ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌ – 6 -ப,க்திபாதம்-9-ஜ்ஞாந ப,க்த் யவஸ்தா ஸூக்தி அதிகரணம் –(118-121)-ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

July 14, 2026

(1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 284 முடிய (48)

(1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-284 (27)

6 — ப,க்திபாதம் -—97–121—-25-இதிலே 2 அதிகரணங்கள்
8–ஜ்ஞாந ப,க்த்யதி கரணம்‌ 97 –117—மொத்தம் -21 —ஸூரணைகள்
பகுதி -1-97-101-ஸூரணைகள்–பகுதி -2–102–117-ஸூரணைகள்-
9-ஜ்ஞாந ப,க்த் யவஸ்தா ஸூக்தி அதிகரணம் –118-121—மொத்தம் –4 —ஸூரனைகள் –

இப்படி ஈஸ்வரன் வளர்த்துக் கொண்டு போருகிற ஞான பிரேமங்களை உடையரான இவருடைய ஞான தசையிலும் ,பிரேம தசையிலும் ,உண்டான பேச்சுக்கள் இருக்கும் படி எங்கனே என்ன அருளிச் செய்கிறார் மேல் .. (பக்தி என்பதை ப்ரேமம் என்று அருளி -பக்தி முற்றிய தசை -ப்ரேமம் என்ற உரு எடுத்து -)ஆனால்‌ இவர்க்கு இந்த ஜ்ஞாந தஸையில்‌ பேச்சேது? ப்ரேம தஸையில்‌ பேச்சேது? என்னில்‌,-

ஜ்ஞானத்தில் தம் பேச்சு பிரேமத்தில் பெண் பேச்சு–சூரணை –118-

அதாவது -ஜ்ஞான தசையில் தாமான தன்மையிலே நின்று பேசுவர் .. பிரேம தசையிலே அவஸ்தாந்திர பன்னராய் பெண் பேச்சாய்ப் பேசுவர் என்கை-( ஞானத்தில் ஆண் பேச்சு என்னாமல்-தன் பேச்சு என்றது இந்த பிறவியில் கொண்ட ஆண் ரூபம் என்று-மேலே சொல்லப் போகும் கருத்துக்கு ஸூ சகம் -மணி வல்லிப் பேச்சு வந்தேறி இல்லையே )-ஜ்ஞாநத்தில்‌ தம்‌ பேச்சு, ப்ரேமத்தில்‌ பெண் பேச்சு என்கிறார் –

இப்படி தெளிவும் கலக்க முமான இத் தசைகளிலே பேச்சில் பேதம் ஒழிய ஸ்வரூபத்திலும் பேதம் உண்டோ என்ன அருளிச் செய்கிறார் —பேச்சில்‌ வைஷம்யமொழிய ஸ்வரூபத்தில்‌ மாறாட்டமில்லை என்கிறார்‌ –

தேறும் கலங்கி என்று தேறியும் தேறாது ஸ்வரூபம் குலையாது–சூரணை -119-

(ஞானம் ப்ரேமம் -தெளிவும் கலக்கமும் என்கிற வார்த்தைகளால் ) ஸ்வரூபம் -சேஷத்வ பாரதந்தர்யம்
ஆண் பெண் -ரூபம் தானே)–தேறும்-அதாவது-தேறும் கை கூப்பும் -7-2-5–என்றும்-(உய்ந்த பிள்ளை கெட்டேன்-என்பர் இவள் தேறும் என்பதே – சரம தசையில் பிறக்கும் தெளிவுக்கு அஞ்ச வேண்டும் என்பர் நஞ்சீயர் )கலங்கி –அதாவது – கலங்கிக் கை தொழும்-2-4-4- -என்றும்-தெளிந்த தசையிலும் ,கலங்கின தசையிலும் , சேஷத்வ பிரகாசமான அஞ்சலி மாறாமையாலே ,-தேறியும் தேறாதும் –
பிண்டத்வ கடத்வ கபாலத்வ சூர்ணத்வங்கள் ஆகிற அவஸ்தாந்தரங்களை பஜித்தாலும் , ம்ருத்தான ஆகாரத்துக்கு அழிவில்லாதால் போலே (மண் பிண்டம் குடம் ஓடு பொடி எல்லாமே மண் தானே )
தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனள் இத் திருவே -4-4-7- -என்கிறபடியே , தெளிந்த தசையோடு கலங்கிய தசையோடு வாசி அற உபய அவஸ்தையிலும் ,சேஷத்வ ரூபமான ஸ்வரூபம் நிலை குலையாது என்ற படி 

“சிந்திக்கும்‌ திசைக்கும்‌ தேறும்‌ கை கூப்பும்‌’” (திருவா. 7 – 2 – 5), “கலங்கிக்‌ கை தொழும்‌ நின்றிவள்‌” (திருவா. 2 – 4 – 4) என்றும்‌, ‘‘தேறியும்‌ தேறாது மாயோன்‌ திறத்தனளே இத் திருவே” (திருவா. 4 – 4- 7) என்றும்‌ பிண்டத்வ-கடத்வ-கபாலத்வ காபாலிகத்வாத்‌,-யவஸ்தைகளில்‌ ம்ருத்தான ஆகாரம்‌ அநுவர்த்திக்குமாப் போலே தெளிந்த (தேறின – பா. போதோடு கலங்கின போதோடு வாசியற இரண்டவஸ்தையிலும்‌ அஞ்ஜலி ஹஸ்தையாய்க் கொண்டு “அவனை யல்லதறியாள்‌” என்கையாலே ஜ்ஞாந தஸையில்‌ தாமான தன்மையோடு ப்ரேம தஸையில்‌ பிராட்டிமார் பேச்சான அவஸ்தையோடு வாசியற சேஷத்வத்தில்‌ கலக்கமற்று ஏக ரூபமாயிருக்கு மென்கிறார் 

சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும் ‘திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;
வந்திக்கும் ஆங்கே மழைக் கணீர் மல்க ‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
‘அந்திப்போ தவுணன் உடலி டந்தானே! அலைகடல் கடைந்த ஆர் அமுதே!
சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல் செய் தானே!–7-2-5–ஒரு ஹேது இன்றிக்கே இருக்க தேறா நின்றாள் -இது தானும் பயாவஹமாய் இருக்கிறதாய் யாயிற்று -மோஹம் செல்லா நிற்க அபேக்ஷிதம் பெற்றாரைப் போலே தேறுகை பயாவஹம் இறே -சரம தசையில் பிறக்கும் தெளிவுக்கு அஞ்ச வேணுமே-கை கூப்பும்-தேவர் படிகளை நினைத்து ஈடுபட்டுக் கும்பிடும் -கீழே மயங்கும் -கை கூப்பும் -என்றது -இங்கே தேறும் கை கூப்பும் என்றது -அல்லாதது சஞ்சாரியாய் செல்லா நிற்க இது ஒன்றும் ஸ்திரமாக செல்லா நின்றது –ஸ்வரூப அனுபந்தியான தர்மம் ஆகையால் -நித்யாஞ்சலி புடா -என்ன கடவது இறே –ஆற்றாமையாலே-

இலங்கை செற்றவனே யென்னும் பின்னும்
வலம் கொள் புள்ளுயர்த்தாய் என்னும் உள்ளம்
மலங்க வெவ்வுயிர்க்கும் கண்ணீர் மிகக்
கலங்கிக் கை தொழும் நின்றிவளே –2-4-4-கலங்கிக் கை தொழும் – பிரணயி கை தொழுவது கலங்கி இறே-நின்றிவளே –-நின்று -கை தொழுகை மாறாது ஒழிகை – இவள் -தொழுவித்துக் கொள்ளக் கடவ இவள் இறே தொழுகிறாள்

ஏறிய பித்தினோடு ‘எல்லா உலகும் கண்ணன் படைப்பு’ என்னும்’
நீறு செவ்வே இடக் காணில், நெடுமால் அடியார்’ என்று ஓடும்;
நாறு துழாய்மலர் காணில்,‘நாரணன் கண்ணி ஈது’ என்னும்;
தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே இத் திருவே.–4-4-7-நீறு செவ்வே -என்ற இடம் -தேறாமை-நாரணன் கண்ணி ஈது என்ற இடம் -தேற்றம் –கோவை வாயாள் திருவாய்மொழி -தேற்றம் -இத்திருவாய்மொழி -தேறாமைமாயோன் திறத்தனளே-ஞானம் அப்ரயோஜனமாம் படி ஆச்சர்யமான பிரணயித்வத்தை உடையவன் திறத்தனள்-இத் திருவே-இத்திரு என்றும் அத்திரு என்றும் விகல்பிக்கலாம் படி இருக்கிறது-அநபாய நிகளாய் இருக்கிற ஆகாரம் இருவருக்கும் ஒக்கும்
அவளுக்கு அவனே உத்தேச்யன்-இருவரும் உத்தேச்யரான ஏற்றம் உண்டே இவளுக்கு

ஆனால் இவர்க்கு அவஸ்தாந்த்ரம் -ஆவது எது என்னும் அபேஷையில் அருளிச் செய்கிறார் .–ஆனால்‌ பின்னை அவஸ்தாந்தரம்‌ கூடின படி என்‌ என்னில்‌-ஆனால்‌ பின்னை அவஸ்தாந்தரம்‌ கூடின படி என்‌ என்னில்‌ – ஸ்வரூபத்திலும்‌ ஸ்வரூபாநுரூபமான வருத்தி ப்ரார்த்தனையிலும்‌ வாசியில்லை. தம்‌ பேச்சும்‌ பிராட்டிமார்‌பேச்சுமான இவ்வளவே அவஸ்தாந்தரம்‌-

அடியோம் தொடர்ந்து குற்றேவல் அடிச்சியோம் அடிக் கீழ் குற்றேவல் ஆகை அவஸ்தாந்த்ரம்-சூரணை -120-

அடியோம்-அதாவது-அடியோம் போற்றி ஓவாதே -9-2-9-என்றும் ,-தொடர்ந்து குற்றேவல்--அதாவது-
தொடர்ந்து குற்றேவல் செய்து-9-2-3- -என்று தாமான தன்மையில் சொல்லுமோ பாதி–அடிச்சியோம்-
அதாவது- அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் –10-3-6–என்றும் , அடிக் கீழ் குற்றேவல்- அதாவது-
திரு அடிக் கீழ் குற்றேவல் முன் செய்த -1-4-2–என்று சொல்லுகையாலே , ஸ்வரூபத்திலும் ,ஸ்வரூப அநுரூப வ்ருத்தி பிரார்த்தனையிலும் பேதம் இல்லை ..-பிராட்டியான பாவனையாலே ,தம் பேச்சான இது போய் ,பெண் பேச்சாகை இவர்க்கு அவஸ்தாந்த்ரம் ஆவது என்ற படி .. அடியோம் தொடர்ந்து குற்றேவல் -என்று தம் பேச்சாலே சொல்லுகிற இது அடிச்சியோம் அடிக் கீழ் குற்றேவல்-என்று பெண் பேச்சாகை இவருக்கு அவஸ்தாந்த்ரம் ஆவது என்று வாக்யத்துக்கு சொல் படுத்தும் க்ரமம் –(வாக்ய அந்வயம் என்றவாறு )(ஸ்வரூபத்திலும் வ்ருத்தி கைங்கர்யத்திலும் பேதம் இல்லையே – ஆண் தன்மையில் பாடினாலும் நாயகி பாவமாக பாடினாலும் சேஷத்வத்துக்கும் கைங்கர்யத்துக்கும் இரண்டு அவஸ்தைகளும் ஆக நான்கு பாசுரங்கள் காட்டி வியாக்யானம் )

ஸ்வரூபத்திலும்‌ ஸ்வரூபாநுரூபமான வ்ருத்தி ப்ரார்த்தனையிலும்‌ வாசியில்லை. தம்‌ பேச்சும்‌ பிராட்டிமார்‌ பேச்சுமான இவ்வளவே அவஸ்தாந்தரம்-

வீற்று இடம் கொண்டு வியன் கொள் மா ஞாலத்து இதனுளும் இருந்திடாய் அடியோம்
போற்றி யோவாதே
கண்ணினை குளிரப் புது மலர் ஆகத்தைப் பருக
சேற்றிள வாளை செந்நெலூடு களும் செழும் பணைத் திருப் புளிங்குடியாய்
கூற்றமாய் அசுரர் குல முதலரிந்த கொடு வினைப் படைகள் வல்லானே–9-2-9—சேஷித்வத்தால் வந்த வேறுபாடு தோற்றும் படி விஸ்மய நீயமான மஹா பிருத்வியான இதிலேயும் இருந்திடாய் -உன்னைக் கொண்டு கார்யம் இன்றிக்கே அந்நிய பாரமான சம்சாரத்திலே -உன்னை ஒழிய செல்லாமை யுடையார் இருக்குமது உனக்கு ஏற்றமோ -இதில் உமக்கு பிரயோஜனம் என் என்னில் –-அடியோம்-அநந்ய பிரயோஜனரான நாங்கள் –-போற்றி –அவ்விருப்பு நித்யமாகச் செல்ல வேணும் என்று மங்களா சாசனம் பண்ணி –-யோவாதே-உச்சி வீடு விடாதே–கண்ணினை குளிரப்-கமர் பிளந்த கண்கள் விடாய் கெட்டுக் குளிரும் படி–புது மலர் ஆகத்தைப் பருக–செவ்விப் பூ போலே இருக்கிற திருமேனியை அனுபவிக்கும் படியாக –புஷ்ப்ப ஹாஸ ஸூ குமாரமான வடிவை -லோசநாப்யாம் பிபன் நிவ –என்கிறபடியே நிரந்தரமாக அனுபவிக்கப் பெறுகை –

கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி உன் திரு வுடம்பு அசைய
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி
தடம் கொள் தாமரைக் கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ வுலகும் தொழ விருந்து அருளாய் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-3—இத்தசையில் செய்யப்படுவது இது -என்று உணர்த்தி அந்தரங்க வ்ருத்தியைப் பண்ணி -பெருமாள் தமக்கு அபிமதங்களில் அவஹிதர் அன்றிக்கே இருந்த போதும் -இவ்வடிமையைக் கொண்டு அருள வேணும் -என்று வடிம்பிட்டு இளைய பெருமாள் அடிமை செய்தால் போலே –தொல்லடிமை-ஆத்மாவுக்கு ஸ்வாபாவிகமான வடிமை -மம சஹஜ கைங்கர்ய விதய -என்கிறபடியே வழி வரும் தொண்டரோர்க்கு அருளி-நெறி தப்பாதே வருகிற அடியோங்களுக்கு கிருபை பண்ணி – இம் மூன்று பாட்டிலும் தம்முடைய யோக்யதையைச் சொன்னால் போலே இருக்கும் -அது அன்று சொல்கிறது -ஒருவருக்கே சேஷமாய் இருப்பாரை வேறு முகம் பார்ப்பார் யுண்டோ என்று தம்முடைய அநந்ய கதித்வத்தை சொல்கிறார்

அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் ஆழி அம் கண்ணா உன் கோலப் பாதம்
பிடித்து அது நடுவு உனக்கு அரியையரும் பலர் அது நிற்க எம் பெண்மை ஆற்றோம்
வடித்தடம் கண் இணை நீரும் நில்லா மனமும் நில்லா எமக்கு அது தன்னாலே
வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே–10-3-6—அளவிட ஒண்ணாத ஸ்வ பாவத்தை யுடையையாய் தர்ச நீயனான ஸ்ரீ கிருஷ்ணனே – உன்னுடைய அலங்கார உத்தமமான திருவடிகளை அநந்யார்ஹைகளான எம் தலை மேலே நீ வைத்து அருள வேணும் 

என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள் நீரலிரே
முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே
 –1-4-2–திருவடியின் கீழ் அந்தரங்க வ்ருத்தி பண்ணுகைக்கு ஏற்கவே ப்ரவர்த்திக்க பெறாத நான் அகன்றே போம் அத்தனையோ –-முன் செய்ய முயலுகை யாவது -அதுக்கு ஈடான பாக்யத்தைப் பண்ணுகை-க்ரியதாமித மாம்வத -என்றும் – முகப்பே கூவிப் பணி கொள்ளாய் -என்றும் சொல்லுகிறபடியே கண் வட்டத்தில் நின்று பண்ணுகைக்கு ஈடாக முயலாத நான் அகன்றே போம் இத்தனையோ என்றுமாம் -தந்தாமுக்கு என்ன ஓன்று இல்லாதார் தய நீயர் அன்றோ என்று கருத்து-த்வத்க்ருபா சங்கு சந்தீ-என்னக் கடவது இறே –

ஆனால் இவர்க்கு தம் பேச்சு அன்றோ ஸ்வாபாவிகம்– பிராட்டிமார் தசையை ப்ராபித்து பேசும் பெண் பேச்சு வந்தேறி அன்றோ என்ன- — பகவத் ஏக பரதந்த்ர்யமுமாய் பகவத் ஏக போகமுமாய் — இருக்கும் ஆத்ம வஸ்துவுக்கு ஸ்திரீ சாதர்ம்யம் ஸ்வரூப அனுபந்தி ஆகையாலே தத் பிரயுக்தமான பேச்சு
இவருக்கு வந்தேறி அன்று என்னும் இடத்தை ரூபகவத்வேன (உருவகப்படுத்தி) அருளிச் செய்கிறார்
மேல் —(பவாடவி வர்ணனம் -பாரதம்-இருளில் சூழ்ந்து அவிவேகம் -விவாக ஞானம் இல்லாமல் –
பஹுதா சந்தத துக்க வர்ஷினி -ஆளவந்தார் திருவடி ஆச்சார்யர் -உப்புக்கடல் பாவ சாகரம் போன்ற உருவகங்கள் உண்டே )ஆனால்‌ இவர்க்குத் தாமான தன்மை ஸ்வாவிகமாய்‌, பிராட்டி மார் தன்மை வந்தேறி யாயிருக்குமோ? என்னில்‌; ப,க,வதே.க பரதந்தரமுமாய்‌, ப,க,வதே,க போக,மூமாயிருக்கிற ஆத்ம வஸ்துவுக்கு ஸ்த்ரீத்வம்‌ வந்தேறி யல்லாமையாலே பிராட்டிமார் தன்மை ஸ்வாபாவிகம்‌ என்கிறார்

வித்யை தாயாகப் பெற்று பாலுமமுதுமான திரு நாமத்தாலே திருமகள் போல வளர்த்த தஞ்சமாகிய தந்தை மற்றொருவர்க்குப்‌ பேச்சுப் படாமல்‌, விஸ்வபதி லோக பர்த்தா என்னும்‌ மணவாளரை நாலிரண்டிழை கொண்டு முப்புரியான ப்‌ரஹ்ம ஸூத்ர பந்தத்தோடே வரிப்பிக்கப்‌ பரம் புருடன்‌ கைக் கொண்ட பின்‌ சதுர்த்தியுள் புக்கு இடையீடு நடுக் கிடக்கும்‌ நாள் கழித்து ஜந்ம பூமியை விட்டகன்று சூழ்விசும்பிற் படியே உடன் சென்று குடைந்து நீராடி வியன் துழாய்‌ அஞ்சனத்தின்‌ நீறு நானப் பொடி பீதக வாடை பல்கலன் கொண்டு நோக்கி அலங்கரித்துப்‌ பல்லாண்டிசைத்துக்‌ கவரி செய்ய நிறை குட விளக்கமேந்தி இள மங்கையர்‌ எதிர் கொள்ள வைகுந்தம்‌ புக்கிருந்து வாய் மடுத்துப்‌ பெரும்‌ களிச்சியாக வானவர்‌ போக முண்டு கோப்‌புடைய கோட்டுக்கால்‌ கட்டில்‌ மிதித்து ஆரோஹித்து பரத-அக்ரூர-மாருதிகளை பரிஷ்வங்கித்த மணி மிகு மார்விலே குரு மா மணியா யணையும்‌ வஸ்துவுக்கு மணிவல்லிப் பேச்சு வந்தேறியன்று.–சூரணை -121-

வித்யையைத் தாயாகப் பெற்று- அதாவது — சஹி வித்யாதஸ் தம் ஜனயிதி -ஆபஸ்தம்ப சூத்ரம்-16–17-என்கிற படியே ஆசார்யன் திரு மந்திர முகேன ஸ்வரூப ஞானத்தை உண்டாக்கின போது இவ் ஆத்மா சத்பாவம் ஆகையாலே , வித்தையை மாதாவாகக் கொண்டு இவ் ஆத்ம வஸ்துவை ஜனிப்பித்து-

‘“ஸ ஹி வித்‌,யாதஸ்தம்‌ ஜநயதி தச் ச்‌,ரேஷ்ட,ம்‌ ஜந்ம” (ஆப.தர்ம.) என்றும்‌, “உத்பாத,க ப்‌,ரஹ்மபித்ரோ ர்க.,ரீயாந்‌ ப்‌,ரஹ்மதா பிதா” என்றும்‌ சொல்லுகையாலே ஆசார்யன்‌ திருமந்த்ர முகத்தாலே ஸ்வரூப ஜ்ஞாநத்தை உண்டாக்க, தத,நந்தரம்‌ இவனுடைய ஸத்‌,பாவமாகையாலே வித்‌,யை தாயாகப் பெற்று,

பாலும் அமுதுமான திரு நாமத்தாலே திரு மகள் போல் வளர்த்த –-அதாவது தேனும் பாலும் அமுதுமாய திரு மால் திருநாமம் -பெரிய திருமொழி -6-10-6–என்கிற போக்ய பதார்த்தமான திரு மந்த்ரத்தாலே
திரு மகள் போல் வளர்த்த–அதாவது — திரு மகள் போலே வளர்த்தேன் -பெரியாழ்வார் -3-8-4-என்கிற படி – அனந்யார்ஹ சேஷத் வாதிகளாலே ஸ்ரீ லஷ்மி சத்ருசமாக வளர்த்துக் கொண்டு போந்த-

“தேனும்‌ பாலுமமுதுமாய திருமால்‌ திருநாமம்‌”‘ (திருமொழி 7 – 10 – 6) என்ற போக்‌ய பதார்த்த,த்தாலே “திருமகள் போல வளர்த்தேன்‌”? (பெரியா. திரு. 3 – 8 – 4) என்கிறபடியே அநந்யார்ஹ அபேஷத்வாதி,களாலே பிராட்டியோ டொக்கச்‌ சொல்லும்படி வளர்த்துக் கொண்டு போந்த

கான  வெண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர்
மானம் அழித்து நின்ற வென்றி யம்மான் எனக்கு என்றும்
தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம்

நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே —6-10-6–எனக்கு சர்வ வித போக்யமுமான-ஸ்ரீ யபதி உடைய திரு நாமத்தை –மிதுனமான வேஷமே காணும் இவர்க்கு  ரசிப்பது –
ரமா மாணா வநே த்ரய -என்னுமா போலே – (தண்டகாரண்யத்தில் –சித்ரகூடம் அடைந்து -அழகான இடம் பெருமாளும் பிராட்டியும் – சேர்ந்து இருப்பதை கண்டு இளைய பெருமாள் மகிழ்ந்து போல் இங்கும் )

ஒரு மகள் தன்னை உடையேன் உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போலே வளர்த்தேன் செம்கண் மால் தான் கொண்டு போனான்
பெரு மகளாய் குடி வாழ்ந்து  பெரும் பிள்ளை பெற்ற யசோதை
மருமகளை கண்டு உகந்து மணாட்டுப் புறம் செய்யும் கொலோ -3-8-4—கடி மா மலர் பாவை ஒப்பாள் என்கிறபடியே (நாயனார் -ஸாம்ய ஷட்கம்)1-அநந்யார்ஹ சேஷத்வம்-2-அநந்ய சரண்யத்வம்-3-அநந்ய போக்யத்வம்-4-சம்ஸ்லேஷத்தில் தரிக்கை-5-விஸ்லேஷத்தில் தரியாமை-6-ததேக நிர்வாகத்வம் )
சர்வருக்கும் வை லஷணத்துக்கு  உபமான பூமியாய் புருஷகார யுக்தையான-நாரீணா முத்தமையோடே சதர்ச -ஸ்வபாவ்யை  யாம்படி வளர்த்தேன் –

தஞ்சமாகிய தந்தை--அதாவது-தேஹோத்பாதகனாய் -ச பித்ரா ச பரித்யக்த ஸூ ரைஸ்ச சமஹர்ஷபி த்ரீன் லோகான் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத –ஸூந்தர -38-32– -இத்யாதி படியே ஆபத் தசைகளில் கை விடும் பிதாவை போல் அன்றிக்கே –-பூதாநாம் யோவ்யய பிதா -சஹஸ்ர நாமம் -என்கிறபடி
சம்பந்தம் கண் அழிவு அற்று இருக்க – பவ மோஷண யோஸ் த்வ யைவ ஜந்து க்ரியதே–ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -உத்தர -88- -என்னும் படி சம்சார மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் இருக்கும் பிதாவைப் போலும் அன்றிக்கே – ஸ்வரூப உத்பாதகனாய் -ஒரு தசையிலும் கை விடாதே -ஹிதைஷியாய் – உஜ்ஜீவன ஏக பரனாய்க் கொண்டு மோஷைக ஏக ஹேதுவாய் இருக்கையாலே ஆபத் ரஷகனான ஆச்சர்யனான பிதா-

““தஞ்சமாகிய தந்தை தாய்‌’‘ (திருவா. 3 – 6 – 9) என்று தேஹோத் பாத,கனாய்‌ ஆபத் காலங்களிலே *“ஸ பித்ரா ச” (ரா.ஸு. 38 – 32) இத்யாதிகளிற் படியே கை விடுமவனைப்‌ போலன்றிக்கே ““பூ,தாநாம்‌ யோவ்யய? பிதா’” (பாரதம்‌) என்கிற ஸம்ப,ந்த, முண்டாயிருக்கச் செய்தேயும்‌ ஸம்ஸார மோக்ஷங்களிரண்டுக்கும்‌ பொதுவான பிதாவைப் போலுமன்றிக்கே மோஷ ஏக ஹேதுவாய்‌ எல்லா அவஸ்தையிலும்‌ இவனுடைய உஜ்ஜீவநத்திலே தோக்காய்‌, இவனுடைய ஹிதைஷியாய்ப் போருகிற ஆசார்யனாகிற பிதா-

தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு தானுமாய் அவை அல்லனாய்
எஞ்சல் இல் அமரர் குல முதல் மூவர் தம்முளும் ஆதியை
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் அவன் இவன் என்று கூழேன்மின்;
நெஞ்சினால் நினைப்பான் எவன்?அவன் ஆகும் நீள்கடல் வண்ணனே.–3-6-9–ஷாம காலம் வந்தால் தூற்றடியிலே வைத்துப் போதல் -விற்று உண்ணுதல் செய்யுமவர்களைப் போல் அன்றிக்கே அழிய மாறி நோக்கும் தாயும் தந்தையாய்-அவ்யய பிதா -தந்தை யானவன் தாய் ஆக மாட்டான் –ஸர்வேஷாமேவ லோகா நாம் பிதா மாதாச மாதவ – தங்களை தஞ்சமாகிய தானுமாய் –
வயிறு நொந்த போதாக கழுத்திலே கயிற்றை இட்டு கொள்ளும் தானும் அன்ரியிலே இருக்கை
அவை அல்லனாய்- தந்தை தாய் தான் என்னும் இவ்வளவு அன்றியே அல்லாத பந்து வர்க்கமுமாய்
எஞ்சல் இல் அமரர் குல முதல்-எஞ்சல் ஆகிறது -சுருங்குதல் -பகவத் அனுபவத்தில் சங்கோசம் இல்லாத நித்ய ஸூ ரிகள் குலம் உண்டு -திரள் -அதுக்கு நிர்வாஹகனை – அவர்களுக்கு ஜீவன ஹேது வானவனை என்றுமாம் –

மற்று ஒருவருக்குப் பேச்சுப் படாமல் –அதாவது –மற்று ஒருவருக்கு என்னை பேசல் ஒட்டேன்–பெரியாழ்வார் -3-4-5- -என்றும் ,-மானிடவர்க்கு பேச்சுப் படில் –நாச்சியார் -1-5-என்கிற அந்ய சேஷத்வ பிரசங்கம் வாராதபடி —

மற்றொருவர்க்குப்‌ பேச்சுப் படாமல்‌) “’மற்றொருவர்க் கென்னைப் பேச வொட்டேன்‌” (பெரியா. தி.3- 4.5), “மானிடவர்க்கென்னு பேச்சுப் படில்‌ வாழகில்லேன்‌”‘(நா.தி. 1 – 5) என்று அந்ய சேஷத்வ ப்ரஸங்கமும் வாராதபடி.

சுற்றி நின்று ஆயர் தழைகள் இட சுருள் பங்கி நேத்ரத்தால் அணிந்து
பற்றி நின்று ஆயர் கடைத்தலையே பாடவும் ஆடவும் கண்டேன் அன்றிப்பின்
மற்று ஒருவர்க்கு என்னைப் பேசல் ஒட்டேன் மாலிரும் சோலை எம் மாயற்கு அல்லால்
கொற்றவனுக்கு இவள் ஆம் என்று எண்ணிக் கொடுமின்கள் கொடீராகில் கோழம்பமே – 3-4-5–இப்படிப் பட்டவனுக்கு ஒழிய -வேறு ஒருவர்க்கு என்று -என்னை சொல்ல ஒட்டேன் – நீங்கள் நினைத்து இருக்கிறது செய்யல் ஆவது இல்லை – நீங்கள் வாய் விடில் நான் முடிவன்-மனிடர்வர்க்கு என்று பேச்சு படில் வாழகில்லேன்(நாச்சியார் 1-5-) -என்னுமா போலே சொல்லுகிறாள் –

வானிடை வாழும் அவ் வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்த வவி
கானிடைத் திரிவதோர் நரி புகுந்து கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப
ஊனிடை யாழி சங்கு உத்தமர்க்கு என்று உன்னித் தெழுந்த என் தட முலைகள்
மானிடர்வர்க்கு என்று பேச்சுப் படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே –1-5–நானும் அறியாது இருக்க –அவனும் அறியாது இருக்க – மனுஷ்யம் மாத்ரமாய் இருப்பாருக்கு என்று நாட்டிலே இங்கனே ஒரு சப்தம் பரிமாறும் ஆகில்- அது என் காதில் விழா விடிலும் – எனக்கு சத்தை இல்லை கிடாய் –என்கிறாள்
பிறருக்காய் இருக்கும் இருப்பு -சத்த்யா பாதகமாய் இருந்த படி —

விஸ்வபதி லோக பர்த்தா என்னும் மணவாளரை -அதாவது –பதிம் விஸ்வஸ்ய –புருஷ ஸூக்தம் -என்றும் ,-கௌசல்யா லோக பர்த்தாரம் –ஸூந்தர -38-55–என்று பதி சப்ததாலும் -பர்த்ரு சப்தத்தாலும் -சர்வ லோக நாயகராகச் சொல்லப் படுகிற-மணவாளரை – பணவாள் அரவணை பற்பல காலமும் பள்ளி கொள்ளும் மணவாளரை –நாச்சியார் -10-6- என்கிற அழகிய மணவாளரை –

(விஸ்வபதி லோக பர்த்தா வென்னும்‌ மணவாளரை) ““பதிம்‌ விஸ்வஸ்ய”’ (தை.நா. 11) என்றும்‌, “கெளஸல்யா லோக பர்த்தாரம்‌”” (ரா.ஸு, 38 – 56) என்றும்‌, ”பணவாளரவணைப் பற்பல காலமும்‌ : பள்ளி கொள்‌ மணவாளர்‌’‘ (நா.தி. 10 – 6) என்றும்‌ சொல்லுகிறபடியே ப்ராப்த சேஷியாய்‌, ஸர்வ ரக்ஷகனானவனை.-

கண மா மயில்காள் கண்ணபிரான் திருக் கோலம் போன்று
அணி மா நடம் பயின்று ஆடுகின்றீர்கு அடி வீழ்கின்றேன்
பண மாடரவணைப் பற்பல காலமும் பள்ளி கொள்
மண வாளர் நம்மை வைத்த பரிசிது காண்மினே–10-6–தம்மோட்டை ஸ்பரசத்தாலே விகசிதமான பணங்களை உடையவனாய்-நித்ய அனுபவத்தாலே களித்து வர்த்திக்கிற திரு வநந்த ஆழ்வானைப் படுக்கையாக உடையவர்-தம் உடம்போடு அணைய ஆசைப் பட்டாருக்கு உடம்பு கொடுக்குமவர் –பற்பல காலமும் பள்ளி கொள் மண வாளர் – அவர் அநாதி காலம் கூடிப் பண்ணின கிருஷி பலம் அன்றோ நானுங்கள் காலைப் பிடிக்கிறது-மணவாளர் -என்கையாலே – பெரிய பெருமாள் போலே காணும் இவளை இப்பாடு படுத்தினார் –

நால் இரண்டு இழை கொண்டு முப்பிரியான ப்ரஹ்ம ஸூத்திர பந்தத்தோடு வரிப்பிக்க
அதாவது –எட்டு இழையாய் மூன்று சரடாய் இருப்பதொரு மங்கள ஸூத்திரம் போலே -(முமுஷுப்படி )
எட்டு அஷரமாய் – மூன்று பதமாய் ,ஈஸ்வர சம்பந்த பிரகாசமான திருமந்தரம் ஆகிற மங்கள ஸூத்தர சம்பந்தத்தோடே-பாணிம் க்ருஹ்ணீஷ் வ பாணி நா -பால –73-26-என்கிறபடி வரிக்கும் படி பண்ண –

(நாலிரண்டிழை கொண்டு முப் புரியான ப்‌ரஹ்ம ஸுத்ர ப,ந்த,த்தோடே வரிப்பிக்க) “எட்டிழையாய்‌ மூன்று சரடாயிருப்பதொரு மங்கல ஸத்ரம் போலே எட்டுத்‌ திருவெழுத்தாய்‌, மூன்று பதமாய்‌, ஸர்வேஸ்வரனோடு அவிநாபூத ஸம்பந்த, ப்ரகஸகமான திருமந்த்ரமாகிற மங்கல ஸூத்ர ப ந்தத்தோடே “பாணிம் க்‌ருஹ்ணீஷ்வ பாணிநா” (ரா. படா, 23 – 27) என்று அவன்‌ வரிக்கும்படி பண்ண-

பரம் புருடன் கைக் கொண்ட பின்-அதாவது –பரம் புருடா நீ என்னைக் கைக் கொண்ட பின் -பெரியாழ்வார் -5-4-2–என்கிறபடியே பரம புருஷனான மணவாளர் பரிக்ரஹித்த அநந்தரம் –சதுர்தியுள் புக்கு –அதாவது –விவாஹா அநந்தரம் சேஷ ஹோம பர்யந்தமான சதுர் திவசத்திலும் அகலுதலும் அணுகலும் அற்று,-அனந்யார்ஹ சேஷத்வ அனுகுணமாக பரிமாற்றத்துக்கு அர்ஹம் என்னும் அளவைப் பிரகாசித்துக் கொண்டு இருக்குமோபாதி,பிரணவோக்தமான அனந்யார்ஹ சேஷத்வத்தில்
கண் அழிவு அற அங்கீகரிக்கையாலும் , தத் அனுகுணமாக கிட்டிப் பரிமாறப் பெறாமையாலும் ,
அகலுதலும் அணுகலும் அற்று கைங்கர்ய பிரார்த்தனையோடு சொல்லும் சரம சதுர்த்தி யிலே உள் புக்கு –

(பரம்புருடன்‌ கைக் கொண்ட பின்‌) ““பறவை யேறு பரம் புருடா நீ என்னைக் கைக் கொண்ட பின்‌” (பெரியா. தி. 8 – 4 – 2) என்று கருட வாஹநனான புருஷோத்தமன்‌ கைக் கொண்ட அநந்தரம்‌. (சதுர்த்தி,யுள் புக்கு) விவாஹாநந்தரம்‌ ஸேஷ ஹோம பர்யந்தமான சதுர்‌திவஸம் போலே ப்ரதம சதுர்த்தி,யிலே சொல்லப்பட்ட ஸேஷத்வ ஜ்ஞாநாநந்தரம்‌ சரம சதுர்த்தியில்‌ சொல்லுகிற கைங்கர்ய ப்ரார்த்தனையில்‌ அந்வயித்து.-

பறவை ஏறு பரம் புருடா நீ என்னைக் கை கொண்ட பின்
பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும் பதம் ஆகின்றதால்
இறவு செய்யும்  பாவக்காடு தீக்கொளீஇ  வேகின்றதால்
அறிவை என்னும் அமுதவாறு தலைப் பற்றி வாய்க் கொண்டதே -5- 4-2 –பெரிய திருவடியை வாகனமாக உடைய புருஷோத்தமனே – திரு வேம்கடமுடையான் பெரிய திருவடி மேலே எழுந்து அருளி வந்து இவரை பரம பதத்துக்கு கொடு போகையிலே த்வரிக்கிற படி–விரோதி நிவ்ருத்தியை பிறப்பித்ததும்
திரு வேம்கடம் உடையான் பெரிய திருவடி மேல் வந்து இறே –நீ – ஆஸ்ரித சம்ச்லேஷ ஏக ஸ்வ-ஸ்வபாவனான  நீ-என்னை – விளிக்கும் கண் இலேன் நின் கண் மற்று அல்லால் –என்றும்-உனக்கு பணி செய்து இருக்கும் தவம் உடையேன் (5-3-2 )-என்றும் அங்கோர் நிழல் இல்லை நீரும் இல்லை -என்றும் – அநந்ய கதியுமாய் – அநந்ய உபாயனுமாய் – அநந்ய போகனுமான என்னை –அங்கீகரித்த பின்பு-நான் உன்னைப் பற்றும் போது  இறே – ஜன்மாந்தர சஹஸ்ரங்களிலே தபோ ஞான சமாதி ரூபேண பிறப்பது-நீ என்னைக் கை கொண்ட பின் – எல்லாம் ஏக காலத்திலே பிறக்கும் இறே –

இடை ஈடு நடுக் கிடக்கும் நாள் கழித்து –அதாவது –தம்பதிகள் இருவரும் -ஏக சய்யைலே வர்த்திக்கச் செய்தே -அந்யோன்ய ஸ்பர்ச யோக்யதை இல்லாதபடி -இடையீடரான சோமாதிகள் நடுவே கிடக்கும் நாள் போலே – சேஷத்வ ஞானமும் சேஷவ்ருத்தி பிரார்த்தனையும் உண்டாகையாலே , இரண்டு தலைக்கும் அண்ணிமை உண்டாய் இருக்கவும் -சேர்ந்து பரிமாற ஒண்ணாதபடி – நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பில் இட்டு-திருவாய் -5-1-5- -என்கிறபடியே அனுபவ விரோதியாய் இடையீடான சரீரம் நடுவே கிடக்கிற நாலு நாளையும் –நாள் கடலை கழிமின் -திருவாய் -1-6-7- – என்கிற படியே கழித்து –

(இடையீடு நடுக் கிடக்கும்‌ நாள்‌ கழித்து) ஒரு படுக்கையிலே தம்பதிகளிருவரு மிருக்கச செய்தே ஸோமாதீகளான மூவர்களும்‌ நடுவே இருக்கையாலே இவர்களுக்கு ஸ்பர்ஸ யோக்‌,யதை இல்லாதாப் போலே சேஷத்வ ஜ்ஞாநமும்‌ சேஷ வ்ருத்தி ப்ரார்த்தனையும்‌ உண்டாயிருக்கச்‌ செய்தே, “நண்ணியும்‌ நண்ணாகில்லேன்‌ நடுவே யோருடம்பிலிட்டு”’ (திருவா, 5 – 1 5) என்று ப,க,வத_நுப,வ விரோதி,யாய்‌, இடையீடான ஸரீரம்‌ கிடக்கும்‌ நாலு நாள்‌ ப,க,வத,நுப,வம்‌ கூடாமையாலே அந்நாலு நாளையும்‌ “’நாள்கடலைக் கழிமின்‌”‘ (திருவா. – 7) என்று கழித்து.

கண்ண பிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை
நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பிலிட்டுத்
திண்ணம் அழுந்தக் கட்டிப் பல செய்வினை வன் கயிற்றால்

புண்ணை மறைய வரிந்து என்னைப் போர வைத்தாய் புறமே.–5-1-5—கிட்டியும் கிட்டாதார் கணக்கு ஆனேன் -பேறாக சொல்லுகிறது ஞான பலத்தை –பெறாமை யாகிறது -ஞான அனுகூலமான பிராப்தி இல்லாமை -அது இன்றிக்கே ஒழிகிறது என் என்னில் -அசித் சம்சர்க்கத்தாலே-சம்சாரத்திலே நீ வைக்கையாலே-என்கிறார் –-நடுவே ஓர் உடம்பிலிட்டுத்--சரீர சம்பந்தம் அநாதி யாய் இருக்க -நடுவே என்பான் என் என்னில் இவ்வாத்மாவுக்கு ஸ்வரூப அனுபந்தி இல்லாமையாலும் கர்ம உபாதிகம் ஆகையாலும்-பகவத் பிரசாதத்தால் விடக் காண்கையாலும் – முத்துக்கு மாலினியம் அநாதியாய் இருக்க ஒரு நாளிலே கடைந்து தெளியக் காண்கையாலே-ஸ்வரூப அதிரேகி -என்று தோற்றுமா போலே பகவத் அர்ஹமான வஸ்துவுக்கு மாம்ஸாஸ் ருங்மயமான அசித்தோடே என்ன சேர்த்தி உண்டு –
பெருமாளோடு அனுபவிக்கப் பாரித்த பிராட்டி முன்பே ராவணன் தோற்றினால் போலே இருக்கிறதாயிற்று இவருக்கு சரீர சம்பந்தம் -சம்சர்க்கம் ஒழிய ஆச்ரயத்தோடு ஒரு சம்பந்தம் இல்லை என்கை – திண்ணம் அழுந்தக் கட்டிப் பல செய்வினை வன் கயிற்றால்-பலவாய்ச் செய்யப்பட்டு வலிதான பாபம் ஆகிற பாசத்தால் த்ருடமாக நெருக்க கட்டி புண்ணை மறைய வரிந்து என்னைப் போர வைத்தாய் புறமே.– சரீரகத தோஷம் தெரியாதபடி பண்ணி -அக்வாயைப் பார்த்தால் காக்கை நோக்கும் படியாய் இருக்கை-தோலின் கை பாணி புறத்தால் வந்த வழு மூட்சியைப் பார்த்து ஸ் ப்ருஹை பண்ணும் படி இறே பண்ணி வைத்தது –-என்னை -ஸ்வ ரக்ஷணத்தில் அப்ராப்தனாய் அசக்தனாய் இருக்கிற என்னை-போர வைத்தாய் புறமே.–அனுபவத்தில் பாரித்து இருக்கிற பிராட்டியை அசோகா வனிகையிலே வைத்தால் போலே -இவர்களுக்கு சம்சாரிகள் நடுவே இருக்கிற இருப்பு

நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்-தோள்கள் தலை துணி செய்தான்
தாள்கள் தலையில் வணங்கி நாள் கடலைக் கழிமினே –1-6-7—திருவடிகளிலே நிர்மமனாய் வணங்கி
நாள் கடலைக் கழிமினே –ஜ்ஞானம் பிறந்தால் ப்ராப்தி அளவும் -ஒரு பகல் ஆயிரம் ஊழி-என்னுமா போலே கால ஷேபம் அரிதாய் இறே இருப்பது-திருவடியைப் போலே தசரதாத் மஜனுடைய வீர சரிதத்தை அனுசந்தித்துக் காலத்தைப் போக்குவது-அன்றிக்கே சக்கரவர்த்தி திருமகனை ஆஸ்ரயித்து சம்சார ஆர்ணவத்தை மாற்றிக் கொள்ள பாருங்கோள் என்கிறார் என்றுமாம்

ஜன்ம பூமியை விட்டு அகன்று –அதாவது –முற்றிலும் பைம் கிளியும் பந்துமூசலும் பேசுகின்ற சிற்றில் மென்பூவையும் விட்டகன்ற செழும் கோதை -பெரிய திருமொழி -3-7-8-என்கிறபடியே ஒருவராலும் விட அரிதான ஜன்ம பூமியான சம்சார விபூதியை முன்பு ஆதரணீயமான போந்த வஸ்துக்களோடே கூடப் புரிந்து பாராமல் விட்டு நீங்கி ..-அன்றிக்கே–அன்று நான் பிறந்திலேன் -திருச்சந்த –64-என்னும் படி கிடந்த தனக்கு ஆசார்யன் திரு மந்தரத்தால் உண்டான ஜன்மம் பெற்றது இங்கே ஆகையாலே ஜன்ம பூமியான இவ் விபூதியை பகவத் அனுபவ ப்ராவண்யத்தாலே – முற்றிலும் பைம் கிளியே –இத்யாதி படியே –முன்பு ஆதரணீயமான போந்த வஸ்துக்களோடே கூட விட்டகன்று என்னவுமாம் ..
பிறந்தகம் விட்டு புக்ககத்துக்கு போகிறதாக சொல்லுகிற இந்த ரூபகத்துக்கு இது மிகவும் சேரும் இறே-

(ஜந்ம பூ,மியை விட்டகன்று) “முற்றிலும்‌ பைங்கிளியும்‌ பந்துமூசலும்‌ பேசுகின்ற சிற்றில்‌ மென் பூவையும்‌ விட்டகன்ற செழுங்கோதை”‘ (திருமொழி 3 – 7 – 8) என்று ஒருவராலும்‌ விட வொண்ணாத ஜந்ம பூ,மியான ஸம்ஸார விபூ,தியை விட்டகன்று.

முற்றிலும் பைங்கிளியும் பந்தும் ஊசலும் பேசுகின்ற
சிற்றில் மென் பூவையும் விட்டகன்ற செழும் கோதை தன்னைப்

பெற்றிலேன் முற்றிழையை பிறப்பிலி பின்னே நடந்து
மற்றெல்லாம் கை தொழப் போய் வயலாலி புகுவர் கொலோ ?–3-7-8–சிறு கூட்டிலே நின்று பேசா நின்ற மிருது ஸ்வபாவமான பூவையையும் விட்டகன்ற-லிலோ உபகரணங்களை விட்டு அவனைப் பற்றின பின்பு உடம்பிலே பிறந்த பௌஷ்கல்யம்-முன்னே போக விட்டு கடைப் பணியும் கொக்கு வாய் கூட்டமும்
கண்டு பின்னே போகப் பெற்றிலேன்

நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து
அன்று வெக்கணைக் கிடந்தது என்னிலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே –64—நான் திருவடிகளில் தலை சாய்க்கைகாக ஸ்ர்ஷ்டி காலத்தில் நாம ரூபங்களை தந்து அருள –விஷயாந்தர ப்ராவண்யத்தால் அனுபவிக்கப் பெற்றிலேன் –ஆத்மாவுக்கு ஜன்மம் ஆகிறது ஜ்ஞான லாபம் ஆகையாலே அஜ்ஞனனாய்ப் போனேன்-பிறந்த பின்பு மறந்திலேன் – அவன் க்ர்ஷியாக எனக்கு அறிவு பிறந்தபின் மறந்து அறியேன் –

சூழ் விசும்பிற் படியே உடன் சென்று-அதாவது –-சூழ் விசும்பு-10-9-1–என்கிற திரு வாய் மொழியில் சொல்லுகிறபடியே அர்ச்சிராதி மார்க்கத்தாலே வழி உள்ளார் அடைய சத்கரிக்க – அங்கு அவனோடும் உடன் சென்று -நாச்சியார் -6-10-என்கிறபடி–நயாமி-ஸ்ரீ வராஹ சரமம்–என்கிற நாயகன் முன்பே போக -பின்னே போய் –குடைந்து நீராடி- –அதாவது – குள்ளக் குளிர குடைந்து நீராடி -திருப்பாவை -13-என்கிறபடியே பர்த்ரு கிருஹத்துக்கு போகிற பெண் அவ்வூர் எல்லையிலே சென்றவாறே அவர்கள் குளிப்பாட்ட குளிக்குமா போலே அம்ருத வாஹிநியான விரஜையிலே -இப்பால் உள்ள அழுக்கு அறும்படி நீராடி –

(சூழ்‌ விசும்பிற் படியே) ““சூழ் விசும்பு’” என்கிற திருவாய்மொழியில் படியே அர்ச்சிராதி,மார்க்கஸ்த,ரா யிருக்கிற அர்ச்சிராதி,புருஷர்களடைய அடைவே ஸத்கரிக்க. (உடன்‌ சென்று) “அங்கவனோடுடன் சென்று”? (நா. தி. 6 – 9) என்கிறபடியே அவன்‌ முன்னே போகப்‌ பின்னே போய்‌. (குடைந்து நீராடி) “’குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே”” (திருப்பாவை 13) என்கிறபடியே பர்த்ரு க்‌,ருஹத்துக்குப் போம்‌ பெண்ணை அவ்வூர்க்‌குளக் கரையில்‌ குளிப்பாட்டக் கடவர்களிறே, அப்படியே விரஜைக் கரையிலே இப்பாலுள்ள அழுக்கறும்படி நீராடி

சூழ் விசும்பு -பிரவேசம் –வேதாந்தங்களில் பிரசித்தமான அர்ச்சிராதி கதி மார்க்கத்தையும் -சரீர விஸ்லேஷ சமயத்தில் வரும் கிலேசம் எல்லாம் ஆறும் படி தானே வந்து முகம் காட்டும் படியையும் –
மார்க்கஸ்தரான புருஷர்களுடைய ஸத்காரங்களையும் -அம்மாக்கத்தாலே போய்ப் புகக் கடவ பரம பதத்தையும் நித்ய ஸூரிகள் வந்து ஆதரிக்கும் படியையும் -பிராட்டிமாரும் ஸ்ரீ வைகுண்ட நாதனும் எதிரே வந்து ஆதரிக்கும் படியையும் – நித்ய ஸூரிகள் சேவிக்க பிராட்டிமாரோடு வீற்று இருந்து அருளுகிற படியையும் –பரம ப்ராப்யரான நித்ய ஸூ ரிகள் நடுவே தாமே ஆனந்த நிர்ப்பரராய் இருக்கும் படியையும் காட்டி அருளக் கண்டு ப்ரீதராய் -அத்தை அந்யாபதேசத்தாலே பேசி அனுபவிக்கிறார்

குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலம் செய்து மண நீர்
அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனைமேல்
மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்–6-10—அவற்றை வீதியிலே தானும் தோழன்மாருமாக ஆனை ஏறி வந்தான் என்றது இறே-இப்போது-தானும் அவனுமாக அங்கே ஆனைக் கழுத்திலே புக்கு வலமாக வந்து-இருவரையும் கூட வைத்து – உடன் மண நீராட்டினார்கள் யாய்த்து

புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்
பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுப்
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளந் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்குடைந்து நீராடாதே-கிருஷ்ண விரஹ ஆற நீராடப் போகாதே நமக்கு கிருஷ்ண விச்லேஷம் பிறவாமைக்கும் கிருஷ்ண குணங்களிலே அவஹாகித்து அனுபவிக்கப் பெறாதே–அவனைப் பிரிந்த வ்யசனம் எல்லாம் நிஸ் சேஷமாய் போம்படி  கால ஷேப கூடத்திலே பிரவேசித்து பகவத் அனுபவத்தைப் பண்ணாதே –

வியன் துழாய் அஞ்சனத்தின் நீறு நானப்பொடி பீதகவாடை பல்கலன் கொண்டு நோக்கியர் அலங்கரித்து –அதாவது –-குளித்தேறின பெண்ணைப் பர்த்ரு பந்துக்களான ஸ்திரீகள் வந்து அலங்கரிக்குமா போலே –-வியன் துழாய் கற்பு என்று சூடும் -மூன்றாம் திருவந்தாதி -69-என்றும் ,
ஆரார் அயிர் வேல் கண் அஞ்சனத்தின் நீர் அணிந்து–சிறிய மடல் -10-என்றும் ,-மெய் திமிரு நானப் பொடி –பெரியாழ்வார் -1-4-9–என்றும் ,-உடுத்துக் களைந்த நின் பீதகவாடை-திருப்பல்லாண்டு -9-என்றும் ,-பல் கலனும் யாம் அணிவோம் -திருப்பாவை -27-என்கிறபடியே-அலங்கார உபகரணங்களான திவ்ய மால்ய -திவ்ய அஞ்சன -திவ்ய சூர்ண –திவ்ய வஸ்த்ர -திவ்ய ஆபரணங்களை –-தம் பஞ்ச சதான் யப்சரஸாம் பிரதிதாவந்தி சதம் மாலா ஹஸ்தா –சதம் அஞ்சன ஹஸ்தா -சதம் சூரண ஹஸ்தா
-சதம் வாசோ ஹஸ்தா -சதம் பூஷண ஹஸ்தா
–கௌஷீதகி-என்கிறபடியே ஏந்திக் கொண்டு –
மானேய் நோக்கியரான-5-8-1– திவ்ய அப்சரஸ் ஸூக்கள் எதிரே வந்து –-தம் ப்ரஹ்ம அலங்காரேண அலங்குர்வந்தி- கௌஷீதகி – என்கிறபடியே-போக்த்ரு பூத ஈஸ்வர போக்யமாம் படி அலங்கரித்து-

வியன்துழாய்‌ அஞ்சனத்தின்‌ நீறு என்று தொடங்கி) ““வியன்துழாய்க்கற்பென்று சூடும்‌” (மூ.திரூவ. 69), “’ஆராரயில் வேற்கணஞ்சனத்தின்‌ நீறணிந்து’‘ (சி.மடல்‌),, “மெய்திமிரு நானப்பொடி “” (பெரியா.தி. 1-49), ‘“பெருமானரையில்‌ பீதக வண்ணவாடை” (நா.தி. 13 – 1), “பல்கலனும்‌ யாமணிவோம்‌”’ (திருப்பாவை 27) என்றும்‌, “தம்‌ பஞ்சஸ தாந்ய ப்ஸரஸாம்‌ ப்ரதிதா வந்தி மதம்‌ மாலா ஹஸ்தா? ஸதம்‌ சூர்ண ஹஸ்தா? தம்‌ வாஸோ ஹஸ்தா?”’ (கெளஷீ- உப.) என்று குளக்கரையிலே பர்த்தாவினுடைய பந்துக்கள்‌ வந்து அலங்கரிக்குமாப்‌ பாலே திவ்யாலங்காரோப கரணங்களை ஏந்திக்‌ கொண்டு மானேய்‌ நோக்கிகளான ஐந்நூறு திவ்யாப்ஸரஸ்ஸூக்கள்‌ எதிரே வந்து “தம்‌ ப்‌,ரஹ்மாலங்காரேணா லங்குர்வந்தி” (கெளஷீ- உப.) என்கிறபடியே பர விநியோகார்ஹமாம்படி அலங்கரித்து.

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும்
கருங்குழல் மேல் -மற்பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும் —–69—ஏதேனும் ஒரு பூவைச் சூட நினைத்தாள் ஆகில்-காட்டுப் பூ சூடாள்–தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம்-என்கிறபடியே விஸ்மயமான திருத் துழாய் அல்லது குழலிலே வையாள்–கற்பு என்று பாதி வ்ரத்யம் –

ஆராயில் வேற்கண் – அஞ்சனத்தின் நீர் அணிந்து – சீரார் செழும் பந்து -கொண்டு அடியா நின்றேன் நான் –அழகும் கூர்மையும் ஆர்ந்த கண் –அழகுக்கு இடுகிறது அன்று இறே –மங்களார்த்த மாக அஞ்சனம் இட்டு –அயில் வேல் கண் அஞ்சனத்தின் நீர் அணிந்து – கடைந்த பாத்திரத்திலே நெய் இட்டால் போலே 

மெய் திமிரும் நானப் பொடியோடு  மஞ்சளும்
செய்ய தடம் கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும்
வெய்ய கலைப்பாகிக் கொண்டு  உவளாய் நின்றாள்
அய்யா அழேல் அழேல் தாலேலோ அரங்கத்து அணையானே தாலேலோ -1 3-9 –திருமேனியில் மர்திக்கைக்கு ( ஈசுவதற்கு ) ஈடான -சந்தன கஸ்தூரி கர்பூராதி சுகந்த தரவ்ய சமுதாய சூர்ணத்தோடே நிறம் பெற சாத்த தக்க மஞ்சள் பொடியும் –

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா வுன்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெரும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பல் கலனும் யாம் அணிவோம்
ஆடை யுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்–27–யாம் அணிவோம் –-ஆபரணங்களுக்கு அழகு கொடுக்க வல்ல அவயவங்களிலே கிடந்து தானும் நிறம் பெற்று – பூட்டின தானும் நிறம் பெற்று போம்படி வடிவு படைத்த நாங்கள் –இவ் வெல்லை வரும் வளவு இறே மலரிட்டு நாம் முடியோம் என்றது –
நாம் முடியோம் என்றால் பூட்ட மாட்டான்-அணிவோம் என்றால் பூட்டாது இருக்க மாட்டான் — அவன் அலங்கரிக்கைக்கு இவர்கள் அனுமதியே அமையும்-

பல்லாண்டு இசைத்து கவரி செய்ய –-அதாவது – தொக்கு பல்லாண்டு இசைத்து கவரி செய்வர் ஏழையரே –திருவாய் -7-6-11–என்கிறபடியே இவ் விஷயத்தில் கிஞ்சித் கரிக்கையில் உண்டான சாபலம் தோற்ற திரள நின்று மங்களாசாசனம் பண்ணி சாமரம் பணிமாற-நிறை குடம் விளக்கம் ஏந்தி இள மங்கையர் எதிர் கொள்ள –அதாவது –அலங்குருதையாய் உபலால நத்தோடே செல்லுகிற பெண் -பர்த்ரு கிருஹத்தை அணுகச் சென்றவாறே – அங்குள்ள ஸ்திரீகள் மங்கள தீபாதிகளை ஏந்திக் கொண்டு எதிரே வந்து சத்கரிக்குமா போலே – நிதியும் நற் சுண்ணமும் நிறை குட விளக்கமும் மதி முக மடந்தையர் ஏந்தினர் –10-9-10–என்கிறபடியே மங்கள அவஹமான பூர்ண கும்பாதிகளைத் தரித்துக் கொண்டு , சதிர் இள மங்கையர் தாம் வந்து எதிர் கொள்ள-10-9-10- என்கிறபடியே நித்ய யவ்வன ஸ்வபாவைகளான வேறு சில திவ்ய அப்சரஸ்ஸூகள் எதிர் கொள்ள –

(பல்லாண்டிசைத்துக் கவரி செய்ய) இவர்கள் விஷயத்தில்‌ சாபலத்தாலே மங்களாஸாஸநம்‌ பண்ணிச்‌ சாமரமிட. (நிறைகுட விளக்கமேந்தி இளமங்கையரெதிர் கொள்ள] “நிதியும்‌ நற்சுண்ணமும்‌ நிறைகுடவிளக்கமும்‌ மதிமுக மடந்தையர்‌”‘ (திருவா. 10 – 9-10) என்று மங்களாவஹமான மங்கள தீப பூர்ண கும்பங்களையும்‌ தரித்துக் கொண்டு. “சதிரிளமங்கையர்‌ தாம்‌ வந்தெதிர் கொள்ள”” (நா.தி. 6 – 5) என்று நித்ய நவயெளவந ஸ்வபாவைகளான வேறே சில திவ்யாப்ஸரஸ்ஸுக்கள்‌ எதிர் கொள்ள.

புக்க அரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த
சக்கரச் செல்வன் தன்னைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன
மிக்க ஒர் ஆயிரத்துள் இவை பத்தும் வல் லார் அவரைத்
தொக்குப் பல்லாண்டிசைத்துக் கவரி செய்வர் ஏழையரே.–7-6-11-
பகவத் விஷயத்தில் உள்ளன வெல்லாம் சொன்ன இப்பத்தை கற்றவர்களை-தொக்குப் -திரண்டு-பல்லாண்டிசைத்துக் -மங்களா சாசனம் பண்ணி-கவரி செய்வர் ஏழையரே.–ஈஸ்வரன் பக்கல் பண்ணக் கடவ அசாதாரண பரிசரியையும் பண்ணுவர்கள் மதி முக மடந்தையர் -நெடு நாள் சம்சாரத்தில் பட்ட கிலேசம் எல்லாம் போம்படி ஆதரிப்பர்கள் –

விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–10-9-10-
–அவ்வளவில் பகவத் பரி சாரிகைகள் வந்து எதிரே நிற்பார்கள் -வைஷ்ணவர்களுக்கு நிதியான திருவடி நிலைகளையும் -திருச் சுண்ண பிரசாதத்தையும் -நிறை குடங்களையும் -மங்கள தீபங்களையும் ஏந்தி-மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–தேசாந்திரம் போன பிரஜை வந்து கிட்டினால் தாய் முகம் குளிர்ந்து இருக்குமா போலே ஹர்ஷத்தாலே பூர்ண சந்திரனைப் போலே இருக்கிற முகங்களை யுடையவர்கள் வந்து எதிர் கொண்டார்கள் –

கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்தி
சதிரள மங்கையர் தாம் வந்து எதிர் கொள்ள
மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டெங்கும்
அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்—-6-5–சதிரள மங்கையர் தாம் வந்து எதிர் கொள்ள
நிறை குட விளக்கமும் மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே –திருவாய் மொழி -10-9-10-என்னக் கடவது இறே-தங்கள் பருவத்தாலும் வடிவு அழகாலும் தங்களையே எல்லாரும் கடாஷிக்கும் படி இருக்கிறவர்கள் தாங்கள் கவிழ்ந்து முன்னடியைப் பார்த்து கொடு வந்து எதிர் கொள்ள –

வைகுந்தம் புக்கிருந்து –அதாவது – உபலால நத்தொடு சென்ற பெண் பர்த்ரு க்ரஹத்திலே புகுருமா போலே – மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கிருப்பார் -நாச்சியார் -3-10–என்கிறபடியே – ஸ்ரீய பதி யானவனுக்கு போக ஸ்தானமான ஸ்ரீ வைகுண்டத்தை ப்ராபித்து -அவனோடு கூடி இருந்து –வாய் மடுத்து பெரும் களிச்சியாக வானவர் போகமுண்டு-அதாவது – பர்த்ரு க்ரஹத்திலே பெண் வந்த பின்பு , தம்பதிகளும் மற்றும் உள்ள பந்துக்களும் கூடி இருந்து பெரும் களிச்சி உண்ணுமா போலே —
அடியார்கள் குழாங்களும்-2-3-10- அவனுமாக இருக்கிற சேர்த்தியிலே –அடியேன் வாய் மடுத்து பருகிக் களித்தேன் -2-3-9–என்று பெரும் களிச்சியாக பெரும் முழு மிடறு செய்து –கட்டு எழில் வானவர் போகம் உண்பாரே –6-6-11–என்கிறபடியே – நித்ய சூரிகள் புஜிக்கிற போகத்தை – சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ராஹ்மணா விபிச்சதா –தைத்ரியம் –என்கிறபடியே புஜித்து –

(வைகுந்தம்‌ புக்கிருந்து) ‘“மன்னிய மாதவனோடு வைகுந்தம்‌ புக்கிருப்பார்‌” (நா.தி. 3 10) என்று ஸ்ரீயபதியான ஸர்வேஸ்வரனோடே தேஸ விஸேஷ ப்ராப்திபண்ணி. (வாய்‌ மடுத்துப் பெருங் களிச்சியாக வானவர் போகமுண்டு) பின்பு பர்த்ரு க்‌ருஹத்திலே தம்பதிகளும்‌ மற்றுமுள்ள பந்துக்களும்‌ பெருங்களிச்சி யுண்ணக் கடவரிறே; அப்படியே ““அடியேன்‌ வாய் மடுத்துப் பருகிக்‌ களித்தேன்‌” (திருவா. 2 – 3 – 9) என்றும்‌, ““கட்டெழில்‌ வானவர்‌ போகமுண்பாரே”” (திருவா, 6 – 6 – 11) என்றும்‌ நித்ய ஸூரிகளுடைய போகத்தை அவர்களோடொக்க முழு மிடறு செய்து ““ஸோஸ்நுதே ஸர்வாந்‌ காமாந்‌ ஸஹ ப்‌ரஹ்மணா விபஸ்சிதா’‘ (தை. உப.) என்கிறபடியே புஜித்து.

கன்னியரோடு எங்கள் நம்பி கரியபிரான் விளையாட்டை
பொன்னிய மாடங்கள் சூழ்ந்த புதுவையர் கோன் பட்டன் கோதை
இன்னிசை யால் சொன்ன மாலை ஈரைந்தும் வல்லவர் தாம் போய்
மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கிருப்பாரே–3-10—நித்தியமான ஸ்ரீ வைகுண்டத்திலே போய்
ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரன் உடன் கூட நித்ய அனுபவம் பண்ணப் பெறுவர்-

களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக் கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான்நிலம் சுடர் ஆழி சங்கேந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே -2-3-10—இவன் தன்னையே அன்றிக்கே இவனுடைய ரக்ஷகத்வத்திலே தோற்று இருக்கும் ததீயர் திரள்களை –-குழாங்களையே –
திரளாக வேணும் -அது தான் அநேகமாக வேணும்-இவ்விஷயத்துக்கு உசாத் துணையாம் போது அசங்க்யாதராக வேணும் என்று இருக்கிறார் –

கடிவார் தண்ணம் துழாய்க் கண்ணன் விண்ணவர் பெருமான்
படிவானம் இறந்த பரமன் பவித்ரன் சீர்
செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்தாடி
அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே
–2-3-9—வாயும் திரையுகளில் தூறு மண்டின கிலேசம் எல்லாம் போம்படி சாம்சாரிக துரிதம் என்னவுமாம்-படிந்து -சென்று கிட்டி குடைந்து -எங்கும் புக்கு
ஆடி -அவகாஹித்து-அடியேன் வாய் மடுத்துப் பருகிக் -பெரு விடாயோடே அனுபவித்து
களித்தேனே-இதர விஷய ஸ்பர்சம் துக்கமே யானால் போலே-பகவத் குண அனுபவம் களிப்பே யாகக் கடவது –

கட்டெழில் சோலை நல் வேங்கட வாணனைக்
கட்டெழில் தென்குரு கூர்ச்சட கோபன்சொல்
கட்டெழில் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர்
கட்டெழில் வானவர் போகம் உண்பாரே.
–5-6-11–பெரிய வானவர் -போக விசேஷணம் ஆகவுமாம் -சம்சாரத்தில் போகம் கர்ம நிபந்தம் ஆகையால் அல்பமாய் அஸ்திரமாய் இருக்கும் இறே -ஸ்வரூப அனுரூபம் ஆகையால் சம்ருத்தமாய் நித்தியமாய் இருக்கை –

கோப்புடைய கோட்டுக் கால் கட்டில் மிதித்து ஆரோஹித்து – அதாவது – பர்த்ரு சம்ச்லேஷத்துக்குப் படுக்கையிலே ஏறுமா போலே – கோப்புடைய சீரிய சிங்காசாசனம்-திருப்பாவை -23-என்றும்
கோட்டுக் கால் கட்டில் –திருப்பாவை 19-என்றும் சொல்லுகிற படி உபய விபூதியும் தொழிலாக வகுப்புண்டு சர்வ ஆஸ்ரயமான திவ்ய பர்வங்கத்திலே – தமேவம் வித் பாதேநாத் யாரோஹதி -கௌஷீதகி -1-5-என்கிறபடியே பாத பீடத்திலே அடி இட்டு ஏறி –பாரத அக்ரூர மாருதிகளை பரிஷ்வங்கித்த மணி மிகு மார்பிலே –அதாவது – தம் சமுதாப்ய காகுஸ்தஸ் சிரஸ்யாஷிபதம் கதம்
அங்கே பாரதமா ரோப்ய முதித பரிஷச்வஜே –
என்றும் –சோப்யேனம் த்வஜ வஜ்ராப்ஜக்ருத சிஹ்நேன பாணினா சம்ச்ப்ருஸ் யாக்ருஷ்யச ப்ரீத்யா ஸுகாடம் பரிஷஸ்வஜே –யுத்த -130-39–என்றும் ,
ஏஷ சர்வஸ்வ பூதஸ்து பரிஷ்வங்கோ ஹனுமதா மயா காலமிமம் ப்ராப்ய தத்தஸ் தஸ்ய மஹாத்மன -யுத்த -1–13– என்றும் சொல்லுகிறபடி , ஸ்ரீ பரத ஆழ்வானையும் அக்ரூரரையும் திருவடியையும் ஆதரித்து அணைத்துக் கொண்ட – மணி மிகு மார்பு-10-3-5– -என்று ஸ்ரீ கௌஸ்துபம் நிறம் பெரும் படி அழகிய திரு மார்பிலே ..

(கோப்புடைய கோட்டுக்கால்‌ கட்டில்‌ மிதித்து ஆரோஹித்து) பின்பு பர்த்ரு ஸம்ஸ்லேஷத்துக்குப்‌ படுக்கையிலே ஏறக் கடவதிறே; அப்படியே ““கோப்புடைய சிங்காசனம்‌” ( திருப்பாவை 23) என்றும்‌, ““குத்துவிளக்கெரியக்‌ கோட்டுக்கால்‌ – மெத்தென்ற பஞ்ச சயனத்தின்மேலேறி”” (திருப்பாவை 19) என்றும்‌ சொல்லுகிறபடியே உபய விபூ,தியும்‌ தொழிலாக வகுப்புண்ட ஸர்வாஸ்சர்ய மயமான சீரிய சிங்காசனத்திலே “’தமேவம் வித்‌பாதே,நாத்‌, யாரோஹதி” (கெளஷீ. 1 – 5) என்கிறபடியே பாத பீடத்திலே அடியிட்டேறி,(பரதாக்ரூரமாருதிகளைப்‌ பரிஷ்வங்கித்த மணிமிகுமார்விலே) “அங்கே பரதமாரோப்ய முதித பரிஷஸ்வஜே”’ (ரா. யு. 130 – 41) என்றும்‌, “ஸோப்யேநம்‌ த்‌வஜ வஜ்ராப்ஜ க்ருத சிஹ்நேந பாணிநா । ஸம்ஸ்ப்ருஸ்யாக்ருஷ்ய ச ப்ரீத்யா ஸுகாட,ம்‌ பரிஷஸ்வஜே”” (வி.பு. 5 – 18 – 2) என்றும்‌, ““ஏஷ ஸர்வஸ்வபூ,தஸ்து பரிஷ்வங்கோ ஹநூமத?”’ (ரா. யு. 1 – 13) என்றும்‌, ஸ்ரீபரதாழ்வானையும்‌, அக்ரூரனையும்‌, திருவடியையும்‌ அணைத்த மணி மிகு மார்விலே – ஸ்ரீகௌஸ்துப,மும்‌ நிறம்பெறும்படி அழகுமிக்க திருமார்பிலே,

மாரி மலை முழஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க வெப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப் பூ வண்ணா வுன்
கோயில் நின்று இங்கனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
கார்யம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்–23—சராசரங்களை அடைய தொழிலாக வகுப்புண்டிருக்கை – உபய விபூதியும் தொழிலாக வகுப்புண்டிருக்கை -என்னவுமாம் தர்ம ஜ்ஞானாதிகளாலும் அதர்ம அஜ்ஞானாதிகளாலும் கோப்புடைய சிம்ஹாசனம் -என்றுமாம் –உபய விபூதியில் உண்டான சராசர பதார்த்தங்களை அடங்கலும் தொழிலாக வகுப்புண்டு இருக்கை-சீரிய சிங்கத்துக்கு சத்ருசமான ஆசனம்-ஓர் அணு சென்று அடியிடிலும் கிருஷ்ணனோடு ஸாம்யா பத்தியைக் கொடுக்கும் ஆசனம் –

குரு மா மணியாய் அணையும் வஸ்துவுக்கு –அதாவது –-குரு மா மணிப் பூண் –பெரியாழ்வார் -1-3-10-என்று ஸ்லாக்கியமாய் ஈஸ்வரத்வ சிஹ்நமான ஸ்ரீ கௌஸ்துபத்தோ பாதி போக்யமாய் தேஜஸ்கரமாய்க் கொண்டு அணிகிற ஆத்ம வஸ்துவுக்கு (திரு மார்பில் சம்பந்தத்தால் மணிக்கு ஏற்றம் -புருடன் மணி வரமாக -ஸ்ரீ தேசிகன்)–மணி வல்லி பேச்சு வந்தேறி அல்ல – அதாவது – வண் பூ மணி வல்லி –திருவிருத்தம் –9 -என்று உதாரமாய் போக்யமாய் தனக்குத் தானே ஆபரணமாம் படி அழகியதாய் கொள் கொம்பு பெறா விடில் தலை எடுக்க மாட்டாமை தரைப் பட்டு கிடக்கும் கொடி போன்றவள் என்கிற ஸ்த்ரீத்வ பிரயுக்தமாய் வரும் பேச்சு வந்தேறி அன்று —ஸ்வாபாவிகம் என்ற படி
பெண் பேச்சு என்ன அமைந்து இருக்க மணி வல்லி பேச்சு என்றது – மணி மிகு மார்பில் மணியாய் அணையும் -என்றதோடு ஒக்க -மணி வல்லி –என்றால் சொற் கட்டளையால் வரும் ரசம் உண்டாகையாலே –இத்தால் ஸ்த்ரீத்வம் ஆத்மாவுக்கு ஸ்வபாவிகம் ஆகையாலே ,அத்தை
உள்ளபடி தர்சித்த இவர்க்கு தத் பிரயுக்தமான பேச்சு ஸ்வபாவிகம்
என்று சொல்லிற்று ஆய்த்து-

(குருமாமணியாயணையும்‌ வஸ்துவுக்கு) ஸ்லாக்‌யமாய்‌, ஸர்வேஸ்வரத்வ சிஹ்நமான அந்த ஸ்ரீகெளஸ்துபத்தோபாதி அவனுக்கு போக்‌யமுமாய்‌, தேஜஸ்கரமுமாய்க்‌ கொண்டு அணைகிற ஆத்ம வஸ்துவுக்கு. (மணிவல்லிப் பேச்சு வந்தேறியன்று) ““வண்பூ மணி வல்லி யாரே பிரிபவர் தாம்‌”’ (திருவிரு. 9) என்று உதாரமாய்‌, அழகு மிக்கதாய்‌, ஸ்லாக்‌யமான கொடி போன்றவள்‌ என்கிற ஸ்த்ரீத்வ ப்ரயுக்தமாய்‌ வருகிற பேச்சு வந்தேறி யன்று, ஸ்வாபாவிகம்‌ என்கிறார்‌.

பெரு மா உரலில் பிணிப்பு உண்டு இருந்து அங்கு
இரு மா மருதம் இறுத்த இப்பிள்ளை
குரு மா மணிப் பூண் குலாவித் திகழும்
திரு மார்வு இருந்தவா காணீரே
சேய் இழையீர் வந்து காணீரே -1-2-10–கௌஸ்துப ஆபரணம் -ஸ்ரேஷ்டமாய் ஸ்லாக்கியமான ஆபரணம் –கௌஸ்துபம் -நீல நாயகம் -ஜீவாத்மாவுக்கு பிரதிநிதி
அஸ்திர பூஷண அதிகாரம் – பரத அக்ரூர மாருத -பிரக்ருதிகளை ஆலிங்கனம்-திகழ்கின்ற திரு மங்கை திரு மார்பு -அலர்மேல் மங்கை உறை மார்பன்-துளஸீ பிராட்டி கௌஸ்துபம் -பரமன் பறை சாற்றும்
கூர்ம வியாக்ர ஐம்படைத்தாலி -எளிமை பறை சாற்றும் )

திண் பூஞ்சுடர்  நுதி நேமி யஞ்செல்வர் விண்ணாடனைய
வண்  பூ மணி வல்லி யாரே பிரிபவர் தாம் இவையோ
கண் பூங்கமலம் கருஞ்சுடராடி வெண் முத்தரும்பி
வண் பூங்குவளை மடமான் விழிக்கின்ற மாயிதழே
–9–மணி வல்லி –தனக்குத் தான் ஆபரணமாய் இருக்கிற படி-நாயகன் கழுத்தைக் கட்டிக் கொண்டு இருக்க வேண்டிய கொடி –-கழுத்தைக் கட்டிக் கொண்டு கண்ணும் கண்ண நீருமாய் இருக்கிறபடி –-ஒரு கொம்பிலே சேர்க்க வேண்டி இருக்க நிலக்கிடை கிடக்கிற படி –(துவண்டு அன்றோ கிடக்கிறாள் )ஆரே பிரிபவர் தாம்-பிரணயித்வம் இல்லாமை யாகிலும் சைதன்யம் இல்லையோ –வண் பூ மணி வல்லி-–ஆழ்வார் திரு நாமம் –மணி வல்லிப் பேச்சு வந்தேறி அன்றேகோல் தேடி ஓடும் கொழுந்தே போன்றதே மால் தேடி ஓடும் மனம் -பாரதந்தர்யமே வடிவானவள்-வண் பூ மணி வல்லி-தர்ச நீயமான புஷ்போத் கமத்தை உடைத்தாய் ஸ்லாக்யமான கொடி போன்றவளை (பூ மலர்ந்த கொடி )

–——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌ – 6 — ப,க்திபாதம்-8–ஜ்ஞாந ப,க்த்யதி கரணம்‌ -பகுதி-2-(102-117)-ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

July 14, 2026

(1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 284 முடிய (48)

(1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-284 (27)

6 — ப,க்திபாதம் -—97–121—-25-இதிலே 2 அதிகரணங்கள்
8–ஜ்ஞாந ப,க்த்யதி கரணம்‌ 97 –117—மொத்தம் -21 —ஸூரணைகள்
பகுதி -1-97-101-ஸூரணைகள்–பகுதி -2–102–117-ஸூரணைகள்-
9-ஜ்ஞாந ப,க்த் யவஸ்தா ஸூக்தி அதிகரணம் –118-121—மொத்தம் –4 —ஸூரனைகள் –

இங்கன் அன்றிக்கே ,இவருடைய இந்த பரம பக்தி -கர்ம ஞான பக்திகள் ஆகிய சாதன த்ரயத்தையும் ,
இஜ் ஜென்மத்திலே அனுஷ்டிக்கையாலே யாதல் , பூர்வ ஜென்மங்களில் அப்யாசத்தாலே ஆதல் ,
உண்டானதாலோ என்கிற சங்கையில் , இரண்டு படியாலும் வந்தது அன்று என்னும் இடத்தை இவர் தம்முடைய உத்திகளாலே சாதிக்கிறார்-
இவருடைய பரபக்தி ஜந்மாந்தரங்களிலே கர்ம ஜ்ஞாநாதிகளை அநுஷ்டித்து தத் பலமாய்க் கொண்டு வந்ததானாலோ என்னில்‌, ஜந்மாந்தரங்களில்‌ அவை தமக்கு இல்லை என்னுமிடம்‌ தாமே அருளிச் செய்தார்‌ என்கிறார்‌

இடகிலேன்-நோன்பறிவிலேன் கிற்பன் கீழ் நாள்கள்-என்கையாலே சாதன த்ரய பூர்வ அப்யாசஜம்
அல்ல-சூரணை-102-

(இடகிலேன் என்கையாலே-நோன்பறிவிலேன் என்கையாலே-கிற்பன் என்கையாலே-கீழ் நாள்கள் என்கையாலே-சாதன த்ரய ஜம் அல்ல -பூர்வ அப்யாச ஜம் அல்ல- அப்யாஸ ஜம் -செய்து போந்த வாற்றால் உண்டாவது )-இடகிலேன் என்கையாலே –அதாவது –இடகிலேன் ஓன்று அட்டகிலேன் ஐம்புலன் வெல்லகில்லேன் கடவனாகிக் காலம் தோறும் பூப்பறித்து ஏத்தகில்லேன் —
தடவுகின்றேன் எங்குக் காண்பன் சக்கரத்து அண்ணலையே திருவாய் -4-7-9-
-பசித்தாருக்கு சோற்றை இடுதல் ,தாஹித்தாருக்கு தண்ணீர் வார்தல் செய்தேன் ஆகில்-யஜ்ஞோ தான தப கர்ம -ஸ்ரீ கீதை -18-5–என்கிற படியே ,–தானமும் கர்ம யோக அந்தர் பூதமாகையாலே கர்ம யோகத்திலே நிவேசிப்பிக்கலாம் ,,அது செய்ய மாட்டுகிறேலேன் – இந்திரியங்களை விஷயத்தில் போகாத படி நியமித்தேன் ஆகில் ,
ஞான யோகத்தில் நிவேசிப்பிக்கலாம் –அதுவும்செய்ய மாட்டுகிறலேன்,-நியதனாய் கொண்டு சாஸ்த்ரோக்தமான காலங்களிலே , புஷ்பயாதி உப கரணங்களை சம்பாதித்துக் கொண்டு ஆராதித்து ஸ்துத்திதேன் ஆகில் பக்தி சரீரத்தில் நிவேசிப்பிக்கலாம் அதுவும் செய்ய மாட்டுகிறலேன் என்றும் –

““இடகிலேன்‌ ஒன்றட்டகில்லேன்‌ ஐம்புலன்‌ வெல்லகில்லேன்‌ கடவனாகிக் காலந் தோறும்‌ பூப்பறித்‌தேத்த கில்லேன்‌’” (திருவா. 4 – 7 – 9) என்று பகவத்‌ விபூதி பூதர்‌ என்று அந்ந பாநாதிகளை பூதங்களுக்கு இட்டுக்கொடுபோரில்‌ கர்ம யோகத்திலே நிவேஸிப்பிக்கலாம்‌, இந்த்‌ரிய ஜயம்‌ பண்ணினேனகில்‌ ஜ்ஞாந யோகத்திலே நிவேஸிப்பிக்கலாம்‌. ஸாஸ்த்ரோக்தமான ப்ரகாரங்களிலே புஷ்பாத்‌ யுபகரணங்களைக்‌ கொண்டு பகவத் ஸமாராதநம்‌ பண்ணினேனாகில்‌ பக்தி யோகத்திலே நிவேஸிப்பிக்‌கலாம்‌. இவை இத்தனையும்‌ செய்யப்‌ பெற்றிலேன்‌ என்றும்‌,

இடகிலேன் ஒன்று; அட்டகில்லேன்; ஐம்புலன் வெல்லகிலேன்;
கடவனாகிக் காலந்தோறும் பூப்பறித்து ஏத்தகிலேன்;
மடவல் நெஞ்சம் காதல் கூர, வல்வினையேன் அயர்ப்பாய்த்
தடவுகின்றேன்; எங்குக் காண்பன் சக்கரத்து அண்ணலையே?
–4-7-9—இடகிலேன் ஒன்று; அட்டகில்லேன்-பசித்தார்க்கு சோற்றை இடுதல் -தாஹித்தார்க்கு தண்ணீர் வார்த்தல் செய்ய மாட்டு கிறிலேன்-யஞ்ஞா தான தப கர்ம – என்கிறபடியே தானம் கர்ம யோகாந்தர்பூதமாய் இருக்க -அதுக்கு ஆள் ஆகிறிலேன்-என்கை –ஐம்புலன் வெல்லகிலேன்;-அர்த்த லோபத்தாலே அவை செய்யா விட்டால் இந்திரியங்கள் விஷயத்தில் பட்டி புகாத படி நியமிக்க மாட்டிற்று இலேன்-கடவனாகிக் -நியதனாய்
காலந்தோறும் பூப்பறித்து ஏத்தகிலேன்;-சமாராதனத்துக்கு விஹிதமான காலத்தில் -திருப் பள்ளித் தாமம் பறித்தல் பரிமாறுதல் செய்யப் பெற்றிலேன் –சததம் கீர்த்த யந்த-என்கிறபடி திரு நாம சங்கீர்த்தனம் பண்ணிற்று இலேன்-இவை உண்டாயிற்றாகில் பக்தி சரீரத்தில் நிவேசிக்கலாம் -அதுவும் இல்லை என்கிறார் -இவற்றினுடைய ஸ்வரூப நிஷேதம் பண்ணுகிறது அன்று –உபாயத்வத்தை நிவேதிக்கிறது –மட வல் நெஞ்சம்-மட வென்று மென்மை-பகவத் குண பிரசங்கத்தில் சிதிலமாகை
வல் நெஞ்சம் -பகவத் குணங்களில் விழுந்தால் ஈஸ்வரனாலும் மீட்க முடியாது இருக்கை –காதல் கூர, -ஸ்நேஹம்-மிக வல்வினையேன் – பிரேம அனுரூபமாக காணப் பெறாத படி பாபத்தை பண்ணின நான் –காதலுக்கு விஷயம் பெற்றேன் அல்லேன்-இத்தை அகஞ்சுரிப் பகுத்தப் பெற்றேன் அல்லேன் –
ஆசா லேசம் உடையோருக்கு முகம் கொடாதவனாய் இழந்தேன் அல்லேன் -என் பாபம் இருந்தபடி என்
அயர்ப்பாய்த் தடவுகின்றேன்-அறிவு கேட்டை உடையேனாய் முன்னே வந்து நின்றாலும் காண முடியாத படி தடவா நின்றேன்-நத்வா பச்யாமி கௌசல்யே -என்கிறபடியே-எங்குக் காண்பன்--ஒரு கைம்முதல் இன்றிக்கே இருக்க கூப்பிடா நின்றேன் -எங்கே காணப் பெறுகிறேன்-சக்கரத்து அண்ணலையே?– கையும் திரு வாழியுமான சேர்த்தியிலே யாயிற்று இவர் அகப்பட்டது –

நோன்பு அறிவிலேன் என்கையாலும் –அதாவது நோற்ற நோன்பிலேன் ,நுண் அறிவிலேன்–5-7-1–என்று
பல வ்யப்தமாம் படி அனுஷ்டிதமான கர்ம யோகம் உடையவன் அல்லேன் -அது இல்லாமையாலே ,
சூஷ்ம ரூபமான ஜீவ பர விஷய ஞான யோகத்தை உடையேன் அல்லேன் –ஆகையால் உபய சாத்யை யான பக்தி இல்லை என்னும் இடம் அர்த்தா சித்தம் என்று அருளிச் செய்கையாலே வர்த்தமான ஜென்மத்தில் கர்ம ஞான பக்திகள் ஆகிய சாதன த்ரய அனுஷ்டானத்தால் உண்டானது அல்ல

”நோற்ற தோன்பிலேன நுண்ணறிவிலேன்‌”’ (திருவா. 5 – 7 – 1) என்று பலத்தோடே வ்யாப்தமாய்‌ இருப்பதொரு கர்மத்தை அநுஷ்டிக்கப் பெற்றிலேன்‌; ஆத்ம யாதாத்ம்ய ஜ்ஞாந பூர்வகமான பகவஜ் ஜ்ஞாநத்தை உடையேனல்லேன்‌- ஆக இவை இல்லாமையாலே உபய ஸாத்‌யமான பக்தியை உடையேனல்லேன்‌ என்றும்‌

நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்று
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே.—5-7-1—நோற்ற நோன்பிலேன்-நோன்பிலேன் என்னாதே-நோற்ற நோன்பிலேன் -என்கிறது -பல வியாப்தமாம் படி யனுஷ்டித்தமாய் இருபத்தொரு கர்மம் இல்லை என்கிறது -என் ஆற்றாமையால் சில யுண்டானாலும் சக்ரவர்த்தியுடைய புத்ர காமேஷிடி போலே யாதல் -ஸ்ரீ வஸூ தேவருடைய அநந்த விரதம் போலே பல வியாப்தமாய் இருபத்தொரு தர்மம் இல்லை –ந தர்ம நிஷ்டோஸ்மி-என்கிற இடத்தில் தர்மம் இல்லை என்னாதே தர்ம நிஷ்டை இல்லை என்றால் போலே –நுண்ணறிவிலேன்-அறிவிலேன் என்னாதே –நுண்ணறிவிலேன்-என்றது ஸ்வரூப ஞான பூர்வகமாக பர ஸ்வரூபத்தை சாஷாத்கார பர்யந்தமாக அறியும் அறிவை அறிவை யுடையேன் அல்லேன் –கர்மம் இல்லை என்ற போதே -தத் சாத்தியமான ஞானம் இல்லை என்னும் இடம் அர்த்த ஸித்தமாய் இருக்க ஞானம் இல்லை என்றது என் என்னில்-பூர்வ ஜென்மத்தில் கர்மத்தை அனுஷ்ட்டித்து தத் பலமான ஞானம் இந்த ஜென்மத்தில் நைசர்க்கிகமாக பிறக்கலாம் இறே -அத்தாலே சொல்லிற்று –அன்றிக்கே-புராணங்களில் தனித் தனியே கர்ம ஞானங்களே சாதனமாக சொல்லுகையாலே சொல்லிற்று ஆகவுமாம்-பக்தி இல்லை என்னாது ஒழிவான் என் என்னில் –பக்தி யாகிறது ஞான விசேஷம் ஆகையாலே ஞானத்தை சொன்ன போதே அத்தையும் சொல்லிற்று ஆயிற்று

கிற்பன் என்கையாலே-அதாவது கிற்பன் கில்லேன் என்று இலன் முன நாளால் -3-2-6–என்று முன்பு உண்டான காலம் எல்லாம் -குர்யாத்-( செய்யத்தகும் ) -என்று நன்மை செய்ய அடுக்கும் என்றால் ,வல்லேன் என்று இசைந்திலேன் –-ந குர்யாத் ( செய்யத்தக்கது )-என்று தீமை செய்யல் ஆகாது என்றால் ,மாட்டேன் என்று தவிர்ந்திலேன் — இப்படி விஹிதத்தை செய்யாமல், நிஷிதத்தை செய்து போந்தேன் என்றும் –

(கிற்பன்‌ கீழ்நாள்கள்‌ என்கையாலே) “கிற்பன்‌ கில்லேன்‌ என்றிலன்‌ முனநானால்‌”’ (திருவா. 8 – 2 – 6] விஹிதததைச்‌ செய்து அவிஹிதத்தைத் தவிர்‌’ என்கிற விடத்தில்‌ அப்படிச்‌ செய்கிறேன்‌ என்னாதே விஹிதத்தைத் தவிரந்து அவிஹிதத்தைச் செய்து போந்தேன் நெடுங் காலம்‌ என்றும்‌-

கிற்பன் கில்லேன் என்றிலன் முன நாளால்
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்
பற்பல்லாயிரம் உயிர் செய்த பரமா நின்
நற் பொற் சோதித் தாள் நணுகுவது எஞ்ஞான்றே –3-2-6—கிற்பன்-அல்ப யத்னமாய் பஹு பலமான ஸூ க்ருதத்தைச் செய் என்றால் ஓம் என்று இசைந்து இலேன்-மித்ர பாவத்தாலே அபுநாவ்ருத்தி லக்ஷணமான போகத்தை பெறலாம் என்றால் அத்தைச் செய்வேன் என்று இலேன்-கில்லேன் என்றிலன்--இப்போது அல்பமாய் மேலே பஹ்வநர்த்தமாய் இருக்கிற விஷய ப்ராவண்யத்தை தவிர்க்கும் என்றால் -அத்தை தவிர்வேன் -என்று இலேன் – இப்படி செய்கிறது எத்தனை நாள் போரும் என்ன-முன நாளால் -நீ விசேஷ கடாக்ஷம் பண்ணுவதற்கு முன்பு எல்லாம் 

கீழ் நாள் என்கையாலே – அதாவது –-தெரிந்து உணர்வு ஓன்று இன்மையால் தீ வினையேன் –ஆழி அம் கையானை ஏத்தாது அயர்த்து —வாழா இருந்து ஒழிந்தேன் கீழ்–பெரிய திருவந்தாதி -82–என்று பகவத் விஷயத்தை அறியும் ஆராயும்-ஞானம் ஒன்றையும் இல்லாமையாலே , பகவத் அனுபவ போக்யமான காலத்தை பாழே போக்கிய பாவியேன் – பிராட்டி சொன்னது செய்தல் அல்லது ,நிற்க மாட்டாமையாலே ,மாயா மிருகத்தை அன்று பின் பற்றிப் போன –அருகாழியை திருகையிலுடைய சர்வேஸ்வரனை மங்களாசாசனம் பண்ணப் பெறாதே அறிவு கெட்டு வ்யர்தமே இருந்து விட்டேன் கீழ் உள்ள காலம் எல்லாம்-என்று அருளிச் செய்கையாலே பூர்வ ஜென்மங்களில் அப்யாசத்தால் உண்டானதும் அல்ல என்கை-

”ஆழியங்கை அம்மானை ஏத்தாதயர்த்து – தீவினையேன்‌ வாளா விருந்தொழிந்தேன்‌ கீழ் நாள்களெல்லாம்‌’” (பெரியதிருவ. 82) என்றும்‌, ஸர்வாதிகனான ஸர்வேஸ்வரனை மங்களாஸாஸநம்‌ பண்ணாதே விஸ்மரித்து அநாதி காலம்‌ வ்யர்த்தமே இருந்தேன்‌ என்கையாலும்‌, இப்படி ஜந்மாந்தரங்களில்‌ தமக்கு கர்ம ஜ்ஞாநாதிகளில்‌ அந்வயமில்லை என்று அருளிச் செய்கையாலே. (ஸாதந த்ரய பூர்வாப்‌யாஸ ஜமல்ல) ஐத்மாந்தரங்களில்‌ கர்ம ஜ்ஞாந பக்த்திகளை அநுஷ்டி,த்து தத்பலமாய்‌ வந்த பக்தியன்று என்கிறார் –

தெரிந்த உணர்வு ஓன்று இன்மையால் தீ வினையேன் வாளா
இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம்
கரந்த உருவின்
அம் மானை அந் நான்று பின் தொடர்ந்த ஆழி யங்கை
அம்மானை ஏத்தாது அயர்த்து–82—அது பத்து-இது எட்டு என்னும் ஞானம் இத்தனை அல்லது
பகவத் விஷயத்தை ஆராயும் ஞானம் ஒன்றும் இல்லாமையால்-தத் ஞானம் அஞ்ஞானம் அதோந்ய துக்தம் வித்யாந்யா சில்பநை புணம் (ஸ்ரீ விஷ்ணு புராணம் )-என்னும் ஞானம் யுண்டாகையால்-தீ வினையேன்-பகவத் அனுபவ யோக்யமான காலத்தைப் பாழே போக்கின பாபத்தைப் பண்ணினேன்-வாளா இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் குனியக் குறுணி பற்றும் காலம் எல்லாம் வ்யர்த்தமே இருந்தேன் (ஆனுகூல்ய லேசம் இருந்தாலே பேறு என்றவாறு )அவதரித்து அல்ப அநுகூலயத்திலே விஷயீ கரிக்கும் காலம் போயிற்று என்று தாத்பர்யம்-வடிவைக் கரந்து வர்த்திக்கிற அம் மாய மானை
அன்று தொடர்ந்த அருகாழியைக் கையிலே யுடைய ஸர்வேஸ்வரனை இளைய பெருமாளும் உதவாத தசையில் ஏத்தப் பெறுவது அறிவு கெட்டுக் கிடந்த நான் பழுதே போக்கினேன்-

இன்னமும் இவர் தம்முடைய திவ்ய ஸூக்தி விசேஷத்தாலே இது தன்னை வ்யக்தீகரிக்கிறார்-ஜந்மாந்தரங்களிலே ஸாதித்துப் பெற்றதன்றாகிலும்‌ இந்த ஜந்மத்திலே சில தாள்‌ ஸாதித்துப் பெற்றதானாலோ என்னில்‌, அதுவுமல்ல என்கிறார்‌

இப் பிறப்பே சில நாளில் என்ற போதே இரண்டும் கழியும்-சூரணை-103-

அதாவது-இப் பிறப்பே–சில நாளில் என்ற போதே-குறிக் கொள் ஞானங்களால் எனை ஊழி செய்தவமும் , கிறிக் கொண்டு இப் பிறப்பே சில நாளில் எய்தினன் யான்—திருவாய் -2-3-8- -என்று
யம நியமாத்ய வஹிதராய் கொண்டு சம்பாதிக்க வேண்டும்-வேதன த்யாநோபாச நாத்யவஸ்தா விசேஷங்களான ஜ்ஞானங்களாலே அநேக கல்பம் கூடி ஸ்ரவணமாய் ,மனனமாய் , த்ருவ அனு ஸ்ம்ருதியாய் வரக் கடவ பக்தி யோகமாகிற தபசினுடைய பலத்தை ஒரு யத்னமும் இன்றிக்கே இருக்க –
நல் விரகானவனாலே -இஜ் ஜென்மத்திலே -அதிலும் அல்ப காலத்திலேயே பெற்றேன் என்கையாலே –இரண்டும் கழியும் –-அதாவது-ஜென்மாந்தர அப்யாசஜம் என்றும் ,-இஜ் ஜென்மத்திலே சாதன அனுஷ்டானஜம் என்றும்-சொல்லுகிற இரண்டும் போம் என்ற படி —-இப் பிறப்பே -என்றும் -சில நாள்களில் -என்றும் இரண்டையும் அருளிச் செய்தது ஜென்மாந்தர அப்யாசத்தையும் இஜ் ஜென்மத்தில் சிரகால சாத்தியமான வற்றில் அன்வயத்தையும் வ்யாவர்த்திக்கைக்கா இறே-

அன்றிக்கே –இடகிலேன்–நோன்பு அறிவிலேன் -கிற்பன் -சில நாளில் -இத்யாதி வாக்யத்தில் எடுத்த சந்தைகள் எல்லாத்தாலும் பூர்வ ஜென்ம சித்தமான சாதன த்ரய அப்யாச பலம் இல்லாமையை சாதித்தாகவும் , அது இல்லையாகில் ,இஜ் ஜென்மத்தில் அவற்றை அப்யசித்து ,வந்தததனாலோ என்கிற சங்கை வர- பூர்வ ஜென்மங்களிலும் இஜ் ஜென்மத்திலும் இவருக்கு அவற்றில் அன்வயம் இல்லை என்னும் இடத்தை-இப் பிறப்பே -இத்யாதி -யான இவருடைய ஸ்ரீ ஸூக்தி விசேஷத்தாலே தர்சிப்பியா நின்று கொண்டு ,-உபய சங்கையும் சேரத் தள்ளுகிறார் என்று இங்கனே யோஜிக்கவுமாம் ..

இந்த யோஜனையைப் பற்றவும் , பூர்வ யோஜனையே இதனுடைய பட்டோலையான பெரிய படிக்கு சேருவது-

““குறிக் கொள் ஞானங்களால்‌ எனை யூழி செய்தவமும்‌ கிறிக் கொண்டிப் பிறப்பே சிலநாளிலெய்தினன்‌ யான்‌” (திருவா. 2 – 8 – 8) என்று யம நியமாத்‌யவஹிதராய்க்‌ கொண்டு ஸம்பாதிக்க வேண்டும்‌ வேதந-த்‌யாந-உபாஸநாத்‌, யவஸ்தா விஸேஷங்களான ஜஞாநங்களாலே அநேக கல்பம்‌ கூடி ஸ்ரவணாமாய்‌, மநநமாய்‌-த்ருவாநுஸ்ம்ருதியாய்‌, வரக் கடவதான தப பலத்தை ஒரு யத்நமின்றியிலே இருக்க நல் விரகனான அவனாலே இஜ் ஜந்மத்திலே, அது தன்னிலும்‌ அல்ப காலத்திலே பெற்றேனென்கைஃ யாலே ஐந்மாந்தர ஸாத்‌யமுமல்ல; இஜ் ஜந்மத்திலும்‌ ஸாதித்து வந்ததுமல்ல என்கிறார் –

குறிக் கொள் ஞானங்களால் எனை யூழி செய் தவமும்
கிறிக் கொண்டு இப்பிறப்பே சில நாளில் எய்தினன் யான்

உறிக் கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான் பின்
நெறிக் கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித் துயர் கடிந்தே –2-3-8—குறிக் கொள் ஞானங்களால் – யம நியமாதி க்ரமத்தாலே அவஹிதராய்க் கொண்டு சம்பாதிக்கும் பக்தி ரூபாபன்ன ஞானங்களாலே
வேதன உபாசன த்யாநாத்ய அவஸ்தா விசேஷங்களாலே -பலவாகச் சொல்லுகிறது-எனை யூழி செய்தவமும்-கிறிக் கொண்டு –அநேக கால சாத்தியமான புருஷார்த்தத்தை -அநாயாசேன பெறலாவது ஒரு நல் விரகைப் பெற்று-தபஸ் –என்று தத் பலத்தைச் சொல்லுகிறது-கிறி என்று பகவத் பிரசாதம்
இப்பிறப்பே சில நாளில் எய்தினன்--இஜ் ஜென்மத்தில் -அது தன்னிலும் அல்ப காலத்திலேயே பெற்றேன்-யான்--ஒரு புருஷார்த்தம் உண்டு என்று அறியாத நான்

ஆனால் இவருக்கு இந்த பக்தி உண்டாகுகைக்கு ஹேது என் என்னும் ஆ காங்க்ஷையிலே –பல போக்தாவான ஈஸ்வரன் கிருஷி பலன்-என்னும் அத்தை –ஷேத்ரமும் ,கர்ஷகனும் ,க்ருஷியும் ,தத் பலமுமாக ரூபித்து கொண்டு அருளிச் செய்கிறார் –ஆனால்‌ இவர்க்கு இந்த பக்தி உண்டாகைக்கு ஹேது ஏதென்னில்‌ பல போக்தாவான ஸர்வேஸ்வரனுடைய க்ருஷிபலம்‌ என்னுமிடத்தை க்ஷேத்ரமும்‌, கர்ஷகனும்‌, க்ருஷியும்‌, தத்பலமுமான வேஷத்தாலே அருளிச் செய்கிறார்‌

1-பெரும்பாழில்‌ ஷேத்ரஜ்ஞன்‌ பெருஞ்செய்‌ கலியாரேவ ஆளும்‌ வன் குறும்பர்‌ குடியேறிப் பெருங்குடியும்‌ தங்கள்‌ கருத்துள்ளே யாக்கிப்‌ படிந்துண்ணும்‌ போகத்தே தூராதே யொறுக்கெணுப்‌ போகத்துக்குக்‌ காவல் செய்து குமைத்துத்‌ திரித்து வீழ்த்து வலித்‌தெற்றி அருவியறுத்துக்‌ கடனாயின இறுப்பிக்கப்‌ பாழ்த்த விதி யானவாறே –2-தன் பால்‌ மனம்‌ வைப்பிப்பதாகத்‌ தேய்ந்தற மன்னி ஒள் வாளுருவி வினைத் தூற்றை வேரறுவித்துத்‌ தீக் கொளீஇக்‌ கவ்வை எருவிட்டு அமுதவாறு தலைப் பற்றி ஈரியாய்க் கசிந்ததிலே ஈரநெல்‌ வித்தி –3-எழு நாற்றுக் களையையும்‌ வேர் முதல் மாய்த்துப்‌ பட்டிச் சேவதக்கி மீதுகொள்ளாமல்‌ குறிக்கொள்வித்துக்‌ கடல்புரைய விளைந்து தலை வணக்கினவாறே –4-நாளுநாள்‌ கோட்குறையாக நின்றாரறியாமல்‌ குணங்கொண்டு ஆராமை யுண்டு காலக்கழிவாலே திலத்துகாமல்‌ பற்றறுத்துத்‌ தண்டாலடித்துப்‌ பதரறுத்துப்‌ போர்த்த தோல் விடுத்து ஸுக்ஷ்மவொட்டும்‌ நீரிலே கழுவி வேறோர்‌ கலத்திட்டு பைந்தொடி மடந்தையரைக் கொண்டு ஷட்‌ குண்ரஸாந்நமாக்கி வானோர்க்காரா வமுதானவாறே முற்றுமுண்ண முன்னம்‌ பாரித்து –5-உழுவதோர்‌ நாஞ்சில் கொண்டு பெருக முயலும்‌ பத்தி யுழவன்‌ க்ருஷி பலமிறே-சூரணை -104–

(பெரும் பாழ்-மூலப் பிரக்ருதி –ஷேத்ரஞ்ஞன் -ஆன்மா –பெரும் செய் -மனம் -வயலாக உருவகம் )பெரும் பாழில் ஷேத்ரஜ்ஞன் பெரும் செய் –அதாவது – முடிவில் பெரும் பாழ்–திருவாய் -10-10-10-என்று நித்தியமாய் -அபரிச்சேதமாய் , சேதனருக்கு போக மோஷங்களை விளைத்துக் கொள்ளலாம் நிலமான பிரகிருதி தத்வத்தில் –-ஷேத்ரஜ்ஞன் ஆகிற பக்த சேதனுடைய ,-நெஞ்சப் பெரும் செய் -5-3-4-என்று பக்திக்கு விளை நிலமான மனஸ் ஆனது –பாழ்த்த விதி ஆனவாறே -என்றதோடு இதுக்கு சம்பந்தம் -பாழ் படுகைக்கு அடி சொல்லுகிறது நடு உள்ளது அடங்கலும் –

(பெரும்பாழில்‌ க்ஷேத்ரஜ்ஞன்‌) “முடிவில்‌ பெரும்பாழேயோ”” (திருவா. 10 – 10 – 10) என்று அபரிச்சேத்‌,யமாய்‌, சேதநர்க்கு போக மோக்ஷங்களை விளைத்துக்‌ கொள்ளுகைக்கு நிலமான மூல ப்ரக்ருதியிலே பத்‌தனான சேதநன்‌, “நெஞ்சப்‌ பெருஞ் செய்யுள்‌” (திருவா. 5 – 3 – 4) என்று பகவத்‌ பக்திக்கு விளை நிலமான சேதநருடைய நெஞ்சாகிற பெரும்‌ செய்யிலே-

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10–ஸ்வ கார்யமான மஹத்தாதிகளைப் பத்துத் திக்கிலும் புக்கு எங்கும் வியாபிக்க -நித்தியமாய் அபரிச்சேதயமாய் -சேதனர்க்கு புருஷார்த்தத்தை விளைத்துக் கொள்ளலாம் நிலமான பிரகிருதி தத்துவத்துக்கு ஆத்மாவானவனே

ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னை சொல் நீர்படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ! கடியனே?–5-3-4–நெஞ்சமாகிற பெரிய செய்யிலே. கலவியும் பிரிவும் என்னும் இவற்றாலே புடைபடுத்திப் பரமபதத்தைப் போன்று பரப்புடைத்தாம் படி பெருக்கினானாதலின் ‘நெஞ்சப் பெருஞ் செய்யுள்’ என்கிறாள்.-ஆக, ஊரார் அலராகிற எருவை இட்டு, தாயாராலே எப்பொழுதும் பேசப்படுகின்ற ஹித வசனமாகிற நீரை நிறுத்தி, ஆசையாகிய நெல்லை வித்தி முளைத்த நெஞ்சமாகிற பெரிய விளை நிலத்துக்குள்ளே என்றபடி.

கலியார் ஏவ ஆளும் வன் குறும்பர் குடி ஏறி –அதாவது – ஏவினார் கலியார் நலிக என்று என் மேல்—பெரிய திருமொழி -1-6-8-என்கிறபடியே கலியுகமாகிற வன்னியன் -இவனை நலியும் கோள் -என்று ஏவ ,
ஆளும் வன் குறும்பர் –அதாவது –மனம் ஆளும் ஓர் ஐவர் வன் குறும்பர் -பெரிய திருவந்தாதி -51-என்கிறபடியே – சேதன சேஷமான மனஸை -தங்களுக்கு சேஷம் ஆக்கி கொண்டு நடத்தும் அவர்களாய் –முன் கை மிடுக்கராய் -அத்வீதியராய் இருந்துள்ள இந்திரியங்களாகிய குறும்பர் –குடியேறி –-அதாவது –கோவாய் ஐயர் என் மெய் குடியேறி -பெரிய திருமொழி -7-7-9-என்கிற படியே இச் சேதனனுக்கு நியாமகராய் கொண்டு , தேஹத்திலே குடி புகுந்து ,-கலியார் ஏவ -என்றது-இந்திரியங்கள் உடைய நலிவுக்கு கலி காலம் பிரவர்தகம் ஆகையாலே –கலியார் -என்றும் -ஐவர்-என்றும் -சேதன சமாதியாலே சொல்லுகிறது .-தனக்கு என்ன ஆக்ரஹம் உடையாரைப் போலே ,நலிகிற கொடுமையைப் பற்ற —
கலியார் என்று -ரேபாந்தமாக ஆழ்வார் அருளிச் செய்தது கலி காலத்துக்கு அஞ்சினபடி யாலே இறே

(கலியாரேவ) ““ஏவினார்‌ கலியார்‌ நலிக’” (திருமொழி 1 – 6 – 8) என்று கலியுகமாகிற வறியன்‌ தன்‌ படரான இந்த்‌ரியங்களை ப்ரேரிக்க. (ஆளும்‌ வன் குறும்பர்‌) “’மனமாளுமோரைவர்‌ வன்குறும்பர்‌”’ (பெ.திருவ.51) என்று ப்ரதாந கரணமான மநஸ்ஸையும்‌ தங்கள் வஸமாக்கிக் கொண்டு ஆளுமவர்களுமாய்‌ முன்கை மிடக்கருமாய்‌ அநியாம்‌யருமான அத்‌விதீயரை வரும்‌ ““பொய்யாலைவரென்‌ மெய் குடி யேறி”” (திருமொழி 7 7 – 9) என்கிறபடியே குடியேறி-

ஏவினார் கலியார் நலிக வென்று என் மேல் எங்கனே வாழுமாறு ஐவர்
கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் குறுங்குடி நெடும் கடல் வண்ணா
பாவினாரின் சொல் பன் மலர் கொண்டு உன் பாதமே பரவி நான் பணிந்து என்
நாவினால் வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்–1-6-8–கலியார் என்கிறார் ஆயிற்று -கலி காலத்துக்கு அஞ்சினபடியாலே —

மனமாளும் ஓர் ஐவர் வன் குறும்பர் தம்மை
சினமாள்வித்து ஓர் இடத்தே சேர்த்து -புனமேய
தண் துழாயான் அடியைத் தான் காணும் அஃது அன்றே
வண் துழாம் சீரார்கு மாண்பு –51–பள்ளிகள் கலஹம் போலே – ஈஸ்வரனுக்கு ஆத்மா சேஷமாய் –
ஆத்மாவுக்கு மனஸ்ஸூ சேஷமாய்-மனஸ்ஸூ போன வழியே போகக் கடவதான இந்திரியங்கள் இருக்கும் முறை அன்றிக்கே மனஸ்ஸை இந்திரியங்கள் ஆளும்படி இருக்கை-வன் குறும்பர்-மனஸ்ஸைத் தங்கள் போன வழியே கொடு போக வல்லராய் இருக்கை-இன்னதனை த்ரவ்யத்துக்கு அரசு செய்வாரைக் கிடைக்கும் என்னும் வன்னியரைப் போலே

கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறிக் கூறை சோறு இவை தா என்று குமைத்துப்
போவார் நானவரைப் பொறுக்க கில்லேன் புனிதா புட் கொடியாய் நெடு மாலே
தீவாய் நாகணையில் துயில்வானே திருமாலே இனிச் செய்வது ஓன்று அறியேன்
ஆவா வென்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே–7-7-9-நீ சேஷியாமது தவிர்ந்து இவை எனக்கு நியாமகமாய்க் கொண்டு வந்து என் சரீரத்திலே குடி புகுந்தது –

பெரும் குடியும் தங்கள் கருத்துள்ளே ஆக்கி –அதாவது –முன்னின்று முறை போக்கும் பெரும் குடி போலே (இங்கு பெரும் குடி என்றது மனத்தினை ) தங்களுக்கு பிரதானமான மனசையும் –
ஐம்புலன் கருதும் கருத்துள்ளே திருத்தினேன் மனத்தை –பெரிய திருமொழி -1-1-8–என்கிறபடியே –
தாங்கள் நினைத்த வழியே ஒழுகும் படியாகப் பண்ணி-படிந்து உண்ணும் போகத்தே –அதாவது
படிந்துண்டும் போகத்தே தூராதே பொருக் கொணா போகத்து காவல் செய்து –பெரிய திருமொழி -1-6-2-
புலன் படிந்து உண்ணும் போகம் -என்று விஷயங்களிலே அவஹாகித்து புஜிக்கிற போகத்தில் –தூராதே-தூராக் குழி-திருவாய்-5-8-6- -என்ற படி ஒரு காலும் பூர்ணம் ஆகாதே –பொருக் கொணா போகத்து-பொறுத்து கொண்டு இருந்தால் பொறுக்க ஓணாப் போகாமே நுகர்வான்-என்கிறபடியே –பெரிய திருமொழி -7-7-7-இவற்றால் வந்த நலிவை ஆற்றி இருப்போம் என்றால் ,ஆற்ற ஒண்ணாத படி ,
விஷய போகங்களை புஜிக்க வேணும் என்று –காவல் செய்து – கடியார் காளையர் ஐவர் புகுந்து காவல் செய்த அக்காவலை -பெரிய திருமொழி -7-7-8– -என்கிற படி க்ரூரராய் ,நலிய நலிய- இளகிப் பதியா நின்ற பருவத்தை உடையராய்க் கொண்டு ,இவனைச் சிறை செய்து 

பெருங்குடியும்‌ தங்கள்‌ கருத்துள்ளே யாக்கி) ““ஐம்புலன்கருதும்‌ கருத்துளே திருத்தினேன்‌ மனத்தை?” (திருமொழி 1 – 1 – 8) என்கிறபடியே ப்ரதாந கரணமான மநஸ்ஸாகிற பெருங்குடியும்‌ தங்கள்‌ கருத்துள்ளேயாம்படிபண்ணி. (படிந்துண்ணும்‌ போகத்தே தூராதே) *’புலம்படிந்துண்ணும்‌ போகமே பெருக்கிப் போக்கினேன்‌’ (திருமொழி 1 – 6 – 2) என்று ஸப்‌தாதி விஷயங்களிலே அவகாஹித்து பஜிக்கிற போகத்தை அபி வ்ருத்‌தமாக்கி. “’தூராக்குழி”’ (திருவா. 5 – 8 – 6) என்கிறபடியே அத்தால்‌ ஒருகாலும்‌ பர்யாப்தி பிறவாதே. (பொறுக்கொணுப்‌ போகத்துக்குக்‌ காவல்‌ செய்து) ”பொறுத்துக் கொண்டிருந்தால்‌ பொறுக் கொணாப் போகமே நுகர்வான்‌ புகுந்து” (திருமொழி 7 – 7 – 7) என்று சேதநனாலே பொறுக்கப் போகாத ஸப்‌தாநுபவத்துக்கு, “கடியார்‌ காளையர்‌ ஐவர்‌ புகுந்து காவல் செய்த”” (திருமொழி 7 – 7 – 8) என்று நெஞ்சில்‌ க்ரெளர்யத்தை உடையராய்‌, பதிக்க பாதிக்க மேலே இளகிப் பதித்து வருகிற அந்த விஷயங்கள்‌ {இந்த்‌ரியங்கள்‌] கீழே சொன்ன போகத்துக்கு விருத்‌,த,மான பகவத்‌ ஸம்ரம்பமாகிற்‌ ராஜபரிகரம்‌ புகுராதபடி காவல்செய்து.

கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும் கருத்துளே திருத்தினேன் மனத்தை
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை பெரு நிலத்தார் உயிர்க்கு எல்லாம்
செற்றமே வேண்டித் திரி தருவேன் தவிர்ந்தேன் செல் கதிக்கு உய்யுமாறு எண்ணி
நல் துணையாக பற்றினேன் அடியேன் நாராயணா என்னும் நாமம் —1-1-8–மனத்தை பர விஷயமாக்கி -விஷயங்களிலே ப்ரவணம் ஆகிற பாஹ்ய இந்திரியங்களை காதாசித்கதமாய் ஆகிலும் விஷயங்களில் நின்றும் மாற்றி -ப்ரத்யக் விஷயம் ஆக்கினால் நல் வழி போகுகைக்கு உறுப்பாம் இறே –ஸ்தோத்ராதி இந்திரியங்கள் விஷயங்களிலே இழிந்து தான் நினைத்த வழியிலே கொடு போய் –
மனசையும் அதுக்கு உறுப்பாக்கி போந்தேன்-விஷய ப்ரவணர் ஆனவர்கள் விஷய ப்ராவண்யம் போராது என்று ஔஷத சேவை பண்ணி இருப்பார்கள் இறே-அப்படியே விஷயங்களிலே மனசை வலிய மூட்டிப் போந்தேன்-

சிலம்படி யுருவில் கரு நெடும் கண்ணார் திறத்தனாய் அறத்தையே மறந்து
புலம்படிந்து உண்ணும் போகமே பெருக்கிப் போக்கினேன் பொழுதினை
வாளா
அலம் புரி தடக்கை யாயனே மாயா வானவர்க்கு அரசனே வானோர்
நலம் புரிந்து இறைஞ்சுன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் -1-6-2—ஸ்திரீகளுக்கு வழி பறித்திடுமது மறக்க ஒண்ணாதே- தன்னுடைய உஜ்ஜீவனத்துக்கு உபாயமானத்தையே யாயிற்று வருந்தி மறப்பது –கொண்டி திரியும் பசுப் போலே-இந்த்ரியங்கள் தான் விஷயங்களில் மண்டி யாயிற்று இருப்பது முதல் தன்னிலே –அதுக்கு மேலே-விஷய சந்நிதி உள்ள இடத்திலே வர்த்தித்து
இந்த்ரியங்களுக்கு விஷயங்களிலே போக்யதா புத்தியைப் பிறப்பித்து-அவை அவற்றில் மேல் விழுந்து புஜிக்கும் படி – அத்தால் வந்த போகத்தைப் பெருக்கி –பகவத் விஷயத்தில் அடிக் கழஞ்சு பெற்று ( மதிப்பு பெற்று )செல்லக் கடவ காலத்தை வ்யர்த்தமே போக்கினேன்-

சூழ் கண்டாய் என் தொல்லை வினையை அறுத்துன்னடி சேறும்
ஊழ் கண்டிருந்தே தூராக் குழி தூர்த்து எனை நாளகன்றிருப்பன்
வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்! வானோர் கோமானே!
யாழி னிசையே! அமுதே! அறிவின் பயனே! அரிஏறே!–5-8-6—உன் திருவடிகளை சேரும் முறைமை கண்டு வைத்தே துஷ்பூரமான இந்திரியங்களுக்கு இரை தேடியிட்டு எத்தனை நாள் அகன்று இருக்கக் கட வேன் – இப்படி ஆறி இருக்கப் பார்த்தால் முறையை அறிவித்தது என் –மயர்வற மதி நலம் அருளிற்றிலை யாகில் நானும் ஆறி இருக்கலாயிறே-பூர்ணே சதுர்த்தசே-வர்ஷே -என்று ஓர் அவதி பெறினும் பெற்றதோடு ஒக்கும்

கறுத்துக் கஞ்சனை அஞ்ச முனிந்தாய் கார் வண்ணா கடல் போல் ஒளி வண்ணா
இறுத்திட்டான் விடை ஏழும்  முன் வென்றாய் எந்தாய் அந்தரம் ஏழுமும்  ஆனாய்
பொறுத்துக் கொண்டு இருந்தால் பொறுக்க ஒணாப் போகாமே நுகர்வான் புகுந்து ஐவர்
அறுத்துத் தின்றிட வஞ்சி நின்னடைந்தேன்
அழுந்தூர் மேல் தின்ற வம்மானே–7-7-7-இவற்றால் வந்த நலிவை ஆற்றி இருப்போம் என்றால் ஆற்ற ஒண்ணாதபடி போகங்களைப் புஜிக்க வேணும் என்று ஐவர் நெருக்கி புஜிப்பிக்க அவர்களுக்கு அஞ்சி உன் திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –

நெடியானே கடியார் கலி நம்பீ நின்னையே நினைந்து இங்கு இருப்பேனைக்
கடியார் காளையர் ஐவர் புகுந்து காவல் செய்த அக் காவலைப் பிழைத்துக்
குடி போந்து உன்னடிக் கீழ் வந்து புகுந்தேன்
கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி
அடியேனைப் பணி யாண்டு கொள் எந்தாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே–7-7-8—நெஞ்சில் நன்மை இன்றிக்கே பிறரை நலிய நலிய இளகிப் பதியா நின்ற பருவத்தை யுடைய ஐவர் வந்து புகுந்து சிறை செய்கிற –த்யக்த்வா புத்ராம் ச தாராம் ச ராகவம் சரணம் கத –என்கிறபடியே-அவற்றைத் தப்பி உன் திருவடிகளிலே சரணம் புகுந்தேன்-

குமைத்து திரித்து வீழ்த்து வலித்து எற்றி அருவி அறுத்துக் கடனாயின இறுப்பிக்க –அதாவது –
குமைத்து – கூறை சோறு இவை தா என்று குமைத்துப் போகார்-பெரிய திருமொழி -7-7-9- -என்றும் ,
திரித்து-செக்கலிட்டு திரித்துக்கும் ஐவர் –திருவாய் -7-1-5–என்றும் ,-வீழ்த்து–கொடு வன் குழியினில் வீழ்க்கும் ஐவர் –திருவாய் -7-1-9-என்றும் ,வலித்து-எற்றி–ஐவர் திசை திசை வலித்து எற்றுகின்றனர் –திருவாய் -7-1-10–என்றும் ,-அருவி–ஐவர் அருவித் தின்றிட–பெரிய திருமொழி -7-7-1- என்றும் –
அறுத்து–ஐவர் அறுத்துத் தோன்றிட –பெரிய திருமொழி –7-7-7-என்றும் -என்கிறபடியே
தனக்கு அபீஷ்டமானவற்றை தா என்று துகைத்து இழுத்து , சரீரமாகிற செக்கிலே இட்டு ,சுழற்றி க்ரூரமாய் , கரையேற ஒண்ணாதபடி இருக்கும் விஷயங்கள் ஆகிற படு குழியில் தள்ளி ,
அவை தான் அநேகங்களாக ஸ்வ ஸ்வ விஷயங்களிலே கொடு போகைக்காக ,
நாலு திக்கிலும் இழுத்து ,நலிந்து அருவித் தின்னுமா போலேயும் ,அறுத்து தின்னுமா போலேயும் ,
என் விஷயத்தைக் காட்டு -என் விஷயத்தைக் காட்டு -என்று நெருக்கி , இப்படி பஹுவிதமாகத் தண்டித்து –
கடனாயின இறுப்பிக்க –-அதாவது –பொருள் இன்பம் என இரண்டும் இறுத்து என் ஐம்புலன்கட்குக் கடனாயின –பெரிய திருமொழி -6-2-1-என்று ஸ்ரோத்ராதிகளுக்கு ,பிராப்தமாய் இருக்கிற அர்த்த காமங்கள் என்று சொல்லப் படுகிற ,இரண்டையும் கடமை இருப்பாரை போலே அவற்றாலே பரி பூதனாய்க் கொடுத்துப் போந்தேன் என்னும் படி தங்களுக்கு பிராப்த கரங்களை இறுப்பித்து கொள்ள

(குமைத்துத்திரித்து வீழ்த்தி வவித்தெற்றி அருவியறுத்தென்றும்‌) ‘“கூறைசோறிவை தாவென்று குமைத்துப்போகார்‌” (திருமொழி 7 – 7 – 9) என்றும்‌, ”செக்கிலிட்டுத திரிக்குமைவரை”’ (திருவா. 7 – 1 – 5) என்றும்‌, ‘*கொடுவன்குழியனில்‌ வீழ்க்குமைவரை” (திருவா. 7 – 1 – 9) என்றும்‌, “(திசைதிசை வவித்தெற்றுகின்றனர்‌”” (திருவா. 7 – 1 – 10) என்றும்‌, “’அருவித்தின்றிட அஞ்சி நின்னடைந்தேன்‌”’ (திருமொழி 7 – 7 – 1) என்றும்‌, “ஐவரறுத்துத்தின்றிட அஞ்சி”? (திருமொழி 7 – 7 – 7) என்றும்‌ சொல்லுகிறபடியே இப்படி ஆராய்ச்சியற்றுத்‌ தங்கள்‌ வறமானவாறே பலபடியாலும்‌ தண்டித்து. (கடஞுயின இறுப்பிக்க) ““பொருளின்பமென இரண்டுமிறுத்தேன்‌ ஐம்புலன்கட்கடனாயின”’ (திருமொழி 6 – 2 – 1) என்று ஸ்ரோத்ராதி,களுக்கு ப்ராப்தமாயிருக்கிற அர்த்த காமங்கள்‌ என்று சொல்லப்படுகிற இரண்டையும்‌ கடமை யிறுப்பாரைப் போலே அவற்றாலே பரிபூ,தனாய்க்‌ கொடுத்துப் போந்தேன்‌ என்று அவற்றுக்கு ப்ராப்தங்களை இறுப்பித்துக்‌ கொள்ள.

கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறிக் கூறை சோறு இவை தா என்று குமைத்துப்
போவார் நானவரைப் பொறுக்க கில்லேன்
புனிதா புட் கொடியாய் நெடு மாலே
தீவாய் நாகணையில் துயில்வானே திருமாலே இனிச் செய்வது ஓன்று அறியேன்
ஆவா வென்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே–7-7-9—நீ சேஷியாமது தவிர்ந்து இவை எனக்கு நியாமகமாய்க் கொண்டு வந்து என் சரீரத்திலே குடி புகுந்தது -நான் ( வகுத்த ப்ராப்தமான திருவடிகளையே )கூறையும் சோறுமாக நினைத்து இருக்கும் அது ஒழிய வேறு சிலவற்றைத் தா வென்று என்னை நெருக்கி ஒரு ஷணமும் கால் வாங்கு கிறிலர்கள் –
நான் அவர்களுடைய நலிவைப் பொறுக்க மாட்டு கிறிலேன் –

தீர் மருந்தின்றி ஐவர் நோயடும் செக்கிலிட்டுத் திரிக்கும் ஐவரை
நேர் மருங்கு உடைத்தா அடைத்து நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்
ஆர் மருந்தினி யாகுவார்! அடலாழிஏந்தி அசுரர் வன்குலம்
வேர் மருங் கறுத்தாய்! விண்ணுளார் பெருமானேயோ!–7-1-5—ஐவர் நோயடும் செக்கிலிட்டுத் திரிக்கும் ஐவரை-சப்தாதிகள் இவ்வாத்மாவை முடிக்கும் சரீரம் -அதிலே பிரவேசித்து நெருக்கும் ஸ்ரோத்ராதிகளை -சரீரத்தில் பிரவேசிப்பித்து சப்தாதிகளை காட்டி நெருக்குகிற ஸ்ரோத்ராதிகளை –

குல முதல் அடுந் தீவினைக் கொடு வன் குழியினில் வீழ்க்குமைவரை
வல முதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய்
நில மு தல் இனி எவ்வுலகுக்கும் நிற்பன செல்வன எனப்பொருள்
பல முதல் படைத்தாய்! என்கண்ணா! என் பரஞ்சுடரே!–7-1-9–இப்படிப்பட்ட மஹா பாபங்களை விளைக்க வற்றாய் -கொடிதாய் -துஷ் பரிஹரமாய் –வலிய குழி -புக்கால் கால் வாங்க ஒண்ணாத சப் தாதிகளிலே -புகத் தள்ளும் ஸ்ரோத்ராதிகளை

என் பரஞ்சுடரே! என்று உன்னை அலற்றி உன் இணைத் தாமரைகட்கு
அன்புருகி நிற்குமது நிற்கச் சுமடு தந்தாய்
வன் பரங்கள் எடுத்து ஐவர் திசை வலித்து எற்று கின்றனர்
முன் பரவை கடைந்த அமுதம் கொண்ட மூர்த்தியோ–7-1-10-!–நீ தந்த பிரக்ருதியோட்டை கர்ம சம்பந்தமே ஹே துவாக துர்பரமான விஷயங்களை சுமத்தி ஐந்து இந்திரியங்களும் திக்கு தோறும் வலித்து நலியா நின்றன-

திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா
உருவச் செஞ்சுடராழி வல்லானே உலகுண்ட ஒருவா திரு மார்பா
ஒருவருக்கு ஆற்றி உய்யும் வகை அன்றால் உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது
அருவித் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன்
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே —7-7-1—ரஷகனான உன்னில் காட்டிலும் பாதக வர்க்கம் அணித்தாய் நின்று நலியா நின்றன – கர்ம வச்யன் ஆகையாலே கர்ம க்ருதங்கள் சேர்ந்தே இருக்கும்-நீ அவசரம் பார்த்து புகுந்தாய் -இவை சஹஜங்கள்–உண்ணிலாய 7-1–என்னுமா போலே ஒருவர் இருவர் இன்றிக்கே சேதன சமாதியால் நலியா நின்றுள்ள ஐந்து இந்த்ரியங்கள் என் பக்கல் வந்து புகுந்து என்னை நெருக்கி ஒரு ஷணமும் கால் வாங்குகிறவன வில்லை-என்னுடைய விஷயத்தைக் காட்டு -என்னுடைய விஷயத்தைக் காட்டு என்று இவை தனித் தனியே அலைத்து நெருக்க-அவற்றுக்கு அஞ்சி வந்து-சர்வ ஸ்வாமியான  உன் திருவடிகளிலே சரண ரஷணத்தில் அதிகரித்த உனக்கு அத்தை முடிய நடத்த வேண்டாவோ –

கறுத்துக் கஞ்சனை அஞ்ச முனிந்தாய் கார் வண்ணா கடல் போல் ஒளி வண்ணா
இறுத்திட்டான் விடை ஏழும்  முன் வென்றாய் எந்தாய் அந்தரம் ஏழுமும்  ஆனாய்
பொறுத்துக் கொண்டு இருந்தால் பொறுக்க ஒணாப் போகாமே நுகர்வான் புகுந்து ஐவர்
அறுத்துத் தின்றிட வஞ்சி நின்னடைந்தேன்
அழுந்தூர் மேல் தின்ற வம்மானே–7-7-7—இவற்றால் வந்த நலிவை ஆற்றி இருப்போம் என்றால் ஆற்ற ஒண்ணாதபடி போகங்களைப் புஜிக்க வேணும் என்று ஐவர் நெருக்கி புஜிப்பிக்க அவர்களுக்கு அஞ்சி உன் திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –

பொறுத்தேன் புன் சொல் நெஞ்சில் பொருள் இன்பம் என இரண்டும்
இறுத்தேன் ஐம்புலன் கட்கனாயின
வாயிலொட்டி
யறுத்தேன் யார்வச் செற்றமவை தன்னை மனத் தகற்றி
வெறுத்தேன் நின் அடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே —6-2-1—சிலரை பந்துக்களாக நினைத்து இருந்தால் அவர்களுக்கு உபகரிக்கும் போது அர்த்தம் வேணுமே – பிறரைக் கவி பாடுவது அர்த்தத்துக்காக விறே-ஆகையால் ஸ்தோத்ராதிகளுக்கு பிராப்தமாய் இருக்கிற அர்த்த  காமங்கள்   என்று சொல்லப் படுகிற இரண்டையும் கடமை இருப்பாரைப் போலே அவற்றாலே பரி பூதனாய்க் கொடுத்துப் போந்தேன்–இப்படி அர்த்த க்ரஹணம் பண்ணப் புக்கால் அதுக்கு சஹாகரித்தவர்களுக்கு ஸ்நேஹித்து வாழ்விக்கக் கடவன் என்றும்-அதுக்கு விரோதத்தை பண்ணினாரைச் செற்று முடிக்க கடவன் என்றும்-பிரதிஞ்ஞை பண்ணி அந்த சங்கல்பத்தை அனுஷ்டானம் பர்யந்தம் ஆக்கி தலைக் கட்டிப் போந்தேன்-பொருள் இன்பம் இரண்டும் இறுத்தேன் –

பாழ்த்த விதி யானவாறே –அதாவது – இப்படி ஆகையாலே ,வாழ்த்தி அவன் அடியை பூ புனைந்து ,நின் தலையை தாழ்த்து , இரு கை கூப்பு என்றால் ,கூப்பாத பாழ்த்த விதி –பெரிய திருவந்தாதி –84-என்கிற படியே வகுத்த சேஷியானவனை வாழ்த்தி ஆராதித்து ,வணங்கி கும்பிடுகைகள் ஆகிற , இவற்றில் ஒன்றிலும் ,அன்வயியாமையாலே , தத் அங்கீகார பற்றாசான ஸூஹ்ருத கந்தம் அற்று ,மனஸ் பாழ் பட்டவாறே –—

(பாழ்த்த விதியானவாறே) “வாழ்த்தி அவனடியைப்‌ பூப் புனைந்து நின்‌ தலையைத்‌ தாழ்த்திருகை கூப்பென்றால்‌ கூப்பாத பாழ்த்த விதி’” (பெ.திருவ. 84) என்று இப்படி இந்த்‌ரிய பாரவஸ்யதையாலே ஒரு கரணமும்‌ ப,க,வத்‌, விஷயத்தில்‌ ப்ர வணமாகாத படியாய்‌, நெஞ்சில்‌ ப,க,வத் ஸ்மரண லேஸமுமின்றிக்கே ஈஸ்வரன்‌ எடுக்கைக்குப்‌ பற்றாசாக ஒரு நன்மையும்‌ இல்லாதபடி யானவாறே.

வாழ்த்தி யவனடியைப் பூ புனைந்து நின் தலையைத்
தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் கூப்பாத -பாழ்த்த விதி

எங்குற்றான் என்றவனை ஏத்தாத என்னெஞ்சமே
தங்க தான் ஆம் ஏலும் தங்கு–84—உன் தலையை அவன் திருவடிகளில் தாழ்ந்து இரண்டு திருக்கையையும் கூப்பு என்றால் கூப்பாதே-எங்குச் சென்றாகிலும் கண்டு -திருவாய் –6-8-5-என்னும்படி
ஆதரத்தோடே அவனை ஏத்தாத நெஞ்சமே அவனைப் பற்றாதே கால் பாவலாம் ஆகில் தங்கு-பாழ்த்த விதி என்று-தம்முடைய அகலுகையைச் சொல்லி வெறுக்கவுமாம்-பிராப்தி பிரதிபந்தகமான கர்ம வைகல்யத்தைச் சொல்லவுமாம்

2-தன் பால் மனம் வைப்பிபதாக தேய்ந்து அற மன்னி –( இது தொடங்கி -ஈர நெல் வித்தி முடிய -பயிர் செய்யும் இறைவன் பாழ் பட்ட மனமாகிய வயலைச் செப்பன் இட்டுப் பக்தியாகிற நெல்லை விதைத்தமை ) அதாவது –தன் பால் மனம் வைக்க திருத்தி –திருவாய் -1-5-10-என்கிறபடியே இந்திரிய அவஸ்தையாலே இப்படி பட்ட பாழ் பட்ட மனஸை –பயிர் படும் படி தன் பக்கல் வைக்கப் பண்ணுகைக்காக – தேய்ந்தற மன்னி– அதாவது –எனது ஏழை நெஞ்சாளும் திருந்தாத ஓர் ஐவரை தேய்ந்தற மன்னி இருந்தான் –திருவாய் -8-7-2-என்கிற படி-கண்டது எல்லாத்திலும் சபலமாய் இருக்கிற மனஸை ,அதுவே பற்றாசாக பொதி எடுத்து ஆளா நிற்ப்பராய், எத்தனையேனும் பலவான்கள் திருத்தப் புக்காலும் திருந்தாதே இனி இப்படி ஓர் ஐவர் இல்லை என்னும்படி இருக்கிற இந்திரியங்கள் ஆகிற ஐவர் ஷயித்து , முடிந்து போம் படி , ஆசன பலத்தாலே குறும்பரை அழிக்கும் ராஜாக்களைப் போலே ,
ஸ்தாவர பிரதிஷ்டையாய் இருந்து

“தன்பால்‌ மனம்‌ வைக்கத் திருத்தி”” (திருவா. 1 – 5 – 10) என்கிறபடியே இந்த்‌ரியங்களாலே அபஹ்ருதமான மநஸ்ஸைத்‌ தன்‌ வஸமாக்குவதாக, ““எனதேழை நெஞ்சாளும்‌ திருந்தாத ஓரைவரைத் தேய்ந்தற மன்னி’” என்று பிடித்தார்க்குப்‌ பிழையாத படி சபலமான நெஞ்சைத் தங்கள்‌ வஸமாக்கிக் கொண்டு ஆளுகிற அதிகரான இந்த்‌,ரியங்‌களாகிற கள்ளர் பள்ளிகளைத்‌ தான்‌ போக்கு வரத்தா யிருக்கில்‌ ஜயிக்க வொண்ணாதென்று அவர்கள்‌ க்ஷ்யித்து நஸிக்கும்படி ஸ்தாவர ப்ரதிஷ்டை,யாயிருந்து

சார்ந்த விரு வல்வினைகளும் சரிந்து மாயப் பற்று அறுத்து
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞானச் சுடராகி யகலம் கீழ் மேல் அளவிறந்து
நேர்ந்த யுருவாய் யருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே –1-5-10—விரோதியைப் போக்கும் அளவு அன்றிக்கே மனஸ்ஸூக்குத் தானே விஷயமாம் படி அண்ணி

இருந்தான் கண்டு கொண்டே எனதேழை நெஞ்சாளும்
திருந்தாத வோரைவரைத் தேய்ந்தற மன்னி

பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்
தருந்தானருள் தான் இனி யானறியேனே-8-7-2—கண்டது எல்லாவற்றிலும் -சபலமாய் இருக்கிற என் நெஞ்சை -அதுவே பற்றாசாக இந்திரியங்கள் பணி கொள்ளாத தொடங்கிற்று – திருந்தாத-அநாதி காலம் சர்வ சக்தி திருத்தப் பார்த்த இடத்திலும் திருந்தாத வன்மையையுடைய திருந்தாத வன்மையையுடைய இந்திரியங்கள் – வோரைவரைத்-இப்படி பண்ணுகைக்கு இன்னம் ஓர் ஐவர் இல்லை -இவற்றால் பட்ட நலிவின் மிகுதியால் சேதன சமாதியால் சொல்லுகிறார்-தேய்ந்தற மன்னி-இருந்தான் -பிராகிருத விஷயங்களிலே பற்று அறும் படி வந்து புகுந்து இருந்தான் –பிராகிருத விஷயங்களில் பற்று நேராக க்ஷயிக்கும் படி தன் வடிவு அழகைக் காட்டிக் கொண்டு புகுந்து இருந்தான் விஷயாந்தரங்களிலும் வடிவு அழகிலே இறே இவன் துவக்குண்டு இருப்பது –ராஜாக்கள் சத்ருக்களை ஆசன பலத்தால் அழிக்குமா போலே இந்திரியங்களுக்கு விஷயங்களில் பற்று அரும்படி புகுந்து இருந்தான்

ஒள் வாள் உருவி வினைத் தூற்றை வேர் அறுவித்து –அதாவது – நீ பணித்த அருள் என்னும் ஒள் வாள் உருவி—பெரிய திருமொழி -6-2-4-என்கிற படியே – மா மேகம் சரணம் விரஜ–ஸ்ரீ கீதை – -என்று என்னுடைய பிரசாதத்தையே ,உனக்கு உஜ்ஜீவன ஹேதுவாக அத்யவசி என்ன – ஸ்திதோஸ்மி கத சந்தேக–ஸ்ரீ கீதை -18–66 -என்னும் படி -சகல சந்தேகங்களையும் துணித்து பொகட வற்றாய் –சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி–ஸ்ரீ கீதை -என்று அருளிச் செய்த படி , சர்வ பாபங்களையும் சேதிக்கைக்கு சமர்ததுமான ஒண்மை உடைய கிருபை ஆகிற வாளை அப்ரிதகதமாக்கி பக்தி யாகிற பயிருக்கு விளை நிலமாகக் கல்பிதமாய் இருந்துள்ள மனஸ் பாழே கிடந்தது போம் படி-கொடு வினை தூறு -திருவாய்-3-2-9-என்கிற படியே -இவனால் அடி காணவும் அறுக்க ஒண்ணாதாகவும் மூடின பாபமாகிய தூற்றை –வினைகளை வேரற –திருவாய்-3-2-1–என்றும்-வல் வினை தொடர்களை முதல் அரிந்து -திருவாய்-3-2-2–என்றும் சொல்லுகிற படி மறு கிளை உண்டாகாத படி வாசனா ருசிகள் ஆகிற ஊசி வேரோடும் ,பக்க வேரோடும் ,அறுப்பித்து வினை தூற்றை ,வேர் அறுத்து -என்னாதே –வேர் அறுவித்து -என்கையாலே நிஜர்த்தமும் தோற்றுகிறது –-வினை அறுக்கையில் , பிரயோஜக கர்த்ருத்வம் ஈஸ்வரனுக்கும் ,சாஷாத் கர்த்ருத்வம் கிருபைக்கும் ஆகலாம் இறே-(மோக்ஷயிஷ்யாமி –னிச்சாலே நானும் வேண்டா -நீயும் வேண்டா -அவை தன்னடையே விட்டுப் போகும் காண் –முமுஷுப்படி -பிறவினையைக் காட்டும் விகுதி இருப்பதால் )

(ஒள் வாளுரூவி வினைத் தூற்றை வேரறுவித்து) இப்படி இந்த்‌,ரியங்களாகிற சோரராலே ஆக்ரமிக்கப் படுகையாலே பாபமாகிற தூறு மண்டின அந்த ஸ்தலத்தை, “நீ பணித்த அருளென்னும்‌ ஒள் வாளுருவி எறிந்தேன்‌’‘ (திருமொழி 6 – 2 – 4) என்று “’மாமேகம்‌”‘ என்ற என்னுடைய ப்ரஸாதத்தையே உனக்கு உஜ்ஜீவந ஹேதுவாக அத்‌,யவஸி – என்ன, ““ஸ்தி,தோஸ்மி க.த ஸந்தேஹ கரிஷ்யே வசநம்‌ தவ?” (கீதை 18 – 73) என்னும்படி ஸம்மயங்களை யடையத்‌ துணித்துப்‌ பொகட வற்றாய்‌, ‘ஸர்வ பாபேப்‌, யோ மோக்ஷ யிஷ்யாமி”’ என்று அருளிச் செய்தபடியே அந்த பாபமாகிற தூற்றை சே,தி,க்‌கைக்கு ஸமர்த்த,மான தன்னுடைய பரம க்ருபை யாகிற வாளை உருவி, “’கொடுவினைத்‌ தூற்றுள் நின்று?’ (திருவா. 3 – 2 – 9) என்று இவனால்‌ அடிக் காணவும்‌ அடி யறுக்கவும்‌ அரிதாய்ப்‌ புகும்‌ வழி அறியுமித்தனை யொழியப்‌ புறப்பட வழி தெரியாதிருப்பதா யிருக்கிற தூற்றை, ““வினைகளை வேரற” ( திருவா. 3 – 2 – 1) என்றும்‌, “தொன் மா வல் வினைத்‌ தொடர்களை முதலரிந்து”” (திருவா. 3 – 2 – 2) என்றும்‌ சொல்லுகிறபடியே மீண்டு கிளையாதபடி ருசி வாஸனை யாகிற ஊசி வேரோடும்‌ பக்க வேரோடும்‌ அறுத்துப் பொகட்டு

பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின்னுதவாவது
அறிந்தேன் நீ பணித்த வருள் என்னும்  ஒள் வாள் உருவி
எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர வெறிந்து வந்து
செறிந்தேன்
நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே —6-2-4—அவன் பணித்த மாமேகம் -என்ற வார்த்தை ஆய்த்து-அருள் என்கிறது என் என்றால்-என்னுடைய பிரசாதத்தையே உன்னுடைய உஜ்ஜீவன ஹேதுவாக அத்யவசி என்றான் இறே–ஒள் வாள்-சம்சயங்களை அடைய துணித்துப் பொகட்டு-நஷ்டோ மோஹ -ஸ்ம்ரித் லப்த -ஸ்திதி தோஸ்மி கத சந்தேக கரிஷ்யே -என்னப் பண்ண வற்றாய் இருக்கை-

கூவிக் கூவிக் கொடு வினைத் தூற்றுள் நின்று
பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன்
மேவி அன்று ஆ நிரை காத்தவன் உலகம் எல்லாம்
தாவிய வம்மானை எங்கினித் தலைப் பெய்வனே –3-2-9–கொடிதான பாபத்தை விளைக்க வற்றாய் புக்க இடமும் புறப்பட்ட விடமும் தெரியாததான சம்சாரத்திலே யாயிற்று நிற்கிறது-

முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் –3-2-1—வெந்நாள்--ஞானம் பிறந்தால் இப்பிரக்ருதி சம்பந்தத்தோடே இருக்கிற நாள் அசோகவ நிகையிலே பிராட்டி இருந்தால் போலே-நோய் வீய–நோய் என்று சரீர சம்பந்தம் ஆதல் -விஸ்லேஷம் ஆதல் -வீய முடிய-வினைகளை–சரீர சம்பந்தத்துக்கு அடியானை பாபங்களை-வேர் அறப் பாய்ந்து–சவாசனமாகப் போக்கி -பாய்ந்து என்று சினம் தோற்றுகிறது–ஒரு சர்வ சக்தி செய்யுமத்தை நான் செய்யவோ –

வன் மா வையம் அளந்த எம் வாமனா நின்
பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்
தொன் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ –3-2-2––அநாதியாய் அநேகமாய் சர்வ சக்திக்கும் நெஞ்சு உளுக்க வேண்டும் படி பிரபலமான பாவத் தொடர்ச்சிகளை ஒன்றோடு ஓன்று அனுபந்தித்து இருக்கை –முதல் அரிந்து–வாசனையோடு போக்கி-நின் மா தாள் சேர்ந்து –-பிராப்தமாய் -ஸூ லபமாய் நிரதிசய போக்யமான திருவடிகளை கிட்டி -என்கிற ஸ்தானத்தில் சேர்ந்து என்கிறது கெடு மரக்கலம் கரை சேர்ந்தால் போலே இருக்கை

தீக் கொளீ இ-அதாவது-வெட்டின காட்டை சுட்டிப் பொகட்டுமா போலே ,மோஷ இஷ்யாமி -என்கிற
கிருபா ப்ரயுக்த சங்கல்பத்தாலே ,முந்துற அடி அறுத்த வற்றை –-இறவு செய்யும் பாவக் காடு தீக் கொளீ வேகின்றதால் –பெரியாழ்வார் -5-4-2–என்று இவ் ஆத்மாவை முடிக்கிற கர்ம சந்தானம் நெருப்பு கொழுந்தி வேகா நின்றது என்னும் படி ..-யாதேஷீ கா தூல மக்னவ் ப்ரோதம் ப்ரதூயேத
ஏவம் ஹாஸ்ய சர்வே பாப்மான ப்ரதூயந்தே
-சாந்தோக்யம் -5-24–3 –என்கிற படி-( தீயிலிட்டு தூசு போலே )உரு மாய்ந்து போம் படி தக்த மாக்கி —கவ்வை எரு இட்டு-அதாவது-ஊரவர் கவ்வை எரு இட்டு–திருவாய் -5-3-4- -என்கிற படியே பகவத் ஆபிமுக்யம் பிறந்த அளவிலே , இவன் பாகவதன் ஆனான் என்று சம்சாரிகள் சொல்லும் பழி மொழியை பக்தி ஆகிற பயிருக்கு வர்த்தகமான எருவாக இட்டு –அமுதவாறு தலை பற்றி-அதாவது –அறிவை என்னும் அமுதவாறு தலைப் பற்றி வாய் கொண்டது –பெரியாழ்வார் -5-4-2–என்கிற படியே ,-ஜ்ஞானம் ஆகிற அமுத நதியை ,வாயளவாய் தலைக்கு மேலே போம் படி ,பெருகப் பண்ணி —

(தீக்கொளீஇ) ““இறவு செய்யும்‌ பாவக்காடு தீக்கொளீஇ வேகின்றதால்‌”” (பெரியா. தி. 5- 4- 2) என்று ‘அஸந்நேவ ஸ பவதி?” என்கிறபடியே இவ் வாத்மாவுக்கு விநாஸத்தைப்‌ பண்ணுகிற பாபமாகிற காட்டை, ‘“இஷீகாதூல மக்‌,நெள ப்ரோதம்‌ ப்ரதூ,யேத, ஏவம்‌ ஹாஸ்ய ஸர்வே பாப்மாநஃ ப்ரதூ,யந்தே” (சா. 5 – 24 – 0), “போய பிழையும்‌ புகுதருவானின்றனவும்‌ தீயினில்‌ தூசாகும்‌”’ (திருப்பாவை 5) என்கிறபடியே வேம்படி பண்ணி, ‘*ஊரவர் கவ்வை எருவிட்டு” (திருவா. 5 – 3 – 4) என்று ப,க,வதபி,முக்‌,யம்‌ பிறந்தவளவிலே இவனை பாக, வதனென்று ஸம்ஸாரிகள்‌ சொல்லுகிற பழி மொழியை ப,க,வத்‌,ப,க்தி வர்த்த, கமான எருவாக இட்டு. (அமுதவாறு தலைப் பற்றி) ”அறிவை யென்னு மமுதவாறு தலைப் பற்றி வாய்க் கொண்டது’” (பெரியா. தி. 5 – 4 – 2) என்று ஜ்ஞாநமாகிற அம்ருத 

பறவை ஏறு பரம் புருடா நீ என்னைக் கை கொண்ட பின்
பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும் பதம் ஆகின்றதால்
இறவு செய்யும்  பாவக்காடு தீக்கொளீஇ  வேகின்றதால்
அறிவை என்னும் அமுதவாறு தலைப் பற்றி வாய்க் கொண்டதே -5- 4-2 ––இவ் ஆத்மாவை முடிக்கிற கர்ம சந்தானம் பெரு நெருப்பு கொழுந்தி வெந்திட்டதால்-ஸ்ரீ ஆழ்வாரும் ஸ்ரீ ஈஸ்வரனும் சம்ச்லேஷித்த அளவிலே அனுமதி வேண்டாதே வெந்தது ஆய்த்து – காண்டா வனம் வெந்தால் போலே-ஞானம் அம்ர்தமாகிற ஆறு பெருகி   வாய் அளவாய் தலைக்கு மேல் போகா நின்றது-அதனில் பெரிய என் அவா -என்றபடி-அநு கூல ஞானம் ஆகிற பெருக்காறு-எல்லாம் மென்மேலே ஒரு முகமாய் பெருக்கிடா நின்றது –

மாயனை மன்னு வட மதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்–5--உத்தர பூர்வாகக்ங்கள்-பால் குடித்து வியாதி போக்குமா போலே – இனியது அனுபவிக்க இன்னாதது குலையும்

ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னை சொல் நீர்படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்

பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ! கடியனே?–5-3-4-ஊரார் சொல்லுகிற பழியை ப்ரேமத்துக்கு எருவாக இட்டு -பிராதி கூல்ய-நிவ்ருத்தி பிறந்து -இவ்விசயத்தே கை வைத்த அன்றே பழி சொல்லாத தொடங்கினார்கள் –விபீஷணஸ்து தர்மாத்மா நது ராக்ஷஸ சேஷ்டித்த -என்றாள் இறே ஒருத்தி -நான் மறக்கப் பார்த்தாலும் -அவர்கள் ஸ்மாரகராய் அவத்யக்கரராக நின்றார்கள் -இவர்களால் இறே எனக்கு தரித்து இருக்க லாயிற்று

ஈரி யாய் கசிந்ததிலே – அதாவது –கண்ணனுக்கு என்று ஈரி யாய் இருப்பாள் -திருவாய் -6-7-9–என்றும் ,-கசிந்த நெஞ்சினளாய் –திருவாய் -6-7-8–என்றும் சொல்லுகிற படி அந்த ஞான வாரியாலே -( வெள்ளத்தால் )– நல்லது கண்டால் அவனுக்கு என்னும் அனுசந்தானத்தாலே -ஆர்தரதை விளையும் படி ,–ஈர நெல் வித்தி--அதாவது –சங்கமாகிற நெல்லை விதைத்து .நெஞ்சு பதம் செய்து ,செவ்வி வாய்த்த வாறே அந் நெஞ்சிலே–3-எழு நாற்றுக்களையும் வேர் முதல் மாய்த்து ( எழு நாற்று -என்ற இதில் தொடங்கி தலை வணக்கினவாறே -வரை மனமாகிய வயலிலே விதைத்த பக்தியாகிற நெல் முளைத்துக் கருவிலே ஈன்று காய்த்து முற்றின படியை சொல்லிற்று )-அதாவது – செய்தலை எழு நாற்று –பெரியாழ்வார் -3-7-9-என்கிறபடியே ,-தத் பிரத்யாசன்னமாய் , ததேக பரதந்த்ரமாய் ,ததேக போக்யமாய் ,வளருகிற இப் பயிரில் ,–வேர் முதல் மாய்த்து–அதாவது –-கர்த்ருத்வ போக்த்ருத்வ புத்தியை விளைக்கும் அஹங்கார மம காரங்களாகிய களையையும் –நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து–திருவாய் -1-2 3–என்கிறபடியே வூசி வேரோடே பறித்து பொகட்டு–

(ஈரியாய்க் கசிந்ததிலே) “’கண்ணனுக் கென்று ஈரியா யிருப்பாள்‌”” (திருவா. 6 – 7 – 9) என்றும்‌, ”கசிந்த நெஞ்சினளாய்‌ ”” (திருவா. 6 – 7 – 8) என்றும்‌, அந்த ஜ்ஞாந வாரியாலே நெஞ்சு பதஞ் செய்து செவ்வி வாய்த்தவாறே. (ஈர நெல் வித்தி) ஸங்க,மாகிற நெல்லை விரைத்து. (எழு நாற்றுக்களையையும்‌ வேர் முதல்‌ மாய்த்து) ‘“செய்த் தலை யெழு நாற்று”’ (பெரியா. தி. 3 – 7 – 9) என்று சொல்லுகிற அந்தப் பயிரிலுண்டான ““நீர் நுமதென்றிவை வேர் முதல்‌ மாய்த்து ”’ (திருவா. 1 – 2- 3) என்று அஹங்கார மமகாரமாகிற களையை ஊசி வேரொடு பறித்துக் பொகட்டு

காரியம் நல்லனகள் அவைகாணில் என் கண்ணனுக்கு என்று
ஈரியா யிருப்பாள்
இதெல்லாம் கிடக்க இனிப்போய்ச்
சேரி பல்பழி தூஉய் இரைப்பத் திருக்கோளூர்க்கே
நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே.–6-7-9–கிருஷ்ணனுக்கு என்றால் மேல் ஒன்றும் சொல்ல மாட்டாதே -அவன் குணங்களை அனுசந்தித்து நீராய் இரா நின்றாள் -ஈரித்து இருக்கும் -ஆர்த்த ஹ்ருதையாய் இருக்கும்

கைத் தலத்துள்ள மாடழியக் கண்ணாலங்கள் செய்து இவளை
வைத்து வைத்து கொண்டு  என்ன வாணிபம் நம்மை வடுப்படுத்தும்
செய்த் தலை எழு நாற்றுப் போலே   அவன் செய்வன செய்து கொள்ள
மைத் தட முகில் வண்ணன் பக்கல் வளர விடுமின்களே – 3-7-9—செய்த் தலையிலே விளைந்த நாற்று
உடையவன் வேண்டினபடி விநியோகம் கொள்ளுமா போலே இவளையும் அவன் வேண்டினபடி செய்து கொள்ள

நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து இறை
சேர் மின் உயிர்க்கு அதன் நேர் நிறையில்லே–1-2-3—அனர்த்த கரமான அஹங்கார மமகாரங்களை-இவற்றை சவாசனமாகப் போக்கி-இது அக்னி நா சிஞ்சேத்-போலே துஷ்கரம்-இவை நேராக விடும் போது பகவத் விஷயத்தைப் பற்றி விட வேணும்-அவனைப் பற்றும் போது இவற்றை விட்டு அல்லது பற்ற ஒண்ணாது-ஆகையாலே இதரே தராஸ் ராயக்ரச்தம்-ஆனால் இதற்குப் பொருள் என் -என்னில் -ஆச்சார்ய சேவையாலும் சாஸ்திர அப்யாசத்தாலும் இவை அபுருஷார்த்தம் என்று அத்யவசிக்கை
இரண்டு வ்ருஷம் சேர நின்றால்-ஒன்றிலே குட்டமிட்டுப் பெருங்காயத்தை வைத்தால் மற்றையது நிற்க இது க்ரமத்தால்-உலர்ந்து போமா போலே –இந்த ஜ்ஞானம் பிறந்தால் இவை ஸ்வ கார்யம் செய்ய மாட்டாது

பட்டி சேவை அதக்கி-அதாவது – களை பறித்தாலும் போராதே , பட்டி புகாமல் நோக்கினால் இறே பயிர் தலைப் பெற்றுச் செல்லுவது –ஆகையாலே –வன் புலச் சேவை அதக்கி—பெரியாழ்வார் -5-2-3-என்கிற படி , விஷயாந்தரங்களிலே பிரவணமாய் ,பகவத் பக்தியை தலை அழிக்கை யாலே , பக்தி யாகிற இப் பயிருக்கு பட்டியான இந்திரியங்கள் ஆகிற சேக்கள் உடைய ஸ்வைர சஞ்சார ஹேதுவான கர்வத்தைப் போக்கி —மீது கொள்ளாமல் குறிக் கொள் வித்து –அதாவது – பயிர் பல பர்யந்தம் ஆனாலும் ,பலிதாம் சத்தை ,ராத்ரிசரர் அபஹரிக்க யோக்யதை உண்டாகையாலே ,ரஷை பண்ணுவிக்க வேணும் ஆயத்து ..-அப்படியே –விளைந்த தானியமும் ராக்கதர் மீது கொள்ள கிலார்கள்–பெரியாழ்வார் -4-4-8–என்கிற படி
அனந்யார்ஹமாம்படி–அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் –திருவாய் -5-2-5-என்று ராஷச பிரக்ருதிகளும் , ஆசூர பிரக்ருதிகளுமாகச் சொல்லலாம் படியான அபாகவாத ஜனங்கள் -எங்களுக்கும் இவன் ஸ்நேஹீ -என்று இருக்கும் அவ் வழியாலே ,-இத்தை அபஹரிக்கைக்கு அவகாசம் அற -பக்தியாகிற பயிர் விளைந்து இருக்கும் நெஞ்சுக்கு –-குறிக்கொள்வித்து –-அதாவது-பக்தியாகிற பயிர் விளைந்து கிடக்கிற நெஞ்சுக்கு – பறவை அரையா உறகல் பள்ளி அறைக் குறிக் கொள்மின் -பெரியாழ்வார் -5-3-9-என்கிற படியே காவல் அடைத்து —

(பட்டிச் சேவதக்கி ) வன் புலச்சேவை யதக்கி -பெரியா -5-2-3 என்கிறபடியே அந்தப் பயிருக்குப் பட்டியான இந்த்ரியங்களாகிற சேக்களினுடைய ஸ்வைர ஸஞ்சார ஹேதுவான கர்வத்தைப் போக்கி (மீது கொள்ளாமல் ) விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ள கிலார்கள் -பெரியா -4-4-8- என்று அந்த பக்தியாகிற தானியம் அப்ராப்த விஷயத்திலே போகாதே –பள்ளியறை குறிக்கொள் மின் -என்று காவலடைத்து –(கடல் புரைய விளைத்து ) 

வயிற்றில் தொழுவைப் பிரித்து வன் புல சேவை அதக்கி
கயிற்றும் அக்கும் ஆணி கழித்து காலிடை பாசம் கழற்றி
எயிற்றிடை மண் கொண்ட எந்தை யிராப் பகலா ஓதுவித்து என்னை
பயிற்றிப் பணி செய்யக் கொண்டான் பண்டன்று பட்டினம் காப்பே -5- 2-3 –இந்திரியங்கள் ஆகிற வலிய சேக்களை அதக்கி -நெருக்கி – சேவதக்குவார் -போலே -என்னக் கடவது இறே-காவலில் புலனை வைத்து -(திருமாலை -1 )

நளிர்ந்த சீலன் நயாசீலன் அபிமான துங்கனை நாள் தோறும்
தெளிந்த செல்வனை சேவகம் கொண்ட செம்கண் மால் திருக் கோட்டியூர்
குளிர்ந்து உறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவார் உள்ள நாட்டினில்
விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ள கிலார்களே -4- 4-8 ––இதுக்கு ஏகாந்தமான குணங்களை சிநேகத்தோடு சொல்லுவார்  உள்ள நாட்டினுள்-அவர்கள் அளவல்ல-அவர்கள் சம்பந்தம் உடையவர் அளவல்ல-அவர்கள் இருந்த ஊர் அளவல்ல – அவ்  வூரோடே சேர்ந்த நாட்டினுள் விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ள கிலார்களே–தனக்கும் தம் பந்துக்களுக்கும் என்னல் இறே அவர்கள் கொள்ளுவது-பகவத் பாகவத விஷயங்களுக்கு என்றால் அவர்களுக்கு கொள்ள சக்தி இல்லை
புனத்தினைக் கிள்ளி புதுவவி காட்டி வுன் பொன் அடி வாழ்க (5-3 )-என்று இறே இவர்கள் இருப்பது –

செய்கின்ற தென் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்ற திவ்வுலகத்து
வைகுந்தன் பூதங்களே யாய் மாயத்தினால் எங்கும் மன்னி
ஐயம் ஒன்றில்லை அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்
உய்யும் வகை இல்லை தொண்டீர் ஊழி பெயர்த்திடும் கொன்றே.–5-2-5—அஸூர ராக்ஷஸரான நீங்கள் மனுஷ்ய வேஷத்தை கொண்டு பிறந்து கலந்து திரிகிறீர் உள்ளீர் ஆகில்-

கடல் புரைய விளைந்து தலை வணக்கினவாறே –அதாவது –காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி –திருவாய் -5-3-4–என்கிறபடியே எருவும் நீரும் உண்டானாலும் , மேல் வர்ஷம் இல்லாத போது பயிர் தலை குளிர்ந்து வளராது என்று ,காள மேக நிபஸ்யமான வடிவழகை , வர்ஷித்து வளர்க்கையாலே ,அந்த பக்தி ஆகிற பயிர் கடல் போலே ,அபரிசேத்யமாம்படி பலித்து .-தலை வணக்கினவாறே –அதாவது –வரம்பற்ற கதிர்ச் செந்நெல் தாள் சாய்த்துத் தலை வணக்கும் –பெரியாழ்வார் -4-9-8–என்கிற படி பலித்த பயிரானது பரி பக்குவமாய் தலை வணங்குமா போலே ,
பலிதமான அதனுடைய பரிபாக நிபந்தனமான ஆர்த்தியால் வந்த பாரவச்யம் பிறந்தவாறே —நாளு நாள் கோள் குறையாத நின்றார் அறியாமல் குந்தம் கொண்டு ஆராமை உண்டு-( நாளு நாள்-இது முதல் முன்னம் பாரித்து முடிய விளைந்த நெற்களை உரிய காலத்திலே அறுத்து –நெற்களை வேறாகப் பிரித்து-பின் அரிசியாக்கி -பின் சோறாக்கி – உண்டு பயன் பெற்றமயைச் சொன்னபடி ) –அதாவது –
பத்தி பரிமாணம் சொன்ன இத்தால் பலித்தது – தத் ஆஸ்ரயமான ஆத்ம வஸ்து பகவத் போக்யமாம் படி திருந்தினமை இறே –ஆகையால் –

காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி -5-3-4- என்று எருவும் நீரும் உண்டானாலும் மேல் வர்ஷம் இல்லாதபோது பயிர் அபி விருத்த மாகாமையாலே காளமேக நிபஸ்யமான வடிவழகாலே அபரிச்சேதயமான சமுத்திரம் போலே அந்தப் பக்தியாகிற பயிரை அபி விருத்தமாக்கி (தலை வணக்கினவாறே ) வரம்புற்ற கதிர்ச் செந்நெல் தாள் சாய்த்துத் தலை வணக்கும் -பெரியா -4-9-8-என்கிறபடியே அந்தப் பக்தி பரிபாகத்தாலே பலித்த பயிரானது தலை வணக்குமா போலே ஆர்த்தியால் வந்த பாரவஸ்யம் விளைந்தவாறே

ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னை சொல் நீர்படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனி
நம் கண்ணன் தோழீ! கடியனே?–5-3-4—ஊரார் பழியும் -தாயார் ஹித வசனமும் -கேளாத படியான காதல் -அமர்ந்த காதல் -தர்ம அனுபந்தியான காதல் -பெரிதான அமரை விளைத்த காதல் -உஊராரை பூசல் ஆக்கின காதல் என்னவுமாம் –ஈரம் -சங்கம் /காதல் -காமம் –சங்காத் சஞ்சாயதே காம கடல் புரைய விளைவித்த-அப்ரமேயோ மஹா த-என்ற கடல்தி ஒப்பாம் அத்தனை -கிடையா விடினும் விட மாட்டாத காதல் என்கை-கடல் புரைய என்றார் முதல் -அநந்தரம் கடலின் மிகப் பெரிதால் என்றார் –பின்னை மண்டிணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -என்றார் -முடிவில் அதனில் பெரிய என் அவா –என்றார் –இது இறே காதல் பெருகின படி -இது இறே பொய் நின்ற ஞானத்திற்கு பின்பு இவ்வளவும் வர விளைத்துக் கொண்ட கார்யம் –

உரம் பற்றி இரணியனை உகிர் நுதியால் ஒள்ளிய மார்பு உறைக்க ஊன்றிச்
சிரம் பற்றி முடி இடிய கண் பிதுங்க வாய் அலரத் தெழித்தான் கோயில்
உரம் பெற்ற மலர்க் கமலம் உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட
வரம் புற்ற கதிர் செந்நெல் தாள் சாய்த்து தலை வணங்கும் தண் அரங்கமே -4- 9-8 –சேற்று வாய்ப்பாலே உரம்பெற்று இருக்கிற தாமரைப் பூவானது –திரு உலகு அளந்து அருளின போது-மேல் எடுத்த திருவடிகளைப் போலே கிளற வளர்ந்து பிரகாசியா நிற்க-அப்போது –லங்கைஸ் சூராணாம் -என்கிறபடியே தேவர்கள் முதலானவர்கள் திரண்டு காலை நீட்டி தலையை வணங்கி தண்டன் இட்டு கிடந்தால் போலே –

4-நாளு நாள் வந்து என்னை முற்றவும் தான் உண்டான்–திருவாய் -9-6-8- -என்றும் ,-கோட் குறை பட்டது என் ஆர் உயிர் —திருவாய் -9–6-7–என்றும் ,-நின்றார் அறியா வண்ணம் என் நெஞ்சும் உயிரும் அவை உண்டு-10-7-1- -என்கிற படியே-ஒரு நாள் புசித்து விடுகை அன்றிக்கே ,நாள் தோறும் வந்து புஜியா நிற்கச் செய்தே .பின்னையும் , பர்யாப்தன் அன்றிக்கே படுகிற அலமாப்பு கண்டு ,இத் தலையிலே சிறிது தொங்கிற்று உண்டு என்று நிரூபித்து அறிய வேண்டும் படியாக இப் பரிமாற்றத்தில் தலை நின்று- பிராட்டி ,திருவடி ,திரு அனந்த் தாழ்வான் -முதலானாரும் அறிய மாட்டாதபடி , பெரும் பசியர் ஆனவர்கள் விளைந்த நெல்லை சேர அறுத்து கொண்டு போய் , புஜிக்கப் பற்றாமே முற்றின வளைவுகளை குந்தம் கொண்டு புசிக்குமா போலே , முக்தனான வாறே ,பின்னை சேரப் புஜிக்க பற்றாத தன் அபிநிவேசத்தால், இந்த சரீரதோடே இருக்கச் செய்தே விளைந்த பரிபாக அனுகுணமாக – மனக்காராமை மன்னி உண்டிட்டாய் —திருவாய் -10-10-6-என்கிறபடியே , மனசுக்கு ஒரு காலும் திருப்தி பெறாதே மென் மேலும் விரும்பி புசித்து —

(நாளு நாள் கோள் குறையாக நின்றாரறியாமல்‌ குந்தங் கொண்டு ) “நாளுநாள்வந்தென்னை முற்றவும்‌ தானுண்டான்‌”’ (திருவா. 9 – 6 -8)என்றும்‌, ““கோட் குறைபட்டது என்னாருயிர்‌ கோளுண்டே’‘ (திருவா. 9 – 6 – 7) என்றும்‌, ““என்னெஞ்சுமுயிரு முள் கலந்து நின்றாரறியா வண்ணம்‌ என்னெஞ்சு முயிருமவை யுண்டு”” (திருவா. 10 – 7 – 1) என்றும்‌ சொல்லுகிறபடியே நாள் தோறும்‌ பு,ஜியா நிற்கச் செய்தே பர்யாப்தனன்றியிலே அவனுடைய அலமாப்புக் கண்டு இத் தலையிலே சிறிது உண்டென்று நிரூபிக்கலாம்படி யாயும்‌, ப,க,வத,நுப, வத்தில்‌ தலை நின்ற பிராட்டி திருவடி திருவநந்தாழ்வான்‌ தொடக்கமானவர்களும்‌ அறிய வொண்ணாதபடி குந்தங் கொண்டு பு,ஜித்தும்‌. (ஆராமை யுண்டு) “மனக்காராமை மன்னி உண்டிட்டாய்‌’” (திருவா. 10 – 10 & 6) என்று இப்படிக்‌ குந்தங் கொள்ளுகையாலே அபர்யாப்தனாம்படி புஜித்து ,

கோள் உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான்
நாளும் நாள் வந்து என்னை முற்றவும் தானுண்டான்
காள நீர் மேகம் தென் காட் கரை என் அப்பற்கு
ஆள் அன்றே பட்டது என் ஆர் உயிர் பட்டதே–9-6-8—ஒரு நாள் அனுபவித்து நம்மது அன்றோ என்று கை வாங்கி இருக்கை அன்றிக்கே நாள் தோறும் நாள் தோறும் அபூர்வமாக அனுபவியா நின்றான் –
என்னை முற்றவும் தானுண்டான்-சம்சாரத்திலே அணு பரிமாணமான இவ்வஸ்துவை விபுவான தான் விளாக்குலை கொண்டு அனுபவித்தான் என்கிற இது தனக்கு ஏற்றமாம் படி கௌரவியா நின்றான் –

காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–9-6-7—என்னாத்மாவை நிச்சேஷமாக புஜிக்க செய் தேயும் இத்தலையிலே சிறிது சேஷித்தது –அவன் சாபேஷனாய்ப் போகையாலே இத்தலையிலே சிறிது சேஷித்தது என்று இருக்கிறார் -இப்போது இருந்து கிலேசப்படக் காண்கையாலே சிறிது தொடங்கிற்று உண்டு என்கிறார் -ஒரு சர்வஞ்ஞான் இல்லாத ஒன்றிலே இத்தனை வியாமோஹம் பண்ணக் கூடாது என்று இருக்கிறார் –

செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் திருமால் இரும் சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே
–10-7-1-கலவிக்கு தேசிகரான பிராட்டி திருவனந்த ஆழ்வான் முதலானோர்க்கும் அபூமியாம் படி யாய்த்து என்னோடு கலந்து –ஆருயிர் பட்டது எனதுயிர் பட்டது -என்றார் இறே –என்-நெஞ்சும் உயிரும் அவை உண்டு –தேஹாத்ம விவேகம் பண்ண அறியாதே யாய்த்து புஜித்தது–சேதனனையும் அசித்தோபாதி பரதந்தனாக்கி புஜித்தான் –உருவமும் ஆருயிரும் உடனே யுண்டான் -என்கிறபடியே எனக்கு என்ன மாட்டாமைக்கு -அசித்தோபாதி யாய்த்து சேதனனும் –-போகத்தில் இழிகிற போது இருவராய் இழிந்து -எதிர்த்தலையைத் தோற்பித்து -போக்தாவும் அபிமானியும் தானே யானான் –நிறைந்தானே–அவாப்த ஸமஸ்த காமன் ஆழ்வாரைப் பெறுவதற்கு முன்பு குறைவாளனாய் -இவரைப் பெற்ற பின்பு -பூர்ணன் ஆனான்-

எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்

புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6-விரும்பி நிரந்தரமாக புஜித்தாய்-இனி உண்டு ஒழியாய்-நீ தொடங்கின காரியத்தை நடுவே குறை கிடைக்க விடாதே விஷயீ கரித்தே விடாய் -நீ ஆரம்பித்த காரியத்தில் குறை கிடப்பது உண்டோ -நீ இவ்வளவு புகுர நிறுத்துகைக்கு நான் சஹகரித்தது உண்டோ மேல் நான் ஓன்று செய்கைக்கு

காலக் கழிவாலே நிலத்து உகாமல் பற்று அறுத்து –அதாவது –காலக் கழிவு செய்யேல்–திருவாய் -2-9-2–என்றும் ,-மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல—பெரிய திருமடல் -என்றும் சொல்லுகிற படி பரிபக்வமான இவ் வஸ்து ,கால ஷேபத்தால் தரைப் பட்டு மங்கிப் போகாமல் ,-பற்று அறுத்து –
அதாவது – வினை பற்று அறுக்கும்-பெரிய திருமொழி -11-4-9- -என்கிற படி – பிராப்தி விரோதமான கர்மங்களை அறுத்து –தண்டால் அடித்து பதர் அறுத்து – அதாவது – அறுத்த நெல் கதிரை தடியாலே அடித்து பதறும் மணியும் பிறிக்குமா போலே-அருள் என்னும் தண்டால் அடித்து -பெரிய திருவந்தாதி -26-என்கிறபடி தன் உடைய கிருபை என்னும் த்ருட தர சாதனத்தாலே ,நெல்லோடு ஒக்க விளைந்து இருப்பதாய் , அசாரமான பதர் போல் இருக்கிற ஆத்ம அனுபவத்தில் ருசியை அறுத்து –போர்த்த தோல் விடுத்து –அதாவதுஅந் நெல்லில் உமியை விடுவிக்குமா போலே , போர்த்த பிறப்போடு நோயோடு மூப்பொடு இறப்பவை பேர்த்து ––திருவாய் -7-5-10- என்கிற படி , ஆத்மாவை பொதிந்து கொண்டு கிடப்பதாய் ,ஆதிவ்யாதிகளுக்கும் (மனத்தின் சோர்வும் சரீர நோயும் ) ,ஷட் பாவ விகாரங்களுக்கும் ,அடியான ஸ்தூல தேகத்தினுடைய ,விமோசனத்தைப் பண்ணி —

காலக் கழிவாலே நிலத்துகாமல்‌ பற்றறுத்து) ‘”காலக் கழிவு செய்யேலே”’ (திருவா. 2-9 – 2) என்றும்‌, மன்னும்‌ வறுநிலத்து வாளாங் குகுத்தது போல்‌”‘ (பெ.மடல்‌] என்றும்‌, இப்படி பக்வமான ஸமதந்தரம்‌ கால க்ஷேபத்தாலே மங்கிப் போகாதபடி, ‘ வினை பற்றறுக்கும்‌”’ (திருமொழி 11 – 4 – 9) என்றும்‌, “*வினைகள்‌ பற்றறுதல்‌” (திருச்ச. 74) என்றும்‌ சொல்லுகிறபடியே ப்ராப்தி விரோதி,யான கர்மங்களை அறுத்து, அருளென்னும்‌ தண்டாலடித்து‘” (பெ.திருவ. 26) என்றும்‌, அவனுடைய பரம க்ருபையாலே நெல்லோடே கூடி விளைந்திருப்பதாய்‌, அஸாரமான பதர் போலே இருக்கிற ஆதமாநுப,வத்தில்‌ ருசியை யறுத்து, (போர்த்த தோல் விடுத்து) “போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடிறப்பவை பேர்த்து” (திருவா. 7 – 5 – 10) என்கிறபடியே ஆதி,வ்யாதி, களுக்கும்‌ ஷட்‌,பாவ விகாரத்துக்குமடியான ஸ்தூ,ல தே,ஹத்தையும்‌ கழற்றி

ஈதே யானுன்னைக் கொள்வது எஞ்ஞான்றும் என்
மைதோய் சோதி மணி வண்ண வெந்தாய்
எய்தா நின் கழல் யான் எய்த ஞானக்
கைதா காலக் கழிவு செய்யலே –2-9-2--செய்கிறோம் என்ன ஒண்ணாது செய்து கொடு நிற்க வேணும் –

மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல் ———-89
என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும்–தனக்காகக் கண்டது அன்றிக்கே பிறர்க்காக கண்ட வஸ்து பிறர்க்கு ஆகப் பெறாதே தானே நின்று –வெறு நிலத்திலே நிஷ் பிரயோஜனமாகப் பொகடுமா போலே விழுந்த தரை தன்னிலே – விநியோகம் கொள்ளுகைக்கு யோக்யமாய் இருப்பதொரு வஸ்துவும் இன்றிக்கே பாழே பொகட்டால் போலே நல் நறு வாசம் தான் இருக்கிறபடி –

துணை நிலை மற்று எமக்கோர் உளது என்று இராது தொழுமின்கள் தொண்டர் தொலைய
உண முலை முன் கொடுத்த வுரவோளதாவி உகவுண்டு வெண்ணெய் மருவி
பணை முலை யாயர் மாதர்  உரலோடு கட்ட அதனோடும் ஓடி அடல் சேர்
இணை மருது இற்று வீழ நடை கற்ற தெற்றல் வினை பற்று அறுக்கும் விதியே —11-4-9–ஓன்று என்னலாம் படி நின்ற மருதுகள் முறிந்து விழும்படியாக நடை கற்ற தெள்ளியவன் நம்முடைய பாபத்தை ச வாசனமாக போக்கும் இது நிச்சிதம் -கர்ம பலன்களை -ருசி வாசனைகள் உடன் போக்குவான் என்றபடி-

அறிந்து அறிந்து வாமனன் அடி இணை வணங்கினால்
செறிந்து எழுந்த ஞானமோடு செல்வமும் சிறந்திடும்
மறிந்து எழுந்த தெள் திரையுள் மன்னு மாலை வாழ்த்தினால்
பறிந்து எழுந்து தீ வினைகள் பற்று அறுதல் பான்மையே –74—பகவத் ப்ராப்தி பந்தகங்களாய் -ஸ்வ ஆஸ்ரயித்தில் வேர் விழுந்தவை அவற்றை விட்டு-பறிந்து போய்-மறுவல் இடாதபடி வாசனையோடே போம்படி பண்ணுகை–அவன் ஓர் ஏற்றம் செய்தானாக அன்றிக்கே ப்ரக்ர்தியாய் இருக்கை-இதுவும் -சர்வ பாபேப்யோ மோஷ யிஷ்யாமி -என்கிறபடியே கைங்கர்யத்துக்கும் உப லஷணம் –

யானும் என் நெஞ்சமும் இசைந்து ஒழிந்தோம் வல் வினையைக்
கானும் மலையும் புகக் கடிவான் தானோர்
இருளன்ன மா மேனி எம் மிறையார் தந்த
அருள் என்னும் தண்டால் அடித்து —26-
–மற்று ஓன்று காணாமல் ஸ்ரம ஹரமான வடிவை யுடைய என் ஸ்வாமியுடைய ப்ரஸாதமாகிற தண்டாலே ஹிம்ஸித்து (மற்று ஓன்று காணாமல்-வினையைப் போக்குகைக்கு வேறே ஒரு உபாயம் காணாமல் அவன் அருளாலே போக்கினான் என்றபடி )

வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை
பேர்த்துப் பெருந்துன்பம் வேரற நீக்கி
த தன் தாளின் கீழ்ச்
சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே.–7-5-10—ஆத்ம ஸ்வரூபம் தெரியாத படி அறிவு கெடுக்கும் ஜென்மம் என்ன -அது புக்க இடத்தே புக்க கடவதான வியாதி என்ன -அத்தை பொறுத்தாலும் அவர்ஜனீயமாய் வரக் கடவதான மூப்பு என்ன -அதுக்கு எல்லையான மரணம் என்ன -இவற்றை அடைய –பேர்த்துப் –விரகர் நெடும் சுவ போக்க வேண்டும் படி இ றே அதின் கனம்-அஹம் சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்றான் இறே –பெருந்துன்பம் வேரற நீக்கித -ஆத்ம அனுபவம் ஆகிற மஹா துக்கத்தை வாசனையோடு போக்கி -ப்ரக்ருதி ப்ராக்ருதங்களுக்கு அஸ்த்தர்ம் என்பதொரு நன்மை உண்டு -அபுருஷார்த்தம் ஸ்திரமானத்துக்கு மேல் இல்லை இறே மஹா துக்கம் –
தன் தாளின் கீழ்ச்-சேர்த்து -அதுக்கு மேலே நித்ய கைங்கர்யத்தை கொடுத்து அருளி

சூஷ்ம ஓட்டும் நீரிலே கழுவி-அதாவது – அநந்தரம் தண்டுலத்தை தவிடு அற கழுவுமா போலே ,ஸ்தூல தேஹம் போனாலும் , தான் போகக் கடவதன்றிக்கே ,சம்சரண ஹேதுவாய்க் கொண்டு , போந்ததாய் ,பகவத் அனுபவ விரோதியாய் இருக்க செய்தே ,விரஜா பர்யந்த கமன சாதனமாய் கிடந்த சூஷ்ம சரீரத்தையும் ,-தத்தோய ஸ்பர்ச மாத்ரென -என்கிற படியே –விரஜா ஜல ஸ்பர்சத்தாலே வாசனா ரேணுக்களுடன் போக்கி ,-கர்ம சம்பந்தம் அறுகையாலே ,சூஷ்ம சரீரம் இருக்கைக்கு ஹேது இல்லாமையால் ,இங்கே கழித்து விடலாய் இருக்க செய்தே ,விரஜா பர்யந்தம் இவனுக்கு கமன சாதனமாக ஈஸ்வரன் தன் இச்சையாலே வைத்து ,விரஜையிலே உள் புக்கவாறே கழித்து விடும் – -என்று இறே நம் ஆச்சார்யர்கள் அருளிச் செய்வது ..-சூஷ்ம பிரகிருதி சம்பந்தம் கிடக்கும் அளவும் ,வாசனா ரேணுவும் கிடக்கையாலே , அதுவும் அப்போது ஆய்த்து நிவ்ருத்தம் ஆவது ..-விரஜைக்கு சென்று கிட்டி , வன் சேற்று அள்ளலையும் வாசனா ரேனுவையும் கழுவி-என்றார் இறே (–ஸ்ரீ பிள்ளைலோகாச்சார்யாரும் அர்ச்சிராதி கிரந்தத்தில் )-வேறோர் கலத்து இட்டு-அதாவது-சீரார் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை வேரார் நுதல் மடவாள் வேறோர் கலத்திட்டு –சிறிய திருமடல் -30- என்கிறபடியே ,ஸ்தூல சூஷ்ம ரூபியான பிரக்ருதியில் நின்றும் விவேகித்து வாங்கின இவ் ஆத்ம வஸ்துவை அமானவ கர ஸ்பர்சத்தாலே ,அப்ராக்ருத தேஹத்திலே பிரவேசிப்பித்து-

ஸூஷ்ம வொட்டும்‌ நீரிலே கழுவி) ஸ்தூ,ல தே,ஹம்‌ போனாலும்‌ ஸம்ஸரிக்கைக்கு யோக்‌,யமாகையாலே ப,க,வத,நுப,வ விரோதி,யுமாய்‌, விரஜாதீர பர்யந்தமாக இவ்வாத்மாவுக்கு க,மந ஸாத,நமுமாய்‌, துஷம் போலே ஸ்வரூபத்தைப் பற்றிக் கிடக்கிற ஸுக்ஷ்ம ப்ரக்ருதியையும்‌ ‘*தத்தோய ஸ்பர்ஸ மாத்ரேண”‘ என்கிறபடியே விரஜா ஜல ஸ்பர்பத்தாலே வாஸநா ருசிகளோடே போம் படி கழுவி. (வேறோர் கலத்திட்டு) “சீரார்‌ தயிர்‌ கடைந்து வெண்ணெய்‌ திரண்டதனை வேரார்‌ நுதல்‌ மடவாள்‌ வேறோர்‌ கலத்திட்டு”” (சி.மடல்‌) என்று ஸ்தூ,ல ஸூக்ஷ்மமான ப்ரக்ருதியினின்றும்‌ விவேகித்து எடுக்கப் பட்டு ப,க,வத்‌, விநியோக அர்ஹமான ஆத்ம ஸ்வரூபத்தை அமாநவ கர ஸ்பர்ஸத்தாலே அப்ராக்ருத விக்‌,ரஹ ப்ரவேஸத்தைப் பண்ணி வைத்து

சீரார் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை
வேரார் நுதல் மடவாள் வேரோர் கலத்திட்டு
நாரார் உறி ஏற்றி நன்கமைய வைத்ததனைவேரோர் கலத்திட்டு – வெண்ணெய் பரிமாறும் கலத்திலே இட்டு வைக்கில் நாற்றமே குறியாக அறியும் என்று த்ரவ்யாந்த்ரம் பரிமாறும் கலத்திலே இட்டு வைத்தாள் காணும்

பைம்தொடி மடந்தையரை கொண்டு ஷட் குண ரச அன்னமாக்கி-அதாவது –-அணைவர் போய் அமரர் உலகில் பைம்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள் இணை–திருவாய் -10-2-11- -என்கிறபடியே ,
தம் பஞ்ச சதான்யப்சரசாம் பிரதிதாவந்தி சதம் மாலா ஹஸ்தா -இத்யாதி பிரகரேன-வந்து எதிர் கொண்டு -தம் ப்ரஹ்ம அலங்காரேண அலங்குர்வந்தி -கௌஷீதகீ –1-35– என்று தங்கள் கையாலே இவ் ஆத்ம வஸ்துவுக்கு ப்ரஹ்ம அலங்காரத்தைப் பண்ணி , சத்கரிக்கும் திவ்ய அப்சரஸூகளைக் கொண்டு ,தன்னுடைய போகத்துக்கு அர்ஹகாம் படி ,அலங்கரிப்பியா நின்று கொண்டு ,-ஸ்வேன ரூபேண அபிநிஷ்பத்யதே -சாந்தோக்யம் -என்கிறபடி ஸ்வரூப ஆவிர்பாவம் பிறந்து ,முன்பு திரோஹிதமாய் கிடந்த ஆத்ம குணங்கள் எல்லாம் பிரகாசிக்கப் பெற்று இருக்கிற இத் ஆத்ம வஸ்துவை
ஞானாதி ஷட் குணங்களாகிற ஷட் ரச யுக்தமாய்-அஹம் அன்னம்–தைத்ரியம் –என்கிற அன்னம் ஆம் படி ,அவர்கள் கர ஸ்பர்சத்தால் பக்குவம் ஆக்கி , சேஷ வஸ்துகமான ஞான சக்த்யாதி ஷட் குணங்களும் ,சேஷி விநியோகத்துக்கு உறுப்பு ஆகையாலே ,இக் குணங்களோடு கூடி –அஹம் அன்னம் – என்று இருக்கும் இவ் வஸ்து அவனுக்கு அறுசுவை அடிசிலாய் இறே இருப்பது

(பைந்தொடி மடந்தையரைக் கொண்டு ஷட்‌குண ரஸாந்நமாக்கி] ‘அணைவர் போயமருலகில்‌ பைந்தொடி மடந்தையர் தம்‌ வேய் மரு தோளிணை”’ (திருவா. 10 – 2 -11) என்று “ஸதம்‌ மாலா ஹஸ்தா?” (கெளஷீதகீ) இத்யாதியாலே சொல்லப்படுகிற திவ்யாப்‌ஸரஸ்ஸுக்களைக் கொண்டு பகவத்‌ போக யோக்‌யமாம்படி அலங்கரித்து, “ஸ்வேந ரூபேணாபி நிஷ்பத்‌யதே”‘ என்று ஸ்வ ஸ்வரூபாவிர்பாவத்தைப்‌ பெறுவிக்கையாலே ஸ்வருப கதமாயிருக்கச் செய்தே முன்பு திரோஹித மாயிருக்கிற ஜஞாந ஸக்தயாதிகளும்‌, அபஹத பாப்மத்வாதிகளும்‌ ப்ரகாஸித்து இவை ஸேஷவஸ்துகதமாகையாலே ஸேஷி விநியோகத்துக் குறுப்பாகையாலே அந்த குண விஸிஷ்டமான ஆத்ம வஸ்துவைத்‌ தனக்கு போக்‌,யமாக்கி

அந்தமில் புகழ் அனந்த புர நகராதி தன்னை
கொந்தலர் பொழில் குருகூர் மாறன் சொல் லாயிரத்துள்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போய் அமர் உலகில்
பைந்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள் இணையே–10-2-11-
–பரம பதத்தில் சதம் மாலா ஹஸ்தா -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே அப்சரஸ் ஸூ க்களுடைய கொண்டாட்டத்துக்கு விஷய பூதராவார் –முடியுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள –என்றத்தோடு — வேய் மரு தோள் இணையை அணைவர்-என்கிற இத்தோடு வாசி இல்லை மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே -என்னக் கடவது இறே-

வானோர்க்கு ஆரா அமுதம் ஆனவாறே -அதாவது – வானோர்க்கு ஆரா அமுதே -திருவாய் -5-7-11-என்கிறபடி ,-வைகுந்தன் தமர் எமர் எமதிடம் புகுது -திருவாய் -10-9-9–என்பது –விதி வகை புகுந்தனர்-10 -9 -10—-என்பது-பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர் -10-9-10-இத்யாதி படி ஆதரிக்கும் நித்ய ஸூரிகளுக்கு பரம போக்யமாம் படி ஆனவாறே —முற்றும் உண்ண முன்னம் பாரித்து -அதாவது-என்னை முற்றும் உயிர் உண்டு-10-7-3- -என்கிற படி இத் ஆத்ம வஸ்துவை முழுக்க புஜிப்பதாக –என்னில் முன்னம் பாரித்து -9-6-10–என்கிறபடி- இத் ஆத்ம வஸ்துவுக்கு ருசி பிறப்பதற்கு முன்னே பிடித்து பாரித்து –

(வானோர்க் காராவமுதான வாறே) நித்ய ஸூரிகளுக்கும்‌ போக்யமானவாறே. (முற்றுமுண்ண முன்னம்‌ பாரித்து) “என்னை முற்றுமுயிருண்டு” (திருவா, 10 – 9 -10) என்றும்‌, “என்னில்‌ முன்னம்‌ பாரித்து”’ (திருவா. 9 – 6 -10) என்றும்‌ சொல்லுகிறபடியே இவனை புஜிப்பதாக இவனிலும்‌ முன்னே பாரித்து-

தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக்
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்த ஆயிரத்துள்ளிவை தண் சிரீவர மங்கை மேய பத்துடன்
வைகல் பாடவல்லார் வானோர்க்கு ஆராவமுதே.–5-7-11--சாபிப்ராயமாக கற்கும் அவர்கள் -சர்வ காலமும் நித்ய ஸூரிகளுக்கு போக்ய பூதராவார் -அதுக்கு அடி-உபாய உபேயங்கள் இரண்டும் ஈஸ்வரன் என்று இருக்குமது அவர்களுக்கு அபிமதம் ஆகையாலே-

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–10-9-9—பரமபதத்தைச் சென்று கிட்டின அளவிலே திரு வாசல் காக்கிற முதலிகள் -ஸ்ரீ வைகுண்ட நாதனுடையார் எங்களுக்கு ஸ்வாமிகள் -எங்கள் பதத்தைக் கொள்ள வேணும் என்றாய்த்து அவர்கள் பாசுரம் -பயிலும் திருவுடையார் யாவராலும் எம்மையாளும் பரமர் -என்ற இவரைப் போலே யாய்த்து அங்குள்ளாரும் இருப்பது -திருவாசல் முதலிகள் எதிரே வந்து சத்கரித்து -கையைக் கொடுத்து -கொண்டு புக்கு தங்கள் கைபுடைகளிலே இருத்தி பிரம்பையும் கொடுப்பார்கள் ஆயத்து-சென்று புகுகிறவர்களுக்கும் கைங்கர்யமே உத்தேச்யம் -அங்கு இருக்கிறவர்களுக்கு கைங்கர்யமே யாத்திரை -ஆகையால் இவர்கள் கொள்வதும் அவர்கள் கொடுப்பதும் அது -புகுது என்றது -புகுதுக -என்றபடி

விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–10-9-10–தங்கள் ஆசனங்களில் இவர்களை வைத்து தங்கள் தாழ்ச்சி தோற்றது தறையிலே இருந்து -தங்கள் மஹிஷிகள் நீர் வார்க்க -இவர்கள் ஸ்ரீ பாதத்தை விளக்கினார்கள் –

வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்

கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10—நான் பாரித்த அளவும் அன்றிக்கே நான் பாரித்த காலத்துக்கு முன்பே பாரித்து –ஆச்சார்ய விஷயீ காரத்துக்கு பின்பு இறே இவருடைய பாரிப்பு -சம்பந்தத்துக்கு திரஸ்கார ஹேது இல்லாமையால் -அவனுடைய பாரிப்பு சத்தா ப்ரயுக்தம் இறே
தான் என்னை–விபுவாய் ஸ்வதந்த்ரனான தான் -அணு பரிமாணனாய் பரதந்த்ரனான என்னை –
முற்றப் பருகினான்-தன் குண சேஷ்டிதாதிகளைக் காட்டி -என்னை நீராக்கி -நிச்சேஷமாகப் பருகினான் –வஸசா சாந்வயித்வைநம் லோச நாப்யாம் பிபன்நிவ -என்கிறபடியே -இத்தலையை அழித்துப் பரிமாறினான் -என்கிறபடியே –விழுங்குமவன் காணில் -என்று இறே இவர் பாரித்தது

5-உழுவதோர் நாஞ்சில் கொண்டு , பெருக முயலும் பக்தி உழவன் கிருஷி பலம் இறே -( இதுக்கு மேல் எல்லாம் சர்வேஸ்வரனை உழவனாக உருவகம் செய்து அருளிற்று )-அதாவது-உழுவதோர் படையும் –பெரியாழ்வார் -4-7-5–என்றும் ,-ஒற்றை குழையும் நாஞ்சிலும் –பெரிய திருமொழி -8-8-8–என்கிறபடி
இவர் கர்ஷகன் என்று தோற்றும் படி க்ருஷி சாதனத்தைக் கையிலே கொண்டு , அரியது எளியதாகும் ஆற்றலால் மாற்றி பெருக முயல்வாரைப் பெற்றால்–இரண்டாம் திருவந்தாதி -22-என்கிறபடியே ,அரிதான தன் திரு அடிகளில் பிராப்தியும் எளிதாகும் படி ,இவ் ஆத்ம உஜ்ஜீவனத்துக்கு மிகவும்
யத்னியா நிற்கும் ஸ்வபாவனாய்-பக்தி உழவன்–நான்முகன் -23–என்கிற படி .–இவ் ஆத்மாவுக்கு ஸ்வ விஷய பக்தியை விளைக்கைக்கு கிருஷி பண்ணித் திரியும் சர்வேஸ்வரனுடைய – கிருஷி பலமிறே இவ் ஆழ்வாருக்கு உண்டான இப் பக்தி- என்றபடி –இத்தால் இவருடைய பக்தி உத்பத்தி காரணம்- பகவத் கிருஷி -என்றது ஆய்த்து-

(உழுவதோர்‌ நாஞ்சில்கொண்டு பெருக முயலும்‌ பத்தி யுழவன் க்ருஷிபலமிறே) “உழுவதோர்‌ படையும்‌” (பெரியா. தி. 4 – 7 – 5), “ஒற்றைக் குழையும்‌ நாஞ்சிலும்‌”” (திருமொழி 8 – 8 – 9) என்று க்ருஷி ஸாதநத்தைக் கொண்டு, ‘“அரியதெளிதாகுமாற்றலால்‌ மாற்றிப்‌ பெருக முயல்வாரைப்பெற்றுல்‌” (இ.திருவ. 22) என்று அரிதான பகவத்‌ ப்ராப்தியும்‌ எளிதாம்படி இவனுடைய உஜ்ஜீவநத்துக்கு மிகவும்‌ க்ருஷி பண்ணுகிற *பத்தி யுழவன்‌”‘ (நா. திருவ. 23) என்கிற பக்திக்கு க்ருஷி பண்ணுகிற ஸர்வேஸ்வரனுடைய க்ருஷி பலமாய்க்‌ கொண்டு உண்டாய்த்து இவருடைய பக்தி என்கிறார்‌. ஆக இத்தால்‌ இவருடைய பக்தி போக்தாவான ஸர்வேஸ்வரனுடைய க்ருஷி பலம்‌ என்றதாய்த்து-

உழுவதோர்  படையும் உலக்கையும் வில்லும் ஒண் சுடர் ஆழியும் சங்கும்
மழுவோடு வாளும் படைக்கலமுடைய மால் புருடோத்தமன் வாழ்வு
எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப் பொழுது அளவினில் எல்லாம்
கழுவிடும் பெருமைக் கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே – 4-7-5-கலப்பையும்–இவற்றை ஆயுதமாக உடைய

ஒற்றைக் குழையும் நாஞ்சிலும் ஒரு பால் தோன்றத் தான் தோன்றி
வெற்றித் தொழிலார் வேல் வேந்தர் விண் பால் செல்ல வெஞ்சமத்து
செற்ற கொற்றத் தொழிலானைச் செந்தீ மூன்றும் இல்லிருப்ப
கற்ற மறையோர் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-8–ஒரு காது குழையும்
கலப்பையும் ஒரு கால் தோன்ற தான் வந்து –

அரியது எளிதாகும் ஆற்றலால் மாற்றி
பெருக முயல்வாரைப் பெற்றால் –கரியதோர்
வெண் கோட்டு மால் யானை வென்றி முடித்தது அன்றே
தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து—-22--அரியதாவது -பெறுதற்கு அரிதான பகவல் லாபமும் -பகவத் பஜனமும் – இவை இரண்டும் எளிதாகும் -என் செய்தால் -என்னில் –ஆற்றலாலே -என்கிறது-சக்தியாலே -என்னுதல் –பொறையாலே   என்னுதல் –சக்தியான போது அவனுக்கு சக்தி வைகல்யம் இல்லாமையாலே இவன் பரத்தை தன் பக்கலிலே மாற்றிக் கொண்டு இவனுடைய பேற்றுக்கு பிரதி பந்தகங்கள் ஆனவற்றையும் போக்கி தன்னைக் கொடுக்கைக்கு யுடலாகிறது –-இவன் தலையிலே ஒரு தேவை இடுகிறது என் — எல்லாம் நாமே ஏறிட்டுக் கொண்டு செய்வோம் என்பான் ஒரு பர சக்தியைப் பெற்றால் – இவன் அசக்தி தீரத் தன் சக்தியைக் காட்டி ரஷிக்கை –அன்றிக்கே –பொறை யானபோது
இவன் பெறாமைக்கு பண்ணி வைக்கும் ப்ராதி கூல்யங்களை தன் கிருபையாலே பொறுத்துக் கொடுக்கைக்கு யுடலாய் இருக்கை-இவனுடைய சர்வ ரஷணங்களையும் தன் தோளிலே ஏறிட்டுக் கொண்டு இவனுக்குப் பேற்றிலே அந்வயமாம் படி –தன் பேறாகக் கொண்டு ஆஸ்ரிதன் பக்கல் உள்ள அல்ப அனுகூல்யத்தை – அஜ்ஞனாய் அசக்தனானவன் இத்துணை செய்து உகக்கப் பெற்றோம் -என்று
மிகவும் உத்சாஹிப்பாரைப் பெற்றால் அரியது எளியதாகும்-இத்தாலே அவனாலே அவனைப் பெறுதல் -தம்மாலே அவனை இழத்தல் -என்றபடி

வித்தும் இட வேண்டும் கொலோ விடை யடர்த்த
பத்தி யுழவன் பழம் புனத்து -மொய்த்து எழுந்த
கார்மேகம் அன்ன கருமால் திருமேனி
நீர் வானம் காட்டும் நிகழ்ந்து –23-–பகவத் விஷய பக்திக்கு இவன் செய்ய வேண்டுவது ஓன்று யுண்டோ –பிரதிபந்தகங்களைத் தானே போக்கி –ருசியைப் பிறப்பித்து –பக்தியை விளைப்பானான-எம்பெருமானுமாய்ப் பழையதான சம்சாரப் பரப்பில் பழம் புனம் என்கிறது – விளைந்து வருகிற நிலத்தில் உதிரியே முளைக்குமாபோலே ஈஸ்வரன் சம்சார பிரவாஹத்தைப் பண்ணி வைத்த படியாலே
யாத்ருச்சிகமாக ஸூஹ்ருதங்கள் பிறக்கும் என்று கருத்து –அவன் வடிவைக் காண வேணும் என்கிற அபேஷை  பிறக்கிற பின்னோடே- திரண்டு எழுந்த கார் காலத்தில் மேகம் போலே கறுத்து இருக்கிற நிறத்தை யுடைய சர்வேஸ்வரன் திரு மேனியை நீர் கொண்டு எழுந்த காளமேகமானது காட்டும்-அன்றிக்கே – சம்சாரம் ஆகிற பழம் புனத்திலே ஈர நெல் வித்தி -என்கிறபடியே விஷய ருசி யாகிற விதையைத் தான் தேடி இட வேணுமோ-அவன் வடிவோடு போலியான தன் வடிவைக் காட்டி
தத் விஷய ருசியை வர்ஷூ கவலாஹம் தானே முன்னின்று ப்ராபிய நிற்கும் -என்றுமாம் –

இப்படி இத் தலையில் நன்மை அற்று இருக்கச் செய்தே ஈஸ்வர கிருஷி பலிக்கக் கண்ட இடம் உண்டோ என்ன -அருளிச் செய்கிறார் மேல் –இப்படி இத்தலையில்‌ ஒரு நன்மை யின்றிக்கே யிருக்க ஈஸ்வரனுடைய கிருஷி பலித்தவிடமுண்டோ வென்னில்‌, கோஸல தேஸத்திலுண்டான ஸ்தாவர ஜங்கமங்‌களையும்‌ கோகுலத்திலுண்டான சராசரங்களையும்‌ ஸ்வ ஸம்ஸ்லேஷ விஸ்லேஷைக ஸுக துக்கராம்படி பண்ணக் கண்டோமிறே என்கிறார்‌-

கோசல கோகுல சராசரம் செய்யும் குணம் ஓன்று இன்றியே அற்புதம் என்னக் கண்டோம்-சூரணை -105

(கோசல சராசரம் ஓன்று இன்றியே என்னக் கண்டோம்-என்றும்-கோகுல சராசரம் செய்யும் குணம் அற்புதம் என்ன கண்டோம்-என்றும் )-கோசல சராசரம் ஓன்று இன்றியே என்னக் கண்டோம்-
அதாவது–த்வாம் ஆமனந்தி கவய கருணா ம்ருதாப்தே ஞான க்ரியா பஜன லப்யம் அலப்யம் அந்யை ஏதேஷு கேன ,வரத உத்தர , கோசலஸ்தா பூர்வம் சாதுர்வம் அபஜந்த ஹி ஜந்தவஸ் த்வாம்–ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் -69–என்கிற படியே , அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் – ஓன்று இன்றியே நல் பாலுக்கு உய்த்தனன் –திருவாய் -7-5-1- என்று திரு அயோத்யாதி கோசல தேச வர்திகளான சராசரங்கள் எல்லாம் நிர்ஹேதுகமாக ,-ராமோ ராமோ ராம இதி ,பிரஜாநாம் அபவன் கதா , ராம பூதம் ஜகத பூத் ராமே ராஜ்யம் பிரசாசதி –யுத்த –131-96–என்றும் ,-அபிவிருஷா பரிம்லானாஸ் ச புஷ் பாங்குர கோரகா
விஷயேதே மஹா ராஜா ராம வியசன கர்சிதா உபதப் தோதகா நத்ய பல் வலானி சராம்சிச
பரிசுஷ்க பலாசாநி வநான் யுபவ நாசிச –
அயோத்யா -59-4-5—(சுமந்திரன் தசரதனுக்கு சொன்னவை)–என்றும்-அகால புலினோ வருஷா சர்வேசாபி மதுரஸ் ரவா யுத்த –127-17–இத்யாதி படியே-ஸ்வ சம்ச்லேஷ விஸ்லேஷ ஏக சுக துக்கங்கள் ஆகிற நல்ல ஸ்வாபத்தை உடையதாம் படி நடத்தினான் என்றும் –

“த்வாமாமநந்தி கவய? கருணாம்ருதாப்‌ தே, ஜ்ஞாந க்ரியா பஐந- லப்‌யமலப்‌யமந்யை
ஏதேஷு கேந வரதோரத்தர கோஸல ஸ்தா பூர்வம்‌ ஸதூர்வ- மப ஜந்த ஹி ஜந்தவஸ்த்வாம்‌’” 
(வரத,.ஸ்த. 69) என்றும்‌, “அயோத்தியில்‌ வாழும்‌ சராசரம்‌ முற்றவும்‌ – ஒன்றின்றியே நற் பாலுக்குய்த்தனன்‌” (திருவா. 7 – 5 – 1) என்றும்‌ கோஸல தே,ஸத்திலுண்டான சராசரங்களடைய “அபி வ்ருக்ஷாச பரிம்லாநாஸ் ஸ புஷ்பாங்குர கோரகா? உபதப்தோதகா நத்‌ய பல்வலாநி ஸராம்ஸி ச ப பரிஸூஷ்க பலாஸாநி வநாந் யுபவநாநி ச (ரா. ௮. 59 – 8), ““விஷயே தே மஹாராஜ ராம வ்யஸந கர்ஸிதா?”, என்றும்‌, “அகால பலிநோ வ்ருக்ஷா ச” (ரா. யு. 127 – 18) என்றும்‌, “ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாமபவந்‌ கதர? ! ராமபூ,தம்‌ ஜகத பூத்‌ ராமே ராஜ்யம்‌ ப்ரஸாஸதி”? (ரா. உ.) என்றும்‌ ஒரு ஹேது வின்றியிலே ஸ்வ ஸம்ஸ்லேஷ விஸ்லேஷைகஸுக துக்க ராகவும்‌.

கற்பார் இராம பிரானை அல் லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே
.–7-5-1—நல்ல இடத்தை யுடைய திரு அயோத்யையில் -நில மிதி தானே ராம பக்தியை விளைப்பிக்கும் என்கை -தேசோயம் சர்வ காமதுக்–ராகவார்த்தே பராக் ராந்தா நபிராணே குருதேதயாம் -என்னுமவர்கள்-வாழும்-வர்த்திக்கும் என்னும் ஸ்தாநத்திலே வாழும் என்கிறது -தேச வாசம் தானே போக ரூபமாய் இருக்கை -ராம குணங்களையே அனுபவித்து இருக்கும் என்னுதல்-சராசரம் முற்றவும்-ஸ்தாவர ஜங்க மாத்மகமான சகல பதார்த்தங்களையும் –-நற்பாலுக்கு உய்த்தனன்-நல்ல ஸ்வ பாவத்தை யுடைத்தாம் படி பண்ணினவன் –தன் சம்ச்லேஷ விஸ்லேஷமே ஸூக துக்கமாம் படி பண்ணினான் -திர்யக் யோனி கதச்சாபி சர்வோ ராமம நுவரத–என்றும் – -அபி வ்ருஷா பரிம்லா நா -என்றும் -ராம மேவா நுகச்சத்வ மஸ்ருதிம் வாபி கச்சித -என்றும் -ராமேண ரஹி தா நாந்து கிமர்த்தம் ஜீவிதம் ஹிந-என்றும் -இப்படி ஸ்வ சம்ச்லேஷ விஸ்லேஷ ஸூ க துக்கமாம் படி பண்ணிற்று ஒரு தேச விசேஷத்திலேயோ -என்ன-நான்முகனார் பெற்ற நாட்டுளே.–ப்ரஹ்மாவுக்கு அடைத்த நாட்டுள்ளே-அவனுடைய நியாமகத்வத்தையும் தவிர்த்து -சேதனருடைய கர்ம வஸ்யத்தையும் தவிர்த்து தான் கைக்கு கொண்டு தன்னால் அல்லது செல்லாத படி பண்ணினான் –

கோகுல சராசரம் செய்யும் குணம்-அதாவது-கோகுலத்தில் உண்டான சராசரங்கள் எல்லாம் –அவன் ஒருவன் குழலூதின போது , மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் மலர்கள் வீழும் , வளர் கொம்புகள் தாழும் , இரங்கும் கூம்பும் , திரு மால் நின்ற நின்ற பக்கம் நோக்கி அவை செய்யும் குணமே -பெரியாழ்வார் –3-6-10–என்றும் ,-மருண்டு மான் கணங்கள் மேய்க்கை மறந்து மேய்ந்த புல்லும் கடை வாய் வழி சோர , இரண்டு பாலும் துளங்கா புடை பெயரா எழுது சித்திரங்கள் போல நின்றனவே –பெரியாழ்வார் -3-6-9–என்றும் ,-பறைவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படு காடு கிடப்ப ,
கறைவையின் கணங்கள் கால் பரப்பிட்டு கவிழ்ந்து இறங்கி செவி யாட்ட கில்லாவே
-பெரியாழ்வார் -3-6-8–என்றும்-கோவலர் சிறுமியர் இளம் கொங்கை குதுகலிப்ப ,உடல் உளது வீழ்ந்து எங்கும்
காவலும் கடந்து கயிறு மாலையாகி வந்து கவிழ்ந்து நின்றனரே
–பெரியாழ்வார் -3-6-1– -என்கிறபடி
சைதன்ய பிரசரணம் இல்லாத வ்ருஷங்களோடு சைதன்யம் லேசம் உள்ள திர்யக்கு களோடு ,
சைதன்ய விசேஷார்ஹா மனுஷ்ய ஜாதியாரான சிறு பெண்களோடு , (வலக்கை இடக்கை அறியாத இடைப்பெண்கள்–என்பதால் அர்ஹ சப்தம் ) வாசி அற நிர்ஹேதுகமாக பகவத் பிராவண்ய பரவசங்கள் ஆனவை கண்டு – நங்கை மீர்காள் ஓர் அற்புதம் கேளீர்-ஸ்ரீ பெரியாழ்வார் -3-6-1-என்று விஷேஷஜ்ஞர்-(ஸ்ரீ பெரியாழ்வார்-) வித்தராய் சொல்லும்படியாகக் கண்டோம் என்கை–

கோகுலங்களிலுண்டான சராசரங்களிலே சைதந்ய ப்ரஸரண மில்லாத வ்ருக்ஷங்களும்‌, “அவனொருவன்‌ குழலூதின போது மரங்கள் நின்று மது தாரைகள் பாயும்‌ மலர்கள்‌ வீழும்‌ வளர் கொம்புகள்‌ தாழும்‌ இரங்கும்‌ கூம்பும்‌ திருமால்‌ நின்ற நின்ற பக்கம்‌ நோக்கி அவை செய்யும்‌ குணமே” (பெரியா.தி. 3 – 6 – 10) என்றும்‌, சைதந்ய லேஸமுடைய திஸ்ர்யக்குக்களும்‌ “மருண்டு மான் கணங்கள்‌ – கால் பரப்பிட்டுக் கவிழ்ந்திரங்கிச்‌ செவி யாட்டகில்லாவே”” (பெரியா. தி, 3 – 6 – 6) என்று திர்யக் ஸ்தாவரங்கள்‌ அந்யோந்யம்‌ ஸ்வபாவங்கள்‌ மாறாடும்படி பண்ணி, “நங்கைமீர்களிதோரற்புதம்‌ கேளீர்‌” (பெரியா-3 – 6 – 1) என்று இதோராஸ்சர்யமென்று விஸேஷஜ்ஞர்‌ சொல்லும்படியாகக்‌ கண்டோமிறே என்கிறார்‌.

கரும் கண் தோகை மயில் பீலி அணிந்து கட்டி நன்கு உடுத்த பீதக வாடை 
அரும் கல வுருவின் ஆயர் பெருமான் அவன் ஒருவன் குழலூதின போது 
மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் மலர்கள் வீழும் வளர் கொம்புகள்  தாழும்  
இரங்கும் கூம்பும்  
திருமால் நின்ற நின்ற பக்கம் நோக்கி யவை செய்யும் குணமே -3- 6-10 ––தேவ மனுஷ்ய திர்யக் ஜாதிகள் உருகின அளவு அன்றிக்கே – அசேதனங்களான வ்ருக்ஷங்களானவை ஒரு படிப்பட நின்று – உள்ளுருகினமை தோற்ற மது தாரைகள் பாயா நிற்கும் –கொம்பில் நிற்கிற பூக்கள் எல்லாம் நிலை குலைந்து வீழா நிற்கும்-மேலே வளருகிற சாகைகள் ஆனவை கீழே படியா நிற்கும்-தன்னிலே நின்று அலைந்து ஈடுபடா நிற்கும்-ஸ்ரீ யபதி யானவன் உலாவி உலாவி நின்று குழலூதின வழியே அவன் நின்ற நின்ற  பார்ஸ்வங்களை நோக்கி – – அஞ்சலி செய்வாரைப் போலே தாழ்ந்த கொம்புகளை குவியா நிற்கும் -அவை செய்தபடி குணம் இருந்தபடி -என் தான்-என்று ஆச்சர்யப் படுகிறார்-

திரண்டு எழு தழை மழை முகில் வண்ணன் செங்கமல மலர் சூழ் வண்டினம் போலே 
சுருண்டு இருண்ட குழல் தாழ்ந்த  முகத்தால் ஊதுகின்ற  குழலோசை வழியே 
மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த புல்லும் கடை வாய் வழி சோர 
இரண்டு பாடும் துலுங்கா புடை பெயரா வெழுது சித்திரங்கள் போலே  நின்றனவே
-3-6-9-மான்   திரள்கள் ஆனவை -சஜாதீய விஜாதீய விபாகாதிகள் தோன்றாபடி அறிவு அழிந்து – தனக்கு தாரகமாக எப்போதும் செய்து போரும் மேய்கையை தவிருகை அன்றிக்கே -விஸ்மரித்து – மேயக் கவ்வின புல்லும் -இறக்குதல் உமிழ்தல் செய்ய மாட்டாதே  பார- பர-வச்யத்தால் கடை வாய் வழியே நழுவி விழ -முன்னும் பின்னுமான இரண்டு அருகும் அசையாதே – பக்கங்களிலும் போகவும் மாட்டாதே  –சித்திரத்தில் எழுதினவை போல் – ஒரு வியாபாரம் அற்று நின்றன 

சிறு விரல்கள் தடவி பரிமாற செம்கண் கோட செய்ய வாய் கொப்பளிக்க 
குறு வெயர்ப் புருவம் கூடலிப்ப கோவிந்தன் குழல் கொடூதின போது 
பறைவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படு காடு கிடப்ப 
கறைவையின் கணங்கள் கால் பரப்பி இட்டுக் கவிழ்ந்து இறங்கி செவி ஆட்ட கில்லாவே
-3-6-8 – பஷிகளினுடைய திரள்கள்-தம் தாமுடைய வஸ்தவ்ய ஸ்தலங்களை விட்டு-குழலோசை வழியே ஊதுகிறவன் அளவும் வந்து சூழ்ந்து கொண்டு – வெட்டி விழுந்த  காடு போலே பரவசமாய் கிடக்க -பசுக்களினுடைய திரள்கள் ஆனவை-பாரவச்யத்தாலே கால்களை பரப்பி-தலைகளை மிகவும் நாற்றிக் கொண்டு-செவியை இசைக்கில் இசைக்கு பிரதிபந்தகம் ஆம் -என்று  செவியை ஆட்டவும் மாட்டாதே நின்றன —

நாவலம் பெரிய தீவினில் வாழு நங்கைமீர்கள் இதோர் அற்புதம் கேளீர்
தூவலம் புரி உடைய திருமால்  தூய வாயில் குழலோசை வழியே
கோவலர் சிறுமியர் இளம் கொங்கை குதுகுலிப்ப வுடல் உள் அவிழ்ந்து எங்கும்
காவலும் கடந்து கயிறு மாலையாகி வந்து கவிழ்ந்து நின்றனரே -3 6-1 
–கோ வல்லர் -கோ ரஷணத்திலே சமர்த்தர் ஆனவர்களுடைய சிறுப் பெண்கள்-தங்கள் வசத்தில் நில்லாதபடி பரிணதமான முலைகளானவை – தங்களைப் பிற்பாடராக்கி நாங்கள் முன்னே போகிறோம் -என்று கௌதூஹலம் பண்ண –இளம் கொங்கை -சொல் கேளா பிரஜைகள் ஆய்த்து -கொங்கையில் குதுகுலிப்பு மாத்ரம் அன்றிக்கே – கொங்கைக்கு ஆஸ்ரயமான சரீரமும் – சர்வேந்த்ரியங்களுக்கும் பிரதானமான மனசும் கட்டுக் குலைந்து –எங்கும் உள்ள காவலையும் கடந்து – அதாவது அறைக்குள்ளே இட்டு -தாய்மார் அணைத்துக் கொண்டு -கதவுகளையும் அடைத்து – புறக் காவலாக வேண்டும் பந்துக்களும் கிடக்க –
அந்த காவல்களை எல்லாம் – சூத்திர பாஷாணங்களைப் போலே ஒரு சரக்காக நினையாமல் கடந்து -கயிற்றிலே ஒழுங்கு பட சேர்த்த மாலைகள் போலே நிரை நிரையாக வந்து –இவனைச் சூழ்ந்து கொண்டு நின்றார்கள்-அன்றிக்கே – குழலோசை வழியே வந்து -இவனைக் கண்டவாறே -லஜ்ஜித்து –
கவிழ்தலை இட்டு -( சூழ்ந்து )-நின்றார்கள் என்னுதல் எதிர் செறிக்க மாட்டாமல் கவிழ்தலை இட்டு நின்றார்கள் -என்னுதல்-

இத்தால் பகவத் நிர்ஹேதுக ,விஷயீகாரம் இப்படி பலிக்கக் காண்கையாலே , ஆழ்வார் உடைய பக்தியும் ,பகவத் நிர்ஹேதுக கிருஷி பலம் என்னத் தட்டு இல்லை என்றது ஆய்த்து-ஆக இத்தால்‌, சைதந்யாசைதந்யங்களிரண்டும்‌ தன்னில்‌ பதார்த்த வைஷம்யத்துக்கு ஹேதுவாமித்தனை யொழிய பகவத்‌ விஷயீகாரத்துக்கு ஹேதுவாகக்‌ காணாமையாலே இவர்க்குப்‌ பிறந்த பக்தி பகவந் நிர்ஹேதுக விஷயீகாரத்‌தாலே என்றதாயிற்று.-

ஆனால் இப்படி நிர்ஹேதுகமாக -விஷயீகரிக்கும் அளவில் ,எல்லோரையும் விஷயீகரிக்கலாய் இருக்க ,
இங்கனே இவர் ஒருவரை விஷயீகரிக்கைக்கு அடி என்ன என்னும் அபேஷையிலே-நிரந்குச ஸ்வதந்த்ரனானவன் ஈச்வரஸ்த்வ செருக்காலே செய்யும் அவற்றுக்கு அடி ஆராயப் படாது என்னுமத்தை லௌகிக த்ருஷ்டாந்தத்தாலே தர்சிப்பிக்கிறார் மேல்– (ந்யோஜ்யம் -பர அநுயோஜ்யம்-இரண்டும் இல்லாதது அன்றோ நிரங்குச ஸ்வா தந்திரம் – இன்னத்தை செய் செய்யாதே என்றும் எதனால் இப்படி செய்தாய் என்று கேட்க முடியாது-சத்ருஞ்சயன் -அயோத்யா தேச யானை பெயர் )-ஆனால்‌ ”ஸமோஹம்‌ ஸர்வபூதேஷு ந மே த்‌வேஷ்யோஸ்தி ந ப்ரிய?” (கீதை 9 – 26) என்கிறபடியே ஸர்வ ஸமனுமாய்‌, பரதுக்கம்‌ ஸஹியாதபடியான பரம க்ருபையை உடையனான ஸர்வேஸ்வரன்‌ ஸர்வரோடும்‌ தனக்கு ஸம்பந்தம்‌ ஒத்திருக்க, அவர்களிலே ஒருவனை நிர்ஹேதுகமாக விஷயீகரித்தான்‌ என்றால்‌ அவனுக்கு வைஷம்ய நைர்க்‌ருண்யங்‌கள்‌ வாராதோ என்னில்‌ நிருபாதிக ஸர்வ ஸேஷியுமாய்‌, ஸ்வதந்த்ர ஸ்வாமியுமாய்‌, அத ஏவ உபய விபூதியையும்‌ ஸ்வாதீநமாகவும்‌, ஸ்வார்த்தமாகவும்‌ உடைய ஸர்வேஸ்வரன்‌ ஸ்வகீயமான வற்றிலே ஒன்றை ஸ்வ விநியோகார்த்தமாக இப்படி நிர்ஹேதுகமாக விஷயீகரிக்கும் போது வைஷம்ய நைர்க்‌ருண்யங்களை யிட்டு நிவாரகர்‌ இல்லை என்னும்‌ அர்த்தத்தை லோக த்‌ருஷ்டாந்த த்‌வாரா அருளிச் செய்கிறார்‌.

பட்டத்துக்கு உரிய யானையும் அரசும் செய்யுமவை ஆராயாது-சூரணை -106-

(கழு மலத்து யாத்த களிறும் கருவூர் விழுமியோன் மேல் சென்றதனால் –
விழுமிய வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால தீண்டா விடுதல் அரிது )அதாவது
அராஜகமான தேசத்திலே ,பட்டத்துக்கு உரிய யானையைக் கண்ணைக் கட்டி விட்டால் ,
அவ் ஆனை எடுத்தவன் ஒருவன் ராஜாவாக்கும் அளவில் ,அல்லாதார் எல்லாரும் கிடக்க ,இவனை இப்படி அது எடுக்கைக்கு அடி என் என்றும் ,ராஜா ஆனவன் தன் செருக்காலே ஒருத்தியை தன் மகிஷியாக பரிக்ரஹிக்கும் அளவில் , இங்கன் ஒத்த ஸ்திரீகள் பலரும் உண்டாய் இருக்க ,இவளை இப்படிப் பரிகிரஹிக்க அடி என் என்றும் ஆராய்வார் இல்லை என்ற படி —இத்தால் சொல்லிற்று ஆயிற்று-ஸ்வாதந்தைர்யம் ஐஸ்வர்யம் அபர் அனுரோஜ்ய மாஹு –ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்–55-என்கிறபடியே பர்யனுயோஜ்யம் அல்லாத ஐஸ்வர்ய ஸ்வாதந்தரனாய் – (ரூப பிரகாரம் பரிமாணம் க்ருத வியவஸ்தை அனைத்துக்கும் அனைவருக்கும் செய்த நீ- சத்தை அசத்தாக்கும் அசத்தை சத்தாகும் அபரிமித சக்தன் நீ – உனது செல்வமே ஸ்வாதந்தர்யம் தானே)
பவ மோஷண ,யோஸ் த்வயைவ ஜந்து கிரியதே—ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் உத்தர -88-என்கிறபடியே –
ஸூவாதீன பந்த மோஷனாய் ,( அடங்குவார் இல்லாத ஸ்வா தந்தர்யத்தால் )
வேண்டின போது வேண்டின வஸ்துவை வேண்டினபடி யாக்க வல்லனுமான சர்வேஸ்வரன் ,
அஹேதுகமாய் இருக்க ,ஆதார விஷயமாம் படி , பட்டத்துக்கு உரிய ஆனையும் ,அரசும் ,செய்யும் அவை போலே , ஸ்வாதீனமுமாய் ,ஸ்வார்தமுமாய்-( ஸ்வ பிரயோஜனமாய் ) ஆத்ம வஸ்துக்களில் ,ஓர் ஒன்றை ,
ஈஸ்வரத்துவ செருக்குக்கு அடியான ஸ்வ இச்சையாலே ,ஸ்வ விநியோக அர்ஹஹாம் படி , விஷயீகரித்தால் , அல்லாத ஆத்மா வஸ்துக்கள் எல்லாம் கிடக்க ,இவ் வஸ்துவை இவன் இப்படி விஷயீகரிப்பான் என் என்று இதுக்கு அடி ஆராயப் படாது என்கை –

தான்‌ செய்தது தான்‌ இட்ட வழக்காம்படி நிரங்குஸ ஸ்வதந்த்ரமான ஆனை, யாரேனுமொருவனை எடுக்க, அவனே ராஜாவாகவும்‌ அந்த ராஜா பரிக்‌ரஹித்தவளே ராஜ மஹிஷியுமா மிடத்தில்‌ இப்படி ஆவானென்‌? என்று ஆராய்வாரில்லை யிறே. அப்படியே-“’ரூபப்ரகார பரிணாம க்ருத வ்யவஸ்த,ம்‌ விஸ்வம்‌ விபர்யஸிதுமந்யத ஸச்ச கர்த்தும்‌ | ஷாம்யந்‌ ஸ்வபாவ நியமம் கிமுதீ க்ஷஸே த்வம்‌ ஸ்வாதந்த்ர்ய மைஸ்வர மபர்யநு யோஜ்யமாஹு ” (வை.ஸ்த. 55), ““படுநைக வராடிகேவ க்லுப்தா ஸ்தலயோ? காகணிகா ஸுவர்ண கோட்யோ | பவமோக்ஷ்ண்யோஸ் த்வயைவ ஐந்து கரியதே ரங்க நிதே, த்வமேவ பாஹி”’ (ர. ஸ்த. உ. 88) என்று உபயமும்‌ தானிட்ட வழக்காம்படி நிரங்குச ஸ்வதந்தரனானவன்‌ செய்யுமவை ஆராயப் படாதிறே என்கிறார் –

இங்கன் சொல்லுவான் என் ?–இவர் தமக்கு ஜ்ஞாத ஸூஹ்ருதங்கள் அன்றோ இல்லை என்றது ..
யாத்ருச்சிகாத் யஜ்ஞாத ஸூஹ்ருதங்கள் அடியாக அங்கீகரித்தான் ஆனாலோ என்ன ,
அருளிச் செய்கிறார் – (யதேச்சையாக நடந்தது யாதிருச்சிகம் -ப்ராசங்கிக்கம் பேச்சுவாக்கில் ஏதோ சொன்னது – ஆனு ஷங்கிகம்-திருடன் வில்லாளி முன்பே போனவர் மூவருக்கும் அறியாமல் – காப்பாற்றப்பட்டதால் -அஞ்ஞாத ஸூஹ்ருதங்கள் ஆழ்வார் சர்வஞ்ஞர் -அனைத்தும் அறிந்து பாடியவர் -இவை இருந்தால் பாடி இருப்பார் –அனைத்தையும் திருப்புளிய மரம் அடியிலே காட்டி அருளினான் –
தெரியாமல் வந்து தலை மேல் விழும் ஸூஹ்ருதங்கள் இல்லை )-அப்படிச் சொல்லுவானென்‌? இவர் தமக்கு ஜ்ஞாத ஸுக்ருதமன்றோ இல்லை என்றது? யாத்‌ருச்சிகாதிகளான அஜ்ஞாந ஸுக்ருதமடியாக அவன்‌ விஷயீகரித்தானாகத்தட்டென்‌ ? என்னில்‌, ஸ்வ பர விபாகமற ஸர்வத்தையும்‌ ஸாக்ஷாத்கரித் தருளிச் செய்தவர்க்கு யாத்‌ருச்சிகாதிகள்‌ உண்டாகில்‌ ப்ரகாஸிக்குமிறே. இவர்க்கு அஜ்ஞாதமாவது பூர்வாவஸ்தையிலிறே. உத்தராவஸ்தையிலும்‌ அஜ்ஞாதமாகில்‌ மயர்வற மதிநலம்‌ அருளப்‌ பெற்றாரில்லையாவரிறே.-

முந்நீர் வாழ்ந்தார் சூட்டும் கோவை ஆழி என்கிற சாஷாத் க்ருத ஸ்வ பர வ்ருத்தந்தார்க்கு யாத்ருச்சிகாதிகள் உண்டாகில் தோன்றும் —சூரணை -107-

(முந்நீர் என்கிற ஸ்வ வ்ருத்தந்தார்க்கு–வாழ்ந்தார் -என்கிற பர வ்ருத்தந்தார்க்கு–சூட்டும்-என்கிற -பரம பதத்தில் உள்ளோர் வ்ருத்தாந்தையும்-கோவை ஆழி என்கிற ஈஸ்வர வ்ருத்தாந்தங்களையும் பர -பர ப்ரஹ்மத்தையும் பிறரையும் குறிக்கும் யாத்ருச்சிகாதிகள் பற்றி பாடவில்லை -ஆகையால் தோன்றவில்லை -ஆகையால் இல்லை என்றவாறு )-முந்நீர் என்கிற ஸ்வ வ்ருத்தந்தார்க்கு-அதாவது
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே-3-2-1- -என்று தொடங்கி சர்வேஸ்வரன்-விசித்ரா தேக சம்பத்தி ஈஸ்வராய நிவேதிதம் பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்த பாதாதி ஸம்யுதா –ஸ்ரீ விஷ்ணு தத்வம் -இத்யாதிப் படியே-ஸ்வ சரண கமல சமாஸ்ரயணனே உபகரணமான கரண களேபரங்களை இவ் ஆத்மாவுக்கு உண்டாக்கி , உஜ்ஜீவிப்பைக்கையே பிரயோஜனமாக ஜகத் ஸ்ருஷ்ட்டியைப் பண்ண ,நான் அவன் தந்த சரீரத்தைக் கொண்டு , அவனை ஆஸ்ரயிக்கை அன்றிக்கே -( ஆக்கையின் வழி உழல்வேன் ),அதன் வழியே ஒழிகி சம்சாரித்து போந்தேன் என்று , ஸ்வ வ்ருத்தாந்தையும் ,

“முந்நீர் ஞாலம்‌ படைத்த எம்‌ முகில் வண்ணனே” (திருவா. 3 – 2 – 1) என்று தொடங்கி அவன்‌ சேதநருடைய உஜ்ஜீவநார்த்தமாக ஜகத் ஸ்ருஷ்ட்யாதி வ்யாபாரங்களைப்‌ பண்ணின படியையும்‌, தாம்‌ அவன்‌ கொடுத்த தேஹத்தைக் கொண்டு அதன் வழியே ஒழுகி ஸம்ஸரித்துப் போந்த படியையும்‌,

முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் –3-2-1—தய நீய தசையைக் கண்டு -இவை கரணங்களை பெற்று கரை மரம் சேர வேணும் -என்று தயா பரதந்த்ரனாய் ஸ்ருஷ்டித்த படி – கர்ம அனுகுணமாக ஸ்ருஷ்டியாகிலும் யவ்கபத்யம் அனுக்ரஹக்ருதம் என்கை-எம் – ஸ்ருஷ்ட்டி சர்வ சாதாரணம் ஆகிலும் இவர் தமக்காக என்று இருக்கிறார் -எங்கும் ஓக்க வர்ஷித்தாலும் அது கொண்டு விளைத்துக் கொண்டவன் -எனக்காக -என்று இருக்குமா போலே-எல்லாருக்கும் ஓக்க அவன் செய்தாலும் க்ருதஞ்ஞான் எனக்காக -என்று இருக்கும் இறே-முகில் வண்ணனே–மேகம் ஜல ஸ்தல விபாகம் இன்றிக்கே வர்ஷிக்கிறது பிரதியுபகாரம் கொள்ளுகைக்கு அன்று இறே-பஹுஸ்யாம் என்று தன் பேறாக ஸ்ருஷ்டிக்கை –-அந்நாள் –-அசித் விசிஷ்டானாய் சோஸ்ய தசா பன்னனான நாள்
நீ –என்று இழவு உள்ளதாய் முகம் காட்டின நீ-தந்த – திருவடிகளில் தலை சாய்த்து உன்னைப் பெறுகைக்கு உறுப்பாம் உடம்பை அபகரித்து –துர்லபோ மானுஷோ தேஹ -மானுஷ்யம் ப்ராப்ய -தன்னைப் பெறுகைக்கு உபகரணமும் தானே தர வேண்டி இருக்கிற படி-ஆக்கையின் வழி உழல்வேன்
விஷய ப்ராவண்யத்தை விளைத்துக் கொண்டு சரீரத்தின் வழியே போய் அநர்த்தப் பட்டேன் –-உழல்வேன்-சுழி தோறும் முழுகா நின்றேன் -கரை ஏற கொடுத்த தெப்பத்தைக் கொண்டு அதன் வழியே போய் கடலிலே புகுவாரைப் போலே உடம்பின் வழியே போய் சம்சார ஆர்ணவத்திலே புக்கு நசிக்கை
வெந்நாள்--ஞானம் பிறந்தால் இப்பிரக்ருதி சம்பந்தத்தோடே இருக்கிற நாள் அசோகவ நிகையிலே பிராட்டி இருந்தால் போலே-நோய் வீய- நோய் என்று சரீர சம்பந்தம் ஆதல் -விஸ்லேஷம் ஆதல் –வீய முடிய-வினைகளை-சரீர சம்பந்தத்துக்கு அடியானை பாபங்களை-வேர் அறப் பாய்ந்து–சவாசனமாகப் போக்கி -பாய்ந்து என்று சினம் தோற்றுகிறது–ஒரு சர்வ சக்தி செய்யுமத்தை நான் செய்யவோ –
எந்நாள்--இன்ன நாள் என்று ஓர் அவதி பெற்றார் ஆகிலும் அத்தை பற்றி கொண்டு இருப்பர்
யான் – உன்னை பெறுகைக்கு தந்த உபகரணத்தை அழித்துக் கொண்ட நான் –-உன்னை–என் பேற்றுக்கு போக்கடி சொல்ல வேணும் -என்று வளைக்கலாம் படி இருக்கிற உன்னை-இனி வந்து கூடுவேன்--நீ தந்த கைம்முதலையும் அழித்துக் கொண்ட பின்பு கிட்டுகைக்குப் போக்கடி உண்டாகில் சொல்ல வேணும் -என்கிறார் 

வாழ்ந்தார் -என்கிற பர வ்ருத்தந்தார்க்கு-அதாவது-வாழ்ந்தார்கள் வாழ்ந்தது -4-1-6–என்று தொடங்கி ,முன்பு ஜீவித்தர்கள் வாழ்ந்த பிரகாரம் , மகா வர்ஷா ஜல புத் புத்தம் போலே -நசிந்து நசிந்து அதிபதித்தார்கள் என்னும் அது ஒழிய சிருஷ்டி காலம் தொடங்கி ,இன்றளவும் வர ஜீவித்தவர்கள் ஒரு படிப் பட ஜீவித்தே ,போந்தார்கள் என்னும் இவ் அர்த்தம் தான் இல்லை என்று – ஐஸ்வர்யவான்களாய் முன்பு ஜீவித்தவர்கள் வ்ருத்தாந்தையும் ,

வாழ்ந்தார்கள்‌ வாழ்ந்தது”” (திருவா. & – 1 – 6) என்கிற பாட்டிற்படியே முன்பு ஜீவித்தவர்களாகச்‌ சொல்லுமவர்கள்‌ ஜலபுத்‌புதம் போலே நஸித்து அதே கதியிலே போனார்கள்‌ என்னுமதொழிய ஒருபடிப்பட ஜீவித்துப்‌ போந்தார்கள்‌ என்னுமர்த்தம்‌ இல்லை என்னுமதுவும்‌,

வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை மொக்குளின் மாய்ந்து மாய்ந்து
ஆழ்ந்தார்
என்று அல்லால், அன்று முதல் இன்று அறுதியா
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பது இல்லை ; நிற்குறில்
ஆழ்ந்தார் கடற் பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ.–4-1-6–லோகத்தில் ஜீவித்தவர்கள் ஜீவித்தது இவர் வி நாசமாக நினைத்து இருக்குமத்தை இ றே அவர்கள் வாழ்வாக நினைத்து இருக்கிறது
இன்னம் கெடுப்பாயோ -என்றார் இறே இவர் –-மாமழை மொக்குளின்பெரு மழைக் குமிழி போலே -ஜல புத்புத வத்சமம் -மா மழை என்கிறது அநந்தரம் விழும் துளியோடே வசிக்கும் என்கைக்காக-மாய்ந்து மாய்ந்து-நசித்து நசித்து-ஆழ்ந்தார் என்று அல்லால், அன்று முதல் இன்று அறுதியா-வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பது இல்லை ;-ஜீவித்த நாள் பண்ணின பாபத்தாலே அதோ கதியில் விழுமது ஒழிய ஸ்ருஷ்ட்டி காலமே தொடங்கி இற்றை அளவும் வர ஜீவித்தவர்கள் ஒருபடிப்பட ஜீவித்தார்கள் என்னும் அர்த்தம் தான் முதலிலே இல்லை -அர்த்தம் தான் முதலிலே உண்டாகில் இறே இவர்களுக்கு உண்டு இல்லை என்ன வேண்டுவது

சூட்டும்-அதாவது –-சூட்டு நன் மாலைகள் –திரு விருத்தம் -21–என்று தொடங்கி ,-பரமபத வாசிகள் சாமாராதன உபகரணங்களைத் தரித்துக்கொண்டு , சாமாராதனம் பண்ணி நிற்கச் செய்தே
அத்தை உபேஷித்து திரு ஆய்ப் பாடியிலே வெண்ணெயை விரும்பி வந்து அவதரித்ததை சொல்லுகையாலே , பரம பதத்தில் உள்ளோர் வ்ருத்தாந்தையும் –

‘சூட்டு நன் மாலைகள்‌’” (திருவிரு. 20) என்று தொடங்கி – ஒரு விபூ,தியாக ஸமாராதநோந்முகராய்‌ உப கரணங்களைக் கொண்டு நில்லா நிற்கச் செய்தே அத்தை உபேஷித்துத்‌ திருவாய்ப்பாடியில்‌ திரண்ட வெண்ணெயை அசிந்திதமாக புஜிக்கையிலுண்டான இச்சையாலே கருஷ்ணனாய்‌ வந்தவதரித்து நப்பின்னைப்‌ பிராட்டிக்காக ருஷபங்கள்‌ ஏழையும்‌ அடர்த்தான்‌ என்றும்‌-

சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி வானோர்கள் நன்னீர்
ஆட்டி அம் தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்தி மிலேற்றுவன் கூன்
கூட்டிடை ஆடின கூத்து அடல் ஆயர் தம் கொம்பினுக்கே
 –21-அங்கு நடந்தவற்றையும்-இங்கு நடந்தவற்றையும் பிரத்யக்ஷமாகக் கண்டு அன்றோ அருளிச் செய்கிறார்

கோவை –அதாவது-கோவை வாயாள் பொருட்டு-4-3-1- -என்று தொடங்கி –-தேச கால விப்ரக்ருஷ்டங்களான ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாத்வ்யவதாரங்களில் விரோதி நிரசன அபதானங்களை ,
தத் தத் தேச காலங்களில் போலே தர்சித்து ,நீ இப்படி விரோதி நிரசனம் பண்ணுகிற தசைகளில் ,
உதவி சிசிரோபசாரம் பண்ணப் பெற்றிலேன் ஆகிலும் , என்னுடைய ஹ்ருதயாதிகளே உனக்கு போக உபகரணனாம் படி என் பக்கலிலே வ்யாமுக்தனாவதே ! என்கையாலும் .

““கோவை வாயாள் பொருட்டு”’ (திருவா. 4 – 3 – 1) என்று தொடங்கி -ராமக்ருஷ்ணாத்‌ யவதாரங்களைப் பண்ணி விரோதி நிரஸநம்‌ பண்ணுகிற தஸைகளிலே உதவி ஸிஸிரோபசாரம்‌ பண்ணப்‌ பெற்றிலேனாகிலும்‌ என்னுடைய ஸத்தாதிகளெல்லாம்‌ தனக்கு போக உபகரணமாகக்‌ கொள்ளும்படி என் பக்கலிலே வ்யாமுக்‌தனானானென்றும்‌.

கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய்! மதிள்இலங்கைக்
கோவை வீயச் சிலை குனித்தாய்! குலநல் யானை மருப்பு ஒசித்தாய்!
பூவை வீயா நீர்தூவிப் போதால் வணங்கேனேலும், நின்
பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே.
–4-3-1-நப்பின்னை பிராட்டியையும் ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளையும் பிரணயிநி களாக உடையனாய் இருக்க என் சத்தையே தனக்கு எல்லாமாகக் கொள்வதே -என்கிறார்–புஷ்ப ஹாஸ ஸூகுமாரமான திருமேனிக்கு பூசும் சாந்து என் நெஞ்சமாய் விடுவதே –

ஆழி –அதாவது – ஆழி எழ-7-4-1- -என்று தொடங்கி , த்ரை விக்ரமணம் ,சமுத்திர மதனம் ,பூமி யுத்தரணம் ,ஜகன் நிகரணம் ,பாரத சமர நிர்வகணம் (கை அறவு -நிர்மாணம் என்றவாறு) ஹிரண்ய நிரசனம் ,ராவண வதம் ,பாணாகர சேதனம் ,ஜகத் ஸ்ருஷ்ட்டி ,கோவர்த்தன உத்தோரணம் ஆகிய பூர்வ சரிதங்களையும் , பத்துப் பத்தாக பேசுகையாலும் , ஈஸ்வர வ்ருத்தாந்தங்களையும் –

ஆழியெழச்சங்கு’” (திருவா. 7 – 4- 1) என்று தொடங்கி – அவனுடைய த்ரைவிக்ரமாபதாநம்‌-அம்ருதமதநம்‌, பூம்யுத்‌தரணம்‌, மஹா ப்ரளயவ்ருத்தாந்தம்‌, ஹிரண்ய நிரஸநம்‌, ராவண வத,ம்‌, பாணனுடைய பாஹாுவநச்சேதந ப்ரகாரம்‌, ததநந்தரம்‌ ஜகத் ஸ்ருஷ்டி ப்ரகாரம்‌, கோவர்த்‌தநோத்‌தரணம்‌ இப்படிப்‌ பத்தும் பத்தான விஜய பரம்பரைகளையும்‌,

ஆழியெழச்சங்கு’” (திருவா. 7 – 4- 1) என்று தொடங்கி–தான் க்ரமத்தாலே பண்ணின அபதானங்களை ஒரு காலே காட்டி அருளக் கண்டு தரித்த ஆழ்வார் -திரு உலகு அளந்து அருளுகை தொடக்கமான அவனுடைய விஜய பரம்பரையை -மயர்வற மதி நலம் அருள பெற்றவர் ஆகையால் சமகாலத்தில் அனுபவித்தவர்களை போலே அனுபவித்து எம்பெருமானை ஏத்தி ஹ்ருஷ்டராகிறார் –அவனுடைய த்ரைவிக்ரம வியாபாரத்தையும்-அம்ருத மதனத்தையும்-பூமி உத்தரணத்தையும் -ஜெகன் நிகரணத்தையும் -பாரத சமர ப்ரவர்த்தகத்வத்தையும்- ஹிரண்ய வாதத்தையும்-லங்கா பங்கத்தையும்-பாண யுத்தத்தையும்-ஜகத் ஸ்ருஷ்ட்டி பிரகாரத்தையும்- கோவர்த்தன உத்தரணத்தையும்-அனுசந்தித்து -ஏவம்வித விஜய ஆபத்தான விசிஷ்டனான சர்வேஸ்வரனுடைய விரோதி நிரசன சாமர்த்தியத்தை அனுசந்தித்து அருளுகிறார் 

என்கிற சாஷாத்க்ருத பர வ்ருத்தந்தார்க்கு-யாத்ருச்சிகாதிகள் உண்டாகில் தோன்றும் –அதாவது-ஒரு உபாதி அற ஒரு போகியாக சாஷாத்தாக அருளிச் செய்கிற இவருக்கு அஜ்ஞாதமான ஓன்று இல்லாமையாலே , தம்மை ஈஸ்வரன் அங்கீ கரிக்கைக்கு அடியான ,யாத்ருச்சிகாதி ஸூஹ்ருதங்கள் உண்டாகில் , அல்லாதவற்றோ பாதி பிரகாசிக்கும் இறே என்ற படி ..இத்தால் பிரகாசித்ததாகில் அருளிச் செய்வர் –அப்படி அருளிச் செய்யக் காணாமையாலும், கேவல நிர்ஹேதுக,பிரசாத பிரகாசக வசனங்கள் பலவும் அருளிச் செய்தமை காண்கையாலும் – ( வெறிதே அருள் செய்தமையை விளக்கும் அருளிச் செயல்கள் பல உண்டே ) அவையும்-யாத்ருச்சிகாதிகள்- இவர்க்கு இல்லை என்றது ஆய்த்து

இப்படி ஸ்வ பர விபாகமற ஸர்வத்தையும்‌ ஸாக்ஷாத்கரித்துப்‌ பேசின இவர்க்குத்‌ தம்மை விஷயீகரித்தது யாத்‌ருச்சிகாதி, ஸுக்ருதமடியாக என்னுமது உண்டாகில்‌ ப்ரகாஸிக்குமிறே என்கிறார்

இப்படி அங்கீகார ஹேதுவாய் இருப்பதொரு ஸூஹ்ருதம் இல்லை யாகிலும் ,-அத்வேஷ ஆபிமுக்யங்கள் ,ஸூஹ்ருதம் அடியாக ஆனாலோ என்ன ,அருளிச் செய்கிறார் மேல் —இப்படி அங்கீ காரத்துக்கு ஹேதுவாயிருப்பதொரு ஸுக்ருதமில்லையே யாகிலும்‌, அத்‌வேஷாபிமுக்‌,யங்கள்‌ ஸுக்ருதமடியாக ஆனாலோ என்னில்‌, அந்த அத்‌வேஷாபிமுக்‌யங்களும்‌ அவனாலே உண்டாய்த்தென்று இவர் தாமே அருளிச் செய்தாரிறே

செய்த நன்றி தேடிக் காணாதே-கெடுத்தாய் தந்தாய் என்ற அத்வேஷ ஆபிமுக்யங்களும் சத் கர்மத்தால்
அல்ல -சூரணை -108-

(கெடுத்தாய் என்ற அத்வேஷமும் ( மருவித் தொழும் மனம் உடைத்தாய் இருத்தல் )- தந்தாய் என்ற ஆபீமுக்யமும் ( தீ மனம் இல்லாதவனாக இருத்தல் )ஸத் கர்மத்தால் அல்ல என்றபடி
ஈஸ்வர ஸுஹார்த்தம் -யாதிருச்சா ஸூஹ் ருதம் -விஷ்ணு கடாக்ஷம்-அத்வேஷம் -ஆபி முக்கியம் –
போன்ற -8 -படிக்கட்டுகள் முன்பே பார்த்தோம் –ஸூஹ்ருத தேவர் அவனுக்கே அசாதாரணப் பெயர்- வார்த்தா மாலை )-செய்த நன்றி தேடிக் காணாதே –அதாவது – வாட்டாற்றாருக்கு என் நன்றி செய்தேனா என் நெஞ்சில் திகழ்வதுவே-10-6-8–என்று சர்வேஸ்வரன் தம்மை விஷயீகரிக்கைக்கு உடலாக தாம் செய்த ஸூஹ்ருதம் ஏதேனும் உண்டோ என்று ,தேடிக் காணாதே –கெடுத்தாய் என்ற அத்வேஷமும் -தந்தாய் என்ற ஆபீமுக்யமும்--அதாவது –என்னைத் தீ மனம் கெடுத்தாய் -2-7-8–என்றும் , மருவித் தொழும் மனமே தந்தாய்-2-7-7- -என்று (வரிசை கிரமும் இல்லாமல் அன்றோ அருளிச் செய்கிறார் -இவை அவன் மூலம் வந்தமையால் ) தீ மனம் போக்குகையாகிற அத்வேஷமும் , மருவித் தொழும் மனம் உண்டாக்குகை யாகிற ஆபிமுக்யமும் , இரண்டும் அவனாலே உண்டாய்த்து என்று ,தாமே நிஷ்கரிஷ்க்கையாலே , அத்வேஷ ஆபிமுக்யங்களும் சத் கர்மம் அடியாக வந்தது அன்று என்கை
(ததாமி புத்தி யோகம் -தந்தாய் தேஷாம்–சதத யுக்தாயாம் ப்ரீதி பூர்வகம் மேல் விழுந்து தாதாமி புத்தி யோகம் -தந்தாய் அனுகம்பார்த்தம் -தமஸை -நாசயாமி -கெடுத்தாய் -ஞான தீபேண பாஸ்கரா- கீதையிலும் -இவை இரண்டும் உண்டே –-அருள் கொண்டு ஆயிரம் இந்த தமிழ் பாடினான் அன்றோ)

”வாட்டாற்றார்க்கெந்நன்றி செய்தேனா என்னெஞ்சில்‌ திகழ்வதுவே” (திருவா. 10 – 8 – 8) என்று ஸர்வேஸ்வரன்‌ தம்மை விஷயீகரித்ததுக்கு ஹேது தேடிக் காணாதே. (கெடுத்தாய்‌ தந்தாய்‌ என்று) “என்னைத்‌ தீ மனங்கெடுத்தாய்‌”” (திருவா. 2 – 7 – 8), “மருவித் தொழும்‌ மனமே தந்தாய்‌” (திருவா. 2 – 7 – 7) என்று சொல்லுகிற அத்‌வேஷாபிமுக்‌யங் களிரண்டும்‌ அவனாலே உண்டாய்த் தென்று தாமே அருளிச் செய்கையாலே அவையும்‌ ஸத் கர்ம மடியாக வந்ததன்று என்கிறார்

மெய்ந்நின்ற கமழ் துளவ விரை ஏறு திரு முடியன்
கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது புனல்
மைந்நின்ற வரை போலும் திரு உருவ வாட்டாற்றாற்கு
எந்நன்றி செய்தேனோ என்நெஞ்சில் திகழ்வதுவே–10-6-8-
–என்ன நன்மை செய்தெனாக –பெரிய வுடையாரைப் போலே என்னை அழிய மாறினேனோ –திருவடியைப் போலே தனியிடத்தில் உதவினேனோ –தன்னுடைய ஆஞ்ஞா ரூபமான விஹிதங்களை அனுஷ்டித்தேனோ –என் நெஞ்சில் புகுந்த பின்பு விளங்கினான் என்னும் படி விரும்பிற்று —

திரிவிக்ரமன் செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய்
உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளி
பரவிப் பணிந்து பல்லூழி யூழி நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே –2-7-7--இப்படி பலகாலும் நினைத்தும் அடைவு கெடப் பேசியும் குண பரவசனாய் வணங்கி இப்படி கால தத்வம் உள்ளதனையும்-போக்யமும் பிராப்தமுமாய் உன் திருவடிகளையே அநந்ய ப்ரயோஜனமாய்க் கொண்டு அடிமை செய்யும் மனசையே தந்தாய்-விஷயாந்தரங்கள் அஸ்திரமுமாய் அபோக்யமும் ஆகையால் சஞ்சலம் ஹி மன-என்னும் படி இறே இருப்பது –-வல்லை காண் என் வாமனனே — சுக்கிராதிகள் வார்த்தை செவிப்படாத படி மஹா பலியை வடிவு அழகால் வஞ்சித்தால் போலே என்னை அநந்யார்ஹனாக்கிக் கொள்ள வல்லை காண்
இச் சக்தியை உடையவனுக்கு முடியாதது உண்டோ –

வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே –2-7-8-–பந்த ஹேது அன்றிக்கே குண அனுபவமே யாத்ரையாம் படியான நிர்தோஷ அந்தகரணாய் ஜென்மம் ஆகிற துழதி உண்டு -தூர்த்துக்கம் -அது போம்படியாக-விஷயாந்தர ஸ்பர்சியான நெஞ்சைப் போக்குவதும் செய்தாய்
ஸ்ரீ யபதியாகையாலே பூர்ணனான எனக்கு உன்னால் ப்ரத்யுபகாரமாக செய்யலாவது ஒன்றும் காண்கிறிலேன்- பிரதிபகாரம் பண்ணி அல்லது நிற்க மாட்டுகிறிலேன் –

ஆனால் பரம பக்திக்கு ,முகம் காட்டுமோ பாதி ,பரி கணனைக்கும் முகம் காட்டும் என்றார் இறே – இவர் தாம்-அந்த பரிகணனை தான் இவர்க்கு உண்டால் ஆய்த்தோ என்ன -அருளி செய்கிறார் மேல் —ஆனால்‌ பரமபக்திக்கு முகம்‌ காட்டுமாப் போலே பரிகணனைக்கும்‌ முகம் காட்டும்‌ என்றாரிறே இவர் தாமே-ஆகையாலே அந்த பரிகணனை இவர்க்கு உண்டாய்த்தானாலோ என்னில்‌, அதுவுமில்லை என்று தாமே அருளிச்செய்தாரிறே என்கிறார்‌ மேல்‌.

எண்ணிலும் வரும் கணனைக்கு எண்டானும் இல்லை –சூரணை -109-(கணனை–எண்ணுதல் )-

எண்ணிலும் வரும் கணனைக்கு—அதாவது –எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவம்–1-10-2-என்றது ,
ஈஸ்வரன் குண ஆதிக்யம் சொன்ன இத்தனை போக்கி , அந்த பரகணனைக்கு தம்மோடு அந்வயம் இல்லாமை கண்டு –எண்டானும் இல்லை –அதாவது –நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்று ,ஓர் எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு கண்டாயே -1-10-5-–என்று காரியங்கள் பலிக்கும் இடத்து ,எண்ணிலும் வரும் -என்றது தான் மிகை யாகும் படி ஓர் எண் தானும் இன்றி இருக்கச் செய்தே ,பலித்துக் கொடு நிற்கிறபடி கண்டாய் என்று , தம் திரு உள்ளத்துக்கு மூதலிக்கையாலே,அதுவும் இவர்க்கு இல்லை என்கை –

“எண்ணிலும்‌ வரும்‌ என்னினி வேண்டுவம்‌”” (திருவா, 1 – 10 – 2) என்று பரமபத்தி யுக்தர்க்கு முகம் காட்டுமாப் போலே பரிகணனைக்கு முகம்‌ காட்டும்‌ என்னுமிடம்‌ ஈஸ்வரனுடைய குணாதிக்யம்‌ சொல்லிற்றத்தனைபோக்கி, அந்த பரிகணனையும்‌ தமக்கில்லை என்னுமிடத்தை “கருமங்கள்‌ வாய்க்கின்று ஒரெண்டானுமின்றியே வந்தியலுமாறு – கண்டாயே” (திருவா. 1 – 10- 5) என்று – கார்யங்கள்‌ ஸித்‌திக்குமிடத்தில்‌ ”எண்ணிலும்‌ வரும்‌” என்றது தானும்‌ மிகையாம்படி  ‘“ஓரெண்டானுமின்றியே”” என்று அந்த எண் தானுமின்றியே பலித்துக் கொடு நின்றபடி கண்டாயே என்று அதுவுமில்லை என்று தாமே பேசினாரிறே

கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
எண்ணிலும் வரும் என்னினி வேண்டுவம்
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம் பிரானையே –1-10-2-கட படாதிகள் உடைய அஸ்தி பாவத்தை இசையும் -ஈசுவரனுடைய அஸ்தி பாவத்தை இசையான்–பஞ்ச விம்சதி தத்துவத்தையும் இசையும் -ஷட் விம்சகளை இசையான் – நம்முடைய உண்மையை இசைந்தான் இறே என்று அப்போதே வந்து முகம் காட்டும் இவன் எண்ணின் அளவுக்கு அவ்வருகே வரும் என்னவுமாம்-

கண்டாய் நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்றோர்
எண் தானும் இன்றியே வந்தியலுமாறு

உண்டானை உலகேழுமோர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே –1-10-5–எண்ணிலும் வரும் –என்று இது மிகையாம் படி வந்து பலித்துக் கொண்டு நிற்கிறபடி கண்டாயே-இயலுகை பலிக்கை-

அது தான் வேணுமோ ? தமக்கு அனுமதி இச்சைகள் உண்டாக அருளிச் செய்தாரே ? அவை தான் ஹேது ஆனாலோ என்ன -அதுவும் அவனாலே உண்டானது என்கிறார் —ஆனால்‌ தமக்கு அநுமதீச்சைகள்‌ உண்டாக அருளிச் செய்தாரே- அவைதான்‌ ஹேதுவானாலோ என்னில்‌, அவையும்‌ அவனாலே உண்டானவையாகையாலே ஹேது அன்று என்கிறார்‌-

மதியால் இசைந்தோம் என்னும் அனுமதி இச்சைகள் இருத்துவம் என்னாத என்னை இசைவித்த
என் இசைவினது–சூரணை -110-

மதியால் என்னும் அனுமதி -என்றும் -இசைந்தோம் என்னும் இச்சை -என்று கொண்டு
அனுமதி இச்சைகள் இசைவினது-இசைவு தானாக இருக்கின்ற இறைவனுடையது -என்றபடி
என் இசைவு என்று ஈஸ்வரனைச் சொல்லி -என் இசைவினது-ஈஸ்வரன் கர்த்தவ்ய பலன் என்றபடி
ஆழ்வார் க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் போலே அவனும் ஆழ்வார் இசைவு -திரு நாமம் அவனுக்கு சாத்துகிறார்
)

மதியால் என்னும் அனுமதி – அதாவது – வைத்தாய் மதியால் எனது உள்ளத்து அகத்தே-8-7-10- -என்று
அனுமதி மாத்ரத்தாலே அவனை என் நெஞ்சுக்குள்ளே வைத்தேன் என்று- தமக்கு உளதவாகச் சொன்ன அனுமதியும்–இசைந்தோம் என்னும் இச்சை-அதாவது – யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் -பெரிய திருவந்தாதி-என்று விரோதியை போக்கும் படியாக நானும் என் நெஞ்சும் இசைந்தோம் என்றும் ,தமக்கு உளவாகச் சொன்ன இச்சையும் –

வைத்தேன்‌ மதியால்‌ எனதுள்ளத்‌தகத்தே”” (திருவா. 8 – 7 – 10) என்றும்‌, “யானுமென்னெஞ்சு மிசைந்தொழிந்தோம்‌ (பெ.திருவ. 26) என்றும்‌, அனுமதி மாத்ரத்தாலே அவனை என்‌ தெஞ்சுக்குள்ளே வைத்தேன்‌ என்றும்‌, விரோதியைப்‌ போக்குவானாக யானும்‌ என்‌ நெஞ்சும்‌ இசைந்‌தொழிந்தோம்‌ என்றும்‌ தமக்கு அநுமதீச்சைகள்‌ உண்டாகச்‌ சொன்னாரே என்னில்‌; அந்த அநுமதீச்சைகளும்‌

வைத்தேன் மதியால் எனது உள்ளத்தக்கத்தே
எய்த்தே ஒழிவேன் அல்லேன் என்றும் எப்போதும்
மெய்த்தேய் திரை மோது தண் பாற் கடலுளால்
பைத்ததேய் சுடர்ப் பாம்பணை நம் பரனையே –8-7-10–அனுமதியாலே என்னெஞ்சினுள்ளே வைத்தேன் -அனுமதி மாத்ரத்துக்கு உள்ள பலாதிக்யம் என் -அவன் ஹ்ருதயஸ்த்தனான பின்பு பிரிந்து துக்கப் படுகிறேன் அல்லேன் -இது எத்தனை குளிக்கு நிற்கும் -என்ன –என்றும் எப்போதும்-சர்வ திவசத்திலும் -சர்வ அவஸ்தையிலும்

யானும் என் நெஞ்சமும் இசைந்து ஒழிந்தோம் வல் வினையைக்
கானும் மலையும் புகக் கடிவான் தானோர்
இருளன்ன மா மேனி எம் மிறையார் தந்த
அருள் என்னும் தண்டால் அடித்து —26—இத் தலையில் குறைவற்றது-பொருந்தாத தலையும் பொருந்திற்று-பொருந்துமவன் பொருந்தச் சொல்ல வேண்டா இறே-அவன் மேல் விழ –
என்னுடைய விலக்காமையே கர்த்ருத்வம் 

இருத்துவம் என்னாத என்னை –அதாவது யான் ஒட்டி என்னுள் இருத்துவம் என்றிலன் -1-7-7–என்று
அவன் தம்முள்ளே புகுந்து இருப்பதாக கேட்ட அளவிலே நான் இசைந்து , என்னுடைய ஹிருதயத்திலே இருத்துவோம் என்று இலேன் என்ற படி .. அவனை உள்ளே இருத்துவோம் என்று இசையாத தம்மை இசைவித்த என் இசைவினது – அதாவது-இசைவித்து என்னை-5-8-9–என்கிற படி வருந்தி இசையப் பண்ணி –மயர்வறவற என் மனத்தே மன்னினான் தன்னை என் இசைவினை-1-7-4– நான் அல்லேன் என்று அகலாத படி என் இசைவு தானாய்ப் புகுந்தவனை என்னும் படி யத்தனித்த ஈஸ்வரனுடைய கிருஷி பலம் என்கை —(மன்னினான் தன்னை -இரண்டாம் வெறுமையாக சொல்லி வந்து அடுத்து – –என் இசைவினை-விடுவேனோ – பெருமாளையே இந்த சப்தத்தால் அருளிச் செய்கிறார் )

யானொட்டி என்னுள்‌ இருத்துவமென்றிலன்‌‘ (திருவா. 1 – 7- 7) என்று, நான்‌ அவனை என்னுள்ளே இருக்க வொட்டேன்‌ என்று ப்ரதிஜ்ஞை பண்ண, தான்‌ “அத்ய மே மரணம்‌ வாபிதரணம்‌ ஸாகரஸ்ய வா”’ (ரா. யு. 21 – 87) என்று ப்ரதிஜ்ஞை பண்ணினாப் போலே ப்ரதிஜ்ஞை பண்ணி, ஸ்வதந்த்ரமான நெஞ்சை அபஹரித்து ஸரீரத்‌தோடே கலந்து, பின்பு ஆத்மாவோடே கலந்து, இப்படி யத்நம்‌ பண்ணி, ““இசைவித்‌சென்னை” (திருவா. 8 – 8 – 9) என்று என்னை இசையும்படி பண்ணினான்‌ என்றும்‌, இசைவித்த மாத்ரமே யன்றியிலே, ‘“என்னிசைவினை”” (திருவா. 1 – 7 – 4) என்று இசைவு தானும்‌ தானேயாய்‌ நின்றவனுடைய க்ருஷி பலம்‌ என்கிறார்

யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன் தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
ஊனொட்டி நின்று என்னுயிரில் கலந்து இயல் வானொட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே–1-7-7–நான் இசைந்து என் ஹிருதயத்திலே இருத்துவேன் என்றிலேன்-இசைவு என்னாலே வந்ததாகில் அன்றோ விடுகை என்னாலே வந்ததாவது-இசைவு இன்றிக்கே இருக்கக் கிட்டின படி என் என்னில் –
நிரபேஷனான தான் -உம்முடைய பக்கலிலே இருக்கை தவிரேன் -என்று ப்ரதிஜ்ஜை பண்ணி வந்து
அத்ய மே மரணம் வா அபி தரணம் ஸாகரஸ் யவா-எனக்கு பவ்யமாய் -தன்னாலும் திருத்த ஒண்ணாத படி ஸ் வ தந்திரமான நெஞ்சை வஞ்சித்து தன்னுடைய சீலாதி குணங்களாலும் வடிவு அழகாலும் என்னை அறியாமே அகப்படுத்தி-

இசைவித் தென்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே!
அசைவில் அமரர் தலைவர் தலைவா! ஆதிப் பெரு மூர்த்தி!
திசைவில் வீசும் செழுமா மணிகள் சேரும் திருக்குடந்தை
அசைவில் உலகம் பரவக் கிடந்தாய்! காண வாராயே.–5-8-9—நெடுநாள் விமுகனான என்னையும் அடிமையிலே இசைவித்து -என் இசைவுக்கு எதிர் சூழல் புக்குத் திரிந்த உனக்கு அபேக்ஷிதம் செய்யக் குறை என் -நான் அர்த்தியாதே இருக்க என் கார்யம் செய்த நீ இன்று இரக்கச் செய்தே விளம்பிக்கிறது ஏன்-உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே!-பரகு பரகு என்று திரியாத படி உன் திருவடிகளே விஷயமாம் படி பண்ணுமவனே -என்கை -நிழலும் அடி தாறுமானோம் என்கிறபடியே மிதியடியாம் படி ஸ்ரீ சடகோபனாக்கி -பெறும் காற்றில் பூளை போலே யாதானும் பற்றி நீங்கும் விரோதமாய் இறே முன்பு வர்த்தித்தது-அம்மானே –இசைவே தொடங்கி இவர் கார்யம் தானே செய்ய வேண்டும் பிராப்தி

மயர்வற என் மனத்தே மன்னினான் தன்னை -உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வில் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என் இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ –1-7-4–அப்படி இருக்கிறவன் என்னையும் அவர்களோடு ஒக்கப் பண்ணுகைக்கு இசைவும் தானாய் வந்து புகுந்தான்-என் சொல்லி யான் விடுவேனோ-என்ன கண் அழிவைச் சொல்லி -நான் கை வாங்குவது –
அஞ்ஞானம் அனுவர்த்தித்து விடவோ –-அஸந்நிஹிதன் என்று விடவோ –-அந்நிய பரன் என்று விடவோ – நன்மைகளை பண்ணித் தந்திலன் என்று விடவோ – பிரதியுபகாரம் கொள்ள இருந்தான் என்று விடவோ – மேன்மை போராது என்று விடவோ – இசைவுக்கு கிருஷி பண்ணினேன் நான் என்று விடவோ – எத்தைச் சொல்லி விடுவது –

இவை ஒன்றும் இல்லை ஆகிலும் ,-மாதவன்-என்றும் -திரு மால் இரும் சோலை மலை -என்றும் ,
சொன்ன உக்தி மாத்ரங்களை பற்றாசாக கொண்டு விஷயீகரித்தானாக அருளிச் செய்கையால் ,அவை தான் உண்டோ என்ன , அவை பேற்றுக்கு அடியாக சொல்ல தக்கவை அன்று என்னும் இடத்தை ,மற்றும் இவற்றோடு சக படிதங்களாக தக்க வற்றையும் கூட்டிக் கொண்டு அருளிச் செய்கிறார் மேல் —ஆனாலும்‌ இவர்‌ தம்முடைய ப்ரபந்தத்திலே ஹேது ஸூசகமாகச் சில உக்திகள்‌ உண்டாயிரா நின்றதே என்னில்‌, அவையும்‌ ஹேது அன்றென்னுமிடத்தைப்பல படியாலும்‌ உப பாதிக்கிறார்‌ –
(திரு மால் இரும் சோலை ஊரைச் சொன்னாய் -பேரைச் சொன்னாய் -மாதவன் -இவற்றுடன் சக படிதங்களாக ஸ்ரீ வசன பூஷணத்தில் உள்ளவைஅடியார்க்கு ஒதுங்க நிழல் கொடுத்தாய் -அவர்கள் விடாய் தீர்த்தாய் -அஃஞ்ஞான ஸூ ஹ்ருதங்களாய் சக படிதங்களாக என்றவாறு -அபுத்தி பூர்வகமாக வைதிக புத்திரர்கள் திரும்ப -விரஜை அருகில் போனாலும் இவர்கள் உள்ளே போகாதது போக இச்சை இல்லாத காரணம் )

மாதவன் மலை நீர் நிழல் என்று ஏறிடுமது வ்யாவ்ருத்த் யுக்தி அன்யார்த்தம்-அ புத்தி பூர்வகம்
அ வி ஹிதம்-பல வி சத்ருசம் -பலாந்தர ஹேது —சூரணை -111-

(மாதவன் மலை-என்று ஏறிடுமது வ்யாவ்ருத்த் யுக்தி–வேறுபாட்டினை அறிவிக்கும் சொற்கள் –
நீர் நிழல் என்று ஏறிடுமது அன்யார்த்தம்-வேறு ஒன்றின் பொருட்டு – அ புத்தி பூர்வகம்-நினைவு இன்றிக்கே சொல்லுதல்-அ விஹிதம்-சாஸ்த்ரங்களால் விதிக்கப்படாதவை -பல விசத்ருசம்-பலனுக்கு ஒத்ததாகாதவை -பலாந்தர ஹேது –அல்ப பலன்களுக்கு ஹேது )-மாதவன் என்று-அதாவது –
மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது யாதவங்களும் சேர் கொடேன் என்று என்னுள் புகுந்து இருந்து தீது அவன் கெடுக்கும் அமுதம் –திருவாய் -2-7-3–என்று அந்தப் புர வாஸிகள் சொல்லும் -மாதவன்-என்கிற திரு நாமத்தை அஹ்ருதயமாக சொன்ன அளவில் , அத்தையே குவாலாக கொண்டு ,அல்லாத திரு நாமங்களுக்கும் – இதுக்கும் வாசி அறியாத என்னை விஷயீகரித்து ,
என்னுள்ளே புகுந்து (அதுக்கும் மேலே மன்னி )இருந்து , சகல கர்மங்களையும் போக்கினான் என்றும் –மலை என்று –அதாவது-திரு மால் இரும் சோலை மலை என்றேன் என்ன ,திரு மால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -10-8-1–என்று ஓர் ஓர் தேசங்களில் ,மலைகளை சொல்லா நின்றால் ,ஒரோ விசேஷங்களை இட்டுச் சொல்லுமோ பாதி ,யாத்ருச்சிகமாக (யஸ்ய கச்ச இதி யச்சா யதேச்சையாக)-திரு மால் இரும் சோலை மலை-என்னும் காட்டில் தான் உகந்து அருளின திருமலையின் பேரை விரும்பி சொன்னேன் ஆகக் கொண்டு நிரபேஷனான தான் பிராட்டி யோடு கூட வந்து என்னுள்ளே பரி பூரணமாக புகுந்தான் என்று சொல்லும் படி —(மானத்து வண்டலுழ வோர் எழுத்தின் வடிவுற்ற சீர் மானத் துவண்ட வினையாளராயினும் மால் வளர்வி மானத்து வண்டலமா மரங்கம் வழியா வரினும் மானத்து வண்டமர் தார் அண்டராம்பதம் வாய்க்கு மங்கே –திருவரங்கத்து மாலை ) மாதவன் என்று நம் பேரைச் சொன்னான் -என்றும் திரு மால் இரும் சோலை மலை என்று நம் ஊரைச் சொன்னான்– என்றும்
எறிடுகிற இவை –
(பெருமாள் ஆழ்வார் தலையிலே ஸூஹ்ருதத்தை ஏறிடுகிறான் என்றபடி )- ஈஸ்வரன் உகந்த திரு நாமம் என்றும் , அவனுகந்து வர்த்திக்கிற திருமலை என்று சொன்னவை அல்ல – பேருக்கும் பேருக்கும் ,மலைக்கும் மலைக்கும் வ்யாவ்ருத்தி சொன்ன மாத்ரம் —

“மாதவனென்றதே கொண்டு என்னை யினி இப்பாற் பட்டது’” (திருவா. 2 – 7 – 3) என்றும்‌, “திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்னத் திருமால்‌ வந்தென்‌ தெஞ்சு நிறையப் புகுந்தான்‌ (திருவா. 10- 8- 1) என்றும்‌ இப்படி அந்தப்புரத்திலுள்ளார்‌ சொல்லும்‌ பாசுரத்தை அஹ்ருதயமாகச் சொன்ன வளவிலே இத்திருநாமத்துக்கும்‌ அல்லாத திருநாமத்துக்கும்‌ வாசி யறியாத என்னை விஷயீகரித்து என்‌ விரோதிகளைப்‌ போக்கினான்‌ என்றும்‌, திருமலையின்‌ பேரைச்‌ சொன்னேனாக ஸ்ரீய பதியான ஸர்வேஸ்வரன்‌ என்னுடைய அஹ்ருதயமான உக்தியையே பற்றாசாகக்‌ கொண்டு விஷயீகரித்தான்‌ என்றும்‌.

மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது
யா தவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்திருந்து
தீதவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரை கட்குன்றம்
கோதவமிலன் கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே –2-7-3—மாதவன் என்கிற யுக்தி மாத்ரத்தையே கொண்டு -என் பக்கல் அஹ்ருதயமான யுக்தி மாத்திரமே உள்ளது-அத்தை அந்தப்புரத்தில் உள்ளார் வார்த்தை யாகையாலே சஹ்ருதயமாகவும் -அநேக ஆயாச சாத்தியமான ஆச்ரயணமாகவும் கொண்டு
என்னை –-கேவல நாராயண சப்தத்துக்கும் இதுக்கும் வாசி அறியாத என்னை-இனி போன காலமே போரும் -இனி விடேன் என்னா நின்றான் –பழுதே பல காலும் போயின -என்று ஈஸ்வரனைக் கிட்டின சேதனர் இருக்கும் இருப்பை தான் இரா நின்றான் –இப்பால் பட்டது-அணைக்கு கிழக்குப் பட்ட நீரோ பாதி இறே போன காலம் -இனி மேல் உள்ள காலம் ஆகிலும் ஒரு பொல்லாங்கும் சேர வீட்டுக் கொடேன் என்று –

திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்

குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால்
திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே-10-8-1–சிலர் ஒரு மலையைச் சொல்லும் இடத்தில் ஒரு விசேஷணத்தை இட்டுச் சொல்ல வேணும் –அம் மாத்ரம் சொன்னேன் அத்தனை என்று இரா நின்றார் இவர் -இவ் விசேஷணத்தை இட்டுச் சொல்லிற்று தன் பக்கல் ஆதரத்தாலே என்று இரா நின்றான் அவன் –என்ன -மனஸ் சஹகாரம் இல்லை -யுக்தி மாத்திரமே என்று இருக்கிறார் –ராவணன் தம்பிக்கு மித்ர பாவமே அமையும் என்று இருக்கிறவன் -இவருக்கு உக்திக்கு அவ்வருகு ஓன்று வேணும் என்று இருக்குமோ –சேஷத்வம் ஸ்வரூபம் ஆகில் -உபாய பாவம் நம் தலையிலே கிடந்ததாகில் -அத்வேஷம் உண்டாகில் -நம் பேறாக விஷயீ கரிக்கைக்கு உக்திக்கு அவ்வருகு உண்டோ -என்று இரா நின்றான் அவன் –திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்—திருமால் –அஹ்ருதயமாகச் சொன்னது தன்னையும் சஹ்ருதயம் ஆக்குவாரும் அருகே உண்டு – வந்து -நம்மை அங்கே அழைத்துக் கார்யம் கொள்ளுகை அன்றிக்கே –நாம் இருந்த இடத்தே வருவதே –சாபேஷன் இருந்த இடத்திலே பூர்ணன் வருவதே -சர்வருக்கும் அபிகம்யனானவனுக்கு நான் அபிகமயனாவதே –ஸோ அப்யகச்சன் மஹா தேஜோ சபரீம் – என் நெஞ்சம் -உக்திக்கு அசஹகாரியான என் நெஞ்சம் — நிறையப் புகுந்தான்-–விஷயாந்தரங்களுக்கு அவகாசம் இல்லாத படி பாழ் தீரப் புகுந்தான் –

நீர் நிழல் என்று ஏறிடுமது-அதாவது-மற்றும் இவற்றோடு சஹபடிதமாய் போருமவையான –-என் அடியார் விடாயை தீர்த்தாய் –அவர்களுக்கு ஒதுங்க நிழலைக் கொடுத்தாய் –என்று ஏறுடுகிற இவை
அன்யார்த்தம்
–அதாவது -தன் பயிர் தீயாமைக்காக நீர் உள்ள இடத்தில் நின்றும் நெடும் துலை இட்டு இறைக்கிறதும் , தனக்கு சூது சதுரங்கம் பொருகைக்கும் ,காற்று வரவுக்கு இருக்கையும் ஆக விரிவு உண்டாக புறம் திண்ணை கட்டி வைக்கிறதும் ஒழிய ,-பாகவதர்கள் விடாயைத் தீர்க்கைக்கும் , அவர்களுக்கு ஒதுங்க நிழல் ஆகைக்கும் செய்கிறது அல்லாமையாலே அன்யார்த்தம்-அபுத்தி பூர்வகம்
அதாவது-இவை தான் இத்தனையும் இத் தலையில் நினைவின்றி இருக்க , அவன் அடி தேறி இடுகிற அவை ஆகையாலே ,புத்தி பூர்வகமும் அல்ல.

(நீர்‌ நிழல்‌ என்று) “என்னடியார்‌ விடாயைத்‌ தீர்த்தாய்‌ அவர்களுக்கு ஒதுங்க நிழல்‌ கொடுத்தாய்‌” என்றாப் போலே இவை விஷயீகார ஹேது வானாலோ என்னில்‌; மாதவன்‌, மலை என்றது இரண்டும்‌ வ்யாவ்ருத்த் யுக்தி- அதாவது – இந்தத் திருநாமத்துக்கும்‌ அல்லாத திருநாமங்களுக்கும்‌ வாசி அறிந்து ஸ்ரீயப்பதியுடைய திருநாமம்‌ என்று சொன்னதன்று-இப் பேருககும்‌ அப்பேருக்கும்‌ வேறுபாடு சொன்ன மாத்ரம்‌. ”திருமாலிருஞ்சோலைமலை”’ என்றது – ஸர்வேஸ்வரனுக்கு இது வஸ்தவ்ய பூ,மி என்று சொன்னதன்று; ஒரோ தேஸங்களில்‌ மலைகளைச்‌ சொல்லுவார்‌, “கொல்லி மலை”, *குலை மலை’ என்று சொல்லுவாரைப் போலே இம் மலைக்கும்‌ அம் மலைக்கும்‌ வேறுபாடு தோற்றச்‌ சொன்னவித்தனை. (நீர்‌ நிழல்‌ என்னுமவை அந்யார்த்த,ம்‌) அதாவது – தன்‌ பயிருக்காக ஏற்றமிரைத்தும்‌ சூதுச துரங்கத்துக்காக விரிவுண்டாக அகம்‌ கட்டியும்‌ செய்கிறானத்தனைபோக்கி, பாகவதர்கள்‌ விடாய்‌ தீருகைக்கும்‌, ஒதுங்குவார்‌ ஓதுங்குகைக்குமன்றிறே; ஒரு வைஷ்ணவன்‌ அந்நீரிலே துளி நீர்‌ அள்ளக் காணுதல்‌, அந்நிழலிலே ஒருவன்‌ ஒதுங்கக்‌ காணுதல்‌ செய்யில்‌ தடியிட்டு விலக்குவர்களிறே. இவை யெல்லாம்‌ சேர அபுத்தி பூர்வம்‌ இந்த உக்தி வ்ருத்திகளிரண்டும்‌ இவர்க்கு புத்‌தி பூர்வமல்ல.

அவிஹிதம்-அதாவது-இவை தான் பல ஹேதுதயா சாஸ்திர விஹிதங்களும் அன்று-பல வித்ருசம் அதாவது-பகவத் விஷயமாகிற மகா பலத்துக்கு இவை சத்ருசம் அல்ல –பலாந்தர ஹேது-அதாவது
இவை உண்டாய்த்தாகில் இவ் அருகே சில அல்ப பிரயோஜனங்களுக்கு , ஹேதுவாம் இத்தனை என்கை –ஆகையால் இவை பகவத் அங்கீஹார ஹேதுவாக மாட்டாது என்று கருத்து 

(அவிஹிதம்‌) இவை தான்‌ மோக்ஷ ஹேதுக்களென்று ஸாஸ்த்ர விதியுமில்லை. (பல விஸத்‌ருஸம்‌) பகவத்‌ விஷயீகார மஹா பலத்துக்கு இவை ஸத்‌ருஸமுமன்று. (பலாந்தரஹேது] இவை உண்டாயிற்‌றாகில்‌ இப் பாலுண்டான அல்ப ப்ரயோஜநத்துக்கே ஹேதுவாமித்தனை போக்கி, அந்த மஹாபலத்துக்கு ஹேதுவாகவும்‌ மாட்டாது. ஆகையால்‌ இவை ஹேதுவாகமாட்டாது –

கீழே –யாத்ருச்சிகாதிகள் உண்டாகில் தோன்றும் -சூரணை -107–என்றதுவும்-இங்கே மாதவன்-இத்யாதியாலே -அவன் ஏறிடத் தக்கவை சில உண்டாக ,இவர் தம்முடைய உக்தியாலே , கண்டு எடுத்து கழிக்கிற இதுவும் தன்னில் சேரும்படி எங்கனே என்னில் ,-யாத்ருச்சிகாதிகள் தான் பலவும் உண்டாகையாலே ,-அத்யுத்கடங்கலாய் (உயர்ந்தவையாய் ), மகா பலத்துக்கு உறுப்பாய் , வந்து விழும் அவையும் , ஆபாசங்களாய் இருக்கும் அவையும் உண்டாகையாலே , அத்யுத்கடங்கலாய் , அவனுக்கு ஹேதுவாகக் கொள்ளலாம் படி இருக்கும் அவற்றை கீழே சொல்லிற்றாகி , ஆபாசங்களாய் ,அவன் ஆரோபித்து கொள்ளத் தக்கவற்றை இங்கே சொல்லிற்று என்று விபஜித்து கொள்ளும் அளவில் விரோதம் இல்லை–

இவற்றை ஹேதுவாக நினைத்திருந்தாராகில்‌ ““மதிநல மருளினன்‌?” (திருவா. 1 – 1 – 1) என்றும்‌, “ஓஒ? எண்டானுமின்றியே வந்தியலுமாறு’” (திருவா, 1 – 10 – 5) என்றும்‌, ““எனதாவி யுள் கலந்த”” (திருவா. 2 – 3 – 4) என்றும்‌, ”நீசனேன்‌ நிறை வொன்றுமிலேன்‌ என் கண்‌ பாசம்‌ வைத்த பரஞ்சுடர்ச்சோதி” (திருவா. 3 – 3 – 4) என்றும்‌, ‘“அதுவுமவனதின்னருளே” (திருவா. 8 – 8 – 3) என்றும்‌, “வெறிதே அருள் செய்வர்‌”” (திருவா. 9 – 7 – 8) என்றும்‌, “ இன்றென்னைப் பொருளாக்கித் தன்னை என்னுள்‌ வைத்தான்‌”? (திருவார்‌. 10 – 8 – 8) என்றும்‌, “‘பொருளல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்‌” (திருவா. 5 – 7 – 3) என்றும்‌, “நடுவே வந்துய்யக் கொள்கின்ற நாதன்‌” (திருவா. 1 – – 3) என்றும்‌, ‘“என்னைத்‌ தீ மனங் கெடுத்தாய்‌”’ (திருவா. 2 – 7 – 8) என்றும்‌, மருவித் தொழும்‌ மனமே தந்தாய்‌?” (திருவா. 2 – 7 – 7) என்றும்‌, ““வரவாறொன்‌றில்லையால்‌ வாழ்வினிதால்‌”” (பெ.திருவ. 56) என்றும்‌ இப்படி நிர்ஹேதுகமாக விஷயீகரித்தான்‌ என்றருளிச் செய்த ஸ்வ வாக்யங்கள்‌ பலவற்றோடும்‌ வ்யாஹதமாமே.-இப்படி இவரை அஹேதுகமாக விஷயிகரிக்க வேண்டுவானென்‌ என்னில்‌ “த்வம்‌ மே அஹம்‌ மே” என்று ஸம்பந்தத்தை ஏறிட்டு இவரை வலியப் பிடிக்க, இவர்‌ இறாய்த்த விடத்திலும்‌ வழக்குப் பேசி, அவ்வளவிலும்‌ அகப்படா தொழிய, மஹாபலிக்குத் தன்‌ வடிவழகைக் காட்டி வஸீ கரித்து லோகத்தை அதிக்ரமித்துக் கொண்டாப் போலே தன்‌ வடிவழகைக் காட்டி இவரை வாய் மாளப் பண்ணி விஷயீகரிக்கும்படி அவனை க்ருபை கால் கட்டிற்று என்கிறார் 

ஆனால் இவரை இப்படி நிர்ஹேதுகமாக விஷயீகரிக்க வேண்டுவான் என் என்னும் அபேஷையிலே அருளிச் செய்கிறார் மேல்-

இவன் நடுவே அடியான் என்று ஓலைப் படா பிரமாணம் பஷ பாதி ஸாஷி வன் களவில் அனுபவமாக
இந்திர ஞாலங்கள் காட்டிக் கொள்ள காப்பார் அற்று விதி சூழ்ந்தது–சூரணை -112-

(இவன் -சர்வேஸ்வரன் -ஓலைப் படா பிரமாணம்-வேதம்-இவன் நடுவே ( வந்து )அடியான் என்று-காட்டி-
நாம் ஓலைப் படா பிரமாணம்-என்று- சொல்ல-அவன் ஸாஷி-என்று-காட்டி–நாம் பஷ பாதி -என்று சொல்ல-இப்படி காட்டியதைக் கூட்டி வியாக்யானம்-வன் களவில் அனுபவமாக- இந்திர ஞாலங்கள் காட்டிக் கொள்ள-காப்பார் அற்று விதி சூழ்ந்தது–பகவத் கிருபாவையே விதி என்கிறார்)-அதாவது
இப்படி ஒன்றை ஆரோபித்தாகிலும் ,விஷயீகரிக்கும் இவன் ,-நடுவே –-அதாவது –-நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதன் -1-7-5–என்கிற படியே ,-நாதன் ஆகையால் நிர்ஹேதுகமாக வந்து –-அடியான் என்று –அதாவது –அடியான் இவன் என்று எனக்கு ஆர் அருள் செய்யும் நெடியான் -9-4-10 –என்றும்-த்வம் மே -என்கிறபடியே-இவன் என் அடியான் என்று பிடிக்க ,-அஹம் மே -என்கிற படி -அதுக்கு இவர் இசையாமல் , என்னை நீ உன் அடியான் என்றது எத்தாலே -என்ன – (த்வம் மே அஹம் மே குதஸ் தத் ததபிகுதஸ் இதம் வேத மூல பிரமாணாத் ஏதச்சா நாதி ஸித்தாத் அநு பாவ விபவாத் ஸோபி சாக்ரோச ஏவ ஸ்யாத் க்வாக்ரோசஸ் கஸ்ய கீதா திஷு மம விவிதஸ் கோத்ர ஸாஷீ ஸூதீ அந்த த்வத் பக்ஷபாதீ ச இதி ந்ருகலஹே ம்ருக்யமத்யஸ்த வத்வம் –ஸ்ரீ பட்டர் ஸ்ரீ ஸூக்தி –) இதம் வேத மூல பிரமாணாத் -என்கிறபடியே இவரை இசைவிக்கைக்காக–ஓலைப் படா பிரமாணம்--அதாவது–பதிம் விச்வச்ய–புருஷ ஸூக்தம் -என்றும்-பிராதந ஷேத்ரஜ்ஞ பதி –ஸ்வேதா உபநிஷத் -என்றும்-ஷராத்மானாவ் வீஷதே தேவ ஏக–ஸ்வேதா உபநிஷத் -என்றும் இத்யாதிகளாலே சேதன அசேதனங்கள் அடைய தனக்கு சேஷம் என்னும் இடத்தை பிரதிபாதிக்கிற வேதத்தை பிரமாணமாக காட்ட , அது எழுதா மறை ஆகையாலே , அது ஓலைப் படா பிரமாணம் என்று இவர் அத்தை அந்யதாகரித்து , தம்முடைய அநாத்ய அனுபவத்தை பிரபலமாக கொண்டு நிற்கையாலே-

(இவன்‌ நடுவே அடியான்‌ என்று தொடங்கி). “நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதன்‌” (திருவா. 1 – 7 – 5) என்றும்‌, ”அடியானிவனென்‌றெனக்காரருள்‌ செய்யும்‌” (திருவா. 9 – 4 – 10) என்றும்‌ நாதனாகையாலே நிர்ஹேதுகமாக வந்து இவர்க்கிசைவின்றிக்கே இருக்கச் செய்தே “இவன்‌ என்‌ அடியான்‌” என்று பிடிக்க, அதுக்கு, இவர்‌ இசையாதொழிய, இவர்‌ இசைகைக்காக ‘“பதிம்‌ விஸ்வஸ்ய” இத்யாதிகளைக்‌ காட்ட, அது எழுதா மறையாகையாலே அது ஓலைப் படா ப்ரமாணம்‌ என்று அத்தையும்‌ இவர்‌ அந்யதாகரிக்க,-

விடுவேனோ என் விளக்கை என் ஆவியை –நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை
தொடுவே செய்து இள வாய்ச்சியர் கண்ணினுள்ளே விடவே செய்து விழிக்கும் பிரானையே –1-7-5–அசன்னேவ ச பவதி-என்கிறபடியே உரு மாய்ந்து போன என் ஆத்மாவை-நடுவே வந்து-விஷய பிரவணனாய் போகா நிற்க நடுவே வந்து -நிர்ஹேதுகமாக என்னவுமாம்-வந்து– நான் இருந்த இடத்தே தானே வந்து-உய்யக் கொள்கின்ற-அஸத் கல்பனான என்னை -சந்தமேனன் ததோ விது-என்னப் பண்ணின படி-கொள்கின்ற-கொண்டு விட்டிலன்-மேன் மேல் எனக் கொள்ளா நிற்கிற அத்தனை-நாதனை-உய்யக் கொள்கைக்கு நிபந்தனம் சொல்லுகிறது-இழவு பேறு தன்னதான குடல் துடக்கைச் சொல்லுகிறது

அடியான் இவன் என்று எனக்கு ஆர் அருள் செய்யும்
நெடியானை
நிறை புகழ் அம் சிறைப் புள்ளின்
கொடியானைக் குன்றாமல் உலகம் அளந்த
அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே–9-4-10—மேல் பண்ணப் புகு கிற உதார குணம் பிராப்தம் என்று தோற்றுகைக்காக –அடியான் -என்று ஒரு பேரை இட்டு யாயிற்று உபகரித்தது-எனக்கு ஆர் அருள் செய்யும்-நெடியானை -கொள்ளுகிற என்னளவு அன்றிக்கே தன்னளவில் உபகரித்த சர்வேஸ்வரனை-பெரிய திருவடியை விஷயீ கரித்தால் போலே என்னை விஷயீ கரித்தவன்-

பஷ பாதி ஸாஷி–அதாவது-ஆட்சியிலும் பிரபலமான துடர்ச்சியை முன்னிட்ட அளவிலே – அதுக்கும் ஸாஷி யார் என்று கேட்டவாறே –ஸூதீச்யாத்-என்கிறபடி ,-தத்வ தர்சிகளான ஞானிகளைக் காட்ட – த்வத் பஷ பாதி ச -என்கிறபடியே அவர்கள் உனக்கு பஷ பாதிகள் என்று அதுக்கும் இவர் கண் அழிவு சொல்லுகையாலே –வன் களவில் அனுபவமாக அதாவது-வன் கள்வனேன் –5-1-4-என்று விஷயீகார அநந்தரம்-அநாதி காலம் தாம் அஹம் மம -என்று இருந்து போன அனுபவம் ,-ஆத்மா அபஹாரம் ஆகிற வலிய களவாலே வந்தது என்று இவர் அனுதபிக்கும் படி –-இந்திர ஞாலங்கள் காட்டி இவ் எழ உலகும் கொண்ட -9-5-6–என்று-இந்திர ஞாலங்கள் போலே ,திருஷ்ட்டி சித்த அபகாரிகளான-வடிவழகையும் ,சீலத்தையும் , சேஷ்டிதையையும் காட்டி,வாய் மாளப் பண்ணி , ஆசூர பிரக்ருதியான மகா பலி-என்னது என்று இருந்த லோகத்தைத் தன்னதாக்கிக் கொண்டால் போலே இவரையும் வடிவழகையும் சீலாதிகளையும் காட்டி வாய் மாளப் பண்ணி இவர்-என்னது -என்று இருந்த ஆத்மாவை தன்னதாக்கிக் கொள்ளும் படியாக –காப்பார் அற்று –அதாவது-விதி வாய்க்கின்று காப்பார் யார்–5-1-1 -என்று
கிருபா ஜனிகையான இவள் காக்கவோ ?-கிருபா பரதந்த்ரனான நீ காக்கவோ ?-கிருபா பாத்ரமான நான் காக்கவோ -என்னும் படி ஒருவரால் நிவாகரிக்க ஒண்ணாத படி பெருகுவதாய் , ஸ்வதந்த்ரனான தன்னாலும் தப்ப ஒண்ணாத படி இருக்கையாலே , விதி சப்த வாச்யையாய் இருந்துள்ள கிருபைவிதி சூழ்ந்தது--அதாவது–எனைத்தோர் பிறப்பும் —-எதிர் சூழல் புக்கு எனக்கே அருள்கள் செய்ய – அம்மான் திரிவிக்ரமனை –விதி சூழ்ந்தது -2-7-6–என்று-அநேக ஜன்மங்கள் நான் பிறந்த பிறவிக்கு எதிராகப் பிறந்து கொடு வந்து , எனக்கு ஒருவனுக்கே தன் பிரசாதங்களை பண்ணும் படியாக – சர்வேஸ்வரனாய் வைத்து த்ரிவிக்ர அபதான முகத்தாலே எல்லார் தலையிலும் திரு அடிகளை வைத்த ஸூசீலனை ,
கிருபை சூழ்ந்தது என்னும் படி இவரை அங்கீகரித்து அல்லது நிற்க ஒண்ணாது வளைத்துக் கொண்டது என்கை–காட்டிக் கொள்ள -என்கிற இடத்தில்-காட்டி-என்கிற இது –-பிரமாணம் காட்டிக் கொள்ள-ஸாஷி காட்டிக் கொள்ள-இந்திர ஞாலங்கள் காட்டிக் கொள்ள – என்று-சர்வாந்தர அன்விதமாய் கிடக்கிறது

இவர்‌ அடியானானமைக்கு தத்த்வ தர்மிகளான ஜ்ஞாநிகள்‌ ஸாக்ஷியாக உண்டீ என்ன; அவர்களும்‌ உனக்கு பக்ஷபாதிகள்‌ என்று ப்ரதி வசநம் பண்ண, ஆனால்‌ “இவ் வஸ்து உம்மதானபடி எங்ஙனே?” என்று பகவதபிப்ராயமாக, “அநுபவவிபவாத்‌”” என்கிறபடியே “அஹம்‌ மம” என்று அநாதி, காலம்‌ அநுபவித்துப் போந்தேன்‌ என்று ப்ரபல ப்ரமாணமான அநுபவத்தைக் காட்ட, ப்ரமாண ஸாக்ஷிகளும்‌ ஆக்ரோஸ முண்டாயிருக்கச் செய்தே அநுபவித்துப் போந்த இது ““வன்கள்வனேன்‌” (திருவா. 5 – 1 – 4) என்று ஸர்வஜ்ஞனானவனையும்‌ க்ருத்ரிமித்துப்‌ போந்தேன்‌ என்று விஷயீகாராநந்தரம்‌ தாமே பேசும்படி இவர்‌ க்ருத்ரிமத்திலே அநுபவித்தாராம்படி ‘*இந்திர ஞாலங்கள் காட்டி இவ்வேழுலகுங்கொண்ட. நந்திரு மார்வன்‌”! (திருவா. 9 – 5 – 5) என்று ஐந்த்‌ரஜாலிகம்‌ காட்டுவாரைப் போலே சிறுப்பது பெருப்பதான வடிவழகைக் காட்டி, மன்னை மனங்கொள்ள வஞ்சித்து தெஞ்‌சுருக்கி’ ” (பெ. மடல் ) என்கிறபடியே ஆஸூர ப்ரக்ருதியான மஹாபலியை வாய் மாளப் பண்ணி ஸகல ஜகத்தையும்‌ ஆக்ரமித்துக் கொண்டாப் போலே, வடிவழகைக் காட்டி வாய்மாளப்‌ பண்ணி விஷயீகரிக்கும்படி, (காப்பாரற்று) ”விதிவாய்க்கின்று காப்பாரார்‌ – ஐயோ கண்ண பிரான்‌ அறையோ இனிப் போனாலே”’ (திருவா. 5 – 1 – 1) எனறு – கிருபை பெருகுமிடத்தில்‌ க்ருபா பரதந்த்ரனான நீ காக்கவோ? க்ருபா ப்ரேரிகையான அவள்‌ காக்கவோ? க்ருபா விஷயமான நான்‌ காக்கவோ? இந்த கருபையைத் தப்பி நீ போனாயாகில்‌ “அறையோ அறை” என்று நிவாரகரில்லாதபடி விதி சூழ்ந்தது. ”எதிர் சூழல்‌ புக்கெனைத்தோர்‌ பிறப்பும்‌ எனக்கே அருள்கள்‌ செய்ய – அம்மான்‌ திருவிக்கிரமனை விதி சூழ்ந்தது”” (திருவா. 2 – 7 – 6) என்று அநேக ஜந்மங்கள்‌ இவர் பிறவிகளுக்கு எதிரே பிறந்து கொடு வந்து இவரை விஷியீகரிக்கும்படி விரோதி நிரஸந ஸீலனான ஸர்வேஸ்‌வரனை, இவரை விஷயீகரித்தல்லது நிற்க வொண்ணாத படியான க்ருபை கால் கட்டிற்று என்கிறார்‌-

என் கொள்வன் உன்னை விட்டு என்னும் வாசகங்கள் சொல்லியும்
வன் கள்வனேன் மனத்தை வலித்துக் கண்ண நீர் கரந்து
நின் கண் நெருங்க வைத்தே எனது ஆவியை நீக்க கில்லேன்
என் கண் மலினம் அறுத்து என்னைக் கூவி அருளாய் கண்ணனே –5-1-4—களவாவது -பரத்வ வ்யாபஹாரம்-வலிய களவாவது –சோரேணாத் மாப ஹாரிணா-என்கிறபடியே பகவத் சேஷமான ஆத்மவஸ்துவை அபஹரிக்கை-த்ரவ்யங்களில் தலையான வஸ்து -ஆத்மவஸ்து -உடையவன் சர்வாதிகன் -அகவாய் இப்படி இருக்கையாலே யுக்தி மாத்ரமான ஆனு கூல்யம் கொண்டு என் விரோதியைப் போக்க ஷமன் அல்லேன் என்கிறார் மேல்-மனத்தை வலித்து--விஷயங்களின் நின்றும் மனசை நிவர்ப்பித்து -நான் இந்திரிய ஜெயம் பண்ண நினைக்கை யாவது -அவன் என்னை மேலிடுகை –இந்திரியாணி பிரமாதீ நீ ஹரந்தி பிரசபம் மன-கண்ண நீர் கரந்து- விஷய அனுபவத்தால் வந்த கண்ண நீரை மாற்றி -விஷய ப்ராவண்யம் சாஸ்த்ர உபதேசத்தால் போமோ -உன் போக்யதையைக் காட்டினால் அன்றோ அந்தக் கண்ண நீர் மாறுவது –

அந்தரம் நின்று உழல்கின்ற யானுடைப் பூவைகாள்
நும் திறத்து ஏதும் இடை இல்லை குழறேன்மினோ
இந்திர ஞாலங்கள் காட்டி இவ் ஏழ் உலகும் கொண்ட
நம் திரு மார்வன்
நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான்–9-5-5–கண்டார்க்கு விட ஒண்ணாத வடிவையும் -சீலத்தையும் -சேஷ்டிதத்தையும் காட்டி -இவை நிலை நில்லாமையாலே பொய் காண் -என்கிறாள் –-இவ் ஏழ் உலகும் கொண்ட-பிறர் உடைமை கொள்ளும் இடத்தில் சேஷியாத படி கொள்ளுமவன் –-நம் திரு மார்வன் -பிரணயித்தவத்தால் வந்த ப்ரஸித்தியை எனக்கு காட்டி –பிராட்டியோடு பழகிற்றும் பிரணயியாய் அன்று -அத்தைக் காட்டி கண்டாரை அகப்படுத்திக் கொள்ளுகைக்காக -சில பொய்களைக் காட்டி மஹா பலி பக்கலிலே நின்றும் பூமியைக் கொண்டால் போலே கலந்து பரிமாறுகிறான் என்று தோற்றும் படி சில பொய்களைச் செய்து விஸ்லேஷிக்கை -என்னை முடிக்கைக்கு உபாயம் என்றுமாம் 

ஒன்னா வசுரர் துளங்கச் செல நீட்டி
மன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்துத் ———112
தன்னுலக மாக்குவித்த தாளானை –
–அவ்வளவிலே எதிரிட்டு வந்த நமுசிப் ப்ரப்ருதிகளை-ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படி பண்ணி-அவனை ஆகாசத்திலே சுழற்றி எரிந்து அவ்வளவும் செல்லப் பரப்பி-பழையதாய் மகாபலி தான் அடி இட்டுப் போந்த ராஜ்யத்தை-சிறு காலைக் காட்டி மூவடி மண் தர வேணும் என்று இரந்து-கையிலே நீர் விழுந்த அனந்தரத்திலே பெரிய அடியாலே அளந்த வஞ்சனையைச் சொல்லுகிறது –

கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே! என்றென்று
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?
ஐயோ! கண்ண பிராஅன்! அறையோ! இனிப் போனாலே.–5-1-1-
விதி என்று பகவத் கிருபை –கர்ம பரதந்த்ரனுக்கு கர்மம் அனுபவித்து அல்லது நிற்க ஒண்ணா தோபாதி -அவனுக்கும் கிருபா பரதந்த்ரன் ஆகையால் கிருபை பண்ணி அல்லது நிற்க ஒண்ணாமை யாலே விதி என்கிறது -பகவத் கிருபை கரை புரள புக்கால் நிவாரகர் உண்டோ –காப்பது ஏது என்னாதே காப்பார் யார் என்கிறது -பல போக்தாவான இவனாலும் -கிருபா ஜனகை யான அவனாலும் ஒண்ணாது என்கை –ஸ்வ தந்த்ரனான அவனாலும் ஒண்ணாது -ஸ்வ தந்தர்யத்திலும் விஞ்சி இ றே கிருபை இருப்பது -இவனால் கிருபையை விஞ்சைக் குற்றம் செய்ய ஒண்ணாது -அவனால் ஸ்வ தந்தர்யத்தால் குற்றம் கண்டு கை விட ஒண்ணாது -நிரங்குச மான ஸ்வ தந்தர்யத்தை யுடைய நம்மால் தடுக்கத் தட்டு என் என்ன-ஐயோ!-ஸ்வ தந்தர்யத்தை நினைத்தோ -கிருபையை விஞ்சி கால் வாங்கி காண் -இனி என்கிறார்-ஐயோ என்றது ஹர்ஷத்தாலே -கிருபையின் கீழ் குற்றம் காண ஞானம் இல்லை -விட சக்தி இல்லை-கண்ண பிராஅன்! அறையோ! இனிப் போனாலே.–ஓர் இடைச்சி கையிலே  கட்டுண்ட தசையில் அந்த பந்தத்தை தப்ப விரகு அறியாதே சக்தியும் இன்றிக்கே இருந்த நீயோ போகப் புகுகிறாய்-கண்ணபிரான் என்று சம்புத்தி -இனிப்போனால் அறையோவறை -அனுக்ரஹ சீலனான உனக்கும் -மெய் என்று பேரிடலாவதொரு பொய் என் பக்கலிலே உண்டான பின்பு போகலாமோ-மித்ர பாவம் பெற்றால் -நத்யஜேயம் என்னும் உனக்குப் போகலாமோ -ஸூ க்ரீவ மஹா ராஜரைப் போலே அறை கூவுகிறார் –

மது சூதனை யன்றி மற்றிலேன் எத்தாலும் கருமமின்றி
துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே
–2-7-6—நான் இழவுக்கு யத்னம் பண்ணிப் போந்த காலம் எல்லாம் என்னைப் பெறுகைக்கு அவன் கிருஷி பண்ணிப் போருகையாலே பெற்றேன்
எதிரான சூழல் -என்னை அகப்படுத்திக் கொள்ளுகைக்கு ஈடான திரு வவதாரங்கள்-எனக்கே யருள்கள் செய்ய- எனக்கும் பிறருக்குமாக அன்றிக்கே எனக்கே அருள்கள் பண்ணும்படி –-யம்மான் திரிவிக்ரமனையே –-எனக்கு என்னவே விதி சூழ்ந்தது சர்வேஸ்வரனாய் வைத்து ஸ்ரீ வாமனனாய் சகல லோகங்களையும் திருவடியின் கீழே இட்டுக் கொண்டவனை – அது பரதசை என்னும்படி எனக்கு என்னவே விதி சூழ்ந்தது தம்மை விஷயீ கரித்து அல்லது அவனை இருக்க ஒட்டாமையாலே அவனுடைய க்ருபா குணத்தை விதி என்கிறது -ச தம் நிபதிதம் 

எல்லாம் செய்தாலும் ஏவம் பூத கிருபை தான் அநாதி காலம் இவாத்மா விஷயமாக பெருகாமல் ,இன்று பெருகும் அளவில் ,இதுக்கு ஓர் அடி வேண்டுகையாலே இதுக்கு உடலாகக் கற்பிக்க லாவதொரு ஸூஹ்ருதம் இல்லையோ என்ன-அருளிச் செய்கிறார்–ஆகையாலே இவர் தாமே “நிர்ஹேதுகமாக விஷயீகரித்தான்‌’ என்று அர்த்தத்தை அறுதியிட்ட பின்பு விஷயீகார ஹேதுவான ப்ரதம ஸுஹருதமும்‌ அவனை யல்லதில்லை என்கிறார்‌ மேல்‌-

வரவாறில்லை வெறிதே என்று அறுதி இட்ட பின் வாழ் முதல் என்கிற ஸூஹ்ருதம் ஓழியக்
கற்பிக்கலாவது இல்லை-சூரணை-113-

வரவாறு இல்லை என்று-அதாவது- வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால்—பெரிய திருவந்தாதி -56-என்று இது வந்த வழி இன்னது என்று இதற்க்கு சொல்ல லாவது ஒரு ஹேதும் இல்லை- பேறும் மிகவும் இனிதாய் இரா நிற்கும் என்றும் –வெறிதே அருள் செய்வர் செய்வார்கட்கு- திருவாய் -8-7-8-என்று-தாம் செய்ய நினைத்தவர்களுக்கு -நிர் ஹேதுகமாக கிருபை பண்ணுவர் என்றும் –இப்படி விஷயீகாரம் நிர் ஹேதுகம் என்று தாமே அறுதி இட்ட பின்பு –வாழ் முதல் என்கிற ஸூஹ்ருதம்-
அதாவது –தனியேன் வாழ் முதலே–திருவாய் -2-3-5- -என்று சம்சாரத்தில் ஒரு துணை இன்றிக்கே இருக்கிற என்னுடைய அனுபவத்துக்கு பிரதம ஸூஹ்ருதம் ஆனவனே -என்று தம்முடைய பேற்றுக்கு மூல ஸூஹ்ருதமாக இவர் அருளிச் செய்த அவன் தன்னை ஒழிய வேறு கற்பிக்கலாவதொரு ஸூஹ்ருதம் இல்லை என்கை–அன்றிக்கே – யாத்ருச்சிகளாதிகள் உண்டாகில் தோன்றும்–107–என்று அஜ்ஞாத ஸூஹ்ருதமும் இவருக்கு இல்லை என்றவாறே-இப்படி நேராகக் கழிக்க வேணுமோ ?-
அநாதி காலம் அங்கீகரியாதவன் இன்று செய்கையாலும் அல்லாத ஆத்மாக்கள் எல்லாம் கிடக்க , இவரை இப்படி விஷயீகரிக்கையாலும், இதற்கு உடலானது ஏதேனும் ஒரு ஸூஹ்ருதம் இவர்க்கு உண்டாகக் கூடும் என்று கார்யத்தை இட்டு அனுமித்ததாகிலும் , கல்பிக்க லாவது ஓன்று இல்லையோ என்ன- அப்படி கல்பிக்க லாவது இல்லை என்னும் இடத்தை ,விஸ்த்ரேண பிரதி பாதிக்கிறார் என்று சங்கதி ஆக்கி-செய்த நன்றி தேடிக் காணாதே -சூரணை -108-தொடங்கி-வெறிதே என்று அறுதி இட்ட பின் 113-என்னும் அளவும் ஏக வாக்யமாய் கொண்டு-இவ் ஆழ்வார் கருத்தைச் சொல்லி கொண்டு செல்கிறதாய் –-1-என் நன்றி செய்தேனா -என்று பகவத் அங்கீகாரத்துக்கு உடலாக தாம் செய்த ஸூஹ்ருதம் உண்டோ என்றி தேடிக் காணாதே – அங்கீகாரத்துக்கு உடலானது இல்லை ஆகில் –
2-அத்வேஷ ஆபிமுக்யங்களுக்கு தக்க தான் உண்டோ என்னில் , அவையும் அவனாலே வந்தது –
3-சத் கர்மத்தால் வந்தது அல்ல–எண்ணிலும் வரும் -என்று பரிகணனை தான் உண்டோ என்னில்- அதுக்கு எண்டானும் இல்லை-.. 4-வைத்தேன் மதியால்-யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் –
என்கிற அனுமதி இச்சைகள் தானும் உண்டோ என்னில்-அவையும் அவன் உண்டாக்கினது —
5-மாதவன் என்றதே கொண்டு –திரு மால் இரும் சோலை மலை என்றேன் என்ன -இத்யாதிகளால் –
ஈஸ்வரன் வலியவே எறிடிகிறவைகள் இவை –வ்யாவ்ருத்தி யுக்தாதிகள் ..-இவன் நடுவே வந்து-அடியான் என்று பிடித்து-பிரமாண சாஷிகள் காட்டி அவை கார்யகரம் ஆகாத அளவில் வடிவு அழகைக் காட்டி இப்படி இவ் வஸ்துவை ஸ்வ தீனம் ஆக்கி கொள்ளும் படி இவனை நிவாகரர் அற்ற கிருபை சூழ்ந்தது –6-இவ் விஷயீகாரத்துக்கு-வரவாறு ஓன்று இல்லை -வெறிதே அருள் செய்த இத்தனை-என்று
இவர் தானே அறுதி இட்ட பின்பு –-7-தனியேன் வாழ் முதலே –என்று தம் பேற்றுக்கு மூல ஸூஹ்ருதமாக
இவர் அருளிச் செய்த ஈஸ்வரன் தன்னை ஒழிய இவருக்கு வேறு ஒரு கற்ப்பிக்க லாவதொரு ஸூஹ்ருதம் இல்லை -இங்கனே யோஜிக்கவுமாம் –-இந்த யோஜனை இதின் பட்டோலையான கிரந்தத்தில் இவர் அருளிச் செய்த மரியாதைக்கு சேரும்

“வரவாறொன்றில்லையால்‌ வாழ்‌வினிதால்‌”” (பெ. திருவ. 56) என்று பேற்றுக்கு ஒரு ஹேதுவின்றியிலே இருக்கச்‌ செய்தே அப்பேறு மிகவும்‌ இனிதாயிருந்ததென்றும்‌, ““வெறிதே அருள் செய்வர்‌ செய்வார்கட்குகந்து”” (திருவா. 8 – 7 – 8) என்று ”செய்வார்களுக்கு உகந்து வெறிதே அருள் செய்வர்‌’‘ என்கையாலே தான்‌ அங்கீகரிக்க வேண்டினார்க்குத்‌ திருவுள்ளத் தோடே உகந்து நிர்ஹேதுகமாக க்ருபை பண்ணுமென்று இப்படி இவ் விஷயீகாரம்‌ திர்ஹேதுக மென்று தாமே அறுதி யிட்டபின்‌ (வாழ்முதல்‌ என்ற ஸுஹ்ருதமொழியக்‌ கற்பிக்கலாவதில்லை) இவ் விஷயீகாரத்துக்கு ஹேதுவான மூல ஸூஹ்ருதம்‌ *‘பொழிலேமழுமேனமொன்றாய்‌ நுனியார்‌ கோட்டில்‌ வைத்தாய்‌ – தனியேன்‌ வாழ் முதலே”’ (திருவா. 2 – 3 – 5) என்று ப்ரளயார்ணவ மக்‌னையான ஸ்ரீபூமிப்பிராட்டியை நீருக்கும்‌ சேற்றுக்கும்‌ இறாயாத வடிவைக் கொண்டு உத்‌தரிப்பித்து, தனியே ஸம்ஸாரார்ணவ மக்‌நனாய்‌ ஒரு கைம்முதலில்லாத என்னுடைய உஜ்ஜீவநத்துக்கு ப்ரதம ஸுஹ்ருதமானவனே என்று அருளிச்செய்த ஞானப்பிரானை யொழிய வேறு கல்பிக்கலாவதில்லை என்கிறார்‌.

வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால் எல்லே
ஒருவாறு ஒருவன் புகாவாறு -உருமாறும்
ஆயவர் தாம் சேயவர் தாம் அன்று உலகம் தாயவர் தாம்
மாயவர் தாம் காட்டும் வழி–56—இன்ன வழியாக வந்ததென்று தெரியாது;—அடி இல்லை யாகில் பலம் சுருங்கி இருக்குமோ என்னில்–பலம் அதிகமாய் இருக்கும்-பலன் போக்யமாயிரா நின்றது;-ஆச்சரியம்-தன்னுடைய ஸ்வரூப ஸ்வ பாவங்களை அழியமாறும்-எல்லா உபாயங்களையும் விட்டு என்னையே பற்று என்கை-போக்தாவினுடைய உபாய அனுஷ்டானங்களை அவர்க்காகத் தான் அனுஷ்ட்டிக்கும் என்று கருத்து எல்லாம் விட்டு என்னைப் பற்று என்னும் இவர்–அன்று உலகம் தாயவர் தாம் மாயவர் தாம் காட்டும் வழி நினைத்த போது தாமே வந்து கிட்டுமவர்-இப்படி ஆச்சர்ய பூதரானவர் காட்டும் உபாயம் வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால்-

இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாத வெந்தாய்
கனிவார் வீட்டின்பமே என் கடல் படா வமுதே
தனியேன் வாழ் முதலே பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய் யுனபாதம் சேர்ந்தேனே –2-3-5—எனக்கு இப் பேற்றுக்கு அடியான பிரதம ஸூ க்ருதத்துக்கு உத்பாதகன் ஆனவனே-பந்துக்கள் நடுவே இருக்கிறவர் -தனியேன் -என்கிறார் இறே
வழி பறிக்காரர் நடுவே நின்றால் அவர்கள் துணை யாகார் இறே-எனக்கு என்று இருப்பார் நடுவே இருக்கை இறே இவருக்கு தனிமை நம்மை அத்தலைக்கு ஆக்கி வைக்கை இறே இவருக்கு வாழ்வு

ஆக இதுக்கு கீழ்-இவர் பிரபாவத்தையும் ,-அதுக்கடி பகவத் நிர்ஹேதுக கடாஷம் என்னும் அத்தையும்,
அத்தால் இவருக்கு உண்டான பக்தியின் வ்யாவர்த்தியையும் ,-அது தான் கர்ம ஜ்ஞான சாத்யை அல்லாமையையும் , இவரை ஈஸ்வர அங்கீகரித்ததற்கு கேவல கிருபை ஒழிய ஹேது அந்தரம் இல்லாமையையும் சொல்லிற்று ஆய்த்து-

ஆக, இதுக்குக்கீழ்‌ இவருடைய ப்ரபாவத்தையும்‌, ப்ரபாவத்துக்கடி பகவந் நிர்ஹேதுக கடாக்ஷம்‌ என்னுமிடத்தையும்‌, அந்த கடாக்ஷமடியாக இவர்க்குண்டான பக்தியினுடைய வ்யாவ்ருத்தியையும்‌, அந்த பக்தி தான்‌ கர்ம ஜ்ஞாந ஸாத்‌யையுமல்ல, அதுக்கடியான யாத்‌ருச்சிகாதிகளுமில்லை, கேவல நிர்ஹேதுக க்ருபையாலே உண்டாயிற்றென்னுமிடத்தையும்‌ அருளிச் செய்து தலைக்கட்டினாராய்த்து –

இப்படி நிர்ஹேதுக விஷயீகார பாத்ர பூதரான இவருடைய பக்தி பகவத் கிருபை ஏக லப்தையாய் இருந்தாலும் , உபாகசனுக்கு கர்ம ஜ்ஞான ஜனிதையான பக்தியோபாதி இவருக்கு பிராப்தி சாதனம் இதுவோ என்ன -அருளிச் செய்கிறார் மேல்–ஆனால்‌, உபாஸகனுக்கு கர்ம ஜ்ஞாநங்களாலே ஸாத்‌யையான பக்தி பகவத் ப்ராப்திக்கு ஸாதநமாகக்‌ கண்டோம்‌, இவர்க்கு நிர்ஹேதுக க்ருபையாலே பக்தி உண்டாயிற்றாகில்‌ பகவத் ப்ராப்திக்கு இது ஸாதநமானாலோ என்னில்‌, அந்த பக்த் யுத்பத்தி ஹேதுவான க்ருபை தானே ப்ராப்திக்கும்‌ ஸாதநம்‌ என்கிறார்‌ மேல்‌

நலம் அருளினன்-என் கொல் என்று-ஆமூல சூடம்-அருளால் மன்னும் இவர்க்கு-அன்புக்கு அடி யானதுவே-அடி சேருகைக்கும் சாதனம்-சூரணை-114-

(அன்புக்கு அடி என்றது பக்திக்கு அடி என்றவாறு-அன்புக்கு அடி -பக்திக்கு காரணம் ஈஸ்வர கிருபையே -அதுவே அடி -ஈஸ்வர திரு அடி- சேருகைக்கும் அடி-காரணம் ) நலம் அருளினான் என்று-அதாவது
மயர்வற மதி நலம் அருளினன்-1-1-1- -என்று தம்முடைய பக்தி உத்பத்தி காரணம் , கேவல பகவத் கிருபை என்று உபக்ரமித்து –என் கொல் என்று –அதாவது –என் கொல் அம்மான் திரு அருள்கள்-10-7-4–(பன்மை -உபகார பரம்பரைகள் -ஆ மூல -ஆதி அந்தமாக அருள்கள்) (நன்கு என் உடலம் கை விடான் -என் மகங்காரம் -இத்தை சாத்தியமாக கொண்டு அதனாலே கொண்டான் –நாங்கள் குன்றம் கை விடான் -இத்தை சாதன புத்தியாக கை விடான் ) என்னும் அளவாக –ஞான தசையோடு -வர்ண தசையோடு–பிராப்தி தசையோடு -வாசி அற-ஆமூலசூடம்-அருளால் மன்னும் இவர்க்கு-அதாவது
மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்-1-5-11-என்று பிடி தோறும் நெய் ஒழிய செல்லாத சுகுமாரரை போலே , நின்ற நிலை தோறும் அவன் அருள் கொண்டே தரிக்க வேண்டும் ஸ்வபாவர் ஆன இவர்க்கு – ( இன்ப மாரிக்கு -அடி தோறும் அர்ச்சை -அருள் மாரிக்கு அடி தோறும் அருள் -அர்ச்சாவதாரமே அருளின் சரம தசை ) அன்புக்கு அடி யானதுவே அடி சேருகைக்கும் சாதனம்-
அதாவது-ஆரா அன்பில் அடியேன் உன்னடி சேர் வண்ணம் அருளாய்-6-10-2–என்கையாலே ,-நலம் அருளினன் -என்று பக்தி காரணமாக சொன்ன கிருபையே-அடி சேருகை யாகிற பிராப்த்திக்கும் சாதனம் என்ற படி –

“மயர்வற மதிநலமருளினன்‌ ”‘ (திருவா. 1 – 1 – 1), “ஆவா வென்றருள்‌ செய்து” (திருவா. 5 – 1 – 9), “’தானே இன்னருள்‌ செய்து” (திருவா. 5 – 1 – 10), ‘“அதுவுமவனதின்னருளே”‘ (திருவா. 0 – ப – 3), ”என்கொலம்மான் திருவருள்கள்‌”‘ (திருவா, 10 – 7 -4) என்று ஜஞாந தஸையோடு, உபாயதஸையோடு, ப்ராப்தி தஸையோடு வாசியற ஆமூலசூடம்‌ அருளால்‌ ”மன்னு குருகூர்ச் சடகோபன்‌”’ (திருவா, 1 – 5 -11) என்று தொடங்கி – ஸுகுமாரராயிருப்பார்‌ பிடி தோறும்‌ ‘நெய்‌’ என்னுமாப் போலே அவனுடைய அருளை யொழியச்‌ செல்லாத இவர்க்கு. (அன்புக் கடியானதுவே அடி சேருகைக்கும்‌ ஸாதநம்‌) ““அறியாக் காலத்துள்ளே அடிமைக் கணன்பு செய்வித்து’” (திருவா. 2- 3 – 3) என்று அறிவு நடையாடுகைக்கு யோக்யதை யில்லாத அதி பால்யததிலே அன்பை விளைத்தானென்றும்‌, ““ஆராவன்பிலடியேனுன்னடி சேர்‌ வண்ணமருளாயே” (திருவா. 6 – 10 – 2) என்கையாலே அந்த பக்திக்கடியான கிருபையே பகவத் ப்ராப்திக்கு சாதநம் என்கிறார் –

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே –1-1-1–மயர்வு -அஜ்ஞானம் -இத்தால் ஜ்ஞான உதய -அந்யதா ஜ்ஞான -விபரீத ஜ்ஞான ரூபமான அஜ்ஞானத்தைச் சொல்லுகிறது-அற -சவாசனமாகப் போகும்படி-மதி நலம்-மதி என்று ஜ்ஞானம்-நலம் -என்று பக்தி -பக்தி ரூபாபன்ன ஜ்ஞானம் என்றபடி-அருளினன்-இத் தலையில் நன்மை தீமை பாராதே நிர்ஹேதுக கிருபையால் தந்து அருளினான்-முலைக் கடுப்பாலே தரையிலே பீச்சுமா போலே –எனக்குத் தந்து அருளினான் -என்னாது ஒழிந்தது -பகவத் விஷயீ காரத்துக்கு முன்பு தம்மை அசத் கல்பராக நினைத்து இருக்கையாலேஎவன்–-இப்படி உபகாரகனான ஸ்ருதி பிரசித்தி ஆனவன்-

ஆனான் ஆளுடையான் என்றஃ தே கொண்டுகந்து வந்து
தானே இன்னருள்செய்து என்னை முற்றவும் தானானான்
மீனாய் ஆமையுமாய் நர சிங்கமுமாய்க் குறளாய்க்
கானார் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார்வண்ணனே.–5-1-10—என்னை அடிமை கொள்வான் ஆனான் என்கிற இந்த யுக்தி மாத்ரத்தையே குவாலாகக் கொண்டு -இப்படி சொல்லுகைக்கு தான் பண்ணின க்ருஷியை மறந்தான் -என்னுடைய யுக்தி மாத்ரத்தையே குவாலாக நினைத்தான் -பலம் பூஜிக்கிற நான் அன்றிக்கே உகப்பும் தன்னதே யாயிற்று-வந்து-தானே இன்னருள் செய்து- தான் இருந்த இடத்தே நான் செல்லுகை அன்றிக்கே நான் இருந்த இடத்தே தானே வந்து -அர்த்தியாது இருக்க தானே தன் பேறாக கிருபை பண்ணி –-என்னை முற்றவும் தானானான்-உள்ளொடு புறம்போடு வாசி அற கலந்தான் -என்னுதல்–சேலேய் கண்ணி யரும் பெரும் செல்வமும் -என்ற படியே சர்வவித பந்துவும் தான் ஆனான் என்னுதல் –

உணர்விலும் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறல் பொருட்டு என்
உணர்வினுள்ளே யிருத்தினேன் அதுவுமவன தின்னருளே
உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பினவும் பழுதேயாம்
உணர்வைப் பெற ஊர்ந்திறவேறி யானும் தானாய் ஒழிந்தானே–8-8-3—வைத்தேன் –மதியால் –என்றது தான் இறே -அவனை என்னுடைய ஞானத்துக்கு விஷயம் ஆக்கினேன் -இச்சித்தேன் என்கை -இச்சை தான் ஸ்வ ஆதீனமோ என்னில் –அதுவுமவன தின்னருளே-அந்த இச்சை தானும் பிறந்தது அவன் பிரசாதத்தாலே –நின்ற நின்ற வளைவுகள் தோறும் -இவ்வளவு அவனாலே பிறந்தது -என்னும்படியாய் யாயிற்று இருப்பது -அவனுடைய நிருபாதிக ஸுஹார்த்தம் -தன் பொன்னடிக்கு கீழ் இருத்தும் வியந்து -என்று ப்ராப்ய ப்ராபகன் அவனே என்று அருத்தித்து -என்றது இறே -அத்தை இ றே இங்குச் சொல்கிறது –

என் கொல் அம்மான் திருவருள்கள் உலகும் உயிரும் தானேயாய்
நன்கு என் உடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி
தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமால் இரும் சோலை
நங்கள் குன்றம் கை விடான் நண்ணா அசுரர் நலியவே–10-7-4—சர்வேஸ்வரனுக்கு என் பக்கல் யுண்டாய் இருந்துள்ள பிரசாத அதிசயத்துக்கு அவதி என்னா – உலகும் உயிரும் தானேயாய்-சகல லோகங்களும் சகல ஆத்மாக்களும் தான் இட்ட வழக்காய் இருக்கிறவன் தனக்கு ஒரு குறை யுண்டாய் -இப்படிப் படுகிறானோ –நன்கு என் உடலம் கை விடான்-செருக்கர் நீச ஸ்த்ரீகள் கால் கடையிலே துவளுமா போலே என்னுடம்பை விரும்பி விடுகிறிலன் –எனக்கு மமதா விஷயம் என்னுமதுவே ஹேதுவாக விடுகிறிலன்-ஞாலத்தூடே நடந்து உழக்கி--பூமி எங்கும் உலாவி -எல்லார் தலைகளிலும் திருவடிகளை வைத்து திரு உலகு அளந்து அருளிற்று -தம்மைப் பெறுகைக்கு கிருஷி பண்ணி என்று இருக்கிறார் -சர்வ சாதாரணன் வியாபாரம் ஆகையால் சம்பந்தம் அறிந்தால் எனக்கு என்னலாம் இறே –திரு உலகு அளந்து அருளுகை ஒரு வியாஜ்யமாய் -ஆழ்வாரை அனுபவிக்கைக்கு ஏகாந்தமான ஸ்தலம் ஏதோ என்று ஆராய்ந்து திரு மலையிலே நின்று அருளினான்–

மாலே மாயப் பெருமானே மா மாயனே என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே –-1-5-11—அவனும் தன் வியாமோஹத்தால் யாயிற்று இவரைச் சேர்த்துக் கொண்டது-அவன் தன் செல்லாமையைக் காட்டி சேர்த்து கொண்ட படியைக் கண்டு ப்ரீதராய்-அது உள்ளடங்காமையாலே வழிந்து புறப்பட்ட இத் திருவாய்மொழி க்கு உண்டான லோக பரிக்ரஹத்தைச் சொல்லுகிறது-

அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று
அறியாமை வஞ்சித்தாய் எனதாவியுள் கலந்தே –2-3-3—அறிவு கேட்டைப் பண்ண வற்றாய்-துஸ்தரமான சம்சாரத்திலே இருக்கிற என்னை –அடியேன் -என்கிறது -அஹம் சப்த பர்யாயம் – அறிவுக்கு சம்பாவனை இல்லாத பால்யத்திலே -பிராப்தி பலமான அடிமையிலே ஸ்நேஹத்தை பிறப்பித்து வைத்தாய்–இங்கே வைத்து பகவத் விஷயத்தை அவஹாகிப்பித்தது-அத்தாலே ஒரு தேச விசேஷத்திலே பெறும் பேறு சாத்மிக்கைக்காகவும்- ப்ராப்யத்தில் த்வரை விஞ்சுக்கைக்காகவும் இறே-அந்நிய பரமான என் ஆத்மாவில் புகுந்து -தன் குண சேஷ்டிதாதிகளாலே வசீகரித்து –-அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று-அறியாமை வஞ்சித்தால் போலே – எனதாவியுள் கலந்தே-
அறியா மா மாயத்து அடியேனை-அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து- வைத்தாயால்-என்று அந்வயம்

கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல்லசுரர் குலமெல்லாம்
சீறா எரியும் திருநேமி வலவா! தெய்வக் கோமானே!
சேறார் சுனைத்தா மரை செந்தீ மலரும் திருவேங் கடத்தானே!
ஆறா அன்பில் அடியேன் உன்னடி சேர் வண்ணம் அருளாயே.–6-10-2--சுனைகள் அறாக்கயம் ஆகிறாப் போலே யாயிற்று இவருக்கு அன்பு மாறாதே இருக்கிற படி -க்ரம பிராப்தி பற்றாத படியான ப்ரேமம் இறே-உன்னடி சேர் வண்ணம் அருளாயே.–உன் திருவடிகளிலே சேர்ந்து அடிமை செய்யும் படி என் பக்கலிலே கிருபை பண்ணி அருள வேணும் –நீ வந்து திரு மலையிலே அவசர பிரதீஷனாய் இருக்க -உன்னைப் பெற வேணும் என்னும் ருசி எனக்கு உண்டாய் இருக்க நான் கூப்பிடுகை மிகை அன்றோ

இப்படி ப்ராப்தி சாதனம் கிருபையே ஆகில் ,-இன் நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்ற போதே ,
இவர் அபேஷிதம் செய்து விடலாய் இருக்க ,இவரை வைத்து (உறாமை என்றாலும் சம்சாரத்தில் வைத்து ) ஸ்வ சம்ஸ்லேஷ விஸ்லேஷங்களாலே ,(ஆத்ம ஞானம் வந்த பின்பு -விஸ்லேஷத்தில் தானே பக்தி வளரும் ) ஞான பக்திகளை வளர்த்தது ஏதுக்கு ஆக என்னும் ஆ காங்ஷையாலே அருளி செய்கிறார் மேல் —இப்படி பரம க்ருபாவானானவன்‌ இவர்க்கு ஸம்ஸ்லேஷ விஸ்‌லேஷங்களினாலே ஸோக ஹர்ஷங்களை விளைவித்ததுக்கு ப்ரேயாஜநம்‌ என்‌ என்னில்‌, இவர்க்கு தேஸ விஸேஷத்தில்‌ அநு பவம்‌ ஸாத்மிக்கைக்காக ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களினாலே ஐஞாந பக்திகளை வளர்த்து ஸ்ரமம்‌ செய்வித்தபடி என்கிறார்‌-

புணர் தொறும் என்னக் கலந்து பிரிந்து ஞான பக்திகளை வளர்த்தது கனம் குழை இடக் காது பெருக்குதலும் மாச உபவாசி போஜன புறப் பூச்சும் போலே ஆற்ற நல்ல மா போகச் சிரமமாக —சூரணை -115-

புணர் தொறும் என்னக் கலந்து பிரிந்து-அதாவது – தடமுலை புணர் தொறும் புணர்ச்சிக்கு ஆரா சுக வெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க்கச் சூழ்ந்து அது கனவென நீங்கி ஆங்கே அகவுயிரகம் அகம் தோறும் உள் புக்கு ஆவியின் பரமல்ல வேட்கை அந்தோ –திருவாய் -10-3-2-(காலைப் பூசல் ) இத்யாதியாலே சம்ஸ்லேஷிக்கும் தொறும் ,சம்ஸ்லேஷத்தக்கு தக்க அளவில்லாத சுக சாகரமானது ,
அபரித்சேத்யமான ஆகாசத்தையும் கடந்து ,அவ் அருகு பட்டு ,விபூதி த்வயத்தையும்
விளாக் குலை கொள்ள வல்ல அறிவையும் முழுத்தும் படி பெருகி ,-இப்படிப் பெருகின இது —
விஸ்லேஷ பிரசங்கத்திலே (பிரியவே இல்லாமல் இருந்தாலும் )-பெருக்காறு வற்றி அடி சுடுமா போலே ,
ஸ்வப்ன கல்பம் என்னலாம் படி ,வற்றிப் போய் -அத் தசையில் பிராண ஸ்தானமான ஹிருதயத்தில் பூர்வ சம்ஸ்லேஷத்தால் உண்டான , புடை தொறும் உள்ளே புகுந்து ,ஆஸ்ரயமான ஆத்மாவுக்கு பொறுக்க ஒண்ணாத படி ,அபிநிவேசம் பெருகி வாரா நின்றது என்று ,சொல்லும் படியாக கலப்பது பிரிவதாய்- கலவியாலே ஜ்ஞானத்தையும் பிரிவாலே பக்தியையும் வளர்த்தது –( ஒரே பாசுரத்தாலே இரண்டையும் காட்டி அருளுகிறார் )கனம் குழை இடக் காது பெருக்குதல் போலே-அதாவது –-கனத்த பணி இடுகைக்கு இடமாம் படி ,நூல் இட்டு திரி இட்டு குதும்பை இட்டு காது பெருக்குமா போலேயும்-மாச உபவாசி போஜன புறப் பூச்சு போலே-அதாவது-மாசோ உபவாசிகளுக்கு ,பிரதமத்தில் போஜனத்தை இடில் பொறாது என்று, சோற்றை அறைத்து உடம்பிலே பூசி ,பொரி கஞ்சி கொடுத்து , பொரி கூழ் கொடுத்து ,ஒடுக்கத்திலே போஜனத்தை பொறுப்பிக்குமா போலவும்–

“புணர்‌ தொறும்‌” (திருவா. 10 – 3 – 2) என்கிற பாட்டில்‌ ஸம்ஸ்லேஷிக்குந் தோறும்‌ அந்த ஸ்ம்ஸ்லேஷ்த்தின்‌ அளவல்லாத ஸுக ஸாகரம்‌, அபரிச்சிந்நமான ஆகாயத்தையும்‌ கடந்து அது தானும்‌ இதுக்குள்ளேயாம்படியான இவருடைய ஜஞாநமும்‌ தனக்குள்ளேயாம்படி வ்யாப்தமான அந்த ஸுகம்‌, அவனுடைய விஸ்லேஷத்திலே பெருக்காறு அடிச்சுடுமாப் போலே ஸ்வப்ந ஸமமாய்ப் போய்‌ அந்த ஸுகம்‌ போனவிடமெல்லாம்‌ வ்யாப்தமாய்க் கொண்டு அணு பரிமாணமான ஆத்மாவின்‌ அளவல்லாத அபிநிவேஸம்‌ பெருகிற்றென்று சொல்லும்படி ஸம்ஸ்லேஷித்து ஜ்ஞாநத்தை வளர்த்து, விஸ்லேஷித்து பக்திகளை வளர்த்தது. (கனங்குழையிடக்‌ காது பெருக்குதலும்‌ மாஸோபவாஸி போஜநப் புறப் பூச்சும் போலே) கனத்த பணிகளிடுகைக்குக்‌ காது பெருக்குவாரைப்‌ போலேயும்‌, மாஸோபவாஸிகளுக்கு அப்போதே அஸநத்தை இடில்‌ ஸாத்மியா தென்று ஸரீரத்திலே அந்நத்தை அறைத்துப்‌ பூசியும்‌ கஞ்சியைக்‌ கொடுத்தும்‌, குழம்பு கொடுத்தும்‌ ஸாத்மிப்பிப்பாரைப் போலேயும்‌-

தகவிலை தகவிலை யே நீ கண்ணா தடமுலை புணர்தொறும் புணர்ச்சிக்கு ஆராச்
சுகவெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க்கச் சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே
அக உயிர் அகம் அகம் தோறும் உள் புக்கு ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ

மிக மிக இனி உன்னை பிரிவை ஆமால் வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே–10-3-2—அணைக்கிறது பிரிகைக்கு இறே -என்று கை நெகிழ்ந்த இடத்தில் உடம்பு வெளுக்கும் -அதுக்கு பரிஹாரார்த்தமாக திரிய அணைக்கும் -ஆக இப்படி அதிசங்கையும் பரிஹாரமுமாய் செல்லும் இத்தனை யாய்த்து--தடமுலை –என்றது -போக்தாவால் உண்டு அறுக்க ஒண்ணாத போக்யதா பிரகர்ஷம் -மலராள் தனத்து உள்ளான் –இத்யாதி –புணர்ச்சிக்கு ஆராச்-சுகவெள்ளம் -கலவியின் அளவில்லாத ஸூக சாகரம் -கலக்கும் இடத்தில் இருவருக்கும் அனுரூபமாய் இறே ஸூகம் இருப்பது –அவன் ஸ்வரூபம் இயத்தா ரஹிதமாய் இருக்குமா போலே யாய்த்து போக்யதா பிரகர்ஷமும்-அதனில் பெரிய அவா விறே இவளது –விசும்பு இறந்து அறிவை மூழ்க்கச்-சூழ்ந்து -அந்த ஸூகம் அபரிச்சின்னமான ஆகாசத்தைக் கடந்து -மயர்வற மதி நலம் அருள பெற்ற அறிவையும் மூழ்த்தும் படி பெருகிற்று என்னுதல் –-விசும்பு -என்று பரம பதம் –அறிவு -ஆகிறது -உபய விபூதியையும் விளாக் குலை கொள்ளும் தன்னறிவு என்னுதல்
அது கனவு என நீங்கி-ஸ்வப்ன கல்பம் என்னலாம் படி வற்றிப் போய் -இந்திர ஜாலங்கள் என்றும் கனவு என்றும் அஸ்திரங்களை சொல்லக் கடவது இறே -கலந்த போது ஸூகம் அபரிச்சின்னமாய் இருக்கும் –பிரித்விக் கண்டவாறே பெருக்காறு அடிச் சுடுமா போலே துக்கமும் அபரிச்சின்னமாய் இருக்கும் –
ஆங்கே-அத்தசையிலே-அக உயிர்-பிராண ஸ்தான மான ஹ்ருதயம்-அகம் அகம் தோறும் உள் புக்கு-ஹ்ருதயத்தில் உண்டான அவகாசம் தோறும்–முன்புள்ள சம்ச்லேஷ விஸ்லேஷங்களாலே ஹிருதயம் புடை பட்டு இறே இருப்பது -அவ்வவகாசகங்களின் உள்ளே சென்று புக்கு —=ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ– ஆச்ரயத்தின் அளவன்றிக்கே அபி நிவேசம் பெருகி வாரா நின்றது –சம்ச்லேஷ ஸூகம் புக்க இடம் எங்கும் ஆற்றாமை யாய்த்து -அணு பரிமாணமாக ஆத்மாவால் பொறுக்கும் அளவன்று ஆசை -ஸூ கமும் துக்கமும் ஸ்வரூபேணா வஸ்திதியும்-என்று மூன்று –ஸ்வரூபேணா வஸ்திதியில் நிற்கிறது இல்லை –அந்தோ -இது உனக்கு-உபதேசிக்க வேண்டுவதே —-கலவியில் இருவரும் கூடக் கலந்து பிரிவால் ஆற்றாமை உனக்கு உபதேச கம்யமாவதே-கலவிக்கு இருவராய் -நோவு ஒரு தலைக்கே யாவதே

ஆற்ற நல்ல மா போகச் சிரமமாக –அதாவது-ஆற்ற நல் வகை காட்டும் அம்மான் -திருவாய் -4-5-5–என்று-எனக்கு பொறுக்க பொறுக்க தன் குண சேஷ்டிதாதிகளைக் காட்டி ,(மஹா க்ரம மஹதி அநு பூர்வி -படிக்கட்டு ) அவ் வழியாலே என்னை அடிமை கொண்டவன் என்னும் படி , பகவத் அனுபவம் கனாக் கண்டு அறியாத இவர்க்கு-எம்மா வீடு-2-9-1–என்றும்-கட்டு எழில் வானவர் போகம்-6-6-1–என்றும் சொல்லுகிறபடியே எவ் வகையாலும் , விலஷணமாய் கொண்டு , கட்டடங்க (நிரஸ்தமான-யதா சைத்தனம் உப்புக்கட்டி போலே )நன்றாய் இருப்பதாய் அபரிசின்ன ஞான சக்திகரான நித்ய சூரிகள் அனுபவிக்கிற ,போகத்தை முதலிலே கொடுக்கில் சாத்மியாது என்று கருதி , அது சாத்மிக்கைக்காக சிரமம் செய்வித்த படி என்கை -(.மா போகத்தை சிரமம் செய்து கொடுத்தார் என்றவாறு )ஆன பின்பு ஞான பக்திகளை வளர்த்தது பிராப்தி சாதனதயா அன்று ( அனுபவத்துக்காக என்றபடி )என்று கருத்து ..-மாசோ உபாசிக்கு புறப் பூச்சு மாத்ரத்தால் ,போஜனம் பொறாமையால் ,புறப் பூச்சு சொன்ன இது மற்றைய வற்றுக்கும் உப லஷணம்–மா போகம் -என்றது -மா வீடு -வானவர் போகம்-என்கிறசந்தைகளில் ஆதி அந்தங்களை சேர்த்து சொன்ன படி —

(ஆற்றநல்ல மா போகச் சிரமமாக) “*ஆற்ற நல்ல வகை காட்டுமம்மான்‌ ” (திரு-4-5-5) என்றும்‌, அர்ஜுநனுக்கு ஸாத்மிக்க ஸாத்மிக்க அர்த்தம்‌ அருளிச் செய்தாப் போலே எனக்கும்‌ ஸாத்மிக்க ஸாத்மிக்கத்‌ தன்னுடைய பரத்வாதிகளை அநுபவிப்பித்தான்‌ என்று இவர்‌ அருளிச் செய்தபடியே பகவதநுபவம்‌ என்று கனாக் கண்டறியாத இவர்க்கு “எம்மா வீடு”’ (திருவா. 2 – 9 – 1) என்றும்‌, “மா போகம்‌”’ என்றும்‌ சொல்லுகிறபடியே எல்லாப்படியாலும்‌ விலக்ஷணமாய்‌, ““கொள்ள மாளா இன்ப வெள்ளம்‌”” (திருவா. 4 – 7 – 2) என்கிறபடியே அதிஸயித ஜ்ஞாந ஸக்திகரான நித்ய ஸூரிகளாலும்‌ துலைத்தநுபவிக்க வொண்ணாதபடி அபரிச்சேத்‌யமாயிருக்கிற தன்னோட்டை அநுபவத்தை முதலிலே ப்ரகாஸிப்பிக்கில்‌ இவரைக் கிடையாதென்றும்‌, அவ்வநுபவம்‌ ஸாத்மிக்கைக்காகச்‌ சிரமம்‌ செய்வித்தபடி என்கிறார்-

ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை அமரர் தம்
ஏற்றை எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை
மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன்;
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே.–4-5-5—ஆற்ற-அமைய -பொறுக்க பொறுக்க
நல்ல வகை காட்டும் அம்மானை-தன் குண சேஷ்டிதங்களை அனுபவிப்பித்தவன் –-தன் படிகளை ஒரு காலே காட்டில் குளப் படியில் கடலை மறுத்தால் போலே இவருடைய ஆஸ்ரயம் சிதிலமாம்-இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை என்ற போதே வீற்று இருந்து ஏழு உலகை அனுபவிப்பித்தால்-இவரை கிடையாது என்று இறே இவ்வளவும் கொண்டு போந்தது –-அம்மானை அமரர் தம்-ஏற்றை-
சர்வேஸ்வரனாய் -நித்ய ஸூ ரிகளை போக்தாக்களாய் உடையனாய் வைத்து -தனக்கு ஒரு குறை உடையனாய் அன்று -போக்தாக்கள் இல்லாமை அன்று – ஷூ த்ரனாய் ஷூ த்ர விஷயங்களில் கால் கிடையிலே கிடந்த என்னை க்ரமேண அனுபவிப்பித்த மஹா உபகாரகனை–அர்ஜுனனுக்கு -உபதேஸித்தால் போலே தன் குண சேஷ்டிதங்களை எனக்கு சாத்மிக்க சாத்மிக்க அனுபவிப்பித்த மஹா உபகாரகனை-பண்ணின உபகாரகத்துக்கு பிரதிபகாரம் காணாமையாலே ஏத்தினேன் -அது திருவாய்மொழி யாயிற்று-நாள் தோறும் ஆனந்தத்தை உடையேன் ஆனேன் – வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவி -என்னும்படி யானேன்

எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்
கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா வடியேன் வேண்டுவது ஈதே –2-9-1—எம்மா வீட்டுத் திறமும் செப்பம்–வீடு -மோக்ஷம் மா வீடு -உத்க்ருஷ்டமான மோக்ஷம் -அவித்யா நிவ்ருத்தம் மாத்திரம் அன்று-எம்மா வீடு -எல்லா பிரகாரத்தாலும் உத்க்ருஷ்டமான மோக்ஷம் கிடீர் என்ன -ஆனாலும் அபேக்ஷை இல்லை –-வீட்டுத் திறமும் -வீட்டிடை யாட்டம் – செப்பம்-செப்போம்-சொல்லோம்- என் கருத்து அறிக்கைக்காக -நீ கொள் -என்றும் நாம் வேண்டா -என்றும் நிஷேத அர்த்தமாகவும் பிரசங்கிக்க காட்டுவோம் அல்லோம் – ஒரு தமிழன் –எம்மா வீட்டு விகற்பங்களும் செவ்வியவாம் -என்றான் -அப் பக்ஷத்தில் சாலோக்ய ஸாரூப்ய சாமீப்ய சாயுஜ்யம் -என்கிற இவை எல்லாம் இம் மோக்ஷத்தில் உண்டாகை–உமக்குச் செய்ய வேண்டுவது என் என்ன – நின்-செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்-ப்ராப்யமாய் -அகவாய் சிவந்து -அதுக்கு பரபாகமான புறா வாயில் கறுப்பை உடைத்தாய் -விகாசம் செவ்வி குளிர்த்தி நாற்றம்
இவற்றாலே நிரதிசய போக்யமான திருவடிகளை – ஆஸ்ரிதற்கு அருமைப் பட வேண்டாத படி செவ்வியதாய் பூஜ்யமான திருவடிகள் என்னவுமாம் என் தலையிலே கொக்குவாயும் படி கண்ணியும் போலே சேர்த்து அருள வேணும்

கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோது இல தந்திடும் என்
வள்ளலேயோ!
வையம் கொண்ட வாமனாவோ!’ என்று என்று
நள் இ ராவும் நன்பகலும் நான் இருந்து,ஓலம் இட்டால்
கள்ள மாயா! உன்னை என்கண் காணவந்து ஈயாயே.–4-7-2—கொள்ள மாளாத ஆனந்த சமுத்திரத்தை -அனுபவிக்க அனுபவிக்க குறையாது இருக்கை-வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் -என்றது இறே -அது ஆகிறது-கோது இல தந்திடும்-ஆனந்தத்துக்கு கோதாகிறது -அனுபவித்தால் அமையும் என்று இருத்தல் -புறம்பே ஒன்றை அபேக்ஷித்தல் செய்கை – அது இன்றிக்கே ஒழிகையாவது -மேன் மேல் என அபேக்ஷை வர்த்திக்கையும் -இதர விஷய வைராக்ய ஜனகமாகையும்–கோதில-வ்யதிரேகத்தில் மோஹிப்பிக்கை–என் வள்ளலேயோ – நிர்ஹேதுகமாக அபகரித்து வைத்து கூப்பிட பேசாது இருக்கிறது என்-உன் பேறாக அபகரித்து அபகரித்து இப்போது என் பேறாக கூப்பிடப் பண்ணுகிறது என் -இப்படிக் கூப்பிட பண்ண நினைத்தால் வீற்று இருந்து ஏழு உலகில் படியை அனுபவிப்பத்தது என்-வையம் கொண்ட வாமனாவோ!’-வையம் கொண்ட பின்பும் -வாமன வேஷமே யாய்த்து-இவருக்கு பட்டு இருப்பது –-உன்னை இந்திரன் இரக்க-அத்தியாய உபகரிக்குமவன் அல்லையோ-எனக்கு நீ இரந்து தந்து இன்று நான் இரக்க இருக்கிறது என்-என்று என்று
இந்திரனைப் போலே ஒரு பிரயோஜனாந்தரத்தைக் கொண்டு போகிறார் அல்லரே-அவ்வடிவும் நீர்மையையும் இறே இவர்க்குப் பேறு

கட்டெழில் சோலை நல் வேங்கட வாணனைக்
கட்டெழில் தென்குரு கூர்ச்சட கோபன்சொல்
கட்டெழில் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர்
கட்டெழில் வானவர் போகம் உண்பாரே.–6-6-11--பெரிய வானவர் -போக விசேஷணம் ஆகவுமாம் -சம்சாரத்தில் போகம் கர்ம நிபந்தம் ஆகையால் அல்பமாய் அஸ்திரமாய் இருக்கும் இறே -ஸ்வரூப அனுரூபம் ஆகையால் சம்ருத்தமாய் நித்தியமாய் இருக்கை –

ஆனால் ஞான பக்திகளை வளர்த்தது அதுக்காகிறது –முனியே நான் முகனே -அளவும் மானச அனுபவம் ஒழிய ,ப்ரத்யஷ அனுபவம் இல்லாத இவர்க்கு -இவற்றை வளர்க்கைக்கு உறுப்பாக
வரும் சம்ச்லேஷ விச்லேஷங்கள் ஆகிற இவை எவை என்ன அருளிச் செய்கிறார் மேல் -இவர்க்கு இங்கு ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களாகச்‌ சொல்லுகிறவை எவை என்னில்‌, ப்ரத்யக்ஷ ஸமாநாகாரமான மாநஸாநுபவமும்‌, அவ்வநுபவத்தை பாஹ்ய ஸம்ஸ்லேஷாபேக்ஷை பண்ண, அது கிடையாமையாலே மாநஸாநுபவத்துக்கு வந்த கலக்கமும்‌ என்கிறார்‌ மேல்‌ 

இவற்றால் வரும் சம்ஸ்லேஷ விஸ்லேஷங்கள் ஆகிறன எளியனாய் நிற்கும் அரியனாய் எய்தான் என்கிற தர்சன சமமான மானச அனுசந்தானமும் திண் கொள்ளப் பொறாத மனஸ் சைதில்யமும் -சூரணை -116-

(சம்ஸ்லேஷமாவது-எளியனாய் நிற்கும் அரியனாய் எய்தான் என்கிற தர்சன சமமான மானச அனுசந்தானம்-ஞானத்தால்-மானஸ சாஷாத்காரம்-மனசில் நினைவின் நீட்சியால்-
விஸ்லேஷமாவது திண் கொள்ள பொறாத மனஸ் சைதில்யம் -என்றவாறு
பாஹ்ய சம்ச்லேஷ அபேக்ஷையாலே -கலங்கி உள்ளத்தில் உள்ள சம்ச்லேஷ -மானஸ சாஷாத்காரமும் கலங்கி -விஸ்லேஷம் – கண்ணுக்கு தெரிந்து – புத்திக்கு எட்ட வில்லை -மண்டோதரி -த்வம் அப்ரமேய) அதாவது – கீழ்ச் சொன்ன இக் கார்யங்கள் அடியாக வரும் சம்ஸ்லேஷமும் , விஸ்லேஷமும் ஆகிறன-
எளியனாய்
– அதாவது – கருத்துக்கு நன்றும் எளியனாய்-3-6-1- –என்றும் ,-நிற்கும் –-அதாவது –
நிற்கும் முன்னே வந்து –7-3-6–என்று , நெஞ்சுக்கு மிகவும் விசததம அனுபவ விஷயமாய் கொண்டு ,
என் முன்னே வந்து நிற்கும் என்றும் , அரியனாய்- அதாவது –-கண்கள் காண்டற்கு அரியனாய்-3-6-1- -என்றும் ,-எய்தான் –அதாவது –என் கைக்கும் எய்தான்-7-3-6–என்று-கண்ணுக்கு அவிஷயமாய் கொண்டு ,கையால் அணைக்கைக்கு எட்டு கிறிலன் என்றும் , சொல்லுகிற பிரத்யஷ அனுகூல்யமான மானஸ அனுசந்தானமும் ,-திண் கொள்ளப் பொறாத மனஸ் சைதில்யம்-அதாவது கண் கட்கு திண் கொள்ள ஒரு நாள் அருளாய் நின் திரு உருவே -5-10-7- -என்று (தாஹார்த்தன் நாக்கு நனைக்க கேட்பது போலே ஒரு நாள் அருளாய்- நின் திரு உருவே-இது உன்னதோ -அருளால் நோக்கிக் கொண்டு இருக்க –பக்தாநாம் அன்றோ ) அபேஷிதமான பாஹ்ய அனுபவம் பெறாமையாலே- ஆந்த்ர அனுபவமும் ,
அடி மண்டியோடே கலங்கும் படி அந்தக் கரண சைதில்யமும் என்கை-

அந்த ஜஞாந பக்திகளை வளர்த்தத்தால்‌ வரும்‌ ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களாகிறனவை எவை என்னில்‌, (எளியனாய்‌ நிற்கும்‌ அரியனாய்‌ எய்தான்‌ என்கிற தர்ஸந ஸமமான மாதஸாநுஸந்தாநமும்‌) “கருத்துக்கு நன்றுமெளியனாய்‌”‘ (திருவா. 8 – 6 – 11), “நிற்கும்‌ முன்னே வந்து”‘ (திருவா-7 – 2 – 6), “கண்கள்‌ காண்டற்கரியனாய்‌”’ (திருவா. 3 – 6 – 11), ““கைக்குமெய்தான்‌” (திருவா. 3 – 6 – 11) என்றும்‌ சொல்லுகையாலே என்னுடைய ஹ்ருதயத்திலே மிகவும்‌ எளியனாய்க் கொண்டு என் முன்னே நிற்கும்‌ என்றும்‌, என்‌ கண்ணுக்கு அவிஷயமாய்க் கொண்டு கையாலே அணைக்கைக்கு எட்டுகிறிலன்‌ என்றும்‌ சொல்லுகிற ப்ரத்யக்ஷ ஸமாநாகார மாநஸாநுஸந்தாநமும்‌, (திண் கொள்ளப் பெறாத மநஸ் ஸைதில்யமும்‌) அந்த மாநஸாநுபவ வைஸத்‌யத்தாலே “என்‌ கண்கட்குத்திண்கொள்ள ஒருநாள்‌ அருளாயுன்‌ திருவுருவே”’ (திருவா. 5 – 10 – 7) என்று பாஹ்ய ஸம்ஸ்லேஷாபேக்ஷை பண்ணி அது கிடையாமையாலே அம் மாநஸாநுபவத்துக்கு வரும்‌ குலைதலும்‌ ்‌ என்கிறார்‌.-

கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
மண்கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள்செய்யும் வானவர் ஈசனைப்
பண்கொள் சோலை வழுதி வளநாடன் குருகைக்கோன் சடகோபன் சொல்
பண்கொள் ஆயிரத்து இப் பத்தால் பத்தராகக் கூடும் பயிலுமினே.–3-6-11–கண்ணுக்கு விஷயம் அன்றிக்கே அகவாயிலே மிகவும் பிரகாசிக்கிற படி –-இவருக்கு எங்கும் இதுவே சம்ச்லேஷ விஸ்லேஷங்களுக்கு பிரயோஜம்-சம்ச்லேஷம் ஆகிறது -மானஸ அனுபவம் -விஸ்லேஷம் ஆகிறது -பாஹ்ய சம்ச்லேஷ அபேக்ஷையாலே மானஸ அனுபவத்துக்கு வரும் குலைதல்-

காலம் பெற என்னைக் காட்டுமின்கள் காதல் கடலின் மிகப் பெரிதால்
நீல முகில் வண்ணத்து எம்பெருமான் நிற்கு முன்னே வந்தென் கைக்கும் எய்தான்
ஞாலத்தவன் வந்து வீற்றிருந்த நான் மறை யாளரும் வேள்வி ஓவாக்
கோலச் செந்நெற்கள் கவரி வீசும் கூடு புனல் திருப் பேரெயிற்கே.–7-3-6-சிரமஹரமான வடிவை காட்டி யாயிற்று ஆசையை வளர்த்தது -அவன் காதலுக்கு கிருஷி பண்ணா நிற்க என்னால் ஸ்த்ரீத்வத்தை நோக்கி இருக்கப் போமோ –முன்னே வந்து நிற்கை பொல்லாதோ என்னவந்தென் கைக்கும் எய்தான்-உரு வெளிப்பாடு அன்றிக்கே கையாலே அணைக்க எட்டினால் அன்றோ அழகிது –வார்த்தை சொல்லாமை அன்றிக்கே அணைக்கைக்கும் எட்டுகிறிலன் -தான் மேல் விழுந்து அணையாமை அன்றிக்கே நான் மேல் விழுந்து அணைக்கைக்கும் எட்டு கிறிலன்-ஆனால் செய்யப் படுவது என் என்ன -அவன் வந்து இருக்கிற ஊரிலே கொண்டு போய் விடாய் பாருங்கோள்

ஒண் சுடரோ டிருளுமாய் நின்றவாறும் உண்மை யோடின்மையாய் வந்து என்
கண் கொளா வகை நீ கரந்து எனைச் செய்கின்றன
எண் கொள் சிந்தையுள் நைகின்றேன் என் கரிய மாணிக்கமே! என் கண் கட்குத்
திண் கொள ஒருநாள் அருளாய் உன் திருவுருவே.–5-10-7-
என் கண்ணுக்கு அவிஷயமாய்-மறக்க ஒண்ணாத படி நெஞ்சிலே விசதமாக நின்று என்னை நீ செய்கிறவற்றுக்கு அவதி இல்லை –-எண் கொள் சிந்தையுள் நைகின்றேன்-நினைக்க மநோ ரதிக்கிற அளவிலே சிதிலனாகா நின்றேன்
என் கரிய மாணிக்கமே!-ஸைதில்யத்தை பார்த்து மீள ஒண்ணாத வடிவு அழகு -அவ்வடிவை எனக்கு முற்றூட்டு ஆக்கினவனே-என் கண் கட்குத்-தமக்கு முன்னே என்று கொல் கண்கள் காண்பது என்னும்படி விடாய்க்கும் கண்கள்-திண் கொள ஒருநாள் அருளாய் உன் திருவுருவே.-த்ருடமாக காணலாம் படி -ஸ்வப்ன தர்சனம் போலே மானஸ அனுபவம் மாத்திரம் அன்றிக்கே ஸூ த்ருட ப்ரத்யக்ஷமாம் படி -விடாயான் ஒரு கால் நாக்கு நனைக்க வேணும் என்னுமா போலே -அப்ராப்த விஷயத்தையோ நான் ஆசைப்படுகிறது –பக்தா நாம் என்கிற வடிவை அன்றோ-

ஆனால் அபிமத விஷய சம்ஸ்லேஷ விஸ்லேஷங்கள் புண்ய பாப நிபந்தனமாக வன்றோ ,
லோகத்தார்க்கு வருவது ..லோக வ்யாவ்ருத்தரான இவருக்கு (மாறன் அன்றோ )இவை வருகைக்கு நிதானம் எது என்னும் அபேஷையிலே அருளி செய்கிறார்–அபிமத விஷயத்தில்‌ ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களிரண்டும்‌ நாட்டார்க்கு புண்ய பாப பலமாயன்றோ உண்டாகிறதென்னில்‌; அந்த பாபங்கள்‌ வாஸனையோடே போகப்‌ பெற்ற இவர்க்கு ப்ரிய ஹித பரனான ஈஸ்வரன் தானே நடத்தும்‌ என்கிறார்‌.-

புண்ணியம் பாபம் , புணர்ச்சி பிரிவை அவை சரித்தவர்க்கு ப்ரிய ஹித பரன் தான் துளக்கற எங்கும்
தழைக்க நடத்தும் –சூரணை -117-

( புண்ணியத்தால் புணர்ச்சி–துளக்கற நடத்தும்-பாபத்தாலே பிரிவு -எங்கும் தழைக்க நடத்தும் -லோகம் எல்லாம் வாழ நான் படுகிறேன் என்றபடி-சரித்தவர் -இறைவனால் புண்ணிய பாபங்களை போக்கப் பட்டவர்-ப்ரிய ஹித பரன் தான் –பிரிய பரன் தான் -சம்ஸ்லேஷம் நடத்திக் காட்டி -என்றும் –-ஹித பரன் தான் என்றும்-விஸ்லேஷம் நடத்திக் காட்டி ஆழ்வாரது சம்ஸ்லேஷமும் விஸ்லேஷமும் புண்ய பாப பலனால் இல்லை -அவனது க்ருத்யம் என்றவாறு )-அதாவது
புண்ணியம் பாபம் புணர்ச்சி பிரிவு என்று இவையாய் –6-3-4- என்கிறபடி நாட்டார்க்கு புண்ணிய பாப பலமாய் கொண்டு வருகிற சம்ஸ்லேஷ விஸ்லேஷங்களை-அவை சரித்தவர்க்கு –அதாவது – சார்ந்த இரு வல் வினைகளையும் சரித்து -1-5-10–என்று-தில தைலவத் தாரு வஹ்னி வத் -கத்யத்ரயம் -என்கிறபடி ஆத்மாவோடு பிரிக்க ஒண்ணாத படி பொருந்திக் கிடக்கிற புண்ய பாப ரூபமான பிரபல
கர்மங்களை விரகர் நெடும் சுவர் தள்ளுவாரைப் போலே ,தான் போக்குகையாலே அவை இரண்டும் அற்று இருக்கும் இவர்க்கு ,-( கர்மங்கள் இல்லாமலே லீலா விபூதியில் இருப்பது ஈஸ்வர இச்சையால் அன்றோ )பிரியா பரன் ஹித பரன் தான்-அதாவது-ப்ரிய பரனும் ,ஹித பரனுமான ஈஸ்வரன் தான் ஞான பக்திகளை வளர்க்கையில் நினைவாலே —( நிரங்குச ஸ்வ தந்த்ரன் அன்றோ நியமன சாமர்த்யத்துக்காக ஈஸ்வர சப்தம் இங்கு ) துளக்கமற -அதாவது-துளக்கம் அற்று அமுதமாய் எங்கும் பக்க நோக்கு அறியான் என் பைம் தாமரை கண்ணன் -2-6-2–என்று விபூதி ரஷணத்தைப் பற்ற வரும் அந்ய பரதை கலசாத படி அத்தை ( கடாக்ஷத்தை-)ஒருங்க விட்டுக் கொண்டு வந்து , இனி போராதபடி என்னுளே புகுந்து அத்தாலே -விகஸித சஹஜ சார்வஜ்ஞனுமாய் – (இதுக்கு முன்பு ஆழ்வாரை பெறாமல் மழுங்கிய -சகஜம் இல்லாமல் -சர்வஞ்ஞனாய் இல்லாமல் ) அபி ஷிஷ்ய ச லங்காயாம் ராக்ஷஸேந்திரம் விபீஷணம் க்ருதக்ருத்தயஸ் ததா ராமோ விஜ்வர பிரமுமோத ஹா -கிஷ்கிந்தா –1-85—என்கிற படி – உள் நடுக்கமும் தீர்ந்து ,எனக்கு நிரதிசய போக்யனுமாய் , நாய்ச்சிமாரையும் புரிந்து பாராமல் ,என்னையே பார்த்து கொண்டு இதனாலே திரு கண்களும் செவ்வி பெற்று , (முன்பு வெறும் கண்ணனாக இப்பொழுது தானே பைம் தாமரைக் கண்ணன் ) இப்படி என்னுடன் கலந்து இருந்தான் என்று ,இவர் ப்ரீதராம் படியாகவும் ,-எங்கும் தழைக்க நடத்தும்–அதாவது –தழை நல்ல வின்பம் தலைப் பெய்து எங்கும் தழைக்க –9-5-10–என்று விஸ்லேஷ வ்யசனத்தாலே நான் முடியா நின்றேன் ..
இனி என் துக்கம் காணாமையாலே ,லோகம் எல்லாம் விஸ்தீரணமாய் ,நன்றான சுகத்தை பெற்று -சம்ருத்தமாகக் கடவது என்னும் படி அதி மாத்ர துக்க நிமக்னராம் படியாகவும் ,நடத்திக் கொண்டு போரும் என்ற படி-

(புண்ணியம்‌ பாவம்‌ புணர்ச்சி பிரிவை) “புண்ணியம்‌ பாவம்‌ புணர்ச்சி பிரிவென்றிவையாய்‌”’ (திருவா. 6 – 3 – 4) என்று நாட்டார்க்கு புண்ய பாப பலமாய்க் கொண்டு வருகிற ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களை, (அவை சரித்தவர்க்கு ) சார்ந்த இரு வல்வினைகளும்‌ சரித்து மாயப்‌ பற்றறுத்து”‘ (திருவா. 1 – 5 – 10) என்று ஆத்மாவோடே பிரிக்க வொண்ணாதபடி சேர்ந்திருக்கிற புண்ய பாப ரூபமான ப்ரபல கர்மங்களை விரகர்‌ நெடுஞ்சுவர்‌ தள்ளுமாப்‌ போலே ஒருகாலே வாஸனையோடே போம்படி ஈஸ்வரன்‌ போக்குகையாலே அவை இல்லாத இவர்க்கு, (ப்ரிய ஹித பரன் தான்‌ துளக்கற எங்கும்‌ தழைக்க நடத்தும்‌) ப்ரிய பரனாய்க் கொண்டு ஜ்ஞாநத்தை வர்த்திப்பித்தும்‌ ஹித பரனாய்க் கொண்டு பக்தியை வர்த்திப்பித்தும்‌ போருகிற ஈஸ்வரன் தானே.[சிக்கென இத்யாதி,]துளக்கற்றமுதமாய்க் கொண்டு “எங்கும்‌ பக்க நோக்கறியான்‌”” (திருவா, 2 – 6 – 2) என்று விபூதி வ்யாபாரத்தை ஒருங்க விட்டுக் கொண்டு வந்து என்‌னுள்ளே சிக்கெனப்‌ புகுந்து அத்தாலே விகஸித ஸஹஜ ஸார்வஜ்ஞ்யனுமாய்‌, “விஜ்வர?? (ரா. பா. 1 -85) என்கிறபடியே உள் நடுக்கம்‌ தீர்ந்து நிரதிஸய போக்‌யனுமாய்‌ நாச்சிமாரையும்‌ புரிந்து பராமல்‌ என்னளவிலே நிரந்தரமாக கடாக்ஷிக்கையாலே திருக் கண்களும்‌ செவ்வி பெற்று இப்படி என்னுள்ளே இருந்தான்‌ என்றும்‌, *‘தழை நல்ல இன்பம்‌ தலைப்பெய்தெங்கும்‌ தழைக்கவே” (திருவா. 9 – 5 – 10) என்று ‘விஸ்லேஷ வ்யஸநத்தாலே நான்‌ முடியா நின்றேன்‌, என்னுடைய க்லேஸம்‌ கண்டு ஜகத்து கலேஸிக்க வேண்டாவே” என்றும்‌, தீப்பாய்வார்‌ “நாடு வாழ, நகரி வாழ ‘ என்று வாழ்த்துமாப் போலே “ஜகத்தெங்கும்‌ ஆநந்தமானது அபிவ்ருத்‌தமாயிருக்க‘ என்று தாம்‌ முடிகையிலே வ்யவஸிதராயும்‌ இப்படித்‌ தாமே பேசும்படி நடத்திக் கொண்டு போரும்‌ என்கிறார்‌.

புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்று இவையாய்
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய்
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
கண்ணன் இன்னருளே கண்டு கொண்மின்கள் கைதவமே.–6-3-4-ஸூ க துக்க ஹேதுவான புண்ய பாபங்களும் -தத் பல பூதமான அபிமத சம்ச்லேஷ விஸ்லேஷங்களும்–எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய்-அநு கூல விஷயமான எண்ணமும் -பிரதி கூல விஷயமான விஸ்ம்ருதியும் -ஸத்பாவ அஸத் பாவங்களுமாய் –அல்லனாய்-புண்ய பாவங்களை அனுபவியா நிற்க செய்தே தான் அகர்ம வஸ்யனாய்-

சார்ந்த விரு வல்வினைகளும் சரிந்து மாயப் பற்று அறுத்து
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்

ஆர்ந்த ஞானச் சுடராகி யகலம் கீழ் மேல் அளவிறந்து
நேர்ந்த யுருவாய் யருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே –1-5-10-இவ்வாத்மாவுக்கு ஸ்வரூப அனுபந்தியோ என்னலாம் படி பொருந்தி இருக்கை-விரு வல்வினைகளும் சரிந்து
இருவகைப்பட்ட புண்ய பாப ரூபமான கர்மங்களை விரகர் நெடும் சுவர் தள்ளுமா போலே அநாயாசேன போக்கி-வல்வினை-சர்வ சக்தியானவனும் அனுசந்தித்தால் நெஞ்சு உளுக்க வேண்டும்படி இருக்கை
சார்ந்த-எள்ளும் எண்ணெயும் போலே சேர்ந்து இருக்கை-மாயப் பற்று அறுத்து விஷயங்களில் ருசி வாசனைகளைப் போக்கி மாயை -அஜ்ஞ்ஞானம் –அத்தாலே ருசியை நினைக்கிறது –பற்று -வாசனை
தீர்ந்து
-க்ருதக்ருத்யனாய் என்னுதல் அநந்ய பிரயோஜனனாய் என்னுதல் –-தன்பால் மனம் வைக்கத் திருத்தி-விரோதியைப் போக்கும் அளவு அன்றிக்கே மனஸ் ஸூ க்குத் தானே விஷயமாம் படி பண்ணி
வீடு திருத்துவான்-பரமபதத்தை கோடிக்கத் தொடங்குவான்-அதாகிறது -ஆழ்வார் எழுந்து அருளி இருக்கிற மகோத்சவத்தாலே ஒரு புதுமை தோற்றி இருக்கை-

சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற் பின்
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் துளக்கற்ற அமுதமாய் எங்கும்
பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே –2-6-2-
–ஆடியாடியில் ஆற்றாமையால் வந்த உள் நடுக்கம் தீர்ந்தானாய் இரா நின்றான் -விஜ்வர என்னக் கடவது இறே-அமுதமாய்-
பிரமுமோத ஹ
-என்கிறபடியே தன் உகப்பாலே எனக்கு நிரதிசய போக்யனாய் அவன் தன்னை அனுபவித்து இனியனாய் இருக்கும் இருப்பு இறே இவர்க்கு போக்யம்-எங்கும்-பக்க நோக்கு அறியான்-
பிராட்டி பின்னே வந்து அணைத்தாலும் விலங்கப் பார்க்கிறிலன் –-இங்கே ஆளவந்தாருக்கு குருகைக் காவல் அப்பன் அருளிச் செய்த வார்த்தை-என் பைந்தாமரைக் கண்ணனே–ஆடியாடியிலே ஆற்றாமையால் வந்த தாபம் தீர்ந்து திருக் கண்களும் குளிர்ந்த படி –

எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம்
பழன நல் நாரைக் குழாங்கள் காள் பயின்று என் இனி
இழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது
தழை நல்ல இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைக்கவே-9-5-10-–ஈஸ்வர விபூதி சம்ருத்தமாக வேணும் என்கிறாள் –நல்கித்தான் காத்தளிக்கும் பொழில் -இறே -தாம் தாம் முடிய நினைப்பார் நாடு வாழ்க என்பாரைப் போலே -சொல்லுகிறாள் என்று ஆளவந்தார் நிர்வாஹம் -நான் பட்ட பாடு நாடு படாது ஒழிய வேணும் -என்று எம்பெருமானார் –நான் முடிய என்னார்த்தி காணாதே லோகம் அடைய பிழைக்கும் -என்று பட்டர் –

–——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌ – 6 — ப,க்திபாதம்-8–ஜ்ஞாந ப,க்த்யதி கரணம்‌ -பகுதி-1-(97-101)-ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

July 11, 2026

(1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 284 முடிய (48)

(1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-284 (27)

6 — ப,க்திபாதம் -—97–121—-25-இதிலே 2 அதிகரணங்கள்
8–ஜ்ஞாந ப,க்த்யதி கரணம்‌ 97 –117—மொத்தம் -21 —ஸூரணைகள்
பகுதி -1-97-101-ஸூரணைகள்–பகுதி -2–102–117-ஸூரணைகள்-
9-ஜ்ஞாந ப,க்த் யவஸ்தா ஸூக்தி அதிகரணம் –118-121—மொத்தம் –3 —ஸூரனைகள் –

தன்னாக்குகை யாவது என் என்ன அருளி செய்கிறார்-

அதாவது மயர்வற மதி நலம் அருளுகை—சூரணை -97-

அது என்றது -தன்னாக்க – என்றதை பராமர்சிக்கிறது .. மயர்வற மதி நலம் அருளுகை -ஆவது அஞ்ஞானம் ச வாசனமாக போக்கி பக்தி ரூபாபன்ன ஞானம் கொடுக்கை – ( ஸ்வரூப ஐக்கியம் இல்லை -விபு இல்லை –கீழே தனக்கு ஒத்த ஞான சக்திகளைக் கொடுத்தார் – இங்கு ஞானம் கனிந்த நலம் )

அதாவது – தன்னாக்குகையாவது என்றபடி. தன்னாக்குகையாவது – தான்‌ “*மயர்வறமதிநல மருளினன்‌” என்று தாமே அருளிச்‌ செய்யலாம்படி அஜ்ஞாநத்தை ஸவாஸநமாகப் போக்கி பக்திரூபாபந்ந ஜ்ஞாதத்தைத்‌ தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையாலே கொடுக்கை

அது தன்னை விசதமாக அருளிச் செய்கிறார் மேல்- (அது -மயர்வற மதி நலம் அருளுகையாவது )-அஜ்ஞாநத்தைப் போக்கி பக்தி ரூபாபந்ந ஜ்ஞாநத்தைக்‌ கொடுக்கையாவது – பகவஜ்‌ ஜ்ஞாந விரோதியான நாலு வகைப்பட்டிருக்கிற அஜ்ஞாநம்‌ போய்‌ ஜ்ஞாந ப்ரஸரண த்‌வாரமான மநஸ்ஸு அவித்‌யாதி களாலே திரோஹித மாகையாலே குண்டிதமாய்‌, தந் நிவ்ருத்தியிலே விகஸிதமாய்க் கொண்டு மேல் நோக்கிக்‌ கிளருகிற ஜ்ஞாநத்தை பரம பக்தி பர்யந்தமாக வளர்க்கை என்கிறார்‌.

இருள் துயக்கு மயக்கு மறப்பு என்கிற (ஞானத்தை) அனுதய சம்சய விபர்யய விஸ்ம்ருதிகள் அற்று
மலர்மிசை எழுகிற ஞானத்தை-காதல் அன்பு வேட்கை அவா என்னும் சங்க காம அனுராக ஸ்நேகாத்ய அவஸ்தா நாமங்களோடே பரம பக்தி தசை ஆக்குகை –சூரணை-98-

அதாவது–மயர்வற மதி நலம் அருளுகை ஆகிறது தான் –இருள் தருமா ஞாலம் –-இருள் தீர்ந்து இவ் வையம் மகிழ -என்று இருள் என்கிற சப்தத்தால் சொல்லப் படும் ஞான அனுதயமும் –துயக்கன் மயக்கன்–இத்யாதி ஸ்தலங்களில் துயக்கு என்கிற சப்தத்தால் சொல்லப் படும் ஸ்தானுர்வா புருஷோவா -என்கிற படியே க்ராக்ய வஸ்துவை இன்னது என்று நிச்சயிக்க மாட்டாத சம்சயமும் –மயக்கு -என்கிற சப்தத்தால் சொல்லப்படும்-ரஜ்ஜு சுக்த்யாதி விஷய சர்ப்ப ரூப்யாதி புத்தி போலே
அதஸ்மின் தத் புத்தி ஆகிற விபர்யமும்
-(கயிறை பாம்பாக / சுக்தி -முத்துச்சிப்பி – ரூப்யம் வெள்ளி )-மறுப்பும் ஞானமும் –திருவாய் -1-10-10-என்றும்-மறப்பற என்னுள் மன்னினான் -திருவாய் -1-10-10–இத்யாதிகளில் போலே-மறப்பு -என்று சொல்லப் படும் பூர்வ அனுபூத விஷயமாய் அனுபவ சம்ஸ்கார மாத்ரஜமான ஞானத்தின் உடைய அபாவம் ஆகிற விஸ்ம்ருதியும்-ஆக இந்த சதுர் வித -சங்கோச அவஸ்தையும் அற்று –

(இருள்‌ துயக்கு மயக்கு மறப்பென்கிற) ”இருளார்‌ வினை கெட”‘ (திருவிரு. 33), துயக்கின்றித் தொழுதுரைத்த’” (திருவா. 3 – 1 – 11), “மயக்குடை மாயைகள்‌” (திருவா. 1 – 3 – 10), “மறப்பற என்னுள்ளே மன்னினான்‌”” (திருவா. 1 – 10 – 10) என்கிற ஜ்ஞாநாநுதயமென்ன, ‘ஸ்தாணுர்வா புருஷோ வா’ என்று வஸ்துவை யதாவாக க்‌ரஹிக்க வொட்டாதிருக்கிற ஸம்மயமென்ன, ரஜ்ஜுவில்‌ ஸர்ப்ப புத்‌தியும்‌, ஸ்தாணுவில்‌ புருஷ புத்‌தியும் போலே வஸ்துவை விபரீதமாக க்‌ரஹிக்கை யாகிற விபர்யயமென்ன, அநுபூத விஷய ஜ்ஞாந திரோதாந ரூபமான விஸ்ம்ருதி யென்ன, இப்படிச் சொல்லுகிற அஜ்ஞாநத்தை வாஸனையோடே போக்கி.

அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும்
இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர் ஈங்கு ஓர் பெண் பால்
பொருளோ எனும் இகழ்வோ? இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ
தெருளோம் அரவணையீர் ! இவள் மாமை சிதைக்கின்றதே –33–மோஹ அந்தகார ஸஹ சரிதமான விபரீத விருத்தங்கள் போம்படி ஸங்கல்ப ரூபமான ஆஜ்ஜையை நடத்தா நிற்புதீர்

வியப்பாய வியப்பில்லா மெய்ஜ்ஞான வேதியனை
சயப்புகழார் பலர் வாழும் தடம் குருகூர் சடகோபன்
துயக்கின்று தொழுதுரைத்த வாயிரத்துள் இப்பத்தும்
உயக்கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே -3-1-11-துயக்காவது -மனம் திரிபு -சம்சய விபர்யய ரஹிதமான சம்யக் ஞானத்தால் கண்டு ப்ரீதி பிரேரிதரராய் தொழுது-அந்த ப்ரீதி வழிந்த சொல்லான ஆயிரத்திலும் இப்பத்து

துயக்கறு மதியில் நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும்
மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்
புயற்கரு நிறத்தனன் பெரு நிலம் கடந்த நல்லடிப் போது
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே —1-3-10-துயக்கறு மதியுண்டு -சம்சய விபர்யய ரஹிதமான அந்தக்கரணம்-அத்தை யுடையார் ஆகையாலே யதா ஜ்ஞானத்தை யுடைய தேவர்களை மதி கெடுக்கும் படி தெரியாத குண சேஷ்டிதங்களை யுடைய ஆச்சர்யமான அவதாரங்களுக்கு எல்லை இன்றிக்கே இருக்கை

மறப்பும் ஞானமும் நான் ஒன்றும் உணர்ந்திலன்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு
மறப்பு என்றும் ஞானம் என்றும் ஒன்றும் அறிந்திலேன் நான்
மறப்பனோ இனி யான் என் மணியையே –1-10-10—ஒரு சேதனனாய் நினைத்தேனோ மறக்கைக்கு
நினைவு நான் அடியாக வரில் அன்றோ மறுப்பும் நான் அடியாக வருவது -அசித் கல்பன்–அறிவுக்கு அடைவு இன்றிக்கே இருக்கிற என் பக்கலிலே அறிவைப் பிறப்பித்து-மறக்கக் கூடும் என்று பார்த்து
அழகிய திருக் கண்களால் குளிர நோக்கிக் கொண்டு ஒரு நாளும் மறக்க ஒண்ணாத படி என்னுள்ளே ஸ்தாவர பிரதிஷடையாய் இருந்தவனை புறம்பு ஒரு அந்நிய பரதை தோற்ற இருக்கிறிலன்-மறவாமைக்கு பரிஹாரம் அவன் கையிலே உண்டாய் இருக்க இனி மறக்க உபாயம் உண்டோ
கீழ் அநாதி காலம் நினைக்க விரகு இல்லாதாப் போலே இறே மேல் உள்ள காலம் எல்லாம் மறக்க விரகு இல்லாத படியும்

மலர்மிசை எழுகிற ஞானத்தை-அதாவது – மனனகமல மற மலர் மிசை எழு தரும் –திருவாய் -1-1-2-என்கிற படியே (மனன் அகம் மலம் கீழ் சொன்ன நாலும் ) மன பரிசுத்தியாலே விகசிதமாய் கொழுந்து விட்டு – தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -முதல் திருவந்தாதி -67–என்கிற படி
பிராப்த விஷயமான தன்னை நோக்கி கிளருகிற ஞானத்தை –காதல் என்னும் சங்கத்தை -(சினேகா அங்குரம் -தொடக்க நிலை அங்குரார்ப்பணம்– முளை ) அதாவது – உளப் பெறும் காதல் –திருவிருத்தம் -59- நேரிய காதல்-திருவாசிரியம் -2- காணக் கழி காதல் –இரண்டாம் திருவந்தாதி -56–கழிய மிக்கதோர் காதல் –திருவாய் -5-5-10–காதல் கடல் புரைய –திருவாய் -5-3-4- காதல் கடலினும் மிக்க பெரியதால் –திருவாய் -7-3-6- காதல் உரைக்கில்–நீள் விசும்பும் கழிய பெரிதால்-திருவாய் -7-3-8– மெய்யமர் காதல் –திருவாய் -6-8-2–என்றும்- (காதல் என்ற சொல்லால் சொல்லப்படும் -ஒரு பொருளைப் பார்க்கும் இடத்தில் முதல் முதலில் மனதில் தோன்றும் ஸ்நேஹத்தின் முளையாய் இருக்கும் சங்கமும் )

(மலர்மிசை எழுகிற ஜ்ஞாநத்தை) “’மனனகமலமற மலர்மிசை எழுதரும்‌” (திருவா, 1 1 – 2) என்று ஜ்ஞாந ப்ரஸரண த்‌வாரமான மநஸ்ஸைப்‌ பற்றிக்‌ கிடக்கிற “’காம ச க்ரோதஸ் ச லோப,ய்ச ஹர்ஷோ மாநோ மதோ க்‌ரூணா । விஷாதஸ்சாஷ்டம? ப்ரோக்த இத்யேதே மநஸோ மலா?” என்று சொல்லப்படுகிற காம க்ரோதாதி ரூபமாய்‌ அஷ்டவிதமான மல நிவ்ருத்தியாலே விகஸிதமாய்க்கொண்டு மேல் நோக்கிக்‌ கிளருகிற ஜ்ஞாநத்தை. (காதல்‌ அன்பு வேட்கை அவா என்னும்‌) ““நொந்தாராக் காதல்‌’” (திருவா. 2 – 1 – 9) என்றும்‌, ‘“ஆரா வன்பு”’ (திருவா. 6 – 10- 2) என்றும்‌, “பெருகு மால் வேட்கை” (திருவா. 9 – 6 – 1) என்றும்‌, “அதனில்‌ பெரிய என்னவா?” (திருவா. 10 – 10 – 10) என்றும்‌ சொல்லப்படுகிற – வஸ்து தர்ஸநத்திலே ப்ரதம பாவியாய்‌, ஸ்நேஹாங்குரரூபமான ஸங்கமென்ன,

அன்பு என்னும் காமம் –அதாவது –அன்பு சூட்டிய –திருவிருத்தம் -2- அன்பில் இன்பு –திருவாசிரியம்-2-
அன்பே பெருகும் மிக –பெரிய திருவந்தாதி -8–என்றும்-ஆரா அன்பு –திருவாய் மொழி -என்றும்
அன்பு என்று சொல்லப்படும் –சங்காத் சஞ்சாயதே காம -ஸ்ரீ கீதை -2-62–என்றபடி (சங்கத்தின் பின் தோன்றும் பார்க்கப்பட்ட பொருளை அனுபவித்தால் அல்லது நிற்க ஒண்ணாதபடி
இருக்கும் முதிர்ந்த நிலையான காமம் )-வேட்கை என்னும் அநு ராகம்-அதாவது-வேவாரா வேட்கை நோய் –திருவாய் -2-1-10- பெருகுமால் வேட்கையும் –திருவாய் -9-6-1- ஆவியின் பரமல்ல வேட்கை–திருவாய் -10 -3 -2— -என்றும் (வேட்கை என்று சொல்லப்படும் -காமத்தின் காரியமாய் -அனுபவிக்கப்படுகின்ற பொருளின் மேல் ஆசையானது இடைவீடு இன்றியே இருக்கும் அநு ராகமும் -)அவா என்னும் ஸ்நேஹம்- அதாவது – அவா வொருக்கா வினையோடும் –திருவிருத்தம் -64–காண்பான் அவாவுவன் –திருவிருத்தம் -84–சூடுதற்கு அவா –திருவாசிரியம் -2-
அதனில் பெரிய என் அவா-திருவாய் -10-10-10- -என்றும் இப்படி பல இடங்களிலும் –காதல்-அன்பு- வேட்கை- அவா –என்று சொல்லப் படுகிற விஷய தர்சனத்தில் – (அப்பொருளை மேலும் மேலும் அனுபவிக்குமது ஒழிய விட்டுப் பிடிக்கப் பற்றாதபடி அந்த அநுராகத்தின் பின் விளையும் ஸ்நேஹமும் )

மனனக மலமற மலர் மிசை எழு தரும்
மனன் உணரளவிலன் பொறியுணர் யவையிலன்
இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும்
இனன் இலன் எனன் உயிர் மிகு நரையிலனே –1-1-2–மலமற-யோக அப்யாசத்தாலே மனசில் உண்டான அவித்யாதி தோஷங்கள் கழியக் கழிய –அவை யாவன –காம க்ரோதச்ச லோபச்ச ஹர்ஷ மாநமதா குணா விஷாதச்சாஷ்டம ப்ரோக்த இத்யேத மனசா மலா-ஆத்ம ஸ்வரூபமும் நித்தியமாய் ஞானமும் நித்யம் ஆகையால் (உயிர்களும் அழிவற்றவை; ஞானமும் அழிவற்றது; ஆகையால்,) இத் தோஷம் ஸ்வரூப கதமுமல்ல -ஞான கதமும் அல்ல – ஆத்மாவினுடைய தர்மபூத ஞானத்துக்கு (தோற்றம் மறைவுகளை வழங்குவது-)உதய அஸ்தமய வியவஹாரம் பண்ணுகிறது-ஞானம் ப்ரஸ்ருதி த்வாரத்தைப் பற்ற வாயிற்று – ஆக,ப்ரஸ்ருதி த்வாரமான மனத்தினைப் பற்றிக் கிடக்கின்ற தோஷமானது –

அளப்பரும் தன்மைய ஊழி யங்கங்குல் அந் தண் அம் துழாய்க்கு
உளப் பெரும் காதலின் நீளிய வாயுள ஓங்கு முந்நீர்
வளப் பெரு நாடன்   மது சூதன் என்னும் வல்வினையேன்
தளப் பெரு நீள் முறுவல் செய்ய வாய தட முலையே -59–அழகிய குளிர்ந்த திருத் துழாய்க்கு என்னுள்ளத்திலே வளருகிற காதல் போலே நீளிய வாயுள்ளன–காதலுக்கு முடிவு காணாதவோ பாதி கங்குலுக்கும் முடிவு காண ஒண்ணாது என்கை (கங்குலும் காதலும் முடிவு காண ஓண்ணாமை -) அதனில் பெரிய என் அவா -10-10-10-பெரியத்தில் பெரியது என்னும் அத்தனை பகவத் தத்துவத்தையும் விளாக்குலை கொண்டது இறே இவ்வவா பகவத் ஆனந்தத்தைப் பரிச்சேதிக்கப் பார்த்து அவை பட்டது படும் அத்தனை யாயிற்று-

உலகு படைத்து உண்ட எந்தை அறை கழல் சுடர் பூம் தாமரை சூடுதற்கு அவாவு ஆர்
உயிர் உருகி யுக்க நேரிய காதல் அன்பில் இன்பீன் தேறல் அமுத
வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு ஒரு பொருள்க்கு அசைவோர் அசைக திரு வோடு மருவிய
இயற்க்கை மாயாப் பெரு விறல் உலகம் மூன்றினோடு நல் வீடு பெறினும்
கொள்வது எண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே ?-2––அத்தலையில் வை லக்ஷண்யத்தை அனுசந்தித்தவாறே அச்சேத்யமான ஆத்ம வஸ்து த்ரவ்ய த்ரவ்யமாய் ஓர் அவயவி யாக்கிக் காண ஒண்ணாத படி மங்கிற்று ஆயிற்று –பக்தி பரவசரான படியை அருளிச் செய்கிறார்–நேரிய காதல்
அந்த அவாவானது விலக்ஷணமான தொரு சங்கத்தையும் பிறப்பித்தது–அன்பில் இன்பு-த்யாயதோ விஷயாந் பும்ஸஸ் சங்கஸ் தேஷுப ஜாயதே சங்காத் சஞ்ஜாயதே காம -காமாத் க்ரோதோ அபி ஜாயதே –ஸ்ரீ கீதை -2-62- (விஷயங்களை இடைவிடாமல் எண்ணும் மனிதனுக்கு அவற்றில் அதிகமான சேர்க்கை –சங்கம் -உண்டாகிறது அந்த சங்கத்தினால் காமம் உண்டாகிறது காமத்தினால் கோபம் ஏற்படுகிறது) என்கிறபடியே அந்த சங்கம் தான் ஓர் அன்பைப் பிறப்பித்தது

காணக் கழி காதல் கை மிக்குக் காட்டினால்
நாணப் படும் என்றால் நாணுமே –பேணிக்
கருமாலைப் பொன் மேனி காட்டா முன் காட்டும்
திருமாலை நாங்கள் திரு —56—சர்வேஸ்வரனை காண மிகா நின்ற காதல் விஞ்சிக் காட்டினால்
நீ சேஷி நான் சேஷபூதன் என்னும் முறையிலே நிற்கப் போமோ – கண்டால் அல்லது கழியாதே காதல் என்றுமாம் – ஸாபராதன் என்று மீளவும் போகாது

நொந்தாராக் காதல் நோய் மெல்லாவி உள்ளளுலர்த்த
நந்தா விளக்கமே நீயும் அளியத்தாய்
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் எம்பெருமான்
அந்தாமத் தண் துழாய் ஆசையால் வேவாயே –2-1-9—இடைவிடாதே உருவ நலிகிற பிரேம வியாதி
பிரேம வியாதிக்கு உள்ளது ஓன்று இறே இது-மெல்லாவி –
விளக்கின் பிரக்ருதியின் மார்த்வம் போலே இருக்கும் ஆத்மாவும் என்று இருக்கிறாள்-அதாகிறது -பகவத் குண அனுசந்தானத்தாலே நைந்து இருக்கை-உள்ளளுலர்த்த- தோல் புரை அன்றிக்கே -உள்ளே குருத்து வற்றாக வற்றுவிக்க

கழிய மிக்கதோர் காதலள் இவள் என்று அன்னை காணக்கொடாள்
வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
குழுமித் தேவர் குழாங்கள் கைத்தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே
எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே.–5-5-10—அலைவு அற விஞ்சின காதல் என்னுதல் –நாள் கழிய கழிய விஞ்சின காதல் என்னுதல் -சோகச்சகில காலேந கச்ச தாஹ்யபக்கச்சதி -மம்ஸாபச்யதிச் காந்தா மஹான் யஹனி வர்த்ததே –

ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னை சொல் நீர்படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ! கடியனே?–5-3-4—பேரமர் காதல்- ஊரார் பழியும் -தாயார் ஹித வசனமும் -கேளாத படியான காதல் -அமர்ந்த காதல் -தர்ம அனுபந்தியான காதல் -பெரிதான அமரை விளைத்த காதல் -உஊராரை பூசல் ஆக்கின காதல் என்னவுமாம் –-ஈரம் -சங்கம் -காதல் -காமம் –சங்காத் சஞ்சாயதே காமகடல் புரைய விளைவித்த-அப்ரமேயோ மஹா த-என்ற கடல்தி ஒப்பாம் அத்தனை -கிடையா விடினும் விட மாட்டாத காதல் என்கை-கடல் புரைய என்றார் முதல் -அநந்தரம் கடலின் மிகப் பெரிதால் என்றார் –பின்னை மண்டிணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -என்றார் -முடிவில் அதனில் பெரிய என் அவா -என்றார் –இது இறே காதல் பெருகின படி -இது இறே பொய் நின்ற ஞானத்திற்கு பின்பு இவ்வளவும் வர விளைத்துக் கொண்ட கார்யம்

காலம் பெற என்னைக் காட்டுமின்கள் காதல் கடலின் மிகப் பெரிதால்
நீல முகில் வண்ணத்து எம்பெருமான் நிற்கு முன்னே வந்தென் கைக்கும் எய்தான்
ஞாலத்தவன் வந்து வீற்றிருந்த நான் மறை யாளரும் வேள்வி ஓவாக்
கோலச் செந்நெற்கள் கவரி வீசும் கூடு புனல் திருப் பேரெயிற்கே.–7-3-6—காதல் கடல் புரைய விளைவித்த என்ற அளவு அன்று –மடலூரப் புக்க போது விலக்கினவர்கள் தாங்களே கொண்டு போய் காட்ட வேண்டும் தசை இறே

கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடிக் கார்க்கடல் வண்ணனோடு என் திறத்துக்
கொண்டலர் தூற்றிற்றது முதலாக் கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ!
மண் திணி ஞாலமும் ஏழ்கடலும் நீள் வீசும்புங் கழியப் பெரிதால்;

தெண் திரை சூழ்ந்தவன் வீற்றிருந்த தென் திருப் பேரெயில் சேர்வன் சென்றே.–7-3-8—யதோ வாசோ நிவர்த்தந்தே -என்கிற பகவத் ஆனந்தத்துக்கு அவதி உண்டாகிலும் இக்காதலுக்கு பாசுரம் இட்டுச் சொல்லப் போகாது -தோழீ -அவன் காதலின் பெருமை சொல்லி அது அடியாக என் காதலுக்கு கிருஷி பண்ணின நீ படும் பாடு அறிவுதியே-மண் திணி ஞாலமும் ஏழ்கடலும்-நீள் வீசும்புங் கழியப் பெரிதால்;-உரைக்கில் என்கிறது என் –காதல் கடலில் மிகப் பெரிதால் என்றில்லையோ என்ன -அது முகப்பில் வார்த்தை -பெரியத்தில் எல்லா வற்றிலும் பெரியது என்னும் இத்தனை -மண்ணாலே நெருங்கின பூமி -கடினையான பூமி என்கிறபடி -அத்தையும் சூழ்ந்த கடல் ஏழும் -அவற்றுக்கு எல்லாம் அவகாசமான ஆகாசமும் இவை இத்தனைக்கும் அவ்வருகு பட்டு இருக்கை 

மையமர் வாள்நெடுங்கண் மங்கைமார் முன்பு என்கை இருந்து
நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ?
கையமர் சக்கரத்து என் கனிவாய்ப்பெரு மானைக் கண்டு
மெய்யமர் காதல் சொல்லிக் கிளிகாள்! விரைந்தோடி வந்தே.–6-8-2—மெய்யமர் காதல் சொல்லிக்-திருமேனியில் அணைய வேண்டும்படியான காதல் -என் உடம்போடு அணைய வேண்டும் காதல் என்றுமாம் –காத்ரைச் சோகாபி கர்ச்சிதை சம்ஸ்ப்ருசெயம்-என்ன கடவது இறே –குண ஞானத்தால் தரிக்கும் அளவன்று என்று சொல்லுங்கோள் -என்று சீயர் அருளிச் செய்வர் -பிள்ளான் -தம்மை போல் பொய்யாய் நிலை நில்லாத காதல் அன்று என்று சொல்லுங்கோள் என்று பணிக்கும்

செழு நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப சேயரிக் கண்
அழுநீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ
முழுநீர்  முகில் வண்ணன் கண்ணன் விண்ணாட்டவர் மூதுவராம்
தொழுநீர் இணையடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே —-2—குண ஜிதரால் விழுவது காலில் இறே–சூட்டிய -என்பான் என் என்னில்-வாசகம் செய் மாலையே – என்னுமா போலே (சாத்தின- பாடிய- போல் இல்லாமல் சூட்டிய என்பதால் பா மாலை -அன்பு மாலை )-ஆழ்வார் அன்பு திருவடிகளுக்கு அலங்காரம் –சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில் சொல்லு சொல்லு என்று சுற்றும் இருந்து ஆர் வினவிலும் வாய் திறவாதே அந்த காலம் அடைவதன் முன்  மார்வம் என்பதோர் கோவில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி  ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார்க்கு அரவர் தண்டத்தில் உய்யலும் ஆமே – 4-5 -3-

உலகு படைத்து உண்ட எந்தை அறை கழல் சுடர் பூம் தாமரை சூடுதற்கு அவாவு ஆர் உயிர் உருகி யுக்க நேரிய காதல் அன்பில் இன்பீன் தேறல் அமுத வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு ஒரு பொருள்க்கு அசைவோர் அசைக திரு வோடு மருவிய இயற்க்கை மாயாப் பெரு விறல் உலகம் மூன்றினோடு நல் வீடு பெறினும் கொள்வது எண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே ?-2–நேரிய காதல்-அந்த அவாவானது விலக்ஷணமான தொரு சங்கத்தையும் பிறப்பித்தது–அன்பில் இன்பு –த்யாயதோ விஷயாந் பும்ஸஸ் சங்கஸ் தேஷுப ஜாயதே சங்காத் சஞ்ஜாயதே காம -காமாத் க்ரோதோ அபி ஜாயதே –ஸ்ரீ கீதை -2-62-
(விஷயங்களை இடைவிடாமல் எண்ணும் மனிதனுக்கு அவற்றில் அதிகமான சேர்க்கை -சங்கம் -உண்டாகிறது-அந்த சங்கத்தினால் காமம் உண்டாகிறது காமத்தினால் கோபம் ஏற்படுகிறது) என்கிறபடியே அந்த சங்கம் தான் ஓர் அன்பைப் பிறப்பித்தது

அருகும் சுவடும் தெரி யுணரோம் அன்பே
பெருகும் மிக இது என் பேசீர்
-பருகலாம்
பண்புடையீர் பாரளந்தீர் பாவியேம் கண் காண்பரிய
நுண்புடையீர் நும்மை நுமக்கு –8—ஆகிலும் உமக்கு (உம் விஷயத்தில் ) அன்பு மிகா நின்றது
இதுக்கு அடி சொல்லீர்-(ஆழ்வார் கேள்வி இது பெருமாள் கேள்வி அல்ல -நஞ்சீயர் தெளிவிக்கிறார் )

கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல்லசுரர் குலமெல்லாம்
சீறா எரியும் திருநேமி வலவா! தெய்வக் கோமானே!
சேறார் சுனைத்தா மரை செந்தீ மலரும் திருவேங் கடத்தானே!
ஆறா அன்பில் அடியேன்உன்னடி சேர் வண்ணம் அருளாயே.–6-10-2—சுனைகள் அறாக்கயம் ஆகிறாப் போலே யாயிற்று இவருக்கு அன்பு மாறாதே இருக்கிற படி -க்ரம பிராப்தி பற்றாத படியான ப்ரேமம் இறே-

வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்
மாவாய் பிளந்த மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே –2-1-10—ஒரு கால் வெந்து சமையக் கடவது அன்றிக்கே –அக்னி நேவாக்நி பர்வத -என்கிறபடியே வெந்த இடமே இந்தநமாக தஹியா நிற்கிற காதல்
அளவில்லாத வேட்க்கை நோய்-மெல்லாவி –பாத்தம் போராத ஆத்மாவை -அதாஹ்யமாய் இருப்பது கேவல அக்னி யாகில் இறே-யுள்ளுலர்த்த- கூடோ அக்னி ரிவ பாதபம் -கோடாரத்தில் பற்றின அக்னி போலே குருத்து வற்றாக வற்றுவிக்க-

உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி
பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
தெருவு எல்லாம் காவி கமழ் திருக் காட்கரை
மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே–9-6-1—ஆத்மாவுக்கு பொறுக்க ஒண்ணாத படி அபி நிவேசம் பெருகா நின்றது -அணு பரிமாணமாக இவ்வஸ்துவின் அளவன்றிக்கே ஆறு பெருகுமா போலே மேன்மேல் என பெருகா நின்றது –ஆலும் ஓவும் விஷாத அதிசய ஸூ சகம் —நெஞ்சம் உருகுமால் –வேட்க்கையும் பெருகுமால்-என்று தம்மால் நியமிக்க ஒண்ணாத விஷாதம் தோற்றச் சொல்லுகிறார்-

தகவிலை தகவிலை யே நீ கண்ணா தடமுலை புணர்தொறும் புணர்ச்சிக்கு ஆராச்
சுகவெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க்கச் சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே
அக உயிர் அகம் அகம் தோறும் உள் புக்கு ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ
மிக மிக இனி உன்னை பிரிவை ஆமால் வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே–10-3-2—ஆச்ரயத்தின் அளவன்றிக்கே அபி நிவேசம் பெருகி வாரா நின்றது –சம்ச்லேஷ ஸூ கம் புக்க இடம் எங்கும் ஆற்றாமை யாய்த்து -அணு பரிமாணமாக ஆத்மாவால் பொறுக்கும் அளவன்று ஆசை -ஸூகமும் துக்கமும் ஸ்வரூபேணா வஸ்திதியும்-என்று மூன்று –ஸ்வரூபேணா வஸ்திதியில் நிற்கிறது இல்லை –
அந்தோ -இது உனக்கு-உபதேசிக்க வேண்டுவதே —-கலவியில் இருவரும் கூடக் கலந்து பிரிவால் ஆற்றாமை உனக்கு உபதேச கம்யமாவதே-கலவிக்கு இருவராய் -நோவு ஒரு தலைக்கே யாவதே

இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகளந்த
திருத் தாளிணை நிலத் தேவர் வணங்குவர் யாமுமவா
ஒருக்கா வினையொடும்
எம்மோடும் நொந்து கனியின்மையின்
கருக்காய் கடிப்பவர் போல் திருநாமம் சொல் கற்றனமே – -64–அவா ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து –சப்தாதி விஷயங்களில் உண்டான அவாவை –பகவத் விஷயத்தில் ஒருங்க பண்ண ஒட்டாத பாபத்தோடும்- அத்தை அனுஷ்டித்த என்னோடும் கூட நொந்து – இப்படி இருப்பதொரு பாபம் உண்டாவதே – இத்தை அனுஷ்டிக்கைக்கு-நான் ஒருவன் உண்டாவதே -என்று நொந்து

தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழு வினுள்ளும்
ஐய நல்லார்கள் குழிய விழவினும் அங்கங்கெல்லாம்
கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பானவாவுவன் நான்
மைய வண்ணா மணியே முத்தமே என் தன் மாணிக்கமே – -84—அவாவுவன் நான் –ஆசைக்கு கண் உண்டோ -(யுக்த அயுக்த விவேக ஞானம் இருக்காதே ஆசைக்கு ) காண வேணும் -என்று ஆசைப்படும் இத்தனை போக்கி – காண அரிது -என்று அறிய மாட்டேன் –காண அரிதாகில் காண வேணும் என்று ஆசையைப் பிறப்பித்து உம்மை சிஷித்து விட்டாரா என்ன –மைய வண்ணா -இத்யாதி – விஷய தோஷம் இறே இதுக்கு அடி என்கிறார் –நல் சரக்கை இழந்து ஆறி இருப்பார்களோ –

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10--–தத்வ த்ரயத்தையும் விளாக் குலை கொண்டு அது குளப்படி யாம்படி பெரிதான என்னுடைய அபி நிவேசத்தை -அதிலும் பெரிய உன்னுடைய அபி நிவேசத்தைக் காட்டி வந்து சம்ச்லேஷித்தாயே -என்னுடைய கூப்பீடும் ஒருபடி போம்படி பண்ணுவதே –அங்கே பரதம் ஆரோப்ய முதித பரிஷஸ்வஜே -என்று மீண்டு புகுந்து ஸ்ரீ பரத ஆழ்வானை மடியிலே வைத்து உச்சி மோந்து உகந்தால் போலே யாய்த்து இவருடைய விடாயும் கெடும்படி வந்து கலந்தது–

அவஸ்தா நாமங்களோடே பரம பக்தி தசை ஆக்குகை – அதாவது – பிரதமபாவியாய்–ஸ்நேக அங்குரமான –சங்கமும் – சங்காத் சஞ்சாயாத காம -என்கிற படியே தத் அனந்தர ஜாதமாய்-அவ் விஷயத்தை அனுபவித்து அல்லாது நிற்க ஒண்ணாதபடி இருக்கும் தத் விபாக தசையான காமமும்
தத் கார்யமாய் -அனுபாவ்ய விஷய ராக அவிச்சேத ரூபமான அனுராகமும் – தத் அநந்தரம் அவ் விஷயத்தை உத்தரோத்தரம் அனுபவிக்கும் அது ஒழிய விட்டுப் பிடிக்க பற்றாத படி விளையும் ஸ்நேஹமும் , முதலான அவஸ்தைகளுக்கு -அனுரூபமான நாமங்களை உடைத்தாய்க் கொண்டு
பரம பக்தி தசா பர்யந்தம் ஆகும் படி பண்ணுகை என்கை —காதல் அன்பு வேட்கை அவா -என்னும் இவை-சங்காத் உத்தர உத்தர அவஸ்தைகளுக்கு –வாசகமாய் இருக்க –முன் பின் கலந்து வந்ததே ஆகிலும் எல்லா அவஸ்தைகளும் இவருக்கு எப் பொழுதும் பிரகாசித்து இருக்கையாலே –
அப்போதைக்கு அப்போது தம் ஆற்றாமைக்கு ஈடாக பேசுகிறது ஆகையாலே விரோதம் இல்லை —ஆக இத்தால் சொல்லிற்று ஆய்த்து –மயர்வற மதி நலம் அருளுகை ஆவது – அஞ்ஞான அபிதையாக சாஸ்திர சித்தமான அனுதயாதி சதுர் வித சங்கோச அவஸ்தையும் அற்று – விகசிதமாய் கொழுந்து விட்டு -விஷய உன்முகமாக கிளருகிற ஞானத்தை – ஸ்நேக பிரதம அங்குரமான சங்கம் முதலான உத்தர உத்தர விபாக ரூப அவஸ்தைகளுக்கு அனுரூபமான காதல் இத்யாதி நாமங்களைப் பஜித்து ,
பிரேம சீமா பூமியான பரம பக்தி தசா பன்னமாகும் படி பண்ணுகை என்றது ஆய்த்து
—ஆக கீழ்-
அத்ரி ஜமதக்னி -சூரணை -92 – இத்யாதி வாக்யத்தில் சொன்ன சங்கைக்கு மூலம்-இவர் பிரபாவம் என்றும்- அது தனக்கு ஹேது -பகவத் நிர்ஹேதுக கடாஷம் என்றும் கடாஷத்தினுடைய சக்தியும்
இவரை இப்படி கடாஷித்தது லோக ஹித அர்த்தமாக என்றும் – கடாஷிக்கை யாவது மயர்வற மதி நலம் அருளுகை என்றும் – அது தன்னின் பிரகாரமும் சொல்லப் பட்டது .

“ஸங்காத் ஸஞ்ஜாயதே காம?” (கீதை 2 – 62) என்கிற அதினுடைய பரிபாகமான காமமென்ன; அதினுடைய அவிச்சேத,ரூபமான அநுராகமென்ன, அநந்தரம்‌ அவ் வஸ்துவை அநுபவித்தல்லது நிற்க வொண்ணாத அபி நிவேஸ ரூபமான ஸ்நேஹமென்ன, இவை தொடக்கமான இப்படி அவஸ்தராநுரூுபமான நாமங்களை உடைத்தாய்க் கொண்டு பரம பக்தி பர்யந்தமாக அபி,வ்ருத்‌தமாம்படி பண்ணுகை என்கிறார்‌. ஆக- இதுக்குக்‌ கீழ்‌, பகவத் கடாக்ஷமடியாக இவருக்கு அஜ்ஞாந நிவ்ருத்தி பூர்வகமாய்க்‌ கொண்டு உண்டான பக்தி ரூபாபந்ந ஜ்ஞாநம்‌ பரமபக்தி பர்யந்தமாக அபி வ்ருத்‌தமான படி சொல்லிற்று

இனி மேல் இவருடைய இந்த பக்தி தான் கர்ம ஞான சாத்யையாய் – பகவத் பிராப்தி சாதன பூதையாய் இருக்கும் உபாசகர் பக்தியிலும் – பிரபன்னர் பகவான் பக்கல் அர்த்தித்து பெறும் கைங்கர்ய உபகரண பக்தியிலும் வ்யாவிருத்தை என்னும் இடம் அறிவிக்கைக்காக – பிரதமம் சாதன பக்தி வேஷத்தை தர்சிப்பிகிறார் இதில் –இனிமேல்‌ இவருடைய இந்த பக்தி கர்ம ஜ்ஞாந ஸாத்‌யையாய்‌, உபாஸந ரூபையான ஸாதந பக்தியோ? அன்றிக்கே ஸித்‌த,ஸாதந பரிக்‌ரஹம் பண்ணினவர்கள்‌ கைங்கர்‌யோப கரணமாக அபேஷித்துப் பெற்ற பக்தியோ? என்னில்‌; உபயமுமன்று, ஸஹஜையாய்‌, ஸத்தா ப்ரயுக்தையான வ்ருத்த்யுபகரண பக்தி என்கிறார்-(அதில்-ஜந்மாந்தர ஸஹ்ஸ்ர நற்றவங்களாலே) என்கிற சூர்ணையாலே உபாஸந ரூபையான பக்தி வுடைய வேஷத்தை அருளிச் செய்கிறார்‌.

1-ஜென்மாந்தர சஹஸ்ர நல் தவங்களாலே க்யாத குலங்களிலே பிறந்து
2-எழுதி வாசித்து தத்வஜ்ஞராய்
3-குளித்து ஓதி உரு எண்ணும் அந்தி ஐ வேள்வி அறு தொழில்களால் மிக்கு
4-ஊன் வாடப் பொருப்பிடைத் தான் வருந்தி
5-துன்ப வினைகளை விடுத்து
6-விவேக சமாதிகள் வளர
7-எட்டு நீக்கி
8-எட்டும் இட்டு
9-எட்டினாய பேதப் பூவில் சாந்தோடு
10-தேவ கார்யம் செய்து
11-உள்ளம் தூயராய்
12-வாரி புன் புல வகத்தினுள் இளைப்பினை அடையவே விளக்கினைக் கண்டு
13-யோக நீதி நண்ணி அறம் திகழும் மறையோர் மனம் தன்னுள் அமர்ந்து உறையும் அரும் பெறும் சுடரை கண்கள் சிவந்ததிற்படியே மனவுட்கொண்டு
14-நிரந்தரம் மறவாமை தொடக்கறா ஸ்ம்ருதியாய் கனவில் மிக்க தர்சன சமமாய் ஆகத்து புல்கு மத்யர்த்த பிரியமாய் வைகும் சிறப்பு விட்டு குற்றேவல் என்னாத அநந்ய பிரயோஜனமாய்
வேதன உபாசன சேவாத்யானாதிகள் என்று சொல்லும் அது சாத்திய சாதன பக்தி யாக சாஸ்திர சித்தம்-சூரணை -99-

(க்யாத குலங்களில் -புகழ் நிறைந்த மேல் குலங்களில் –விளக்கினை -இங்கு ஆத்மாவை –அரும் பெரும் சுடர் -இங்கு பரமாத்மாவை-உள்ளம் தூயராய் –முடிய கர்மத்தைச் சொல்லி -யோக நீதி நண்ணி -முடிய ஞானத்தைச் சொல்லுகிறது)-1-ஜென்மாந்தர சஹஸ்ர நல் தவங்களாலே -அதாவது –
ஜென்மாந்தர சஹஸ்ரேஷு தபோ ஞான சமாதிபி : நராணாம் ஷீண பாபானாம் கிருஷ்ண பக்தி பிரஜாயதே –ஸ்ம்ருதி –என்றும்-ஒன்றி நின்று நல் தவம் செய்து ஊழி ஊழி தோறு எல்லாம்–திருச்சந்த –75 -என்றும் சொல்லுகிற படியே ஜென்மாந்திர சஹஸ்ரங்களிலே த்ரிவித பரித்யாக பூர்வமாக –பகவத் சமாராதன ரூபேண அனுஷ்டிதங்களான சத் கர்மங்களாலே –க்யாத குலங்களில் பிறந்து –-அதாவது
ஸூசினாம் ஸ்ரீ மதாம் கேஹே யோக ப்ரஷ்டோபி ஜாயதே-அதவா யோகிநாமேவ குலே மஹதி தீமதாம்-ஸ்ரீ கீதை -6-41– (-யோகத்தின் ஆரம்ப காலத்தில் யோகத்தில் நின்றும் நழுவினவன் பரிசுத்தர்களும் ஸ்ரீ மான்களுமானவர்களுடைய குலத்தில் பிறக்கிறான் – அன்றிக்கே யோகம் செய்கின்றவர்களும் சிறந்த ஞானிகளுமானவர்களுடைய பெரிய குலத்தில் பிறக்கிறான் ) என்றும்-ஜெனித்வாஹம் வம்சே மஹதி ஜகதி க்யாத யசசாம் சுசினாம் யுக்தாநாம் குண புருஷ தத்வ ஸ்திதி விதாம்—ஸ்தோத்ர ரத்னம் -61–
( நான் உலகில் பிரசித்தமான கீர்த்தியை யுடையவர்களும் பரிசுத்தர்களும் யோகம் செய்து கொண்டு இருப்பவர்களும் குணமயமான பிரகிருதி ஆத்மா இவற்றின் உண்மை நிலையை அறிந்தவர்களும் ஆனவர்களுடைய குலத்திலே பிறந்து ) என்றும் சொல்லுகிறபடி – தத்வ வித்துகளாய் -பரம யோகிகள் என்று ஜகத் பிரசித்தம் ஆனவர்கள் உடைய குலங்களில் பிறந்து –

(ஜந்மாந்தர ஸஹஸ்ர நற்றவங்களாலே) “’ஜந்மாந்தர ஸஹஸ்‌ரேஷு தபோ ஜ்ஞாந ஸமாதிபி,ச | நராணாம்‌ க்ஷீண பாபாதாம்‌ க்ருஷ்ணே பக்தி? ப்ரஜாயதே“‘ (லக்‌வத்ரி ஸ்ம்ருதெள) என்றும்‌, ‘“ஒன்றி நின்று நற்றவம்‌ செய்தாழியூழிதோறெலாம்‌” (திருச்ச. 75) என்றும்‌, “அநேக ஜந்ம ஸம்ஸித்‌த,?”’ (கீதை 6 – 45) என்றும்‌ சொல்லுகிறபடியே ஜந்மாந்தர ஸஹஸ்ரங்களிலே பலாபிஸந்தி ரஹிதமாய்‌, பகவத் ஸமாராதந ரூபமான ஸத் கர்மங்களாலே, (க்‌யாத குலங்களிலே பிறந்து) “*ஸூசீநாம்‌ ஸ்ரீமதாம்‌ கேஹே யோக,ப்‌ரஷ்டோ அபி,ஜாயதே” (கி,தை 6 – 41) என்றும்‌, “ஜநித்வாஹம்‌ வம்ஸே மஹதி ஜகதிக்யாத யமஸாம்‌ ஸூசீநாம்‌ யுக்தாநாம்‌ குண புருஷ தத்த்வஸ்தி,திவிதாம்‌”‘ ( ஸ்தோ, 7.61) என்றும்‌ சொல்லுகிறபடியே தத்த்வஜ்ஞாநிகளாய்‌, பரமயோகிகள்‌ என்றும்‌ ப்ரஸித்‌தரானவர் ஸ்தலங்களிலே வந்து பிறந்து.

ஒன்றி நின்று நல் தவம் செய்து ஊழி ஊழி தோறேலாம்
நின்று நின்றவன் குணங்களுள் உள்ளி உள்ளம் தூயராய்
சென்று சென்று தேவ தேவர் உம்பர் உம்பர் உம்பராய்
அன்றி எங்கள் செங்கண் மாலை யாவர் காண வல்லரே –75—சஞ்சலம் ஹி மந க்ர்ஷ்ண -என்கிறபடியே விஷயாந்தரங்களிலே மண்டி -அவற்றில் நின்றும் மீட்க அரிதான நெஞ்சை -பகவத் விஷயத்தில் உத்தேச்ய புத்தியாலே மீட்ட –அம் மனஸ்சோடே பகவத் விஷயத்தில் ஒன்றி நின்று –நல் தவம் செய்து-
தபஸ் என்று –யஜ்ஞே நதாநேந தபஸா நாஸ கேந -என்றும் – யஜ்ஞோ தாநம் தபஸ் கர்மநத்யாஜ்யம் கார்யமே வதத் -என்றும் -சொல்லுகிற கர்மங்களுக்கும் உபலஷணம் –நல் தவம் என்று – ஜீவ பர யாதாம்ய ஜ்ஞான பூர்வகமாகவும் த்ரிவித பரித்யாக பூர்வகமாகவும் – அனுஷ்டிக்கும் கர்ம யோகத்தை சொல்லுகிறது –ஊழி ஊழி தோறேலாம் – புதுப் புடைவையில் அழுக்கு கழற்றுமா போலே -அந்த கர்மத்தாலே விரோதி பாபம் போகும் இடத்தில் –ஜந்மாந்தர சஹஸ்ரேஷூ -இத்யாதி படியே கால தைர்க்யத்தை சொல்லுகிறது-நின்று நின்றவன் குணங்களுள் உள்ளி- க்ரமத்தாலே பரம பாவநனாய் இருந்துள்ளவன் குணங்களை அனுசந்தித்து -இத்தால்- விவேக விமோகாதி சாதனா சப்தங்களில் அப்யாசத்தை சொல்லுகிறது –-க்ரமத்தாலே அநவரத பாவநையும் சொல்லுகிறது –உள்ளம் தூயராய் –
உக்தமான கர்ம யோகத்தாலும் பகவத் குண அப்யாசத்தாலும் மநஸா விசுத்தேந -என்றும்-மநஸா  க்ராஹ்யா -என்றும் -சொல்லுகிறபடியே –சென்று சென்று-த்ருவாநு ஸ்ம்ர்தி -என்றும் -நிதித்யாஸிதவ்ய -என்றும் -சொல்லுகிறபடி க்ரமத்தாலே அநவரத பாவனை அளவும் சென்று –பரிசுத்த அந்த கரணராய்-சூரிகள் அளவும் செல்ல சோபன க்ரமத்தாலே -பரபக்தி பரஜ்ஞான பரம பக்தி ரூபத்தாலே
உத்க்ர்ஷ்டராய் பெறுவது ஒழிய

ப்ராப்ய புண்யக்ருதாம் லோகாநுஷித்வா ஸாஸ்வதீ​: ஸமா​:
ஸுசீநாம் ஸ்ரீமதாம் கேஹே யோகப்ரஷ்டோऽபிஜாயதே-
-6-41-யோகத்தில் தவறியவன், புண்ணியம் செய்வோரின் உலகங்களை யெய்தி, அங்கு கணக்கில்லாத வருஷங்கள் வாழ்ந்து, தூய்மையுடைய செல்வர்களின் வீட்டில் பிறக்கிறான்.

ஜநித்வா’ஹம் வம்ஶே மஹதி ஜகதி க்யாதயஶஸாம்
ஶுசீநாம் யுக்தாநாம் குணபுருஷ தத்த்வ ஸ்திதி விதாம் |
நிஸர்கா தேவ த்வச்சரண கமலைகாந்த மநஸாம்
அதோ’த: பாபாத்மா ஶரணத! நிமஜ்ஜாமி தமஸி ||–61
-புகலிடம் கொடுக்கும் ஸ்வாமியே! நான் பரிசுத்தமான, உன்னுடன் எப்பொழுதும் இருக்க விரும்புபவர்களான, சித் மற்றும் அசித் ஆகியவற்றின் ஸ்வரூபத்தையும் தன்மைகளையும் நன்கு உணர்ந்தவர்களான, உன் திருவடிகளிலேயே எப்பொழுதும் தன்கள் மனதை வைத்திருக்கும் சிறந்தவர்களான, ப்ரஸித்தமான புகழை உடைய பெரியோர்கள் அவதரித்த, உயர்ந்த வம்சத்தில் பிறந்திருந்தாலும், பாபமே வடிவெடுத்தவனாகையாலே, இந்த ப்ரக்ருதியில் ஆழமாக மூழ்கிக் கொண்டிருக்கிறேன்.

2-எழுதி வாசித்து தத்வஜ்ஞராய் –அதாவது –-தெரித்து எழுதி வாசித்து கேட்டும் -நான்முகன் -63-என்கிறபடியே பகவத் விஷயத்தை அனுசந்தித்து தத் விஷயமான சப்தங்களை லிகிப்பது வாசிப்பது பிறர் சொல்ல கேட்பதாய் கொண்டு இந்த சாஸ்திர அப்யாச முகேன பிறந்த தத்வ ஞானமுடையராய் –3-குளித்து ஓதி உரு எண்ணும் அந்தி ஐ வேள்வி அறு தொழில்களால் மிக்கு –அதாவது – குளித்து மூன்று அனலை ஓம்பும் –திருமாலை -25-என்கிறபடியே -உபாசன அங்கமான -நித்ய கர்ம அனுஷ்டான உபயுக்தமாய் இருந்துள்ள காய சுத்யர்த்தமான ஸ்நானத்தை பண்ணி –-ஓதி உரு எண்ணும் அந்தி–முதல் திருவந்தாதி -33- -என்றும் –ஐ வேள்வி —பெரிய திருமொழி -3-8-4-என்றும்-அறு தொழில் அந்தணர் –திரு எழு கூற்று இருக்கை -என்றும் -சொல்லுகிற சந்த்யாவந்தன காயத்ரி ஜபம் என்ன –
தேய யஜ்ஞம் -பித்ரு யஜ்ஞம் -பூத யஜ்ஞம் -மனுஷ்ய யஜ்ஞம் -ப்ரஹ்ம யஜ்ஞம் -ஆகிய பஞ்ச மகா யஜ்ஞங்கள் என்ன-அத்யயன –அத்யாபன -யஜன -யாஜன -தான -பிரதிக்ரகங்கள் -ஆகிய ஷட் கர்மங்கள் என்ன- இப்படி இருந்துள்ள நித்ய நைமித்திக கர்ம அனுஷ்டானங்களால் பரி பூரணராய்-

(எழுதி வாசித்து தத்த்வஜ்ஞராய்‌) “தெரித்தெழுதி வாசித்தும்‌ கேட்டும்‌”” (நான்‌.திரு. 63) என்று ஸாஸ்த்ராப்‌யாஸத்துக்கு யோக்‌யமான அக்ஷர ஸிக்ஷையென்ன, அந்த அக்ஷர ராஸி க்‌ரஹண ரூபமான வேத அப்‌யாஸமென்ன, அந்த வேதத்தினுடைய அர்த்த,விஜ்ஞாநத்துக்குறுப்பான ஸாஸ்த்ராப்‌யாஸமென்ன, உபயத்தினுடையவும்‌ அர்த்த ஸ்ரவணமென்ன; அவற்றாலே பிறந்த தத்த்வ ஜ்ஞாநத்தை யுடையராய்‌. (குளித்து) உபாஸந அங்கமான நித்யகர்மாநுஷ்டாநத்துக்கு உபயுக்தமாக காய ஸூத்‌த்‌, யர்த்த,மான ஸ்நாநத்தைப்பண்ணி. (ஓதி உருவெண்ணுமந்தி ஐவேள்வி) ஸந்த்‌யாவந்தந காயத்ரீ ஜப-பஞ்ச மஹா யஜ்ஞங்களைப்பண்ணி. (அறு தொழில்களால் மிக்கு) “அறு தொழி லந்தணர்‌” (திருவெழுகூ.)என்று யஜந-யாஜத-அத்‌யயந–அத்‌யாபந-தாந-ப்ரதிக்‌ரஹங்களென்கிற ஷட்கர்மங்களாலே பூர்ணராய்‌-

தரித்து இருந்தேனாகவே தாரா கணப் போர்
விரித்துரைத்த வென்னாகத்துன்னை-தெரித்து எழுதி
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்
பூசித்தும் போக்கினேன் போது-63-–ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவனை ஆஸ்ரித பஷபாதியான உன்னை –தெரித்து -இத்யாதி –அர்த்தத்தை நிர்ணயியா -அத்தை எழுதி வாசித்தும்-பிறர் சொல்லக் கேட்டும் திருவடிகளிலே நிர்மமனாய் வணங்கியும்-அதுவே ஸ்வ பாவமாம்படியும் தத்தத் காலங்களிலே சமாராதானம் பண்ணியும் போது போக்கினேன் தெரித்து -அனுசந்தித்து -என்றுமாம் –

குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள் அந்தண்மை தன்னை
ஒளித்திட்டேன் என் கண் இல்லை நின் கணும் பக்தனும் அல்லேன்
களிப்பது என் கொண்டு நம்பி கடல் வண்ணா கதறுகின்றேன்
அளித்து எனக்கு அருள் செய் கண்டாய் அரங்க மா நகர் உளானே –25-கர்ம ஜ்ஞானங்கள் இரண்டும் இல்லையாய் இருக்க – உபய சாத்யமான பக்தி இல்லை என்னும் இடம் சொல்ல வேணுமோ -என்னில் –
ஜன்மாந்தர சஹஸ்ரேஷூ தபோ ஜ்ஞான சமாதிபி நராணாம் ஷீண பாபாநாம் க்ர்ஷ்னே பக்தி பிரஜாயதே-என்கிறபடியே உண்டாகலாம் இறே – அதுவும் இல்லை என்கை –கதறுகின்றேன் –
அந் நிலையிலே தான் நிற்கப் பெற்றேனா –சாதன அனுஷ்டானம் பண்ணி பலம் தாழ்ந்தால் கூப்பிடுவாரைப் போலே ஸ்ரவண கடுகமாக கூப்பிடா நின்றேன் –

நகர மருள் புரிந்து நான்முகற்குப் பூ மேல்
பகர மறை பயந்த பண்பன் பெயரினையே
புந்தியால் சிந்தியா தோதி யுரு வெண்ணும்
அந்தியா லாம் பயன் அங்கு என்
–33–ஸ்வா பாவிக சம்பந்தத்தை அனுசந்தித்து அவனை உகப்பியாதே
–எம்பெருமானை அகலுகையே பலித்து விடுவது —அவன் குணங்களுக்கு வாசகமான திரு நாமம்- ஓதி இத்யாதி – அஹ்ருதயமாகப் பண்ணும் ஆயாச ரூபமான கர்மத்தைப் பற்றுவதே –

சிறையார் உவணப் புள் ஓன்று ஏறி அன்று திசை நான்கும் நான்கும் இரிய செருவில்
கறையார் நெடு வேல் அரக்கர் மடியக் கடல் சூழ் இலங்கை கடந்தான் இடந்தான்
முறையால் வளர்க்கின்ற முத்தீயர் நால் வேதர் ஐ வேள்வி யாறங்கர் ஏழின் இசையோர்
மறையோர் வணங்கப் புகழ் எய்து நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே !–3-8-4- நாலு வேதத்தை உத்தரிப்பாராய் பஞ்ச மகா யஞ்ஞாத்ய அனுஷ்டானங்களில் — சப்த ரசங்களையும் உள்ளபடியே அறிந்து இருக்கும் பிராமணர்-

முத்தீ நான்மறை ஐவகை வேள்வி அரு தொழில் அந்தணர் வணங்கும் தன்மையை-அறு தொழில் –யஜனம் -யாஜனம் -அத்யயனம் -அத்யாபனம் -தானம் -ப்ரதிக்ரஹம் -என்கிற ஷட் கர்மங்களை யுடையரான-அத்யயனம் பண்ணுகை -பண்ணுவிக்கை-யஜிக்கை -யஜிப்பிக்கை -தானம் பண்ணுகை கொள்ளுகை-என்றால் போலே சொல்லுகிற இவற்றைத் தொழிலாக யுடையரான ப்ராஹ்மாணருக்கு ஆஸ்ரயணீயனாய் இருக்கும் படி சொல்லிற்று-

4-ஊன் வாட பொருப்பிடை தாம் வருந்தி –அதாவது-ஊன் வாட உண்ணாது உயிர் காவல் இட்டு -பெரிய திருமொழி -3-2-1-என்றும்-பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து நெருப்பிடையே நிற்கவும்–மூன்றாம் திருவந்தாதி -78–என்றும்-வீழ் கனியும் ஊழ் இலையும் என்னும் இவையே நுகர்ந்து -உடலம் தாம் வருந்தி—பெரிய திருமடல் -12-என்றும்-சொல்லுகிற படி நித்ய கர்மாதிகளை அவிகலமாக அனுஷ்டிக்கையாலே தபசர்ய யோக்யதை பிறந்தவாறே -காய சோஷன அர்த்தமாக -அசநத்தை குறைத்து – பிராண தாரணத்துக்கு தக்க அளவாக்கி -உஷ்ண காலத்திலேயே பர்வதாக்ரத்திலும் –
பஞ்ச அக்னியில் மத்தியிலும் நின்றும் -சீத காலங்களில் அகாக்யமான தடாகங்களில் மூழ்கிக் கிடந்தும் –ஜீர்ண பர்ண பல அசநராயும் –இப்படி தபச் சர்யையாலே சரீரத்தை சோஷிப்பித்து ( வாடச் செய்து )–

-“ஊன்வாட உண்ணாதுயிர்காவலிட்டு”” (திருமொழி 3 – 2 – 1) என்று அவிகலமான நித்யகர்மாநுஷ்ட,ாநத்தாலே தபம்சர்யைக்கு யோக்‌,யமானவாறே தத,ர்த்த, மான காயபோஷணார்த்த_மாக நிராஹாரராய்‌, அவ்வளவிலும்‌ ப்ராணத,ரணார்த்த, மாக அப்‌, க்ஷ்ணவாயுப,க்ஷணங்களைப்பண்ணி. (பொருப்பிடைத்தாம்‌ வருந்தி) ”பொருப்பிடையே நின்றும்‌ புனல்குளித்தும்‌ ஐந்து நெருப்பிடையே நிற்க” (மூ.திருவ. 76) என்றும்‌, ‘‘வீழ்‌ கனியுமுழிலையுமென்னுமிவையே நுகர்ந்துடலம்‌ தாம்‌ வருந்தி” (பெ.திருமடல்‌) என்றும்‌ சொல்லுகிறபடியே க்‌,ரீஷ்மகாலங்களில்‌ பர்வதாக்‌,ரத்திலே நின்றும்‌, பஞ்சாக,நிமத்‌,யே நின்றும்‌, பபீதகாலங்களிலே அறாக்கயமான தடாகங்களிலே மூழுகிக்கிடந்தும்‌, ஜீர்ணபர்ணப,லாரநராயும்‌ இப்படி தபஸ்சர்யையாலே மாரீரத்தை ஸோஷிப்பித்து.

ஊன் வாட உண்ணாது உயிர் காவலிட்டு உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து
தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா தமதா இமையோர் உலகாள கிற்பீர்
கானாட மஞ்சைக் கண மாட மாடே கயலாடு கானீர்ப் பழனம் புடை போய்
தேனாட மாடக் கொடியாடு தில்லைத் திருச் சித்ர கூடம் சென்று சேர்மின்களே–3-2-1—மாம்சமானது குறைய-( இடை சிறுத்து வைராக்யம் மிக்கு ) அசன வசநாதிகளைக் குறைத்து பிராணங்களைப் போகாதபடி அப்பஷண வாயு பஷணங்களாலே கால் கட்டி சரீரத்தை விட்டுப் போகாத இந்திரியங்கள் ஐந்தும் ஸ்வ ஸ்வ விஷயங்களைப் பெறாமையாலே நொந்து ஈடுபடும் படி தாங்கள் மேன்மேலும் கிலேசிக்கும்படி தபஸு பண்ண வேண்டா

பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும்
ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா
-விருப்புடைய
வெக்காவே சேர்ந்தானை மெய்ம் மலர் தூயக் கை தொழுதால்
அக்காவே தீ வினைகள் ஆய்ந்து ——-76—பனி நாள் மலைகளில் (நின்றும் பனி நாளில் )பொய்கைளிலே புக்குக் குளித்து–கோடை நாள் பஞ்சாக்கினி மத்யஸ்தனாய் நிற்கவும் வேண்டா –(வேண்டா என்று முன்னிலையாகச் சொல்வதே போதுமே-நீர் வேண்டா என்று குறிப்பிட்டுச் சொல்வான் என்னில் நம்மைப் பெறவே அவன் கோர மா தவம் செய்கின்றான் என்பதை காட்டவே -)

தொன்னெறியை வேண்டுவார் வீழ் கனியும் ஊழிலையும் –12
என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தித்
துன்னும் இலைக் குரம்பைத் துஞ்சியும் வெஞ்சுடரோன் —-13
மன்னு மழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும்-
இன்னதோர் தன்மையராய் ஈங்குடலம் விட்டு எழுந்து —-14வீழ் கனியும் – தானே விழுந்து பசை அற்ற கனியும்-ஊழிலையும் – முளையிலே விழுந்த இலையும் – முற்றிப் பழுத்த சருகான இலையும் –என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தித்- அதாவது -சருகு இலை தின்றும்  காயும் கிழங்கும் தின்றும் இ றே தபஸ் ஸூ அனுஷ்டிப்பது-அவதாரணத்தாலே-ஒரு வ்ரத சமாப்தி பிறந்து பின்னை ஒரு வ்ரத ஆரம்பித்ததின் முன்னே யாகிலும்-ஏகவாரம் அன்னம் புஜித்ததும் இல்லை என்று தோன்றுகிறது  –
இத்தால் அநவரத காயக் கிலேசம் சொல்லுகிறது-நுகர்ந்து – அந்த சாதனத்தில் பண்ணின ஆதரம் தோற்ற போக்யதை உண்டானது போலே இருக்க புஜிககை-உடலம் தாம் வருந்தி – அபிமத விஷயத்தைக் கண்டு இங்கே அனுபவிக்கலாய் இருக்கிற சரீரத்தை கிலேசிப்பித்து-தாம் வருந்தி
இவனுடைய கர்மம் கொண்டு போய் கிலேசிப்பித்தல் தைவம் கொண்டு போய் கிலேசிப்பித்தல் செய்யும் அது ஒழிய தாமே கிலேசிப்பித்து-

5-துன்ப வினைகளை விடுத்து –அதாவது – கீழ் சொன்ன கர்ம அனுஷ்டானத்தாலே மேவு துன்ப வினைகளை விடுத்து -திருவாய் -3-2-8-என்கிற படியே-தில தைலாதிவத்-( எள்ளில் எண்ணெய் போன்று ) ஆத்மாவோடு பிரிக்க ஒண்ணாத படி பொருந்திக் கிடக்கிற துக்க ஹேதுவான பாபங்களை –தர்மேன பாப மபநுததி-தைத்ரியம் – ( நாள்தோறும் செய்யவேண்டிய கர்மங்களைச் செய்கையாலே பாவங்களை போக்குகிறான் ) -என்கிற படியே போக்கி –

(துன்ப வினைகளை விடுத்து) ““மேவுதுன்பவினைகளை விடுத்தும்‌”” (திருவா. 3 – 2 – 8) என்று கீழ்ச்சொன்ன கர்மாநுஷ்டாநத்தாலே ”திலதைலவத்‌,தாருவஹ்நிவத்‌’” (ஸர.க.த்‌,யம்‌) என்கிறபடியே ஆத்மாவோடு பிரிக்கவொண்ணாதபடி பொருந்திக் கிடக்கிற து,2க,ஹேதுவான பாபங்களை “த,ர்மேண பாபமபநுத,தி” (தை. உப.) என்கிறபடியே க்ஷயிப்பித்து.-

மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்
ஓவுதல் இன்றி யுன் கழல் வணங்கிற்றிலேன்
பாவு தொல் சீர்க் கண்ணா வென் பரஞ்சுடரே
கூவிகின்றேன் காண்பான் எங்கு எய்தக் கூவுவனே –3-2-8—இவ்வாத்மாவுக்கு நிரூபகமோ என்னும்படி பொருந்தின சாம்சாரிகமான துக்கத்தை விளைவிப்பதான தத் பிராப்தி விரோதிகளை
-தர்மேண பாபமப நுதி-என்று விகித அனுஷ்டானத்தாலே போக்கவும் மாட்டிற்று இலேன்
நிதித்யாசி திவ்ய -என்கிறபடியே அனவ்ரத பாவன ரூபமான பக்தியை பண்ணப் பெற்றிலேன் –

6-விவேக சமாதிகள் வளர –விவேகாதிகள் -சமாதிகள் -வளர –அதாவது – இப்படி பிரதிபந்தக பாப நிவ்ருத்தியாலே மனசுத்தி ஹேதுவான விவேகாதி சப்தகமும் – சம தம நியதாத்மா சர்வபூதானுகம்பீ -(சமம் தமம் இவற்றில் நியமத்துடன் கூடிய மனத்தை யுடையவன் எல்லா உயிர்கள் இடத்திலும் அருள் பொருந்தினவன் )இத்யாத் யுக்த சம தமாதிகளும் அபிவிருத்தமாக .. ( விவேகம் -விமோகம் -அப்பியாசம் -கிரியை -கல்யாணம் -அநவசாதம் -அநுத் தர்ஷம் )–இதில் விவேகமாவது –( சரீரத்தின் தூய்மை )
ஜாத்ய ஆஸ்ரய நிமித்த அதுஷ்டாத் அன்னாத் காய சுத்திர் விவேக -போதாயன விருத்தி –(சாதி – ஆஸ்ரயம் – நிமித்தம் – என்ற மூன்று குற்றங்கள் இல்லாத அன்னத்தால் காயசுத்தி-சரீரத்தின் தூய்மை – ஏற்படும் ) என்கிறபடியே – ஜாதி துஷ்டமும் -ஆஸ்ரய துஷ்டமும் நிமித்த துஷ்டமும் இன்றிக்கே இருந்துள்ள அன்னத்தால் உண்டான காய சுத்தி –ஜாதி துஷ்டங்கள் ஆனவை -களஞஜ்க்ரஞ்ச நாதிகள் ( வெங்காயம் காளான் என்கிற நாய்க்குடை போல்வன ) ..ஆஸ்ரய துஷ்டங்கள் ஆனவை -அபிசச்த பதித சண்டாளாதிகள் உடைய த்ரவ்யம் –(அபிசஸ்தன்-பிறரால் இகழப்படுபவன் -பதிதன் -தன் நிலையில் நின்றும் இழிந்தவன் -சண்டாளாதிகள் -கர்ம ஜாதி சண்டாளர்கள் )ஆஸ்ரயம் என்றது -த்ரவ்ய ஸ்வாமியான புருஷனைச் சொல்லுகிறது ..-நிமித்த துஷ்டம் ஆவது -உச்சிஷ்ட கேசாத் யுபஹதம் ஆனது (எச்சில் மயிர் கல் முதலியவற்றுடன் கூடிய பொருள் ) இந்த த்ரிவித தோஷமும் இல்லாத ஆகாரத்தின் விவேசந பலமான காய சுத்தியிலே-விவேக சப்தம் உபசாரனோக்தம்–அன்றிக்கே – விவிக்த ஆகார சேவையாலே ராஜச தாமச ஹாராப்யாயித தேஹத்தில் காட்டில் ஸ்வ தேஹத்தினுடைய விவேசனம் விவேகம் என்னவுமாம் —சுத்தி யாவது -அகத்தே பயோ விவேசனம் இறே ( அசுத்தங்கள் நின்றும் பிரித்து அறிதல் ) காய சுத்தி -என்ற இடத்தில் காய சப்தத்தால் அந்த கரணத்தை சொல்லுகிறது –
ஆகார சுத்தவ் சத்வ சுத்தி-சாந்தோக்யம் -என்று சுருதி சொல்லிற்று –சத்வமாவது அந்த கரணம் இறே —
அபயம் சத்வசம் சுத்தி -ஸ்ரீ கீதை –16-1-( சத்துவத்துக்குத் தூய்மை பயம் அற்று இருத்தல் )என்றும் –
சத்வானுரூப சர்வஸ்ய ஸ்ரத்தா பவதி -ஸ்ரீ கீதை -17-3-–(எல்லாருக்கும் ஸ்ரத்தையானது சத்வத்துக்குத் தகுதியாக உண்டாகிறது ) என்றும் சொல்லுகிற இடங்களிலும் –சத்வ சப்தம் அந்த கரணம் வாசியாக ஸ்ரீ பாஷ்ய காரர் அருளிச் செய்தார் இறே — ஆகை இறே விவேகமாவது -ஆகார சுத்தவ் சத்வ சுத்தி-என்கிற படியே அந்த கரண சுத்திக்கு அடியான அன்ன சுத்தி என்று ஸ்ரீ ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தது .விமோகமாவது -விமோக காமாநபிஷ்வங்க-போதாயன விருத்தி –என்கிற படி காமத்தில் அநபிஷ்வங்கம்..-யாதொரு விகாரத்தாலே விஷயத்தை புஜியாது நிற்க மாட்டான் -அந்த விகாரம்-அபிஷ்வங்கம் — காமத் க்ரோதோபீஜாயதே -ஸ்ரீ கீதை –2-62 –இத்யாதி வசனத்தாலே குரோத அத்யபாவமும் இவ் இடத்தில் பலிதம் –அப்யாசமாவது – ஆரம்பண சம்சீலனம் புன புன அப்யாசக-போதாயன விருத்தி – -என்கிற படி-த்யான அலம்பனமான வஸ்துவிலே பலகாலம் பரிசீலனம் பண்ணுகை –-ஆரம்பணம் என்றது -ஆலம்பனம் என்ற படி- இவ் இடத்தில் ஆலம்பனம் ஆவது-ஸூபாஸ்ரயம் –( தியானத்துக்கு உரிய பொருளை )–கிரியையாவது -பஞ்ச மகா யஜ்ஞாத்ய அனுஷ்டானம் -சக்தித க்ரியா-போதாயன விருத்தி – -என்கிறபடியே-பஞ்ச மகா யக்ஞாதி நித்ய கர்மங்களை வல்ல அளவும் அனுஷ்டிக்கை –கல்யாணமாவது -சத்யார்ஜவ தயா தான ஹிம்சாநபித்யா கல்யாண நி ”–போதாயன விருத்தி – –என்கிற படியே – சத்யம், ஆர்ஜவம் ,தயை தானம் ,அஹிம்சை, அனபித்யை – ஆகிற இவை கல்யாணம் எனப்படும் –-இதில் சத்யம் -பூத ஹிதம் ..ஆர்ஜவம்-மனோ வாக் காய ஏக ரூப்யம் . தயை-ஸ்வார்த்த நிரபேஷை–பர துக்க அசஹிஷ்ணுத்வம் –-தானம்-லோபராஹித்யம்-அஹிம்சை- கரண த்ரேயேண பர பீடா நிவ்ருத்தி அபித்யை-பர கீயே ஸ்வ புத்தி -பிறர் பொருளை தனது பொருளாகக் கருதுதல் )அன்றிக்கே நிஷ் பல சிந்தை யாதல் -பரக்ருத அபகார சிந்தை ஆதலுமாம் .-அது இல்லாமை- அநபிதியைஅனவசாதமாவது -தேச கால வைகுண்யாத் -சோக வஸ்த்வாத்ய நுசம்ருதேச்ச தஜ்ஜம் சைதன்யம் அபாஸ்வரத்வம் மனச அவஸாத-போதாயன விருத்தி -–என்கிறபடியே
தேச கால வைகுண்யத்தாலும்(குணக் கேட்டினாலும் ) சோக ஹேதுவாயும் பய ஹேதுவாயுமாய் உள்ள வஸ்துக்களில் அனுசம்ருதியால் உண்டான தைன்யமாகிற மனசினுடைய அபாஸ்ரத்வம் ,அவசாதம் ஆகையாலே ,அதனுடைய விபர்யயம்-சோக வஸ்து என்றது -சோக நிமித்த வஸ்து என்ற படி –அதாவது அதீதமான புத்ர மரண ஆதி- ஆதி சப்ததாலே -பய நிமித்தமான ஆகாமி வஸ்து விவஷிதம் – சோகம்-அதீத விஷயமாய்-பயம்-ஆகாமி விஷயமாய் இறே இருப்பது–அபாஸ்த்ரத்வம் என்கிற இது -தைன்ய சப்த விவரணம் ..தைன்யமாவது – அபீஷ்ட கார்ய பிரவர்த்ய ஷமத்வம் –பாஸ்வரத்வ விரோதி என்று தைன்ய விசேஷணம் ஆகவுமாம்– அனுத்தர்ஷம் ஆவது –தத்வி பர்யயஜா துஷ்டி ருத்தர்ஷ -என்கிற படி
தேச கால ஷாட் குண்யத்தாலும் பிரியவஸ்த்வாத்ய அனு ஸ்ம்ருதியாலும் உண்டான துஷ்டி உத்கர்ஷம் ஆகையாலே அதனுடைய விபர்யயம் –அதாவது ஹர்ஷ ஹேதுகள்–உண்டானாலும் அப்ரீதனாகது ஒழிகை- (பாஸ்வரம் -விளக்கம் -தெளிவு -அபாஸ்வரம் -தெளிவின்மை -தைன்யம் -வறுமைத் தன்மை )இனி–சமாதிகளில் – -அதாவது – சமம் ஆவது அந்த கரண நியமனம் – தமம் ஆவது பாஹ்ய கர்ண நியமனம் சமச் சித்த பிரசாந்திஸ் ஸ்யாத் தமச்சேந்திரிய நிக்ரஹ – என்னக் கடவதிறே–
ஷமா சத்யம் தமச் சம –என்கிற இடத்தில்-தமோ பாக்ய கரணானம் அநர்த்த விஷயேப்யோ நியமனம் -சம – அந்த கரணச்ய ததாவித நியமனம் –என்று இறே ஸ்ரீ பாஷ்ய காரர் அருளிச் செய்தது –-மாறி சொல்லும் இடங்களும் உண்டு ..-ஆத்ம குணங்களில் பிரதானங்கள் இறே இவை … சாந்தோ தாந்த உபரதஸ் திதிஷூ சமாஹிதோ பூத்வா ஆத்மன்யேவ ஆத்மானம் பச்யேத்–ப்ருஹதாரண்யம் -6-4-23-
( மனத்தினை அடக்கி புற இந்திரியங்களை அடக்கி காம்யகர்மங்களில் ஆசை இல்லாதவனும் பொறுமை யுள்ளவனும் சமாதானம் யுடைய மனத்தினையும் யுடையவனாகி இந்த உயிரினிடத்திலே பரம்பொருளை பார்க்கக் கடவன் )-என்கையாலே , உபாசனத்தில் இழியும் அவனுக்கு ,பிரதம அபேஷிதங்கள் இவையாக இறே சுருதியும் சொல்லிற்று ..-மற்றும் உள்ள ஆத்ம குணங்களுக்கும் எதா யோகம் அர்த்தம் கண்டு கொள்வது ..-ஆக இப்படி இருந்துள்ள விவேகாதிகளும் சமாதிகளும் மேன்மேலும் அபிவிருத்தமாய் வளர –

(விவேகமாமாதிகள்‌ வளர) இப்படி பாப விமோசநம்‌ பிறந்தவாறே மநோ நைர்மல்ய ஹேதுவான விவேக-விமோகாப்‌,யாஸ க்ரியா கல்யாணாநவஸா தநுத்‌த,ர்ஷங்களும்‌, ““ஸமதம நியதாத்மா ஸர்வ பூதாநுகம்பீ விஷய ஸுக விரக்தோ ஜ்ஞாந த்‌ருஷ்டி ப்ரபந்ந ச । அநியதநியதாந்தோ நைவ ருஷ்டோ ந ஹ்ரூஷ்டச ப்ரவஸித இவ கேஹே வர்த்ததே யஸ்ஸ முக்தச”” என்கிற ஸமாதி,களும்‌ அபி,வ்ருத்‌தமாக.-இதில்‌ விவேகமாவது – “’ஜாத்யாஸ்ரய நிமித்தாது,ஷ்டாத,ந்நாத் காயமாத்‌திர் விவேக” (போதாயந) என்கிற காய ஸூத்‌திக்கடியான அந்ந ஸூத்‌தி,.-விமோகமாவது – காமாநபி,ஷ்வங்க,ம்‌. அப்‌,யாஸமாவது -““ஆரம்பண ஸம்ஸபீலநம்‌ புந புநரப்‌யாஸ?”’ என்று த்‌,பாநாலம்பநவஸ்துவிலே பலகாலும்‌ பரிஸீலநம்‌ பண்ணுகை.  க்ரியையாவது  “பஞ்ச மஹா யஜ்ஞாத்‌,யநுஷ்டாநம்‌ ஸக்திதா க்ரியா?” என்று நித்ய கர்மங்களை வல்லவளவும்‌ அநுஷ்டிக்கை, கல்யாணமாவது – ““ஸத்யார்ஜவத யாதாநா ஹிம்ஸாநபி,த்‌,பா கல்யாணாநி” என்கிற ஸத்யார்ஜவத, யாத,நா ஹிம்ஸாதி,கள்‌. அநவஸாத,மாவது **ஸோக ஹேதுஷு மநஸ? கேத,ராஹித்யம்‌ அநதவஸாத,” என்கிறபடியே ஸோகஹேதுக்கள்‌ உண்டானாலும்‌ நெஞ்சு தளராதிருக்கை. அநுத்‌தர்ஷமாவது – ““தத்‌ விபர்யயஜா துஷ்டி: – உத்‌தர்ஷச தத்‌,விபர்யய? – அநுத்‌த.ர்ஷ?’” என்று ஹர்ஷ ஹேதுக்கள்‌ உண்டானாலும்‌ அதி ப்ரீதனாகாதொழிகை –

7-எட்டு நீக்கி-அதாவது-ஈனமாய எட்டும் நீக்கி –திருச்சந்த -114–என்று ஞான சங்கோசதயா ஆத்மாவுக்கு குறையான அவித்யாதிகள் ஐந்தும் ,( அவித்யை -செருக்கு -இராகம் -த்வேஷம் அபிநிவேசம் ) சரீர சம்பந்த பிரயுக்தமான தாப த்ரயங்களும் ஆகிற எட்டையும் போக்கி —துன்ப வினைகளை விடுத்து -அதாவது –கீழேயும் கர்ம விமோசனம் சொல்லிற்றே என்னில் – அங்கு சொல்லிற்று ஞான உத்பத்தி விரோத பிராசீன கர்ம மாதரம் ஆகையால் விரோதம் இல்லை – அன்றிக்கே ஆத்மாவுக்கு பொல்லாங்கை பண்ணுவதான-காம குரோத லோப மோஹ மத மாத்சர்ய அஞ்ஞான அசூயை ஆகிய எட்டையும் போக்கி என்னவாம்-காமம் ஆவது-அர்தித்த பதார்த்தம் அனுபவித்து அல்லாது நிற்க ஒண்ணா தசை –குரோதமாவது -அதின் கார்யமாய் அர்தித்த பதார்த்த அலாபத்தில் சந்நிஹிதர் பக்கல் பிறக்கும் சீற்றம் ..-லோபம் ஆவது –சந்நிஹிதர் பதார்த்தத்தில் அதி பிராவண்யம் ..-மோஹம் ஆவது கர்தவ்ய அகர்தவ்யங்களை விவேகிக்க மாட்டாது ஒழிகை .-மதம் ஆவது அர்தாதி லாபத்தில் வரும் களிப்பு-மாத்சர்யம் ஆவது-பர சமிர்தியை பொறாமையை அனுஷ்டான பர்யந்தமாக நடத்துகை ..
அஞ்ஞானம் ஆவது -இவற்றால் மேல் வரும் அநர்த்தம் நிரூபியாமை ..அசூயை ஆவது -குணங்களில் தோஷத்தை ஆவிஷ்கரிக்கை ..-ஏவம் பூதங்களான இவற்றைப் போக்கி என்ற படி –

(எட்டு நீக்கி) ‘ஈனமாய எட்டு நீக்கி” (திருச்ச. 114) என்கிறபடியே ஆத்மாவுக்குப்‌ பொல்லாங்கைப்‌ பண்ணக் கடவதான ‘காம-க்ரோத,- லோப, -மோஹ-மத, -மாத்ஸர்ய-அஜ்ஞாத-அஸூயைகள்‌ என்கிறவற்றை விட்டு. –

ஈனமாய எட்டும் நீக்கி ஏதமின்றி மீது போய்
வானமாள வல்லையேல் வணங்கி வாழ்த்து என்னெஞ்சமே
ஞானமாகி நாயிறாகி ஞாலம் முற்றும் ஓர் எயிற்றில்
ஏனமாய் இடந்த மூர்த்தி யெந்தை பாதம் எண்ணியே -114-சேதனர்க்கு குறையான அவித்யாதிகள் ஐந்தையும் சரீர சம்பந்த பிரயுக்தமான தாபத் த்ரயங்களையும் நீக்கி – இவை இவனுக்கு ஜ்ஞான சங்கோசம் என்கையாலே –ஈனம் -என்கிறது –

8-எட்டும் இட்டு-அதாவது –இன மலர் எட்டும் இட்டு –பெரிய திருமொழி -1-2-7-என்றும் –கந்த மா மலர் எட்டும் இட்டு –பெரிய திருமொழி -3-5-6-என்றும் -சொல்லுகிற படி ஓர் ஒரு அஷரங்கள் பரிமளோத்தரமான புஷ்பம் போலே அவனுக்கு போக்யமாம் படி இருக்கையாலே , அஷ்ட வித புஷ்பம் சமர்பிப்பாரை போலே திரு மந்த்ரத்தை அனுசந்தித்து ,-அவன் பெயர் எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே–திருச்சந்த –77 -என்றும் –ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் எட்டு எழுத்தும் வாரமாக ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே –திருச்சந்த –78-என்றும் சொல்லக் கடவதிறே
அன்றிக்கே –அஹிம்சா பிரதமம் புஷ்பம் ,புஷ்பம் இந்திரிய நிக்ரக -சர்வ பூத தயா புஷ்பம் , ஷமா புஷ்பம் விசேஷத-ஞானம் புஷ்பம் தப -புஷ்பம் த்யானம் -புஷ்பம் தவைவச சத்யம் அஷ்ட வித புஷ்பம் விஷ்ணோ பிரதீகரம் பவேத் -என்கிற படியே அஹிம்சாத் அஷ்ட வித புஷ்பங்களையும் இட்டுமாம் —கீழே விவேக சமாதிகள் என்றதில் அந்தர் பூதங்களானவை இதிலும் வந்ததாகிலும் ஈஸ்வரனுக்கு இவற்றை போக்யத்வேன அனுசந்தித்து அனுஷ்டிக்கையைச் சொல்கிறது ஆகையாலே விரோதமில்லை –ஆகையிலே இவற்றை புஷ்ப சமர்பணமாக சொல்கிறது —

(எட்டுமிட்டு) “கந்தமாமலரெட்டுமிட்டு” (திருமொழி 3 – 5.- 6), “இனமலரெட்டுமிட்டு’” (திருமொழி 1 – 2 – 7) என்கிறபடியே “அஹிம்ஸா ப்ரதமம்‌ புஷ்பம்‌ புஷ்பமிந்த்‌ரிய நிக்‌ரஹ?। ஸர்வபூததயா புஷ்பம்‌ க்ஷமா புஷ்பம்‌ விஸேஷத: । ஜஞாநம்‌ புஷ்பம்‌ தப? புஷ்பம்‌ தயாநம்‌ புஷ்பம்‌ ததைவ ச ! ஸத்யமஷ்டவிதம்‌ புஷ்பம்‌ விஷ்ணோ: ப்ரீதிகரம்‌ பவேத்‌” என்கிறபடியே அஹிம்ஸாதிகளான அஷ்டவித, புஷ்பங்களை இட்டு. இந்த அஹிம்ஸாதிகள்‌ திருவுள்‌ளத்துக்கு உகப்பாகையாலே புஷ்பமென்கிறது –

கார் கொள் வேங்கைகள் கன வரை தழுவிய கறி வளர் கொடி துன்னி
போர் கொள் வேங்கைகள் புன வரை தழுவிய பூம் பொழில் இமயத்துள்
ஏர் கொள் பூஞ்சுனைத் தடம் படிந்து இன மலர் எட்டும் இட்டு இமையோர்கள்
பேர்கள் ஆயிரம் பரவி நின்றடி தொழும் பிரிதி சென்று அடை நெஞ்சே —1-2-7—அஹிம்ஸாதிகளான  புஷ்பங்கள் எட்டும் இட்டு(அஹிம்சா-பிரதமம் இந்திரிய நிக்ரஹம் சர்வ பூத ஹிதம் ஷமா தானம் தபஸ்
த்யானம் சத்யம் -அஷ்ட விதம் விஷ்ணுவுக்கு பிரிய தர்மம்
)-அன்றிக்கே –செங்கழுநீர் செண்பகம் இருவாட்சி பாதிரி புன்னை குறுக்கத்தி கருமுகை தாமரை என்றாப் போலே பிரதானமாய் இருப்பன எட்டும் ஆதல்-அஷ்டாங்க பிரணாமத்தை சொல்லுதல் ஆதல் –-மனஸ் புத்தி அஹங்காரம் தலை கால்கள் கைகள்- அத்தை மலர் என்னும்படி என் – என்னில் பூவோபாதி அவனுக்கு ஸ்ப்ருஹா விஷயமாய் இருக்கும் ஆகில் இறே – சூட்டினேன் சொன் மாலை -என்னுமா போலே –
அன்றிக்கே  கீழில் திரு மொழியில் திரு மந்த்ரம் பிரஸ்துதம் ஆகையாலே திரு வஷ்டாஷரத்தை சொல்லிற்று ஆதல் –

கந்த மா மலர் எட்டும் இட்டு நின் காமர் சேவடி கை தொழுது எழும்
புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்
சந்தி வேள்வி சடங்கு நான்மறை ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும்
அந்தணாளரறா அணியாலியம்மானே –3-5-6—கந்த வத்தான விலஷண புஷ்பங்கள் எட்டையும் இட்டு –
அவை யாவன – கருமுகை -கற்பகம் -நாழல் -மந்தாரம் -சௌகந்தி -செங்கழுநீர் – தாமரை -கைதை
ஸ்வாபதேசம் – பரம போக்யமான திரு மந்தரத்தால் பிரதிபாத்யமான வஸ்துவின் பக்கலில் தன்னை சமர்ப்பித்து – சர்வ கந்த -என்கிற வஸ்து ஆகையாலே – உன்னுடைய ஸ்ப்ருஹணீயமான சிவந்த திருவடிகளை கையாலே தொழுது உஜ்ஜீவிக்க வேணும் என்னும் அத்யவாசாயத்தை உடைய என்னுடைய ஹிருதயத்திலே –

எட்டும் எட்டும் எட்டுமாய் ஒரு ஏழும் ஏழும் ஏழுமாய்
எட்டு மூன்று ஒன்றுமாகி நின்ற வாதி தேவனை
எட்டினாய பேதமோடு இறைஞ்சி நின்றவன் பெயர்
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே –77-–கீழ்ச் சொன்ன ஜகத் அந்தராத்ம பாவத்துக்கு வாசகமான மந்த்ராந்தந்தரங்களில் காட்டில் திரு அஷ்டாஷரத்தை வாயாலே உச்சரிக்குமவர்கள் –வல்லர் வானம் ஆளவே –அர்த்தத்தை மனசாலே அனுசந்தித்தும் –வாயாலே சப்தத்தை உச்சரித்தும் –
சாரீரமான ப்ரணாமத்தை பண்ணியும்-இப்படி மநோ வாக் காயங்களாலே பஜிக்குமவர்கள் இட்ட வழக்கு பரமபதம் -என்கை-

சோர்விலாத காதலால் தொடக்கறா மனத்தராய்
நீர் அராவணைக் கிடந்த நின்மலன் நலம் கழல்
ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் எட்டு எழுத்தும்
வாரமாக வோதுவார்கள் வல்லர் வானம் ஆளவே –78—ஷீராப்தி நாதன் திருநாமமான திருவஷ்டாஷரத்தையும் –-ஏஷ நாராயண ச ஸ்ரீ மான் -என்றும் – நாராயணனே நமக்கே பறை -தருவான் என்றும் – பவான் நாராயணோ தேவ -என்றும் – தர்மி  புக்க விடம் எங்கும் இத்திருநாமம் பிரதம அபிதாநமாய் இருக்கும் -என்கை–நமோ நாராயணா யேதி மந்தரைக சரணா வயம் –என்கிறபடியே
தன் நிஷ்டராய்க் கொண்டு சொல்லுமவர்கள் – பரமபததுக்கு நிர்வாஹகராக வல்லர் -என்கிறார் –

9-எட்டினாய பேத பூவில் சந்தொடு தேவ கார்யம் செய்து –அதாவது – எட்டினாய பேதமோடு இறைஞ்சி -திருச்சந்த -77-என்கிற படியே-மநோ புத்ய அபிமாநேன சஹன்யச்ய தராதலே கூர்ம வச்சதுர : பாதான் சிரஸ் தத் ரைவ பஞ்சமம் -என்கிற படியே , பக்நாபிமானனாய் விழுகையும் , மநோ புத்திகளுக்கு ஈஸ்வரனே விஷயம் ஆகையும் , பாத த்வயங்களும் ,கர த்வயங்களும் ,சிரசும் பூமியிலே பொருந்துகுகை யாகிற அஷ்டாங்க பிரமாணத்தைப் பண்ணி ,-

(எட்டினாய பேதம்‌) ““எட்டினாய பேதமோடிறைஞ்சி’* (திருச்ச. 77) என்கையாலே “மநோ புத்தி அபிமாநேந ஸஹ ந்யஸ்ய தராதலே ! கூர்மவச் சதுர ச பாதந்‌ ஸிரஸ்‌ தத்ரைவ பஞ்சமம்‌” என்றும்‌, “*உரஸா ஸிரஸா த்ருஷ்ட்யா வசஸா மநஸா ததா ॥ பத்‌ப்‌யாம்‌ கராப்‌யாம்‌ ஜாநுப்‌யாம்‌ ப்ரணா மோஷ்டாங்க, ஈரித?‘ என்றும்‌, பக்நாபிமாநனாய்‌ விழுகையும்‌, மநோ புத்‌திகளுக்கு ஈஸ்வரனையே விஷயமாக்குகையும்‌, பாணித்‌வயமும்‌, பாத த்‌வயமும்‌, ஸிரஸ்ஸும்‌ பூமியிலே பொருந்துகையாகிற அஷ்டாங்க ப்ரணாமத்தைப் பண்ணி.

எட்டும் எட்டும் எட்டுமாய் ஒரு ஏழும் ஏழும் ஏழுமாய்
எட்டு மூன்று ஒன்றுமாகி நின்ற வாதி தேவனை
எட்டினாய பேதமோடு இறைஞ்சி நின்றவன் பெயர்
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே –77-எட்டினாய பேதமோடு இறைஞ்சி நின்று
அஷ்டாங்க ப்ரணாமத்தை பண்ணி அம்முகத்தாலே ஆஸ்ரயித்து நின்று பிரணாமத்துக்கு அஷ்டாங்கதை யாவது –-பக்ன அபிமாநியாய் விழுகையும் மநோ புத்திகளுக்கு ஈச்வரனே விஷயம் ஆகையும்-பத த்வய கர த்வயங்களும் கூர்மவத் பூமியிலே பொருந்துகையும்-

பூவில் புகையும் விளக்கும் சாந்தும் நீரும் மலிந்து –திருவாய் -5-2-9-என்றும் சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல வாய்ந்து கொண்டு –திருவாய் -10-2-10-என்கிற படியே புஷ்பாங்கராதிகளான சாமராதந உபகரணங்களைப் பல சங்க கர்துவங்களாகிற-துராலும் ,மயிரும் ,புழுவும் படாத படி ஆராய்ந்து மிகவும் சம்பாதித்து கொண்டு ,-10-தேவ கார்யம் செய்து–பெரியாழ்வார் -4-4-1 -என்கிற படியே பகவத் சமாராதனத்தை செய்து –11-உள்ளம் தூயராய் –அதாவது –-ஒன்றி நின்று நல் தவம் செய்து ,ஊழி ஊழி தோறு எல்லாம்நின்று , நின்றவன் குணங்கள் உள்ளி உள்ளம் தூயராய்—திருச்சந்த -75-என்கிற படியே , நித்ய கர்ம அனுஷ்டானம் தொடங்கி,பகவத் ஆராதன பர்யந்தமாக பண்ணும் , த்ரிவித பரித்யாக பூர்வகமான கர்ம அனுஷ்டானத்தாலும் ,பகவத் குண அனுசந்தாதாலும் – காஷயே கர்மபி :பக்வே ததோ ஜ்ஞானம் ப்ரவர்த்ததே –( கர்மங்களைச் செய்வதனால் பாபம் அழிந்த அளவில் பின்னர் ஞானம் தோன்றுகிறது )-என்கிற படி ஜ்ஞான யோகார்ஹமாம்படி ம்ருதீத கஷாயர் ஆகையாலே ,பரிசுத்த அந்த கரணராய்-

(பூவில்‌ சாந்தொடு தேவ காரியம்‌ செய்து) “பூவில்‌ புகையும்‌ விளக்கும்‌ சாந்தமும்‌ நீரும்‌ மலிந்து ” (திருவா. 5 – 2 – 9), “சாந்தொடு விளக்கம்‌ தூபம்‌ தாமரை மலர்கள்‌ நல்ல ஆய்ந்து தொண்டு” (திருவா. 10 – 2 – 10) என்று ஸமாராதநோபகரணங்கள்‌ மிகுத்துக் கொண்டு அநந்ய ப்ரயோஜநராய்‌, ““தேவ காரியம்‌ செய்து” (பெரியா. திரு. 4 – 4 – 1) என்கிறபடியே பகவத் ஸமாராதநத்தைப் பண்ணி -(உள்ளம்‌ தூயராய்‌) ““ஒன்றி நின்று நற்றவம்‌ செய்தூழியூழி தோறெலாம்‌ நின்று நின்றவன்‌ குணங்களூள்ளி உள்ளம்‌ தூயராய்‌” (திருச்ச. 75) என்கிறபடியே நித்யகர்மாநுஷ்டாநம்‌ முதலாக பகவத் ஸமாராதந மெல்லையாக பல சங்க கர்த்ருத்வ த்யாக பூர்வகமாக உண்டான கர்மாநுஷ்டாநத்தாலும்‌ பகவத்‌ குணாநுஸந்தாநத்தாலும்‌ ““கஷாயே கர்மபிர் பக்வே ததோ ஜ்ஞாநம்‌ ப்ரகாஸதே”” என்கிறபடியே கர்மாநுஷ்டாநத்தாலே ம்ருதிதகஷாயனானவாறே ஜ்ஞாந விகாஸத்துக்கடியான மநோ நைர்மல்யத்தை உடையராய்-

மேவித் தொழுது உய்ம்மின்னீர்கள் வேதப் புனித இருக்கை
நாவிற் கொண்டு அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமே
பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழும் அடி யாரும் பகவரும் மிக்கது உலகே.–5-2-9-பூவோடு கூடின புகையையும் -ஸமாராதன த்ரவ்யங்களையும் மிகுத்து –அநந்ய பிரயோஜனராய் தொழும் கைங்கர்ய நிஷ்டரும் ––அதுக்கு ஷமர் அன்றிக்கே குண அனுபவம் பண்ணும் குண நிஷ்ட்ருமாய்க் கொண்டு- லோகம் அடங்க சம்ருத்தம் ஆயிற்று –

மாய்ந்து அறும் வினைகள் தாமே மாவதா வென்ன நாளும்
ஏய்ந்த பொன் மதிள் அனந்த புர நகர் எந்தைக்கு என்று
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல
ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே–1
0-2-10-அங்குத்தைக்கு தகுதியான
மதிலை யுடைய திருவனந்த புரத்திலே வர்த்திக்கிற என் ஸ்வாமிக்கு என்று புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்க வல்லார் அந்தமில் புகழினாரே–அமரர் ஆவார் என்கிற அளவன்றிக்கே –விண்ணுளாரிலும் சீரியர் ஆவார் –

நா அகார்யம் சொல்லிலாதவர் நாள் தோறும் விருந்து ஒம்புவார்
தேவ கார்யம் செய்து வேதம் பயின்று வாழ் திருக் கோட்டியூர்
மூவர் காரியமும் திருத்தும் முதல்வனை சிந்தியாத அப்
பாவ காரிகளைப் படைத்தவன் எங்கனம் படைத்தான் கொலோ -4- 4-1 –இவர்களுக்கு உகப்பாக பகவத் சமாராதனம் பண்ணிப் போருமவர்கள் –திரி தந்தாகிலும் –என்னக் கடவது இறே

ஒன்றி நின்று நல் தவம் செய்து ஊழி ஊழி தோறேலாம்
நின்று நின்றவன் குணங்களுள் உள்ளி உள்ளம் தூயராய்
சென்று சென்று தேவ தேவர் உம்பர் உம்பர் உம்பராய்
அன்றி எங்கள் செங்கண் மாலை யாவர் காண வல்லரே –75-உக்தமான கர்ம யோகத்தாலும்
பகவத் குண அப்யாசத்தாலும் மநஸா விசுத்தேந -என்றும் –மநஸா க்ராஹ்யா -என்றும் -சொல்லுகிறபடியே பரிசுத்த அந்த கரணராய்

12-வாரிப் புன்புல வகத்தினுள் இளைப்பினை அடைவே விளக்கினை கண்டு – அதாவது பிரகீர்னே விஷயாரண்யே பிரதாவந்தம் பிரமாதிகம் , ஜஞாநான்குசேன க்ருஹ்நீயாத் வஸ்ய இத்திரிய தந்தினம்
( பரந்து இருக்கிற விஷயமாகிற காட்டிலே ஓடிக் கொண்டு இருப்பதும் அகப்பட்டாரைக் கொல்லுவதுமான இந்த்ரியங்களாகிற யானையை த்யாஜ்ய உபாதேய ஞானம் ஆகிற அங்குசத்தால் வசப்படுத்த வேண்டும் ) என்று விஸ்தீரணமான விஷய அடவியிலே ஓடா நிற்ப்பதாய் ,அகப்பட்டாரை கொல்லுமதான இந்திரியமாகிற யானையை , த்யாஜ்யோ உபாதேய விவேக ஞானம் ஆகிற அங்குசத்தால் ,வஸ்யமாகப் பண்ணுவான் என்கிற படியே –-வாரிச் சுருக்கி மத களிறு ஐந்தினையும் சேரி திரியாமல் செந்நிறீஇ –முதல் திருவந்தாதி -47–என்று மதித்த யானைகளை தண்ணீரிலே செறுப்பிக்குமா போலே ,இந்திரியங்கள் ஆகிற மத ஹஸ்திகளை விஷய அனுபவம் ஆகிற போகத்தை குலைத்து -அவ்வவளவும் அன்றிக்கே – விஷயங்கள் நடமாடும் இடத்தில் போகாதே -பிரத்யக் வஸ்து விஷயமாகை ஆகிற செவ்வியிலே நிறுத்தி என்றும் –புன்புல வழி அடைத்து ,அரக்கு இலச்சினை செய்து ,நன் புல வழி திறந்து ,ஞான நல் சுடர் கொளீ இ-திருச்சந்த -76- -என்று அல்ப அஸ்த்ராதித்வ தோஷ துஷ்டமான சூத்திர விஷயங்களை பற்றிப் போகிற இந்திரிய மார்க்கத்தை நிரோதித்து ,
அவற்றினுடைய சூத்திர அனுசந்தத்தாலே ,வாசனா அனுவர்தியும் அறும் படி ,அத்தை உறைப்பித்து ,
விலஷண விஷயத்தில் இந்திரிய மார்க்கத்தைப் பிரகாசிப்பித்து நன்றான ஞான பிரபையும் மிகவும் உண்டாக்கி என்றும் –ஐம்புலன் அகத்தினுள் செறுத்து –திரு எழு கூற்று இருக்கை -என்று
ஸ்ரோத்ராதி இந்திரியங்கள் ,சப்தாதி விஷயங்களில் போகாமே உள்ளே அடக்கி என்றும் சொல்லுகிற படியே -நிக்ருஹிதேந்திரிய க்ராமராய்-( க்ராமம் கூட்டம் )-இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி அளைப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே விளக்கினை விதியில் காண்பார் மெய்மையைக் காண்கிற்பாரே–திருக்குறும் தாண்டகம் -18–என்கிற பாட்டில் சொல்லுகிற அடைவிலே –
அவித்யா அஸ்மித ரக த்வேஷா அபிநிவாச பஞ்ச கிலேச–யோக சூத்ரம் –
( அறியாமை செருக்கு ஆசை த்வேஷம் அபிமானம் -என்னும் இவை ஐந்து கிலேசங்கள் ) -என்று சொல்லுகிற கிலேசங்களின் சஞ்சாரத்தைத் தவிர்த்து ,
நாத்யுச்சரிதம் ..நாதிநீசம்–ஸ்ரீ கீதை –6-11–இத்யாதிகளில் சொல்லுகிற படியே ஓர் ஆசனத்தே இருந்து ,
சம்ப்ரேஷ்ய நாசிகாக்ரம் ஸ்வம் திசச்சா நவ லோகயன்-ஸ்ரீ கீதை -6-13- என்னும் படியே ,
நாசாக்ரன்யச்த ( நாச அக்ர ந்யஸ்த ) லோசனராய் ,ஓர் அளவில் நில்லாத இந்திரியங்களை பிரத்யக்கு ஆக்கி , த்யேயமான பகவத் விஷயத்தில் சிநேகத்தை வைத்து ,விடாமல் அனுசந்தித்து , சுடர் விட்டு தோன்றுகிற ஞானத்தாலே ,ஸ்வயம் பிரகாசமான ஆத்ம ஸ்வரூபத்தை , சாஸ்த்ரோத்ரா பிரகாரத்தாலே சாஷாத் கரித்து , சத் கர்ம அனுஷ்டானத்திலே ஷீண பாபனாய் நிர்மல அந்த கரணனானவனுக்கு பகவத் சாஷாத் கரத்துக்கு உறுப்பாக விளையும் யோக ஜன்ய ஞானம் தான் பிரதமம் ஆத்ம ஸ்வரூபத்தை தர்சித்து கொண்டிறே மேல் போவது ..விளக்கினை விதியில் காண்பார்-என்கிற இது பகவத் சாஷாத் காரமாக பூர்வர்கள் வியாக்யானம் பண்ணி வைத்தார்கள் ஆகிலும் ,இவர் ஆத்ம பரமாகவே அருளிச் செய்தார் என்று கொள்ள வேணும் – பகவத் த்யான தர்சனங்களை மேலே சொல்லுகையாலே —விதியில் காணும் பிரதம மத்திய தசைகளை சூரனை -23–என்று ஆத்ம பரமாகவே இறே கீழும் இவர் அருளிச் செய்தது .. யோஜனா பேதங்களும் உண்டாய் இருக்கும் இறே –

(வாரிப்புன்புலவகத்தினுள்‌) “வாரிசுருக்கி மதக்களிறைந்தினையும்‌ சேரி திரியாமல்‌ செந்நிரீ, ‘ (மூ.திருவ. 47) என்றும்‌, ““புன்புலவழியடைத்தரக்கிலச்சினை செய்து நன்புல வழி திறந்து ஞானநற்கூடர் கொளீஇ”” (திருச்ச. 76) என்றும்‌, ”ஐம்புலனகத்தினுள்‌ செறுத்து” (திருவெழு.) என்றும்‌, ”ப்ரசீர்ணே விஷயாரண்யே ப்ரத வந்தம்‌ ப்ரமாதிநம்‌ ! ஜ்ஞாநாங்குஸேந க்ருஹ்ணியாத்‌ வஸ்யமிந்த்‌ரிய தந்திநம்‌”” என்கிறபடியே இந்த்‌ரியங்களாகிற மமூதிதமான ஆனைகளை த்யாஜ்யோபாதேய விவேக ஜ்ஞாநமாகீற அங்குஸத்‌தாலே வணக்கி, விஷயங்களாகிற சேரியில்‌ திரியாதபடி பகவத்‌ விஷயமாகிற யதா ஸ்தாநமாகிற தறியிலே சேர்த்தென்றும்‌, இந்த்‌ரியங்களை ஷூத்‌ர விஷயங்களிலே போகாதபடி வாஸனையோடே விடுவித்து ப்ராப்த விஷயத்திலே மூட்டி ஜ்ஞாநமாகிற ப்ரகாஸமான தீபத்தைக்‌ கொளுத்தி. இப்படி நிக்‌ருஹீதேந்த்‌ரிய க்‌ராமராய்‌, (இளைப்பிணை யடைவே விளக்கினைக் கண்டு) “இளைப்பினை இயக்கம்‌ நீக்கி இருந்து முன்னிமையைக் கூட்டி அளப்பிலைம்புலனடக்கி அன்பவர்‌ கண்ணே வைத்துத்‌ துளக்கமில்‌ சிந்தை செய்து தோன்றலும்‌ சுடர் விட்டாங்கே விளக்கினை விதியிற்காண்பார்‌‘” (திருக்குறு. 18) . என்றும்‌ சொல்லுகிறபடியே யோகாப்‌யாஸ விரோதியாயிருந்துள்ள யாதாயாதங்களை மாற்றி ஓர் ஆஸந விஸேஷங்களிலே இருந்து நாஸாக்‌ரந்பஸ்த லோசநனாய்‌, இந்த்ரியங்களை நியமித்து த்‌யேய வஸ்துவின்‌ பக்கலிலே நிரதிஸயமான ஸ்நேஹத்தைப் பண்ணி ததநந்தரம்‌ ஸ்வயம் ப்ரகாஸமாய்க்‌ கொண்டு தோற்றுகிற ஆத்ம ஸ்வரூபத்தை ஸாஸ்த்ரோக்த ப்ரகாரத்திலே ஸாக்ஷாத்கரித்து.

வாரி சுருக்கி மதக் களிறு ஐந்தினையும்
சேரி திரியாமல் செந்நிறீஇ கூரிய
மெய்ஞ்ஞானத்தால் உணர்வார் காண்பரே மேலொரு நாள்
கைந்நாகம் காத்தான் கழல்
—–47–மத்த கஜம் போலே தாம் கண்டபடி காடு பாய்கிற ஸ்ரோத்ராதிகளை –பின்னையும் கண்ணுக்கு இலக்காம் இடத்திலே திரியுமாகில் விழ விட்டுக் கொள்ளக் கடவதாய் இருக்கும் இறே-யானை-அப்படியே இவற்றை ஜெயித்தாலும் விஷயங்களுக்கு ஏகாந்த ஸ்தலங்களிலே
இவை போகாத படி ஒக்க நிறுத்தினால் பின்னைப் பிறக்குமது கூரிய மெய் ஞானமாய் இருக்குமாய்த்து -அதாவது ஸூஷ்மார்த்தத்தை க்ரஹிக்கவும் வற்றாய் தர்மி க்ராஹகமுமாய் இருக்கும் யாய்த்து –அது தான் விஹித கர்மங்களை பலாபிசந்தி ரஹிதமாக அனுஷ்டித்து ஷீண பாபனாய்    – ஆத்மா யாதாம்ய ஞானம் உண்டாய் ஈஸ்வர பாரதந்த்ர்யமும் உண்டாம் என்னும் இடத்தையும் அறிந்து-உபாசனம்  த்ருவாஸ்ம்ருதி -தர்சன சாமாநாகாரதா பிரத்யஷதாபத்தி என்றும்-விசதே தத நந்தரம்-கீதை -18-55-என்று சொல்லுகிறபடியே-அப்படிப் பட்ட ஜ்ஞானத்தை உடையவர்கள் அவனைக் காண்பார்கள்  –

புன்புல வழி அடைத்து அரக்கு இலச்சினை செய்து
நன் புல வழி திறந்து ஞான நற் சுடர் கொளீ இ
என்பில் எள்கி நெஞ்சு உருகி யுள் கனிந்து எழுந்தது ஓர்
அன்பில் அன்றி ஆழி யானை யாவர் காண வல்லரே –76-ஷூத்ர விஷயங்களைப் பற்றி போருகிற இந்த்ரிய வ்யாபாரத்தை நிரோதித்து –சப்தாதி விஷயங்களினுடைய ஷூத்ரதையை அனுசந்தித்து -வாசநையும் -அனுவர்த்தியாத படி –பலவான் இந்த்ரிய க்ராமோ வித்வாம் ஸம்பி கர்ஷதி –என்று ஜ்ஞானாதிகர்களையும் வாசனை நலியும் இறே -அதுவும் பிரவாதபடி பண்ணி –விலஷண விஷயத்தில் இந்த்ரிய மார்க்கத்தை பிரகாசிப்பித்தது இவ்வாத்மாவுக்கு ப்ராப்தமாய் –ஸூ ஸூ கம் கர்த்தும் -என்கிறபடியே சாதனை வேளையே தொடங்கி ரசிக்கும் பகவத் விஷயமே இந்த்ரியங்களுக்கு விஷயமாக்கி -என்கை-நன்றாக ஞானப் பிரபையை மிகவும் உண்டாக்கி ஈஸ்வரனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை -ஸ்வ ஜ்ஞானத்துக்கு விஷயமாம்படி பண்ணி –

ஐம்புலன் அகத்தினுள் செறுத்து நான்குடன் அடக்கி முக்குணத்து இரண்டவை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று ஆங்கு இரு பிறப்பு அறுப்போர் அறியும் தன்மையை –கர்ம யோகத்தை அங்கமாக யுடைத்தான உபாயம் சொல்லப் படுகிறது –சஷூராதி இந்த்ரியங்களை சப்தாதி விஷயங்களிலே போகாமே உள்ளே அடக்கி-மநோ-புத்தி-சித்த அஹங்காரங்களையும்-செறுத்து-ஆஹார நித்ரா
பயம் ஐதுனங்கள் -உடல் உறவு -இவற்றைத் தவிர்த்து என்றுமாம் –

இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற் பாரே
–18-அவித்யா அஸ்மிதா ராக த்வேஷா அபிநிவேஸா க்லேஸா – என்றும் சொல்லுகிற கிலேசங்கள் உடைய சஞ்சாரத்தைத் தவிர்த்து –நாத்யுச்ச்ர்தம் -இத்யாதியில்-சொல்லுகிறபடியே ஓர் ஆசனத்தே இருந்து –அளவிறந்த இந்த்ரியங்களை பிரத்யக்காக்கி –அவிச்சின்ன ஸ்ம்ருதி ரூபமான பக்தியைப் பண்ணி –இப்படி சுடர் விட்டு தோன்றும்
ஜ்ஞானத்தாலே –வேதங்களாலே ஜோதி ரூபனாக பிரதிபாதிக்கப் பட்ட விளக்கை-சாஸ்த்ரங்களில் விதித்தபடியே உபாசித்து அவனைக் காண்பார் –என்றும் உளனாய் இருக்கிற சர்வேஸ்வரனை
காண வல்லரே -காண -மாட்டார் -என்றபடி –அதவா – இப்படி யோக சாஸ்த்ரத்தில் சொல்லுகிறபடியே
உபாசித்துக் காண்பாருக்கு காணலாம் -என்றுமாம் –அங்க பிரபத்தி இல்லாமல் காண மாட்டார் என்றபடி–

13-யோக நீதி நண்ணி-அதாவது –நன்று இருந்து யோக நீதி நண்ணுவார்கள்–திருச்சந்த -63- என்கிற படி யோகம் ஆகிற உபாயத்தாலே கிட்டி ,-அறம் திகழ் மறையோர் மனம் தன்னுள் அமர்ந்து உறையும் அரும் பெரும் சுடரை ,கண்கள் சிவந்ததில்-படியே மன உள் கொண்டு –-அதாவது மறம் திகழும் மனம் ஒழித்து ,,வஞ்சம் மாற்றி ,வன் புலன்கள் அடக்கி-இடர்பார துன்பம் துறந்து ,இரு முப்பொழுது ஏத்தி ,எல்லை இல்லா தொன் நெறிக் கண் நிலை நின்ற தொண்டரான அறம் திகழ் மனத்தவர் தம் கதியை–பெருமாள் திருமொழி -1-7-என்று கொலையும் சினமும் கொடுமையாகிய மறத்தால் விளங்கா நின்றுள்ள மனசை வாசனையோடு போக்கி , பொய்யை தவிர்ந்து ,வன் புல சேக்களை பட்டி புகாமே கட்டி ,மிக்க துக்கத்தை விளைப்பதான –பாரமாய பழ வினையை பற்று அறுத்து – ஸ்லாக்கியமாய் இருந்துள்ள -ஆதி நடு அந்தி -ஆகிய மூன்று பொழுதிலும் ஏத்தி ,அளவிறந்த பழைய மரியாதையிலே ,சிலவரால் கலக்க ஒண்ணாத படி ..நிலை நின்ற வைஷ்ணவர்களான ,ஆந்ரு சம்ச்யோஜ்வல சித்தருக்கு பரம ப்ராப்யன் ஆனவன் என்றும் –மறையோர் மனம் தன்னுள்-அதாவது – மறையோர் மனம் தன்னுள் விண்ணுளார் பெருமானை—பெரிய திருமொழி -7-3-7-என்று பிராமணர் ஹிருதயங்களை தனக்கு வாசஸ் ஸ்தானமாய் உடையனாய் இருக்கும் -அமரர்கள் அதிபதியை -என்றும் ,-மா தவமானவர் தங்கள் சிந்தை அமர்ந்து உறைகின்ற எந்தை—பெரிய திருமொழி -2-1-1-என்றும் , மகா தபஸை உடையராய் இருக்கும் மனுஷ்யர்களுடைய ஹிருதயங்களில் , அநந்ய பிரயோஜனனாய் கொண்டு நித்ய வாசம் பண்ணுகின்ற ஸ்வாமி என்றும் -சொல்லுகிற படி , பரி சுத்த அந்த கரணரான பரம யோகிகள் ஹிருதயங்களிலே –அரும் பெரும் சுடரை –அதாவது ஆரமார்வன் அரங்கன் என்னும் அரும் பெரும் சுடர் ஒன்றினைச் சேரும் நெஞ்சினர்–பெருமாள் திருமொழி -2-7-என்னும் படி , ஆபரணாத் அலங்குருதனாய் அத்யுஜ்வலமான விக்ரகத்தோடே எழுந்து அருளி இருக்கும் சர்வேஸ்வரனை —கண்கள் சிவத்தில் படியே –அதாவது – கண்கள் சிவந்து–திருவாய் -8-8-1- –என்கிற பாட்டில் சொல்லுகிற படி அவயவ சோபை–ஆபரண சோபை –ஆயுத சோபை களோடு காள மேக நிபஸ்யமாய் இருந்துள்ள திவ்ய விக்ரஹத்துடனே–-மன உள் கொண்டு-கற்றவர் தம் தம் மன உள் கொண்டு – பெரிய திருமொழி -7-3-1–என்று அறிவு உடையரான யோகிகள் ஆனவர்கள் தம் தம் ஹிருதயங்களில் கொண்டு என்ற படி ..
ஹிருதய கமலத்தில் த்யானம் பண்ணி –

(யோக நீதி நண்ணி) என்று யோகம்‌ தலை நின்று. (அறந்திகமும்‌ மறையோர்‌ மனந்தன்னுள்‌ அமர்ந்துறையும்‌ அரும்பெருஞ்சுடரை) ‘*மறந்திகழு மனமொழித்து வஞ்சமாற்றி ஐம்புலன்களடக்கி இடர்ப்பாரத்துன்பம்‌ துறந்து இருமுப்பொழுதேத்தி எல்லை யில்லாத தொன்னெறிக் கண்‌ நிலை நின்ற தொண்டரான அறந்திகழு மனத்தவர்தம்‌ கதியை” (பெருமாள்‌ திரு. 1 – 7) என்றும்‌, “மறையோர் மனந்தன்னுள்‌” (திருமொழி 7 – 8 – 7) என்றும்‌, ““மாதவமானவர் தங்கள்‌ சிந்தை”’ (திருமொழி 2 – 1 – 1) என்றும்‌, ”ஆரமார்வனரங்கனென்னுமரும்பெருஞ்சுடரொன்றினைச்‌ சேரும்‌ நெஞ்சினராகி’” (பெருமாள்திரு. 2 – 7) என்றும்‌ சொல்லுகிறபடியே பரமயோகி,களுடைய ஹ்ருதயங்களிலே அதி ப்ரகாபமமான விக்‌ரஹத்தோடே எழுந்தருளியிருக்கிற ஸர்வேஸ்வரனை.
(கண்கள் சிவந்திற் படியே மனவுட் கொண்டு) ““கண்கள் சிவந்து’ (8-8 -1)-என்கிற பாட்டின் படியே அவயவ ஸோபையோடும்‌ ஆபரண ஸோபையோடும்‌ கூடி காளமேக நிபஸ்யாமமாயிருக்கிற விலக்ஷண விக்‌ரஹத்தை ““கற்றவர் தந்தம்‌ மனவுட்‌ கொண்டு” (திருமொழி 7 – 3 – 1) என்கிறபடியே ஹ்ருதய கமலத்திலே த்‌யாநம் பண்ணி.

மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி ஐம்புலன்கள் அடக்கி இடர் பார துன்பம்
துறந்து இரு முப் பொழுது ஏத்தி எல்லை இல்லா தொன் நெறி கண் நிலை நின்ற தொண்டரான
அறம் திகழும்  மனத்தவர் தம் கதியை
பொன்னி அணி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
நிறம் திகழும் மாயோனை கண்டு என் கண்கள் நீர் மல்க என்று கொலோ நிற்கும் நாளே ?—-1-7—மறம்–கொலையும் -சினமும் -கொடுமையும் – இவற்றால் விளங்கா நின்ற மனஸை வாசனையோடு போக்கி –பொய்யைப் போக்கி-வன்புலச் சேக்களை பட்டி புகாமே கட்டி-

பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற பாலையாகி இங்கே புகுந்து என்
கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான் கொண்ட பின் மறையோர் மனம் தன்னுள்
விண்ணுளார் பெருமானை எம்மானை வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல்
வண்ணன் மா மணி வண்ணன் எம் அண்ணல் வண்ணமே அன்றி வாய் யுரையாதே –7-3-7-தன் உள்-வாசஸ் ஸ்தானம்-பிராமணர் உடைய ஹிருதயங்களைத் தனக்கு வாசஸ் ஸ்தானமாய் உடையனாய் –

வானவர் தங்கள் சிந்தை போல என்னெஞ்சமே யினிதுவந்து மா தவ
மானவர் தங்கள் சிந்தை அமர்ந்து உறைகின்ற வெந்தை

கான வரிடு காரகில் புகை ஓங்கு வேங்கடம் மேவி மாண் குற
ளான வந்தணற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-1—மஹா தபசை  உடையவராய் இருக்கிற மனுஷ்யர்கள் உடைய ஹிருதயங்களிலே – அநந்ய பிரயோஜனனாய்க் கொண்டு
நித்ய வாஸம் பண்ணுகிற ஸ்வாமி –(நாம் செய்வதை அவன் அன்றோ செய்கிறான் )

கார் இனம் புரை மேனி நல் கதிர் முத்த வெண்ணகை செய்ய வாய்
ஆர மார்வன் அரங்கன் என்னும் அரும் பெரும் சுடர் ஒன்றினை
சேரும் நெஞ்சினராகி சேர்ந்து கசிந்து இழிந்த கண்ண நீர்களால்

வார நிற்ப்பவர் தாள் இணைக்கு ஒருவாரம் ஆகும் என் நெஞ்சமே –2-7—பெரிய வரை மார்வில் பேராரம் பூண்டு -என்று -ஐஸ்வர்ய பிரகாசகமாம் படி இட்டுப் பூண வேண்டும்படி உள்ள ஹாரத்தையும்-திரு மார்பிலே உடையராய் இருக்கிற-ஸ்ரீ பெரிய பெருமாள் என்று -உபய விபூதியிலும் பிரசித்தராய்
நிரவதிக தேஜோ ரூபராய் அத்விதீயரானவரை-அவர் வந்து கிட்டும் போது விலக்காமை யடியாகப் -பிறந்த பக்தியை உடையராய்-அவனைக் கிட்டி நிரதிசய பக்தி உக்தராய் கண்ணும் கண்ண நீருமாய் இருக்கும் அவர்களுக்கு பக்தி பாரவச்யத்தாலே இறே என்று அங்குத்தைக்கும் இவர்களுக்குமாய் நில்லாதே இவர்களுடைய திருவடிகளுக்கு-அநந்ய பிரயோஜனமாய் நில்லா நின்றது என் நெஞ்சு –

கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து கனிந்து -உள்ளே
வெண் பலிலகு சுடரிலகு விலகு மகர குண்டலத்தன்
கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சாரங்கன்
ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேன் உள்ளானே–8-8-1-தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அஷிணீ-என்று கண்கள் ஆகிறது சிவந்து இறே இருப்பது –இப்போது சிவந்து -என்கிறது -மாயக் கூத்தனில் விஸ்லேஷத்தாலே விவர்ணம் ஆனது -சம்ச்லேஷித்த பின்பு தன் நிறம் பெற்ற படி -கண்ணிலே துவக்குண்டு கால் வாங்க மாட்டாதே இருக்கிற இருப்பு இசையில் காணும் இத்தனை-ஆஸ்ரித சம்ச்லேஷத்தில் அவிக்ருதனாகில் ஆஸ்ரயணீயன் அன்றிக்கே ஒழியும் இறே -அவனும் கடல் உடைந்தால் போலே தன்னளவில் விக்ருதனாகக் கடவது இறே-அலைந்து வருகை யாவது இவரைப் பெற்ற பெற்றாலே -இங்கனம் சம்பவிப்பதே -என்று திரு முடியை அசையா நிற்கை –உள்ளானே––யுவா குமாரா –என்று கேட்டே போம்படியான அழகு -வயிர பேழை திறந்தால் போலே அவயவ சோபையும் ஆபரண சோபையும் ஆயுத சோபையுமாய்-மிளிரா நின்றதாயிற்று –

சினவில் செங்கண் அரக்கர் உயிர் மாளச் செற்ற வில்லி என்று கற்றவர் தந்தம்
மனம் உட் கொண்டு
என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மா முனியை  மரம் ஏழ்   எய்த மைந்தனை
நனவில் சென்றார்க்கும் நண்ணற்கு அரியானை நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியைக்
கனவில் கண்டேன் இன்று கண்டமையால் என் கண் இணைகள் களிப்பக் களித்தேனே -7-3-1–அறிவுடையரான யோகிகள் ஆனவர்கள் தம் ஹிருதயத்திலே கொண்டு-எல்லா காலத்திலும் எல்லா அவஸ்தையிலும்-ஒருபடிப்பட நின்று ஏத்த அவர்களுக்கு எல்லாம் செய்தும் பின்னையும் ஒன்றும் செய்யாதானாய் பெரும் தனிசு பட்டால் போலே -இவர்களுக்கு செய்யல் ஆவது என் -என்று
இவற்றை அனுசந்திக்குமவனை –

14-நிரந்தரம் மறவாமை துடக்கறா ஸ்ம்ருதியாய் –அதாவது-நிரந்தரம் நினைப்பதாக–திருச்சந்த -101- -என்றும் ,-மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாய்-பெரிய திருமொழி -3-5-4-என்றும் சொல்லுகிற படியே அந்த த்யானதுக்கு விச்சேதமும் விஸ்மிருதியும் அற்று –துடக்கறா மனத்தராய் – அதாவது –
சோர்விலாத காதலால் துடக்கறா மனத்தராய் -திருச்சந்த -78–என்று சர்வ காலமும் விஷயாந்தரங்களால் அபஹ்ருதம் ஆகாத பிரேமத்தை உடையார் ஆகையாலே , தத் சம்ச்லேஷ வியோகைக சுக துக்காராம் படி -சத்வ சுத்தவ் த்ருவா ஸ்ம்ருதி –சாந்தோக்யம் — ( அந்தக்கரணம் தூய்மை அடைந்தால் இடையறாத த்யானம் உண்டாகும் )-என்கிற படி , த்யேய வஸ்துவில் துடக்கறாமல் த்ருவ அனு ஸ்ம்ருதியாய் –கனவில் மிக்க தர்சன சமமாய்-அதாவது – கனவில் மிக கண்டேன்-இரண்டாம் திருவந்தாதி -81- -என்று இந்திரியங்களால் கலக்க ஒண்ணாதபடி மானச ஜ்ஞானத்தாலே ,அழகிதாக கண்டேன் என்னலாம் படி-ஸா ச ஸ்ம்ருதிர் தர்சன சமானகார – ஸ்ரீ பாஷ்யம் -லகு சித்தாந்தம் –( அந்த நினைவு தானும் கண்ணால் நேரே காண்பது போலே இருப்பது ஓன்று )என்கிற படி அது தான் பிரத்யஷா சாமானகாரமாய் –ஆகத்து புல்கும் அத்யந்த பிரியமாய்-அதாவது –அப்படி தர்சனம் ஆனது தான் –ஞானத்தால் ஆகத்து அணைப்பார்க்கு-திருவாய் -10-4-6-என்றும் ,-ஆகத்து அணைப்பார் அணைவரே -முதல் திருவந்தாதி -32-என்றும் ,-எல்லையில் அந்நலம் புல்கு–திருவாய் -1-2-4 -என்றும்
ஆர்வம் புரிய பரிசினால் புல்கில்—முதல் திருவந்தாதி -50-என்னும் படி , அங்கனா பரிஷ்வங்கம் போலே -பிரியோ ஹி ஞானின அத்யர்தமஹம் -ஸ்ரீ கீதை -7-17–என்கிற ஸ்மிர்தவ்ய விஷய சாரத்தாலே ,தானும் அத்யர்த்த பிரியமாய் —

(நிரந்தரம்‌ மறவாமை) “நிரந்தரம்‌ நினைப்பதாக”’ (திருச்ச. 101) என்றும்‌, “மன்னு சேவடிக்கே மறவாமை” (திருமொழி 3 – 5 – 7) என்றும்‌ சொல்லுகிறபடியே அந்த த்‌யாநத்துக்கு விஸ்ம்ருதியும்‌ விச்சேதமுமின்றிக்கே. (துடக்கு ஸ்ம்ருதியாய்‌) “சோர்‌விலாத காதலால்‌ துடக்கறா மனத்தராய்‌”’ (திருச்ச. 78) என்கிறபடியே ஸர்வ காலமும்‌ விஷயாந்தரங்களால்‌ அபஹ்ருதமாகாத ப்ரேமத்தை உடையராகையாலே தத்‌ ஸம்ஸ்லேஷ வியோகைக ஸூக துக்கராய்‌, பகவத் ஸ்ம்ருதி ஸந்ததி ரூபேண செல்லா நின்றால்‌ விச்சேதமில்லாத த்‌ருவாநு ஸ்ம்ருதி ரூபமாய்‌, “ஸத்த்வாத்‌ தெள த்‌ருவா ஸ்ம்ருதி: ஸ்ம்ருதிலம்பே, ஸர்வக்‌ரந்தீ நாம்‌ விப்ரமோக்ஷி’‘ (சாந் 7 – 26 – 2) என்னக் கடவதிறே. (கனவில் மிக்க தர்ஸந ஸமமாய்‌) “கனவில்‌ மிகக்கண்டேன்‌’” (இ. திருவ. 81) என்கிறபடியே அந்த ஸ்ம்ருதி ப்ரத்யக்ஷ ஸமாநாகாரையாய்‌. (ஆகத்துப்‌ புல்கும்‌ அத்யர்த்த ப்ரியமாய்‌) ஆகத்தணைப் பாரணைவரே” (மு.திருவ. 32) என்றும்‌, “ஆர்வம்‌ புரிய பரிசினால்‌ புல்கில்‌” (மூ.திருவ. 50) என்றும்‌ சொல்லுகிறபடியே அந்த தர்சந ஸமாநாகாரையான ஸ்ம்ருதிதான்‌ அந்த த்‌யேய வஸ்துவை ஹ்ருதயகமலத்திலே அணைக்கும்படி ஸ்மர்த்தவ்ய விஷய ஸாரஸ்யத்தாலே தானும்‌ அத்யர்த்த, ப்ரிய ரூபையாய்

இரந்து உரைப்பது உண்டு வாழி ஏமம் நீர் நிறத்தம்மா
வரம் தரும் திருக் குருப்பில் வைத்ததாகில் மன்னு சீர்ப்
பரந்த சிந்தை ஒன்றி நின்று நின்ன பாத பங்கயம்
நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே -101-சப்தாதி விஷயங்களில் போந்த என்னுடைய மனஸ் – மற்று ஒன்றில் போகாதே –உன் பக்கலிலே ஒன்றி நின்று –ப்ராப்தமுமாய் – நிரதிசய போக்யமும் ஆகையாலே -ஆகர்ஷகமுமான உன் திருவடிகளை-அம் மனஸ் நிரந்தரமாக நினைக்க வற்றாம்படி நீ திரு உள்ளமாக வேணும் –என் நினைவும் -என் செயலும் -அகிஞ்சித்கரம்உன் நினைவுக்கே பல வ்யாப்தி உள்ளது -என்கை –

மின்னின் மன்னு நுடங்கிடை மடவார் தம் சிந்தை மறந்து வந்து நின்
மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால்

புன்னை மன்னு செருந்தி வண் பொழில் வாய் அகன் பணைகள் கலந்து எங்கும்
அன்னம் மன்னு வயல் அணி யாலி யம்மானே–3-5-4-அப்ராப்த விஷயங்களில் உண்டான வாஞ்சையை தவிர்த்து பிராப்த விஷயத்தை ஆசைப்படப் பண்ணின இது தான் போரும் இறே உபகாரம்-அவற்றை நானே கை விட்டு உன் பக்கலிலே வந்து சதைகரூபமான உன் திருவடிகளிலே-எனக்கு மறவாமை யாகிற பேறு உண்டாம்படியாக – நான் அபேஷிக்க அன்றிக்கே தண்ணீர் பந்தல் வைப்பாரோபாதி நிர்ஹேதுகமாக செய்து அருளினாய் –

சோர்விலாத காதலால் தொடக்கறா மனத்தராய்
நீர் அராவணைக் கிடந்த நின்மலன் நலம் கழல்
ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் எட்டு எழுத்தும்
வாரமாக வோதுவார்கள் வல்லர் வானம் ஆளவே –78—சர்வ காலமும் -விஷயாந்தரங்களால் அபஹ்ர்தம் ஆகாத பிரேமத்தை உடையவர் ஆகையாலே -அதாவது பிரேம அதிசயத்தாலே தத் சம்ச்லேஷ விஸ்லேஷ துக்க ரஹிதராகை –பகவத் ஸ்ம்ர்த்தி சந்ததி ரூபேண செல்லா நின்றால் விச்சேதம் இல்லாத நெஞ்சை உடையராய் –சத்வ சுத்தௌ த்ருவா ஸ்ம்ர்தி -என்றும் – ஸ்ம்ரதிலம் பேசர்வகரந்தீநாம் விபர மோஷ -என்கிற அளவைச் சொல்லுகிறது-நீர் அராவணைக் கிடந்த நின்மலன் நலம் கழல் –
இப்படி பிரேமத்தை விளைக்கும் விலஷண விஷயமான சுபாஸ்ரயத்தை சொல்லுகிறது –

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே -மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி யொளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு -81-–அஸ்தமிதியாத ஆதித்யனைக் கண்டேன்-பிரத்ய பிஜ்ஞார்ஹமாக கண்டேன் –வடிவில் திகழா நின்ற திரு ஆழியையும் ஒளி திகழா நின்றுள்ள திருவடிகளையும் உடையவனுடைய பரம பதத்தில் திகழா நின்ற ஜோயோதிசை உடைத்தான திருமேனியைக் கண்டேன்

இமையாத கண்ணால் இருள் அகல நோக்கி
அமையாப் பொறி புலன்கள் ஐந்தும் நமையாமல்
ஆகத் தணைப்பார் அணைவரே ஆயிர வாய்
நாகத் தணையான் நகர் -32–
–கீழ்ச் சொன்ன படியே இந்த்ரிய ஜெயம் பண்ணிற்று இலர்களே யாகிலும் சேஷத்வ ஜ்ஞானத்தை யுடையராய்க் கொண்டு அவனை ஹ்ருதயத்தில் வைத்துஅனுசந்திக்குமவர்கள் அன்றிக்கே அப்படி இந்த்ரிய ஜெயத்தை பண்ணாதே ஈஸ்வரன் ஒருவன் உளன் என்று மாத்ரம் உடையார்க்கு என்றதாகவுமாம்-அத் தேசத்தைச் சென்று ப்ராபிக்கலாமோ  – அவன் மேல் விழா நின்றால் இறாயாதார்-என்றுமாம் –முக்த ப்ராப்ய வஸ்து இருக்கிறபடி-பர்யங்க வித்யையில் சொல்லுகிறபடியேயாய் இருக்கிறது – அங்கு உள்ளார் எல்லார் அடிமைக்கும் உப லஷணம்-

இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு
எல்லையில் அந்நலம் புல்கு பற்று அற்றே
 –1-2-4-அபிமத விஷயத்தை அணைத்தால் போல் ஆஸ்ரயணம் தான் இனிதாய் இருக்கையாலே புல்கு என்கிறார்

அரிய புலன் ஐந்தடக்கி ஆய் மலர் கொண்டு ஆர்வம்
புரிய பரிசினால் புல்கில்
பெரியனாய்
மாற்றாது வீற்றிருந்த மாவலி பால் வண் கை நீர்
ஏற்றானைக் காண்பது எளிது ——50—ஸ்நேஹம் மிக்க பிரகாரத்தாலே-அணையில் – ஆஸ்ரயணம் தானே போக்ய்மாய் இருக்கிறபடியாலே-நல்லது கண்டால் ஆசைப் படுமோபாதி இவ் விஷயத்திலும் ஆசை பிறக்க அமையும்–தான் அர்த்தியாய்க் கொண்டு சென்று நிற்குமவன் ஆய்த்து – ஆகையாலே அவனை ஆஸ்ரயிக்கும் இடத்திலே ஒரு அருமை தட்டாது-என்கிறார் –

வைகும் சிறப்பு விட்டு குற்றேவல் என்னாத அநந்ய பிரயோஜனமாய் –அதாவது –-நின் புகழில் வைகும் தம் சிந்தையிலும் ,மற்று இனிதோ நீ அவர்க்கு வைகுந்தம் என்று அருளும் வான்–பெரிய திருவந்தாதி -53- என்று உன்னுடைய கல்யாண குணங்களிலே விச்சேதம் இன்றியே செல்லுகிற சிந்தையிலும்
காட்டிலும் இனிதோ நீ அவருக்கு நன்றாக சொல்லிக் கொடுக்கும் பரம பதம் என்றும் –சிறப்பு விட்டு-
அதாவது – உலகு படைத்து இத்யாதி–அமுத வெள்ளத்ததானாம் சிறப்பு விட்டு –ஒரு பொருட்கு அசைவோர் அசைக நல் வீடு பெறினும் கொள்வது எண்ணுமோ தெள்ளியீர் குறிப்பு–-திருவாசிரியம் -2-என்று பரத்வ ஸுலப்யாதிகளாலே பரிபூர்ணனான சர்வேஸ்வரன் நிரதிசய போக்யமான திரு அடிகளை அனுபவிக்கையில் உண்டான அபிநிவேசத்தில் -த்ரவீபூதமாய் ,ஓர் அவயவியாக காண ஒண்ணாத படி மங்கின ஆத்ம வஸ்துவிலே , அந்த ஆதாரம் அடியாக பிறந்த விலஷணமான சங்க காமத்ய அவஸ்தைகளை உடைய பக்தியால் விளைகிற நிரதிசய ரசத்திலே உளனாகையாகிற லாபத்தை விட்டு -சூத்திர புருஷார்தங்களுக்கு கிலேசப் படுவார் அங்கனே கிலேசப் படுக – ஸ்லாக்கியமான ஐஸ்வர்யம் ,–அதில் விலஷணமான ஆத்ம அனுபவம் –அவ்வளவு இன்றிக்கே பர விலஷணமான மோஷம் -இவற்றைப் பெருமளவு ஆனாலும் ,சார அசார விவேக ஜ்ஞர்களுடைய ஹிருதயத்தில் அவற்றை ஸ்வீகரிக்கவும் நினைவு உண்டோ என்றும் —குற்றேவல் என்னாத அநந்ய பிரயோஜனமாய்-உனது பாலே போர் சீரில் பழுத்து ஒழிந்தேன் மேலால் பிறப்பின்மை பெற்று அடிக் கீழ் குற்றேவல் அன்று மறப்பின்மை யான் வேண்டும் மாடு–பெரிய திருவந்தாதி -58-என்று உன்னுடைய ஸ்மர்யமான தசையே தொடங்கி இனிதான குணங்களிலே பழுத்து ஒழிந்தேன் –பின்பு ஒருகால் பிறவாமை பெற்று ,திரு அடிகளில் நித்ய கைங்கர்யம் பண்ணுகை அன்று எனக்கு வேண்டுவது .. பிறந்த ஞானத்துக்கு மறப்பின்மை எனக்கு வேண்டும் தனமானம் -என்றும் சொல்லுகிற படி-இவ் அனுசந்தானத்தாலே ,தேச விசேஷத்தில் அனுபவத்தையும் உபேஷிக்கும் படி தானே பரம பிரயோஜனமாய் ரசிக்கையாலே ,அநந்ய பிரயோஜனமாய்-வேதன உபாசன சேவா த்யானாதிகள் என்று சொல்லும் அது சாத்திய சாதன பக்தியாக சாஸ்திர சித்தம்-அதாவது-வேதனம் என்றும் , உபாசனம் என்றும் ,சேவை என்றும் ,த்யானம் என்றும் , ஏவமாதி சொற்களால் சொல்லப் படுகிற பக்தியானது – உபய பரிகர்மித ஸ்வாந்தச்ய –ஆத்மசித்தி( கர்மம் ஞானம் இரண்டாலும் அலங்கரிக்கப்பட்ட அந்தக் கரணத்தை யுடையவனுக்கு )-என்கிற படியே , கர்ம ஞான சம்ஸ்க்ருத அந்த கரணனுக்கு பிறக்கும் அது ஓன்று ஆகையாலே -சேதன சாத்தியமாய் – பகவத் பிரசாதந உபாயதயா – தத் பிராப்தி சாதனமான பக்தியாக – ச உப ப்ரும்ஹண வேதாந்த சாஸ்த்ரத்தில் ( இதிகாச புராணங்களுடன் கூடிய வேத சாஸ்திரத்தில் ) சொல்லப் பட்டது என்கை-

(வைகும்‌ சிறப்பு விட்டுக்‌ குற்றேவ லென்னாத அநத்ய ப்ரயோஜநமாய்‌) “’நின் புகழில்‌ வைகும்‌ தம்‌ சிந்தையிலும்‌ மற்றினிதோ நீ அவர்க்கு வைகுந்தமென்றருளும்‌ வான்‌?” (பெரியதிருவ. 53) என்றும்‌, “’உலகு படைத்துண்ட வெந்தை”” (திருவாசி.2) என்று தொடங்கி, ”அமுத வெள்ளத்தானாம்‌ சிறப்புவிட்டு ஒருபொருட்கசைவோரசைக நல்வீடு பெறினும்‌ கொள்வதெண்ணுமோ தெள்ளியோர்‌ குறிப்பே” என்றும்‌, “மேலால்‌ பிறப்பின்மை பெற்றடிக்கீழ்க்‌ குற்றேவலன்று மறப்பின்மை யான்‌ வேண்டும்‌ மாடு’* (பெரியதிரூவ. 58) என்றும்‌ சொல்லுகிறபடியே இவ்வநுஸந்தாந ரஸத்தாலே தேஸா விஸேஷத்திலநுபவத்தை உபேஷிக்கும்படி தானே பர மப்ரயோஜநமாம்படி இருக்கையாலே அநந்ய ப்ரயோஜநமாய்‌.. (வேத,ந-௨ பாஸந-ஸேவா-த்‌யாநாதி களென்னுமவை) வேதநம்‌, உபாஸநம்‌, ஸேவை, த்யாநம்‌, த்‌ருவாநுஸ்ம்ருதி, தர்சந ஸமாநாகாரம்‌, பக்தி என்றும்‌ சொல்லப்படுகிறவை யாகையாலே இந்த ப,க்தி ஸாத்‌ய ஸாதந பக்தியாக ஸாஸ்த்ர ஸித்‌தம்‌. ‘உபய பரிகர்மித ஸ்வாந்தஸ்ய ஐகாந்திகாத்யந்திக பக்தியோகைகலப்‌ய”(ஆத்மஸித்‌தி,) என்று கர்ம ஜ்ஞாந ஸம்ஸ்க்ருதாந்தா கரணனுக்குப்‌ பிறக்கும தொன்றாகையாலே ஸாத்‌,யமாய்‌, பகவத் ப்ரஸாதநோபாயமாகையாலே ஸாதநமான பக்தி என்று ஸாஸ்த்ரங்களாலே சொல்லப்பட்டதென்கிறார்‌. ஆக இத்தால்‌ சேதநனாலே ஸாத்‌யமாய்‌, உபாய ரூபமான பக்தி விஸேஷம்‌ சொல்லிற்று –

ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு
என் செய்வன் என்றே இருத்தி நீ நின் புகழில்
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ யவர்க்கு
வைகுந்தம் என்று அருளும் வான்–53-
–உன் புகழிலே தங்குகிற சிந்தையில் காட்டில் இனிதோ
நீ போரப் பொலியச் சொல்லிக் கொடுக்கிற பரமபதம்-ஸித்தத்துக்கு இடை நிற்குமோ ஸாத்யம்
இதுக்கு அது யுக்தி ஸாரமே காரணம்-குண அனுபவ யோக்கியமான இந்த ஜென்மத்தில் காட்டில் பரம பதம் ஸ்லாக்யம் என்கைக்குக் காரணம் பரமபதம் யுக்தி சாரமாய் இருப்பதே என்று யதா ஸ்ருத பங்க்தி தாத்பர்யம் –

உலகு படைத்து உண்ட எந்தை அறை கழல் சுடர் பூம் தாமரை சூடுதற்கு அவாவு ஆர்
உயிர் உருகி யுக்க நேரிய காதல் அன்பில் இன்பீன் தேறல் அமுத
வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு ஒரு பொருள்க்கு அசைவோர் அசைக திரு வோடு மருவிய
இயற்க்கை மாயாப் பெரு விறல் உலகம் மூன்றினோடு நல் வீடு பெறினும்
கொள்வது எண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே
?-2–-இம் மேன்மையாலும் நீர்மையாலும் வடிவு அழகாலும் விளைந்த பரபக்தியாதிகளை மேலே விளக்கி அருளுகிறார் –அவ்வுடம்போடே இருக்கச் செய்தே பெறக் கடவதான பரபக்தியாதிகளோடே இவை ஒவ்வாதே நிற்கிற இடம் -(ஒவ்வாது என்ற இடம் )- விசார விஷயமோ –சார அசார விவேகம் பண்ணி இருப்பார்க்கு மநோ ரதத்துக்கு விஷயம் அல்ல-சார அசார விவேகஞ்ஞர் நல்லதுக்கு தீயத்துக்கும் தரமிட்டுப் -பிரித்து அறிந்து – இருப்பார்கள்

மாலே படிச் சோதி மாற்றேல் இனி உனது
பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன் –மேலால்
பிறப்பின்மை பெற்று அடிக் கீழ் குற்றேவல் அன்று
மறப்பின்மை யான் வேண்டும் மாடு –58-
–ஸம்ஸார நிவ்ருத்தி பூர்வகமாகப் பரம பதத்திலே உன் திருவடிகளிலே அடிமை செய்கை யன்று எனக்கு தனம்-பரமபதத்தில் நீ இருக்கும் இருப்பை மறவாமை
பரமபதத்திலே போனால் அல்லது மறவாமை இல்லாமையாலே பரம பதமும் வேண்டினாராய்ப் பலித்தது-இவருக்கு மறப்புத் தான் உண்டோ என்னில் ப்ரக்ருதி ஸம்பந்தம் உடையார்க்கு வருமது நமக்கும் வாராதோ என்று பயப்படுகிறார்-ஊரடைய வெந்து கொண்டு வாரா நின்றால் நம் அகம் ஒன்றும் பிழைக்கும் -என்று பயம் கெட்டு இருப்பார் உண்டோ –

இப்படி உபாசன ரூபமாய் -உபாயமுமாயும் -இருந்துள்ள இது போல் அன்றிக்கே , உபேய பூத கைங்கர்ய உபகரணமாக பிரபன்னர் பகவான் பக்கல் அபேஷித்து பெரும் பக்தி விசேஷத்தை பிரதி பாதிக்கிறார் மேல் –இனி உபேயமான கைங்கர்யோப கரணமாய்‌, ப்ரார்த்‌யமான பக்தி விஸேஷம்‌ சொல்லுகிறது மேல்‌-

ஸ்வீக்ருத சித்த சாதனர்–இத்தை சாத்தியமாக இரக்க பிராப்திக்கு முன்னே சித்திக்கும்–சூரணை-100-(இத்தை -பக்தியை )

அதாவது
த்வத் பாத மூலம் சரணம் பிரபத்யே -ஸ்தோத்ர ரத்னம் -22-என்றும் ,-த்வத் பாதாரவிந்த யுகளம் சரண மஹம் பிரபத்யே–கத்யத்ரயம் – -என்றும் சொல்லுகிறபடி , ஸ்வீகரிக்க பட்ட சித்த சாதனத்தை உடையவர்கள்..-இத்தை –-அதாவது – இந்த பக்தியை போஜனத்துக்கு ஷூத்து போலே கைங்கர்யத்துக்கு உபகரணம் ஆகையாலே , பிராப்யமான கைங்கர்யத்தோபாதி இதுவும் நமக்கு பிராப்யம் என்று புத்தி பண்ணி , பகவத் பக்திம் அபீ பிரயச்சமே -ஸ்தோத்ர ரத்னம் -54-என்றும் ,
ஸ்தான த்ரயோதித பரபக்தி யுக்தம் மாம் குருஷ்வ-சரணாகதி கத்யம் -என்றும் ,-பரபக்தி ,பரஞான ,பரம பக்தி ஏக ஸ்வாபம் மாம் குருஷ்வ–சரணாகதி கத்யம் -என்றும் சொல்லுகிற படி பகவான் பக்கலிலே அர்த்திக்க-இமாம் பிரக்ருதிம் ஸ்தூல சூஷ்ம ரூபம் விஸ்ருஜ்ய ததா நீ மேவ-சரணாகதி கத்யம் –இத்யாதியிலே சொல்லுகிற படி – சரீர வியோகசம அநந்தரம் பகவத் பிராப்தி பண்ணுவதற்கு முன்னே சித்திக்கும் என்கை –

’த்வத் பாத மூலம்‌ ஸரணம்‌ ப்ரபத்‌யே”” (ஸ்தோ,ர.22) என்றும்‌, ‘“ஸ்ரீமந்‌ நாராயண சரணாரவிந்த,ம்‌ ஸரணமஹம்‌ ப்ரபத்‌யே”” (ஸ -கத்யம்‌) என்றும்‌, “லோக விக்ராந்த சரணென ஸரணம்‌ தே அவ்ரஜம் விபோ ”” (ப,வி.பு.) என்றும்‌ சொல்லுகிறபடியே இப்படி ஸித்‌த ஸாதந ஸ்வீகாரம்‌ பண்ணினவர்கள்‌ இத்தை ஸாத்‌யமாக இரக்க, இந்த பக்தி கைங்கர்யோபகரணமாய்க் கொண்டு ப்ராப்யாந்தர் கதமாகையாலே “‘பகவத்‌ பக்திமபி ப்ரயச்ச, மே!” (ஸ்தோ.ர.) என்றும்‌, ‘பரபக்தி பரஜ்ஞாந பரமபக்த்யேக ஸ்வபாவம்‌ மாம்‌ குருஷ்வ”’ (ர.கத்‌யம்‌) என்றும்‌ சொல்லுகிறபடியே இந்த பக்தியை ஸாத்‌யமாக அவன் பக்கலிலே அபேஷிகிக்க, ப்ராப்திக்கு முன்னே ஸித்திக்கும்‌, இது கைங்கர்யத்துக்கு பூர்வ பாவியாகையாலே பகவத் பிராப்திக்கு முன்னே ஸித்‌திக்கும்‌ என்கிறார்‌.

ந தர்மநிஷ்டோ’ஸ்மி நசாத்மவேதீ
நபக்தி மாம்ஸ்த்வச் சரணாரவிந்தே |
அகிஞ்சநோ’நந்யகதிஶ் ஶரண்ய!
த்வத் பாத மூலம் ஶரணம் ப்ரபத்யே |
|–22–சரணடையத் தகுந்த ஸ்வாமியே! நான் கர்ம யோகத்தில் நிலையாக இல்லை; என்னிடத்தில் ஆத்ம ஞானமும் இல்லை;-என்னிடத்தில் உன் திருவடிகள் விஷயமான பக்தியும் இல்லை; இப்படி வேறு உபாயமும் புகலும் இல்லாத நான்,-உன் திருவடிகளையே உபாயமாக உறுதியாக ஏற்றுக் கொள்கிறேன்.

பர பக்தி பர ஜ்ஞான பரம பக்த்யேக ஸ்வபாவம் மாம் குருஷ்வசூரணை -15பர பக்தியும் -அதன் கார்யமான பர ஜ்ஞானமும் -அதன் கார்யமான பரம பக்தியும் – எனக்கு யாவதாத்மா பாவியாக உண்டாக வேணும் -என்கிறார்

மச் சரணார விந்த யுகள  ஐகாந்திக ஆத்யந்திக பர பக்தி பர ஜ்ஞான பரம பக்தி விக்ன – நிரதிசய போக்யமான என் திருவடிகளில் நித்தியமாய் ஏக ரூபமாய் செல்லுகிற பர பக்தி பர ஜ்ஞான பரம பக்தி களுக்கு இடைச் சுவரான முன் சொன்னவற்றை உடையீராய்–மச் சரணாரவிந்த யுகள ஐகாந்திக ஆத்யந்திக பர பக்தி பர ஜ்ஞான பரம பக்தி – இது காணும் பெரும் பேறு

அவபோதிதவாநிமாம் யதா
மயி நித்யாம் பவதீயதாம் ஸ்வயம் |
க்ருபயைததநந்ய போக்யதாம்
பகவந்! பக்திம் அபி ப்ரயச்ச மே ||-
-54-என் ஸ்வாமியே! எப்படி உன்னுடைய நிர்ஹேதுக க்ருபையால் என்னுடைய சேஷத்வத்தை எனக்கு அறிவுறுத்தினாயோ, அதேபோல வேறு எங்கும் கிடைக்காத, உன்னிடத்தில் பக்தி செய்யும் அந்த இனிய அனுபவத்தையும், நீயே அளிக்க வேண்டும்.

இனி இவ் ஆழ்வாருடைய பக்தி விசேஷம் இருக்கும் படியை அறிவிக்கிறார் …

இது உபயமும் அன்றிக்கே-அறியாக் காலத்தே-ஒக்கப் பிறந்து-தழுவி-நின்று-கட்டமே-நோயாய்
உலர்த்தி-வீழ்ந்து-அலப்பாய்-த்யாக ஸ்வீகார நிஷ்டா ஹானிகள் ஆக்கி சத்தா போக விருத்தி உபகரணம் ஆவது ஓன்று-சூரணை -101-

( இது -ஆழ்வாருடைய பக்தியானது -சாதன ஸாத்ய பக்திகள் போலே அன்றே –சத்தைக்கும் போகத்துக்கும் கைங்கர்ய உபகரணம் என்றவாறு )-அதாவது-கீழ் உக்தையான இவ் ஆழ்வார் உடைய பக்தி ,-ஸ்வ யத்தன சாத்யையாய் உபாய பூதையாய் இருக்கும் பக்தியும் ,-உபாய பரிக்ரஹ அனந்தர அபேஷிக்க உபாய பலமாய் வரும் பக்தியும் ஆகிற-நடுவில் சொல்லுகிற இரண்டும் அன்றிக்கே –
அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து -திருவாய் -2-3-3–என்றும்
பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ்நிக்த லஷ்மனோ லஷ்மி வர்த்தன –பால -18-27- -என்கிற படியே
அறிவுக்கு சம்பாவனை இல்லாத பால்யத்திலே ,பிராப்தி பலமான அடிமையிலே , அதி பிராவண்யத்தை பிறப்பித்தது என்னும் படி திருத் துழாய்க்கு மணம் போலே ஒக்கப் பிறந்து –

(இது உபயமுமின்றிக்கே) இவருடைய பக்தி உபாஸகர்‌ கர்ம ஜ்நாநங்களாலே ஸாதித்து பகவத் ப்ரஸாதத்துக்கு ஸாதநமாகக்‌ கொள்ளுகிற பக்தியுமன்றிக்கே, ஸித்‌த ஸாதந பரிக்‌ரஹம்‌ பண்ணினவர்கள்‌ கைங்கர்யோபகரணமாக அபேஷித்துப்‌ போருகிற பக்தியுமன்றிக்கே; (அறியாக் காலத்தே ஒக்கப் பிறந்து] ‘அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண்‌ அன்பு செய்வித்து’” (திருவா. 2 – 8 – 3) என்றும்‌, ““பால்யாத் ப்ரப்‌ரதி ஸுஸ்நிக்‌த.”” (ரா.] என்றும்‌ சொல்லுகிறபடியே அறிவு நடையாடுகைக்கு யோக்‌யதை யில்லாத அதிபால்யத்திலே கைங்கர்யத்தைப்‌ பெற்றல்லது நிற்க வொண்ணாத அதிமாத்ர ப்ராவண்யத்தை விளைத்தான்‌ என்று சொல்லும்படி ”ஸஹஜ பக்திரஸ்மாகம்‌”‘ என்று ஸஹஜையாய்‌,

அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று
அறியாமை வஞ்சித்தாய் எனதாவியுள் கலந்தே –2-3-3-அறிவு கேட்டைப் பண்ண வற்றாய்-துஸ்தரமான சம்சாரத்திலே இருக்கிற என்னை – அடியேன் -என்கிறது -அஹம் சப்த பர்யாயம் – அறிவுக்கு சம்பாவனை இல்லாத பால்யத்திலே -பிராப்தி பலமான அடிமையிலே ஸ்நேஹத்தை பிறப்பித்து வைத்தாய்–இங்கே வைத்து பகவத் விஷயத்தை அவஹாகிப்பித்தது-அத்தாலே ஒரு தேச விசேஷத்திலே பெறும் பேறு சாத்மிக்கைக்காகவும்- ப்ராப்யத்தில் த்வரை விஞ்சுக்கைக்காகவும் இறே
போக்யதை மிக்கு இருக்கிறபடி 

தழுவி நின்று –அதாவது — தழுவி நின்ற காதல் தன்னால் -திருவாய் -4-7-11–என்று விடுவேன் என்றாலும் ,விட ஒண்ணாத படி உடன் வந்தியாய்-கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும் –திருவாய் -7-2-4-என்றும் ,-வேட்கை நோய் கூர –9-6-7- என்று அநுபாவ்ய விஷயத்தை யதா மனோரதம் அனுபவிக்கப் பெறாத போது ,போஜனம் பெறாத தசையிலே பசி போலே , கஷ்டம் எனபது -வியாதி என்பதாம் படி -வெறுப்பை விளைத்து –உலர்த்தி –அதாவது –வேவரா வேட்கை நோய் மெல்லாவி உள் உலர்த்த –2-1-10-என்றும் ,-வீழ்ந்து –அதாவது – உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து –5-7-2-என்றும் ,-அலப்பாய்-
அதாவது –உன்னைக் காண்பான் நான் அலப்பாய் –5-8-4-என்றும் ,சொல்லுகிற படி அசோஷ்யமான ஆத்ம வஸ்துவைக் குருத்து வற்றாம் படி சோஷிப்பித்து ,-கடலிலே விழுந்தால் போல் கரை ஏற ஒண்ணாத படி அபிநிவேச ரூபமான தன்னுள்ளே ஆழ்ந்து போக்யமான ,அவ் விஷயத்தை காண வேண்டும் என்று அலமாக்கப் பண்ணி –

*‘தழுவி நின்ற காதல்‌ ”” (திருவா. 4 – 7 -11) என்று உடன் வந்தியாய்‌, கட்டமே காதல்‌” (திருவா. 7 – 2 – 4) என்றும்‌, ““வேட்கை தோய் கூர” (திருவா. 9 – 6 7) என்றும்‌ அபி, நிவேஸாநுகுணமாக அநுபவம்‌ ஸித்‌தியாமையாலே இது கஷ்டம்‌ என்று சொல்லும்படி வ்யாதி ரூபமாகையாலே பாத,கமாய்‌, ““வேவாரா வேட்கை தோய்‌ மெல்லாவி உள்ளுலர்த்த”” (திருவா. 2 – 1 – 10) என்றும்‌, “உன்னைக் காணுமவாவில்‌ வீழ்ந்து” (திருவா. 5 – 7 – 2) என்றும்‌, ““உன்னைக் காண்பான்‌ நானலப்பாய்‌”” (திருவா. 5 – 8 – 4) என்றும்‌ அஸோஷ்யமான ஆத்ம வஸ்துவை ஸோஷிப்பித்து, அபி நிவேஸத்திலே ஆழ்ந்து, காண வேணுமென்று அலமாக்கப் பண்ணி.

இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்; எழுந்துலாய் மயங்கும் கை கூப்பும்;
கட்டமே காதல்’ என்று மூர்ச்சிக்கும்; ‘கடல்வண்ணா! கடியை காண்’ என்னும்;
‘வட்டவாய் நேமி வலங்கையா!’ என்னும் ‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
சிட்டனே! செழுநீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறத் தென் சிந்தித்தாயே ?–7-2-4—அமுத வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு -என்று ப்ரேமமே புருஷார்த்தம் என்று இருக்கிற இவள் -ப்ரேமம் போலே தண்ணிதாய் இருபத்தொரு இல்லை என்னா நின்றாள் -இது ரசிப்பது இவ்விஷயத்தின் உடைய லாப ஹேது வான போது இறே -விஸ்லேஷத்தில் நலிவுக்கு உடலாகையாலே தண்ணிது என்கிறாள் -இது கட்டம் என்னும் காட்டில் இதுக்கு பரிஹாரம் பிறந்தது ஆகாமையாலே மூர்ச்சிக்கும் –

தழுவி நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன்றனைக்
குழுவு மாடம் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல்
வழு விலாத ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இப்பத்தும்
தழுவப் பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே.–4-7-11–நான் விடுவேன் என்னிலும் விட ஒண்ணாத உடன் வந்தியானஅதிமாத்ர ப்ரேமத்தாலே

காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–9-6-7-அபி நிவேசம் மிகும் படி அனுசந்தித்து
கரைந்து உகும்--சிதிலமாய் -ஓர் அவயவி பிரதிபத்தி பண்ண ஒண்ணாத படி உகும் –

வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்
மாவாய் பிளந்த மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே –2-1-10—ஒரு கால் வெந்து சமையக் கடவது அன்றிக்கே -அக்னி நேவாக் நி பர்வத -என்கிறபடியே வெந்த இடமே இந்தநமாக தஹியா நிற்கிற காதல்
அளவில்லாத வேட்க்கை நோய்-மெல்லாவி –பாத்தம் போராத ஆத்மாவை -அதாஹ்யமாய் இருப்பது கேவல அக்னி யாகில் இறே-யுள்ளுலர்த்த- கூடோ அக்னி ரிவ பாதபம் -கோடாரத்தில் பற்றின அக்னி போலே குருத்து வற்றாக வற்றுவிக்க

அங்குற்றேனலேன் இங்குற்றேனலேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான்
எங்குற்றேனுமலேன் இலங்கை செற்ற அம்மானே!
திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவர மங்கல நகருறை
சங்கு சக்கரத்தாய்! தமியேனுக்கு அருளாயே.–5-7-2–சாதனம் அனுஷ்ட்டித்து முக்த பிராயனாய் இருக்கிறேன் அல்லேன் -சாதனம் அனுஷ்டானம் பண்ணுமவர்களில் ஒருவனாய் இருக்கிறேன் அல்லேன் -மேலும் சாதன அனுஷ்டானம் பண்ண ஒண்ணாத படி ஸுந்தரியாதிகளிலே ஈடுபட்டு உன்னைக் காண வேணும் ஆசையால் பலஹீனனாய் தளர்ந்து இனி உபாய அனுஷ்டான ஷமனும் அல்லேன் -இது பூர்வர்கள் நிர்வாகம் –அதவா – நீ இருந்த இடத்தே வந்து கிட்டி உன்னை அனுபவிக்கிறேன் அல்லேன் -உன் பக்கல் நிரபேஷராய் இருக்கிற சம்சாரிகளிலே ஒருவனாய் இருக்கிறேன் அல்லேன் -உன்னை ஒழிய தரித்து இருக்கிற சம்சாரிகளோடே பொருத்தம் யுடையேன் அல்லேன் –அங்கு வர மாட்டேன் -அபி நிவேசத்தால் இங்கு நிற்க மாட்டேன் -பிறரோடு பொருத்தம் உடையேன் அல்லேன் -என்றுமாம் –

செலக் காண்கிற்பார் காணு மளவும் செல்லும் கீர்த்தியாய்!
உலப்பிலானே! எல்லா உலகு முடைய ஒருமூர்த்தி!
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான் நான்
அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே
.–5-8-4-க்ரம பிராப்தி பற்றாதபடி ஸ்நேஹித்து இருக்குமவர்கள் -அவர்களதான திருக் குடந்தையில் அவர்களை பிரிய மாட்டாமையாலே உடம்போடு கண்டு அனுபவிக்கலாம் படி கண் வளர்ந்து அருளுகிறவனே-ஆஸ்ரித வத்சலனான உன்னை காண் கைக்காக -அத்தலை இத்தலையாய் நீ என்னை காண பட்ட அளவன்று-நான் உன்னை காண் கைக்கு பட்டது-அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே-அலமந்து -விஷயம் சந்நிஹிதமாய் இருக்கச் செய்தே-ஆகாசத்தை பார்க்கிறது -நினைத்த பரிமாற்றம் பெறாமையாலே ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு உதவ வந்து தோற்றினால் போலே -தம் தசையைப் பார்த்து தோற்றுகிறானோ என்று பார்த்து -என்னுடைய நிராலம்பநதையைப் பார்த்து என்னுமாம் ஆண்டான் வரக் காணா மையாலே ஸ்நே ஹிதிகள் செய்வதும் செய்யா நின்றேன் -க்ருபணர் செய்வதும் செய்யா நின்றேன் -சபலர் செய்வதும் செய்யா நின்றேன் -விரக்தர் செய்வதும் செய்யா நின்றேன்

தியாக ஸ்வீகார நிஷ்டா ஹானிகளாக்கி –அதாவது –தியாக நிஷ்டைக்கு ஹானி யாக்கி – ஸ்வீ கார நிஷ்டைக்கு ஹானி ஆக்கி –என்று கொண்டு-தியாக நிஷ்டா ஹானியாக்கி-அதாவது –
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்-5-8-3- -என்கிற படியே இதர உபாய பரித்யாக பூர்வமாக அவனே உபாயம் என்று அறுதி இட்டு இருக்கும் இவரை–குதிரியாய் மடலூருதும்-5-3-9- -என்றும்-மடலூர்ந்தும் எம்மாழி அம் கைப் பிரானுடைத் தூ மடல் தண் அம் துழாய் மலர் கொண்டு சூடுவோம்-5-3-10- -என்னும்படி த்யஜித்த உபாயத்தில் மூட்டுகையாலே -த்யாக நிஷ்டா ஹானியையும் ,-

என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3—நானும் எனக்கு கடவனாய் -பிறரும் சக்தர் ஆனவன்றும் -உன்னால் வரும் நீ ஒழிய -என்னால் வரும் நீயும் வேண்டா -பிறரால் வரும் நீயும் வேண்டா என்கை -த்வம் ஏவ உபாயம் போதோ மே பாவ –

நாணும் நிறையும் கவர்ந்து என்னை நன்நெஞ்சம் கூவிக்கொண்டு
சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான் தன்னை
ஆணை என் தோழீ! உலகு தோறு அலர் தூற்றி ஆம்
கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே.–5-3-9-–என்னாலான மிறுக்குகள் செய்து –கோணை-மிறுக்கு-அதாவது மடல் கொண்டு புறப்பட்டவாறே எதிரே வரும் –சென்று கும்பிடக் கடவேன்-குதிரியாய்-என்று தடை இல்லாப் பெண் -அடங்கா ஸ்திரீயாய் –குதிரி என்று ஆபரணம் இட்டு வைக்கும் செப்பாய் -இவளுக்கு ஆபரணம் -நாணும் நிறையும் இ றே -அவை போகையாலேகேவல சரீர மாத்ரமாய் செல்லக் கட வேன்-குதிரி -குதிரையை யுடையவள்-பனை மடலை குதிரையாக யுடையவள் என்றுமாம் –மடல் ஊர்துமே.-இரண்டு தலையையும் நோக்கி இருந்தது அமையும் –இனி மடலூர்ந்தே விடக் கடவேன் –

யாமடல் ஊர்ந்தும் எம் ஆழி அங்கைப் பிரானுடைத்
தூமடல் தண்ணத் துழாய் மலர் கொண்டு சூடுவோம்

யாமடம் இன்றித் தெருவு தோறு அயல் தையலார்
நாமடங்காப் பழி தூற்றி நாடும் இரைக்கவே.–5-3-10-செய்யக் கடவது அல்லாததை செய்தே யாகிலும் –தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று இருக்கக் கடவ நாம் மடலூர்ந்தே யாகிலும் -இங்கு மடலாக நினைக்கிறது -பெற்று அன்று தரியாத உபேய த்வரையும்-அதுக்கு அடியான உபாய வை லக்ஷண்ய அனுசந்தானமும் உபாயம் தன்னாலே பேறு என்ற துணிவும் -வேறு ஒன்றை உபாயமாக நினையாமையும் -க்ரம பிராப்தி பற்றாமையும் -மடலாய்ச் செல்லுகிறது-மடலைக் கொடு புறப்பட்டால்-எதிரே வந்து என் கையில் மடலை வாங்கி தன் தோளில் மாலையை வாங்கி என் தோளில் இடில் இறே அவனுக்கு நிறம் உள்ளது -இல்லையாகில் அவன் படும் பாடு பாராய் -செவ்வி மாலை சூடக் காண் நான் வேண்டி இருக்கிறது -என் தோளில் மாலை பாராய் சரு கான படி -அத்தலையை அழித்து ஆகிலும் பெற கடவோம்

ஸ்வீ கார நிஷ்டைக்கு ஹானி ஆக்கி
அதாவது –ஆறு எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் -5-7-10–என்றும்-கழல்கள் அவையே சரணாகக் கொண்ட–5-8-11- -என்றும் ,-அடி மேல் சேமம் கொள் தென் குருகூர் சடகோபன் -5-9-11-என்றும் ,
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் -5-10-11–என்றும் ,-அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே-6-10-10 -என்று-நோற்ற நோன்பு-5-7– பதிகம் தொடங்கி அடுத்து அடுத்து பிரபத்தி பண்ணும்படி ஆக்குகையாலே
சக்ருதேவஹி ,சாஸ்த்தார்த்த க்ருதோயம் ,தாரயேன் நரம்-ஸ்ரீ லஷ்மீ தந்திரம் –-சக்ருதேவ பிரபன்னாய தவாஸ் மீதிசயாசதே அபயம் சர்வ பூதேப்ய தாதாமி ஏதத் விரதம் மம –யுத்த –18-33- –இத்யாதிகளில் சொல்லுகிற படியே சக்ருத் கர்தவ்யமான ஸ்வீகாரத்தில் ,நிஷ்ட ஹானியையும் உண்டாக்கி.-

(த்யாக ஸ்வீகார நிஷ்டா ஹாநிகளாக்கி) த்யஜித்த உபாயத்திலே மூட்டி, த்யாக நிஷ்டையைக் குலைத்து, ஸக்ருத்‌ ஸ்வீகாரம்‌ அமைந்திருக்க *நோற்ற தோன்பு தொடங்கி, அடுத்தடுத்து ப்ரபத்தி பண்ணுகையாலே ஸ்வீகாரத்தில்‌ நிஷ்டையைக் குலைத்து. 

ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக் கோர் கைம்
மாறு நான் ஒன்றிலேன் என தாவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெருஞ் செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை
நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!–5-7-10-ஆறு -என்று உபாயம் -சரண் என்று உபேயம் -உபாய உபேயங்கள் இரண்டும் உன் திருவடிகளேயாம் படி பண்ணினாய் என்று பிள்ளான் நிர்வஹிக்கும்--இவை இரண்டிலும் உபாயத்தையே சொல்லுகிறது என்று பட்டர் நிர்வஹிப்பர்-எனக்கு உபாயம் உன் திருவடிகளேயாம்படி பண்ணித் தந்தாய்ஆறு -உபாயம் -உபாக்யார்த்தைக வாசக -என்கையாலே சரண் என்று உபாயம் –எனக்கு என்று -உபாயாந்தர நிஷ்டரைக் காட்டிலும் தமக்கு உள்ள வேறுபாடு சொல்லுகிறார் –நோற்ற நோன்பிலேன் என்று தொடங்கி-உபாயாந்தர சூன்யத்தையை முன்னிட்டு உபாய நிஷ்கர்ஷம் பண்ணுகிற திரு வாய் மொழி யாகையாலே அத்தையே நிகமிக்கிறது -அவதாரணத்தாலே ஏக பதத்தை நினைக்கிறது -ஈஸ்வரனை பற்றின ஊற்றத்தாலே உபாயாந்தரங்களை நெகிழ்கை ஒழிய -நாஸ்திக்யத்தாலே விடுமன்று அது விஷயாந்தர ப்ராவண்ய ஹேதுவாம் -ஒளஷத சேவை பண்ணினான் ஒருவன் சர்ப்பத்தின் வாயிலே கை கொடுத்தால் நிர்ப்பாதம் -ஒளஷத ஸ்பர்சம் இல்லாதவன் அத்தைச் செய்தால் மரண ஹேதுவாம் –

உழலை என்பில் பேய்ச்சி முலை யூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே.–5-8-11—தமக்கு உபாயமாக முன்பு பிரகாசிப்பித்த திருவடிகளையே அபிமத சித்திக்கு உபாயமாக புத்தி பண்ணிக் கொண்ட திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வாரானவர்-

நாமங் களாயிர முடைய நம் பெருமானடி மேல்
சேமங் கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த

நாமங்களாயிரத்துள் இவை பத்தும் திருவல்லவாழ்
சேமங்கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே.–5-9-11-தேவோ நாம சஹஸ்ரவான் என்கிறபடியே குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திரு நாமங்களை யுடையவன் ஆகையாலே சர்வேஸ்வரனாக பிரசித்தனானவன்-அவனைப் பெறாதே நோவு பட நோவு பட அவன் திருவடிகளே ரக்ஷகமாகப் பற்றும் ஆழ்வார் பிராட்டி ஆற்றாமை மிக்க இடத்திலும் ராவணனை சபியாதே பெருமாள் வரவை பார்த்து இருந்தால் போலே அவனுக்கு திரு நாமங்கள் போலே குண சேஷ்டிதங்களுக்கு ப்ரதிபாதகமான ஆயிரத்திலும்-ஆராய்ந்து உரைத்த இப்பத்தையும்-

நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்
ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்

ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ் வெய்துவர் வைகலுமே.–5-10-11—அனந்த சாயித்தவம் சர்வாதிக வஸ்துவுக்கு லக்ஷணம் ஆகையாலே -சர்வாதிகனே சரண்யன் என்கிறது -திரு வனந்த ஆழ்வானுடைய புருஷகார பாவம் சொல்லுகிறது என்றுமாம் –படுக்கையைச் சொல்ல படுக்கை யுடையாரைச் சொல்லிற்றாம் இறே
நம்பிரான் -ஆஸ்ரித விஷயத்தில் உபகார சீலனானவன் –சரணே சரண் நமக்கு என்று -நமக்கு திருவடிகளே உபாயம் என்று –அவதாரணத்தாலே உபாய நைரபேஷ்யம் சொல்லுகிறது -சம்சாரிக ஸ்வ பாவங்கள் மேலிட்டு விபரீதமே பலியா நின்றாலும் இது தவிர வேறு ஒன்றில் கால் தாழாது ஒழி கை -மஹா விச்வாஸம் ஆகிறது –நாடொறும் ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்-ஆக நூற்ற
நாள் தோறும் இதுவே மநோ ரதமான ஆழ்வார் -பகவத் குண பிரேரிதராய் தாம் உள்ராகைக்காக-

அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன் றில்லா அடியேன் உன் னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10-உன்னடிக் கீழ் -விக்ரஹ யோகம் சொல்லுகிறது-அமர்ந்து -செறிந்து -சஹகாரி வ்யவதானம் இன்றிக்கே ஒழிகை
புகுந்தேனே.–போக்கு வரவு யுண்டாய் அன்று -புத்தி கதியாய் அத்யாவசாயத்தை சொல்லுகிறது

சத்தா போக விருத்த உபகரணம்-ஆவது ஓன்று–சத்தைக்கும் போகத்துக்கும் விருத்திக்கும் உபகரணமாவது ஓன்று உண்டு பகவத் விஷயத்தை நினையாமை என்றும் ,சத்தா ஹானி என்றும் இரண்டு இல்லை என்று இருக்கும் இவருக்கு –அநவரத தத் விஷய நினைவு -ஸ்மரண -ஹேது ஆகையாலே-சத்தைக்கும் – எல்லாம் கண்ணன்-6-7-1- -என்று இருக்கும் இவருக்கு தத் விஷய அன்பு ருசியை மென் மேலும் விளைக்கையாலே போகத்துக்கும் –-வழு இலா அடிமை செய்ய வேண்டும் -3-3-1-என்று இருக்கும் இவருக்கு , அசேஷ சேஷ தைக ரதித்வதுக்கு உடலாகையாலே வ்ருத்திக்கும் உபகரணமாய் இருக்கும் என்கை –அன்றிக்கே –சத்தா போகேத்யாதிக்கு -நா கிஞ்சித் குர்வதச் சேஷத்வம்—ஸ்தோத்ர ரத்னம் -46-என்று கிஞ்சித் கரியாத வஸ்துவுக்கு சேஷத்வம் இல்லை என்கையாலே ,சேஷத்வ ஏக நிரூபணியனான இவனுடைய சத்தை -கிஞ்சித் காரத்திலே ஆதலால் இவனுக்கு சத்தா ஹேதுவாய்-தனக்கே ஆக எனைக் கொள்ளும் ஈதே -2-9-4- -என்றும்-உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் -10 -3 -9—-என்றும்-கதா பிரகர்ஷா இஷ்யாமி- ,ஸ்தோத்ர ரத்னம் -46-இத்யாதிகளின் படியே – இது தான் பரம பிரயோஜனமாய் பண்ணும் அதாகையாலே அவனுக்கு போகமாய் இருக்குமதான கைங்கர்ய வ்ருத்திக்கு உபகரணமாய் இருப்பது என்றுமாம்–ஆக கீழ்ச் செய்தது ஆயிற்று –இவருடைய பக்தி சாதித்து பெற்றதும் அன்று-அபேஷித்து பெற்றதும் அன்று-
சஹஜையாய் ,சத்தாதிகளுக்கு ,உபகரணமாய் இருப்பது ஓன்று என்றது ஆய்த்து –

(ஸத்தா போக வ்ருத்த் யுபகரமானதொன்று) ““நாகிஞ்சித்குர்வதஸ் ஸேஷத்வம்‌”’ (வேதாஸம்‌) என்று ஸேஷத்வைக நிரூபணீயமான இவருடைய ஸத்தை கிஞ்சித்காரத்தாலே யாகையாலே இவருடைய ஸத்தா ஹேதுவாய்‌, “’தனக்கேயாக”’ (திருவா. 2 – 9 – 4) என்றும்‌, “உன்தன்‌ திருவுள்ள மிடர்கெடுந்தோறும்‌”” (திருவா. 10 – 3 – 9) என்றும்‌ “*கதாத்‌, ரக்ஷ்யதி மாம்‌ பதி” (ரா.ஸு.) என்றும்‌, ”கதா ப்ரஹர்ஷயிஷ்யாமி” (ஸ்தோ.ர. ) என்றும்‌, “உன்னாகமுற்றுமகத்தடக்கி ஆவி யல்லல்‌ மாய்த்ததே”” (திருவா. 4 – 3 – 3) என்றும்‌ ஸர்வேஸ்வரனை பலியாகச்‌ சொல்லுகையாலே அவனுக்கு போகமாயிருக்கிற கைங்காயத்துக்கு உபகரணமாயிருப்பதொரு பக்தி என்கிறார்‌. ஆக, இதுக்குக் கீழ்‌ இவருடைய பரபக்தி ஸாதித்துப்‌ பெற்ற பக்தியுமன்று, அபேக்ஷித்துப்‌ பெற்ற பக்தியுமன்று, ஸஹஜையாய்‌, ஸத்தா ப்ரயுக்தையான பக்தி என்றார் –

உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற்றிலையு மெல்லாம்
கண்ணன்
எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர்வளம் மிக்கவன் ஊர்வினவித்
திண்ணம் என்இளமான் புகுமுர் திருக்கோளூரே.–6-7-1–ஜீவித்து அல்லது தரிக்க ஒண்ணாத சோறு -தாஹித்தால் பானம் பண்ணி யல்லது நிற்க ஒண்ணாத தண்ணீர் -தின்றால் அல்லது புஷ்டனாக விரகு இன்றிக்கே இருக்கும் வெற்றிலையும் -தாரக போஷக போக்யம் ஆனவை எல்லாம் எனக்கு நாதனான கிருஷ்ணன் -வாஸூ தேவஸ் சர்வம் -என்று ஆயிற்று இவள் இருப்பது-

ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்

தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1-சர்வ தேசத்திலும் -காட்டிலும் தொடர்ந்து அடிமை செய்த இளைய பெருமாளை போலே-மன்னி-சர்வ அவஸ்தையிலும் -உலகத்தோடு ஏகாந்தத்தோடு வாசி அற-வழு இலா அடிமை -சர்வ சேஷ வ்ருத்தியும் செய்ய வேண்டும்-சாஸ்த்ரங்களால் இதுவே புருஷார்த்தம் என்று அறிக்கை போராது-அனுஷ்டான பர்யந்தமாக வேணும் – நாம்-திரு உள்ளத்தைக் கூட்டிக் கொள்ளுகிறார் ஆதல் கேசவன் தமருக்கு பின்பு தனியர் அல்லாமை யாலே திரு உள்ளத்தோடு ஒக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கூட்டிக் கொண்டு சொல்லுகிறார் ஆதல்

எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –2-9-4—சேஷ சேஷிகள் கலந்தால் சேஷ பூதனுக்கும் வருவதொரு ரசம் உண்டு இறே-அப்படியே அன்றியே நீ உகந்த அடிமை கொண்டு அருள வேணும்
ஸ்ரக் சந்த நாதிகளைப் போலே மிக்க அம்சம் கழிக்கலாய் இருக்கை- கீழ் முன்னிலையாய் போரச் செய்தே தனக்கே என்கிறது – முகத்தைப் பார்க்கில் நோக்கிலும் ஸ்மிதத்திலும் துவக்குண்டு அத்தாலே நிஷ்கர்ஷம் குலையும் என்று கவிழ்ந்து இருந்து கையோலை செய்து கொடுக்கிறார் –
எனக்கே ஆடச்செய் -என்கிற இடம் -அந்நிய சேஷத்வத்தை தவிர்க்கிறது
தனக்கே யாக என்கிற இடம் -தன்னோடு தனக்கு உள்ள அன்வயத்தைத் தவிர்க்கிறது-

உகக்கும் நல்லவரோடும் உழி தந்து உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள்
வியக்க இன்புறுதும்
எம் பெண்மை ஆற்றோம் எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்
மிகப் பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு நின்று உழி தருவர் கஞ்சன் ஏவ
அகப்படில் அவரோடும் நின்னொடு ஆங்கே அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ–10-3-9-எங்களை போல் அன்றிக்கே -நீ உகக்கும்படியான வி லக்ஷணை களோடு சஞ்சரித்து -அவர்களோடே பரிமாறப் பெற்றிலோம் என்று திரு உள்ளத்தில் யுண்டான விடாயால் வந்த துக்கம் கெடும் தோறும் –
நாங்கள்-வியக்க இன்புறுதும்–புறம்புள்ளாரைப் போல் அன்றியே -உன் உகப்பே பிரயோஜனமாக நாங்கள் -மிகவும் உகப்புதோம்-மிகுதி எதில் காட்டில் என்னில்-எங்களோடு கலக்குமதில் காட்டில் -என்னுதல்–உன்னில் காட்டில் நீ உகந்தவர்களை உகப்புதோம் -என்னுதல் –
எம் பெண்மை ஆற்றோம்-உன் உகப்புக்கு புறம்பாய் வரும் ஸ்த்ரீத்வம் எங்களுக்கு அஸஹ்யம் -அது வேண்டா –

பவந்த மேவாநுசரந் நிரந்தரம்
ப்ரஶாந்த நிஶ்ஶேஷ மநோரதாந்தர: |
கதா’ஹம் ஐகாந்திக நித்ய கிங்கர:
ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாதஜீவித: ||–46-மற்ற எல்லா விஷயங்களிலுமிருக்கும் ஆசையை அடியோடு விட்டு உன்னையே தொடரும்படி இருந்து, எப்பொழுதும் உனக்கு நித்ய கைங்கர்யம் செய்து உனக்கு ஆனந்தத்தைக் கொடுத்து என் வாழ்கைக்கும் ஒரு பயனைப் பெறுவேன்?

–——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌ – 5 –ஸூரி வைபவ பாதம்-7-ப,க,வத் கடாக்ஷ விஸேஷாதி கரணம்‌ -(94-96)-ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

July 9, 2026

5 –ஸூரி வைபவ பாத, – 3 அதிகரணங்கள் இதில்-
5– க்‌ரந்த,-தத் கர்த்ரு வைப, வாதி, கரணம்‌ —39 – 74 –மொத்தம் 36 ஸூரணைகள்
6—ஸூரி ப்ராமாண்ய விஸேஷாதி கரணம்‌(ப்ரமாத்ரு வைபவம் ) 75 – 93 –மொத்தம் 19-ஸூரணைகள்
7-ப,க,வத் கடாக்ஷ விஸேஷாதி கரணம்‌ 94–96—மொத்தம் -3- ஸூரணைகள்

இவருக்கு இந்த பிரபாவத்துக்கு அடி ஏது என்னும் ஆ காங்ஷையிலே இதுக்கு ஹேது -பகவத் நிர்ஹேதுக கடாஷம் என்கிறார் மேல் – இப்படி கடாஷித்தது தான் இந்த லோகத்தை இவரைக் கொண்டு திருத்துகைக்காக என்னும் அத்தையும் – இவர் தம்முடைய பூர்வ அவஸ்தையும் – இவரை கடாஷித்த பிரகாரத்தையும் – விசதமமாக சொல்லலுகிறது இச் சூரணையிலே –இவர்க்கு இந்த ப்ரபாவமுண்டாகைக் கடி என்‌ என்னில்‌, ஸ்ருஷ்ட்யாதி முகத்தாலே ஸம்ஸாரிகளுடைய உஜஜீவநத்துக்கு கிருஷி பண்ணுகிற ஈஸ்வரன்‌ ஸஜாதீயரைக்‌ கொண்டு இவர்களைத்‌ திருத்த வேணு மென்று பார்த்து அதுக்காளாவாரை ஸம்ஸாரத்தில்‌ கிடையாத தஸையிலே தேவ மநுஷ்யாதி சரீரங்களிலே பரவேஸித்து, ததநுஸாரிகளாய்க் கொண்டு ஜந்ம பரம்பரைகளிலே இழிந்த ஸம்ஸார ஸாகர மத்‌யஸ்தரான இவர்‌ பக்கலிலே நிர்ஹேதுகமாகப் பண்ணின விஸேஷ கடாக்ஷமென்கிறார்‌-

இதுக்கு ஹேது —ஊழி தோறும் சோம்பாது-ஒன்றி பொருள் என்று அளி மகிழ்ந்து-முற்றுமாய் நின்று
நூலுரைத்து யோகு புணர்ந்து கண் காண வந்து ஆள் பார்க்கிறவன் உலகினத்தின் இயல்வை நல் வீடு செய்ய இணக்குப் பார்வை தேடி கழலலர் ஞானமுருவின முழுதும் ஒட்டின பெரும் கண் எங்கும் இலக்கு அற்று அன்போடு நோக்கான திசையிலே ஆக்கையில் புக்கு உழன்று மாறிப் படிந்து துளங்குகிறவர்
மேலே பட பக்க நோக்கற பண்ணின விசேஷ கடாஷம்-சூரணை -94-

(1-ஆள் பார்க்கிறவன் –2-நல் வீடு செய்ய –தேடி -3-முழுதும் ஒட்டின பெரும் கண் –இலக்கு அற்று —
4-அன்போடு நோக்கான திசையில் –5-துளங்குகிறவர் மேல் பட –6-பக்கம் நோக்கற பண்ணின விசேஷ கடாஷம்- -என்றவாறு )-அதாவது இதுக்கு ஹேது – அதாவது – இவருடைய இந்த பிரபாவதுக்கு ஹேது –
ஊழி தோறும் சோம்பாது ஒன்றி பொருள் என்று அளி மகிழ்ந்து –அதாவது – ஊழி தோறும் தன்னுள்ளே படைத்து -திருவாய் -10-7-9-என்றும்-சோம்பாது இப் பல் உயிர் எல்லாம் படர்வித்த வித்தா -பெரிய திருவந்தாதி -18- -என்றும்-ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் –திருவாய் -3-9-10-என்றும் –-பொருள் என்று இவுலகம் படைத்தான் –திருவாய் -2-10-11-என்றும்-அளி மகிழ்ந்து உலகம் எல்லாம் படைத்து திருவாய் -3-4-8-என்றும்-சொல்லுகிற படி – பண்ணின கிருஷிகள் தப்பினாலும் சோம்பி கை வாங்காதே பின்னையும் கிருஷி தன்னை பண்ணும் கர்ஷகனைப் போலே கல்பம் தோறும் சிருஷ்டிக்கச் செய்தே –
சபலமாகாது இருக்க முசியாதே -மிகவும் ஒருப்பட்டு என்றேனும் ஒரு நாள் – பிரயோஜனப் படும் என்று க்ருஷியை உகந்து -ஜகத் சிருஷ்டியைப் பண்ணி —

இதுக்கு ஹேது – கீழ்‌ ப்ரஸ்துதமான ப்ரபாவத்துக்கு ஹேது. “ஊழி தோறும்‌. தன்னுள்ளே படைத்துக்‌ காத்துக்‌ கெடுத்துழலும்‌”’ (திருவா. 10 – 7-9) என்றும்‌, ”சோம்பாதிப் பல்லுருவை யெல்லாம்‌ படர்வித்த வித்தா”” (பெரியதிரு. 18) என்றும்‌, ”ஒன்றி யொன்றி உலகம்‌ படைத்தான்‌”” (திருவா. 3 – 9 – 10) என்றும்‌, ‘“பொருளென்றிவ் வுலகம்‌ படைத்தவன்‌”’ (திருவா. 2 – 10 – 11) என்றும்‌, அளிமகிழ்ந்துலக மெல்லாம்‌ படைத்தவை” (திருவா. 3 – 4 – 8) என்றும்‌ சொல்லுகிறபடியே கர்ஷகனானவன்‌ ஒரு போகம்‌ பதறி(ரி)ற்றென்னா, கை வாங்காதே மேலே மேலே க்ருஷி பண்ணுமாப் போலே கல்பந் தோறும்‌ ஸ்ருஷ்டிக்கச் செய்தேயும்‌, அது ஸபலமாகாதிருக்‌கச் செய்தேயும்‌, பின்னையும்‌ முசியாதே ப்ரயோஜநமாம்‌, ப்ரயோஜநமாம்‌ என்று திருவுள்ளத்தில்‌ க்ருபையாலே வந்த உகப்போடே அடுத்தடுத்து ஸ்ருஷடித்து,

ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகு எல்லாம்
ஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்து உழலும்
ஆழி வண்ணன் என் அம்மான் அம் தண் திரு மால் இரும் சோலை
வாழி மனமே கை விடேல் உடலும் உயிரும் மங்க ஓட்டே–10-7-9—சகல லோகங்களையும் கல்பம் தோறும் தன் சங்கல்ப ஏக தேசத்திலே உண்டாக்கி -நாம ரூபங்களைக் கொடுத்த பின்பு -தன் கார்யம் தானே செய்து கொள்ளலாம் என்று -அவ்வளவில் விடாதே அவற்றினுடைய ரக்ஷணத்தைப் பண்ணி -இவை அதி ப்ரவ்ருத்தமான வாறே சம்ஹரித்து -இதுவே யாத்ரையாய் இருக்கிற-ம்பீர ஸ்வ பாவனானவன் என் ஸ்வாமி –

தாம்பால் ஆப்புண்டாலும் அத் தழும்பு தான் இளக
பாம்பால் ஆப்புண்டு பாடுற்றாலும் –சோம்பாது இப்
பல்லுருவை எல்லாம் படர்வித்த வித்தா
உன்
தொல்லுருவை யார் அறிவார் சொல்லு–18–இப்படி ஸம்ஸாரிகள் வை முக்யம் பண்ணினார்கள் என்று சோம்பாதே நம் கார்யம் செய்கை நமக்கு எளிவரவோ என்று காளியனில் காட்டில் தோலாதாராய் இருக்கிற பிரஜைகளை எல்லாம் விஸ்திருதம் ஆக்கின(காளியன் இடம் தோற்காமல் அவனிலும் நீசர்கள் அன்றோ நாம் )காரணத்வ ப்ரயுக்தமான குடல் துடைக்கை யுடையவனே பழையதான உன்னுடைய வடிவை வேறு சிலர் அறியப் போமோ-நீயே சொல்லு

நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய்ச்
சென்று சென்றாகிலும் கண்டு,சன்மம் கழிப்பான் எண்ணி,
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?–3-9-10-ஸ்ருஷ்டிகள் பலித்ததில்லை என்று கை வாங்காதே மிகவும் ஒருப்பட்டு லோகங்களை உண்டாக்கினான்-

பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே –2-10-11-பண்ணின கிருஷிகள் தப்பினாலும் சோம்பாதே க்ருஷி பண்ணும் கார்ஷிகனைப் போலே- கொடுத்த கரணங்களைக் கொண்டு அநர்த்தத்தை விளைத்துக் கொள்ள பின்னையும் கரணங்களைத் தந்த ஜகத் காரண பூதனுடைய கல்யாண குணங்களிலே சேர்த்து-

ஒளி மணி வண்ணன் என்கோ! ஒருவன் என்று ஏத்த நின்ற
நளிர் மதிச் சடையன் என்கோ! நான் முகக் கடவுள் என்கோ!
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம் படைத்து அவை ஏத்த நின்ற
களி மலர்த் துளவன் எம்மான் கண்ணனை மாயனையே.–3-4-8–கிருபையை உகந்து -ஸ்ருஷ்ட்யாதி ரக்ஷணத்தை உகந்து – லோகத்தை எல்லாம் ஸ்ருஷ்டித்து -அந்த ஸ்ருஷ்ட்டி பிரயோஜனம் பெற்று அவர்கள் ஏத்தும் படி நின்ற

முற்றுமாய் நின்று –அதாவது –நில நீர் எரி கால் விண் உயிர் என்று இவைதான் முதலா முற்றுமாய் நின்ற எந்தை திருவாய் -7-6-2-என்றும்-தத் ஸ்ருஷ்ட்வா -ததேவ அனுப்ராவிசத்-தைத்ரியம் –இத்யாதி படியே ஸ்ருஷ்டமான ஜகத்திலே இவற்றினுடைய வஸ்துத்வ நாம பாகத்வங்களுக்கும் பிரவ்ருத்தி நிவ்ருத்தி சக்திகளுக்குமாக அனு பிரவேசித்து – இவற்றைச் சொல்லும் வாசக சப்தம் தன் அளவிலே பர்யவசிக்கும் படி பிரகாரியாய் நின்று —

(முற்றுமாய் நின்று) ““தத் ஸ்ருஷ்ட்வா ததேவாநு ப்ராவிஸத்‌”’ (தை. 2 – 6 – 1) என்கிறபடியே ஸ்ருஷ்டமான ஜகத்திலே அவற்றினுடைய வஸ்துத்வ-நாம பாக்த்வங்களுக்காக அவற்றைச்‌ சொல்லுகிற ஸப்‌தங்கள்‌ தன்னளவிலே பர்யவஸிக்கும்படி வ்யாப்தனாய்க்‌ கொண்டு ப்ரகாரியாய்‌ நின்று-

என்று கொல் சேர்வது அந்தோ!அரன் நான்முகன் ஏத்தும் செய்ய
நின் திருப் பாதத்தை யான்? நிலம் நீர்எரி கால் விண்ணுயிர்
என்ற இவை தாம் முதலா முற்றுமாய் நின்ற எந்தாயோ!

குன்று எடுத்து ஆநிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தாவோ!–7-6-2-பிருதிவ்யாதி பூத பஞ்சகங்களுக்கும் தத் அந்தரவர்த்தியான சேதன வர்க்கத்துக்கும் அந்தராத்மாவாய் நின்று நிர்வஹிக்கிறவனே-எந்தாயோ!-அபேக்ஷை இன்றிக்கே இருக்க இவற்றை உண்டாக்கும் படியான சம்பந்தம் சொல்லுகிறது -இந்நீர்மையாக்கி காட்டி என்னை எழுதிக் கொண்டவனே -உண்டாக்கி விடும் அளவு அன்றியே அரியன செய்து நோக்குமவன் அன்றோ

நூல் உரைத்து –அதாவது –அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்த -பெரிய திருமொழி -11-4-8-என்கிற படி கேட்பார் உபசத்தி பண்ண மாட்டாமையாலே இழக்க வேண்டாதபடி திர்யக் ரூபேண தன்னை தாழ விட்டு நின்று – ஜ்ஞாதவ்ய தர்ம பிரகாசமான சாஸ்த்ரத்தை உபதேசித்து-

‘அன்னமதா யிருந்தங்கற நூலுரைத்த ‘” (திருமொழி 11 – 4 – 8) என்கிறபடியே ஸாராஸார விவேகோந்முகமான ஹம்ஸ ரூபியாய்க் கொண்டு ஸாஸ்த்ர ப்ரதராநத்தைப் பண்ண-

முன்னுலகங்கள் ஏழும் இருள் மண்டி யுண்ண முதலோடு  வீடும் அறியாது
என்னிது வந்தது என்ன விமையோர் திசைப்ப எழில் வேதம் இன்றி மறைய
பின்னையும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி இருள் தீர்த்து இவ் வையம் மகிழ
அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்தவது நம்மை யாளும் அரசே –11-4-8-
–கொடுத்த நாம் இருந்தோம் ஆகில் இவை இப்படிப் படுகிறது என்-என்று திரியட்டும் அவர்கள் அளவில் பிரசாதத்தைப் பண்ணி லோகத்தில் அஞ்ஞானம் தீர்ந்து-தன்னைக் கண்டார் எல்லாரும் ஆனந்த நிர்பரராம் படியாக
கேட்பார் உபசத்தி பண்ண மாட்டாமையாலே இழக்க வேண்டாத திர்யக்காய் – ( தானே தாழ நின்று )சாரதியாய் உபதேசித்தால் போலே ஹிதானுசந்தானம் பண்ணக்  கடவ அவனே ரஷகன் –

யோகு புணர்ந்து –அதாவது –குறைவில் தடம் கடல் கோள் அரவேறி தன் கோல செம் தாமரைக் கண் –
உறைபவன் போல் ஓர் யோகு புணர்ந்த ஒளி மணி வண்ணன்–
திருவாய் -3-10-2-என்கிற படியே
திரு பாற் கடலில் திரு அனந்த் தாழ்வான் மேல் ஏறிப் படுக்கை வாய்ப்பாலே கண் வளர்ந்து அருளுகிறார் போலே ஜகத் ரஷண உபாய சிந்தை பண்ணி கண் வளர்ந்து —

யோகு புணர்ந்து) ““தன் கோலச் செந்தாமரைக் கண்‌ உறைபவன்‌ போலவோர்‌ யோகுபுணர்ந்த ஓளிமணிவண்ணன்‌”’(திருவா. 3 – 10 – 2) என்று க்ஷீராப்தியில்‌ யோக நித்‌ரா வ்யாஜத்தாலே சேதநருடைய ரக்ஷண உபாயசிந்தை பண்ணி,

குறைவு இல் தடம் கடல் கோள் அரவு ஏறித்தன் கோலச் செந்தாமரைக் கண்
உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த ஒளி மணி வண்ணன் கண்ணன்

கறை அணி மூக்குடைப் புள்ளைக் கடாவி அசுரரைக் காய்ந்த அம்மான்
நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டு இலனே.–3-10-2–நானே அன்று -என்னிலும் குறைவற்றார் உண்டு திருமேனி நீ தீண்டப் பெற்று மாலும் கருங்கடல் என்நோற்றாய்-என்கிறபடியே சர்வ காலமும் தன மடியிலே வைத்துக் கொண்டு இருக்கப் பெற்ற இதுவும் ஒன்றே –-தடம் கடல்
தாலும் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி
-என்கிறபடியே அங்குசிதமாக கண் வளர்ந்து அருளும் படி இடமுடைத்தான இதுவும் ஒரு பாக்யமே–கோள் அரவு ஏறி கோள் -என்று ஒளியாய் -ஸ்வ ஸ் பர்சத்தாலே உண்டான ஒளியை சொல்லுகிறது-கோள் என்று தேஜோ பதார்த்தங்களான க்ரஹங்களாய் அவ் வழியிலே ஒளியைச் சொல்லுகிறது-கோள் என்று மிடுக்காய் -ப்ரக்ருஷ்ட விஞ்ஞான பலை கதாமநி -என்கிறபடியே தாரண சாமர்த்தியத்தை சொல்லுகிறது என்றுமாம்-அரவு-மென்மை குளிர்த்தி நாற்றம் இவற்றை பிரக்ருதியாக உடையனாய் இருக்கை-ஏறி சுழல வந்து சாதரமாக நோக்கி ஏறுகை
தன் கோலச் செந்தாமரைக் கண்-உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த -வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும்படியாய் ஐஸ்வர்யா ஸூ சகமான சிவப்பை உடைத்தாய் இருக்கை-கண்ணுறைகை -கண் வளர்கை – கண் வளர்த்தல் என்ற பேராய்-ஜகத் ரக்ஷண சிந்தனை உக்தன் ஆகை
ரஷ்ய வர்க்கம் கரைமரம் சேரும்படி யாதல்-ஆத்மாநம் வா ஸூ தேவாக்க்யம் சிந்தையன் -என்கிறபடியே -ரக்ஷகனான தன்னை யாதல் அனுசந்திக்கை –
ஒளி மணி வண்ணன் கண்ணன்-ரஷ்ய வர்க்கத்தை தன வடிவு அழகாலே துவக்கி கரைமரம் சேர்க்கைக்காக கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவன்-
ஒளியை உடைய நீல மணி போலே இருக்கிற வடிவை உடைய கிருஷ்ணன்

கண் காண வந்து –அதாவது – சிந்தித்த உபாய அனுகுணமாக-துயரில் மலியும் மனிசர் பிறவியில் -தோன்றி கண் காண வந்து–திருவாய் -3-10-6 -என்கிற படியே–சஷுசா பச்யதி கச்ச னைனம் -கட உபநிஷத் -என்றும்-நமாம்ச சஷூர் அபிவீஷதே தம்-என்றும்-கட் கண்ணால் காணா அவ் உரு–பெரிய திருவந்தாதி –28 -என்றும் சொல்லப் படுகிற தான் துக்கதோரான மனுஷ்யருடைய பிறவியிலே ஆவிர்பவித்து அருளி , அவர்கள் மாம்ச சஷுவுக்கு விஷயமாம் படி வந்து-

சிந்தா ஸமநந்தரம்‌ தோற்றின உபாயாநுகு, ணமாக (கண் காண வந்து) “துயரில்‌ மலியும்‌ மனிசர் பிறவியில்‌ தோன்றிக் கண் காண வந்து”’ (திருவா. 3 – 10 – 6) என்கிறபடியே ”ந மாம்ஸ சஷுரபி வீக்ஷதே தம்‌”, “ந சக்ஷுஷா பஸ்யதி கஸ்ச நைநம்‌””“என்றேனும்‌ கட்கண்ணால்‌ காணாத அவ்வுரு” (பெரியதிரு. 28) என்றும்‌ சொல்லுகிற தான்‌ துக்க பஹுளரான மநுஷ்யரோடே ஸஜாதீயராய்க் கொண்டு வந்து பிறந்து அவர்களுடைய மாம்ஸ சக்ஷுஸ்ஸுக்கு விஷய பூ,தனாய்‌,

துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி நின்ற வண்ணம் நிற்கவே
துயரின் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து
துயரங்கள் செய்து தன் தெய்வ நிலை உலகில் புக உய்க்கும் அம்மான்
துயரம் இல் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் ஓர் துன்பம் இலனே.–3-10-6-துக்கோத்தரமான மனுஷ்யருடைய ஜென்மத்தில் வந்து ஆவிர்ப்பவித்து மாம்ஸ சஷூஸ்ஸூ க்கு விஷயம் இன்றிக்கே
நித்ய ஸூ ரிகளுக்கு சதா தர்ச நீய விஷயமான தன்னை மாம்ஸ த்ருஷ்டிக்கு விஷயம் ஆக்கி அநு கூலரை அழகால் ஈடுபடுத்தி பிரதி கூலரை ஆயுதத்தால் அழியச் செய்து

அன்றே நம் கண் காணும் ஆழியான் காருருவம்
இன்றே நாம் காணாது இருப்பதுவும் –என்றேனும்
கட் கண்ணால் காணாத வவ் வுருவை நெஞ்சு என்னும்
உட் கண்ணால் காணும் உணர்ந்து
–28-ஒரு நாளும் பகவத் விஷயத்தைக் காணாமையாலே பீலிக்கண் -என்றவோபாதி கண் என்று பேரான கண்ணால் காணப் போகாத அவனுடைய திருமேனியை நெஞ்சாகிற உள் கண் உணர்ந்து காணுமாகில் அன்றே நம் கண் காணும் ஆழியான் கார் உருவம்

ஆள் பார்க்கிறவன் –அதாவது –-இப்படி அவதாராதிகளாலே –ஆள் பார்த்து உழி தருவாய் -நான்முகன் -60–என்கிற படி , எனக்கு அடிமை ஆவார் உண்டோ -என்று இதுவே வேளாண்மையாக தேடித் திரிகிறவன்-

‘ஆள்பார்த்துழிதருவாய்‌”? (பெரியதிரு. 60) என்று அப்ராக்ருத விக்‌ரஹ விஸிஷ்டனாய்‌, நிரங்குசா ஸ்வதந்த்ரனாய்‌, நிரபேக்ஷனான தான்‌ உற்றாரா யிருப்பார்‌ உருமாறி நின்று ஆராயுமாப் போலே *தமருகந்த இத்யாதிப்படியே அர்ச்சகர்‌ உகந்த திரவ்யத்தைத்‌ திருமேனியாகக்‌ கொண்டு அவர்களுக்கு அத்யந்த பரதந்த்ரனாய்‌, அவர்களிடுகிற பத்ர புஷ்பாதிகளிலே ஸா பேக்ஷனாய்க் கொண்டு கோயில்‌களிலேயும்‌, க்‌ருஹங்களிலேயும்‌ நின்றருளி நம்முடைய விஷயீகாரத்துக் காளாவார்‌ ஆர்‌ என்று ஆள் பார்க்கிறவன்‌.-

ஆட் பார்த்து உழி தருவாய் கண்டு கோள் என்றும் நின்
தாட் பார்த்து உழி தருவேன் தன்மையை -கேட்பார்க்கு
அரும் பொருளாய் நின்ற வரங்கனே உன்னை
விரும்புவதே விள்ளேன் மனம்–60-எனக்கு அடியார் ஆவார் யுண்டோ என்று இது வெள்ளாமை யாகத் தேடித் திரிகிறபடியை கண்டு உனக்கு அடியேனாக வேணும் என்று உன் திருவடிகளையே பார்த்துத் திரிகிற என் ஸ்வ பாவத்தை திரு உள்ளம் பற்றி அருள வேணும்

தமருகந்த   தெவ் வுருவம் அவ் வுருவம் தானே
தமருகந்த தெப்பெர் மற்றப் பேர் தமருகந்து
எவ் வண்ணம் சிந்தித்து இமையா திருப்பரே
அவ் வண்ணம் ஆழியானாம் –
44–தன் கருத்து அறிந்து எடுத்துக் கை நீட்டும் திருவாழி முதலான திவ்ய பரிகரங்களை யுடையனான சர்வேஸ்வரன் அவர்களைக் கால் கடைக் கொண்டு இன்று சம்சாரத்திலே தன்னைப் பற்றி இருக்கும் ஆஸ்ரிதரானவர்கள் ஸூவர்ண ரஜாதாதி களான த்ரவ்யங்களாலே உகந்து ஏறி அருள பண்ணினது யாதொரு விக்ரஹம் அந்த விக்ரஹத்தை அசாதாரண விக்ரஹத்தோ பாதி தானே ஆதரித்து பரிக்ரஹியா நிற்கும்-இப்படி அவர்கள் உகந்த திரு மேனியை விரும்புகிற அளவன்றிக்கே ஆஸ்ரிதர் உகந்து சாத்தின திரு நாமம் யாதொன்று அந்தத் திரு நாமத்தை நாராயணாதி நாமங்களோபாதி தனக்கு நாமமாக விரும்பா நிற்கும்-ஆஸ்ரிதரானார்கள் உகந்து கொண்டு குண சேஷ்டிதாதிகளான யாதொரு பிரகாரத்தை அனுசந்தித்து அனவ்ரத பாவனை பண்ணி இருப்பார்கள் -அந்த பிரகாரத்தை உடையனாகா நிற்கும் 

உலகினது இயல்வை நல் வீடு செய்ய –அதாவது –ஒ ஒ உலகினது இயல்வே—திருவாசிரியம் -6-என்று
தத்வ வித்துகளை கண்டால் சகிக்க மாட்டாமல் விஷணராம் படி – பெற்ற தாய் இருக்க மணை வெந்நீர் ஆட்டுவாரை போலே –பெரிய திருமொழி -11-6-6- உத்பாதகனாய் சர்வ பிரகார ரஷகனாய் போருகிற பர தேவதையான தன்னை விட்டு கிடந்த இடம் தெரியாத படி அபிரசித்தமான சூத்திர தேவதைகளை –
ஆட்டை அறுத்தல் – பிரஜையை அறுத்தல்- அத்யந்த நிஷிதமான மதுராதிகளை நிவேதித்தல்- ஆகிய
பரஹிம்சாதி சாதனா முகத்தாலே பஜித்து- தத்பலமாக துக்க மிஸ்ரமான சுகத்தை தருமவையாய்
அநாதியாய் துஸ்தரமாய் இருக்கிற பிரகிருதி சம்பந்த நிபந்தனங்களான ஜென்மங்களில் நின்றும்
ஒருகாலும் நீங்காமைக்கு உறுப்பாய் – பல வகைப் பட்டு தப்ப அரிதாய் இருந்துள்ள சப்தாதி விஷயங்களிலே துக்கப் பட்டு அழுந்துகிற லோக ஸ்வபாவத்தை-யாதேனும் பற்றி நீங்கும் வ்ரதத்தை நல் வீடு செய்யும் திருவிருத்தம் -95– என்று அநாதி வாசனையாலே பிரகிருதி பிராக்ருதங்களில் ஏதேனும் ஒன்றை அவலம்பித்து தன்னை விட்டு அகலுகையே ஸ்வபாவமான சம்சாரி சேதனன் விரதத்தை நன்றாக விடுவிக்கும் என்கிறபடியே ஸ வாசனமாக போக்குகைக்காக —

(உலகினதியல்வை நல்வீடுசெய்ய) “ஓ ஓ உலகினதியல்வே”’ (திருவாசிரி. 6) என்கிற படியே ஸர்வ ப்ரகார ரக்ஷகனான தன்னை விட்டு ஷூத்‌ர தே,வதைகளை பர ஹிம்ஸாதி ஸாதந முகத்தாலே வலித்து, ஷூத்‌ர ப்ரயோஜநங்களைப்‌ பெற்று அவற்றை அநுபவிக்‌கைக்காக தேவாதி சரீர ப்ரவேஸம்‌ பண்ணி, ஆஸ்சர்ய பூதையான ப்ரக்ருதி வஸ்யரான ஸம்ஸாரி சேதநர் ஸ்வபாவத்தை “யாதானும்‌ பற்றி நீங்கும்‌ விரதத்தை நல் வீடு செய்யும்‌”” (திருவிரு. 95) என்று ப்ரக்ருதி ப்ராக்ருதங்களில்‌ ஏதேனுமொன்றைப்‌ பற்றத் தன்னை விட்டு நீங்குகையே ஸ்வபாவமான விரதத்தை ஸவாஸநமாகப்‌ போக்குகைக்காக,

ஒ! ஒ! உலகினது இயலவே ஈன்றோள் இருக்க மணை நீர் ஆட்டி படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து
அளந்து தேர்ந்து உலகு அளிக்கும் முதல் பெரும் கடவுள் நிற்ப புடை பல தானறி
தெய்வம் பேணுதல் தனாது புல் அறிவாண்மை பொருந்தக் காட்டி
கொல்வன முதலா அல்லன முயலும் இனைய செய்கை இன்பு துன்பு அளி
தொல் மா மாயப் பிறவி யுள் நீங்கா பல் மா மாயத்து அழுந்து மா நளிர்ந்தே –6–ஒரு விபூதியாக தன்னை அனுபவிக்கிற அனுபவத்துக்கு விச்சேதம் இன்றிக்கே செல்லுகிறாப் போலே இது ஒரு விபூதி தன் பக்கல் வைமுக்யம் பண்ணும்படி வைப்பதே – இது ஒரு லோகத்தினுடைய ஸ்வ பாவமே -உத்பத்திக்கு முன்னே உண்டாக்குகைக்கு சாதன அனுஷ்டானம் பண்ணி – பின்னை கர்ப்பத்தில் தரித்து – பிரசவ வேதனையை அனுபவித்து – அநந்தரம் தண்ணிய இட்டுக் கொடு துவண்டு நோக்கினால் அறிவு பிறந்து பண்ணின உபகாரத்தை ஸ்மரிக்கும் அளவானவாறே அவளை விட்டு ஒரு உபகாரமும் பண்ணவும் அறியாதே இவன் பண்ணின உபகாரத்தையும் ஸ்மரிக்கவும் அறியாதே இருபத்தொரு அசித் பதார்த்தத்தை கொண்டாடுவாரைப் போலே வகுத்த விஷயத்தை விட்டு அப்ராப்த விஷயத்தை ஆதரியா நின்றார்கள்

பேயிருக்கு நெடு வெள்ளம் பெரு விசும்பின் மீதோடிப் பெருகு காலம்
தாயிருக்கும் வண்ணமே யும்மைத் தன் வயிற்றிருத்தி  உய்யக் கொண்டான்
போயிருக்க மற்று இங்கோர் புதுத் தெய்வம் கொண்டாடும் தொண்டீர் பெற்ற
தாயிருக்க மணை வெந்நீர் ஆட்டுதிரோ மாட்டாத தகவற்றீரே —11-6-6-
நாம் கொடுத்த கரணங்களைக் கொண்டு நம்மைப் பற்றப் பாராதே புறம்பே போயிற்றன-என்று வெறுத்து போய் இருக்க – அங்கே
புதுசாக இருக்கிற தேவதைகளை கொண்டாடுகிற தொண்டீர்   –அசேதனமாய் இருப்பது ஒன்றை
வெந்நீர் ஆட்டுதிரோ – செய்ய மாட்டாத கிருபை அற்றீரே –

யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்
மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே  -அதனால்
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்
மாதாவினைப் பிதுவை திரு மாலை வணங்குவனே – 
-95 –பகவத் வ்யதிரிக்த விஷயம் ஆகையே வேண்டுவது –பற்றுவது ஏதேனும் ஒன்றாக-அமையும் –அவற்றில் குண தோஷங்கள் நிரூபிக்க வேண்டா –நீங்கும்-பகவத் விஷயம் இத்தனையே வேண்டுவது விடுகைக்கு விரதத்தை –நீ பற்றுகிற விஷயங்கள் அடைய ஸ தோஷமாய் இருக்கும் –-பகவத் விஷயமே கிடாய் நல்லது -என்று சிலர் உபதேசித்தாலும் –அது நன்றே ஆகிலும் –நான் அத்தை விடுகையிலே-சங்கல்பித்தேன் என்னும் –சர்வேஸ்வரன்-ஏதத் வ்ரதம் மம -என்று ரஷிக்கைக்கு வ்ரதம் கொண்டு இருக்குமா போலே யாயிற்று-இவன் அவனை விடுகைக்கு வ்ரதம் கொண்டு இருக்கும் படி

இணக்கு பார்வை தேடி--அதாவது – மிருக பஷிகளை பிடிப்பார் சஜாதீய புத்தியாலே தன்னோடு
இணக்க வற்றான மிருக பஷிகளை பார்வையாக வைத்து பிடிப்பாரைப் போலே -பார்வை வைத்து இணக்குவதாக அதுக்கு ஆவார் ஆர் என்று தேடி

இணக்குப் பார்வை தேடி) ஸஜாதீய புத்‌தியாலே தன்னோடு இணக்க வற்றான பார்வை மானை வைத்து ம்ருகம் பிடிப்பாரைப் போலே ஸஜாதீயரைக் கொண்டு திருத்த வேணும்‌ என்று பார்த்து,அதுக்காளாவார்‌ ஆரோ என்று தேடி,-

கழலலர் ஞானம் உருவின முழுதும் ஒட்டின பெரும் கண்-அதாவது –கழல் தலம் ஒன்றே நில முழுதாயிற்று ஒரு கழல் போய் நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட அண்டத்து
உழறலர் ஞானச் சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லா அழறலர் தாமரைக் கண்ணன் –திருவிருத்தம் -58- என்று தொடங்கி ஒரு திரு அடி தலமே பூமி அடைத்தானாயிற்று-ஒரு திரு அடி பூமியிலே இடம் இல்லாமையாலே போய் சர்வருக்கும் சர்வ காலத்திலும் இந்த சம்பந்தத்தை நினைத்து தனி நிழலில் ஒதுங்கலாம் படி நிழலை கொடுக்கைக்காக ஊர்த்த்வ லோகங்களில் எல்லாம் நிறைந்தது –
பரப்பை உடைத்தான அவ் அண்டத்தை அடைய புக்குழருகையாலே விகசிதமாய் இருந்துள்ள ஞானம் ஆகிய பிரகாச ரூபமான தீபத்தை உடையனாம் என்கிற படியே கழல் தலமும் உழறலர் ஞானமும் -மாறுபாடு உருவின பரப்பு எங்கும் ஓட்டிப் பார்த்த அழறலர் தாமரை போன்ற செவ்வியை உடைய –
பெரும் கண் மலர்–
திருவிருத்தம் -45- -என்ற பெரிய திரு கண்களானவை –

(கழறலர்‌ ஞானமுருவின மூழுதுமோட்டின பெருங்கண்‌) ““கழறலம்‌” (திருவிரு. 58) என்கிற பாட்டில்‌ சொல்லுகிற படியே ஜகத்திலே வ்யாப்தமான ஜ்ஞாநத்தையும்‌ அதிக்ரமித்து, ”மண்முழுது மகப்படுத்து நின்ற””, ”மேலைத் தண்மதியும்‌ கதிரவனும்‌ தவிரவோடி”’ (திருநெடு. 5) என்று ஸகல லோகங்களையும்‌ ஆக்ரமிக்கும்படி வ்யாபிக்கப் பெற்ற திருவடிகளிலும்‌ முற்பட்ட ்‌அழறலர் தாமரைக் கண்ணன்‌ ” (திருவிரு. 58) என்றும்‌, ““பெருங் கேழலார்‌ தம் பெருங்‌கண் மலர்ப் புண்டரீகம்‌”” (திருவிரு. 45) என்கிற திருக் கண்களானவை,-

கழல் தலம் ஒன்றே நில முழு தாயிற்று ஒரு கழல் போய்
நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட வண்டத்து
உழறலர் ஞான சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லா
அழறலர் தாமரைக் கண்ணன் என்னோ விங்களக்கின்றதே
 – 58–விலக்ஷணமான ஸ்வரூப ரூப குண விபூதியை யுடைய ஸர்வேஸ்வரன் த்ரைவிக்ரம அபதானத்தாலே ஸமஸ்த விபூதிகளையும் தனக்கே யாக்கினால் போலே தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே -திருவாய் -2-9-4- என்று உம்முடைய அபேக்ஷைக்கு ஈடாகக் கொண்டு அருளக் குறையில்லை என்று அவனுடைய ஸம்பந்தத்தையும் ஸக்தியையும் பிரகாசிப்பித்து ஆஸ்வஸிப்பித்தாராயிற்று –அழற்றிலே  நின்று அலர்ந்த தாமரைப் பூ போலே இருந்த உள்ள திருக் கண்களை உடையவன் –-தச்யதா கப்யாசம் புண்டரீகம் மேவ அஷணீ -என்னக் கடவது இறே-

ஒண் மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப ஒரு காலும் காமருசீர் அவுணன் உள்ளத்து
எண் மதியும் கடந்து அண்ட மீது போகி இரு விசும்பினூடு போய் எழுந்து மேலைத்
தண் மதியும் கதிரவனும் தவிர்ந்து ஓடித் தாரகையின் புறம் தடவி அப்பால் மிக்கு
மண் முழுதும் அகப்படுத்து நின்ற வெந்தை மலர் புரையும் திருவடியே வணங்கினேனே–5-சதுர்தச புவனத்தையும் அளந்து கொண்டு –-மண் -என்று பூமியைச் சொல்லி முழுதும் -என்கையாலே ஊர்த்வ லோகங்களையும் நினைக்கிறார் –அங்கன் இன்றிக்கே-மண் -என்று ஸ்தலமாய்-மேல் உண்டான ஸ்தலங்களைச் சொல்லுகிறது –-அளந்து -என்னாதே –அகப்படுத்து -என்கையாலே – இவன் மேல் விழுக்காடும் அவர்கள் இறாய்ப்பும் -தோற்றுகிறது –நின்ற – க்ர்தக்ருத்யனாய் நின்ற-சேஷ பூதன் சேஷியை லபித்தது க்ர்த்க்ருத்யனாய் போலே காணும்-சேஷியும் சேஷ பூதனை லபித்தது க்ர்த்க்ருத்யனாய் ஆனபடி -(க்ருத க்ருத்யா ததோ ராம விஜ்வர பிரமுமோத ஹா )

பெரும் கேழலார்  தம் பெரும் கண் மலர் புண்டரீகம் நம் மேல்
ஒருங்கே பிறழவைத்தார்
இவ்வகாலம் ஒருவர் நம் போல்
வரும் கேழ்பவருளரே தொல்லை யாழி யஞ்சூழ் பிறப்பும்
மறுங்கே வரப் பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே -45–ரஷ்யத்தின் அளவு அன்றிக்கே –ரஷகனுடைய பாரிப்பு இருக்கிற படி -பெரும் கேழலார்  என்ற உடம்பு-அடைய-கண்ணாய் இருக்கை –-கடல் போலே பெருத்து அது நிறைய தாமரை பூத்தாற் போலே இருக்கை மகா வராஹஸ் ஸ்ப்புட பத்ம லோசன –இப் பிரளயம் கொண்ட பூமியை எடுத்து பிராட்டிக்கு கார்யம் செய்தானாய்- ஸ்ரீ பூமிப் பிராட்டியை குளிர நோக்கிக் கொண்டு இருக்கிற இருப்பு –நம் மேல் –அவள் பிரஜையான நம் மேல் –ஒருங்கே –ஸ்ரீ பூமி பிராட்டி பக்கலிலும் பாலி பாயாதபடி–பிறழ வைத்தார் –மிக வைத்தார் –-தம்மால் தரிக்க போகிறது இல்லை–

எங்கும் இலக்கு அற்று –-அதாவது – ஓர் இடத்திலும் அதுக்கு ஆவாரைக் காணாமல் ஒரு விஷயத்தை அப்படிக்கு ஆக்குவதாக பார்க்கிற அளவிலே –அன்போடு நோக்கான திசையிலே ஆக்கையில் புக்கு உழன்று- மாறி படிந்து துளங்குகிறவர் மேல் பட –-அதாவது-அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும் –பெருமாள் திருமொழி -1-10-என்று ஸ்ரீ விபீஷண ஆழ்வான் விஷயமாக எப்போதும் ஸ ஸ்நேகமாக பார்த்துக் கொண்டு கிடக்கையாலே – தனக்கு பள்ள மடையான தஷிண திக்கிலே –
யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு -திருவிருத்தம் -95-என்றும்-ஆக்கையின் வழி உழல்வேன் -திருவாய் –3-2-1-என்றும்-மாறி மாறி பல பிறப்பும் பிறந்து –திருவாய் -3-2-2-என்றும் –பல் பிறவியில் படிகின்ற யான்—திருவாய் -5-1-9-என்றும்-பிறவிக் கடலில் நின்று நான் துளங்க -திருவிருத்தம் -45-என்றும் சொல்லுகிற படி ஜாதி நியமம் ஆதல் வர்ண நியமம் ஆதல் அன்றிக்கே கர்ம அனுகுணமாக ஏதேனும் ஒரு சரீரத்தில் பிரவேசித்து அந்த சரீரத்தின் வழி போய் ஜன்ம பரம்பரைகளிலே தோள் மாறி அவ் அனர்த்தத்திலே வெறுப்பு இன்றிக்கே அதில் அவஹாகித்து தரை காண ஒண்ணாத சம்சார சாகர மத்யஸ்தராய் கொண்டு நடுங்குகிற இவர் மேல் பட –

(எங்குமிலக்கற்று) விஷயீகாரத்துக்கு அநுகுணமான நன்மை சேதநர் பக்கல்‌ காணாமையாலே எங்கும்‌ இலக்கற்று, (அன்பொடு நோக்கான திசையிலே) *’அன்பொடு தென்திசை நோக்கிப்‌ பள்ளி கொள்ளும்‌”’ (பெகுமா.தி. 1 – 10) என்கிறபடியே இவர்கள் பக்கல்‌ நன்மை பெறாத வளவிலும்‌ இவர்கள் பக்கல்‌ தனக்குண்டான சாபலத்தாலே ஸ ஸ்நேஹமாக கடாஷித்த திசையிலே, (ஆக்கையில்‌ புக்கு) ”யாதானு மோராக்கையில்‌ புக்கு”’ (திருவிரு. 95) என்றும்‌, ““ஆக்கையின்‌ வழி யுழல்வேன்‌”’ (திருவா. 3 – 2 – 1) என்றும்‌, “மாறி மாறிப்‌ பல பிறப்பும்‌ பிறந்து (திருவா. 2 – 6 – 8) என்றும்‌, “’பன் மா மாயப் பல் பிறவியில்‌ படிகின்ற யான்‌” (திருவா. 3 – 2 – 2) என்றும்‌, ““பிறவிக் கடலுள்‌ நின்று நான்‌ துளங்க”” (திருவா. 5 – 1 – 9) என்றும்‌ சொல்லுகிறபடியே தேவாதி சரீரங்களிலே புக்கு“தேவோஹம்‌ மநுஷ்யோஹம்‌’ என்கிறபடியே அவற்றிலே பக்‌தராய்‌, அவற்றின்‌ வழியே போய்‌ தத் பலமான ஜந்ம பரம்பரைகளிலே தோள் மாறி அவற்றிலே அவகாஹித்துத்‌ தரை காண ஓண்ணாத ஸம்ஸார ஸமுத்‌ர மத்‌யஸ்தராய்க் கொண்டு நடுங்குகிற இவர் மேலே படும்படி,

வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய
துன்பம் மிகு துயர் அகல அயர் ஒன்றில்லா சுகம் வளர அக மகிழும் தொண்டர் வாழ
அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும் அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள்
இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும் இசைந்த உடனே என்று கொலோ விருக்கும் நாளே ?—1-10–ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு ராஜ்யத்தைக் கொடுத்து – அத் திக்கைப் பார்த்து கண் வளர்ந்து அருளுகிற
ஸ்ரீ பெரிய பெருமாளுடைய உள்ளில் திரு முற்றத்திலே

யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்
மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே  –
அதனால்
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்
மாதாவினைப் பிதுவை திரு மாலை வணங்குவனே – -95–ஏதேனும் ஒரு சரீரத்தில் பிரவேசித்து –அது தண்ணிய ஸூ கர-ஜன்மாவில் (ஸூ கர -பன்றியாய் )ஜனித்தாலும் –மம அயம் தேக -என்று அதிலேயே அபிமானித்து – அங்கே-உண்டானவத்றோடு சில சம்பந்த விசேஷங்களும் –அவை தன்னை விட மாட்டாமையாலேயாய்-போரா நிற்கும் ஆயிற்று –ஆக்கை -என்கையாலே-உபசயாத்மகம் என்று தோற்றுகிறது-(தேகம் வளர்ந்து -சரீரம் தேய்ந்து )புக்கு –சேதனனுக்கு அசித் சம்சர்க்கம்  ஸ்வதா உள்ளது ஓன்று அன்று –-கர்ம நிபந்தனம் என்கை –அங்கு ஆப்புண்டும் –-கர்ம வாசனையாய்- ருசி வாசனையாய் -அதிலே பத்தனாய் இருக்கும் –இது தண்ணிது என்று ஆசார்ய உபதேசாதிகளாலும் –சாஸ்திர வாசனையாலும் – பிரத்யஷத்தாலும்-அறியா நிற்கச் செய்தே –இத்தை விடில் செய்வது என் என்று துணுக் துணுக் என்னா நிற்கும் –ஆப்புண்டும் –சிநேகத்தைப் பண்ணியும் –ஆப்பு அவிழ்ந்தும் –கர்மம் அடியாக வந்தது என்று அறியாதே –அவன் தான் இதிலே இலை அகலப் படுத்தா-நிற்கும் –கர்ம ஷயம்   வந்தவாறே=அது தான் குலைந்து கொடு நிற்கும் இறே 

முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் –3-2-1-விஷய ப்ராவண்யத்தை விளைத்துக் கொண்டு சரீரத்தின் வழியே போய் அநர்த்தப் பட்டேன் – உழல்வேன்-சுழி தோறும் முழுகா நின்றேன் -கரை ஏற கொடுத்த தெப்பத்தைக் கொண்டு அதன் வழியே போய் கடலிலே புகுவாரைப் போலே உடம்பின் வழியே போய் சம்சார ஆர்ணவத்திலே புக்கு நசிக்கை-

மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து அடியை யடைந்து உள்ளம் தேறி
ஈறிலின்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினன்
பாறிப்பாறி யசுரர் தம் பல் குழாங்கள் நீர் எழப் பாய் பறவை யொன்று
ஏறி வீற்று இருந்தாய் உன்னை என்னுள் நீக்கல் எந்தாய் –2-6-8—சபரிகாரமாக உம்மை விஷயீ கரிக்கைக்கு நீர் செய்தது என் என்ன – அநாதியாக சாவது பிறப்பதுமாகப் போந்தேன்-அனுபவித்து மீளுதல் -பிராயச்சித்தம் பண்ணுதல் செய்யக் காலம் இல்லை யாயிற்று-இப்படி ஜென்ம பரம்பரையாக போரா நிற்க உன் திருவடிகளை வந்து கிட்டிக் கொண்டு நின்றேன் -அதாகிறது இந்த சித்திக்கு இத்தலையில் ஒரு முதலும் உண்டு என்று தோற்றாத படியால் சொல்லுகிறது

வன் மா வையம் அளந்த எம் வாமனா நின்
பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்
தொன் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ –3-2-2–-மம மாயா என்று உன்னுடையதாய் -தான் ஒன்றாய் இருக்க குண த்ரய பேதத்தை உடைத்தாய் துரத்யையாய் இருந்துள்ள ப்ரக்ருதி – நீ முடித்த முடியை நான் அவிழ்க்கவோ -ஸூ கத்திலே சங்கிப்பிப்பது -பிரவ்ருத்தியிலே மூட்டுவது-உணர்த்தி அறப் பண்ணுவது -ஆகிற குணங்களை தப்பவோ –பல் பிறவியில் – பிரகிருதி சம்பந்த ப்ரயுக்தமான தேவாதி பேதங்கள்-படிகின்ற யான்– -விழுகின்ற -என்னாத படி கின்ற -என்கிறது இவ்வனர்த்தத்திலே வெறுப்பு இன்றிக்கே பொருந்தி இருக்கை –வர்த்தமான நிர்த்தேசத்தால் இன்னம் தரை கண்டது இல்லை என்கை

ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே.–5-1-9–ஷூ பிதமான கடலுக்கு உள்ளே அழுந்துகிற நாவாய் போலே சம்சார ஆர்ணவத்திலே நான் நின்று துளங்க-நாவாய் என்று அதில் நிற்கிறவர்களை சொல்கிறது -மாஞ்சா க்ரோசந்தி இத்யாதி -கேவலம் நாவாயைச் சொன்ன போது கரையிலே நின்றார் இதுக்கு துணை யாவார் யார் என்கிறார்கள் ஆகக் கடவது -அப்போது தனக்கு ஓடுகிற தசையை உணர மாட்டாத அளவைச் சொல்லுகிறது -நாவாய் -ஆவாரார் துணை -என்கை யாவது -வ்ருஷடீ பிரதீஷாத் சாலையை என்றால் போலே யாகக் கடவது –நடுங்குகை யாவது -அசைந்து வருகை –

பக்க நோக்கற பண்ணின விசேஷ கடாஷம்--அதாவது-இப்படி இவர் மேல் பட்ட இத்தை-நம் மேல் ஒருங்க பிறழ் வைத்தார் -திருவிருத்தம் -45-என்கிற படியே ஒரு மடைப் படுத்தி-பக்க நோக்கு அறியான் என் பைம் தாமரைக் கண்ணனே திருவாய் -2-6-2- என்று-நாச்சிமார் திரு முலைத் தடத்தாலே நெருக்கி அணைத்தாலும் புரிந்து பார்க்க அறியான் என்னும் படி — நா ஸௌ புருஷகாரேண ந சாப்யன்யேன ஹேதுநா கேவலம் ஸ்வ இச்சையாவாஹம் ப்ரேஷே கிஞ்சித் கதாசன–பாஞ்சராத்ரம்-(என் இச்சையால் ஒருவனை ஒரு கால் கடாஷிக்கிறேன் -வேறே சாதனத்தாலும் புருஷகாரத்தாலும் இல்லை ) -என்றும்
நிர்ஹேதுக கடாஷேண மதீயேன மகா மதே ஆச்சார்யா விஷயீகாராத் பிராப்னுவந்தி பராம் கதிம்–பாஞ்சராத்ரம்-(எனது நிர்ஹேதுக கடாக்ஷத்தாலே ஆச்சார்யர் அங்கீகாரத்தாலே உயர்ந்த பேற்றினை அடைகிறார்கள் )-என்றும் சொல்லுகிற படி –ஸ்வ இச்சையால் நிர்ஹேதுகமாக பண்ண பட்ட விசேஷ கடாஷம் —இதுக்கு ஹேது–இப்படி பட்ட விசேஷ கடாஷம்-என்று வாக்ய அந்வயம் –ஆக கீழ் உக்தமான இவருடைய பிரபாவத்துக்கு ஹேது ஸ்பஷ்டமாக பிரதி பாதகமாயிற்று ..-இத்தாலே சங்கா வாக்கியத்தில் சொன்ன சங்கைகள் எல்லாம் கிடக்க ,-அனந்தன் மேல் புண்ணியங்கள் பலித்தவர் இவர் என்று நிர்ணயமாய் விட்டது .

“எங்கும்‌ பக்க நோக்கறியான்‌”’ (திருவா, 2 – 6 – 2) என்கிறபடியே நாச்சிமார் வந்து திருமுலைத் தடத்தாலே நெருக்கி அணைத்தாலும்‌ புரிந்து பாராதே ““நாஸெள புருஷ காரேண ந சாப்யந்யேந ஹேதுநா | கேவலம்‌ ஸ்வேச்ச யைவாஹம்‌ ப்ரேஷே கஞ்சித்‌ கதாசந”” (பாஞ்ச.), ““நிர்ஹேதுக கடாக்ஷேண மதீயேந மஹாமதே ! ஆசார்ய விஷயீகாராத்‌ ப்ராப்நுவந்தி பராங்கதிம்‌”” (பாஞ்ச.) என்றும்‌ சொல்லுகிறபடியே ஸ்வேச்சையாலே நிர்ஹேதுகமாகப்‌ பண்ணப்பட்ட விஸேஷ கடாஷம்‌ என்கிறார்‌
ஆக இத்தால்‌ கீழ்ச் சொன்ன அவருடைய ப்ரபாவத்துக்கு ஹேது பகவத் கடாக்ஷம்‌ என்றதாய்த்து.

பெரும் கேழலார்  தம் பெரும் கண் மலர் புண்டரீகம் நம் மேல்
ஒருங்கே பிறழவைத்தார்
இவ்வகாலம் ஒருவர் நம் போல்
வரும் கேழ்பவருளரே தொல்லை யாழி யஞ்சூழ் பிறப்பும்
மறுங்கே வரப் பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே -45–ரஷ்யத்தின் அளவு அன்றிக்கே –ரஷகனுடைய பாரிப்பு இருக்கிற படி -பெரும் கேழலார்  என்ற உடம்பு-அடைய-கண்ணாய் இருக்கை –-கடல் போலே பெருத்து அது நிறைய தாமரை பூத்தாற் போலே இருக்கை மகா வராஹஸ் ஸ்ப்புட பத்ம லோசன –இப் பிரளயம் கொண்ட பூமியை எடுத்து பிராட்டிக்கு கார்யம் செய்தானாய்- ஸ்ரீ பூமிப் பிராட்டியை குளிர நோக்கிக் கொண்டு இருக்கிற இருப்பு –நம் மேல் –அவள் பிரஜையான நம் மேல் –ஒருங்கே –ஸ்ரீ பூமி பிராட்டி பக்கலிலும் பாலி பாயாதபடி–பிறழ வைத்தார் –மிக வைத்தார் –-தம்மால் தரிக்க போகிறது இல்லை–

சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற் பின்
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் துளக்கற்ற அமுதமாய் எங்கும்
பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே –
2-6-2-பிராட்டி பின்னே வந்து அணைத்தாலும் விலங்கப் பார்க்கிறிலன் – இங்கே ஆளவந்தாருக்கு குருகைக் காவல் அப்பன் அருளிச் செய்த வார்த்தை-என் பைந்தாமரைக் கண்ணனே–ஆடியாடியிலே ஆற்றாமையால் வந்த தாபம் தீர்ந்து திருக் கண்களும் குளிர்ந்த படி –

நித்ய சம்சாரியாய் போந்தார் ஒருவருக்கு பகவத் கடாஷ விஷயமான அளவிலே நிகில பாபங்களும் நீங்கி -இப் பிரபாவம் எல்லா உண்டாகக் கூடுமோ என்கிற சங்கையிலே -பகவத் கடாஷ வைபவத்தை அருளிச் செய்கிறார் –நித்ய ஸம்ஸாரியாய்ப்‌ போந்தாரொருவர்க்கு ப,க,வத் கடாக்ஷத்தாலே ஸாம்ஸாரிக ஸகல பாபங்களும்‌ போய்‌ இந்த ப்ரபாவமெல்லாம்‌ உண்டாகக் கூடுமோ என்னில்‌; ஸபரி முதலானாரை பரி ஸூத்‌,த,மாக்கின ஸர்வேஸ்வரனுடைய தி,வ்ய கடாக்ஷம்‌ அவஸ்ய மநுபோக்தவ்யமான ஸகல பாபங்களையும்‌ நஸிப்பிக்குமிறே என்கிறார்‌

ச்ரமணி விதுர ரிஷி பத்நிகளை பூதராக்கின புண்டரீ காஷன் நெடு நோக்கு சாபம் இழிந்தது என்னப் பண்ணும் இறே-சூரணை -95-

சிரமணீ பூதராக்கின புண்டரீகாக்ஷன் நெடு நோக்கு-அதாவது – ஸ்ரமநீம் தர்ம நிபுணாம் அபிகச்ச—பாலகாண்டம் -1-57-( தாயினும் உயிருக்கு நல்கும் சவரியைத் தலைப்பட்ட நன்னாள் ஏயதோர் நெறியின்
எய்தி யிரலையின் குன்றமேறி
-கம்பர் ) –என்று கபந்தன் சொன்ன அநந்தரம் – சோப்ய கச்சன் மகா தேஜஸ் சபரீம்-பால -1-57( மிக்க தேஜஸ் உடைய ஸ்ரீ ராமபிரான் சபரியிடம் சென்றார் )-என்கிற படியே –
ஸ்வயமேவ சென்று விஷயீகரித்த வேடுவச்சி யான ஸ்ரமணியை சஷுசா தவ ஸூவ்ம்யேன பூதாஸ்மி ரகுநந்தன – பாத மூலம் கமிஷ்யாமி யானஹம் பர்ய சாரிஷம் –ஆரண்யம் -74-12-
( ஆண்டவன் அன்பின் ஏத்தி அழுது இழி அருவிக் கண்ணாள்
மாண்டது என் மாயப்பாசம் வந்தது வரம்பில் காலம்
பூண்ட மாதவத்தின் செல்வம் போயது பிறவி என்பாள்
வேண்டிய கொணர்ந்து நல்க விருந்து செய்திருந்த வேளை –
கம்பர் ) என்று தேவரீர் உடைய அழகிய திரு கண் பார்வையாலே என்னுடைய பிராப்தி பிரதி பந்தங்கள் எல்லாம் போய் – பரிசுத்தன் ஆனேன் என்று சொல்லும்படி யாகவும் –

(ஸ்ரமணிவிது,ர) ““ஸ்ரமணிம்‌ த.ர்ம நிபுணாம்‌”’ (ரா. ஆ. 1 – 56) என்கிறபடியே வேடுவிச்சியாயிருக்கிற ஸபரியை *சக்ஷுஷா தவ ஸெளம்யேந பூதாஸ்மி ரகு,தந்த,ந । பாத,மூலம்‌ க,மிஷ்யாமி யாநஹம்‌ பர்யசாரிஷம்‌”‘ (ரா. ஆ. 74 – 12) என்று அவள்தானே “தேவரீருடைய அழகிய கடாக்ஷத்தினாலே என்னுடைய ப்ராப்தி ப்ரதிப,ந்த,கங்களெல்லாம்‌ நிங்பேஷமாகப்‌ போகையாலே பரிஸுத்‌,தை,யானேன்‌’ என்று சொல்லும்படி பண்ணியும்‌,

விதுரரைப் பூதராக்கின புண்டரீ காஷன் நெடு நோக்கு-அதாவது – வெள்ளமானது பள்ளத்திலே தானே சென்று விழுமா போலே – அபிஜனாத்ய அஹங்கார யோக்யதையும் இல்லாமையாலே – நிவாசாய ய யௌ வேசம விதுரஸ்ய மகாத்மான-உத்யோக பர்வம் – -என்று தானே சென்று க்ரஹத்தில் புக்கு
விதுரான்னானி புபுஜே சுசீனி குண வந்தி ஸ-உத்யோக பர்வம் –தம்முடைய ஸ்பர்சம் உள்ளவற்றை விரும்பி அமுது செய்யப் பெற்ற விதுரரை –பீஷ்ம துரோண வதிக்ரம்யா மாஞ்சைவ மது ஸூதன கிமர்தம் புண்டரீகாஷா புக்தம் வ்ருஷல போஜனம்-உத்யோக பர்வம் – – என்று எதிரியானவன்- சீறிச் சொல்லச் செய்தேயும் –-புண்டரீகாஷா -என்னும் படி அழகிய திரு கண்களின் கடாஷத்தாலே சகல சம்சாரிக தோஷங்களும் போய் பரிசுத்தர் ஆம் படியும் —

ஸ்ரீவிது,ரரை ‘“பீ,ஷ்மத்‌,ரோணாவதிக்ரம்ய மாஞ்சைவ மது,ஸூ௫த.ந । கிமர்த்த_ம்‌ புண்ட,ரீகாக்ஷ பு,க்தம்‌ வ்ருஷலபே,ஜநம்‌”” (பார. உத்‌.) என்று எதிரியானவன்‌ சீறிச்‌ சொல்லா நிற்கச் செய்தேயும்‌ ”புண்ட,ரீகாக்ஷ”” என்னும்படியான திருக்கண்களாலே அவரை பரிஸூத்‌,த, ராம்படி பண்ணியும்‌,

ரிஷி பத்நிகளை பூதராக்கின புண்டரீ காஷன் நெடு நோக்கு-அதாவது-வேர்த்து பசித்து வயிறு அசைந்து வேண்டு அடிசில் உண்ணும் போது ஈது என்று பார்த்து இருந்து நெடு நோக்கு–நாச்சியார் -12-6- கொள்ளுகிற போதை – நெடு நோக்காலே பக்த விலோசனத்தில் ருஷி பத்நிகளில் ஒருத்தியை –
தத்ரை கா வித்ருதா பர்த்தா பகவந்தம் யதாஸ்ருதம் ஹிருதோபகூஹ்ய விஜஹவ் தேஹம் கர்ம நிபந்தனம் –ஸ்ரீ பாகவதம் -10-23-34–(ஒருத்தி கணவனால் தடுக்கப் பட்டவளாய் தான் கேட்டு இருந்தபடியே கண்ணபிரானை மனசால் கட்டிக் கொண்டு கர்மத்தால் உண்டான சரீரத்தை விட்டாள் )
என்று ஸ்வ விஷய பிராவண்யத்தாலே – அப்போதே சம்சாராம் முக்தையாம் படியையும் – அல்லாதாரை ஷீண பாபராய் முக்த அர்ஹராம் படி பரிசுத்தராகவும் பண்ணின சர்வேஸ்வரனுடைய கடாஷமானது –

(ருஷி பத்நிகளை) “*வேர்த்துப் பசித்து வயிறசைந்து வேண்டடிசி லுண்ணும் போது ஈதென்று பார்த்திருந்து நெடு நோக்குக் கொள்ளும்‌” (நா. திரு. 12 – 6) என்கிறபடியே தன்னுடைய நெடு நோக்காலே ப,க்த விலோசநத்தில்‌ ருஷி பத்நிகளிலே ஒருத்தியை “கத்ரைகா வித்‌,ருதா ப,ர்த்ரா ப,க,வந்தம்‌ ய தாஸ்ருதம்‌ । ஹ்ருதேரபகூ,ஹ்ய விஜஹெள தேஹம்‌ கர்மநிப,ந்த,நம்‌”” (ப,ாக,. 10 – 28 – 34) என்று தன் பக்கல்‌ ப்ராவண்யத்தாலே-அப்போதே முக்தையாம்படிபண்ணியும்‌, அதிலே சிலர்‌ தன்னை அதுப,விக்கும்படியாகவும்‌ பண்ணின விஷோேஷ கடாக்ஷமானது,

கார்த் தண் முகிலும் கருவிளையும் காயா மலரும் கமலப்பூவும்
ஈர்த்திடுகின்றன வென்னை வந்திட்டு இருடீகேசன் பக்கல் போகே யென்று
வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வேண்டடிசில் உண்ணும் போது ஈதென்று
பார்த்திருந்து நெடு நோக்குக் கொள்ளும் பத்த விலோசனத்து உய்த்திடுமின் –12-6-பசுக்களைக் கொண்டு போனால் காதம் இரு காதம் அவ்வருகே கை கழிய விட்டு-அங்கே ரிஷிகளுடைய ஆஸ்ரமங்களிலே சேமம் -தளிகை -வேண்டிவிட்டு -அவர்கள் க்ரியா பிரதானராய் இருந்த வாறே
பத்நீ சாலைகளிலே வேண்டிப் போக விடும்-அவர்கள் சேமம் கொடுத்து விட்டால் அதின் வடிவு வரவு –பார்த்து திருமேனி எங்கும் வேர்த்துப் பசித்து தடுமாறி –இதனால் வேண்டி அடிசில் ஆய்த்து
விரும்பி இட்ட சோறு –பிரயோஜ நாந்தரர் இடும் அவற்றை குழியிலே கால் கழுவினாரோ பாதி யாகவாய்த்து கொள்வது –பித்ருக்கள் நிமித்தமாக வரிக்கப் பட்டது போலே இல்லாமல் -தானும் விதி ப்ரேரிதனாகக் கொள்ளும் என்றபடி பெரியாழ்வார் பெண் பிள்ளை இடுமது போலே – இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில்-நான் ஓன்று நூறாயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வன் -9-7–என்னுமா போலே பெரியாழ்வார் மகளாய் இழந்து இராதே ஒரு பட்டை சோற்றை கொண்டு போயாகிலும் கிட்டுவோம் -என்கிறாள்-நெடு நோக்குக் கொள்ளும் பத்த விலோசனத்து உய்த்திடுமின் –பத்தம் -சமைத்த சோறு — விலோசனம் -பார்வை-(பிரசாதம் எதிர் பார்த்து இருக்கும் -என்றே சப்தார்த்தம் ) சோறு பார்த்து இருந்த இடமாய்த்து- சோறு பார்த்து இருக்கும் இடத்திலே -என்றபடி

அம்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழிந்து–திருப்பாவை –22 -என்று-அழகிய திரு கண்களாலே எங்களைப் பார்த்து அருளினாய் ஆகில் சாபோபகதரைப் போலே அனுபவித்து அல்லாது நசியாத எங்கள் பாபம் போய் விடும் என்கிற படியே – அனுபவ விநாஸ்யமான சகல பாபங்களும் நிவ்ருத்தமாம் படி பண்ணும் இறே என்கை–பகவத் கடாஷம் தான் சகல பாப ஷபண நிபுணமாகையாலே பட்டவிடம் -அமலங்களாக –திருவாய் -1-9-9 -என்னும் படி நிர் தோஷமாம் இறே —

(சாபமிழிந்தென்னப் பண்ணுமிறே) “திங்களு மாதித்தியனுமெழுந்தாற் போல்‌ அங்கணிரண்டுங்கொண்டெங்கள்மேல்‌ நோக்குதியேல்‌ எங்கள்மேல்‌ சாபமிழிந்து ”” (திருப்பாவை 22) என்கிறபடியே ஆஹ்லாத,கரத்வத்தையும்‌, அதிப்ரகாஸகத்வத்தையும்‌ உடைத்தாகையாலே சற்த்‌.ராதி.த்யர்களிருவரும்‌ உதித்தாற்போலேஇருக்கிற அழகிய திருக்கண்களாலே எங்களைப்‌ பார்த்தருளினாயாகில்‌ ஸசாபோபஹதரைப்போலே, அநுப,வித்தல்லது நமமியாத ஸாம்ஸாரிக ஸகல துரிதங்களும்‌ நிவ்ருத்தமாம்‌ என்று சொல்லும்படி ஸகல பாபக்ஷபணத்தில்‌ நிபுணங்களாயிறே இருப்பது என்கிறார்-

அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டில் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் (எம் கண்)மேல் நோக்குதியேல்
எங்கள்  மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்–22—சந்திர ஸூர்யர்கள் கோப பிரசாதங்களுக்கு ஒப்பர் அல்லர் என்கை –இரண்டும் கொண்டு முழு நோக்கு பொறுக்கும் அளவானவாறே -இரண்டும் -என்று சொல்கிறார்கள் –1-ப்ரஹ்ம சாபம் மார்பிலே வேர்ப்பாலே போக்கலாம் –-2-துர்வாசாவினுடைய சாபம் மார்பில் இருக்கிறவர்களுடைய கடாக்ஷத்தாலே போக்கலாம்-3-கௌதம சாபம் காலில் பொடியால் போக்கலாம் –-4-தக்ஷ சாபம் ஒரு தடாகத்தில் முழுக்கிட்டு போக்கலாம்-எங்கள் சாபம் போக்குகைக்கு இத்தனையும் வேணும் –1-வேர்த்து நின்று விளையாடக் காண வேணும்(நாச்சியார் )-2-எங்கள் மேல் நோக்க வேணும்-3-பொடி தான் கொணர்ந்து பூச வேணும் (நாச்சியார் 13)-4-இப்போதே எம்மை நீராட்ட வேணும்

கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே
அமலங்களாக விழிக்கும்
ஐம்புலனும் அவன் மூர்த்தி
கமலத்தயன் நம்பி தன்னைக் கண்ணுத லானொடும் தோற்றி
அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி என் நெற்றி உளானே –1-9-9–அவன் திருக் கண்களால் நிர் தோஷனாம் படியும் -காண வல்லேனாம் படியும் விசேஷ கடாக்ஷத்தைப் பண்ணினான் -விஷய பிரவணமான இந்திரியங்கள் செய்வது என் என்னில்-ஐம்புலனும் அவன் மூர்த்தி அவையும் அவன் அழகைக் கண்டு அவனுக்கு சரீரவத் விதேயம் ஆயிற்றின அவனைக் காண்பதற்கு முன்பு அவிதேயமானவை அவனைக் கண்டவாறே விதேயம் ஆயிற்றன

இப்படி இவரை நிர்ஹேதுகமாக விசேஷ கடாஷம் பண்ணிற்று எதுக்காகா ? விசேஷ கடாஷ வேஷம் தான் ஏது– இவர் தாம் பின்பு ஆன படி எங்கனே என்னும் அபேஷையிலே அருளிச் செய்கிறார் மேல் —ஸர்வேஸ்வரன்‌ இவரை இப்படி நிர்ஹேதுகமாக கடாக்ஷித்ததுக்கு ப்ரயோஜநம்‌ என்‌ என்னில்‌, லோக ஹிதார்த்தமாக என்கிறார்‌

கோ வ்ருத்திக்கு நெருஞ்சியை புல்லாக்கினவன் ஜகத் ஹிதார்த்தமாக- எனக்கே நல்ல அருள்கள் -என்னும் படி சர்வ சௌஹார்த்த பிரசாதத்தை ஒருமடை செய்து இவரைத் தன்னாக்க லோகமாகத் தம்மைப் போல் ஆக்கும் படி யானார்-சூரணை-96-

கோ வ்ருத்திக்கு நெருஞ்சியை புல்லாக்கினவன் ( கோ விருத்திக்கு -பசுக்களை பாதுகாத்து போஷிக்க )அதாவது-திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி-திருவாய் -10-3-10-என்று பரம பதத்தில் காட்டிலும் ,
பசு நிரை மேய்க்கையே விரும்பி இருக்கும் அவனாகையாலே – பிருந்தாவனம் பகவதா கிருஷ்ணேந அக்லிஷ்ட கர்மணா சுபேன் மனசா த்யாதம் கவாம் வ்ருத்தி மபீப்சதா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-6-28–என்கிற படியே-கோ ரஷணத்துக்காக நெறிஞ்சிக் காட்டை -உத்பன்ன நவ சஷ்பாட்யா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-6-37- என்கிறபடியே தத் போக்யமான புல்லாம்படி பர சம்ருத்தி ஏக பிரயோஜனமான
திரு உள்ளத்தாலே சங்கல்பித்த சர்வ சக்தி யானவன் –ஜகத் ஹிதார்த்தமாக-அதாவது –-நமோ ப்ரஹ்மண்ய தேவாய கோ ப்ராஹ்மண ஹிதாயச ஜகத் ஹிதிதாய க்ருஷ்ணாய கோவிந்தாய நமோ நம –பாரதம் -என்கிற படியே கோ ரஷணத்தோபாதி ஜகத் ரஷணத்துக்கும் கடவன் தானே ஆகையாலே –
ஜகத்தினுடைய ஹிதார்தமாக
-( ஆடுதுறை – ஜகத் ரக்ஷணப் பெருமாள் )

“*திவத்திலும்‌ பசுநிரை மேய்ப்புவத்தி” (திருவா, 10 – 3 10) என்று ஸ்வ ரக்ஷணத்தில்‌ அந்வயமில்லாத கோ ரக்ஷணத்திலே திருவுள்ளம்‌ உகந்திருக்கையாலே அவற்றினுடைய அபிவ்ருத்‌திக்காக “ப்‌ருந்தாவநம்‌ பகவதா க்ருஷ்ணேநாக்லிஷ்ட கர்மணா ! றாபே,ந மநஸாத்‌,யாதம்‌ கவாம்‌ வருத்‌தி மபிப்ஸதா”’ (வி.பு. 5 – 6 – 28) என்று நெரிஞ்சிக் காட்டை பர ஸம்ருத்‌த்‌யேக ப்ரயோஜநமாகத்‌ திருவுள்ளத்தாலே **உத்பந்நநவபாஷ்பாட்‌யம்‌”’ (வி.பு. 5 – 6 – 37) என்கிறபடியே அவற்றுக்கு போக்‌யமாக ஸங்கல்பித்தவன்‌. “நமோ ப்‌ரஹ்மண்யதே வாய கேரா ப்‌ராஹ்மண ஹிதாய ச ।ஜகத்‌தி தாய க்ருஷ்ணாய கோவிந்தாய நமோ நம?” (பாரதம்‌) என்று பசுக்களினுடைய ரக்ஷணத்தோபாதி ஜகத்தினுடைய ரக்ஷ்ணத்துக்குக்‌ கடவன்‌ அவனாகையாலே அந்த ஜகத்தினுடைய ஹிதார்த்தமாக.

அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ அசுரர்கள் வன்கையர் கஞ்சன் ஏவ
தவத்தவர் மறுக நின்று உழி தருவர் தனிமையும் பெரிது உனக்கிராமனையும்
உவத்திலை உடன் திரிகிலையும் என்று என்று ஊடுற வென்னுடை யாவி வேமால்
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே–10-3-10—பரம பதத்தில் இருப்பைக் குலைத்து அன்றோ பசு மேய்க்கப் போந்தது -அவ்விருப்பு குலைந்து வந்து இருந்ததும் இப்போது பொல்லாது என்று இருக்கிறாள் -அவ்விருப்பிலே இருந்தான் ஆகில் இப்போது வயிறு எரிய வேண்டா விறே -நம் பேர் இழவு கொண்டு கார்யம் இல்லை –வஸ்து ஸூ ரஷிதமாய் இருக்கும் என்று இறே இவர்கள் இருப்பது -பரம பதத்தில் இருப்பை விட்டு பசு மேய்க்கப் போகக் கடவ யுன்னை – எங்களை உபேக்ஷித்தாய் என்று இன்னாதாகப் புகுகிறோமோ -அவ்விருப்பிலும் பசு மேய்க்க என்றால் யுகப்புதி என்றுமாம் –

எனைத்தோர் பிறப்பும் –எனக்கே நல்ல அருள்கள் -என்னும் படி-அதாவது – எனைத்தோர் பிறப்பும் எதிர் சூழல் புக்கு எனக்கே அருள்கள் செய்ய அம்மான் திரு விக்ரமனை – விதி சூழ்ந்தது–திருவாய் -2-7-6 -என்று அநேக ஜென்மங்கள் நான் பிறந்த ஜென்மங்களுக்கு எதிரே பிறந்து வந்து எனக்கே தன் பிரசாதங்களைப் பண்ணும் படி சர்வேஸ்வரனை கிருபை கால் காட்டிற்று என்றும் – நல்ல அருள்கள் நமக்கே தந்து அருள் செய்வான்–திருவாய் -8-6-1 -என்றும் இத் தலையில் குற்றம் ஆதல் –அஜ்ஞஞத்வம் ஆதல்–தன் சார்வஜ்ஞம் ஆதல் -பாராதே – தன் பேறாக பண்ணுமதான அருள்களை நமக்கே அசாதாரணமாக தந்து அருளுகிறவன் என்றும் இவர் பேசும் படி –

(எனக்கே நல்ல வருள்கள்‌ என்னும்படி) ‘எதிர்சூழல் புக்கெனைத்தோர்‌ பிறப்பும்‌ எனக்கே அருள்கள்‌ செய்ய – எம்மான்‌ திருவிக்கிரமனை – விதி சூழ்ந்தது”‘ (திருவா. 2 – 7-6) என்று – அநேக ஜந்மங்கள்‌ நான்‌ பிறந்த ஐந்மங்களுக்கு எதிரே பிறந்து வந்து என்னை விஷயீகரிக்ரும்படி ஸர்வேஸ்வரனை க்ருபை கால் கட்டிற்று என்றும்‌, ‘நல்ல வருள்கள்‌ நமக்கே உகந்தருள் செய்வான்‌’” (திருவா. §-6- 1) என்றும்‌ தன் பேறாக க்ருபை பண்ண!], “பிராட்டி திருவநந்தாழ்வான்‌ தொடக்கமானார்க்குக்‌ கூறுகொடாதே எனக்கும்‌ என்னோடு ஸம்பந்தமுடையார்க்கும்‌ தருகிறவன்‌” என்று இவர்‌ பெறும்படி.

மது சூதனை யன்றி மற்றிலேன் எத்தாலும் கருமமின்றி
துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே –2-7-6-
–நான் இழவுக்கு யத்னம் பண்ணிப் போந்த காலம் எல்லாம் என்னைப் பெறுகைக்கு அவன் கிருஷி பண்ணிப் போருகையாலே பெற்றேன்
எதிரான சூழல் -என்னை அகப்படுத்திக் கொள்ளுகைக்கு ஈடான திரு வவதாரங்கள்-எனக்கே யருள்கள் செய்ய- எனக்கும் பிறருக்குமாக அன்றிக்கே எனக்கே அருள்கள் பண்ணும்படி –-யம்மான் திரிவிக்ரமனையே – எனக்கு என்னவே விதி சூழ்ந்தது-சர்வேஸ்வரனாய் வைத்து ஸ்ரீ வாமனனாய் சகல லோகங்களையும் திருவடியின் கீழே இட்டுக் கொண்டவனை –-அது பரதசை என்னும்படி எனக்கு என்னவே விதி சூழ்ந்தது –தம்மை விஷயீ கரித்து அல்லது அவனை இருக்க ஒட்டாமையாலே அவனுடைய க்ருபா குணத்தை விதி என்கிறது -ச தம் நிபதிதம் –

எல்லியும் காலையும் தன்னை நினைத்து எழ
நல்ல வருள்கள் நமக்கே தந்தருள் செய்வான்
அல்லி யந்தண்ணந்துழாய் முடி அப்பனூர்
செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே–8-6-1—இத்தலையில் குற்றம் பாராதே வெறுமையே பார்த்து தன் பேறாக அருளுகை -மாயக் கூத்தனில் விடாய்க்கு அருளினான் என்று இருக்கிறிலர்-நமக்கே தந்தருள் செய்வான்-பலர் அடியார் முன்பு அருளிய -என்று நித்ய ஸூ ரிகளும் தாம் பெற்றபேறு பெற்றிலர் என்றாயிற்று நினைத்து இருப்பது-

சர்வ சௌஹார்த்த பிரசாதத்தை ஒருமடை செய்து-அதாவது-ஸூஹ்ருதம் சர்வ பூதானாம்-ஸ்ரீ கீதை -5-29-என்கிற படியே-சர்வ பூதங்களின் பக்கலிலும் நடக்கிற தன்னுடைய சௌஹார்த்த பலமான பிரசாதமாகிற கிருபையை இவர் ஒருவர் விஷயமாகவும் ஒரு மடைப் படுத்தி –இவரைத் தன்னாக்க-
அதாவது –-என்னைத் தன்னாக்கி –திருவாய் –7–9-1-என்கிற படி- அஞ்ஞான அசக்திகளுக்கு எல்லையாய் இருக்கிற இவரை- தன்னோடு ஒத்த ஞான சக்திகளை உடையராம் படி பண்ண
இப்படி அவனால் திருந்தின இவர் –லோகமாகத் தம்மை போல் ஆக்கும் படி யானார்-அதாவது –
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போல் அவனுடைய பேரும் தார்களுமே பிதற்றி–திருவாய் -6-7-2- -என்கிற படி-தம்மோடு அன்வயித்த லோகத்தில் உள்ளவர்கள் எல்லாம் தம்மை போல் பகவத் ஏக பரராக பண்ணும் படி ஆனார் என்கை —

(ஸர்வ ஸெளஹார்த்த, ப்ரஸாதத்தை ஒரு மடை செய்து) “ஸுஹ்ருதம்‌ ஸர்வ பூதாநாம்‌ ஜ்ஞாத்வா மாம்‌ .ஸாந்திம்ருச்சதி‘” (கீதை 5 – 29) என்கிறபடியே ஸர்வ பூதங்கள்‌ பக்கலிலும்‌ நடக்கிற தன்னுடைய ஸெளஹார்த்தத் தாலுண்டான ப்ரஸாதத்தை-இவரொருவர் பக்கலிலே ஒரு மடைப் படச்‌ செய்து விஷயீகரித்து. (இவரைத் தன்னாக்க) ““என்னைத் தன்னாக்கி”” (திருவா. 7 – 9 – 1) என்கிறபடியே இவரைத்‌ தன்னோடொத்த ஜ்ஞாந பக்திகளை உடையராகவும்‌, அநந்யார்ஹ ஸேஷபூதராகவும்‌ பண்ண- அவனாலே விஷயீ க்ருதரான இவரும்‌ லோகமாகத்‌ தம்மைப் போலே ஆக்கும்படி ஆனார்‌. “ஊரும்‌ நாடுமுலகமும்‌ தன்னைப் போல்‌” (திருவா. 6 – 6 – 2) என்கிறபடியே தாம்‌ அவதரித்த திருநகரி, அத்தோடே சேர்ந்த திருவழுதிவளநாடு, அத்தோடே சேர்ந்த பூ, லோகம்‌, அவற்றிலுள்ளாரடையத்‌ தம்மைப் போலே பகவதநுபவைக பரராகப்‌ பண்ணும்படி ஆனார்‌ என்கிறார்‌.-

போக்தாரம் யஜ்ஞதபஸாம் ஸர்வலோகமஹேஸ்வரம்
ஸுஹ்ருதம் ஸர்வபூதாநாம் ஜ்ஞாத்வா மாம் ஸாந்திம்ருச்சதி
-5-29—யாகம், தபசு இவைகளைக் செய்விக்கும் கர்த்தாவாயிருப்பவரும், இவைகள் வாயிலாக யோகியால் அடையப்பெறும் தெய்வமாயிருப்பவரும் நாராயணனே. உலகம் முழுவதையும் அவர் ஆளுகிறார். அப்படிச் செய்வதால் அவரிடத்து அன்பு இல்லாதுபோய்விடவில்லை. கைம்மாறு கருதாது எல்லா உயிர்களுக்கும் நன்மையே செய்கிறார் அவர். எல்லாருடைய உள்ளத்திலும் மன சாக்ஷியாக வீற்றிருந்து அவரவர் கர்மத்துக்கு ஏற்ற பலனை அவர் எடுத்து வழங்குகிறார். செயலுக்குத் தலைவனாயிருப்பது போன்று அறிவுக்கும் அறிவாய் இலங்குகின்றார் அவர். இவ்வுண்மையை அறிகின்றவர்களுக்கு மனச்சஞ்சலம் இல்லை.
சாந்தி தானே வந்தமையும்.

என்றைக்கும் என்னை உய்யக்கொண்டு போகிய
அன்றைக்கு அன்று என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
இன் தமிழ் பாடிய ஈசனை
ஆதியாய்
நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ?–7-9-1–கவி பாடுகைக்கு அனுரூபமான ஞான சக்தி யாதிகள் இல்லாத என்னை -தன்னோபாதி ஞான சக்தி யாதிகளை யுடையேனாம் படி பண்ணி -என்னுதல் -என்னைத் தன்னாக்கி-தனக்கு ஆளாம் படி பண்ணி என்னுதல் –-என்னால் தன்னை-தன்னாலே தத்த சக்தகதனான என்னாலே -சுருதி யாதிகளுக்கும் பேச நிலம் அன்றிக்கே இருக்கிற தன்னை -யதோ வாசோ நிவர்த்தந்தே –யஸ்யாமதம் தஸ்ய மதம் -அவ்விஞ்ஞாதம் விஜயானதாம் –

ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்ற
க் கற்பு வான் இடறி
சேரும் நல் வளம் சேர் பழனத் திருக் கோளூர்க்கே
போருங்கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே –6-7-2-தான் இருந்த ஊரும்-அத்தோடு சேர்ந்த நாடும் -அத்தோடு சேர்ந்த லோகமும் –ராமாவதாரத்திலும் ஒரு ஊர் இறே திருந்திற்று -இங்கு லோகே அவ தீர்ண பாமர்த்த சமக்ர பக்தி யோகாயா -என்கிறபடியே யாயிற்று திருத்துகை –அங்கே பரம சாம்யா பன்னரைத் தேடித் போகிறாள் ஆகில் தான் திருத்தினார் ஆகாதோ –அவனுடைய பேரும் தார்களுமே பிதற்றக் -அரவிந்த லோசனன் என்றும் -மட்டவிழ் தண்ணம் துழாய் -என்றும் விரை மட்டலர் தண் துழாய் -என்றும் சொல்லா நிற்கை -ப்ரீதி பிரேரிதராய் அக்ரமாகச் சொல்லுகை -ஜாமதகன் யஸ்ய ஜல்பத -என்கிற படியே -இப்படி லோகம் அடங்க அக்ரமமாக சொல்லும் படி பண்ணி –

–——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌ – 5 –ஸூரி வைபவ பாதம்-6—ஸூரி ப்ராமாண்ய விஸேஷாதி கரணம்‌(ப்ரமாத்ரு வைபவம் ) -(75-93)ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

July 8, 2026

5 –ஸூரி வைபவ பாத, – 3 அதிகரணங்கள் இதில்-
5– க்‌ரந்த,-தத் கர்த்ரு வைப, வாதி, கரணம்‌ —39 – 74 –மொத்தம் 36 ஸூரணைகள்
6—ஸூரி ப்ராமாண்ய விஸேஷாதி கரணம்‌(ப்ரமாத்ரு வைபவம் ) 75 – 93 –மொத்தம் 19-ஸூரணைகள்
7-ப,க,வத் கடாக்ஷ விஸேஷாதி கரணம்‌ 94–96—மொத்தம் -3- ஸூரணைகள்

இது வரை ஸ்ரீ திருவாய் மொழி வைபவம் -மேலே 19 சூர்ணிகைகளால் ஸ்ரீ நம்மாழ்வார் வைபவம் மேலே –இப்படி பிரமாண பிரமேய வைபவத்தை பிரதிபாதித்த அநந்தரம் பிரமாத்ரு வைபவத்தை
விஸ்தரேண பிரதி பாதிக்கிறார் மேல் — அதில் பிரதமத்தில் பிரமாண பிரமேயங்கள் இப்படி விலஷணமாய் இருந்ததே ஆகிலும் , இப் பிரமாண வக்தா ஆனவர் சதுர்த்த வர்ணர் அன்றோ என்ன
பாகவத உத்தமரான இவருடைய ஜன்ம நிரூபண தோஷத்தை பிரமாண பிரமேயங்களில் த்ரவ்ய பாஷா நிரூபண தோஷம் கீழ் உக்தம் அன்றிக்கே இருக்கச் செய்தே அத்தை சித்தவத்கரித்து திருஷ்டாந்தமாக கொண்டு அருளிச் செய்கிறார்-ஆக, ப்ரமாண ப்ரமேயங்களை ஸஹ படித்து இந்த ப்ரஸங்கத்திலே இவற்றோடே சேர்த்து ப்ரமாத்ரு வைபவத்தை அருளிச் செய்கிறார்‌–மேலெல்லாம்‌ இதில்‌ ப்ரமாண ப்ரமேயங்களினுடைய எல்லையான அர்ச்சாவதாரத்தினுடையவும்‌, திருவாய்மொழியினுடையவும்‌ த்‌ரவ்ய பாஷா நிரூபணத்தோடொக்கு மென்று இவற்றை ஸித்‌தவத் கரித்து இவற்றோடொக்கும்‌ ப்ரமாதாக்களின்‌ ஜந்ம நிரூபணம்‌ என்கிறார்‌ –

வீட்டு இன்ப-இன்ப பாக்களில் த்ரவ்ய பாஷா நிரூபண சமம் இன்ப மாரியில் ஆராய்ச்சி –சூரணை-75-

அதாவது
கனிவார் வீட்டு இன்பமே என் கடல் படா அமுதே –திருவாய் -2-3-5-என்கிற படி பகவத் விஷயம் என்றால்
உளம் கனிந்து இருக்கும் அவர்கள் உடைய க்ருஹங்களிலே அவர்கள் உகந்த ஒரு த்ரவ்யத்தை திரு மேனியாக கொண்டு இருந்து இன்பத்தை விளைக்கிற த்ரவ்ய அர்ச்சாவதாரத்தில் , நிரூபணத்தோடும்-அம் தமிழ் இன்பப் பாவினை அவ்வட மொழியை -பெருமாள் -1-4- -என்கிற படியே திராவிட ரூபமாய்
பகவத் குண கண பிரதிபாதகதயா விசேஷஜ்ஞர்க்கு ஆனந்தவஹமாய் இருக்கிற திரு வாய் மொழியில் பாஷா நிரூபணத்தோடும் , துல்ய தோஷம்-அடியார்க்கு இன்ப மாரியில் -திருவாய் -4-5 -10-–என்கிற படி ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு திரு வாய் மொழி முகத்தாலே ஆனந்தத்தை வர்ஷிக்கும் மேகமான ஆழ்வார் பக்கல் உத்பத்தி நிரூபணம் என்கை-விஷ்ணோ அர்ச்சாவதாரேஷு லோஹபாவம் கரோதிய யோ குரவ் மானுஷம் பாவ முபவ் நரக பாதினவ்– ஸ்ரீ ப்ரஹ்மாண்ட புராணம் –
(எவன் ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரங்களில் தாம்பரம் போன்ற உலோகபுத்தியைச் செய்கிறானோ –
எவன் குருவிடத்தில் மனிதன் எண்ணத்தைச் செய்கிறானோ -அவ்விருவரும் நரகத்தில் விழுமவர்கள் )யோ விஷ்ணவ் பிரதிமாகரே லோஹபாவம் கரோதி வை குரவ்ச மானுஷம் பாவமுபவ் நரகபாதினவ்–(மானிடவன் என்றும் குருவை மலர்மகள் கோன் தானுகந்த கோலம் உலோகம் என்றும் ஈனமாதா எண்ணுகின்ற நீசர் இருவருமே எக்காலும் நண்ணிடுவர் கீழாம் நரகு –ஞானசார -32-) அர்ச்சாவதார உபாதான வைஷ்ணவ உத்பத்தி சிந்தனம் மாத்ரு யோனி பரீஷாயாஸ் துல்யமாகூர் மநீஷணா-ஹரிகீர்த்திம் வினைவ அந்யத் ப்ராஹ்மணேன நரோத்தம பாஷாகானம் ந காதவ்யம் தச்மாத்பாபம் த்வயா க்ருதம்–ஸ்ரீ மத்ஸ்ய புராணம் –கிமப்யத்ராபி ஜாயந்தே யோகிநஸ் சர்வ யோநிஷூ
பிரத்யஷி தாத்ம நாதானாம் நைஷாம் சிந்த்யம் குலாதிகம்
–ஸ்ரீ பவிஷ்யோத்தரம் –சூத்ரம் வா பகவத் பக்தம் நிஷாதம் ச்வபசம் தா வீஷதே ஜாதி சாமான்யாத் சா யாதி நரகம் நர – ஏவமாதி சாஸ்திர வசனங்களை ஹரூதிகரித்தி இறே இவர் இப்படி அருளிச் செய்தது .-அவஜானந்தி மாம் மூடா –ஸ்ரீ கீதை -9-11–என்கிற படி வாசி அறியாமல் ,அவஜ்ஜை பண்ணும் மூடர்க்கும் பஸ்யந்தி கேஸிதநிசம் த்வத் அநந்ய பாவா -ஸ்தோத்ர ரத்னம் -16-(ஒப்பார் மிக்கார் இலையாய தேவரீர் தன்மையை தேவரீரைத் தவிர வேறு பொருளில் எண்ணத்தைச் செலுத்தாத ஒரு சிலர் எப்பொழுதும் பார்க்கிறார்கள் ) -என்கிற படியே
வாசி அறிந்து ஆதரிக்கும் அநந்ய பாவர்க்கும் மூன்று இடமும் ஒக்கும் இறே-

““கனிவார்‌ வீட்டின்பமே”’ (திருவா. 2 – 3 – 5) என்கிறபடியே அவன்‌ என்றால்‌ உள் கனிந்திருக்கிற வர்களுடைய க்‌ருஹங்களிலே வந்து இன்பத்தை அளிக்கும்‌ அர்ச்சாவதாரத்தினுடையவும்‌, ““அந்தமிழினின்பப் பாவினை”” (பெருமா.திரு, 1 – 4) என்றும்‌ சொல்லுகிற ரஸாவஹமான திருவாய்மொழியினுடையவும்‌ த்‌ரவ்ய நிருபணத்தோடும்‌ பாஷா நிரூபணத்தோடும்‌ ஓக்கும்‌ என்றும்‌, ““அடியார்க்கின்பமாரி?? (திருவா. 4 – 5 – 10) என்கிறபடியே ஸ்ரீவைஷ்ணவர்களுக்குத்‌ திருவாய்மொழி முகத்தாலே ஆநந்தாவஹமான பகவத்‌ குணங்களை வர்ஷிக்கும்‌ மேகமான ஆழ்வாருடைய திருவவதாரத்தில்‌ ஆராய்ச்சியு மென்கிறார்‌. அர்ச்சாவதாரத்தில்‌ த்‌ரவ்ய நிரூபண நிஷேதம்‌ பஹு ப்ரமாண ஸித்‌தம்‌. அத்தோடே சேர்த்துச் சொல்லுகையாலே திருவாய் மொழியினுடைய பாஷா நிரூபணம்‌ பண்ணலாகாதென்னுமிடம்‌ ஸித்‌தமாய்த்து. ““ஹரிகீர்த்திம்‌ விநைவாந் யத்‌ ப்‌ராஹ்மணேந நரோத்தம । பாஷா காநம்‌ ந காதவ்யம்‌ தஸ்மாத்‌ பாபம்‌ த்வயா க்ருதம்‌” (லைங்கே, 2-, 3 – 44) என்றிறே மநுவும்‌ சொன்னது. அப்படியாகிறது – அர்ச்சாவதாரத்தில்‌ த்‌ரவ்ய நிரூபண நிஷேதத்துக்கு ப்ரமாணமென்‌ என்னில்‌; ““அர்ச்சாவதாரோபாதாநம்‌ வைஷ்ணவே ஜாதி சிந்ததம்‌ | மாத்ரு யோநி பரீக்ஷா யாஸ் துல்ய மாஹுர் மநீஷிண?” (பாஞ்ச.) என்றும்‌, “யோ விஷ்ணோ? ப்ரதிமாகாரே லோஹ பாவம்‌ கரோதி வை । யோ குரெள மாநுஷம்‌ பாவம்‌ உபவ் நரக பாதிநெள”” (பகவச் சாஸ்த்ரே) என்றும்‌ சொல்லக் கடவதிறே–

இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாத வெந்தாய்
கனிவார் வீட்டின்பமே என் கடல் படா வமுதே
தனியேன் வாழ் முதலே பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய் யுனபாதம் சேர்ந்தேனே –2-3-5—ஓர் அளவில்லை யாகிலும் பகவத் விஷயத்தில் பக்வமான ப்ரேமம் உடையவர் களுக்கு மோக்ஷ ஸூகமானவனே அவர்கள் இருந்த இடத்தே வந்து போக்யனானவனே –தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே -என்னக் கடவது இறே-நீ என்றால் உள் கனிந்து பக்குவமாய் இருக்குமவர்களுக்கு மோக்ஷ சுகம் ஆனவனே! அன்றி, ‘நீ என்றால் இனியராய் இருக்குமவர்கள் இருப்பிடத்திலே வந்து அவர்களுக்கு ஆனந்தத்தை விளைவிக்குமவனே!’ என்றுமாம்.  (வீடு -மோக்ஷமும் க்ருஹமும் – மோக்ஷ ஸூகத்தைக் கொடுப்பவன் – வீட்டிலேயே வந்து ஆனந்தத்தை விளைவிக்குமவன் –)

மாவினை வாய் பிளந்து உகந்த மாலை வேலை வண்ணனை என் கண்ணனை வன் குன்றம் ஏந்தி
ஆவினை அன்று உய்ய கொண்ட ஆயர் ஏற்றை அமரர்கள் தம் தலைவனை அம் தமிழ் இன்ப
பாவினை அவ் வடமொழியை
பற்றற்றார்கள் பயில் அரங்கத்து அரவு அணை பள்ளி கொள்ளும்
கோவினை நாவுற வழுத்தி என் தன் கைகள் கொய்ம் மலர் தூ என்று கொலோ கூப்பும் நாளே—-1-4-அம் தமிழ் இன்ப பாவினை – இருள் இரியச் சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி போலே இனியவனை-அவ் வட மொழியை -ஸ்ரீ மன் நாராயணனைப் போலே இனியவனை-

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.–4-5-10-ப்ராப்த விஷயத்தில் அடிமை செய்யப் பெற்ற இதுவேயோ-இது ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஆனந்தாவஹமும் ஆயிற்று–இன்ப மாரி- இன்பத்தை உண்டாக்கும் மேகம்-இது எனக்கு இருக்கிறபடி கண்டால் உகக்கிறவர்களுக்கு எங்கனே இருக்கிறதோ என்கை-தொண்டர்க்கு அமுது உண்ண சொல்மாலைகள் சொன்னேன் –

மானிடவர் என்றும் குருவை மலர்மகள் கோன்
தான் உகந்த கோலம் உலோகம் என்றும் -ஈனமதா
வெண்ணுகின்ற நீசர் இருவருமே எக்காலும்
நண்ணிடுவர் கீழா நரகு
–32-

இங்கன் இன்றிக்கே பேச்சிலும் ,இது சொன்னவர் பிறவியிலும் , தாழ்வு பார்த்து ,இப் பிரபந்தத்தை இகழும் அவர்களுக்கு , அநிஷ்ட பிரசஞ்சனம் பண்ணுகிறார் -பேசித்யாதி வாக்ய த்வயத்தாலே-ஆகிலும்‌ திராவிட பாஷையாயிரா றின்றதே, அது க்ராஹ்யமாம்படி எங்ஙனே என்னில்‌;

பேச்சு பார்க்கில் கள்ளப் பொய் நூல்களும் க்ராஹ்யங்கள்-பிறவி பார்க்கில் அஞ்சாம் ஒத்தும்nஅறு மூன்றும் கழிப்பனாம்-சூரணை -76-

அதாவது –
சமஸ்க்ருதமாகவும் ,த்ராவிடமாகவும் ,பகவத் பரமானது உபாதேயம் . அந்ய பரமானது த்யாஜ்யம் என்று கொள்ளாதே ,பாஷா மாத்ர அவதியாக , விதி நிஷேதங்களை அங்கீகரித்து திராவிட பாஷையாகையாலே இது த்யாஜ்யம் என்னப் பார்க்கில்–வெள்ளியார் பிண்டியார் போதியார் என்று இவர் ஓதுகின்ற கள்ள நூல் –பெரிய திருமொழி -9-7-9-என்றும்-பொய்நூலை மெய்நூல் என்று என்றும் ஓதி–பெரிய திருமொழி -2-5-2- -என்றும் சொல்லுகிறmபாஹ்ய சாஸ்த்ராதிகளும் ,சமஸ்க்ருத பாஷையான ஆகாரத்தாலே , உபாதேயம் ஆக வேணும் ..–பிறவி பார்க்கில்-அதாவது சதுர்த்த வர்ண உத்பவர் என்று வக்தாவன இவர் பிறவியைப் பார்த்து , இத்தை இகழம் அளவில் , அஞ்சாம் ஒத்தும் அறு மூன்றும் கழிப்பனாம்–அதாவது-மத்ஸ்ய கந்தா சுதனான வியாசன் சொன்ன பஞ்சம வேதமான மகா பாரதமும் கோப ஜன்மாவன கிருஷ்ணன் சொன்ன ஷட்க த்ரயாத்மகமான கீதோ உபநிஷத்தும் த்யாஜ்யமாக வேணும் என்கை ..-இத்தால் பாஷா மாத்ரத்தையும் ,வக்த்ரு ஜென்மத்தையும் பார்த்து
இகழும் அளவில் வரும் விரோதம் காட்டப் பட்டது-அதவா –-பாஷா வக்த்ரு ஜன்ம மாந்த்யங்கள் நிரூபிக்கலாகாது என்று ,கீழ் சொன்ன படி அன்றிக்கே , சம்ஸ்க்ருத பாஷையாய் உள்ளதும் ,ஜன்ம கெளரவம் உடையார் ,சொல்லும் அதுவே உபாதேயம் என்று கொள்ளுபவர்களுக்கு அநிஷ்ட பிரசன்ஜனம் பண்ணுகிறார் -வாக்ய த்வ்யத்தாலே ..-அதாவது – பகவத் பரத்வ அந்நிய பரத்வங்களை பரிக்ராக்ய பரித்யாஜ்வத்வங்களுக்கு ஹேது வாக்காதே – சமஸ்ருத பாஷை யானது உபாதேயம் என்று ,பேச்சின் உடைய கௌரவ மாத்ரத்தை பார்க்கில்-கள்ள நூல் -பொய் நூல்- என்று கழிக்கப் பட்ட பாஹ்ய சாஸ்த்ராதிகளும் பரி கிராஹ்யங்கள் ஆம்-யதாஜ்ஞானர் சொன்னது உபாதேயம் அயதாஜ்ஞானர் சொன்னது த்யாஜ்யம் என்று கொள்ளாதே-ஜன்ம கெளரவம் உடையார் சொன்னதே உபாதேயம்-
அல்லாதார் சொன்னது த்யாஜ்யம் என்று பிறவி மாத்ரத்தையே பார்க்கில் ,-மச்த்ய கந்தா சூதனான வியாசர் சொன்ன பஞ்சம வேதமும் ,கோபோ ஜன்மாவன கிருஷ்ணன் சொன்ன கீதோ உபநிஷத்தும் த்யாஜ்யமாக வேணும் என்கை —

(பேச்சுப் பார்க்கில்‌) பாஷா மாத்ரமே அங்கீகார-அநங்கீகார ஹேதுவாகில்‌, (கள்ளப்‌ பொய்ந் நூல்களும்‌ க்ராஹ்யங்கள்‌) ‘*வெள்ளியார் பிண்டியார்‌ போதியாரென்றிவர்‌ ஓதுகின்ற கள்ளநூல் தன்னையும்‌’” (திருமொழி 9 – 7- 9) என்றும்‌, “’பொய்ந்‌நூலை மெய்ந் நூல்‌’ (திருமொழி 3 – 5 – 2) என்றும்‌ சொல்லுகிற பாஹ்ய ஸாஸ்த்ரங்களும்‌ குத்‌ருஷ்டி ஸாஸ்த்ரங்களும்‌ அங்கீ கரிக்கப்படும்‌. அவற்றுக்கு அப்படி ஸிஷ்டாசார மில்லாமையாலும்‌, இத்தை ஸிஷ்டரானவர்கள்‌ பரிக்‌ரஹிக்கையாலும்‌ பாஷாவதி மாத்ரமே பரிக்‌,ராஹ்ய-அபரிக்‌ராஹ் யதா ஹேதுவாக ஒண்ணாது –ஆனாலும்‌ ப்ரபந்த கர்த்தா சதுர்த்த வர்ணாதிகாரி யாயிரா நின்றாரே? ப்ரபந்தமும்‌ ப்ரதிபாத்‌ய வஸ்துவும்‌ விலஷணமே யாகிலும்‌ கர்த்ரு மாந்த்‌யத்தாலே ப்ரபந்த மாந்த்யமும் பிறக்குமே என்ன (பிறவி பார்க்கில்‌ அஞ்சாமோத்தும்‌ அறு மூன்றும்‌ கழிப்பனாம்‌) என்கிறார்‌. (பிறவி பார்க்கில்‌) இதுக்கு வக்தாவான ஆழ்வாருடைய ஜந்மத்தை யிட்டுக்‌ கழிக்கப் பார்க்கில்‌, வலைச்சி வயிற்றிலே பிறந்த வ்யாஸன்‌ சொன்ன பஞ்சம வேதமான மஹா பாரதமும்‌, இடைச்சேரியிலே பிறந்த கருஷ்ணனருளிச் செய்த ஷ்ட்க த்ரயாத்மகமான ஸ்ரீகீதையும்‌ கழியுண்ணும் –

வெள்ளியார் பிண்டியார் போதியார் என்று இவர் ஓதுகின்ற
கள்ள நூல் தன்னையும் கருமம் அன்று என்று உய்யக் கருதினாயேல்

தெள்ளியார் கை தொழும் தேவனார் மா முநீரமுது தந்த
வள்ளலார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-9-வெள்ளியார் பிண்டியார் போதியார் என்று இவர் ஓதுகின்ற – சுக்ரனைச் சொல்லுதல்-அன்றிக்கே வெள்ளி  மலையை வாசஸ் ஸ்தானமாக உடைய ருத்ரன் -என்ணுதல்- அசோகா  வருஷத்தின் கீழே இருக்கக் கடவ   ஆர்ஹதர்
அரசின் கீழே இருக்கக் கடவ பௌத்தர் என்று சொல்லப் படுகிற இவர்கள் கதறிக் கொண்டு திரிகிற –கள்ள நூல் தன்னையும்  கருமம் அன்று என்று உய்யக் கருதினாயேல் யதாஹி சோரஸ் சததாஹி புத்த -என்னக் கடவது இறே-(திருடர் போல் சர்வம் ஸூந்யம் -அவனது ஸமஸ்த திருட்டு ) இது நமக்கு கர்த்தவ்யம் அன்று என்று உஜ்ஜீவிக்க விரகு பார்த்தாயாகில்  –

பூண்ட வத்தம் பிறர்க்கடைந்து தொண்டு பட்டுப் பொய் நூலை மெய் நூல் என்று என்றும்  ஓதி
மாண்டு அவத்தம் போகாதே வம்மின்
எந்தை என் வணங்கப் படுவானை கணங்கள் ஏத்தும்
நீண்ட வத்தக் கருமுகிலை எம்மான் தன்னை நின்ற வூர் நித்திலத்தைத் தொத்தார் சோலை
காண்டவத்தைக் கன லெரி வாய்ப் பெய்வித்தானைக் கண்டது நான் கடல் மல்லைத் தல சயனத்தே —2-5-2-விப்ரலம்ப கரராயும் ப்ராந்தராயும் உள்ளவர்கள் தம்தாமுடைய புத்தியாலே வரைந்த சாஸ்த்ரங்களை
வைதிக சாஸ்திரம் போலே இருக்க ஆதரித்து அப்யசித்து பின்னை அவற்றின் உடைய ஸ்வரூபம் இருந்தபடியை ஆராய்ந்து மீளுகைக்கு அவகாசம் இல்லாதபடி முடிந்து-அவத்தம் போகாதே-
இஹ லோகம் பர லோகங்கள் இரண்டிலும் வ்யர்த்தமே போகாதே –வம்மின் – கெடுவிகாள்
கடுக வந்து நில்லுங்கோள் –

இவ் ஆழ்வாருடைய உத்பத்தியை வியாச கிருஷ்ண உத்பத்தி சமமாக அருளிச் செய்தார் கீழ்–
அவற்றில் இதுக்கு உண்டான வியாவிருத்தியை அருளிச் செய்கிறார் மேல்..ஆக, இதுக்குக்‌ கீழ்‌ கருஷ்ண த்‌வைபாயநனான வ்யாஸனோடும்‌, க்ருஷ்ணனேடும்‌ உண்டான ஜந்ம ஸாதர்ம்யம்‌ சொல்லி, “‘க்ருஷ்ண க்ருஷ்ண த்‌வைபாய நோத்பத்திகள்‌ போலன்றே’‘ என்று – இனி மேல்‌ வைதர்ம்யம்‌ சொல்லுகிறது, எங்ஙனே என்னில்‌;

கிருஷ்ண கிருஷ்ண த்வைபாயன உத்பத்திகள் போல் அன்றே கிருஷ்ண த்ருஷ்ணா தத்வ ஜன்மம்-சூரணை -77-

அதாவது
ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனான – ஸ்ரீ கிருஷ்ணன் உடையவும்-கன்யா சூதனனான வியாசனுடையவும்- உத்பத்தி போலே அன்றே-கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்றவராய்-திரு விருத்தம் -37- கிருஷ்ண த்ருஷ்ணா தத்வ மிவோதிதம்-ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் –பூர்வ -6-என்கிற படியே-கிருஷ்ண விஷய திருஷ்ணை தானே ஒரு வடிவு கொண்டால் போலே
இருக்கிற ஆழ்வாருடைய அவதாரம்
என்கை ..

இடைச்சி வயிற்றிலே பிறந்த க்ருஷ்ணனுடையவும்‌ வலைச்சி வயிற்றில்‌ பிறந்த கருஷ்ணாத்‌வைபாயநனுடையவும்‌ (உத்பத்தி போலன்றே, இவர்‌ திருவவதாரம்‌ இவ்வளவேயோ, இவ்வாழ்வாருடைய திருவவதாரத்தையும்‌ அவர்களுடைய ஜந்மத்தையும்‌ நிருபித்தால்‌ இத்தோடு அவை நேர் நில்லாது. ஆகையால்‌ இவர்க்கு அவர்கள்‌ ஸத்‌ருஸரல்லர்‌-

கொடும் காற் சிலையர் நிரை  கோள் உழவர்  கொலையில் வெய்ய
கடுங்கா விளைஞர் துடி படுங்கவ் வைத்து அருவினையேன்
நெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற
தொடுங்கால்  ஓசியும்   இடை இள மான் சென்ற சூழ் கடமே 
–37- சக்ருதேவ பிரபன்னாய -யுத்த காண்டம் – 18-32 – சடக்கென்று –சக்ருத் பிரபத்தியும் பொறாததை கிடீர் நான் தீர்க்க காலம் உபாசித்தது –தேவகியாரைப் போலே அநந்த வ்ரதம் அனுஷ்டித்து கிடீர் –தன்னையும் அறியாதே தன்னை பெறப் பட்ட அருமையும் அறியாதே கிடீர் போயிற்று –மஹாதா தபஸா ராம மஹாதா சாபி கர்மணா –ஆரண்ய காண்டம் – 66-3 – நீண்ட காலம் உடலை வருத்தி –பல நியமங்களை கடப் பிடித்து – பல கர்மங்களை இயற்றி அல்லவோ-ராமனாகிய உன்னை பெற்றாள் -என்று ஸ்ரீ கௌசல்யார் சொல்லுமா போலே –நீண் மலர் பாதம் –ஆஸ்ரிதர் இருந்த இடத்தளவும் செல்ல தானே வளரும் படி ஸூலபமான திரு அடிகள்–அது தானும் தன் பேறாய் இருந்த படி–மலர்-செவ்வி –பரவிப் பெற்ற – ஸ்தோத்ர வாதங்களை பண்ணிப் பெற்ற –நிதி எடுத்தாற் போலே பெற்ற இவள்-

அது எங்கனம் என்னும் அபேஷையில் பல ஹேதுகளாலும் இவர் ஜன்ம வ்யாவிருத்தியை பிரகாசிப்பிகிறார் மேல் — அதில் பிரதமத்தில் அவர்களைப் பெற்றவர்கள், இவரைப் பெற்றவர்களுக்கு
சத்ருசரல்லாமையை இசைவிக்கிறார்-
இவர்களுடைய உத்பத்தி ப்ரகாரங்களையும்‌ ஸ்தலங்களையும்‌ விசாரித்தால்‌ அவையும்‌ வாசா மகோசரம்‌ என்கிறார்‌ மேல்‌-

பெற்றும் பேர் இழந்தும்-கன்னிகை யானவளும்-எல்லாம் பெற்றாளாயும் தத்துக் கொண்டாள் என்பர்
நின்றார் என்னுமவளும் நெடும் காலமும் நங்கைமீர் என்னும் இவளுக்கு நேர் அன்றே –சூரணை-78-
(பெற்றும் பேர் இழந்தவளும் -பாட பேதம் – நங்கைமீர் என்னும் அவளுக்கு-உடைய நங்கையாருக்கு -நம்மாழ்வாருடைய திருத் தாயாருக்கு –பெற்றும் பேர் இழந்தவளும் -தேவகி பிராட்டியார் -நேர் அன்று –
பெற்றும் கன்னிகையானவளும்-மத்ஸ கந்தி நேர் அன்று –என்னுமவளும் யசோதை பிராட்டியும் -நேர் அன்று )அதாவது-பெற்றும் – திருவின் வடிவு ஒக்கும் தேவகி பெற்ற -பெரியாழ்வார் -1-2-17-என்கிற படியே ஸ்ரீ கிருஷ்ணனைப் பிள்ளையாய் பெற்று இருக்கச் செய்தேயும் , அவனுடைய பால்ய ரசம் ஒன்றும் அனுபவிக்க பெறாமையால் , திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன்-பெருமாள் திருமொழி -7-5–என்று பேறு இழந்தவளான தேவகியும் ,–பெற்றும் –த்வீபே பதரிகாமிஸ்ரே பாதராயணம் அச்சுதம்
பராசராத் சத்யவதீ புத்ரம் லேபே பரந்தபம்
–பாரதம் —( இலந்தைக்காடு கலந்த காட்டில் சத்யவதி என்பவள் பராசரரிடம் இருந்து பகவனைத் தபிக்கச் செய்யும் விஷ்ணுவின் அம்சமான வியாச முனிவரைப் பிள்ளையாக அடைந்தாள் ) என்கிற படியே வியாசனைப் பிள்ளையாகப் பெற்று இருக்கச் செய்தேயும் ,அவனால் உள்ள ரசம் ஒன்றும் அனுபவிக்கப் பெறாதபடி –புன கன்யா பவிஷ்யதி —
(பரிதி தந்த மா நதி மருங்கு ஒரு பகல் பராசரன் மகப்பேறு
கருதி வந்து கண்டு என்னையும் எனது மெய்க் கமழ் புலவையும் மாற்றிச்
சுருதி வாய்மையின் யோசனை பரப்பு எழு சுகந்தமும் எனக்கு ஈந்து
வருதி நீ எனப் பனியினால் மறைத்து ஒரு வண் துறைக்குறை சேர்ந்தான்
முரண் நிறைந்த மெய்க் கேள்வியோன் அருளினால் முஞ்சியும் புரி நூலும்
இரணியம் செழும் கொழுந்து விட்டனவென இலங்கு வேணியும்
தரணி எங்கணும் வியாதன் என்று உரை கெழு தபோதன முனி அப்போதானும்
தரணியின் புறத்து அனல் என என் வயின வதரித்தனன் அம்மா
சென்னியால் என்னை வணங்கி யாதொரு பகல் சிந்தி நீ சிந்திக்கு
முன்னையான் அரு குறுவல் என்று உரை செய முனிமகன்
முனி மீளக் கன்னியாக என வித்துடன் கரந்தனன்
–வில்லிபாரதம் -சம்பவச் சருக்கம் 6-7-8 –)-என்று
பராசர வசனத்தாலே ,மீளவும் கன்னியான மச்த்ய கந்தையும் எல்லாம் பெற்றாளாயும் –
அதாவது –எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே–பெருமாள் திருமொழி -7-5 -என்னும் படி
கிருஷ்ணனுடைய பால சேஷ்டாதிகளை எல்லாம் அனுபவிக்கப் பெற்று இருக்கச் செய்தேயும் ,-
தத்து கொண்டாள் கொலோ ,தானே பெற்றாள் கொலோ–பெரியாழ்வார் -2 -1-7—என்றும் ,
இம்மாயம் வல்ல பிள்ளை நம்பி உன்னை என் மகனே என்பர் நின்றார்–பெரியாழ்வார் -3 –1 –3- -என்றும்
அவனுடைய அதிமாநுஷ சேஷ்டிதங்கள் அடியாக தானும் பிறரும் சங்கிக்கும் படியான மாத்ருவத்தை உடைய யசோதையும்நெடும் காலமும் நங்கைமீர் என்னுமிவளுக்கு நேர் அன்றே –அதாவது-நெடும் காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற –திருவிருத்தம் –37-என்று சக்ருதாஸ்ர்யணம் அமைந்து இருக்க ,ஆதர அதிசயத்தாலே சிரகாலம் ஆஸ்ரித சுலபனான கிருஷ்ணன் திரு அடிகளை ஆஸ்ரயித்து இவளைப் பெற்றவளாகவும் ,-நங்கைமீர் நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர்-திருவாய் -4-2–9 -என்று தொடங்கி பூரணைகளான நீங்களும் ஒரு பெண் பிள்ளை பெற்று வளர்திகோள் இறே
பகவலாஞ்ச நாதிகளை திவாராத்ர விபாகம் அற வாய் புலற்றா நின்று உள்ள சபலையான என் பெண் பிள்ளை படியை எங்கனே சொல்லுவேன் என்று வாசா மகோசரமான இவருடைய முக்த வசநாதிகளை அனுபவித் தாளாகவும் சொன்ன இவரைப் பெற்றவளுக்கு சத்ருசர் அன்றே என்கை .

தேவகி பெற்ற” (பெரியா. 1 – 8 – 17) என்கிறபடியே ஸ்ரீதேவகிப் பிராட்டி க்ருஷ்ணனைப்‌ பெற்று வைத்து, ”திருவிலேனொன்றும்‌ பெற்றிலேன்‌”’ (பெருமா.தி.7 – 5) என்கிறபடியே அவனுடைய பால்ய ரஸம்‌ அநுபவிக்கப்‌ பெற்றிலளிறே. வ்யாஸனைப் பெற்ற அநந்தரம்‌ “புந கந்யா பவிஷ்யதி?” (பார ) என்று ஸ்ரீபராஸர பகவான்‌ சொல்ல மீண்டும்‌ கந்யகையான மத்ஸ்யகந்தியும்‌ அவனுடைய பால்ய ரஸம்‌ அநுபவிக்கப்‌ பெற்றிலள்‌. (எல்லாம்‌ பெற்றாளாயும்‌) “எல்லாம்‌ தெய்வ நங்கை யசோதை பெற்றாளே’‘ (பெருமா.தி. 7 – 5) என்கிற யசோதையும்‌ க்ருஷ்ணனுடைய பால்ய சேஷ்டிதங்களெல்லாம்‌ அநுபவிக்கப்‌ பெற்றாளே யாகிலும்‌, “’தத்துக் கொண்டாள் கொலோ”’ (பெரியா.2 – 1 7) என்றும்‌, “உன்னை என் மகனே என்பர்‌ நின்றார்‌” (பெரியா. 3 – 1 – 3) என்றும்‌ – தானும்‌ பிறரும்‌ ஸங்கிக்கும் படியாயிருக்கும்‌. இவருடைய உத்பத்தி – அங்ஙனன்றிக்கே “நெடுங் காலம்‌ கண்ணன்‌ நீண் மலர்ப் பாதம்‌ பரவிப் பெற்ற”’ (திருவிரு. 37) என்றும்‌, “நங்கைமீர்‌ நீருமோர்‌ பெண் பெற்று நல்கினீர்‌” (திருவா. 4 – 2 – 9) என்றும்‌ சொல்லுகிற படியே பரிபூர்ணைகளான நீங்களும்‌ சில பெண்களைப் பெற்று வளர்த்தி கோளல்லிகோளோ, பகவல் லாஞ்சநாதிகளை திவா ராத்ர விபாகமற வாய் புலற்றும்படியான என்‌ பெண் பிள்ளைக்கு ஸத்‌ருஸமுண்டோ என்கையாலே இவர்க்கும்‌ அவர்களுக்கும்‌ அத்யந்த வைஷம்யம்‌ சொல்லிற்று –

பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய
திருவின் வடிவு ஒக்கும் தேவகி பெற்ற
உருவு கரிய ஒளி மணி  வண்ணன்

புருவம் இருந்தவா காணீரே பூண் முலையீர் வந்து காணீரே -1-2-17-லஷ்மி துல்ய ஸ்வாபையான தேவகி பிராட்டி இப்படிக்கு ஈடாக நோற்றுப் பெற்ற – திருவின் வடிவு ஒக்கும் என்கையாலே – கீழ் சீதக் கடலுள் அமுதன்ன தேவகி -என்றது -இங்கே ஸ்பஷ்டமாய் இறே இருப்பது –

மருவு நின் திரு நெற்றியில் சுட்டி அசை தர மணி வாய் இடை முத்தம்
தருதலும் உன் தன் தாதையை போலும் வடிவு கண்டு கொண்டு உள்ளம் உள் குளிர
விரலை செஞ்சிறு வாய் இடை சேர்த்து வெகுளியாய் நின்று உரைக்கும் அவ் வுரையும்
திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே –7-5-பால்ய அவஸ்தையிலே அனுபவங்களை அனுபவிக்க பாஹ்ய ஹீனையான நான் இழந்தேன்-இழக்கைக்கு நான் ஒருத்தி உண்டானாப் போலே அனுபவிக்கைக்கு இட்டுப் பிறந்த ஸ்ரீ யசோதைப் பிராட்டி எல்லாம் பெற்றாள் இறே –

தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ
சித்தம் அனையாள் அசோதை இளம் சிங்கம்
கொத்தார் கரும் குழல் கோபாலர் கோளரி
அத்தன் வந்து என்னை அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் – 2-1 7- தத்த புத்ரனாக வளர்த்துக் கொண்டாளோ-அன்றியே தானே மெய் நொந்து பெற்றாளோ-அதாவது-அசோதை இளம் சிங்கம் -என்ன -இவள் தத்த ஸ்வீகாரம் செய்யக் கண்டிலோம் –இவள் பெறுகிற போது இவளை பார்த்துப் பேணிக் கொண்டு இருந்த நாம் எல்லாம் இவள் பெறக் கண்டிலோம் –அயர்ந்து உறங்கி விட்டோம் – இவள் தான் -நான் பெற்றேன் -என்று சொல்லக் கேட்டோம் இத்தனை -இறே ––ததர்ச ச ப்ரபுத்தாச யசோதா ஜாதமாத்மஜம்-என்கிறபடியே அவளும் அப்போது பெற்று மோகித்து கிடந்து
உணர்ந்து பின்பு இறே இவனைக் கண்டது –இப்படி தான் சொல்லுகிறது-அதி லோகமான இவனுடைய ரூப குண சேஷ்டிதங்களைக் கண்டால் – இவள் பிள்ளை -என்று -சொல்லப் போகாதபடி இருக்கையாலே –அவள் தானும் –இம் மாயம் வல்ல பிள்ளை நம்பி உன்னை என் மகனே என்பர் நின்றார் -என்று
இவனுடைய அதி மானுஷ  சேஷ்டிதங்களைக் கண்டால் -நீ என்னுடைய பிள்ளையாக கூடாது –
நடு நின்றவர்கள் உன்னை என்னுடைய பிள்ளை என்றே சொல்லா நின்றார்கள் -என்னும்படியாய் இறே இருப்பது –

கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கி குடத் தயிர் சாய்த்துப் பருகி
பொய் மாய மருதான அசுரரை பொன்று வித்து இன்று நீ வந்தாய்
இம் மாயம் வல்ல பிள்ளை நம்பீ உன்னை என் மகனே என்பர் நின்றார்
அம்மா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே 3-1-3- -இந்த ஆச்சர்யங்களை செய்ய வல்லவனாய்- பிள்ளைத் தனத்தால் பூர்ணம் ஆனவனே-இப்படி இருக்கிற உன்னை உன் வாசி அறியாத நடு நின்றவர்கள்- என்னுடைய மகன் -என்று சொல்லுவார்கள் –நான் அங்கன் இன்றிக்கே -என் மகன் அன்று -என்றும் –எல்லார்க்கும் ஸ்வாமி -என்றும் – உன்னை உள்ளபடி அறிந்து கொண்டேன்-ஆன பின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன்-

கொடும் காற் சிலையர் நிரை  கோள் உழவர்  கொலையில் வெய்ய
கடுங்கா விளைஞர் துடி படுங்கவ் வைத்து அருவினையேன்
நெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற
தொடுங்கால்  ஓசியும்   இடை இள மான் சென்ற சூழ் கடமே 
–37–தேவகியாரைப் போலே அநந்த வ்ரதம் அனுஷ்டித்து கிடீர் –தன்னையும் அறியாதே தன்னை பெறப் பட்ட அருமையும் அறியாதே கிடீர் போயிற்று –மஹாதா தபஸா ராம மஹாதா சாபி கர்மணா –ஆரண்ய காண்டம் – 66-3 – நீண்ட காலம் உடலை வருத்தி –பல நியமங்களை கடப் பிடித்து – பல கர்மங்களை இயற்றி அல்லவோ-ராமனாகிய உன்னை பெற்றாள் -என்று ஸ்ரீ கௌசல்யார் சொல்லுமா போலே –நீண் மலர் பாதம் –ஆஸ்ரிதர் இருந்த இடத்தளவும் செல்ல தானே வளரும் படி ஸூலபமான திரு அடிகள்–அது தானும் தன் பேறாய் இருந்த படி–மலர்-செவ்வி –பரவிப் பெற்ற – ஸ்தோத்ர வாதங்களை பண்ணிப் பெற்ற –நிதி எடுத்தாற் போலே பெற்ற இவள்-

நங்கைமீர்! நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர்;
எங்ஙனே சொல்லுகேன் யான் பெற்ற ஏழையை?
சங்கு என்னும்; சக்கரம் என்னும்; துழாய் என்னும்;
இங்ஙனே சொல்லும் இராப்பகல் என்செய்கேன்?–4-2-9–உங்கள் பூர்த்தி நான் சொல்லக் கேட்டு அறிய வேணுமே உங்களுக்கு நீங்களும் ஒரு பெண் பிள்ளையை பெற்று வளர்த்தி கோளே-நல்குகை -வளர்க்கை -இவள் பட்டது பட்டார் உண்டோ-உன் பெண் பிள்ளைக்கு வாசி என் என்ன-எங்ஙனே சொல்லுகேன் யான் பெற்ற ஏழையை?-என்னுடைய பெண் பிள்ளை படி என்னாலே பாசுரம் இட்டுச் சொல்லாயோ இருக்கிறது-நங்கைமீர் என்று சம்போதிப்பது சஜாதீயரை -இவளுக்கு சஜாதீயர் ஆழ்வார்களாம் இத்தனை-நீங்களும் பகவத் விஷயத்தில் பிரவணர் நான் பட்டது பட்டார் உண்டோ -என்று கருத்து-யதோ வாசோ நிவர்த்தந்தே-என்கிற விஷயத்தை முடிய பேசிலும் இவ்விஷயத்தில் அவகாஹித்தார் படி பாசுரம் இட்டு சொல்ல முடியாது என்கை-சதா பரகுணாவிஷ்டோ த்ரஷ்டாவ்யஸ் சர்வ தேஹிபி -என்று கண்டு இருக்கும் அத்தனை போக்கி பேசப் போகாது-ப்ரியோஹி ஜஃனானி நோஸ்யார்த்தம் -என்று இறே அவன் வார்த்தையும் கிடையாததிலே கிடைக்குமதில் பண்ணும் சாபல்யத்தை பண்ணுகிறவள்-

இனி மூவருடைய உத்பத்தி ஸ்தல கந்த விசேஷங்களை பார்த்தால், மற்றை இரண்டிலும் , இவருடைய உத்பத்தி ஸ்தலத்துக்கு உண்டான வைபவம் விலஷணம் என்னும் இடத்தை மூதலிக்கிறார்-

மீன நவநீதங்கள் கந்திக்கும் இடமும் வெறி கொள் துழாய் கமழும் இடமும் தன்னில் ஒக்குமோ-சூரணை -79-(மீன கந்திக்கும் இடம் -வியாசர் அவதார ஸ்தலம் -நவநீதம் கந்திக்கும் இடம் -ஸ்ரீ கிருஷ்ணன் திருவவதார ஸ்தலம் -வெறி கொள் துழாய் கமழும் இடம் -நம்மாழ்வார் திரு அவதார ஸ்தலம் )

அதாவது
மீன் வெறி நாறுகிற வியாச உத்பத்தி ஸ்தலமும் , வெண்ணெய் முடை நாறுகிற கிருஷ்ண உத்பத்தி ஸ்தலமும் ,-வெறி கொள் துழாய் மலர் நாறும் வினயுடையாட்டியேன் பெற்ற–திருவாய் -4 -4-3- -என்றும்
இவள் அம் தண் துழாய் கமழ்தல்–திருவாய் -8-9-10-என்றும் பகவத் சம்பந்த பிரகாசமான திருத்துழாய் மணம் நாறுகிற ஆழ்வார் அவதரித்த ஸ்தலத்துக்கு சத்ருசமோ என்றபடி-பிராக்ருத விஷய சம்சர்கஜமான ஹேய கந்தங்கள் இறே அவை .-அப்ராக்ருத விஷய சம்சர்கஜமான உபாதேய கந்தம் இறே இது -இத்தால் தாத்ருச ஸ்தலங்களில் உண்டான அவர்கள் உத்பத்தியில் -ஈத்ருச ஸ்தலத்தில் உண்டான இவருடைய உத்பத்தியின் ஏற்றம் காட்டப் பட்டது

மத்ஸ்ய கந்தத்தையுடைய வ்யாஸன்‌ பிறந்த விடமும்‌ நவநீத கந்தியான க்ருஷ்ணன்‌ பிறந்தவிடமும்‌ – ‘“வெறி கொள் துழாய்‌ மலர் நாறும்‌ வினையுடை யாட்டியேன்‌ பெற்ற”’ (திருவா. 4 – 4 – 9) என்கிற பகவத் ஸம்பந்த கந்தியான் ஆழ்வார்‌ திருவவதரித்த இடத்துக்கு ஸத்‌ஸருமன்றே-

அறியும் செந்தீயைத் தழுவி,‘அச்சுதன்’ என்னும்;மெய் வேவாள்;
எறியும் தண் காற்றைத் தழுவி, ‘என்னுடைக் கோவிந்தன்’ என்னும்;
வெறி கொள் துழாய் மலர் நாறும் வினையுடை யாட்டியேன் பெற்ற
செறிவளை முன்கைச் சிறுமான் செய்கின்றது என்கண்ணுக்கு ஒன்றே?–4-4-3-இத்தசையில் சம்ச்லேஷ ஸூசகமான இந்த பரிமளம் எங்கனே உண்டாம் படி என்னில்-காற்றோடு புகுந்து அணைந்தார் என்று கார்யத்தைக் கொண்டு கல்பித்தல்-கோவை வாயாளில் அனுபவம் பத்துக் குளிக்கு நிற்கும் என்னுதல்
வந்தேறி கழிந்தால் ஆத்ம ஸ்வரூபம் பகவத் சம்பந்தியாய் இருக்கும் -என்னுதல்-அன்றி மற்று ஓர் உபாயம் என் இவள் அம் தண் துழாய் கமழ்தல்-என்னக் கடவது இறே-வினையுடை யாட்டியேன் பெற்ற –
பிரிவிலும் திருத் துழாய் மணம் மாறாத படி அவகாஹித்து போலி கண்டு பிரமிக்கும் படி ப்ரேமம் யாய் விட்டது பாபத்தை பண்ணின என் வயிற்றிலே பிறப்பு இ றே பாக்ய பலத்தை பாப பலமாக சொல்லுகிறாள் -இழவைப் பற்ற-

அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம்தண் துழாய் கமழ்தல்
குன்ற மா மணி மாட மாளிகைக் கோலக் குழாங்கள் மல்கி
தென் திசைத் திலதம் புரை குட்ட நாட்டுத் திருப் புலியூர்
நின்ற மாயப் பிரான் திருவருளாம் இவள் நேர் பட்டதே–8-9-10—வேறு மற்று உபாயம் உண்டோ -இவள் அழகியதாய் குளிர்ந்து இருக்கிற திருத் துழாய் நாறுகைக்கு -ராஜ புத்ரனை அணையாதார்க்கு மாளிகைச் சாந்து நாறுமோ -என்னுடம்பு திருத் துழாய் நாறா நின்றதோ -ஸ்வாபதேசத்தில் –அம் தண் துழாய் கமழ்தல்-என்கிறது அங்கீ கார ஸூ சகமாய் இருக்கிறது –

இன்னமும் அவர்களுடைய உத்பத்தி ஸ்தலங்களுக்கும் , இவர் உத்பத்தி ஸ்தலத்துக்கும் உள்ள வைஷம்ய அதிசயத்தை காட்டுகிறார்-

ஆற்றில்–துறையில்–ஊரில் உள்ள வைலஷம்யம் வாசா மகோசரம்-சூரணை -80-

அதாவது –
வ்யாச உத்பத்தி ஸ்தலம் -ஆறு தானே அசிஷ்ட பரிக்ரகம் ( சிவ சம்பந்தம் ) உடைய கங்கையாய் ,
அத் துறை ஓடத் துறையாய் , ஊர் வலைச் சேரியாய் இருக்கும்-கிருஷ்ண உத்பத்தி ஸ்தலம் -ஆறானது கிருஷ்ண ஜல பிரவாஹதயா தமோ மயியான, யமுனையாய் , துறையும் அதில் காளிய விஷ தூஷிதமான துறையாய் , ஊர் தானே –அறிவொன்றும் இல்லாத ஆய்க் குலம்–திருப்பாவை -28–என்கிற படி இடக்கை வலக்கை அறியாதார் வர்த்திக்கிற இடைச் சேரியாய் இருக்கும்-இவ் ஆழ்வாருடைய உத்பத்தி ஸ்தலம் -ஆறு-பவள நன் படர்க் கீழ் சங்கு உறை பொருநல்–திருவாய் -9-2–5-என்கிற படி
விலக்ஷண பதார்த்தங்களுக்கு ஆகரமுமாய் , வாஸ ஸ்தலமுமாய் கொண்டு அதி ஸ்லாக்யமுமாய் இருக்கும் தாம்ரபரணி யாய் ,-துறை சுத்த ஸ்வாபமாய் ,அவகாதாமாய் இருக்கிற சங்கங்கள்
வந்து சேருகிற திருச் சங்கணி துறையாய்–திருவாய் -10–3-11-ஊர்-நல்லார் நவில் குருகூர்–திருவிருத்தம் –100 -என்கிற படி சகல சஞ்சன ஸ்லாகநீயமாய்-சயப் புகழார் பலர் வாழும் தடம் குருகூர் -திருவாய் -3-1-11-என்றும்-நல்லார் பலர் வாழ் குருகூர்–திருவாய் -10-8-11-என்கிற படியே சம்சாரத்தை ஜெயித்த புகழை உடையராய் , பகவத் அனுபவம் பண்ணி வாழ்கிற ,ஞாநாதிகரான விலக்ஷணர் பலரும் நிரந்தர வாசம் பண்ணுகிற திரு குருகூராய் இருக்கும்-ஆகையால் அந்த ஆறுகளையும் துறைகளையும் ஊர்களையும் பற்ற இந்த ஆற்றுக்கும் துறைக்கும் ஊருக்கும் உண்டான வைஷம்யம்
பேச்சுக்கு அவிஷயமாய் இருக்கும் என்கை –ஆக-கிருஷ்ண-கிருஷ்ண த்வைபாயனர் உத்பத்தியில் காட்டில் கிருஷ்ண த்ருஷ்ணா தத்வமான இவர் உத்பத்திக்கு ஏற்றத்துக்கு உடலாக கீழ் விவஷிதமானவற்றை வெளி இட்டார் ஆய்த்து.

வ்யாஸனுக்கு உத்பத்தி ஸ்தலமான அஸிஷ்ட பரிக்‌ரஹமுடைய கங்கா நதிக்கும்‌, அதில்‌ ஓடத் துறைக்கும்‌, அவ் விடத்தில்‌ வலைச் சேரிக்கும்‌, க்ருஷ்ணோத்பத்தி ஸ்தலமான க்ருஷ்ண ஜல ப்ரவாஹமான யமுநா நதிக்கும்‌, காளிய விஷ தூஷிதமான அதில்‌ துறைக்கும்‌, “கறவைகள்‌ பின் சென்று ” என்கிறபடியே ‘பசுக்கள் தான்‌ ஸர்வஜ்ஞம்‌’ என்னும்படி அறிவு கேடரான இடையர்‌ வர்த்திக்கிற இடைச் சேரிக்கும்‌ ஆகிய இவற்றுக்கும்‌, முக்தா பல ப்ரஸவோந்முக ஸங்க ஸமூஹங்களுக்கு வாஸஸ்தாநமான தாம்ரபர்ணி நதிக்கும்‌ ஸூத்‌த ஸ்வபாவமாயிருக்கிற அந்த ஸங்கங்கள் சேருகிற திருச் சங்கணித்‌ துறைக்கும்‌, “நல்லார்‌ நவில்‌ குருகூர்‌” (திருவிரு, 100) என்கிறபடியே ஸத்துக்களாலே கொண்டாடப்‌ படுமதாய்‌ ““சயப் புகழார்‌ பலர்‌ வாழும்‌ தடங் குருகூர்‌” (திருவா, 3 – 1 11) என்கிறபடியே ஸம்ஸாரத்தை ஜயித்த புகழை உடையராய்‌, பகவதநுப,வம்‌ பண்ணி வாழ்கிற ஜ்ஞாநாதிகர்‌ பலரும்‌ வர்த்திக்கிற திருக்குருகூர்க்கு முண்டான வைஷம்யம்‌ பேச்சுக்கு அவிஷயமா யிருக்கும்‌. ஆக, க்ருஷ்ணக்ருஷ்ணத்‌வைபாயநோத்பத்தி என்று தொடங்கி, இவ்வளவாக, அவர்களவதாரத்தோடு இவருடைய அவதாரத்துக் குண்டான ஸாதர்ம்ய வைதர்ம்ய, தர்ம்யங்கள்‌ சொல்லிற்று

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன் தன்னைப்
பிறவி பெறும்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்
சிறு பேர் அழைத்தனவோம் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்–28—கறவைகள் பின் சென்றுஇவர்கள் சேவித்த ஆச்சார்யர்கள் இருக்கிறபடி-எங்களைப் பார்த்தால் -பசுக்கள் -வசிஷ்டாதிகளுக்கு சத்ருசமாக போரும் – பசுக்கள் அசுக்காட்டில் -அனுகரிக்கையில் -ஆர்ஜவம் –1-அறிவில்லை2-அறிவு ஓன்று இல்லை3-அறிவு ஒன்றும் இல்லைகர்மாதிகள் இல்லை என்ற சொற்களே சொல்ல அறியாமல் இவ்வாறே சொல்லும்படி அன்றோ எங்கள் அறிவு

பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வந்து நின் பல் நிலா முத்தம்
தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக் கண் தாமரை தயங்க நின்று அருளாய்
பவள நன் படர்க் கீழ் சங்கு உறை பொருநல் தண் திருப் புளிங்குடி கிடந்தாய்
கவள மாக் களிற்றின் இடர் கெடத் தடத்துக் காய்சினப் பறவை ஊர்ந்தானே–9-2-5–நல்ல பவள படரின் கீழே சங்குகள்-நிர்ப்பாதமாய் வர்த்திக்கிற திருப் பெருநலை யுடைத்தாய் -ஸ்ரமஹரமான திருப் புளிங்குடியிலே கண் வளர்ந்து அருளுகிறவனே –படர் -தூறு /நிர்ப்பாதமாய் பவளத் தூற்றில் சங்குகள் வர்த்திகையால் அவ்வூரிலே பதார்த்தங்களுக்கு பாதகங்களால் அச்சம் இல்லை என்கை –

செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு அத் திருவடி திருவடி மேல் பொருநல்
சங்கணி துறைவன்
வண்தென் குருகூர் வண் சடகோபன் சொல்லாயிரத்துள்
மங்கையர் ஆய்ச்சியர் ஆராய்ந்த மாலை அவனோடும் பிரிவதற்கு இரங்கி தையல்
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன இவையும் பத்து அவற்றின் சார்வே-10-3-11-இவர் இருந்த இடத்தே சத்துக்கள் சேருமா போலே -சங்குகளாலே அணியப் பட்ட -திருப் பொருநலை யுடையராய் –சம்ருதமான திரு நகரியை யுடையராய் –பரம உதாரரான ஆழ்வார் அருளிச் செய்த ஆயிரத்திலும்-

நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர்
வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல்லார் தொடையில் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம்
பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே – 100–லோகத்தில் சத்துக்கள் அடைய -ஆழ்வார் ஆழ்வார் -என்னா நிற்கும் இத்தனை –ராமோ ராமோ ராம -இதிவத் -(ராமோத்வைதம் போல் ஆழ்வார் ஒருவரே இங்கு பேசப்படுகிறார் ) சர்வதாபி கதஸ் சத்பி –பெருமாள் சிரமம் செய்து விட்டு ஒரு-நிழலிலே இருந்த அளவிலே – பர சம்ருத்யை  ஏக பிரயோஜனாந்தர வர்கள் அதுக்கு உறுப்பான-கற்கைக்காக படு காடு கிடப்பர்கள் –-சமுத்திர இவ சிந்துபி -இப்படி கிடக்கிறது -இவர் குறை-நிரம்புக்கைக்கோ என்னில் –-பண்டே நிரம்பி நிற்கிற கடலை நிரப்புக்கைக்கு அன்றிக்கே ஆறுகள் வந்து புகுருகிறது –-நடுவு தரிப்பு இல்லாமை இத்தனை இறே –

வியப்பாய வியப்பில்லா மெய்ஜ்ஞான வேதியனை
சயப்புகழார் பலர் வாழும் தடம் குருகூர் சடகோபன்
துயக்கின்று தொழுதுரைத்த வாயிரத்துள் இப்பத்தும்
உயக்கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே -3-1-11-சம்சாரத்தை ஜெயித்த புகழை உடையராய் இருக்கை –ஆழ்வார் உடன் சாம்யா பன்னராய் இருக்கை –இப்படி இருப்பார் அநேகர் ஆழ்வாரை அனுபவித்து இருக்கை

நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே–10-8-11-துக்கங்கள் ஆனவை -இது நமக்கு தேசம் அன்று என்று தானே விட்டுப் போம் -பெருத்த வயல் சூழ்ந்து இருந்துள்ள திருப்பேர் மேலே யாய்த்து சொல்லிற்று -வி க்ஷணர் பலரும் தம்மை அனுபவித்து இனியராய் இருக்கும் திரு நகரியை யுடையராய் இருக்கும் ஆழ்வார் அருளிச் செய்தது –நல்லார் நவில் குருகூர் -ஸர்வதா அபிகதஸ் சத்பி-

எல்லாம் செய்தாலும் ,பூர்வ வர்ணங்களில் பிறவி போலே ,சதுர்த்த வர்ணத்தில் பிறவி
தேஜஸ்கரம் அன்றே என்ன – தாஸ்ய ரசஞ்ஞற்கு இது தேஜஸ்கரம் என்னும் அத்தை திருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார்-இனி மேல்‌, இப்படி ஆழ்வார்‌ தாழ்ந்த வர்ணத்திலே அவதரித்தாரே யாகிலும்‌, மிகவும்‌ தேஜஸ்ஸு உண்டாமென்கிறார்‌. எங்ஙனே என்னில்‌, ஸர்வேஸ்வரன்‌ லோக ஸம்ரஷணார்த்தமாக அவதரித்த விடத்தில்‌ பரத்வ ஸங்கையும்‌ அஸஹ்யமாம்படி தாழ்ந்தவதரிக்க, தேஜஸ்ஸு அதிஸயித்திருக்குமாப் போலே பாகவதத்வ ரஹிதமான உத் க்ருஷ்ட ஜந்மமும்‌ அவத்‌யம்‌ என்றிருக்கிறவர்களுக்கு ஜந்மாதிகளால்‌ வருகிற அஹங்கார மின்றிக்கே கைங்கர்யமே நிரூபகமான குலங்களில்‌ ஜந்மம்‌ நித்ய விபூதியிலும்‌ தேஜஸ் கரம்‌ என்கிறார்‌-

தேவத்மும் நிந்தை யானவனுக்கு ஒளி வரும் ஜனிகள் போலே ப்ரஹ்ம ஜன்மமும் இழுக்கு என்பார்க்கு
பண்டை நாளில் பிறவி உள் நாட்டு தேசு இறே
சூரணை -81-

(தேவத்மும் நிந்தை யானவனுக்கு-ஸ்ரீ ராமனுக்கு -ஸ்ரீ கிருஷ்ணனுக்கு –உள் நாட்டு தேசு-பரமபத தேஜஸ்)அதாவது-ராவண வத அநந்தரம் ப்ரஹ்மாதிகள்-பவான் நாராயணோ தேவோ–யுத்த –120–13-என்றது அசஹ்யமாய் –ஆத்மானம் மானுஷம் மந்யே ராமம் தசரதாத்மஜம் – யுத்த -120-11-என்கையாலும் ,கோவர்தந உத்தரண அநந்தரம் அந்த அதி மானுஷ சேஷ்டிதம் கண்டு ஆச்சரியப் பட்ட கோபர்
பாலத் வஞ்ச அதி வீர்யஞ்ச ஜன்மச அஸ்மாஸ்வ அசோபனம்
சிந்தய மாநமமே யாத்மன் சங்காம் கிருஷ்ண பிரயச்சதி
தேவோ வா தானவோ வா த்வம் யஷோ கந்தர்வ ஏவ வா
-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-7–என்று சங்கித்து சொல்ல-ஷணம் பூத்வா த்வசவ் தூஷ்ணீம் கிஞ்சித் ப்ரணய கோபவான்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13 9–என்கிற படியே-அது அசஹ்யமாம் என்னும் இடம் தோன்ற சிறிது போது வாய் திறவாமல் இருந்து பின்னை –நாஹம் தேவோ ந கந்தர்வோ ந யஷோ ந ச தானவ அஹம் வோ பாந்தவோ ஜாத நைவ சிந்தய மதோன்யதா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-12- -என்கையாலும்-தேவர்க்கும் தேவனான தான், லோக ரஷண அர்த்தமாக மனுஷ்ய சஜாதீயனாக அவதரித்த அளவில் தேவனாக சொல்லுகையும் நிந்தையாகும் படி புரையறப் பிறக்கும் சீலாதிகனான சர்வேஸ்வரனுக்கு-சவு ஸ்ரேயான் பவதி ஜாயமான–யஜுர் வேதம் -3-6-3- -என்கிற படியே-பல பிறப்பாய் ஒளி வரும் முழு நலம் -திருவாய் -1-3-2 –என்று தாழ விழுந்த தனையும் கல்யாண குணங்கள் ஒளி பெற்ற வரும் ஜென்மங்கள் போலே
மாஸ்ம பூதபி மே ஜன்ம சதுர் முகாத்மான–ஸ்தோத்ர ரத்னம் -35–என்று பிராமணியத்துக்கு எல்லை நிலமான பிரம்மாவாய் பிறக்கையும் சேஷத்வ விரோதியான அஹங்கார ஹேது வாகையாலே
ஆத்மாவுக்கு அவத்யம் என்று இகழும் படி –தாஸ்ய ரசம் அறிந்தார்க்கு -பண்டை நாள்– 9-2–என்ற திரு வாய் மொழியில்-பல் படி கால் குடி குடி வழி வந்து ஆள் செய்யும் தொண்டர் -என்றும்-உன் பொன் அடி கடவாதே வழி வருகின்ற அடியார்-என்றும்-தொல் அடிமை வழி வரும் தொண்டர்-என்றும் சொன்ன படியே தாஸ்ய விரோதியான ஜன்மாத்ய அபிமானம் இன்றிக்கே கைங்கர்ய அனுரூபமான குடிப் பிறவி-
ஆழி அம் கை பேராயருக்கு ஆளாம் பிறப்பு –உள் நாட்டு தேசு அன்றே –பெரிய திருவந்தாதி -79-
என்கிறபடியே –பகவத் விமுக பிரசுரம் ஆகையாலே புற நாடான லீலா விபூதி போல் அன்றிக்கே பகவத் அனுகூல்ய ஏக போக ரசத்திலே நெருங்கி போக விபூதியாய் ,அவனுக்கு அந்தரங்கமாய் இருக்கிற பரம பதத்தில் வர்த்திக்கிற தேஜசை உடைத்து இறே என்கை —பரம பதத்தில் பகவத் கைங்கர்ய அனுகுணமாக பரிக்ரஹிக்கும் தேஹத்தோபாதி சேஷ வஸ்துவான ஆத்மாவுக்கு இதுவும் தேஜஸ்கரம் என்று கருத்து –

(தே,வத்வமும்‌ நிந்தை யானவனுக்கு) ராவண வதாநந்தரம்‌ ப்‌ரஹ்மாதிகள்‌ “பவாந் நாராயணோ தேவ?” (ரா.யு. 120 – 13) என்றவது – திருவுள்ளத்துக்கு அஸஹ்யமாய்‌, “ ஆத்மாநம்‌ மாநுஷம்‌ மந்யே ராமம்‌ தஸரதராத்மஜம்‌”’ (ரா. யு. 120 – 11) என்றும்‌, கோவர்த்ந தோத்தரணாநந்தரம்‌. அந்த அதிமாதுஷ சேஷ்டிதங் கண்டு ஆச்சா்யப்பட்ட இடையர்‌ *““பாலத்வஞ்சாதி வீர்யஞ்ச ஐந்ம சாஸ்மாஸ்வ ஸோபநம் ॥ தேவோ வா தாநவோ வா த்வம்‌ யக்ஷோ கந்தர்வ ஏவ வா! (வி. பு. 5 – 13 – 7) என்று ஸங்கிக்க, “ஷணம்‌ பூத்வா த்வஸெள தூஷ்ணீம்‌ கிஞ்சித் ப்ரணய ரோஷவாத்‌” என்று அது அஸஹ்யமாய்‌, ”நாஹம்‌ தேவோ ந கந்தர் வோ ந யஷோ ந ச தாநவ ! அஹம்‌ வோ பாந், வோ ஜாத? நைதச்சிந்த்ய மதோந் யதா ‘” (வி. பு. 5 – 13 – 12) என்று இப்படி பரத்வ ஸங்கையும்‌, அஸஹ்யமாம்படி ஸீலாதிகனா யிருக்கிறவனுக்கு.
(ஒளிவரும்‌ ஜநிகள்‌் போலே) ““ஸ உ ஸ்ரேயான் பவதி ஜாயமாந” என்றும்‌, “பல் பிறப்பாய்‌ ஒளி வரு முழு நலம்‌”’ (திருவா. 1 – பீ – 2) என்றும்‌ சொல்லுகிறபடியே ஆநந்தாதி கல்யாண குணங்கள்‌ ஒனி பெற்று வரும்‌ அவதாரங்கள்‌ போலே.-(ப்‌ரஹ்ம ஜத்மமும்‌ இழுக்கென்பார்க்கு) ‘இதராவஸதேஷு மா ஸ்ம பூதபி மே ஜந்ம சதுர்முகாத்மநா’” (ஸ்தோ. ர. 55) என்கிறபடியே அபாாகவத க்‌ருஹ்ங்களில்‌ ப்‌ரஹ்மாவாய்ப்‌ பிறக்கையும்‌ அவத்‌யமாம்படி பகவத்‌ தாஸ்யமே ரஸித்த ஜ்ஞாநாதிகர்க்கு (பண்டை நாளில்‌ பிறவி) “பண்டை நாள்‌” (திருவா. 9 – 2 – 1) என்கிற பாட்டின் படியே லக்ஷ்மீ-தத்‌ வல்லபருடைய கடாக்ஷமடியாகக்‌ கைங்கர்யமே நிரூபகமாக உடைத்தாய்‌, தாஸ்ய விரோதி ஜந்மாதிகளால்‌ வரும்‌ அஹங்கார ரஹிதமான குலங்களில்‌ ஜந்மமும்‌.(உண்ணாட்டுத் தேசிறே) புற நாடான வீலாவிபூதி போலன்றிக்கே பகவதாநுகூல்யைக போகராலே நெருங்கி பகவானுக்கு போக விபூ,தியாகையாலே அந்தரங்கமா யிருக்கிற பரமபதத்தில்‌ தேஜஸ்ஸன்றோ என்கிறார்-

எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில பல பிறப்பாய்
ஒளி வரு முழு நலம்
முதலில கேடில வீடாம்
தெளிதரு நிலைமையது ஒழிவிலன் முழுவதும் இறையோன்
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே –1-3-2-வேதம் சொல்லிலும் –பஹூதா விஜாயதே -என்னும் அத்தனை –-தான் சொல்லிலும் –பஹூநிமே -என்னும் அத்தனை –-உட்புக்க தம் போல்வார் சொல்லிலும் –என்நின்ற யோநியுமாய் பிறந்தாய் -என்னும் அத்தனை – பிறப்பாய் –-பரார்த்தமாக தாழ நின்றோம் என்று தம் பக்கலிலும் புரை இன்றிக்கே இருக்கை –என்னக் கடவது இறே-ஒளி வரு முழு நலம் –பிறக்கப் பிறக்கக் கல்யாண குணங்கள் கட்டடங்க உஜ்ஜ்வலமாகா நிற்கும்-ச உ ஸ்ரேயான் பவதி ஜாயமான –

தவ தாஸ்ய ஸுகைக ஸங்கிநாம்
பவநேஷ்வஸ் த்வபி கீடஜந்ம மே |
இதராவஸதேஷு மா ஸ்ம பூத்
அபி மே ஜந்ம சதுர் முகாத்மநா ||–55-
எம்பெருமானுக்குத் தொண்டு செய்வதில் மூழ்கியிருப்பவர்களின் திருமாளிகைகளில் ஒரு புழுவாகவாவது பிறக்க வேண்டும்.-மற்ற க்ருஹங்களில் ப்ரஹ்மாவாகப் பிறப்பதும் எனக்கு வேண்டாம்.

பண்டை நாளாலே நின் திரு வருளும் பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால் குடி குடி வழி வந்து ஆள் செய்யும்

தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1-நெடுநாள் கூடவே பண்ணிப் போந்த கடாக்ஷத்தையும் –எதிர் சூழல் புக்கு நெடுநாள் பட்ட கிலேசத்தின் பலம் அன்றோ இது -நெடு நாள் கிருஷி பண்ணி பல வேளையில் கை விடவோபங்கயத்தாள் திருவருளும்-கொண்டு — அதுக்கு அடியாக பெரிய பிராட்டியார் கடாக்ஷத்தையும் கொண்டு –அவனுடைய அருளின் ஸ்வாதந்தர்யத்தை கெடுக்கும் அவள் அருள் -பிரணயித்தவத்தால் வந்த பாரதந்தர்யம் இறே ஸ்வாதந்தர்யத்தை தவிர்ப்பது-என்னடியார் யது செய்யார் -என்னும் உன் கடாக்ஷமும் -நகச்சின் நபராத்யதி –என்னும் அவள் கடாக்ஷத்தையும் பெற்று –க்ருபயா பர்யபாலயத் -என்று கிருபா பரதந்த்ரமான உன் கடாக்ஷமும் -அந்த பாரதந்தர்யத்துக்கு அடியான அவள் கடாக்ஷமும் -என்றுமாம் –
நின் கோயில் சீய்த்துப் –-உகந்து அருளின நிலங்களிலே அசாதாரண பரிசர்யை பண்ணி -தேஹாத்ம அபிமானிகள் தம் தாமுடைய க்ருஹங்களைப் பேணுமவர்கள் –பிராட்டி யடியாக பகவத் பிரசாதம் பெற்றவர்கள் உகந்து அருளின தேசங்களை பேணுவர்கள் –-பல்படிகால்-இன்று புதிதாய் வந்ததோ -நீ விசேஷ கடாக்ஷம் பண்ண தொடங்கின அன்றே தொடங்கி வந்தது அன்றோ -என்கை –
குடி குடி -சபரிகரமாக-வழி வந்து –ஆள் செய்யும் -சாஸ்திரங்களில் சொல்லுகிற முறை தப்பாதபடி வந்து ஆட் செய்யும் தொண்டரோர்க்கு அருளிச் -அடிமை செய்கிற அடியோங்கள் பக்கலிலே கிருபை பண்ணி-

உண்ணாட்டுத் தேசன்றே ஊழ் வினையை யஞ்சுமே
விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே-மண்ணாட்டில்
ஆராகி என் இழிலிற்று ஆனாலும் ஆழி யங்கைப்
பேராயற்கு ஆளாம் பிறப்பு –79-
–ஆழியங்கைப் பேராயற்கு ஆளாம் பிறப்பு-ஸர்வேஸ்வரனாய் வைத்து இதர ஸஜாதீயனாய்ப் பிறந்தவனுக்குக் கைங்கர்யம் பண்ணுகைக்கு யோக்யமான ஜென்மம் பரம பதத்தில் இருக்கும் தேஜஸ்ஸை யுடைத்தன்றே என்றுமாம்-உண்ணாட்டுத் தேசன்றே-உள் நாடு என்று பரம பதமாகக் கொள்ளுகிறது-பகவத் அபிப்ராயத்தாலே(அக்கரை -சம்சாரம் இக்கரை பரமபதம் என்று உண்டே )தேசன்றே -தேசன்றோ என்றபடி-பரம பதத்தில் பகவத் கைங்கர்ய அனுகுணமாக பரிக்ரஹிக்கும் தேஹத்தோபாதி சேஷ வஸ்துவான ஆத்மாவுக்கு இதுவும் தேஜஸ் கரம் என்று கருத்து
ச ஏக பவதி இத்யாதி போல் அங்கு கைங்கர்யத்துக்கு எடுத்துக் கொள்ளும் பிறப்புக்களில் ஒன்றே இதுவும் 

இனி இவர் அவதாரத்தின் பரோ உபகாரகத்வத்தை ச நிதர்சனமாக அருளிச் செய்கிறார் .-இப்படிப்பட்ட இவருடைய அவதாரம்‌ ஜநக குல ஸுந்தரியான நாச்சிமார்‌ முதலானாரூடைய அவதாரம் போலே ஸர்வோபகாரகம்‌ என்கிறார்‌-

ஜனக தசரத வசுதேவ குலங்களுக்கு மூத்த பெண்ணும் நடுவில் பிள்ளையும் கடைக் குட்டியும் போலே
இவரும் பிறந்து புகழும் ஆக்கமும் ஆக்கி அம் சிறையும் அறுத்தார்-சூரணை -82-

( ஜனக குலத்துக்கு மூத்த பெண் பிறந்து புகழை ஆக்கினால் போலேயும்-தசரத குலத்துக்கு நடுவில் பிள்ளை -ஸ்ரீ பரதாழ்வான் -பிறந்து ஆக்கத்தை ஆக்கினால் போலேயும்-வசுதேவ குலத்துக்கு கடைக்குட்டி பிறந்து அம் சிறை அறுத்தால் போலேயும்-இவரும் பிறந்து புகழும் ஆக்கமும் ஆக்கி அம் சிறையும் அறுத்தார் )அதாவது
ஜனக குலத்துக்கு மூத்த பெண்ணான பிராட்டி பிறந்து –
ஜனகானாம் குலே கீர்த்தி மா ஹரிஷ்யதி மே ஸூதா சீதா பர்த்தார மாசாத்ய ராமம் தசரதாத் மஜம்–பால -67-21- -என்கிற படியே- தான் பிறந்த குலத்துக்கு கீர்த்தி உண்டாக்கினால் போலேயும்-தசரத குலத்துக்கு நடுவில் பிள்ளையான ஸ்ரீ பரதாழ்வான் பிறந்து-ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய தர்மம் வக்தும் இஹார்ஹசி கதம் தசரதாஜ் ஜாதோ பவேத் ராஜ்ய அபஹாரஹா அயோத்யா –82-12–இத்யாதியாலே
மூத்தார் இருக்க இளையார் முடி சூடக் கடவர் அன்று என்கிற குல மரியாதையை நடத்தின அளவு அன்றிக்கே –ஜடிலம் சீர வசனம் ப்ராஞ்சலீம் பதிதம் புவி–அயோத்யா -100-1-என்றும்-பங்கதிக் தஸ்து ஜடிலோ பரதஸ் த்வாம் ப்ரதீஷிதே –யுத்த –127-5-என்றும் சொல்லுகிற படி ஜ்யேஷ்டரான பெருமாள் உடைய விஸ்லேஷத்தில் ,சடை புனைந்து வற்கலை உடுத்தி ,கண்ண நீரால் உண்டான சேற்றிலே தரைக் கிடை கிடந்து , குலத்துக்கு முன்பு இல்லாத ஏற்றங்களை உண்டாக்கினால் போலேயும் –வசுதேவ குலத்துக்கு –மக்கள் அறுவரை கல்லிடை மோத இழந்தவள் தன் வயிற்றில் சிக்கென வந்து பிறந்து நின்றாய் -பெரியாழ்வார் -5-3-1-என்கிற படியே கடைக் குட்டியான ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்து
தந்தை காலில் பெரு விலங்கு தாள வீழ -பெரிய திருமொழி -7-5-1-என்கிறபடியே-தங்களால் விடுவித்துக் கொள்ள ஒண்ணாத மாதா பிதாக்கள் கால் கட்டை அறுத்தால் போலேயும்-இவரும் திரு அவதரித்து –மலி புகழ் வண் குருகூர் –திருவாய் -4-2-11-என்னும் படி தாம் பிறந்த ஊருக்கு புகழ் உண்டாக்கிகுடி கிடந்தது ஆக்கம் செய்து –என்கிற படியே சேஷத்வ குல மரியாதை தப்பாத படி நின்ற மாத்ரம் அன்றிக்கே ,சேஷி விரஹ கிலேச அதிசயத்தாலே , காண வாராய் என்று என்றே கண்ணும் வாயும் துவர்ந்து–திருவாய் -8-5-2- -என்றும்-கண்ண நீர் கைகளால் இறைத்து –7-2-1–என்றும்
இட்ட கால் இட்ட கையாம் படி நிஸ் சேஷ்டராய் ,தரைக் கிடை கிடந்த பிரேம விசேஷத்தாலே ,
இக் குடிக்கு பண்டு இல்லாத ஏற்றத்தை உண்டாக்கி .அறுவர் தம் பிறவி அம் சிறையே –1-3-11-என்கிறபடி தம் உடைய பிரபந்த அப்யாச முகத்தாலே தம்மோட அந்விதரான இவர்கள் உடைய சம்சாரமாகிற அரிய சிறையும் அறுத்தார் என்கை-திருஷ்டாந்த பூதரான மூவர் செய்ததும் ஒருத்தரே செய்கையாலும் , இத்தனையும் ஸ்வரூப அனுகூலமாக செய்கையாலும் இவர் பிறப்பு இறே மிகவும் பரோ உபகாரம் ஆய்த்து-

ஜநக குலத்துக்கு மூத்த பெண்ணான நாச்சியார்‌ திருவவதரித்து. “ “ஸீதா பர்த்தாரமாஸாத்‌ய. ராமம்‌ தஸரதாத்மஜம்‌ | ஜநகாநாம்‌ குலே கீர்த்திம்‌ ஆஹரிஷ்யதி மே ஸுதா”'(ரா. பரா. 67 – 21) என்று தான்‌ பிறந்து ஜநக குலத்துக்குக்‌ கீர்த்தியை உண்டாக்கினாப் போலவும்‌,
தஸரத குலத்துக்கு நடுவில்‌ பிள்ளையான ஸ்ரீபரதாழ்வான்‌ பிறந்து ‘விலலாப ஸப மத்‌யே ஜகர்ஹே ச புரோஹிதம்‌ ! ராஜ்யஞ் சாஹஞ்ச ராமஸ்ய தர்மம்‌ வக்து மிஹார்ஹஸி”’ (ரா. ௮. 82 – 10) என்றும்‌, “‘ஜடிலம்‌ சீர வஸநம்‌ ப்ராஞ்ஜலிம்‌ பதிதம்‌ புவி?” (ரா. ஆ. 102 – 1) என்றும்‌, ““குடிக் கிடந்தாக்கம்‌ செய்து” (திருவா. 9 – 2 – 2) என்றும்‌ சொல்லுகிற படியே மூத்தாரிருக்க இளையார்‌ முடிசூடக் கடவதன்று என்கிற குல மர்யாதையை நடத்தின வளவன்றிக்கே, ஜயேஷ்டரான பெருமாளுடைய விஸ்லேஷத்தில்‌ ஜடை புனைந்து, வல்கலை சாத்தி, கண்ணநீராலுண்டான சேற்றிலே தரைக் கிடை கிடந்து அக்குலத்துக்கு முன்பில்லாத ஏற்றங்களை உண்டாக்கினாப் போலேயும்‌,
வஸாுதேவ குலத்துக்கு “‘மக்களறுவரைக்‌ கல்லிடை மோத இழந்தவள் தன்‌ வயிற்றில்‌ சிக்கென வந்து பிறந்து நின்றாய்‌” (பெரியா. தி. 5 – 3 – 1) என்று சொல்லுகிறபடியே கடைக் குட்டியான க்ருஷ்ணன்‌ பிறந்து ““தந்தை காலில்‌ பெரு விலங்கு தாளவிழ”‘ (திருமொழி 7 – 5 – 1) என்கிறபடியே தங்களாலே விடுவித்துக் கொள்ள வொண்ணாத மாதா பிதாக்களுடைய கட்டை அறுத்தாப் போலேயும்‌,
இவரும்‌ திருவவதரித்து ““மலி புகழ் வண் குருகூர்‌’‘ (திருவா. 4 – 2 – 11) என்றும்‌, “ஏற்கும்‌ பெரும்புகழ்‌ வண் குருகூர்‌‘” (திருவா. 3 – 9 – 11) என்றும்‌ சொல்லுகிறபடியே தாம்‌ திருவவதரித்து அந்நகரிக்குக்‌ கீர்த்தியை உண்டாக்கி, “*குடிக்கிடந் தாக்கம்‌ செய்து” (திருவா. 9 – 2 – 2) என்கிறபடியே அங்குள்ளார்க்கு ஜ்ஞாந வர்த்தகரான மாத்ரமே யன்றியிலே ப்ரேம வர்த்தகராயும்‌, ”அறுவர் தம்‌ பிறவி அஞ்சிறையே”’ (திருவா. 1 – 311) என்கிறபடியே தம்முடைய ப்ரபந்தாப்‌யாஸ முகத்தாலே ஸம்ஸாரிகளுடைய அறவைச் சிறையையு மறுத்தார் –

குடிக் கிடந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த வடிமைக்குக் குற்றேவல் செய்து உன் பொன்
அடிக் கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி நீ யொருநாள்
படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கணியாய்
கொடிக்கொள் பொன் மதில் சூழ் குளிர் வயல் சோலைத் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-2-குடிக்கு ஈடாக வர்த்தித்து -குல மரியாதை தப்பாதே வர்த்திக்கை –இஷுவாகு வம்சயரில் -கநிஷ்டர் முடி சூடி அறிவார் இல்லை -என்றான் இறே-ஸ்ரீ பரதாழ்வான்-ஆக்கம் செய்து-குடியில் பண்டு இல்லாத நன்மைகளை யுண்டாக்கி –பங்கதிக் தஸ்து ஜடில -என்கிறபடியே ஜடாவல்கலமும் கண்ணும் கண்ண நீருமாய் இருக்கை –

துக்கச் சுழலையை சூழ்ந்து கிடந்த வலையை அறப் பறித்து
புக்கினில் புக்கு உன்னை கண்டு கொண்டேன் இனிப் போக விடுவது உண்டே
மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழந்தவள் தன் வயிற்றில்
சிக்கனே வந்து பிறந்து நின்றாய்
திரு மால் இரும் சோலை எந்தாய் – 5-3- 1-இழந்தவள் இழவு தீர்ந்தால் போலே என்னுடைய இழவு தீர்க்க வேணும் என்கிறார் –தேவகிப் பிராட்டிக்கு அஷ்டம கர்ப்பம் இறே ஸ்ரீ கிருஷ்ணன் – கால நேமியோடே சம்பந்தம் உடையராய் – ஹிரண்ய சாபத்தாலே பாதாளத்திலே வர்திப்பார் ஆறு ராஷசரை யோக நித்ரையால் பிரவேசிப்பிக்க – தேவகியார் வயிற்றிலே பிறந்த ஆறு ராஷசரை(ஹிரண்யாக்ஷன் பிள்ளை கால நேமி பிள்ளைகள் இந்த ஆறு பேரும்-கால நேமி கம்சன்
ப்ரஹ்மா சாபத்தால் பாதாளத்தில் வர்த்திக்கப் பெற்றார்கள்-அங்கும் விஷ்ணு பக்தராக இருந்ததால்
ஹிரண்ய கசிபு சாபத்தால் தந்தையால் கொல்லப்பட்டார்கள் )கல்லிடை மோத – கம்சனால் நிரசிக்கப்பட -ஏழாம் கர்ப்பமான நம்பி மூத்த பிரானை ரோகிணியார் வயிற்றினில் அவதரிப்பித்து –
தாம் எட்டாம் கர்ப்பமாய் இறே வந்து அவதரித்தது-அவள் முன்பு இழந்த இழவு தீர சிக்கன வந்து பிறந்து நின்றாய்-

தந்தை காலில் பெரு விலங்கு தாள விழ  நல்லிருள் கண்  வந்த
எந்தை பெருமானார் மருவி நின்ற ஊர் போலும்
முந்தி வானம் மழை பொழியும் மூவா வுருவில் மறையாளர்
அந்தி மூன்று அனல் ஓம்பும் அணியார் வீதி அழுந்தூரே –7-5-1–ஆபத்திலே வந்து உதவி அவற்றைப் போக்கும் ஸ்வபாவன் ஆய்த்து–ஸ்ரீ வசுதேவர் காலில் உண்டான  பெரு விலங்கு உண்டு – எட்டு கர்ப்பத்துக்கே அவ்வருகே இட்ட விலங்கு அது தன்னடையே விட்டுப் போம்படியாக – இவன் வந்து அவதரித்த அநந்தரம் திருவாய்ப்பாடி ஏறக் கொண்டு போக வல்லாரானார் இறே 

மெலியும் நோய் தீர்க்கும் நம் கண்ணன் கழல்கள் மேல்
மலிபுகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மலிபுகழ் வானவர்க்கு ஆவர் நற்கோவையே.–4-2-11–கிட்டாதவற்றையும் அனுபவிக்க ஆசைப் பட்டார் என்னும் புகழ் மிக்கு இருக்கிற ஆழ்வார் சொன்னது-தேச காலங்களால் கை கழிந்த அவன் படிகளையும் இப்போதே பெற வேண்டும்’ என்று விடாய்க்கும்படி பகவத் விஷயத்திலே விடாய்க்கையால் வந்த புகழே அன்றோ? ஆதலின், ‘மலிபுகழ்’ என்கிறது.

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் றனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர்பத்து
ஏற்கும் பெரும்புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே.–3-9-11-உபய விபூதி உக்தன் என்றால் -அவனுக்கு தக்கு இருக்குமா போலே சர்வேஸ்வரன் கவி என்றால் அதுக்கு போரும்படி இருக்கிற ஆழ்வார் –தேவிற் சிறந்த திருமாற்குத் தக்க தெய்வக் கவிஞன் பாவிற் சிறந்த திருவாய் மொழி பகர் பண்டிதனே: நாவிற் சிறந்த அம் மாறற்குத் தக்க நன்னா வலவன் பூவிற் சிறந்த ஆழ்வான் கம்ப நாட்டுப் புலமையனே.’–என்பது சடகோபரந்தாதி, சிறப்புப்பாயிரம்.

குடிக் கிடந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த வடிமைக்குக் குற்றேவல் செய்து உன் பொன்
அடிக் கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி நீ யொருநாள்
படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கணியாய்
கொடிக்கொள் பொன் மதில் சூழ் குளிர் வயல் சோலைத் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-2–குடிக்கு ஈடாக வர்த்தித்து -குல மரியாதை தப்பாதே வர்த்திக்கை -இஷுவாகு வம்சயரில் -கநிஷ்டர் முடி சூடி அறிவார் இல்லை -என்றான் இறே-ஸ்ரீ பரதாழ்வான்–ஆக்கம் செய்து-குடியில் பண்டு இல்லாத நன்மைகளை யுண்டாக்கி -பங்கதிக் தஸ்து ஜடில -என்கிறபடியே ஜடாவல்கலமும் கண்ணும் கண்ண நீருமாய் இருக்கை – நின் தீர்த்த வடிமைக்குக் குற்றேவல் செய்து-தன்னுடைய ரஸ்யத்தை யாலே இதர புருஷார்த்தங்களிலே நசை அறுக்க வல்ல அடிமைகளில் அந்தரங்கமான அடிமைகளை செய்து
உன் பொன்-அடிக் கடவாதே-உன்னுடைய ஸ்ப்ருஹணீயமான திருவடிகளை அல்லது அறியாதே -என்னுதல் -உன் திருவடிகளை தப்பாதே என்னுதல் -அல்லது அறியாமை யாவது -அநந்ய பிரயோஜனகை -தப்பாது ஒழிகை யாவது -ஆஞ்ஞஜையை அதி லங்கியாது ஒழிகை –ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய -என்று இருக்கையும் -பெருமாளை மீடகைக்கு சென்று திருவடிகளிலே விழ -பித்ரு வசனத்தை அனுஷ்டித்தோமானா நிறம் நமக்கு யுண்டாவது நீ ராஜ்யத்திலே இருக்கிறது காண் -என்ன ஆரூரோஹ ரதம் ஹ்ருஷ்ட -என்று மீளுகையும்-வழி வருகின்ற-பரம்பரையாக வருகின்ற என்னுதல் -அடிமை செய்யும் முறையில் ஒன்றுமே தப்பாத படி போருகிற -என்னுதல்-அடியரோர்க்கு அருளி -அநந்ய கதியாய் இருக்கிற எங்கள் பக்கலிலே கிருபை பண்ணி-

அமரர்கள் தொழுது எழு அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே–1-3-11–சிறையில் இருந்த ராஜகுமாரன் தலையிலே அபிஷேகத்தை வைத்து பின்னை சிறையை வெட்டி விடுவாரைப் போலே நித்ய ஸூரிகள் வரிசையைக் கொடுத்து பின்னை சம்சார அஞ்சிறையை கழிக்கும் ஈஸ்வரன் ஆதி வாஹிகரோடு விரஜையில் சென்று ஸூஷ்ம சரீர விதூ நனம் பெறுவார்-

இன்னமும் இவருடைய அவதாரத்தாலே லோகத்துக்கு உண்டான நன்மைகளை அருளிச் செய்கிறார் .-அவ்வளவே யன்றிக்கே அஜ்ஞாந அந்தகார நிரஸநாதிகளாலே ஆதித்ய ராம க்ருஷ்ணர்‌களில்‌ வ்யாவ்ருத்தர்‌ என்கிறார்‌.

ஆதித்ய ராம திவாகர அச்யுத பானுக்களுக்கு போகாத உள்ளிருள் நீங்கி சோஷியாத பிறவிக் கடல் வற்றி விகஸியாத போதில் கமலம் மலர்ந்தது வகுள பூஷண பாஸ்கர உதயத்தாலே-சூரணை -83-

(வகுள பூஷண பாஸ்கர உதயத்தாலே-ஆதித்யனுக்கு போகாத உள்ளிருள் நீங்கி –ராம திவாகரனுக்கு சோஷியாத பிறவிக் கடல் வற்றி –அச்யுத பானுக்கு விகஸியாத போதில் கமலம் மலர்ந்தது )-ஆதித்யனுக்கு போகாத உள்ளிருள் நீங்கி-அதாவது
கதிரவன் குண சிகை சிகரம் வந்து அணைந்தான் -கனவிருள் அகன்றது –திருப்பள்ளி -1- என்னும் படி
பாஹ்ய அந்தகாரத்தை போக்கிக் கொண்டு உதிக்கும் ஆதித்யனுக்கு போகாத உள்ளிருளான அஞ்ஞான அந்தகாரம் தமோ பாஹ்யம் வினச்யேத்து பாவக ஆதித்ய சந்நிதவ் பாஹ்ய மாப்யந்தரஞ்சைவ விஷ்ணு பக்தார்க்க சந்நிதவ் -என்கிற படியே நீங்கி–ராம திவாகரனுக்கு சோஷியாத பிறவிக் கடல் வற்றிஅதாவது – சர ஜாலாம் சுமான் சூர கபே ராம திவாகர சத்ருர ஷோமயம் தோயம் உபசோஷம் நயிஷ்யதே–ஸூ ந்தர -37-16-(ராம சூர்யன் இராக்கதக் கடலை வற்றும்படி செய்யப் போகிறார் ) என்கிற படியே – சர ஜாலங்கள் ஆகிற கிரணங்களை உடையனாய் கொண்டு சத்ரு ராஷசர் ஆகிற சமுத்ரத்தை வற்றப் பண்ணின ராம திவாகரனுக்கும் வற்றாத பிறவி என்னும் பெரும் கடல்-என்கிற சம்சார சாகரம் வற்றி அச்யுத பானுக்கு விகஸியாத போதில் கமலம் மலர்ந்தது
அதாவது-ததோகில ஜகத் பத்ம போதய அச்யுத பாநுனா தேவகி பூர்வ சந்த்யாயாம் ஆவிர்பூதம் மஹாத்மனா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-2-என்ற ஜகத் பத்மம் விசிதாகும் படியாக தேவகியாகிற பூர்வ சந்தையில் ,ஆவீர் பாவித்த அச்யுத பானுவான கிருஷ்ணனுக்கு விகஸியாத –போதில் கமல வன் நெஞ்சம் -பெரியாழ்வார் -5-2-8–என்கிற ஹிருதய பத்மம் விகசிதம் ஆய்த்து-யத் கோ சஹாஸ்ரம் அபஹந்தி தமாம்சி பும்ஸாம் நாராயணோ வசதி யத்ர ச சங்க சக்கர யன் மண்டலம் சுருதி கதம் பிரணமந்தி விப்ராஸ் தஸ்மை நமோ வகுள பூஷண பாஸ்கராய –ஸ்ரீ பராங்குச அஷ்டகம் -என்று
திரு வாய் மொழி ஆயிரம் ஆகிற கிரணங்களை உடையவராய் , மகிஷீ பூஷண ஆயூத விசிஷ்டனான நாராயணனை –-கண்கள் சிவந்ததில்-8-8-1–படியே உள்ளே உடையவராய் , வேத வித்துகளான சர்வ சிஷ்டர்களும் கேட்ட போதே தாம் இருந்த தேசத்தை நோக்கி வணங்கும் படியான வைபவத்தை உடையராய் , வகுளா பரணாராய் இருக்கிற ஆழ்வார் ஆகிற பாஸ்கரனுடைய உதயத்தில் என்கை-ஆதித்ய திவாகர பானு சப்தங்களால் அன்றிக்கே-( ஆதித்யன் –அதிதியின் புத்ரன் –திவாகரன் பகலை செய்கிறவன் —பானு -பிரகாசிக்கிறவன் –பாஸ்கரன் -பிரகாசிக்கச் செய்கிறவன் ) பாஸ்கர சப்தத்தாலே இவரைச் சொல்லுகையாலே – ஊரும் நாடும்-6-7-2- -இத்யாதி படியே ஸ்வ சம்பந்தத்தை உடையார் எல்லாருக்கும் பிரகாசத்தைப் பண்ணுமவர் என்று தோற்றுகிறது —

(ஆதித்யேத்யாதி,). பாஹ்யமான அந்த காரத்தைப்‌ போக்கிக்‌ கொண்டு உதிக்கிற ஆதித்யனுக்குப் போகாத உள்ளிருளான அஜ்ஞாந அந்தகாரமும்‌,-தமோ பாஹ்யம்‌ விநஸ்யேத்து பாவக ஆதித்ய ஸந்நிதெள ந பாஹ்யாப்‌, யந்தரஞ்சைவ விஷ்ணு பக்தார்க்க ஸந்நிதெள”’ என்கிறபடியே நீங்கி, ‘ஸரஜாலாம் ஸூமாந்‌ ஸூர கபே ராம திவாகர:। ஸத்ருரஷோமயம்‌ தோயம்‌ உபஸோஷம்‌ நயிஷ்யதி”‘ (ரா.ஸு. 37 – 16) என்று ஸரஜாலங்களாகிற கிரணங்களை உடையனாய்க் கொண்டு ஸத்ரு ராக்ஷஸராகிற ஸமுத்ரத்தை வற்றப் பண்ணுகிற ராம திவாகரர்க்கு வற்றாத ஸம்ஸார ஸமுத்‌ரம்‌ “பிறவி என்னும்‌ கடலும்‌ வற்றி” (பெரியா, தி, 5 – 4 – 2) என்கிறபடியே வற்றி,*“ததோகில ஜகத் பத்‌மபோதாய அச்யுத பாநுநா ! தேவகீ பூர்வ ஸந்த்‌யாயாம்‌ ஆவிர்பூதம்‌ மஹாத்மநா”’” (வி.பு. 5- 3 – 2) என்று ஜகத் பத்‌மம்‌ விகஸிதமாம்படி தேவகி யாகிற பூர்வ ஸந்த்‌யையிலே ஆவிர்பூதனான அச்யுத பாநுவான் க்ருஷ்ணனுக்கு விகஸியாத ”போதில்‌ கமல வன்னெஞ்சம்‌”‘ (பெரியா. தி. 5 – 2- 8) என்கிற ஹ்ருத் பத்‌மம் விகஸிதமாயிற்று,
“யத்‌, கோ ஸஹஸ்ர மபஹந்தி தமாம்ஸி பும்ஸாம்‌ நாராயணோ வஸதி யத்ர ஸ சங்க, சக்ரா | யந் மண்டலம்‌ ஸ்ருதிகதம்‌ ப்ரணமந்தி விப்ரா? தஸ்மை நமோ வகுள பூ,ஷண பாஸ்கராய”” (பரா. ௮.) என்றும்‌ திருவாய்மொழி ஆயிரமாகிற கிரணங்களை உடையராய்‌, மஹிஷீ பூக்ஷணாயுத விஸிஷ்டனான நாராயணனை *கண்கள்‌ சிவந்திற்படியே உள்ளே உடையராய்‌, வேத வித்துக்களான ஸர்வ ஸிஷ்டர்களும்‌ ப்ரணாமம்‌ பண்ணும்படியான வைபவத்தை உடையராய்‌, வகுள பூஷணரான ஆழ்வாராகிற பாஸ்கரோதயத்திலே என்கிறார்‌. கீழ்ச் சொன்ன ஆதித்ய திவாகர பாநு சப்‌தம்‌ போலன்றிக்கே இவர் பக்கவிலே பாஸ்கர சப்‌த ப்ரயோகம்‌ பண்ணுகையாலே **ஊரும்‌ நாடும்‌ உலகமும்‌ தன்னைப்‌ போல்‌ (திருவா. 6 – 7- 2) என்கிறபடியே தம்மோடு ஸம்பந்த, முடையா ரெல்லார்க்கும்‌ தம்மோடொத்த ப்ரபாவத்தை உண்டாக்குமவர்‌ என்னுமிடமும்‌ தோற்றுகிறது –

கதிரவன் குண திசை சிகரம் வந்து அணைந்தான் கன இருள் அகன்றது காலை அம் பொழுதாய்
மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம் வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி
எதிர் திசை நிறைந்தனர் இவரோடும் புகுந்த இரும் களிற்று ஈட்டமும் பிடியோடு முரசும்
அதிர்தலில் அலை கடல் போன்று உளது எங்கும் அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—-1-தன்னுடைய ஆயிரம் கிரணங்களாலும் ஜகத்திலந்தகாரத்தை நீக்கி வெளிச் செறிப்பைப் பண்ண வல்ல ஆதித்யனானவன், கிழக்கிலே உதய கிரியிலே வந்து ஸங்கதனானான். அவனுக்கடுத்தாப் போலே கோயிலாய்த்துக் காணும் ; திருவடிகளும் அத் திக்கிலேயாகப் பெற்றது: கண் வளர்ந்தருளுகிற தேவரீருக்கு ப்ராத:காலத்திலே ஸந்த்யா தீபங்கொண்டு வருவாரைப்போலே.திநகரனானவன் தன் கிரணங்களெல்லாவற்றோடும் கீழ் திக்கில் உதய கிரியை வந்தணையா நின்றான்–(உம் திருவடிப் பக்கத்திலே திருவடிக் குற்றேவல் செய்யத் தோன்றினது போலே உள்ளது. )அடியிலும் முடியிலும் ஆதித்யர்கள் வந்து நிற்க, நடுவே கிடந்து கண் வளர்ந்தருளுகிறதென்? “கதிராயிரமிரவி கலந்தெரித்தா லொத்த நீண் முடி “பெரியா திரு 4-1-1)-யிறே. “மிக்க செஞ்சுடர்ப் பரிதி சூடி” (திருவாசிரியம் – 1 ] முடியிலே ஆயிரம் ஸூர்யர்களுடைய ஒளியுடைய கிரீடமாகிற ஆதித்யனும், அடியிலே உலகிலிருள் நீக்கும் ஆதியனும் வந்து நிற்க, நடுவே கிடந்து கண்ணுறங்கலாமோ? என்று நஞ்ஜீயர் கருத்தருளுவர் .(கனவிருளகன்றது) ராத்ரியில் மிக்க இருளானது ஸவாஸநமாகப் போய்த்து. ஆதித்யன் வரவுக்குத் தக்கபடியே- செறிந்த இருளானது குறைய வாங்கிற்று. “இருள் வீற்றிருந்தது பார் முழுதும்”-திருவிருத்தம் – 18 – என்கிறபடியே ராஜாஜ்ஞையை பங்கித்து வன்னியர் குறும்பு செய்யுமா போலே,ஸாம்ராஜ்யம் பண்ணிற்று. மதிப்பனான ராஜா ஸ பரிகரனாய் எடுத்து விட்டவாறே ஒரு பயணங் குறைய வாங்குமா போலே-இருட்டும் ஒரு பயணம் குறைய வாங்கிற்று.-(காலை யம் பொழுதாய்) ஆராதகர் ஆராத நார்த்தமாக உத்யோகிக்கக் கடவ காலமாய்த்து.

பறவை ஏறு பரம் புருடா நீ என்னைக் கை கொண்ட பின்
பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும் பதம் ஆகின்றதால்
இறவு செய்யும்  பாவக்காடு தீக்கொளீஇ  வேகின்றதால்
அறிவை என்னும் அமுதவாறு தலைப் பற்றி வாய்க் கொண்டதே -5- 4-2 –சம்சாரம் ஆகிற பெரிய கடலும் சுவறி-பெரும் பதம் ஆகின்றதால் – பெரியதாம் பெற்ற படி –மேல் சாத்தும் பரியட்டமும் பெற்று –-திருப் பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறிக்கப் பெற்று திருப் பல்லாண்டு பாடின படி-உடுத்துக் களைந்த -இத்யாதி –ஆகின்றதால் – இது மேன்மேல் என வளர்ந்து வருகிற படி-எத்திறத்தும் இன்பம் (திருச்சந்த ) எங்கும் திருவருள் பெற்று –இழவுக்கு சம்சாரமும் அதுக்கு அடியான கர்மமும் போலே-மோஷத்துக்கு ஞானமும் பக்தியும் –பிறவி என்னும் கடலும் வற்றி -என்று சம்சாரம் போன படி சொன்னார் –இனிஅதுக்கு அடியான கர்மம் போன படியை அருளிச் செய்கிறார்-

ஏதங்கள் ஆயின எல்லாம் இறங்க விடுவித்து என்னுள்ளே
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து
போதில் கமல வல் நெஞ்சம் புகுந்தும் என் சென்னித் திடரில்
பாத இலச்சினை வைத்தார் பண்டு அன்று பட்டினம் காப்பே -5- 2-8 –போதில் கமலம் வல் நெஞ்சும் புகுந்தும் –போது -அறிவு-இல் -இருப்பிடம்-கமலம் -ஹிருதய கமலம்-வன்மை -அந்தர்யாமியையும் அறிய ஒட்டாத வலிமை-ஞான பிரசவ த்வாரமான நெஞ்சை இருப்பிடமாக உடைய கமலம் புகுந்தும் –
இப்படிக்கொத்த நெஞ்சுக்கு உள்ளே புகுந்து திருத்தின படி-

கண்கள் சிவந்து –ப்ரவேஸம்--தன் வடிவைக் காட்டி இவரை வர வணைத்து–இவருடைய ஸ்வரூபம் தனக்கு பிரகாரமாய் -தன்னைக் காணும் காட்சிக்குள்ளே காணலாம் படி இருக்கிறபடியையும்
தனக்கும் நிறம் கொடுக்கும் படியான வை லக்ஷண்யத்தை யுடைத்தாய் இருக்கிற படியையும் காட்டிக் கொடுக்கக் கண்டு ப்ரீதர் ஆகிறார்-முதல் இரண்டரைப் பாட்டாலே தன் வடிவு அழகைக் காட்டி அவ்வழி யாலே ஸ்வரூபத்தை காட்டிக் கொடுக்கிறனாய் இருக்கிறது –-முதல் இரண்டரைப் பாட்டு ஆத்மாஸ்ரயம் என்னும் இடத்தை காட்டிக் கொடுக்கைக்காக ஆஸ்ரயமான-தன்னைக் காட்டிக் கொடுக்கிறான் என்றும் சொல்லுவர்-இருத்தும் வியந்தில் அழகு பின்னாட்டுகிறது என்றும் சொல்லுவர்கள் –

ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்ற
க் கற்பு வான் இடறி
சேரும் நல் வளம் சேர் பழனத் திருக் கோளூர்க்கே
போருங்கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே –6-7-2–தான் இருந்த ஊரும்-அத்தோடு சேர்ந்த நாடும் -அத்தோடு சேர்ந்த லோகமும் –ராமாவதாரத்திலும் ஒரு ஊர் இறே திருந்திற்று -இங்கு லோகே அவ தீர்ண பாமர்த்த சமக்ர பக்தி யோகாயா -என்கிறபடியே யாயிற்று திருத்துகை –அங்கே பரம சாம்யா பன்னரைத் தேடித் போகிறாள் ஆகில் தான் திருத்தினார் ஆகாதோ –அவனுடைய பேரும் தார்களுமே பிதற்றக் –அரவிந்த லோசனன் என்றும் –மட்டவிழ் தண்ணம் துழாய் -என்றும் விரை மட்டலர் தண் துழாய் -என்றும் சொல்லா நிற்கை -ப்ரீதி பிரேரிதராய் அக்ரமாகச் சொல்லுகை –ஜாமதகன் யஸ்ய ஜல்பத -என்கிற படியே -இப்படி லோகம் அடங்க அக்ரமமாக சொல்லும் படி பண்ணி

இப்படி பர உபகார ஜன்மமான இவர் வர்ணத் த்ரயத்தில் ஒன்றிலே அவதரியாதே , சதுர்த்த வர்ணத்தில் தாழ இழிவான் என் என்ன , அதுவும் பர ரஷண அர்த்தமாகவே என்கிறார் ..-இப்படி மஹாப்ரபாவத்தை உடையரான இவர்‌ அத்ரைவர்ணிகத்திலே தாழ இழிவானென்‌ என்னில்‌-

வம்ச பூமிகளை உத்தரிக்க கீழ்க் குலம் புக்க வராஹ கோபாலரைப் போலே இவரும் நிமக்னரை உயர்த்த தாழ இழிந்தார்-சூரணை -84-

(வம்சத்தை உத்தரிக்க கீழ்க் குலம்-யாதவ குலம் – புக்க கோபாலனைப் போலேயும்-பூமியை உத்தரிக்கக் கீழ்ப்புக்க வராஹனைப் போலேயும்-இவரும் நிமக்னரை உயர்த்த தாழ இழிந்தார்-)வம்சத்தை உத்தரிக்க கீழ்க் குலம் புக்க கோபாலனைப் போலேயும்-அதாவது யயாதி சாபாத் வம்சோயம் ராஜ்யாநர்ஹோ ஹி சாம்ப்ரதம்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-21-12- -என்கிற படி யயாதி சாபத்தாலே ராஜ்யார்ஹம் இல்லாத படி நிஹீனமான யது வம்சத்தை – அயம் ச கத்யதே பிராஞ்சை புரானார்த்த விசாரதை கோபாலோ யாதவம் வம்சம் மக்னப் உத்தரிஷயதி–ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-20-49 -என்கிற படி உத்தரிப்பிக்கைக்காக–அங்கோர் ஆய்க் குலம் புக்கதும் -திருவாய் -6-4-5–என்கிற படியே கோப குலத்தில் உள் புக்கு கோபாலனான ஸ்ரீ கிருஷ்ணனைப் போலவும் –பூமியை உத்தரிக்கக் கீழ்ப்புக்க வராஹனைப் போலேயும்–அதாவது – ஹிரண்யாஷா பலத்தாலே நிலை குலைந்து பிரளயங்கதையான பூமியை- உத்த்ரு தாஸி வராஹேண கிருஷ்னேண சத பாஹுந –தைத்ரியம் – –என்றும்-நமஸ்தஸ்மை வராஹாயா லீல யோத்தரதே மஹீம்—ஸ்ரீ வராஹ புராணம் என்றும்
சொல்லுகிற படி உத்தரிக்கைக்காக –கேழலாய் கீழ் புக்கு இடந்திடும்–திருவாய் -2-8-7–என்கிற படியே
பாதாளத்தில் தாழ வீழ்ந்த வராஹா ரூபியை போலவும் –இவரும் நிமக்னரை உயர்த்த தாழ இழிந்தார்
அதாவது-குலம் தாங்கும் அபிமானத்தாலே சம்சாரத்தில் நிமக்னர் ஆனவர்களை , அந் நிலையில் நின்றும் பேதித்து –அபிமான துங்கன்–திருப்பல்லாண்டு –11-என்னும்-உயர்த்தியை உடையவர் ஆக்குகைக்காக அஹங்கார ஹேதுவான வர்ணங்கள் அனர்த்த கரம் என்று தோற்றும் படி தத் ரஹீதமான சதுர்த்த வர்ணத்திலே தாழ இழிந்தார் என்கை-இத்தால்- நாம் உத்க்ருஷ்ட வர்ணம் என்னும் துர் அபிமானத்தாலே -சம்சாரத்திலே அழுந்துகிறவர்கள் அது ஹேயம் என்று அறிந்து -அவ் அபிமானம் அற்று கரை யேறுகைக்காக- அவர்கள் உத்க்ருஷ்டமாக நினைத்து இருக்கும் வர்ணங்களை ஹேயம் என்று விட்டு நித்க்ருஷ்ட வர்ணத்தில் தாழ இழிந்தார் என்று ஆய்த்து-

க்ஷத்ரியரில்‌ வைத்துக் கொண்டு ஹீநமான யது குலத்தை உத்‌தரிக்கைக்‌காக ”அங்கோராய்க் குலம்‌ புக்கு?” (திருவா. 6 – 4 – 5) என்றும்‌, அயம்‌ ஸ கத்‌யதே ப்ராஜ்ஞை? புராணார்த்த,விஸாரதை, ! கோபாலோ யாதவம்‌ வம்ஸம்‌ மக்‌ந மப்‌யுத்‌தரிஷ்யதி’‘ (வி. பு. 5 – 20 – 49) என்றும்‌ சொல்லுகிறபடியே அறிவு கேடர்க்கு எல்லையான இடையரோடு ஸஜாதீயனாய்க் கொண்டு கோபாலனானாப் போலவும்‌, ப்ரளயார்ணவ மக்‌னையான ஸ்ரீ பூமிப் பிராட்டியை எடுக்கைக்காக ““உத்‌த்‌ருதாஸி வராஹேண க்ருஷ்ணேந ஸத பாஹுநா”’ (தை. உ.) என்றும்‌, “‘நமஸ் தஸ்மை வராஹாய லீலயோத்‌தரதே மஹீம்‌ | குரமத்‌யக,தோ யஸ்ய மேரு கணகணாயதே”’ (வராஹபு.) என்கிறபடியே வராஹ ஸஜாதீயனாய்க் கொண்டு ““கேழலாய்க்‌ கீழ்ப் புக்கு (திருவா. 2 8 – 7) என்கிறபடியே பாதாளத்திலே தாழ இழிந்த வராஹ ரூபியைப் போலவும்‌, ஸம்ஸாரார்ணவ மக்நரான ஸகல ஜந்துக்களையும்‌ அதில் நின்றும்‌ எடுக்கைக்காக அத்ரைவர்ண்யத்திலே தாழ இழிந்தார்‌ என்கிறார்‌.-அல்லது த்ரைவர்ண்யத்திலே நின்று ப்ரபந்தீ, கரித்தாராகில்‌ வேதமும்‌ ததுப ப்‌ரும்ஹணங்களும் போலே அதி க்ருதாதி காரமாமிறே,

வேண்டித்தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள்வாய்ப்
பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கோர் ஆய்க்குலம்புக்கதும்
காண்ட லின்றி வளர்ந்து கஞ்சனைத் துஞ்ச வஞ்சம்செய்ததும்
ஈண்டு நான் அலற்றப் பெற்றேன் எனக்கு என்ன இகல்உளதே?–6-4-5—அத்தசையிலே அஞ்சினான் புகலிடமாய் இருப்பது ஓர் இடைச்சேரி உண்டாவதே –கம்சனுக்கு குடி மக்களாய் இருக்கச் செய்தேயும் -அவனுக்கு அநிஷ்டம் என்று பாராதே மறைத்து வைத்து அடைக்கலம் நோக்க வல்ல ஊர்

கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு
இடந்திடும்
தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பார் என்னும்
மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பரே –2-8-7-பூமியை பிரளயம் கொள்ள -தன் மேன்மை பாராதே நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு-கீழ்ப் புக்கு-இடந்திடும்- அண்ட புத்தியில் புக்கு ஒட்டு விடுவித்துக் கொண்டு ஏறின படி-

அல் வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியூர் கோன் அபிமான துங்கன்
செல்வனைப் போலே திருமாலே நானும் உனக்கு பழ வடியேன்
நல் வகையால் நமோ நாராயணா என்று நாமம் பல பரவிப்
பல் வகையாலும் பவித்ரனே உனக்குப் பல்லாண்டு கூறுவனே –11-அபிமான துங்கன் – அபிமானம் சேஷத்வ விரோதியாய் இருக்க அத்தால் மிக்கு இருப்பார் என் என்னில் –கர்மத்தால் வந்த துர்மானம் ஆய்த்து த்யாஜ்யம் -தாசோஹம் -என்கிற வைஷ்ணவ அபிமானம் உபாதேயம் ஆகையாலே அத்தாலே பூரணராய் இருப்பர் என்கிறது –அதாவது உகந்து அருளின நிலங்களில் உண்டான குறைவு நிறைவுகளும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய தேக யாத்ரையில் குறைவு நிறைவுகளும் தம்மதமாய இருக்கை-செல்வன் -என்று-ஸ்வரூப ப்ராப்தமான ஐஸ்வர்யத்தாலே குறைவற்றவர் என்கை -அதாவது
ஞான பக்தி வைராக்யங்களால் குறை வற்றவர் யென்கையும்-லஷ்மணோ லஷ்மி சம்பன்ந -என்கிறபடி அஹம் சர்வம் கரிஷ்யாமி –என்று இருக்கையும்-உபமான சேஷாணாம் ஸாதூநாம் -என்கிறபடியே சாத்விகருக்கு உபமான பூமியாய் இருக்குமவர்-இவரை திருஷ்டாந்தம் ஆக்கிக் கொண்டு -பழ வடியேன் -என்று முன்பு ஐஸ்வர்யார்த்தியாய் இன்று ஸ்வரூப ஞானம் பிறந்தவன் சொல்லுகை அநுப பன்னம் அன்றோ  என்னில் கர்மத்தால் வந்த அஹங்காரம் போனால் தாஸ்யம் சர்வ ஆத்மாக்களுக்கும் சத்தா
ப்ரயுக்தம் ஆகையாலே சொல்லுகிறார்கள்-
அதவா – நை சர்க்கிகமான ஞானம் உடையாருக்கும் இன்று ஆஸ்ரயிக்கும் இவனுக்கும் வாசி வையாதே விஷயீ கரிக்கும் ஈஸ்வர அபிப்ராயத்தாலே சொல்லவுமாம்

ஆக வீட்டு இன்பம் –சூர்ணிகை -75- என்று தொடங்கி இவ்வளவும் மந்த மதிகளுடைய சங்க நிராகரண அர்த்தமாக ஆழ்வாருடைய உத்பத்தி நிரூபணத்தில் வரும் பிரத்யவாயமும் – வ்யாசாதிகளை பற்ற இவர் அவதார வைலஷண்யமும் -78-79-80-81- அவதாரம் பரார்த்தம் என்னும் இடமும் ,82-83-
மகா பிரபாவர் ஆன இவர் தாழ அவதரிக்கைக்கு நிதானமும்-84 அருளி செய்தாராய் நின்றார்
.

ஆக, வீட்டின்பமென்று தொடங்கி, இவ்வளவும்‌ வர மந்த மதிகளுடைய ஸங்கா நிராகரணார்த்த மாக ‘ப்ரமாண ப்ரமேயங்களினுடைய சரமாவதியான அர்ச்சாவதாரத்தினுடையவும்‌ திருவாய்மொழியினுடையவும்‌ த்‌ரவ்ய பாஷா நிரூபணத்தோடொக்கும்‌ ஆழ்வாருடைய உத்பத்தி நிரூபணமும்‌’ என்று இவருடைய உத்பத்தி நிரூபணத்தால்‌ வரும்‌ ப்ரத்யவாயத்தையும்‌, வ்யாஸாதிகளைப் பற்ற இவருடைய அவதார வைலக்ஷண்‌யத்தையும்‌, அவதாரம்‌ பரார்த்த,ம்‌ என்னுமிடத்தையும்‌, இப்படி மஹா ப்ரபாவரான இவர்‌ தாழ அவதரிக்கைக்கு ஹேதுவையும்‌ அருளிச் செய்தார்

இன்னமும் ஆழ்வாருடைய வைபவத்துக்கு உறுப்பாக சாமான்யேன பாகவத வைபவத்தை பல உதாஹரணங்களாலும் பிரகாசிப்பியா நின்று கொண்டு இவ் ஆகாரங்கள் அறிவார்க்கு இறே-ஜென்மத்தில் உத்கர்ஷம் அபகர்ஷம் தெரிவது என்கிறார் மேல் ஒரு சூரணையாலே..-இனிமேல்‌ ஆழ்வாருடைய வைபவத்துக்கு உறுப்பாக ஸாமாந்யேந பாகவத வைபவத்தைப்‌ பல உதாஹரணங்களாலும்‌ அருளிச் செய்கிறார்‌. அதில்‌, அவர்கள்‌ ஐத்ம வ்ருத்த ஜ்ஞாநங்களால்‌ குறைய நின்றார்களே யாகிலும்‌ பகவத்‌ பக்தரானார்களாகில்‌ அவர்கள்‌ ஸர்வ உத்க்ருஷடரென்றும்‌, அவர்கள்‌ உத்க்ருஷ்ட ஜந்மாக்களாலே அநுவர்த்த நீயரென்றும்‌, அவர்களுடைய ஸம்பந்தமே உத்தாரக மென்றும்‌, அவர்கள் விஷயத்தில்‌ பகவானுடையவும்‌, பகவதீயருடையவும்‌ ஆதர ப்ரகாரத்தையும்‌, அநு வர்த்த நீயரான ப்ரகாரத்தையும்‌,- அவர்களுடைய ஸ்பர்ஸாதிகளே பாவநம்‌ என்னுமிடத்தையும்‌, ப்ரமேய பூதனுடையவும்‌, ப்ரமாதாக்களினுடையவும்‌, உக்த் யநுஷ்டாநங்களாலே வெளியிடுகிறார்‌.

1–ம்லேச்சனும்‌ பக்தனானால்‌ சதுர்வேதிகள்‌ அநுவர்த்திக்க அறிவு கொடுத்து, குல தைவத்தோ டொக்கப்‌ பூஜை கொண்டு பாவந தீர்த்த, ப்ரஸாதனாம்‌ என்கிற திருமுகப் படியும்‌, –2–விஸ்வாமித்ர -விஷ்ணுசித்த -துளஸீ ப்‌ருத்யரோடே உள் கலந்து தொழு குலமானவன்‌ நிலையார்‌ பாடலாலே ப்‌ராஹ்மண வேள்விக் குறை முடித்தமையும்‌, (துளஸீ ப்ருத்யர் –துளவத் தொண்டு செய்த தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -தொழு குலமானவர்-நம்பாடுவான் -ப்ராஹ்மணன் –ஸோம சர்மா )-3-கீழ் மகன்‌ தலை மகனுக்கு ஸம ஸஹாவாய்த்‌ தம்பிக்கு முன் பிறந்து வேலும்‌ வில்லுங் கொண்டு பின் பிறந்தாரைச் சோதித்துத்‌ தமையனுக்கு இளையோன்‌ ஸத்‌ பாவம்‌ சொல்லும்படி ஏக குலமானமையும்‌, –4-தூது மொழிந்து நடந்து வந்தவர்களுடைய ஸம்யக் -ஸகுண-ஸஹ போஜநமும்‌, (தூது மொழிந்தவருடைய சம்யக் போஜனமும் –தூது நடந்தவருடைய சகுண போஜனமும் —
தூது வந்தவருடைய ஸஹ போஜனமும் )-5-ஒரு பிறவியிலே இரு பிறவியானா ரிருவர்க்கு தர்ம ஸூநு ஸ்வாமிகள்‌ அக்‌ர பூஜை கொடுத்தமையும்‌, (பெரும்புலியூர் ஸ்வாமிகள் -அங்குள்ள பிராமணர்கள் -யாகத்தில் திருமழிசைப்பிரானைக் கௌரவித்தார்கள் – திருவையாறு மேற்கே ஒரு மேலே தொலைவில் உள்ள பெரும்புலியூர் )-6-ஐவரில்‌ நால்வரில்‌ மூவரில்‌ முற்பட்டவர்கள்‌ ஸந்தேஹியாமல்‌ ஸஹஜரோடே புரோடாஸமமாகச்‌ செய்த புத்ர க்ருத்யமும்‌, –7-புஷ்ப த்யாக போக மண்டபங்‌களில்‌ பணிப் பூவும்‌ ஆல வட்டமும்‌ வீணையுங் கையுமான அந்தரங்கரை முடி மன்னவனும்‌ வைதிகோத்தமரும்‌ மஹா முனியும்‌ அநுவர்த்தித்த க்ரமமும்‌, –8-யாக,அநுயாக உத்தர விதிகளில்‌ காய அந்ந ஸ்தல ஸூத்‌தி பண்ணின வ்ருத்‌தாசாரமும்‌ அறிவார்க்கிறே ஜந்ம உத்கர்ஷ அபகர்‌ஷங்கள்‌ தெரிவது.–சூரணை -85-(ஸ்ரீ வசன பூஷணத்தில் -226 -239 -சூர்ணிகைகளில் அருளிச் செய்தவற்றைப் போலவே இவையும் –)

ம்லேச்சனும் பக்தன் ஆனால்-அதாவது –மத் பக்த ஜன வாத்சல்யம் பூஜாயாஞ்ச அனுமோதனம் ஸ்வயம் அப்ரயச்ச நஞ்சைவ மதர்தே டம்பவர்ஜனம் –மத் கதா ஸ்ரவணே பக்தி ஸ்வர நேத்ராங்க விக்ரியா-
மம அனுஸ்மரணம் நித்யம் யச்சமாம் நோப ஜீவதி ,பக்தி ரஷ்ட விதா , ஹ்யேஷா யஸ்மின் ம்லேச்சேபி வர்த்ததே –
என்கிற படியே-ம்லேச்ச ஜாதியில் உள்ளவனும்-1-என்னுடைய -பக்தி ஜன பக்கல் வாத்சல்யமும் –2-என்னுடைய ஆராதனத்தில் உகப்பும்-3-தானே ஆராதிக்கையும்-4-என் பக்கல் டம்பம் அற்று இருக்கையும் –5-என் கதையைக் கேட்கும் இடத்தில் பக்தியும் –6-பக்தி கார்யமான ஸ்வர நேத்ராங்களில் விகாரமும் –7-என்னையே எப்பொழுதும் நினைக்கையும் –8-என்னை பிரயோஜ நாந்தரம் கொள்ளாது ஒழிகையும் –அஷ்ட விதையாக அருளிச் செய்த பக்தி உடையவன் ஆனால்-

“மத்‌ பக்த ஜந வாத்ஸல்யம்‌ பூஜாயாஞ்ச அநுமோதநம்‌ ! ஸ்வயமப்‌யர்ச்சதஞ்சைவ மதர்த்தே டம்ப வர்ஜநம்‌ |) மத் கதா ஸ்ரவணே ப்ரீதி ஸ்வர நேத்ராங்க விக்ரியா । மமாநுஸ்மரணம்‌ நித்யம்‌ யச்ச மாம்‌ நோபஜீவதி । பக்திரஷ்டவிதா ஹ்யேஷா யஸ்மிந்‌ ம்லேச்சேபி வர்த்ததே’* (பகவச் ஸாஸ்த்ரே) என்று பாகவத விஷயத்தில்‌ வாத்ஸல்யம்‌ முதலான அஷ்டவிதையான பக்தி ம்லேச்சன் பக்கலிலே உண்டாயிற்றாகிலும்‌.

சதுர் வேதிகள் அனுவர்திக்க அறிவு கொடுத்து –அதாவது –ச விப்ரேந்தரோ முனி ஸ்ரீமான் ச யதிஸ் ச பண்டித தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் -என்றும் –பழுது இலா ஒழுகலாற்று பல சதுப் பேதிமார்கள் இழி குலத்தவர்கள் ஏலும் எம் அடியார்கள் ஆகில் தொழுமினீர் – கொடுமின் கொள்மின் -திருமாலை -42-என்றும் சொல்லுகிற படியே – சர்வோத்க்ருஷ்டனாய் -உத்க்ருஷ்ட வர்ணரான சதுர்வேதிகள் அபிஜன அத்யபிமான தூஷிதமான ஸ்வ ஸ்வரூப சுத்யர்தமாக -அனுவர்த்திக்கைக்கு விஷயமாய் – அவர்களுக்கு ஞான அபேஷை உண்டாகில் ஞான பிரதானம் பண்ணி-குல தெய்வத்தோடு ஒக்க பூஜை கொண்டு –அதாவது –ச ச பூஜ்யோ யதாஹ்யஹம் -என்றும்-நின்னோடு ஒக்க வழி பட அருளினாய் -போல் மதிள் திருவரங்கத்தானே -திருமாலை -42-என்கிற படியே-மம நாதம் -மம குலதைவதம்–கத்யத்ரயம் –என்று குல தெய்வமாக சொல்லப் படுகிற சர்வேஸ்வரனோடு ஒக்க –( யாவர்க்கும் தொழு குலமாம் இராமன் -கம்பர் – குகப்படலம் -68-)கடல் மல்லைத் தல சயனம் ஆர் என்னும் நெஞ்சுடையார் -அவர்கள் எங்கள் குல தெய்வமே –பெரிய திருமொழி -2-6-4-என்கிற படியே குல தெய்வமாய் அவர்களை பூஜை கொண்டு-பாவன தீர்த்த பிரசாதனாம் என்கிற திரு முகப் படியும் –அதாவது –தத் பாதாம்பு அதுலம் தீர்த்தம் தத் உச்சிஷ்டம் ஸு பாவனம் -என்று அவன் திருவடிகளை விளக்கின ஜலம் அனுபமமான தீர்த்தம் –அவன் அமுது செய்த சேஷம் பரம பாவனம் என்கையாலே –அஹங்கார மதிரா பாந மத்தரான அசுத்தரும் இந்த தீர்த்த பிரசாத அன்வயத்தாலே – சுத்த ஸ்வரூபராம் படி பாவன தீர்த்த பிரசதனனாம் என்று அருளிச் செய்த பகவத் உக்தியான திரு முகமும் – அதன் படி எடுப்பான ஆழ்வார் பாசுரமும் ..
(வானுளார் அறியலாகா வானவா என்பராகில் -தேனுலாம் துளப மாலைச் சென்னியாய் என்பராகில்
ஊனமாயினகள் செய்யும் ஊன காரகர்களேலும் போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதமன்றே
–)

““ஸ விப்ரேந்தரோ முநிஸ் ஸ்ரீமாறந் ஸ யதிஸ்ஸ ச பண்டித:। தஸ்மை தேயம்‌ ததோ க்‌ராஹ்யம்‌-ஸ ச பூஜ்யோ யதா ஹ்யஹம்‌ । தத் பாதாம் ப்வதுலம்‌ தீர்த்தம்‌ ததுச்சிஷ்டம்‌ ஸுஃபாவநம்‌ | ததுக்தி மாத்ரம்‌ மந்த்ராக்‌ர்யம்‌ தத் ஸ்ப்ருஷ்ட மகிலம்‌ ஸூசி?” (பகவஸ் ஸாஸ்த்ரே) என்று – அவர்கள்‌ ஜந்ம வ்ருத்த ஜ்ஞாநங்களால்‌ உத்க்ருஷ்டர்‌. அவர்கள்‌ உத்க்ருஷ்ட ஜந்மாக்‌களாலே அநுவர்த்தநீயர்‌. அவர்கள்‌ வித்‌யோபஜீவநத்துக்கு விஷய பூதர்‌. அவர்கள்‌ என்னைப் போலே யாகிலும்‌ பூஜ்யர்‌, அவர்கள்‌ தீர்த்த ப்ரஸாதாதிகள்‌ பரம பாவநம்‌” என்கிற திருமுகமான பகவதுக்தியும்‌, ”பழுதிலா ஒழுகலாற்று””  (திருமாலை 42) இத்யாதியான திருமுகப்படியும்‌.

பழுதிலா வொழுகலாற்றுப் பல சதுப்பேதிமார்கள்
இழி குலத்தவர்கள் ஏலும் எம் அடியார்கள் ஆகில்
தொழுமினீர் கொடுமின் கொண்மின் என்று நின்னோடும் ஒக்க
வழிபட்டு அருளினாய் போல் மதிள் திருவரங்கத்தானே–42—எம் அடியார்கள் ஆகில் – என்னோட்டை அசாதாரண பந்தத்தை அறிந்து ஜ்ஞான அனுகூலமான ஸ்வ ஆசாரத்தை உடையராகில் –
கைங்கர்யமே எல்லா நன்மைகளுமாக நினைத்து இருக்குமவர்களாய் ஈஸ்வரனும் இவர்கள் திறத்தில் நாமே இவர்களுக்கு உபாய உபேயங்களும் எல்லா உறவும் என்றும் நினைத்து இருக்கப் பெறுமவர்கள் –பகவத் பிரசாதம் ஒழிந்த சாதனாந்தரங்கள் பய ஸ்தானம் என்று இருக்கும் நீங்கள் அவர்களை ஆராதியுங்கோள–கொடுமின் கொண்மின்-அவர்கள் உங்கள் பக்கல் ஒரு ஜ்ஞான அபேஷை பண்ணில் நீங்கள் ஆதரித்து சொல்லுங்கோள் – அவர்கள் பகவத் ஜ்ஞானத்தை உங்களுக்கு பிரசாதிக்கில் கேட்டு க்ருதார்த்தர் ஆகுங்கோள் – ஜாதி நிபந்தனமான சம்பந்தம் போலே யாதல்-குண நிபந்தனமான சம்பந்தம் போலே யாதல்-நீர் மேல் எழுத்தான சம்பந்தம் அன்று இறே இவர்களோடு பண்ணும் சம்பந்தம் –இது யாவதாத்மபாவியான சம்பந்தம் இறே –இப் பாசுரம் பல பிரதரான தேவரீரே அருளிச் செய்த பின்பு இதில் ஒரு சம்சயம் உண்டோ –நின்னோடும் ஒக்க வழி பட- எனக்கு மேல் பூஜ்யர் இல்லாமையாலே என் மாத்ரமே யாகிலும்-அவர்களை ஆராதித்து நல் வழி போங்கோள் –அருளினாய் – பக்தி ரஷ்டவிதாஹ் ஏஷா யாஸ்மின் ம்லேச்சேபி வர்த்ததே சவிப்ரேந்த்ரோ முனிச் ஸ்ரீ மான் சயதிச்சை பண்டித தஸ்மை தேயம் ததோராஹ்யம் – என்கிறபடியே –இந்தாஹாச்யம் தேவரீர் கிருபையால் அருளிச் செய்த இத்தனை இறே –

விண்டாரை வென்றாவி விலங்குண்ண மெல்லியிலார்
கொண்டாடு மல்லகலம் அழலேற வெஞ்சமத்து
கண்டாரைக் கடல் மல்லைத் தல சயனத்து உறைவாரை
கொண்டாடும் நெஞ்சுடையார் அவர் எங்கள் குல தெய்வமே -2-6-4-
கொண்டாடும் நெஞ்சுடையார்-
இவர் என்ன அபேஷையாலே வந்து கிடக்கிறார்-நமக்காக விறே -என்று நின்று இருந்து வெக்கணைக் கிடந்தது என்ன நீர்மையே -என்று இதிலே ஈடுபடுமவர்கள் – (திருமழிசை ஆழ்வாரே கொண்டாடும் நெஞ்சுடையார் அவரே என் குல தெய்வம்)அவர் எங்கள் குல தெய்வமே- குல தைவதம் தத் பாதாராவிந்தம் -ஆளவந்தார் என்னும் அளவல்ல எங்களது- ததீய பாதாரவிந்தம்–சரம பர்வ நிஷ்டை

வானுளார் அறியலாகா வானவா என்பாராகில்
தேனுளாம் துளப மாலைச் சென்னியா என்பராகில்
ஊன மாயினகள் செய்யும் ஊன காரகர்கள்  ஏனும்
போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே –41-தருவரேல் –பகவத் பிரசாதம் போலே
பிரயோஜனாந்த பரர்க்கும் பொதுவாய் இருக்குமது அன்றோ இது –அலாப்ய லாபம் கிட்டிற்று ஆகில் –
ஒரு நாள் பட்டர் பிரசன்னராய் ஜீயருக்கு இட்ட பிரசாதத்தை நினைப்பது –புனிதம் அன்றே –தேசாந்தர
காலாந்தர-தேகாந்தரே அன்றியே-ஸ்பர்ச வேதியாய் இரும்பு பொன்னாப் போலே அப்போதே பரி ஸூத்தம் –தத் உச்சிஷ்டம் ஸூ பாவனம் – பகவத் பிரசாதம் -பாவனம் இது ஸூ பாவனம்

விஸ்வாமித்ர விஷ்ணுசித்த துளஸீ ப்ருத்யரோடே உள் கலந்து தொழு குலமானவன்-அதாவது –
அபர ராத்ரியிலே சென்று பாடி -நம்பியை திரு பள்ளி உணர்த்துகையாலே –கௌசல்யா ஸுப்ரஜா ராமா பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே உத்திஷ்ட நரசார் தூலே கர்த்தவ்யம் தைவமாஹ்நிவம் –பால -23-2—என்றும் ,அரவணையாய் ஆயர் ஏறே அம்மம் உண்ணத் துயில் எழாயே –பெரியாழ்வார் -2-2-1 -என்றும் ,
அரங்கத்தம்மா பள்ளி எழுந்து அருளாயே -திருப்பள்ளி எழுச்சி -என்று திரு பள்ளி உணர்த்தின
விஸ்வாமித்திரன் ,பெரியாழ்வார் ,துளபத் தொண்டாய தொண்டர் அடி பொடி ஆழ்வார் ஆகிற இவர்களோடு ச கோத்ரியாய்– வலம் தாங்கு சக்கரத்து அண்ணல் மணி வண்ணற்கு ஆள் என்று உள் கலந்தார் -என்கிற படியே – பகவத் சேஷத்வ ஞான பூர்வகமாக -அநந்ய பிரயோஜன வ்ருத்தியிலே -அன்விதனாய் உள் கலந்து – (நம்பியைத் திருப்பள்ளி உணர்த்துகையாலே மூவருடன் ஒரு சேர எண்ணப்பட்டு ) வலம் தங்கு சக்கரத்து அண்ணல் மணி வண்ணற்கு ஆள் என்று உள் கலந்தார் –திருவாய் -3-7-9–என்கிறபடியே ஒப்பும்மைப் பெற்று எம் தொழு குலம் -திருவாய் -3-7-8-என்று விசேஜ்ஞர் ஆதரிக்கும் ஏற்றத்தை அடைந்த ஜன்ம சித்த நைச்யனான பாகவதன் –(நம்பாடுவான் )

(விஸ்வாமித்ர-விஷ்ணுசித்த-துளஸீ ப்‌ருத்யரோடே உள் கலந்து) ““கெளஸல்யா ஸுப்ரஜா ராம பூர்வா ஸந்த்‌,யா ப்ரவர்த்ததே । உத்திஷ்ட, நரஸார்தூ,ல கர்த்தவ்யம்‌ தைவமாஹ்நிகம்‌”” (ரா. படா, 23 – 2) என்று பெரிய பெருமாளைத்‌ திருப்பள்ளி உணர்த்தின விஸ்வாமித்ரனோடும்‌, “ அரவணையாய்‌ ஆயரேறே அம்மமுண்ணத் துபிலெழாயே”” (பெரியா. தி.2-2-1) என்று க்ருஷ்ணனைத்‌ திருப்பள்ளி உணர்த்தின பெரியாழ்வாரோடும்‌, ”அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே”’ (திருப்பள்ளி.) என்று பெரியபெருமாளைத்‌ திருப்பள்ளி உணர்த்தின துளவத் தொண்டாய ஸ்ரீதொண்டரடிப்பொடி ஆழ்வாரோடும்‌ ஸகேத்ரிகளாய்க்‌ கொண்டு திருப்பள்ளி உணர்த்தி, **வலந்தாங்கு சக்கரத் தண்ணல்‌ மணி வண்ணர்க்‌காளென்று உள் கலந்தாரடியார்‌’‘ (திருவா. 3 – 7 – 9) என்கிறபடியே வலவருகே தரிக்கப்‌ பட்ட திருவாழியையும்‌ அதுக்குப் பரபாகமான நீலமணி போலே இருக்கிற திருமேனியை யுமுடைய ஸர்வ ஸ்வாமிக்கு அநந்யார்ஹ ஸேஷ பூதரென்று கொண்டு ஸேஷத்வ ஜ்ஞாந பூர்வகமான வ்ருத்தியிலே அந்வயித்து, “எம்‌ தொழு குலம்‌ தாங்களே” (திருவா. 3- 7 – 8) என்று ஜ்ஞாதாக்களாலே அநுவர்த்த நீயருமாய்‌, ஸேஷத்வ ஜ்ஞாநாநுகுணமான குலத்திலே பிறந்தவர்‌-

அரவு அணையாய் ஆயர் ஏறே அம்மம் உண்ணத் துயில் எழாயே
இரவும் உண்ணாது உறங்கி நீ போய் இன்றும் உச்சி கொண்டதாலோ
வரவும் காணேன் வயிறு அசைந்தாய் வன முலைகள் சோர்ந்து பாய
திரு உடைய வாய் மடுத்து திளைத்து உதைத்து பருகிடாயே -2 2-1 –அழகிய திருப் பவளத்தை மடுத்து -திரு-அழகு –இவ் வன முலையிலே உன்னுடைய திரு உடைய வாயை அபிநிவேசம் தோற்ற மடுத்து –முலை உண்ணுகிற ஹர்ஷம் தோற்ற கர்வித்து கால்களாலே என் உடம்பிலே உதைத்து கொண்டு -இருந்து உண்டிடாய் –பருகுதல்-பானம் பண்ணுதல் –யசோதை பிராட்டி அத்தை அறிந்து –அம்மம்  உண்ணத் துயில் எழாயே-என்று அவனை எழுப்பி – நெடும் போதாக முலை உண்ணாமையை அவனுக்கு அறிவித்து –நெறித்து பாய்கிற தன் முலைகளை உண்ண வேண்டும் என்று அபேஷித்து-
அவன் இறாய்த்து இருந்த அளவிலும் -விடாதே நிர்பந்தித்து  முலை ஊட்டின பிரகாரத்தை தாம் அனுபவிக்க ஆசைப் பட்டு – தத் பாவ யுக்தராய் கொண்டு – அவனை அம்மம் உண்ண எழுப்புகை முதலான ரசத்தை அனுபவித்து பேசி ஹ்ர்ஷ்டராகிறார் இத் திரு மொழியில் –

பெரிய பெருமாள் உணர்ந்தருளும் போதை யழகு கண்டு அடிமை செய்ய ஆசைப் பட்டுத் திருப் பள்ளி யுணர்த்துகிறார்.-திருப் பள்ளி யுணர்த்துகைக்கு நிபந்தனம் என் என்னில்: – “ஆம் பரிசறிந்து கொண்டு”(திருமாலை 38] – எம்பெருமான் உகந்த கைங்கரியமே பேறு” என்னும் உண்மையை அறிந்திவராகையாலே-)என்கிறபடியே – கைங்கர்ய யாதாத்ம்யம் அறியுமவராகையாலே,(பாவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸா நுஷ ரம்ஸ்யதே | அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வபத ச தே!![ரா-அ 31-25](நீர் வைதேஹி யுடன் கூட மலைத் தாழ்வரைகளில் விளையாடுவீர்; அடியேன் நீர் விழித்துக் கொண்டிருக்கும் போதும் தூங்குப் போதும் உமக்கு எல்லா அடிமைகளையும் செய்வேன்.] என்றும், ) ” ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி ’(திருவாய் 3-3-1) என்கிறபடியே-ஸர்வதேச ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும் ஸர்வ வித,கைங்கர்யத்தையும் பண்ணுமிடத்தில் “தனக்கே யாக வெனைக் கொள்ளுமீதே” –2-9-4-என்று அவனுகந்த கைங்கர்யமாக வேணும்; அதுசெய்யுமிடத்தில் (க்ரியதாமிதி மாம் வத.)என்றும், “எனக்கே யாட் செய்” -2-9-4-என்றும், முகப்பே கூவிப் பணி கொள்ளாய்’’ -8-5-7-என்றும் சொல்லுகிறபடியே – ஏவிக் கொள்ள வேணுமென்றிருக்குமவ ராகையாலே ப்ரபாத ஸூ சகங்களைச் சொல்லித் திருப் பள்ளி யுணர்த்துகிறார்.

குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை
நலந்தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்
வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார் அடியார் தம்மடியார் எம் அடிகளே
.–3-7-9—வலவருகே தரிக்கப் பட்ட திரு வாழி யை உடையனாய் -அதுக்கு ஆச்ரயமான நீல மணி போலே சிரமஹரமான திரு நிறத்தை உடைய சர்வாதிகனுக்கு-ஸ்வரூப ஞானம் முன்னாக அடிமை செய்கையே பிரயோஜனம் என்று இருக்குமவர்களுடைய சம்பந்தி சம்பந்திகள் நாதர் என்கிறார் –

நம்பனை ஞாலம் படைத்தவனைத் திரு மார்பனை
உம்பர் உலகினில் யார்க்கும் உணர்வு அரியான் தன்னைச்
கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் அவர் கண்டீர்
எம்பல் பிறப்பிடைதோறு எம் தொழு குலம் தாங்களே.–3-7-8—பலவகைப் பட்ட ஜென்மங்களில் அவகாசம் தோறும் திரு நாமத்தை சொன்னவர்களே யன்று உத்தேச்யர்–அவர்கள் குலமாக எங்கள் குலத்துக்கு ஆச்சார்ய சந்தானம் –

நிலையார் பாடலாலே ப்ராஹ்மண வேள்வி குறை முடித்தமையும் –அதாவது – சரக குலோத்பவனான சோம சர்மா வாகிற பிராமணன் உபக்ரமித்த யாகத்யை யதாக்ரமம் அனுஷ்டியாமையாலும் –
அது சமாமிப்பதுக்கு முன்னே மரிக்கையாலும் -பிரம ரஷசாய் பிறந்து திரியா நிற்க செய்தே –
த்வம் வை கீதப் ப்ரவானே நிஸ்தார யிதுமர்ஹசி ஏவ முக்த்வாத ,சண்டாளம் ராஷசஸ் சரணம் கத -என்கிற படியே நீ உன்னுடைய கீத பிரபாவத்தாலே என்னை இவ் ஆபத்தில் நின்றும் கரை ஏற்ற வேணும் என்று சரணம் புக – யன் மயா பஸ்சிமம் கீதம் ஸ்வரம் கைசிக முத்தமம் – பலேன தஸ்ய பத்ரம் தே மோஷ இஷ்யதி கில்பிஷாத் –கௌசிக மஹாத்ம்யம் (உயர்ந்த ஸ்வரம் கௌசிகம் பலத்தால் உன்னை இந்தப் பாபத்தில் இருந்து விடுக்கிறேன் )என்று நம்பி சந்நிதியில் பின்பு பாடின – நிலையார் பாடலான கைசிக பண்ணாலே – ஏவம் தத்ர வரம் க்ருஹ்ய ராஷசோ ப்ரஹ்ம சம்ஜ்ஞத யக்ஜா சாபாத் விநிர் முக்த சோமசர்மா மகாயச -கௌசிக மஹாத்ம்யம் –என்னும் படியாக வைகல்ய தோஷத்தால் வந்த ராஷசத் வத்தைப் போக்கி உஜ்ஜீவிப்பிக்கையாலே – அந்த ப்ராஹ்மணன் உடைய யாகத்தில் குறையை தலைக் கட்டின படியும்-

(நிலையார்‌ பாடலாலே ப்‌ராஹ்மண வேள்விக் குறை முடித்தமையும்‌) சரக வம்ஸத்திலே பிறந்த ஸோம ஸர்மாவான ப்‌ராஹ்மணன்‌ வைதிகமான யாகத்தை உபக்ரமித்து அதில்‌ மந்த்ர-க்ரியா-த்‌ரவ்ய-தஷிணா-லோபத்தாலே யாக மத்‌யே ம்ருதனாய்‌ ப்‌ரஹ்ம ரக்ஷஸ்‌த்வத்தை அடைந்து வந்தவன்‌, கைஸிக வ்ருத்தாந்தத்தில்‌ வந்த ஸ்ரீ வைஷ்ணவரைக் கண்டு -த்வம்‌ வை கீத ப்ரபாவேந நிஸ்தாரயிதுமர்ஹஸி ஏவமுக்த்வாத, சண்டாளம்‌ ராக்ஷஸ ஸ்ரவணம்‌ ௧,த2 | ப்‌ரஹ்ம ரக்ஷோ வசஸ் ஸ்ருத்வா ஸ்வபாகஸ் ஸம்ஸிதவ்ரத ! பாட, மித்யேவ தத்‌ வாக்யம்‌ ப்‌ரஹ்ம ராக்ஷஸ சோதிதம்‌ । யந் மயா பஸ்சிமம்‌ கீதம்‌ ஸ்வரம்‌ கைஸிக முத்தமம்‌ । ப,லேந தஸ்ய பத்‌ரம்‌ தே மோக்ஷயிஷ்யாமி கில்பிஷாத்‌ । ஏவம்‌ தத்ர வரம்‌ க்ருஹ்ய ராக்ஷஸோ ப்‌ரஹ்ம ஸம்ஜ்ஞீத: | யஜ்ஞ ஸாபாத்‌, விநிர்முக்தஸ் ஸோமஸர்மா மஹா யஸா” (கை. பு.) என்று அவன்‌ ஸரணம்‌ புக, (நிலையார்‌ பாடலாலே) கைஸிகம்‌ என்கிற பண்ணில்‌ தாம்‌ பண்ணின கீத ப்ரபாவத்தாலே அவனுடைய ப்‌ரஹ்ம ரக்ஷஸ்‌த்வத்தை விடுவித்து உஜ்ஜீவிப்பிக்கையாலே அந்த யாகக் குறையும்‌ தலைக் கட்‌டினாரானமையும்‌.-

சிலையால் இலங்கை செற்றான் மற்றோர் சினவேழம்
கொலையார் கொம்பு கொண்டான் மேய குறுங்குடி மேல்
கலையார் பனுவல் வல்லான் கலியன் ஒலி மாலை
நிலையார் பாடல் பாடப் பாவம் நில்லாவே
—9-6-10—சாஸ்திர உக்தமான லஷணத்தில் ஒன்றும் குறையாத படி கவி பாட வல்லரான ஆழ்வார் ஒலியை உடைத்தாக அருளிச் செய்த -உக்தி ஆபாசங்களால் அழிக்க ஒண்ணாத படியான திண்மையை உடைய இத்தை அஹ்ருத்யமாகச் சொல்ல
புத்தி பூர்வகமாகப் பண்ணின பாபங்கள் போம்
–(கைசிக மஹாத்ம்யம் -கார்த்திகை சுக்ல பக்ஷம் ஏகாதசி -நாடகம் இன்றும் இங்கு நடக்கும்)

கீழ் மகன் தலை மகனுக்கு சக சகாவாய் – அதாவது – நிஷாத வம்ச ஜராகையாலே-(வேடர் குலத்தில் பிறந்தவர் ஆகையால்) – ஏழை ஏதலன் கீழ் மகன் –பெரிய திருமொழி -5-8-1–என்னும் படி , ஜன்ம வ்ருத்த ஞானங்களால் தண்ணியரான ஸ்ரீ குஹப் பெருமாள்-(தலை மகனுக்கு )அயோத்தியர் கோமான் ஆகையாலே அவை-ஜன்ம வ்ருத்த ஞானங்களால் எல்லாத்தாலும் உத்க்ருஷ்டனாய் இருக்கும் அளவு அன்றிக்கே – தர்ம ஐக்யத்தாலே -( ஆதி யம் சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்தவன் ஆகையால் ) வானோர் தலை மகனாய் -7-2-10–இருக்கிற சக்கரவர்த்தி திரு மகனுக்கு உகந்து தோழன் நீ –பெரிய திருமொழி -5-8-1-என்கையாலே சமனான சஹாவாய்- (ஆழ நீர்க் கங்கை அம்பி கடாவிய ஏழை வேடனுக்கு எம்பி நின் தம்பி நீ தோழன் மங்கை கொழுந்தி எனச் சொன்ன வாழி நண்பினை உன்னி மயங்குவான் –கம்ப நாட்டாழ்வார் )-

(கீழ்மகன்‌) “ஏழை ஏதலன்‌ கீழ்மகன்‌” (திருமொழி 5 – 8 – 1) என்று ஜந்ம வ்ருத்த ஜ்ஞாநங்களால்‌ குறைய நின்ற ஸ்ரீகுஹப் பெருமாள்‌ ”வானோர் தலைமகன்‌”” (திரு விருத்த-53 )என்கிறபடியே தலைமகனான சக்ரவர்த்தித் திருமகனோடே “உகந்து தோழன்‌ நீ?” (திருமொழி 5 – 8 – 1) என்னும்படி ஸமஸஹாவாய்‌,

ஏழை  ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து
மாழை மான் மட நோக்கி யுன் தோழி உம்பி யெம்பி என்று ஒழிந்திலை  உகந்து
தோழன் நீ எனக்கு
இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட
ஆழி வண்ண நின்னடி இணை  அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே –5-8-1-கீழ் மகன் -இவை இத்தனையும் பூஷணமாம் படியான ஜென்மத்தை உடையவன் கீழ்ச் சொன்னவை இரண்டும் ஜ்ஞான சாத்யமாயும்-பிராயச்சித்த சாத்யமாயும் இருக்கும் இறே – இது வேறு ஒன்றால் கழிக்க ஒண்ணாதே-இஷ்வாகு வம்ச பிரபவ -என்கிறவர்க்கு எதிர் தட்டாய் இருக்கும் படி – இத்தால் ஜன்மத்தின் கொத்தை சொல்லுகிறது –இம் மூன்றாலுமாக பெருமாள் உடைய நீர்மையின் ஏற்றம் சொல்லிற்று ஆய்த்து ––யுன் தோழி – உனக்கு ஸ்வாமிநி- என்னாதே தோழி என்கிறார் -நீர்மையாலே- –உம்பி யெம்பி –உன்னுடைய தம்பி என்னுடைய தம்பி – இங்கனே சொல்லுவான் என் என்னில்-பெருமாள் விஷயீ கரித்து இருக்குமவர்களை அவரோபாதியாக நினைத்து இருக்கும் இளைய பெருமாள் கருத்தாலே-என்று ஒழிந்திலை- அவ்வளவிலே விட்டிலை பிராட்டியை தோழி என்றும் இளைய பெருமாளை தம்பி என்றும் சொன்ன போதே ஆர்த்தமாக வரும் இறே தம்முடைய தோழமை – – உகப்பாலே -தோழன் நீ -எனக்கு என்கிறார்-உகப்பு ஓர் அளவில் நிற்குமது அன்றே (உனக்கு நான் தோழன் என்றால் தனது ப்ராதான்யம் சித்திக்கும் -ஆகவே இப்படி )தோழன் நீ எனக்கு – ஸ்வ நிகர்ஷத்தைச் சொல்லி புருஷகாரத்தை முன்னிட்டு ஸ்ரீ வைஷ்ணவ அங்கீ காரம் உண்டானால்-அநந்தரம் உபாய ஸ்வரூபம் அனுசந்தேயமாகக் கடவது இறே அத்தைச் சொல்லுகிறது – (நாலடி வந்ததே இவற்றுக்கு சமம் )

முடிவிவள் தனக்கு ஒன்று அறிகிலேன்’ என்னும்; ‘மூவுல காளியே!’ என்னும்;
‘கடி கமழ் கொன்றைச் சடையனே!’ என்னும்; ‘நான்முகக் கடவுளே!’ என்னும்;
வடிவுடை வானோர் தலைவனே!’ என்னும்; ‘வண் திரு வரங்கனே!’ என்னும்;
அடி யடையா தாள் போல் இவள் அணுகி அடைந்தனள் முகில்வண்ணன் அடியே.–7-2-10–இப்படி ஈஸ்வர அபிமானிகளான ப்ரயோஜனாந்தர பரர்க்கும் பிரகாரியான சீலத்துக்கும் மேலே தன்னோடு லப்த சா ரூப்யரான நித்ய ஸூ ரிகளுக்கு சேஷியானவனே –என்னும்

வாராயின முலையாள் இவள் வானோர் தலைமகனாம்
சீராயின தெய்வ நல் நல் நோயிது தெய்வத் தண் அம் துழாய்
தாராயினும் தழை யாயினும் தண் கொம்பதாயினும்   கீழ்
வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே -53 —வானோர் தலைமகனாம் சீராயின தெய்வ நல் நல் நோயிது–அயர்வறும் அமரர்கள் அதிபதியான ஸர்வேஸ்வரனுடைய குணங்கள் அடியாக யுண்டாய்-நாட்டார் கொள்ளுவது அன்றியே திவ்யமாய்-கிலேச பலம் இன்றியே-போக பலமான நோயாய் இருக்கும்–இத்தால்-நோய் முதலும் நோயும்-நாடினாள் ஆயிற்று மேல் துணிவுக்கு உபாயம் நாடிச் சொல்லுகிறாள்

தம்பிக்கு முன் பிறந்து –அதாவது –மாழை மான் மட நோக்கி உன் தோழி உம்பி எம்பி என்று ஒழிந்திலை –பெரிய திருமொழி -5-8-1- என்கையாலே -இவர் தம்பியான இளைய பெருமாளுக்கு முன் பிறந்தவராய்-வேலும் வில்லும் கொண்டு பின் பிறந்தாரை சோதித்து –அதாவது –இப்படி தம்மை அங்கீகரித்த அன்று இராத்திரி பெருமாள் பள்ளி கொண்டு அருளா நிற்க – அவருடைய சௌகுமார்ய அனுசந்தாநத்தால் உண்டான பரிவாலே கண் உறக்கம் அற்று , கையும் வில்லுமாய் காத்துக் கொண்டு நிற்கிற இளைய பெருமாளை அதி சங்கை பண்ணி –-கூர் அணிந்த வேல் வலவன்–பெரியாழ்வார் -3-10-4- -என்றும்
ததஸ்த் வஹஞ்ச உத்தம பாண சாப த்ருத் ஸ்திதோபவம் தத்ர ச யஸ்ய லஷ்மண –அயோத்யா –87-23-–
( இளைய பெருமாள் ஸ்ரீ குகப்பெருமாளை அதி சங்கை பண்ண இருவரையும் அதி சங்கை பண்ணி ஸ்ரீ குகப் பெருமாள் பரிக்ரகம் பெருமாளை நோக்கிற்று இறே-ஒரு நாள் முகத்தில் விழித்தவர்களை வடிவழக்கு படுத்தும் பாடாயிற்று இது –ஸ்ரீ வசன பூஷணம் )(மாலைவாய் நியமம் செய்து மரபுளி இயற்றி வைகல் வேலை வாயமிர் தன்னாளும் வீரனும் விரித்த நாணல்-மாலை வாய்ப் பாரின் பாயல் வைகினன் – வரி வில் ஏந்திக் காலை வாய் அளவும் தம்பி இமைப்பிலன் காத்து நின்றான்=தும்பியின் குழாத்தின் சுற்றம் சுற்றத்தன் தொடுத்த வில்லன் வெம்பி வெந்து அழியா நின்ற நெஞ்சினன் விழித்த கண்ணன் தம்பி நின்றானை நோக்கித் தலைமகன் தனிமை நோக்கி அம்பியின் தலைவன் கண்ணீர்
அருவி சோர் குன்றின் நின்றான்
-கம்ப நாட்டாழ்வார் ) என்றும் சொல்லுகிற படியே சாயுதராய் கொண்டு
இவர் மேல் கண்ணாய் நின்று அவர் நினைவு சோதித்து-

(தம்பிக்கு முன் பிறந்து) “என் தம்பி உன் தம்பி‘ என்கையாலே அவருடைய தம்பியாரான இளைய பெருமாளுக்கும்‌ முற்பாடராய்‌, (வேலும்‌ வில்லுங் கொண்டு பின் பிறந்தாரைச் சோதித்து) இளைய பெருமாள்‌ பெருமாள் பக்கல்‌ ஸெளகுமார்யா நுஸந்தாநத்தா லுண்டான பரிவாலே அநிமிஷ த்‌ருஷ்டியாய்க்‌ கொண்டு இவரையும்‌ அதி ஸங்கை பண்ணி ஸாயுதராய்க் கொண்டு நோக்கும்படி பெருமாள் பக்கல்‌ பரிவை யுடையராய்‌

வாரணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம்
தேரணிந்த வயோத்தியர் கோன் பெரும் தேவீ கேட்டருளாய்
கூரணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில்
சீரணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம்
–3-10-4-மிகக் கூர்மையை யுடைய வேல் தொழில் வல்லவன் – ஸ்ரீ குஹப் பெருமாள் வேல் வாங்கினார் என்றால் சத்ருபக்ஷம் மண் உண்ணும்படி யாய்த்து இவருடைய ஸுர்யம் இருப்பது-இப்படி வேலும் கையுமாய்த் திரியுமது ஒழிய – ஏழை ஏதலன் –இத்யாதிப் படியே – (ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது—சொல்லிக் கொள்ளவும் இல்லையே ) அபிஜன வித்யா வ்ருத்தங்கள் ஒன்றும் இல்லாத ஸ்ரீ குஹப் பெருமாளோடே –-மாழை மான் மட நோக்கி உன் தோழி உம்பி எம்பி தோழன் நீ எனக்கு -என்று அருளிச் செய்த படியே குணத்தோடு கூடின தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் –

தமையனுக்கு இளையோன் சத்பாவம் சொல்லும் படி ஏக குலம் ஆனமையும் –-அதாவது- ஆச சஷேத சத்பாவம் லஷ்மணஸ்ய மகாத்மான பரதாயா அப்ரேமயாயா குஹோ கஹன கோசர –அயோத்யா -86-1–என்கிற படியே ஸ்ரீ ராம விரக கிலிஷ்டனாய் – சித்ர கூடத்து ஏறப் போவதாக வந்த தமையனான
ஸ்ரீ பரதாழ்வானுக்கு தம்பியான ஸ்ரீ இளைய பெருமாள் உடைய – பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ் நிக்த – பால -18-27–என்றும் –பரவாநஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷ சதம் ஸ்திதே –ஆரண்ய -15-7–என்றும் -சொல்லுகிற படியே ஸ்ரீ பெருமாள் பக்கல் பிரேம பாரதந்த்ர்யங்களே நிரூபகமாம் படி இருக்கையாகிற சத்தையோடே ,( ஸத்பாவம் -பிரேம பாரதந்தர்யங்களே சத்தையாம்படி ) வ்யாப்தமான ஸ்வாபத்தை சொல்லும் படி இஷ்வாகு வம்சயரோடு ஏக குலம் ஆனபடியும் –

(தமையனுக்கு இளையோன்‌ ஸத்‌ பாவம்‌ சொல்லும்படி ஏக குலமானமையும்‌) ‘*ஆசசக்ஷேத ஸத்‌ பாவம்‌ லக்ஷ்மணஸ்ய மஹாத்மந: | பரதாயா ப்ரமேயாய குஹோ கஹந கோசர?” (ரா. ஆ. 86 – 1) என்று அளவிறந்த வைபவத்தை உடையரா யிருக்கிற ஸ்ரீபரதாழ்வானுக்கு இளைய பெருமாள்‌ கைங்கர்ய ஸ்ரீயாலே உளராயிருக்கிற படியை இவர்‌ உபதேஸிக்கும்படி இஷ்வாகு வம்ஸ்யரோடு ஏக குலமானமையும்‌.

தூது மொழிந்து நடந்து வந்தவர்களுடைய சம்யக் சகுன சஹ போஜனமும்-அதாவது –முன்னோர் தூது வானரத்தின் வாய் மொழிந்து -பெரிய திருமொழி -2-2-3-என்று ஸ்ரீ பிராட்டிக்கு தூது வாக்யத்தை ஸ்ரீ திருவடி வாயிலே சொல்லி விட்ட ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன்-சபர்யா பூஜி தஸ் சம்யக் ராமோ தசரதாத்மஜா–பால-1-57- -என்கிற படி ஸ்ரீ சபரி கையால் பண்ணின சம்யக் போஜனமும் ,
(ஆண்டவள் அன்பின் ஏத்தி யழுதிழி அருவிக் கண்ணன் மாண்டது என் மாயப்பாசம் வந்தது வரம்பில் காலம் பூண்ட மாதவத்தின் செல்வம் போயது பிறவி என்பாள் வேண்டிய கொணர்ந்து நல்க விருந்து செய்திருந்த வேலை –கம்ப நாட்டாழ்வார் ) குடை மன்னரிடை நடந்த தூதா-பெரிய திருமொழி -6-2-9- -என்னும் படி -ஸ்ரீ பாண்டவர்களுக்கு தூது போன ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்ரீ பீஷ்ம ஸ்ரீ துரோணாதி க்ருஹங்களை விட்டு –ஆதியால் துரியோதனன் க்ருஹம் விதுரான்னானி புபுஜே சுசீனி குணவந்தி ச பாரதம் -உத்யோக பர்வம் – என்கிறபடியே-ச காரம் பாவனத்வமும் போக்யத்வமும் பாவனத்வ போக்யத்வங்கள் கண்டு உகந்து ஸ்ரீ விதுரர் திரு மாளிகையிலே பண்ணின ச குண போஜனமும் ,தூது வந்த குரங்கு -பெரிய திருமொழி -10-2-6–என்கிற ஸ்ரீ திருவடி -த்ருஷ்டா சீதா -பால-1-78- என்ற ப்ரீதியாலே
( கண்டனன் கற்பினுக்கு அணியைக் கண்களால் ) உபகாராய சுக்ரீவோ ராஜ்ய காங்ஷி விபீஷண-நிஷ்காரணாய ஹனுமான் தத் துல்யம் சஹ போஜனம் –பாத்மோத்தர புராணம் – என்று திரு உள்ளம் பற்றி –கோதில் வாய்மையினானோடு உடனே உண்பன் நான் –பெரிய திருமொழி -5-8-2- என்று ஸ்ரீ பெருமாளோடு பண்ணின சஹ போஜனமும் –

(தூதுமொழிந்து) ““முன்னோர்‌ தூது வானரத்தின்‌ வாயில்‌ மொழிந்து” ‘ (திருமொழி 2 – 2 3) என்று பிராட்டி பக்கல்‌ திருவடியோடே தூத வாக்யத்தை அருளிச் செய்துவிட்ட பெருமாள்‌ “ ஸ பர்யா பூஜிதஸ் ஸம்யக்‌, ராமோ தஸரதாத்மஜ?’‘ (ரா. பா. 1 – 58) என்று ஸபரி கையாலே ஸம்யக்காக பூஜிதரான பின்பு அழகு நிலைபெற்ற படியையும்‌, (நடந்து) குடைமன்னரிடை நடந்த தூதா’” (திருமொழி 6 – 2 – 9) என்று பாண்டவ தூதனான க்ருஷ்ணனுடைய ““புக்தவத்ஸு த்‌விஜாக்‌ர்யேஷு நிஷண்ண? பரமாஸநே ! விதுராந்நாநி புபுஜே ஸூசீநி குணவந்தி ச ” (படர. உத்‌,.) என்று பாவநத்வ போக்‌யத்வங்களை உடைத்தா யிருக்கிற விதுராந்த போஜநத்தையும்‌, (வந்த) ”தூது வந்த குரங்கு?” (திருமொழி 10 – 2 – 6) என்கிறபடியே ”த்‌ருஷ்டா ஸீதா” (ரா.பா. 1 – 78) என்ற திருவடியோடே ““உபகாராய ஸுக்‌ ரீவோ ராஜ்யகாங்க்ஷி விபிஷண? ! நிஷ் காரணாய ஹநுமாந்‌ தத் துல்யம்‌ ஸஹ போஜநம்‌” (பாத்‌மோத்தரே) என்றும்‌; “உடனே உண்பன்‌ நானென்ற ஒண் பொருள்‌?” (திருமொழி 5 – 8 – 2) என்கிறபடியே பெருமாள்‌ ஸஹ போஜநம்‌ பண்ணின படியும்‌.-

முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன்
மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே
பின்னோர் தூது ஆதி மன்னர்க்காகிப் பெரு நிலத்தார்
இன்னார் தூதனென நின்றான் எவ்வுள் கிடந்தானே–2-2-3-த்வாபரத்தின் உடைய ஆதியிலே
பிராட்டியைப் பிரிந்த ஆற்றாமை மீதூர்ந்து கடலிலே புக்கு முடியும் அளவானவாறே ஒரு குரங்கின் வாயிலே வார்த்தையைச் சொல்லி விட்டான் –

போதார் தாமரையாள் புலவிக் குல வானவர் தம்
கோதா கோதில் செங்கோல் குடை மன்னரிடை நடந்த
தூதா தூ மொழியாய் சுடர் போல் என் மனத்து இருந்த
வேதா
நின்னடைந்தேன் திரு விண்ணகரம் மேயவனே —6-2-9-பாண்டவர்கள் உடைய சத்ர சாமாராதிகள்  அடையப் பறித்துக் கொண்டு ஒருவரால் பிரதிஹதி பண்ண ஒண்ணாத ஆஞ்ஞையை உடையராய்க் கொண்டு முத்தின் குடை நிழல் கீழ் இருந்து  பூமிப் பரப்புக்கு எல்லாம் தாங்களே ராஜாக்களாக நிர்வஹித்துக் கொண்டு போருகிற துரியோத நாதிகளின் நடுவே கழுத்திலே ஓலையைக் கட்டிக் கொண்டு தூது போனவனே-அன்றிக்கே கிருஷ்ணன் உடைய அபிப்ராயத்தாலே
கோதில் செங்கோல் குடை மன்னர் -என்று பாண்டவர்களையே சொல்லுகிறது ஆகவுமாம் –

ஓத மா கடலைக் கடந்தேறி யுயர் கொள் மாக் கடிகாவை யிறுத்துக்
காதல் மக்களும் சுற்றமும் கொன்று கடி யிலங்கை மலங்க எரித்துத்
தூது வந்த குரங்குக்கே உங்கள் தோன்றல் தேவியை விட்டுக் கொடாதே
ஆதர் நின்று படுகின்றது  அந்தோ   அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ–10-2-6-வெறும் கையே தூது வந்தான் ஒருவன் செய்தது இதுவானால் – நாம் இவளைக் கொண்டு இருப்போம் அல்லோம்
என்று அவன் கையிலே பிராட்டியை விட்டுக் கொடாதே

வாத மா மகன் மற்கடம் விலங்கு மற்றோர் சாதி என்று ஒழிந்திலை உகந்து
காதலாதரம் கடலினும் பெருகச் செய் தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று
கோதில் வாய்மையினோடும் உடனே உண்பன் நான் என்ற ஒண் பொருள் எனக்கும்
ஆதல் வேண்டும்
என்று அடியிணை யடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-2—வாய்மை -வாக் இந்த்ரிய வியாபாரம் அதாகிறது வசனம்-அதுக்கு கோது இல்லாமை யாவது
சம்ஸ்ரவே மதுரம் வாக்கியம் -என்று பிராட்டி உடைய திரு உள்ளத்தை மெய் என்று பட்டு அவள் தரிக்கும்படி சொல்லுகையும்-த்ருஷ்டா சீதா -என்று இவர் தரிக்கும்படி சொல்லுகையும் – ( கண்டேன் சீதையை -கம்பரும்-தரிக்க சொன்னவாறு )-உடனே உண்பன் நான் என்று – இனி நாம் ஒக்க ஜீவிக்கக் கடவோம்-இவ்வர்த்தம் –ஏஷ சர்வஸ்வ  பூதஸ்து-என்கிறத்தைப் பற்றச் சொல்லுகிறது
(சோஸ்நுதே ஸர்வான் காமான் -ப்ரஹ்ம குண சேஷ்டிதங்களை அனுபவிக்கிறோம்-பாலே போல் சீர் –அங்கு தான் நாம் சரீரம் அவன் சரீரீ என்பதை முற்றுமாக உணர்கிறோம் ) ஒரு கலத்தில் உண்பாரைப் போலே சேஷ சேஷிகள் இருவருக்கும் அனுபாவ்யம் இறே திரு மேனி –

ஒரு பிறவியிலே -இத்யாதி –அதாவது – யது குலத்திலே பிறந்து -கோப குலத்தில் சஜாதீயத்வேன வளருகையாலே ஒரு பிறவியிலே இரு பிறவியான ஸ்ரீ கிருஷ்ணனுக்கு ஸ்ரீ தர்ம புத்ரர் தம்முடைய
யாகத்திலே அக்ர பூஜை கொடுத்தமையும்
–ருஷி புத்ரராய் பிறந்து -போய் மற்றோர் இடத்திலே -தஜ் ஜாதீயராய் வளருகையாலே ஒரு பிறவியில் இரு பிறவியான திரு மழிசைப் பிரானுக்கு ஸ்ரீ பெரும் புலியூர் அடிகள் தம்முடைய யாகத்தில் அக்ர பூஜை கொடுத்தமையும்-

ஒரு பிறவியிலே இரு பிறவியானா ரிருவர்க்கு] யது குலத்திலே பிறந்து கோப குலத்திலே வளர்ந்த கிருஷ்ணனுக்கும்‌, ருஷி கர்ப்பமாய்க் கொண்டு போந்த விடத்திலே வளர்ந்த திருமழிசைப் பிரானுக்கும்‌, (தர்ம ஸுநு ஸ்வாமிகள்‌ அக்‌ர பூஜை கொடுத்தமையும்- தர்ம புத்ரரும்‌, பெரும்புலி யூரடிகளும்‌ தங்கள்‌ யாகங்களிலே அக்ர பூஜை கொடுத்தமையும்‌.-

ஐவரில் இத்யாதி -அதாவது – பாண்டவர்கள் ஐவரில் பிரதானரான ஸ்ரீ தர்ம புத்ரர் ஸ்ரீ விதுரருக்கு
ஞானாதிக்யத்தையும் -அசரீரீ வாக்யத்தையும் கொண்டு சந்தேகியாமல் செய்த புத்ர க்ருத்யமும் –ஸ்ரீ தசரதாத்மஜர் நால்வரில் பிரதானரான ஸ்ரீ பெருமாள்–சௌமித்ரே ஹரே காஷ்டானி நிர்மதிஷ்யாமி பாவகம் க்ருத்ரராஜம் திதஷாமி மத்க்ருதே நிதனம் கதம் –ஆரண்ய -68-27- என்று சகஜரான ஸ்ரீ இளைய பெருமாளும் கூட நிற்க செய்தே அவர் கையிலும் காட்டாமல் – ஏவமுக்த்வா சிதாம் தீப்தாமாரோப்ய பதகேச்வரம் – ததாஹா ராமோ தர்மாத்மா ஸ்வ பந்துமிவ துக்கித –ஆரண்ய -68-31-என்கிற படியே
ஸ்ரீ பெரிய உடையாருக்கு செய்த புத்ர க்ருத்யமும் –(இந்தநம் எனைய என்னக் காரகில் ஈட்டத்தோடும் சந்தனம் குவித்து வேண்டும் தருப்பையும் திருத்திப் பூவும்-சிந்தினன் மணலின் வேதி தீர் தர இயற்றித் தெண்ணீர் தந்தனன் தாதை தன்னைத் தடக்கையால் எடுத்துச் சார்வான்-ஏந்தினன் இருகை தன்னால் ஏற்றினன் ஈமம் தன் மேல் சாந்தொடு மலரும் நீரும் சொரிந்தனன் தலையின் சாரல் காந்தெரி கஜலமூட்டிக் கடன்முறை கடவா வண்ணம் நேர்ந்தனன் நிரம்பு நன்னூல் மந்த்ர நெறியின் வல்லான் –கம்ப நாட்டாழ்வார் )ஸ்ரீ பெரிய நம்பி ,ஸ்ரீ திரு கோட்டியூர் நம்பி ,ஸ்ரீ பெரிய திரு மலை நம்பி -என்று சக ப்ரஹ்மச்சாரிகளாய்க் கொண்டு ஸ்ரீ ஆளவந்தார் திரு அடியிலே சேவிக்கையாலும் -ஸ்ரீ உடையவருக்கு ஆச்சார்யர்கள் ஆகையாலும் – பிரசித்தரான ஸ்ரீ நம்பிகள் மூவரிலும் –பிரதானரான ஸ்ரீ பெரிய நம்பி ஸ்ரீ மாறனேர் நம்பிக்கு – புரோடாசத்தை நாய்க்கு இடாதே கொள்ளும் -என்று அவர் அருளிச் செய்து போந்த படி புரோடாசமாக நினைத்து செய்த புத்ர க்ருத்யமும்-

(ஐவரில்‌ இத்யாதி,) ஐவரில்‌ முற்பட்ட தர்ம புத்ரர்‌ ஸ்ரீவிதுரர்க்கு ஜ்ஞாநாதிக் யத்தையும்‌ அசரீரி வாக்யத்தையம்‌ கொண்டு ஸந்தேஹியாமல்‌ புத்ர க்ருத்யம்‌ பண்ணினமையும்‌, நால்வரில்‌ முற்பட்ட சக்ரவர்த்தித் திருமகன்‌ ஸஹஜரான இளைய பெருமாளோடே கூட “ததஸ்தேநைவ ஸோகேந க்ருத்‌ரம்‌ தக்‌த்‌வா ஜடாயுஷம்‌”’ (ரா.பா.1 – 54) என்கிற படியே பெரிய உடையார்க்குப்‌ புத்ர க்ருத்யம்‌ அநுஷ்டித்தபடியும்‌, மூவரில்‌ முற்பட்ட . பெரிய நம்பி மாறனேரி நம்பிக்குப்‌ புரோடாஸமமாகப்‌ புத்ர க்ருத்யம்‌ அநுஷ்டித்தபடியும்

புஷ்ப த்யாக இத்யாதி -அதாவது-சிந்து பூ மகிழும் திருவேம்கடம்-திருவாய் -3-3-2-என்கிறபடியே புஷ்ப மண்டபமான ஸ்ரீ திரு மலையிலே-பணிப்பூவும் கையுமாய் திரு உள்ளம் அறிந்து பரிமாறுகையாலே ஸ்ரீ திரு வேங்கடம் உடையானுக்கு அந்தரங்கரான ஸ்ரீ குரும்பறுத்த நம்பியை-துளங்கு நீண் முடி அரசர் தம் குரிசில் தொண்டை மன்னவன் –பெரிய திருமொழி -5-8-9–என்கிற அபிஷிக்த ஷத்ரியாக்யரான ஸ்ரீ தொண்டை மான் சக்கரவர்த்தி அனுவர்தித்த க்ரமும் வேகவத் உத்தரே தீரே புண்ய கோட்யாம் ஹரிஸ் ஸ்வயம் வரதஸ் சர்வ பூதானாம் அத்யாபி பரித்ருச்யதே –ஸ்ரீ காஞ்சீ மஹாத்ம்யம் -என்கிற படியே
த்யாக மண்டபமான ஸ்ரீ பெருமாள் கோவிலிலே திரு ஆல வட்டமும் கையுமாய் பெருமாளுக்கு அந்தரங்கராய் நின்ற ஸ்ரீ திரு கச்சி நம்பியை வைதிகோதமரான உடையவர் அனுவர்தித்த க்ரமமும்-தெண்ணீர் பொன்னி திரைக் கையால் அடி வருட பள்ளி கொள்ளும்–பெருமாள்–1-1–என்கிற படியே
போக மண்டபமான ஸ்ரீ கோவிலில் வீணையும் கையுமாய் பெருமாளுக்கு அந்தரங்கராய்
வர்த்தித்த ஸ்ரீ திரு பாண் ஆழ்வாரை ஸ்ரீ லோக சாரங்க முனிவர் அனுவர்தித்த க்ரமும்

(புஷ்ப த்யாகேத்யாதி,) “சிந்து பூ மகிமும்‌ திருவேங்கடத்து”” (திருவா. 3 – 3 – 2) என்கிற படியே புஷ்ப மண்டபமான திருமலையிலே பணிப் பூவுங் கையுமாய்த்‌ திருவுள்ள மறியப்‌ பறிமாறுகையாலே திருவேங்கடமுடையானுக்கு அந்தரங்கரான குறும்பறுத்த நம்பியை ““துளங்கு நீண் முடி அரசர் தம்‌ குரிசில்‌ தொண்டை மன்னவன்‌”’ (திருமொழி 5 – 8 – 9) என்கிற அபிஷிக்த க்ஷத்ரிய புத்ரரான தொண்டை மான்‌ சக்ரவர்த்தி அநுவர்த்தித்த க்ரமமும்‌, ““வேகவத் யுத்தரே தீரே புண்ய கோட்யாம்‌ ஹ்ரிஸ் ஸ்வயம்‌ । வரதஸ் ஸர்வ பூதாநாம் அத்‌யாபி பரித்‌ரு்ஸ்யதே”” (ஹஸ்திகிரி மாஹா.) என்கிறபடியே த்யாக மண்டபமான பெருமாள் கோயிவிலே திருவாலவட்டமும்‌ கையுமாய்ப்‌ பெருமாளுக்கு அந்தரங்கராய்‌ நின்ற திருக்கச்சி நம்பியை வைதிகோத்தமரான உடையவர்‌ அநுவர்த்தித்த க்ரமமும்‌, ““தெண்ணீப்பொன்னி திரைக் கையாலடி வருடப் பள்ளி கொள்ளும்‌”’ (பெருமாள் தி, 1 1) என்கிறபடியே போக மண்டபமான கோயிலில்‌ வீணையுங் கையுமாய்ப்‌ பெரிய பெருமாளுக்கு அந்தரங்கரான திருப்பாணாழ்வாரை லோக ஸாரங்க மஹாமுனிகள்‌ அநுவர்த்தித்த க்ரமமும்‌.

எந்தை தந்தை தந்தைதந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூமகிழும் திரு வேங்கடத்து
அந்தம் இல்புகழ்க் கார்எழில் அண்ணலே.–3-3-2-
சிந்து பூ- திருவேங்கடமுடையானுடைய நீர்மைக்கு தோற்று அக்ரமமாக பிரயோகிக்கிற படி – இங்கு உள்ளார் அங்கு சென்றால் மேன்மை கண்டு படும் பாடு எல்லாம் அங்கு உள்ளார் எல்லாம் இங்கு நீர்மை கண்டு படும் படி-கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடம் இறே-மகிழும் திரு வேங்கடத்து-அந்தம் இல்புகழ்--பரம பதத்தில் சாவதி என்னும் படி யாயிற்று திருமலையில் வந்த பின்பாயிற்று புகழ் நிரவதிகம் ஆயிற்று-

துளங்கு நீண் முடி யரசர் தம் குரிசில் தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு
உளம் கொள் அன்பினோடு இன்னருள் சுரந்து அங்கோடு நாழிகை ஏழு உடன் இருப்ப
வளம் கொள் மந்திரம் மற்று அவர்க்கு அருளிச் செய்தவாறு அடியேன் அறிந்து உலகம்
அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே –5-8-9-உளம் கொள் அன்பினோடு – ஹித உபதேசத்துக்காக பண்ணின அன்பாகையாலே திரு உள்ளத்தைப் பற்றி இருக்கும் இறே–இன்னருள் –-தன் பேறான அருள்-உதாரா -என்று பிரயோஜனாந்தர பரர் அளவிலும்  இருக்கச் செய்தே-ஜ்ஞாநீத் வாத்மைவ -என்கிற விசேஷணம் உண்டு இறே

இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த
அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
திரு அரங்க பெரு நகருள் தெண்ணீர் பொன்னி திரை கையால் அடி வருட பள்ளி கொள்ளும்
கருமணியை கோமளத்தை 
கண்டு கொண்டு என் கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே–1-1-தெளிந்த நீரை உடைத்த காவேரி -திரையாகிற கைகளாலே திருவடிகளை வருட-பள்ளி கொள்ளும் கருமணியை – ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே ஒரு நீல ரத்னம் சாய்ந்தால் போலே கண் வளர்ந்து அருளுகிறவனை-கோமளத்தை -கண்ணார துகைக்க ஒண்ணாத சௌகுமார்யம் உடையவன்

யாக அனுயாக உத்தர வீதிகளில் காய அன்ன ஸ்தல சுத்தி பண்ணின வ்ருத்தாசாரமும்- அதாவது –-யஜ தேவ பூஜாயாம் -என்கையாலே யாக சப்த வாச்யமான திரு ஆராதனத்திலே ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் ஸ்பர்சத்தாலே காய சுத்தி பண்ணிய ஸ்ரீ உடையவரும்–பகவத் ஆராதன அநந்தரம் தத் சமாப்தி ரூபேண பண்ணப் படும் அது ஆகையாலே – அனுயாக சப்த வாச்யமான பிரசாத ஸ்வீகாரத்தில் –ஸ்ரீ பிள்ளை ஏறு திரு உடையார் தாசர் கர ஸ்பர்சத்தாலே -அன்ன சுத்தி பண்ணின ஸ்ரீ நம் பிள்ளையும் –உத்தர வீதி குடி புகுகிற போது ஸ்ரீ பிள்ளை வானமாமலை தாசர் சஞ்சரணத்தாலே ஸ்தல சுத்தி
பண்ணின ஸ்ரீ நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டரும்
–ஆகிய ஞான வ்ருத்தர்களுடைய ஆசாரமும் -அறிவார்க்கு இறே ஜன்ம உத்கர்ஷ அபகர்ஷங்கள் தெரிவது – அதாவது – இப்படி கீழ் சொன்ன இவை எல்லாம் அறிவார்க்கு இறே-இன்ன ஜன்மம் உத்க்ருஷ்டம் -இன்ன ஜன்மம் அபக்ருஷ்டம் -என்று
ஜென்மத்தினுடைய உத்கர்ஷமும் அபகர்ஷமும் தோன்றுவது என்ற படி 

(யாகா நுயாகேத்யாதி,) யாகம் என்று – திருவாராதநமாய்‌, அதுக்குப்‌ பிள்ளை யுறங்கா வில்லி தாஸர் ஸ்பர்ஸத்தாலே காய ஸூத்‌தி, பண்ணின உடையவருடையவும்‌, அநு யாகம்‌ என்று – பகவத் ஸமாராதநாநந்தரம்‌ பண்ணப் படுகிற ப்ரஸாத ஸ்விகாரம்‌. அதுக்குப்‌ பிள்ளை ஏறு திருவுடையார்‌ தாஸருடைய கர ஸ்பர்ஸத்தாலே அந்ந ஸூத்‌தி, பண்ணின நம்பிள்ளை யுடையவும்‌, உத்தர வீதி குடி புகுருகைக்கு “ஆலோக்ய ராஜநகரீ மதி, ராஜஸூநு ராஜாநமேவ பிதரம்‌ பரிசிந்த்ய பூ,ப ! ஸூக்‌ரீவ மாருதி விபீஷண புண்ய பாத ஸஞ்சார பூத பவநம்‌ ப்ரவிவேஸ ராம?” என்று பெருமாள்‌ ஸ்தல ஸூத்‌தி பண்ணினாப் போலே, உத்தர வீதி குடி புகுருகிற காலத்திலே பிள்ளை வானமாமலை தாஸருடைய ஸஞ்சாரத்தாலே ஸ்தல ஸூத்‌தி பண்ணின நடுவில்‌ திருவீதிப் பிள்ளை பட்டருடையவும்‌ அநுஷ்டாந ப்ரகாரங்களையும்‌ அறிவார்க்கிறே ஐந்மத்தினுடைய உத்க்ருஷ்ட அபக்ருஷ்டத்வம்‌ தெரிவது-

இத்தால் ஜென்மாத் யபக்ருஷ்டர் பகவத் பக்தர்கள் ஆனார்கள் ஆகில் – உத்க்ருஷ்ட வர்ணரால் அனுவர்த நீயராய் – அவர்களுக்கு ஞான பிரதராய் – ஸ்ரீ ஈஸ்வரனோபாதி அவர்களுக்கு பூஜ்யராய் –
ஸ்வ தீர்த்த பிரசாதங்களாலே சர்வரையும் சுத்தர் ஆக்குமவர்களாம் படியும் -பாப மக்னரான உத்க்ருஷ்ட வர்ணருக்கும் ஸ்வ சம்பந்தத்தாலே உத்தராகராம் படியையும் ,-அவர்கள் அளவில் ஸ்ரீ பகவத் ததீயர்கள் உடைய ஆதார அனுவர்த்த பிரகாரங்களையும் – அவர்களுடைய ஸ்பர்சமே பரம பாவனத்வம் என்னும் அத்தையும் –பிரமேய பூதனான ஸ்ரீ ஈஸ்வரனுடையவும் பிரமாத்ரு பூதரான ஸ்ரீ ததீயர் உடையவும்
வசன அனுஷ்டானங்களாலே -மந்த மதிகளும் அறியும் படி பிரகாசிப்பித்தார் ஆய்த்து
-(ஸ்ரீ வசன பூஷணத்தில் -226-தொடங்கி-239-வரை உள்ள சூத்திரங்களையும் அவற்றின் வியாக்யானத்தையும் போலே இங்கும் )

ஆக கீழ்‌ ஜந்ம வ்ருத்த ஜ்ஞாநங்களால்‌ குறைய நின்றார்களேயாகிலும்‌ பகவதீ யரானார்‌களாகில்‌ அவர்கள்‌ ஸர்வோத்க்ருஷ்டராய்க்கொண்டு உபாதேயரென்னு மிடத்தைச்‌ சொல்லிற்று

ஜென்ம உத்கர்ஷ அபகர்ஷங்கள் தெரிவது -என்ற இடத்தில் –தத் உத்கர்ஷ அபகர்ஷங்களுக்கு
உடலாக விவஷிதமானவற்றை -மேல் இரண்டு வாக்யத்தாலே வெளி இடுகிறார் – அதில் பிரதமத்தில் அபக்ருஷ்ட ஜென்மம் இன்னது என்று தோற்றும்படி பகவத் ஞான ரஹிதமான வர்ணாதிகளின் ஹேயத்வத்தை ச ப்ரமாணமாக தர்சிப்பிக்கிறார்-
இனிமேல்‌ பகவஜ் ஜ்ஞாநமின்றியிலே இருக்கிற அஜ்ஞர்‌ ப்‌ரமிக்கிற கேவல வர்ணாதிகள்‌ வ்யர்த்தமாகையாலே த்யாஜ்ய மென்னுமிடத்தை ஸ ப்ரமாணமாக அருளிச் செய்கிறார்‌-

அஜ்ஞர் பிரமிக்கிற வர்ண ஆஸ்ரம வித்ய வ்ருத்தங்களை கர்த்தப ஜென்மம் ஸ்வபசா தமம் சில்ப நைபுணம் பஸ்மாஹூதி சவ விதவா அலங்காரம் என்று கழிப்பர்கள்-சூரணை-86-

(அஜ்ஞர் பிரமிக்கிற வர்ணத்தைக் கர்த்தப ஜென்மம்-கழுதைப்பிறப்பு -என்றும் –
ஆஸ்ரமத்தை ஸ்வபசா தமம்-நாய் இறைச்சி தின்னும் நீசனை விட தாழ்ந்தது -என்றும்
வித்யயையைச் சில்ப நைபுணம்-செய் தொழில் திறன் -செருப்பு குத்த கற்றவோபாதி -என்றும்
வ்ருத்தத்தைப் பஸ்மாஹூதி–சாம்பலில் இட்ட ஆஹுதி -என்றும் கொண்டு சவ அலங்காரம் என்றும் –
விதவா அலங்காரம்-என்றும் கழிப்பர்கள்-பகவத் சம்பந்தம் இல்லாத வர்ணமும் -ஆஸ்ரமும் -ஞானமும் -அனுஷ்டானமும் -தள்ளத்தக்கவை -என்றதாயிற்று )அதாவது – பகவத் தாஸ்யமே ஆத்மாவுக்கு நிரூபகம் என்று நிஷ்கர்ஷித்து – தத் அனுகுணமாக -ஹேய உபாதேய விபாகம் பண்ணத் தக்க ஞானம் இல்லாதவர்கள் – பகவத் அந்வய ரஹித தயா அபக்ருஷ்டராய் இருக்க – உத்தம வர்ணம் -உத்தம ஆஸ்ரமம் ,சத் விதியை, சத் வ்ருத்தம்-என்று உத்க்ருஷ்டமாக பிரமிக்கிற வர்ணாதியான அத்தை
சதுர் வேத தரோ விப்ரோ வாஸூ தேவம் ந விந்ததி வேத பரா பராக்ராந்தஸ் ஸ்வை ப்ராஹ்மண கர்தப -என்று நாலு வேதங்களையும் அதிகரித்து வைத்தே – சர்வே வேதா யத்பதம் ஆமனந்தி–கடவல்லி -என்றும்-வேதைஸ்ச – சர்வைர் அஹமேவ வேதே –ஸ்ரீ கீதை -15-15-என்கிற படியே
சகல வேத பிரதி பாத்யனான ஸ்ரீ சர்வேஸ்வரனை அறியாதவன் குங்குமம் சுமந்த கழுதை போல் தான் பரித்து-சுமந்து கொண்டு திரிகிற வேதத்தின் பரிமளம் அறியாத பிராமண கழுதை என்றும்

அஜ்ஞர்‌ – பகவச் சேஷத்வ ஜ்ஞாதமில்லாதவர்கள்‌, உத்தம வர்ணமென்றும்‌, உத்தமாஸ்ரமமென்றும்‌, ஸத்‌வித்‌யை என்றும்‌,ஸத்‌ வ்ருத்தமென்றும்‌ கேவலம்‌ உத்க்ருஷ்டமாக ப்‌ரமிக்கிற இவற்றை.
(கர்த்தப ஜந்ம மித்யாதி,) ”சதுர்வேத தரோ விப்ரோ வாஸு தேவம்‌ ந விந்த,தி । வேத பாரபராக்ராந்தஸ்ஸ வை ப்‌ராஹ்மண கர்த்தப”” என்கிறபடியே ஸகல வேதத்‌தையும்‌ அதிகரித்து வைத்து ““வேதைஸ் ச ஸர்வைரஹமேவ வேத்‌ய” (கீதை 15 – 15) என்கிறபடியே ஸகல வேத,ப்ரதிபாத்‌யன்‌ ஸர்வேஸ்வரன்‌ என்றறியாதவர்‌ குங்குமம்‌ சுமந்த கமுதையோ பாதி என்றும்‌,

ஸ்வபசோபி மஹீபால விஷ்ணு பக்தோ த்விஜாதிக விஷ்ணு பக்தி விஹீனஸ்து யதிஸ்ஸ ச்வபச அதமா -என்று -யதிஸ்ஸ-சரம ஆஸ்ரயமி ஆகிலும் பகவத் பக்தி ஹீனன் ஆனவன் ஸ்வபசனில் காட்டில் தண்ணியன் என்றும் –தத் கர்ம யத் ந பந்தாப சா வித்யா யா விமுக்தயே ஆயாசாயா அபரம் கர்ம வித்யான்யா சில்பனை புணம்–ஸ்ரீ விஷ்ணு புராணம் –1-9-41 -என்று பகவத் பரத்ய மோஷார்த்தை ஆனதுவே வித்யை –அல்லாதவை செருப்பு குத்த கற்றவோபாதி என்றும்-ஆம்னா யாப்யசநான் யரண்யருதிதம் வேத விரதான் அன்வஹம் மேத்ஸ் சேத பலானி பூர்த்த விதயஸ் சர்வே ஹுதம் பஸ்மினி தீர்த்தா நாம் அவகாஹாநாநி ச கஜஸ்நானம் வினா யத்பத த்வந்த்வாம் போருஹ சம்ஸ்ம்ருதிர் விஜயதே தேவஸ் ச நாராயண –முகுந்தமாலை –25-என்று-பகவத் ஸ்ம்ருதி இல்லாதவர்கள் உடைய கர்ம அனுஷ்டானம் – பஸ்மாஹூதிவத் நிஷ் பிரயோஜனம் என்றும் –

விஷ்ணு பக்தி விஹீநஸ் சேத்‌ யதிஸ்ச ஸ்வபசாதம?’‘ என்று யதியே யாகிலும்‌ பகவத்‌ பக்தி இன்றிக்கே இருக்குமாகில்‌ அவன்‌ ஸ்வபாகனிற் காட்டில்‌ தண்ணிய னென்றும்‌, “’தத் கர்ம யந்ந பந்தாய ஸா வித்‌யா யா விமுக்தயே ! ஆயாஸாயாபரம்‌ கர்ம வித்‌யாந்யா ஸில்பநைபுணம்‌” (வி.பு. 1 – 19) என்று மோக்ஷார்த்த,மான ஜ்ஞாநமே ஜ்ஞாநம்‌; அல்லாத ஜ்ஞாநம்‌ செருப்புக்குத்தக்‌ கற்றவோபாதி என்றும்‌, ”ஆம்நாயாப்‌யபஸ நாந்யரண்யருதி,தம்‌ வேத வரதாந் யந்வஹம்‌ மேத,ஸ்சேத,ப,லாநி பூர்த்த விதய? ஸர்வே ஹுதம்‌ பஸ்மநி | தீர்த்தா நாம வகாஹதாநி ச கஜஸ்நாதம்‌ விநா யத்பத த்‌வந்தவாம் போருஹ ஸம்ஸ்ம்ருதீர் விஐயதே தேவஸ் ஸ நாராயண??‘ (முகுந்தமாலை 25) என்றும்‌ பகவஜ் ஜ்ஞாதமில்லாதவர்களுடைய கர்மாதிகளெல்லாம்‌ பஸ்மா ஹுதி போலே நிஷ் ப்ரயோஜநமென்றும்‌,

யச்யாகிலாமி வஹபிஸ் ஸூமங்கலை வாசோவிமிச்ரா குண கர்ம ஜன்மபி பிரணாந்தி சும்பந்தி புனந்தி வை ஜகத் யாஸ் தத் விமுக்தாஸ் சவ சோபநா மத–ஸ்ரீ பாகவதம் -10-18-12— விஷ்ணு பக்தி விஹீனச்ய வேதஸ் சாஸ்திரம் ஜெபஸ் தப அப்ராணாஸ் யேவ தேஹஸ்ய மண்டனம் லோக ரஞ்சனம்–என்று பகவத் அந்வய ரஹிதோக்திகளும் பகவத் பக்தி ஹீனனுடைய வித்யா வருத்தங்களும் ஸ்வ அலங்கார கல்பம் என்றும் –பிராதுர் பாவைஸ் ஸூர நர சமோ தேவதேவாஸ் ததீய ஜாத்ய வ்ருத்தை ரபிச குணதஸ் தாத்ருசோ நாத்ர கர்ஹா கிந்து ஸ்ரீமத் புவன த்ராண தோன்யேஷு வித்யா வ்ருத்த ப்ராயோ பவதி விதவா கல்ப கல்ப ப்ரகர்ஷ– என்று பகவத் அநன்விதருடைய வித்யா வ்ருத்த பாஹுள்யமாகிற உத்கர்ஷம் – பகவத் சம்பந்த ஞானம் ரூப சௌமாங்கல்ய அபாவத்தாலே விதவ அலங்கார சமம் என்றும் ஞானிகள் ஆனவர்கள் இகழ்வார்கள் என்கை .–ஆக –இப்படி பகவத் விஷய ஸ்பர்சம் அற்ற
வர்ண ஆஸ்ரமங்களும் ஞான வ்ருத்தங்களும் ஹேயம் என்கையாலே – கீழ் அப்க்ருஷ்ட ஜென்மதயா விவஷிதமானது இன்னது என்னும் இடம் அறிவித்தா
ர் ஆய்த்து –

தேசவா? புருஷா லோகே யேஷாம்‌ ஹ்ருதி, ந கேஸவ? । கேஸவார்ப்பித ஸர்வாங்கா ந பாவா ந புநர்ப வா?”, “யஸ்யாகி லாமீவஹபிஸ் ஸுமங்கலைர் வாசோ விமிஸ்ரா குண கர்ம ஜந்மபி ! ப்ராணந்தி ஸூம்பந்தி புநந்தி வை ஜகத்யாஸ் தத்‌ வியுக்தா ஸவ ஸோபநா மதா?” என்று பகவஜ் ஜ்ஞாநமில்லாதவர்கள்‌ ஜீவந்ம்ருதராகையாலே அவர்கள்‌ ஸவ ப்ராயரென்றும்‌, ““ப்ராதுர் பாவைஸ் ஸுர நர ஸமோதே வதேவஸ் ததீயா ஜாத்யா வ்ருத்தைரபி ச குண தஸ்தாத்‌ ருஸோ நாத்ர கர்ஹா கிந்து ஸ்ரீமத்‌ புவநப வந த்ராணதோந்யேஷு வித்‌யா வ்ருத்த ப்ராயோ பவதி வித வாகல்பகல்ப? ப்ரகர்ஷூ” என்று பகவஜ் ஜ்ஞாநமில்லாத வர்களுடைய வித்‌யாதி,கள்‌ பகவத் ஸம்பந்த ஜ்ஞாந மென்கிற ஸெளமங்கல்ய மில்லாமையாலே விதவால்ங்காரமென்று இந்த ஜந்மாதிகளை ப்ரமாணிகரான ஜ்ஞாதாக்கள்‌ அநாதரிப்பர்க ளென்கிறார்‌. பகவஜ் ஜ்ஞாநமில்லாத ஜந்மாதிகள்‌ தயாஜ்யமென்னுமிடம்‌ சொல்லிற்று

முதல்‌ ப்ரகரணம்‌ முற்றிற்று

இனி மேல் ஆத்மா நிரூபக சேஷத்வ அனுகூல ஜென்மமே உத்க்ருஷ்ட ஜென்மம் என்னும் அத்தை அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரும் -முமுஷுக்களுமான மகாத்மாக்கள் ஆதார முகேன பிரகாசிப்பிக்கிறார் -இனி மேல்‌ பகவத்‌ விநியோகார்ஹமாயும்‌, பகவத் ஸம்பந்தத்தை உடைத்தாயு மிருக்கிற திர்யக் ஸ்தாவரங்களே யாகிலும்‌ மிகவும்‌ உத்க்ருஷ்டங்களென்னுமிடத்தை ““வாசிகை பக்ஷி மிருகதாம்‌ மாநஸைரந்த்ய ஜாதிதாம்‌ | ஸாரீரஜை: கர்ம தோஷைர்யாதி ஸ்தாவரதாம்‌ நர” (மநு) என்று வாசிக காயிக பலமாய்க் கொண்டு அல்லாதார்க்கு வரக்‌ கடவதான திர்யக் ஸ்தாவர ஜந்மங்கள்‌ போலன்றிக்கே, பகவத்‌ விநியோகார்ஹமாய்‌, பகவத் ஸம்பந்தத்தை உடைத்தாயுமிருக்கிற திர்யக் ஸ்தாவரங்களே உபாதேயமென்று மஹாத்மாக்களாலே பரிக்‌ரஹிக்கவும்‌ ஆதரிக்கவும்‌ படுகையாலே தந் முகேந ப்ரகாஸிப்பிக்கிறார்‌

அணைய ஊர புனைய அடியும் பொடியும் பட பர்வத பவனங்களில் ஏதேனுமாக ஜனிக்கப் பெறுகிற
திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை பெருமக்களும் பெரியோரும் பரிக்ரஹித்து பிரார்த்திப்பர்கள்-சூரணை -87-

(அணையப் பெறுகிற ஊரப் பெறுகிற புணையப் பெறுகிற திர்யக்கு ஸ்தாவர ஜன்மங்களை
பெருமக்கள்-ஸ்ரீ நித்ய ஸூரிகள் – பரிக்ரஹித்தார்கள்–அடி படப் பெறுகிற- பொடி படப் பெறுகிற-பர்வதத்திலே ஏதேனுமாகப் பெறுகிற –பவனங்களில் ஜனிக்கப் பெறுகிற திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை பெரியோர்— ஸ்ரீ ஸூகப் ப்ரஹ்ம ரிஷி-ஸ்ரீ உத்தவர் -ஸ்ரீ குலசேகர பெருமாள் -ஸ்ரீ ஆளவந்தார் -பிரார்த்திப்பர்கள்-)-அதாவது– அணைவது அரவணை மேல் பூம் பாவை யாகம் புணர்வது–திருவாய் -2-8-1 -என்று ஸ்ரீ பிராட்டி திரு மேனி ஸ்பர்சத்தோடு ஒக்க விகல்பிக்கலாம் படி -அத்யந்த ஸூக ஸ்பர்சமாய் – சைத்ய மார்தவ ஸௌரப்யங்களை பிரகிருதியாக உடைத்தாய் கொண்டு –ஸ்ரீயபதி யானவன் கண் வளர்ந்து அருளுகைக்கு பாங்காய் இருக்கும் ஸ்ரீ திரு அரவணை யாயும் –

*அணைவதரவணைமேல்‌” (திருவா.2 – 8 – 1) விடாயர்‌ மடுவிலே சேர்ந்தாப் போலே ஸ்ரம ஹரமாய்‌, அதாவது – “பூம்பாவை யாகம்‌ புணர்வது” என்று நாச்சிமாரோட்டைச்‌ சேர்த்தியோடே விகல்பிக்கலாம் படியான ஸூக ஸ்பர்ஸத்தை உடையனாகையாலே ஸர்வேஸ்வரன்‌ கண் வளர்ந்தருளுகைக்குப்‌ பாங்காயிருப்பதான திருவனந்தாழ்வானாயும்‌

அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்
புணர்வது இருவரவர் முதலும் தானே

இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே –2-8-1—சேஷ பூதன் அடிமை செய்து அல்லது தரிக்க மாட்டாதாப் போலே சேஷியும் திரு அநந்த ஆழ்வான் மேல் அணைந்து அல்லது தரியானாய் இருக்கிறபடி-பூ என்று அழகு -பாவை என்று ஸ்த்ரீத்வம்-நிரவதிகமான போக்யதையும் ஸ்த்ரீத்வத்தையும் உடையாளாய் இருக்கை-தேஹ குணத்தாலும் ஆத்ம குணத்தாலும் குறைவற்று இருக்கை-யாகம்-புணர்வது
இவருடைய ரூப குணத்திலே துவக்குண்டு ஆத்ம குணத்து அளவும் செல்ல மாட்டாது இருக்கை
அணைவது புணர்வது -என்கையாலே போகம் ஒத்து இருக்கிற படி-ரம மாணா வநேத்ரய -மாதா பிதாக்கள் கூட இருக்கும் படுக்கையில் சம்பந்தமே ஹேது வாக ஏறும் புத்ரனைப் போலே
பிராட்டியும் அவனும் திரு அநந்த ஆழ்வான் மேலே இருக்க-தமேவம்வித் பாதே நாத்யாரோஹதி -என்கிறபடியே அதிலே ஏறி அவர்களை இவனை அணைக்கை இறே முக்த ப்ராப்யம் –

ஊரும் புள் கொடியும் அஃதே –திருவாய் –10-2-3-என்கிற படியே ஆர்த்த ரஷணத்துக்கும் அனுகூலரை அனுபவிப்பக்கைக்கும் -தன் உகப்பு தனக்குமாக – அவன் பல காலம் மேற் கொண்டு நடத்துகைக்கு வாகனமான ஸ்ரீ கருள புள்ளாயும்-

“ஊரும்‌ புட்கொடியுமக்தே”” (திருவா. 10 – 2 – 3) என்கிறபடியே வேதாந்த வேத்‌யத்வத யோதகமான கருட வாஹநன்‌ கருட த்‌வஜன்‌ என்று சொல்லப்படும்படி அவனுக்கு வாஹநமாயும்‌ த்‌வஜமாயுமிருக்கும்‌ பெரிய திருவடியாயும்‌-

ஊரும் புள் கொடியும் அக்தே உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான்
சேரும் தண்ணனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில்
தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறியச் சொன்னோம்
பேரும் ஓர் ஆயிரத்துள் ஓன்று நீர் பேசுமினே-10-2-3—வாஹனமானது பெரிய திருவடி –கொடியும் அக்தே -இது நித்ய ஸூரிகளுக்கும் உப லக்ஷணம் -இது நித்ய ஸூரிகளுக்கு கொடுத்து வைக்கும் நாநா ரஸ அனுபவத்தை -இன்று செல்லுமவனுக்கும் கொடுக்கும் என்னுமிதுக்காக சொல்கிறது

தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும் தாளிணை மேலும் -திருவாய் -1-9-7-
புணைந்த தண் அம் துழாய் –என்கிற படியே -அவன் ஆதரித்து ( கேசவ பிரியா அன்றோ )சாத்துகைக்கு அர்ஹமான திருத் துழாயாயும் இருக்கும்- திர்யக் ஸ்தாவர ஜென்மங்களை-

“தாளிணை மேலும்‌ புனைந்த” (திருவா, 1 – 9 – 7), ““புனையுங் கண்ணி”” (திருவா. 4 – 3 – 2) என்கிறபடியே ஸர்வேஸ்வரத்வ ஸூூசகமான தனி மாலையாய்‌, ”மலர்த் துழாய் மாட்டே நீ மனம்‌ வைத்தாய்‌” (திருவா. 3- 1 & 4) என்கிறபடியே அவன் திருவுள்ளத்தைக்‌ கொள்ளை கொள்ளவற்றான திருத் துழாயாழ்வாராயுமிருக்கிற திர்யக் ஸ்தாவர ஜந்மங்களை-

தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும்
தாளிணை மேலும்
புனைந்த தண்ணம் துழாய் யுடை யம்மான்
கேளிணை ஒன்றும் இலாதான் கிளரும் சுடர் ஒளி மூர்த்தி
நாள் அணைந்து ஒன்றும் அகலான் என்னுடை நாவில் உளானே –1-9-7—அபிமத விஷயத்தை அணைவார் புழுகு நெய் ஒட்டிக் கொண்டு போமா போலே தாம் உகந்த படியே திருத் துழாயாலே திருமேனியை எல்லாம் அலங்கரித்து வந்தபடி –தோளிணை மேலும் ஸூ காடம் பரிஷஸ் வஜே -என்கிறபடியே அணைக்கும் தோள்களிலும்-நன் மார்பின் மேலும்-அவன் அப்படி அணைக்கைக்கு பற்றாசான பிராட்டி இருக்கிற திரு மார்பிலும்-சுடர் முடி மேலும் –இவ்வணைக்கை தான் வகுத்த விஷயம் ஆகில் இறே புருஷார்த்தம் ஆவது –அந்த சேஷித்வ பிரகாசகமான சர்வாதிகாத்தவ லக்ஷணமான திரு அபிஷேகத்திலும் –தாளிணை மேலும்- அந்த சேஷித்வத்துக்கு தோற்று விழும் திருவடிகளிலும்-சாத்தின திருத் துழாயை உடைய சர்வேஸ்வரன் -இது தான் சர்வாதிக லக்ஷணம் இறே

பூசும் சாந்து என்நெஞ்சமே; புனையும் கண்ணி எனதுடைய
வாசகம் செய் மாலையே;
வான் பட்டாடையும் அஃதே;
தேசமான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே;
ஈசன், ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே.–4-3-2—இவருடைய பாவ பந்தம் அவனுக்கு பரிமளிதமான அங்க ராகமே யாயிற்று-வழக்கனான மாலை அன்றிக்கே ஆதரித்துச் சூடும் மாலை –என்னுடைய யுக்தி மாத்திரமே-இவர் நெஞ்சிலும் பரிமளிதம் யாயிற்று இவர் வாக்கு -வாக்கான மாலை இறே சாந்துக்கு பூக்கட்டி இறே மனம் கொடுப்பது

மாட்டாதே யாகிலும் மலர்தலை மா ஞாலம் நின்
மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம் வைக்க
மாட்டாதே பல சமய மதி கொடுத்தாய் மலர்த்துழாய்
மாட்டே நீ மனம் வைத்தாய் மா ஞாலம் வருந்தாதே –
3-1-4–உன் திரு உள்ளத்தையும் கால் தாழ பண்ண வல்ல திருத் துழாய் முதலான போக்கிய ஜாதங்களிலே பிரவணனாய்-மாடு – இடம் -அதன் பக்கலிலே –

பெரு மக்கள் உள்ளவர் –திருவாய் -3-7-5-என்கிற படி -அஹ்ருத சஹஜ (திருட முடியாத -கூடவே உள்ள) தாஸ்யர் ஆகையாலே –-அசந்நேவ ச பவதி அஸத் ப்ரஹ் மேதி வேத சேத் -தைத்ரியம் –என்பது –
அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத சந்த மேனம் ததோ விது இது –தைத்ரியம் – -என்பதாக வேண்டாதபடி என்றும் ஒக்க உளராய் இருக்கிற மகாத்மாக்களான ஸ்ரீ நித்ய ஸூரிகள் -பகவத் கைங்கர்ய இச்சையாலே பரிக்ரஹித்தார்கள் –

பெரு மக்களுள்ளவர்‌’” (திருவா. 3 – 7 – 5) என்னும்படி மஹாத்மாக்களாயும்‌, ஸத்தையே பிடித்து மோஷத்வ ஜ்ஞாந திரோதாந மில்லாமையாலே “’அஸந்நேவ’”, ‘“ஸந்தமேநம்‌”’ (தை.ஆ.) என்ன வேண்டாதபடி இருக்கையாலே நித்யரான ஸூரிகள்‌ பகவத்‌ விநியோகார்ஹமாக ஸ்வேச்சையாலே பரிக்‌ரஹித்தார்கள்‌-

பெருமக்கள் உள்ளவர் தம் பெருமானை அமரர்கட்கு
அருமை ஒழிய அன்று ஆர்அமுது ஊட்டிய அப்பனைப்
பெருமை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
வருமையும் இம்மையும் நம்மை அளிக்கும் பிராக்களே.–3-7-5–நித்ய ஸூரிகள்–பேராளன் பேரோதும் பெரியோர் என்றும் –ச மஹாத்மா ஸூ துர்லபா -என்றும் முமுஷுக்களை யும் சர்வ உத்க்ருஷ்டராக சொல்லக் கடவதானால்-நித்ய சித்தராய்ச் சொல்ல வேண்டா இறே-உள்ளவர்- நிரூபகமான சேஷத்வ ஞானம் நித்யம் ஆகையால் தாங்களும் நித்யராய் இருக்கை –-இங்கு உள்ளாரைப் போலே அசன்னேவா-என்பது சந்தமேனம்-என்பதாக வேண்டாதவர்கள் –

பத்யு பிரஜானாம் ஐஸ்வர்யம் பசூணாம் வா ந காமயே அஹம் கதம்போ பூயாசம் குந்தோ வா யமுனா தடே – என்று பிராஜாபதி பசுபதிகள் உடைய ஐஸ்வர்யத்தையும் வேண்டேன் –பூத்த நீள் கடம்பேறி –நாச்சியார் -4-4–என்றும் –பூம் குருந்து ஏறி இருத்தி –நாச்சியார் -3-3–என்றும் சொல்லுகிற படி
யமுனை கரையில் அவன் திரு அடிகளால் மிதித்து ஏறின கடம்பாதல் -குருந்தாதல் ஆக வேணும் என்றும் –ஆஸாமஹோ சரண ரேணு ஜூஷாமஹம் ஸ்யாம் ப்ருந்தாவனே கிமபி குல்ம லதெவ்ஷதீனாம் யா துஸ்த்யஜம் ஸ்வ ஜன மார்ய பதஞ்ச ஹித்வா பேஜூர் முகுந்த பதவீம் ஸ்ருதிபிர் விம்ருக்யாம்–ஸ்ரீ பாகவதம் -10-48-61—என்று ஸ்ருதிகளால் தேடப் படும் ஸ்ரீ கிருஷ்ணன் போன வழியை ஸ்வ ஜனாதிகளும் அதிக்ரமித்து -யாவர் சில பெண்கள் பின் தொடர்ந்தார்கள் -அவர்கள் உடைய பாத ரேணுவை பஜித்து இருப்பனவாய் பிருந்தாவனத்தில் இருக்கும் சில செடிகள் கொடிகள் ஒவ்ஷதிகளில் வைத்து கொண்டு – ஏதேனும் ஒன்றாகவேனாக வேணும் என்றும் -( ஸ்ரீ உத்தவர் –

(அடியும்‌ பொடியும் பட) ““பத்யு? ப்ரஜாநாமைஸ்வர்யம்‌ பஸூநாம்‌ வா ந காமயே அஹம்‌ கதம்போ பூயாஸம்‌ குந்தேரா வா யமுநா தடே”’ என்று ப்ரஜாபதி பஸூ பதிகளுடைய ஐஸ்வர்யத்தையும்‌ வேண்டேன்‌; ”பூத்த நீள்‌ கடம்பேறி”’ (நா. தி. 4 – 4] என்றும்‌, ‘“பூங்குருந்தேறி யிருத்தி” (நா. தி. 3 – 3) என்றும்‌ சொல்லுகிற க்ருஷ்ணனுடைய திருவடிகளோட்டை ஸ்பர்ஸத்துக்கு விஷயமான குருந்தாதல்‌, கடம்பாதல்‌ ஆவேனாக வேணும்‌ என்றும்‌, ““ஆஸாமஹோ சரண ரேணு ஜுஷாமஹம்‌ ஸ்யாம்‌ ப்‌,ருந்ததாவநே கிமபி குல்மல தெளஷதீநாம்‌ । யா து ஸ்த்யஷம்‌ ஸ்வஜ ந மார்ய பதஞ்ச ஹித்வா பேஜுர் முகுந்த பதவீம்‌ ஸ்ருதிபிர் விம்ருக்‌யாம்‌”‘ (பாக,.10) என்று வேதங்களாலும்‌ தேடவரிய க்ருஷ்ணன்‌ போன வழியை ஸ்வ ஜநத்தையும்‌ குலாசாரத்தையும்‌ அதிக்ரமித்து யாவர் சில பெண்கள்‌ பின் தொடர்ந்தார்கள்‌, அந்த க்ருஷ்ணனுடையவும்‌, பெண்களுடையவும்‌ பாத ரேணுவை தரித்திருக்கும்‌ ப்‌ருந்தா வநத்தில்‌ சிறு செடிகள்‌ கொடிகள்‌ ஓஷதிகள்‌ இவையாவேனாக வேணும்‌ என்றும்‌,ஸ்ரீ ஸூகர் பிரார்த்தனை அடி பட -பொடி பட )

ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட
பூத்த நீள் கடம்பேறிப் புகப் பாய்ந்து
வாய்த்த காளியன் மேல் நடமாடிய
கூத்தனார் வரில் கூடிடு கூடலே–4-4—விஷ தக்தமான கடம்பு -திருவடிகள் பட்டவாறே பூத்தது-அங்கோல தைலத்துக்கு உள்ள சக்தியும் இங்கு இல்லை அன்றே –-கல்லு பெண்ணானால் கடம்பு பூக்கச் சொல்ல வேணுமோ-

எல்லே ஈது என்ன விளமை எம்மனைமார் காணில் ஒட்டார்
பொல்லாங்கு ஈது என்று கருதாய் பூங்குருந்தேறி யிருத்தி
வில்லால் இலங்கை யழித்தாய் நீ வேண்டியது எல்லாம் தருவோம்
பல்லாரும் காணாமே போவோம் பட்டைப் பணித்து அருளாயே—–3-3–நான் பழிக்கு அஞ்சினேன் ஆகிலும் உங்களுக்கு இது தர வேண்டுவது இல்லை இறே –என்று குருந்தின் மேல் இவற்றையும் கொண்டு அதில் பூ பொருந்தினால் போலே பொருந்தி -இழியக் கணிசியாதே இருந்தான்

கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே -ஸ்ரீ பெருமாள் -4-1-
மீனாய் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே –ஸ்ரீ பெருமாள் –4-2-
செண்மகமாய் நிற்கும் திரு உடையேன் ஆவேனே —ஸ்ரீ பெருமாள் -4-4-
தம்பகமாய் நிற்கும் தவம் உடையேன் ஆவேனே –ஸ்ரீ பெருமாள் -4-5-
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே –என்று ஸ்ரீ திருமலை ஆழ்வாரோட்டை சம்பந்தம் உடைய திர்யக் ஸ்தாவர ஜன்மங்களில் ஏதேனும் ஒன்றாகப் பெறுவேனாக வேணும் என்றும் –ஸ்ரீ பெருமாள் -4-10-இத்தகையப் பிறப்பையும் –(பொன்மலை – பர்வதங்களில் ஏதேனுமாக -)

(பர்வத) “கோனேரி வாழும்‌ குருகாய்ப் பிறப்பேனே’‘ (பெருமா. தி. 4 – 1) என்றும்‌, “திருவேங்கடச் சுனையில்‌ மீனாய்ப் பிறக்கும்‌ விதி யுடையே னாவேனே”‘ (பெருமா.தி, 4 2) என்றும்‌ “‘தம்பகமாய்‌ நிற்கும்‌ (பெருமா. தி. 4 – 5) , “*செண்பகமாய்‌ நிற்கும்‌‘” (பெருமா. தி. 4 – ச்‌) , “கானாறாய்ப் பாயும்‌”(பெருமா. தி. 4 – 7), எம்பெருமான்‌ பொன் மலை மேல்‌ ஏதேனுமாவேனே”'(பெருமா. தி. 4 – 10) என்றும்‌ திருமலை யாழ்வாரோட்டை ஸம்பந்தமுடைய திர்யக் ஸ்தாரவரங்களில்‌ ஏதேனுமொன்றாகப்‌ பெறுவேனாக . வேணும்‌ என்றும்‌,

வேங்கடத்து கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே –4-1--விரஜையைப் பற்றி அமாநவ வசத்திலே வர்த்திக்குமா போலே –கோனேரியைப் பற்றி வர்த்திக்கும் குருகாய் பிறப்பேன் -என்கிறார் –திரு வேங்கட சுனையில் மீனாய் பிறக்கும் விதி வுடையேன் ஆவேனே— 4-2-கீழ்ச் சொன்ன குருகாய் பிறக்கில் அதுக்கு சிறகு உண்டாகையாலே ஸ்ரீ திருமலையில் அல்லனாய் கழியப் பறக்கைக்கு யோக்யதை யுண்டு இறே-அப்படியும் ஓன்று அன்றியே-உத்பத்தி ஸ்திதி லயங்களுக்கு ஸ்ரீ திருமலையிலேயாய் மீனாய்ப் பிறப்பேன் -என்கிறார் –வேம்கடத்து செண்பகமாய் நிற்கும் திரு உடையன் ஆவேனே –4-4-ஸ்ரீ திருமலையிலே செண்பகமாய் நிற்கும் சம்பத்து உண்டாக வேணும் –
அதாவது –பகவத் பிரத்யாசத்தி இறே பிராப்யம் -அது கிட்டுமான பின்பு ஸ்தாவரமாய் நிற்கவும் அமையும்- -மேலே ஏறின சைதன்யத்தாலே கார்ய கரம் இல்லை –என்கிறார் –வேம்கட மலை மேல்
தம்பகமாய் நிற்கும் தவம் உடையன் ஆவேனே
–4-5-ஒரு பிரயோஜனத்துக்கு காகாதே அங்கே மூத்தற்று தீய்ந்து போவதொரு ஸ்தாவரமாம் தவம் உடையன் ஆவேனே –அநேக ஜன்ம தப பலம் என்று இருக்கிறார் காணும் இது தன்னை —வேங்கடத்துள் அன்னனைய பொற் குவடாம் அரும் தவததேன் ஆவேனே –4-6-பொற்குவடம் என்னும் அத்தனை -வேறு உபமானம் இல்லை –திரு வேங்கட மலை மேல்
கானாறாய் பாயும் கருத்துடையன் ஆவேனே
– 4-7-சஹ்யம் பற்றினதாகில் கீழே போம் இறே –
அங்கே சுவறிப் போம் காட்டாறுகள் அபிசந்தியை யுடையேனாக வேணும் –திருவேங்கட மலை மேல்
நெறியாய் கிடக்கும் நிலை வுடையேன் ஆவேனே
– 4-8-எப்போதும் ஒக்க வைஷ்ணவர்கள் சஞ்சரிக்கையாலே அவர்கள் பாத ரேணு படும்படி வழியாய்க் கிடக்கும் துணிவு உடையேன் ஆவேனே –
தொண்டர் அடிப்பொடி யாட நாம் பெறில் -என்று இருக்குமவர் இறேநின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தது இயங்கும் படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே
–4-9-அநந்ய பிரயோஜனரும் –பிரயோஜனாந்தர பரரும்-அந்ய பரரும் கிடந்தது சஞ்சரியா நின்றால் ஒரு நினைவுற்று அசேதனவத் கிடக்க வேணும்-பார தந்த்ர்யத்துக்கு அசேதன சமாதியாகவும் வேணும் – அது புருஷார்த்தமாகைக்கு காணவும் வேணும் –திரு வேம்கடம் என்னும் எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே –4-10–ஸ்ரீ அனந்தாழ்வான் இவ்விடத்துக்கு -ஸ்ரீ திருவேங்கடமுடையான் தானாகவே அமையும் -என்னும் அது என் என்னில் – சேஷ பூதர் திரளுக்கு புறம்பான சேஷியாகிலும் அமையும் என்கை–அங்கன் அன்றிக்கே ஸ்ரீ பட்டர் அருளிச் செய்யும் படி –
நாம் அறிய வேண்டா திரு வேங்கட முடையானும் அறிய வேண்டா –கண்டாரும் அறிந்து ஸ்லாகிக்கவும் வேண்டா ஸ்ரீ திருமலை மேலே உள்ள தொரு பதார்த்தமாக அமையும்
-என்றார் –

தவ தாஸ்ய ஸுகைக ஏக சங்கினாம் பவனேஷூ அஸ்த்வபி கீட ஜன்ம மே–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -55-என்று தேவரீர் உடைய தாஸ்ய சுகம் ஒன்றிலுமே சங்கத்தை உடையரான ஸ்ரீ வைஷ்ணவர் திரு மாளிகைகளிலே உத்பத்தி விநாசங்கள் இரண்டும் அங்கேயாம் படி – கீட ஜன்மமே எனக்கு உண்டாக வேணும் என்றும் -( பவனங்களில் ஏதேனுமாக -)

(ப,வநங்களில்‌]) “தவத,ஸ்ய ஸுகைக ஸங்கிநாம்‌ பவநேஷ் வஸ்த்வபி கீடஜந்ம மே”? (ஸ்தோ.ர. 55) என்று – தேவரீருடைய தாஸ்ய ஸுக மொன்றிலுமே ஸங்கத்தை உடையரான ஸ்ரீவைஷ்ணவர்கள் திருமாளிகைகளிலே உத்பத்தி விநாஸங்களிரண்டும்‌ அங்கேயாம் படியான கீட ஜத்மமே எனக்கு உண்டாக வேணும்‌ என்றும்‌;

தவ தாஸ்ய ஸுகைக ஸங்கிநாம்
பவநேஷ்வஸ் த்வபி கீடஜந்ம மே |
இதராவஸதேஷு மா ஸ்ம பூத்
அபி மே ஜந்ம சதுர் முகாத்மநா ||
–55–எம்பெருமானுக்குத் தொண்டு செய்வதில் மூழ்கியிருப்பவர்களின் திருமாளிகைகளில் ஒரு புழுவாகவாவது பிறக்க வேண்டும்.-மற்ற க்ருஹங்களில் ப்ரஹ்மாவாகப் பிறப்பதும் எனக்கு வேண்டாம்.-ஆளவந்தார் பகவானிடத்தில் அதிகமான பக்தியைப் பெற்றபின், பகவானிடத்தில் அடிமைத்தனத்துடன் நிறுத்தாமல், அவனுடைய அடியார்களுக்கு அடிமையாக இருப்பதை ப்ரார்த்திக்கிறார்.

இப்படி-அவனடி படவும்–அவனை அணைந்தார் அடியில் பொடி படவும் –-அவன் உகந்து அருளின நிலத்தே ஆதல் ,-அவன் அடியார் அபிமானம் உள்ள நிலத்திலே ஆதல் , வர்திக்கவும் ஈடாக ஜனிக்க பெறுகிற திர்யக் ஸ்தாவர ஜன்மங்களைபேராளன் பேரோதும் பெரியாரான–ஸ்ரீ பெரிய திருமொழி -7-4-4- –ஸ்ரீ ஸுக பிரம ரிஷி ,ஸ்ரீ உத்தவர் ,ஸ்ரீ குலசேகர பெருமாள் , ஸ்ரீ பெரிய முதலியார் முதலான முமுஷுக்கள் பிரார்த்தித்தார்கள் என்ற படி .

இப்படி பகவத்‌ பாகவத ஸம்பந்தங்களை யுடைய திர்யக் ஸ்தாவர ஜந்மங்களை *பேராளன்‌ பேரோதும்‌ பெரியோரான ஸ்ரீஸூக ப்‌ரஹ்மர்ஷி, ஸ்ரீகுலசேகரப் பெருமாள்‌, பெரிய முதலியார்‌ தொடக்கமான முமுஷுக்கள்‌ ப்ரார்த்தித்தார்கள்‌.

தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழப்
போராளும் சிலையதனால்   பொரு கணைகள் போக்குவித்தாய் என்று நாளும்
தாராளும் வரை மார்பன் தண் சேறை  எம்பெருமான் உம்பராளும்
பேராளன் பேரோதும் பெரியோரை யொரு காலும் பிரிகிலேனே  -7-4-4-வாயாலே திரு நாமம் சொல்லா விடில் தரியாத ஸ்வபாவத்தை உடையராயக் கொண்டு சங்கீர்த்தனம் பண்ணுகிற பெரியோர் உண்டு -( ஓதும் நிகழ் காலம் ) அவன் தானும் அகப்பட -மகாத்மான -என்னும்படி இருக்கிற மகா பிரபாவர்களை –ஷண காலமும் பிரிய காலம் எல்லாம் இடை விடாமல் அனுபவிக்கலாம் என்னிலும் பிரிய ஷமன் அல்லேன் –

இத்தால் –வாசிகை பஷி ம்ருகதாம் மானஸைர் அந்த்ய ஜாதிதாம் சரீரஜை கர்ம தோஷைர் யாதி ஸ்தாவரதாம் நர –மனு ஸ்ம்ருதி -12-9- -என்று இந்த விபூதியிலே -திர்யக், ஸ்தாவர ஜன்மங்கள் -வாசிக காயிக பாப பலங்களாக சாஸ்திரம் சொல்லா நிற்க-அப்படி இன்றிக்கே ஸ்ரீ பகவத் விநியோக அர்ஹமாக இந்த ஜன்மங்களை நித்ய ஸூரிகள் ஸ்வ இச்சையால் ஏறிட்டுக் கொள்வார்கள் என்றும் –
தாஸ்ய ரசஜ்ஞரான முமுஷுக்கள் தத் சம்பந்த -ததீய சம்பந்தம் உள்ள திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை பிரார்த்திப்பார்கள் என்றும் சொல்லுகையாலே –தாஸ்ய குண ஜன்மமே உத்க்ருஷ்ட ஜன்மம் என்றது ஆய்த்து–

ஆக இத்தால்‌ பகவஜ் ஜ்ஞாந ரஹிதமான உத்க்ருஷ்ட வர்ணாதிகள்‌ ஸத்துக்களுக்கு அநாதரணீய மென்றும்‌, பகவத்‌ விநியோகார்ஹமான திர்யக் ஸ்தாவர ஜந்மங்கள்‌ ஆதரணிய மென்னுமிடத்தையும்‌ சேர அருளிச் செய்தார்

பகவத் விநியோஹ அர்ஹம் ஆகையாலே திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை நித்ய ஸூரிகள் பரிக்ரஹிக்கைக்கு பிராப்தம் –அங்கன் இன்றிக்கே-முமுஷுக்கள் ஆன இவர்கள் – பகவத் ,பாகவத சேஷத்வ வாஞ்சையாலே திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை பிரார்த்தித்தார்கள் ஆகிலும்
உத்க்ருஷ்டதயா சாஸ்திர சித்தமான வர்ணத்தை இப்படிக் கழிக்கிறது என் என்ன அருளிச் செய்கிறார்-இனி மேல்‌ ஸேஷத்வத்துக்குப்‌ புறம்பான ஆத்மாவையும்‌ அநாதரிக்கிறவர்களுககு ஓளபாதிகமான வர்ணாதிகளை அநாதரிக்கச்‌ சொல்ல வேணுமோ? என்கிறார்‌-

சேஷத்வ பஹிர்பூத ஞான ஆனந்த மயனையும் சஹியாதார் த்யாஜ்ய உபாதியை ஆதரியார்களே-சூரணை -88-

(த்யாஜ்ய உபாதியை-தள்ளத்தக்க-கர்மம் அடியாக -இடையில் வந்த வர்ணத்தை -ஆதரிக்க மாட்டார்களே )-அதாவது – ந தேஹம் ந பிராணான் நச ஸுகம் அசேஷ அபிலஷிதம் நச ஆத்மானம்
நாந்யத் கிமபி தவ சேஷத்வ விபவாத் பஹிர்பூதம் நாத ஷணமபி சஹே யாது சததா வினாசம் தத் சத்யம் மதுமதன !விக்ஜ்ஞாபனமிதம்
–ஸ்தோத்ர ரத்னம் -56–என்று தேவரீர் உடைய சேஷத்வதுக்கு புறம்பான தேஹாதிகள் ஒன்றினையும் ஷணமும் சகியேன் –அவ்வளவு அன்றியே –ஞான ஆனந்த மயமான ஆத்ம வஸ்துவையும் சகியேன் –அது சததாவாக விநாசத்தை அடைவதாக —இந்த விண்ணப்பம் அஹ்ருதயம் அன்று -சத்யம்-திரு முன்னே பொய் சொன்னேன் ஆகில் தேவருக்கு பொய்யனான மது பட்டது படுகிறேன் என்கையாலே-சேஷத்வத்துக்கு புறம்பான போது – ஞான ஆனந்த மயஸ்த்வாத்மா-என்று-ஞான ஆனந்த மயத்வாலே ஸ்லாக்யமாய் இருக்கும் ஆத்மாவையும் சகியாதவர்கள் –சேஷத்வ விரோதி பூத அஹங்கார ஹேது ஆகையால் த்யாஜ்யமாய் -கர்ம நிபந்தனம் ஆகையாலே ஒவ்பாதிகமாய் இருக்கிற வர்ணத்தை ஆதரிப்பார்களோ என்கை–ஒவ்பாதிகமான இத்தை உபாதி என்றது கார்ய காரண உபசாரம்

“ந தேஹம்‌ ந ப்ராணாந்‌ ந ச ஸுக,மஸேஷாபி லஷிதம்‌ ந சாத்மாநம்‌ நாந்யத்‌ கிமபி தவ ஸேஷத்வ விப்வாத்‌ ! பஹிர்பூ,தம்‌ நாத க்ஷணமபி ஸஹே யாது ஸததா விநாஸம்‌ தத்‌ ஸத்யம்‌ மது மதந விஜ்ஞாபநமித,ம்‌”” (ஸ்தோ, ர. 57) என்று – தேவரீருடைய ஸேஷத்வத்துக்குப்‌ புறம்பான தேஹாதிகள்‌ ஒன்றையும்‌ ஸஹியேன்‌; அவ்‌வளவே யன்றியிலே ஜ்ஞாநாநந்த,மயமான ஆத்ம வஸ்துவையும்‌ ஸஹியேன்‌; அது ஸததாவாக விநாஸத்தை அடைவதாக. இது – அஹ்ருதயமன்று ஸத்யம்‌- இது அஸத்யமாகில்‌ தேவரீர் ஸந்நிதி யில்‌ அஸத்யம்‌ சொன்ன மது பட்டது படக் கடவேன்‌-என்று ஸேஷத்வத்துக்குப்‌ புறம்பான போது ““ஜஞாநாநந்த மயஸ்த்வாத்மா” (பாஞ்ச) என்று ஜ்ஞாநாநந்த மயனையும்‌ ஸஹியாதவர்கள்‌, ஸேஷத்வ ஜஞாந விரோதியான அஹங்காரத்துக்கு ஹேதுவாகையாலே த்யாஜ்யமாய்‌, காமமடியாக வருவதொன்றாகையாலே ஓளபாதிகமான வர்ணத்தை ஆதரியார்க ளென்னுமிடம்‌ சொல்ல வேணுமோ ? என்கிறார் –

இந்த வர்ணத்தினுடைய ஓளபாதிகத்வத்தை உதாஹரண முகத்தாலே வெளியிடுகிறார்‌-இந்த வர்ணத்தினுடைய ஓளபாதிகத்வத்தை உதாஹரண முகத்தாலே வெளியிடுகிறார்‌-

இதின் ஒவ்பாதிகத்வம் ஒரு ராஜா தன்னை மறை முனிவன் ஆக்கினவன் நீசனாக்குவித்த ராஜாவை
வாரே உறுப்பாக யஜிப்பித்து ஸ்வர்கம் ஏற்றின போதே தெரியும்-சூரணை -89-

(இதின் ஒவ்பாதிகத்வம்-வந்தேறி -ஒரு ராஜா-விசுவாமித்திரர் – தன்னை மறை முனிவன் ஆக்கினவன்-ப்ரஹ்ம ரிஷி யாகும்படி செய்த வசிஷ்ட பகவான் -நீசனாக்குவித்த ராஜாவை-வசிஷ்டராலே நீசனாகும் படி சபிக்கப்பட்ட திரிசங்கு என்னும் அரசன் – வாரே உறுப்பாக யஜிப்பித்து-தோலாகிய வார் -வேள்விக்கு அங்கமான உறுப்புத் தோலாக-ஸ்வர்கம் ஏற்றின போதே வர்ணம் வந்தேறி ஸ்வாபாவிகம் இல்லை என்று தெரியும்-சரு மாத்தின கதை -ஜமதக்கினி -பரசுராமர் -பிறப்பால் ப்ராஹ்மணர் -க்ஷத்ரியர் ஆனார் )அதாவது இவ் வர்ணத்தின் உடைய ஒவ்பாதிகத்வம் குசிக வம்சனாய் ராஜாவான விஸ்வாமித்திரன் ப்ரஹ்ம ரிஷித்வ காமனாய்–நெடும் காலம் தபசு பண்ணின தன்னை –-மந்திரம் கொள் மறை முனிவன் –பெருமாள் -10-2- என்னும் படி ப்ரஹ்ம ரிஷி ஆக்கின சக்திமான வசிஷ்டன் தன் வார்த்தை கேளாமல் -தன்னை அவ மதி பண்ணிப் போனது கொண்டு ஸ்வ புத்ரர்கள் பண்ணின சாபத்தாலே மார்பில் இட்ட யக்ஜோபவீதமே வாராம் படி -சண்டாளன் ஆக்குவித்த – இஷ்வாகு வம்சனாய் உள்ள திரி சங்கு என்கிற ராஜாவை -அந்த வார் தான் யஜ்ஞாங்கமான உருப்பு தோலாகக் கொண்டு தன்னுடைய தபோ பலத்தாலே யஜிப்பித்து ஸ்வர்க ஆரோகணம் பண்ணுவித்த போது ஸுஸ்பஷ்டம் என்கை .–இத்தால் ஒரு ஷத்ரியன் ஸூஹ்ருத விசேஷத்தால் -அந்த சரீரம் தன்னோடே ப்ரஹ்ம ரிஷி ஆகையாலும் –ஒரு ஷத்ரியன் துஷ்க்ருத விசேஷத்தாலே அந்த சரீரம் தன்னோடே சண்டாளன் ஆகையாலும் ,ஷத்ரியத்வம் போய் ப்ரஹ்ம ரிஷி ஆனவன் –தான் ப்ரஹ்ம ரிஷி ஆவதற்கு முன்பே ஷத்ரிய வேஷம் போய் சண்டாள வேஷமாய் நிற்கிறவனை அந்த வேஷம் தன்னோடே யஜிப்பித்து ஸ்வர்கத்தில் ஏற்றுகையாலும் வர்ணத்தின் கர்ம ஒவ்பாதிகத்வம் எல்லோருக்கும் தோன்றும் என்றது ஆய்த்து-

ருஷிக வம்ஸ உத்பவனாய்‌ ராஜாவான விஸ்வாமித்ரன்‌ ப்‌ரஹ்ம ரிஷித் வத்தை ஆசைப்பட்டு நெடுங்காலம்‌ தபஸ்ஸு பண்ணின தன்னை ‘‘மந்திரங்‌ கொள்‌ மறை முனிவன்‌” (பெருமா.தி.10 – 2) என்னும் படி ப்ரஹ்ம ரிஷியாக்கின வஸிஷ்டன்‌ தன்னுடைய வார்தாதிலங்கநம்‌ பண்ணின த்ரி ஸங்குவைத்‌ தன்‌ புத்ரர்களுடைய ஸாபத்தாலே மார்விலிட்ட யஜ்ஞோபவீதந் தானே வாராம்படி சண்டாளனாக்கு விக்க, அந்த த்ரிஸங்குவையும்‌ அந்த வாரே யஜ்ஞாங்கமான உறுப்புத் தோலாம் படித்‌ தன்னுடைய தபோ பலத்தாலே யஜிப்பித்து ஸ்வர்க்காரோஹணம்‌ பண்ணுவித்த போதே வர்ணம்‌ கர்மோபாதிகம்‌ என்னுமிடம்‌ ஸுவ்யக்த மென்கிறார்‌,-ஆக இத்தால்‌ ஒரு க்ஷத்ரியன்‌ ப்‌ரஹ்ம ரிஷியானானென்றும்‌, ஒரு க்ஷத்ரியன்‌ சண்டாளனானானென்றும்‌, அந்த சண்டாளனானவனை அந்த ப்‌ரஹ்ம ரிஷியானவன்‌ தபோ பலத்தாலே ஸ்வர்க்க மேற்றினான்‌ என்றும்‌ சொல்லுகையாலே வர்ணம்‌ ஓளபாதிகம்‌ என்னுமிடம்‌ ஸுஸ்திரமாய்த்து –

வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி வரு குருதி பொழி தர வன் கணை ஒன்றேவி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்
செந்தளிர் வாய் மலர் நகை சேர் செழும் தண் சோலை தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த அணி மணி யாசனத்து இருந்த அம்மான் தானே– 10-2–ரிஷி தனக்கே தனக்கு என்னாதபடி நிர்ப்பரனாய்த் தன்னுடைய அனுஷ்டானங்கள் எல்லாம் அடைவே அனுஷ்டித்து யாகத்தைத் தலைக் கட்டும்படி பண்ணி யஜ்ஞ் விக்னரரான மாரீச ஸூபாஹூகளைக் முடித்த பிள்ளைத் தனத்தை உடையவனை மாரீசன் பட்டானோ என்னில் -பின்னை இருந்த இருப்பு ம்ருத ப்ராயன் என்று கருத்து-

இனி மேல் ப்ராகரணிகமாய் வருகிற பிரமாத்ரு வைபவ ஸ்தாபனத்துக்கு உறுப்பாக பிரமாண பிரமேயங்களையும் கூட்டிக் கொண்டு மூன்றிலும் த்யாஜ்ய உபதேயங்கள் உண்டு என்னும் இடத்தை விபஜித்து சொல்லி – இவ் விசேஷம் அறிவார் பெரும் பேற்றையும் -இது அறியாமல் பாகவத ஜன்ம நிரூபணம் பண்ணுவார் அதஹ்பதிக்கும் படியும் அறிவிக்கிறார் —ஆக கீழ்‌ பகவத் ஸம்பந்த, ஜஞாந ரஹிதமான உத்க்ருஷ்ட ஜந்மம்‌ அபக்ருஷ்ட மாகையாலே அதினளவிலே நிற்கிற ப்ரமாதாக்கள்‌ அநுபாதேயரென்றும்‌, பகவத் ஸம்பந்த ஜ்ஞாந முகத்தாலே அபக்ருஷ்ட ஜந்மம்‌ உத்க்ருஷ்ட ஜந்மமாகையாலே அதிலே நிற்கிற ப்ரமாதாக்கள்‌ உபாதேயரென்றும்‌ சொல்லா நின்றது. இனி மேல்‌ ப்ரமாதாக்களளவே யன்றிக்கே ப்ரமாண-ப்ரமேய-ப்ரமாதாக்கள்‌ மூன்றிலும்‌ த்யாஜ்யமுமுண்டு, உபாதேயமுமுண்டு; அப்படி உபாதேயமான ப்ரமாண-ப்ரமேயங்களோடு விகல்பிக்கலாம்‌ படியான அந்த ப்ரமாதாக்களுடைய வைபவத்தை ப்ரமாணங்களும்‌ ப்ராமாணிகரும் சொல்லா நிற்க, அத்தை அறியாதே மந்த மதிகளாய்க் கொண்டு ஜந்ம நிரூபணம்‌ பண்ணுமவர்கள்‌ அத பதிப்பர்களென்று கீழே ““வீட்டின்ப வின்பப்பாக்களில்‌ த்‌ரவ்ய பாஷா நிரூபண ஸமம்‌ இன்பமாரியிலாராய்ச்சி” என்று உபக்ரமித்த அர்த்தத்தை நிகமிக்கிறார்‌

மா வுருவில் கள்ள வேடம் திருந்து வேத மலமான மானிடம் பாடல் சர்வ வர்ண சூத்ரத்வம் காடு வாழ் சாதியில் கடல் வண்ணன் வேடம் தென்னுரையில் ஹரி கீர்த்தி ஸ்வபசரில் பத்தி பாசனுமும்
அறிவார் ஆரார் அமரர் என்ன வேற (ஏற) அறியாதார் சாதி அந்தணர்கள் ஏலும் தகர விழுவர்
-சூரணை -90-

அதாவது
எம்மா உருவும் வேண்டும் ஆற்றாலாவாய் எழில் ஏறே –திருவாய் -5-8-2-என்கிற படியே எல்லா ரூபமும்
அப்ராக்ருதம் ஆகையாலே ஸ்லாக்யமுமாய் -இச்சா க்ருஹீதமாயுமாய் இருக்கும்-பகவத அவதார விக்ரஹங்களில் வைத்துக் கொண்டு -வேத அப்ராமாண்யத்தை உபபாதித்து –-வைதிக ருசியை குலைக்கைகாக – யதாஹி சோரஸ் சத்தாஹி புத்த – அயோத்யா -109-33-என்கிற படியே
கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புறம் புக்கவாறும் –திருவாய் -5-10-4-என்னும் படி பரிக்ரஹித்த புத்த முனியான விக்ரஹமும் –

எம்மா வுருவும்‌ வேண்டு மாற்றாலாவா யெழிலேறே”’ (திருவா. 5 – 8 – 2) “எவ் வுருவும்‌ மாவுரு’ என்று அவன்‌ பரிக்‌ரஹித்த விக்‌ரஹமெல்லாம்‌ அப்ராக்ருதமா யிருக்குமென்றும்‌, “இச்சா க்‌ருஹீதாபி மதோருதேஹா “” (வி.பு. 6 – 7 – 84) என்று இச்சையாலே பரிக்‌ருஹீதமா யிருக்குமென்றும்‌ சொல்லுகிற விக்‌ரஹங்களில் வைத்துக்கொண்டு “கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புரம் புக்கவாறும்‌”” (திருவா. 3 – 10 – 4) என்று, “யாதா ஹி சோரஸ்ஸ ததா ஹி புத்தா (ரா. ஆ. 109 – 73) என்று வேதத்துக்கு அப்ராமாண்யம்‌ சொல்லுகிற புத்‌த முனியான விக்‌ரஹமும்‌,

எம்மானே! என் வெள்ளை மூர்த்தி! என்னை ஆள்வானே
எம்மா உருவும் வேண்டு மாற்றால் ஆவாய்! எழிலேறே!
செம்மா கமலம் செழுநீர் மிசைக் கண் மலரும் திருக் குடந்தை
அம்மா மலர்க் கண் வளர்கின்றானே! என் நான் செய்கேனே?–5-8-2—எ உரு -மா உரு –எவ்வுரு கொண்டால் ஆர்த்த ரக்ஷணம் தலைக் கட்டும்-அவ்வுருவைக் கொள்ளும் -அது தான் அப்ராக்ருத திவ்ய சமஸ்தானமாய் இருக்கை-இச்சையால் என்னுதல்ஆஸ்ரிதற்கு ஈடாக என்னுதல்-நித்ய ஸூ ரிகள் நடு இருப்பில் காட்டில் ஆஸ்ரித கார்யம் செய்யப் பெறுகையாலே நிரதிசய தீப்தி உக்தனாய் மேனாணித்து இருக்கை –பல் பிறப்பாய் ஓளி வரு முழு நலம்

கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புறம் புக்க வாறும் கலந்த சுரரை
உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும்
வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும்
உள்ளமுள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே.–5-10-4-யதா ஹி சோரஸ் சததா ஹி புத்த -என்கிறபடியே க்ரித்ரிம வேஷத்தை கொண்டு – வேதைஸ் ச சர்வை ரஹமேவ வேத்ய-என்று வேதார்த்த தத்வ ஞானனானவன் வேத அபிராமாணிக வாதிகள் வேஷத்தை கொள்ளுகை-பாகத்தாலும் அழகிய சந்நிவேசத்தாலும் சென்று புக்க போதே ஆப்தன் என்று விஸ்வஸிக்கும் படி புக்க படியும்
வைதிக ஹிம்சையையும் சாமான்ய ஹிம்சையோபாதி யாக்கப் புகுகிறவன் ஆகையாலே -பசும் புல்லுச் சாவ மிதியாதே கூசி யடியிட்டுப் புக்க படி

பகவத் ஸ்வரூபாதிகளை யாதாவாக பிரதிபாதிக்கையாலே கட்டளைப் பட்டு இருந்த வேதத்தில் –
ந ஸ்மர்தவ்யோ விசேஷண வேத மந்த்ரோப்ய வைஷ்ணவ -என்கிற படியே-ஸ்மரிக்கவும் ஆகாத படி மல அம்சமான –மானிடம் பாடல் என்னாவது–திருவாய் -3-9-3 -என்கிற படி ஷேத்ரஜ்ஞரை பிரசம்சிக்கிற வாக்யங்களும் —

(திருந்து வேதம்‌) ஸகல ஸப்‌தங்களும்‌ ஸத்‌வாரகமாகவும்‌, அத்‌வாரகமாகவும்‌ ஸர்வேஸ்வரனை ப்ரதி பாதிக்கையாலே கட்டளைப் பட்ட வேதத்தில்‌ (மலமான மானிடம்‌ பாடல்‌) *’ஓர்‌ மானிடம்‌ பாடலென்னாவதே” (திருவா. 3 – 9 – 3) என்றும்‌, “ந ஸ்மர்த்தவ்யோ விஸேஷேண வேத மந்த்ரோப்ய வைஷ்ணவ:? ! காவ்யாலாபோபி ஜப்யோஸெள யத்ர ஸங்கீர்த்ய தேச்யுதா ” என்றும்‌ சொல்லுகிறபடியே ஹேயரான க்ஷேத்ரஜ்ஞரை ப்ரஸம்ஸிக்கிற வாக்யங்களும்‌,-

ஒழிவு ஒன்று இலாத பல் ஊழிதோறு ஊழி நிலாவப் போம்
வழியைத் தரும் நங்கள் வானவர் ஈசனை நிற்கப் போய்க்
கழிய மிக நல்ல வான்கவி கொண்டு புலவீர்காள்!
இழியக் கருதி ஓர் மானிடம் பாடல் என்னாவதே?–3-9-3—நின்ற நிலையும் அழியும்படி பார்த்து த்ருஷ்டத்தில் ஸ்வரூப ஹானி -அத்ருஷ்டத்தில் நரகம் அறிவுக்கு பிரயோஜனம் மேல் மேல் என உயர்ந்த தேடுகை அன்றோ –ஷூ த்ர மனுஷ்யரை கவி பாடுகிறது ஏதுக்காக–பகவத் சேஷ பூதராய் இருக்கிற உங்கள் ஸ்வரூபத்துக்கு சேர்ந்ததோ -உங்கள் கவிக்கு சேர்ந்ததோ-பாட்டு உண்கிறவனுக்கு ஒரு நன்மை உண்டாகவோ –

ந சூத்ரா பகவத் பக்தா விப்ரா பாகவதஸ் ஸ்ம்ருதா சர்வ வர்ணேஷு தே சூத்ரா யேஹ்ய பக்தா ஜனார்தனா –பாரதம் ஆஸ்வ -118-32-என்று எல்லா வர்ணங்களிலும் பகவத் பக்தர் அல்லாதார் சூத்ரத்வம் ஆகிற –-பிரமேயத்திலும் -பிரமாணத்திலும் -பிரமாதாக்களிலும் உண்டான த்யாஜ்ய அம்சங்களும்-

(ஸர்வ வர்ண ஸூத்‌ரத்வம்‌) “ந ஸூத்‌ரா பகவத்‌ பக்தா விப்ரா பாகவதாஸ் ஸ்ம்ருதா? | ஸர்வ வர்ணேஷு தே ஸூத்‌ரா யே ஹ்ய பக்தா ஜநார்த்தநே” என்று பகவத்‌ பக்தனல்லாதவன்‌ எல்லா வர்ணங்களிலும்‌ ஸூத்‌ரனென்றும்‌, ப்ரமாண-ப்ரமேய -ப்ரமாதாக்கள்‌ மூவரிலும்‌ த்யாஜ்யரையும்‌ சொல்லி இனி மேல்‌ உபாதேயரையும்‌ சொல்லுகிறது-

காடு வாழ் சாதியும் ஆகப் பெற்றான் -நாச்சியார் -12-8-என்று ஊர் மனையில் வஸியாமல் – பசுக்களுக்கு புல்லும் தண்ணீரும் உள்ள காடுகளில் வர்திக்கையாலே –-காடு வாழ் சாதி -என்கிற கோப ஜாதியில் சஜாதீயனாய் வந்து அவதரித்து நிற்கிற ஸ்ரீ கிருஷ்ணன் உடைய –காலிப் பின்னே வருகின்ற கடல் வண்ணர் வேடத்தை வந்து காணீர் –பெரியாழ்வார் -3-3-1–என்று தாம் அனுபவித்து பிறர்க்கும் அழைத்துக் காட்டும் படி பசு மேய்த்து வருகிற போதை அலங்காரத்தோடு கூடி இருக்கிற விக்கிரஹமும்-

(காடு வாழ் சாதியில்‌ கடல் வண்ணன் வேடம்‌] ““கற்றினம்‌ மேய்க்கிலும்‌ மேய்க்கப்‌ பெற்றான்‌ காடு வாழ்‌ சாதியுமாகப் பெற்றான்‌”” (நா.திரு. 12 – 8) என்று கோபாலனாய்க்‌ கொண்டு காட்டிலே பசுக்களின் பின்னே ”கறையினார்‌” (திருவா. ச – 8 – 4) என்னும் படி பேணாதே திரியச் செய்தேயும்‌ ‘‘கடல் வண்ணன்‌ வேடத்தை வந்து காணீர்‌”” (பெரியா… 3 – 3 – 1) என்னும்படி பிறர்க்கும்‌ அழைத்துக் காட்ட வேண்டும்படி த்ரஷ்டவ்யமான க்ருஷ்ண லிக்ரஹமும்‌,

கற்றினம் மேய்க்கலும் மேக்கப் பெற்றான் காடு வாழ் சாதியுமாகப் பெற்றான்
பற்றி உரலிடை ஆப்புமுண்டான் பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக் கோலோ
கற்றன பேசி வசவு உணாதே காலிகளுய்ய மழை தடுத்த
கொற்றக் குடையாக வேந்தி நின்ற கோவர்த்தனத்து என்னை யுய்த்திடுமின்–12-8-வானிளவரசாய்-பெரியாழ்வார் -3-6-3- இருக்குமவன் –திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி –திருவாய் -10-3-10-என்கிறபடியே-(தெய்வத்தை காட்டிலும் ஐந்தாம் வேற்றுமை -அதை விட / இரண்டாம் வேற்றுமை அங்கேயும் –டியோ டியோ -சொல்லி -பசு மேய்க்கும் மந்த்ரம் என்பான் -ஹாவு ஹாவு சொல்வது போலே )அது தன்னிலும் ஸ்வ ரஷணத்தில் அந்வயம் அல்லாத கன்றுகளை மேய்க்கையையே மிகவும் பெறாப் பேறு பெற்றானாக நினைத்து இருந்தான் –கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் -திரு நெடும் தாண்டகம் -16–இவனுக்கு ஒரு ஜன்மம் இல்லை காண் என்னும் இழவு தீர பசுக்களுக்கு புல்லும் தண்ணீரும் உள்ள காட்டைத் தேடி-அங்கு தங்கும்படியான ஜன்மமும் ஆகப் பெற்றான் –

நிறையினால் குறைவில்லா நெடும் பணைத் தோள் மடப்பின்னை
பொறையினால் முலை யணைவான் பொரு விடை ஏழு அடர்த்த உகந்த
கறையினார் துவர் உடுக்கைக் கடையாவின் கழி கோல் கை
சறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவிலமே –4-8-4—கறை மிக்கு துவரூட்டின -சிவந்த தோலாயிற்று –உடுக்கை -இடையர் காட்டிலே போனால் முன் கிழியாமைக்கு உடுக்கும் உடைத் தோலைச் சொல்லுகிறது – துவர் என்னைச் செய்தே-கறையினார் என்கிறது -காட்டில் பழங்களை அறுத்து இடுகையாலே கறை மிக்கு இருக்கை

சீசீலைக் குதம்பை ஒருகாது ஒரு காது செந்நிறம் மேல் தோன்றிப் பூ
கோலப் பணைக் கச்சம் கூறை உடையும் குளிர் முத்தின் கோடாலாமும்
காலிப் பின்னே வருகின்ற கடல் வண்ணன் வேடத்தை வந்து காணீர்
ஞாலத்து புத்திரனைப் பெற்றார் நங்கைமீர் நானே மற்றாரும் இல்லை – 3-3 1- காலி –என்கிற இது –
ஜாதிப் பேர் ஆகையாலே இவ்விடத்தில் கன்றுகளைச் சொல்லுகிறது – கன்றுகளை வயிறு நிறைய மேய்த்து – அவற்றை முன் நடக்க விட்டு – தான் பின்னே வாரா நிற்க –கடல் போன்ற நிறத்தை உடையவனுடைய அலங்காரத்தை வந்து காணும் கோள்

தென்னுரையில் கேட்டு அறிவது உண்டு -பெரிய திரு மடல் -6-என்கிற படி தஷிண திக் வர்தியானது கொண்டு – தென்னுரை என்று சொல்லப் படுகிற திராவிட பாஷை யான பிரபந்தங்களில் –
ஹரி கீர்த்திம் வினை வான்யத் ப்ராஹ்மணோ நரோத்தம பாஷா காநம் ந கர்த்தவ்யம் -காதவ்யம்-
தஸ்மாத் பாபம் த்வயா க்ருதம்
–ஸ்ரீ மத்ஸ்ய புராணம் – இத்யாதிப் படியே பகவத் பிரதிபாதாக மானவையும்-

(தென்னுரையில்‌ ஹரி கீர்த்தி) த்‌ராவிட பாஷா பரிகல்பிதமான ப்ரபந்தங்களில்‌ வைத்துக் கொண்டு *ஹரி கீர்த்திம்‌ விநைவாந்யத் ‘ ” (மாத்ஸ்யே) இத்யாதிப்படியே பகவத் ப்ரதிபாதக மானவையும்‌ –

மானோக்கின் அன்ன நடையார் அலரேச ஆடவர் மேல் —–38
மன்னு மடலூரார் என்பதோர் வாசகமும்
தென்னுரையில் கேட்டு அறிவது உண்டு அதனை யாம் தெளியோம் ——39
மன்னும் வட நெறியே வேண்டினோம் –மடலூர்வதென்பது நாணத்தை அறவே யொழித்துக் காதலை வெளிப்படையாக்கித் தெருவேற்ப்புறப்பட்டுச் செய்யுங் காரியமாதலால், நாணத்தையே ஸர்வஸ்வமாகக் கொண்ட மாதர்கட்கு இக்காரியம் கூடவே கூடாதென்று தமிழர் மறுத்தனர்.-அந்த ஸித்தாந்தத்தையே “கடலன்ன காமத்தராயினும் மாதர், மடலூரார் மற்றையார்மேல்“ இத்யாதிகளால் பின்புள்ளார் வெளியிட்டனர்.-காதல் கடல்போல் வளர்ந்து கிடந்தாலும் அபவாதத்துக் ஆஸ்பதமான மடலூர்தல் பெண்டுகளுக்கு கூடாதென்பது தமிழர்களின் கொள்கையாயிருந்தாலும் அதனை நான் உசிதமாகக் கொள்ளேனென்கிறார் ஆழ்வார்.-மடலூர்வதற்குக் காமத்தின் மிகையே அதிகாரமாதலால் அப்படிப்பட்ட காம்முள்ளவர்கள் ஆணாயிருந்தாலென்? பெண்ணாயிருந்தாலென்? யாரேனும் மடலூரலாம், ஆசையை வரம்பிட்டுக்காக்க ஆராலும் முடியாது, அரசராணைக்குக் கட்டுப்படுமோ ஆசை, வேலியடைத்தால் நிற்குமோ வேட்கை,-அளவு கடந்த வேட்கையின் காரியமாக விளையக்கடவதான் மடலூருகையை ஆண்கள் தாம் செய்யலாம், பெண்கள் செய்யலாகாதென ஒரு வரம்பு கட்டுவதானது ப்ரேமத்தின் போக்கை அறியாதவர்களுடைய செயலாமத்தனை யென்பது ஆழ்வாருடைய திருவுள்ளம்

ஸ்வபசோபி மஹீபால விஷ்ணு பக்தோ த்விஜாதாக –என்கிற படி ஸ்வபசரில்-பெறற்கு அரிய நின் பாத பத்தி யான பாசனம் –திருச்சந்த -100–என்று ஸ்வ யத்னத்தாலே,-பெறற்கு அரிதாய் உள்ள பகவத் பாத கமல பக்தி ஆகிற தனம் உடையார்களும் ஆகிற –பிரேமயாதி த்ரயத்திலும் உபாதேய அம்சங்களும் ஆன இவ் விபாகம் அறிவார் –நீரார் முகில் வண்ணன் பேரார் ஓதுவார் ஆரார் அமரர்—திருவாய் -10-5-8-என்கிற படியே – ஏதேனும் ஜென்ம வருத்தங்களை உடையேரே ஆகிலும் -ஸூரி சமர் என்னும் படி ஸ்லாக்க்கியராய் –இலங்கு வான் யாவரும் ஏறுவர் சொன்னாலே –திருவாய் -3-8-11-என்கிற படியே
அத்யுஜ்வலமான பரம பதத்தை ப்ராபிக்க —

(ஸ்வபசரில்‌) ஸ்வபரோபி மஹீபால் விஷ்ணு பக்தோ த்விஜாதி க” (பாஞ்ச. என்று ஸ்வபாகரே யாகிலும்‌, (பத்தி பாசனமுமறிவார்‌) “பெறற்கரிய நின்ன பாத பத்தியான பாசனம்‌” (திருச்ச, விரு. 100) என்று சொல்லுகிறபடியே ஸ்வ யத்நத்தாலே பெறுதற்கரிதான பகவச் சரணார விந்தங்களில்‌ பக்தியைத்‌ தங்களுக்கு தநம்‌ என்று அறியுமவர்களுமாகிற ப்ரமாண -ப்ரமேய-ப்ரமாதாக்கள்‌ மூன்றும்‌ -உத்க்ருஷ்ட தமம்‌ என்றும்‌ சொல்லி இந்த உத்க்ருஷ்ட -தமமான ப்ரமாண-ப்ரமேயங்களோடு விகல்பிக்கும்படியான இந்த ப்ரமாதாக்கள் வைபவத்தை (ஆராரமாரென்ன) “நீரார்‌ முகில் வண்ணன்‌ பேராரோதுவார்‌ ஆராரமரரே”” (திருவா. 10 – 5 – 8) என்று விலக்ஷண விக்‌ரஹ யுக்தனான ஸர்வேஸ்வரனுடைய திரு நாமங்களை அநுஸந்திக்க வல்லவர்கள்‌ ஏதேனுமொரு ஐந்ம வ்ருத்தங்களை உடையரே யாகிலும்‌ அவர்கள்‌ நித்ய ஸூரிகள்‌ என்றும்‌, (ஏற) ”இலங்குவான்‌ யாவரூமேறுவர்‌ சொன்னாலே”” (திருவா. 3 – 8 – 11) என்று பகவத விஷயத்தில்‌ அந்வயித்தவர்கள்‌ ஆரேனுமாகிலும்‌ தேஸ விஸேஷ ப்ராப்தி பண்ணுவர்கள்‌ என்றும்‌

பிறப்பினோடு பேர் இடர் சுழிக்கண் நின்று நீங்கும் அஃது
இறப்ப வைத்த  ஞான நீசரைக் கரைக்கொடு ஏற்றமா
பெறற்கு அரிய நின்ன பாத பத்தியான பாசனம்
பெறற்கு அரிய மாயனே யெனக்கு நல்க வேண்டுமே -100-பெருதருக்கு அரிய உன் திருவடிகளை விஷயமாக உடைத்தான பரம பக்தி யாகிற பாஜனத்தை-ப்ராப்யன் ஆனவனை காட்டில் தத் விஷய பக்தி துர்லபம் இறே–யா ப்ரீதி ரவிவேகா நாம் -என்றும் – முக்திஸ் தஸ்ய க்ரேஸ்திதா -என்றும் –
சமஸ்த ஜகதாம் மூலே யஸ்ய பக்திஸ் ஸ்திராத்வயி -என்றும் சொல்லக் கடவது இறே-பாசனம் -மரக்கலம்-அத்தாலே தனத்தை லஷிக்கிறது -தனமாய தானே கைகூடும் -என்னக் கடவது இறே-யாமேவை ஷவ்ர்ணு தேதே நலப்யே -என்றும் –ஹ்ர்தாம நீ ஷா மனஸா பிக்ல்ப்த –என்றும் –
வேதாந்தங்கள் உன் திருவடிகளைப் பெறுகைக்கு சாதனமான பக்தியை உபதேசித்து-வைத்தது இறே -அந்த பக்தியை –பெறற்கு அரிய மாயனே –உன் கேவல க்ருபை ஒழிய வேறு ஒரு வழியாலே உன்னைப் பெற இருப்பார்க்கு இருப்பார்க்கு-சித்தியாத ஆச்சர்ய பூதனே –லோகத்திலே சாத்யங்களுக்கு  எல்லாம் சாதனம் உண்டாய் இருக்க அநந்ய சாத்யனான-ஆச்சர்ய பூதனே-எனக்கு நல்க வேண்டுமே – பெற வேண்டுமவை எல்லாவற்றுக்கும் உன் கிருபையை  அல்லாது அறியாத எனக்கு-அந்த பக்தியை தேவரீர் தந்து அருள வேணும் பிரயோஜநாந்த பரருக்கு மோஷ ருசியைப் பிறப்பித்து -தத் சாதனமான பக்தியைக் கொடுத்தருளக் கடவ தேவரீர் – அநந்ய ப்ரயோஜனனாய் – அநந்ய சாதனனாய் –இருந்துள்ள எனக்கு த்வத் அனுபவ பரிகரமான அந்த பக்தியை தந்து அருளுகை தேவரீருக்கு அபிமதம் அன்றோ -அத்தை தந்து அருள வேணும் -என்றது ஆய்த்து –

சாரா ஏதங்கள் நீரார் முகில் வண்ணன்
பேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரரே
–10-5-8–நீராலே பூர்ணமான மேகம் போலே இருக்கிற நிறத்தை யுடையவன் -அவ்வடிவைக் காணும் தனையும் இ றே உபதேசிக்க வேண்டுவது – பேர் ஆர் ஓதுவார் -அவன் திரு நாமத்தை நிரந்தரமாகச் சொல்லுவார் யாவர் சிலர்-ஆரார் அமரரே–அவர்கள் ஏதேனும் ஜென்ம வ்ருத்தங்களை யுடையரே யாகிலும் அவர்கள் இருந்த படியே நித்ய ஸூரிகளோடு ஒப்பர்கள்--இத்தால் ஆஸ்ரயிப்பார்க்கு ருசி பிறக்கைக்காக அவர்கள் ஏற்றம் அருளிச் செய்கிறார் –

புலம்பு சீர்ப் பூமி யளந்த பெருமானை நலங்கொள் சீர் நன் குருகூர்ச் சடகோபன் சொல்
வலங்கொண்ட வாயிரத்துள் இவையுமோர் பத்து இலங்குவான் யாவரும் ஏறுவர் சொன்னாலே –3-8-11-இருந்ததே குடியாக ஏத்தும் படியான குணங்களை உடையனாய் தன் விபூதியை அளந்து கொள்ளுகையினாலே ஸ்வாமி யானவனை யாய்த்து கவி பாடுகிறது-இதில் சொன்ன பெரு விடாயை உடைய ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திகள் ப்ரதிபாத்யனை விளாக் குலை கொண்டு இருக்கும் -என்னுதல்
ப்ரதிபாதன சாமர்த்யார்த்த்தை உடைய ஆயிரம் என்னுதல் அத்விதீயமான இப்பத்தை சொன்னால் இன்னார் இனையார் என்னாதே பகவத் அனுபவத்துக்கு விச்சேதம் இல்லாத வை லக்ஷண்யத்தை உடைய பரமபதத்தை பிராபிக்க பெறுவர் 

இப் பிரேமயாதி த்ரயத்திலும் ,கீழ் சொன்ன வாசி அறியாதாராய் கொண்டு -பாகவத ஜென்ம நிரூபணம் பண்ணுவார் –அமர வோரங்க மாறும்—திருமாலை -43-என்கிற பாட்டில் சாங்கமாக சகல வேதங்களையும் அத்யயனம் பண்ணி ததீய ஸ்ரேஷ்டருமாய் -உத்க்ருஷ்ட ஜன்மாக்க்களுமாய் இருந்தார் ஆகிலும் தேவரீர் திரு அடிகளின் சம்பத்- ஏக நிரூபணியரான ஸ்ரீ வைஷ்ணவர்களை – ஜென்மாதிகளை இட்டு நிந்திப்பர் ஆகில் காலாந்திர தேசாந்தர அன்றிக்கே அப்போதே அவ்விடம் தன்னிலே அவர்கள் தங்கள் சண்டாளர்கள் ஆவர்கள் என்கிற படி உத்க்ருஷ்ட ஜென்மாக்களே ஆகிலும் கர்ம சண்டாளராய் இனி ஒரு காலமும் கரை ஏற யோக்யதை இல்லை என்னும் படி அதபதிப்பர்கள் என்கை-அநாசாரான் துராசாரான் அஜ்ஞாத்ரூந் ஹீன ஜென்மன மத் பக்தான் ஸ்ரோத்ரியோ நிந்தன் சத்யஸ் சண்டாளதாம் வ்ரஜேத்–ப்ரஹ்மாண்ட புராணம் -என்னக் கடவதிறே-

இப்படி ஸர்வோத்க்ருஷ்டராகச்‌ சொல்லா நிற்க (அறியதார்‌) ஜந்மாதிகளால்‌ வந்த அஹங்காரத்தாலே மந்த மதிகளாய்க் கொண்டு அவர்கள் வைபவத்தை அறியாதே ஜந்ம நிரூபணம்‌ பண்ணுமவர்கள்‌ (சாதி யந்தணர்களேலும்‌ தகர விழுவர்‌) ‘அமரவோரங்கமாறும்‌”’ (திருமாலை 43) என்கிற பாட்டின் படியே ““அநாசாராந்‌ துராசாராந் அஜ்ஞாத்ரூதந் ஹீந ஜந்மந? । மத்‌ பக்தாந்‌ ஸ்ரோத்ரியோ நிந்தந்‌ ஸத்‌யஸ் சண்டாளதாம்‌ வ்ரஜேத்‌”” என்றும்‌ சொல்லுகிறபடியே உத்க்ருஷ்ட ஜந்மத்திலே பிறந்து அங்க ஸஹிதமான நாலு வேதங்களையும்‌ அதிகரித்து பகவத்‌ பக்தரா யிருந்தார்களே யாகிலும்‌ ஜந்மாதிகளால்‌ குறைய நின்று பகவதீயரா யிருப்பாருடைய ஜந்மத்தை காதா சித்கமாக வாகிலும்‌ நிரூபித்‌தார்களாகில்‌ அந் நிலையிலே அவர்கள்‌ சண்டாளராவர்‌ என்கையாலே பின்னை ஒரு காலும்‌ உஜ்ஜிவந மில்லாதபடி அத, பதிப்பர்க ளென்கிறார்‌. “ஸூத்‌ரம்‌ வா பகவத்‌ பக்தம்‌ நிஷாதம்‌ ஸ்வபசம்‌ ததா | ஈக்ஷதே ஜாதி ஸாமாந்யாத்‌ ஸ யாதி நரகம்‌ நர- என்றும்‌, “ப்ரத்யக்ஷிதாத்மநாதாநாம்‌ நைஷாம்‌ சிந்த்யம்‌ குலாதிகம்‌” என்றும்‌ சொல்லா நின்றதிறே –

அமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதித்
தமர்களில் தலைவராய சாதி அந்தணர்கள் ஏலும்
நுமர்களைப் பழிப்பர் ஆகில் நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே
அவர்கள் தாம் புலையர் போலும் அரங்க மா நகர் உளானே –43-அத்விதீயமான ஷட் அங்கங்களையும் அழகிதாக பாடங்களையும் தரித்து அர்த்தத்தையும் தரிக்குமவர்கள் ஆகை –அங்கங்களுக்கு அத்விதீயம் ஆவது ஓர் அங்கத்தில் ஜ்ஞானம் குறைவு அற உண்டானால் லோகத்தார் அவனை சர்வஞ்ஞன் என்று சொல்லும்படி இருக்கை – சீஷாயாம் வர்ண சிஷா -இத்யாதி –ஜாதி சண்டாளனுக்கு ஒரு காலத்திலே வைஷ்ணவன் ஆகைக்கு அதிகாரம் உண்டு – இவன் உயர வேறித் தானே விழுந்தவன் ஆகையாலும் பாகவத அபசாரம் ஆகிற மகா பாபத்தை பண்ணினவன் ஆகையாலும் அவனிலும் தண்ணியன் கர்ம சண்டாளன் இறே –பெறுகைக்கு அவர்கள் சம்பந்தமே அமைகிறாப் போலே
இழக்கைக்கும் அபசாரமே அமையும்

ஆக
சூரணை 75–வீட்டின்ப இத்யாதி வாக்கியம் தொடங்கி, சூரணை -84 -நிமக்னரை உயர்த்த தாழ இழிந்த்தார் -என்னும் அளவும் -ஆழ்வாருடைய வைபவத்தை பிரதிபாதித்து – தத் ஸ்தாபன அர்த்தமாக -மிலேசனும் பக்தன் ஆனால் -என்று தொடங்கி – மேல் எல்லாம் சாமான்யேன பாகவத வைபவத்தை விஸ்தரேண பிரகாசிப்பித்தது -உபக்ரம வாக்கியத்தில் போலே – பிரமாண பிரமேயங்கள் உடனே சேர்த்து பிரமாத்ரு வைபவத்தை நிகமித்தார் ஆய்த்து –

இப்படி பாகவத சாமான்ய ப்ரயுக்த வைபவம் மாதரம் அன்றிக்கே ,-ஜனக தசரத -சூரணை -82 -இத்யாதி வாக்கியம் தொடக்கமாக மூன்று வாக்யத்தாலே -கீழ் சொன்ன வைபவ விசேஷதய உதகமான பிரமாணம் ஏது என்னும் ஆ காங்க்ஷையிலே அருளி செய்கிறார் மேல் –இப்படி பாகவத ஸாமாந்யத்தாலே ஆழ்வாருடைய உத்பத்தி நிரூபிக்கலாகாது என்கிற மாத்ர மன்றிக்கே, ஆழ்வாருடைய அவதாரம்‌ வ்யாஸ ஸூகாதி களாலும்‌ ப்ரகாஸிப்பிக்கப்‌ பட்ட தென்கிறார்‌ மேல்‌.-

தமிழ் மா முனி திக்கு சரண்யம் என்றவர்களாலே க்வசித் க்வசித் என்று இவர் ஆவிர்பாவம் கலியும் கெடும் போலே ஸூசிதம்-சூரணை-91-

தமிழ் மா முனி திக்கு சரண்யம் என்றவர்களாலே–-அதாவது-தஷிண திக் க்ருதா யேன சரண்யா புண்ய கர்மண –குருகா மஹாத்ம்யம் –என்று – வண் தமிழ் மா முனி –என்கிற படியே -திராவிட சாஸ்திர பிரவர்தகரான அகஸ்தியன் இருக்கிற திக்கு சர்வருக்கும் புகல் இடம் என்றே மக ரிஷிகளால் –
இப்போது இது சொல்லிற்று – வைதிகரான ருஷிகள்-திராவிட பிரபந்த வக்தாவான இவரை இப்படி
பஹுமதி பண்ணி சொல்லக் கூடுமோ என்று சங்கிப்பார்க்கு ஒரு திராவிட ஜ்ஞானாலே தஷிண திக்குக்கு நன்மை சொன்னவர்கள் திராவிட பிரபந்த முகேன – லோஹ உஜ்ஜீவகரரான இவரையும் இப்படி பஹுமானம் பண்ணிச் சொல்லக் குறை இல்லை என்று தோற்றுகைக்காக –க்வசித் க்வசித் என்று இவர் ஆவிர்பாவம் —அதாவது –
க்ருதா திஷு நரா ராஜன் கலா விச்சந்தி சம்பவம் –
கலவ் கலு பவிஷ்யந்தி நாராயணா பராயணா
க்வசித் க்வசின் மஹா ராஜ த்ராவிடேஷு ச பூரிச
தாமரபரணி நதி யத்ர கிருதமாலா பயஸ்விநீ
காவேரீச மஹாபாகா ப்ரதீசீச மஹாநதி
யேபிபந்தி ஜலம் தாஸாம் மனுஜா மனுஜேச்வர-
தேஷாம் நாராயண பக்திர் பூயஸீ நிருபத்ரவா
–ஸ்ரீ பாகவதம் -11-5-38 /39–என்று
ஜ்ஞாதாக்கள் வந்து ஆவிர்பவிக்கும் ஸ்தல விசேஷங்களைத் தத்தம் நதீ விசேஷங்களாலே பிரகாசிப்பித்தது அந்த நதி விசேஷ ஜலத்தை பானம் பண்ணுகிறவர்களுக்கு பகவத் பக்தி அதிசயிக்கும் படியையும் சொல்லுகிற அளவில் – பிரதமத்தில் –தாமர பரணி நதீ எத்ர – என்று இவர் ஆவிர்பாவ ஸ்தலத்தை சொல்லுகையாலே – இவ் ஆழ்வார் உடைய ஆவிர்பாவமானது –கலியும் கெடும் கண்டு கொண்மின் -திருவாய் -5-2-1-இவர் தாம் மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் ஆகையாலே –
திரு மங்கை ஆழ்வார் உடையவர் போல்வார் அவதரித்து -கலி யுக ஸ்வாபம் கழியும் என்றும் –
மேல் வரும் அம்சத்தை தர்சித்து அருளி செய்தாற் போலே – திரிகால ஜ்ஞரான ஸ்ரீ ஸூகாதிகளால் ஸூசிக்கப் பட்டது
என்கை–க்ரூரே கலியுகே ப்ராப்தே நாஸ்திகை: கலுஷீக்ருதே விஷ்ணோர் அம்சாம்ச சம்பூதே வேத வேதார்த்த தத்வ வித் ஸ்தோத்ரம் வேத மயம் கர்த்தும் த்ராவிட்யாபிச பாஷயா
ஜனிஷ்யதி சதாம் ஸ்ரேஷ்டா லோகானாம் ஹிதகாம்யயா –குருகா மஹாத்ம்யம்
-இத்யாதி
வசனங்களும் இவர் ஆவிர்பாவ ஸூசகங்கள் ஆகையால் இவ் இடத்தில் விவஷிதங்கள் –கேவல ஜன்ம வாசக சப்தங்கள் ஒன்றை சொல்லாதே அவதார சப்த பரியாயமான ஆவிர்பாவ சப்தம் சொல்லிற்று
இவர் பிறப்பும் ஈஸ்வரன் பிறப்போபாதி பரார்த்தம் என்று தோற்றுகைக்காக – இத்தால் இவர் ஒரு அவதார விசேஷம் என்றது ஆயிற்று –

“வண்டமிழ்‌ மாமுனி”’ (பெருமா.தி. 10 – 5) தக்ஷிணாதிக்‌ க்ருதா யேந ஸரண்யா புண்ய கர்மணா”’ (குருகா மாஹாத்ம்யம்‌) என்று த்ராவிட ஸாஸ்த்ர ப்ரவர்த்தகனான அகஸ்த்யன்‌ நின்ற திக்கு ஸர்வர்க்கும்‌ புகலிடம்‌ என்ற வ்யாஸ ஸூகாதிகளாலே (க்வசித்‌ க்வசித்‌ என்று இவர்‌ ஆவிர்பாவம்‌) *’கலெள கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா: | க்வசித் கவசிந் மஹா பாகா த்‌ராவிடேஷு ச பூயாஸ ? தாம்ர பர்ணீ நதீ யத்ர க்ருதமாலா பயஸ்விநீ । காவேரி ச மஹா பாகா ப்ரதீசீ ச மஹாநதீ, । யே பிபந்தி ஜலம்‌ தாஸாம்‌ மநுஜா மநுஜேஸ்வர ! தேஷாம்‌ நாராயணே பக்திர் பூயஸீ நிருபத்‌ரவா”’ (வி.பு.) என்றும்‌,
“க்ரூரே கலியுகே, ப்ராப்தே நாஸ்திகைச கலுஷீக்ருதே ॥ விஷ்ணோரம்ஸாம் ஸ ஸம்பூதோ வேத வேதார்த்த ஸாரவித்‌ | ஸ்தோத்ரம்‌ வேத மயம்‌ கர்த்தும்‌ த்‌ராவிட்‌யா ஸ ச பாஷயா ஜநிஷ்யதி ஸதாம்‌ ஸ்ரேஷ்டோ லோகாநாம்‌ ஹித காம்யயா ! கஸ்சிந் மநுஷ்ய ரூபேண க்ருபயா தத்ர வை முநி? । ப்ரயாஸ்யதி புநஸ்ஸோபி ஸாயுஜ்யம்‌ பரமாத்மநா அத்‌ யேதவ்யம்‌ த்‌விஜஸ் ஸ்ரேஷ்டைர் வேத ரூபமிதம்‌ க்ருதம்‌ ! ஸ்த்ரீபிஸ் , ஸூத்‌ரா திபிஸ் சைவ தேஷாம்‌ முக்தி? கரே ஸ்திதா’” (குருகாமா.) என்றும்‌, ““கலெள புந பாபரதாபி பூதே ஸ உத்‌ பபூ வாஸ்ரித வத்ஸலத்வாத்‌ ! பக்தாத்மநா ஸர்வ ஜநாந்‌ ஸு கோப்தும்‌ விஸ்வாதி கோ விஸ்வ மயோ ஹி விஷ்ணு?” என்றும்‌ இவ் வாழ்வாருடைய ஆவிர்பாவம்‌ கர்ம மூலமன்றிக்கே பகவதவதாரம் போலே ஜகத்‌ ரக்ஷணார்த்தமாக பகவதிச்சையாலே உண்டான தாகையாலே ஆவிர்பாவம்‌ என்கிறது –அந்த ஆவிர்பாவம் ““கலியும்‌ கெடும்‌”” (திருவா. 5 – 2 – 1) என்று இவர் தாம்‌ திருமங்கையாழ்வார்‌, உடையவர் போல்வார்‌ வந்துதித்து கலியுக, ஸ்வபாவம்‌ கெடும்‌ என்று அருளிச் செய்தாப் போலே அவர்களாலே ஸசிப்பிக்கப்பட்ட தென்கிறார் –

வலி வணக்கு வரை நெடும் தோள் விராதை கொன்று வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி
கலை வணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கி கரனோடு தூடணன் தன் உயிர் ரை வாங்கி
சிலை வணக்கி மான் மறிய வெய்தான் தன்னை தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
தலை வணக்கி கை கூப்பி ஏத்த வல்லார் திரிதலால் தவமுடைத்து தரணி தானே —10-5–எதிரிகள் வலியைத் தோற்பிக்கக் கடவதாய்-மலை போலே திண்ணியதான தோள்களையும் உடைய
விராதனைக் கொன்று-ஸ்ரீ அகஸ்த்யன் கொடுத்த தர்ச நீயமான வில்லை வாங்கி-

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.–5-2-1—கர்மம் போகையால் கர்ம அநு குணமாக அனுபவிப்பிக்கும் நரகமும் கோப்புக் குலைந்து கட்டு அழிந்து போயிற்று –-சிறை கிடப்பார் இல்லாமையால் சிறைக் கூடம் பேணா வேண்டா விறே – கர்மமும் கர்ம அனுபவ ஸ்தானமும் போகையாலே-அதுக்கு நிர்வாஹகானான யமனுக்கு இந்த சம்சாரத்தில் சாத்தியம் ஒன்றும் இல்லாத படி யாயிற்று –நமன் தமரால் ஆராய பட்டு அறியார் -ஸ்வ புருஷ மபிவீஷ்ய பாச ஹஸ்தம் –அவன் முக்த ப்ராப்ய பூமியிலே ஆராயில் ஆராயும் இத்தனை -இங்கு ஓர் அவகாசமும் இல்லை என்கை-அபாபனான தர்ம புத்திரனுக்கு ஒரு பாப லேசத்தாலே நன்றாக தர்சனம் பண்ண வேண்டிற்று இறே -அதுவும் இல்லை இறே இவர்களுக்கு -அதுக்கு எல்லாம் அடியான கால தோஷமும் போயிற்றே -கலிக்கு அடைத்த காலமாய் இருக்க போகை யாவது என் என்னில் –அநுபூத அர்த்தத்திலும் சம்சயம் உண்டோ –இவை அடங்க போகைக்கு அடி என் என்ன –பாகவத சஞ்சாரம் இல்லாமையினாலே கால தோஷம் உண்டாகிறது –அவர்கள் சஞ்சாரம் உண்டாகையாலே கலி துர்லபம் யாயிற்று-பூதங்கள் என்கிறது –பூ சத்தாயாம்-என்று தாது வாகையாலே அவன் சத்தத்தையே சத்தையாய் அறுகையாலே-அவன் வடிவு அழகை அனுபவித்து -அத்தாலே லப்த சத்தாகராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –

இப்படி அவதரித்த இவர் தாம் யார் என்னும் ஆ காங்க்ஷையிலே பேர் அளவு உடையாரும் – இவரை இன்னார் என்று அளவிடாமை – அதிசங்கை பண்ணும் படியை அருளிச் செய்கிறார் மேல் –இப்படி அருளிச் செய்கிற இவருடைய அவதார வைபவத்தைப் பார்த்து பகவதவதாரங்களில்‌ ஸ்வருபேண அவதாரமோ? ஆவேஸாவதாரமோ? நித்யரோ? முக்தரோ? ஸித்‌தரோ? தம்முடைய ஜந்மாந்தர ஸஹஸ்ர புண்ய ஸஞ்சயங்களாலே வந்தவரோ? ஈஸ்வரனுடைய பாக்‌ய பலத்தாலே வந்தவரோ? என்று அதி ஸங்கிப்பர்கள்‌ என்கிறார்‌-

அத்ரி ஜமதக்னி பங்கிதிரத வஸு நந்த ஸூனுவானுடைய யுக வர்ண க்ரம அவதாரமோ ? வ்யாசாதிவத் ஆவேசமோ ? மூதுவர் கரை கண்டோர் சீரியரில் ஒருவரோ ? முன்னம் நோற்ற அனந்தன் மேல் புண்ணியங்கள் பலித்தவரோ ? என்று சங்கிப்பார்கள் –சூரணை -92-

(அத்ரி ஸூனு -தத்தாத்திரேயன் -அந்தணர் -கிருதயுகம் -ஜமதக்கினி ஸூனு -பரசு ராமன் -த்ரேதா யுகம் – பங்கிதிரத ஸூனு -சக்கரவர்த்தி திருமகன் -த்ரேதா யுகம் -க்ஷத்ரியர் -பங்க்தி -தச-வஸூ நந்த ஸூனு -துவாபர யுகம்-வைசிய குலம் -மூத்தவர் -நித்ய ஸூரிகள் -கரை கண்டோர் -முக்தர் -சீரியர் -ஸ்வேதத் தீவு வாசிகள் )அதாவது-கிருத யுகத்தில் அத்ரியும் ஜமதக்னியும் ஆகிய ப்ராஹ்மண உத்தமர்களுக்கு
பிள்ளையாய்க் கொண்டு -தத்தாரேயனும் பரசு ராமனுமாய் – த்ரேதா யுகத்தில் ஷத்ரியனானான தசரத சக்கரவர்த்திக்குப் பிள்ளையாய் – த்வாபர யுகத்தில் யயாதி சாபத்தாலே அபிஷேக பிராப்தி அற்ற யது குலோத்பவர் ஆகையாலே ஷத்ரியரில் தண்ணியராய் -வைஸ்ய பிராயராய் இருக்கிற வஸு தேவருக்கும் – கிருஷி கோரஷ வாணிஜ்யம் வைஸ்யம் கர்ம ஸ்வ பாவஜம்–ஸ்ரீ கீதை -18-44- –
( பயிர் செய்தல் -பசுக்களைக் காத்தல் -வாணிகம் இவை வைச்யனுக்கு இயல்பான தொழில்கள் ) என்கிற படி – கோ ரஷணாதி தர்மத்தை உடைய சாஷாத் வைச்யரான ஸ்ரீ நந்தகோபர்க்கும் புத்ரனாய்-
இப்படி கிருதாதி யுக தர்மத்தில் ப்ராஹ்மணாதி வர்ண க்ரமேண அவதரித்து வந்த
சர்வேஸ்வரன் சதுர்தமான கலி யுகத்தில் சதுர்த்த வர்ணத்திலே வந்து அவதரித்த படியோ என்கை –பூர்வ யுக த்ரயத்திலும் -அடைவே வர்ண த்ரயத்திலும் -அவதரித்து வருகையாலும்
கலவ் புன :பாபரதா பிபூதே ச உத்ப பூவ ஆஸ்ரித வத்சலத்வாத் பக்தாத்மனா சர்வ ஜனான் ஸூகோப்தும் விச்வாதி கோ விச்வ மயோஹி விஷ்ணு -என்று கலி யுகத்தில் சர்வேஸ்வரன் பக்த ரூபேண அவதரித்தான் என்று ருஷிகள் சொல்லுகையாலும் இவர் வைபவம் கண்டவர்களுக்கு இப்படி சங்கிக்க யோக்யதை உண்டு இறே–வ்யாசாதி வத் ஆவேசமோ -அதாவது –-கிருஷ்ண த்வைபாயனம் வியாசம் வித்தி நாராயணம் ப்ரபும்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-4-5- -என்றும் ,-சோயம் நாராயணஸ் சாஷாத் வியாச ரூபீ மஹாமுனி–பாரதம் – –என்றும் சொல்லுகிற படி வேதங்களை வ்யசிக்கை முதலான கார்யங்களை நிர்வகிக்கைக்காக வ்யாசாதிகள் பக்கல் ஆவேசித்தால் போலே – இவரைக் கொண்டு திராவிட வேதத்தை பிரவர்த்திப்பைக்காக – இவர் பக்கல் ஆவேசித்தானானோ என்கை-இவரைக் கொண்டு லோகத்தை திருத்துகைக்காக இவர் பக்கலிலே –ஆவேசித்து நிற்கவும் கூடும் ஆகையாலே
இப்படியும் சங்கிக்கலாம் இறே–மூதுவர் கரை கண்டோர் சீரியரில் ஒருவரோ-அதாவது – விண்ணாட்டவர் மூதுவர்–திருவிருத்தம் -2- -என்று பரம பதத்துக்கு நிலத் தாளிகளான
நித்ய ஸூரிகளிலே இவ் விபூதியை திருத்துகைக்காக ஈஸ்வர ந்யோகத்தாலே அவதரித்தார் ஒருவரோ ?-அன்றிக்கே –கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர்–திருவாய் -8-3-10- -என்று சம்சாரத்தை கடந்து அக்கரைப் பட்டு இருக்கும் முக்தரில் சம்சாரிகளைத் திருத்துகைக்காக பகவத் நிதேசத்தால் ,அவதரித்தார் ஒருவரோ ?அன்றிக்கே –முக்தானாம் லஷணம் ஹ்யதேத் ஸ்வேத த்வீபநி வாசினாம் –பாரதம் -சாந்தி பர்வம் – என்கிற படியே-முக்த ப்ராயராய் –பாற் கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும் சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியர் -திருவிருத்தம் –79-என்கிற ஸ்வேத தீப வாசிகளிலே இவ் அருகு உள்ளாரை திருத்துகைக்காக ஈஸ்வர இச்சையாலே அவதரித்தார் ஒருவரோ என்கை -இவருடைய வைபவம் பார்த்தால் ,எல்லார் படியும் சொல்லலாம் படி இருக்கையாலே – இப்படியும் தனித் தனியே சங்கிப்பார்க்கு சங்கிக்கலாம் இறே —பின்னை கொல் நில மா மகள் கொல் திரு மகள் கொல் —என்கிற படியே பிராட்டிமாரோடு சேர்த்து பார்க்கும் போதும் -தனித் தனியே சங்கிக்கலாம் படி இறே இருப்பது — மற்று உள்ள ததீயர் உடன் பின்னை சொல்ல வேண்டா இறேமுன்னம் நோற்ற அநந்தன் மேல் புண்ணியங்கள் பலித்தவரோ –(முன்னம் நோற்ற புண்ணியங்கள் பலித்தவரோ -என்றும் –அநந்தன் மேல் புண்ணியம் பலித்தவரோ -என்றும் தனித்தனியே கூட்டிப் பொருள் )அதாவது –கீழ் சொன்னவர்கள் ஒருவரும் அன்றிக்கே சம்சாரிகள் தன்னிலே –
முன்னம் நோற்ற விதி கொலோ —திருவாய் -6-5-7-என்கிறபடியே ஜன்மாந்திர சகஸ்ர சஞ்சிதமான
தன்னுடைய ஸூஹ்ருத பலமாக கொண்டு இப்படி திருந்தினார் ஒருவரோ ?
அன்றிக்கே –அநந்தன் மேல் கிடந்த எம் புண்ணியா -திருச்சந்த -45-என்று நிர்ஹேதுக கடாஷ விசேஷத்தாலே – நித்ய சம்சாரியை நித்ய ஸூரி கல்பம் ஆக்க வல்ல அநந்த சாயியான சநாதன புண்யம் – முழு நோக்காகாப் பலித்து இப்படி திருந்தினார் ஒருவரோ சங்கிப்பார்கள் –அதாவது –
இப்படி கீழ் சொன்ன வகைகளால் இவரை இன்னார் என்று நிச்சயிக்க மாட்டாமல் பேரளவு உடையாரும் சங்கியா நிற்ப்பார்கள் என்ற படி –

க்ருத யுகத்திலே அத்ரி ஜமதக்‌நிகள் பக்கலிலே தத்தாத்ரேயராயும்‌, பரஸூராமனாயும்‌-த்ரேதா யுகத்திலே ஷத்ரியனான தஸரத சக்ரவர்த்தி பக்கலிலே வந்தவதரித்தும்‌-த்‌வாபர- யுகத்திலே க்ஷத்ரியரில்‌ தண்ணியராகையாலே வைஸ்ய ப்ராயரான வஸுதேவ ஸூநுவாயும்‌, ‘“க்ருஷி கோரக்ஷ வாணிஜ்யம்‌ வைஸ்யம்‌ கர்ம ஸ்வபாவஜம்‌” (கீ. 18 – 44) என்று கோ ரக்ஷண தர்மத்தை உடையராகையாலே வைஸ்யரான ஸ்ரீநந்தகோபர்க்குப்‌ புத்ரராயும்‌, யுக க்ரமத்திலும்‌ அடைவே வர்ண த்ரயத்திலே வந்து அவதரித்துப் போந்த ஸர்வேஸ்வரன்‌ கலியுகத்திலே நாலாம்‌ வர்ணத்திலே ஆழ்வாராய்த்‌ திருவவதரித்தானோ என்றும்‌,-““க்ருஷ்ண த்‌வைபாயநம்‌ வ்யாஸம்‌ வித்தி, நாராயணம்‌ ப்ரபும்‌” (விபு. 3 – 4-5) என்கிறபடியே வேதங்களை வ்யஸிக்கைக்காக வ்யாஸாதிகள் போல்‌ வந்தவதரித்தானோ ? என்றும்‌, ”கரை கண்டோர்‌”” (திருவா. 8 – 3 – 10)என்று ஸம்ஸாரத்தைக்‌ கரை கண்ட முக்தரிலே ஒருவர்‌ அப்படியே அவதரித்தாரோ? ““பாம்பணை மேல்‌ பன்ளி கொண்டருளும்‌ சீதனையே தொழுவார்‌ விண்ணுளாரிலும்‌ சீரியரே” (திருவிரு. 79) என்றும்‌, .““முக்தாநாம்‌ லக்ஷணம்‌ ஹ்யேதச்ச்‌ வேத த்‌வீப நிவாஸிநாம்‌?” (பர. ரா. 337 – 40) என்றும்‌ நித்ய முக்தரோடொக்கச்‌ சொல்லலாம்படி இருக்கிற பவேதத்‌,வீபவாஸிகளான ஸித்‌தரிலே ஒருவரோ? “முன்னம்‌ நோற்ற விதி கொலோ” (திருவா. 6 – 5 – 7) என்கிற படியே ஜந்மாந்தர ஸஞ்சிதமான தம்முடைய பாக்‌யத்தாலே பிறந்தவரோ? “அனந்தன்‌ மேல்‌ கிடந்த வெம் புண்ணியா?” (திருச்ச. 45) என்று அநந்தஸாயியான ஸர்வேஸ்வரனுடைய பாக்‌யத்தாலே பிறந்தவரோ? என்று சங்கிப்பர்கள்‌ என்கிறார் –

க்ருஷிகௌரக்ஷ்யவாணிஜ்யம் வைஸ்யகர்ம ஸ்வபாவஜம்
பரிசர்யாத்மகம் கர்ம ஸூத்ரஸ்யாபி ஸ்வபாவஜம்
–18-44-உழவு, பசுக்காத்தல், வணிகம் இவை இயற்கையிலே பிறக்கும் வைசியக் கர்மங்களாம். தொண்டு புரிதல் சூத்திரனுக்கு அவனியற்கையாய் ஏற்பட்ட தொழில்.

கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர்
துளக்கமில்லா வானவர் எல்லாம் தொழுவார்கள்
மலக்கமெய்த மா கடல் தன்னைக் கடைந்தானை
உலக்க நாம் புகழ் கிற்பது என் செய்வதுரையீரே–8-3-10–தங்கள் ஞானத்துக்கு விஷயங்களால் கலக்கம் இன்றிக்கே மஹா தபஸ் ஸூ க்களை யுடைய மனன சீலரான சனகாதிகள்-கரை கண்டோர்-முக்தர் –
துளக்கமில்லா வானவர்-முதலிலே சம்சார ஸ்பர்ஸ கந்தம் இல்லாத நித்ய ஸூ ரிகள் —துளக்கம் –சலனம் -அதாகிறது -சங்கோசம் –எல்லாம் தொழுவார்கள்-முமுஷுக்களும் -முக்தரும் -நித்யசித்தருமான இவர்கள் எல்லாம் அடிமை செய்கிறவர்கள் -அடிமை செய்கையாவது ஸ்வாமிக்கு அதிசயத்தை பண்ணுமது ஆகையால் மங்களா சாசனம் இறே –

வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற
நாதனை ஞாலம் விழுங்கும்  அநாதனை ஞாலந்தத்தும்
பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும்   சீரியரே 
– – -79–சீதனை-திருப்பாற்கடலில் கிடக்கிறபடியை நினைத்தாலே தாபம் போக்கி குளிர வைப்பவன் அன்றோ-தாபார்த்த ஜல ஸாயீனம் –சீதனையே-அவனைத் தொழுது வேறே ஒரு பிரயோஜனத்தைக் கொள்ள இருக்காமல் அவனைப் பிரசங்கிக்க மாத்திரத்தாலே நெஞ்சு தளராமல் அனுபவிக்க வேண்டுமே-இதுவே அவதாரிகையில் பார்த்தோம்-நிறுத்தி நிதானமாக அனுபவிக்க வேண்டும்-விண்ணுளாரிலும் சீரியரே –நிரந்தர பகவத் அனுபவமே யாத்ரை யான -அத்தேசத்தில் அன்றியிலே – அப்படிக்கு விரோதியான சம்சாரத்திலே இருந்தே -அதுவே யாத்ரையாய் இருக்கையாலே – இவர்கள் நித்ய ஸூரிகளிலும் சீரியர்–அநாதனை –ஆத்மேஸ்வரம் –என்னுமா போலே தனக்கு ஒரு நியந்தா இல்லாதவன் –நாயகனைப் பிரியாத மகளிர் பாக்யத்தை கூறித் தலைவி இரங்கும் பாசுரம் –-இங்கேயே அவனை-இடைவிடாமல் அனுபவிக்கப் பெற்றவர் முக்தர்களிலும் சீரியர்-பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும்-சீதனையே-ஸ்ரீ தேவி பூ தேவி திருவடி வருட – அப்படிப்பட்ட இடையில்லாத் போகம் தனக்கு கிடையாமையை சொல்லி-வேத முதல்வன் விளங்கு பூரி நூலன் -ஞாலந்தத்தும் பாதனைப் –திரு உலகு அளந்த திருவடி யுடையவன் -உத்பத்தி ஸ்தானமான திருவடியை யுடையவன் என்றுமாம்-திருமாலின் திருவடியின் நின்றும் பூ லகம் வந்தமை புருஷ ஸூகதம் சொல்லுமே-உண்ணும் சோறு இத்யாதி -மனம் மொழி காயம் மூன்றாலும் இங்கேயே பகவத் அனுபவமே யாத்திரையாக-கொண்ட ஆழ்வார் நித்ய ஸூரிகளிகளும் மேம்பட்டவர் என்றதாயிற்று-

அன்னைமீர்! அணி மாமயில் சிறு மானிவள்நம்மைக் கை வலிந்து
என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலை வில்லி மங்கலம் என்றலால்
முன்னம் நோற்ற விதி கொலோ? முகில் வண்ணன் மாயம் கொலோ?
அவன் சின்னமும் திருநாமமும் இவள் வாயனகள் திருந்தவே.–6-5-7—தொலை வில்லி மங்கலம் என்கை ஒழிய ஏதேனும் ஒரு வார்த்தையும் கேட்க்கிறீலள் -என்னுடைய வார்த்தையும் கேட்க்கிறீலள் -உங்களை மறைத்ததும் சொல்லுவது எனக்கு இ றே -அவ் வூரை நான் சொல்லிலும் கேட்க்கும் –-முன்னம் நோற்ற விதி கொலோ? -முன்னே பண்ணின பாக்ய பலமோ -ஜன்மாந்தர சகஸ்ரரேஷூ -பஹு நாம் ஜென்ம நா மந்தே – முகில் வண்ணன் மாயம் கொலோ?-அதுக்கு இத்தனை கனத்த பலம் உண்டாக மாட்டாது -அழகைக் காட்டிப் பண்ணின ஆச்சர்ய சேஷ்டிதங்களோ -அதில் சம்சயம் இத்தலையாலே சாதித்ததுக்கு இத்தனை கனத்த பலம் உண்டாக மாட்டாது என்று -இதில் சம்சயம் -இதுக்கு முன்பு ஒரு வ்யக்தியில் இப்படி பிறக்கக் காணாமையாலே-

மண்ணுளாய் கொல் விண்ணுளாய் கொல் மண்ணுளே மயங்கி நின்று
எண்ணும் எண் அகப்படாய் கொல் என்ன மாயை நின்தமர்
கண்ணுளாய் கொல் சேயை கொல் அநந்தன் மேல் கிடந்த வெம்
புண்ணியா புனம் துழாய் அலங்கல் அம் புனிதனே –45—திருவநந்த ஆழ்வான் மேல் சாய்ந்து அருளின வடிவு அழகைக் காட்டி தேவரீர் உடைய ஆஸ்ரித சம்ச்லேஷ ஸ்வபாவத்தையும் என்னுடைய அனன்யார்ஹ சேஷத்வத்தையும் எனக்கு உணர்தினவனே –பும்ஸ்த்வம் நயதீதி புண்ய -என்கிறபடியே இவருடைய ஸ்ரூபத்தையும் பிரகாசிப்பிக்கைக்கு உபாயம் ஆனவனே-தோளும் தோள் மாலையுமான அழகைக் காட்டி -விஷயாந்தர ருசி என்ன -சோரேண ,ஆத்ம அபஹாரிணா -என்கிற ஆத்ம அபஹாரம் என்ன –இவ் வசுதங்களைத் தவிர்த்த பரம-பாவனனே-இது என்ன ஆச்சர்யம்-என் திறத்தில் நீ செய்து அருளின இவை என்னால் பரிச்சேதிக்கலாய் இருந்தது இல்லை என்கிறார் –

இப்படி இவரை ஞானிகள் ஆனவர்கள் சங்கிக்கைக்கு ஹேது என்னும் ஆ காங்ஷையிலே-இதுக்கு மூலம் இவருடைய பிரபாவம் என்கிறார் மேல் –இப்படி இவர்கள்‌ சங்கிக்கைக்கு ஹேது என்னென்னில்‌, இவருடைய ப்ரபாவம்‌ கண்டு என்கிறார்‌ மேல்‌.

இதுக்கு மூலம்-1-யான் நீ என்று மறுதலித்து-2-வானத்து மண் மிசை மாறும் நிகரும் இன்றி-3-நிலையிடம் தெரியாதே-4-தெய்வத்தின் ஒரு வகைக்கு ஒப்பாக-5-இனத்தலைவன் அம்தாமத்து அன்பு செய்ய-6-சேர்ந்தமைக்கு அடையாளம் உளவாகவே-7-உகந்து உகந்து திமிர் கொண்டால் ஒத்து-8-நாட்டியல் ஒழிந்து-9-சடரை ஒட்டி-10-மதாவலிப்தர்க்கு அங்குசம் இட்டு-11-நடாவிய கூற்றமாய்-12-தீயன மருங்கு வாராமல்-13-கலியுகம் நீங்கி கிருதயுகம் பற்றி-14-பட்டு எழு போது அறியாது இருந்த
பிரபாவம் இதுக்கு மூலம் –சூரணை -93-

அதாவது-இவரை கண்ட ஞானாதிகர் -இவர் இன்னார் -என்று நிர்ணயிக்க மாட்டாமை –இங்கன் சங்கிகைக்கு ஹேது –
1-யான் நீ என்று மறுதலைத்து-மாறுபட்டு இருந்த பிரபாவம் –-அதாவது –
புவியும் இரு விசும்பும் நின்னகத்த நீ என் செவியின் வழி புகுந்து என் உள்ளாய் அவிவின்றி யான் பெரியன்-நீ பெரிய என்பதனை யார் அறிவார் ஊன் பருகு நேமியாய் உள்ளு -பெரிய திருவந்தாதி -75–என்று தொடங்கி உபய விபூதியும் உன் சங்கல்ப்பத்தில் கிடக்கின்றன – ஏவம் பூதனான நீ என்னுடைய ஸ்ரோத்ர இந்திரயத்வாரா புகுந்து விச்சேதம் இன்றி என் ஹிருதயத்தில் உளையாகா நின்றாய் –இப்படியான பின்பு விபூதியை உடைய நீயோ விபூதிமானை உடைய நானோ -பெரியார் என்று அறிவார் ஆர் ? அப்ரதிஹத சக்தியான நீ தான் இத்தை நிரூபித்து அறிந்து காண் என்று உபய விபூதி யுக்தனோடே மறுதலைக்கிற வைபவத்தை உடையராய்

“’புவியும்‌ இரு விசும்பும்‌ நின்னகத்த, நீ என்‌ செவியின்‌ வழி புகுந்தென்னுள்ளாய்‌, அவிவின்றி யான்‌ பெரியன்‌ நீ பெரியை என்பதனை யாரறிவார்‌, ஊன் பருகு நேமியாய்‌ உள்ளு”” (பெரிய திரு. 75) என்று – உபய விபூ,தியையும்‌ உன்‌ ஸங்கல்பைக தேஸத்திலே வைத்து என்‌ ஸ்ரவண த்‌வாரா நெஞ்சிலே புகுந்து விச்சேதமின்றியிலே நித்ய வாஸம்‌ பண்ணா நின்ற பின்பு, நானோ, நீயோ பெரியாய்‌? ஆரென்று ஸர்வாதிகனான நீயே விசாரி – என்று ஸர்வேஸ்வரனோடே விகல்பிக்கலாம் படியாய்‌

புவியும் இரு விசும்பும் நின்னகத்த நீ என்
செவியின் வழி புகுந்து என்னுள்ளே -அவிவின்றி
யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்
ஊன் பருகு நேமியாய் உள்ளு
–75–உபய விபூதியும் உன் ஸங்கல்பத்திலே கிடக்கின்றன-உபய விபூதி யுக்தனான நீ என்னுடைய ஸ்ரோத்ர இந்திரியத்தை வழியே புகுந்து விச்சேதம் இன்றிக்கே என் ஹ்ருதயத்திலே உளையாகா நின்றாய்-உபய விபூதியை யுடைய நீயோ-விபூதிமானை யுடைய நானோ-பெரியார் யார் என்று அறிவார் யார்-அப்ரதிஹத சக்தியான நீ அறிவுதி யாகில் சொல்லு-சத்ரு சரீரங்களைப் பருகுகிற திருவாழி–(விஸ்வம் பர பரா ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம் -சமக்யா பந்ததி -ஆழ்வாரை
இப்பாசுரம் அடியாகவே அருளிச் செய்கிறார் )

2-வானத்து மண் மிசை மாறும் நிகருமின்றி இருந்த பிரபாவம் –( வானத்து நிகரும் இன்றி -மண்மிசை மாறும் இன்றி -என்று தனித்தனியே கொண்டு பொருள் )-அதாவது –தண் தாமரை சுமக்கும் பாதப் பெருமானைச் சொல் மாலைகள் சொல்லுமாறு அமைக்க வல்லேற்கு இனி யாவர் நிகர் அகல் வானத்தே–திருவாய்-4-5 8– -என்றும்-வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவையுடைய மால் வண்ணனை மலைக்கு நா வுடையேற்கு மாறுளதோ விம் மண்ணின் மிசையே –திருவாய் -6-4-9–என்றும்
அவனுடைய விபூதி யோகத்துக்கும் ஸுகுமார்யத்துக்கும் தகுதி யாம்படி யாகவும் – சர்வேஸ்வரனாய் அவாப்த சமஸ்த காமனாய் ஒன்றுக்கும் விக்ருதம் ஆகாதவன் தம்முடைய உக்தி ஸ்ரவண ஹர்ஷ பிரகர்ஷத்தாலே தெகிடாகும் படியாகவும் திரு வாய் மொழி பாடுகிற நாவீறு உடைமையாலே –
உபய விபூதியிலும் உபமான ரஹிதராய்-3-நிலை இடம் தெரியாதே இருந்த பிரபாவம்
-அதாவது – கலவியும் பிரிவும் கலசி நடக்கையாலே -கல்வியால் வந்த ரசமேயாக செல்லும் அங்குள்ளார் படியும் அன்றிக்கே – பகவத் குணைக தாரகதையால் அன்ன பானாதிகளால் தரிக்கும் இங்குள்ளார் படியும் அன்றிக்கே – இப்படி உபய விபூதியிலும் அடங்காமல் –-வைகுந்தமோ வையமோ நும் நிலையிடம்-திருவிருத்தம் -75- என்று வாசஸ்தலம் தெரியாத படியாய் –

(வானத்து மண்மிசை மாறும்‌ நிகருமின்றி) ““இனி யாவர்‌ நிகரகல் வானத்தே’” (திருவா. 4 5 – 8) என்றும்‌, ““மாறுளதோ இம் மண்ணின் மிசையே”’ (திருவா. 6 – 4 – 9) என்றும்‌ ‘ உபய விபூதி யிலும்‌ எனக்கு ஸத்‌ருஸருண்டோ என்னும்படி த தாஸ்ய ஹ்ருஷ்டோக்தியை உடையராய்‌ (நிலையிடம்‌ தெரியாதே) ““வைகுந்தமோ வையமோ நும்‌ நிலையிடம்‌”” (திருவிரு -75) என்று – இந்த விபூதிஸ்தரோ? நித்யவிபூதிஸ்தரோ? என்று அறுதியிட ஒண்ணாதபடி இருக்கையாலே உபய விபூ,தியிலும்‌ வ்யாவ்ருத்தராய்‌,

நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானைத் தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொல்மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனியாவர் நிகர் அகல் வானத்தே?–4-5-8-
–அநாதி அஞ்ஞானாதி சம்சாரக்கத்தாலே நித்ய சம்சாரிகளுக்கும் இவ்வருகான நமக்கும் – பூவில் பிறப்பால் வந்த போக்யதையாலும் ஆத்ம குண பூர்த்தியாலும் நித்ய ஸூ ரிகளுக்கும் அவ்வருகான பிராட்டிக்கும் தன் போக்யதா அதிசயத்தாலே ஆனந்த ஜனகனனாய்–இவ்விரண்டு ஆகாரத்துக்கும் உப பாதகமாய் அவிசேஷஞ்ஞரான லீலா விபூதியில் உள்ளாரோடு -விசேஷஞ்ஞரான பரமபத வாசிகளோடு வாசியற நிருபாதிகமான சர்வ சேஷித்வத்தை யுடையனாய் இந்த போக்யதைக்கும் மேன்மைக்கும் மேலே ஸுந்தர்ய ஸுகந்த்ய ஸுகுமார்ய லாவண்யாதி குணங்களுக்குத் தோற்று-செவ்வியையுடைய தாமரை சுமக்கும்படியான திருவடிகளை யுடையனான சர்வாதிகனை இவ்வாகார அநு சந்தானத்தாலே உடை குலைப்படாதே-சப்த சந்தர்ப்பங்களை சொல்லும்படியாக என்னை அமைத்து தரிக்க வல்ல எனக்கு-அதி விஸ்தீரணையான த்ரிபாத் விபூதியில் அதிகார ஆகாரராய் அனுபவிக்கிறவர்கள் ஆர் தான் இனி ஒப்பார் –இந்தளத்திலே தாமரை போலே இருள் தரும் மா ஞாலத்தில் அனுபவிப்பார்க்கு தெளி விசும்பில் அனுபவிப்பார் சத்ருசர் அல்லர்கள் என்று கருத்து –

கலக்க ஏழ்கடல் ஏழ்மலை உலகேழும் கழியக் கடாய்
உலக்கத் தேர்கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும்பல
வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவை யுடை மால்வண்ணனை
மலக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம்மண்ணின் மிசையே?–6-4-9-–ஹர்ஷ ப்ரகரஷத்தாலே அலமாக்கும் படி பண்ணும் நா வீறு யுடைய எனக்கு இந்த பூமியின் மேலே எதிர் உண்டோ-ஈஸ்வரனுக்கு மநோ ஹாரியான வாக்கையுடையார் வேறு பூமியில் இல்லை என்று கருத்து –

உலாகின்ற கெண்டை  யொளி யம்பு எம்மாவியை யூடுருவக்
குலாகின்ற வெஞ்சிலை வாள்   முகத்தீர் குனிசங்கிடறிப்
புலாகின்ற வேலைப் புணரி யம்பள்ளி யம்மான் அடியார்
நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே –
-75 –-இஜ் ஜகத் ரஷண அர்த்தமாக வந்து கண் வளர்ந்து அருளுகிற – இந் நீர்மைக்குத் தோற்று இருக்கிற நித்ய ஸூரிகள் நித்ய வாசம் பண்ணுகிற ஸ்ரீ வைகுண்டமோ-அன்றிக்கே – மானாவிச் சோலை போலே ஆவது அழிவதாய் – காதாசித்கமாக அவன் வந்து முகம் காட்டிப் போகும்-லீலா விபூதியோ – உங்களுடைய வாஸ ஸ்தானம் –வானவர் நாடு -என்கிறபடியே – அவர்கள் இட்ட வழக்காய் இருக்கும் இறே அவ் விபூதி –அஹங்கார மமஹாரங்களாலே -ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யம்-நடை யாடாதபடி – பண்ணிக் கொண்டு இருப்பார்கள் இறே இங்கு உள்ளோர் –பிள்ளை திரு நறையூர் அரையர் – அடியார் நிலாகின்ற வைகுந்தமோ – அன்றிக்கே அவனதான வையமோ -என்று பணிப்பாராம் –

4-தெய்வத்தின் ஒரு வகைக்கு ஒப்பாக இருந்த பிரபாவம் –அதாவது –தெய்வத்தினம் ஓர் அனை யீர்களாய்-திருவிருத்தம்-23-என்று ஒருவர் இருவர் அன்றிக்கே –நித்ய ஸூரிகள் எல்லாரும் கூடினாலும்
தமக்கு ஒருவகைக்கு ஒப்பாம் படியாய் —

(தெய்வத்தினம்‌ ஒருவகைக் கொப்டாக) “*தெய்வத்தினமோரனையீர்களாய்‌” (திருவிரு. 23) என்று நித்யஸூரிகளெல்லாரும்‌ கூடினாலும்‌ தம்முடைய ஒருவகைக் கொப்பாக உடையராய்‌,

புனமோ புனத் தயலே வழி போகும் அரு வினையேன்
மனமோ மகளிர் நும் காவல் சொல்லீர் புண்டரீகத்து அம் கேழ்
வனமோர் அனைய கண்ணான் கண்ணன் வானாடு அமரும் தெய்வத்
தினம் ஓர் அனையீர் களாய், இவையோ நும் இயல்வுகளே
 –23-தெய்வத்தினம் ஓர் அனையீர் களாய்,– ஆழ்வார் ஒருவர் எழுந்து அருளி இருக்கும் இருப்பு நித்ய ஸூரிகள் திரள இருந்தால் போல் இருக்கிறதே என்றவாறு -திவ்ய சங்கத்தோடே ஒரு பிரகாரத்தாலே ஒப்புடையீராய் இருக்கை -நித்ய ஸூரி சங்கத்தோடே ஒரு பிரகாரத்தாலே ஒப்புடையீர்களாய் இருக்கிறீகோளே–இவையோ நும் இயல்வுகளே -பர சித்த அபஹாரியான பிரதிகூலா சரணம் உங்களுக்கு ஸ்வ பாவ மாகவாயோ என்று தன் குறையற யுரைத்தானாயிற்று-ஒருபடி நம் மநோ வ்ருத்தி அறியாதவர்களாய் ஒருபடி நம்மிடம் ப்ரீதி யுடையவர்களாய் இருக்கிறி கோளே-உங்களுடைய ஸ்வ பாவங்கள் இங்கே புனம் காக்கும் தோழி தலைவி இவர்களோடு ஒத்த ஸ்வ பாவத்தால் திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்கள்–புனம் -இவர்கள் இருக்கும் தேசம்-யுக்தமான ஸூரி சாத்ருஸ் யமும் இவ்விருவருக்கும் ஒக்கும் என்றதாயிற்று-

5-இனத் தலைவன் அம் தாமத்து அன்பு செய்ய இருந்த பிரபாவம் –அதாவது – வானோர் இனத் தலைவன் கண்ணன் -பெரிய திருவந்தாதி -25-என்று-அந்த நித்ய ஸூரி சங்க நிர்வாஹனான சர்வேஸ்வரன் ,-அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மானுக்கு –திருவாய் -2-5-1–என்று
அழகிய தாமமான பரம பதத்திலே பண்ணும் வியோமோஹத்தை அடைய தம் பக்கலில் பெரு மடை கொள்ளப் பண்ண –

(இனத் தலைவன்‌ இத்யாதி,) ”வானோரினத் தலைவன்‌”’ (பெரியதிரு. 25) என்று அப்படிப்பட்ட ஸூரி ஸமூஹத்துக்கு நிர்வாஹகனான ஸர்வேஸ்வரன்‌, ““அந்தாமத்தன்பு செய்து”‘ (திருவா. 2 – 5 – 1) என்று விலக்ஷணமான பரம பதத்தில்‌ பண்ணும்‌ வ்யாமோஹத்தை இவர் பக்கலிலே பண்ண

ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை
ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே -சீரார்
மனத் தலை வன் துன்பத்தை மாற்றினேன் வானோர்
இனத் தலைவன் கண்ணனால் யான் —25-
நித்ய ஸூரிகளுக்குத் தலைவனாய் வைத்துத் தன்னை இதர சஜாதீயனாக்கி ஸூலபனான கிருஷ்ணனாலே பகவத் சம்பந்தம் ஆகிற ஐஸ்வர்யத்தை யுடைத்தான மனஸ்ஸிலே தலையிலே கிடக்கிற ஸம்ஸார துக்கத்தை மாற்றினேன்-எல்லாரையும் நம்மாலே திருத்தப் போமோ என்கிறார் –

அந்தாமத்தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தாமரை யடிக்கள் செம்பொன் திருவுடம்பே –2-5-1–பரமபதத்தில் உள்ளார் எல்லார் பக்கலிலும் பண்ணும் அபி நிவேசத்தை என் பக்கலிலே பண்ணி –மஞ்சா க்ரோசந்தி இத்வத்என்னாவி சேர் –
கமர் பிளந்த தரையிலே நீரைப் பாய்ச்சினால் போலே –உள்ளூலாவி உலர்ந்து உலர்ந்து -என்று
குருத்து வற்றாக வற்றான என்னாத்மாவிலே-விடாயர் மடுவில் விழுமா போலே வந்து கலந்தான் –
அம்மானுக்கு– நித்ய விபூதியில் உள்ளரோபாதி லீலா விபூதியில் உள்ளாருக்கும் வந்து முகம் காட்ட வேண்டும் பிராப்தி உடையவனுக்கு இவரைப் பெற்ற பின்பு யாயிற்று அவன் சர்வேஸ்வரன் யாயிற்று

6-சேர்ந்தமைக்கு அடையாளம் உளவாக இருந்த பிரபாவம் –அதாவது –திரு அருள்களும் சேர்ந்தமைக்கு அடையாளம் திருந்த உள – திருவாய் -8-9-6- என்று மேன்மேலும் அவன் விஷயீகாரங்களை பெற்றமைக்கு -ஸூவ்யக்த லாஞ்சனமான ராகம் வாய் கரையில்- (உதட்டிலே செந்நிறம் -) தோன்றுகை முதலான கலவிக் குறிகள் உண்டாய் செல்ல –7-உகந்து உகந்து திமிர் கொண்டால் ஒத்து இருந்த பிரபாவம் –அதாவது – உகந்து உகந்து உள் மகிழ்ந்து குழையுமே திருவாய் -6-5-4–என்றும்-திமிர் கொண்டால் ஒத்து நிற்கும் -திருவாய் -6-5-2-என்றும் அவன் சௌந்தர்ய சீலாதிகளை அனுசந்தித்து -உத்தரோதரம் விளைகிற பாஹ்யாப்யந்தர ஹர்ஷத்தாலே -சிதிலராவது – ஸ்தப்தோஸ்யுத தமா தேசம ப்ராஷ்ய -சாந்தோக்யம் –(திமிர் கொண்டவனைப் போலே இருக்கின்றாய் அந்தப் பரம் பொருளைக் கேட்டு அறிந்தாயோ )என்கிறபடியே சர்வ நியாமக ,பர ப்ரஹ்ம சாஷாத் காரம் பிறந்தாரைப் போலே ஸ்திமித ராவதாய்–

(சேர்ந்தமைக் கடையாளமுளவாக) “திருவருள்களும்‌ சேர்ந்தமைக் கடையாளம்‌ திருந்தவுள”’ (திருவா. 8 – 9 – 6) என்று ஸர்வேஸ்வரனுடைய க்ருபையாலே விஷயீ க்ருதரானமைக்கு ஸுவ்யக்தமாக லாஞ்சநமான ராகத்தை வாய்க் கரையிலே உடையராய்‌ கேவலம்‌ வாய்க் கரையில்‌ ராக மாத்ர மன்றிக்கே “‘உகந்துகந்துள் மகிழ்ந்து குழையுமே”’ (திருவா. 6 – 5 – 4) என்று பாஹ்யாப் யந்தர ஹர்ஷத்தாலே ஸிதிலராய்‌, “’திமிர கொண்டாலொத்து நிற்கும்‌ ”” (திருவா. 6 – 52) என்று அநுஸந்தா நத்தாலுண்டான ஆதராதிஸயத்தாலே ““ஸ்தப்‌தோஸ்யுத தமாதேஸம ப்ராக்ஷ்ய?”” (சா. 6 – 1 – 3) என்று ஸர்வ நியாமகமான ப்‌ரஹ்ம ஸ்வரூப ஸாக்ஷாத்காரம்‌ பிறந்தாரைப் போலே ஸ்திமிதராய்‌,

திருவருள் மூழ்கி வைகலும் செழு நீர் கண்ண பிரான்
திருவருள்களும் சேர்ந்தமைக்கு அடையாளம் திருந்த உள
திருவருள் அருளால் அவன் சென்று சேர் தண் திருப் புலியூர்
திருவருள் கமுகு ஒண் பழத் தது மெல்லியல் செவ்விதழே–8-9-6–அவன் விஷயீ காரங்களையும் பெற்றமைக்கு அடையாளம் வ்யக்தமாக உள-குணாகுண நிரூபணம் பண்ணாதே விஷயீ கரிக்கை யாகிற ஸ்வ பாவத்தை உபகரிக்கைக்காக -அவன் தானே சென்று பொருந்தும் சிரமஹரமான வூர் /-திருவருள் கமுகு-என்று சில உண்டு -நீரால் வளருமது அன்றிக்கே பிராட்டியும் தானுமாக கடாக்ஷிக்க அதுவே நீராக வளருமவை-ஒண் பழத்தது மெல்லியல் செவ்விதழே–ம்ருது ஸ்வ பாவையான இவளுடைய அதரம் செவ்விப் பழம் போலே இரா நின்றது –இவளுடைய அதரம் அவ் வூர்க்காய் யன்றோ இருக்கிறது 

நிற்கும் நான்மறை வாணர் வாழ்தொலை வில்லி மங்கலம் கண்டபின்
அற்க மொன்றும் அறவு றாள்மலிந் தாள்கண் டீர்இவள் அன்னைமீர்!
கற்கும் கல்வி யெல்லாம் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் என்றே
ஒற்கம் ஒன்றும் இலள் உகந்துகந்து உண்மகிழ்ந்து குழையுமே.–6-5-4-
–சொல்லும் சொல் எல்லாம் திரு நாமமே யாய் -இது தன்னிலும் வடிவு அழகுக்கும் ஆஸ்ரித பாரதந்தர்யத்துக்கும் வாசகமான திரு நாமங்களையே சொல்லா நின்றாள் -கிருஷ்ணன் ஆகில் ஆஸ்ரித பாரதந்தர்யம் பிரசித்தம் இறே -பிரான் -உபகார சீலன் –திருநாமங்களை இடைவிடாதே செல்லா நின்றால்-இளைப்பு ஒன்றும் இன்றிக்கே இரா நின்றாள்–ஒற்கம் -ஒல்குதல்-அதாவது ஒடுங்குதல் -இளைப்பு-திரு நாமங்கள் வழியே அவன் அழகையும் குணங்களையும் நினைந்து மேன் மேல் என ப்ரீதையாய்-உண்மகிழ்ந்து குழையுமே.-– அந்தகாரண ப்ரீதி அதிசயத்தாலே ஆஸ்ரயம் அழியா நிற்கும்-

குமுறுமோசை விழவொலித் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
அமுத மென்மொழி யாளை நீர்உமக் காசை யின்றி அகற்றினீர்
திமிர்கொ டாலொத்து நிற்கும் மற்றிவள் தேவ தேவபிரான்என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர்மல்க நெக்கொசிந்து கரையுமே.–6-5-2-
–திமிர் கொண்டால் போலேயாய் பேசாதே நில்லா நிற்கும் –மற்று இவள் வார்த்தை சொன்னால் தேவர்களான நித்ய ஸூரி களுக்கும் தேவர்களான விஷ்வக் சேனாதிகளுக்கும் தன்னை அநு பதிப்பித்துக் கொண்டு இருக்கிற மஹா உபகாரகன் என்கிற அர்த்த யுக்தி மாத்திரத்திலே-நெளிந்த வாயை யுடையளாய் கண்கள் நீர் மலக்கும்படியாக கட்டுக் குலைந்து தளர்ந்து நீர்ப்பண்டமாகா நின்றால் –-நிமிதல்-நெளிதல்-

8-நாட்டியல் ஒழிந்து இருந்த பிரபாவம் –அதாவது – நாட்டாரோடு இயல் ஒழிந்து நாரணனை நண்ணினமே -திருவாய் -10-6-2–என்றும் உண்டியே உடையே உகந்து ஓடி -என்றும்-யானே என் தனதே –திருவாய் -2-9-9–என்றும் அஹங்கார மமகார வச்யராய் இருக்கிற லௌகீகரோடு சம்பந்தம் அற்று –9-சடரை ஒட்டி இருந்த பிரபாவம் –அதாவது –சடகோபர் ஆகையாலே –ஆர்ஷம் ப்ரஹ்ம தர்ம உபதேசம்ச வேத சாஸ்த்ர விரோதினா -மனு தர்ம சாஸ்திரம் -12–106-( வேத சாஸ்திரத்துக்கு மாறுபாடு அல்லாத )என்கிற படி பிராமண அனுகூல்ய தர்கங்களாலே மத்யஸ்தமாக அர்த்தத்தை சாதிக்கை அன்றிக்கே ,
பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆகிற சடரை ஸ்ருத்யந்த தாத்பர்யமான ஸ்வோக்தி விசேஷங்களாலே
ஸ்வ சந்நிதானத்தில் நில்லாதபடி துறத்தி –

““நாட்டாரோடியல் வொழிந்து”‘ (திருவா. 10 – 6 – 2) என்று ஸம்ஸாரிகளோட்டை ஸங்கத்தை விட்டு (ஸடரையோட்டி) ஸட கோபராகையாலே ப்ரமாணாநு குணமாக தர்க்கம்‌ சொல்லுகை யன்றிக்கே ஸ்வ மநீஷையாகக்‌ கற்பித்துக்‌ கொண்டு, ஷூஷ்க தர்க்கங்களாலே அர்த்த ஸ்தாபநம்‌ பண்ண விருக்கிற ஸடரைத்‌ தம்முடைய உக்தி ஸ்ரவண மாத்ரத்தாலே தம்முடைய ஸந்நிதாநத்தில்‌ நில்லாதபடி பண்ணி,

வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானைப்
பாட்டாயே பல பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே–10-6-2--நாம் அடிமை செய்ய -பிராப்தி பிரதிபந்தகமாய் அநாதி கால ஆர்ஜிதமான அவித்யாதிகள் எல்லாம் போகப் பெற்ற படி கண்டாயே -நாம் அநாதி காலம் கூட ஆர்ஜித்த வற்றை ஒரு சர்வ சக்தி அல்ப காலத்திலேயே போக்கினை படி கண்டாயே –நாட்டாரோடு இயல்வு ஒழிந்து –அஹங்கார மமக வச்யரோடு தொற்றற்ற படி கண்டாயே –இவை என்ன உலகு இயற்கை –கொடு உலகம் காட்டேல்-என்னப் பண்ணின படி கண்டாயே – நாரணனை நண்ணினமே--நிருபாதிக சர்வ ரக்ஷகனைக் கிட்டப் பெற்றோம் -நிருபாதிக சர்வ பந்துவைக் கிட்டப் பெற்றோம் –கேட்டாயே மட நெஞ்சே-பவ்யமான நெஞ்சே கேட்டாயே –என்று உபகார ஸ்ம்ருதி தொடராக கூறிக் கொள்ளுகிறார் –

யானே என்னை யறியகிலாதே
யானே என்தனதே என்று இருந்தேன்

யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –2-9-9—அவனுக்கு கலக்கம் இல்லாமையால் -தன்னைத் தருகைக்கு எதிர் சூழல் புக்கு திரிய -நான் என்னை முடிய சூழ்த்துக் கொண்டேன்-தேஹாத்ம அபிமானத்தாலே என்னை அவனுக்கு பிரகாரம் என்று அறிந்திலேன்–ஈஸ்வரோஹம் என்று இருந்தேன்-இவன் நான் என்றால் ஈஸ்வரனுக்கு கிட்ட அரிதாய் இ றே இருப்பது-நானும் எனக்கு உரியேன் இன்றிக்கே இருக்க எனக்கு ஒரு உடைமையும் உண்டாக நினைத்து இருந்தேன்-தேகத்தை ஆத்மாவாகவும் -ஈஸ்வர விபூதியை என் உடைமை யாகவும் இந்த விபரீத அஞ்ஞானமே யாய் இருந்தேன்-இருந்தேன் இப்படி ஸ்வரூபம் நசித்துக் கிடைக்க அனுதாபம் இன்றிக்கே க்ருதக்ருத்யனாய் இருந்தேன்-அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று இருக்கை பிராப்தமாய் இருக்க ஒரு கார்யம் இல்லாதாரைப் போலே இருந்தேன்

10-மதா வலிப்தர்க்கு அங்குசம் இட்டு இருந்த பிரபாவம் –அதாவது – பராங்குசர் ஆகையாலே –வித்யாமதோ தன மதஸ் த்ருதீயோ அபிஜனோ மத ஏதே மதாவலிப்தானாம்- ( வித்யா மதம் செல்வா மதம் குடிப்பிறப்பு மதம் ) என்று மத ஹஸ்தி போலே அபிஜன வித்யாதி மத த்ரயா வலிப்தராய் திரியும் அவர்களுக்கு நிர் மதராய் தலை வணக்கும் படி உபதேச ரூப அங்குசம் இட்டு 

(மதா வலிப்தர்க்கு அங்குஸ மிட்டு) பராங்குஸ ராகையாலே ‘வித்‌யா மதோ தந மத,ஸ்‌த்ருதியோபி ஜநோ மத, | ஏதே மதா வலிப்தாநாம்‌ ஏத ஏவ ஸதாம்‌ தம?”’ என்று அபிஜந வித்‌யா வ்ருத்தங்களாகிற மத,த்ரயங்களினாலே தூஷிதரா யிருக்கிறவர்களை ஸ்வோக்தி ரூபமான அங்குஸங்களாலே நிர்மதராம்படி பண்ணி,

11-நடாவிய கூற்றமாய் இருந்த பிரபாவம் –-அதாவது –பறவையின் பாகன் மதன செங்கோல் நடாவிய கூற்றம்–திருவிருத்தம் -6- -என்று வேத வேத்யத்வ த்யோதகமாம்படி வேத மய கருட வாஹனான சர்வேஸ்வரன் விஷயத்தில்- நின் கண் வேட்கை எழுவிப்பன்–திருவிருத்தம்–96-என்று எல்லார்க்கும் பக்தியை உண்டாக்கி நடத்தா நின்று கொண்டு தம் தர்சனத்தில் அகப் பட்டவர்களின் சம்சாரத்துக்கு ம்ருத்துவாய் —

“பறவையின்‌ பாகன்‌ மதன செங்கோல்‌ நடாவிய கூற்றங் கண்டீர்‌”” (திருவிரு. 6) என்று வேத, வேத்‌யத்வ ஸூசகமான கரூட வாஹநனான ஸர்வேஸ்வரன் விஷயத்திலே, “நின்‌ கண்‌ வேட்கை எழுவிப்பனே”” (திருவிரு. 96) என்கிறபடியே எல்லார்க்கும்‌ பக்தியை உண்டாக்கி நடத்துமவராய்‌ கூற்றம்‌ என்கையாலே தம்முடைய தர்ஸநஸ்தருடைய ஸாம்ஸாரிகமான ருசிக்கு விநாஸகரராய்‌

தடாவிய வம்பும் முரிந்த சிலைகளும் போக விட்டு
கடாயின கொண்டொல்கும் வல்லி ஈதேனும் அசுரர் மங்கக்
கடாவிய வேகப் பறவையின் பாகன் மதன செங்கோல்
நடாவிய கூற்றம் கண்டீர் உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே
–6—இவளைப் பிராட்டியாக உடையவன்-காமனுடைய ஆஞ்ஞையை நிர்வஹிக்கிற –மதனன் ஆஜ்ஜையை நடத்துவதால் எதிர்ப்பட்டாரை அழியச் செய்வதொரு மிருத்யுவாய் இருக்கும்–புற மதஸ்தர்கள் நிலை கெடும்படி வேத ஸ்தாபன ப்ரவர்த்தகாச்சார்யார்-வேத நாயகன் எம்பெருமான் பக்கலிலே வேட்க்கையை எழுவித்து முக்தராக்கி ஊழ்வினைத் தொடர்ச்சிக்கு யமன் போன்றவர் என்றவாறு–கூற்றம் –அவனைப் போலே பாணங்களாலே மோஹிக்கப் பண்ணுகை அன்றிக்கே தானே முடிக்கை என்கிறது –ஜீவிக்க நினைத்து இருப்பார் தம் தாமை நோக்கிக் கொள்ளுங்கோள்-கண்டவர்கள் ப்ராணனைத் தன் வசம் ஆக்குகையாலே உங்கள் உயிரைக் காத்துக் கொள்ளுங்கோள்-இந்த லோகத்திலே அந்த மிருத்யுவைத் தப்பினாலும் இந்த மிருத்யுவைத் தப்ப ஒண்ணாது –

வணங்கும் துறைகள் பல பல வாக்கி மதி விகற்பால்
பிணங்கும் சமயம் பல பல வாக்கி  அவையவை தோறு
அணங்கும் பல பல வாக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கு நின்னோரை இல்லாய் நின் கண் வேட்கை எழுவிப்பனே – -96 –ஸ்வ தந்த்ர்யத்தையும் தவிர்த்து – அவர்கள் தங்கள் அறிவு கெட்டு-இன்பம் அனுபவியாதபடி -பண்ணி – எல்லாரும் என்னைப் போலே உன் பக்கலிலே ஆசை-உடையராம்படி -பண்ணக் கடவேன் –இது சம்சாரத்தில் இருக்கச் செய்தே பகவத் ஜ்ஞானம்-பிறக்கையால் வந்த கர்வோக்தி யிருந்தபடி இறே –நீ கை விட்டாலும் நான் கை விடவோ – அனைவரையும் ஆஸ்ரிதர்-ஆக்குகிறேன் என்று ஈஸ்வரன் இடம் மார் தட்டுகிறார் –வணங்குந் துறைகள் பலபல ஆக்கியிருந்தாலும் ப்ரபத்தி மார்க்மொன்றையே பரவச் செய்வேன்;-மதிவிகற்பாற் பிணங்குஞ்சமயம் பலபல ஆக்கியிருந்தாலும் ஸ்ரீவைஷ்ணவ சமயமொன்றையே பரவச் செய்வேன்;-அணங்கும் பலபல ஆக்கியிருந்தாலும் ஸ்ரீமந்நாராயண ரூபியான நின் வடிவத்திலேயே பக்தியை நிகழ்த்துவேன் என்பதாகக் கொள்க.–ஸமாப்யதிக தரித்ரனாய்-ஸர்வ சரீரியான உன் பக்கலிலே அபிநிவேசத்தைப் பிறப்பிப்பன் –

12-தீயன மருங்கு வாராமல் இருந்த பிரபாவம் –அதாவது – கொன்று உயிர் உண்ணும் விசாதி பகை பசி தீயன எல்லாம்–திருவாய் -5-2-6-என்று சரீரத்தை முடித்து பிராணனை அபகரிக்க கடவதான வியாதி சாத்ரவ ஸூதாதி( நோய் பகை பசி ) தோஷங்களும் சாம்சாரிக சகல துக்க ஹேதுவான பாபங்களும் –
வன் துயரை — மருங்கும் –கண்டிலமால்-பெரிய திருவந்தாதி –54-என்ற படி அருகில் வாராத படியாய்-

(தீயன மருங்கு வாராமல்‌) **கொன்றுயிருண்‌ணும்‌ விசாதி பகை பசி தீயன வெல்லாம்‌”’ (திருவா. 5 – 2 – 6) என்று சேதநரை முடித்து ப்ராணாபஹாரம்‌ பண்ணக் கடவதான ஆதி வ்யாதி ரூபமான தோஷங்களும்‌ “வானே மறி கடலோ”’ (பெரியதிரு. 54) இத்யாதி,ப்படி ஸாம்ஸாரிக து,:க ஹேதுவான பாபங்‌களும்‌ பார்ஸ்வத்திலும்‌ வாராதபடியாய்‌,

கொன்று உயிர் உண்ணும் விசாதி பகைபசி தீயன எல்லாம்
நின்று இவ் வுலகில் கடிவான் நேமிப்பிரான் தமர் போந்தார்
நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும் ஞாலம் பரந்தார்
சென்று தொழுதுய்ம்மின் தொண்டீர்! சிந்தையைச் செந்நிறுத்தியே.–5-2-6—கையும் திரு வாழி யுமான அழகிலே ஈடுபட்டு இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –கடிவான் போந்தார் ஆனவர்கள் –அதுக்காக லோகத்தில் பூமியிலே பரந்தார்கள்-யத்ர அஷ்டாக்ஷர சமசித்தோ மஹா பாகோ மஹீயதே –இத்யாதி-

வானோ மறி கடலோ மாருதமோ தீயகமோ
கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால்
-ஆ ஈன்ற
கன்று உயரத் தாம் எறிந்து காய் உதிர்த்தார் தாள் பணிந்தோம்
வன் துயரை ஆ ஆ மருங்கு –54—ஆகாஸ கமனம் பண்ணிற்றோ -மஹா ப்ரஸ்த்தானம் -மஹா விந்த்யம் -பண்ணிற்றோ-இவற்றில் எங்கே சேர்ந்தது-சமீபத்திலே காணாது ஒழிகையால் ஒருங்கிற்றுக் கண்டிலமால் -என்றதிலே மருங்கு என்றது பொருள் இன்றிக்கே நிற்கும் என் அருகில் காணோம் என்றபடி –பிரபல பிரதிபந்தகங்களைப் போக்குமவர் திருவடிகளிலே பணிந்தோம்-நம்மோடே நெடு நாள் பழகிப் போந்த வலிய துயரை அருகும் கண்டிலோம்-இவர் எங்கே புக்கு முடித்தார்-ஐயோ ஐயோ என்கிறார் –

13-கலியுகம் நீங்கி கிருத யுகம் பற்றி இருந்த பிரபாவம் – அதாவது – திரியும் கலியுகம் நீங்கி –திருவாய் -5-2-3-என்றும் –பவிஷ்ய த்யத ரோத்தரம்-பாரதம் (பொருள்களின் தன்மை தலைகீழாக மாறாடிப் போகின்றன )-என்கிற படி பதார்த்த ஸ்வ பாவங்கள் மாறாடும் படி பண்ணுவதாய் – கலவ் ஜகத் பதிம் விஷ்ணும் சர்வ சரஷ்டாரம் ஈஸ்வரம் நார்சயிஷ்யந்தி மைத்ரேய பாஷண்டோ பஹதா ஜனா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-1-50–( கலியுகத்தில் மைத்ரேயரே சர்வேஸ்வரனை பாபங்களால் கெடுக்கப்பட்ட மக்கள் வணங்க மாட்டார்கள் ) என்கிற படி பகவத் ருசி விரோதியான கலி யுகம் போய் -பெரிய கிருத யுகம் பற்றி–திருவாய் -52-3- – என்கிற படியே கேவல வைஷ்ணவ தர்மமே நடக்குமதாய் யுகாந்தர வ்யதானம் அன்றிக்கே ஒரு போகியாக கிருத யுகம் பிரவேசிக்கும் படியாக –4-பட்டு எழு போது அறியாது இருந்த பிரபாவம்-( பட்ட போது-எழு போது -என்று பிரித்து பொருள் )அதாவது – பட்ட போது எழு போது அறியாள் விரை மட்டலர் தண் துழாய் என்னும் –திருவாய் –2-4-9-என்று பகவத் விஷயத்திலே போக்யதா அனுசந்தானத்தாலே – நந்தந்த்யுதித ஆதித்யே நந்தந்த்யச்தமிதே ரவவ் –அயோத்யா -105-24–என்று ஆதித்ய உதயத்திலே வந்தவாறே – த்ரவ்யார்ஜன காலம் வந்தது என்று உகப்பர்கள்–அவன் அஸ்தமித்தவாறே அபிமத விஷயங்களோடு ரமிக்கைக்கு காலம் வந்தது என்று உகப்பர்கள் என்றும் –
பிராதர் மூத்ர புரீஷாப்யாம் மத்யாஹ்னே ஷூத் பிபாச்ய சாயம் காமேன பாத்யந்தே ஜந்தவோ நிசி
நித்ரயா
-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-62-( மக்கள் காலையில் மூத்திரம் மலம் இவற்றாலும் – நடுப்பகலில் பசி தாகத்தாலும் – மாலையில் காமத்தாலும் இரவில் தூக்கத்தாலும் துன்புறுத்தப் படுகின்றார்கள் )என்றும் –சொல்லுகிற படி நாட்டாருக்கு புறம்பே கால ஷேபத்துக்கு உடலாய் செல்லுகிற திவாராத்ரா விபாகமும் அறியாதே அகால்ய கால்யமான தேசத்தில் போலே பகவத் அனுபவ ஏக கரராய் இருந்த பிரபாவம் – இதுக்கு மூலம்–இப்படி இருந்த பிரபாவம்-என்று வாக்ய சம்பந்தம் –இத்தால் கீழ் சொன்ன சங்கைக்கு காரணம் இன்னது என்று எல்லாரும் அறியும் படி அருளிச் செய்தார் ஆய்த்து

(கலியுகம்‌ நீங்கிக்‌ கிதயுகம்‌ பற்றி) “திரியும்‌ கலியுகம்‌ நீங்கி!” (திருவா. 5 – 2 – 9) என்று ‘“பவிஷ்யத்யத ரோத்தரம்‌”‘ (பார.சா .மோ) என்கிறபடியே பதார்த்த ஸ்வபாவங்கள்‌ வேறுபட்டு வருகிற கவியுக தோஷமும்‌ நீங்கி, ““பெரிய கிதயுகம்‌ பற்றிப்‌ பேரின்ப வெள்ளம்‌ பெருக) (திருவா. 5 – 2 – 3) என்று ஆதி க்ருத யுகத்தை யொக்க மஹத்தான ஆநந்த ஸாகரம்‌ அபி வ்ருத்‌தமாக, “பட்ட போதெழு போதறியாள்‌ விரை மட்டலர்‌ தண்டுழா யென்னும்‌”‘ (திருவா. 2 – 4 – 9) என்று பகவத்‌ விஷயத்தில்‌ போக்‌யதாநுஸந்தாநத்தாலே “‘தந்தந்த் யுதித ஆதித்யே நந்தந்த் யஸ்தமிதே ரவெள”’ என்றும்‌, ‘ப்ராதர் மூத்ர புரீஷாப்‌,யாம்‌ மத்‌யாஹ்நே ஷூத் பிபாஸயா । ஸாயம்‌ காமேந படத்‌யந்தே ஜந்தவோ நிமி நித்‌ரயா” என்கிறபடியே ஸம்ஸாரிகளுக்குப்‌ புறம்பே கால க்ஷேப ஹேதுவான திவா ராத்ர விபாக மறியாதே அகால கால்யமான தேஸ விஸேஷத்திற்‌ போலே பகவதநுபவைக பரராய்ப்‌ போந்த இவருடைய ப்ரபாவம்‌ கீழ்‌ அப்படி சங்கிக்கைக்கு ஹேது என்கிறார்-

திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருகக்

கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே.–5-2-3—பவிஷ்யத் யத்ரோத்தரம் என்கிறபடியே -பதார்த்தங்களினுடைய ஸ்வ பாவம் மாராடி இருக்கும் கலி ஸ்வ பாவம் போய் -ஷூ த்ர தேவதைகள் பரராகவும் பர தேவதை அபரனாகவும் கடவதாய் இறே இக்காலம் இருப்பது -தேவர்கள் என்கிறது -ஆக்கரான இந்த்ராதிகளை யன்று -இவர்களுடைய லோகத்தை கண்டால் சங்கை பண்ணும் நித்ய ஸூரிகளும் புகுந்தார்கள்-வா ஸூ தேவ மநோ யஸ்ய தஸ்யாந்தராயோ மைத்ரேய தேவேந்த்ராத் த்வாதிகம் பலம் –என்னக் கடவது இறே–யுகாந்தர வியவதானம் இன்றிக்கே ஒரு போகியான க்ருத யுகம் பிரவேசித்து -கேவலம் வைஷ்ணவ தர்மமே நடையாடக் கடவ காலமாகை- பண்டே பெரிதான ஆனந்த சமுத்திரம் -அதுக்கு மேலே பெருகும் படி -அநந்த கிலேச பாஜனமான தேசத்திலே அந்தமில் பேரின்பம் உண்டாம் படி யாயிற்று

பட்டபோது எழுபோது அறியாள் விரை
மட்டலர் தண் துழாய் என்னும் சுடர்
வட்ட வாய் நுதி நேமியீர் நும்
திட்டமென் கொல் இவ்வேழைக்கே
–2-4-9-உதித்ததும் அஸ்தமித்ததும் அறிகிறிலள் -இனிச் செய்வது என் -இது தாயார் இருந்தபடி என் என்னில்-ராத்திரியில் நித்திரை காணாமையாலும் -பகலில் வார்த்தை சொல்லிப் போது போக்காமையாலும்-இவ் வறியாமை சர்வ விஷயமாகிலுமாம் இ றே -ஒன்றையே எப்போதும் வாய் வெருவா நிற்கும்-பரிமளத்தாலும் தேனாலும் பரிபூரணமான திருத் துழாய் என்னும்
பரிமளம் தேன் செவ்வி குளிர்த்தி இவற்றை உடைய திருத் துழாய் என்னுதல்–கையும் திரு வாழி யான சேர்த்தியைக் காட்டி அனுபவிப்பித்தல் -விரோதிகளை அழியச் செய்தல் செய்கை அன்றிக்கே
அச் சேர்த்தியை இவளுக்கு காட்டி அவ் வழகைக் கொண்டு அகல நின்று நலியத் தொடங்கினீர்
சுடரையும் வட்டமான வாயையும் கூர்மையையும் உடைத்தாகை-உகப்பாரை அவ் வழகைக் காட்டி அவ் வழகைக் கொண்டு அகல நின்று முடிக்கும் – யுகாவாதாரைக் கிட்டி நின்று அத் திரு வாழி யாலே அழியச் செய்து முடிக்கும் -என்பர் சீயர்-வேறு ஒன்றையும் அறியாதே அவனையே வாய் புலற்றுகிற இத்தையும் பேற்றுக்கு பரிகரம் என்று இருக்கிறிலள் அவன் நினைவே உபாயம் என்று இருக்கிறாள்இப்படி இருபத்தொரு வ்யக்தி புறம்பு இல்லை என்கிறாள்-

–——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌ – 5 –ஸூரி வைபவ பாதம்-5– க்‌ரந்த,-தத் கர்த்ரு வைப, வாதி, கரணம்‌ -இரண்டாம் பகுதி-(50-74) -ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

July 5, 2026

5 –ஸூரி வைபவ பாத, – 3 அதிகரணங்கள் இதில்-
5– க்‌ரந்த,-தத் கர்த்ரு வைப, வாதி, கரணம்‌ —39 – 74 –மொத்தம் 36 ஸூரணைகள்
6—ஸூரி ப்ராமாண்ய விஸேஷாதி கரணம்‌(ப்ரமாத்ரு வைபவம் ) 75 – 93 –மொத்தம் 19-ஸூரணைகள்
7-ப,க,வத் கடாக்ஷ விஸேஷாதி கரணம்‌ 94–96—மொத்தம் -3- ஸூரணைகள்

5– க்‌ரந்த,-தத் கர்த்ரு வைப, வாதி, கரணம்‌ —39 – 74 –மொத்தம் 36 ஸூரணைகள்–முதல் பகுதி-39 – 49–மொத்தம் 11-ஸூரணைகள்இரண்டாம் பகுதி-50-74மொத்தம் 25-ஸூரணைகள்

திரு வாய் மொழி ஒன்றுக்கும் அன்றே வேதத்வம் சாதித்தது . இவருடைய பிரபந்தங்கள் நாலுக்கும் ஒக்கும் இறே –ஆகை இறே-வேத சதுஷ்டய -சூரணை 43–இத்யாதி வாக்யத்தில் இவர் பிரபந்தங்கள் நாலையும் நாலு வேதத்தினுடைய ஸ்தாநேயாக அருளிச் செய்தது – -அதில் எந்த பிரபந்தம் எந்த வேதத்தின் உடைய ஸ்தானத்திலே என்ன அருளிச் செய்கிறார் -கீழே இவருடைய ப்ரபந்தங்கள்‌ நாலும்‌ வேத சதுஷ்டயம் போலே என்றது, எந்த ப்ரபந்தம்‌ எந்த வேத ஸ்தாநத்திலே என்னில்‌-

இயற்பா மூன்றும் வேத த்ரயம் போலே-பண்ணார் பாடல் பண்புரை இசை கொள் வேதம் போலே-சூரணை -50–

அதாவது
இயற்பாவான திரு விருத்தம் திருவாசிரியம் , பெரிய திரு அந்தாதி என்கிற பிரபந்தங்கள் மூன்றும் -அடைவே ருக், யஜுர், அதர்வணங்கள் ஆகிற மூன்று வேதத்தின் உடையவும் ஸ்தானத்திலே ..-பண்ணார் பாடல்–திருவாய்-10-7-5-என்று -பண்ணோடு சேர்ந்து இருந்துள்ள இசையை உடைய திருவாய்மொழி –-பண்புரை வேதம்-திருவாய்-6-6-5–என்றும் -இசை கொள் வேதம்–பெரிய திருமொழி-5-3-2–என்றும்-பண்ணையும் இசையும் உடைத்தான சாம வேதம் போலே என்கை ..வியாக்யானங்களில் -பண்புடை வேதம் -என்று ஒழிய –பண்புரை வேதம்-என்ற பாடமும் ,-இசை கொள் வேதம் என்கிறதுக்கு -சாம வேத பரத்வம் கண்டது இல்லை ஆகிலும் , ஆப்த தமரான இவர் ,இப் பிரபந்தத்திலே இப்படி அருளிச் செய்கையாலே ,இப்படியும் கொள்ள வேணும் ..-அப்போதைக்கு அவ்வவ ஸ்தலங்களில் சாம வேத வைலஷண்யத்தைப் பற்ற இத்தைச் சொன்னதே உள்ளது . மற்றயவற்றுக்கும் இது உப லஷணம் என்று கொள்ளக் கடவது .-பண்புரை வேதம் என்றது -பண்ணை புரைந்து இருக்கிற வேதம் என்றதாய்
அப் பண்ணுக்கு ஆஸ்ரயமான வேதம் என்ற படி ..-இசை கொள் வேதம்-என்றது இசையை உடைத்தான வேதம் என்ற படி-பண்ணார் பாடல் என்று -திரு வாய் மொழி பண்ணையும் இசையையும் உடைத்தாய் –
ஆகையாலே சாம வேதத்துக்கு பண்ணும் இசையும் உண்டு என்னும் இடம் அறிவிக்கைக்காக வாய்த்து
சாம வேத பரமான சந்தைகள் வேண்டுவது உண்டாய் இருக்க ,இவற்றை இவர் இப்போது எடுத்தது-

இயற்பாவா யிருக்கிற திருவிருத்தம்‌, திருவாசிரியம்‌, திருவந்தாதி என்கிற ப்ரபந்தங்கள்‌ மூன்றும்‌ ருக்‌, யஜூர் அதர்வணம்‌ என்கிற மூன்று வேத ஸ்தாநத்திலே; ”பண்ணார் பாடல்‌”’ (திருவா, 10 – 7 – 5) என்கிற திருவாய்மொழி “பண்புடை வேதம்‌”, (திருவா. 6 – 6 – 5) ‘இசை கொள் வேதநூல்‌ (திருமொழி 5 – 3 – 2) என்றும்‌ சொல்லுகிற காந ப்ரதாநமான ஸாம வேதம் போலே என்கிறார் –

நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–10-7-5—பண்ணார் பாடல் இன் கவிகள் —ஆர்தல் -சேர்தல் -மிகுதல்-பண் மிக்கு இருந்துள்ள பாடல் -புஷ்ப்பம் பரிமளத்தோடே அலருமா போலே -திருவாய் மொழி அவதரித்த போதே பண் மினுங்கி யாய்த்து இருப்பது –இன் கவி–பண்ணுக்கு ஆஸ்ரயமான கவி தானே இனிதாய் இருக்கை –

பண்புடை வேதம் பயந்த பரனுக்கு
மண்புரை வையம் இடந்த வராகற்கு
தெண்புனற் பள்ளிஎம் தேவபி ரானுக்குஎன்
கண்புனை கோதை இழந்தது கற்பே.–6-6-5—ஈஸ்வரனை உள்ளபடியே காட்டித் தரும் நீர்மையை யுடைய வேதம் —

வசையில் நான்மறை கெடுத்த அம் மலர் அயற்கு அருளி முன் பரி முகமாய்
இசை கொள் வேத நூல் என்று இவை பயந்தவனே எனக்கு அருள் புரியே
உயர் கொள் மாதவிப் போதொடு உலாவிய மாருதம் வீதியின் வாய்த்
திசை எல்லாம் கமழும் பொழில் சூழ் திரு வெள்ளறை நின்றானே –5-3-2—நல்ல நாதத்தை உடைத்தாய் இருந்துள்ள வேதம் இதிஹாசாதிகள் இவற்றை உண்டாக்கினவனே என் பக்கலிலே கிருபையை பண்ணி யருள வேணும் –

ஆனால் அந்த சதுஷ்டயத்தில் ருக்கு சாம ரூபேண விஸ்த்ருதமாம் ஆகாரம் இங்கும் ஒக்குமோ என்னும்
ஆ காங்ஷையிலே அருளிச் செய்கிறார் மேல் ..இதில்‌ ருக்கு ஸாமமாகப்‌ பாடப்படுகிறாப் போலே ருக்‌ வேத ஸ்தாநே யாயிருக்கிற திருவிருத்தம்‌ திருவாய்மொழியாகப்‌ பாடப்படும்‌ என்கிறார்‌-

ருக்கு சாமத்தாலே சரசமமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே சொல்லார் தொடையல் இசை கூட்ட
அமர் சுவை ஆயிரம் ஆயிற்று-சூரணை-51-

அதாவது-
சாம ஸங்க்ரஹமான ருக்கானது ஸ்வ விவரணமாய் ருசஸ் சாம ரச -என்கிற படியே தனக்கு
ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே , ரச சகிதமாய் ,-ஹாவு ஹாவு-இத்யாதியான ஸ்தோபத்தாலே விச்த்ருதமாமா போலே ருக் வேத ஸ்தாநேயாய் இருக்கிற சொல்லார் தொடையலான–(தொடையல் -சப்த சந்தர்ப்பம் )திருவிருத்தம்-100–திரு விருத்தம் நூறு பாட்டும்- இசை கூட்டி-திருவாய்-2-4-11- என்கிற படியே -இசையிலே கூட்டினவாறே-சாம வேத ஸ்தாநேயாய் –அமர் சுவை ஆயிரம்–திருவாய்-1-3-11-என்கிற படியே சரசமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாய் பரம்பின என்கை .

ஸாம ஸங்க்‌,ரஹம்‌ ருக்கு; ருக்‌ விவரணம்‌ ஸாமம்‌. அப்படியே திருவிருத்தமும் திருவாய்மொழியும்‌. (ருக்கு ஸாமத்தாலே ஸரஸமாய்‌) ருக்கு ஸாமத்தோடே கூடி ரஸ ஸஹிதமாய்‌. (ஸ்தோப,த்தாலே பரம்புமாப் போலே) ஸ்தோப,ம்‌ என்கிறது ருக்‌ வேதங்களை யொழிந்த “*ஹாவு ஹாவு ஹாவு”” இத்யாதிகளாலே பாட, ஒன்று பத்தாக விஸ்த்ருதமாமாப் போலே *சொல்லார் தொடையலான இந் நூறு பாட்டும்‌ ““இசை கூட்டி வண் சடகோபன்‌”‘ (திருவா. 2 – 4 – 11) என்கிறபடியே இசையிலே கூட்டினவாறே “அமர்‌ சுவை யாயிரம்‌”’ (திருவா. 1 – 3 – 11)என்கிறபடியே ஸரஸமான ஆயிரமாயிற்று-

நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர்
வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல்லார் தொடையில் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம்
பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே – – 100–ஆப்த வாக்கியம் என்று ஆதரிக்க வேண்டா –பாட்யே கேயே ச மதுரம் -என்கிறபடியே-இதில் சாரஸ்யத்துக்கும்  ஆக ஆதரிக்க வேணும்-

வாட்டமில் புகழ் வாமனனை இசை
கூட்டி வண் சடகோபன் சொல்
அமை
பாட்டோராயிரத்து இப்பத்தால் அடி
சூட்டலாகுமே அந்தாமமே –2-4-11–இசை-கூட்டி –இயல் தானே ஆகர்ஷகமாய் இருக்க புஷ்ப்பம் பரிமளத்தோடே அலர்ந்தால் போலே இசையோடே புணர்ப்புண்டது என்கை-வண் சடகோபன் சொல்
மானஸ அனுபவம் அன்றிக்கே வாசகம் ஆக்கி நாட்டை அடைய வாழ்வித்த உதார குணம்
அமை பாட்டு-சப்த லக்ஷணங்களாலும் அர்த்தத்தாலும் பூரணமாய் இருக்கை -அமைவு -சமைவு-

அமரர்கள் தொழுது எழு அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே–1-3-11—இவ் வாசிகமான அடிமை -முறை என்று -கார்யாபுத்த்யா செய்ய வேண்டாதபடி -ரச கனமாயிற்று இவ்வாயிரமும் –ரசகனமாயிற்று -சுவை நிறைந்தனவாய் இருக்கிற ஆயிரம்.-‘இதனால், சொற்களைக் கொண்டு செய்யும் அடிமை ‘முறை’ என்று காரிய புத்தியாகச் செய்ய வேண்டா என்றபடி.

இனி சாமம் தான் அநேக விதம் ஆகையாலே ,இது எந்த சாமத்தொடு ஒக்கும் என அருளி செய்கிறார் மேல் –ஸாமந்தான்‌ ஆயிரமாய்‌ அநேக விதமாயிருக்குமே. எந்த ஸாமத்தோடே ஓப்பாகிறது என்னில்‌, சாந்தோக்‌ய ஸமமாயிருக்கும்‌ என்கிறார்‌ மேல்‌

சாந்தோகன் என்று சாமான்யம் ஆகாமல் முதலிலே பிரித்து-யாழ் பயில் கான ஸ்வரூபியை பாலையாகி என்று விசேஷிக்கையாலே-வேத கீத சாமி நான் என்ற சாமம் தோன்ற உத்கீத பிரணவத்தை பிரதமத்திலே மாறாடி சரம கதி முடிவாக தொண்டர்க்கு அமுது என்ன தேவான்னம் ஆக்கி மகா கோஷ நல் வேத ஒலி போலே மகாத்யயனம் என்ன பாடுகையாலே இத்தை சாந்தோக்ய சமம் என்பர்கள்.–சூரணை-52-

சாந்தோகன் என்று சாமான்யம் ஆகாமல் முதலிலே பிரித்து — அதாவது –சாம வேத கீதனாய சக்ரபாணி அல்லையே–திருச்சந்த -14- – திசை முகனார் தங்கள் அப்பன் சாமி அப்பன் – பெரிய திருமொழி –2-2-7-
சாமவேதோஸ்மி-ஸ்ரீ கீதை –10-22- -என்று அபியுக்தரும் ,அவன் தானும் சொன்ன சாமம் சாமான்யம் ஆகாமல் சாந்தோகன் ,பவ்ழியன்,ஐம் தழல் ஓம்பு தைத்ரியன் ,சாம வேதி –பெரிய திருமொழி-5-5-9-
என்ற இடத்தில் –சாம வேதி -என்று மேல் சொல்லா நிற்க –சந்தோகன் -என்று முதலில் பிரித்தது என்கை –இது நினைவன்றாகில் –சாம வேதி -என்றதுக்குள்ளே இந்த சாமமும் அந்தர் பவிக்குமாய் இருக்க இங்கன் பிரித்து சொல்ல வேண்டா விறே- என்ற கருத்து-யாழ் பயில் கான ஸ்வரூபியை பாலையாகி என்று விசேஷிக்கையாலே– அதாவது –யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவை திருவாய்-2-3-7–என்று
யாழ் விஷயமாக அப்யசிக்க படுவதான சாஸ்திரத்தில் சொன்ன லஷணத்தை உடைய நரம்பிலே பிறந்த பண் பட்ட ரசம் என்னும் படி கான ஸ்வரூபம் போலே இனியன் ஆனவனை -கான சாமான்யம் ஆகாமல் –யாழ் நரம்பில் பெற்ற பாலை யாகி-(பாலையாகிய கான ஸ்வரூபி )-பெரிய திருமொழி-7-3-7–என்று அந்த சாந்தோக சாமத்தின் நிறமான-பாலையாழ் என்கிற பண்ணை இட்டு விசேஷிக்கையாலே என்கை ..இப்போது இது சொல்லிற்று – சாம வேத கீதன் –என்கிற இடத்தில் வேதத்தோடு அன்றிக்கே , அதன் கீதத்தோடு சாமானாதி கரிக்கையாலே அந்த கீதமும் சாந்தோக சாம வேதம் என்று அறிவிக்கைகாக —வேத கீத சாமி நான் என்ற சாமம் தோன்ற — அதாவது –இப்படி விசேஷிக்கையாலே ,பச்வதி கரண ந்யாயத்தாலே ,-சாம வேத கீதன்–சாமி–சாம வேதோச்மி –என்று சொன்ன சாமான்யமான இஸ் சாம சப்தமும் ,-கீத சப்தமும் ,கீழ் சொன்ன சந்தோக தத் கீதங்கள் ஆகிற விசேஷத்தில் பர்யவசிக்கும் இறே –-ஆன பின்பு சாந்தோக சாமமே இத்தால் சொல்லப் பட்டது-ஆகையாலே இப்படி அப்யுக்தரும் தானும் தன்னோடு சாமானாதி கரிக்கும் படி உத்க்ருஷ்டமாய் அவனுக்கு ஆதரீயணமான சாந்தோக சாமம் ஈது என்னும் இடம் தோன்றும் படியாக என்கை ..

“சந்தோகன்‌ பெளழியன்‌ ஐந்தழலோம்பு தைத்திரியன்‌ சாமவேதி”” (திருமொழி 5 – 5 9) என்கிற விடத்தில்‌ ““’ஸாமவேதி” என்று ஸாம ஸாமாந்யமாகாமல்‌ ““சந்தோகன்‌”” என்று முதலிலே பிரித்து “’முன்னல் யாழ் பயில்‌ நூல் நரம்பின்‌ முதிர்சுவை”’ (திருவா 2-5 – 7) என்கிற காந ரூபியை காந ரஸமானவனை; ““யாழ் நரம்பில் பெற்ற பாலையாகி”’ (திருமொழி 7 – 3 – 7) என்று கொண்டு காந ஸ்வரூபி என்று ஸமுதாயமாக்காமல்‌, “பாலை?””, “யாழ்‌” என்கிற பண்ணை யிட்டு விஸேஷிக்கையாலே “சாம வேத கீதனாய”” (திருச்ச. 14) என்றும்‌, “’வேதா நாம்‌ ஸாம வேதோஸ்மி?”  (கீதை 10 – 22) என்றும்‌ அவன் தன்னோடொக்க ஸமாநாதி, கரிக்கும் படியான சந்தோக ஸாமம்‌ இத்திருவாய்‌ மொழி என்னுமிடம்‌ தோற்ற-

தூய்மை யோகமாயினாய் துழாய் அலங்கல் மலையாய்
ஆமையாகி ஆழ் கடல் துயின்ற வாதிதேவ நின்
நாமதேயமின்னதென்ன வல்லமல்ல வாகிலும்
சாமவேத கீதனாய சக்ர பாணி அல்லையே
 –14-நீ அழிவுக்கு இட்ட கூர்ம விக்ரஹம் சாந்தோக்ய சித்தமாய் -கையும் திரு வாழியுமான அதி ரமணீய விக்ரஹம் என்று அறிந்தேன் –ய ஏஷோ அந்தராதித்யே ஹிரண்மயம் புருஷோ தர்ச்யதே ஹிரண்மய ஸ்மஸ்ருர் ஹிரண்யகேஸ ஆப்ரணகாத் சர்வ ஏவ ஸுவர்ண: தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீக மேவ மக்ஷிணி (சாந்தோக்யம் 1-6 and 7)-த்யேயஸ் ஸதா சவித்ர் மண்டலமத்யே வரதீ நாராயணாயஸ் சஸரஸிஜாஸன ஸன்னிவிஷ்ட கேயூரவான் மகரகுண்டலவான் கிரீடி ஹரீ ஹிரண்மயவபுர் -த்ர்த சங்கசக்ர (ஸ்ரீ நரஸிம்ஹ புராணம் )

திங்களப்பு வானெரி காலாகித் திசை முகனார்
தங்களப்பன் சாமியப்பன் பாகத்திருந்த வண்டுண்
தொங்கலப்பு நீண் முடியான் சூழ் கழல் சூட நின்ற
எங்களப்பன் எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-7—கார்ய வர்க்கத்துக்கு உப லஷணமாக சந்திரனையும் காரணமான பூத பஞ்சகத்துக்கு உப லஷணமாக நாலையும் சொல்லி இவற்றுக்கு  அந்தராத்மாவாய் நிற்கிறான் என்றபடி – சதுர் முகனுக்கும் ஜநகன் ஆனவன் –சாம வேத ப்ரதிபாத்யனான காரண -பூதன் -( ஏக விஞ்ஞான சர்வ விஞ்ஞானம் )

வேதாநாம் ஸாமவேதோऽஸ்மி தேவாநாமஸ்மி வாஸவ:
இந்த்ரியாணாம் மநஸ்சாஸ்மி பூதாநாமஸ்மி சேதநா–
10-22-வேதங்களில் யான் சாமவேதம்; தேவரில் இந்திரன்; புலன்களில் மனம் யான்; உயிர்களிடத்தே உணர்வு நான்.-மஹா விஷ்ணுவுக்கே ஸாமக அதாவது ஸாமவேதம் ஓதுபவர் என்ற பெயர், விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் அமைந்துள்ளது-இசையோடு கூடியிருப்பதால் ஸாமவேதம் பொருள் விளங்காதவர்களுக்கும் உள்ளத்தைக் கவர வல்லதாகிறது.

பந்தோடு கழல் மருவாள் பைங்கிளியும் பாலூட்டாள் பாவை பேணாள்
வந்தானோ திருவரங்கன் வாரானோ  என்று என்றே வளையும் சோரும்
சந்தோகன் பவுழியன் ஐந்து அழல் ஓம்பு தைத்ரியன் சாம வேதி
அந்தோ என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே —5-5-9—சந்தோகன் –சந்தோக சாமத்தை பிரித்துச் சொல்லுகிறதாகவுமாம் – அன்றிக்கே இத்தால் –வேதைக சமதி கம்யன் என்ற படியாய் –பவுழியன் ஐந்து அழல் ஓம்பு தைத்ரியன் சாம வேதி-மேல் வேதாந்த வித்தமன் என்றதாகவுமாம் –

முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே
பன்னலார் பயிலும் பரனே பவித்திரனே

கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா
நின்னலால் இலேன் காண் என்னை நீ குறிக்கொள்ளே–2-3-7—பழையதாய் வி லக்ஷணமாய் யாழ் விஷயமாக ப்ரவ்ருத்தமாய் அப்யஸிக்கப் படுவதான நூல் உண்டு சாஸ்திரம்-அது சொன்ன லக்ஷணத்தை உடைய நரம்பில் பிறந்த முதிர்ந்த ரசம் போலே போக்யமானவனே
ய ஆத்ய ஸ்வா தூ நாம் -என்று சப்த சாரஸ்யத்தை தலையாகச் சொல்லக் கடவது இறே
மிடற்றைச் சொல்லாதே நரம்பைச் சொல்லிற்று கர்மத்தால் போது செய்யாதது ஆகையால்-

பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற பாலையாகி இங்கே புகுந்து என்
கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான் கொண்ட பின் மறையோர் மனம் தன்னுள்
விண்ணுளார் பெருமானை எம்மானை வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல்
வண்ணன் மா மணி வண்ணன் எம் அண்ணல் வண்ணமே அன்றி வாய் யுரையாதே –7-3-7–பண் வர்க்கத்திலே இனிய பேச்சை உடைய யாழ் நரம்பிலே – யாழிலே பிறக்கப் பெற்ற -பாலை -யாகிற பண்ணாய் அப் பண் போலே போக்யனாய்க் கொண்டு வந்து புகுந்து –

உத்கீத பிரணவத்தை பிரதமத்திலே மாறாடி — அதாவது –ஒரு சாமம் தனக்கே ,பிரஸ்தாபம், உத்கீதம் ,ப்ரதீஹாரம் ,உபத்ரவம் ,நிதநம் என்று அஞ்சு பாகங்கள் உண்டாகையாலே ,அவற்றுக்குள் ஒன்றாக இருக்கச் செய்தே , சாம்ன உத்கீதோ ரச –சாந்தோக்யம்- என்று சாமத்துக்கு ரசமாக சொல்லப் படுமதாய் ,பிரணவ பூர்வமாக , கானம் பண்ணப் படுமதாய் ,இருப்பது ஓன்று இறே உத்கீதம் –-ஆகையால் அந்த உத்கீத அவயவமான பிரணவத்தை ,-ஓம் இத் ஏதத அஷரம் உத்கீதம் உபாசீத -என்று சாந்தோக்யம் தன்னில் பிரதமத்தில் எடுத்தால் போலே ,இங்கும் பிரதமத்திலே எடுக்கிற அளவில் ,ஓம் என்று
சம்ஹிதா காரேன வெடுத்தால் அதிகிரிதா அதிகாரமாம் என்று அசம்ஹிதா காரேன அஷர த்ரயத்தையும் பிரதம த்வதீய த்ருதீய பாதங்களில் எடா நிற்க செய்தே , பிரதம அஷரமான அ காரம் முதலாக எடாதே உ காரம் முதலாக எடுக்கையாலே அஷர க்ரமத்தை மாறாடி
என்கை-இப்படி உ காரம் முதலாக எடுத்ததுக்கு பிரயோஜனம் அந்த சாந்தோக்ய ரசமான உத் கீதத்துக்கு நோக்கான உத் -என்கிற
திரு நாமம் இதற்க்கு உள்ளுறை யானமை தோன்ற உ காராதியாக எடுத்து -உயர்ந்தே
-10-10-11–என்று தகாராந்தமாக முடிக்கை ….-இது தான் மேலில் சூர்ணையில் வியக்தம் ..-ஆக இப்படி அஷர த்ரய ரூபேண ,பிரணவத்தை பிரதமத்திலே கீர்த்தியா நிற்கச் செய்தே ஏதத் அபிப்ரா யேன அஷர க்ரமத்தை மாறாடி-

உத்‌ கீத மேதத் பரமநுப்‌ரஹ்ம””, ““ஓங்காரோத்‌ கீத மேவ”, “ஓமித் யேததக்ஷர முத்‌ கீத முபாஸீத”‘(சா. 1 – 1 – 1) என்று சொல்லுகிற உத்‌ கீத ப்ரணவத்தை ப்ரதமத்திலே மாறாடி. இப் ப்ரபந்தத்துக்கு உத்‌கீதம்‌ என்கிற இது ப்ரதாநம்‌ என்னுமாகாரம்‌ தோன்ற ப்ரணவத்தை ப்ரபந்த ஆதியிலே “உயர்வற-மயர்வற, அயர்வறும்‌”” என்று மாறாடி

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே-இந்த பத்தும் அனுசந்தித்து -உயர்ந்தே பிறந்தார்

சரம கதி முடிவாக — அதாவது -சாந்தோக்ய மத்யே சொன்ன ,அர்சிராதியான சரம கதியை –
சூழ் விசும்பு அணி முகிலிலே
-10-9-1- -பேசுகையாலே சரம கதியை முடிவாக கொண்டு என்கை ..
இத்தை சரம கதி என்கிறது -கர்ப்ப யாம்ய தூமாதிகள் போல் அன்றிக்கே எல்லை நிலமான முக்தி மார்க்கம் என்கையாலேதொண்டர்க்கு அமுது என்ன தேவான்னம் ஆக்கி —அதாவது -அந்த சாமம் –ஏதத் சாம காயன்னாச்தே–தைத்ரியம்–என்கிற படியே பகவத் அனுபவ ஜனித ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக –ஹாவு ஹாவு -இத்யாதிபடியே சாம கானம் பண்ணி அஹம் அந்நாதா -என்று களிக்கும் நித்ய முக்தரான தேவர்களுக்கு போக்யமாம் ஆம் போலே –தொண்டர்க்கு அமுது உண்ண -9-4-9–என்கிற படியே
இதுவும் பகவத் அனுபவ சபலர்க்கு போக்யமாம் படி ஆக்கி என்கை ..மகா கோஷ நல் வேத ஒலி போலே மகாத்யயனம் என்னப் பாடுகையாலே —-அதாவது –சர்வேப்யோபிஹி வேதேப்ய சாமகோஷோ மகாநபூத் அன்வ கோஷாய தத்யர்த்தம் தேன ப்ரஹ்மாண்ட மண்டப -என்றும்–பாடு நல் வேத ஒலி -திருவாய்-5-9-3–என்றும் சொல்லுகிற பெரிய கோஷத்தை உடைத்தான சாம வேதம் போலே ,பெரிய திரு அத்யயனம் என்னப் பாடுகையாலே என்கை .. இத்தை சாந்தோக்ய சமம் என்பர்கள்..-ஆக இப்படி கீழ் சொன்ன ஆகாரங்களை கொண்டு ,இத்தை சாந்தோக சாமத்தில் உபநிஷத் பாகமான சாந்தோக்யத்துக்கு சமம் என்று அபியுக்தர்கள் சொல்லுவார்கள் என்கை-

“உயர்ந்தே” என்று சரம கதி முடிவாக அகார மகாரங்களிரண்டினுடைய சரமமான நடு தகாரம்‌ அத்தைத் திருவாய்மொழிக்கு முடிவாக்கி {அகார-உகாரங்களின்‌ சரமமான தகாரத்தைத்‌ திருவாய்மொழிக்கு முடிவாக்கி!.–அன்றிக்கே அர்ச்சிராதி,யை முடிவாக்கி என்னவுமாம்‌. அதுக்கடி – முடிவிலே சூழ்‌ விசும்பணிமுகிலாகையாலே. “’தொண்டர்க்கமுதுண்ணச்‌ சொன் மாலைகள்‌ சொன்னேன்‌”’ (திருவா. 9 – 4 – 9) என்று இப் ப்ரப,ந்த,த்தை ““ஹாவு ஹாவு ஹாவு” என்று தொடங்கி,  “அஹமந்நாதோரஹ மந்நாதோரஹமந்நாத,?‘” என்று தேவ போக்‌யமானாப் போலே, ப,க,வத்‌,விஷயத்தில்‌ சபலரானார்க்கு போக்‌யமாக்கி.““ஸர்வேப்‌யோபி ஹி வேதேப்‌ய: ஸாம கோஷோ மஹாநபூத்‌ | அந்வ கோஷய தத்யர்த்த,ம்‌ தேந ப்ரஹ்மாண்ட,மண்டபா ” என்று (மஹாகோஷம்‌) பெரிய ஆரவாரத்தை உடைத்தாயிருப்பது ஸாம கோஷமிறே. “எழுந்த நல்வேதத்தொலி”* என்றும்‌, *“ஸாமத்‌வநி” என்றும்‌ சொல்லுமாப் போலே இப்ப்ரபந்தத்தையும்‌ மஹாத்‌யயநமென்னப்‌ பாடுகையாலே பெரிய திருவத்யயந மென்னக் கடவதிறே. ஆகையாலே இத்தை சாந்தோக்‌ய ஸமமென்பர்கள்‌ என்கிறார்

சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே
–10-9-1–அங்குத்தை அனுபத்துக்கு ஈடாம்படி மிகவும் விடாய் பிறக்கைக்காக – தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளைக் கண்ணாலே கண்டால் போலே விசதமாக பிரகாசிக்கும் படி பண்ணி அருளினான் –காட்டி அருளக் கண்டு ப்ரீதராய் -அத்தை அந்யாபதேசத்தாலே பேசி அனுபவிக்கிறார் –தமக்கு அவன் பண்ணிக் கொடுத்த பேற்றை ஸ்ரீ வைஷ்ணவர்கள் எல்லாரும் பெற்றவராக பேசுகிற இது -அந்யாபதேசமாவது–அது தனக்கு பிரயோஜனம் -இங்குள்ளார் ஆழ்வார் பேறு நமக்குத் தப்பாது -என்று இருக்கைக்காக –

கண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து
பண்டை வினை ஆயின பற்றோடு அறுத்துத்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே –9-4-9—ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் உபகாரகனாகப் பெற்றேன்-இப்பேறு என்னால் வந்ததாக மாட்டாது -நான் சர்வேஸ்வரனால் விஷயீக்ருதன் ஆனேன் –

சூடு மலர்க் குழலீர்! துயராட்டியேனை மெலியப்
பாடு நல் வேத ஒலி பரவைத் திரை போல் முழங்க
மாடுயர்ந் தோமப் புகை கமழும் தண் திரு வல்லவாழ்
நீடுறை கின்ற பிரான் கழல் காண்டுங் கொல் நிச்சலுமே.–5-9-3—ஈஸ்வரனைப் பாடுகிற பழம் புணர்ப்பான வேதம் என்னுதல்-கானத்தை யுடைய சாம வேதம் என்னுதல் -உளன் சுடர் மிகு சுருதியுள்-என்று பிரமாணங்களில் உத்கர்ஷம் ஆதல் -வேதா நாம் சாம வேதோ அஸ்மி -என்னும் உத்கர்ஷம் ஆதல்-

உத்கீத பிரணவத்தை பிரதமத்திலே மாறாடி-என்று கீழ் சொன்னதின் கருத்தை ஆப்த உபதேச முகேன அறிவிக்கிறார் மேல் .-அந்தராதித்யவித்‌யை தொடக்கமான வற்றையும்‌ இதிலே சொல்லுமென்று கொண்டு முற்பட்ட யோஜனையை அருளிச் செய்கிறார்‌ மேல்‌-

புரவி ஏழு ஒரு கால் உடைய தேரிலே திரு சக்கரம் ஒத்து கால சக்கரச் செங்கோல் நடாவி ஜோதிஸ் சக்கர ஒளி சுருக்கி அக்நீஷோ மீய தேஜோ அம்ருதத்துக்குக் ஊற்றும் மந்தேஹர்க்கு செம் தீயும்
முக்தி மார்க்கத் தலை வாசலும் கண்ணாவான் கண்ணில் பிறந்த கண்மணியும் த்ரயீ மயமுமான மண்டலத்திலே தண் தாமரை சுமக்க தோள் வளையும் குழையும் திரு செய்ய முடியும் ஆரமும் படையும் திகழும் பொன் மேனியும் செஞ்சுடர் தாமரை கண்ணுமாய் அணி நிற மூர்த்தி ஈது என்னும் படி இரண்டையும் தன்னிறம் ஆக்குகிற செய்யாளான வித்தை யோடே அருக்கன் மேவின சதாத்யேய தேஜஸ்ஸின் சாம ரச உத்கான நாமம் உள்ளுறையான ஆத்யந்தங்களாலே ஓர் ஆயிரமாம் அவற்றிலே ஒன்றை ஆயிரம் முகத்தினால் அருளின தீர்த்தம் போலே தீர்த்தங்கள் ஆயிரமுமாக விஸ்தரிக்கிறார் என்று வேத குரு உபதேசம் .–சூரணை -53–

1-புரவி ஏழு ஒரு கால் உடைய தேரிலே –-அதாவது –காரார் புரவி ஏழ் பூண்ட தனி ஆழி -சிறிய திருமடல் –என்றும்-ஒரு கால் உடைய தேர் -பெரிய திருமொழி-5-7-8–என்றும் சொல்லுகிற படியே – காயத்ரீ /ப்ருஹதீ /உஷ்ணிக் /ஜகதீ/த்ருஷ்டுப் /அனுஷ்டுப் /பங்க்தி -என்கிற ஏழு சந்தஸ்ஸூக்களும் ஏழு குதிரைகளாக கொண்டு வகிக்கையாலே ,-சப்தாஸ்வ யுக்தமாய் .கால சக்ர மயமான ஏக சக்கரத்தையும் உடையதான ரதத்திலே என்கை–சப்த யுஜ்ஞஜந்தி ரதமேக சக்ரம் -ஆரணம்–என்றும்
ஹாயாச்ச சப்த சந்தாம்சி தேஷாம் நாமாநி மே ஸ்ருணு காயத்ரீ ச ப்ருஹத் யுஷ்ணிக் ஜகதீ
த்ருஷ்டுபேவச அனுஷ்டுப் பங்க்தி ரித்யுக்தா சந்தாம்சி ஹரயோ ரவ
-ஸ்ரீ விஷ்ணு புராணம்-2-8-4-– என்றும் சொல்லக் கடவதிறே-ஏகோ அச்வோ வஹதி சப்தநாமா-ஆரணம்-–என்றதுக்கு ஹிருதயம் ஏதத் அனுகுணமாக வியாக்யாதமான இடங்களில் கண்டு கொள்வது —திரிநாபிமதி பஞ்சாரே ஷண்ணே மின்யஷா ஆத்மகே , சம்வத்சர மயே க்ருத்ஸ்னம் காலசக்ரேத் மகே பிரதிஷ்டிதம் –ஸ்ரீ விஷ்ணு புராணம்-2-8-3- என்கிற படியே , சாதுர் மாஸ்ய த்ரயாத் மகமான நாபியை உடைத்தாய்-சம்வஸ்தரம் பரிவஸ்த்ரம் , இதாவஸ்த்ரம்.அனுவஸ்த்ரம் , இத்வஸ்த்ரம் என்று சொல்லப் பட்ட ஐஞ்சு
வஸ்தரத்தையும் ,அரங்களாக உடைத்தாய் வசந்த கிரீஷ்ம வர்ஷா சரத்தே மந்த சிசிரங்களாகிற ஆறு ருதுக்களையும் நேமியாக உடைத்தாய் , ப்ரவாஹா பரி விருத்தியாலே , அஷய ரூபமாக இருக்கிற கால சக்கரத்திலே , சர்வம் பிரதிஷ்டிதம்-என்கையாலே , இந்த ஏக சக்கரம் கால சக்கரமாய் இறே இருப்பது .
ஆக இப்படி இருந்துள்ள சப்த அஸ்வங்களையும் ,ஏக சக்கரத்தையும் உடைத்து ஆகையாலே ,இதர வ்யாவ்ருத்த வைபவமான ரதத்திலே என்ற படி –

“காரார்‌ புரவியேழ்‌”’ (சி. திருமடல்‌) என்றும்‌, ““ஓருகாலுடைய தேரொருவன்‌”” (திருமொழி 5 – 7 – 8) என்றும்‌, “ஸப்த யுஞ்ஜந்தி ரத மேக சக்ரம்‌”” (அருணம்‌ 3) என்றும்‌, “ஏகோ அஸ்வோ வஹதி ஸப்தநாமா‘ (அருணம்‌ 3) என்று ஸப்தநாமா வாயிருப்பதொரு அஸ்வத்தாலே வஹிக்கப்படுவதாய்‌, ஏக சக்ரியுமாயிருக்கிற தேரிலே-

கார் ஆர் புரவி ஏழ் பூண்ட தனி ஆழித் தேரார் – நிறை கதிரோன் -மண்டலத்தைக் கீண்டு புக்கு –
ஆராவமுதம் அங்கு எய்தி -அதில் நின்றும் வாராது ஒழிவது  ஓன்று உண்டே –மேக மண்டலத்தில் செல்லுவதும் ஏழு குதிரைகள் பூட்டப் பெற்றதும் ஒற்றைச் சக்கரத்தை வுடையதுமான – அது தான் உங்களுக்கு ஏற்க உண்டே என்று தோற்றிற்றோ -தனி ஆழித் தேரார் – பிள்ளாய் -இரண்டாதல் நாலாதல் அன்றிக்கே தனிச் சக்கரமாம் –பிள்ளாய் -ஆகாசத்திலே ஒருவன் தேர் நடக்கை யாவதென் –மேக பதத்திலே குதிரை சஞ்சரிக்கை யாவது என் புரவி -இரண்டு அல்ல நாலு அல்ல ஆறு அல்ல -எட்டு அல்ல ஏழு குதிரை பூண்கை யாவது என் –நிறை கதிரோன் – ஒரு விளக்கின் சந்நிதியில் விழிக்க மாட்டாத அதி சூத்திரன் உஷ்ண கிரணங்களால் பூர்ணனாய் இருக்கிற ஆதித்யனைச் சென்று கிட்டுகை யாவதென் –மண்டலத்தைக் கீண்டு புக்கு –ஒருவனை இங்கே உபாசித்து அவனுடைய ராஜகுலத்தாலே -ஆதித்ய மண்டலத்தின் நடுவே போகிறானாம் இறே அங்கே ஏறப் போனால் அவ்வழிப் போக்குத் தான் இங்குப் போலே இரண்டருகும் பணையாக நடவே போகிறானோ தான் -என்கை –

ஊழியாய் ஓமத்து உச்சியாய் ஒரு காலுடைய தேர் ஒருவனாய் உலகினில்
சூழி மால் யானைத் துயர் கெடுத்து இலங்கை மலங்க வன்று வடு சரம் துரந்து
பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளிப் பகலவன் ஒளி கெடப் பகலே
ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே —5-7-8–காலோ பல ஷிதமான சகல பதார்த்தங்களுக்கும் நிர்வாஹகனாய்-அஹம் ஹி சர்வ யஞ்ஞாநாம் போக்தா பிரபு – என்றும்-போக்தாம் யஜ்ஞ  தபஸாம் -என்கிறபடியே-சர்வ கர்ம சமாராத்யனாய்-ஏக சக்கரமான ரதத்தை உடைய ஆதித்யனுக்கு அந்தராத்மாவாகக் கொண்டு அவ் வழியாலே உபாஸ்யனாய்-

இனி மேல் மண்டலத்தை வர்ணிக்கிறது –2-திரு சக்கரம் ஒத்து -அதாவது — அம் மேருவில் செஞ்சுடரோன் திரு மால் திருக் கை திருச் சக்கரம் ஒக்கும் -திரு விருத்தம் -88–என்னும் படி
விருத்தாகாரதையாலும் ,தேஜோ விசேஷத்தாலும் ,திரு ஆழியோடு ஒத்து இருக்கை–3-கால சக்கரம் செம் கோல் நடாவி —- அதாவது –திரு சக்கரத்தால் அகல் விசும்பும் ,நிலனும்,இருளார் வினை கெட செம் கோல் நடாவுதீர்–திரு விருத்தம் -33 -என்கிற படி உபய விபூதியிலும் ,ஈஸ்வரன் தன் ஆக்ஜையை நிர்வகிக்கைக்கு உபகரணமான திரு ஆழியைப் போலே ,-கால சக்கரத்தாய்–-திருவாய்-7-2-7-என்னும் படி கால சக்கர நிர்வாகனானவனுடைய கால சக்கர விஷயமான ஆக்ஜையை-தனி வளர் செம் கோல் நடாவு தழல் வாய் அரசு -திரு விருத்தம் -13- -என்கிற படியே நடத்துகை .

திருமால்‌ திருக்கைத்‌ திருச் சக்கரமொக்கும்‌”’ (திருவிரு. 86) என்கிறபடியே திருவாழி யாழ்வானோடே ஒப்புச் சொல்லலாய்‌, (கால சக்கரச் செங்கோல்‌ நடாவி) ““கால சக்கரத்தாய்‌” (திருவா. 7 – 2 – 7), ‘தனி வளர்‌ செங்கோல்‌ நடாவுதிர்‌’” (திருவிரு, 13) என்கிறபடியே கால சக்ர நிர்வாஹகமுமாய்‌,

திருமாலுரு வொக்கும் மேரு அம் மேருவில் செஞ்சுடரோன்
திருமால் திருக் கைத் திருச் சக்கர மொக்கும்
அன்ன கண்டும்
திருமாலுருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது ஓர்
திருமால் தலைக் கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீ வினையே – – -88-அம் மேருவிலே சஞ்சரியா நிற்கிற ஆதித்யன் ஆனவன் –திருமால் திருக்கை திருச் சக்கரம் ஒக்கும் –வடிவார் சோதி வலத் துறையும் சுடர் ஆழியும் -என்கிறபடியே –அவன் கையிலே திரு வாழியைப் போலே இருக்கும்-அந்த மஹாமேருபர்வதததின் ஸமீபத்திலே விளங்கா நின்ற சிவந்த லொளியையுடைய ஸூர்யன் அவ்வெம்பெருமானுடைய அழகிய திருக்கையிலுள்ள திருவாழியாழ்னாவ் போன்றிருப்பான்-

பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்! பற்றிலார் பற்ற நின்றானே!
கால சக் கரத்தாய்! கடலிடங் கொண்ட கடல்வண்ணா! கண்ணனே!’ என்னும்;
‘சேல்கொள் தண் புனல்சூழ் திருவரங்கத்தாய்!’ என்னும்’என் தீர்த்தனே!’ என்னும்;
கோல மா மழைக்கண் பனி மல்க இருக்கும் என்னுடையக் கோமளக் கொழுந்தே.–7-2-7-விஷயீ கரிக்க காலமாக வேணுமே என்ன –கால தத்வம் நீ இட்ட வழக்கு அன்றோ -ஆஸ்ரிதர்க்காக பகலை இரவாக்கினவன் அன்றோ -அங்கனம் அன்றிக்கே பிரதிபந்தகமும் உண்டு காணும் என்ன -ப்ரதி பஷத்துக்கு ம்ருத்யுவான திரு வாழி கையிலே இருக்க பிரதிபந்தகம் உண்டோ 

தனி வளர் செங்கோல்  நடாவு தழல் வாயரசவிய
பனிவளர் செங்கோல்  இருள் வீற்று இருந்தது பார் முழுதும்
துனி வளர் காதல் துழாயை துழாவு தண் வாடை தடிந்து
இனி வளை காப்பவர் ஆர் எனை வூழிகள் ஈர்வனனே-13-தன்னுடைய தேஜஸ்ஸிலே அல்லாத தேஜஸ் பதார்த்தங்கள் அடைய மறையும்படி அத்விதீயமாய்க் கொண்டு வளருவதான தன்னுடைய பிரகாசத்தை எங்கும் ஓக்க நடத்துவானாய் உஷ்ண கிரணன் ஆகையாலே ப்ரதாப உத்தரரான ஆதித்யன் அஸ்தமிக்க

4-ஜோதீஸ் சக்கர ஒளி சுருக்கி –அதாவது –சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம் -திருப்பள்ளி எழுச்சி -7–என்னும் படி ,சர்வதோதிக்கமாக வ்யாப்தமான ஸ்வ தேஜஸ் பிரகர்ஷத்தாலே –துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி –திருப்பள்ளி எழுச்சி -3- இத்யாதிப் படியே ,நஷத்ராதியான ஜ்யோதிர் கணங்களின் தேஜஸ்ஸை சங்கோசைப்பிக்கை –5-அக்நி ஷோமீய தேஜோ அம்ருதத்து ஊற்றும் -அதாவது –அக்னிம் வா வாதித்யஸ் சாயம் ப்ரவிசதி தஸ்மாத் அக்னிர் தூராத் நக்தம் தத்ருசே உபேவா தேஜஸீ சம்பத்யேதே–அஷ்டகம் -2- –என்றும்-ப்ரபா விவஸ்வதோ ராத்ரவ் அஸ்தம் கச்சதி பாச்கரே விசத்யக்னி மாதோ ராத்ரவ் வஹ்நிர் தூராத் பிரகாசதே-ஸ்ரீ விஷ்ணு புராணம்-2-8-20-என்றும் சொல்லுகிற படியே அஸ்தமய சமயத்திலே தன்னுடைய பிரபையை அக்னியிலே பிரவேசிப்பித்து ராத்ரியில் அக்னிக்கு தேஜோ வ்ருத்தியை வுண்டாக்குகையாலே அக்நியுடைய தேஜஸ் ஸூக்கு ஊற்று என்கிறது .-6-ஷீணம் பீதம் ஸூரைஸ் சோமம் ஆப்யாயயதி தீப்தி மான் ,மைத்ரேயைககலம்
சந்தம் ரச்மினைகேன பாஸ்கர , க்ரமேண ஏன பீதோசவ் தேவைஸ் தேன நிசாகரம்
ஆப்யாயத் யனுதினம் பாஸ்கரோ வாரி தஸ்கர
–ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-12-13-–என்கிற படியே
அபார பாசத்தில் ,பிரதமை தொடங்கி சதுர்த்தசி அளவும் நித்யம் ஒரு கலையாக அமிர்த மயமான பதினாலு கலைகளையும் தேவர்கள் புசித்து பதினைந்தாவது கலையை பஞ்சதசி அன்று அபராஹனத்திலே , பித்ருக்கள் புசிக்க ,இப்படி ஷீணனான சந்த்ரனுக்கு , பூர்வ பஷ பிரதமை தொடங்கி நித்யம் ஒரு கலையாக பஞ்ச தசி அளவும் பதினஞ்சு கலைகளையும் தன்னுடைய ரச்மிகளாலே ,வர்திப்பிக்கை யாலே ,சோமனுடைய அமிர்தத்துக்கு ஊற்று என்கிறது ..-ஆக இப்படி அக்னியினுடைய தேஜஸ்ஸூக்கும் ,சோமனுடைய அமிர்ததுக்கும் உத்பத்தி ஸ்தானமாய் இருக்கும் என்கை.-

(ஜயோதிஸ் சக்ரவொளி சுருக்கி) “துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி” (திருப்பள்ளி. 3) என்கிறபடியே நக்ஷத்ர தேஷஸ்ஸுக்கு ஸங்கோசத்தைப் பண்ணுமதாய்‌-(அக்‌நீஷோமீய தேஜோம்ருதத்துக்கு ஊற்றும்‌) அக்‌நியினுடைய தேஜஸ்ஸூக்கும் சந்தரனுடைய அம்ருத கலைக்கும்‌ உத்பத்தி ஸ்தலமுமாய்‌. பூர்வாபரங்களாகிற பக்ஷ த்வயத்திலும்‌ சந்த்ர கலையானது போவது வருவதாவது ஆதித்யன் பக்கல் நின்றுமிறே.-

சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம் துன்னிய தாரகை மின் ஒளி சுருங்கி
படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ பாய் இருள் அகன்றது பைம் பொழில் கமுகின்
மடல் இடை கீறி வண் பாளைகள் நாற வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
அடல் ஒளி திகழ் தரு திகிரி அம் தடக் கை அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே-—3 –சூழ்ந்த திக்குகளெங்கும், சுடரொளியானது ஆதித்யனுடைய தேஜஸ்ஸானது விஸ்த்ருதமாய்த்து- (தேஜஸாம் ராஸி மூர்ஜிதம்) என்றும், “பயிலும் சுடரொளி” என்றும் சொல்லுகிறபடியே தேவரீருடைய திருமேனி யொளியானது எங்குமொக்க விஸ்த்ருதமாம்படியாக உணர்ந்தருளலாகாதோ? என்று கருத்து.
( தம் த்,ருஷ்ட்வா தே ததா தேவா: ஸங்க சக்ர க,தா த ரம் அபூர்வ ரூப ஸம்ஸ்தாநம் தேஜஸாம் ராஸி மூர்ஜிதம்!!|(வி-பு 1-9-67][சங்க,சக்ர கதா தரனாய், அபூர்வமான திருமேனி அமைப்பை உடையவனாய், உறுதி யானவனாய், தேஜோ ராலியான அந்த பாகவானைக் கண்ட தேவர்கள் அப்போது (ஸ்துதிக்கத் தொடங்கினர்)] என்றும், “பயிலும் சுடரொளி ” [ கிருவாய் 3-7-1] என்றும் சொல்லு கிறபடியே, கோடி ஸூர்ய ப்ரகாஸமான தேவரீருடைய திருமேனி ஒளியானது எல்லா விடங்களிலும் பரவும் படியாக விழித்தெழ வேண்டாவோ? என்று கருத்து. )(துன்னிய இத்யாதி)நெருங்கின நக்ஷத்ரங்களினுடைய பரஞ்செய்கிற தேஜஸ்ஸானது ஸங்குசிதமாய், விஸ்த்ருதமான ஒளியை யுடைய குளிர்ந்த சந்த்ரனும்,
(பசுத்தனன்) விவர்ணனானான்;-கருகினானென்று கருத்து.

7-மந்தேஹருக்கு செம் தீயும் –அதாவது மந்தேகர் என்பார் ,சில ராஷசர் சந்த்யா சமயத்தில் ,ஆதித்ய ரதத்தை பற்றிக் கொண்டு ,போக ஒட்டாதே ஆதித்யனோடே மகா யுத்தம் பண்ணி , அவனைக் கொல்லத் தேடுவர்களாய் ,அவ்வளவிலே பிராமணர் காயத்ரி அபி மந்திரிதைகளான அப்புக்களை அர்க்க்ய ரூபேண ஊர்தவமாக ப்ரேஷேபிக்க அந்த காயத்ரி பூத அர்க்க்ய சக்தியாலே , ஆதித்ய மண்டலத்தில் ஜொலித்து கொண்டு , தோற்றின சிவந்த அக்னியிலே விழுந்து முடிந்து போவார்கள் என்று –
-மீண்டு அவற்றுள் எரி கொள் செம்தீ வீழ் அசுரரை போல் –திருவிருத்தம் -82—என்று ஆழ்வார்
அருளிச் செய்கையாலே ,மந்தேஹருக்கு ஜொலிக்கிற அக்நியாய் இருக்கும் என்கிறது ..-ராஷசரை அசுரர் என்று ஆழ்வார் அருளி செய்தது –தானவனாகம் தரணியில்-பெரிய திருமொழி-1-4-1-என்றும் –
தானவன் வாள் அரக்கன்-பெரிய திருமொழி-2-2-2–என்றும் சொன்னவை போலே ஆசூர பிரக்ருதிகளான ஆகாரத்தாலே ..-ததுஹா வா ஏத ப்ரஹ்மவாதின பூர்வாபிமுகா சந்த்யாயம் காயத்ரி அபிமந்த்ரிதா ஆப ஊர்த்வம் விஷி பந்தி -ஆரணம்–என்றும்
சந்த்யா காலே து சம்ப்ராப்தே ரவ்த்ரே பரம தாருனே மன்தேஹா ராஷசா கோராஸ் சூர்ய மிச்சந்தி காதிதும் பிரஜாபதி க்ருதஸ் சாபஸ் தேஷாம் மைத்ரேய ரஷசாம் அஷயத்வம் சரீரானாம் மரணம் ச தினே தினே ததஸ் சூர்யஸ்ஸ தேஷாம் வை யுத்த மாஸீத் ஸூதாகுணம் ததோ திவிஜோத்தமாஸ் தோயம் ப்ரஷிபந்தி மகாமுனே ஓங்கார ப்ரஹ்ம சம்யுக்தம் காயத்ரியா சாபி மந்த்ரிதம் தேன தக்யந்தி தே பாபா வஜ்ர பூதேன வாரிணா –என்றும் பிராமணர் இங்கு பிரேஷேபிக்கிற அர்க்க்ய ஜலம் தானே
வஜ்ரீ பூதமாய் கொண்டு அந்த ராஷசரை நிரசிக்கும் என்று ஸ்ருதியிலும் புராணங்களிலும் சொல்லுகையாலும் , அந்த அர்க்க்ய ஜலம் ஆதித்ய மண்டலத்தையும் ஜொலிப்பித்து அணுக செல்லில் நசிக்கும் படி ஆக்கும் என்றும் சொல்லலாம் இறே

(மந்தேஹர்க்குச்‌ செந்தீயும்‌)மந்தேஹரென்று – ஆதித்யனோடே உத,யாஸ்தமய ஸமயங்களிலே யுத்தம்‌ பண்ணுவார்‌ சில அசுரர்கள்‌. அவர்களை ‘“எரிகொள்‌ செந்தீ வீழ்‌” (திருவிரூ. 82) என்கிறபடியே தப்தமாக்குகைக்கு ஒரு அக்‌நி ஜ்வாலையுமாய்‌,

எரி கொள் செந் நாயிறு இரண்டுடனே உதய மலை வாய்
விரிகின்ற வண்ணத்த எம்பெருமான் கண்கள் மீண்டவற்றுள்
எரி கொள் செந் தீ வீழ் அசுரரைப் போலே    எம்போலியர்க்கும்
விரிவ சொல்லீர் இதுவோ வையமுற்றும் விளரியதே – – – 82–அவ் வாதித்யர்கள் உடைய தேஜஸ்சிலே விழுந்து முடிந்து போகிற ஆசூரப் பிரக்ருதிகளைப் போலே ஆயிற்று என் போல்வார்களுக்கும்  இக் கண்கள் பாதகமாம் ஆகிறபடி

ஏனம் முனாகி யிரு நிலம் இடந்து அன்று இணை யடி யிமையவர் வணங்க
தான வனாகம் தரணியில் புரளத் தடஞ்சிலை குனித்த வென் தலைவன்
தேனமர் சோலைக் கற்பகம் பயந்த தெய்வ நன்னறு மலர் கொணர்ந்து
வானவர் வணங்கும் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே –1-4-1-இப்பொழுது தானவன் என்கிறது ராவணனை –-தையலாள் மேல் காதல் செய்த தானவன் வாளரக்கன் -என்னக் கடவது இறே
தநுவினுடைய வம்சஜன் என்று தானவன் என்கிறது ஆதல் -தநு வம்சம் ராவணனுக்கு மாத்ரு வம்சம்
ஆசூரமான வியாபாரங்களை உடையவன் என்றாதல் – ராவணன் உடைய வராதிகளாலே  பூண் கட்டி இருக்கிற சரீரமானது அம்பு தைச்சு பூமியிலே புரளும் படியாக-

தையலாள் மேல் காதல் செய்த தானவன் வாளரக்கன்
பொய்யிலாத பொன் முடிகள் ஒன்பதோடு ஒன்றும் அன்று
செய்த வெம்போர் தன்னில் அங்கோர் செஞ்சரத்தால் உருள
எய்த வெந்தை யெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-2–நிரூபாதிக ஸ்த்ரீத்வத்தை உடையவள் பக்கலில் ஜநநீ என்று பாராதே அப்ராப்தமான சங்கத்தைப் பண்ணினான் ஆயிற்று – அதுக்கடி ஆசூர பிரக்ருதியாகைலே -யாயிற்று-தேவதை கொடுத்த வாளை விஸ்வசித்து இருந்தான் ஆயிற்று – பெருமாள் மிடுக்கை பார்க்க அறியாதே –

8-முக்தி மார்க்கத் தலை வாசலும்-அதாவது அர்ச்சிராதி கதி என்னும் முக்தி மார்க்கத்தாலே போம் அளவில் – அர்சிஷா மேவாபி சம்பவந்தி -இத்யாதி படியே- அர்ச்சி ப்ரப்ருதிகளை சென்று கிட்டிப் போகிற மாத்ரம் அன்றிக்கே ,- தத் பித்வா சூர்யச மண்டலம்-என்றும் – தேரோர் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு -சிறிய திருமடல்-என்றும்–வெம் கதிர் வட்டத்தூடு போய்–பெரிய திருமொழி-4-5-10-என்றும் – சொல்லுகிற படியே , இம் மண்டலதூடே போகையாலும்- அண்ட கடாஹத்தைப் பேதித்து புறப்படும் அதுக்கு முற்பட்டது ஆகையாலும் இத்தை இம் மார்க்கத்துக்கு தலை வாசல் என்கிறது -9-கண்ணாவான் கண்ணில் பிறந்த கண் மணியும் -அதாவது கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு –திருவாய்-1-8-3- சஷூர் தேவநாமுத மர்த்யாநாம்-யஜுர் வேதம் – -என்கிற படியே – சர்வருக்கும் திருஷ்டி பூதனான சர்வேஸ்வரன் கண்ணிலே –-சஷோஸ் சூர்யோ அஜாயத -புருஷ ஸூக்தம்-என்கிற படியே ஜனிப்பதும் செய்து-ஜகதேக சஷுஷே -என்ற படி ஜகத்துக்கு திருஷ்டி பூதமுமாய் இருக்கும் என்கை –10-த்ரயீ மயமுமான மண்டலத்திலே -அதாவது -‘ த்ரயீ மயாய-என்கிற படியே வேத மயமாய் இருக்கிற ஆதித்ய மண்டலத்திலே என்கை ..–இத்தால்-த்யேய சதா சவித்ரு மண்டல மத்திய வர்த்தி நாராயண சரசி ஜாசன சந்நிவிஷ்ட கேயூரவான் மகர குண்டலவான் கிரீடி ஹாரி ஹிரண்மயவபு த்ருத சங்க சக்கர -என்ற இதில் அவன் எழுந்து அருளி இருக்கிற சவித்ரு மண்டலத்தை வர்ணித்தார் ஆயிற்று .

(முக்தி மார்க்கத் தலை வாசலும்‌)“’நக்ஷத்ராதாதித்யம்‌” என்று முக்தி மார்க்க த்‌வாரமுமாய்‌,- “ஸம்வத்ஸராதாதித்யம்‌‘”’ என்று ஆதித்யனைக் கூட்டி “’தத்‌ பித்வா ஸூர்ய மண்ட,லம்‌”” என்றும்‌, “தேரார்‌ நிறை கதிரோன்‌ மண்டலத்தைக்‌ கீண்டு புக்கு” (சி.திருமடல்‌) என்றும்‌ சொல்லுகிறபடியே ஆதித்ய மண்டலத்தை பேதித்தே முக்தனுக்குப்‌ போக வேண்‌டுகையாலும்‌, மற்றவை யெல்லாம்‌ கிட்டுமளவேயாய்‌ ௮ண்ட பேதம்‌ பின்பே (அண்ட பேதத்துக்கு முன்‌பே )யாகையாலே முக்தி மார்க்கத் தலை வாசலும்‌ என்கிறார்‌. (கண்ணாவான்‌ கண்ணில்‌ பிறந்த கண் மணியும்‌) *“’கண்ணாவானென்றும்‌ மண்ணோர்‌ விண்ணோர்க்கு’‘ (திருவாய்‌. 1.- 8 – 3) என்றும்‌, ““சஷுர் தேவாநாமூத மர்த்யாநாம்‌” (யஜு. ஸம்‌. ச்‌ – 6) என்றும்‌ சொல்லுகிறபடியே தேவர்களுக்கு நேத்ர பூதனான ஸர்வேஸ்வரனுடைய  “’சக்ஷோஸ் ஸூர்யோ அஜாயத’” (பு.ஸூ .) என்கிறபடியே திவ்ய சக்ஷுஸ்ஸைப்‌ பிறப்பகமாக உடைத்தாய்‌- ”ஜக தேக சக்ஷுஷே”’ என்கிறபடியே ஜகத்துக்கு த்‌ருஷ்டி பூதமாய்‌, (த்ரயீ
மயமுமான மண்டலத்திலே) ““தரயீ மயாய” 
என்கிறபடியே வேத மயமுமான ஆதித்ய மண்டலத்‌திலே

கார் ஆர் புரவி ஏழ் பூண்ட தனி ஆழித் தேரார் –
நிறை கதிரோன் -மண்டலத்தைக் கீண்டு புக்கு

ஆராவமுதம் அங்கு எய்தி–மேக மண்டலத்தில் செல்லுவதும் ஏழு குதிரைகள் பூட்டப் பெற்றதும்
ஒற்றைச் சக்கரத்தை வுடையதுமான – அது தான் உங்களுக்கு ஏற்க உண்டே என்று தோற்றிற்றோ
மேக பதத்திலே குதிரை சஞ்சரிக்கை யாவது என்-புரவி -இரண்டு அல்ல நாலு அல்ல ஆறு அல்ல -எட்டு அல்ல ஏழு குதிரை பூண்கை யாவது என் –தனி ஆழித் தேரார் –பிள்ளாய் -இரண்டாதல் நாலாதல் அன்றிக்கே-தனிச் சக்கரமாம் – பிள்ளாய் -ஆகாசத்திலே ஒருவன் தேர் நடக்கை யாவதென் –நிறை கதிரோன் –ஒரு விளக்கின் சந்நிதியில் விழிக்க மாட்டாத அதி சூத்திரன் -உஷ்ண கிரணங்களால் பூர்ணனாய் இருக்கிற ஆதித்யனைச் சென்று கிட்டுகை யாவதென் –மண்டலத்தைக் கீண்டு புக்கு –
ஒருவனை இங்கே உபாசித்து அவனுடைய ராஜகுலத்தாலே -ஆதித்ய மண்டலத்தின் நடுவே போகிறானாம் இறே-அங்கே ஏறப் போனால் அவ்வழிப் போக்குத் தான் இங்குப் போலே இரண்டருகும் பணை யாக நடவே போகிறானோ தான் -என்கை –

திங்கள் தோய் மாட நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானை
மங்கையர் தலைவன் வண்டார் கலியன் வாயொலிகள் வல்லார்
பொங்கு நீருலகம் ஆண்டு பொன்னுலகு ஆண்டு பின்னும்
வெங்கதிர்ப் பருதி வட்டத்தூடு போய் விளங்குவாரே –4-5-10-ஆதித்ய மண்டலத்தின் நடுவிட்டு அர்ச்சிராதி மார்க்கமே போய் பரமபதத்திலே சென்று ஸ்வ ஸ்வரூபத்தை பெற்று உஜ்ஜ்வலராவர்

கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு
தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே –1-8-3—சம்சாரிகளோடு நித்ய ஸூ ரிகளோடு வாசி இல்லை – அரை க்ஷணம் தங்கள் கார்யம் நிர்வஹித்துக் கொள்ள மாட்டாமைக்கு-கண்ணாகைக்காக என்னுதல்-கண்ணாம் அவன் என்னுதல்-கண் -என்று நிர்வாஹகன் – சஷூர் தேவா நாம் உதமர்த்தயா நாம் –என்கிற ஸ்ருதி அர்த்தத்தின் படியே சொல்கிறார்-

இனி அதில் எழுந்து அருளி இருக்கிற படியை வர்ணிக்கிறார் –1-தண் தாமரை சுமக்க –அதாவது
தண் தாமரை சுமக்கும் பாத பெருமான் -திருவாய்-4-5-8–என்கிற படியே-சரசி ஜசன சந்நிவிஷ்டனாய் இருக்கை-தோள் வளையும் குழையும் பெரியாழ்வார்-1-5-10–அதாவது-இத்தால் கேயூரவான் மகர குண்டலவான் -என்றதை சொல்லுகிறது .-திரு செய்ய முடியும் ஆரமும் படையும் திகழ-திருவாய்-8-4-7-
இத்தால் கிரீடி ஹாரி த்ருத சங்க சக்கர -என்றதைச் சொல்லுகிறது ..–2-திகழும் பொன் மேனியும்-அதாவது-ஆரமும் படையும் திகழ திருவாய்-8-4-7–என்கிற படியே கீழ் சொன்ன ஆயுத ஆபரணங்கள் எல்லாம் விளங்கும் படி இருப்பதாய் ,பொன் மேனி கண்டேன்-மூன்றாம்-1–என்னும் படி ஹிரண்ய மயமான திரு மேனியும்-ச எஷாந்தர் ஆதித்யே ஹிரண்மய புருஷோ த்ருச்யதே ஹிரண்ய ச்மஸ்ரூர்
ஹிரண்ய கேச ஆப்ரணகாத் சர்வ ஏவ ஸூவர்ண
-சாந்தோக்யம்-–என்றும் ஹிரண்மயவபு –என்றும் சொல்லக் கடவதிறே-3-செஞ்சுடர் தாமரை கண்ணுமாய் -அதாவது அஞ்சுடர் வெய்யோன் அணி நெடும் தேர் தோன்றாதால்-என்ற அநந்தரம்-செஞ்சுடர் தாமரை கண் செல்வனும் வாரான்-என்றது அந்த ஆதித்ய மண்டலத்தில் எழுந்து அருளி இருக்கிறவனை இறே ..-ஸ்ருதியும் -தஸ்ய யதா கப்யாசம் புண்டரீக மேவ மஷிணீ-என்றது அவ் இருப்பிலே இறே .. ஆகையால் ஆதித்ய கிரணங்களால் விகசிதமான போதை சிவந்த ஒளியை உடைய தாமரை போன்ற திரு கண்களுமாய் என்கை-

(தண்டாமரை சுமக்க) ”தண்டாமரை சுமக்கும்‌ பாதப் பெருமான்‌”” (திருவாய்‌. 4 5 – 8) என்றும்‌, “த்யேயஸ் ஸதா ஸவித்ரு மண்டல மத்‌ய வர்த்தீ நாரயாணஸ்‌ ஸரஸி ஜாஸந ஸந்நிவிஷ்டா கேயூரவாந்‌ மகர குண்டலவாந்‌ கிரீடீ ஹாரீ ஹிரண்மயவபுஸ் த்‌ருத சங்க சக்ர” என்றும்‌, ““மங்கல வைம்படையும்‌ தோள் வளையும்‌ குழையும்‌ மகரமும்‌” (பெரியா.திரு, 1 – 8 -9) என்றும்‌, ”திருச் செய்ய முடியுமாரமும்‌ படையுந் திகழ” (திருவாய்‌. 8 – 4 – 7) என்றும்‌, ‘‘நீண்ட பொன் மேனியோடும்‌’” (திருவாய்‌. 5- 5- 7), *“செஞ்சுடர்த் தாமரைக் கண்‌ செல்வனும்‌”’ (திருவாய்‌. 5 – 4 – 9) என்றும்‌ சொல்லுகிற படியே பாஹு-வலய-மகர குண்டல-அபிஷேக-ஹார-கேயூர- சங்க, -சக்ராதி, திவ்ய பூூஷணங்களாலும்‌ விளங்கா நிற்பதுமாய்‌, ““ருக்மாபம்‌ ஸ்வப்ந தீ கம்யம்‌ வித்‌யாத்து புருஷம்‌ பரம்‌” (மநு. 12 – 122) என்றும்‌, “’ஆப்ரணகாத்‌ ஸர்வ ஏவ ஸுவர்ண?”‘ (சா. 1 – 6 – 6) என்றும்‌ சொல்லுகிற ஸ்ப்ருஹணீயமான திவ்ய விக்‌ரஹத்தையும்‌, “யதா கப்யாஸம்‌ புண்டரீக மேவ மக்ஷிணீ”” (ச,ா.) என்கிறபடியேஆதித்ய கிரணத்தாலே அலர்த்தப்பட்டு சிவந்த தேஜஸ்ஸை யுடைய திருக் கண் மலரையுமுடைத்தாய்‌,

நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானைத் தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானை
ச் சொல்மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனியாவர் நிகர் அகல் வானத்தே?–4-5-8—குளிர்ந்த ஆசன பத்மத்தாலே தரிக்கப் பட்ட திருவடிகளை உடைய சர்வேஸ்வரனை-திருவடிகளில் மென்மை குளிர்த்தி நாற்றம் தொடக்கமான போக்யதைக்கு தோற்று சுமக்கிற படி-ஆசன பத்மத்தால் அல்லது தனக்கு ஸ்திதி இல்லாதா போலே என் கவி அல்லாது தரிக்க மாட்டாது இருக்கை

செங்கமலக் கழலில் சிற்று இதழ் போல் விரலில் சேர் திகழ் ஆழிகளும் கிண்கிணியும் அறையில்
தங்கிய பொன் வடமும் தாள நன் மாதுளையின் பூவொடு பொன் மணியும் மோதிரமும் கிறியும்
மங்கல ஐம் படையும் தோள் வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்து இலக
எங்கள் குடிக்கரசே ஆடுக செங்கீரை யேழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே – 1-5 10- –திரு மார்பில் சாத்தின மங்கள அவஹமான ஸ்ரீ பஞ்சாயுதமும் – அதுக்கு பரபாகமாக கொண்டு இரண்டு அருகும் விளங்கா நின்றுள்ள திருத் தோள் வளைகளும் திருக் காது பணிகளும் -திரு மகரக் குழைகளும்-திருச் செவி மடல் மேல் சாத்தின வாளிகளும் – திருக் குழலில் சாத்தி திரு நெற்றிக்கு அலங்காரமாக -நாலும் = தொங்குகின்ற -சுட்டியும் –

திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு அதனுள் கண்ட அத்திருவடி என்றும்
திருச் செய்ய கமலக் கண்ணும் செவ்வாயும் செவ்வடியும் செய்ய கையும்
திருச் செய்ய கமல வுந்தியும் செய்ய கமலை மார்பும் செய்ய வுடையும்
திருச் செய்ய முடியும் ஆரமும் படையும் திகழ வென்ன சிந்தை யுளானே–8-4-7-அப்படி திரு மேனிக்கு பரபாகமாய் பயம் தீரும் படி ரக்ஷகத்வ ஸூ சகமாய் இருந்துள்ள திரு அபிஷேகமும்-ஆரமும்-பெரிய வரை மார்பில் பேராரம் பூண்டு -என்கிறபடியே திரு மார்வுக்குத் தகுதியான திருவாரமும் –-படையும்-வினைத்தலையில் ஆயுதமாய் போக தசையில் ஆபரணமாய் இருக்கிற திவ்யாயுதங்களும் திகழ -சோபபயன் தாண்ட காரண்யம்-என்கிறபடியே திவ்யாயுதம் தானே விளங்கும்படியாக
என்றும் — வென்ன சிந்தை யுளானே–அவன் என்றும் ஓக்க என் நெஞ்சிலே வர்த்திகையாலே பயத்துக்கு ஒதுங்க இடம் இல்லை –பயம் பய நாஸநம்

திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் -செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக் கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று ———-1-திருக் கண்டேன்– தர்மம் தன்னைக் கண்டேன் –பொன் மேனி கண்டேன்–அவள் இருக்கும் ஆசனம் கண்டேன்

நிறைந்த வன்பழி நம்குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்
சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும்
நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் நேமி அம் கை உளதே.–5-5-7-அபரிச்சின்னமான தேஜஸ்ஸினுள்ளே உன்நேயமாம் படி யாயிற்று திரு மேனி இருப்பது -இது தேஜஸ்ஸினுள்ளே வடிவு தான் அபரிச்சேதயமான போக்யதையை யுடையதாய் நித்ய ஸ்ப்ருஹா விஷயமாய் இருக்கை –

வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்
அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.–5-4-9–இத்தசையில் புண்டரீ காஷனான ஸ்ரீ யபதியும் வருகிறிலன் -சிவந்த ஒளியை யுடைய தாமரைப் பூ போல் இருக்கிற திருக் கண்களை யுடைய ஸ்ரீ யபதியும் வருகிறிலன் -இந்த துர்த்தசையிலே குளிர நோக்கிக் கொண்டு இருவருமாய் வர ப்ராப்தமாய் இருக்க அது கிட்டிற்று இல்லை -ஆதித்யன் உதித்தாலும் ராத்திரி வர சம்பாவனை யுண்டு -அஸ்தமியாத ஆதித்யன் வருகிறிலன் -பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -என்ன கடவது இறே-

4-அணி நிற மூர்த்தி ஈது என்னும் படி இரண்டையும் தன்னிறம் ஆக்குகிற செய்யாளான வித்தையோடே –அதாவது-திருக் கண்டேன்-என்று முதலில் தன்னை கண்ட அநந்தரம்-ருக்மாபம்-என்னும் படி இருக்கிற அவன் திரு மேனியைக் கண்டு –பொன் மேனி கண்டேன்-என்று இருக்கச் செய்தேயும்-தன் திரு மேனி நிறத்தில் வியாப்தியாலே இள வெய்யில் கலந்தால் போல் விளங்கி , தர்சநீயமாய் இருக்கும் அவன் திரு மேனி நிறத்தைக் கண்டு திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன் -என்னும்படி யாகவும் ..–செய்யதோர் ஞாயிற்றை காட்டி சிரீதரன் மூர்த்தி ஈது என்னும்—திருவாய் –4-4-2-என்று அந்த மண்டல வாசிநியான தன் விக்ரக தேஜோ வியாப்தி யாலே சிவந்த ஒளியாலே அத்வீதீயமாய் இருக்கும் படியைக் கண்டு ஸ்ரீ தரன் வடிவு ஈது என்று பிரமித்து சொல்லும் படியாகவும் , பகவத் விக்ரகமும் ஆதித்ய மண்டலமும் ஆகிய இரண்டையும் தன்னிறமாகும் படி பண்ணுகிற சிவந்த நிறத்தை உடையவள் ஆகையாலே ஹிரண்ய வர்ணாம்—ஸ்ரீ ஸூக்தம் – இத்யாதி படியே கமல மலர் மேல் செய்யாள்–திருவாய்-9-4-1-என்று நிரூபகம் ஆகும் படி இருப்பாளாய் வித்யா சகாய மாதித்ய சமஸ்தம் வித்யா பிரசாதகம் -என்றும்-வித்யா சகாய வந்தம் மாம் ஆதித்யஸ்தம் சனாதனம்-என்றும் சொல்லுகிற படியே வித்யா சப்த வாச்யையான பிராட்டி யோடே கூடே–அருக்கன் மேவின- அதாவது வானிடை அருக்கன் மேவி நிற்ப்பார்க்கு -பெரிய திருமொழி-2-1-7-என்கிற படியே சவித்ரு மண்டல மத்ய வர்தியான
-ய ஏஷ அந்தராதித்யே -என்றதை சொல்லுகிறது-சதாத்யேய தேஜஸ்ஸின்-அதாவது த்யேயஸ் சதா -என்கிற படியே சர்வ காலமும் த்யானம் பண்ணுவாருக்கு விஷயமாய்-ஹிரண்மயஸ் சகுநிர் ப்ரஹ்ம நாம ஏன சூர்யஸ் தபதி தேஜசேத்த–காடகம்–என்றும்-தத் சவிதுர் வரேண்யம் பர்க்க -காயத்ரி –என்றும்
தேஜ பரம் தத் சவிதுர் வரேண்யம் தாம்னா பரேணா பிரணகாத் ஸூவர்ணம்–ஸ்ரீ ரெங்கராஜ ஸ்த்வம் உத்தர -79-என்றும் சொல்லுகிற படி தேஜோ மயமாய் இருக்கிற வஸ்துவினுடைய-

““அருக்கனணிநிறமும்‌ கண்டேன்‌” (மூ.திரு. 1) என்றும்‌, ““செய்யதோர்‌ நாயிற்றைக்‌ காட்டிச் சிரீதரன்மூர்த்தி”” (திருவாய்‌. 4 –4– 2) என்றும்‌ சொல்லுகிறபடியே ஆதித்ய தேஜஸ்ஸு போலே யிருக்கிற பகவத்‌ விக்‌ரஹத்தையும்‌, ப்ரபா -ப்ரபாவான்‌௧ளுடைய சேர்த்தியாலே ஸ்ரியப் பதித்வத்துக்கு ஸ்மாரகமு மாயிருக்கிற ஆதித்ய மண்டலத்தையும்‌,இவை யிரண்டையும்‌ தன்னிறமாக்கும்படியான ““கமலமலர் மேல்‌ செய்யாள்‌” (திருவாய்‌. 9 – 3 – 1) என்கிறபடியே ஹிரண்ய வர்ணையாய்‌, *“வித்‌யா ஸஹாயம்‌” “ஆதித்ய ஸம்ஸ்தம்‌ வித்‌யாப்ரபாவகம்‌ (ப்ரஸாதகம்‌)’” என்கிறபடியே வித்யை என்கிற திருநாமத்தை உடையளாயிருக்கிற பெரிய பிராட்டியாரோடே.-“வானிடை அருக்கன்‌ மேவி நிற்பார்க்கு’” (பெ.திருமொழி 2 – 1 – 7) என்கிறபடியே ஆதி,த்யாந்தர் வர்த்தியாய்‌, ஸதாத்‌, த்யேய தேஜோ ருபமாயிருக்கிற இவரை ப்ரதிபாதி,க்கிற .

திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன்
-செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக் கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று ———-1–இருவரும் சேர்ந்த சேர்த்தியாலே இள வெய்யில் கலந்தால் போலே இருக்கிறபடி –இருவர் ஒளி சேர்ந்து -தங்கத்தின் பெருமை தங்க ஒளி கலந்து –லோக விஜாதீயம்--பால ஸூர்யன் ஒளி –இருளின் ஒளியும் வெளிச்சமும் சேர்ந்தால் போல் -என்று சொல்லலாம் படி சமுதாய சோபை பொன் மேனி ஸுந்தர்யம் -நீல மேனி ஐயோ -நீலமாக ஸ்ப்ருஹணீயமாய் மேல் அவயவ சோபை லாவண்யம்-

பெய் வளைக் கைகளைக் கூப்பி, ‘பிரான் கிடக்கும் கடல்’ என்னும்;
செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டி, ‘சிரீதரன் மூர்த்தி ஈது’ என்னும்;
நையும் கண்ணீர் மல்க நின்று, ‘நாரணன்’ என்னும்; அன்னே!என்
தெய்வ உருவிற் சிறுமான் செய்கின்றது ஒன்று அறியேனே.–4-4-2—இராத்திரி எல்லாம் சமுத்திர கோஷத்துக்கு ஆடல் கொடுத்து ஆதித்யன் உதித்தவாறே ஆதித்யனும் பிரபையும் சேர்ந்து இருக்கிற படியைக் கண்டு -இது ஸ்ரீதரனுடைய வடிவு என்று ஹ்ருஷ்டை யாகா நின்றாள் – பிரபா ப்ரபாவன்கள் உடைய சேர்த்தி மாத்ரத்தையே கொண்டு சொல்லா நின்றாள் – செய்யதோர் ஞாயிற்றை – அழகியதாய் அத்விதீயமான நாயிறு -தாயும் தமப்பனும் சேர இருந்த சந்நிதியிலே பசித்த பிரஜைகளை போலே சிதிலையாகா நின்றாள்-

மையார் கருங்கண்ணி கமல மலர்மேல்
செய்யாள்
திரு மார்வினில் சேர் திருமாலே
வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும்
கையா உனைக் காணக் கருதும் என் கண்ணே–9-4-1-ஸ்வா பாவிகமான கறுப்பை யுடைத்தாய் அஞ்ஞனத்தாலே அலங்க்ருதமான திருக் கண்களை யுடையவள் -ஒன்றால் சமாதானம் பண்ண வேண்டாத படி அழகு ஸ்வாபாவகமாய் இருக்கையாலே கண்ணுக்கு அஞ்சனம் மங்களமார்த்தம் இறே –
கமல மலர்மேல்-செய்யாள் –ஸுகுமார்யத்தாலே வந்த போக்யதையை யுடையவள் – திரு மார்வினில் சேர் -மேகத்திலே மின் சேர்ந்தால் போல் யாயிற்று சேர்த்தியால் வந்த அழகு -அபூ அடி கொதித்துக் கால் வாங்கி திரு மார்விலே ஏற வேண்டும் படி யாயிற்று -அவளுக்கு திரு மார்வில் சேர்த்தி இருப்பது –
திருமாலே-அவன் பக்கல் அத்யந்தம் வ்யாமுக்தனானவனே –அவள் திரு மார்வில் பண்ணும் வ்யாமோஹத்தை இவன் அவயவங்கள் தோறும் பண்ணும் என்கை -இப்படி அந்நியோன்யம் சேர்ந்த சேர்த்தியிலே இறே கைங்கர்யம் பண்ண ஆசைப் பட்டது -இச்சேர்த்தியைப் பற்ற இறே அவள் முன்னாக பற்ற ஆசைப்படுவார் ஆசைப்படுவது –நகச்சின் நபராத்யதி -என்னும் அவளும் –என்னடியார் அது செய்யார் -என்னுமவனுமான சேர்த்தி இறே -சம்சாரிகளுக்கு தஞ்சம்

தருக்கினால் சமண் செய்து சோறு தண் தயிரினால் திரளை மிடற்றிடை
நெருக்குவார் அலக்கண் அது கண்டு என்னெஞ்சம் என்பாய்
மருட்கள் வண்டுகள் பாடும் வேங்கடம் கோயில் கொண்டதனோடும் வானிடை
அருக்கன் மேவி நிற்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே
—2-1-7-வைதிகர் ஆனவர் ஆஸ்ரயிக்கும் படியாக-ஆதித்ய அந்தர்யாத்மாவாகக் கொண்டு நிற்கிறவனுக்கு –ஆதித்ய அந்தராத்மாவாய் இருக்கும் என்று அனுசந்தித்துப் போகை அன்றிக்கே கண்ணாலே கண்டு அடிமை செய்து அனுபவிக்கப் பெற்றாயே நீ –

சாமரே சோத்கானநாமம் உள்ளுறையான ஆத்யந்தங்களாலே – அதாவது சாம்ன உத்கீதோ ரச – என்கையாலே சந்தோக சாமத்துக்கு ரசமாய் இருந்துள்ள உத்கானம் உண்டு–உத்கீதம்-( சாம ரஸம் உத்கீதம் -அதில் நாமம் உத் ) அதில் –உத்-என்று சொல்ல பட்ட –தஸ்ய உதிதி நாம -என்கிற திரு நாமம்
இதுக்கு உள்ளுறை யானமை தோற்றும் படியான ஆத்யந்தங்களை உடைத்தாய் இருக்கையாலே என்கை .. உயர்வு-என்று எடுத்து உயர்ந்தே -என்று தலைக் கட்டுகையாலே உ காரம் ஆதியும் த காரம் அந்தமும் ஆய இறே இருக்கிறது ஆத்யந்தங்களாலே -என்றது மேல் சொல்லுகிறதுக்கு ஹேது இது என்று தோற்றுகைக்காகா-ஓர் ஆயிரம் அவற்றிலே ஒன்றை-அதாவது-ஓர் ஆயிரமாய் உலகு எழ அளிக்கும் பேர் ஆயிரம்-என்கிற படியே ஒரு திரு நாமமே ஆயிரம் முகமாக நின்று ஜகத் ரஷணம் பண்ண வல்ல திரு நாமங்களிலே ஒரு திரு நாமத்தை – (ஒன்றே ஆயிரமாய் அளிக்கும் என்றால் ஆயிரமும் பத்து லக்ஷமாக அளிக்கும்)ஆயிரம் முகத்தினால் அருளிய -இத்யாதி-அதாவது –
ஆயிரம் முகத்தினால் அருளி மந்தரத்து இழிந்த கங்கை–பெரிய திருமொழி-1-4-7–என்று
கங்கை தானும் ஒன்றாய் இருக்க ,லோக பாவன அர்த்தமாக சகஸ்ர முகமாக பிரவஹித்தால் போலே
தீர்த்தங்கள்-ஆயிரம் என்ற படியே –லோக பாவனமான ஆயிரம் பாட்டாக விஸ்தரிக்கிறார் என்று ஸ்ரீ வேதாசார்ய பட்டர் உபதேசித்து அருளும் படி என்கை ..-விஸ்தரிக்கிறார் என்ற கர்த்ருத்வத்தை அபௌருஷேயத்வ விரோதமற கீழ் சொன்ன படி கொள்வது-

ஸாம்ந உத்‌கீதோரஸ?” (சாந்) என்று ஸாமத்துக்கு ரஸமாய்‌, ““தஸ்யோதிதி நாம”‘ (சாந்த ] என்கிறபடியே அவர்க்குக்‌ திருநாமமாயிருக்கிற உத்‌காந நாமத்தை உள்ளுறையாக உடைத்தாகையாலே * ‘உத்‌’” என்கிற விதில்‌ உகார தகாரங்களை ஆதி யந்தங்களில்‌ உடைத்தாயிருக்கிற இப் பரபந்தத்தை.
ஓராயிரமா யுலகேழளிக்கும்‌ பேராயிரம்‌”” (திருவாய்‌;9 – 3 – 1) என்கிறபடியே ஒரோ திருநாமமே அநேக பிரகாரமாக ரக்ஷிக்கும் படியான திருநாமங்களில்‌ வைத்துக் கொண்டு ஆதித்யாந்தர வஸ்திதனான வனுக்குத்‌ திருநாமமான ”உத்‌” என்கிற உத்துக்கு பர்யாயமான நாராயண ஸப்‌தத்தை “’ஆயிர முகத்தினாலருளி மந்தரத் திழிந்த கங்கை” (பெரிய. திரு. 1 – 4 – 7) என்கிறபடியே கங்கை லோக பாவநார்த்தமாக ஸஹஸ்ர முகமாக ப்ரவஹித்தாப் போலே “’தீர்த்தங்களாயிரத்து”’ (திருவாய்‌. 7 – 10 – 11) என்கிறபடியே லோக பாவநார்த்தமாக ஆயிரம்‌ பாட்டாக விஸ்தரிக்கிறார்‌ என்று வேதாசார்ய ப,ட்டர்‌ அருளிச் செய்யும்படி

ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்
பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்

கார் ஆயின காள நல் மேனியினன்
நாராயணன் நங்கள் பிரான் அவனே–9-3-1-ஓர் ஆயிரமாய் -ஒரோ திரு நாமங்களே ஆயிரம் முகத்தால் ரக்ஷிக்க வற்றாய் இருக்கும் –ஐஸ்வர்யஸ்ய சமக்ரஸ்ய வீர்யஸ்ய யசசச் ச்ரிய- என்று நிர்வசன பேதத்தால் அநேகம் படி ரக்ஷிக்க வற்றாய் இறே இருப்பது –-உலகு -ரக்ஷிக்கும் இடத்திலே ஓரோர் ஒருத்தரை அன்றிக்கே லோகமாக ரக்ஷிக்கும்-ஏழ் -அது தன்னிலும் ஒரு லோகம் மாத்திரம் அன்றிக்கே சர்வ லோகங்களையும் ரக்ஷிக்கும் – அளிக்கும்- பேர்— அவன் பாப பிராஸுர்யத்தாலே ஷிபாமி என்னக் கடவன் -இவை ரஷிக்கையே ஸ்வபாவமாக இருக்கும் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்–இப்படிப்பட்ட திரு நாமங்களை ஆயிரம் உடையனாகையால் யுண்டான பெருமையை யுடையவன் -தேவோ நாம சஹஸ்ரவான்

வெந்திறல் களிறும் வேலை வாய் அமுதும் விண்ணோடு விண்ணவர்க்கு அரசும்
இந்திரர்க்கு அருளி எமக்கும் ஈந்து அருளும் எந்தை எம்மடிகள் எம்பெருமான்
அந்தரத்து அமரர் அடி இணை வணங்க ஆயிர முகத்தினால் அருளி
மந்தரத்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே–1-4-7-ஆயிர முகத்தினால் –
மேருவிலே இழிந்து மந்த்ரத்திலே இழிந்து ஹிமவானில் இழிந்து இங்கே பல வகைகளிலே வரும்படியை சொல்லக் கடவது இறே-

தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குரு கூர்ச்சட கோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே.–7-10-11-தன் இனிமையால் புறம்புள்ளவற்றை அறுக்கும் என்னுதல் -பாவனம் என்னுதல் –

ஆக –எவ்வுலகத்து எவ்வகையும் -சூரணை -39- தொடங்கி இவ் ஆழ்வார்-பிரபந்த சதுஷ்டயத்துக்கும்
வேத ரூபவத்வமும் அங்க உபாங்க சாகித்யமும் சாஸ்திர வாதி வேத லஷண சாம்யமும் இதில் இவருக்கு தோற்றுகிற கர்த்ருத்வத்தால் இதின் நித்ய அபௌருஷேயத்வ ஹானி இல்லாமையும்
அதில் சாம வேத ஸ்த்தாநீயமான திரு வாய் மொழி சாம வேத ஸ்ரேஷ்டமான சந்தோக சாம உபநிஷத் சமம் என்னும்
அதுவும் சொல்லிற்று ஆயத்து-

ஆக, ‘“எவ்வுலகத்தெவ்வெவையும்‌”’ என்று தொடங்கி, இவ் வாழ்வார்‌ அருளிச் செய்த ப்ரபந்தங்கள்‌ நாலுக்கும்‌ வேத ரூபத்வமும்‌, அங்கோபாங்க ஸஹிதத்வமும்‌, ஸாஸ்த்ரதவம்‌ முதலான வேத லக்ஷணங்களும்‌ இவற்றினுடைய நித்யத்வ-அபெளருஷேயத்வமும்‌, இந்நாலு ப்ரபந்தங்களுக்கும்‌ நாலு வேத ஸ்தாநேயான ப்ரகாரத்தையும்‌, அதில்‌ திருவாய்மொழி ஸாம ஸாமாந்ய மன்றிக்கே, சந்தோக,ஸாமோபநிஷத் தாயிருக்கிற ப்ரகாரத்தையும்‌, அதில்‌ விசேஷ லக்ஷணங்களையும்‌ சொல்லுகையாலே இப்ப்ரபந்தத்‌துக்கு வேத,ஸாம்யம்‌ சொல்லா நின்றது –

ஆக இப்படி இப் பிரபந்த சதுஷ்டத்யத்துக்கும் வேத சாம்யத்தை சாதித்தார் கீழ் .. இங்கன் அன்றிக்கே இது தனக்கு வேதோபப்ருஹ்மண சாம்யமும் சொல்லுவார்கள் என்கிறார் மேல் ..-இனி மேல்‌ ஸ்வரூபாதிகளை விஸத,மாகச்‌ சொல்லுகிற ஸ்ரீபாஞ்சராத்ராதிகளைப் போலே விக்‌ரஹத்தை விஸதமாகச்‌ சொல்லுகிற வேதத்துக்கு இப் ப்ரபந்தம்‌ விவரண ரூபமாயிருக்கும்‌ என்பாரு முண்டென்கிறார்‌ 

அன்றிக்கே ஸ்வரூப குண விபூதி சேஷ்டிதங்களை விசதமாக்குகிற பாஞ்சராத்ர புராண
இதிகாசங்கள் போலே நீலபாரூ போக்தி தெரியச் சொன்ன வேத உப ப்ருஹ்மணம் என்பர்கள்-சூரணை -54-

அதாவது இப்படி வேத சாம்யம் சொல்லுகை அன்றிக்கே பகவத் ஸ்வரூப குண விபூதி சேஷ்டிதங்களுக்கு எல்லாம் -பிரதிபாதகமாய் இருந்துள்ள வேதத்தில்-யத்த தத்ரேச மக்ராஹ்ய மகோதர மவர்ண மசஷுஸ் ச்ரோத்ரம் தாதா பாணி பாதம் நித்யம் விபும் சர்வகதம் ஸூ ஸூஷ்மம் ததவ்யயம்யத் பூதயோநிம் பரிபஸ்யந்தி தீரா -என்றும்-சத்யம் ஞான அநந்தம் ப்ருஹ்ம-என்றும்-நிஷ்கலம் ,நிஷ்க்ரியம் ,சாந்தம் நிரவத்யம் ,நிரஞ்சனம் நிர்குணம் -இத்யாதிகளால் சொல்லப் படுகிற ஸ்வரூபத்தையும்-யஸ் சர்வஜ்ஞஸ் சர்வவித்–முண்டோகம்-பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வாபாவிகீ ஞான பல க்ரியா ச–ஸ்வேதாஸ்வதரம் சத்ய காமஸ் சத்ய சங்கல்ப -சாந்தோக்யம் –இத்யாதிகளால் சொல்லப் படுகிற குணங்களும்-ஸ்ருணு தத் பரமம் ஸூஷ்மம் சர்வஞ்ஜம் சர்வப்ருத் ததா ,ஞான ரூபம் அநாதி அந்தம் அவிகாரி நிராமயம் அசஷுச் ஸ்ரோத்ரம் அஸ்பர்சம் அபாணி சரணம் த்ருவம், நாம ஜாத் ஆதி ரஹிதம் அவர்ணம் அ குணம் த்வபி விச்வஸ்ரவோ ,விச்வ சஷூர் , விச்வ பாணி பதம் பரம் , அ சக்தம் அ சரம்
சாந்தம் ஸ்வயம் ஜோதிரநூபமம் ,தூரஸ்த்தம் அந்திக சரம் ,ஜ்ஞான கம்யம் , நிரஞ்சனம் ,பூத பர்த்ரு சமம் ,ஜ்யோதிர் ஜ்யோதிஷாம் தமஸ பரம் அஷரம் சர்வ பூதஸ்தம் தத் விஷ்ணோ பரமம் பதம்–ஸ்ரீ பாஞ்ச ராத்ரம் –
இத்யாதிகளாலும்–அப்ராக்ருத குண ஸ்பர்சாத் நிர்க் குணம் பரிகீயதே ,ஸ்ருணு நாரத ஷாட் குண்யம் கத்திய மானம் மயானன.அ ஜடம் ஸ்வாத்ம சம்போதி நித்யம் சர்வ அவகாஹனம் .ஜ்ஞானம் நாம குணம் பிராஹு பிரதமம் குண சிந்தகா . ஸ்வரூபம் ப்ரஹ்மணஸ் தச்ச குணச்ச பரிகீயதே
ஜகத் பிரக்ருத் பாவோய சா சக்தி பரிகீர்த்திதா கர்த்ருத்வம் நாம யத் தஸ்ய ஸ்வாதந்த்ர்யம் ,பரிப்ரும்ஹிதம் ஐஸ்வர்யம் நாம தத் ப்ரோக்தம் குண தத்வார்த்த சிந்தகை ,ச்ரம ஹானிஸ்து யாதஸ்ய சததம் குர்வதோ ஜகத்பலம் நாம குணஸ் தஸ்ய கதிதோ குண சிந்தகை தஸ்யோபாதான பாவேபி
விகார விரஹோ ஹி யவீர்யம் நாம குணஸ் சோயம் அச்யுதத்வா பராஹ்வய , சக கார்ய நபேஷா
யாதத் தேஜஸ் சமுதாஹ்ருதம்–அஹிர் புத்ன்யா சம்ஹிதை
-இத்யாதிகளால் விசதமாக்குகிற பாஞ்ச ராத்ரம் போலேயும்--யதோ வா இமானி பூதானி ஜாயந்தே ,யேன ஜாதானி ஜீவந்தி
யத் பிரயந்தி அபிசம்விசந்தி
–தைத்ரியம்-ப்ராஹ்மணோஸ்ய முகம் ஆசீத் பாஹு ராஜன்ய க்ருத ஊரூ ததஸ்ய யத் வைஸ்ய பத்ப்யாம் ஸூத்ரோ அஜாயத–புருஷ ஸூக்தம் – அந்த ப்ரவிஷ்ட சாஸ்தா ஜனானாம் சர்வாத்மா -ஆரணம் – பாதோஸ்ய விஸ்வா பூதானி –புருஷ ஸூக்தம் –தைத்ரியம் –இத்யாதியாலும்–ச ஹோவாச மஹிமான ஏ வைஷாம் ஏதே த்ரயஸ் த்ரிம் ச தேவ தேவா இதி
கதமேத த்ரயஸ் த்ரிம்சதிதி அஷ்டவ் வஸவ் ஏகாதச ருத்ரா த்வாதச ஆதித்ய த ஏகரிம்சத் இநதிரஸ் சைவ பிரஜாபதிஸ் ச த்ரயச்த்ரிசம்த்
-ப்ருஹதாரண்யம்- -இத்யாதியாலும்–பவ்திமாப்யோ கோபவநாத் கோபவன , கௌசிகாத் கௌசிக ,கௌடிந்ண்யாத் கௌடிண்ந்ய சாண்டில்யாத் சாண்டில்ய ,கௌசிகாச்ச ,கௌதமாச்ச ,கௌதம ,அக்நிவைச்யா அக்னிவைஸ்ய சாண்டில்யாத் -ப்ருஹதாரண்யம்-இத்யாதியாலும்–ஜகஜ் ஜென்மாதிகளையும் ப்ராஹ்மணாதி வர்ணங்களையும் தேவ ஜாதியில் வைவித்யத்தையும் ருஷி வம்சாதிகளையும் பிரதிபாதிக்கிற வாக்யங்களால் சொல்லப் படுகிற விபூதியை-சர்க்கச்ச பிரதி சர்கச்ச வம்சோ மன்வந்த்ராணி ச ,வம்சானுசரிதஞ் சைவ புராணம் பஞ்ச லஷணம்-அமரம்- என்கிறபடியே சர்க்காதிகளையும் ,வம்சங்களையும் , மன் வந்தரங்களையும் ,வம்சானு சரிதங்களையும் , விஸ்தரேண பிரதி பாதிக்கிற முகேன விசதமாக்குகிற புராணம் போலவும்உத்ர்ர்தாசி வராஹேண -தைத்ரியம்-இதம் விஷ்ணு விசக்ரமே த்ரேதா நிததே பதம் –ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம் -இத்யாதிகளாலே சொல்லப் படுகிற அவதார சேஷ்டிதங்களைஸ்ரீ ராமாயணம் நாராயண கதாம் -என்னும் படி ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணா அவதார சேஷ்டிதங்களை விஸ்தரேண பிரதி பாதிக்கையாலும்-அத விஷ்ணுர் மகா தேஜ அதித்யாம் சமஜாயதே ,வமானம் ரூபமாஸ்த்தாய, வைரோசநிமுபாகமத் ,த்ரீன் க்ரமாநத பிஷித்வ பிரதி க்ருஹ்ய ச மாதவ ஆக்ரம்யலோகன் லோகாத்மா சர்வ லோகே ஹிதே ரத மஹேந்த்ராய புன பிரதாந் நியம்ய பலிமோஜசா––பால காண்டம் -29-19-இத்யாதிகளாலே ப்ராசங்கிகமாக அவதாராந்தர சேஷ்டிதங்களையும் ஸ்ரீ ராமாயணத்தில் சொல்லுகையாலும் ,–மோஷ தர்மத்திலே ஸ்ரீ ஜன்ம ரகஸ்யத்திலே-அவதார ரஹஸ்யத்திலே –நார தேனைவ முக்தச்து பிரத்யுவாச ஜனார்தனா -என்று தொடங்கி-பூர்வம் மஸ்த்யோ பவிஷ்யாமி ஸத்தா பயிஷ்யாமி மேதிநீம் வேதாம்ஸ்வை உத்தரிஷ்யாமி மஜ்ஜமானான் மகார்ணவே,த்வதீயம் கூர்ம ரூபேண ஹேம கூட சமப்ரபம் ,மந்தரம் தாரைஷ்யாமி அமிர்தார்த்தே த்விஜோத்தம –சாந்தி பர்வம் –348-3-4-இத்யாதியாலே தசாவதார சேஷ்டிதங்களையும் விசதமாக்கும் இதிகாசம் போலவும்-நீல தோயாத மத்யஸ்தா வித்யுத்லேகேவ பாஸ்வர –நாராயண அநுவாகம்-மனோமய பிராண சரீரோ பாருப -முண்டகம்-இத்யாதிகளாலே விக்ரஹத்தை சொன்ன இத்தை-ஆதி மத் யந்தம்–விக்ரஹத்தை பல இடங்களிலும் வர்ணித்து கொண்டு பேசுகையாலே- தெரியச் சொன்ன-திருவாய் -6-9-11–என்கிற படியே விசதமாக்கி சொன்ன வேத உப ப்ரஹ்மணம் என்று இத்தை சொல்லுவார்கள் என்கை-

இப் பிரபந்த சதுஷ்டயமும்
முழு நீர் முகில் வண்ணன்
-திருவிருத்தம் -2–என்றும்
மைப்படி மேனி-திருவிருத்தம் -94-
பச்சை மேனி–திருவாசிரியம்-1-
தாமரைக் காடு–திருவாசிரியம்-5-
நற் பூவை பூவீன்ற–பெரிய திருவந்தாதி –1-
கார் கலந்த மேனி–பெரிய திருவந்தாதி –86-
துயர் அறு சுடர் அடி–திருவாய்-1-1-1-
புனக் காயா நிறத்த–திருவாய்-10-10-6- என்று உபக்கிரமம் பிடித்து உபசம்ஹாரம் பரியந்தம்
விக்ரஹத்தை வர்ணித்து கொண்டு செல்லா நிற்கும்
இறே .-தெரியச் சொன்ன–திருவாய்-6-9-11- -என்கிற இது திருவாய்மொழி சந்தையே ஆகிலும் உப ப்ரஹ்மணத்வம் பிரபந்தாந்தரங்களுக்கு ஒக்கும் என்றே கொள்ள வேணும்-வேதத்வம் சொன்ன போது சாதாரணமாக சொன்னது இங்கும் ஒக்கும் இறே
பாஞ்ச ராத்ர புராண இதிகாசங்களிலும் இப் பிரபந்தத்திலும் ஸ்வரூபாதி சம்ஸ்தார்தங்களும் சொல்லப் பட்டதே ஆகிலும் இவ்வோ அர்த்தங்களில் இவற்றுக்கு நோக்கு ஆகையாலே- இப்படி வகை இட்டு சொல்லக் குறை இல்லை-

ஸ்வரூப ரூப கு,ண விபூதி சேஷ்டிதங்களித்தனையும்‌ வேதத்திலே சொல்லும்‌-ஸ்வருபத்தையும்‌, குணத்தையும்‌ விஸதமாகச்‌ சொல்லும்‌ ஸ்ரீபாஞ்சராத்ரம்‌-விபூதியை விஸதமாகச்‌ சொல்லும்‌ புராணங்கள்‌-அவனுடைய திவ்ய சேஷ்டிதங்களுக்கு பிரகாஸகமாயிருக்கும்‌ இதிஹாஸங்கள்‌, அவை போலே “’நீல தோயத மத்‌யஸ்த வித்யுல்‌லேகேவ பாஸ்வரா”‘ (தை.நா.) என்றும்‌, பாரூபஸ் ஸத்ய ஸங்கல்ப ” (முண்டக 2- 27) என்றும்‌ விக்‌ரஹ பரமான வே வாக்யங்களை “*“தெரியச் சொன்ன ஓராயிரம்‌” (திருவாய்‌. 6 – 9 -11)என்கிறபடியே விஸதமாக்குகிற வேத உப ப்‌ரும்ஹணம்‌ என்பாருமுண்டென்கிறார்‌.

தெரிதல் நினைதல் எண்ண லாகாத் திருமாலுக்கு
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்
தெரியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே.–6-9-11—இதர புருஷார்த்தங்களில் அல்ப அஸ்திரத்வாதிகளையும்-பகவத் விஷயத்தின் உடைய வை லக்ஷண்யத்தையும் வ்யக்தமாகச் சொன்ன

செழு நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப சேயரிக் கண்
அழுநீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ
முழுநீர்  முகில் வண்ணன் கண்ணன் விண்ணாட்டவர் மூதுவராம்
தொழுநீர் இணையடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே —-2—இக் கடலைத் தரையாக பருகின மேகம் இருந்தபடி-இவ்வடிவு உடையானும் தானேயாய் வருவானும் தானேயாய் இருக்கிறபடி – மேகம் ஜலம் இரண்டாய்  இன்றிக்கே ஜலமாகவே இருக்கை -ஆதார ஆதேய இரண்டுமே நீராயாயேயான மேகம் போலே இருக்கும்-இவளைப் பிரிந்த அவன் வடிவு என்று நிச்சயிக்கிறாள்-இவளைக் கண்டு அனுமானிக்கிறாள்–இது தான் முழு நீர் மேகம்-மேகத்தில் உள்ள நீர் மேகமே நீர்-அவன் இடத்தில் கறுமை -கறுமையே அவன்-கண்ணன் என்னும் கறும் தெய்வம்முழு நீர் முகில் வண்ணன் என்று-ப்ரேம விஷயம் பூர்ணமாய் –-தர்ச நீயமாய்-உத்துங்கமாய் இருக்கும் என்றதாயிற்று-கண்ணன் என்று-இவ் விஷயம் இவருக்குக் கை புகுந்தமை தோற்றுகிறது-

மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும் வைதிகரே
மெய்ப்படியால் உன் திருவடிச் சூடும் தகைமையினார்
எப்படி யூராமி லைக்கக் குருட்டாமிலைக்கும் என்னும்
அப்படி யானும் சொன்னேன் அடியேன் மற்று யாது என்பனே — – 94—அஞ்சனத்தின் படியான திரு மேனியும் –-கண்டார்கள் கண் குளிரும்படியான-வடிவும் –பட்டர் ஒருகால் இவ்விடத்தை அருளிச் செய்யா நிற்க –-பிள்ளை விழுப்பர் அரையரும் -ஆப்பான் திருவழுந்தூர் அரையரும் -இருந்தார்களாய் –-அனுசந்தித்தார் நெஞ்சில் இருள் படியும் படியான-திரு மேனியும் -என்று அருளிச் செய்ய –நஞ்சீயர் –இன்னார் என்று அறியேன்–என்னப் பண்ணுகை யாகாதே -என்று அருளிச் செய்து அருள –(பொன்னார் சார்ங்கம் யுடைய அடிகளை இன்னார் என்று அறியேன் -சார்ங்க பாணி உள்ளத்தில் அமர்ந்து இருட்டாக்கி அருளச் செய்ததற்கு பிரமாணம்)-இவ்வார்த்தை சொன்னார் யார் -என்ன -ஜீயர் -என்று அவர்கள் சொல்ல –நூற்றுப் பதின் காதத்து அவ்வருகே பிறந்து –இவ்வளவும் வந்து –இன்று நமக்கு இத்தை உபகரிப்பதே -என்று கொண்டாடி அருளினாராம் –மைப்படி –காதல் மையலை உண்டாக்கும் படியான திரு மேனி-பொன்னார் சார்ங்கம் உடைய யடிகளை இன்னார் என்று அறியேன்செந்தாமரை கண்ணும் –அகவாயில் குண பிரகாசமான திருக் கண்களும் –

செக்கர் மா முகில் உடுத்து மிக்க செம் சுடர்
பரிதி சூடி அம் சுடர் மதியம் பூண்டு
பல சுடர் புனைந்த பவள செவ்வாய்
திகழ பசும் சோதி மரகத குன்றம்
கடலோன் கை மிசை கண் வளர்வது போல்
பீதக ஆடை முடி பூண் முதலா
மேதகு பல் கலன் அணிந்து சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப மீது இட்டு
பச்சை மேனி மிக பகைப்ப
நச்சு வினை கவர் தலை அரவின் அமளி ஏறி
எறி கடல் நடுவுள் அறி துயில் அமர்ந்து
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர்
தெய்வ குழாங்கள் கை தொழ கிடந்த
தாமரை வுந்தி தனி பெரு நாயக
மூ வுலகு அளந்த சேவடியோயே –1–மீது இட்டு பச்சை மேனி மிக பகைப்ப-கீழ்ச் சொன்னவற்றாலும் -அவற்றை நெருக்கிற தன்னாலும் ஒன்றை ஓன்று ஸ்பர்த்தித்து- ஸ்யாமமான நிறமும் மிகவும் உஜ்ஜவலமாக – அவற்றை அடைய நெருக்கி உள்ளே இட்டுக் கொள்ளப் பார்த்ததான அத்தையும் அழித்து ப்ரசரிக்க திருமேனி தேஜஸ் மிகவும் பிரகாசிக்க என்றபடி –-கடலோன் கை மிசைக் கண் வளர்வது போலே -என்ற உபமானத்துக்கு இது உபமேயம்-

மா முதல் அடி போது ஓன்று கவிழ்த்து அலர்த்தி
மண் முழுதும் அகப்படுத்து ஒண் சுடர் அடி போது
ஓன்று விண் செலீ இ நான் முகப் புத்தேள்
நாடு வியந்து உவப்ப வானவர் முறை முறை
வழி பட நெறீ இ தாமரை காடு
மலர்க் கண்ணொடு கனி வாய் உடையது

மாய் இரு நாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன
கற்பகக காவு பற்பல வன்ன
முடி தோள் ஆயிரம் தழைத்த
நெடியோய் கல்லது அடியதோ வுலகே–5-தாமரை காடு மலர்க் கண்ணொடு கனி வாய் உடையதுமாய்
ஆரேனுமாகத் தன திருவடிகளைத் தலையிலே வைத்தால் ஆதித்ய சந்நிதியில் தாமரை போலே
திருக்கண் செவ்வி பெறுமாயிற்று- தாமரைக் காடு அலர்ந்தால் போலே இருக்கிற திருக் கண்ணோடே கனிந்த வாயையும் யுடைத்தாய் இருப்பதுமாய் –

முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மோடி நீ கூடி –நயப் புடைய
நாவீன் தொடை கிளவி யுள் பொதிவோம் நற் பூவைப்
பூ வீன்ற வண்ணன் புகழ்
–1-நற் பூவைப்-வாசகத்துக்கு எட்டுமது அன்று என்கிறது
(திருமேனி அழகு ஸ்வரூபத்தின் அளவு அல்லவே ) உபமானம் உபமேயத்துக்குப் போராமையாலே
உபமானத்தையும் சிக்ஷிக்கிறது-பூ வீன்ற வண்ணன்-பூவைப் பூ காட்டுகிற நிறத்தை யுடையவன்
பூவைப் பூவைக் காட்டுகிற நிறத்தை யுடையவன் என்றுமாம் –-கோ சத்ருஸோ கவய கவய சத்ரூஸோ கவ் –என்னுமா போலே-

கார் கலந்த மேனியான் கை கலந்த வாழியான்
பார் கலந்த வல் வயிற்றான் பாம்பணையான் -சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை
என்னினைந்து போக்குவார் இப்போது –86-ஸர்வதா ஸத்ருசமான மேகத்தோடே ஒத்த திரு மேனியை யுடையவன்-கார் கலந்த மேனியான் சீர் கலந்த சொல் –ஸ்ரீ ராமாயணம்-கை கலந்த வாழியான் சீர் கலந்த சொல் –ஸ்ரீ பாகவதம்-பார் கலந்த வல் வயிற்றான் சீர் கலந்த சொல் –இதிஹாசங்கள் புராணங்கள்-பாம்பணையான் -சீர் கலந்த சொல் -அருளிச் செயல்கள்சீர் கலந்த சொல்–திருநாமங்கள் என்றுமாம் –

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே 
–1-1-1-துயர் அற்ற என்றபடி-இவர் மயர்வு அற அவன் துயர் அற்றபடி–சுடரடி-நிரவதிக தேஜோ ரூபமான திவ்ய விக்ரஹம்-அடி -சேஷபூதர் அனுபவிக்க இழியும் துறை

எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6-—புனக்காயா நிறத்த-தன்னிலத்திலே காயாய் பூ போலே யாய்த்து வடிவு இருப்பது –புண்டரீகக் கண் –வாத்சல்ய அமிருத வர்ஷியாய் யாய்த்து கண்கள் இருப்பது —செங்கனி வாய்-சிவந்து கனிந்தாய் யாய்த்து முறுவல் இருப்பது -பிராட்டி விரும்பும் துறைகள் இறே இவை –

உப ப்ருஹ்மணத்வ சாம்யம் உண்டானாலும் ,இவ் ஆழ்வார் பிரபந்தங்களுக்கு உள்ள ஏற்றம்
ஆர்ஷமான புராணாதிகளுக்கு இல்லை என்னும் இடத்தை அறிவிக்கைக்காக , உபயத்தின் உடையவவும் உத்பத்தி மூலங்களை அருளி செய்ய கோலி ,பிரதமம் ஆர்ஷோ பிரபந்த உத்பத்தி மூலத்தை அருளி செய்கிறார்-கீழ்ச் சொன்ன புராணேதிஹாஸ கர்த்தாக்களான ருஷிகளாலே சொல்லப்பட்ட ஆர்ஷங்களுக்கு மூலமெது; இவர்‌ திருவாய்மொழி பாடுகைக்கு மூலமெது என்ன; கல்பாதியிலே உத்‌ரிக்த குணாநுகுணமாகச்‌ சொல்லும்‌ ப்‌ரஹ்மாவின்‌ ப்ரஸாதமும்‌, ரஜஸ் தமஸ் ப்ரசுரனான ருத்ரன்‌, அவை தலை சாய்ந்து ஸத்த்வம்‌ தலை யெடுத்த போது அத்‌யாத்மம்‌ சொல்லக் கேட்ட ஸப்‌ரஹ்மசாரிகளான ப்‌ரூகு-புலஸ்த்ய-மார்க்கண்டேய வாமதேவாதி,கள்‌ என்று சொல்லப்படுகிறவர்கள்‌ ப்ரஸாதமும்‌ ஆர்ஷத்துக்கு மூலம்‌-ப்‌,ரஹ்ம ருத்‌ராதிகளுக்கு அந்தர்யாமியாய்க் கொண்டு அவர்களுக்கு ஜ்ஞாந ப்ரதாநம்‌ பண்ணினவன் தானே ஸ்ரீ யப்பதியாய்‌, பரம ஸத்த்வ ஸமாஸ்ரயமான திவ்ய விக்‌ரஹ யுக்தனுமாய்‌ நின்று செய்த ப்ரஸாதம்‌ இவர்க்கு மூலம்‌ என்கிறார்‌ –

கல்பாதியில் தோற்றிற்று வர்ணிக்கும் சதுர் முகன் சந்தஸூம் மோஹ சாஸ்திர பிரவர்தகன்
பிண சுடலை வெந்தார் அக்கும் ஆறும் அணிந்து ஏறி ஏறி சுழன்று ஆடும் ஆலமமர் பிச்சுத் தெளிந்து
தான் வணங்குமாறு உரைக்க கேட்ட சஜாதீயர் பிரசாதமும் ஆர்ஷ மூலம்-சூரணை -55-

அதாவது
யஸ்மின் கல்பேது யத் ப்ரோக்தம் புராணம் ப்ரஹ்மணா புரா தஸ்ய தஸ்யது மஹாத்மியம் தத் ஸ்வரூபேண வர்ண்யதே –ஸ்ரீ மாத்ஸ்ய புராணம் –என்கிறபடியே-குண த்ரய வஸ்யனான தனக்கு கால பேத குண த்ரயமும் சங்கீர்ணமாயும்-அதில் ஒரு குணம் பிரசுரமாய் இருக்கும் விசேஷத்தை இட்டு –
சங்கீர்ணாஸ் சாத்விகாஸ் சைவ ராஜசாஸ் தாமசாஸ் ததா-ஸ்ரீ மாத்ஸ்ய புராணம் – -என்று சங்கீர்ணங்கள் என்றும் சாத்விகங்கள் என்றும் ,ராஜசங்கள் என்றும் ,தாமசங்கள் என்றும் சொல்லப் படுகிற அஹஸ் ஸூக்களாகிற கல்பங்களுடைய ஆதிகளிலே உத்ரிக்தமான குணானுகுனமான பிரதி பந்தம் ஆன படியே —அக்னேஸ் சிவஸ்ய மஹாத்மியம் தாமசேஷு பிரகீர்திதம் ராஜசேஷு ச மஹாத்மியம் அதிகம் ப்ரஹ்மணோ விது– சாத்விகேஷ்வத கல்பேஷு மஹாத்ம்யமதிகம் ஹரே தேஷ்வேவ யோக சம்சித்தா கமிஷ்யந்தி பராம் கதிம் , சங்கீர்னேஷூ சரஸ்வத்யா பித்ரூணாம் ச நிகத்யதே –ஸ்ரீ மாத்ஸ்ய புராணம்-என்கிற படி – தாமச கல்பங்களிலே அக்னி சிவர்களுடைய மகாத்ம்யத்தையும் ராஜச கல்பங்களில் தன்னுடைய மகாத்ம்யத்தையும் சாத்விக கல்பங்களில் சர்வேஸ்வரனுடைய மகாத்ம்யங்களையும் சங்கீர்ண கல்பங்களில் பித்ரு சரஸ்வதியின் மகாத்ம்யத்தையும் வர்ணியா நிற்கும் சதுர் முகனுடையமச் சந்தா தேவ தே ப்ரஹ்மன் பிரவ்ருதேயம் சரஸ்வதி–பால காண்டம் 2-30- என்கிற படி இவன் வாக்கிலே இச் சப்தம் பிறக்கைக்கு அடியான அனுக்ரக கார்யமான நினைவும் .. சந்தஸ் என்கிற இது நினைவு என்றே இவ் இடத்தில் கொள்ள வேண்டும் .
சந்தம் என்றே நினைவுக்கு வாசகம் . சந்தஸ் என்கிற இதுவும் நினைவுக்கு வாசகமாக வந்த இடங்களிலோ கண்டு கொள்வது . ஆக இப்படி இருந்துள்ள சதுர் முகன் நினைவும் –மோஹ சாஸ்திர பிரவர்தகன்-அன்யம் தேஹி வரம் தேவ பிரசித்தம் சர்வ ஜந்துஜூ மர்த்த்யோ பூத்வா பாவனேவ மாமாராதய கேசவ .. மாம் வ்ருணீஷ் வச தேவேச வரம் மத்தோ க்ருஹாணச, யேநாஹம் சர்வ பூதானாம் பூஜ்யாத் பூஜ்யதரோ பவம்–என்று வரம் வேண்டின ஸ்வ உத்கர்ஷ காமன் ஆகையாலே — த்வஞ்ச ருத்ர மஹாபாஹோ மோஹா சாஸ்த்ராணி காரய -என்று பகவான் நியோகித்தது வியாஜமாக ஆகமாதி மோஹ சாஸ்த்ர பிரவர்தகனான ருத்ரன் ,-பிணங்கள் இடு காடதனுள் ,நடமாடு பிஞ்சகன் -பெரிய திருமொழி-2-6-9–என்றும் ,-சுடலையில் சுடு நீறன்-பெரிய திருமொழி-10-1-5–என்றும்-வெந்தார் என்பும் சுடு நீரும் மெய்யிற் பூசி–பெரிய திருமொழி-1-5-8–என்றும்-அக்கும் புலி இன தளும் உடையார் –பெரிய திருமொழி-9-6-1–என்றும் ஆறும் பிறையும் அரவமும் உடம்பும் சடை மேல் அணித்து –பெரிய திருமொழி-6-7-9–என்றும் எரி உருவத்து ஏறேறி –இரண்டாம் திரு வந்தாதி — 63-என்றும் – சுழன்றாடும் கொன்னவிலும் மூவிலை மேல் கூத்தன்-பெரிய திருமடல்-60- -என்றும்-ஆலமமர் கண்டத்தவன்–முதல் திருவந்தாதி-4- -என்றும் சொல்லுகிற படியே தம பிரசுரன் ஆகையாலே நிஹீன வ்ருத்தி பரனாய்உன்மத்த வத நுன்மத்த .பிரபு ,பிரபவதாமபி ராத்ரவ் ஸ்மசாநேப்யடசிதத் கிமே தத் தவேச்வர – -இத்யாதியாலே சிம்சான பர்யடனம் தொடக்கமான நிஹீன வ்ருத்திகளை நீ அனுஷ்டிக்கைக்கு ஹேது என் என்று தேவி கேட்க்கும் படி சம்சானங்களிலே சஞ்சரித்து ,சப பஸ்மத்தை உடம்பு எங்கும் பூசி ,
அத்தி மாலையை பூண்டு ,வயாக்ர சர்மத்தை உடுத்தி ,நதி சந்திர சர்பாதிகளை ஜடையிலே அணிந்து ,
சர்வேஸ்வரன் தன சார்வஜ்ஞ அனுகுணமாக , வேத மயனான விஹஹேச்வரனை மேற் கொண்டு உலவுவா போலே , தன் அறிவு கேட்டுக்கு அனுகுணமாக ஞான ஹீனமான ரிஷபத்தை வாகனமாய் உடையனாய் ,மத்தர் களித்து ந்ருத்தம் பண்ணுமா போலே சக்ர பிரமம் போலே சுழன்று ஆடுவது ,விஷத்தை கண்டத்திலே தரிக்கை ஆகையாலே ,நம்மில் காட்டில் அதிசயித சக்திகர் இல்லை என்று தன்னை ஈஸ்வரனாக நினைத்து இருப்பதாக பிராந்தி நீங்கி ,சத்வ குணம் தலை எடுத்து ,-சத்வம் விஷ்ணு பிரகாசம் ஆகையாலே –-ஆல் மேல் வளர்ந்தானை தான் வணங்குமாறு -நால்வருக்கு மேலை யுகத்துரைத்தான் –நான்முகன்-17–என்கிற படியே -அகடிதகடநா சமர்த்தனான சர்வேஸ்வரனை தான் உபாசிக்கும் பிரகாரத்தை உபதேசிக்கக் கேட்டவர்கள் ஆகையாலே , சத்வ நிஷ்டராய் ,ருஷித்வத்தால் வந்த சாஜாத்யத்தை யுடையரான அகஸ்த்ய புலஸ்திய தஷ மார்கண்டேயர்கள் நால்வரில் ஒருவனான புலஸ்த்யன் புராண சம்ஹிதா கர்த்தா பவான் வத்ஸ பவிஷ்யதி தேவதாபார மார்த்யஞ்ச யதாவத் வேத்ச்யதே பவான் -என்று ஸ்ரீ பராசர பகவானுக்கு வர பிரதானம் பண்ணுகையாலே சஜாதியரான ருஷிகள் பிரசாதமும் ருஷி ப்ரோதக்தங்களான பிர பந்தகளுடைய மூலம் என்கை-–ஸ்ரீ வால்மீகி பகவானுக்கு அனுக்ரகரான பிரம்மாவை போலே விஜாதீயன் அன்றிக்கே ஸ்ரீ பராசர பகவானுக்கு வரபிரதனான புலஸ்தயனும் ருஷி ஆகையாலே ,இவனுக்கு சஜாதியன் என்னத் தட்டில்லை இறே..மற்று உண்டான இதிகாச புராண கர்த்தாக்கள் உடைய பிரபந்தங்களுக்கு மூலமும் ஆராய்ந்தால் ,இப்புடையிலே யாயிருக்கும் அத்தனை அல்லது அத்வாரக பகவத் பிரசாதம் ஒரு விஷயத்திலும் இல்லை என்று நினைத்து இறே ஆர்ஷ மூலம் என்று திரள அருளி செய்தது—

(கல்பாதி,யில்‌) ‘“யஸ்மிந்‌ கல்பே து யத் ப்ரோக்தம்‌ புராணம்‌ ப்‌ரஹ்மணா புரா ! தஸ்ய தஸ்ய து மாஹாத்ம்யம்‌ தத் ஸ்வரூபேண வர்ண்யதே ॥ அக்‌நேஸ் ஸிவஸ்ய மாஹாத்ம்யம்‌ தாமஸேஷு ப்ரகீர்த்யதே । ரஜஸேஷு ச மாஹாத்ம்யம்‌ அதிகம்‌ ப்‌ரஹ்மணோ விது | ஸாத்த்விகேஷ்வத கல்பேஷு மாஹாத்ம்யம்‌ அதிகம்‌ ஹரே -தேஷ்வேவ யோக ஸம் ஸித்‌தாக,மிஷ்யந்தி பராம்‌ க,திம்‌”” (மாத்ஸ்யே) என்று குண த்ரய வஸ்யனாகையாலே கல்பாதியிலே தனக்குத்‌ தோற்றின குணாநுகுணமாக தமஸ்ஸு தலையெடுத்த போது ருத்‌ராக்‌நி மாஹாத்ம்யமும்‌, ரஜஸ்ஸு தலையெடுத்த போது ஸ்வ வர்ணநமும்‌, ஸத்த்வம்‌ தலையெடுத்த போது பகவத்‌,வர்ணநமும்‌ சொல்லக் கடவனான ப்‌,ரஹ்மாவினுடைய ““மச்சந்தா தேவ தே ப்‌ரஹ்மந்‌ ப்ரவ்ருத்தேயம்‌ ஸரஸ்வதீ?” (ரா. பா. 2 – 31) என்கிற நினைவும்‌.  ““சந்தஸ்ஸு”  என்றது நினைவென்றபடி–(மோஹ ஸாஸ்த்ர ப்ரவர்த்தகன்‌”) “தவம்‌ ஹி ருத்‌ர மஹா பாஹோ மோஹ ஸாஸ்த்ராணி காரய ! மாஞ்ச கோபய யேந ஸ்யாத்‌ ஸ்ருஷ்டிரேஷோத்தரோத்தரா | த்ரய்யாமபி ச ஸாமாந்ய வாதஸ்சித்த விபே,த,த₹ ॥ கிம்புநர் லோக மோஹார்த்த,ம்‌ ப்ரவ்ரூத்தம்‌ ருத்‌ர ஸாஸநம்‌ | மயாநுமிஷ்டோ ருத்‌ரஸ்து மோஹ ஸாஸ்த்ரம்‌ வ்யதாத்‌ ஸ்வயம்‌”’-என்கிறபடியே பகவந் நியோகத்தாலே மோஹ ஸாஸ்த்ர ப்ரவர்த்தகனான ருத்‌ரன்‌- (பிணச்சுடலை இத்யாதி, ) பிணங்களிடுகாடதனுள்‌”’ (திருமொழி 2 – 6 – 9) என்றும்‌, “சுடலையில்‌ சுடு நீறன்‌’” (திருமொழி 10 – 1 – 5) என்றும்‌, ““வெந்தாரென்பும்‌ சுடு நீறும்‌” (திருமொழி 1 – 5 – 8) என்றும்‌, ““அக்கும்‌ புவியினதளுமுடையர்‌” (திருமொழி 9 – 6 – 1) என்றும்‌, “ஆறும்‌ பிறையுமரவமும்‌ அடம்பும்‌ சடைமேலணிந்து”” (திருமொழி 6 – 7 – 9) என்றும்‌, “வேறேறிப்‌ பட்டவிடுசாபம்‌”” (இர.திருவ. 63) என்றும்‌, “’தன்னினுடனே சுழலச்‌ சுழன்றாடும்‌”’ (பெ.திருமடல்‌) என்றும்‌, “’ஆலமமர்‌ கண்டத்தரன்‌”’ (மு.திருவ. 4] என்றும்‌, ““ஆல் மேல்‌ வளர்ந்தானைத் தான்‌ வணங்குமாறு – மேலை யுகத்துரைத்தான்‌’” (நா. திருவ, 17) என்றும்‌ சொல்லுகிற இவற்றாலே ருத்‌ரன்‌ தமஸ்ஸு தலை மண்டை யிட்டு பகவத்‌ விமுகனய்‌ ப்‌ரமித்து, பிணங்களிடுகாடுகள்தோறும்‌ ஸஞ்சரியாநின்றுகொண்டு, “தீ பாக்‌நிம்‌ தீ பதைலஞ்ச பஸ்ம சாஸ்திம்‌ ரஜஸ் வலாம்‌ ॥ ப்ரமாதாத்‌ ஸ்பர்ஸநாத்‌, விப்ரஸ்ஸவாஸா ஜலமாவிஸேத்‌’” என்று தர்ஸந-ஸ்பர்ஸந-அநர்ஹங்களான பஸ்மாஸ்திகளைத் தரித்து வ்யாக்‌ர சர்மவஸநனாய்‌, நதீ சந்த்‌ரர்களை ஜடையிலே தரித்து, ஸாபோபஹதனாய்‌, க்ருத்யாக்ருத்ய விவேக ஸூந்யனாய்‌ விஷத்தை தரித்து, சக்ர ப்‌ரமம்‌ போலே ப்‌ரமிக்கிறவன்‌,-அதுக்கு மேலே ஸத்த்வம்‌ தலை யெடுத்து, ஸத்த்வம்‌ விஷ்ணு ப்ரகாஸகமாகையாலே, அகடிதகடநா ஸாமர்த்‌யத்தை யுடைய ஸர்வேஸ்வரனே உபாஸ்யனென்று தான்‌ அவனை உபாஸிக்கும்‌ ப்ரகாரத்தை உபதேஸிக்கக் கேட்டு ஸத்த்வஸ்தராய்‌, ருஷித்வத்தால்‌ ஸாஜாத்யத்தை யுடையரான புஸஸ்த்ய ப்‌ருகு. மார்க்கண்டேய-வாம தேவாதிகளுடைய ப்ரஸாத,ம்‌ ஆர்ஷங்களான புராணேதிஹாஸங்களுக்கு காரணமென்றதாய்த்து. புலஸ்த்யாதிகளுக்கு பராஸரனோடே ருஷி ஸாஜாத்யமுண்டாகையாலே ஸஜாதீயர்‌ என்றது.

பிணங்கள் இடு காடதனுள்  நடமாடு பிஞ்ஞகனோடு
இணங்கு திருச் சக்கரத்து எம்பெருமானார்க்கிடம் விசும்பில்
கணங்கள் இயங்கும் மல்லைக் கடல் தல  சயனம்
வணங்கும் மனத்தாரவரை வணங்கு என் தன் மட நெஞ்சே-2-6-9–மனிச்சு கலவாத நெஞ்சை உடைய
ருத்ரனோடு கூட – ஸ்மசாந பூமியிலே ஆடா நின்றுள்ள ருத்ரனோடே கூட – அபிமான உபஹதரானவர்களுக்கும் நித்ய ஸூரிகளுக்கும் ஒக்க திருமேனியில் இடம் கொடுத்து இருக்கும் நீர்மையைச் சொல்லுகிறது – திரு வாழி ஆழ்வானைச் சொல்லுகிற இடம் நித்ய ஸூரிகளுக்கும் உப லஷணம்-

வெந்தார் என்பும் சுடு நீரும் மெய்யில் பூசிக் கையகத்து ஓர்
சந்தார் தலை கொண்டு உலகு ஏழும் திரியும் பெரியோன்
தான் சென்று என்
எந்தாய் சாபம் தீர் என்ன இலங்கமுது நீர் திரு மார்வில்
தந்தான் சந்தார் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-8—வெந்தவர்களுடைய எலும்பும்
அது சுட்ட சாம்பலும் உடம்பிலே பூசி கையிலே சந்துகள் ஆர்ந்து இருந்துள்ள தலையைக் கொண்டு –
எல்லா நரம்புகளும் வந்து கூடின இடத்திலே யிறே சேதித்தது – தலை என்னாமல் சந்தார் என்பதால் -எல்லா நரம்புகளும் இத்யாதி -என்கிறார்-கூறு செய்த ஊரிலே -கையும் கைத்தளையுமாய்-கை விலங்குமாய் – திரிவாரைப் போலே-ஈஸ்வர அபிமாநியாய் தன் ஆஞ்ஞை நடத்திப் போந்த இடத்தில்
கையும் ஒடுமாய் திரிந்த துர் மாநியானவன் சென்று – என் ஸ்வாமீ – என்னுடைய சாபத்தைப் போக்க வேணும் -என்ன –

அக்கும் புலியின தளமுடையார் அவரொருவர்
பக்கம் நிற்க நின்ற பண்பரூர் போலும்

தக்க மரத்தின் தாழ்சினை ஏறி தாய் வாயில்
கொக்கின் பிள்ளை வெள்ளிற  வுண்ணும் குறுங்குடியே —9-6-1-தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து -என்கிறபடியே அனுகூல சிஹ்னத்தோடே வருகை அன்றிக்கே-அக்கும் -எலும்பும்
புலித் தோலும் உடையராய்-மற்றும் எருக்கம் பூ சாம்பல் என்றால் போலே நிஷித்த த்ரவ்யங்களுக்கு ஒரு அவதி இல்லை இறே –ஈஸ்வர அபிமாநிகளாய் இருப்பர்க்கும் முகம் கொடுத்துக் கொண்டு இருக்குமவன் அனுகூலராய்ச் சென்று கிட்டுகிற நமக்கு முகம் தரச் சொல்ல வேணுமோ –

ஆறும் பிறையும் அரவமும் அடம்பும் சடை மேல் அணிந்து உடலம்
நீறும் பூசியேறூரும் இறையோன் சென்று குறை யிரப்ப
மாறு ஒன்றில்லா வாச நீர் வரை மார்வகலத்து அளித்து உகந்தான்
நாறும் பொழில் சூழ்ந்து அழகாய நறையூர் நின்ற நம்பியே–6-7-9—என்னுடைய ரஷணம் நானே பள்ளிக் கொள்ள வல்லேன் -என்று துர்மானத்தைப் பண்ணி அதுக்கு ஈடான அடையாளங்களை  உடையனாய் இருக்கிற தன் ஜடையில் ஏக தேசத்தில் கங்கையை தரித்து -( கங்கா தரன் ) போக பிரதானன் என்று தோற்ற சந்த்ரனையும் தரித்து -( சந்த்ர சேகரன் ) சர்ப்பத்தையும் அடப்பம் பூவையும் ஜடையிலே அணிந்து –அடம்பம் பூ-கடம்பம் மர விசேஷ பூ – உடம்பிலே பஸ்மத்தையும் அணிந்து ருஷபத்தை நிர்வஹியா நின்றுள்ள ஈஸ்வர அபிமாநியானவன் லோக குருவுமாய் தனக்குப் பிதாவுமாய் இருக்கிற
ப்ரஹ்மாவின் உடைய தலையைச் சேதித்து அத்தாலே பாதகியாய்க் கொண்டு சர்வேஸ்வரன் திருவடிகளில் தன் குறையை அறிவிக்க 

ஏறு எழும் வென்று அடர்த்த வெந்தை எரி உருவத்து
ஏறேறி பட்ட விடு சாபம் -பாறேறி
யுண்ட தலை வாய் நிறையக் கோட்டங்கை யொண் குருதி
கண்ட பொருள் சொல்லில் கதை–63-ஏறு ஏழையும் வென்ற ஸ்வாமி எரியினுடைய உருவை உடையனாய் ருஷபத்தை ஏறின ருத்ரனை ப்ரஹ்மா கபாலீ த்வம் பவிஷ்யஸி -என்று இட்ட சாபத்தை
ஒட்டின அழகிய கை –கழுகும் பருந்தும் ஏறி உண்ணா நின்ற தலையை உடைய வாய் நிறையும்படிக்கு ஈடாக அழகிய குருதியைக் கண்ட அர்த்தத்தைச் சொல்லில் அது ஒரு மகா பாரதம்-

மன்னு குலவரையும் மாருதமும் தாரகையும்
தன்னினுடனே சுழலச் சுழன்று ஆடும்  ———–70
கொன்னவிலும் மூவிலைக் வேற்கூத்தன் பொடியாடி
அன்னவன் தன் பொன்னகலம் சென்று ஆங்கு அணைந்து இலளே  —–71–திரு வுலகு அளந்து அருளின தேசம் எல்லாம் உபதஹதமான படி –கிடந்த விடத்தில் கிடவாது ஒழிகை-குலவரை யுள்ளிட்ட பதார்த்தங்கள் எல்லாம் புன்னைப் பூ போலே சுழன்று வர –ஆசைப் பட்டாரும் வயிறு பிடிக்கும் படி இருக்கை-கண் மூன்றானால் போலே இருக்கிறது அன்றோ –

நெறி வாசல் தானேயாய் நின்றானை யைந்து
பொறி வாசல் போர்க் கதவம் சாத்தி அறிவானாம்
ஆலமர நீழல் அறம் நால்வர்க்கு அன்றுரைத்த
ஆலமர் கண்டத் தரன் –4—தாமஸ குணத்துக்குச் சேர்ந்தது செய்யுமது அல்லது –
சத்வாத் சஞ்ஜாயதே ஞானம்–ஸ்ரீ கீதை -14-17–என்கிறபடியே கதற (உபதேசிக்க )அவன் கடவானோ -என்கிறார்-எம்பெருமான் கொடுத்த வெளிச்சிறப்பு மாத்ரத்தையும் விஷ ஹரண சக்தியையும் கொண்டு இத் துறையிலே இழியப் போமோ –

ஆல நிழல் கீழ் அற நெறியை நால்வர்க்கு
மேலை யுகத்து உரைத்தான் மெய்த்தவத்தோன் -ஞாலம்
அளந்தானை ஆழிக் கிடந்தானை ஆல் மேல்
வளர்ந்தானைத தான் வணங்குமாறு -17-ஆகம பிரசித்தமான வட விருஷத்தின் கீழே இருந்து தர்ம மார்க்கத்தை ஆப்தரான நாலு சிஷ்யர்களுக்குப் போன யுகத்தில் சொன்னான் – பகவத் ஜ்ஞானம் அறிக்கைக்கு ஈடான தபஸ்சை யுடையவன் –

இனி இவ் ஆழ்வார் பிரபந்தங்களுக்கு மூலம் இன்னது என்கிறார் —

பரம சத்வத்தோடே உள்ளி உரைக்கும் நிறை ஞானத்து அயனாம் சிவனாம் திருமால் அருள் கொண்டு
இவர் பாடினார்-சூரணை -56-

அதாவது –
கல்பாதியில் உத்ரிக்தமான குண அனுகுணமாக தோற்றிற்று வர்ணிக்கும் என்றதுக்கு எதிர் தட்டாம் படி
பரம சத்வத்தோடே -உள்ளி உரைக்கும் -என்று ரஜஸ் தமஸ் ஸூக்களோடும் தத் சகபடிதமான சத்வதோடும் அந்வயம் இன்றிக்கே , பரம சத்வ சமாஸ்ரய ஸ்தோத்ர ரத்னம் -12–என்கிறபடியே –
தனக்கு மேல் எல்லை இல்லை என்னும் படியான சுத்த சத்வ யுக்தனாய் ,தான் சொல்லிற்று அடைய வேதார்தமாய் இருக்கச் செய்தே சடக்கென சொன்னால்,-வாய் வந்த படி சொன்னான் நிரூபியாதே -என்பார்கள் என்று சேதனர் பக்கல் வாத்சல்யாதிசயத்தாலே இவர்களுக்கு ஆப்திக்கு உறுப்பாக –
நெறி உள்ளி உரைத்த திருவாய்-1-3-5-–என்கிற படியே வேத மார்க்கத்தை விசாரித்து ,அருளி செய்யுமவனாய் பிச்சு தெளிந்து சொன்னவன் வார்த்தை கேட்டு உண்டான , ஞான மாத்ரத்தை உடையவர்கள் போல் அன்றிக்கே ,-நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி – திருவாய்-4-8-6–என்கிறபடி பரி பூர்ண ஞானத்தை நிரூபகமாக உடையவனாய் ,-அயனாம் சிவனாம் திரு மாலால் -என்கிற படி கீழ் சொன்ன பிரம்மா ருத்ரருகளுக்கும் அந்தர்யாமியாய் நின்று , அவ்வவ கார்யங்களை நிர்வஹிக்கையாலே ,தத் தத் சப்த வாச்யனாய் , சர்வாதிகனான ஸ்ரீயபதி யினாலே –
அருளப் பட்ட சடகோபன்–திருவாய்-8-8-1- என்கிறபடியே மயர்வற மதி நலம் அருளப் பெற்றவராய் அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் -கண்ணி 8–– என்கிற படியே அந்த அத்வாரக பகவத் பிரசாதத்தை மூலமாக கொண்டு இவர் இப் பிரபந்தங்கள் பாடி அருளினார் என்கை .-

பரம ஸத்த்வஸமாஸ்ரய: கஸ் (ஸ்தோ.ர. 12) என்கிறபடியே ரஜஸ் தமஸ்ஸூக்கு ஆஸ்ரயமன்றிக்கே பரம ஸத்வ ஸ்மாஸ்ரயனாய்‌, அவர்களைப் போலே தோற்றிற்றுச்‌ சொல்லுகை யன்றிக்கே “நெறி யுள்ளி யுரைத்த ” (திருவா. 1 – 3 – 8) என்கிறபடியே இவன்‌ சொல்லிற்றொன்று வேதர்த்தமாயிருக்கச்‌ செய்தேயும்‌, இச் சேதநர் பக்கல்‌ க்ருபாதிஸயத்தாலே விசாரித்துச்‌ சொல்லலாம்படி ஆப்தனுமாய்‌, ““நிறை ஞானத்தொரு மூர்த்தி”” (திருவா. 4 – 9 – 6) என்கிறபடியே அதுக்கடியான ஸார்வஜ்ஞ்யத்தை யுமுடையனாய்‌, *’அயனாய்‌ சிவனானாய்‌ திருமாலாலருளப்பட்ட சடகோபன்‌”’ (திருவா. 8 – 8- 11) என்கிறபடியே ப்‌ரஹ்ம ருத்‌ராதி களுக்கும்‌ அந்தர்யாமியாய் நின்று அவர்களை ப்ரவர்த்திப்பித்தாப் போலே ஸ்ரீயப் பதியாய்‌ அஸாதாரண விக்‌ரஹ யுக்தனான ஈஸ்வரனுடைய க்ருபை இவர்‌ திருவாய்மொழி பாடுகைக்கு மூலமென்கிறார் –

கஶ்ஶ்ரீ: ஶ்ரிய: பரம ஸத்வ ஸமாஶ்ரய: க:
க: புண்டரீகநயந: புருஷோத்தம: க: |
கஸ்யாயுதாயுத ஶதைக கலாம்ஶகாம்ஶே
விஶ்வம் விசித்ர சிதசித் ப்ரவிபாக வ்ருத்தம்||-ஶ்லோகம் 12 –யாரிடத்தில் சுத்த ஸத்வம் உள்ளது?

பிணக்கற வறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த
கணக்கற நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புறநெறி களை கட்டு
உணக்குமின் பசையற வவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே –1-3-5-ஆறு வகைப்பட்ட பாஹ்ய சமயத்துக்கு வைதிக சமயத்தோடு உண்டான பிணக்கு அற-வேத மார்க்கத்தை ஆராய்ந்து அருளிச் செய்த படி-வாக்விவ்ருதாச்சா வேதா -என்று தான் சொன்னது அடங்க வழியாய் இருக்க பிரஜைகள் பக்கல் பரிவாலே-ஒர்ரர்த்தம் போதியாதவன் நிரூபிக்குமா போலே ஆராய்ந்து அருளிச் செய்த படி –

அறிவினால் குறையில்லா அகல் ஞாலத்தவர் அறிய,
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி,
குறிய மாண் உருவாகி, கொடுங் கோளால் நிலங்கொண்ட
கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறையிலமே.–4-8-6-சேதன பேதத்தோ பாதி போறும் இறே உபாய பேதமும் -கர்ம யோகம் முதலாக பிரபத்தி பர்யந்தமாக சகல உபாயங்களையும் வ்யக்தமாக உபதேசித்த படி-கர்ம ஞான பகுதிகள் -அவதார ரஹஸ்யம் புருஷோத்தம வித்யை -ஸ்வரூப யாதாம்யம் -விரோதி நிவ்ருத்திக்கு பிரபத்தி -ஆத்மாபிராப்திக்கு பிராப்தி -பகவல்லாபத்துக்கு பிரபத்தி -இவற்றை அடங்க விசத்தமாக அருளிச் செய்தநிறைந்த ஞானத்தை உடைய அத்விதீயமான ஸ்வரூபத்தை யுடையவன் – ஞானாதிகன் சொன்னது இறே பிரமாணம் ஆவது -எல்லாருடைய ஞானத்துக்கும் அடியான ஞான பூர்த்தியை யுடையவன் –

தெருளும் மருளும் மாய்த்துத் தன் திருந்து செம் பொற் கழல் அடிக் கீழ்
அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால்
அருளப் பட்ட சடகோபன்
ஓராயிரத்துள் இப்பத்தால்
அருளி யடிக் கீழ் இருத்தும் நம் அண்ணல் கரு மாணிக்கமே–8-8-11–ப்ரஹ்ம ருத்ர பிரமுகரான சர்வாத்மாக்களுக்கும் நிர்வாஹகனாய் -சர்வேஸ்வரனான ஸ்ரீ யபதியாலே – அருளப் பட்ட சடகோபன்-மயர்வற மதி நலம் அருளினன்-என்கிறபடியே கிருபைக்கு விஷய பூதரான ஆழ்வார் -இவ்வருளுக்கு வாய்த்தலை பிராட்டி -என்கை-

அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
வருளினான் அவ் வருமறையின் பொருள்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே-8--பரம ரஹஸ்யமான வேதார்த்தத்தை நிர்ஹேதுகமாகத் தன் பக்கல் ஆசாலேசம் உடையார் வாழும் படி-ஸ்ரீ கீதா உபநிஷத் ஆச்சார்யனாய் நின்று வெளியிட்டான்
வேதங்கள் மறைத்த அர்த்தத்தை தீரோத்தகன் ஆகையாலே பிரகாசிப்பித்தான் (மூலையில் உள்ள உபநிஷத் அர்த்தங்களை நடு முற்றத்தில் இட்டு அருளி பதன் பதன் என்று அர்ஜுனனுக்கு  அருளிச் செய்தானே )-ஆழ்வாருக்குத் திருவாய் மொழிக்கு உள்ளுறை போலே காணும் அருளிச் செய்தது-(சூத்ரம் -உபநிஷத் -விருத்திக்காரர் -கீதாச்சார்யன் -ஆழ்வார் ப்ரஹ்ம சூத்ரம் போலே ) இருவருக்கும் முழு நோக்காகப் பெற்றால் ஆழ்வாருக்கு செய்யப் போகாது இல்லை யாகாதே-வேத அதிகாரிகளுக்கு உஜ்ஜீவமாம் படி எம்பெருமான் செய்தது -அநாதிகாரிகளும் க்ருதார்த்தராம் படி ஆழ்வார் அருளிச் செய்தது-எம்பெருமான் அருளினது ப்ராதேசிகம் –ஆழ்வார் அருள் சார்வத்ரிகம்- பாலேய் தமிழ் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரம் -என்றும் -தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் -என்றும் இறே சொல்லிற்று –

அவர்கள் பிரசாதம் ஆர்ஷ மூலம் என்னும் இடம்-மச் சந்தா தேவாதே ப்ரஹ்மன் -என்றும்
புராண சம்ஹிதா -இத்யாதியாலே பிரபன்ன வக்தாக்களானவர்கள் வசன சித்தமாய் இருந்தது …
அப்படியே இவர் பிரபந்தங்களுக்கு ,மூலம் பகவத் பிரசாதம் என்னும் அது இவர் வசன சித்தமோ
என்னும் அபேஷையில் அத்தை மூதலிக்கிறார்-
அவர்களுடைய ப்ரஸாதம்‌ ஆர்ஷத்துக்கு மூலமென்னுமிடம்‌ பரமாண ப்ரஸித்‌தமா யிருந்தது. இவருடைய பரபந்தத்துக்கு பகவத் ப்ரஸாதம்‌ மூலமென்னுமிடம்‌ அறிந்தபடி என்‌ என்னில்‌, அவர் தம்முடைய வசநங்கள்‌ ப்ரமாணமென்கிறார்‌

கருவுள் வேறலாமை அரன் அயன் எனச் செய்யும் அவை போலே மூவுருவா முதல்வன் துப்பரவாலே பரம கவிகளால் பாடுவியாது நேர் படச் சொல்லும் நீர்மை இலா என்னை தன்னாக்கி என் நா முதல் வந்து புகுந்து தப்புதல் அற தன்னை வைகுந்தனாக தன் சொல்லால் தானே துதித்து மலக்கு நாவியல் மொய்ய சொல்லால் சொல்ல வல்லேன் என்று நானும் சொல்லி நாடும் கை எடுக்கும் படி என் சொல்லால் யான் சொன்ன இன்கவி என்பித்தான் என்றார் இறே-சூரணை-57–

அதாவது
ஸ்ருஷ்டும் தத கரிஷ்யாமி த்வாமாவிச்ய பிரஜாபதே —ஸ்ரீ விஷ்ணு தர்மம் –-கல்பாந்தே ருத்ரரூபீ யோ க்ரசதே சகலம் ஜகத் – விஷ்ணுராத்மா பகவதோ பவஸ்யாமித தேஜச -பாரதம் கர்ணபர்வம் -என்கிற படியே-திசை முகன் கருவுள் வீற்று இருந்து படைத்திட்ட கருமங்களும் –திருவாய்-5-10-8–என்றும்
வெள்ளை நீர் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும் திருவாய்-5-10-4–என்றும் சொல்லும் படி பிரம்மா ருத்ரர்களுக்கு அந்தர்யாமியாய் கொண்டு ஸ்ருஷ்ட்டி சம்ஹாராதிகளை பண்ணா நிற்கச் செய்தே-அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே -திருவாய்-1-1-8–என்று
ஜகத் ஸ்ருஷ்ட்டி வேதோபதேசம் ஜகத் சம்ஹாரம் திரி புர தஹனம் இவற்றை பிரம்மா ருத்ரர்கள் தாங்களே செய்தார்களாக லோகத்தார் சொல்லும்படி செய்தாற் போலே-

“ஸ்ருஷ்டி ஸ்தித் யந்தகரணீம்‌ ப்‌ரஹ்ம விஷ்ணு ஸிவாத்மிகாம்‌ | ஸ ஸம்ஜ்ஞாம்‌ யாதி பகவாந்‌ ஏக ஏவ ஜநார்த்தநா ”” (வி.பு.1 – 2) என்றும்‌, “ஸ்ருஷ்டிம்‌ தத? கரிஷ்யாமி த்வாமாவிஸ்ய ப்ரஜாபதே”’, “கல்பாந்தே ருத்‌ரரூபீ யோ க்ரஸதே ஸகலம்‌ ஜகத்‌ ! தமாத்‌யம்‌ புருஷம்‌ விஷ்ணும்‌ ப்ரணதோஸ்மி ஜநார்த்தநம்‌”’, “’விஷ்ணுராத்மா பகவதோ பவஸ்யாமித தேஜஸ । தஸ்மாத்‌ தநுர்ஜ்யா ஸம்ஸ்பர்ஸம்‌ ஸவிஷேஹோ மஹேஸ்வர?” (பார. கர்ண. 29) என்றும்‌, ”திசைமுகன்‌ கருவுள்‌ வீற்றிருந்து படைத்திட்ட கருமங்‌களும்‌’” (திருவா. 5 – 10 – 8) என்றும்‌, ‘“வெள்ள நீர்ச் சடையானும்‌ நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும்‌”” (திருவா. 5 – 10 – 4) என்றும்‌ சொல்லுகிறபடியே ப்‌ரஹ்மாதிகளுக்கு அந்தர் யாமியாய்‌ ஸ்ருஷ்ட்யாதிகளைப்‌ பண்ணா நிற்கச் செய்தேயும்‌ ‘அரனயனென உலகழித்தமைத்துளன்‌”’ (திருவா. 1 – 1 – 8) என்கிறபடியே ப்‌ரஹ்மா ஜகத்தை ஸ்ருஷ்டித்தான்‌; வேதங்களை உபதேஸித்தான்‌; ருத்ரன்‌ ஜகத்தை ஸம்ஹரித்தான்‌; த்ரிபுரங்களை தஹித்தான்‌” என்று லோகத்தார்‌ சொல்லும்படி செய்தாப் போலே

திருவுருவு கிடந்தவாறும் கொப்பூழ்ச் செந்தாமரை மேல் திசைமுகன்
கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும்
பொருவிலுன் தனி நாயக மவை கேட்குந்தோறும் என்நெஞ்சம் நின்று நெக்கு
அருவி சோருங் கண்ணீர் என்செய்கேன் அடியேனே.–5-10-8-திரு நாபி கமலத்தில் சதுர்முகன் ஆகிற அதிஷ்டானத்துக்கு உள்ளே –ஸ்ருஷ்டிம் தாத்தா கரிஷ்யாமி த்வாமாவிஸ்ய ப்ரஜாபதே-என்கிறபடியே சதுர்முகன் ஆசன பத்மத்தோ பாதியாய் இருக்கை–அவனுக்கு அந்தராத்மாவாய் -சர்வ நியந்தரு த்வத்தால் வந்த வேறுபாடு தோன்ற இருந்து-ஸ்ருஷ்டித்த வியாபாரங்களும் -ப்ரஹ்ம ஸ்ருஷ்ட்டி அடைய அவனே செய்கிறான் என்னும் படி இருந்த படி-

கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புரம் புக்க வாறும் கலந்த சுரரை
உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும்
வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும்
உள்ளமுள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே.–5-10-4-கங்கையினுடைய நீர் வெள்ளத்தை ஜடையிலே தரித்த ப்ரபாவத்தை யுடைய ருத்ரனும் விஷ்ணுராத்மா என்கிறபடியே சரீரவத் பரதந்த்ரன் என்னும் இடம் ப்ரஸித்தமாம்படி நின்றதுவும்

சுரர் அறிவரு நிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என வுலகு அழித்து அமைத்து உளனே 
–1-1-8–ருத்ரனுக்கு அந்தர்யாமியாய் கொண்டு திரிபுர தஹனம் பண்ணி-பிரம்மாவுக்கு அந்தர்யாமியாய் நின்று வைதிக ஜ்ஞானத்தை தேவர்களுக்கு உபதேசித்து-இயந்து -ஈந்து -அறிவையீந்து -என்றபடி-திரிபுர தஹனம் பண்ணின ருத்ரன் என்றும் -வைதிக ஜ்ஞானம் ப்ரவர்த்தகன் ப்ரஹ்மா என்றும் அவர்களுக்கு பிரசித்தியை கொடுத்தால் போலே-ப்ரஹ்மாவுக்கு அந்தர்யாமியாக அண்டாந்த வர்த்திகளை ஸ்ருஷ்டித்தும் அவனுக்கு நிலம் அல்லாத ப்ராக்ருத சிருஷ்டியை ஸ்வேன ரூபேண பண்ணியும்-ருத்ரனுக்கு அந்தர்யாமியாய் நின்று அவனாலே சம்ஹார்யமான அம்சத்தை சம்ஹரித்தும் அவனுக்கு நிலம் அல்லாத ப்ராக்ருத சம்ஹாரத்தை ஸ்வேன ரூபேண பண்ணினான் சர்வேஸ்வரனே – ஏதௌ த்வௌ விபுதஸ் ரேஷ்டௌ- இப்படி சமஸ்த சிருஷ்டி சம்ஹாரங்களையும் தானே செய்கையாலே வேறேயும் சிலர் சிருஷ்டி சம்ஹாரங்களுக்கு கடவர் உண்டு என்று சொல்ல முடியாது –

மூவுருவா முதல்வனே--அதாவது –-என் முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே-திருவாய் -7-9-2-
என்று ஸ்வேன ரூபேண நின்று கார்யம் செய்யும் இடத்தில் தனக்கு தானே அடி ஆனால் போலே பிரம்மா ருத்ரர்களுக்கும் தானே அடியாய் அவர்களை சரீரமாக கொண்டு நின்று சிருஷ்டி யாதிகளைப் பண்ணி
அவர்கள் செய்தார்கள் என்று பிரசித்தம் ஆக்கும் அவன்-துப்புரவாம்-அதாவது –திறத்துக்கே துப்புரவாம் திருமால்—திருவாய் -7-9-9-என்கிற படி ஏதேனும் ஒரு கார்யத்திலும் வந்தால் ஒரு த்ருணைத்தை கொண்டு கார்யம் தலை கட்டிக் கொள்ள வல்ல சாமர்த்தியத்தை உடையவன் ஆகையால் –பரம கவிகளால் பாடுவியாது-அதாவது –-இன் கவி பாடும் பரம கவிகளால் தன் கவி தான் தன்னை பாடுவியாது –திருவாய்-7-9-6- என்று சொல்லுகிறபடியே ,தன்னைக் கவி பாடுவிக்க வேண்டினால், அதுக்கு ஈடான ஞான சக்தி யாதிகளால் குறை வற்றவர்களாய் , இனிய கவி பாட வல்ல மேலான கவிகளான , வியாச பராசர வால்மீகி ப்ரப்ருதிகளும் ,செம்தமிழ் -பாடுவாரான முதல் ஆழ்வார்கள் உண்டாம் இருக்க , அவர்களைக் கொண்டு பாடுவித்து கொள்ளாதே ,–நேர் பட யான் சொல்லும் நீர்மை இலாமையால் ஏர்விலா என்னைத் தன் ஆக்கி —திருவாய்-7-9-5-என்கிற படியே , தனக்கு தகுதியாம் படி வாய்க்க சொல்லுகைக்கு அடியான ஞானாதி குணங்கள் எனக்கு இன்றிக்கே இருக்க ,-என்னை தன்னாக்கி -என்கிற படியே ,என்னை தன்னோடு ஒக்க ஞான சக்திகளை உடையனாம் படி பண்ணி-
ஆ முதல்வன் இவன் என்று தன்தேற்றி என் நா முதல் வந்து புகுந்து-திருவாய் -7-9-3- -என்கிற படியே
என்னுடைய வாக் பிரவர்திக்கு முதாலாய் வந்து புகுந்து-என்னாகியே தப்புதல் இன்றித் தனைக் கவி தான் சொல்லி–திருவாய் -7-9-4 -என்கிறபடியே -என்னை உபகரணமாக கொண்டு பாடா நிற்க செய்தே ,என்னுடைய ஸ்பர்சத்தால் வந்த தோஷம் தட்டாத படியாகக் கொண்டு ,-என்னால் தன்னை வைகுந்தனாக புகழ -திருவாய் -7-9-7-என்கிற படியே நான் புகழ்ந்த இத்தாலே , ஸ்ரீ வைகுண்ட நாதனாய் ,அங்குத்தை ஐஸ்வர்யம் பெற்றானாய் நினைத்து ,-தன் சொல்லால் தான் தன்னைக் கீர்தித்த மாயன்—திருவாய் -7-9-2-என்றும்-தானே யான் என்பரானாகித் தன்னைத் தானே துதித்து -திருவாய்-10-7-2–என்றும் சொல்லுகிற படி-சொல்லும் தன்னது ,சொன்னானும் தான் ,சொல்லிற்றும் தன்னை-என்னும் படி எனக்கு அந்தர் ஆத்மாவாய் நின்று ,தன்னைத் தானே ஸ்துதித்து-

“மூவுருவாம்‌ மூதல்வன்‌” (திருவா. 7 – 9- 2) என்கிறபடியே ப்ரஹ்மாதிகளுக்குத்‌ தானே காரணமானாப் போலே தனக்குத் தானே அடியாயிருக்கிறவன்‌,-*திறத்துக்கே துப்பரவாம்‌”‘ (திருவா. 7 – 9 – 9) என்கிறபடியே யாதொன்றைக் கொண்டு யாதொரு கார்யம்‌ கொள்ள நினைத்தான்‌, அத்தைக் கொண்டே அக் கார்யம்‌ கொள்ள வல்ல ஸாமர்த்‌யத்தை உடையனாகையாலே, தன்னைக் கவி சொல்லுவித்துக் கொள்ள நினைத்தால்‌ ‘“இன் கவிபாடும்‌ பரம கவிகளால்‌ தன் கவி தான்‌ தன்னைப்‌ பாடுவியாது” ‘ (திருவா. 7 – 9 – 6) என்கிறபடியே வ்யாஸ-பராஸர-வால்மீகிகளைக் கொண்டு கவி பாடுவித்துக் கொள்ளுதல்‌, முதலாழ்வார்களைக் கொண்டு கவி பாடுவித்துக் கொள்ளுதல்‌ செய்யாதே. (நேர் படச் சொல்லும்‌ நீர்மையிலா என்னைத்‌ தன்னாக்கி) “நேர் பட யான் சொல்லும்‌ நீர்மையிலாமையில்‌”” (திருவா. 7 – 9 – 5) என்கிறபடியே தன்னைக் கவி பாடுகைக்குத்‌ தகுதியான ஜ்ஞாந சக்த்யாதிகளின்றிக்கே இருக்க, “என்னைத்‌ தன்னாக்கி”” (திருவா, 7 – 9 – 1) என்கிறபடியே என்னைத்‌ தனக்கு அநந்யார்ஹமாக்கி என்னுதல்‌; என்னைத்‌ தன்னோடொத்த ஜஞாந சக்த்யாதிகளை உடையனாம்படி பண்ணி, “என்‌ நா முதல்‌ வந்து புகுத்து’” (திருவா. 7 – 9 – 3) என்கிறபடியே ஜ்ஞாநாதிகளை உண்டாக்கித்‌ தான்‌ தூரஸ்தனாயிராதே என்னுடைய ஜிஹ்வாக்‌ரத்திலே வந்து புகுந்திருந்து–தப்புதலின்றித் தனைக் கவி தான்‌ சொல்லி?” (திருவா. 7 – 9 – 4) என்கிறபடியே என்னை உபகரணமாகக் கொண்டு கவி பாடா நிற்கச் செய்தே என்னுடைய ஸ்பர்ஸத்தால்‌ வந்த தோஷம்‌ தட்டாத படி பண்ணி, *’தன்னை வைகுந்தனாகப் புகழ வண் தீங்கவி’‘ (திருவா, 7 – 9- 7) என்கிறபடியே நான்‌ கவி பாடின பின்பு தன்னை ஸ்ரீவைகுண்ட நாதனாகவும்‌ அவ்‌ விபூதியில்‌ ஐஸ்வர்யம்‌ தான்‌ பெற்றானாகவும்‌ நினைத்து, *‘தன் சொல்லால்‌ தான்‌ தன்னைக்‌ கீர்த்தித்த மாயன்‌” (திருவா. 7 – 9 – 2) என்கிறபடியே சொல்லும்‌ தன்னதாய்‌, சொன்னானும்‌ தானாய்‌, சொல்லிற்றும்‌ தன்னையாய்‌, தன்னைத் தானே துதித்து” (திருவா. 10 – 7- 2) என்கிறபடியே எனக்கு அந்தர்யாமியாய்‌ நின்று தன்னைத் தானே ஸ்துதியா நிற்கச்‌ செய்தேயும்‌–

என் சொல்லி நிற்பன்?என் இன்னுயிர் இன்று ஒன்றாய்
என் சொல்லால் யான் சொன்ன இன்கவி என்பித்துத்
தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன் என்
முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே.–7-9-2-
மூவுருவாம் முதல்வனே.-அது தானே ஏது போலே என்னில் த்ரி மூர்த்திகள் என்று தன்னையும் கூட எண்ணும் படி ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு அடியானால் போலேயும் -ப்ரஹ்மாவை ஓதுவித்து தேவர்களுக்கு வெளிச்சிறப்பு பண்ணி அத்தை அவன் தலையிலே ஏறிட்டால் போலேயும் -ருத்ரனுக்கு அந்தராத்மாவாய் நின்று திரிபுர தஹனம் பண்ணி அவன் தலையிலே ஏறிட்டால் போலேயும் தானே காரியம் செய்து பிறர் கையிலே ப்ரஸித்தியை ஏறிடுகை பண்டே ஸ்வபாவம் என்கை –

திறத்துக்கே துப்பரவாம் திரு மாலின் சீர்
இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ?
மறப்பிலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னை
உறப்பல இன்கவி சொன்ன உதவிக்கே?–7-9-9—ஏதேனும் ஒன்றிலே புக்கால் அத்தை தலைக் கட்ட வல்ல சாமர்த்தியத்தை யுடையவன் -த்ருணத்தைக் கொண்டு ஒரு கார்யம் கொள்ளப் புக்கால் -அத்தைக் கொண்டே நினைத்த கார்யம் கொள்ளும் சாமர்த்தியத்தை யுடையவன் –திறம் -கூறுபாடு துப்புரவு -சாமர்த்தியம்-திரு மாலின் சீர்-இந்த சாமர்த்யரத்துக்கு அடியாய் இருக்கிறது ஸ்ரீ யபதித்தவம் ஆயிற்று –

இன் கவி பாடும் பரம கவிகளால்
தன் கவி தான் தன்னைப் பாடுவியாது
இன்று
நன்கு வந்து என்னுடன் ஆக்கி என்னால் தன்னை
வன் கவி பாடும் என் வைகுந்த நாதனே.–7-9-6—தன்னை கவி பாடுவித்துக் கொள்ள நினைத்தால்-பராசர வ்யாஸ வால்மீகிகள் ஆதல் -செந்தமிழ் பாடுவார் என்னும் முதல் ஆழ்வார்கள் ஆதல் அன்றோ பாத்ர பூதர் -அவர்களை ஒழிய –தன் கவி தான் தன்னைப் பாடுவியாது-கவியும் தன்னது –கர்த்தாவும் தான் -விஷயமும் தான் –

சீர் கண்டு கொண்டு திருந்து நல் இன் கவி
நேர்பட யான் சொல்லும் நீர்மை இலாமையில்
ஏர்வுஇலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைப்
பார் பரவு இன் கவி பாடும் பரமரே.–7-9-5-நான் கவி பாடுகைக்கு அடியான ஞானாதி குணங்கள் இன்றிக்கே இருக்கச் செய் தேயும் ஏர்வுஇலா என்னைத்-சைதன்ய ப்ரயுக்தமான இச்சையும் இன்றிக்கே இருக்கிற என்னை தன் ஆக்கி என்னால் தன்னைப்-தனக்கு உண்டான ஞானாதிகளை எனக்கு உண்டாக்கி -என்னைக் கொண்டு அபரிச்சின்னனான தன்னை -என்னை தன்னாக்கி -தனக்கு அநந்யார்ஹம் என்னும் இடத்தை அறிவித்து என்றுமாம்-

என்றைக்கும் என்னை உய்யக்கொண்டு போகிய
அன்றைக்கு அன்று என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
இன் தமிழ் பாடிய ஈசனை ஆதியாய்
நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ?–7-9-1-கவி பாடுகைக்கு அனுரூபமான ஞான சக்தி யாதிகள் இல்லாத என்னை -தன்னோபாதி ஞான சக்தி யாதிகளை யுடையேனாம் படி பண்ணி -என்னுதல் -என்னைத் தன்னாக்கி-தனக்கு ஆளாம் படி பண்ணி என்னுதல் –

ஆ முதல்வன் இவன் என்று தன் தேற்றி என்
நா முதல் வத்து புகுந்து
நல் இன்கவி
தூமுதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்
வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ!–7-9-3–ஸ்ரீ வால்மீகி பகவான் கவி பாடிற்று ஈஸ்வரன் திரு உள்ளம் அடியாக ப்ரஹ்மா சரஸ்வதியை அவன் நாவிலே ஏவி இ றே -அங்கனம் இடையீடு இன்றிக்கே தானே என்னுடைய வாக் பிரவ்ருத்திக்கு முதலாய் வந்து புகுந்து என்னுதல் –முந்துற நாவில் வந்து புகுந்து என்னுதல் –

அப்பனை என்று மறப்பன் என் ஆகியே
தப்புதல் இன்றித் தனைக் கவி தான் சொல்லி
ஒப்பிலாத் தீ வினையேனை உயக்கொண்டு
செப்பமே செய்து திரிகின்ற சீர்கண்டே.–7-9-4—என்னோட்டை சம்சர்க்கத்தால் வந்த தோஷம் தட்டாமே -நானே கவி பாடினேன் ஆகில் நிரவத்யமாம்-இது இ றே அரிது-தனைக் கவி தான் சொல்லி-தனக்கு சத்ருசமாக தான் சொல்லி

வைகுந்த நாதன் என் வல்வினை மாய்ந்து அறச்
செய்குந்தன் தன்னை என்னாக்கி என்னால் தன்னை
வைகுந்தனாகப் புகழ்
வண் தீங்கவி
செய்குந்தன் தன்னை எந்நாள் சிந்தித்து ஆர்வனோ?–7-9-7—நான் புகழ்ந்தால் தான் ஸ்ரீ வைகுண்ட நாதன் ஆவானாய் இறா நின்றான் -அது தான் முன்பே நித்தியமாய் இருக்க -என் கவி பாட்டாலே இப்போது பெற்றானாய் இருக்கை -தமப்பன் கொடுத்து அது தன்னையே மகன் கொடுக்க அன்று பெற்றானாய் இரா நின்றான் இறே -ஆத்மா நித்தியமாய் இருக்கச் செய்தே அசன்னேவா என்றும் சந்தமேனம்-என்றும் சொல்லுகிறது-

என் சொல்லி நிற்பன்?என் இன்னுயிர் இன்று ஒன்றாய்
என் சொல்லால் யான் சொன்ன இன்கவி என்பித்துத்
தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன் என்
முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே.–7-9-2-சொல்லும் தன்னது -சொன்னானும் தானே -சொல்லிற்றும் தன்னை –கவி பாட்டுண்டேன் ஆகில் கிடீர் கவி பாடினேன் ஆவது -தான் தன்னைக் கவி பாடினான் ஆகில் உம்முடைய கவி என்று நாட்டிலே பிரசித்தம் ஆக்கின படி எங்கனே என்னில்
மாயன் -இது இ றே அவனுடைய ஆச்சர்ய சக்தி இருக்கும் படி -நீர் இதில் அந்வயித்த படி என் என்ன -என்னை உபகரணமாக கொண்டு தானே கவி பாடினான்

வலக்கை ஆழி இடக்கை சங்கம் இவை உடைய மால் வண்ணனை மலக்கு நாவுடையேற்கு –திருவாய்-6-4-9-என்று ஒன்றுக்கும் விக்ருதன் ஆகாத ,சர்வாதிகனை என் உக்தி மாத்ரத்தாலே விக்ருதனாம் படி
பண்ண வல்ல நா வீறுடைய எனக்கு என்றும் – நாவியலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்–திருவாய்-4-5-4–என்று நெஞ்சு ஒழிய வாக் பிரவர்த்தி மாத்ரத்தாலே ,இசை மாலைகளைக் கொண்டு ஸ்துதிக்க கிட்டப் பெற்றேன் என்றும் –மொய்ய சொல்லால் இசை மாலைகள் , ஏத்தி உள்ளப் பெற்றேன்–திருவாய்-4-5-2–என்று செறிந்த சொல்லாலே உண்டாய் ,இசையோடு கூடி இருந்துள்ள தொடைகளால் ஏத்தி அனுசந்திக்கப் பெற்றேன் என்றும் வானக் கோனை கவி சொல்ல வல்லேற்க்கு–திருவாய்-4-5-9-என்று- ஸ்ரீ வைகுண்ட நாதனை கவி சொல்ல வல்ல எனக்கு என்றும்-நான் பாடினேனாக நினைத்து நானும் சொல்ல –-சடகோபன் சொல் -திருவாய்-2-2-11–என்றவாறே நான் இத்தை பாடினேனாக நினைத்து நாடும் அஞ்சலி பண்ணும் படி –என் சொல்லால் யான் சொன்ன இன் கவி என்பித்து –திருவாய்-7-9-2–என்ற படி என்னுடைய வசன வ்யக்தியாலே ,நான் கர்த்தாவாக சொன்ன இனிய கவி என்று நாட்டிலே பிரசித்தம் ஆக்கினான் என்று அருளிச் செயதார் இறே என்கை ..
ஆகையால் இவர் சர்வேஸ்வரன் அருள் அடியாகவே பாடினதாய் நிச்சிதம் என்று கருத்து
.

மலக்கு நா வுடையேற்கு”’ (திருவா. 6 – 4- 9) என்றும்‌,“நாவியலாலிசை மாலைகளேத்தி”’ (திருவா. 4 – 5 – 4) என்றும்‌, ‘மொய்ய சொல்லாலிசை மாலைகளேத்தி”” (திருவா. 4 – 5 2) எனறும்‌, ‘‘வானக் கோனைக் கவி சொல்ல வல்லேற்கு”” (திருவா. 4 – 5 – 9) என்றும்‌ இப்படி நானும்‌ சொல்லி, *’சடகோபன் சொல்‌”” என்றவாறே நாடும்‌ அஞ்ஜலி பண்ணும்‌ படி பண்ணி, *“என்சொல்லால்‌ யான்‌ சொன்ன இன் கவி என்பித்து”’ (திருவா. 7- 9- 2) என்று – சொல்‌ என்னதாகவும்‌, சொன்னேன்‌ நானாகவும்‌, அது தான்‌ எனக்கு இனிதாகவும்‌ சொல்லுவித்தான்‌ என்கிறாரிறே. ஆகையால்‌ இவருடைய உக்திகளால்‌ ஸர்வேஸ்வரனருளாலே திருவாய்மொழி பாடினார்‌ என்னுமிடம்‌ ஸித்‌தம் 

கலக்க ஏழ்கடல் ஏழ்மலை உலகேழும் கழியக் கடாய்
உலக்கத் தேர்கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும்பல
வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவை யுடை மால்வண்ணனை
மலக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம்மண்ணின் மிசையே?–6-4-9-
-தாமஸ பரமோ தாதா சங்க சக்ர கதா தரா-என்று சர்வாதிக வஸ்துவுக்கு லக்ஷணம் ஆயிற்று திவ்யாயுதங்கள் -வலக்கையில் திரு வாழி யையும் -இடக்கையில் ஸ்ரீ பாஞ்ச ஜன்யமும் -இவற்றை யுடையனுமாய் -கறுத்த நிறத்தை யுடையவனை
மால் வண்ணனை என்ன அமைந்து இருக்க திவ்யாயுதங்களை சொல்லுவான் என் என்று கஞ்சனூர் வண் துவரைப் பெருமாள் பட்டரை கேட்க -அவிக்ருத வஸ்துவுக்கு லக்ஷணம் இ றே திவ்யாயுதங்கள் என்றார்-மலக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம்மண்ணின் மிசையே?அவாக்ய அ நாதரா என்கிற சர்வாதிக வஸ்துவை விக்ருதமாக்கும் நா வீறுடைய எனக்கு சோழேந்திர சிம்ஹனை உளுக்காகப் பண்ண வல்ல நாவைப் படைத்த எனக்கு -பூமியில் எதிர் உண்டோ-ஈஸ்வரன் உளுக்கு ஆகும் படி கவி சொல்ல வல்லார் தம்மை ஒழிய சிலைவர் இல்லாமையால் வேறு என்னோடு ஒப்பார் இல்லை என்கிறார்-

மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்
தூவி அம் புள்ளுடையான் அடல் ஆழி அம்மான் தன்னை
நாவியலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்;
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே.–4-5-4-நெஞ்சின் வருத்தம் இன்றிக்கே வாக் ப்ரவ்ருத்தி மாத்ரமான திருவாய்மொழி யைக் கொண்டு நா புரட்டின இடம் எங்கும் கவியாய்க் கிடக்கை
ஏத்தி நண்ணப் பெற்றேன்;-இவர் நண்ணி ஏத்தினவர் அல்லர் -ஏத்திக் கொண்டு பண்ணுகிறார்-

மைய கண்ணாள் மலர்மேல் உறை வாள் உறை மார்பினன்
செய்ய கோலத்தடங் கண்ணன் விண்ணோர் பெருமான் தனை
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேன்
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே.–4-5-2—மொய் என்று வலி யாதல் -பெருமை யாதல்
வலி யான போது-சிதிலமாய் இராதே சொல் செறிந்து கட்டுடைத்தாய் இருக்கை–பெருமையான போது இவ்விஷயத்தை விளாக் குலை கொள்ளவற்றாய் இருக்கை –யதோ வாசோ நிவர்த்தந்தே-என்று மீளாதே இவ்விஷயத்துக்கு நேரே வாசகமாய் இருக்கை –இசை மாலைகள் – பரிமள பிரசுரமான பூ மாலைகள் போலே கேட்டார் நெஞ்சு பிணிப்புண்ணும் படி இசை விஞ்சி இருக்கை – அவனும் அவளும் நித்ய ஸூ ரிகளுமாய் இருந்து கேட்டுக் கொண்டாட பிறந்த பிரபந்தம் இறே-ஸ்ரீ ராமாயணத்தில் காட்டில் இப்பிரபந்தத்துக்கு ஏற்றம் -பகவத் ஹ்ருதயத்தை பின் சென்ற ப்ரஹ்மா அடியாக நாரதாதிகள் முன்னிலையாக பிறந்த பிரபந்தம் அன்றிக்கே-கேட்டாரார் வானவர்கள் – தென்னா வென்னும் என் அம்மான் -என்கிறபடி தானும் நித்ய ஸூரிகளும் கேட்டுக் கொண்டாடும் படி இருக்கை –-ஏத்தி உள்ளப் பெற்றேன்மன பூர்வோ வாக் உத்தர -என்கிற நாட்டார் படியும் அன்று –இவர் படி-ஏத்தி பின்னை யாயிற்று நினைத்தது-கவி பாடுகைக்கு நினைவு அத்தலையில் யானாலும் பேறு தம்மதாய் இருக்கிற படி-சாஸ்திர பலம் ப்ரயோத்த்ரி என்கிற இடம் அன்றியிலே இருக்கிற படி-முடியானே -யிலே விடாய்த்த போது தனித்தனியே கரணங்கள் விடாய்த்தால் போலே இங்கு தனித் தனியே யாயிற்று அனுபவிக்கிறதுஈஸ்வரன் நினைவாலே பாடுகிற கவி யாகையாலே தாமும் கரணங்களோ பாதி அந்வயித்தார்

வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த்
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான் தனை,
கூனற் சங்கத் தடக்கை யவனை, குடமாடியை,
வானக் கோனைக் கவிசொல்ல வல்லேற்கு இனி மாறுஉண்டோ?–4-5-9-இப்படிப் பட்டவனை கவி சொல்ல வல்லேனுக்கு -அகல் வானம் என்று விசேஷிக்க வேணுமோ -உபய விபூதியிலும் எதிரில்லை-

ஏத்த வேழுலகும் கொண்ட கோலக்
கூத்தனை குருகூர்ச் சடகோபன் சொல்
வாய்ந்த வாயிரத்துள் இவை பத்துடன்
ஏத்த வல்லார்க்கு இல்லையோ ரூனமே –2-2-11-வேதத்தில் காட்டில் ஆழ்வார் அடியாகப் பிறந்த ஆபி ஜாத்யம்-ஆப்திக்கு இன்னார் கூறியது என்ன வேண்டுதலின், ‘குருகூர்ச் சடகோபன்’ என்கிறார்.
இதனால், (த்ரீணீ பதா விசக்ரமே )வேதாந்தத்தைக் காட்டிலும் ஆழ்வாரிடத்தில் பிறந்த திருவாய்மொழிக்குள்ள ஆபி ஜாத்யம் — உயர்குடிப் பிறப்பின் சிறப்பினைக் கூறியபடி

என் சொல்லி நிற்பன்?என் இன்னுயிர் இன்று ஒன்றாய்
என் சொல்லால் யான் சொன்ன இன்கவி என்பித்துத்
தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன்
என்
முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே.–7-9-2-சொல்லும் என்னதாய் -சொன்னேனும் நானேயாய் -அது தான் இனிய கவியாம் படி நாட்டிலே பிரசித்தம் ஆக்கினான் –என்பித்து-பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் -என்கிறபடியே லோக பிரசித்தம் ஆக்கி –தான் வென்று அர்ஜுனனை நாட்டார் உடன் ஓக்க புகழுமா போலே -அது தான் அப்படி அன்றோ என்னில் – தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த -சொல்லும் தன்னது -சொன்னானும் தானே -சொல்லிற்றும் தன்னை –கவி பாட்டுண்டேன் ஆகில் கிடீர் கவி பாடினேன் ஆவது -தான் தன்னைக் கவி பாடினான் ஆகில் உம்முடைய கவி என்று நாட்டிலே பிரசித்தம் ஆக்கின படி எங்கனே என்னில்-மாயன் -இது இ றே அவனுடைய ஆச்சர்ய சக்தி இருக்கும் படி -நீர் இதில் அந்வயித்த படி என் என்ன -என்னை உபகரணமாக கொண்டு தானே கவி பாடினான் -உபகரணமான படி தான் என் என்ன-என்-முன் சொல்லும்-அவன் முன்னே சந்தை இட பின்னே சொன்னேன் –தானே சொன்னான் ஆகில் ஸ்ரீ கீதை போலே வறமுறுகலாம் இறே –

இப்படி இப் பிரபந்தங்களுக்கு மூல வைலஷண்யத்தால் வந்த ஏற்றம் உண்டு என்று அறிவித்த அளவும் அன்றிக்கே, வக்த்ரு வைலஷண்யத்தால் ,வந்த ஏற்றமும் உண்டு ,என்று அறிவிக்கைகாக ருஷிகளில் காட்டில் ஆழ்வாருக்கு உண்டான வ்யாவ்ருத்தியை அருளிச் செய்கிறார் ..(ஆழ்வார் ஏற்றம் ஐந்து சூரணைகளில்-பிரேமம் -வைராக்யம் -தாரக போஷாக போக்யங்களில் வேறுபாடு பல சாதன தேவதாந்தர-இவற்றைச் சொல்லும்) இதுக்குக் கீழ்‌ ப்ரபந்த, மூல வைலக்ஷண்யம்‌ சொல்லிற்று. இனி மேல்‌ வக்த்ரு வைலக்ஷண்‌யம்‌ சொல்லுகிறது-

தர்ம வீர்ய ஞானத்தாலே தெளிந்து ஹ்ருஷ்டராய் மேலே மேலே தொடுப்பாரைப் போல் அன்றி
அருளின பக்தியாலே உள் கலங்கி சோகித்து மூவாறு மாசம் மோஹித்து வருந்தி ஏங்கி தாழ்ந்த சொற்களாலே நூற்கிற இவர்-சூரணை -58-
(பக்தியாலே உள் கலங்கி-தாழ்ந்த சொற்களாலே நூற்கிற இவர்-ஞானத்தாலே மேலே மேலே தொடுப்பாரைப் போல் அன்றே -)

அதாவது
ஹஷிதம் பாஷிதம் சைவ கதிர்யா யச்ச சேஷ்டிதம் தத் சர்வம் தர்ம வீர்யேண யதாவத் சம்பிரபச்யதி—ஸ்ரீ பாலகாண்டம் –3-4-(ஸ்ரீ ராமபிரானுடைய புன்முறுவல் வார்த்தைகள் என்னும் இவற்றையும் -சஞ்சாரத்தையும் -செயல்களையும் மற்றும் எல்லாவற்றையும் பிரமனுடைய வரபலத்தால் உள்ளபடியே நன்கு அறிகின்றார் )என்கிற படியே தாம் தாம் அனுஷ்டித்த தபோ ரூபமான தர்மத்தின் உடைய சக்தியாலே ஜனித்த ஞானத்தாலே –கண்டும் தெளிந்தும் கற்றார் கண்ணற்க்கு ஆள் அன்றி ஆவரோ –திருவாய் -7-5–7-என்கிற படியே ஜ்ஞாதவ்யங்களை தெளிய அறிந்து , அது தான் –ந போதாத் அபரம் சுகம்-(ஞானத்தை தவிர வேறு இன்பம் இல்லை )என்னும் படி இருக்கையாலே ,ஹர்ஷ யுக்தராய் ,அந்த தெளிவும் ஹர்ஷமும் அடியாக உத்தரோத்தரம் சப்தங்களை தொடுக்கும் ருஷிகளை போல் அன்றியே–தர்ம வீர்யத்தாலே வந்ததுக்கும் -அது தான் ஞான மாத்ரத்துக்கும் -எதிர் தட்டாம் படி-மயர்வற மதி நலம் அருளினன்–திருவாய் -1-1-1–என்கிற படியே , நிர்ஹேதுக பகவத் பிரசாதத்தாலே வந்ததாய் ஞான விபாக ரூபையான பக்தியாலே தெளிவுக்கும் ஹர்ஷத்துக்கும் எதிர் தட்டாம் படி-மதி எல்லாம் உள் கலங்கி–திருவாய் -1-4-3-என்கிற படி விரஹவ்யதையாலே ஞானம் எல்லாம் அடி மண்டியோடே கலங்கி ,
யதா மனோரதம் பகவத் அனுபவம் பெறாமையாலே-ஆடியாடி அகம் கரைந்து-2-4-பதிகங்கள் படியே சோகித்து —மூவாறு மாசம் மோகித்துமேலே தொடுக்கும் அதுக்கு எதிர் தட்டாம் படி –-எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே –திருவாய் -1-3-1- என்றும்-பிறந்த வாறும் வளர்ந்தவாறும் –5-10-1-திருவாய் — என்றும் –-கண்கள் சிவந்து பெரியவாய் –திருவாய் -8-6-1-என்றும்
சர்வாதிகனாய் ,அவாப்த சமஸ்த காமனாய் இருக்க செய்தே , ஷூத்ரராய் ,சபலராய் இருப்பாரைப் போலே -அவன் செய்த நவநீத சௌர்ய வ்ருத்தாந்தையும் –-அகர்ம வச்யனாய் இருக்க செய்தேயும் -கர்ம வச்யரை போலே பிறந்த படியையும்-மாயக் கூத்தனில் தான் கண்ணும் வாயும் துவர்ந்தால் போல் தம்மை பிறிகையாலே ,அவன் கண்ணும் வாயும் துவர்ந்து ,தம்மோடு கலந்த பின்பு அவை தன்னிறம் பெற்ற படியும் அனுசந்தித்து -ஈது என்ன பிரகாரம் -ஈது என்ன பிரகாரம்- என்று ஓர் ஒன்றில் அவ்வாறு மாசமாக மூவாறு மாசம் மோஹித்து — வருந்தி நான் வாசக மாலை கொண்டு–திருவாய் -3-8-10-என்கிற படியே ஒரு சொல் எடுக்கும் பொது ஒரு மலை எடுக்குமா போலே வருத்தப் பட்டு —என்று என்று ஏங்கி அழுதக்கால்–திருவாய் -8-5-3-என்கிற படியே அனுபவ அலாப க்லேசத்தால் அவன் படிகளை பல காலும் சொல்லி பொருமி பொருமி அழுது–அங்கே தாழ்ந்த சொற்களால்—திருவாய் -8-5-11-என்கிற படியே -எங்கே காண்கேன்-என்ற மன சைதில்யத்தாலே கத்கத ஸ்வரமான சப்தங்களால் –வண் தமிழ் நூற்க நோற்றேன் –திருவாய் -4-5-10-என்ற இப் பிரபந்தத்தை நூற்கிறவர் இவர் என்கை .

“ஹஸிதம்‌ பாஷிதஞ்‌சைவ கதிர்யா யச்ச சேஷ்டிதம்‌ | தத் ஸர்வம்‌ தர்ம வீர்யேண யதாவத் ஸம் ப்ரபஸ்யதி?” (ரா. பாடி – 4) என்கிறபடியே தந்தாமுடைய தபோ பலத்தாலே லப்‌தமான ஜ்ஞாநத்தாலே “கண்டும்‌ தெளிந்தும்‌’” (திருவா. 7- 5- 7) என்கிறபடியே கண்டு தெளிந்து ஹ்ருஷ்டராய்‌, மேலே மேலே ஸப்‌தங்களைத்‌ தொடுக்கும்‌ ருஷிகளைப் போலன்றே அருளின ப,க்தி ரூபமான ஜ்ஞாநமெல்லாம்‌ அடி மண்டியோடே கலங்கி யதா மநோரதம்‌ பகவதநுபவம்‌ பண்ணப் பெறாமையாலே ஸோகித்து, “’தாம்நா சைவோதரே பத்‌த்‌வா ப்ரத்யபத்‌ நாதுலூகலே யதி ஸக்நோஷி கச்ச த்வம்‌ அதி சஞ்சல சேஷ்டித” என்றும்‌, “‘உரலினோடிணைந் திருந்தேங்கிய எளிவு எத்திறம்‌’” (திருவா, 1 – 3 1) என்றும்‌, “போனாய்‌ மா மருதின்‌ நடுவே ” (திருவா. 5 – 1 – 2) என்றும்‌, ““பிறந்தவாறும்‌ வளர்ந்தவாறும்‌”’ (திருவா. 8 – 10 – 1) என்றும்‌, “ஸர்வஜ்ஞனாய்‌ ஸர்வ ஸக்தியா யிருக்கச்‌ செய்தே இப்படி ஓரபலை கையாலே கட்டுண்பதே! இதென்ன ஆஸ்ரித வ்யாமோஹந்‌தான்‌!’ என்கிற ஆஸ்ரித வ்யாமோஹாநுஸந்தாநமும்‌, இவர்‌ பக்தி பாரவஸ்யத்தாலே கலங்கி ஸர்வஜ்ஞத்வாதிகளை மறந்து விரோதம்‌ பண்ணுவதாக நின்ற இரண்டு மருதுக்கும்‌ நடுவே தவழ்ந்து சென்றதை அநுஸந்தித்து, உலகங்கட்கெல்லாம்‌ ஒருயிரான வஸ்துவுக்கு ஒரு தீங்குவரில்‌ செய்வதென்‌?” என்கிற ப்ரேமாதிஸயமும்‌, ‘ஜநந ஹேதுவான கர்ம ஸ்பர்ஸ மில்லாத வஸ்து “’ததஸ் ச த்‌வாதஸே மாஸே”? (ரா.படா. 10 – 8) என்கிறபடியே பன்னிரண்டு மாஸம்‌ கர்ப்பவாஸம் பண்ணி ஸத்ரு க்‌ருஹத்திலே இருளிலே வந்து அவதரிப்பதே!” என்றும்‌, ஓரொன்றில்‌ மூவாறு மாஸம்‌ மோஹித்து, ““வருந்தி நன்‌ வாசக மாலை கொண்டு” (திருவா. 3 – 8 – 10) என்கிற படியே ஒரு சொல்‌ எடுக்கும் போது ஒரு மலை எடுத்தாப் போலே வருந்தி, (ஏங்கி) “என்றென்றேங்கி அழுதக்கால்‌”” (திருவா. 8 – 5 – 3) என்கிறபடியே அவன் திருநாமங்‌களைச்‌ சொல்லப் புக்கு பல ஹாநியாலே நடுவு நடுவே ஏங்குவது இளைப்பதாய்‌. (தாழ்ந்த) “அங்கே தாழ்ந்த சொற்களால்‌”” (திருவா. 8 – 5 – 11) என்கிறபடியே சொல்லப் புக்குச்‌ சொல்ல மாட்டாதே தரைப்பட்டு கத்‌கத ஸ்வரத்தோடே ““வண்டமிழ் நோற்க நோற்றேன்‌”” (திருவா. 4 – 5 – 10) என்று நூற்கிற விவர்‌ என்கிறார்

கண்டு தெளிந்தும் கற்றார் கண்ணற்கு ஆளன்றி ஆவரோ?
வண்டுண் மலர்த் தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழுநாள்
இண்டைச் சடைமுடி ஈசன் உடன்கொண்டு உசாச் செல்லக்
கொண்டங்குத் தன்னொடுங் கொண்டு உடன் சென்றது உணர்ந்துமே.–7-5-7–பிரிய ஹிதங்களை ஸ்ரவணம் பண்ணி -தங்களிலே அத்யவசித்து -அத்தை சாஷாத் கரித்தவர்கள்–சர்வ ஸூலபனுக்கு அன்றி ஆளாவாரோ -ஐஸ்வர்யார்த்திக்கு ஐஸ்வர்ய விசிஷ்டானாயும் -கேவலனுக்கு சுத்தி குண உக்தனாயும் -பகவத் சரணார்த்திக்கு ஸமஸ்த கல்யாண குண விசிஷ்டானாயும் -இப்படியால் சர்வ ஸூலபன் ஆனவனுக்கு –ஒருவன் பக்கலிலே ஓர் அர்த்தத்தைக் கேட்டு, அதிலே தெளிய வாசனை பண்ணி. பின்பு நேரே அறிதல் பரியந்தமாக்கி வைப்பார்.-கேட்டல் தெளிதல்கள் தாம், நேரே பார்ப்பதற்குச் சமானமான ஆகாரத்தளவும் சென்று நிற்கும் அன்றோ? (த்ரஷ்டவ்ய -ஸ்ருதி போல் ஆழ்வார் இங்கும் கண்டும் என்கிறார் ஸ்ரவணம் மனனம் நிதித்யாசிதவ்யம் சாஷாத்காரம் அளவு கூட்டிப்போகுமே )-

விதியினால் பெடை மணக்கும் மென்னடைய அன்னங்காள்
மதியினால் குறள் மாணாய் வுலகிரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல்வினையே மாளாதோ வென்று ஒருத்தி
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே –
1-4-3-நீர் கொடுத்த மயர்வறு மதி நலம் எல்லாம் அடி மண்டியோடே கலங்கிற்று என்று சொல்லுங்கோள் –மயங்குமால் –இப்போது அறிவு போயிற்று ஆகில் பின்பு அறிவு உண்டாகிறது என்று இராமே முடியும் தசை யாயிற்று என்னுங்கோள் 

எம்பெருமானோடே புணர்ந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி -க்ஷண மாத்திரை விஸ்லேஷத்தாலே -அறத் தளர்ந்து -ஆர்த்தியாலே கிடந்த இடத்தே கிடவாதே மோகமும் உணர்ச்சியுமாய் மாறி மாறிச் சென்று கண்டார்க்கு எல்லாம்தயை நீயை யான தசையை பிராப்த்தையாய்-நோவு படுகிற இவளைக் கண்ட திருத் தாயார் -அவன் திரு முன்பே பொகட்டு ராம கிருஷ்ணாதி ரூபேண வந்து திருவவதாரம் பண்ணி ஆர்ஜித்த நீர்மைகளை எல்லாம் இவளுடைய அவசாதத்தை போக்காமையாலே இழக்கப் புகா நின்றீர் என்று கூப்பிடுகிறாள்-அஞ்சிறைய மட நாரையிலும் வாயும் திரையுகளிலும் காட்டில் இதில் ஆற்றாமை விஞ்சி இருக்கும் காசை இழந்தவனுக்கும் பொன்னை இழந்தவனுக்கும் மாணிக்கத்தை இழந்தவனுக்கும் இழவு ஒத்து இராது இறே -இங்கு தம் தசை தாம் பேச மாட்டார் –2-4-ஆடியாடி -பிரவேசம் –

பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே
 –1-3-1-மார்வினிடையிலே கட்டுண்டு –உரத்த ஏறு போலச் செருக்கன் -என்றுமாம் –எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே – உரலோடு ஒக்கச் சலியாதே இருந்து -அச்சத்தாலே ஏங்கின -குரல் இரங்க மாட்டாத – எளிமை என்னபடியாய் இருக்கிறது –எளிவு -எளிமை 

போனாய் மாமருதின் நடுவே! என் பொல்லா மணியே!
தேனே! இன்னமுதே! என்றேன்றே சில கூத்துச் சொல்லத்
தானேல் எம்பெருமான் அவன் என்னாகி ஒழிந்தான்
வானே மாநிலமே மற்றும் முற்றும் என்னுள்ளனவே.–5-1-2-போனாய் -யாமலார்ஜுனங்கள் நடுவே போன போது யசோதை பிராட்டி ப்ரேமத்தாலே சொன்ன வார்த்தையை -ப்ரேம கந்தம் இன்றிக்கே இருக்கிற நான் சொன்னேன் –போனாய் -கை கழிந்தது -இனி பிரதிகிரியை இல்லை -பல அனுபவமே என்று இருக்கிறார் -பூத காலமாய் இருக்க இவருக்கு வர்த்தமான காலம் போலே இருக்கிறது –ஈஸ்வரன் கொடுத்த ஞான வைஸத்யம் இவருக்கு வயிறு எரிச்சலுக்கு உறுப்பாயிற்று -நலிய வந்தவை தான் நலிய பற்றாமை தானே சென்று புக்கான் என்கிறார்-மா மருது-மஹா அசுரர்கள் வடிவுக்குத் தகுதியாக ஆவிர்பவித்த மருதுகள்-இவன் மௌக்யத்தை அறிந்து பணைத்தவை என்றுமாம் -அவ்வருகே சாய்ந்தவை இப்பெரிய வடிவோடே உள்ளே சாய்ந்தனவாகில்-என்னாவக் கடவது என்கிறார் –
நடுவே போனாய் -இருவரும் க்ருத சங்கேதர்களாய் இருக்க -ஒன்றிலே துளை கண்டு போனாய் போலே யாயிற்று போனது- புணர் மருதம் இறே – மௌக்யத்தாலே ஓர் அருகு ஒதுங்க அறியானே -யாமளார்ஜ்ஜுன யோர் மத்யே ஜகாம என்று ருஷி வயிறு பிடிக்கிறான் -இவர் மா மருதுவின் நடுவே போனாய் என்கிறார்

5-10-பிறந்த வாறும் வளர்ந்த வாறும்-ப்ரவேஸம்-திரு வல்ல வாழிலே புக வேணும் பரிமாற வேணும் என்று மநோ ரதித்து-அப்படிப் பெறாதே மிகவும் அவசன்னராய் -நின்றார் கீழே-இத் திருவாய் மொழியில் அவனுடைய குண சேஷ்டிதாதிகளை அனுசந்திக்கப் புக்கு சிதிலரானவர் –இச் ஸைதில்யத்தை போக்கி அருளி தரித்து நின்று அனுபவிக்க வல்லேனாம் படி பண்ணி அருள வேணும் என்று சரணம் புகுகிறார்-8-8-கண்கள் சிவந்து -ப்ரவேஸம்-மாயாக் கூத்தனில் விடாய் தீர இருத்தும் வியந்திலே இப்படி -எவ்வாய்ச் சுடரும் தம்மில் முன் வளவாய்க் கொள்ள -என்கிறபடியே –
நிரவதிக ப்ரீதியோடே சம்ச்லேஷிக்க பெற்றானாய் -இவர் விடாயும் தீர்ந்து -தன் விடாயும் தீர்ந்து -தம்மிலும் அதிக ப்ரீதனானவன் –

பொருந்திய மாமருதின்னிடை போய எம் பொருந் தகாய்! உன் கழல் காணிய பேதுற்று
வருந்தி நான் வாசக மாலை கொண்டு உன்னையே இருந்திருந்து எத்தனை காலம் புலம்புவனே?–3-8-10-ஆசைப்பட்ட விஷய அநு குணமாய் இறே நோவு பாடும் இருப்பது –ஒரு சொல் தொடை எடுக்கையாகிறது ஒரு மலையை எடுத்தால் போலே இருக்கிறது-நான் விரஹம் பொறுக்க மாட்டாத மேன்மையை உடைய நான்-வாசக மாலை கொண்டு உன் குணத்துக்கு வாசகமான சொல் தொடையைக் கொண்டு-உன்னையே இருந்திருந்து-யதோ வாசோ நிவர்த்தந்தே-என்னும்படியான உன்னையே ஒரு வார்த்தை தலைக் கட்டுகைக்கு நடுவே பல படி இளைப்பாற வேண்டி இருக்கை
எத்தனை காலம் புலம்புவனே?–-இதுக்கு முடிவு என்று -என்கிறார் -சாதனா புத்தியா சொல்ல மாட்டார் -ப்ராப்யபுத்தியாலே தவிர மாட்டார்-

முடி சேர் சென்னி யம்மா நின் மொய் பூந்தாமத் தண் துழாய்
கடி சேர் கண்ணிப் பெருமானே என்று என்றே ஏங்கி அழுதக்கால்
படிசேர் மகரக் குழைகளும் பவளவாயும் நால் தோளும்
துடி சேரிடையும் அமைந்ததோர் தூ நீர் முகில் போல் தோன்றாயே–8-5-3-என்று என்றே-ஒரு கால் சொல்லி யாறி இருந்தேனாய் தான் தாழ்கிறாயோ-ஏங்கி அழுதக்கால்-பொருமி அழுதக்கால் -என்னுடைய அழுகை குரலில் தளர்த்தியை கேட்டால் சடக்கென வந்து கொடு நிற்க வேண்டாவோ –

எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்று என்று
அங்கே தாழ்ந்த சொற்களால் அந்தண் குருகூர்ச் சடகோபன்
செங்கேழ் சொன்ன வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
இங்கே காண விப் பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே-8-5-11–நிரந்தரமாக சொல்லி -ஒரு கால் சொல்லி -ஆசையை ஆவிஷ்கரித்தோம் இ றே -என்று ஆறி இருக்கிறார் அல்லரே -லாபத்தளவும் சொல்லும் அத்தனை இறே-அங்கே தாழ்ந்த சொற்களால்-தோளும் தோள் மாலையிலும் அந்த சேஷித்வத்திலும் பிரவணமான சொற்களாலே-அந்தண் குருகூர்ச் சடகோபன்-உபதிஷ்டந்து மாம் சர்வே என்னுமா போலே இவ்வாற்றமைக்கு எல்லாம் இடம் கொடுத்த ஆழ்வார் என்று ஆளவந்தார் நிர்வாஹம்

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.–4-5-10-––விலக்ஷணமாய் சர்வாதிகாரமான திராவிட பிரபந்தத்தை நிர்மிகைக்கு- அவனுடைய அங்கீ காரமாகிற புண்யத்தைப் பண்ணினேன்-அவனுக்கு அடியாராக பாகவதருக்கு இப்பிரபந்தம் ஆனந்த வர்ஷியான மேகமாய் இறே இருக்கிறது –

இப்படி பகவத் பிரேமத்தாலே ருஷிகளில் வ்யாவ்ருத்தரான அளவின்றிக்கே , இதர விஷய வைராக்யத்தாலும் ,அவர்களில் இவர் வ்யாவ்ருத்தர் என்கிறார் .-இனி மேல்‌ இந்த ருஷிகளிற் காட்டில்‌ இவர்க்கு ஸம்ஸாரத்தில்‌ நசை யறுகையாலுண்டான வைலக்ஷண்யம்‌ சொல்லுகிறது-

ஸ்வாத்யாய யோகங்களைக் கற்றும் தெளிந்தும் கண்டமை மைப்பாலே ஓதி உணர்ந்தவர்
இன்னும் ஆசாபாச பத்தர்-அவன் வழங்கும் திவ்ய சஷுஸ்ஸாலே நேரே கார் செறிந்த நீறாடி
கட்கரிய அரும் பொருளை கண்ட போதே யாமுறாமை என்னும் படி இவர்க்கு வன் பாசங்கள் நீங்கிற்று -சூரணை -59-..

(ஸ்வாத்யாயம் -வேதம் – ஓதி உணர்ந்தவர் கண்டமை மைப்பாலே –கண்ட காட்சியில் கலக்கத்தாலே -மயக்கத்தால் –( வானமே நோக்கும் மையாக்கும் –திருவாய் -7-2-3- )இன்னும் ஆசாபாச பத்தர்-
அவன் வழங்கும் திவ்ய சஷுஸ்ஸாலே நேரே கண்ட போதே இவர்க்கு வன் பாசங்கள் நீங்கிற்று .)-அதாவது-
ஸ்வாத்யாயாத் யோகமாசீத யோகாத் ஸ்வாத்யாய மாமேநேத் , ஸ்வாத்யாய யோக சம்பத்யா பரமாத்மா பிரகாசதே , ததீஷணாய ஸ்வாத்யாயஸ் சஷூர் யோகஸ் ததா பரம் , ந மாம்ச சஷுஷா த்ரஷ்டும் ப்ரஹ்ம பூதஸ் ச சக்யதே –-ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-6-2-3- என்கிறபடியே ,( வேதத்தாலே பொருளை அறிந்து அஷ்டாங்க யோகத்தை அடையக் கடவன் -யோகத்தால் மீண்டும் வேதத்தை சொல்லக் கடவன்
வேதம் யோகம் இவ்விரண்டின் நிறைவினால் பரம்பொருள் பிரகாசிக்கின்றன -அந்தப் பரம் பொருளைப் பார்ப்பதற்கு வேதம் ஒரு கண் அப்படியே யோகம் சிறந்த கண் -பரம்பொருளாகிய அவன் ஊனக் கண்களால் பார்க்க முடியாதவன் ) ஸ்வாத்யாய யோகங்கள் ஆகிற இரண்டு த்ருஷ்டிகளாலும் ஒழிய மாம்ச சஷுசால் பரமாத்மாவை காணப் போகாமையாலே ஸ்வாத்யாத்யா சப்த வாசகமான வேதத்தை ஓதியும்- யம நியமாத் அஷ்டாங்க யோகத்தை அப்யசித்தும் அவ் வழியாலே தத் உபய விஷயமான பரமாத்மாவை ஏவம் பூதன் என்று தெளிந்தும் ,இம் முகத்தாலே ஸ்வ யத்நேன கண்ட காட்சியில்-அ வைசத்யாலே –ஓதி உணர்ந்தவர் முன்னா -திருவாய் –3-5-5-என்கிறபடியே வேத சாஸ்த்ரங்களை ஓதி , த்யாஜ்ய உபாதேயங்களை உணர்ந்து இருக்கிற ருஷிகள் இன்று அளவும்
ஆசா பாச சதைர் பத்தா–ஸ்ரீ கீதை -16-12- (ஆசைகளாகிற பல வகைப்பட்ட தளைகளால் கட்டுண்டு இருப்பார்கள் ) -என்கிற படியே சாம்சாரிக போக விஷயங்களான ஆசாக்ய பாத சதங்களாலே பந்திக்கப் பட்டு இருப்பார்கள் ..-திவ்யம் ததாமி தே சஷு –ஸ்ரீ கீதை -11-8- -என்கிற படி தன்னைக் காண்கைக்கு சாதனமாக அவன் கொடுத்த திவ்ய ஞான ரூப சஷுசாலே –நேரே கடிக் கமலத்துள் இருந்தும் காணகிலான் -முதல் திருவந்தாதி -56-என்றும் ,-கார் செறிந்த கண்டத்தான் எண் கண்ணான் காணான்—நான்முகன் –73-என்றும் , நீறாடி தான் காண மாட்டாத தாரகல சேவடி –நான்முகன் 27–என்றும்
கட்கரிய பிரமன் சிவன் இந்திரன் இவர்கட்க்கும் கட்கரிய கண்ணன் -திருவாய் –7-7-11-என்றும்
சொல்லுகிற படி இவ் அருகில் உள்ளாரைக் காட்டில் ஞான சக்தி யாதிகளில் அதிகராய் ,
தாமோதரனை ,தனி முதல்வனை ஞாலம் உண்டவனை–திருவாய் -2-7-12-–ஒருவருக்கும் தரம் அறியலாமோ – என்று தங்களை ஒழிய ஒருவருக்கும் அறியப் போகாது என்று இருக்கும் பிரம ருத்ராதிகளுக்கும் காண அரியனாய்

வேதங்களைக்‌ கற்றும்‌ அதில்‌ அர்த்தத்தைத்‌ தெளிந்தும்‌ யம நியமாத்‌,யஷ்‌டாங்க, யோகத்தாலேயும்‌ அவனைக் கண்ட மைமைப்பாலே – ஸ்வ ப,ஹு பலாரா்ஜிதமான ஸாஸ்த்ர ஜந்ய ஜ்ஞாதத்தாலே தாங்கள்‌ காண்கிறதாகையாலே மெய்ம்மை யற்றிருக்கும்‌; அவிஸத மாயுமிருக்கும்‌. அத்தாலே ““ஓதி யுணர்ந்தவர்‌ முன்னா” (திருவா. 3 – 5- 5) என்கிறபடியே வேத ஸாஸ்த்ரங்களை ஓதி, த்யாஜ்யோபாதேயங்களை உணரந்திருக்கிற ருஷிகள்‌ இன்றும்‌ “ஆஸா பாஸ ஸதைர் பத்‌தா காம க்ரோத,பராயணா ”” என்கிறபடியே ஸாம்ஸாரிக ஸங்க பாஸ பத்‌தர்‌. இவர்க்கோ வென்னில்‌ 2- (அவன்‌ வழங்கும்‌ திவ்ய சக்ஷுஸ்ஸாலே) “அவன்‌ கண்களாலே அமலங்களாக விழிக்கும்‌” (திருவா. 1 – 9 – 9) என்றும்‌, ““திவ்யம்‌ ததாமி தே சஷு பஸ்ய மே யோக,மைஸ்வரம்‌”‘ (கீதை 11 – 8) என்றும்‌ சொல்லுகிற படியே இவரை அமலராம்படி கடாக்ஷித்து, அவனாலே தத்தமான திவ்ய சஷுஸ்ஸாலே நேரே கடிக்கமலத் துள்ளிருந்தும்‌ காண்கிலான்‌ கண்ணனடிக்‌ கமலந் தன்னை அயன்‌”” (மூ.திருவ. 56) என்றும்‌, ““கார் செறிந்த கண்டத்தான்‌ எண் கண்ணான்‌ காணான்‌’” (தா.திருவ. 73) என்றும்‌, “*நீறாடி தான்‌ காண மாட்டாத-தாரகல சேவடி ” (நா. திருவ. 27) என்றும்‌, *“கட்கரிய பிரமன்‌ சிவனிந்திரனென் றிவர்க்கும்‌ கட்கரிய கண்ணன்‌’‘ (திருவா. 7 – 7 – 11) என்றும்‌, ”விதி ஸிவ ஸநகாத்‌, யைர்த்‌ யாதுமத்யந்த தூ,ரம்‌”’ (ஸ்தோ.ர. 47) என்றும்‌ சொல்லுகிறபடியே தங்களைப் போரப் பொலிய நினைத்திருக்கும்‌ ப்‌ரஹ்ம ருத்‌ராதிகளுக்கும்‌ காண வரிதாயிருக்கிற-

சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு
ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த
வேத முதல்வனைப் பாடி வீதிகள் தோறும் துள்ளாதார்
ஓதி உணர்ந்தவர் முன்னா என் சவிப்பார் மனிசரே?–3-5-5-பரபரக்கற்ற அறிவுடையராக தங்களை நினைத்து இருக்குமவர்கள் ஞான பலம் இல்லாமையால் நிந்தியரில் பிரதம பாவிகள் என்கை –
விதுஷோ அதிக்ரமே தாண்ட பூயஸ்தம்

கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே
அமலங்களாக விழிக்கும்
ஐம்புலனும் அவன் மூர்த்தி
கமலத்தயன் நம்பி தன்னைக் கண்ணுத லானொடும் தோற்றி
அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி என் நெற்றி உளானே –1-9-9-அவன் திருக் கண்களால் நிர் தோஷனாம் படியும் -காண வல்லேனாம் படியும் விசேஷ கடாக்ஷத்தைப் பண்ணினான்-

ஆஸாபாஸஸதைர்பத்தா: காமக்ரோதபராயணா:
ஈஹந்தே காமபோகார்தமந்யாயேநார்தஸஞ்சயாந்
-16-12-நூற்றுக்கணக்கான ஆசைக் கயிறுகளால் கட்டுண்டு காமத்துக்கும் சினத்துக்கும் ஆட்பட்டோராய்க் காம போகத்துக்காக
அநியாயஞ்செய்து பொருட் குவைகள் சேர்க்க விரும்புகிறார்கள்.

ந து மாம் ஸக்யஸே த்ரஷ்டுமநேநைவ ஸ்வசக்ஷúஷா
திவ்யம் ததாமி தே சக்ஷú: பஸ்ய மே யோகமைஸ்வரம்
–11-8-உன்னுடைய இயற்கையான இக்கண்களால் என்னைப் பார்க்க முடியாது. உனக்கு ஞானக் கண் கொடுக்கிறேன்.
என்னுடைய ஈசுவர யோகத்தைப் பார்.

பேரே வரப் பிதற்ற லல்லால் எம் பெம்மானை
ஆரே யறிவார் அது நிற்க நேரே
கடிக் கமலத் துள்ளிருந்தும் காண்கிலான்
கண்ண
னடிக் கமலம் தன்னை யயன் ——56-சர்வேஸ்வரனுடைய பரிமளத்தை யுடைத்தான திரு நாபீ கமலத்தில் அவ்யவதாநேந பிறந்து அவன் தன்னாலே ஓதுவிக்கப் பட்டு அங்கே இருக்கிற ப்ரஹ்மா சர்வேஸ்வரனைக் காண்கிறிலன்-அறிகிறிலன்-(கண்ணன் -கண் இடம் முடையவன் சர்வ வியாபி -சர்வேஸ்வரன் )

ஆரே அறிவார் அனைத்துலகும் உண்டு உமிழ்ந்த
பேராழியான் தன் பெருமையை -கார் செறிந்த
கண்டத்தான் எண் கண்ணான் காணான் அவன் வைத்த
பண்டைத் தானத்தின் பதி–73-—சர்வ லோகத்தையும் யுண்பது உமிழ்வதாய் பிரதிகூல  நிரசனத்துக்கு உறுப்பான திரு வாழியை யுடையவன் –உபாயாந்தரங்களை யருளிச் செய்யாதே தன்னையே யுபாயமாகச் சொன்ன மஹா குணத்தை யறிய வல்லார் யார் –கறுத்த கண்டத்தை யுடைய ரூத்ரனோடு கூடின எட்டுக் கண்களை யுடைய ப்ரஹ்மாவும் அறிய மாட்டான் –

மாறான் புகுந்த மட நெஞ்சம் மற்றதுவும்
பேறாககே கொள்வேனோ பேதைகாள் -நீறாடி
தான் காண மாட்டாத தாரகல சேவடியை
யான் காண வல்லேற்கு இது-27-–பேரளவு யுடையனான ருத்ரன் காண மாட்டாத –தாரை யுடைத்தாய் அகன்று சிவந்து இருந்துள்ள திருவடியை நான் காண வல்லேனான பின்பு-அவன் தானே அபி நிவிஷ்டனாய்க் கொண்டு என் பக்கலிலே புகுரா நின்ற பின்பு-நான் அவன் திரு நிறத்திலே சிறிது அறிந்தேன் என்று இது பேறாகக் கொள்வேனோ – ஒரு லாபமோ -என்கிறார்-இது மாறன் புகுந்த மட நெஞ்சம் – மால் தான் புகுந்த மட நெஞ்சம் –சர்வேஸ்வரன் தானே விரும்பிப் புகுந்த பவ்யமான நெஞ்சு –

கட்குஅரிய பிரமன் சிவன் இந்திரன் என்ற இவர்க்கும்
கட்குஅரிய கண்ணனை
க் குருகூர்ச் சடகோபன் சொன்ன
உட்குஉடை ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் வல்லார்
உட்குஉடை வானவரோடு உட னாய் என்றும் மாயாரே.–7-7-11-மநுஷ்யர்கள் உடைய கண்ணுக்கு காண ஒண்ணாத ப்ரஹ்மாதிகள் கண்ணுக்கும் அவிஷயமான கண்ணனை –ப்ரஹ்மாதிகள் என்றும் கேட்டே போம் அத்தனை அல்லது அவர்களுக்கு காண ஒண்ணாதாய் இருக்கிறவன் -உறவு வெளிப்பட்டால் –சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் -என்கிறபடியே பார்த்த பார்த்த இடம் எங்கும் தானேயாய் இரா நின்றான்

தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை
ஆமோ தரமறிய
ஒருவர்கென்றே தொழுமவர்கள்
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும்
ஆமோ தரமறிய எம்மானை என்னாழி வண்ணனையே –2-7-12-தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை-ப்ரஹ்மாதிகள் பாசுரம் இருக்கிற படி -ஆஸ்ரித பாரதந்தர்யம் ஒருவருக்கும் தரை காணப் போமோ –தனி முதல்வனை-சதேவ என்கிறபடியே -ஜகத்துக்கு த்ரிவித காரணமும் தானே யாய் இருக்கிற படியை தான் அறியப் போமோ –-ஞாலம் உண்டவனை-ஆபத் ஸகத்வத்தைத் தான் அறியப் போமோ-ஆமோ தரமறிய ஒருவர்க்கு -என்றே தொழுமவர்கள் தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும் ஆமோ தரமறிய- எங்களை ஒழிய ஒருவருக்குத் தான் அறியப் போமோ என்பர்கள் -இப்படி சொல்லிக் கொண்டு தொழும் ஸ்வ பாவருமாய் -அவனுக்கு சரீரவத் அந்தரங்கரான ருத்ரனுக்கும் ப்ரஹ்மாவுக்கும் தான் அறியலாமோ-எம்மானை என்னாழி வண்ணனையே- தன் குண ஆர்ணவத்தை என் பக்கலிலே மடுத்து என்னை அடிமை கொண்டவனை –

திகஶுசிம் அவிநீதம் நிர்த்தயம் மாமலஜ்ஜம்
பரம புருஷ! யோ’ஹம் யோகிவர்யாக்ரகண்யை: |
விதிஶிவ ஸநகாத்யைர் த்யாதும் அத்யந்த தூரம்
தவ பரிஜநபாவம் காமயே காமவ்ருத்த:
||–47—புருஷோத்தமனே! என்னுடைய (தவறான) எண்ணப்படி நடக்கும் தன்மையை உடைய காரணத்தால் ப்ரஸித்தமான நான், என்னுடைய புனிதமற்ற தன்மையாலும், சீர் செய்யப்படாத தன்மையாலும், கருணையும், வெட்கமும் இல்லாத தன்மையாலும்,
ப்ரஹ்மா, சிவன், ஸனகாதி முனிவர்கள் போன்ற உயர்ந்த யோகிகளுக்கும் எட்டாததான உன் கைங்கர்யத்தை ஆசைப்பட்டதை என்னையே நினைத்து நொந்துகொள்ள வேண்டும்.

அறிந்தன வேத வரும் பொருள் நூல்கள் அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்-திருவாய் -9–3-3-என்கிற படியே-யஸ்ய அமதம் தஸ்ய மதம்—கேனோ உபநிஷத் — (எவன் பரம்பொருளை அளவிடப் பட்டதாக எண்ண வில்லையோ அவன் பரம்பொருளை அறிகிறான் ) இத்யாதியாலே வேதங்களும் அறிவரிய வஸ்து என்றே அறியும் படியாய் ,–கேட்ப்பார்க்கு அரும் பொருளாய் நின்ற –நான்முகன் –60-என்று –நாயமாத்மா ப்ரவசநேன லப்யா ந மேதையா ந பஹுநா ஸ்ருதேந –கட உபநிஷத் –( பரம்பொருள் மனத்தாலும் தியானத்தாலும் கேள்வியாலும் -இறைவனாகிய தன்னுடைய அருளால் ஒழிய – அடையத்தக்கவன் அல்லன் -)என்ற படி தன் பிரசாதம் ஒழிய ஸ்வ யத்னத்தாலே ஸ்ரவணாதிகள்-கேட்டு -சிந்தித்து -தெளிந்து -இத்யாதிகள் – பண்ணுவாருக்கு துர் லப வஸ்துவான சர்வேஸ்வரனை-கண்டேன் கமல மலர்ப் பாதம் – திருவாய் -10-4-9- என்கிற படியே அவன் தானே காட்டுகையாலே ,
விசதமமாக கண்ட போதே ,-பொய் நின்ற ஞானமும் -திருவிருத்தம் -1–என்று தொடங்கி , இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று அவித்யாதிகளை விடுவித்து அருள வேண்டும் என்று அவனைக் கால் கட்டும் படி இவருக்கு–மற்ற வன் பாசங்கள் –திருவாய் -8-2-11-என்று ஸ்வ யத்ன நிவர்த்யம் அல்லாத படி பிரபலமான பாஹ்ய சங்கங்கள் –பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அறக் கொண்டிட்டு -திருவாய் -7–8–5-என்னும் படி , தத் ப்ரசாதத்தாலே ஸ்வாசனமாக விட்டு அகன்றது என்கை ..

அரும் பொருளாய்‌ நின்ற அரங்கனே?” (நா. திருவ. 60) என்கிற படியே பெறுதற்கரிய ப்ரயோஜநமாய்‌ பரத்வ- ஸெளலப்‌ய விஸிஷ்டனான ஸர்வேஸ்வரனை “கண்டேன்‌ கமல மலர்ப் பாதம்‌” (திருவா. 10 – 4- 9) என்கிறபடியே கண்ட போதே ““பொய்ந் நின்ற ஞானமும்‌ ” (திருவிரு. 1) என்று தொடங்கி, “’இனி யாமுறாமை”” (திருவிரு. 1) என்று – ‘அவித்‌யாதிகளை விடுவித்தருளவேணும்‌” என்று இவர் தாமே அவனைக் கால்கட்டி அபேக்ஷிக்கும்படி இவர்க்கு வேறொருவரால்‌ விடுவிக்க அரிதான ‘“மற்ற வன் பாசங்கள்‌”’ (திருவா. 6 – 2 11) என்கிறபடியே ஸாம்ஸாரிக ஸகல பாபயங்களும்‌ “பாசங்கள்‌ நீக்கி” (திருவா. 7 – 8 5) என்கிறபடியே அவன்தானே போக்குகையாலே நீங்கிற்று; நேராக நிவ்ருத்த மாய்த்தென்கிறார்-

அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள்
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே–9-3-3-துர்ஜ்ஜேயன் என்னும் -இவ்வளவு அறிந்தனவாக கொல்ல அமையும் –யதோ வாசோ நிவர்த்தந்தே –யஸ்யாமதம் தஸ்ய மதம் –அவ்விஞ்ஞாதம் விஜா நதம் -என்னும் இவ்வளவே அறிந்தது –

ஆட் பார்த்து உழி தருவாய் கண்டு கோள் என்றும் நின்
தாட் பார்த்து உழி தருவேன் தன்மையை -கேட்பார்க்கு
அரும் பொருளாய் நின்ற வரங்கனே
உன்னை
விரும்புவதே விள்ளேன் மனம்–60--புக்கு அநு பவிக்கில் அநு பவிக்கும் இத்தனை போக்கி ஆராயப் புகில் அளவிட ஒண்ணாத-வைலஷண்யத்தை யுடையையாய்க் கொண்டு கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிறவனே–உன்னை விரும்பும் அத்தனை மனசை உன் பக்கல் நின்றும் வாங்கேன் –த்வாம்ருதஸ் யந்தி நி -ஸ்தோத்ர ரத்னம் -27-இதிவத்

கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக
பண்டே பரமன் பணித்த பணி வகையே–10-4-9—கண்டேன்–என்றும் கேட்டே போம் விஷயத்தை சாஷாத் கரிக்கப் பெற்றேன் — கமல மலர்ப்பாதம் –பிராப்தி ஒழியவே ஞான லாபமே அமையும் படியான போக்ய விஷயம் என்கிறது – காண்டலுமே-விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்–கண்ட போதே வினை என்று பேர் பெற்றவை எல்லாம் விட்டுப் போய்த்து –சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்னுமவன் அடியாக வந்ததாகையாலே தட்டில்லை இறே –

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந் நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே 
–1–சர்வஞ்ஞனுமாய் சர்வ சக்தியாய் இருக்கிற நான் இவற்றைச் செய்து வருகிறேன்-உன்னுடைய அவதாரத்துக்கு பிரயோஜனம் சொல் என்கிறார் – நீயோ நானோ உபாய அனுஷ்டாம் பண்ணுவது சொல்லு–அவதார பிரயோஜனம் சாது பரித்ராணாம் துஷ்ட நிக்ரஹம் தர்ம ஸம் ஸ்தாபனம் மூன்றுக்கும் அல்லவே ஸித்த உபாயம் ஆகவதர்க்கே அன்றோ நீர் அவதரித்தீர்அடியேன் -என்று தம்முடைய ஸ்வரூபத்தை விண்ணப்பம் செய்கிறார்-செய்யும் –இவ் வபேஷைக்கு மேல் இல்லை –இப் பாட்டில் விரோதி நிவ்ருத்தியையும் அவதார ஸுலப்யத்தாலே -உபாய பாவத்தையும் நித்ய ஸூரி ஸேவ்யமான -ப்ராப்யத்தையும் அடியேன் -என்று ஸ்வரூபத்தையும் மெய்ந்நின்று கேட்டு அருளாய் -என்று பல அபேக்ஷையும் பண்ணுகையாலே அர்த்த பஞ்சகம் ஸூசிதமாயிற்று-

பாதமடை வதன் பாசத்தாலே மற்றவன்பாசங்கள் முற்ற விட்டு
கோதில் புகழ்க் கண்ணன் தன்னடி மேல் வண் குருகூர் சடகோபன் சொன்ன
தீதில் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவையுமோர் பத்திசை யோடும் வல்லார்
ஆதுமோர் தீதிலராகி இங்கு மங்கு மெல்லாம் அமைவார்கள் தாமே–8-2-11—திருவடிகளில் கிட்டுகையில் உண்டான சங்கத்தால் புறம்பு உண்டான வலிய சங்கங்களை நிச்சேஷமாக விட்டார் -இதுவாயிற்று இத்திருவாய் மொழியிலே சொல்லிற்று யாயிற்று -புறம்புள்ள பற்று அற்று திருவடிகளிலே ஆசைப்பட்டவர் அல்லர் –மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு -என்கிறபடியே திருவடிகளிலே சங்கத்தால் உபாதிகமான பாஹ்ய சங்கத்தை தவிர்ந்தவர்-

பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அறக் கொண்டிட்டு நீ
வாச மலர்த் தண் துழாய் முடி மாயவனே!அருளாய்
காயமும் சீவனுமாய்க் கழிவாய்ப் பிறப்பாய் பின்னும் நீ
மாயங்கள் செய்து வைத்தி;இவை என்ன மயக்குகளே.–7-8-5-அவித்யா கர்ம வாசனா ருசிகளைப் போக்கி-என்னை-விஷயாந்தரங்களிலே கால் தாழ்ந்து இருக்கிற என்னை-உனக்கே அறக் கொண்டிட்டு நீ-துயர் அறு சுடர் தொழுது எழு-என்னும் படி பண்ணி

இவ்வளவும் அன்றிக்கே ,தாரகாதி வைலஷண்யத்தாலும் அவர்களில் இவருக்கு உண்டான வ்யாவ்ருதியை அருளிச் செய்கிறார் .-இனி மேல்‌ அவர்களுக்கும்‌ இவர்க்கும்‌ தாரகாதிகளும்‌ வேறுபட்டபடி சொல்லுகிறது-

அவர்களுக்கு காயோடு என்னும் இவையே தாரகாதிகள் .. இவர்க்கு எல்லாம் கண்ணன் இறே-சூரணை -60-

அதாவது –
ருஷிகள் ஆனவர்களுக்கு-காயோடு நீடு கனி உண்டு வீசு கடும்கால் நுகர்ந்து –பெரிய திருமொழி -3–2-2–என்றும் –வீழ் கனியும் ஊழ் இலையும் என்னும் இவையே நுகர்ந்து–பெரிய திரு மடல் -12- என்றும் சொல்லுகிற படி பல மூல பத்ர வாயு தோயங்களே-(கனிகள் கிழங்குகள் இலைகள் காற்றுத்தண்ணீர் என்னும் இவைகளே ) தாரக போஷாக போக்யங்கள் .-ருஷிம் ஜுஷாமஹி–ஸ்ரீ பராங்குச அஷ்டகம் –) ரிஷியாகிற நம்மாழ்வாரை வணங்குகிறேன் )-என்று இவரையும் ருஷி என்று சொல்லிற்று ஆகிலும் ,
தாரகாதிகள் அவை அன்று –கிருஷ்ண த்ருஷ்ண தத்வமான இவர்க்கு- உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் –திருவாய் -6-7-1- என்கையாலே ,தாரக போஷாக போக்யங்கள் எல்லாம் கண்ணன் இறே என்கை-

“காயோடு நீடு கனியுண்டு”” (திருமொழி 3 – 2 – 2) என்றும்‌, ““வீழ் கனியுமூழிலையு மென்னு மிவையே நுகர்ந்து ”” (பெ.திருமடல்‌) என்றும்‌ சொல்லுகிறபடியே பல-மூலபத்ர-வாயு- தோயங்களே அவர்களுக்கு தாரக போஷக போக்‌யங்கள்‌. இவரையும்‌ “ருஷி” என்று கீழே சொல்லிற்றிறே. அது இவர்க்கும்‌ ஒவ்வாதோ என்னில்‌, ஒவ்வாது. “உண்ணும்‌ சோறு பருகுநீர்‌ தின்னும்‌ வெற்றிலையு மெல்லாம்‌ கண்ணன்‌” (திருவா. 6 – 7 – 1) என்கிறபடியே தாரகாதிகளுமெல்லாம்‌ ஸர்வ ஸுலபனான ஸர்வேஸ்வரனிறே இவர்க்கு.

காயோடு நீடு கனி யுண்டு வீசு கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம் ஐந்து
தீயோடு நின்று தவம்
செய்ய வேண்டா திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்
வாயோது வேதம் மலிகின்ற தொல் சீர் மறையாளர் நாளும் முறையால் வளர்த்த
தீயோங்க வோங்கப் புகழ் ஓங்கு தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-2—பருவம் இளைதான காய்களையும் வெய்யிலிலும் காற்றிலும் உலர்ந்து பசையற்ற கனிகளையும் புஜித்து வீசின வெட்டிய காற்றைப் பருகி நெடும் காலம் பஞ்சாக்னி மத்யஸ்தராய் நின்று தபஸு பண்ண வேண்டா-ஸ்ரீயபதியை ஹிருதயத்தில் பிரியாதபடி வைத்துக் கொள்வோம் என்பீர் (வைப்பவர்கள் இல்லை –வைக்க நினைத்தாலே போதும் அவன் உள்ளே புக தான் காத்துக் கொண்டு இருக்கிறானே விலக்காமையே வேண்டுவது )

தொன்னெறியை வேண்டுவார் வீழ் கனியும் ஊழிலையும் –12
என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தித்
துன்னும் இலைக் குரம்பைத் துஞ்சியும் வெஞ்சுடரோன் —-13
மன்னு மழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும்-
இன்னதோர் தன்மையராய் ஈங்குடலம் விட்டு எழுந்து —-14
தொன்னெறிக் கண் சென்றார் எனப் படும் சொல் அல்லால்வீழ் கனியும் – தானே விழுந்து பசை அற்ற கனியும்–ஊழிலையும் – முளையிலே விழுந்த இலையும் – முற்றிப் பழுத்த சருகான இலையும் –என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தித்- அதாவது -சருகு இலை தின்றும்  காயும் கிழங்கும் தின்றும் இறே தபஸ் ஸூ அனுஷ்டிப்பது-அவதாரணத்தாலே-ஒரு வ்ரத சமாப்தி பிறந்து பின்னை ஒரு வ்ரத ஆரம்பித்ததின் முன்னே யாகிலும் ஏகவாரம் அன்னம் புஜித்ததும் இல்லை என்று தோன்றுகிறது  –
இத்தால் அநவரத காயக் கிலேசம் சொல்லுகிறது-நுகர்ந்து – அந்த சாதனத்தில் பண்ணின ஆதரம் தோற்ற போக்யதை உண்டானது போலே இருக்க புஜிககை-உடலம் தாம் வருந்தி –அபிமத விஷயத்தைக் கண்டு இங்கே அனுபவிக்கலாய் இருக்கிற சரீரத்தை கிலேசிப்பித்து-தாம் வருந்தி-இவனுடைய கர்மம் கொண்டு போய் கிலேசிப்பித்தல் தைவம் கொண்டு போய் கிலேசிப்பித்தல் செய்யும் அது ஒழிய தாமே கிலேசிப்பித்து-துன்னும் இலைக் குரம்பைத் துஞ்சியும் – இலையாலே நெருங்கச் செய்த பர்ண சாலைகளிலே கிடந்தும் – அதில் நின்றும் உதிர்ந்த புழுதியானது கண்ணிலே புக்கு நோவு படும்படியாகத் துஞ்சியும் நித்ரை மரணத்தோடு  பர்யாயம்  ஆகையாலே துஞ்சியும் -என்கிறது –

உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற்றிலையு மெல்லாம்
கண்ணன்எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி

மண்ணினுள் அவன் சீர்வளம் மிக்கவன் ஊர்வினவித்
திண்ணம் என்இளமான் புகுமுர் திருக்கோளூரே.–6-7-1-ஜீவித்து அல்லது தரிக்க ஒண்ணாத சோறு -தாஹித்தால் பானம் பண்ணி யல்லது நிற்க ஒண்ணாத தண்ணீர் -தின்றால் அல்லது புஷ்டனாக விரகு இன்றிக்கே இருக்கும் வெற்றிலையும் -தாரக போஷக போக்யம் ஆனவை எல்லாம் எனக்கு நாதனான கிருஷ்ணன் -வாஸூ தேவஸ் சர்வம் -என்று ஆயிற்று இவள் இருப்பது-என்றென்றே கண்கள் நீர்மல்கி-
இடைவிடாமல் இப்படியே சொல்லி -அவளைக் காணப் பெறாமையாலே கண்கள் சோகா ஸ்ருவாலே நிரம்பி -அவ்விஷயத்தை இடைவிடாமல் அனுசந்தித்து -ஸ்மர்த்தவ்ய விஷய சாரஸ்யத்தாலே-ஆஹ்லாத சீத நேத்ராம்பு -என்கிறபடியே ஆனந்தா ஸ்ருவாலே நிரம்பி என்னவுமாம் –

இப்படி சர்வ பிரகாரத்தாலும் பிராக்ருத விஷயங்களில் நசை அற்று பகவத் ஏக பரரான இவர் தத் விரஹத்தில் படும் அது எல்லாம் அவர்கள் ப்ராக்ருத விஷய சங்கம் அறாமையாலே ,அவ் விஷயங்களுடைய விரஹத்தில் படுவார்கள் என்கிறார்.-ஆகில்‌ இவர்க்கு ஸம்ஸாரத்தில்‌ நசையற்ற தென்றும்‌, அவர்களுக்கு நசையற்ற தில்லை என்றும்‌ சொல்லிற்றே, அதறிந்தபடி என்‌ என்னில்‌, அத்தைச் சொல்லுகிறது-

அழுநீர் துளும்ப கடலும் மலையும் விசும்பும் துழாய் திரு மால் என்று எங்கே காண்கேன் என்னும் இவர் அலமாப்பு , அவர்களுக்கு புத்ர வ்யோகத்திலே–சூரணை -61-

அதாவது –
சேயரி கண் அழுநீர் துளும்ப அலமருகின்றன–திருவிருத்தம் –2-என்றும்
கடலும் மலையும் விசும்பும் துழாய் -திருவாய் -2-1-4-என்றும்
சிந்தை கலங்கி திரு மால் என்று அழைப்பன்–திருவாய் -9-8-10–என்றும்
எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை—திருவாய் -8-5–11-என்றும்
உன்னை காண்பான் நான் அலப்பாய் -திருவாய் -5-8-4-என்றும் சொல்லுகிற படி பகவத் விரஹ விசயனத்தாலே கண்ணும் கண்ணீருமாய் அபரிச்சேத்யமான கடலோடு,நிர்விவரமான மலையோடு – அச்சமான ஆகாசத்தோடு வாசி அற , எங்கும் தேடி ,ஹ்ருதயம் கலங்கி ,ஸ்ரீ ய பதியே -என்று கூப்பிட்டு
எங்கே காணக் கடவேன் என்று இவர் படும் அலமாப்பு –ஸ்ரீ வசிஷ்ட பகவான் புத்ர வியோக க்லேசத்தாலே ,-ச மேரு கூடாதாத்மானம் முமோச பகவான் ருஷி சிரஸ் தஸ்ய சிலாயஞ்ச தூலராசா விவாபதத் , ந மமார ச பாதேன ததாச முனி சத்தமே ததாக் நிமித்வா பகவான் ச விவேச மகாவனே
தம் ததா ஸூ சமித் தோபி ந ததாஹா ஹூதாசன தீப்ய மானோப்ய மித்ரக்னம் சீதோக்நிர்பவத்ததா
ச சமுத்திர மபிப்ரேத்ய சோஹாவிஷ்டோ மகா முனி கண்டே பத்தவா சிலாம் குர்வீம் நிபபாத ததம்பசி
-என்கிற படியே(அந்த பகவானான வசிஷ்ட முனிவர் மேரு மலையின் சிகரத்தில் இருந்து விழுந்தார் -அவருடைய தலை கல்லில்பஞ்சுக் குவியலில் விழுவது போலே விழுந்தது -அப்பொழுது அந்த முனிவர் தலைவன் அப்படி விழுந்ததனால் இறந்தார் இலர் – ஏ முனிவரே அந்த வசிஷ்ட பகவான் அப்படியே நெருப்பினை மூட்டி அதிலே புகுந்தார் -நெருப்பு மிக்க ஆற்றல் வாய்ந்ததாயினும் – அப்பொழுது அந்த நெருப்பு எரிந்து கொண்டு இருந்தாலும் அவரை எரிக்க வில்லை -சோகத்தினால் பீடிக்கப்பட்டு இருக்கும்-அந்த வசிஷ்ட முனிவர் கடலை அடைந்து பெரிய கல்லினை கழுத்தினில் கட்டிக்க கொண்டு அந்தக் கடலிலே விழுந்தார் ) என்கிறபடி மலையில் ஏறி விழுவது ,நெருப்பிலே புகுவது , கழுத்திலே கல்லைக் கட்டி கடலிலே விழுவது ஆகையாலும் ,–ஸ்ரீ வேத வியாச பகவான் புத்ர விரகம் பொறுக்க மாட்டாமல்த்வை பாயனோ விரஹ காதர ஆஜுஹாவ புத்ரேதி –ஸ்ரீ பாகவதம் -1-2-2–( வியாசர் புத்திரனான சுகரைப் பிரிந்த பிரிவுக்கு அஞ்சினவராய் புத்திரனே என்று கூப்பிட்டார் )என்கிற படியே
புத்ரனே என்று வாய் விட்டுக் கூப்பிட்டு அழுது கொண்டு காணப் பெறாமையால் அலமந்து திரிகையாலும் , அவர்களுக்கு புத்ர விச்லேஷத்திலே நடக்கும் என்றபடி –

அழுநீர் துளும்ப அலமருகின்றன (திருவிரு. 2) என்றும்‌, ‘‘கடலும்‌ மலையும்‌ விசும்பும்‌ துழாய்‌” ்‌ (திருவா. 2 -1- 4) என்றுதொடங்கி, * ‘சிந்தை கலங்கித் திருமால்‌ என்றழைப்பன்‌ (திருவா. 9 – 8 – 10) என்றும்‌, ”எங்கே காண்கேன்‌ ஈன் துழாயம்மான்‌ தனனை ” (திருவா, 8-5-11) என்றும்‌, “‘உன்னைக் காண்பான்‌ நானலைப்பாய்‌”” (திருவா, 5 – 8 – 4) என்றும்‌ சொல்லுகிறபடியே பகவத் விஸ்லேஷ வ்யஸநத்தாலே கண்ணும்‌ கண்ணீருமாய்‌ அபரிச்சேத்யமான கடலோடு, நிர்விவரமான மலையோடு, அச்சமான ஆகாஸத்தோடு வாசியற, எங்கும்‌ தேடி ‘ஸ்ரீயப் பதியே!’ என்று கூப்பிட்டுப் படுகிற இவருடைய அலமாப்பு – (அவர்களுக்கு புத்ர வியோகத்திலே) வஸிஷ்ட வ்யாஸாதிகளான அவர்களுக்கு ஸக்தி ஸூகாதிகளாகிற புத்ர வியோகத்திலே காணலாம் –

செழு நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப சேயரிக் கண்
அழுநீர் துளும்ப அலமருகின்றன
வாழியரோ
முழுநீர்  முகில் வண்ணன் கண்ணன் விண்ணாட்டவர் மூதுவராம்
தொழுநீர் இணையடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே —-2—அஸி தேஷணை-கண் கிடீர்-சேய் -அழகாய் –அரி -வண்டாய்-அன்றிக்கே-ஹரிக்கிற மநோ ஹாரி என்றுமாம்-அன்றிக்கே-சிவந்த அரியை உடைத்தான-அன்றிக்கே-சிவந்து மநோ ஹரிக்கும் கண்கள்-ஸ்ரீ வாதி கேசரி ஸ்வாமி நிர்வாகம் –-கறும் கண்ணி தவிர்ந்து விஸ்லேஷத்தால் கரும் கண்ணி மாறி சிவந்து இருக்கை-அஸ்ரு பிரவஹிக்கிறது–என் கார்யம் தலைக் கட்டிற்று-இவள் கார்யம் தலைக் கட்டும் அத்தனை-பகவத் வ்யதிரேகத்தில் கண்ணும் கண்ணீருமாய் இருக்கும் இது இறே ஆத்மாவுக்கு ஸ்வரூபம்–இத்தைக் காணும் அது இறே இவர்களுக்கு உத்தேச்யம்-இவ்விருப்பை இவனும் காணப் பெற்றதில்லை – அசலிட்டுக் கேட்கும்-தோழி சொல்ல – இத்தனை இறே  –கிமர்த்தம் -இத்யாதி-ஆர் குடி வேர் பறிய இக்கண்ணும் கண்ண நீருமாய் இருக்கிறது-ஆரைச் சேதனராகக் கொண்டு -என்றுமாம் –-அவன் கண்டு உகக்கும் அலமருகின்றன -தடுமாறா நின்றனஅழு நீர் துளும்ப அமலருகின்றன -என்கையாலே-அபிநிவேசம் மிகுந்தமை தோற்றுகிறது-

கடலும் மலையும் விசும்பும் துழாய் எம் போல்
சுடர் கொள் இராப்பகல் துஞ்சாயால் தண் வாடாய்
அடல் கொள் படை யாழி அம்மானைக் காண்பான் நீ
உடலம் நோய் உற்றாயோ ஊழி தோர் ஊழியே –2-1-4—பரப்பு உடைத்தான் கடலோடே-நிர் விவரமான மலையோடு -அபரிச்சின்னமான ஆகாசத்தோடு -வாசி அறத் துழாவி –-காரார் திரு மேனி காணும் அளவும் போய் –என்று ஷீராப்தி யோடு -திருமலையோடு -பரமபதத்தோடு வாசி அறத் தேடுவார்க்கு போலியாய் இருக்கிற படி –தவ் வனானி கிரீன் சைவ சரிதச்ச சராம்ஸிச நிகிலேந விசின்வா நவ் ஸீதாம் தசரதாத் மஜவ் –

அந்தோ அணுகப் பெறு நாள் என்று எப்போதும்
சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன்

கொந்தார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வந்தே உறைகின்ற எம்மா மணி வண்ணா–9-8-10–சொல்லத் தொடங்கினது தலைக் கட்ட மாட்டாத பல ஹானியாலே அந்தோ -என்கிறார் -அணுகப் பெறு நாள் யாவை என்ன வேண்டி இருக்க -அது மாட்டாது ஒழிகிறார் இறே -ஒரு கால் சொல்லி பல ஹானியாலே விடுகை அன்றிக்கே –சர்வ காலமும் ஹிருதயம் கலங்கி -மாதா பிதாக்களைக் கூப்பிடுமா போலே திருமால் என்று அழையா நிற்பன் -பிதா மாதா ச மாதவ –

எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்று என்று
அங்கே தாழ்ந்த சொற்களால் அந்தண் குருகூர்ச் சடகோபன்
செங்கேழ் சொன்ன வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
இங்கே காண விப் பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே-8-5-11—-ஐஸ்வர்ய ஸூ சகமான திருத் துழாய் மாலையை யுடைய சர்வேஸ்வரனை கண்டு அல்லது தரிக்க மாட்டாத படி சபலனான நான் எங்கே காணக் கட வேன்-என்று என்று-நிரந்தரமாக சொல்லி -ஒரு கால் சொல்லி -ஆசையை ஆவிஷ்கரித்தோம் இறே -என்று ஆறி இருக்கிறார் அல்லரே -லாபத்தளவும் சொல்லும் அத்தனை இறே
அங்கே தாழ்ந்த சொற்களால்-தோளும் தோள் மாலையிலும் அந்த சேஷித்வத்திலும் பிரவணமான சொற்களாலே

செலக் காண்கிற்பார் காணு மளவும் செல்லும் கீர்த்தியாய்!
உலப்பிலானே! எல்லா உலகு முடைய ஒருமூர்த்தி!
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான் நான்
அலப்பாய்
ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே.–5-8-4—ஆஸ்ரித வத்சலனான உன்னை காண் கைக்காக -அத்தலை இத்தலையாய் நீ என்னை காண பட்ட அளவன்று-நான் உன்னை காண் கைக்கு பட்டது-அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே-அலமந்து -விஷயம் சந்நிஹிதமாய் இருக்கச் செய்தே-ஆகாசத்தை பார்க்கிறது -நினைத்த பரிமாற்றம் பெறாமையாலே ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு உதவ வந்து தோற்றினால் போலே -தம் தசையைப் பார்த்து தோற்றுகிறானோ என்று பார்த்து -என்னுடைய நிராலம்பநதையைப் பார்த்து என்னுமாம் ஆண்டான்-வரக் காணா மையாலே ஸ்நே ஹிதிகள் செய்வதும் செய்யா நின்றேன் -க்ருபணர் செய்வதும் செய்யா நின்றேன் -சபலர் செய்வதும் செய்யா நின்றேன் -விரக்தர் செய்வதும் செய்யா நின்றேன் –

இம் மாத்ரமே அன்றியே பல சாதனாதிகளில் பிரதிபத்தி விசேஷத்தாலும் , இரண்டு தலைக்கும் உண்டான நெடு வாசியை அருளி செய்கிறார் மேல் .-பல ஸாதந தேவதாந்தரங்களில்‌ இவர்களிருவர்க்கும்‌ நினைவு ஒக்குமோ என்னில்‌,

பல சாதன தேவதாந்தரங்களில் இவர்கள் நினைவு பேச்சிலே தோன்றும்–சூரணை -62-

அதாவது
நிரஸ்தாதிஸயாஹ்லாத ஸூக பாவைக லஷணா பேஷஜம் பகவத் ப்ராப்தி ரேகாந்தாத் யந்திகீ மதா
தஸ்மாத் தத் ப்ராப்தயே யத்ன கர்தவ்ய பண்டிதைர் நரை தத் பிராப்தி ஹேதுர் ஜ்ஞானாநஞ்ச கர்ம சோக்தம் மகாமுனே –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-59-6
0— (தனக்கு மேல் ஒன்றும் இல்லாததாக ஆனந்த ரூபமான சுகம் ஒன்றையே வடிவாக யுடையதும் துக்கம் இல்லாததும் மீண்டு வருதல் இல்லாததுமான பகவானை அடையும் பேறானது சம்சார துக்கத்துக்கு மருந்தாக இருக்கும் –ஆகையால் பண்டிதர்களான மனிதர்கள் அந்தப் எம் பெருமானை அடைவதற்கு முயற்சி செய்யக் கடவர் –-மைத்ரேய முனிவரே ஞானமும் கர்மமும் அவனை அடைவதற்கு உபாயமாகச் சொல்லப் பட்டன ) இத்யாதிகளாலே
பகவத் ப்ராப்தியே பலமாகவும் , கர்ம ஞானாதிகளே உபாயமாகவும் , இந்திராதி தேவ அந்தர்யாமியான ஈச்வரனே உத்தேச்யன் ஆகையாலே , இந்திராதி தேவதைகள் அனுவர்த்த நீயராகவும் இறே ருஷிகள் சொல்லுவது ..தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே –திருவாய் -2-9-4-என்றும்-வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம் –திருவாய் -3-3–1-என்றும் கைங்கர்யமே புருஷார்த்தம் ஆகவும் தத் சாதனமும் ,
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் -திருவாய் -5–10 -11-என்றும் –அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே–திருவாய் -6-10 –10 -என்கிற பிரபத்தி யாகவும் , உன்னித்து மற்றோர் தெய்வம் தொழாள்–திருவாய் -4–6–10-என்று -தேவதாந்தரங்கள் அனுவர்த்தநீயர் அல்லராகவும் இறே இவர்கள் அருளிச் செய்தது ..

““பேஷஜம்‌ பகவத் ப்ராப்தி?”‘(வி. பு. 6 – 5 – 59) என்று பகவத் ப்ராப்தி பலமாகவும்‌, அதுக்கு ஸாதநம்‌ கர்ம ஜ்ஞாந பத்திகள்‌ என்றும்‌, இந்த்‌ராதி, தேவதாந்தர்யாமியாய்க் கொண்டு ஈஸ்வரன்‌ உபாஸ்யனா யிருக்கு மென்றுமிறே அவர்கள்‌ சொல்லுவது. இவரோ வென்றால்‌ ““தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே”’ (திருவா. 2- 9-4) என்றும்‌, *“வழு விலா வடிமை செய்ய வேண்டும் நாம்‌”’ (திருவா. 3 – 3- 1) என்கிற கைங்கர்யம்‌ புருஷார்த்தமாகவும்‌, அதுக்கு ஸாதநம்‌ ““நாகணை மிசை நம்பிரான்‌ சரணே சரண்‌ நமக்கு”’ (திருவா. 5 – 19 – 11) என்றும்‌, *’அடிக் கீழமர்ந்து புகுந்தேன்‌” (திரூவா. 6 – 10 – 10) என்றும்‌ சொல்லுகிற ப்ரபத்தி என்றும்‌, தேவதாந்தரங்களை ‘‘உன்னித்து மற்றொரு தெய்வம்‌ தொழாள்‌‘ (திருவா. 4 – 6 – 10) என்றுமிறே இவரருளிச் செய்வது –

எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –2-9-4—சேஷ சேஷிகள் கலந்தால் சேஷ பூதனுக்கும் வருவதொரு ரசம் உண்டு இறே-அப்படியே அன்றியே நீ உகந்த அடிமை கொண்டு அருள வேணும்
ஸ் ரக் சந்த நாதிகளைப் போலே மிக்க அம்சம் கழிக்கலாய் இருக்கை–கீழ் முன்னிலையாய் போரச் செய்தே தனக்கே என்கிறது –முகத்தைப் பார்க்கில் நோக்கிலும் ஸ்மிதத்திலும் துவக்குண்டு அத்தாலே நிஷ்கர்ஷம் குலையும் என்று கவிழ்ந்து இருந்து கையோலை செய்து கொடுக்கிறார் –-எனக்கே ஆடச்செய் -என்கிற இடம் -அந்நிய சேஷத்வத்தை தவிர்க்கிறது தனக்கே யாக என்கிற இடம் -தன்னோடு தனக்கு உள்ள அன்வயத்தைத் தவிர்க்கிறது

ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1—சர்வ தேசத்திலும் -காட்டிலும் தொடர்ந்து அடிமை செய்த இளைய பெருமாளை போலே-மன்னி-சர்வ அவஸ்தையிலும் -உலகத்தோடு ஏகாந்தத்தோடு வாசி அற-வழு இலா அடிமை -சர்வ சேஷ வ்ருத்தியும்-செய்ய வேண்டும்-சாஸ்த்ரங்களால் இதுவே புருஷார்த்தம் என்று அறிக்கை போராது-அனுஷ்டான பர்யந்தமாக வேணும் –நாம்-திரு உள்ளத்தைக் கூட்டிக் கொள்ளுகிறார் ஆதல்-கேசவன் தமருக்கு பின்பு தனியர் அல்லாமை யாலே திரு உள்ளத்தோடு ஒக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கூட்டிக் கொண்டு சொல்லுகிறார் ஆதல்

நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்
ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்

ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ் வெய்துவர் வைகலுமே.–5-10-11—அனந்த சாயித்தவம் சர்வாதிக வஸ்துவுக்கு லக்ஷணம் ஆகையாலே -சர்வாதிகனே சரண்யன் என்கிறது -திரு வனந்த ஆழ்வானுடைய புருஷகார பாவம் சொல்லுகிறது என்றுமாம் –படுக்கையைச் சொல்ல படுக்கை யுடையாரைச் சொல்லிற்றாம் இறே
நம்பிரான் -ஆஸ்ரித விஷயத்தில் உபகார சீலனானவன் –சரணே சரண் நமக்கு என்று -நமக்கு திருவடிகளே உபாயம் என்று –அவதாரணத்தாலே உபாய நைரபேஷ்யம் சொல்லுகிறது -சம்சாரிக ஸ்வ பாவங்கள் மேலிட்டு விபரீதமே பலியா நின்றாலும் இது தவிர வேறு ஒன்றில் கால் தாழாது ஒழி கை -மஹா விச்வாஸம் ஆகிறது –நாடொறும் ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்-ஆக நூற்ற
நாள் தோறும் இதுவே மநோ ரதமான ஆழ்வார் -பகவத் குண பிரேரிதராய் தாம் உள்ராகைக்காக-

அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன் றில்லா அடியேன் உன் னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10-–சாஸ்திரங்களில் சொல்லுகிற உபாயாந்தரங்களில் அந்வயம் இன்றிக்கே அநந்யார்ஹ சேஷ பூதனான நான் -இத்தால் -அநந்ய கதித்வமும் ஸ்வரூப ஞானமும் ப்ரபத்திக்கு பரிகரம் என்கிறது-உன்னடிக் கீழ் -விக்ரஹ யோகம் சொல்லுகிறது-அமர்ந்து -செறிந்து -சஹகாரி வ்யவதானம் இன்றிக்கே ஒழிகை-புகுந்தேனே.–போக்கு வரவு யுண்டாய் அன்று -புத்தி கதியாய் அத்யாவசாயத்தை சொல்லுகிறது-

உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;
நும் இச்சை சொல்லி,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!
மன்னப் படுமறை வாணனை வண் துவராபதி
மன்னனை ஏத்துமின்! ஏத்துதலும்,தொழுது ஆடுமே.–4-6-10—உன்னித்து -மதித்து -நெஞ்சால் ஒன்றாக நினைத்து கிருஷ்ணனை ஒழிய வேறு ஒரு தேவதையை தொழாள்-வேறு ஒன்றை தேவதை என்று மதித்தல் தொழுதல் செய்யுமவள் அல்லள்-தேவதாந்தர்ய ஸ்பர்சம் பொறாத இவளுக்கே இந்த பரிஹாரம் பண்ணுவது

ஆகையால் பலத்திலும் ,சாதனத்திலும் ,தேவதாந்தரங்களிலும் ,-அவர்கள் பிரதி பத்தியும் இவர் பிரதி பத்தியும் இரண்டு தலையில் பேச்சில் தெரியும் என்கை-சகல வேத ஸங்க்ரஹமான திரு மந்த்ரத்திலே பிரதம பதத்தால் சேஷத்வைக நிரூபணியமாக பிரதி பாதிக்க பட்ட ஆத்மாவுககு ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தம் சரமபதத்தில் சதுர்த்தி யால் சொல்லப் பட்ட கைங்கர்யமே ஆகையாலும் , மத்யம பத பிரதிபாதிதமான பகவத் அத் யந்த பாரதந்த்ர்யதுக்கு தத் ஏக உபாயத்வம் ஒழிய ஸ்வ ரக்ஷண ஸ்வ பிரவ்ருத்தி சேராமையாலும் மத்யம அஷர பிரதிபாதிதமான ,பகவத் அனந்யார்ஹத்வதுக்கு
தேவதாந்தர அனுவர்தன கந்தமும் சகியாமையாலும் , பகவத் ப்ராப்தமே பலமாகவும் ,
ஸ்வ யத்ன ரூப கர்மாதிகள் உபாயமாகவும் , அஹங்கார யுக்த தேவதைகள் பகவத் விசேஷண தயா உபாதேயராகவும் கொள்ளுமது ஸ்வரூப யாதாம்ய தர்சிகளுக்கு பரித்யாஜமாய் இறே இருப்பது .-ஆன பின்பு பலாதி த்ரயத்தில் , அவர்கள் பிரதி பத்திக்கும் ,இவர் பிரதி பத்திக்கும் நெடு வாசி உண்டாகையால், இவ் வழியிலும் ,அவர்களில் இவர் அத்யந்த வ்யாவ்ருத்தர் என்றது ஆயிற்று-

ஆக தர்ம வீர்யேத்யாதி-சூரணை-58– தொடங்கி இது வரை இப் பிரபந்த வக்த்ரு வைலஷண்யம் பிரதி பாதித்து -இனி இப் பிரபந்த வைலஷண்யம் தன்னை பிரதிபாதிக்கிறார்-ஆக, இதுக்கு கீழ்‌ வக்த்ரு வைலக்ஷண்யம்‌ சொல்லிற்று – இனி மேல்‌ ப்ரபந்த,வைலக்ஷண்யம்‌ சொல்லுகிறது. அவர்கள் ப்ரபந்தங்களுக்கு கதாந்தர ப்ரஸ்தாவமுண்டு; இதுக்கில்லை என்னா நின்று கொண்டு இதினுடைய ஸார தமத்வம்‌ சொல்லுகிறார்‌ –

ஸ்ரீ ராமாயணம் ,நாராயண கதை என்று தொடங்கி , கங்கா காங்கேய சம்பவாத் யசத் கீர்த்தனம்
பண்ணின எச்சில் வாய் சுத்தி பண்ணாமல் , திரு மால் அவன் கவி என்றே , வாயோலை படியே
மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு உரிய சொல் வாய்த்த இது வேதாதிகளில் , பௌருஷ மாநவ கீதா வைஷ்ணவங்கள் போலே அருளிச் செயல் சாரம்-சூரணை -63-

அதாவது —
காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்னம் ஈத்ருசை : கரவாண்யஹம்—பாலகாண்டம் -2-42- ( ஸ்ரீ ராமாயணம் காவ்யம் முழுவதும் இத்தகைய ஸ்லோகங்களால் நான் செய்கிறேன் )என்றுஸ்ரீ ராம கதையை சொல்லுவதாக ஸ்ரீ ராமாயணம் என்று உபக்ரமித்து கங்கா சம்பவ ,ஸூப்ரஹ்மண்ய உத்பத்தி- புஷ்பக வர்ண ரூப கதைகளை பரக்கப் பேசுகையாலே ,அசத் கீர்த்தனம் பண்ணி , வாக் அசுத்தி வந்தது இறே
ஸ்ரீ வால்மீகி பகவானுக்கு
நாராயண கதாமிமாம்–பாரதம் ஆதிபர்வம் -என்கிற படி ,நாராயண கதை என்று உபக்ரமித்து சம்பவ பர்வதத்திலே காங்கேயரான ஸ்ரீ பீஷ்மருடைய உத்பத்தி தொடக்கமாக
அநேகருடைய உத்பத்தி பிரகாரங்களை ,விஸ்தரேண பிரதி பாதிக்கை யாலும் ,-பூசல் பட்டோலை -என்னும் படி பாரத யுத்த பிரகாராதிகளையே பரக்க நின்று வர்ணித்த படியாலும் ,அசத்கீர்தனத்திலே மிகவும் பரந்து ,அ சுத்த வாக்கை ,-அசத் கீர்த்தனா காந்தார பரிவர்த்தன பாம்ஸூலாம் ,வாசம் ஸௌரி கதா லாப கங்கயைவ புநீமஹே-ஸ்ரீ ஹரிவம்சம் –என்று –( பொருள் அல்லாதவற்றைப் பேசுதலாகிற காட்டிலே சுற்றியதால் புழுதி அடைந்த வாக்கினை ஸ்ரீ கண்ணபிரானுடைய சரிதையைச் சொல்லுதலாகிற கங்கை நீரால் தூய்மை ஆக்குகிறேன் ) –என்று அசத் கீர்தனமாகிற காட்டிலே ,அலைந்து புழுதி படைத்த வாக்கை ,பகவத் கதா லாபமாகிற கங்கையிலே ,சுத்தம் ஆக்குகிறேன் என்று சுத்தி பண்ணினான் இறே ஸ்ரீ வேத வியாச பகவான் .-ஸ்ரீ வால்மீகி பகவான் இப்படி அனுதபித்து ,வாக் சுத்தி பண்ணிற்று இலன் ஆகிலும் , இந்த நியாயம் அவனுக்கும் ஒக்கும் என்று ,நினைத்து இறே இவர் கூட்டி எடுத்தது ..ஆக இப்படி உபக்ரமித்ததர்க்குச் சேராத படி அசத் கீர்த்தனம் பண்ணி ,வாக்கை அசுத்தை ஆக்கி அதுக்கு சுத்தி பண்ண வேண்டாதபடி ,-திரு மாலவன் கவி யாது கற்றேன் -திருவிருத்தம் –48-என்று ஸ்ரீய பதி என்று அடியிலே வாயோலை இட்ட பிரகாரத்திலே ,-
மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மது ஸூதன் அடி மேல் –திருவாய் -6-8-11-என்கிற படியே , அந்ய பரமான சப்தங்கள் ஒன்றும் ஊடு கலசாத படி சப்தங்களைத் தெரிந்து எடுத்து ,-உரிய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி திருவாய் -4–5-6-என்கிற படியே விஷயத்துக்கு தகுதியான சொல்லாலே
சொல்லப் பட்டதாய் ,-வாய்த்த வாயிரம்-திருவாய் -2-2-11-என்று வாஸ்யனான சர்வேஸ்வரனுக்கு வாய்த்த இப் பிரபந்தம் வேதேஷு பௌருஷம் ஸூக்தம்-தர்ம சாஸ்த்ரேஷூ மாநவம்-பாரதே பகவத் கீதா புராணேஷூ ச வைஷ்ணவம்–( வேதங்களில் புருஷ ஸூக்தமும் -தர்ம சாஸ்த்ரங்களுக்குள் மனுவால் சொல்லப்பட்ட மனு தர்ம சாஸ்திரமும் – மஹா பாரதத்தில் ஸ்ரீ கீதையும் -புராணங்களில் ஸ்ரீ விஷ்ணு புராணமும் ) என்று வேதங்களில் புருஷ சூக்தமும் ,-தர்ம சாஸ்த்ரங்களில் மனு பிரனீதமும் ,
மகா பாரதத்தில் ஸ்ரீ கீதையும் புராணங்களில் ஸ்ரீ விஷ்ணு புராணமும் சாரமாய் இருக்குமா போலே –
அந்யகதா கந்த ரஹிதமான அருளிச் செயலிலே சாரமாய் இருக்கும் என்கை-
-இத்தால்-தீதில் அந்தாதி -திருவாய் -8-2–11-என்கிற படியே கதாந்திர பிரஸ்தாப தோஷ ராஹித்யாலே , ஆர்ஷ பிரபந்தங்களில் ,வ்யாவிருத்தமாய் , பகவத் பிரதிபாதன சாமர்த்தியத்தாலே , பகவத் ஏக பரமான மற்றை ஆழ்வார் பிரபந்தங்களிலும் ,சாரமாய் இருக்கும் என்று இப் பிர பந்த வைலஷண்யம் சொல்லிற்று ஆயிற்று –

“காவ்யம்‌ ராமாயணம்‌ கருத்ஸ்நமீத்‌ருஸை கரவாண்யஹம்‌”‘ (ராபா. 2 – 42), “நமோ பகவதேதஸ்மை வயாஸாயாமித தேஜஸே | யஸ்ய ப்ரஸாதாத்‌,வஹ்யாமி நாராயண கத மிமாம்‌” (ப.ர.ஆதி;) என்றும்‌ சொல்லுகிறபடியே இதிஹாஸ ஸ்ரேஷ்டமான ஸ்ரீராமாயணம்‌ நாராயண கதை என்று தொடங்கி, கங்கையினுடைய வர்ணநமும்‌, ஸுப்‌ரஹ்மண்ய கதையும்‌, புஷ்பக வர்ணநமூமாய்‌, ஸ்ரீமஹாபாரதத்தில்‌ நாராயண கதை என்று தொடங்கி, கங்கையினுடையவும்‌ ஸ்ரீபீஷ்மருடையவும்‌ உத்பத்தி முதலான பூசல் பட்டோலையாய்‌, *அஸத் கீர்த்தந காந்தார பரிவர்த்தந பாம்ஸுலாம்‌” (ஹரிவம்பே) என்கிறபடியே அஸத் கீர்த்தநம் பண்ணின எச்சில் வாயானது “வாசம்‌ சவ்ரிகதா லாபகங்கயைவ புநீமஹே”’ என்று ஸூத்‌,தி, பண்ண வேண்டிற்றிறே அவர்களுக்கு. “ஸா ஜிஹ்வா யா ஹரிம்‌ ஸ்தெளதி”’ (வி.த,ர்மே 1) என்றும்‌, “வாயவனை யல்லது வாழ்த்தாது”” (மு.திரு11) என்றும்‌ சொல்லுகிற இவர் நாக்குக்கு பகவத்‌ வ்யதிரிக்தமான வர்ணநம்‌ உச்சிஷ்டமிறே.-இவருடைய ப்ரபந்தத்தில்‌ அப்படி எச்சில் வாய்‌ ஸூத்‌தி பண்ண வேண்டாதே திருமாலவன் கவி யாது கற்றேன்‌’‘( திருவிரு. 48) என்று வாயோலை யிட்டாப் போலே மாற்றங்களாய்ந்து கொண்டு”’ (திருவா. 6 – 8- 11) என்கிறபடியே எல்லாச்‌ சொற்களும்‌ புறம்பு அந்ய பரங்களாயிராதே ஸர்வமும்‌ *“உரிய சொல்லாலிசை மாலைகளேத்தி’* (திருவா. 4 – 5 – 6) என்கிறபடியே அவனுக்கு ப்ராப்தமான சொல்லாய்‌ “*வாய்த்த வாயிரத்துள்‌”’ (திருவா. 2 – 2 – 11) என்கிறபடியே வாச்யனுக்கு வாய்த்த ப்ரபந்தம்‌; (வேதாதிகளில்‌) வேத ஸாஸ்த்ரேதிஹாஸ புராணங்களில் வைத்துக் கொண்டு “வேதேஷு பெளருஷம்‌ ஸூக்தம்‌ தர்மமமாஸ்த்ரேஷு மாநவம்‌ ! பாரதே பகவத்‌ கீதா புராணேஷு ச வைஷ்ணவம்‌”’ என்கிறபடியே வேதத்தில்‌ ஸாரமான ஸ்ரீபுருஷ ஸூக்தம் போலேயும்‌, தர்ம ஸாஸ்த்ரத்தில்‌ மநு ப்ரணீதமானது ஸாரமானாப் போலேயும்‌, ஸ்ரீமஹா பாரதத்தில்‌ கீதை ஸாரமானாப் போலவும்‌, புராணங்களில் வைத்துக் கொண்டு ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌ ஸாரமானாப் போலவும்‌, அருளிச்செயலில் வைத்துக் கொண்டு இத் திருவாய்மொழி ப்ரபந்தத்தினுடைய ஸார தமத்வம்‌ சொல்லிற்று 

வாய் அவனை அல்லது வாழ்த்தாது கை யுலகம்
தாயவனை அல்லது தாந்தொழ  பேய் முலை நஞ்
சூணாக வுண்டான் உருவோடு பேர் அல்லால்
காணாக் கண் கேளா செவி —11-–நீ அளவிதாம் படி அமையும் காண் என்றாலும் கேளாது-என்னிலும் காட்டிலும் அவன் எங்குற்றான் என்று பார்க்கிற என்னுடைய வாக் இந்த்ரியமானது அவனை ஒழியப் புகழாது –

மெல்லியல் ஆக்கைக் கிருமி குருவில் மிளிர் தந்தாங்கே
செல்லியசெல் கைத்துலகை என் காணும் என்னாலும் தன்னைச்
சொல்லிய சூழல் திருமாலவன் கவியாது கற்றேன்
பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ வுண்டு பண்டு பண்டே-48 —திரு மால் –இந்த ஆச்சர்ய சக்தி தான் புறம்பு கிடவாதே –இவ்வாஸ்ரயத்தில் கிடக்க வேண்டுவான் என் என்னில் – ஸ்ரீய பதி ஆகையாலே –திருமாலவன் கவி –அவனும் அவளுமான சேர்த்திக்கு தகுதியான கவி –இத்தால் – ஸ்ரீ ராமாயணத்தில் வ்யாவ்ருத்தி சொல்லுகிறது –ஸீதாயாஸ் சரிதம் மகத்-என்று தொடங்கச் செய்தே அவளை ஒழிய-தனியே இறே இருந்து கேட்டது –1-யாது கற்றேன் -என்னுதல் –2-ஆறு கற்றேன் என்னுதல் –3-அவன்  கவி யாது கற்றேன் என்னுதல் –4-யாதொன்று நான் கற்றது -அது திருமாலவன் கவி -என்னுதல் –யாது ஓன்று நான் கற்றது -எந்த சிறியத்தையும் நான் கற்றாலும் அதுவும் திருமாலவன் கவியே-ஆறு -ஸமஸத்தையும் கற்றேன்கற்றேன் -என் முன் சொல்லும் -என்கிறபடியே அவன் முன்னே  சந்தை இட – நான் பின்னே சொன்னேன் இத்தனை-

மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மதுசூதபிரான் அடிமேல்
நாற்றங்கொள் பூம்பொழில் சூழ் குருகூர்ச்சட கோபன்சொன்ன
தோற்றங்க ளாயிரத்துள் இவையும்ஒரு பத்தும்வல்லார்
ஊற்றின்கண் நுண்மணல்போல் உருகாநிற்பர் நீராயே.–6-8-11-நல்ல சொற்களை தெரிந்து கொண்டு -இத் தசையிலும் வாசக சப்தங்கள் விலக்ஷணமாய் இருக்கிற படி –சோக ஸ்லோகத்வமாகத -என்கிறபடியே –விரோதிகளை போக்கி தன்னை யுபரிக்குமவனை யாயிற்று கவி பாடிற்று-

கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும்
பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேற்கு
அரியது உண்டோ எனக்கு இன்று தொட்டும் இனி என்றுமே?–4-5-6-இவ்விஷயத்துக்கு நேரே வாசகமான சொல்லாலே-இசைமாலைகள்-ஸம்ஸரவே மதுரம் வாக்கியம் என்னும் படி திருச் செவி சாத்தலாய் இருக்கை-ஏத்தி உள்ளப்பெற்றேற்கு-ஏத்தி அனுபவிக்கப் பெற்ற எனக்கு அரியது உண்டோ-நான் பெறாதே இனி பெற வேண்டி இருப்பது ஒரு பொருள் உண்டோ-எனக்கு-ஈஸ்வரோஹம் என்று இருக்கிற சம்சாரத்தில் சேஷத்வம் ரசிக்கப் பெற்று ஸ்வரூப அநு ரூபமாக வாசிகமான அடிமை செய்யப் பெற்று வினை நோய்கள் கரியவே -என்று விரோதியும் கழிக்கப் பெற்ற எனக்கு-

ஏத்த வேழுலகும் கொண்ட கோலக்
கூத்தனை குருகூர்ச் சடகோபன் சொல்
வாய்ந்த வாயிரத்துள் இவை பத்துடன்
ஏத்த வல்லார்க்கு இல்லையோ ரூனமே –2-2-11—வாய்ந்த வாயிரம் – ஈஸ்வரனுக்கு இதுவும் ஓர் ஐஸ்வர்யம் ஆயிற்று நேர் பட்டது-சொல் வாய்ந்த வாயிரம் – வாஸ்யத்தில் காட்டில் வாசகம் நேர் பட்டது என்றுமாம் -அதாவது விஷயத்தை உள்ள அளவும் பேச வற்றாய் இருக்கை-உடனே ஏத்த வல்லார்க்கு –
சாபிப்ராயமாக சொல்லுமவர்க்கு –அல்லாதாருடைய அநீஸ்வரத்தையும் இவனுடைய பரத்வத்தையும் சொல்லுகிறது ஆகையால் அபிப்ராயத்தோடே கற்க வேணும் என்றதாயிற்று-இல்லையோ ரூனமே-
தேவதைகளோடு ஓக்க நினைத்தால் -அவர்களுக்கு உத்கர்ஷத்தை நினைத்தல் –இவனுக்கு அபகர்ஷத்தை நினைத்தல் -இவை யாயிற்று ஊனம்-அவை இவர்களுக்கு இல்லை -தேவதாந்த்ர ஸ்பர்சம் ஆயிற்று சம்சார பீஜம் –

பாதமடை வதன் பாசத்தாலே மற்றவன்பாசங்கள் முற்ற விட்டு
கோதில் புகழ்க் கண்ணன் தன்னடி மேல் வண் குருகூர் சடகோபன் சொன்ன
தீதில் அந்தாதி ஓர் ஆயிரத்துள்இவையுமோர் பத்திசை யோடும் வல்லார்
ஆதுமோர் தீதிலராகி இங்கு மங்கு மெல்லாம் அமைவார்கள் தாமே–8-2-11—பிரபந்தத்துக்கு தீதாவதுகதான்தர ப்ரஸ்தாவம்-ராம வ்ருத்தாந்தத்தை சொல்லப் புக்கு ஸூ ப்ரஹ்மண்ய உத்பத்தி -புஷ்ப்பக வர்ணன் இவற்றிலே இழிகையும்-நாராயண கதாமிமாம் என்று சொல்லி விட்டு விட்டார் விட்ட அம்பு எண்ணுகையும் இவை –

இனி மேல் இப்படி அருளிச் செயலில் சாரமான இதன் ப்ரமாண்ய அதிசயத்தை
பிரகாசிப்பைகாக ,ஆழ்வார்களுடைய ஐக கண்ட்யைத்தையும் ,அவர்களில் தலைவரான இவர்
அருளிச் செய்த இப் பிரபந்ததினுடைய பிராபல்யத்தையும் ,பிரதி பாதியா நின்று கொண்டு ,
ஏவம் பூதமான விதுக்குச் சேராத சாஸ்திரங்கள் பரீஷக பரித்யாஜ்யங்களாம் படியை அருளிச் செய்கிறார் –ஆனால்‌ இவ்வாழ்வார்களுடைய ப்ரபந்தங்களும்‌ பரஸ்பர விருத்‌தங்களாயிருக்குமோ என்ன, இவர்களெல்லாரும்‌ ஏக கண்டராகையாலே எல்லாம்‌ ஏகரர்த்த ப்ரதிபாதகங்களுமாய்‌, எல்லா ப்ரபந்தங்களும்‌ இவருடைய ப்ரபந்தத்தைப்‌ பின் செல்லும்படியான வைபவத்தை உடைத்தாய்‌, இத்தோடு சேராத ஸாஸ்த்ரங்களெல்லாம்‌ த்யாஜ்யங்களா யிருக்குமென்று இதினுடைய ப்ராமாண்யம்‌ சொல்லுகிறது –

குரு சிஷ்ய கிரந்த விரோதங்களை பரமதாதிகளாலே பரிஹரியாமல் செஞ்சொல் செம்தமிழ் இன் கவி
பரவி அழைக்கும் என்று அந்யோந்யம் கொண்டாடி பேசிற்றே பேசும் ஏக கண்டரில் என்னில் மிகு வென்னும் இவர் உரை கொள் இன் மொழி கொண்டு சாஸ்த்ரார்தங்களை நிர்ணயிக்க வேண்டுகையாலே வலம் கொண்டு இதுக்கு சேராதவை மநு விபரீதங்கள் போலே-
(விலக்கப்படுவனவாம் )-சூரணை -64-

அதாவது –
ருஷிகளில் ,குரு சிஷ்யர்களான வியாச ஜைமிநிகளில் , குருவான வியாசனுடைய கிரந்தமான ,ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரத்தோடு சிஷ்யனான ஜைமினி உடைய கிரந்தமான கர்ம ஸூத்ரத்தோடு நிரீஸ்வர வாதாதிகளால் ,வந்த விரோதத்தை , சம்பத் தேரிதி , ஜைமினி–ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்–1-2-32
( பிராணா ஹூதி ஹோமங்களை அக்னி ஹோத்ர ஹோமங்களாக செய்வதற்காக உபாசகனுடைய
மார்பு முதலான உறுப்புகளை நெருப்பு களாக கூறியுள்ளது என்று ஜைமினி சொன்னார் )
அன்யார்த்தம் து ஜைமினி–ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்– 1-4-18-( வேறு பயனுக்காகவே இங்கு ஜீவனைச் சொல்லுகிறது என்று ஜைமினி சொல்கிறார் )பரம் ஜைமினி முக்யத்வாத்—ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்– 4-3-11-
( பர ப்ரஹ்மத்தை உபாசிக்கின்றவர்களையே ஆதி வாஹிகர்கள் அழைத்துக் கொண்டு போகிறார்கள் என்று ஜைமினி எண்ணுகிறார்-ப்ரஹ்ம கமயிதி என்ற இடத்தில் உள்ள ப்ரஹ்ம சப்தம் ப்ரஹ்மத்தின் இடமே முக்கியமாக இருப்பதால் )ப்ராஹ்மனே ஜைமினி –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்-4-4 -5-( ப்ரஹ்ம சம்பந்தியான அபஹத பாப்மத்வம் முதலான குணங்களோடு முக்தன் தோன்றுகிறான் என்று
ஜைமினி சொல்லுகிறார் ) இத்யாதியான ,ப்ரஹ்ம ஸூத்தரங்களாலே ஜைமினிக்கு ப்ரஹ்ம ஸ்வரூப தத் குண தத் உபாசன தத் பலாதிகளின் உடைய அங்கீகாரம் உண்டு என்னும் இடமும் தோற்றுகையாலும் ,மகா பாரதத்திலே ,ஹய சிர உபாக்யானாதிகளிலே பகவத் வியாச உபதேச லப்த
பரமாத்மா தத்வ ஞானம் உடையவனாய் சொல்லுகையாலும் , ஸ்ரீ வேத வியாசனும் ஜைமினியும் ஏக கண்டர்கள்.
-இனி தேவதா நிராகரணம் பண்ணின இது ,ஈஸ்வர பிரநீதமாக வேதத்தை சிலர் சொல்லுகையாலே ,அந்த பௌ ருஷேத்வம் அடியாக விப்ரலம்பாதி தோஷங்களை கல்பித்து வேத அப்ராமண்யம் சொல்லுவது , வைதிக கர்மங்களை ,நிந்திப்பதாகிற பாஹ்யரை நிராகரித்து ,
வேத ப்ராமண்ய கர்மா அவச்ய ,கர்தவ்யைகளை சாதிக்கையில் உண்டான இச்சையாலே
ஸ்வ மதம் அன்றிலே இருக்க பரம பதத்தை அவலம்பித்து சொன்னான் என்றாதல் ..
அன்றிக்கே -தேவதா நிராகரணத்தில் ,தாத்பர்யம் இல்லை
..–அஸ்ருத வேதாந்தருக்கு கர்மத்தில் ,அச்ரத்தையை நிவாரிக்கைக்காக , கர்ம பிரதாண்யம் சொல்லுகையிலே தாத்பர்யம் ஆகையாலே ,
நஹி நிந்த்யா நிந்த்யம் நிந்திதும் ந பிரவர்த்ததே நிந்திதாத் இதரத் பிரசம்கிதம் -(நிந்தையானது நிந்திக்கும் பொருளை நிந்திப்பதற்கு வரவில்லை – நிந்திக்கும் பொருளைக் காட்டிலும் வேறான ஒரு பொருளைத் துதிப்பதற்காக வந்தது ) –என்கிற ந்யாயத்தாலே , தேவதா நிரகரணம் பண்ணின இது ,கர்ம பிரசம்சார்த்தம் ஆகையாலே அந்ய பரம் என்றாதல் கொள்ள வேணும் என்று இப்படி பரமத அன்ய பரத்வங்களால் பரிஹரிக்க வேண்டிற்று இறே .( கர்மங்களை அவசியம் செய்ய வேண்டும் என்பதன் பொருட்டு ஆகையால் கடவுள் இல்லை என்று கூறின இது வேறு ஒன்றிலே நோக்கு என்றாதல் கொள்ள வேண்டும் -என்று இப்படி பிறர் தம் மதம் மேற்கொண்டு கூறினார் – வேறு ஒன்றினை உட்க்கொண்டு கூறினார் என்று பரிஹாரம் செய்ய வேண்டுமே )

ருஷிகளில்‌ குரு ஸிஷ்யர்களான வ்யாஸ ஜைமிநிகளில்‌ குருவான வியாஸனுடைய க்ரந்தமான ப்‌ரஹ்ம ஸூத்ரத்துக்கு ஸிஷ்பனான ஜைமிநி க்‌ரந்தமான கர்ம ஸூத்ரத்தில்‌ நிரீஸ்வர வாதத்தால்‌ வந்த விரோத,த்தை வ்யாஸன் தானே “’ஜைமீிநி ராசார்யோ மந்யதே”’ என்று ஆப்தமாக எடுக்கையாலே இருவரும்‌ ஏக கண்டர்‌; இனி நிரீஸ்வர வாதம்‌ சொன்னது – வைதிக க்ரியைகளை நாஸ்திவாதம்‌ பண்ணுகிற பாஹ்யரை நிராகரிக்கைக்காக பர மதத்தை அதிஷ்டித்துச் சொன்னானென்று பரிஹரிக்க வேண்டிற்று அங்கு.

அப்படியே
இங்கும் அந்யோந்ய வசன விரோதம் உண்டாய் ,அதுக்கு பரிகாரம் பண்ண வேண்டாத படி
செஞ்சொல் கவிகாள்–திருவாய் -10-7-1-என்றும்
செம் தமிழ் பாடுவார் தாம் வணங்கும் -பெரிய திருமொழி -2-8-2–என்றும்
இன் கவி பாடும் பரம கவிகள்-திருவாய் -7-9-6 -என்றும்
பதியே பரவித் தொழும் தொண்டர் -பெரிய திருமொழி -7–1-7-என்றும்
அரங்காவோ என்று அழைக்கும் தொண்டர் -பெருமாள் திருமொழி -2-2–என்றும் பரஸ்பரம் ஸ்லாகித்து கொண்டு ,பேசிற்றே பேசல் அல்லால்–திருமாலை -22- -என்ற படியே ஒருவர் பேசினதே எல்லாரும் பேசும் ஏக கண்டரான ஆழ்வார்களில் வைத்து கொண்டு-என்னில் மிகு புகழார் யாவர் –பெரிய திருவந்தாதி –4-என்று சேஷிக்கு அதிசயகராகப் பெற்ற ப்ரீதி பிரகர்ஷத்தாலே என்னில் காட்டில் மிக புகழ் உடையார் ஆர் என்னும் சர்வாதிகரான இவருடைய –உரை கொள் இன் மொழியாளை-திருவாய் -6-5–3- -என்கிற படியே ஸ்ரீ ராமாயணாதிகளையும் ஸ்வ வைலஷண்யத்தாலே ஜெயிக்கும் படியான
சக்திகளைக் கொண்டு வேத தத் உப ப்ரும்ஹண ரூப சாஸ்த்ரங்களில் ,சம்சயிதமான அர்த்தங்களை நிர்ணயிக்க வேண்டும் படியாய் இருக்கும் ஆகையாலே –வலம் கொண்ட வாயிரம்
–திருவாய் -3–8-11-என்கிற படியே பிரதி பாத்ய வஸ்துவை உள்ள படியே பிரதி பாதிக்க வல்ல சாமர்த்தியத்தை உடைத்தான இப் பிரபந்தத்துக்கு சேராத சாஸ்திரங்கள் –மன் வர்த்த விபரீதா து யா ஸ்ம்ருதிஸ் ஸா ந சஸ்யதே
( எந்த ஸ்ம்ருதியானது மனுவினால் சொல்லப்பட்ட பொருளுக்கு மாறுபட்டு இருக்கிறதோ அது புகழப்படுவது இல்லை ) என்று சொல்லப் பட்ட மநு விபரீதமான ஸ்ம்ருதிகள் போலே கழிக்க படும் என்கை-

இதுக்கு அப்படிப்‌ பரிஹரிக்க வேண்டாதபடி ”சென்சொற் கவிகாள்‌’” (திருவா. 10 – 7 – 1) என்றும்‌, ‘‘செந்தமிழ் பாடுவார்தாம்‌”” (திருமொழி 2 – 8 – 2) என்றும்‌, “இன்கவி பாடும்‌ பரம கவிகள்‌” (திருவா. 7 – 9 – 6] என்றும்‌, “பாலேய்‌ தமிழரிசைகாரர்‌ பத்தர்‌ பரவுமாயிரம்‌”’ (திருவா. 1 – 5- 11) என்றும்‌, ““பரவித்தொழும்‌ தொண்டர் தமக்குக்கதி?’ [திருமொழி 7 – 1 – 7) என்றும்‌, *’அழைப்பன்‌ திருமாலை ஆங்கவர்கள்‌ சொன்ன பிழைப்பில்‌ பெரும் பெயரே பேசி” (இ. திருவ. 50) என்றும்‌, * அரங்கவோ என்றழைக்‌கும்‌?” (பெரு. தி, 2 – 2) என்றும்‌ சொல்லுகிறபடியே அந்யோந்யம்‌ கொண்டாடி “பேசிற்றே பேசலல்லால்‌“‘ (திருமாலை 22) என்று ஏக கண்டராகையாலே ஏகார்த்த ப்ரதிபாதகரான இவர்களில் வைத்துக் கொண்டு, ‘ “என்னில்‌ மிகு புகழார்‌ யாவரே?” (பெ. திருவ. 4) என்கிறபடியே தாஸ்ய ஹ்ருஷ்டோக்தியை உடையரான இவருடைய “உரை கொளின்மொழி’” (திருவா. 6 – 5 – 9) என்கிறபடியே “அது அது’ என்று வாய்‌ புலற்றும் படியாகப்‌ பேச்சுக்கு அவிஷயமாய்‌-மாற்று முறையு மற்றிருப்பதாய்‌, ஸ்ரீராமாயணத்திலுங் காட்டில்‌ இனிமையை உடைத்தாயிருக்கிற இவருடைய உக்திகளைக் கொணடு தத்வ ஹித புருஷார்த்தங்களை ப்ரதிபாதி,க்கிற வேதாந்த ஸாஸ்தரங்களில்‌ ஸம்ஸயித்தவற்றை நிர்ணயிக்க வேண்டும்படி இருக்கையாலே “சொல்‌ வலங்கொண்ட” (திருவா. 53. 9. 11) என்கிறபடியே அர்த்த ப்ரதிபாதந ஸாமர்த்‌யத்தை உடைத்தான இப்‌ ப்ரபந்தத்தோடு சேராதவை யாவை சில ஸமாஸ்த்ரங்கள்‌, அவை, **மந்வர்த்த விபரீதா து யா ஸ்ம்ருதிஸ்ஸா ந ஸஸ்யதே” என்று மநு விபரீதமான ஸ்ம்ருதிகளைப் போலே கழிக்கப்படுகிறது-

செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் திருமால் இரும் சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே–10-7-1—செவ்விய சொல்லை யுடைய கவிகாள் -கவிக்குச் செவ்வை யாகிறது –அநந்ய பிரயோஜனமாய் இருக்கை -பிரயோஜனத்தைக் கணிசிக்கை கவிக்கு குடிலம் ஆகையாவது –இன் கவி பாடும் பரம கவிகள் -என்றும் –செந்தமிழ் பாடுவார் என்றும் -சொல்லுகிற முதல் ஆழ்வாரைகளை யாய்த்து நினைக்கிறது –பெரும் தமிழன் அல்லேன் -என்னா- வாய் அவனை அல்லது வாழ்த்தாது -என்கிறவர்கள் இறே அநந்ய பிரயோஜனர்

வெந்திறல் வீரரில் வீரர் ஒப்பார் வேதமுரைத்து இமையோர் வணங்கும்
செந்தமிழ் பாடுவார் தாம் வணங்கும் தேவர் இவர் கொல் தெரிக்க மாட்டேன்
வந்து குறள் உருவாய் நிமிர்ந்து மாவலி வேள்வியில் மண்ணளந்த
அந்தணர் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-2-பெருகு மத வேழம் என்கிறபடியே கலப்பற்ற பசும் தமிழ் பாடும் முதல் ஆழ்வார்கள் 

இன் கவி பாடும் பரம கவிகளால்
தன் கவி தான் தன்னைப் பாடுவியாது இன்று
நன்கு வந்து என்னுடன் ஆக்கி என்னால் தன்னை
வன் கவி பாடும் என் வைகுந்த நாதனே.–7-9-6–தன்னை கவி பாடுவித்துக் கொள்ள நினைத்தால்-பராசர வ்யாஸ வால்மீகிகள் ஆதல் –செந்தமிழ் பாடுவார் என்னும் முதல் ஆழ்வார்கள் ஆதல் அன்றோ பாத்ர பூதர் -அவர்களை ஒழிய –

மாலே மாயப் பெருமானே மா மாயனே என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே –-1-5-11-பாலேய் தமிழர்-பாலோடு ஒத்து உள்ள தமிழ் அறிவார்-இசைகாரர் இசை அறிவார்-பத்தர் பரவும்-சர்வேஸ்வரனும் ஆழ்வாருமான பரிமாற்றத்திலே கால் தாழ்ந்து இருக்குமவர்கள்-பாலேய் தமிழர் –என்கிறது முதல் ஆழ்வார்களை
இசைகாரர் –என்கிறது ஸ்ரீ மதுர கவிகள் போல்வாரை-பத்தர் -என்கிறது பெரியாழ்வார் போல்வாரை
ஸ்ரீ பராங்குச நம்பி -ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் பிள்ளை யுறங்கா வல்லி தாசர் போல்வர் என்னுமாம் -ஆழ்வான் ஓர் உருவிலே

அழைப்பன் திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன
பிழைப்பில் பெரும் பெயரே பேசி
-இழைப்பரிய
வாயவனே யாதவனே என்றவனை யார் முகப்பும்
மாயவனே என்று மதித்து —50-சிறியாத்தான் -த்வயத்தில் ஆநு பூர்வி பிரதானம் -அவைகளை நினைத்து பிரசன்னனாம் – அர்த்தம் விட சொற்களே முக்கியம் -அவற்றை கேட்டே எம்பெருமான் மகிழ்வான் -என்றபடி –ரிஷிகள் கோஷ்டியில் -ய படேத் ராமசரித்ரம் சர்வ பாபி ப்ரமுச்யதே -பால -1-97- என்று பாவனமாய் இருக்கும்-ஆழ்வார்கள் கோஷ்டியில் அது நச்சுப் பொய்கை –-உயிர்க்கு அது காலன் என்று இரந்தேற்க்கு நீர் குயில் பைதல்காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் – திருவாய் -9-5-8-என்னக் கடவது இறே-

தோடுலா மலர் மங்கை தோள் இணை தோய்ந்ததும் சுடர் வாளியால்
நீடு மா மரம் செற்றதும் நிரை மேய்த்ததும் இவையே நினைந்து
ஆடி பாடி அரங்காவோ! என்று அழைக்கும் தொண்டர் அடி பொடி
ஆட
நாம் பெறில் கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை என்னாவதே ?–2-2-இந்த சீலாதி குணங்களையே நினைந்து இவற்றை நினைக்கும் அது ஒழிய வேறொரு பிரயோஜனத்தையும் கணிசியாதே –ப்ரீதி பிரகர்ஷத்தாலே இருக்க மாட்டாதே ஆடிப்பாடி-ஸ்ரீ பெருமாள் திரு நாமத்தைச் சொல்லி யாற்ற மாட்டாதே கூப்பிடும்-பகவத் குண வித்தரான ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய பாத ரேணுக்களிலே அவகாஹிக்கப் பெறில்-

பேசிற்றே பேசல் அல்லால் பெருமை ஓன்று உணரலாகாது
ஆசற்றார் தங்கட்கு அல்லால் அறியலாவான் அவனும் அல்லன்
மாசற்றார் மனத்து உளானை வணங்கி நாம் இருப்பது அல்லால்
பேசத்தான் ஆவது உண்டோ பேதை நெஞ்சே நீ சொல்லாய்–22-நீல தோயாத மத்யஸ்தா வித்யுல்லகேவ-என்றும்-நீலமுண்ட மின்னன்ன மேனி -என்றும்-அதஸீ புஷ்ப சங்காசம் -என்றும்-ஹிரண்மய புருஷோ த்ர்சயே -என்றும்-ருக் மாபம் -என்றும் சுட்டு உரைத்த நன் பொன் உன் திரு மேனி ஒளி ஒவ்வாது -இத்யாதி –வேதங்கள் பேசும் படியே பேசும் அத்தனை அல்லது நம்மால் பேச முடியாது –அப்ராப்ய -என்று பேசின இத்தனை அப்படியே பேச ஒண்ணாது என்று பேசும் அத்தனை என்றுமாம்–ஆசற்றார் நம் ஆழ்வார் போல்வார்-நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று ஏக சிந்தையராய் இருக்கும் சித்தோபாய விசுவாசிகள்-மாசற்றார் பெரியாழ்வார் போல்வார்
வடதடமும் வைகுந்தமும் மதிள் த்வாராபதியும் இடவகைகள் இகழ்ந்திட்டு என்பாள் இடவகை கொண்டனையே -என்றபடி நித்யவாசம் செய்து அருளுபவன் என்று சொல்லிக் கொண்டு வணங்கினால் நமக்குள்ளும் நித்ய வாஸம் செய்து அருளுவான்-

என்னின் மிகு புகழார் யாவரே பின்னையும் மற்று
எண்ணில் மிகு புகழேன் யான் அல்லால்
–என்ன
கருஞ்சோதிக் கண்ணன் கடல் புரையும் சீலப்
பெருஞ்சோதிக் கென்னஞ்சாள் பெற்று -4—என்னில் காட்டில் மிக்க புகழை யுடையார் எவர் என்றுமாம்
(ஆத்மா அணு -கீர்த்தியோ விபூவாகி எட்டுத்திக்கிலும் பரவி உள்ளது –என் தன் அளவு என்றால் யானுடைய அன்பு பூதத்தாழ்வார் போல் இங்கும் -ஆஸ்ரயத்தில் (ஆத்மாவில் ) அடங்காத புகழை யுடையேன் யானே யன்றோ-அளவிறந்த சீலத்தை யுடைய ஸர்வேஸ்வரனுக்கு அதிசயத்தைப் பண்ணப் பெற்று இருக்கிற என்னில் காட்டில் மிக்க புகழை யுடையார் யார் –

கரைகொள் பைம்பொழில் தண்பணைத் தொலை வில்லி மங்கலம்கொண்டுபுக்கு
உரைகொள் இன்மொழி யாளை நீர்உமக் காசை யின்றி அகற்றினீர்
திரைகொள் பௌவத்துச் சேர்ந்ததும்திசை ஞாலம் தாவி அளந்ததும்
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடுங்கண் நீர்மல்க நிற்குமே.–6-5-3—கேட்டார் அடங்க இது ஒரு பேச்சே என்று கொண்டாடும்படியான இனிய மொழியை யுடையவள் என்னுதல் –அர்த்தத்தில் இழியா வேண்டாதே சப்தமே அமைந்து இருக்கும் என்னுதல் -பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரம் –என்று நின்றார் நின்ற துறைகளில் ஈடுபடும்படி இருக்கை –மாற்றும் உரையும் அற்ற பேச்சு என்னுதல் -உரை என்று -“-“பாட்யே கேயே ச மதுரம் பிரமாணை: த்ரிபி: அந்விதம்படிப்பதிலும் இசையுடன் பாடுவதிலும் இனிமையோடு கூடியதும்” என்னும்ஸ்ரீ ராமாயணமாய் அது குத்துண்ணும் படி இருக்கும் என்னுதல்

புலம்பு சீர்ப் பூமி யளந்த பெருமானை நலங்கொள் சீர் நன் குருகூர்ச் சடகோபன் சொல்
வலங்கொண்ட வாயிரத்துள் இவையுமோர் பத்து இலங்குவான் யாவரும் ஏறுவர் சொன்னாலே –3-8-11-இருந்ததே குடியாக ஏத்தும் படியான குணங்களை உடையனாய் தன் விபூதியை அளந்து கொள்ளுகையினாலே ஸ்வாமி யானவனை யாய்த்து கவி பாடுகிறது-இதில் சொன்ன பேறு விடாயை உடைய ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திகள் -ப்ரதிபாத்யனை விளாக் குலை கொண்டு இருக்கும் -என்னுதல்
ப்ரதிபாதன சாமர்த்யார்த்த்தை உடைய ஆயிரம் என்னுதல்-

இப்படி இது கொண்டு சாஸ்திர அர்த்தங்கள் நிர்ணயித்தவர் யார் என்னும் அபேஷையிலே அருளிச் செய்கிறார் .-

பாஷ்யகாரர் இது கொண்டு சூத்திர வாக்யங்கள் ஒருங்க விடுவர்-சூரணை -65–

அதாவது
ஸ்ரீ பாஷ்ய காரர் ஸ்ரீ பாஷ்யம் பண்ணி அருளும் பொழுது ஸூத்திர வாக்யங்களில் சந்நிதிக்தங்களான அர்த்தங்கள் எல்லாம் இப் பிரபந்தத்தில் ,ஸூக்திகளைக் கொண்டு நிர்ணயித்து ஒருங்க விட்டு அருளுவர் என்கை-( பேத சுருதி -அபேத சுருதி -ஒருங்க கடக சுருதி -தத்வ த்ரயம் -பேதம் -விஸிஷ்ட அத்வைதம் -ப்ரஹ்மாத்மகம் – சரீராத்மா பாவம் -சாமானாதி கரண்யம் -பின்ன பிரவ்ருத்தி நிமித்தம் -காரிய காரண நிபந்தம் – த்ரிவித காரணம் -உபாதானமாக இருந்தும் நிர்விகாரம் -சரீரம் மாறலாம் ஆத்மா விகாரம் அடையாமல் -விஸிஷ்ட ப்ரஹ்மம் இல்லதும் உள்ளதும் அல்லது அவன் உரு -இப்படிப்பட்ட உரு இல்லை -உருவமே இல்லை என்பது இல்லை-அசித் சித் விலக்ஷணன்-வியாப்ய கத தோஷம் இல்லாதவன் –உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்-யானே நீ என் உடைமையும் நீயே –நீராய் நிலனாய் –சிவனாய் அயனானாய்-பரன் திறம் அன்றி பல்லுலகீர் தெய்வம் மற்று இல்லை -பிரகார பிரகாரி பாவம்-உரு பெரும் செல்வமும் இத்யாதி –மாறன் தமிழ் ஆரணமே )

ஆகையாலே பாஷ்யகாரர்‌ இப் ப்ரபந்தங் கொண்டு ஸூத்ர வாக்யங்கள்‌ ஒருங்கவிடுவர்‌” என்கிறார்

அவர் தாம் அருளிச் செய்து அருளுகைக்கு மூலம் எது என்னும் -வேதாந்த ஸூத்ரங்களைக் கொண்டு இதிலர்த்தங்களைக் கடிப்பியாதே இப் ப்ரபந்தத்தைக்‌ கொண்டு வேதாந்த ஸூத்ரங்களை கடிப்பிப்பானென்‌ என்னில்‌அபேஷையில் அருளிச் செய்கிறார் மேல் ..

அதுக்கு மூலம் விதயச்ச என்கிற பரமாச்சார்ய வசனம்-சூரணை -66-

அதாவது
ஸ்ரீ பாஷ்ய காரர் அப்படி செய்து அருளுகைக்கு அடி –விதயச்ச வைதிகாஸ் த்வதீய கம்பீர மனோ னுசாரின-ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -20- (த்வதீயர் -பாகவதர்கள் -பக்தர்கள் வேதத்தில் சொல்லப்படுகின்ற விதிகள்-வேத வாக்கியங்கள் – தேவரீரைச் சரணமாகப் பற்றி இருக்கின்ற பெரியோர்களுடைய கம்பீரமான மனத்தினை அனுசரித்தவைகளாக ஆகின்றன -என்று இதம் குரு -இதம் மகார்ஷீ -ஆரணம் -( இதனைச் செய்க இதனைச் செய்யற்க )-என்கிற ஸ்வதந்த்ரமான வைதிக விதிகளும் , அநந்ய பிரயோஜனராய் ஆஸ்ரயித்து இருக்கும் த்வதீயருடைய ஐஸ் வர்யாதிகளால் கலக்க ஒண்ணாத படி கம்பீரமான மனசை பின் செல்லும் என்று -இந்த ஸ்ரீ ஆழ்வார் போல்வார் நினைவை சாஸ்திரங்கள் தான் பின் செல்லுமதாக பரம ஆசார்யரான ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த வசனம் என்கை-

*“வைதிகா: வித யஸ்ச த்வதீய கம்பீர மநோநு ஸாரிண?”” என்று கொண்டு ‘இத,ம்‌ குர்யாத்‌ இதம்‌ ந குர்யாத்‌”, “விஜ்ஞாய ப்ரஜ்ஞாம்‌ குர்வீத”” (ப்‌,ரூ. 6 – 4 – 21), “த்‌யாயத,”‘ (மூ. 2- 2- 6), “‘உபாஸீத” (கா. 1 – 1 – 1) என்கிற வைதிக ஸாஸ்த்ரங்களானவை ஐஸ்வர்ய கைவல்யங்களால்‌ கடக்க ஓண்ணாதபடி கம்பீரமான த்வதீயருடைய மஸ்ஸைப் பின் செல்லுமென்று கொண்டு பரமாசார்யரான ஆளவந்தார்‌ அருளிச் செய்கையாலே –

த்வதாஶ்ரிதாநாம் ஜகதுத்பவ ஸ்திதி
ப்ரணாஶ ஸம்ஸார விமோசநாதய: |
பவந்தி லீலா விதயஶ்ச வைதிகா:
த்வதீய கம்பீர மநோநுஸாரிண: ||–20
-வேதத்தின் விதிகளும் கூட உன்னுடைய அடியார்களின் ஆழமான நெஞ்சங்களையே தொடரும்.

இப்படி அபியுக்தர்கள் ஆனவர்கள் இது கொண்டு சாஸ்திர அர்த்தங்கள் நிர்ணயிக்கும் படி ,சகல வேத உப ப்ருஹ்மணங்களிலும் அதி பிரபலமாய் , இவ்வளவும் அன்றிக்கே கீழ் சொன்ன படியே ,திராவிட வேதமாக கொண்டு , வேத சமமாய் இருக்கிற ஆப்த தமமான இப் பிரபந்தத்திலே ஆப்திக்கு உறுப்பாக
இவர் வேறே சில விஷயங்களை எடுப்பான் என் என்கிற சங்கையிலே
,அருளிச் செய்கிறார் ..–ஆனால்‌ பாஷ்யகாரருட்பட ப்‌ரஹ்ம ஸூத்ரங்களில்‌ ஸந்தேஹார்த்தங்களையும்‌ இது கொண்டு நிர்ணயிக்கும்படியான ஆப்தியை யுடைய இப் ப்ரபந்தத்துக்கு இவர்‌ வேறே சிலரை ஆப்தராக எடுப்பானென்‌ என்னில்‌

ஆப்திக்கு இவர் சுருதி மார்கண்டேயன் பார்த்தன் என்கிற இவை வியாச மநு பிரமவாதிகளை வேதம் சொல்லுமா போலே—சூரணை -67-

அதாவது –
இதில் சொல்லுகிற அர்த்தங்கள் ஆப்த்திக்கு உறுப்பாக இவர் –-சுடர் மிகு சுருதியுள் -திருவாய் -1-1-7-என்றும்-மார்கண்டேயனும் கரியே –திருவாய் -5–2-7-என்றும்-பார்த்தன் தெளிந்து ஒழிந்த–திருவாய் -2-8-6- -என்றும்-ஸ்ருதியையும் ,மார்கண்டேனயனையும் ,பார்த்தனையும் சொல்லுகிறவை –பரம ஆப்தமான வேதம் –ச ஹோவாச வியாச :பாராசர்ய –ஆரணம் -(பராசர முனிவருடைய புதல்வரான அந்த வியாசர் சொன்னார் )என்றும்-யத் வை கிஞ்ச மநுரவதத் தத் பேஷஜம் -யஜுர்வேதம் (எது ஒன்றினை மனுவானவர் சொன்னாரோ அது மருந்து )என்றும்-ப்ரஹ்ம வாதினோ வதந்தி-யஜுர்வேதம் (ப்ரஹ்மத்தை அறிந்தவர்கள் சொல்லுகிறார்கள் ) -என்றும் ஆப்திக்கு உறுப்பாக வ்யாசனையும், மநுவையும் ,ப்ரஹ்ம வாதிகளையும் சொல்லுகிறாப் போல் என்கை ..-ஆன பின்பு ,அது தாழ்வு அல்ல –ஆப்தி அதிசயத்துக்கு உறுப்பு என்று கருத்து ..( கீதாச்சார்யனும் மனு இஷுவாகு இவர்களுக்கு நானே முன்பு சொன்னவை என்று அர்ஜுனனுக்கு சொன்னால் போலேயும் )

வேதந் தான்‌ ஆப்ததமமா யிருக்கச்‌ செய்தேயும்‌ ஆப்திக்கு ”ஸஹோவாச வ்யாஸ? பாராமர்ய?” (யஜு. அரு.), ‘“யத்‌ வை கிஞ்ச மநுரவதத்‌ தத்‌ பேஷஜம்‌”” (யஜு. 2 – 2 – 10) என்றும்‌, ““ப்‌ரஹ்மவாதி நோ வதந்தி!” (யஜு. 1 – 7 – 1) என்றுமெடுத்தாப் போலே இவரும்‌, “உளன்‌ சுடர் மிகு சுருதியுள்‌’* (திருவா. 1 – 1 – 7) என்றும்‌, ““மார்க்கண்டேயனும்‌ கரியே”’ (திருவா. 5 – 2 7) என்றும்‌, ““பார்த்தன்‌ தெளிந்தொழிந்த”’ (திருவா. 2 – 8 – 6) என்றும்‌ ஆப்த யதிஸயத்‌துக்காக எடுத்தார்‌ என்கிறார்-

திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –
1-1-7-முதல் பாட்டுத் தொடங்கிச் சொன்ன அர்த்தங்கள் எல்லாவற்றுக்கும் பிரமாணம் நிர்த்தோஷ ஸ்ருதி என்கிறது-சுடர் மிகுகை யாவது -பௌருஷ்யத்வ நிபந்தனமான விப்ரலம்பாதி தோஷ ரஹிதமுமாய் பிரமாணாந்தரங்களைக் கொண்டு பாஹ்ய குத்ருஷ்டிகளால் அவிசால்யமாகையாலே மிக்க தேஜச்சை யுடைத்தாகை-ஒருவரால் பண்ணப் பட்டது அன்றிக்கே என்றும் கேட்டே வருமதாகையாலே ஸ்ருதி என்கிறது –

நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்
மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்பதெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே.–5-2-7-அவன் பிரசாதத்தாலே கிடீர் -நீங்கள் அவர்களை ஆஸ்ரயித்ததாலும் பலம் தருவான் அவனே –-பலமத-நஹி பாலன சாமர்த்த்யம் ருதே ஸர்வேச்வரீம் ஹரீம் – இவர்களை ஆஸ்ரயிக்க வேறே ஒருவன் பலம் தருமது எங்கே கண்டோம் என்னில்-ஸ்ரீ மார்க்கண்டேய பகவான் சாக்ஷி-

தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்
சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –2-8-6—அந்த பூ மாலைகள் தன்னையே ருத்ரன் ஜடையில் கண்டு
அவையே -தஜ் ஜாதீயங்கள் அன்றியே அவை தன்னையே-சிவன் முடி மேல் -இவன் திருவடிகளில் இட்டத்தை அவன் தலையிலே கண்டான்-தான் கண்டு -அர்ஜுனன் தானே கண்டு -சுருதி யாலே யாதல் -ஆப்த வாக்யத்தாலே யாதல் அன்றிக்கே அதாகிறது அர்ஜுனனுக்கு ஆர் அஸ்திர அபேக்ஷையாலே அத்தேவதையை அர்ச்சிக்க வேண்ட -அத்தை என் காலிலே இடு என்று இடுவித்துக் கொள்ள
ஸ்வப்னத்தில் அம்மாலையை சிரஸிலிலே தரித்துக் கொண்டு வந்து அஸ்திரத்தைக் கொடுத்துப் போயிற்று-பார்த்தன் தெளிந்து ஒழிந்த- அவன் சாரதியாய் தாழ நிற்கச் செய்த்தேயும்-அதில் கலங்காதே சது பார்த்தோ மஹா ம நா என்கிற அர்ஜுனன் நிஷ் கர்ஷித்தான் அன்றோ

ஆனால் இத்தை உபப்ருஹ்மணமாக சொன்ன பஷத்தில் ,வேத வ்யாக்யை யாமது ஒழிய
வேத ரூபம் இதம் க்ருதம் -என்றும் த்ராவிடீம் பிரம சம்ஹிதாம் -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் பூர்வ –6-என்றும்
திராவிட வேத ஸூக்தை–ரெங்கராஜ ஸ்தவம் பூர்வ –16-என்று அபியுக்தர் சொல்லுகிற வேதத்வம்
இதுக்கு கூடுமோ என்ன அருளி செய்கிறார் ..-கீழே இதுக்கு வேத ரஹஸ்யத்வம்‌ சொல்லிற்று; இப்படி யிருக்க இத்தை கரந்தஸ்தமாக்கி வ்யாக்‌யாநம்‌ பண்ணப்படா நின்றது-

பாரத கீதைகளின் வேத உபநிஷ்த்த்வம் போலே இதுவும் வ்யாக்க்யை யானாலும் வேத ரஹச்யமாம்-சூரணை -68-(பாரதத்தின் வேதத்வம் போலேயும் கீதையின் உபநிஷத்த்வம் போலேயும் )

இத்தால் கீழே வேத சாம்யம் சொன்ன இடத்தில் சொல்ல வேண்டி இருக்க அநுத்தமாய் கிடந்தவற்றை இங்கே அருளிச் செய்தார் ஆய்த்து-அதாவது –-வேத உபப்ருஹ்மாணமான மகா பாரதமும் ,அதில் சாரமான ஸ்ரீ கீதையும் , வேதாந் அத்யாப யாமாச மகாபாரத பஞ்சமான் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -என்றும்
( நீடாழி உலகத்து மறை நாலொடு ஐந்து நிலை நிற்கவே -ஸ்ரீ வில்லி பாரதம் ) பகவத் கீதா ஸூபநிஷத் ஸூ -என்றும் சொல்லுகிற படியே , வேதமும் உபநிஷத்தும் ஆகிறாப் போலே-இது வேத வ்யாக்க்யையான உப ப்ருஹ்மணமே ஆனாலும் வேத ரகஸ்யமாம் என்கை–வேத ரஹஸ்யம் ஆவது வேதத்தில் ரஹஸ்ய பாகமான உபநிஷத் ,கீழே சாந்தோக்ய சமமாகவே சொல்லிற்று –ஆகையால் இந்த பஷத்திலும் , இதின் திராவிட வேதத்வ ஹானி வாராது என்று கருத்து .

அப்போது வேதத்வத்துக்கும்‌ ரஹஸ்யத்வத்துக்கும்‌ கொத்தை வாராதோ என்னில்‌, ப்ரஸித்‌த,-லிகித-படித- பாடங்களான மஹா பாரதத்துக்கும்‌ ஸ்ரீகீதைக்கும்‌ ‘“வேதாநத்‌யாபயாமாஸ மஹாபாரத பஞ்சமாந்‌”’ (வி.பு) என்றும்‌, “பகவத்‌ கீதாஸு உபநிஷத்ஸு’”'(கீ. 1) என்றும்‌ சொல்லுகிறபடியே இவை யிரண்‌டுக்கும்‌ வேதத்வ-உபநிஷத்த்வங்கள்‌ உண்டானாப் போலே இதுவும்‌ விகித-படிதங்‌களாய்ப்‌ போந்ததே யாகிலும்‌ வேத,த்வமும்‌ ரஹஸ்யத்வமும்‌ உண்டாம் -என்கிறார் –

ஆக இப்படி இப் பிரபந்தத்தை வேத சமம் என்பது தத் வேத உபப்ருஹ்மண சமம் என்பதாகா நின்றீர் ..
அவை இரண்டுக்கும் ,தத் அனுரூபமாய் இருப்பன சில அலங்காரங்கள் உண்டு இறே – தத்ருச அலங்காரங்கள் இதுக்கும் உண்டோ- என்ன—சம்ஸ்க்ருதமான வற்றுக்கு தத் அனுகுனமான அலங்காரங்கள் பலவும் உண்டானாப் போலே த்ராவிடமான இதுக்கும் ஏதத் அனுகுனமான அலங்காரங்கள்-( செய்கோலம்) பலவும் உண்டு என்கிறார் –ஆக, இப்ப்ரபந்த,ம்‌ வேதத்தோடும்‌, உப ப்‌ரும்ஹணத்தோடும்‌ துல்யமென்றீர்‌, அவை யிரண்டுக்குமுன்ள உதாத்தாதிகளான வேத லக்ஷணங்களும்‌, அத்யாய அம்ச பர்வாதிகளான உப ப்‌ரும்ஹண லக்ஷணங்களும்‌ இதுக்குமுண்டோ என்னில்‌,பலவும் உண்டு என்கிறார் –

உதாத்தாதி பத க்ரம ஜடா வாக்ய பஞ்சாதி பாத வ்ருத்த ப்ரஸ்ன காண்ட அஷ்டக அத்யாய அம்ச
பர்வ ஆதி அலங்காரங்கள் போல் எழுத்து அசை சீர் பந்தம் அடி தொடை நிரை நிரை யோசை தளை இனம் யாப்பு பாத்துறை பண் இசை தாளம் பத்து நூறாயிரம் முதலான செய் கோலம் இதுக்கும் உண்டு-சூரணை –69-

அதாவது-
உதாத்யாதி என்கிற இடத்தில் -ஆதி -சப்தத்தால் அனுதாத்த ஸ்வரித பிரசயங்களை சொல்லுகிறது . .
(உதாத்தம்-ஒலியை சமமாக வைத்து அத்யயனம் -அநுத்தாதம் -ஒலியைப் படுத்து அத்யயனம் –
ஸ்வரிதம் -ஒலியை எடுத்து வைத்து அத்யயனம் /பிரசயம்- முதலில் ஓசையை எடுத்துக் கூறி –
மற்றப் பதங்களையும் அதுக்கு சமமாக வைத்து அத்யயனம் ) இந்த உதாத்தாதி ஸ்வர விசேஷங்களும் ,க்ரம ஜடா பஞ்சாதிகளும் ( ஜடை ஒரு சொல்லை மாற்றி மாற்றி இரண்டு முறை சொல்லுதல்/ பஞ்சாதி -50 – சொற்கள் கொண்டது – ) ப்ரஸ்ன அஷ்டகங்களும் ,( ஒத்து இயல் போன்ற சிறு பகுதி ப்ரச்னம் என்றும் எட்டு ப்ரச்னங்கள் கொண்டதை அஷ்டகம் ) வேதா சாதாரணம்-(வேதத்துக்கே உரியவை ) .
அம்ச பர்வாதிகள் உப ப்ரஹ்மண சாதாரணம் .. பர்வாதி என்கிற இடத்தில் ஆதி சப்தத்தால் ,ஸ்கந்தாதிகளை சொல்லுகிறது ..
பத வாக்ய பாத வ்ருத்த காண்ட அத்யாயங்கள் உபய சாதாரணம் .(பாதம் -ஆதி / விருத்தம் -செய்யுள் ) ஸ்ரீ ராமாயணத்தில் ,பிரதான பரிசேதனங்களிலும் காண்ட வ்யஹாரம் உண்டு இறே ..-கௌஷீதகி முதலான உபநிஷத்களில் ,அத்யாயம் என்கிற பரிசேத வ்யவஹாரம் கண்டு கொள்வது ..-ஆக இப்படி வேதத்துக்கும் தத் உபப்ருஹ்மணங்களுக்கும் உண்டான அலங்காரங்களைச் சொல்லி , அப்படியே இதுக்கும் உண்டான அலங்காரங்களைச் சொல்லுகிறது மேல்எழுத்து இத்யாதி –எழுத்தாவது -குற்றெழுத்து ,நெட்டெழுத்து ,முதலான பதின் மூன்று எழுத்தும் ..
(குறிலும்- நெடிலும் -உயிரும்- குற்றியலுகரம் -குற்றியலிகரம் -ஐகாரக் குறுக்கமும் -ஆய்தமும் -மெய்யும் –வல்லினமும் -மெல்லினமும் -இடையினமும் -உயிர்மெய்யும் -அளபெடையும் -ஆக -13-) இவை அசைக்கு உறுப்பாக நிற்கும்-அசையாவது -நேரசை ,நிரை அசை இரண்டையும்(குறிலே நெடிலே குறிலிணை ஏனைக் குறில் நெடிலே நெறியே வரினும் நிறைந்து ஒற்றடுப்பினும் நேரும் நிறையுமாம் )சீராவது -ஆசிரிய உரிசீர் நான்கும் (நேர் நேர்- நிரை நேர்- நேர் நிரை-நிரை நிரை -என்பன ஆசிரிய உரிச்சீர் )வெண்பா உரிச்சீர் நான்கும் ,(நேர் நேர் நேர் -நிரை நேர் நேர் -நேர் நிரை நேர் -நிரை நிரை நேர் நான்கும் வெண்பா உரிச்சீராம் )வஞ்சி உரிச்சீர் நான்கும் ,(நேர் நேர் நிரை -நிரை நேர் நிரை -நேர் நிரை நிரை -நிரை நிரை நிரை -நான்கும் வஞ்சி உரிச்சீராம் )பொதுச்சீர் பதினாறும் , ஓர் அசைச் சீர் இரண்டும் –ஆக முப்பது சீரும்-(பொதுச் சீர் -மேல் கூறிய ஈரசைச் சிர் நான்கின் இறுதியிலும் -நேர் நேர் -நேர் நிரை -நிரை நேர் -என்னும் ஈர் அசைச் சீர்கள் நான்கினையும் தனித்தனியே தந்து உறழ்ந்தால் பொதுச் சீர் -16-/நேர் நிரை இரண்டும் ஓர் அசைச் சீர் )பந்தம் எனிலும் ,தளை எனிலும் ஒக்கும் என்று தமிழர் சொல்லுகையாலே பந்தமும் தளையும் ஒன்றாகையால் ,இங்கே பந்தம் என்றும் , மேலே தளை என்றும் ,சொல்லும் அளவில் ,புனருக்தம் ஆகையாலே இரண்டத்து ஓன்று வர்ஜிக்க-( நீக்க -) வேண்டும்-அடியாவது – குறள் அடி ,சிந்தடி முதலான அடி ஐந்தும்(குறள் அடி- சிந்தடி – அளவடி -நெடிலடி -கழி நெடிலடி –(குறள் இரு சீரடி -சிந்து முச்சீரடி -நேரடி நாலொரு சீர் -ஐந்து சீர் நெடிலடி -ஐந்து சீருக்கு
மேற்பட்ட சீர்களையுடைய அடிகள் எல்லாம் கழி நெடிலடி )தொடையாவது மோனை, இயைபு ,எதுகை, முரண் ,அளபெடை என்கிற ஐந்திலும் அடி மோனை முதலாக ஓர் ஒன்றிலே எவ்வெட்டு தொடையாக நாற்பதும் , அந்தாதி தொடை ,இரட்டை தொடை ,செந்தொடை என்கிற மூன்றுமாக ஆக நாற்பத்து மூன்று தொடையும் .-(எழுவாய் எழுத்து ஒன்றின் மோனை இறுதி இயைபு -இரண்டாம் வழுவா எழுத்து ஒன்றின் மாதே எதுகை-மறுதலைத்த மொழியான் வரினும் முரண் -அடிதோறும் முதன் மொழிக் கண் அழியா தளபெடுத்து ஒன்றுவதாகும் அளபெடையே –-அந்த முதலா தொடுப்ப தந்தாதி -அடி முழுதும் வந்த மொழியே வருவது இரட்டை -வரன் முறையான் முந்திய மோனை முதலா முழுவதும் ஒவ்வாது விட்டால் செந்தொடை நாமம் பெறும் -நறு மென் குழல் தே மொழியே )நிரை நிரை யாவது
நேர் நிரை நிரை ,நிரை நிரை நிரை முதலானவை .
.(இத்தால் பொருள்கோளை சொன்னபடி -நிரனிறை சுண்ணம் அடிமறி மொழி மாற்று அவை நான்கு என்ப மொழி புனர் இயல்பே )ஓசையாவது –
செப்பலோசை ,அகவலோசை ,முதலான நாலு ஓசையும் ( வெண்பாவுக்கு உரியது செப்பலோசை -அகவலோசை ஆசிரியப்பாவுக்கு -துள்ளலோசை கலிப்பாவுக்கு -தூங்கலோசை வஞ்சிப்பாவுக்கு )தளை யாவது-நேர் ஓன்று ஆசிரிய தளை ,நிரை ஓன்று ஆசிரிய தளை-இயல் சீர் வெண்டளை-வெண் சீர் வெண்டளை -கலித்தளை – ஒன்றிய வஞ்சித்தளை -ஒன்றாத வஞ்சித்தளை –முதலான ஏழு தளையும்-இனமாவது தாழிசை துறை விருத்தம் -என்கிற பாக்கள் இனம் மூன்றும்-யாப்பாவது பிரபந்த ரூபமாய் இருக்கை ( தொகுத்தல் விரித்தல் தோகைவிரி மொழி பெயர்ப்பு எனத்தகு நூல் யாப்பு ஈர் இரண்டு என்ப )பாவாவது -வெண்பா ,ஆசிரியப்பா ,(கலிப்பா வஞ்சிப்பா )முதலான நான்கு பாக்கள்-துறை என்கிற இதுவும் இனத்தின் வகையில் ஒன்றாகையாலே புனருக்தமாம் –அர்த்தாந்தரம் உண்டாகில் கண்டு கொள்வது – (நாற்பெரு பண்ணும் இருபத்தொரு திறனும் ஆகிய இவை
எல்லாம் செந்துறை என்பது – மேற்புறமும் பதினோராடலும் என்ற இவை எல்லாம் வெண்டுறை யாகும் –செந்துறை பாடற்கு ஏற்கும்-ஒலி குறித்தற்றே என்பதால் -/ வெண்டுறை ஆடற்கு ஏற்பது -கூத்தின் மேற்றே என்பதால்-யாப்பு அருங்கல விருத்தி )பண் ஆவது –(ராகங்கள்) முதிர்ந்த குறிஞ்சி ,நட்ட பாஷை ,நட்டராகம் செந்திரி -பியந்தை இந்தளம் முதலானவை-இசையாவது –(ஸ்வர ஸ்தானம்)
குரல் ,துத்தம் ,கைக்கிளை -உழை இளி விளரி தாரம் -என்கிற பேரால் சொல்லப் படுகிற
நிஷாத ரிஷப ,காந்தார ,ஷட்ஜ மத்யம தைவத பஞ்சமங்கள் ஆகிற ஏழு இசையும்
(இளி குரல் துத்தம் நான்கு மாத்திரை விளரி கைக்கிளை மூன்றே யாகும் தாரம் உழை இரண்டாகத் தகுமே )தாளமாவது-கஜகர்ணச் சோராகதி மகரத்வஜ தாளக லஷ்மீ கீர்த்தி பாணி பாதவ் கௌரீ பஞ்சாநநஸ்ததா சதுராம்நாய தாளச்ச தாளோயம் கருடத்வஜ சங்கீத ஸாஸ்த்ர வித்வத்பிரேதா தாளா ப்ரகீர்த்திதா — ) கஜகர்ணம் – சோரகதிர் -மகரத்வஜ -லஷ்மி கீர்த்தி- பாணி -பாதவ் கௌரி -பஞ்சானனம் – , சதுராம் நாயம் .கருடத்வஜம் சங்கீத சாஸ்த்ர வித்வத்பி ரேதே தாளா பிரகீர்திதா -என்கிற படியே கஜகர்ணம் ,சோரகதி , மகரத்வஜம் முதலான தாளங்கள் .. ஆதி – ரூபகம்- சாபு -ஜம்பை -ஏகம் -மட்டியம் -துருவம் -அட –போன்றவை தாள வேறுபாடுகள் –பத்தாவது அம்ச பர்வாதிகளில் அவாந்தர பரிச்சேதங்களான அத்யாயாதிகள் போலே நூற்றினுடைய அவாந்தர பரிச்சேதங்களாய்
இப் பத்தும்-9-4-11- -இவை பத்தும்-5-5-11- -என்று சொல்லப் படுகிற திரு வாய் மொழிகள் . ,
நூறாவது – பிரதான பரிச்சேதங்களான அம்ச பர்வ காண்டாதிகள் போலே நூறே சொன்ன -9-4-11-
பத்து நூறு–6-7-11- என்னும் படி ..நூறு நூறு பாட்டாய் இருந்துள்ள பிரதான பரிச்சேதங்கள் .
ஆயிரமாவது சதுர் விம்சத் சஹஸ்ராணி ஸ்லோகானாம் –பாலகாண்டம் –4-2-என்னுமா போலே இருந்துள்ள மகா பரிச்சேதம்
–முதலான என்கையாலே முதல் இட்டு மூன்று பத்து உத்தர கண்ட விவரணமாய் நடு இட்ட மூன்று பத்தும் பூர்வ கண்ட விவரணமாய் மேல் இட்டு மூன்று பத்தும் அதுக்கு உபயோகியான அர்த்த பிரதி பாதகமாய் மேலில் பத்து பல அவாப்தி கதனமாய் இருக்கையாலே உண்டான விபாக விசேஷங்களும் விவஷிதங்கள் என்று தோற்றுகிறது- ( பிரதம ஷட்கம் கர்ம ஞான யோகம் /மத்யம ஷட்கம் பக்தி யோகம்/ சரம ஷட்கம் பூர்வ ஷட்க சேஷம்-ஸ்ரீ கீதையில் போலே )முதலான செய் கோலம் இதுக்கும் உண்டு -என்றது செய் கோலத்து ஆயிரம் -4–1 -11-என்று கவிக்கு சொல்லுகிற அலங்காரங்களால் குறை வற்ற ஆயிரம் என்கையாலே ,ஏவமாதிகளான சர்வ அலங்காரங்களும் இதுக்கு உண்டு என்கை .

த்‌ரமிடோபநிஷத்‌ விஹிதங்களாய்‌, “’செய்கோலத் தாயிரம்‌” (திருவா. 4 – 1 – 11) என்கிறபடியே ‘எழுத்து, அசை, சீர்‌’ என்று இத்யாதிகளான அலங்காரங்கள்‌ இதுக்குமுண்டென்கிறார்‌ (உதாத்தாதி, என்று தொடங்கி] பாஷாநுகுணமாயும்‌, வேதா அநு குணமாயுமிறே லக்ஷணங்களிருப்பது, ஆகையாலே அந்த பாஷாநுகுணமான லஷணங்களை அருளிச் செய்தது.

அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய்கோலத்து ஆயிரம் சீர்த்தொடைப் பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற் பாலரே.–4-1-11-கவிக்கு செய் -செய்த கவி –வாசிகமான அடிமை என்னுதல்-கோலத்து ஆயிரம்–கவிக்கு சொல்லுகிற அலங்காரங்களால் குறைவற்று இருக்கை
சீர்த்தொடைப் பாடல் இவை பத்தும் -கல்யாண குணங்களை தொடுத்துச் சொன்ன இது திருவாய் மொழி

ஆக இதுக்கு கீழ் திவ்ய பிரபந்தத்துக்கு வேத சாம்யமும் , தத் உப ப்ருஹ்மண சாம்யமும் உண்டு என்னும் இடத்தை அருளிச் செய்தார் .. இங்கன் அன்றிக்கே வேத ஆவிர்ப்பாவ விசேஷமாய் இவ் ஆழ்வாரால் நிர்மிதமாக பிரசித்தமாய் இருப்பது ஓன்று என்று ,இதுக்கு இன்னும் ஒரு யோஜனை பண்ணுகிறார் மேல் .-ஆக இதுக்குக் கீழ்‌ வேதத்தினுடையவும்‌, தது,பப்‌ரும்ஹணத்தினுடையவும் ஸ்தாநத்திலே யாக்கி அவற்றினுடைய ஸப்‌த லக்ஷணங்களும்‌ அர்த்த லக்ஷணங்களும்‌ அருளிச் செய்தார்‌. இனி மேல்‌ ப்ரமேய பூதனான ஸர்வ ஸ்மாத் பரனுடைய அவதார பரம்‌பரையில்‌ எல்லையான அர்ச்சாவதாரம் போலே ப்ரமாண வேதாவதாரத்தினுடைய எல்லை இத் திருவாய்மொழி என்கிறார்‌-

அதவா வேத வேத்ய ந்யாயத்தாலே , பரத்வ பர முது வேதம் வியூஹ வியாப்தி அவதரணங்களில்
ஓதின நீதி கேட்ட மனு படு கதைகளாய் ஆக மூர்த்தியில் பண்ணின தமிழ் ஆனவாறே வேதத்தை திராவிடமாகச் செய்தார் என்னும்–சூரணை -70-

(வேத வேத்ய ந்யாயத்தாலே , பரத்வ பர முது வேதம்- வியூஹத்தில் ஓதின நீதியாய் -வியாப்தி யிலே கேட்ட மனுவாய் – அவதரணங்களிலே படு கதைகளாய் ஆக மூர்த்தியில் பண்ணின தமிழ் ஆயிற்று
ஆதலால் வேதத்தை திராவிடமாகச் செய்தார்-அப்படி இன்றியும்-வியாப்தி -கரந்த சில இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் பரந்து நிற்றல்-ஓதின நீதி -பாஞ்சராத்ரம்-கேட்ட மனு -மனு தர்ம சாஸ்திரம் படுகதைகள் -ஸ்ரீ ராமாயணமும் ஸ்ரீ மஹா பாரதமும் ஆகமூர்த்தி -அர்ச்சாவதாரம் )

அதாவது
கீழ் சொன்ன-உபய பிரகாரமும் -(வேத சாம்யம் -உப ப்ரஹ்மணம் சாம்யம் )அன்றிக்கே ,
வேத வேதே பரே பும்சி ஜாதே வேத பிராசேத ஸாதா சீத் சாஷாத் ராமயணாத்மநா –பாலகாண்டம் –
(வேதங்களால் அறியப்படும் பரமபுருஷன் சக்கரவர்த்தி திருமகனாக அவதரித்தவாறே அந்த வேதங்களும் பிரசேதஸ்ஸின் புதல்வரான ஸ்ரீ வாலமீகி பகவானிடம் இருந்து ஸ்ரீ ராமாயணமாகப் பிறந்தது ) -என்று வேத வேத்யனான பரம புருஷன் தசரத புத்ரனே அவதரித்த இடத்தில் ,
அபௌ ருஷேயமான வேதமும் , ஸ்ரீ வால்மீகி பகவான் பக்கல் ஸ்ரீ இராமாயண ரூபேண அவதரித்தது என்கிற ந்யாயத்தாலே —ஷயந்தமஷ்ய , ரஜஸ ,பராகே-தைத்ரியம் -( இந்த ராக்ஷஸ தாமச குணங்களின் மயமான இப்பிரக்ருதி மண்டலத்தின் மேலே பரமபதத்தில் எழுந்து அருளி இருப்பவரான -)
ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத்–புருஷ ஸூக்தம் –( சூரியனனுடைய வர்ணம் போன்ற வர்ணத்தை யுடைய இந்த பரம புருஷனை நான் அறிவேன் -அவன் தமஸ்ஸாகிற பிரகிருதி மண்டலத்துக்கு அப்பால் பரமபதத்தில் இருக்கிறான் ) தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூரயே –யஜுர் வேதம் ( விஷ்ணுவுடைய அந்த உயர்ந்த பரமபதத்தை நித்ய ஸூரீகள் எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள் )யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமன் ,சோஸ்நுதே சர்வான் காமான் சக – ப்ரஹ்மணா விபிச்சதா -தைத்ரியம்( ஹிருதய குகையில் உள்ள இந்த ப்ரஹ்மத்தை எவன் வழிபடுகிறானோ அவன் பிரகிருதி சம்பந்தம் இல்லாதது என்று சொல்லப்படும் பரமபதத்தில் அந்த ப்ரஹ்மத்துடன் கூட எல்லாக் கல்யாண குணங்களையும் அனுபவிக்கிறான் )- இத்யாதிகளாலே
பல விடங்களிலும் ,ஈஸ்வரனுடைய பராவஸ்தையைப் பிரதி பாதிக்கையாலே ,பரத்வத்திலே நோக்காய் ,-முது வேதம்—திருவாய் -1-6–2-என்கிற படியே-புருஷ புத்தி பிரபவ தோஷம் கந்தம் இல்லாதபடி அநாதித்வேன பழையதாய் இருக்கும் வேதம் ஆனது—

வியூகத்தில் ஓதின நீதியாய் –அதாவது – ஷாண் குண்யாத் வாஸூ தேவ பர இதி ச பவான் முக்த போக்ய –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -யுத்த -39- ( தேவரீர் பரவாஸூ திவ்ய மங்கள விக்ரகத்தோடே கூடினவராய் ஆறு குணங்களால் முக்தருக்கு இனியராகா நின்றீர் ) என்கிற படியே ஷாட் குணிய பரி பூர்ணனாய் , முக்த போக்யனாய் இருக்கிற அந்த பரனாவன்-பலாட்யாத் போதாத் சங்கர்ஷணஸ் த்வம் ஹரசி விதனுஷே சாஸ்த்ர மைச்வர்ய வீர்யாத் , பிரத்யும்னஸ் சரக்க தர்மவ் நயசி ச பகவன் சக்தி தேஜோ அநிருத்தோ பிப்ராண பாசி தத்வம் கமயசிச ததா வ்யூஹ்ய -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் உத்த -39- (வலிமையோடு கூடின ஞானத்தால் சங்கர்ஷணராகிய நீர் சம்ஹாரத்தைச் செய்கின்றீர் -–சாஸ்திரங்களையும் நன்கு விரிவு படுத்துகின்றீர்– ப்ரத்யும்னராய் ஐஸ்வர்யத்தாலும் வீர்யத்தாலும் ஸ்ருஷ்ட்டியையும் செய்து தர்மத்தை பரப்புகின்றீர்- அப்படியே அநிருத்தராய் சக்தியையும் ஒளியையும் தரித்துக் கொண்டு ரஷிக்கவும் செய்து தத்துவத்தையும் பரப்புகின்றீர்-) என்கிற படி சர்க்காதி நிர்வஹனார்தமாக வியூஹி பவித்த அவஸ்தையில் –

சங்கர்ஷணாதி சத்பாவம் பஜே லோக ஹிதேப்யச கிரமச
பிரளயோத்பத்தி ஸ்த்திபி பிராண்யனுக்ரக பிரயோஜன மதான்யச்ச
சாஸ்த்ர சாஸ்த்தார்த்த தத்பலை தசாஸ் துர்ய ஸூஷூப் த்யாத் யாச்
சதுர் வியூஹேபி லஷயே –
ஸ்ரீ விஷ்வக்ஸேன சம்ஹிதை
( லோக க்ஷேமார்த்தமாக ஸ்வ இச்சையால் சங்கர்ஷணாதி முதலிய வ்யூஹ நிலைகளை அடைகிறேன் –முறையாக சம்ஹாரம் ஸ்ருஷ்ட்டி ரக்ஷணம் என்பைகளால் உயிர்களுக்கு அனுக்ரஹம் ஏற்படுகின்றது –பின்னும் சாஸ்திரம் -சாஸ்திரத்தின் பொருளான தர்மம் – அவற்றாலாய தத்வ ஞானம் முதலிய பயன்களும் இருக்கின்றன –நான்கு வியூகங்களிலும் துரியம் ஸூஷூப்தி இவை முதலான நிலைகளையும் அறிந்து கோடல் வேண்டும் ) இத்யாதியாலும்-தத்ர ஞான பல த்வந்த் வாத் ரூபம் சங்கர்ஷணம் ஹரே ஐஸ் வர்ய வீர்ய சம்பேதாத் ரூபம் பிரத்யும்ன முச்யதே சக்தி தேஜஸ் சமுத்கர்ஷா தா அநிருத்த தனுர் ஹரே ஏதே சக்தி மயா வியூஹா குணோன் மேஷ ஸ்வ லஷணா -ஸ்ரீ விஷ்வக்ஸேன சம்ஹிதை – (அந்த வியூகத்தில் ஞானம் பலம் முதலிய குணங்களின் சேர்க்கையால் சங்கர்ஷண திரு உருவம் உண்டாகிறது –ஐஸ்வர்யம் வீர்யம் ப்ரத்யும்னன் திரு மேனி / சக்தி தேஜஸ் மூலம் அநிருத்தன் – இந்த சக்தி மயங்களான வியூகங்கள் குணங்களின் பிரகாசங்களுக்கு இலக்கணங்கள் )இத்யாதியாலும்-அந்த வியூஹ விசேஷ தத் குண ரூப க்ருத்யாதிகளை விஸ்தரேண பிரதி பாதிக்கைக்காக பஞ்ச ராத்ரச்ய க்ருஸ்த்னச்ய வக்தா நாராயணா ஸ்வயம்–பாரதம் -(எல்லா பாஞ்ச ராத்ரங்களையும் சொன்னவன் நாராயணனே )என்கிற படியே சர்வத்துக்கும் ஆதி வக்தா ஈஸ்வரன் ஆகையாலே –ஓதினாய் நீதி –இரண்டாம் திருவந்தாதி –48-என்று சொல்லப் பட்ட பாஞ்ச ராத்ரமாய் ஆவிர்பவித்து-

வியாப்தியில் கேட்ட மனுவாய்-அதாவது இப்படி வியூஹிப்பித்த மாத்ரம் அன்றிக்கே சர்வ சப்த வாஸ்யனாய் சர்வ கர்ம சமாராத்யனாய் கொண்டு சர்வ அந்தர்யாமித்வேன வியாபித்து நிற்கும் அவஸ்தையில் –ஆபோ நாரா இதி ப்ராக்தோ ஆபோ வை நர ஸூனவே
தா யதஸ்யாயநம் பூர்வம் தேன நாராயண ஸ்ம்ருத –மனு ஸ்ம்ருதி -1-19-
(தண்ணீரானது நரேன் என்ற பரமாத்மாவினிடம் இருந்து தோன்றியது -ஆதலால் நாரம் என்று சொல்லப்படுகிறது –-முன்பு யாது ஒரு காரணத்தால் அந்நீரானது பரமாத்மாவுக்கு சரீரமாக இருந்ததோ அதனால் நாராயணன் என்று எண்ணப்படுகிறான் )-இத்யாதியாலும்

பிரசாசிதாரம் சர்வேஷாம் அணீயாம் சமணீயசாம்
ருக்மாபம் ஸ்வப்னதீகம்யம் வித்யாத்து புருஷம் பரம்
–மனு ஸ்ம்ருதி -12–122-
( பரம புருஷனை எல்லாவற்றையும் நியமிக்கப்படுகின்றவனாகவும் சூஷ்மமானத்தைக் காட்டிலும் சூஷ்மமானவனாயும் ஓடவைத்த பொன்னிறம் யுடையவனாகவும் கனவில் உள்ள புத்தி போன்ற யோகத்தால் அடையத் தக்கவனாயும் அறிதல் வேண்டும் )
ஏநமேக வதந்த்யக்னிம் மருதோன்ய பிரஜாபதீம்
இந்திரமே கேபரே பிராண மபரே ப்ரஹ்ம சாஸ்வதம்–
மனு ஸ்ம்ருதி -12-123-
(இவனைச் சிலர் நெருப்பு என்று சொல்கிறார்கள் – வேறு சிலர் மருத்துக்களாவும் சொல்கிறார்கள் -சிலர் பிரமனாகவும் இந்த்ரனாகவும் மற்றும் பிராணனாகவும் மற்றும் சிலர் நித்தியமான ப்ரஹ்மமாகவும் சொல்கிறார்கள் )
ஏஷ சர்வாணி பூதானி பஞ்சபிர் வ்யாப்ய மூர்திபி
ஜன்ம வ்ருத்தி ஷயைர் நித்யம் சம்சார யதி சக்ரவத்
–மனு ஸ்ம்ருதி -12-124 –
(இவன் எல்லா உயிர்களையும் மண் முதலிய ஐந்து ஐந்து பூதங்களாலான சரீரங்களால் பரந்து பிறத்தல் வளர்த்தல் இறத்தல் என்னும் இவைகளால் எப்பொழுதும் சக்கரம் போன்று சுழலும்படி செய்கிறான் )இத்யாதியாலும்

ச ஆத்மா அங்கான்யன்ய தேவதா-தைத்ரியம் –என்கிற படியே சர்வ தேவதா சரீரதையா சர்வ கர்ம சாமார்த்யன் –இவன் என்று தோற்றும் படி பூர்வ பாக உப ப்ரஹ்மணமாய்க் கொண்டு சர்வ அந்தர்யாமிதயா வ்யாப்தியை பிரதி பாதிக்கைக்காக-கேட்ட மனு –நான்முகன்–76–என்கிற படியே
ஆப்தமாய் கேட்கப் பட்ட ,மன்வாதி ஸ்ம்ருதியாய் ஆவீர் பாவித்து-அவதரணத்தில் படுகதைகளாய்
அதாவது அப்படி அதீந்த்ரியனாய் நிற்கிறவன் சாது பரித்ராணாதிகளுக்காக ஸ்ரீ ராம ஸ்ரீ கிருக்ஷ்ணாத்ய அவதாரங்களைப் பண்ணின அவஸ்தையில் தத் அவதார சேஷ்ட்யாதிகளை
பிரதி பாதிக்கைக்காக -படு கதையும் -நான்முகன் -76-என்கிற படியே வ்ருத்த கீர்த்தன ரூபமான-பாடும் கதையாக – ஸ்ரீ இராமாயண ஸ்ரீ மகா பாரத இதிகாசங்களாய் ஆவீர் பாவித்து –

ஆக மூர்த்தியை பண்ணின தமிழனாவாறே -அதாவது-அப்படி அவதார முகேன நின்று ரஷித்து அருளுமவன் ,அவதாரத்தில் பிற்பட்டாரும் இழவாத படி – ஆக மூர்த்தி யாய வண்ணம் என் கொல் –திருச்சந்த -17-(யாக மூர்த்தி -ஆக மூர்த்தியாக -யஜ தேவ பூஜாயாம் -அர்ச்சிக்கத்தக்க மூர்த்தி
அன்றிக்கே இப்படியாக வேண்டும் என்று சங்கல்பித்துக் கொண்டு தோன்றிய திவ்ய மங்கள விக்ரஹம் -என்றுமாம் ) என்று விசேஷஜ்ஞர் ஈடுபடும் படி ஆஸ்ரித ஹிருதய அனுகுணமாக – ( நெஞ்சில் நினைப்பவன் எவன் -என்பதை நாமும் அறியும் படி மா முனிகள் )தமர் உகந்தது எவ் உருவம் –முதல் திருவந்தாதி -44–இத்யாதிப் படியே-த்ரவ்ய நாம ரூப ஆசன சயனாதிகளிலும்-தேச கால அதிகாராதிகளிலும் ஸ்நான போஜனாதிகளிலும் ஒரு நியமமற பண்ணிக் கொண்டு அத்யந்த ஸூலபனாய் இருக்கும் அர்ச்சாவாதார அவஸ்தையில் -தத் வைபவ பிரதிபாதன அர்த்தமாக
சடகோபன் பண்ணிய தமிழ்-2-7–13–என்னும் படி பிரமேயம் தன்னைப் போலே தானும் சர்வ ஸூலபமாய் சர்வ அதிகாரமாய் ஆகைக்கு உறுப்பாக த்ராவிட ரூபமாக கொண்டு செய்வதாக சொல்லுவதும் ஒரு பிரகாரம் உண்டு என்கை..எய்தற்கு அறிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் செய்தற்கு உலகில் வரும் சடகோபனை –இராமானுச நூற்றந்தாதி -18-என்னக் கடவதிறே..

இவை எல்லாத்திலும் -( வேதம் -பாஞ்சராத்ரம் மனு சாஸ்திரம் ஸ்ரீ ராமாயணம் ஸ்ரீ மஹா பாரதம் திருவாய் மொழி ) எல்லாம் சொல்லுமே ஆகிலும் ஒன்றுக்கு ஒன்றிலே நோக்காய் இருக்கையாலே இறே இவர் இப்படி அருளிச் செய்தது .. இது தான் பரத்வ பரம் -என்கையாலே ஸ்பஷ்டம் இறே ..

(அதவா) என்றது – கீழ்ச் சொன்ன யோஜனை யொழிய யோஜநாந்தர மென்கை. “வேத வேத்‌யே பரே பும்ஸி ஜாதே தஸரதாத்மஜே ! வேதா ப்ராசேத ஸாதாஸீத்‌ ஸாக்ஷாத்‌ ராமாயணாத்மநா”” (ரா. பா.) என்கிறபடியே வேத வேத்‌யனான பரம புருஷன்‌ தஸரத புத்ரனாய்‌ வந்தவதரித்த விடத்தில்‌ அபெள்ருஷேயமான வேதமும்‌ ஸ்ரீவால்மீகி பகவான் பக்கலிலே ஸ்ரீராமாயணமாய்‌ வந்தவதரித்த தென்கிற ந்யாயத்தாலே. (பரத்வபரமுதுவேதம்‌) “’முதுவேத முதல்வனுக்கு?” (திருவா. 1 – 6 – 2) என்கிற ப்ரத்வ ப்ரதிபாதகமான பழைய வேதம்‌. இத்தால்‌ நித்ய நிர்தோஷமாய்‌, அபெளருஷேயமாய்‌ ப்‌ரம விப்ரலம்பாதி, தோஷ ரஹிதமான வேதம்‌ என்றபடி.-அந்த பரத்வம் தானே வ்யூஹீபவித்த அவஸ்தையில்‌ அந்த வேதந்தானே “பஞ்சராத்ரஸ்ய க்ருத்ஸ்நஸ்ய வக்தா நாராயணஸ் ஸ்வயம்‌”” (பர. மோ.) என்றும்‌, ““ஓதினாய்‌ நீதி”‘ (இ, திருவ.48) என்றும்‌ சொல்லுகிறபடியே அவனருளிச் செய்த ஸ்ரீபாஞ்சராத்ர ஸாஸ்த்ரமாய்‌ வந்தவதரித்தும்‌,-அந்தர்யாமியான அவஸ்தையில்‌ “கேட்ட மனுவும்‌” (நா.திருவ. 76) என்கிறபடியே ஆசார வ்யவஹார ப்ராயஸ் சித்தங்களுக்கு ப்ரகாஸ கமான மந்வாதி ஸ்ம்ருதிகளாயும்‌,ராம க்ருஷ்ணாத்‌ யவதாரங்களில்‌ வந்தவாறே ”பாட்டும்‌ முறையும்‌ படு கதையும்‌‘” (நா. திருவ. 76) என்கிறபடியே வேதங்கள் தான்‌ இதிஹாஸாதிகளானாப்‌ போலேயும்‌,
”ஆகமூர்த்தியாய வண்ணம்‌”” (திருச்ச, 17) என்கிறபடியே ஸர்வேஸ்வரன்‌ ஆஸ்ரித ஹ்ருதயாநுகுணமாக “’தமருகந்ததெவ்வுருவம்‌”'(மூ.திரூவ. 45) என்கிறபடியே த்ரவ்ய-நாம-ரூப-ஆஸந-ஸயந-தேஸ – கால-அதிகாயு-போஜநாதீ ஸகல வ்யாபாரங்‌களையும்‌ ஆஸ்ரித ஹ்ருதயாநுகுணமாக்கிக் கொண்டு ஸர்வ ஸுலபமான அர்ச்சாவதாரமான விடத்தில்‌ ப்ரமாணமும்‌ அப்படியே ப்ரமேயம் போலே ஸர்வ ஸுலபமாய்‌ ஸர்வாகதிகாரமாம்படி த்‌ரவிட ஸம்ஹிதையாக ப்ராப்த மாகையாலே **பண்ணிய தமிழ் மாலை”” (திருவா. 2 – 7 – 13) என்கிறபடியே வேதத்தைத்‌ திருவாய்மொழியாகச்‌ செய்தருளினார்‌ என்னவுமாம்‌ என்கிறார்‌. அந்த வேதம்‌ முதலானவை எல்லாத்திலும்‌ எல்லாம்‌ சொல்லிற்றே யாகிலும்‌ ஒன்றுக் கொன்றிலே நோக்காகக் கடவது –

மதுவார் தண்ணம் துழாயான் –முது வேத முதல்வனுக்கு
எதுவேது என் பணி என்னாது அதுவே ஆட்செய்யுமீடே –1-6-2—இவ்விஷயத்தை பேசும் போது
அபௌரு ஷேயம் ஆகையாலே நித்தியமான வேதமே யாக வேண்டாவோ -என்கிறார் –
வேத முதல்வன் ஆகையாவது -சாஸ்திர யோநித்வாத் -என்கிறபடியே வேத பிரதிபாத்யன் என்கை
திருத் துழாய் மாலையாலே அலங்கருதன் என்கைக்கு மேல் இல்லை சர்வாதிகன் என்கைக்கு
அதுக்கு மேலே ஓன்று இறே வேதைக சமதிகன்யன் என்னுமது-

உணர்ந்தாய் மறை நான்கும் ஓதினாய் நீதி
மணந்தாய் மலர்மகள் தோள் மாலே -மணந்தாய் போய்
வேயிரும் சாரல் வியலிரு ஞாலம் சூழ்
மா யிரும் சோலை மலை——48—வேத உப ப்ரும்ஹணமான இதிஹாச புராணங்களை உண்டாக்கினாய் அந்த வேதங்களின் பொருளை விவரிக்க வல்ல ஸ்ம்ருதி முதலிய உப ப்ரும்ஹண நூல்களையும் –மநு முதலிய மஹர்ஷிகள் முகமாக) அருளிச் செய்கின்றாய் ப்ராஹ்மணமான -ஸ்ம்ருதி  இதிஹாச புராணங்களையும் யுண்டாக்கி – திரு முகத்துக்கு படியெடுத்துக் காட்டினாப் போலே –

பாட்டும் முறையும் படுகதையும் பல் பொருளும்
ஈட்டிய தீயும் இரு விசும்பும் -கேட்ட
மனுவும் சுருதி மறை நான்கும் மாயன்
தனமாயையில் பட்டதற்பு-76-—பாட்டுக்களும் அவற்றுக்கு வ்யக்தமான ரூபமானவையும் –
இசையும் இயலும் என்னவுமாம் – –படுகதை இத்யாதி-உத் க்ரந்தமாகச் சொல்லும் கதைகளும் -அவற்றின் யுடைய பஹூ விதமான பொருள்களும்-பாட்டும் – கீர்த்தனமான இதிஹாசங்கள்-
பல் பொருளும்--அவற்றுக்கு வ்யாக்யனாமான நாநாவான அவ்வர்த்தங்களைச் சொல்லுகிற புராணங்கள் என்றுமாம் –ஈட்டிய தீயும் இரு விசும்பும்-ஒன்றிலே எல்லாம் யுண்டாம்படி பஞ்சீ கரணத்தாலே  சேர்க்கப் பட்ட அக்னியும் பரப்பை யுடைத்தான ஆகாசமும்-இவை அண்ட காரணமான பூத பஞ்சகங்களுக்கும் உபலஷிதையான தேவாதி கார்ய லஷணங்களுக்கும் உப லஷணம்-
கேட்ட மனுவும் – ஆப்த தமமாக ஜகத்து எல்லாம் கேட்டுப் போருகிற மனுவும்
சுருதி மறை நான்கும் – ஓதி வருகிற நாலு வேதங்களும்-மாயன் – ஆச்சர்ய பூதனானவனுடைய
தன மாயையில் பட்ட தற்பு- தன்னுடைய சங்கல்ப்பத்திலே யுண்டான தத்தவத்தை யுடைத்து
தற்பு – தத்த்வார்த்தம் –

ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி நாலு மூர்த்தி நன்மை சேர்
போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி எண்ணில் மூர்த்தியாய்
நாக மூர்த்தி சயநமாய் நலம் கடல் கிடந்தது மேல்
ஆக மூர்த்தி யாய வண்ணம் என் கொல் ஆதி தேவனே –17-ஆஸ்ரிதர் தேவரீருக்கு விக்ரஹமாக  நினைத்த த்ரவ்யத்திலே ஸ்வ அசாதாராண விக்ரஹத்தில் பண்ணும் விருப்பத்தை பண்ணுகிற இஸ் ஸ்வபாவம் என்னாய் இருக்கிறது –ஆஸ்ரிதர் உனக்கு விக்ரஹமாக நினைத்த த்ரவ்யத்தை இறே ஸ்வ அசாதாராண விக்ரஹத்தோபாதி விரும்புவது -தமர் உகந்த எவ்வுருவம் அவ்வுருவம் ஆனாய்-ஜகத்துக்கு எல்லாம் காரண பூதனான நீ கார்ய பூதனாய் இருப்பான் ஒரு சேதனனுடைய
இச்ச அதீநமாக உன்னைப் பண்ணுவதே –

தமருகந்த   தெவ் வுருவம் அவ் வுருவம் தானே
தமருகந்த தெப்பெர் மற்றப் பேர்
தமருகந்து
எவ் வண்ணம் சிந்தித்து இமையா திருப்பரே
அவ் வண்ணம் ஆழியானாம் -44–-யார் எப்படி என்னை சேவிக்க ஆசைப்படுகிறானோ ) நமக்கு நல்லவர்கள் இன்னார் என்றும் இல்லை -இன்னபடி பஜிப்பார் ஒன்றும் இல்லை –அவர்கள் நின்ற நிலையிலே அவர்கள் பஜித்த படியே அவர்களை பற்றுவேன் என்கிறது -தமரானவர்கள் பிராகிருத த்ரவ்யங்களிலே ஒன்றை உனக்குத் திரு மேனியாகக் கொள்ள வேணும் -என்றால் அத்தைத் திருமேனியாகக் கொள்ளும் – -சதங்கை அழகியார் -என்று திரு நாமம் சாத்தினார் ஆகில்
நாராயணாதி நாமங்களைக் காட்டிலும் அத்தை விரும்பும் –

வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகனை
கண்ணனை நெடுமாலைத் தென் குருகூத்ச் சடகோபன்
பண்ணிய தமிழ் மாலை யாயிரத்துள்
இவை பன்னிரண்டும்
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே–2-7-13-வேதம் போலே அடி அன்றிக்கே இருக்கிறது அன்று -அப்வருஷேயம் -என்னுமதில் காட்டிலும் விலக்ஷணமாய் இருக்கிறதாயிற்று வக்த்ரு சுத்தியால்-

எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபனை
ச் சிந்தை யுள்ளே
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம்
உய்தற்கு உதவும் இராமானுசன் எம் உறு துணையே – 18- துஷ் ப்ராபங்களான வேதங்களை –
பிரவணம் போலே சுருங்கி இருத்தல்-வேதம் போலே பரந்து இருத்தல் -செய்கை அன்றிக்கே -ஆயிரம் பாட்டாகவும் அது தான் சாரமாகவும்-ஸ்திரீ பாலர்களுக்கும் கற்கலாம் படியான பாஷையிலே செய்து அருளுகைக்கு லோகத்திலே வந்து அவதரித்து அருளினவராய் -பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆகிய சடர்க்கு பிரதிபடராய் இருக்கையாலே – ஸ்ரீ சடகோபர் -என்னும் திரு நாமத்தை உடையவரான ஆழ்வாரை–

ஆனால் அபௌருஷேயமான வேதம் இப்படி அவஸ்தாந்தரத்தை பஜித்ததாகில் கலுஷமாய் அர்த்த பிரகாசத்வம் குன்றாதோ -என்ன – வக்த்ரு விசேஷத்தாலே அது மற்றை படியாய்த்து-( தெளிந்து பிரகாசம் மிக்கு ) என்னும் அத்தை சத்ருஷ்டாந்தமாக அருளி செய்கிறார்–ஆனால்‌ இப்படி பரத்வ ப்ரதிபாதகமான வேதம்‌ அவஸ்தாந்தர பாக்காயுள்ள வளவில்‌ ப்ரமேய ப்ரகாஸகமாக வற்றோ என்ன, இவ் வவஸ்தையிலே யதாவாக ப்ரகஸிக்கும்‌ என்னுமிடத்தை த்ருஷ்டாந்த முகத்தாலே பேசுகிறார்‌

மண்ணாடின சக்ய ஜலம் தோதவத்தி சங்கணி துறையிலே துகில் வண்ணத் தெண்ணீராய்
அந்தஸ் ஸ்தத்தத்தை காட்டுமா போலே அல்ப ஸ்ருதர் கலக்கின சுருதி நன் ஞானத் துறை சேர்ந்து
தெளி உற்று ஆழ் பொருளை அறிவித்தது .-சூரணை -71-

அதாவது
உச்ச ஸ்தலத்தில் நின்றும் ,வேகத்தோடு வந்து பூமியில் விழுகையாலே, ம்ருன் மிஸ்ரமாய் கலங்கி சஹ்யத்தில் நின்று வரும் ஜலமானது ,
தோதவத்தி தூய் மறையோர் துறை -பெரியாழ்வார் -4-8-1-என்றும்
பொருநல் சங்கணி துறை –திருவாய் -10-3-11-என்றும் சொல்லுகிற துறைகளிலே வந்தவாறே துறை வாசியாலே ,
துகில் வண்ண தூ நீர்–திருவாய் -7-2-11- -என்றும்
தெண்ணீர் பொன்னி–பெருமாள் திரு -1-1- -என்றும் சொல்லுகிற படியே தெளிந்த நீராய் ,தனக்குள்ளே கிடக்கிற பதார்த்தங்களை பிரகாசிக்குமா போலே-பிபேத் யல்ப ச்ருதான் வேதோ மாமயம் பிரதரிஷ்யதி –என்கிற படி –வேதம் தான் நடுங்கும் படி ,தத் அபிப்ராயம் அறியாமல் ,பிரதி பந்தங்களை சொல்லும் அல்ப ஸ்ருதர் ஒரு வாக்யத்து அர்த்தம் சொல்ல புக்கால் ,அது தன்னில் நின்று விபிரதிபத்தி பண்ணி
த்வைதம் என்பார் அத்வைதம் என்பார் த்வைதாத்வைதம் என்பராய் இப்படி கலக்க கலங்கிய சுருதியானது-நல் ஞானத் துறை -என்று இவர் தாம் அருளிச் செய்த படி-யதா ஞானத்து துறையான இவ் ஆழ்வார் பக்கலிலே வந்து சேர்ந்து ,-தெளி உற்ற ஆயிரம் -என்கிற படியே முன்புத்தை கலக்கம் தீர்ந்து ,தெளிவை அடைந்து ,-அறிவித்தேன் ஆழ் பொருளை -என்கிற படியே அகாதமாய் ,பரம ரகஸ்யமான அர்த்த விசேஷங்களை எல்லாம் தோன்றுவித்தது என்கை-

மண்ணாடின ஸஹ்ய ஜலமாவது – ‘*தோதவத்தித் தூய் மறையோர்‌ துறை படிய”’ (பெரியா. 4 – 8 – 1) என்றும்‌, “பொருநல்‌ சங்கணி துறை ”” (திருவா. 10 – 3 – 11) என்றும்‌ சொல்லுகிற துறைகளிலே ‘ ‘துகில் வண்ணத் தூநீர்ச் சேர்ப்பன்‌’‘ (திருவா. 7 – 211) என்றும்‌, “தெண்ணீர்ப் பொன்னி” (பெருமா. தி. 1 – 1 ) என்றும்‌ சொல்லுகிறபடியே தெளிந்த நீராய்த்‌ தனக்குள்ளே கிடக்கிற பதார்த்தங்களை ப்ரகாஸிப்பிக்குமாப்‌ போலே, அல்ப ஸ்ருதர்‌ கலக்கின ஸ்ருதி – ”இதிஹாஸ புராணாப்‌யாம்‌ வேதம்‌ ஸமுபப்‌ரும்ஹயேத்‌ பிபேத் யல்ப ஸ்ருதாத்‌ வேத-மாமயம்‌ ப்ரதரிஷ்யதி” (பர. ஆதி.) என்கிறபடியே அல்ப ஸ்ருதராயிருக்கு மவர்கள்‌ ஒரு ஸ்ருதி வாக்யத்தைப் பிடித்து இதுக்குப் பொருள்‌ த்வைதமென்றும்‌, அத்‌வைதமென்றும்‌, த்‌வைதாத்‌வைதமென்றும்‌ இப்படி பஹு ப்ரகாரமாகக் கலக்க, கலங்கின ஸ்ருதியானது – (நன் ஞானத்துறை சேர்ந்து) ‘“ரமணீயம்‌ ப்ரஸந் நாம்பு, ஸந் மநுஷ்யமதோ யத (ரா. பரா. 2 – 5) என்றும்‌, ““காலை நன்‌ ஞானத்‌துறை”: (திருவிரு. 93) என்றும்‌ சொல்லுகிறபடியே ஞானத் துறையான இவ்வாழ்வார்‌ பக்கலிலே சேர்ந்து, (தெளிவுற்று ஆழ் பொருளை அறிவித்தது) *’தெளிவுற்ற வரயிரம்‌ ” (திருவா, 7 – 5 – 11) என்கிறபடியே ப்ரஸந்ந கம்பீரமான ஆயிரம் பாட்டாய்‌, ““அறிவித்தேன் ஆழ்பொருளை ” (நா. திருவ. 1) என்கிறபடியே அகதமாய்‌ பரம ரஹஸ்யமான அர்த்த விஸேஷங்களை யெல்லாம்‌ யதா தர்ஸநம்‌ பண்ணுவிக்கும் என்கிறார் –

மா தவத்தோன் புத்திரன் போய் மறி கடல் வாய் மாண்டானை
ஓதுவித்த தக்கணையா வுரு வுருவே கொடுத்தானூர்
தோதவத்தி தூய்  மறையோர்  துறை படிய துளும்பி எங்கும்
போதில் வைத்த தேன் சொரியும் புனல் அரங்கம் என்பதுவே – 4-8- 1—சமாசார (சம்யக் ஆச்சாரமாய் ) பரர் ஆகையாலே – பரிசுத்தமாய் தோய்த்து உலர்த்தின வஸ்தரங்களை தரித்து கொண்டு இருப்பாராய்-
தூய்தான மறையே  தங்களுக்கு நிரூபகமாய் உடையராய் இருக்குமவர்கள்–மறைக்கு தூய்மையாவது –அபவ்ருஷேயமாய்-நித்ய – நிர்தோஷமாய் – இருக்கையாலேசர்வ பிரமாண விலஷணமாய்- பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை –  உள்ளபடி பிரதி பாதிக்க வற்றாய் இருக்கை –இத்தை இவர்கள் நிரூபகமாக உடையராய் இருக்கை யாவதுஸ்வாத்யாயோ அத்யே தவ்யே-என்கிற விதி பிரகாரம் தப்பாமல் அத்யயனம் பண்ணி – அதில் அர்த்த ஞானத்தையும் அதுக்கு அனுரூபமான அனுஷ்டானத்தையும் உடையராய் இருக்கையாலே வைதிகர் என்றே நிரூபகமாய் படி இருக்கைதுறை படி- கங்கையில் புனிதமாய காவேரி –என்கிறபடி கலந்து இழி புனலான கங்கையில் காட்டிலும் பரி சுத்தமான காவேரியிலே பெரிய பெருமாளுடைய திருக் கண் நோக்கான திரு முகத்  துறை முதலான துறைகளிலே – திரள் திரளாக அவஹாகித்து ஸ்நானம் பண்ணி-

செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு அத் திருவடி திருவடி மேல் பொருநல்
சங்கணி துறைவன்
வண்தென் குருகூர் வண் சடகோபன் சொல்லாயிரத்துள்
மங்கையர் ஆய்ச்சியர் ஆராய்ந்த மாலை அவனோடும் பிரிவதற்கு இரங்கி தையல்
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன இவையும் பத்து அவற்றின் சார்வே-10-3-11-இவர் இருந்த இடத்தே சத்துக்கள் சேருமா போலே -சங்குகளாலே அணியப் பட்ட -திருப் பொருநலை யுடையராய் –

முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் மொய்புனல் பொருநல்
துகில் வண்ணத் தூ நீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ் வண் குரு கூர்ச் சட கோபன்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே.–7-2-11-பொருநலில் துகிலினுடைய வர்ணமான சுத்த ஜலத்திலே சேர்க்கப் பட்டவர்–தம்முடைய திரு உள்ளம் போலே ப்ரசன்னமான ஜலத்தோடே சங்கதரானவர்-தூ நீர்த் துறைவன்-

இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த
அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
திரு அரங்க பெரு நகருள் தெண்ணீர் பொன்னி திரை கையால் அடி வருட பள்ளி கொள்ளும்
கருமணியை கோமளத்தை  கண்டு கொண்டு என் கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே–1-1-தெளிந்த நீரை உடைத்த காவேரி -திரையாகிற கைகளாலே திருவடிகளை வருட-

காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்
மாலை வெய்யோன் பட வையகம் பரவுவர் அன்ன கண்டும்
காலை நன் ஞானத் துறை படிந்தாடிக் கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் அவன் மைப்படியே –  -93–காலை –சத்வோத்தரமான காலையிலே –நல் ஞானம் –ஞானம் ஆகில்-பகவத் விஷயத்தை பற்றி அன்றி இராது இறே –ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -(முதல் திருவந்தாதி )என்னக் கடவது இறே –தத் ஜ்ஞானம் அஞ்ஞானம் அதோன்யதுக்தம் (பராசர மகரிஷி )- என்றும் –வித்யான் யாசில் பகை புணம் – புறம்பே ஒன்றை அறிந்ததோடு துன்னம் பெய்ய அறிந்ததோடு வாசி இல்லை இறே –துறை படிந்தாடி –ஜ்ஞானம் ஆகிற இத் தீர்த்தத்திலே புக்கு அவஹாகித்து –

தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக்கதி செய்யும்
தெளிவுற்ற கண்ணனைத் தென் குரு கூர்ச்சட கோபன் சொல்
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்
தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே.–7-5-11-தெளிவுற்ற கண்ணனைத் –நாம் இவன் கார்யம் செய்யக் கடவோம் -என்று இருக்கும் கிருஷ்ணனை -இவன் கலங்கின அன்றும் தான் தெளிந்து முடிய நடத்துமவனை-தென் குரு கூர்ச்சட கோபன் சொல்-அவன் படி கிடக்க -சொன்னவர் படியாலும் ஆப்தர் என்று விஸ்வஸித்து இருக்கலாம் வார்த்தை –-தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்
இவை இரண்டும் கிடக்க இப்பாசுரம் தானே விஸ்வசிக்கலாம் படி தெளிவைப் பிறப்பிக்கும் இத்தை அப்யசிப்பவர்கள்-

நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்– யான்முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளைச்
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து–1-ப்ரஹ்மாவை சர்வேஸ்வரன் சிருஷ்டித்தான் – ஈஸ்வரனும் அறிய வேண்டாதே ப்ரஹ்மா தானே பிரதானனாய் ருத்ரனை சிருஷ்டித்தான் –அப்படி நானும் சொல்ல வல்லேனாய் அந்தாதி முகத்தாலே அகாதமான வேதார்த்தை அறிவித்தேன் –

ஆனால் வேதத்துக்கு அத்யயன கால நியதியும் ,அதிகாரி நியதியும் உண்டாய் இரா நின்றதே -அந்த வேத அவதாரமான இதுக்கு அவை இன்றிக்கே ஒழிவான் என் என்ன அருளி செய்கிறார் -இனிமேல்‌ அந்த ப்ரதாநமான வேதத்திற் காட்டிலும்‌ இதினுடைய அவதார ரூபமான திருவாய்மொழிக்கு இவருடைய ஸ்பர்ஸத்தாலே வந்த ஏற்றம்‌ சொல்லுகிறது

மேகம் பருகின சமுத்ராம்பு போலே நூற் கடல் சொல் இவர் வாயான வாய்த் திருந்தின வாறே சர்வதா சர்வோப ஜீவ்யம் ஆமே –சூரணை -72-

அதாவது –
விரசமாய் ,தத் அந்தர்கத சத்வங்களுக்கு ஒழிய புறம்புள்ளார்க்கு உப ஜீவ்யம் அன்றிக்கே -பர்வங்களில் ஒழிய ஸ்பர்சிக்கலாகாது என்கையாலே , ஸ்பர்ச கால நியதியை உடைத்தாய் ,இருக்கிற சமுத்திர ஜலமானது , மேகம் பருகி வர்ஷிக்க , அந்த மேக ஸ்பர்சத்தாலே, தன் விரதசை போய் , சர்வதா சர்வ ஜன போக்யமாம் போலே ,-ஸ்ராவண்யாம் ப்ரவ்ஷ்ட பாத்யம் வா உபாத்க்ருத்ய யதா விதி யுக்தச் சந்தாம் ஸ்யதீ யீத ஈன மாசான் விப்ரோர்த்த பஞ்சமான் ,அத ஊர்த்த்வம் து சந்தாம்சி சுக்லேது நியத படேத்
வேதான்காநி ரஹஸ்யம் ச கிருஷ்ண பஷேது சம்படேத்–மனு ஸ்ம்ருதி -4-95-
(பிராமணன் ஆவணி மாதத்திலாவது புரட்டாசி மாதத்திலாவது சாஸ்திரத்தில் சொல்லியபடி உபாகர்மாக்களை செய்து
நியமத்துடன் கூடினவனாய் நாலரை மாதங்களில் வேதங்களை அத்யயனம் செய்யக் கடவன் –
இதற்குப் பிறகு நியமத்துடன் கூடினவனாய் சுக்லபக்ஷத்தில் வேதங்களை ஓதக் கடவன் –
வேதங்களையும் உபநிஷத்துக்களையும் கிருஷ்ண பக்ஷத்தில் நன்றாக அத்யயனம் செய்யக் கடவன் ) என்கிற படியே அத்யயன கால நியதியையும் த்ரைவர்ணிகாதி காரதயா அதிகார நியதியையும் உடைத்தாய் உள்ள –நூல் கடல்—மூன்றாம் திருவந்தாதி -32-என்கிற வேத வித்யா சமுத்ரத்தில் வசனம்-இவள் வாயனகள் திருந்த–திருவாய் -6-5–7- -என்கிற படியே ,இவருடைய வாக்கதமாய் ,-கால நியம ,அதிகாரி நியம நிரபேஷமான ஆகாரத்தை அடைந்து ,கட்டளைப் பட்டவாறே – அத்யே தவ்யம் த்விஜச் ரேஷ்டை : வேத ரூபமிதம் க்ருதம் ச்த்ரீபிஸ் சூத்ராதிபிச் சைவ தேஷாம் முக்திஸ் கரே ஸ்திதா–பாஞ்சராத்ரம் -(வேதரூபமாகச் செய்யப்பட இத்திருவாய் மொழி ப்ராஹ்மண உத்தமர்களாலும் பெண்களாலும் நான்காம் வருணத்தவர்களாலும் அத்யயனம் செய்யத்தக்கது –-இதனை அத்யயனம் செய்யுமவர்களுக்கு மோக்ஷம் கையில் இருக்கிறது -) -என்கிற படியே ஒரு கால நியமம் இன்றிக்கே ,சர்வ காலமும் சர்வருக்கும் உப ஜீவ்யமாம் இறே என்கை-

ஸமுத்‌ர ஜலம்‌ விரஸதையை யுடைத்தாய்‌ ததந்தர்கதமான பதார்த்தங்களுக்கே உபஜீவ்யமாய்‌, புறம்புள்ளார்க்கு உப ஜீவ்யமன்றியிலே இருப்பதாய்‌, அபர்வணி ஸ்பர்ஸிக்கைக்குக்‌ கால நியதியையு முடைத்தாயிருக்கும்‌. அந்த ஸமுத்‌ர ஜலத்தை மேகமானது பாநம்‌ பண்ணி ஐகத்திலே வர்ஷிக்க அந்த மேக, ஸ்பர்ஸத்‌தாலே அதினுடைய விரஸ்தையும்‌, ஸ்பர்ஸ கால நியதமும்‌ போய்‌, ஸர்வ ஜந போக்‌யமுமாமாப் போலே, பகவத் ஸ்வரூபாநுரூப குண விபூ,திகளை ப்ரதிபாதிக்கிற வேதம்‌ பகவத்‌ விபூதி பூ.தரான தேவதாந்தரங்களை ப்ரதிபாதிக்கை யாகிற விரஸதையை உடைத்தாய்‌, வேதாதிகாரிகளான த்ரை வர்ணிகர்க்கே அத்‌யேதவ்யமாகையாலே அதி க்ருதாதி காரமுமாய்‌ அத்‌யயந-அநத்‌யயந-கால நியதியையு முடைத்தா யிருக்கும்‌. ‘“நூற் கடல்‌’” (மூ. திருவ, 92) என்கிறபடியே அபரிச்சேத்யமான அந்த வேதமாகிற ஸாஸ்த்ரத்திலுண்டான அர்த்த விஸேஷங்கள்‌ ‘‘இவள் வாயனகள்‌ திருந்தவே” (திருவா. 6 – 5- 7) என்கிறபடியே இவருடைய வாக் கதமாய்க் கொண்டு கட்டளைப் பட்டவாறே பகவத்‌ வ்யதிரிக்த ப்ரஸம்ஸா பரதையாகிற விரஸதையும் போய்‌ “அத்‌யேதவ்யம்‌ த்‌விஜ ஸ்ரேஷ்டைர் வேத ரூபமிதம்‌ க்ருதம்‌ । ஸ்த்ரீபிஸ் ஸூத்‌ராதி பிஸ்சைவ தேஷாம்‌ முக்தி: கரே ஸ்திதா” (பாஞ்ச.) என்கிறபடியே ஸர்வாதி காரமுமாய்‌ ஸர்வ காலாத்‌ யேதவ்யமுமா யிருக்கும்‌-

பாற் கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும்
நூற் கடலும் நுண்ணூல தாமரை மேல் -பாற் பட்டு
இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்
குருந்து ஒசித்த கோபாலகன் ——-32–வித்யா சமுத்ரமும்-இதிஹாச புராணங்கள்   ஆகிற
கடலும் —

அன்னைமீர்! அணி மாமயில் சிறு மானிவள்நம்மைக் கை வலிந்து
என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலை வில்லி மங்கலம் என்றலால்
முன்னம் நோற்ற விதி கொலோ? முகில் வண்ணன் மாயம் கொலோ?
அவன்சின்னமும் திருநாமமும் இவள் வாயனகள் திருந்தவே.–6-5-7-அல்லாதார் தங்கள் திருந்துகைக்காக திரு நாமங்கள் சொல்லுவார்கள் –திருநாமம் திருந்துகைக்கு இவள் சொல்ல வேணும் -நாமும் திரு நாமங்கள் சொல்கிறோம் -இவள் வாயில் பட்ட வாறே இங்கனம் உயிர் பெற வேணுமோ என்கிறாள் –

இன்னமும் வேத கார்யமாய் இருக்க செய்தே காரணமனவது போல் அதிகிருதாதிகாரம் இன்றியே ,இது சர்வாதிகாரமாய் இருக்கக் குறை இல்லை என்னும் இடத்துக்கு ஒரு திருஷ்டாந்த விசேஷம் தர்சிப்பிகிறார்-ஸமுத்‌ர ஜலத்தையும் தத்கார்யமான மேகம்‌ பருகின ஜலத்தையும்‌ அதி க்ருதாதிகாரமான வேதத்துக்கும்‌ தத் கார்யமான திருவாய்மொழிக்கும்‌ த்‌ருஷ்டாத்தமாக்கினால்‌ காரணம்‌ போலே கார்யமும்‌ அதிக்ருதாதிகாரமா யிருக்குமோ என்னில்‌, அப்படியிராது–ஸர்வாதிகாரமாய்‌, ஸ்லாக்‌யமாய்‌,ஸ்ப்ருஹணீயமா யிருக்குமென்கிறார்‌

ம்ருத் கடம் போல் அன்றே பொற்குடம்-சூரணை -73-

அதாவது –
ம்ருத் கடம் தொடும் அவர்களே தொடும் இத்தனை போக்கி ,எல்லாரும் தொட ஒண்ணாதே இருக்க ,
பார்திவமாய் இரா நிற்க செய்தே ,பொற் குடம் எல்லோருக்கும் ஸ்பர்சிக்க இரா நின்றது இறே என்கை .
இத்தால் காரணமான வேதம், அதிக்ருதிதாதிகாரமாய் இருந்தாலும் , தத் கார்யமான இது
சம்ஸ்கார விசேஷத்தாலே ,சர்வாதிகாரமாய் இருக்கக் குறை இல்லை என்றதாயிற்று —
த்ருஷ்டாந்தத்திலே தோற்றுகிற காரணதய கார்ய ஸ்லாக்யாதிகள் ,தார்ஷ்டாந்திகத்திலும் விவஷிதம்

ம்ருத்‌ கடமானது தொடுமவர்களே தொடுமித்தனை போக்கி எல்லார்க்கும்‌ தொட வொண்ணாதிறே. அங்ஙனன்றிக்கே பொற் குடம்‌ பார்த்திவமா யிருக்கச் செய்தேயும்‌ எல்லார்க்கும்‌ ஸ்பர்ஸிக்கவுமாய, ஸ்லாக்‌யமுமாய்‌, ஸ்ப்ருஹணீய முமாயிருக்கும்‌. ஆகையாலே அதி க்ருதாதிகாரமான வேதந் தான்‌ திருவாய்மொழியான அவஸ்தையை பஜித்தாலும்‌ ஸர்வாதிகாரமுமாய்‌, ஸ்ப்ருஹணீயமுமா யிருக்குமென்கிறார்‌-

இனி மேல் இப்படி இருந்துள்ள திருவாய் மொழியும் ,ஏதத் பிரதிபாத்யமான அர்ச்சாவதாரம் ஆகிய பிரமாண பிரமேய சரமங்கள் இவற்றின் உடைய பூர்வ அவஸ்தைகளில் , அவஹாகன ஷமர் அல்லாதவருக்கு சுலபமாக கல்பிதங்கள் ஆனவை என்று –-வேத வேதே -சூரணை -70– இத்யாதி வாக்யத்தில் சொன்ன பிரமாண பிரமேய சரமங்களை நிகமிக்கிறார் –ஸர்வ ஸுலபமாய்‌ ஸர்வாதிகாரமான அர்ச்சாவதாரத்தையும்‌ திருவாய் மொழியையும்‌ கீழ்‌ ‘“பரத்வபரமுது வேதம்‌” என்று ப்ரஸ்துதமான ப்ரமாண ப்ரமேயங்களை “‘பெரும்புறக்‌ கடலும்‌” ““ஸ்ருதி ஸாகரமும்‌ என்று பராமர்ஸித்து, அவற்றினுடைய எல்லையான அர்ச்சாவதாரமும்‌ திருவாய்மொழியும்‌ கீழ்ச் சொன்ன பரத்வாதிகளுக்கும்‌ வேதம்‌ முதலான ஸாஸ்த்ரங்களுக்கும்‌ அயோக்‌யரானார்க்கும்‌ அநுபாவ்யமாம்படி சரமமாயிருக்கும்‌ என்கிறார்‌.

பெரும் புறக் கடலும் சுருதி சாகரமும் அலைந்து ஆழ்ந்து ஓடும் இடங்களில் அயோக்யருக்கு சமைத்த மடுவும் சாய் கரகமும் மாண மேய சரமம்-சூரணை -74-

அதாவது
பெரும் புறக்கடலை –பெரிய திருமொழி -7-10 -1-எல்லாக் கடலுக்கும் புறம்பாய் ,தான் பெருத்து இருக்கிற கடல் போலே அபரிசேத்யமாய் இருக்கிற ,பரவஸ்துவான பிரமேயம் – சமுத்ரம் தரங்கிதமாய் அலைந்து நிற்கும் இடம் போலே ,ஜ்ஞானாதி ஷட் குண பரிபூரணமான தானே–அவற்றில் இவ் இரண்டு குணங்களை பிரகடிப்பித்து கொண்டு ,-பிரகாசிப்பித்துக் கொண்டு – சங்கர்ஷ்ணாதி ரூபேண ,வியூஹித்து இருக்கும் இடத்திலும் ,-சமுத்ரத்தில் நிலை காண ஒண்ணாத படி , ஆழ்ந்து இருக்கும் இடம் போலே ,-யாமாத்மா ந வேத -ப்ருஹதாரண்யம் -5-7-22(எந்தப் பரம்பொருளை ஆன்மா அறியவில்லையா )-என்றும்-கட்கிலி உன்னைக் காணுமாறு அருளாய் –திருவாய் -7-2-3 –என்றும் சொல்லுகிறபடி
அத்ருச்யத்வேன அந்தர்யாமியாய் நிற்கும் இடத்திலும்–சமுத்ரமானது ,கழிகளாய் கொண்டு ஓடும் இடம் போலே-மானுஷே லோகே ஜஜ்ஞே விஷ்ணு சநாதன-அயோத்யா காண்டம் -1-7- ( மனித லோகத்தில் நித்யரான விஷ்ணுவானவர் பிறந்தார் )என்றும் – யஸ்யாம் ஜாதோ ஜகன்னாதச் சாஷாத் விஷ்ணுஸ் ஸநாதன-( உலக நாதனான நித்யனான விஷ்ணு எவ்விடத்தில் அவதரித்தாரோ )-என்றும் –
நாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாதோ மதுராம் புரீம்–ஸ்ரீ ஹரி வம்சம் -113-62-( திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையைத் தனக்கு முன்னே அவதரிக்கும்படி போகவிட்டு வடமதுரை என்னும் நகரத்துக்கு எழுந்து அருளினாரோ ) என்றும்-விஷ்ணுர் மானுஷ ரூபேண சசார வஸூ தாதலே –( விஷ்ணுவானவர் மனித உருவத்தோடு பூ லோகத்தில் சஞ்சரித்தார் )-என்கிற படியே கண் காண வந்து தோன்றி ஞாலத்தூடே நடந்து திரிந்த அவதாரமான இடத்திலும் , தேச கரண கால விப்ரக்ருஷ்டைதகளால் கிட்டி அனுபவிக்க யோக்யதை அல்லாதவருக்கு ,-அதிலே தேங்கின மடுக்கள் போலே -( பூதக ஜலம் போலே அந்தர்யாமித்வம் -ஆவரண ஜலம் போலே பரத்வம் – பாற்கடல் போலே வ்யூஹம் -பெருக்காறு போலே விபவங்கள்-அதிலே தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம் — ஸ்ரீ வசன பூஷணம் –சூர்ணிகை -39-) -என்கிறபடியே தேசாதி விப்ரகர்ஷ கந்தம் இல்லாதபடி ,கல்பிக்க பட்ட அத்யந்த சுலப விஷயம்
பிரமேய ஆவிர்பாவ பரம்பரையின் உடைய சரம அவஸ்தையான அர்ச்சாவதாரம் .–மதி மந்தாந மாவித்ய யேனாஸௌ சுருதி சாகராத் –( எந்த வியாச பகவானால் வேதமாகிய கடலில் நின்றும்
ஞானமாகிய மத்தை த்தை கடைந்து )-என்கிறபடியே அபரிசேத்யமாய் பரத்வ பரமான வேதம் –
சமுத்திர தரங்கித பிரதேசம் போலே தத் வியூஹ பிரதி பாதகதயா அவச்த்தாந்தராபன்னமாய் பஞ்ச ராத்ரமான விடத்திலும் , சமுத்ரத்தில் அகாத ஸ்தலம் போலே தத் அந்தர்யாமித்வ பிரதிபாதகதயா அவஹாகித்து அர்த்த தர்சனம் பண்ண அரிதாம் படி மன்வாதி ஸ்ம்ருதி ரூபமான இடத்திலும்
சமுத்ரம் கழிகளாய் ஓடுமா போலே தத் அவதார பிரதிபாதகதயா இதிகாச ரூபேண விஸ்த்ருதமாய் நடக்கிற இடத்திலும் , ஞானசக்தியாதி சங்கோசத்தால் அவஹாகித்து விடாய் தீர மாட்டாருக்கு
–விடாய்த்தவன் வாயை அங்காந்து இருக்க தானே தண்ணீர் வந்து குதிக்கும் படி ,கல்பிதமான சாய் கரகம் போலே
, அனாசாயேன உஜ்ஜீவிக்கலாம் படி ,அத்யந்த சுலபமான சாஸ்திரம் பிரமாண பூதமான வேதத்தின் உடைய ஆவிர்பாவ பரம்பர சரம அவஸ்தையான திருவாய் மொழி என்கை–இத்தால் மடுவும் சாய் கரகமும் என்கையாலே பிரமாண பிரமேயங்களின் உடைய ஒளியும் எளிமையும் இனிமையும் தொடக்கமான சத்குண சாஹித்யம் சொல்லப் பட்டது-(உப்புக் கடல் -எம்பெருமானாகிய பெரும் புறக்கடல் -வேதக்கடல் – மூன்றுக்கும் முடிந்தநிலை -தடாகம் -அர்ச்சாவதார -திருவாய்மொழி-என்றவாறு )-

பெரும் புறக்கடலும்‌ ஸ்ருதி ஸாகரமும்‌) அபரிச்சேத்‌யமான ப்ரமாண ப்ரமேயங்கள்‌; அவை யாவன – பரத்வமும்‌ பரத்வ ப்ரதி பாதகமான வேதமும்‌-அவற்றுக்குடலானால்‌ அலையக் கடவதிறே – அலைகையாவது – பர வாஸுதேவர் பக்கல் நின்றும்‌ பிறந்த ஸங்கர்ஷண ப்ரத்யும்நாதிகளான  வ்யூஹமூம்‌ தத் ப்ரதிபாதகமான ஸ்ரீபாஞ்சராத்ர ஸாஸ்த்ரமும்‌-(ஆழ்ந்து) “யமாத்மா ந வேத,” (ப்‌,௬. 5 – 7 – 22) என்று சொல்லுகிற அந்தர்யாமித்வமும்‌, தத் பரமான மந்வாதி ஸ்ம்ருதிகளும்‌. (ஓடுமிடம்‌) ராம க்ருஷ்ணாத்‌ யவதாரங்களும்‌ தத் ப்ரகாஸகங்களான இதிஹாஸங்களும்‌;-இவை தேஸ -கால -இந்திரிய -விப்ரக்ருஷ்டங்களாகையாலே பரத்வாதிகளை அநுபவிக்க யோக்‌யரல்லாதவர்களுக்கு அப்படி தேஸ கால விப்ரகர்ஷமு மின்றிக்கே பெருகின ஆற்றில்‌ மடுப் போலே ஸர்வ ஸுலப,முமாய்‌, ருசி ஜநகமூமாய்‌, ஸ்ரமஹரமுமாய்‌, ஸர்வ ஜந போக்‌யமுமாய்‌, ஸர்வாபாஸ்ரயமுமான அர்ச்சாவதாரமும்‌, வேதாதி களுக்கு யோக்‌யரா யிருக்கிறவர்களுக்கு சாய் கரகம் போலே ஸுகரமுமாய்‌, ஸர்வாதிகாரமுமான திருவாய் மொழியும்‌ ப்ரமாண ப்ரமேயங்களினுடைய சரம மென்கிறார்‌. ஆக, இத்தால்‌ **பரத்வபரமுதுவேதம்‌’” என்று தொடங்கின அர்த்தங்களை உபபாதி,த்து அவ் வர்த்தத்துக்கெல்லை அர்ச்சாவதாரமும்‌ திருவாய்மொழியுமென்று நிகமித்தாராய் ஆய்த்து –

பெரும் புறக் கடலை யடல் ஏற்றினைப் பெண்ணை யாணை எண்ணில் முனிவர்க்கு அருள்
தரும் தவத்தை முத்தின் திரட்கோவையைப் பத்தராவியை நித்திலத் தொத்தினை
அரும்பினை யலரை அடியேன் மனத்தாசையை அமுதம் பொதியின் சுவைக்
கரும்பினைக் கனியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே–7-10-1-சர்வ பதார்த்தங்களையும் தன்னுள்ளே அடக்கி நோக்கும் கடல் போலே-அபரிச்சேத்யனாய் உள்ளவனை –
எல்லா கடலுக்கும் புறம்பாய்-தான் பெருத்து இருக்கிற கடல் போன்று இருக்கிறவனை –

பூகத ஜலம் போலே அந்தர்யாமித்வம் – ஆவரண ஜலம் போலே பரத்வம் – பால் கடல் போலே வியூஹம் –
பெருக்காறு போலே விபவங்கள் – அதில் தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம் —சூரணை-39--இவனுக்கும் தேச கால கரண விப்ரக்ருஷ்டமின்றிக்கே – கோயில்களிலும் கிருஹங்களிலும் -என்றும் ஒக்க எல்லாருக்கும் கண்ணுக்கு இலக்காம்படி நிற்கிற – பின்னானார் வணங்கும் ஜோதி யான அர்ச்சாவதாரம் –(திருநெடும் தாண்டகம் ) பௌம நிகேதநேஷ் வபி குடி குஞ்சேஜ்ஷூ-என்கிறபடியே -பல இடங்களிலும் சன்னதி பண்ணி நிற்கும் படியை நினைத்து இறேமடுக்கள் போலே – என்ற பஹு வசனத்தாலே அருளிச் செய்தது – அவதார குணங்கள் எல்லாம் அர்ச்சா ஸ்தலங்களில் பரி பூரணமாய் இருக்கையாலும் – அவதார விக்ரஹங்களை அர்ச்சா ரூபேண பல இடங்களிலும் பரிக்ரஹித்து கொண்டு இருக்கையாலும்-அதிலே தேங்கின மடுக்கள் போலே -என்கிறது –மடுக்கள் பன்மை ஓர் அவதாரத்துக்கு பல பல சேஷ்டிதங்களுக்கும் பல திவ்ய தேசங்கள் உண்டே –அயத்ன ஸித்தமாய் –அதி ஸந்நிஹிதனுமாய்-அஷ்டாங்க தூர கமன நிரபேஷமாய்- கோயில் முதலான திவ்ய தேசங்களிலும் -க்ருஹங்களிலும் ஸ்தாவர ப்ரதிஷ்டையாய் இருந்து நிலைத்து தத் தத் அவதாரங்களில் நித்ய விக்ரஹமாய் கண்ணுக்கு இலக்காய் கொண்டு- சர்வ ஸமாஸ்ரயணீயமாய் – துர்லப பராங்முகையான பிரபத்திக்கு பிரிய விஷயம்-பெரிய விடாயான் -குளிர்ந்து தெளிந்து நிறைந்த –கிணறு கல்லியும் அண்டத்துக்கு பாய்ந்து பாற் கடலை கடைந்து  -வற்றின ஆற்றிலே ஓடிச் சென்று தண்ணீர் தேடுவது போலே இத்தை விட்டு அங்கே தேடுகை –

–——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர விளக்கங்கள்-மூன்றாம் அத்யாயம்-ஸாதந அத்யாயம் – இரண்டாம் பாதம்-உபய லிங்க பாதம்–ஸ்ரீ வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்-

July 5, 2026

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநித விவித பூத விராத ரக்ஷைக தீக்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||-இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

பாராசர்ய வசஸ்ஸுதா₄ம் உபநிஷத் து₃க்₃தா₄ப்₃தி₄ மத்₄யோத்₃த்₄ருதாம்
ஸம்ஸாராக்₃நி விதீ₃பந வ்யபக₃த ப்ராணாத்ம ஸஞ்ஜீவநீம் |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் ப₃ஹுமதி வ்யாகா₄த தூ₃ரஸ்தி₂தாம்
ஆநீதாம் து நிஜாக்ஷரை : ஸுமநஸ: பௌ₄மா: பிப₃ந்து அந்வஹம்
 ||இரண்டாவது மங்கள ஸ்லோஹம்-

ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||

யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந   தர்சிதா:
வரம் ஸுதர்சனார்யம் தம் வந்தே கூர குலாதிபம்-ஸ்ருத  ப்ரகாசிகா பட்டருடைய தனியன்:

————————-

இரண்டாம் பாதம் –உபய லிங்க பாதம் -8 அதிகரணங்கள்-40 ஸூத்ரங்கள்

முதல் அதிகரணம் -சந்த்யாதி கரணம்– 6 ஸூத்ரங்கள்-
கனவில் காணும் பொருள்கள் அனைத்தும் பரமாத்வால் படைக்கப் படுகின்றன -எனபது நிரூபிக்கப் பட்டுள்ளது-

இரண்டாம் அதிகரணம் -தத்பாவாதிகரணம் -2 ஸூத்ரங்கள்-
ஜீவன் உறங்கும் இடங்கள் எவை எவை என்று நிரூபிக்கப் படுகிறது-

மூன்றாவது அதிகரணம் -கர்மாநு ஸ்ம்ருதி சப்த வித்யதிகரணம் — 1 ஸூத்ரம்–
உறங்கிய ஜீவனே மீண்டும் விளித்து எழுகிறான் -வேறே ஜீவன் இல்லை என்று நிரூபிக்கிறது –

நான்காவது அதிகரணம் -முக்தாதிகரணம் – 1 ஸூத்ரம்-
விழிப்பு கனவு ஆழ்ந்த உறக்கம் மூன்றை விட மாறுபட்ட மூர்ச்சை நிலை-

ஐந்தாவது அதிகரணம் – உபய லிங்க அதிகரணம் -15 ஸூத்ரங்கள்–
அந்த்ர்யாமியாக இருந்தும் உடலின் தோஷங்கள் தட்டாதவன் பரப் ப்ரஹ்மம்-

ஆறாவது அதிகரணம் -அஹி குண்டலாதிகரணம் -4 ஸூத்ரங்கள்–
ப்ரஹ்மத்தின் ரூபம் அசேதன பொருள்களான மூர்த்தமும் -விக்ரகமும் -பிரபஞ்சமே ப்ரஹ்மத்துக்கு சரீரம் என்றும் கூறப்பட்டன –
அசேதனங்களின் தோஷங்கள் ப்ரஹ்மத்துக்கு ஏற்படாது என்று நிரூபிக்கப் படுகிறது –

ஏழாவது அதிகரணம் -பராதிகரணம் -7 ஸூத்ரங்கள்–
ப்ரஹ்மத்தை விட உயர்ந்த வஸ்து வேறு இல்லை என்றும் இவனை
தவிர அடைய வேண்டிய வஸ்து வேறு இல்லை என்றும் நிரூபிக்கப் படுகிறது –

எட்டாவது அதிகரணம்-பலாதிகரணம் – 4 ஸூத்ரங்கள்-
கர்மங்களின் அனைத்து பலன்களையும் பரமாத்மாவே அளிக்கிறான் என்று நிரூபிக்கப் படுகிறது

3-2-1-ஸந்த்₄யாதி₄கரணம்-நாம் கனவில் காணும் பொருள்களை யார் படைக்கிறார்? –பாதத்தின் ஸங்கதி-மூன்றாம் அத்யாயமான ஸாதந அத்யாயத்தில், பக்தி யோகம் என்ற ஸாதனத்தைப் பற்றிக் கூறுவதற்கு முன்னால், அதைச் செய்வதற்கான தகுதியை ஏற்படுத்த முதல் இரண்டு பாதங்கள் அமைந்துள்ளன. வைராக்ய பாதம் என்ற முதல் பாதத்தில் இந்த ஸம்ஸாரத்தில் ஜீவாத்மா படும் கஷ்டங்களைச் சொல்லி அதன் மூலம் உலகில் பற்றின்மையை ஏற்படுத்துகிறார் வ்யாஸர். அதைத் தொ டர்ந்து உபய லிங்க பாதம் என்ற இரண்டாவது பாதத்தில், பகவானிடம் ஆசையை வளர்ப்பதற்காக பரமாத்மாவின் இரண்டு அடையாளங்களைச் சொல்கிறார்
1-அகி₂ல ஹேய ப்ரத்யநீகத்வம் – எல்லா தாழ்ச்சிகளுக்கும் -தோஷங்களுக்கும் எதிர்த் தட்டாய் இருத்தல்
2-கல்யாண கு₃ண ஏக தாநத்வம் – அனைத்து கல்யாைண குணங்கள் -நற் பண்புகளுக்கும் இருப்பிடமாய் இருத்தல்.

ப்₃ரஹ்மைவ ஸ்வை ꞉ ஸ்வபா₄வை ꞉ ப₃ஹுமுக₂ம் அவத₃த் ப்ராக்தநாத்₄யாய யுக்₃மே
தஸ்யேஹ ஆக்ருஷ்ய சிந்தா கிமிதி புநரஸௌ ஸாத₄நாத்₄யாய மத்₄யே ।
மைவம் வித்₃யா꞉ ப்ரபே₄த்தும் விஶத₃யதி பரம் தத்₃தி₄ தத்₃ரூப பே₄தா₃த்
ஸித்₃தோ₄பாயாதி₃பா₄வம் ப்ரத₂யதி ச விபோ ₄꞉ ப்ராப்ய த்ருஷ்ணாய ப்ரதி₂ம் நே ॥

கேள்வி – முன் இரண்டு அத்யாயங்களில் ப்ரஹ்மத்தை அதன் குணங்களோடு கூடப் பல விதமாகச் சொல்லி விட்டாரே ? மறுபடியும் இதில் எதற்காக ஸாதனத்தைச் சொல்ல வேண்டிய இடத்தில் இழுத்து வைத்து ப்ரஹ்மத்தைப் பற்றிப் பேசுகிறார்?
பதில் – மேல் மூன்றாவது பாதத்தில் பக்தி யோகம் -உபாஸனத்தின் வகைகளை வேறுபடுத்திச் சொல்ல வேண்டும், உபாஸனத்தின் வேறுபாடு அதில் த்யானிக்கப்படும் குணங்களின் வேறுபாட்டால் தான், அதற்காக இந்த இடத்தில் ப்ரஹ்மத்துக்கு எண்ணிறந்த கல்யாண குணங்கள் உள்ளன என்று சொல்வது பொருத்தமானது தான். மேலும், மோக்ஷம் அடைவதற்கு பக்தி யோகம் என்ற ஸாத்₄ய உபாயம் (நம்மால் செய்யப்பட வேண்டிய வழி-உபாயம்) இருப்பது போல், ப்ரஹ்மமே ஸித்த உபாயமாக (நம்மால் செய்யப்படத் தேவை யில்லாமல் தானே ஸித்தமாக இருக்கும் உபாயமாக) இருப்பதால், ஸாதனத்தைச் சொல்ல வேண்டிய இந்த அத்யாயத்தில் ப்ரஹ்மத்தையும் சொல்வது பொருத்தமானதே –

பாதத்தின் சுருக்கம்
முன் பாதத்தில், ஜீவாத்மா விழித்திருக்கும் போதும் மரணமடைந்த பிறகும் அனுபவிக்கும் துன்பங்களைப் பற்றிச் சொன்னார் வ்யாஸர். இந்தப் பாதத்தில் கனவு, தூக்கம், மயக்கம் என்ற மூன்று நிலைகளைப் பற்றிப் பேசுகிறார்.

த்யக்தம் தோ₃ஷை ꞉ கு₃ணாட்₄யம் யதி₃ புநரிஹ தத் ப்₃ரஹ்ம சிந்த்யேத பாதே ₃
ஜீவ ஸ்வப்நாத்₃ யவஸ்தா₂ மநநம் அத₂ கத₂ம் ஸங்க₄டே தீதி சேந் ந ।
ஸ்வாப்நார்த₂ ஸ்ரஷ்ட்ருபா₄வ ப்ரப்₄ருதி ப₃ஹுவித₄ ப்₃ரஹ்ம மஹாத்ம்ய ஸித்₃த்₄யை
ஜந்தோரஸ்ய ஸ்வ முக்தௌ அதி பரவஶ தாஜ்ஞப்தேய ச ஏத த₃த்ர ॥

கேள்வி – ப்ரஹ்மம் தோஷங்களற்றவர், குணங்களுடையவர் என்று சொல்ல வந்த பாதத்தில் எதற்காக மறுபடியும் ஜீவனுடைய கனவு முதலானவற்றைப் பேச வேண்டும்? இதை முன் பாதத்திலேயே
சேர்த்திருக்கலாமே ?
பதில் – ஜீவாத்மாவின் கனவு முதலான நிலைகளைப் பற்றி ஆராய்ந்தாலும், அதில் முக்கியமாக ப்ரஹ்மத்தின் பல ஒப்பற்ற குணங்கள் சொல்லப் படுகின்றன – அவர் தான் நாம் கனவில் காணும் பொருள்களைப் படைக்கிறார் என்று தொடங்கி. எனவே , பரமாத்மாவின் பெருமைகளைச் சொல்ல வந்த இந்த பாதத்திலும் இது பொருத்தமானதே . மேலும், கனவு தூக்கம் முதலான நிலைகளில் எல்லாம் இந்த ஜீவாத்மா எவ்வளவு தூரம் பரமாத்மாவை அண்டியே இருக்கிறார் என்று காட்டுவதன் மூலம், இந்த ஸம்ஸாரத்தைத் தாண்டி மோக்ஷம் அடைவதற்கும் நாம் அந்த பரமாத்மாவைத் தான் எதிர்பார்த்து இருக்க வேண்டும், நாமாக அடைந்து விட முடியாது என்பதையும் உணர்த்துகிறார்.

3-2-1-ஸந்த்₄யாதி₄கரணம் – ஸங்கதி – முன் பாதத்தின் இறுதி வரை , ஜீவாத்மா பிறக்கும் போது அனுபவிக்கும் துக்கங்களைக் கூறினார். இந்த அதிகரணத்தில் ஸ்வப்நத்தில் ஜீவாத்மாவின் நிலையை ஆராய்கிறார்.

உபநிஷத்தில் ஸ்வப்நத்தைப்பற்றி
விஷய வாக்யம்
– ப்ருஹதாரண்யக உபநிஷத்தின் 4ஆவது அத்யாயத்தின் 3ஆவது கண்டத்தில் உள்ளது.-தஸ்ய வா ஏதஸ்ய புருஷஸ்ய த்₃ வே ஏவ ஸ்தா₂நே ப ₄வத இத₃ம் ச பரலோக ஸ்தா₂நம் ச |-இந்த ஜீவாத்மாவுக்கு இரண்டு இடங்கள் – இந்த உலகமும் ஸ்வர்கமும்-

ஸந்த்₄யம் த்ருதீயம் ஸ்வப்ந ஸ்தா₂நம் । தஸ்மிந் ஸந்த்₄யே ஸ்தா₂நே திஷ்ட₂ந் நேதே உபே ₄ ஸ்தா₂நே பஶ்யதி–ஸந்த்யம்-– (ஸ்வப்நம்) மூன்றாவது இடம். அந்த இடத்தில் இவன் இந்த உலகம் ஸ்வர்கம் இரண்டையும் காண்கிறான்.-ஸந்த்₄யம் என்றால் விழிப்புக்கும் தூக்கத்துக்குமான ஸந்தி₄யில் (இடையில்) உண்டானது – அதாவது ஸ்வப்நம்.

ந தத்ர ரதா₂ ந ரத₂யோகா₃ ந பந்தா₂நோ ப₄வந்த்யத₂ ரதா₂ந் ரத₂ யோகா₃ந் பத₂꞉ ஸ்ருஜதே ।-அங்கு தேர்கள், குதிரைகள், பாதைகள் இல்லை . தேர்களையும் குதிரைகளையும் பாதைகளையும் ஸ்ருஷ்டிக்கிறார்.

ந தத்ர ஆனந்தா₃ முத₃꞉ ப்ரமுதோ ₃ ப₄வந்தி அத₂ ஆனந்தா₃ந் முத₃꞉ ப்ரமுதோ ₃ ஸ்ருஜதே ।-அங்கு ஆநந்தம், மோதம், ப்ரமோதம் இல்லை . ஆநந்தத்தையும் மோதத்ணதயும் ப்ரவமாதத்தையும் ஸ்ருஷ்டிக்கிறார்.
பார்ப்பதால் இன்பமளிக்கும் பொருள்கள் தான் ஆநந்தம் என்றும், நம்முடையது என்று அறிவதால் இன்பமளிக்கும் பொருள்கள் மோதம் என்றும், பயன்படுத்துவதால் இன்பமளிக்கும் பொருள்கள் ப்ரமோதம் என்றும் கூறப் படுகின்றன-

ந தத்ர வேஶாந்தா꞉ புஷ்கரிண்ய꞉ ஸ்ரவந்த்யோ ப₄வந்த்யத₂ வேஶாந்தா₃ந் புஷ்கரிணீ꞉ ஸ்ரவந்தீ꞉ ஸ்ருஜதே ।ஸ ஹி கர்தா–அங்கு குட்டைகள், குளங்கள், நதிகள் இல்லை . குட்டைகளையும் குளங்களையும் நதிகளையும் ஸ்ருஷ்டிக்கிறான்.

பூர்வ பக்ஷியின் வாதம்
ஸந்தேஹம்
– இங்கு ஸ்வப்நத்தில் காணப்படும் பொருள்களைப் படைப்பவர் ஜீவாத்மாவா? பரமாத்மாவா?
பூர்வ பக்ஷம் – ஜீவாத்மா தான் இவற்றை ஸ்ருஷ்டிக்கிறார் என்று 2 ஸூத்ரங்களால் கூறுகிறார் பூர்வ பக்ஷீ.
1–ஸந்த்₄யே ஸ்ருஷ்டி: ஆஹ ஹி–
“ஸந்த்₄யத்தில் ஸ்ருஷ்டி (ஜீவாத்மாவால்), அப்படி யன்றோ கூறிற்று” ஸந்த்யத்தில் (ஸ்வப்னத்தில்) காணப்படும் பொருள்களின் ஸ்ருஷ்டி, அந்த ஸ்வப்நத்தைக் காணும் ஜீவனால் தான் செய்யப் படுகிறது என்கிறது வேதமே – ’-ஸ ஹி கர்த்தா’ (அவர் அன்றோ கர்த்தா) என்று ஜீவனையே சொல்வதால்.

2-நிர்மாதாரம் ச ஏகே புத்ராத₃ய: ச
ஏகே –
ஒரு சிலர், அதாவது க்ருஷ்ண யஜுர் வேதத்தைக் கற்பவர்கள், அதன் பகுதியான கடோபநிஷத்தில்
நிர்மாதாரம் – ஜீவாத்மா தான் ஸ்வப்நப் பொருள்களை உண்டக்குபவர் (நிர்மாதா) என்று கூறுகிறார்கள் – அதாவது(ய ஏஷு ஸுப்தேஷு ஜாக₃ர்தி காமம் காமம் புருஷோ நிர்மிமாண : ) அதாவது “புலன்கள் எல்லாம் தூங்கும் போது இந்த ஜீவாத்மா மட்டும் விழித்துக் கொண்டிருந்து, தன்னுடைய காமங்களை
(ஆசைப்பட்ட பொருள்களை ) உண்டாக்குகிறார்” என்று கடோபநிஷத் கூறுகிறது.
புத்ராத₃ய: ச – புத்ரன் முதலானவை தான் (இங்கு காமங்கள் என்று சொல்லப் படுகின்றன). காமம் என்றால் பொதுவாக ’ஆசை ’ என்று பொருள் இருந்தாலும், இங்கு அந்தச் சொல் ஆசைப்படப்படும் பொருள்களையே காட்டுகிறது.-ஏனென்றால் இந்த கடோபநிஷத்தில் இதற்கு முன்னாலும் யமன் நசிகேதஸ்ஸிடம் பேசும் போது காமம் என்ற சொல்லால் பொருள்களையே குறிப்பிடுகிறார்.

யே யே காமா: து₃ர்லபா ₄: மர்த்ய லோகே ஸர்வாந் காமாந் ச₂ந்த₃த: ப்ரார்த₂ யஸ்வ-“எந்தெந்தப் பொருள்கள் எல்லாம் மனித உலகில் கிடைக்க அரிதானவையோ , அவற்றை ஆசைப்படி கேட்டுக் கொள்” அவன் அன்றோ கர்த்தா (செய்பவன்)

பரமாத்மா தான் படைக்கிறார்
ஸித்தாந்தம் –
தன் ஸித்தாந்தத்தை வ்யாஸர் 4 ஸூத்ரங்களால் சொல்கிறார்.
3–மாயா மாத்ரம் து கார்த்ஸ்ந்யேந அநபி₄ வ்யக்த ஸ்வரூ பத்வாத்
மாயா மாத்ரம் து –
“(ஸ்வப்நத்தில் காணப்படும் பொருள்கள் எல்லாம்) மாயமானவையே ”. மாயம் என்ற சொல்லுக்குப் பொய்யானது என்று பொருள் அல்ல, ஆச்சர்யமானது என்று தான் பொருள். ஸ்வப்நத்தில் நாம் காணும் பொருள்கள் எல்லாம் மிகவும் ஆச்சர்யமானவை , ஏனென்றால் அவற்றை நாம் மட்டும் தான் காண முடியும், அதுவும் அப்போது மட்டும் தான் காண முடியும். மற்றவர்களோ , நாமே விழித்த பிறகோ காண முடியாது.
வ்யாஸரின் கருத்து – இப்படிப்பட்ட ஆச்சர்யமான பொருள்களை பரமாத்மாவால் மட்டுமே ஸ்ருஷ்டிக்க முடியும்.

(ஜனகஸ்ய குலே ஜாதே தேவ மாயேவ நிர்மிதா -பால -2-27- ந பவந்தி -கனவில் காண்பவை அவன் ஒருவன் மட்டுமே காணுமாறு பரம் பொருள் படைக்கிறான் என்கிறது – இந்த ஆச்சர்யமே மாயா-சத்ய சங்கல்பன் அன்றோ –)

கேள்வி – உபநிஷத்தில் ஜீவாத்மாவும் ஸத்ய ஸங்கல்பன், அதாவது நினைத்ததை எல்லாம் நடத்தும் வல்லமை படைத்தவர் என்று சொல்லப்பட்டுள்ளதே ? அவர் ஏன் இந்த ஆச்சர்யமான ஸ்ருஷ்டியைச் செய்திருக்க முடியாது?
பதில் –
கார்த்ஸ்ந்யே
–முழுவதுமாக
அநபி₄வ்யக்த -வெளிப்படாத
ஸ்வரூபத்வாத் -தன்மைகளைக் கொண்ட படியால்
பரமாத்மாவைப் போல் ஜீவாத்மாவுக்கும் (1) பாபமின்மை , (2) மூப்பின்மை , (3) மரணமின்மை , (4) சோகமின்மை , (5) பசியின்மை , (6) தாகமின்மை , (7) எல்லா ஆசைகளும் நிரம்பி யிருத்தல், (8) நினைத்ததை நடத்தும் வல்லமை ஆகியவை இயற்கையான பண்புகள் தான். ஆனாலும், ஸம்ஸாரத்தில் இருக்கும் போது ஜீவாத்மாவின் இந்த இயற்கைத் தன்மைகள் மறைக்கப் பட்டுள்ளன. மோக்ஷம் அடையும் பொழுது தான் தன்னுடைய இயற்கையான தன்மைகளோடு ஜீவாத்மா முழுவதுமான வெளிப்படுகிறார் என்று வேதமே கூறுகிறது. எனவே ஸம்ஸாரத்தில் இருக்கும் ஜீவாத்மாவால் இப்படிப்பட்ட ஆச்சர்யமான ஸ்வப்நப் பொருள்களைப் படைக்க முடியாது.

ய ஏஷு ஸுப்தேஷு ஜாக₃ர்தி காமம் காமம் புருஷோ நிர்மிமாண :” என்ற கடோபநிஷத் வாக்கியத்திலும்
“ஜீவாத்மாக்கள் அனைவரும் தூங்கும் போதும் பரமாத்மா விழித்திருந்து ஸங்கல்பித்து ஸங்கல்பித்து
ஸ்வப்நப் பொருள்களைப் படைக்கிறார்” என்று பரமாத்மா தான் சொல்லப் படுகிறார், ஏனென்றால் இதற்கு முன்னும் பின்னும் “இவரே ப்ரஹ்மம், இவரிடம் உலகப் பொருள்கள் எல்லாம் ஆச்ரயித்துள்ளன” என்று சொல்கிற படியால்.

(கட உபநிஷத் -5-8-7- ஏஷூ சுப்தேஷூ ஜாகர்தி –-இவை தூங்கும் பொழுது அவன் விழித்து உள்ளான்-மேலும் அதே வரியில் – தத் ஏவ சுக்ரம் தத் ப்ரஹ்ம தத் ஏவ அம்ருதம் உஸ்யதே தஸ்மின் லோகாஸ்ரித சர்வே தது நான்யேதி கச்சன -என்று அந்த ப்ரஹ்மமே ஒளி அமிர்தம் அனைத்தும் ஒடுங்கி உள்ளன –
அவனைக் கடந்து ஏதும் இல்லை என்கிறது-ப்ருஹத் உபநிஷத் -4-3-10-வேசாந்தா புஷ்கரிண்ய ஸ்ரவந்த்ய ஸ்ருஜதே ஸ ஹி கர்த்தா என்று பரம புருஷனைப் பற்றிக் கூறியது)

ஸ்வப்நப் பொருள்களும் உண்மையே
கேள்வி –
ஸத்ய ஸங்கல்பம் முதலானவை ஜீவாத்மாவுக்கு இயற்கையான பண்புகள் என்றால் அவை ஏன் ஸம்ஸாரத்தில் இருக்கும் பொழுது மறைக்கப் பட்டுள்ளன? பதில் – அடுத்த ஸூத்ரத்தில்
4-பராபி₄த்₄யாநாத் து திரோஹிதம் தத: ஹி அஸ்ய ப₃ந்த₄விபர்யயௌ
பராபி₄த்₄யாநாத் து
– (ஜீவாத்மா எண்ணிறந்த பிறவிகளாகத் தவறு செய்ததால்) பரமாத்மாவின் ஸங்கல்பத்தால் தான்
திரோஹிதம் – ஜீவாத்மாவுக்கு இயற்கையான இந்த பண்புகள் வெளிப்படாமல் மறைக்கப்பட்டுள்ளன.
தத: ஹி அஸ்ய – அந்த பரமாத்மாவின் ஸங்கல்பத்தால் அன்றோ இந்த ஜீவாத்மாவுக்கு
ப₃ந்த₄விபர்யயௌ- ஸம்ஸாரத்தில் பந்தமும் (கட்டுப் பட்டிருப்பதும்) அதற்கு எதிரான முக்தியும்.
ஸம்ஸாரத்தில் இருப்பதே பரமாத்மாவின் ஸங்கல்பத்தால் தான் என்றால், இங்கு இருக்கும் பொழுது இயற்கையான பண்புகள் மறைக்கப் பட்டிருப்பதும் அவர் ஸங்கல்பத்தால் தான் என்று தானாகவே அறியலாம்.

(தைத்ரியம் -2-7-1-யதா ஹி ஏவ ஏஷ ஏ தஸ்மின் அத்ருஷ்ய அநாத்ம்யே அநிருக்தே அநிலயநே
அபயம் பிரதிஷ்டாம் விந்ததே அத ச அபயம் கத பவதி யதா ஹி ஏவ ஏஷ ஏதஸ்மின் உதரம் அந்தரம் குருதே அத தஸ்ய பயம் பவதி -என்றும்ஏஷ ஹி ஏவ ஆனந்தயாதி -என்றும்2-8-1-பீஷாச்மாத் வாத பவதே -என்றும் கூறும்-கோஹ்யே வாந் யாத்க ப்ராண்யாத்-யதேஷ ஆகாஸ ஆனந்தோ நஸ்யாத்
ஏஷஹ் ஏவ ஆனந்தயாதி பரஞ்சோதி ரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யதே -முதலிய ஸ்ருதிகளால்-பரமாத்மாவின் மூலமே ஜீவனின் ஸூக துக்கங்களை பறை சாற்றுகின்றன)

கேள்வி – எதன் மூலம் பரமாத்மா இப்படி மறைக்கிறார்?
பதில் –5-தே ₃ஹ யோகா₃த் வா ஸ: அபி –
“அதுவும் (மறைக்கப் படுவதும்) உடலோடு சேர்க்கையாலோ (அல்லது மூல ப்ரக்ருதியோடு சேர்க்கையாலோ)”-ஸ்ருஷ்டி காலத்தில் உடலோடு உள்ள சேர்க்கையாலும், ப்ரளயத்தில் (நமக்கு உடலே இல்லாத பொழுது) ஸூக்ஷ்மமாக (பெயர் உருவத்தால் பிரித்துப் பார்க்க முடியாததான) மூல ப்ரக்ருதியோடு சேர்க்கையாலும் மறைக்கப் படுகின்றன.

(கட உபநிஷத் -5-8-தஸ்மின் லோகாஸ்ரித சர்வே தது நாத்யேதி கச்சன -என்பது
பரம் பொருளுக்கே பொருந்தும்-)

6– ஸூசக: ச ஹி ச்ருதே : ஆசக்ஷதே ஹி தத்₃வித₃:
ஸூசக: ச ஹி –
கனவில் வரும் காட்சிகள் உண்மையில் நடக்கப் போகும் நிகழ்வுகளைக் கோடி காட்டுகின்றன என்று
ச்ருதே : – வேதம் சொல்கிறது – ஒரு கர்மத்தைச் செய்யும் பொழுது கனவில் ஒரு பெண்ணைக் கண்டால் அந்தக் கர்மம் நன்கு பலனளிக்கும், கொலை செய்யப் படுவதைக் கண்டால் உண்மையில் செய்யப்படுவான், என்பது போல்.
ஆசக்ஷதே ஹி தத்₃வித₃: – ஸ்வப்நத்தின் உண்மைத் தன்மையை அறிந்த ஜ்ஞாநிகள் இவ்வாறே கூறுகிறார்கள்.

(சாந்தோக்யம் -5-2-8-யதா கர்ம ஸூ காம்யேஷூ ஸ்த்ரியம் ச்வப்நேஷூ பச்யதி ஸ்ம்ருத்திம் தத்ர ஜாநீயாத் தஸ்மின் ஸ்வப்ன நிதர்சனே —)

ஜீவாத்மா தான் ஸ்வப்நப் பொருள்களைப் படைக்கிறார் என்றால், நல்ல நிகழ்வுகளைக் கோடி காட்டும் பொருள்களை மட்டும் கனவில் ஸ்ருஷ்டித்துக் கண்டு விடலாம். துன்பம் தரும் காட்சிகளையே பார்க்க மாட்டார். எனவே ஜீவன் படைக்கவில்லை .-ஆக, ஸ்வப்நப் பொருள்களும் உண்மை யானவையே , நமது சிறு புண்ய பாபங்களைக் கழிப்பதற்காகப் பரமாத்மா படைக்கிறார்.

3-2-2-தத₃பா₄வாதி₄கரணம்– ஜீவாத்மா எங்கு தூங்குகிறார்?-அதிகரணத்தின் பின்புலம-ஸங்கதி–
முன் அதிகரணத்தில் ஸ்வப்நத்தைப் பற்றி ஆராய்ந்து விட்டு,இந்த அதிகரணத்தில் ஸுஷுப்தி அதாவது ஆழ்ந்த உறக்கம் என்ற நிலையைப்பற்றி ஆராய்கிறார்.-
விஷய வாக்யம்–
உபநிஷத்தில் ஜீவாத்மா எங்கு தூங்குகிறார் என்பது மூன்று விதமாகக் கூறப்படுகிறது
1- யத்ர ஏதத் ஸுப்த: ஸமஸ்த: ஸம் ப்ரஸந்ந: ஸ்வப்நம் ந விஜாநாதி, ஆஸு ததா₃ நாடீ₃ஷு ஸூ ப்தோ பவதி: –சாந்தோக்யம் -8-6-3--எப்போது இந்த ஜீவாத்மா எல்லாப் புலன்களும் செயலிழந்த நிலையில், புலன்களால் ஏற்படும் துன்பங்கள் இல்லாமல், கனவும் காணாமல், ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறாரோ அப்போது இந்த நாடிகளில் தான் சேர்ந்திருக்கிறார்.
2–அத₂ யதா₃ ஸுஷுப்த: ப₄வதி யதா₃ந கஸ்யசந வேத₃, ஹிதா நாம நாட்₃ய: த்₃வா ஸப்ததி-ஸஹஸ்ராணி ஹ்ருத₃யாத் புரீ ததம் அபி₄ப்ரதிஷ்ட₂ந்தே , தாபி₄: ப்ரத்யவ ஸ்ருப்ய புரீததி சேதே –ப்ருஹத் உபநிஷத் -2-1-19– எப்போது இந்த ஜீவாத்மா தூங்குகிறாரோ அப்போது இதயத்தில் பூரீதத் என்ற இடத்துக்குச் செல்லும் 72000 நாடிகளின் மூலம் சென்று அந்த புரீதத் என்பதில் சயனிக்கிறான்
3-யத்ர ஏதத் புருஷ: ஸ்வபிதி நாம ஸதா ஸோம்ய! ததா₃ ஸம்பந்ந: ப₄வதி –சாந்தோக்யம் -6-8-1--எப்போது இந்த ஜீவாத்மா உறங்குகிறானோ அப்போது ஸத் என்கிற பரமாத்மாவோடு சேர்ந்திருக்கிறார்.
ஆக உப்படி நாடிகள், புரீதத், பரமாத்மா என்ற மூன்று இடங்களில் ஜீவாத்மா உறங்குவதாகச் சொல்லப்படுகிறது.

ஸந்தேஹம்– இந்த மூன்று இடங்களுக்கும் விகல்பமா? ஸமுச்சயமா? விகல்பம் என்றால் ஒரே இலக்கை அடைய இருக்கும் பல வழிகளுள் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது–திருவரங்கம் செல்ல விழுப்புரம் கடற்கரை பாதையில் செல்வது. ஸமுச்சயம் என்றால் ஒரு இலக்கை அடைய பல பொருள்களைச் சேர்த்துப் பயன் படுத்துவது–அரிசி பருப்பு வெல்லம் முதலானவற்றைச் சேர்த்து சக்கரைப் பொங்கல் செய்வது போல்.

பூர்வ பக்ஷம் -இவற்றுக்குள் விகல்பம் தான்– அதாவது ஒரு ஸமயத்தில் இவற்றில் ஏதோ ஒன்றில் தான் ஜீவாத்மா தூங்குகிறார். ஏனென்றால் அந்த அந்த வாக்கியத்தில் நாடிகளும், புரீதத்தும், பரமாத்மாவும் தனித் தனியாகத் தான் சொல்லப்பட்டுள்ளார்கள். மேலும்,ஆத்மா அணுவான படியால் அவர் ஒரு காலத்தில் ஒரு இடத்தில் தான் இருக்கமுடியும். எனவே மூன்று இடங்களுக்குள் விகல்பம் தான்.

வியாசரின் ஸித்தாந்தம்-
1- தத₃பா₄வ: நாடீ₃ஷு தச் ச்₂ருதே : ஆத்மநி ச
தத₃பா₄வ: –
ஸ்வப்நம் இல்லாத நிலையான ஸுஷுப்தி என்ற ஆழ்ந்தஉறக்கம்
நாடீ₃ஷு நாடிகளிலும்
ஆத்மநி பரமாத்மாவிடத்திலும்
ச புரீதத் என்ற இதயப் பகுதியிலும் (ஏற்படுகிறது)
தச்ச்₂ருதே : – மூன்றை யுமே தூக்கத்துக்கான இடமாக வேதம் உபதேசிக்கிறபடியால்.

வ்யாஸரின் அபிப்ராயம்–விகல்பம் சொன்னால், ஒரு வாக்கியத்தின் படி நடக்கும் பொழுது மற்ற இரண்டு வாக்கியங்களும் தற்காலிகமாகப் புறக் கணிக்கப் பட வேண்டும். இது வேத வாக்கியத்துக்கு ஒரு குறை யாகும். எனவே ஸமுச்சயம் என்று தான் கொள்ள வேண்டும்.
ப்ராஸாத₃ க₂ட்வா பர்யங்க ந்யாயம்–ராமன் மேல் மாடியில்(ப்ராஸாத₃ம்) தூங்குகிறான்,-கட்டிலில்(க₂ட்வா) தூங்குகிறான், மெத்தையில் (பர்யங்கம்) தூங்குகிறான் என்று சொன்னால் எப்படி மூன்றுக்கும் ஸமுச்சயம்(சேர்க்கை ) கொள்கிறோமோ அதே போல் இங்கும் நாடிகள், புரீதத், பரமாத்மா என்ற மூன்று இடங்களிலும் சேர்த்துத் தான் சயனிக்கிறார் ஜீவாத்மா.

நேரடியாகத் தூங்குவது பரமாத்மாவிடம் – இந்த மூன்றிலும் வைத்துக் கொண்டு, நாடிகளும் புரீதத்தும் மேல் மாடியின் நிலையிலும் கட்டிலின் நிலையிலும் உள்ளன. பரமாத்மா தான் மெத்தையின் நிலையில் உள்ளார், அதாவது அவர் தான் நேரடியாக இந்த ஜீவாத்மா சயனிக்கும் இடமாக உள்ளார்.

ஏன் இப்படிக் கொள்ள வேண்டும் என்பதை அடுத்த ஸூத்ரத்தில் கூறுகிறார் வ்யாஸர்
2-அத: ப்ரபோ₃த₄: அஸ்மாத்
– “ஆகையால் தான் இதிலிருந்து விழிக்கிறான்”
வேதாந்தத்தில் (ஸத: ஆக₃ம்ய ந விது₃: ஸத ஆக₃ச்சா₂ம: இதி)-சாந்தோக்யம் -6-10-2— அதாவது “விழிக்கும் பொழுது ஸத் என்ற பரமாத்மாவிடமிருந்து எழுந்து வரும் இந்த ஜீவாத்மா ’நான் பரமாத்மாவோடு இவ்வளவு நேரம் கூடி இருந்தேன்’ என்று அறியாமலேயே விழிக்கிறார்” என்று கூறுகிறது.
இந்த வாக்கியம் பொருந்த வேண்டுமென்றால், ஜீவாத்மா உறங்கும் மெத்தை ஸ்தானத்தில் பரமாத்மா இருக்கிறார் என்று தான் கொள்ள வேண்டும். மூன்று இடங்களுக்குள் விகல்பமாக இருந்தால், ’பரமாத்மாவிலிருந்தோ நாடியிலிருந்தோ புரீதத்திலிருந்தோ எழுந்து வருகிறார்’ என்று வேதம் சொல்லி யிருக்க வேண்டும். அப்படிச் சொல்ல வில்லை . ஆக, ஜீவாத்மா தூங்கும் பொழுது இம் மூன்று இடங்களுக்கும் ஸமுச்சயம் தான், அதிலும் நேரடியாகப் பரமாத்மாவிடம் சயனிக்கிறார் என்று நிரூபிக்கப்பட்டது.

3-2-3-கர்மாநுஸ்ம்ருதி சப்₃த₃ வித்₄யதி₄கரணம் –தூங்குபவர் தான் விழிக்கிறாரா? (தூங்குபவரே விழிக்கிறார் )
ஸங்கதி–
முன் அதிகரணத்தில் தூக்கத்தைப் பற்றின பேச்சு எழுந்த படியால், அதோடு தொடர்புபட்ட வேறொரு விஷயத்தை இதில் ஆராய்கிறார்.
ஸந்தேஹம்– எந்த ஜீவாத்மா தூங்கச் சென்றாரோ அவரே தான் பிற்பாடு விழிக்கிறாரா? அல்லது வேறொரு ஜீவாத்மா விழிக்கிறாரா?

பூர்வ பக்ஷம்– தூங்கப் போகும் ஜீவாத்மா புலன்கள், மனது முதலானவற்றோடு தொடர்பை இழந்து, பரமாத்மாவோடு தூக்கத்தில் சேர்கிறார் என்று வேதத்தில் கூறப்படுகிறது. இதற்கும் முக்திக்கும் வேறுபாடே இல்லை . எனவே , அந்த ஜீவாத்மா திரும்பவும் விழிக்க இயலாது, எனவே வேறொரு ஜீவாத்மா தான் தூக்கத்திலிருந்து விழிக்கிறார்.

ஸித்தாந்தம்- 1– ஸ: ஏவ து கர்ம-அநு ஸ்ம்ருதி-சப்₃த₃-விதி₄ப்₄ய:
ஸ: ஏவ து–
“அவன் தான் அன்றோ ” –அதாவது, தூங்கப் போன அதே ஜீவாத்மா தான் விழிக்கிறார் அன்றோ-(இதற்கு நான்கு ஹேதுக்கள்-1-கர்ம-2-அநு ஸ்ம்ருதி-3-சப்₃த₃-4-விதி-)
கர்ம–இந்த ஜீவாத்மா சேர்த்து வைத்த புண்ய பாபங்களின் பயன்களை அவன் அநுபவித்தே ஆக வேண்டும், கர்மங்களை அழிக்க்கக் கூடிய பரமாத்மாவைப் பற்றின ஜ்ஞாநம் இவனுக்கு ஏற்படாதபடியால்.
அநு ஸ்ம்ருதி:–“நேற்று தூங்கப் போன நானே இன்று விழித்துள்ளேன்” என்கிற நினைவு உள்ள படியால்.
சப்₃த₃:– வேதச் சொல் அவ்வாறு சொல்வதாலும்-(சாந்தோக்யம் -6-10-2- த இஹ வ்யாகரோ வா சிம்ஹோ வா வ்ருகோ வா வரஹா வா கீடோ வா பதங்கோ வா தம்சோ வா மசகோ வா யத்யத் பவந்தி தத் ஆபவந்தி) அதாவது ’தூக்கத்துக்கு முன் புலியாகவோ சிங்கமாகவோ எதுவாக எந்த ஜீவாத்மா இருந்தானோ அதுவாகவே அவன் தூக்கத்துக்குப் பின் விழிக்கிறான்”
விதி₄: – வேதத்தில் மோக்ஷம் அடைவதற்குத் தியானம் செய்ய வேண்டும் என்று சொல்லும் கட்டளைகள் எல்லாம் வீணாகப் போகுமான படியால். – தூங்கினாலே முக்தி என்றால் எதற்குத் தியானம் செய்ய வேண்டும்?

தூக்கமும் முக்தியும்
முக்திக்கும் தூக்கத்துக்கும் எந்த வேறுபாடும் இல்லையே என்று பூர்வ பஷி கேட்டிருந்தார். அது தவறானது.
ஸுஷுப்தியைப் பற்றி உபநிஷத் சொல்லும் பொழுது, அது எந்த விதமான செயல்பாடுகளும் இல்லாமல், ஜீவாத்மாவின் ஜ்ஞாநம் மிகவும் சுருங்கி யிருக்கும் நிலை என்கிறது
சாந்தோக்யம் -8-11-1-தத் யத்ர ஏதத் ஸூ ஷூப்த –நாஹகலு அயம் ஏவம் சம்ப்ரதி ஆத்மானம் ஜா நாதி அயம் அஹம் அஸ்மி இதி நோ ஏவ இமானி பூதானி வி நாசமேவ அபீத பவதி நாஹம் அத்ர போக்யம் பச்யாமி-“இந்த ஸுஷுப்தி நிலையில், ஒரு ஜீவாத்மா’ நான் இன்னார்’ என்று தன்னையும் அறிவதில்லை , தன்னைச் சுற்றி இருக்கும் பொருள்களையும் அறிவதில்லை , அறிவின் வெளிப்பாடில்லாமல் அழிந்தது போல் இருக்கிறார்”

முக்தியைப் பற்றி உபநிஷத் சொல்லும் பொழுது, அதில் இந்த ஜீவாத்மா முழுவதுமாக அறிவின் மலர்ச்சியைப் பெற்று, எல்லா விதமான இன்பங்களையும் அநுபவிக்கிறார் என்கிறது
பரம் ஜ்யோதி: உப ஸம்பத்₃ய ஸ்வேந ரூபேண அபி₄நிஷ்பத்₃யதே — பரமாத்மாவை அடைந்து தன் இயற்கையான பண்புகளோடு கூட முழுவதுமாக வெளிப்படுகிறார்-

ஸர்வம் ஹ பச்ய: பச்யதி ஸர்வம் ஆப்நோதி ஸர்வ ச:-முக்தி அடைபவன் அனைத்தையும் அறிகிறான், அனைத்தையும் எல்லா விதத்திலும்அடைகிறான்-

சாந்தோக்யம் -8-12-3-பரம் ஜ்யோதிரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே ச தத்ர பர்யேதி ஐ ஷத் கிரீடன் ரமமாண- என்றும்7-25-2-ஸ ஸ்வ ராட் பவதி தஸ்ய சர்வேஷூ லோகேஷூ காம சாரோ பவதி -என்றும்7-26-2-சர்வம் ஹ பச்ய பஸ்யதி சர்வம் ஆப் நோதி சர்வச -என்றும் கூறும் –

ஸ: தத்ர பர்யேதி ஜக்ஷத் க்ரீடன் ரமமாண:, ஸ: ஸ்வராட் ப₄வதி, தஸ்ய ஸர்வேஷு லோகேஷு காம சார: ப₄வதி--அவன் அந்த வைகுந்தத்தில் ஆநந்தமாக விளையாடிக் கொண்டு திரிகிறான், செயற்கையாக யாருக்கும் அடிமையாக இருப்பதில்லை , அவனுக்கு எல்லா உலகங்களிலும் அவன் ஆசைப்பட்டபடி இன்பங்கள் கிடைக்கின்றன
ஆக இப்படி தூக்கத்துக்கும் முக்திக்கும் பெருத்த வேறுபாடு உள்ளதால், களைப்படைந்து செயல்பட முடியாமல் தூங்கப்போன ஜீவாத்மா தான் பரமாத்மாவிடமிருந்து புத்துணர்ச்சி பெற்று திரும்பவும் விழிக்கிறார்.

3-2-4-முக்₃தா₄தி₄கரணம் –மயக்கம் ஒரு தனி நிலையா?(மரணத்தில் பாதி மயக்கம் )
முக்₃தா₄தி₄கரணம்–ஸங்கதி–
முன் அதிகரணங்களில் விழிப்பு, கனவு, தூக்கம், மரணம் முதலான நான்கு நிலைகளைப் பற்றி ஆராய்ந்தார் வ்யாஸர். இந்த அதிகரணத்தில், மயக்கம் என்ற நிலையைப் பற்றி ஆராய்கிறார்-

ஸந்தேஹம்– மயக்கம் என்பது முன் சொல்லப்பட்ட4 நிலைகளுக்குள் ஒன்று தானா? அல்லது தனி நிலையா?
பூர்வ பக்ஷம்– தனி நிலை என்று சொல்லத் தேவை யில்லை . மயக்கத்தில் ஜ்ஞாநம் வெளிப்படாமல் இருப்பது போல் தூக்க நிலையிலும் அறிவு வெளிப்படுவதில்லை . எனவே அதிலேயே இதை அடக்கி விடலாம்

ஸித்தாந்தம்- 1- முக்₃தே ₄ அர்த₄ ஸம்பத்தி: பரிசேஷாத்
முக்₃தே ₄-
மயக்க மடைந்த புருஷனிடம் யாதொரு நிலை உள்ளதோ , அந்த மயக்கம் என்ற நிலை
அர்த₄ஸம்பத்தி: – மரணத்தில் பாதியை அடைந்தது போன்றது (எனவே தனி நிலை என்று தான் ஏற்க வேண்டும்)
பரிசேஷாத்–மீதமிருக்கிற படியால்.

மயக்கம் என்ற நிலையில் ஜ்ஞாநம் வெளிப் படாதபடியால் இது விழிப்பு மற்றும் கனவு நிலைகளில் அடங்காது. இது ஆழ்ந்த உறக்கத்திலும் அடங்காது, காரணம் மாறுகிறபடியால். தூக்கத்துக்குக் காரணம் தமோ குணம், மயக்கத்துக்குக் காரணம் அடிபடுவது, –அத்யந்த அநிஷ்ட ஸ்ரவணாத்-மிகவும் அதிர்ச்சி தரும் கெட்ட செய்தியைக் கேட்பது, முதலானவை .

மரணத்திலும் இது அடங்காது–-நிமித்த வைரூப்யாத்தன்மை மாறுபடுகிற படியால். மரணத்தில் உடலோடும் ப்ராணனோடும் முழுவதுமாகத் தொடர்பு அற்று விடும். ஆனால் மயக்கத்திலோ அவை முற்றுமாக அறுவதில்லை , மிகவும் வலு விழந்தாலும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அதனால் –ஆகார வைரூப்யாத்-தன்மையில் மாறுபாடு உள்ளது.-ஆக, விழிப்பு தூக்கம் கனவு மரணம் என்று நமக்குத் தெரிந்த நான்கு நிலைகளில் இது அடங்காதபடியால், மயக்கம் என்பது ஒரு தனி நிலை என்று தான் கொள்ள வேண்டும்.

இந்த நான்கு அதிகரணங்களும் ஒரு பேடிகைஇதில் ஜீவனுக்கு நான்கு நிலைகளிலும் உள்ள துக்கங்கள் காட்டப்படுகின்றனஇனி ப்ரஹ்மம் ஜாக்ராதிகள் ஆகிய எந்த நிலையிலும் தோஷம் அற்றது என்றும் தானே நிர்த் தோஷமான கல்யாண குணம் மிக்கது என்றும் நான்கு அதிகரணங்களாலும் விளக்குகிறார் –

3-2-5-உப₄ய லிங்கா₃தி₄ கரணம் குற்ற மில்லாக் கல்யாண குணக் கடல் –அதிகரணத்தின் பின் புலம்–ஸங்கதி– இது வரை வைராக்யம் உண்டு செய்வதற்காக ஜீவாத்மா ஸம்ஸாரத்தில் படும் துன்பங்களைக் கூறினார் வ்யாஸர். இனி பரமாத்மாவிடம் ஆசை பிறப்பதற்காக-பகவத் ப்ராப்தி த்ருஷ்ணா -ஆர்த்தி பெருக- அவனுடைய பெருமைகளையும் குற்ற மின்மையையும் விரித்துரைக்கிறார்-

ஸந்தேகம்– விழிப்பு, கனவு முதலான நிலைகளில் உடலில் இருப்பதால் ஜீவாத்மாவுக்கு தோஷங்கள் ஏற்படுவது போல் பரமாத்மாவும் உடலில் இருப்பதால் அவருக்கும் தோஷம் உண்டா? அல்லது கிடையாதா?

பூர்வ பக்ஷம்– உடலில் வெவ்வேறு நிலைகளில் பரமாத்மா அவற்றில் உள்ளபடியால் அவருக்கும் தோஷம் உண்டு-

ஸம்போ₄க₃ ப்ராப்தி: இதி தேத் ந வைசேஷ்யாத்(அதிகரணம்1.2.1 ஸூத்ரம் 8)என்ற ஸூத்ரத்தில் பரமாத்மா தியானத்துக்காக இதயத்தில் இருப்பதால் அவருக்கு தோஷம் வருமா என்று கேட்டு, அவர் கர்மத்தால் அல்லாமல் கருணையால் இதயத்தில் இருக்கிற படியால் தோஷம் வராது என்று கூறப்பட்டது

போ₄க்த்ரா பத்தே: அவிபா₄க₃: ஸ்யாத் லோகவத் (அதிகரணம் 2.1.5 ஸூத்ரம் 1) என்ற ஸூத்ரத்தில் உலகத்தை ஸ்ருஷ்டிக்கும் பரமாத்மாவுக்கு மூல ப்ரக்ருதியே உடலானபடியால், உடல் என்பதே துக்கத்தைத் தரக் கூடியது என்று நாம் உலகில் ஜீவாத்மாக்களிடம் காண்கிறபடியால், பரமாத்மாவுக்கும் இந்த உடலால் தோஷங்கள் வருமே என்று கேட்டுக் கொண்டு, அப்படி யில்லை ,கர்மத்தால் ஏற்கப்பட்ட உடல் தான் துன்பங்களைக் கொடுக்கும், எல்லா உடல்களும் அப்படி அல்ல, முக்தர்கள் ஏற்கும் உடல்கள் துன்பங்களைக் கொடுப்பதில்லை , அதுபோல் பரமாத்மாவும் கர்மங்களின் காரணமாக உடல் எடுத்துக் கொள்ளாதபடியால் அவருக்கு தோஷம் இல்லை என்றார்

இப்போது பூர்வ பஷி கூறுவது–எந்தக் காரணத்தால் வேண்டுமானாலும் பரமாத்மா உடலை உடையவராக இருக்கட்டும். ஆனால் உடல் என்பதே தாழ்ந்தது, அதோடு தொடர்பு என்பதே தோஷம் தான். இதை வஸ்து ஸ்வபாவம்(பொருளின் தன்மை )என்பார்கள். சேற்றில் ஒருவன் தெரியாமல் விழுந்தாலும் தெரிந்தே விழுந்தாலும் அது உடலை அழுக்காக்கத் தான் செய்யும். அதுபோல் இந்த உடல்களோடு பரமாத்மாவுக்கு தொடர்பு இருப்பதாலேயே அவருக்கும் தோஷம் இருந்தேவாக வேண்டும்.

பரமாத்மாவின் இரண்டு அடையாளங்கள் 1- ந ஸ்தா ₂நத: அபி பரஸ்ய உப₄ய லிங்க₃ம் ஸர்வத்ர ஹி
ஸ்தா₂நத: அபி–
விழிப்பு முதலான நிலைகளில் இருக்கும் அந்தந்த உடல்களுக்குள் இருந்தாலும்
பரஸ்ய ந–பரமாத்மாவுக்கு எந்த தோஷங்களும் கிடையாது
ஸர்வத்ர ஹி–ஏனென்றால் எல்லா உபநிஷத்துக்களிலும் ஸ்ம்ருதிகளிலும்
உப₄ய லிங்க₃ம்–அவர் குற்றமின்மை குணமுடைமை என்ற 2 அடையளங்கள் உடையவராகவே கூறப் படுகிறார்-

வேதத்தில்–(அபஹத பாப்மா விஜர: விம்ருத்யு: விஸோக: விஜிக₄த்ஸ: அபிபாஸ: ஸத்ய காம: ஸத்ய ஸங்கல்ப:-சாந்தோக்யம் -8-1-5- ) அதாவது “பாப மற்றவர், மூப் பற்றவர், மரண மற்றவர், ஸோக மற்றவர், பசி யற்றவர், தாக மற்றவர், எல்லா ஆசைகளும் நிரம்பியவர், நினைத்ததை நடத்தும் வல்லமை படைத்தவர்” என்று கூறப்படுகிறது. இதில் முதல் 6 பண்புகளால் பரமாத்மாவுக்கு எந்தக் குற்றங்களும் இல்லை என்றும், கடைசி 2 பண்புகளால் பரமாத்மாவுக்குக் கல்யாண குணங்கள் உள்ளன என்றும் தெரிகிறது

ஸ்ம்ருதியில்-ஸமஸ்த கல்யாண கு₃ணாத்மக: அஸௌ ஸ்வ சக்தி லேச உத்₃த்₄ருத பூ₄த ஸர்க₃: | தேஜோ ப₃ல ஐச்வர்ய மஹாவபோத ₄ஸு வீர்ய சக்த்யாதி₃ கு₃ணை கராசி: || -(ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-84-)“எல்லாக் கல்யாண குணங்களும் உடையவர்; தன் சக்தியின் ஒரு சிறு பகுதியால் உலகத்தை எல்லாம் படைக்கிறது;தேஜஸ் பலம் ஐச்வர்யம் ஜ்ஞாநம் வீரம் சக்தி என்ற குணங்களின் கடல்”-

பர: பராணாம் ஸகலா: ந யத்ர க்லேசாத₃ய: ஸந்தி பராவரேசே -((ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-85)- பரமாத்மா உயர்ந்தவர்களை விட உயர்ந்தவர்; அவரிடம் எந்த விதமான தோஷங்களும் இல்லை-

ஸமஸ்த ஹேய ரஹிதம் விஷ்ண் வாக்₂யம் பரம் பதம் (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-51)–எந்த விதமான குற்றங்களும் அற்றவரான விஷ்ணு உயர்ந்த இலக்காவார்-

ஜீவாத்மாவுக்கு எப்படி குற்றங்கள்? கேள்வி–பரமாத்மாவைப் பற்றி’அபஹத பாப்மா’ என்று சொல்லும் வேதம், ஜீவாத்மாவைப் பற்றியும் இப்படி தான் கூறுகிறது. ஆனால் அது ஜீவாத்மாவின் இயற்கையான நிலை ஆகும். ஆனால் இப்போது ஜீவாத்மா தேவர் மனிதன் விலங்கு தாவரம் முதலான உடல்களை எடுத்துக் கொண்டு பிறப்பதால் இது வேறொரு நிலை ஆகும். இந்த நிலை வேறு பாட்டால் -அவஸ்தா பேதாத் –இப்போது ஜீவாத்மாவுக்குக் குற்றங்கள் உள்ளன என்று ஏற்கிறோம். அதே போல் பரமாத்மாவுக்கும் நிலை வேறு பாட்டால் இயற்கையில் தூய்மையானவரான அவருக்கும் தோஷம் உண்டு.

பதில்-2– பே₄தா₃த் இதி தேத் ந ப்ரத்யேகம் அதத்₃ வசநாத்
பே₄தா₃த்
– (நிலை ) மாறுபாட்டால் (பரமாத்மாவுக்கும் தோஷங்கள் வரலாமே )
இதி தேத் ந–என்று நீங்கள் கூறினால் அது தவறானது
ப்ரத்யேகம் அதத்₃ வசநாத்– ஒவ்வொரு முறையும் பரமாத்மாவுக்கு தோஷம் இல்லை என்று வேதம் சொல்வதால்-

ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் உள்ள அந்தர்யாமி ப்ராஹ்மணம் என்ற பகுதியில் தான் பரமாத்மா அனைத்துப் பொருள்களுக்குள்ளும் அந்தர்யாமியாக இருக்கிறார் என்று தெளிவாகச் சொல்லப்படுகிறது. ப்ருதிவீ, ஜலம், அக்நி, வாயு, வானம், ஸ்வர்கம், ஸூர்யன், திசைகள், சந்த்ரன், நக்ஷத்ரங்கள், மூல ப்ரக்ருதி, கண், காது, மனது, தோல், ஜ்ஞாநம் முதலானவற்றை ஒவ்வொன்றாக எடுத்து, “இதில் பரமாத்மா உள்ளார், இதற்குள் பரமாத்மா உள்ளார், இது அவரை அறிவதில்லை , இதுவும் அவருக்கு சரீரம், இதை அவர் இயக்குகிறார்” என்று தனித் தனியாகச் சொல்லி விட்டு, உடனடியாக ஒவ்வொரு முறையும் “குற்றமற்றவரான அவர் தான் உனக்கும் அந்தர்யாமீ” என்று வேதம் கூறுகிறது. எனவே , இந்த உடல்களுக்குள் இருப்பதால் வரக் கூடிய தோஷங்கள் அவருக்கு இல்லை என்பது தான் உபநிஷத்தின் கறுத்துஆகும்

ஜீவாத்மா இயற்கையாகக் குற்ற மற்றவரானாலும்,பரமாத்மாவின் ஸங்கல்பத்தால் அவர் ஸம்ஸாரத்தில் கட்டுப்படுவதை வேதம் சொல்வதால், அந்தக் குற்றமின்மை இப்போது இல்லை என்று சுருக்கிக் கொள்கிறோம். ஆனால் பரமாத்மாவுக்கு அப்படி எந்த வாக்கியமும் இல்லாத்தால் அவர் எப்போதும் குற்ற மற்றவரே .-

வஸ்து ஸ்வபாவத்தை ஆராய்தல்
பூர்வ பஷி ஒருவாதத்தை முன் வைத்தார்–உடல் என்பது அதன் ஸ்வபாவம் அதாவது இயற்கையாலேயே தாழ்ந்தது. எனவே அதோடு பரமாத்மாவுக்குத் தொடர்பு இருந்தாலேயே தோஷங்கள் வந்தே தீரும் என்று. இது தவறானது.– உலகில் எந்தப் பொருளும் இயற்கையில் துக்கமளிப்பதாகவோ ஸுகமளிப்பதாகவோ இருப்பதில்லை . அப்படி இருந்தால், ஒரு பொருள் எல்லா மனிதர்களுக்கும் எல்லா இடங்களிலும் எல்லாக் காலத்திலும் துக்கத்தையோ ஸுகத்தையோ மட்டும் தான் அளிக்க வேண்டும். ஆனால் உலகில் நாம் அப்படிக் காண வில்லை . ஒரே பாகற்காய் சிலருக்கு ஸுகத்தையும் சிலருக்குத் துன்பத்தையும் தருகிறது. கெட்டியான ஆடைகள் இமாலயத்தில் இன்பம் அளிக்கின்றன- ஆனால் சென்னையில் துன்பம் அளிக்கின்றன. ஒரு போர்வை ஒரே ஊரிலேயே குளிர் காலத்தில் இன்பத்தையும் வெயில் காலத்தில் துன்பத்தையும் தருகிறது. ஆகவே , ஒரு பொருள் இன்ப துன்பங்களை அளிப்பது அதன் தன்மையால் இருக்கவே முடியாது, அந்தந்த ஜீவாத்மாவின் பாப புண்யங்களுக்கு ஏற்பத்தான் சில சில பொருள்கள் அவனுக்கு சில சில காலங்களில் இன்பமோ துன்பமோ அளிக்கின்றன

(ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-6-46-48- நரக ஸ்வர்க்க சம்ஜ்ஞே வை பாப புனே த்விஜோத்தம -வஸ்து ஏகம் ஏவ துக்காய ஸூ காய ஈர்ஷ்யா கமாய ச – கோபாய ச யத தஸ்மாத் வஸ்து வஸ்தவாமகம் குத-தத் ஏவ ப்ரீதயே பூத்வா புன துக்காய ஜாயதே – தத் ஏவ கோபாய யத் பிரசாதாய ச ஜாயதே தஸ்மாத் துக்காத்மகம் நாஸ்தி ந ச கிஞ்சித் ஸூ காத்மகம் –என்றபடி)

(சீதா பிராட்டி-பெருமாளிடம் -ஸ்வர்க்கம் நரகம் -சேர்ந்து இருப்பதும் பிரிந்து இருப்பதும் -வஸ்துவின் தன்மையால் அல்ல -)

(நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே
.–6-3-1–தன் விருத்த விபூதி கத்வத்தைக் காட்டக் கண்டு -முன்பு பிரிவாலே வந்த அவசாதத்துக்கு உதவிற்றிலன் -என்று வெறுத்தவர் -சர்வ கதனாய்-தத்கத தோஷ ரசம் ஸ்ப்ருஷ்டனாய் ஸமஸ்த கல்யாண குணாத்மகனான இவனே நமக்கு ப்ராப்யமும் ப்ராபகமும் மற்றும் உள்ள சர்வ வித பந்துவும் என்று அவன் பெருமையை அனுபவித்து ப்ரீதராய் கொண்டு பேசுகிறார்)

ததே₃வ ப்ரீதயே பூ₄த்வா புநர் து₃꞉கா₂ய ஜாயதே । தஸ்மாத் து₃꞉கா₂த்மகம் நாஸ்தி ந ச கிஞ்சித் ஸுகா₂த்மகம் ॥ ஒரே பொருள் இன்பத்தை அளித்து விட்டு, பிறகு அதுவே துன்பத்தைத் தருகிறது. எனவே ஸுக வடிவமானது என்றோ துக்க வடிவமானது என்றோ ஒரு பொருளே கிடையாது. அது ஜீவாத்மாவின் பாப புண்யங்களால் ஏற்படுகிறது.-எனவே , உடல் என்பதே இயற்கையில் துன்பத்தையே அளிக்கக் கூடியது என்று பூர்வ பஷி சொன்னது பொருந்தாது. ஆகையால், பரமாத்மா கருணையால் இந்த உடலோடு தொடர்பு பட்டிருந்தாலும், அவருக்கு பாபங்களோ புண்யங்களோ இல்லாத படியால் அவருக்கு அது துன்பத்தையோ இன்பத்தையோ அளிக்காது. அவர் அந்தந்த பொருள்களுள் இருந்து கொண்டு அவற்றை இயக்குகிறார், அவ்வளவு தான்.

வேதம் உபதேசிப்பது ஜீவாத்மாவுக்கா? பரமாத்மாவுக்கா?
3- அபி ச ஏவம் ஏகே –
“மேலும் ஒரு சிலர் இவ்வாறு (கூறுகிறார்கள்)
வேதங்களில் ஒரு சாகையைச் சேர்ந்தவர்கள், ஒரே உடலில் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் இருந்தாலும், ஜீவாத்மா மட்டும் தான் தோஷங்களை உடையவராகிறார், பரமாத்மாவுக்கு தோஷங்கள் கிடையாது என்று படிக்கிறார்கள்-
த் ₃வா ஸுபர்ணா ஸயுஜா ஸகா₂யா ஸமாநம் வ்ருக்ஷம் பரிஷஸ்வ ஜாதே| தயோ : அந்ய: பிப்பலம் ஸ்வாது₃ அத்தி அநச்நன் அந்ய:அபி₄சாக சீதி||(முண்டக உபநிஷத் -3-1-1-)
ஒரே தன்மைகளை உடையவர்களாக(அபஹத பாப்மத்வம் முதலான 8 பண்புகளை உடையவர்களான) இரண்டு பறவைகள் (ஜீவாத்மாவும் பரமாத்மாவும்) ஒரு மரத்தில்(உடலில்) உள்ளனர். அம் மரத்தில் உண்டாகும் பழங்களை (இன்ப துன்பங்களை ) ஒரு பறவை (ஜீவாத்மா) மட்டும் உண்டு ஒளி மங்கிப் போகிறது. மற்றொரு பறவை (பரமாத்மா) உண்ணாமல் ஒளி விஞ்சி இருக்கிறது

பூர்வ பக்ஷியின் கேள்வி– ’அநேந ஜீவேந ஆத்மநா அநு ப்ரவிச்ய நாம ரூபே வ்யாகரவாணி’ (சாந்தோக்யம் –)தாவது ’இந்த ஜீவாத்மாக்களை உடலாகக் கொண்ட நான் எல்லாப் பொருள்களுக்கும் புகுந்து பெயராலும் உருவத்தாலும் அவற்றை வேறு படுத்தப் போகிறேன்’ என்று பரமாத்மா கூறுவதால், எல்லாச் சொற்களுமே ஒரு அசேதனப் பொருளைச் சொல்லி, அதற்குள் இருக்கும் ஜீவாத்மாவைச் சொல்லி, அதற்குள் இருக்கும் பரமாத்மாவைச் சொல்கின்றன-(அபர்யாவஸ்யமான வ்ருத்தி). ஆகவே வேதத்தில் “ப்ரஹ்மசாரீ இப்படிச் செய்ய வேண்டும்”, “ஸந்யாஸீ இப்படிச் செய்ய வேண்டும்” என்று சொல்லும் வாக்கியங்களிலெல்லாம் பரமாத்மாவுக்குத் தான் கட்டளை இடப்படுகிறது என்றாகும். அப்படியானால் அவரும் கர்மங்களுக்கு வசப்பட்டவராக வேண்டுமே ?

பதில் (அடுத்த ஸூத்ரத்தில்) 4-அரூபவதே₃வ ஹி தத் ப்ரதா₄நத்வாத்–“அது உருவமற்றது போல; இயக்குவதால் பரமாத்மாவுக்கு உலகமே உருவமானாலும் அவர் உருவமற்றவர் போலத் தான் உள்ளார், அதாவது அந்தந்த உடலால் வரும் இன்ப துன்பங்களால் பாதிக்கப் படாமல் தான் உள்ளார்.ஏனென்றால் வேதமே “ஆகாதசோ ஹ வை நாம நாம ரூபயோ : நிர்வஹிதா , தே யத₃ந்ரா தத் ப்ரஹ்மம்- (சந்தோக்யம் -8-14-1) அதாவது “ஆகாசம் எனப்படும் பரமாத்மா பெயர்களையும் உருவங்களையும் நிர்வாஹம் செய்பவர், அவற்றுக்கு அப்பாற்பட்டவர்” என்று தெளிவாகக் கூறுகிறது.எனவே பரமாத்மா கர்மத்துக்கு வசப்படமாட்டார். வேதம் நமக்குத் தான் கட்டளை இடுகிறதே தவிற பரமாத்மாவுக்கு அல்ல

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌ – 5 –ஸூரி வைபவ பாதம்-5– க்‌ரந்த,-தத் கர்த்ரு வைப, வாதி, கரணம்‌ -முதல் பகுதி -(39-49)-ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

July 2, 2026

5 –ஸூரி வைபவ பாத, – 3 அதிகரணங்கள் இதில்-
5– க்‌ரந்த,-தத் கர்த்ரு வைப, வாதி, கரணம்‌ —39 – 74 –மொத்தம் 36 ஸூரணைகள்
6—ஸூரி ப்ராமாண்ய விஸேஷாதி கரணம்‌(ப்ரமாத்ரு வைபவம் ) 75 – 93 –மொத்தம் 19-ஸூரணைகள்
7-ப,க,வத் கடாக்ஷ விஸேஷாதி கரணம்‌ 94–96—மொத்தம் -3- ஸூரணைகள்

5– க்‌ரந்த,-தத் கர்த்ரு வைப, வாதி, கரணம்‌ —39 – 74 –மொத்தம் 36 ஸூரணைகள்–முதல் பகுதி-39 – 49–மொத்தம் 11-ஸூரணைகள்

இனிமேல் –சந்தங்கள் ஆயிரம்-திருவாய்-10-9-11- –என்று திருவாய் மொழிக்கு சொன்ன வேதத்வத்தை சாதிக்கக் கோலி பிரதமம் ஏவம் விதமாய் இருப்பதொரு வேதம் உண்டோ என்கிற சங்கைக்கு பரிஹாரம் பண்ணுகிறார் மேல்-வேத அத்‌,யயந விதி, போலே இப் ப்ரப,ந்த,அத்‌,யயநமும்‌ விதி, என்பது, இதினுடைய அர்த்த, பரிஜ்ஞாநா பாவத்தில்‌ உத்பத்தி நிரூபிக்க வேணு மென்பதாய்க் கொண்டு வேதத்தோ டொக்கச்‌ சொல்லா நின்றீர்‌. இதுவும்‌ பிற்றை வேதமோ என்னில்‌ ; இதுவும் வேதம்‌; இது என்ன வேதம்‌ என்ன

எவ்வுலகத்து எவ்வெவையும் என்கையாலே வேதம் பஹு விதம்–சூரணை-39-

அதாவது
ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வவையும் -திருவாய்-3-1-6–என்கையாலே வேதம் ஆனது
அத்யேதாக்கள் உடைய பேதத்தாலும் ,லோக பேதத்தாலும் பஹுவிதமாய் இருக்கும்
என்கை .. ஆகையால் அதிலே இதுவும் ஒரு விதம் என்ற கருத்து-

‘வேதா வா ஏதே । அநந்தா வை வேதா ச’” (யஜு. கா.) என்றும்‌, ‘“ஓதுவாரோத்தெல்லாம்‌ எவ்வுலகத் தெவ்வெவையும்‌”* (திருவா. 3 – 1- 6) என்றும்‌ சொல்லுகிறபடியே அத்‌யேதாக்களுடைய பேதத்தாலும்‌, லோக பேதத்‌தாலும்‌ வேதம்‌ ப,ஹு வித,ம்‌ என்கிறார் –

ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும்
சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிறிதில்லை
போது வாழ் புனந்துழாய் முடியினாய் பூவின் மேல்
மாது வாழ் மார்பினாய் என் சொல்லி நான் வாழ்த்துவனே -3-1-6–ஓதுவார் என்கையாலே -அதிகாரி வைவித்யத்தைச் சொல்லுகிறது –-ருகாதி சதுர் வேதங்களும் அத்யேத்ரு பேதத்தாலே பிறந்த சாகா பேதங்களும் –ஊர்த்த லோகங்களில் உள்ளார் ஞானாதிகருமாய் -ஆயுஸ் சாலே அதிகருமாய் இருக்கையாலே அவர்களுக்கு அனுரூபமாக அவ்வோ லோகங்களிலும் இந்த பேதங்களும் உண்டு

ஆனால் ஏக பாஷையாய் இருக்க வேண்டாவோ ? சம்ஸ்க்ருதமும் த்ராவிடமுமாய் அன்யோன்யம் பேதித்து இரா நின்றதீ என்ன சொல்லுகிறது மேல்-ஆனால்‌ அது ஸம்ஸ்க்ருதமாய்‌, இது த்‌ராவிடமாய்ப்‌ பிரிந்திராறின்றதீ என்ன, சொல்லுகிறது மேல்‌.

இதில் சமஸ்க்ருதம் திராவிடம் என்கிற பிரிவு ருகாதி பேதம் போலே-சூரணை -40-

அதாவது
இப்படி பஹு விதமான இவ் வேதத்திலே சமஸ்க்ருத வேதம் திராவிட வேதம் என்கிற பிரிவு-சமஸ்க்ருதாம் சந்தன்னில் ருக் வேதம் ,யஜுர் வேதம் சாம வேதம், அதர்வண வேதம் ,என்கிற பிரிவு போலே என்கை ….-இத்தால் வேத ராசி ஒன்றாய் இருக்க செய்தே ,சமஸ்க்ருத பாஷா ரூபம் ஆனவது தன்னிலே ருகாதி ரூபேண பல படியாய் பிரிந்தால் போலே பாஷா பேதேநவும் இப்படி பிரிந்து இருக்கும் என்ற படி-(ஆதித்யருக்குள் அஹம் விஷ்ணு -ஏகாதச ருத்ரனுக்குள் சங்கரன் -அந்த கோஷ்ட்டிக்குள் –
நக்ஷத்திரங்களில் அஹம் – சந்திரன் -இல்லாத போதும் என்பதுக்கு த்ருஷ்டாந்தம் )

(இதில்‌) இந்த வேதத்தில்‌. (ஸம்ஸ்க்ருதம்‌ த்‌ராவிட,ம்‌ என்கிற பிரிவு ருகாதி பேதம் போலே என்று) வேதங்கள் தான்‌ ஒன்று போலேயோ மற்றது? ஸம்ஸ்க்ருத வேதந்தான்‌ ரூக்‌,யஜுஸ் ஸாம அத,ர்வணங்களாய்ப்‌ பிரிந்தாப் போலே வேதந்தான்‌ ஸம்ஸ்க்ருத ரூபமாயும்‌, த்‌ராவிட ரூபமாயும்‌ பிரிந்ததென்கிறார் –

அப்படி சொல்லலாமோ ? சமஸ்க்ருத பாஷை போலே திராவிட பாஷை அநாதி அன்றே –ஆகஸ்த்யம் அன்றோ இது ?என்ன சொல்லுகிறது மேல்-ஆனாலும்‌ அந்த ஸம்ஸ்க்ருத பாஷைதான்‌ அநாதியாயிரா நின்றதே என்ன-

செந்திறத்த தமிழ் என்கையாலே ஆகஸ்யமும் அநாதி-சூரணை -41-

அதாவது
செம் திறத்த தமிழ் ஓசை வட சொல் ஆகி-திரு நெடும் தாண்டகம் -4- – -என்று (ஓசை -சொல் என்ற அர்த்தத்தில் இங்கு -ஸ்தான பிரமாணத்தாலே) சமஸ்க்ருததோடே சஹபடிதமும் , ப்ரதமோக்தமும் ஆகையாலே அகஸ்த்ய பிரகாசிதமான மாத்ரம் கொண்டு ஆகஸ்த்யம் என்று சொல்லப் படுகிற
திராவிடமும் அநாதியாய் உள்ளது என்கை .-இத்தால் அநாதித்வம் சமஸ்க்ருத திராவிட சாதாரணம் என்றது ஆய்த்து-

செந்திறத்த தமிழோசை வடசொல்லாகி’ (திருநெடு. 4) என்று ஸம்ஸ்க்ருதத்தோடே ஸஹபடிக்குமிடத்தில்‌ ‘“செந்திறத்த தமிழோசை” என்றதுக்குப்‌ பின்பிறே “வட சொல்லாகி’” என்றது. ஆகையாலே இரண்டும்‌ அநாதி யிறே-

இந்த்ரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை யிரு நிலம் தீ நீர் விண் பூதம் ஐந்தாய்ச்
செந்திறத்த தமிழோசை வடசொல்லாகித் திசை நான்குமாய் திங்கள் நாயிறாகி
அந்தரத்தில் தேவர்க்கும் அறியலாகா அந்தணனை அந்தி மாட்டு அந்தி வைத்த
மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழ்தியேல் வாழலாம் மட நெஞ்சமே–4—சாஸ்திர வஸ்யர் உடைய (திசை நான்குமாய்த் திங்கள் ஞாயிறாகி,)ஸ்ருஷ்டியைச் சொல்லுகைக்காக சாஸ்திர ஸ்ருஷ்டியைச் சொல்லுகிறார் – திராவிட சம்ஸ்க்ருதங்களை ஸ்ருஷ்டித்து-ஆரியத்தைச் சொல்லி அதனுடைய சிதைவாகையாலே பின்னை தமிழைச் சொல்ல பிராப்தமாய் இருக்க – இத்தை பிரதமத்திலே உபாதானம் பண்ணிற்று —1-இது சர்வாதிகாரம் ஆகையாலும்-2-ஸ்வார்த்தத்தைச் செவ்வே பிரகாசிப்பிக்க கடவதாகையாலும்-3-தம் பாழி ( தம் துறை )யாகையாலும்-4-இன்னமும் அத்தோபாதி இதுவும் பிரமாணம் என்கைக்காக முற்பட அருளிச் செய்கிறார்-வேதங்கள் போலேயும் இதிஹாச புராணங்கள் போலேயும் அன்று இறே ஆழ்வார்கள் வார்த்தை – அனுஷ்டாவின் வார்த்தை இறே இது – (த்ரை குண்யா விஷயா வேதா )ஐஸ்வர்ய கைவல்யங்கள் த்யாஜ்ய தயா புகுரும் இத்தனை இறே இவர்கள் பக்கலில் –செந் திறத்த தமிழ் ஓசைதிறம் –கூறுபாடும்-பிரகாரமும் –-ஸ்வாரதத்தை செவ்வியதாக பிரகாசிப்பிக்கையே கூறான -த்ரமிட சப்தம்-உப ப்ரஹ்மண அபேஷை அற்று இருக்கை-
வேதங்களுக்கு உப ப்ரஹ்மண அபேஷை உண்டு இறே–‘ஈரத் தமிழ்‘ –-செவிக்கினிய செஞ்சொல்– ”செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய வோதித் தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே” –வேதாந்த தேசிகன்–ஓசை -என்று பாட்டுக்கும் த்வனிக்கும் பெயர்-லஷணையால் சப்தத்தை சொல்கிறது -மேல் வடசொல் -என்கையாலே-வடசொல் -என்று சமஸ்க்ரதத்தை சொல்கிறது –சாஸ்த்ரத்தை ஈஸ்வரன் ஸ்ருஷ்டிக்கை யாவது -பிரகாசிப்பிக்கை -(வெளியிட்டு அருளினான் ஆழ்வார்கள் மூலம் )

ஆனால் அந்த பாஷை அநாதி ஆகிறது ..-திருவாய் மொழிக்கு வேதத்வ பிரகாசமான வசனம் உண்டோ என்ன சொல்லுகிறது மேலே-ஆனால்‌ அந்த பாஷை அநாதி யாகிறது; திருவாய்மொழிக்கு வேதத்வ முண்டாக வேணுமென்கிற நிர்பந்த, முண்டோ என்னில்‌;

வட மொழி மறை என்றது தென் மொழி மறையை நினைத்து இறே-சூரணை -42-
(பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை என்றதால் நல்ல அரக்கன் ஸ்ரீ விபீஷண ஆழ்வான் இருப்பதால் தானே இன சுட்டு அடை மொழி )

அதாவது
மறை-என்று கேவல வேத வாசி சப்தத்தாலே சொல்ல அமைந்து இருக்க –வட மொழி மறை -திருவாய் -8-9-8–என்று சமஸ்க்ருத வேதம் என்றது -திராவிட வேதம் உண்டு என்று நினைத்திறே என்கை
பிரதி கோடி இல்லாத போது இப்படி விசேஷிக்க வேண்டியது இல்லை இறே என்று கருத்து-

வேதம்‌ என்னாதே ஸம்ஸ்க்ருத வேதம்‌ என்கையாலே த்ராவிட, வேதமுமுண்டாக வேணுமென்கிறார்-

மடவரல் அன்னை மீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் மல்லைச் செல்வ
வடமொழி மறை வாணர் வேள்வியுள் நெய் யழல்வான்புகை போய்
திட விசும்பில் அமரர் நாட்டை மறைக்கும் தண் திருப் புலியூர்
படவர வணையான் தன் நாமம் அல்லால் பரவாள் இவளே–8-9-8—சம்ஸ்க்ருத பாஷையும் வேதங்களும் தாங்கள் இட்ட வழக்காய் வ்யாஸ பாதம் செலுத்த வல்ல ப்ராஹ்மணர் ஸமாராதன ரூபமான யாகங்களில் ஹோமம் பண்ணின நெய்யால் ஜ்வலித்த அக்னிகளினின்றும் புறப்பட்ட மிக்க புகையானது –

ஆனால் அந்த வேதத்துக்கு அங்க உபாங்கங்கள் உண்டானவோ பாதி இதுக்கும் அவை உண்டோ என்ன சொல்லுகிறது மேல்-அங்கோபாங்க ஸஹிதத்வம்‌ இதுக்குமுண்டோ என்ன, உண்டென்கிறார்‌ மேல்‌-

வேத சதுஷ்ட (த்தயத்துக்கு-இங்கும் லுப்தம் ) அங்க உபாங்கங்கள் போலே இந் நாலுக்கும்
இரும் தமிழ் நூல் புலவர் பனுவல் ஆறும் மற்றை எண்மர் நன் மாலைகளும்- (இருமை -பெருமை -)-சூரணை-43-

அதாவது
ருகாதி வேத சதுஷ்டயத்துக்கும்-சீஷா வியாகரண நிருக்த சந்த கல்ப ஜோதிஷங்கள் ஆகிற ஆறு அங்கங்களும் மீமாம்ச நியாய புராண தர்ம சாஸ்த்ராத் உப அங்கங்கள் எட்டுமாய் இருந்துள்ள பதினாலும் போலே-(ஆதி -ஆயுர்வேதம் காந்தர்வ வேதம் அர்த்த வேதம் தனுர் வேதம் )-இந்த திராவிட வேத சதுஷ்டயதுக்கும்-இரும் தமிழ் நூல் புலவன் நங்கை யாளன்–பெரிய திருமொழி -1-7-10- -என்று
ஒருவரால் கரை காண ஒண்ணாத படி இருக்கிற திராவிட வேத சாஸ்த்ரத்தை கரை கண்ட ஞான ஆதிக்கத்தை உடையரான திரு மங்கை ஆழ்வார் உடைய-கலியன் வாயொலி செய்த பனுவல் -பெரிய திருமொழி -1-4-10–என்று சாஸ்திர ரூபங்களான பிரபந்தங்கள் ஆறும்–மற்றை ஆழ்வார்கள் எண்மர் உடையவும் விலஷணமான பிர பந்தங்களும் என்கை ..-நன் மாலைகள் என்றது –நய நின்ற நன் மாலை -முதல் திருவந்தாதி -57–என்று முதல் ஆழ்வார் பிரபந்தத்தில் அருளிச் செய்தது எல்லா பிரபந்ததுக்கும் ஒக்கும் என்று நினைத்து .

1-பொய் நின்ற ஞானமும் -திருவிருத்தம் -1––இத்யாதியாலே ஸ்வரூப விரோதியாய் வந்தேறி யான தோஷங்களை முதல் அடியிலே பேசினால் போலே பிரதமத்திலே -வாடினேன் வாடி-பெரிய திருமொழி -1-1-1- -இத்யாதியாலே ஸ்வ ரூபத்துக்கு வந்தேறியான தோஷங்களை கண்டு நொந்து பேசுகையும்
2-பகவத் ப்ராவண்ய ப்ராசுர்யமும்-பத்துடை அடியவர்க்கு எளியவன் –எத்திறம் –ப்ராவண்ய ப்ராஸூர்யம் – உருகுமால் நெஞ்சம் கார் ஒக்கும் காட்கரை அப்பன் /முலையோ முழு முற்றும் போந்தில –பால்யாத் ப்ராவண்யம் -கணபுரம் கை தொழும் பிள்ளையை -பிறர் சொல்ல கேட்டு கை தொழும் இவள் -அருவி சோர் வேங்கடம் நீர் மலை உருகினாள் உள் மெலிந்தாள்
3-அதில் அர்ச்சாவதாரத்தில் ஊற்றமும்-செய்ய பரத்துவுமாய் –எய்துபவர்க்கு அர்ச்சாவதார எளிது -அவனாகும் நீள் கடல் வண்ணனே –-அன்று தேர் கடாவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொலோ-ஸ்ரீ கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் – விபவம் பாடப் பிறந்தவர் அர்ச்சையை பாடுவது ஏற்றம் –
காரார் திருவேங்கடம் காணும் அளவும் போய்–ஆராமம் சூழ் /-மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யலாமே–ஏரார் முயல் வீட்டுக் காக்கை பின் போவதே
4-கலவியும் பிரிவும் மாறி மாறி வருகையும்-அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மான் -ஆடி ஆடி அகம் கரைந்து –வாடி வாடி இவ்வாணுதலே /-கோவை வாயாள் பொருட்டு–பூசும் சாந்து என் நெஞ்சமே -ஹர்ஷம் மிக்கு -மண்ணை இருந்து துழாவி —-ஏறிய பித்தினோடு -மாயன் திறத்தனள் இத்திரு தேறியும் தேறாமல் /-யானும் ஏத்தி –ஏத்த ஏத்த எங்கு எய்தும் /ஒரு நாள் காண வாராயே–வருத்தம் -8-5-எல்லியும் காலையும் திருக்கடித்தானாம் தாயப்பத்தி விட்டு -ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்காமல் சன்னிஹிதன் -மைந்தனும் வந்திலன் என் செய்கேன் -திருக்கண்ணபுர பாசுரம் -வருத்தம் சொல்லி ஆழ்வார் /8-5-வருந்தாது இரு மட நெஞ்சே ஆறாம் பத்தில் நம் மேல் வினைகள் வாரா -சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸூ ச – நேரான மொழி பெயர்ப்பு-சோகப்படாதே முதலில் சொல்லி –
5–அந்ய உபதேச பேச்சும்–ஆறு கிண்ணகம்-தாய் மகள் தோழி
6-அது தன்னில் ராத்ரி வ்யசனமும்-மடல் எடுக்க ஒட்டாமல் -ஊரெல்லாம் துஞ்சி பெண் பிறந்தார் பெரும் துயர் காண மாட்டாமல் -கண்ணனும் வாரானால் -காகுத்தனும் வாரானால் -காப்பார் யார் -நங்கள் அடிகள்-தோழியும் நானும் ஒழிய -வியக்தமாக தோழி பாசுரம் இல்லை ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் அருளிச் செயலில் -கோழியும் கூவுகின்றதில்லையே -கூர் இருள் ஆயிற்றே
7-தூத ப்ரேஷணமும்-நான்கு தூது பதிகம் -அவ்வளவு தெம்பு இல்லையே ஸ்ரீ திருமங்கை ஆழ்வாருக்கு -நான்கு பாசுரங்களுக்கு பின்பே நேராக-ஓ மண் அளந்த தாடாளா -வரை எடுத்த தோளாளா –தண் குடந்தை நகராளா–மலையாள ஊட்டு இல்லையே
8-அநுகாரம்-கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் -பதிகம் -ஜெகதாகாரம் –வடவரை நின்றும் வந்து இன்று கணபுரம் இட வகை கொள்வது யான் என்று பேசினாள்
9–மடல் எடுக்கை-மாசறு சோதி பதிகம் –/ஸ்ரீ சிறிய திருமடல் ஸ்ரீ பெரிய திரு மடல் -ஸ்ரீ திரு நறையூர் நம்பி மேல் –
10/11/12-தோழி தாய் மகள் என்னும் அவஸ்தை த்ர்யாபத்திகளும்-சாழல் பதிகம் அவ்யக்தம் தோழி பதிகம்-இவள் திறத்து இருவரும் –2-7-/-7-2-திருத்தாயார் பதிகங்கள் -திண்ணம் என் இள மான் புகுமூர் திருக்கோளூரே-உண்ணும் சோறு / கள்வன் கொல்-அவனூர் வினவி சென்றாள்-கரியான் ஒரு காளை வந்து–அணி யாலி புகுவார் கொலோ -கள்வன் கொல் பிராட்டி திருக்கோலம் இன்றும் சேவை உண்டே -பொன்னிவர் மேனி -நாள் வேதம் ஓதும் -அவர் நாகரீகர் செல்வர் பெரியர்-என்னையும் நோக்கி
அன்னையும் நோக்கும் என்று அஞ்சுகிறேன் –அச்சோ ஒருவர் அழகியவா -ஸுந்தர்யம் இங்கு -எங்கனே நீ லாவண்யம் அங்கு-இரண்டும் மகள் பாசுரங்கள்
13-இந்திரிய பய குரோசம் -ஐவர் திசை திசை எற்றி-
14-ஈஸ்வர ஸ்வாதந்த்ர்ய பயம் ,-அரவணை மேல் பள்ளி கொள்ளும் முகில் வண்ணனே அறையோ முறையோ ஸ்ரீ திருவிருத்தம் —தடுப்பார் இல்லாத நிரங்குச ஸ்வாதந்தர்யம் /-தெள்ளியீர்-கை வளை கொள்வது தக்கதோ -ஸ்ரீ நீல மேக பெருமாள் -நீணிலா முற்றத்து நின்று இவள் நோக்கினாள்
15-அசக்ருத் பிரபத்தி கரணம்-ஐந்து தடவை-நோற்ற நாலும்–உலகுண்ட பெரு வாயா ஸ்ரீ நம்மாழ்வார் –பத்து தடவை இவர்–ஸ்ரீ நைமிசாரண்யம் -ஸ்ரீ திருவேங்கடமுடையான் -ஸ்ரீ அண்ணன் கோயில் -ஸ்ரீ திருவரங்கம் -ஸ்ரீ திரு விண்ணகர்–திரு நறையூர் இடர் கெடுத்த திருவாளர் –6-9-பாட்டு தோறும் திருப்பாத பிரஸ்தாபம் இங்கும் உலகுண்ட பெரு வாயா போலே–தேரெழுந்தூர் -திருக்குறுங்குடி மகள் பாவனையில் -9-5-/ 5-9 மானே நோக்கு அங்கு நாயகா பாவம் /
16-ஆர்த்தியின் உடைய கரை புரட்சிகளும்–மாலுக்கு ஏரார் விசும்பில் இருப்பு அரிதாம் படி அங்கு -ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சி இவர் –
17-பர துக்க அசஹிஷ்ணுதையாலே பல காலும் ஹிதம் சொல்லுகையும்–தொடக்கமான கட்டளையாலே மற்றை ஸ்ரீ ஆழ்வார் பிர பந்தங்களைக் காட்டிலும் ,இப் பிரபந்த சதுஷ்டியார்த்த ஜ்ஞாபகமாய் இருக்கையாலே ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் பிரபந்தங்களையே இதுக்கு அங்கங்கள் என்கிறது ..-மற்றை ஸ்ரீ ஆழ்வார் பிரபந்தங்கங்களும் எதார்த்த அனுசாரிகளாய் , இதில் அர்த்த நிர்ணயத்துக்கு உறுப்பு ஆகையாலே .இதுக்கு உப அங்கங்கள் என்கிறது ..ஆக –சீஷாயாம் வர்ண சிஷா பத சமதிகமோ வ்யாக்ரியா நிர்வசோப்யாம் சந்தஸ்
சந்தச் சிதவ் ஸ்யாத் கமயதி சமயம் ஜ்யோதிஷம் ரெங்கநாத ,கல்ப அனுஷ்டான
முக்தம் ஹ்யுசித கமிதயோர் நியாய மீமாம்ச யோஸ் ஸ்யாத் அர்த்த வ்யக்தி
புராண ஸ்ம்ருதிஷூ ததனுகாஸ் த்வாம் விசின் வந்தி வேதா -ஸ்ரீ ரெங்கராஜ உத்தர ஸ்தவம்-18- –என்கிற படியே அவை அந்த வேத சதுஷ்டயத்துக்கும் உபகார அங்கங்களாய் இருக்குமா போலே இவையும் கீழ் சொன்ன படியே இத வேத சதுஷ்டயத்துக்கும் உப அங்கங்களாய் இருக்கும் என்றது ஆய்த்து —

““அங்காநி வேதாஸ் சத்வாரோ மீமாம்ஸா ந்யாய விஸ்தர? ! புராணம்‌ த,ர்ம ஸாஸ்த்ரஞ்ச வித்‌,யா ஹ்யேதாஸ் சதுர்தஸ -என்கிறபடியே சதுர்தஸ வித்‌யாஸ்தாந வேதம் போல்‌ இங்கும்‌ இவருடைய ப்ரபந்தங்கள்‌ நாலும்‌ நாலு வேதத்தினுடைய ஸ்தாநேயாய்‌, “இருந் தமிழ் நூற் புலவன் மங்கை யாளன்‌?” (திருமொழி 1 – 7 – 10) என்றும்‌, ““கலியன் வாயொலி செய்த பனுவல்‌ ” (திருமொழி 1 – 4 – 10) என்றும்‌ சொல்லுகிற திருமங்கை யாழ்வாருடைய ப்ரபந்தங்களாறும்‌, அங்கங்களினுடைய ஸ்தாநத்திலேயாய்‌, மற்றை எட்டு ஆழ்வார்களுடைய ப்ரபந்தங்களும்‌ உபாங்கங்களா யிருக்கும் –

செங்கணாளி யிட்டிறைஞ்சும் சிங்க வேள் குன்றுடைய
எங்கள் ஈசன் எம்பிரானை இரும் தமிழ் நூல் புலவன்
மங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார்க் கலியன்
செங்கை யாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே-1-7-10–ஒருவரால் கரை காண ஒண்ணாத படி இருக்கிற தமிழ் சாஸ்திர உக்தமான படியைக் கரை கண்ட ஜ்ஞான ஆதிக்யத்தை உடையவர் –

வரும் திரை மணி நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானை
கரும் கடல் முந்நீர் வண்ணனை எண்ணிக் கலியன் வாயொலி செய்த பனுவல்
வரம் செய்த வைந்தும் ஐந்தும் வல்லார்கள் வானவர் உலகுடன் மருவி
இரும் கடல் உலகம் ஆண்டு வெண் குடைக் கீழ் இமையவராகுவர் தாமே —1-4-10-

அயல் நின்ற வல் வினையை அஞ்சினேன் அஞ்சி
உய நின் திருவடியே சேர்வான் நய நின்ற
நன் மாலை கொண்டு நமோ நாரணா வென்னும்
சொன் மாலை கற்றேன் தொழுது —
—57-நிர் வசன ரூபமாக நின்ற நல்ல மாலை கொண்டு-நயம் நின்ற நன் மாலை -நயம் -அன்பும் மகிழ்ச்சியும் -திருமந்த்ரார்த்தை நயப்பிக்கையில் ஈடுபட்ட திவ்ய பிரபந்தம் என்றுமாம்-ஸாஸ்த்ர ரூபமாய் இருக்கும் விலக்ஷணமான மாலையைக் கொண்டு என்றுமாம்-நயப்புடைத்தாய் –அதி விலக்ஷணமான சப்தங்களாலே தொடுக்கப் பட்ட இப் பிரபந்த ரூபமான மாலையைக் கொண்டு உன்னை ஆஸ்ரயித்து உனக்கு வாசகமாய் திரு மந்திரம் என்று பிரசித்தமான சொல் தொடை

வித்யாந்தரங்களில் வேதத்துக்கு உண்டான ஆதிக்யம் இதுக்கும் உண்டோ என்ன சொல்லுகிறது மேல் -ஸகல வித்‌யைகளிலும்‌ வைத்துக் கொண்டு அங்கியான வேதம்‌ அதிகமாயன்றோ இருப்பது என்னில்‌,

சகல வித்யாதிக வேதம் போலே இதுவும் திவ்ய பிரபந்த பிரதானம்-..சூரணை -44 –

அதாவது
அங்கானி வேதாஸ் சத்வாரோ மீமாம்ச நியாய விஸ்தர புராணம் தர்ம சாஸ்த்ரஞ்ச வித்யா ஹ்யேதாச் சதுர்தச —என்று சக படிதமாய் இருக்க செய்தே ,ஸ்வ அங்கோ உபாங்களான சகல வித்யைகளிலும் ,ஸ்வ வைபவத்தால் மேலாய் இருக்கும் வேதம் போலே ஸ்ரீ திவ்ய பிரபந்தங்களிலும் சகபடிதமாய் இருக்க செய்தே ஸ்வ அங்க உபாங்களான சகல ஸ்ரீ திவ்ய பிரபந்தகளிலும் ஸ்வ வைபவத்தாலே இதுவும் மேலாய் இருக்கும் என்கை-

அந்த ஸகல வித்‌யைகளிலும்‌ அதிகமான வேதம்‌ ப்ரதாநமானாப் போலே இதுவும்‌ திவ்ய ப்ரபந்தங்களில்‌ ப்ரதாநமாயிருக்கும்‌.

ஆனால் அந்த வைபவத்துக்கு உடலான சாஸ்த்ரத்வ பாகவத ஜ்ஞாரூபவத்வ நிர்தோஷத்வ ஸ்ருதித்வ சத்யத்வ அநாதி நித்யத்வங்கள் இதுக்கும் உண்டோ என்ன சொல்லுகிறது மேல்-ஆனால்‌ வேதத்துக்குச்‌ சொல்லுகிற ”வேத ஸாஸ்த்ராத் பரம்‌ நாஸ்தி” (ஹரிவம்ஸே ) என்கிற ஸாஸ்த்ரத்வமும்‌, ““ஸ்ருதி ஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா” என்கிற பகவதாஜ்ஞா ரூபத்வமும்‌, ப்‌ரம விப்ரலம்பாதி, தோஷ ரஹிதத்வமும்‌, பூர்வ பூர்வோச்சாரண க்ரமத்தாலே உத்த ரோத்தரோச்சார்யமாணத்வம்‌, நித்யத்வம்‌, ஸத்யத்வம்‌ தொடக்கமான லக்ஷணங்கள்‌ இத்திருவாய்மொழிக்குமுண்டோ என்னில்‌, உண்டென்கிறார்‌-

வேத நூல் இரும் தமிழ் நூல்–ஆக்ஜை ஆணை வசையில் ஏதமில் சுருதி செவிக்கு இனிய ஓதுகின்றது உண்மை பொய்யில் பாடல் பண்டை நிற்கும் முந்தை அழிவில்லா என்னும் லஷணங்கள் ஒக்கும்-சூரணை -45-

அதாவது
வேத நூல் பிராயம் நூறு – திருமாலை -3- என்ற அத்தை வேத சாஸ்திரம் என்றால் போலே இத்தையும் –இரும் தமிழ் நூல் புலவன்-பெரிய திருமொழி -1-7-10–என்று பெரிய திராவிட சாஸ்திரம் என்கையாலும்
அத்தை — ஸ்ருதிஸ் ஸ்ம்ருதிர் மமை ஆக்ஜை -பாஞ்சராத்ரம் –என்று பகவத் ஆக்ஜை ரூபமாக சொன்னால் போலே-இத்தை –ஆணை ஆயிரம் -திருவாய்-6-3-11–என்று தத் ஆக்ஜா ரூபமாக சொல்லுகையாலும் ,-அத்தை -வசையில் நான் மறை –பெரிய திருமொழி-5-3-2- என்று விப்ரலம்பாதி தோஷ ரகிதம் என்றால் போலே ,-இத்தையும் –ஏதமில் ஆயிரம்-திருவாய்-1-6-11- -என்று நிர்தோஷமாக சொல்லுகையாலும் ,-அத்தை-சுடர் மிகு சுருதி-திருவாய்-1-1-7- -என்று ஸ்ரூயதே இதி ஸ்ருதி -என்கிறபடியே பூர்வ பூர்வோச்சாரண கிரமத்திலே சரவண இந்திரியத்தாலே கிரகிக்க படுமதாய் சொன்னால் போலே , இத்தையும் –கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே -திருவாய்-10-6-11 -என்று ஸ்ராவ்யமாய் சொல்லுகையாலும் ,-அத்தை –வேத நூல் ஓதுகின்றது உண்மை-திருச்சந்த -72- -என்று சொல்லும் அதில் ஒரு பொய் இல்லை என்றால் போலே ,-இத்தையும் –பொய்யில் பாடல்-திருவாய்-4-3-11–என்று அசத்திய கந்த ரகிதம் இல்லை என்கையாலும்,-அத்தை பண்டை நான்மறை -பெரிய திருமொழி-5-7-1–என்று அநாதியாகவும்-நிற்கும் நான்மறை-திருவாய்-6-5-4- -என்று -அநதினத்தவம்-அழிவில்லாததாகவும் சொன்னால் போலே இத்தையும் முந்தை ஆயிரம் -திருவாய்-6-5-11-அழிவில்லா ஆயிரம் -திருவாய்-9-7-11-என்று அநாதியாய் அழிவற்று இருக்குமதாய் சொல்லுகையாலும் இந்த லஷணங்கள் எல்லாம் இரண்டுக்கும் ஒக்கும் என்கை-

வேதநூல்‌?” (திருச்ச.72) என்றாப் போலே ““இருந்தமிழ்நூல்‌ ‘” (திருமொழி 1 – 7 – 10) என்று ஸாஸ்த்ரத்வமும்‌, ”ஸ்ருதி ஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா’” என்றாப்போலே ஆணை யாயிரத்து”” (திருவா. 6 – 3 – 11) என்று பகவதநுஸாஸந ரூபமாய்‌, “வசையில்‌ வேதம்‌”” (திருமொழி 5 – 3 – 2) என்றாப் போலே ““ஏதமிலாயிரம்‌” (திருவா. 1 – 0 – 11) என்று ப்‌ரம விப்ரலம்பாதி, தோஷ ரஹிதமாய்‌, “*சுடர் மிகு சுருதி”’ (திருவா. 1 – 1 – 7) என்றும்‌, *’செவிக்கினிய செஞ்சொல்‌?” (திருவா. 10 – 6 – 11) என்றும்‌ ஸ்ராவ்யமாய்‌, ““வேத நூலோதுகின்றதுண்மை?” (திருச்ச.72) என்றாப் போலே ‘“பொய்யில் பாடலாயிரம்‌”? (திருவா. 4 – 3 – 11) என்று இதில்‌ சொல்லுகிற அர்த்தங்களில்‌ ஒரு பொய்‌ இன்றியிலே இருப்பதாய்‌, ‘“பண்டைநான்மறை” (திருமொழி 5 – 7 – 3), “நிற்கும்‌ நான்மறை”! (திருவா. 6 – 5 – 4) என்றாப் போலே ‘‘முந்தை யாயிரம்‌’‘ (திருவா. 6 – 5 – 11) என்றும்‌, “அழிவில்லா ஆயிரம்‌”’ (திருவா. 9 – 7 – 11) என்றும்‌ ஆத்‌யந்த ரஹிதமாய்‌, அதிற் சொல்‌லுகிற லக்ஷணங்கள்‌ இதுக்குமுண்டென்கிறார் –

வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும்
பாதியும் உறங்கிப் போகும் நின்ற விப்பதினை யாண்டு (நின்றதில் பதினை யாண்டு -என்றும் பாடம் )
பேதை பாலகனதாகும் பிணி பசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்க மா நகர் உளானே–3—வேத சாஸ்த்ரா விரோதிநா -என்கிறபடியே
வேதமாகிற நூல் -வேதாக்ய சாஸ்திரம் -என்னக் கடவது இறே-நூல் -சாஸ்திரம்-அதவா வேதங்களும் நூல்களும் -என்னவுமாம் -வேதங்களும் வேதார்த்த ஞானம் உடைய புருஷர்கள் உடைய வசனங்களும் –

போதில் மங்கை பூதலம் கிழத்தி தேவி யன்றியும்
போது தங்கு நான்முகன் மகன் அவன்மகன் சொலில்
மாது தங்கு கூறனேற தூர்தி என்று வேத நூல்
ஓதுகின்றது உண்மை யல்லது இல்லை மற்றுரைக்கிலே –72–ஸ்ரீ பூமி சஹிதன் பிரம்மாவுக்கு உத்பாதகன் ப்ரஹ்ம உத்பன்னன் ருத்ரன் என்று வேதாக்ய சாஸ்திரம் ஓதுகிற அர்த்தமே சத்யம்-அதுக்கு புறம்பாக ஓர் அர்த்தம் சொல்லில் அது அசத்யம் – ஸூபர்ண வைகுண்ட சம்வாதே – யத்தத் பத்ம மபூத் பூர்வம் யத்ர ப்ரஹ்மா வ்யஜாயதே ப்ரஹ்மணச்சாபி சம்பூதச்சிவ இத்யவதார்யதாம் சிவாத் ஸ்கந்தஸ் சம்பபூவ ஏதத் ஸ்ர்ஷ்டி சதுஷ்டயம் –இத்யாதி –

செங்கணாளி யிட்டிறைஞ்சும் சிங்க வேள் குன்றுடைய
எங்கள் ஈசன் எம்பிரானை இரும் தமிழ் நூல் புலவன்
மங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார்க் கலியன்
செங்கை யாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே-1-7-10–ஒருவரால் கரை காண ஒண்ணாத படி இருக்கிற தமிழ் சாஸ்திர உக்தமான படியைக் கரை கண்ட ஜ்ஞான ஆதிக்யத்தை உடையவர் –

காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த
தாளிணையன்தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்து
த் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணைஇன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே.–6-3-11-பீஷாஸ் மாத் வாதே பவதே -என்கிறபடியே ஆயிரத்திலும்-ஜெகன் நியமனத்தைச் சொன்ன –

வசையில் நான்மறை கெடுத்த அம் மலர் அயற்கு அருளி முன் பரி முகமாய்
இசை கொள் வேத நூல் என்று இவை பயந்தவனே எனக்கு அருள் புரியே
உயர் கொள் மாதவிப் போதொடு உலாவிய மாருதம் வீதியின் வாய்த்
திசை எல்லாம் கமழும் பொழில் சூழ் திரு வெள்ளறை நின்றானே –5-3-2—விப்ரலம்பாதி தோஷ சம்பாவனை இல்லாத நாலு வேதத்தைக் கொடுத்துதாதா யதபூர்வ மகல்பயத்-என்று
முன்பு போலே இவற்றை உண்டாக்கு -என்று விட அவனும் வேதத்தை அசுரர்கள் கையில் பறிகொடுத்து
வேதா மே பரமஞ் சஷூர் வேதா மே பரமம் தனம் -என்று கண்ணும் கண்ண நீருமாய் நின்று கூப்பிட
அவன் பக்கலிலே கிருபையைப் பண்ணி  –

மாதவன் பால் சட கோபன் தீ தவம் இன்றி உரைத்த
ஏதமில் ஆயிரத்து இப் பத்து ஓத வல்லார் பிறவாரே–1-6-11-தீதாவது -தன் மேன்மையைப் பார்த்து எழ நிற்கை-அவமாவது -ஆஸ்ரயிக்கிறவனுடைய சிறுமை பார்த்து கையிடுகை –-இன்றியுரைத்த -இரண்டு குற்றமும் இல்லாமையைச் சொன்ன – ஏதமில் ஆயிரம் -லஷண ஹாநியால் வரும் குற்றம் இன்றிக்கே இருக்கை-

திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7–முதல் பாட்டுத் தொடங்கிச் சொன்ன அர்த்தங்கள் எல்லாவற்றுக்கும் பிரமாணம் நிர்த்தோஷ ஸ்ருதி என்கிறது சுடர் மிகுகை யாவது -பௌருஷ்யத்வ நிபந்தனமான விப்ரலம்பாதி தோஷ ரஹிதமுமாய் பிரமாணாந்தரங்களைக் கொண்டு பாஹ்ய குத்ருஷ்டிகளால் அவிசால்யமாகையாலே மிக்க தேஜச்சை யுடைத்தாகை-ஒருவரால் பண்ணப் பட்டது அன்றிக்கே என்றும் கேட்டே வருமதாகையாலே ஸ்ருதி என்கிறது –

காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே–10-6-11–பாட்யே கே யே ச மதுரம் -என்கிறபடியே இசையோடு புணர்ப்புண்ட தமிழ்த்தொடை –நித்ய ஸூரிகள் இத்தைக் கேட்டால் பர்யாப்தர் ஆகார் -இப்பாடுகிறது உள்ளீடானவன் சீலத்தாலேயே என்னில் –பாசுரத்துக்காக என்கிறது –ஸம்ஸ்ரவே மதுரம் -என்கிறபடியே செவியே தொடங்கி ரசிக்கும்-செஞ்சொல்லே–-நினைவும் சொல்லும் செயலும் ஒருபடிப் பட்ட சொல்லு –சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினால் -என்னா செந்தமிழ் பத்தும் என்றார் இறே –

போதில் மங்கை பூதலம் கிழத்தி தேவி யன்றியும்
போது தங்கு நான்முகன் மகன் அவன்மகன் சொலில்
மாது தங்கு கூறனேற தூர்தி என்று வேத நூல்
ஓதுகின்றது உண்மை யல்லது இல்லை மற்றுரைக்கிலே –
72-ஸ்ரீ பூமி சஹிதன் பிரம்மாவுக்கு உத்பாதகன் ப்ரஹ்ம உத்பன்னன் ருத்ரன் என்று வேதாக்ய சாஸ்திரம் ஓதுகிற அர்த்தமே சத்யம்-யல்லது இல்லை மற்றுரைக்கிலே — அதுக்கு புறம்பாக ஓர் அர்த்தம் சொல்லில் அது அசத்யம் –-ஸூபர்ண வைகுண்ட சம்வாதே – யத்தத் பத்ம மபூத் பூர்வம் யத்ர ப்ரஹ்மா வ்யஜாயதே ப்ரஹ்மணச்சாபி  சம்பூதச்சிவ இத்யவதார்யதாம் சிவாத் ஸ்கந்தஸ் சம்பபூவ ஏதத் ஸ்ர்ஷ்டி சதுஷ்டயம் -இத்யாதி –

உய்வு உபாயம் மற்று இன்மை தேறி, கண்ணன் ஒண் கழல் மேல்
செய்ய தாமரைப் பழனம் தென்னன் குருகூர்ச் சடகோபன்
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே.–4-3-11-ஆழ்வார் பிரணயித்வ குண அனுசந்தானத்தாலே தரித்தவாறே ஊரும் தளிரும் முறியுமாயிற்று -அகாலப்பலிநோ வ்ருஷா
சிவந்த தாமரையை உடைய பழனங்களை உடைத்தாய் தெற்குத் திக்குக்கு ஸ்லாக்யமான திரு நகரியை உடைய ஆழ்வார்-ந தே வாக ந்ருதா காவ்யே காசிதத்ர பவிஷ்யதி -என்கிறபடியே திருவாய் மொழி எல்லாவற்றுக்கும் ஆதல்-அவாப்த ஸமஸ்த காமன் ஒரு சம்சாரியினுடைய சத்தாதிகளே தனக்கு போக உபகரணமாக இருந்தான் -என்கிற பிரணயித்வத்தில் ஒரு பொய் இன்றிக்கே இருக்கிற பத்து என்னுதல் –

பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும்
பிண்டமாய் விரிந்த பிறங்கு ஒளி அனலும் பெருகிய புனலொடு நிலனும்
கொண்டல் மாருதமும்  குரை கடல் ஏழும் ஏழு மா மலைகளும் விசும்பும்
அண்டமும் தானாய் நின்ற  எம்பெருமான் அரங்க மா நகர் அமர்ந்தானே –5-7-1-பூர்வே பூர்வேப்யோ வச ஏத தூசு -என்கிறபடியே பூர்வ பூர்வ உச்சாரண க்ரமத்தைப் பற்ற உத்தர உத்தர உச்சாரணம்   ஆகையாலே புருஷ புத்தி அதீனம் ஆனால் வரக் கடவ தோஷங்கள் ஒன்றும் இல்லாத வேதங்களும் –

நிற்கும் நான்மறை வாணர் வாழ்தொலை வில்லி மங்கலம் கண்டபின்
அற்க மொன்றும் அறவு றாள்மலிந் தாள்கண் டீர்இவள் அன்னைமீர்!
கற்கும் கல்வி யெல்லாம் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான்என்றே
ஒற்கம் ஒன்றும் இலள் உகந்துகந்து உண்மகிழ்ந்து குழையுமே.–6-5-4-அபவ்ருஷேயமாய் நித்தியமான வேதங்கள் –

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண்குரு கூரவர் சடகோபன்
முந்தை ஆயிரத்துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச்சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே.–6-5-11–பழையதான வேதார்த்தத்தை அருளிச் செய்கையாலே சர்வேஸ்வரன் இதர சஜாதீயன் ஆனால் போலே -வேதமும் தமிழாய் வந்து இவர் பக்கலிலே அவதரித்த படி-செவ்விய தமிழ் -பசும் தமிழ் -அர்த்தத்தை விசதமாகக் காட்டுவது -இப் பத்தை அப்யஸிக்க வல்லார் ஸ்ரீ யபதிக்கு அடிமை செய்வார்-

ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை
ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்
வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அழிவு இல்லா ஆயிரத்து இப்பத்தும் நோய் அறுக்குமே–9-7-11–கேட்டார்கள் நெஞ்சை ஒரு நாளும் விடாதே வர்த்திக்கிற இப்பத்து –இப்பாசுரத்தை கேட்டார்க்கு சம காலத்தில் போலே சர்வ காலமும் ரசம் பிறக்கும் படி யாய்த்து இருப்பது-

அந்த வேதம் போலே இதுவும் அஸ்ம்ருத கர்த்ருகமாய் இருக்க வேண்டாவோ ? ஸ்ரீ ஆழ்வார் இதுக்கு கர்த்தா என்கையாலே ,நித்யத்வ அபௌருஷேயத்வங்கள் கூடாதீ என்ன சொல்லுகிறது மேல்-ஆனால்‌ “சொல்லப்பட்ட ஆயிரத்துள்‌” (திருவா. 8 – 10 – 11) என்று இவர் தம்மாலே சொல்லப்பட்டது என்கிற இதில்‌ கர்த்ருத்வத்தால்‌ நித்யத்வ-அபெளருஷேயத்வ-ஹாநி வாராதோ என்னில்‌, வாராதென்கிறார்‌. அது என் போல வென்னில்‌-

சொல்லப் பட்ட என்ற இதில் கர்த்ருத்வம் ஸ்ம்ருதி அத்தை ஸ்வயம்பூ படைத்தான் என்றது போலே-சூரணை -46-

அதாவது
சடகோபன் சொல்லப் பட்ட ஆயிரம்–திருவாய்-8-10-11–என்று இதில் ஸ்ரீ ஆழ்வாருக்கு சொன்ன கர்த்ருத்வம்-அநாதி நிதனா ஹ்யேஷா வாகுத் ஸ்ருஷ்டா ஸ்வயம்புவா -என்று-(அநாதி அநிதன -பண்டை நின்ற வேதத்தை ) ஸ்ம்ருதி அந்த வேதத்தை-( ஜகத்தை-) பிரம்மா சிருஷ்டித்தான் என்று சொன்னாவோ பாதி என்கை- ஸ்வயம்பு சிருஷ்டித்தான் என்னாதே–படைத்தான்-என்றது முன்னம் திசை முகனை தான் படைக்க மற்றவனும் முன்னம் படைத்தனன் நான் மறைகள்-பெரிய திருமடல்-10 -என்று ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தியையும் தர்சிப்பைக்காக .. அநாதி நிதானமான சந்தர்ப்பம் பிரம்மாவின் வாக்கில் நின்றும் ஆவிர்பவித்த மாத்ரம் கொண்டு ,பிரம்மாவுக்கு அதில் சொன்ன கர்த்ருத்வ உபாதி இதிலும் ஸ்ரீ ஆழ்வாருக்கு சொன்ன கர்த்ருத்வம் ஆகையால் இத்தால் ,இதன் நித்யத்வ அபௌருஷேயத்வ ஹானி வாராது என்று கருத்து-

முன்னம்‌ திசை முகனைத் தான்‌ படைக்க, மற்றவனும்‌ முன்னம்‌ படைத்தனன்‌ நான்மறைகள்‌”! (பெ.திருமடல்‌) என்றும்‌, ““அநாதி நிதாநா ஹ்யேஷா வாகுத்ஸ்ருஷ்டா ஸ்வயம்பு வா?‘ (பார-சபா ) என்றும்‌ சொல்லுகிறபடியே, ஸ்ம்ருதி, “ப்ரஹ்மா வேதங்களைப்‌ படைத்தான்‌ ‘ என்ற இடத்தில்‌, அந்த ப்‌,ரஹ்மாவால்‌ வந்த கர்த்ருத்வத்தால்‌ அவறறினுடைய நித்யத்வ-அபெளருஷேயத்வங்களுக்கு ஹாநி வாராதாப் போலே இதுக்கும்‌ நித்யத்வ அபெளருஷேயத்வ ஹாநி வாராது –

நல்ல கோட்பாட்டுலகங்கள் மூன்றின் உள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை அந்தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப்பட்ட வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே–8-10-11-வேதம் போலே தான் தோன்றி அன்றிக்கே இருக்கை-பரத்வம் போலே வேதம்-அவதாரம் போலே திருவாய்மொழி –பிரமேய சரமம் -பிராமண சரமம் -பரத்வ பர முது வேதம் -அர்ச்சாவதாரங்களை திருவாய் மொழி சொல்லுமே —

மன்னிய தாமரை மா மலர்ப் பூ பூத்தம் மலர் மேல் —–9
முன்னம் திசை முகனைத் தான் படைக்க -மற்றவனும்
முன்னம் படைத்தனன் நான்மறைகள் அம்மறை தான் –10—-அந்தச் சதுர முகனும் முன்பு உண்டாக்கின நான்மறைகள் என்றால் போலே இருக்கிறது-சர்வேஸ்வரன் இவ் வேத அஷர ராசியை-ஸூப்த பிரபுத்த ந்யாயத்தாலே முன்புத்தை ஆநு பூர்வியை ஸ்மரித்துச் சொல்லும் என்று வேதத்தின் உடைய அபௌ ருஷேயத்வம் சொல்லா நிற்க-இவன் சிருஷ்டித்தான் -என்னில் பிரமாண விருத்தமாம் இறே-
இனித் தானே-யோ ப்ரஹ்மாணம் விததாதி   பூர்வம் யோ வை வேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை -என்று சொல்லுகிற்றவற்றோடும் விரோதிக்கும் இறே-ஆனால் பின்னை என் சொல்லிற்று ஆகிற்றது  என்னில்
இன்னான் தன் பிதாவின் பக்கல் படைத்த த்ரவ்யம் இன்னதனை -என்னுமா போலே அந்த ப்ரஹ்மாவும் சர்வேஸ்வரன் பக்கல் அதிகரித்த நாலு வேதங்களும் -என்றபடி- பிறந்து படைத்தான் -என்னக் கடவது இறே பெற்றத்தை –

பூர்வ சந்தர்ப்ப பிரக்ரியை இவர் தர்சிப்பித்து பேசினதே உள்ளது என்னும் இடத்தை அறிவிக்கிறார் மேல்-

நால் வேதம் கண்ட புராண ரிஷி மந்த்ர தர்சிகளை போலே இவரையும் ரிஷி முனி கவி என்னும்-சூரணை -47-

அதாவது
நால் வேதம் கண்ட புராண ரிஷி–நால் வேதம் கண்டானே -பெரிய திருமொழி-8-10-1–என்னும் படி
ஈஸ்வரன் தான் அடியிலே செய்தால் போல் நாலு வேதங்களையும் சாஷாத் கரித்து அஷ்டா தச புராணம் கர்த்தா சத்யவதீ ஸுத-என்கிற படி அஷ்டாதச புராணங்கள் உடைய ஆநு பூர்வியையும் தர்சித்துச் சொன்ன வேத வியாச பகவானை சொல்லுகிறது-நால் வேதம் கண்டான் -என்கிற இடத்தில் ஸ்வேன ரூபேண நின்று தர்சித்தமை அன்றிக்கே வியாச ரூபேண நின்று தர்சித்தமை தன்னைச் சொல்லுகின்றது இவருக்கு கருத்தாகவுமாம் சங்கீர்ண புத்தயோ தேவா பிரம ருத்ர புரஸ்ஸர சரண்யம் சரணம் ஜக்மு நாராயண மநாமயம்..தைர் விக்ஜ்ஞாபித்த கார்யஸ்து பகவான் புருஷோத்தம அவதீர்னோ மகா யோகி சத்யவத்யாம் பராசராத் என்றும்-கிருஷ்ண த்வைபாயனம் வியாசம் வித்தி நாராயண பிரபும் -என்றும் பகவத் ஏவச அவதாரயா பகவான் தானாக சொல்லக் கடவதிறே..–இப்படி இருந்துள்ள ஸ்ரீ வேத வியாச பகவானை வேதங்களின் பூர்வ சித்த அனுபூர்வியை தர்சித்து சொன்ன படியாலே தர்சநாத் ருஷி மனந சீலோ முனி கவி கிராந்த தர்சீ-என்கிற வர்தங்களை நினைத்துக் கொண்டு-ஸ்ரூயதாம் சிம்ஹனா தோயம் ருஷேச்தச்ய மகாத்மனா தர்மேச அர்த்தேச கர்மே ச மோஷே ச பரதர்ஷப -என்றும்-ஏவம் விதம் பாரதம் து ப்ரோக்தம் ஏன மகாத்மனா சோயம் நாராயணஸ் சாஷாத் வியாச ரூபீ மகா முனி –என்றும் சஷால் லோகான் பாவ்யமான கவி முக்ய பராசர்ய-என்றும்
ருஷி முனி கவி என்றும் சொல்லிற்று இறே–மந்த்ர தர்சிகள் ஆனவர்களை பூர்வ ஸித்த சந்தர்ப்பத்தை
சாஷாத் கரித்து சொன்னவர்கள் என்னும் இடம் தோற்ற நம ருஷிப்யோ மந்த்ர க்ருத்ப்ய -என்றும்
பகவான் சௌனக முனி -என்றும் இத்யாதிகளாலே ருஷி முனி என்று சொல்லிற்று இறே .-இவர்கள் விஷயத்திலும் கவி சப்த பிரயோகம் உண்டாகில் வந்த ஸ்தலங்களிலே கண்டு கொள்வது -ஆக இப்படி இவர்களை சொன்னால் போலே த்ராவிடமான இதின் பூர்வ ஸித்த அனுபூர்வியை சாஷாத் கரித்து பேசின இவ் ஆழ்வாரையும் –-ருஷிம் சுஷாமஹே கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் இவோதிதம்
சகஸ்ர சாகாம் யோத்ரா ஷீத் த்ராவிடீம் ப்ரஹ்ம சம்ஹிதாம்
–என்றும்-சடகோபம் முனிம் வந்தே சடானாம் புத்தி தூஷகம் , அஞ்ஞானம் ஜ்ஞான ஜனகம் திந்திரிணீ மூல சம்ஸ்ரயம் -என்றும்-உலகம் படைத்தான் கவி யாயினேற்கு -திருவாய்-3-9-10–என்றும் முன்பு உண்டான சந்தர்ப்பத்தை தர்சிப்பித்து பேசினவர் என்னும் இடம் தோற்ற ருஷி என்றும் ,முனி என்றும் ,கவி என்றும் சொல்லும் என்கை 

”நால் வேதங் கண்டானே”’ (திருமொழி 8 – 10 – 1) என்கிறபடியே நாலு வேதங்களைக்‌ கரை கண்ட வர்களையும்‌ அஷ்டாதஸ புராண கர்த்தாக்‌களையும்‌ “*சதுர் வேத தர்ஸநாத்‌ ருஷி:‘” என்கிறபடியே ருஷிகளென்றும்‌, ”ஜிதந்தே”” இத்யாதி, ஜிதந்தா- மந்த்ர தர்ஸிகளான சவ்நகாதிகளை முனிகளென்றும்‌, இதிஹாஸ கர்த்தாக்களான ஸ்ரீ வால்மீகி பகவான் போல்வாரை கவிகளென்றும்‌ சொல்லுமாப் போலே இவரையும்‌ ““ருஷிம்‌ ஜுஷாமஹே க்ருஷ்ண த்ருஷ்ணா தத்த்வமிவோதிதம்‌ | ஸஹஸ்ர ஸாகாம்‌ யோ த்‌ராஷீத்‌, த்‌ராவிடீம்‌ ப்‌ரஹ்ம ஸம்ஹிதாம்‌” (பரா.௮.) என்றும்‌, ““ஸட,கோபமுநிம்‌ வந்தே, ஸடாநாம்‌ புத்‌தி தூஷகம்‌ | அஜ்ஞாநாம்‌ ஜ்ஞாந ஜநகம்‌ திந்த்ரிணீ மூல ஸம்ஸ்ரயம்‌””’ (பரா. அ) என்றும்‌, “உலகம்‌ படைத்தான்‌ கவி” (திருவா. 3 – 9 – 10) என்றும்‌ சொல்லுகையாலே இவரையும்‌ ருஷி முனி கவி என்னும்‌ என்கிறார் –

வண்டார் பூ மா மலர் மங்கை மண நோக்கம்
உண்டானே உன்னை உகந்து உகந்து உன் தனக்கே
தொண்டானேற்கு என் செய்கின்றாய் சொல்லு நால் வேதம்
கண்டானே கண்ண புரத் துறை யம்மானே—8-10-1-
பிரளய காலத்திலே இவற்றின் உடைய ஆநு பூர்வியை ஸ்மரித்து இருந்து வெளி இடுகை -இறே இவற்றைக் காண்கை யாவது-நித்தியமான வேதத்தில் சாஷாத் காரத்துக்கு மேற்பட இல்லை இறே (ஆகவே படைத்தானே என்னாமல் -கண்டானே -சப்தங்கள் போனாலும் ஆனு பூர்வி அழியாதே )அன்றிக்கே பட்டர் அருளிச் செய்ததாக சிறியாத்தான் பணிக்கும் படி – இது கர்த்தரி அன்று -கர்மணி கிடாய் -என்று பிராப்ய பிராபகங்கள் இரண்டும் அவனே என்னும் இடத்தை யாயிற்று வேதங்கள் வெளி இட்டது –

ருஷிம் ஜுஷாமஹே க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வமிவோதிதம் |
ஸஹஸ்ர சாகாம் யோத்ராக்ஷீத் த்ராவிடீம் ப்ரஹ்ம ஸம்ஹிதாம் ||
–3-எந்த ஒரு முனிவர் – ஆயிரம் சாகைகள் உள்ள சாம வேதம் போலே ஆயிரம் பாசுரங்களை யுடையதான திராவிட ப்ரஹ்ம சம்ஹிதையை சாஷாத் கரித்தாரோ, ஸ்ரீ கிருஷ்ண பக்தியே வடிவு எடுத்து அவதரித்தது என்று சொல்லும்படியான அந்த ஸ்ரீ சடகோப முனிவரை ஸேவிக்கிறோம்!

சடகோப முநிம் வந்தே சடாநாம் புத்தி தூஷணம் |
அஜ்ஞாநாம் ஜ்ஞான ஜனகம் திந்த்ரிணீ மூல ஸம்ஸ்ரயம் ||–6
-குடில புத்திகளுடைய துர்ப்புத்தியைத் தொலைப்பவரும் – தீய மனத்தவர்களுடைய தீய மனத்தை கெடுத்து – அறிவில்லாதவர்களுக்கு நல்லறிவை நல்குமவரும் – அறிவிலிகளுக்கு மருவித் தொழும் மனமே தந்து – ஸ்ரீ திருப்புளி யாழ்வார் அடியிலே வீற்று இருப்பவருமான – இங்குத்தை வாழ்வே தமக்கு நிரூபகமாகக் கொண்ட ஸ்ரீ நம்மாழ்வாரை வணங்குகிறேன்!

நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய்ச்
சென்று சென்றாகிலும் கண்டு,சன்மம் கழிப்பான் எண்ணி,
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?–
3-9-10-ஸ்ருஷ்டிகள் பலித்ததில்லை என்று கை வாங்காதே மிகவும் ஒருப்பட்டு லோகங்களை உண்டாக்கினான் கவி ஆயினேற்கு-கவியாயினுக்கு
அவன் ஸ்ருஷ்ட்டி பலித்து அநந்யார்ஹனான எனக்கு என்றும் -கால தத்வம் உள்ளதனையும் வேறு சிலருடைய கவியில் எனக்கு அந்வயம் உண்டாகி தகுமோ-வேறு சிலர்க்கு கவியாக நான் தகு வேனோ என்றுமாம்-இப்போது பகவத் குணங்களை பாடி மேலும் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத – ஏதத் சாம காயன் நாஸ்தே-என்று பாடப் புகுகிற நான் வேறு சிலர்க்கு தகு வேனோ

இன்னமும் இதன் உடைய அநாதித்வ ஸூசுகமானது ஒன்றை தர்சிப்பிக்கிறார் மேலே-

படைத்தான் கவி என்ற போதே இதுவும் யதா பூர்வ கல்பனம் ஆமே-சூரணை -48-

அதாவது உலகம் படைத்தான் கவி –என்கையாலே ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் -என்கிற படியே
ஒருப் பட்டு மேன்மேலும் லோக சிருஷ்டியை பண்ணும் இடத்தில் ஸுூர்யா சந்திர மசவ் ததா எத பூர்வ மகல்பயத்––தைத்ரியம்-என்கிற படியே ஸ்ருஷ்ட்டி தோறும் சந்திர சூர்யாதி சகல பதார்த்தங்களையும்
யதா பூர்வ கல்பனமாய் வருமா போலே திராவிட வேதமான இப் பிரபந்தமும் ஸ்ருஷ்ட்டி தோறும் யதா பூர்வ கல்பனமாய் வரும் என்று தோன்றும் இறே
என்கை ..

‘ஒன்றி யொன்றி உலகம்‌ படைத்தான்‌ கவியாயினேற்கு’” (திருவா-3-9-10) என்று அடுத்தடுத்து ஜகத் ஸ்ருஷ்டியைப்‌ பண்ணினவனுக்குக்‌ கவி யானேன்‌ என்கையாலே “ஸுூர்யா சந்தரமஸெள ததா யத பூர்வ மகல்பயத்‌?” (தை. உ.) என்று ஸ்ருஷ்டி தோறும்‌ ஸூர்யா சந்த்‌ரமாக்கள்‌ உண்டானாப் போலே  ஸ்ருஷ்டி தோறும்‌ இந்த ப்ரபந்தமும்‌ உண்டென்னுமிடம்‌ தோற்றுகிறது. இத்தாலும்‌ இதினுடைய அநாதித்வம்‌ சொல்லுகிறது.

ஏவம் பூதமான இது பகவத் பிரசாதத்தாலே ஆழ்வாருக்கு சித்தித்து ,-ஆழ்வார் பிரசாத்தாலே இவ் அருகு உள்ளாருக்கு உப ஜீவ்யமாய் ,இவரை இட்டு நிரூபிக்கும் படியானமையை ச த்ருஷ்டாந்தமாக அருளி செய்கிறார் மேல்-ஆனால்‌ அதிகாரிகள்‌ ஸம்ஹ்ருதராக வேதம்‌ நித்யமானபடி என்‌ என்னில்‌, ஸர்வஜ்ஞனான ஸர்வேஸ்வரன்‌ நித்யனாகையாலே அவன் திருவுள்ளத்திலே வாஸனை கிடந்து ஸூப்த ப்ரபுத்‌த, ந்யாயத்தாலே ஸம்ஹாராநந்தரம்‌ “யோ ப்‌,ரஹ்மாணம்‌ விததாதி பூர்வம்‌ யோ வை வேதாம்ஸ் ச பரஹிணோதி தஸ்மை” (ஸ்வே.6 – 18) என்கிறபடியே ப்‌,ரஹ்மாவை உண்டாக்கி, அநந்தரம்‌ அவனுக்கு வேத ப்ரதாநத்தைப் பண்ண, ஸர்வேஸ்வரனோடே அத்‌யயநம்‌ பண்ணின அந்த ப்‌ரஹ்மாவானவன்‌ ஜ்யேஷ்ட புத்ரனான ருத்‌ரன்‌ தொடக்கமானாரை ஒதுவித்தாப் போலே ஸர்வேஸ்வரன்‌ இந்த த்‌ராவிட வேத ஸம்ஸ்காரத்தைத்‌ திருவுள்ளத்திலே வைத்து இவரை ஓதுவிக்க, இவரும்‌ தம் பக்கலில்‌ க்ருதஜ்ஞரான ஸ்ரீ மதுர கவிகள் போல்வாரை அத்‌யயநம்‌ பண்ணுவிக்க, இதுவும்‌ இவரை யிட்டு நிரூபிக்கும்படி யாய்த்து என்கிறார்‌-

உறக்கம் தலை கொண்ட பின்னை மறை நான்கும் உணர்ந்த தங்கள் அப்பனோடே ஓதின சந்த சதுமுகன் சலம் கலந்த வெண்புரி நூல் மானுரி திரி தந்து உண்ணும் காமன் உடல் இருக்கு இலங்கு
ஜ்யேஷ்ட புத்ராதிகளுக்கு மறை பயந்தாப் போலே-ஆதுமில் காலத்து எந்தையான வாய் முதல் அப்பன் பிரம குருவாய் இராப் பகல் முன் சொல்ல-கற்றனமே என்ற இவரும் நாவினால் நன்மையால் என்னும் ஓத வல்ல பிராக்களை கன்மின்கள் என்று சொல் பயிற்ற வேதம் ஓதுவார் ஒத்து ஆகையாலே ஆதர்வணாதிகள் போலே இதுவும் பேர் பெற்றது-சூரணை -49-

அதாவது
உன்னிய யோகத்து உறக்கம் தலை கொண்ட பின்னை-பெரிய திருமடல் -8- -என்கிற படியே சம்ஹ்ருதி சமயத்தில் நாம ரூப விவாகநர்ஹமாய் சதவஸ்தமாய் கிடந்த இத்தை ஸ்ருஷ்ட்டி காலம் வந்தவாறே
விபக்தம் ஆக்கி மகதாதி சகல தத்வங்களையும் அண்டத்தையும் சிருஷ்டித்து சதுர் முக சிருஷ்டிக்கு முன்னாக ஏகார்ணவத்திலே –இவை நல் வழியாய் கரை சேரும் விரகு ஏதோ -என்று அனுசந்திக்கை யாகிற யோக நித்தரை செய்த அனந்தரம்

உன்னிய யோகத் துறக்கம்‌ தலைக் கொண்ட பின்னை”’ (பெ. திருமடல்‌) என்கிறபடியே “ந ப்ரஹ்மா நேஸாநோ நேமே த்‌யாவாப்ரூதிவீ ந நக்ஷத்ராணி”’ (மஹோபநிஷத்‌) என்றும்‌, ““ப்ருதி வ்யப்ஸு ப்ரலீயதே” என்று தொடங்கி, “மஹாநவ்யக்தே லீயதே அவ்யக்தம் அஷரே லியதே அக்ஷரம்‌ தமஸி லீயதே தம? பரே தேவ ஏகீ பவதி” ‘(ஸு.உ.), “ஏகோ ஹ வை நாராயண ஆஸீத்‌” (ம.உ.) என்றும்‌, ““ஒன்றுந் தேவுமுலகுமுயிரும்‌ மற்றும்‌ யாதுமில்லாவன்று”” (திருவா. 4 – 10 – 1) என்றும்‌ சொல்லுகிறபடியே ஸகல தத்த்வங்களும்‌ அவர் பக்கலிலே ஏகீபவித்து ‘அப்ரஜ்ஞாதமலக்ஷணம்‌”‘ (மநு. 1 – 5) என்கிறபடியே நாம ரூப விபாகா நர்ஹமாய்‌ அவனை யிட்டு நிரூபிக்க வேண்டும்படி அவனெருவனுமேயாய்‌ மேல்‌ ஸ்ருஷ்ட்யாதி முகத்தாலே சேதநருடைய ரக்ஷண ப்ரகாரங்களைத்‌ திரு வுள்ளத்தோடே கூட்டுகிற தஸை யிறே ஸம்ஹாரமாவது.

தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும்———6
என்னும் இவையே முலையா வடிவமைந்த
அன்ன நடைய வணங்கேய் அடி இணையைத்—————7
தன்னுடைய அம் கைகளால் தான் தடவத் தான் கிடந்ததோர்
உன்னிய யோகத் துறக்கம் தலைக் கொண்ட—————8தான் கிடந்து –-ஸ்வதஸ்   சர்வஞ்ஞானாய் -ஒன்றால் ஒரு காலுஷ்யம் இன்றிக்கே இருக்கக் கடவ அவன்-இவள் உடைய ஸ்பரசத்தாலே  வந்த ஸூகத்தாலே இரண்டும் அறியாதே கிடந்தது உறங்கா நிற்கும் –தோர் உன்னிய யோகத் துறக்கம் தலைக் கொண்ட பின்னை   – அல்லாதார்க்கு முன்பே தானே நெஞ்சு இருண்டு இருக்கும் இ றே
அதுக்கு மேலே கண்ணைச் செம்பளித்தவாறே புறம்பு பிரகாசிக்கிற இதுவும் போய் இருளும் இறே –
இவனுக்கு அங்கன் ஒன்றும் இன்றியே திருக் கண்களை செம்பளித்தால் அகவாயில்
பிரகாசிக்குமதுக்கு வர்த்தமானாய் இருக்கும் –உன்னுகை –அனுசந்திக்கை –யோகத் துறக்கம் –
ரஜஸ் தமஸ் ஸூ க்களால் அபி பூதனாய்உறங்குகிறான் -அன்று-உறங்குவான் போல் யோகு செய்த பெருமான்
-திரு வாய் மொழி -5-4-11-யோக நித்தரை இறே அவை நல் வழியாக கரை சேரும் வகையதோ -என்று ஜகத் ரஷண சிந்தை பண்ணிக் கொண்டாயிற்று கண் வளர்ந்து அருளுகிறது –

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர்படைத்தான்

குன்றம் போல் மணிமாடம் நீடு திருக் குருகூரதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–4-10-1–தேவ ஜாதியும் அவர்களுக்கு இருப்பிடமான லோகங்களும் மனுஷ்யாதிகளான ஆத்மாக்களும் அண்டத்துக்கு அடியான மஹதாதிகளும் ஒன்றும் இல்லாத அன்று-ஒன்றும் தேவும் என்று தேவாதி காரியங்களுக்கு காரணத்திலே லயத்தை சொல்லுகிறது என்று ஒரு தமிழன் சொன்னான் அன்று,-கரண களேபரங்களை இழந்து அசித் விசிஷ்டமாய்க் கிடந்த அன்று நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்-சதுர்முகனோடு கூட தேவ ஜாதியையும் லோகங்களையும் மனுஷ்யாதி யாத்மாக்களையும் உண்டாக்கினான் – இவை அழிந்தது என்கிற இடத்தில் மஹதாதிகளையும் சொன்னார் –ஸ்ருஷ்டியில் ப்ரஹ்மா தொடக்கமாக சொன்னார் இதுக்கு கருத்து என் என்னில்-மஹதாதிகளிலே பரத்வ சங்கை பண்ணுவார் இல்லாமையால் பரத்வ சங்கை பண்ணுகிற இடமே பிடித்துச் சொல்லுகிறார் -அவர்கள் பக்கல் பரத்வத்தை கழிக்கைக்காக- சதுர்தச புவன சிரேஷ்டாவோடு -அவனாலே ஸ்ருஷ்டராய் நித்ய ஸ்ருஷ்டிக்கு கடவரான தச பிரஜாபதிகளோடு அவர்களுக்கு போக ஸ்தானமான லோகங்களோடு -அவர்களுக்கு குடி மக்களான மனுஷ்யாதிகளோடு வாசி அற படைத்தான்-போக மோக்ஷங்களை விளைத்து கொள்ளுகைக்காக கரணங்களைக் கொடுத்தான்

உறங்குவான் போல் யோகு செய்த பெருமானைச்
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
நிறங் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப்பத்தால்
இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ?–5-4-11—நம்மால் கார்யம் இல்லாத இவர்களால் கார்யம் என் -என்று லோகத்தாரை விட்டு -இத்தசையை விளைத்தவன் இவ்வளவில் செய்வது என் -என்று அவளை அனுசந்தித்தார் –ஜகத் ரக்ஷணார்த்தமாக திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளின படியை அனுசந்தித்து –இப்போது வாராமையாலே வெறுத்தோம் அத்தனை -நம்முடைய ரக்ஷண சிந்தை பண்ணிக் கிடக்கிறன் நம்மைக் கை விடான் -என்று இம் மஹா குணத்தை அனுசந்தித்து தரிக்கிறார்-கண் வளருகை என்று ஒரு பேராய்-ஜகத் ரக்ஷண உபாய சிந்தை பண்ணுகிற சர்வேஸ்வரனை

உணர்ந்தாய் மறை நான்கும் -இரண்டாம் திருவந்தாதி -48–என்கிற படியே-ஸூப்த பிரபுத்த ந்யாயத்தாலே ,சம்ஸ்கார கதமாய் கிடந்த நாலு வேதங்களையும் ஆநு பூர்வி தப்பாத படி ஸ்மரித்த –திசை முகனார் தங்கள் அப்பன் -என்கிற படியே தனக்கு ஜநகனான சர்வேஸ்வரனோடே-
யோ வை வேதாம்ச ப்ரஹனோதி தஸ்மை –ஸ்வேதாஸ்வர உபநிஷத்–என்னும் படி ஓதின –
சந்த சது முகன் –பெரியாழ்வார் திருமொழி-2-5-8–என்கிற படி சந்தசை நிரூபகமாக உடைய சதுர் முகன் –சலம் கலந்த செஞ்சடை –திருச்சந்த –113-வெண் புரி நூல் மார்வன் -முதல் திருவந்தாதி -46- –மானுரிய தளம் உடையவர் –பெரிய திருமொழி-10-9-4-பிறர் மனை திரிந்து உண்ணும் -திருக் குறும் தாண்டகம் -19-
காமன் உடல் கொண்ட தவத்தார் -நான்முகன்-78- இருக்கிலங்கு திருமொழிவா எண் தோள் ஈசர் -பெரிய திருமொழி-6-6-8- என்று நித்ய ஸ்நான உபவீத கிருஷ்ணாஜினதரான-பிஷான போஜன -இந்திரிய ஜெய -சதா அத்யயன – பரத்வங்களான பிராமச்சர்ய லஷண யுக்தனாய் -ப்ரஹ்மண புத்ராயா சேஷ்டாய – என்கிற படியே தனக்கு ஜேஷ்ட புத்ரனான ருத்ரன் முதலானார்க்கும் – சரணாம் மறை பயந்த -முதல் திருவந்தாதி-60–என்கிற படியே புருஷார்த்த தத் உபாய ஞான சாதனமான வேதத்தை ஒதுவித்தாப் போலே —

பின்னை ஸம்ஹாராநந்தரம்‌ யோக, நித்‌ராஸமா ரூடனாய் ஸ்ருஷ்ட் யுந்முகனான காலத்தில்‌  ““உணர்ந்தாய்‌ மறை நான்கும்‌’” (இ.திருவ.48) என்கிறபடியே நாலு வேதங்களையும்‌ ஸ்மரித்த “திசை முகனார்‌ தங்களப்பன்‌” (திருமொழி 2 – 2- 7) என்கிறபடியே தனக்குப்‌ பிதாவான ஸர்வேஸ்வரனோடே அத்‌யயநம்‌ பண்ணின.–முன்புள்ளவையை யிறே அத்‌யயநம்‌ பண்ணலாவதும்‌-ஸ்மரிக்கலாவதும்‌- ”சந்தச் சதுமுகன்‌” (பெரியா. 2 – 5 8) என்கிறபடியே ப்‌,ரஹ்மாவானவன்‌ ”சலங் கலந்த செஞ்சடை”, (திருச்ச. 113) “வெண் புரிநூல் மார்வன்‌”’(மு.திரூவ. 46) , ““மானுரியதளுமுடையவர்‌‘ (திருமொழி 10 9 – 5) , ““பிறர் மனை திரி தந்துண்ணும்‌”’ (திருக்குறு. 19) , ““காமனுடல் கொண்ட தவத்தான்‌”’ (நா.திருவ.. 79) , ““இருக்கிலங்கு திருமொழி வாய்‌ எண்டோளீசர்‌”’ (திருமொழி 6 – 6 – 9) என்றும்‌, நித்ய ஸ்நாந யஜ்ஞோபவித க்ருஷ்ணாஜிந தாரணமும்‌, பிக்ஷாசரணமும்‌, ஜிதேந்த்‌ரியத்வமும்‌, ஸதா அத்‌யயந பரத்வமுமாகிற ப்‌ரஹ்மசர்ய லக்ஷணத்தை உடையனாய்‌, “ப்‌ரஹ்மண? புத்ராய ஜ்யேஷ்டாய ஸ்ரேஷ்டாய”’ என்கிறபடியே ஜ்யேஷ்ட புத்ரனான ருத்ரன் முதலானார்க்கு சரணா மறை பயந்த தாமரையான்‌’‘ (மூ.திருவ. 60) என்று புருஷார்த்த, தத் ஸாதந ஜ்ஞாந ஸாதநமான வேதத்தை ஓதுவித்தாப் போலே

உணர்ந்தாய் மறை நான்கும் ஓதினாய் நீதி
மணந்தாய் மலர்மகள் தோள் மாலே -மணந்தாய் போய்
வேயிரும் சாரல் வியலிரு ஞாலம் சூழ்
மா யிரும் சோலை மலை——48–நாலு வகைப்பட்ட வேதங்களையும் ஸ்மரித்தாய்–பிரளய காலத்திலே இவை இழந்து கிடக்கிறபடி திரு உள்ளத்திலே பட்டு இவற்றை அடித் தொட்டும் யுண்டாக்க வேணும் என்று கோலி யருளி ஸூப்த பிரபுத்த ந்யாயத்தாலே மறந்தவன் நினைத்தால் போலே -உறங்கினவன் உணர்ந்தாப் போலே -மறைந்து கிடந்த வேதங்களையும் யுண்டாக்கினாய்–அந்த ஆனுபூர்வி தப்பாதபடி ஸ்மரிக்கையாலே- அபௌ ருஷேயத்வமும் நித்யத்வமும் எல்லாம் சித்தித்தது ஆய்த்து வேதத்துக்கு –வாக்யத்துக்கு பத நியதியோபாதியும் போருமாய்த்து -பதங்களில் வர்ண நியதியும் – வேதங்களும் தன்னோடு ஒக்க நித்யமாய்ப் பழையதாய் இருக்கையாலே பண்ணினான் என்னாதே உணர்ந்தான் என்கிறது-பூர்வே பூர்வேப்யோ வாச எத தூசு -காட்டகம் -3-9-50–உளன் சுடர் மிகு சுருதியுள் -என்றும் முது வேத முதல்வன் -திருவாய் 1-6-2- செப்பெட்டைக் கையிலே கொடுத்து நிதியைக் காட்டுமாப் போலே –

திங்களப்பு வானெரி காலாகித் திசை முகனார்
தங்களப்பன்
சாமியப்பன் பாகத்திருந்த வண்டுண்
தொங்கலப்பு நீண் முடியான் சூழ் கழல் சூட நின்ற
எங்களப்பன் எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-7–கார்ய வர்க்கத்துக்கு உப லஷணமாக சந்திரனையும் காரணமான பூத பஞ்சகத்துக்கு உப லஷணமாக நாலையும் சொல்லி இவற்றுக்கு அந்தராத்மாவாய் நிற்கிறான் என்றபடி -சதுர் முகனுக்கும் ஜநகன் ஆனவன் –

உந்தி எழுந்த வுருவ மலர் தன்னில்
சந்தச் சதுமுகன் தன்னைப் படைத்தவன்

கொந்தக் குழலை குறந்து புளி யட்டித்
தந்தத்தின் சீப்பால் குழல் வாராய் அக்காக்காய்
தாமோதரன் தன்  குழல் வாராய் அக்காக்காய் -2 5-8 – திரு நாபியிலே கிளர்ந்த அழகிய தாமரைப் பூவிலே உருவம்-அழகு –ஜகத் சிருஷ்டியில் வந்தால் தன்னோடு ஒக்க விகல்ப்பிக்கலாம்படி ஞான சக்திகளால் வந்த வைலஷண்யத்தை உடைய சதுர்முகனை சிருஷ்டித்தவன்-சந்தம் -அழகு–அன்றிக்கே
சந்தம் என்று சந்தஸை வேதத்தை தனக்கு நிரூபகமாக உடையவன் -என்னவுமாம்-

சலம் கலந்த செஞ்சடைக் கறுத்த கண்டன் வெண்டலைப்
புலன் கலங்க வுண்ட பாதகத்தன் வன் துயர் கெட
அலங்கல் மார்பில் வாச நீர் கொடுத்தவன் அடுத்த சீர்
நலம் கொள் மாலை நண்ணும் வண்ணம் எண்ணு வாழி நெஞ்சமே –113-கங்கா ஜலத்தை சாகல்யேந  தன்னுள்ளே அடக்கினதாய் -சிவந்த சடையையும் -ஷீராப்தி சமுத்திதமான விஷத்தாலே கறுத்த கண்டத்தையும் உடைய ருத்ரன் –கங்கா தரத்வமும் -நீல கண்டத்வமும் -இவனுடைய சக்திக்கு ஸூசகமாய் இருக்கிறது –சிவந்த ஜடை என்கையாலே -இந்த சக்தி சாதித்துப் பெற்றது என்கைக்கு ஸூசகம் –இப்போது இவனுடைய சக்தி சொல்லுகிறது என் -என்னில் – குரு பாதக ஹேதுவாய் இருந்துள்ள இந்த துர்மாநத்துக்கு அடி இந்த சக்தி என்கைக்காக –சத் பிரக்ருதிகளுக்கு உண்டான சக்தி சாத்விகருக்கு நிழல் ஆமாப் போலே துர்மாநிகளுக்கு உண்டானது பிறர்க்கும் பாதகமாய் இறே இருப்பது –

பண்புரிந்த நான்மறையோன் சென்னிப் பலியேற்ற
வெண் புரி நூல் மார்பன் வினை தீர புண் புரிந்த
ஆகத்தான் தாள் பணிவார் கண்டீர் அமரர் தம்
போகத்தால் பூமி யாள்வார் –46-அழகிய ஸ்வரத்தை யுடைத்தான வேதத்தைத் தரித்துள்ள ப்ரஹ்மாவினுடைய தலையை ருத்ரன் அறுத்தான் ஆய்த்து-லோக குருவுமாய் தனக்குப் பிதாவுமான அவனுடைய சிரஸை இறே சேதித்தது   –வாமாங்குஷ்ட நகாக்ரேண சிந்னம் தஸ்ய சிரோ மயா -என்கிறபடியே – அவனும் கபாலீத்வம் பவிஷ்யசி -என்று சபிக்கப்ரஹ்ம ஹத்யையாலே அத்தலை யோட்டிலே சிரகாலம் பிஷை புக்குக் கொடு திரிந்தான் ஆய்த்து –வெண் புரி நூல் மார்பன் வினை தீர –
பிராயச்சித்த வேஷத்தோடு கூட சர்வேஸ்வரன் உடைய முன்னே வந்து தோற்றினான் ஆய்த்து –விநீத வேஷத்தோடு ப்ராயசித்தியான படி – மூலை யடியே திரிந்தார் பாதகிகள் ஆனவாறே முழுகித் திரியுமா போலே இவனும் தேவியும் சண்டேஸ்வரனும் அப்படியே-வினை தீர –என்கிற இத்தால் இவனுடைய கர்ம வஸ்யத்வமும் தான் பண்ணின கார்யம் தனக்குப் பரிஹரிக்கப் போகாமையும் சொல்லுகிறது
இத்தால் ஈஸ்வரத்வ சங்கை இல்லை -என்கிறது –

மல்கிய தோளும் மானுரியதளும் உடையவர் தமக்குமோர் பாகம்
நல்கிய நலமோ நரகனைத் தொலைத்த  கர தலத்தது அமைதியின் கருத்தோ
அல்லியங் கோதை யணி நிறம் கொண்டு வந்து முன்னே நின்று போகாய்
சொல்லி யென் நம்பி இவளை நீ யுங்கள் தொண்டர் கைத் தண்டு என்றவாறே –10-9-4—பல தோள்களை உடையனாய் – மானுடைய தோல் என்னுதல் –அன்றிக்கே-மகானான ஆனையினுடைய தோலை உடையனாய் (மானுரியதளும்-மான் -மகான் -மான் யானை -இரண்டின் -உரி அதளும் )-தன் தபோ பலத்தாலே நான் கார்யம் கொள்ள வல்லேன் -என்று கொண்டு துர்மானத்தை உடையனாய் இருக்கிற ருத்ரனுக்கும் திரு மேனியிலே இடம் கொடுத்த சீலாதிசயத்தை நினைத்து இருக்கிறாயோ –

பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர் மனை  திரி தந்து உண்ணும்
முண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர்
உலகம் ஏத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால் மற்றை யார்க்கு உய்யலாமே -19–உளுத்து அளம் பற்றின சுவர் போலே
பொடி உதிருகிற தலையோட்டையைக் கையிலே ஏந்தி –முடை யடர்த்த சிரம் ஏந்தி -மூ வுலகும் பலி திரிவோன் -என்கிறபடியே நெடும் காலம் கையோட்டைக் கொண்டு திரிந்து இரந்து உண்டான் –வெந்தார் என்பும் சுடு நீரும் மெய்யில் பூசிக் கையகத்து ஓர்
சந்தார் தலை கொண்டு உலகு ஏழும் திரியும் பெரியோன் தான் சென்று என்
எந்தாய் சாபம் தீர் என்ன இலங்கமுது நீர் திரு மார்வில்
தந்தான் சந்தார் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே
—1-5-8-)

கண்டு வணங்கினார்க்கு என்னாம் கொல் காமன் உடல்
கொண்ட தவத்தான் குமை உணர்த்த
-வண்டலம்பும்
தார் அலங்கல் நீண் முடியான் தன் பேரே கேட்டு இருந்து அங்கு
ஆர் அலங்கல் ஆனமையால் ஆய்ந்து-78—மன்மதனுடைய உடலை நீறாக்கின தபஸ்ஸை யுடைய ருத்ரனுக்கு-மஹிஷியான உமையானவள் முறை மாறாடி அஞ்ஞான ஞாபனம் பண்ண-

முருக் கிலங்கு கனித் துவர் வாய் பின்னை கேள்வன் மன்னெல்லாம் முன்னவியச்  சென்று வென்றிச்
செருக் களத்து திறல் அழியச் செற்ற வேந்தன் சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர்
இருக் கிலங்கு திரு மொழி வாய் எண் தோள் ஈசற்கு  எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட
திருக் குலத்து வளச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –6-6-8–வேதத்தில் ஸ்ரீ புருஷ ஸூக்தாதிகளை உச்சரியா நின்றுள்ள வாயை உடையராய் எட்டுத் தோள்களையும் உடையராய் இருக்கிற தேவர்க்கு -(ருத்ரன் )-

சரணா மறை பயந்த தாமரை யானோடு
மரணாய மன்னுயிர் கட்கெல்லாம் அரணாய
பேராழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது
ஓராழி சூழ்ந்த வுலகு ———–60–எல்லாருக்கும் ஹிதத்தை சொல்லக் கடவதான வேதத்தை ஓதுவிக்கப் பட்ட ப்ரஹ்மாவோடு –-சரணா மறை பயந்த–என்றத்தை -அரணாய-என்றத்தோடே கூட்டி ஈஸ்வரனுக்கு விசேஷணம் ஆக்கவுமாம் –சரணா மறை பயந்த–அபிமத சித்திகளுக்கு அடைத்த உபாய பேதங்களை யுடைய வேதங்களை ஜகத்துக்கு ஓதுவிக்கும்-ப்ரஹ்ம விதாவான ப்ரஹ்மா மந்த்ர க்ருத் என்பது(ப்ரஹ்ம விதம் வர -ப்ரஹ்மத்தை அறிந்தவர்களின் ஸ்ரேஷ்டரான நான்முகன் )

ஆதுமில் காலத்து எந்தை-திருவாய் -3-3-4- –என்றும் –ஒன்றும் தேவும்-திருவாய் -4-10-1- -இத்யாதிப் படியே
ஒன்றும் இல்லாத சம்ஹார காலத்திலே-நாம ரூபங்களை இழந்தவோ பாதி-சத்தையும் இழந்து போகாமே எந்தையான முறையாலே தன் மேல் ஏறிட்டுக் கொண்டு நோக்கி-மீளவும் கரணாதிகளை தந்து , ஞான விகாசத்தை பண்ணின –வாய் முதல் அப்பன்-திருவாய் -7-9-3- -என்கிற வாய்த்த காரண பூதனான உபகாரகன்-பீதக வாடை பிரானார் பிரம குருவாக வந்து -பெரியாழ்வார் -5-2-8–என்கிற படியே தானே ஆசார்யனாய் –-இராப் பகல் ஓதுவித்து பெரியாழ்வார் -5-2-3–என்கிற படியே -திவாராத்ர விபாகம் அற-என் முன் சொல்லும் -திருவாய் -7-9-2–என்கிற படியே – முன் உருச் சொல்ல – திரு நாமச் சொல் கற்றனமே -திருவிருத்தம் -66–என்று அநூச்சாரணம் பண்ணினேன் என்று இப்படியே அவனோடு ஓதின இவரும்-

ஆதுமில்‌ காலத்தெந்தை”’ (திருவா. 3 – 4 – 4) என்கிறபடியே-சேதநாசேதநாத்மகமான ஸகல பதார்த்தங்களும்‌ வஸ்துத்வ-நாம பாக்த்வங்களை இழந்த காலத்தில்‌ இவற்றைத்‌ தன் பக்கலிலே ஏறிட்டுக் கொண்டு நோக்கி, “எந்தை” என்கிற படியே ஸ்வாமியா யிருக்கிறவன்‌. “என்‌ வாய் முதலப்பன்‌’‘ (திருவா. 7 – 9 – 3) எனக்கு வாய்த்த ப்ரதமோபகாரகன்‌ என்கிற. ““பீதகவாடைப் பிரானார்‌ பிரம குருவாகி’” (பெரியா. 5 – 2 – 8) என்கிறபடியே ஸர்வேஸ்வரன் தானே இவர் தமக்கு ஆசார்யனாய் வந்து ““எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப் பகலோதுவித்து”’ (பெரியா. 5 – 2 – 3) என்கிறபடியே திவா ராத்ரமோதுவித்து. இப்படி ஓதுவிக்குமிடத்தில்‌ “என்‌ முன்‌ சொல்லும்‌ மூவுருவாம்‌ முதல்வனே”’(திருவா. 7 – 9 – 2) என்கிறபடியே ஈஸ்வரன்‌ முன்னுருச் சொல்ல, “’திருநாமச் சொல்‌ கற்றனமே” (திருவிரு. 64) என்று அநூச்சாரணம்‌ பண்ணினேன்‌ என்று அவனோடே ஓதின இவரும்‌.

சாதி மாணிக்கம் என்கோ! சவி கொள் பொன் முத்தம் என்கோ!
சாதி நல் வயிரம் என்கோ! தவிவு இல் சீர் விளக்கம் என்கோ!
ஆதி அம் சோதி என்கோ! ஆதி அம் புருடன் என்கோ!
ஆதும் இல் காலத்து எந்தை அச்சுதன் அமலனையே.–3-4-4–எனக்கு ஒரு துணை அல்லாத சம்சார அவஸ்தையில் தன்னோடே உண்டான சம்பந்தத்தை அறிவித்தவன்-எனக்குத் தன்னைப் பெறுகைக்கு முதல் ஒன்றுமில்லாத காலத்திலே, தான் எந்தையான முறையை எனக்கு அறிவித்து, பின்பு ஒரு காலமும் நழுவ விடாதே பாதுகாத்து, இதுதான் என்பக்கல் ஒரு பிரயோஜனம் கொண்டன்றியே நிர்ஹேதுகமாகத் தன் பேறாகப் பாதுகாத்தவனை.

ஆ முதல்வன் இவன் என்று தன் தேற்றி என்
நா முதல் வத்து புகுந்து நல் இன்கவி
தூமுதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்
வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ!
–7-9-3–என்னை உபகரணமாகக் கொண்டு -கர்த்தாவும் தானேயாய் -கர்மீபவிப்பானும் தானே யானான்-எனக்கு வாய்த்த -காரண பூதனான -உபகாரகனை-இனி ஒரு நாளும் மறக்க உபாயம் இல்லை-

ஏதங்கள் ஆயின எல்லாம் இறங்க விடுவித்து என்னுள்ளே
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து
போதில் கமல வல் நெஞ்சம் புகுந்தும் என் சென்னித் திடரில்
பாத இலச்சினை வைத்தார் பண்டு அன்று பட்டினம் காப்பே -5- 2-8 –-ஸ்ரீ சர்வேஸ்வரத்வ சிஹ்னமுமாய் –
ஸ்ரீ புருஷோத்வ லஷணமுமாய் இருக்கும் திருப் பீதாம்பரத்தை உடைய சர்வேஸ்வரன்-ப்ரஹ்மத்தை உபதேசிக்கிறவன்-உத்பாதக ப்ரஹ்ம பித்ரோர் கரீயான் பிரமத பிதா –என்னக் கடவது இறே-ப்ரஹ்ம சப்தம் ஞான வாசி-ஈஸ்வரத் பிடார் கொண்டு திருத்த ஒண்ணாமல் ஆசார்யனாய் இறே திருத்துவது (மண் மிசை மாதவன் —-நண்ணறு ஞானம் தலைக்கொண்டது அண்ணல் ராமானுஜன் வந்து தோன்றிய அப்பொழுதே )

வயிற்றில் தொழுவைப் பிரித்து வன் புல சேவை அதக்கி
கயிற்றும் அக்கும் ஆணி கழித்து காலிடை பாசம் கழற்றி
எயிற்றிடை மண் கொண்ட எந்தை யிராப் பகலா ஓதுவித்து என்னை
பயிற்றிப் பணி செய்யக் கொண்டான் பண்டன்று பட்டினம் காப்பே -5- 2-3 –பிரளய ஆவர்ணத்திலே அகப்பட்டு கிடக்கிற பூமியை எடுத்தால் போலே – சரீர வச்யனான என்னை எடுத்த ஸ்வாமி –திவா ராத்ர விபாகம் அற-சர்வ காலமும் -என்றபடி –என்னை சிஷிப்பித்து –அதாவது –கர்ப்ப வாசமும் —இந்திரிய வச்யத்வமும் –கர்ம வச்யத்வமும் –யம வச்யத்வமும் – த்யாஜ்யம் என்னும் அத்தை அறிவித்து-தன்னுடைய சர்வ சேஷித்வத்தையும் – நிரதிசய போக்யதையும் – தமக்கு சேஷத்வம் ஸ்வரூபம் என்னும் இடத்தையும் ஆய்த்து -ஒதுவித்து–இத்தை அனுஷ்டான பர்யந்தமாக்கி – செய்யேல் தீ வினை ( திருவாய் -2-9-3 ) -என்று-ஓதுவித்த பிரயோஜனம் பெற்ற படி – நித்ய கைங்கர்யம் கொள்ளக் கடவோம் -என்று திரு உள்ளத்தாலே அறுதி இட்டு -கொண்டபடி –

என் சொல்லி நிற்பன்?என் இன்னுயிர் இன்று ஒன்றாய்
என் சொல்லால் யான் சொன்ன இன்கவி என்பித்துத்
தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன் என்
முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே.–7-9-2-
–அவன் முன்னே சந்தை இட பின்னே சொன்னேன் –தானே சொன்னான் ஆகில் ஸ்ரீ கீதை போலே வறமுறுகலாம் இறே –அது தானே ஏது போலே என்னில் த்ரி மூர்த்திகள் என்று தன்னையும் கூட எண்ணும் படி ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு அடியானால் போலேயும் -ப்ரஹ்மாவை ஓதுவித்து தேவர்களுக்கு வெளிச்சிறப்பு பண்ணி அத்தை அவன் தலையிலே ஏறிட்டால் போலேயும் -ருத்ரனுக்கு அந்தராத்மாவாய் நின்று திரிபுர தஹனம் பண்ணி அவன் தலையிலே ஏறிட்டால் போலேயும் தானே காரியம் செய்து பிறர் கையிலே ப்ரஸித்தியை ஏறிடுகை பண்டே ஸ்வபாவம் என்கை –

இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகளந்த
திருத் தாளிணை நிலத் தேவர் வணங்குவர் யாமுமவா
ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து கனியின்மையின்
கருக்காய் கடிப்பவர் போல் திருநாமம் சொல் கற்றனமே – -64–பூர்ண அனுபவம் பெறாமையாலே சத்தை கிடைக்கைக்காக அவன் திரு நாமத்தைச் சொல்லுகையை அப்யஸித்தோம் (இத்தனை ) என்றபடி-இல்லாமையால் கருக்காய் கடிப்பார் போல் ஆயிற்று- இவருடைய அபிநிவேசத்துக்கு திரு நாமம் –அவனைக் கண்ணாலே கண்டு கையாலே அணைக்க-ஆசைப்பட்டாருக்கு அவன் பேரைக் கொண்டு என் செய்வார்-அதிகாரம் இல்லை யாகிலும் திரு நாமம் மாத்ரம் சொன்னேன் – இத்தை வ்யாஜ்யமாக்கி நிர்ஹேதுகமாக கடாஷித்தான் என்றபடி –அவர்களைப் போல் பக்தி பரவசனாய் அனுபவிக்க பெறாமை இழந்தேன் என்றும் –அவர்கள் அனுபவிக்கும் விஷயத்தை கிட்டி அவத்யத்தை விளைத்தேன் என்றும் விஷாதத்திலே தாத்பர்யம்-

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் -என்று தொடங்கி– குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரிவன் -என்று ஸ்வாச்சார்ய பிரேமத்தையும்-நன்மையால் மிக்க நான் மறை யாளர்கள் புன்மையாய் கருதும் படியான என்னை அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையான் சடகோபன் -என்று க்ருதக்ஜைதையை முன்னிட்டு கொண்டு – ஓத வல்ல பிராக்கள்-திருவாய்-9-1-11- -என்று இத்தை அப்யசிக்க வல்ல உபகாரகர் என்னும் படி .. ஸ்ரத்தா பூர்வகமாக ஓதும் ஸ்ரீ மதுர கவிகள் போல்வாரை-கன்மின்கள் என்று உம்மை யான் -என்கிற படியே -இத்தை அப்யசி யுங்கோள்–என்று சொல்லி ,-சொல் பயிற்றிய -திருவாய்-9-5-8–என்கிற படியே -இச் சப்தத்தை அப்யசிக்க-வேதமானது -ஓதுவார் ஒத்து -என்று அத்யேதாக்களை இட்டு நிரூபிக்கபடுமது ஆகையாலே ,ஆதர்வணம் ,தைத்ரியம் காண்வம் என்று பேர் பெற்றால் போலே , இவர் இதுக்கு பிரதமாத்யேதாவனது கொண்டு -இதுவும் சடகோபன் சொல் -திருவாய்–1-2-11–என்று பேர் பெற்றது என்கை

‘நாவினால்‌ நவிற்றின்பமெய்‌தினேன்‌”’ (க.நு.சி. 2) என்று தொடங்கி ““குருகூர் நம்பிப் பாவினின்னிசை பாடித் திரிவன்‌”” என்றும்‌, “நன்மையால்‌ மிக்க நான்மறையாளர்கள்‌ புன்மையாகக்‌ கருதுவரா”ம் படியான “என்னை ஆண்டிடும்‌ தன்மையான்‌ சடகோபன்‌’‘ (க.நு.சி,4) என்கிற ப்ரதிபத்தியை யுடைய *ஓத வல்ல பிராக்களான ஸ்ரீமதுரகவிகள் போல்வாரை ““கன்மின்களென்றும்மை யான்‌ கற்பியா வைத்த மாற்றம்‌” (திருவா, 6 – 8 – 6) என்கிறபடியே இப் ப்ரபந்தத்தை அப்‌யஸியுங்கோள்‌ என்று ““சொல் பயிற்றிய நல் வளமூட்டினீர்‌”” (திருவா. 9 – 5 – 8) என்கிறபடியே சொல்லிச்‌ சொல்லுவிக்க, வேதமானது “’ஓதுவாரோத்தெல்லாம்‌ ‘? (திருவா, 3 – 1 – 6) என்கிறபடியே அத்‌யேதாக்களை யிட்டு, அதர்வணமென்றும்‌, தைத்திரீயம்‌ என்றும்‌ பேர் பெற்றாப் போலே இதுவும்‌ “சட கோபன் சொல்‌”” என்கையாலே ‘திருவாய்மொழி’ என்று பேர் பெற்றது 

ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே துணிந்து
தாது சேர் தோள் கண்ணனை குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீதிலாத ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும்
ஓத வல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே-9-1-11-–சம்சாரத்தின் தண்மையும்-ஈஸ்வரனே ப்ராப்ய ப்ராபகங்கள் என்றும் இறே இதில் சொல்லிற்று -இத்தை அப்யஸித்து நல்வழியே போமிது இறே உபகாரகராகை யாவது–அத்தை அப்யசிக்கைக்கு ஹேதுவான சரீர பரிக்ரஹம் பண்ணின காலமே பிடித்து நாதர் என்கிறார் –

என்மின்னு நூல்மார்வன் என்கரும்பெருமான் என்கண்ணன்
தன்மன்னு நீள்கழல்மேல் தண்துழாய் நமக்கன்றி நல்கான்
கன்மின்கள் என்று உம்மை யான் கற்பியா வைத்த மாற்றம் சொல்லிச்
சென்மின்கள் தீவினையேன் வளர்த்த சிறு பூவைகளே!–6-8-6—நீங்கள் அபேக்ஷியாது இருக்க -நான் சொல்லுங்கோள் என்று -ரஷ்யங்களான உங்களை -ரஷகை யான நான் -கற்பித்து வைத்த மாற்றம் -தண்துழாய் நமக்கன்றி நல்கான்-என்கின்ற மாற்றத்தை என்னுதல் –இதுவோ தக்கவாறு என்று கற்பித்த மாற்றத்தை என்னுதல்–அவனுக்கு மறுமாற்றத்துக்கு அவகாசம் இல்லாத படி -கிட்டினால் -என்று இராதே -வழியே பிடித்து சொல்லிக் கொண்டு செல்லுங்கோள்-

உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர்
குயிற் பைதல் காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்
தயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து சொல்
பயிற்றிய நல் வளம் ஊட்டினீர் பண்பு உடையீரே
–9-5-8—தயிரும் பழம் சோறும் -பாலும் வெஞ்சோறும் அவ்வவ காலங்களுக்கு உசிதமாகத் தந்து திரு நாமங்களை கற்பித்ததற்கு பிரதியுபகாரம் பண்ணினி கோள்-நல்ல சம்பத்தை புஜிப்பித்தி கோள் -நான் காலம் தோறும் உங்களுடைய ரக்ஷணம் பண்ணிப் போந்தேன் -நீங்களும் இவ்விடங்களில் நலிந்து போந்தி கோளே-

ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும்
சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிறிதில்லை
போது வாழ் புனந்துழாய் முடியினாய் பூவின் மேல்
மாது வாழ் மார்பினாய் என் சொல்லி நான் வாழ்த்துவனே -3-1-6-ஓதுவார் என்கையாலே -அதிகாரி வைவித்யத்தைச் சொல்லுகிறது – ருகாதி சதுர் வேதங்களும் அத்யேத்ரு பேதத்தாலே பிறந்த சாகா பேதங்களும் –ஆக அத்யேத்ரு பேதத்தால் சாகா பேதங்களாய்க் கொண்டு பிரி யுண்ட வேதங்கள் எல்லாம்

சேரத் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
சீர்த் தொடை யாயிரத்து ஒர்த்த விப்பத்தே –1-2-11-ஹிதம் -நன்மை சொல்ல என்று இழிந்து அஹிதத்தை -தீமையைச் சொல்லுவான் ஒருவன் வார்த்தை அன்று; ஆப்த தமரானவர் வார்த்தை என்கை.

ஆக –அத்யயன -சூரணை-37-இத்யாதி வாக்யத்தில் சந்தங்கள் ஆயிரம் என்று பிரஸ்துதமான திரு வாய் மொழியின் வேதத்வத்தை –எவ்வுலகத்து -சூரணை -39 -இத்யாதி வாக்கியம் தொடங்கி இவ்வளவாக சாதித்தார் ஆய்த்து-

–——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌ – 4-ஆசார பாதம்-4-ஸாஸ்த்ர தாத்பர்ய நிஷ்டாசாராதிகரணம்‌ -(19-38-ஸூரணைகள்) -ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

July 1, 2026

இனி மேல் இந்த சாஸ்திர நிஷ்டராயும்-தாத்பர்ய நிஷ்டராயும் இருக்கும் முமுஷுக்கள் படிகளைச் சொல்லுகிறது-இனி மேல்‌ ஸாஸ்த்ரோப லக்ஷிதமான பக்தி நிஷ்டனுடையவும்‌, தாத்பர்யோப லக்ஷிதமான பிரபத்தி நிஷ்டனுடையவும்‌ ப்ரதிபத்திகளைச்‌ சொல்லுகிறது 

சாஸ்திரிகள் தெப்பக் கரையரை போலே இரண்டையும் இடுக்கி பிறவிக் கடலை நீந்த -சாரஜ்ஞர் விட்டத்தில் இருப்பாரைப் போலே இரு கையும் விட்டு கரை குறுகும் காலம் எண்ணுவார்கள்-சூரணை-19-

அதாவது-ஆத்மா வா அரே த்ரஷ்டவ்யாஸ் ஸ்ரோதவ்ய மந்தவ்ய நிதித்யாசி தவ்ய–ப்ருஹதாரண்யம் –
ஆத்மேத் யேவோபாசீத–ப்ருஹதாரண்யம் – ஒமித் யாத்மானாம் த்யாயத-முண்டகம் – என்று சம்சார நிவ்ருத்தி பூர்வக பகவத் பிராப்தி சாதனமாக பகவத் உபாசனத்தை விதித்து அம்ருதஸ் யைஷ சேது-முண்டகம் – பலமதே உபபத்தே-ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -3-2-8– என்று பகவானே அதற்க்கு பல பிரதானனாகவும் சொல்லும் சாஸ்த்ரத்தில் நிஷ்டர் ஆனவர்கள்
ஆறு நீஞ்சுவார் தெப்பத்தை ஒரு கையிலே இடுக்கி தாங்களும் ஒரு கை துழாவுமா போலே
ஸ்வ யத்னமும் தத் சாத்திய பகவத் கிருபையும் ஆகிய உபயத்தையும் அவலம்பித்து கொண்டு -பிறவி கடல் நீந்துவார்க்கே -திருவாய் -2-8-1–என்கிற படியே சம்சார சாகரத்தை கடக்க தேட–ஸ்வ யத்ன நிஷேத பூர்வகமாக ஆத்மாவின் பகவத் ஏக உபாயத்தை பிரதி பாதிக்கிற சாஸ்திர சாரமான திரு மந்த்ரஜ்ஞர் ஆனவர்கள் ஓடம் ஏறினவர்கள் தீரகமனார்தமான ஸ்வ யத்னத்தையும் தெப்பத்தையும் கை விட்டு –கரை குறுவது எப்போது -என்று பார்த்து கொண்டு அதன் விட்டத்திலே இருக்குமா போலே சம்சார ஆர்ணவ மக்நாநாம் விஷயாக்ராந்த சேதஸாம் விஷ்ணு போதம் விநாநாந்யத் கிஞ்சித் அஸ்தி பாராயணம் –ஸ்ரீ விஷ்ணு தர்மம்-என்கிற படியே அக்கரையும் இக்கரையும் ஊடுருவ நின்று சம்சார சமுத்ரத்தை கடத்தும்
வைகுந்தன் என்பதோர் தோணியை-நாச்சியார் -5–4– சம்சார நிஸ்தாரமாகப் பற்றி-தத் ஞான சக்தியாதி அனுசந்தானத்தாலும் ஸ்வ பாரதந்த்ர்யாதி அனுசந்தானத்தாலும் நிர் பரர் ஆகையாலே இரண்டு கையும் விடுமா போலே ஸ்வ யத்ன ரூப உபாசனாதியையும் தத் சாத்திய பகவத் கிருபையையும்
அவலம்பிக்கையை விட்டு கேவல பகவத் கிருபையே உத்தாரகம் என்று அத்யவசித்து
கூவிக் கொள்ளும் காலம் இன்னும் குறுகாதோ
-திருவாய் -6–9–9 -என்றும்
ஆக்கை விடும் பொழுது எண்ணே–திருவாய் -1–2–9-என்று சொல்லுகிற படியே
பகவத் பிராப்தி ஆகிய கரையை குறுகைக்கு ஈடான கால சிந்தனை பண்ணா நிற்பார்கள் என்கை-இத்தால் சாஸ்த்ரஜ்ஞர் உடையவும் சாரஜ்ஞர் உடையவும் பிரபத்தி க்ரமம் சொல்லிற்று ஆயிற்று-

ஆறு நீஞ்ச வந்தவன்‌ தெப்பத்தை ஒரு கையிலே இடுக்கியும்‌, தானும்‌ ஓரு கையாலே நீஞ்சுமாப் போலே, பக்தி நிஷ்டனும்‌, ஸ்வ யத்நமும்‌ ஸ்வ யத்ந ஸாத்‌யமான பகவத் க்ருபையையுங் கொண்டு ”புணைவன்‌ பிறவிக் கடல்‌ நீந்துவார்க்கே”‘ (திருவாய்‌, 2 – 8 – 1) என்கிறபடியே ஸம்ஸார ஸாக,ரத்தைக்‌ கடக்கத்‌ தேடும்‌. (ஸாரஜ்ஞர்‌) தாத்பர்ய நிஷ்டரான ப்ரபந்நரானவர்கள்‌. (விட்டத்திலிருப்பாரைப்‌ போலே) ஆற்றின்‌ கரையேறிப்‌ போகிறவன்‌ அதில்‌ யத்நத்தில்‌ அந்வயமற்று விட்டத்திலிருக்குமாப் போலே ; ”விஷ்ணு போதம்‌ விநா நாந்யத் கிஞ்சிதஸ்தி பராயணம்‌?’ ( ) என்கிறபடியே அக்கரையோடு உருவ நின்று நடத்துகிற ‘*வைகுந்தனென்பதோர்‌ தோணி?” (நா. திரு. 5 – 4) என்கிற விஷ்ணு போதத்திலே இருந்து அவனுடைய ஜ்ஞாந ஸக்த்யாதி, கு,ணாநுபவத்தாலும்‌ ஸ்வ பாரதந்தர் யாநுஸந்தாநத்தாலும்‌ நிர்பரராய்‌ மேல்‌ உபாயதயா கர்த்தவ்ய மில்லாமையாலே, இரு கையும்‌ விட்டு – அசேதந க்ரியா கலாபத்தையும்‌ தத் ஸாத்‌யமான பகவத் க்ருபையையும்‌ விட்டு – கேவல பகவத் க்ருபையே தங்களுக்கு உத்தாரகம்‌ என்று அத்‌யவஸித்துக்‌ கரை குறுகும்‌ காலமெண்ணுவர்கள்‌.கூவிக் கொள்ளுங்கால மின்னம்‌ குறுகாதோ” (திருவாய்‌. 6 – 9-9) என்றும்‌, “ஆக்கை விடும் பொழுதெண்ணே’” (திருவாய்‌, 1 – 2 – 9) என்றும்‌ சொல்லுகிறபடியே ப்ராப்தியைச்‌ சிந்தித்திருப்பார்கள்‌,

அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்
புணர்வது இருவரவர் முதலும் தானே
இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே –2-8-1-–சம்சாரம் ஆகிறது ஒரு கடல் -அது நம்மால் கடக்க அரிது -ஒரு சர்வ சக்தியைப் பற்றி கடக்க வேணும் -என்று நினைப்பார்க்கு ப்ரதி பூவாய்த் தலைக்கு கட்டிக் கொடுக்கும் சர்வ பர நிர்வாஹகன் இறே– ப்ரதி பூ விஷ்ணு போதம் என்கையாலே தெப்பம் என்னவுமாம்

என்புருகி இனவேல் நெடும் கண்கள் இமை பொருந்தா பல நாளும்
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன்
அன்புடையாரைப் பிரிவுறு நோயது நீயுமறிதி குயிலே
பொன்புரை மேனிக் கருளக் கொடி யுடைப் புண்ணியனை வரக் கூவாய்–5-4—உகந்து அருளின நிலங்களிலே புக்கு அனுபவிக்கக் கோலி அங்கு அணைத்தல் வார்த்தை சொல்லுதல் செய்யக் காணாமையாலே அப்படிப் பரிமாறின அவதாரங்களிலே போய் அவை தீர்த்தம் பிரசாதித்து போகையாலே-பரத்வத்து அளவும் சென்று அவ்விருப்புத் தானும் பெரும் கடலுக்கு ஒரு மரத் தோணி போலே யாம்படியாக அபி நிவேசம் கரை புரண்டு அதனுடைய அலாபத்தாலே படுகிற அலமாப்பு இருக்கிறபடி –

ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?
தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ.–6-9-9-
–வரையாதே எல்லார்க்கும் கொடுக்கும் நிரதிசய போக்யமான திருவடிகளில் -அழைத்துக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ –விஷயாந்தர தர்சன மாத்திரத்திலே முடியும் படி யானாலும் அணித்தாகாதோ -தாவி வையம் கொண்ட -என்கிறது உபாய அம்சம் –தடந்தா மரைகள் -என்கிறது உபேய அம்சம் –கூவிக் கொள்ளும் காலம்-என்று தாம் சென்று காண்கை அன்றிக்கே தானே அழைத்துக் காட்டுகை முறையாகையாலே கிட்டும் பிரகாரம் சொல்லுகிறது-

ஒடுங்க அவன் கண் ஓடுங்கலும் எல்லாம்
விடும் பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே
–1-2-9—ஈச்வரோஹம் என்று இருக்கை தவிர்ந்து -அவனுக்குப் பிரகாரமாக அவன் அபிமானத்துக்கு உள்ளே அந்தர்பவிக்கவே-எல்லாம் விடும்
ஒடுங்கல் -ஒடுக்கத்தை பண்ணுமவை – ஆத்மாவுக்கு சங்கோசகங்களான அவித்யாதிகள் எல்லாம் போம் –ஒடுங்கல் -வந்தேறி யாய் -ஒடுங்கிக் கிடந்தவை என்னுமாம்-ஸ்வரூபாதி ரேகியாய் ஒடுங்கிக் கிடந்த அவித்யாதிகள் எல்லாம் போம்-எல்லாம் என்கையாலே -பஜன விரோதியோடு -பிராப்தி விரோதியோடு -வாசி அற சர்வமும் நசிக்கும் என்கிறது-பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே-
பின்பு சரீர அவசானமே விளம்பம் காமிநி தன் உடம்பில் அழுக்கைக் கழற்றி போகத்திலே அந்வயிக்க அவசர ப்ரதீஷியையாய் இருக்குமா போலே சரீர அவசானத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கை

இவர்களுக்கு இவ் ஆகாரங்கள் உண்டாகுகைக்கு அடி இன்னது என்கிறது-இவர்களுக்கு அவ்வதி,காரமுண்டாகைக்கு ஹேதுவான ஸ்வரூப ஜ்ஞாந தாரதம்யத்தைச்‌ சொல்லுகிறது

இவை ஸ்வரூபத்தை உணர்ந்து உணர்ந்து உணரவும் உணர்வைப் பெற ஊர மிக உணரவும் உண்டாம்-சூரணை -20-

அதாவது சாஸ்த்ரிகள் ஆனவர்களுக்கு-உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து
உருவியந்த இந் நிலைமை உணர்ந்து உணர்ந்து உணரிலும்
–திருவாய் -1-3-6- என்கிற படியே
ஆத்ம ஸ்வரூபத்தை ஜ்ஞப்த்தி மாத்ரம் அன்றிக்கே-நித்ய ஞான குணகமாய்-அந்த ஞானத்தாலே எங்கும் ஒக்க வியாபித்து-தேஹத்தில் காட்டில் வேறு பட்டு இருக்குமதாய்-அந்த ஜ்ஞாத்ருத்வ பலாயாத கர்த்ருத்வ போக்த்ருத்வ சஹிதமாய் பகவத் சேஷமாய் இருக்கும் என்று ஸ்ரவண மனனங்களாலே சாஷாத் கரிக்கவே ஸுவ யத்னத்தாலே சம்ஸார நிஸ்தரணம் பண்ண தேடுகை யாகிற இது உண்டாம்-சாரஞ்ஸ்தஞரானவர்களுக்கு ஆத்ம ஸ்வரூப வைலஷண்யத்தை தர்சிப்பைக்கு உடலாக
உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பினவும் பழுதே யாம் உணர்வை பெற ஊர்ந்து -திருவாய் -8–8–3-–என்கிற படியே வைஷயிக ஞானமும் பிராணனும் சரீரமும் மற்றும் பரிசேத்யமான பிராகிருதி விகாரங்களும் , பிரக்ருதியும் ஹேயம் என்னும் அறிவை பெரும் படி நிர்ஹேதுகமாக ஈஸ்வரன் நடத்த
மெய்ம்மையை மிக உணர்ந்து-திருமாலை -38 -என்கிறபடியே-ஆத்ம ஸ்வரூபத்தை-தேஹாதி விலக்ஷணமாய் ஞான ஆனந்த ஸ்வரூபமாய் ஞாத்ருவாதி குணகமாய் ததீய சேஷத்வ பர்யந்த தத் சேஷத்வ யுக்தமாய் தத் காஷ்டையான பார தந்த்ர்ய யோக்யதை ஏக வேஷமாய் இருக்கும் என்றே உணரவே ஸ்வ பரத்தை அவன் மேல் புகட்டு ஸ்வ யத்ன ரஹிதையராய் இருக்கிற இது உண்டாம் என்கை–இத்தால் இவர்கள் உடைய ஸ்வரூப ஜ்ஞான ஆகார தார தம்யமே கீழ் சொன்ன ஆகாரங்கள் இவர்களுக்கு உண்டாகுகைக்கு ஹேது என்றது ஆயிற்று-

(உணர்ந்துணர்ந்துணரவும்‌) ‘உணர்ந்துணர்ந்திழிந்தகன்று உயர்ந்து உருவியந்த இந் நிலைமை உணர்ந்துணர்ந்துணரிலும்‌’” (திருவாய்‌. 1 – 3 – 6) என்கிறபடியே ஆத்ம ஸ்வரூபத்தை ஜ்ஞப்தி மாத்ர மன்றிக்கே நித்ய ஜ்ஞாந குணகமாய்‌ தேஹேந்தரியாதி, விலக்ஷணனாகவும்‌, ஜ்ஞாதாவாகவும்‌, கர்த்தாவாகவும்‌ பகவச் சேஷமாகவும்‌ ஸ்ரவண மநநாதிகளாலே ஸாக்ஷாத்கரித்த ஸாஸ்த்ரிகளுக்கு அந்த வ்ருத்தி உண்டாம்‌. (உணர்வைப்‌ பெறவூர மிகவுணர்வுமுண்டாம்‌)‘உணர்வுமுயிருமுடம்பும்‌ மற்றுலப்பிலனவும்‌ பழுதேயாம்‌ உணர்வைப் பெறவூர்ந்து ” (திருவாய்‌. 8. 8.3) என்கிறபடியே தேஹேந்த்‌ரியாதிகளில்‌ வ்யாவ்ருத்தமான ஆத்ம ஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரிக்கும்படி நிர்ஹேதுகமாக ஈஸ்வரன்‌ நடத்த “மெய்ம்மையை மிக வுணர்ந்து’‘ (திருமாலை 38) என்கிறபடியே ததீய ஸேஷத்வ பர்யந்தமாக உணர ப்ரபந்நனுக்கு இந்த ப்ரதிபத்தி உண்டாம் –

உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உருவியந்த இந்நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும்
இறை நிலை உணர்வு வரிது உயிர்காள்
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே –1-3-6–உணர்ந்து உணர்ந்து -ஞாத்ருத்வ ஸ்வபாவனாகையாலே என்றும் ஓக்க உணருகையே ஸ்வபாவமாக உடையனாய்
இழிந்து அகன்று உயர்ந்து -அந்த ஞானம் நிஷ்க்ருஷ்ட வேஷத்தில் அபரிச்சின்னமாகையாலே தத் த்வாரா பத்து திக்கிலும் வியாபித்து-உருவியந்த -உரு வியந்த -ரூப யோக்கியமான அசித்தில் காட்டில் வேறு பட்டு இருந்த -இயத்தால்-வேறுபாட்டால் விலக்ஷணமாய் இருத்தல்-இந் நிலைமை-இந்த ஆத்மாவின் நிலைமையை -இந்நிலைமை என்று யுக்த பிரகார வைலக்ஷண்யம் ஆத்மாவுக்கு ஒழிய இல்லை என்கிற ஸம்ப்ரதிபத்தியைச் சொல்லுகிறது –-உணர்ந்து உணர்ந்து உணரிலும் – ஸ்ரவணத்தாலே உணர்ந்து -அதுக்கு மேலே மனனத்தாலே உணர்ந்து -யோகத்தால் சாஷாத் கரித்து உணர்ந்தாலும்-இறை நிலை உணர்வு வரிது -சர்வேஸ்வரன் ப்ரஹ்ம ருத்ரர்கள் நடுவே தன்னை மறைத்து நிற்கிற நிலை விவேகித்து அறிய அரிது–உயிர்காள்-சேதனர் ஆனபடியால் விவேகித்து அறியும் ஸ்வ பாவரானவர்களே-அரி அயன் அரன் என்னும் இவரை-அரி அயன் அரன் என்று பிரசித்த ரானவர்களை-உணர்ந்து உணர்ந்து –அவர்கள் குண விபூதியாதிகளை இட்டுப் பலகாலும் ஆராய்ந்து
உரைத்து உரைத்து –தத் ப்ரதிபாதகமான ப்ரமாணங்களையும் பலகாலும் வ்யவஹரித்துப் பார்த்துப் பார்த்து-மனப்பட்ட தொன்றே-நெஞ்சிலே ஈஸ்வரனாகப் பட்ட ஒரு வஸ்துவை – வ்யாஹரன் மாம் அநு ஸ்மரந்–என்கிறபடியே-உணர்ந்து உணர்ந்து -தத் குண விக்ரஹாதிகளைப் பலகாலும் அநு சந்தித்து
உரைத்து உரைத்து இறைஞ்சுமின் –தத் வாசகமான மந்த்ர நாமாதிகளைப் பலகாலும் வ்யவஹரித்து உபாசியுங்கோள் –

உணர்விலும் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறல் பொருட்டு என்
உணர்வினுள்ளே யிருத்தினேன் அதுவுமவன தின்னருளே
உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பினவும் பழுதேயாம்
உணர்வைப் பெற ஊர்ந்திறவேறி யானும் தானாய் ஒழிந்தானே–8
-8-3—உணர்வும்-வைஷயிக ஞானமும்
உயிரும்-பஞ்ச வ்ருத்தி பிராணனும் உடம்பும்-சரீரமும்-மற்று உலப்பினவும் -மற்றும் அபரிச்சேத்யமான மஹதாதி ப்ரக்ருதி விகாரங்களும் -ப்ரக்ருதியும்-பழுதேயாம்-உணர்வைப் பெற ஊர்ந்து–இவை ஹேயம் என்னும் அறிவை நான் பெறும்படி நடத்தி -தேரூர்ந்து என்னுமா போலே -இவை அபுருஷார்த்தம் என்னும் உணர்வு யுண்டு -மயர்வற்ற மதி -அத்தை நான் உடையேனாம் படி பண்ணி-இறவேறி-ப்ரக்ருதி ப்ராக்ருதங்கள் அபுருஷார்த்தம் என்னும் அளவே அன்றிக்கே முடிய போய் -ஞானானந்த ஸ்வரூபனாய் -நித்யனாய் -ஸ்வதஸ் ஸூ கியாய் இருக்கிற அளவும் செல்ல அறிவித்து-யானும் தானாய் ஒழிந்தானே––அவ்வளவிலும் பர்யவசியாதே –என்னைச் சொல்லும் சொல்லாலே தன்னைச் சொல்லலாம் படி தனக்கு பிரகார தயா சேஷம் என்னும் இடத்தைக் காட்டித் தந்தான் –அஹம் புத்தியும் அஹம் சப்தமும் தன்னளவும் செல்லும் படி பிரகார தைக வேஷமாய் இருக்கிறபடியைக் காட்டித் தந்தான் –தச்சப்தம் குண விசிஷ்ட வாசியானாவோ பாதி -த்வம் -சப்தமும் -அசித் விசிஷ்ட ஜீவ அந்தர்யாமி யாம் அளவும் காட்டக் கடவது இறே –

மேம் பொருள் போக விட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து
ஆம் பரிசறிந்து கொண்டு ஐம் புலன் அகத்தடக்கிக்
காம்பறத் தலை சிரைத்து உன் கடைத் தலை இருந்து வாழும்
சோம்பரை உகத்தி போலும் சூழ் புனல் அரங்கத்தானே–38–மெய்ம்மையை மிக உணர்ந்து –மெய் -என்கிறது ஆத்மாவை –மெய் -எனபது ஆத்மாவைக் காட்டுமோ -என்னில் —சத்யஞ்சா ந்ர்தஞ்ச சத்ய மவபவத் -என்கிற ஸ்ருதி சாயையால் அருளிச் செய்கிறார் –-சத்ய சப்தம் அசத்திய வ்யாவர்த்தியை சொல்லுகிறது அன்று ஆத்ம ஸ்வரூபத்தின் நித்யதையைச் சொல்லுகிறது –மெய்ம்மை -என்று முழுச் சொல்லாய் – பிரத்யக் விஷயத்தைச் சொல்லுகிறது – கைம்மை பொய்ம்மை -என்னுமா போலே-ஆக மெய்ம்மை -என்று – மெய்யான தன்மை -என்றபடி –மிக உணர்ந்து –தேகமே ஆத்மா என்று இருக்கும் லோகாயதிகன் அளவன்றிக்கே –தேகாதிரிக்தமாய்-ஸூயமாய் இருக்கும் ஆத்மா என்னும் மீமாம்சகன் அளவன்றிக்கே-ஜ்ஞானம் ஆகந்துகம் -என்னும் வைசேஷிகன் அளவன்றிக்கே –1-ஸுவயம் பிரகாசனாய்-2-நித்யனாய்-3-ஜ்ஞான குணகனாய்-4-அணு வாய்-5-ஈஸ்வரனுக்கு அனன்யார்ஹ சேஷமாய்-6-அது தான் ததீய சேஷத்வ பர்யந்தமாக உணருகை –
அதாவது ஆத்மாவை உள்ளபடி உணருகை –ஆம் பரிசறிந்து கொண்டு--பிரக்ருத ப்ராக்ருதங்கள் த்யாஜ்யம் -என்று அறிந்து மேலும் ஆத்மாவை உள்ளபடி உணர்ந்தால் – பின்னையும்-ஆம் பரிசு ஆவது –
கைங்கர்யமே யாய்த்து –-ஆம் பரிசு வர்த்திக்கும் படியை அறிந்து – ஆத்மா அபிமான ரூபமாக வாய்த்து வ்ருத்தி ஹேதுக்கள் தான் இருப்பது –தாசோஹம் -என்ற போது -கைங்கர்யமே வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –பிரகிருதி பிராக்ருதங்களில் சங்கோசம் போய் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்தால் சஹஜ கைங்கர்யமே இறே வ்ருத்தி ஹேதுவாவது –பிரகிருதி பிராக்ருதங்கள் த்யாஜ்யம் என்கிற ஜ்ஞானமும் –
ஆத்மா பகவத் பரதந்த்ரன் என்கிற ஜ்ஞானமும் பிராப்யம் கைங்கர்யம் என்கிற ஜ்ஞானமும் இறே சேதனனுக்கு வேண்டுவது –விடுவிக்கையும் பற்றுவிக்கையும் உபாய பூதனான ஈஸ்வரன் கார்யம் இறே –

ஆக-முனிவரை இடுக்கியும் -சூரணை -17 -என்று தொடங்கி இவ் வளைவாக சாஸ்திர தாத் பர்யங்களின்
விஷய பேதமும் அதிகாரி பேதமும் அவ் அதிகாரிகளின் பிரதி பத்தி பேதமும் அதுக்கு அடியான ஜ்ஞான ஆகார தார தம்யமும் சொல்லப் பட்டது-

ஸ்வரூப ஞானம் என்றும் ஸ்வரூப யாதாத்மா ஞானம் என்றும் ஆத்ம ஸ்வரூப விஷய ஞானத்திலே தார தம்யம் உண்டு இறே -அதில் பதிம் விச்வசஸ்ய-ஸ்ரீ புருஷ ஸூக்தம்- என்றும்-யஸ்யாஸ்மி என்றும்
நஹி விஜ்ஞாதர் விஜ்ஞாதேர் விபரிலோபோ வித்யதே ஞாநாத் யேவாயம்புருஷ -ப்ருஹதாரண்யம்-6-3-10–என்றும்-ஆத்மாவுக்கு பகவத் சேஷத்வத்தையும் ஜ்ஞாத்ருத்வத்தையும் சொல்லி-அந்த ஜ்ஞாத்ருத்வ கார்யமான போக்த்ருத்வ பிரயோஜனமாக-சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மண விபச்சிதா -தைத்ரியம் -என்று பகவத் அனுபவத்தையும் சொல்லுகிற சாஸ்திர முகத்தாலே ஸ்வரூபத்தை அறியும் அளவில் பகவத் சேஷத்வமும் பகவத் அனுபவ போக்த்ருத்வமும் இறே பிரகாசிப்பது-அந்த சாஸ்திர தாத் பர்யமான திரு மந்த்ரத்தில் உள் புக்கால் இறே பாரதந்திர போக்யதா ரூபமான ஸ்வரூப யாதாத்ம்யம் பிரகாசிப்பது-இதுவே ஸ்வரூப யாதாத்ம்யம் என்னும் இடத்தை அறிவிக்கிறார் மேல்-
(சேஷத்வம் -அகாரம்-லுப்த சதுர்த்தி -பரமாத்மாவுக்கே ஜீவாத்மா சேஷன் -சேஷத்வம் ஸ்வரூபம்-தாதரத்தே சதுர்த்தி- லுப்த சதுர்த்தி -போக்த்ருத்வம் மகாரம்-ஞாத்ருத்வம் -மன ஞானே–மன அவபோதனே-பாரதந்தர்யம் நம -போக்யதை-நாராயணாய நம -பிரார்த்தனா சதுர்த்தி இங்கு -அஹம் அன்னம் –அவன் -அந்நாதா –தட்டு மாறும் சீலம் காட்கரையிலே கொழிக்கும் சந்தன குசுமாதிகள் போலே நாராயணாய நம -என்றபடி )-இந்த ஸ்வரூப ஜ்ஞாநமும்‌ ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநமுமாகிற இவை யிரண்டும்‌ தன்னிலொக்குமோ என்னில்‌ ; ஒவ்வாது என்கிறார்‌

சேஷத்வ போக்த்ருத்வங்கள்-போல் அன்றே-பாரதந்திர போக்யதைகள்--சூரணை -21 –

அதாவது –சேஷத்வம் ஆவது இஷ்ட விநியோக அர்ஹதா மாத்ரம்-பாரதந்த்ர்யம் ஆவது சேஷிக்கு இஷ்டமான படியே விநியோகப் படுகை-கட்டிப் பொன் போலே சேஷத்வம்-பணிப் பொன் போலே பாரதந்த்ர்யம்-என்னக் கடவதிறே ஆகையால் சேஷ வஸ்துவை சேஷிக்கு இஷ்டமான படியே
விநியோகப் படுத்தும் அது பாரதந்த்ர்யம்
போக்த்ருத்வம் ஆவது ஜ்ஞாத்ருத்வ பலத்தாலே போக தசையிலே விளைகிற ரசங்களுக்கு தான் போக்தாவாகை-போக்யதை யாவது பதார்த்த கதமான ரச வர்ணாதிகள் போக்தாவுக்கு போக்யமாய் இருக்கும் போலே ஆத்ம கதமான ஜ்ஞானாதிகளும் ஈஸ்வரனுக்கே போக்யமாய் இருக்கை-ஆகையால் இஷ்ட விநியோக அர்ஹ மாத்ரமாய் சேஷத்வம் போல் அன்றே-இவ் வஸ்துவை சேஷிக்கு இஷ்டமான படி விநியோகப் படுத்தி கொடுக்கிற
பாரதந்த்ர்யம் போகத்தில் ஸ்வார்ததா புத்தி ஹேதுவான போக்த்ருத்வம் போல் அன்றே அந்த
போக்த்ருத்வத்தை சேஷி உடைய பிரிய உபயோகி ஆக்கிக் கொடுக்கிற போக்யதை
என்ற படி-

ஸேஷத்வமாவது – இஷ்ட விநியோக அர்ஹதா மாத்ரம்‌. பாரதந்தர்யமாவது – அந்த ஸேஷ வஸ்துவை ஸேஷிக்கு இஷ்ட மானபடி விநியோகப் படுத்திக்‌ கொடுக்குமது. போக்த்ருத்வமாவது – ரஸாரஸங்‌களுக்குத்‌ தானே போக்தாவாகை. போக்‌யதையாவது – பதார்த்த, கதமான ரஸ வர்ணாதிகள்‌ போக்தாவுக்கே போக்‌யமா யிருக்குமாப் போலே ஆத்ம கதமான ஜ்ஞாநாதிகளும்‌ ஈஸ்வரனுக்கே போக்‌யமாயிருக்கை, ஆகையால்‌ இஷ்ட விநியோக அர்ஹதா மாத்ரமான சேஷத்வம் போலே யன்றே, அத்தை இஷ்டமானபடி விநியோகப் படுத்திக்‌ கொடுக்கிற பாரதந்த்ர்யம்‌. ஸ்வ போகத்துக்கும்‌ ஹேதுவாயிருக்கிற போக்த்ருத்வம்‌ போலே யன்றே அந்த போக்த்ருத்வத்தை ஸேஷியினுடைய ப்ரியோப யோகி,யாக்கிக்‌ கொடுக்கிற போக்‌யதை.

இவ் அர்த்தத்தை ஸ்வரூப யாதாத்ம்ய பிரகாசமான திரு மந்த்ரத்திலே தர்சிப்பிக்கிறார்-

ஜ்ஞான சதுர்த்திகளின் மேலே இறே ஆநந்த ஷஷ்டிகளுக்கு உதயம்--சூரணை -22 –
(ஞான -மகாரம் -லுப்த சதுர்த்தி முன்னால்–போக்யதை -ஆனந்தம் -நாராயணாய அர்த்தம் -ஷ்ஷடி -நமஸ் -பாரதந்தர்யம் -சதுர்த்தி ஞானங்களுக்கு மேலே இறே ஷ்ஷடி ஆனந்தங்களுக்கு உதயம் என்று சொல்லாமல் —உத்கீத பிரணவத்தை பிரதமத்தில் மாறாடி-என்பதால் – அச்சு எழுத்து குறைவாக -அல்ப அக்ஷரம் பூர்வம் -என்பதாலும் -)

அதாவது ஆத்ம வாசியான ம காரத்திலே –மன – ஜ்ஞானே -என்கிற தாதுவிலே உதிதமாய்
போக்த்ருத்வ பிரகாசமாய் இருக்கிற ஜ்ஞானத்தின் மேலே இறே-அந்த மகார விவரண ரூபமாய் போக்யதா பிரகாசகமான சதுர்த்தியில்-ஆனந்தத்துக்கு உதயம்-பிரதம அஷரத்தில் சேஷத்வ வாசியான லுப்த சதுர்த்தியின் மேலே இறே பாரதந்த்ர்ய பிரகாசமான நமஸுக்கு உதயம் என்கை–இத்தால் ஆத்ம ஸ்வரூபத்தின் உடைய சேஷத்வ போக்த்ருத்வங்கள் உதித்து இருக்க செய்தே அதன் மேலே ஸ்வரூப யாதாத்ம்ய வேஷமாக உதித்தவை ஆகையாலே சேஷத்வ போக்த்ருத்வங்களில் -பாரதந்த்ர்ய போக்யதைகளுக்கு நெடு வாசி உண்டு என்றது ஆயிற்று–இந்த யோஜனைக்கு அல்பம் அனுபபத்தி உண்டு-ஷஷ்டி என்கிற இது -முக்ய விருத்தி யாலே ஆதல்-கௌன விருத்தியாலே ஆதல் நமஸை காட்டாமையாலே-ஷஷ்ட்யந்த பதம் என்கிறதை ஷஷ்டி என்று சொல்லிற்று ஆகாதோ என்னில்
அது சேராது –நமஸு இரண்டு பதம் ஆகையாலும் அதில் உத்தர பதமே ஷஷ்ட்யந்தம் ஆகையாலும் ..
ஆனால் செய்ய அடுப்பது என் என்னில் இன்னும் ஒரு யோஜனை சொல்லப் படுகிறது-
(ஞாத்ருத்வமும் போக்த்ருத்வமும் -தங்கள் விரோதிகளை -ஸ்வாதந்த்ரத்தையும் ஸ்வார்த்தத்தயா போக்த்ருத்வத்தையும் – உதிப்பத்தை சகிக்கும் -ஆனால் பின்பு தள்ளும் -ந -நிஷேதையாலே-
ஆகவே நமஸ் நாராயணாய நம என்று கூட்டி பொருள் என்றவாறே – சேஷத்வத்துக்கு மேலே ஸ்வாதந்தர்யம் உதிப்பதால் அது தாழ்வு –பாரதந்தர்யம் உயர்ந்தது என்றவாறு இத்தை விசாரிக்கவே ஸ்ரீ மா முனிகள் ஸ்ரீ மேல்கோட்டைக்கு எழுந்து அருளி ஸ்ரீ ஆய் ஸ்வாமிகளைக் கண்டு இருவரும் ஸ்ரீ திருக்குருகூருக்கு மீண்டார்கள் )அதாவது த்ருதிய அஷரத்திலே –மன -ஜ்ஞானே -என்கிற தாதுவிலே உதிதமாய் போக்த்ருத்வ பிரகாசமான ஜ்ஞானத்தின் மேலே இறே மகார விவரணமான சதுர்த்தியில்
சொல்லப் படுகிற போகத்தில் காகாஷி ந்யாயத்தாலே நமஸ் சப்தத்தாலே கழிக்க படுகிற ஸ்வ பிரயோஜனத்வ பிரயுக்தமான ஆனந்தத்துக்கு உதயம் பிரதம அஷரத்திலே சேஷத்வ வாசியான சதுர்த்தியின் மேலே இறே--நஜ்ஞாலே நிஷேதிக்க படுகிற ஸ்வ ரஷணே ஸ்வ பிரவ்ருத்தி ஹேது பூத
ஸ்வதந்த்ர்யா பிரகாசி யான ஷஷ்டிக்கு உதயம்
என்கை
இத்தால் சேஷத்வ பிரகாசமான சதுர்த்தியின் மேலே ஸ்வ ரக்ஷண ஹேது பூத ஸ்வதந்த்ர்ய வாசியான ஷஷ்டி உதிக்கையாலும் போக்த்ருத்வ பிரகாசமான ஜ்ஞானத்தின் மேலே போக ஸ்வார்ததா புத்தி மூலமான ஆனந்தம் உதிக்கை யாலும் சேஷத்வ போக்த்ருத்வங்கள் ஸ்வரூப விரோதி உதய சஹங்களாய் இருக்கும்-நமஸிலே பாரதந்த்ர்யம் உதித்த பின்பு ஸ்வ ரஷணே ஸ்வ யத்னம் நிவ்ருத்தம் ஆகையாலும் நமஸ் சப்த அனுக்ருஹீதையான-(நாராயணாயா நம )சரம சதுர்த்தியிலே ஈஸ்வரனுக்கு போக்யமாய் இருக்கையே ஆத்மாவுக்கு வேஷம் என்று தோற்றின பின்பு ஸ்வ பிரயோஜனம் நிவ்ருத்தம் ஆகையாலும் பாரதந்த்ர்ய போக்யதைகள் ஸ்வரூப விரோதி உதய சஹங்கள் அன்று .-ஆகையால் ஸ்வரூப விரோதி உதய சஹங்களான சேஷத்வ போக்த்ருத்வங்கள் போல அன்றே அத்தை சகியாத படி இருக்கும் பாரதந்த்ர்ய போக்யதைகள் என்றது ஆயிற்று-

ஆகையிறே போக்த்ருத்வ ப்ரகாஸகமாய்‌ “மந – ஜ்ஞாநே‘ என்கிற தாதுவிலே உதிதமான ஜ்ஞாநத்துக்கு மேலே அந்த மகார விவரண ரூபமாய்‌ போக்‌யதா ப்ரகாஸகமான சரம சதுர்த்தி யிலே ஆநந்தம்‌ உதித்ததும்‌, ஸேஷத்வ ப்ரகாஸகமான சதுர்த்தியின் மேலே பாரதந்த்ர்ய ப்ரகாஸகமான ஷஷ்டி, உதித்ததும்-

இப்படி ஸ்வரூப யாதாம்ய ஞான தசையில் தோற்றுகிற பாரதந்த்ர்யாதிகள் ஸ்வரூப ஞான தசையில் தோற்றுகிற சேஷத்வாதிகளை திரஸ் க்ருதமாக்கும் படி சொல்லுகிறது–இனிமேல்‌ இந்த ஸ்வரூப ஜ்ஞாநத்தினுடையவும்‌ ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநத்தினுடையவும்‌ அத்யந்த வைஷம்யம்‌ சொல்லுகிறது

முளைத்து எழுந்த சூர்ய துல்ய யாதாத்ம்ய சரமம் விதியில் காணும் பிரதம மத்யம தசைகளை
பகல் விளக்கும் மின்மினியும் ஆக்கும்-
–சூரணை -23 –- (பகல் விளக்கு வீண் –மின்மினி அல்பம் என்றவாறு )

அதாவது–முளைத்து எழுந்த திங்கள் தானாய்-திரு நெடும் தாண்டகம் -1—என்றும்-யதா சூர்யஸ் ததா ஞானம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -6–5–62- என்றும் சொல்லப் பட்ட ஸ்வரூப சாஷத்கார ஞானத்தின் உடைய யாதம்ய அவஸ்தையான சரமம் என்று ஸ்வரூப யாதாம்ய வேஷமாக பின்பு சொன்ன பாரதந்த்ர்ய போக்யதைகளைச் சொல்லுகிறது-ஸ்வரூப சாஷாத் கார ஞானத்திற்கு சந்த்ரனை திருஷ்டாந்தமாக ஆழ்வார் அருளிச் செய்தது தமக்கு பகவத் பிரசாத லப்தம் ஆகையாலே அயத்ன சித்தம் ஆகையாலும் அந்த ஞானம் தான் ஆஹ்லாத கரமாய் இருக்கையிலுமாம் இறே-இங்கும் உணர்வை பெற மிக ஊர உணர்வும் உண்டாம் -சூரணை -20 என்று இந்த ஸ்வரூப யாதாத்ம்ய ஞானம் பகவத் பிரசாத லப்தமாக இறே சொல்லிற்று-யதா சூர்யா -என்கிற இதில் ஸ்வ யத்னத்தாலே வந்த க்லிஷ்டதை தோற்றிற்று ஆகிலும இவ் இடத்தில் அது அவிவஷிதம் ஞானத்தின் உடைய பிரகா அதிசயம் சொல்லுகிற மாத்திரமே அபேஷிதம்–ஏவம்பூதமாய் இருந்துள்ள சாஷாத் காரத்தின் உடைய ஞானத்தின் உடைய
யாதாத்ம அவஸ்தையிலே பிரகாசிக்கிற பாரதந்த்ர்ய போக்யதைகள் ஆகிற சரமங்கள் –
ஸ்வரூபத்தை உணர்ந்து உணர்ந்து உணரவும்
-சூரணை -20 -கீழ் சொன்ன ந்யாயத்தாலே – விதியிலே காண்பார்– திருக் குறும் தாண்டகம் -18–என்கிற படியே சாஸ்திர விதி பிரகாரேன ஸ்ரவண மனநாதிகளாலே தர்சிக்க படுகிற பிரதம தசையான சேஷத்வத்தையும் மத்யம தசையான போக்த்க்ருத்வத்தையும் – பகல் விளக்கும் மின் மினியும் போலே அப்ரயோஜனமாகவும் அல்ப பிரகாசமாகவும் பண்ணும் என்கை –பிரண வோதிதமான ஸ்வரூபத்தின் உடைய யாதாத்ம்ய யத்வேன மத்யம சரம பதங்களிலே பின்பு உதிக்கும் அவை ஆகையாலே ,பாரதந்த்ர்ய போக்யதைகளை சரமங்கள் என்கிறது பிரதம அஷரத்தில் சதுர்த்தியிலே பிரதம ஏவ சேஷத்வம் உதிக்கை யாலும்
அநந்தரம் தத் ஆஸ்ரய வாசியான சரம அஷரத்தில் உத்தர பத த்வயத்தில் பாரதந்த்ர்ய போக்யதை உதயத்துக்கு முன்னே நடுவே ஜ்ஞாத்ருத்வ பலாயாத போக்த்ருத்வம் உதிக்கை யாலும் சேஷத்வ போக்த்ருதவங்களை பிரதம மத்திய தசைகள் என்கிறது--ஆக இவ் வாக்யத்தால் ஸ்வ யதன ஸ்வ பிரயோஜன கந்த அசகங்களாய் ஸ்வ சேஷி போகாத்யந்த அனுகூலங்களாய்க் கொண்டு ஸ்வரூபத்தை நிறம் பெறுத்தும் இப் பாரதந்த்ர்ய போக்யதைகள் இவ் ஆகாரங்கள் இல்லாத சேஷத்வ போக்த்ருதவங்களை திரஸ் க்ருதமாக்கி தானே மேலாய் இருக்கும் என்ற தாயிற்று-

முளைத்தெழுந்த திங்கள் தானாய்‌’” (திருநெடு. 1) என்றும்‌, *‘யதா ஸுூர்யஸ் ததா ஜ்ஞாநம்‌”‘ (வி. பு. 6 – 5 – 62) என்றும்‌, ஆஹ்லாத கரனாயும்‌, அதி ப்ரகாஸ கனாயுமிருக்கிற சந்த்‌ராதித்யர்களை யாதாத்ம்ய சரமமான பாரதந்த்ர்ய போக்‌யதா ஜ்ஞாதங்களுக்கு த்ருஷ்டாந்தமாக்குகையாலே பகவத் ப்ரஸாத லப்‌தமாகையாலே அயத்ந ஸித்‌த,மாய்‌, அதி ப்ரகாஸகமுமான அத்யந்த பாரதந்த்ர்ய போக்‌யதா ஜ்ஞாநங்களில்‌ பாரதந்தர்யம்‌ ஸேஷத்வ லக்ஷணமான இஷ்ட விநியோக அர்ஹதையை ஸ்வயமேவ நிரவஹித்துத்‌ தலைக் கட்டுகையாலும்‌, போக்‌யதையானது அசித்‌ வ்யாவ்ருத்தி லக்ஷ்ண மாத்ரமான போக்தருத்வத்தை சேஷியினுடைய ப்ரியோபயோகி,யாக்கிக்‌ கொடுக்கையாலும்‌ விதியில்‌ காணும்‌ ப்ரதம மத்‌யம தஸைகளை ”விளக்கினை விதியில்‌ காண்பார்‌” (திருக்குறு. 18) என்கிறபடியே ஸாஸ்த்ர முக,த்தாலே வந்த ஸ்ரவண மநதநாதிகளால்‌ காணப்படுகிற ப்ரதம தஸையான ஸேஷத்வத்தையும்‌, மத்யம தஸையான போக்த்ருத்வத்தையும்‌, அந்த பாரதந்தர்ய போக்யதைகள்‌ பகல் விளக்கையும்‌ மின்மினியையும் போலே்‌ அப்ரயோஜகமாகவும்‌ அல்ப ப்ரகாஸகமாகவும்‌ பண்ணும்‌ என்கிறார் –

மின்னுருவாய் முன்னுருவில் வேத நான்காய்
விளக்கொளியாய் முளைத்து எழுந்த திங்கள் தானாய்
பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப்பில்லாப்
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும்
பொன்னுருவாய் மணிவுருவில் பூதமைந்தாய்
புனலுருவாய் அனல் வுருவில் திகழும் சோதி
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தாய்
தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே—-1—விளக்கொளியாய் முளைத்து எழுந்த திங்கள் தானாய் –என்று –மந்தவ்ய நிதித்த்யாசிதவ்ய த்ரஷடவ்ய -என்கிற மனந நிதித்யாசன தர்சனங்களைச் சொல்லுகிறது –ஸ்ரோதவ்ய -மந்தவ்ய – நிதித்யாஸி தவ்ய -த்ரஷ்டவ்ய-ப்ருஹதாரண்யம்–விளக்கொளியாய் -முளைத்து எழுந்த திங்கள் தானாய் )முளைத்து – பர்வதாக்ரத்திலே தோன்றின சந்தரனைப் போலே தீப த்ர்ஷ்டாந்தத்தால் சொன்ன ஸ்ரவண ஜ்ஞானத்தில் காட்டிலும் பிரகாச ரூபமான மனந தசையைச் சொன்னபடி –எழுந்து – பர்வதாக்ரத்தை விட்டு ஆகாசத்தில் எழுந்த சந்தரனைப் போலே மனந அவஸ்தையில் காட்டிலும் அதி பிரகாசமான அநவரத பாவனையைச் சொல்லிற்றாயிற்று-திங்கள் தானாய் – சாஷாத் காரத்தைச் சொல்லுகிறது –
எங்கனே என்னில் – தானான திங்கள் -என்று – ஆகந்துகமான களங்கம்- இன்றியே இருக்கிற சந்த்ரனைச் சொல்லுகையாலே ஆகந்துகமான களங்கம் -பூமியினுடைய சாயை பிரதிபலிக்கையாலே –
சந்த்ர பிரபா ஸ்தானத்திலே ஆத்மாவுக்கு பிரபா ரூபமான தர்ம பூத ஜ்ஞானம் – பிரகிருதி சம்சர்க்கம் நேராக அற்று நிஷ்க்ர்ஷ்டமான ஆத்ம வஸ்துவைச் சொன்னபடி –நிஷ்க்ர்ஷ்ட ஸ்வரூபத்தைக் கண்டால் இறே- சாஷாத்காரம் சித்தித்ததாவது – சாஷாத்கார விசிசிஷ்ட ஆத்மா -சாஷாத்காரம் தந்தவன் -என்று -பரமாத்மா சாஷாத்காரம் – சந்திர த்ர்ஷ்டாந்தத்தாலே – சதி ஆஹ்லாதே -என்கிறபடியே ஆஹ்லாத ரூபம் தோற்றுகைக்காகவும் பகவத் பிரசாத லப்தம் ஆகையாலே அனாயாச சித்தியால் வந்த அம்லானதை தோற்றுகைக்காவும்-சந்திரனை த்ருஷ்டாந்திக்கிறார் –யதா ஸூர்யஸ் ததா ஞானம் -என்று
ஸூர்யனை த்ருஷ்டாந்தித்தது சந்திரனுக்கு ஸ்வ யத்னத்தால் வந்த க்லிஷ்டதை தோற்றுக்கைக்காக 

இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற் பாரே–18–தைல தாரை போலே அவிச்சிந்ந ஸ்ம்ருதி ஸந்தான ரூபமான பக்தியை பகவத் விஷயமாகப் பண்ணி-சுடர் விட்டு தோன்றலும் – இப்படி சுடர் விட்டு தோன்றும் ஜ்ஞானத்தாலே –வேதங்களாலே ஜோதி ரூபனாக பிரதிபாதிக்கப் பட்ட விளக்கை-சாஸ்த்ரங்களில் விதித்தபடியே உபாசித்து அவனைக் காண்பார் –என்றும் உளனாய் இருக்கிற சர்வேஸ்வரனை காண வல்லரே -காண -மாட்டார் -என்றபடி –அதவா – இப்படி யோக சாஸ்த்ரத்தில் சொல்லுகிறபடியே உபாசித்துக் காண்பாருக்கு காணலாம் -என்றுமாம் –அங்க பிரபத்தி இல்லாமல் காண மாட்டார் என்றபடி

இப்படி இருந்துள்ள ஸ்வரூப ஞானத்தையும் ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞானத்தை உடையவராய் சாஸ்த்ரிகள் -சூரணை -19 –இத்யாதி வாக்யத்தில் பிரவ்ருத்தி பரராயும் நிவ்ருத்தி பரராயும் சொல்லப் பட்ட அதிகாரிகளுக்கு பிரவர்த்த நிவர்தககங்கள் இன்னது என்கிறது மேல்-இந்நாலிலும்‌ வைத்துக் கொண்டு உபாஸகனுக்கு போக்த்ருத்வம்‌ உபாய ருப ப்ரவ்ருத்தி ஹேதுவாயிருக்கும்‌ ; ப்ரபந்தனுக்கு போக்‌யதை நிவருத்தி ஹேதுவாயிருக்கும்‌ என்கிறார்‌ மேல்‌

நாலில் ஓன்று பிரவர்தகம் ஓன்று நிவர்தகம்-சூரணை -24 –

அதாவது சேஷத்வ போக்த்க்ருத்வங்களும் பாரதந்திர போக்யதைகளும் ஆகிற நாலிலும் வைத்து கொண்டு சேஷத்வ போக்த்ருத்வங்களே ஆத்மாவுக்கு ஸ்வரூபம் என்று தர்சித்த சாஸ்த்ரஜ்ஞர்களை-
போக்த்ருத்வம் ஆனது போக்தாவனவன் போக்ய சித்திக்கு யத்னம் பண்ண வேண்டாவோ என்னும் நினைவாலே போக்ய பூத பகவத் விஷய லாப அர்த்தமான உபாய பிரவர்தியிலே மூள்விக்கும்--பாரதந்த்ர்ய போக்தைகளையே ஸ்வரூப யாதாம்ய வேஷம் என்று தர்சித்த சாரஜ்ஞரை
போக்யதை ஆனது -போக்தாவான ஈஸ்வரன் அன்றோ -ஸ்வ போக்யமான இவ் வஸ்துவை பெருகைக்கு யத்னம் பண்ணுவான் –தத் போக்ய பூதமான இவ் வஸ்துவுக்கு தல் லாபத்துக்கு யத்தனிக்க பிராப்தி இல்லை என்னும் நினைவாலே உபாய பிரவர்த்தியில் நின்று மீள்விக்கும் என்கை-

உபாயத்வ அனுசந்தானம் நிவர்த்தகம் – உபேயத்வ அனுசந்தானம் பிரவர்த்தகம் –ஸ்ரீ வசன பூஷணம் –சூர்ணிகை -87—உபாயம் -நினைக்க யத்னம் நீங்கும் –செய்யும் செயல்களில் உபாய பாவனை இல்லாமல் என்றும் -ஸாத்ய உபாயம் எண்ணியும் –உபேயம் புருஷார்த்தம் என்ற நினைவால் கைங்கர்யம் -அனைத்தையும் செய்ய வைக்கும் -ஸூ சரீர தியாக -ஸூ யத்னம் தானே –பாரதந்தர்ய தூஷணம் ஆகாதோ என்ன -உபாய அதிகாரிக்குத் தான் தூஷணம் -உபேய அதிகாரிக்கு இல்லை-பற்றுவது –கத்யார்த்தா புத்யர்த்தா மானஸ கார்யம் -பிரார்த்தனா மதி சரணாகதி – உபேய அதிகாரி வழு விலா அடிமை செய்ய வேண்டுமே -சென்றால் குடையாம் இத்யாதி-தோழி -தாயார் மகள் -சம்பந்தம் -தாயார் -உபேயத்தில் துணிவு தலை மகள் பாசுரம் –தூது விட்டது உபாயமாக என்று அஞ்சுவது தாயார் –ப்ராப்ய தவரையால் பண்ணலாமே –மோக்ஷ உபாயம் தப்பு கால விளம்பம் கூடாது என்பதற்காக பண்ணலாமே உபாயத்வ அநு சந்தானம் நிவர்த்தகம் -என்றது – வைதமாய் வரும் தசையில் -தேக த்யாக ரூப பிரவ்ருத்தியில் உபாயத்வ அநு சந்தானம் நடக்கையாலே -அவ் அனுசந்தானம் இவனை சாதனதயா சம் பிரதிபன்னமான இத் தேக த்யாக ரூப பிரவிருத்தியில் நின்று மீளுவிக்கும் -என்றபடி –
உபேயத்வ அநு சந்தானம் பிரவர்தகம் -என்றதுராக பிராப்தமாய் வரும் தசையில் -இவ் விஷயத்துக்கு ஹானி வரக் கண்டு இருப்பதில் -முடிகையே நல்லது என்று –தேகத் த்யாகம் தன்னை புருஷார்த்தமாக அநு சந்திக்கையாலே -அவ் அனுசந்தானம் இவனை அதிலே மூளுவிக்கும் என்றபடி —
அன்றிக்கே – வைதமாய் வரும் போது -பகவத் விஷயத்தில் உபாயத்வ அநு சந்தானம் இதுக்கு(தேகத் த்யாகத்துக்கு ) நிவர்தகமாம் – ராக பிராப்தமாய் வரும் போது-அவ் விஷயத்தில் உபேயயத்வ அனுசந்தானம் இதுக்கு பிரவர்தகமாம் என்னவுமாம் –

ஆனால் சேஷத்வ போக்த்க்ருத்வங்கள் இவர்களுக்கும் உண்டே-அவை செய்வது என்ன என்ன சொல்லுகிறது மேல்-ஆனால்‌ இந்த ஸேஷத்வ போக்த்ருத்வங்க ளிரண்டும்‌ இவனுக்குச்‌ செய்யும்படி என்‌ என்னில்‌ ; இவனுடைய வ்ருத்திக்கு அநு ரூபமாயிருக்கும்‌ . என்னுமிடத்தைச்‌ சொல்லுகிறது மேல்‌

முற்பாடர்க்கு க்ரிய அங்கம் ஆனவை இரண்டும் செயல் தீர்ந்தார் வ்ருத்தியிலே ஸ்வ நிர்பந்தம் அறுக்கும்-சூரணை-25 –

(கர்ம யோகத்துக்கு அங்கங்களே சேஷத்வமும் போக்த்ருத்வமும்-செய்த வேள்வியர் -செயல் தீர்ந்தார்
வ்ருத்தி -கைங்கர்யம்
போகத்தில் தட்டு மாறும் சீலம் காட்கரையில் கொழிக்கும்-அடுத்த திருவடியை நீட்டினாரே ஆழ்வார்-பேரக்குழந்தை காலை தாத்தா கன்னத்தில் அடித்துக் கொள்ளுமாறு –-ஸ்ரீ பெரிய நம்பி ஸ்ரீ ராமானுஜர் ஐதிக்யமும் உண்டே-படியாய்க்கிடந்து பவளவாய் காண வேண்டுமே -எதிர் விழி கொடுக்கும் பாரதந்தர்யம் –-போக்த்ருவத்துக்கும் விநியோகம் உண்டே-அவன் அனுபவத்துக்கு உறுப்பாகும் -)அதாவது சாஸ்த்ரஜ்ஞர்கள் -என்று சொல்லப் பட்ட உபாசகருக்கு போக்த்க்ருத்வம் ஆனது போக்ய சித்திக்கு உடலான யத்னத்திலே மூட்டுகையாலும்-அது தான் ஆத்ம ஞான பூர்வகமாக யத்தனிக்க வேண்டுகையாலே சேஷத்வமும் அதுக்கு உறுப்பாகையாலும்-உபாசன பிரதம பாவியான -கர்மத்துக்கு உத்பத்தியிலே சக கரித்துக் கொண்டு தத் அங்கங்களாய் இருக்கிற அவை இரண்டும்
செயல் தீர சிந்தித்து வாழ்வார்-நான்முகன் -88- (போக்யம் என்று அறிந்து -சிந்தித்து செயல் தீர்ந்தார் -)-என்கிற படியே இவ் ஆத்மா செய்யக் கடவது ஒன்றும் இல்லை-எம்பெருமானே நிர்வாககன் -என்று அனுசந்தித்து உபாய ரூப ப்ரவர்தியிலே நிவ்ருத்தரான பிர பன்னருடைய கைங்கர்ய ரூப பிரவர்த்தியில் அவன் உகப்பை பின் செல்லும் அது ஒழிய தங்கள் நிர்பந்தத்தை தவிர்க்கும் என்கை-பரகத அதிசய ஆதான இச்சையா உபாதேயத்வ மேவ யஸ்ய ஸ்வரூபம் ச சேஷ (-சேஷத்வ லக்ஷணம் ஸ்ரீ பாஷ்யகாரர் ஸ்ரீ ஸூக்திகள் )- என்கிற படியே –பரகத அதிசய கரத்தவ ரூபமான சேஷத்வம்
ஸ்வ ஆஸ்ரயா இச்சையா வரும் ஸ்வ நிர்பந்தத்தை தவிர்க்கும்
இறே–இனி போக்த்க்ருத்வம் ஸ்வ நிர்பந்தத்தை தவிர்க்கை யாவது பாரதந்த்ர்ய போக்யதா ஞானம் பிறந்தவன் உடைய போக்த்க்ருத்வம்
ஆகையாலே ,ஸ்வ ரசத்துக்கு உடல் அன்றிக்கே ,சேஷி ரசத்துக்கு உடலாய் இருக்கை.
.-ஆனந்தம் அவன் ப்ரீதியை துளிர் எழுப்ப – என்கிற படியே இவனுடைய போக்த்க்ருத்வம் சேஷியானவன் ப்ரீதிக்கு வர்தகமாய் இறே இருப்பது-ஆகை இறே –அஹம் அன்னம் அஹம் அன்னம் -தைத்ரியம்-என்று ஸ்வ போக்யதையை முன்னிட்டு சேஷியை உகப்பிக்க இழிந்தவன் அஹம் அந்நாத-தைத்ரியம் -என்று ஸ்வ போக்த்க்ருத்வத்தையும் புரஸ் கரிக்கிறது-இப்படி அல்லாத போது ஒரு சேதனனோடு அனுபவித்ததாய் இராது இறே-இவற்றை எல்லாத்தையும் உள் கொண்டு ஆய்த்து — வ்ருத்தியிலே ஸ்வ நிர்பந்தம் அறுக்கும் –என்று அருளி செய்தது-

‘முற்பாடர்‌’ என்று சொல்லப்‌பட்ட உபாஸகர்க்கு (க்ரியாங்க, மானவை, இரண்டும்‌) கர்மத்துக்கு, அங்கமான ஸேஷத்வ போக்த்ருத்வங்க ளிரண்டும்‌ ; கர்மத்துக்கு யோக்‌யதாபாதகங்களான ஸேஷத்வ போக்த்ருத்வங்கள்‌ ; இப்படி இருக்கிற இவற்றைச்‌ சொல்லுவான்‌ என்‌ என்னில்‌ ; போக்த்ருத்வமாவது – போக்‌ய ஸித்‌திக்கு அடியான யத்நத்திலே மூட்டுகையாலும்‌, ஸேஷத்வம்‌ அதில்‌ ஆத்ம ஜ்ஞாநம்‌ முன்னாக ப்ரவர்த்திக்க வேண்டுகையாலும்‌, அந்த சேஷத்வ போக்த்ருத்வங்கள்‌ ஸாதந ப்ரதம பாவியான கர்மத்தினுடைய உத்பத்தியிலே ஸஹ கரிக்கையாலும்‌ அவற்றை க்ரியாங்கம்‌ என்கிறது –
இப்படிப்பட்ட ஸேஷத்வ போக்த்ருத்வங்கள்‌ (செயல் தீரந்தார்‌ வ்ருத்தியில்‌) “செயல்‌ தீரச் சிந்தித்து வாழ்வாரே வாழ்வார்‌”? (நா. திருவ. 88) என்கிறபடியே உபாய ரூப ப்ரவ்ருத்தியில்‌ ஸ்வரூப பாரதந்த்ர்யத்தாலே நிவ்ருத்தரான ப்ரபந்தருடைய, வ்ருத்தியில்‌ – கைங்கர்ய வ்ருத்தியிலே என்றபடி. (ஸ்வ நிர்பந்த, மறுக்கும்‌)-ஸ்வ போக்த்ருத்வ ப்ரதிபத்தியையும்‌, மதீயத்வ ப்ரதிபத்தியையும்‌ தவிர்க்கும்‌. எங்ஙனே என்னில்‌ ; இவனுடைய போக்த்ருத்வம்‌ அவனுடைய போகத்துக்கு வர்த்தகமாயிருக்கும்‌, * அஹமந்நம்‌ என்ற பின்பு ‘‘அஹமந்தாத.:” என்றது – போக்த்ருத்வமிறே, இப்படிச் சொல்லாத போது ஒரு சேதநனோடே அநுபவித்ததா யிராதிறே ; இவனுடைய ஸேஷத்வமும்‌ அத் தலைக்கு அதிஸய கரமாயிருக்கும்‌, “*பரகத-அதிஸய-ஆதநேச்சயா உபாதேயத்வமேவ யஸ்ய ஸ்வரூபம்‌ ஸ ஸேஷ:”, ‘“யதேஷ்ட விநியோகர்ஹம்‌ ஸேஷ ஸப்தேந கத்‌யதே”, “ஈஸ்வரேண ஜகத் ஸர்வம்‌ யதேஷ்டம்‌ விநியுஜ்யதே” என்னக் கடவதிறே

போகத்தில் தட்டு மாறும் சீலம் காட்கரையிலே கரை அழிக்கும்–சூரணை -178-அதாவது
இப்படி போக்ய பூதரான ஆழ்வாருடன் கலந்து பரிமாறும் இடத்தில் – ஆள் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயன் –திருவாய்-9-6-7–என்றும் – ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது -திருவாய்-9-6-9–என்றும் பேசும்படி அத் தலை இத் தலையாய் சேஷி சேஷ பாவம் மாறாடும் சீல குணம் –காட்கரையிலே கரை அழிக்கும்-அதாவது–திரு காட்கரை மருவிய மாயன் தன் மாயம் நினை தொரு-திருவாய்-9-6-1- -என்று
வித்தராய்ப் பேசின திருகாட்கரையிலே கரை அழியப் பெருகும் என்கை — கரை அழிக்கும் என்கிறது -காட்கரை -என்கிற சமாதியாலே .–நம் கண்ணன் கள்வங்கள்-என்னில் முன்னம் பாரித்து என்னை முற்றம் பருகினான் –-கீழே என் உயிர் தான் உண்டான் -இங்கு பருகினான் -பெருமானுடைய உண்ணும் சோறு பருகும் நீர் இருக்கும் படி -தட்டு மாறும் சீலம் – ஆராவமுத ஆழ்வார் திருமழிசைப் பிரான் -அங்கும் தட்டு மாறிற்றே -)

செடியாய வல் வினைகள் தீர்க்கும் திரு மாலே!
நெடியானே! வேம்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தது இயங்கும்
படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே –4
-9-அநந்ய பிரயோஜனரும் – பிரயோஜனாந்தர பரரும்- அந்ய பரரும் கிடந்தது சஞ்சரியா நின்றால் ஒரு நினைவுற்று அசேதனவத் கிடக்க வேணும்-பார தந்த்ர்யத்துக்கு அசேதன சமாதியாகவும் வேணும் – அது புருஷார்த்தமாகைக்கு காணவும் வேணும்

உயிர் கொண்டு உடல் ஒழிய ஓடும் போது ஓடி
அயர்வு என்று தீர்ப்பான் பெயர் பாடி -செயல் தீரச்
சிந்தித்து வாழ்வாரே வாழ்வார் சிறு சமயப்
பந்தனையார் வாழ்வேல் பழுது-88-ஆத்மா சரீரங்களை விட்டு பிராணன்களைக் கொண்டு யமபடராலே ப்ரேரிதனாய் போம் போது- ஆளிட்டு அந்தி தொழ ஒண்ணா தாப் போலே ஆஸ்ரிதரை ஆளிட்டு அழைத்துக் கொள்ளாதே- தானே ஓடி வந்து இவர்கள் தர்சனத்தாலே வந்த அறிவு கேடு முதலான துரிதங்களை எல்லாம் போக்குமவன் திரு நாமத்தை ப்ரீதியோடு சொல்லித் தனக்கு ஒரு சாத்யம் இல்லாத படி  அனுசந்தித்து வாழ்வாரே வாழ்வார்-செயல் என்று கர்மா ஆகவுமாம்
இவ்வாத்மா தான் செய்யக் கடவ ஷூத்ர சமயம் ஆகிற பந்தத்தை யுடையார் வாழ்வு வ்யர்த்தம்
துக்க ஹேதுவான அஹங்கார மமகார கர்ப்பமாகையாலே பந்தகமாய் ஷூத்ர மான கர்மாத் யுபாய பேதங்களைப் பற்றினார்க்கு ஒரு பிரயோஜனமும் இல்லை – அந்வய வ்யதி ரேகங்களாலே இவற்றுக்கு உபாயத்வம் முதலிலே இல்லை என்று உள்ளபடி யுணர்ந்து இருக்கும்-ஞானி நாமக் ரேசரர் ஆகையாலே
பந்தனையார் வாழ்வேல் பழுதென்று அவற்றில் ஒரு சரக்கற அருளிச் செய்கிறார் –
துக்க ஹேதுவான-அஹங்கார கர்ப்பம் ஆகையாலே பந்தகமாய்- ஷூத்ரமான கர்மாத் யுபாய பேதங்களைப் பற்றினார்க்கு
ஒரு பிரயோஜனமும் இல்லை –பகவத் ப்ரீதியே பலத்துக்கு உபாயம்-கண்டாகர்ணன் க்ஷத்ர பந்து பக்கலிலே பார்த்தோமே 

இந்த க்ரியா வ்ருத்தி சப்தங்களால் சொன்ன கர்ம கைங்கர்யங்கள் இவர்களுக்கு எதுக்கு அநுகுணமாய் இருக்கும் -இந்த க்ரியா வாசியான கர்மமும்‌ வ்ருத்தி வாசியான கைங்கர்யமும்‌ எதுக்கு அநுரு,ணமா யிருக்கு மென்னில்‌ மேல் சொல்லுகிறது-

கர்ம கைங்கர்யங்கள் சத்ய அசத்ய நித்ய அநித்திய வர்ண தாஸ்ய அனுகுணங்கள்-சூரணை -26 –(அதாவது கர்மம் அசத்யமாய்–அநித்யுமுமான வர்ணத்துக்கு அநுகுணமாய் இருக்கும்
கைங்கர்யம் சத்தியமாய் நித்யமுமான தாஸ்யத்துக்கு அநுகுணமாய் இருக்கும்
என்கை-)

வர்ணத்தை அசத்தியம் அநித்தியம் என்கிறது ஆத்மாவுக்கு உள்ள வேஷம் அல்லாமையாலே
சததைக ரூபம் அன்றிக்கே -ஔ பாதிகமுமாய் அநித்யமுமாய் நச்வரமான தேக அவதியாய் போருகையாலே
–தாஸ்யத்தை சத்யம் நித்யம் என்கிறது-திருமாலே நானும் உனக்கு பழ வடியேன் திருப்பல்லாண்டு -11– என்கிறபடியே ஆத்மாக்கு உள்ள வேஷம் ஆகையாலே சததைக ரூபமாய் யாவதாத்மா அனுவர்த்தி யாகையலே-வர்ண அனுகுணம் என்றது -வர்ணத்துக்கு சேர்ந்தது என்ற படி-
தாஸ்ய அனுகுணம் என்றதும் அப்படியே-தாஸ்யத்துக்கு சேர்ந்தது என்ற படி-(விசிஷ்ட வேஷத்தை பொறுத்தே இருக்கும் கர்மம் -அசத்திய அநித்ய வர்ணம்-கைங்கர்யம் நிஷ்க்ருஷ்ட வேஷம் பொறுத்தே இருக்கும் -சத்யமாயும் -நித்யமாயும் தாஸ்யம் திருமாலே நானும் உனக்குப் பழ வடியேன் -தாஸ்யம் பழைமை நித்யம் -அங்கும் உண்டே நிருபாதிகம் -சத்யம் )

இவை இரண்டிலும்‌ வைத்துக் கொண்டு எத்தை எதுக்கு அநுகுணம்‌ என்கிறதென்னில்‌ ; கர்மம்‌ அஸத்யமுமாய்‌, அநித்யமுமான வர்ணத்துக்கு அநு கு,ணமாயிருக்குமென்றும்‌, கைங்கர்யம்‌ ஸத்யமுமாய்‌ நித்யமுமான ஸ்வரூபத்திலே ஆகையாலே ஸத்யமுமாய்‌ நித்யமுமாயிருக்கும்

அல் வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியூர் கோன் அபிமான துங்கன்
செல்வனைப் போலே திருமாலே நானும் உனக்கு பழ வடியேன்
நல் வகையால் நமோ நாராயணா என்று நாமம் பல பரவிப்
பல் வகையாலும் பவித்ரனே உனக்குப் பல்லாண்டு கூறுவனே –11-திருமாலே – இவ்வாத்ம வஸ்து ஒரு மிதுன சேஷம் -என்று சேஷத்வ பிரதி சம்பந்தியை சொல்லுகிறார்கள்-இத்தால் மாதா பித்ர் சேஷத்வமும் -தேவதாந்தர சேஷத்வமும் கர்ம உபாதிகம் என்கை
அதவா-தேவரீருக்கு பிராட்டி நிரூபக பூதையாய் இருக்கிறாப் போலே எங்களுக்கும் தாஸ்யம்
நிரூபகம் என்கிறார்கள் -என்றுமாம் நானும் – பிரயோஜனாந்தர பரதையாலே அநாதி காலம் அன்யார்ஹனாய் போந்த நானும் – சேஷி பக்கல் பிரயோஜனாந்தரத்தை அபேஷிக்கை யாவது -பதிவ்ரதை பர்த்தாவின் பக்கலிலே வ்யபிசாரத்தை அபேஷித்தவோபாதி இறே –உனக்குப் பழ வடியேன் – உனக்கு சேஷித்வம் அநாதி யானவோபாதி எனக்கும் சேஷத்வம் அநாதி என்கை
உனக்கு – பிரயோஜனாந்தரத்தை அபேஷித்து திருவடிகளில் கிட்டினதுவே ஹேதுவாக அநந்ய
பிரயோஜநன் ஆக்க வல்ல உனக்கு-இந்த ஸ்வரூப ஞானம் எவ் வழியாலே பிறந்தது என்னில்
சகல வேதாந்த தாத்பர்யமான மந்திர ரஹச்யத்தாலே பிறந்தது என்கிறார் மேல்-

இவை இரண்டுக்கும் பிரேரகங்கள் எவை -இவை இரண்டுக்கும்‌ ப்ரேரகர்‌ ஆர்‌ என்னில்‌ -என்ன சொல்லுகிறது-

இவற்றுக்கு விதி ராகங்கள் பிரேரகங்கள்-சூரணை -27 –

அதாவது – யஜேத -யஜுர் வேதம்-ஜூஹுயாத்–கர்ம மீமாம்சை-இத்யாதி யான சாஸ்திர விதி கர்மத்துக்கு பிரேரகம் -அசேஷ சேஷ தைகரதி யாகிற ராகம் கைங்கர்யத்துக்கு பிரேரகம் என்கை .
(பிரேரகம் தூண்டுபவை-காதல் -நின் கண் வேட்கை எழுவிப்பேனே -இசைவித்து – ஒழிவிலா காலம் எல்லாம் வழு விலா அடிமை -அசேஷ -சேஷதைக ரதி ரூபம் நித்ய கிங்கரோ பவாமி -அனுபவம் -ப்ரீதியைத் தூண்ட -அது கைங்கர்யத்தில் தூண்டும்-அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம்-இட்ட கால் இட்ட கைகளாய் இருக்கும் -மூவாறு மோசம் மோகிக்கப் பண்ணுமே ) பகவத் அனுபவ ஜனித ப்ரீதி காரிதம் இறே கைங்கர்யம் .-உற்றேன் உகந்து பணி செய்து உன பாதம் பெற்றேன் -திருவாய் -10-8-10–என்னக் கடவது இறே- (கிரமம் படி இல்லாமல் -பணி செய்து முதலில் பாதம் பெற்றது அப்புறம் -உபாசகருக்குத் தானே கிரமம் )

“இத,ம் குரு ‘, “அநேந யஜேத” என்றும்‌ சேதநனைக்‌ குறித்துச் சொல்லுகிற ஸாஸ்த்ர விதிகள்‌ கர்மத்துக்கு ப்ரேரகம்‌. பகவதநுபவ ஜநித ப்ரீதி கைங்கர்யத்துக்கு ப்ரேரகம்‌. ““உற்றேனுகந்து பணி செய்து” (திருவாய்‌. 10- 8 – 10)என்னக் கடவதிறே.

உற்றேன் உகந்து பணி செய்ய உன பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்

கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–10-8-10-கெடு மரக்கலம் கரை சேர்ந்தால் போலே கிட்டிக் கொடு நின்றேன் –ப்ரீதி ப்ரேரிதனாயக் கொண்டு -திருவாய் மொழி பாடி -உன் திருவடிகளை அனுபவிக்கப் பெற்றேன் – –சாதகமாய் மேல் -சாத்தியமாகச் சொல்லுகிறது அன்று -இரண்டும் ஏக காலத்திலே உள்ளதாகையாலே –ஈதே இன்னம் வேண்டுவது-இது தானே மாறி மாறி யாவதாத்ம பாவியாகச் செல்லுகை இறே –பு நரா வ்ருத்தி இன்றிக்கே ஒழிகை யாவது -மீளாது ஒழிகை -விதி போலே இருக்கிறதன்றே – எந்தாய்--இவ்வனுபவம் ஸ்வரூப அனுரூபம் என்கிறது –இத்தலைக்கு சேஷத்வமும் தேவர்க்கு சேஷித்வமும் இறே ஸ்வரூபம் -இவர் அபேக்ஷித்த படியே செய்கிறோம் என்ன -ப்ரீதராய் அருளிச் செய்கிறார் –

இவற்றுக்கு ஆஸ்ரயம் யார் என்ன சொல்லுகிறது-இவற்றுக்கு ஆஸ்ரயம்‌ ஆர்‌ என்னில்‌

மண்டினாரும் மற்றையாரும் ஆஸ்ரயம்-சூரணை -28 –

அதாவது-கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று மண்டினார்-திருக் குறும் தாண்டகம் -19– என்று உகந்து அருளின நிலங்களிலே அத்ய அபிநிவிஷ்டராய் இருக்கிற பிர பின்னர்
கைங்கர்யத்துக்கு ஆஸ்ரயம்-விளக்கினை விதியின் காண்பார் மெய்மையைக் காண்கிற்பாரே -திருக் குறும் தாண்டகம்-18–என்று கீழில் பாட்டில் சொன்ன மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யலாமே -திருக் குறும் தாண்டகம் -19—மற்றையரான உபாசகர் கர்மத்துக்கு ஆஸ்ரயம் என்கை-(சாஸ்திரம் – –உபாசனம்-விளக்கினை விதியில் காணும் மற்றையரான உபாசகர் -கர்மத்துக்கு ஆஸ்ரயம்-சாஸ்த்ர தாத்பர்யம் -திருமந்திரம் —பிரபன்னர் -அர்ச்சாவதார திவ்ய மங்கள விக்ரஹ கைங்கர்யம் –என்றவாறு )இத்தால் கர்ம கர்த்தாக்களையும் கைங்கர்ய கர்த்தாக்களையும் சொல்லிற்று ஆய்த்து-

(மண்டினாரும்‌ மற்றையாரும்‌ ஆஸ்ரயம்‌)-“கண்டியூர்‌” (திருக்குறு. 19) இத்யாதி,. மண்டினார்‌ என்கிறது – உகந்தருளின நிலங்களிலே அத்யபிநிவிஷ்டராயிருக்கிற ப்ரபந்நரை ; மற்றையார்‌ என்கிறது – “விளக்கினை விதியில்‌ காண்பார்‌” (திருக்குறு. 18) என்கிற உபாஸகர்‌ என்று ப்ரஸித்‌தமிறே. இத்தால்‌ கர்மத்துக்கு ஆஸ்ரயம்‌ உபாஸகர்‌, கைங்கர்யத்துக்கு ஆஸ்ரயம்‌ ப்ரபந்நர்‌ என்றபடி-

பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர் மனை  திரி தந்து உண்ணும்
முண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர் உலகம் ஏத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால் மற்றை யார்க்கு உய்யலாமே -19-–அவன் உகந்து அருளின இத் திருப் பதிகளிலே நெஞ்சு மண்டினவர்கள் உய்யல் அல்லது அல்லாதார்க்கு உஜ்ஜீவிக்க விரகு உண்டோ –

இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற் பாரே–18--சாஸ்த்ரங்களில் விதித்தபடியே
உபாசித்து அவனைக் காண்பார் –என்றும் உளனாய் இருக்கிற சர்வேஸ்வரனை காண வல்லரே -காண -மாட்டார் -என்றபடி –அங்க பிரபத்தி இல்லாமல் காண மாட்டார் என்றபடி-

இவற்றுக்கு விஷயம் ஏது என்ன சொல்லுகிறது-இவற்றுக்கு விஷயம்‌ ஏதென்னில்‌ ;

அருள் முடிய நிறுத்தி அடைய நின்றதும் நல்லதோர் அருள் தன்னாலே நன்றும் எளியன் ஆகிறதும் விஷயம்-சூரணை -29 –

அதாவது-எத் தவம் செய்தாருக்கும் அருள் முடிவது ஆழியான் பால் -நான்முகன் 2–என்கிற படியே ஆஸ்ரயண பல சித்தி தன்னுடைய பிரசாதத்தாலே யாம்படி –-தன் மூர்த்தி நிறுத்தினான் தெய்வங்களாக -திருவாய் -5-2-8–என்ற படியே தனக்கு தனுபூதரான தேவதைகளை நிறுத்தி –
அவரவர் விதி வழி அடைய நின்றனர் -திருவாய்-1-1-5–என்கிற படியே ஆஸ்ரயிக்கிற சேதனர் வித்யுக்த பிரகாரேன ஆஸ்ரயித்து பலம் பெரும் படி தேவதாந்தர்யாமியாய் நின்ற இடம் கர்மத்துக்கு விஷயம்நல்லதோர் அருள் தன்னாலே காட்டினான் திரு அரங்கம் -திருமாலை -10–என்றும்-கருத்துக்கு நன்றும் எளியனாய்-திருவாய்-3-6-11- -என்று சொல்லுகிறபடியே கேவல ஸுய க்ருபையாலே அத்யந்த சுலபனாய் கொண்டு அர்ச்சாவதாரமாய் நிற்கிற இடமே கைங்கர்யத்துக்கு விஷயம் என்கை-

”எத் தவம்‌ செய்தார்க்கும்‌ அருள் முடிவதாழியான்‌ பால்‌”: (நான்‌. திருவ. 2) என்றும்‌, “’நிறுத்தி நும்‌ உள்ளத்துக் கொள்ளும்‌ தெய்வங்களும்மை உய்யக் கொள்‌ மறுத்துமவனோடே கண்டீர்‌” (திருவாய்‌. 5 – 2- 7) என்றும்‌, ”அவரவர்‌ விதி வழி அடைய நின்றனரே” (திருவாய்‌. 1 – 1 – 5] என்றும்‌ சொல்லுகிறபடியே தேவதைகளுக்கு அந்தர்யாமியாய்க் கொண்டு நின்ற விடமும்‌, ”நல்லதோரருள் தன்னாலே காட்டினான்‌ திருவரங்கம்‌”? (திருமாலை 10) என்றும்‌, “கருத்துக்கு நன்றுமெளியன்‌”’ (திரு வாய்‌. 3 – 6 – 11) என்றும்‌ சொல்லுகிறபடியே அர்ச்சாவதாரமாய்க் கொண்டு நின்ற இடமும்‌. –

தேருங்கால் தேவன் ஒருவனே என்று உரைப்பர்
ஆரும் அறியார் அவன் பெருமை -ஒரும்
பொருள் முடிவும் இத்தனையே எத் தவம் செய்தார்க்கும்
அருள் முடிவது ஆழியான் பால் –2–எல்லா சாதன அனுஷ்டானம் பண்ணினவர்களுக்கும்
அவற்றுக்கும் பலம் சர்வேஸ்வரன் பக்கலில் நின்றும் என்கை-ஏழு ஏழு  படி இங்கனே தபஸ் ஸூ பண்ணினாருக்கும் எம்பெருமான் பிரசாதத்தால் அல்லது பல பர்யந்தமாய் முடியாது-

நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்
மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே

கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்பதெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே.–5-2-7—உங்கள் நெஞ்சிலே நீங்கள் நிறுத்திக் கொள்ளுகிற தேவதைகள் –த்யேய வஸ்துக்களை நிறுத்துகையும் த்யாதாவுக்கே பரம் என்கை அங்குஷ்ட மாத்ர புருஷோமத்ய ஆத்மனி திஷ்ட்ட்தி-என்கிறவன் அவசர ப்ரதீஷனாய் நிற்கிறது அன்றே -யுக்த்யா ஆபாசங்களாலும் வசன ஆபாசங்களாலும் பொரி புறம் தடவி நிறுத்துகை –உங்களை உய்யக் கொள்ளும் இடத்தில் -ரஷிக்கும் போது தாங்கள் அக்ஷமர் ஆகையால் –பேணிலும் வரம் தர மிடிக்கில்லாத தேவரை -திருவில்லாத் தேவரை –மறுத்தும் அவனொடே கண்டீர் – மீண்டும் அவனோடே சேர்த்து -அவன் பிரசாதத்தாலே கிடீர் –நீங்கள் அவர்களை ஆஸ்ரயித்ததாலும் பலம் தருவான் அவனே –
பலமத-நஹி பாலன சாமர்த்த்யம் ருதே ஸர்வேச்வரீம் ஹரீம்
– இவர்களை ஆஸ்ரயிக்க வேறே ஒருவன் பலம் தருமது எங்கே கண்டோம் என்னில் –மார்க்கண்டேயனும் கரியே- ஸ்ரீ மார்க்கண்டேய பகவான் சாக்ஷி-

இறுக்கும் இறை இறுத்து உண்ண எவ்வுலகுக்குந் தன்மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே

மறுத் திரு மார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுது உய்ம்மினீரே.–5-2-8—ஸ்வ வர்ண ஸ்வ ஆஸ்ரம உசித கர்மங்களாலே சமாராதித்து ஸ்வ அபிலஷிதங்களை பெற்று உஜ்ஜீவிக்க-எவ் வுலகுக்குந் தன்மூர்த்தி நிறுத்தினான் தெய்வங்களாக –-பின்ன ருசிகளான -அதிகாரிகளை யுடைத்தான சர்வ லோகங்களுக்கும் –தன் சரீர பூதரான தேவதைகளை சமாராத்யராக நிறுத்தினான் –ஈஸ்வரோஹம் என்று இருப்பார் தலை வணங்குகைக்காக நிறுத்தினான் –-அத் தெய்வ நாயகன் தானே-
ஆஸ்ரயிப்பார்களோடு ஆஸ்ரயணீயரோடு வாசி அற எல்லார்க்கும் நிர்வாஹகன் அவன் தானே -சேதனருடைய குண அனுரூபமாக ஆராத்யராகவும் அபிமத பலப்ரதராம் படியும் பண்ணினான்

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே 
–1-1-5—அவரவர் இறையவர் அவ்வோ தேவதைகள்-குறைவிலர்
ஆஸ்ரயிக்கிற வர்களுடைய பலம் கொடுக்கைக்கு குறை யுடையவர் அல்லர்-இறையவர்-நிருபாதிக சர்வேஸ்வரன்-அவரவர் விதி வழி யடைய-ஆஸ்ரயிக்கிறவர்கள் வித்யுக்த பிரகாரத்தாலே ஆஸ்ரயிக்கவும்-ஆஸ்ரயணீயர் அவர்களுக்கு பல பிரதானத்துக்கு சக்தராகவும்-நின்றனரே அந்தராத்மதயா நின்றார்-

நாட்டினான் தெய்வம் எங்கும் நல்லதோர் அருள் தன்னாலே
காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம்
கேட்டீரே நம்பிமீர்காள் கெருட வாகனும் நிற்கச்
சேட்டை தன் மடி யகத்துச் செல்வம் பார்த்து இருக்கின்றீரே–10—சத்வ பிரசுரராய் தன்னைப் பற்றும் அளவு உடையவர் அன்றிக்கே இருக்கும் ரஜஸ் தமஸ் பிரசுரர்க்கும் தேவதைகளை நாட்டினான் –
அதுக்கடி தன்னரசு போலே ஸ்வ தந்த்ரராய் மூலையடியே திரியப் புக்கவாறே ஸ்வ ஸ்வ குண அனுகூலமாக தேவதைகளை ஆஸ்ரயித்து பின்னை சேதனர் இறே – நம் வாசி அறிந்து -நம்மைப் பற்றுகிறார்கள் என்னும் நினைவாலே யாய்த்து தேவதைகளை நாட்டிற்று –உபக்நத்தை பெறாத கொடி போலே யாய்த்து ஈஸ்வரனுடைய ஆத்ம பாவத்தை ஒழியில் தேவதைகள் உடைய சத்தாதிகள் இருப்பது –சுள்ளிக் கால் நாட்டினால் போலே இருக்கிறது ஆய்த்து-நிறுத்தினான் தெய்வங்களாக -என்னக் கடவது இறே –நல்லதோர் அருள் தன்னாலே – தான் நினைத்த வழியே தன்னுடைய ஹிதம் அறிந்து போராதே
நோவு பட்டு இருந்தன ஆகாதே என்று கிருபை பண்ணினான் ஆய்த்து –நல்லதோர் அருள் –இவற்றின் உடைய கர்ம அனுகுணம் ஆதல் – ஆஸ்ரய அனுகுணம் ஆதல்-பண்ணும் அருள்போல் அன்றியே –க்ர்ப்பயா கேவலம் –என்கிறபடியே-இவற்றின் உடைய துர்கதியைக் கண்டு பண்ணும் அருள் –இவர்கள் தம் தாம் தசையை நினைந்து அனுசந்தித்து அதுக்கு அனுதபிக்கவும் அறியாதே இருக்கச் செய்தே பண்ணும் அருள் இறே-நல்லதோர் அருள் -என்கையாலே-கீழ் தேவதைகளை உண்டாக்கி வைத்ததும் அருளின் கார்யம் என்கிறது –நல்லதோர் அருள் தன்னாலே -காட்டினான் திருவரங்கம்--சிலர் எங்களுக்கு காட்ட வேண்டும் என்ன -காட்டுகை அன்றிக்கே முலைக் கடுப்பு தீர தரையிலே பீச்சுவாரைப் போலே தன் செல்லாமையினால் காட்டினான் ஆய்த்து –

கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
மண்கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள்செய்யும் வானவர் ஈசனைப்
பண்கொள் சோலை வழுதி வளநாடன் குருகைக்கோன் சடகோபன் சொல்
பண்கொள் ஆயிரத்து இப் பத்தால் பத்தராகக் கூடும் பயிலுமினே.–3-6-11–கண்ணுக்கு விஷயம் அன்றிக்கே அகவாயிலே மிகவும் பிரகாசிக்கிற படி – இவருக்கு எங்கும் இதுவே சம்ச்லேஷ விஸ்லேஷன்களுக்கு பிரயோஜம்-சம்ச்லேஷம் ஆகிறது -மானஸ அனுபவம் -விஸ்லேஷம் ஆகிறது -பாஹ்ய சம்ச்லேஷ அபேக்ஷையாலே மானஸ அனுபவத்துக்கு வரும் குலைதல்-மண் கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள்செய்யும் வானவர் ஈசனைப்-நித்ய ஸூரிகளுக்கு ஸூலபன் ஆனால் போலே-சம்சாரிகள் என்று வாசி வையாதே அர்ச்சாவதார முகத்தால் வந்து ஸூலபனானவனை-

இவ்வோ நிலைகளை விஷயமாக உடைத்தாய் ஆகையாலே கர்ம கைங்கர்யங்கள் இப்படி சொல்லப் பட்டன என்கிறார்-

இவற்றாலே சாதாரணம் அசாதாரணம் என்னும்–சூரணை -30 –

அதாவது-இப்படி தேவதா அந்தர்யாமியையும் அர்ச்சாவதார தையும் விஷயமாக உடைய இவ் ஆகாரங்களாலே சாதாரண விக்ரக விசிஷ்டனை விஷயமாக உடைய கர்மத்தை சாதாரணம் என்றும்
அசாதாரண விக்ரக விசிஷ்டனை விஷயமாக உடைய கைங்கர்யத்தை அசாதாரணம் என்றும் சொல்லும்
என்கை-

(இவற்றாலே) இந்த ப்ரமாண ப்ரகாரங்களாலே (ஸாதாரணம்‌ அஸாதாரணம்‌ என்னும்‌) ஸாதாரணமான்‌ விக்‌ரஹ விஸிஷ்டன்‌ கர்மத்துக்கு விஷயம்‌, அஸாதாரணமான விக்‌ரஹ விஸிஷ்டன்‌ கைங்கர்யத்துக்கு விஷயம்‌ என்று விஷய பேதத்தை அருளிச் செய்து, அதில்‌ அஸாதாரண விக்‌ரஹ விஷய கைங்கர்ய நிஷ்டன்‌ ஸாதாரண விக்ரஹ விஷயத்திலே ஸர்வ ஸாமாந்ய தயா கர்த்தவ்யமானவற்றில்‌ அந்வயியான்‌ என்கிறார் –

இவ் அசாதாரண சேவையிலே அதிகரித்தாருக்கு சாதாரணமான வதில் அந்யவம் தன்னடையே கழியும்படியை ச த்ருஷ்டாந்தமாக அருளி செய்கிறார்-ஆனால்‌ பழையதாக அநுவர்த்தித்துப்‌ போந்ததுமாய்‌ வர்ணாத்‌,ய ஸாதாரணமுமான ஸத்‌வாரக விஷய ப்ரவ்ருத்தியை இப்போது இவனாலே விடப் போமோ என்னில்‌

ஜாதி ஆஸ்ரம தீஷைகளில் பேதிக்கும் தர்மங்கள் போலே அத்தாணி சேவகத்தில் பொதுவானது நழுவும்-சூரணை-31

(அசாதரண கைங்கர்யத்தில் இழியவே சாதாரணமான கர்மம் தன்னடையே கழியும் –-ஸ்ரீ லஷ்மணன் ஸ்ரீ ராம கைங்கர்யத்தில் இழியவே ஊர்மிளை உடன் கூடின தர்ம அனுஷ்டானம்
தன்னடையே கழிந்ததே –நற்செல்வன் தங்காய்-ஸ்ரீ ஆச்சார்ய கைங்கர்யத்தில் இழியவே பகவத் கைங்கர்யம் நழுவும் – ஸ்ரீ வடுக நம்பி பால் காய்ச்சி ஸ்ரீ நம் பெருமாள் சேவை விட்டாரே )-அதாவது
ஸ்வ கர்ம ப்ராஹ்மணஸ்ய -அத்யயனம் ,அத்யாபனம் ,யஜனம் யாஜனம் ,தானம் ப்ரதிக்ரஹணம்,
தாயாத்யம், சிலோஞ்ச்ச ,அந்யச்ச, அபரிக்ருஹீதம் , ஏதான் ஏவ ஷத்ரியஸ்ய அத்யாபன யாஜன பிரதிக்ரஹணாதி ,பரிஹார்யாணி ,தண்ட யுத்த தாதிகார , ஷத்ரியவத் வைச்யஸ்ய தண்ட யுத்த வர்ஜம் க்ருஷி கோரஷண வாணிஜ் யாதிகம் க்ராஹ்யம்–ஆபஸ்தம்ப ஸூத்ரம்
-என்கையாலே
அத்யயன அத்யாபன யஜன யாஜன தான பிரதிஹ்ருக -ரூப ஷட் கர்மமும் பிராமணனுக்கு கர்தவ்யமாய் ஷத்ரிய வைஸ்யர்களுக்கும் அத்யாபனாதி த்ரயம் ஒழிய அத்யயனாதி த்ரயமே கர்தவ்யமாய் , அவர்கள் தங்கள் உள்ளும் தண்ட யுத்தங்கள் ஷத்ரியனுக்கே அசாதாரணமாய் ,
க்ருஷி கோ ரக்ஷண வாணிஜ்யங்கள் வைஸ்யனுக்கு அசாதாரணமாய் , சுஸ்ருஷா சூத்ரச்ய இதரேஷாம் வர்ணானாம்-என்கையாலே சூத்ரனுக்கு திரை வர்ணிக ஸூஸ்ருஷையே தர்மமாய் ,
இப்படி தத் ஜாத்ய அனுகுணமாக ஒருவனுக்கு உபாதேயம் ஆனது ஒருவனுக்கு த்யாஜ்யமாக கொண்டு தர்மங்கள் பேதித்து இருக்கும் இறே-
–பிரமச்சாரியான தசையில் உபாதேயமான பிஷா சரண சமிதா தரணாதிகள் க்ருகஸ்தனான தசையில் த்யாஜ்யங்களாய் அக்னி கோத்ர அதிதி சத்காராதிகள் உபாதேயம் ஆகையாலும் வனஸ்தனான தசையில் – -சந்த்யஜ்ய க்ராம்யமாகாரம் சர்வஞ்சைவ பாரிசாதம்-என்கையாலே பூர்வ ஆஸ்ரமத்தில் உபாதேயமான க்ராம்யாகார பரிச்சதாதிகள் த்யாஜமாய் –
வசீத சர்வ சீரம் வா -என்று தொடங்கி சொல்லப் பட்ட சரம சீர வசனத்வ ஜடிலத்வ மச்முருச்லோம நகதாரண வன்ய ஆகாரங்கள் உபாதேயம் ஆகையாலும் சந்யாசியான தசையில் பூர்வ ஆஸ்ரம உபாதேயமான அக்நிஹோத்ர அதிதி சத்காராதிகளும் ஜடிலத்வாதிகளும் த்யாஜ்யமாய்
அநக்நிஸ் அநிகேதஸ் ஸ்யாத் -மனு ஸ்ம்ருதி -இத்யாதிப் படியே அனக்நித்வ அநிகேதத்வ
அசஹாயத்வாதிகளும் உபாதேயம் ஆகையாலும் ஆஸ்ரய தர்மம் பேதியா நின்றது இறே .-ஜியோஷிடோமாதிகளில் தீஷித்தவனுக்கு வர்ணத்ரைய ஆஸ்ரம சச்துஷ்டைய சாதாரணமாய்
அகரேண பிரத்யவா எதாய அவஸ்ய கர்தவ்யமாய் போரும் நித்ய கர்மம் அநனுஷ்டேயமாய்
ஜியோதிஷ்டோமாதி தர்மமே அனுஷ்டேயம் ஆகையாலே தீஷையிலே தர்மம் பேதித்து இருக்கும் இறே-ஆக இப்படி பிராமணாதி ஜாதிகளிலும் பிராமசார்யாதி ஆஸ்ரமங்களிலும் ஜியோதிஷ்டோமாதி தர்மாந்தர தீஷைகளிலும் பேதிக்கும் தர்மங்கள் போலே அசாதாரண விக்ரக சஹிதேஸ்வர விஷயம் ஆகையாலே அசாதாரணமாய் ,அத ஏவ –அத்தாணி சேவகம் –திருப்பல்லாண்டு -8- -என்று
அந்தரங்க சேவை யாகிற கைங்கர்யத்திலே அதிகரித்தவர்களுக்கு தேவதாந்த்ரி விஷயமாய் தத் சரீர பூத தேவதாத்வார தத் ஆராதனம் ஆகையாலே சாதாரணமாய் இருந்து உள்ள கர்மம் உறங்குவான் கை பிண்டம் போலே தன்னடைவே நழுவும் என்கை –இத்தால் வர்ணாஸ்ரம நிஷ்டர்க்கு தத் அதிகார அநுரூப தர்மம் ஒழிய அநுகுணமானது த்யாஜ்யதையா கழிக்கப் படுமா போலே ஸ்வரூப யாதாம்ய தர்சிகள் ஆனவர்களுக்கு தத் அநுரூப தர்மம் ஒழிய அனனுரூபமானது த்யாஜ்யமாய் தன்னடையே விட்டுக் கழியும் என்றது ஆயிற்று--இப்படி இருக்கச் செய்தே ,சிஷ்டர்கள் அனுஷ்டித்து போருகிறது –
ஸ்வ அனுஷ்டத்தை-அநநுஷ்டானத்தை – பின் சென்று லோகம் நசிக்க ஒண்ணாது என்று
ஆந்ரு சம்சயத்தாலே இறே-யதி ஹ்யஹம் ந வர்த்தேயம் ஜாது கரமண்ய தந்த்ரித மம வர்த்மாநுவர்த்தந்தே மனுஷ்யா பார்த்த ஸர்வஸ –ஸ்ரீ கீதை -23–உத் சீதே யுரிமே லோகா ந குர்யாம் கர்ம சேதஹம் சங்கரஸ்ய ச கர்த்தா ஸ்யாம் உபஹந்யாம் இமா பிரஜா –ஸ்ரீ கீதை -24- என்கிற படி பரார்தமாகவே இறே இவர்கள் அனுஷ்டிப்பது –(குல வர்ண ஆஸ்ரம தர்ம ஸங்க்ரஹம் ஆகாமைக்காக
-பரார்த்தம் பரனது ஆனந்தத்துக்கு என்றுமாம் )

ஜாதி த,ர்மமானது ஜாத்யந்தரத்திலே பேதிக்கக் கண்டோம்‌, கண்ட படி என்‌ என்னில்‌, யஜந-யாஜந-அத் யயந-அத்யாபந தாந ப்ரதி க்‌ரஹங்களாகிற ஷட் கர்மங்கள்‌ க்ஷத்ரியாதி,களில்‌ பேதியா நின்றன விறே –ஆஸ்ரம தர்மம்‌ ஆஸ்ரமாந்தரத்தில்‌ பேதியா நின்றது. இவை இத்தனையும்‌ பேதித்தாலும்‌ பேதியாத நித்ய தர்ம-நைமித்திக த,ர்மங்கள்‌ ஜ்யோதிஷ்டோமாதி, தீக்ஷைகளில்‌ பேதிக்குமாப் போலே ‘அத்தாணிச் சேவகமும்‌”’ (திருப்பல்‌. 8) என்கிற அந்தரங்க கைங்கர்யத்தில்‌ வர்ணாஸ்ரம ஸாதரண தர்மம்‌ தானே நழுவுமிறே-உறங்குகிறவன கையில்‌ எலுமிச்சம் பழம் போலே இது தனக்கு அவகாஸ மில்லை. இந்த த்‌ருஷ்டாந்த பலத்தாலே இவ் வதிகாரிக்கு அகரணே ப்ரத்யவாயமில்லை என்கிறது. கீழ்ச் சொன்னவை தன்னைப் போலே ; இப்படி இருக்கச் செய்தேயும்‌ ஸிஷ்டர்கள்‌ அநுஷ்டித்துப்‌ போருகிது ஆந்ரு ஸம்ஸ்யத்தாலே யிறே 

நெய்யிடை நல்லதோர் சோறு நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக்காயும் கழுத்துக்கு பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல
பையுடை நாகப் பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே –8-–அத்தாணி -என்று பிரியாமை –சேவகம் -என்று சேவை-ஐஸ்வர்யார்த்திக்கும் அநவரத பாவநையும் -அந்திம ச்ம்ர்த்தியும் அநந்ய பிரயோஜநோபாதி கர்த்தவ்யம் இறே–ஆனால் ஐஸ்வர்ய சாதனத்தையும் –தந்து -என்று பிரயோஜத்தோடு ஒக்க சொல்வான் என் என்னில் வெள்ளுயிர் ஆன பின்பு சொல்லுகிறார்கள் ஆகையாலே அந்த சாதனமும் ஸ்வயம் பிரயோஜனமாய் இறே இருப்பது -அநந்ய பிரயோஜனனுக்கு ஸ்வயம் பிரயோஜனமான சேவை சாதனமாக்கி கிடீர் ஷூத்தரமான ஐஸ்வர்யத்தை தந்தது என்கை

இந்த கைங்கர்ய நிஷ்டருக்கு கர்ம நிஷ்டரோடு சேர்த்தி இல்லாமையை சொல்லுகிறது மேல்-இனி கர்ம நிஷ்டனிற் காட்டில்‌ கைஙகர்ய நிஷ்ட,னுக்குள்ள வைஷம்யம்‌ சொல்லுகிறது-

சாதன சாத்தியங்களில் முதலும் முடிவும் வர்ண தர்மிகள் தாச வ்ருத்திகள் என்று துறை வேறு இடுவித்தது-சூரணை -32 –

(சாதனத்தில் முதல் வர்ண தர்மிகள் என்று துறை வேறு விடுவித்து -என்றும்-சாத்யத்தில் முடிவு தாச விருத்திகள் என்று துறை வேறு விடுவித்து -என்றும் பிரித்து பொருள்-சாதனம் -உபாசனம் முதல் படி- கர்ம யோகம் – வர்ண தர்மம் – பகவத் அனுபவம்- சாத்தியம் முடிவு தானே வ்ருத்தி கைங்கர்யம் முடிவு- தாஸ்யம் தானே சத்யம்- நித்யம்- அந்தரங்க அத்தாணிச் சேவகம்-இந்த உயர்ந்த நிலையைக் காட்டவே அது தன்னடையே கழியும் ) அதாவது சாதனத்தில் முதல் அடியான கர்மமும் முடிந்த நிலமான கைங்கர்யமும் -இந்த நெடு வாசி அறிந்தவர்களை நீங்கள் வர்ண தர்மிகள் ,நாங்கள் தாஸ வ்ருத்திகள் -என்று உறவு அறுத்து துறை வேறு இட்டு போகப் பண்ணிற்று என்கை
அதாவது – ஸ்ரீ திரு வயிந்திர புரத்திலே -ஸ்ரீ வில்லி புத்தூர் பகவர் -என்பார் ஒருவர்
எல்லாரும் ஒரு துறையில் அனுஷ்டானம் பண்ண ,தனியே ஒரு துறையில் அனுஷ்டானம்
பண்ணுவராய் -ஒரு நாள் அனுஷ்டானம் பண்ணி ,மீளா நிற்க செய்தே இருந்த பிராமணர் -ஜீயரே -எங்கள் துறையில் அனுஷ்டானம் பண்ண வாராது ஒழிகிறது என்-என்ன-விஷ்ணு தாஸா வயம் யூயம் ப்ராஹ்மணா வர்ண தர்மின–அஸ்மாகம் தாஸ வ்ருத்தினாம் யுஷ்மாகம் நாஸ்தி சங்கதி -என்று துறை வேற இட்டு போனார் ஆய்த்து-(அன்னைமீர் விடுமினோ போலே-ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ கோயிலில் உள்ள சம்சாரிகள் சென்ற பின்பே ஸ்ரீ கோயிலிலுக்குள் நுழைந்த ஐதிக்யம் ஸ்வார்த்தமான கைங்கர்யம் அங்கும் உபாசகனுக்கு -துளி ஸ்வாதந்தர்யம் ஒட்டிக் கொண்டு இருக்குமே- அவன் திரு உள்ளத்திலும் இவன் வந்த வழி பட்டு இருக்குமே )-

ஸாதநங்களில்‌ முதற் சொல்லுகிறது கர்மம்‌, கர்ம ஜ்ஞாந பக்திகளிறே ஸாதநங்கள்‌. ஸாத்‌யங்களில்‌ முடிவு கைங்கர்யம்‌பகவதநுபவம்‌, அநுபவ ஜநித ப்ரீதி, அநந்தரமிறே பீரீதி காரித கைங்கர்யம்‌, திருவயிந்திரபுரத்தில்‌ வில்லி புத்தூர்ப் பகவர்‌ என்பாரொருவர்‌ எல்லாரும்‌ ஒரு துறையிலே அநுஷ்டாநம்‌ பண்ண, தாம்‌ ஒரு துறையிலே அநுஷ்டாநம்‌ பண்ணுவாராய்‌, ஒருநாள்‌ அநுஷ்டாநம்‌ பண்ணி மீண்டெழுந்தருளா நிற்கச் செய்தே, இருந்த ப்‌ராஹ்மணர்‌ ‘ஏன்‌ ஜீயரே! எங்கள்‌ துறையில்‌ அநுஷ்டாநம்‌ பண்ண வாராதொழிவானென்‌’ என்ன, *’விஷணு தாஸா வயம்‌ யூயம்‌ ப்‌ராஹ்மணா வர்ண தர்மிண? ! அஸ்மாகம்‌ தாஸ விருத்தீநாம்‌ யுஷ்மாகம்‌ நாஸ்தி ஸங்கதி:’‘ என்று – ‘நீங்கள்‌ ப்‌ராஹ்மணார்‌, வர்ண தர்மிகள்‌; நாங்கள்‌ தாஸ வ்ருத்திகள்‌, கைங்கர்ய பரர்‌. ஆகையாலே உங்களோடே எங்களுக்கு அந்வயமில்லை” என்று துறை வேறிட்டுப் போனாரிறே

கீழ் –ஜாதியாதிகளில் பேதிக்கும் தர்மங்கள் போலே -சூரணை-31 என்ற இத்தாலே ஸூசிதமான அதிகார பேதத்துக்கும் துறை வேறு இட்டு போகும் படியான நெடு வாசிக்கும் பிரகாசகமான கர்ம கைங்கர்ய நிஷ்டர் இருவருக்கும் உண்டான ஜென்மாதி விசேஷத்தை தர்சிப்பதாக கோலி ,பிரதமம் ஜன்ம விசேஷத்தை சொல்லுகிறது மேல்-இனி மேல்‌ இவர்களிருவர்க்கும்‌ ஜந்ம நிருபக கூடஸ்தரிருக்கும்படி என்‌ என்ன; இவை இப்படிப் பட்டிருக்கும்‌ என்கிறார்‌-

வேத வித்துக்களும் மிக்க வேதியரும் சந்தஸாம் மாதாவாலும் அதுக்கும் தாயாய்த் தாயினும் ஆயின
செய்யும் அத்தாலும் பிறப்பிக்கும் அது இருவருக்கும் ஸ்ரேஷ்ட ஜன்மம் –சூரணை -33 –

அதாவது-யேச வேத விதோ விப்ர—பாரதம்-என்கிற வேத வித்துகிகளான பூர்வ பாக நிஷ்டர்
காயத்ரீம் சந்தசா மாதா – தைத்ரீயம் என்கிறபடி சந்தசுகளுக்கு மாதாவாய் இருக்கிற காயத்ரி உபதேசத்தாலே பிறப்பிக்கும் அது -கர்ம நிஷ்டருக்கு ஸ்ரேஷ்ட ஜன்மம் யேசாத் யாத்மவிதோ ஜனா -( ஏச அத்யாத்ம வித் )-பாரதம்-என்கிற மிக்க வேதியரான வேத தாத் பர்ய வித்துக்கள்-ரூசோ யஜூம்ஷி சாமானி ததைவா தர்வணா நிச சர்வம் அஷ்டாஷராந்தச்தம் யச்சன்யா தபி வாங்மயம் –என்று சகல வேத ஸங்க்ரஹம் ஆகையாலே அந்த காயத்ரிக்கும் மாத்ரு பூமியாய் – பெற்ற தாயினும் ஆயின செய்யும் –பெரிய திருமொழி -1-1-9-என்கிற படியே சரீர உத்பாதிகையான மாதா மாத்ரம் அன்றிக்கே
உஜ்ஜீவனத்துக்கு உறுப்பான ஞானத்தை உண்டாக்கும் திரு மந்த்ரத்தாலே பிறப்பிக்கும் அது கைங்கர்ய நிஷ்டருக்கு ஸ்ரேஷ்ட ஜன்மம் என்கை–சஹி வித்யாஸ் தம் ஜனயிதி தஸ் ஸ்ரேஷ்டம் ஜன்ம-ஆபஸ்தம்ப சூத்ரம் -என்கையாலே-கேவல ஜன்மம் என்னாதே ஸ்ரேஷ்ட ஜன்மம் என்கிறது ..-அது வர்ண அனுகுணமான விதி நிஷேதங்களுக்கும் தத் அநுரூப அனுஷ்டானந்தக்கும்-தத் அனுகுண பல பிராப்த்திக்கும் உறுப்பாகையாலே அவர்களுக்கு ஸ்ரேஷ்ட ஜன்மம் —இது ஸ்வரூப அனுரூபமான-( ஆத்ம ஸ்வரூபத்துக்கு இங்கு )- விதி நிஷேதங்களுக்கும் தத் அநுரூப அனுஷ்டானந்தக்கும்
தத் அநுரூப பல பிராப்த்திக்கும் உறுப்பாகையாலே இவர்களுக்கு ஸ்ரேஷ்ட ஜன்மம்-
(தாஸ்ய சத்யன் -சகல ஆகமங்களும் உன்னையே காட்டும்-அந்தராத்மதயா உபாசகன் – அவரவர் இறையவர் –விதி வழி அடைய நின்றனர் –-சகல பலாநாம் ப்ரசூதி தேசிகன் -சாஸ்த்ர தாத்பர்யத்தை பிடித்து தாஸ்யம் -அச்யுத சதகம் 17-20-ஸ்லோகத்தில்-இந்தக் கருத்தை அருளிச் செய்கிறார் )

 யே ச வேத விதோ விப்ரா” (பார. ஆர.) என்கிற. வேத வித்துக்கள்‌, ““காயத்ரீம்‌ சந்தஸாம்‌ மாதா’‘ என்கிற க,௱யத்ர் யுபதேஸத்தாலே பிறப்பிக்குமது கர்ம நிஷ்ட,னுக்கு ஸ்ரேஷ்ட ஜந்மம்‌; ‘“யே சாத்‌,யாத்ம விதோ ஜநா?” என்கிறபடியே மிக்க வேதியரான வேத தாத்பர்யம்‌ கைப்பட்டவர்கள்‌ ““ஸர்வ மஷ்டாக்ஷராந் தஸ்தம்‌”” (வ்ரு.ஹா. )என்கிறபடியே, அந்த காயத்ரி தனக்கும்‌ மாத்ரு ஸ்தாநமாய்‌, “பெற்ற தாயினுமாயின செய்யும்‌”‘ (திருமொழி–1– 1 – 9) என்கிறபடியே ஸரீரோத்பத்தி மாத்ர மன்றியிலே ஜ்ஞாந விகாஸத்‌தைப்‌ பண்ணிக் கொடுப்பதான திருமந்த்ரத்தாலே பிறப்பிக்குமது கைங்கர்ய நிஷ்டர்க்கு ஸ்ரேஷ்ட ஜந்மம்‌. “ஜந்மநா ஜாயதே ஸூத்‌ர? கர்மணா ஜாயதே த்‌விஜ? । வேதாப்‌,யாஸேந விப்ரத்வம்‌ ப்‌,ரஹ்ம வித்‌ ப்‌ராஹ்மணோ விது,” என்றும்‌, “ஸ ஹி வித்‌யாதஸ்‌“ தம்‌ ஜநயதி தச் ச்‌ரேஷ்ட,ம்‌ ஜந்ம” (ஆப.த.1 – 1 – 16) என்னக் கடவதிறே

குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயர் ஆயின எல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —9—மாதாவானவள் சரீரத்துக்கு உத்பாத யாம் அளவு இறே-ஆத்மாவுக்கு ஸ்வரூபமான ஜ்ஞான விகாசத்தை பிறப்பிப்பான் அவனே இறே-சரீரமே மாதாபிதரௌ ஜநயதே -என்று விரோதியான சரீரத்தை உத்பாதித்து விடும் அளவு இறே அவர்கள் செய்தது-சஹி வித்யா தஸ்தம் ஜநயதி தச் ஸ்ரேஷ்டம் -ஜ்ஞானப் ப்ரதன் அவன் இறே-

இப்படி ஸ்ரேஷ்ட ஜன்மாக்களான இருவருக்கும் நிரூபகங்கள்–இப்படி ஸ்ரேஷ்ட ஜந்மரான இருவர்க்கும்‌ நிரூபகம்‌ ஏதென்னில்‌- இன்னது என்கிறது-

அந்தணர் மறையோர் என்றும்–அடியார் தொண்டர் என்றும்–இவர்களுக்கு நிரூபகம்-சூரணை -34 –-

(அந்தணர் -ப்ராஹ்மண்யமும் மறையோர் -வைதிகத்வமும்-அடியார் -சேஷத்வம் அடிமைத்தனம் அறிந்தவர் -தொண்டர் -கிஞ்சித் கைங்கர்யம் செய்தவர் என்றவாறு – எது எது ஏன் பணி என்னாது அதுவே ஆட் செய்யும் ஈடு )-அதாவது-சாதி அந்தணர் -திருமாலை -43–துணை நூல் மார்வில் அந்தணர் -பெரிய திருமொழி -1-5-9–தீ யோம்பு கை மறையோர்-பெரிய திருமொழி -7-9-7–நந்தா வண் கை மறையோர்– -பெரிய திருமொழி -6-7-8- என்று விசேஷண பூத சரீரத்வாரா வந்த வர்ணமும் தத் பிரயுக்தமான வைதிகவத்மமும் அவர்களுக்கு நிரூபகம்-திருமால் அடியார்-திருவாய் -5-6-11-
அணி அரங்கன் திரு முற்றத்து அடியார்-பெருமாள் -1-10-திரு மாலுக்கு உரிய தொண்டர்-திருவாய் -6-9-11
திரு நாரணன் தொண்டர்-திருவாய் -3-7-4- என்று ஆத்மா வஸ்துவுக்கு ஞான ஆனந்தங்களில் காட்டிலும்
அந்தரங்க நிரூபகமான சேஷத்வம் தத் பிரயுக்த கிஞ்சித் கரத்வமும் இவர்களுக்கு நிரூபகம் என்கை-

“’துணை நூல்‌ மார்விலத்தணர்‌”” (திருமொழி 1 – 5 – 9) என்றும்‌, ”தீயோம்புகைமறையோர்‌’” (திருமொழி 7 – 9 – 7) என்றும்‌ சொல்லுகிற இவை கர்ம நிஷ்டரர்க்கு நிரூபகம்‌. “வேதார்த்த அநுஷ்டாந யோக்‌யர்‌ அந்தணர்‌” என்றும்‌, ‘வேதார்த்த அநுஷ்டாந பரர்‌ மறையோர்‌’ என்றும்‌ சொல்லக் கடவது. இனி, “அணியரங்கன்‌ திருமுற்றத்தடியார்‌”” (பெரு. திரு 1 – 10) என்றும்‌, “’அக மகிமும்‌ தொண்டர்‌”” (பெரு.திரு 1 – 10) என்றும்‌ சொல்லுகிறபடியே கைங்கர்ய நிஷ்டனுக்கு நிரூபகம்‌ – அடியார்‌-கிஞ்சித்கார அர்ஹர்‌. தொண்டர்‌-கிஞ்சித்கார ஸ்வபாவர்

அமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதித்
தமர்களில் தலைவராய சாதி அந்தணர்கள் ஏலும்
நுமர்களைப் பழிப்பர் ஆகில் நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே
அவர்கள் தாம் புலையர் போலும் அரங்க மா நகர் உளானே43—சாதி அந்தணர்கள் –கீழ்ச் சொன்னவை ஷத்ரிய வைஸ்யர்களுக்கும் பொது விறே – அவ்வளவு அன்றியே ஜாத்யா பிராமணராய் இருக்கை –ஏலும் –கீழ்ச் சொன்னவை ஒருவருக்கும் சித்திக்கும் அது அல்ல –சித்திக்குமே யாகிலும் – வைஷ்ணவ நிந்தையில் வந்தால் இவை எல்லாம் அசத் சமம் என்கை – துர்மானோ பஹதர்க்கு அபசார ஹேதுவுமாய் – இவை இல்லாதார் தலை மேலே கால் இட்டு திரிகைக்கு உடலாம் இத்தனை –

தொண்டாம் இனமும் இமையோரும் துணை நூல் மார்பில் அந்தணரும்
அண்டா வெமக்கே யருளாய் என்று அணையும் கோயிலருகெல்லாம்
வந்தார் பொழிலின் பழனத்து வயலினயலே கயல் பாய
தன்டாமரைகள் முக மலர்த்தும் சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-9–-கேவல ப்ராஹ்மணரும் –
வித்யா விநய சம்பந்நே ப்ராஹ்மனே -என்று பிரித்தார் இறே ஸ்ரீ பாஷ்ய காரர் 

சேயோங்கு தண் திருமாலிரும் சோலை யுறையும்
மாயா வெனக்கு உரையாய் இது மறை நான்கினுளாயோ
தீ யோம்புகை  மறையோர் சிறுபுலியூர்ச் சலசயனத்
தாயோ வுன தடியார் மனத்தாயோ வறியேனே—7-9-7–எப்போதும்  ஒக்க அக்நி கார்யத்தில் அவஹிதராய்ப் போருகிற பிராமணர் உடைய

பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்துக்
கந்தார் களிற்றுக் கழல் மன்னர்  கலங்கச் சங்கம் வாய் வைத்தான்
செந்தாமரை மேல் அயனோடு சிவனும்  அனைய பெருமையோர்
நந்தா  வண்கை மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியே –6-7-8—தனித் தனியே சிருஷ்டி சம்ஹாரத்துக்கு ஷமராய் ப்ரஹ்ம ருத்ரர்களில் காட்டில் ஏற்றமான ஔதார்யத்தை உடைய
பிராமணர்
நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் –

கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி வளநாடன் மன்னு குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ்மாலை ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெருஞ் செல்வத்தராய்த் திருமால் அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே.–5-6-11—இந்த லோகத்தில் எல்லாரும் கொண்டாடும் படியான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை யுடையராய் ஸ்ரீ லஷ்மீ பாதிக்கு அடியாரானவர்களை ஆராதிக்கப் பெறுவார்கள் -அவர்களுக்கு ஆராதனம் ஆகிறது இவர் அநு கரித்த இப் பாசுரத்தை சொல்லுகை-தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல்மாலைகள் சொன்னேன் என்ன கடவது இ றே-இவர் இவ் வநுகாரத்தாலே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ப்ரியகரர் ஆனால் போலே இது கற்றாரும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பிரியமான வ்ருத்தியைப் பண்ணக் கடவர் என்கை-

வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய
துன்பம் மிகு துயர் அகல அயர் ஒன்றில்லா சுகம் வளர அக மகிழும் தொண்டர் வாழ
அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும் அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள்
இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும் இசைந்த உடனே என்று கொலோ விருக்கும் நாளே ?—1-10–பகவத் அனுபவத்தாலே நிரதிசய ஆனந்த உக்தரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் வாழ-

தெரிதல் நினைதல் எண்ண லாகாத் திருமாலுக்கு
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்

தெரியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே.–6-9-11–ஸ்ரீ யபதிக்கு அசாதாரணமான தாஸ்யத்துக்கு பர்யவசான பூமியான ஆழ்வார் -இவருடைய அஹம் புத்தி இருக்கிற படி -பயிலும் சுடர் ஒளிக்கு பின்பு ததீய சேஷத்வ பர்யந்தமாயிற்று -இவருடைய அஹம் அர்த்தம் இருப்பது -இவ்வளவு வருகை இறே அநந்யார்ஹ சேஷம் ஆவது

உடை ஆர்ந்த ஆடையன் கண்டிகையன் உடை நாணினன்
புடையார் பொன் நூலினன் பொன்முடியன் மற்றும் பல்கலன்
நடையா உடைத் திரு நாரணன் தொண்டர் தொண்டர் கண்டீர்
இடையார் பிறப்பிடை தோறு எமக்கு எம் பெரு மக்களே
.–3-7-4–ஸ்ரீ மன் நாராயணன் –ஆபரணங்களில் அந்நிய தமமாய் இருக்கிறபடி லஷ்மீ சம்பந்தமும் ஆபரண சோபையினுடைய போக்யத்தையாலே சொல்லாது ஒழிய மாட்டார் அசங்க்யாதம் ஆகையால் பேச மாட்டார் –அந்த ஆபரண சேர்த்திக்கும் மிதுனத்துக்கும் தோற்று அடிமை புக்கவர்கள் அன்று அவர்கள் தோற்ற தோல்விக்கு அடிமை புக்கவர்கள் எனக்கு நிரந்தரமான ஜென்மத்தில் அவகாசம் தோறும் சேஷிகள் –

கேவலம் இவையோ நிரூபகம்-க்ராம குலாதி வியாபதேசங்களும் இல்லையோ —கர்ம கைங்கர்யங்களில்‌ நிஷ்டராயிருக்கும்‌ இருவர்க்கும்‌ வ்யபதேஸம்‌ ஏதென்னில்‌ — சொல்லுகிறது மேல்-

ஒரு தலையில் க்ராம குலாதி வியாபதேசம்-குலம் தரும் என்னும் மாசிற் குடி பழி என்று பதியாக கோயிலில் வாழும் என்பர்கள்-சூரணை -35 –

அதாவது
கர்ம நிஷ்டர் என்று சொல்லப் பட்ட ஒரு தலையில் சரீர அனுபந்திகளான க்ராம குலாதிகளை இட்டு
வியபதேசிக்கும் அந்த வியபதேசத்தை கைங்கர்ய நிஷ்டரான மற்றை தலையில் உள்ளவர்கள்
குலம் தரும் -பெரிய திருமொழி-1-1-9–என்கிற படியே திரு மந்திர சித்த பகவத் சம்பந்த ஜ்ஞான பிரயுக்தமாய் மாசில் குடி -மூன்றாம் திருவந்தாதி –10—என்று சேஷத்வ விரோதியான அஹங்காராதிகள் இல்லாமையாலே நிர் தோஷமாய் இருக்கிற இக் குலத்துக்கு -(கீழ் சொன்ன வியபதேசத்தை )அவத்ய கரம் என்று கருதி-வேம்கடத்தை பதியாக வாழ்வீர்காள்–நாச்சியார் -8-9–
கோயிலில் வாழும் வைட்டணவன்—பெரியாழ்வார் 5-1-3–என்று பகவத் அன்வயம் உள்ள தேச சம்பந்தத்தை விட்டு வ்யவகரிப்பர்கள் என்கை .. இது பகவத் சம்பந்தத்தை இட்டு வ்யபதேசிக்கும் அதுக்கும் உப லஷணம்.(ஊரிலேன் காணி இல்லை உறவு மற்று ஒருவர் இல்லை பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் –கதறுகின்றேன்) ஏகாந்தீ வ்யபேதேஷ்டவ்யோ நைவ க்ராம குலாதிபி விஷ்ணுனா
வ்யபேதேஷ்டவ்யஸ் தஸ்ய சர்வம் ச ஏவ ஹி—பரமைகாந்தி தர்மம்
-என்னக் கடவதிறே-

 கரம நிஷ்டரை க்ராம குலாதிகளாலே வ்யபதேஸிக்கக் கடவது; கைங்கர்ய நிஷ்டனுக்கு அந்த க்‌ராம குலாதிகளால்‌ வருகிற வ்யபதேஸம்‌ ”குலந் தரும்‌’” (திருமொழி 1 – 1 – 9) என்றும்‌, “மாசில்‌ குடிப்‌ பிறப்பு” (மூ.திருவ. 10)என்றும்‌ பகவத் ஸம்பந்த ஜ்ஞாநத்தாலே இதர வ்யாவ்ருத்தமான வைஷ்ணவ ஜாதீயனான இவனுக்கு அவத்‌யமாகையாலே நிரவத்‌யமான பகவத்‌ ஸம்பந்த ப்ராதாந்யமே தோற்றும்படியாக, ““வேங்கடத்தைப்‌ பதியாக வாழ்வீர்காள்‌” (நா.திரு.8 – 9) என்றும்‌, “கோயிலில்‌ வாழும்‌ வைட்டணவர்‌” (பெரியா.திரு. 5 – 1 .. 3) என்றும்‌ சொல்லுகிறபடியே பகவத் ஸம்பந்தமுள்ள தேஸத்தையிட்டும்‌, பகவத்‌ ஸம்பந்த தந் தன்னை யிட்டும்‌ வ்யபதேஸிக்கக் கடவது; “ஏகாந்த வ்யபதேஷ்டவ்யோ நைவ க்‌ராம குலாதி,பி। விஷ்ணுநா வ்யபதேஷ்டவ்யஸ் தஸ்ய ஸர்வம் ஸ ஏவ ஹி நத்யாஸ் தஸ்யைவ நாமாதி, ப்ரவிஷ்டாயா யதார்ணவம்‌ ! ஸர்வாத்மநா ப்ரபந்தஸ்ய விஷ்ணு மேகாந்திநஸ் ததா”” என்னா நின்றதிறே –

குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயர் ஆயின எல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —9—ஜன்ம வருத்தங்களால் குறைய நின்றான் ஒருத்தனுக்கு பகவத் சம்பந்தம் உண்டானால் இவற்றால் உயர்ந்தான் ஒருத்தன் இவை இரண்டிலும் இவனுக்கு தாழ்வு உண்டாகவும் தான் உயர்ந்தான் ஆகவும் -நினைத்து இருக்கவும் கூட கூச வேண்டும்படி யாயிற்று பகவத் பிரபாவம் இருப்பது –
ஆனாலும் பெண் கொடுத்தல் கொள்ளுதல் செய்கிறார் இல்லை – அதுக்கடி ஜாதி நிபந்தனம் ஆகை
ஸ்லாகைக்கு நிபந்தனம் ஸ ஸ்லாக்யஸ் ஸ குணீ தந்யஸ் ஸகுலீந -என்னக் கடவது இறே –கண்ட தெல்லாம் தர்ம சந்தேஹம் பண்ணக் கடவ தர்ம புத்திரன் பகவத் ப்ரத்யாசத்தியாலும் அசரீரி வாக்யத்தாலும் விதுரரை ப்ரஹ்ம ரதத்தாலே சம்ஸ்காரம் பண்ணினான் இறே – ருஷிகள் தர்ம வ்யாதன் மாம்ஸ விக்ரயம் பண்ணி கை ஒழியும் தனையும் பார்த்து நின்று தர்ம சங்கங்கள் கேட்டுப் போனார்கள் இறே –இங்கன் அன்றாகில் பஞ்சம வேதமான மஹா பாரதத்திலே எழுதக் கூடாது இறே – கைசிக கதையிலே வந்தவாறே விலஷணனாய் இருப்பான் ஒரு ப்ரஹ்ம ராஜஸ் ஆசார வைகல்யத்துக்கு -பகவத் ஜ்ஞானம் உடையான் ஒரு பாடுவானாலே பரிஹாரம் இருந்தது இறே –ஸ்ரீ விபீஷண ஆழ்வான் ராவணனைப் பார்த்து -பெருமாளை சரணம் புகு-என்று சொல்ல – த்வாந்துதிக்  குல பாம்ஸநம் -என்று -நீ இக்குடிக்கு உடல் அல்ல என்றான் இறே – ராவணனுக்கு வார்த்தை சொல்லும் இடத்தில் –நிசாசர -என்று அவனை ராஷசனாகவும் தான் அல்லனாகவும் சொன்னான் – இங்கனே அன்றிக்கே -ராஷசாநாம் பல அபலம் என்று பெருமாள் தாமும் அருளிச் செய்தார் –ஆகையாலே பகவத் சம்பந்தம் ஸ்பர்ச வேதியாய் இருந்தது –

தேசும் திறலும் திருவும் உருவமும்
மாசில் குடிப் பிறப்பும்   மற்றவையும்
வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான் பேரோத
நலம் புரிந்து சென்றடையும் நன்கு —-10–மதிப்பும் –பராபிபாவன சாமர்த்தியமும் -ஐஸ்வர்யமும் -வடிவு அழகும் –குற்றம் அற்ற பிறப்பும் –குற்றம் அற்ற பகவத் ப்ரத்யாசத்தியால் வரும் ஆபி ஜாத்யமும்–-அநுக்தமான அவையும் -இவை எல்லாமான நன்மைகளும்-

மத யானை போல் எழுந்த மா முகில்காள் வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள்
பாம்பணையான் வார்த்தை என்னே
கதி என்றும் தானாவான் கருதாது ஓர் பெண் கொடியை
வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே–8-9–ஏஷ ஹ்யேவா நந்தயாதி -தைத் ஆனந்த -7-என்கிறபடியே அவன் ஆனந்திப்பிக்க ஆனந்தித்து திரிகிறி கோள் அன்றோ நீங்கள்-ஒரு விபூதியாக  அஹம் அன்னம் அஹம் அன்னம் என்று களிக்குமா போலே நீங்களும் திரள் திரளாக வர்த்திக்கிறிகோள் அன்றோ-வந்தேறிகளாய் திருநாள் சேவித்து போவாரைப் போலே போராதே-
அங்கே நித்ய வாசம் பண்ணப் பெறுவதே நீங்கள்
 -சேறு தோய்ந்து கழுவினவர்கள் அன்றிக்கே –
முக்தரைப் போலே அன்றிக்கே – நித்ய சித்தரைப் போலே யாய்த்து –
அங்குத்தை வர்த்தநத்தை இறே வாழ்வாகச் சொல்லுகிறது-இரண்டு ஆற்றுக்கும் நடுவில் வாசம் போலே – நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம் -11-5- என்னக் கடவது இறே பல நீ காட்டிப் படுப்பாயோ –திருவாய் -6-9-9- என்றும் –
புறத்து இட்டு இன்னம் கெடுப்பாயோ
 -6-9-8-என்றும் இதர விஷய ப்ராவண்யம் விநாச ஹேதுவாய் இருக்கும் – பகவத் ப்ராவண்யம் வாழ்வாய் இருக்கும்

நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால்
புன்மையால் உன்னை புள்ளுவம் பேசி புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே
உன்னும் ஆறு உன்னை ஒன்றும் அறியேன் ஓவாதே நமோ நாரணா என்பன்
வன்மை யாவது உன் கோயிலில் வாழும் வைட்டணவன் என்னும் வன்மை கண்டாய் -5- 1-3 –வன்மை -மிடுக்கு-ஸ்ரீ கோயிலில் வாழும் என்று புறம்புள்ள அபிமானம் குலைகையாலும் தாம் அநந்ய பிரயோஜனர் ஆகையாலும் இவருடைய ராஜ குலம் இருக்கும் படிபவத் விஷய வாஸிந -(ஸ்ரீ ராமாயணம் ) இவற்றின் புறத்தான் என்று எண்ணானோ-(திரு விருத்தம் )என்று ஸ்ரீ பகவத் அபிமானம் உள்ள தேசத்தே கிடக்கை இறே தங்களுக்கு பேறாக நினைத்து இருப்பது-

ஊரிலேன் காணி இல்லை உறவு மற்று ஒருவர் இல்லை
பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
கார் ஒளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர் களைகண் அம்மா அரங்க மா நகர் உளானே –29—வேறு எவ்வித யோக்யதையுமில்லாமற் போனாலும் ஸாளக்ராமம், கோயில் திருமலை, பெருமாள் கோயில் முதலிய திவ்யதேசங்களில் ஜந்மமாவது கிடைத்தால் அதைக் கொண்டு உய்வு பெறலாம்.-அப்படிப்பட்ட ஒரு தேசத்திலும் எனக்குப் பிறவி நேரவில்லையே!-திவ்யதேசத்தில் ஐந்மமில்லாவிடினும் உதரபோஷணார்த்தமாக ஏதாவது கொஞ்சம் க்ராம பூமிகள் ஏற்பட்டிருந்தால் அங்குப் போக வேண்டிய காலங்களில் யாத்ருச்சிகமாக இடையிலே ஒரு திவ்யதேவஸேவை கிடைக்கக்கூடும் அப்படிப்பட்ட ப்ரஸக்தி நேருவதற்கு ஒரு குழியளவு காணியுமில்லை யென்கிறார்.-இவையொன்றுமில்லையாகிலும் திவ்யதேசவாஸிகளோடு உறவு இருக்குமாகில் பந்து க்ருத்ய பரிபாலனத்துக்காகச் சிலகாலம் அங்குப்போகவும் அதடியாக பகவத்ஸேவை கிடைக்கவும் ப்ரஸக்தியுண்டு; அப்படிப்பட்ட உறவினர்களும் எனக்கில்லை.

இனி உபயர் உடையவும் கூடஸ்தரை சொல்லுகிறது-இனிமேல்‌ இருவருடையவும்‌ கூடஸ்தரைச்‌ சொல்லுகிறது-

விப்ரருக்கு கோத்ர சரண சூத்ர கூடஸ்த்தர் பராசர பாராசர்ய போதாய நாதிகள்-பிரபன்ன ஜன கூடஸ்த்தர் பராங்குச பரகால யதி வராதிகள் .-சூரணை -36-

அதாவது
அந்தணர் மறையோர் என்கிற பிராமணருக்கு கோத்ர கூடஸ்தர் பரசராதிகள்
கோத்ரமாவது-அபத்ய சந்ததி ( பிள்ளைப்பிறப்பின் சந்ததி ) – சந்ததிர் கோத்ர ஜனன குலம் அபிஜனம் அன்வயம் -பர்யாய சொற்கள் -அமரகோசம் -என்னக் கடவதிறே-அந்த கோத்ரம் தான் அநேகமாய் தத் தத் கூடஸ்தரான வசிஷ்ட காஸ்யப பரத்வாஜ வத்ஸ ப்ரப்ருதிகள் பலர் உண்டாகையாலே பராசராதிகள் என்கிறது .-சரண கூடஸ்தர் பாராசர்யாதிகள் —சரணங்கள் ஆனவை -வேத சாகைகள் தத் அத்யாதிகளையும் கௌணமாக சரண சப்தத்தாலே சொல்லக் கடவது .-சரண சப்த காடக காலாபாதி சாகா விசேஷஷு முக்ய தத்தத் யாயிஷு புருஷே ஷு கௌண-என்கையாலே இவ் இடத்தில் சாகைகளைச் சொல்லுகிறது ..சர்வ சாகைகளுக்கும் பிரதான பிரவர்தகன் பாராசர்யனாக இருக்க செய்தேயும் பின்பு தத் தத் சாகைகளுக்கு தனி தனி பிரவர்தகரான கடக லாப கண்வராதிகளும் உண்டாகையாலே பாராசர்யாதிகள் என்கிறது-சூத்ரம் ஆவது -கர்ம அனுஷ்டான பிரதி பாதகமான கல்பம் . சீஷாயாம் வர்ண சிஷா—ஸ்ரீ ரெங்கராஜ உத்தர சதகம் -18- -என்று தொடங்கி சொல்லி வருகிற அளவிலே கல்பேனுஷ்டானம் முக்தம் -என்றது இறே ..அது தானும் பலவாய் ,தத் தத் கர்த்தாக்கள் ஆன ஆபஸ்தம்ப ஆஸ்வலாயநாதிகளும் உண்டாகையாலே போதாயானாதிகள் என்கிறது . ஆக இவர்கள் விப்ரருக்கு கூடஸ்த புருஷர்கள் அடியார் தொண்டர் -என்கிற பிரபன்ன ஜனங்களுக்கு கூடஸ்தர்
பத்யு ஸ்ரிய பிரசாதேன ப்ராப்த சார்வஜ்ஞய சம்பதம்
(மயர்வற மதிநலம் அருளப்பெற்றவருக்கு மொழி பெயர்ப்பு ) பிர பன்ன ஜன கூடஸ்தம் பிரபத்யே ஸ்ரீ பராங்குசம் -ஸ்ரீ பராங்குச அஷ்டகம் -4–. என்கிற நம் ஆழ்வார் திரு மங்கை ஆழ்வார் தொடக்கமான எல்லா ஆழ்வார்களும் ,எம்பெருமானார் முதலிய ஆச்சார்யர்களும் என்கை .-கூடஸ்தர் ஆகிறார் –மூல பூதர் இறே-உபதேச அனுஷ்டானங்களாலே பிரபத்தி மார்க்கத்தை தலை பெருத்தி வளர்த்தவர்கள் ஆகையால் இவர்களை பிர பன்ன ஜன கூடஸ்தர்கள் என்கிறது –(ப்ரஹ்ம ஞானம் அளித்தவர் ஸ்ரீ நம்மாழ்வார் – கைங்கர்யம் செய்ய உணர்த்தியவர் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் –ஆச்சார்ய அபிமானம் அனுஷ்டானம் ஸ்ரீ ராமானுஜர் )

முற்பட்ட ப்‌ராஹ்மணர்க்கு பராஸர(வ்யாஸ)வஸிஷ்டாதிகள்‌ கோத்ர குருக்களுமாய்‌- போதாயநாதிகள்‌ ஸூத்ர குருக்களுமாய்‌, (தத் தச் சரண- உபயங்‌களில்‌) பூர்வ பூர்வ புருஷர்கள்‌ கூடஸ்தருமாய்‌ இருப்பர்கள்‌. ப்ரபந்ந ஜந கூடஸ்த ர்‌ ““பத்யுஸ் ஸ்ரிய? ப்ரஸாதேந ப்ராப்த ஸார்வஜ்ஞ்ய ஸம்பதம்‌ ! ப்ரபந்ந ஜந கூடஸ்தம்‌ ப்ரபத்‌யே ஸ்ரீபராங்குஸம்‌?” (பரா.௮..] என்றும்‌, ‘‘ராமாநுஜாங்க்‌ரி ஸரணோஸ்மி குல ப்ரதீபஸ் த்வாஸீத்‌ ஸ யாமுந முநேஸ் ஸ ச நாத வம்ஸ்யச । வம்ஸ்ய? பராங்குஸ முநேஸ்ஸ ச ஸோபி தேவ்யா ததாஸஸ் தவேதி வரதாஸ்மி தவேக்ஷணீய?” (வரத.ஸ்தவே 102) என்றும்‌ சொல்லுகிறபடியே  நம்மாழ்வார்‌, திருமங்கையாழ்வார்‌ தொடக்கமான ஆழ்வார்‌களும்‌, உடையவர்க்கு முன்பும்‌ பின்புமுள்ள ஆசார்யர்களும்‌ என்கிறார்

சீஷாயாம் வர்ண சிஷா பதசமதிகம வியாக்ரியா நிர்வசோப்யாம்
சந்தஸ் சந்தஸ்திதவ் ஸ்யாத் கமயதி சமயம் ஜ்யவ்திஷம் ரங்க நாத
கல்பே அனுஷ்டானம் யுக்தம் ஹி உசிதகமிதயோ நியாய மீமாம்சயோ ஸ்யாத்
அர்த்த வ்யக்தி புராண ஸ்ம்ருதிஷு தத் அனுகா த்வாம் விசின் வந்தி வேதா –18-கல்ப ஸூத்ரத்திலே வைதிக கர்மங்களை அனுஷ்ட்டிக்க வேண்டிய முறைமை சொல்லப் பட்டது

பத்யு: ச்ரிய பிரசாதேன ப்ராப்த சார்வஜ்ஞ்ய சம்பதம் |
ப்ரபன்ன ஜன கூடஸ்தம் ப்ரபத்யே ஸ்ரீ பராங்குசம் ||-
-5-ஸ்ரீ திருமால் திருவருளால் – மயர்வற மதிநலம் அருளினன் யவனவன் – சர்வஜ்ஞத்வம் ஆகிற சம்பத்தைப் பெற்றவரும் பிரபன்ன ஜனங்களுக்கு தலைவருமான – ஸ்ரீ நம்மாழ்வாரைத் தஞ்சமாகப் பற்றுகிறேன்

ராமானுஜ அங்க்ரி சரணோஸ்மி குல ப்ரதீபத்வ ஆஸீத் ச யமுந முநேஸ் ச ச நாத வம்ஸ்யஸ்
பராங்குச முநேஸ் ச ச ஸோபி தேவ்யாஸ் தாஸஸ் தவேதி வரதாஸ்மி தவே ஷணீயஸ் –102–அடியேன் எம்பெருமானாருடைய திருவடிகளைச் சரணமாக அடைந்தவன்-விப்ரர்க்கு கோத்ர சரண ஸூத்ர கூடஸ்தர் பராசர பாராசர்ய போதாய நாதிகள் – ப்ரபந்ந ஜன கூடஸ்தர் பராங்குச பரகால யதிவராதிகள்-அந்த எம்பெருமானாரோ ஆளவந்தாருடைய வித்யா வம்சத்துக்கு அணி விளக்காக ஆனார்
ராமானுஜரும் –தூய் நெறி சேர் எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம் கதி பெற்று உடையன் அன்றோ –அந்த ஆளவந்தார் தாமும் வித்யா அந் வயத்தாலும் குடல் துடைக்காலும் ஸ்ரீ மந் நாதமுனிகளுடைய வம்சத்தவர்-பிதா மஹம் நாத முனிம் விலோக்ய ப்ரஸீத மத் வ்ருத்தம் அசிந்தயித்வா -என்ற குடல் துவக்கும் உண்டே–அந்த நாதமுனிகளும் நம்மாழ்வாருடைய வம்சத்தவர்
குருகையில் வந்த குல முனிவனுடைய குலக் கொழுந்து-ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் அமுதத் திரு வாய் ஈரத் தமிழின் இசை உணர்ந்தோர்கட்க்கு இனியவர் தம் சீரைப் பயின்று உய்யும் சீலம் கொள் நாத முனி அன்றோ-அந்த ஆழ்வாரும் உனது பிராட்டிக்கு அடியவர்-ஆழ்வாரும் உனக்குப் படுக்கைப் பற்று அன்றோ – பங்கயத்தாள் திரு அருளும் கொண்டவர் அன்றோ–இந்த பாரம்பர்யத்தாலே தேவரீருக்கு அடியேன் கடாக்ஷிக்கத் தகுந்தவன் ஆகின்றேன் அன்றோ–நிகமத்தில் தம்மைக் கடாக்ஷித்து அருள வேண்டுவது பேர் அருளாளனும் அவர்ஜநீயம் என்னும் இடத்தை மூதலிக்கிறார்

இனி இரண்டு தலைக்கும் பிராமணிய வைஷ்ணவத்ய சித்தி ஹேது நியமங்களை தர்சிப்பிகிறார் மேல்-இனிமேல்‌ விப்ரரூம்‌ ப்ரபந்நருமான இவர்களிருவர்க்கும்‌ ப்‌ராஹ்மண்ய ஸித்‌தி, ஹேது எது? வைஷ்ணவத்வ ஸித்‌தி, ஹேது ஏது? என்னச்‌ சொல்லுகிறார்‌ –

அத்யயன ஞான அனுஷ்டானங்களாலே பிராமண்யம் ஆகிறார் போலே சந்தங்கள் ஆயிரம் அறிய
கற்று வல்லார் ஆனால் வைஷ்ணவத்த ஸித்தி- சூரணை-37-
-(அத்யயனம் ஞானம் அனுஷ்டானம் மூன்றுக்கும் அறிய கற்று வல்லார் மூன்று சப்தங்கள் )

அதாவது
ஸ்வ அத்யாயோத்ய தவ்ய–என்கிற படியே – ப்ரதமம் வேதத்தை ஆச்சார்ய உச்சரண அனுச்சாரண முகேன அஷர ராசி க்ரஹணம் பண்ணுகை யாகிற அத்யயனத்தை பண்ணி மீமாம்ச ஸ்ரவணாதிகளாலே தத் அர்த்த ஞானம் பிறந்து தத் அனுரூபமான அனுஷ்டானமும் உண்டானால் பிராமண்யம் சித்திக்குமா போலே ,சந்தங்கள் ஆயிரம்–திருவாய்-10-9-11- என்ற படியே சந்தோ ரூபமாய் சகஸ்ர சாகையாய் இருக்கிற திருவாய் மொழியை-அறியக் கற்று வல்லார் வைட்டணவர்––திருவாய்-5-5-11-என்கிற படியே அத்யே தவ்யம் திவிஜ ஸ்ரேஷ்டை வேத ரூபம் இதம் க்ருதம்- என்கிற பிரகாரத்திலே ஆச்சர்ய உச்சாரண அனுசாரண முகேன அப்யசிக்கை யாகிற அத்யயனத்தை பண்ணி உபதேச முகத்தாலே தத் அர்த்த ஞானம் பிறந்து தத் அனுரூபமாக அனுஷ்ட்டிக்கவும் வல்லார் ஆனால் ஆய்த்து வைஷ்ணத்வம் சித்திப்பது என்கை –

அத்‌யயநமாவது – ஓதுகை. ஜ்ஞாநமாவது அதில்‌ அர்த்த பரிஜ்ஞாநம்‌. அநுஷ்டாநமாவது – அறிந்தபடியே அநுஷ்டிக்கை என்று இவற்றாலே ப்‌,ராஹ்மண்ய மாகிறாப் போலே, (சந்தங்களாயிரமும்‌) ““சந்தங்களாயிரத்திவை வல்லார்‌” (திருவா. 10 – 9 – 11) என்று சந்தோ ரூபமான ஆயிரத்தையும்‌, “அறியக்‌ கற்று வல்லார்‌ வைட்டணவர்‌”’ (திருவா. 5 – 5 – 11) என்கிறபடியே திருவாய்மொழி ஆயிரமும்‌ அத்‌யயநம் பண்ணி, ஆசார்ய முகத்தாலே அர்த்த ஸ்ரவணம் பண்ணி, அறிந்த படியே அநுஷ்டிக்கவும்‌ வல்லாரானாலாய்த்து வைஷ்ணவத்வம்‌ ஸித்‌தித்ததாவது. ‘ஸ்வாத்‌யாயோத்‌ யேதவ்ய?”‘ (தை. ஆ.2) என்கிற விதி போலே “அத்‌யேதவ்யம்‌ த்விஜ ஸ்ரேஷ்டை வேத ரூபமித,ம்‌ க்ருதம்‌?” என்று அந்த வேதாந்த தாத்பர்யமாய்‌, இந்த திராவிட வேதத்துக்கு உள்ளீடான பாகவத ஸேஷத்வ பர்யந்தமான பகவச்‌ சேஷத்வ பரிஜ்ஞாநா பாவத்தால்‌ ப்‌ராஹ்மண்ய ஸித்‌தியுமில்லை –

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-சந்தங்களை யுடைத்தான ஆயிரம் என்னுதல் -சந்தோ ரூபமான ஆயிரம் என்னுதல் -இப்பத்தையும் அப்யஸிக்க வல்லார் அத்தேசத்திலே பகவத் குண அனுபவம் பண்ணி -அதிலே வித்தராய் அதுக்கு அவ்வருகு கால் வாங்க மாட்டாதே இருக்குமவர்களைப் போலே யாவர் –

அறிவரிய பிரானை ஆழி அம் கையனையே அலற்றி
நறிய நன்மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துளிவை பத்தும் திருக்குறுங்குடி யதன்மேல்
அறியக் கற்று வல்லார் வைட்ணவர் ஆழ்கடல் ஞாலத்துள்ளே.–5-5-11-பரம பதத்திலும் அவதாரங்களிலும் திருக்குறுங்குடி நிலையிலே அழகாலும் சீலத்தாலும் உண்டான ஏற்றம் அறிந்து கற்க வல்லவர்கள் -குணாதிக்யம் இறே வஸ்துவுக்கு ஏற்றம் -வியக்தமாக கற்க வல்லார்கள் என்றுமாம்-மரு பூமியான சம்சாரத்திலே -உகந்து அருளினை ஏற்றம் அறியுமவர்கள் நித்ய ஸூ ரிகளோடு ஒப்பார்கள்-

அந்த வேத அத்யயனாதிகள் உடையவர்களுக்கு இந்த வேத அத்யயனாதிகள் இல்லாத அளவில் வைஷ்ணத்வ அஸித்தி ஒழிய பிராமணிய ஹானி இல்லையே என்ன சொல்லுகிறது மேல் ..அவர்களுடைய உத்பத்தியும்‌ நிரூபிக்க வேணுமென்கிறார்‌–

இந்த உள் பொருள் கற்று உணர்ந்து மேலைத் தலை மறையோர் ஆகாதாரை அயல் சதுப் பேதிமார் என்று உத்பத்தி நிரூபிக்கும்-சூரணை -38-

அதாவது
மிக்க வேதியர் வேதத்தின் உள் பொருள் -கண்ணி நுண் – 9—என்று உபநிஷத் குஹ்யமான
இந்த திராவிட வேதார்த்தத்தை –கற்று உணர்ந்த மேலை தலை மறையோர்-முதல் திருவந்தாதி -66–என்கிற படியே-ஆச்சார்ய உபதேச முகேன கற்று அறிந்து உத்க்ருஷ்டரான-வேதாந்திகள் ஆகாதவரை –அயல் சதுப் பேதிமார் -திருமாலை -39-என்று — வேத அத்யயன பிரயோஜனம் ஈஸ்வரனை உள்ளபடி அறிந்து , ஸ்வரூப அனுரூபம் புருஷார்த்தம் கைங்கர்யம் என்று இருக்கையாய் இருக்கிற இந்த ஞான பாவத்தாலே ,நாலு வேதங்களையும் அதிகரிக்கச் செய்தே அந்த வேதத்தோடு தங்களுக்கு ஒட்டு இன்றி அதுக்கு அசலானவர்கள் என்று அறுதி இட்டு –-விஷ்ணு பக்தி விஹீநோய சர்வ சாஸ்த்ரார்த்த வேத்யபி
ப்ராஹ்மண்யம் தஸ்ய ந பவேத் தாஸ் யோத்பத்திர் நிரூப்யதாம்
-பாத்ம புராணம் –என்கிற படியே
இவர்கள் பிராமணர் அல்லர் என்று உத்பத்தி ஆராயப் படும் என்கை ..-யா புத்ர பிதரம் த்வேஷ்டிதம் வித்யா தந்த்யரேசதம் -யோ விஷ்ணும் சததம் த்வேஷ்டி தம் வித்யா தந்த்யரேசதம் –என்னக் கடவதிறே..

““மிக்க வேதியர்‌ வேதத்தினுட்பொருள்‌‘” (க.நு.சி. 9) என்று உபநிஷத்‌ குஹ்யமுமான இந்த த்‌ராவிட வேதத்தினுடைய ரஹஸ்யார்த்தத்தை, (கற்றுணர்ந்து மேலைத் தலைமறை யோராகாதாரை) ““வேட்பனவும்‌” (மு.திருவ.66) என்கிறபடியே கற்றுணர்ந்தும்‌ அநுஷ்டாந பரருமாகாதாரை ““அயல் சதுப்பேதிமார்கள்‌”” (திருமாலை 39) என்று அசலிட்டு உத்பத்தி நிரூபிக்கக் கடவதிறே. ‘‘ஓளபாஸநி ஸஹஸ்‌ரேப்‌யோ ஹ்யாஹிதாக்‌நிர் விஸிஷ்யதே | ஆஹிதாக்‌நி ஸஹஸ்ரேப்‌,யஸ் ஸோமயாஜி விஸிஷ்யதே | ஸோமயாஜி ஸஹஸ்ரேப்‌,யஸ் ஸத்ரயாஜி விஸிஷ்யதே ! ஸத்ரயாஜிஸ் ஸஹஸ்ரேப்‌,யஸ் ஸர்வவேதாந்த பாரக,ீ ! ஸர்வ வேதாந்த வித்கோட்யா விஷ்ணு ப,க்தோ விஸிஷ்யதே । விஷ்ணு ப,க்தி விஹீநோ யஸ் ஸர்வ ஸாஸ்த்ரார்த்த, வேத்‌,யபி ! ப்‌,ராஹ்மண்யம்‌ தஸ்ய ந பவேத்‌ தஸ்யோத் பத்திர் நிரூப்யதாம்‌ ‘ –(பாத்ம புராணம் –)என்னக் கடவதிறே –

மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள்
நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர் சடகோபன் என்னம்பிக்கு ஆட்
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே -9–ப்ரமாண ஸ்ரேஷ்டமான வேதத்தை நிரூபகமாக உடையவர்கள் –உளன் சுடர் மிகு சுருதியுள் -என்று ஆழ்வார் அருளிச் செய்ய கேட்டிருக்கையாலே – அநேக சாக அத்யயனம் -பண்ணினவர்கள் என்றுமாம் –சகல வேதங்களின் உடைய ரஹஸ்யார்த்தத்தை – வேதாந்த ரஹஸ்யம் –ததீய சேஷத்வ பர்யந்தமான பகவத் சேஷத்வம் என்று இறே-வைதிக சாஸ்திரம் நிர்ணயித்தது-துர்க்ரஹமான இந்த ரஹஸ்யார்த்தத்தை கேட்பார்க்கு பிரதிபத்தி விஷயமாம் படி –பாடி –
பரமனைப் பயிலும் திரு வுடையார் எவரேலும் -என்றும் –எம்மை யாளும் பரமர் -என்றும்-அருளிச் செய்தார் இறே-பகவத் சேஷத்வத்துக்கும் கூட மேட்டு மடையான என் நெஞ்சிலே இத்தை
ஸ்திரமாக்கினார் –-கல்லைத் துளைத்து அதிலே நீரை நிறுத்துவாரைப் போலே நிர் விவரமான என்  நெஞ்சுக்கும் இதுவே விஷயமாம் படி பண்ணினார்–இது இறே –என் தண்மையைப் பாராதே என் திறத்தே பண்ணின உபகாரம்

காலை எழுந்து உலகம் கற்பனவும் கற்று உணர்ந்த
மேலைத் தலை மறையோர் வேட்பனவும் வேலைக் கண்
ஓராழி யானடியே யோதுவது மோர்ப்பனவும்
பேராழி கொண்டான் பெயர் ——66–அறிவு தலைக் கட்டினவர்கள்-பாவன பிரகர்ஷத்தாலே சாஷாத் கரிப்பனவும்-அறிவு தலை நின்றேறி அறிந்தவர்கள் பாவனா பிரகர்ஷத்தாலே சாஷாத் கரிக்க ஆசைப் படுமதுவும் –

அடிமையில் குடிமை யில்லா அயல் சதுப் பேதிமாரில்
குடிமையில் கடமை பட்ட குக்கரில் பிறப்பரேலும்
முடியினில் துளபம் வைத்தாய் மொய் கழற்கு அன்பு செய்யும்
அடியரை உகத்தி போலும் அரங்க மா நகர் உளானே–39–கைங்கர்யம் நமக்கு கர்த்தவ்யம் என்று இருக்கும் அவர்கள் அன்றிக்கே இருக்கை –கைங்கர்யம் ஆகிறது -சஹஜம் – அது ஒழியச் செல்லாது இருக்கை யாவது -பிராப்தம் – அது இன்றிக்கே இருக்குமவர்கள் –அடிமைக்கு அசலான சதுர் வேதிகளாய் இருப்பாரில் காட்டில் –வேதத்யயனம் -பண்ணுகிறதுக்கு பிரயோஜனம்-ஈஸ்வரனை உள்ளபடி அறிகையும்-தன்னை உள்ளபடி அறிகையும் – கைங்கர்யம் ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தம் என்று அறிகையும் -ஆய்த்து –அசல் ஆகையாவது – இந்த ஜ்ஞானத்துக்கு உடலாக வேத அத்யயனம் பண்ணுகிறோம் என்று அறியாது இருக்கை –-அத்யயன பலம் அர்த்த ஜ்ஞானம் என்று அறியாதவர்கள்-சதுர் வேதிகள் ஆனாலும் நிஷ் பிரயோஜனம் -என்கை –விஷ்ணு பக்தி விஹீ நோயஸ் சர்வ சாஸ்த்ரார்த்த வேத்யபி ப்ராஹ்மண்யம் தன் நபவேத் தச்யோத்பத்திர் நிரூப்யதாம் – என்னக் கடவது இறே –

ஆக கர்ம கைங்கர்யங்கள் -26-என்று தொடங்கி– இவ்வளவாக இரண்டும் இன்னத்துக்கு அனுகுணம் என்றும்-இவற்றுக்கு பிரேரக ஆஸ்ரய விஷய பேதங்களும் இவற்றின் சாதாரண அசாதாரணத்வமும்
அசாதாரண அன்வயத்தில் சாதாரண நிவ்ருத்தியும் , கைங்கர்ய நிஷ்டருக்கு கர்ம நிஷ்டரோடு பொருந்தாமையும்அதுக்கு அடியாக இருவருடைய ஜன்ம நிரூபக கூடஸ்த பேதங்களும் ,
இருவருக்கும் பிராமணிய வைஷணத்வ ஸித்தி ஹேதுக்களும் , திராவிட வேதார்த்த ஞான அபாவத்தில் ஸ்வாதீத வேதாநன்வயராய் நிஹீனத்வ புத்தயர்ஹராம் படியும் சொல்லிற்று-

சாஸ்த்ர சாஸ்த்ர தாரதம்ய பிரகரணம் முற்றிற்று

–——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌ – 3-விஷய பாதம்-3-ஸாஸ்த்ர தாத்பர்ய விஷய விஸேஷாதிகரணம்‌ -(17-18) ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

June 29, 2026

(1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 284 முடிய (48)

(1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-284 (27)

ஆக சர்வேஸ்வரன் தன் கிருபையால் சம்சாரி சேதனரை உஜ்ஜீவிப்பதற்க்காக
சாஸ்திரத்தையும் சாஸ்திர தாத் பர்யமான திரு மந்தரத்தையும் வெளி இட்டான் என்றது கீழ் -இவை இரண்டையும் வெளி இட்ட பிரகாரம் என் ? அவற்றுக்கு விஷயம் எது ? என்னும் ஆகாங்ஷையிலே தத் பிரகாரங்களையும் தோற்றுவித்துக் கொண்டு விஷயங்களையும் சொல்லுகிறது மேல்-(ஸாஸ்த்ரத்தையும்‌ ஸாஸ்த்ர தாத்பர்யமான திருமந்த்ரத்தையும்‌ வெளியிட்டருளினான்‌ என்று நின்றது கீழ்‌ ; அவற்றை வெளியிட்ட ப்ரகாரமென்‌ ; அவற்றுக்கு விஷயமேது” என்கிற சங்கையில்‌ சொல்லுகிறது)

முனிவரை இடுக்கியும்–முந்நீர் வண்ணனாயும்-வெளி இட்ட சாஸ்திர தாத் பர்யங்களுக்கு
விசிஷ்ட நிஷ்க்ருஷ்ட வேஷங்கள் விஷயம்
-சூரணை 17–

அதாவது –இருள்கள் கடியும் முனிவர்-திருவாய் -10-7-7– -என்கிற ஸ்ம்ருதி கர்த்தாக்களான
(இருள்கள் கடியும் முனிவர் -ஸ்ருதி–ஸ்மர்த்தா -ஸ்மர்த்தர்-மனன சீலர் -ராம ஷேம மனன சீலத்வம் பரத்வாஜருக்கு -ஜகத் ரக்ஷண சிந்தை முனியே -அவனையே சொல்லுவார் ) வியாஸாதி ரிஷிகளை கிருஷ்ணத் த்வைபாயனம் வியாசம் வித்தி நாராயணம் பிரபும் கோஹ்யன்ய புண்டரீகாஷாத் மகா பாரத க்ருத் பவேத் –என்கிற படியே-தானாகச் சொல்லலாம் படி அந்தர்யாமியாய் எடுத்து நின்று தன் முகேன வெளி இட்ட சாஸ்தரத்துக்கு சேதனருடைய தேக விசிஷ்ட வேஷம் விஷயம்-வதரி யாஸ்ரமத்துள்ளானை கரும் கடல் முந்நீர் வண்ணனை -என்கிற படியே-ஸ்ரீ பதரி ஹாஸ்ரமத்திலே ஸ்வேன ரூபேண நின்று வெளி இட்ட-சாஸ்திர தாத் பர்யமான திரு மந்த்ரத்துக்கு சேதனருடைய நிஷ்க்ருஷ்ட வேஷம் விஷயம் என்கை–இத்தால் சாஸ்த்ரத்தில் தேஹத்திலே நோக்கு-தாத் பர்யத்திலே ஸ்வரூபத்திலே நோக்கு -என்றது ஆய்த்து-

இருள்‌கள்‌ கடியும்‌ முனிவரும்‌” (திருவாய்‌. 10 – 7 – 7) என்கிற ஸ்மர்த்தாக்களான வ்யாஸாதி,களுக்கு க்ருஷ்ண த்‌வைபாயநம்‌ வ்யாஸம்‌ வித்‌தி, நாராயணம்‌ ப்ரபு,ம்‌ | கோஹ் யந்ய: புண்ட,ரீகாஷாந் மஹா பாரத க்ருத்‌,பவேத்‌”’ (வி.பு. 3 – 4 – 5) என்கிறபடியே அந்தர்யாமியாய் நின்று தந் முகேந ப்ரவர்த்திப்பித்த ஸாஸ்த்ரங்களுக்கு விஷயம்‌ இவர்களுடைய தேஹ விஸிஷ்ட ஸ்வரூபம்‌ என்றும்‌, *“கருங்கடல்‌ முந்நீர்வண்ணன்‌”’ (திருமொழி 1 – 4 10) என்கிறபடியே ஸ்ரீபதரிகாஸ்ரமத்திலே ஸ்வேந ரூபேண நின்று வெளியிட்ட தாத்பர்யமான திருமந்த்ரத்துக்கு விஷயம்‌ சேதநருடைய நிஷ்க்ருஷ்ட ஸ்வரூபம்‌ என்றும் சொல்லப்பட்டது ; ஸாஸ்த்ரத்துக்கு தேஹத்திலே நோக்கு; தாத்பர்யத்துக்கு ஸ்வரூபத்திலே நோக்கு என்றதாய்த்து –

அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும்
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும்
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை
மருள்கள் கடியும் மணி மலை திருமால் இரும் சோலை மலையே–10-7-7-அஞ்ஞான அந்தகாரத்தை வாசனையோடு போக்கும் ஸ்மர்த்தாக்களும் –இவர்கள் எல்லாரும் கூட ஏத்தும் சர்வேஸ்வரனுடைய திருமலை –

வரும் திரை மணி நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானை
கரும் கடல் முந்நீர் வண்ணனை எண்ணிக் கலியன் வாயொலி செய்த பனுவல்
வரம் செய்த வைந்தும் ஐந்தும் வல்லார்கள் வானவர் உலகுடன் மருவி
இரும் கடல் உலகம் ஆண்டு வெண் குடைக் கீழ் இமையவராகுவர் தாமே —1-4-10-முந்நீரான கரும் கடல் –
ஆற்று நீர் -ஊற்று நீர் -வேற்று நீர் -வர்ஜ ஜலமான –மூன்று வகை நீரை உடைத்தாய் கறுத்த நிறத்தை உடைய கடல் போலே இருக்கிற நிறத்தை உடையவனை அனுசந்தித்து ஆழ்வார் அருளிச் செய்த பாட்டுக்கள்-

ஏவம் பூதமான இவை இரண்டும் சர்வ அதிகாரமோ அதிகிருதா அதிகாரமோ என்ன சொல்லுகிறது மேல்-(இவை யிரண்டும்‌ ஸர்வாதிகாரமா யிருக்குமோ? அதி க்ருதாதிகாரமா யிருக்குமோ? என்கிற சங்கையிலே சொல்லுகிறது)

தோல் புரையே போம் அதுக்கு பழுதிலா யோக்யதை வேணும் மனம் உடையீர் என்கிற ஸ்ரத்தையே அமைந்த மர்ம ஸ்பர்சிக்கு நானும் நமரும் என்னும் படி சர்வரும் அதிகாரிகள்-சூரணை -18-

அதாவது விசிஷ்ட வேஷம் விஷயம் ஆகையாலே ஆந்தரமான ஸ்வரூபத்தில் ஊற்றம் இன்றியே
மேல் எழ தேஹத்திலே நோக்காய் -(மேம் பொருள் போக விட்டு உண்டே )நடக்கிற சாஸ்தரத்துக்கு
பழுதிலா ஒழுகலாறு –
என்ற படி நெடுக போகிற வம்ச பிரவாகத்திலே உத்பத்தியிலே ஆதல் ஆசாரத்திலே ஆதல் ஒரு பழுது அற்று இருக்கிற யோக்யதை வேணும்-கண்ணன் கழலினை நண்ணும் மனம் உடையீர்-திருவாய் -10-5-1- என்றும்-ஸ்ரத்தைவ காரணம் பும்ஸாம் அஷ்டாஷா பரிக்ரஹே என்றும் சொல்லுகிற படியே (ஆசை உடையார்க்கு எல்லாம் இத்தையே தமிழ் படுத்தி கிருபா மாத்ர பிரசன்னாச்சார்யார் -நம் ஸ்வாமி ) ஸ்ரத்தா மாத்திரமே அமைந்த ஸ்வரூப ஸ்பர்சி யான தாத் பர்யத்துக்கு நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாரயணமே –என்று சொல்லும் படி யோக்ய அயோக்ய விபாகமற சர்வரும் அதிகாரிகள் என்கை—இத்தால் சாஸ்திர தாத் பர்யங்களின் அதிக்ருதாதிகாரத்வ சர்வாதிகாரத்வங்களை தத் ஹேது சஹிதமாகச் சொல்லிற்று ஆயிற்று-

தேஹ விஸிஷ்ட ஸ்வரூபத்தை விஷயமாக உடைத்தாகையாலே தேஹாவஸாநமே தனக்கு அவஸாநமான ஸாஸ்த்ரத்துக்கு ”பழுதிலா ஒழுகலாற்றுப் பல சதுப் பேதிமார்‌கள்‌” ்‌ (திருமாலை 42) என்கிறபடியே அதிகாரி ஸம்பத்தி ஸாபேக்ஷமாயிருக்கும்‌. “மன முடையீர்‌” என்கையாலே * “கண்ணன்‌ கழலிணை நண்ணும்‌ மனமுடையீர்‌”” (திருவாய்‌. 10 – 8 – 1) என்றும்‌, “ந தீர்த்தம்‌ ந ச நக்ஷத்ரம்‌ ந க்‌ரஹா ந ச சந்த்‌ரமா: ஸ்ரத்‌தைவ காரணம்‌ ந்ரூணாம்‌ அஷ்டாக்ஷர பரிக்‌ரஹே”” (பாஞ்சராத்ரே) என்றும் சொல்லுகிறபடியே ஸ்ரத்‌தா மாத்ரமே அமைந்த ஸ்வரூப ஸ்பர்ஸியான தாத்பர்யத்துக்கு “நானும்‌ சொன்னேன்‌ நமருமுரைமின்‌ நமோ நாராயணமே ‘ (திருமொழி 6 – 10 – 6) என்கையாலே அதிகாரி நியமமில்லை. இத்தால்‌ ஸாஸ்த்ரம்‌ அதி க்ருதாதிகாரமா யிருக்கும்‌ ; ஸாஸ்த்ர தாத்பர்யமான திருமந்த்ரம்‌ ஸர்வாதிகாரமென்றதாய்த்து –

–——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்