ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -87-புலம்பும் கன குரல் போழ் வாய அன்றிலும் –பண்டை நாளாலே -9-2-

March 27, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

அன்றில் கிரௌஞ்ச மிதுனம் -ஒலி -விஸ்லேஷ துக்கம்-ஆழி -கடலின் பேர் இரைச்சல் -ஸம்ஸ்லேஷ ஸூகம்-கருடவாஹனன் என்று ஸ்தோத்ரம் பண்ணுவதே குற்றமாகக் கொண்டு உபேக்ஷித்து
வையமே சிலம்பும்படி-இத்திரு -மிதுனத்தைப் பற்றின இத்திரு-திருமால் இப்படிச் செய்வதே -மாலையைப் பற்றிய அத்திரு துறையடைவு–தலைவி ஆற்றாமைக்கு தோழி இரங்குதல் –-பண்டை நாளாலே -9-2-திருமால் உகப்புக்குக்காகக் கைங்கர்யம்-காய்சின வாழி சங்கு வாள் வில் தண்டேந்தி
எம்மிடர் கடிவானே–9-2-6-மூலவர் உத்சவர்கள் திருநாமங்கள் இதில் உண்டே
-தாய் பாசுரம் என்றும் தோழி பாசுரம் என்றும் கொள்ளலாம்-

அவதாரிகை –உன்னைப் பிரிந்த அளவிலே பாதக பதார்த்தங்கள் இவளை நலிந்து ஈடுபட்டது கண்டு –
லோகமாக கூப்பிடும்படி பண்ணுவதே -என்று திருத் தாயார் வார்த்தையாய் இருக்கிறது–அன்றிற்கும் ஆழிக்கும் ஆற்றாத தலைவிக்குத் தோழி இரங்குதல் –

உன்னை பிரிந்த அளவிலே பாதக பதார்த்தங்கள் இவளை நலிந்து ஈடுபட்டது கண்டு – லோகமாக கூப்பிடும்படி பண்ணுவதே – என்று திருத் தாயார் வார்த்தையாய் இருக்கிறது -அன்றிற்கும் ஆழிக்கும் ஆற்றாத தலைவிக்குத் தோழி இரங்குதல் –

இப்படி இவருடைய ஆர்த்த ஸ்வரத்தைக் கேட்ட ஸூஹ்ருத்துக்கள் இவருடைய ஆர்த்தியின் மேலே லௌகிக வியாபாரங்கள் ஸ்மாரகமாய்க் கொண்டு இவரை நலிகிற படியைக் கண்டு இப்படி லோக உபக்ரோசம் பிறக்கும் படி ஸ்மாரகங்கள் நலிவதே என்ற ஈஸ்வரனை நோக்கி யுட் கொண்டு
வெறுத்து உரைத்த பாசுரத்தை அன்றிலுக்கும் ஆழிக்கும் ஆற்றாத் தலைவி தளர்த்தியைக் கண்டு
தோழி கிளர்ந்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-அவதாரிகை-அனுகூல பதார்த்தங்களும் பிரதிகூலமாய் இவள் நோவு பட அத்தாலே
இவளையும் உம்மையும் நாட்டார் பழி சொல்லும்படியான செயல்களை நீர் பண்ணுவதே என்று திருத்தாயார் சொல்லுகிறாள் –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-அவதாரிகை-இப்படி உன் பிரிவு பொறாமல் உன்னைப் புலம்பும் இத்திருவினை அன்றிலும் ஆழியும் பாதிப்பதும் உன்னைப் பாடுமது குற்றமாக வையம் எல்லாம் இவளைப் பழி சொல்லுமத்தும் செய்வதே திருமால் என்று சொல்லும் தாயாராய் அருளிச் செய்கிறார் இதில் —

புலம்பும் கனகுரல்  போழ்வாய வன்றிலும் பூம் கழி பாய்ந்து
அலம்பும் கனகுரல் சூழ் திரை யாழியும் ஆங்கவை நின்
வலம் புள்ளது நலம்பாடுமிது குற்றமாக வையம்
சிலம்பும்படி செய்வதே திருமால் இத்திருவினையே –
87-தலைவி ஆற்றாமைக்குத் தோழி இரங்குதல் –

திருமால்–பிராட்டியினிடத்து மோஹமுள்ளவனே!
புலம்பும்–(விரஹவேதனையால்) கத்துகிற
கன குரல்–கனத்த குரலையுடைய
போழ் வாய் அன்றிலும்–பிளந்த வாயையுடைய அன்றிற் பறவையும்-போழ்-பிரிந்தாரை இறு துண்டாக விடுவாரை-
பூ கழி பாய்ந்து அலம்பும்–அழகிய கழியினுள்ளே புகும்படி பாய்ந்து அலருகிற
கன குரல்–கம்பீரமான தொனையையுடைய
சூழ் திரை ஆழியும்–சூழ்ந்த அலைகளையுடைய கடலுமாகிய
ஆங்கு அவை–அவ்வவ்விடத்திலுள்ள அந்தந்த பாதக வஸ்துக்களானவை.
நின் வலம்புள்ளது நலம் பாடும் இது குற்றம் ஆக–உனது வலிமையையுடைய கருடப்பறவையினது நன்மையை
(இவள்) எடுத்துப் பாடுகிற இதுவே குற்றமாகிக்கொண்டு
வையம் சிலம்பும்படி–உலகத்தார் முறையிடும்படி-குற்றம் சொல்லி கோஷிக்கும் படி
இத் திருவினை–திருமகள் போன்ற இப்பெண்ணை
செய்வதே–துன்ப்படுத்துவதே! (இது தகுதியோ?)

பண்டை யுறவான பரனைப் புளிங்குடிக்கே
கண்டு எனக்கு எல்லா வுறவின் காரியமும் -தண்டற நீ
செய்தருள் என்றே யிரந்த சீர் மாறன் தாளிணையே
உய்துனை என்று உள்ளமே ஓர்
—82–இப்படி நிருபாதிக பந்துவான ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு சர்வவித பந்து க்ருத்யமும் செய்ய வேணும்-என்று ஸ்ரீ திருப் புளிங்குடியிலே போய்ப் புக்கு-அங்கே ஸ்ரீ பிராட்டியாரோடு கூட- பள்ளி கொண்டு அருளுகிற-ஸ்ரீ காய்ச்சின வேந்தைக் குறித்து – திருப் பவளத்தைத் திறந்து ஒரு இன் சொல்லுச் சொல்ல வேணும் –மா ஸூ ச -உபாயத்துக்கு சோகப்படாதே– க்ரியதாம் மாம் வத -கைங்கர்யம் – திருக் கண்களை அலர விழித்துக் குளிர நோக்கி அருள வேணும்–திருவடிகளைத் தலைக்கு அலங்காரமாக வைத்து அருள வேணும் –-ஸ்ரீ பிராட்டியும் ஸ்ரீ தேவருமாக திவ்ய சிம்ஹாசனத்திலே எழுந்து அருளி இருக்க வேணும்–கண் முகப்பே நாங்கள் சசம்ப்ர்ம ந்ருத்தம் பண்ணும்படி உலாவி அருள வேணும்-என்றால் போலே ஒரு கோடி வெள்ளங்களை-அவர் சந்நிதியிலே-அசல் அறியாதபடி- பிரார்த்திக்கிற பண்டை நாளில் -அர்த்தத்தை பண்டை யுறவான இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -ஏவம் விதராண ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை –நாசத்தை விளைக்கும் துணை போல்-அன்றிக்கே-உஜ்ஜீவனத்தைப் பண்ணும் துணை என்று மனசே-அனுசந்தித்துப் போரு-என்கிறார் –

புலம்பும் கனை குரல் –பலவற்றைச் சொல்லிக் கூப்பிடுவதாய் -செறிந்த த்வனியை உடைத்தாய் –
உன்னைக் கூடி பிரிந்து தனி இருப்பாரை -இரு துண்டமாக விடுகிற வாயை வுடைய அன்றிலும் –பூம் கழி இத்யாதி –அழகிய கழியில் வரப் பாயா நிற்பதாய் –அலை எறியா நிற்பதாய் – ஊமை கூறனான த்வனியை உடைத்தாய் -பரந்த திரைகளை உடைய கடலும் –ஆங்கவை –பிரிந்து இருப்பார்க்கு மற்றும் பாதகமான சேக்கள் கழுத்திலே மணி ஓசை என்ன –சந்த்ரோதயம் என்ன -தென்றல் என்ன -இப்படிப் பட்ட பாதகங்களை சொல்லிற்று ஆதல் –அன்றிக்கே –கீழ்ச் சொன்னவை தன்னையே சொல்லிற்று ஆதல் இவை பாதகமாகா நின்றன –என்ன குற்றம் செய்தாள் என்று பாதகம் ஆகிறது என்ன –நின் வலம் புள் இத்யாதி –உனக்கு அசாதாரணமாய் -பலத்தை உடைத்தாய் – கருடோ வாருணம் சத்ரம் ததைவ மணி பர்வதம் -சபார்யஞ்ச ஹ்ருஷீகேசம் லீலயைவ வஹந்யயௌ -என்கிறபடியே தாரண சாமர்த்தியத்தை உடையனான திருவடி உடைய நலமுண்டு –நன்மை- அத்தைப் பாடினது குற்றமாக –த்வதங்க்ரி சம்மர்த கிணாங்க சோபினா  (ஸ்தோத்ர ரத்னம் )-என்கிறபடியே- அவனுக்கு அடிமை செய்து அவன் தழும்பு சுமந்தாப் போலே சம்ஸ்லேஷ சிஹ்னங்களை-தரிக்க வேணும் என்று ஆசைப்பட்டு –
அவனைப் பாடின இது குற்றமாக–வையம் சிலம்பும்படி செய்வதே –சிறியார் பெரியார் என்ற வாசி இன்றிக்கே -இருந்ததே குடியாக- கை எடுத்து பழி சொல்லும்படி பண்ணுவதே –திருமால் – நீர் தான் பிரணயிகள் அல்லீராய்  தான் இப்படி செய்கிறீரோ –இத் திரு வினையே –உம்மை ஆசைபட்டவளில் குறைந்தாளோ-அவளோடு கூடின உம்மை ஆசைப்பட்டவள் –ராவணாதிகள் பெருமாளைப் பழி சொல்ல ராஷசிகள் தன்னை நெருக்க இருந்தவளைப் போலே இருக்க வல்லளோ –இவள் அன்றில் -கடலோசை -தொடக்கமானவை இவளை நலிய-அத்தாலே இவள் நோவு படா நின்றாள் என்று நாட்டார் பழி சொல்ல நீர் விட்டு வைப்பதே – உம்முடைய மகிஷி நோவு பட பார்த்து இருக்கை உமக்கு குறை யன்றோ -என்றபடி –

ஆற்றாமை மிக்கு துயரம் தணியும் பொருட்டு பெரிய திருவடியின் சிறப்பை பாராட்டி நிற்க -அன்றிலின் குரலும் கடல் ஓசையும் சேர்ந்து நலிய -விரஹ வேதனை வளர்ந்து – பெண்ணை மேல் பின்னும் அவ் வன்றில் பெடை வாய்ச் சிறு குரலும் என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர் வாளாம் என் செய்கேன்-பெரிய திருமடல் –பூம் கழி பாய்ந்து-அலம்பும் கனகுரல் சூழ் திரை யாழியும்-நதி பதியாகிய கடல் அழகிய கழியின் உள்ளே புகப் பாய்ந்து அலை மறிந்து பெரு முழக்கம் செய்வது மனைவியை கைகளால் ஆரத் தழுவி ஆரவாரம் செய்வது போலே இருக்க விரஹ தாபம் விஞ்சும்–புள்ளது நலம் -எம்பெருமானை ஆஸ்ரிதர்கள் இருக்கும் இடம் எழுந்து அருள பண்ணுவதே நலம் -உனக்கு அடிமை செய்து
தழும்பு கொண்டால் போலே இவளும் சம்ச்லேஷ அடையாளங்களை தரிக்க ஆசைப்பட்டு பாடின இது குற்றமாக – பாதகங்கள் நலிய இவள் நோவு பட்டாள் என்று நாட்டார் பழி சொல்லும் படி நீர் விட்டு வைப்பதே-வையம்-சிலம்பும்படி செய்வதே-இவள் தளர்ச்சிக்காக -தாயார் தோழியர் உற்றோர் உறவினர் ஊரார்-அனைவரும் முறையிடுதல்–திருமால் இத்திருவினையே -ஒருத்திக்கு அப்படி இவளுக்கு இப்படியா -இவள் நிழல் போலே என்றாலும் இவளையும் நீ பார்க்க வேண்டாவோ-உன் மஹிஷி நோவு பட பார்த்தல் உனக்கு குறை அன்றோ-திருமால் ! நான் முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம்பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசியென்-ஒரு மா முதல்வா ! ஊழிப் பிரான் ! என்னை யாளுடை கரு மா மேனியன் ! என்பன் என் காதல் கலக்கவே –திருவாய் -8-3-9-போலே –-இங்கும் திருமால் -அண்மை விளி ஆங்கவை-பிரிந்து இருப்பிற்கு மற்றும் பாதகமான சேக்கள் கழுத்தில் மணியோசை என்ன -சந்திரோதயம் என்ன -தென்றல் என்ன-இப்படிப் பட்ட பாதகங்களை சொல்லிற்று ஆதல்

அன்றிற் குரலுக்கும் கடலோசைக்கும் ஆற்றாத தலைவியின் நிலைமை கண்டு தோழி இரங்கிக் கூறும் பாசுரம் இது.-அதாவது- நாயகியின் தளர்ச்சியைக் கண்ட தோழி தானும் தளர்ச்சியடைந்து, பாவநாப்ரகருஷத்தாலே நாயகனை எதிரிற் கொண்டு முன்னிலைப்படுத்தித் தன்னிலே யுரைத்த பாசுரம். அன்றி, தோழி தலமைகனை எதிர்ப்பட்டுத் தலைமகளின் ஆற்றாமையை அவனுக்குக் கூறியுணர்த்துவது என்னவுமாம். உன்னிடத்தில் அன்பு கொண்டு தலைவி, உன்னைப் பிரிந்த நிலையில் அத்துயரம் ஒருவாறு தணியும் பொருட்டு உனக்கு வாஹனமாய் உது நித்யஸம்பந்தம் பெற்றுள்ள பெரிய திருவடியின் சிறப்பைப் பாராட்டிக் கூறி நிற்க,’
அதனைக் கண்டு. அதனால், இவள் பிரிவாற்றாத மெல்லிய ளென்று உணர்ந்து அன்றிற் குரலும் கடலொளியும் அவ்வாற்றாமையின் மேலும் தாமும் ஹிம்ஸை பண்ணக் கடவனோ வென்கிறாள். ஆணும் பெண்ணுமான அன்றில் இணைபிரியாமல் நெருங்கி ஒன்றொடொன்று வாயலகைக் கோத்துக்கொண்டு உறங்கும்பொழுது அவ்வுறக்கத்திலே வாயலகு தன்னிலர் நெகிழ்ந்தவளவிலே
துயிலுணர்ந்து அப்பிரிவைப் பொறாமல் மெலிந்து பெருந்தொளியாகக் கத்துகிற மிக இரங்கத்தக்க சிறுகுரல் விரஹ வேதனையை வளரச் செய்வதால் “புலம்புங் கன குரற் போழ்வாயவன்றிலும்” எனப்பட்டது.“பெண்ணை மேல், பின்னும்மவ்வன்றிற் பெடைவாய்ச் சிறுகுரலும், என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர்வாளாமென் செய்கேன்’ என்று திருமங்கையாழ்வாரும் பெரிய திருமடலில் அருளிச் செய்தார்.--பூங்கழிபாய்ந்து அலம்புங் கனகுரல் சூழ்திரையாழியும் = நதிபதியாகிய கடல் அழகிய கழியினுள்ளே புகப்பாய்ந்து அலைமறிந்து-பெரு முழக்கஞ் செய்வதை நோக்குமிடத்து, அது, தன் மனைவியைக் கைகளால் தழுவிக் களிப்பினால் ஆரவாரஞ் செய்வது போன்றிருத்தலால் விரஹ வேதனை மிகுகிறபடி. அஃறிணைப் பொருள்களிலும் சேதநமாகிய சிறுபறவையோடு அசேதநமாகிய
பெருங்கடலோடு வாசியறப் பிரிவுக்கு வேதனைப் படுவதையும் கலவிக்கு மகிழ்ச்சி கொள்வதையும் கண்ணெதிரிற் காணுதல் கலக்கத்துக்குக் காரணமாம்.
(புள்ளதுகலம்.) பக்தர்களை ரக்ஷிக்கும் பொருட்டு எம்பெருமானை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வந்து உதவுதல் கருடனுடைய நலமென்க.
வையம் சிலம்புதலாவது- இவளுடைய தளர்ச்சிக்காகத் தாயர் தோழியர் உற்றார் உறவினர் ஊரார் அனைவரு முறையிடல்.-திருமால்! என விளித்தது, ஒருத்திக்கு நல்லவனாயிருக்கின்ற நீ இவள் இங்ஙனம் வருந்தப் பார்த்திருத்தில் பக்ஷபாதமன்றோ? என்றவாறு.
‘இத்திருவினை’ என்ற இவளையுந் திருமகளாகவே சொன்னது. இவள் அவளுக்கு நிழல் போலிருப்பவள் என்றாகிலும் இவளைப் பார்க்க வேண்டாவோ?’ என வெறுத்துரைத்தவாறு. திரு- ஸ்த்ரீகளுட் சிறந்தவள்.–கனகுரல் – பண்புத்தொகை; நிலைமொழி வடமொழியாதலின் இயல்பாயிற்று.
‘கனைகுரல்’ என்ற பாடத்தில் ‘கனைக்கின்ற குரல்’ எனப்பொருள் காண்க; வினைத்தொகை.
போழ் வாய அன்றிலும் = தன் குரலால் விரஹிகளை இரு துண்டமாகப் பிளந்திடுகிற வாயையுடைய அன்றில் என்றும் உரைப்ப,-‘போழ்’ என்பது தன் வினை பிறவினை இரண்டுக்கும் பொது. பூங்கழி- பூக்களையுடைய கழி என்னவுமாம். வலம்- வெற்றியுமாம்.–“(ஆங்கவை) பிரிந்திருப்பார்க்கு மற்றும் பாதகமான சேக்கள் கழுத்திலே மணியோசையென்ன, சந்திரோதய மென்ன, தென்ற லென்ன
இப்படிப்பட்ட பாதகங்களைச் சொல்லிற்றாதல்” என்ற நம்பிள்ளை வீடு காண்க.
(நின் வலம்புள்ளது நலம்பாடுமிது குற்றமாக வையம் சிலம்பும்படி செய்வதே!) கருடன் உனக்கு அடிமை செய்த தழும்பு சுமந்தாற்போலே ஸம்ச்லேஷ அடையாளங்களைத் தரிக்க வேணுமென்று ஆசைப்பட்டு அக்கருடனைப் பாடினவிது குற்றமாக அன்றில் கடலோசை முதலானவை இவளை நலிய அத்தாலே இவள் நோவுபடா நின்றாளென்று நாட்டார் பழிசொல்லும்படி நீர் விட்டு வைப்பதே!,-உம்முடைய மஹிஷி நோவுபடப் பார்த்திருத்தல் உமக்குக் குறையன்றோ என்றபடி, திருமால்- அண்மை விளி;
“திருமால் நான்முகன்” (8-3-9) என்ற திருவாய் மொழிப் பாசுரத்திற்போல.–எம்பெருமானைச் சேராமையாலாகுந் துன்பத்தையும் சேர்வதனாலாகும் இன்பத்தையும் உலக நடத்தைகள் நினைபூட்டுதலால் வருந்தாநின்ற ஆழ்வாரது தன்மையைக் கண்ட அன்பர்கள், எம்பெருமானை நோக்கி “இப்படி உலகம் முறையிடும்படி இவரை இவை கலியக்கடவனவோ?’ என்று வெறுத்துரைத்தல்

திருமால் -நீர் தான் பிரணயிகள் அல்லீராய் தான் இப்படி செய்கிறீரோ –-இத் திரு வினையே -உம்மை ஆசைபட்டவளில் குறைந்தாளோ-அவளோடு கூடின உம்மை ஆசைப்பட்டவள் –-உம்முடைய மகிஷி நோவு பட பார்த்து இருக்கை உமக்கு குறை யன்றோ -என்றபடி –

புலம்பும் கனகுரல் போழ் வாயவன்றிலும்-தன்னில் தான் புகுந்து வாய் அலகைக் கொடுத்து அது உறக்கத்திலே நெகிழ்ந்தவாறே விஸ்லேஷ ஆர்த்தி பிறந்து புலம்பும்படியான பிளந்த வாயையும்
கனத்த குரலையும் யுடைய அன்றிலும்–பூம் கழி பாய்ந்து அலம்பும் கனகுரல் சூழ் திரை யாழியும்-அழகிய கழிக்கு உள்ளே புகுரப் பாய்ந்து அலைகிற கம்பீர த்வநியை யுடைத்தாய் ஆலிங்கநம் பண்ணுவாரைப் போலே சூழ்ந்த திரைக்கையை யுடைத்தான ஸமுத்ரமும்-ஆங்கவை அந்த அவைகள்-நின் வலம்புள்ளது நலம்பாடுமிது குற்றமாக-உன்னுடைய பிரபலமான பெரிய திருவடியினுடைய ஆஸ்ரித ஸம் ரக்ஷணத்தில் உதவியாகிற நலத்தைப் பாடின இதுவே குற்றமாக–வையம் சிலம்பும்படி செய்வதே-லோகம் எல்லாம் கூப்பிடும்படி யாக இவ்வன்றிலும் ஆழியும் செய்யக் கடவதோ–திருமால்
திருமாலே என்று தன்னிலே முன்னிலையாகச் சொல்லுகிறாள்-நீயும் ஒருத்திக்கு நல்லையாய் அன்றோ இருக்கிறாய்-அவள் என் நினைக்கும் என்று கருத்து–இத் திருவினையே-அத் திருவுக்கு நிழல் என்றாகிலும் இவளைப் பார்க்க வேண்டாவோ என்று வெறுத்து உரைத்தாள் ஆயிற்று —இத்தால்-சிறியாரோடு பெரியாரோடு (அன்றிலும் கடலும் )வாசியற போக அர்த்தமான பரஸ்பர ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களாலே சோக ஹர்ஷங்கள் யுண்டாய்க் கொண்டு நடக்கிற படியைக் கண்டு தமக்கு ஈஸ்வரனோடு போகம் சித்திக்கைக்கு ஈடான பரிகரம் (பெரிய திருவடி )அவனுக்கு உண்டாய் இருக்க
நமக்கு இழக்க வேண்டுவது இல்லை இறே என்கிற ஸந்தோஷமே குற்றமாக இந்த ஸ்மாரகங்கள் இவரை நலியும் படியாவதே என்று ஸூஹ்ருத பூதர் ஈஸ்வரனைக் குறித்துத் தம்மிலே வெறுத்து யுரைத்தார் ஆயிற்று

ஸ்வாபதேசம் –-இத்தால் -அத்தலையாலே வரக் கண்டார் ஆறி இருக்கை அன்றி -இவர் க்ரம ப்ராப்தி பற்றாமை பதறி மேல் விழ நீர் தாழ்த்தீர் ஆவது உமக்கு குறை அன்றோ -என்று இவர் தசையை அனுசந்தித்தவர் பாசுரமாய் இருக்கிறது – க்ஷிப்ரம் பவதி தர்மாத்மாச ஸ்வஸ் சாந்திம் நியச்சதி கௌந்தேய ப்ரதிஜா நீ ஹி நமே பக்த ப்ரணஸ் யதி–ஸ்ரீ கீதை – இவை மறந்தீரோ -என்கிறார்கள் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம் —-புலம்பும் கனகுரல் போழ் வாயவன்றிலும் -பலவற்றைச் சொல்லிக் கூப்பிடுவதாய் செறிந்த த்வனியை யுடைத்தாய் பிரிந்து தனி இருப்பாரே இரு துண்டமாக விடுகிற வாயையுடைய அன்றில்களும்-பூம் கழி பாய்ந்து அலம்பும் கனகுரல் சூழ் திரை யாழியும்-அழகிய கழியிலே வரப் பாயா நிற்பதாய் ஊமைக் கூறான த்வனியை யுடைத்தாய் பரந்த திரைகளை யுடைய கடலும்–ஆங்கவை-பிரிந்து இருப்பார்க்கு மேடும் பாதகங்களும் சேக்கழுத்தில் மணி ஓசை என்ன
தென்றல் என்ன சந்த்ர உதயம் என்ன இப்படிப்பட்ட பாதகங்களைச் சொல்லிற்று ஆதல்-கீழ்ச் சொன்னவை தன்னையே சொல்லி ற்று ஆதல்-இவை பாதகம் ஆகா நின்றன–என்ன குற்றம் செய்தாள் என்று இவை பாதகம் ஆகிறது–நின் வலம்புள்ளது நலம்பாடுமிது குற்றமாக-உனக்கு அசாதாரணமாய்
பலத்தை யுடைத்தாய்-கருடோ வாருணம் ச்சத்ரம் ததைவ மணி பர்வதம் ஸா பர்யாஞ்ச ஹ்ருஷீ கேசம்
லீலையைவ வஹந்யயவ் –
(ஸ்ரீ விஷ்ணு புராணம் –5-30-1 )என்கிறபடியே தாரண சாமர்த்தியத்தை யுடையனான பெரிய திருவடியின் நலம் உண்டு-த்வத் அங்கரி ஸம் மர்த்த கிணாங்க ஸோபிநா -ஸ்தோத்ர ரத்னம் –41- என்கிறபடியே-அவன் அடிமை செய்து தழும்பு சுமந்தால் போலே ஸம்ஸ்லேஷ சிஹ்னங்களைத் தரிக்க வேணும் என்று ஆசைப்பட்டு அவனைப் பாடின இது குற்றமாக–வையம் சிலம்பும்படி செய்வதே-சிறியார் பெரியார் என்ற வாசி இன்றிக்கே இருந்ததே குடியாகக் கை எடுத்துப் பழி சொல்லும்படி பண்ணுவதே–திருமால்-நீர் ப்ரணயிகள் இல்லீராய்த் தான் இப்படிச் செய்கிறீரோ-இத்திருவினையே-உம்மை ஆசைப்பட்ட அளவில் குறைந்தாளோ அவளோடு கூடின உம்மை ஆசைப்பட்ட இவள் ராவணாதிகள் பெருமாளை பழி சொல்ல ராக்ஷஸிகள் தன்னை நெருக்க
இருந்தவளைப் போலே இருக்க வல்லளோ இவள-அன்றில்-கடலோசை-தொடக்கமானவை நலிய அத்தால் நோவு படா நின்றாள் என்று நாட்டார் பழி சொல்ல நீர் விட்டு இருப்பதே-உம்முடைய மஹிஷி நோவு படப் பார்த்து இருக்கை உமக்கு குறை அன்றோ என்றபடி –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-வியாக்யானம்-புலம்பும் கனகுரல் போழ் வாயவன்றிலும் உன்னைப் பிரிந்து தனி இருப்பாரே இரு பிளவாக்கும் சஞ்சுவையும் அத்தால் சிலம்புவதும் கணைப்பதும் உள்ள அன்றிலும்–பூம் கழி பாய்ந்து அலம்பும் கனகுரல் சூழ் திரை யாழியும்-அழகிய கழிக்குள் புகுரப் பாய்ந்து அதில் உள்ள பதார்த்தங்களை அலப்பும் போது கனைத்துக் கொண்டும் பெரும் குரல் செய்து கொண்டும் ஒன்றுக்கு ஓன்று ஆஸ்லேஷித்துக் கொண்டு வருகிற திரைகளை யுள்ள கடலும்-ஆங்கவை
ஏவம் பூதமாயுள்ள புலம்புறு மணி தென்றல் முல்லை மல்லிகை –(திருவாய் –9-9-1–9-9-2) முதலானவையும்–நின் வலம்புள்ளது நலம்பாடுமிது குற்றமாக-உனக்கே சேஷமும் பலவத்தரமுமான
பசி ராஜனுக்குள்ள நன்மையைப் பாடின இதுவே ஒரு தப்பாக்கி-வையம் சிலம்பும்படி செய்வதே-லோகம் எல்லாம் இவளை பழி சொல்லும்படி செய்வைத்து உனக்குத் தகுமோ-திருமால்-நீர் தெருவில் மால் செய்யுமதுக்கும் இவளை பிரிந்து இங்கனே பாதிப்பத்துக்கும் என்ன சேர்த்தி யுண்டு-இத்திருவினையே-அத்திருவுக்கு இவள் அன்றோ ஸ்தந பாஹ் வாதிகளாய் விளங்கினவள்
உம்முடைய ரசிகதைக்கு இது கொத்தை காண் என்கிறாள் –

ஸ்வாபதேசம்-இத்தால்-அத்தலையாலே வரக்கண்டு ஆறி இருக்குமது அன்றிக்கே இவள் க்ரம பிராப்தி பற்றாமை பதறி மேல் விழ நீர் தாழ்த்தீராய் இருக்கும் இது உமக்கு குறை அன்றோ என்று இவர் தசையை அனுசந்தித்தவர்கள் பாசுரமாய் இருக்கிறது-ந மே பக்த பிரணஸ்யதி -ஸ்ரீ கீதை -9-31-
மறந்தீரோ என்கிறாள்

இதற்கு உள்ளுறை பொருள். -அன்றிற்குரல் பிரிவுத் துன்பத்துக்கு ஸ்மாரகம்; ஆழிமுழக்கம் சேர்க்கையின்பத்துக்கு ஸ்மாரகம்.(நின் வலம்புள்ளது நலம்பாடுமிது குற்றமாக) எம்பெருமான் நம்மிடத்து விரைந்து வந்து சேர்வதற்குறுப்பான வேக கதியைவுடைய வாஹனம் அவனுக்குச் சொந்தமாயிருக்கையில் நாம் இழக்கவேண்டுவதில்லையே யென்று மகிழ்ச்சி பாராட்டுதலே குற்றமாக என்கை. அடிமைச்செல்வமுடைமை பற்றி ஆழ்வாரைத் திரு என்றது; எம்பெருமானோடு நித்யாநுபவஞ் செய்யத்தக்கவை ரென்க.

ஸ்வா பதேசம் –அன்றில் குரல் துன்பத்துக்கு ஸ்மாரகம் -ஆழி முழக்கம் சேர்க்கை இன்பத்துக்கு ஸ்மாரகம் திருவடி இருப்பதால் நம்மிடம் கூட்டி வருவான் -இழக்க வேண்டியது இல்லை என்று பாராட்டி பேசினதே குற்றமாக – அடிமைச் செல்வம் மிக்க ஆழ்வாரை இத்திரு -என்கிறது -அத்திரு அவனைப் பற்றும் இத்திரு இருவரையும் பற்றுமே – எம்பெருமான் உடன் நித்ய அனுபவம் செய்யத் தக்கவராய் இருந்தும் இப்பாடு படுவதே –

ஸ்வா பதேசம் –இத்தால் – அத் தலையாலே வரக் கண்டார் ஆறி இருக்கை அன்றி – இவர் க்ரம ப்ராப்தி பற்றாமை பதறி மேல் விழ நீர் தாழ்த்தீர்  ஆவது  உமக்கு குறை அன்றோ -என்று இவர் தசையை அனுசந்தித்தவர் பாசுரமாய் இருக்கிறது –க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா சஸ்வஸ் சாந்திம் நியச்சதி கௌந்தேய ப்ரதிஜாநீ ஹி நமே பக்த ப்ரணஸ் யதி–ஸ்ரீ கீதை – இவை மறந்தீரோ -என்கிறார்கள் –

தாத்பர்யம்--இதில் லௌகிக பதார்த்தங்கள் பாதகமாம் படி ஸூஹ்ருத்துக்கள் பாசுரம் உத்போதாக பதார்த்தங்கள் ஞாபகப்படுத்தும் வருந்தும் நாயகி பாசுரத்தால் உன்னுடன் ஸம்ஸ்லேஷித்து
சிஹ்னங்கள் தனக்குப்பட ஆசை கொண்ட உனக்கு வாகனமாய் பெரிய திருவடி கல்யாண குணங்களைக் கீர்த்தனை பண்ணி அத்தைப் போலவே தானும் பெற ஆசை கொண்ட இவள்
அது பெறாமையாலே மிகவும் ஆரத்தை ஆனாள்-அதுக்கு மேல் விரஹிணிக்கு பாதகமாய் அநஷரமான அன்றில் கடலோசை இவை போன்ற பாதகங்கள் இவளை நலியும் படி வாசா மகோசரம் என்று
வையம் எல்லாம் உன்னை இகழ்ந்து புலம்பும் படி ஆனதே என்று நாயகனை நினைத்து சர்வேஸ்வரனுக்குச் சொல்கிறாள்

9-2-பண்டை நாளாலே நின் திரு வருளும்பங்கயத்தாள் திருவருளும்கொண்டு -ப்ரவேஸம்-

போக்ய பாகத் த்வரை தெளிந்த சிந்தைக்கு முன்னில் மூன்றிலும் ப்ரகடம் -சூர்ணிகை -177-
உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்-இறுதியில் தானே ஆழ்வார் -பந்து க்ருத்யம் -கைங்கர்ய பிரார்த்தனை இதில் —

மேல் திருவாய் மொழியில் -அவனை ஒழிந்தார் அடங்கலும் -ஔபாதிக -ஒரு காரணம் பற்றி வந்த உறவினர்கள்-
அவன் ஒருவனுமே -நிருபாதிக -ஒரு காரணமும் பற்றாமல் இயல்பாகவே அமைந்த உறவினன் -என்றார் –
ஒரு காரணம் பற்றாமல் அமைந்த உறவினன் ஆனால்-பின்னை உறவினருக்கு உரிய கார்யங்களைச்
செய்யாது இருக்க முடியாது அன்றோ –
ஆதலால் ஒரு காரணம் பற்றாமல் இயல்பாகவே அமைந்த-உறவினனான சர்வேஸ்வரன்
திருக் கண் வளர்ந்து அருளுகிற திருப் புளிங்குடியிலே-
எல்லா வித கைங்கர்யங்களையும் பெற வேண்டும் என்று ஆசைப் பட்டு இவர் சென்று கிட்டினார் –
கிட்டின இடத்தில் -இவரை-என் -என்னுதல்-திருக் கண்களாலே குளிர நோக்குதல் –
ஒரு வார்த்தை சொல்லுதல்-செய்யக் கண்டிலர் –காணாமையாலே மிகவும் துன்புற்றவர் ஆனார்
அத்துன்பம் அவன் உளனாக தீரும் அன்றோ –அதற்கு மேலேயும் ஓன்று உண்டாயிற்று –அது என் எனின் –

திருமேனி அலசும்படி பலகாலமாக ஒரே தன்மையாக திருக்கண் வளர்கின்றான் -என் வருகிறதோ
என்று ஒரு அச்சம் உண்டாயிற்று -திரு உடம்பு அசைய –எத்தனை காலம் கிடத்தி –
மேலே ஆரா அமுதே -என்கிற திருவாய் மொழியிலே-என் துன்பத்தை தீர்க்கின்றிலன் -என்று இன்னாதார் ஆனார் –
இங்கே -என் துன்பத்தினையும் தன் துன்பத்தினையும் தீர்க்கின்றிலன் -என்று இன்னாதார் ஆகிறார் –

ஆக –
கொடியார் மாடம் கோளூரகத்தும் புளிங்குடியும் மடியாது இன்னே -என்று அதுவே தலை எடுத்து-
அங்கும் இங்கும் -திருவாய் மொழியிலும் தன் துன்பங்களை தீர்க்காமை அருளிச் செய்தாரே –
அதனுடைய அனுபாஷனம் -இத் திருவாய் மொழி –அனுபாஷனம் –
பெரிய ஆற்றாமையோடு-மீண்டும் கூறுதல் –
பெரிய ஆற்றாமையோடு என்னுடைய துன்பம் எல்லாம் தீரும்படி-
திருக் கண்களாலே நோக்கி அருள வேண்டும் -தாமரைக் கண்களால் நோக்காய் –
என் தலை மேலே திருவடிகளை வைத்து அருள வேண்டும் -பாத பங்கயமே தலைக்கு அணியாய் –
தேவரும் பிராட்டியாரும் கூட எழுந்து அருளி இருக்கும் இருப்பை எனக்கு காட்டி அருள வேணும் –உன் தாமரை மங்கையும் நீயும் –

யத்ர கிருஷ்னௌ ச கிருஷ்ணச சத்யபாமாச பாமி நீ -பாரதம் -உத்தியோக பர்வம் –
எந்த இடத்தில் கிருஷ்ணனும் திரௌபதியும் அர்ஜுனனும்-கோபத் தன்மை உள்ள சத்ய பாமையும்-இருக்கிறார்களோ -என்று சொல்லுகிறபடி
அவ்விருப்பில் அன்றோ அவனை அழைத்து காட்சி கொடுத்தது -என்றது-இப்படி சஞ்சயன் வந்தான் என்று அறிவிக்க
நமக்கு நல்லான் ஒருவன்-உகவாதார்க்கும் இவ்விருப்பைப் போய்ச் சொல்லுவான் ஒருவன்
அனுகூலனான இவனுக்கு விழிநீர் அடைத்தோம் ஆகிறோம்
உகவாதார் மண் உண்ணும்படி கார்யம் பார்த்தோம் ஆகிறோம்-புகுர விடும் கோள்
என்று உள்ளே அழைப்பித்து காட்சி கொடுத்தான் -என்றபடி –சஞ்சயன் பெற்ற பேற்றில் எனக்கு குறைய ஒண்ணாது –
நச அபிமன்யு நயமௌ தம் தேசம் துபிஜக்மது -பாரதம் உத்தியாக பர்வம்
அவர்கள் வீற்று இருந்த அந்த இடத்துக்கு அபிமன்யுவும் சென்றான் இல்லை-
இரட்டையர்களான நகுல சகா தேவர்களும் போனார்கள் இல்லை -என்கிறபடியே-
தாயும் தமப்பனும் சேர இருந்த இடத்தில் குழந்தைகளுக்கு சென்று கிட்ட ஒண்ணாமை இல்லை அன்றோ –
அவர்களுக்கும் சென்று கிட்ட ஒண்ணாத படி ஆயிற்று எழுந்து அருளி இருக்கிற இருப்பு-
அவ் விருப்பிலே அன்றோ அவனை அழைத்து காட்சி கொடுத்தது –

அப்படியே
தேவரும் பிராட்டிமாரும் எழுந்தருளி இருக்கும் இருப்பை எனக்குக் காட்ட வேண்டும் –
என்னைக் கண்ட காட்சியிலே வேறுபட்டவனாய் என் முன்னே-நாலடி உலாவி அருள வேண்டும் –பவளம் போல் கனிவாய் சிவப்ப நீ காண வாராய் –
அனுகூலரைக் கண்டால் பிறக்கும் புன்முறுவல் காண வேண்டும் -தவழ கதிர் முறுவல் செய்து-
ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேண்டும் -கூவுதல் வருதல் செய்யாய் –என்று இங்கனே-
தாமும் அவனும் அறிந்ததாக திருவாசலை திருக் காப்பு கொண்டு தனி இடத்திலே-
தம்முடைய எண்ணங்களை எல்லாம் விண்ணப்பம் செய்து-கொடு வினையேனும் -ஏக வசனம் —
இவற்றை இப்போதே பெற வேண்டும் என்று விரைகிறார்-
இறைவனுக்கும் உயிர்கட்கும் உள்ள சம்பந்தத்தை அனுபவித்தார் மேல் திருவாய் மொழியில் –
சம்பந்தத்தின் பலத்தை ஆசைப்பட்டு விரும்புகிறார் இத் திருவாய் மொழியில் —
சர்வ வித பந்து அவனே -கண்ணன் அல்லால் வேறு சரண் இல்லை –பற்ற உபதேசித்தார்-
ஆடாமல் அசையாமல் அர்ச்சையில் கண் வளர்ந்து இருக்க கண்டார் –கைங்கர்யம் செய்ய பாரிக்கிறார் -இதில்-

உபாதி-கர்மத்தால் வந்த பந்துத்வம் -விட்டு -சர்வவித பந்து -காரணம் இல்லாமல் -ஆச்ரயித்தால் -அடியார்க்கு ஆட்படுத்த விமலன் போலே ராமானுஜர்
அனந்தாழ்வான் -அருளாள பெருமாள் எம்பெருமானார் இடமும் -வான மா மலை ஜீயர் -கோயில் அண்ணன்
அப்பாச்சி அண்ணா -இவருக்கு பொன்னடிக்கு கால் ஜீயர் இடம் காட்டிக் கொடுத்து -ஆய்ச்சியர் குமாரர் –
நித்ய நிருபாதிக சர்வ பந்து –பிராதா –பிதா ச மம ராகவா –
பந்துவும் பிதாவும் அவரே என்றார் இளைய பெருமாள் -ராமம் தசரதன் வித்தி -கச்சதாம் -தாய் சொன்ன படியே –
சர்வேஸ்வரனுக்கு அடிமை செய்து போக அருளிச் செய்கிறார் –
லுப்த சதுர்த்தி -அகாரம் -நாராயணாயா -வியக்த சதுர்த்தி –
நாராயணனுக்குக்காக -தருவித்துக் கொண்டு சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்த்தை உசித கைங்கர்யம் -செய்ய வேண்டும் –
ஸ்யாம் பவேயம் —சேர்த்தியில் -குடிக்கிடந்து கைங்கர்யம் செய்ய வேண்டும் –

இரண்டாம் திருவாய் மொழியில் கீழே நிருபாதிக பந்துவான சர்வேஸ்வரனுடைய பல ரூபதயா ப்ராப்யத்தையை அருளிச் செய்து –
அவன் கண் வளர்ந்து அருளில் கைங்கர்யம் பண்ணுகையை மநோ ரதித்து-கைங்கர்ய பிரதிசம்பந்தியானவனுடைய
புண்டரீகாக்ஷத்வத்தையும்
அனுரூப சம்பந்தத்தையும்
ஸ்ரீ மஹா லஷ்மீ ஸஹாயத்வத்தையும்
தர்ச நீய ஆகாரதையையும்
மந்த ஸ்மித சோபையையும்
ஆஸ்ரித அர்த்தமான திவ்ய வாஹந திவ்ய ஆயுதவத்தையும்
அசாதாரண திவ்ய பரிகர யோகத்தையும்
அகில லோக வந்த்யத்வத்தையும்
அதிசயித ஸுகுமார்யத்தையும்
ஸ்ரீ மஹா லஷ்மி சேவ்யத்வத்தையும்
அனுசந்தித்து -ஏவம் பிரகார விசிஷ்டனான நீ உனக்கு அசாதாரண சேஷ பூதராயப் போந்த எங்களுக்கு
கிருபை பண்ணி பூர்ண கடாக்ஷம் பண்ணவும் –
திருவடிகளை எடுத்துத் தலையிலே வைக்கவும் அங்கீ கரிக்கும் பொழுது பிராட்டியோடே கூட எழுந்து அருளி இருந்து அங்கீ கரிக்கவும்
ஆசா அநு ரூபமாக நடந்து எழுந்து அருளி வரவும்
முகமும் முறுவலுமாய்க் கொண்டு என் முன்னே நிற்கவும்
நிற்கும் போது பெரிய திருவடியை மேற்கொண்டு திவ்ய ஆயுதங்களையும் ஏந்திக் கொண்டு வரவும்
அசாதாரண பரிகாரத்தோடே வந்து என் முன்னே எழுந்து அருளி வந்து இருக்கவும்
சர்வ லோகங்களும் கண்டு வாழும்படி எழுந்து அருளி இருக்கவும்
இந்த ஸூ குமாரமான வடிவை நான் அனுபவிக்கும்படி பண்ணவும்
நாய்ச்சிமாரை அடிமை கொண்டு அருளுகிறாப் போலே உன் திருவடிகளில் அடிமை கொண்டு அருளவும் வேணும்
என்று தம்முடைய மநோ ரத பரம்பரையை திருப் புளிங்குடியிலே கிடந்தது அருளுகிற சர்வேஸ்வரன் திருவடிகளில் பிரார்த்தித்து அருளுகிறார் –

பண்டை நாளாலே நின் திரு வருளும் பங்கயத்தாள் திரு வருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால் குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1-

வேறு கதி இல்லாத-அடியோங்களைக் குறித்து-ஒரு வார்த்தை அருளிச் செய்து
விடாய் கெடும்படி குளிர நோக்கி அருள வேண்டும் -என்கிறார்-

குடி குடி வழி வந்து ஆள் செய்யும்–மூன்று பாட்டிலும் -கைங்கர்யம் செய்ய கொடுத்து வைத்து இருக்கிறோம்
யோக்யதை இருப்பதாக சொல்லிக் கொள்கிறார் அல்லர் -உரிமை -கேட்க வில்லை -உனக்கே -என்று அநந்யார்ஹை
போக்கிடம் இல்லை கத்யந்த சூன்யத்தை ஆவிஷ்கரிக்கிறார்

பண்டை நாளாலே நின் திரு வருளும் –எதிர் சூழல் புக்கு பல நாள் பட்ட கிலேசத்தின் பலம் அன்றோ இந்த கைங்கர்யம் -என்றபடி –
நெடுநாள் கிருஷியை செய்து-பல வேளையில் கை விடவோ -என்கிறார்-

என் அடியார் அது செய்யார் -பெரியாழ்வார் திருமொழி -4-9-2-என்னும் உன் திரு அருளையும் –
பாபாநாம் வா ஸூ பாநாம் வா வதார்ஹாணாம் ப்லவங்கம்-
கார்யம் கருணம் ஆர்யேண நகஸ்சின் ந அபராத்யதி -யுத்தம் -116-44 -என்று
குற்றம் செய்யாதவர் யாவர் -என்னும் அவள் திருவருளையும் பெற்று –

————–

குடிக் கிடந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த வடிமைக்குக் குற்றேவல் செய்து உன் பொன்
அடிக் கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி நீ யொருநாள்
படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கணியாய்
கொடிக்கொள் பொன் மதில் சூழ் குளிர் வயல் சோலைத் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-2-

ஆஸ்ரய விஷய அனுரூபமாக -எல்லார்க்கும் சுலபமான உன் திருவடிகளை-என் தசென்னிக்கு சூட வேணும்

ஸ்ரீ பரத ஆழ்வான்-ஆக்கம் செய்து –குடியில் -பண்டு இல்லாத நன்மைகளை உண்டாக்கியது போல் –இவரும் பிராப்ய த்வரையால் -அழுவது தொழுவது கண்ண நீர் கைகளால் இறைக்கும் -பிரபன்ன குடியில் இல்லாத -அநந்ய கத்தி ஆகிஞ்சன்யம் மட்டும் இல்லாமல் -மண்ணை இருந்து வாமனன் மண் இது மின்னிடை மடவார் -அநுகரித்துதூது விட்டு -த்வரையில் விஞ்சி -ஆக்கம் செய்தார் இறே

நின் பாத பங்கயம் –ஒரு செவ்விப் பூவினைக் கொண்டு காணும் காடும் ஓடையும் அளந்து கொண்டது-பூமிக்கு அளவாக்கின திருவடிகளை-என் தலைக்கு அளவாக்க லாகாதோ –கோலமாம் என் சென்னிக்கு -4-3-6-என்று இருப்பார் தலைக்கு வைக்கலாகாதோ

———–

கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி உன் திரு வுடம்பு அசைய
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி
தடம் கொள் தாமரைக் கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ வுலகும் தொழ விருந்து அருளாய் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-3-

திரு உடம்பு வருந்த ஒரு படியே திருக் கண் வளர்ந்து அருளாதே-அடியோமுக்காக பிராட்டியும் நீயும் எழுந்தருள வேண்டும்-என்கிறார் –

தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி–இம் மூன்று பாசுரங்களிலும் தம்முடைய வம்ச பரம்பரையின் பெருமையை சொன்னால் போலே அன்றோ இருக்கிறது –அது அன்று இங்குச் சொல்லுகிறது-
ஒருவருக்கேயாய் இருப்பாரை முகம் பார்ப்பார் வேறு ஒருவர் இலர் -என்று-தம்முடைய அநந்ய கதித்வத்தைச் சொல்லுகிறார் –
கைங்கர்ய கிரியைச் சொல்லி -யோக்யதை இருப்பதாகச் சொல்லிக் கொள்ள வில்லை -உனக்கே அற்றுத் தீர்ந்தோம் -நீ கை விட்டால்
வேறு யாரும் கொள்ள மாட்டார்கள் -மறந்தும் தொழா மாந்தர் -அன்றோ -அநந்ய கதித்வம் அன்றோ வெளியிட்டுக் கொள்கிறார் –

உன் தாமரை மங்கையும் நீயும் –
பகவத் விஷயத்தில் முதலடி இடுவார் பிராட்டி புருஷகாரமாக பற்ற வேணும் -என்னுமதனாலே-பங்கயத்தாள் திருவருளும் -என்றார் மேல்
அடிமை செய்யும் இடத்திலும் இருவருமான சேர்த்தியிலே அடிமை செய்வதாக-சொல்லி போரும் அதனைப் பற்ற சொல்லுகிறார் இங்கு –

திருப் புளிங்குடி கிடந்தானே –இருந்தருளாய்-
சாய்ந்து அருளின அழகு காட்டினாய்-இருந்து அருளின போதை அழகையும் காட்டி அருளாய்-
நின்ற வாறும் இருந்த வாறும் கிடந்தவாறும் -குழந்தை கிருஷ்ணன் -பெரிய கிருஷ்ணன் -பெருமாள் நிலை சேவித்தது போராதே –
அர்ச்சையிலும் ஒவ் ஒரு பெருமாளையும் இப்படியே சேவிக்க அபேக்ஷை கொண்டோம் -காட்டி அருளுவாய் –

——————–

புளிங்குடிக் கிடந்து வர குணமங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி
நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்பப்
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வாராயே–9-2-4-

மங்களா சாசனப் பாசுரம் -ஆஸ்ரித அர்த்தமாக -நின்று இருந்து கிடந்து –

திருப்பதிகளிலே எழுந்து அருளி இருப்பவனாய்-என்னை இவ்வளவு ஆக்கினாப் போலே-
மேலும் எனது விருப்பத்தை செய்தருள வேண்டும் –என்கிறார்

புளிங்குடிக் கிடந்து வர குணமங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே–திருப் புளிங்குடியிலே –கிடந்ததோர் கிடக்கை திருமாலை -என்னும் அழகினைக் காட்டியும்-வர குண மங்கையிலே – பிரான் இருந்தமை காட்டினீர் -திருவாய்மொழி -என்னும் இருப்பின் அழகினைக் காட்டியும்-ஸ்ரீ வைகுண்டத்தில் –நிலையார நின்றான் -திருவாய்மொழி -என்னும் நின்ற நிலையின் அழகினைக் காட்டியும் –அன்றோ என்னை புகுர நிறுத்தியது

பேற்றுக்கு அடி கிருபை -இழவுக்கு அடி கர்மம் -என்கிற மகா விச்வாஸம் இருக்கும் படி –தெளிந்த என் சிந்தை –என்றபடி-

அன்றிக்கே
தண்ணியன் -என்று அகலாதபடி–கண்கள் சிவந்து -என்ற திருவாய் மொழியிலே என் மனத்தினைத் தெளிவித்தும்-
அதனைக் கைவிடாதே எப்பொழுதும் எழுந்தருளி இருந்து -என்னுதல் –

என்னை ஆள்வாய் –
என்னை -தண்ணியன் -என்று அகலவும் ஒட்டாதே-பிரிவாற்றாமையால் -முடியவும் ஒட்டாதே-
குண ஞானத்தினாலே தரிப்பித்து கொண்டு போனதாய் –

நீ காண வாராயே –
என் எதிரே உன் அழகு காண வர வேண்டும் –அவன் கூத்து இருக்கிறபடி-
அவன்மாறி மாறி இடும் அடி வல்லார் ஆடினால் போலே காணும் இருப்பது –

——————-

பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வந்து நின் பல் நிலா முத்தம்
தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக் கண் தாமரை தயங்க நின்று அருளாய்
பவள நன் படர்க் கீழ் சங்கு உறை பொருநல் தண் திருப் புளிங்குடி கிடந்தாய்
கவள மாக் களிற்றின் இடர் கெடத் தடத்துக் காய்சினப் பறவை ஊர்ந்தானே–9-2-5-

ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு வந்து தோற்றினாப் போலே-வந்து தோன்றி அருள வேணும்-என்கிறார் –

அனுகூலர்களைக் கண்ட காட்சியாலே-அகவாயில் அன்பு தோற்ற-தன்மைகள் வேறுபட்டவனாய்-
புன்முறுவல் செய்து நிற்கும்படியை காண வர வேண்டும் –

நின் திருக் கண் தாமரை தயங்க நின்று அருளாய் –திருக் கண்கள் உடைய ஸ்மிதம் புன் முறுவல் இருக்கிறபடி –
தயங்குகையாவது-அப்போது பிறந்த ஒளி ஆதல்-கடல் சலித்தால் போலே அசைந்து வருகிற படியைச் சொல்லிற்று ஆதல் –

தயங்க நின்று அருளாய்-முந்துற நாலடி வந்து -பின்னை அதுவும் மாட்டாதே-ஸ்தப்த்தனாய் செயல் அற்றவனாய் நிற்கும் நிலையைக் காண வேண்டும் –புது நடை அழகை ஸேவிக்கப் பிரார்திக்கிறார்

————

காய்ச்சினப் பறவை யூர்ந்து பொன்மலையின் மீமிசைக் கார்முகில் போல்
மாசின மாலி மாலிமான் என்று அங்கவர் படக் கனன்று முன்னின்ற
காய்சின வேந்தே கதிர் முடியானே கலி வயல் திருப் புளிங்குடியாய்
காய்சின வாழி சங்கு வாள் வில் தண்டேந்தி எம்மிடர் கடிவானே–9-2-6-

எம்மிடர் கடிவானே–பெருமாள் திரு நாமம் -உத்சவர் –பூமி பாலன் காய்ச்சின வேந்து -மூலவருக்கும் உத்சவர்களுக்கும் பாசுரம்
தேவ பிரான் -அரவிந்த லோசன் -பொலிந்து நின்ற பிரான் கண்டீர் -கரும் தடம் கண்ணி தாயாருக்கும் மங்களா சாசனம் உண்டே

நீர் விரும்பினவற்றை செய்ய ஒண்ணாதபடி-தடைகள் பிரபலமாக அன்றோ இருக்கின்றன -என்ன
மாலி சுமாலி மால்யவான் என்னும் இவர்களைக் காட்டிலும்-வலியவோ என் விரோதிகள் -என்கிறார் –

கதிர் முடியானே –விளங்குகின்ற திருமுடியை உடையவனே -என்றது-
நீ பாது காப்பதற்கு முடி சூடி இருக்க -நான் இழக்கவோ -என்கிறார் என்றபடி-

எம் இடர் கடிவானே -அனுபவ விரோதிகள் -தேவர் சேவை சாதிக்கப் போகுமே –அனுபவ அலாப ரூப துக்கம்-திருக்கண் தாமரை தயங்க நின்று அருளாய் –என்று மேல் பாசுரத்தோடு கூட்டி வினை முடிக்க –

————–

எம்மிடர் கடிந்து இங்கு என்னை யாள்வானே இமையவர் தமக்கும் ஆங்கனையாய்
செம்மடல் மலரும் தாமரைப் பழனத் தண் திருப் புளிங்குடிக் கிடந்தாய்
நம்முடை யடியார் கவ்வை கண்டுகந்து நாம் களித்துள நலம் கூர
இம்மட வுலகர் காண நீ யொரு நாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே–9-2-7-

வலி அற்றவர்களோடு–வலி மிக்கவர்களோடு–வாசி அறக் காப்பவனான நீ-
நாங்கள் வாழும்படி கண் எதிரே ஒரு நாள் இருக்க வேண்டும் -என்கிறார் –

நீ யொரு நாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே –
எங்கள் கண் வட்டத்திலே ஒரு நாள் இருந்து அருள வேண்டும் -என்றது –
நித்ய ஸூரிகள் எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருப்பதற்கு விஷயமான நீ-
ஒரு நாள் எங்கள் கண்ணுக்கும் விஷயமாய் இருந்தால் ஆகாதோ -என்கிறார் என்றபடி-
உன்னுடைய காட்சி அதிகாரத்தை உடைய ஒரு சிலர்க்கேயாய் இருக்க வேண்டுமோ -என்பார்-எங்கள் கண் முகப்பே -என்கிறார் –

————–

எங்கள் கண் முகப்பே யுலகர்கள் எல்லாம் இணை யடி தொழுது எழுது இறைஞ்சி
தங்கள் அன்பாரத் தமது சொல் வலத்தால் தலைச் தலைச் சிறந்து பூசிப்ப
திங்கள் சேர் மாடத் திருப் புளிங்குடியாய் திருவைகுந்தத் துள்ளாய் தேவா
இங்கண் மா ஞாலத்தி தனுளும் ஒரு நாள் இருந்திடாய் வீற்று இடம் கொண்டே–9-2-8-

பரம பதத்தில் அன்றோ-வீற்று இருத்தலின் அழகு-காட்டலாவது-என்ன –
அவ்விருப்பின் அழகினை நாங்கள் காணத்-திருப் புளிங்குடியில் ஒரு நாள் இருந்து அருள வேண்டும் –என்கிறார் –

தங்கள் அன்பாரத் தமது சொல் வலத்தால்-இடையர் கோஷ்டியில் புகுந்து -அங்கும் இருந்து -அவர்கள் சொன்ன வார்த்தையும் -இவர் சொன்ன வார்த்தையும் –
நூறு பிராயம் புகுவீர் –பொன்னாலே பூணூல் இடுவர்-பழம் உண்பீர்-பால் உண்பீர் –அழுத்த இரட்டை உடுப்பீர் –
என்பன போன்று சொல்லுகை —
வங்கி புரத்து நம்பி -விஜயஸ்வ -வெற்றி உண்டாக -என்ன-ஆண்டான் சொன்ன வார்த்தையை நினைவு கூர்வது –
அங்கு சென்றாலும் முரட்டு சம்ஸ்க்ருதம் விட்டீர் இல்லீரே-எங்கே இருந்தாலும் நாம் நாமே காணும் இங்கே எழுந்து அருளீர் –

———-

வீற்று இடம் கொண்டு வியன் கொள் மா ஞாலத்து இதனுளும் இருந்திடாய் அடியோம்
போற்றி யோவாதே கண்ணினை குளிரப் புது மலர் ஆகத்தைப் பருக
சேற்றிள வாளை செந்நெலூடுகளும் செழும் பணைத் திருப் புளிங்குடியாய்
கூற்றமாய் அசுரர் குல முதலரிந்த கொடு வினைப் படைகள் வல்லானே–9-2-9-

இவ்விருப்பில் வாசி அறியாத-இவ் உலகத்தாருக்கு
நடுவில் இருக்கிறது என் -என்னில் -ருசி உடைய நாங்கள்-அதுவே ஜீவனமாக இருக்கிற நாங்கள் -கண்டு அனுபவிக்க –என்கிறார்

நமக்கு இவை எல்லாம் இங்கே காணலாம் அன்றோ –
சாய்ந்து அருளின அழகு பெரிய பெருமாள் பக்கலிலே காணலாம்-
நின்று அருளின அழகு நம் பெருமாள் பக்கலிலே காணலாம்-
இருப்பில் உண்டான அழகு பெரிய பிராட்டியார் பக்கலிலே காணலாம் -என்று பட்டர் அருளிச் செய்வர் –

——

கொடு வினைப் படைகள் வல்லையாய் அமரர்க்கிடர் கெட வசுரர்கட்கிடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை யமுதே கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடி விணை யில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள் கூவுதல் வருதல் செய்யாயே–9-2-10-

எல்லை இல்லாத இனிமையை உடையதான-உன் திருவடிகளில் நானும் வந்து அடிமை செய்யும் படி
என்னை அங்கே அழைத்தல்-அல்லது நீ இங்கே வருதல் செய்ய வேண்டும்-என்கிறார் —

கொடு வினையேனும் பிடிக்க –
கண்கள் சிவந்து –என்ற திருவாய் மொழிக்கு பின்பு-இவர்க்கு தாம் தாழ்ந்தவர் என்னும் நினைவு -நிஹித அநுஸந்தானம் -இல்லை அன்றோ –
அவர்களும் ஸந்நிஹிதராய் -அண்மையில் இருப்பாராய்-ப்ராப்யம்-சம்பந்தமும் உண்டாய் இருக்க-
நான் இழந்து இருப்பதே -என்று-பாவியேன் -என்பாரைப் போன்று -கொடு வினையேன் -என்கிறார் –

நீ யொருநாள் கூவுதல் வருதல் செய்யாயே –
எல்லை இல்லாத இனியனாய்-அண்மையில் இருப்பவனான நீ-ஸ்வரூபத்தை நோக்குகைக்கு-
ஒரு நாள் அங்கே அழைத்தல் -இங்கே வருதல்-செய்து அருள வேண்டும்-
முற்பட வருதல் என்று இலர் ஆயிற்று-அச் சேர்க்கையை குலைக்க ஒண்ணாது என்னுமதனாலே-
விருப்பம் உடையார் பக்கல் அவனைத் தனியே விட்டு இரார்கள் அன்றோ –
அதனால் கூடக் கொடு வருவார்கள் என்னும் அதனை பற்றச் சொல்லுகிறார்-

———-

கூவுதல் வருதல் செய்திடாய் என்று குரை கடல் கடைந்தவன் தன்னை
மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல் வழுதி நாடன் சடகோபன்
நாவில் பாடல் ஆயிரத் துள்ளும் இவையும் ஓர் பத்தும் வல்லார்கள்
ஓவுதல் இன்றி யுலகம் மூன்று அளந்தான் அடி இணை யுள்ளத்தோர் வாரே–9-2-11-

நிகமத்தில் –-இத் திருவாய்மொழி கற்றார்-எப்பொழுதும் நினைக்கப் பெறுவார்-என்கிறார்-

குரை கடல் கடைந்தவன் தன்னை -கூவுதல் வருதல் செய்திடாய் என்று-ஆயிற்று இவர் சொல்லிற்று–இந்த விருப்பம் இல்லாதார்க்கும் உடம்பு நோவ கடல் கடைந்து அமுதம்-கொடுத்தவனை ஆயிற்று இவர் விரும்பியது-

உடைமை இருந்த இடம் உடையவர் வந்து கைப்பிடித்தல் தானே முறைமை -கூவுதல் -உடைமையே வருவது -முறை இல்லாமை
வருதல் -முறையாக ஆக்கவுமாம் -என்றபடி -பார்யை ஆள் இட்டு அழைக்கை முறை இல்லையே -அதுபோல் கூவுதலும் முறை இல்லை –

திருக் கண்களால் குளிர நோக்கி அருள வேண்டும்
திருவடிகளை தலைக்கு மேலே வைத்து அருள வேண்டும்
தேவரீர் எழுந்து அருளி இருக்கும் இருப்பைக் காண வேண்டும்
நாய்ச்சிமாரும் தேவருமான இருப்பைக் காண வேண்டும்
உலாவும்படி காண வேண்டும்
புன்முறுவல் இருக்கும் படி காண வேண்டும்–என்று ஆசைப் பட்ட இவருக்கு அப்போதே கிடையாமையாலே–இவற்றைப் பெற வேண்டும் என்னும் எண்ணம் தானே பேறு ஆகத் தோற்றிற்று–இதனைக் கற்றவர்களுக்கும் இந்த எண்ணம் மாறாமலே முடியச் செல்லும் என்கிறார்-மநோ ரதம் தானே புருஷார்த்தம் -என்ற படி –

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -86-அடைக்கலத் தோங்கு கமலத்தல ரயன்-வள வேழ்வுலகு -1-5-

March 27, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

என்ன என்று சொல்லி புலம்புவேன்-நீக்கியை -ஏந்தியை-கிரியை அல்ல -இரண்டாம் வேற்றுமை உருவு சேர்த்து –சோறாக்கி -சோறை ஆக்குபவன் -சோறாக்கியை போல்-தலைவனைப் பிரிந்த தலைவி இரங்கல் –துறை–கீழ் மகள் -தாய் பாசுரம்-இரண்டுக்கும் சேர்ந்து இங்குள்ள பதங்கள் நிர்வாகங்கள் உண்டு-வள வேழ்வுலகு -1-5-இதன் விவரணம் -நினைவு நைந்து பாடும் –திருவாய் மொழி–அடைக்காய் -வெற்றிலையும் பாக்கும் –அடை இலை -திருமேனி பச்சிலை –அதில் உள்ள பூ நாபி கமலம் –அதில் அலர்ந்த அயன்-அடைக்கலம் -ரஷ்ய வஸ்துவாய் -ரக்ஷிக்கிறவனையும் சொல்லலாம்-சிவன் துயரை நீக்கியவன்-அடியார் ரக்ஷிக்க திவ்ய ஆயுதங்கள் ஏந்தி உள்ளவனே-ஆஸ்ரிதர்களுக்கு அடங்கி -அடிக்கப்பட்டு அத்தாலே அலர்ந்து இருந்தவன்-அவன் இடம் குறை இல்லை–ஓங்கு -அடைக்கமலத்து ஓங்கும் கமலம் -பச்சை மா மலை போல் மேனி -அதில் உள்ள நாபி கமலம்-அடைக்கலத்து அரன் -சரண் அடைந்த ருத்ரன்-அடைக்கலத்து நீக்கி -ரக்ஷகமான பெருமாள் -துயரம் போக்குபவன்-அடைக்கலத்து அயன் -தான் வளரும் ஆதாரமாகக் கொண்ட -கர்ப்ப ஸ்தானம் என்றும் கொள்ளலாம் 

அவதாரிகை –எத்தனை ஏனும்  இருள் வந்து மேலிட்டு பாதகம் ஆனாலும் – அத் தலையில் ஒரு குறை சொல்ல ஒண்ணாத படி இறே–அவன் ஸ்வரூபத்தை நிரூபித்தால் இருக்கும்படி –மகள் நொந்த படியும்
தாயார் அவன் இடம் குறை இல்லை என்றும் கொள்ளலாம்-

இப்படி ஆர்த்தராய்ப் புலம்பினவர் ஆபத் சகன் அல்லாமையும் ஆபந் நிவ்ருத்தி பரிகரம் இல்லாமையும்
ஆஸ்ரித பவ்யன் இல்லாமையும் உதவாது ஒழிகிறானோ இப்படி இருக்க முகம் காட்டாத போதே நாம் எத்தைச் சொல்லி பிரலாபிப்பது என்று நிராசரான பிரகாரத்தை அருளிச் செய்கிறார்-இது நாயகி வார்த்தை யாகவுமாம்-

அடைக்கலத் தோங்கு கமலத்தல ரயன் சென்னி என்னும்
முடைக்கலத்து  ஊண் முன் அரனுக்கு நீக்கியை ஆழி சங்கம்
படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால்
புடைக் கலந்தானை எம்மானை என் சொல்லிப் புலம்புவனே
– – 86-தலைவனைப் பிரிந்த தலைவி வருந்துதல் –

அடை–இலையாகிய
கலந்து–இடத்திலே
ஓங்கு–உயர்ந்துதோன்றின
கமலத்து–(திருமாலின் நாபித்) தாமரை மலரிலே
அலர்–வெளிப்பட்டுத் தோன்றின
அயன்–ப்ரஹ்மாவினுடைய
சென்னி என்னும்–தலையாகிய
முடை கலந்து–முடை நாற்றமுடைய பிக்ஷாபாத்திரத்திலே
ஊண்–உணவு இரத்தலை
முன்–முன் ஒரு காலத்தில்
அரனுக்கு–சிவனுக்கு
நீக்கியை–போக்கியருளினவனும்
ஆழி சங்கம்படைக்கலம் ஏந்திய–ஸுதர்சந பாஞ்சஜந்யங்களை ஆயுதங்களாகத் திருக்கைகளிற் கொண்டுள்ளவனும்
வெண்ணெய்க்கு–வெண்ணெய்க்காக
அன்று–களவுங்கையுமாக அகப்பட்ட அந்நாளில்
ஆய்ச்சி–யசோதைப் பிராட்டி
வல் தாம்புகளால்–வலிய கயிறுகளால்
புடைக்க-அடிக்க
அலந்தானை–வருந்தினாற்போலத் தோற்றினவனும்
எம்மானே–எமது தலைவனுமான திருமாலைக் குறித்து
என் சொல்லி புலம்புவனே–நான் என்னவென்று சொல்லிப் புலம்புவனே?

வளம் மிக்க மால் பெருமை மன்னுயிரின் தண்மை
உளமுற்று அங்கூடுருவ ஓர்ந்து -தளர்வுற்று
நீங்க நினை மாறனை மால் நீடு இலகு சீலத்தால்
பாங்குடனே சேர்த்தான் பரிந்து—5–அஞ்சிறைய மட நாரையில் தூத பரேஷண வ்யாஜத்தாலே
தம் ஆற்றாமையை அவனுக்கு அறிவித்த அநந்தரம் அவன் வந்து சம்ச்லேஷித்து அருளக் கண்டு
அவன் பெருமையையும் தம் சிறுமையையும் நினைத்து ஸூ ரி போக்யனானவனை அயோக்யனான நான் கிட்டி தூஷிப்பதில் அகன்று போகை நன்று என்று தாம் அகலப் புக
ஆழ்வீர்-உம்முடைய பொல்லாமையைப் பாராதே நம்முடைய செல்லாமையைப் பாரீர் -என்று
ஆக்ரம்யா லோகன் -என்று த்ரிவிக்ரம அபதான சித்தமான தன் சௌசீல்யத்தையும்
நவநீத சௌர்ய வ்ருத்தாந்த சித்தமான தன் செல்லாமையையும் காட்டி தம்மை அவன் சேர்த்துக் கொள்ள அத்தாலே தாம் அகலுகை தவிர்ந்து பொருந்தின படியை அருளிச் செய்கிற
வள வேழு உலகின் அர்த்தத்தை வளம் மிக்க -இத்யாதியால் அருளிச் செய்கிறார் –திருவாய் பாடியிலே வெண்ணெயோபாதி இவரையும் சேர விரும்பினான் –வைகலும் வெண்ணெய் கை கலந்து யுண்டான் பொய் கலவாது என் மெய் கலந்தானே -என்னக் கடவது இறே-

அடைக்கலத் தோங்கு-சர்வேஸ்வரன் பக்கலிலே நிஷேபம் போலே யாயிற்று ப்ரஹ்மா வளருவது-(வைத்த மா நிதி அன்றோ)-கமலத்தல ரயன் –நிஷேபம் போலே என்ற இடம் –ஒரு  குறை பிறவாதபடி உணர்ந்து – நோக்குகிற படியை சொன்ன இத்தனை –-அவ்வளவு அன்றிக்கே – நேரே சர்வேஸ்வரன் பக்கலிலே பிறந்த ஜன்மத்தால் வந்த ப்ராப்தியை உடையவன் –(அஜன் யோனி சம்பந்தம் இல்லாதவன் –அயன் -அவன் இடம் நேராகப் பிறந்த புத்ரன்)-சென்னி -இத்யாதி –லோக குருவுமாய் -பிதாவுமானவன் தலையை அறுத்துப் பாதகியாய் நின்றான் -ஒருவன் –தலை அறுப்புண்டு எளிவரவு பட்டு நின்றான் ஒருவன் –இவருடைய துக்கத்தையும் போக்கினான் ஆயிற்று இவன் –அயன் சென்னி என்னும் முடைக்கலம் –பிரம்ம சிரஸ் என்றொரு நாமம் மாத்ரமேயாய் –தான் முடைக்கலமாயிற்று –பூதி கந்த பஹூளம் (துர்நாற்றம் மிக்கு )ஆகையாலே கழுகும் பருந்துமாய் தொடர்ந்து திரியும்படி யாயிற்று சஞ்சரிப்பது –முடைக்கலத்து  ஊண் முன் அரனுக்கு நீக்கியை –அதிலே உண்டு திரிகிற இத்தை முன் அரனுக்கு-நீக்கினவனை –சம்ஹர்த்தாவாய் தன் அதிகாரத்தோடு இருக்கச் செய்தே –இவ் எளிவரவு வர-
நாம் ஒருவன் ஆக்கிக் கார்யம் கொள்வான் ஒருவன் -நோவு பட விட்டு இருக்க ஒண்ணாது -என்று
அவனுடைய துக்கத்தைப் போக்கினவனை –இத்தால் –ஸ்ருஜ்யத்வ கர்ம வஸ்யத்வ ஷேத்ரஞ்சத்வங்கள் இருவருக்கும் அவிசிஷ்டம் என்றபடி –ஒருவன் தலை அறுப்புண்டு நின்றான் –ஒருவன் பாதகியாய் நின்றான் –இவன்-அவர்கள் இருவருக்கும் வந்த துக்கத்தைப் போக்கிக் கொண்டு நின்றான்

ஆழி சங்கம் படைக்கலம் ஏந்தியை –இவர்கள் இப்படி அலைந்து கொண்டு கிடந்தால் – ரஷிக்க வேண்டும் போதாக கருவி எடுக்க பார்த்து இருக்க ஒண்ணாது -என்று திவ்ய ஆயுதங்களை எப்போதும் கையிலே தரித்துக் கொண்டு நிற்கிறவனை –திருவாழி உள்ளிட்ட திவ்ய ஆயுதங்கள் ஆகிற திவ்ய ஆபரணங்களை ரஷிக்க வேண்டும்படியாக- தரித்து கொண்டு இருக்கும் ஸ்வபாவன் ஆனவனை –வெண்ணெய் இத்யாதி –பிரம்மா ருத்ராதிகளுக்கும் கூட துக்க நிவர்த்தகனாய் –அதுக்கு ஈடான பரிகரத்தையும்  உடையவனாய் -இருக்கச் செய்தே –ஆஸ்ரிதரால் தனக்கு வந்த கிலேசத்தை-பரிஹரித்து கொள்ள மாட்டாதே இருக்குமவன் –ப்ரஹ்மாதிகளுக்கும் கூட நிர்வாஹனாய் –
சர்வ ஸ்மாத் பரனாய் இருக்கிறவன் தன்னுடைய விபூதி யில் ஏக தேசத்தில் – சில அனுகூல ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தால் அல்லாது செல்லாதே -அவாப்த சமஸ்த காமனாய் இருக்கிறவனுக்கு -ஓன்று குறையாய் அது தான் நேர் கொடு நேர் கிடையாதே களவு காணப் புக்கு- வாயது கையதாக அகப்பட்டு -அதுக்கு பிரதி கிரியை பண்ண மாட்டாதே நிற்கிறவனை –அன்று –அவன் வந்து கட்டுண்டு எளியனாவது ஒரு நாள் உண்டே – அதுவும் ஒரு நாளே -(கீழ் தாய் பாசுரம் என்றால் இந்த நிர்வாகம் ) தானே வந்து கட்டுண்டு எளியனாய் இருக்கிற அன்று கிட்டப் பெறாதே -இன்று பெறுகைக்கு பிரார்த்தித்து இருப்பதே -நான் (கீழ் மகள் பாசுரம் என்றால் இந்த நிர்வாகம் ) ஆய்ச்சி –ஓர் இடைச்சியால் வந்த நலிவு பரிஹரிக்க மாட்டாதே இருப்பதே –வன் தாம்புகளால் –உரவியவை எல்லாம் அற்று அற்றுப் போக மேலே மேலே சிலவற்றை எடுத்து அடித்தாள் ஆயிற்று –-ஸ்நேஹம் (அன்புக்கும் வெண்ணெய்க்கும் ஸ்நேஹம்  )எவ்வளவு உண்டு -அவ்வளவு நிலை நிற்கும் இறே-சீற்றமும் –இடைச்சி குமைத் திறங்கள் (பெரிய திருவந்தாதி )-என்னக் கடவது இறே –புடைக்கலந்தானை –அலந்து இருக்கும் இதுக்கு மேற்பட இதுக்கு ஒரு பிரதி கிரியை இல்லை பண்ணலாவது –-அலந்தானை -அலவென்று மலர்வாய் –இவள் அடிக்க அடிக்க முகம் மலர்ந்து-இருந்த படியாகவும் –கண்ணியால் -குறும் கயிற்றால் கட்ட வெட்ட என்று இருந்தவனை (பெரிய திருமொழி)  -என்று இருந்தவன் இறே–எம்மானை –கட்டுண்டு அடியுண்டு கண்ணும் கண்ண நீருமாய் உடம்பு வெளுத்து இருந்த இருப்பைக் காட்டி என்னை அனந்யார்ஹமாக எழுதிக் கொண்டவனை –-பையவே நிலை (திருவாய் -5-10 )இறே ஈடு அழிப்பது –என் சொல்லிப் புலம்புவனே –இப்போது ஆசைப் பட்டு பெறாமையாலே புலம்ப வேண்டா நின்றது-முன்பு செய்து வைத்த  தொரு குறை -இல்லாதபடி யாலே சொல்லுகைக்கு ஒரு பாசுரம் காண்கிறிலேன் –நாம் இப்போது பெறாது ஒழிகிறது நம்முடைய க்ரம ப்ராப்தி பற்றாமை-என்று இத் தலையிலே கை வாங்கலாய் இருந்தது –அங்கனம் சொல்லலாவது ஓன்று இல்லை இறே-அத் தலைக்கு –மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித்–அயன் -அஜன் -யோனி ஜன்மாவான் அன்று –

ஆஸ்ரித விரோதி நிரசன சீலனாயும் இருந்து -ஆஸ்ரித விரோதி நிரசனத்துக்கு பரிகரமும் கொண்டு -ஆஸ்ரித ஸூலபனாயும்- பிரம்மா ருத்ராதிகள் துயரங்களையும் தீர்த்து அருளிய சர்வ ஸ்மாத் பரனாயும் இருந்து வைத்து –-அடைக்கலத் தோங்கு கமலத்தல ரயன் -தாமரைப் பூ பசிய இலையின் மீது உயர்ந்து விகஸிப்பது போலே திரு நாபித் தாமரை மலர் பசிய திருமேனி மீது எழுந்து தோன்றி இருக்குமே
அடைக்கமலமாக புகுந்த சிவனுக்கு நீக்கி -ரக்ஷகமாக இருந்து நீக்கினவன் என்றுமாம் – அடைக்கலத்தோங்கு அயன் –என்று தன்னிடம் அடைக்கலமாக வந்த நான் முக்கண் என்றுமாம் அடைக்கலம் என்றால் ரஷிப்பதற்கு உரிய பொருளும் ரக்ஷகனையும் குறிக்கும்
கமலத்து அலர் -தாமரைப் பூ என்று கொண்டால் தோன்றிய -வருவித்திக் கொள்ள வேண்டும் – முடை -கெட்ட நாற்றம்-புடைக் கலந்தானை-புடைக்க அலர்ந்தானை -பட்டர் திருகி கோஷ்ட்டியூரில் இருக்கும் பொழுது நஞ்சீயர் -பொருள் உரைக்க-ஆழ்வார் திரு உள்ளத்துக்கு உகந்த அர்த்தம் என்று புகழ்ந்தார் -அவதார பிரயோஜனம் பெற்றோமே என்று மகிழ்வான்-ஆற்றாமை மிக்கு ஆழ்வார் திருக் கல்யாண குணங்களையும் திரு நாமங்களையும் சொல்லி முறையிடுகிறார் – என் சொல்லிப் புலம்புவனே அவனது குண சேஷ்டிதங்களில் ஒன்றும் குறை இல்லாமல் எனது குறையே–வல் வினையேன் -என்றே சொல்லக் கடவேன் –

நாயகனைப் பிரிந்த நாயகி இரங்கியுரைக்கும் பாசுரம் இது. ஆபத்துக்கு உதவுந் தன்மையும் அடியார்களுடைய விரோதிகளை நிக்ரஹித்தற்கு ஏற்ற கருவிகளையுடையவனாருக்குந் தன்மையும் அடியார்க்கு எளியனாயிருக்குந் தன்மையும் எம்பெருமானுக்கு இயற்கையாகவுள்ளன;
இத்தன்மைகள் தன் பக்கலில் உதவாமையைக் குறித்துப் பராங்குசநாயகி இறங்குகிறானென்க.
அடைக்கலத்தோங்கு கமலத்தலரயன் சென்னியென்னும் முடைக்கதை தூண் முன்னரனுக்கு நீக்கியை” என்றதனால் ஆபத்துக்கு உதவுந் தன்மையும்,-“ஆழிசங்க படைக்கலமேந்தியை” என்றதனால் ஆச்ரித விரோதிகளை நிக்ரஹிப்பதற்கு ஏற்ற கருதியுடைமையும்
“வெண்ணெய்க் கன்றாய்ச்சி வன்தாம்புகளால் படைக்கலந்தானே.– என்றதனால் அடியார்க் கெளிமையும் தெரிவிக்கப்பட்டனவாம்.(என் சொல்லிப் புலம்புவனே.) சிவனுக்குத் துயரந் தீர்க்க ஆயுதமேந்தியுள்ளவனை நோக்கி என் துயரந்தீர்க்கக் கையில் கருவி கொள்ள வேணுமென்று சொல்வேனோ? ஆய்ச்சியர்க்குக் கட்டவு மடிக்கவும் எளியனானவனை நோக்கி எனக்கெளியனாக வேணுமென்று சொல்வேறோ?-யாது சொல்லிக் கூப்பிடுவே னென்கிறான். அந்தோ இத்தன்மைகள் பாவியேன் பக்கலில் உதவக் காணவில்லையே! என இரங்கியவாறு.

ஒரு காலத்திலே பரமசிவன் தன்னைப்போலவே பிரமனும் ஐந்து சிரமுடையனாயிருப்பது பலரும் பார்த்து மயங்குவதற்கு இடமாயிருக்கின்றதெனக் கருதி, அவனது சிரமொன்றைக் கொய்துவிட, அக்கபாலம் அப்படியே அவன் கையில் ஒட்டிக்கொள்ள ‘இதற்கு என்ன செய்வது? என்று கவலைப்பட, தேவர்களும், முனிவர்களும் ‘இப்பாவந்தொலையப் பிச்சை யெடுக்கவேண்டும்” என்றைக்குக் கபாலம் நிறையுமோ அன்றைக்கே இது கையைவிட்டு அகலும் என்று சொல்ல, சிவபிரான் பலகாலம்
பல தலங்களிலுஞ் சென்று பிச்சையேற்றுக் கொண்டே வருந்தித் திரிந்தும் அக்கபாலம் நீங்காதாக,
ஒருநாள் பதரிகாச்ரமத்தை அடைந்து அங்கு எழுந்தருளியுள்ள நாராயணமூர்த்தியை வணங்கி ஏற்றபோது அப்பெருமான் அக்ஷயமென்று பிக்ஷையிட, உடனே அது நிறைந்து கையை விட்டகன்றது என்பது, அயன் சென்னிகலத்து ஊண் அரனுக்கு நீக்கிய கதை.

தாமரைப்பூப் பசிய இலையின் மீது உயர்ந்து விகஸிப்பது போலத் திருநாபித் தாமரை மலர் எம்பெருமானது பசிய திருமேனியின் மீது எழுந்து தோன்றினமை “அடைக்கலத்தோங்கு கமலம்” என்றதனால் விளங்கும்.-இனி, அடைக்கலமென்பதை அரனுக்கு விசேஷணமாக்கி, அடைக்கலமாகப் புகுந்த சிவனுக்கு, என்றும்,-நீக்கி என்பதற்கு விசேஷணமாக்கி ரக்ஷகமாக இருந்து நீக்கினவனென்றும் பொருள் கொள்ளலாம். அன்றி, ‘அடைக்கலத்தோங்கு அயன்’ என் அந்வயித்து (தன் பக்கலிலே) அடைக்கலமாக வளர்கிற பிரமன் என்று உரைப்பாருமுளர்.
அடைக்கலமென்பது ரக்ஷிப்பதற்கு உரிய பொருளையும் ரக்ஷகனையுங் குறிக்கும்
‘கமலத்து அலர்’ என்பதற்கு தாமரைப்பூ எனப்பொருள் கொண்டால், தோன்றின’ என்று வருவித்துக் கொள்ளவேணும். முடை– கெட்டநாற்றம்.-படைக்கலம் – போர்க்கருவி: எம்பெருமானுக்குச் சங்குச் சக்கரங்கள் ஆபரண கோடியிலும் ஆயுத கோடியிலும் அமையும்.-படைக்கலம் ஏந்தி = படையும் கலமுமாக (ஆயுத ஆபரணங்களாக)த் தரித்தவன் என்றலும் பொருந்தும். திருவாழியாழ்வன் ஆயுத மாகலாம்;-திருச்சங்காழ்வான் எங்ஙனே ஆயுதமாகும் வகையென்னில்; ஸ்ரீபஞ்சஜக்யம் தனது பெரு முழக்கத்தால் பகைவரை அஞ்சுவித்து அழித்தலால் ஆயுதவர்க்கத்தின் பாற்படும்.அன்று ஆராய்ச்சி வன்தாம்புகளால் புடைக்க அலந்தானை= வெண்ணெய் திருடின குற்றத்திற்காக யசோதைப் பிராட்டி உரலோடு பிணைத்துத் தாம்பினால் கட்டியடிக்க வருந்திருந்தவனை என்றபடி; வருந்தி நின்றது அடிப்பதனாலுண்டான துன்பம் பொறுக்கமாட்டாமையாலன்று;-திருவாய்ப்பாடி யெங்கும் துருதுருக்கையாய்த் திரிந்து பெண்களையும் தயிர் பால் நெய் வெண்ணெண் முதலியவற்றையும்
கொள்ளைப் பெறாதபடி இங்ஙனே கட்டிப்போட்டு வைத்திருக்கிறாளே யென வருந்தியவாறு பெரிய திருவிழாக்களில் கள்ளப் பயல்களை அரசாங்கச்சேவகர்கள் சிறைபடுத்தி வைத்தாலி, ‘வேண்டினபடி திரிந்து களவு முதலிய செய்யப்பெறாமை நம்மையிப்படி சிறைப்படுதுதிவைப்பதே!’ என்று அப்பயல்கள் வருந்துவது போல.

பட்டர் திருகோட்டியூரி லெழுந்தருளியிருக்கும்போது ஒரு ஸ்வாமி வந்து ‘அடியேனுக்கு ஓருரு திருவிருத்தம் பொருளருளிச் செய்யவேணும்’ என்று பிரார்த்திக்க, ‘நம்பெருமானைப்பிரிந்த துயரத்தினால் எனக்கொன்றும் சொல்லப்போகிறதில்லை;-நஞ்சீயர் பக்கலிலே கேட்டுக்கொள்ளும் என்று சொல்லி, நஞ்சீயர்க்கு நியமிக்க, சீயரும் பொருளருளிச் செய்து வகையில்
இப்பாட்டளவிலே வந்தவாறே “புடைக்க அலந்தானை” என்கிற பாடப்படியே நஞ்சீயர் பொருளுரைக்க,
பட்டம் அதுகேட்டு ‘ஜீயா!” “அலந்தானை” என்ற பாடத்திற்காட்டிலும் “அலர்ந்தானை” என்ற பாடம்
ஆழ்வார் திருவுள்ளத்திற்கு மிகப் பொருந்தும் போரே இன்று தோன்றுகின்றது’ என்றருளிச் செய்தாராம்.
-ஆய்சச்சி அடிக்க அடிக்க முகமலர்ந்தானாம் கண்ணபிரான். (இதனை விவரிப்போம்.)
கண்ணபிரான், வெண்ணெய் களவு செய்கிற தன்னை யசோதைப்பிராட்டி அடிக்கடி தாம்பினால் கட்டி வருத்துகின்றாளென்று வீட்டிலுள்ள கயிறுகளைத் துண்டு துண்டாக அறுத்து வைத்திடுவான்; அவற்றை அவன் ஒன்றோடொன்று முடிபோட்டு ஒரு கயிறுவடிவமாக்கி அதுகொண்டு கண்ணபிரானைக் கட்டுவள்; அப்படி கட்டும்போது தன் உடம்புக்கு எட்டம் போராதபடியான
அக்கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்ட முடியாதபடி எளிதில் தன்னைத் தப்பித்துக்கொள்ள வல்லவனாயினும் தனது ஸௌசீல்யம் ஸௌலப்யம் ஆச்ரித பாரதந்திரியம் முதலிய சீலங்களை வெளியிடுவதற்கென்றே பரத்வநிலையைத் தவிர்த்து மநுஷ்ய ஸஜாதீயனாக அவதரித்திருக்கிற தான் உரலோடு கட்டுண்டு அடியுண்டிருக்கை முதலான இவ்வகைகளால்தான் அக்குணங்களை விளங்கச் செய்து கொள்ள வேணுமென்று கொண்டு, ஒரு சுற்றுக்கும் போராத தாம்பு இரண்டு மூன்று
சுற்றுக்கு போரும்படி உம்பைச் சுருக்கி அமைத்துக் கொண்டு ‘கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்பண்ணிய பெருமாயன்” என்னும்படி அவன்; ‘இங்ஙனே நம்முடையய ஸௌசீல்ய ஸௌல்ப்ய குணங்கள் விளங்கப் பெற்றோமே;-அவதார ப்ரயோஜநம் நன்கு நிறைவேறப் பெற்றதன்றோ’ என்று முகமலர்ச்சியடைந்திடுவன் என்க.-எம்பெருமான் பக்கல் ஈடுபட்டு ஆற்றாமை கொண்ட ஆழ்வார் அவனது திருக்கல்யாண குணங்களையும், திரு நாமங்களையுஞ் சொல்லி முறையிடுதல் இப்பாட்டுக்கு உள்ளுறை பொருள்.-(என்சொல்லிப் புலம்புவனே?) அவனது குணசேஷ்டிதங்களில் குறையொன்றுங் காணாமையால் எனது குறையையே நான் சொல்லக்கடலே னென்பதாம்.

அடைக்கலத் தோங்கு கமலத்தல ரயன் சென்னி என்னும் முடைக்கலத்து ஊண் முன் அரனுக்கு நீக்கியை-பசுத்த இலையாகிற இடத்திலே உயர்ந்த கமலத்திலே விகசிதனாய்த் தோன்றின
ப்ரஹ்மாவினுடைய தலை என்று சொல்லப்பட்ட முடை நாற்றத்தை யுடைய பாத்திரத்தில் ஊணை
சாப உபஹதனான காலத்தில் ஸம்ஹார கர்த்தாவான ருத்ரனுக்குப் போக்கினவனை-(பிஷாண்டர் கோயில் ஹர சாபம் போக்கிய கரம்பனூர் அருகில்)-இலையில் ஓங்கின கமலம் -என்கையாலே
பசுத்த திரு மேனியைக் காட்டுகிறது-அரனுக்கு நீக்கிவை -என்கையாலே ஸ்வ சாப ஸம்ஹாரம் பண்ண மாட்டாதவன் கிடீர் லோக ஸம்ஹாரம் பண்ண இருக்கிறான் என்றபடி-ஆழி சங்கம் படைக்கலம் ஏந்தியை கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் -பெரிய திருவந்தாதி -87-என்றும்
அடங்காரை எரி அழலம் புக வூதி–திருவாய் -4-8-8-என்றும் விரோதி நிரசன பரிகரத்தைக் கை விடாதவனை-படைக்கலம் -ஆயுதம்-(படை-என்று ஆயுதம் என்றும் அவையே கலம்-கலன் -ஆபரணம் என்றுமாம்)-நீக்கி ஏந்தி என்று சொல்லாய் இரண்டாம் வேற்றுமையாய் இருக்கிறது-வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால் புடைக் கலந்தானை-வெண்ணெய்க்காகக் களவு கையோடே அகப்பட்ட அன்று பெற்ற தாயான இடைச்சியானவள் திருமேனியின் மார்த்தவம் பாராதே
சிக்கெனத் தாம்புகள் கைக்கு எட்டியது எல்லாம் எடுத்துத் தன் கோப அநு ரூபமாகப் புடைக்க
அதுக்கு பிரதிகிரியை காணாதே அழுகையும் அஞ்சி நோக்கும் அந்நோக்கும் -பெருமாள் திருமொழி -7-8- என்னும்படி அலமருகிறவனை–எம்மானை என் சொல்லிப் புலம்புவனே – – இந்த அபதானத்தாலே எத்திறம் அபவ்யனானவன் பவ்யனாக வேணும் என்னவோ-அபரிகரனானவன் ஸ பரிகாரனாக வேணும் என்னவோ-எத்தைச் சொல்லிக் கூப்பிடுவது என்கிறார் ஆயிற்று–இது நாயகி புலம்பலுக்கும் ஒக்கும் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு–அடைக்கலத் தோங்கு-சர்வேஸ்வரன் பக்கலிலே போலே யாயிற்று ப்ரஹ்மா இருப்பது நிஷேபம் போலே என்றவிடம் குறை வராதபடி யுணர்ந்து நோக்குகின்ற படியைப் பற்றச் சொன்னது அத்தனை–கமலத்தல ரயன்-அவ்வளவு அன்றிக்கே -ஸர்வேஸ்வரன் பக்கலிலே பிறந்த ஜென்மத்தாலே வந்த ப்ராப்தியை யுடையவன்–சென்னி என்னும் முடைக்கலத்து ஊண் முன் அரனுக்கு நீக்கியை-லோக குருவுமாய் பிதாவுமானவன் தலையை அறுத்துப் பாதகியாய் நின்றான் ஒருவன்
தலை யறுப்புண்டு கிலேசியா நின்றான் ஒருவன் இவருடைய கிலேசத்தையும் போக்கினவன்–அயன் சென்னி என்னும் முடைக்கலம்-ப்ரஹ்ம சிரஸ் என்ற ஒரு நாமத்தை யுடைத்தான முடைக்கலம் ஆயிற்று-பார் ஏறி யுண்ட தலைவாய் -இரண்டாம் திரு -63-என்னும்படி கழுகும் பருந்தும் தொடர்ந்து திரியும்படிக்கு ஈடாக வாயிற்று ஸஞ்சரிப்பது-முடைக்கலத்து ஊண் முன் அரனுக்கு நீக்கியை ஆழி சங்கம் படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால் புடைக் கலந்தானை எம்மானை என் சொல்லிப் புலம்புவனே – –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-அடைக்கலத் தோங்கு கமலத்தலரயன்-கதுப்பும் கருமையும் பசுமையும் அகலமுள்ள இலை உள்ளதும் ஓங்கினதுமான செங்கமலத்தில் உத்பவித்தவன் அவனுடைய–சென்னி என்னும் முடைக்கலத்து ஊண் முன் அரனுக்கு நீக்கியை-அவனுடைய சிரஸ் கபாலமான அதி ஹேய நாற்றமுள்ள பிஷா பாத்திரத்தில் பிஷிக்கும் ருத்ரனுக்கு ஸர்வரும் பார்க்க அவர் முன்னாகவே அந்த ப்ரஹ்ம ஹத்தியைப் போக்கினவனை–ஆழி சங்கம் படைக்கலம் ஏந்தியை-திருக் கைகளிலே திருவாழி திருச்சங்கு முதலான திவ்ய ஆயுதங்களை திவ்ய ஆபரணமாகப் பூ ஏந்தினால் போல் தரித்தவனை-வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால் புடைக் கலந்தானை-வெண்ணெய்க்காகக் களவு கையோடே அகப்பட்ட அன்று பெற்ற தாயே பலவத்தான கண்ணி நுண் சிறுத் தாம்புகளால் கட்ட
உரவிடை யாப்புண்டு அவன் படைக்கப்புடைக்க முக கமல விகசநத்தோடே ஒளி விகஸநத்தை யுள்ளவனை–எம்மானை-இவைகளை எல்லாம் எனக்கு காட்டி என்னை அநந்யார்ஹம் ஆக்கிக் கொண்டவனை–என் சொல்லிப் புலம்புவனே – எத்தைச் சொல்லிப் புலம்ப வல்லேன் நான் என்கிறார் –

தாத்பர்யம்–இதில் சர்வேஸ்வரன் நம்மை ரக்ஷிக்க அவதரித்த போது ஒதுங்கிப் போன தம்மை வெறுத்து பேசுகிறார்-உமக்கு புத்ரன் சரண்யன் -நான்முகன்-ருத்ரனுடைய ப்ரஹ்மஹத்தி போக்கியும்
அங்க ஹீனனான ப்ரஹ்மாவை அதிகாரத்தில் இருந்து தள்ளி வைக்காதே தொடர்ந்தும் தங்களையே ஈஸ்வர் என்று அபிமானம் கொண்ட அவர்களுக்கு ரக்ஷகனாய் ரக்ஷண பரிகரங்களை எப்போதும் கையிலே ஏந்தி வெண்ணெய் உண்டு அபவாதம் பொறாமல் தாயான யசோதை உனது மேல் பரிவினால் கைக்கு எட்டிய தாம்பினால் உன்னை அடிக்க அத்தைத் தப்பித் போக மாட்டாமல் அலர்ந்து இருந்த உன்னை சேவிக்கப் பெறாமல் இருந்தது எனது குற்றமே என்கிறாள்

1-5-வள வேழ் உலகின் பிரவேசம் –

முதல் திருவாய்மொழியில் ‘சர்வேஸ்வரன் சர்வ ஸ்மாத் பரன் ஆகையாலே அவனைப் பற்றுவார்க்கு ஒரு குறை இல்லை,’ என்றார்;
இரண்டாந்திருவாய்மொழியால், அந்த ஆச்ரயணம் தான் புருடோத்தமனைப் பற்றுகிறது ஆகையாலே பலத்தோடே வ்யாப்தம் அல்லது இராது,’ என்றார்;
மூன்றாந்திருவாய்மொழியால், பஜிப்பார்க்காகத் தான் அவதரித்து ஸூலபனாகையாலே பஜிக்கத் தட்டு இல்லை,’ என்றார்;
நான்காந்திருவாய்மொழியால் ஸூலபனானவன் ஆனவன் தானே -அபராத சஹனாகையாலே பலத்தோடே வ்யாப்தம் அல்லது இராது ,’ என்றார்;
அயோக்ய அநுஸந்தானம் ‘தம் தாழ்வினை நினைந்து அகலுவாரையும் தன் செல்லாமையைக் காட்டிப் பொருந்த விட்டுக் கொள்ளும் சீலவான்,’ என்கிறார், இத்திருவாய்மொழியால்.

கீழ் கலங்கித் தூதுவிட்ட இடம்-ப்ரேம- அன்பின் காரியம்; இங்கு அகலப் பார்க்கிற இடம் ஞான காரியம்.அகலுவான் என்?’ என்னில்,- சேஷிக்கு – தலைவனுக்கு அதிசயத்தைத் தேடுமவர்கள் தம் தாம் விநாசத்தை அழிவினைப் பாரார்கள் அன்றே? -நான், நல்லார் தீயார் என்று நிரூபணம் பண்ணாதே எல்லார் தலையிலும் என் காலை வைத்ததைக் கண்டீரே,’
எனத் தான் திருவுலகு அளந்தருளின எளிமையைக்காட்ட,-ஒரு குணாதிக்யமோ வேண்டுவது ‘நம்மால் வரும் மேன்மையும் இவனுக்கு வேண்டா,’ என்று பின்னையும் அகலப்புக,-உம்மால் வரும் மேன்மையேயன்றோ நீர் வேண்டாதது? உம்மால் வரும் நான்தான் வேண்டுமோ, வேண்டாவோ?
நீர் தாழ்ந்தவர் என்று அகலுமதிலும் சேர்கிறது, திருவாய்ப்பாடியில் வெண்ணெயினைப் போன்று எனக்குத் தாரகங்காணும்;
இனி, நீர் அகலில், திருவாய்ப்பாடியில் வெண்ணெய் விலக்கினார் புக்க உலகம் புகுதல் திண்ணம்;
நீர் அகலுமது என்னுடைய இருப்புக்குக் கேடு-சத்தா ஹானி ,’ என்று கூறி, பின்னர்
மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் ‘நட்பு உணர்ச்சியோடு வந்து சேர்ந்த இந்த விபீடணன் -போட்கன்- வஞ்சனையுள்ளவன் ஆகவுமாம்;
நான் இவனை விடில் உளேன் ஆகேன்,’ என்று சேர்த்துக் கொண்டாற்போலவும்,கரிஷ்யே வசனம் தவ-என்று நீ கூறுகின்ற இச்செயலை நான் செய்கிறேன் என்று சொல்லப் பண்ணினாற்போலவும்,
வருந்தித் தம்மை இசை வித்து, சேர்தற்கு அவன் தான் விரும்பியவாறே -சம்ச்லேஷ உன்முகனான படியே ஸம்ஸ்லேஷித்து சேர்த்து- தலைக் கட்டினான்,’ என்கிறார்.-

இப்படி கடக முகத்தால் இவ் வாழ்வார் தம் தசையை அறிவித்த அநந்தரம் -இவர் ஆர்த்தி தீரும்படியாக –
அளவியன்ற ஏழ் உலகத்தவர் பெருமான் கண்ணன் -என்று ப்ரக்ருதமான ப்ரகாரத்திலே ஸ்வாமித்வ ஸுசீல்ய விசிஷ்டானாய்க் கொண்டு அவ்வளவிலே வந்து
சந்நிஹிதனான சர்வேஸ்வரனுடைய நிரவதிக ஸுசீல்யத்தை அருளிச் செய்வதாக தத் உபபாதகமான -1-அவனுடைய ஸர்வேஸ்வரத்வத்தையும்–2-சர்வ
காரணத்வத்தையும் –3-அசேஷ ஜன சம்ச்லேஷத்தையும் -4-விபூதி த்வய நிர்வாஹகத்வத்தையும் –5-ஆஸ்ரித அர்த்த ப்ரவ்ருத்தியையும் —
6-போக்யமான ஸ்வபாவ நாம யோகத்தையும் -7–போக்யதா ப்ரகாசகமான ஸுலபயத்தையும் -8–ஆஸ்ரித விஷய வ்யாமோஹத்தையும் –
9-ஆஸ்ரித உபகார அதிசயத்தையும் -அனுசந்தித்து
இப்படி விலக்ஷணான சர்வேஸ்வரனை அத்யந்த நிக்ருஷ்டரான நாம் அணுகுகை அவ்த்யாவஹம் –
அதிசய ஞான அணுகிலும் அங்குத்தைக்கு மாலின்ய கரம் என்று அகலப் புக
இவரைத் தன் சீலத்தைக் காட்டி ஆகவிடத் தேட ஸமாஹிதராய் அனுபவித்தவர் பின்னையும் அவ்வனுசந்தானத்தாலே அகல தன்னுடைய ஹேய ப்ராதிபட்யத்தையும்
ஆஸ்ரித வ்யாமோஹத்தையும் பிரகாசிப்பித்து ஆக்கவிட்டுக் கொள்ள ஸமாஹிதராய்
தம் பக்கல் ஈஸ்வரனுக்குப் பிறந்த உபகாரகத்வத்தையும் மேலுண்டான பாரிப்பையும் அனுபவித்து ஸந்துஷ்டாராகிறார் –

வள வேழுலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன் பின்னையும்
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய்
இளவேறேழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே
 –1-5-1-

நித்திய சூரிகட்கு -அனுபாவ்யனானவனை -அனுபவிக்கப்படும் பொருளானவனை, 
மனம் வாக்குக் காயங்களால் தூஷித்தேன் ’ என்கிறார்.-‘வானோர் இறையைக் கள்வா என்பன்’ என்று கூற நினைத்தவர், தொடங்கின வாக்கியம் முடிப்பதற்கு முன்னே தம்மை நினைத்து,  ‘அருவினையேன்’ என்கிறார்.-அருவினை’ என்னலாமோ?’ எனின்,
‘பாபம் என்பது, அநிஷ்டாவஹம் -தமக்கு விருப்பம் இல்லாததைக் கொடுப்பது’ என்று இருக்குமவர் ஆகையாலே, இறைவனை விட்டு அகன்று நீங்கியிருத்தல் தமக்கு விருப்பமாயினும் அதனைச் செய்ய ஒட்டாது தடுக்கின்றமையின் அன்பினை ‘அருவினை’ என்கிறார்.‘களவேழ்’ என்பதற்குக் ‘களவிலே வேட்கையுடையனாய்-அபி நிவிஷ்டனாய்- ஊற்றமுடையனாய்’ என்று கூறலும் ஆம்

இளஏறு ஏழும் தழுவிய – ம்ருத்யு சமமாய் -யமனுக்கு ஒத்தனவாக இருந்துள்ள இடபங்கள் ஏழனையும் ஊட்டியாக ஒருக்காலே தழுவினான். பின்னர் அவளை அடைதலால், அவள் முலையிலே அணைந்தது போன்று இருக்கையாலே  ‘தழுவிய’  என்கிறார்.
எந்தாய் என்பன் – ஏழ் எருதுகளையும் அடர்த்த செயலுக்குத் தோற்று, ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டி சொல்லும் பாசுரத்தையும் சொன்னேன்.
யுக்தி மாத்ரமேயோ சொன்ன அளவேயோ!-நினைந்து நெஞ்சாலும் தூஷித்தேன் – நிந்தித்தேன்.
அவ்வளவேயோ நைந்தே – பிறர் அறியும்படி சிதிலனாய்-காயிகத்தாலும் உடலாலும்-தூஷித்தேன் – நிந்தித்தேன்.

‘அயர்வறும் அமரர்கள் அதிபதி’ என்றேன்;-‘எத்திறம்’ என்றேன்;-பிராட்டிமார் நிலையை ப்ராப்தனாய் – அடைந்து தூது விட்டேன்’ என்று, அவற்றுக்கு அநு தபிக்கிறார் வருந்துகிறார் என்று பொருள் கூறலும்

—————

நினைந்து நைந்து உள்கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால்
நினைந்த வெல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே
மனம் செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ மாயோனே
 –1-5-2-

நெஞ்சால் நினைந்தும், வாயால் பேசியும், உடலால் நைந்தும், -தப்பச் செய்தேன் ’ என்றார் கீழ் பாசுரத்தில்;-ப்ரேமார்த்த சித்தரான -அன்பினால் நனைந்த மனத்தையுடைய ப்ரஹ்மாதிகள் அன்றோ அதுதான் சொல்லப் பெறுவர்!-தப்பச் செய்தேன் ‘ என்ற இடம் தப்பச் செய்தேன் என்கிறார் இப் பாசுரத்தில்;

அவன் இவை கொண்டு காரியங் கொள்ளுமதிலும் ‘சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி’ என்னுமாறு போன்று ‘அவனுக்கு என்று தரிக்குமதுவே’ இவர்களுக்குப் பேறாக இருக்குமாதலானும்,-பாவ பந்தம் இரண்டு தலைக்கும் உண்டு ஆதலின்,
அவன் தானும் இவை கொண்டு காரியங் கொள்ளுமதிலும் இவர்கள் தரித்துக் கொண்டு நிற்கக் காணுமதனையே பேறாக நினைத்திருப்பனாதலானும்  ‘ஏந்தி வணங்கினால்’ என்கிறார்.

நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் – தன் திருவுள்ளத்தால் விஷயீகரிக்கப்பட்ட எல்லாப் பொருள்கட்கும் காரணமாய். ‘மேல்  மனம் செய் ஞானம்’ என்று  சங்கல்ப ரூப ஞானத்தை அருளிச் செய்வதனால், ஈண்டு,  ‘நினைந்த’என்பறதற்குக் கருத்து என்?’ என்னில், காரியமாக வேறுபட்டு விரிந்த தேவர்கள் முதலான எல்லாப் பொருள்களும் அழித்து  ‘ஸதேவ’ என்று கூறும்படி இருந்த அன்று, புத்திரர் பௌத்திரர் முதலானவர்களோடு வாழ்ந்தவன் அவர்களை இழந்து தனியன் ஆயின் தன் தனிமையை நினைந்து வெறுக்குமாறு போலவும், வேறு தேசத்தை அடைந்திருக்கிற புத்திரனைத் தாய் தந்தையர்கள் நினைக்குமாறு போலவும், இவற்றினுடைய இழவை நினைப்பதொரு நினைவு உண்டு; அதனை அருளிச் செய்கிறார்.

————-

மாயோனிகளாய் நடை கற்ற வானோர் பலரும் முனிவரும்
நீ யோனிகளைப் படை என்று நிறை நான்முகனைப் படைத்தவன்
சேயோன் எல்லா வறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால்
தாயோன் எல்லா எவ்வுயிர்க்கு தாயோன் தான் ஓர் ஓருவனே 
–1-5-3-

‘நீர் நம்முடைய மேன்மையைப் பார்த்து அங்ஙனம் நெகிழப் போகாதே, நாம் தாழ நின்று எல்லாரோடும் பொருந்தும் சீல குணத்தையும் ஒரு கால் பாரீர்,’ என்று திரு உலகு அளந்தருளின சீல குணத்தை காட்டிக் கொடுக்க,
அதனை நினைந்து அகல மாட்டாதே, அணுகவுமாட்டாதே, நடுவே நின்று,அணாவாய்த்துக் காலம் கழிக்கிறார்.
‘அவனை ஒழிய அப்படிக் காலம் கழிக்க வல்லரோ?’ என்னில், 
சீர் கலந்த சொல் நினைந்து போக்கும் போது போக்க வல்லரே; சீல குண அநுசந்தானத்தால் போக்கலாமன்றே?

நாய்ச்சிமார் தொடும் போதும் பூத் தொடுமாறு போன்று கூசித் தொடும் திருவடிகளைக் கொண்டு அன்றே காடும் ஓடையும் அளந்து கொண்டான்!’ என்று ஆச்சரியப்படுகிறார்.-கடுநடை யிட்டு ஓடுகிறவர் இவன் சீல குணத்தை நினைந்து கால் தாழ்க்கிறார்-அசேஷ ஜன சம்ஸ்லேஷ ரூபமான லோக விக்ரமண ஸ்வ பாவத்தை ஈஸ்வரன் காட்டக் கண்டு விஸ்மிதராகிறார் –.தான் ஓர் ஓருவனே-இது ஒரு பிரகாரமே-மேன்மைக்கு ஒப்பு இல்லாதா போலே நீர்மைக்கும் அவதி இன்றிக்கே இருக்கிறபடி என் -என்று விஸ்மிதர் ஆகிறார் –ப்ரீதி அதிசயத்தாலே –ஒருவனே தானோர் ஒருவன் –என்று அவனைக் கொண்டாடுகிறார் –

—————–

தானோர் உருவே தனிவித்தாய்த் தன்னில் மூவர் முதலாய
வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய்
தானேர் பெரு நீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண் வளரும்
வானோர் பெருமான் மா மாயன் வைகுந்தன் எம்பெருமானே –
1-5-4-

இனி, ‘நான் அல்லேன்’ என்னிலும், தன்னுடைய சௌசீல்ய குணத்தால் என்னை விடான்,’ என்று – ஸமாஹிதராகிறார்- ‘தான் ஓர் தனி’ என்னும் மூன்று பதங்கள் -அழகிய த்ரிவித மூன்று காரணமும் தானேயாகி’ என்றபடி.

தன்னின் மூவர் முதலாய-தன்னில் -என்றது தன் பக்கலிலே என்ற படியாய் –
தன் சங்கல்ப ஞான ரூப ஞானத்தால் சேந்த்ர-என்று இந்திரனையும் கூட்டி –
பிரமன் சிவன் இந்திரன் ஆகிய மூவர் முதலாய – என்று கூறலும் ஆம்.

நெடு நாள் தன் வாசி அறியாதே போந்த எனக்கு அறிவைத் தந்து தன்னை உள்ளபடி அறிவித்தவன், தான் தந்த அறிவைக் கொண்டு நான் அகன்று போகப் புக்கால்,
அவன் விட்டு ஆறியிருப்பனோ என்பார்,‘எம்பெருமானே’ என்கிறார்.-இத்தலை இறாயா நிற்க -தன் பேறாகச் சேர விட்டுக் கொள்ளுமவன் இறே ஸ்வாமி யானவன் –இந்த ஸுசீல்யமானது அத்யந்த நிஹீனனான என்னோடே ஸம்ஸ்லேஷியா விடில் அவனுக்கு சித்தியாது -ஆதலால் ஸுசீல்ய குண சித்யர்த்தமாக இனி அவனுக்கு ஆத்மாந்தமாக சகல சேஷ வ்ருத்தியும் பண்ணுவேன் -என்கிறார் –

———-

மானேய் நோக்கி மடவாளை மார்பில் கொண்ட மாதவா
கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறிந்தாய் கோவிந்தா
வானார் சோதி மணி வண்ணா மதுசூதா நீ யருளாய் உன்
தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு வினையேனே 
–1-5-5-

இவ்வளவிலே முகம் காட்டில் பழையபடியே அகலும் -அவர் தாமே அர்த்திக்கும் தனையும் முகம் காட்டக் கடவோம் அல்லோம் -என்று அகல நிற்க -உன்னைச் சேருமாறு அருளாய் என்கிறார் –

தீம்பு சேர்வது கிருஷ்ணனுக்கே ஆகையாலே  ‘போம்பழி எல்லாம் அமணன் தலையோடே’ என்னுமாறு போன்று,கிருஷ்ணன் தலையிலே ஏறிட்டுச் சொல்லுகிறார்

அருளாய் சேருமாறு வினையேன் – கலத்தில் இட்ட சோற்றை விலக்குவாரைப் போன்று, நீ வந்து கிட்டக் கொள்ள அகலுகைக்கு அடியான பாவத்தைப் பண்ணின நான் சேருமாறு அருள வேண்டும்.-தாம் இசைந்த பின்பும் கிடையாமையாலே ‘வினையேன்’ என்கிறார்.

இத்தால் -1–ப்ரார்த்த நீயனுடைய நித்ய புருஷகார யோகத்தையும் – -2-ஆஸ்ரித வக்ரதையைக் கழிக்கும் ஆர்ஜவ ஆபாதகத்வத்தையும் -3-க்ஷண அபி நிவேசத்தையும்
-4-ப்ராப்யமான தேச விக்ரஹ வை லக்ஷண்யத்தையும் -5-பிரதிபந்தக நிவர்த்ததையும் –சொல்லிற்று ஆயிற்று –

————-

வினையேன் வினை தீர் மருந்தானாய் விண்ணோர் தலைவா கேசவா
மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா
சினை யேய் தழைய மரா மரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா
இனையாய் இனைய பெயரினாய் என்று நைவன் அடியேனே –
1-5-6-

இவர்-ஆபிமுக்யம் – எதிர்முகம் செய்தவாறே, இறைவன் அல்பம் சிறிது தாழ்த்தான்;
இவர் ‘என்னை’ இழந்தாய்? கிடாய் ’ என்கிறார்.-இவர் அபேஷித்த போதே முகம் காட்டாமையாலே அவனுடைய குண சேஷ்டிதங்கள் ஸ்ம்ருதி விஷயமாய் நலிய சிதிலர் ஆகிறார் –அகல நினைக்கிற இது உள்ளது இவர் ஒருவர்க்குமே யாதலின்‘வினையேன் வினை’என்கிறார்.

இனையாய்- ஏவம்விதமான குண சேஷ்டிதங்கள் -இவ்விதமான குணங்களையும் செயல்களையுமுடையவனே.-இனைய பெயரினாய்– அவற்றிற்கு வாசகங்களான திருப் பெயர்களை உடையவனே.-என்று நைவன் – ‘காண வேண்டும், கேட்க வேண்டும்’ என்ன மாட்டாதே – உருகுகின்றேன். அடியேனே –யார் உடைமை அழிகிறது?
இவ் வுயிர் ஏதேனும் தனக்குத் தானே உரியதாகி அழிகிறதோ, பிறர்க்கு உரிமைப்பட்டு அழிகிறதோ? உடையவர்கள் வேண்டுமாகில் தங்கள்-வஸ்துவை – பொருளை நோக்கிக் கொள்ளுகிறார்கள் என்பார்,அடியேனே’- என்கிறார்,
உன்னால் இரட்சிக்க ஒண்ணாமல் அழிகிறதோ? என்னால் இரட்சிக்கலாய் அழிகிறதோ?

இத்தால் -1-அனுபவ விரோதி நிவர்த்தகமும் –-2-அனுபாவ்ய விபூதி யோகமும் –-3-ஆஸ்ரித சத்தாதி ஹேதத்வமும்–4- தத் விஷய ஸுலப்யாதிகளும் -5-அத்தாலே வந்த உன்மேஷமும்
-6-தத் ஹேதுவான ஸ்ரீ லஷ்மி சம்பந்தமும் -7-விசுவாச ஜனகத்வமும் –-8-தன் நிபந்தந உஜ்ஜ்வல்ய அதிசயமும் –தோற்றுகிறது –

————–

அடியேன் சிறிய ஞானத்தன் அறிதலார்க்கும் அரியானை
கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை
செடியார் ராக்கை யடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கதோர் அயர்வுண்டே 
–1-5-7-

நைவன்’ என்றார்; இவரை நைவிக்க மனம் இல்லாமையாலே வந்து முகங்காட்டினான்;
அவனைப் பார்த்து ‘நம்மால் வரும் குணாதிக்யமும் -குணத்தின் மேன்மையும் -இவனுக்கு வேண்டா,’ என்று அகலுகிறார்.

அடியேன் சிறிய ஞானத்தன் – சம்சாரிகளில் அறிவு கேடர் -சர்வஞ்ஞர் -‘முற்றறிவினர்’ என்னும்படியன்றோ என் அறிவு கேடு!
‘அல்லேன்’ என்று அகலும் இவர், ‘அடியேன்’ என்கிறது, வாசனையாலே.
அன்றிக்கே , ‘அடியேன்’ என்கிறது, அடிமைக்கு இசைந்து அன்று;
ஆத்துமாவிற்கு ஞான ஆனந்தங்களைப் போன்று சேஷத்வத்தை -அடிமையையும் நிரூபமாக நினைந்திருக்கையாலே. நான்’ என்பது போன்று ‘அடியேன்’ என்கிறார் எனலுமாம்.தம்மைச் ‘சிறிய ஞானத்தன்’ என்றும், இறைவனை ‘அறிதல் ஆர்க்கும் அரியானை’ என்றும் அருளிச் செய்கிறார்-கண்ணனை- அறிய அரியனாயிருந்தும் ஆயர்கட்கும் ஆய்ச்சிகட்கும் தன்னை எளியன் ஆக்கி வைத்தவனை.

அவனையே உபாயமாகப் பற்றித் தூறு மண்டின சரீரத்தை அறுத்துக் கொள்ளும் அடியார் உண்டு கேவலர்;-அவர்கள் அடியாரோ?’ என்னில், தலைவனுக்கு அதிசயத்தை விளைக்குமவர்களே அடியார் ஆவர்;-தம்மைப் போன்று கிட்டித் தலைவனுக்குத் தாழ்வினை விளைக்கப் பாராமல், பிறவியாகிற தளையை அறுத்துக் கொண்டு கடக்க நிற்கின்றவர்கள் அவர்கள் ஆதலின், அவர்களையே அடியவர்கள் என்று இருக்கிறார்.கைவல்யாதி ப்ரயோஜனங்களைக் கொண்டு அகன்று போவார்கள் என்ன பாக்யம் பண்ணினாரோ –

அடியேன் காண்பான் அலற்றுவன்- அடியேன்’ என்று அலற்றுவன், காண வேண்டும்’ என்று அலற்றுவன். இதனின் மிக்க ஓர் அயர்வு உண்டே – உண்டியே உடையே என உகந்து ஓடும் இம் மண்டலத்தாரோடு சேர்ந்து திரிந்த -சம்சாரியாக இருந்த -நாளில் அறிவே நன்றாக இருந்தது அன்றே!
‘அது நன்றாயினவாறு என்?’ என்னில், அப்போது கடக்க நின்று பகவத் தத்துவத்தைக் குறி அழியாமை வைத்தேன்; இப்போது அன்றோ நான் கிட்டி அழிக்கப் பார்த்தது! இதனைக் காட்டிலும் அறிவு கேடு உண்டோ?-சம்சார தசையிலே அஜ்ஞ்ஞானம் தன்னை அழிக்குமது இறே இது அவனை அழிக்குமது இறே –

————————

உண்டாய் உலகு ஏழ் முன்னமே யுமிழ்ந்து மாயையால் புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர் உவலை யாக்கை நிலை எய்தி
மண் தான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்காகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண் கரைய நெய்யூண் மருந்தோ மாயோனே
 –1-5-8-

நீர் உம்மைக் கொண்டு அகலுவீராகில், திருவாய்ப்பாடியில் வெண்ணெய் விலக்கினால் புக்க உலகம் புகுவீர்,’ என்றான். அவன் கருத்தைத் தாம் அறிந்தமை தோற்ற அநுபாஷிக்கிறார் இப் பாசுரத்தில்.மாயோனே – ஆஸ்ரித ஸ்பர்சமுள்ள -‘அடியார்கள் தீண்டிய பொருளால் அல்லது தாரகம் இல்லாதபடியான- ஆஸ்ரித வியாமோஹத்தாலே – அடியார்களிடத்துள்ள பெரு மோஹத்தாலே செய்தாய் இத்தனையன்றோ?’ ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனாய்ப் புக்கு ‘வெண்ணெய் அமுது செய்ய’ என்றால் கொடார்கள் அன்றே?-மண்ணை அமுது செய்தது, அதன் சத்தைக்காக;-வெண்ணெய் அமுது செய்தது, உன் சத்தைக்காக.-மண்ணை உண்கிற போது சேஷித்தது உண்டாகில் இறே உமிழ்கிற போதும் சேஷிப்பது-

————

மாயோம் தீய வலவலைப் பெருமா வஞ்சப் பேய் வீய
தூய குழவியாய் விடப்பால் வமுதா வமுது செய்திட்ட
மாயன் வானோர் தனித்தலைவன் மலராள் மைந்தன் எவ்வுயிர்க்கும்
தாயோன் தம்மான் என்னம்மான் அம்மா மூர்த்தியைச் சார்ந்தே 
–1-5-9-

பரிவரான யசோதாதிகள் வெண்ணெய் உனக்கு அம்ருத சமம் -என்னுடைய ஸ்பர்சம் விஷ சமம் -நான் அகலுகையே உக்தம் -என்ன -பூதனை நஞ்சு பாதகம் ஆகாதாப் போலே உம்முடைய தோஷமும் பாதகம் அன்று –பெற்ற தாய் போலே வந்த பேய்ச்சி -என்று போலியும் அமையும் -என்ன-ஆகில் அகல்வேன் அல்லேன் என்று சமாஹிதர் ஆகிறார்-‘பூதனையை முடித்தது போன்று ‘நான் அல்லேன்’ என்று அகலப் புக்க
என் நிர்ப்பந்தத்தைப் போக்கினான்,

என் அம்மான் –mநான் தன்னை அகன்று முடிந்து போகாதபடி நோக்கினவன்.
இனி, ‘நித்திய சூரிகளும் மற்றும் உள்ள எல்லா ஆத்துமாக்களும் ஒரு தட்டும்
நாள் ஒரு தட்டுமாம்படி என் பக்கலிலே விசேடமான திருவருளைச் செய்தவன்’ என்பார், ‘என் அம்மான்’ என்கிறார் எனலுமாம். அம்மா மூர்த்தியைச் சார்ந்து- விலக்ஷணமான திருமேனியை யுடைய அம் மகா புருஷனைக் கிட்டி, ‘கிட்டி மாயோம் – இனி அகன்று மாயக் கடவோம் அல்லோம்; ‘பிரிகை யாவது – விநாசம்’ என்று இருக்கையாலே ‘மாயோம்’ என்கிறார்.-இது, ‘நானும் என்னோடு சம்பந்தமுடையாரும் முடியக் கடவோ மல்லோம்,’ எனப் படர்க்கையை உளப் படுத்திய உளப் பாட்டுப் பன்மை.
இனி, இறைவனை உளப் படுத்தியதாகக் கொண்டு, ‘இரண்டு தலையையும் அழித்துக் கொள்ளக் கடவோம் அல்லோம்’ என்று பொருள் கூறலுமாம்.

ஸ்வதஸ் சர்வஞ்ஞனான – தனக்குத்தானே முற்றறிவனானவனும் ‘தாய்’ என்று பிரமிக்கும்படி தோற்றின பெரிய வஞ்சனை யுடையவளான பூதனை முடியும்படியாக.-எனக்கும் அல்ல -பிறர்க்கும் அல்ல -அவனுக்கே -என்று அவள் அநந்யார்ஹம் ஆக்குகையாலே அம்ருதம் ஆயிற்று –‘பூதனையுடைய விஷம் அமிருதமாம்படி அமுது செய்தவன் தான் யார்?’ என்னில், –வானோர் தனித் தலைவன் – அயர்வு அறும் அமரர்களுக்குத் தனித் தலைவன் ஆனவன்.-மலராள் மைந்தன்-‘தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்று அமரர் ஆட் செய்வார்,’ என்கிறபடியே, -அவர்கள் விரும்பித் தொண்டுகளைச் செய்யப் பெரிய பிராட்டியாரும் தானுமாக இருக்குமவன். மைந்தன் – அவளுக்கு மிடுக்கானவன். இனி, இதற்கு, ‘அவளுடைய சேர்த்தியினாலே நித்தியமான புதிய யௌவனத்தை யுடையவன்’ என்று பொருள் கூறலுமாம்.

————–

சார்ந்த விரு வல்வினைகளும் சரிந்து மாயப் பற்று அறுத்து
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞானச் சுடராகி யகலம் கீழ் மேல் அளவிறந்து
நேர்ந்த யுருவாய் யருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே 
–1-5-10-

இவரை இப்படி இசைவித்து வைத்து, ஒரு புதுமை செய்ய வேண்டாதபடியான பரம பதத்தை
கோடிக்க-அலங்கரிக்கத் தொடங்கினான்.தீர்ந்து – தான்-க்ருதக்ருத்யனானான் – செய்ய வேண்டுவனவற்றை எல்லாம் செய்து முடித்தவனாய்.-இனி, தீர்ந்து என்பதனைத் ‘தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி’ என்று கூட்டி, ‘அல்லேன்’ என்று அகலாதே தனக்கே தீர்ந்து, தன் பக்கலிலே நெஞ்சை வைக்கும்படி திருத்தி என்று பொருள் கூறலும் ஆம்.இறைவன் இவர் பக்கல் கொண்ட அவாவின் மிகுதியால் வீடு திருத்துகையில் விளம்பிக்க, அக்கால நீட்டிப்பிற்குப் பொறாராய் ‘முனியே நான்முகனே முக்கண்ணப்பா’ என்ற திருவாய் மொழி முடிய இறைவன் தமக்குச் செய்த உபகாரத்தைச் சொல்லிக் கூப்பிட்ட கூப்பீடு உலகத்தார்க்கு எல்லாம் பெரியதோர் உபகாரமாய் முடிந்தது)நெடுமால்- இப்படி இருக்கிற நெடுமால் வீடு திருத்துவான் ஆனான். இறைவனுடைய வியாப்தியும் இவரைப் பெற்ற பின்பு – புதுக்கணித்தது -அழகு பெற்றது ஆதலின், ‘நெடுமால் -என்கிறார்.
இனி, ஒருவனைப் பிடிக்க நினைத்து ஊரை வளைவாரைப் போன்று இவரைத் திருத்துகைக்காகப் பரந்திருப்பவனாய் இருந்தான் ஆதலின், ‘நெடுமால்’ என்கிறார்-நெடுமாலே-‘முனியே நான்முகனே’ என்னும் அளவும் அவன் செய்த உபகாரத்தை அருளிச் செய்கிறார். -அவன் தெளிந்து வந்து கொடு போகப் பற்றாமல் கூப்பிடுகிறார் அன்றே நடுவெல்லாம்.என்னைத் திருத்தி -பின்னை எனக்குத் திரு நாட்டையும் தந்து அருளுகைக்காக ஆகுவதே -எம்பெருமானுடைய சர்வஞ்ஞத்வ சர்வசக்திதவ
பரம காருணிகத்வ ஆஸ்ரித வத்சலத்வம் என்ற இப்படி அபர்யந்த குணங்கள் எல்லாம் 
என்கிறார் –

————–

மாலே மாயப் பெருமானே மா மாயனே என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே –
-1-5-11-

பிடி தோறும் நெய் ஒழியச் செல்லாத ஸூகுமாரரைப் போன்று, நின்ற நின்ற நிலைகள் தோறும் இறைவன் திருவருள் ஒழிய நடக்க மாட்டாதவர் ஆதலின், ‘மால் அருளால் மன்னு சடகோபன்’ என்கிறார்.

ஸ்ரீ ஆழ்வான் ஒரு-உருவில் – முறை  ‘ஸ்ரீ பராங்குச நம்பியைப் பாலேய் தமிழர் என்கிறது;
இசைகாரர் என்றது, ஸ்ரீ ஆழ்வார் திருவரங்கப்பெருமாள் அரையரை; 
பத்தர் என்றது, ஸ்ரீ பிள்ளை யுறங்கா வில்லி தாசரை’ என்று பணித்தார். 

ஸ்ரீ ஆளவந்தார் -பாலேய் தமிழர் என்கிறது, ஸ்ரீ முதலாழ்வார்களை;
இசைகாரர் என்கிறது, ஸ்ரீ திருப்பாணாழ்வாரை;
பத்தர் என்கிறது, ஸ்ரீ பெரியாழ்வாரை’ என்று அருளிச் செய்வர்.

ஆக, இயல் அறிவார் இசை யறிவார், பகவானுடைய குணங்களில் ஈடுபட்டு இருப்பார் ஆகிற இவர்கள்,-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -85-மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து –எம்மா வீடு -2-9-

March 27, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

இதில் சரணாகதி அனுஷ்டானம் செய்கிறார்-ஆத்ம நிஷேபம்-ஷட் விதா சரணாகதி-சேஷத்வ ஞானம் -அடியேன் சேஷ பூதன் -திருவடிகளே அடைக்கலம் என்று சமர்ப்பித்து -தேவரீர் ரக்ஷித்து அருள வேணும்
பிரார்த்தனா கர்ப்பமான ஞானம் -மதி சரணாகதி-மாலைப் பொழுது கண்டு தலைவி இரங்குதல் – எம்மா வீடு -2-9-இதன் விவரணம்-அம்மா வடியேன் வேண்டுவது ஈதே –2-9-1-

இருளினுடைய தோற்றரவுக்கு நொந்தாள் ஒரு தலைமகள் வார்த்தை யாதல் –
அன்றிக்கே – இவள் தசையை அனுசந்தித்த திருத் தாயார் வார்த்தை யாதல் –

இப்படி ப்ரலாபித்தவர் தமக்கு அனுபவ யோக்யமான காலம் வந்திருக்க அனுபவம் ஸித்தியாத ஆர்த்தி அதிசயத்தாலே ஆர்த்தி தீருகைக்கு ரக்ஷகனான ஈஸ்வரன் பக்கலிலே ஆத்ம நிக்ஷேபத்தைப் பண்ணிக்
கூப்பிட்ட பிரகாரத்தை மாலை கண்டு வருந்தின தலைவி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்–அவதாரிகை -கையில் அகப்பட்ட மாணிக்கத்தைக் குரங்கானது எறியுமா போலே உதய காலத்தில் இருளாக்கிரகுரங்கால் எறியப்பட்ட மாணிக்கம் போன்ற ஆதித்யன்
அவ்விருளோடே முட்டும்படி ஆணிப்பொன் போல் சுடர் விடு மாலை என்னை நலியா நின்றது
உனக்கே அடிச்சியான ஆத்மாவாய் அடிமைப்பட்ட அடைக்கலமாக என்னை என்று அவன் தத் தத்ப் பலங்களை வெளியிடும் திரு நாமங்களால் அநு நயிக்கும் தலை மகளாய் ஆர்த்தி அதிசயத்தால் புலம்புகிறார் இதில் –

மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து இருளோடு முட்டி
ஆணிப் பொன் அன்ன சுடுர்ப்படுமாலை உலகு அளந்த
மாணிக்கமே என் மரகதமே மற்று ஒப்பாரை இல்லா
ஆணிப் பொன்னே அடியேன் அடி யாவி யடைக்கலமே  
– – -85-மாலைப் பொழுது கண்டு தலைவி வருந்துதல் –

உலகு அளந்த–உலகங்களை அளந்து கொண்ட
மாணிக்கமே–மாணிக்கம்போலச் சிறந்தவனே
என் மரகதமே–மரகதப் பச்சைப் போல் எனக்கு இனியனானவனே!
மற்று ஒப்பாரை இல்லா–தன்னை யொப்பவர் வேறு எவரையும் உடையனாகாத
ஆணிப் பொன்னே–மாற்றுயர்ந்த பொன் போல மதிப்பையும் ஒளியையுமுடையவனே!
மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்த–மாணிக்கத்தால் கருத்தரங்கு வீசியெறியப்பட்டால்
அம் மாணிக்கம் அக்குரங்கின் கையிலே அகப்பட்டு அழிதல் போன்று
ஆணிப் பொன் அன்ன சுடர் இருளொடு முட்டபடும்–மாற்றுயர்ந்த பொன்போன்ற ஒளியை யுடைய
ஸூர்ய மண்டலம் இருளோடு சென்று கிட்டித் தான் மறையப் பெற்ற
மாலை–மாலைப் பொழுதிலே
அடியேன் அடி ஆவி அடக்கலமே-இயல்பில் உனக்கு அடியவளான எனது சொந்தமா உயிர்
உனக்கே அடைக்கலப் பொருளாக ஒப்பிக்கப்பட்டது.

எம்மா வீடும் வேண்டா என் தனக்குன் தாளிணையே
அம்மா அமையும் என ஆய்ந்து உரைத்த -நம்முடைய
வாழ் முதலாம் மாறன் மலர்த் தாளிணை சூடி
கீழ்மை யற்று நெஞ்சே கிளர் –19-பிறர்க்கு அவன் மோஷ பரதன் -என்னுமத்தை உபதேசிக்கிற அளவில்-2-8–முதல்நடுவுஇறுதிஇவர் மோஷத்தை ஸ்லாகித்துக் கொண்டு பேசுகையாலே
இவருக்கு மோஷத்தில் அபேஷையாய் இருந்தது -என்று ஈஸ்வரன் அத்தைக் கொடுக்கப் புக –
தமக்கு உகப்பாகத் தரும் மோஷமும்-அஹங்கார கர்ப்பம் ஆகையாலே அபுருஷார்த்தம் -என்று அத்தை கழித்து – பரமபதஸ்தனாய் ஸூகிக்கவுமாம்-சம்சாரஸ்தனாய் துக்கிக்கவுமாம்-எனக்கு அதில் ஒரு நிர்பந்தம் இல்லை-தேவர்க்கு உறுப்பாம் அதுவே எனக்கு வடிவாம்படி பண்ணி அருள வேணும்
என்று ஸ்வ பிராப்யத்தை நிஷ்கர்ஷிக்கிற எம்மா வீட்டில் அர்த்தத்தை – எம்மா வீடும் வேண்டா –-என்று துடங்கி அருளிச் செய்கிறார்–கீழ்மை யற்று நெஞ்சே கிளர் –தத் இதர சேவை ஆகிற தாழ்ச்சி அற்று-தேவு மற்று அறியேன் -என்று அவனையும் தவிர்க்கிறார் -(தாழ்ச்சி எங்கும் தவிர்ந்து நின் தாள் இணை கீழ் வாழ்ச்சி என்றார் ஆழ்வார் -இவர் அதையும் தவிர்ந்து –கீழ்மை அற்று ஆழ்வார் மலர் தாளிணை சூடி இருப்பதே நம்முடைய வாழ் முதல் என்று அருளிச் செய்கிறார் )ஆழ்வார் சேவையாலே சத்தை பெற்று மனசே மயங்காமல் மேன்மேல் எனக் கிளர்ந்து போரு –

மாணிக்கம் கொண்டு குரங்கை விரட்ட-சூர்யன் மாணிக்கம் -மாலை குரங்கு – வீண் ஆகும் த்ருஷ்டாந்தம்-தூங்க முடியாத இரவு —மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து –குரங்கானது மாணிக்கத்தைக் கொண்டு எறியுமா போலே —பெரு விலயனான மாணிக்கத்தை குரங்கானது -அதன் சீர்மையை அறியாதே எடுத்து –கார்யம் கொள்ள ஒண்ணாதார் இடத்தே மங்கிப் போம்படி எறியுமா போலே -என்னுதல் –அன்றிக்கே –குரங்கு என்று விலங்குதலாய் –அத்தாலும் எடுத்து விநியோகம் கொள்ள-ஒண்ணாதார் இடத்தே-மங்கிப் போம்படி எறியுமா போலே என்னுதல் –-அப்போது எறிவாரை அழைத்து கொள்ளும் இத்தனை –(அசாத்திய சாத்தியமான இடத்தில் எடுக்க முடியாத இடத்தில் எறிந்தால் போல் என்ற-அர்த்தம் கொண்டு குரங்கு என்று எறிவாரை -கர்த்தாவை -அத்யாஹாரம் பண்ணிக் கொள்ள வேண்டுமே)இருளோடு -இத்யாதி –இருளோடு வந்து -சந்தித்து -மாற்றற்ற செம்பொன் போலே ஸ்லாக்யமான ஆதித்யனை ஆயிற்று முடித்துக் கொண்டு மாலை வந்து தோற்றிற்று – குரங்கு கையில் புக்கு மாணிக்கம் நசித்தால் போல் ஆயிற்று – ராத்ரிக்கு அவயவமான இருளின் கையிலே புக்கு ஆதித்யன் மாய்ந்தபடி –இனி வெறும் மாலையே யாய்ச் சொல்லும் இத்தனை ஆகாதே என்று கை வாங்கி இருக்க ஒண்ணாதபடி ஆயிற்று அவன் படி –உலகு அளந்த மாணிக்கமே –
ரஷகரான இந்த்ராதிகளும் (இந்திரன் கிழக்கு திக்பலர் தானே )தங்களால் முடியாமை கை வாங்கின-வன்றும் –தான் வந்து கைக் கொண்டு -தாமச பிரக்ருதிகளை( மஹா பலியை -நமுசி பிரக்ருதிகளை )தள்ளி நோக்குமவன் இறே –காடும் மலையுமான ஒரு விபூதியை அளந்து கொண்டது ஒரு மாணிக்கத்தை இட்டு காணும் –மாணிக்கமே –பெரு விலையனாய் இருக்கை -தன்னைப் பாராதே அழிய மாறின படி –என் மரகதமே – உடம்பிலே அணைத்தால் ஸ்ரமஹரமாய் இருக்கை-மற்று ஒப்பாரை இல்லா ஆணிப் பொன்னே –முதலிலே ஸ்லாக்யமாய்-உபமான ராஹித்யத்வத்துக்கு- மாற்று அற்ற பொன் போலே இருக்கிறவனே –அடியேன்- போக்யதையில் தோற்று- அடியேன் -என்கிறார் –அடியாவி –
தலை மகள் வார்த்தை யான போது –உனக்கு சேஷ பூதமான என்னுடைய ஆத்ம வஸ்து -என்கை –ஆத்ம சமர்ப்பணம் பண்ணுகையும்  மிகையாம்படி இறே -இவனுக்கு அத்யந்த சேஷமாய் இருக்கிறபடி –
பிரமித்த போது இறே சமர்ப்பிக்கலாவது –சமர்ப்பித்த வநந்தர ஷணம்  -என்னத்தை எவனுக்கு கொடுத்தேன் -என்று நினைக்க ஒண்ணாதபடி தன்னோடு  தான் தொற்று அற்று இறே-இருப்பது –அதவா-கிந்து சமர்ப்பயாமி தே -(ஸ்தோத்ர ரத்னம் )-உற்று எண்ணில் அதுவும் மற்று ஆங்கு அவன் தன்னது -(திருவாய் மொழி )என்னக் கடவது இறே –ஆழ்வான்-திருக்கோட்டியூர் நம்பி பாடு நின்றும் வந்த அனந்தரத்தில்-பிள்ளைப் பிள்ளாய் -என்னுள்ளான் என்ன – வேண்டும் ஸத்தாநே –ஆழ்வார் -அடியேன் உள்ளான் -என்றபடி-கண்டாயே -என்று பணித்தார் –பிள்ளைப் பிள்ளாய் -என்று ஆழ்வானைக் குறித்து நம்பி அருளிச் செய்தார் என்னவுமாம் –அன்றிக்கே-ஆழ்வான் தம்முடைய சிஷ்யரான பிள்ளை பிள்ளையைக் குறித்து அருளிச் செய்தார் -என்னவுமாம் –அடியேன் அடி யாவி –
பெண் பிள்ளை ஆவி என்னவுமாம் தாயார் வார்த்தையாக –

காலை அரும்பி பகல் எல்லாம் போதாகி மாலை மலரும் இந்நோய்–திருக்குறள் -ஆற்றாமை மிக்கு தலைவி தலைவனை உனக்கே என் உயிர் தஞ்சம் -நீயே சடக்கென வந்து அருள வேணும் -என்கிறாள்
அடியேன் அடி யாவி -திருத் தாயார் வார்த்தை என்பற்கு என் அடிமையான மகள்-ஆவி -உயிர் போலே அருமையான பெண்-அடியேனுடையாவி -பாட பேதம் –ஒருவரால் எறிய பட்டு குரங்கு மேல் விழுந்த மாணிக்கம் அதன் கையில் அகப்பட்டு அழிந்து திரும்ப மாட்டாது போலே இருளை அளிக்க அதன் மேல் விழுந்த சூ ரியான் மீலாது இரவே யாக நீண்டு போனதே –சூர்ய மண்டலம் -மாணிக்கம் -இருள் -குரங்கு மாணிக்கம் -செந்நிறமான -கரு மாணிக்கம் அபூத உவமை – இங்கு குரங்கு -இருள் என்பதால் கருங்குரங்கு என்றவாறு-அன்றியே மாணிக்கம் கொண்டு குரங்க எறிந்தால் போலே என்றுமாம் குரங்க-என்றது வளைதலாய்-உதித்த ஆதித்யன் உயர எழுந்து விழுந்து அஸ்தமித்த கடுமையைச் சொன்னன படி – ஆற்றாமை மிக்கு ஆத்மாவை சமர்ப்பிப்பதும் -மோஹ அந்தகாரம் விவேகம் -மாறி மாறி வர -சமர்ப்பித்தது அவனது அன்றோ சர்வ ரக்ஷகன் நீயே அன்றோ -வந்து காத்து அருள் என்கிறார்

மாலைப்பொழுது கண்டு வருந்திய நாயகி இரங்கி யுரைத்த பாசுரம் இது.
காலையரும்பிப் பகலெல்லாம் போதாகி, மாலை மலுருமிந்தோய்” (திருக்குறள்- பொழுது கண்டிரங்கள்-7). என்கிறபடியே-காம நோய் மிகவும் முதிர்வதற்கு உரிய காலமான மலைப் பொழுதில் ஆற்றாமை மிகுதியால் தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேறு கதியற்றவளாய்த் தலைமகள் தலைமகனைக் கருத்தி ‘உனக்கே என் உயிர் தஞ்சம்;-ஆதலால் நீயே என்னை வந்து காத்தருள வேண்டும்’ என்று முறையிடுகிறாள்.-இப் பாட்டைத் தாய் வார்த்தை யென்பார்க்கு, ‘அடியேனடியாவி’ என்பதற்கு, எனது அடிமையான மகள் என்று பொருள் கொள்ள வேணும்.-ஆவி- உயிர்போல் அருமையான பெண் என்றபடி, ஆகுபெயர்- ‘அடியேனுடையாவி’ என்பதும் பாடமாம்.-ஒருவரால் எறியப்பட்டுக் குரங்கின் மீது சென்று விழுந்த மாணிக்கமான அதன் கையில் அகப்பட்டுத் திரும்பமாட்டாது அழிவதுபோல, இருளை அழித்தற் பொருட்டு அதன் மீது சென்று வீழ்ந்த ஸூர்யன் அவ்விருளிற்பட்டு மீளாது மறைந்திட்டானெனக் கற்பனை கூறுப்பட்டது.-ஸூர்ய மண்டலத்திற்கு மாணிக்கம் உவமை; இவளுக்குக் குரங்கு உவமை. மாணிக்கம் மீளாக்காணாமற் போதற்கு ஸூர்யாஸ்தமநம் உவமை.-மாணிக்கம் நவரத்நங்களுள் ஒன்று; இது செந்நிறமுடையது. நூல்களிற் கருமாணிக்க மென வருதல் அபூதோபமையென்க. இங்கு உபமேயமாகிய இருளின் தன்மையைக் கருதி, குரங்கு, கருங்குரங்கு எனக் கொள்ளப்பட்டது.-இனி, மிகச் சிறந்த மாணிக்கத்தை அதன் சீர்மையை யறியாத குரங்கு எடுத்து எங்கேனும் மங்கிப் போம்படி எறிந்து மாய்த்துப் போக்கி விட்டாற் போல, ஸூர்யனை இருளிலேயெறிந்து போக்கின மாலைப்பொழுது என்றும் உரைக்கலாம்;
இவ்வுரையில், மாலைக்குக் குரங்கும்,ஸூர்யனுக்கு மாணிக்கமும், அதன் வீழ்தற்கு அது எறியப்படுதலும், இருளுக்கு எறியப்படுமிடமும் உவமையாம்.-அழகியமணவாள சீயருரை காண்மின்;-“அன்றியே, மாணிகக்த்தைக் கொண்டு குரங்க எறிந்தாற்போலே யென்றுமாம்.
குரங்கதலாவது வளைதலாய், உதித்த ஆதித்யன் உயர் எழுந்து விழுந்து அஸ்தமித்த கடுமையைச் சொன்னபடி” என்று இவ்வுரைக்கு, குரங்க’ என்னும் செயவெனெச்சம் தொக்க தென்க.-ஆணிப்பொன்- மாற்றறிதற்குக் கொள்ளும் உயர்தரப்பொன்; இதுக்குமேலே மாற்றில்லையென்னும்படியான சிறந்த பொன் என்றும் உரைப்பர்.-மற்று ஒப்பாரையில்லா– தனக்குத்தானே உவமையாவதன்றி ஒருபடியாலும் வேறு நிகரில்லாத என்றபடி, “தனக்குவமையில்லாதான்” என்ற திருக்குறளும் அறிக.-இதனால், தன்னையொழிந்தார் யாவரினும் தான் மேற்பட்டவனென்பது விளங்கும். “ஒத்தார் மிக்காரை யிலையாய மாமாயா” என்றார் திருவாய்மொழியிலும்.

இப்பாட்டுக்கு உள்ளுறை பொருளாவது– எம்பெருமானை யநுபவிப்பதற்கு உரிய காலம் வந்திருக்க, அவ்வநுபவம் கிடையாமையாலாகிய ஆற்றாமையின் மிகுதியால் வருந்திய ஆழ்வார், அவ்வருத்தம் தீரும்பொருட்டு ஸ்வாமயான எம்பெருமானை பக்கலிலே ஸொத்தாகிய தன் உயிரை அடைக்கலமாக ஸமர்ப்பித்தலாம். மிக்க விளக்கமுடைய விவேகம் மோஹாந்தகாரத்திலே விழுந்து அகப்படும்படியான
இந் நிலையில் உன்னைச் சரணமடைந்த இவ்வுயிருக்கு நீயேயன்றோ ரக்ஷகனென்று உரைத்தனரென்க.

மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து இருளோடு முட்டி ஆணிப் பொன் அன்ன சுடுர்ப்படுமாலை
மாற்றுடைய பொன் போலே ஒளியை யுடைய சுடரானது இருளோடே வந்து கிட்டி மாணிக்யத்தைக் கொண்டு குரங்கை எறிந்தால் அக்குரங்கின் கையிலே மாணிக்யம் அகப்பட்டால் போலே படும்படியான மாலையிலே-அன்றியே மாணிக்யத்தைக் கொண்டு குரங்கை எறிந்தால் போலே என்றுமாம்–குரங்குதலாவது வளைதலாய்-உதித்த ஆதித்யன் உயர எழுந்து விழுந்து அஸ்தமித்த கொடுமையைச் சொன்னபடி-உலகு அளந்த மாணிக்கமே-உன்னதான லோகத்தைப் பிறர் கொள்ளாதபடி எல்லை நடந்து
அநந்யார்ஹம் ஆக்கி உடைமை பெற்றவாறே உஜ்ஜ்வல ஸ்வ பாவனானவனே-என் மரகதமே-அக் காலத்தில் வடிவில் பசுமையைக் காட்டி என்னை உனக்கு ஆக்கிக் கொண்டவனே-மற்று ஒப்பாரை இல்லா ஆணிப் பொன்னே-ஸ்வ இதர ஸமஸ்த விலக்ஷணமான ஸ்வரூப ஓவ்ஜ்ஜ்வல்யத்தை யுடையவனே –அடியேன் அடி யாவி-சேஷத்வமே நிரூபகமான என்னுடைய சேஷ பூதமான பிராணனானது-யடைக்கலமே-உன் பக்கலிலே நிஷிப்தம் அன்றோ-ஆதலால் ரக்ஷணீயம் என்றதாயிற்று-இத்தால் மோஹ அந்தகாரத்தின் கையிலே அத் யுஜ்ஜ்வலமாய் உன்னதமான விவேகமானது-(குரங்கு கையில் மாணிக்கம் -இருளின் கையில் சூர்யன்)-விழுந்து அகப்படும் படியான அவஸ்தையில் உன் பக்கலிலே நிஷிப்தமான இவ் வாத்மாவுக்கு நீ யன்றோ ரக்ஷகன் என்று தம்மிலே நொந்து உரைத்தார் ஆயிற்று –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து-குரங்கானது மாணிக்கம் கொண்டு எறியுமா போலே பெரு விலையனான மாணிக்கத்தை குரங்கானது அதின் சீர்மையை அறியாதே
எடுக்க ஒண்ணாத இடத்தே மங்கிப் போம்படி எறியுமாப் போலே-அன்றிக்கே-குரங்கு என்று
விலங்குதலாய் அத்தாலும் எடுத்து விநியோகம் கொள்ள ஒண்ணாத இடத்திலே எறியுமா போலே என்னுதல்-அப்போது எறிவாரை அழைத்துக் கொள்ளுதல்-இருளோடு முட்டி ஆணிப் பொன் அன்ன சுடுர்ப்படுமாலை-இருளோடே வந்து சந்தித்து-மாற்று அற்ற பொன் போலே ஸ்லாக்யமான ஆதித்யனை மறைத்துக் கொடு மாலை வந்து தோற்றிற்று –என் பக்ஷத்தில் உள்ளாரையும் அழியச் செய்து கொண்டாயிற்று இது வந்து தோற்றிற்று-எனக்கு ஆஸ்வாஸ கரனான ஆதித்யனை முடித்துக் கொண்டாயிற்று வந்து தோற்றுகிறது-குரங்கின் கையிலே புக்க மாணிக்கம் நசித்தால் போலே யாயிற்று –ராத்திரிக்கு அவயவமான இருளின் கையில் புக்க ஆதித்யன் மாய்ந்த படி-இனி உருமாயுமாகாதே என்று கை வாங்கி இருக்க ஒண்ணாதபடி யாயிற்று அவன் படிஉலகு அளந்த மாணிக்கமே–ரக்ஷகராக விட்ட இந்த்ராதிகள் தங்களால் முடியாமை கை வாங்கின வன்று தான் வந்து கைக்கொண்டு தாமஸ ப்ரக்ருதிகளைத் தள்ளி நெருக்குமவன் இறே காடும் மலையான இந்த பூமியை அளந்தது ஒரு மாணிக்கத்தை இட்டுக் காணும்–மாணிக்கமே-பெறு விலையன் என்கை-தன்னைப் பாராதே அழிய மாறின படி–என் மரகதமே-உடம்பிலே அணைத்தால் ஸ்ரம ஹரமாய் இருக்கை–மற்று ஒப்பாரை இல்லா ஆணிப் பொன்னே-முதலிலே ஸ்லாக்யமாய்-உபமான ராஹித்யத்துக்கு மாற்று அற்ற பொன் போலே இருக்கிறவனே-அடியேன்-போக்யதையிலே தோற்று அடியேன் என்கிறார்அடி யாவி-தலை மகள் வார்த்தை யானபோது உனக்கு சேஷமான என்னுடைய ஆத்ம வஸ்துவானது என்கை
ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணும் போதும் வஸ்து நிர்தேசம் பண்ணும் போதும் சேஷத்வத்தை இட்டு அல்லது நிரூபிக்க ஒண்ணாத படியாய் இருக்கை–திருத்தாயார் வார்த்தையான போது –அடியேன் அடி-நாய்க்குட்டி என்னுமா போலே–யடைக்கலமே- இருளுக்கு அஞ்சின படியால் சொல்லுகிறாள்
அல்லது ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணுகையும் மிகையாம்படி இறே இவனுக்கு அத்யந்தம் சேஷமாய் இருக்கும் படி–பிரமித்தபோது இறே ஸமர்ப்பிக்கலாவது-ஸமர்ப்பித்த அனந்தர க்ஷணம் என்னதை அவனுக்கு கொடுத்தேன் என்று நினைக்க ஒண்ணாத படி தன்னோடு தனக்குத் தொற்று அற்றபடி இறே இருப்பது-அதவா கிம் து ஸமர்ப்பயாமி தே -ஸ்தோத்ர ரத்னம் -53-உற்று எண்ணில் அதுவும் மற்று அங்கு அவன் தன்னது –திருவாய் -7-9-10-என்னக் கடவது இறே-ஆழ்வான் திருக்கோட்டியூர் நம்பி பாடு நின்றும் வந்த அநந்தரத்திலே-பிள்ளாய் எனது உள்ளத்து என்ன வேண்டும் அவஸ்தையிலே-அடியேன் உள்ளான் -திருவாய் -8-8-2- என்று ஆழ்வார் அருளிச் செய்தபடி கண்டாயே என்று பணித்தான் –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்–மாணிக்கம் கொண்டு-மாணிக்கத்தைக் கைக்கொண்டு-குரங்கு எறிவு ஒத்து-குரங்கு எறிந்தால் போலே–இருளோடு முட்டி-முன்னுற்ற ஆதித்யன் இப்போது இருளோடு முட்டிப் பாயுமவனாய் இரா நின்றான்-ஆணிப் பொன் அன்ன சுடுர்ப்படு மாலை யிலே-இந்த மாலையாலே நான் இங்கனே பாதைப்படுவது உசிதமோ என்று அபிப்ராயம்–மேல் அநவ்சித்ய பிரகடனம் பண்ணுகிறார்
தன் ஸ்வரூப ப்ரகடனத்தால்–உலகு அளந்த மாணிக்கமே-அந்நிய பரரான அசுத்தரையும் திருவடியால் ஆக்ரமித்து உஜ்வலனாய் விளங்குமவனே-என் மரகதமே-நீ என் பரிரம்பண விஷயனான போது என் அதீனனாய் மரகத மாணிக்கம் போன்று என்னை உனக்காக்கிக் கொண்டவனே-மற்று ஒப்பாரை இல்லா ஆணிப் பொன்னே-பூசலாம் பொன்னொளி பெற்ற நிஸ் ஸமாப்யதிக திவ்ய விக்ரஹனே-அடி யாவி-உனக்கு அடிச்சியோம் தொழுத்தையோமாய்-அடியேன்-யாவதாத்ம உபக்ரமமாய் அடிமைப்பட்ட ஆத்மாவே நான்-அதுக்கும் மேலே-உன் யடைக்கலமே-த்வத் ஏக ரக்ஷயை யானவளே நான்
இப்போது உன்னைப்பிரிந்து இந்த மாலையால் நலிவு படவோ –

தாத்பர்யம்-இரவுக்கு அஞ்சின நாயகியாய்க் கொண்டு அடிக்கடி இரவும் இருளும் வந்து என்னை நலியாதபடி ரஷித்து அருள வேணும் என்று நாயகனான சர்வேஸ்வரனைச் சரணம் புகுகிறார்-விவேக சூன்யசமான குரங்கானது மாணிக்கத்தை பாழான இடத்தில் எறியுமா போல் சூர்யன் இருளை விட்டு நலிய தனக்கு ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன் அபரிச்சின்ன மரின்மை உடையவன் சர்வ ஜகத் ஸ்வாமி எனக்கு நாதன் உனக்கு சேஷமாய் உனது கையையே திருவடியையே எதிர்பார்த்து இருக்கும் அடியேனை ரக்ஷித்து அருள வேணும் என்கறார்

2-9-எம்மா வீடு பிரவேசம் –

கீழில் திருவாய் மொழியில் –நலம் அந்தம் இல்லாதோர் நாடு புகுவீர் -என்று இவர் தாமும் அருளிச் செய்து
சர்வேஸ்வரனும் இவருக்கும் இவர் பரிகரத்துக்கும் மோஷம் கொடுப்பானாகப் பாரிக்க -அத்தைக் கண்டு –
தேவரீர் எனக்கு மோஷம் தந்து அருளப் பார்த்ததாகில் இங்கனே தரப் பார்ப்பது –
அதாகிறது -உனக்கு மோஷம் கொள் -என்று எனக்காகத் தருகை அன்றிக்கே –நமக்காகக் கொள் -என்று தேவர்க்கே
யாம் படியாகத் தர வேணும் –என்று -தாம் நினைத்து இருந்தபடியை அவன் திரு முன்பே பிரார்த்திக்கிறார் –

கைங்கர்யம் பண்ணியே பொழுது போக்க வேண்டும் –கைங்கர்யம் தூண்டவே அருளிச் செயல்களும் அவற்றுக்கு வியாக்யானங்களும் –
இந்த புருஷார்த்த நிர்ணயம் இதில் -அத்தை பிரார்த்தித்தது ஒழிவில் காலம் எல்லாம் -3-3–வழு விலா அடிமை செய்ய வேண்டும் என்றாரே –மேல் –
ஸ்ரீ ராம சிகாமணி -நம்பிள்ளைக்கு- தொட்ட இடம் எல்லாம் ஸ்ரீ ராம திருஷ்டாந்தம் கொண்டு விளக்குவாறே –
தொழுது எழு-என்று தாம் நினைத்து இருந்து –தொழுது எழுகையே-அவன் திரு முன்பே அருளிச் செய்கிறார் –
ஸ்வதந்த்ரம் பாரதந்த்ரம் / ச்வார்த்ததா -பரார்த்ததா /அசித்வத் பரதந்த்ரம் -பிறருக்காகவே இருக்கும் -புஷ்பம் சந்தனம்-போலே
அம்மா அடியேன் வேண்டுவது ஈதே -நின் செம்மா பாதம் -தலை மேல் ஒல்லை -என்றே முன் நிலையாக அருளிச் செய்கிறார் –

ஆனால் இது தான் பின்னை இத்தனை நாள் நிஷ்கர்ஷியாது ஒழிவான் என்-என்னில் -அவன் மேன்மேல் என குண அனுபவத்தை
பண்ணுவிக்கையாலே-அதுக்குக் காலம் போந்தது அத்தனை அல்லது இது நிஷ்கர்ஷிக்க அவகாசம் பெற்றிலர் –
ஆனாலும் இப்போது குண அனுபவமே அன்றோ பண்ணுகிறது என்னில் -அது அப்படியே
அவன் தம் பக்கலிலே மேன்மேல் எனப் பண்ணுகிற விருப்பத்தைக் கண்டு -இவனுக்கு இந்த வ்யாமோஹம் முடிய அநுவர்த்திப்பது ஒன்றாய் இருந்தது
நாம் இவனை மீட்டாகிலும் நம்முடைய பிராப்யத்தை நிஷ்கர்ஷிப்போம் என்று பார்த்து
நீ இங்கனே நில் -என்று அவனை நிறுத்தி வைத்து ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுகிறார் –இரண்டாவது சங்கதி –

எம்பார் -இத் திருவாய்மொழி அருளிச் செய்யப் புக்கால் இருந்தவர்களை யார் என்று கேட்டுக் கதவுகளையும் அடைப்பித்து
குஹ்யமாகவும் அருளிச் செய்வது –

ப்ராப்யமாகில் இப்படி அன்றோ இருப்பது இவர் நிஷ்கர்ஷிக்க வேண்டுகிறது என் -என்னில்
சர்வேஸ்வரன் இவ்வாத்மாவுக்கு சேஷியாய்-இவனும் சேஷ பூதனுமாய் -அவனுடைய உபாய பாவமும் நித்தியமாய் இருக்கச் செய்தே
யன்றோ இவனுக்கு இன்று ச்வீகாரம் வேண்டுகிறது –சர்வ முக்தி பிரசங்கம் வாராமைக்காக –
அப்படியே அவன் ஸ்வ தந்த்ரன் ஆகையாலே நினைத்த போது நினைத்த படி கொள்வான் ஒருவன் ஆகையால் பிராப்தி சமயத்தில்
அனுபவம் இருக்கும் படியையும் நிஷ்கர்ஷித்துப் பெற வேணும் இறே-
உத்தரார்த்தத்திலும் இவ்வர்த்தத்தை சொல்லா நின்றது இறே
-த்வயம் தன்னில் நிஷ்கர்ஷிக்க வேண்டுகிறது என் என்னில் பூர்வார்த்தத்தில் சொன்ன சாதனம் சர்வ பல ப்ரதமாகையாலே
-பிரயோஜனாந்த பரராய் சரணம் புகுவாருக்கும் அவற்றைக் கொடுத்து விடுவான் ஒருவன் இறே சர்வேஸ்வரன்
இது தன்னில் ஓடுகிறது என் என்னில்-1- -முக்தனாய் நிரதிசய ஸூக அனுபவத்தை பண்ணவுமாம் -2–ஆத்மா பிராப்தியைப் பெறவுமாம் –
3–ஆத்மா வி நாசமே யாகவுமாம் -4– நரக அனுபவத்தை பண்ணவுமாம் -இவற்றில் எனக்கு ஒரு நிர்பந்தம் இல்லை-(இவை எல்லாம் அதிசய யுக்தி -பிராப்யத்தில் நோக்கு )
உனக்காய் வரும் அன்று இவை இத்தனையும் வரவுமாம் -எனக்காய் வருமன்று இவை இத்தனையும் வேண்டா–
ஆன பின்பு —தேவருக்கு உறுப்பாம் இதுவே எனக்கு வடிவாம் படி பண்ணி அருள வேணும்–என்று ஸ்வ பிராப்யத்தை நிஷ்கர்ஷிக்கிறார் –

சேஷத்வ பலம் -ஸூ பிரயோஜன நிவ்ருத்தி/-பாரதந்த்ர பலம் -ஸூ பிரயத்ன நிவ்ருத்தி –

இப்படிப் பட்ட பரிமாற்றம் தான் லோகத்தில் பரிமாறுகிறது ஓன்று அல்ல -17 லஷம் ஆண்டு களுக்கு முன்பே —
இவ்வாழ்வார் பக்கலிலே காணுதல் -இராமாயண புருஷர்களில் ஸ்ரீ பரத ஆழ்வான்-இளைய பெருமாள்
இவர்கள் பக்கலிலே காணுதல் செய்யும் அத்தனை –
பகவத் ஏக பாரதந்த்ர தயா -சேஷி க்கு அத்யந்த பிரிய -கைங்கர்ய கரணம் மாத்ரம் -ஸ்வார்த்த கர்த்ருத்வ-போக்த்ருத்வ -ரஹித -பாரதந்த்ர்யா அனுகுண குணம் -இப்படிப் பட்ட பரிமாற்றம்-
கைகேயி ராஜன் -என்ற சொல் பொறுக்க மாட்டாமே திரளிலே வந்து கூப்பிட்டான் இறே
தஸ் ஸ்ருத்வா—விலலாப சபா மத்யே -ஒரு திரளாக இருந்து என்னுடைய சேஷத்வத்தை அபஹரிப்பதே -திருட்டுக் கூட்டமாக இருந்து –
தஸ்யபிர் முஷி தே நேவா யுகத மாக் ரந்திதம் ப்ருசம் -என்னும்படி இழந்த வஸ்துவுக்கு தக்கபடியாய் இருக்கும் இறே கூப்பீடும்-
பெருமாளையும் பாரதந்த்ர்யத்தையும் அன்றோ இழந்தான் –
ஜ கர்ஹே ச -சந்த்யாவந்தனத்துக்கு பிற்பாடரை சிஷ்ட கர்ஹை பண்ணுவாரைப் போலே கர்ஹித்தான்
புரோஹிதம் -அழகியதாக இக்குடிக்கு முன்னாடி ஹிதம் பார்த்தாய் –-புரஹா ஹிதம் பஸ்யதி புரோஹிதம் –
சபா மத்யே புரோஹிதம் ஜ கர் ஹே -நியமாதி க்ரமம் ரஹசி போதயேத்-என்கிற நிலையும் பார்த்திலன் –
ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய -ஒருவனுக்கு இரண்டு வஸ்து சேஷமானால் ஒன்றை ஓன்று நிர்வஹிக்குமோ –
ஆனால் ராஜ்ஜியம் தான் என்னை ஆண்டாலோ-தர்மம் வக்தும் இஹ அர்ஹசி–பெருமாள் காடேறப் போனார் -சக்கரவர்த்தி துஞ்சினான்
-நாடு அராஜமாகக் கிடக்க ஒண்ணாது -நின்றாரில் பிரதானர் தலையிலே முடியை வைக்க வேணும் என்று பார்த்தாய் அத்தனை போக்கி
இதுக்கு விஷய பூதனான என்னைப் பார்த்து வார்த்தை சொல்லிற்று இல்லை
கதம் தசரதாஜ்ஜாதோ பவேத் ராஜ்ய அபஹாரக –அவர் பொகட்டுப் போன ராஜ்யத்தை அபஹரித்து அவரைப் பிரித்து
அனந்தரத்திலே முடிந்தவன் வயிற்றிலே பிறந்தேனாம் படி எங்கனே நான் –

பெருமாள் உள்ளப்படி தான் இருப்பதாக -ஆளுவதோ மீளுவதோ எதுவாக இருந்தாலும் -இதுவே ஸ்ரீ பரத ஆழ்வான் நிலை
அசித்வத் பாரதந்த்ரம் படி ராஜ்யமும் என்னை ஆளலாமே –
ஸ்வரூபம் பார்க்க வேண்டாமோ -ராஜ்யம் அபஹரிப்பவன் சக்கரவர்த்தி பிள்ளை யாவாரோ –

இளைய பெருமாள் நில் என்ன குருஷ்வ என்றார் இறே –
அன்வயத்தாலே தரிக்கக் கடவ வஸ்துவை வ்யதிரேகத்து நிற்கச் சொல்லுகையாவது அழிக்கை இறே
குரு என்னாதே குருஷ்வ என்றார் இறே —ஆத்மைநிவ பதம் –
ஆருடைய பிரயோஜனத்துக்கு ஆர் தான் இருக்கிறார்
உம்முடைய இழவுக்கு நீர் பதறாது இருக்கிறது என்
அநு சரம் பண்ணும் பிரகாரத்தை விதிக்கிறார்
நீர் தாம் நில் என்று அருளிச் செய்தது -நான் நிற்கச் சொல்லுகைக்கு யோக்யனாம் படி இருக்கை இறே
உம்முடைய சாயையை நில் -என்று சொல்லிற்று இலீரே -தனி சைதன்யம் -ஜீவன் -என்று நினைத்தது உம் குற்றம் –
சாயையோபாதி உம்மைப் பின் செல்வேனாக வேணும் –
நீரும் நிழலும் வாய்ந்து இருப்பதொரு பிரதேசத்தைப் பார்த்து பர்ண சாலையை அமையும் -என்ன நம் தலையில்
ஸ்வா தந்த்ர்யத்தை வைத்த போதே பெருமாள் நம்மைக் கை விட்டார் -என்று வேறு பட்டார்
ஏவ முக்தஸ்து ராமேண-இதுக்கு முன்பு எல்லாம் நம் குறையாலே இழந்தோம் என்று இருந்தோம் -இவர் தாமே நம் ஸ்வரூபம்
அழியக் கார்யம் பார்த்தார் -இனி நம் ஸ்வரூபம் என்று ஓன்று உண்டோ என்று வேறுபட்டார் –
முன் நம் குறையாலே இழந்தோம் -இப்பொழுது இவராலே இழக்கிறோமே -ஸ்வரூபம் அழிக்கப் பார்க்கிறார் –
லஷ்மண -பாரதந்த்ர்யத்தை நிரூபகமாக உடையவர் -லஷ்மி சம்பன்ன –அடையாளம் கொண்டவர் -பாரதந்த்ர்யமே நிரூபகம்
சமய தாஞ்ஜலி-நாம் நம் ஸ்வரூபத்தை அழித்துக் கொண்ட வன்று நோக்குகை யன்றிக்கே சேஷி தானே அழித்த வன்றும்
ஸ்வரூபத்தை தர வாயிற்று அஞ்சலி -சர்வ அபிமத சாதனம் ஆயிற்று
லீதா சமஷாம்-பண்ணின அஞ்சலிக்கு அந்ய பரதை பாவிக்க ஒண்ணாதவன் சந்நிதியிலே
காகுத்சம் -பிராட்டி சந்நிதியும் மிகையாம் படியான குடிப்பிறப்பை உடையவரை –
ககுஸ்த வம்சே விமுகே -கை கூப்பி வந்தால் ஏமாந்து போகமாட்டானே –
இதம் வசனம் பிரவீத் -இவ்வார்த்தையை சொல்லுவானே என்று கொண்டாடுகிறார் ருஷி
பரவா நஸ்மி -உம்முடைய அஸ்மிதை போலே அல்ல காணும் என்னுடைய அஸ்மிதை
தேவரீர் உடையவனாக உள்ளேன் நான் -உம்முடைய-அஸ்மிதை -ஸ்வா தந்த்ர்யம் வேற -நான் ஸ்வ தந்த்ரன் அல்லேன் என்று சொல்லும் ஸ்வ தாந்த்ரம் உண்டே –

இப்படிக்கொத்த பார தந்த்ர்யத்தை யாயிற்று இவர் ஆசைப்படுகிறது-
இது தான் ஒருவர் அபேஷிக்குமதுவும் அல்ல – அபேஷிப்பார் இல்லாமையாலே நாம் கொடுத்துப் போருமதுவும் அல்ல -17 லஷம் வருஷமாக —
அவ்வழி புல் எழுந்து போயிற்று காணும் -என்று அவன் அநாதரித்து இருக்க –
புருஷன் அர்த்திக்க வருமது இறே புருஷார்த்தம் ஆவது
இப் பேறு இத்தனையும் நாம் பெற்றேனாக வேணும் என்று இவர் அபேஷிக்க-அவனும் தலை துலுக்கப் பெற்றாராய்த் தலைக் கட்டுகிறார்
வகுள பூஷண பாஸ்கரர் உதயம் ஆன பொழுதே இத்தை மீண்டும் கேட்கப் பெற்றான் –

ஒன்பதாம் திருவாயமொழியிலே -ஈசுவரனுடைய மோக்ஷ பிரதத்வத்தை அனுபவித்தவர் -அந்த மோக்ஷ பிரகாரங்கள்
எல்லாவற்றுக்கும் தாத்பர்ய பூமியாவது-பகவத் பாரதந்தர்யமே என்று நிஷ்கர்ஷித்து –
1–அவன் திருவடிகளோட்டை சம்பந்தமே உத்தேச்யம் என்னும் இடத்தையும் –
2–தத் விஷய ஞானத்தில் அபேக்ஷையையும்
3–ஞான அனுரூபமான ஸ்துத் அனுபவத்தில் ஸ்ரத்தையையும்
-4-அனுபாவ்யம் ததேக பாரதந்தர்யம் என்னும் இடத்தையும்
5–அதனுடைய அவிஸ்மரணம் ஆனந்த ஜனகம் என்னும் இடத்தையும்
6—அந்த ஸ்ம்ருதி காரிதமான பாஹ்ய அனுபவ அபேக்ஷையையும்
7—நிரந்தரமான ஆந்திர அனுபவம் அதிருப்தி கரம் என்னும் இடத்தையும்
8—அல்ப கால அனுபவத்திலும் அதிசயித்த அபி நிவேசத்தையும்
9—அனுபாவ்ய விஷயத்தோடு உண்டான அபிருத்தாக் சித்தி சம்பந்தத்தையும்
10—அந்த சம்பந்தத்தைக் குலையாமையில் உண்டான அபேக்ஷையையும்
அருளிச் செய்து -மோக்ஷ பிரதனான ஈஸ்வரன் சந்நிதியில் மோக்ஷ தாத்பர்யத்தை நிஷ்கர்ஷித்து அபேக்ஷித்து அருளுகிறார் –

முதல் பாட்டில் காயிகமான பேற்றை அபேஷித்தார்
இரண்டாம் பாட்டில் மானசமான பேற்றை அபேஷித்தார்
மூன்றாம் பாட்டில் வாசிகமான பேற்றை அபேஷித்தார்
நாலாம் பாட்டில் ஸ்வரூப அனுரூபமான பிராப்யத்தை நிஷ்கர்ஷித்தார்
அஞ்சாம் பாட்டில் நீர் ஆராக இருந்து இப் பேற்றை அபேஷித்தீர் என்ன -நான் ஆராயினும் ஆயிடுக –உன்னை அனுபவித்து மகிழும்படி பண்ணி யருள வேணும் என்றார்
ஆறாம் பாட்டில் த்ரிவித கரணங்களாலும் உன்னை ப்ரீதி புரஸ் சரமாக அனுபவிக்கும் படி பண்ணி யருள வேணும் என்றார் –
ஏழாம் பாட்டில் அப்படிச் சடக்கென செய்யாமையாலே இன்னாதானார்
எட்டாம் பாட்டில் ஸ்வரூப அனுரூபமாக நீ ஷண காலம் என்னோடு அனுபவிக்கப் பெறில் பின்புள்ள காலம் எல்லாம் வேண்டேன் -என்றார்
ஒன்பதாம் பாட்டில் உன்னை அனுபவிக்க இட்டுப் பிறந்து வைத்து அது கிடையாதபடி நானே அனர்த்தத்தை சூழ்த்துக் கொண்டேன் -என்றார்
பத்தாம் பாட்டில் எனக்கு ஒரு நாளும் ஜ்ஞான விசேஷத்தைப் பண்ணித் தந்தோம் இறே என்று என்னை என் கையிலே காட்டித் தராது ஒழிய வேணும் என்றார்
நிகமத்தில் இது கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டினார் –

எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்
கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா வடியேன் வேண்டுவது ஈதே
 –2-9-1-

1-ஆழ்வீர்-மோஷத்தைக் கொள்ளும் என்றான் ஈஸ்வரன் -வேண்டா என்றார் –
2-மா வீடு கிடீர் –விலஷணமான மோஷம் கிடீர் -என்றான் -அதுவும் வேண்டா என்றார் –
3-எம் மா வீடு கிடீர் -ஐஸ்வர்யம் ஆத்ம லாபம் -என்று இருக்க வேண்டா -பரம புருஷார்த்த லஷண மோஷம் என்றான் -அதுவும் எனக்கு வேண்டா என்கிறார்

செப்பம் –செப்போம் –சொல்லோம்-நீ பிரசங்கிக்கக் கடவை யல்ல -நான் பிரதிஷேதிக்கவும் கடவேன் அல்லேன் –கொக்குவாயும் படு கண்ணியும் போலே உன் திருவடிகளும் என் தலையும் சேர வேணும்-

அதுக்கும் இதுக்கும் உள்ள வாசி பாராய்-1- -அங்கு முதலை ஓன்று –எனக்கு முதலை ஐந்து –2–அங்கு ஆயிரம் தேவ சம்வத்சரம் –இங்கு அநாதி காலம் –3–அங்கு ஒரு சிறு குழி –இங்கு பிறவி என்னும் பிறவிக்கடல் 4–அதுக்கு சரீர நாசம் –எனக்கு ஆத்மா நாசம்--5–ஆனையின் காலை யாயிற்று முதலை பற்றிற்று – இங்கு என்னுடைய நெஞ்சை யாயிற்று அருவித் தின்றிடுகிறது

சேஷத்வமே புருஷார்த்தம் -விக்ரகமே உத்தேச்யம் -ரிஷிகள் ஸ்வரூபத்தில் மண்டி -ஆழ்வார்கள் –திண் கழல் இருவர் -மிதுனம் -விட்டாலும் விடாதே

————–

ஈதே யானுன்னைக் கொள்வது எஞ்ஞான்றும் என்
மைதோய் சோதி மணி வண்ண வெந்தாய்
எய்தா நின் கழல் யான் எய்த ஞானக்
கைதா காலக் கழிவு செய்யலே 
–2-9-2-

முதல் பாட்டில் காயிகமான பேற்றை அபேஷித்தார்-இதிலே மானசமான பேற்றை அபேஷிக்கிறார்-

எய்தா நின் கழல் யான் எய்த
1-ஸ்வ யத்னத்தால் ஒருவருக்கும் பிராபிக்க ஒண்ணாத திருவடிகளை -உன்னாலே பேறு-என்று இருக்கிற நான் ப்ராபிக்கும் படி பண்ணி –அது நீர் மயர்வற மதிநலம் பெற்ற அன்றே பெற்றிலீரோ என்ன-ஞானக் கைதா –
2-இது நீ நினைத்து இருக்கும் அளவு போறாது -அது நான் பெற்றேன் என்று தெளியும்படி பண்ண வேணும்-அமிழ்ந்தினார்க்கு கை கொடுத்தால் போலே இருக்கையாலே ஜ்ஞான லாபம் –பிரத்யஷ சமானாகார ஞானம் –-ஜ்ஞானமான கையைத் தா -என்கிறார் -சர்வம் ஞான பிலவம்-தெப்பம் -கீதை –
இங்கே எம்பாருக்கு ஆண்டான் அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது-அதாவது
ஒரு கிணற்றிலே விழுந்தவனுக்கு இரண்டு பேர் கை கொடுத்தால் எடுக்குமவர்களுக்கும் எளியதாய் ஏறுமவனுக்கும் எளிதாய் இருக்கும் இறே -அப்படியே ஆகிறது என்று –
ஞானக் கை தா –3-அங்கன் அன்றிக்கே -அது பின்னை பரபக்தி பர ஞான பரம பக்திகளை உடையார் பெரும் பேறன்றோ என்ன-ஞானக் கை தா – அவற்றையும் தேவரே பிறப்பித்து தேவர் திருவடிகளைப் பெற வேணும் -செய்கிறோம் என்ன ஒண்ணாது -செய்து கொடு நிற்க வேணும் –

————-

செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் என்
கையார் சக்கரக் கண்ண பிரானே
ஐயார் கண்டம் அடைக்கிலும் நின் கழல்
எய்யாது ஏத்த அருளிச் செய் எனக்கே
 –2-9-3-

இதில் வாசிகமான பேற்றை அபேஷிக்கிறார் –உதக்ரந்தி திசையிலும் கூட உன் திருவடிகளை நான் இளையாது ஏத்தும்படி -பிரானே -கிருபை பண்ணி அருள வேணும் -என்கிறார்-பிரார்த்தித்த எனக்கே அருள் செய் -வேண்டுதல் -அதிகாரி ஸ்வபாவம் -உனது அருளே உபாயம் –

———-

எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே
 –2-9-4-

இத் திருவாய் மொழியிலே இவர் நிஷ்கர்ஷித்த பிராப்யமாவது-(முக்கரணங்களால் கைங்கர்யம் )-ஸ்ரக் சந்த நாதிகளோபாதி தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -என்று இறே
இவ்விடத்தில் எம்பார் அருளிச் செய்யும் படி –சர்வேஸ்வரன் த்ரிவித சேதனரையும் ஸ்வரூப அனுரூபமாக அடிமை கொள்ளா நின்றான் -நாமும் இப்படி பெறுவோமே -என்று –
முக்தரும் நித்யரும்-தாங்களும் ஆனந்தித்து அவனையும் ஆனந்திப்பார்கள்-அஹம் அன்னம் -என்று அவனை -ஆனந்திப்பித்து -அவன் உகந்த வழியாலே–அஹம் அந்நாத என்று தாங்களும் ஆனந்திப்பார்கள் – -பத்தர் தாங்கள் ஆனந்தியாதே-அவனை ஆனந்திப்பார்கள் –இன்புறும் இவ்விளையாட்டுடையான் –3-10-7-இறே –

மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் -தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -என்று பிரார்த்திப்பான் என்- திரு உள்ளம் ஆனபடி செய்கிறான் என்று இராதே -என்று பிள்ளை திரு நறையூர் அரையர் எம்பாரைக் கேட்க
அது கேளீர் -முன்பு பிரிந்து அன்று -பின்பு பிரிவுக்கு பிரசங்கம் உண்டாயன்று -இரண்டும் இன்றி இருக்கத் திரு மார்வில் இருக்கச் செய்தே–அகலகில்லேன் அகலகில்லேன் -என்னப் பண்ணுகிறது விஷய ஸ்வபாவம் இறே –-அப்படியே பிராப்ய ருசி பிரார்த்திக்கப் பண்ணுகிறது -என்று அருளிச் செய்தார் –எம்பார்-

எம்மா வீட்டில் எம்மா வீடாய்–ஸ்ரீ  வைஷ்ணவ சர்வ ஸ்வமுமாய் -உபநிஷத் குஹ்யமுமாய் -சர்வேஸ்வரன் பக்கலிலே-அபேஷித்துப் பெறுமதுவாய்-(ராக ப்ராப்தமாய் )-இவ்வாத்மாவுக்கு வகுத்ததுமான பார தந்த்ர்யத்தை– அவன் பக்கலிலே அபேஷிக்கிறார் –-ராக பிராப்தமுமாய் -ஸ்வரூப பிராப்தமாய் இருக்கும் -என்றவாறு -சிஷ்டாசாரமும் மூல பிரமாண சித்தமுமாயும் இருக்குமே -இத்தனையுமாய் இருப்பதால் சாரதமங்களுக்குள் சார தமம்

எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என் மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி தனக்கேயாக- ஏழு சொற்களால் —ஏழு சங்கைகள் தீர்ந்து மகிழ்கிறார் ஆழ்வார் –
முதலிலே ஆட்செய்ய -என்ன வேணும் -ஆட்செய் -என்று -ஸ்வா தந்த்ர்யத்தை வ்யாவர்த்திக்கிறது -பரதன் சங்கை தீர்ந்தது –முதல் சங்கை தீர்ந்தது –
அதில் –எனக்கு ஆட்செய் -என்ன வேணும் -எனக்கு ஆட்செய் -என்று அப்ராப்த விஷயங்களை வ்யாவர்த்திக்கிறது –இரண்டாம் சங்கை தீர்ந்தது –
அதில் எனக்கே ஆட்செய் என்று தனக்கும் எனக்கும் பொதுவான நிலையைத் தவிர்த்து -எனக்கே ஆட்செய் என்ன வேணும் -மூன்றாம் சங்கை தீர்ந்தது
இது தான் ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி நிற்க வேணும் -நான்காம் சங்கை தீர்ந்தது-க்ரியதாமிதி மாம் வத -என்கிறபடியே -இன்னத்தைச் செய் –என்று- ஏவிக் கொள்ள வேணும்
இப்படி ஒரு வார்த்தை அருளிச் செய்து நெடுங்கை நீட்டாக இருக்க ஒண்ணாது
என் மனக்கே வந்து-என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுர வேணும் -ஐந்தாம் சங்கை தீர்ந்தது-புகுந்தாலும் போக்கு வரத்து உண்டாக ஒண்ணாது-இடைவீடின்றி மன்னி -ஸ்த்தாவர பிரதிஷ்டையாக எழுந்து அருளி இருக்க வேணும் – ஆறாம் சங்கை தீர்ந்தது
இருந்து கொள்ளும் கார்யம் என் என்றால்-தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
ஸ்ரக் சந்த நாதிகளோ பாதியாகக் கொள்ள வேணும்-அது சூடுமவனுக்கும் பூசுமவனுக்கும் உறுப்பாய் -மிகுதி கழித்துப் பொகடும் அத்தனை இறே-ஒரு மிதுனமாய் பரிமாறா நின்றால் பிறக்கும் இனிமையும் இரண்டு தலைக்கும் ஒத்து இருக்கும் இறே-அங்கன் என்னுடைய ப்ரீதிக்கு நான் அன்வயித்தேன் ஆக ஒண்ணாது – ஏழாம் சங்கை தீர்ந்தது –

பரமம் சாம்யம் உபைதி -சக ப்ரஹ்மம் -சக சாம்ய -சப்தங்கள் -சாம்யா பத்தி சாஸ்திரங்கள் சொல்ல-இவர் தமக்கு அந்வயம் இல்லாமல் அவனுக்கு மட்டுமே என்கிறது என்-
ஆனந்தத்தில் சாம்யா பத்தி -கைங்கர்யத்தால் வருகிற ஆனந்தம் வேண்டாம் என்கிறார் -அவன் ஆனந்தத்தால் இவருக்கும் ஆனந்தம் –அஹம் அன்னம் அஹம் அந்நாத –சாஸ்திர வாசனையாலே -தானே அருளிச் செய்கிறார் –-ஜகத் வியாபார வர்ஜம்-ஹேது மாறுவதால் ஹர்ஷத்தில் மாறுபாடு வாராதே -பிள்ளை தமப்பன் சம்பாதித்த சொத்தை பிரீதியாக அனுபவிப்பது போலே

பிராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுகிற சமயத்திலே திரு முகத்தைப் பார்க்கில் வ்யவசாயம் குலையும் என்று கவிழ்ந்து இருந்து கையோலை செய்து கொடுக்கிறார்

வங்கி புரத்து நம்பி திருமாளிகையில் மேல் கோட்டையில் ராமானுஜர் கையோலை இன்றும் வைத்து மகிழ்கிறார்கள் –

எனக்கே கண்ணனை-தனக்கேயாக என்ற பின்புத்தை எனக்கே இறே -புருஷார்த்தம் ஆகைக்காக சொல்லுகிறது –பாரதந்த்ர ஞானம் வந்த பின்பு வரும் ஸ்வா தந்த்ர்யம் –
ஞானாதிக்யத்தால் வரும் அஜ்ஞ்ஞானம் —என்னுடைய பந்தும் கழலும் தந்து போ போலே -அடிக் கழஞ்சு பெரும்-தனக்கே என்கிறது -பாரதந்தர்ய காஷ்டாய் -எனக்கே என்கிறது -புருஷார்த்தம் –

சிறப்பே —பல கால் வேண்டா -ஒரு கால் அமையும்-அது தன்னிலும் திருவாசலைத் திருக் காப்புக் கொண்டு ஒருவர் அறியாதபடி சிறப்பாக செய்யவும் அமையும்
சிறப்பாகிறது -ஏற்றம் -அதாவது -புருஷார்த்தம் – ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தத்தைக் கொண்டருள வேணும் -என்றபடி-சிறப்பாவது -1-முக்தியும்-2- சம்பத்தும் –3-நன்றியும்
இவற்றில் நான் உன் பக்கல் கொள்ளும் மோஷம் உனக்கேயாக எனைக் கொள்ளுமதுவே –
உன் பக்கல் நான் கொள்ளும் சம்பத்து என்னவுமாம் –நன்றி என்னவுமாம் –பராங்குசனுக்கு -அவயவ பூதர் ஆனால் நாமும் பெறுவோமே-தேவும் மற்று அறியேன் என்று இருப்பார்கள் யாவரும் அவயவ பூதர்-

———–

சிறப்பில் வீடு ச்வர்க்க நரகம்
இறப்பில் எய்துக எய்தற்க யானும்
பிறப்பில் பல் பிறவிப் பெருமானை
மறப்பு ஓன்று இன்றி என்றும் மகிழ்வேனே
 –2-9-5-

ஏதேனுமாக உண்டான வஸ்து தேவர்க்கே உறுப்பாம் இதுவே வேண்டுவது -என்கிறார் –
வபுராதி ஷூ யோபி கோபி வா –மயா சமர்ப்பிதா –ஜீவன் உனக்கு உரியவன் —ஸ்தோத்ர ரத்னம் -52-என்னுமா போலே –இத்தலையில் உள்ளது எல்லாம் மறக்கலாம் -மறக்க வேண்டும் –அத்தலையில் உள்ளது ஒன்றும் நழுவ ஒண்ணாது –

என்றும் மகிழ்வேனே –மகிழ்ச்சி என்றும் அனுபவம் என்றும் பர்யாயம்-அனுபவிப்பேன் என்கிறார் –தொழுது எழு -பர்யாய சொற்கள் – ஆக -1-இத்தாலே –ஜீவாத்மா -ஸ்வரூபமும் –பெருமான் -என்கையாலே -2- சேஷித்வமும்மறப்பு ஓன்று இன்றி -என்கையாலே -3–ஜ்ஞாத்ருத்வமும்என்றும் -என்கையாலே-3- நித்யத்வமும்மகிழ்வு -என்கையாலே-4- போக்த்ருத்வமும் -போக்யமாக முதலில் இருந்து அவன் போக்கியம் கண்டு நாம் போகிக்க –ஆக -இத்தாலே –ஜீவாத்மா -ஸ்வரூபமும் வெளியிடுகிறார் –

கீழ்ப் பாட்டும் இப்பாட்டும் முன்னிலை யன்றியே ஸ்வ கத அனுசந்தானமாய் இருக்கிறது –

———-

மகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம்
மகிழ் கொள் சோதி மலர்ந்த வம்மானே
மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும்
மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே
 –2-9-6-

தேவாதி பதார்த்தங்களை உண்டாக்கினால் போலே- என்னையும் உன்னை அனுபவிப்பேனாம் படி பண்ண வேணும் -என்கிறாராதல்-
அன்றியே
தேவாதி பதார்த்தங்களுக்கு ஒரோ ஸ்வபாவம் நியதமாம் படி பண்ணினால் போலே எனக்கு உன்னை அனுபவிக்குமது-நியத ஸ்வபாவமாம்படி பண்ணி யருள வேணும் என்கிறாராதல் ஸ்வார்த்ததையே இல்லாத பேற்றைக் கேட்டீர் -லோகத்தில் இப்படி கேட்க வில்லையே அகடிதகடநா-இல்லாதவற்றை உண்டாக்கினாயே -அது போலே இத்தையும் அருளுவாய் –திருதிய விபூதியாக உண்டாக்கி அருளுவாய் –

என்னுடைய ஹிருதயம் உன்னை அனுபவித்து மகிழ்ச்சியை உடைத்தாம் படி பண்ண வேணும்-என்னுடைய வாக் வ்யவஹாரமும் அப்படியேயாகப் பண்ண வேணும்
என்னுடைய வியாபாரமும் ப்ரீதி புரஸ் சரமாக பண்ணும் கைங்கர்யமேயாக வேணும்
நானும் தனியே அனுபவித்து ப்ரீதியை உடையேனாம்படி பண்ண வேணும்
என்றும் இப்படி நான் உன்னை அனுபவிக்கும்படி வர வேணும் –
மகிழ் கொள் ப்ரீதி பூர்வகமாக அனுபவிக்கையே இப்பாட்டில் ஏற்றம் –

———–

வாராய் யுன் திருப்பாத மலர்க்கீழ்
பேராதே நான் வந்தடையும் படி
தாராதாய் உன்னை என்னுள் வைப்பில் என்றும்
ஆராதாய் எனக்கு என்றும் எக்காலே 
–2-9-7-

தம்முடைய அபி நிவேசத்தாலே -எல்லாக் காலமும் என்னை அடிமை கொள்ள வர வேணும் -என்கிறார் –தாராதாய் -என்று இத்தை அவனுக்கு நிரூபகமாகச் சொல்லுகிறார் –மயர்வற மதி நலம் அருளினான் -என்றும் –வீடு திருத்துவான் -என்றும்- கேசவன் தமர் -என்றும் அருளிய இவர்- இன்னாப்பாலே இப்படி அருளிச் செய்கிறார்-அருளாத நீர் -முன்பு சொன்னால் போலே –தாராதாய் -என்று திரு நாமம் சாத்துக்கிறார் –இந்த திரு நாமம் வேண்டாம் என்றால் வாராய்-அந்ய பரோக்தியிலே பிராப்யத்தை நிஷ்கர்ஷிக்கிறார்–வாராய்-வர வேணும்-உன் திருப் பாத மலர்க் கீழே -பேராதே யான் வந்து அடையும்படி -தாராதாய் –என்னுதல்-உன் திருப் பாத மலர்க் கீழே -பேராதே யான் வந்து அடையும்படி-வாராய் -என்னுதல்-

————-

எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று
எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்
மிக்கார் வேத விமலர் விழுங்கும் என்
அக்காரக் கனியே உன்னை யானே 
–2-9-8-

இதுக்கு ஆளவந்தார் அருளிச் செய்யும் படி -இனிக் கூறிட ஒண்ணாத படி சிறு கூறான அத்யல்ப காலத்திலும் நீ ஸ்வாமியான முறை தப்பாதபடி என் ஹிருதயத்திலே வந்து புகரப் பெறில் மற்று எக்காலத்திலும்-இது ஒழிந்த எல்லாக் காலத்திலும்
யாதொன்றும் வேண்டேன் –பின்னை இது தானும் வேண்டேன்-இத்தை எம்பெருமானார் கேட்டருளி-இது பொருள் அழகியது – இவ் வாழ்வாருடைய பிரக்ருதிக்குச் சேராது-நஹி வாசோ தரித்திர -வஸூ தேவர் -ஸ்ரீ கிருஷ்ணன் திருவவதரித்த பின் பல நூறு தானம் செய்வதாக எண்ணினால் போலே –-பெறிலும் பெறாது ஒழியிலும் சிறுகக் கோல மாட்டார் -இங்கனேயாக வேண்டும் என்று அருளிச் செய்வர்
எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் –-எல்லாக் காலத்திலும் எனக்கு சேஷியான நீ -நான் சேஷமான முறை தப்பாமே வந்து என் ஹிருதயத்திலே புகுரப் பெறில்-எக்காலத்திலும்-இக்காலம் எல்லாவற்றிலும்-மற்று யாதொன்றும் வேண்டேன் பின்னை இது ஒழிந்த மற்று ஒன்றையும் வேண்டேன் –

அக்காரக் கனியே — மற்று -எக்காலத்திலும் யான் ஒன்றும் வேண்டேன் -பிள்ளான் நிர்வாகம்
அக்காரக் கனியே மன்னில் -எக்காலத்திலும் யான் உன்னை – மற்று- யாதொன்றும் வேண்டேன்-யத்ர நான்யத்ர பஸ்யதி -அது தவிர -சுருதி சாயலில் -எம்பெருமானார் நிர்வாகம் –

———–

யானே என்னை யறியகிலாதே
யானே என்தனதே என்று இருந்தேன்
யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே 
–2-9-9-

யானே –என் இழவு பகவத் க்ருதமல்ல –அவன் எதிர் சூழல் புக்கு திரியா நிற்க –நானே கிடீர் விநாசத்தைச் சூழ்த்துக் கொண்டேன் –இருந்தேன் –இப்படி நெடுநாள் போருகிற இடத்திலே ஒரு நாள் அனுதாபம் பிறக்கவுமாம் இறே –அது அன்றிக்கே க்ருதக்ருத்யனாய் நிர்ப்பரனாய் –இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே -இருந்தேன்தீ வினையேன் வாளா விருந்தேன் 

எம் வானவர் ஏறே —நித்ய ஸூரிகள் தங்கள் சேஷத்வ அனுரூபமாக அடிமை செய்யா நிற்க அவனும் தன் சேஷித்வத்தால் வந்த உத்கர்ஷம் தோற்ற இருக்கும் இருப்பு-எம் -என்றது-எனக்கும் அவர்களோடு ஒத்த பிராப்தி உண்டாய் இருக்க இழந்து அனர்த்தப் பட்டேன் –

—————

ஏறேல் ஏழும் வென்று ஏர் கொள் இலங்கையை
நீறே செய்த நெடுஞ்சுடர்ச் சோதி
தேறேல் என்னை உன் பொன்னடி சேர்த்து ஒல்லை
வேறே போக எஞ்ஞான்றும் விடலே
 –2-9-10-

அவ்விரோதிகளைப் போக்கினாப் போலே என்னுடைய விரோதிகளையும் போக்க வேணும் –உன் பொன்னடி சேர்த்து ஒல்லைநின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து -என்று தொடங்கின அர்த்தத்தைத் தலைக் கட்டுகிறார்-தலைக்கு கட்டு -தலைக்கட்டினார் -சாடு–நான் இசைந்த போதே சடக்கெனத் திருவடிகளில் திவ்ய ரேகையோபாதி சேர்த்து அருள வேணும்
அவ்வளவும் போராது
வேறே போக எஞ்ஞான்றும் விடலே —-இவனுக்கு எல்லா உத்கர்ஷமும் பண்ணிக் கொடுத்தோம் ஆகில் இனி என் என்ன ஒண்ணாது-நீ எல்லா உயர்த்திகளும் பண்ணித் தந்தாலும் நான் எல்லாத் தாழ்வுகளும் பண்ணிக் கொள்வேன்-என்னை என் கையிலே காட்டித் தராது ஒழிய வேணும் –நெறி காட்டி நீக்காதே —

————–

விடலில் சக்கரத் தண்ணலை மேவல்
விடலில் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
கெடலில் யாயிரத்துள் இவை பத்தும்
கெடலில் வீடு செய்யும் கிளர்வார்க்கே
 –2-9-11-

நாம் ஒருவரையும் விடோம் காணும் -என்று திருக் கையில் திரு வாழியைக் காட்டினான் –ஒரு காலும் விடாத திரு வாழியைக் கையிலே உடைய சர்வேஸ்வரனைக் கவி பாடிற்று-

இப்பத்தும் கிளர்வார்க்கு கெடலில் வீடு செய்யும் வரில் பொகடேன்-கேடில் தேடேன் -என்று இருக்கை யன்றிக்கே ஸ்ரத்ததாநராய் இருப்பார்க்கு -அனர்த்த கந்த ரஹிதமாய்-
அஹங்கார மமகாரங்கள் உடைத்த தன்றிக்கே- தனக்கே யாக வேணும் -என்று இவர் பிரார்த்தபடியே இவ்வாத்மவினுடைய ஸ்வரூப அனுரூபமான பேற்றைத் பண்ணித் தரும் –

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -84-தையல் நல்லோர்கள் குழாங்கள் குழிய-மையார் கருங்கண்ணி -9–4-

March 26, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

அடுத்த பாசுரம் சரணாகதி பாசுரம்-இதில் கண்ணாலே கண்டது போல் கூப்பிடுகிறாள்-துறையடைவு-தலைவி தலைவனைக் காண விரைதல்–-எங்கே காண்பேன் -இந்தக்கூட்டத்திலா -கோபிமார்கள் -ரிஷிகள் -அரசர்கள் ராஜஸூய யாகம் -தானம் கொடுக்கும் குழுவிலா –-நேராக ஏகாந்தமாக ஸேவை சாதிப்பான் என்று அறிவிலியாக நினைந்து -காணாமல்-மையார் கருங்கண்ணி -9–4-இதன் விவரணம்-இங்கும் திருவாழி திருக்கையுடன் சேவிக்க ஆசை உண்டே–வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும்
கையா உனைக் காணக் கருதும் என் கண்ணே–9-4-1-
கரு மாணிக்கம் இல் பொருள் உவமை மாணிக்கமே -சிவந்தே தானே இருக்கும்-முத்து போல் குளிர்ந்தும் இருப்பானே –

அவதாரிகை –-இவள் மோஹித்த அநந்தரம் -அரத்தியாய் ஓர் இடத்தில் தரியாதே –பகவத் அலாபத்தாலே-அங்கே இங்கே தடுமாறி கூப்பிட்டு கொண்டு திரிகிறபடியை சொல்கிறது –
க்வசிதுத் பரமதேவகாத் க்வசித் விப்ரமதே பலாத் ச்வசின்மத்தஇவாபாதி காந்தான் வேஷணதத்பர –முகில் வண்ணன் பேர் கிளறிக்கிளறிப் பேசி நைந்து போனாள் கீழே மூவாறு மாதம் மோஹித்தவர் அன்றோ-தமோ குணத்தால் வந்த மோஹம் அல்லவே-அதே போல் இங்கும்-உப ரதி ஒய்வு-அரதி -பரபரத்து ஓர் இடத்தில் இருக்க ஒட்டாமல்-அங்கே இங்கே -ராமாவதாரம் கிருஷ்ணாவதாரம்-சீதாப் பிராட்டி எங்கே எங்கே என்று விப்ரமதே மயங்கி -பித்துப் பிடித்தால் போல் காந்தையைத் தேடித் தரியாமல் இருந்தது போல் –

இப்படி பரிவரும் வெறுக்கும் படி ஆர்த்தரான இவர் போக்ய பூதனான ஸர்வேஸ்வரனைக் காண ஆசைப்பட்டுத் தம்மிலே அவனை நோக்கி ப்ரலாபித்த ப்ரகாரத்தை நாயகி யானவள் நாயகனான ஸர்வேஸ்வரனைப் புறம்பே திரளிடை யாகிலும் காண ஆசைப்பட்டுப் புலம்பின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்–அவதாரிகை–இதுக்கு மேல் தன் கணவனைக் காணாமல் பொறுக்க மாட்டாத நாயகியாய் கோப ஸ்த்ரீ சங்க ஸேவ்யனான கண்ணனாயும் – அத்வர்ய் வாதிகளோடு மஹா சாவாத்யரோத் சாயாதிக்ருதனான சக்ரவர்த்தி திருமகனாயும் திவ்ய அப்சரஸ் சங்க திவ்ய ஸூரி சங்க பரிசரண விஷய பரமபத நிலயனாயும் மற்றும் அங்கங்காக தத் தத் சங்க சேவ்யனாயும் காண அவாவைப் பெற்று அவனில் தன் ப்ரீத்யபி வ்யஞ்ஜகமான திரு நாமங்களை உரக்கச் சொல்லி
விமுக்த லஜ்ஜையாய்க் கூப்பிடுகிறார் இதில்

தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழு வினுள்ளும்
ஐய நல்லார்கள் குழிய விழவினும் அங்கங்கெல்லாம்
கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பானவாவுவன் நான்
மைய வண்ணா மணியே முத்தமே என் தன் மாணிக்கமே
– -84-தலைவி தலைவனைக் காண விரைதல்–

மைய வண்ணா–மையுடைய நிறம் போன்ற கரிய திருநிறமுடையவனே!
மணியே முத்தமே என்றதன் மாணிக்கமே–நீலமேணியும் முத்தும் மாணிக்கமும் போல
நிறத்தையும் அழகையும் ஒளியையும் உடைய எம்பெருமானே!
தையல் நல்லார்கள்–அழகிய ஸ்த்ரீகள்
குழாங்கள் குழிய குழுவினுள்ளும்–கூட்டமாய்க் கூடின திரளினுள்ளே யாயினும்
ஐய நல்லார்கள்–சிறந்தவர்களான நல்லபுருஷர்கள்
குழிய விழவினும்–திரண்ட திருவிழாக்களிலாயினும்-உத்ஸவங்களிலும்
அங்கு அங்கு எல்லாம்–இன்னும் அப்படிப்பட்ட திரள்களெல்லாவற்றிலுமாயினும்
கைய பொன் ஆழி வெண் சங்கொடும்–கைகளிலுள்ள பொன்னிறமான சக்கரத்துடனும் வெண்ணிறமான சங்கத்துடனும்
நான் காண்பான் அலாவுவன்–நான் (உன்னைக்) காண ஆசைப்பட நின்றேன்.

மையார் கண் மா மார்பில் மன்னும் திருமாலை
கையாழி சங்கு டனே காண வெண்ணி -மெய்யான
காதலுடன் கூப்பிட்டுக் கண்டு உகந்த மாறன் பேர்
ஓத வுய்யுமே இன்னுயிர்–
84–கீழ் – சீலாதிகனாய் -அதுக்கு ஊற்றுவாயான ஸ்ரீ பிராட்டியோடு நித்ய சம்யுக்தனாய் –இரண்டு இடத்திலும் அழகு பெற தரித்த ஸ்ரீ ஆழ்வார்களை யுடையனான-ஸ்ரீ எம்பெருமானை அனுபவிக்க வேணும் என்று தாமும் தம்முடைய கரண க்ராமங்களுமாக விடாய்த்துக் கூப்பிட தூணிலே தோற்றி சிறுக்கனுக்கு உதவினாப் போலே மானசமாகத் தோற்றி தன் குணங்களை அனுபவிப்பிக்க அத்தை அனுபவித்து ஹ்ருஷ்டராகிற -மையார் கரும் கண்ணியில் அர்த்தத்தை
மையார்கண் மா மார்பில் மன்னும் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -இப்படி பகவத் விஷய பக்தியை உடைய ஸ்ரீ ஆழ்வார் திருநாமத்தை அனுசந்திக்கவே விலஷணமான ஆத்ம வஸ்து உஜ்ஜீவிக்கும் –

தையல் நல்லார் இத்யாதி –தையல் நல்லார் உண்டு -ஸ்திரீ ரத்னங்கள் —அவர்கள் குழாம் உண்டு -திரள்–அத் திரள்கள் திரண்ட திரளினுள்ளும்     –-பெண்கள் திரள்களைக் கண்டவாறே -திருக் குரவை-என்று இருப்பாராய் -ஆயிற்று இவர் –ஐய நல்லார் இத்யாதி —அறவோர் அரும் தவத்தோரையர்-என்று பண்டித வாசகங்கள் –ஐய நல்லார் உண்டு –பண்டிதரில் நல்லாராய் இருக்குமவர்கள் –அவர்கள் குழிய விழவிலும் -தீர்க்க சத்ரங்கள் -மற்றையில் -அவற்றுக்காக திரள இருப்பர்கள் இறே –தீர்க்க சத்திரம் -என்றது யாகாதிகளை–அவற்றிலும்-ஸ்ரீ தண்ட காரண்யத்தில் ருஷிகள் திரள் போலே இருக்கிற வற்றிலும் –சமாஜேஷூ மஹத் ஸூச -என்னுமா போலே –அங்கு அங்கு எல்லாம் –-அவற்றோடு போலியான விடங்கள் எல்லாவற்றிலும் –கைய இத்யாதி –திரு ஆழி இன்றிக்கே -மனிச்சேயான அவதாரத்தோடு- அவற்றை மறைத்த அவதாரத்தோடு வாசி யற திவ்ய ஆயுதங்களோடு காண ஆசை பட்டாய்-இற்றே இருப்பது –-ஆசூர பிரக்ரதிகளுக்கு அன்றோ மறைத்தது – எனக்கு காணத் தட்டு என் என்று-இருப்பாராயிற்று –ஜாநாது மாவதாரம் தே கம்சோயம் திதி ஜன்மஜ (ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-13–)சத் ப்ரக்ருதி யானவன் -தேனைவ ரூபேண சதுர் புஜேன சஹஸ்ர பாஹோ பவ விஸ்வ மூர்த்தே -என்றான் இறே –அவாவுவன் நான் –ஆசைக்கு கண் உண்டோ -(யுக்த அயுக்த விவேக ஞானம் இருக்காதே ஆசைக்கு ) காண வேணும் -என்று ஆசைப்படும் இத்தனை போக்கி – காண அரிது -என்று அறிய மாட்டேன் –காண அரிதாகில் காண வேணும் என்று ஆசையைப் பிறப்பித்து உம்மை சிஷித்து விட்டாரா என்ன –மைய வண்ணா -இத்யாதி –
விஷய தோஷம் இறே இதுக்கு அடி என்கிறார் –நல் சரக்கை இழந்து ஆறி இருப்பார்களோ –மைய வண்ணா -கண்டார் கண்ணிலே அஞ்சனம் எளிதினால் போல் குளிர்ந்து இருக்கும்படி –மைப்படி மேனியான் அஞ்சன வண்ணன் அன்றோ அவன் –மணியே –அப்படியே இருக்கச் செய்தே -முடிந்து ஆளலாய் இருக்கிறபடி –முத்தமே -உடம்பிலே ஏறிட்டுக் கொண்டால் விடாய் எல்லாம் தீரும்படி இருக்கை –என் தன் மாணிக்கமே -பெரு விலையனாய் இருக்கை ––மைய வண்ணா குளிர்ச்சி – கண்ணுக்கு மட்டும் இது-முத்தமே -குளிர்ச்சி -உடம்பிலே ஏறிட்டுக் கொள்ளும்படி அன்றோ–இவ் வாழ்வாருக்கு மோஹம் ஆவது  –எத்திறம் -என்ற இடத்தில் சௌலப்யம் குணம் மாத்ரம் அனுபவம்–முகில் வண்ணன் விஷயத்தில் அழுந்தின அனுபவம் மாத்ரமே – அது இருந்த இடத்தில் இருக்க ஒட்டாதே-கிளப்பி விட -தேடிக் கூப்பிடுகிறார் –அபரிச்சின்ன வைபாவனாய் இருக்கச் செய்தேயும் -ஆஸ்ரிதர்க்கு அத்யந்த சுலபனாய் கண்டார் கண் குளிரும்படி -சம்சார தாபம் ஆறும்படி –அஞ்சன கிரி போல் திரு மேனி உடைய-சௌலப்யம் அனுபவித்து –அவனைக் காண வேணும் த்வரையில் அருளிச் செய்கிறார் –சௌலப்யம் அழகையும் காட்டி -கோபிமார் திரளில் ரசக் கிரீடை பண்ணின படியையும் தண்ட காரண்யத்தில்   ருஷிகள் கோஷ்டியில் வீற்று இருந்த படியையும் – சகல திவ்ய ஆயுத சோபை உடன் – காண ஆசை கொண்டு அருளுகிறார் –

மைய வண்ணா மணியே முத்தமே என் தன் மாணிக்கமே–அவனையே முன்னிலை படுத்தி பேசி -நாயகனையே இடையூறாக நினைத்து பேசி குரவைக் கூத்தாடும் மகளிர் கூட்டத்திலும் -தர்ம புத்திரர் ராஜ ஸூய யாகம் செய்யும் மஹா புருஷர்கள் குழாங்களிலும் இருப்பவன் ஆகையால் தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழு வினுள்ளும்-ஐய நல்லார்கள் குழிய விழவினும் அங்கங்கெல்லாம்-கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பானவாவுவன் நான்-என்கிறார் – பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு பவ்வம் ஏறி துவரை எல்லாரும் சூழ சிங்காசனத்தே இருந்தானைக் கண்டார் உளர் –
காந்தள் முகிழ் விரல் சீதைக்காக்கிக் கடுஞ்சிலை சென்று இறுக்க வேந்தர் தலைவன் சனகராசன் தன வேள்வியில் கண்டார் உளர் -பெரியாழ்வார் பாசுரங்கள் –மணியே முத்தமே என் தன் மாணிக்கமே – –முத்தினை மணியை மணி மாணிக்க வித்தினை சென்று விண்ணகர்க் காண்டுமே -திருமங்கை ஆழ்வார்-தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழு-பரதந்த்ரராய் இருக்கும் -பிரபன்ன கோஷ்ட்டி
ஐய நல்லார்கள் குழு-யாகம் பல செய்யும் கைங்கர்ய கோஷ்ட்டி புறம்பே திரள்களில் ஆகிலும் காண ஆசைப்பட்ட நாயகி பாசுரம் –குழாங்கள் குழிய குழு-என்கையாலே சமூகம் பலவாய்ச் சேர்ந்த சமுதாயம் -நாயகி நாயகனைக் காண விரைந்து பேசும் பாசுரம் இது. நாயகனுடைய விரஹத்தை ஆற்றாத நாயகி, அவனை என் காதலின்படி தனியே ஏகாந்தத்திற் கண்டு கூடிக் குலவி இன்புற கிடையாதாயினும் ஆண்களும் பெண்களும் பலர் கூடிய கூட்டத்தினிடையில் எங்கேனுங் காணக் கிடக்குமாயினும் அது கொண்டு ஆறியிருப்பேனென்று கருதிச் சொல்லுகிறாளென்க.-“மையவண்ணா மணியே முத்தமே என்றன் மாணிக்கமே!” என்று முன்னிலையாகக் கூறியிருப்பது எங்ஙனே எனின்;-நாயகனையே இடையறாது நினைத்துக் கொண்டிருந்து நினைப்பு மிகுதியால் அவனை எதிரில் நிற்கிறாய் போலப் பாவித்து முன்னிலைப்படுத்திக் கூறினபடி,–திருவாய்ப்பாடியிலுள்ள ஆயர் மங்கையர் கூடியாடுங் குரலைக் கூத்துப் போன்ற மகளிர் குழாத்திலும், தருமபுத்திரர் செய்த ராஜஸூய யாகம் போன்ற மஹா புருஷர்களின் குழாத்திலும் எழுந்தருளி யிருப்பதற்குத் தகுதியுடைமைபற்றி“கையனல்லார்கள் குழாங்கள் நான்” என்றது. எம்பெருமான் பெண்களின் திரளிலும் மஹாபுருஷர்களின் கோஷ்டிகளிலும்
ஸேவிக்கத் தகுந்தவனென்பதை ‘பல்லாயிரம் பெருந்தேவிமாரோடு பௌவமேற்துவரை,
எல்லாருஞ் சூழச் சிங்காசனத்தே யிருந்தாளைக் கண்டாருளர்” “காந்தள் முகிழ்விரல்ருளர்”
என்ற பெரியாழ்வார் பாசுரங்களாலு முணர்க.–தையல் நல்லார்கள்- ஸ்திரீகளுட் சிறந்தவர் என்றும், ஐயநல்லார்கள்- ஆர்ய ச்ரேஷ்டர் என்றுங் கொள்க.-தையல் நல்லார்கள் நல்- தையலார்கள் என மாறுதலுமாம். ‘குழிய’ என்றது குழுவிய என்றவாறு.-(தழுவிய என்பது தழிய என்றும், கெழுவிய என்பது கெழிய என்றும் வருதல்போல. (சீவக சிந்தாமணி-சுரமஞ்சரியாரிலம்பகம் 32.) “தமிழ் கழியசாலவர்” (கந்தபுராணம்-அசுரக் காண்டம்) ‘தனது மாடே, தழிய காவலரை நோக்கி” ” (கந்தபுராணம்-அசுரக் காண்டம்)“கெழிய ராகுவுங் கேதுவும்” என்ற இடங்களில் ‘தழிய’ ‘கெழிய’ என்ற பிரயோகங்கள் காண்க.)கைய’ என்பதும் ‘மைய’ என்பதும் குறிப்புப் பெயரெச்சங்கள். மணியே முத்தமே மாணிக்கமே யென உபமானத்தை உபமேயமாகவே சொன்னது உபசார வழக்கு.-“முத்தினை மணியை மணி மாணிக்க வித்தினைச், சென்று விண்ணகர்க் காண்டுமே” எனத் திருமங்கையாழ்வார் பாசுரத்திலும்
இம்மூன்று உவமைகள் ஒருங்கே கூறப்படுதல் காண்க.
-நெஞ்சென்னும் உட்கண்ணால் எம்பெருமானை ஸேவிக்கப் பெற்ற ஆழ்வார் அப்பெருமானை மீண்டும் எங்கேனும் காண ஆசைப்பட்டு அவனை நோக்கித் தன்னிலே யுரைத்த வார்த்தை இதற்கு உள்ளுறை பொருள்.–‘தையனல்லர்கள் குழாங்கள் குழிய குழு’ என்பதற்கு ஸ்வாபதேசம்- பரதந்திரராயிருக்குந் தன்மையையே ப்ரதானமாகவுடைய
ப்ரபந்தர்களின் கோஷ்டி எனவும் ‘ஐயநல்லார்கள் குழு’ என்பதற்கு ஸ்வாபதேசம்- யாகம் முதலிய தொழில்களை நடத்து மியல்புடைய கைங்கர்ய ப்ரவ்ருத்தி ‘சீலர்களின் கோஷ்டி எனவும் கொள்வர்.
-இப் பாட்டின் அழகிய மணவாள சீயருரையில்- நாயகியானவள் நாயகனுடைய ஸர்வேச்வரனைப் புறம்பே திரளிடையாகிலுங்காண ஆசைப்பட்டுப் புலம்பின பாசுரம்’ என்றதும் ‘துழாங்கள் குழிய குழு’ என்கையாலே ‘அந்த’ ஸமூஹந்தான் பலவாய்ச்சேர்ந்த ஸமுதாயத்தைச் சொல்லுகிறது’ என்றதும்,‘இந்தக்கிளவி, “மள்ளர் குழீஇய விழவினாலும், மகளிர் தழீஇய துணங்கையானும், யாண்டுங்கணேன் மாண்டக்கோனை” என்ற அகந்தமிழிலுஞ் சொல்லப்பட்டது’ என்றதும் இங்கு அறியத்தக்கன.-மேலெடுத்துக் காட்டிய மேற்கோள் குறுந்தொகை. இது நச்சினார்க் கிளியராலும் “உயிரினுஞ் சிறந்ததன்று” என்ற தொல்விழவினாலும், மகளிர் தழீஇய துணக்கையாலும் யாண்டுங்காணேன் மாண்டக்கோனை, யானுமோராடுகள மகளே யென்கைக் கோடீரிலங்குவளை ஞெகிழ்ந்த, பீடுகெழுகுரிசிலுமாடுகள மகனே’ என்பது நொதுமலர்வரைவுழித் தோழிக்குத் தலைமகள் அறத்தொடு நின்றது; ஆதிமந்தி

தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழு வினுள்ளும்-விலக்ஷணை களான நாரீ ஸமூஹங்களானவை திரண்ட திரட்சி யுள்ளும்-குழாங்கள் குழிய குழு-என்கையாலே அஸ் ஸமூஹம் தான் பலவாய்ச் சேர்ந்த சமுதாயத்தைச் சொல்லுகிறது-ஐய நல்லார்கள் குழிய விழவினும்-பூஜ்யரான விலக்ஷண புருஷர்கள் திரண்ட மஹா உத்ஸவத்திலும்–அங்கங்கெல்லாம்-அவ்வவ் விடங்கள் எல்லாவற்றிலும்–கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பானவாவுவன் நான்-போக்யத்வ
ரக்ஷகத்வங்களுக்கு ஸூசகமாய் கற்பகக் கவடு விழுந்தால் போலே திருக்கைக்கு அலங்காரமாய்
ஒவ்ஜ்வல்ய விசிஷ்டமான திருவாழியோடும் அத்யந்த பரி ஸூத்தமான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தோடும்
கூடக் காண வேணும் என்று ஆசைப்படா நிற்பன்–வந்து காண்கைக்குக் கால்நடை தாராத நான்-கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -இவருக்கு காரார் காணும் அளவு போய் -ஆடல்மா குதிரையில் கானால் விடேன் என்றவர் திருமங்கை ஆழ்வார்மைய வண்ணா-ஆசை யற்று இருக்க ஒட்டாத வடிவழகை யுடையவன்–மணியே-துர்லபன் என்று மீள ஒண்ணாத படி முடிந்து ஆளவானவனே-முத்தமே-நீர்மை இல்லை என்று தவிர வேண்டாதபடி முழு நீர்மை யுடைய ஸூத்த ஸ்வ பாவனே-என் தன் மாணிக்கமே-பிரகாஸ குண அதிசயத்தாலே என்னை உன் அநு ராகத்திலே அகப்படுத்திக் கொண்டவனே -என்று அவன் ஸ்வ பாவங்களைச் சொல்லிப் புலம்பினாள் ஆயிற்று-இந்தக் கிளவி
மள்ளர் குளீஇய விழவினானும் மகளிர் தலீஇய நுணங்கை யானும் யாண்டும் காணேன் மாண் தக்கோனை -என்று அகத் தமிழிலும் சொல்லப் பட்டது-(குறுந்தொகை பாடல் )இத்தால் நமக்கு போக்ய பூதனான கிருஷ்ணனை கோபீ ஜன மத்யத்திலும் வித்வ ஜ்ஜன மயத்தை யுடைத்தான யாகாதி மஹா உத்ஸவத்திலும் அசாதாரண சிஹ்னங்களோடே அனுபவிக்க ஆசைப்பட்டமை சொன்னார் ஆயிற்று
-அன்றிக்கே பாரதந்தர்ய காஷ்டா நிஷ்டரான பிரபத்தி நிஷ்டர் ஸமூஹத்திலும் கர்ம கலாபாதி ப்ரவ்ருத்தி சீலரான கைங்கர்ய நிஷ்டர் ஸமூஹத்திலும் காண ஆசைப்பட்டார் ஆகவுமாம்-(கர்மமும் கைங்கர்யத்தில் புகும்)அன்றியே இரண்டும் ப்ராப்ய தசையிலேயாய் வைகுண்டே து பர லோகே –பக்தைர் பாகவதை ஸஹ -லிங்க புராணம் என்றும்-அமரரும் முனிவரும் -திருவாய் -10-9-9-என்றும்
சொல்லுகிறபடியே குண பரதந்த்ரரும் கைங்கர்ய வ்ருத்தி சீலருமான ஸூரி சங்கங்களைச் சொல்லிற்று ஆகவுமாம்

தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழு வினுள்ளும்-நல் ஸ்த்ரீகள் கூட்டமாய்க் கூடின கூட்டத்திலும்-ஐய நல்லார்கள் குழிய விழவினும்– ஸத் புருஷர்களாய்க் கூடிச் செய்யும் உத்ஸவங்களிலும்-அங்கங்கெல்லாம்-இப்படியாக அங்கங்காக உள்ள சங்கங்களில் எல்லாம்–கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பானவாவுவன் நான்-திருக்கைத் தலங்களுக்கு அழகு பெறுத்தும் அழகுள்ள திருவாழி ஆழ்வானோடும் திருச்சங்கு ஆழ்வானோடும் காண வேணும் என்று மிக்க அவனைப் பெற்ற நான்-மைய வண்ணா -கரு வளர் மேனியாய்க் கண்ணுக்கு இட்டுக் கொள்ளவான மை போன்றவனே-மணியே ஸ்வாதீன நீல ரத்னம் போன்றவனே-முத்தமே-கருணை யாகிற தெளி நீரால் அதிசயித்து எங்களை வெள்ளுயிராக்க வல்லவனே-என் தன் மாணிக்கமே–எனக்கு ஸர்வதோமுக நிரதிசய அதிசய நாயகனே என்று ஸ்வயமேவ புலம்புகிறார் —

தாத்பர்யம்–இதில் சர்வேஸ்வரனுடைய ஸுலப்ய அதிசயத்தை அனுசந்தித்து அவனைக் காண வேணும் என்னும் த்வரையால்-ஓ ஸ்வாமியே நீயோ அபரிச்சின்ன வைபவம் -மேன்மை கொண்டவனாய் இருந்தும் -அளவில்லா முடியாத பெருமை -இருந்தாலும்-ஆஸ்ரிதருக்கு ஸூலபனாய்
கண்ணுக்கு குளிர்த்தியாய் கண்டவர் சம்சார தாபம் தீரும்படி அஞ்சன வண்ணனே ஸுலப்யம் அழகைக் காட்டி என்னை நின்ற இடத்தில் நிற்க ஒட்டாமல் பண்ணி திவ்ய ஆயுதங்கள் தரித்து ராஸக்ரீடை பண்ணிய இடங்களிலும் தண்டகாரண்யத்தில் ரிஷிகள் குழுவில் வீற்று இருந்த படியிலும் காண ஆசைப்பட்ட எனக்கு அப்பொழுது உள்ளாருக்கு சேவை சாதித்தால் போல திவ்ய ஆயுதங்கள் தரித்து
என்னை க்ருதார்த்தனாக ஆக்கி அருள வேணும் என்று பிரார்த்திக்கிறார்

9-4-மையார் கருங்கண்ணி கமல மலர்மேல்செய்யாள்-ப்ரவேஸம்-

இறைவனுடைய ஸ்வா தந்த்ர்யத்துக்கு அடி -அவன் தானே இருக்கும்-
அவனுடைய சீலம் முதலான குணங்களுக்கு அடி -பிராட்டியே இருக்கும் –

சீலம் முதலான குணங்கள் வந்தவாறே-ஸ்வா தீனம் இன்றிக்கே ஒழிகிறதோ -என்னில்-நிரூபித்தால்
அந்த ஸ்வா தந்த்ரியத்தைப் போன்று-இவளுடைய சேர்த்தி-நித்தியமாய் இருக்கையாலே –
அங்கனமாய் இராது -காரணம் பற்றி வந்தது ஆனாலும் –
பாஷ்ய காரர் மேலே ஸ்ரீ வல்லப என்று நினைத்து-ஸ்வரூபத்தை நிரூபிக்கிற இடத்தில்-
ஞானம் ஆனந்தம் இவற்றுக்கு முன்பு ஸ்ரீய பதி என்றாரே அன்றோ –கீதா பாஷ்யத்தில் –

ஸ்ரீய பதி – நிகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதாநாநந்த
ஞான ஆனந்த ஏக ஸ்வரூப ––இத்யாராப்ய –ஸ்வ அபிமத அநுரூப நித்ய நிரவத்ய ஸ்வரூப ரூப குண விபவ
ஐஸ்வர்ய சீலாத்ய-அநவதிக அதிசய அசங்கேய கல்யாண குண கண ஸ்ரீ வல்லப

இப்படி இருக்கிறவனுடைய-சீல குணத்தையும்(சீலம் எல்லை இலான் அடிமேல் அணி கோல நீள் குருகூர்ச் சடகோபன் சொல்)
அதற்கடியான திருமகள் கேள்வனாய் இருக்கும் தன்மையையும் -(அடைவதும் அணியார் மலர் மங்கை தோள் )
அருளிச் செய்தார் மேல் திருவாய் மொழியிலே –

கடுக பெற வேண்டும்படி-குணங்களால் மேம்பட்டவனுமாய்-பெறுவிப்பாரும் அருகிலே உளராய் இருக்கையாலே
இப்போதே பெற வேண்டும்படியான ஆசை பிறந்தது –அப்போதே பெறக் காணாமையாலே-விஷயத்துக்கு தகுதியாக விடாய்த்தார்-
பெற வேண்டும்படி குணங்களால் மேம்பட்டவனுமாய்-பெறுவிப்பாரும் அருகே உளராய்- இருக்கப் பெறாவிட்டால் ஆறி இருக்க போகாதே அன்றோ –

ஆகையாலே-
முடியானே -என்ற திருவாய்மொழியின் வாசனையாலே-அறிவுடைப் பொருள்களைப் போன்று தனித் தனியே
கரணங்களும் விடாய்க்க -தாமும் விடாய்க்கிறார் -முதல் ஐந்து பாசுரங்களில்-
வீற்று இருந்து ஏழ் உலகு -திருவாய்மொழி வாசனை 6-7-8-பாசுரங்களில்-
என்றைக்கும் என்னை -திருவாய்மொழி வாசனை -9-பாசுரத்தில்
செஞ்சொற் கவிகாள் –திருவாய்மொழி வாசனை –10-பாசுரத்தில்
இதுதான் எல்லா திருவாய் மொழி களோடும் கூடி இருப்பது ஒன்றாயிற்று -என்றது-கலம்பகம் மாலை போலே –

முடியானே /வீற்று இருந்து ஏழ் உலகு /என்றைக்கும் என்னை /செஞ்சொற் கவிகாள்
என்னும் திருவாய் மொழிகளில் ஓடுகிற எண்ணங்களை உடைத்தாய் இருப்பது ஆயிற்று -என்றபடி-

இப்படி இந்த்ரியங்களும் தனித் தனியே விடாய்க்க -(கண்ணே -என் கருத்தே -உன்னை உள்ளும் என் உள்ளம் –)இப்படி இந்த்ரியங்களும் தனித் தனியே விடாக்க(பேதுறுவன்-)
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உடைய துயரத்துக்கு தோற்றின-அது தான் காலம் தாழ்த்து வந்தான் என்னலாம்படி
ஆற்றாமைக்கு காலம் தாழ்த்துத் தோற்றாமல்-தூணிலே வந்து தோற்றினால் போலே -நரசிங்கமாய் –தோற்ற வேண்டும் படி ஆயிற்று –

இப்படிப் பட்ட
தம் நிலையையும்
அதற்கு அடியான விடாயையும்-
விடாய் அறிந்து அதற்கு உதவ வந்து அவன் முகம் காட்டின படியையும் நினைத்து உவகையினராய்-(என் உள்ளம் உகந்தே)
நான் கிருதக் கிருத்தியன் ஆனேன்-(கண்டு கொண்டேனே)
அடிமை செய்யப் பெற்றேன்-(தொண்டர்க்கு அமுது உண்ண)
வாழ்ந்தேன்-(உய்ந்தவாறே)
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் எல்லாம் நான் உபகாரகனாம் படி ஆனேன்
இது ஒருவன் பெரும் பேறு இருந்தபடியே -என்று தமக்கு பிறந்த லாபத்தை நினைத்து இனியராய் அதனைப் பேசித் தலைக் கட்டுகிறார்-

நாலாம் திருவாய் மொழியில் கீழே அவன் ஸீலாதிசயத்தை அனுபவித்து சிதிலரானவர் –
ஸீலவானாய் ஸ்ரீ யபதியானவனை அனுபவிக்க வேணும் என்று அபி நிவேசித்து அந்த அபி நிவேச அனுரூபமான
ஸ்ரீ மஹா லஷ்மீ விசிஷ்டத்வத்தையும்
அத்ய அபி நிவேச விஷயத்வத்தையும்
ஆஸ்ரித ரக்ஷகத்வத்தையும்
அசேஷ பிரதி சம்பந்தித்வத்தையும்
காரணத்தவாதி குண யோகத்தையும்
பரமபத நிலயத்வத்தையும்
ஹ்ருஷ்ட யதிசயத்தையும்
சர்வ அந்தராத்மாதிகளையும்
கிஞ்சித்க்கார விஷயத்வத்தையும்
நிருபாதிக சம்பந்தத்தையும்
அனுசந்தித்து ஏவம் வித பூதனானவனை அனுபவிக்க வேணும் என்கிற ஆகாங்ஷையாலே தம்மோடு கரணங்களோடு வாசியற
ஈடுபட்ட இவருடைய ஆர்த்தி தீர்க்கும்படி முகம் காட்ட அனுபவித்து ஸந்துஷ்டராய்
ஆஸ்ரித அனுபாவ்யமான திருவாய் மொழியை அவன் திருவடிகளில் பாடி உஜ்ஜீவிக்கப் பெற்றேன் என்று மிகவும் ஹ்ருஷ்டராகிறார் –

மையார் கருங்கண்ணி கமல மலர்மேல்
செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே
வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும்
கையா உனைக் காணக் கருதும் என் கண்ணே–9-4-1-

விஷய த்ரயம் -விசிஷ்ட த்ரயம் -பிராட்டி -திவ்ய ஆயுதங்கள் -திவ்ய விக்ரக விசிஷ்டன்

மையார் கருங்கண்ணி – வேறு ஒரு பொருளைக் கொண்டு அழகு செய்ய வேண்டாதபடி-இயல்பான அழகினை உடையதாய்-ஆயிற்றுத் திருக் கண்கள் இருப்பன –
இனி மங்களத்தின் பொருட்டு தரிக்கும் இத்தனையேயாம் அஞ்சனம்-
கருங்கண்ணி -என்னா நிற்கச் செய்தே –மையார் -என்னும் போது-மங்களத்தின் பொருட்டு தரிக்கப் படுத்தல் எனபது தானே போதரும் அன்றோ –

திரு மார்வினில் சேர் திருமாலே – தாமரைப் பூவில் வாசனையும் தாதும் அடிக் கொதித்தால்- உன் மார்வில் அடி மாறி இட வேண்டும்படி-மார்வு படைத்தவனே-
இவள் இவ்வேற்றம் எல்லாம் கொண்டும் அம்மார்வுக்கு அவ்வருகே போக மாட்டாள்-
அவ்வகலம் எல்லாம் இனிமையாக இருக்கையாலே-அவ்வருகு போக வேண்டாவே– அகலம் மார்வு -விரிந்து இருத்தல் சிலேடை-

திருமாலே-இவள் -மார்பில் படும் பாட்டினை – இவளுடைய எல்லா உறுப்புகளிலும் பிச்சு ஏறி இருக்குமாயிற்று அவனும் –
அவனுடைய திருக் கண்கள் சிவந்தனவாய் அன்றோ இருப்பன
அவன் இவளை எப்போதும் பார்த்துக் கொண்டே இருப்பதனால் –- அவன் கண்களின் சிவப்பு இவள் மேல் ஊறி இவள் திருமேனி சிவந்து இருக்கும் –
இவள் அவனை எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருக்கையாலே- இவள் கண்களின் கருமை அவன் திருமேனியில் பரந்து-அவன் திருமேனி கருமையாய் இருக்கும் –

இவளுக்கு திருக் கண்கள் குளிர்ந்து இருக்கும் -கருமை -குளிர்ச்சி கிருபை-அவனுக்கு வாத்சல்யம் விஞ்சி இருக்கும்
அவனுடைய சேர்க்கையால் ஆயிற்று இவளுக்கு தண்ணளி விஞ்சி இருப்பது
இவளுடைய சேர்க்கையால் ஆயிற்று அவனுக்கு வாத்சல்யம் விஞ்சி இருப்பது-

காணக் கருதும் என் கண்ணே-அவனை ஆசைப் படுவார் ஆசைப் படுவது ஒரு கார்யம் கொள்ள அன்று-காண ஆயிற்று
திரு வேங்கடத்தானைக் காண அன்றோ —காரார் திரு மேனி காணும் அளவும் அன்றோ – சதா பஸ்யந்தி ஸூரைய-நித்ய ஸூரிகளும் இத்தனை -அன்றோ

என் கண்ணே–நமக்கு நேத்ர பூதரான இவரைக் காட்டிலும் இவர் திருக் கண்களுக்கு-முக்கியமானவர்களாய் இருக்கும் ஏற்றம் உண்டே அன்றோ அவர் நேத்ரத்துக்கு

——-

கண்ணே உன்னைக் காணக் கருதி என்நெஞ்சம்
எண்ணே நின்று இயம்பும் கொண்ட சிந்தையதாய்
விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்பு அரியாயை
நண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பேனே – -9-4-2-

ஆழ்வார் என்னைப் பார்க்கட்டும் என்று நீ தானே சங்கல்பம் கொள்ள வேண்டும் -கரணியும் நீயே -கரணங்களும் நீயே -உபாய மும் உபேயமும் நீயே -என்றபடி –

தமக்கும்-தம்முடைய மனதுக்கும் உண்டான-சாபல்யத்தை-காதல் பெருக்கை-அருளிச் செய்கிறார்-

கண்ணே உன்னைக் காணக் கருதி-அவனாலேயே அவனைப் பெறுமவர் அன்றோ இவர்-கண்ணே –எனக்கு கண் ஆனவனே–பிரபன்ன ஜன கூடஸ்தர் -நாலாயிர ஆழ்ந்த பொருள் இதுவே –
பேற்றிலே உள்ள நியதியைப் போன்றே -அதனைப் பெறுதற்கு உரிய-வழியிலும் இவருக்கு உள்ள நியதியும் –

கண்ணே -என்கையாலே – வழியும் அவனே -என்பதனைச் சொல்லிற்று-
உன்னைக் காண -என்கையாலே பேறும் அவனே -என்பதனைச் சொல்லிற்று-
எண்ணே கொண்ட -என்கையாலே -அந்த வழியைக் கொண்டு-இந்த பேற்றினைப் பெற வேண்டும் என்று- இருக்கும் அதிகாரியினுடைய வாழ்க்கை இருக்கிறபடி சொல்லிற்று –
ஆத்மா யோசித்து -மனஸ் சிந்தித்து -கையால் செய்வதை -மூன்றும் மனஸ் செய்யும் ஆழ்வாருக்கு –
உபாயமும் அவனே உபேயமும் அவனே –இத்தை உணர்ந்து – ப்ரீத்தி காரித கைங்கர்யம் அவன் கொடுக்க -விருப்பம் ஆசை ஒன்றே நமக்கு க்ருத்யம் -அதிகாரி ஸ்வரூபம் இதுவே –

எண்ணே நின்று இயம்பும் கொண்ட சிந்தையதாய்–பஹு சங்க்யாதம் -மநோ ரதம் -கொண்டு -ஐந்து வேலைக்கு காரர்கள் உண்டே
ஐந்து விருப்பங்களும் மனஸ் கொள்ளலாமே -காண்கையிலும் பிரதி பந்தம் போகையிலும் -அடிமை செய்வதிலும் -அபி நிவேசம்

நண்ணாது ஒழியேன் -என்பதற்கு-
1-அவனைக் கிட்டாத போது நான் தரியேன் -என்று பொருள் அருளிச் செய்வர் ஆய்த்தான் -பட்டரின் சிஷ்யர் –
அங்கன் அன்றிக்கே-
2-நண்ணாது ஒழியேன் -என்கிற இடம் மகா விசுவாசத்தை சொல்லுகிறது-
தேவர்கள் வேறுபட்ட சிறந்த தேசத்தில் இருக்கையாலே கிரமத்திலே எடுக்கலாம்-
அங்கன் அன்றிக்கே இவ் உலகத்தில் அகப்பட்டு நிற்கிற இவரை அன்றோ கடுக எடுக்க வேண்டுவது-
எடுக்க வேண்டும் நிலத்தில் இருந்தேன் –எடுக்க வேண்டும் என்று இருந்தேன்-
எடுப்பான் தானாய் இருந்தான்-எடுத்தால் பெறுவது தன்னையாய் இருந்தது–ஆன பின்பு-எனக்கு என்ன கண் அழிவு உண்டு –

—————-

அழைக்கின்ற அடி நாயேன் நாய் கூழை வாலால்
குழைக்கின்றது போல் என் உள்ளம் குழையும்
மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய்
பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே–9-4-3-

ஆர்த்தியே பற்றாசாக -ஆஸ்ரித ரக்ஷகனான உன்னுடைய -கிருபை பொழிவது பகவான் ஆனபடியால் -நிர்ஹேதுக -காரணம் –
ஆர்த்தி இருந்தால் தான் பொழிவார் -ஆர்த்திக்காக பொழிய வில்லை -ஆர்த்தி -அதிகாரி ஸ்வரூபம் -உன் குணத்துக்கு புறம்பு ஆனேனோ –என்கிறார்-

பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே – அருள் -பிழைக்கின்றது – என்று பேதுறுவனே –
வரையாதே காத்த மகா குணம் எனக்கு உதவாமையாலே அதனை இழக்கப் புகா நின்றாய் என்று- பேகணியா நின்றேன் -என்று ஆளவந்தார் அருளிச் செய்யும்படி –
அதனை எம்பெருமானார் கேட்டருளி
இது பொருள் அழகிது-ஆனால் இது இப்போது இவர்க்கு ஓடுகிற நிலைக்கு சேராது-
ஆனபின்பு-பசுக்களும் ஆயர்களும் மழையிலே நோவு படாதபடி மலையை எடுத்து மறித்த-இம் மகா குணத்துக்கு
நான் புறம்பு ஆகிறேனோ-என்று பேதுறா நின்றேன் -என்கிறார் என்று அருளிச் செய்தார்
அவ்வருள் அவனை தப்பி போகிறது -ஆளவந்தார் நிர்வாகம்-
அவ்வருள் இவரை தப்பிப் போகிறது -எம்பெருமானார் நிர்வாகம்-

————–

உறுவது இது என்று உனக்கு ஆட்பட்டு நின் கண்
பெறுவது எது கொல் என்று பேதையேன் நெஞ்சம்
மறுகல் செய்யும் வானவர் தானவர்க்கு என்றும்
அறிவது அரிய அரியாய அம்மானே–9-4-4-

உறுவது இது என்று உனக்கு ஆட்பட்டு நின் கண்-சேஷத்வமே ஏற்புடைத்து -பிரதி சம்பந்தி -உனக்கு தாஸ்ய அனுமதியைப் பண்ணி
இசைந்து –இசைவித்து உன் தாழ் இணைக்க கீழ் இருத்தும் அம்மானே

நின் கண் பெறுவது எது கொல் என்று –ஆத்மாவின் ஸ்வரூபத்தையும் உணர்ந்து –சீரியதும் கைங்கர்யமே என்றும் அறிந்து –
அநந்ய பிரயோஜனருக்கு சர்வேஸ்வரன் வேறு ஒன்றையும்-கொடுப்பான் ஒருவன் அல்லன் என்றும் அறிந்து இவர்
உன் பக்கல் பெறுவது எது கொல் -என்கைக்கு காரணம் என் என்னில்-
க்ரமத்தில் செய்கிறோம் என்று சொல்லிக் கொண்டே இருந்து-சம்சாரத்தில் இருக்கும் இருப்பையே கொடுத்து விடப் போகின்றாயோ-
அன்றி-என் விரைவு அறிந்து சடக்கு என முகம் காட்டுகிறோயோ –என்கைக்காக சொல்லுகிறார் என்பது –ஆர்த்த பிரபன்னர் அன்றோ ஆழ்வார் –
கஜேந்திரன் அநாதி காலம் இழந்து காணப் பெற்றான் -பரதன் கண்டு இழந்து 14 சம்வத்சரம் பொறுத்து பெறப் பெற்றான் -எனக்கு என்ன ஆகுமோ

மறுகல் செய்யும் வானவர் தானவர்க்கு என்றும்—அறிவது அரிய அரியாய அம்மானே-அசாதாரண சம்பந்தம் உண்டே -அனைவருக்கும்
சாமான்யம் அதி தைவதம் -யாராலும் அறிய முடியாத போது நின்ற பொன் அம் கழல்-ஆஸ்ரித சுலபன் சர்வேஸ்வரன் இரண்டு ஆகாரங்களை
எவராலும் அறிய முடியாமல் – -வாசாம் அகோசரம் –அரியாய அம்மானே —ஸ்வாமி -நரசிம்மம் –

பின்னை அவன் இதற்கு செய்த மாற்று என் என்னில் –தன் சௌலப்யத்தை காட்டுகை அன்றோ -என்றது-எளியோமாகையும் ஒரு கோடி உண்டாக நீர் சொன்னீர் ஆகில்-
நீர் தாம் அக் கோடியில் உள்ளார் ஒருவராய் இருந்தீர் ஆகில்-உமக்கு இனி-நாம் கைப் புகுந்தோம் என்று இருக்கை அமையாதோ -என்கிறான் -என்றபடி-
நரசிம்கனாய் வந்ததால் எளியவன் -பிரகலாதன் போலே எளியவனாய் இருக்க கை புகுந்தோம் என்று அன்றோ இருக்கக் கடவது –

——-

அரியாய அம்மானை அமரர் பிரானைப்
பெரியானைப் பிரமனை முன் படைத்தானை
வரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற
கரியான் கழல் காணக் கருதும் கருத்தே–9-4-5-

கழல் காணக் கருதும் கருத்தே-என் மனமானது காண வேண்டும் என்று விரையா நின்றது-கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள இரண்டு பாசுரங்கள்
படுக்கைக்கு பரபாகமான வடிவும்-அதற்கு பரபாகமான திருவடிகளும்-ஆகிய இவற்றை ஆயிற்று காண ஆசைப் படுகிறது

எளியோமான கோஷ்டி பேறு கை புகா நிற்க எதனால் பதற்றம் -என்ன-நெஞ்சு காண துடிக்கிறதே என்கிறார் இதில்

———

கருத்தே உன்னைக் காண கருதி என் நெஞ்சத்து
இருத்தாக இருத்தினேன் தேவர்கட்கு எல்லாம்
விருத்தா விளங்கும் சுடர் சோதி உயரத்து
ஒருத்தா உன்னை உள்ளும் என் உள்ளம் உகந்தே –9-4-6-

காண ஆசைப் பட்ட அளவிலே-அவன் தம்முடைய திரு உள்ளத்திலே புகுந்தருள தம்முடைய மனம் உகந்து-அனுபவிக்கிறபடியை-அருளிச் செய்கிறார் —

கருத்தே உன்னைக் காண கருதி-எனக்கு மிடுக்கான உன்னைக் காண ஆசைப் பட்ட அளவிலே-முகம் காட்டினாய் –
இவ் விறைவனை அடைவதற்கு ருசியே அமையும் -என்றபடி –
கண்ணே உன்னைக் காண கருதி -என்றார் மேல்-கருத்தே உன்னைக் காணக் கருதி -என்கிறார் இங்கே
இதனால் இவருக்கு கண்ணும் கருத்தும் அவனே -ஞானமும் சக்தியும் அவனே -ஆயினமையைத் தெரிவித்த படி

என் நெஞ்சத்து இருத்தாக இருத்தினேன் –மறுகல் செய்த நெஞ்சிலே -மறுகல் இல் ஈசனை
பரம பதத்தில் இருக்குமாறு போலே இருத்தினேன்-இவர் பக்கல் இசைவு பெற்றிலோம் என்று இருக்குமவன்
இத்தனை இசைவு பெற்றால்-பின்னை தள்ளிக் கதவு அடைத்தாலும் போகானே அன்றோ –

———-

உகந்தே யுன்னை உள்ளும் என்னுள்ளத்து அகம்பால்
அகந்தான் அமர்ந்தே யிடங்கொண்ட வமலா
மிகுந்தானவன் மார்வகலம் இரு கூறா
நகந்தாய் நரசிங்கமதாய வுருவே–9-4-7-

ஆர்த்தி சாந்தி அடைந்து அனுபவிக்கப் பெற்றதை இது முதல் நான்கு பாசுரங்களால் -அருளிச் செய்கிறார்

தூணிலே தோற்றி-பிரகலாதனுடைய துன்பத்தை தீர்த்தால் போன்று தம் துன்பத்தை தீர்த்த படியை நினைந்து-ஏத்துகிறார்

அடியார்கள் ஸூளுறவு செய்த காலத்தில் வந்து-தோற்றுமவன் ஆகையால்-
தூணிலே தோற்றினால் போலே வந்து தோற்றி-மனத்தின் இடம் எல்லாம் புகுந்து-
கமர் பிளந்த இடம் எங்கும் நீர் பாய்ச்சுமாறு போலே-நிரம்ப என்னை அனுபவிப்பித்தான் –என்கிறார் என்பது –

நரசிம்ம ராகவா யாதவ ரெங்கேந்திர ஸிம்ஹம் உபாஸ்ம ஹே -ஆத்மா தானே பக்தர்கள் -பிரகலாதன் -விபீஷணன் -அர்ஜுனன்
திருப் பாண் ஆழ்வார் -நலிவுப்பட கிளர்ந்த சிங்கங்கள்

———-

உருவாகிய ஆறு சமயங்கட்கு எல்லாம்
பொருவாகி நின்றான் அவன் எல்லாப் பொருட்கும்
அருவாகிய வாதியைத் தேவர்கட்கு எல்லாம்
கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே–9-4-8-

சர்வ அந்தராத்மா -சர்வ காரணன் -சர்வ சுலபனான -உன்னைக் காணப் பெற்றேன் -கண்டு கொண்டேனே –
அவதாரத்துக்கு பிற்பாடராய் இருக்க-கண்டு கொண்டேன் -என்கிறார் -இதற்கு கருத்து என் -என்னில் –
அன்பினால் நனைந்த மனத்தினர்க்கு என்றும் காணலாம்
அவதார சம காலத்திலும் காண ஒண்ணாது சிசுபாலன் முதலாயினர்க்கு-
புறச் சமயங்களால் அசைக்க முடியாதவனாய்-எல்லாப் பொருள்கட்கும் அந்தர்யாமியாய்க் கொண்டு-எல்லாரையும் நியமிக்கின்றவனாய்
பிரமன் முதலாயினார்க்கும் காரணனாய் இருந்து வைத்து-அடைந்தார்க்கு சுலபன் ஆனவனைக்-காணப் பெற்றேன் -என்கிறார்

———–

கண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து
பண்டை வினை ஆயின பற்றோடு அறுத்துத்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே –9-4-9-

நிதான பாசுரம் -பக்தாம்ருதம் -ஒரே பாசுரத்தில் திருமந்த்ரரார்த்தம் அனைத்தும் அருளிச் செய்து-வாயால் கைங்கர்யம் -வாசிக கிஞ்சித் காரம்

பிரதம பதம் -அநந்யார்ஹ சேஷ பூதன் -நம-விரோதி போக்கி -பிரதி சம்பந்தித்தவம் -நாராயணா-அடியேன்-மந்த்ர தாத்பர்யம் ததீய சேஷத்வம் சொல்லிற்று ஆயிற்று

என் கண்ணினை–பக்தி ரூபாபன்ன ஞானம் -இரண்டு கண்கள்

சொல் மாலைகள் சொல்லப் பெற்றேன்–அடியார்கட்கு அடிமை யாதலை-எல்லையாக உடைய பேற்றினைப் பெற்றேன் –
பெற்ற பேற்றின் கனம் இருந்த படியாலே-இது தான் தோன்றியான கைப்பற்று (ஸ்வ யத்னம் )அடியாக வந்தது ஓன்று அன்று –

————

அடியான் இவன் என்று எனக்கு ஆர் அருள் செய்யும்
நெடியானை நிறை புகழ் அம் சிறைப் புள்ளின்
கொடியானைக் குன்றாமல் உலகம் அளந்த
அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே–9-4-10-

நிருபாதிக சம்பந்தம் உடையவனைக் கிட்டி -சேஷத்வத்துக்கு குடல் துவக்கே உபாதி-கிருதார்த்தன் ஆனேன்-என்கிறார் –

எனக்கு ஆர் அருள் செய்யும் நெடியானை-கொள்ளுகிற என் அளவு அன்றிக்கே-தன் அளவிலே அருள் செய்த சர்வேஸ்வரனை –

குன்றாமல் உலகம் அளந்த அடியானை –குணத்தையும் குணம் இல்லாமையையும்-நிரூபணம் செய்யாதே -உலகம் அளந்த பொன்னடி –திரு உலகு அளந்து அருளினாப் போலே
ஒரு காரணமும் இல்லாமல் நிர்ஹேதுகமாக —அம் சிறைப் புள்ளின் கொடியானை-பெரிய திருவடியை அங்கீ கரித்தால் போலே என்னை அங்கீ கரித்தான்

———-

ஆறா மதயானை அடர்த்தவன் தன்னைச்
சேறு ஆர் வயல் தென் குருகூர் சடகோபன்
நூறே சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
ஏறே தரும் வானவர் தம் இன்னுயிர்க்கே–9-4-11-

ஏறே தரும்-ஏற்றினைத் தரும்–இத் திருவாய்மொழி-தன் இனிமையினால்-நித்ய ஸூரிகள் மனத்தினைப் புண்படுத்தும் -ஏறான சர்வேஸ்வரனைத் தரும் -என்னுதல்-என்கிறார்

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -83-விளரிக் குரல் அன்றில் மென் பெடை-உண்ணிலாய ஐவரால் -7–1-

March 21, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

விளரி -உச்ச ஸ்வர கண்ட த்வநி-ஸப்த ஸ்வரங்களில் ஓன்று -தைவதம் -ஒலி -உச்ச ஸ்தாயீ
குரல்-துத்தம் கைக்கிளை உழை-இனி விளரி தாரம் -என்று ஷட்ஜ ருஷப காந்தார மத்யம பஞ்சம
தைவத நிஷாதங்கள் ஆகிற ஸப்த ஸ்வரத்துக்கும் பேராகையாலே ஆறாம் ஸ்வரமான தைவதத்தை விளரி என்கிறது-அன்றில் -கிரௌஞ்ச மிதுனம் -வாய் அலகு விட்டால் ஒலிக்கும்-சிந்தனை- பசலை-மெலிவு -அழுந்தல் -மொழி பிதற்றல் -மரணம் -காமம் -ஷட்பாவம் -இருந்து பிழைக்க முடியாத தசை -இறந்தே –முடிந்ததே பிழைக்கும் மரண தசையை நெருங்கி உள்ளவள் -வீட்டில் உள்ள பனை மரம் -இல் பொருள் உவமை அதில் தாமரை இதழ்கள் வைத்துக் கட்டிய கூடு அதுக்கு உள்ள அன்பு இவருக்கு இல்லையே

உரு வெளிப்பாட்டாவே நோவு படா நிற்கச் செய்தே –அதுக்கு மேலே –முற்றத்திலே ஒரு பனையாய் –
அப் பனையில் தொங்கிற்று ஒரு அன்றில் –தான் வாய் அலகை பேடையோடு கோத்து கொண்டு இருக்கிற இத்தை நெகிழ்ந்தவாறே  கூப்பிட கடவதாய் – அதனுடைய ஆர்த்த த்வனியில் இவள் மோஹித்து கிடக்க –இத்தைக் கண்டு –இதன் த்வனி இருக்கிற படி இது –இவளுடைய ஆற்றாமை இருந்தபடி இது –இவளுடைய மார்த்வம் இருக்கிறபடி இது –இவை எல்லாம் இருந்தபடியாலே இவள் உளளாக அபிமதம் கை புகுந்து –இவள் ப்ரீதையாய் இருக்கக் காண மாட்டோம் ஆகாதே -என்று
இங்கனே தாயார் உடைய வார்த்தையாய் இருக்கிறது -பட்டர் –இவ்விடத்தை அருளிச் செய்யா நிற்க -நஞ்சீயர் – ஸ்ரீ ராமாயணத்தில் இவ்விடத்துக்கு  போலியாக சொல்லலாம் இடம் உண்டோ -என்று கேட்க –இளைய பெருமாள் காட்டிலே கொண்டு போய் பிராட்டியை விட்டுப் போந்த அநந்தரம்- அவளுடைய ஆர்த்த த்வனி கேட்ட ஸ்ரீ வால்மீகி பகவானுக்கு திருத் தாயார் படி உண்டாக சொல்லலாம் -என்று அருளிச் செய்தார் –

இப்படி இவருடைய சைத்திலயத்தைக் கண்ட பரிவர் ஆஸந்நமான பாதக சந்நிதி இருந்தபடியால் இவர் தரித்து இருக்க அரிதாய் இருந்தது என்று வெறுத்து உரைத்த பாசுரத்தை நாயகன் பிரிவாற்றாத் தலைவி தளர்த்தியைக் கண்டு-இனி இவளுக்கு இருக்கை அரிது என்று இரங்கி உரைத்த தாய் வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

விளரிக் குரலன்றில் மென்பெடைமேகின்ற முன்றிற் பெண்ணை
முளரிக் குரம்பையிதுயிதுவாக முகில் வண்ணன் பேர்
கிளறிக் கிளறிப் பிதற்றும் மெல்லாவியும் நைவும் எல்லாம்
தளரிற் கொலோ அறியேன் உய்யலாவது  இத் தையலுக்கே – –
-83 –அன்றிலின் குரலுக்கு தலைவி தளர்வதைக் கண்டு தோழி இரங்குதல் –

விளரி–விளரியென்னும் இசையை யுடைய-உச்ச ஸ்வர கண்ட த்வநி
குரல்–குரலையுடைய
அன்றில்–அன்றிற்பறவை
மெல் பெடை–மெல்லிய (தனது) பேடையை விரும்பித் தழுவுதற் கிடமான
மூன்றில் பெண்ணை முளரி குரம்பை–முன் வாசலிலுள்ள பனை மரத்திலுள்ளதும் முட்களை யரிந்து செய்யப்பட்டதுமான கூடு-முன்றில்  பெண்ணை -முற்றத்தில் உண்டான பனை மரம்-முளரி குரும்பை -தாமரை பூவினால் செய்யப்பட கூடு
மெல் ஆவியும்–(இவளது) மெலிவடைந்த உயிரும்
நையும்–(உடம்பின் ) இளைப்பும்
எல்லாம்–என்னும் இவையாவும்
இது இது ஆக–இப்படி எங்கும் எதிரில் அருகில் இருக்க,
(இவ் வன்றிலைக் காணுதலாலும் இதன் குரலைக் கேட்டலாலும் ஆற்றாமைத் துயரம் மிக்கு)
முகில்வண்ணன் பேர் கிளரி கிளரி பிதற்றும்–காள மேக நிறத்தனான தம் தலைவனது திருநாமங்களை
(வலியின்மையால் வருந்தியெடுத்தெடுத்துக் கூறி வாய்பிதற்றும் படியான
தளரின் கொலோ–முழுவதும் தளர்ந்தொழிந்தாலோ
இ தையலுக்கு–இம்மகளுக்கு
உய்யல் ஆவது–(அவன் வந்து சேர) உஜ்ஜீவந முண்டாவது?
அறியேன்–அறிகிறேனில்லை.

உண்ணிலா வைவருடன் யிருத்தி யிவ்வுலகில்
எண்ணிலா மாயன் எனை நலிய -எண்ணுகின்றான்
என்று நினைந்து ஓலமிட்ட இன் புகழ் சேர் மாறன் என
குன்றி விடுமே பவக் கங்குல்
—61-உலகமுண்ட பெரு வாயனிலே ஸ்ரீ திரு வேங்கடமுடையான் திருவடிகளிலே ஆர்த்தி பரவசராய்- பூர்ண பிரபத்தி பண்ணினவர்-தொடங்கின கார்யம் தலைக் கட்டினால் அல்லது கார்யம் செய்யோம் -என்று இருக்கும் நிரந்குச ஸ்வதந்த்ரனான ஈஸ்வரன்
பழையபடியே தம்மை சம்சாரத்திலே வைக்கக் கண்டு சம்சாரம் ஆகிற சிறைக் கூடத்திலே புண்ய பாபங்கள் ஆகிற இரு விலங்கை இட்டு இந்த்ரியங்கள் ஆகிற படர் கையிலே கண் பாராமல் நலியுங்கோள் என்று காட்டிக் கொடுத்து நம் எளிவு கண்டு சிரித்துக் கொண்டு ஸ்ரீ திரு நாட்டிலே தானும் நித்ய ஸூரிகளுமாக இருக்கிறான் என்று அனுசந்தித்து தம்முடைய ஆர்த்தி அதிசயத்தையும்-
ரஷகத்வ உபாய யோகியானவன் குணங்களையும் அவன் திரு முகத்தைப் பார்த்து சொல்லா நின்று கொண்டு கேட்டார்க்கு தரிப்பு அரிதாம் படி கூப்பிடுகிற உண்ணிலாவிய -யின் அர்த்தத்தை உண்ணிலா ஐவர் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –பாதம் அகலகில்லாத் தம்மை அகற்றுவற்றின் நடுவே இருத்தக் கண்டு -நலிவான் – சுமடு தந்தாய் -ஒ -என்று சாதன பலமான ஆக்ரோசத்தோடே-பழி இட்டு – என்று இறே ஸ்ரீ அழகிய பெருமாள் நாயனார் அருளிச் செய்தது–கேட்க்கைக்கு இனியதாய் ஸ்லாக்கியமான யஸஸ்ஸை யுடைய ஸ்ரீ ஆழ்வார் -என்று அனுசந்திக்க –இவ் உக்தி மாத்ரத்தாலே-சம்சாரம் ஆகிற காளராத்ரி நசித்து விடும்-இது நிச்சயம் –குன்றுதல் -குறைதல்-ஸ்ரீ ஆழ்வாரைப் போலே-அமுதம் கொண்ட மூர்த்தியோ -என்று கூப்பிடுகை அன்றிக்கே அவர் திரு நாமத்தைச் சொல்லவே-விடியா வென்னரகான சம்சாரத்துக்கு விடிவு பிறக்கும் —

விளரிக் குரல் அன்றில்–விளரி என்று உச்சமான த்வனிக்கு பெயர் – -உயர்ந்த த்வனியை  உடைத்தாம் படி கார்யப்பாட்டால் கூப்பிடுகிற அன்றிலினுடைய-மென்பெடை-கலக்கும் போதும் பூ தொடுமா போலே தீண்டும்படி யாயிற்று மார்த்வம் –இம் மார்த்வத்திலே விரஹமுமானால் பாடாற்றப் போகாது இறே-மேகின்ற –மேவா நிற்கிற –நித்ய சம்ஸ்லேஷமாய் செல்லா நிற்கும் இறே – அநபாயினிக்கு ஸ்மாரகமாய் இருக்கிறபடி –முன்றில் பெண்ணை –முன்றில் என்று முற்றத்துக்கும் வாசலுக்கும் பெயர்-முற்றத்துப் பனை நடலாமோ என்று இவ் விடத்துக்கு நிர்வஹியா நிற்கச் செய்தேவங்கி புரத்து நம்பியை சிலர் கேட்க –   அதுவோ இவள் கார்யம்  தளிரும் முறியுமாய் செல்லுகிறது-என்று பணித்தாராம் –(அநர்த்தப்பட்டுப் போனதுக்கு இதுவே ஹேது என்றவாறு ) முன்றில் தனி நின்ற பெண்ணை மேல் கிடந் தீர்கின்ற வன்றிலின் கூட்டை- பிரிக்க கிற்பவர் யார் கொலோ -பெரிய திரு மொழி – 11- 2- 1- –அவனை கொடு வருவர் யாரோ -என்கிறபடி இறே –(நம்மாழ்வார் அங்கி பாசுரம் போல் அங்க பேசுறதுக்கு இதுவும் )அல்லது பிரிப்பன பிரித்து கூட்டுவன கூடித் திரிகிறாள் அன்றே இவள்-முளரிக் குரம்பை –-இதனுடைய சௌகுமார்யத்துக்கு ஈடாக – தாமரை இலைகளையும் பூக்களையும்-கொடு வந்து – கூடாக பண்ணிவிக்கும் இறே –அன்றிக்கே –முளரி -என்று முள்ளாய் –முள்ளாலே செய்த-கூடு என்னவுமாம் –இது இதுவாக –இக் கூடு கூடாக –இது இப்படி குடில் கட்டி கொண்டு போந்து – பாதகமாய் அற்ற பின்பு-மென் பெடையோடே மேவா நின்றுள்ள விளரி குரல் அன்றிலினுடைய முன்றில் பெண்ணை–முளரிக் குரம்பை இது இதுவாக –முகில் வண்ணன் பேர் கிளறிக் கிளறிப் பிதற்றும் –
முகில் வண்ணன் திரு நாமத்தை கிளர்ந்து கிளர்ந்து-ஜல்ப்பிக்கிற ஜல்பமும்-மெல்லாவியும் – சிறுது போதும் இஜ் ஜல்பத்துடன் தான் செல்லுகிறதோ என்று இருக்க – அதுவும் இல்லாதபடி-ஹிருதயத்தில் உண்டான தளர்த்தியும் –நைவும் –அதுக்கு மேலே–இவளுடைய சைதில்யமும்-எல்லாம் – இவை எல்லாம் மிகுந்தபடியால் –தளர்வு இத்யாதி-இத் தையலுக்கு  உய்யலாவது –இப் பெண் பிள்ளைக்கு ஜீவிக்கலாவது -தளரிற் கொலோ –இஜ் ஜல்பம் இன்றிக்கே ஒழியும்படி வரும் தளர்த்தி யாவது -முடிகை இறே –முடியிலாகாதே -இவளுக்கு   பிழைக்கல்  ஆவது -அறிகிறிலேன்-

அன்றில் -கிரௌஞ்சம் -காம உத்தீபகமாய் -விரக வேதனையை வளர்ச்சி செய்யுமே-காவார் மடல் பெண்ணை அன்றில் அரி குரலும் -என்றும் –பெண்ணை மேல் பின்னும் அவ்வன்றில் பெடை வாய்ச் சிறு குரல் –என்றும் திருமங்கை ஆழ்வார் –சமஸ்க்ருதம் -சப்த ஸ்வரங்கள் -ஷட்ஜம் -ரிஷபம் -காந்தாரம் -மத்தியமம் -பஞ்சமம் -தைவதம் -நிஷாதம் -போலெ-தமிழில் குரல் -துத்தம் -கைக்கிழை-உழை-இளி-விளரி -தாரம் -என்னும் ஏழு இசை-விளரி -தைவதம் -என்பர் -கிரௌஞ்சம் -க்வணதி -மத்யமம் -என்பதால் -விளரி -மத்யமம் ஸ்வரம் என்றும் சொல்வர்-விளரி என்னும் ஒரு பண்ணும் உண்டு-மென் பெடை-பிரிவு பொறாத ஸுகுமார்யத்தை யுடைய பெடை –முளரிக் குரம்பை-முட்களை அரிந்து செய்யப்பட கூடு -தாமரை இலை பூக்களையும் கொண்டு வந்து செய்த கூடு என்றுமாம்
இது இது -கட்புலனாகும் பலவற்றை சொன்னபடி –-விளரிக் குரலன்றில் மென்பெடை மேகின்ற முன்றிற் பெண்ணை-முளரிக் குரம்பை யிதுயிதுவாக-என்றதை பின் பற்றியே திரு மங்கை ஆழ்வாரும் –முன்றில் பெண்ணை மேல் முளரிக் கூட்டகத்து அன்றிலின் குரல் அடரும் என்னையே -பெரிய திரு மொழி -11-1-6–ஆவியின் நைவும் –பாகவதர்கள் எம்பெருமான் திரு நாமங்களை சொல்லி புலம்ப ஆழ்வார் நெஞ்சம் தளர்ந்து நைந்த தன்மையைக் கண்டு – இவருக்கு தேஹ விநியோகம் ஆன பின்போ எம்பெருமான் வந்து இவரைச் சேர்த்துக் கொள்வது -என்று வெறுத்து கூறுகிறார்கள் –பிரிவாற்றாத தலைவியின் தளர்ச்சி கண்டு தோழி இரங்கிக் கூறம் பாசுரம் இது. காம விரஹத்தாலுண்டாகும் வேதனைகளுள் சிந்தனை பசலை மேனி மெலிவு அழுங்கல் மொழி பல பிதற்றல் முதலிய பலவும் இவளுக்கு நிகழ்ந்தாய் விட்டன;-இது வரையிலும் இவளுடைய தலைவன் இவளை வந்துகூடி உய்யச் செய்யக் காண்கின்றிலேன்;-இனி மரணமொன்றே நிகழாது நிற்பது; அதுவும் நிகழ்ந்த பின்பு தான் இவளை வந்து கூடி உய்யச் செய்வதாகவிருக்கிறானோ? என்று தோழி இரங்குகின்றாள்.-இதனால்,இனி இவளுக்கு ஜீவித்திருத்தல் அரிதாம் என்றவாறு.–வடநூலார் க்ரௌஞ்ச மென்று கூறுவதே அன்றிற்பறவையாகாது; இது எப்பொழுதும் ஆணும் பெண்ணும் கூடியே நிற்கும்;
கணநேரம் ஒன்றை ஒன்று விட்டுப் பிர்ந்தாலும் அத்துயரத்தைப் பொறாமல் ஒன்றையொன்று இரண்டு மூன்றுதரம் கத்திவிட்டு அதன் பின்பும் தன் துணையைக் கூடா விட்டால் உடனே இறந்து படும். (பகல் முழுவதும் புணர்ந்திருந்து இரவிற் பிரிந்து வருந்துவதாகிய சக்கரவாகப் பறவையும் அன்றிலெனப்படுவது உண்டு.) அன்றிலும் அதன் குரலும் காமாத் தீபகமாய்ப் பிரிந்தார்க்கு
விரஹ வேதனையை வளரச் செய்யுமென்க. இப் பறவையைப் பனைமரத்தில் வாழ்வதாகவே பலரும் பலவிடத்துங் கூறுவர்;-“காவார்மடற் பெண்ணையன்றி லரிகுரலும்” “பெண்ணைமேற் பின்னுமவ்வன்றிற் பெடை வாய்ச் சிறுகுரல்” என்பன திருமங்கையாழ்வார் பாசுரஙகள்.-ஸம்ஸ்க்ருதத்தில், ஷட்ஜம் ரிஷபம் காந்தாரம் மத்தியமம் பஞ்சமம் தைவதம் நிஷாதம் என்னும் ஸப்த ஸ்வரங்கள்-தமிழில் முறையே குரல் துத்தம் கைக்கிளை உழை இளி யிளரிதாரம் என்னும் ஏழிசை யெனப்படுதலால் விளரி யென்றது.-தைவத மென்னும் ஸ்வரமென்னலாம்; அன்றி, வடமொழி நிகண்டில் “க்ரௌஞ்ச: க்வணதி மத்யமம்” என்றதால் அன்றில் மத்யம்மென்னும் ஸ்வரத்தை யொலிக்கிறதென்று தெரிதலால் விளரி யென்பதற்கு மத்யம ஸ்வரமென்று பொருள் கொள்ளுதலும் ஒன்று. விளரியென ஓர் பண்ணுமுண்டு.மென்பெடை = பிரிவுபொறாத ஸௌகுமார்யத்தையுடைய பேடை. ‘முளிரிக்குரம்பை’ என்பதற்கு- தாமரையிலைகளையும் பூக்களையும் கொண்டு வந்து செய்த கூடு என்று உரைப்பாருமுளர். ‘இது வலிது- நட்புலனாகும் பலவற்றைச் சுடடியது.
* மாறன் பணித்த தமிழ் மறைக்கு ஆறங்கங்கூற அவதரித்த வீறுடைய திருமங்கையாழ்வார், இங்கு,
“அன்றில் மென்பெடைமேகின்ற முன்றில் பெண்ணை முளரிக் குரம்பையிது” என்றதையடியொற்றி (பெரியதிருமொழி 11-1-6) “முள்நிற் பெண்ணைமேல் முளிரிக் கூட்டகத்து அன்றிலின் குரல் அடருமென்னையே” என அருளிச் செய்திருத்தல் காண்க.
மேகின்ற- மேவுகின்ற. குரம்பை- குடம்பை. மூன்றில்- இல்முன் என்பது முன்பின்னாகமாறித் தொக்க மரூஉமுடிபு;-தொல்காப்பியம் எழுத்ததிகாரம் புள்ளிமயங்கியலில் (60)“முன்னென்கிளவி முள்ளர்த்தோன்றும், இல்லென்கிளறி மிசை றகர மொற்றல், கொல்லின் மருங்கின் மரீஇய மரபே” என்றது காண்க:-இதனை இலக்கணப் போலியில் அடக்குவர் இக்காலத்தார். தையல்- அழகு; அதனையுடையவளுக்கு ஆகுபெயர்.-‘பிதற்றும்’ என்பதற்கு முதனிலைத் தொழிற்பெயராக, பிதற்றுதலும், என்றுரைக்கவுமாம்.-‘ஆவியும் நையும்,’ ‘ஆவியின் நையும்’ என்பட பாட பேதங்கள்.இப்பாட்டுக்கு உள்ளுறை பொருளாவது- பாகவதநுபவம் பெறாமையால் ஆழ்வார் தளர்தலைக்கண்ட அன்பர்-‘பாதகமான லௌதிக பதார்த்தங்கள் அருகிலிருத்தலால் இவர் ஆறியிருப்பது அரிதாயிந்தது’ என்று கூறுதலாம்.-இவர் தம் இருக்கிற விடத்திலே அருகிலுள்ளார் சிலர் எம்பெருமானைச் சேர்ந்து அநுபவிக்கப் பெறுதலைக்கண்டு தமக்கு
அத்தன்மை கிடைத்திடாமையாலே ஆற்றாமைமிக்கு எம்பெருமான் திருநாமங்களை வாய்மாறாமல் எடுத்துக்கூறி புலம்பி, நெஞ்சந்தளர்ந்து நைகிற தன்மையைக் கண்டு ‘இங்ஙனம் மெலிகிற இவர்க்கு தேஹவியோகம் ஆனபின்போ எம்பெருமான் வந்து இவரைச் சேர்த்துக் கொள்வது!’ என்ற வெறுக்கக் கூறினரென்க

ஆறாம் ஸ்வரமான தைவதத்தை விளரி என்கிறதுவிளரி என்று-ஒரு பண் என்றும் சொல்வர்-மென் பெடை மேகின்ற-புணர்ச்சியிலே துவண்டு மெல்லிதான பேடையோடே மேவிப் போருகிற-முன்றிற் பெண்ணை-முற்றத்திலே பனையிலே-முளரிக் குரம்பை யிதுயிதுவாக-முள்ளை அரிந்து செய்யப்பட்ட இந்தக் கூடு இவ் வன்றிலுக்கு இருப்பிடமாக–முளரிக் குரம்பை என்று -தாமரையாலே செய்த கூடு என்னிலுமாம்-முகில் வண்ணன் பேர் கிளறிக் கிளறிப் பிதற்றும்-இதினுடைய ஆர்த்தி ஸ்வரத்தாலே ஸ்மரித்து ஸ்யாமளமாய் ஸ்ரம ஹரமாய் இருக்கிற காள மேகம் போலே இருக்கிற வர்ணத்தை யுடைய
ஸர்வேஸ்வரனுடைய ஒவ்தார்ய ஸூசகமான திரு நாமங்களை பல ஹானியாலே வருந்தி எடுத்து எடுத்து அக்ரமாகச் சொல்லும்படியான-மெல்லாவியும்-மெலிந்து சென்று அற்ற பிராணனும்-நைவும்
அதுக்கு அடியான சரீர ஸைதில்யமும்-எல்லாம் தளரிற் கொலோ-ஓன்று ஒழியாமல் முடிந்தாலோ–அறியேன் உய்யலாவது இத் தையலுக்கே-இந்தப் பெண் பிள்ளைக்கு உஜ்ஜீவிக்கலாவது அறிகிறிலேன்–அறிகிறிலேன் -என்கையாலே-முடியவுமாம் -அவனைப் பெற்று ஆஸ்வஸிக்கவுமாம் என்று கருத்து–இத்தால் தாம் இருக்கிற தேசத்திலே ஆசன்னமாக போக ப்ரஸக்தரானாரைக் கண்டு
தம்முடைய போக அலாபத்தாலே அது ஸ்மாரகமாக ஆர்த்தி விஞ்சி பிரலாபிக்கிற பிரகாரத்தைக் கண்டவர்கள் இவருக்கு போக சித்தி இல்லாத அளவிலே இவர் முடிந்து பிழைக்கும் அத்தனையோ
என்று வெறுத்து உரைத்தார் ஆயிற்று –

முளரிக் குரம்பை என்று யிதுயிதுவாக முகில் வண்ணன் பேர் கிளறிக் கிளறிப் பிதற்றும் மெல்லாவியும் நைவும் எல்லாம் தளரிற் கொலோ அறியேன் உய்யலாவது இத் தையலுக்கே

ஸ்வா பதேசம் –இத்தால் ஆழ்வார் படியை கண்டவர்களுக்கு யாதநா சரீரம் போலே   க்லேசமே யாகாதே இவர்க்கு உள்ளது –இச் சரீரத்தோடு பகவல் லாபம் உண்டாய் இவர் தரித்து இருக்க காண மாட்டோம் ஆகாதே- இஸ் சரீர விஸ்லேஷத்துக்கு பின்பு ஆகாதே இவர்க்கு ஆஸ்வாசம் உள்ளது -என்று தோற்ற-இருக்கிறபடியைச் சொல்கிறது –விளரிக் குரல் –இது வேதார்த்த அர்த்தம் என்பதால் ஸ்ரீ இராமாயண போலி கேட்டாராம் ஜீயர் –-தூ நிலா முற்றத்தில் ஒரு பனை இருக்க பிரசக்தி உண்டோ -என்பதற்கு ஐதிகம் –தளிரும் முறிவும் –நாயகன் அடிக்கடி வருகையும் முற்றத்தில் படுக்கையும் நிலவுமாய் போகம் நடக்கிறதோ- இரவும் பகலும் பாதகமாய் செல்ல -அனைவரும் கிலேசித்து இருக்க —
பனையை வெட்டி முற்றத்தை-அழகாய் பேணுவாரும் உண்டோ-

தாத்பர்யம்–கீழே உரு வெளிப்பாட்டுக்கு தளர்ந்ததுக்கு மேல் அன்றிலும் உச்ச ஸ்வர ஒலியால் கூப்பிட
மோஹித்த திருத்தாயார் பாசுரம்–முற்றத்தில் பனை மரத்தில் நன்றாக கூடு கட்டி நித்ய சம்ஸ்லேஷம் நடவா நிற்க பிரிய நேரிடுமோ என்று அதி சங்கை பண்ணி கூப்பிட்டது போல் இவளும் நாயகன் உடன் கூடி இருக்கவே விஸ்லேஷத்தில் அதி சங்கை பண்ணி உன்னை விட்டு ஒரு ஷணமும் இருக்க வல்லேன் என்று அவன் சொன்னவற்றை நினைத்து முகில் வண்ணன் வாசகமான திரு நாமங்களை மீண்டும் மீண்டும் அக்ரமமாக பிதற்றி அனுசந்திக்க – இவளது நெஞ்சும் தளர்ந்து உடலும் மெலிய
மறு சரீரம் எடுத்து ஸூகப்படுமது ஒழிய இந்த சரீரத்துடன் அனுபவிக்க மாட்டாள் போல் உள்ளதே என்கிறாள் திருத்தாயார்

அரும் பதம்-இது -உச்ச ஸ்தாயீ-பேர் பிதற்றுவது -வேதாந்தம் அர்த்தம் இப்படி சொல்லலாமோ என்னில்
பிராட்டி இரண்டாம் பிரிவில் ஸ்ரீ வால்மீகி பகவான் ப்ரீய பரராய் உதவினது போல் என்று பட்டர் ஜீயருக்குக் காட்டி அருளினார்-இனி அவதார சமாப்தி அநந்தரம் தான் சீதா பிராட்டி கூடினாள் அன்றோ
அதே போல் இவளும் இவ்விடம்புடன் கூட மாட்டாள் என்று அத்தைக் காட்டி அருளிய படி –

7-1-உண்ணி லாவிய ஐவராற் குமை தீற்றி-ப்ரவேஸம்

ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் அர்த்த பஞ்சக பரமாக அருளிச் செய்வார் முன்பே பார்த்தோம்

பரமாத்மா ஸ்வரூபம் முதல் இரண்டும் –
சேதன ஸ்வரூபம் ஸ்வ அடுத்த இரண்டிலும்
உபாயம் ஸ்வரூபம் அடுத்த இரண்டிலும் –
அநிஷ்ட ஹானி விரோதி ஸ்வரூபம் 7/8 பதிகம்
இந்திரியங்கள் படுத்தும் பாடு இதில் அருளுகிறார் –
மேல் 9/10 பதிகம் இஷ்ட பிராப்தி –

சர்வ சக்தித்வம் அருளிச் செய்கிறார் ஏழாம் பத்தில்

முதற்பத்தால், பகவத் கைங்கரியம் புருஷார்த்தம் என்று அறுதியிட்டார்;
இரண்டாம் பத்தால். அந்தக் கைங்கரியத்தில் களையறுத்தார்;
மூன்றாம் பத்தால், களையறுக்கப்பட்ட அந்தக் கைங்கரியமானது பாகவத சேஷத்துவ பரியந்தமான பகவத்கைங்கரியம் என்றார்;
நான்காம் பத்தால், இப்படிப்பட்ட கைங்கரியத்திற்கு விரோதிகள் ஜஸ்வரிய கைவல்யங்கள் என்றார்;
ஐந்தாம் பத்தால், அந்த விரோதிகளைப் போக்குவானும் அவனே என்றார்;
ஆறாம் பத்தால், விரோதிகளை அழிக்கும் இயல்பினனான சர்வேஸ்வரன் திருவடிகளிலே சரணம் புக்கார்;

இப்படிப் பெரிய பிராட்டியார் முன்னிலையாகச் சரணம் புக்க விடத்திலும்,
தக்தப் பட நியாயம் போலே சம்சாரம் தொடருகிறபடியைக் கண்டு நோவுபடுகிறார் இந்த ஏழாம் பத்தால்.

தக்தபடம் – எரிந்து போன வஸ்திரம். ‘மடிப் புடைவை வெந்தால் உண்டையும் பாவும் ஒத்துக் கிடக்கும்:
காற்று அடித்தவாறே பறந்துபோம்’என்பது, ஸ்ரீ வசனபூஷணம்,2-ஆம் பிரகரணம், சூ. 191.

‘அமர்ந்து புகுந்தேன்’ என்று தம்மால் ஆன அளவும் புகுர நின்றார்.
பின்பு அவனைப் புகுர நிற்கக் கண்டிலர்.
‘இனிக் கைவிடப் பார்த்தான் ஆகாதே’ என்று விழுந்து கிடந்து கூப்பிடுகிறார்.
விளம்பத்திற்குக் காரணம் இல்லாத சாதனத்தைப் பற்றி நின்றவன்,
அது பலத்தைக் கொடுக்குந்தனையும் கிடந்து கூப்பிடுவானத்தனை அன்றோ?

இவர்தாம் மேலே செய்ததாயிற்றது, திருவேங்கடமுடையான் திருவடிகளிலே
பெரிய பிராட்டியார் முன்னிலையாகத் தம்முடைய
ஆகிஞ்சந்யத்தை விண்ணப்பஞ்செய்து கொண்டு சரணம் புக்காராயன்றோ இருக்கிறது?
அது, ‘மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே.’-என்பது, ஸ்ரீ கீதை, 7 : 14.
‘என்னையே எவர்கள் சரணம் அடைகிறார்களோ, அவர்கள் இந்த மாயையினைத்தாண்டுகிறார்கள்,’ என்கிறபடியே,
கடுகப் பலித்துக் கொடு நிற்கக் கண்டிலர்.
இனி, ‘நம்மைக் கைவிடப் பார்த்தான் ஆகாதே’ என்று இன்னாதாகிறார்.

பக்தி-அங்க பிரபத்தி -கீதையில் -பக்தி ஆரம்ப விரோதிகளை போக்க –
பிரபத்தி -ஸ்வ தந்த்ர பிரபத்தி -ஆர்த்தன் திருப்தன் இரண்டு வகை –
ஸர்வ பாபேப்யோ மோக் ஷயிஷ்யாமி –பாப சப்தம் கீதைப்படி –வேற ரகஸ்ய த்ரயப்படி வேறே –
இங்கு மோக்ஷ விரோதி பாபங்கள் விவஷிதம்

—–

கீழே சுருக்கமான பிரவேசம்
இனி அத்தையே விரித்து அருளிச் செய்கிறார்

‘சர்வேஸ்வரன் திருவருள் செய்வதற்கு வேண்டுவன,
1-சம்சாரத்தினுடைய தண்ணிமை நெஞ்சிலே படுதல்
2-சர்வேஸ்வரனுடைய வைலக்ஷண்யத்தை நினைத்தல்,
3-சரணாகதி செய்தல் என்னும் இவற்றிற்கு மேற்பட இல்லை அன்றோ?’ என்று

சம்சாரத்தின் ஸ்வபாவத்தை நினைத்துப் போக்கடி அற்று அவ்வடியைப் பற்றிச் சரணம் புக்கார்;
புக்க இடத்திலும் தாம் விரும்பிய காரியத்தைச் செய்யாமையாலே,
சரணம் புக்கார் மேலே வேல்காரரை ஏவித் துன்புறுத்தும்
அருளற்றவரைப் போலேயாக அவனை நினைத்து அஞ்சினவராய்,

இவ்வளவிலும் பலிக்கக் காணாமையாலே, -இந்திரியங்கள்-வேல் என்றபடி –
‘வைப்பனாக வைத்த பிரஹ்மாஸ்திரம் வாய் மடிந்தது காண்! என்று கூப்பிடுகிறார்.

‘இனித்தான், ஷிபாமி -‘தள்ளுகிறேன்’ என்பதும். -தாதாமி ‘கொடுக்கிறேன்’ என்பதும். இரண்டே யன்றோ?-
அவற்றுள், ‘தள்ளுகிறேன்’ என்னுமளவிலே யன்றோ நாம்’ என்றிருந்தார்.
‘அது என்? இவர்க்குக் ‘கொடுக்கிறேன்’ என்ற புத்தி யோகத்தைச் செய்து கொடுத்தானே?’ என்னில்,
‘அதுவும் நோவு படுகைக்கு உடலாகத் தந்தான்’ என்றிருக்கிறார்.

தம்முடைய சத்தி கொண்டு பெற இருந்தார் அல்லர்;
அவனுக்குச் சத்தி இல்லாமல் இழக்கிறார் அல்லர்; பேற்றுக்கு வேண்டுவது முன்பே செய்து நின்றார்;
‘ஆன பின்பு,இவர்க்கு இப்போது இழக்க வேண்டுவது இல்லை அன்றோ?
ஆயின், பலியாது ஒழிவான் என்?’ என்னில்,
‘இவர் குறையால் வைத்தாலன்றோ பலித்தது இல்லையாவது?
நமக்காக இருக்கிற பின்பு இவர் இங்கே இருந்தால் நல்லது,’ என்றிருந்தான்.

அவனும் இவரைக் கொண்டு ஒரு காரியம் கொள்ள அன்றோ எண்ணி இருக்கிறது?
அதுவும் ஒழிய, இவருடைய திருமேனி இறுதியானதாகையாலே, இவர் சரணாகதி செய்த இடத்திலும்,
இவர் திருமேனியில் தனக்குப் பிராவண்யத்தாலே காரியம் செய்திலன்.
இவர் திருமேனியில் அவனுக்கு உண்டான பிராவண்யத்தைக் கண்டே அன்றோ
‘மங்க ஒட்டு’10. 7 : 10. என்று அவனைக் காற்கட்டிற்றும்?
மெய்யான பிரேமம் உண்டானால் இங்ஙன் அல்லது இராதே. -மெய் சரீரம் உண்மை -சாடு

இது பிரகிருதி ஆயிற்றே அவனுக்கு. -சாடு– ஸ்வபாவம் -மூல பிரகிருதி

அவன் தம்மைக் கொண்டு கொள்ள இருக்கிற காரியத்தை இதில் பொருந்துவாரைக் கொண்டு
கொண்டால் ஆகாதோ என்றாயிற்று இவர் நினைத்திருக்கிறது.
இதில் பொருந்துவாரை’ என்றது, திருமழிசைப் பிரான் போல்வாரை.-
‘செய்து கொடுத்த ஞான லாபம் இவர் தரித்திருப்பதற்குக் காரணமாம்,’ என்றிருந்தான் அவன்;
அதுதானே விரைவதற்குக் காரணமாயிற்று இவர்க்கு. ‘கிரமத்திலே காரியம் செய்கிறோம்’ என்றிருந்தான் அவன்;
அதுத ன்னையே கொண்டு ‘நம்மைக் கைவிட நினைத்தான்’ என்றிருக்கிறார் இவர்.

நித்திய விபூதியையும் திவ்விய மங்கள விக்கிரஹத்தையும் கண்ணாற்கண்டு,
‘அங்கே போய் அப்படியே அநுபவிக்க வேணும்’ என்னும் பதற்றத்தை யுடைய இவர்க்கு.
சம்சாரம் ததீயமாயிருப்பதும் ஓர் ஆகாரம் உண்டு’ என்னும் ஞான மாத்திரத்தாலே தரித்திருக்கப் போகாதே.
‘யானும் நீ தானாய்த் தெளிதோறும் நன்றும் அஞ்சுவன் நரகம் நான் அடைதல்’திருவாய்மொழி. 8. 1 : 9.–
என்றே அன்றோ இவர் இருப்பது?

1-இப்படி இருக்கிற தம்மையும்,
2-‘அவனுக்குப் பாதுகாக்கப்படும் பொருள் குறைவற்று இருக்கிறபடியையும்,
3-காக்கும் தன்மை ஸ்வரூபமாயிருக்கிறபடியையும்,
4-காத்தற்குத் தொடர்பு இருக்கிறபடியையும்,
5-தமக்கு இவற்றில் தொடர்பு அற்று இருக்கிறபடியையும்,

1-ஆர்த்தி உடன் பிரபத்தி பண்ணிய தம்மையும்
2-உலகம் மூன்று உடையாய்
3-கடல் ஞாலம் காக்கின்ற
4-அண்ணலே
5-வல முதல் கெடுக்கும் வரமே தந்து –

சத்துவம் முதலான குணங்கள் அவற்றிற்கு அடியான
கர்ம தேஹ இந்திரியங்கள் இவற்றிற்கு அடியான மூலப்பகுதி மஹான் அஹங்காரம் அதன் காரியமான விஷயங்கள்
அவித்யை கருமம் வாசனை ருசி ஆகிய இவை எல்லாம் அவனுக்கு வசப்பட்டவைகளாய் இருக்கிறபடியையும் நினைத்து,
‘விஷயங்களும் இந்திரியங்களும் நடையாடுகிற சம்சாரத்தே வைத்த போதே
இவற்றுக்கு நம்மை இரையாக்கிப் போகட நினைத்தானித்தனை:
‘தள்ளுகிறேன்’ என்கிற கூட்டத்திலே புக்கோம்.

‘இனித்தான், இவன் பரிகரங்கள் கண்டதும் நம்மை அகற்றுகைக்கு உறுப்பாக.
அவற்றுள், நித்திய விபூதியில் ஓலக்கம் இருக்கிறது, நாம் படுகிற நலிவு கண்டு அங்குள்ளாருடனே கூடச் சிரித்திருக்கைக்கு;
லீலாவிபூதி கண்டது நமக்குச் சிறைக் கூடமாக.
மயர்வற மதிநலம் அருளிற்றும், அல்லாதாரைப் போன்று சுகமே இராமல் துடித்து நோவு படுகைக்காக’ என்று அறுதியிட்டு,
அவன் திருவடிகளிலே தலையை மடுத்து, கேட்டார் அடங்கலும் நீராம்படி கிடந்து கூப்பிடுகிறார்.

‘மின்னிடை மடவார்’ என்ற திருவாய்மொழியில், ஒரு பிராட்டியின் நிலையை அடைந்தாராய்ப் பிரணய ரோஷம்
தலை எடுத்துச் சொன்னவை எல்லாம் பிறர் வாயாலே சொன்னாற்போலே இருக்கையாலே,
ஆழ்வாரான தன்மையிலே நின்று இன்னாதாம்படியான நிலை விளைந்தது இவர்க்கு.
இவர். எல்லா அளவிலும் ஸ்ரீஜனகராஜன் திருமகளாரோடு ஒப்பார் ஒருவராயிற்று. என்றது,
அத்தலையில் குறை இடுவார் ஒருவர் அன்றிக்கே ‘இவற்றுக்கெல்லாம் அடி நம்முடைய பாபம்’ என்றிருப்பார் ஒருவர் என்றபடி.

இங்ஙனே இருக்கக்கடவ இவர், அவன் தலையிலே குறையை ஏறிட்டுக் கூப்பிடுகிறார் அன்றோ அந்த நிலை விளைகையாலே?
‘இவர் தாம் தம்மாலே வந்ததனை அவன் தலையிலே ஏறிடுவான் என்?’ என்னில்,
சம்பந்தத்தை உணர்ந்தால், இத்தலையாலே வந்ததனையும் அவன் பக்கலிலே ஏறிடலாய் இருக்கும் அன்றோ?

குழந்தை கிணற்றிலே விழுந்தால், ‘தாயானவள் தள்ளினாள்’ என்னக கடவாதாயிருக்கும். என்றது.
‘தாயானவள் கண்களிலே வெண்ணெய் இட்டுப் பார்த்திருந்தாளாகில் இக்குழந்தை விழுமோ?
இவள் நோக்காமை அன்றோ கேடுற்றது?’ என்று கொண்டு அவள் தலையில் குறை சொல்லக் கடவதாய் இருக்கும் என்றபடி.

உதங்கன் கிருஷ்ணன் பக்கலிலே வந்து, ‘உனக்கு இரு திறத்தாரோடும் சம்பந்தம் ஒத்திருக்கச் செய்தே,
பாண்டவர்களை அழிக்காமல் துரியோதனாதியர்களை அழித்தாய்; இப்படிச் சார்வு செய்யப் போமோ?’ என்றாற்போலே
வார்த்தைகள் சிலவற்றை அவன் சொல்ல, கிருஷ்ணனும் அவர்கள் குறைகளை எல்லாம் சொல்லி,
‘அவர்கட்குத் தருமத்தில் ருசி இல்லை காண் என்ன,
‘நீ பின்னை அவர்களுக்குத் தருமத்தில் ருசி உண்டாக்கிக் கொடாது ஒழிவான் என்?’ என்றான் அன்றோ?

பல நீ காட்டிப் படுப்பாயோ?’,
‘கிறிசெய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ?’ திருவாய். 6. 9. 9. ஷ 6 9 : 8.-என்று சொல்லுகிறபடியே
அவற்றின் அண்மையும் சகிக்க முடியாதபடியாய், இனி, தாம் அறியாதிருக்கச் செய்தேயும்
பகவத் விஷயத்தில் பிரவணமான ‘முடியானே’ என்ற திருவாய்மொழியிற் கூறப்பட்ட உறுப்புகளையுடைய
இவர்க்கு இந்திரியங்கட்கு வசப்படுதல் உண்டு என்னுமிடம் மேலே கூறியதோடு முரணாகாதோ?’ என்னில்,
பக்கத்து வீடு நெருப்புப் பற்றி வேவா நின்றால், தமது தமது வீடுகளைப் பாதுகாத்துக் கொள்ளாமல் இருப்பவர் இலர் அன்றோ?
புற்றின் அருகே பழுதை கிடந்தாலும் ‘பாம்பு’ என்று நினைத்து மயங்கக் கூடியதாய் இருக்கும் அன்றே?
அங்குத்தைக்கும் இங்குத்தைக்கும் பொதுவான உடம்போடே இருக்கிறபடியைக் கண்டார்:
உலகத்தார் முழுதும் இந்திரியங்களுக்கு வசப்பட்டவராய்க் கிடந்து நோவுபடுகிற படியையும் கண்டார்:
‘இது நம்மளவும் வரின் செய்வது என்?’ என்று அஞ்சிக் கூப்பிடுகிறார்.

ஸாகா ம்ருகா – பூசலிலே புக்கு அங்கு உண்டான பழக்கம் இன்றிக்கே இருக்கை.
பணையோடு பணை தத்தித் திரியுமவை அன்றோ? ராவண ஸாயகார்த்தா; –
‘தேவத்யமாநா: பதிதாக்ரய வீரா: நாநத்யமா நாபய ஸல்ய வித்தா:
ஸாகாம்ருகா ராவண ஸாய கார்த்தா: ஜக்மு: ஸரண்யம் ஸரணம் ஸ்மராமம்’-என்பது, ஸ்ரீராமா. யுத். 59 : 45.
‘வாநரா:’ என்னாமல், ‘ஸாகா ம்ருகா:’ என்று விசேடித்ததற்கு பாவம் அருளிச் செய்கிறார்,

திசைப் பாலகர்களையுங்கூட அச்சமுறுத்தி வளர்ந்தவன் கையில் அம்புகள்.
ஜக்மு: ஸரண்யம் ஸரணம் ஸ்மராமம் – தங்களுடைய ஆபத்தை அறிந்து போக்கக் கூடியவனையும் பார்த்துப் பற்றினார்கள்.
‘அரக்கர்களால் துன்புறுத்தப்பட்ட வானரங்களுடைய பெரிய கூட்டமானது,
பாதுகாக்கின்றவனும் சக்கரவர்த்தி திருமகனுமான பெருமாளைச் சரணமாக அடைந்தது,’ என்கிறபடியே,
‘ராக்ஷஸை: வத்யமாநாநாம் வாநராணாம் மஹாசமூ:
ஸரண்யம் ஸரணம் யாதா ராமம் தஸரதா த்மஜம்’-என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 17.

முதலிகள் அடங்கலும் அரக்கர்கள் வாயிலே கிடந்து பெருமாளைச் சரணம் புக்காற்போலே,
இவரும் மனம் ஆளும் ஓர் ஐவர் வன்குறும்பரான இந்திரியங்களுக்குப் பயப்பட்டுக் கூப்பிடுகிறார்.
‘பிரியமான ஜனங்களைப் பாராதவளும், அரக்கியர்களின் கூட்டத்தைப் பார்ப்பவளும், தன் கூட்டத்தால் விடப்பட்டதும்
நாய்க் கூட்டத்தால் சூழப்பட்டதுமான பெண் மான் போன்றிருப்பவளும்’ என்கிறபடியே,
ப்ரியம்ஜநம் அபஸ்யந்தீம் பஸ்யந்தீம் யராக்ஷஸீகணம்
ஸ்வகணேந ம்குகீம் ஹீநாம் ஸ்வகணை; ஆவ்ருதாமிவ’-என்பது, ஸ்ரீராமா. சுந். 15 : 24.

‘மயிலி யற்குயின் மழலையாள் மானினம் பேடை
அயிலெ யிற்றுவெம் புலிக்குழாத் தகப்பட்ட தன்னாள்’-என்பது, கம்பரா. சுந். காட்சிப். 4.

ஸ்ரீஜனகராஜன் திருமகள் பட்டது படுகிறார்.
பிள்ளை திருநறையூர் அரையர் ‘இப்பாசுரங்களில் முன் அடிகள் இரண்டும், புலியின் வாயிலே அகப்பட்ட குழந்தை
தாய் முகத்திலே விழித்துக் கொண்டு புலியின் வாயிலே கிடந்து நோவுபடுமாறு போலே இருக்கிறது,’ என்று பணிப்பர்.
‘தாவத் ஆர்த்தி:’ என்ற ஸ்லோகத்திற்படியே, சரணம் புக்கால் தம்மை இன்னாதாகச் சம்பந்தம் இல்லையே:
அவனை இன்னாதாமித்தனை அன்றோ?
திருமலையிலே புகுந்து கிட்டி நின்றதுவும் இவர்க்குப் பேற்றுக்குக் காரணமாதல் தவிர்ந்து
கூப்பிடுகைக்குக் காரணமாயிற்றித்தனை அன்றோ?

பரமாத்மா ஸ்வரூபம் முதல் இரண்டும் –
சேதன ஸ்வரூபம் ஸ்வ அடுத்த இரண்டிலும்
உபாயம் ஸ்வரூபம் அடுத்த இரண்டிலும் –
அநிஷ்ட ஹானி விரோதி ஸ்வரூபம் 7/8 பதிகம்
இந்திரியங்கள் படுத்தும் பாடு இதில் அருளுகிறார் –
மேல் 9/10 பதிகம் இஷ்ட பிராப்தி –

ஏழாம் பத்தில் — கீழ் இரண்டு பத்தாலே உபாய ஸ்வரூப சோநத்தையும் -தத் ஸ்வீ காரத்தையும் அருளிச் செய்து –
மேலே ஏழாம் பத்தாலும் எட்டாம் பத்தாலும்-உபாய நிவர்த்யமான விரோதி ஸ்வரூபத்தையும் –
தன் நிவ்ருத்தி பிரகாரத்தையும் அருளிச் செய்கிறார் -அதில் விரோதி ஸ்வரூப பரமான இப்பத்தாலே –

நிவர்த்யமான விரோதியாயுள்ள சரீர இந்திரியாதிகள் நிவர்த்தகனான ஈஸ்வரன் இட்ட வழக்கு என்னுமத்தையும்
விரோதி நிவ்ருத்தி பிறவாத போது ப்ராப்ய கத ப்ராவண்யம் ஆர்த்தி ஜனகம் என்னுமத்தையும்
ஆர்த்தி சமிப்பது அபி நிவிஷ்டனான ஈஸ்வரனுடைய தேச ப்ராப்தியாலே என்னுமத்தையும்
ஆர்த்தி ஹேதுவான விரோதியானது ஜகத் ரக்ஷண ஹேதுவான விஜய அபதானங்களை யுடைய சர்வ சக்திக்கே நிவர்த்த நீயம் என்னுமத்தையும்
ரக்ஷகனான அவனை ஒழிய வேறு நிவர்த்தகர் இல்லை என்னும் இடம் சம்மதம் என்னும்படியையும்
சர்வ ஸ்ரஷ்டாவான அவனுடைய காலைக் கட்டிக் கூப்பிட்டு விரோதியைக் கழித்துக் கொள்ள வேணும் என்னுமத்தையும்
உரு வெளிப்பாடான அனுபவம் நடக்கச் செய்தேயும் அலாப ஜெனிதையான ஆர்த்தி விரோதி கார்யம் என்னுமத்தையும்
விசித்ர விரோதி நிவர்த்தனத்தில் விசித்ர விபூதி விசிஷ்டனான விசித்ர சக்தி யுக்தனே வேணும் என்னுமத்தையும்
விரோதி விஸிஷ்ட வேஷத்தில் வாசிக்க கைங்கர்யம் கொண்ட ப்ரீதி அதிசயத்தாலே விரோதியை விஹஸ்தமாக்கின ஹர்ஷத்தையும்
ப்ராப்ய விஷயத்தில் ப்ராவண்யம் அதிசயித்தால் பிரதிபந்தகம் உபாய பூதன் போக்கும் என்னுமத்தையும் –

அருளிச் செய்து
விரோதியினுடைய ஸ்வரூபத்தை சோதித்து அருளினார் –

இதில் முதல் திருவாய் மொழியில் -கீழே -ப்ராப்த்யர்த்தமாக -சரணாகதியை யனுஷ்டித்த இவர்க்கு
பிராப்தி விரோதி நிவ்ருத்யர்த்தமாக பிரதிபந்தக ப்ராபல்யத்தைப் பிரகாசிப்பிக்க –
காட்டிப் படுப்பாயோ –இன்னம் கெடுப்பாயோ -என்று பாண்டே அஞ்சி இருக்கிற இவர் பிரதிபந்தகமான தேஹ இந்திரியாதிகளுடைய
அதி ப்ரவ்ருத்தியை அபரோக்ஷித்து-அதிசயித ஆர்த்தியை யுடையராய் -விரோதி நிவர்த்தகனான ஈஸ்வரனுடைய
சம்பந்தாதி குண பவ்ஷ் கல்யத்தையும்
போக்யதா அதிசயத்தையும்
ரக்ஷணார்த்த வியாபாரத்தையும்
அகடிதகடநா சாமர்த்த்யத்தையும்
விரோதி நிராசன ஸ்வ பாவத்தையும்
சர்வ பிரகார சந்நிதியையும்
யரும் தொழில் செய்தும் ஆஸ்ரித கார்யம் செய்யும் படியையும்
அசாதாரண சிஹ்நாதி யோகத்தையும்
சகல ஜகத் ஸ்ரஷ்ட்ருத்வாதிகளையும்
சாரா ஸங்க்ரஹண சாமர்த்யத்தையும்
அனுசந்தித்து -ஏவம் வித ஸ்வ பாவனான நீ உனக்கு விதேயமான சரீர இந்திரியாதிகள் என்னை நலியக் கண்டு
நிவர்த்திப்பியாதிருந்தாய் -என்று அந்நிய விசேஷம் அடியாகப் பெரிய ஆர்த்தியோடே கூப்பிடுகிறார் –

உண்ணி லாவிய ஐவராற் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம்
நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய்
எண்ணிலாப் பெரு மாயனே!இமையோர்கள் ஏத்தும் உலக மூன்றுடை
அண்ணலே! அமுதே! அப்பனே!என்னை ஆள்வானே!
–7-1-1-

சுக அனுபவத்திற்கு உரியனவான திருவடிகளையுடைய உன்னை நீ அறிதி அன்றோ?’ என்பார், ‘உன் பாத பங்கயம்’ என்கிறார்.-என்றது, ‘அடி அறியாமல் தான் அகற்றுகிறாய் அன்றே-சம்சாரத்தில் அருசி பிறவாதார்க்கும் விட ஒண்ணாதபடி போக்கியமான திருவடிகளை.-நலிவான் –நண்ணாமை என்றும், நலிவு என்றும் இரண்டு இல்லை இவர்க்கு;
திருவடிகளைக் கிட்டாது ஒழிகையே இவ் வாத்துமாவுக்கு நலிவு. -தொழுகையே எழுகை போலே இந்தக் கொடுமையான வகையே நலிவான்.-‘அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேன்’ என்ற பின்பும்.

பாண்டவர்கள் காரியத்தை எண்ணினாற்போலே, இங்குக் காரியம் செல்லா நிற்கச் செய்தே, மந்திரமும் செல்லுகிறபடி.-‘இவரை நம் பக்கலினின்றும் பிரித்தோமாம் விரகு என்னோ?’ என்று சிந்திக்கிறான் என்றிருக்கிறார்.எண்ணிறந்த செயல்களைச் செய்யவற்றாய், நீ வேண்டாதாரைச் சிறை இட்டு நலியக்கடவதானபிரகிருதியைப் பரிகரமாகவுடையவனே!
அன்றிக்கே,-‘எண்ணிறந்த மஹா ஆச்சரியமான குணங்களை யுடையவனே!’ என்று பிள்ளான் பணிக்கும்படி. ‘இப்படிக் குணவானாயிருக்கிற உனக்கு என்னை நலிகைக்கு என்ன சேர்த்தி உண்டு?’ விடு நகங்கட்டி நலியா நிற்கச் செய்தே ‘தண்ணீர்’ என்பாரைப் போலே, அவன் குணங்களைச் சொல்லுகிறபடி.

உலக மூன்றுடை-அண்ணலே!-சர்வ லோகங்களையும் உடைய ஸர்வேஸ்வரனே -சர்வ ரக்ஷகத்வத்தைக் காட்டிற்றும் நம்மைக் கை விடான் என்று இருக்கைக்காக வன்றோ
அமுதே!-போக்யதையை அறிவித்ததும் மேல் விழுகைக்காக அல்லவோ-அமுதே – அவன் தன்னுடைய இனிமையைக் காட்டிற்றும் தம்மை அனுபவிப்பிக்கைக்கு அன்று; புறம்பு ஒன்று பொருந்தாதே நோவு பட என்றிருக்கிறார்.-அப்பனே –உபகாரகனே -உபகாரத்தை காட்டிற்றும் இவ்வளவு உபகரித்தவன் இனி கை விடுமோ என்று இருக்கைக்காக–‘இப்படி உபகாரகனானவன் நலியா நின்றானோ?’ என்று நம்பும்படி செய்து பின்பு அபகரித்தற்காகக் காட்டினான் என்றிருக்கிறார்.-என்னை ஆள்வானே – ன் இசைவு இன்றிக்கே இருக்க என் கார்யம் உனக்கே பரமாக ஏறிட்டுக் கொண்டதுவும் நான் கை விடான் என்று இருக்கைக்காக அன்றோ–பிராங் நியாயம் பலிக்கும் என்றிருக்கைக்காகக் காட்டினான் என்றிருக்கிறார்.
‘இதற்கு முன்பெல்லாம் நம்மை நிர்வஹித்துக் கொண்டு போந்தது நாமும் சில செய்தோ?
அப்படியே மேலும் நம் காரியம் அவன் செய்யும்,’ என்றிருக்கைக்காகச் செய்தானத்தனை;
நினைவு வேறே என்றிருக்கிறார். ‘என்னை ஆள்வானே! நலிவான் இன்னம் எண்ணுகின்றாய்’ என்கிறார்.-

—————

என்னை ஆளும் வன்கோ ஓரைந்திவை பெய்து இராப்பகல் மோது வித்திட்
டுன்னை நான் அணு காவகை செய்து போதி கண்டாய்
கன்னலே! அமுதே! கார்முகில் வண்ணனே!கடல்ஞாலம் காக்கின்ற
மின்னு நேமியினாய்!வினையேனுடை வேதியனே!
–7-1-2-

என்னை ஆளும் வன் கோ – என்னை நோக்குவாய் நீயாய், பணி கொள்வார் வேறே சிலர் ஆவதே! அத்தலை இத்தலை ஆயிற்றுக் காண்.-ஈஸ்வரன் என்பான் ஒருவன் உண்டாய்,
அவனுக்கு ஆத்துமா சேஷமாய்,-அவனுக்கு மனம் அந்தரங்கத் துணையாய்,
அதற்கு இந்திரியங்கள் சேஷமாகை தவிர்ந்து கலகத்தில் பள்ளிகள் போலே என்னை இந்திரியங்கள் ஆளும்படி ஆவதே!-வன்கோ – பிரபலருமாய் வந்தேறிகளானவர்களுக்குப் பணி செய்து வெறுத்தேன்.-எல்லா நற்குணங்களையுமுடைய சர்வேஸ்வரன் சேஷியாகை தவிர்ந்து, குணம் இல்லாதவர்கள் சேஷிகள் ஆவதே?’-ஒருவனுக்குச் சேஷமாதல் தவிர்ந்தது’ என்பார், ‘ஐந்து’ என்கிறார்.-ஸ்ரீபிரஹ்லாதனை பாம்புகளைக் கூட விட்டுக் கட்டி நலிந்தாற்போலே இருக்கிறது காணும், இவற்றை உண்டாக்கி என் பக்கலிலே நீ விட்டது.

உன்னை அனுபவிக்க வேணும் என்று போந்த பிராட்டியை மாய மானைக் காட்டிப் பிரித்து,
ஒற்றைக் கண்ணன், ஒற்றைக் காதள் இவர்களை கைகளிலே காட்டிக் கொடுத்து
உன்னைக் கொண்டு அகன்றாற்போலே காண் இதுவும்!

கடல் ஞாலம் காக்கின்ற மின்னு நேமியினாய் – ‘போதி கண்டாய்’ என்று யார் கால் கட்ட நீ அன்று நோக்கிற்று!-‘இந்திரியங்களாலே நோவுபட்டோம்’ என்று இவர்கள் அபேக்ஷித்த போதோ நீ நோக்கிற்று! நீ இனியன் என்று அறியாதரையுங்கூட நோக்குமவன் அல்லையோ? கடலோடு கூடின பூமியைக் கண்களிலே வெண்ணெய் இட்டுக்கொண்டு நோக்கும் தன்மையன் அல்லையோ? ‘காத்தல் தான் காதாசித்கமோ உனக்கு?’ என்பார், ‘காக்கின்ற’ என்று நிகழ்காலத்தாற் கூறுகின்றார்.-மின்னு நேமியனாய் –-இயற்றி-யத்னம்- உண்டு என்னா, சங்கற்பத்தால் நோக்குமவனோ?-ஆசிலே வைத்த கையும் நீயுமாயன்றோ நோக்குவது? -ஆசு -பிடி -ஆயுதம்-உருவின வாள் உறையில் இடாதே அன்றோ நோக்குவது? விளங்கா நின்றுள்ள திருவாழி. –-கிருபையால் மிக்கு இருக்கும் திரு ஆழி

வினையேனுடை வேதியனே –-ஊர்ப் பொதுவாயிருக்கிற நீ. என்னளவிலே வந்தவாறே வேதங்களாலேயே அறியப்படுகின்றவனானாய். இன்று இருந்து ஓலைப்புறத்திலே கேட்கும்படியான பாபத்தைச் செய்வதே நான்!- சிசுபாலனுக்கு சஷூவுக்கு விஷயம் ஆனாயே-

————

வேதியா நிற்கும் ஐவரால் வினையேனை மோதுவித்து உன திருவடிச்
சாதியா வகை நீ தடுத்து என் பெறுதி அந்தோ
ஆதி ஆகி அகல் இடம் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட
சோதி நீள் முடியாய் தொண்டனேன் மது சூதனனே
 –7-1-3-

வேதியா நிற்கும் – வேதனையே செய்யா நிற்கும்.-அழகிதாக எல்லா நிலைகளிலும் அடிமை செய்ய ஆசைப்பட்டேன்.-‘உடனாய் மன்னி’ திருவாய்மொழி, 3. 3 : 1.-என்று பாரித்த எல்லாம் இவற்றுக்குப் பணி செய்கைக்கு ஆவதே!-எல்லா நிலைகளிலும் அடிமை செய்ய ஆசைப்பட்டுச் சொன்ன எல்லாம் இவற்றின் பக்கலிலே ஆனபடியைத் தெரிவித்தபடி.

என்ன உறவின் கனந்தான்! தம்முடைய குற்றத்துக்கும் அவனை வெறுக்கும்படி காணும் சம்பந்தம் இருக்கிறபடி.-சாதநாநுஷ்டானம் செய்து பலத்துக்குத் தடை செய்வாரைச் சொல்லுமாறு போலே சொன்னபடி பாரீர். உன் திருவடிகளைச் சாராதபடி தகைந்து,

என் பெறுதி – என் சொரூபம் அழியுமித்தனையோ வேண்டுவது?
நான் படுகிற வியசனத்தால் உனக்கு ஒரு பிரயோஜனம் உண்டாகில் எனக்கு அதுவே அமையும்; உனக்காக இருக்குமதன்றோ எனக்கு வேண்டுவது?-துர்வாசர் வர, ‘பெருமாளுக்கு ஒரு துன்பம் வர ஒண்ணாது’ என்று தம் நோவு பாராதே விடை கொண்டார் அன்றோ?-என் பெறுதி –-நீ, சொன்ன சொல் தவறாதவன் ஆகைக்காக ஸ்ரீபரதாழ்வானைப் பிரித்து வைத்தாய், என் இருப்புக்கு உனக்கு என்ன பிரயோஜனம் உண்டு?

தொண்டனேன் மதுசூதனனே – இவன் இரட்சகன் என்னுமிடத்துக்கு முன்னே ஒன்று தேடிச் சொல்ல வேணுமோ? மதுவைப் போக்கினாற்போலே நான் இந்திரியங்கட்குக் கட்டுப்பட்டிருத்தலை இன்று இருந்து போக்கினவன் அன்றோ?
தன் படிகளைக் காட்டி எனக்குப் புறம்பு உண்டான வாசனையைப் போக்கி-
இன்று கைக்கு எட்டாதிருக்கிற இதுவே அன்றோ குறை?-

——–

சூது நான் அறியா வகைச் சுழற்றி ஓர் ஐவரைக் காட்டி உன்னடிப்
போது நான் அணுகா வகை செய்து போதி கண்டாய்
யாதும் யாவரும் இன்று நின்னகம் பால் ஒடுக்கி ஓர் ஆலினீளிலை
மீது சேர் குழவி! வினையேன் வினை தீர் மருந்தே!
–7-1-4-

நான் உறுவது அறியாதபடி –சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் விஷயங்களைக் காட்டி மயங்கச் செய்து-‘உன்மத்தங்காய் தின்னப்பண்ணி’ –உன்னடிப்போது நான் அணுகா வகை செய்து –உன் திருவடிகளாகிற செவ்விப்பூக்களை நான் கிட்டாதபடி செய்து. என்றது,
‘மயிர் கழுவி-பிரபத்தி செய்த பின்பு- இருக்கிறவனைச் செவ்விப்பூச் சூடாமல் தடுப்பாரைப் போலே’-வினையேன் வினைதீர் மருந்தே – பாபமே நிரூபகமான என்னுடைய பாபத்தைப் போக்கும் மருந்தாம் வல்லவனே! என்னுடைய ஐம்புல இன்பங்களில் உண்டாகும் ஈடுபாட்டினைப் போக்கி என்னை இப்படித் துடிப்பித்தவன் அல்லையோ?-

————-

தீர் மருந்தின்றி ஐவர் நோயடும் செக்கிலிட்டுத் திரிக்கும் ஐவரை
நேர் மருங்கு உடைத்தா அடைத்து நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்
ஆர் மருந்தினி யாகுவார்! அடலாழிஏந்தி அசுரர் வன்குலம்
வேர் மருங் கறுத்தாய்! விண்ணுளார் பெருமானேயோ!–
7-1-5-

இந்திரியங்கள் பாதகம் ஞானம் கொடுத்தேன் -இத்துடன் காலம் போனால் -என் செய்கேன் -திருவடி கிடைக்காமல் –‘ஆனால், நம் படி இதுவாகில், உமக்கு ஒரு பரிகாரம் தேடிக்கொண்டாலோ?’ என்றான்;-ஆர்மருந்து இனி ஆகுவார்–என் இடையாட்டம் பிறரைக்கொண்டு காரியம் இல்லை: நான் நோவுபடாநின்றேன்.-நீ கை வாங்கினாய். ஆன பின்பு எனக்கு ஒரு இரட்சகர் உளரோ?-நானும் பிறரும் இல்லாத அன்று நீ உண்டு: நீ விட்ட அன்று யார் உண்டு?-நானும் கையும் திருவாழியுமாய் இருந்தேனாகில் நான் என்னை நோக்கிக் கொள்ளேனோ?-நித்திய ஸூரிகளும் அவனும் பிராட்டியுமாகப் பரம பதத்திலே இருக்கிறபடியே நினைத்து
விண்ணுளார் பெருமானேயோ–அங்கே கேட்கும்படி கிடந்து கூப்பிடுகிறார். -பகல் ஓலக்கம் -சாம கானம் கேட்டு ரசிக்கவோ –-ஹா ராம! ஹா லக்ஷ்மண! ஹா ஸூமித்ரே!’ என்று பிராட்டி தனியே கிடந்து கூப்பிட்டாற்போலே, பரமபதத்திலே இருப்பும் அணி கலங்கும்படி கூப்பிடுகிறார்.

————-

விண்ணுளார் பெருமாற் கடிமை செய்வாரையும் செறும் ஐம்புலனிவை
மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால்?
பண்ணுளாய்!கவி தன்னுளாய்!பத்தி யினுள்ளாய்! பரமீசனே! வந்தென்
கண்ணுளாய்! நெஞ்சுளாய்! சொல்லுளாய்!ஒன்று சொல்லாயே
.–7-1-6-

சம்சாரத்திலே முமுக்ஷூக்களாய்க் கைங்கரியத்திலே மூழ்கி இருக்கக் கடவரானவர்களையும் செறும்-பெரிய திருவடியையும் அகப்பட ‘எனக்கு’ என்னப் பண்ணிற்றே அன்றோ? -அவன் தான் அவதரித்துச் சோகிப்பது மோகிப்பதானாற்போலே ஆயிற்று இவர்களும்.-இவர்தாம் விண்ணுளாரில் ஒருவரே அன்றோ?
இவற்றுக்குத் தந்நிலமாவது, நான் இவை இருந்த இடம் தேடிச் சென்று கழுத்திலே கயிறு இட்டுக் கொடு நிற்கவல்லேன் ஒருவனாவது;-இங்ஙனே இருக்கிற என்னைப் பெற்றால் இவை என் செய்யா?-காற்றை ஓரிடத்தில் கட்டிவைக்கில்,’ அன்றோ மனத்தினை நியமிக்கலாவது?’-இந்திரியங்களை அடக்குதல் அரிது’ என்று சொல்லுகிறாயாகில் நம் பக்கலிலே மனத்தினை வை’ என்று அருளிச் செய்த நீயும் விட்டால்’ என்னலுமாம்.

உனக்குச் சக்தி இல்லாமையினாலேயோ நான் இழக்கிறது?’-பண்ணுளாய் –
என் துன்ப ஒலியைக் கேளாதிருக்கிறாய் அல்லையே.-கவி தன்னுளாய்-
என்னுடைய ஆர்த்தியை உட்கொண்ட சொற்களைக் கேளாதிருக்கிறாய் அல்லையே?-பத்தியினுள்ளாய்-இப்படிச் சொல்லுவிக்கிற ஆற்றாமையை அறியாதிருக்கிறாய் அல்லையே?-பரம் ஈசனே–உனக்கு முடியாதது ஒன்று உண்டாக அதனைச் செய்யாமாட்டாது இருக்கிறாய் அல்லையே?-உன் சேஷித்துவம் ஏறிப் பாயாத இடம் உண்டோ?

உன் இருப்பில் எனக்கு ஐயம் உண்டோ?-என் கண் காண வந்து ஒன்று சொல்லுகை அன்றோ எனக்குத் தேட்டம்? செய்த காரியத்தில் குறை உண்டு என்கிறேன் அல்லேன்;-நீ செய்யாத காரியத்தை அன்றோ சொல்லுகிறது-எனக்காக நாலடி நடந்து வந்து, ‘நீ அஞ்சாதே கொள்’ என்று, என்னை,-மாஸூச:- துக்கப்படாதே என்ன வேணும்.-

————

ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத ஓர் ஐவர் வன் கயவரை
என்று யான் வெல்கிற்பன் உன் திருவருள் இல்லையேல்?
அன்று தேவர் அசுரர் வாங்க அலைகடல் அரவம் அளாவி ஓர்
குன்றம் வைத்த எந்தாய்! கொடியேன் பருகு இன்னமுதோ!
–7-1-7-

கொடியேன் பருகு இன்னமுதே--தேவர்களை போலே நித்யத்வத்தைக் கொள்ளாதே உன்னையே ஆசைப்படுகிற எனக்கு நிரதிசய போக்யனானவனே -தேவர்களை போலே உப்புச் சாற்றில் திருப்தனாகப் பெற்றிலேன் -தோளும் தோள் மாலையுமாய் கடலைக் கடைந்த போதை அழகாயிற்று இவருக்கு அம்ருதம் -இவருடைய அமிருதம் விசஜாதீயமாய் இருக்கிற படி –கடைந்தனையே ஆசைப்படப் பெற்றிலேன்.
அன்றிக்கே,-நீ செய்தது கொண்டு திருப்தனாக வேண்டி இருக்க, ‘அட்டது ஒழியச் சுட்டது கொண்டு வா,’ என்று-உன்னை நிர்ப்பந்திக்கும்படியான பாவத்தைச் செய்துள்ளேன் என்னுதலுமாம்.-நீ உபேஷித்தால் அதி பலமான இந்த்ரியங்களை என்னால் வெல்ல முடியுமோ என்கிறார் –

————–

இன்னமு தெனத் தோன்றி ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த
முன்னம் மாயமெல்லாம் முழு வேர் அரிந்து என்னை யுன்
சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்தேத்திக் கை தொழவே அருள் எனக்கு
என்னம்மா! என்கண்ணா!இமையோர்தம் குலமுதலே!–
7-1-8-

தொடக்கித்தில் அமிர்தம் போலாம்;பரிணாம நிலையில் விஷத்தைப் போலாம்-ஓர் ஐவர்-
தனித்தனியே பிரபலமாய் ஒப்பற்றவையாய் இருக்கிற சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் விஷயங்கள் ஐந்தும்.-அநாதியான சம்சாரத்தை எல்லாம்.வாசனையோடே போக்கி உன் சின்னமும் திருமூர்த்தியும்--தவள ஒண்சங்கு சக்கரம் என்றும்,-‘வலக்கை ஆழி இடக்கைச் சங்கம்’ என்றும்,-‘அரவிந்தலோசனன்’ என்றும் சொல்லுகிறபடியே,
திவ்விய ஆயுதங்களையும் அவற்றுக்கு ஒப்பாயிருக்கிற திருமேனியையும்.-சிந்தித்து ஏத்திக் கை தொழவே அருள் எனக்கு- இவற்றை நெஞ்சாலே நினைத்து’ உள்ளடங்காமல் வாய் விட்டுத் துதி செய்து, பின்னைத் திருவடிகளில் விழுகைக்குத் தகுதியாக எனக்கு அருளவேணும்.-என் அம்மா–எனக்குத் தாய் போல் பரிவன் ஆனவனே!-என் கண்ணா
அந்தப் பரிவை அநுஷ்டான பரியந்தமாக்கினவனே!-இமையோர்தம் குலமுதலே--மனம் வாக்குக் காயம் என்னும் இம்மூன்றும் ஒருங்கி உன் பக்கலிலே பிரவணமாம்படி-ஒரு நாட்டுக்குச் செய்து கொடுத்த நீ, அதனை என் ஒருவனுக்கும் செய்யத் தட்டு என்?

————-

குல முதல் அடுந் தீவினைக் கொடு வான் குழியினில் வீழ்க்குமைவரை
வல முதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய்
நில மு தல் இனி எவ்வுலகுக்கும் நிற்பன செல்வன எனப்பொருள்
பல முதல் படைத்தாய்! என்கண்ணா! என் பரஞ்சுடரே!
–7-1-9-

பூமி தொடக்கமாக மற்றும் எல்லா லோகங்களுக்கும் ஸ்தாவர ஜங்கமாத்மகமாய் உள்ள அநேக பதார்த்தங்களையும் முதலிலே படைத்தாய் -ஸ்ருஷ்டிக்கு பிரயோஜனம் மோஷமான பின்பு அது தான் பெற வேண்டாவோ-இந்த்ரியங்களுடைய பலத்தை வாசனையோடு போக்க வல்லேனாம் படி பிரசாதங்களை பண்ணி அருள வேணும்-என்கண்ணா! என் பரஞ்சுடரே!–எனக்கு பவ்யனாய் நிரதிசய போக்யனுமாய் உள்ளவனே -சர்வ சக்தியாய் எனக்கு பவ்யனாய் போக்யனான நீயே இந்திரிய உபாதையை போக்கி அருள வேணும்-

———–

என் பரஞ்சுடரே! என்று உன்னை அலற்றி உன் இணைத் தாமரைகட்கு
அன்புருகி நிற்குமது நிற்கச் சுமடு தந்தாய்
வன் பரங்கள் எடுத்து ஐவர் திசை வலித்து எற்று கின்றனர்
முன் பரவை கடைந்த அமுதம் கொண்ட மூர்த்தியோ
–7-1-10-!–

என்னை அனுபவிக்கைக்கு உறுப்பாகச் சரீரத்தைத் தந்தாயானாய் நீ;-அதுதானே எனக்கு இழவுக்கு உடலாயிற்று.-இராஜபுத்திரன் தலையில் முடியை வாங்கிச் சும்மாட்டைக் கொண்டு வழியிலே நின்றால், அடி அறியாதார் சுமை எடுத்துக் கொண்டு போமாறு போலே யாயிற்று,-பகவானுடைய அனுபவத்துக்கு ஈடாகக் கொடுத்த சரீரம் இந்திரியங்களுக்குப் பணி செய்யும்படியாய் விட்டது.-வலியில்லாதான் ஒருவன் தலையிலே மிக்க பாரத்தைச் சுமத்திச் சுற்றும் நின்று தந்தாம் வழியே இழுத்துக் கொண்டுபோகத் தேடுமாறு போலே காணும் இவையும்.-பெரிய தோள்களை யுடையவனே! (மூர்த்தி -தோள்களைச் சொன்னவாறு )என்னுடைய இந்திரியங்களைப் பாற அடித்துப் பொகட்டு, கடல் கடைந்த போதை ஒப்பனையோடே கூடின வடிவினைக் காட்ட வல்லையே!

————-

கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க் குணங்கள் படைத்து அளித்துக் கெடுக்குமப்
புண்டரிகக் கொப்பூழ்ப் புனற்பள்ளி அப்பனுக்கே
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்லா யிரத்துள் இப்பத்தும்
கண்டு பாட வல்லார் வினை போம் கங்குலும் பகலே
.–7-1-11-

படைத்து அளித்துக் கெடுக்கும் –-ரஜோ குணத்தையுடையனாய்க் கொண்டு படைத்து,
தமோ குணத்தை யுடையனாய்க் கொண்டு அழித்து,-சத்துவ குணத்தை யுடையனாய்க் கொண்டு இவற்றை அடையக் காத்துக் கொடு நிற்கிறபடி.-‘அப்புண்டரிகக் கொப்பூழ்’ என்கையாலே,-பிரமன் சிவன் முதலாயினோர் காரியம் என்னுமிடமும்,-அவன் காரணன் என்னமிடமும் சொல்லிற்று. –தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் –
விஷயங்களையும் இந்திரியங்களையும் நினைத்த நெஞ்சாரல் தீர, சேஷத்துவத்தினுடைய எல்லை நிலத்திலே போய் நிற்கிறார்;-தாபத்தாலே வருந்தினவன் மடுவிலே தாழ இழியுமாறு போலே.-கண்டு பாட வல்லார் –இவருடைய நிலையை நினைத்தால் பாடப் போகாதே அன்றோ?-கண்டு –-நமக்குத் தஞ்சம் என்று நினைத்து.-வினை போம் கங்குலுப் பகலே –இரவு பகலில் வினை போம்.-இராப்பகல் மோதுவித்திட்டு’ என்ற துயரம் போம்.-திவா ராத்திரி இந்திரிய வச ஹேதுவான பாபங்கள் போகும் –-நம்மை அறியாமலே இரவிலே பாபங்கள் போகுமே -கனவில் படும் சுகம் துக்கம் புண்ய பாப பயன் என்பர் –திவா ராத்ரம் இந்திரிய வஸ்யத்தைக்கு ஹேதுவான பாபம் போம்-திவா ராத்ரம் அடிமை செய்கைக்கு விரோதியான பாபம் போம்-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -82-எரி கொள் செந்நாயிரு இரண்டுடனே-உருகுமால் நெஞ்சு -9–6-

March 19, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

இல் பொருள் உவமை -இரண்டு ஸூர்யர்கள் உதய கிரியில்-இணைக் கூற்றம் கொல் அறியேன் போல் இங்கும்-வெப்பம் உமிழும் திருக்கண்கள்-மந்தேஹர்கள் ராக்ஷஸர்கள் -ஸூர்யன் ரதத்தைத் தடுக்க
அர்க்க தீர்த்தம் வஜ்ராயுத வலிமை கொண்டு -செந்தீ போல் ஸூர்யனை ஆக்கி அவர்கள் விழுந்து மடிவார்கள் -மீண்டும் மாலை தோறும் உயிர் பெறுவார்-இப்பாசுரத்திலும் மீண்டு -பத பிரயோகம்
அதே போல் அபலைகளான நங்களும் கண்களின் வெப்பக் கொழுந்தில் அழுந்துவதோ – வையம் முற்றும் விளரியது–(எம்பெருமான்) உலகம் முழுவதையும் விருப்பத்தோடு செழிக்கச் செய்யும் விதம்
ஹரி -ஹரி ப்ரஹ்ம மூர்த்தத்தில் கூக்குரல்-துறையடைவு–உருவு வெளிப்பட்டால் -தலைவி தலைவனின் கண் அழகைப் பாராட்டி இரங்குதல் —அவனையே சிந்தித்து –மீனாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணன் -இவற்றைப் பார்த்து இப்படி சொல்லும்படி ஆர்த்தி விஞ்சி–உருகுமால் நெஞ்சு -9–6-இதன் விவரணம்

ஜீயர் –இப்பாட்டு சொல்ல வநபிமதமாய் இருக்கும் -என்று அருளிச் செய்வர் –உரு வெளிப்பாட்டிலே சர்வேஸ்வரன் உடைய திருக் கண்கள் பாதகமாம் படியை சொல்லுகிறது இது இறே – இவருடைய ஆற்றாமை உண்டாகில் இறே இப் பாசுரம் சொன்னால் நமக்கு சாத்மிப்பது – தாயாய் அளிக்கின்ற தண் தாமரை கண்ணன் அன்றோ –

அரும்பதம்-உயிருக்கு எல்லாம் தாயாய் இருக்கும் கண்கள்-தூது செய்யும் கண்கள்-காருண்யம் தயை பொழியும் கண்கள்-தெற்கு நோக்கி பெரிய பெருமாள் -துயிலுமா கண்டு –என் செய்கேன் உலகத்தீரே ‘
கிருபா ப்ரவாஹம் -தாங்க முடியாதே -கால் தள்ளாட -திரு மணத்தூண்கள் பிடித்து -ஆலம்பனம்
அரவிந்த மலர் தோறும் அதிசயம் உள்ளதே-அமலங்களால் விளிக்கும்-ஜிதந்தே புண்டரீகாக்ஷ –நமஸ்தே பூர்வஜ-ஆழ்வார் பாவம் -தவிப்பு -ஆர்த்தி இருந்தால் தானே இப்படி பாதகமாக வார்த்தை சொல்ல முடியும் –ஆற்றாமை உண்டானால் தானே இவ்வாறு சொல்லலாம் -இல்லாமல் கொடுமை என்று நம்மால் சொல்லப் போகாதே 

இப்படி அனுபவ அலாபத்தாலே சிதிலரானவர் தம்மை பிரதம அங்கீ காரம் பண்ணின ஈஸ்வர கடாக்ஷம் தான் நமக்குத் பரிதாப ஹேதுவான ப்ரகாரத்தை நாயகனான ஸர்வேஸ்வரனுடைய திருக் கண்களைக் கண்டு அனுபவிக்கப் பெறாமையாலே அவை தானே பரிதபிப்பிக்கிற பிரகாரத்தை நாயகி தோழியர்க்கு உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

எரி கொள் செந் நாயிறு இரண்டுடனே உதய மலை வாய்
விரிகின்ற வண்ணத்த எம்பெருமான் கண்கள் மீண்டவற்றுள்
எரி கொள் செந் தீ வீழ் அசுரரைப் போலே    எம்போலியர்க்கும்
விரிவ சொல்லீர் இதுவோ வையமுற்றும் விளரியதே
– – – 82–தலைவி தலைவனின் கண் அழகைப் பாராட்டி இரங்குதல் —

எரிகொள்–வெப்பத்தைக் கொண்ட
செம் ஞாயிறு இரண்டு–சிவந்த இரண்டு ஸூர்ய மண்டலம்
உடனே–ஒருங்கே
உதய மலையாய்–உதய பர்வதத்திலே
விரிகின்ற–தோன்றி விளங்குகிற
வண்ணத்த–தன்மை போன்ற தன்மையை யுடைய
எம்பெருமானது கண்கள்–எம்பெருமானது திருக்கண்கள்,
அவற்றுள்–அந்த ஸூர்ய வடிவங்களிலே
எரிகொள்–ஜ்வலித்துக் கொண்டு தோன்றுகிற
செம் தீ–சிவந்த நெருப்பிலே
மீண்டு வீழ்–(வேறு புகலிடமில்லாமையால்) மீண்டும் வந்து விழுந்து இறக்கிற
அசுரரை போல–(பகைவரான கொடிய மாந்தேஹரென்னும்) அஸுரர்களுக்குப் போல
எம் போலியர்க்கும் (அநுகூலரான மெல்லிய) எம் போன்றவர்களுக்கும்-பகவத் விஷயத்தில் பிரேம உக்தரான எம் போல்வாருக்கும்
விரிவ–தாபஞ்செய்வனவாய்ப் பரவுகின்றன;
முன்னம் தோன்றா நின்றன -உருவ வெளிப்பாடு
வையம் முற்றும் விளரியது–(எம்பெருமான்) உலகம் முழுவதையும் விருப்பத்தோடு செழிக்கச் செய்யும் விதம்
இதுவோ–இதுதானோ?
சொல்லீர்–சொல்லுங்கள்.

உருகுமால் என்நெஞ்சம் உன் செயல்கள் எண்ணி
பெருகுமால் வேட்கை எனப்பேசி -மருவுகின்ற
இன்னாப்புடன் அவன் சீர் ஏய்ந்து உரைத்த மாறன் சொல்
என் நாச் சொல்லாது இருப்பது எங்கு
—86-என்னால் -என் நா என்றுமாம்-ஸ்மாரக பதார்த்தங்களைக் கண்டு நோவு பட்டு செல்லா நிற்கச் செய்தே இருந்ததும் வியந்தில் தடுமாறாகக் கலந்த கலவி ஸ்ம்ருதி விஷயம்மாக தரிக்க-அத்தாலே-பூர்வ சம்ச்லேஷ பிரகாரத்தை அனுசந்தித்து ப்ரீதராய்ச் செல்லுகிற -உருகுமால் நெஞ்சத்தில் -அர்த்தத்தை உருகுமால் என் நெஞ்சம் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார்

எரி இத்யாதி –நெருப்பை உமிழா நிற்பனவாய் –சிவந்து இருந்துள்ள நாயிறு இரண்டு உதய கிரியிலே உடனே விரிக்கின்ற –-எரி போலே உதய காலத்திலே -பரம்புகிற அவற்றின் படியை உடைத்தாய் இரா நின்றன-சர்வேஸ்வரன் உடைய இரண்டு திருக் கண்கள் –மீண்டு இத்யாதி –(மீண்டும் மீண்டும் என்றும்
பாதிப்பில் இருந்து மீண்டும் என்று இரண்டு நிர்வாகங்கள் ) ஆதித்யன் உதிக்கும் அளவிலே -மந்தேகர் என்பார்  -சில அசுரர்கள் ஆதித்ய ரதத்தை பற்றிக் கொண்டு போக ஒட்டாதே நிரோதிப்பார்களாய் –
பிராமணர் நீர் பொகடுகிற இத்தாலே -ஆதித்யனுக்கு ஒரு தேஜஸ் பிறந்து – அதிலே அவர்கள் புக்கு முடிந்து-போகையாய் இருப்பது உண்டு இறே – அப்படியே புறம்பு போக்கற்று திரியட்டும் அவ் வாதித்யர்களுடைய அந்த நெருப்பிலே விழுந்து முடிந்து போகிற அசுரர்களைப் போலே-எம் போலியர்க்கும் விரிவ — என்னைப் போலே ஆசைப் பட்டு நோவு படுகிற அவர்களுக்கு-எல்லாம்
அசுரர்களை போலே இவை பாதகமாய் கொண்டு பிரகாசமாகா நின்றது –சொல்லீர் இதுவோ வையமுற்றும் விளரியதே–லோகமாக கை எடுத்து கூப்பிடுகிற வதுக்குமடி இதுவோ சொல்லி கோள்-
இவை பாதகமாயோ லோகமாக கூப்பிடுகிறது என்கிறாள் –(மெல்ல எழுந்து ஹரி என்ற பேர் அரவம் இதுக்காகவோ )வாயும் திரை உகளும் படியே –(தம்மைப் போலவே நோவு படுகின்றன என்று நீயும் திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயோ )அன்றிக்கே –மீண்டவற்று -எரி கொள் செந்தீ வீழ் அசுரரைப் போலே   -எம் போலியர்க்கும்– அவ் வாதித்யர்கள் உடைய தேஜஸ்சிலே விழுந்து முடிந்து போகிற
ஆசூரப் பிரக்ருதிகளைப் போலே ஆயிற்று என் போல்வார்களுக்கும்  இக் கண்கள் பாதகமாம் ஆகிறபடி –விரிவ சொல்லீர் –இவ் வளவில் எனக்கு ஒரு புகலிடம் சொல்லீர் –விரிகையாவது -பரம்புகையாய் –
அத்தாலே போய் புகுகையாய் –புகலிடம் என்று வருகிறது –கீழ் விரிவ- விஸ்தரிக்க அர்த்தம்
இனி விரிவ சொல்லீர் -எம் போல்வாருக்கு விரிவ -புகலிடம் புகுகை சொல்லீர்
-கீழ் மூதறிவுவாட்டி
வேங்கடம் ஆட்டவும் இத்யாதி சொன்னதே ஹேதுவாக மோஹம் தெளிந்து தரித்து கண் முன்னே அவன் கண்கள் முன்னே தோன்றி நலியத் தொடங்கிற்றே உருவ வெளிப்பாட்டில் –

உரு வெளிப்பட்டால் -நாயகி நாயகன் கண் அழகுக்கு இரங்கி உரைக்கும் பாசுரம்-ஏக காலத்திலே இரண்டு சூரியன்கள் போலே -அபூத உவமை – தாப ஹேதுவாய் -சர்வ லோக ரக்ஷகராய் விரும்பி
தன் பேறாக காத்து அருளும் தன்மைக்கு இப்படி உதவாமை ஒவ்வுமோ –மந்தேஹாருணம் த்வீபத்தில் உள்ள அசுரர்கள் தவம் செய்து பிரமன் இடம் வரம் பெற்று ஸூர்யனை வளைத்து போர் செய்ய சந்த்யா காலத்தில் மந்த்ர பூர்வகமாக விடும் தீர்த்தங்கள் வஜ்ராயுதம் போலே ஆகி அவர்களை தள்ளியது போலே – விளக்கில் விட்டில் போலே -அர்க்ய நீரால் எழுந்த செந்தீயில் விழுந்து மாண்டனர் -என்பர் –
இதையே மீண்டு -சூர்யன் அவர்கள் தீய சக்திகளில் இருந்தும் மீண்டு என்றும் -இப்படி அசுரர்கள் மீண்டும் மீண்டும் மாய்ந்து போவதையும் குறிக்கும் பூர்ண அனுபவம் பெறாமல் மானஸ அனுபவ மாத்திரமே வருந்தும் அளவு பரிதாப ஹேதுவானதே திருமேனி மைப்படி மலை போலே சோதி மயமாய் இருந்து அனுபவம் கொடுக்காமல் இருப்பதே –எம்போலியர்க்கும்-விரிவ சொல்லீர்-அநு கூலரான எம் போல்வாருக்கும் தாபம் செய்வனவாய் பரவுகின்றன –-இதுவோ வையமுற்றும் விளரியதே- உலகம் முற்றும் விருப்பத்தோடு ரஷிக்கும் விதம் இதுவோ – ஆழ்வார் ஆற்றாமை அவன் ரக்ஷகத்வத்திலும் அதி சங்கை பண்ணும் படி பண்ணிற்றே-உருவெளிப்பாடுகண்ட நாயகி நாயகனது கண்ணழகுக்கு இரங்கி யுரைக்கும் பாசுரம் இது.-உருவெளிப்பாடாவது- பிரிந்து சென்ற நாயகனிடத்தில் இடைவிடாது கருத்தை ஊன்றவைத்த மனத்தின் நினைப்பு மிகுதியால் அவனது வடிவம் வெளிப்பாடாய்க் கண்ணுக்கெதிரே காணப்படுதல். அங்ஙனம் காணப்பட, அவ்வடிவத்தின் கண்ணழகிலேயீடுபட்ட நாயகி, அவ் வடிவம் கைக்கு எட்டாது மறைந்த பின்பு, அக்கண்ணழகு தன் காதல்நோயை மிக வளர்த்தித் தன்னை மிக வருத்துகின்றமையைத் தோழியரை நோக்கிச் சொன்னது இது. வெவ்விய இரண்டு ஸூர்ய மண்டலங்கள் உதயகிரியில் ஏக காலத்தில் தோன்றி விளங்குகின்ற தன்மை போன்ற தன்மையை யுடையனவான எம்பெருமானது திருக்கண்களானவை எமக்குத் தாபஹேதுவாயிரா நின்றன.
அந்த ஸூர்ய வடிவங்களிலே ஜ்வலித்துக்கொண்டு தோன்றுகிற சிவந்த நெருப்பிலே வேறு கதியற்று விழுந்து சாகின்ற மந்தேஹரென்னும் அசுரர்களுக்கு அவை எப்படி தாபகரங்களாயிருகின்றனவோ அப்படியே அநுகூலரான எம்போன்றவர்களுக்கும் தாபஞ் செய்வனவாய்ப் பரவுகின்றன; எம்பெருமான் உலக முழுவதையும் விரும்பிக் காத்தருள்கிறானென்று புகழ்பெற்றிருக்குந் தன்மைக்கு இதுவோ ஏற்றது! என்றாளாயிற்று.–தைத்திரீய ஆரண்யகம் என்னும் வேத பாகத்தில் இரண்டாவது ப்ரச்நத்தில் இரண்டாவது அநுவாகத்தில் ஓதப்பட்டுள்ள ஒரு வரலாறு-இப் பாட்டின் மூன்றாமடியில் கொள்ளப் பட்டுள்ளது; மந்தேஹாருண மென்னும் த்வீபத்தில் வாழும் மந்தேஹ ரென்னும் அசுரர்கள்
உக்ரமான தவத்தைச் செய்து பிரமனிடத்து வரம்பெற்று அதனாற் செருக்கடைந்து எப்பொழுதும் ஸூர்யனை வளைந்து எதிர்த்துத்தடுத்துப் போர் செய்கின்றனரென்றும், அந்தணர் முதலியோர் ஸர்த்யா காலங்களில் மந்த்ரபூர்வகமாகக் கையிலெடுத்துவிடும் அரக்கிய தீர்த்தங்கள்
வஜ்யராயுதம் போலாகி அவர்கள் மேல் விழுந்து அவர்களை அப்பால் தள்ளி ஸூர்யனுடைய ஸஞ்சலத்துக்குத் தடையில்லாதபடி செய்கின்றன வென்றும், அந்தணர் முதலியோர் செலுத்தும் அர்க்கியத்தின் ஆற்றலால் ஸூர்யமண்டலத்தினிடையே ஒரு செந்தீ எழுந்து ஜ்வலிக்க (விளக்கில் விட்டில்போல்) அத் தீயில் அசுரர்கள் விழுந்து மாண்டு போகின்றனரென்றும் ஓதப்பட்டுள்ளது.-இரண்டு ஸூர்யமண்டலம் ஏககாலத்திலே ஓருதயகிரியில் உதித்தெழுந்து விளங்கினாற் போன்ற எம்பெருமான் கண்கள், வல்லியலாரான அவ்வசுரர்களுக்குப்போல, மெல்லியலாரான எமக்கும் தாபஞ் செய்கின்றவே; வலியாரை யழித்து மெலியாரைக் காத்தருள்கின்ற னென்பது இவ் வண்ணமேயோ? என்று பராங்குச நாயகி வருந்திக் கூறுகின்றாள்.-‘ஏக காலத்தில் இரண்டு ஸூர்ய மண்டலம் உதித்தாற்போல்” என்றது இல்பொருளுவமை (அபூதோபமை) அரக்கராகிய மந்தேஹரை அசுரரென்றது- கொடுமையில் ஒற்றுமையால். அசுரர¬- உருபுமயக்கம்; அசுரர்க்கு எனப் பொருள் படுதலால்.‘உதயம்மலை’ = மகாவொற்றுதலைபற்றிய விரித்தல் விகாரம்.–மந்தேஹர்கள் எரிகொள் செந்தீயில் வீழ்ந்து அழிதல் எப்பொழுதும் நிகழ்தலால் அத்தன்மையை ‘மீண்டு’ என்பதனாற் குறித்ததென்னலாம்;-மீண்டும் மீண்டும் என்றவாறு. அன்றியே,மீண்டு = (ஸூர்யனை வருத்துதலாகிய தம்தொழிலில் நின்றும்) நீங்கி என்னவுமாம்-‘விர்வ’ என்பது வினைமுற்று. ‘விளரியது’ என்பதை ‘விளரி’ என்பதன் மேற்பிறந்த ஒன்றனபாற் குறிப்பு முற்றென்று கொண்டால் அகரம் சாரியையாம்;
‘விளர்’ என்பதற்மேற் பிறந்ததென்றுகொண்டால் இகர அகரம் இரண்டும் சாரியையாம்;
விளரியென்றசொல் – மிக்க விருப்பமென்னும் பொருளதாதலை (சூடாமணி நிகண்டு-ளகரவெதுகை-15).-விளரியே யிளமை யாழிலோர் நரம்பு யாழ் நீள்வேட்கை” என்றதனாலும்,
விளர் என்பத செழிப்பென்னும் பொருளாதலை “விளரென்பிகிளமைதானே வெளுப்போடு கொழுப்புமாகும்” என்றதனாலும் உணர்க.

எரி கொள் செந்நாயிறு இரண்டுடனே உதயமலைவாய் விரிகின்ற வண்ணத்த-சிவப்பாலும்
ஒவ்ஷ்ண் யத்தாலும் அக்னி ஸ்வபாவத்தைக் கொள்ளுவதாய் உதய தசையில் ராகத்தை யுடைத்தான ஆதித்யனுடைய இரண்டு வடிவு ஏக காலத்திலே ஸஹ சரிதமாய் உதயகிரி இடத்திலே பரம்புகிறது என்னலாம் படியான ரூபத்தை யுடையன ஆயின–எம்பெருமான் கண்கள்-அடியிலே என்னை அநந்யார்ஹம் ஆக்கிக் கொண்ட ஸ்வாமியினுடைய திருக் கண்கள்-மீண்டவற்றுள் எரி கொள் செந்தீ வீழ் அசுரரைப் போலே-அந்த ஆதித்ய ரூபங்களுக்குள்ளே காயத்ரீ பூதமான அர்க்ய ஸக்தியாலே
ஜ்வலித்துக் கொண்டு தோற்றின சிவந்த அக்னியில் ஆதித்யனுக்கு பாதகராய் வந்து நாங்களே மீண்டு விழும்படியான மந்தே ஹாதிகளான ஆஸூர ப்ரக்ருதிகளைப் போலே (மந்தேஹர் ராக்ஷசர் -அசூரத் தன்மை உள்ளவர் ) எம்போலியர்க்கும் விரிவ-ஆனுகூல்யம் யுடையவராய்-அபலைகளான நம் போல்வாருக்கும் தாஹகங்களாய்க் கொண்டு பரம்பா நின்றன-சொல்லீர் இதுவோ வையமுற்றும் விளரியதே –உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணன் -பெரிய திருமொழி –7-1-9-என்கிறபடியே இந்தக் கண்ணோ லோகத்தை எல்லாம் வெளிச் செறிப்பித்து ரஷித்தது-இப்படி பாதகங்களான இவற்றுக்கு அந்த ரக்ஷகத்வம் உண்டான படி என் -சொல்லீர் என்று தன் ஆற்றாமையைத் தோழிக்கு உரைத்தாள் யாயிற்று –இத்தால்-ஜிதம் தே புண்டரீகாக்ஷ -என்கிறபடியே
பிரதமத்திலே சேஷித்வத்தைப் பிறப்பித்த ஸ்வாமி கடாஷமானது அனுபவத்தைக் கொடாமையாலே
பிரதிகூல விஷயத்தில் பரிதாப ஹேதுவாமோபாதி அனுகூலரான நமக்கும் ஆர்த்தி ஜனகமாகா நின்றன-இது லோகத்துக்கு ரக்ஷகமான படி எங்கனே என்று ஸூஹ்ருத்துக்களுக்கு (பாகவத உத்தமர்களுக்கு ) நொந்து உரைத்தார் ஆயிற்று
-விளரி என்று வெளுப்பாய் வெளிச் செறிப்பிக்கிற முகத்தாலே ரக்ஷணத்தைச் சொல்லிற்று ஆயிற்று

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-வியாக்யானம்-எரி கொள் செந்நாயிறு இரண்டுடனே உதயமலைவாய் விரிகின்ற வண்ணத்த எம்பெருமான் கண்கள் மீண்டவற்றுள் எரி கொள் செந்தீ வீழ் அசுரரைப் போலே எம்போலியர்க்கும் ஆதித்ய உதய விரோதி மந்தேஹர் மேல் பிரயோகித்த படியால் அத்தால் உத்பூத சக்திக ஆதித்யனால் உத்பூத ப்ரஜ்வவநாத்ய குணாக்னியில் விழுந்து நசிக்கிற அசூரரைப் போலே என்னைப் பார்ப்பது என்னைப் போன்ற வரீலுமாய்-இதுவோ வையமுற்றும் விளரியதே –விரிவ சொல்லீர்-இந்தத் த்ருஷ்ட்டி பூமி எங்கும் பரவா நின்றது-இதுக்கு என்ன உபாயம் சொல்லீர் என்று தன் தோழிமார்களைக் கேட்க்கிறாள்-மீண்டவற்றுன் என்றதுகச்ச அநு ஜாநாமி ததா பலம் த்ரஷ்யஸி மே ரதஸ்த–யுத்த -59-144-என்று பெருமாள் அருளிச் செய்தும் மூல பலத்தோடு வந்த ராவணாதி விஷயம் ஆகவுமாம் –

இப்பாட்டுக்கு உள்ளுறை பொருளாவது- எம்பெருமான் முதலில் அகக்கண்ணுக்கு இலக்கான பொழுது தம்பக்கல் வைத்த கடாக்ஷந்தானே பின்பு பூர்ணாநுபவம் பெறாமையால் வருந்துமளவில் தமக்குப் பரிதாப ஹேதுவாகத் தோன்றும் விதத்தை ஆழ்வார் அன்பரோடு கூறுதலாம். எம்பெருமானது மைம்மலை போல விளங்குந் திருமேனியிற் சோதிவடிவமாய்க் காணப்படுகிற கண்களின் நோக்கம் அநுபவத்தைக் கொடாமையால் பிரதிகூலர்க்குத் துயர் விளைத்தல்போல அடியவரான எமக்கும் வருத்தம் விளைவிக்கின்றன! இப்படிப்பட்ட எம்பெருமான் லோகத்துக்கு ரக்ஷகனாகுந் தன்மை எங்ஙனே? என்கிறார்.-தம்மை விரைவிற் சேர்த்துக் கொள்ளாமையா லுண்டான ஆற்றாமை அவனுடைய ரக்ஷகத்வத்திலும் சங்கை செய்யும்படியாயிற்று என்க.

தாத்பர்யம்-கீழே ஞான வ்ருத்தைகள் திருவேங்கடம் சொல்ல-உணர்ந்து அவனது திருக்கண்கள் முன்னே தோற்ற நிரந்தரம் அனுபவிக்கப் பெறாமல் பாதகம் ஆகும்படியை தோழிக்கு சொல்லும் பாசுரம்
சூர்யன் உதிக்கும் பொழுது மந்தேகர் தடுக்க ப்ராஹ்மணர் காயத்ரி அர்க்யம் விட சூர்யன் தேஜஸ் மிக்கு அதில் விழுந்து மடிவது போல் உதய கிரியில் உள்ள இரண்டு சூர்யன் போல் இரண்டு திருக்கண்கள்
எம்முன்னே தோற்றி -என்னைப் போலவே பிரேம பரவசராய் உள்ளோர் முன்னும் தோற்றி மிகவும் பாதியா நின்றது-மந்தேஹா கூட்டம் போல் ஆழ்வார் தமர் உலகோர் ஹரி ஹரி சொல்வதும் இந்த பாதகம் பொறுக்க மாட்டாமல் தானோ-தண் தாமரைக் கண்களை இப்படி அக்னி போல் சொல்வது
ஆற்றாமை மிக்கு — குண அனுபவம் -கொடுத்த ப்ரீதி அனுபவம் தலைக் கட்டாமையால் வெறுத்துச் சொன்ன படி

9-6-உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி-ப்ரவேஸம்-

எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம் -என்று-தம் இருப்பில் நசை அற்றுச் சொன்ன வார்த்தை அன்றோ -மேல்
இவ்வளவில் வந்து முகம் காட்டி இவரைப் பெறுதல் –இல்லையாகில் இழத்தல் –செய்ய வேண்டும்படி யான நிலை ஆயிற்று –
இந்நிலையிலே திருவடி சென்று கிட்டின போது-முன்பு பல நாள் பட்ட துக்கமும் கிடக்கச் செய்தே-பெருமாளும் வாராது இருக்க
சமா த்வாதச தத்ர அஹம் ராகவச்ய நிவேசனே-புஜ்ஞானா மானுஷான் போகான் சர்வகாம சம்ருத்தி நீ -சுந்தர -36-11-
பன்னிரண்டு ஆண்டு பெருமாளும் தானும் ஒருபடிப்பட கலந்த கலவி வந்து
பிராட்டியின் நினைவுக்கு விஷயம் ஆனால் போலே –
இருத்தும் வியந்து -என்ற 8-6-திருவாய் மொழியிலே -தலைதடுமாறாக பிறந்த கலவி வந்து-நினைவுக்கு விஷயம் ஆயிற்று
இங்கு திருவடி போல்வார் வர வில்லை -ஸத்ருச அத்ருஷ்ட-ஸத்ருச -சம்பந்த பதார்த்தம் –அத்ருஷ்ட வசத்தால் என்றுமாம் –

அதற்கடி-
இவர் மேற்கொண்ட கைங்கர்யத்தை முடியச் செய்து-தலைக் கட்டுகைக்கு தகுதியான ஜீவன அதிர்ஷ்டமாவது –
அன்றிக்கே –-
இவர் சொல்லக் கேட்கையிலே பாரித்துக் கொண்டு இருக்கின்ற ஈஸ்வரனுடைய பாக்யமாவது –
அன்றிக்கே –
பகவானை அனுபவிக்கிற அனுபவத்தால் உண்டான ப்ரீதி-உள் அடங்காமை வழிந்து புறப்பட
இவர் சொற்களைக் கேட்டு பகவத் விஷயத்திலே ருசி பிறக்க இருக்கிற மக்கள் உடைய பாக்கியமாவது –
நின் கண் வேடிக்கை எழுவிப்பேன் -இது அன்றோ ஆழ்வார் செய்த கைங்கர்யம் —
இராமர் பாக்யம் சீதை பாக்யம் -தரணி செய்த பாக்யம் -தவம் உடைத்து தரணி -கம்பர் –
சேர்த்தி சேவை இன்றும் நமக்கு அதிருஷ்டம் -நாம் தான் பாக்கியவான்கள் -மூன்றும் என்றால் போலே –

இப்படி -இருத்தும் வியந்து -திருவாய் மொழியில் பேசப்பட்ட கலவி வந்து நினைவுக்கு விஷயம் ஆயிற்று-
சமாத்வாதச -பிள்ளாய் -இன்று இங்கு வெறும் தரையாய் இருக்கிற நான்-
எங்கள் மாமனார் மாளிகையிலே பன்னிரண்டு ஆண்டு ஒருபடிப்பட இராம குணங்களை விளை நீர் அடைத்துக் கொண்டேன் காண்
என்றாள் அன்றோ –

வீற்று இருந்து ஏழு உலகம் -கலவி என்றாலும் இருந்தும் வியந்து -என்பதில் தான் நெறி மாறி அனுபவம் –
இங்கு -இருத்தும் வியந்து -என்கிற திருவாய் மொழியிலே-மூ வுலகும் தன் நெறியா வயிற்றில் கொண்ட
சிறியேனுடைச் சிந்தையுள் நின்று ஒழிந்தான் -என்கிறபடியே
புறம்பு எங்கும் முறையிலே கார்யம் செய்தவன்-இவர் ஒருவர் அளவிலும் அன்றே -முறை கெடக் கார்யம் செய்தது
–8-7/9-6 ஏகார்த்தம் -இரண்டிலும் -சிறிய என் ஆருயிர் உண்ட -இங்கும்
அப்படிப் பட்ட அக்கலவி தான் இப்பொழுது-ஒரு நினைவின் அளவில் இருக்கை அன்றிக்கே-நினைதொறும் -ஸ்ம்ருதி விஷயம் –
அப்பொழுது உண்டான அக்கலவி இன்பத்தை-இப்பொழுதும் அனுபவிப்பதாக ஒரு புத்தி பிறந்தது -என்றது
அப்படியே மேன்மை உடையவன்-அம்மேன்மையும் கிடக்கச் செய்தே-
தாழ நின்று கலந்த குணத்தையும்-வடிவு அழகையும் சொல்லி-அது தான் இப்பொழுதைய அனுபவமே யென்னும்படியாய்
இருப்பது ஒரு புத்தி பிறந்து –
அவனுடைய சீல குணத்தை நினைக்கும் நினைவாலே-உருகுகிறார் -என்றபடி –

விஸ்வரூபம் ரூபம் அத்புதம் ஹரே -நினைத்து -இன்பம் இல்லை -கண் முன்னால் சஞ்சயன் -இன்றும் கண்டால் போலே –
ஆச்சார்ய அனுக்கிரகத்தால் – -நினைவு மாத்திரம் அன்றிக்கே –
நேராக காண்பது போன்ற இன்பம்
மேன்மை -இருத்தும் வியந்த -வாமனன் த்ரிவிக்ரமன் -சொன்னபடி -கார் முகில் வண்ணன் -அழகையும் -சொல்லி –

கடலைத் தரை காண்பாரைப் போலே-இருத்தும் வியந்து -என்கிற திருவாய் மொழியின் அனுபவத்தை-
இதிலே கொண்ட வந்து சேர்ப்பதே நம் முதலிகள் -என்று ஈடுபட்டு அருளிச் செய்வர் நஞ்சீயர்–
அப்ராப்தியும் கிடக்கச் செய்தே-சீல குணத்தை நினைக்கும் நினைவாலே உருகுகிறார் ஆயிற்று
ப்ரீதி இன்மையை உட்கொண்ட குண அனுசந்தானம் காண்-என்று இதற்கு ஆளவந்தார் அருளிச் செய்யும் சந்தை-
ஸ்ம்ருதி மாத்ர வியசனம் இருக்கச் செய்தெ -பிரத்யக்ஷ சாமானாகாரம் தர்சனம் இல்லையே -அதனால் அப்ரீதி கர்ப்ப குண அனுசந்தானம் –

குணங்கள் பல ஈடுபடுத்தும் -என்பதற்கு பிரமாணங்கள் மேலே காட்டி அருளுகிறார்-
தே தம் ஊசு மகாத்மானாம் பௌர ஜானபதை சஹ-பகவோ ந்ருப கல்யாணா குணா புத்ரஷ்ய சந்தி தே -அயோத்யா -2-26-
சக்கரவர்த்தி பெருமாளுக்கு திருமுடி சூட வேண்டும் என்று கோலி-
நாம் அறுபதினாயிரம் ஆண்டு ஒரு தலை மிதிக்க ஒரு தலை கிளற இப்படி வருந்தி அடிப்படுதின-
இராச்சியத்தை-இன்று சிறியவன் தலையில் வைத்தால் இது பொறுக்குமோ-என்று பார்த்து
இதை நாட்டோடு சேர விசாரித்து செய்வோம் என்று அரசர்கள் கூட்டத்தை கூட்டின இடத்து

சநிக்தோ நுநாத சஞ்ஜஞ்ஞே நேத்ர ஹர்ஷ சமீரித-ஜனௌ கோத்குஷ்ட சந்நாதோ விமாநம் கம்பயந்நிவ-அயோத்யா -2-18-
மக்கள் ஆரவாரித்த ஆரவாரமானது அரண்மனையை கிடு கிடுக்கச் செய்தது -என்கிறபடியே-
சகரவர்த்தி மாளிகையை அளித்து செய்யும்படி ஆரவாரிக்க அதனைக் கேட்டு
நாம் நினைத்த கார்யம் பலித்தது -ஆயினும் இவர்கள் நினைவை இவர்கள் வாயால் சொல்லக் கேட்டால் ஆகாதோ என்று நினைத்து –
கதம் நு மயி தர்மேன பிருதிவீம் அனுசாசதி-பவந்தோ த்ருஷ்டும் இச்சந்தி யுவராஜம் மமாத்மாஜம் –அயோத்யா -2-25-
வாரீர் கோள் -நான் அற நெறியில் தேசத்தை ஆண்டு வரும் போது இளவரசனைப் பார்க்க வேண்டும் என்று
எவ்வாறு விரும்புகிறீர்கள் -என்கிறபடியே
அறுபதினாயிரம் ஆண்டு சிறியது பெரியதை நலியாதபடியாக-பூமிப் பரப்பை அடைய நோக்கிக் கொண்டு
இதம் சரீரம் க்ருத்ச்னச்ய லோகஸ்ய சரதா ஹிதம்-பாண்டரஷ்ய ஆத்பத்ரஷ்ய சாயாயாம் சரிதம் மா -அயோத்யா -2-7-
எல்லா உலகங்கட்கும் நன்மையைச் செய்கிற என்னால் இந்த உடல் வெண் கொற்றக் குடையின் நிழலில்
கிலம் ஆக்கப் பட்டது -என்கிறபடியே
முத்தின் குடை நிழலிலே திரிந்து -எனக்கு என்று ஒரு சுகம் கோலாதே
உங்களைப் பாதுகாக்கும் தர்மத்தையே செய்து கொண்டு போந்தேன்-
நான் ஒரு வார்த்தை கேட்ட இடத்து –இப்போது நீ இருக்கச் செய்ய வேண்டாமோ
செய்ய வேண்டிய காலத்தில் செய்து கொள்ளுகிறோம் -என்னுதல்-அன்றியே
கார்யம் ஆகில் செய்ய லாகாதோ -என்று வார்த்தை சொல்லுதல் அன்றிக்கே –
படுகுலை அடித்தவனை தப்ப ஒரு அறவன் கீழே ஒதுங்க நினைப்பாரைப் போலே
என்னை விட்டு என் மகனே அமையும் என்று நீங்கள் விரும்புகைக்கு நான்-உங்களுக்கு செய்த தீங்கு என் என்ன –
ஜ்ஞான விஞ்ஞான சம்பன்ன நிதசே நிரத பிது-தாதுநாமிவ சைலேந்த்ரோ குணாநாம்
ஆக்ரோ மகான் – கிஷ்கிந்தா -13-20-தாரை வாலி இடம் பேசியது
நீ எங்களுக்கு செய்த தீங்கு ஒன்றும் இல்லை-உன் மகனுடைய குண அபராதங்கள் கான் இதற்கு அடி –
நீ நோக்கிக் கொண்டு போந்த படிகளில் ஒரு குறை இல்லை-
குணவானாய் இருப்பான் ஒரு புத்ரினைப் பெற்று நாட்டினை படுகுலை அடித்தாய் காண் –
பஹவ -உன் அளவு அன்று காண்-காக்கும் தர்மத்தில் அவர்க்கு உண்டான பாரிப்பு
விராஜயன் ராஜ ஸூதா ராஜமார்க்கம் நரை வ்ருதம்-ஹ்ருதயானி ஆமமந்தேவ ஜனச்ய குண வத்தையா -அயோத்யா -26-2-
பொன் முதலிய தாதுக்கள் இமய மலையைப் போன்று
சௌலப்யம் முதலிய குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமாய் இருப்பவன் -என்கிறபடியே
நாட்டிலே சிலரை குணம் இல்லாதவர் என்று பழித்தும்-சிலரை குணவான்கள் என்று கொண்டாடுகிறதும்
இன்ன ஆகாரத்தின் பொன் -என்று விலை பெறுமா போலே-
இன்னார் இடத்திலே இருக்கிற குணம் -என்று ஆயிற்று புறம்பு விலை போவது
சிறந்த குணம் உள்ளவர் ஆகையாலே மக்களின் மனத்தினைக் கடைந்தவர் போல் ஆனார் -எனபது ஸ்ரீ ராமாயணம் –

எர்ணா குளம் பக்கம் திருக் காட்கரை -பெரிய கோயில் –
போகத்திலே தட்டு மாறும் சீலம் காட்கரையிலே -கரை அழிக்கும் –
ஞானம் -தர்சன் பிராப்தி -ப்ரீதி காரித கைங்கர்யம் வரை -மூன்று தசைகள் உண்டு –
மயர்வறமதி நலம் அருள பெற்று அந்தாமத்து அன்பத்து-அனுபவம் கலந்து –
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா அடிமை செய்ய பாரித்து -உகந்து பெற்றார் ஆழ்வார்-

ஆறாம் திருவாய்மொழியில் கீழ் இவர் ஸ்மாரக தர்சனத்தாலே அத்யந்தம் அவசன்னரான அளவிலே
ஆஸ்வாச கரமாம்படி ஈஸ்வரன் தன் குணங்களை பிரகாசிப்பிக்க -அவனுடைய
ஆச்சர்ய பிரகாரத்தையும்
அனுபஹித பந்யத்தையும்
உதார குண ஸ்வ பாவத்தையும்
அதிசயித சீலத்தையும்
ஆஸ்ரித பவ்யதையையும்
அத்யந்த வ்யாமோஹத்தையும்
வ்யாமோஹ பர்யவசானத்தையும்
அபேஷா நிரபேஷமான நித்யாதரத்தையும்
அனுபாவ்ய ஸுந்தர்யத்தையும்
அபி நிவேச ஸைக்ர்யத்தையும்
அனுசந்தித்து இந்த குணங்களினுடைய வைலக்ஷண்ய அனுபவத்தால் பிறந்த ப்ரீதி அதிசயத்தாலே
மிகவும் சிதிலராகிறார் –

உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி
பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
தெருவு எல்லாம் காவி கமழ் திருக் காட்கரை
மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே–9-6-1-

திருக் காட்கரையிலே எம்பெருமானுடைய-ஆச்சர்யமான செயல்களை நினைதொறும் என் மனம் உருகா நின்றது –என்கிறார்-

மனசு ஸைதில்யாம் மாற்றவோ -அபி நிவேசம் அகம் சுரிப்படுத்தவோ -அனுபாவ்ய குணாதிகனை விலக்கவோ-ஆஸ்ரய கரமான சாபல்யத்தை தவிர்க்கவோ –

போகம் -தட்டு மாறும் சீலம் காட்கரையிலே கரை அழிக்கும் -சேஷி சேஷ பாவம் -ஆராவமுத ஆழ்வான் -திரு மழிசைப்பிரான் -ஏதோத்த காரி போலவும் –

நினைதொறே–ஊரை நினையும் தோறும்-அழகினை நினையும் தோறும்-ஒரு ஊரும் வடிவும் இல்லாதாரைப் போலே தாழ நின்ற சீலத் தன்மையை நினையும் தோறும் –

———

நினைதொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும்
வினை கொள் சீர் பாடிலும் வேம் எனது ஆர் உயிர்
சுனை கொள் பூஞ்சோலைத் தென் காட்கரை என் அப்பா
நினைகிலேன் நான் உனக்கு ஆள் செய்யும் நீர்மையே –9-6-2-

வினை கொள் சீர் பாடிலும் வேம் எனது ஆர் உயிர்– வினை கொள் சீர் பாடிலும்-எனது ஆர் உயிர்–வேம்-
பாபங்களை விழுங்கும் -அபகரிக்கும் –பாவங்களைப் போக்குகின்ற கல்யாண குணங்கள்-என் ஒருவனையும் அழியா நின்றன –

அன்றியே
சீர் -என்று சீலமாய்-வினை -என்று செயலாய் –அதாவது சீலத்தின் கார்யமாய் தாழ நின்ற செயல்கள் -என்னுதல்

உனக்கு நான் ஆள் செய்யும் நீர்மை -நினைக்க -உருகி விட்டால் முடியாதே -முதல் அர்த்தம்
பகவானுக்கு ஆள் செய்கை நீர்மை இல்லையே -ஸ்வ பாவம் தானே –இங்கே அவன் ஆழ்வாரை மேலே இருத்தி கைங்கர்யம் செய்யும் நீர்மை -என்றவாறு –
நான் எனது -என்பதை நீர் நுமது வேர் முதல் -சொன்னால் போலே வார்த்தைப் பாட்டில் ஆவது இப்படி
நான் உனக்கு ஆள் செய்வது சொல்லி வைப்போம் -பரம பிரமாதா அன்றோ ஆழ்வார்-புரிந்த அந்தரங்கள் ஈடு மூலம் அறிவார்கள் -எம்பார் நிர்வாகம்

நினைகிலேன் நான் உனக்கு ஆள் செய்யும் நீர்மையே –நான் உனக்கு அடிமை செய்யும் வகை-நினைக்க மாட்டு கின்றிலேன்
வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம் -3-3-1- என்று இருந்தமையைத் தெரிவிப்பார் –நான் -என்கிறார்
வகுத்த சேஷி யானவன் இறைவன் ஆதலின் –உனக்கு -என்கிறார் –
அவன் தாழ நின்று புரிந்த செயல்களை விநயத்தாலே-ஆள் செய்யும் நீர்மை -என்கிறார்-
அவன் தமக்கு ஆள் செய்யும் நீர்மையை –தாம் ஆள் செய்யும் நீர்மை நினைகிலேன் -என்கிறார் –
இச் சொலவையும் இழக்க ஒண்ணாது என்று-நான் உனக்கு ஆள் செய்யும் நீர்மை என்பான் என்-
நீ எனக்கு ஆள் செய்யும் நீர்மை என்னாமல்-என்ன-இச் சொலவையும் இழப்பரோ பாவியார் -என்று பணிப்பர் எம்பார்-
நம் விதி வகையே வாட்டாற்றான் -ஆழ்வார் ஆசைப் பட்டதையே தனது விதி ஆக்கி வைத்தான் அவனும்

———

நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை
ஈர்மை செய்து என் உயிராய் என் உயிர் உண்டான்
சீர் மல்கு சோலைத் தென் காட் கரை என் அப்பன்
கார் முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலன்–9-6-3-

அடிமை கொள்ள என்று புகுந்து-தன் படிகளைக் காட்டி-எல்லா வற்றையும் கொள்ளை கொண்ட தன்மைகளை
நினைக்க முடியாதவனாக இருக்கிறேன் –என்கிறார் –

என் உயிராய் என் உயிர் உண்டான் –போக்தாச்ச பிரபுரேவச -எனக்குத் தாரகன் போலே புகுந்து என்னை அழித்தான் –அழிக்குமவனாகப் புகுரில் இவர் இசையாரே –
இருவரும் கூட உண்ணப் புகுந்து உண்பவன் தானே ஆனான் –

அன்றிக்கே
என் உயிராய் என் உயிர் உண்டான் -என்பதற்கு-தன்னால் அல்லது சொல்லலாதபடி என்னைச் செய்து என்னை உண்பதும் செய்தான் -என்றுமாம் –

கார் முகில் வண்ணன்-
என்னுடைய சேர்க்கையாலே–பக்தி பூமா அன்றோ இவர் -கடலை முழுக்கப் பருகின காளமேகம் போலே ஆயிற்று அவன் வடிவில் செவ்வி இருப்பது –
தூ நீர் முகில் போலே தோன்றாயே-8-5-3-என்று இவர் ஆசைப்பட்ட படியே தோற்றி அனுபவிப்பித்து பேர நின்ற பின்பு-அத் தலையில் செவ்வி இருந்த படி –

——–

அறிகிலேன் தன்னுள் அனைத்து உலகும் நிற்க
நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான்
வெறி கமழ் சோலைத் தென் காட்கரை என் அப்பன்
சிறிய என் ஆர் உயிர் உண்ட திரு வருளே–9-6-4-

முறை தவறாமல் சர்வ ஆதார பூதன் -சர்வாந்தராத்மா -ஆனவன் -அதி ஸூத்ரனான என்னுடன் கலந்து அனுபவித்த
சீல அதிசயத்தை அளவிட்டு சொல்ல அறியேன்–சிறியேனுடைச் சிந்தையுள் நின்று ஒழிந்தார் -8-7-8- என்றதனைச் சொல்லுகிறார் –

சிறிய என் ஆர் உயிர் உண்ட- சிறியேனுடை நல் உயிரை -என்றது-மிக்க அற்பனான என்னுடைய ஆத்துமாவை -என்றபடி –
அவனுடைய மேன்மைக்கு எல்லை காண ஒண்ணாததைப் போன்று- தம்முடைய சிறுமைக்கும் எல்லை இல்லையாக நினைத்து இருக்கிறார் –

ஆர் உயிர் – இவர் தம்மை சிறுக நினைத்திரா நின்றார்-அவன் இவரை நித்ய ஸூரிகட்கும் அவ்வருகாக நினைத்திரா நின்றான்-
இவர் தம்மை சிறுக நினைத்தால் பயன் என் –இவர் தம்மைத் தாம் அறிந்தாரோ -என்று-மேல் விழா நின்றான் – யானே என்னை அறிய கிலாத என்று அன்றோ இவர் இருந்தார் –

சிறிய என் ஆர் உயிர் உண்ட திரு வருளே அறிகிலேன் – இது முன்னம் ஸ்வரூப ஞானத்தால் செய்தது ஓன்று அன்றே –
ஸ்வரூப ஞானத்தால் விரும்பினால் அன்றோ ஸ்வரூபத்து அளவு நிற்பது –கழி பெரும் காதல் –முறையை அழிக்கும் அன்றோ –

———

திருவருள் செய்பவன் போல என் உள் புகுந்து
உருவமும் ஓர் ஆர் உயிரும் உடனே உண்டான்
திருவளர் சோலைத் தென் காட்கரை என் அப்பன்
கருவளர் மேனி நம் கண்ணன் கள்வங்களே–9-6-5-(எம் கண்ணன் கள்வங்களே-பாட பேதம் )

என்னை அடிமை கொள்பவனைப் போல் புகுந்து-என் உடலையும்-உயிரையும் கொண்டான் –எனக்கும் ஹேயமான சரீரமும் –அத்துடன் வியாப்தமான ஆத்மாவையும் –
ஹேய உபாதேய விபாகம் அற – ஒருவனுடைய-கழி பெரும் காதல் -இருந்தபடி என் –என்று ஆச்சர்யப் படுகிறார்-திருவருள் தான் பெற்றானாய் இரா நின்றான்-
ஆதலின் –திருவருள் செய்பவன் போலே -என்கிறார் –

கள்வங்களே– முகப்பில் ஒன்றாய்-முடிவில் ஒன்றாய் -இருக்கும் செயல்கள் –
1-அடிமை கொள்வாரைப் போலே புகுந்து-தான் ஏவப் படுகிறவனாய் -தாழ நிற்கையும் –
2-விரோதியான சரீரத்தை -கழித்து தர என்று புகுந்து- உடலையும் உயிரையும் வேறு படுத்து உணர்தலை-செய்யாது ஒழிகையும்-
3-இனிய பொருளாக புகுந்து தான் அனுபவிக்கின்றவன் ஆகையும்
4-என் பேறாகப் புகுவானாகப் புகுந்து தன் பேறாகத் தலைக் கட்டுகையும்
5-இவை முழுதும் வடிவில் வேறுபாட்டால் தோற்றி இருக்கையும் ஆம் –க-ருவளர் மேனி
இத்தலையில் ஆத்தும அபகாரத்தை தவிர்த்தது-தன் ஆத்தும அபகாரத்தாலே ஆயிற்று –

————

எம் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும்
அம் கண்ணன் உண்ட என் ஆர் உயிர்க்கோது இது
புன் கண்மை எய்திப் புலம்பி இராப்பகல்
என் கண்ணன் என்று அவன் காட் கரை ஏத்துமே-9-6-6-

அவன் வஞ்சகன் என்று அறிந்தால்-அதிலே கிடந்தது நெஞ்சாறல் படாமல்-நீர் அகன்றாலோ -என்ன
அவனைக் கண்டவாறே–அதி வியாமுக்தன் வியாபாரங்கள்-ருஜுவாய் நேர்மையாய் இருக்கும் -அவ் வஞ்சகனை மெய் என்று இருப்பன் -என்கிறார் –

எனக்குச் செம்மாய் இருக்கும் -என்றதற்கு-எனக்கு சேமமாய் இருக்கும் என்று ஒரு தமிழ் புலவர் பொருள் கூறினார் –

புன் கண்மை – பேகணிப்பு-தீனம் -சிறிய ஞானம் இரண்டு அர்த்தங்கள் –பொல்லா நோக்கை உடைத்தாய் என்கை–புன் கண் -புல்லிய அறிவு-கண் -அறிவு-
பட்டர் -இதற்கு-புன் கண்மை எய்தி--மீளவும் அறிவை அடைந்து-மீள உயிர்ப் பெய்து -என்று ஆயிற்று நிர்வஹித்து போவது
இது தானே சொல்லோடு சேர்ந்து இருக்கிறது இல்லை–கேட்கப்பட்ட இந்த பொருளோடு -சொல்லும் சேரப் பொருந்தி வழக்காறாம் படி எங்கனே-
என்று ஆராயா நிற்கச் செய்தே -நஞ்சீயர் நம்பிள்ளை உடன் ஆராயா நிற்கச் செய்தே –
கோதான இது மீளவும் புன் கண்மை எய்தும் போது (சிறிது ஞானம் பெற்று) மீளவும்-உயிர்ப் பெய்தது ஆக வேண்டும் அன்றோ –
பொருளின் தன்மையாலே தன்னடையே வரும் என்று-நான் -நம்பிள்ளை -சொன்னேன்–சீயர் போர உகந்து அருளினார் -என்று அருளிச் செய்வர் –

————-

காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–9-6-7–உயிரான பாசுரங்கள் இது முதல் மூன்றும் –

திவ்ய தேசம் -பிரதானம் -இங்கே நித்ய வாசம் செய்வதால் அவனுக்கும் கும்பீடு -அடிமை கொள்வாரைப் போலே புகுந்து-என் உயிரை நேராக உண்டு-
என் ஆர் உயிர் கோள் உண்டே -கோட் குறை பட்டது–பின்னையும் உண்ணாதாரைப் போலே-இருக்கும் -என்கிறார் –

ஈஸ்வரன் தனக்கேயாய் இருக்கும் -அசித்துப் பிறக்கேயாய் இருக்கும் -ஆத்மா தனக்கும் பிறர்க்கும் பொதுவாய் இருக்கும் —
என்ற முற்பட்ட நினைவு -அங்கண் இன்றிக்கே அசித்தைப் போலே தனக்கே யாக எனைக் கொள்ள வேணும் என்கிறது நமசாலே
அதாவது போக தசையில் ஈஸ்வரன் அழிக்கும் போது நோக்க வேணும் என்று அழியாது ஒழிகை –
அழிக்கைக்கு ஹேது கீழே சொல்லிற்று -மேலும் சொல்லும் -(பிரணவத்திலும் -நாராயணாயா என்றத்திலும்) —சூர்ணிகை -91-93-
அகாரம் இல்லாத பிரணவம் இல்லையே -அவன் விருப்பம் செய்வதே அடிமைத் தன்மை -திரு உள்ளம் படியே வேதம் சொல்லும் –
எதிர் விழி கொடுக்கும் பார தந்தர்யம் -அவனுக்கு பிடித்ததே செய்ய வேண்டும் –
அசித்து போலே பாரதந்தர்யம் -அவனுக்கே என்ற நினைவால் -அவன் அனுபவம் வளர்க்க -இதுவும் வேண்டுமே -அவன் போகம் அழிக்க கூடாதே –

ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால் –அடிமை கொள்வாரைப் போலே புகுந்து-என்னை வெறுந்தரை ஆக்கின-ஆச்சர்யத்தை உடையவனாலே
மேலே –திருவருள் -என்று மறைத்துக் கூறியதை-வெளியிடுகிறார் – கிட்டின போது தாழ நின்று மின்மினி பறக்க-செயல் புரிந்த ஆச்சர்யத்தை நினைந்து -மாயனால் -என்கிறார் –

——

கோள் உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான்
நாளும் நாள் வந்து என்னை முற்றவும் தானுண்டான்
காள நீர் மேகம் தென் காட் கரை என் அப்பற்கு
ஆள் அன்றே பட்டது என் ஆர் உயிர் பட்டதே–9-6-8-

அபேஷா நிரபேஷமாக -இவருக்கு என் ஆத்மா பட்ட பாடே —ஆட் -பட்ட பாடே–ஹர்ஷத்தாலே -இதில் -ஈடுபட்டு அருளிச் செய்கிறார் –தரைப் பட்டு முன்பு பேசினார்

நாள் தொறும் என்னை அனுபவியா நின்றாலும்-பெறாப் பேறு பெற்றால் போலே அனுபவிக்கிற இவனுடைய-குணத்தின் தன்மையை-பொறுக்க ஒண்ணுகிறது இல்லை-என்கிறார்

கோள் உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான்-(இதற்குப் பலபடியாக அருளிச் செய்வர் –)வெறிதே அருள் செய்வர் -8-7-5- எந்நன்றி செய்தேனோ -4-5-9-
அன்றிக்கே –
இதற்கு முன்பு இப்படி பட்டது ஒரு சரக்கினைப் பெற்று அறியாதானாய் –பக்கம் நோக்கு அறியான் -2-5-2- போலேயும்
அனந்தன் பாலும் -பெரியாழ்வார் திருமொழி -5-4-8- போலேயும் என் பக்கல் காதலை உடையவன் ஆனான் -என்னுதல் –
அன்றிக்கே –
என்னால் தான் கொள்ளப் படாது இருக்க-தான் யென்னைக் கைக் கொண்டான் -என்னுதல் –

நாளும் நாள் வந்து என்னை முற்றவும் தானுண்டான் – ஒரு நாள் அனுபவித்து-இனி இது நாம் அனுபவித்தது அன்றோ -என்று-கை வாங்கி இருந்தானோ
நாள் தோறும் நாள் தோறும் வந்து – அவனுடைய அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதம் இருக்கிறபடியைத் தெரிவித்தபடி –முற்றவும் தானுண்டான் –
அணு அளவிதான இவ் உயிரை-எங்கும் பரந்து இருக்கிற தான்- விளாக்குலை கொண்டு அனுபவித்தான் என்கிற இது-தனக்கு ஏற்றமாம் படி ஆதரியா நின்றான் –
சிறிய என் ஆர் உயிரை -என்ற அது தம்மை பார்த்து-இது அவனுடைய அனுபவத்தைக் கொண்டு சொல்கிறார் –

காள நீர் மேகம் தென் காட் கரை என் அப்பற்கு – கறுத்த நீர் கொண்டு எழுந்த-காளமேகம் போலே இருக்கிற வடிவை உடையவனாய்
அம்மேகம் தான் மழை பெய்யும் இடத்திலே படிந்தாப் போலே-திருக் காட் கரையிலே வந்து-அண்மையிலே எழுந்து அருளி இருக்கிற-நிருபாதிக பந்துக்கு –
வடிவழகு அது
ஊர் அது
தனக்கு என்ன குறை உண்டாய் இப்படி படுகிறான் –

———–

ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது
பேர் இதழ்த் தாமரைக் கண் கனிவாயது ஓர்
கார் எழில் மேகம் தென் காட் கரை கோயில் கொள்
சீர் எழில் நால் தடம் தோள் தெய்வ வாரிக்கே–9-6-9-

நீரேயோ இப்படிப் பட்டீர்-குண அனுபவத்தையே பொழுது போக்காக உடைய
நித்ய ஸூரிகளும் படும் பாடு இது அன்றோ -என்ன-அவர்களும் தான் நான் பட்டது பட்டார்களோ –என்கிறார் –

அபி நவ அபிமத  விஷய ஈடுபாடு-அன்றோ ஆழ்வாரது -மூத்தவர் நித்ய ஸூரிகள் -யத்ர பூர்வே சாத்யா சந்தி தேவா –

பகவான் உடைய குணங்களுக்கு நிலம் அல்லாததாய் இருக்கிற-இவ் உலகத்திலே நான் பட்ட பாட்டினை-நித்ய விபூதியில் உள்ளவர்கள் தான் பட்டார்களோ -என்கிறார் –
இங்கு எனது உயிர் பட்டது-அங்கு ஆர் உயிர் பட்டது –என்று அருளிச் செய்வர் எம்பெருமானார்-எல்லார் செய்வதும் குண அனுபவம் தானே –
அங்கனம் இருக்க இவர்க்கு இவ்வாசி கூறினபடி என் -என்று நான் -நம்பிள்ளை -கேட்க
திருமணம் ஆன புதுப் பெண்ணுக்கு கணவனுடைய கைகள்-அவள் மேலே பட்டவாறே வேர்ப்பது விடுவது ஆமாறு போலே
இவர் அனுபவத்தில் புதியர் ஆகையாலே வருகிறது காணும் -என்று ஜீயர் அருளிச் செய்வர் –

———

வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10-

ஆச்சார்ய சம்பந்தம் ஹேது எனக்கு வேணுமே -அவனுக்கு அது தேவை இல்லை -அநாதி காலமாக அன்றோ -சொத்தை அடைய ஸ்வாமி

பசித்தவன் சோறு கண்டால் போல என்னை போல் அன்றிக்கே தாஹித்தவன் தண்ணீர் கண்டால் போலே-அன்றோ அவன் -பூர்ணமாக பருகினான்

முற்றப் பருகினான் –தன் குணங்களையும்-செயல்களையும்-காட்டி-என்னை நீராக்கி-குறை சிறிதும் இல்லாதபடி பருகினான் –

தஸ்ய தத் வசனம் ஸ்ருத்வா ராமோ வசனம் அப்ரவீத்-வசஸா சாந்த்வயித்வா ஏனம் லோசநாப்யம் பிபந்நிவ-யுத்தம் -16-65-
ஸ்ரீ ராமர் -அந்த விபீஷணன் உடைய அந்த வார்த்தையைக் கேட்டு-அவனை வார்த்தையால் சமாதானம் பண்ணி-கண்களால் பருகுவார் போலே

அத்யந்த அல்பன் -அவன் அபரிச்சின்ன ஸ்வ பாவன்-கோனாரை அடியேன் -அஹம் த்வா-சர்வஞ்ஞன் சர்வ சக்தன் -அஞ்ஞான அசக்தன் -தான் என்னை

கார் ஒக்கும் காட் கரை அப்பன்-ஆழ்வார் திரு மேனி உட்க்கொண்ட –கரு வளர் -ஸ்வாமி பெற்ற புகராலே திவ்ய தேசமும் சோலைகளும்-திருவளர் சோலை ஆயிற்றே

ஆழ்வாருடையது திருக்கோளூர் போல் பெருமானுடைய உண்ணும் சோறு பருகும் நீர் இருக்கும் படி அன்றோ இத் திருவாய் மொழி

———

கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக்
கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
வடிவு அமை ஆயிரத்து இப்பத்தினால் சன்மம்
முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே–9-6-11-

நிகமத்தில்- இத் திருவாய் மொழியைக் கற்பார்க்கு-பிறவி முடிந்து-அதற்கு அடியான சம்சாரமும் நசிக்கும் –என்கிறார் –

கொடி மதிள் தென் குருகூர்ச் –கம்சனை வென்ற வெற்றிக்கு கொடி கட்டிற்று-திரு நகரியிலே ஆயிற்று–ஸ்வாமியின் வெற்றிக்கு உரிய அடியார் இருந்த இடத்தே-அன்றோ கொடி கட்டுவது-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -81-உறுகின்ற கன்மங்கள் மேலன-வீடுமின் முற்றவும் -1-2-

March 19, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

துறையடைவு-வெறி விலக்குத் தொடங்கிய தோழி இரங்குதல் –-இவள் குழலில் திருத்துழாய் சூட்டவும் -பகவத் ப்ரசாதம் தருவதும் –திவ்ய தேச வாசமோ தானே பரிகாரம் இவளுக்கு பற்று அற்று புல்க வேண்டுமே-வீடுமின் முற்றவும் -1-2-இதன் விவரணம்-பற்றிலையாய் அவன் முற்றில் அடங்க வேண்டுமே –முன்னிலை படர்க்கையாய் -ஓர்ப்பிலராய் பண்ணுகிறீர்களே -வ்ருத்த ஸ்த்ரீ தோழி சொல்லும் பாசுரம்-விரஹ அக்னியால் தளர்ந்து உள்ள தலைவி –ப்ரபந்ந ஜன கூடஸ்தர்-அடிக்கீழ் அமர்ந்து புகுந்து இருக்க வேண்டுமே-திருவேங்கடம் குளம் -திருவடி -சரணம் -நீராடப்போதுவீர் -ப்ரஹ்ம அனுபவம்-ஆட்டவும் -அவஹாகிக்கப் பண்ண வேண்டும்-இவளை -வைலக்ஷண்யம் -விசேஷணம் இல்லாமல் )

இருளும் போய் முடிகி இவளும் மோஹித்து கிடக்க – இவள் தசையையும் காணா நிற்கச் செய்தே பந்து வர்க்கத்தில் உள்ளார் –க்ரமத்தில் பரிஹரிக்கிறோம் -என்று ஆறி இருக்க-இத்தைக் கண்டு இவளுடைய அவசாதம் இருந்த படி இது – ஸ்லாக்யதை இருந்தபடி இது – இப்படி இருக்க இவர்கள் ஆறி இருக்கைக்கு
இவர்கள் நேர் கொடு நேரே இவளைப் பெற்றவர்கள்-அன்றோ -என்று இங்கனே ஒரு மூதறிவாட்டி சொல்லுகிறாளாய் இருக்கிறது –

இப்படி ஆர்த்தரான இவரை ஆஸ்வஸிப்பிக்க வேணும் என்று பரிவரானவர்கள் தங்கள் பிரிவின் கனத்தாலே முகாந்தரங்களாலே இவர் ஆர்த்தியை சமிப்பிக்க வேணும் என்று உத்யோகித்து இவர் பிரகிருதி அறிந்தவர் இவ்வார்த்தி சமிக்கும் ப்ரகாரங்களிலே இழியாதே ப்ரகாராந்தரங்களிலே இழிந்து என்ன கார்யம் செய்கிறார் என்று தம்மிலே வெறுத்து உரைத்த பாசுரத்தை-தலைவி தளர்த்தி கண்டு தாயார் முதலானார் வெறி யாடலுற தலைவி நினைவு அறிந்த பாங்கி வெறி விலக்க லுற்ற அவர்கள் கேட்கும்படி தன்னில் உரைத்த பாசுரத்தாலே (முன்னிலை படர்க்கை ) அருளிச் செய்கிறார் –

உறுகின்ற கன்மங்கள்  மேலன ஒர்ப்பிலராய் இவளைப்
பெறுகின்ற தாயர்  மெய்ந்நொந்து  பெறார் கொல் துழாய் குழல் வாய்த்
துறு கின்றிலர் தொல்லை வேங்கடமாட்ட வுஞ் சூழ் கின்றிலர்
இறுகின்றதால் இவள் ஆகம் மெல்லாவி எரி கொள்ளவே
– – -81 –வெறி விலக்குவிக்க நினைந்த தோழி இரங்கல் —

ஓர்ப்பு இலர் ஆய்–(இவளுக்கு நேர்ந்துள்ள நோயின் தன்மையையும் அதன் காரணத்தையும்
அதனைத் தீர்க்கும் உபாயத்தையும்) ஆராய்ந்து தெளிதலில்லாதவர்களாய்
உறுகின்ற–(இவள் தாய்மார் விடாமல்) பொருந்தி நடத்துகிற
கன்மங்கள்-(வெறியாட்டு முதலிய) காரியங்கள்
மேலன–மேன்மேலும் உண்டாகாகின்றன;
இவளை பெறுகின்ற தாயர்–இவளைப் பெற்று வளர்க்கிற தாய்மார்.
மெய் நொந்து பெறார் கொல்–உடம்பு வருந்திப் பெற்றாரில்லையோ?
குழல்வாய்–(இவளது) கூந்தலிலே
துழாய்–(எம்பெருமானது) திருத்துழாயை
கூறுகின்றிலர்–சூட்டுகின்றாரில்லை;
தொல்லை வேங்கடம்–பழமையான திருவேங்கட மலையிலே
ஆட்டவும்–இவளைக் கொண்டுபோய்ச் சேர்க்கவும்
சூழ்கின்றிலர்–ஆலோசிக்கின்றாரில்லை;
இவள் ஆகம்–இவளது உடம்பு
மெல் ஆவி எரி கொள்ள–மென்மையான உயிரை விரஹத் தீக் கவர்ந்து கொள்ளும்படி
இறுகின்றது–முடிகிறவளவாகா நின்றது.

வீடு செய்து மற்றெவையும் மிக்க புகழ் நாரணன் தாள்
நாடு நலத்தால் அடைய நன்குரைக்கும் -நீடு புகழ்
வண் குருகூர் மாறன் இந்த மா நிலத்தோர் தாம் வாழப்
பண்புடனே பாடி யருள் பத்து--2-கீழ் எம்பெருமான் உடைய பரத்வத்தை அனுபவித்தவர் அனுபவ ஜனித ஹர்ஷ ப்ரகர்ஷத்தாலே போதயந்த பரஸ்பரம் -பண்ணி அல்லது தரிக்க மாட்டாதே துணைத் தேட்டமாய்த்து ஈடானாரை சம்சாரத்தில் காணாமையாலே அவர்களைத் திருத்தி யாகிலும் சேர்த்துக் கொள்வோம் என்று பரோபதேச பிரவ்ருத்தராய் பகவத் வ்யதிரிக்த விஷயங்களின் தோஷ பாஹூள்யத்தையும் பகவத் குண வைலஷண்யத்தையும் உபதேசியா நின்று கொண்டு
அப்ராப்த விஷயங்களை விட்டு பிராப்த விஷயமான எம்பெருமானை பஜியுங்கோள்-என்கிற
வீடுமின் முற்றத்தின் அர்த்தத்தை வீடு செய்து இத்யாதியாலே அருளிச் செய்கிறார்–வீடுமின் –என்று- த்யாஜ்ய உபாதேய- தோஷ குண -பரித்யாக சமர்ப்பண- க்ரமத்தை சாலம்பன மந்த்ரமாக உபதேசித்து -என்று ஆச்சார்ய ஹிருதய -சூர்ணிகை -219–பாட்டுக்கு கிரியையும் பத்துக்கு கருத்தும் -என்கையாலே பத்துப் பாட்டுக்கும் உயிர்பாட்டு பிரதானமாய் இருக்கும்- பாட்டுக்குக் கிரியையும் பத்துக்குக் கருத்தும் போலே நூற்றுக்கு உபதேசப் பத்து –ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -216

உறு கின்ற இத்யாதி –இவர்கள் நிரூபித்து செய்யக் கடவது ஒரு கார்யம்  இல்லையோ -என்கிறாள் –உறுகின்ற கன்மங்கள்  மேலன ஒர்ப்பிலராய்-மேலே வரக் கடவனவாய் – அவை தான் வர்த்தமானம் போலே-இருக்க வந்து கிட்டி நிற்கிற கார்யங்களை ஒன்றும் ஓரக் கடவார் இன்றிக்கே –இவளைப் பெறுகின்ற தாயர்  –இவளைப் பெற்றவர்களுக்கு எப்போதும் ஒக்க வயிறு எரிந்தபடி இருக்க வேண்டாவோ –ஒரு லாபாலாபங்கள்  வேணுமோ –இவள் தானாக அமையாதோ –மெய்ந் நொந்து  பெறார் கொல் –இவளைப் பெற்றவர்கள் உடம்பு நொந்து அன்றோ பெற்றது-வளர்த்துக் கொண்ட இத்தனையோ –(தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ -பெரியாழ்வார் )-என் தான் இவள் இப்படி சொல்லுகைக்கு இவர்கள் செய்தது என் என்ன –துழாய் குழல் வாய்த் துறு கின்றிலர் –
மண்ணாயினும் கொண்டு வீசுமினே  -என்ற அளவும் போய் –அது கடக்க நின்று வீசுமளவும் போராதே –
அது தன்னையே கொண்டு வந்து குழலிலே -நிரம்ப-துறுக்க வேண்டும்படி யாயிற்று தசை முடிகின படி –தொல்லை இத்யாதி –இக் குடிக்கு பழையதாக செய்து போரும் பரிஹாரத்தையும் செய்கிறிலர்கள்-வேங்கடமாட்டவும்–கல்லும் காடுமாய் இருக்கிறது அடைய ஒரு தடாகம் போலே காணும் இவளுக்குத் தோற்றுகிறது –ஏஷ ப்ரஹ்ம பிரவிஷ்டோஸ்மி (பாரதம் )-போலே–சூழ் கின்றிலர் –அது தான் செய்யவும் வேண்டா –உபக்ரமிப்பதும் செய்கிறிலர்கள் –மந்த்ரிப்பதும் (ஆலோசனையும் )செய்கிறிலர்கள்- பகவத் விஷயம் ஸ்பர்ச வேதி யாகையாலே -அடி இட்ட போதே தொடங்கி பலிக்கும் இறே-நோவையும் அறிந்து பரிஹாரம் இன்னது என்று அறிந்து -செய்ய வேண்டாவோ என்ன –இறு கின்றது  இவளதாகம் –இத்தனை க்ரமம் பொறுக்குமோ -இவள் பிரகிருதி –இற்றிற்று அழிந்து போகா நின்றது–மெல்லாவி எரி கொள்ளவே –மிருதுவான ஆத்ம விரஹ அக்னி கொளுத்தி வேவா நிற்க க்ரமம் பார்த்து இருக்கக் கடவதோ –

வெறி விலக்கு-ஒர்ப்பிலராய் -இனி இவளுக்கு ஆகக் கடவது-நிலைமைகளை ஆராயத்தவர்களாய்
வேங்கடமாட்டவும் -திவ்ய தேசமே இவள் தாபம் தீர்க்கும் தடாகம் என்றவாறு-வேங்கடமாட்ட வுஞ் சூழ் கின்றிலர்-திருவேங்கடமலை யாத்திரை கூட்டிச் செல்ல பிரார்த்தித்து அத்தை நிறைவேற்றாமல் உள்ளீர்களே-திருவேங்கடத்தில் இவளை நடையாடச் செய்ய எண்ணு கின்றிலரே- இவர் ஆற்றாமையைத் தணிக்கும் வழிகளில் இழியாமல் -வேறு வழிகளில் இழிவதே – பகவத் பிரசாதமும் திவ்ய தேச வாஸமுமே இவர் ஆற்றாமைக்கு பரிஹாரம் இவை செய்யாமல் இவர் தளர்ச்சி மேன்மேல் மிகுகின்றது -என்றவாறு–வெறி விலக்கத் தொடங்கிய தோழி இரங்கிக் கூறும் பாசுரம் இது. தலைமகள், திருமாலாகிய தலைமகன் விஷயமாக வேட்கை நோய் கொண்டு மேனி மெலிந்து வடிவு வேறுபட, அது நோக்கிய தாய்மார் ‘இது முருகக் கடவுள் ஆவேசித்ததனாலானது என்று மாறாகத் துணிந்து அதற்குப் பரிஹாரமாக வேலனைக் கொண்டு வெறியாடுவித்தல், ஆடு பலிகொடுத்தல், கள்ளிறைத்தல், இறைச்சி தூவல், கருஞ்சோறு, செஞ்சோறு வைத்தல் முதலிய காரியங்களை இடைவிடாது ஒன்றன் மேலொன்றாகச் செய்யத் தொடங்க, நோயொன்றும் மருந்தொன்று மாதலால், தான் காதலித்த நாயகனுடைய தகுதிக்கு ஏற்றிராத அக்காரியங்களை நோக்கி நாயகி மேன்மேலும் மிக வருந்த, அது நோக்கித் தலைவி நினைவறிந்து வெறிவிலக்கவந்த தோழி, அத்தாய்மார் செவிப்பட
முன்னிலைப் படர்க்கையாகக் கூறியதாயிது.

இப்போது அவளுக்கு நேர்ந்துள்ள நோயின் ஸ்வரூபத்தையும் அதன் காரண மின்னதென்பதையும்
அதனைத் தீர்க்குமுபாயம் இன்னதென்பதையும் ஆராய்ந்து தெளிய கில்லாத இவள் தாய்மார் ஓயாது நடத்துகிற வெறியாட்டு முதலிய காரியங்கள் மேன்மேலும் உண்டாகாநின்றன; அந்தோ! இவளைப்பெற்றதாய் பெறுகின்ற பொழுது மெய்ந்நொந்து பெற்றவளாயும், வளர்க்கின்ற செவிலித்தாயார் தாம் தாம் வருந்திப் பிள்ளை பெற்றவராயுமிருத்தால் இவள் பிழைக்கும் வழியிலே முயலாது இங்ஙனம் இவளை இழக்கைக் குறுப்பான வழியல்லாவழியிலே தலையிடுவார்களோ? விபரீதமான காரியங்களையே இவர்கள் செய்யக் காண்கையாலே இவளை மெய்ந்நொந்து பெறாதே எங்கேனும் விலைகொடுத்து வாங்கினாபோலும். எம்பெருமானது திருத்துழாயை முடியிறச் சூட்டுதலும் அவனது போகஸ்தானமான திருவேங்கடமலைக்கு அழைத்துக் கொண்டு போதலுமே இந் நோய்க்கு ஏற்ற பரிஹாரமாயிருக்க அவையொன்றுஞ் செய்யக் காண்கிறீலோமே! ஸுகுமாரமான இவளது உயிரை விரஹாக்கி கவர்ந்து கொள்ளும்படி இவட்குத் தளர்ச்சி மேன்மேல் மிகுகின்றதே! என்ன பரிதாபம்!! என்றாளாயிற்று.-“ஓர்ப்பு இலராய்” என்பதற்கு– ‘இவளுக்கு இனி ஆகக் கடவனவாய நிலைமைகளை ஆராயாதவர்களாய்’ என்று முரைப்ப- ‘இவளுக்கு இனி ஆகக் கடவனான நிலைமைகளை ஆராயாதவர்களாய்’ என்று முரைப்ப. எம்பெருமானுகந்தருளின திவ்யதேசத்தை
இவள் தாபந் தீர்ப்பதற்கு உரியதொரு பொய்கையாக நினைத்தனளாதலால் ‘வேங்கடம் ஆட்டவும்’ என்றது.அன்றி ‘வேங்கடமாட்டவும் சூழ்கின்றலர்’ என்பதற்கு- திருவேங்கடமலைக்கு இவளை யழைத்துக்கொண்டு வருகிறேனென்று பிரார்த்தனை பண்ணிக் கொண்டு அதற்கு உரிய ஆவேசத்தை ஆடுவிக்க ஆலோசிக்கின்றேனென்று பிரார்தனை பண்ணிக் கொண்டு அதற்கு உரிய ஆவேசத்தை ஆடுவிக்க ஆலோசிக்கின்றாரில்லை என்றாவது, திருவேங்கடத்திலே இவளை நடையாடச் செய்தற்கு எண்ணுகின்றிலர் என்றாவது உரையிடலாம். இம்மகளுக்கு இந்த நோய் தீர்ந்தால் இவளை
திருவேங்கடமலைக்கு அழைத்துக் கொண்டு வந்து ஸேவை பண்விக்கிறோம் என்று பிரார்த்தனை செய்து கொள்ளலாமே.-அது செய்யக் காணோமே; வீண் செயல்களே செய்து நோயை வளர்த்திக் காலங்கழிக்கின்றனரே! என்று இரங்கிக் கூறியவாறு.

உறுகின்ற கன்மங்கள் மேலன ஒர்ப்பிலராய் -இவள் நோயின் தன்மை ஆராயாதே உற்று நடத்துகிற வெறியாட்டு முதலான கருமங்கள் மேன் மேலுண்டாகா நின்றன–இவளைப் பெறுகின்ற தாயர் மெய்ந்நொந்து பெறார் கொல்-இவளைப் பெறுகிற அளவிலே தாயாருடம்பு நொந்து பெற்றவராகக் கூடும் வருந்திப் பெற்றார்கள் ஆகில் இவள் பிழைக்கும் வழியிலே முயலுவர் இறே-பிழைக்கும் வழி இல்லை இறே–துழாய் குழல் வாய்த் துறு கின்றிலர்-திருத் துழாயைக் குழல் இடத்திலே நிரம்பச் சூட்டு கிறிலர்–தொல்லை வேங்கடமாட்ட வுஞ் சூழ் கின்றிலர்-பழையதான பெரிய திருமலையிலே கொண்டு போகைக்கும் விரகு பண்ணு கிறிலர்–ஆட்டுதல் –-அங்கே நடையாடப் பண்ணுதல்–சூழ்தல் –-விரகு செய்தல்-அன்றியே – திரளுதல் ஆகவுமாம்–இறுகின்ற தாலிவாளகம்-இறுகின்றதால் இவள் ஆகம்
விரஹத்தாலே மெலிந்த இவளுடைய சரீரம் முடிகிற அளவாகா நின்றது –மெல்லாவி எரி கொள்ளவே –
மிருதுவான பிராணனை விரஹ அக்னி க்ரஸித்து சரீரமும் முடியா நின்றது –மெய் நொந்து பெறார் கோல்-என்று அந்வயம்இத்தால்-பிரிவின் கனத்தாலே நிரூபியாமல் பிரகாராந்தரத்தாலே இவள் ஆர்த்தியைப் பரிஹரிக்கத் தேடா நின்றார்கள்-பகவத் ப்ரஸாதமும்-தேச வாஸமுமே பரிஹாரமாய் இருக்க அது செய்யாமையாலே சத்தையும் குலையும்படி சைதில்யமே விஞ்சா நின்றது – இவர் அருமை அறிந்து வருந்திக் கிட்டினவர்கள் அல்லரோ இவர்கள் என்று ப்ரக்ருதி அறிந்த ஸூஹ்ருத்துக்கள் உரைத்த பாசுரமாய் இருக்கிறது

இப் பாட்டுக்கு உள்ளுறை பொருளாவது- ஆழ்வாரை ஆற்று விக்கவேணுமென்று ஞானிகள் தங்கள் பரிவால் வேறுசிலவிதமான பரிஹாரங்களைச் செய்யப்புக, இவரது தன்மையையயறிந்த அன்பவர்கள் இவராற்றாமையைத் தணிக்கும் வழிகளயில் இழியாமல் வேறு வழிகளில் இழிந்து என்னபயனென்று வெறுத்து உரைக்கும் வார்த்தையாம். பகவத் ப்ரஸாதமும் திவ்யதேச ஸரஸமுமே இவராற்றாமைக்குப் பரிஹாரம்; அவை செய்யாமையான் இவர்க்குத் தளர்ச்சி மேன்மேல் மிகுகின்றது என்கை.

ஸ்வா பதேசம்-இப் பாட்டால் தரிப்பிப்பார்க்கும் ரஷகனுக்கும் இடமறும்படி இவர் பகவத் விஷயத்திலே
அவஹாகித்த படியாய் சொல்கிறது – (பகவத் பிரசாதமும் திவ்ய தேச வாசமும் பரிகாரம் )உறுகின்ற இவளை -என்கையால் ஸ்லாக்கியதை
தொல்லை மார்க்கம்–திருவேங்கடமுடையான் திருவடி சேர்க்கும் பிரபத்தி மார்க்கம்–இவள் அருமை அறியாதவர்களாய் இருக்கிறார்களே –

தாத்பர்யம்--மோஹித்து கிடந்த நாயகியைக் கண்ட ஞான விருத்தை -மூதாட்டி – நோயை அறியாத பந்துக்களை வெறுக்கிறாள்-உடல் பிராணன் வருந்தி இருக்க இவளை உபேக்ஷித்தால் உத்தர -மேல் வரப்போகும் -ஆபத்தை ஆலோசிக்காமல்-திருத்துழாய் முடியில் சேர்க்காமலும்-திவ்ய தேச வாசம் சேர்க்கும் முறையையும் மெய் வருந்தி பெற்ற தாய் வயிறு எரியாமல் ஏதாவது ஒருபரிகாரம் செய்து மீட்கப் பார்க்காமல் இவர்கள் உபேக்ஷித்தார்கள்

1-2-வீடுமின் முற்றவும் -அவதாரிகை –

தத்வ பரமாயும் -உபாசனை பரமாயும் இறே மோக்ஷ சாஸ்திரம் தான் இருப்பது
அதில் தத்வ பரமாகச் சொல்ல வேண்டுவது எல்லாம் எல்லாம் சொல்லிற்று கீழில் திருவாய்மொழியிலே-
உபாசன பரமாகச் சொல்ல வேண்டுமவற்றுக்கு எல்லாம் ஸங்க்ரஹமாக இருக்கிறது இத் திருவாய் மொழி-

இத் திருவாய்மொழியை ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்தாராகத் திருமாலை யாண்டான் பிரபத்தி விஷயமாக்கி நிர்வகித்துக்கொண்டு போந்து எம்பெருமானாரும் அப்படியே அருளிச் செய்து கொண்டு போந்து, ஸ்ரீ பாஷ்யம் எழுதி முடித்த பின்னர்,பத்தி விஷயமாக அருளிச் செய்து கொண்டு போந்தார், பின்னர் எம்பாரும் அவ்வாறே அருளிச் செய்தார்.

தனக்கும் தன் தன்மை அறிவரியான்’ என்கிறபடியே, அபரிச்சின்ன -அளவிற்கு அப்பாற்பட்ட -விஷயம் –‘கொள்ள மாளா இன்ப வெள்ளம்’ அன்றே?-‘எப்பொழுதும், நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழிதோறும், அப்பொழுதைக்கு ‘அப்பொழுது என் ஆரா அமுதம்’ என்னும்படி-நித்ய அபூர்வமாய் இருக்கும்–இனி தம் அபிநிவேசமமோ என்றால், ‘காதல் கடலின் மிகப் பெரிதால்’ என்றும்,  ‘மண் திணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால்’ என்றும்,  ‘சூழ்ந்ததனிற் பெரிய என் அவா’ என்றும் சொல்லும்படி பெருகி இருந்தது; .

இனி நமக்கு போதயந்த பரஸ்பரத்துக்கு -ஆளாவார் யார் , (‘நாம் ஒருவருக்கு ஒருவர் உணர்த்திக்கொண்டு நுகர்தற்கு ஆளாவார் யாவர்?’ )என்று நினைந்து சம்சாரிகள் பக்கல் கண் வைத்தார்;
தாம் பகவத் விஷயத்தில் பிரவணராய் இருக்குமா போலே அவர்கள் சப்தாதி விஷயங்களில் பிரவணராய் இருந்தார்கள்
அவர்கள் அனர்த்தம் பரிஹரித்து அல்லது நிற்க ஒண்ணாதாய் இருந்தது
‘ஒருவனுக்கு வைணவத்துவமுண்டு, இல்லை என்னும் இடம் தனக்கே தெரியுங்காண்’ என்று  பலகாலும் அருளிச் செய்வர்;
அதாவது, பிறர் அநர்த்தம் கண்டால் ‘ஐயோ!’ என்று இரங்குவானாகில்,
அவன் ‘நமக்குப் பகவத் சம்பந்தம் உண்டு’ என்று இருக்க அடுக்கும்;
‘இத்தனையும் வேண்டும் பட்டிடுவானுக்கு’ என்று இருந்தானாகில்,
அவன் ‘நமக்குப் பகவத் சம்பந்தமில்லை’ என்று இருக்க அடுக்கும் என்றபடி.

1- சர்வேஸ்வரனுடைய நன்மையினையும்,
2-இவர்கள் பற்றியுள்ள விஷயங்கள் அல்ப அஸ்திரத்வாதி தோஷ துஷ்டங்கள் என்னும் இடத்தையும்
3-பற்றும் இடத்தில் வரும் அந்தராய பரிஹாரத்தையும்
4-பற்றும் இடத்தில் இன்று புதிதாக செய்ய வேண்டுவது ஓன்று இல்லை -பழைய
சம்பந்தத்தை உணர அமையும் என்னும் இடத்தையும் (‘அடங்குக உள்ளே’)
5-பற்றுவாருக்கு அனுசந்திக்கப்படும் மந்த்ரம் இன்னது என்னும் இடத்தையும் (‘வண்புகழ் நாரணன்’ )
6-அவனுடைய பஜநீயதையையும் அருளிச் செய்யா நின்று கொண்டு
7-இதர விஷய வைராக்ய பூர்வகமாக பகவத் பக்தியைப் பண்ணி ஆஸ்ரயியுங்கோள் என்று
பர உபதேச ப்ரவ்ருத்தராகிறார் –

தத்வ ஹிதங்கள் இறே சாஸ்திரங்களில் ப்ரதிபாதிக்கிறது –
ஹிதமாவது அலவ்கிக புருஷார்த்த சாதனம் என்பதால் புருஷார்த்தம் ஹித்துக்குள்ளே சொருகி இறே இருப்பது
பூர்வ த்விகம் -தத்வம் நிரூபணம் -உத்தர த்விகம் -ஹித நிரூபணம் –
அந்த சாயையிலே முதல் திருவாய் மொழி தத்வ நிரூபணம் -இரண்டாம் திருவாய் மொழி ஹித நிரூபணம்
வீடுமின் முற்றவும் -1-சம தமாத் யுபேத ஸ்யாத் -ஸூ த்ரார்த்தம்
மின்னின் நிலை 2– வைராக்ய பாத அர்த்தம்
புல்கு-4 -என்று பகவத் அனுசந்தானத்துக்கு ப்ரீதி ரூபத்வம்
அற்றது பற்று எனில் –உற்றது வீடு உயிர் -ஞான யோகத்தால் ஆத்ம சாஷாத்காரம் கிட்டினால் அங்கே தாழாமல் இருக்க உபதேசம்

முதல்பாட்டில் -வ்யதிரிக்த விஷயங்களை -வேறுபட்ட பொருள்களை விட்டு, சர்வேஸ்வரன் பக்கல் ஆத்துமாவைச் சமர்ப்பிக்க இசைமின்,’ என்றார்;
இரண்டாம் பாட்டில், ‘வ்யதிரிக்த விஷயங்களினுடைய தோஷ தர்சனம் பண்ணவே விடலாம்,’ என்றார்;
மூன்றாம் பாட்டில்,-த்யாஜ்ய அம்சத்தை – விடுந்தன்மையினைச் சுருங்க அருளிச் செய்தார்;
நான்காம் பாட்டில் பற்றப் படுகிற விஷயத்தினுடைய நன்மையினை அருளிச் செய்தார்;
ஐந்தாம் பாட்டில், பற்றுமிடத்தில், வரும்-அந்தராய பரிக்ரஹத்தை – தடைகளை நீக்கும் வழியினை அருளிச் செய்தார்;
ஆறாம் பாட்டில், அவன்-சங்க ஸ்வ பாவன்- அன்பே உருவமானவன்,’ என்றார்;
ஏழாம் பாட்டில், ‘சம்பந்த ஞானம் உண்டாகவே பொருந்தலாம்,’ என்றார்;
எட்டாம் பாட்டில், ‘வேறு உபகரணம் தேட வேண்டா; அவன் தந்த உறுப்புகளை அவனுக்கு ஆக்க அமையும்,’ என்றார்:
ஒன்பதாம் பாட்டில், ‘அப்படிச் செய்யவே, -பஜன விரோதிகள்– வழிபாட்டிற்குத் தடையாக உள்ளவை எல்லாம்
தன்னடையே விட்டுப் போம் ’ என்றார்;
பத்தாம் பாட்டில்,-பாசனத்துக்கு ஆலம்பமான மந்திரம் இன்னது என்றார்;
முடிவில், ‘இவைதாம் வாய் வந்தபடி சொன்னவை அல்ல; சேதனருடைய -ஹிதத்துக்கு ஈடாக -நன்மைக்குத் தக
ஆராய்ந்து சொல்லப்பட்டவை,’ என்கிறார்.
அன்றி, ‘இவை தாம் ஹித தமமாய் இருப்பன ஆகையாலே, எப்போதும் ஒக்க ஓரப் படுவன,’ என்கிறார் என்னலுமாம் -.

இப்படி சர்வ ஸ்மாத் பரனானவனே ஆஸ்ரயணீயன் ஆகையாலே 1-ஆஸ்ரயண ரூபமான பகவத் பஜனத்துக்கு உபயுக்தமான தத் இதர சகல தியாகத்தையும் -2-பஜன பிரகாரத்தையும் 3-அஸ்தைர்யத்தையும் 4-தியாக பிரகாரத்தையும் -5-தியாக பூர்வகமாக ஆஸ்ரயணீயனுடைய ஸ்வரூப வைலக்ஷண்யத்தையும் –
6-அதிசயித புருஷார்த்தத்வத்தையும் -7-சர்வ ஸமத்வத்தையும் -8-விலக்ஷண ஸ்வரூபமான ஆஸ்ரயண பிரகாரத்தையும் -9-தத் பலமான அநிஷ்ட நிவ்ருத்தியையும்
10-ஆஸ்ரயணீயனுடைய அபிமத பல ரூபத்வ பூர்த்தியையும் சொல்லிக் கொண்டு ஆஸ்ரயண ரூப பஜனத்தைப் பர உபதேச முகத்தால் அருளிச் செய்கிறார் –

இந்த லோகத்தில் ஆத்மாக்களில் பகவத் ஏக போகராய் இருப்பார் இல்லாமையால் இவர்களை பகவத் ஏக போகராக்கிக் கொண்டாகிலும் அனுபவிக்க வேணும் என்று இந்த ஆத்மாக்களைக் குறித்து பகவத் ஏக போகத்வ உபாயமான பக்தி யோகத்தை பகவத் வியதிரிக்த விஷய வைராக்ய பூர்வகமாக உபதேசிக்கிறார் –

வீடுமின் முற்றவும் வீடு செய்து உம்முயிர்
வீடுடை யானிடை வீடு செய்ம்மினே
 –1-2-1-

சம்சார வெப்பம் எல்லார்க்கும் ஒத்து இருக்கையாலே யாவரேனும் ஒருவர்க்குச் சுவை பிறக்காதா என்று நினைந்து பொதுவிலே எல்லார்க்கும் உபதேசிக்கிறார்.

வீடு செய்து-‘மேல் ‘வீடுமின் முற்றவும்’ என்றவர், மீண்டும் ‘வீடு செய்து’ என்னும் இதற்குக் கருத்து என்?’ என்னில், அரசகுமாரன் அழுக்கு சிறையிலே கிடந்தால், முடி சூடி அரசை நடத்துவதிலும் சிறைவிடுகைதானே பயனாக இருக்குமாறு போன்று, மேல் ஒரு பேறு பெறுவதிலும் இவற்றை விட்டு நிற்கும் நிலைதானே பேறாக இருக்கையாலே விடுகையாகிற பேற்றைப் பெற்று என்றபடி

உம் உயிர் வீடு உடையானிடை
இதுக்கு பல படியாக அருளிச் செய்வர்
1-யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய ப்ருத்வீ சரீரம் -(‘எவனுக்கு உயிர்கள் எல்லாம் சரீரமோ, எவனுக்கு உலகம் சரீரமோ’ ) என்கிறபடியே, உம் உயிரையும் அதற்கு வீடாகவுள்ள சரீரத்தையும் உடையவனிடத்தில் – என்னுதல்
2-அன்றிக்கே இதற்கு, ‘உம் உயிரைச் சரீரமாக -வீடாக -உடையவனிடத்தில்’-என்னுதல்
3-அன்றிக்கே ‘உம் உயிரை விடுமிடத்தில் உடையவனிடத்திலே’ விடுமின்-சமர்ப்பியுங்கோள் என்றுமாம்
வீடுடையான்-4-பரமபத நிலையான பக்கலிலே என்னுதல்

உம் உயிர்
அழிந்து போகின்ற சரீரத்துக்கு நன்மை பார்க்கச் சொல்லுகின்றேனோ?
நித்தியமான ஆத்துமாவுக்கு அன்றோ நான் நன்மை பார்க்கச் சொல்லுகிறேன்?’  என்றும்,
‘அது தானும் என் உயிர்க்கோ? உங்களுடைய உயிர்க்கு அன்றோ?’ உம் உயிர்’ என்றும் அருளிச் செய்கிறார்.
உடையானிடை-பொதுவில் உடையான் என்கிறார்  என்கிறார்;– சுவை பிறந்து, ‘அவன் யார்?’ என்றால்-வண்புகழ் நாரணன்’- என்கைக்காக.-நீங்களும் உடையவன் பக்கல் ‘வீடு செய்மின்’என்றபடி வீடு-சமர்ப்பிக்கை; அதாகிறது, இசைகை.

இத் திருவாய் மொழி பிரமேயம் -பகவத் ஆஸ்ரயணம் -சகல இதர பரித்யாக பூர்வகமாக
பகவத் விஷயமான ஆத்ம சமர்ப்பணம் பிரமேயம்-முற்றவும் வீடுமின் -வீடு செய்து உம்முயிர் வீடுடை யானிடை வீடு செய்ம்மினே -என்று அன்வயம் –

——-

மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை யுன்னுமின் நீரே –
1-2-2-

-இதர விஷயங்களில் போக்யதா புத்தி -பண்ணிப் போருகிற இவனுக்கு
‘அவை அற்பம், நிலையற்றவை’ என்று- தோஷ தர்சனம் – குற்றங்களைக் காணும் படி செய்யவே விடத் தக்கனவாக இருக்குமாதலின், ‘மின்னின் நிலையில’ என்கிறார்.

மன் உயிர் ஆக்கைகள் –உயிர் -மன்னுகிற -பொருந்தியிருக்கின்ற- சரீரங்கள் என்னுதல்;
நித்தியமான ஆத்ம வஸ்து பரிக்ரஹிக்கிற தேகங்கள் —
நிலையுள்ள உயிர் மேற்கொள்ளுகின்ற சரீரங்கள் -என்னுதல்,-அன்றியே – உயிர்-ஏக வசனத்தை – – தொகுதி ஒருமையாகக் கொண்டு- ஜீவ அனந்தயத்துக்கும் உப லக்ஷணமாய் – பல ஆத்மாக்கள் பரிக்ரஹிக்கிற சரீரங்கள் என்றுமாம் 

இறை உன்னுமின் –இதில் அற்பத்தை ஆராயுங்கோள்.-நீரே –இதற்கு ஒரு பிரமாண-அபேக்ஷையும் – விருப்பமும் வேண்டுவது இல்லை.-சதாசார்ய உபதேசமும் வேண்டா என்றபடி.-இவ்வாத்மா சம்பந்தியான சரீராதி பிராகிருத விஷயங்களினுடைய
அஸ்திரத்வாதி தோஷங்களை நீங்களே ஆராய்ந்து உணருங்கோள் -உணரவே எளிதாக விடலாம் -என்கிறார் –

————

நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து இறை
சேர் மின் உயிர்க்கு அதன் நேர் நிறையில்லே–
1-2-3-

த்யாஜ்ய அம்சத்தை -விடுந்தன்மையினைச் சுருங்க அருளிச் செய்கிறார்;
சம்சாரத்துக்கு பீஜம் – வித்து இன்னது என்றும், அதற்கு பேஷஜம் – மருந்து இன்னது என்றும் அருளிச் செய்கிறார்

நீர் நுமது – அநர்த்த கரமான -கேட்டினைச் செய்கிற -அகங்கார மமகாரங்கள் -‘யான்,’ ‘எனது’ என்னும் செருக்குகள்.-ஈண்டு அதிகாரம் பிறர்க்கு உபதேசிக்கும் முன்னிலை இடமாதலின், ‘யான், எனது’ என்னும் தன்மைப் பெயர்களை நீர் நுமது’ என முன்னிலையாக அருளிச் செய்கிறார்.
அன்றிக்கே – செருக்கினைப் புலப்படுத்தும் அச் சொற்களைத் தாம் தம் திருவாயால் கூறுதற்கு, அஞ்சி ‘நீர், நுமது’ என்கிறார் எனலுமாம்; ‘கூறின், நாக்கு வேம்,’ என்பது கருத்து.

இறை சேர்மின் – அப்ராப்த விஷயங்களை –அடையத் தக்கன அல்லாதவற்றை- நீக்கி வகுத்த சேஷியானவனைப் பற்றப் பாருங்கோள்.-சேர்மின் சம்சாரி இறைவனை அடைதல், கெடுமரக்கலம் கரை சேர்ந்தாற்போன்று இருக்கையாலே ‘சேர்மின்’ என்கிறார்.

உயிர்க்கு அதன் நேர் நிறை இல் – இத்தோடு ஒக்கச் சீரியது இல்லை என்னுதல்;
நேர் என்று ஒப்பாய், நிறை என்று மிகுதியாய், உயிர்க்கு இத்தோடு ஒத்ததும் மிக்கதும் இல்லை என்னுதல்.
ஞான ஆனந்தங்களை -லக்ஷணமான ஆத்துமாவிற்கு, முதலில் ஒளஷதம் போலே சம்சாரிகளுக்கு பகவத் சம்பந்தம் – ஹிதமுமாய்– உதர்க்கத்தில் – அடுத்த கணத்தில் பிரியமுமாய் இருக்கும் இத்தோடு ஒக்கும் சீரியது இல்லை என்றபடி.

—————-

இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு
எல்லையில் அந்நலம் புல்கு பற்று அற்றே
 –1-2-4-

பற்றப்படுகின்ற விஷயத்தினுடைய போக்யதையை – இனிமையினை அருளிச்செய்கிறார்.

துச்சத்வம்–ப்ரதீதி மாத்திரம் பாத யோக்கியமான மித்யத்வம் -பற்றி – -‘இல்லது’ என்கிறார் அல்லர்;விநாசித்வத்தைப் பற்றி – தோன்றி மறையும் மின்னலைப் போன்று, -அழியுந்தன்மையது ஆதலின், உடலை ‘இல்லது’என்கிறார்.உள்ளதும் –அழிந்து போகும் பொருளினும் -வியாவ்ருத்தியை -வேறுபட்டுள்ள தன்மையினை நோக்கி உயிரை ‘உள்ளது’என்கிறார்.இல்லது உள்ளது என்பனவற்றிற்கு, ‘ஆத்மாவுக்கு இருப்பிடமான சரீரத்தின் படியும் –அத்தை இருப்பிடமாக யுடைய ஆத்மாவின் படியும் அல்ல -என்றுமாம்

எல்லை இல் அந்நலம் –
‘ஆனந்த மய
:’ என்றும்,
‘உணர்முழுநலம்’ என்றும்,
‘ஒடியா இன்பப் பெருமையோன்’ என்றும்,
‘சுடர்ஞான இன்பம்’ என்றும்,
ஸமஸ்த கல்யாண குணாத் மகோ அசவ் (‘எல்லா நற்குணங்களையும் இயற்கையாகவுடையவன் இறைவன்’ )என்றும்
கூறலாம்படி இருக்கும்.

புல்கு – குணஞானமுடையவனுக்கு, -குணாதிக விஷய- குணங்களால் மேம்பட்ட இறைவனுடைய அனுபவம் – அங்கநாபரிஷ்வங்கம் போன்று போக ரூபமாய் இருக்குமாதலின், ‘புல்கு’ என்கிறார்.

பற்று அற்றே –அது செய்யுமிடத்தில் இருகரையன் ஆகையன்றிக்கே, புறம்புள்ள பற்றுகளை அற்றே புல்கு.-இறைவன் ‘பற்றிலார் பற்ற நின்ற’வனாதலின், பற்று அற்றே புல்க வேண்டும்.

சர்வ சங்க பரித்யாக பூர்வகமாக ஸ்வேதர சமஸ்து வஸ்து விலக்ஷண ஞான ஆனந்த ஸ்வரூப ஸமஸ்த கல்யாண குணாத்மகனான பகவானுடைய ஆஸ்ரயணம் இப்பாட்டு பிரமேயம் 

ஸ்ரீ பன்னீராயிரப்படியில் மட்டும் உள்ள விலக்ஷண ஸ்ரீ ஸூக்திகள்-கீழ் மூன்று பாட்டிலும் பன்மையாலே உபதேசித்து இப்பாட்டுத் தொடங்கி ஒருமையாலே உபதேசிக்கிறது-த்யாஜ்யங்கள் பரஸ்பர விருத்தங்களாய்க் கொண்டு பலவாதலாலும் சத்வாதி குண பேதத்தாலே ருஸ்யாதி விசிஷ்டரான அதிகாரிகள் ஒன்றோடு ஓன்று ஒவ்வாத புத்தி பேதத்தை யுடையராகையாலும் இதர தியாகத்தில் பன்மையாலே உபதேசிக்க வேணும் –
பகவத் பஜனத்தில் புத்தி ஐக்யத்தாலும் புருஷார்த்த ஐக்யத்தாலும் அதிகாரி ஐக்கியம் உண்டாகையாலே ஒருமையாலே உபதேசிக்கலாம் –

————–

அற்றது பற்று எனில் உற்றது வீடுயிர்
செற்றது மன்னுறில் அற்றிறை பற்றே
 –1-2-5-

இறைவனைப் பற்றுமிடத்து வருகின்ற -அந்தராய பாரிஹாரத்தையும் -இடையூற்றை நீக்குந் தன்மையினை –அருளிச் செய்கிறார்.(இங்கு இடையூறு’ என்றது, கைவல்ய அனுபவத்தினை-உற்றது வீடுயிர்-உயிர் வீடு உற்றது – ஆத்துமா மோக்ஷத்தை – பிராபித்தது- அடைந்தது;-அது நித்தியமாய் ஞான ஆனந்தங்களாய் இருக்கையாலே ‘இது தன்னையே அனுபவிக்க அமையாதோ! என்று தன் பக்கலிலே கால் தாழப் பண்ணும்;
அங்கு அனுபவிக்கும் அவ் வின்பத்தினையே இங்கு ‘வீடு’ என்கிறார்.அது செற்று –
அதனை முகஞ்சிதறப் புடைத்து.-அற்ற இறை பற்று – ஆஸ்ரயண- அடைகின்ற – காலத்திலே அவனுக்கு என்று அத்யவசித்து – அறுதி செய்து, சேஷியான அவனைப் பற்றப் பார்.
அன்றிக்கே
விபக்தியை மாறாடி-அவனைப் பற்றி இத்தை அறப் பார் -என்னுதல்–‘மாற்பால் மனஞ்சுழிப்ப மங்கையர் தோள் கைவிட்டு’ என்னுமா போலே-

இதர சங்க தியாக பூர்வகமாக ஆத்ம அனுபவத்தை இச்சியாதே சர்வ சேஷியை
ஆஸ்ரயிக்க வேணும்-என்றது இப்பாட்டு பிரமேயம் –

—————–

பற்றிலன் யீசனும் முற்றவும் நின்றனன்
பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே –
1-2-6-

ஈஸ்வரத்வம் வந்தேறி என்னும் படி சங்க ஸ்வ பாவன் காண்-என்கிறார் –அவன்-சங்க ஸ்வ பாவன்- பற்றுக்கு இருப்பிடமானவன்-பற்றிலன் –பற்று -உண்டு சங்கம் -அத்தை வாஸஸ் ஸ்தானமாக யுடையவன் – அன்பை உறைவிடம் ஆக உடையவன்.
பற்றிலன் என்பது – பற்றிலான் என்பதன் விகாரம்;இன்னான் இங்கு உண்டோ என்ன இங்கு இல்லை ‘அகத்திலான்’ என்பது போன்று;-அகத்திலான் – அகத்திலே இருப்பவன்.

முற்றவும் நின்றனன் –ஆஸ்ரயணித்வே – அடையும் திறத்தில்-சமனாய் – ஒத்தவனாய் இருந்தான். –இத்தலை இருந்தபடி இருக்கத் தான் எல்லார்க்கும் ஒத்திருக்கை.–பற்றிலையாய் – நீயும் பற்றிலையாய் -நீயும் பற்றினையுடையையாய்-சங்கத்தை யுடையையாய்-அவன் முற்றில் அடங்கு – அஹம் சர்வம் கரிஷ்யாமி (‘நான் எல்லா அடிமைகளும் செய்வேன்,’) என்கிறபடியே, அவனுடைய-எல்லா கைங்கர்யத்திலும் அன்வயி – எல்லாத் தொண்டுகளிலும் சேர்வாய்.

இப் பாசுரத்திற்குப் பட்டர் அருளிச்செய்யும்படி:
பற்றிலன் ஈசனும் –பரம பதத்தில் எழுந்தருளி இருக்கின்றவனும் அவர்கள் பக்கல் பற்றுடையவன் அல்லன். ‘முற்றவும் நின்றனன் –அவர்கள் எல்லாராலும் வரும் ஏற்றமும் இன்று வந்து ஆஸ்ரயிக்கிற – அடைகிற இவனாலே ஆம்படி நின்றான் –முற்றவும் நின்றனன்
நாமே தனக்கு தாரகாதிகளாக நினைத்து இருக்கும்-;பற்றிலையாய் –
விட ஒண்ணாதாரை நீ ஒரு தலையாக விட்டான் அவன்; அவன் ஒரு தலையானால் விடலாமவற்றை விடத்தட்டு என் உனக்கு?அவன் முற்றில் அடங்கு –அவனையே எல்லாமாகப் பற்றப் பார்:

—————-

அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன்
அடங்கு எழில் அஃது என்று அடங்குக உள்ளே 
–1-2-7-

சம்பந்த ஞானமே வேண்டுவது என்கிறார்.ததீயம் – ‘அவனுடைய உடைமை இவையெல்லாம்,’ என்னும் நினைவே வேண்டுவது;-தானும் அதற்குள்ளே ஒருவனாகச் சேரலாம்-அந்வயிக்கலாம் – என்கிறார்-எம்பெருமானோடு உள்ள சம்பந்தத்தை அனுசந்திக்கவே தன் சிறுமையால் வெருவாதே தரித்து ஆஸ்ரயிக்கலாம் என்கிறார்-அந்த சம்பத் எல்லாம் என் ஸ்வாமியினுடைய சம்பத் என்று அனுசந்திக்கவே கூசாதே சென்று அணுகலாம் –அப்படி அனுசந்தித்துக் கொண்டு கூசாதே போய் அடிமை செய்யுங்கோள் என்கிறார் –.சம்பந்த ஞானத்தைப் பிறப்பித்தல் யாருடைய தொழில்?’ எனின், அது இருவரையுஞ் சேர்ப்பிக்கின்ற ஆசாரியனுடைய தொழில்.-கடகருடைய க்ருத்யம்-இங்கே பட்டர் பிதா புத்ரர்கள் இருவரும் படவோடின கதையை அருளிச் செய்வர் –பரகத அதிசய ஆதானேச்சயா உபாதேயத்வமேவ யஸ்ய ஸ்வரூபயா ச சேஷி பர சேஷி –

————–

உள்ளம் உரை செயல் உள்ள விம்மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை உள்ளில் ஒடுங்கே 
–1-2-8-

அவன் தனக்காகத் தந்த கரணங்களை அவனுக்கு ஆக்குகையே வணங்குதலாம் என்று-
பஜன பிரகாரத்தை – வணங்கும் முறையினை அருளிச் செய்கிறார்.
-இப் பாட்டில் பஜிக்கைக்கு புறம்பு ஒரு உபகரணம் சம்பாதிக்க வேண்டா-முன்னமே யுண்டானவற்றின் வியபிசாரத்தை தவிர்த்து வகுத்த விஷயத்திலே சமர்ப்பியுங்கோள்-என்கிறார்-

—————–

ஒடுங்க அவன் கண் ஓடுங்கலும் எல்லாம்
விடும் பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே
–1-2-9-

நீங்கள் அவனைக் கிட்டவே விரோதிகள் அடைய விட்டுப் போம்,’ என்கிறார் இத் திருப் பாசுரத்தில்.எல்லாம் விடும் – அவித்யா -அறிவின்மை, கருமம், வாசனை, ருசி இவையெல்லாம் அடியோடே விட்டுக் கழியும்-ஆத்துமாவின் ஸ்வரூபத்துக்குத் தக்கவற்றைச் செய்யவே,-ஸ்வரூப அறுரூபமானவற்றைச் செய்யவே –ஸ்வரூபத்துக்கு விரோதிகளாக உள்ளவை எல்லாம் விட்டுப்போகும் என்றபடி.-பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்-இன்பத்தில் இச்சையுடைய ஒரு பெண் தன் உடம்பில் அழுக்கினைப் போக்கித் தன் கணவனோடு இன்பம் நுகர்தற்கு உரிய காலத்தை எதிர் நோக்கிக்கொண்டு இருத்தல் போன்று, இவனும் பேற்றுக்கு உறுப்பாக உடலை விட்டு உயிர் நீக்குங் காலத்தினை எதிர்பார்த்திருக்கக் கடவன்.-பஜனத்துக்கு அங்கம் என்று நினைத்து -பின்னையும் அந்திம தசையில் நினை என்று அந்திம ஸ்ம்ருதியை விதிக்கிறது என்பாரும் உளர் –

ஓர் அயனத்தின் அன்று ஸ்ரீ குன்றத்துச்சீயர் எம்பெருமானார் ஸ்ரீ பாதத்திலே புக, அவருடைய சிறுபேரைச் சொல்லி, ‘சிங்கப் பிரான்! இன்று அயநங்காண்,’ என்ன, திருவுள்ளத்தில் ஓடுகிறது இன்னது என்று அறியாமையாலே அவர் பேசாது இருக்க,
உயிர் உடலை விட்டு நீங்கும். அந்திம காலத்தில் பலம் கண்ணழிவற்ற பின்பு நடுவு விரோதியாய்ச் செல்லுகிற நாளில் ஓரண்டு கழியப் பெற்ற இது உனக்கு ஒன்றாய் இருந்தது இல்லையோ!’ என்று அருளிச் செய்தார்.

அன்றியே
ஸ்ரீ எம்பார் ஒரு உருவில் , ‘பின்னும் ஆக்கை விடும்பொழுது எண்ணே,’ என்பதற்கு
‘இங்ஙனே காரணமானது கழிந்த போதே காரியமும் தன்னடையே கழிந்ததே அன்றோ!
பலமும் இனிக் கைப் புகுந்ததே அன்றோ! இனி, சிந்தா விஷயம் உண்டோ?’ என்று அருளிச் செய்தார்.

—————-

எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே
 –1-2-10-

இத் திருப் பாசுரத்தால் ஸ்ரீ திரு மந்திரத்தை அர்த்தத்தோடு அருளிச் செய்கிறார்.
ஸ்ரீ ஆழ்வான் இப்பாட்டளவும் வரப் பணித்து இப் பாட்டு இது, இத் திருப்பாசுரம் திருமந்திரத்தின் பொருள் என்பதற்கும்
மந்திரத்தின் பொருள் ஆசாரியன் பால் கேட்டல் வேண்டும் என்பதற்கும் ஐதிஹ்யம் ஆம்.
ஸ்ரீ ஆழ்வாருடைய முந்தின வார்த்தை,கௌரவத்திலே நோக்கு; பிந்தின வார்த்தை, இனிமையிலே நோக்கு.
வந்தவாறே ‘இத்தையும் உங்கள் ஆசிரியர் பக்கலிலே கேட்டுக் கொள்ளுங்கோள்,’ என்ன,
ஸ்ரீ பட்டரும் ஸ்ரீ சீராமப் பிள்ளையும் எழுந்து போகப் புக்கவாறே, அவர்களை அழைத்து,
‘இன்ன போது இன்னார் இருப்பார்; இன்னார் போவார் என்று தெரியாது; இருந்து கேளுங்கோள்,’ என்று
ஸ்ரீ திரு மந்திரத்தை உபதேசித்து, இப்பாட்டை நிர்வகித்து
‘இப்பாட்டை இதற்கு அர்த்தமாக நினைத்திருங்கோள்,’ என்று பணித்தார்.

எண் பெருக்கு அந் நலத்து, ஒண் பொருள்-வஸ்து தான் ஸ்வஸ்மை ஸ்வயம் ப்ரகாசகமுமாய்
தர்ம பூத ஞானமானதுவும் விஷயங்களைக் கிரஹித்து தன்னையும் அறிவிக்கக் கடவதாய் இருக்கும் அத்தைப் பற்றிச் சொல்கிறது –இதனாலே இரண்டு அடை மொழிகளைக் கொடுத்து –நலம் -என்றும் ஒண் என்றும் அருளிச் செய்கிறார்-ஈறு இலவான ஒண் பொருளையும், ஈறு இலவான வண் புகழையும் உடையன் ஆகையாயிற்று
‘நாராயணன்’ யாகையாகிறது
 –திண் கழல் சேரே — இப்படிப்பட்ட சம்பந்த ஜ்ஞானம் முன்னாகப் பற்றினாரை ஒருகாலும் விடாத திருவடிகளை ஆஸ்ரயி ––பஜனத்துக்கு ஆலம்பன மந்த்ரம் திரு அஷ்டாக்ஷரம் என்றது இப் பாட்டு பிரமேயம்

————–

சேரத் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
சீர்த் தொடை யாயிரத்து ஒர்த்த விப்பத்தே
 –1-2-11-

உபதேசம் பலரைக் குறித்து-உபக்ரமிகையாலே – தொடங்குகையால், ‘சேர்’ என்பது போன்ற-ஏக வசனங்கள் – ஒருமை இடங்களை எல்லாம்-ஜாதி அபிப்ராயம் – கூட்டத்தைக் குறித்த ஒருமையாகக் கொள்க.

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -80-சீர் அரசு ஆண்டு தன் செங்கோல் சில நாள் –முடிச் சோதியாய் -3–1-

March 18, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

ஸூர்யன் அஸ்தமித்தது -அரசாண்டு கழிந்த மன்னர் போல் நித்ய லீலா உபய விபூதிக்கு அரசே -என்னை நீத்து வஞ்சித்த நிகர் அற்ற அரசே-எம் விசும்பு அரசே -ஆழ்வாருக்கு பரமபதம் அண்ணியது தானே –அக்கரை இக்கரை -பெரியாழ்வார் போல் இங்கும்-அருளாய்-உரு வெளிப்பாட்டில் -கண்ணுக்கு தோன்றும் தலைவனை சம்போதித்து -இரங்கி பேசும் தலைவி பாசுரம்–வேதனை-கீழ் பாசுரம் -தானான தன்மையாகவும் கொள்ளலாம்-இதில் பெண் நாயகி பாவனை-பிராட்டி தசையைப் பிராபித்து -அரும்பதம்–முடிச் சோதியாய் -3–1-இதன் விவரணம்–மூன்று முடிக்கு உரிய அரசு -நாயனார்-வைரமுடி – ராஜ முடி -கிருஷ்ண ராஜ முடி-கிரீடம் மகுடம் சூடாவதம்சம் –மூன்றும்-

ஆதித்யனும் போய் அஸ்தமித்து – இருளும் வந்து பாதகமாக நோவு படுகிறாள்-ஒரு பிராட்டி வார்த்தையாய் இருக்கிறது –

இப்படி அனுபவ அபி நிவேசம் பிறந்தவர் அதுக்கு ஈடாக அனுபவிக்கப் பெறாமையாலே தம்முடைய விவேக பிரகாசம் குலைந்து மோஹ அந்தகாரம் மேல் இடுகிறபடியை பிரிவாற்றாது பொழுதொடு புலம்பின தலைவி வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-அவதாரிகை-இவ்விபூதியில் தம் இருப்பைத் தாம் அசஹமாநராய்
வைத்தவனையே நிவர்த்திப்பாய் என்ற அபிப்ராயத்தால் இருளுக்கு அஞ்சின நாயகியாய் அருளாய் என்று பிரார்திக்கிறார் இதில்

சீரரசாண்டு  தன் செங்கோல் சில நாள் செலீஇக் கழிந்த
பார் அரசு ஒத்து மறைந்தது நாயிறு பாரளந்த
பேரரசே எம் விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்த
ஓரரசே அருளாய் இருளாய் வந்து உறுகின்றதே
 – -80 –பிரிவு ஆற்றாத தலைவி மாலைப் பொழுதுக்கு இரங்குதல் –

சீர் அரசு ஆண்டு–சிறப்பாக ராஜ்ய பரிபாலனம் பண்ணி
தன் செங்கோல் சில நான் செலீ இ–தனது நீதி தவறாத ஆஜ்ஞையைச் சில காலம் (உலகத்திற்) செலுத்தி
கழிந்த–பின்பு இறந்தொழிந்த
பார் அரசு–ஸார்வபௌமனான ஒரு சக்ரவர்த்தியை
ஒத்து–போன்று
ஞாயிறு–ஸூர்யன்
மறைந்து–அஸ்தமித்தான்;
பார் அளந்த–உலகத்தை அளந்து கொண்ட
பேர் அரசே–சிறந்த தலைவனே!
எம் விசும்பு அரசே–பரமபதத்துக்கு நாயகனான எம்பெருமானே!
எம்மை நீத்து வஞ்சித்த–எம்மைத் தனியே பிரித்து வஞ்சனை செய்த
ஓர் அரசே–ஒப்பற்ற நாதனே!
அருளாய்–(இங்ஙனம் நீங்கியிராதபடி எமக்கு, வந்து) அருள் புரிவாய்; (அங்ஙனம் அருள் புரியாமையினால்)
இருள் ஆய் வந்து கூறுகின்றது–இருள் மிக்கதாய் வளர்ந்து கொண்டு வந்து சூழ்ந்து (எம்மை) வருந்துகிறது.

முடியார் திருமலையில் மூண்டு நின்ற மாறன்
அடிவாரம் தன்னில் அழகர் -வடிவழகைப்
பற்றி முடியும் அடியும் படி கலனும்
முற்றும் அனுபவித்தான் முன்—
——-21-கீழ்-அயன் மலையோடு-புறமலையோடு-திருப்பதியோடு
உத்தேச்யமாக திருமலை ஆழ்வாரை அனுபவித்துக் கொண்டு வருகிற மருளில் வண் குருகூர் வண் சடகோபனான ஆழ்வார் வட மா மலை உச்சி –என்கிற படியே அம் மலையிலே ஒரு கொடி முடி என்னலாம் படியையும் அதுக்கு அவயவமாய் இருப்பதொரு கல்பக தரு பஹூ சாகமாகத் தழைத்து பூத்தாப் போலேயாயுமாய் இருக்கிற மேலிரும் கற்பகமான அழகர் உடைய திவ்ய அவயவங்களும்
திரு அணிகலன்களுக்கும் உண்டான ஸூகடிதத்வத்தையும் வேத வைதிக புருஷர்களாலும் அளவிட ஒண்ணாத பெருமையையும் அத்தையும் விளாக் கொலை கொள்ளும்படியான ஆஸ்ரித வாத்சல்யத்தையும் அனுபவித்து விஸ்மிதர் ஆகிற முடிச் சோதியில் அர்த்தத்தை முடியார் திருமலையில் -என்று துடங்கி அருளிச் செய்கிறார் –

சீரரசாண்டு –குணமாக ஆண்டு –தர்ம புத்ரம் ராஜ்ஜியம் பண்ணாவிடில் நாங்களும் இங்கு இரோம்-
என்று அக்னி ஹோத்ரங்களையும் கொண்டு அவன் இருந்த காடேறப் புறப்பட்டு போனார்கள் இறே –
அப்படி சீரியதாக ராஜ்யத்தை நடத்தி –தன் செங்கோல் சில நாள் செலீஇ–இது தான் அல்ப காலத்தோடு பர்யவசிக்கை அன்றியே –தன்னுடைய-ஆஜ்ஜையை நெடு நாள் நடத்தி-(சில நாள் -விபரீத லக்ஷணை )-கழிந்த  பாரர சொத்து –-இப்படி நெடுநாள் லோகத்தை நடத்திப் போந்த மாந்தாத்ரு பிரமுகரான-ராஜாக்களைப் போலே–பார் அரசு ஒத்து-மறைந்தது நாயிறு- ஆதித்ய சன்னதியிலே -நாயக சன்னதியில் போல ஆஸ்வசித்து இருக்க கடவதாய்- ராத்ரியில் வந்தால் கரணங்களுக்கு எல்லாம் பிரிந்த விஷயம் ஒன்றுமே இலக்காகையாலே – ராத்திரி என்றால் வெருவக் கடவதாய் இறே இருப்பது –
பகலில் இந்திரியங்கள் ஸ்வ  விஷயங்களிலே-பாவி பாய்கையாலே வியசனம் அரையாறு பட்டு இருக்கும் இறே –மறைந்தது –-ஆதித்யன் எல்லாருக்கும் கண்ணாய்  இருக்க ஆகாரம் கிடக்கச் செய்தே
விசேஷித்து இவளுக்கு கண்ணாய் இருக்கையாலே –-நாயகனைப் போக விட்டு வழி பார்த்து -நின்றாப் போலே –கண் மறைய பார்த்து நின்றால் போலே காணும் –கண்ணாஞ்சுழலை இட்டுப் பார்த்தாள் –பார் அளந்த பேர் அரசே –இருளின் கையில் அகப்பட்ட ஆதித்யனை மீட்கும் போது – மகா பலி-கையிலே அகப்பட்ட பூமியை மீட்டவனே வேணும் போலே காணும் –அளந்த –பூமிப் பரப்படைய அளந்த திருவடிகளைக் கொண்டு இவ்விருளையும் அளந்தால் ஆகாதோ –இருளார் வினை கெட இறே-(39 ) செங்கோல் நடத்துகிறது –(அளப்பது ஸ்வ அதீனமாக்குவது )பேரரசே –-எளிய செயல்கள் செய்யுமவன் அல்லனே –செய்யுமவை அடங்க பெருத்தாயிற்று இருப்பது –எம் விசும்பரசே –பகவத் விஷயத்தில் ஜ்ஞானம் பிறந்த பின் சம்சாரத்தில் காட்டில் பரம பதம் அணித்தாய் காணும் இவருக்கு இருப்பது –பொன் உலகு ஆளீரோ -என்று முதல்-அதுவே இறே கொடுத்தது –எம்மை நீத்து வஞ்சித்து ஓரரசே
உபய விபூதிக்கும் தனித் தனியே கடவனோபாதி- என்னை அகற்றி-முடிக்கைக்கும் தனி முடி சூடி இருக்கிறவனே -என்று பிள்ளான் –(என்று எம்பார் என்றும் சிலர் சொல்வர் )என்னை அகற்றி -அது செய்கிற போது பிரியேன்  என்று வைத்து பிரிந்து – இஸ் ஸ்வபாவதுக்கு புறம்பு-என்னோடு ஒப்பார் யார் -என்று இருக்கிறவன் ஆயிற்று — என்னால் அல்லது செல்லாதவரை பொகட-வல்லார் யார் – என்னோபாதி  இல்லையே -என்று இதுக்கும் தனி முடி சூடி இருக்கிறவன் ஆயிற்று-என்று பட்டர்-அருளாய் –அருளுக்கு விஷயமறக் கிடாய் புகுகிறது – சத்தை போனால் அருளுக்கு விஷயம் இல்லையாம் இறே –பரம பதத்தில் உள்ளார் நித்ய அனுபவத்தாலே நிரபேஷராய் இருப்பார்கள் –
சம்சாரிகள் அன்ன பாநாதிகளாலே தரித்து இருப்பார்கள்-இங்கே இருந்தே அவ் விபூதியில் உள்ளார் படியாய் இருப்பார்க்கு அருளல் ஆகாதோ –குண அனுபவத்தால் அங்குள்ளார் (அநந்ய )அந்ய பரராய் இருப்பார்கள்-இங்குள்ளார் சப்தாதி விஷயங்களிலே (அநந்ய) அந்ய பரராய் இருப்பார்கள் –
குண ஜ்ஞானமே யாய் அனுபவம் இன்றிக்கே இருக்கிற இவர் பக்கலிலே இறே அவனுக்கு-
தான் அருளின படி காட்டலாவது –அருள வேண்டும்படி இப்போது இங்கு வந்தது என் என்ன –
இருளாய் வந்து உறுகின்றதே--இருளாய் வந்து கோமுக வ்யாக்ரமாகை தவிர்ந்து – வ்யாக்ரமாயே வரா நின்றது –ஊழி என்கிற பேராய் தலைக் காட்டுகை தவிர்ந்து – இருளாயே பாதகமாய் நின்றது –மத்யஸ்தர்க்கு இறே ஊழி பாதகமாவது —பிரிந்தார்க்கு இராத்திரி இறே பாதகமாவது –ஜகதுப சம்ஹாரத்துக்கு ஹேதுவாகையாலே நாட்டார்க்கு இறே ஊழி பாதகமாவது –உறுகின்றதே  
இருள் வந்து ஸ்பர்சிக்க புகா நின்றது –அதுக்கு முன்னே –இருளன்ன மா மேனியை-( பெரிய திருவந்தாதி )கொண்டு வந்து இடை இட்டுக் கலக்க வேணும் என்கிறாள் –

மாலைப் பொழுது கண்டு தலைவி இரங்கும் பாசுரம் -உரு வெளிப்பாட்டால் நாயகன் நேராக தோன்றி-அவனை நோக்கி அருளிச் செய்யும் பாசுரம் –சீரரசாண்டு தன் செங்கோல் சில நாள் செலீ இ க்கழிந்த-பார் அரசு ஒத்து மறைந்தது நாயிறு – சூர்ய அஸ்தமனம் அரசன் ஆண்டு மறைந்தால் போலே என்றவாறு – நீர் வந்து ரஷியா விடில் அரசர்கள் இல்லாத ராஜ்யத்தில் கணவனை இழந்த பெண் மக்கள் கொடியோரால் படும் பாட்டை இருளினால் நான் பாடுவேன் என்கிறார் யாயிற்று-இருளில் அகப்பட்ட தன்னையும் சூரியனையும் மீட்க ஓங்கி இலக்கு அளந்த உத்தமன் வேண்டுமே –பாரளந்த பேரரசே -என்கிறார் –பரமபதம் போலே என்னையும் அனர்யார்ஹம் ஆக்கிக் கொள்ளத் தக்கவனே-எம் விசும்பரசே-பிரியேன் பிரிந்தால் தறியேன் -இன்ன காலத்தில் வருவேன் சொல்லி வராமல் -எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே –-ஓரரசே -இப்படியும் ஒரு தலைவன் உண்டாவதே – என்னை உபேக்ஷித்து உன்னைக் காட்டாது இருக்கும் இந்த ஸ்வபாவத்தில் முடி சூடி இருக்கிறவனே-வஞ்சித்ததோர் அரசே –
அவனைச் சேர பெறாமையாலே விவேக பிரகாசம் குலைந்து மோஹாந்தகாரம் மேல் இடுகின்ற படியை-எம்பெருமானைக் குறித்து விண்ணப்பம் செய்கிறார்-இத்தால் சம்சாரத்தில் இருப்பு அஞ்ஞானம் வந்து மேல் இடும்படி இருக்கையாலே கடுக இவ்விருப்பைக் கழித்துத் தர வேணும்-என்று அருளிச் செய்கிறார் -நம்பிள்ளை -ஸ்ரீ ஸூ க்திகள்--பிரிவாற்றாத தலைவி மாலைப்பொழுது கண்டு இரங்கி யுரைக்கும் பாசுரம் இது.-இப் பாட்டில் நாயகனை நோக்கின் விளியுள்ளதனால், உருவெளிப்பாட்டில் கண்ணெதிரில் நாயகன் காணப்பட்டாதென்றும்-அன்னவனை நோக்கி இது கூறுகின்ற தென்றுங் கொள்க.-ஸூர்யன் உலகமுழுவதும் பகலெல்லாம் தடையறத் தனது செய்ய கிரணத்தைச் செலுத்திப் பின் அப்பாற் சென்றபடியை-“சீராசாண்டு தன் செங்கோல் சில நாள் செலீஇக் கழிந்தஅ பாராசொத்து மறைந்தது நாயிறு” என்றார்.–ஓரரசன் சிறப்பாக ராஜ்யத்தை அரசாட்சி செய்து தனது நீதி தவறாது ஆஞ்ஞையைச் சிலகாலம் உலகததிற் செலுத்திப் பிறகு இறந்தொழியுமா போலே யிருக்கிறதாயிற்று ஸூர்யாஸ்தமனம், நாயகனே! இப்பொழுது நீ என்னை வந்து சேர்ந்திடாயாயின்
அரசனில்லாத ராஜ்யத்தில் கணவனையிழந்த பெண்மகள் கொடியரால் படும் பாட்டை யான் இருளினால் படுவேன் என்பது தோன்ற இது சொல்லப்பட்ட தென்க.–இருளின் கையிலே யகப்பட்ட ஸூர்யனையும் தன்னையும் மீட்கைக்கு மஹாபலிகையிலே யகப்பட்ட உலகத்தை மீட்டவன்
வேண்டுமென்பாள் பாரளந்த பேரரசை விளித்தாள்.-எம் விசுபரசே!= பரமபதத்தைப் போலவே எம்மையும் அநந்யார்ஹ சேஷமாக்கிக் கொள்ளதக்கவனே! என்றபடி.-முதலில் என்னை விட்டுப் பிரியவேமாட்டேன், என்று சொன்னதும், பின்பு ‘இன்ன காலத்தில் வருவேன்’ என்று காலங் குறித்துக் கூறினாலும் இரண்டும் பொய்யாம்படி. தன்னைப் பிரிந்து சென்று நெடுநாள் வாராது விளம்பித்தது பற்றி “எம்மைநீத்து வஞ்சித்த ஓராசே” என்றாள். ‘இவ்விடத்து ஓராசே!’ என்றது இப்படியும் ஒரு தலைவனுண்டோவென்று குறை கூறியவாறு.–“எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே!” என்பதற்கு- “என்னை உபேக்ஷித்து உன்னைக் காட்டாதிருக்கிற இந்த ஸ்வபாவத்திலே முடிசூடியிருக்கிறவனே!”
என்று விசேஷார்த்தம் உரைப்பர். ‘வஞ்சித்த’ என்னும் பெயரெச்சத்தின் ஈறு தொக்கியிருப்பதால் ‘வஞ்சித்தோராசே’, என்றாயிற்று.செலீஇ = செலுத்தி; சொல்லிசை யளபெடை! இங்கு அளபெடை அலகுபெறவில்லை.–“எம்பெருமானைச் சேர்ந்து அநுபவிக்கப் பெறாமையாலே தமது விவேக ப்ரகாசங் குலைந்து மோஹாந்தகரநம் மேலிடுகிறபடியை எம்பெருமானைக் குறித்து இதனால் ஆழ்வார் விண்ணப்பஞ் செய்தாராயிற்று. இங்கே நம்பிள்ளையீடுகாண்மின்;-“இத்தால் ஸம்ஸாரத்திலிருப்பு அஜ்ஞானம் வந்து மேலிடும்படியிருக்கையாலே கடுக இவ்விருப்பைக் கழித்துத் தரவேணுமென்று அருளிச்செய்கிறார்.

சீரரசாண்டு தன் செங்கோல் சில நாள் செலீஇக் கழிந்த பார் அரசு ஒத்து மறைந்தது ஞாயிறு-அழகிய ராஜ்யத்தைப் பண்ணி தன்னுடைய அபங்குரையான ஆஜ்ஜையைச் சில காலம் நடத்திக் கழிந்து போன பூமியில் ராஜாக்களோடு ஒத்தது என்னலாம் படி ஆதித்யனானவன் பகல் எல்லாம் ப்ரதா போத்தரனாய் நடத்தி அஸ்தமித்தான்–பாரளந்த பேரரசே-ரக்ஷணீயமான பூமிக்கு அந்நிய அபிமானத்தைக் கழித்து
உன் திருவடிகளின் கீழே ஆக்கிக் கொண்ட பெரிய ஸ்வாமி யானவனே–எம் விசும்பரசே அந்நிய அபிமான ப்ரஸங்கம் இல்லாத நித்ய விபூதிக்கு ஸ்வாமி யானால் போலே எங்களையும் அநந்யார்ஹமாக ஆண்டு கொண்டவனே–எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே -இப்படி அநந்யார்ஹதை ஒத்து இருக்க-அவர்களைப் போலே அனுபவம் பெறாதபடி எங்களை நீக்கி வஞ்சித்து வைத்தமைக்கு அத்விதீய நாயகன் ஆனவனே–அருளாய்-இப்படி நீங்கி இராதபடி கிருபை பண்ணி அருள வேணும்-இருளாய் வந்து உறுகின்றதே –தனித்து இருக்கில் இருளின் கையிலே அகப்படும் அத்தனை-ஆகையால் அருள வேணும் என்றதாயிற்று–இத்தால் ஆதித்ய ப்ரகாஸம் என்னலாம்படி ஸர்வ லோகத்தையும் வெளிச் சிறப்பிக்கிற தம்முடைய விவேகம் அனுபவ அலாபத்தாலே குலைந்து
மோஹ அந்தகாரமும் மேலிடுகையாலே ஸமஸ்த விபூதி ரக்ஷகனாய் நம்மைக் காரியப்பட்டாலே
பிரித்து வைத்து இருக்கிற ஸர்வேஸ்வரனுடைய கிருபையை இவ் வஸ்தைக்கு ரக்ஷகம் என்று அறுதியிட்டு இரங்க வேணும் என்று அபேக்ஷித்தார் ஆயிற்று

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்வியாக்யானம்–சீரரசாண்டு-இந்த லோகமான பூமி எல்லாவற்றையும்
ராஜ்ய ஆஜ்ஞக ராஜாவாய் அனுபவித்தவனாய்–தன் செங்கோல் சில நாள் செலீஇக்-தன் ஆஜ்ஜையைச் சில நாள் நடத்தி–கழிந்த பார் அரசு ஒத்து-கழிந்து போன பூபரோடு ஒத்தவளாய்-மறைந்தது ஞாயிறு-மறைந்தான் ஆதித்யன்–பாரளந்த பேரரசே -இந்தப் பூமியை எல்லாம் ஓர் அடியால் அளந்து கொண்ட மஹா பிரபுவானவனே-எம் விசும்பரசே-எங்களதான தெளி விசும்புக்கு அரசானவனே
அங்காகவே இருப்பதான எங்கள் பதின்மரையும் சில நாள் அங்கு இராதபடி விலக்கி எங்களை வஞ்சிப்பதற்கு அத்விதீய பிரபு ஆனவனே-அருளாய்-அங்காக நான் வந்து இருப்பதாக அருளிச் செய்யாய்–இங்கு உமக்கு என்ன பாதகம் என்ன-இருளாய் வந்து உறுகின்றதே –அஞ்ஞான அந்தகாரமே எவரிலும் வந்து திணுங்கி எல்லாரையும் பாதியா நின்றது-ஆர் தான் இந்த ப்ரபந்ந அதிகாரிகள்
இவர்களுக்கு அனுபவ காரகமான இந்த பிரபந்தங்களை இங்கனே வைத்து தேவரீர் ப்ரவர்த்திப்பத்துக்கு என்ன பலம் ஆகையால் என்னை அங்கு வாங்கு என்றபடி –

ஸ்வாபதேசம் –இத்தால்-சம்சாரத்தில் இருப்பு அஞ்ஞானம் வந்து மேலிடும்படியாய் இருக்கையாலே
கடுக இவ்விருப்பை கழித்து தர வேணும் என்று   அருளிச் செய்கிறார் –

தாத்பர்யம்–கீழே விண்ணுளாரிலும் சீரியரான பாகவதர்களைக் கண்டு களித்த ஆழ்வார் அந்த அனுபவம் தமக்கு கிட்டாமல் தளர்ந்து இங்கு அஞ்ஞானம் வளர்க்கும் ஸம்ஸாரத்திலே இருப்பு பொறுக்க மாட்டாமல் இரவுக்கு வருந்தும் நாயகி பாசுரத்தால் அருளிச் செய்கிறார்-மாந்தாதா போன்ற ராஜாக்கள் சாது சம்மதித்து செங்கோல்- தர்ம ஆஜ்ஜை -நடத்தி பின்பு காலம் கழிந்து சென்றால் போல் இத்தனை காலமும் இந்திரியங்கள் வேறே வேறே விஷயம் போகும்படி உபகரித்த ஆதித்யனும் அஸ்தமிக்க
நீண்ட இருளும் வந்து பாதித்து மனசை ஏக முகமாக உபய விபூதி நாயகனையே நினைக்கும் படி பண்ணி என்னையும் ரக்ஷிப்பதாகச் சொல்லிப் போந்த நீ என்னை –‘உன்னையே கதியாக கொண்ட என்னை – உனது அருளுக்கு விஷயம் ஆக்க வேண்டும் -என்று பிரார்திக்கிறார்

3-1-முடிச் சோதி பிரவேசம்-

பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல் மருளில் வண் குருகூர் வண் சடகோபன் –2-10-1-என்று அவன் கல்யாண குண விஷயமாக
அஜ்ஞ்ஞானம் இல்லை என்றார் கீழில் திருவாய்மொழியில் –அந்த குணாதிக விஷயம் தன்னில் ஒரு அஜ்ஞ்ஞானம் அனுவர்த்திக்கிற படி
சொல்லுகிறார் இதில் -கீழ்ச் சொன்ன அஜ்ஞானத்துக்கு அடி கர்மமாய் இருக்கும் -இங்குத்தை அஜ்ஞானத்துக்கு அடி
விஷய வைலஷண்யமாய் இருக்கும் -நித்ய ஸூரிகளுக்கும் உள்ளதொரு சம்சயம் ஆயிற்று இது –
ஸ்வரூப அனுபந்தியாய் இருப்பதொரு சம்சயம் ஆகையாலே ஸ்வரூபம் உள்ளதனையும் நிற்பது ஓன்று இறே இது

திருமலையை அனுபவித்துக் கொண்டு வாரா நிற்கச் செய்தே -வடமா மாலை உச்சியை -என்னுமா போலே திருமலையில் ஏக தேசம்
என்னலாம் படியாய் கல்பக தரு பஹூ சாகமாய்ப் பணைத்துப் பூத்தால் போலே நிற்கிற அழகருடைய சௌந்தர்யத்தை அனுபவித்தார் –
-வேதங்களோடு வைதிக புருஷர்களோடு ப்ரஹ்ம ருத்ராதிகளோடு வாசியற ஸ்வ யத்னத்தால் காணும் அன்று காண ஒண்ணாதபடி
இருக்கிற இருப்பரையும் தானே கொடு வந்து காட்டும் அன்று ஜன்ம வ்ருத்தாதிகளால் குறைய நின்றார்க்கும் காணலாய் இருக்கிற இருப்பையும்
அனுசந்தித்து விஸ்மிதர் ஆகிறார் –

திருமலை -சரம பர்வம் -சுந்தர தோள் உடையான் -பிரதம பர்வம் –சரம பர்வம் அனுபவித்த பின்பு பிரதம பர்வம் அனுபவிப்பது எதனால் –
ஏக தேசம் -திருமலைக்குள் அவனும் அடக்கம் -சரம பர்வத்தில் பிரதம பர்வமும் அடங்குமே –
வேதங்கள் – -ஓதுவார் ஒத்து எல்லாம் –நின் புகழை
மறையாய நால் வேதத்துள் நின்ற -வியாசாதிகளும் காண முடியாதவன்
அரன் முதலாய -நான் முகனும் இந்த்ரனும் பிறை ஏறும் சடையானும் -அறிய முடியாதவன்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே -தானே கொடு வந்து காட்டுவதற்கு திருஷ்டாந்தம்-

கீழ் இரண்டு பத்தாலும் –
ப்ராப்யமான ப்ரஹ்ம ஸ்வரூபத்தினுடைய சேஷித்வ ஸித்தமான-ரக்ஷகத்வ போக்யத்வங்கள் சொல்லிற்றாய்
அநந்தரம்-முன்றாம் பத்தாலும் நாலாம் பத்தாலும்
ப்ராப்தாவான ப்ரத்யகாத்ம ஸ்வரூபத்தினுடைய பகவத் ஏக சேஷத்வ ஸித்தமான தத் ஏக அநு பவத்வமும்-
தத் ஏக ப்ரியத்வமும்-சொல்லுகிறது –
அதில் தத் ஏக அனுபவத்வ பரமான இம்மூன்றாம் பத்தில் –
1-பகவச் சேஷித்வ பாரம்ய ஸித்தமான ஆத்ம சேஷத்வத்தினுடைய ஸ்வாபாவிகத்வத்தையும்
2-அதுக்கு விரோதியான தேஹ சம்பந்தாதி நிவர்த்த நீயம் என்னும் இடத்தையும்
3-நிவ்ருத்த விரோதிகனுக்கு சேஷ வ்ருத்தி பிரகாரம் பரார்த்த நீயம் என்னும் இடத்தையும்
4-சேஷியினுடைய சர்வாத்ம பாவ ப்ரயுக்தமான சேதனனுடைய அப்ருதக் சித்த பிரகாரத்வம் -சேஷத்வ வேஷம் என்னும் இடத்தையும்
5-ஏவம் வித சேஷத்வ ரசத்தால் வந்த ப்ரேம விகாரத்தையும்
6-சேஷத்வ பிரதிசம்பந்தி அர்ச்சாவதார பர்யந்தம் என்னும் இடத்தையும்
7-தச் சேஷத்வாபி வ்ருத்தி ரூபமான ததீய சேஷத்வ காஷ்டயையும்
8-ததீயா பாரதந்தர்ய நிதானமான தத் அனுபவ அபி நிவேசத்தையும்
9-அனுபவ விசேஷமான வாசிக்க அனுபவ வை லக்ஷண்யத்தையும்
10-சர்வ பிரகார அனுபவ ஸித்தமான ஸமஸ்த விருத்தி நிவ்ருத்தியையும்
அருளிச் செய்து -இச் சேதனனுடைய பகவத் ஏக அனுபவத்தை ப்ரதிபாதிக்கிறார் –

இதில் முதல் திருவாய் மொழியில்
சேஷத்வத்தினுடைய ஸ்வா பாவிகத்வத்துக்கு மூலமான சேஷியினுடைய சர்வ பிரகார பாரம்யத்தை ப்ரதிபாதிப்பதாக
தெற்குத் திருமலையில் கைங்கர்ய பிரதிசம்பந்தி தயா சந்நிஹிதரான அழகருடைய திவ்ய சவ்ந் த்ர்யத்தை அபரோக்ஷித்து
1-ஆபரண அவயவ சோபையினுடைய ஸூ கடிதத்வத்தையும் –
2-உஜ்ஜ்வலமான சவ்ந்தர்யத்தினுடைய உபமான ராஹித்யத்தையும்
3-சர்வ பிரகார உஜ்வல்யத்தால் உண்டான ஸர்வேஸ்வரத்வத்தையும்
4-அந்த பாரம்யத்தினுடைய போக்யதாதிசயத்தையும்
5-இந்த வை லக்ஷண்யத்தினுடைய வாசா மகோசர மாஹாத்ம்யத்தையும்
6-ஸமஸ்த வேதங்களாலும் சாகல்ய யுக்தி பண்ண ஒண்ணாமையும்
7-அதிசயித ஞானரான ப்ரஹ்ம ருத்ராதி தேவதா வர்க்கமும் சொல்ல நினைத்தாலும் அவ் உஜ்வல்யத்துக்கு மாலிந்யாவஹம் என்னும் இடத்தையும்
8-அபூர்வனாய் அதிசயித ஞானனாய் இருப்பான் ஒரு ப்ரஹ்மா தலைப் படிலும் அதேஜஸ் கரம் என்னும் இடத்தையும்
9-ஆச்ரித வாத்சல்ய அதிசயத்துக்கு சங்கல்ப முகத்தாலே பண்ணும் ஸம்ஸ்ரித ரக்ஷண பாராம்யமும் திரஸ்கார கரம் என்னும் இடத்தையும்
10-ஏவம் விதமான பாரம்யத்தை அறிந்து ஈஸ்வர அபிமானிகளும் ஆஸ்ரயிக்கை ஏற்றம் அல்ல என்னும் இடத்தையும்
அருளிச் செய்து பரம சேஷியான ஈஸ்வரன் சந்நிதியில் தச் சேஷத்வத்தினுடைய ஸ்வா பாவிகத்வத்தையும் உபபாதித்து அருளுகிறார் –

முதல் பாட்டில் அழகருடைய திரு அணி கலன்களுக்கும் திருமேனிக்கும் உண்டான ஸூ கடிதத்வத்தை அனுசந்தித்தார்
இரண்டாம் பாட்டில் அதுக்கு நாட்டார் திருஷ்டாந்தம் இட்டுச் சொல்லுமவை எல்லாம் உனக்கு அவத்யத்தை விளைக்கும் என்றார்
மூன்றாம் பாட்டில் -நாட்டாரை விடும் மயர்வற மதிநலம் அருளப் பெற்ற நீர் சொல்லீர் என்ன என்னால் சொல்லி முடியாது என்றார்
நாலாம் பாட்டில் -இப்படி விலஷணனாய் நிரதிசய போக்யனாய் இருக்கிற உன்னை நாட்டார் இழந்து போம்படி
அவர்களை மதி விப்ரமங்களைப் பண்ணினாய் என்றார்
அஞ்சாம் பாட்டில் நாட்டாரில் வ்யாவ்ருத்தர் அல்லீரோ உம்மால் பேச ஒண்ணாமைக்கு குறை என் என்ன
-என்னை வ்யாவ்ருத்தன் ஆக்கினவோபாதி உன்னை சாவதி ஆக்கிற்று இல்லையே என்றார்
ஆறாம் பாட்டில் வேதங்களும் நீரும் கூடப் பேசினாலோ என்ன அவையும் உன்னைப் பரிச்சேதிக்க மாட்டாது என்றார்
ஏழாம் பாட்டில் வேதங்கள் கிடக்கட்டும் -வைதிக புருஷர்கள் என்று சிலர் உண்டே அவர்கள்
ஏத்தக் குறை என் என்ன அதுவும் உனக்கு நிறக்கேடு என்றார்
எட்டாம் பாட்டில் கர்ம பாவனை இன்றிக்கே ப்ரஹ்ம பாவனையேயாய் இருப்பான் ஒரு ப்ரஹ்மாவை உத்ப்ரேஷித்து
அவனும் ஏத்தினாலும் தேவர்க்கு அவத்யம் என்றார்
ஒன்பதாம் பாட்டில் மேன்மை பேச ஒண்ணாது என்கைக்கு நீர்மையோ தான் பேசலாய் இருக்கிறதோ என்றார்
பத்தாம் பாட்டில் உன்னாலே ஸ்ருஷ்டரான ப்ரஹ்மாவாலே ஸ்ருஜ்யரான இவர்கள் உன்னை ஏத்துகையாவது
உனக்கு அவத்யம் அன்றோ என்றார்
நிகமத்தில் இத்திருவாய் மொழி தானே ப்ராப்யத்தைத் தரும் என்கிறார் –

முடிச் சோதி யாயுனது முகச் சோதி மலர்ந்ததுவோ
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் யலர்ந்ததுவோ
படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே
 –3-1-1-

கடலுக்குள் பட்டதொரு த்ருணம் ஒரு திரை ஒரு திரையிலே தள்ளக் கடந்து அலையுமா போலே -ஓர் அழகு ஓர்-அழகிலே தள்ளக் கிடந்து அவற்றை அனுபவிக்கிறார்-சேஷித்வ ஸூசகமான அழகை அனுபவித்து தம் சேஷத்வத்துக்கு அனுரூபமான திருவடிகளின் அழகை அனுபவிக்கிறார் –மருளில் வ ண் குருகூர் வ ண் சடகோபன் -என்ற தத்வ ஹிதங்களில் சம்சயம் அற்ற இவருக்கு இது ஒரு நித்ய சம்சயம் விளைந்தது
விஞ்ஞான பலமாய் விஷய வை லக்ஷண்யம் அடியாக பிறந்த சம்சயம் ஆகையால் நித்யமாகச் செல்லும் என்கை –

திருமாலே கட்டுரையே —இதுவும் ஒரு சேர்த்தி அழகு இருக்கிறபடி-இப்படி இன்று அனுபவிக்கப் புக்க இவரோடும் நித்ய அனுபவம் பண்ணுபவர்களோடு அவன் தன்னோடு வாசியில்லை இச்சம்சயம் அனுவர்த்திக்கைக்கு-தமக்கு இந்த சம்சயம் அறுதியிட ஒண்ணாதாப் போலே அவர்களுக்கும் என்று இருக்கிறார்-கட்டுரையே -சொல்ல வேண்டும் என்றபடி -ஷேப உக்தி -சொல்ல முடியாது என்றபடி –அறிந்தேன் என்பவன் அறியாதவன் ஆகிறான் –

————-

கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை யொவ்வா
சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது
ஒட்டுரைத்து இவ்வுலகு உன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி 
–3-1-2-

முதல் உறவு பண்ணும் கண் -அதுக்கு தோற்று ஜிதந்தே என்று விழும் திருவடிகள் -அவ் விழுக் காட்டுக்கு தோற்று அவன் தான் ஜிதந்தே என்று அணைக்கும் கை-இவை இருக்கிற படி –நின் கண் -என்கையாலே -உனது முகச் சோதி -என்றத்தை நினைக்கிறது-பாதம் என்று -அடிச் சோதி என்றத்தை நினைக்கிறது –-கை என்று தாம் நடு வனுபவித்த அழகுக்கு உப லஷணம் –ரத்னம் அறியாதான் ஒருவன் குருவிந்தக் கல்லோடு ஒக்கும் இது -என்றால் -அவ்வளவாக இ றே இவனுக்கு இதில் பிரதிபத்தி –
அவ்வழியாலே அதுக்கு அவத்யமாம் இ றே -அப்படியே இவன் பண்ணும் ஸ்தோத்ரம் இங்குத்தைக்கு அவத்யமாகவே தலைக் கட்டும் –இங்குத்தைக்கு புன்மையைக் காட்டுகைக்கு நிபந்தனம் என் -என்னில் பரஞ்சோதி –நாராயண பரோ ஜ்யோதி -என்கிறபடியே நீ சர்வ வஸ்து விசஜாதீயன் ஆகையாலே –

——————

பரஞ்சோதி நீ பரமாய் நின்னிகழ்ந்து பின் மற்றோர்
பரஞ்சோதி யின்மையில் படியோவி நிழல்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த எம்
பரஞ்சோதி கோவிந்தா பண்புரைக்க மாட்டேனே
 –3-1-3-

உன்னுடைய சங்கல்ப லவ லேசத்தாலே கார்யகரமாய்க் கொண்டு விஸ்த்ருதமாக நின்றுள்ள லோகங்களை எல்லாம் உண்டாக்கின எம் பரஞ்சோதி –மேன்மையை எல்லை காணிலும்-நீர்மை தரை காண ஒண்ணா தாய் இருக்கிறதே-நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய்யூண் என்னும் ஈனச் சொல் -திரு விருத்தம் -98-என்று நெஞ்சால் நினைக்க ஒண்ணாதது சொல்லத்தானே போகாதது இறே- -ஸூலபதையால் வந்த தேஜஸ் ஸூம் உன்னது-அழகுக்கு மேற்பட்டார் இல்லாமையால் அழகால் வந்த தேஜஸ் ஸூம் உன்னது-லோகத்தில் உபமான ரஹிதர் நீயே யாகையாலே உபமான ராஹித்யத்தால் வந்த தேஜஸ் ஸூம் உன்னது–ஜகத் காரணத்வ ப்ரயுக்தமான தேஜஸ்ஸூம் உன்னது
பண்புரைக்க மாட்டேனே-பண்பு -படி -உன் படிகள் இவையான பின்பு என்னால் பேசப் போகாது-அனுபவித்துப் போம் இத்தனை- என்கிறார் –

———–

மாட்டாதே யாகிலும் மலர்தலை மா ஞாலம் நின்
மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம் வைக்க
மாட்டாதே பல சமய மதி கொடுத்தாய் மலர்த்துழாய்
மாட்டே நீ மனம் வைத்தாய் மா ஞாலம் வருந்தாதே
 –3-1-4-

மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம் வைக்க–உன் இடத்திலேயான -உன் பக்கலிலே யான -அன்றிக்கே -மாட்டு -என்று மாடாய் -நிதி போலே ஸ்லாக்க்யமான என்னுதல்-
மாட்டு என்று மட்டாய்-மத்வ உத்ஸ – என்று மதுஸ் யந்தி யாகையாலே நிரதிசய போக்யம்-என்னுதல் – –மாட்டு -இடம் -தேன் -நிதி மூன்று பொருள்கள்

மாஞாலம் -இத்யாதி-இம் மஹா பிருத்வியானது இங்கனே நோவு பட்டே போமித்தனை ஆகாதே
1–கர்ம வச்யர் ஆகையாலே தானே உன் பக்கலிலே நெஞ்சை வைக்க மாட்டிற்றிலர்-
2–அதுக்கு மேலே நீ பல விலக்கடிகளையும் உண்டாக்கி வைத்தாய் –
3–நீயோ நிரதிசய போகய ஜாதத்திலே பிரவணனானாய்-இனி சம்சாரிகளுக்கு க்லேசமேயோ சேஷித்தது –-உன்னை விட்டால் பின்னை புத்தி நாசாத் ப்ரணச்யதி -ஸ்ரீ கீதை -2-63–என்னும் விஷயங்களிலே இவர்கள் பிரவணராய் இங்கனே நோவு பட்டே போம் இத்தனையாகாதே –படிக்கட்டு-விஷாயாந்தர -நினைவு -சங்கம் பற்று -விருப்பம் -பேராசை கிடைக்காமல் –கோபம் -சம்மோஹம் மயக்கம்-நினைவு போகும் -புத்தி நாசம் -ஸ்வரூப நாசம் –பிரானே தமக்கு பகவத் விஸ்லேஷம் கிலேச கரமாய் இருக்கையாலே எல்லாருக்கும் இப்படி இருக்கும் என்று இருக்கிறார்–

————

வருந்தாதே வருந்தவத்த மலர்கதிரின் சுடருடம்பாய்
வருந்தாத ஞானமாய் வரம்பின்றி முழுதியன்றாய்
வரும் காலம் நிகழ்காலம் கழிகாலமாய் உலகை
ஒருங்காக வளிப்பாய் சீரெங்குலக்க வோதுவனே
 -3-1-5-

மூன்றாம் பாட்டுக்கும் இப்பாட்டுக்கும் நேரே சங்கதி -நாட்டார் இழவு நடுவு பிரசங்காத் ப்ரஸ்துதம் இத்தனை – கோவிந்தா பண்புரைக்க மாட்டேனே -என்று சொல்லுவான் என்-நாட்டார் பேர் இழவு கிடக்கிடீர் -மயர்வற மதிநலம் அருளப் பெருகையாலே நீர் வ்யாவ்ருத்தரே – நாட்டாரில் வ்யாவ்ருத்தரான அளவேயோ -விண்ணுளாரிலும் வ்யாவ்ருத்தரே -நீர் நம்மைப் பேச மாட்டீரோ என்ன – என்னை வ்யாவ்ருத்தன் ஆக்கினாய் இத்தனை அல்லது உன்னை சாவதி ஆகிற்றிலையே -என்கிறார் –

திரு மேனியைக் கண்டவாறே -அரிய தப பலமோ -என்று தோற்றி இருக்கும் -ஆபாத ப்ரதீதி –
சிறிது அவஹாகித்தவாறே -ஒரு தப பலம் அல்ல -சஹஜ பாக்ய பலம் -என்று தோற்றி இருக்கும் -நிர்ணயம் -காலத் த்ரயத்திலும் லோகத்தை ஒருங்காக ஒருமடைப்பட ஒரு படியே ரஷிக்கிற உன்னுடைய குணங்களை எங்கே முடிய நான் பேசுவேன்-உடையவன் ஆகையால் எல்லாவற்றையும் உடைய உன் சர்வ ரக்ஷகத்வம் இவற்றை எங்கே நான் முடிவு காண –

—————

ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும்
சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிறிதில்லை
போது வாழ் புனந்துழாய் முடியினாய் பூவின் மேல்
மாது வாழ் மார்பினாய் என் சொல்லி நான் வாழ்த்துவனே
 -3-1-6-


எங்குலக்க ஓதுவன் -என்றார் -வேதங்கள் நம்மைப் பேசா நின்றனவே -உமக்குப் பேசத் தட்டு என் -என்ன-அவையும் இவ்வளவு அன்றோ -தகையல்லால் பிறிதில்லை -செய்தது -வேதங்கள் உன்னைப் பேசி சத்தை பெற்றன-என்கிறார் –

ஸ்ரீ ராமாயணம் என்றால் ப்ரஹ்ம லோகத்தில் அநேகம் க்ரந்தமாய் இருக்கச் செய்தே இங்கு இருபத்து நாலாயிரமாய் இரா நின்றது-

பூவின் மேல் மாது வாழ் மார்பினா-பிராட்டி பிரிந்து இருக்கில் இறே வைத்த வளையம் சருகாவது –இவ்வொப்பனையை ஒப்பனை யாக்கும் அவளோட்டை சேர்த்தி தான் என்னாலே பேசலாய் இருந்ததோ –தாமரைப் பூவை இருப்பிடமாக உடைய பெரிய பிராட்டியார் பூ அடி கொதித்துப் போந்து வர்த்திக்கும் மார்வை உடையவனே –
பிராட்டி பெருமாளைக் கைப்பிடித்த பின்பு பிறந்தகமான ஸ்ரீ மிதிலையை நினைக்கும் அன்றாயிற்று இவளும் இம்மார்வை விட்டு பிறந்தகமான தாமரையை நினைப்பது –
என் சொல்லி யான் வாழ்த்துவனே-இவ்வொப்பனைக்கும் இச்சேர்த்திக்கும் என்னாலே பாசுரம் இட்டு சொல்லலாய் இருந்ததோ –சர்வேஸ்வர சிஹ்னமான திருத் துழாய் ஆகையால் அவ் வைஸ்வர்யத்தைப் பேசவோ –பிராட்டி யோட்டைச் சேர்த்திக்கு நான் பாசுரம் இட்டுச் சொல்லவோ –

——————

வாழ்த்துவார் பலராக நின்னுள்ளே நான்முகனை
மூழ்த்த நீருல்லெல்லாம் படை என்று முதல் படைத்தாய்
கேழ்த்த சீரரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து
சூழ்த்தமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே 
–3-1-7-

உன்னாலே ஸ்ருஷ்டனான சதுர்முகனாலே ஸ்ருஷ்டரானவர்கள் உன்னை ஏத்த என்ற ஒரு பொருள் உண்டோ –இப்பங்களத்தை விட்டு கால்கடியரானவர்கள் ஏத்தப் புக்கால் எல்லை காணப் போமோ -கால் கடியார் -சக்தர் –இவர்கள் ஏத்தும் அளவோ இவன் குணங்கள் என்ன — அவ்வழியாலே அவத்யமாய்த் தலைக்கட்டாதோ –

————-

மாசூணாச் சுடருடம்பாய் மலராது குவியாது
மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய்
மாசூணா வான் கோலத்தமரர் கோன் வழிப்பட்டால்
மாசூணா வுனபாதம் மலர்ச்சோதி மழுங்காதே
–3-1-8-

இவனைப் போல் அன்றியே கேவலம் ப்ரஹ்ம பாவனையேயாய் இருப்பான் ஒரு ப்ரஹ்மாவை உத்ப்ரேஷித்து-அவன் ஏத்தினாலும் தேவர்க்கு அவத்யமாம் அத்தனை அன்றோ – என்று பட்டர் அருளிச் செய்யும் படி-

மலராது குவியாது -என்கிறது கீழும் மேலும் அந்வயிக்கக் கடவது-சம்சாரிகள் கர்ம நிபந்தமாக பரிக்ரஹித்த தேஹத்துக்கு வரக் கடவதான ஸ்வரூப அந்யதா பாவமும் இல்லை இவன் திருமேனிக்கு – அவர்கள் ஞானத்துக்கு வரக் கடவதான ஸ்வபாவ அந்யதா பாவமும் இல்லை இவனுடைய ஞானத்துக்கு -என்கை-தம்முடைய சேஷத்வ அனுரூபமாக உன் திருமேனி என்னாதே உனபாதம் என்கிறார்-திருமேனி -சோதி சொல்லாமல் –சுடர் உடம்பாய் -தொடங்கி -சேஷ பூதர் என்பதால் –பாத மலர்ச் சோதி மழுங்காதே -என்கிறார்-மாசூணா வுனபாதம் மலர்ச்சோதி-ஹேய பிரதி படமான உன்னுடைய திருவடிகளின் அழகு –

—————

மழுங்காத வைந் நுதிய சக்கர நல் வலத்தையாய்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படையாக மலருலகில்
தொழும் பாயர்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே
 –3-1-9-

கையில் திரு வாழி இருந்தது அறிந்திலன்-அறிந்தான் ஆகில் இருந்த விடத்தே இருந்து அத்தை ஏவிக் கார்யம் கொள்ளலாம் இறே-ஆர்த்த நாதம் செவிப் பட்டவாறே -தன்னை மறந்தான் -கையும் திரு வாழியுமான தன்னை -தான் ரஷகன் என்பதை மறக்க வில்லை –
நினைத்தாலும் இருந்த இடத்திலே இருந்து துக்க நிவ்ருத்தி பண்ண ஒண்ணாது
தொழும் காதல் களிறு ஆயிற்று-கையும் திரு வாழியுமான அழகு காண ஆசைப்பட்டு இருக்கிறவன் ஆயிற்று –காதலே இதுக்கு நிரூபகமாய் இருக்கை-சேஷ பூதனுக்கு காதல் அடையாளம் -சேஷிக்கு அடையாளம் நல் சக்கர வலத்தை புள்ளூர்வது-சங்கல்பத்துக்கு முற்பட்டாயிற்று திருவடி வேகம் இருப்பது-அவன் வேகம் போராமல் அவனையும் இடுக்கிக் கொண்டு இறே வந்து விழுந்தது -ஹூம் ஹூம் -பட்டர் –-தோன்றினையே -இடர் பட்டார் தாமாய்-தமக்குத் தோற்றினால் போலே காணும் இருக்கிறது –மலருலகில்-திரு நாபீ கமலத்தை அடியாக யுடைததான சம்சாரத்தில் -மலரும் உலகம் -மலரை அடியாக கொண்ட உலகம் –மறையாதே என்ற இதுக்கு மறையும் மறையும் -என்று சிற்றாட் கொண்டான் வார்த்தை —பெரு முதலியாய் இருந்து வைத்து திருவடிகளை ஆஸ்ரயித்தார்க்கு தானே தடுமாறி கொண்டு வந்து உதவும் என்னும் இவ் வழகிய தேஜஸ்ஸை இழந்தாய் ஆகாதே –

————–

மறையாய நால் வேதத்துள் நின்ற மலர்ச் சுடரே
முறையால் இவ்வுலகெல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய்
பிறையேறு சடையானும் நான்முகனும் இந்த்ரனும்
இறையாதல் அறிந்து ஏத்த வீற்று இருத்தல் இது வியப்பே 
–3-1-10-

மறை என்றும்-வேதம் என்றும் இரண்டு படியாகச் சொல்கிறது –
பாஹ்யராய் நாஸ்திகராய் இருப்பாருக்கு தன் படிகளை மறைக்கையாலும்
ஆஸ்திகராய் இருப்பார்க்கு தன் அர்த்தத்தை வெளியிட்டுக் காட்டுகையாலும்-வேதங்களிலே சர்வாதிகனாகவும் நிரதிசய போக்யனாகவும் பிரகாசிக்கிறவனே-சர்வவித ரஷணங்களையும் பண்ணிணவனே-விஷம சிருஷ்டிக்கு அடியான கர்ம விசேஷம் இறே சேதனர் பண்ணி வைப்பது-யௌ கபத்யம் அனுக்ரஹ கார்யம் -ஒருவன் ஒரு குழமணனைப் -மரப்பாச்சி பொம்மை -பண்ணி -அதன் கழுத்திலே காக்கைப் பொன்னித் தொற்றி -அதன் தலையிலே காலை வைத்து-இது என்னை வணங்கிற்று என்று இறுமாந்து இருக்குமா போலே நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணி -திருவாய்மொழி -7-5-4-என்கிறபடியே-உன்னாலே மனையப் பட்ட பிரம்மாவும் அவனாலே ஸ்ருஷ்டரான இவர்களும் உன்னை ஏத்த அத்தாலே இறுமாந்து இருந்தால் என்றால் இது உனக்கு ஏற்றமோ -ஹாச்யமாய்த் தலைக்கட்டும் அத்தனை அன்றோ-உனக்கு அவத்யம் அன்றோ –-

—————

வியப்பாய வியப்பில்லா மெய்ஜ்ஞான வேதியனை
சயப்புகழார் பலர் வாழும் தடம் குருகூர் சடகோபன்
துயக்கின்று தொழுதுரைத்த வாயிரத்துள் இப்பத்தும்
உயக்கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே 
-3-1-11-

துயக்காவது -மனம் திரிவு சம்சார விபர்யய ரஹிதமாக சாஷாத்கரித்து அருளிச் செய்த ஆயிரத்தில் வைத்துக் கொண்டு இப்பத்தும் அராஜகமான தேசத்தில் ராஜ புத்திரன் தலையில் முடியை வைத்து விலங்கு வெட்டி விடுமா போலே அழகர் திருவடிகளிலே கைங்கர்யத்தை அன்வயித்து பின்னை தத்விரோதியான சம்சார சம்பந்தத்தை அறுத்துக் கொடுக்கும்-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -79-வேதனை வெண் பூரி நூலனை-மொய்ம்மாம் பூம் பொழில் –3 -5-

March 18, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

சீதளம் -குளிர்ந்த -பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளியதால் –அருமை பெருமைகளை வரிசைப்படுத்தி அருளிச் செய்கிறார்-சீதனையே தொழுவாரைக் கொண்டாடுகிறார்-மொய்ம்மாம் பூம் பொழில் –3 -5-திருநாம வைபவம் சொல்லும் பதிகம்போற்ற தேவர்கள்-ஏச நான்உலோகர் சிரிக்க நின்று ஆடி ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப்படுவாரே.–3-5-8-சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே – இங்கு

பாவியேன் -பகவத் விஷயம் என்றால் தளராதே நின்று அனுபவிக்குமவர்களும் சிலரே -என்கிறார் –
தலைவனை பிரியாத மகளிரது சிறப்பைக் கூறித் தலைவி இரங்கல் –

இப்படி ஆர்த்தி அதிசயத்தாலே ஈடுபட்டவர் இவ் விஷயத்தை அனுபவிக்கப் பெற்றவர்கள் ஸூரிகளிலும் விலக்ஷணர் ஆவர்கள் இறே என்று தம்முடைய இழவை அருளிச் செய்கிறார்

இது நாயகி வார்த்தை யாகவுமாம்

வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற
நாதனை ஞாலம் விழுங்கும்  அநாதனை ஞாலந்தத்தும்
பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும்   சீரியரே
– – -79–தலைவனைப் பிரியாத மகளிரது சிறப்பைக் கூறித் தலைவி இரங்குதல் –

வேதனை–வேதம் வல்லவனும்
வெள் புரி நூலனை–சுத்தமான யஜ்ஜோபவீதம் முடையவனும்
விண்ணோர் பரவ நின்ற சாதனை–மேலுலகத்தார் துதிக்க அவர்களுக்குத் தலைவனாய் நின்றவனும்
ஞானலம் விழுங்கும் அநாதனை–(பிரளயகாலத்திலே) உலகத்தை வயிற்றினுள் வைத்து நோக்கி
(அங்ஙனம் தன்னை நோக்குதற்கு) ஒரு தலைவனை யுடையனாநாதவனும்
ஞாலம் தத்தும் பாதனை–உலகத்தை யளந்த திருவடியை யுடையவனும்
பால் கடல் பாம்பு அணைமேல்–திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வானாகிற் படுக்கையின் மேல்
பள்ளி கொண்டு அருளும்–யோக நித்திரை கொண்டருளுகிற
சீதனையே–குளிர்ந்த தன்மையுடையவனுமான எம்பெருமானையே
தொழுவார்–இடைவிடாது வணங்கி யநுபவிக்கப் பெற்றவர்
விண் உளாரிலும் சீரியர்–பரமபதத்திலுள்ளவர்களிலுஞ் சிறப்புடையராவர்.

வேதனை –புக்க இடமும் புறப்பட்ட இடமும் தாம் பட்டது படும் வேதத்தை நினைக்கிறார் –வெண் புரி நூலனை-மைவரை போல் பொலியுமுரு -என்று அவ் வடிவை இறே வேதங்களும் பிரதிபாதிக்கிறது –
அவ் வடிவுக்கு பரபாகமான திரு யஜ்ஜோபவீதத்தை உடையவனே–விண்ணோர் பரவ நின்ற நாதனை –
நித்ய ஸூரிகளும் அடைவு கெட்டு கிடந்தது கூப்பிடுவது-அவ் வடிவை இறே –ஞாலம் விழுங்கும்  அநாதனை--குறைவற்றார் சிலர் கொண்டாட இருந்தோம் என்று மேன்மை பார்த்து இராதே –
குறைவாளரான சம்சாரிகளை பிரளயம் நலியாதபடி வயிற்றிலே-எடுத்து வையா நின்றால் – நீ இது  செய்யக் கடவ இல்லை -என்று சிலரால் சொல்ல ஒண்ணாது-இருக்கிறவனை –ஞாலம் இத்யாதி –
புழுக் குறித்தது எழுத்தாமாப்  போலே –ஒருகால் ரஷித்து விடுகை அன்றிக்கே – ஜகத்தை அடைய வளைந்து கொண்ட திருவடிகளை உடையவனை –எல்லாம் செய்தாலும் ஒன்றுமே செய்யப் பெற்றிலோம் என்று இவற்றின் உடைய ரக்ஷண சிந்தனை செய்து கிடக்கிற படி-உன் அடியார்க்கு என் செய்வான் என்றே இருத்தி-இந்திரனுக்கு இழந்தத்தைக் கொடுத்து -(மஹா பலி -அம்ருத மதனம் இரண்டிலும் -) தான் பேர்ந்து கிடக்கிறபடி யாதல் தனது படுக்கையாக பாற்கடலையே கடைந்தான் அன்றோ-சீதனை-திருப்பாற்கடலில் கிடக்கிறபடியை நினைத்தாலே தாபம் போக்கி குளிர வைப்பவன் அன்றோ-தாபார்த்த ஜல ஸாயீனம் –சீதனையே-அவனைத் தொழுது வேறே ஒரு பிரயோஜனத்தைக் கொள்ள இருக்காமல் அவனைப் பிரசங்கிக்க மாத்திரத்தாலே நெஞ்சு தளராமல் அனுபவிக்க வேண்டுமே-இதுவே அவதாரிகையில் பார்த்தோம்-நிறுத்தி நிதானமாக அனுபவிக்க வேண்டும்-விண்ணுளாரிலும் சீரியரே –நிரந்தர பகவத் அனுபவமே யாத்ரை யான -அத்தேசத்தில் அன்றியிலே –
அப்படிக்கு விரோதியான சம்சாரத்திலே இருந்தே -அதுவே யாத்ரையாய் இருக்கையாலே – இவர்கள் நித்ய ஸூரிகளிலும் சீரியர்–அநாதனை –ஆத்மேஸ்வரம் –என்னுமா போலே தனக்கு ஒரு நியந்தா இல்லாதவன் –

நாயகனைப் பிரியாத மகளிர் பாக்யத்தை கூறித் தலைவி இரங்கும் பாசுரம் –-இங்கேயே அவனை-இடைவிடாமல் அனுபவிக்கப் பெற்றவர் முக்தர்களிலும் சீரியர்-பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும்-சீதனையே-ஸ்ரீ தேவி பூ தேவி திருவடி வருட – அப்படிப்பட்ட இடையில்லாத் போகம் தனக்கு கிடையாமையை சொல்லி-வேத முதல்வன் விளங்கு பூரி நூலன் -ஞாலந்தத்தும் பாதனைப்
திரு உலகு அளந்த திருவடி யுடையவன் -உத்பத்தி ஸ்தானமான திருவடியை யுடையவன் என்றுமாம்
திருமாலின் திருவடியின் நின்றும் பூ லகம் வந்தமை புருஷ ஸூகதம் சொல்லுமே-உண்ணும் சோறு இத்யாதி -மனம் மொழி காயம் மூன்றாலும் இங்கேயே பகவத் அனுபவமே யாத்திரையாக-கொண்ட
ஆழ்வார் நித்ய ஸூரிகளிகளும் மேம்பட்டவர் என்றதாயிற்று –-நாயகனைப் பிரியாத பாக்கியம் பெற்ற மகளிர்களின் சிறப்பைக் கூறித் தலைவி இரங்கும் பாசுரம் இது.-வேதம் வல்லவனாய் சுத்தமான யஜ்ஞோபவீத மணிந்தவானய் மேலுலகத்தார் துதிக்குமாறு அவர்கட்குத் தலைவனாக நிற்பவனாய்ப்
பிரளய காலத்தில் உலகங்களை வயிற்றினுள் வைத்து நோக்குபவனாய்த் தனக்கொரு தலைவனை யுடையனாகாதவனாய் உலகத்தை யளந்த திருவடியையுடைவனாய்த் திருப்பாற்கடலில் க்ஷேசாயி யாகி யோகந்துயிர் கொண்டருள்பவனாய்க் குளிர்ந்த தன்மையயுடைவனான எம்பெருமானையே இடைவிடாது வணங்கி யநுபவிப்பவர் யாரோ, அவர்கள் பரமபதத்தில் வாழும் நித்ய முக்தர்களிற் காட்டிலும் சிறப்புடையராவர் என்கிறது.–நாயகனுடைய பிரிவிலே தனித்து மிக வருந்துகிற நாயகி, தன்னை சிறப்புடையராவர் என்கிறது.-நாயகனுடைய பிரிவிலே தனித்து மிக வருந்துகிற நாயகி, தன்னை யாற்றுவிக்கிற தோழியை நோக்கி,-‘நாயகனைப் பிரியாமல் அவனுடன் என்றுங்கூடி வாழ்பவர் முத்தியுலகத்துப் பேரின்பம் நுகர்வாரினுஞ் சிறப்புடையாராவர், என்ற இதனால்
‘அப்படிப்பட்ட பாக்ய விசேஷத்தை யான் பெற்றிலனே!’ என்று தன் ஆற்றாமை மிகுதியை வெளியிட்டாளாயிற்று.–ஸ்ரீதேவியும் பூதேவியும் ஒருகாலும் விட்டுப் பிரியாது திருவடி வருடக் கூடிக்குலவி யின்புற அவர்களுடன் அறிதுலமருந்தன்மையை‘பாற்கடல் பாம்பணை மேற் பள்ளிகொண்டருளுஞ் சீதனை’ என்றதனால் குறிப்பிட்டு,அப்படிப்பட்ட இடையீடில்லாப் போகம்
தனக்குக் கிடையாமையைப் பற்றிப் பொறாமையும் வருத்தமுங் கொண்டவை கொள்க.–‘வேதனை’ என்பதற்கு– வேதம் வல்லவன் என்றும், வேதங்களாலே பிரதிபாதிக்கப்படுபவன் என்றும் பொருள் கொள்ளலாம்.-வெண்புரிநூல் = வெண்ணிறமான முப்புரிநூல் வைதிக புருஷனென்கைக்கு அடையாளமான சுத்த யஜ்ஞோவீதத்தையுடையவன் என்றவாறு. “வேதமுதல்வன் விளங்கு புரிநூலன் (8-4-2.) என்ற திருமொழியுங் காண்க. “ஞாலந்தத்தும் பாதன்” என்பதற்கு- ‘உலகத்தை யளந்த திருவடியையுடையவன்’ என்று பொருள் கொள்வதன்றியே, பூமிக்கு உற்பத்தி ஸ்தாநமான திருவடியை யுடையவன் என்றும் பொருள் கொள்வர்;-திருமாலின் திருவடியினின்று பூலோக முண்டாயிற்றென்று வேதங்கள் கூறும். சீலன் – அருளுடையானென்றபடி.–இடைவிடாது பகவதநுபவம் செய்வதற்கென்றே வாய்த்த இடமான பரமபதத்தில் பகவதநுபவத்திற்கு எவ்வகையான இடையூறு மில்லாதலால் அங்கிருந்து கொண்டு பகவானை யநுபவித்தல் வியப்பன்று; உண்டியே உடையே உகந்தோடு மிம்மண்டலம் பகவதநுபவத்திற்கு நேர்விரோதி யாதலால் அப்படிப்பட்ட இந்த இருள் தருமா ஞானத்திலிருந்து கொண்டே அங்ஙனம் நித்யாநுபவஞ் செய்தலில் மிக அருமை யுண்டாதலால் அவ்வருமையைப் போக்கி எம்பெருமானை இடைவிடாது அனுபவிக்குமவர்களை நித்ய முக்தர்களிலும் மேம்பட்டவராகக் கூறத்தடையுண்டோ?-ஒரு சிறந்த காரியத்தைப் பிரதிபந்தகமில்லாத விடத்தில் தலைக்கட்டுதலிற் காட்டிலும் பிரதிபந்தகம்மலிந்த விடத்தே தலைக்கட்டுதல் வியக்கத்தக்கதன்றோ
எம்பெருமான் புக்கல் ஈடுபாடு கொண்ட- ஆவார் மற்றொன்றிற் சிந்தை செலுத்தாது அப் பெருமானையே மனமொழி மெய்களால் பூர்ணாநுபவஞ் செய்யப் பெற்றவர். இவ்வுலகத்திலிருந்து கொண்டே நித்யஸூரிகளிலும் மேம்பட்டவராவர் என்று அருளிச் செய்தாராயிற்று. அப்படிப்பட்ட அநுபவம் தமக்குக் கிடைக்கவில்லையே! என்று வருந்துகின்றமையும் இதில் தோன்றும்.

வேதனை-வேதங்களால் சொல்லப் படுமவனை-வெண் புரி நூலனை -வைதிக புருஷன் என்கைக்கு அடையாளமான ஸூத்த யஜ்ஜோபவீதத்தை யுடையவனை–விண்ணோர் பரவ நின்ற நாதனை-வேத ப்ரதிபாத்யர்களான அல்லாத தேவதைகள் தம் தாமுடைய பத ஸித்திக்காக ஸ்தோத்ரங்களைப் பண்ண
அவர்களுக்கு அபிமத பல ப்ரதாநம் பண்ணி அவர்களுக்கு ஸ்வாமியாய் நின்றவனை-ஞாலம் விழுங்கும் அநாதனை-அத் தேவதைகளோடு அவர்களுக்கு இருப்பிடமான ஜகத்தோடு வாசியற பிரளயம் கொள்ளாமல் திரு வயிற்றிலே வைத்து நோக்கி தன்னை நோக்குகைக்கு ஒருவர் வேண்டாதவனை-ஞாலந்தத்தும் பாதனைப் அந்த ஜகத்துக்குத் தானே சேஷி என்னும் இடம் தோற்றத்
தன் கீழே ஆக்கிக் கொள்ளும் திருவடிகளை யுடையவனை-பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும் சீதனையே தொழுவார்-ஜகத்துக்குப் பின்னையும் இடையூறு வந்தால் ரக்ஷிக்க வேணும் என்று திருப்பாற்கடலிலே பிரிய ஒண்ணாத போகத்தை யுடைய திரு அனந்தாழ்வான் ஆகிற படுக்கையின் மேலே ரக்ஷண சிந்தை பண்ணிக் கொண்டு கண் வளர்ந்து அருளும் சீதள ஸ்வ பாவம் உள்ளவனை–சீதனையே-அந்நிய விமுகராய்க் கொண்டு (வேறே ஒன்றைக் காணாமல் -கணிசியாமல்) அனுபவிக்கப் பெற்றவர்கள்-விண்ணுளாரிலும் சீரியரே – நித்ய அனுபவம் பண்ணப் பெற்ற பரமபத வாஸிகளிலும் கனத்தவர்கள்–இவ்விடத்தில் சீதன் என்றது தாப ஆர்த்தோ ஜல சாயிநம் –ஸ்ரீ விஷ்ணு தர்மம் –41-30-என்று அனுபவிக்கப் பெறாதார் ஆர்த்தி தீர்க்கைக்காகத் திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகையாலே நாராயணத்வ ப்ரயுக்தமான ஸுசீல்ய சீதனத்தைச் சொல்லிற்று ஆயிற்று –

தாத்பர்யம்-இதில் பகவத் அனுபவத்தில் தம்மைப் போல் நெஞ்சு தளராமல் திட ஸித்தராய் இருந்து அவனை அனுபவிக்கும் பாகவதரைக் கண்டு ஹ்ருஷ்டராகிறார்-கரிய மேனிக்கு பரபாகமாக -யஜ்ஜோபவீதம் கண்டு வேதமும் வைதிகரும் எப்பொழுதும் ஏத்தும் கல்யாண குணங்கள் நிரம்பிய ஸர்வேஸ்வரன் சிறியவருக்கு ஆபத்து வர மேன்மையை நினைத்து மதம் பிடித்து இல்லாமல்
திரு வயிற்றிலே வைத்து ரஷிப்பவன் இவ்வாறு செய்யாதே என்று நியமிக்க யாரும் மேம்பட்டவர் இல்லாதவனாய் இவ் விபூதியை ஒருகால் ரஷிக்கும் அளவு அன்றிக்கே திருவிக்ரமனாய் அளந்து
இன்னும் ரக்ஷண சிந்தை பண்ணும் ஸ்ரீ யபதியை விரோதி பஹுளமான சம்சாரத்தில் இருந்தே
ஆஸ்ரயிக்கும் பாகவத உத்தமர்கள் நிரபாதகமான அங்க நித்ய அனுபவம் செய்பவர்களை விட மேம்பட்டவர் என்கிறார்

3-5-மொய்ம் மாம் பூம் பொழில் — பிரவேசம் –

‘புகழும் நல் ஒருவன்’ என்ற திருவாய்மொழியிலே, பகவானுடைய சொரூப ரூப குண விபூதிகளை அனுபவித்து, அதனால் வந்த ஹர்ஷப் பிரஹர்ஷத்தாலே களித்து அவ்வனுபவமில்லாதாரை நிந்தித்து, அவ்வனுபவமுடையாரைக் கொண்டாடிச் சொல்லுகிறது ‘மொய்ம்மாம்பூம்பொழில்’ என்ற இத்திருவாய் மொழி.
இவர் ‘முந்நீர் ஞாலம்’ என்ற திருவாய்மொழியில், சரீர சம்பந்தத்தை அநுசந்தித்தும்,
மற்றைய விஷயங்களில் ஈடுபாட்டினை அநுசந்தித்தும் சோகித்த சோகம் சிலர்க்கு நிலமாகில் அன்றோ,
இத்திருவாய்மொழியில் பகவானை அனுபவித்த அனுபவத்தாலே மகிழ்ச்சி கொண்டவரான இவருடைய மகிழ்ச்சி சிலர்க்கு நிலமாவது?
‘ஆயின், இவரும் பகவானை அனுபவம் பண்ணுகிறார்; நாமும் அவ்விஷயத்திலே கை வைக்கிறோம்;
இவருக்கு இங்ஙன் இருப்பான் என், நமக்கு இங்ஙன் இராதொழிவான் என்?’ என்னில்,
நாமாகிறோம் கண்டார்க்கு ஒளிக்க வேண்டுமவையாய், சாஸ்திரங்களெல்லாம் ஒருமுகஞ்செய்து நீக்குகின்றவையாய்,
முதல் தன்னிலே கிடையாதவையாய், கிடைத்தாலும் நிலை நில்லாதவையாய், பின்னர் நரகத்திலே மூட்டிக் கேட்டினை
விளைக்கக்கூடியனவான மற்றைய விஷயங்களினுடைய லாபாலாபங்களில் பிறக்கும் சோகமும் மகிழ்ச்சியுமே ஆயிற்று அறிவது.
நெருப்பும் நெய்யும் பக்கம் -ஆண் பெண் -தஸ்மாத் நாரீச சம்சர்க்கம்
விஷத்தை விட விஷயாந்தரம் தாழ்ந்ததே -நினைத்தாலே விநாசம் –
ஞானவான்களையும் அழிக்கும்-மனம் சஞ்சலம் -பிரம்மா த்யானமே பண்ண வேண்டும் –
ராக -பய -குரோத மூன்றையும் வெல்ல வேண்டும் -பிடித்தது -நடக்காமல் போகுமே -பயம் -நடந்தால் கோபம் வருமே –

‘நன்று; ஆசையற்றவராய், சத்துவ குணத்தையுடைய பெரியோர்கட்குத் தலைவராய் இருக்கிற இவர்க்குச் சாஸ்திரங்கள்
‘கூடாதவை’ என்று விலக்கிய சோகமும் மகிழ்ச்சியும் கூடினபடி எங்ஙனே?’ எனின்,
‘இவருடைய சோகமும் மகிழ்ச்சியும் சாஸ்திரங்களிலே விலக்கிய சோகமும் மகிழ்ச்சியும் அல்ல;
சமஸ்த கல்யாணகுணாத்மகனான சர்வேசுவரனை அனுபவித்து அவ்வனுபவத்தால் உண்டான பிரீதியாயிற்று இவர்க்கு மகிழ்ச்சியாவது.
‘இப்படி வகுத்த சர்வேசுவரனை அநாதிகாலம் இழந்து இதர விஷயத்தில் ஈடுபாடு உடையோமாய்க் கேட்டினை அடைவோமே!’
என்னுமதாயிற்று இவர்க்குச் சோகமாவது.
மேலும் ‘காமம் ஆகாது’ என்று விலக்கியிருக்கவும், ‘இடைவிடாது தியானம் செய்யத் தக்கவன்’ என்று கொண்டு
பகவத் காமத்தைச் சாஸ்திரங்கள் விதியா நின்றனவே அன்றோ?
சேம நல் வீடும் –சீரிய நல் காமமும் -கண்ணனுக்கே ஆமது காமம் -அத்தை கிட்ட இது வேண்டுமே –
இனி, முத்தரும் பகவானுடைய அனுபவத்திலே ‘நான் பரமாத்துமாவுக்கு இனியவனாய் இருக்கிறேன்; நான் பரமாத்துமாவாகிற
இனிய பொருளை அனுபவிக்கிறவன்,’ என்று-அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம்-
களியாநிற்பர்கள் அன்றோ? ‘இறந்தகாலம் எதிர்காலம் இவற்றில் நடந்த நடக்கும் காரியங்களைச் சொல்லுகிறவராயும்,
ஒன்றிலும் ஐயம் இல்லாதவராயும், எல்லாத் தர்மங்களையும் அறிந்தவராயுமுள்ள நாரதர்’ என்று சொல்லப்படுகிற நாரதர்
முதலிய முனிவர்களும் பகவானுடைய சந்நிதியில் வந்தவாறே ஆடுவது பாடுவது ஆகாநிற்பர்கள் அன்றோ?
விரக்தரில் முதல்வனான திருவடியும் பிராட்டியைக் கண்டுவந்த மகிழ்ச்சியினாலே முதலிகளைப் பார்த்து,
‘நீங்கள் மதுவனத்தை அழித்து உண்ணுங்கோள்! நான் உங்களுடைய விரோதிகளைத் தடுக்கிறேன்!’
(விரோதிகளாவார், காத்திருந்த ததிமுகன் முதலியோர்) என்றானன்றோ? மஹாராஜர்க்கு, ‘உம்முடைய காவற்காடு அழிந்தது’ என்று அறிவிக்க,
‘நம்மோடு கூறிப்போந்த காலமுந்தப்பி, நாந்தாம் ‘தீக்ஷ்ண தண்டர்’ என்று அறிந்திருந்தும், இவர்கள் காவற்காட்டை அழிக்கும் போது,
‘செய்யவேண்டிய காரியத்தைச் செய்யாதவர்கட்கு இப்படிப்பட்ட ஆரம்பம் உண்டாகமாட்டாது. ஆதலால், எல்லாப்படியாலும்
பிராட்டியைத் திருவடி தொழுதார்களாக வேண்டும்,’ என்று அப்போது உண்டான மகிழ்ச்சி, இருந்த இடத்தில் இருக்க வொட்டாமல்,
வாலானது ருஸ்யமூக பர்வதத்தின் கொடுமுடியிலே சென்று அறைந்ததாயிற்று. நடுவே ‘காவற்காடு’ என்று ஒன்று உண்டாயிற்று,
ராஜபுத்திரர்களுடைய ஜீவன அத்ருஷ்டமாயிற்று; அன்றாகில், முதலிகளுடைய மகிழ்ச்சி இராஜபுத்திரர்கள் முதுகோடே போமாயிற்று.

வெற்றிலைச்சாறு சிறிது மிடற்றுக்குக் கீழே இழியப்பெற்ற ஒருவன், தன்னைத்தான் அறிகின்றிலன்; அங்ஙனம் இருக்க
உள் கலந்தார்க்கு ஓர் அமுதமாய், அமுதிலும் ஆற்ற இனியனாய், எனக்கே தன்னைத் தந்த கற்பகம் என் அமுதம்,’ என்று
தாமே முற்றூட்டாக இவ்வமுதத்தை உண்ட இவர்க்கு மகிழ்ச்சி உண்டாகச் சொல்ல வேண்டாவே அன்றோ? நிற்க.
இப்படிப்பட்ட பகவானுடைய அனுபவத்தால் வந்த பிரீதியின் மிகுதியினாலே முதலிலே-1- இதில் அறிவில்லாதாரையும்,
-2- அறிவுண்டாய்ப் புறம்பே கருத்தூன்றினவர்களாயிருப்பாரையும்,-3- சந்தி செய்தல் முதலிய ஒழுக்கங்களையே முக்கியமாகக் கொண்டவர்களாய்,
‘அநுஷ்டான காலங்களில் திருநாள் சேவிக்கலாகாது,’ என்று இருப்பாரையும், -4-அறிவு உண்டாகியே புறம்பே பரபரக்கற்று
‘அதற்கும் இதற்கும் வாசி என்?’ என்று சமானபுத்தி பண்ணி இருப்பாரையும், -5-தங்களை ஆஸ்திகராகப் புத்தி பண்ணி
அவ்வாஸ்திக்யத்துக்குப் ‘புறம்பே விநியோகம்’ என்று இருப்பாரையும்,6- இராஜச தாமசங்கட்கு ஒத்தனவான
அற்பப் பலன்களைக்கொண்டு போவாரையும், -7-அந்த அந்தப் பலன்களுக்காகத் தாமத தேவதைகளை அடைகின்றவர்களையும் எடுத்து,
அவர்களுக்குப் புறம்பே எல்லா நன்மைகளும் உளவேயானாலும், பகவானுடைய குணங்களை அநுசந்தித்தால் அவிக்ருதராகில்,
‘அவர்கள் அவஸ்துக்கள்’ என்று அவர்களை நிந்தித்து,
‘உயர்குடிப்பிறப்பு, உயர்ந்த தொழில், ஞானம் இவைகள் இல்லாதிருப்பினும், பகவானை அனுபவம் பண்ணி விக்ருதராமது உண்டாகில்,
அவர்களுக்கு நான் அடிமை’ என்று அவர்களைக் கொண்டாடிப் பிரீதராகிறார்.
ரத யாத்ரை – -தாரு ப்ரஹ்மம் -தள்ளு முள்ளு நடுவில் -பூரி -ஏழு நாளும் தொட்டு சேவிக்கலாம் -752 அடுப்புக்கள் -மடப்பள்ளி -2000 படி தளிகை –
ஸ்ரீ பத்ரி அலக நந்தாவில் குளித்து–ஸ்ரீ த்வாரகையில் பட்டு ஆடை உடுத்தி -ஸ்ரீ பூரியில் உண்டு – ஸ்ரீ ரெங்கம் வந்து
கண் வளர்ந்து அருளுவதே நித்ய கைங்கர்யம் என்பர் –
மத்யானம் -சந்த்யா வந்தனம் -கைங்கர்யம் -செய்யும் பொழுது கர்ம லோபம் -மூன்று கோடி ரிஷிகள் இவன் விட்ட கைங்கர்யம் செய்வார்களாம் –
விஷ்ணு பக்தி இல்லாதவனுக்கு ஜபம் தபஸ் போல்வன -பிணத்துக்கு அலங்காரம் பண்ணினது போலே -பிரமாணம்

அஞ்சாம் திருவாய் மொழியில் –கீழ்ச் சொன்ன பகவத் பிரகார தயா சேஷத்வத்தில் தமக்குப் பிறந்த ரசாதிசயத்தாலே அத்யந்த ஹ்ருஷ்டராய்
1-பிரதிசம்பந்தியான சேஷியினுடைய ஆபந் நிவாரகத்வத்தையும் –
2-அஸூரா நிராசன சாமர்த்யத்தையும்
3-ஆர்த்த சம்ரக்ஷணத்தையும்
4-அபிமத விரோதி நிவர்த்தகத்வத்தையும்
5-அவதார ப்ரயோஜனத்தையும்
6-அதிசயித போக்யதையையும்
7-ஆஸ்ரித பக்ஷபாதத்தையும்
8-அர்ச்சாவதார சவ்லப் யத்தையும்
9-உபய விபூதி நாதத்வத்தையும்
10-விலக்ஷண விக்ரஹ யோகத்தையும் —
அனுசந்தித்து -ப்ரீதி ப்ரகரஷத்தாலே சம்ப்ராந்த ராகாதாரை நிந்தித்தும்– உகந்து ஆடுவது பாடுவதாவாரை உகந்தும்–
இந்த சேஷத்வ சாரஸ்யத்தை உபபாதிக்கிறார்

மேல் திருவாய்மொழியிலே, அவன் உடைமை என்னும் தன்மையாலே இவ் விபூதிமுழுதும் உத்தேஸ்யம் என்று அனுபவித்தார்;
இத்திருவாய்மொழியில், இவ்விபூதி தன்னிலே, ‘எண்ணாத மானிடத்தை எண்ணாத போதெல்லாம் இனியவாறே’ என்றும்,
‘பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே’ என்றும் சொல்லுகிறபடியே, சிலரைக் கழித்துச் சிலரைக் கூட்டிக்கொள்ளா நின்றார்;
‘இது சேருகிறபடி யாங்ஙனம்?’ என்னில்,
இவ்வாகாரமும் கிடக்கச்செய்தே, வேறு ஆகாரம் தோற்றாதபடியான பாகம் பிறந்தவாறே, அவன் உடைமை என்னும் தன்மையே தோற்றி
,மேல் திருவாய்மொழியில் உபாதேயம் என்று அநுசந்தித்தார். ‘இவர்தாம் எல்லார் படிகளும் உடையராயன்றோ இருப்பது?
முத்தர் படியையுடையர் என்னுமிடம் சொல்லிற்று மேல் திருவாய்மொழியாலே. முமுக்ஷூக்கள் படியையுடையர் என்னுமிடம் சொல்லுகிற இத்திருவாய்மொழியாலே,’ என்று அருளிச்செய்வர்.

மொய்ம்மாம் பூம்பொழிற் பொய்கை
முதலைச் சிறைப்பட்டு நின்ற
கைம்மாவுக்கு அருள் செய்த
கார்முகில் போல்வண்ணன் கண்ணன்
எம்மானைச் சொல்லிப் பாடி
எழுந்தும் பறந்தும் துள்ளாதார்
தம்மால் கருமம் என்? சொல்லீர்,
தண் கடல் வட்டத்து உள்ளீரே!
–3-5-1-

கலங்கிய மடுவின் கரைக்கு கலங்கா பெரு நகரின் இருந்து வந்தானே –அச்சோலையோடு பொய்கையோடு வேற்றுமை அற-இவர்க்கு உத்தேஸ்யமாயிருத்தலின் வர்ணிக்கிறார். ‘வல்லரக்கர் புக்கு அழுந்த –தயரதன் பெற்ற மரகத மணித் தடத்துக்கு இப் பொய்கையும் போலியாய் இருத்தலின், வர்ணிக்கிறார்,’தாமரைக்காடு மலர்க் கண்ணொடு கனிவாய் உடையதுமாய்’ என்கிறபடியே, உபமான முகத்தாலும் விரும்பத் தக்கதாய்
இருக்கிறதாதலின், வர்ணிக்கிறார் -அற்பமாய் இருப்பதொரு நீர்ப்புழுவின் கையிலே அகப்பட்டது என்பார், ‘முதலைச் சிறைப்பட்டு’ என்கிறார்.-முதலையின் செயலே யாய் யானையின் செயல் ஒழிந்ததாதலின், ‘நின்ற’ என்கிறார்-கால் வாசி அறிந்தே அன்றோ பற்றிற்று? முன்பு ஒன்றைப் பிடித்தது இல்லையே? –

பலம் இருக்கிறது என்ற எண்ணம் -யானைக்கு வந்து நோவு ஆதலின், ‘கைம்மா’ என்றது.
அன்றியே, ‘துதிக்கையும் முழுகிப் போய்விட்ட துன்பம் ஆதலின், ‘கைம்மா’ என்கிறது ‘என்னுதல்.‘யானைக்கு நெடுங்கை நீட்டாக ஒண்ணாது என்று ‘தூவாய புள் ஊர்ந்து வந்து’ பூ இடுவித்துக்கொண்டான்-யானையின் காலில் விலங்கை அன்றோ வெட்டிவிட்டது? ‘கொடிய வாய் விலங்கே’ -பெரிய திருமொழி, 6-8-3.-அன்றோ? ‘விலங்கு’ என்றது, சிலேடை: கால் விலங்கு, முதலை, ‘முதலையை ‘விலங்கு’ என்றல் கூடுமோ?’ எனின், அதற்குப் பிரமாணம் காட்டுகிறார்,-கண்ணன் – கண்ணையுடையவன்; இதனையே ‘குளிரக் கடாக்ஷித்து நின்ற நிலை’ –கார் முகில் போல் வண்ணன் கண்ணன் –யானையின் இடரைப் போக்கின போது வடிவிற் பிறந்த துடிப்பும் குணத்திற் பிறந்த துடிப்பும் இருக்கிறபடி.
வடிவழகை யனுபவிப்பித்து யானைக்குக் கையாளாய் நின்ற நிலை; தன்னை அனுபவிப்பித்துத் தாழ நின்றாயிற்றுப் போக்கிற்று.எம்மானை –யானைக்கு உதவியவதனால் அதன் சிறை விட்டது; அந்நீர்மையிலே தாம் சிறைப்படுகிறார்;பட்டர், இவ்விடத்தை அருளிச் செய்யும் போது மேலும் இயலைச் சொல்லச் செய்து ‘அவன் நூறாயிரம் செய்தாலும் மனமும் செயலும் வேறுபடாதிருப்பதற்கும் நாமே வேணும்; நமக்கு ஒரு ஆபத்து உண்டானால் இருந்த விடத்தில் இருக்க மாட்டாமல் விரைந்து வருவதற்கும் அவனே வேணும்,’ என்று அருளிச் செய்தார்.

தண் கடல் வட்டத்து உள்ளீர் சொல்லீர்-விசேஷஜ்ஞர்களோடு அல்லாதாரோடு இவ் வர்த்தம் பிரசித்தம் என்று இருக்கிறார்.-சதுஸ் சஹார பர்யந்த பூமியில் உள்ள நீங்கள் சொல்லி கோளே-இப்பூமியில் பிறந்தது பகவத் அனுபவத்துக்காக என்கை-ப்ரஹ்ம தேசத்தில் அப்பன் பிள்ளையோடு திருவாயமொழி கேட்ட போதை வார்த்தை நினைப்பது –

———

தண் கடல் வட்டத்து உள்ளாரைத்
தமக்கு இரையாத் தடிந்து உண்ணும்
திண் கழற்கால் அசுரர்க்குத்
தீங்கு இழைக்கும் திருமாலைப்
பண்கள் தலைக் கொள்ளப் பாடிப்
பறந்தும் குனித்தும் உழலாதார்
மண் கொள் உலகிற் பிறப்பார்
வல்வினை மோத மலைந்தே.
–3-5-2-

‘ஸ்ரீ கஜேந்திராழ்வானுக்கு உதவின உதவி, நித்தியசூரிகட்கு உதவிய உதவி என்னலாம்படியன்றோ,-தங்களுக்கு இடர் உண்டு என்று அறியாத சமுசாரிகளுடைய விரோதியைப் போக்கி உதவி செய்வது?-ஆபத்துக்கு உள்ளே இருந்து சம்பத்து என்று நினைத்துக் கொண்டு இருப்பார்களுக்கும் வந்து ரஷித்தானே-என்று நீர்மையை நினைந்து விக்ருதர் ஆகாதார்

தண் கடல் வட்டத்துள்ளார் – ஏக தேச வாசித்வ பாந்தமே -ஒரே தேசத்தில் வசிக்கும் காரணத்தால் வந்த சம்பந்தமே காரணமாக ஆயிற்று நலிவது-தமக்கு இரையாகத் தடிந்து உண்ணும் திண்கழல் கால் அசுரர் – சர்வேசுவரன் ரக்ஷிக்கைக்கு ஹேது -ஏது யாது ஒன்று? அதுவே ஆயிற்று இவர்கள் நலிவதற்குக் காரணமும்.மஹா பாவம் அனுபவிக்கப் பிறக்கிறவர்கள்,’இறைவன், ரக்ஷிக்கைக்கு ‘அது எனக்கு விரதம்,’ என்று அறுதியிட்டு இருக்குமாறு போன்று, இவர்கள் பிறரை நலிவதற்கு அறுதியிட்டு வீரக்கழலைக் கட்டியிருப்பவர்கள்’ என்பார், ‘கழல் கால் அசுரர்’ என்கிறார். ‘அவனுடைய ரக்ஷணத்துக்கு ஈடான கிருபையைத் தவிர்க்கிலும், இவர்கள் பிறரை நலிவதற்கு இட்ட வீரக்கழலைத் தவிர்க்க ஒண்ணாது,’ என்பார், ‘திண்கழல்’ என்கிறார்.

பண்கள் தலைக்கொள்ளப் பாடி –
1-‘திருமகள் கேள்வனைப் பாடாநின்றார்கள்’ என்று,
2- பண்கள்தாம் ‘என்னைக்கொள், என்னைக்கொள்’ என்று வந்து தலை காட்ட. என்றது,
3- ‘பண் சுமக்கப் பாடி’ என்றபடி. -அதிகமாக பாடி -ராக மாலிகையில் என்றுமாம் –
4-அன்றி, ‘பண்கள் தலைமை பெறும்படி பாடி’ என்றுமாம். என்றது, ‘தலையான பண்ணிலே பாடி’ என்றபடி.
5-அன்றி, ‘அன்பினாலே அடைவு கெட்டு, ஒரு பண்ணிலே எல்லாப் பண்களும் வந்து முகங்காட்டும்படி பாடி’ என்னலுமாம்.

———-

மலையை எடுத்துக் கல் மாரி
காத்துப் பசு நிரை தன்னைத்
தொலைவு தவிர்த்த பிரானைச்
சொல்லிச் சொல்லி நின்று எப்போதும்
தலையினொடு ஆதனம் தட்டத்
தடு குட்டமாய்ப் பறவாதார்
அலை கொள் நரகத்து அழுந்திக்
கிடந்து உழக்கின்ற வம்பரே
.–3-5-3-

தான் பிறந்து வளருகிற ஊரிலே ஒரு பொருளை வேறு ஒரு தேவதை கொள்ளுகையாகிற இது-மஹிஷீ ஸ்வேதம் பிறரதானதைப் போன்றது’ என்று பார்த்து, ‘அவ்வாகாச வாயனுக்கோ இடுவது? -ஆகாசம் வாசமாக கொண்ட இந்த்ரன் – நமக்கும் மழைக்கும் காற்றுக்கும் இடம் தந்து பசுக்களுக்கும் புகலாய்ப் புல்லும் தண்ணீரும் உண்டாய் இருக்கிற
இம்மலைக்கு அன்றோ இடுவது?’

வீரராயிருப்பார் வினை முடுகினால் எதிரியுடைய ஆயுதந்தன்னைக் கொண்டு அவரை வெல்லுவார்களே அன்றோ? அப்படியே, முன்னே நின்ற கல்லை எடுத்துக் கல் மாரியைக் காத்தான்.-அவன் செய்த தீங்கிற்குத் தோளைக் கழிக்க வேண்டியிருக்க, ‘பாவி பசிக் கோபத்தாலே செய்தானாகில் செய்வது என்? அசுரர்கள் பக்கல் செய்யுமதனை இவனோடு செய்ய ஒண்ணாது; தானே கையோய்ந்து போகிறான்!’ என்று, அவனால் வந்த நலிவைக் கணக்கிட்டு ஏழு நாள் ஒருபடிப்பட்ட மலையை எடுத்துக்கொண்டு நின்றானாயிற்று.
குன்று குடையாக எடுத்தான் குணம் போற்றி – ‘கல்லை எடுத்துக் கல் மாரி காத்து’ என்னும் இவ்விடத்தில் ‘நீராலே வர்ஷித்தானாகில் கடலை எடுத்துக் காக்குமித்தனை காணும்’ என்று பட்டர் அருளிச்செய்வர்.

ஆயர்களுடைய இளிம்பு கண்டால் சிரிப்பன பசுக்களே யன்றோ?-அன்று அம்மழையிலும் காற்றிலும் அடியுண்டாரும் தாமாய், உதவிற்றும் தமக்காக என்றிருக்கிறாராதலின், ‘பிரானை’ என்கிறார்.நிலா, தென்றல், சந்தனம், தண்ணீர் போலே பிறர்பொருட்டாக ஆயிற்று வஸ்து இருப்பது.

‘அரியன செய்து பாதுகாப்பதற்குப் பண்ணும் செயலை விலக்காது ஒழியுமத்தனையே வேண்டுவது; இத்தலையில் தரம் இல்லை,’

என் தஞ்சனே! நஞ்சனே! வஞ்சனே! என்னும் எப்போதும் என் வாசகம்,’ என்கிறபடியே,
‘வாய் படைத்த பிரயோஜனம் பெற்றோம்’ என்று ஏத்தாதார்.

அவன் தன்னை தங்களுக்காக ஒக்கினால்-அவனுக்காக தங்களை ஒக்காதார் அவஸ்துக்கள் என்கை-தடு குட்டம் -குணாலை கூத்து –

————-

வம்பு அவிழ் கோதை பொருட்டா
மால் விடை ஏழும் அடர்த்த
செம் பவளத்திரள் வாயன்
சிரீதரன் தொல் புகழ் பாடிக்
கும்பிடு நட்டம் இட்டு ஆடிக்
கோகு உகட்டு உண்டு உழலாதார்
தம் பிறப்பால் பயன் என்னே
சாது சனங்க ளிடையே?
–3-5-4-

கோகு கட்டுண்கை –ஆரவாரம் கொட்டுகை –கோகு கொட்டு என்றும்- பாடம் –

ஒப்பனை யழகையும் மயிர் முடியையுங்கண்டவாறே தன்னைப் பேணாதே ‘தவாஸ்மி – உனக்காக இருக்கிறேன்’ என்று அவளுக்காகத் தன்னை ஓக்கினான்-அடர்த்த – பின்னர் அணையப் புகுகிறது அவள் தோள்களை ஆகையாலே கிரமப் பிராப்தி பற்றாமே ஒரு காலே ஊட்டியாக நெரித்தான் ஆயிற்று.

செம்பவளம் திரள் வாயன் – விருப்பத்திற்குத் தடையாய் இருந்தவைகள் போகையாலே புன்முறுவல் செய்தபடி.
அன்றியே,
‘அவை திருத்தோள்களுக்கு இரை போராமையாலே புன்முறுவல் செய்து நின்றபடி’ என்னுதல்.
சிரீதரன் – இவ்விடைகள் ஏழையும் வென்று வீர லக்ஷ்மியோடே நின்ற நிலை
அன்றி,-‘அவள் அணைக்கும்படியாக நின்ற நிலை’ என்றுமாம்.-தந் திருஷ்ட்வா -மஹர்ஷீணாம் சுகாவஹம்-பபூவ –ஹ்ருஷ்டா-வைதேஹீ –பர்த்தாரம் –-பரிஷஸ்வஜே –இப்போதாயிற்று ‘ஆண்பிள்ளை’ என்று அணைத்தது; ஸ்த்ரியம் புருஷம் விக்ரஹம் என்றவள் –‘ஆண் வடிவாக இருக்கின்ற பெண்’ என்றவளே யுத்தவடு உள்ள இடமெங்கும் திருமுலைத் தடத்தாலே வேது கொண்டாள். ’பிராட்டி பெருமாளை அணைத்தது போன்று நப்பின்னைப்பிராட்டி அணைக்க நின்றபடி’ 

‘திருப்புன்னைக்கீழ் ஒருவர் இருக்குமிடத்திலே நம் முதலிகள் பத்துப்பேர் கூட நெருக்கிக் கொண்டிருக்கச் செய்தே, கிராமணிகள், மயிரெழுந்த பிசல்களும் பெரிய வடிவுகளும் மேலே சுற்றின இரட்டைகளுமாய் இடையிலே புகுந்து நெருக்குமாறு போலே காண்’ என்று பிள்ளைப் பிள்ளை ஆழ்வான்– கூரத்தாழ்வான் சிஷ்யர்.-அருளிச் செய்வர்.–பகவானுடைய குணங்களைக் கேட்டு ஆனந்தத்தால் வேறுபாடு இல்லாதவர்கள் நடுவே வந்தால் அவர்களுக்கு அஸஹ்யமாயிருக்கும் என்று கூறுதற்குத் திருவுள்ளம் பற்றி, அதற்கு ஆப்த சம்வாதம்-

——–

சாது சனத்தை நலியும்
கஞ்சனைச் சாதிப்பதற்கு
ஆதி அம் சோதி உருவை
அங்கு வைத்து இங்குப் பிறந்த
வேத முதல்வனைப் பாடி
வீதிகள் தோறும் துள்ளாதார்
ஓதி உணர்ந்தவர் முன்னா
என் சவிப்பார் மனிசரே?
–3-5-5-

பாகவத அபாசாரம் பொறாமையாலே இவன் அவதரித்து ஆனைத் தொழில்கள் -ஆஸ்ரிதர்களுக்காகவே திருவவதாரம் –என்பர் -நித்திய விபூதியில் உள்ளார் அனுபவிக்கிறபடியே -அனுபவிக்கிற பிரகாரமும்,-அனுபவிக்கிற திருமேனியும்.-லீலா விபூதியில் உள்ளாரும் அனுபவிக்கும்படியாக அவதரித்தான்-பல படிகளாலும் இவர்களை நாம் பாதுகாக்க வேணும்,’ என்று அவன் வந்து அவதரித்தால் ஒரு படியாலும்
திருந்தாதபடியே அன்றோ இவர்கள் படி இருப்பது
-இக்ஷ்வாகு வமிசத்திலே யுவநாஸ்வான் என்பான் ஒருவன் மந்திரத்தாலே சுத்தம் செய்யப்பட்ட தண்ணீரைக் குடிக்க, அவன் வயிற்றிலே கர்ப்பம் உண்டாயிற்றே யன்றோ ஒரு சத்தி விசேஷத்தாலே?
அங்கு ஆணும் பெண்ணுமாய்க் கலந்து பிறந்தமை இல்லையே? அப்படியே, இங்கும் சர்வ சத்தி யோகத்தாலே இவ்வர்த்தம் பொருத்தமாகத் தட்டு இல்லையே யன்றோ? இதற்குப் பிரமாணம் ‘அஜாயமாந:’ என்ற சுருதியே யன்றோ?

வேத முதல்வனைப் பாடி – வேதங்களால் அறியப்படுகின்றவனைப் பாடி; அன்றி, ‘வேதங்களாலே முதல்வனாகச் சொல்லப்படுகின்றவனைப் பாடி’ என்னுதல்.
‘பிறந்த முதல்வனைப் பாடுகிறது என்? வளர்ந்த விதங்களையும் பாடலாகாதோ?’ எனின்,
‘பிறந்தவாறு எத்திறம்?’ என்னா, வளர்ந்தவாற்றில் போகமாட்டாதே அன்றோ இருப்பது?
‘எத்திறம்!’ என்றால், பின்னையும் ‘எத்திறம்!’ என்னுமித்தனை.

‘துள்ளி ஆடினால் உலகத்தார் சிரியாரோ?’ என்ன, அதற்கு விடையாக, ‘மிளகாழ்வான் வார்த்தையை நினைப்பது’ என்கிறார். இதனால், ‘உலகத்தாருடைய நகையே பூஷணமாய்விடும்,’ என்பது கருத்து.

ஈசுவரன் கை விட்டாலும் விடாத என் நெஞ்சிலும் அவர்களைஉபேக்ஷித்தேன் என்கிறார்

மேல் திருவாய்மொழியிலே, அவன் உடைமை என்னும் தன்மையாலே இவ் விபூதிமுழுதும் உத்தேஸ்யம் என்று அனுபவித்தார்;
இத்திருவாய்மொழியில், இவ்விபூதி தன்னிலே, ‘எண்ணாத மானிடத்தை எண்ணாத போதெல்லாம் இனியவாறே’ என்றும்,
‘பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே’ என்றும் சொல்லுகிறபடியே, சிலரைக் கழித்துச் சிலரைக் கூட்டிக்கொள்ளா நின்றார்;
‘இது சேருகிறபடி யாங்ஙனம்?’ என்னில்,
இவ்வாகாரமும் கிடக்கச்செய்தே, வேறு ஆகாரம் தோற்றாதபடியான பாகம் பிறந்தவாறே, அவன் உடைமை என்னும் தன்மையே தோற்றி
,மேல் திருவாய்மொழியில் உபாதேயம் என்று அநுசந்தித்தார். ‘இவர்தாம் எல்லார் படிகளும் உடையராயன்றோ இருப்பது?
முத்தர் படியையுடையர் என்னுமிடம் சொல்லிற்று மேல் திருவாய்மொழியாலே. முமுக்ஷூக்கள் படியையுடையர் என்னுமிடம் சொல்லுகிற இத்திருவாய்மொழியாலே,’ என்று அருளிச்செய்வர்.

————-

மனிசரும் மற்றும் முற்றும் ஆய்
மாயப் பிறவி பிறந்த
தனியன் பிறப்பிலி தன்னைத்
தடங்கடல் சேர்ந்த பிரானைக்
கனியைக் கரும்பின் இன் சாற்றைக்
கட்டியைத் தேனை அமுதை
முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார்
முழுது உணர் நீர்மையினாரே.
–3-5-6-

கர்மங்கட்குக் கட்டுப்படாதவனாய் இருந்து கர்மங்கட்குக் கட்டுப்பட்டவர்களும் பிறக்கமாட்டாத பிறவிகளிலே பிறக்கின்றானாதலின், ‘மாயப்பிறவி’ என்கிறது.
‘ஒரு காரணமும் இல்லாமல் காரணமுடையார்க்கும் அவ்வருகே பிறக்க வல்லவன்

’தனியன் –இப்படி அவதரித்தும், போகும் அன்று உடுத்த ஒலியலோடே-கட்டின வஸ்த்ரத்துடன் – ஆயிற்றுப் போவது.
‘சேர்ந்து போனார் ஒருவரும் இலரோ?’ எனின், தொடர்ந்து செய்த இவ்வவதாரங்களிலே இராமாவதாரம் ஒன்றிலும்‘நாலிரண்டு பேர் கூடப்போனார்கள்’ என்று கேட்டோமித்தனையே யன்றோ? -அவர் பட்ட பிரயத்னத்துக்கு இது நாலிரண்டு போலே என்றவாறே –
‘சேர்ந்து போனார் இலரேயாயினும், இங்கிருந்த நாளில் பரிவருண்டோ?’ எனின்,
‘இவன் நமக்காகப் பிறந்தான்’ என்று நினைக்கைக்கும் ஒருவரும் இலரே அன்றோ?

பிறப்பிலி தன்னை – இப்படிப் பிறருக்காக அவதரித்தால் அவ்வவதாரத்தால் பயன் முழுதும் பெறாதே ஒழிந்தாலும்,நாம் வருந்தியும் இது பலித்தது இல்லையே!’ என்று கைவாங்குகை யன்றி,இவர்களுக்கு ஒன்றுஞ் செய்யப்பெற்றிலோம்’ என்று,பிறந்திலனாய்ப் பிறக்கைக்கு ஒருப்பட்டானாய் இருப்பவன்.
தடங்கடல் சேர்ந்த பிரானை –இன்னமும் பிறக்கைக்குத் தவயோகம் பண்ணுகிறபடி.
திருப்பாற்கடலிலே அநிருத்த உருவமாய்க் கொண்டு கண்வளர்ந்தருளுகிற இடம் அவதாரத்திற்கு மூலமேயன்றோ?‘வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை’ என்றார் ஸ்ரீஆண்டாள். இவர்கள் பிறவி என்னும் பெருங்கடலைப் போக்குகைக்காக அன்றோ அவன் கடலிலே வந்து கிடக்கிறது?
கனியை –
கடல் பழுத்தபடி. அன்றி, ‘பாலிலே பழுத்த படி’ என்னுதல்
அங்குச் சாய்ந்து கிடக்கிற போதை வடிவழகால் வந்த இனிமையை ‘சர்வரஸ:’ என்று ஒரு சொல்லாலே சொல்லமாட்டார்;-எல்லாம் சொல்லப்புக்கால் சொல்லித் தலைக்கட்டமாட்டார்;
அவற்றால் போதரும் கூற்றிலே வைத்துச் சிலவற்றைச் சொல்லுமித்தனை, ஆகையாலே, ‘கனியை’ என்கிறார்.

கனியை கரும்பினின் சாற்றை கட்டியை தேனை அமுதை– கண்ட போதே நுகரவேண்டும் கனியும், கோது அற்ற இனிய கருப்பஞ்சாறும், உடல் முழுதும் ரசத்தையுடைய கட்டியும்,
எல்லா ரசமும் சேர்ந்திருக்கிற தேனும் நுகர்கின்றவனை என்றும் உள்ளவனாகச் செய்யும் அமுதமும் போலே இனியனானவனை.
கண்ட போதே நுகரலாம்படியாய், அதுதான் கோதுகழிந்த ரசாமிசமாய், அதுதன்னைத் திரட்டினதாய், அதுதான் பருகலாம்படியாய், இனிமையேயன்றிச் சாவாமல் காக்கமதாய் இருக்கையைத் தெரிவித்தபடி. மேல் திருவாய்மொழியில் ‘நலங்கடல் அமுதம்
என்கோ!’ 
என்று தொடங்கி அனுபவித்த இனிமை

முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார் – பகவானுடைய குணங்களைக் கேட்டால் அசூயை பண்ணாமல் ஏத்திக் குனிப்பவர்கள்;முனிவாகிறது, வெறுப்புத் தன்மையாய், அது இன்றிக்கே ஒழிகையாவது, கலங்குகையாய், அடைவு கெட்டு ஏத்திக் குனிப்பார் என்று பொருள் 

முழுது உணர் நீர்மையினாரே –1- ஏக விஞ்ஞாநேந சர்வ விஞ்ஞானம்-‘ஒன்றை (பரம்பொருளை) அறிந்ததனாலே எல்லாம் அறிந்தவர் ஆகிறார்கள்,’ என்கிறபடியே, அவர்கள் எல்லாவற்றையும் அறிந்தவர்கள் ஆகிறார்கள்; அவர்கள் முற்றறிவினர்கள் ஆகிறார்கள்:
2-ஞான பலமான இது -ஏத்திக் குனிப்பது-உண்டான போதே ஞான விசேடத்தில் இல்லாதது இல்லை யன்றே?

———–

நீர்மை இல் நூற்றுவர் வீய
ஐவர்க்கு அருள்செய்து நின்று
பார் மல்கு சேனை அவித்த
பரஞ் சுடரை நினைந்து ஆடி
நீர் மல்கு கண்ணினர் ஆகி
நெஞ்சம் குழைந்து நையாதே
ஊன் மல்கி மோடு பருப்பார்
உத்தமர்கட்கு என் செய் வாரே!
–3-5-7-

அவர்கள் இழந்த பரிகரம் எல்லாம் தானேயாய் நின்றானாதலின், ‘நின்று’ என்கிறது.பரஞ்சுடரை –‘ஆயுதம் எடுக்க ஒண்ணாது’ என்றார்களே? அதற்காக, சேநாதூளியும் முட்கோலும் சிறுவாய்க்கயிறும் தேருக்குக் கீழே நாற்றின
திருவடிகளும் சிறு சதங்கையுமாய்ச் சாரதி வேஷத்தோடே நின்ற நிலையைச் சொல்லுகிறது.-ஆதி யம் சோதி உரு -ஏஷ நாராயண ஷீராப்தி நாதனே இவன்-

நினைந்து ஆடி –அவன் அடியார்கட்குப் பரதந்திரப்பட்டு இருக்குங் குணத்தை அநுசந்தித்து,
ஈசுவரன், தன்னையும் தன் விபூதியையும் அடியார்களுக்கு உடைமையாக்கி யன்றோ வைப்பது?

அடியார்களுக்கு உடைமை ஆக்கி வைக்கும் என்றதற்கு ஐதிஹ்யம் காட்டுகிறார், ‘ஆயிரத்தளியிலே’ என்று தொடங்கி. ஆயிரத்தளி – பழையாறை – நாதன்கோயில் – நந்திபுரவிண்ணகரம் என்னும் தலம். இங்கே சோழர்களும், பின்னர்ப் பல்லவர்களும், பின்னர்ச் சோழர்களும் சில காலம் இருந்து அரசாண்டனர். இராஜா – கி.பி. 11ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்த சோழ அரசன்.-கிருமி கண்ட சோழன் –
ஆயிரத்தளியிலே இராஜா இருக்கச்செய்தே பெரிய நம்பியையும் ஆழ்வானையும் நலிந்தானாய், ஆழ்வான் மடியிலே சாய்ந்து கிடக்கச்செய்தே, பெரிய நம்பி திருநாட்டுக்கு எழுந்தருளினார்; அவ்வளவிலே ‘ஒருவரும் இல்லாதாரைத் தகனம் பண்ணக்கடவோம்,’ என்று திரிகிறார் சிலர் அங்கே வந்து, ஆழ்வானைக் கண்டு, ‘ஒருவன் உண்டிறே’ என்று போகப் புக, ஒருவரையும் ஒரு குறை சொல்லியறியாதவன், ‘வாரிகோள் மாணிகள்! வைஷ்ணவனுமாய் ஒருவனும் இல்லாதான் ஒருவனைத் தேடிப் பிரதிபத்திபண்ண
இருக்கின்றீர்களோ நீங்கள்? ஈசுவரனும் ஈசுவர விபூதியும் வைஷ்ணவனுக்குக் கிஞ்சிக்கரிக்க இருக்க, வைஷ்ணவனுமாய் அறவையுமாயிருப்பான் ஒருவனை நீங்கள் எங்கே தேடுவீர்கள்?’ என்றானாம்.

ஸ்ரீ வைஷ்ணவன் -அநாதி இல்லையே ச நாதன் அன்றோ -ஜென்மத்துக்கு பிரயோஜனம் -ஸ்ரீ வைஷ்ணவனுக்கு உறுப்பாக-கூரத் ஆழ்வான்-மாருதி ஆண்டான் மூலம் அனுப்பி அருளிச் செய்த ஸ்லோகம்
அஷ்டகாக அஷ்ட அத்யாயி -வையாகரனிகள் -தீ விஷய -அஸ்தி -நாஸ்தி -திஷ்டன் -மனுஷ்யாணாம் –
ஆஸ்திகன் -நாஸ்திகன் -திஷ்டன் -பூர்வம் -மத்யம் -பச்சிம -யதீஸ்வரன் -துரந்தவன்-பின்னால் உள்ள -பூர்வம் பிரதமம் –
கிருமி கண்ட சோழன் நாஸ்திகன் –
உன் சேவை எப்படி கிடைக்குமோ -என்று கேட்பது போலே
ஆந்தர அபிப்ராயம் -மத்யம நமஸ் – -பெருமானுக்கு கிங்கரன்
பகவத் பக்தன் -பாகவத பக்தன் -பிரணவம் -பாகவத சம்பந்தம் தெளிந்த பின்பு தானே நாராயண கைங்கர்யம் சித்திக்கும் -என்றவாறு
அஷ்டாஷர-தீ விஷய -ஸ்வரூப -உபாய -புருஷார்த்த -ஞானம் -த்ரிவித நிஷ்டன் -மத்யமபத ஏக தேச -ஷட்யந்தமான மகார வாஸ்ய உபாய விரோதி –
பூர்வம் மாம்-ஸ்வரூப நிஷ்ட மாம் -அடியேனை -கிழக்கு தேசத்தில் உள்ளவர் -பிரணவம் நிஷ்டர் -இரண்டும்-மன் நாசாயா முயற்சிக்கிறது -இங்கு அர்த்தம் –
ஹே பச்சிம -ஹே கைகர்யா நிஷ்டர் -மேலேதேசத்தில் உள்ள பாஷ்யகாரர் -என்றுமாம் –
திருதிய பத -நாராயணாய -கைங்கர்யம் பண்ணி ஆனந்தப்பிபது புருஷார்த்த விரோதி -நலிகிறது-பாகவத ஆச்சார்ய கைங்கர்ய அலாபத்தால் ஞானமே வியர்த்தம்
போக்கி கொடுத்து அருளும் -என்கிறார் -திரு உள்ளம் உகந்தார் –

உத்தமர்கட்கு என் செய்வாரே –பகவானுடைய குண அநுசந்தானத்தாலே மெலிகின சரீரத்தையுடையராய் இருந்துள்ள மஹா புருஷர்களுக்கு ஒருவருக்கொருவர் உணர்த்திக்
கொள்வதற்கு உசாத்துணை ஆவார்களோ? ‘பிறப்பிற்குப் பிரயோஜனம் வைஷ்ணவர்களுக்கு உறுப்பாமதுவே,’ என்கிறார்.

———–

வார் புனல் அம் தண் அருவி
வட திரு வேங்கடத்து எந்தை
பேர் பல சொல்லிப் பிதற்றிப்
பித்தர் என்றே பிறர் கூற
ஊர் பல புக்கும் புகாதும்
உலோகர் சிரிக்க நின்று ஆடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார்
அமரர் தொழப்படுவாரே
.–3-5-8-

‘திருவேங்கடமுடையானுடைய நீர்மைக்கு ஈடுபடுவாரைக் கொண்டாடுகைக்கு நாம் யார்?
நித்தியஸூரிகள் அன்றோ அவர்களைக் கொண்டாடுவார்கள்?’ என்கிறார்.

பேர் பல சொல்லிப் பிதற்றி – அவனுடைய திருநாமம் பலவற்றையும் அடைவுகெடச் சொல்லி. சொரூப ரூப குணங்களுக்கு வாசகமாயும், விபூதிக்கு வாசகமாயுமுள்ள பெயர்கள் பலவாதலின், ‘பேர் பல’ என்கிறார். என்றது, தாம் ‘ஒழிவில் காலத்’திலும், ‘புகழும் நல் ஒருவனி’லுமாகச் சொன்னவற்றைச் சொல்லுகிறார்-

ஒழிவில் காலம்’ என்ற திருவாய்மொழியில் ‘வானவரீசன்’ ‘ஈசன் வானவர்க்கு’ என்பன, ஸ்வரூப வாசகம்; ‘காரெழில் அண்ணல்’ ‘கருமாணிக்கம்’ என்பன,ரூப வாசகம்; ‘திருவேங்கடத்து அந்தமில் புகழ்’ என்றது, குணவாசகம்;
‘புகழும் நல் ஒருவன்’ என்ற திருவாய்மொழியில் ‘வானவராதி என்கோ’என்றது, ஸ்வரூப வாசகம்; ‘பங்கயக் கண்ணன்’ என்றது, ரூப வாசகம்; ‘புகழும் நல் ஒருவன்’ என்றது, குணவாசகம்.

‘‘பொருவில் சீர்ப் பூமி என்கோ!’ என்னா, ‘கண்ணனைக் கூவுமாறே’ என்பது; ‘குன்றங்கள் அனைத்தும் என்கோ!’ என்னா, ‘பயங்கயக் கண்ணனையே, என்பது; ‘ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை எண்ணுமாறு அறியமாட்டேன் யாவையும் எவரும் தானே’ என்பதாகா நின்றார்;

வைஷ்ணவர்கள் அங்கீகாரம் பெறுமதிலும் வைஷ்ணவர்கள் அல்லாதார் ‘இவன் நமக்கு உடல் அல்லன்’ என்று கைவிடுகைதான் உத்தேஸ்யமாதலின், ‘பிறர் கூற’ என்கிறார்.இராவணன் ‘இராக்கதர் குலத்தில் தள்ளுண்ட உன்னை’ என்றதனை உத்தேஸ்யமாக நினைத்திருந்தான் அன்றோ ஸ்ரீ விபீஷணாழ்வான்?
மிளகாழ்வான் வார்த்தை: இராஜா அகரம் வைக்கிறானாய் அங்கே செல்ல,‘உமக்குப் பங்கு இல்லை’ என்ன,
‘அது என்? வேதபரீக்ஷை வேணுமாகில் அத்தைச்செய்வது, சாஸ்திரப் பரீட்சை வேணுமாகில்
அத்தைப் பரீக்ஷிப்பது,’ என்ன, ‘உமக்கு அவையெல்லாம் போதும்; அதற்கு உம்மைச்சொல்ல வொண்ணாது,’ என்ன,
‘ஆனால், எனக்குக் குறை என்?’ என்ன, நீர் வைஷ்ணவர் அன்றோ? ஆகையாலே காண்,’ என்ன, புடைவையை முடிந்து ஏறிட்டுக் கூத்தாடினான் ஆயிற்றுத் தன்னை அவர்கள் கைவிட்டதற்கு; ஆதலால், வைஷ்ணவர் அல்லாதாரான மற்றையோரால்
‘இவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்’ என்று தள்ளப்படுவதே வேண்டுவது.

———

அமரர் தொழப் படுவானை
அனைத்து உலகுக்கும் பிரானை
அமர மனத்தினுள் யோகு
புணர்ந்து அவன் தன்னோடு ஒன்றாக
அமரத் துணிய வல்லார்கள்
ஒழிய அல்லாதவர் எல்லாம்
அமர நினைந்து எழுந்து ஆடி
அலற்றுவதே கருமமே .
–3-5-9-

சர்வேசுவரனை அடைந்து அற்பப் பிரயோஜனங்களைக்கொண்டு அகலப்போகிறவர்கள் மக்கள் ஆகார்,’கேவலம் ஆத்தும அநுசந்தானத்தைப் பண்ணி, சீலம் முதலான குணங்களோடு கூடின இறைவனிடத்திலே நெஞ்சு போகாதபடி நெஞ்சை இறுகப் பிடிக்க வல்ல தாழ்ந்தவர்கள் நீங்க மற்று உள்ளார் எல்லாம்.-யாத்ருச தாத்ருச -நின்ற நின்ற நிலையிலே வாரும் -பக்தியிலே குறைந்தார்களும் மிக்கார்களும் -என்றவாறு –
அமர நினைந்து எழுந்து அலற்றுவதே கருமம் – வேறு பிரயோஜனங்களைக் கருதாதவர்களாய் இறைவனை நெஞ்சிலே பொருந்த அனுசந்தித்து, அவ் வனுசந்தானத்தாலே வந்து மகிழ்ச்சி கொண்டு கிளர, அக்கிளர்த்தியோடே ஆடி அடைவு கெட ஏத்தும் இதுவே செய்யத்தக்க காரியம்.-பக்திபாகம் பிறவாதார்க்கும் நிஷ் பன்ன பக்திக ப்ரவ்ருத்தியை அநு விதானம் பண்ணுகை பிராப்தம் -என்று கருத்து –

————

கருமமும் கரும பலனும்
ஆகிய காரணன் தன்னைத்
திரு மணி வண்ணனைச் செங்கண்
மாலினைத் தேவ பிரானை
ஒருமை மனத்தினுள் வைத்து
உள்ளம் குழைந்து எழுந்து ஆடிப்
பெருமையும் நாணும் தவிர்ந்து
பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே
.-3-5-10-

ஒருமை மனத்தினுள் வைத்து – ஒரு பிரயோஜனத்துக்காக அன்றி, நெஞ்சிலே இருக்கை தானே பிரயோஜனமாக நெஞ்சிலே வைத்து.-இதனால், மேற் பாசுரத்திலே பிரயோஜநாந்தர பரரை நிந்தித்தார் என்னுமிடம் தோன்றுகிறதே அன்றோ?
உள்ளம் குழைந்து எழுந்து ஆடிப் பெருமையும் நாணும் தவிர்ந்து பேதைமை தீர்ந்து பிதற்றுமின்– இப்படி வேறு பலனைக் கருதாதவராய் நெஞ்சிலே வைத்தவாறே, அகவாய் நெகிழ்ந்து அந்த நெகிழ்ச்சியோடே இருந்த இடத்தில் இராமல் ஆடி,
‘பகவானுடைய குணங்களைக் கேட்டார் உரையும் செயலும் வேறுபட்டவராதல் விக்ருதராய் -நமக்குப் போருமோ? ‘எல்லாவளவிலும் நம் அகவாய் ஒருவர்க்கும் தெரியாதபடி மறைத்துக் கொண்டு இருக்க வேண்டாவோ?’ என்றிருக்கிற அறிவு கேட்டையும், இவற்றை அடையப் பொகட்டு, அடைவுகெட ஏத்துங்கோள். இதுவே உங்களுக்குப் புருஷார்த்தம் என்கிறார்.

———

தீர்ந்த அடியவர் தம்மைத்
திருத்திப் பணிகொள்ள வல்ல
ஆர்த்த புகழ்அச் சுதனை
அமரர் பிரானைஎம் மானை
வாய்ந்த வளவயல் சூழ்தண்
வளம் குரு கூர்ச்சட கோபன்
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப் பத்தும்
அரு வினை நீறு செய்யுமே.
–3-5-11-

பிராப்பியப் பிராபகங்கள் அவனே’ என்று இருக்குமவர்கள் ஆயிற்றுத் தீர்ந்த அடியவராகிறார்;-அவர்களைத் திருத்திப் பணி கொள்ளுகையாவது, அவர்களுடைய பிராப்பியப் பிராபக விரோதிகளைப் போக்கி அடிமை கொள்ளுகை.
‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி, வழுவிலா அடிமை செய்ய வேண்டும்’ என்று இருந்தாலும்,-‘முகப்பே கூவிப் பணிகொள்வானாய் குறைவற்ற கல்யாண குணங்களை யுடையவனாய்,-அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று இருந்தாலும் -கிரியதாம் இதி மாம் வத -என்ன வேண்டுமே –அருவினை நீறு செய்யும் –பகவானுடைய குணங்களைக் கேட்டால் வேறுபடாதே திண்ணியராய் இருக்கைக்கு அடியான மஹாபாவங்களைச் சாம்பல் ஆக்கும்.-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -78-நலியும் நரகனை வீட்டிற்றும் –இன்பம் பயக்க-7-10–

March 18, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

கண்ணன் சாத்தி அருளிய திருத்துழாயில் ஆசைப்போட்டு கிடையாமல்-இன்பம் பயக்க-7-10–திருவாறன் விளை -வலம் செய்து கை கூப்பும் காலம்-துறையடைவு-பிரிவாற்றாத தலைவி தலைவன் ஆற்றலை எண்ணி நெஞ்சு அழிந்து இரங்கல் –ப்ராக்ஜோதி புரத்தில் நரகாசூர நிரஸனம் -ஸத்யபாமை உடன் சென்று -முராசூரனை அழித்து முராரி -நரகாந்தன் பெயர் –சோணித புரத்தில் -பாணாசுரன் தோள்களை துணித்த சரிதம்-வலிமையையும் பெருமையும் வாசா மகோசரம் -வலியின் பெருமை என்றுமாம் – அஞ்சன கிரி போன்ற திருமேனி -சாத்திய திருத் துழாயில் ஆசைப்பட்டு -நெஞ்சு கொடுத்த வேதனை-அது அவன் குற்றம் அல்ல -நானே தான் ஆயிடுக –

அவதாரிகை – இதில் கிருஷ்ண அவதாரத்தில் பரிமாற்றத்தை பெற வேண்டும் என்று ஆசைப் பட்டாள்
ஒரு பிராட்டி வார்த்தையாய் இருக்கிறது பிரிவாற்றாத தலைவி தலைவன் ஆற்றலைக் கருதி நெஞ்சு அழிந்து இரங்கல் —

இப்படி ஆர்த்தரான இவ்வாழ்வாருடைய –விரோதி நிரசன ஸ்வபாவங்கள் உண்டாகச் செய்தே
நம்முடைய பிரதிபந்தகங்கள் போய் அவனுடைய போக்யதையை அனுபவிக்கப் பெறாமல்
(இவ்வாழ்வாருடைய )திரு உள்ளம் தளும்பி அத்தாலே கிலேசித்த பிரகாரத்தை நாயகனான ஈஸ்வரன் சக்தனாய் இருக்கக் கிட்டப் பெறாமையாலே நெஞ்சு அழிந்து இரங்கின நாயகி பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

நலியும் நரகனை வீட்டிற்றும்  வாணனை திண் தோள் துணித்த
வலியும் பெருமையும் யான் சொல்லும் நீர்த்தல்ல  மைவரை போல்
பொலியும் உருவில் பிரானார் புனை பூம் துழாய் மலர்க்கே
மெலியும் மட நெஞ்சினார் தந்து போயின வேதனையே
– 78–பிரிவாற்றாத தலைவி தலைவன் ஆற்றலை எண்ணி நெஞ்சு அழிந்து இரங்கல் –

(எமது நாயகனார்)
நலியும்நரகனை வீட்டிற்றும்–(உலகத்தை) வருத்துகிற நரகாசுரனைக் கொன்றதும்
வாணன் திண்தோள் துணிந்த வலியும்–பாணாஸுரனது வலிய தோள்களை அறுத்துத் தள்ளிய வலிமையும்
பெருமையும்–(அப்போரில் வெளிக்காட்டிய) தலைமையும்
யாம் சொல்லும் நீர்த்து அல்ல–(எளிமையான) யாம் புகழ்ந்து சொல்லி முடிக்குத் தன்மையானவல்ல;
மை வரைபோல் பொலியும் உருவின் பிரானார்–அஞ்சனகிரிபோல விளங்குகிற வடிவத்தையுடைய அத்தலைவரது
புனை பூதுழாய் மலர்க்கே–சாத்திய அழகிய திருத்துழாய்ப் பூமாலையைப்பெறுவதற்காகவே
மெலியும்–ஆசைப்பட்டு வருந்துகிற
மட நெஞ்சினார்–(எமது) பேதைநெஞ்சு
தந்து போயின–(தான் எம்மைவிட்டுப் போம் பொழுது எமக்குக்) கொடுத்துவிட்டுப் போனவை
வேதனை–இத் துன்பங்கள்.

இன்பக் கவி பாடுவித்தோனை இந்திரையோடு
அன்புற்று வாழ் திரு வாறன் விளையில் -துன்பமறக்
கண்டு அடிமை செய்யக் கருதிய மாறன் கழலே
திண் திறலோர் யாவர்க்கும் தேவு 
—70-தாம் பாடின ஸ்ரீ திருவாய் மொழியைக் கேட்கைகாக ஸ்ரீ பெரிய பிராட்டியார் உடன் பேர் ஒலக்கமாக ஸ்ரீ திரு வாறன்விளையிலே அவன் வந்து எழுந்து அருளி இருக்கிற படியை அனுசந்தித்து நாம் அங்கே சென்று ஸ்ரீ திருமாலவன் கவி -என்ற வாயோலைப் படியே அவனும் அவளுமான சேர்த்தியிலே ஸ்ரீ திருவாய் மொழியை அவர்கள் இருவரும் உகந்து திருச் செவி சாத்தும்படி கேட்ப்பித்து அடிமை செய்யப் பெறுவது எப்போதோ – என்று மநோ ரதிக்கிற -இன்பம் பயக்க -வில் அர்த்தத்தை இன்பக் கவி பாடுவித்தோனை -என்று அருளிச் செய்கிறார் –தர்சன அனுபவ கைங்கர்ய அனுபவ மநோ ரதத்தை யுடைய ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே-திருட அத்யாவச்ய உக்தராய் உள்ளவர்க்கு எல்லாம் பர தேவதை –ஸ்ரீ ஆழ்வாரும் வேண்டா – நமக்கு உத்தேச்யம் ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே -அமையும்
அன்றிக்கே – மாறன் கழல் சேர் திண் திறலோர் -உண்டு-திருட அத்யாவசாய உக்தரான ஸ்ரீ மதுரகவி ஸ்ரீ நாத முனி பரப்ரக்ருதிகளாய் உள்ளவர்கள் – மற்றும் அத்யாவசாய யுக்தராய் உள்ளார் -எல்லாருக்கும் குல தைவம் என்றாகவுமாம் — அவன் விட்டாலும் அவள் விடாள் -அவள் விட்டாலும் விடாத திண்ணிய கழல் –நமது ஆச்சார்யர்கள் – வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாருக்கும் -நம் போலே அத்யாவச்யம் இல்லாதவர்களுக்கும் –உபகார ஸ்ம்ருதியோடே தன் சரிதை கேள்வி யாகாமல் இன்பம் பயக்க விருந்த நிலத் தேவர் குழுவிலே பாட்டு கேட்பிப்பதாக கான கோஷ்டியையும் ஸ்ரீ தேவ பிரான் அறிய மறந்தவர்–என்று இறே ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் ஸ்ரீ நாயனார் அருளிச் செய்தது –

நலியும் நரகனை –சர்வேஸ்வரன் பரிகிரகைக்கு யோக்யதைகளாய் இருக்குமவர்களை கொண்டு
வந்து சிறை செய்தான் இறே –நலியும் –அந் நலிவு  தம்மதாம் படி இருத்த படி –வீட்டிற்றும் –-வீழ்த்ததும்
முடித்ததும் –வாணன் இத்யாதி –உஷையும் அநித்ருதனையும் சேர ஒட்டாதே சிறை வைத்த வாணனுடைய–திண் தோள் –தேவதாந்திர சமாஸ்ரயணம்  பண்ணி திண்ணிய தோள் உடையனாக நினைத்து இருந்தான் –ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் -ப்ரஹ்மத்தினுடைய ஆனந்தத்தை அறிந்தவன் –நபிபேதி குதஸ் சன –என்றும் –ஏஷஹ்யேவா சநந்த -இத்யாதி -இறே –அத்தால் வந்த தைரியத்தாலே தான் புத்தி  பூர்வம் பண்ணினவற்றையும் மதியாது இருக்கும் இறே –அவன் திண்ணிய தோளை துணித்த வலியும் பெருமையும் -என்னுதல்–வலியின் பெருமை என்னுதல் –மிடுக்கும் மேன்மையும் — அன்றிக்கே வலியினுடைய பெருமையும் –யான் சொல்லும் நீர்த்தல்ல –நாம் இப்போது சொல்லும் அளவோ –நீர்த்தல்ல –தன்மை உடைத்ததல்ல – ஸ்வபாவத்தை உடைத்ததல்ல –அவனுடைய விரோதி நிரசன சீலத்தையும்    –ஆண் பிள்ளைத் தனத்தையும் –மேன்மையையும் – நாம் இன்று இருந்து சொல்லும் அளவோ –அவன் வாராமையால் படுகிற நலிவால் வந்த குறை-அத் தலையில் இட ஒண்ணாத படி இறே அவன் ஸ்வரூபத்தை நிரூபித்தால் இருப்பது –ஆனால் பின்னை இதரராலே  வந்தது ஆகாதோ என்ன –மைவரை -இத்யாதி – நமக்கு சாத்மிக்கும் விஷயம் சாத்மியாத விஷயம் என்று ஆராயாதே ஆசைப்பட்ட நம் நெஞ்சு தந்து போன ஐஸ்வர்யம் இறே இது எல்லாம் என்கிறார் –மை வரை போல் –அஞ்சன கிரி போலே யாயிற்று திருமேனி இருப்பது –பொலியுமுரு – ஒரு த்ருஷ்டாந்தத்தை சொல்லிற்று என்ன –அவ்வளவாய் இராதே –ஸர்வதா ஸாத்ருச வஸ்து இல்லாமையால்- உள்ளத்தில் உரு செய்த ஒன்றை போலியாக சொல்லப் புக்கு – பின்னையும் அது தானும் போராதே இறே இருப்பது –பிரானார் –பக்தாநாம் -என்று இறே இவர் படி –புனை இத்யாதி –
அவர் சாத்தின அழகிய திருத் துழாய் மலர்க்கே –மெலியும் மட நெஞ்சினார் – சாத்மிக்கும் விஷயத்தில் ஆசைப்பட்டு கிடையா விட்டால் படும் அதைப்பட்டு கிடையாது என்று இருந்தாலும் – பற்றிற்று விடாதே நிற்கிற நம் நெஞ்சு தந்து  போன-கிலேசம் இறே இது எல்லாம் –

ஆழ்வார் திரு உள்ளம் அவன் திருத் துழாய் மாலையைப் பெற ஆசைப்பட்டு கிடையாமையாலே இவருக்கு வருத்தம் விளைவித்து அவன் இடம் தான் போய் அடைந்ததே-இவரே தேவாதி தேவன் என்பதை நரகாசுர வத – பாணாசூர விருத்தாந்தங்களால் வெளியிட்டு –-வருணன் குடை -மந்தரகிரி சிகரம் ரத்னா கிரி -அதிதி உடைய குண்டலங்கள் -ஐராவத யானை -கவர்ந்து போக -சத்யாபாமை தேவி யுடன் கருட வாகனத்தில் வந்து முரனை அழித்து-நாயகனையும் அழித்து 16100 — தேவ கன்னிகைகளையும் -கொண்டு பாரிஜாதம் கொணர்ந்து துவாரகையில் சத்யா பாமை வீட்டுப் புழக்கடையில் நாட்டினானே-அவனது விரோதி நிரசன வல்லமை பரத்வம் நம் போல்வாருக்கும் வேதங்களுக்கும் கூட சொல்ல முடியாதே-அவனைக் கிட்டி அனுபவிக்கப் பெறாமல் அவனது போக்யத்தையிலே மனம் செலுத்துவதும் ஆற்றாமையையே விளைவிக்கும் -என்றவாறு–பிரிவாற்றாத தலைவி தலைவனது ஆற்றலைக் கருதிநெஞ்சழிந்து இரங்கும் பாசுரம் இது.-நானோ வென்னில் எனது நாயகருடைய அதிமாநுஷ சேஷ்டிதங்களையும் ப்ரபுத்வத்தையும் நோக்கி ‘நமக்கு அவர் துர்லபர்’ என்று கருதி ஒருவாறு காதலையடக்கி ஆறியிருக்குந் தன்மையுடையேன்;-எனது மனமோ அங்ஙனம் ஆறியிராமல் அவனது மாலையைப் பெறுதற்கு ஆசைப்பட்டு அது கிடையாமையால் எனக்கு இப்படிப்பட்ட வருத்தத்தை வினைத்துத்தான் அவனிடம் போய்விட்டது என்று இரக்கத்தோடு உரைத்தானாயிற்று.-நரகாஸுரனைக் கொன்று பதினாறாயிரத்தொருநூறு கன்னிகைகளை மணஞ்செய்து கொண்டவரும், பாணாஸுரனது தோள்களைத் துணித்து ஆவன் மகனான உஷை தனது போனான அநிருத்தனை வெளிப்படையாக மணஞ் செய்துகொண்டு கூடி வாழும்படி செய்தவருமான தலைவர் அவர் பக்கற்காதலியாகிய என்னை வந்து அடைந்து இன்பமடைவிக்க வேண்டாவோ வென்பால் அவ் விரண்டு வரலாறுகளையும் எடுத்துக் கூறினாள்.-தாமே தேவாதிதேவ ரென்று தோன்றும்படி வெளியிட்ட வீர்ய சக்தியை ‘பெருமை’ என்றது.-வீட்டிற்று உயிர் விடுவித்தது; இறந்த காலத் தொழிற்பெயர். விடு என்பதன் விகாரமாகிய வீடு என்பதனை பிறவினையான ‘வீட்டு’- பகுதி;
று- விகுதி. இனி, வீழ்த்திற்கு என்பது வீட்டிற்று என மரூஉ வாயிற்றென்பாருமுளர்.
-நீர்த்து = நீர்மை என்னும் பண்பின் அடியாய்ப்பிறந்த ஒன்றன்பாற் குறிப்புமுற்று. மை வரை = மேகம் படிந்த மலை என்னவுமாம்.-பாட்டின் முடிவில் ‘வேதகா’ என்னும் வடசொல் ஐயீறாகத் திரித்தது. வலியின் பெருமையும், என்றும் பாடமுண்டாம்.-ஆஸ்ரித விரோதிகளை அழிக்குங்குணம் எம்பெருமானுக்கு இயல்பாயிருக்கவும் தாம் அவனருளால் தமது பிரதிபந்தங்கள் ஒழிய அவனது போக்யத்தையை அநுபவிக்கப் பெறாமல் மனங்கலங்கி அதனால் வருந்துகிறபடியை ஆழ்வார் அருளிச் செய்தல் இதற்கு உள்ளுறை பொருள்.-எம்பெருமானது விரோதி நிரஸந் சக்தியும் பரத்வ மஹிமையும் எம்போலியர்க்கு வரையறுத்துச் சொல்லக் கூடியவையல்ல; தேவங்களுக்கும் எட்டாதவை; அப்படிப்பட்ட ஸர்வேஸ்வரனைக் கிட்டி அநுபவிக்கப் பெறாத வளவில் அவனது யோக்யதையில் மனஞ் செலுத்துதலும் ஆற்றாமை துயரையே மூட்டுகின்ற தென்றவாறு.

நலியும் நரகனை வீட்டிற்றும்-மேலிட்டு நலிந்து வருகிற நரகா ஸூரனை ஸத்யபாமைப் பிராட்டி வார்த்தைக்காக விழப் பண்ணினதும்–வாணனை திண் தோள் துணித்த வலியும்-உஷையையும் அநிருத்தரையும் கொண்டு போய் இருக்கைக்காக பாணனுடைய யுத்த ஆகாங்ஷியான திண்ணிய ஆயிரம் தோளையும் அறுத்து விழவிட்ட ஆயுத பலமும்–பெருமையும் அந்த பாண யுத்தத்தில் ஈஸ்வர அபிமானியான ருத்ரனை முதுகு புறம் கொண்ட சர்வேஸ்வரத்வமும்-யான் சொல்லும் நீர்த்தல்ல-வேதங்கள் அகப்பட எல்லை காண மாட்டாத இக்குணங்கள் அல்ப ஞானனான நான் சொல்லும்படியான நீர்மையை யுடையது அல்ல–மைவரை போல் பொலியும் உருவில் பிரானார்-அஞ்சன கிரி போலே வளர்ந்த வடிவை யுடையராய் இருக்கிற உபகாரகர் ஆனவர்–புனை பூம் துழாய் மலர்க்கே-வெற்றிக்கும்
அழகுக்கும் சூட்டின அழகிய திருத் துழாய்த் தாருக்காக-மெலியும் மட நெஞ்சினார்-ஈடுபட்டு பற்றிற்று விட மாட்டாத நெஞ்சினாரானவர்-தந்து போயின வேதனையே –அத் தார் நசையாலே நம்மை விட்டுப் போகிற போது நமக்குத் தந்து போனவை கிலேசங்களாய் இருந்தன விறே என்று அழிந்து உரைத்தாள் யாயிற்று-இத்தால் ஈஸ்வரனுடைய விரோதி நிரசன சக்தி அபரிச்சிந்னையாய் இருக்கச் செய்தேயும்
அநுபவ ஸித்தி பிறவாத அளவிலே அதிசயித போக்யதை ஆர்த்தியைப் பிறப்பிக்கும் என்றதாயிற்று

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-வியாக்யானம்-திவ்ய ஆயுதாதிகளை நமக்கு அனுபாவ்யமாக்கி உபகரிக்குமவரால் தம் அழகுக்கும் ஐஸ்வர்யத்துக்கும் அநு குணமாகச் சாத்திக் கொள்ளப்பட்ட
அழகிய திருத்துழாய் மாலையில் உள்ள குஸூ மங்களுக்கே ஆசைப்பட்டு கிலேசிக்கும் எனக்கு பவ்யமான பெருமையுள்ள மனஸ்ஸாகிறவர் தாம் என்னை விட்டு அவன் இடத்தில் போம் போது தந்து போன வேதனை இது என்று அறியுங்கோள் என்கிறாளாய் அருளிச் செய்தார் –

தாத்பர்யம்–கிருஷ்ணாவதார திருத்துழாய் மேல் ஆசைப்பட்டு அவன் அப்பொழுதே வந்து தந்து ஆஸ்வாசப் படுத்தாமல் போனது அவர் தோஷம் இல்லை-கிடைக்காத ஒன்றை ஆசைப்பட்ட நெஞ்சு –
அதன் தோஷம் தான் இது என்று-மனதை வெறுத்து நாயகி பாசுரம்-மணம் செய்ய யோக்யதை கொண்ட தேவ மஹிஷிகள் -16108 -சிறை வைத்த நரகாசுரனை சத்யபாமை கூட்டிச் சென்று சம்ஹரித்த மஹா உபகாரகன் உஷை அநிருத்த சேர விட்ட வலிமையையும் பெருமையும் -வேதமே சொல்ல முடியாத பெருமை அன்றோ-மஹா குணங்களை யுடையவன்-எட்டா நிலத்தில் அஞ்சன கிரி போன்ற அவனது திருத்துழாயில் ஆசைப்பட்டு அரியதை ஆசைப்பசுடாதே என்று சொன்னாலும் கேளாத மனம் தந்து போன நலிவே இது

7-10-இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும்-ப்ரவேஸம்-

சர்வேஸ்வரன் தம்மைக் கொண்டு திருவாய்மொழி பாடுவித்துக்கொண்ட மஹோபகாரத்துக்குப் பிரதியுபகாரம்
தேடிக் காணாமை தடுமாறினார், மேல் திருவாய்மொழியிலே;
இவர் தாம் தம்முடைய மயக்கத்தாலே பிரதியுபகாரந்தேடித் தடுமாறினார்த்தனை போக்கி
இவர் தம்மால் கொடுக்கலாவது ஒன்றும் இல்லை;
அவன் ஒன்று கொண்டு குறைதீர வேண்டும் விருப்பமுடையன் அல்லன்;
இவர் தம்முடைய உபகார ஸ்மிருதி இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலே செய்தது ஒன்றே அன்றோ?

ஆனாலும், ஆறி இருக்கமாட்டாரே! இனி, நாமும் அவனுக்கு ஒன்று கொடுத்தோமாய்,
அவனும் நம் பக்கல் ஒன்று பெற்றானாகச் செய்யலாவது ஒன்று உண்டு.
அவன், தனக்கு வகுத்த கைங்கரியத்தைச் செய்யவே,
அதனைத் தனக்குப் பிரதியுபகாரம் செய்ததாக நினைத்திருக்கும் தன்மையனாய் இருந்தான்;
ஆன பின்பு, உம்முடைய சொரூபத்திற்குத் தகுந்ததான ஆத்துமா உள்ள அளவு உளதான அடிமையிலே அதிகரிப்போம்’ என்று பார்த்தார்.

இனித்தான் வேத வாக்கியங்களும் ‘தனது இயல்பான வடிவினை அடைகிறான்’ என்று
சொரூபத்தின் அடைதல் அளவும் சொல்லவே, அதற்கு அப்பால் கைங்கரியமானது அவகாத ஸ்வேதம் போலே
தன்னடையே வரும் என்று ப்ரஹ்மத்தினை அடைதல் அளவும் சொல்லிவிடும்.
ஸவேந ரூபேண அபிநிஷ்பத்யதே’-என்பது, சுருதி.
அவகாத ஸ்வேதம் – நெல் முதலியவற்றைக் குற்றும் போது சரீரத்தில் தோன்றும் வியர்வை.

ஆழ்வார்கள் ‘வழுவிலா அடிமை செய்யவேண்டும் நாம்’ என்று அது தன்னையே சொல்லா நிற்பார்கள்;
அடைந்தன் பலமான கைங்கரியத்தில் ருசியாலே.
‘சம்சாரம் தியாஜ்யம்; சர்வேஸ்வரன் உத்தேசியன்’ என்கிற ஞானம் பிறந்து, பகவானை அடைந்தவர்கள்,
‘பகவானை அடைதல் (பிறவிப் பிணிக்கு) மருந்து’ என்று பகவானை அடைதல் அளவிலே நின்றார்கள்;
பேஷஜம் பகவத் ப்ராப்தி:’ என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 6. 5 : 59.-

அவர்களைக் காட்டிலும்’ மயர்வற மதிநலம் அருளினன்’ என்கிறபடியே, பகவானுடைய திருவருளாலே
அடைந்த ஞானத்தையுடையரான இவர்களுக்கு வாசி இதுவாயிற்று.
இனி, அடிமை செய்யுமிடந்தன்னில் ‘சரீர சம்பந்தம் அற்றுப் பரமபதத்தை அடைந்தால் பின்பு செய்யுகிறோம்’ என்று
அவ்வளவும் ஆறியிருக்கும்படியன்றே, செய்ந்நன்றி நினைவு இவரை நலிகிறபடி?

ஆகையாலே, ‘ஸ்ரீவால்மீகி பகவான் பாடின ஸ்ரீராமாயணம் கேட்கைக்குத் திருவயோத்தியையிலே
திருத்தம்பிமாரும் தாமுங்கூடப் பெருமாள் பேரோலக்கம் இருந்தாற்போலே,
சர்வேஸ்வரனும் நாம் பாடின திருவாய்மொழி கேட்கைக்காகத் திருவாறன்விளியிலே
பரியங்க வித்தியையிற்சொல்லுகிறபடியே திருவனந்தாழ்வான் மேலே நாய்ச்சிமாருடனே கூடி
நித்திய பரிஜனங்களோடே கூட எழுந்தருளியிருந்தான்’
அங்கே சென்று திருவாய்மொழி கேட்பித்து அடிமை செய்வோம்,’ என்று எண்ணுகிறார்.

(அயோத்யையில் கேட்டதாக இங்கு தெளிவாக
வால்மீகி ஆஸ்ரமம் அருகில் -நைமிசாரண்யத்தில் கேட்டு அருளினார் என்பாரும் உண்டு
முக்காலும் அறிந்த வால்மீகி அயோத்யைக்கு வந்ததாக சொல்லலாம் )

அங்ஙனம் எண்ணுமிடத்திலும், சர்வேஸ்வரன் அடையத் தக்கவனானால் அர்ச்சிராதி கதியோடு
தேசவிசேடத்தோடு வாசி அற அடையத்தக்கதில் சேர்ந்த தேயாமன்றோ? என்றது,
‘முன்பு அடையப்படாதனவாய்ப் பின்பு உபாயத்துக்குப் பலமாய் வருவன யாவை சில?
அவையெல்லாம் அடையத்தக்கதில் சேரக் கடவனவாம் அன்றோ?’ என்றபடி.அப்படியே,
‘திருவாறன்விளையிலே எழுந்தருளியிருக்கிற சர்வேஸ்வரன் திருவடியிலே போய் அடிமை செய்யக் கடவோம்.
அதுதானும் வேண்டா;
அந்தத் தேசத்தை அடைதல்தானே அமையும். அதுதானும் வேண்டா;
இங்கே, இருந்தே அங்கு ஏறப்போவதாக எண்ணுகிற அவ்வெண்ணந்தானே அமையும்.

இனி, நாம் அத்தேசம் அடையத் தக்கது என்று புத்தி பண்ணிப் போருவதைப் போன்று,
அவனும் நாம் இருந்த தேசத்தைக் குறித்து வரக்கடவன்:
அவ்வளவிலும் நாம் அவனைத் தொடர்ந்து சென்று விட்டு நாம் அத்தேசத்திலே போய்ப் புகக்கடவோம்;
அத்தேசமே நமக்கு அடையத் தகுந்தது; அங்கே போய்ப் புகவே, நம்முடைய கைங்கரிய விரோதிகள் அனைத்தும் கழியும்.
இனி, நான் வேறு ஒன்றிலே இச்சை பண்ணினாலும், என் நெஞ்சமானது அத்தேசத்துக்கு ஒழிய ஒரு தேசத்துக்கு ஆளாக மாட்டாது;

‘என்னுடைய மனமானது வேறு ஒன்றிலும் செல்லுவது இல்லை’ என்கிறபடியே.
’ பாவோ நாந்யத்ர கச்சதி’ என்பது, ஸ்ரீராமா. உத்தர. 40 : 15
ஆக, திருவாறன்விளையிலே புக்கு அடிமை செய்யக்கூடிய படிகளை எண்ணி இனியர் ஆகிறார்.
ஸ்ரீ ராமாயணத்தைக்காட்டிலும் இதற்கு வாசி, பாடினாரே கேட்பிக்கையும், பாட்டுண்டாரே கேட்கையுமாயிற்று.

சீதையின் மஹத்தான சரிதம்’ என்னா நிற்கச் செய்தே,
கவி பாட்டுண்டவளை ஒழியத் தானே அன்றோ கேட்டது?
பாடினான் ஸ்ரீவால்மீகி பகவான்; கேட்பித்தாரும் குசலவர்கள் அல்லரோ?

7-2-கங்குலும் பகலும் -அடுத்த 7-3-நிகரில் முகில் வண்ணன் பின்பு ஆறு திருவாய் மொழிகளும்
திவ்ய தேச பதிகங்கள் இல்லையே
இதில் மீண்டும் திவ்ய தேசம்
வன்னி பழம்-அர்ஜுனன் சம்பந்தம் -பாம்பை ஆற்றங்கரை -இன்றும் இங்கே பிரசாதம் –
ஆகிஞ்சன்யம் இவருக்கு -அவனுக்கு பூர்த்தி -அவாப்த ஸமஸ்த காமன் -பிரதியுபகாரம் இங்கும் அங்கும் இல்லை என்றவர்
வகுத்த கைங்கர்யம் உண்டு என்று கண்டு பிடித்தார்
ஸ்வரூப சித்திக்கு செய்வதை பிரதியுபகாரம் என்று அவன் திரு உள்ளம் பித்தன் அன்றோ-
துணைக் கேள்வி -இங்கு -நம்மைப் பார்க்கும் வேகத்தில் பாசுரம்விடாதீர் -திருக் குறள் அப்பன் –
32 நாள் லவ குசர் ஸ்ரீ ராமாயணம் அருளி -சிலர் நைமிசாரண்யத்தில் என்பர் -இங்கு ஈட்டில் திரு அயோத்யையில் என்று தெளிவாக உள்ளதே –

பத்தாம் திருவாய் மொழியில்
கீழ் இப்படி தம்மைக் கொண்டு கவி பாடுவித்துக் கொண்ட மஹா உபகாரத்தால் தம்முடைய விரோதி அஸத் சமமாம்படி
ஹ்ருஷ்டரானவர் -அவன் உபகாரத்துக்கு ஒரு பிரதியுபகாரம் காணாமையாலே
சேஷியானவனுக்கு அதிசய ஜனகமான சேஷ வ்ருத்தி ஒழிய இல்லை என்று அறுதி இட்டு -பிரதி சம்பந்தியான அவனுடைய
அசேஷ சேஷித்வ ப்ரகாசகமான ஸ்ரீ யபதித்தவ பூர்த்தியையும்
அநந்யார்ஹ சேஷத்வ அபதானத்தையும்
ஆஸ்ரித ரக்ஷண ஆகாரத்தையும்
அனுபாவ்யமான விக்ரஹ யோகத்தையும்
அனுபவ அர்த்தமான அவதாரத்துக்கு மூலமாயுள்ள அனந்த சயனத்வத்தையும்
அநிஷ்ட நிவ்ருத்தி விசிஷ்டமான அபிமத சயாகத்வத்தையும்
பிரபல விரோதி பஞ்சநத்வத்தையும்
ஆந்திர துக்க நிவர்த்தகதத்தையும்
பாபம் நிவ்ருத்தமாய் ப்ராப்ய தேசம் சித்திக்கிலும் உத்தேசியமான ஆஸன்ன தேச யோகத்தையும்
நிரதிசய வ்யவசாய ஜனகத்வத்தையும்
அனுசந்தித்து -ஏவம் வித ஸ்வ பாவனான அவன் நம்மை விரோதியைக் கழித்து அடிமை கொள்ளுகைக்காக ஆசன்னமான
திரு வாறன் விளையிலே ஸந்நிஹிதனான அவன் திருவடிகளிலே அடிமை செய்யக் கடவோம் என்று மநோ ரதித்து
இப்படி நிவர்த்திய விரோதி பல நிரூபண பூர்வகமாக அதனுடைய சரண்ய நிவர்த்யத்வத்தை நிஷ்கர்ஷித்து நிகமிக்கிறார் –

இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற் றமர்ந் துறைகின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை
அன்புற் றமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களு மாகுங் கொலோ?–
7-10-1-

இன்பம் பயக்க – எப்பொழுதும் துக்கத்தையே அடைந்து கொண்டிருக்கிற சம்சாரி சேதனனுக்குத் தன்னுடைய சேர்த்தியாலே ஆனந்தம் உண்டாமாறு போலே ஆயிற்று பிராட்டியுடைய சேர்த்தியாலே
‘ஆநந்த மய:’ என்கிற வஸ்துவான அவன் தனக்கும் ஆனந்தம் உண்டாம்படியும்;
‘அல்லி மலர் மகள் போக மயக்குகளாகியும் நிற்கும் அம்மான்’ திருவாய். 3. 10 : 8.என்று
பிராட்டியுடைய சேர்த்தியாலே பிச்சு ஏறி இருக்குமாயிற்று.-இருவருமான சேர்த்தியிலே, இதற்கு முன்பு ஆனந்தம் புதியது உண்டு அறியாதான் ஒருவனுக்கு ஆனந்தம் உண்டாமாறு போலே ஆயிற்று, கணந்தோறும் உண்டாம்படி.’-இருவருமான சேர்த்தியாலே தங்களுக்கு ஆனந்தம் உண்டாக, அச் சேர்த்தியைக் காண்கையாலே உலகத்துக்கு ஆனந்தம் உண்டாக,
அதனைக் கண்டு குழந்தை பால் குடிக்கக் கண்டு உகக்கும் தாயைப் போலே
இவர்களுக்கு உண்டான பிரீதியைக் கண்டு அதனாலே தாங்கள் இனியராய் இருப்பர்களாயிற்று.

இனிது உடன் வீற்றிருந்து ஆள்கின்ற – தன் சந்நிதியாலே உலகம் அடையத் தளிரும் முறியுமாம்படி இருக்கிறவன், தான் பெறாப் பேறு பெற்றாற்போலே, ‘திருவாய்மொழி கேட்கைக்குத் தகுதியாக இருப்பது ஒரு தேசம் பெற்றோம்’ என்று விரும்பி வசிக்கிற தேசமாயிற்று.-

அன்புற்று –‘திருவாய்மொழி கேட்கலாய் இருப்பது ஒரு தேசம் பெறுவோமே!’ என்று அங்கே அன்பினை வைத்து.-அமர்ந்து – அந்தத் தேச வாசத்துக்கு மேற்பட ஒரு பிரயோஜனத்தைக் கணிசியாதே விரும்பி.-உறைகின்ற – அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதியாதே, நித்திய வாசம் செய்கிற.

அணி பொழில் சூழ் திருவாறன்விளை –-‘பிராப்பிய பூமி’ என்று தோற்றும்படி இருப்பதாய், அவன் தனக்கும்-விபூதியில் உள்ளாருக்கும் -உலகத்துள்ளார்க்கும் இருந்து
திருவாய்மொழி கேட்கைக்குத் தகுதியான பரப்பை யுடைத்தாய். காட்சிக்கு இனியதாய் இருக்கிற பொழிலாலே சூழப்பட்ட திருவாறன்விளையை.

அன்புற்று – ‘திருவாய்மொழி கேட்கைக்குத் தக்கதான தேசம் பெற்றோம்’ என்று அவன் விருப்பத்தை வைத்தாற்போலே, ‘திருவாய்மொழி கேட்பிக்கைக்குத் தக்கதாய் இருப்பது ஒரு தேசத்தைப் பெறுவோமே!’ என்று அத் தேசத்திலே விருப்பத்தை வைத்து.-அமர்ந்து – அத் தேச வாசத்துக்கு அப்பால் ஒரு பிரயோஜத்தை -கணிசியாதே -விரும்பாமல்.-வலஞ்செய்து 
வலம் வருதல் முதலானவற்றைச் செய்து.-கை தொழும் நாள்களும் ஆகுங்கொலோ 
‘அந்தக் காலம் இந்த நாளாக வேண்டும்’ என்றாரே ஸ்ரீகௌசல்யையார்.
‘போய் வருகை தவிராராகில் மீண்டு புகுரும் நாள் இன்று ஆயிற்றாகிலோ’ என்றார் போலே,இந்த எண்ணத்திற்கு அடைத்த காலமே அனுபவத்துக்கு அடைத்த காலமாகப் பெற்றோம் ஆகிலோ?’ என்கிறார்.-

———-

ஆகுங்கொல் ஐயம் ஓன்று இன்றி அகலிடம் முற்றவும் ஈரடியே
ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறளப்பன் அமர்ந்து உறையும்
மாகந் திகழ் கொடி மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளை
மாகந்த நீர் கொண்டு தூவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொலோ?
–7-10-2-

அமர்ந்து உறையும் – இந்திரனுக்கு இராச்சியத்தை வாங்கிக் கொடுத்துத் திருப் பாற் கடலிலே போய்ச் சாய்கை அன்றிக்கே, அவன் வந்து நித்திய வாசம் செய்கிற.

மாகம் திகழ் கொடி மாடங்கள் நீடு மதிள் திருவாறன்விளை –-அவன் திருவடியால் அளந்த ஆகாசப் பரப்பு அடங்கலும் பரந்துள்ள கொடிகளை யுடைத்தான மாடங்களை,
ஓங்கி யிருந்துள்ள மதிள்களை யுமுடைத்தான திருவாறன் விளையை. -கொண்டைக் கோல் நாட்டிய இடம் இது

மா கந்தம் நீர் கொண்டு தூவி வலஞ்செய்து கை தொழக் கூடுங்கொல் –‘பூமியை அடங்கலும் பனி போன்ற குளிர் நீரால் நனைக்கட்டும்’ என்று ஸ்ரீ நந்திக் கிராமம் தொடங்கி
ஸ்ரீ பரத்துவாச பகவான் ஆஸ்ரமத்தளவும் வர, பனி நீராலே விடுவித்தான் ஸ்ரீசத்துருக்நாழ்வான் என்றது அன்றோ?-அப்படியே, மா கந்த நீர் கொண்டு தூவி அநுகூலமான காரியங்களைச் செய்து கை தொழக் கூட வற்றேயோ?-

———

கூடுங்கொல்? வைகலும் கோவிந்தனை மதுசூதனைக் கோளரியை
ஆடு பறவை மிசைக்கண்டு கைதொழுது அன்றி யவன் உறையும்
பாடும் பெரும்புகழ் நான்மறை வேள்வி யைந்து ஆறங்கம் பன்னினர் வாழ்
நீடு பொழில்திரு வாறன் விளை தொழ வாய்க்குங்கொல் நிச்சலுமே?
–7-10-3-

கோவிந்தனை மதுசூதனைக் கோள் அரியை – அங்கு நிற்கிறவனைக் கண்டால் மூன்று படி தொடை கொள்ளலாய் இருக்கும்.-1-ஆஸ்ரித வாத்சல்யம், 2-ஆஸ்ரித விரோதி நிரசின சீலதை, 3-அடியர் அல்லார்க்குக் கிட்டுதற்கும் அரியன் என்னும் இவை.

ஆடு பறவை மிசைக் கண்டு – வெற்றிப் புள்ளின் மேலே கண்டு. ஆடு – வெற்றி.
அன்றிக்கே,-சர்வேஸ்வரன் வாகனம் என்கிற உவகையின் மிகுதியாலே-மது பான மத்தரை-  கட் குடியர் போன்று களித்து ஆடா நின்றுள்ள திருவடி திருத் தோளிலே கண்டு என்னுதல்.
நாம் திருவாறன்விளையைப் பிராப்யம் என்று போகிறதைப் போன்று, அவனும் திருநகரியையே’உத்தேஸ்யமாம் என்று வாரா நிற்கும் அன்றோ?-கண்டு –-நடு வழியிலே கண்டால். கை தொழுது – காரியங் கொண்டிலோமே ஆகிலும், கிட்டினால் கை தொழுகைக்குச் சம்பந்தம் உண்டே அன்றோ? ஆகையாலே முறை தப்பாமல் பணிதல் செய்து.(நமஸ்கரித்து கிட்ட மாட்டோம் -கிட்டினால் நமஸ்கரிப்போம்)-போதயந்த பரஸ்பரம் -‘ஓருவர்க்கு ஒருவர் உணர்த்திக் கொண்டு’ என்னும்படி, அவ்வூரிலுள்ளாரோடு சென்று கூடவேணும்–.வாய்க்குங்கொல் நிச்சலுமே – அங்குத்தை ஸ்ரீவைஷ்ணவர்களோடே கூடி நித்தியானுபவம் பண்ணக் கூடவற்றேயோ?-

————-

வாய்க்குங்கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத் தீங்கு நினைக்கப் பெற
வாய்க்குங் கரும்பும் பெருஞ்செந்நெலும் வயல் சூழ் திரு வாறன்விளை
வாய்க்கும் பெரும்புகழ் மூவுலகீசன் வடமதுரைப் பிறந்த
வாய்க்கும் மணி நிறக் கண்ணபிரான் தன் மலரடிப் போதுகளே?
–7-10-4-

நித்திய அக்நி ஹோத்திரம் போலே ஒரு கால விசேடத்திலேயாய்ப் போக ஒண்ணாது,
எல்லா நிலைகளிலும் உண்டாக வேணும்.-மனத்து ஈங்கு நினைக்கப் பெற – அங்குச் சென்று அனுபவிக்க வேண்டா. இங்கே இருந்து நெஞ்சாலே அங்குத்தைப் பரிமாற்றங்களை நினைக்கப்பெற அமையும்.-‘பெற’ என்கையாலே,-இந்த எண்ணத்துக்கு அவ்வருகு ஒரு பேறு இல்லை என்று இருக்கிறார் ஆயிற்று இவர்.-இதுக்கு மேலே யோக்யதை எதிர் பார்க்க மாட்டானே -ஆசை உடையார்க்கு எல்லாம் என்று இதனாலே எம்பெருமானார் வரம்பு அறுத்தார் –

முற்காலத்தில் இடையாற்றுக்குடி நம்பி என்பார் ஒருவர் இருந்தனர்;-அவர் திருநாள்கள் தோறும் வந்து பெருமாளைச் சேவித்துப் போனால், மறித்துத் திருநாள் வருந்தனையும் அதனையே போது போக்காக நினைத்துக் கொண்டு இருப்பாராயிற்று;
ஒருநாள் ஒரு திருநாளின் வைபவத்தை நினைத்திரா நிற்கச் செய்தே, ‘அமுது செய்கைக்குப் போது வைகிற்று’ என்றார்களாக, ‘ஆகில் வருகிற திருநாள் அணித்தாகிறது’ என்றாராம்.

அவர் நூறு வயதும் புகுகையாலே வலிமை குன்றித் திருமுளைத் திருநாளில் பெருமாள் புறப்பட்டருளுகைக்கு உதவ வந்து புகுரப் பெற்றிலர்:
பெருமாளும் தேடி யருளக் காணாமல், ‘நம் இடையாற்றுக்குடியான் வந்திலன்’ நங்கண்ணாலம் அல்லவோ!’ என்று திருவுள்ளமானாராம்.

அவர் தாம் ஆறாந்திருநாளிலே சேவித்திருக்கச் செய்தே, ‘நாம் உனக்குச் செய்ய வேண்டுவது என்?’ என்று கேட்டருள,
‘தேவரீர் தந்தருளின சரீரத்தைக் கொண்டு போரக் காரியம் கொண்டேன்; இனிப் போக்குவரத்துக்குத் தகுதி இல்லாதபடி போர இளைத்தது’ என்ன,
‘வாராய், மெய்யே இளைத்தாயாகில்: இங்ஙனே இரு’ என்று அருளிச் செய்தார்;
பெருமாள் நடுவில் திருவாசலுக்கு அவ் வருகே எழுந்தருளுங்காட்டில் அவர் திருநாட்டுக்கு எழுந்தருளினார்.(திருக்கோளூர் பெண் பிள்ளை வார்த்தை–58– நில் என்று பெற்றேனோ இடையாற்றூர் நம்பியைப் போலே)

அழகிய நீல மணி போன்ற திரு நிறத்தை யுடைய உபகாரத் தன்மையனான கிருஷ்ணனுடைய மலர்ச்சி பொருந்திய திருவடிகளாகிற செவ்விப் பூக்களை ஈங்கு மனத்து நினைக்கப் பெற வாய்க்குங்கொல். நிச்சலும் எப்பொழுதும்.-

————–

மலரடிப் போதுகள் என்நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்கப்
பலரடியார் முன்பு அருளிய பாம்பணை யப்பன் அமர்ந்துறையும்
மலரின் மணிநெடு மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளை
உலக மலி புகழ் பாடநம் மேல் வினை ஒன்றும் நில்லா கெடுமே.
–7-10-5-

பலரடியார் முன்பு அருளிய-ஸ்ரீ வேத வியாச பகவான், ஸ்ரீ வால்மீகி பகவான், ஸ்ரீ பராசர பகவான், ‘இன்கவி பாடும் பரமகவிகள்’ என்று சொல்லப்படுகிற
முதலாழ்வார்கள் எல்லாரும் உளராயிருக்க, என் பக்கல் விசேட கடாட்சம் செய்வதே!-கிழக்குத்தை இராசாக்கள் பொல்லாங்காலே இங்கே நலிவு பிறக்குமளவிற்செய்வது என்?’ என்று எம்பெருமானார் அதனை நினைந்தருளி, ‘இத் தேசத்தை விடாதே நோக்கிக்  கொண்டு கிடந்தோம்;-இவ் விடத்துக்கும் அழிவு வரும்படி ஆசுர வர்க்கம் மேலிடாநின்றது; மேல் செய்ய அடுப்பது என்?’ என்று பெரிய நம்பிக்கு அறிவிக்க,
‘நான் பெருமாளுடைய திரு எல்லையிலே ஒரு பிரதக்ஷணம் வரும்படியாக உம்முடைய சிஷ்யர்களிலே ஒருவரைப் போர விடுவது’ என்ன
‘அதற்கு ஆவார் ஆர்?’ என்ன, ‘என் பின்னே போராநின்றால் ‘ஒருவன் பின்னே போகாநின்றேன்’ என்று தன் நெஞ்சிற்படாதே சாயை போலே என்னைப் பின் செல்வான் ஒருவனாக வேணும்’ என்ன, கச்சதா மாதுல குலம்-உடை வாள்-அனகா- நித்ய சத்ருக்ந ப்ரீதி உடன் போனது போலே –
‘அதற்கு ஆவார் அர்?’ என்ன,‘ஆழ்வானைப் போக விடலாகாதோ?’ என்றாராம்.
ஆக, பல முதலிகள் இருக்க, ஆழ்வானைக் கொடுத்தாற்போலே

உலகம் மலி புகழ் பாட – ஈண்டின இடத்தில் வெள்ளம் போலே உலகத்தில் அடங்காதபடியான அவனுடைய கல்யாண குணங்களைப் பிரீதியினாலே தூண்டப்பட்டவராய்க் கொண்டு பாட.-நம் மேல் வினை ஒன்றும் நில்லா கெடும் –
பாபம் போகைக்காகத் தனித்து ஒரு முயற்சி செய வேண்டா; பால் குடிக்க நோய் தீருமாறு போலே நம்முடைய பாபங்கள் தாமே நசித்துப் போம்

—————

ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீவினை உள்ளித் தொழுமின் தொண்டீர்!
அன்றங்கு அமர்வென்று உருப்பிணி நங்கை அணி நெடுந் தோள் புணர்ந்தான்
என்றும் எப்போதும் என்நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக் கின்ற பிரான்
நின்ற அணி திரு வாறன்விளை என்னும் நீணக ரமதுவே.–
7-10-6-

ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீவினை –இவன் தான் போக்கப் பார்க்கும் அன்று அன்றோ, புதுப் புடவை அழுக்குக் கழற்றுமாறு போலே சிறிது கிடக்கச் சிறிது போவது?
அங்ஙன் அன்றிக்கே, வரம்பில் ஆற்றலை யுடை இறைவன் போக்கும் அன்று வாசனையோடே போமே அன்றோ?

அங்கு –இவன் விரையா நின்றான், உடையவன் வந்து கைக் கொள்ளானோ என்று இருக்கிற அளவிலே, தூணிலே தோற்றினாற்போலே தோற்றினான் ஆயிற்று. -குண்டின புரம் -ருக்மிணி தேவி சந்நிதி உண்டு –தாருகன் தேரோட்டி –அங்கே அவன் வீயத் தோன்றியது போலே -மடுத்தூதிய சங்கு ஒலி கேட்டு மகிழ்ந்தாள் –இதனால், ‘விரும்பினவர்கள் விரும்பும் சமயத்திலே வந்து தோன்றுமவன்’ என்பதனைத் தெரிவித்தபடி.-

நின்ற அணி திருவாறன்விளை என்னும் நீள் நகரமது –பிரகாசியா நிற்கச் செய்தேயும் கண்களுக்கு இலக்கு ஆகாதபடி இருக்கை அன்றிக்கே,‘இவன் நமக்கு உளன்’ என்று அச்சந் தீரும்படி கண்களாலே கண்டு அனுபவிக்கும்படி நிற்கிறஅழகிய திருவாறன்விளையாகிற மஹா நகரத்தை.-உள்ளித் தொழுமின் தொண்டீர்! –-‘தாம் அடிமை செய்ய நினைக்கிறாகில் ‘உள்ளித் தொழுமின்’ என்கிற பரோபதேசத்துக்குக் கருத்து என்?’ என்னில்,
இவர்க்குச் சுவானுபவந்தான் பரோபதேசத்தை ஒழிந்து இராது; நெஞ்சினை விளித்ததோடு ‘தொண்டீர்’ என்றதனோடு வாசி இல்லை.நெஞ்சு போல்வாரை தொண்டீர் -என்கிறார் -சுய அனுபவ ஹானி இல்லையே –

————-

நீணகரமதுவே மலர்ச் சோலைகள் சூழ் திரு வாறன்விளை
நீணகரத் துறைகின்ற பிரான் நெடுமால் கண்ணன் விண்ணவர்கோன்
வாணபுரம் புக்கு முக் கட்பிரானைத் தொலைய வெம் போர்கள் செய்து
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்றொன்று இலமே
.–7-10-7-

திருவாறன்விளையே பிராப்பியம் என்னா நின்றீர்; அவன் அன்றோ பிராப்பியன்?’ என்ன,
‘அன்று என்ன வல்லேனோ? என் சித்தாந்தம் இருக்கும்படி கேட்கலாகாதோ?’ என்கிறார்.
‘உபாசனத்தின் பலமாய் வருமவை யெல்லாம் பிராப்பியத்திலே சேர்ந்தனவாகக் கடவன;(ஆஸ்ரயண பலமான அர்ச்சிராதிகதி தொடக்கமான எல்லாமே ப்ராப்ய அந்தர் கதம் தானே )-அன்றிக்கே,-‘சாத்தியத்தின் வளர்சிக்கு உடலாய் வருமவை யெல்லாம் பலத்துக்கு உடலாகக் கடவன,’ என்னுதல்,-ஆகையாலே, பிராப்பிய பூமி அந்தத் தேசமே; அங்கே கொடு போய்ச் சேர்க்கும் கடகன் அவன்;-இது என் சிந்தாந்தம் இருக்கும்படி’ என்கிறார்.

‘அவனுக்குக்கூடப் பிராப்பிய பூமி’ என்று தோற்றும்படி இருக்குமாயிற்று.
ஸ்ரீ வைகுந்த நாதன் இத்தை பிராப்யம் என்று அன்றோ உகந்து நித்ய வாசம் செய்கிறான் –சரண் – அவன் கடகன்; திருவாறன்விளையே பிராப்பியம்.-பிராப்பியனானவன் வந்து எழுந்தருளி யிருக்கும் தேசம் ஆகையாலே அவனுடைய சம்பந்தத்தாலே
அத் தேசமும் பிராப்பியம் என்கைக்குத் தட்டு இல்லை.-ஓர் அறப் பெரியவன் உபாயமாய்ப் பலத்தைக் கொடுக்கிறவனாக வேணுமே: ஆகையாலே, அவன் உபாயம்; அத் தேசம் பிராப்பியம்.-அன்றி மற்று ஒன்று இலமே –இங்ஙன் அல்லது உபேய உபாயங்கள் மாறாடக் கடவோம் அல்லோம்.

———–

அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று அகலிரும் பொய்கையின் வாய்
நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான்
சென்று அங்கு இனி துறைகின்ற செழும் பொழில் சூழ் திரு வாறன்விளை
ஒன்றி வலஞ்செய ஒன்றுமோ? தீவினை உள்ளத்தின் சார்வல்லவே
.–7-10-8-

அவனைப் பார்த்தால் தானும் அல்லாதாரைப் போன்று புறம்பாய்க் கடக்க நிற்கும்படியாய் அன்றோ சம்பந்தம் இருக்கும்படி?-ஆகைச் சுட்டி அன்றோ பிரணவத்தில் நடுப் பதம் கிடக்கச் செய்தே அன்றோ திரு மந்திரத்தில் நடுப் பதம் ஜீவிக்கிறதும்?திருமந்திரத்தில் நடுப்பதம் ‘நம:’என்பது, ‘இத்தால் (உகாரத்தால்) தனக்கும் பிறர்க்கும் உரித்தன்று என்கிறது.’
‘நமஸ்ஸூ, ந என்றும், ம: என்றும் இரண்டு பதம்.’ ‘ம:என்கிற இத்தால் தனக்கு உரியன் என்கிறது. ‘ந’ என்று அத்தைத் தவிர்க்கிறது.’-65-
‘ஆக, நம: என்கிற இத்தால், தனக்குரியன் அன்று என்கிறது,’
ஈஸ்வரன் தனக்கே யாயிருக்கும்; அசித்துப் பிறர்க்கே யாயிருக்கும்;
ஆத்துமா தனக்கும் பிறர்க்கும் பொதுவாயிருக்கும் என்னும் முற்பட்ட நினைவு;
அங்ஙனன்றிக்கே அசித்துப்போலே தனக்கேயாக எனைக் கொள்ள வேணும் என்கிறது நமஸ்ஸால்’ –91.

ஆனையின் நெஞ்சு இடர் தீர்த்த பிரான் –துதிக்கை முழுத்தின இடரே அன்றோ? நீண்ட கை குறுகும் அளவுமன்றோ பார்த்து நின்றது?இவன் கை விட்டால் கைக் கொள்ளா நின்றானித்தனை அன்றோ?அன்றிக்கே, ‘நம் காரணமாகச் சர்வேஸ்வரனுக்கு ஒரு தாழ்வு வருகிறதோ?’ என்னும் இடராதல். என்றது, இவன் இப்படி வருந்த அவன் காத்தபடி அழகியதாய் இருந்தது! இவனையோ நாம் இப்படிக் காப்பவன் என்று நினைத்திருந்தது?’ என்று உலகத்தார் இவனை இப்படி நினைக்கின் செய்வது என்?’ என்று துன்புற்ற துன்பத்தைத் தெரிவித்தபடி.-இரண்டற்கும் இடர் வாராதபடி
கரையிலே கொண்டு ஏறி, பின்னர் முதலை வாயினைக் கிழித்து யானையின் இடரை நீக்கினானாயிற்று.

இங்கே, ‘இராச புத்திரனைச் சிறையிலே இட்டு வைத்தால் கைக் கூட்டனுக்கும் பாலுஞ்சோறும் இடுவாரைப் போலே காண்,’ என்று இதற்குப் பட்டர் அருளிச் செய்வர். இரண்டும் மோட்சத்தைப் பெற்றதே! முதலை சாப மோட்சமும், ஸ்ரீகஜேந்திராழ்வான் சாக்ஷாத் மோட்சமும் பெற்றமையைத் தெரிவித்தபடி.

பிரான் –யானையின் இடரைப் போக்கின இதுவும், அதற்கு அன்றித் தமக்கு உதவி செய்தானாக நினைத்திருக்கிறார் காணும் இவர்.-இவ் வெண்ணத்தை உடையவனாகை அன்றோ ஒருவன் வைஷ்ணவன் ஆகையாவது? என்றது,-அநுகூலரிலே ஒருவனுக்கு ஒரு நன்மை உண்டானால் அது தன்னதாக நினைத்திருக்கையும் கேடு வந்தால்
அதனைத் தனக்கு வந்ததாக நினைத்திருக்கையுமாகிற இவ்விரண்டும் உண்டானால் அன்றோ வைஷ்ணவத்துவம் உண்டாயிற்றாவது?’ என்றபடி.

சென்று அங்கு இனிது உறைகின்ற செழும் பொழில் சூழ் திருவாறன்விளை ஒன்றி வலஞ்செய ஒன்றுமோ –இவன் உதவாத அன்று அவ் யானைக்கு உள்ள இடரைப் போன்று போருமாயிற்று.-அத் தேசத்தை அடையாத போது சர்வேஸ்வரனுக்கு உண்டான இடரும்.
அவன் வந்து தன் ஆதரம் எல்லாம் தோன்ற வசிக்கின்ற அழகிய பொழிலாலே சூழப்பட்ட திருவாறன்விளையைக் கிட்டி-வலஞ்செய்தல் முதலானவற்றைச் செய்யக் கிட்டுமோ?

தீவினை உள்ளத்தின் சார்வு அல்லவே –அப்போது தீவினை உள்ளத்தின் சார்வு ஆகாது.
‘ஒளியும் இருளும் சேர்ந்து இருத்தல் உண்டோ?’ என்றது,‘அவன் வந்து நித்திய வாசம் செய்யத் தீவினை ஒதுங்க இடம் உண்டோ?’ என்றபடி.-

————–

தீ வினை உள்ளத்தின் சார்வல்லவாகித் தெளி விசும்பு ஏறலுற்றால்
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று
யாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனை
மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல்?’ என்னுமென் சிந்தனையே.
–7-10-9-

‘எனக்கு ஸ்ரீவைகுண்டமும் திருவாறன்விளையும் இரண்டும் கிடைப்பதானால், ஸ்ரீவைகுண்டத்தை விட்டுத் திருவாறன்விளையே அமையும் என்னும் என் நெஞ்சம்’ -அங்கு உள்ளாரும் வந்து விரும்பும் திருவாறன் விளை யமையும் -.-மேவி வலஞ்செய்து –அத் தலத்தை நான் சென்று அடைந்து அநுகூலமான கைங்கரியத்தைச் செய்து-கைதொழக் கூடுங்கொல் என்னும் என் சிந்தனை –என் நெஞ்சு எனக்கு அடங்கியது அன்று; ‘வேறு ஒன்றிலும் என் மனம் செல்லுவது இல்லை,’ என்கிறபடியே.–பாவோ நான்யத்ர கச்சதி -போலே –

————

சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அல்லாத்தன்மை தேவபிரான் அறியும்
சிந்தையினால் செய்வதா னறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத் தேவர் குழு வணங்கும்
சிந்தை மகிழ் திரு வாறன் விளையுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே.
–7-10-10-

இது தான் ஒரு வார்த்தை மாத்திரமேயாய் உம்முடைய நெஞ்சு பரம பதத்தை விரும்பினாலோ?’ என்ன,-‘அதனை. என் நினைவிற்கு வாய்த் தலையிலே-மூலம் – இருக்கிற சர்வேஸ்வரனைக் கேட்டுக் கொள்வது’ என்று இங்ஙனே அருளிச் செய்வர் சீயர்.
அன்றிக்கே,-‘நீர் திருவாறன்விளையை பிராப்பியம் என்று இருக்கிறீர்; ஈஸ்வரன் ஸ்வதந்திரன் அல்லனோ?-அவன் பரம பதத்தைத் தரிலோ?’ என்ன,
‘அவன் முற்றறிவினன் அல்லனோ? அறியானோ?’ என்கிறார் என்று பிள்ளான் பணிப்பர்;
புருஷார்த்தத்தைக் கொடுப்பவன் அல்லனோ? புருஷன் விரும்பியதனை யன்றோ கொடுப்பது?

யாரேனுமாகப் புக்காரை எல்லை இல்லாத ஆனந்தத்தை யுடையவர்களாகச் செய்யும் தேசம் ஆதலின், ‘சிந்தை, மகிழ் திருவாறன் விளை’ என்கிறார்.-இதனால், பிராப்பிய பூமி’ என்று தோற்றும்படி இருக்கும் என்பதனைத் தெரிவித்தபடி.

தீர்த்தனுக்கு அற்ற பின் –அவன் தன்னுடைய இனிமையின் மிகுதியாலே எனக்குப் புறம்பு உண்டான பற்றைத் தவிர்த்துத் தனக்கே அநந்யார்ஹனாம்படி செய்து கொண்ட அன்று தொடங்கி; உஜ்ஜீவிக்கப் பண்ணின அன்று தொடங்கி; நடுவே உஜ்ஜீவியாதே கிடந்து போந்ததே பல காலம்.விசேஷ கடாக்ஷத்துக்கு முன்புள்ள காலம் -உகாரார்த்தம் அர்த்தம் அறிந்த பின்பு -உ ஜீவியாத காலம்-

———

தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குரு கூர்ச்சட கோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே
.–7-10-11-

தீர்த்தன் –இன்னார்க்குத் தீர்த்தன் என்னாமையாலே தன்னினின்றும் வேறுபட்டவர்க்கு எல்லாம் தீர்த்தன் ஆயிற்று.-தீர்த்தமாவது,-தான் பரிசுத்தமுமாய், தன்னைத் தீண்டினாரையும் பரிசுத்தராம்படி செய்யுமதாயிற்று.-இத்திருவாய் மொழி வல்லார் அயர்வறும் அமரர்களால் ஸ்லாக நீயர் என்கிறார் –மஹீஷிகளை ஸ்நேஹித்து கொண்டாடும் தசையில் அவர்களுக்கு சர்வ ஸ்வதானம் பண்ணினார்களாகச் சொல்லுவார்கள் -நித்ய ஸூ ரிகள் மஹீஷிகளை கொண்டாடி இருக்கும் போது ஆகிறது -தாங்கள் கைங்கர்யத்தில் இழிந்தால் எடுத்துக் கை நீட்டும் போது-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –