ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -94-மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும் –இருத்தும் வியந்து -8-7–

April 3, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

வைதிகர்கள் தானே அவனது திவ்ய மங்கள விக்ரஹத்தையும் செந்தாமரைக்கண்ணும் அறிவார்கள்
உள்ளத்தில் இருந்து காட்சி கொடுப்பான்-இருத்தும் வியந்து -8-7–இதன் விவரணம்–தலைவியைக் கண்ட பாங்கன் -மீண்டு -தலைவனைக் யடுத்து வியந்து கூறல் —தோழன் இடம் தலைவியின் ஏற்றம் சொல்லி தேக ஆத்ம குணங்களைக் காணச் சொல்ல-அவன் சென்று மீண்டு வியந்து -வைதிகரான உன்னைப் போல்வார் தானே இவள் அழகைக் காணலாம்-இருவர் பெருமையையும் சொல்லும் பாசுரம் இது -அன்றோ –வைதிகரே-உயர் சிறப்பு ஏவகாரம் -வைதிகர் மட்டுமே அறிய முடியும்–சீதா வைபவம் அறியாத திருவடி –-மோதிரம் கொடுத்து அனுப்பி காண வைக்க-அவளைக் கண்ட பின் துஷ்கரம் க்ருதவான் ராமன்-இவளைப் பிரிந்து இன்னும் உயிர் உடன் உள்ளானே என்று அருளிச் செய்தது போல்
கண்டனன் -மூன்று பண்புகள் சேர்ந்து-கற்பு நற்பிறப்பு இத்யாதிகள் புகழ்ந்து அருளிச் செய்தானே

அவதாரிகை – துர்மானத்தாலே இழப்பாரும் அறிவு கேட்டாலே இழப்பாருமாகா நிற்பர்கள் -என்றார் (கீழ் இரண்டு பாசுரங்களால் -உமக்கு குறை இல்லையே -என்ன –எனக்கும் ஒரு குறை உண்டாக்கி வைத்தாயே –முன்னடி தோற்றாதபடி -மயர்வற மதி நலம் அருளினாயே –பக்தி ரூபாபன்ன ஜ்ஞானத்தை-இறே அருளிற்று –அந்த பக்தி பாரவஸ்யத்தாலே சொல்ல மாட்டுகிறிலேன் என்னுதல் –
வள வேழ் உலகின் படியே ( 1-5 )அயோக்யா அனுசந்தானத்தாலே ஓன்றும் சொல்ல மாட்டுகிறிலேன் என்னுதல் –

தலைவியைக் கண்ட பாங்கன் மீண்டு தலைவனை அடுத்து வியந்து கூறல்

மாலை நல் நாவில் கொள்ளார் -என்று நாட்டாரைப் பழித்தீர் -நீர் தாம் நம்மை யுள்ளபடி அறிந்து சொன்னீரே என்று ஈஸ்வர அபிப்ராயமாக-விலக்ஷணரான வைதிகர் அன்றோ அது செய்ய வல்லார்
நான் அவர்கள் போன வழியே போமவன் அன்றோ -என்று அருளிச் செய்கிறார் –

மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும் வைதிகரே
மெய்ப்படியால் உன் திருவடிச் சூடும் தகைமையினார்
எப்படி யூராமி லைக்கக் குருட்டாமிலைக்கும் என்னும்
அப்படி யானும் சொன்னேன் அடியேன் மற்று யாது என்பனே
— – 94-தலைவியைப் பார்த்த தோழன் தலைவனிடம் வியந்து பேசுதல் –

மை படி மேனியும்–நீல நிறம் செறிந்த திருமேனியையும்
செம் தாமரை கண்ணும்–செந்தாமரை மலர் போன்ற திருக் கண்களையு முடைய
உன்–உனது
திரு அடி–திருவடித் தாமரை மலர்களை
வைதிகரே–வைதிகர்கள் தாமே
மெய் படியால்–உண்மையான நெறியால்
சூடும்–தம் தலைமேற்கொண்டு வணங்கும்படியான
தகைமையினார்–தன்மையுடையவர்கள்;
எப்படி ஊர் ஆ மிலைக்க குருடு ஆ மிலைக்கும் என்னும் அப்படி–எப்படி (வெளியில் மேய்ந்துமீண்டு) ஊர்வந்து சேர்ந்த
(கண்தெரியாத) பசுக்கள் (இடமறிந்து) கனைக்கக் குருட்டுப் பசுவும் கூடக் கனைக்கும்மென்று (உலகம்) சொல்லுமோ, அப்படியே
யானும் சொன்னேன்–யானும் உன்னைத் துதித்தேன்.
அடியேன் மற்று யாது என்பன்–அடியவனான நான் வேறு என்ன வென்று சொல்லுவேன்?

இருந்தவன் தான் வந்து இங்கு இவர் எண்ணம் எல்லாம்
திருந்த விவர் தம் திறத்தே செய்து -பொருந்தக்
கலந்து இனியனாய் இருக்கக் கண்ட சடகோபர்
கலந்த நெறி கட்டுரைத்தார் கண்டு –77–இவர் -வெள்ளக் கேட்டாலே அழியாதபடி ஸ்ரீ திருக் கடித்தானத்தே இருப்பைக் காட்டி சம்ஸ்லேஷ ரசத்தை சாத்மிப்பித்த –அநந்தரம்-ஸ்வ விஷயத்தில் அர்த்தித்வ பிரமுகரான இவர் மநோ ரதத்தை எல்லாம் தான் இவர் பக்கலிலே பண்ணிக் கொண்டு-இவரோடு பூர்ண சம்ஸ்லேஷம் பண்ணி அந்த சம்ச்லேஷ ஜனித ஹர்ஷ பிரகர்ஷத்தாலே புதுக்கணித்த திவ்ய அவயவங்களையும் நீல பர்வதம் போலே ஒளி இருக்கிற வடிவையும் இருக்கிறபடியை மண்டி அனுபவித்து ஹ்ருஷ்டராய் செல்லுகிற -இருத்தும் வியந்தில் அர்த்தத்தை இருந்தவன் தான் வந்து -இத்யாதியால் அருளிச் செய்கிறார்

மைப்படி மேனியும் –அஞ்சனத்தின் படியான திரு மேனியும் –-கண்டார்கள் கண் குளிரும்படியான-வடிவும் –பட்டர் ஒருகால் இவ்விடத்தை அருளிச் செய்யா நிற்க –-பிள்ளை விழுப்பர் அரையரும் -ஆப்பான் திருவழுந்தூர் அரையரும் -இருந்தார்களாய் –-அனுசந்தித்தார் நெஞ்சில் இருள் படியும் படியான-திரு மேனியும் -என்று அருளிச் செய்ய –நஞ்சீயர் –இன்னார் என்று அறியேன்–என்னப் பண்ணுகை யாகாதே -என்று அருளிச் செய்து அருள –(பொன்னார் சார்ங்கம் யுடைய அடிகளை இன்னார் என்று அறியேன் -சார்ங்க பாணி உள்ளத்தில் அமர்ந்து இருட்டாக்கி அருளச் செய்ததற்கு பிரமாணம்)-இவ்வார்த்தை சொன்னார் யார் -என்ன -ஜீயர் -என்று அவர்கள் சொல்ல –நூற்றுப் பதின் காதத்து அவ்வருகே பிறந்து –இவ்வளவும் வந்து –இன்று நமக்கு இத்தை உபகரிப்பதே -என்று கொண்டாடி அருளினாராம் –மைப்படி –காதல் மையலை உண்டாக்கும் படியான திரு மேனி
பொன்னார் சார்ங்கம் உடைய யடிகளை இன்னார் என்று அறியேன் –செந்தாமரை கண்ணும் –
அகவாயில் குண பிரகாசமான திருக் கண்களும் –வைதிகர் இத்யாதி –இப்போது -வைதிகர் என்கிறது –
வேதத்தில் பூர்வ பாக நிஷ்டர் –கேவலம் கிரியா கலாபம்-கொண்டு பெற இருக்குமவர்கள் –
ப்ரஹ்மத்தின்  உடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளுக்கு பிரதிபாதகமான-உபரிதன பாக நிஷ்டர் அன்றிக்கே –கர்ம பாகத்தையே பற்றி நிற்குமவர்கள் –அங்கனன்றிக்கே – நிதித்யாசிதவ்ய -என்று விதேயமாய் வரும் நூல் பிடித்த பக்தியை உடையவர்களைச் சொல்லிற்றாகவுமாம் –அவனுடைய குண அனுசந்தானத்தாலே கலங்கி அடைவு கெடும் அது அன்றிக்கே இருக்குமவர்கள் — இப்படி இருக்குமவர்களே மெய்யான பிரகாரத்தாலே உன் திருவடியை-ஆஸ்ரயிக்கும் ஸ்வபாவத்தை உடையவர் –ஆனால் பின்னை நீர் சொன்னபடி எங்கனே -என்ன –-எப்படி இத்யாதி –ஊரில்  பசுக்கள் வந்து-புகுரப் புக்கால் எப்படி சம் ப்ரமிக்கும் அந்த சம் ப்ரம ஹேது இன்னது என்று அறியாதே –
குருட்டுப்-பசுவும் சம் ப்ரமியா நிற்கும் இறே –அப்படி யானும் சொன்னேன் – அளவுடையார் சொல்லும்-விஷயம் அன்றோ – நாம் என் -என்று பாராதே -நானும் பாசுரத்தை சொன்னேன் அடியேன் மற்று யாது என்பனே –இதுக்கு மேற்பட பர தந்த்ரனுமாய் -பக்தி பரவசுமான நான்-அடைவு பட ஒன்றைச் சொல்லி தலைக்கட்ட வல்லேனோ –அன்றிக்கே அயோக்யா அனுசந்தானம் பண்ணி அகலுகிற நான் அங்குத்தைக்கு சத்ருசமாக ஒன்றைச் சொல்லித் தலைக் கட்ட வல்லேனோ –நெஞ்சு பிச்சேரும்படியான விக்ரக வை லஷண்யம்-அயோக்யா அனுசந்தானமே ஸ்வ ரசமான தாத்பர்யம்–ஊருக்கு வரும் பசு கன்றை நினைத்து கத்துமா போலே குருட்டு பசுவும் கத்துவது போலே நீ அளித்த பக்தியால் உன் ஸ்வரூபாதிகளில் விழித்து மதி மயங்கி கிடக்கிற நான் உன்னை ஸ்மரித்து ஸ்வ தந்த்ரித்து ஒன்றைச் சொல்ல வல்லேன் -என்கிறார்-

விலக்ஷணமான அதிகாரிகள் உன்னை உள்ளபடி அறிந்து பேச -நான் அவர்கள் வழி தொடர்ந்து செல்வேன் –கண் தெரிந்த பசுக்கள் ஊர் புகுந்து சேர -அந்த மகிழ்ச்சிக்கு ஈடாக கனைத்தலும் செய்ய -கண் இல்லாத குருட்டுப் பசுவும் கனைப்பது போலே வேத வைதிக புருஷர்கள் சொன்ன பாசுரங்களைக் கேட்டு நானும் சொன்னேன்-சொல்லுவதற்கு அடியான சம்பந்தம் -பக்தி பாரவஸ்யம் உள்ள நான் ஞானம் சக்தியால் பேசினேன் அல்லேன்-இந்த பாசுரம் ஒட்டியே ஸ்ரீ பட்டரும் ஸ்ரீ குண ரத்ன கோசத்தில்-இத்யுக்தி கைதவச தேன விடம்பயாமிதா நம்ப ஸத்ய வஸஸ புருஷான் புராணான்-யத்வா நமே புஜபலம் தவ பாத பத்ம லாபே-ஸ்லோகம் அருளிச் செய்தார் –

மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும்-என்று அவளுக்கு ஏற்ற வடிவு அழகு உடையாய் நீ என்றும் வைதிகரே-மெய்ப்படியால் உன் திருவடிச் சூடும் தகைமையினார்-அவளைக் கண்டு ஆறி இருந்த நீ வைதிகரால் கொண்டாடப் படுபவன் என்றும் –எப்படி யூராமி லைக்கக் குருட்டாமிலைக்கும் என்னும்-
அப்படி யானும் சொன்னேன் -என்று அவ் வடிவின் சிறப்பையும் உன் திண்மையும் உணராது நாட்டார் போலே முன்பு உன்னை பழித்தேன்-குருட்டுப் பசு கனைப்பது போலே என்றும்-அடியேன் -அந்த பிழையை ஷமிப்பதற்கு ஏற்ற நிலை யுடையேன் நான் என்றும்-மற்று யாது என்பனே –அவள் வடிவு அழகைக் கண்டும் கலக்கம் அடையாது திண்மையாய் இருக்கும் இத்தை பாராட்டிக் கூறும் விதத்தால் அன்றி எங்கனம் வர்ணிப்பேன் -என்றவாறு –கீழ்ப்பாட்டில் ‘மாலை நன்னாவிற்கொள்ளார் நினையாரவன் மைப்படியே’ என்று உலகத்தாரைப் பழித்த ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ‘நீர்தாம் நம்மை உள்ளபடியறிந்து சொல்ல வல்லீரோ?’ என்று திருவுள்ளம் பற்றினதாக ஆழ்வார் கருதி,
‘பிரானே! உலக்ஷணரான வைதிகர்களே உன்னை உள்ளபடியறிந்து செல்லவல்லார்; நான் அவர்கள் போன வழியே போவதற்கு மாத்திரமே உரியன்’ என்று இப்பாட்டால் விண்ணப்பஞ்செய்கிறார்.
-கண்டார் கண்குளிரும்படியான உனது திருமேனியையும் சிவந்த தாமரைமலர் போலேயிருக்கிற திருக்கண்களையுமுடையான உன்னுடைய திருவடித் தாமரை மலர்களை, கேட்டார் வாய்க் கேட்கைன்றியே மெய்யாகக் கண்டு தலைமேற்கொண்டு அநுபவிக்குந் தன்மையுடையவர்கள் யாரென்னில், வேதவேதாந்த ஞானத்திற் சிறந்த மஹான்களேயாவர்,-அறிவாளியான நானும் அவர்களைப் போலே ஏதோ சில சொல்லுகிறேனே. இஃது என்னென்னில்,-நன்றாகக் கண்தெரிந்த பசுக்கள் ஊர்புகுந்து சேர்ந்தவாறே நிலை கண்டு மகிழ்ந்து அந்த மகிழ்ச்சிக்குப் போக்குவீடாகக்
கனைத்தல் செய்ய கண்ணில்லாத குருட்டுப் பசுவும் அதுகேட்டுத் தான் இன்னதென்றறியாமலே ஒக்கக் கனைக்குமென்று உலகம் சொல்லுகிற விதமாகவே வேதகவைதிக புருஷர்கள் சொன்ன பாசுரத்தைக் கேட்டுவைத்து நானுஞ்சொன்னேனத்தனை;-செல்லுதற்கு அடியான் ஸம்பந்தமுடையவனும் பக்தி பரவசப்பட்டவனுமான நான் அப்படியல்லாமல் என் ஞானத்தாலே கண்டு என் சக்தியாலே சொன்னேனென்னவல்லேனோ? என்றாராயிற்று. இப்பாசுரத்தை ஒருபுடை திருவுள்ளம்பற்றி
ஸ்ரீகுணரத்நகோசத்தில் பட்டம் அருளிச்செய்த ‘இத்யுக்திகைதவசதேக விடம்பயாமி தாநம்ப! ஸத்யவசஸ: புருஷாந்புரணார்- யத்வா நமே புஜபலம்தவ பாரதபத்மவாபே’ என்ற ச்லோகம் இங்கு ஸ்மரிக்கத்தாகும்.-(புராண புருஷனே (எம்பெருமானே)! உண்மையான வாக்குடையவனே! உனது பாத கமலங்களைச் சேரும் பாக்கியம் எனக்குக் கிடைக்குமானால், எனது கைகளின் வலிமை (புஜபலம்) உனக்குச் சேவை செய்வதற்கே பயன்படும்” என்பது இதன் பொருளாகும்)

இதி உக்தி கைதவ சதேந விடம்பயாமி
தாந் அம்ப ஸத்ய வசஸ: புருஷாந் புராணாந்
யத்வா ந மே புஜ பலம் தவ பாத பத்ம
லாபே த்வம் ஏவ சரணம் விதித: க்ருதா அஸி–60-

ஹே அம்ப இத்யுக்தி கைத வசதேந –போட்கனான அடியேன் பல பல நைச்ய யுக்திகளை சொல்வதால்
தான் சத்ய வசச  புருஷான் புராணான் விடம்பயாமி—நீசனேன் நிறை ஒன்றும் இலேன் –
நானோ நாநா விதம் நரகம் புகும் பாவம் செய்தேன்–ஈவிலாத தீ வினைகள் எத்தனை செய்தனன் கொல்-என்று அநு சந்திக்கும் –ஸ்ரீ பராங்குச பரகாலாதி ஆழ்வார்களும் ஆளவந்தார் போன்ற பூர்வாச்சார்யர்களையும் அநு கரிக்கிறேன் அத்தனை ஒழிய ச ஹ்ருதயமாக நைச்ய அநு சந்தானம் பண்ணினேன் அல்லேன்
உக்தி கைதவ சதேந –கள்ளத் தனமாக நூற்றுக் கணக்கில் செய்யும் நைய அநு சந்தானங்களால்-
உண்மையில் தம் பக்கல் ஒரு கைம்முதலும் இல்லாதவன் –
அத்தலையில் திருவருளே தஞ்சம் என்றே இருப்பவன் என்கிறார் மேல் –
யத்வா தவ பாத பத்ம லாபே மே புஜ பலம் ந -நைச்ய அனுசந்தான அநு கரணம் அத்தனை போக்கி
என் திறத்தில் ஒரு சாமர்த்தியமும் இல்லையே –
புஜ பலம்-தோள் மிடுக்கு பொருளாயினும் சாமர்த்தியம் என்பதே பொருள் இங்கு –
சர்வாத்மநா அடியேன் அசமர்த்தன் என்றதாயிற்று
விதித த்வமேவ சரணம் க்ருதா அஸி –தேவரீர் நிர்ஹேதுகமாக அருள் செய்ய விதி வாய்த்தது என்கை –

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! இப்படியாக நான் பல விதமான கள்ளத்தனம் நிறைந்து,
நூற்றுக்கணக்கான தவறுகள் உடையவனாக இருக்கிறேன். இருந்தாலும் உனது அருள் பெற்றவர்களும், உண்மையை கூறுபவர்களும் ஆகிய ஆழ்வார்கள் முதலான முன்னோர்கள் கூறியதையே பின்பற்றி நிற்கிறேன்(இப்படிக் கூறுவதும் ஒரு வகையில் பொய் என்கிறார்).
எனக்கு உனது திருவடிகளைப் பிடித்துக் கொள்வதற்கு இதைவிட வேறு எந்த உபாயமும் இல்லை.
வேறு புகலிடம் இல்லாத எனக்கு உனது கருணையால் நீயே புகலிடமாக உள்ளாய்.–இங்கு இவர் கூறுவது என்ன? நான் ஆசார்யர்களின் வாக்குகளைப் பின்பற்றுவதாகக் கூறுவது ஒரு பொய்யே ஆகும். இருந்தாலும் அவர்களை நான் தொழுகிறேன் என்ற காரணத்திற்காகவாவது காப்பாற்ற வேண்டும் என்றார்.–ஆசார்யர்களைத் தொழுகிறேன் என்னும் காரணத்தை முன்னிட்டாவது தன்னைக் காக்க வேண்டும் என்று வேண்டி நிற்கும் ஸ்ரீபராசரபட்டர், திருவரங்கத்தில் உள்ளபடி சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

இப்பாட்டுக்கும் கிளவித்துறை வகையில்பொருள் சொல்ல வேண்டில், ‘தலைவியைக் கண்ட பாங்கன் மீண்டு தலைவனையடுத்து வியந்து கூறல் இது’ என்று கொள்க. அதாவது- இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து பிரிந்த தலைமகன் தான் அத்தலைமகளை மீண்டுஞ் சேரவிரும்பி அவளது அழகு முதலியவற்றைத் தன் உயிர்த் தோழனிடம் பாராட்டிக்கூற, அது கேட்டு‘ஒரு மங்கை காரணமாக நீ இங்ஙனம் மெலிதல் தகாது’ என்று அவனை இடித்துரைத்த தோழன் அவனால் மீண்டும்
அவ்வடியின் சிறப்பை மிக எடுத்துக் கூறிக் கழற்றெதிர் மறுக்கப்படட்பின் அவனைச் சமாதானப்படுத்தி,
அவன் சொன்ன குறிப்பின்படியே தான் சென்று பூஞ்சோலையில் அவளைக் கண்டு அவளது ரூபலாவண்ய ஸௌந்தர்யாதிகளை நேரில் நோக்கி வியந்து ‘இத்தன்மையுடையவளைக் கண்டு பின் காமவேதனையால் மிக வந்தாது சிறிதும், ஆகியிருத்தல் எத்துணைப் பெரியோர்க்கும் ஆகாதே;
இப்படிப்பட்டவர்களைக் கண்டு பிரிந்தும் ஒருவாறு ஆறியிருக்கிறவனை நான் முன்பு ஆராய்ச்சி யின்றி இடித்துரைத்தேனே! என்று நொந்து இகழ்ந்ததற்கு இரங்கி,விரைந்து மீண்டு வந்து தலைவனை நோக்கிக் கூறியது இது.–“மைப்படி மேனியும் செந்தாமரைக்கண்ணும்” என்ற அடைமொழிகளால், அவ்வழகியைச் சேர்தற்கு ஏற்ற வடிவழகுடையாய் நீ யென்றும், ‘வைதிகரே மெய்ப்படியாலுன் திருவடிசூடும் தகைமையினார். என்றதனால், அவ்வழகியாளைக் கண்டும் ஒருவாரு ஆறியிருந்த நீ
ஞானனுட்டானமுடைய வைதிகர்களாலுந் தலைமேற்கொண்டு நன்கு மதித்துக் கொண்டாடத் தக்கவனென்றும்,-‘எப்படி யூராமிலைக்கக் குருட்டாமிலைக்குமென்னும் அப்படி யானுஞ்சொன்னேன்’ என்றனதனால், அவ்வடிவத்தின் சிறப்பையும் உனது மனத்திண்மையையும் நோக்காது உலகத்திற் சாதாரணமான ஒரு தீயொழுக்கத்திலிழிவாரை அவர் நண்பர் கட்டுரைத்து மறுக்கிற வழக்கின்படியே நான் உன்னைமுன்பு இடித்துரைத்தது கண் தெரிகிற பசுக்கள் கனைத்தவாறே குருட்டுப் பசுவும் கனைத்தன்போல-அறியா மரபாற் செய்த தென்றும், ‘அடியேன்’ என்றதனால், அப்பிழையை நீ க்ஷமிப்பதற்கேற்ற நிலையுடையேன் யானென்றும்,‘மற்று யாதென்பனே?’ என்றதனால், அவ்வடிவழகைக் கண்டும் முழுக்கலக்கமடையாது. சிறிது துணிவுற்றிருந்த உனது
திண்மையை இங்ஙனம் பாராட்டிக் கூறும் விதத்தாலன்றி அவ்வடிவத்தின் சிறப்பை யான்
எங்ஙனம் வருணித்துக் கூறவல்லேனென்றுங் கூறினானாயிற்று..

மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும்-அஞ்ஜனத்தின் வடிவு போலே இருக்கிற திருமேனியையும்
அதுக்குப் பரபாகமாய்ச் சிவந்த தாமரை போலே இருக்கிற திருக்கண்களையும்–வைதிகரேநீல தோயத -தைத்ரியம் என்றும்-யதா கப்யாஸம் புண்டரீகம் -சாந்தோக்யம் என்றும் திரு வடிவையும் திருக் கண்ணையும் வேதத்தில் சொல்லுகிறபடி அறியுமவர்களே-மெய்ப்படியால்-கேட்டார் வாய்க் கேட்கை அன்றிக்கே-மெய்யாகக் கண்டபடியாலே-உன் திருவடிச் சூடும் தகைமையினார்-பிராப்தமுமாய்
போக்யமுமான உன்னுடைய திருவடிகளை-சிரஸா வஹித்து அனுபவிக்கும் ஸ்வ பாவத்தை யுடையவர்கள்-எப்படி யூராமி லைக்கக் குருட்டாமிலைக்கும் என்னும் ஊர் அணைந்த ஆக்கள் கன்று நிலை கண்டு கனைக்க–கண்ணில்லாத ஆவும் அது கேட்டு ஒக்கக் கனைக்கும் என்று லோகம் யாதொருபடி சொல்லும்–அப்படி யானும் சொன்னேன்-அந்த ப்ரகாரத்திலே வேத வைதிக புருஷர்கள் சொன்ன பாசுரத்தைக் கேட்டு நானும் சொன்னேன்–அடியேன்-சொல்லுகைக்கு அடியான உறவையுடைய நான்-மற்று யாது என்பனே — அல்லது என் ஞானத்தாலே கண்டு என் சக்தியாலே சொன்னேன் என்ன வல்லேனோ என்றார் ஆயிற்று

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்–குருட்டா மிலைக்கும் என்னும் அப்படி யானும் சொன்னேன்-அடியேன் மற்று யாது என்பனே உனக்கே அடிமைப்பட்ட நான் என்முன் சொல்லிச் சொல்லும் நான் நீ சொல்லுவியாத மற்று எத்தைச் சொல்லுவேன் என்கிறார் –

தாத்பர்யம்–இதில் தேவர்கள் அபிமானத்தாலும் மற்றவர்கள் அஞ்ஞானத்தால் பேச மாட்டாமல் உள்ளது போல் இவரும் பக்தி பாரவசயத்தால் பேச இருப்பதை அருளிச் செய்கிறார்
வேத யுக்தமான உன்னுடைய ஸ்வரூபாதிகளை அறிந்து சாஸ்திரம் விதித்தபடியே த்யானம் செய்த பக்தர்கள் உள்ளம் புகுந்து அஞ்சன மலையுடன் செந்தாமரைக் கண்ணுடன் பரவசம் ஆக்குவான்
ஸ்யாமம் அதி சுந்தரம் உள்ளுள்ள வாத்சல்யம் கண்ணில் வெளியில் கசிந்து பரிவாஹம் ஆகுமே
தியானித்து ப்ராப்யமான உனது திருவடிகளை சிரஸா வகிப்பார் என்னால் முடியாதே யாகிலும்
காலையில் மேய்க்கப் போன பசு கன்றை நினைத்து கனைத்து வருமா போல் அறியாத குருட்டுப்பசு கனைக்குமா போல் நானும் சொன்னேன் இப்படி அல்லது நீ அளித்த பக்தியால் மதி மயங்கி கிடைக்கும் நான் ஸ்வ தந்திரமாக ஒன்றும் சொல்ல வல்லேன் அல்லேன் என்கிறார்

8-7-இருத்தும் வியந்து என்னைத் தன் பொன்னடிக் கீழ் -ப்ரவேஸம் –

கீழ் அடைய இத் திருவாய் மொழியில் பேற்றுக்கு கிருஷி செய்தபடி –மேல் இப் பேற்றுக்கு வேலியாய் இருக்கிறது-மேம் பொருள் போல் ரத்னம்
இத் திருவாய்மொழியில் செய்கிறது என் என்னில் –

தாம் அனாதிகாலம் புத்தி பூர்வகமாக செய்து போந்த பாவங்கள் முழுதுதினையும் மறந்து-
தம்மாட்டு பத்தி பிறந்த பின்பு-
அறியாமலே செய்து போந்த பாவங்களை காணா கண்ணிட்டு-
இவர் தம்முடைய பேற்றுக்கு அவன் தானே முயற்சி செய்து-இவருக்கு பிறந்த விடாய் தீரும்படி கலந்து
இது தான் இவருக்கு உபகரித்தானாய் இருக்கை அன்றிக்கே தன் பேறாய் இருக்கிறபடியை -நினைத்து
தானே அர்த்தியாய் விரும்பினவனாய்-தன் பேறாக வந்து கலந்தவனை-

நாம் இரப்பாளராகக் கூப்பிட்ட இடம்-என் செய்தோம் ஆனோம் என்று நாணம் கொண்டு-
ஒரு சம்சாரி சேதனன் பக்கல் சர்வேஸ்வரன் செய்யும் அங்கீகாரம் இருக்கும்படியே இது -என்று வியப்பு அடைந்தவர் ஆயினார்-

அங்கனம் வியப்பு அடைந்தவராய்-பகவத் அங்கீ காரத்தால் பெற்ற பேற்றுக்கு த்ருஷ்டாந்தம் –
இராகவன் அபயத்தைக் கொடுத்த அளவிலே இராவணன் தம்பியான விபீஷணன் வணங்கினான் -என்றபடியே
ராகவேண அபயம் தத்தே ஸன்னத-(நன்று வணங்கினான்)  ராவணானுஜ விபீஷண மகா ப்ராஞ்ஞா பூமிம் சமவலோகயன் -யுத்தம் -1901-
இராவணன் பின் பிறந்த நாம் இரகு குலத்தில் உள்ளார்க்கு ஆளாக புக நின்றோமே -என்று இருந்தவன்
பெருமாள் பாடு நின்றும் அருள்பாடிட்டு வந்தவாறே-என்னையே இப்படி கைக் கொண்டு அருளுவது –
அவன் பின் பிறந்த தண்மை எங்கே போயிற்று -என்று
வேர் அற்ற மரம் போலே கூட வந்த நால்வரோடும் திருவடிகளிலே வந்து தரைப் பட்டாப் போலேயும்-

இராம குணங்கள் நடையாடாத அசோக வனத்திலே திருவடி சென்று சேர்ந்து கேட்ட போதே-
இனிமையான வார்த்தையை வைதேகிக்கு சொன்னார் -என்றபடியே-
ஏவம் பஹூவிதம் சிந்தாம் சிந்தயித்வா மகாகபி சம்சரவே மதுர வாக்கியம் வைதேஹ்யா வ்யாஜகாரா ஹா -சுந்தர -31-1-
பிராட்டி உள்ளாம்படி இராம நாம சங்கீர்தனத்தை செய்ய –இந்நிலத்தில் இது நடப்பது ஓன்று அன்று –
இது மனத்தின் விகாரத்தால் வந்த மயக்கமோ அன்று
காற்றின் செயலால் வந்த மயக்கமோ – அன்று
இது பிரிந்தாருக்கு வந்த மயக்கமோ – அன்று
அனைவருக்கும் வரும் கானல் நீர் போன்ற மயக்கமோ என்று பல படிகளால் ஐயம் கொண்டு
முன்னே நின்று வார்த்தை சொல்லா நின்றான்-
இது கேட்டு நாம் வேறுபடுகிற தன்மையும் உண்டு – ஆன பின்பு இது மெய்யாம் இத்தனை -என்று-
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள்-தெளிந்து ஹ்ருஷ்டை யானால் ஆனால் போலேயும் –
கிம் து ஸ்யாத் சித்த மோஹ அயம் பவேத் வாத்கதி து இயம் உன்மாதஜ விகாரோவா ஸ்யாத் இயம் ம்ருகத்ருஷ்ணினா -சுந்தர -34-25-

ஆழ்வார் சங்கித்து (மருள் தானீதோ மாய மயக்கு மயக்கே–8-7-3-)அங்கன் அல்ல மெய் தான் ப்ரீதராய்(தூய சுடர்ச் சோதி தனதென்னுள் வைத்தான்
தேசந்திகழும் தன் திருவருள் செய்தே-8-7-4-)
அத்வேஷம் பிறப்பித்து -த்வேஷம் இல்லாமை முதல் படி வெறுப்பு இல்லாமை
ஆவி முக்கியம் உண்டாக்கி –
தன்னால் அல்லாது செல்லாமையை பிறப்பித்து
மேன்மை பாராமல் தாழ நின்று கலந்து
தாழ நின்று பரிமாறும் ஆஸ்ரித பாரதந்த்ர்யம் -ஹ்ருஷ்டர் ஆக பேசுகிறார்

உயர்ந்த திருவாய்மொழி -இது என்பர்–இதுக்கு ஒத்த திருவாய்மொழி இல்லை என்பர்-
நமக்கு ஆசை அதிகம் நினைத்தோம்
எம்பெருமான் தமக்கு செய்யும் உபகாரம் துடிப்பை – சந்தோஷமாக அருளிச் செய்த திருவாய்மொழி-
ரத்னம் போலே இது -மேம் பொருள் போக விட்டு -த்வயார்த்த பிரதி பாதித்த படியால் -மேலே மூடி -கீழே பொட்டி போலே-

ஏழாம் திருவாய் மொழியில் –
திருக் கடித்தானத்திலே எழுந்து அருளி இருந்த சர்வேஸ்வரன் தம்முடைய திரு உள்ளத்திலே ஸமஸ்த விரோதிகளும்
கழியும்படி புகுந்து பரிபூர்ணமாக எழுந்து அருளக் கண்டு
அவன் தானே அர்த்தியாய்ப் புகுந்த படியையும்
அவனுடைய விரோதி நிவர்த்தகத்வத்தையும்
அஞ்ஞான தமோ நிரசனத்தையும்
அதுக்கு அடியான அத்யுஜ்ஜ்வல விக்ரஹ யோகத்தையும்
ஸூஸ்த்திர ஸ்த்திதியையும்
அத்தாலே பிறந்த திவ்ய அவயவ சோபையையும்
அவ் வழகினுடைய அநு பாவ்ய அதிசயத்தையும்
நிர்ஹேதுக உபகாரகத்வத்தையும்
அதிசயித உபகாரகத்தினுடைய அனுசந்தேயத்வத்தையும்
நித்ய அநு பாவ்ய பரத்வத்தையும்
அனுசந்தித்து ஏவம் பூதனான சர்வேஸ்வரன் தன திரு உள்ளத்தில் புகுந்து இருக்கிற அதிசயித
வ்யாமோஹத்திலே விஸ்மிதராய் இது பிரமமோ மாயாதி விகாரமோ என்று சங்கித்து
நம் அளவில் விப்ரலம்பியான் என்று தெளிந்து இது ஒரு உபகார அதிசயமே
என்று அத்யந்தம் ஹ்ருஷ்டராகிறார் –

இருத்தும் வியந்து என்னைத் தன் பொன்னடிக் கீழ் என்று
அருத்தித் தெனைத்தோர் பல நாள் அழைத்தேற்கு
பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து என் தன்
கருத்தை யுற வீற்றிருந்தான் கண்டு கொண்டே-8-7-1-

இத் திருவாய் மொழியிலே தமக்கு உண்டான லாபத்தை-சுருங்க அருளிச் செய்கிறார்

இதனால்-பிராப்ய பிராபகங்களைச் சொல்லுகிறது –யாங்கனம் எனின் –
தன் பொன்னடி -என்று பிராப்ய ஸ்வரூபம் சொல்லிற்று-
இருத்தும் -என்று-பிராபகனும் அவனே என்று சொல்லிற்று-
வியந்து இருத்தும் -என்று தன் பேறாக இருத்தும் –

அருத்தித்து –சேதனனான வாசிக்கு இத்தனையாவது வேண்டும் அன்றோ –அதிகாரி ஸ்வரூபம்

அழைத்தேற்கு–அழைக்கவும் கூட மாட்டாத இவனையே நாம் அழைத்தது –

அழைத்தேற்கு-இவன் காதலை அறியாதே தாழ்த்தான் ஆகவும்-நாம் காதலை உடையோமாகவும்-
நினைத்துக் கூப்பிட்டு என்ன கார்யம் செய்தோம் -என்கிறார் காண் -என்று பிள்ளான் பணிப்பர்
அத்தலையில் காதலை நினைத்தால்-விரும்புதலும் கூட அன்றோ மிகையாய் இருப்பது –

என் தன் கருத்தை யுற –
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -2-9-4-என்னும்-என் நினைவைத் தான் கைக் கொண்டான் –

வீற்றிருந்தான் –இவரைப் பெற்றதால் உண்டான வேறுபாடு வடிவிலே தோற்ற-கிருதக்ருத்தியனாய் இரா நின்றான் –-அபி நிவேசம் மிக்கு -வேறு பாடு தோன்ற பூர்ண அவலோகநம் செய்து இருந்தானே

கண்டு கொண்டே –பெரிய நோய்க்கு தப்பின புத்திரனை-தாய் தந்தையர்கள் பார்த்துக் கொண்டு இருக்குமா போலே
மாயக் கூத்தா -என்ற திருவாய்மொழி யிலே-விடாய்க்கு தப்பினவர் என்று பார்த்துக் கொண்டே இருந்தான் –

——–

இருந்தான் கண்டு கொண்டே எனதேழை நெஞ்சாளும்
திருந்தாத வோரைவரைத் தேய்ந்தற மன்னி
பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்
தருந்தானருள் தான் இனி யானறியேனே-8-7-2-

நான் இந்த்ரியங்களுக்கு கட்டுப்பட்டு இருந்த தன்மையை-தன் அழகாலே தவிர்த்து
என்னை அங்கீகரித்த உபகாரத்துக்கு ஒவ்வாது–ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உடைய ஆபத்தை நீக்கிய தன்மையும்-என்கிறார்–உம்மைத் தொகை –
இந்திரியங்கள் அழகிலே ஈடுபட்டு நலிவதால் அழகைக் கொண்டே விஷயீ கரித்து அருளினான் –

மொத்தமாக ஆழ்வாரை விழுங்கி –அசத் சமமாக திருவடிக்கு கீழ் சேர்த்துக் கொண்டானே —

போதரே என்று சொல்லிப் புந்தியில் புகுந்து தன்பால்-ஆதரம் பெருக வைத்த அழகன் -திருமாலை -16 -அன்றோ-

பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான் தருந்தானருள் தான்-பெருமான் தான் தரும் அருள் தான் –
தரும் என்கிற இது – தந்த -தருகின்ற -தரும் -என-முக்காலத்திலும் சொல்லலாய் இருக்கையாலே-தரும் அருள் -என்கிறார்
அடியாருக்கு செய்ததும் தமக்குச் செய்ததாக அன்றோ இவர் நினைத்து இருப்பது-ஆதலின் -கொடுத்த என்னாது -தரும் -என்கிறார்-

இனி யானறியேனே-எனக்கு உதவின பின்பு-நான் அதனை ஒன்றாக நினைத்து இரேன்
யான் நோவு பட்டது பல ஆண்டுகள்-அகப்பட்ட பொய்கை அளவுக்கு உட்பட்டது
முதலை ஓன்று
காலம் அநாதி
அகப்பட்டது பிறவிப் பெரும்கடல்-குட்டத்து கோள் முதலை அது
முதலை ஐந்து
இதனை மீட்டுக் கொண்ட மகா குணத்துக்கு-ஒரு குணமாய்ற்றதோ
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் பக்கலிலே செய்த அருளை இட்டு-புறம்பு உள்ளாரைப் பிரித்து வேறு படுத்தினார்-
தமக்குச் செய்த அருளை இட்டு அதனையே பிரித்து வேறுபடுத்துகிறார்-

—————

அருள் தான் இனி யான் அறியேன் அவன் என்னுள்
இருள் தானற வீற்றிருந்தான் இதுவல்லால்
பொருள் தான் எனில் மூ வுலகும் பொருள் அல்ல
மருள் தானீதோ மாய மயக்கு மயக்கே–8-7-3-

எல்லாவற்றாலும் நிறைவுற்றவனாக இருக்கின்றவனான சர்வேஸ்வரன்
தம் பக்கல் இப்படி காதலைச் செலுத்துவது கூடாதது ஓன்று என்று-ஐயம் கொண்டு
இவ் வனுபவம் மயக்கம் முதலானவைகளாலே பிறந்ததோ -என்கிறார்-

அவன் என் மனத்திலே அறிவின்மை யாகிற இருள் எல்லாம் புகும்படி-
பெறாப் பேறு பெற்றானாய்-அவ் வேறுபாடு தோற்ற இரா நின்றான்-இனி எனக்கு வேறு ஓன்று தோற்றுமோ-

இதுவல்லால் பொருள் தான் எனில் மூ வுலகும் பொருள் அல்ல –
இதற்கு திருமலை ஆண்டான் பணிக்கும் படி –
உலகத்தார் செல்வங்களில் தலையாக சொல்லுவது-மூன்று உலகத்து செல்வதை அன்றோ –
அதுவும் எனக்கு ஒரு சரக்கு அன்று -என்கிறார் -எனபது-ஆழ்வாருக்கு -என்றவாறு –

அங்கன் அன்றிக்கே
என்னுடைய மனத்திலே புகுந்து எழுந்து அருளி இருக்கிற இருப்பு ஒழிய
வீற்றிருந்து ஏழு உலகும் தனிக் கோல் செல்ல இருக்கும் இருப்பும்
தனக்கு ஒரு ஐஸ்வர்யமாக நினைத்து இருக்குமோ என்று பார்த்தால்
அதுவும் ஒரு சரக்காக நினைத்து இருக்கின்றிலன் எம்பெருமான் –என்று எம்பெருமானார் அருளிச் செய்வர் –
இதுவே -சர்வேஸ்வரனின் காதலின் பெருக்கைக் கூறும் -இடத்துக்கு பொருந்துவது –

இதில் இதுவே தனக்கு பரம புருஷார்த்தம் என்று இருந்தான் –
மூ உலகும் பொருள் அல்ல -ஆழ்வாருக்கும் எம்பெருமானுக்கும் என்று இரண்டு நிர்வாகங்கள்

நெடுநாள் இந்த சரீரத்தைக் கொடுத்து அறிவு கொடுத்தான் –பிராமாயன் சர்வ பூதாநி யந்த்ரா ரூபாயா மாயையா —
இப்போது தன்னுடைய காதலாலே என்னை மயங்கச் செய்தான் –

———

மாய மயக்கு மயக்கான் என்னை வஞ்சித்து
ஆயன் அமரரர்க்கு அரி ஏறு எனதம்மான்
தூய சுடர்ச் சோதி தனதென்னுள் வைத்தான்
தேசந்திகழும் தன் திருவருள் செய்தே-8-7-4-

அவன் என்னை மயங்கச் செய்தான் அல்லன்-என் உள்ளே கலந்து அருளினானே-இதிலே ஓர் ஐயம் இல்லை -என்கிறார்-
வைகலும் வெண்ணெய் கை கலந்து -உண்டு -என் மெய்யுள் கலந்தானே

ஆயன் அமரரர்க்கு அரி ஏறு எனதம்மான் – நித்ய ஸூரிகளுக்கு அவ்வருகான ஏற்றத்தை உடையனாய் வைத்து-கிருஷ்ணனாய் வந்து அவதரித்து
என்னுடைய அடிமையை நிர்வகித்த-பரம ஆப்தன் -என்னை வஞ்சித்து மாய மயக்கு மயக்கான் –திரு மோகூர் ஆப்தன் -வழித் துணை பெருமாள் –

புறம்பு ஒருவருக்கு இன்றிக்கே-தனக்கே உரியதான அருள் ஆதலின்-தன் திரு வருள் -என்கிறார் –

தான் வேறு ஒரு சாதனத்தைக் கொண்டு சாதித்துக் கொள்ளப் படாதவன் –என்னும்படியைக் கொண்டு என் உள்ளே பிரகாசிப்பித்தான்
ஆதலின் –என்னுள் வைத்தான் -என்கிறார்

குற்றங்கட்கு எல்லாம் எதிர்தட்டாய்-வேறுபட்ட சிறப்பினை உடைய ஒளி உருவமாய்-சுத்த சத்வ மயமாய்-தனக்கே உரியதான வடிவை என்னுள் வைத்தான்-

திகழும் தன் திருவருள் செய்து உலகத்தார்
புகழும் புகழ் தானது காட்டித் தந்து என்னுள்
திகழும் மணிக் குன்றம் ஒன்றே ஒத்து நின்றான்
புகழும் புகழ் மற்று எனக்கும் ஓர் பொருளே–8-7-5-

ஒருவர் பெரும் பேறே என்று உலகம் அடங்க கொண்டாடும்படி-என் உள்ளே வந்து நின்று அருளினான்
அதனால் வந்த புகழை அல்லது-இவனுடைய மற்று உள்ள புகழையும் ஒன்றாக மதியேன் -என்கிறார்-

திகழும் தன் திருவருள் செய்து – பிறர் உடைய அளவுக்கு உட்பட்ட அருள் போலே அன்றிக்கே
இரண்டு தலைக்கும் நிறமாம்படியான-தன் திருவருளை என் பக்கலிலே செய்து –
நிர்ஹேதுகம் ஆனதால் அபேஷா நிரபேஷம் அவனுக்கு -அத்யந்த பரதந்த்ரம் சித்திக்கும் இவருக்கு –

———

பொருள் மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் சீர்க்கத்
தருமேல் பின்னை யார்க்கவன் தன்னைக் கொடுக்கும்
கரு மாணிக்கக் குன்றத்துத் தாமரை போல்
திரு மார்வு கால் கண் கை செவ்வாய் யுந்தியானே–8-7-6-

எனக்கு தன்னை ஒழிய வேறு ஒன்றனைத் தந்து விட்டால்-புறம்பு தன்னை வேறு ஒருவர் கொள்வார் இல்லாமை எனக்குத் தந்தானோ-
என் பக்கலிலே காதலால் தந்து அருளினான் -என்கிறார்

கரு மாணிக்கக் குன்றத்துத் தாமரை போல் திரு மார்வு கால் கண் கை செவ்வாய் யுந்தியானே-கரு மாணிக்க குன்றம் -திரு மேனிக்கு திருஷ்டாந்தம்
தாமரை போல் -அவயவ சோபைக்கு திருஷ்டாந்தம்
திரு மார்வு -புருஷகாரமான பிராட்டி எழுந்து அருளி இருக்க்கிற திரு மார்வு
கால் -அச் சேர்த்திக்கு தோற்று விழும் திருவடிகள்
கண் -திருவடிகளில் விழுந்தாரை குளிர நோக்கும் கண்
கை -அவர்களை எடுத்து அணைக்கும் கை
செவ்வாய் -இன்சொற்களைச் சொல்லும் திரு அதரம்
உந்தி -அனுபவிக்கத் தக்க திரு உந்தி –உந்தி மேலதன்றோ –அமலனாதி -3-என்னக் கடவது அன்றோ

——–

செவ்வாய் யுந்தி வெண் பல் சுடர்க் குழை தம்மோடு
எவ்வாய்ச் சுடரும் தம்மில் முன் வளாய்க் கொள்ள
செவ்வாய் முறுவலோடு எனதுள்ளத்திருந்த
அவ்வாயன்றி யானறியேன் மற்றருளே–8-7-7-

அவன் தம்மோடு கலந்த கலவியினாலே உவகையனாய்-அது தன் பேறாக முறுவல் செய்த திருப் பவளத்தை-அனுபவித்துப் ப்ரீதர் ஆகிறார் –

தம்மில் முன் வளாய்க் கொள்ள –
ஒன்றுக்கு ஓன்று நான் நான் என்று-தம்மில் தாம் முற்பட்டு ஆழ்வாரை வளைத்துக் கொள்ள –
அதாவது-நான் நான் என்பதற்காக முற்பட்டு ஆழ்வாரை வளைத்துக் கொள்ள -என்னுதல்-
அன்றிக்கே-முற்பட்டு என்னை வளைத்து கொள்ள -என்னுதல் –

செவ்வாய் முறுவலோடு எனதுள்ளத்திருந்த –
அவாகீ -அநாதர -என்று இருக்கக் கூடிய பரம் பொருள்-இவரைப் பெற்று இது தன் பேறு என்று தோற்ற-முறுவல் செய்தபடி-
பூ அலரும் போது எங்கும் ஒக்க செவ்வி பிறக்குமாறு போலே-திவ்ய அவயவங்கள் தோறும் ஒரு வேறுபாடு பிறக்கும்படி யாயிற்று புன் முறுவல் பூத்தது –

———-

அறியேன் மற்றருள் என்னை யாளும் பிரானார்
வெறிதே யருள் செய்வர் செய்வார்கட்குகந்து
சிறியேனுடைச் சிந்தையுள் மூவுலகும் தன்
நெறியா வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரே–8-7-8–

அவன் தம்மோடு வந்து கலக்கைக்கு அடி-அவனுடைய திருவருள் காரணம்-என்கிறார்

சாதனமாக ஒன்று-ம் எதிர் பார்க்க மாட்டார்அதிகாரி ஸ்வரூபம் வேண்டுமே -பல அனுபவ யோக்யதை -உண்பதற்கு பசி போலே-போஜனத்துக்கு ஷூத்து போலே –நிர்ஹேதுகமாக பிரதம அனுக்ரகம் -ருசி வளர்த்துக் கொள்வது நமது கர்தவ்யம்-ஹேது அவன் உகப்பு -ஆசை அதிகாரி யோக்யதை –
அத்தனை அல்லது-பேற்றுக்கு சாதனமாக சொல்ல ஒண்ணாதே அன்றோ –

பிரியதம ஏவ ஹி வரணீயோ பவதி -ஸ்ரீ பாஷ்யம்-ஜிஜ்ஜாஸூ அதிகரணத்தில் –
அவனே எல்லாமாக நினைத்து வேறு ஒன்றையும் கெடுக்காத அநந்ய பிரயோஜனர் பிரிய தமர் -அவர்களை வரிப்பான் –

அவன் இதுவரை மூவுலகுக்கும் அவ்வருகாகா நினைத்திரா நின்றான்-
இவர் தம்மை மூவுலகுக்கும் இவ்வருகாக நினைத்திரா நின்றார்-

————

வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரும் யவரும்
வயிற்றில் கொண்டு நின்ற ஒரு  மூவுலகும் தம்
வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மாலை
வயிற்றில் கொண்டு மன்ன வைத்தேன் மதியாலே-–8-7-9-

வயிற்றில்
1-தாய் போல் நோக்கி
2-ஸ்வரூப ஏக தேசத்தில்
3-ஸங்கல்ப ஏக தேசத்தில்
4-அகவாயில் -உள்ளத்தில் கொண்டு

சர்வ பிரகார ரக்ஷணத்வம் ஸூ ஸ்திரமாக எனது நெஞ்சிலே -மாறாமல் -வைத்தேன்

வயிற்றில் கொண்டு மன்ன வைத்தேன் மதியாலே-இசைவித்து என்ற அவன் அருளினை மதியால் -அனுமதியாலே புத்தியால்
விலக்காத படி உள்ளத்திலே மன்னும் படிக்கு வைத்தேன் –
அவன் அங்கு இங்கு சலிக்காத படி பேராத படி வைத்தேன்

இப்படி அவன் அங்கீகரித் ததற்கு நீர் செய்தது என் என்னில் –அனுமதி மாத்ரம் செய்தேன் இத்தனை -என்கிறார் —
நிர்ஹேதுகமான விஷயீ காரத்துக்கு -அனுமதி மாத்திரமே வேண்டுவது –
அத்வேஷம் ஒன்றுமே வேண்டுவது இதுவே தானே பத்துடை அடியவர்க்கு எளியவன் பார்த்தோம் –

தம் வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மாலை–தம்முடைய நினைவில் ஆயிரத்தில் ஒரு கூற்றாலே நடத்திக் கொண்டு என்னுதல் –
அன்றிக்கே –
வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரையும் யாவரையும்-தம் வயிற்றில் கொண்டு- நின்ற ஒரு மூவுலகையும் தம் வயிற்றில் கொண்டு –என்று பிரித்துச் சொல்லுதல் –நின்ற வண்ணம் நின்ற மாலை-இவற்றை அடைய தன் வயிற்றில் கொண்ட இடத்திலும் ஒரு விகாரம் இன்றிக்கே நின்ற சர்வேஸ்வரனை –

மன்ன வைத்தேன் மதியாலே –இதற்கு –இவன் படியை அறிந்து கொண்டேன் -என்கிறார் என்று நடாதூர் அம்மாள் பணிப்பர்
நிர்ஹேதுகமாக அருள் செய்வார் -நின்ற வண்ணம் -விகாரம் இல்லாமல் -பிரகாரங்கள் உடன் தான் சேர்ந்து இருந்தான்
சர்வ பிரகார ரக்ஷகன் -என்கிற ஞானத்தால்-இருதயத்தில் வைத்தேன் -என்றபடி –
அன்றிக்கே
மதி -அனுமதி -என்று ஆக்கி–அனுமதி மாத்ரத்திலே -என்பர் பட்டர் –என்றது
அவன் புகுகிற இடத்தில் விலக்கு அற்றிலன் -என்றபடி-அனுமதி அதிகாரி ஸ்வரூபம் –

மதியால் இசைந்தோம் என்னும் அனுமதி இச்சைகள் இருத்துவம் என்னாத என்னை இசைவித்த என் இசைவினது -ஆசார்ய ஹிருதயம் ஸ்ரீ ஸூக்தி-

——-

வைத்தேன் மதியால் எனது உள்ளத்தக்கத்தே
எய்த்தே ஒழிவேன் அல்லேன் என்றும் எப்போதும்
மெய்த்தேய் திரை மோது தண் பாற் கடலுளால்
பைத்தேய் சுடர்ப் பாம்பணை நம் பரனையே –8-7-10-

சர்வ ஸ்மாத் பரன் ஷீராப்தி நாதன் -ஸுஹார்த்தம் –வ்யூஹ ஸுஹார்த்தம் பிரதானம் பாஞ்ச ராத்ரம் -ஸ்ரீ ரெங்கம்
என் நெஞ்சுக்குள் வைத்து இடை விடாமல் அனுபவிப்பேன் –வைத்ததுக்கு பலன்-இந்தப்பாசுரத்தில்
வைத்தேன் மதியால் எனது உள்ளத்தக்கத்தே -மீண்டும் சொல்லி அனுமதி முக்கியம் என்பதை காட்டி –
என் உணர்வில் உள்ளே நிறுத்தினேன் -அதுவும் அவனது இன்னருள் -ராஷா பேஷாம் ப்ரதீக்ஷிதே
எதிர் பார்க்கிறான் -உபாயம் இல்லை –அதிகாரி ஸ்வரூபம்-புருஷ சாபேஷமுமாய் புருஷகார சாபேஷமுமாய் தானே பேறு கிட்டும் 

எம்பெருமான் சபரிகரமாக என்னுள் புகுந்தான் -பாற் கடல் -பாம்பணை –
அவனை நான் இனி ஒரு நாளும் விஸ்லேஷித்து துக்கப் படேன் -மாயக் கூத்தாவில் பெரிய சிரமம் பட்டார் –

பேற்றுக்கு அடி கிருபை -இழவுக்கு அடி கர்மம்–கர்மமும் கிருபையும் அனுபவித்துத் தானே தீர வேண்டும்

பைத்ததேய் சுடர்ப் பாம்பணை நம் பரனையே–நம் பராத் பரனையே மதியால் வைத்தேன்
சுடர் பாம்பணை பள்ளியாக கொண்ட மேன்மை
புண்டரீகாக்ஷத்வம் —சிக்கென செங்கண் மாலே -திருவடியால் அளந்தோமே என்று சேர்த்துக் கொண்டான் –
தாவி –கொண்டோம் – சேவியேன் உன்னை அல்லால் -விட மாட்டேன் என்றதும் பிறந்த செங்கண் மால் -இப்பொழுது மலர்ந்த –
ஸ்ரீ யபதித்தவம் -இத்யாதி எப்பொழுதும் பரத்வம் -இங்கு திரு அநந்த ஆழ்வான் மேலே சயனித்ததால் வந்த பரத்வம்
இத்தை நமக்கு பிரகாசிப்பித்தவன் -பரன் –

வ்யூஹ மூர்த்தி வடிவைக் காட்டி -கண் முன்னே அருளினான் –
அரவித்தமளி -படுக்கை உடன் -அழகிய பாற் கடல் -உடன்அரவிந்த பாவையும் தானும் புகுந்து –

——–

சுடர்ப் பாம்பணை நம் பரனைத் திருமாலை
அடி சேர் வகை வண் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன வாயிரத்து இப் பத்தும் சன்மம்
விட தேய்ந்தற நோக்கும் தன் கண்கள் சிவந்தே–8-7-11-

ஆழ்வார் பாட அவன் பார்த்துக் கொண்டே இருக்க -அவனை பார்த்து ஆழ்வார் பாட -ராகம் -சிவந்து -இந்த காதலே உஜ்ஜீவனம்

நிகமத்தில்-இப் பத்தானது தன்னைக் கற்றவர்கள் உடைய-பிறவிக்கு த்ருஷ்ட்டி விஷம் –
சன்மம் தேய்ந்து அற-கண்கள் சிவந்து நோக்கும் -விடம் நோக்கும் விடம் -த்ருஷ்ட்டி விஷம் —கண்ணில் விடமுடைய தொரு பாம்பு போலே-
திட்டியின்(த்ருஷ்டியின் )விடமன்ன கற்பின் செல்வியை-விட்டிலையோ இது விதியின் வண்ணமே -கம்பர் கும்பகர்ண வதைப் படலம் -60

சன்மம் விட தேய்ந்தற நோக்கும் தன் கண்கள் சிவந்தே–கண் கொத்திப் பாம்பு போலே கண்களில் விஷம் வைத்துக் கொண்டு இந்த திருவாய் மொழி முடிக்கும் –

அடி சேர் வகை வண் குருகூர்ச் சடகோபன் முடிப்பான் சொன்ன வாயிரத்து -அடி சேரும் வகையை முடிப்பதற்காக-சேர்வதில் கால விளம்பம் இல்லாமல்  – ன்றும் சன்மம் முடிப்பான் சொன்ன ஆயிரத்து இப்பத்தும் என்றும் கொண்டு அநிஷ்ட நிவ்ருத்தி
சுடர்ப் பாம்பணை நம் பரனைத் திருமாலை-பரியங்க வித்யை -அநந்த போகிநே ஸ்ரீ சயா ஆஸீனம் -முக்த ப்ராப்ய போகம் இஷ்ட பிராப்தியும் உண்டே

ஞான ஆநந்தங்கள் அன்று இவருக்கு நிரூபகம்-அடிமையே ஆயிற்று-நிரூபகம்
அடிச்சியாம் அடியோம் -சேஷத்வமே ஸ்வரூப நிரூபகம் ஆழ்வாருக்கு -எல்லா அவஸ்தைகளிலும் –என்பரே-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -93-காலை வெய்யோற்கு முன் ஒட்டுக் கொடுத்த-ஒரு நாயகமாய் -4–1-

April 2, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

இருட்டு படுத்தும் பாடு முதலில் சொல்லி -மாறி மாறி அஸ்திரமாக இருப்பதைக் கண்டும் –-ஜலத்துறை -ஆச்சார்ய படித்துறை -பகவத் பக்தியில் ஆழ்ந்து -ப்ரஹ்ம அனுபவமே நீராடல் –போது செய்து -ஈடுபடுத்தி –பொழுது மலர் என்றும் வேறே இடங்களில்-மாலை – நாவில் கொள்ளாமல் நினையாமல் -இழந்து போகிறார்களே ஸம்ஸாரிகள்-கீழ் தேவர்கள் இழவுக்கு-ஒரு நாயகமாய் -4–1-இதன் விவரணம்-ஐஸ்வர்யம் கைவல்யம் த்யாஜ்யம் -விரோதி ஸ்வரூபம்–

தேவர்கள் தானோ ஓர் அபிமான விசேஷத்தாலே (பகவத் விஷயத்தை )தவிருகிறார்கள் –-அல்லாதாரோ தான் பகவத் பஜனம் பண்ணுகிறார்கள் –அவர் இவர் என்று விசேஷிககிறது என் –
எல்லார்க்கும்-புறம்பே அன்றோ போது போக்கு என்கிறார் –இருள் கண்டு அஞ்சுகிற தலைவி தோழி செவிலியரை வெறுத்தல் —

இப்படி ப்ரயோஜனாந்தர பரராய்ப் போருகிற அளவன்றியே ஸம்ஸாரிகள்-அஹோ ராத்ர விபாகத்தாலே காலம் கழிக்கிற படி கண்டு வைத்து பகவத் விஷயத்தில் அந்வயியாதே இருப்பதே -என்று அவர்கள் இழவுக்கு வெறுத்து அருளிச் செய்கிறார் –

காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்
மாலை வெய்யோன் பட வையகம் பரவுவர் அன்ன கண்டும்
காலை நன் ஞானத் துறை படிந்தாடிக் கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் அவன் மைப்படியே –
– -93 –இருளைக் கண்ட தலைவி -தோழி செவிலி தாயாரை வெறுத்தல் —

காலை–உதய காலத்தில்
வெய்யோற்கு முன்–ஸூர்யனாகிய சக்கரவர்த்திக்கு எதிரில்
ஒட்டுக் கொடுத்த–நிற்க மாட்டாமல் புறங்கொடுத்தோடுதலைச் செய்த
கங்குல குறும்பர்–இருளாகிய சிற்றரசர்கள்
மாலை–ஸாயங்காலத்திலே
வெய்யோன்–அந்த ஸூர்யனாகிய பேரரசன்
பட–அழிய-அஸ்தமிக்க
வையகம் பரவுவர்–(தாங்கள்) உலக முழுவம் பரவுவார்கள்;
அன்ன கண்டும்–அப்படிப்பட்ட தன்மையைப் பார்த்திருந்தும்.
காலை–காலத்திற்கு ஏற்றபடி
நல் ஞானம் துறை படிந்து ஆடி–நல்ல ஞானமாகிய துறையிலே இறங்கி மூழ்கி
(ஆச்சார்யர் கீழ் படிந்து -பகவத் பக்தியாகிய வெள்ளத்தில் ஆழ்ந்து ஈடுபட்டு)
கண் போது செய்து–பக்தி பாரவஸ்யத்தாலே கண்களை மூடிக் கொண்டு–(உலக விஷயத்தில் மொட்டு போல் பகவத் விஷயத்தில் மலர்ந்து)
மாலை–எம்பெருமானை
நல் நாவில் கொள்ளார்–(தங்களுடைய) நல்ல நாவினால் பெயர் கூறித் துதியார்;
அவன் மைபடி–அவனது கரிய திருமேனியை
நினையார்–நினைப்பதற்கு செய்யார்.-

ஒரு நாயகமாய் யுலகுக்கு வானோர்
இரு நாட்டில் ஏறி யுய்க்கும் இன்பம் -திறமாகா
மன்னுயிர்ப் போகம் தீது மாலடிமையே யினிதாம்
பன்னியிவை மாறன் உரைப்பால் —-31-சீர் பரவப் பெற்ற நான் -என்று கீழ் பகவத் அனுபவத்தாலே ஹ்ருஷ்டரான ஆழ்வார்-அந்த ஹர்ஷத்தாலே இவ் விஷயத்தை ஒழிய ஐஸ்வர்யாதிகளிலே மண்டி இருக்கிறவர்களைக் குறித்து-மீளவும் இவற்றின் யுடைய அல்ப அஸ்திரத்வாதிகளாகிற தோஷங்களை அறியாதே இவற்றிலே மண்டி இருக்கிறார்கள் என்று இவற்றின் தோஷங்களைப் பரக்க பேசா நின்று கொண்டு பரம புருஷார்த்த பூதனான ஸ்ரீயபதியின் திருவடிகளை ஆஸ்ரயுங்கோள் என்று பிறருக்கு உபதேசித்துச் செல்லுகிற ஒரு நாயகத்தின் அர்த்தத்தை சங்க்ரஹித்து ஒரு நாயகமாய் -இத்யாதியால் அருளிச் செய்கிறார் 

காலை இத்யாதி –உத்பவ அபிபவ ரூபத்தாலே ஆதித்யன் இருளை மேலிடுவது –ராத்திரி ஆதித்யனை- மேலிடுவதாகிற இத்தைக் கண்டு வைத்தும் –நந்தத் யுதித ஆதித்யே-விடிந்த வாறே அபிமத விஷயத்தை சாதிக்கைக்கு த்ரவ்யார்ஜனம்-பண்ணுக்கைக்கு ஈடான காலம் வந்தது என்று உகவா நிற்பர்கள் –நந்தந்த் யஸ்தமிதே ரவவ் –அஸ்தமித்தவாறே இவற்றைக் கொண்டு பிறர் அறியாதவாறே
அவ் விஷயங்களை புஜிக்க-காலம் வந்தது என்று உகவா நிற்பர்கள் –காலை இத்யாதி –பிரபாத சமயத்திலே -வெய்யோன் உண்டு -ஆதித்யன் –அவனுக்கு முன்னோட்டுக் கொடுப்பர்கள் ஆயிற்று-கங்குல்கள் ஆகிற குறும்பர் –அவன் கிரணங்கள் பட- கை விட்டு ஓடா நிற்பர்கள் இறே –மாலையில் பெரிய பிரதாபத்தை உடைய ஆதித்யனை அழித்து-அவன் ஆண்ட பரப்பை அடையக் கைக் கொள்வர்கள் –நித்ரையாலே பூமியாகப் பரவசமாம்படி-பண்ணிக் கொண்டு வரும் இறே–ஆத்மந இத்யாதி-பகல் என்றும் இரவு என்றும் கூறிட்டுக் கொண்டு இங்கனே தந்தமுடைய ஆயுசை ஈர்க்கிறதோர் ஆயுதம்-சாலில் வார்த்த நீர் போல் நம் ஆயுஸ்ஸூ போகிறபடி படி என்று புத்தி பண்ணுகிறவர்கள் அல்லர்-சாவக்கடவராய் இருக்கிறவர்கள்-காலை -ப்ரபாத சமயத்திலே வெய்யோன் உண்டு ஆதித்யன் அவனுக்கு முன்னோட்டுக் கொடுப்பர்கள் ஆயிற்று கங்குல் ஆகிற குறும்பர்
அவன் கிரணங்களைப் பரக்க விட ஓடா நிற்பர்கள் இறே-மாலையிலே பெரிய பிரதாபத்தை யுடைய ஆதித்யனை அழித்து அவன் ஆண்ட பரப்பை அடையக் கைக்கொள்வர்கள்-நித்ரையாலே பூமியாகப் பரவசமாம் படி பண்ணிக்கொடு வரும் இறேஅன்ன கண்டும் –அப் படியைக் கண்டு வைத்தும் –பகவத் விஷயம் பிரத்யஷத்துக்கு அவிஷயம் ஆகையாலே -தான் அறியாது  ஒழிகிறார்கள்-இதனுடைய அஸ்தர்யத்தை பிரத்யஷியா நிற்கச் செய்தேயும்-நெஞ்சில் படாது ஒழிவதே –காலை –சத்வோத்தரமான காலையிலே –நல் ஞானம் –ஞானம் ஆகில்-பகவத் விஷயத்தை பற்றி அன்றி இராது இறே –ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -(முதல் திருவந்தாதி )என்னக் கடவது இறே –தத் ஜ்ஞானம் அஞ்ஞானம் அதோன்யதுக்தம் (பராசர மகரிஷி )- என்றும் –வித்யான் யாசில் பகை புணம் – புறம்பே ஒன்றை அறிந்ததோடு துன்னம் பெய்ய அறிந்ததோடு வாசி இல்லை இறே –துறை படிந்தாடி –ஜ்ஞானம் ஆகிற இத் தீர்த்தத்திலே புக்கு அவஹாகித்து –கண் போது செய்து –போது செய்து என்று மொட்டிக்கைக்கும் பேர் –அலருகைக்கும் பேர் புறம்புத்தை விஷயங்களில் கண் செம்பளித்து என்னுதல் –பகவத் விஷயத்தில் விழித்து என்னுதல் –மாலை –இவன் அனுசந்திக்க என்று உபக்ரமிக்கும் அத்தனை இறே வேண்டுவது –மேல் உள்ளது எல்லாம்-தானே செய்து -கொடு வந்து மேல் விழும்படியான வ்யாமோஹத்தை உடையவனை –நல் நாவில் கொள்ளார்-நல் நா- என்கிறது புறம்புத்தை ஜல்பங்களைத் தவிர்ந்து -பகவத் விஷயத்தை-பேசுவோம் என்றால் – அதுக்கு பாங்கான நாவைப் படைத்து வைத்து -இவர்கள் புறம்பே போகிறது என்-என்கிறார் –சா ஜிஹ்வா -ஹரி -(பேச்சும் நினைவு கைகூப்பும் செய்ய வேண்டுமே )-நினையார் அவன் மைப்படியே –வ்யாமோஹம் பண்ணாதே -த்வேஷத்தைப் பண்ணினாலும் விட ஒண்ணாத வடிவு அழகை நினைப்பார் இல்லை –தருணவ்–த்வேஷத்துக்கு விஷயமாய் மூக்கு அறுப்புண்டவள் இறே – இவ்வார்த்தை சொன்னாள் –தான் பரிபூதையாம்படியை போய் சொல்லுகிற-இடத்திலே இது எதுக்கு உறுப்பாக சொன்னாள் தான் –

உலகில் அநேகர் -வைகலும் வைகல் வரக் கண்டும் அஃது உணரார் -நாலடியார் —-ஆழ்வார்கள் தான் பொழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுவார்கள்-இங்கனம் வாள்களாகி நாள்கள் செல்லுகின்றனவே -பொழுதே பல பகலும் போகின்றனவே-ஊமனார் கண்ட கனவிலும் பழுதா ஒழிகின்றனவே நாள்கள் -என்று கவலைப் படுவார் யாரும் இலை -ஒரு க்ஷணம் பொழுதாகிலும் பகவத் விஷயத்தில் செலுத்துவார் இல்லையே பிறர் இழவுக்கு பரிகிறார் –காலை –சத்வ குண பிரதானம்
நன் ஞானத் துறை படிந்தாடிக் -சிறந்த ஆத்ம ஞானத்துக்கு இறங்கு துறையான ஆச்சார்யரை வணங்கி -அவர் உபதேசங்களில் ஆழ்ந்து-பெருமானை இலக்காகக் கொண்ட ஞானமே நல் ஞானம் –-ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு-கண் போது செய்து-விஷயாந்தரங்களிலே அறிவு செல்லாத படி உள்ளடக்கி-எம்பெருமான் பக்கலிலே-ஞானம் என்னும் உட் கண் மலர்ந்து –போது செய்து என்று மொட்டிகைக்கும் பேர் -அலருகைக்கும் பேர் -புறம்புள்ள விஷயங்களில் கண் செம்பளித்து என்னுதல்-பகவத் விஷயத்திலே விழித்து என்னுதல் –மாலை நல் நாவில் கொள்ளார் -தம் பக்கல் வ்யாமோஹம் கொண்டவனை நாவால் ஸ்துதியாதார் –-நல் நா -எம்பெருமானை ஸ்துதிப்பதற்கு என்றே அமைந்த நா –நாராயணா என்னா நா என்ன நாவே –நினையார் வன்மைப்படியே-அவன் மைப்படி நினையார் -அவனது கரிய திருமேனியை தியானிப்பதும் செய்யார் -லௌகிகரைப் பழித்த படி
பெயரினையே புந்த்தியால் சிந்தியாது ஓதி யுரு என்னும் அந்தியால் ஆம் பலம் எங்கனம் என்பதால்
மாலை நல் நாவில் கொள்ளார் என்று மாத்திரம் சொல்லாமல் மேலே நினையார் வன்மைப்படியே – என்கிறார்
-முந்தின வாக்யத்தால் இருளின் கொடுமையையும் -மேலே அது அவன் திருமேனிக்கு ஸ்மகரமாய் வருத்துகிற படியை தோழிமார் சிந்தியாமையும் -அந்த நோய் தணிக்கும் உபாயத்தையும் செய்யாமையும் பழித்தவாறு –உலகத்தில் அனேகர் “வைகலும் வகைல் வரக்கண்டு மஃதுணரார்” (நாலடியார்- அறன்வலியுறுத்தல் 9) என்றபடி-காலைப்பொழுதும் மாலைப்பொழுதும் மாறிமாறி வந்துகொண்டு காலங்கழிந்துகொண்டே செல்லுகிறபடியை ப்ரத்யக்ஷமாகவே பார்த்துக் கொண்டிருக்கச் செய்தேயும் தங்களுடைய இளமைப் பிராயம் விரைவாகக் கழிந்து போவதில் கருத்தூன்றுதலின்றி-எம்பெருமான் பக்கல் ஈடுபாடு கொள்ளாமல் வீணேயிழந்து பழுதே பலபகலும் போக்குகிறார்களேயென்று ஆழ்வார் வெறுத்து அருளிச் செய்கிறார்.-உலகர்கள் தினப்படி ஸூர்யன் உதிக்கும்போது வேண்டியபடி பொருள்களைத் திரட்டலராமென்று களிக்கிறார்கள்;-பிள்ளை ஸூர்யன் அஸ்தமிக்கும்போது வேண்டிபடி விஷய போகங்களைச் செய்யலாமென்று குதூஹலிக்கிறார்கள்;
இப்படி ஸூர்யனுடைய உயத்தேடு அஸ்தமனத்தோடு வரசிய ஸம்ஸாரிகள் களிப்பதே கருமமாயிருக்கிறார்களே யன்றி,‘இங்ஙனம் வாள்களாகி நாள்கள் செல்லுகினற்னவே, பழுதே பலபலகும் போகின்றனவே!-ஊமனார் கண்ட கனவிலும் பழுதா யொழிகின்றனவே நாள்கள்’ என்று கவலைப்படுவாருமில்லையே!-ஒரு கணப்பொழுதையும் பகவதநுஸந்தாகத்திற் செலுத்துவாரில்லையே! என்று ஸம்ஸாரிகளுக்காக ஆழ்வார் தாம் கவலைப்படுகிறார்.-இவ்வாழ்வார் உலகத்தாரைச் சீர்திருத்தி உஜ்ஜிவிக்கச் செய்யும் பொருட்டுத் திருவவதரித்தவராதலாலும் மிக்க ஜீவ காருண்ய முடையவராதலாலும் பிறரிழவுக்குப் பரிவு கொள்ளக்கடவராவர். முதலிரண்டடிகளால் பகலும் இரவுமாக மாறி மாறி வந்து ஆயுள்நாளைக் கழியச் செய்தலை எடுத்துக்காட்டியபடி, இது செல்வ நிலையாமைக்கும் ஒரு திருஷ்டாந்தமாம்.–பின்னடிகளிரண்டும் நாட்டாரைப் பழிப்பன; காலை- ஸத்வகுண ப்ரதாநமான விடியற்காலத்தில் நல்ஞானத் துறைபடிந்து--சிறந்த ஆத்மஜ்ஞாநத்துக்கு இறங்கு துறையாகிய ஆசார்யனை வணங்கி, ஆடி- அவ்வாசார்யோபவதேசத்திலே ஆழ்ந்து
கண்போதுசெய்து- விஷயாந்தரங்களில் அறிவு செல்லாதபடி அதனை உள்ளடக்கி, மாலை நல்நாவில் கொள்ளார்--தங்கள் பக்கதல் அன்புடைய ஸர்வேச்வரனை நல்ல நாவினால் துதியார்;
அவன் மைப்படி நினையார்- அவனுடைய கரிய திருமேனியை தியானிப்பதுஞ் செய்யார் என்று லௌகிகரைப்பழித்தபடி.-நல்ஞானம்- எம்பெருமானை இலக்காகக்கொண்ட ஞானமே நல்ல ஞானம்; மற்றை விஷயமான ஞானமெல்லாம் அஜ்ஞானமும் விபரீதஜ்ஞானமுமா மென்க.
ஒண் தாமரையான் கேள்வனொருவனையே நோக்குமுணர்வு” (முதல் திருவந்தாதி) என்ற பொய்கையார் பாசுரமறிக.–ஸ்நாநத்துக்கு உரிய காலம் வைகறையாதலால் ‘துறைபடிந்தாடி’ என்பதற்கு ஏற்ப ‘காலை’ எனப்பட்டது.“கண்போதுசெய்து” என்பதற்கு- இரட்டுற மொழிதல் என்னும் உத்தியால் ‘எம்பெருமான் பக்கலிலே ஞானெமன்னும் உட்கண் மலர்ந்து’என்ற பொருளும் கொள்ளத்தகும். இங்கே நம்பின்னை யீடு காண்க:- “போது செய்து என்று மொட்டிக்கைக்கும பேர்,அலருகைக்கும் பேர்; புறம்புற்ற விஷயங்களின் கண் செம்பிளித்து என்னுதல்; பகவத் விஷயத்திலே விழித்து என்னுதல்.” என்று.“பெயரினையே புந்தியாற் சிந்தியாது ஓதியுறு வெண்ணு மந்தியாலாம் பயனங்கென்” (முதல் திருவந்தாதி) என்றபடி மனப் பூர்வமாக தியானித்தலின்றிச் சொல் மாத்திரத்தால் ஓதி யுருவிடுதல் சிறப்பன்றாதலால் “மாலை நன்னாவிற் கொள்ளார்” என்ற மாத்திரத்தோடு நில்லாமல் “நினையாரவன் மைப்படியே” என்றும் அருளிச் செய்தது.

போது- மலரும் பரவத்து அரும்பு; போரும்பு. நல்நா- எம்பெருமானைத் துதிப்பதற்கென்ற அமைந்த நா:
நாராயணா வென்னாநா என்னநாவே” (சிலப்பதிகாரம்- ஆய்ச்சியர் குரவை) என்றார் பிறரும்.–இப்பாட்டுக்குக் கிளவித்துறை கூறவேணுமென்னும் நிர்ப்பந்தமில்லை; அங்ஙனே கிரபபந்தங் கொள்ளில், இருள்கண்டு அஞ்சுகிற தலைவி, தோழியையும் தாயும் வெறுத்தல் இது என்று கொள்ளலாம். நாயகி எம்பெருமானாகிய நாயகனைப் பிரிந்து அப்பிரிவை ஆற்றாது
நிற்கிற நிலையில் ஸூர்யன் அஸ்தமித்துக் காமோத்தீபமான இராப்பொழுது வந்து எங்கும் இருள் பரவி அவ்விருள் எம்பெருமானது கரிய திருமேனியை ஞாபகப்படுத்தி வருத்த, அதற்கு ஆற்றாத அந்த நாயகி “உலகேழு முண்டான சொன்மொழிமாலை அந்தண்ணந்துழய் கொண்டு சூடுமின்” (திருவிருத்தம் 20) என்று சொல்லும்படி தன் நோய்க்குப் பகவந்நாமோச்சாரணமாகிய மந்த்ர பரிஹாரத்தையே உடையவளாதலால், நோய்நிலையும் அதன் பரிஹாரத்தையும் ஆராய்ந்து நடத்தாத தோழியர் செவிலியர் என்பவரைக் குறித்து வெறுத்துக் கூறியது இது என்று கொள்க. முந்தின வாக்கியத்தால், இருளின் கொடுமையை வெளியிட்டாள்; பிந்தினவாக்கியத்தால், அவ்விருள் அவனது திருமேனிக்கு ஸ்மாரகமாய்த் தன்னை வருத்துகிறபடியைத் தேதி முதலியோர் சிந்தியாமையையும், சிந்தித்து அந்நோய் தணிக்கும் உபாயத்தைச் செய்யாமையையும் பழித்தவாறு.வெய்யோன் – உஷ்ணகிரணமுடையவன்; பகைவர்க்குக் கொடிய பராக்ரமசாலி. குறும்பர் – குறுநில மன்னர்.
அன்னகண்டும் = அழியாது பாதுகாக்கிற நீதிமானான செங்கோலரசன் அழிந்ததையும், சமயம் நோக்கி எளியாரை வருத்தும் அநீதியையுடைய கொடுங்கோலரசர் பரவினதையும் ப்ரத்யக்ஷமாகப் பார்த்திருந்தும் என்றபடி.–ஓட்டு- ஓடுதல்; முதனிலைதிரிந்த தொழிற் பெயர்.

காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்-ப்ராத காலத்திலே ஆதித்யன் வருகிறான் என்று அவன் பிரதாபத்துக்கு அஞ்சி ஏலக்கோலி ஓடிப்போன ராத்ரியாகிற குறும்பர்-மாலை வெய்யோன் பட வையகம் பாவுவர்-சாயம் காலத்திலே அந்த பிரதா போத்தரனான ஆதித்யனானவன் அஸ்தமிக்க லோகம் அடங்கப் பரம்பா நிற்பர்கள்-அன்ன கண்டும்–அப்படிக் கால பேதேந ப்ரகாஸ அந்தகாரங்கள் கலசி வருகிறபடி கண்டு இருக்கச் செய்தேயும்–காலை நன் ஞானத் துறை படிந்தாடிக்
ஸத்வ உத்தர காலத்திலே வைதிகமான அத்யாத்ம ஞானத்துக்குத் துறையான ஆச்சார்ய விஷயத்தைப் பிராணாமம் பண்ணி அவன் உபதேசத்தில் அவகாஹித்து–கண் போது செய்து-பாஹ்ய இந்த்ரியத்தைப் புறம்பு போகாதபடி மொட்டுவித்து-மாலை நல் நாவில் கொள்ளார்-ஆஸ்ரித வத்ஸலனான ஸர்வேஸ்வரனை ஸ்தோத்ரம் பண்ண இட்டுப் பிறந்த நாக்கிலே ஸ்வீ கரியார்கள்-நினையார் அவன் மைப்படியே –-அவனுடைய ஸ்யாமளமான திருமேனியை நெஞ்சுக்கு விஷயமன் ஆக்கார்கள்-இப்பொழுதைப் பழுதே போக்குவதே என்று வெறுத்து உரைத்தார் ஆயிற்று

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-நன்மை பெற வல்ல நாக்கால் அனுசந்திப்பதும் செய்யார்கள்
அவன் மை போன்ற திருமேனியை ஸாஸ்த்ரத்தில் பஞ்சத்தாவிபக்த காலங்களில் ஸ்மரியார்கள்
யூகித்தார்த்த விபரீதமாய் நந்தத்த் யுதித ஆதித்யே நந்தத்த் யஸ்தமிதே ரவவ் ஆத்மநோ நாவபுத் வந்தே மனுஷ்யா ஜீவிதா ஷயம் -அயோத்யா -105-24–என்றபடியாய் இரா நின்றார்கள் என்கிறார்

தாத்பர்யம்-இதில் ப்ரஹ்மாதி தேவர்கள் ஈஸ்வரன் என்னும் துர்மானத்தால் நினையாமல் போகிறார்கள்
சம்சாரிகள் இழந்து போவதை நினைத்து இழவுக்கு வருந்தி அருளிச் செய்கிறார்-தினம் தோறும் -இருள் வந்ததால் தூங்கி -ஞானம் அபகரித்து இருள் தீம்பு செய்யுமே-காலையில் உதிக்கும் பொழுது ஓடிப்போய் ஒழியுமே-மாறி மாறி பகலும் இரவும் வர-ஆயுசை கழிக்க -இருந்தும் அறியாமல்
சத்வ உத்தரமான காலையில் -எழுந்து இருந்து சகல இந்திரியங்களை புறம்பே விஷயாந்தரங்களில் மண்டி அவன் திரு நாமம் சொல்லாமல் அஞ்சன திரு மேனியை நினையாமல் கெட்டுப்போகிறார்கள் என்று சோகிக்கிறார்-பர உபதேசம்-ஒரு நாயகமாய் இதனால் தானே

4-1-ஒரு நாயகமாய் ப்ரவேஸம்-

முதற்பத்தால், பகவத் கைங்கர்யம் புருஷார்த்தம் என்று அறுதியிட்டார்;
இரண்டாம் பத்தால், அந்தக் கைங்கர்யத்தில் களை அறுத்தார்;
மூன்றாம் பத்தால், களை அறுக்கப்பட்ட அந்தக் கைங்கர்யமானது பாகவத சேஷத்வ பர்யந்தமான பகவத் கைங்கர்யம் என்றார்;
இப்படிப்பட்ட கைங்கர்யத்திற்கு விரோதிகள் ஐஸ்வர்ய கைவல்யங்கள் என்கிறார் இந்த நான்காம் பத்தால்.

முதல் மூன்று பத்துகளாலும் துவயத்தில் பின் வாக்கியத்தின் பொருளை அருளிச்செய்தார்;
இனி, மேல் வருகின்ற மூன்று பத்துகளாலே அதில் முன் வாக்கியத்தின் பொருளை அருளிச் செய்கிறார்.

மேல் வருகின்ற மூன்று பத்துகளாலே’ என்றது, 4-ஆம் பத்து, 5-ஆம்பத்து, 6-ஆம் பத்துகளைக் குறித்தபடி.
இம்மூன்று பத்துகளாலே ‘ஸ்ரீமந்நாராயண சரணௌ சரணம் பிரபத்யே’ என்ற முன் வாக்கியத்தின் பொருளை அருளிச்செய்கிறார் என்றபடி.
பெரிய பிராட்டியார் புருஷகாரமாக, வாத்சல்யம் ஸ்வாமித்வம் சௌசீல்யம் சௌலப்யம் ஞானம் சத்திகளாகிய குணங்களையுடைய
எம்பெருமானுடைய திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறேன்,’ என்பது இவ்வாக்கியத்தின் பொருள்.
இப்பொருள்தன்னையே 4,5,6-ஆம் பத்துகளில் அருளிச்செய்கிறார் என்பதனைத் தெரிவிக்கின்றார்.
(முதல் பத்து அவதாரிகை – ‘திருமகள்
கேள்வன் இரண்டு’ காண்க.)
“இதில் (துவயத்தில்) முற்கூற்றால், பெரிய பிராட்டியாரை முன்னிட்டு ஈசுவரன் திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறது;
பிற்கூற்றால், அச்சேர்த்தியிலே அடிமை இரக்கிறது,” என்பது ஸ்ரீபிள்ளைலோகாசார்யர் ஸ்ரீசூக்தி.
அக்ரமாக அருளிச் செய்தது -அனுஷ்டான பரம் த்வயம் –சரணாகதி பண்ணினால் பலம் கிடைக்கும் -இங்கு உபதேசம் பலத்தை முதலில் சொல்லி
-பின்பு உபாயம் சொல்ல வேண்டுமே -பிரயோஜனம் இல்லாமல் மந்த மதிகளும் கார்யம் செய்ய மாட்டார்களே –
ஸ்வர்க்க காம-பலம் சொல்லி -ஜ்யோதிஷ்ட ஹோமம் யஜெத -செய்யச் சொல்லிற்றே
பஹூச்யாம் -பிரஜா யேய-சங்கல்பம் -பலத்தை -வியஷ்டி சிருஷ்டி முதலில் சொல்லி -சமஷ்டி சிருஷ்டி பின்பு சொன்னால் போலே

முதல் மூன்று பத்துகளாலும் சொன்ன புருஷார்த்தத்துக்கு உரிய உபாயத்தை அடியிலே அறுதியிடுகிறார்.
‘அடியிலே’ என்றது, சிலேடை : முதல் திருவாய்மொழியிலே என்பதும், திருவடிகளிலே என்பதும் பொருள்.
திருவடிகளிலே என்று பொருள் கொள்ளும்போது ‘உபாயத்தை’ என்பதற்கு உபாயத்தின் தன்மையை என்று பொருள் கொள்க. ‘
சிந்தித்துய்ம்மினோ’ என்பது போன்ற இடங்களில் உபாயத்வம் கூறப்பட்டிருத்தல் தெளிவு.
உபாயத்வம் – உபாயத்தினது தன்மை. உபாயம் – வழி.

இவ்வடி அறியாதாரே அன்றோ வேறு உபாயங்களாகிற விலக்கடிகளில் செல்லுகின்றவர்கள்?

‘அல்லாதார் கர்மம் ஞானம் பத்திகளை உபாயமாகக் கொள்ளாநிற்க, இவர் திருவடிகளை உபாயம் என்கிறது என்?’ என்னும்
வினாவிற்கு விடையாக,‘இவ்வடி அறியாதாரேயன்றோ’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார். அடி – திருவடிகள்.

நிரவதிகப் பிரீதியோடேயன்றோ, மேல், திருவாய்மொழியை இவர் அருளிச்செய்தது?
-நிரவதிகம்– தனக்குமேல் ஒன்று இல்லாதது.
தாமும் குறைவற்று, பற்றினார் குறைகளையும் தீர்க்க வல்லவராம்படி இருந்தார் மேல்.
சமுசாரிகளைப் பார்த்து, ‘நீங்கள் பற்றின விஷயங்கள் தண்ணியவான பின்பு அவற்றைவிட்டுத் திருமகள் கேள்வனைப் பற்றுங்கோள்’ என்று
பரோபதேசத்தில் இழிகிறார் இத்திருவாய்மொழியில்.
ப்ராப்யாந்தர நசை ஒழிந்தே -பரித்யாகம் பூர்வாகமாகவே -உபாயாந்தர பரித்யாகம் -சர்வ தர்மான்-பரித்யஜ்ய என்பதால் சொல்லிற்றே –

‘நன்று; ‘வீடுமின் முற்றவும்’ என்ற திருவாய்மொழியிலும் பரோபதேசம் செய்தார்;
‘சொன்னால் விரோதம்’ என்ற திருவாய்மொழியிலும் பரோபதேசம் செய்தார்;
இந்தத் திருவாய்மொழியும் பரோபதேசமாய் இருக்கின்றது; இவற்றிற்குக் கருத்து என்?’ எனின்,
இவை எல்லாவற்றிலும் எல்லா அர்த்தங்களும் உளவேயாகிலும் ஒவ்வொன்று ஒவ்வோர் அர்த்தத்தில் நோக்காய் இருக்கும்.
‘யாங்ஙனம்?’ எனில்,
‘வீடுமின் முற்றவும்’ என்ற திருவாய்மொழியில் ‘இதர விஷய வைராக்கியம் முன்னாகப் பகவத் பத்தியைச் செய்யுங்கோள்’ என்றார்;
‘சொன்னால் விரோதம்’ என்ற திருவாய்மொழியில் ‘பகவானைத் துதிப்பதற்குத் தக்கனவான உறுப்புகளைக் கொண்டு
பிறரைத் துதி செய்யாமல் சர்வேசுவரனைத் துதி செய்யப் பாருங்கோள்’ என்றார்;
இத்திருவாய்மொழியில் ‘இவர்கள் தாம் பிறரைத் துதி செய்வது சில பிரயோஜனத்திற்காகவே அன்றோ?’ என்று
அவற்றினுடைய–அல்ப அஸ்திரத்வாதி – சிறுமை, நிலையின்மை -அனர்த்தாவகத்வம் -துக்க மிஸ்ரத்வம் முதலிய
தோஷங்களின் மிகுதியை அருளிச்செய்கிறார்.

செல்வம் அற்பமானது, நிலையாதது முதலிய குற்றங்களை யுடையதாகையாலே தண்ணிது;
ஆத்துமலாபமாகிய கைவல்யம் நிலைத்து நிற்பதாயினும், புருஷார்த்தம் அல்லாதது ஆகையாலே, தண்ணிது;
இப்படி ஐஸ்வரிய கைவல்யங்களுக்கு உண்டான தண்மையைச் சொல்லி, ‘சர்வேசுவரன் ஆகிறான் மங்களம் பொருந்திய
எல்லா நற்குணங்களையும் உடையவனாய் விரும்பினவை அனைத்தையும் கொடுக்கக் கூடியவனாய் இருப்பான் ஒருவன்;
ஆனபின்பு அவற்றை விட்டுப் பகவானைத் துதி செய்யப் பாருங்கோள்’ என்று இங்ஙனே பகவானைப் பற்றுவதற்கு உண்டான
நன்மையை விளக்கிப் பேசா நின்று கொண்டு பரோபதேசம் செய்ய இழிகிறார்.
தான் பெற்ற அனுபவம் பேசி அருளிய பின்பு ஆழ்வார் ஐஸ்வர்யம் கைவல்யம் அனுபவிக்கும் சம்சாரிகளைப் பார்த்து
நிலை அற்ற அத்ய அல்பம்விட்டு பகவத் விஷயம் பற்ற அருளுகிறார் இந்த திருவாய்மொழியில்
ப்ராப்யாந்தர பரித்யாகம் முன்னாக பற்ற வேண்டுமே –

இவர் தாம், மக்கள் இந்திரியங்களை வென்றவர்களாய் வந்து நின்றுகொண்டு,
‘எங்களுக்கு நலத்தை உபதேசிக்க வேண்டும்’ என்று கேட்க,
உபதேசிக்கிறார் அன்றே?
பிராட்டியும் ஸ்ரீ விபீஷணாழ்வானும் இராவணனை நோக்கி நலத்தைக் கூறினாற்போன்று இருப்பது ஒன்றேயன்றோ
இவருடைய பரோபதேசம்? ‘எல்லா ஆத்துமாக்களையும் கவரக்கூடியதான காலபாசத்தினால் கட்டு உண்டவனும் நாசத்தை அடைகின்றவனுமான
இராவணனை – பற்றி எரிகின்ற வீட்டினைப் போன்று – உபேக்ஷை செய்யமாட்டேன்’ என்பது ஸ்ரீ விபீஷணாழ்வான் வார்த்தை.
‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின்,
‘வெந்து அற்ற வீட்டிலே ‘ஒரு கம்பாகிலும் கிடைக்குமோ?’ என்று அவிக்கப் பார்ப்பாரைப் போன்று, நானும் நலத்தைக் கூறுவேன்’ என்கிறார் என்பது.

மூன்றாம் பத்தில் –
இப்படி பகவச் சேஷ பூதனான தத் ஏக அனுபவத்தை ப்ரதிபாதித்த அநந்தரம் -தத் ஏக பிரியத்வத்தை நாலாம் பத்திலே ப்ரதிபாதிப்பதாக –
அஸ்திரமாய் -அல்பமான-ஐஸ்வர்ய -கைவல்யங்களில் காட்டில் பகவத் ப்ராப்தியினுடைய உத்கர்ஷ உபதேசத்தாலே சேதனனுடைய அநந்ய போக்யத்வத்தையும் –
அவனுடைய பஹு வித போக்யத்வத்தாலே இவனுக்குப் பிறந்த போக இச்சையையும்
இவனுடைய ஆத்மாத்மீயங்கள் தனக்குப் போக்யமாம் படி ஈஸ்வரன் தான் இவனோடு கலந்த ப்ரணயத்தையும்
அனுபவ அலாபத்தில் துல்ய சம்பந்தி வஸ்து தர்சனத்திலும் ஸ்மாரகத்வேந ஆர்த்தி பிறக்கும் படியையும்
ஆர்த்தி சமிக்கும் படி ஸம்ஸ்லேஷித்த போக்ய விஷயத்தில் ஸ்தோத்ரத்தாலே போத்தாவுக்கு யுண்டான ஹர்ஷ உத்கர்ஷத்தையும்
அவசன்ன தசையிலும் அந்நிய ஸ்பர்சம் பொறாத படியான தத் அனுபந்தமே ஆச்வாஸ கரம் என்னும் இடத்தையும்
போக்ய பூதனுடைய குண அனுபவ இச்சையாலே தீவிர ஸைதில்யம் பிறக்கும் படியையும்
அவன் ஆதரியாத ஆத்மாத்மீயங்கள் அஸஹ்யங்கள் ஆகையாலே அநாதரணீயங்கள் என்னும் இடத்தையும்
அதி துஸ் ஸஹ சம்சார நிவ்ருத்தி பூர்வகமாக ஸ்ரீ யபதி சரணங்கள் அதிசயித புருஷார்த்தம் என்னும் இடத்தையும்
சர்வாதிக சேஷியானவனுடைய கைங்கர்யமே உத்கர்ஷமாய் உசிதமான ப்ராப்யம் என்னும் இடத்தையும்
அருளிச் செய்து சேஷபூதனுடைய தத் ஏக பிரியத்வத்தை உபபாதிக்கிறார் –

அதில் முதல் திருவாய் மொழியில்
சேதனனுடைய அனன்யா போக்யத்வத்தை ப்ரதிபாதிப்பதாக போக்ய பூதனுடைய நிருபாதிக சம்பந்தத்தையும்
சர்வாதிகாத்தவ ஸூ சகமான ஸ்ரீ யபதித்வத்தையும்
போக்யத்வ விசிஷ்டமான ஸுலப்யத்தையும்
போக பிரதிபந்தக விரோதி நிவர்த்தநகத்வத்தையும்
விலக்ஷண விக்ரஹாதி யோகத்தையும்
அவதார போக்யதைக்கு மூலமான அர்ணவ ஸாயித்வத்தையும்
அதுக்கும் அடியான பரத்வ உத்கர்ஷத்தையும்
ஆஸ்ரித சம்ச்லேஷ ஸ்வ பாவத்தையும்
பல பிரதத்வ ஸூ சகமான கருட த்வஜனத்வத்தையும்
நிரவதிக நியந்த்ருத்வத்தையும் அருளிச் செய்து -இப்படி ப்ராப்ய பூதனான ஈஸ்வரனை –
அஸ்திரமாயும் அல்பமாயும் உள்ள ஐஸ்வர்ய கைவல்யங்களில் அகப்படாதே ஆஸ்ரயிங்கோள் என்கிற
உபதேச முகத்தால் ஆத்மாவினுடைய அநந்ய போக்யதையை அருளிச் செய்கிறார் –

ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ.
–4-1-1-

நிலை நில்லாத ஐஸ்வரியத்தைப் பற்றி நீர்க்குமிழி போலே உடைந்து போகின்ற மனிதர்களாதலின், ‘நாயகம் ஆய்’ என்கிறார்.-நிலா நாளிலே இருட்டுப் புரைகளிலும் இருட்டு நாளிலும் ஆயிற்றுப் புறப்படுவது;-இருள் ஓர் இடத்திலே திரண்டாற்போலே கறுத்த நாய்கள் கிடக்கும்; அதனை அறியாதே அவற்றின் வாயிலே காலை இடும்;-அவை கடிக்கும்.
அன்றிக்கே,-கருநாய் என்பதற்கு, கருமை –-கறுமை- சீற்றமாய், வெட்டிய நாய் என்னுதல்.
அன்றிக்கே, கரு நாய் – கருவையுடைத்தான நாய் என்னுதல்;-என்றது, குட்டி இட்ட நாய், என்றும் குட்டியைக் காத்துக்கொண்டு கிடக்குமாகையாலே, ‘அதற்கு ஏதேனும் தீங்கு வருகிறதோ!’ என்று கண்டாரை ஓடிக் கடிக்குமே அன்றோ? அதனைச் சொல்லுகிறது என்றபடி.

காலர் – ‘வீரக் கழல் இட்ட கால்’ என்றே அன்றோ முன்னர்ச் சொல்லிப்போருவது?
இப்போது, ‘நாய் கடித்த காலர்’ என்றாயிற்றுச் சொல்வது என்பார், ‘நாய் கவர்ந்த காலர்’ என்கிறார்.-முன்பு பொற்கலத்திலே உண்டு வாழ்ந்தவனுக்கு இப்போது ஒரு புத்தோடு கிடையாதபடியாயிற்று’ என்பார்,-‘சிதைகிய பானையர்’ என்றும் அருளிச்செய்கிறார்.

முன்பு அரசர்களுக்கு இராச்சியம் வழங்கினானாய் அன்றோ போந்தது? இப்போது ஒரு பிச்சை மாத்திரமேயாயிற்று இவன் விரும்புவது.-முன்பு இராசாக்கள் கொண்டு வந்த பச்சையை, சிலர் இடத் தாம் கொண்டார் என்பது ஆகாமைக்கு ஆள் வைத்தே அன்றோ வாங்குவது? இப்போது தாமே கொள்வர்.
அன்றிக்கே.-இடுகின்றவர்கள் பக்கல் நினைவு இன்றிக்கே, தம் விருப்பம் மாத்திரமே உள்ளது என்பார், தாம் கொள்வர்’ என்கிறார் என்னுதல்.

இராச்சியத் திரு இங்ஙனேயான பின்பு,-திருநாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ –‘ஸ்ரீமானான நாராயணன் திருவடிகளை அடைந்து உய்வு பெற்றுப் போருங்கோள்,’தாள் –‘பிள்ளாய்! உன் உள்வெதுப்பு ஆறுவது எப்போது?’ என்ன,
‘நானும் எனக்கு வகுத்த முடி சூடி அவரும் தமக்கு வகுத்த முடி சூடின அன்றே,’ என்றான் அன்றோ ஸ்ரீ பரதாழ்வான்?-அப்படித் தலையாகப் பிரார்த்திக்கப்பட்ட திருவடிகளை
அடி சூடும் அரசு’ என்னக் கடவது அன்றோ?

‘பேறு எல்லார்க்கும் வேண்டும்’ என்று இருக்கையாலே எல்லார்க்குமாக-‘உய்ம்மின்’ எனப் பன்மையாக அருளிச்செய்கிறார்.-தாள் சிந்தித்து உய்ம்மின் – அடி அற்றால் வாடும் அத்தனையே அன்றோ? -அடி உற்றால் வாழலாம் அடி அற்றால் வாடலாம் –-ஆதலால், அடியைப் பேணி நோக்கி உய்ந்து போருங்கள்.-உபாயமாகவும் ப்ராப்யமாகவும் உய்ம்மினோ –உஜ்ஜீவித்து ஆனந்தம் அடைவோம் –ரக்ஷகன் என்கிற ப்ரபத்தியே அமையும் -ப்ரபத்திக்கும் இதுவே அர்த்தம் என்கிறார் நினைவோடு வ்யாப்தமாயிற்று உஜ்ஜீவனம் இருப்பது-

—————

உய்ம்மின் திறை கொணர்ந்து’ என்று உலகு ஆண்டவர் இம்மையே
தம் மின்சுவை மடவாரைப் பிறர் கொள்ளத் தாம் விட்டு
வெம்மின் ஒளி வெயில் கானகம் போய்க் குமைதின்பர்கள்;
செம்மின் முடித் திரு மாலை விரைந்து அடி சேர்மினோ
. –4-1-2-

அடியிலே நாய் அடி இட்டு நலியத் தொடங்கிற்றே? நாய் முதலிலே காற்கூறு கொண்டது;செம்மின் முடித் திருமாலை விரைந்து அடி சேர்மின் – சிவந்து மின்னுகின்ற முடியையுடைய திருமகள் கேள்வனுடைய திருவடிகளை விரைவில் பற்றுவதற்குப் பாருங்கோள்.-தன்னை அடைந்தார்க்குக் கொடுக்கைக்குத் தலையான முடி உண்டு; கொடுப்பிக்கைக்கு அருகே இருப்பாரும் உண்டு;-‘விரையாமையால் உள்ள இழவே உள்ளது’ ‘அவன் முடியைத் தரினும் நீங்கள் திருவடியைச் சேருங்கோள்’ என்பார், ‘அடி சேர்மினோ’ என்கிறார்.– ‘நீங்கள் உங்கள் அடிவிடாதே கொள்ளுங்கோள்-அடி – திருவடியும் மூலமும்.-தாஸ்யம் விடாதே -அடிப்படைக் கருத்து -சேஷத்வ பாரதந்த்ர்யம் விடாதே கொள்ளுமின் –

அடி சேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ
இடி சேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்
பொடி சேர் துகளாய்ப் போவர்கள் ஆதலில் நொக்கெனக்
கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ
.–4-1-3-

அங்கு நிற்கின்ற தூணைக் காட்டிலும் ஒரு வாசி இல்லை காணும் இவருடைய நினைவால்: ஆதலின், ‘இருந்தவர்’ என்கிறார்.-இப்படி இருந்தவர்கள் என் ஆவர்?’ என்றால், பொடிபடுவர் என்கிறார் மேல் :பொடி சேர் துகளாய்ப் போவர்கள் –கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமின் – முடி கொடுத்தால் மாலையும் கொடுக்க வேண்டுமே! திருமேனியின் பரிசத்தால் நாட்செல்ல நாட்செல்ல வாசனை ஏறி வாரா நின்றுள்ள திருத்துழாய் மாலையைத் திருமுடியிலேயுடையனாய் அடியார்கட்கு எளியவனான கிருஷ்ணன் திருவடிகளை நினைக்கப் பாருங்கோள்.-‘நினைத்தல் மாத்திரம் போதியதாமோ? துதிசெய்தல் வேண்டாவோ?’ எனின், நினைத்த மாத்திரத்தில் கொண்டு முழுகுமே அன்றோ திருவடிகளின் இனிமை?
அன்றிக்கே, ‘இவ்வடியை நினைக்கவே சமுசாரம் அடி அறும்’, என்னுதல்-

——–

நினைப்பான் புகின் கடல் எக்கலின் நுண் மணலிற் பலர்
எனைத்தோர் உகங்களும் இவ்வுலகு ஆண்டு கழிந்தவர்
மனைப்பால் மருங்கு அற மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம்
பனைத்தாள் மத களிறு அட்டவன் பாதம் பணிமினோ
.–4-1-4-

உலகில் கழிந்த பிரமர்கள் கங்கையிலே உள்ள மணல் போலவும் இந்திரனாலே பெய்விக்கப்படுகின்ற மழைத்தாரைகள் போலவும் எண்ணுதற்கு முடியாதவர்கள் ஆவர்,’ எனப்படுதலால். ‘கழிந்தவர் நுண் மணலிற்பலர்’ என்கிறார்.பனைத்தாள் மதகளிறு அட்டவன் பாதம் பணிமின் –‘பனைபோலே இருக்கையாலே அச்சத்தை உண்டாக்குகின்ற காலையுடைத்தான மதயானை உண்டு, குவலயாபீடம்; அதனை முடித்தவன் திருவடிகளைப் பற்றுதற்குப் பாருங்கோள். அவன் உங்களுடைய பிரபலமான தடைகளைப் போக்க, நீங்கள் அவன் காலிலே தலை சாய்க்கப் பாருங்ககோள்,’ என்கிறார்.
மேற்பாசுரத்தில். ‘மாம்’ என்றபதத்தின் பொருள் சொல்லப்பட்டது:
இப்பாசுரத்தில் ‘அஹம்’ என்ற பதத்தின் பொருள் சொல்லப்படுகிறது.
-வலிய பிரதிபந்தகங்களை நிரயத்னமாக தள்ள வல்லவனை ஆஸ்ரயிங்கோள் –

————–

பணிமின் திருவருள் என்னும் அம் சீதப் பைம் பூம் பள்ளி
அணி மென் குழலார் இன்பக் கலவி அமுது உண்டார்
துணி முன்பு நாலப் பல் ஏழையர் தாம் இழிப்பச் செல்வர்
மணி மின்னு மேனி நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ.–4-1-5-

‘பணிமின் திருவருள் என்னும் அணி மென் குழலார்’ என்று முன்புள்ள முதலிகள் நிர்வஹிப்பர்கள்;-இவர்கள் நிர்வாஹத்தில் ‘என்னும்’ என்னும் எச்சம் ‘குழலார்’ என்னும் பெயருக்கு அடைமொழி.
பட்டர், அங்ஙன் அன்றிக்கே,‘திருவருள் பணிமின் என்னும்’ என்னும் இதனை ‘இன்பக் கலவி அமுது உண்டார்’ என்றதனோடே சேர்த்து அருளிச் செய்வர்.பணிமின் திருவருள் என்னும் – தான் இராச்சியத்தை அவர்களுக்குப் படுக்கைப் பற்று ஆக்கி,-அவர்களைப் படுக்கையிலே வைத்துத் தான் தாழ நின்று ‘திருவுள்ளத்தில் கிடக்கிறதை அருளிச் செய்யலாகாதோ?’ என்னும்; தன்னைத் தொழுது வணங்குகின்றவர்கள் புறம்பே உண்டே?
இனி. இன்பச் சுவையாவது, தான் இவர்களுக்குத் தாழ நிற்கையே அன்றோ?
அடி சேர் முடியனராகி இருந்தவன் இவளுக்கு அடிமை என்று தாள நின்று ரசிகத்வம் காட்டுகிறான் என்றவாறு -பட்டர்-

கிருஷ்ண த்ருஷ்ணா வாகக் கூடாதோ –-‘ஆன பின்பு, ‘பக்தாநாம் – ‘பக்தர்களுக்காகவே என்று இருக்கிற உடம்பைப் பற்றப் பாருங்கோள்’ என்கிறார் மேல் :
மணி மின்னு மேனி –-நீலமணி போன்று காந்தியையுடைத்தான திருமேனி;
அன்றிக்கே,-‘நீலமணியைக்காட்டிலும் விஞ்சின அழகையுடைத்தான திருமேனி’ என்னுதல்.

திருமேனியைக் கொடுக்கவே எல்லாம் கொடுத்ததாமிறே; சர்வ அபாஸ்ரயமாயன்றோ திருமேனிதான் இருப்பது!-மற்றுக் கொடுக்குமதிலும் இதுக்கு உண்டான வியாவிருத்தி தோற்றி இருக்கிறது
பரிஷ்வங்கோ ஹநூமத : – அமிருதாசிக்குப் புல்லையிட ஒண்ணாதே!பிறந்தது குரங்கு ஜாதி -நம்மை சேவிக்க அன்றோ பிறந்தான் –-ஸ்ரீ வைகுண்டம் -புல் ஸ்தானம் –
ஸ்நேஹோமே பரம : – (உத்தரராமாயணம்) – என்று இவ்வுடம்பை விரும்பினவனுக்கு இத்தையே கொடுக்கவேணுமே.- மயா காலமிமம் பிராப்ய தத்த: ‘இவன் ஒன்று கொள்வான் ஒருவன் அல்லன்; நாம் இவனுக்கு ஒன்று கொடுக்கப் பெறுவது காண்,’ என்று குறைபட்டிருந்தவர், இவன் விலக்காததொரு சமயம் பெற்று இப்படிக் கொடுத்துக் கொண்டு நின்றார்.
தஸ்ய மஹாத்மந : – ஒரு படி கொடுத்தாராய் ஒன்று செய்த இத்தனை போக்கி, இரண்டு உடம்பு கொடுத்தவனுக்கு ஓர் உடம்பு தரம் அன்றிறே.-வேணி உத்க்ரதனத்திலே பிராட்டி ஒருப்பட்ட அன்று அவளை உளள் ஆக்கினான்;‘அவகாஹ்யார்ணவம் ஸ்வப்ஸ்யே’ (ஸ்ரீராமா. யுத்.) என்ற பெருமாளை மீட்டு அவரை உளராக்கி இப்படி இவர்க்கு இரண்டு உடம்பு
கொடுத்தானிறே அவன். அவன் பல படி உபகரிக்கையாலே இவர் ஒருபடி உபகரித்தார்,’ 

பேர் சொல்லி வாழ்மினோ –-செய்ய வேண்டிய முயற்சி இவ்வளவே; பின்னை வாழ்வோடே தலைக்கட்டும். வாழ்க்கைக்கு ஒரு பேரோ!
‘அச்சுவை பெறினும் வேண்டேன்’ என்னும்படி அன்றோ இது தன்னுடைய இனிமை இருப்பது?-பேரே வாழ்க்கை என்றவாறு -பேர் சொல்வது உபாயம் இல்லையே
கெடும் இடராய –கேசவா என்ன -நாளும் கொடு வினை –தமரும் குறுககில்லார்-

—————

வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை மொக்குளின் மாய்ந்து மாய்ந்து
ஆழ்ந்தார் என்று அல்லால், அன்று முதல் இன்று அறுதியா
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பது இல்லை ; நிற்குறில்
ஆழ்ந்தார் கடற் பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ.
–4-1-6-

‘திருப்பாற்கடலிலே வந்து கண் வளர்ந்தருளுகிறது கர்மத்திற்குக் கட்டுப்பட்டவனாய் அல்லவே?-நம்மால் பற்றப்படுமவன் ஆகைக்காக அன்றோ? ஆன பின்னர், அவன் நினைவோடே சேரச் சொரூபத்திற்குத் தகுதியான பேற்றினைப் பற்றுங்கோள்,’ என்பார், ‘கடற்பள்ளி அண்ணல்’ என்கிறார்.-சர்வ சமாஸ்ரயணீயனாக ஆவதற்கே -இங்கே கிடக்கிறான் –அடியவர் ஆமினோ – அவன் தலைவனாயிற்ற பின்பு நீங்கள் உங்கள் அடிமையை இசையப் பாருங்கோள்.
அன்றிக்கே,-தாச பூதர் -இயற்கையிலே-அடிமை அல்லாதது ஒரு பொருளை இன்று அடிமை ஆக்கிக் கொடுத்ததாக நினைத்திருக்கும் பகவானுடைய அபிப்பிராயத்தாலே சொல்லுகிறார் ஆகவுமாம்.-

—————

ஆமின் சுவை அவை ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்த பின்
தூமென் மொழி மடவார் இரக்கப் பின்னும் துற்றுவர்,
‘ஈமின் எமக்குஒரு துற்று’என்று இடறுவர் ; ஆதலின்,
கோமின் துழாய்முடி ஆதிஅம் சோதி குணங்களே.
–4-1-7-

அன்ன பாநாதி போகங்களும் அநித்தியம் என்கிறார் –-ஆதி அம் சோதி குணங்கள் கோமின் –-எல்லா ஐஸ்வர்யத்திற்கும் அறிகுறியான திருத்துழாய் மாலையைத் திருமுடியிலே உடையனாய், உலக காரணனாய், எல்லை இல்லாத ஒளி உருவமான விக்கிரஹத்தை யுடையவனாய் இருந்துள்ளவனுடைய குணங்களைச் சேர்த்து அனுபவியுங்கோள்
ஆதி-சொரூபத்தைப் பற்றியதாயும்–அம் சோதி– விக்கிரஹத்தைப் பற்றியதாயும் உள்ள கல்யாண குணங்கள்’ என்பார்,-ஆதி அம் சோதி குணங்கள்’ என்கிறார்.

———-

குணங்கொள் நிறை புகழ் மன்னர் கொடைக்கடன் பூண்டிருந்து
இணங்கி உலகு உடன் ஆக்கிலும், ஆங்கு அவனை இல்லார்
மணங்கொண்ட போகத்து மன்னியும் மீள்வர்கள்; மீள்வு இல்லை;
பணங்கொள் அரவணையான் திரு நாமம் படிமினோ
.–4-1-8-

‘இராச்சிய இலக்குமி நிலை நில்லாது ஒழிவது, நாட்டாரோடு பொருந்தி வாழாது ஒழியில் அன்றோ?-அவர்களோடு பொருந்தி வாழவே அது நிலை நிற்குமே?’ என்ன,
1-‘பொருந்தி வாழ்ந்தாலும், எம் பெருமானை அடையாவிடில் கிடையாது;
2-அவனை அடைந்து பெற்றாலும், அதன் தன்மையாலும் நிலை நில்லாது;
3-ஆன பின்பு, அவன் தன்னையே பிரயோஜனமாக அடையுங்கோள்,’ என்கிறார்.

இனி, ‘பலத்தில் நோக்கம் இல்லாதவனாய்த் தான தர்மங்களைச்செய்து எம்பெருமானையே பலமாகப் பற்றாமல், பலத்தில் நோக்கம் உள்ளவனாய்த் தான தர்மங்களைச் செய்து சுவர்க்கம் முதலானஉலகங்களை விரும்பினால் அவை நிலை நில்லா,’
என்று இத்திருப்பாசுரத்திற்குப் பொருள் கூறலுமாம்

யோக ஷேமம் வஹாம் அஹம் -கிடைக்காதது கிட்டும் -கிடைத்தது நிற்கும் அவனைப் பற்றினால் என்றபடி –

பணம் கொள் அரவு அணையான் திருநாமம் படிமின் – தன்னுடைய பரிசத்தாலே விரிந்த படங்களையுடைய திருவனந்தாழ்வானை நிரூபகமாக வுடையவனுடைய திருநாமங்களிலே மூழ்குங்கோள் ‘திருநாமத்திலே மூழ்கினவர்களைத் திருவனந்தாழ்வானைப் போன்று விடான்’ என்பார்.– ‘அரவணையான் திருநாமம் படிமின்’ என்கிறார்.
அன்றிக்கே,
‘இவ்விதமாக அறிந்தவர்கள் பாதங்களால் ஏறுகிறார்கள்,’ என்கிறபடியே, துகைத்து ஏறலாம்படியான படுக்கையையுடையவன்–பஞ்ச சயனத்தின் மேல் ஏறி கோட்டுக் கால் கட்டில் மேல் ஏறி -என்பார்,‘அரவணையான் திருநாமம் படிமின்’ என்று அருளிச்செய்கிறார் என்னுதல்.

———-

படி மன்னும் பல்கலன் பற்றோடு அறுத்து,ஐம் புலன்வென்று,
செடி மன்னு காயம் செற்றார்களும், ஆங்கு அவனை இல்லார்
குடி மன்னும் இன் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள்; மீள்வு இல்லை;
கொடி மன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ.
 –4-1-9-

மேல் எட்டுப் பாசுரங்களால் ‘இவ்வுலக இன்பம் நிலை அற்றது,’ என்றார்;
இப்பாசுரத்தில். ‘உடலை வருத்தும் தன்மையையுடைய தவத்தைச் செய்து அந்தத் தவத்தின் பலம் சுவர்க்கமாகக் கொண்டு ஸ்வர்க்கத்தை அடையும்போது பகவானுடைய திருவருள் வேண்டும்; அவனுடைய திருவருளால் சுவர்க்கத்தை அடைந்தாலும், அதனுடைய இயற்கையாலே நிலை நில்லாது,’ என்கிறார்.

அங்கு அவனை இல்லார் –-அவன் திருவருள் இல்லையாகில் தானே சித்தியாது.
அவன் திருவருளால் பெற்றதாகில், குடி மன்னும் இன்சுவர்க்கம் எய்தியும் – ‘இதற்கும் ஆள் பற்றுவதே!’ என்பர் பட்டர்.

கொடி மன்னு புள்-கொடியாய் மன்னா நின்றுள்ள பறவை. என்றது, தன்னை அடைந்த அடியாரையும் தனக்கு வேறுபடுத்தும் விசேஷணமாகக் கொள்ளுமவன் என்பதனைத் தெரிவித்தபடி. ‘அல்லாதாரைக் காட்டிலும் அவனை வேறுபடுத்தும் விசேஷணமாகக் கொள்ள வேண்டுவான் என்?’ என்னில், அவனுடைய மூக்கு வலியும் அவன் பக்கல் பக்ஷபாதமும் அதற்கு அடி.
புள்ளுடை அண்ணல் –‘திருமகள் கேள்வன்’ என்னுமாறு போலே ஈசுவரனுக்கு நிரூபகமே யன்றோ அவன்? அண்ணல் – தலைவன்.
கழல்கள் குறுகுமின் – உங்கள் பிறவி கழல அவன் கழல்களைக் குறுகுங்கோள்.
‘திருநாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ’ என்றார் முதற்பாசுரத்தில்.
இங்கே, ‘புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ’என்கிறார் காணும், அவளோபாதி இவனும் அங்குத்தைக்கு நிரூபக தர்மம் என்று.

———–

குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம் விட்ட
இறுகல் இறப்பெனும் ஞானிக்கும் அப்பயன் இல்லையேல்,
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்; பின்னும் வீடு இல்லை,
மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில், வீடு அஃதே
.–4-1-10-

திருமகள் கேள்வன் பெரிய திருவடி திருத்தோளிலே தோளும் தோள் மாலையுமாய் வந்து நின்றாலும், சாணகச் சாற்றைப் போன்று-சாணகச்சாறு – பஞ்ச கவ்யம்.– சுத்தி மாத்திரத்தையே பற்றிக்கொண்டு, இனிமையிலே நெஞ்சு செல்லாதபடி அதனையும் விடுவது.-தேவோஹம் – நான் தேவன், மனுஷ்யோகம் – நான் மனிதன்’ என்கைக்கு அடியான தளை ஆதலின்,‘சிறுக நினைவது ஓர் பாசம்’ என்கிறார்.

அண்டாதிபதே -சொல்லி ஐஸ்வர்யம் பெற்று போவான் – அசுத்த சரீரம் -கர்மா தீனம் இல்லாமல் -சுத்தன் என்றே உபாசித்து -கைவல்யம் பெற்று போவான் –
அவன் அழகை அனுசந்தித்து -பகவத் ப்ரீதி காரித கைங்கர்யம் பெற்று போவோம் –அந்திம ஸ்மிருதி இல்லையாகில் ஆதி பரதனைப்போலே மான் ஆதல், மரை ஆதல் ஆமித்தனை.

அஃதே வீடு –‘திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ’ என்று நான் சொல்லுகிற அதுவே புருஷார்த்தம்.
பன்னீராயிரப்படி மட்டும் -அவனைப் பற்றி பிரயோஜ நாந்தரம் பெற்று விடா விடில் -அஃதே வீடு –

—————

அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய்கோலத்து ஆயிரம் சீர்த்தொடைப் பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற் பாலரே.
–4-1-11-

‘காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ’ என்று தாம் சொன்னபடியே உடையவர் ஆவர்

‘கண்ணனைத் தாள் பற்றி’ என்று தாமும் சொல்லி, கண்ணன் கழல்கள் நினைமினோ’ என்று பிறர்க்கும் உபதேசித்து நின்றாரே?-அது தன்னையே அருளிச்செய்கிறார். ‘இப்படி அடியுடையார் புறம்பு இல்லை’ என்றே அன்றோ இவ்வடிகளைத் தாம் பற்றியது?
‘துயர் அறு சுடர்அடி தொழுது எழு’ என்று தம் திருவுள்ளத்திற்கு அருளிச்செய்தார்;
‘வண் புகழ் நாரணன் திண்கழல் சேரே’ என்று பரோபதேசம் செய்தார் அங்கு.
இங்கு, ‘கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடு இலனே,’ என்றார்;
‘கண்ணன் கழல்கள் நினைமினோ,’ என்று பரோபதேசம் செய்தார்.
இது என்ன அடிப்பாடுதான்! ‘கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண்,’
என்றே அன்றோ பரோபதேசம் முடிக்கிறதும்?


——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -92-பேண் நலம் இல்லா அரக்கர் –ஆழி எழ -7–4-

April 2, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

பேறு தப்பாது துணிந்து இருந்தும்-பேற்றுக்குத் த்வரித்தும் இருக்கும் ஆழ்வார் –-பெரும் கிறியானின் ஸுலப்யத்திலே ஆழ்ந்து இருந்தமை கீழ் அருளிச் செய்தார் –-இலங்கைக்கு விசேஷணம் -பாசுரத்தில் முதலில் -அருளிச் செய்து -ரக்ஷகன் -எத்தையும் அழிக்க மாட்டானே-இவர்கள் தண்மையை சொல்லி –
ப்ரயோஜனாந்தர பரர்கள் -தங்கள் அபிமதத்துக்காகவே காலை மாலை -ஸ்தோத்ரம் செய்கிறார்கள் –
தினம் தோறும் -காலையிலும் மாலையிலும் -கார்யம் சித்தி பெறவே –-தோள் கண்டார் தோளே கண்டார் போல்வர் அல்லரே –ஆழ்வார் திரு உள்ளம் அவதாரங்களில் ஈடுபட்டு இதில் இவர்களுக்காக இப்படிச் செய்வதே–ஆழி எழ -7–4-இதன் விவரணம்-இதிலும் அவதாரங்கள் ப்ரயோஜனாந்தர்களுக்காக செய்தமை உண்டே-வேந்தற்கு உற்றுழி பிரிதல் -பிரிவாற்றாமை தாங்காமல் சர்வேஸ்வரன் -தேவேந்திரன் பிரார்த்திக்க -சீதா பிராட்டி பிரிந்து வருந்துவது போல் இங்கும் ஈஸ்வரன் அவதரித்து செய்த ஆனைத் தொழில்கள் எல்லாம் பாகவத் அபசாரம் பொறாமை அன்றோ

அவதாரிகை –பெரும் கிறியானை யல்லால் யடியேன் நெஞ்சம்  பேணலதே -என்றாரே தாம் கீழே –
அளவுடையாராய் அதிகாரி புருஷர்களான தேவர்களுக்கும் இதுவும் அன்றிக்கே  ஒழிவதே -என்கிறார் –
என் தான் அவர்களுக்கு வந்த குறை என் என்னில் –நாம் எல்லாவற்றையும் அழிய மாற பெற இருக்கிற வஸ்துவை அழிவுக்கு இட்டு வேறே சில பிரயோஜனங்களை கொள்ளா நின்றார்களே -என்கிறார் –வேந்தற்கு உற்று உழிப் பிரிவில் தலைவனைக் குறித்துத் தலைவி இரங்குதல்–

இப்படி அனுபவ அர்த்தமாக இவர் ஆதரித்த படியைக் கண்ட ஈஸ்வரன் நம்மை அபேக்ஷித்தாருக்கு முகம் காட்டாது ஒழிவோமோ-தம் தம்முடைய அபிமத ஸித்தி யர்த்தமாக ப்ரயோஜனாந்தர பரரான தேவர்கள் அகப்பட அபேக்ஷிக்க-வந்து பிறந்து கார்யம் செய்து கொடுக்கிலோமோ என்று-தன் திரு உள்ளக் கருத்தை ஆவிஷ்கரிக்க-உன்னுடைய போக்யமான வடிவை அனுபவிக்க ஆசைப்படாதே சத்ரு நிரஸனம் பண்ணித் தர வேணும் என்று அபேக்ஷிப்பதே என்று அவர்களை பழித்து அருளிச் செய்கிறார்-இதுவும் நாயகி வினைத் தொழிலில் பிரியலுற்ற நாயகனைக் குறித்துக் காணலுற்றுக் கவர்ந்து உரைத்தல் ஆகவுமாம் –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்–அவதாரிகை--தன் நெஞ்சு வேறே ஒன்றை ஆதரியாது என்று அருளிச் செய்தார்-விண்ணோரும் என்னைப் போலே யாகாதே விருத்த ஸ்வபாவர் ஆவதே என்று-வெறுத்து அருளிச் செய்கிறார் இதில்

பேண லமில்லா வரக்கர் முந்நீர பெரும் பதிவாய்
நீள் நகர் நீளெரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர்
நாள் நிலந்தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று
காண லுமாங்கொல் என்றே வைகல் மாலையும் காலையுமே
– – 92-தலைவனைக் குறித்து தலைவி இரங்குதல் –

பேண் நலம் இல்லா (உன்னை) விரும்பிப் பக்தி செய்தலாகிய நற்குணமில்லாத
அரக்கர்–ராக்ஷஸர்களுடைய
முந்நீர பெரு பதி வாய்–கடலாகிய பெரு நீரணை யுடைய பெரிய மலையிடத்திலுள்ள
நீள் நகர்–பெரிய லங்காபுரியில்
நீள் எரி வைத்தருளாய்—தீப்த்த அக்னி பானம் -ஆகிற நெருப்பு -பெரிய நெருப்பை வைத்து அளித்தருள வேணும்
என்று–என்று சொல்லிப் பிரார்த்தித்து
நின்னை–உன்னை
விண்ணோர்–தேவர்கள்
வைகல்–நாள்தோறும்
மாலையும் காலையும்–இரண்டு சந்தி களிலும்
தான் நிலம் தோய்ந்து தொழுவர்–தங்கள் கால்கள் தரையிலே படும்படி வந்து வணங்குவர்;
(அவர்கள் அங்ஙனம் வணங்குதல் தங்கள் பகையைப் போக்குவிக்கும் பொருட்டே யன்றி)
நின் மூர்த்தி–உனது வடிவத்தின்
பல் கூற்றில்–பல அம்சங்களுள்
ஒன்று–ஒன்றையேனும்
காணலும் ஆம் கொல் என்றே–பார்க்க வேண்டுமென்றோ (அன்று என்றபடி.)

ஆழி வண்ணன் தன் விசயமானவை முற்றும் காட்டி
வாழிதனால் என்று மகிழ்ந்து நிற்க -ஊழிலவை
தன்னை யின்று போல் கண்டு தானுரைத்த மாறன் சொல்
பன்னுவரே நல்லது கற்பார்
——64-மண்டிணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -என்றும் பக்தி அதிசயத்தாலே அவசன்னரான இவர் தளர்த்தியை மாற்றித் தரிப்பைக்கு-பேர் எயில் சூழ் கடல் தென்னிலங்கை செற்ற பிரான் -என்று பிரஸ்துதமான அவதார சரிதமாய் யுள்ள ஸ்ரீ த்ரி விக்ரமணம் தொடங்கி ஸ்ரீ கோவர்த்தன உத்தாரணம் பர்யந்தமான விஜய பரம்பரைகளை
பத்தும் பத்தாக அவன் காட்டிக் கொடுக்க அத்தை அனுபவித்து ஹ்ருஷ்டராகிற
ஆழி எழ சங்கில் அர்த்தத்தை ஆழி வண்ணன் இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -தங்கள் பிரிய ஹிதங்களுக்கு உறுப்பாக ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம் என்று அறிந்து அனுசந்திக்குமவர்களே எல்லாம் அறிந்து அனுசந்திக்குமவர்கள் -என்றது ஆயிற்று-

பேணலம் இத்யாதி —முந்நீர பெரும் பதியை பேணலம் இல்லா அரக்கர் –கடலால் சூழப்பட்டு பல பகுதிகளை உடைத்தான உன் விபூதியை –நீள் நகர் இத்யாதி –உன் விபூதியில் ஏக தேசத்தை அழித்து தர வேணும் என்று சொல்லா நிற்பர்கள் ஆயிற்று –பர ஹிம்சை என்றால் -திரு உள்ளத்துக்குச் சென்று இராது என்று – இரங்குகைக்காக-சொல்லிக் கொடு-வரும் வார்த்தை யாயிற்று –அவர்கள் ஜீவிக்கில் உன் விபூதி ஜீவியாது -என்னா நிற்பர்கள் -(த்யஜேத் ஏகம் குலம் காக்க ஒருவரை நீக்கலாம் ) தேவர்-குணங்களை ஓர் இடத்தில் மனனம் பண்ணி இருக்கிற ருஷிகளையும் –நீர் விரும்பி நோக்குகிற-தேவர்களையும் நலியா நின்றார்கள் என்பர்கள்–பேண லமில்லா   –பிறரைப் பேணுகை யாயிற்று
அவன் நன்மையாய் நினைத்து இருப்பது –-பிறரும் ஜீவிக்க -நாமும் ஜீவிக்கக் கடவோம் என்று இரார்கள் –பேணலம் இத்யாதி –அவன் விபூதியை பேணுகை யாகிற நன்மை இல்லாத ராஷசர் உடைய –முந்நீர பெரும் பதிவாய் நீள் நகர் –அஞ்சினான் புகலிடமாய் -துர் வர்க்கம் அடங்கலும் புக்கு ஒதுங்கும்-இடம் ஆயிற்று –கடலை அகழாக உடைத்தாய் இருக்கையாலே சிலராலே பிரவேசிக்க அரியதாய் இருக்கை-கடல் சூழ்ந்த (ஜம்போத் த்வீபத்திலே )மகா த்வீபத்திலே உண்டான –நீள் நகர் –தேவர்கள் உடைய வர பலத்தாலே ஒரு நாளும்-அழியாதபடி -பூண் கட்டின இலங்கையிலே –(லங்காம் ராவண பாலிதாம் -திருவடி மதித்த ஐஸ்வர்யம் ) நீள் எரி வைத்து அருளாய் –தேவதைகள் உடைய வரத்தால் உண்டான-சக்தியையும் அழிக்க வற்றான சராக்நியை பிரவேசிப்பிக்க வேணும் -என்பர்களே–இலங்கை  நகர் அம்பு எரி உய்த்தவர்(-4-2) -என்னக் கடவது இறே –ஒரூரைச் சுட்டுத் தர வேணும் என்பர்கள் –நின்னை –
ஜகத் ரஷணத்தில் தீஷித்து இருக்கிற உன்னை –ஒரு விபூதியாக அழியுமாகில் செய்யலாவது இல்லை  இறே -என்று கண்ணும் கண்ண நீருமாய் நின்று இறே-அவர்கள் தன்னையும் அழிய செய்வது –விண்ணோர் –எப்போதும் ஒக்க கண்டு அனுபவிக்கிற  அத் தேசத்திலே-வர்த்திக்கிறவர்களும் அன்றிக்கே –நீ அவதரித்து தாழ நின்ற இடத்தில் -மனிச்சில் உண்டான நீர்மை நடமாடும் இங்கே
வர்த்திக்கிறவர்களும் அன்றிக்கே – பரணிலே இருப்பாரைப் போலே ஸ்வர்க்கத்திலே இருக்கிறவர்கள் இறே –கால் நிலம் தோய்ந்து –நிலத்தில் கால் தோய கடவர் அன்றிக்கே இருக்கிற நிலை அழிந்து –பூமியிலே வந்து கிட்டி –தொழுவர்-ந நமேயம் -என்று ராவணனைப் போலே இருக்கும் நிர்பந்தம்-தவிர்ந்து தொழா நிற்பர்கள் –நின் இத்யாதி –தொழுதார் பெரும் பிரயோஜனத்துக்கு தான் தொழுகிறார்களோ  –தொழுதால் கண்டு அனுபவிக்கும் வடிவைக் காண்கைக்காக அன்று இறே –
உன்னுடைய விக்ரஹத்தில் உண்டான அழகிலே –அநேகம் கூற்றிலே -ஏக தேசமான – ஒரு நாளைப் புறப்பாடு தான் காண்கைக்காகவோ -அன்று இறே –சக்ருத் வதாகார விலோக நாசயா த்ருணீ க்ருதா நுத்தம புத்தி முக்திபி –(ஆளவந்தார் ) வைகல் மாலையும் காலையுமே –அவ் வடிவைக் காண்கைக்கு  அர்த்திப்பார்  நேரும் அளவல்ல வாயிற்று இவர்கள் நேருவது –நாள் தோறும் –அது தன்னிலும் -இடைவிடாது தொழுவார்கள் –இத்தால் அநந்ய ப்ரயோஜனர்க்கு நேர்த்தி அற்பமாய் பலம் அநேகமாய் இருக்கும்- பிரயோஜனாந்தர பரருக்கு மாறி நேர்த்தி அநேகமாய் பலம் அற்பமாய் இருக்குமே –வைகல் மாலையும் காலையும் விண்ணோர் கால் நிலம் தோய்ந்து தொழுவர் – நின் மூர்த்தி-பல் கூற்றில் ஒன்றும் காணலும் ஆம் கொலோ என்று இறே -அன்று இறே –அங்கே நித்ய அஞ்சலி புடா – என்று இருக்கையாலே தொழுதார் தொழுத பிரயோஜனம் –(விபீஷணன் -ராக்ஷஸன் என்பதால் கீழ் கால் பாவாது-பூமியில் பற்றுக் கொம்பு ஆகாது)

பேண லமில்லா வரக்கர் முந்நீர பெரும் பதிவாய் நீள் நகர் நீளெரி வைத்தருளாய் என்று உன் பக்கல் அனுவர்த்தனம் ஆகிற நலம் இல்லாத ராக்ஷஸருடைய சமுத்ரமாகிற நீர் அரண் யுடைத்தான ஸூ வேலமாகிற பெரிய பர்வத ஸ்தானத்திலே பெரிய ஓலக்கத்தை யுடைத்தான லங்கையாகிற படை வீட்டிலே பட்டினி கிடக்கிற அக்னியானவன் பசி தீர்ந்து யுண்டு வளரும்படி ப்ரஷேபிக்க வேணும் என்று அபேக்ஷித்து–நின்னை-நிரதிசய போக்ய பூதனான உன்னை–விண்ணோர்-விலக்ஷண போகம் அறிந்து புஜிக்கிறாராக பாவித்து இருக்கிறவர்கள்–தாள் நிலந்தோய்ந்து தொழுவர்-நிலத்திலே தோய்ந்து தாள் தொழுவர் என்று ப்ரணாமத்தைக் காட்டுகிறது-தேவர்களாய் இருக்கச் செய்தே தங்கள் அர்த்தித்து-அத்தாலே-உத்தரம் தீரமாஸாத்வ -யுத்த -17-10-என்று பூமியிலே கால் பொருந்தித் தொழுவர் என்றுமாம்–நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று காண லுமாங்கொல் என்றே-இப்படி பரம உபாயமான பிரணிபாதாதிகளைப் பண்ணுகிறது நிரதிசய போக்யமாய் ஆஸ்ரித அர்த்தமாக நீ பரிக்ரஹித்த நாநா வான விக்ரஹங்களிலே ஓர் அம்சத்தைக் காணலாம் என்றோ -அன்றிலே என்றபடி –போகத்துக்கு ஆசைப்பட்டுக் காலிலே விழுந்தார்களை அறுக்கை தானே செய்யும் என்று கருத்து-வைகல் மாலையும் காலையுமே –-அஹோ ராத்ர விபாக யுக்தமான காலம் உள்ளதனையும் காணலுமாம் கொல் என்று அந்வயம் –

பேண லமில்லா வரக்கர் முந்நீர பெரும் பதிவாய் நீள் நகர் நீளெரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர் தாள் நிலந்தோய்ந்து தொழுவர்-ஸர்வ பூத ஸூஹ்ருத்தான உன்னையே விண்ணில் உள்ளவரான விலக்ஷண ஞான சக்திகரும்-இந்நிலம் நாம் கால் வைப்பதற்கு யோக்யம் அன்று என்று இருக்குமவராய் ஸ்வ பிரார்த்தனைக்காக இந்நிலத்தில் கால் பதிய வைத்தவர்களாய்–நீணகர்-பஹு காலம் தொடங்கிக் கடல் சூழ்ந்த மஹா த்வீபத்தில் உண்டான இலங்கையில்–நீள் எரி-பஹு நாளாகப் பட்டினி இருக்கிற மஹா அக்னியை சரமுகத்தால் பிரவேசிப்பிக்க அருள் செய்ய வேணும் என்று உன்னை பிரார்த்திப்பதே-வைகலும்-எப்போதும்–தொழுவர்-இதுக்காக உன்னைத் தொழவும் வேணுமே–நீள் நகருக்கு விசேஷணம்-பேணல் இத்யாதி-உன் விபூதியைப் பேணவும்-உன்னை அனுவர்த்திக்கவும் ஆகிற நன்மை இல்லாத ராக்ஷஸருடைய ஸமுத்ரமாகிற முந்நீரை யுடைத்தான ஸூ வேலமாகிற பெரிய பர்வத ஸ்தானத்திலே இருக்கிற என்றபடி -இப்படி பர அநர்த்தத்துக்காக உன்னை விண்ணோர் தொழுவர் அத்தனை போக்கி–நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று காண லுமாங்கொல் என்றே மூர்த்தம் ப்ரஹ்ம ததோ அபி தத் ப்ரிய தரம் ரூபம் யதத்யத்புதம் -(சதுஸ் ஸ்லோஹி-4 ) -என்றபடியே உனக்கு நிரதிசய ப்ரியமாய் எங்களுக்கு த்ருஷ்ட்டி சித்த அபஹாரியான பலவகைப்பட்ட
திவ்ய மங்கள விக்ரஹ பேதங்களில் ஒன்றை யாகிலும் காணலாமோ என்றே அல்லவே-ஊரைச் சுட்டுக் தர வேணும் என்றதற்காக அத்தனை
வைகல் மாலையும் காலையுமே –சாயம் ப்ராதஸ் சமயங்களில் -புன புன தொழுவர் என்றபடி –

தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழல் கமலம் அன்ன தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே -என்று இல்லாமல் பிரயோஜனாந்தர பரர்கள் உன்னை சரண் அடைந்து அவர்கள் கார்யம் செய்ய இரப்பதே-அனன்யா பிரயோஜனரான எங்களுக்கு ஒரு பிரயாசமும் படாமல் சேவை சாதிப்பதை உபேக்ஷித்து அவர்களுக்காக உடம்பு நோவக் கார்யம் செய்வதே–நின்னை விண்ணோர்-காணலுமாங்கொல் என்றே வைகல் மாலையும் காலையுமே-நாள் நிலந்தோய்ந்து தொழுவர் -என்று
தான் நாயகன் மூர்த்தியின் பல கூறுகளையும் ஆசைப் பட்டமையை தெரிவிக்கிறார் –நிலம் தோய்ந்து தாள் தொழுவர் -பூமியில் கால் பட அறுவறுப்பவர்கள் தங்கள் காரியத்துக்காக சாஷ்டாங்க
நமஸ்காராதிகளை ஷீராப்தி நாதனுக்கு செய்வார்கள்-உன்னை நோவு படுத்தி கார்யம் கொண்டு போவார்கள் -அன்றி –இலங்கை பாழாளாகப் படை பொருதானுக்கு பல்லாண்டு கூறுதுமே என்றும்
சென்று அங்கு தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
-என்றும் வாயில் தானும் சொல்லுவார்களோ அப்பாவிகள் –அமிர்தம் கிளர்வதையே கீழ் நோக்கிப் பார்க்கும் அப்பாவிகள் –மந்த்ரம் நாட்டி அன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட சுந்தரத் தோளுடையான்-தோளும் தோள் மாலையுமான அழகை பார்த்திலரே-காணலுமாங்கொல் என்றே -என்று அல்ல என்றபடி –வேந்தற்குற்றுழிப் பிரிவில் நாயகனைக் குறித்து நாயகி யிரங்கல். வேந்தற் குற்றுழிப் பிரிவாவது- ஒரு வேந்தனுக்கு ஒருவேந்தன்
தோற்றுவந்து சரணமடைந்தால் அவனுக்கு உதவி செய்வதற்காகப் பிரிந்து போதல். பாரங்குச நாயகியாகிய தலைவி ஸர்வேச்வரனாகிய தலைவன் தன்னைப் பிரிந்து போனதற்குக் காரணம், ராக்ஷஸர்கட்குத் தோற்றுவந்து சரணமடைந்து வேண்டிய தேவர்களின் பிரார்ததனையாம் என்று கருதி அவர்களை பழிக்கிறான்.-“தோள் கண்டோர் தோளே கண்டார் தொடு கழற் கமலமன்ன தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கைக் கண்டாரு மஃதே”(கம்பராமாயணம், உலாவியற்படலம்) என்றபடி உனது அழகிய திருவடிவத்தில் ஓர் அம்சத்தைக் கண்குளிரக்கண்டு அநுபவிப்பதில் அதிக ஆநந்தமாயிருக்க, தேவர்கள் அதனை ஆசைப்பட்டு வேண்டாமல் உன்காலில் விழுந்து எப்பொழுதும் தங்கள் பகையை
அழித்துத் தரவேண்டுமென்று வேண்டுவதே! என்று அவர்களைப் பழித்து இரங்கினான். அநந்ய ப்ரயோஜநரான எமக்கு ஒரு பிரயாஸமும் படவேண்டாமல் ஸேவை சாதிப்பது மாத்திரமே அருள் செய்யப் போதுமாயிருக்க, எம்மை உபேக்ஷித்து, பிரயோஜநாந்தா பார்க்காக உடம்பு நோவக் காரியஞ்செய்வதே! என்று எம்பெருமானது தன்மைக்கு நொந்துரைத்த் படியுமாம்.
-பேண்நலமில்லாவரக்கர் –தன்னுயிரைப்போலவே பிறவுயிரையுங் கருதி எல்லாப் பிராணிகளும் உய்ந்து வாழ வேண்டுமென்ற எண்ணமில்லாத ராக்ஷஸர். (பிறரை ஹிம்ஸிப்பதே தொழிலாயிருப்பவர்) என்னவுமாம். பதி என்றது இலங்காபுரிக்கு இடமான தவீபத்தை,
பெரும்பதி என்றும், நீணகர் என்றும் கூறியவற்றால், வரபலத்தால் எவராலும் அழித்திட வொண்ணாமை தோன்றும்.-நீளெரி வைத்தருளாய் = இராவணனுக்கு அஞ்சி அகலச் செல்லுந் தன்மையனான அக்நியை அவ்வச்சம் தணிந்து அங்கே அழியாது வளரச் செய்தருளாய் என்று பிரார்த்திக்கிறார்களாம் தேவர்கள்’ இலங்கையை நீறுபடுத்த வேணுமென்கை.
இலங்கையிலுள்ள ராக்ஷஸர்களை வேரோடு அறுத்தொழிக்க வேணுமென்று பிரார்த்தித்தவாறு.” என்றதனால். தான் நாயகனது மூர்த்தியின் பல கூறுகளையுங்காண ஆசைப்பட்டிருக்கின்றமை வெளியிடப்பட்டதாம்.–தாள் நிலந் தோய்ந்து தொழுவர் = பூலோகத்தில் வந்து திருப்பாற்கடலைச் சார்ந்து பரமனைப் பணிந்து வேண்டுவர்.-பூமியில் மநுஷ்ய நாற்றம் நாறுகிறதென்று மூக்கைப் புதைத்துக் கொண்டு மேலே நெடுந்தூரத்தில் நின்றுகொண்டு ஹவிர்ப்பாகங்களைப் பெற்றுப் போகுமயில்வினரான தேவர்கள் தங்களுலகத்தில் இருப்பு குலைந்ததனால் தெய்வத்தன்மை
குலைந்து பூமியிலே கால் தோயவந்து நின்று தொழுவர் என்கிறது. ‘நிலந்தோய்ந்து தாள் தொழுவர்’ என மாற்றி, தரையிலே ஸாஷ்டாங்கமாகப் பணிந்து உன் திருடிகளைச் சேவிப்பவர் என்னவுமாம்.–இப்படி அவர்கள் வைகல் மாலையும் தொழுவது நின் மூர்த்தி பல் கூற்றிலொன்று காலுமாங்கொலென்றே? –உன்னுடைய திருமேனியை நோவுபடுத்திக் காரியங்கொண்டு ஒழிந்து போகப் பார்க்கிறார்களே யன்றி “இலங்கை பாழளாகபவ் படைபெருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே” “சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி” என்று வாயினால் தானும் சொல்வார்களோ அப்பாவிகள். அமுத மெடுத்துக் கொடுக்கக் கடல் கடைந்தருளின காலத்து‘அமுதம் கிளர்வது எப்போதோ’ என்று கீழ்ப்புறமே நோக்கிக் கொண்டிருப்பவர்களேயன்றி ‘மந்தரம் காட்டியன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட சுந்தரத் தோளுடையான்” (நாச்சியார் திருமொழி 9-1) என்னப்பட்ட
அப்பெருமானுடைய தோளுந் தோள்மாலயுமான அழகை ஒரு நொடிப்பொழுதாகிலுங் கண்ணெடுத்துப் பார்த்திலரே பாவிகள்; அன்னவர்க்கேயோ நீ காரியஞ் செய்தருள்வது? ‘நின் பல் மூர்த்தியின் ஒரு கூறும்” என மாறியுரைக்கலாம்.–முந்நீர – குறிப்புப் பெயரெச்சம். ‘என்றே’ என்றவிடத்து ஏகாரம் வினாப்பொருளதாய் எதிர்மறை குறிக்கும். ‘என்று அல்லர்’ என்றபடி.

தாத்பர்யம்--கீழ் அவதார குணங்களை அனுபவித்தார் -இதில் தேவர்கள் பிரார்த்தனையால் அன்றோ
தன் சௌகுமார்யம் பாராமல் இந்த கர்சகமான லோகத்தில் அவதரித்தது என்று அவர்களை வெறுக்கிறார் –இந்த ராவணாதிகள் முந்நீர் அரணாக யுடைய ஒரு தீவில் ஒருவராலும் அணுக ஒண்ணாத இலங்கை என்னும் நகரை நிர்மித்து அதுக்கு ஒருவராலும் அழிய ஓண்ணாமல் வரம் பெற்று –வாசம் செய்து அநேக ஸஜ்ஜனங்களை துன்புறுத்தி அதுக்காக நீ அவதரித்து பானம் கொண்டு அழிக்க உன்னை அனவரதம் பிரார்த்திக்க நீ அவதரித்த இடத்தில் சவுந்தர்யம் அனுபவிக்காமல் இருந்த அவர்களுடைய பாஹ்ய ஹீனைக்கு நான் என் சொல்வேன் என்கிறார் –

7-4-ஆழி எழச் சங்கும் வில்லும் எழ-ப்ரவேஸம்-

மேல் திருவாய்மொழியிலே,(7-3) பகவத் விஷயத்திலே இவர் கவரப்பட்ட மனத்தினை யுடையரானபடி சொல்லிற்று:
மேல் திருவாய்மொழியில் இவர்க்குப் பிறந்த துக்கம், ஒன்றைக் கொடுத்து மாற்றுதல்,
ஒருவராலே நீக்குதல் செய்யுமது ஒன்று அன்றே அன்றோ?
‘இனி இவர்க்குச் செய்யலாவது என்?’ என்று சர்வேஸ்வரன் பார்த்து அருளி ‘ஒன்று கொடுக்கலாவது இதற்கு மேல் இல்லை அன்றோ?
என்று பார்த்துத் தன்னுடைய விஜய பரம்பரைகளைப் பத்தும் பத்தாகக் காட்டிக் கொடுக்கக் கண்டு அனுபவித்து உவகை அடைகிறார்.

நினைத்து அனுபவிக்கவில்லை -கண்டு அன்றோ அனுபவிக்கிறார்-

அவனுக்கு உறுப்பாம் அன்று தம்மையும் வேண்டி. அவனுக்கு உறுப்பு ஆகாத அன்று தம்மையும் வேண்டாத
‘வளவேழ் உலகின்’ என்ற திருவாய்மொழியைப் பாடிய ஆழ்வார் அன்றோ இவர்தாம்!
தம்மை அழிய மாறியும் அத்தலைக்கு நன்மை தேடுமவர் அன்றோ?
இப்படி இவர் தன்மையினை அறியுமவனாகையாலே, தன்னுடைய வெற்றிச் செயல்களைக் காட்டி
இவருடைய இழவு எல்லாம் தீரும்படி சமாதானம் செய்ய அனுபவித்துத் தலைக் கட்டுகிறார்.

இறந்த காலத்தில் உள்ளவை அடங்கலும் சம காலத்திற்போலே கண்கூடாகக் காணலாம்படி செய்து கொடுத்தான்.
அடியிலே இவர்தாம் எல்லாவற்றையும் கண்கூடாகக் காண வல்லராம்படி செய்து கொடுத்தான் அன்றோ?
மயர்வற மதிநலம் அருளின பின்பும் இவ்வளவும் வர வாசனை பண்ணுவித்தானே! ஆகையாலே, இவர்க்கு ஒரு குறையும் இல்லையே!

முதலிலே -திருவடியில் -திரு உலகு அளந்த விருத்தாந்தம் தொடக்கமாக -என்றவாறு

அன்றிக்கே,
மேலே, ‘பேரெயில் சூழ்கடல் தென் இலங்கை செற்றபிரான்’ என்று
இராமாவதாரத்திற்செய்த வெற்றிச்செயல் சொல்லப்பட்டமையாலே,
அவ்வழியாலும் எல்லா அவதாரங்களிலும் உண்டான வெற்றிச் செயல்களை நினைந்து,
இராமாவதாரத்தில் நடத்திய வெற்றிச் செயல்களைக் கண்டு உகக்கும் சக்கரவர்த்தியைப் போலவும்,
கிருஷ்ணாவதாரத்தில் நடத்திய வெற்றிச் செயல்களைக் கண்டு உகக்கும் ஸ்ரீவசுதேவரைப் போலவும்
இவரும் உகந்து பேசுகிறார் என்னுதல்.

‘அஹம் புந;- ‘அஹம்புந: தேவகுமார ரூபம் அலங்க்ருதம் தம் ஸூதம் ஆவ்ரஜந்தம்
நந்தாமி பஸ்யந்நபி தர்ஸநேந பவாமி த்ருஷ்ட்வா ச புநர்யுவேவ’என்பது, ஸ்ரீராமா. அயோத். 12 : 105.
இது, கைகேகியைப் பார்த்துத் தசரத சக்கரவர்த்தி புலம்பிக் கூறுவது.

அஹம் புந–என் தன்மையை அறிந்து என் வழியே போந்த நீ, ‘பெருமாள் காடு ஏறப்போக’ என்றால்
நான் உயிர் வாழ்வேன் என்று சொன்னாயே!
தேவ குமார ரூபம் – அது கிடக்க; இவரையே நீ தான் ‘காடு ஏறப்போக’ என்கிறது?
‘இவர்க்கும் அவ்வளவேயோ?’ என்று சிறியத்தான் கேட்க, ‘கண்ணெச்சில் ஆம்’ என்று
தரம் போராதாரை ஒப்பாகச் சொல்லி இருடி கரி பூசுகிறான் என்றார்.
அலங்க்ருதம் – அதனாலும் வெறும் புறங்காண் ஒரு போலிச் சொல்லலாவது! ஒப்பித்தால் ஒக்கச் சொல்லலாவார் இல்லை.
தம் ஸூதம் – இவனுக்கு இரண்டு படியும் உத்தேசியமாய் இருக்கிறபடி.
ஆ வ்ரஜந்தம் – மலர் மலரும்போது எங்கும் ஒக்கப் பிறக்கும் மலர்ச்சி போலே.
அதுவும் வண்டினை நோக்கி அன்றோ மலர்வது? இவரும் அனுபவிக்கின்றவர்களைக் குறித்தே அன்றோ?
நந்தாமி பஸ்யந்நபி – கண்டபடியே இருக்கச் செய்தே, காணாது கண்டாரைப் போலேயாயிற்று,
நாடோறும் நாடோறும் கணந்தோறும் கணந்தோறும் உகக்கும்படி.
தர்ஸநேந – அணைத்தல், வார்த்தை சொல்லுதல் செய்ய வேண்டா; காட்சியே அமையும்.
கரை புரண்ட அனுபவம் உள்ள இடத்திற்போலே காணும் பிரயோஜனம்,
‘ஸதாபஸ்யந்தி’ அன்றோ?
பவாமி த்ருஷ்ட்வாச புந: யுவேவ-அறுபதினாயிரம் ஆண்டு வயது நிறைந்து கிழவனான சக்கரவர்த்தி,
பெருமாளைக் கண்ட பின்பு, பெருமாளுக்கும் தனக்கும் வாசி தெரியாதபடியானான்.’-
வா போகு–வந்து ஒரு கால் கண்டு அருளி -ஏசல் கண்டு –
‘காமனைப் பயந்த காளை’ என்னுமாறு போலே தன்னை அனுபவிப்பாரையும் தன்னைப் போலே ஆக்கி
உஜ்ஜீவிப்பிக்கும் விஷயம் போலே காணும்.

‘ஸ்ரீவசுதேவர்’ பெரிய திருவிழாவை அடைந்தாற்போலே பிள்ளைகளின் திருமுகங்களைப் பார்ப்பதை அடைந்து,
தமக்கு உண்டாய் இருந்த முதுமை நீங்கி யௌவனம் உடையவரானார்’ என்னும்படி ஆனாரே அன்றோ ஸ்ரீவசுதேவரும்?

‘மஹோத்ஸவமிவ ஆஸாத்ய புத்ராநந விலோகநம்
யுவேவ வஸூதேவ: அபூத் விஹாய அப்யாகதாம் ஜராம்’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 20 : 52.

அன்றிக்கே, (இது மூன்றாவது சங்கதி )
‘மேலே, ‘கண்ணபிரானுக்கு என் பெண்மை தோற்றேன்’ என்று கொண்டு இத்தலையில் தோல்விக்கு
எதிர்த் தலையான அத் தலையில் வெற்றிச் செயல்களை அநுசந்திக்கிறார்’ என்று
பிள்ளை திருநறையூர் அரையர் பணிக்கும்படி-

சூட்டு நான் மாலைகள் தூயன ஏந்தி -கொடுத்துக் கொள்ளாதே கொண்டதுக்கு கைக்கு கூலி கொடுத்து -அமுது செய்திடில் ஒன்றுக்கு
நூறாயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளவும் செய்ய வேண்டுமே -வென்று தரும் மேவி கற்பார்க்கு -இந்த திருவாயமொழி –
ஸமஸ்த சரிதங்களைக் காட்டி -ஆழ்வார் ஸமஸ்த துக்கங்களையும் -மகள் தோழி தாயார் தசை துக்கங்களை -தீர்த்து அருளினான் –
வேண்டிற்று எல்லாம் தரும் கோதில மணி வண்ணன் -கனம் குழை இட காது பெருக்குவாராய்ப் போலே விச்வாஸம் பிறப்பித்து
பைய பைய -சிறுச் சிறிதே விழித்து -கோதில் வாய்மையினான் சாந்தீபன் –

மகா க்ரம -கிரமத்தில் ஏத்தி அருளுவான்
இது ஒரு நேர் முக ஒளி பரப்பு -ஆழ்வார் இருந்த இடத்திலே பத்தும் பத்தாக காட்டி அருளுகிறார்
இதற்கு மங்களா சாசனம் பண்ணாமல் இருக்கக் கூடாதே –

நாலாம் திருவாய் மொழியில் –
விஸ்லேஷ ஜெனிதமான ஆர்த்தியாலே பிராப்தி த்வரையை யுடைய இவர் -தம்முடைய
ஆர்த்தி ஹேதுவான பிரபல பிரதிபந்தகங்களைப் போக்குகைக்கு -சர்வ சக்தியான சர்வேஸ்வரனை ஒழிய சமர்த்தர் இல்லை என்று அறுதியிட்டு
அவனுடைய த்ரைவிக்ரம வியாபாரத்தையும்
அம்ருத மதனத்தையும்
பூமி உத்தரணத்தையும்
ஜெகன் நிகரணத்தையும்
பாரத சமர ப்ரவர்த்தகத்வத்தையும்
ஹிரண்ய வாதத்தையும்
லங்கா பங்கத்தையும்
பாண யுத்தத்தையும்
ஜகத் ஸ்ருஷ்ட்டி பிரகாரத்தையும்
கோவர்த்தன உத்தரணத்தையும்
அனுசந்தித்து -ஏவம்வித விஜய ஆபத்தான விசிஷ்டனான சர்வேஸ்வரனுடைய விரோதி நிரசன சாமர்த்தியத்தை
அனுசந்தித்து அருளுகிறார் –

ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை
வாழி எழத் தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகங் கொண்ட வாறே
.–7-4-1-

ஆழி எழ –‘ஆயிரக் காதம் பறப்பதன் குட்டி ஐந்நூற்றுக் காதம் சிறகு அடிக் கொள்ளும்’ என்னுமாறு போலே முற்கோலி வளர்ந்தபடி.-சிறகடிக் கொள்ளுகையாவது, பின்பு தூரப் பரப்பதற்குத் தகுதியாம்படி இளமையிலே பயிலுதல்.-அச்சங்கொள்ளுதற்கு இடம் அல்லாத இடத்திலும் பயப்படக் கூடியவர்கள்,-அஞ்சத்தக்க இடத்தைக் கண்டால் வாளா இரார்களே அன்றோ?-பய சங்கை இல்லாத இடத்திலும் அஞ்சும்படி செய்கிறது விஷய வைலக்ஷண்யம் அன்றோ?-துரியோதனன் கோட்டியிலே கிருஷ்ணன் எழுந்தருளின போது அவர்கள் செய்த வஞ்சனத்தைக் கண்டு, அச்சங்கொண்டு, தம்முடைய திருமாளிகையில் படுக்கையையும் தடவிப் பார்த்தாரே அன்றோ ஸ்ரீவிதுராழ்வான்?

கடல் கலங்குவது தன்னளவிலே அன்றோ?-பிள்ளை யுறங்கா வில்லிதாசர் ‘மஹாமதி என்றது, மதிகேடர் என்றபடியோ?’ என்றார்,-பிள்ளை தாம், ‘பெருமாள் எழுந்தருளும் போது எங்கேனும் ஒரு சலனம் பிறக்கில் நம் பிராணனை விடுமத்தனை’ என்று
சொட்டையை உருவிப் பிடித்துக் கொண்டு சேவிப்பாராம்.
நம் முதலிகள் அதனைக் கண்டு, இவரை ‘மஹாமதிகள்’ என்று அழைப்பார்கள்.
அறிவு உண்டாகையாவது, பகவத் விஷயத்தில் அறிவு கெடுகை அன்றோ?

ஆழி எழ –இவன் வளர்ந்தருளுகைக்குக் கணிசித்த படியைக் கண்டு,
‘தனியாக ஒண்ணாத’ என்று அஞ்சித் திருவாழி யாழ்வான் ஒரு கையிலே ஏறினார்.

சங்கும் வில்லும் எழ--தூசி ஏறினவர்கள் போரப்-( புகப் )- புக்கவாறே நின்ற இளவணி கலங்கி மேலே நடக்குமாறு போலே,இளவணி-காலாள்.-மற்றை ஆழ்வார்களும் மற்றைக் கைகளிலே ஏறினார்கள்.(ஆழியும் எழ இல்லையே -ஆகவே இவை இளவணி )
அன்றிக்கே, (பரிவால் முதல் அர்த்தம்)-‘இரை பெறாத இடத்தே இருந்து சீறுபாறு என்னக் கூடியவர்கள் இரையுள்ள இடத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடார்கள் அன்றோ?’ என்னுதல்; இனத்திலே ஒருவன் வாழ்வதனைக் கண்டவாறே உறவினர்கள் கூட்டம் வந்து மேல் விழுமாறு போலே, மற்றைத் திவ்விய ஆயுதங்களும் மேல் விழுந்தபடி என்னுதல்-

திசை அளப்பான் பூவார் அடி நிமிர்த்த போது–ஒரு பூவினைக் கொண்டே அன்றோ காடும் ஓடையும் அளந்து.கொண்டது?-பூவை இட்டுப் பூவை கொண்டான் காணும்.
அப் படுக்கையிலே பொருந்தும் சௌகுமார்யத்தை யுடையவன் இக்காடும் ஓடையுமான உலகத்தினை அளக்கப் புக்கால், இவர்களுக்கு இப்படிப்பட வேண்டாவோ?
அவன் இப்படி அளவா நின்றால் இவர்கள் பேசாது இரார்கள் அன்றோ?’

அன்றே பிறந்து அன்றே வளர்ந்தான் ஒருவனுடைய செயல் அன்றோ இவை அடைய?
ஆகையாலே, பரிகைக்குக் காரணம் உண்டு என்றபடி

முடி பாதம் எழ--திருமுடியளவும் திருவடிகள் கிளர.-‘முடி மேலே பாதம் எழ’ என்றும் சொல்லுவர்கள் நிருத்த லக்ஷணத்துக்காக.-அப்பன் ஊழி எழ –-மஹாபலி தகுதி இல்லாமல் அரசு நடத்துகையால் வந்த பொல்லாக் காலமானது போய், நல்லடிக் காலமாயிற்று;
நல்லடிக் காலம் கிளரும் படியாகவும்.-அப்பன் உலகம் கொண்டவாறே –
‘மஹேபகாரகனான சர்வேஸ்வரன் உலகத்தைக் கொண்ட ஆச்சரியம் இருந்தபடி என்?’ என்னுதல்:-அன்றியே, ‘உலகத்தைக் கொண்ட பிரகாரம் இருந்தபடி என்?’ என்னுதல்.
அப்பன் அப்பன் என்று உவகை அடைகிறாராகவுமாம்.-அப்பன் – ‘இந்திரனுக்கு இராயச்சித்தைக் கொடுத்த செயலாலே எனக்கு ஆத்துமாவைத் தந்தான்’ என்கிறாராகவுமாம்.-

———–

ஆறு மலைக்கு எதிர்ந்து ஒடும் ஒலி அர
வூறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல்
மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன்
சாறு பட அமுதம் கொண்ட நான்றே.
–7-4-2-

திருப்பாற் கடலைக் கடைந்த ஆச்சரியமான காரியத்தைச் சொல்லுகிறார்.
அஜிதன் -அமிருத மதன பெருமாள் திருநாமம் -எட்டு உருவங்கள் கொண்டாரே
ஹரி கஜேந்திர மோஷ பெருமாள் திருநாமம்-

ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி- கடலிலே மந்தர மலையை நட்டவாறே கடல் கொந்தளித்து, மலை போய்த் தாழ்ந்து கொடுத்தது; -நீரானது தாழ்ந்த விடத்தே ஓடக் கடவதன்றோ?-ஆறுகளானவை மலையைக் குறித்து எதிரிட்டு ஓடுகிற போதை ஒலியானது இவர்க்குச் செவியிலே படுகிறபடி.-இவர்க்கு முக் காலத்திலும் உள்ளன எல்லாம் தெரியும்படி அன்றோ அவன் வெளிச் சிறப்பித்தது?

அரவு ஊறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி – வாசுகியினுடைய உடலைச் சுற்றிக் கடைகிற போதைச் சரசர வென்கிற ஒலியும். (கீழே சல சல என்ற ஒலி ) ஊறு – உடம்பு. சுலாய் – சுற்றி.

கடல் மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி –மந்தர மலையை கொடு புக்கு நட்டுத் திரித்த போது,-கீழ்க் கடல் மேற் கடலாய்க் கிடாய்ப் பாய்ச்சல் போலே-திரையோடு திரை தாக்கிக் கிளருகிற ஒலியும்,

சாறு பட –கடலிலே நீர் கோதாம்படி பிரயோஜனமான அமிருதம் உண்டாக. என்றது,
‘நீரிலே ரசமான பசை பட’என்றபடி.-அன்றிக்கே, சாறு என்று திருவிழாவாய், ‘தேவ சாதிக்குத் திருவிழா உண்டாம்படியாக’ என்னுதல்; சாறு பட – என்றபடி.-

————-

நான்றில ஏழ் மண்ணுந் தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும்
நான்றில ஏழ்கடல் தானத்தவே அப்பன்
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே
.–7-4-3-

இவன் பெரிய யானைத் தொழிலைச் செய்யா நிற்கச் செய்தேயும், முன்பு போலே ஒரு குறை அற, உண்பார் உடுப்பாராய்ச் செல்லுகிறபடி. ஆதாரமானவன் கூட நிற்கையாலே இவற்றுக்கு ஒரு குறை வாராதே. ஏழு தீவுகளும் சலித்தன இல்லை: தனது தனது இடத்தில் இருந்தன ஆயின.

நீர்ப் பண்டம் அன்றோ தண்ணீர்? அதுவும் தன் இடத்திலே கிடக்கும்படியாக.
அவற்றின் கடினத் தன்மையும் இதனுடைய நெகிழ்ச்சித் தன்மையும் பயன் அற்றவை;
‘அவன் திருவுள்ளக் கருத்து யாது ஒன்று? அதுவே காரியமாக முடிவது,’ என்கை.
புண்ணியம் பாபம் -பேற்றுக்கு சாதனம் இல்லை -இரண்டையும் தொலைத்து –
அவன் நிர்ஹேதுக கிருபையே மோக்ஷ ஹேது போலே –

மாறுபடுருவத் தைக்கும் படியாகக் குத்தி. அண்ட பித்தியினின்றும் ஒட்டு விடிவித்து எடுத்து ஏறட்டு, எயிற்றிலே எற்றிக் கொண்டு (வியாபரித்த போது )செயல் செய்த போது:-அசையாத பொருள்களோடு அசையும் பொருள்களோடு வாசி யறத் தம் தம் இடத்திலே நின்றன-

————

நாளும் எழநிலம் நீரும் எழ விண்ணும்
கோளும் எழ எரி காலும் எழ மலை
தாளும் எழச் சுடர் தானும் எழ அப்பன்
ஊளி எழ உலகம் உண்ட ஊணே
.–7-4-4-

நாளும் எழ –கால நியதி போக.-‘அக்காலத்தில் பகல் இல்லை; இரவு இல்லை; ஆகாயம் இல்லை; பூமி இல்லை; இருள் இல்லை: சூரிய சந்திரர்கள் இல்லை;
வேறு ஒன்றும் இல்லை; பிரஹ்மம் ஒன்றே சமஷ்டி புருஷரூபமாய் இருந்தது,’எழ.-பேர. ஆண்டு என்றும், மாதம் என்றும், நாள் என்றும், கலை என்றும், காஷ்டை என்றும் சொல்லுகிறவை எல்லாம் ஸூரியனுடைய செல்லுதல் வருதலாலே வருகின்றனவை அன்றோ? பாகுபாட்டைச் செய்கிற ஸூரியன் உள்ளே புக்கால் பாகுபடுத்தப் படுகின்ற இவையும் போமித்தனை அன்றோ?

நிலம் நீரும் எழ--காரணங்களோடு காரியங்களோடு வாசி அற உள்ளே புக.
காரியம் உள்ள இடத்தே காரணம் தொடர்ந்து நிற்றலைக் காணா நின்றோம்;

அப்பன் ஊளி எழ--ஒலி உண்டாக. என்றது, ‘ஒவ்வொரு காலத்தில் கலகங்கள் உண்டானால்
நம்முடைய அடைய வளைந்தானுக்குள்ளே புகும் போது திருவாசலில் பிறக்கும் ஆரவாரம் போலே,-திரு வயிற்றிற் புகுகிற போது பிராணிகளுக்கு உண்டான பரபரப்பான ஒலிகள் கிளர’ என்றபடி.-(பசி என்று பன்னீராயிரப்படி )-ஊளி -சப்தம் -உறிஞ்சின ஓசை –எழ -என்றது தோற்ற என்றபடி -லோகத்தை உண்ட படி –
அன்றிக்கே, ‘‘இவற்றை உரிஞ்சுகிற போதை ஒலி காண்!’ என்று நடாதூர் அம்மாள் பணிக்கும்படி’ என்று அருளிச் செய்வர்’-அதனால் நினைக்கிறது, ஈஸ்வரத்வப் பிடரால் அன்றியே பத்தும் பத்தாக அடியார்களைக் காப்பாற்றுதலேயாய் இருக்கிறபடி.-

————-

ஊணுடை மல்லர் ததர்ந்த ஒலி மன்னர்
ஆணுடைச் சேனை நடுங்கும் ஒலி விண்ணள்
ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட ஒலி அப்பன்
காணுடைப் பாரதம் கையறை போழ்தே.
–7-4-5-

பசளைக் கலம் (பச்சைப்பானை )நெரித்தாற்போலே வருத்தம் இன்றியே நெரித்த படியைப் பற்ற.-வலியைப் போரப் பொலியச் சொல்லி வைத்து,‘ததர்ந்த’ என்கிறார் காணும்,

காணுதற்கு இனிய பாரதம். கை அறை போழ்து –-கையும் அணியும் வகுத்து அங்கோடு இங்கோடு உலாவிப் படை பொருத்தி,-நீங்கள் இன்னபடி செய்யக் கடவீர்கோள்! நாங்கள் இன்னபடி செய்யக் கடவோம்’ என்று கை தட்டி விட்ட போது இந்த ஒலி எல்லாம் உண்டாயின.

காணுடைப் பாரதம் கை அறை போழ்தே--கண் முதலான கரணங்களைப் படைத்ததற்குப் பிரயோஜனம் அற்றை நிலையைக் காண்கை அன்றோ?
சேனையின் தூளியும், கையும் உழவு கோலும் சிறு வாய்க் கயிறும், நாற்றின திருவடிகளுமாய் நிற்கிற நிலை அன்றோ அது?
இந் நிலைக்கு உபேயத்துவ மாத்திரமன்றிக்கே, உபாயத்துவமும் உண்டு என்கிறார்,

‘மாம்’ என்று தொடங்கி. ‘கையும் உழவு கோலும், பிடித்த சிறு வாய்க் கயிறும்.
ஸேநா தூளி தூசரிதமான திருக் குழலும், தேருக்குக் கீழே நாற்றின திருவடிகளுமாய் நிற்கிற சாரத்ய வேஷத்தை ‘மாம்’ என்று காட்டுகிறான்’ என்பது, முமுக்ஷூப்படி சரம ஸ்லோக ப்ரகரணம், -ஸூ-. 33.-

——————–

போழ்து மெலிந்த புன் செக்கரில் வான் திசை
சூழும் எழுந்து உதிரப் புனலா மலை
கீழ்து பிளந்த சிங்கம் ஓத்ததால் அப்பன்
ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே
.–7-4-6-

கீழில் பாட்டில் பந்துக்கள் பகையாக வந்து உதவின படி சொல்லிற்று -இதில் ரக்ஷகனான பிதா பகையாக வந்து உதவின்படி சொல்லுகிறது

மலை கீழ்து பிளந்து சிங்கம் ஒத்ததால் –-‘ஒரு மலையைக் கீழே இட்டுக் கொண்டு மேலே இருந்து அதனைப் பிளந்த சிங்கத்தை ஒத்தது’ என்னுதல்.-அன்றிக்கே,-‘கிழித்துப் பிளந்த சிங்கத்தை ஒத்தது’ என்னுதல்.-அன்றிக்கே-‘மகிழ்ந்து பிளந்த சிங்கத்தை ஒத்தது’ -என்னுதல்.-‘இரண்டு கூறு செய்து உகந்த சிங்கம்’ திருச்சந்த விருத். 62.

இத்தாலும் சொல்லிற்றாயிற்று,-ஆபத்துக் கனத்ததனையும் கடுக வந்து இரட்சிக்கும் என்கை.-தமப்பன் பகையாக உதவினவன், அவனில் அண்ணியனான தான் தனக்குப் பகையானால் உதவச் சொல்ல வேணுமோ?-‘தனக்குத் தானே அன்றோ பகைவன்?’ என்கிறபடியே-

————-

மாறு நிரைத்திரைக் குஞ்ச ரங்களின்
நூறு பிணம் மலை போற் புரளக் கடல்
ஆறு மடுத்து உதிரப் புனலா அப்பன்
நீறு பட இலங்கை செற்ற நேரே
.–7-4-7-

மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள் – சாரிகை வந்த சடக்கு, நாலு திசைகளிலும் விட்ட அம்புகள் எதிர் அம்பாய் ஒன்றோடு ஒன்று பொருது-கலார் கலார் என்று ஒலிக்கின்ற ஒலி, கடல் இரைத்தாற்போலே இரா நின்றது.-சாரிகை வந்த சடக்கு, தன்னில் தான் எதிரம்பு கோத்தது காணும். –-அஸ்தரம் –மந்திரித்து –சஸ்திரம் -மந்த்ரம் இல்லா அம்புகள் .

இலங்கை செற்ற நேரே –இலங்கை செற்ற பொழுது. ‘நேர்’ என்பது, ‘நேரம்’ என்று காலத்தைக் காட்டுவதாம்.-‘இலங்கை செற்ற பொழுது மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள்’ என்பது அந்வயம்.-அன்றிக்கே,-இலங்கையைச் செற்ற வாய்ப்பு’ என்னுதல்.-அன்றிக்கே,
‘மாயாப் பிரயோகத்தால் அன்று, செவ்வைப் பூசலிலே நின்று காண் இலங்கையை அழித்தது’ என்னுதல்.-நேர் – நேராக என்றபடி.-அப்போது, ஏகாரம்: தேற்றகாரம். ‘நேர்மையாலே இலங்கை செற்றது’ என்றபடி.-

—————-

நேர் சரிந்தான் கொடிக் கோழி கொண்டான் பின்னும்
நேர் சரிந்தான் எரியும் அனலோன் பின்னும்
நேர் சரிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன்
நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட அன்றே
–7-4-8-

கீழ் அசுரர்களை மார்விலே அம்பேற்று ஜெயித்த படி சொல்லிற்று -அவர்களுக்கு ஆபாஸ்ரயமாக வந்த தேவ ஜாதியையும் ஜெயித்த படி சொல்லிற்று இப்பாட்டில் –

கோழிக் கொடி கொண்டான் நேர் சரிந்தான் – மயிலைக் கொடியிலே யுடையனாய்த் தேவ சேனாதிபதியாய் இளமறியாய்த் தூசித் தலையிலே நின்ற சுப்பிரமணியன்
தோற்றரவிலே கெட்டான். ( இளமறி-குட்டிக் குதிரை -இளம் கன்று பயம் அறியாதே )

பின்னும் நேர் சரிந்தான் எரியும் அனலோன் – அவ்வளவிலே நாற்பத்தொன்பது அக்கினிகளும் பெரிய கிளர்த்தியோடே எரிந்து தோன்றின:-49 மருத் கூட்டங்களும் உண்டே -ஜாடராக்கினி வயிற்றுக்குள் அவையும் எல்லாம் பின்னிட்டன.

பின்னும் நேர் சரிந்தான் முக்கண் மூர்த்தி –-‘மகன் கொடி கட்டிக் கொண்டு சென்று இளிம்பு பட்டான்’ என்று தன் ( எருதுக் )கொடியைப் பொகட்டு வந்து தோற்றின உடனேயே,
கண்ணைப் புதைத்துக் கெட்டு ஓடத் தொடங்கினான்.
அவன் மறைத்துக் கொண்டு போக, இவர், ‘முக்கண் மூர்த்தி கண்டீர்’ என்று கண்ணைக் காட்டிக் கொடுக்கிறார்.-எல்லாம் செய்தாலும் உடம்பில் அடையாளத்தை மறைக்கப் போகாதே அன்றோ?

தன்னோடு ஒக்க ஆறல் பீறலாய் இருப்பது ஒரு தேவதையைப் பற்றி, அரணுக்குள்ளே இருப்பாரைப் போலே திண்ணியனாய் இருந்தானாயிற்று. புருடோத்தமனைப் பற்றி இருப்பாரைப் போலே, கபாலி கந்தரைப் பற்றி நிர்ப்பரனாய் இருந்தான்.
சர்வேஸ்வரனைப் பற்றி ‘எதினின்றும் அஞ்சுகிறான் அல்லன்’ என்று இருப்பாரைப் போன்று எண்ணினான்.

திண் தோள் கொண்ட – ‘உஷை தந்தை அற்றவள் ஆக ஒண்ணாது’ என்று கரத்தைக் கழித்து விட்டான்.-கர பாதை அன்றோ இவனைக் கண்டார் கால்களில் எல்லாம் விழச் செய்தது’ என்று அவனுக்குள்ள கரத்தைக் கழித்து, இறையிலி யாக்கி விட்டான்.-ஆயிரங்கைகளையும் கொண்டு சம்பந்தம் இல்லாத விஷயத்திலே காரியங்கொள்ளுகையாலே அவற்றையே கழித்து விட்டான். அந்தத் தேவதை தானே வந்து, ‘வரம் தந்த நீயே அதனைக் கழிக்கவோ?-(அவரவர் -அந்தராத்மாவாக நின்று அன்றோ நீயே வரம் கொடுத்தாய் )
நீ இவனைக் கொல்லில் என் காலிலே குனிவார் இல்லை இனி’ என்று பல்லைக் காட்டுகையாலே விட்டான்.

இதனால் என் சொல்லியவாறோ?’ எனின், ஈஸ்வரனை ஒழிந்தார் அடங்கலும்,
தாங்கள் உளரான போது காப்பாற்றுகின்றவர்களாகச் செருக்குக் கொண்டு.
ஆபத்து வந்தவாறே இவர்களைக் காட்டிக் கொடுத்துத் தங்கள் தங்களைக் கொண்டு தப்புவர்கள்;
‘எல்லா நிலைகளிலும் தன்னை அழிய மாறியாயினும் அடியார்களைக் காப்பாற்றுவான் சர்வேஸ்வரன் ஆகையாலே, அடையத் தக்கவன் இவனே; அல்லாதார் பற்றத்தக்கவர் அல்லர்,’ என்னும் இடம் சொல்லியபடி.

———–

அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல்
அன்று சுடர் இரண்டும் பிறவும் பின்னும்
அன்று மழை உயிர் தேவும் மற்றும் அப்பன்
அன்று முதல் உலகம் செய்ததுமே.
–7-4-9-

வாணனைத் தண்டித்த அன்று கண்டீர் உலகத்தை உண்டாக்கினான்’ என்று அதனையே பேசுகிறார் என்னுதல்.-பயிர் செய்கையே அன்றே வேண்டுவது? பயிர் அழியாமல் நோக்கின அன்றே அன்றோ – பயிர் செய்ததாவது?

பின்னும் அன்று மழை உயிர் தேவும் மற்றும் – அதற்கு மேலே மழை பெய்யக் கடவதான மேகம்,-மழையாலே உயிர் வாழக் கூடிய ஆத்துமாக்கள்,-மழையைத் தோற்றுவிக்கின்றவர்களான தேவர்கள், மற்றும் உண்டான திரியக்குத் தாவரங்கள் முதலானவைகள்.-அப்பன் –-எல்லாப் பொருள்களையும் தோற்றுவித்தவன்.-

————–

மேய் நிரை கீழ் புக மா புரளச் சுனை
வாய் நிறை நீர் பிளிறிச் சொ ரிய இன
ஆநிரை பாடி அங்கே ஒடுங்க அப்பன்
தீ் மழை காத்துக் குன்றம் எடுத்தானே.
–7-4-10-

தீ மழை காத்து –கேட்டினை விளைக்க வந்த மழையாகையாலே ‘தீ மழை’ என்கிறார்.
ஆயர்களும் பசுக்களும் அன்றிக்கே அன்று தாமே அன்றோ நோவு பட்டார்?-குன்றம் எடுத்தானே –‘மலையை எடுத்துக் காத்த மஹோபகாரகன்’ என்கிறார்.-பசுக்கள் பக்கலிலும் பெண்கள் பக்கலிலும் கிருஷ்ணன் கிருபை பண்ணுகைக்கு ஹேது -அஞ்ஞத்தையும் பாரதந்தர்யமும் –
‘பசியினால் உண்டான கோபம் ஆறுந்தனையும் மழை பெய்து போவானுக்கு’ என்று ஏழு நாள் அன்றோ மலையைத் தரித்துக் கொடு நின்று நோக்கிற்று?-கல் எடுத்து கல் மாரி காத்தாய் -சொல் எடுத்து பாடுவது அரிதானதே –-சொல் எடுத்து தான் கிளியை சொல் என்று துணை மேலை மேல் சோர்கின்றாள்

‘இதனால் என் சொல்லியவாறோ?’ எனின்,-அடியவன் தப்பினாலும் தான் பொறுத்துக் காப்பாற்றுவான் என்பதனைத் தெரிவித்தபடி.-குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
ஊணைப் பறித்தோம் உயிரைப் பரிக்கக் கூடாது என்ற உதார குணத்துக்கு பல்லாண்டு –

————

குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும்
ஒன்றி நின்ற சட கோபன் உரை செயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே
–7-4-11-

குன்றம் எடுத்த பிரான் அடியாரோடும் ஒன்றி நின்ற சடகோபன் உரை செயல் –
கோவர்த்தனத்தை எடுத்துத் தரித்த நீர்மையிலும்-அப்போதை அழகிலும் ஈடுபட்டு இருக்குமவர்களோடே கூடி நின்று-தாமும் பிரீதராய்,-பிரீதிக்குப் போக்கு வீடாகச் சொன்ன பாசுரமாயிற்று.–த்ரிபங்கியாய் நின்ற அழகு –

நன்றி புனைந்து ஓர் ஆயிரம் – சர்வேஸ்வரனுடைய பரத்வ சௌலப்யங்களை வகையிட்டுத் தொடுத்த ஆயிரம் நன்மையாவது,-சம்சாரி சேதனுக்கு, இவனே சர்வ ஸ்மாத் பரன் என்றும், சர்வ சுலபன் என்றும்,-சர்வ சமாஸ்ரயணீயன் என்றும் சொல்லுகை அன்றோ?
அவையே அன்றோ முதல் திருவாய்மொழி தொடங்கி அருளிச் செய்தது?
அன்றிக்கே,-எம்பெருமானுடைய வெற்றிச் செயல்களைத் தொடுத்துச் சொன்ன இப் பத்தும்’ என்னுதல்.

இன்ன வெற்றி விசேஷித்து இல்லாமையால் ஸமஸ்த வெற்றி-
செல்வத்தை விரும்புகிறவனுக்குச் செல்வத்திற்குத் தடையாக வுள்ளனவற்றை-கவனக்குறைவு அசுத்தி பேராசை போன்ற -வென்று கொடுக்கும்;
கேவலனுக்கு -வேறே ப்ரயோஜனமாகிய -விரோதியைப் போக்கிக் கொடுக்கும்;
பகவானைச் சரணம் அடைந்தவர்களில்-உபாசகனுக்கு ஐம்புலன்களையும் வெல்லுதல் முதலியவற்றைச் செய்து கொடுக்கும்;-பிரபந்நனுக்குக் கைங்கரிய விரோதிகளை வென்று கொடுக்கும்.

இது தான் ‘குலந்தரும்’ என்கிறபடியே எல்லா அபேக்ஷிதங்களையும் கொடுக்கும்’;
‘ஐஸ்வர்ய கைவல்ய பகவல் லாபங்களை ஆசைப் பட்டவர்களுக்கு அவற்றைக் கொடுக்கும்’;
‘கர்ம ஞான பத்திகளிலே இழிந்தவர்களுக்கு விரோதியைப் போக்கி அவற்றைத் தலைக் கட்டிக் கொடுக்கும்’;
‘பிரபத்தியிலே இழிந்தவர்களுக்கு ஸ்வரூப ஞானத்தைப் பிறப்பித்துக் கால க்ஷேபத்துக்கும் போகத்துக்கும்
ஹேதுவாயிருக்கும்’ என்ற வாக்கியங்கள் இங்கு அநுசந்தேயங்கள்.(
முமுக்ஷூப்படி. திருமந்திரம். ஸூ18-21.)

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -91-சுருங்கு உறி வெண்ணெய் தொடு உண்ட –வார் கடா அருவி -8–4-

April 2, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

கள்வனை-பெரு வயிற்றாளனை–பெரும்கிறியானை-மூன்றுமே கள்ளத்தனம் தானே நெஞ்சத்தையும் என்னை அறியாமல் கள்ளத்தனமாகத் திருடிய அவனைத் தவிர வேறே ஒருவரையும் பேணாதே-கோபிகள் மனசைத் திருடவே வெண்ணெயைத் திருடினான் அன்றோ–கற்பு நிலை உரைக்கிறாள் -தோழிக்குத் தலைமகள் பாசுரம் –வார் கடா அருவி -8–4-இதன் விவரணம்மஹா மதிகள் அச்சம் கெட்டு அமரும் சௌர்யாதிகள் சிற்றாறிலே கொழிக்கும் –(ஆச்சார்ய ஹிருதயம்-175)–இம் மூன்று இடங்களிலும் காணலாம்-சரீரம் தள்ளி ஆத்மாவை-பிரளயம் -வயிற்றில் வைத்து ரஷித்தே தீருவேன்
இரந்தாலும் ரஷித்தே தீருவேன் –அல்லாதோர் அரணும் அவனில் வேறில்லை அது பொருளாகிலும் அவனை யல்ல தென்னாவி யமர்ந்தணை கில்லாது ஆதலால் அவனுறைகின்ற
நல்ல நான் மறையோர் வேள்வியுள் மடுத்தநறும் புகை விசும்பொளி மறைக்கும்
நல்ல நீள் மாடத் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு எனக்கு நல் அரணே
-8-4-5-

இங்கே கிடந்தது காலம் நெடுகா நின்றது –குறுகா நின்றது என்னா –ஆழங்கால் படா நில்லாதே-நாங்கள் கண்டீரே –புறம்புள்ள விஷயங்களிலே தரித்து -காலம் குறுகுதல் நெடுகுதல் செய்தாலும் ஸூகித்துத் திரிகிறோம் –அப்படியே நீரும் பகவத் விஷயத்திலே நின்றும் நெஞ்சை மாற வைக்கப் பாரத்தாலோ என்ன –ஓம் அப்படி செய்யலாற்றிற்று இறே அதுக்கு ஈடாய் இருப்பதோர் நெஞ்சு பெற்றோம் ஆகில் –என் நெஞ்சு அவனை ஒழிய வேறு ஒன்றை அறியாது என்கிறார் –இந் நெஞ்சு தன்னையும் வைக்கல் ஆயிற்றே-அவன் ஸௌர்யம் பண்ணிற்று இலனாகில் –

இப்படி கால விளம்பம் போறாது ஒழிந்தாலும்-அவன் தானே வந்து முகம் காட்ட வேண்டுகையாலே
பதறினாலும் பிரயோஜனம் இல்லை-அவன் தன் நினைவாலே இருக்கிற உமக்கு அவன் விபூதியைக் கண்டு கால ஷேபம் பண்ணி இருக்கக் குறை என் என்ன–ஆஸ்ரித வ்யாமுக்தனாய்-ஆபத் சகனாய்-ஸர்வஞ்ஞனானவனை ஒழிய என் நெஞ்சு வேறே ஒரு விஷயத்தை ஆதரியாது -என்கிறார் –இப் பாட்டு தோழிக்குத் தலைவி தன் கற்புணர்த்தி அறத்தோடே நின்று உரைத்தல் ஆகவுமாம் –

சுருந்குறி வெண்ணெய் தொடு வுண்ட கள்வனை வையமுற்றும்
ஒருங்குற வுண்ட பெரு வயிற்றாளனை  மாவலி மாட்டு
இருங்குறளாகி  இசையவோர் மூவடி வேண்டிச் சென்ற
பெரும் கிறியானை யல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே – –
-91 –தலைவி தோழியிடம் தன் கற்பு உணர்த்தி அறத்தோடு நிற்றல் –

சுருக்கு உறி வெண்ணெய்–சுருங்கக் கட்டப்பட்டுள்ள உறியிலே சேமித்து வைக்கப்பட்ட வெண்ணெயை
தொடு உண்ட–வஞ்சனையால் எடுத்து அமுது செய்த
கள்வனை–கள்ளத்தனமுடையவனும்
வையம் முற்றும்–உலக முழுவதையும்
இரு குறள் ஆகி–மிக்க வாமன வடிவ முடையனாகி
இசைய–(அவன் தானே தானம் பண்ணுவதற்கு) இசையும்படி
ஓர் மூ அடி வேண்டி–ஒரு மூன்றடி நிலத்தை யாசித்துக் கொண்டு
ஒருங்கு உறு உண்ட–ஒரு சேர விடாமல் உட் கொண்ட
பெரு வயிற்றாளனை–பெரிய திருவயிற்றை யுடையவனும்
மாவலி மாட்டு–மஹாபலி சக்கரவர்த்தியினிடத்தில்
சென்ற–எழுந்தருளின
பெரு கிறியானை அல்லால்–மிக்க தந்திரமுடையவனுமான திருமாலையல்லாமல் (வேறொருத்தனை)
அடியேன் நெஞ்சம் பேணாது–(அவனுக்கே) அடிமையான எனது மனம் விரும்பாது.

வாராமல் அச்சம் இனி மால் தன் வலியினையும்
சீரார் பரிவருடன் சேர்த்தியையும் -பாரும் எனத்
தானுகந்த மாறன் தாள் சார் நெஞ்சே சாராயேல்
மானிடவரைச் சார்ந்து மாய்—74-இன்னமும் இவருக்கு நம் பக்கல் பரிவின் கனத்தாலே பயம் மறுவல் இடக் கூடும் என்று விசாரித்து ப்ரதிகூலர்க்கு கணிசிக்க ஒண்ணாத படி அரண் உடைத்தான ஸ்ரீ திருச் செங்குன்றூரிலே ஸ்ருஷ்டி ஸ்திதியாதிகளை நிர்வஹிக்க வல்ல சக்திமான்களாய்-சாபா நுக்ரஹ ஸ்மர்த்தரான மூவாயிரம் ப்ராஹ்மணர் பரிந்து நோக்க அவர்களும் குழைச் சரக்காம் படி-பிசாசான் தானாவான் அங்குல் யக்ரேணதான் ஹன்யாமிச்சன் ஹரி கணேஸ்வர -என்று சௌர்ய வீர்ய பராக்ரமாதிகளோடே தான் எழுந்து அருளி இருக்கும் நிலையை ஸ்ரீ சர்வேஸ்வரன் காட்டிக் கொடுக்க -அத்தாலே அச்சம் கேட்டு அவன் வடிவு அழகிலே நெஞ்சை வைத்து அனுபவித்து ஹ்ருஷ்டர் ஆகிற -வார்கடாவருயில் அர்த்தத்தை -வாராமல் அச்சம் இனி -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -அவ் அழகை அனுபவித்து ஹ்ருஷ்டரான ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை அபாஸ்ரயமாக ஆஸ்ரயி-நெஞ்சே –ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளில் ஆஸ்ரயணம் உஜ்ஜீவன ஹேது தத் இதர ஆஸ்ரயணம் நாச ஹேது-என்றது ஆயிற்று –

சுருந்குறி வெண்ணெய்--சுருங்கு உறி வெண்ணெய் -கள்ளக் கயிறு வைத்த உறி யாயிற்றே –வெண்ணெய் தொடு உண்ட –வைத்த குறி அழியாமே -வெண்ணெயை  களவு கண்டு அமுது செய்தான் கள்வனை –களவு தன்னை யாயிற்று களவு கண்டது –ஆகையால் -சிலர் இது களவு கண்டல்ல –தெய்வம்-கொண்டதோ -நாம் வைத்திலோமோ  -என்னும்படி யாயிற்று களவு கண்டது –வையம் இத்யாதி –இவ் வெண்ணெயாலே வயிறு நிறைய செய்தேயும் -ஜகத்தாக எடுத்து வைத்தால்-
அரை வயிறு ஆம்படியாய் இற்று இருப்பது –இத்தால் ஆஸ்ரித ஸ்பர்சமுள்ள -த்ரவ்யத்தாலே தரிக்கையும் – ஜகத் ரஷணத்திலே பர்யாப்தம் இன்றிக்கே இருக்கும் படியையும் சொல்லிற்று –மாவலி இத்யாதி –தான் காவலாக இட்டு வைத்த கடல் -இவ் விபூதியை களவு காணும் அன்று-தன் வயிற்றிலே இட்டு வைத்துக் கொண்டு நோக்கும் –நான் என்னது -என்று இருப்பன் ஒருத்தன் இத்தை-அபஹரித்த அன்று அவனோடு இசைய இருந்து சென்று கொள்ளும் –மாவலி மாட்டு – ஆசூர பிரக்ருதி யானவன் பக்கலிலே சென்று கிட்டிற்று – தன்னை ஒழிய வேறு ஒன்றைப் பேணாத-நெஞ்சு உடைய என் பக்கலிலே அன்றோ கிட்ட அடுப்பது –இரும் குறளாகி –பெரிய குறளாகி –அதாவது-லோகத்திலே வாமனர்கள் அடைய வளர்ந்து அருளின இடத்துக்கு ஒப்பாம்படி ஆயிற்று -இவனுடைய சிறுமை –இசைய –இசைவிக்க கிருஷி பண்ணினவன் தானேயாய் –அவன் இசைவும் தன்னதீனமாம் படியாக-உடையனாய் –ஆரேனும் வேண்டா என்னிலும் அவனும் இசைந்து கொடுக்கும் படியும்-ஓர் மூவடி வேண்டிச் சென்ற -இரண்டு அடியை இரந்து – இரண்டு அடியும் அளந்து விடாதே- ஓர் அடிக்கு சிறை இடும்படி மூன்று அடியை இரந்தவனை –வேண்டிச் சென்ற பெரும் கிறியானை யல்லால் – தான் சர்வ நிரபேஷன் என்று தோற்றாதபடி சென்றவன் – நாம் கொடுக்கிற வித்தால் அல்லது தரியான் – என்று தோற்றும்படியாக யாயிற்று சென்றது –தன் ஈஸ்வரத்வத்தைக்  களவு கண்ட படி –அவாப்த சமஸ்த காமன் ஓர் அபேஷை தோற்ற வந்தான் -என்று இத்தனை தோற்றாமை –இரப்பாளனாய் சென்றபடி –
அவன் தயை பிறந்து கொடுக்கும் படியான வடிவைக் கொண்டு –பெரும் கிறியான் –பெரு விரகன் –அடியேன் –மகா பலியைப் போலே ஓன்று கொடுக்க இருக்கிறார் அல்லர் –-இந்த்ரனைப் போலே ஓன்று பெற இருக்கிறார் அல்லர் –-அச் செயலுக்குத் தோற்று எழுதிக் கொடுக்குமவர் இறே இவர் –நெஞ்சம் பேணலதே –பரத்வதையும் கொள்ளாது –பாவோ நான் யத்ர கச்சதிஒருங்கற –பிறி கதிர் படாமே -ஒரு காலே என்றாய் -நிச்சேஷமாக -என்றபடி –யானே என் தனதே என்று இருந்த என் நெஞ்சையும் நான் அறியாதபடி அபஹரித்தான் –

ஸுலப்ய பரத்வ பசும் கூட்டம் அன்றோ அவன் -சுருங்குறி வெண்ணெய் தொடுவுண்ட கள்வன்’ என்பதனால் ஸௌலப்ப குணமும் ‘வையம் முற்றும் ஒருங்குறவுண்ட பெருவயிற்றாளன்’ என்றதனால் பரத்வ குணமும், மாவலி மாட்டிருங்குறளாகி யிசையவோர் மூவடி வேண்டிச்சென்று பெருஙகிறியான்’ என்றதனால் பரத்வ ஸௌலப்யங்களிரண்டுங் கூடின கூட்டாவும் குறிப்பிடப்பட்டன.–-சுருந்குறி-கள்ளக் கயிற்றை உருவி விரல் நுழைக்க ஒண்ணாத படி நெருக்கப் பட்ட உறி-இருங்குறளாகி-மிகக் குறுகிய வடிவம் -பெரிய வடிவத்தை உட்க்கொண்ட சிறிய வடிவம் – மஹிமை யுடைய வடிவம் – கரிய குறள் வடிவம்-பெரும்கிறி யானை–வடிவு அழகு பேச்சின் இனிமையாலே மாயையை மயக்கி -சுக்கிராதிகள் விலக்கினாலும்-உடன் படாதே மூவடி நிலம் பெற்ற சமர்த்தன்-சுருந்குறி வெண்ணெய் தொடு வுண்ட கள்வனை -உடம்பாகிய சிக்கத்திலே கட்டுப் பட்டுள்ள வெண்ணெயின் தன்மையதான முமுஷுவாகிய ஆத்மாவை யாவரும் அறியாத படி விரும்பிக் கைக்கு கொண்டு அனுபவிப்பவன் –-மா வலி மாட்டு -மாடு -பொன் பக்கம் செல்வம் -நிகண்டு –தோழிக்குத் தலைவி தன் கற்பு உணர்ச்சி அறத்தோடு நிற்றல் இது பாரங்குச நாயகியாகிய தலைமகள் களவொழுக்கத்தால்-ஸர்வேச்வரனாகிய தலைமகனைக் கூடி நிற்க, அந்நிலையை யறியாத பெற்றோர் அவளைப் பிறர்க்கு விவாஹஞ் செய்விக்க முயற்சி கொள்ள,
அதனை யறிந்த நாயகி தனது களவைத் தோழிமூலமாக செவிலிக்கும் அவள் மூலமாகத் தந்தைக்கும் மற்றும் பெரியோர்க்குந் தெரிவித்துத் தன்னை அத்திருமாலுக்கே விவாஹஞ் செய்து வைக்கும்படி செய்துகொள்ள விரும்பி அத்தலைமகள் தன் கருத்தை தோழிக்கு வெளிப்படுத்தியது இது’. இங்ஙனம் களவை வெளிப்படுத்தல் ‘அறத்தொடு நிற்றல்’ எனப்படும்.‘சுருங்குறி வெண்ணெய் தொடுவுண்ட கள்வன்’ என்றதனால் இவ்வுடம்பாகிய சிக்கத்திலே கட்டுப்பட்டுள்ள வெண்ணெயின்
தன்மையதான முமுக்ஷுவாகிய ஆத்மாவை எவரும் அறியாதபடி விரும்பிக் கைக்கொண்டு அநுபவிப்பவன் எம்பெருமான் என்பது தோன்றுமென்ப.

சுருந்குறி வெண்ணெய் தொடு வுண்ட கள்வனை-கள்ளக் கயிறு உருவிக் கட்டுகையால் சுருங்கின உறியிலே சேமித்து வைத்த வெண்ணெயைக் களவிலே புக்கு அமுத செய்த க்ருத்ரிமனானவனை-இத்தால்-இச்சரீரமாகிற சிக்கத்திலே கட்டுண்ட நவநீத ப்ராயனான முமுஷு சேதனனைப் பிறர் அறியாதபடி அபி நிவிஷ்டனாய் புஜிக்கும் என்னும் இடம் தோற்றுகிறது –வையமுற்றும் ஒருங்குற வுண்ட பெரு வயிற்றாளனை-இப்படி ஆஸ்ரிதர் உகந்த விஷயத்தை உகக்கும் அளவு அன்றிக்கே
ஸாமான்யமான ஜகத்துக்கு பிரளய ஆபத்து வந்தால் ஒன்றும் பிரி கதிர்ப் படாமல் பசியர் யுண்டால் போலே மேல் விழுந்து திரு வயிற்றிலே வைத்து நோக்கும்படியான ரக்ஷகத்வ சக்தியின் மிகுதியை யுடையவனை –(மஹா மதிகள் அச்சம் கெட்டு அமரும் சௌர்யாதிகள் சிற்றாறிலே கொழிக்கும் –(ஆச்சார்ய ஹிருதயம்-175)மாவலி மாட்டு-இருங்குறளாகி இசைய வோர் மூவடி வேண்டிச் சென்ற பெரும் கிறியானை யல்லால்-மஹா பலி யருகே லோகத்தில் வாமன வேஷம் வளர்ந்து அருளின இடம் என்னும்படி மிக்க வாமனனாய்-அவன் தானே இசையும்படி அத்விதீயமான சிற்றடியாலே மூன்றடி வேண்டி அழகிய நடையிலே மதி மயங்கும்படி சென்ற பெரிய நல் விரகை யுடையவனை ஒழிய–பெரும் கிறியாரை -என்றும் சொல்லுவார்–இத்தால் தன்னுடைய வஸ்து பிறர் கொள்ளாமல் தன்னதே யாக்கிக் கொள்ளும் பேர் அறிவுடையவன் என்கைஅடியேன் நெஞ்சம் பேணலதே –இந்த ஸ்வ பாவங்களால் அவனுக்கே சேஷமான நெஞ்சு வேறே ஒரு விஷயத்தை ஆதரியாது–தொடு உண்ட கள்வன்-என்கையாலே புணர்ச்சி தோற்றிற்று–வையம் இத்யாதியாலே – நீரிடை யுதவி தோற்றிற்று ( புனல் தரு புணர்ச்சி )-மாவலி மாட்டு -இத்யாதிகளாலே ‘தானே குறை நயந்து வரைந்து கொள்ளும் பேர் அறிவுடைமை தோற்றிற்று-

தாத்பர்யம்-இதில் பகவத் அலாபத்தாலே ஆழ்வார் படும் பாட்டைக் கண்ட சம்சாரிகள் நீர் இவ் விஷயத்தை விட்டு எங்களைப் போலே சப்தாதி விஷயங்களிலே ப்ரவணராய் ஸூகித்து இரும் என்று சொல்ல நான் அப்படி செய்யினும் என் மனஸ்ஸூ அவனை விட்டு மற்று ஒன்றையும் விரும்பாதே என்கிறார் –ஆஸ்ரிதர் ஸ்பர்சம் உள்ள வெண்ணெயைத் திருடி கோபிகள் மனம் கவர்ந்த கள்வன் அன்றோ-கள்ளக்கயிற்றை உருவி மோர் விற்கப் போக அந்தக் குறிகள் மாறாதே -அப்படியே தெய்வம் கொண்டு போனது என்று சொல்லும்படி அன்றோ இவனது களவு வியாபாரம்-பிரளய காலத்தில் ஸமஸ்த லோகத்தையும் திருவயிற்றிலே உண்டு -மேலும் இடம் உள்ளபடி-ரக்ஷகத்வ பாரிப்பு மிக்க உபகார ஆபத் சகத் வத்தையும்-மிக குறளாகி -இரண்டு அடி யாசித்தால் சிறை வைக்க உபாயம் இல்லை என்று மூன்று அடி யாசித்து பூமி அந்தரஷிம் இவற்றை எல்லாம் அளந்து மகாபலியை சிறை வைத்த-நடை அழகிலும்-புத்தி சாமர்த்தியத்திலும்-ஈடுபட்ட நெஞ்சு வேறே ஒன்றைப் பேணாதே-பாவோ நான்யத்ர கச்சதி போல்-இவரும் ஸுலப்ய குண அனுசந்தானத்தைத் தாண்டி பரத்வத்துக்கும் போக வல்லார் அல்லரே –

8-4-வார்கடா வருவி யானை மா மலையின்மருப்பிணைக் குவடிறுத்துருட்டி-ப்ரவேஸம்-

வார் கடா அருவி -பிரவேசம்
சர்வேஸ்வரன் சம்சாரிகள் உடைய விருப்பையே பற்றுக் கோடாகக் கொண்டு
சம்சாரத்திலே வந்து அவதரித்து தனியே உலாவா நிற்கும் –
சம்சாரிகளும் தாங்கள் தாங்கள் விரும்பினவற்றை பெறுமதற்கு கிட்டுமது ஒழிய
இவன் வாசி அறிந்து பரியக் கூடிய சம்சாரிகள் இலர் –
என் புகுகிறதோ -என்று அஞ்சின இவர்க்கு அச்சம் தீரும்படி நமக்கு பரிவர் உளர் –
ஒருவர் பரிய வேண்டாதபடியான மிடுக்கும் நமக்கு உண்டு –
என்று தன் படிகளைக் காட்டி சமாதானம் செய்ய-சமாதானத்தை அடைந்தவராய் நின்றார் மேல் –

இத் திருவாய்மொழியில் –
இவர் ஆகிறார் காதலையே இயல்பாக உடையவராய் இருப்பர்-
காதல் மையல் ஏறி கலங்கி-முத்தரும் நித்தியரும் இங்கு இலரே-
சனகன் முதலான முமுஷுக்கள் -நல்ல தவத்தையும் மனனத்தையும் தியானத்தையும் விட மாட்டார்கள்-
கடல் கடைந்தது தெய்வப் பிறப்பில் அன்றோ -என்று கலங்குவர்-

இன்னம் இவருக்கு இது மறுவல் இடக்கூடும் என்று பார்த்து–மறுவல் இடாதபடி தன்னுடைய சூரத்தன்மை-
வீரத் தன்மை முதலான குணங்களையும் -சீர்கொள் சிற்றாயன்-பாசுரத்தில் –
படைத்தல் முதலான ஆச்சர்யமான சேஷ்டிதங்களையும் -படைத்து அளித்து அழிக்கும் –
எதிரிட்ட பகைவர்களை கூட்டத்தோடு வேரோடே வாங்கிப் பொகட வல்ல ஆற்றலையும் காட்டிக் கொடுத்து -கஞ்சனைத் தகர்த்த –
அதுக்கு மேலே
மேம்பட்ட ஞானத்தையும் சக்தியும் உடையவர்களாய்-தனக்கு பரிவராய் இருப்பர் –
வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் -மனக்கொள் சீர் மூவாயிரவர் –
மூவாயிரம் பிராமணர் உளர் -என்று
காட்டிக் கொடுக்கக் கண்டு கிருதார்த்தராய்
அவன் வடிவு அழகிலும்-திருச் செய்ய கமலக் கண்ணனும் –நெஞ்சு சென்று அனுபவித்து இனியர் ஆகிறார்

ஸ்ரீ விபீஷண ஆழ்வான் இராகவனைச் சரணம் அடைந்தவன் ஆகிறேன் -என்று விழுந்த போது
சோஹம் பருஷித தேன தாசவச்ச அவமானித-த்யக்த்வா புத்ராம்ச ஸதாராம்ச ராகவம் சரணம் கத -யுத்த -17-14
மகா ராஜர் பெருமாள் பக்கலில் பிரேமத்தால் கலங்கி துணுக்கு என்று
இவன் கூறிய சொல் பெருமாள் திருச் செவியில் படுமாகில் சாலத் தப்பாம் -என்று

நாயந்தே
ராவணனுடைய தம்பி-ராஷச சாதி–அவன் புகுரக் கடவன் அல்லன் -என்ன

இவர் நம் பக்கல் பரிவாலே சொல்லுகிற வார்த்தை நம் மிடுக்கைக் காட்டவே தெளிவர் என்று பார்த்து –
பிசாசான் தானாவான் யஷான் ப்ருதிவ்யாம் ஸ ஏவ ராஷசான்
அங்குள் அக்ரேன தான் ஹன்யம் இச்சன் ஹரி கணேஸ்வர -யுத்த -18-23
வானரக் கூட்டத்துக்கு அரசனான சுக்ரீவர்
பிசாசர்களாயும் அசுரர்களையும் யஷர்களாயும் பூமியில் இருக்கிற இராக்கதர்களை
விரல் நுனியாலே விரும்பினவனாய்க் கொல்லுவேன் -என்பன போன்ற வார்த்தைகளால்
தன மிடுக்கைக் காட்டக் கண்டு அவர் அச்சம் தீர்ந்து

கிம் அத்ரசித்ரம் தர்மஜ்ஞ லோகநாத ஸூகாவஹா-யத் த்வம் ஆர்யம் பிரபாஷேதா சத்வவான் சத்பதே ஸ்தித -18-36-
தேவரீர் கூறிய வார்த்தையில் என்ன ஆச்சர்யம் -என்று இனியர் ஆனால் போலேயும்

மல் போரில்
பூமிஸ் தஸ்ய ஸ ராமஸ்ய ரதஸ் தஸ்ய ஸ ராஷச-ந சமம் யுத்தம் இத்யாஹூ தேவ கந்தர்வ தானவ -யுத்த 103-5-
தேவர்களும் கந்தர்வர்களும் தானவர்களும் தரையில் இருக்கிற பெருமாளுக்கும்
தேரின் மீதே இருக்கும் அரக்கனுக்கும் நடக்கும் இந்த போரானது ஒத்தது அன்று-என்று கூறினார்கள் -என்றபடியே –
கூறிய பக்கத்தில் உள்ளவர்கள் உடைய அச்சத்தை அவர்கள் முன்னிலையிலே-
மல்லர்களை அழியச் செய்து தீர்த்து அருளினாப் போலேயும்

தம்முடைய அச்சத்தை போக்கி அருள–அதனால் கிருத்தாரத்தராய்-
நம்முடைய உண்ணும் சோறும் பருகும் நீரும் தின்னும் வெற்றிலையும்-எல்லாம் இவன் அல்லது இல்லை -என்று ப்ரீதராய்
முன்பு அழகினைக் கண்டு பரிவாலே அஞ்சினவர்
அழகிலே நெஞ்சு சென்று அனுபவித்து கிருத்தார்தராய்த் தலைக் கட்டுகிறார்-

செங்கணாஞ்சேரி -ஆரம் உளா -ஆறு திவ்ய தேசங்கள் சேர்ந்த இடம் -நவ திருப்பதிகள் சேர்ந்த திரு நகரி போல் -ஸப்த ரிஷிகளுக்கு சேவை திருவாழ் மார்பன்
இமையவர் அப்பன் -தர்ம புத்ரன் –புனர் நிர்வாணம் செய்த திவ்யதேசம் சிற்றாறு –
மஹா மதிகள் அச்சம் கெட்டு அமரும் ஸுர்யாதிகள் சிற்றாற்றிலே கொழிக்கும் -விது ரஸ்ய மஹா மதி —
ஸுர்ய வீர்ய பராக்ரமங்கள் -குணவான் -வீர்யவான் -அடுத்து -பெருமாள் குணங்கள்
எதிரிகள் சேனை கண்டு கலங்காமல் வீரன் –
உள்ளே புகுந்து கலக்குபவன் – ஸூரன்-
தனக்கு விகாரம் இல்லாமல் கலக்குபவன் பராக்ரமன் –

நாலாம் திருவாய் மொழியில் -கீழ் –
அவனுடைய ஸுகுமார்யத்தாலே தனிமைக்கு அஞ்சின இவருடைய பயம் தீரும்படி பரிவரையும் சக்தியையும் காட்டி
ஆஸ்வசிப்பித்த சர்வேஸ்வரன் இவர் இப்படி அஞ்சிற்று விரோதி பூயிஷ்ட தேசம் என்றாய் இருக்கும் –
நம்முடைய விரோதி நிவர்த்தகத்வத்தையும் ஜகத் ஸ்ருஷ்ட்யாதி சக்தியையும் காட்டுவோம் என்று இவர் திரு உள்ளத்திலே பிரகாசிப்பிக்க
அவனுடைய அகில விரோதி நிவர்த்தகத்வத்தையும்
அசேஷ ஜகத் விஷயமான ஸ்ருஷ்ட்யாதி வியாபாரத்தையும்
ஆஸ்ரித ஆபத்சகத்வத்தையும்
ஆஸ்ரித அர்த்தமான அதிசயித வியாபாரத்தையும்
ஆஸ்ரயணீய ஸ்தலாந்தர விலக்ஷணமான தேச விசேஷ ஸ்ததிதியையும்
ஆசிரயணீயதா வை லக்ஷண்யத்துக்கு அடியான சர்வ பிரகார உபகாரகத்வத்தையும்
அநு பாவ்யமான ஆபி ரூப்ய அதிசயத்தையும்
ஜெகஜ் ஜென்மாதி ஹேதுத்துவத்தையும்
ஸ்ரஷ்ட ருஸ் ருஜ்யாதி விபாகம் இல்லாத சர்வாத்ம பாவத்தையும்
சத்தா விபூதி ஹேதுவான நிருபாதிக சேஷித்வத்தையும்
அனுசந்தித்து ஏவம் பூதனான சர்வேஸ்வரன் பரிவரான வைதிக அக்ரேஸருடைய சம்பத்தே தனக்கு சம்பத்தாம் படி
திருச் செங்குன்றூரிலே எழுந்து அருளி நின்ற அதிசயத்தை அனுசந்தித்து ஹ்ருஷ்டராகிறார்-

வார்கடா வருவி யானை மா மலையின்
மருப்பிணைக் குவடிறுத்துருட்டி
ஊர் கொள் திண் பாகனுயிர் செகுத்து
அரங்கின் மல்லரைக் கொன்று சூழ் பரண் மேல்
போர் கடா வரசர் புறக்கிட
மாட மீ மிசைக் கஞ்சனைத் தகர்த்த
சீர் கொள் சிற்றாயன் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு எங்கள் செல் சார்வே–8-4-1-

இராசத துரோகிகளை கொல்லும் போது இராச சின்னங்களை-வாங்கிக் கொல்லுமாறு போலே-
தான் கொடுத்த முடியை வாங்கிக் காண் கொன்றது -என்று-அம்மங்கி அம்மாள் பணிப்பர்-

எங்கள் செல் சார்வே-கேசவன் தர்மருக்கு பின் தமியர் அல்லர் -வம்ச பூமிகளை உத்தரிக்க வராக கோபாலர்

எங்கள் –
மகா ராஜர் -பெரியாழ்வார்- ஸ்ரீ விதுரர் –தாம்-பிள்ளை உறங்கா வல்லி தாசர்–இன்னோர் அன்ன பரிவர்-

செல் சார்வே –அச்சம் இல்லாத இடம் என்று புகும் புகல்-
மேல் இவர்க்கு ஓடின அச்சம் நீங்கிற்று என்னும் இடம் இயல் தழைப்பிலே தெளிந்து இருக்கிறபடி கண்டதே-
இயல் ஓசையிலே தெளிய வேண்டுமே –

எங்கள் செல் சார்வு யாமுடையமுதம்
இமையவரப்பன் என்னப்பன்
பொங்கு மூவுலகும் படைத்து அளித்து அழிக்கும்
பொருந்து மூவுருவன் எம்மருவன்
செங்கயல்களும் தேம் பணை புடை சூழ்
திருச் செங்குன்றூர்த் திருச் சிற்றாறு
அங்கு அமர்கின்ற ஆதியான் அல்லால்
யாவர் மற்றென்னமர் துணையே–8-4-2-

உலகத்தை படைத்தல் முதலாயின வற்றில் வல்லவனாய்–திருச் செங்குன்றூரிலே நின்று அருளினவன்–
அல்லது எனக்கு நல் துணை இல்லை என்கிறார்–

எங்கள் செல் சார்வு –
அனுகூல்யராய் இருப்பார்க்கு எல்லாம் அஞ்ச வேண்டாத புகல்-

யாமுடை யமுதம் –
புகல் மாத்ரமேயாய் இனிய பொருள் வேறே தேட வேண்டாதபடி இருக்கை-அனுபாவ்ய போக்ய வஸ்து -ப்ராப்யமும் ப்ராபகமும் இவனே

எம்மருவன் –
மற்று எல்லார் உடைய காரியமும் நம் புத்தி அதீனமாய் இருக்கும் அல்லது
நம் கார்யம் அல்லாதார் நினைவின் படி அல்ல காணும் இருப்பது-என்று எனக்கு அறிவித்து
என் அச்சத்தை நீக்கி–எனக்கு தாரகன் ஆனவன்-

அல்லால் யாவர் மற்று என் அமர் துணையே –இவனை ஒழிய எனக்கு சேர்ந்த துணை இல்லை-
அல்லாதார் கழுத்து கட்டியாதல்-துணை என்ற பேராய் ஆபத்தில் கூட அழுதல் செய்வர் இத்தனை-

—-

என்னமர் பெருமான் இமையவர் பெருமான்
இருநிலம் இடந்த வெம்பெருமான்
முன்னை வல்வினைகள் முழுதுடன் மாள
என்னை யாள்கின்ற வெம்பெருமான்
தென் திசைக்கணி கொள் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாங்கரைமீ பால்
நின்ற வெம்பெருமான் அடியல்லால் சரண் நினைப்பிலும்
பிறிதில்லை எனக்கே–8-4-3-

வராஹ ரூபி -பிரளய ஆபத்தில் ரஷித்தவன் திருவடிகளே சார்வு -கிருஷ்ணன் -விஷ்ணு -முதல் இரண்டாலும் சொல்லி-ஏனத்துருவாய் கிடந்த பிரான் – ஞானப் பிரானை அல்லால் இல்லை-நான் கண்ட நல்லதுவே-அவன் திருவடிகளை ஒழிய மற்று புகலிடமாய் இருப்பது–ஒரு பொருள் மநோ ரத திசையிலும் எண்ணத்திலும் இல்லை

——–

பிறிதில்லை எனக்குப் பெரிய மூவுலகும் நிறையப்
பேருருவமாய் நிமிர்ந்த
குறிய மாண் எம்மான் குரை கடல் கடைந்த
கோல மாணிக்கம் என்னம்மான்
செறி குலை வாழை கமுகு தெங்கணி சூழ்
திருச் செங்குன்றூர்த் திருச்சிற்றாறு
அறிய மெய்ம்மையே நின்ற வெம்பெருமான்
அடி இணைய யல்லதோர் அரணே-8-4-4-

ஆஸ்ரித அர்த்தமாக -த்ரிவிக்ரம -சமுத்திர மதன ரூபமான –அதிதன்-திருநாமம் –பிறிதில்லை எனக்கு-வேறு ரக்ஷகன் அல்ல

கோல மாணிக்கம் –பெரிய விலையதான இரத்தினம் போலே இருக்கின்ற அழகிய வடிவைக் கொண்டாயிற்று கடலைக் கடைந்தது –

மெய்ம்மையே நின்ற வெம்பெருமான்-நான் என்னை மனிதனாகவே நினைக்கின்றேன் -என்றும்
உங்களுக்கு உறவினனாகவே பிறந்து இருக்கிறேன் -என்றும் மறைக்க வேண்டாதபடி பத்தம் பத்துமாக நின்ற என் ஸ்வாமி-
பத்து அவதானங்கள் பத்து பாசுரங்களில் அருளிச் செய்யும் படி அருளினான் –

——–

அல்லாதோர் அரணும் அவனில் வேறில்லை
அது பொருளாகிலும் அவனை
யல்ல தென்னாவி யமர்ந்தணை கில்லாது
ஆதலால் அவனுறைகின்ற
நல்ல நான் மறையோர் வேள்வியுள் மடுத்த
நறும் புகை விசும்பொளி மறைக்கும்
நல்ல நீள் மாடத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு எனக்கு நல் அரணே–8-4-5-

அர்ச்சா ஸ்தலாந்தரங்களும் -அவனை ஒழிந்து இராது இருக்க -இங்கு நிலை ஒழிய -அடியேனுக்கு பொருந்துகிறது இல்லை

நல்ல நான் மறையோர்-அநந்ய ப்ரயோஜனர் -ப்ரேம பூயிஷ்டர்–எம்பெருமானாரைப் போலே ஆயிற்று அவ் ஊரில் பிராமணர்களும் –

——–

எனக்கு நல்லரணை எனதாருயிரை
இமையவர் தந்தை தாய் தன்னை
தனக்கும் தன் தன்மை யறிவரியானைத்
தடங்கடல் பள்ளி யம்மானை
மனக்கொள் சீர் மூவாயிரவர்
வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் வாழ்
கனக் கொள் திண் மாடத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு அதனுள் கண்டேனே–8-4-6-

சர்வ பிரகார உபகாரகன்- ஷீராப்தி நாதன் -பரிவர் நிறைந்த திவ்ய தேசம் –

வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் வாழ் –
மூவர் செய்யும் கார்யங்களும் ஓர் ஒருவரே செய்ய வல்லராய் இருப்பார்கள் –
அதிகாரி புருஷர்களில் இவர்களுக்கு உண்டான ஏற்றம் –

——

திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு அதனுள் கண்ட
அத் திருவடி என்றும்
திருச் செய்ய கமலக் கண்ணும் செவ்வாயும்
செவ்வடியும் செய்ய கையும்
திருச் செய்ய கமல வுந்தியும் செய்ய கமலை மார்பும்
செய்ய வுடையும்
திருச் செய்ய முடியும் ஆரமும் படையும்
திகழ வென்ன சிந்தை யுளானே–8-4-7-

அதிசயித அவயவ ஆபரண ஆயுத சோபை -உடன் உள்ளத்தில் இருப்பதால் பயம் தீர்ந்தேன் -நித்ய சந்நிஹிதன் ஆகா நின்றான் –

நான்கு செய்ய -இரண்டு செம்மை

திருச் செங்குன்றூரில் நின்று அருளின சீர் கொள் சிற்றாயன்
தன் அழகோடு என் நெஞ்சிலே வந்து புகுந்தான் -என்கிறார்-
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு வந்தான் -முன்பு இங்கு அனைத்துடன் வந்து மறக்க முடியாமல் புகுந்து உள்ளான் –

திருச் செய்ய கமலக் கண்ணும் –
அழகியதாய் சிவந்து இருப்பதாய் மலர்த்தி செவ்வி முதலானவற்றாலே தாமரை போலே இருக்கிற திருக் கண்களும் –
தூது செய் கண்கள் பிரதம கடாக்ஷம் முதல் உறவு பண்ணி அருளும் –

செவ் வாயும் –
நோக்காலே பிறந்த முதல் உறவைக் கிரயம் செலுத்திக் கொடுக்கும் புன்முறுவலும்-

செவ் வடியும் –
புன்முறுவலுக்கு தோற்று விழும் திருவடிகளும் –

செய்ய கையும் –
திருவடிகளிலே விழுந்தாரை எடுத்து அணைக்கும் திருக்கைகளும் –

திருச் செய்ய கமல வுந்தியும் –
அணைத்தார்க்கு எப்பொழுதும் அனுபவிக்கத் தக்கதாய் –
அழகுக்கு எல்லையாய் –
எல்லா பொருள்கட்கும் பிறப்பிடம் என்று தோன்றும் படி இருக்கிற திரு நாபியும் –

செய்ய கமல மார்பும் –
பகவான் உடைய சம்பந்தம் இல்லார்க்கும் -சம்பந்த ஞானம் -இல்லாதார்க்கும் -பற்றாசான-பிராட்டிக்கு இருப்பிடம் ஆகையாலே
சிவந்த திரு மார்பும்
கமலை -என்றுமாம் –நீல மேனி -மாற்றி சிவந்ததாக ஆக்கி அருளும் செய்யாள் இருப்பதால் –

செய்ய வுடையும் –
திருமேனிக்கு பரபாகமான தன்மையைக் குறிப்பதான திருப் பீதாம்பரமும் –

திருச் செய்ய முடியும் –
அப்படி திரு மேனிக்கு பரபாகமாய்-அச்சம் தீரும்படி காப்பதற்கு அறிகுறியான திரு முடியும் –

ஆரமும் –
பெரிய வரை மார்பில் பேராரம் பூண்டு -மூன்றாம் திருவந்தாதி -55 -என்கிறபடியே-திருமார்புக்கு தகுதியான திரு ஆரமும் –

படையும் –
வினைத் தலையில் ஆயுதமாய்– போக நிலையில் ஆபரணமாய்– இருந்துள்ள திவ்ய ஆயுதங்களும் –ஜாதி ஏக வசனம் –

என்றும் வென்ன சிந்தை யுளானே –
அவன் என்றும் ஒக்க என் சிந்தையிலே வசிக்கையாலே-அச்சத்துக்கு ஒதுங்க இடம் இல்லை –
அழகுடன் மறக்க ஒண்ணாத படி நெஞ்சில் புகுந்தான்-ந ச புநரா வ்ருத்தி போல் நித்ய வாஸம் செய்து அருளுகிறான்

திகழ வென் சிந்தையுள் இருந்தானைச்
செழு நிலைத் தேவர் நான்மறையோர்
திசை கை கூப்பி ஏத்தும்
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாற்றங்கரை யானை
புகர் கொள் வானவர்கள் புகலிடம் தன்னை
அசுரர் வன்கையர் வெங்கூற்றை
புகழுமாறு அறியேன் பொருந்து மூ வுலகும்
படைப்பொடு கெடுப்புக் காப்பவனே–8-4-8-

இப்படி நிறைவாக அனுபவித்த சீர் கொள் சிற்றாயன் உடைய– விலஷணமான குணங்களிலும் கீழ்ப் பாசுரத்தில் அருளிச் செய்த அழகிலும் அழுந்தி-
அவனைப் புகழும்படி அறிகின்றிலேன் -புகழாது ஒழியவும் மாட்டுகின்றிலன்-என்கிறார் –

திகழ என் சிந்தையுள் இருந்தானைச்
இதுவும் இவருக்கு ஓர் அச்சம் நீங்குவதற்கு காரணம் –
தம் நெஞ்சிலே இருக்கையாலே ஒரு அரணுக்கு உள்ளே இருக்கிறாப் போலே இருக்கிறது ஆயிற்று –
திகழ சிந்தையுள் இருந்தானை-என்றுஉகவாதார் நெஞ்சிலே இருக்கிற அச்சமும் போயிற்று –என் சிந்தையுள்-என்பதால்
இனிப் போய் பிறர் ஒருவர் வல் நெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன் வளைத்து வைத்தேன் -பெரிய திருமொழி -7-2-7-என்னுமவர்களே அன்றோ

பொருந்து மூ வுலகும் படைப்பொடு கெடுப்புக் காப்பவனே –
தனக்கு வசப் பட்டு இருக்கின்ற எல்லா உலகத்தின் உடைய-படைத்தல் முதலானவற்றை செய்யுமவன்
என்று திரளச் செய்யும் அத்தனை-பொருந்து-அப்ருதக் ஸித்தம் அன்றோ ஸமஸ்தமும் -பிரகாரம் சரீர பூதம் –
பிரித்து வகை இட்டு சொல்லப் புக்கால் சொல்லி முடிக்கப் போகாது -என்றது
சுருங்க சொல்லுதலே சொல்லுவது அத்தனை -என்றபடி-

தென் அரங்கன் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே என்று திரள செல்வத்தைச் சொல்லுமா போலே –
விபூதி அத்யாயம் அருளிச் செய்தால் போலே –
ஏ பாவம் பரமே -தலையில் கை வைத்து -சொல்ல முடியாமல் சங்க்ரஹமாக அருளிச் செய்தானே

ஏ பாவம்! பரமே! ஏழ் உலகும்
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பார்ஆர்?
மா பாவம் விட அரற்குப் பிச்சைபெய்
கோபால கோளரி ஏறு அன்றீயே?–2-2-2-

———-

படைப்பொடு கெடுப்புக் காப்பவன்
பிரம பரம்பரன் சிவப் பிரானவனே
இடைப்பு கோருருவு மொழிவில்லை யவனே
புகழ்வில்லை யாவையும் தானே
கொடைப் பெரும் புகழார் இனையர் தன்னானார்
கூரிய விச்சை யோடு ஒழுக்கம்
நடைப்பலி இயற்கைத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு அமர்ந்த நாதனே-8-4-9-

யாவையும் தானே –
இங்கன் பிரித்து சொல்லுகிறது என் –சேதனம் அசேதனம் என்னும் வேறுபாடு அற அவனுக்கு உரிமை ஆகும் –
சர்வ சப்த வாச்யன் அவனே -சர்வம் கல் இதம் ப்ரஹ்ம -வேதம் தமிழ் செய்த மாறன் -பிரகார பிரகாரி பாவம் —

கொடைப் பெரும் புகழார் –
அவ் ஊரில் உள்ளார் கொடையால் வந்த பெரும் புகழை உடையார் -என்றது –
எதிரிகளையும் கொடையால் வசீகரிக்க வல்லராய் இருக்கையைத் தெரிவித்த படி –
தானமும் சாமம் முதலானவைகளில் ஓன்று அன்றோ –பெரும் புகழாவது-ஞானத்தை கொடுத்ததால் உண்டாகும் புகழ் –

———–

அமர்ந்த நாதனை யவரவராகி
அவரவர்கருளும் அம்மானை
அமர்ந்த தண் பழனத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றறாங்கரையானை
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம் பதி
அவனி தேவர் வாழ்வு
அமர்ந்த மாயோனை முக் கண் அம்மானை
நான்முகனை யமர்ந்தேனே--8-4-10-

சர்வேஸ்வரனாய் வைத்து-எல்லாப் பொருட்கட்கும் பற்றப் படுமவன் ஆகைக்காக-
திருச் செங்குன்றூரில் நின்று அருளினவனை-அனுபவிக்கப் பெற்றேன் -என்கிறார்

நிருபாதிக சேஷி -அவாந்தர சேஷிகள் ப்ரஹ்மாதிகள் -சத்தையும் -தான் இட்ட வழக்கு -தத் பிரயோஜனம் தனக்காம் படி –
அந்தராத்மாவாக இருப்பதும்

அமர்ந்த நாதனை யவரவராகி-பொருத்தமாக ஸ்வாமி -சகல சேதன நிர்வாகம் என்றால் இவனுக்கே பொருந்தும் -நிருபாதிக சேஷி

யவரவராகி
இரவலர் கிட்டினால் அவர்கள் தம் தாமுக்கு நல்லவர் ஆம்போலே அவர்களுக்கும் நல்லனாய் இருக்குமவன் -என்றது
அவர்கள் -இது நமக்கு வேண்டும் -என்று இருக்குமாறு போலே
இவர்களுக்கு இது வேண்டும் -என்று இவன் இருக்கையைத் தெரிவித்தபடி –

அங்கன் அன்றிக்கே –
அவர்களுக்கு பெறுகையிலே விருப்பம்
கொடுக்க கொடுக்க அவர்கள் கொள்ளுகையிலே அர்தித்வம் விருப்பம் இவனுக்கு -என்றது
பெற்றோம் என்ற உவகை அவர்களுக்கு-கொடுக்கப் பெற்றோம் -என்ற உவகை இவனுக்கு -என்றபடி –

அவர்க்கு அருள் அருளும் –
அவர்கள் விரும்பினவற்றைத் தன் பேறாகக் கொடுக்கை
கொள்ளுகிறவனுடைய இரப்பை தான் உடையனாய் கொடுக்கை –

அம்மான் -பூர்த்தி -பகவானுக்கு பூர்த்தி அர்த்தித்தவத்துக்கு ஹேதுவாகும்
அம்மான் -சம்பந்தம் -இழவும் பேறும் தனது பேறாக இருக்குமே

முக்கண் அம்மானை நான்முகனை
பிரமன் சிவன் இவர்களுடைய இருப்பு முதலானவற்றுக்கு நிர்வாஹகன் ஆனவனே-
பிரமன் சிவன் -இவர்களை பலகால் சொல்லுகிறது–
இவனுடைய நிர்வாஹகத் தன்மை தோற்றுகைக்காகவும்
நிர்வஹிக்கப்படும் பொருள்களில் ஒன்றால் நலிவு உண்டாகை கூடாது என்கைக்கும்

அன்றிக்கே
அமர்ந்த மாயோன் -என்று வைத்து இவர்களைச் சொல்லித் தலைக் கட்டுகையாலே
சாமாநாதி கரணத்தைக் காட்டுகிற சொற்கள் விசேடியத்தில் சென்று சேரக் கடவை ஆகையாலே
சரீரியாய் இருக்கிறவனை என்றுமாம் –

——–

தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத்
திருந்துலகுண்ட வம்மானை
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ்
மலர்மிசைப் படைத்த மாயோனை
கோனை வண் குருகூர் சடகோபன்
சொன்ன வாயிரத்துள் இப்பத்தும்
வானின் மீதேற்றி யருள் செய்து முடிக்கும்
பிறவி மா மாயக் கூத்தினையே–8-4-11-

நிகமத்தில்
அராஜகம் ஆனால் அரச புத்திரன் தலையிலே முடியை வைத்து விலங்கு வெட்டி விடுமாறு போலே-இத் திருவாய்மொழியை கற்றவர்கட்கு இது தானே முதலில் பரமபதத்து ஏறக் கொடுபோய்-பின்பு சம்சாரம் ஆகிய மகா நாடகத்தினை அறுக்கும் -என்கிறார்-

தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத் –
இவர் ஐயம் கொண்டு அஞ்சுதற்கு உரிய காரணங்கள் சொல்லப் படுகின்றன-
அவனுடைய இனிமை அன்றோ இவரை அஞ்சப் பண்ணுகிறது –
எனக்கு எல்ல வித இனிய பொருள்களும் ஆனவனே- சர்வ ரச -என்னக் கடவது அன்றோ –
மேலே அச்சம் நீங்குவதற்கு உரிய காரணங்கள் சொல்லப் படுகின்றன –

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -90-தலைப் பெய்து யான் உன் திருவடி –குரவை ஆய்ச்சியர் -6–4–

March 31, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

பிரபத்தி -பக்திக்கு அங்கமாகவும் ஸ்வயம் சாத்யமாகவும் உண்டே-ஸ்வயம் பிரயோஜனமாக பக்தி அதுக்குப் பின்பும் உண்டு-ஸம்ஸார ஸ்வ பாவம் கண்டு அஞ்சி -கால விளம்பம் பொறாமல் ஆற்றாமை துடிக்க – அருளிச் செய்கிறார்-தொல்லை யூழி சுருங்கலதே – காலம் நெடுகிக் கொண்டே போகிறதே –
இம் மாயம் -ஆச்சர்யம் –திருவடியைத் தலையிலே சூட -தலை வேணுமே -அதுக்கு நோன்பு நோற்றுப் பெற வேண்டுமே –சரீரம் இதனால் உபாதேயம் ஆகுமே -ஆக்கைக்கு நோற்றது-சரீரம் நிலையாதே -32-திரு நக்ஷத்ரம் தானே இங்கே இருந்தார் –-பக்தி பெற நோன்பு என்று கொண்டு -தகைமைக்கு நோற்றது -சம்சாரத்தில் பக்தியும் நிலை நில்லாமல் -ரஜோ தமஸ் மூடுமே –முக்குண மய ப்ரக்ருதி அன்றோ –
நிலைப் பெய்யாத -இது ஆக்கைக்கும்-பக்திக்கும் – தன்மைக்கும் -பிரபாக ப்ராப்ய பரமாக இரண்டு நிர்வாஹங்கள்-குரவை ஆய்ச்சியர் -6–4–விவரணம்-குறைவில்லாமல் அருளிச் செய்து-மாய வினைகளையே அலற்றி இரவும் நன் பகலும் தவிராமல் -அங்கும் உண்டே–நண்ணி நான் வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே-6-4-10-மகிழ்ந்து அருளிச் செய்த திருவாய் மொழி அங்கு –

அவதாரிகை –-என் ஞான்று தலைப் பெய்வனே -என்று இறே கீழ் நின்றது –-என்றாகில் என் –
பகவத் ஸ்பர்சம்-பலத்தோடு சந்திப்பித்து விடும் -என்று விஸ்வசித்து இருக்கும் அத்தனை அன்றோ -என்ன –அப்படி செய்யலாய் இற்று இறே -சம்சாரிகளைப் போலே நிரபேஷன் ஆனேன்  ஆகில் எனக்கு உன்னை ஒழிய கால ஷேபம் பண்ணுகை அரிதாக நின்றது என்கிறார் –இப்பாட்டில் சொல்லுகிறது என் என்னில்-உன் திருவடிகளை சமாஸ்ரயிக்கைக்கு ஈடாக-இருப்பதொரு சரீரத்தை பெற்ற படியையும் –
அது தான் அஸ்த்ரமாய் இருக்கிறபடியையும் -அனுசந்திக்கப் புக்கால் –அத்தாலே வந்த ஆற்றாமையாலே -காலம் நெடுகா நின்றது என்னுதல் –
அன்றிக்கே-உன்னை ஒழிய வேறு ஒன்றால் தரியாத படியான ஸ்வபாவத்தை பெற்றான படியையும் –(ஸ்வ பாவம் -பக்தி -இது பெற சரீரம் வேண்டும் இங்கு அது இரண்டாம் பக்ஷம் )இது தான் பிரகிருதியோடு இருக்கச் செய்தே வந்த ஸ்வபாவம் ஆகையாலே –இது தானே ஏக ரூபம்-அன்றிக்கே -இருக்கிற ஆஸ்ரயத்தை அனுசந்திக்கப் புக்கால்
இதுக்கு காலம் போருகிறது இல்லை-என்றது ஆதல் –(மண் பற்று போல் -ஞானியை விக்ரஹத்தோடே ஆதரிக்கும்-மங்க ஒட்டு உன் மா மாயை என்று உபதேசிக்க வேண்டிற்று-இத்தைத் தள்ளியே அழைத்துப் போவார்-விமல சரம திருமேனி -ஸ்ரீ வைகுந்ததில் உள்ளாருக்குக் காட்ட அபிநிவேசம் அவனுக்கு –
விண்ணுளாரிலும் சீரியர் அன்றோ-ஆகவே சரீரத்துக்கு முக்கியம்-ப்ரக்ருதி கார்யமான பிராகிருதம் -அஞ்சு சேர் ஆக்கை-இது தான் -ஸ்வ பாவம் இங்கு -ஏக ரூபமாக இருக்காதே)

இப்படி ஆர்த்தரான இவரை ஆஸ் வஸிப்பிப்பதாக-நம் பக்கலிலே நீர் ஆபி முக்யம் பண்ணி நம்மை ஆஸ்ரயிக்கைக்கு ஹேதுவான-விலக்ஷண சரீரத்தைப் பெற்றீர்-நம் பக்கலிலே நிரதிசய ப்ராவண்யம் உண்டாயிற்று-முக்திஸ் தஸ்ய கரே ஸ்திதா என்று பக்தி யுடையார்க்கு பிராப்தி கைப்பட்டது அன்றோ என்று ஈஸ்வரன் தன் திரு உள்ளக் கருத்தைப் ப்ரகாசிப்பிக்க-இதுக்கு முன்பு நின்ற நிலையை நிரூபித்தால் விளம்பம் பொறுக்கிறது இல்லை என்கிறார்-இதுவும் தலை மகள் ஆற்றாது உரைத்தலாகவுமாம்-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்–அவதாரிகை-இவ்விடம் பொறாமைக்கு மூன்று ஹேது யுண்டு –
இதில் அத்தை அருளிச் செய்கிறார்

தலைப்பெய்து யான் உன் திருவடிச் சூடும் தகைமையினால்
நிலைப்பெய்த வாக்கைக்கு நோற்ற விம்மாயமும் மாயம் செவ்வே
நிலைப் பெய்திலாத நிலைமையும் காண் தோறு அசுரர் குழாம்
தொலைப் பெய்த நேமி எந்தாய் தொல்லை யூழி சுருங்கலதே
– 90–தலைவனைப் பிரிந்த தலைவி ஆற்றாது உரைத்தல் –தலைப் பெய்து யான் உன் திருவடிச் சூடும் தகைமையினால்-பெய்தி பாட பேதம்-

அசுரர் குழாம்–அசுரர் கூட்டத்துக்கு
தொலைபெய்த–அழிவைப் பண்ணின
நேமி–சக்கராயுதத்தை யுடைய
எந்தாய்–எம்பெருமானே!
யான்–நான்
தலைப்பெய்து–(யான் உன்னைச்) சேர்ந்து
நிலைப்பு எய்த–நிலைப்பெற்றிருக்கும்படியாக
ஆக்கைக்கு–இவ்வுடம்பைப் பெறுதற்கு
நோற்ற–தவஞ்செய்த
இ மாயமும்–இந்த ஆச்சர்யத்தையும்
உன் திரு அடி–உனது திருவடித் தாமரை மலர்களை
சூடும்–(எனது) தலைமேற் கொள்ளும்படியான
தகைமையினால்–அடிமைக் குணமாகிய தகுதியினால்
மாயம் செவ்வே நிலைப்பு எய்திலாத நிலைமையும்–இந்த ஆச்சரியம் ஒருபடியாக நிலை
நின்று முடிவு பெற மாட்டாத நிலைமையையும்
காண் தோறு–நோக்கும் போதெல்லாம்
தொல்லை ஊழி சுருங்கலது–பழமையான (அநாதியான காலம் சுருங்குகிறதில்லை)

குரவை முதலாம் கண்ணன் கோலச் செயல்கள்
இரவு பகல் என்னாமல் என்றும் பரவு மனம்
பெற்றேன் என்றே களித்துப் பேசும் பராங்குசன் தன்
சொல் தேனில் நெஞ்சே துவள்
 —54–மாசறு சோதி-5-3–மானேய் நோக்கு -5-9–பிறந்தவாறு–5-10-என்கிற திருவாய் மொழிகளிலே-சேணுயர் வானத்து இருக்கும் –5-3-9- நாராயணன் நாமங்களே தொல் அருள் நல் வினையால் சொலக் கூடும் கொல் –5-9-10–உருக்கி உண்டிடுகின்ற உன் தன்னை நாடும் வண்ணம் சொல்லாய்–-5-10-10-என்று தூரஸ்தன் என்றும்-நா நீர வரத் திரு நாமம் சொல்லக் கூடவற்றே -என்றும்
தரித்து நின்று குண அனுபவம் பண்ண வல்லேனாம் படி பண்ண வேண்டும் என்றும்
தாம் ஆசைப் பட்ட வகைகள் எல்லாம் சித்திக்கும் படி தான் ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து திரு வவதரித்து
செய்து அருளின நிகில சேஷ்டிதங்களையும்-தத் ஹேதுவான திவ்ய குணங்களையும்
அனுபவ விஷயமாக காட்டிக் கொடுக்க-அவற்றைக் கட்டடங்க தரித்து நின்று மண்டி அனுபவித்து
ப்ரீதராய்ச் செல்லுகிற குரவை ஆய்ச்சியில் அர்த்தத்தை குரவை முதலாம் இத்யாதியாலே-அருளிச் செய்கிறார் –அமுத மென் மொழி யாகையாலும்–தேனே இன்னமுதே -5-1-2–என்று பேசப் படுமவன் விஷயம் ஆகையாலும்-தேன் போலே இனிதாய் இறே இத் திருவாய்மொழி தான் இருப்பது

தலைப் பெய்து –உன்னை வந்து கிட்டி –நான் – அறக் கை கழிந்த நான்-உன் திருவடி இத்யாதி –
உன் திருவடிகளை ஆஸ்ரயிக்கை ஆகிற  இஸ் ஸ்வ பாவத்தாலே தரிப்பதான சரீரத்தைப் பெறும்படி –
ஜன்மாந்த்ரத்திலே ஸூஹ்ருதத்தை பண்ணின ஆச்சர்யம் –மாயம் செவ்வே நிலைப்பெய்திலாத நிலைமையும் —மாயம் உண்டு –இப் பிரகிருதி –இது என்றும் ஒக்க ஒரு படிப்பட்டு இராதே இருக்கிற இஸ் ஸ்வபாவத்தையும் காண்டோறும் –அன்றிக்கே –தலைப் பெய்து -இத்யாதி –நான் உன்னை வந்து கிட்டி உன் திருவடிகள் ஒழிய வேறு ஒன்றால்-தரியாத படியான இஸ் ஸ்வ பாவத்தை உடையேனாய் கொண்டு – நான் இதிலே நிலை நின்ற ஆச்சர்யத்தையும்- ஆக்கைக்கு நோன்ற இம் மாயமும் –ஜன்மாந்தர சகஸ்ரேஷூ -என்று நோற்றால் இறே-இஸ் ஸ்வ பாவம்-பிறப்பது –ஒரு சரீர பரிக்ரஹம் பண்ணி இருக்கச் செய்தே -இறே-இஸ் ஸ்வ பாவம்  தான் உண்டாவது –ஆகையால் தாத்ருச சரீர பரிக்ரஹமும் -அந்த பக்திக்கு உறுப்பாம் இறே –இந்த யோஜனையிலும்-க்ரியாகாரக பாவேன அன்வயிக்கும் இடத்தில் –ஆக்கைக்கு நோற்ற -என்கிற இதுவே விசேஷ்யமாய் கொண்டு-பிரதானமாய் -தோற்றிற்றே யாகிலும் –திருவடி சூடும் தகைமையினால் -நிலைப் பெய்க -என்கிற இஸ் ஸ்வபாவ பரமான விசேஷணாம்சத்திலே   வாக்யத்துக்கு தாத்பர்யமாய் – அதுவே பிரதானமாகக் கடவது –மாயம் செவ்வே யித்யாதி –அச்  சரீரம் தான் குண த்ரய உக்தமாய் இருக்கையாலே ரஜஸ் தமஸ்ஸூக்கள் தலை எடுத்த போது –இஸ் ஸ்வ பாவம் (இப்பக்தி- தகைமை )இன்றிக்கே -சத்வம் தலையான போது உண்டாமது ஆகையாலே –என்றும் ஒக்க ஒருபடிப் பட நிலை இல்லாதே இருக்கிற இந்த ஆச்சர்யத்தையும் –காண்டோறு –அனுசந்திக்கும் தோறு எல்லாம் –இத்தையே முடிய அனுசந்தித்துப் போந்தார் என்று-தோற்றுகிறது –அசுரர் இத்யாதி –அசுரர் சமூகத்தை தொலையும்படி பண்ணின திரு ஆழியை உடைய என் ஸ்வாமி யானவனே –இத்தால் –நீ -அசக்தனாய் ஆதல் —அப்ராப்தனாய் ஆதல் —
நாம் செய்தது நாம் பட்டோம் இத்தனை அன்றோ -என்று தான் ஆறி இருக்கிறேனா –தொல்லை இத்யாதி –
பழையதான கல்பம் சுருங்குகிறது இல்லை -நெடிதாக நின்றது –அன்றிக்கே இந்த ஆச்சர்யத்தை அனுசந்திக்கப் புக்கால் –தொல்லை ஊழி யானது சுருங்கலை-உடைத்தாய் இரா நின்றது –காலம் போருகிறது இல்லை –இப்படி சமர்த்தனான நீ ஸ்வாமியாக இருக்க எனக்கு இப்படி வீணாக காலம் கழிவது பொறுக்கப் போகிறது இல்லை -என்று சர்வேஸ்வரனைக் குறித்து முறை இடுகிறார் –

ஆற்றாமையால் காலம் மிக தோன்றுகிறதே –சுருங்கலதே-சுருங்குகிறது இல்லை -இப்படியே என் காலம் கழிந்து விடுகிறதே-நோற்ற விம்மாயமும்-பூர்வ ஜென்ம தவ பலனாகவே நாயகனைப் பெற இயலும் –உன் திருவடிகளில் அடிமையால் அல்லது செல்லாத படியான சரீரத்தைப் பெற்ற படியையும்-அப்படி இருக்கச் செய்தே-அவ்வடிமையை இழந்து இருக்கிற இருப்பையும் அனுசந்திக்கக் காலம் போருகிறது இல்லை -என்கிறார் -அப்பிள்ளை ஸ்ரீ ஸூ க்திகள்-ஆயிரம் ஜென்மங்கள் செய்த நோன்பின் பயனாகவே ஸ்ரீ வைஷ்ணவ ஜென்மம் கிட்டும்-மாயம் செவ்வே-நிலைப் பெய்திலாத நிலைமையும்-இந்த ஆச்சர்யம் ஒரு படியாக நிலை நின்று முடிவு பெற மாட்டாத நிலைமையையும் -அன்றிக்கே-இவ்வுடம்பு நிலை இல்லாது இருக்கும் தன்மை -என்றும் பிரகிருதி சம்பந்தத்தால் இருப்பதால் உண்டான சேஷத்வம் நிலை பெறாமல் சளிக்கக் கூடிய தன்மையையும் என்றுமாம் –
திருவடிச் சூடும்-கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலேஅசுரர் குழாம்-தொலைப் பெய்த நேமி எந்தாய் -என்னுடைய பிராப்தி பிரதிபந்தகங்களைப் பாற்றுதல் உமக்கு ஒரு கார்யமோ –நாயகனைப் பிரிந்த நாயகி பிரிவுக்கு ஆற்றாது உரைக்கும் பாசுரம் இது. நான் உன்னை யணுகி உனது திருவடிகளைத் தலைமேற்கொண்டு வழிபடும்படியான இவ்வுடம்பைப் பெறுதற்கு நல்ல தவஞ் செய்து வைத்திருந்தும் அப்பேறு முட்ட மூடியக்கை கூடாமல் இடையில் நீங்குதலை ஆலோசிக்குமிடத்து ஆற்றாமையாற் காலம் மிக நெடுகித் தோன்றுகிறது-என்பது இப்பாட்டின் தேர்ந்த கருத்து. ‘சுருங்கலது’ என்பதற்கு சுருங்குகிறதில்லை என்று எதிர்மறையாகப் பொருள் கொள்வதன்றியே‘சுருங்குதலை யுடையது’ என உடன்பாடாகப் பொருள் கொள்வதாயின், இப்படியே என் காலங் கழிந்து விடுகிறதேயென்று இரங்கியபடியாம்.-பூர்வ ஜந்மங்களில் மிக்க பெருந்தவஞ் செய்திருந்தாலன்றி, இப்படிப்பட்ட அரிய பெரிய நாயகனைப் பெறுதல் இயலாதாதலால் ‘நோற்ற இம்மாயம்’ என்றது “உள் திருவடிகளில் அடிமையாலல்லது செல்லாதபடியான சரீரத்தைப் பெற்றபடியையும், அப்படியிருக்கச செய்தே அவ்வடிமையை இழந்திருக்கிற இருப்பையும் அநுஸாந்திக்கக் காலம் போருகிறதில்லை யென்கிறார்’ என்பது அப்பிள்ளையுரை.–ஸர்வேச்வரனைச் சரணமடைந்து அவன் திருவடிகளையே வணங்கி அத்திருவடிகளே பேற்றுக்கு உபாயமென்று அத்யவஸாயங் கொள்வதற் குறுப்பான இவ்விலக்ஷண சரீரத்தைப் பெற்றிருப்பதையும் அப்படி பெற்றிருந்தும் பூர்ணாநுபவம் கிடைத்திடாமலிருப்பதையும் நோக்குமிடத்துக் காலதாமதம் பொறுக்க முடியவில்லை யென்று ஆழ்வார் கலங்கியுரைத்தாயிற்று.–‘மாயம் செவ்வே நிலைப்பெய்திலாத நிலைமை’ என்பதற்கு- இவ்வுடம்பு நிலையில்லாத தாயிருக்குந் தன்மையென்றும், ப்ரக்ருதி ஸம்பந்தத்தோடியிருக்கையில் உண்டான அடிமைக்குணம் ரஜோகுண தமோகுண ஸம்பந்தத்தால் நிலைப்படாது சலிக்கக்கூடியதன்மை என்றும் உரைப்பர்.-‘திருவடி’ என்றதற்கு ‘திருவடித் தாமரை மலர்’ எனப் பொருளுரைத்தது ‘சூடும்’ என்றதற்கேற்ப.“கோலமாமென் சென்னிக்கு உன் கமலமன்ன குரைகழலே” என்ற திருவாய் மொழி காண்க.-ஆயிரம் ஜந்மஙக்ளிற் செய்த நோன்பின் பயனாகவே ஒரு ஸ்ரீவைஷ்ணவ ஜன்மம் கிடைப்பதாக ப்ராப்திப்ரதிபந்தகங்களைப் பாற்றுதல் உனக்கொரு பெருங்கார்யமோ? என்பதற்காக ‘அசுரர்குழாந் தொலைப்பெய்தநேமி யெந்தாய்!’ என விளிக்கப்பட்டது.–தலைப்பெய்து + யான், தலைப்பெய்தியான்; “யவ்வரினிய்யாம்” என்பது நன்னூல். தலைப்பெய்தலென்பது ஒரு முழுச்சொல்.

தலைப் பெய்தி (பெய்து) யான் உன் திருவடிச் சூடும் தகைமையினால் நிலைப்பெய்த வாக்கைக்கு நோற்ற விம்மாயமும்-பகவத் அனுபவ ப்ரஸங்கம் அற்று இருக்கிற நான் உன் திருவடிகளை
கோலமாம் என் சென்னிக்கு -(திருவாய் –4-3-6-)என்று சிரஸா வஹிக்கும் படியான சேஷத்வமாகிற ஸ்வபாவத்தாலே கிட்டி திருவடிகளே பிராப்தி ஸாதனம் என்று நிலை பெறுகைக்கு உறுப்பான இந்த சரீரத்தைப் பெறுகைக்கு உன்னுடைய கிருபை யாகிற புண்யத்தை நோற்று வைத்த இந்த ஆச்சர்யத்தையும்-(ஸூ ஹ்ருத தேவர் யார் -முதலிகள் ஐதிகம்-தனக்கும் தெரியாமல் ஸாஸ்த்ரமும் அறியாமல் -எனது அடியாருக்கு ஒதுங்க நிழல் கொடுத்தாய் ஸாஸ்த்ர வேத்யனான புறப்பாடு கண்டு அருளும் அவனே அறிவான்)-மாயம் செவ்வே நிலைப் பெய்திலாத நிலைமையும்-கிருபா லாபம் ஆகிற ஆச்சர்யம் ஒருபடிப்பட நிலை நின்று நடத்தித் தாராதே நிற்கிற படியையும்–காண் தோறு-பார்க்கும் தோறும்–அசுரர் குழாம் தொலைப் பெய்த நேமி எந்தாய்-அஸூர ஸமூஹங்களுக்கு முடிவைப் பண்ணின திருவாழியை யுடைய என் ஸ்வாமி யானவனே–தொல்லை யூழி சுருங்கலதே –விரோதி நிவ்ருத்திக்குக் காலம் பார்க்க வேண்டாமையாலும் பரிகரம் தேட வேண்டாமையாலும் பிராப்தி விளம்பிக்கைக்கு ஹேது இல்லாமையால் முன்பு பழையதாக அகன்று போந்த காலத்தோடு
ஸஜாதீயமான ஆகாமி காலமானது கல்ப ஆகாரமாய்க் கொண்டு வளர்ந்து வரையிட்டுக் காட்டுகிறது இல்லை என்று அருளிச் செய்தார் ஆயிற்று

இதில் இங்கனே அந்வயம்-உன் திருவடிச் சூடும் தகைமையினால்-நிலைப்பெய்த யான் தலைப்பெய்த
வாக்கைக்கு நோற்ற விம்மாயமும் மாயம் செவ்வே நிலைப் பெய்திலாத நிலைமையும் காண் தோறு
அசுரர் குழாம் தொலைப் பெய்த நேமி எந்தாய் தொல்லை யூழி சுருங்கலதே
–என்று–உம்மை விட்டு இங்குப் பொறாமைக்கு அடியேனுடைய நிஜ ஸ்வபாவம் ஒரு ஹேது-இப்போதாக வந்தேறின ஆக்கைக்கு தேவரீர் ஸங்கல்பித்த ஆச்சர்யமும் ஹேதுவாம்-பகவத் ஸ்வரூப திரேதாந கரீம் -சத்யத்ரயம் என்று தொடங்கி அருளிச் செய்தபடி-ஸ்வ விஷய போக்ய புத்தி ஜனனியான ப்ரக்ருதியானது
ஸ்வ பர ஸ்வரூப யாதாம்ய அநு குண ஞான ப்ரவ்ருத்திகளை நிலை நிற்க ஹேதுவாம்-உன் திருவடிச் சூடும் தகைமையினால் நிலைப்பெய்த வாக்கைக்கு நோற்ற விம்மாயமும்-தகைமை என்று ஸ்வ பாவம்
இடை விடாதே த்வதீய புக்தோஜ்ஜித -ஸ்தோத்ர ரத்னம் -42-இத்யாதி யுக்த விதனாய் உன் திருவடிகளில் கீழ் இருப்பதை நிலை நின்ற யான் இங்கனே இங்கு இருப்பைப் பொறுத்து இருக்க ஒட்டுமோ என்றபடி-தலைப்பெய்து யான் உன் திருவடிச் சூடும் தகைமையினால் நிலைப்பெய்த வாக்கைக்கு நோற்ற விம்மாயமும் எனக்கு இப்போது வந்தேறினதான இத்தேஹத்துக்காக தேவரீர் நோன்பு நோற்றதே -ஸங்கல்பித்ததே -என்றபடி–இந்த ஆச்சார்யம் இன்னம் எத்தனை அநர்த்தத்துக்கு ஹேதுவோ என்று
ஏங்கப் பண்ணுமது அன்றி இங்கனே இங்கு இருப்பைப் பொறுத்து இருக்க ஒட்டுமோ என்றபடி-மாயம் செவ்வே நிலைப் பெய்திலாத நிலைமையும் காண் தோறு-மயாத்யஷேண ப்ரக்ருதி –ஸ்ரீ கீதை -9-10-என்று உன்னால் புகழப்பட்ட மாய ப்ரக்ருதி யானது ஸ்வரூப யாதாத்ம்ய அநு குண ஞான ப்ரவ்ருத்திகளை நிலை நிற்க ஒட்டாத நியத ஸ்வ பாவம் யுடையது என்பதும்–இத்தேஹத்தில் அகப்பட்ட எனக்கும்-ராஜ்யாத் பிரம்ஸோ வநே வாஸே –ஆரண்ய -67-24-என்னும்படி பிரிந்து பட்ட உனக்குப் போலே அதி பயாவஹம் ஆகையாலே இங்கனே இங்கு இருப்பைப் பொறுத்து இருக்கப் போமோ என்றபடி-இம்மூன்றையும்-காண் தோறு-பார்க்கும் தோறும்–அசுரர் குழாம் தொலைப் பெய்த நேமி எந்தாய்-அஸூர வர்க்கத்தை உரு அழிக்கும் திருவாழியை ஏந்தின அழகாலே என்னை ஆண்டு கொண்டவனே-தொல்லை யூழி சுருங்கலதே-உன்னையே அனுபவித்தும்-உனக்கே அடிமை செய்தும் கழிந்த யாவதாத்ம உபக்ரமமாய் இந்நாள் வரைக்குள்ள காலம் எல்லாம் நாம் அங்கனே இருந்தோமோ
அங்கனே இருந்தது அத்யல்ப காலங்கள் என்றே போனதாகா நின்றதே-ஆகையாலே
எஞ்ஞான்று தலைப்பெய்வன் என்று இங்கு இருப்பைப் பொறாமையால் ஜலாதுத் த்ருத மத்ஸ்யம் போன்று இரா நின்றேன் என்கிறார் –

தாத்பர்யம்
இதில் சர்வேஸ்வரன் தன்னுடைய கைங்கர்யத்துக்கு உபயோகியான சரீரத்தையும்-தன்னிடம் உள்ள பக்தியும் அருளிய பின்பு பேறு தப்பாது என்று விஸ்வசித்து இல்லாமல் இவற்றின் அஸ்திரம் பார்த்து அலமந்து கூப்பிடுகிறார்-இங்கு தகைமைக்கும் ஆக்கைக்கும் முக்யத்வம் கொண்டு இரண்டு நிர்வாஹங்கள்-பக்திக்கு ஆக்கை எதுக்கு-ஆக்கை சரீரம் பக்தி எதுக்கு-ஒன்றுக்கு முக்கியம் கொடுக்க அடுத்தது அமுக்கியம்-இரண்டுமே வேண்டுமே -சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும் போல்
நான் உன்னைக் கிட்டி உனது திருவடிகளை தலையில் வைத்து கொண்டால் அல்லது தரிப்பது அரிது ஆற்றாமையுடைய இந்த சரீரத்தை அநேக பிறவிகளில் அநேக தவம் செய்து பெற்றும்-இனி வரையில் உன்னைக் காணப் பெற்றிலேன்-இனி காணும் அளவும் இவை ஸ்திரமாக இருக்காவே-சரீரம் மின்னின நிலையில -மன்னுயிர் ஆக்கை-இனி மறு பிறவியில் உன்னை ஆஸ்ரயிப்போம் என்னில்-அங்கு பக்தி நிலைக்க வேண்டுமே -அதுவும் சங்கை உண்டே-அதி துர்லபமான மானுஷ்ய தேஹம் -க்ஷண பங்கி
அது பெற்றாலும் முக்குண மயமான இங்கு சத்வகுண கார்யமான பக்தி இருக்க வேண்டுமே அவ்வளவு துர்லபம்-இப்பிறவியில் இப்போதே பெற வேண்டும்-இவ்விதமாக பாதங்களை நினைத்துப் பார்க்க
உன்னைப்பெறாத இக்காலம் கல்பமாக நெடுகி உள்ளதே-நாதனான நீயோ ஆஸ்ரித விரோதி நிரசன நீயும் ரக்ஷண தீஷிதனாயும் உள்ளாய்-இப்படி இருக்க வீணாக காலம் பெருகுவது பொறுக்கப் போவது இல்லை என்று சர்வேஸ்வரன் இடம் முறை இடுகிறார் –

6-4-குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும்-ப்ரவேஸம்

இத் திருவாய்மொழியில் ஆழ்வார் ஸ்ரீ வால்மீகி பகவானோடு ஒப்பர்.
அவனும் இராமாவதார மல்லது போக்கி அறியான்; அவனுடைய பிரபந்தமும் அப்படியே.
இவரும் கிருஷ்ணாவதாரம் அல்லது அறியார்;
இத் திருவாய்மொழி கிருஷ்ணனுடைய சரிதை ஒழிய வேறு ஒன்றைச் சொல்லாது.

அன்றிக்கே,
“சூரனே! என் எண்ணமானது வேறு இடத்தில் செல்வது இல்லை” என்று கொண்டு
‘பர நிலையும் கூட வேண்டேன்’ –
“ஸநேஹோ மே பரமோ ராஜந் த்வயி நித்யம் ப்ரதிஷ்டித:
பக்திஸ்ச நியதா வீர பாவோ நாந்யத்ர கச்சதி”- என்பது, ஸ்ரீராமா. உத். 40 : 16.
என்ற திருவடியைப் போலே யாயிற்று இவரும் கிருஷ்ணாவதாரம் ஒழிய வேறு ஒன்று அறியாதபடி என்னுதல்.

“சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான்” -5-3-9-என்கிறபடியே, கிட்டி நின்று அநுபவிக்கப் பெற்றிலோம் என்கிற இழவு தீர,
பூமியிலே ஆகப் பெற்றது;-அவதரித்து என்றபடி –
“தொல்லருள் நல் வினையால் சொலக் கூடுங் கொல்?” -5-9-10-என்றே யன்றோ இவர் ஆசைப் பட்டது.
அதாவது,
நா நீர் வந்து திருநாமம் சொல்லுகையாகிறது புண்ணியத்தின் பலமே அன்றோ.

“பிறந்தவாறும்”-5-10- என்ற திருவாய்மொழியில் இவர்க்கு உண்டான இழவு எல்லாம் தீரும்படி
ஸ்ரீ பிருந்தாவனத்தில் நடந்த செயல்களைக் காட்டிக் கொடுக்கக் கண்டு,
அவை இறந்த காலத்தில் நடந்த செயல்கள் போலத் தோற்றுகை அன்றிக்கே,
சம காலத்தில் நடக்கும் செயல் போலே தோற்றக் கிட்டி நின்று அனுபவிக்கிறார்.

“மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியிலே, ‘அல்லோம்’ என்று அகன்று முடிந்து போகப் புக்க தம்மை
‘ஆவோம்’ என்னச் செய்து சேரவிட்டுக் கொண்டபடியை நினைத்து,
இப்படி வல்லார் இவன் அல்லது இலர் கண்டீர்-6-3- என்று தலைக் கட்டுகிறாரா யிருக்கிறது.
(இப்படி 5-3- தொடங்கி 6-3 -இவ்வாறு தலைக்கட்டி இத்திருவாய் மொழி என்கிறார் ஆயிற்று )

“சன்மம் பல பல”-3-10- என்ற திருவாய்மொழியிலும் இப்படி இருப்பது ஓர் உவகை உண்டே;
அதற்கும் இதற்கும் வாசி என்? என்னில்,
அங்கு, இதர வியாவிருத்தி மாத்திரத்தால் உண்டான ஞான லாபத்தால் உண்டான உவகை;
இங்கு, அவன், தன் குணங்களை நேரே இவரை நெருங்கி அநுபவிப்பிக்க,
தம் வசப்பட்டவர் அல்லாதபடி அநுபவித்து உவகையராய் வாய் விடுகிறார்.

சன்மம் பல பல-3-10-அவதார சேஷ்டிதங்கள்
பிறந்தவாறும் -5-10 -அவதார சேஷ்டிதங்கள்
6-2/6-4- நேரே சங்கதி -6-3- பிராசங்கிகம்-சேர மாட்டேன் என்றவரை சேர்த்த வ்ருத்த கடநா சாமர்த்தியம் இடைச் சேர்க்கை
4-10-/5-2—நேரே சங்கதி –5-1- போலே – உபகார பரம்பரை சொல்லி அருளியது போலே –

சேஷத்வம் பாரதந்த்ர்யம் மறந்து -இருப்பதே ஆழ்வார் தம் வசம் இல்லை –
எனக்கு நிகர் யார் -ஸ்வாதந்த்ர்யம் தோன்ற அருளிச் செய்கிறார்
கிருஷ்ணானுபவம் இப்படி பண்ண வைக்கிறதே –

நாலாம் திருவாய் மொழியில் -கீழ் விருத்த விபூதி யோகத்தால் தன் அகடி கடநா சக்தியைக் காட்டி -பல பிரதான சமர்த்தன்
என்கிற பிரதிபத்தியைப் பிறப்பித்த ஸர்வ ஸ்மாத் பரனுடைய ஸூக மத்வ ஸூச நார்த்தமாக
அவனுடைய அனந்த ஸாயித்தவத்தையும்
ஆச்சர்ய ஆகாரவத்தையும்
அதிசயித உஜ்ஜ்வல்யத்தையும்
அப்ராக்ருத விக்ரஹவத்தையும்
அர்த்திகளுக்கு அபேக்ஷிதா கரத்வத்தையும்
அந்நிய அபிமான நிவர்த்தகத்வத்தையும்
அதிசயித போக்ய ஆகாரத்தையும்
அர்த்தியாயும் அபேக்ஷிதம் தலைக் கட்டிக் கொள்ளூம் படியையும்
அசாதாரண சிஹ்ன யோகத்தையும்
பரஞ்சோதி ஸ்வரூபவத்தையும்
அனுசந்தித்து ஏவம் பிரகாரனான ஸ்ரீ கிருஷ்ணனுடைய மநோ ஹரியானா அகில சேஷ்டிதங்களையும் இங்கே இருந்து
அனவரத அனுபவம் பண்ணப் பெற்ற எனக்கு ஆர் இனி நிகராவர் என்று ஹ்ருஷ்டராய்க் கொண்டு
அவனுடைய ஸூப ஸூகத்வத்தை ப்ரதிபாதித்து அருளுகிறார் –

குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம்ஒன்று ஏந்தியதும்
உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும்பல
அரவில் பள்ளிப் பிரான்தன் மாய வினைகளையே அலற்றி
இரவும் நன்பகலும் தவிர்கிலன் என்ன குறைவு எனக்கே
.–6-4-1-

பிறந்தவாறும்” என்றாற் போலே தொடங்கி ஓர் அவதாரம் முன்னாக இழியாமல், இதிலே இழிவான் என்? என்னில்,
“மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியில் உண்டான தம்முடைய பிரணய ரோஷத்தினைப் போக்கித் தம்மைச் சேர விட்டுக் கொண்டபடி,
திருக் குரவைக் கூத்தில் பெண்களோடே கலந்து அவர்களை அநுபவிப்பித்தாற் போலே இருக்கையாலே, அது முன்னாகப் பேசுகிறார்.-நாம் அநுசந்திக்கில் அன்றோ ஓர் அடைவாக இழிவது!-அவன் அநுபவிப்பித்தபடியே பேசுகிறாராகையாலே திருக் குரவைக் கூத்தினை முதல் முன்னம் பேசுகிறார் -திருக் குரவையில் பெண்களோடு உண்டான கலவியையாயிற்று இவர்க்கு முதலிலே காட்டிக் கொடுத்தது.-ஐந்து லக்ஷம் குடிகளிலுள்ள பெண்கள் எல்லாரோடும் கலந்த பிரீதி உண்டாயிற்று, இவர் ஒருவரோடு கலந்து பிரீதி.-குரவை பிணைந்த குழகும்” என்று ஆசைப்பட்டபடியே அநுபவிக்கிறார்.-திருக்குரவையில் இவனை ஒழியப் பெண்களுக்குச் செல்லாதது போலே காணும்
“மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியில், ஆழ்வாரை ஒழிய இவனுக்குச் செல்லாமை விளைந்தபடி,

பூமியிலே ஒரு பருவத்திற் பெண்களோடே கூடப் பூர்ணமாக அநுபவித்திருக்கிற இருப்பைக் கண்டு அது பொறுக்க மாட்டாமையால் பொறாமை மிக்கு, ‘நமக்கு இட்ட சோற்றை உண்டான்’ என்று ஒரு வியாஜமாகக் கல் மழையைப் பெய்வித்தான்;
அப்போது கைக்கு எட்டிற்று ஒரு மலையை எடுத்துத் தரித்துக் கொண்டு நின்ற படி.-இப்படி அநுபவிக்கிறான் சர்வேஸ்வரன்’ என்று அறியான் அன்றோ;
இவன், தன்னை மனித சஜாதீயன் ஆக்கிக் கொண்டு இருக்கையாலே.-அன்றைய தினத்தில் கல் மழையில் பசுக்களுக்கும் இடையர்க்கும் வந்த ஆபத்தைத் தீர்த்தாற் போலே யாகாதே,
இவர்க்கும் “மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியில் வந்த ஆபத்தைத் தீர்த்தபடியும்.

உள் பட மற்றும் பல –-இவை முதலான செயல்களுக்கு ஓர் எண் இல்லை.
“பிறந்தவாறும்” என்ற திருவாய்மொழியில், வலிமைக் குறைவாலே சொல்ல மாட்டிற்றிலர்;
இங்கு, உகப்புத் தலை மண்டை யிட்டுச் சொல்ல மாட்டுகிறிலர்.
மற்றும், இப்படிப் பெண்களுடைய கலவிக்குத் தண்ணீர்த் துரும்பு அறுத்தவை பலவாம்.

அரவில் பள்ளிப் பிரான் –நாட்டார் உறக்கம், தமோ குணத்தால் மறைக்கப்பட்டதாய்த் தங்கள் பொருட்டேயாய் இருக்கும்;-இவன் உறக்கம் பிறருடைய ரக்ஷணத்தின் பொருட்டு இருக்கும்.
உறங்குவான் போல் யோகு செய்த பெருமான் அல்லனோ.-திருவாய். 5. 4 : 11.–
உறங்கினானாகில் பிறருடைய ரக்ஷணத்துக்கு உடலாயிருக்கும்;
உணர்ந்திருந்தானாகிலும் அப்படியே; இது என்ன உபகாரந்தான்!

அரவில் பள்ளிப் பிரான் –-மேலே, ஒரு பாம்போடு உண்டான சேராமை சொல்லிற்று;
இங்கு, ஒரு பாம்போடு உண்டான சேர்த்தி சொல்லுகிறது.
அங்கு, போகத்தைக் காற் கடைக் கொண்டமை சொல்லிற்று;-இங்கு, போகப் பிராவண்யம் சொல்லுகிறது.-போகம் -பாம்பு -இனிமை-பிரதிகூலனான காளியனைப் பறக்க ஓட்டினான்;
அநுகூலனானவனைப் படுக்கையாகக் கொண்டான்.-இவன் தான் -அநந்த முகமாக -பல பல முகமாக அநுகூலிக்கும்;-அவனும்-அநந்த முகமாக – பல பல முகமாக அடிமை கொள்ளும்.

அரவில் பள்ளிப் பிரான்-அவதாரங்களுக்கு அடி திருப்பாற் கடலாகையாலே அதனைச் சொல்லுதல்;-அன்றியே,“நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்” –திருவாய். 5. 10 : 11.என்றதனை நினைக்கிறாராதல்.

அநுபவத்திற்குத் தக்கதான காலமாகையாலே, நல்ல இரவும் நல்ல பகலும் என்கிறார்.
பிரிந்த காலத்திலே அன்றோ நெருப்பை உருக்கி ஏறட்டினாற் போலே இருப்பது,

என்ன குறைவு எனக்கே –-“அங்குக் காலம் பிரபுவாய் இல்லை” என்று கொண்டு பகலும் இரவும் நடையாடாதது ஒரு தேச விசேடம் தேடி அநுபவிக்கைக்குப் பட்டைப் பொதி சோறு கட்ட வேண்டும்படி குறைவாளனா யிருந்தேனோ?-ஒரே தன்மையதான அநுபவம் அன்றோ அங்கு உள்ளது;-அந்த அந்தக் காலங்கள் தோறும் உண்டான அநுபவ விசேடங்களை அநுபவிக்கப் பெற்ற எனக்கு ஒரு குறை உண்டோ?
அன்றிக்கே,-பரத்துவ அநுபவமே அன்றோ அங்கு உள்ளது;-சீல குண அநுபவமுள்ளது இங்கே அன்றோ. ஆதலின் “என்ன குறைவு எனக்கே” என்கிறார் என்னுதல்.
(ஒரே திவ்ய தேசம் அங்கு இங்கு பஹு வாக உள்ளவை அன்றோ )

—————-

கேயத் தீங்குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் கெண்டை ஒண்கண்
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல
மாயக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனம் குழைந்து
நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ்வுலகம் நிகரே
.–6-4-2-

கேயம் தீம் குழல் ஊதிற்றும் – தான் நினைத்த பெண்களுடைய பெயரை வைத்துப் புணர்த்துச் சுவைப் பாட்டாக வைத்து ஊதிற்றும்.-கேயம் – பாட்டு. தீம் – இனிமை. இனிமையை யுடைய பாட்டு என்றபடி.-இதுக்கும் பசு மேய்க்கைக்கும் ஒன்றே பரிகரம்.–குழலை ஊதவே பசுக்கள் வயிறு நிறையும்-சக்கரவர்த்தித் திருமகனுக்கு வில் கை வந்திருக்குமாறு போலே யாயிற்று, கிருஷ்ணனுக்குக் குழல் கை வந்திருக்கும்படி.-இது வைஸ்ய வர்ண தர்மம் -அது ஷத்ரியன் வர்ண தர்மம்-

பசு மேய்த்து வந்த சிரமம் எல்லாம் போகும்படி நப்பின்னைப் பிராட்டி இளமை பொருந்திய அழகிய திருக் கண்களாலே குளிர நோக்கி அழகிய திருக் குழலின் பரிமளத்தாலே திருமேனியை வாசனை யுடைய தாம்படி ஆக்கித் தன் தோள்களோடே அணைத்ததுவும்.-“தோளி”சேர் பின்னை-இவளுக்கு அழகு கை விஞ்சி யிருக்குமே.-

சக்கரவர்த்தித் திருமகனுக்கு அத்யயநம், ஆசாரிய சேவை, அஸ்திர சஸ்திரப் பயிற்சிகள் உண்டாமாறு போலே,-இவனுக்கு-பெண்களை அழைக்கை மற்றும் பல-
மற்றைப் பிராட்டிமாரோடு கலந்த படி.

மாயக் கோலப் பிரான்-நப்பின்னை பிராட்டியாரோடே கலவியால் வந்த ஒற்று மஞ்சளும் மாளிகைச் சாந்துமான அத்யாச்சர்யமான ஒப்பனையை யுடையனாய் -உபகார சீலனானவனுடைய-கிருஷ்ண சேஷ்டிதங்களை நினைத்து அத்தாலே நெஞ்சு நெகிழ்ந்து

எனக்கு எவ் வுலகம் நிகர் – ஒரு தேச விசேடத்தில் தான் எனக்கு ஒப்பாவார் உளரோ?
அநுபவ வேளை போலே நினைக்கின்ற காலத்திலும் இனிமையோடே செல்லக் கடவதானால் எனக்கு எங்கே ஒப்பு?-ஆகாச வாயர் எனக்கு எதிரோ!
( ஆகாசம் கிடைக்குமா பார்த்து இருக்கும் சம்சாரிகளைச் சொல்லிக் கழிக்கக் கூடாதே )
வாய் – இடம். பரமாகாசம் என்கிற பரம பதமாகிற இடத்திலுள்ளார் தாம் எனக்கு ஒப்பாரோ!!
உலகம் என்பது, உயர்ந்தோராகையாலே நித்திய ஸூரிகள் என்றபடி.
பிரார்த்தித படி பெற்றதால் பரம பதத்திலும் சமம் தனக்கு இல்லை என்கிறார்-

——————

நிகரில் மல்லரைச் செற்றதும் நிரை மேய்த்ததும் நீள் நெடுங்கைச்
சிகர மாகளிறு அட்டதும் இவைபோல்வனவும் பிறவும்
புகர்கொள் சோதிப் பிரான்தன் செய்கை நினைந்து புலம்பி என்றும்
நுகர வைகல் வைகப்பெற்றேன் எனக் கென்னினி நோவதுவே
–6-4-3-

மல்லரோடே கூட எல்லா அவயவங்களும் பொருந்தி போர்த் தொழில் செய்ய நிற்கச் செய்தே, சாத்தின சாந்து குறி அழிந்தது இல்லை காணும்.
கூனி சாத்தி விட்ட உடனே பெண்கள் கண்களாலே இலச்சினை இட்டு விடுகையினாலே இவனால் அழிக்கவும் போகாதே அன்றோ.
இவர்கள் கண்களாலே இலச்சினை இடுகையாவது, அவன் தோள்களிலே சேலும் கயலும் இடுகை அன்றோ.
இவன் மல்லரோடே சேர்ந்து அழித்தானாகிலும், ‘மற்று எங்கேனும் அழித்தான்’ என்றே அன்றோ அவர்கள் இருப்பார்கள்.-இதனை அழித்துப் போனானாகில், பின்பு பெண்கள் கோஷ்டிக்கு ஆளாகானே.

க்ஷத்திரியப் பிறவிக்கு ஈடாம்படி மல்லரோடே போர் செய்தான்;-ஆயர் பிறவிக்கு ஈடாம்படி பசுக்களை மேய்த்தான்.-பசுக்களை மேய்த்த போதை ஆயாச மாகாதே, மல்லரோடு பொருத போதும் உள்ளது

சிகர மாகளிறு அட்டதும்-பர்வத சிகரம் போலே உரத்து பெருத்து இருக்கிற குவலயா பீடத்தை நிரசித்ததும்-இவை போல்வனவும் பிறவும்-இவை போலே மற்றும் உண்டான கேசி நிரசன நாதிகளும்-புகர்கொள் சோதிப் பிரான்-விரோதி நிரசன த்தாலே ஒளி பெற்ற தேஜஸ் ஸூ –உபகார சீலன்

எனக்கு என் இனி நோவதுவே –‘காலம் நெடுகுவது குறுகுவது ஆகாத இடந் தேடி அநுபவிக்கப் பெற்றிலேன்’ என்கிற அதிருப்தி யுண்டோ எனக்கு என்கிறார்.
அன்றிக்கே,-அவனுக்கு வரும் நோவன்றோ, இவர்க்கு நோவாவது; அது கழியப் பெற்ற தன்றோ என்னுதல்.
இவர் நோவு போக்கும் அவனுக்கு வரும் நோவன்றோ,-சம்சார ரஷண்ம் -பலிக்காததே அவனது நோவு – ரஷிக்க இசைவதே அவன் நோய்க்கு பரிகாரம் –
இவர்க்கு நோவாவது: அது போகவே இவர்க்கு நோவு போயிற்றதாமன்றோ.-உயிருக்கு வரும் நோவு உடம்புக்கு வரும் நோவாமன்றோ.-

—————-

நோவ ஆய்ச்சி உரலோ டார்க்க இரங்கிற்றும் வஞ்சப்பெண்ணைச்
சாவப் பாலுண்டதும் ஊர் சகட மிறச் சாடியதும்
தேவக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனங்குழைந்து
மேவக் காலங்கள் கூடினேன் எனக்கு என் இனி வேண்டுவதே?
–6-4-4-

ஆய்ச்சி உரலோடு நோவ ஆர்க்க இரங்கிற்றும் –-சீயர், இத் திருப் பாசுரத்தை இயல் அருளிச் செய்ய புக்கால் “நோவ”என்று அருளிச் செய்யும் அழகு காணும்.
‘நோவ என்கிறார் காணும் ஆழ்வார், தம் திரு மேனியிலே கயிறு உறுத்தினாற் போலே.’
ஒரு துவேஷம் உண்டாய்க் கட்டுகிறாள் அல்லளே, சிநேக காரியமான கோபமாகையாலே
சிநேகமுள்ள அளவும் இடை நிற்கும் -சத்ருசமாக -அன்றோ கோபமும்.
தாய் எடுத்த சிறு கோலுக்கு -8-3-5-உளைந்து ஓடியன்றோ, விளியா ஆர்க்க ஆப்புண்டு விம்மி அழுதான்;-வாய் விட்டு அழ மாட்டாதது அன்றோ இவரை வருத்துகிறது.
“தறியார்ந்த கருங்களிறே போல நின்று தடங்கண்கள் பனி மல்கும் தன்மையானை” என்கிறபடியே,-ஒரு மத்த யானையைத் தறியோடே சேர்த்தாற் போலே காணும் இவன் கட்டுண்டு நின்ற நிலை.
ஓர் அபலை கட்டின கட்டு அவிழ்த்துக் கொண்டு போக மாட்டாதே, நின்று அழுகையே இயல்பாய் இருந்தபடி.-“வல்லையாகில் போய்க் காணாய்” என்றாள் அன்றோ.
(அகாரம் கட்டி வைத்து ஆகாரம் கட்ட போனாள் அன்றோ பஹு குடும்பிநி )

யசோதைப் பிராட்டியின் முலை உண்ணும் போதும் தான் உயிர் பெற உண்ணுமாறு போலே காணும், இவள் முலை உண்கிற போதும் தான் உயிர் பெற முலை யுண்டபடி; ஆதலின், ‘உண்டதும்’ என்கிறார்.(அவள் உயிரை தான் பெரும் படி இங்கு )

தேவக் கோலப் பிரான் – மனிதர்களை ஒத்து நின்று செய்யவும் பெற்றதில்லையே.
அதி பால்யத்திலே செய்த செயலாகையாலே அப்ராகிருதமாய் இருப்பதோர் ஒப்பனை போலே இருக்கிறபடி.-தன் செய்கை நினைந்து மனம் குழைந்து மேவக் காலங்கள் கூடினேன் –அவனுடைய செயல்களை நினைத்து அகவாய் உடை குலைப்பட்டு
வேறு பிரயோஜனம் இல்லாதவனாய்க் கொண்டு காலம் போக்கப் பெற்றேன்.
நெஞ்சு நெகிழ்ந்து செயல்களோடே பொருந்தும்படி காலங்களைக் கூடப் பெற்றேன்.
எனக்கு என் இனி வேண்டுவது – இனி அடையத் தக்கது ஒன்று இல்லை என்கிறார்.-

—————-

வேண்டித்தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள்வாய்ப்
பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கோர் ஆய்க்குலம் புக்கதும்
காண்ட லின்றி வளர்ந்து கஞ்சனைத் துஞ்ச வஞ்சம்செய்ததும்
ஈண்டு நான் அலற்றப் பெற்றேன் எனக்கு என்ன இகல்உளதே?
–6-4-5-

தந்தையாக அடைய வேண்டும் என்று விரும்பி-இச்சையாலே-இரக்கிறவர்கள் அளவு பார்த்தல், தன்னளவு பார்த்தல் செய்கை யன்றிக்கே வந்து பிறந்தபடி காணும் இவரை வருத்துகிறது.-தான் இரப்பாளனாய்க் காரியம் செய்யுமவன், பிறர் இரந்தால் பொறுக்க மாட்டானே யன்றோ.

இருளாலே அன்றோ நாம் பிழைத்தது.-இனி, இந்த இருளைச் சரணம் புகுமித்தனை அன்றோ’ என்று பிள்ளை யுறங்கா வில்லி தாசர் பணிப்பாராம்.
“ஊர் எல்லாம் துஞ்சி” -5-4-என்ற திருவாய்மொழியில், கூற்றமான இருள், இப்போது இவர்க்கு ஆதாரத்துக்கு விஷயமாயிற்று அன்றோ.

அங்கு ஓர் ஆய்க் குலம் புக்கதும் – அந்த நிலையிலே இடையிலே வளருகைக்கு ஓர் அஞ்சினான் புகலிடம் உண்டாவதே! ஆய்க்குலம் – ‘கம்சன் பாதகன்’ என்று பயப்பட அறியாதவர்கள். ‘குடி வாய் உடன் பட இருந்தானாகில் இருக்கிறான், இல்லை யாகில் உழக் கோலாலே தகர்க்கிறோம்’ என்று இருப்பர்கள்.

தேவகியாரைப் போலே சமகாலத்தே இருந்து பயப்படாதே, இப்போது பயம் கெட்டு இருந்து அநுபவிக்கப் பெற்றேன்.-கம்சனை முடித்த படியை இன்று இருந்து அநுபவிக்கப் பெற்ற எனக்கு இனி ஒரு மிடி இல்லை-எனக்கு என்ன இகல் உளதே-கம்சன் பட்ட பின்பு எனக்குப் பகைவர்கள் உண்டோ?-இகல் – பகை.-பகவத் விமுகர்களே சத்ருக்கள் -அவர் ஆணைக்கு எதிராக செயல் படுபவர்கள் எனக்கு சத்ரு –

————-

இகல்கொள் புள்ளைப் பிளந்ததும் இமிலேறுகள் செற்றதுவும்
உயர்கொள் சோலைக் குருந்தொசித்ததும் உட்பட மற்றும்பல
அகல்கொள்வைய மளந்த மாயன் என்னப்பன்தன் மாயங்களே
பகலிராப் பரவப் பெற்றேன் எனக்கென்ன மனப்பரிப்பே
.–6-4-6-

பகல் இராப் பரவப் பெற்றேன் – நாட்டார் அபிமத விஷயங்களை அநுபவிப்பதற்குப் ‘பகல் இரா’ என்று கூறிட்ட காலம் இரண்டும்-இந்த விஷயத்திலே அநுபவிக்கப்பெற்ற எனக்கு,
இரவு பகல் புறம்பே விஷயங்களை அனுபவிப்பாருடைய மனோ துக்கம் உண்டோ?
பரிவு – துக்கம்.-அதிலே ஒரு ஒற்றெழுத்து ஏறினாலும் அந்தப் பொருளையே காட்டக் கடவது.பரிவு என்கிறதை சந்தஸ்ஸூ க்குச் சேர பரிப்பு என்கிறது-

————

மனப்பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான்பிறந்து
தனக்கு வேண்டுருக் கொண்டு தான்தன சீற்றத்தினை முடிக்கும்
புனத்துழாய்முடி மாலை மார்பன்என்னப்பன்தன் மாயங்களே
நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கினியார் நிகர் நீணிலத்தே.
–6-4-7-

நாட்டாரை அழுக்கு உடம்பு கழிக்குமவன் தான் கண்டீர் அழுக்கு மானிடச் சாதியில் வந்து பிறந்தான்;-குழந்தை கிணற்றிலே விழுந்தால் எடுக்க வரும் தாய் நெஞ்சு நொந்து வந்து எடுக்குமாறு போலே-குற்றங்களுக் கெல்லாம் எதிர்த்தட்டான தான் பிரகிருதி சம்பந்தம் இல்லாத திவ்ய திருமேனியோடே கர்ப்பத்தில் வாசம் செய்து அவதரித்தானாதலின் ‘தான் பிறந்து’ என்கிறது.
அன்றிக்கே,-பிறப்பதற்குக் கர்மம் செய்து வைத்தவரும் கூட அருவருக்கும் பிறவியிலே கண்டீர்-கர்மத்துக்கு வசப்படாத தான் பிறந்தது என்பார் ‘தான் பிறந்து’ என்கிறார் என்னுதல்.
இதற்கு அடி பரம கிருபை அன்றோ.-அப்படிப் பிறந்தால் ஒருபடிப் பட்டிருக்கப் பெற்றோமோ! இரண்டு தோள்களுடையவனா? நான்கு தோள்களுடையவனா?” என்னும்படியன்றோ பட்ட படி.-தான் வேண்டிய உருவம் அப்ராக்ருத சமஸ்தான விக்ரகம் –
அடியார்கள் வேண்டிய உருவம் என்றுமாம் –இச்சையால் எடுத்தவை-

அடியார்களுடைய விரோதியைப் போக்கினானாய் இருக்கை யன்றிக்கே,
தன் சினம் தீர்ந்தானாய் இருக்கை;-தாயானவள், குழந்தையை நலிந்தவர்களைத் தான் நலிந்து தன் சினம் தீருமாறு போலே.-புனம் துழாய் முடி மாலை மார்பன் என் அப்பன்-
அடியார்களுடைய விரோதிகளைப் போக்கித் திருமஞ்சனம் செய்து ஒப்பித்து,
திருமேனியின் பரிசத்தாலே தன் நிலத்தில் நின்றாற் போலே செவ்வி பெற்று இருக்கின்ற
திருத்துழாய் மாலையினைத் திரு முடியிலும் திருமார்பிலுமுடையவனாய்,
அந்த ஒப்பனையாலே என்னை எழுதிக் கொண்டவன்.-பொதுவாகை யன்றிக்கே, அவனுடைய ஆச்சரியமான செயல்களையே அநுசந்திக்கும் நெஞ்சை யுடையேன்.

எனக்கு நீள் நிலத்தில் யார் நிகர்--பூமி பரப்பை யுடைத்து என்னா, எனக்கு ஒப்பாவார் உளரோ?-பரமபதத்தை ஒன்றாக நினைக்கின்றிலர்; தம்மைப் போலே கவி பாடி அடிமை செய்வார் இல்லாமையாலே, சம்சாரத்தே இருந்து கவி பாடி அடிமை செய்யப் பெற்ற எனக்கு, பூமியில் ஓர் எதிர் உண்டோ? என்கிறார்.-

————–

நீணிலத்தொடு வான்வியப்ப நிறை பெரும் போர்கள்செய்து
வாண னாயிரம் தோள்துணித்ததும் உட்பட மற்றும்பல
மாணியாய்நிலம் கொண்ட மாயன் என்னப்பன்தன் மாயங்களே
காணும் நெஞ்சுடையேன் எனக்கினி என்ன கலக்க முண்டே?
–6-4-8-

சம்பந்தமில்லாத விஷயங்களைப் பற்றின தோள்களைக் கழித்தபடி.
‘இவன் கர பாதை ஆற்ற மாட்டாமல் கண்டார் கால்களில் எல்லாம் குனிந்து திரியா நின்றான்’ என்று அந்தக் கரத்தைக் கழித்து விட்டான்.
‘கை கழியப் போய்ச் சிவனை அடைந்தான், இவன் கர பாதை ஆற்றாமை’ என்று அதனைப் படைக்கு -திரு ஆழிக்கு –-அடைத்து விட்டான். –இவர் கை சக்கரம் கழிய போய் அவன் கைகளை கழித்தான்–வேறு தெய்வத்தைப் பற்றிக் கையிலே பலம் பெற்று விட்டான்.
பகவானைப் பற்றுவதற்குக் கைம் முதல் இல்லாமை விட்டான் அன்றே.
(கை முதல் -மூல தனம் இல்லை -ஆயிரம் கை கொடுத்தான்-அஞ்சலி பண்ணாததால் -கை தப்பிற்று -கைகள் போனது )

கண்ணழிவற்ற அழகாலும்,-வரையாதே எல்லாரையும் தீண்டுகையாலும்,
அடியார்கள் விஷயத்தில் ஓரத்தாலும்,-செய்யும் ஆனைத் தொழில்களாலும்
கிருஷ்ணாவதாரத்தோடு ஒத்திருக்கையாலே, ஸ்ரீ வாமனாவதாரத்தை அநுபவிக்கிறார்.

நிலம் கொண்ட மாயன் என் அப்பன் –-திரு உலகு அளக்க’ என்று ஒரு வியாஜத்தை இட்டு அளந்து கொண்டது தம்மை என்று இருக்கிறார்.-மநோ வாக் காயங்கள் -சிந்தை சொல் செயல் மூன்றையும் கொண்டானே –

அப்பன் தன் மாயங்களே காணும் நெஞ்சுடையேன் – ‘முடியானே’ என்ற திருவாய்மொழியிற் கூறிய கரணங்களை யுடைய ஆழ்வார் ஆகையாலே, நெஞ்சு தானே நினைக்கவும் வற்றாய்க் காணவும் வற்றாயிருக்கும் என்று பிள்ளான் பணிப்பர்” என்று அருளிச் செய்வர்.
அன்றிக்கே,-‘கட்கண்’ என்றும், ‘உட்கண்’ என்றும் சொல்லுகிறபடியே,
நெஞ்சு தன்னையும் கண்ணாகச் சொல்லக் கடவதன்றோ; அது ஆகவுமாம்.
கட்கண்ணால் காணாத அவ்வுருவை நெஞ்சென்னும் உட்கண்ணேல் காணும்
உணர்ந்து”-(பெரிய திருவந். 28.)– என்பது, ஈண்டு அநுசந்தேயம்–

எனக்கு இனி என்ன கலக்கம் உண்டே –-‘இந்த விஷயத்தைக் காணப் பெற்றிலோம்’ என்கிற கலக்கம் எனக்கு உண்டோ?
அன்றிக்கே,-வேறு தெய்வங்கள் ‘ரக்ஷகர்’ என்று இருக்கிற கலக்கமும்,
ஈஸ்வரனுடைய ரக்ஷணத்திலே ஐயப்படும் கலக்கமும்,
‘தானே தனக்குக் கடவன்’ என்னும் கலக்கமும் இல்லை என்னலுமாம்.

என் நான் செய்கேன் -யாரே களை கண் -என்னை என் செய்கின்றாய் போலே –
உபாய அம்சத்தில் கண் வைக்காமல் பிராப்ய அம்சத்தில் கண் வைத்து-கைங்கர்யமே யாத்ரையாக போக வேண்டும் –

———-

கலக்க ஏழ்கடல் ஏழ்மலை உலகேழும் கழியக் கடாய்
உலக்கத் தேர்கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும்பல
வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவை யுடை மால்வண்ணனை
மலக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம்மண்ணின் மிசையே?
–6-4-9-

வைதிக புத்திரர்களை இந்தத் தேசத்தினின்று கொண்டு போருகையும், போன செவ்வியிலே கொடு வந்து கொடுக்கையும், காலையில் செய்ய வேண்டிய யாக காரியங்களைச் செய்து முடித்த பின்பு மத்தியானத்தில் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்வதற்கு முன்பு இவை அடங்கலும் செய்கையும்.

வலம் கை ஆழி இடம் கைச் சங்கம் இவை யுடை மால் வண்ணனை மலக்கு நாவுடையேற்கு –
இவ்விடத்தைப் பட்டர் அருளிச் செய்யா நிற்கச் செய்தே கஞ்சனூரில் இருந்தவரான வண்டுவரைப் பெருமாள் என்பவர்,-மால் வண்ணனை ‘மலக்கு நாவுடையேன்’ என்ன அமையாதோ? ‘வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவையுடை’ என்று விசேடித்ததற்குக் கருத்து என்? என்ன,
“சோளேந்திர சிங்கனை உளுக்காக்கப் பண்ணுகிறேன் என்கிறார் காணும்” என்று அருளிச் செய்தார்.-சோளேந்திர சிங்கன்’ என்பது, நம் பெருமாளுடைய யானை. உளுக்காக்க – இருக்கும்படி. என்றது சர்வேஸ்வரனாகிற மத்த யானையானது பணிந்து கொடுக்கும்படி செய்கிறேன் என்கிறார் என்றபடி.
அறப் பெரியவனுக்கு லக்ஷணம் அன்றோ சங்க சக்கரங்கள்.-“ஒன்றிலும் ஆசை இல்லாதவன், மௌனமாக இருப்பவன்”-“அவாக்யநாதர:” என்பது, சாந்தோக்யம். 3 : 14.-என்கிற சர்வாதிக வஸ்துவைக் கலங்கச் செய்யும் நாவீறுடையேன் என்கிறார்.

மலக்கும் நாவுடையேன் – இவர் வார்த்தையில் கலங்குமவனன்றோ அவன் தான்.
இவர் கலங்கிச் சொல்லச் சமைந்தாற் போலே யன்றோ அவனும் கலங்கிக் கேட்கச் சமைந்தபடி.-இம் மண்ணின் மிசை மாறு உளதோ –-பரம பதத்தில் அநுபவம் வாய் புகுநீர் ஆகையாலே அதனை ஒன்றாக நினைத்திருக்கின்றிலர்.-இனி, உண்டாகில் பூமியிலே; அதிலும் இல்லை என்கிறார்.-தரித்து நின்று அனுபவம் இங்கே தானே –
அன்றிக்கே,-‘ஒப்பு உண்டு, இல்லை’ என்று ஐயங்கொள்ளுகைக்குத் தான் விஷயமுள்ளது நித்திய விபூதியிலே யன்றோ? ஆதலால், ‘இம் மண்ணின் மிசை மாறுளதோ?’ என்கிறார் என்னுதல்.

———–

மண்மிசைப் பெரும்பாரம் நீங்க ஓர்பாரத மாபெரும்போர்
பண்ணிமாயங்கள் செய்துசேனையைப் பாழ்படநூற் றிட்டுப்போய்
விண்மிசைத் தன தாமமே புக மேவிய சோதிதன்தாள்
நண்ணி நான்வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே
-6-4-10-

மண் மிசைப் பெரும் பாரம் நீங்க –-‘விஸ்வம்பரை’ என்றும், ‘க்ஷமை, பொறை’ என்றும் பெயர்களை யுடைத்தாய்த் தாங்கக் கூடியதான பூமியாலும் பொறுக்க ஒண்ணாதபடி அன்றோ துர் வர்க்கம் திரண்டபடி,
பரமபதத்தில்-“எந்தப் பரம பதத்திலே பழையர்களான சாத்தியர் என்கிற தேவர்கள் வசிக்கிறார்களோ” என்கிறபடியே, கனத்தார் உண்டாயிருக்கச் செய்தேயும், பாரம் இல்லை அன்றோ அகங்கார சம்பந்தமுடையார் இல்லாமையாலே. “யத்ர பூர்வே ஸாத்யா: ஸந்தி தேவா:” என்பது, புருஷ ஸூக்தம்.
இங்குப் பாரம் என்கிறது, மக்கள் பாரம் அன்று; யான் எனது என்னும் செருக்கே பாரம் என்றபடி.-தங்கள் பாரத்தினை அவன் தலையிலே வைத்திருக்குமவர்களன்றோ அவர்கள்

பகைவர்களை அழித்ததற்கு மேலே அன்றோ-இவர்கள் இருந்த நிலத்தில் இராமல் பரம பதத்திலே போய்ப் புகப் பெற்றபடி என்று உகக்கிறார்.-பொய்யாசனம் இடுவார், பரிபவிப்பவர் இவர்களையுடைய இந்த நிலத்தை விட்டுப் பரிவரேயான பரம பதத்து ஏறப் போகப் பெறுவதே!

ஒரு தீர்த்தத்தின் அன்று நாயிறு -அஸ்தமன காலம் -போது ஆண்டானும் எம்பாரும் தங்களிலே சந்தித்து,-“யான் எனது என்னும் செருக்கினால் மலினமாக்கப் பட்டவராயிருப்பார் பத்துக் கோடி பேர் நடுவே,-அதி சுகுமாரமான திருமேனியைக் கொண்டு பத்து நாள் எழுந்தருளி, அபாயம் இல்லாமல் புக்கருளப் பெற்றபடி கண்டதே!” என்று
ஒருவரை ஒருவர் தண்டன் இட்டுத் தழுவிக் கொள்ளா நிற்கக் கண்டேன் என்று சீயர் அருளிச் செய்வர்.

எனக்கு நாயகர் பிறர் ஆர் – அவனுடைய அவதாரம் தொடக்கமாக, நடுவுள்ள அபாயங்களைத் தப்பி அடியார்களை வாழ்வித்துத் தனக்கு அமர்ந்த நிலத்தே போய்ப் புக்கபடி யளவும் அநுபவிக்கப் பெற்ற எனக்கு ஆர் தான் நியமிக்கின்றவர்கள் என்கிறார்.“பயிலும் திருவுடையார் யவரேலும்” என்றதனை மறந்தார் போலே இருந்தது.
அன்றிக்கே,-அவர்களைப் பிறராக நினையாரே யன்றோ என்னலுமாம்.-

————————–

நாயகன் முழுவேழுலகுக்குமாய் முழுவேழுலகுந் தன்
வாயகம்புக வைத்துமிழ்ந்து அவையாய் அவை அல்லனுமாம்
கேசவன் அடியிணை மிசைக் குருகூர்ச்சடகோபன் சொன்ன
தூய ஆயிரத் திப்பத்தால் பத்தராவர் துவளின்றியே.
–6-4-11-

கேசவன் அடியிணை மிசைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன – கேசி என்னும் அசுரனைக் கொன்ற சர்வேஸ்வரன் திருவடிகளிலே. “மேல் திருவாய் மொழியிற் சொன்ன சர்வேஸ்வரத்வத்தையும், – இத் திருவாய்மொழியிலே, கேசியைக் கொன்றவனான கிருஷ்ணனுடைய அவதாரத்தையும் அநுபாஷித்துத் தலைக்கட்டுகிறது” என்று சொல்லுவர்.–நாயகன் —6-3 சுருக்கம் –கேசவன் -6-4- சுருக்கம்-
‘நாயகன் முழுவேழ் உலகுக்குமாய்” என்றது முதல் “அவையல்லனுமாய்” என்றது முடிய,
“நல் குரவும்” என்ற திருவாய்மொழியிற் கூறிய சர்வேஸ்வரத்தையும்,
“கேசவன்” என்றதனால், இந்தத் திருவாய்மொழியிற் கூறிய கிருஷ்ணனுடைய செயல்களையும் அநுவதித்துத் தலைக் கட்டுகிறார் என்றபடி.

அன்றிக்கே,-எல்லா உலகங்கட்கும் காரணன் கிருஷ்ணனே” என்கிறபடியே, கிருஷ்ண விஷயமே சொல்லுகிறது என்னுதல்,,“க்ருஷ்ண ஏவஹி லோகாநாம் உத்பத்திரபிசாப்யய: க்ருஷ்ணஸ்ய ஹிக்ருதே பூதமிதம் விஸ்வம் சராசரம்” என்பது, மஹாபாரதம் சபாபர். 38 : 23.

இப் பத்தினையும் கற்றவர்கள் ஆழ்வாரைப் போலே ஆவர்.-துவள் இன்றியே பத்தர் ஆவர் –
துவள் – குற்றம்.-அதாவது பரத்வத்திலே நெஞ்சு செல்லுகை-குற்றம் இல்லாமையாவது, -அத்தை தவிர்ந்து-வேறு அவதாரங்களில் போகாமல் கிருஷ்ணனுடைய செயல்களிலே தாழ்தல்.-திருவடி ஸ்ரீ ராமாவதாரத்தில் பிரவணராய் இருக்குமா போலே-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -89-தீ வினைக்கு அரு நஞ்சை –அங்கும் இங்கும் -8-3-

March 31, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

அடைவதில் சம்சயம் இல்லையே ஆழ்வாருக்கு-எஞ்ஞான்று தலைப்பெய்வன்-(நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–8-3-3-) -என்று என்பதே –உலகம் அளந்த பொன்னடி திரிவிக்ரமன்-ஊராகத் தொட்ட கண்ணன் ஆவினை மேய்க்கும்-வல்லாயன் -சஜாதீயத்தில் மெய்ப்பாடு-அன்று தப்பினேன்-அகாரம் ஆகாரம் தீ வினைக்கு அரு நஞ்சு ஆறு நஞ்சு -தளை தப்பாமல் -தமிழர் –ஆர்ஷ பிரயோகம் போல் ஆழ்வார் -மாற்ற வேண்டாம்-ஆரும் -போக்குவதற்கு போருமதான நஞ்சு–அங்கும் இங்கும் -8-3-இதன் விவரணம்-

அவதாரிகை –-சம்சாரிகளில் காட்டில் வ்யாவ்ருத்தராகப்      பெற்றோம் –இனி அவனைப் பெற்று
அனுபவிக்கிற வர்களோடு  நாம் சஜாதீயராகப் பெறுவது என்றோ -என்கிறார் –(சம்சாரிகளில் வியாவருத்தரானதால் மகிழலாம்-நித்யர்கள் உடன் சேரப்பெறாமல் துக்கம்-ஆரூரோஹ-ரதம் ஏறி -அனிஷ்டம் தொலையப் பெற்று மகிழ்ந்த பரதன் -அதே சமயம் கூடப் பெறாமல் துக்கம் போல் இங்கும் -)

இப்படி பக்தி விரோதி பாபம் கழிந்தாலும் பிராப்தி பிரதிபந்தகம் கிடக்கையாலே அது கழிந்தால் அன்றோ பெறலாவது என்ன-ஆஸ்ரித விரோதி நிரசன சீலனாய் நிரதிசய போக்ய பூதனாய்
ஸ்ரீ யபதியாய் ஸூலபனான இவனை என்று கிட்டி அனுபவிக்கக் கடவோம் என்கிறார்-இது நாயகி இரங்கி உரைத்ததாகவுமாம்-

தீ வினைக்கரு நஞ்சை நல் வினைக்கின்ன முதத்தினை
பூவினை மேவிய தேவி மணாளனை புன்மை எள்காது
ஆவினை மேய்க்கும் வல்லாயனை அன்றுலகீரடியால்
தாவின வேற்றை எம்மானை எஞ்ஜான்று   தலைப் பெய்வனே
– – 89-தலைவனது  கலவிக்கு விரைகிற தலைவி இரங்குதல் —

தீ வினைக்கு அரு நஞ்சை–(அடியார்களுடைய பாவத்துக்கு ப்ரபலமான விஷம் போனறிருப்பவனும்.
நல் வினைக்கு இன் அமுதத்தினை–(அவர்களுக்கு கைங்கரியமாகிய நல்ல தொழிலுக்கு இனிய அமிருதம் போல் இனிப்பாகவுள்ளவனும்-பிரபத்தி செய்வித்து -இசைவித்து தனது தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான் என்றுமாம்
பூவின் மேவிய தேவி மணாளனே–தாமரை மலரைத் தனக்கு இடமாகக் கொண்டு பொருந்திய திருமகளுக்கு கண்வனும்.
புன்மை என் காது ஆவினை மேயக்கும் வல் ஆயனை–சிறுமை கருதி இகழாமல் பசுக்களை மேய்க்கும் வலிமையையுடைய இடையனானவனும்
அன்று–முன்பொரு காலத்திலே
உலகு–உலகங்களை
இர் அடியால்–இரண்டு அடியாலே
தாவின ஏற்றை–அளந்து கொண்ட மேன்மையுடையவனுமான
எம்மானை–எம்பெருமானை
எஞ்ஞான்று தலைப்பெய்வன்–எப்பொழுதும் சேர்வேன்?

அங்கு அமரர் பேண அவர் நடுவே வாழ் திரு மாற்கு
இங்கு ஓர் பரிவர் இலை என்று அஞ்ச -எங்கும்
பரிவர் உளர் என்னப் பயம் தீர்ந்த மாறன்
வரிகழல் தாள் சேர்ந்தவர் வாழ்வார்–73-ஒரு கோல நீல நன்னெடும் குன்றம் வருவது ஒப்பான் -என்று கீழே அனுசந்தித்த அவனுடைய திவ்ய மங்கள விக்ரஹ வைலஷண்யத்திலே திரு உள்ளம் சென்று
இப்படி சௌந்தர்ய சௌகுமார்யங்களுக்கு கொள்கலமான இவ் வடிவோடே பிரயோஜனாந்தர பரர்களான தேவர்கள் கார்யம் செய்கைக்காக-பிரதிகூலர் வர்த்திக்கிற இஸ் சம்சாரத்திலே தனியே வந்து அவதரித்து சஞ்சரியா நின்றான்-எங்கே என்ன தீங்கு வரத் தேடுகிறதோ என்று -இவர் வயிறு எரிந்து பயப்பட-நமக்கு-முமுஷூக்களும்-நித்தியரும்-முக்தரும் உண்டு-நாம் கடலை குளப்படி போலே கலக்க வல்ல பெறு மிடுக்கர் ஆகையாலே நமக்கு ஒரு குறைகளும் இல்லை -என்று அவன் அருளிச் செய்ய அச்சம் தீருகிற அங்கும் இங்கும் -அர்த்தத்தை அங்கு அமரர் பேண -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –ஸ்ரீ ஆழ்வாரைப் போலே-பயமும்-பய நிவ்ருத்தியும் இன்றிக்கே ஸ்ரீ ஆழ்வார் உடைய
வரியை உடைத்தான வீரக் கழலோடு கூடின திருவடிகளைச் சேர்ந்தவர்கள்-நிர்ப்பயமாய் வாழப் பெறுவார்கள் —ஸ்ரீ ஆழ்வார் இப் பாசுரத்தாலே பயம் தீர்க்கையாலே இவர்களுக்கு வாழ்வேயாய் இருக்கும் –

தீ வினைக்கரு நஞ்சே –பகவத் பிராப்திக்கு பிரதி பந்தகமான துஷ் கர்மங்களுக்கு ஆற்ற ஒண்ணாத-
நஞ்சாய் உள்ளவனை–நல் வினைக்கு –பலாபிசந்தி ரஹீதமான கர்மத்தை பரிகரமாக உடைய பக்திக்கு -(பிரபத்திக்கு என்றே கொள்ள வேண்டும் )-இன்னமுதினை –நிரதிசய போக்யனாய் – பரம ப்ராப்யனாய் உள்ளவனை –இப்படி பாபங்களை போக்குகைக்கும் –தன் பக்கல் ருசி ஜநகன் ஆகைக்கும் அடி என் -என்ன –பூவினை மேவிய இத்யாதி –பிராட்டியோடு சேர்த்தியாலே–பெரிய பிராட்டியாருக்கு வல்லபன்-ஆகைக்கு மேற்பட இல்லை இறே மேன்மைக்கு–புன்மை இத்யாதி –அம் மேன்மை  உடையனாய்  இருக்கச் செய்தே –அவளோட்டை சேர்த்தியாலே- ஆஸ்ரிதர்க்கு ஸூலபனாய் உள்ளவனை –புன்மை எள்காது ஆவினை மேய்க்கும் –ஸ்ரீயபதி யான தன் மேன்மைக்கு இது போருமோ –இது புல்லிது என்று இகழாது -பசுக்களை மேய்க்கும் ஆயிற்று –வல்லாயினை –மற்றும் பசு மேய்ப்பார் உடம்பில் துளி நீர்  ஏறிட்டு கொள்ளிலும் அதுக்கும் அவசரம் இல்லாதபடி இருக்குமவனை –அன்று உலகு இத்யாதி-
ஒரூரை ரஷித்தால் போலே இப் பூமியாக ரஷிக்குமவனை –ஏற்றை –லோகத்தை அடைய தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொள்ள பெற்ற  படியால் மேணானித்து இருக்கிறவனை –-இத்தால் வந்த பலமும் தன்னதாய் இருக்கும் படி–எம்மானை –அவன் வெற்றியாலே மேணானித்து இருக்க வல்லன் ஆனால் போல் ஆயிற்று- இவர் அவன் செயலுக்கு தோற்க வல்லபடி –எஞ்ஞான்று தலைப் பெய்வனே
அவன் படிகள் இவை யான பின்பு-நான்  இழவல்லது பொருள் இழவு இல்லை இறே – அப் பேறு பெரும் நாள் என்றோ என்கிறார் -(வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே ) அபீதா நீம் சகாலஸ் ஸ்யாத்-பதினாலு ஆண்டு கழித்தால் வரக் கடவது இறே –அந்நாள் இன்றாகப் பெறுவது -காண் -என்றாப் போலே –

பேற்றுக்கு விரைந்து பேசுகிற படி-தீய கருமங்களை ஒழித்து கைங்கர்யம் செய்பவர்க்கு இன்ப மயமாய் இருந்து -பக்தியை வளர்ச்சி செய்பவன்-நல் வினை-என்றது முக்திக்கு வியாஜ்ய காரணமான பிரபத்தியை புன்மை எள்காது-ஆவினை மேய்க்கும் வல்லாயனை -திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி செங்கனிவாய்-எங்கள் ஆயர் தேவே– எள்காது-பெறாப் பேறு பெற்றால் போன்று அன்றோ உகப்பான் –நாயகனுடைய ஸம்ச்லேஷத்துக்கு விரைகின்ற நாயகி இரங்கியுரைக்கும் பாசுரம் இது. கொடிய துன்பத்தை விளைக்கின்ற தீக் கருமங்களை எளிதில் ஒழிப்பவனும், தன் பக்கல் அடிமை செய்வார்க்கு நிகரற்ற இன்பமூர்த்தியாயிருப்பவனும், தாமரையைத் தனது சிறப்புக்கும் ஸௌகுமார்யத்துக்கும் அழகுக்கும் தக்க இடமாகக் கருதி அதில் வீற்றிருப்பவளாய்ப் புருஷகார பூதையான பிராட்டிக்கு நாயகனும், திருவுள்ளத்தில் சிறிதும் வெறுப்பின்றியே உகப்புடனே பசுக்களை மேய்க்கப்பிறந்து, வேஷம் கொண்டவன் போலன்றிச் சாதி குணந்த தொழிகளில் உறைந்து நிலைநின்ற இடையனும் இரண்டடிகளாலே ஸகல லோகங்களையும் அளந்து கொண்ட மேம்பாடுடையனுமான எமது தலைவனை எப்பொழுது சேரப்பெறுவேன் என்கிறாள்.
அடியார்கட்குப் பகை தீர்ப்பவனும் அடிமைக்கு இனியனும் புருஷகாரமான திருமகளுக்குக் கணவனும் அனபர்க்கு எளியனும் எல்லாவுலகையும் கீழ்ப்படுத்தியவனுமான எம்பெருமானை எப்பொழுது சேர்ந்து அநுபவிக்கப் பெறுவேனென்று ஆழ்வார் பேற்றுக்கு விரைந்து பேசுகிறபடி.–‘தீவினைக்கு அரு நஞ்சு’ என்றது- கொடிய துன்பத்தை விளைக்கிற தீய கருமங்களை எம்பெருமான் எளிதில் ஒழிப்பவன் என்றவாறு.‘நல்வினைக்கு இன்ன முதம்’ என்றது- தன் விஷயத்தில் கைங்கரியம் செய்பவர்கட்கு இன்பமயமாயிருப்பவன் எம்பெருமான் என்றவாறு;-அவர்கள் பக்தியை அழியாது வளரச் செய்பவன் என்க. முக்திக்க வ்யாஜ காரணமான ப்ரபத்தியை இங்க நல்வினை என்றது.புன்மை யெள்காது ஆவினை மேய்க்கும் = மகிவும் நீச ஜாதியாகிய பசுக்கையோ நாம் மேய்ப்பது’ என்று ஜுகுப்ஸை கொள்ளாமல்“ திவத்திலும் பசுநிரை மேய்ப்புவத்தி செங்கனிவா யெங்களாயர் தேவே!” (திருவாய்மொழி 10-3-10). என்கிறபடியே ‘பசுமேய்க்கும் பாக்யம் பெற்றோமே!’ என உவந்து மேய்ப்பவனென்றவாறு.–‘தாவின வேற்றை’ என்றவிடத்து ‘ஏறு’ என்றது விளக்கவந்த உபசார வழக்கு; ஏறு காளை சிங்கம் இச்சொற்கள் ஆண்பாற்கு வருகையில் சிறப்புப் பொருளுணர்த்துவனவாம்; இது வடமொழி மரியாதை.

தீ வினைக்கரு நஞ்சை-கொடிதாய்-துக்கத்தை விளைப்பதான-துஷ் கர்மத்துக்கு ஆற்ற அரிய நஞ்சானவனை–ஆறு நஞ்சினை -என்றால்-எழுத்து மேறும் -பாடமும் அல்ல-அரு நஞ்சினை -நல் வினைக்கின்ன முதத்தினை-என்னவுமாம்நல் வினைக்கின்ன முதத்தினை-ஆஸ்ரயண ரூபமான நல் தொழிலுக்கு நிரதிசய ரஸமான நித்ய போக்யமானவனை-பூவினை மேவிய தேவி மணாளனை-அத்யந்த போக்யதையைப் பூரிப்பதான போக்ய அதிசயத்துக்கு ஸூசகமாய் இருக்கிற பூவிலே
நித்ய வாஸத்தை யுடையளாய்-நிரதிசய வை லக்ஷண்யத்தை யுடைத்தான ஸ்வரூபாதிகளாலே த்யோதமானையாய் இருக்கிற-பெரிய பிராட்டியாருக்கு நித்ய போக்யனானவனை-(இதம் இத்தம்-ஸ்வரூபத்துக்கும் ஸ்வாதந்தர்யத்துக்கும் நீயே நிரூபணம் பட்டர்) புன்மை எள்காது ஆவினை மேய்க்கும் வல்லாயனை-இந்த மேன்மை யுண்டாய் இருக்கச் செய்தே சிறுமை என்று இகழாதே பசுக்களை மேய்க்கக் கடவனாய் அதிலே நிலை நின்ற சிக்கனவை யுடைய இடையனானவனை-அன்றுலகீரடியால் தாவின வேற்றை-இப்படி இனியனானாலும் தன்னுடைமை பிறர் கொள்ளும் அளவில் தன் கால் கீழே இட்டுக் கொள்ளும் மேனாணிப்பை யுடையவனை–எம்மானை-கீழ்ச் சொன்ன ஸ்வபாவங்களைக் காட்டி
என்னை அடிமையாக்கிக் கொண்ட ஸ்வாமி யானவனை–எஞ்ஜான்று தலைப் பெய்வனே –இப் பிரகாரங்களாலே கிட்டக் குறை யில்லை-அது எக்காலம் என்றதாயிற்று –

தாத்பர்யம்--இப்படி பகவத் விலக்ஷண பக்தி உக்தராய் இருக்க சம்சாரி வ்யாவருத்தராய்
அதே சமயம் நித்ய ஸூரிகளுடன் சேரப் பெறாமையால் ஆற்றாமை மிக்கு அத்யந்த வல்லபையான – கமல வாஸினியான பெரிய பிராட்டியார் யுடைய -புருஷகாரம் இருக்க ஆஸ்ரிதருக்கு அத்யந்த துக்க ஜனகமாய் உள்ள பாபங்களைப் போக்கி பிரபத்திக்கு -நல்வினைகள் -அவனே பலம் -அவன் முக விலாசத்துக்குச் செய்ய வேண்டுமே-கர்மமும் கைங்கர்யத்தில் புகுமே-அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம்-மேன்மையைப் பாராதே இடைக்குலத்தில் பிறந்து பசு மேய்த்தும்
மஹாபலி அபஹரிக்க தனது உடைமையை -கால் கீழ் இட்டுக் கொண்ட விசித்திர சரிதங்களால் புகர் பெற்று-இவ்வண்ணமாக பரத்வ ஸுலபயங்களைக் காட்டி என்னை ஆளாக்கிக் கொண்டான்
எப்போது நித்ய கைங்கர்யம் பெறப்போகிறேனோ என்று பிராப்தி -காலத்தைப் பிரதேஷிக்கிறார்- எதிர்பார்த்து அருளிச் செய்கிறார் –

8-3-அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும்-ப்ரவேஸம்-

அங்கும் இங்கும் -பிரவேசம் –
மேல் திருவாய் மொழியிலே பத்தாம் பாசுரத்தில்
ஒரு கோல நீல நல் நெடும் குன்றம் வருவது ஒப்பான் -என்று வடிவு அழகை அனுசந்தித்தவாறே-
தாம் பட்ட கிலேசத்தை மறந்து -சிலர் விரும்பியதுவே காரணமாக-இவ் வடிவோடே சம்சாரத்திலே தனியே வந்து அவதரித்து உலாவா நிற்பன் –
பகைவர்களும் -நடுநிலையரும்-பிரயோஜனங்களை விரும்புகின்றவர்களாயும்-
இவனுக்கு பரிவுடையார் ஒருவரும் இன்றக்கே இருக்கிற சம்சாரத்திலே-
அடியார்கள் விரும்பினவற்றைத் தருவதற்காக சம்சாரிகள் இனத்தனனாய்-
சிலருக்கு பரதந்தரனாயும்-
அவதாரத்துக்கு பிற்பட்டாருக்கு கோயில்களிலும் வீடுகளிலும் அண்மையினில் இருப்பவனாயும்-
இருந்து கொண்டு இருக்கிற இவனுடைய சௌகுமார்யம் அறிந்து பரியக் கூடியவர் ஒருவரும் இலர்-
நானும் உதவப் பெறுகின்றிலேன் என்று அவன் தனிமைக்கு–வெறுத்து அஞ்சினாராக

நமக்கு பரிவர் இலர் -என்று அஞ்ச வேண்டா
முமுஷுக்களும் முக்தரும் நித்தியரும் -கலக்க மில்லா நல் தவத்தர்-கரை கண்டோர் -ஆகிய இவர்கள்
நம் மேல் பரிகையே யாத்ரையாக இருக்குமவர்கள் அல்லரோ –
அன்றியும் நமக்குத் தான் வேறே சிலர் பரிய வேண்டி இருந்ததோ என்று சர்வேஸ்வரன்-
தன் வரம்பில் ஆற்றல் உடைமையைக் காட்டி-மா கடல் தன்னை கடைந்ததைக் -காட்டி அருள சமாதானம் செய்ய-
சமாதானம் அடைந்தவராய் உவகையர் ஆகிறார் – –
அதுக்கு மேலே பரியாமல் போனால் சேஷத்வம் போகுமே என்ற கவலை பட்டார் –

அன்றிக்கே –
சர்வேஸ்வரன் மேல் பரிகைக்கு தமக்கு கூட்டு ஆவார் இல்லை என்று தம் தனிமைக்கு-வெறுக்கிறார் என்றும் சொல்வார்கள்
நித்ய ஸூரிகள் பகவத் விஷய அனுபவத்தில் நோக்கு உள்ளவர்கள்-
சம்சாரிகள் ஐம்புல இன்பங்களிலே நோக்கு உள்ளவர்கள் –
பிரமன் சிவன் முதலானவர்கள் தங்களுக்காக–
நீள் நகர் நீள் எரித்து அருளாய் -திரு விருத்தம் -92–என்று அவனை அம்புக்கு இலக்காக்குதல் –
ஏவிக் கார்யம் செய்து கொள்ளுதல் செய்பவர்கள் –
ஆகையால் பரிகைக்கு தமக்கு ஒரு துணை இல்லை என்று தன் தனிமைக்கு வெறுக்கிறார் -என்றபடி

சேஷமாக உள்ள இவ் வாத்ம வஸ்துவுக்கு-சேஷியே ரட்ஷகன்-என்னும் வெளிச் சிறப்பு –அறிவுக்கு முதல் அடி –
சேஷ வஸ்து ஆகில் சேஷிக்கு அதிசயத்தை விளைத்து தன் ஸ்வரூபம் பெறுமது ஆகையாலே
அவன் காப்பாற்றப்படுமவன் நாம் காப்பாற்றுமவர் என்னும் அளவும் செல்ல அறிகை -ஸ்வரூபத்தை உள்ளபடி உணருகையாவது-
அர்த்திக்கும் அளவும் ஒழிய பரியத் தேடுவது என் –பிரார்த்தனைக்கு மட்டும் இல்லையே அவன் -மங்களா சாசனமே ஸ்வரூபம் —

இத் திருவாய்மொழி நம் ஆழ்வார் உடைய திருப் பல்லாண்டு என்று அருளிச் செய்வர்-
வீற்று இருந்த போற்றி -சப்தத்தால் அங்கு திருப் பல்லாண்டு –

மூன்றாம் திருவாய் மொழியில் -அவனுடைய நிஸ் சங்க ஸூலபதையை அனுசந்தித்து இதர சங்க நிவ்ருத்தி பூர்வகமாகத்
தாம் தத் விஷயத்திலே சக்தரான படியை அனுசந்தித்தவர் –
அவன் ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக இந்த விபூதியில் தன் போக்யதையையும் ஸுகுமார்யத்தையும் பாராதே
ஆஸூர ப்ரப்ருதிகளும் அந்நிய பரருமான திரள்களுக்கு நடுவே அஸஹாயனாய் வந்து வர்த்திக்கிற இதுக்கு அஞ்சி
அவனுடைய அதிசயித போக்யதையையும்
விரோதி நிரசன உத்தியுக்தமான ஆயுதவத்தையும்
சஹாயாந்தர ராஹித்யத்தையும்
க்ஷண காலம் காணாது ஒழியிலும் கல்பமாம்படி அச்சத்தை விலைக்கும் படி ஆபி ரூப்ய அதிசயத்தையும்
ஆயாச சஹம் அல்லாத ஸுகுமார்யத்தையும்
ரமணீய விக்ரஹணாய் வைத்து விரோதி நிரசன அர்த்தமாக வியாபாரிக்கும் படியையும்
கிஞ்சித்க்கார அனுகுணமாக ஸ்ரீ யபதித்வத்தையும்
அசேஷ ஜன சம்ச்லேஷ ஸ்வ பாவத்தையும்
அதிசயித ஞானர்க்கும் அறியவரிய ஆகாரத்தையும்
அத்யந்த விலக்ஷண புருஷரும் சேவிக்கும் படியான அதிசயித சக்தி யோகத்தையும்
அனுசந்தித்து ஏவம் பிரகார விசிஷ்டனானவன் தண் அழகையும் மார்த்வத்தையும் பாராதே ப்ரதிகூல பூயிஷ்டமான சம்சாரத்திலே
அஸஹாயனாய் வர்த்திக்கிற அளவிலே அடிமை செய்யப் பெற்றிலோம் என்று தளர்ந்தவர் –
அவன் தன்னுடைய ஆஸ்ரித ஸாமக்ர்யத்தையும் அதிசயித சக்தியையும் காட்டக் கண்டு
ஸமாஹிதராய் யுகந்து தலைக் கட்டுகிறார் –

அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும்
எங்குமினையை யென்றுன்னை அறியகிலாதலற்றி
அங்கம் சேரும் பூ மகள் மண் மகளாய் மகள்
சங்கு சக்கரக் கையவனென்பர் சரணமே-8-3-1-

அபிமதம் அவன் -அபிமத சாதனம் இல்லை -இதுவே ஆழ்வார் கொள்கை –இவர் நெஞ்சில் அவன் சௌகுமார்யமே ஆயிற்று உறைத்து இருப்பது

எங்குமினையை யென்றுன்னை அறியகிலாதே-நிரதிசய ஸுகுமார்ய யுக்தன் என்று

கருமுகை மாலை போலே இருக்கிற உன் படி அறியாதே –போக்ய பூதன் என்று அனுபவியாதே-புருஷகார பூதன் அபீஷ்ட பல பிரதன் என்பர்

ஸ்வரூப அனுரூபம் மங்களா சாசனம் என்றவாறு

சரணமாகிய நான் மறை நூல்களும் சாராதே
மரணம் தோற்றம் வான் பிணி மூப்பு என்றிவை மாய்த்தோம்
கரணப் பல் படை பற்றறவோடும் கனலாழி
அரணத்தின் படை ஏந்திய ஈசற்காளாயே–8-3-2-

க்ஷேமம் கரமான-சேஷ பூதராக–சேஷிக்கு அதிசயம் பண்ணி பரியாமல்-ஆத்தும லாபத்துக்காக வணங்குகிற  கேவலரை நிந்திக்கிறார்

தாதர்த்தம் ஸ்வரூபமாக இருக்க ஸ்வார்த்ததா -தங்கள் பிரயோஜனத்துக்காக இருப்பதே

ஈஸ்வரன் விடினும் அடியார்களை விடாத திண்மையை உடைய படை ஆதலின் திண் படை

ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை
தாளும் தோளும் கைகளை யாரத் தொழக் காணேன்
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–8-3-3-

அழும் தொழும் ஸ்நேக பாஷ்ப அஞ்சலி யோடே ருசிர சானுக்களின் கூவிக் கொள்ளும் பிரியா வடிமைக்குச் சரணே சரண்
என்று வாழும் வில்லும் கொண்டு பந்துவும் பிதாவும் அவரே என்கையும் –சூர்ணிகை -127 –

விரோதி பூயிஷ்டமான ஜகத்தில் -சஹாயாந்தர ராஹித்யம் -சஹாயாந்தர நிரபேஷ்யம் இத்தை கொண்டே பிர பத்திக்கு ஏற்றம்-அதுவே குறையாகப் படுகிறதே பரிந்து இருக்கும் ஆழ்வாருக்கு

ஆளுமாளார் –
விபூதி த்வயத்திலும் புரிவதற்கு ஆள் இல்லை -தனியே ஒருவரே ஆள வேண்டும் என்று இருக்கிறார்
நித்ய ஸூரிகள் பகவத் அனுபவத்தில் நோக்கு உள்ளவர்கள்-சம்சாரிகள் ப்ரயோஜனாந்தரங்களிலே அந்ய பரர்

தொழக் காணேன்
தொழுகையும்-பரிதலும்-பர்யாயம் போலே காணும்–தொழக் காணப் பெறுகின்றிலேன்

ஆளுமாளார் -சுமப்பார் தாம்– பின் செல்வார் மற்றில்லை -என்கிறது
பரிவரான நீர் அவற்றுக்கு அன்றோ -என்று தம்மை ஏவுகைக்காக

ஞாலத்தே-
பரம பதத்தில் இருந்து அஸ்தானே பய சங்கை பண்ணுகிறேனா-
பிரம்மாஸ்திரம் விடுவார் நாக பாசத்தை இட்டுக் கட்டுவார்
அழைத்து வைத்து மல்லரை இட்டு வஞ்சிக்க தேடுவர்
பொய்யாசனம் இடுவார்
ஆகிய இவர்கள் இருக்கிற தேசத்தில் வாழா நின்றால் நான் அஞ்சாது செய்வது என் –

ஞாலம் போனகம் பற்றி ஓர் முற்றா வுருவாகி
ஆலம் பேரிலை அன்ன வசம் செய்யும் அம்மானே
காலம் பேர்வதோர் காரிருளூழி யொத்துளதால் உன்
கோலம் காரெழில் காணலுற்றாழும் கொடியேற்கே--8-3-4-

ஆலம் பேரிலை அன்ன வசம் செய்யும் அம்மானே-ஆலிலை பேர் சொல்லும் படி -வயிற்றில் இடம் இருக்கும்
இலையில் இடம் இல்லையே-இடம் வலம் கொண்டு கண் வளர்ந்து -திருப் பாற் கடல் போலே திரு உள்ளம்

பேரிலை-பெயருகிற இலை-அதாவது-முகிழ் விரிகிற இலை -என்றபடி –ஆலிலை என்ற ஓர் பெயர் மாத்ரமான இலை-பெரிய இலை என்று விபரீத லஷணையாய்-சிற்றிலை -என்னுதல் –

கோலம் காரெழில் காணலுற்றாழும் கொடியேற்கே-உலக பயத்துக்கு உம்மைப் பற்றி போக்குவேன்
உம்மைப் பற்றிய பயம் போக்க முடியாத பாவி அன்றோ -ஆழ்ந்து போன கொடியேன் -எல்லாரையும் இரட்சிக்கின்ற வஸ்து அன்றோ பிரளயத்தில் அகப்படப் புக்கது -என்று அதற்கும் அஞ்சுகிறார்-அகடிதகடநா சாமர்த்தியமும் -ரக்ஷகத்வம் சக்தியும் அன்றோ என்னில் இவையே இவருக்கு அஞ்ச ஹேதுக்கள் ஆனதே-

1-தனக்கு ஜீரணம் ஆகாத பூமியை உண்டலும்
2-ஜீரணம் ஆகாது -என்று அறியாத இளைஞன் ஆகியும் –
3-பிரளயத்தில் சிறிய இடத்தை உடைய ஆல் இலையிலே திருக் கண் வளர்ந்து அருளுகையும் –
4-அதிலே கிடந்த இடத்தில் கிடக்காமல் விளையாடுகையும் –
இவை எல்லாம் பயத்துக்கு இடங்களாய் இருக்கிற தாயிற்று இவருக்கு –

கொடியார் மாடக் கோளூரகத்தும் புளிங்குடியும்
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியார் அல்லல் தவிர்த்த வஸைவோ அன்றேலிப்
படி தான் நீண்டு தாவிய வசவோ பணியாயே–8-3-5-

கொடிக்கு பயப்பட வல்லார் இவரைப் போன்றார் இலர் –கொடி இடை மடவாருக்கு பயப்படுவார் –

அளந்த திருவடி பிடிக்கவோ -எய்த்த திருத் தோள்களை பிடிக்கவோ இவருக்கு உத்தேச்யம்

உகந்து அருளின இடங்களிலும் செய்ய முடியாதன இல்லை-
சொல்ல நினையாமல் இருக்கிறான் இத்தனை -என்று இருக்கிறார்

பணியா வமரர் பணிவும் பண்பும் தாமேயாம்
அணியாராழியும் சங்கமுமேந்துமவர் காண்மின்
தணியா வெந்நோய் உலகில் தவிர்ப்பான் திரு நீல
மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே–8-3-6-

திரு நீல மணியார் மேனியோடு –
நீல மணி போலே ஸ்ரமத்தை போக்கக் கூடியதாய் சுகுமாரமான வடிவோடு-
இங்கே வர வேண்டுமானால் அவ்வடிவோடே வர வேண்டுமோ-
அத்தை கழற்றி வைத்து வரக் கூடாதோ -இச்சா க்ருஹீதாம் அன்றோ -வடக்கே அதனால் வெள்ளை திருமேனி பரிவு அதிகம் என்பதால்

வருவார் செல்வார் வண் பரிசாரத்து இருந்த என்
திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வதென்
உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும்மோடு
ஒருபாடு உழல்வான் ஓரடியானும் உளன் என்றே-8-3-7-

ஸ்ரம மனம் சூழும் ஸுகுமார்ய பிரகாசம் ஆய்ச்சேரியிலே –சூர்ணிகை -173-மனம் சூழும் படி ஸூ குமார்யம் பிரகாசிப்பித்தானே
ஒரே பாசுரம் -மங்களா சாசனம்

மாயக் கூத்தன் -சாதரரைப் பரிசு அழிக்கும் சேஷ்டித ஆச்சர்யம் குளத்தே கொடி விடும் சூர்ணிகை -173-அங்கேயும் ஒரே பாசுரம் –

அராயி காணே விகடே கிரிம் கச்ச ஸதான்வே ஸ்ரீம் பிடஸ்ய சத்த்வபி தேபிஷ்ட்வா ஸாதயாமசி -ருக்கு -8-அஷ்டகம் -8-அத்யாயம் -13-வர்க்கம் –முதல் ருக்கு மந்த்ரம்
த்வயி அராயி சதி –குழந்தாய் நீ இஹ லோக பரலோக ஐஸ்வர்யம் இல்லாமல் இருந்தாயானால்
த்வயி காணே சதி -நீ வெளிக்கண்ணும் உள் கண்ணும் இல்லாதவனாய் இருந்தால்
த்வயி விக்டே சதி -நீ ஆத்யாத்மீகம் -ஆதி பவ்திக்கம் -ஆதி தைவிகம் -தாப த்ரயங்களால் பீடிக்கப் பட்டு இருந்தாயாகில் —கடம் -தாஹம்
த்வயி ஸதான்வே சதி -புருஷார்த்தங்களை பெற முடியாமல் பிரதிபந்தகங்கள் இருந்தால்
ஸ்ரீம் பீடஸ்ய -திருமகளுக்கு திரு மார்பினால் பீடமாகிய ஸ்ரீ நிவாசனுடைய
கிரிம் -திருமலையைக் குறித்து
ஸ்ரீம் பிடஸ்ய சத்த்வபி கச்ச -ஸ்ரீ நிவாசனுடைய பக்தர்களோடு சென்று சேர்
தேபி -அவர்கள் மூலமாகவே
த்வா ஸ்ரீம் பீடஸ்ய ஸாதயாமசி -நீ ஸ்ரீ நிவாஸனை வேண்டிக் கொள்ள தகுதி பெற்று இருக்கிறாய்-
சமர்பிக்கத் தகுதி பெற்று இருப்பாய் என்றுமாம் –

ஒருவர் இலர் என்று கை வாங்கி இருப்பர்-அது வேண்டா-
ஒருவன் உளன் என்று என் இடையாட்டம் சொல்லுகின்றிலர்கள் -என்கிறார் -என்றபடி –செய்வது என் –
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்றே இருக்கும் ஒருவன் உளன் என்று சொல்லார் செய்வது என் –

என்றே என்னை உன் ஏரார் கோலத்திருந்து அடிக் கீழ்
நின்றே ஆட்செய்ய நீ கொண்டருள நினைப்பது தான்
குன்றேழ் பாரேழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும்
நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே-8-3-8-கொண்டு அருளி -பாட பேதம் –

உம் திருவடிக் கீழ் பரிகைக்கு நிலை ஆளாக என்னைக் கொள்வது என்று–அவனைக் கேட்கிறார்-
சர்வஞ்ஞன் -மடி பிடித்துக் கேட்க்கிறார் –

வண் பரிசாரத்து இருந்த -என்ற எழுந்தருளி இருக்கிற இருப்பு தனக்கு பரிய வேண்டி இருக்க–
அதி மானுஷ  செயல்களுக்கு –மங்களா சாசனம் செய்து நிற்க வேண்டாவோ -என்கிறார் மேல்-
இருந்த திருக் கோலம் -ஈரடிக்கு பாடினால் மூவடிக்கு -பாட வேண்டாவோ –இருந்தவனுக்கு பாடினால் நடந்தவனுக்கு பாட வேண்டாவோ

திருமால் ! நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம்
பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசியென்
ஒரு மா முதல்வா ஊழிப் பிரான் என்னை யாளுடை
கரு மா மேனியன் என்பன் காதல் கலக்கவே-8-3-9-

நம்மிடத்தில் பரிவு கொள்ளுவதற்காக பிரமன் முதலானோர் இருக்க-நீர் இங்கன் அஞ்சுகிறது என் -என்ன
அவர்கள் உன் சௌகுமார்யத்தை அறிவார்களோ -என்கிறார்-

திருமால்-திருமால் என்று பிரித்து விளிக்கிறார்-நீயும் பிராட்டியுமான சேர்த்திக்கு மங்களா சாசனம் செய்வார்களோ அவர்கள்-

ப்ரஹ்மாதிகளுக்கும் ப்ரேமாந்தகனான அடியேனாலும் உனக்கு சத்ருசமாக பரிய ஒண்ணாதே

காதலால் கண் இல்லாதவனான என் பரிவும் உனக்கு ஒத்தது அன்று என்றதாயிற்று-

ஸுகுமார்யம் பாராமல் மதுரமான -உபகாரகனாய் வியாபாரித்து -என் போல்வாரை அங்கீ கரிக்க
திவ்ய மேனிகள் உடன் வந்து -என்ன பாசுரம் இட்டு சொல்ல முடியும் –

கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர்
துளக்கமில்லா வானவர் எல்லாம் தொழுவார்கள்
மலக்கமெய்த மா கடல் தன்னைக் கடைந்தானை
உலக்க நாம் புகழ் கிற்பது என் செய்வதுரையீரே–8-3-10-

இவருடைய அச்சத்தைப் போக்குகைக்காக–
நம்மிடையே சனகன் முதலான முனிவர்கள் -முக்தர்கள் -நித்யஸூரிகள் –இவர்கள் கிட்டி நின்று அபிமத சாதனமாக இல்லாமல் அபிமதமாகவே பரிமாறுகிறார்கள் -தொழுகின்றார்கள்-
நாம் தான் அரிய செயல்களும் செய்ய வல்லோம்-ஆன பின்பு நீர் நம் பொருட்டு அஞ்ச வேண்டாம் காணும் -என்ன-
முன்பு அச்சங்களுக்கு காரணங்களாக இருந்தவை தாமே-அச்சம் நீங்குவதற்கு காரணமாக
அதனை நினைத்து இனியர் ஆகிறார்-முக்தர் கரை ஏறி -ஆப்நோதி என்பதின் தமிழ் ஆக்கம் –
இவர் தமக்கு இன்ன போது இன்னது அச்சத்துக்கு காரணமாம்-இன்ன போது இன்னது பரிகாரமாம் என்று தெரியாதே அன்றோ-

முன்பு தன் மிடுக்கைக் காட்டின இடங்களில் அதனை நினையாதே-அதனையே சொல்ல இப்போது
சமாதானத்தை அடைந்தவர் ஆயினர்-இது –
இப் பிரபந்தம் தலைக் கட்டக் கடவது ஆகையாலே யாதல்-
ஈஸ்வரனுடைய ஜீவன அதிர்ஷடத்தாலே யாதல்-

உரையா வெந்நோய் தவிர அருள் நீண் முடியானை
வரையார் மாட மன்னு குருகூர்ச் சடகோபன்
உரையேய் சொல் தொடை ஓராயிரத் துளிப்பத்தும்
நிரையே வல்லார் நீடுலகத்தப் பிறவாரே–8-3-11-

நிகமத்தில்-இத் திருவாய்மொழி கற்பவர்கள்-அவன் தனிமை கண்டு பயப்படும் சம்சாரத்தில்-பிறவார் -என்கிறார் –
பயம் ஊட்ட வல்ல சம்சாரம் -என்றபடி –ஒரு நாடாக மங்களா சாசனம் செய்கிற தேசத்திலே சென்று நித்ய அனுபவம் பண்ணப் பெறுவர்-

உரையா வெந்நோய் –
சொல்லுதற்கு முடியாததாய் -மிகக் கொடியதான நோய்–
தம் அளவில் பொறுத்தல் அன்றிக்கே–உபய விபூதி நாதனுக்கு என் வருகிறதோ என்று அஞ்சின நோயே அன்றோ

தவிர அருள் நீண் முடியானை –கிரீடம் விபூதி பூர்த்தி -சக்தி பூர்த்தி-சர்வாதிக சேஷி
இது போகும்படிக்கு தகுதியாக திருவருள் புரியும் தன்மையனான-உபய விபூதி நாதனை –
இவர் அச்சம் போகும்படி -நீர் விரும்பிய காரித்தைச் செய்கிறோம் என்று தலையை-சிரக்கம்பனம் பண்ணினான் -துலுக்கினான் போலே காண் –
என்று அம்மங்கி அம்மாள் அருளிச் செய்வர்-
கிரீடம் தாழ்ந்தே –தொழுது எழும் நீண் முடி இவருக்கு — அவனுக்கு அருள் நீண் முடி

அன்றிக்கே-
இவ் ஆழ்வார் உடைய பயம் நீங்கிய பின் பாயிற்று உபய விபூதிக்கும்
இரட்ஷகனாய் சூடிய முடியும் நிலை நின்றதாயிற்று -என்ற படியுமாம்

வரையார் மாட மன்னு குருகூர்ச் சடகோபன் –
இவர் அச்சம் நீங்கின வாறே நிறைவு பெற்றதுமாய் நிலை உள்ளதுமாயிற்று திரு நகரியும்–

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -88-திருமால் உரு ஒக்கும் மேரு –புகழும் நல் ஒருவன் -3-4-

March 31, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

திருமால் தலைக் கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீ வினையே – களிப்புடனும் -வருத்தத்துடனும் பேசலாம்-ஸ்ரீ மத் பாகவத -உபதேசம் -காரணந்து த்யேய -கேட்டு -நினைத்து -இடைவிடாமல் எப்போதும் -கண்டு-ஸ்ரோதவ்ய –மந்தவ்ய நிதித்யாசிதவ்ய -த்ரஷ்டவ்ய-விராட் ஸ்வரூபம் -பாதாள லோகம் பாதம் -ஸத்ய லோகம் சிரஸ் – ஜெகதாகாரம் -ப்ரஹ்ம ஸ்வரூபம் த்யானம் -கை வராதே –கோல நீள கொடி மூக்கும் –திவ்ய மங்கள விக்ரஹம்-அந்தாமத்து அன்பு செய்து – கண்ணுக்கு அடங்கும் படி தன்னை அமைத்து -பிடித்துக் கொள்ளப் பண்ணுவான் -அவனே-நீராய் நிலனாய் –சிவனாய் அயனானாய் -வேதாந்தம் கோஷிக்கும்-கூரார் ஆழி வெண் சங்கு ஏந்தி வாராய் –உலகும் மகிழவே –-அதே போல் இங்கும் மேரு -ஸூர்யன் -போலி கண்டு திருப்தி அடைய மாட்டாரே –அன்ன கண்டும் -ஓக்க கண்டு திருப்தி இல்லாமல்-திருமால் உரு -அவன் ரூபம் –-திருமால் தலைக்கொண்ட -நல்ல அபிநிவேசம் தலைக் கொண்ட –ஞானாதிகம் அடியாக வந்த பித்து -பக்தியின் உச்சநிலையில் உள்ள எங்களுக்கு எப்படி தீ வினை வரும் –இவ்வளவு பக்தி மேலிட்டு இருந்தும் -பிரிந்து உள்ளதால் -தீ வினை இதுவே – பிரிவு ஆற்றாமை- மிக்கு புலம்புவதாகவும் கொள்ளலாம் –சிஹ்னமே பிதற்றி -மறக்காமல் இருக்கிறாள் அன்றோ –இரண்டுக்கும் முரண்பட்டு இல்லையே-பக்தர்கள் பக்கம் பாபம் அண்டாது-பாபம் தொலைந்தால் தானே பக்தி பிறக்கும் –பக்தி ஆரம்ப விரோதி தொலைந்து பக்தி செய்ய -க்ஷணம் விஸ்லேஷமும் பொறுக்காத துன்பம் வருமே –-இரண்டு துன்பமும் வேறு வகைகள்-இங்கே உள்ளவரை இவை இருக்குமே –புகழும் நல் ஒருவன் -3-4-இதன் விவரணம் –கூவுமாறு அறிய மாட்டேன்,-குன்றங்கள் அனைத்தும் என்கோ!-மேவு சீர் மாரி என்கோ! விளங்கு தாரகைகள் என்கோ!-3-4-2-இங்கும் குன்றமும் தாரகைகளும் உண்டே –

அவதாரிகை–இப்படி நாடு பழி சொல்லா நிற்கச் செய்தே -இத்தை சொல்லி பழி சொல்லும்படியாக
பெற்ற நமக்கு இனி ஒரு குறை உண்டோ -என்கிறாள்–இப்பாட்டில் சொல்லுகிறது என் என்னில் –
சர்வதா சத்ருசமாய் இருப்பதொரு வஸ்து -இல்லாதபடி இருக்கிற சர்வேஸ்வரன் – திரு மேனிக்கு-சேர்ந்து இருப்பதொரு உபமானத்தைக் கண்டால் –உபமான ரஹிதமாய் இருப்பதொரு வஸ்துவுக்கு-கதிர் பொறுக்கி யாகிலும்-இங்கனே ஒரு உபமானமாக உண்டாகப் பெற்றோம் -என்று –-இது ஆஸுவாச-ஹேது  வாகை யன்றிக்கே –அவ் உபமேயம் தன்னையே காண வேணும் என்னும்படியான-விடாயை உடைய – நமக்கு இனி ஒரு குறை உண்டோ -என்றது -ஆதல் –அன்றிக்கே-(ஜெகதாகாரம் கீழ்-சரீர ஆத்ம பாவம் -மலையே திரு உடம்பு -ஜகத் சரீரம் சர்வம் தே -இனி) அவனுடைய ஜகதாகாரதையை அனுசந்தித்தால் – அவ்வளவிலே பர்யசியாதே –அவனுடைய-அசாதாரண விக்ரஹத்தை காண வேணும் -என்னும் அபேஷை பிறக்கும்படியான -எனக்கு- ஒரு குறை உண்டோ -என்னுதல் –போலி கண்டு அழிகிற தலைவி ஆற்றாமைக்கு இரங்குதல் —

இப்படி ஸூ ஹ்ருத்துக்களும் நொந்து உரைக்கும் படி ஈடுபட்டவர் பகவத் ப்ராவண்யம் உடையாரைப் பாபம் ஸ்பர்சியாது இருக்க அனுபவ அலாப ஹேதுவான பாபம் நமக்கு எங்கனே வந்தது என்று
விஷண்ணரான (துன்புற்ற )பாசுரத்தை நாயகி வெறுத்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

திருமாலுரு வொக்கும் மேரு அம் மேருவில் செஞ்சுடரோன்
திருமால் திருக் கைத் திருச் சக்கர மொக்கும் அன்ன கண்டும்
திருமாலுருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது ஓர்
திருமால் தலைக் கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீ வினையே
– – -88-போலி கண்டு அழிகிற தலைவி ஆற்றாமைக்கு இரங்குதல் –

மேரு–மஹாமேருமலையானது
திருமால் உரு ஒக்கும்–திருமகன் கேள்வனான தலைவனது திருமேனியை யொத்திருக்கும்
அம் மேருவில் செம் சுடரோன்–அந்த மஹாமேருவின் அருகிலே விளங்குகிற சிவந்த ஒளியை யுடைய ஸூர்யன்.
திருமால் திரு கை திரு சக்கரம் ஒக்கும்–அத் தலைவனது அழகிய கையிலுள்ள திருவாழியை யொத்திருப்பன்;
அன்ன கண்டும்–(அவனுருவத்தையும் சக்கரத்தையும் நேரில் காணாமல்) அவற்றிற்றுப் போலியாயுள்ளவற்றையே கண்டும்.
திருமால் உருவோடு அவன் சின்னமே–அவனுருவத்தையும் அவனது அடையாளத்தையும்
(நேரிற் கண்டாற்போல அன்பு மிகுதியாற் பரவமடைந்து.) பேரிட்டுக் கூவும்படியான.
ஓர் திருமால்–ஒப்பற்ற செல்வமாக வேட்கை-போற்றத்தக்க வ்யாமோஹம் -பக்தி –
தலைக் கொண்ட நங்கட்கு–ஏற்றுக் கொண்டுள்ள எமக்கு
தீ வினை–(பிரிவுக்குக் காரணமான) பாவம்
எங்கே வரும்–எப்படி வரக்கடவது? (வரமாட்டாது.)

புகழ் ஓன்றும்மால் எப்பொருள்களும் தானே
நிகழ்கின்ற நேர் காட்டி நிற்க -மகிழ் மாறன்
எங்கும் அடிமை செய்ய இச்சித்து வாசிகமாய்
அங்கு அடிமை செய்தான் மொய்ம்பால் —
——24-கீழ்-இவர் அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று பாரித்தபடியே சர்வாத்ம பாவத்தைக் காட்டி அடிமை கொள்வதாக ஒருப்பட்ட சர்வேஸ்வரனுக்கு
உத்யோக மாத்ரத்திலே வயிறு நிறையும் அவன் பிரக்ருதிக்கும் வாசிகத்துக்கும் மேற்பட அடிமை செய்ய மாட்டாத தம் பிரக்ருதிக்கும் சேர வாசிகமாக அடிமை செய்து தலைக் கட்டுகிற புகழு நல ஒருவனில் -அர்த்தத்தை புகழ் ஒன்றும் மால் -என்று துடங்கி அருளிச் செய்கிறார் –

திருமால் உரு ஒக்கும் மேரு –ஸ்ரீ ய பதி உடைய வடிவோடு ஒத்திரா நின்றது மேரு வானது –வடிவாலும் –புகாராலும் -(மேரு சிகரி யாணாமாம் அஹம் -கீதை )-அம் மேரு இத்யாதி-அம் மேருவிலே சஞ்சரியா நிற்கிற ஆதித்யன் ஆனவன் –திருமால் திருக்கை திருச் சக்கரம் ஒக்கும் –வடிவார் சோதி வலத் துறையும் சுடர் ஆழியும் -என்கிறபடியே –அவன் கையிலே திரு வாழியைப் போலே இருக்கும் –அன்ன கண்டும் –இப்படியே அவனுக்கு போலியானவற்றைக் கண்டு வைத்தும் –திருமால் -இத்யாதி –ஸ்ரீயபதி உடைய -அந்த மேருவோடே ஒத்த திரு மேனியையும் –வலக்கை ஆழி இடக்கை சங்கம் -என்கிறபடியே –
அசாதாராண சிஹ்னத்தையும் காண வேண்டும்-என்று ஆசைப்பட்டு பிதற்றா நின்றுள்ள –அன்றிக்கே –
திருமால் உரு ஒக்கும் இத்யாதி-சர்வேஸ்வரன் திரு மேனியோடு ஒத்து இருந்தது மேரு –அதிலே சஞ்சரிக்கிற ஆதித்யன் அவன் கையில் திரு ஆழியோடு ஒத்து இருந்தான் –இவை இரண்டும் ஜகத் ஆகாரதைக்கு பல ஷணமாய் இருந்தது –அன்ன கண்டும்- ப்ருதக் ஸ்திதித்ய அநர்ஹ ஆதார ஆதேய பாவ -நியந்தரு நியாம்ய பாவ-சேஷ சேஷி பாவாதிகளாலே –இவை அவனுக்கு சரீரமாய் இருக்கிற படியை கண்டு வைத்தும் –(நியாம்யம் தார்யம் சேஷம் -மூன்றும் சரீர லக்ஷணம்-அப்ருதக் ஸித்த விசேஷணம்-விஸிஷ்ட ப்ரஹ்மமாகவே தானே இருக்கும்)த்வைதி தனித்தனியாகவே இருக்கும்
அத்வைதி ஒன்றாகவே இருக்கும்-விசிஷ்டாத்வைதி -பிரிந்து இருக்க யோக்யதை இல்லாமல் தனித் தனியாகவே இருக்கும்-(அன்ன கண்டும் -வேதாந்த அர்த்த-மதிநலம் அருள பெற்றதாலும் –-பிரணயிதவம் மிகுதியாலும் திருப்பதி அடைய மாட்டாரே ) திருமால் இத்யாதி –இப்படி ஜகதா காரனாய் இருக்கிற அளவில் பர்யவசியாதே –அவனுடைய அசாதாராணமான ரூபத்தையும் –அசாதாராணமான  சிஹ்னங்களையும் காண வேணும் என்று ஆசைப்பட்டு கூப்பிடும்படி –திருமால் –அடிக் கழஞ்சு பெற்ற பிச்சு –நிதித்யா ஸி தவ்ய-என்று விதேயமானது தான் இவருக்கு பிரகிருதி ஆயிற்று –(விதேயம்- விதிக்கப்பட்ட சாதனம் -ஸ்ருதி-இவருக்கு ஸஹஜ பக்தி -இவை ஸ்வ பாவம் இவருக்கு)-தலைக் கொண்ட –தலைக் கொள்கை யாவது -சிலர் பழி சொன்னார்கள் -என்று மீளாதபடி-முறுகு-கொளுந்துகை –நங்கட்கு இத்யாதி –இப்படி பகவத் விஷயத்தில் அவகாஹித்த நம்மை- அவஸ்யம் அநு போக்யத்வம்  -என்கிற வசனத்தைக் கொண்டு நம் கர்மம் நம்மை வடிம்பிட வற்றோ –என்கிறார் –முறுகு  – கொளுந்துகை -வயிரம் பற்றினது என்றபடி –முறுகு -வயிரம் -நெருப்பானது வயிரத்தில் பற்றினால்-அவிக்கப் போகாதது போல் –ஒருத்தராலும் மீட்க்கப் போகாது என்றபடி –த்ருடமாகை -என்றது ஆயிற்று –அவனைக் காண வேண்டும் என்ற உறுதிப்பட்டு நின்ற இவ் அபிநிவேசம் நமக்கு பிறந்த பின்பு-பல ப்ராப்தியில் எவ்விதமான குறையும் நேரிடாது என்று நிச்சயித்து ஹ்ருஷ்டரானார்-

இடைவிடாமல் நாம உச்சாரணம் பண்ணி வருகிற நல்லோமான நமக்கு தீவினை எங்கிருந்து வந்தது என்று தலைவி வெறுத்து பேசும் பாசுரம்-திருமாலுரு வொக்கும் மேரு-அவளது பொன்னிறமான திருமேனி கலப்பதால் தானும் பொன்னிறம் பொலியப் பெற்று-எம்பெருமான் பெரிய திரு மேனி பொன்னிறமான மேருவை ஒக்கும்-அன்ன கண்டும்-நேரில் கண்டால் போலே -அன்பு மிகுதியால் பரவசம் அடைந்து இத்தனை பேரிட்டுக் கூவும்படியான வ்யாமோஹம் பெற்ற நமக்கு பிரிவுக்கு அடியான பாவம் எங்கனே உண்டாயிற்றோ – செய்யதோர் நாயிற்றைக் காட்டி சிரீதரன் மூர்த்தி இது என்னும் -போல அன்றோ வாய் பிதற்றுகிறாள் – ஜன்மாந்தர சகஸ்ரேஷூ தபோ ஞான சமாதிபி-நாராணாம் ஷீண பாபா நாம் கிருஷ்ணே பக்தி ப்ரஜாயதே –என்கிறபடி பாபம் கழிந்தால் தானே பக்தியே பிறக்கும் -பக்தியின் மேல் எல்லையில் இருந்தும் – பேறு பெறாமைக்கு காரணமான பாபங்கள் வர வழி என்னவோ -என்று வருந்தி உரைக்கிறார் –போலிகண்டு அழிகிற தலைவி ஆற்றாமைக்கு இரங்கி யுரைக்கும் பாசுரம். எம் பெருமானை நேராக ஸேவிக்கப் பெறுமளவில் மாத்திரமே யல்லாமல் அவனது போலியைக் காணுமளவில் அவனாகவே பாவித்து இடைவிடாது நாமோச்சாரணம் பண்ணி வருகிற நல்லோமான நமக்கு இங்ஙனே விஹவேதனைக்குரிய தீவினை எங்கிருந்து வந்ததென்று தலைவி வெறுத்துரைக்கிறாள்.-திருமாலுரு வொக்கும் மேரு = ஸ்ரீமஹாலக்ஷ்மியின் பொன்னிறமான திருமேனியினொளி கலப்பதனால் தானும்,-பொன்னிறம் பொலியப்பெற்ற எம்பெருமானது பெரிய திருமேனி பொன்மயமான பெரிய மேருபர்வதம் போன்றிருக்குமென்க.–அம்மேருருவில் செஞ்சுடரோன் திருமால் திருக்கைத் திருச்சக்கரமொக்கும் = அந்த மஹாமேருபர்வதததின் ஸமீபத்திலே விளங்கா நின்ற சிவந்த லொளியையுடைய ஸூர்யன் அவ்வெம்பெருமானுடைய அழகிய திருக்கையிலுள்ள திருவாழியாழ்னாவ் போன்றிருப்பான்.(அன்ன கண்டும் இத்யாதி.) அப்பெருமானுடைய திவ்ய ரூபத்தையும், திவ்யாயுதத்தையும் நேரில் காணப் பெறாமல் அவற்றிற்குப் போலியாக வுள்ளவறறையே கண்டிக்கச் செய்தேயும் அவனுருவத்தையும் அவனது அடையாளத்தையுமே நேரிற் கண்டாற்போல
அன்பு மிகுதியாற் பவசமடைந்து இத்தனை பேரிட்டுக் கூவும்படியான வ்யாமோஹம் பெற்றிருக்கிற எமக்கு, பிரிவுக்கு அடியான பாவம் எங்ஙனே உண்டாயிற்றோ தெரியவில்லையே! என்கிறாள்.
மால் தலைக்கொண்ட – ஆசையின் மேலெல்லையிலே நிற்கிற என்னவுமாம். நாயகனைப் பிரிந்த நாயகி நாயகன் போலிகளை அவனாகவே பாவித்து வாய் பிதற்றுவதை!
(திருவாய்மொழி 4-4-4) “நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலே! வா வென்று கூவும்”
(திருவாய்மொழி 4-4-2). “செய்யதோர் நாயிற்றைக் காட்டிக் கிரீதரன் மூர்த்தியீதென்னும்” என்பவற்றிலும் காண்க.
ஜந்மாந்தஸஹஸ்ரேஷு தபோஜஞாநஸமாதிபி:- நராணாம் க்ஷீணபாபாநாம் க்ருஷ்ணே பக்தி: ப்ரஜாயதே.”-பாபங்கழியப் பெற்றவர்களுக்கே பகவத பக்தி பிறக்குமென்றும், பகவத் பக்தியுடையாரைப்பாவம் அணுகாதென்றும் சாஸ்திரமிருக்க, அந்தப் பக்தியின் மெலெல்லையிலே நிற்கிற நமக்குப் பேறு பெறாமைக்குக் காரணமான பாவம் வருவதற்கு வழியுண்டோ? என்று
ஆழ்வார் வருந்தியுரைத்தாராயிற்று. எம்பெருமான் பக்கலில் மாத்திரமேயன்றி எம்பெருமான் வடிவத்தை யொத்திருக்கும் பொருளிலும் ஈடுபடுதலே பக்தியின் மேலெல்லையாம்.–மூன்றாமடியில், சிஹ்நம் என்றும் வடசொல் சின்ன மெனத்திரிந்தது

திருமாலுரு வொக்கும் மேரு-மஹா மேருவானது ஸ்ரீ யபதியினுடைய திருமேனியோடே ஒக்கும்-பிராட்டி திருமேனியின் ஒளி விரவுகையாலே-ருக்மாபம் ஸ்வப்னம் தீ கம்யம் -(மனு 12-12 ) திருமேனியோடே ஒக்கும் என்றபடி-அம் மேருவில் செஞ்சுடரோன்-அம் மஹா மேருவிலே சிவந்த சுடரை யுடைய ஆதித்யனானவன்–திருமால் திருக்கைத் திருச் சக்கர மொக்கும்-ஸ்ரீ மானுடைய வலது திருக்கையிலே உறைகிற திருவாழியோடே ஒக்கும்–மேருவானது ஸர்வ வர்ஷங்களுக்கும் உத்தரமாகையாலே
ஆதித்யன் வலத்ததாகக் குறையில்லை-அன்ன கண்டும்–அவன் தன்னைக் காண்கை அன்றிக்கே
ஒப்புக் கண்டும்-திருமாலுருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது-ஸ்ரீ மானுடைய வடிவோடே
அசாதாரண சிஹ்னத்தையே ப்ரேம பாரவஸ்யத்தாலே அக்ரமமாகச் சொல்லும்படியான-ஓர் திருமால் தலைக் கொண்ட நங்கட்கு-அத்விதீயமாய் சம்பத்தாய் இருக்கிற பக்தியின் மேல் எல்லையிலே நிற்கிற நமக்கு-எங்கே வரும் தீ வினையே –விஸ்லேஷ ஹேதுவான துஷ் கர்மமானது எங்கனே வருவதாயிற்று-ஏவம் ஹ்வா வத தபதி கிமஹம் ஸாது நா கரவம் கிமஹம் பாப மகரவமிதி -( தைத்ரியம் -ஆனந்த -2-9 ) என்று அக்ருத்ய கரணாதிகள் இவனைத் தபிப்பியாது என்று அன்றோ சொல்லுகிறது–ஷீண பாபரானவர்களுக்கு பக்தி பிறக்கும் என்னச் செய்தே-பக்தியின் மேல் எல்லையிலே நிற்கிற நமக்கு
பிரிகைக்கு அடியான பாபம் வர விரகு யுண்டோ என்றதாயிற்று-கிளவியிலும்-நாயகன் ஈஸ்வரனாகையாலே நல்லோமான நாம் பிரிந்து இருக்கைக்கு அடியான தீ வினை எங்கே வந்தது என்று உரைத்தாள் யாயிற்று

தாத்பர்யம்--இதில் சர்வேஸ்வரன் உடன் போலியான வஸ்துக்களைக் கண்டும் திருப்தி- நேராக குறை வராது-சர்வ சாம்யமான வாஸ்து இல்லையே-ஆயினும் ஆராய்ந்தால்-தனக்கு மேல் உத்க்ருஷ்டம் இல்லாத மகத்தான மேரு படர்வதமே-‘மிக்க உன்னதமாய் தங்க மயம் அது -கரு=மாய் இவன்
உன்னதமாய் உயரம்-ஒளி புகர்-அவன் திருவாளிக்கு ஆயிரம் சூரியனை சொல்லில் சொல்லலாம்
அப்படி நீர் உபமானமான அத்திருமேனிக்கு சத்ருசமான பதார்த்தம் ஆராயும் இடத்தில் இப்படி சொல்லப் பெற்றோமே என்று திருப்தி அடையாமல் ஆசைக்குத் தக்க இவை சத்ருசம் இல்லையே-வஸ்து அந்தரமும் இல்லையே-அவரையே கண்டு திருப்தி அடைவதே வழி காண வேணும் என்று வைர ஊருக்கு போல் அபிநிவேசம் பெற்ற பின்பு பல ப்ராப்திக்கு குறை இல்லை என்று நிச்சயித்து ஹ்ருஷ்டராகிறார் –

3-4-புகழும் நல் ஒருவன் என்கோ!-பிரவேசம்

கீழே – ‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்,’ என்று அடிமை செய்யப் பாரித்தார்;
இவர் பாரித்த பாரிப்புக்கெல்லாம் போரும்படி ஈசுவரனும் தன்னுடைய சர்வாத்தும பாவத்தைக் காட்டிக் கொடுத்தான்;
அதனை அநுசந்தித்துச் சொற்களைக்கொண்டு அடிமை செய்கிறார் இத்திருவாய்மொழியில்.

சர்வ பிரகாரத்வம் சொல்லும் திருவாய் மொழிகள் -புகழு நல் ஒருவன் என்கோ 3-4/–நல் குரவும் செல்வமும் -6-3/மாயா வாமனனே -7-8-
‘பேதம் -தது தது பிரகரணங்களுக்கு சேர –இங்கே அனைத்து கைங்கர்யங்களையும் கொள்வதற்கு
சர்வாத்மா பாவம் -இங்கு -சரீரம் எல்லாம் பிரகாரம் -பிரகாரம் எல்லாம் சரீரம் இல்லை -புஷ்பம் -மணம் -பிரகாரம்-சரீரம் இல்லை
இங்கே இரண்டு சப்தங்களையும் வைத்து அருளிச் செய்கிறார் -அப்ருதக் சித்த விசேஷணம் பிரகாரம் –
ஸூ வியதிரிக்த -தான் அந்தராத்மா பாவம் இருப்பதைக் காட்டிக் கொடுத்தான் -என்கோ-சொல்லுவேனா -வாசிக கைங்கர்யம் –
சகலவித கைங்கர்யம் கேட்டு இதுதானா –

“உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்யவேண்டும்,’ என்று பாரித்த இவர், சொற்களை மாத்திரம் கொண்டு
அடிமை செய்வான் என்?’ எனின், இருவரும் இலையகலப் படுக்குமித்தனை போக்கி–ந ச இச்ச்யதி மாதவ- அவனும் அடிமை கொள்ளமாட்டான்; –
‘கேட்டேயும் -காலாழும்நெஞ்சு அழியும் கண்சுழலும்’ என்னும் தன்மையராய் இவரும்.-இவரும் செய்ய மாட்டார் –
இலையகலப்படுக்குமித்தனை’ என்றது, ‘உணவு உண்பதற்கு இடப்பட்ட இலையை மிகப் பெரிதாக இடவேண்டும் என்று நினைத்தல் இத்தனை’ என்றபடி.
அகலப்படுத்தல் – விரிவுபடுத்துதல்; ‘பெரிய இலையாக இருத்தல் வேண்டும்’ என்றபடி.
இவரும் அடிமை செய்யமாட்டார்; ‘ஜனார்த்தனன் ஒன்றையும் விரும்புவது இல்லை,’ என்கிறபடியே,
-அந்ய குசல பிரச்னம் -ந ச இச்ச்யதி மாதவ -விதுரன் -சஞ்சயன் -சொன்னதாகவும் உள்ளது–இரண்டு வித மஹா பாரதம் மா முனிகள் காலத்திலேயே –
விதுரன் சொல்வதாக இவர் இடம் உள்ள மஹா பாரதம் -பூர்வர்கள் சஞ்சயன் சொன்னதாக சொல்வார்கள் என்கிறார் -அவரே
எளிய முறையில் ஆராதிக்கத் தக்கவனாய் இத்தலையில் பெற்றது கொண்டு மனம் நிறைவு பெறுமவனே அவ்விறைவன்;-பூர்தியைப் பற்ற –
‘புனையும் கண்ணி எனதுடைய வாசகஞ்செய் மாலையே;-திரு வாய் மொழியே – வான் பட்டாடையும் அஃதே,’ என்கிற
இவருடைய சொல் அளவையே எல்லாமாகக் கொள்ளும் தன்மையனே யன்றோ அவ்விறைவன்-உக்தி மாதரத்தை எல்லாவாகமாகவே கொள்பவன் அவன் –
இவருடைய காதல்தானே ‘ஆராத காதலே’ அன்றோ? இவருடைய பாரிப்புக்குத் தகுதியாக அவன்
சர்வாத்தும பாவத்தைக் காட்டிக்கொடுத்த இடத்தில் அடிமை செய்கையின்றியே’, அவனுடைய குணங்களை அநுசந்தித்து
நிலை குலைந்த அந்தக் கரணங்களை உடையராய் ‘கேட்டேயும் -காலாழும்நெஞ்சு அழியும் கண்சுழலும்’ என்னும் தன்மையராய் இவரும்.

நான் ஷூத்ர சம்சாரி -அவாப்த சமஸ்த காமன் -என்னுடைய பாரிப்பு ஏற்று -எங்கும் பரந்து வியாபித்து –
தனக்காக இப்பொழுது தான் -சர்வாத்மா பாவம் கொண்டதாக -எண்ணி காலாழும் நெஞ்சு அழியும் கண்சுழலும்’
அப்படி என்றால் வாசிக கைங்கர்யம் எவ்வாறு பண்ணினார் –மனஸ் நினைத்து தானே வாய் பாட வேண்டும் -மநோ பூர்வோ வாக் உத்தர –
முடியானாலே -கரணங்கள் அனைத்தையும் விரும்புமே –
ஸூ வாரதனே யாகிலும் -இவர் பக்கல் சிறிதாகிலும் வேண்டுமே -இவர் கிஞ்சிதவாறே எல்லாமாகவே கொண்டான் அவன்
-தாய் குழந்தை மழலை சொல் போலே -அவன் ப்ரீதியைக் கண்டு இவரும் எல்லாம் செய்ததாக இவரும் மகிழ்ந்தார்
அதீத காதல் கொண்டவன் இவர் கிஞ்சித் செய்ததையும் பெரியதாக கொண்டு மேலே செய்ய விடாமல் இருப்பானே
அதனால் அனைத்து கைங்கர்யங்களையும் பாரித்தபடியே செய்து முடித்தார் என்றவாறு –
இத் திருவாய்மொழியில் -பிரதிபாதிக்கப்படும் -விபூதி யோகமும் -சமா நாதி கரண்யமும் -அலமாப்பும் சம்சயமும் –
பொருவில் சீர் பூமி -விபூதி -சமா நாதி கரண்யம் -என்கோ -அலமாப்பும் சம்சயமும் —

அவன் சொரூபத்தோடு குணத்தோடு விபூதியோடு செயல்களோடு வேறுபாடு இல்லாமலே எல்லாம் உத்தேஸ்யமாய் இருக்கின்றது இவர்க்கு;
‘இறைவனுடைய குணங்களுக்கும் விபூதிக்கும் இவர்க்கு வேற்றுமை இல்லை,’ என்பது கருத்து.
அவனைச் சார்ந்து விட்டுப் பிரியாமல் -அப்ருதக் சித்த விசேஷணம்-பிரகாரம் – என்பதால் இவற்றுக்கு சாம்யம் உண்டே –
அவை தம்மைக் கண்ட கண்ட இடங்களில் -தனித்தனி -வையதிரண்யத்தில் -அனுபவிக்கை யன்றிக்கே, மாணிக்கத்தையும் வயிரத்தையும்
முத்தையும் ஓர் ஆரத்திலே சேர்த்து அனுபவிப்பாரைப் போலே அவற்றை அடைய அவன் பக்கலிலே-சமா நாதி கரண்யத்தில் – சேர்த்து அனுபவிக்கிறார்.
அன்றியே,
‘குணங்களுக்குப் பிரித்து நிலையுதலாதல் தோன்றுதலாதல் இல்லையாமாறு போன்று, விபூதிக்கும் அவனை ஒழிய
நிலையுதலாதல் தோன்றுதலாதல் இல்லாமையாலே, சேர்த்து அனுபவிக்கிறார்,’ என்னுதல்;
அன்றியே,
‘முத்தனுக்கு லீலா விபூதியும் ததீயத்வ ஆகாரத்தாலே அனுபவிக்கப்படும் பொருள் ஆகா நின்றதே யன்றோ?
அத் தன்மையாலே அனுபவிக்கிறார்,’ என்னுதல்.
‘ஆயின், முத்தன் ‘இச்சரீரத்தை நினையாமலே நான்கு பக்கங்களிலும் சஞ்சரிக்கின்றான்,’ என்று கூறப்பட்டுள்ளதே?’ எனின்,
அவ்விடத்தில் கர்மம் காரணமான உருவத்தை நினையான் என்கிற இத்தனையேயாம்.
ஆக, கர்மங்காரணமான உருவம் நினைவிற்கு விஷயம் ஆகாதபடியான பாகம் பிறந்தால், எல்லாம் அவனுடைய பொருள்
என்றே தோன்றி, எல்லாம் ஒக்க அனுபவிக்கப்படும் பொருளாகவே இருக்கும். இவர்க்கு அவன் குணங்களோடு விபூதியோடு
வேற்றுமை அற அனுபவிக்கப்படும் பொருளாகும்படியன்றோ மயர்வற மதிநலம் அருளிற்று?
கர்மம் காரணமான நினைவு பின் நாடாதபடியன்றோ இவர்க்கு ஈசுவரன் வெளிச்சிறப்புப் பண்ணிக்கொடுத்தது?-வெளிச்சிறப்பு – ஞானம்.

‘நன்று; இவ்விபூதிதன்னிலே ‘எண்ணாத மானிடத்தை எண்ணாதபோது எல்லாம் இனியவாறே,’ என்று சிலரைச்சொல்லி,
‘பேராளன் பேரோதும் பெரியோரை ஒரு காலும் பிரிகிலேனே,’ என்று ஒரு சிலரை மறக்கவொண்ணாதபடியாகவும் சொல்லா நின்றதே?’ எனின்,
ஞானம் பிறந்த நிலையிலே இருக்கும்படியாயிற்று இது; பிராப்தி சமயத்தில் வந்தால், இவ்வேறுபாடின்றி எல்லாம் ஒக்க
அனுபவிக்கப்படும் பொருளாகவே இருக்கும். எல்லாம் ஈசுவர விபூதியாக இருக்கச்செய்தேயன்றோ சிலரைப்
‘பொல்லாத தேவரைத் தேவரல்லாரைத் திருவில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு’ என்கிறது?
இங்ஙனம், அவ்வந்நிலைகள் காரணமாக விஷயங்களைப் பாகுபாடு செய்யாதொழியின், சாஸ்திரங்கள் எங்கும் ஒக்கச் சேரக் கிடக்கும்படி
பார்க்கும் போது நின்ற நின்ற நிலைகளிலே ஹேய உபாதேய விபாகம் பண்ணி அநுசந்திக்க வேண்டி வருமேயன்றோ?

இவர்க்கு, இறைவன் தன் ஸ்வரூப குண விபூதி சேஷ்டிதங்கள் முதலானவைகளை அடையக் காட்டிக்கொடுக்கக் கண்டு,
விபூதி காரணமான பூதங்கள் பௌதிகங்கள் அவற்றில் பிரகாசிக்கின்ற மாணிக்கம் முதலானவைகள் சுவைப்பொருள்கள்
செவிக்கு இனிய இசை முதலானவைகள் மோக்ஷம் முதலான புருஷார்த்தங்கள் இவ்வுலகிற்குப் பிரதானரான பிரமன் முதலானோர்
இவற்றுக்கு அடையக் காரணமான பிரகிருதி புருஷர்கள் ஆகிய இவை முழுதினையும் விபூதியாகவுடையனாய் இவற்றினுள்ளே
அந்தராத்துமாவாய் அநுப்பிரவேசித்து இவற்றோடே கலந்து நிற்கச் செய்தேயும் இவற்றினுடைய தோஷங்கள் தீண்டப்படாதவனாய்,
’ஈசுவரன் தான் கர்மபலத்தைப் புசியாமல் மிக அதிகமாகப் பிரகாசிக்கிறான்,’ என்கிற பிரமாண பலத்தாலே இவ்வாத்துமாவுக்கு
வரக்கூடியதான இன்ப துன்பம் முதலானவைகள் தன்பக்கல் தட்டாதபடி நிற்கையன்றிக்கே, எல்லாப் பொருள்களையும் ஏவுகின்ற
தன்மையால் வந்த புகரையுடையவனுமாய், விபூதியில் அவ்வப்பொருள்கட்கு வாசகமான சொற்கள் அசித்தையும் அசித்தாலே
அபிமானத்தையுடைய ஆத்துமாவையும் காட்டுகிற கணக்கிலே அவற்றுக்குள் அந்தர்யாமியாய் இருக்கிற பரமாத்துமாவையும்
காட்டி இக்கூட்டத்துக்குப் பெயர்களாய் அவன் பக்கலிலே முடிவு அடைந்திருக்கையாலே அசாதாரணமான நாராயணன் முதலான
சப்தங்களோடு வேற்றுமை அற எல்லாச் சொற்களும் அவனையே சொல்லுகின்றன வாயிருக்கிறபடியையும்,
இவ் விபூதிதான் புறம்பாய் விஞ்சிக் காட்டுகையன்றிக்கே தோளில் கிடக்கின்ற தோள் மாலையைப்போன்று தகுதியாய்
அனுபவிக்கப்படும் பொருள்களிலே அடங்கியிருக்கிறபடியையும் அநுசந்தித்துப் பேறு பெற்றாராய்ப் பாரித்தபடியே
எல்லா அடிமையும் செய்யமாட்டாமையாலும், அவன்தான் ‘கோவை வாயாள்’ என்ற திருவாய் மொழியிற் கூறியபடியே,
ஒன்றையே எல்லா அடிமையுமாகக் கொள்ளும் தன்மையனாதலானும், சொற்களைக் கொண்டு செய்கிற அடிமையிலே இறங்கியவராய்,
மஹா வாதத்திலே பலோபாதாநம் பண்ணுவாரைப் போன்று ‘அத்தைச் சொல்லுவேனோ, இத்தைச் சொல்லுவேனோ!’ என்று இங்ஙனம் அலமருகிறார்.

‘என்கோ!’ என்பது ஐயப்பொருளதாதலின், அதனை உதாரண முகத்தால் விளக்குகிறார், ‘மஹாவாதத்திலே பலோபாதாநம் பண்ணுவாரைப் போன்று’என்று.
மஹாவாதம் – பெருங்காற்று; பல உபாதாநம் – பழங்களைச் சேகரித்தல். என்றது, பெருங்காற்று அடிக்கின்ற காலத்தில் மரங்களினின்றும் கீழே விழுந்து
சிதறிக்கிடக்கின்ற பழங்களை எடுக்கின்றவர்கள் ‘இதனைஎடுப்போமா, அதனை எடுப்போமா!’ என்று மனம் சுழன்று அலைவதுபோன்று’ என்றபடி.

இத்திருவாய்மொழியில், முதற்பாசுரத்தை நோக்கி, ‘விபூதி காரணமான பூதங்கள்’ என்கிறார்.
இரண்டாம் பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றிப்‘பௌதிகங்கள்’ என்கிறார்.
நாலாம் பாசுரத்தில் முதலிரண்டு அடிகளைத் திருவுள்ளம் பற்றி, ‘அவற்றில் பிரகாசிக்கின்ற மாணிக்கம் முதலானவைகள்’ என்கிறார்.
ஐந்தாம் பாசுரத்தில் ‘நலங்கடல் அமுதம்’ என்பதுமுதலானவைகளைத் திருவுள்ளம் பற்றிச் ‘சுவைப்பொருள்கள்’ என்கிறார்.
ஆறாம்.பாசுரத்தில் ‘நுடங்கு கேள்வி இசை என்கோ’ என்றதனைத் திருவுள்ளம் பற்றிச் ‘செவிக்கினிய இசை முதலானவைகள்’ என்கிறார்.
ஏழாம் பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றி, ‘மோக்ஷம் முதலான புருஷார்த்தங்கள்’ என்கிறார்.
எட்டாம் பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றி, ‘இவ்வுலகிற்குப் பிரதானரான பிரமன் முதலானோர்’ என்கிறார்.
‘யாவையும் எவரும் தானே’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘இவற்றுக்கு அடையக் காரணமான பிரகிருதி புருஷர்கள்’ என்கிறார்.
‘யாவையும் எவரும் தானாய்’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘இவை முழுதினையும் விபூதியாகவுடையனாய்’ என்கிறார்.
‘தோய்விலன்’என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘இவற்றினுடைய தோஷங்கள் தீண்டப்படாதவனாய்’ என்கிறார்.
‘எல்லாப் பொருள்களையும் ஏவுகின்ற தன்மையால் வந்த புகழையுடையவனுமாய்’ என்றது, ‘தோய்விலன்’ என்றதன் பொருள் ஆற்றலால் போந்த பொருள்.
‘கண்ணனை, சங்கு சக்கரத்தன்’முதலான அசாதாரணமான பெயர்களோடு விபூதியில் அவ்வப்பொருள்கட்குச் சாமாநாதி கரண்யம்
சொல்லுகைக்கு ஏதுவை அருளிச்செய்கிறார்,
‘விபூதியில் அவ்வப் பொருள்கட்கு’ என்று தொடங்கி. வாசகமான சொற்கள் – தேவர்கள், மனிதர்கள் முதலான சொற்கள். பதினோராம் பாசுரத்தைத்
திருவுள்ளம் பற்றித் ‘தோளில் கிடக்கின்ற தோள் மாலையைப் போன்று’ என்கிறார்.

ஆக, இத்தால், ‘வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்’ என்று தாம் பாரித்தபடியே அடிமைசெய்து தலைக்கட்டுகிறார்.
முன்னர்க்கூறிய ‘புனையுங் கண்ணி எனதுடைய வாசகஞ் செய்மாலையே’ என்றதனையும், ‘இவருடைய காதல்தானே ஆராத காதலேயன்றோ?’
என்றதனையும் மீண்டும் அநுவதிக்கிறார், ‘பாரித்தபடியே’ என்று தொடங்கி.

நாலாம் திருவாய் மொழியில் -கீழ் ப்ரஸ்துதமான கைங்கர்யத்துக்கு பிரதிசம்பந்தி சகல சேதன அசேதன விசிஷ்டனான நாராயணன் ஆகையாலே-
அவனுடைய சர்வ பிரகார விசிஷ்டத்வத்தையும் அனுசந்தித்து
1-பூத பவ்திகாத்மக சகல பிரகாரத்வத்தையும்
2-பூத கார்ய விசேஷ பிரகாரத்வத்தையும்
3-அசாதாரண விக்ரஹ யோகத்தையும்
4-ரத்நாதி வி லக்ஷண பதார்த்த பிரகாரத்வத்தையும்
5-சரசமான போக்ய வஸ்து பிரகாரத்வத்தையும்
6-வேத வைதிக ரூபமான காந பர்யந்த சப்த ராசி பிரகாரத்வத்தையும்
7-போக மோக்ஷ ரூபமான புருஷார்த்த பிரகாரத்வத்தையும்
8-லோக பிரதானரான ப்ரஹ்மாதி சரீரகத்வத்தையும்
9-இப்படி ஸமஸ்த சேதன அசேதன பிரகாரத்வத்தையும்
10-தத் கத தோஷைர சம்ஸ்ப்ருஷ்டத்வத்தையும் அனுசந்தித்து
பிரகார வாசக சப்தங்களாலே பிரகாரியான தன்னைச் சொல்லும்படியான அவிநா பாவத்தை பிரகாசிப்பிக்கையாலே-அவனுக்கு பிரகார தயா சேஷ பூதராய் இருக்கிற இவர்
பிரகார வாசக சப்தங்களும் அசாதாரண திவ்ய நாமங்களோ பாதி அங்குத்தைக்கு வாசகமாகையாலே தத் தத் சப்தங்களாலே-தம்முடைய ஸ்வரூப அனுரூபமான வாசிக கைங்கர்யம் பண்ணுகிறார் –

முதற்பாட்டில், இத்திருவாய்மொழியில் பரக்க அருளிச்செய்த அர்த்தத்தைச் சுருங்க அருளிச்செய்தார்;
இரண்டாம் பாட்டில், முதற்பாட்டில் சொன்ன ஐம்பெரும்பூதங்களினுடைய காரியத்தை முறையே பேசினார்;
மூன்றாம் பாட்டில், உலகமே உருவமாய் நின்ற நிலையோடே அசாதாரண விக்கிரகத்தைச் சேர்த்து அனுபவித்தார்;
நான்காம் பாட்டில், ‘ஒளி பொருந்திய மாணிக்கம் முதலிய பொருள்களை விபூதியாகவுடையவன்’ என்றார்;
ஐந்தாம் பாட்டில், ‘சுவைப்பொருள்களை விபூதியாக உடையவன் என்றார்;
ஆறாம் பாட்டில், ‘வேதம் தொடக்கமான இயலும் இசையுமான ஒலிகளின் கூட்டத்தை விபூதியாக உடையவன்’ என்றார்;
ஏழாம் பாட்டில், ‘செல்வம் முதலான புருஷார்த்தங்களை விபூதியாக உடையவன்’ என்றார்;
எட்டாம் பாட்டில், ‘உலகத்தில் பிரதானரான பிரமன் சிவன் முதலியோரை விபூதியாக உடையவன் என்றார்;
ஒன்பதாம் பாட்டில், அவனுடைய விபூதியின் விரிவைத் தனித்தனியே பேசமுடியாமையாலே
‘சேதன அசேதனங்களை விபூதியாகவுடையவன்’ என்று சுருங்க அருளிச்செய்தார்;
பத்தாம் பாட்டில், ‘இவற்றுக்கும் உள்ளுயிராய்ப் பரந்து நின்றாலும் அவற்றினுடைய தோஷங்களால் தீண்டப்படாதவன்’ என்றார்;
முடிவில், இது கற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைக் கட்டினார்-

புகழும் நல் ஒருவன் என்கோ!
பொரு இல் சீர்ப் பூமி என்கோ!
திகழும் தண் பரவை என்கோ
தீ என்கோ! வாயு என்கோ!
நிகழும் ஆகாசம் என்கோ!
நீள் சுடர் இரண்டும் என்கோ!
இகழ்வு இல் இவ் வனைத்தும் என்கோ!
கண்ணனைக் கூவு மாறே
.—————–3-4-1-

அவனுடைய குணங்களையும் விபூதி காரணமான ஐம்பெரும்பூதங்களையும் சேரப்பிடித்து,
இத்திருவாய் மொழியில் மேல் விரிவாகச் சொல்லப்படும் அர்த்தத்தையெல்லாம் சுருக்கமாக அருளிச் செய்கிறார்.

புகழும் நல் ஒருவன் என்கோ 
1–‘உயர்வற உயர்நலம்’ தொடங்கி இதுகாறும் தாம் அனுபவித்த குணங்களை யடைய ஒரு சொல்லாலே ‘புகழும் நல் ஒருவன் என்கோ’ என்கிறார்.
2– இனி, ‘சுருதி ஸ்மிருதி இதிகாசம் முதலானவைகளெல்லாம்
கையெடுத்துக் கூப்பிடாநின்றுள்ள வேறுபட்ட சிறப்பையுடையனான ஒத்தாரை மிக்காரை இலையாய புருஷன் என்பேனோ!’ என்னுதல்;
3– இனி, ‘புகழும் என்கோ, நல் என்கோ, ஒருவன் என்கோ’ எனத் தனித்தனியே கூட்டி,
‘எல்லாராலும் நன்றாகப் புகழப்படுமவன் என்பேனோ! நல்ல ஆனந்தம் முதலிய குணங்களையுடையவன் என்பேனோ!-சமாயப்திக தரித்திரன் –ஒத்தாரை மிக்காரை இலையாய அரியவன் என்பேனோ!’ என்னுதல்.
ஆக, குணத்தின் சேர்க்கையால் வந்த வேறுபட்ட சிறப்பினைச் சொல்லி, மேல் விபூதியைச் சொல்லுகிறார்:-குணங்களுக்கும் செல்வங்களுக்கும் உண்டான சேர்த்தியாலே குணங்களோடு ஒக்கச் செல்வத்தையும் சேர்த்து அனுபவிக்கிறார்-

1-குணம் ஜாதி -வியக்தி விட்டு பிரியாது –கோத்வம் போலே -/ குண்டலம் -த்ரவ்யம் -பிரியுமே -பிரித்து ஸ்திதி உண்டே இதற்கு-சௌலப்யம் -குணம் பிரியாது அறிவோம் –பிருத்வி -த்ரவ்யம் -பிரியாமல் இருக்குமோ சங்கை வருமே -இவற்றின் ஸ்திதி அவனாலே தானே
2-சமா நாதி கரண்யம் இருப்பதால்
3-ஸ்வரூப ருப குண விபூதி -சேர்த்து படிப்பதால்
4-சேர்த்தி -ஆஸ்ரயித்து பெருமை சேர்க்கும் –
5-ஜன்ய ஜனக பாவம் -குணங்கள் -தாய் -படைக்கப் பட்டதால் தானே விபூதி -காருணிகன் நீர்மையால் அருள் செய்தான் -யௌகபத்யம் அனுக்ரகத்தால்
6-ததீயத்வ ஆகாரத்தால் இனிமையாய் எல்லாம் இருக்குமே-

பொரு இல் சீர்ப் பூமி என்கோ-ஒப்பில்லாத பொறுமை முதலிய குணங்களையுடைய பூமி என்பேனோ!-இனி, ‘பூமி திருவடியிலே பிறந்தது’ என்கிறபடியே பூமி அடியிலே பிறந்துடையது ஒன்று ஆகையாலே ‘பொரு இல் சீர்ப்பூமி’ என்கிறார் என்னுதல்.காரணமான ஐம்பெரும்பூதங்களையும் அருளிச்செய்தார்.-நீள் சுடர் இரண்டும் என்கோ –காரியமான கூட்டத்துக்கு அடைய உபலக்ஷணமாகச் சந்திர சூரியர்களைச் சொல்லுகிறார்.-இகழ்வில்’ என்பதற்கு, ‘ஓன்று ஒழியாமே எல்லாம் என்னுதல் -உபாதேய தமமான எல்லாம் என்னுதல் –  ‘கண்ணனைக் கூவுமாறு’ என்பதனைப் ‘புகழும் நல் ஒருவன் என்கோ!’ என்பது
முதலானவற்றோடு தனித்தனியே கூட்டுக.-அருச்சுனன், ‘ஹே கிருஷ்ண ஹே யாதவ’ என்றத்தோடு தாம் ‘பொரு இல் சீர்ப் பூமி’ என்றத்தோடு ஒரு வேற்றுமையற்று இருக்கிறதாயிற்று இவர்க்கு.

———-

கூவுமாறு அறிய மாட்டேன்,
குன்றங்கள் அனைத்தும் என்கோ!
மேவு சீர் மாரி என்கோ!
விளங்கு தாரகைகள் என்கோ!
நாவியல் கலைகள் என்கோ!
ஞான நல் ஆவி என்கோ!
பாவு சீர்க் கண்ணன் எம்மான்
பங்கயக் கண்ண னையே
.–3-4-2-

உக்தமான பூதங்கள் உடைய கார்ய விசேஷத்தை அருளிச் செய்கிறார்-மேற்கூறிய ஐம்பெரும்பூதங்களினுடைய காரியங்களை முறையாகப் பேசுகிறார்.-‘பங்கயக் கண்ணன்’ என்றதனோடு ‘குன்றங்கள் அனைத்தும்’ என்றதனோடு வாசியற்றிருக்கிறதாயிற்று இவர்க்கு.அன்றிக்கே,-‘பெரும் புறக்கடல்’ என்கிற திருமொழி நிர்வஹிக்கிற கிரமத்திலே ‘குன்றங்களனைத்தும்’ என்றது ‘நின்ற குன்றத்தினை நோக்கி’ என்னுமாறு போன்று வடிவிற்குப் போலியாய், சாமா நாதி கரண்யம் இல்லாமல் அவற்றை நிர்வகிப்பவர் வையதி கரண்யம் -கொண்டு –நிர்வகிப்பது போலே -இவற்றை நிர்வகிப்பவர் –

———

பங்கயக் கண்ணன் என்கோ!
பவளச் செவ் வாயன் என்கோ!
அங் கதிர் அடியன் என்கோ!
அஞ்சன வண்ணன் என்கோ!
செங் கதிர் முடியன் என்கோ!
திரு மறு மார்பன் என்கோ!
சங்கு சக்கரத்தின் என்கோ
சாதி மாணிக்கத்தையே!
–3-4-3-

உலகமே உருவமாய் நின்ற நிலையோடு அசாதாரண விக்கிரகத்தையும் சேர்த்து அனுபவிக்கிறார்.-தம்மோடு முதல் உறவு பண்ணின கண்ணழகைச் சொல்லுகிறார்.-ஜிதந்தே புண்டரீகாஷன் -தூது செய் கண்கள்-அந்நோக்குக்குத் தப்பினாலும் தப்பவொண்ணாத முறுவலைச் சொல்லுகிறது.-நோக்குக்கும் புன்முறுவலுக்கும் தோற்றார் விழும் நிலத்தைச் சொல்லுகிறது.-அத்திருவடிகளிலே விழுந்தார்க்கு அனுபவிக்கக் கூடியதான வடிவைச் சொல்லுகிறது.-இது பிராப்த விஷயத்தில் அனுபவம் என்னுமிடத்தைக் காட்டித்தருவது தலைவனாந்தன்மைக்குப் பிரகாசகமான திருமுடி யன்றோ?-திருமுடியைக் கண்டால் சுவாதந்தரியத்தை அனுசந்தித்து இறாய்க்குமதனைத் தவிர்த்துத் தருவது லக்ஷ்மீ சம்பந்தமன்றோ?-‘திருவையும் மறுவையும் மார்வில் உடையவன் என்பேனோ!’ -திரு மறுவைப் பீடமாக கொண்டு இருப்பவள் என்றுமாம் –‘இச் சேர்த்திக்கு என் வருகிறதோ!’ என்று இடமல்லாத இடத்திலும் அச்சத்தாலே ஐயங்கொள்ளுகிற பிரேமத்தின் முடிவெல்லையிலே-நிற்கின்றவர்களுடைய வயிற்றெரிச்சலைத் தவிர்ப்பன திவ்விய ஆயுதங்கள் அல்லவோ?-போலி அன்றியே ஆகரத்திலே பிறந்து நன்றான மாணிக்கம் போலே குற்றமற்றதாய் இயல்பாய் அமைந்த வடிவழகையுடையவனை.-இந்த விபூதி யோகம் அவனுடைய அப்ராக்ருதமாய் திவ்ய பூஷணாதி களாலே அலங்க்ருதமான திருமேனியோடு ஓக்க தகுதியாய் இருக்கும் என்னும் இடம் தோற்றுகைக்காக விபூதி கதனத்தின் நடுவே அவனுடைய திரு மேனியின் அழகைப் பேசுகிறார் –

———

சாதி மாணிக்கம் என்கோ!
சவி கொள் பொன் முத்தம் என்கோ!
சாதி நல் வயிரம் என்கோ!
தவிவு இல் சீர் விளக்கம் என்கோ!
ஆதி அம் சோதி என்கோ!
ஆதி அம் புருடன் என்கோ!
ஆதும் இல் காலத்து எந்தை
அச்சுதன் அமலனையே.
–3-4-4-

‘எனக்கு எம்பெருமானை நினைக்க விரகு சொல்லவேண்டும்,’ என்ன, ‘நான் உனக்கு அது சொல்லுகிறேன்;-நீ எனக்கு அவனை மறக்க விரகு சொல்ல வல்லையே?’ என்றாராம்.–குருகைக் காவல் அப்பன்-பொருள்களாயிருந்தும் அவனை ஒழியப் பிரிந்து நிலையுதலாதல் தோன்றுதலாதல் இல்லையாம்படி இருக்கின்றனவே யன்றோ-எல்லாப் பொருள்களும் பிரகாரமாக, தான் பிரகாரியாயிருக்கும்படியைச் சொல்லுகிறது-எல்லாம் தனக்கு விபூதியாய் இருந்தும், சிறப்புடைய சில பொருள்களை எடுத்து ‘என்னுடைய விபூதி’ என்றானன்றோ இறைவன்? அப்படியே இவரும் பேரொளியையுடைய மாணிக்கம் முதலான பொருள்கள் அவனுக்கு விபூதியாயிருக்கிறபடியை அனுபவிக்கிறார்.-

எல்லை இல்லாத பேரொளி உருவமாய் விளங்குகின்ற பரமபதத்தை விபூதியாக வுடையவன் என்பேனோ!-லீலா விபூதியைச் சொல்லுகிற இடத்தில் நித்திய விபூதியைச் சொல்லுவான் என்?’ என்னில்,‘ஆதி அம் சோதி என்கோ’ என்றதும், ‘சாதி மாணிக்கம் என்கோ!’ என்றது போலே இருக்கிறது.-ஆதும் இல் காலத்து எந்தை அச்சுதன் அமலனையே 1–சமுசார காலத்திலே; என்றது, எனக்குத் தன்னைப் பெறுகைக்கு முதல் ஒன்றுமில்லாத காலத்திலே, தான் எந்தையான முறையை எனக்கு அறிவித்து,பின்பு ஒரு காலமும் நழுவ விடாதே பாதுகாத்து, இதுதான் என்பக்கல் ஒரு பிரயோஜனம் கொண்டன்றியே நிர்ஹேதுகமாகத் தன் பேறாகப் பாதுகாத்தவனை.
அன்றியே,
2–‘யாதுமில்லாத பிரளயகாலத்தில் காரியமாக மாறின இவையடங்கலும் அழிந்து, ‘சத்’ என்ற நிலையாய்க் கிடக்கிற அன்று, தான் ஸ்வாமியான சம்பந்தத்தைக்கொண்டு நாம ரூபங்களை இழந்த இவற்றைச் சத்தை இழந்து போகாமல் தன் பக்கலிலே ஏறிட்டுக்கொண்டு இவற்றைத் தரித்து, ‘தான்’ என்று சொல்லலாம்படி இவை தன் பக்கலிலே கலந்த அன்றும் இவற்றின் குற்றங்கள் தன் பக்கல் தட்டாதபடி இருக்கிறவனை’ என்னுதல்.

‘ஆயின், ‘தோய்விலன்’ என்னுமதனோடு இங்குக் கூறிய இரண்டாவது பொருள், கூறியது கூறலாகாதோ?’ எனின்,
‘நாம ரூபங்களையுடையனவாய்ப் பொருளாகச் சொல்லலாம்படி பிரிய நின்ற போதும் இவற்றோடே கலந்து இவற்றின் குற்றம் தன் பக்கல் தட்டாதபடி நிற்கும் நிலையினைச் சொல்லுகிறது அங்கு; இவை, தான் என்ற சொல்லுக்குள்ளேயாம்படி கலந்து நின்ற
போதும் இவற்றின் குற்றம் தன் பக்கல் தட்டாதபடி நிற்கும் நிலையினைச் சொல்லுகிறது இங்கு,’ 
என்று அருளிச் செய்வர்.
அதற்கு அடி, பிரவேச ஹேது விசேஷம்.-இங்கே அமலன் -காரண -பிரளய – அவஸ்தையில் -ஸ்தூலம்–தோய்விலன் -எனபது -கார்ய அவஸ்தையில் -சூஷ்ம –

———

அச்சுதன் அமலன் என்கோ!
அடியவர் வினை கெடுக்கும்
நச்சு மா மருந்தம் என்கோ!
நலம்கடல் அமுதம் என்கோ!
அச்சுவைக் கட்டி என்கோ!
அறுசுவை அடிசில் என்கோ!
நெய்ச்சுவைத் தேறல் என்கோ!
கனி என்கோ! பால்என் கேனோ!
–3-4-5—

ஹேயப்பிரத்தியநீஹதை புக்க இடத்தே உபலக்ஷணத்தால் கல்யாணகுணங்களும் புகுமாதலின்,-‘அமலன்’ என்றதற்குக் குற்றம் ஒன்றும் தீண்டப்படாதவனாய் நற்குணங்கட்கெல்லாந் தானே இருப்பிடமானவனாய்’ என்று பொருள் அருளிச்செய்கிறார்.-அடியார்கள் இடர்ப்பட வேண்டாதபடி, யானை இடர்ப்பட்ட மடுவின் கரையிலே விழும் தன்மையன்

1-நாம் ஆபத்துக்குள்ளான சமயத்திலே வந்து பாதுகாக்கும்’ என்று நம்பலாம்படி இருப்பான் ஒருவன். -சஞ்சீவி -ஔஷதி நச்சிக் கொண்டு போக வேண்டாத படி நச்சு மா மருந்தம் -2-‘ஆசைப்படும் ஓர் மருந்து’ என்னுதல். மா மருந்து – பெரிய மருந்து; வியாதியினளவு அல்லாத மருந்து-மேல் காற்றிலே காட்ட நோய் தீருமாயிருக்கையைத் தெரிவித்தபடி. –வாட்டம் தணிய வீசீரே — நமனும் முத்கலனும் பேச -நரகில் நின்றார்கள் கேட்க -நரகமே ஸ்வர்க்கமே நாமங்கள் உடைய நம்பி –
3- இனி, ‘மா மருந்து’ என்பதற்கு, ‘ஒரே மூலிகையாய் எப்பொழுதும் உண்ணக்கூடியதாய் இருக்கிற மருந்து’ என்னுதல்.-ஏக மூலிகை -சஹாயாந்திர நைரபேஷ்யம் -பக்க விளைவு போக்க வேறே மருந்து தேவை இல்லாத -சக்ருத் சேவய்யையாய் இருக்குமே-4- இனி, ‘பத்தியமில்லாத மருந்து’என்னுதல்; என்றது, இவன் பிராமாதிகமாகப் பண்ணும் பாவங்களையும் காணாக் கண்ணிட வல்லனாயிருக்கை.-பார்க்காத தன்மையன் என்றபடி -காவலில் புலனை வைத்து -கட்டுக்காவல் இல்லாமலும் –பலன் கொடுக்கும் -பத்தியமே வேண்டாம் –கடைய வேண்டாதே-கடலிலே கிடக்கிற அமுதம்-

——–

பால் என்கோ! நான்கு வேதப்
பயன் என்கோ! சமய நீதி
நூல் என்கோ! நுடங்கு கேள்வி
இசை என்கோ! இவற்றுள் நல்ல
மேல் என்கோ! வினையின் மிக்க
பயன் என்கோ! கண்ணன் என்கோ!
மால் என்கோ! மாயன் என்கோ
வானவர் ஆதி யையே.
–3-4-6-

வேதமானது ஆராதன சொரூபம் சொல்லுமிடமும், ஆராதிக்கப்படும் இறைவன் சொரூபம் சொல்லுமிடமுமாய்க் கட்டடங்க இவனையே சொல்லுகையாலே, வேதத்தில் நாலு மூலைக்கும் உள்ள பயன் இல்லாத இடம் இல்லையாதலின், ‘நாலு வேதப் பயன்’ என்கிறார் –வினையில் மிக்க பயன் என்கோ –-கல நெல்லை வித்தி நூறாயிரக் கலமாக விளைத்துக் கொள்வாரைப் போன்று, இத்தலையிலுள்ளது நட்புத் தன்மையேயாய் அதற்கு -மித்ர பாவமே சம்ப்ராப்தம் -’நத்யஜேயம்-நான் விட மாட்டேன்’ என்னும்படி இருக்கையைக் கூறியபடி.-உனக்கு நான் இருந்தேனே’ என்று ‘மாசுச:- நீ துக்கப்படவேண்டா’ என்னும் கிருஷ்ணன் என்பேனோ!-‘‘நான் தரும் அதனை நீ விலக்காமல் ஏற்றுக்கொள்ளுமித்தனையே வேண்டுவது; உனக்கு நான் இருந்தேன்,’ என்றவனன்றோ?’-

இதற்கு அடி என்?’ என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க, ‘ திரௌபதி குழலை விரித்துக் கிடக்கையாலே அது முடிக்கைக்காக, செய்வது அறியாமையாலே மூலையில் கிடந்தாரை முற்றத்தே இட்டான்; பின்னை அர்த்தத்தின் சீர்மையை அநுசந்தித்து, ஆர் அதிகாரிகளாகச் சொன்னோம்? கைப்பட்ட மாணிக்கத்தைக் கடலிலே போகட்டும்,’ என்று பதண் பதண் என்றான் காணும்,’ என்று அருளிச் செய்தார்.

வானவர் ஆதியையே.–ப்ரஹ்மாதிகளுக்கும் சத்தா ஹேது வானவனை –-தன் சத்தை ஆச்ரித அதீனையாய் இருக்கும் என்கை –

——————

வானவர் ஆதி என்கோ!
வானவர் தெய்வம் என்கோ!
வானவர் போகம் என்கோ!
வானவர் முற்றும் என்கோ!
ஊனம்இல் செல்வம் என்கோ!
ஊனம்இல் சுவர்க்கம் என்கோ!
ஊனம்இல் மோக்கம் என்கோ
ஒளிமணி வண்ண னையே!
–3-4-7-

அதனுடைய நித்தியத்துவம் (என்றுமிருக்குந்தன்மை) அவனுடைய நித்தியமான இச்சையாலே இருக்கும்;-அந்த இச்சை நெகிழில், அதனுடைய நித்தியத்துவமும் மாறும்படியாய் இருக்கும். –திருமந்த்ரார்த்தம் -மூன்றையும் சேஷித்வம் -சரண்யத்வம் பிராப்யத்வம் மூன்றும் -ஆதி -தெய்வம் -போகம் -என்கிறார் -நம்மாழ்வார் பத த்ரயம்

ஒளி மணி வண்ணனை – விபூதியைச் சொல்லுகிற இவ்விடத்தில் ‘ஒளிமணி வண்ணன்’ என்று அவன் தனக்கேயுரிய விக்கிரகத்தைச் சொல்லுகிறது;-இதனால், இவ்வசாதாரண விக்கிரகத்தைப் போன்று இருக்கிறதாயிற்று -மேற்கூறியவையெல்லாம் என்பதனைத் தெரிவித்தபடி.

—————-

ஒளி மணி வண்ணன் என்கோ!
ஒருவன் என்று ஏத்த நின்ற
நளிர் மதிச் சடையன் என்கோ!
நான் முகக் கடவுள் என்கோ!
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம்
படைத்து அவை ஏத்த நின்ற
களி மலர்த் துளவன் எம்மான்
கண்ணனை மாயனையே
.–3-4-8-

உலகத்தில் முதன்மையினையுடையவரான பிரமன் சிவன் முதலியோர்களை விபூதியாகவுடையனானபடியைப் பேசுகிறார்.-கண்ணனை மாயனையே.–
எத்திறம் என்று மோஹிக்கும் படியான ஆச்சர்ய சேஷ்டிதங்களை உடைய கிருஷ்ணனை –

———-

கண்ணனை மாயன் றன்னைக்
கடல் கடைந்து அமுதம் கொண்ட
அண்ணலை அச்சு தன்னை
அனந்தனை அனந்தன் றன்மேல்
நண்ணி நன்கு உறைகின்றானை
ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை
எண்ணுமாறு அறிய மாட்டேன்
யாவையும் எவரும் தானே
.–3-4-9-

அவனுடைய விபூதியினுடைய விரிவினைத் தனித்தனியே பேச முடியாது; காரிய காரண உருவமான அறிவுடைப் பொருள்களும் அறிவில் பொருள்களும் அவனுக்கு விபூதி என்று -பிரயோஜகத்திலே -சேர பிடித்து -கோவையாக -சுருங்கச் சொல்லலாமித்தனை,’ என்கிறார்.யாவையும் எவரும் தானே – அறிவுடைப் பொருள் அறிவில் பொருள் முற்றும் சரீரமாகத் தான் ஆத்துமாவாக இருக்குமித்தனை.

———–

யாவையும் எவரும் தானாய்
அவர் அவர் சமயந் தோறும்
தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும்
சொலப்படான்; உணர்வின் மூர்த்தி;
ஆவி சேர் உயிரின் உள்ளால்
ஆதும் ஓர் பற்று இலாத
பாவனை அதனைக் கூடில்,
அவனையும் கூட லாமே
.–3-4-10-

‘அறிவுடைப்பொருள் அறிவில் பொருள்களுக்கு உள்ளுயிராய் நிறைந்து நின்றாலும், அவற்றின் குற்றங்களால் தீண்டப்படாதவன்’ என்கிறார்.-சரீரத்தினுடைய பரிணாமம் முதலியவைகளையும், ஆத்துமாவினுடைய இன்ப துன்பங்களையும் நினைக்கிறது-தான்’ என்ற சொல்லுக்குள்ளே அடங்கும்படி அவற்றோடே கலந்து நிற்பினும், அவற்றினுடைய தோஷங்கள் தன் பக்கல் தட்டாதபடி நிற்பான்.-ஆத்துமா கர்மமடியாகப் பிரவேசிக்கின்றது;
இறைவன் இவற்றுக்குள் திருவருள் காரணமாகப் பிரவேசிக்கின்றான். சிறைக் கூடத்திலே சிறையனும் கிடந்தான்; அரசகுமாரனும் இருந்தான்; சிறையன் கர்மமடியாகப் பிரவேசிக்கையாலே துக்கத்திற்கு ஏதுவாயிற்று; அரசகுமாரன் இச்சையாலே பிரவேசிக்கையாலே போக ரூபமாயிருந்தது.

ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆதும் ஓர் பற்றிலாத பாவனை அதனைக்கூடில் அவனையும் கூடலாம் –
1–உடலில் சேர்ந்திருக்கின்ற உயிரினிடத்து அந்தச் சரீரத்திற்கு உண்டான பால்யம் யௌவனம் முதலியவைகள் ஒன்றினாலும்-ஒரு சம்பந்தமும் இல்லையாம்படியாகச் சொல்லுகிற சொல்லானது அந்த ஆத்துமாவிற்குக் கூடாநின்ற பின்பு,-அப்பொருள் அவனையுங்கூடத் தட்டு இல்லை.-பாவனை -அநுசந்தான பர அனுசந்தானம்-
அன்றிக்கே, பின்னிரண்டு அடிகட்கு,
2– ‘அவன் பக்கல் பத்தி உண்டாகில் அவனைக் கிட்டலாம்’ -பிரயோஜநாந்தரங்களில் பற்றில்லாத-பத்தி பரமாக அருளிச் செய்தது;-என்றும்,
3–‘புறம்பே உள்ளவேறு உபாயங்களில் உண்டான பற்று முழுதையும் விட்டு, அவனையே பற்றில் அவனைக் கூடலாம்’-‘உபாயாந்தரங்களில் பற்றில்லாத’-பிரபத்தி பரமாக அருளிச்செய்தது;- என்றும்,
4–‘மரண காலத்தில் நம்பிக்கை உண்டாகில் அவனைக் கூடலாம்’ -வேறுபட்ட விஷயங்களில்
சங்கமில்லாத’ என்றும் வேறு வேறு வகையாகவும் பொருள் அருளிச்செய்வர்.
இவ்வுரை விகற்பங்களை எம்பெருமானார் கேட்டருளி, ‘முன்னிரண்டு அடிகளில் எங்கும் பரந்து நிறைந்திருத்தலை அருளிச்செய்தாராதலின், இனி வியாபிக்கப்படுகின்ற பொருள்களினுடைய தோஷங்கள் எங்கும் பரந்து நிறைந்திருக்கிற இறைவனுக்குத் தட்டமாட்டா என்னுமிடம் அவசியம் சொல்ல வேண்டும்; ஆன பின்னர், இத்தையே சொல்லிற்றாக அமையும்,’ என்று அருளிச் செய்வர்.

———–

கூடிவண்டு அறையும் தண்தார்க்
கொண்டல்போல் வண்ணன் றன்னை
மாடுஅலர் பொழில் குருகூர்
வண்சட கோபன் சொன்ன
பாடல்ஓர் ஆயி ரத்துள்
இவையும்ஓர் பத்தும் வல்லார்
வீடுஇல போகம் எய்தி
விரும்புவர் அமரர் மொய்த்தே.
–3-4-11-

மலர்கள் மணத்தோடே மலருமாறு போன்று இசையோடு கூடின ஆயிரத்திலும் வைத்துக்கொண்டு இப்பத்தையும் கற்க வல்லவர்கள். நித்திய கைங்கரியத்தைப் பெற்று, அயர்வறும் அமரர்களாலே விரும்பப்படுவார்கள்,’இத் திருப்பதிகத்தில் பரக்கச் சொன்ன விபூதி முழுதும், தோளில் தோள் மாலையைப் போன்று அவனுக்குத் தகுதியாயிருக்கிறபடியைக் கண்டு கூறினேன்,’ என்பார், ‘வண்டு கூடி அறையும் தண்தார் கொண்டல் போல் வண்ணன்’ என்கிறார்.ஆழ்வார் பக்கல் பண்ணின பிரேமத்தின் மிகுதியாலே, அவருடைய பிரபந்தங்களைக் கற்றவர்களை, சர்வேஸ்வரனை விட்டு இவர்களை நெருங்கி ஆதரிப்பார்கள் நித்திய ஸூரிகள் ஆதலின், ‘அமரர் மொய்த்து விரும்புவர்,’-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -87-புலம்பும் கன குரல் போழ் வாய அன்றிலும் –பண்டை நாளாலே -9-2-

March 27, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

அன்றில் கிரௌஞ்ச மிதுனம் -ஒலி -விஸ்லேஷ துக்கம்-ஆழி -கடலின் பேர் இரைச்சல் -ஸம்ஸ்லேஷ ஸூகம்-கருடவாஹனன் என்று ஸ்தோத்ரம் பண்ணுவதே குற்றமாகக் கொண்டு உபேக்ஷித்து
வையமே சிலம்பும்படி-இத்திரு -மிதுனத்தைப் பற்றின இத்திரு-திருமால் இப்படிச் செய்வதே -மாலையைப் பற்றிய அத்திரு துறையடைவு–தலைவி ஆற்றாமைக்கு தோழி இரங்குதல் –-பண்டை நாளாலே -9-2-திருமால் உகப்புக்குக்காகக் கைங்கர்யம்-காய்சின வாழி சங்கு வாள் வில் தண்டேந்தி
எம்மிடர் கடிவானே–9-2-6-மூலவர் உத்சவர்கள் திருநாமங்கள் இதில் உண்டே
-தாய் பாசுரம் என்றும் தோழி பாசுரம் என்றும் கொள்ளலாம்-

அவதாரிகை –உன்னைப் பிரிந்த அளவிலே பாதக பதார்த்தங்கள் இவளை நலிந்து ஈடுபட்டது கண்டு –
லோகமாக கூப்பிடும்படி பண்ணுவதே -என்று திருத் தாயார் வார்த்தையாய் இருக்கிறது–அன்றிற்கும் ஆழிக்கும் ஆற்றாத தலைவிக்குத் தோழி இரங்குதல் –

உன்னை பிரிந்த அளவிலே பாதக பதார்த்தங்கள் இவளை நலிந்து ஈடுபட்டது கண்டு – லோகமாக கூப்பிடும்படி பண்ணுவதே – என்று திருத் தாயார் வார்த்தையாய் இருக்கிறது -அன்றிற்கும் ஆழிக்கும் ஆற்றாத தலைவிக்குத் தோழி இரங்குதல் –

இப்படி இவருடைய ஆர்த்த ஸ்வரத்தைக் கேட்ட ஸூஹ்ருத்துக்கள் இவருடைய ஆர்த்தியின் மேலே லௌகிக வியாபாரங்கள் ஸ்மாரகமாய்க் கொண்டு இவரை நலிகிற படியைக் கண்டு இப்படி லோக உபக்ரோசம் பிறக்கும் படி ஸ்மாரகங்கள் நலிவதே என்ற ஈஸ்வரனை நோக்கி யுட் கொண்டு
வெறுத்து உரைத்த பாசுரத்தை அன்றிலுக்கும் ஆழிக்கும் ஆற்றாத் தலைவி தளர்த்தியைக் கண்டு
தோழி கிளர்ந்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-அவதாரிகை-அனுகூல பதார்த்தங்களும் பிரதிகூலமாய் இவள் நோவு பட அத்தாலே
இவளையும் உம்மையும் நாட்டார் பழி சொல்லும்படியான செயல்களை நீர் பண்ணுவதே என்று திருத்தாயார் சொல்லுகிறாள் –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-அவதாரிகை-இப்படி உன் பிரிவு பொறாமல் உன்னைப் புலம்பும் இத்திருவினை அன்றிலும் ஆழியும் பாதிப்பதும் உன்னைப் பாடுமது குற்றமாக வையம் எல்லாம் இவளைப் பழி சொல்லுமத்தும் செய்வதே திருமால் என்று சொல்லும் தாயாராய் அருளிச் செய்கிறார் இதில் —

புலம்பும் கனகுரல்  போழ்வாய வன்றிலும் பூம் கழி பாய்ந்து
அலம்பும் கனகுரல் சூழ் திரை யாழியும் ஆங்கவை நின்
வலம் புள்ளது நலம்பாடுமிது குற்றமாக வையம்
சிலம்பும்படி செய்வதே திருமால் இத்திருவினையே –
87-தலைவி ஆற்றாமைக்குத் தோழி இரங்குதல் –

திருமால்–பிராட்டியினிடத்து மோஹமுள்ளவனே!
புலம்பும்–(விரஹவேதனையால்) கத்துகிற
கன குரல்–கனத்த குரலையுடைய
போழ் வாய் அன்றிலும்–பிளந்த வாயையுடைய அன்றிற் பறவையும்-போழ்-பிரிந்தாரை இறு துண்டாக விடுவாரை-
பூ கழி பாய்ந்து அலம்பும்–அழகிய கழியினுள்ளே புகும்படி பாய்ந்து அலருகிற
கன குரல்–கம்பீரமான தொனையையுடைய
சூழ் திரை ஆழியும்–சூழ்ந்த அலைகளையுடைய கடலுமாகிய
ஆங்கு அவை–அவ்வவ்விடத்திலுள்ள அந்தந்த பாதக வஸ்துக்களானவை.
நின் வலம்புள்ளது நலம் பாடும் இது குற்றம் ஆக–உனது வலிமையையுடைய கருடப்பறவையினது நன்மையை
(இவள்) எடுத்துப் பாடுகிற இதுவே குற்றமாகிக்கொண்டு
வையம் சிலம்பும்படி–உலகத்தார் முறையிடும்படி-குற்றம் சொல்லி கோஷிக்கும் படி
இத் திருவினை–திருமகள் போன்ற இப்பெண்ணை
செய்வதே–துன்ப்படுத்துவதே! (இது தகுதியோ?)

பண்டை யுறவான பரனைப் புளிங்குடிக்கே
கண்டு எனக்கு எல்லா வுறவின் காரியமும் -தண்டற நீ
செய்தருள் என்றே யிரந்த சீர் மாறன் தாளிணையே
உய்துனை என்று உள்ளமே ஓர்
—82–இப்படி நிருபாதிக பந்துவான ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு சர்வவித பந்து க்ருத்யமும் செய்ய வேணும்-என்று ஸ்ரீ திருப் புளிங்குடியிலே போய்ப் புக்கு-அங்கே ஸ்ரீ பிராட்டியாரோடு கூட- பள்ளி கொண்டு அருளுகிற-ஸ்ரீ காய்ச்சின வேந்தைக் குறித்து – திருப் பவளத்தைத் திறந்து ஒரு இன் சொல்லுச் சொல்ல வேணும் –மா ஸூ ச -உபாயத்துக்கு சோகப்படாதே– க்ரியதாம் மாம் வத -கைங்கர்யம் – திருக் கண்களை அலர விழித்துக் குளிர நோக்கி அருள வேணும்–திருவடிகளைத் தலைக்கு அலங்காரமாக வைத்து அருள வேணும் –-ஸ்ரீ பிராட்டியும் ஸ்ரீ தேவருமாக திவ்ய சிம்ஹாசனத்திலே எழுந்து அருளி இருக்க வேணும்–கண் முகப்பே நாங்கள் சசம்ப்ர்ம ந்ருத்தம் பண்ணும்படி உலாவி அருள வேணும்-என்றால் போலே ஒரு கோடி வெள்ளங்களை-அவர் சந்நிதியிலே-அசல் அறியாதபடி- பிரார்த்திக்கிற பண்டை நாளில் -அர்த்தத்தை பண்டை யுறவான இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -ஏவம் விதராண ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை –நாசத்தை விளைக்கும் துணை போல்-அன்றிக்கே-உஜ்ஜீவனத்தைப் பண்ணும் துணை என்று மனசே-அனுசந்தித்துப் போரு-என்கிறார் –

புலம்பும் கனை குரல் –பலவற்றைச் சொல்லிக் கூப்பிடுவதாய் -செறிந்த த்வனியை உடைத்தாய் –
உன்னைக் கூடி பிரிந்து தனி இருப்பாரை -இரு துண்டமாக விடுகிற வாயை வுடைய அன்றிலும் –பூம் கழி இத்யாதி –அழகிய கழியில் வரப் பாயா நிற்பதாய் –அலை எறியா நிற்பதாய் – ஊமை கூறனான த்வனியை உடைத்தாய் -பரந்த திரைகளை உடைய கடலும் –ஆங்கவை –பிரிந்து இருப்பார்க்கு மற்றும் பாதகமான சேக்கள் கழுத்திலே மணி ஓசை என்ன –சந்த்ரோதயம் என்ன -தென்றல் என்ன -இப்படிப் பட்ட பாதகங்களை சொல்லிற்று ஆதல் –அன்றிக்கே –கீழ்ச் சொன்னவை தன்னையே சொல்லிற்று ஆதல் இவை பாதகமாகா நின்றன –என்ன குற்றம் செய்தாள் என்று பாதகம் ஆகிறது என்ன –நின் வலம் புள் இத்யாதி –உனக்கு அசாதாரணமாய் -பலத்தை உடைத்தாய் – கருடோ வாருணம் சத்ரம் ததைவ மணி பர்வதம் -சபார்யஞ்ச ஹ்ருஷீகேசம் லீலயைவ வஹந்யயௌ -என்கிறபடியே தாரண சாமர்த்தியத்தை உடையனான திருவடி உடைய நலமுண்டு –நன்மை- அத்தைப் பாடினது குற்றமாக –த்வதங்க்ரி சம்மர்த கிணாங்க சோபினா  (ஸ்தோத்ர ரத்னம் )-என்கிறபடியே- அவனுக்கு அடிமை செய்து அவன் தழும்பு சுமந்தாப் போலே சம்ஸ்லேஷ சிஹ்னங்களை-தரிக்க வேணும் என்று ஆசைப்பட்டு –
அவனைப் பாடின இது குற்றமாக–வையம் சிலம்பும்படி செய்வதே –சிறியார் பெரியார் என்ற வாசி இன்றிக்கே -இருந்ததே குடியாக- கை எடுத்து பழி சொல்லும்படி பண்ணுவதே –திருமால் – நீர் தான் பிரணயிகள் அல்லீராய்  தான் இப்படி செய்கிறீரோ –இத் திரு வினையே –உம்மை ஆசைபட்டவளில் குறைந்தாளோ-அவளோடு கூடின உம்மை ஆசைப்பட்டவள் –ராவணாதிகள் பெருமாளைப் பழி சொல்ல ராஷசிகள் தன்னை நெருக்க இருந்தவளைப் போலே இருக்க வல்லளோ –இவள் அன்றில் -கடலோசை -தொடக்கமானவை இவளை நலிய-அத்தாலே இவள் நோவு படா நின்றாள் என்று நாட்டார் பழி சொல்ல நீர் விட்டு வைப்பதே – உம்முடைய மகிஷி நோவு பட பார்த்து இருக்கை உமக்கு குறை யன்றோ -என்றபடி –

ஆற்றாமை மிக்கு துயரம் தணியும் பொருட்டு பெரிய திருவடியின் சிறப்பை பாராட்டி நிற்க -அன்றிலின் குரலும் கடல் ஓசையும் சேர்ந்து நலிய -விரஹ வேதனை வளர்ந்து – பெண்ணை மேல் பின்னும் அவ் வன்றில் பெடை வாய்ச் சிறு குரலும் என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர் வாளாம் என் செய்கேன்-பெரிய திருமடல் –பூம் கழி பாய்ந்து-அலம்பும் கனகுரல் சூழ் திரை யாழியும்-நதி பதியாகிய கடல் அழகிய கழியின் உள்ளே புகப் பாய்ந்து அலை மறிந்து பெரு முழக்கம் செய்வது மனைவியை கைகளால் ஆரத் தழுவி ஆரவாரம் செய்வது போலே இருக்க விரஹ தாபம் விஞ்சும்–புள்ளது நலம் -எம்பெருமானை ஆஸ்ரிதர்கள் இருக்கும் இடம் எழுந்து அருள பண்ணுவதே நலம் -உனக்கு அடிமை செய்து
தழும்பு கொண்டால் போலே இவளும் சம்ச்லேஷ அடையாளங்களை தரிக்க ஆசைப்பட்டு பாடின இது குற்றமாக – பாதகங்கள் நலிய இவள் நோவு பட்டாள் என்று நாட்டார் பழி சொல்லும் படி நீர் விட்டு வைப்பதே-வையம்-சிலம்பும்படி செய்வதே-இவள் தளர்ச்சிக்காக -தாயார் தோழியர் உற்றோர் உறவினர் ஊரார்-அனைவரும் முறையிடுதல்–திருமால் இத்திருவினையே -ஒருத்திக்கு அப்படி இவளுக்கு இப்படியா -இவள் நிழல் போலே என்றாலும் இவளையும் நீ பார்க்க வேண்டாவோ-உன் மஹிஷி நோவு பட பார்த்தல் உனக்கு குறை அன்றோ-திருமால் ! நான் முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம்பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசியென்-ஒரு மா முதல்வா ! ஊழிப் பிரான் ! என்னை யாளுடை கரு மா மேனியன் ! என்பன் என் காதல் கலக்கவே –திருவாய் -8-3-9-போலே –-இங்கும் திருமால் -அண்மை விளி ஆங்கவை-பிரிந்து இருப்பிற்கு மற்றும் பாதகமான சேக்கள் கழுத்தில் மணியோசை என்ன -சந்திரோதயம் என்ன -தென்றல் என்ன-இப்படிப் பட்ட பாதகங்களை சொல்லிற்று ஆதல்

அன்றிற் குரலுக்கும் கடலோசைக்கும் ஆற்றாத தலைவியின் நிலைமை கண்டு தோழி இரங்கிக் கூறும் பாசுரம் இது.-அதாவது- நாயகியின் தளர்ச்சியைக் கண்ட தோழி தானும் தளர்ச்சியடைந்து, பாவநாப்ரகருஷத்தாலே நாயகனை எதிரிற் கொண்டு முன்னிலைப்படுத்தித் தன்னிலே யுரைத்த பாசுரம். அன்றி, தோழி தலமைகனை எதிர்ப்பட்டுத் தலைமகளின் ஆற்றாமையை அவனுக்குக் கூறியுணர்த்துவது என்னவுமாம். உன்னிடத்தில் அன்பு கொண்டு தலைவி, உன்னைப் பிரிந்த நிலையில் அத்துயரம் ஒருவாறு தணியும் பொருட்டு உனக்கு வாஹனமாய் உது நித்யஸம்பந்தம் பெற்றுள்ள பெரிய திருவடியின் சிறப்பைப் பாராட்டிக் கூறி நிற்க,’
அதனைக் கண்டு. அதனால், இவள் பிரிவாற்றாத மெல்லிய ளென்று உணர்ந்து அன்றிற் குரலும் கடலொளியும் அவ்வாற்றாமையின் மேலும் தாமும் ஹிம்ஸை பண்ணக் கடவனோ வென்கிறாள். ஆணும் பெண்ணுமான அன்றில் இணைபிரியாமல் நெருங்கி ஒன்றொடொன்று வாயலகைக் கோத்துக்கொண்டு உறங்கும்பொழுது அவ்வுறக்கத்திலே வாயலகு தன்னிலர் நெகிழ்ந்தவளவிலே
துயிலுணர்ந்து அப்பிரிவைப் பொறாமல் மெலிந்து பெருந்தொளியாகக் கத்துகிற மிக இரங்கத்தக்க சிறுகுரல் விரஹ வேதனையை வளரச் செய்வதால் “புலம்புங் கன குரற் போழ்வாயவன்றிலும்” எனப்பட்டது.“பெண்ணை மேல், பின்னும்மவ்வன்றிற் பெடைவாய்ச் சிறுகுரலும், என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர்வாளாமென் செய்கேன்’ என்று திருமங்கையாழ்வாரும் பெரிய திருமடலில் அருளிச் செய்தார்.--பூங்கழிபாய்ந்து அலம்புங் கனகுரல் சூழ்திரையாழியும் = நதிபதியாகிய கடல் அழகிய கழியினுள்ளே புகப்பாய்ந்து அலைமறிந்து-பெரு முழக்கஞ் செய்வதை நோக்குமிடத்து, அது, தன் மனைவியைக் கைகளால் தழுவிக் களிப்பினால் ஆரவாரஞ் செய்வது போன்றிருத்தலால் விரஹ வேதனை மிகுகிறபடி. அஃறிணைப் பொருள்களிலும் சேதநமாகிய சிறுபறவையோடு அசேதநமாகிய
பெருங்கடலோடு வாசியறப் பிரிவுக்கு வேதனைப் படுவதையும் கலவிக்கு மகிழ்ச்சி கொள்வதையும் கண்ணெதிரிற் காணுதல் கலக்கத்துக்குக் காரணமாம்.
(புள்ளதுகலம்.) பக்தர்களை ரக்ஷிக்கும் பொருட்டு எம்பெருமானை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வந்து உதவுதல் கருடனுடைய நலமென்க.
வையம் சிலம்புதலாவது- இவளுடைய தளர்ச்சிக்காகத் தாயர் தோழியர் உற்றார் உறவினர் ஊரார் அனைவரு முறையிடல்.-திருமால்! என விளித்தது, ஒருத்திக்கு நல்லவனாயிருக்கின்ற நீ இவள் இங்ஙனம் வருந்தப் பார்த்திருத்தில் பக்ஷபாதமன்றோ? என்றவாறு.
‘இத்திருவினை’ என்ற இவளையுந் திருமகளாகவே சொன்னது. இவள் அவளுக்கு நிழல் போலிருப்பவள் என்றாகிலும் இவளைப் பார்க்க வேண்டாவோ?’ என வெறுத்துரைத்தவாறு. திரு- ஸ்த்ரீகளுட் சிறந்தவள்.–கனகுரல் – பண்புத்தொகை; நிலைமொழி வடமொழியாதலின் இயல்பாயிற்று.
‘கனைகுரல்’ என்ற பாடத்தில் ‘கனைக்கின்ற குரல்’ எனப்பொருள் காண்க; வினைத்தொகை.
போழ் வாய அன்றிலும் = தன் குரலால் விரஹிகளை இரு துண்டமாகப் பிளந்திடுகிற வாயையுடைய அன்றில் என்றும் உரைப்ப,-‘போழ்’ என்பது தன் வினை பிறவினை இரண்டுக்கும் பொது. பூங்கழி- பூக்களையுடைய கழி என்னவுமாம். வலம்- வெற்றியுமாம்.–“(ஆங்கவை) பிரிந்திருப்பார்க்கு மற்றும் பாதகமான சேக்கள் கழுத்திலே மணியோசையென்ன, சந்திரோதய மென்ன, தென்ற லென்ன
இப்படிப்பட்ட பாதகங்களைச் சொல்லிற்றாதல்” என்ற நம்பிள்ளை வீடு காண்க.
(நின் வலம்புள்ளது நலம்பாடுமிது குற்றமாக வையம் சிலம்பும்படி செய்வதே!) கருடன் உனக்கு அடிமை செய்த தழும்பு சுமந்தாற்போலே ஸம்ச்லேஷ அடையாளங்களைத் தரிக்க வேணுமென்று ஆசைப்பட்டு அக்கருடனைப் பாடினவிது குற்றமாக அன்றில் கடலோசை முதலானவை இவளை நலிய அத்தாலே இவள் நோவுபடா நின்றாளென்று நாட்டார் பழிசொல்லும்படி நீர் விட்டு வைப்பதே!,-உம்முடைய மஹிஷி நோவுபடப் பார்த்திருத்தல் உமக்குக் குறையன்றோ என்றபடி, திருமால்- அண்மை விளி;
“திருமால் நான்முகன்” (8-3-9) என்ற திருவாய் மொழிப் பாசுரத்திற்போல.–எம்பெருமானைச் சேராமையாலாகுந் துன்பத்தையும் சேர்வதனாலாகும் இன்பத்தையும் உலக நடத்தைகள் நினைபூட்டுதலால் வருந்தாநின்ற ஆழ்வாரது தன்மையைக் கண்ட அன்பர்கள், எம்பெருமானை நோக்கி “இப்படி உலகம் முறையிடும்படி இவரை இவை கலியக்கடவனவோ?’ என்று வெறுத்துரைத்தல்

திருமால் -நீர் தான் பிரணயிகள் அல்லீராய் தான் இப்படி செய்கிறீரோ –-இத் திரு வினையே -உம்மை ஆசைபட்டவளில் குறைந்தாளோ-அவளோடு கூடின உம்மை ஆசைப்பட்டவள் –-உம்முடைய மகிஷி நோவு பட பார்த்து இருக்கை உமக்கு குறை யன்றோ -என்றபடி –

புலம்பும் கனகுரல் போழ் வாயவன்றிலும்-தன்னில் தான் புகுந்து வாய் அலகைக் கொடுத்து அது உறக்கத்திலே நெகிழ்ந்தவாறே விஸ்லேஷ ஆர்த்தி பிறந்து புலம்பும்படியான பிளந்த வாயையும்
கனத்த குரலையும் யுடைய அன்றிலும்–பூம் கழி பாய்ந்து அலம்பும் கனகுரல் சூழ் திரை யாழியும்-அழகிய கழிக்கு உள்ளே புகுரப் பாய்ந்து அலைகிற கம்பீர த்வநியை யுடைத்தாய் ஆலிங்கநம் பண்ணுவாரைப் போலே சூழ்ந்த திரைக்கையை யுடைத்தான ஸமுத்ரமும்-ஆங்கவை அந்த அவைகள்-நின் வலம்புள்ளது நலம்பாடுமிது குற்றமாக-உன்னுடைய பிரபலமான பெரிய திருவடியினுடைய ஆஸ்ரித ஸம் ரக்ஷணத்தில் உதவியாகிற நலத்தைப் பாடின இதுவே குற்றமாக–வையம் சிலம்பும்படி செய்வதே-லோகம் எல்லாம் கூப்பிடும்படி யாக இவ்வன்றிலும் ஆழியும் செய்யக் கடவதோ–திருமால்
திருமாலே என்று தன்னிலே முன்னிலையாகச் சொல்லுகிறாள்-நீயும் ஒருத்திக்கு நல்லையாய் அன்றோ இருக்கிறாய்-அவள் என் நினைக்கும் என்று கருத்து–இத் திருவினையே-அத் திருவுக்கு நிழல் என்றாகிலும் இவளைப் பார்க்க வேண்டாவோ என்று வெறுத்து உரைத்தாள் ஆயிற்று —இத்தால்-சிறியாரோடு பெரியாரோடு (அன்றிலும் கடலும் )வாசியற போக அர்த்தமான பரஸ்பர ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களாலே சோக ஹர்ஷங்கள் யுண்டாய்க் கொண்டு நடக்கிற படியைக் கண்டு தமக்கு ஈஸ்வரனோடு போகம் சித்திக்கைக்கு ஈடான பரிகரம் (பெரிய திருவடி )அவனுக்கு உண்டாய் இருக்க
நமக்கு இழக்க வேண்டுவது இல்லை இறே என்கிற ஸந்தோஷமே குற்றமாக இந்த ஸ்மாரகங்கள் இவரை நலியும் படியாவதே என்று ஸூஹ்ருத பூதர் ஈஸ்வரனைக் குறித்துத் தம்மிலே வெறுத்து யுரைத்தார் ஆயிற்று

ஸ்வாபதேசம் –-இத்தால் -அத்தலையாலே வரக் கண்டார் ஆறி இருக்கை அன்றி -இவர் க்ரம ப்ராப்தி பற்றாமை பதறி மேல் விழ நீர் தாழ்த்தீர் ஆவது உமக்கு குறை அன்றோ -என்று இவர் தசையை அனுசந்தித்தவர் பாசுரமாய் இருக்கிறது – க்ஷிப்ரம் பவதி தர்மாத்மாச ஸ்வஸ் சாந்திம் நியச்சதி கௌந்தேய ப்ரதிஜா நீ ஹி நமே பக்த ப்ரணஸ் யதி–ஸ்ரீ கீதை – இவை மறந்தீரோ -என்கிறார்கள் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம் —-புலம்பும் கனகுரல் போழ் வாயவன்றிலும் -பலவற்றைச் சொல்லிக் கூப்பிடுவதாய் செறிந்த த்வனியை யுடைத்தாய் பிரிந்து தனி இருப்பாரே இரு துண்டமாக விடுகிற வாயையுடைய அன்றில்களும்-பூம் கழி பாய்ந்து அலம்பும் கனகுரல் சூழ் திரை யாழியும்-அழகிய கழியிலே வரப் பாயா நிற்பதாய் ஊமைக் கூறான த்வனியை யுடைத்தாய் பரந்த திரைகளை யுடைய கடலும்–ஆங்கவை-பிரிந்து இருப்பார்க்கு மேடும் பாதகங்களும் சேக்கழுத்தில் மணி ஓசை என்ன
தென்றல் என்ன சந்த்ர உதயம் என்ன இப்படிப்பட்ட பாதகங்களைச் சொல்லிற்று ஆதல்-கீழ்ச் சொன்னவை தன்னையே சொல்லி ற்று ஆதல்-இவை பாதகம் ஆகா நின்றன–என்ன குற்றம் செய்தாள் என்று இவை பாதகம் ஆகிறது–நின் வலம்புள்ளது நலம்பாடுமிது குற்றமாக-உனக்கு அசாதாரணமாய்
பலத்தை யுடைத்தாய்-கருடோ வாருணம் ச்சத்ரம் ததைவ மணி பர்வதம் ஸா பர்யாஞ்ச ஹ்ருஷீ கேசம்
லீலையைவ வஹந்யயவ் –
(ஸ்ரீ விஷ்ணு புராணம் –5-30-1 )என்கிறபடியே தாரண சாமர்த்தியத்தை யுடையனான பெரிய திருவடியின் நலம் உண்டு-த்வத் அங்கரி ஸம் மர்த்த கிணாங்க ஸோபிநா -ஸ்தோத்ர ரத்னம் –41- என்கிறபடியே-அவன் அடிமை செய்து தழும்பு சுமந்தால் போலே ஸம்ஸ்லேஷ சிஹ்னங்களைத் தரிக்க வேணும் என்று ஆசைப்பட்டு அவனைப் பாடின இது குற்றமாக–வையம் சிலம்பும்படி செய்வதே-சிறியார் பெரியார் என்ற வாசி இன்றிக்கே இருந்ததே குடியாகக் கை எடுத்துப் பழி சொல்லும்படி பண்ணுவதே–திருமால்-நீர் ப்ரணயிகள் இல்லீராய்த் தான் இப்படிச் செய்கிறீரோ-இத்திருவினையே-உம்மை ஆசைப்பட்ட அளவில் குறைந்தாளோ அவளோடு கூடின உம்மை ஆசைப்பட்ட இவள் ராவணாதிகள் பெருமாளை பழி சொல்ல ராக்ஷஸிகள் தன்னை நெருக்க
இருந்தவளைப் போலே இருக்க வல்லளோ இவள-அன்றில்-கடலோசை-தொடக்கமானவை நலிய அத்தால் நோவு படா நின்றாள் என்று நாட்டார் பழி சொல்ல நீர் விட்டு இருப்பதே-உம்முடைய மஹிஷி நோவு படப் பார்த்து இருக்கை உமக்கு குறை அன்றோ என்றபடி –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-வியாக்யானம்-புலம்பும் கனகுரல் போழ் வாயவன்றிலும் உன்னைப் பிரிந்து தனி இருப்பாரே இரு பிளவாக்கும் சஞ்சுவையும் அத்தால் சிலம்புவதும் கணைப்பதும் உள்ள அன்றிலும்–பூம் கழி பாய்ந்து அலம்பும் கனகுரல் சூழ் திரை யாழியும்-அழகிய கழிக்குள் புகுரப் பாய்ந்து அதில் உள்ள பதார்த்தங்களை அலப்பும் போது கனைத்துக் கொண்டும் பெரும் குரல் செய்து கொண்டும் ஒன்றுக்கு ஓன்று ஆஸ்லேஷித்துக் கொண்டு வருகிற திரைகளை யுள்ள கடலும்-ஆங்கவை
ஏவம் பூதமாயுள்ள புலம்புறு மணி தென்றல் முல்லை மல்லிகை –(திருவாய் –9-9-1–9-9-2) முதலானவையும்–நின் வலம்புள்ளது நலம்பாடுமிது குற்றமாக-உனக்கே சேஷமும் பலவத்தரமுமான
பசி ராஜனுக்குள்ள நன்மையைப் பாடின இதுவே ஒரு தப்பாக்கி-வையம் சிலம்பும்படி செய்வதே-லோகம் எல்லாம் இவளை பழி சொல்லும்படி செய்வைத்து உனக்குத் தகுமோ-திருமால்-நீர் தெருவில் மால் செய்யுமதுக்கும் இவளை பிரிந்து இங்கனே பாதிப்பத்துக்கும் என்ன சேர்த்தி யுண்டு-இத்திருவினையே-அத்திருவுக்கு இவள் அன்றோ ஸ்தந பாஹ் வாதிகளாய் விளங்கினவள்
உம்முடைய ரசிகதைக்கு இது கொத்தை காண் என்கிறாள் –

ஸ்வாபதேசம்-இத்தால்-அத்தலையாலே வரக்கண்டு ஆறி இருக்குமது அன்றிக்கே இவள் க்ரம பிராப்தி பற்றாமை பதறி மேல் விழ நீர் தாழ்த்தீராய் இருக்கும் இது உமக்கு குறை அன்றோ என்று இவர் தசையை அனுசந்தித்தவர்கள் பாசுரமாய் இருக்கிறது-ந மே பக்த பிரணஸ்யதி -ஸ்ரீ கீதை -9-31-
மறந்தீரோ என்கிறாள்

இதற்கு உள்ளுறை பொருள். -அன்றிற்குரல் பிரிவுத் துன்பத்துக்கு ஸ்மாரகம்; ஆழிமுழக்கம் சேர்க்கையின்பத்துக்கு ஸ்மாரகம்.(நின் வலம்புள்ளது நலம்பாடுமிது குற்றமாக) எம்பெருமான் நம்மிடத்து விரைந்து வந்து சேர்வதற்குறுப்பான வேக கதியைவுடைய வாஹனம் அவனுக்குச் சொந்தமாயிருக்கையில் நாம் இழக்கவேண்டுவதில்லையே யென்று மகிழ்ச்சி பாராட்டுதலே குற்றமாக என்கை. அடிமைச்செல்வமுடைமை பற்றி ஆழ்வாரைத் திரு என்றது; எம்பெருமானோடு நித்யாநுபவஞ் செய்யத்தக்கவை ரென்க.

ஸ்வா பதேசம் –அன்றில் குரல் துன்பத்துக்கு ஸ்மாரகம் -ஆழி முழக்கம் சேர்க்கை இன்பத்துக்கு ஸ்மாரகம் திருவடி இருப்பதால் நம்மிடம் கூட்டி வருவான் -இழக்க வேண்டியது இல்லை என்று பாராட்டி பேசினதே குற்றமாக – அடிமைச் செல்வம் மிக்க ஆழ்வாரை இத்திரு -என்கிறது -அத்திரு அவனைப் பற்றும் இத்திரு இருவரையும் பற்றுமே – எம்பெருமான் உடன் நித்ய அனுபவம் செய்யத் தக்கவராய் இருந்தும் இப்பாடு படுவதே –

ஸ்வா பதேசம் –இத்தால் – அத் தலையாலே வரக் கண்டார் ஆறி இருக்கை அன்றி – இவர் க்ரம ப்ராப்தி பற்றாமை பதறி மேல் விழ நீர் தாழ்த்தீர்  ஆவது  உமக்கு குறை அன்றோ -என்று இவர் தசையை அனுசந்தித்தவர் பாசுரமாய் இருக்கிறது –க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா சஸ்வஸ் சாந்திம் நியச்சதி கௌந்தேய ப்ரதிஜாநீ ஹி நமே பக்த ப்ரணஸ் யதி–ஸ்ரீ கீதை – இவை மறந்தீரோ -என்கிறார்கள் –

தாத்பர்யம்--இதில் லௌகிக பதார்த்தங்கள் பாதகமாம் படி ஸூஹ்ருத்துக்கள் பாசுரம் உத்போதாக பதார்த்தங்கள் ஞாபகப்படுத்தும் வருந்தும் நாயகி பாசுரத்தால் உன்னுடன் ஸம்ஸ்லேஷித்து
சிஹ்னங்கள் தனக்குப்பட ஆசை கொண்ட உனக்கு வாகனமாய் பெரிய திருவடி கல்யாண குணங்களைக் கீர்த்தனை பண்ணி அத்தைப் போலவே தானும் பெற ஆசை கொண்ட இவள்
அது பெறாமையாலே மிகவும் ஆரத்தை ஆனாள்-அதுக்கு மேல் விரஹிணிக்கு பாதகமாய் அநஷரமான அன்றில் கடலோசை இவை போன்ற பாதகங்கள் இவளை நலியும் படி வாசா மகோசரம் என்று
வையம் எல்லாம் உன்னை இகழ்ந்து புலம்பும் படி ஆனதே என்று நாயகனை நினைத்து சர்வேஸ்வரனுக்குச் சொல்கிறாள்

9-2-பண்டை நாளாலே நின் திரு வருளும்பங்கயத்தாள் திருவருளும்கொண்டு -ப்ரவேஸம்-

போக்ய பாகத் த்வரை தெளிந்த சிந்தைக்கு முன்னில் மூன்றிலும் ப்ரகடம் -சூர்ணிகை -177-
உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்-இறுதியில் தானே ஆழ்வார் -பந்து க்ருத்யம் -கைங்கர்ய பிரார்த்தனை இதில் —

மேல் திருவாய் மொழியில் -அவனை ஒழிந்தார் அடங்கலும் -ஔபாதிக -ஒரு காரணம் பற்றி வந்த உறவினர்கள்-
அவன் ஒருவனுமே -நிருபாதிக -ஒரு காரணமும் பற்றாமல் இயல்பாகவே அமைந்த உறவினன் -என்றார் –
ஒரு காரணம் பற்றாமல் அமைந்த உறவினன் ஆனால்-பின்னை உறவினருக்கு உரிய கார்யங்களைச்
செய்யாது இருக்க முடியாது அன்றோ –
ஆதலால் ஒரு காரணம் பற்றாமல் இயல்பாகவே அமைந்த-உறவினனான சர்வேஸ்வரன்
திருக் கண் வளர்ந்து அருளுகிற திருப் புளிங்குடியிலே-
எல்லா வித கைங்கர்யங்களையும் பெற வேண்டும் என்று ஆசைப் பட்டு இவர் சென்று கிட்டினார் –
கிட்டின இடத்தில் -இவரை-என் -என்னுதல்-திருக் கண்களாலே குளிர நோக்குதல் –
ஒரு வார்த்தை சொல்லுதல்-செய்யக் கண்டிலர் –காணாமையாலே மிகவும் துன்புற்றவர் ஆனார்
அத்துன்பம் அவன் உளனாக தீரும் அன்றோ –அதற்கு மேலேயும் ஓன்று உண்டாயிற்று –அது என் எனின் –

திருமேனி அலசும்படி பலகாலமாக ஒரே தன்மையாக திருக்கண் வளர்கின்றான் -என் வருகிறதோ
என்று ஒரு அச்சம் உண்டாயிற்று -திரு உடம்பு அசைய –எத்தனை காலம் கிடத்தி –
மேலே ஆரா அமுதே -என்கிற திருவாய் மொழியிலே-என் துன்பத்தை தீர்க்கின்றிலன் -என்று இன்னாதார் ஆனார் –
இங்கே -என் துன்பத்தினையும் தன் துன்பத்தினையும் தீர்க்கின்றிலன் -என்று இன்னாதார் ஆகிறார் –

ஆக –
கொடியார் மாடம் கோளூரகத்தும் புளிங்குடியும் மடியாது இன்னே -என்று அதுவே தலை எடுத்து-
அங்கும் இங்கும் -திருவாய் மொழியிலும் தன் துன்பங்களை தீர்க்காமை அருளிச் செய்தாரே –
அதனுடைய அனுபாஷனம் -இத் திருவாய் மொழி –அனுபாஷனம் –
பெரிய ஆற்றாமையோடு-மீண்டும் கூறுதல் –
பெரிய ஆற்றாமையோடு என்னுடைய துன்பம் எல்லாம் தீரும்படி-
திருக் கண்களாலே நோக்கி அருள வேண்டும் -தாமரைக் கண்களால் நோக்காய் –
என் தலை மேலே திருவடிகளை வைத்து அருள வேண்டும் -பாத பங்கயமே தலைக்கு அணியாய் –
தேவரும் பிராட்டியாரும் கூட எழுந்து அருளி இருக்கும் இருப்பை எனக்கு காட்டி அருள வேணும் –உன் தாமரை மங்கையும் நீயும் –

யத்ர கிருஷ்னௌ ச கிருஷ்ணச சத்யபாமாச பாமி நீ -பாரதம் -உத்தியோக பர்வம் –
எந்த இடத்தில் கிருஷ்ணனும் திரௌபதியும் அர்ஜுனனும்-கோபத் தன்மை உள்ள சத்ய பாமையும்-இருக்கிறார்களோ -என்று சொல்லுகிறபடி
அவ்விருப்பில் அன்றோ அவனை அழைத்து காட்சி கொடுத்தது -என்றது-இப்படி சஞ்சயன் வந்தான் என்று அறிவிக்க
நமக்கு நல்லான் ஒருவன்-உகவாதார்க்கும் இவ்விருப்பைப் போய்ச் சொல்லுவான் ஒருவன்
அனுகூலனான இவனுக்கு விழிநீர் அடைத்தோம் ஆகிறோம்
உகவாதார் மண் உண்ணும்படி கார்யம் பார்த்தோம் ஆகிறோம்-புகுர விடும் கோள்
என்று உள்ளே அழைப்பித்து காட்சி கொடுத்தான் -என்றபடி –சஞ்சயன் பெற்ற பேற்றில் எனக்கு குறைய ஒண்ணாது –
நச அபிமன்யு நயமௌ தம் தேசம் துபிஜக்மது -பாரதம் உத்தியாக பர்வம்
அவர்கள் வீற்று இருந்த அந்த இடத்துக்கு அபிமன்யுவும் சென்றான் இல்லை-
இரட்டையர்களான நகுல சகா தேவர்களும் போனார்கள் இல்லை -என்கிறபடியே-
தாயும் தமப்பனும் சேர இருந்த இடத்தில் குழந்தைகளுக்கு சென்று கிட்ட ஒண்ணாமை இல்லை அன்றோ –
அவர்களுக்கும் சென்று கிட்ட ஒண்ணாத படி ஆயிற்று எழுந்து அருளி இருக்கிற இருப்பு-
அவ் விருப்பிலே அன்றோ அவனை அழைத்து காட்சி கொடுத்தது –

அப்படியே
தேவரும் பிராட்டிமாரும் எழுந்தருளி இருக்கும் இருப்பை எனக்குக் காட்ட வேண்டும் –
என்னைக் கண்ட காட்சியிலே வேறுபட்டவனாய் என் முன்னே-நாலடி உலாவி அருள வேண்டும் –பவளம் போல் கனிவாய் சிவப்ப நீ காண வாராய் –
அனுகூலரைக் கண்டால் பிறக்கும் புன்முறுவல் காண வேண்டும் -தவழ கதிர் முறுவல் செய்து-
ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேண்டும் -கூவுதல் வருதல் செய்யாய் –என்று இங்கனே-
தாமும் அவனும் அறிந்ததாக திருவாசலை திருக் காப்பு கொண்டு தனி இடத்திலே-
தம்முடைய எண்ணங்களை எல்லாம் விண்ணப்பம் செய்து-கொடு வினையேனும் -ஏக வசனம் —
இவற்றை இப்போதே பெற வேண்டும் என்று விரைகிறார்-
இறைவனுக்கும் உயிர்கட்கும் உள்ள சம்பந்தத்தை அனுபவித்தார் மேல் திருவாய் மொழியில் –
சம்பந்தத்தின் பலத்தை ஆசைப்பட்டு விரும்புகிறார் இத் திருவாய் மொழியில் —
சர்வ வித பந்து அவனே -கண்ணன் அல்லால் வேறு சரண் இல்லை –பற்ற உபதேசித்தார்-
ஆடாமல் அசையாமல் அர்ச்சையில் கண் வளர்ந்து இருக்க கண்டார் –கைங்கர்யம் செய்ய பாரிக்கிறார் -இதில்-

உபாதி-கர்மத்தால் வந்த பந்துத்வம் -விட்டு -சர்வவித பந்து -காரணம் இல்லாமல் -ஆச்ரயித்தால் -அடியார்க்கு ஆட்படுத்த விமலன் போலே ராமானுஜர்
அனந்தாழ்வான் -அருளாள பெருமாள் எம்பெருமானார் இடமும் -வான மா மலை ஜீயர் -கோயில் அண்ணன்
அப்பாச்சி அண்ணா -இவருக்கு பொன்னடிக்கு கால் ஜீயர் இடம் காட்டிக் கொடுத்து -ஆய்ச்சியர் குமாரர் –
நித்ய நிருபாதிக சர்வ பந்து –பிராதா –பிதா ச மம ராகவா –
பந்துவும் பிதாவும் அவரே என்றார் இளைய பெருமாள் -ராமம் தசரதன் வித்தி -கச்சதாம் -தாய் சொன்ன படியே –
சர்வேஸ்வரனுக்கு அடிமை செய்து போக அருளிச் செய்கிறார் –
லுப்த சதுர்த்தி -அகாரம் -நாராயணாயா -வியக்த சதுர்த்தி –
நாராயணனுக்குக்காக -தருவித்துக் கொண்டு சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்த்தை உசித கைங்கர்யம் -செய்ய வேண்டும் –
ஸ்யாம் பவேயம் —சேர்த்தியில் -குடிக்கிடந்து கைங்கர்யம் செய்ய வேண்டும் –

இரண்டாம் திருவாய் மொழியில் கீழே நிருபாதிக பந்துவான சர்வேஸ்வரனுடைய பல ரூபதயா ப்ராப்யத்தையை அருளிச் செய்து –
அவன் கண் வளர்ந்து அருளில் கைங்கர்யம் பண்ணுகையை மநோ ரதித்து-கைங்கர்ய பிரதிசம்பந்தியானவனுடைய
புண்டரீகாக்ஷத்வத்தையும்
அனுரூப சம்பந்தத்தையும்
ஸ்ரீ மஹா லஷ்மீ ஸஹாயத்வத்தையும்
தர்ச நீய ஆகாரதையையும்
மந்த ஸ்மித சோபையையும்
ஆஸ்ரித அர்த்தமான திவ்ய வாஹந திவ்ய ஆயுதவத்தையும்
அசாதாரண திவ்ய பரிகர யோகத்தையும்
அகில லோக வந்த்யத்வத்தையும்
அதிசயித ஸுகுமார்யத்தையும்
ஸ்ரீ மஹா லஷ்மி சேவ்யத்வத்தையும்
அனுசந்தித்து -ஏவம் பிரகார விசிஷ்டனான நீ உனக்கு அசாதாரண சேஷ பூதராயப் போந்த எங்களுக்கு
கிருபை பண்ணி பூர்ண கடாக்ஷம் பண்ணவும் –
திருவடிகளை எடுத்துத் தலையிலே வைக்கவும் அங்கீ கரிக்கும் பொழுது பிராட்டியோடே கூட எழுந்து அருளி இருந்து அங்கீ கரிக்கவும்
ஆசா அநு ரூபமாக நடந்து எழுந்து அருளி வரவும்
முகமும் முறுவலுமாய்க் கொண்டு என் முன்னே நிற்கவும்
நிற்கும் போது பெரிய திருவடியை மேற்கொண்டு திவ்ய ஆயுதங்களையும் ஏந்திக் கொண்டு வரவும்
அசாதாரண பரிகாரத்தோடே வந்து என் முன்னே எழுந்து அருளி வந்து இருக்கவும்
சர்வ லோகங்களும் கண்டு வாழும்படி எழுந்து அருளி இருக்கவும்
இந்த ஸூ குமாரமான வடிவை நான் அனுபவிக்கும்படி பண்ணவும்
நாய்ச்சிமாரை அடிமை கொண்டு அருளுகிறாப் போலே உன் திருவடிகளில் அடிமை கொண்டு அருளவும் வேணும்
என்று தம்முடைய மநோ ரத பரம்பரையை திருப் புளிங்குடியிலே கிடந்தது அருளுகிற சர்வேஸ்வரன் திருவடிகளில் பிரார்த்தித்து அருளுகிறார் –

பண்டை நாளாலே நின் திரு வருளும் பங்கயத்தாள் திரு வருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால் குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1-

வேறு கதி இல்லாத-அடியோங்களைக் குறித்து-ஒரு வார்த்தை அருளிச் செய்து
விடாய் கெடும்படி குளிர நோக்கி அருள வேண்டும் -என்கிறார்-

குடி குடி வழி வந்து ஆள் செய்யும்–மூன்று பாட்டிலும் -கைங்கர்யம் செய்ய கொடுத்து வைத்து இருக்கிறோம்
யோக்யதை இருப்பதாக சொல்லிக் கொள்கிறார் அல்லர் -உரிமை -கேட்க வில்லை -உனக்கே -என்று அநந்யார்ஹை
போக்கிடம் இல்லை கத்யந்த சூன்யத்தை ஆவிஷ்கரிக்கிறார்

பண்டை நாளாலே நின் திரு வருளும் –எதிர் சூழல் புக்கு பல நாள் பட்ட கிலேசத்தின் பலம் அன்றோ இந்த கைங்கர்யம் -என்றபடி –
நெடுநாள் கிருஷியை செய்து-பல வேளையில் கை விடவோ -என்கிறார்-

என் அடியார் அது செய்யார் -பெரியாழ்வார் திருமொழி -4-9-2-என்னும் உன் திரு அருளையும் –
பாபாநாம் வா ஸூ பாநாம் வா வதார்ஹாணாம் ப்லவங்கம்-
கார்யம் கருணம் ஆர்யேண நகஸ்சின் ந அபராத்யதி -யுத்தம் -116-44 -என்று
குற்றம் செய்யாதவர் யாவர் -என்னும் அவள் திருவருளையும் பெற்று –

————–

குடிக் கிடந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த வடிமைக்குக் குற்றேவல் செய்து உன் பொன்
அடிக் கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி நீ யொருநாள்
படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கணியாய்
கொடிக்கொள் பொன் மதில் சூழ் குளிர் வயல் சோலைத் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-2-

ஆஸ்ரய விஷய அனுரூபமாக -எல்லார்க்கும் சுலபமான உன் திருவடிகளை-என் தசென்னிக்கு சூட வேணும்

ஸ்ரீ பரத ஆழ்வான்-ஆக்கம் செய்து –குடியில் -பண்டு இல்லாத நன்மைகளை உண்டாக்கியது போல் –இவரும் பிராப்ய த்வரையால் -அழுவது தொழுவது கண்ண நீர் கைகளால் இறைக்கும் -பிரபன்ன குடியில் இல்லாத -அநந்ய கத்தி ஆகிஞ்சன்யம் மட்டும் இல்லாமல் -மண்ணை இருந்து வாமனன் மண் இது மின்னிடை மடவார் -அநுகரித்துதூது விட்டு -த்வரையில் விஞ்சி -ஆக்கம் செய்தார் இறே

நின் பாத பங்கயம் –ஒரு செவ்விப் பூவினைக் கொண்டு காணும் காடும் ஓடையும் அளந்து கொண்டது-பூமிக்கு அளவாக்கின திருவடிகளை-என் தலைக்கு அளவாக்க லாகாதோ –கோலமாம் என் சென்னிக்கு -4-3-6-என்று இருப்பார் தலைக்கு வைக்கலாகாதோ

———–

கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி உன் திரு வுடம்பு அசைய
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி
தடம் கொள் தாமரைக் கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ வுலகும் தொழ விருந்து அருளாய் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-3-

திரு உடம்பு வருந்த ஒரு படியே திருக் கண் வளர்ந்து அருளாதே-அடியோமுக்காக பிராட்டியும் நீயும் எழுந்தருள வேண்டும்-என்கிறார் –

தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி–இம் மூன்று பாசுரங்களிலும் தம்முடைய வம்ச பரம்பரையின் பெருமையை சொன்னால் போலே அன்றோ இருக்கிறது –அது அன்று இங்குச் சொல்லுகிறது-
ஒருவருக்கேயாய் இருப்பாரை முகம் பார்ப்பார் வேறு ஒருவர் இலர் -என்று-தம்முடைய அநந்ய கதித்வத்தைச் சொல்லுகிறார் –
கைங்கர்ய கிரியைச் சொல்லி -யோக்யதை இருப்பதாகச் சொல்லிக் கொள்ள வில்லை -உனக்கே அற்றுத் தீர்ந்தோம் -நீ கை விட்டால்
வேறு யாரும் கொள்ள மாட்டார்கள் -மறந்தும் தொழா மாந்தர் -அன்றோ -அநந்ய கதித்வம் அன்றோ வெளியிட்டுக் கொள்கிறார் –

உன் தாமரை மங்கையும் நீயும் –
பகவத் விஷயத்தில் முதலடி இடுவார் பிராட்டி புருஷகாரமாக பற்ற வேணும் -என்னுமதனாலே-பங்கயத்தாள் திருவருளும் -என்றார் மேல்
அடிமை செய்யும் இடத்திலும் இருவருமான சேர்த்தியிலே அடிமை செய்வதாக-சொல்லி போரும் அதனைப் பற்ற சொல்லுகிறார் இங்கு –

திருப் புளிங்குடி கிடந்தானே –இருந்தருளாய்-
சாய்ந்து அருளின அழகு காட்டினாய்-இருந்து அருளின போதை அழகையும் காட்டி அருளாய்-
நின்ற வாறும் இருந்த வாறும் கிடந்தவாறும் -குழந்தை கிருஷ்ணன் -பெரிய கிருஷ்ணன் -பெருமாள் நிலை சேவித்தது போராதே –
அர்ச்சையிலும் ஒவ் ஒரு பெருமாளையும் இப்படியே சேவிக்க அபேக்ஷை கொண்டோம் -காட்டி அருளுவாய் –

——————–

புளிங்குடிக் கிடந்து வர குணமங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி
நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்பப்
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வாராயே–9-2-4-

மங்களா சாசனப் பாசுரம் -ஆஸ்ரித அர்த்தமாக -நின்று இருந்து கிடந்து –

திருப்பதிகளிலே எழுந்து அருளி இருப்பவனாய்-என்னை இவ்வளவு ஆக்கினாப் போலே-
மேலும் எனது விருப்பத்தை செய்தருள வேண்டும் –என்கிறார்

புளிங்குடிக் கிடந்து வர குணமங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே–திருப் புளிங்குடியிலே –கிடந்ததோர் கிடக்கை திருமாலை -என்னும் அழகினைக் காட்டியும்-வர குண மங்கையிலே – பிரான் இருந்தமை காட்டினீர் -திருவாய்மொழி -என்னும் இருப்பின் அழகினைக் காட்டியும்-ஸ்ரீ வைகுண்டத்தில் –நிலையார நின்றான் -திருவாய்மொழி -என்னும் நின்ற நிலையின் அழகினைக் காட்டியும் –அன்றோ என்னை புகுர நிறுத்தியது

பேற்றுக்கு அடி கிருபை -இழவுக்கு அடி கர்மம் -என்கிற மகா விச்வாஸம் இருக்கும் படி –தெளிந்த என் சிந்தை –என்றபடி-

அன்றிக்கே
தண்ணியன் -என்று அகலாதபடி–கண்கள் சிவந்து -என்ற திருவாய் மொழியிலே என் மனத்தினைத் தெளிவித்தும்-
அதனைக் கைவிடாதே எப்பொழுதும் எழுந்தருளி இருந்து -என்னுதல் –

என்னை ஆள்வாய் –
என்னை -தண்ணியன் -என்று அகலவும் ஒட்டாதே-பிரிவாற்றாமையால் -முடியவும் ஒட்டாதே-
குண ஞானத்தினாலே தரிப்பித்து கொண்டு போனதாய் –

நீ காண வாராயே –
என் எதிரே உன் அழகு காண வர வேண்டும் –அவன் கூத்து இருக்கிறபடி-
அவன்மாறி மாறி இடும் அடி வல்லார் ஆடினால் போலே காணும் இருப்பது –

——————-

பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வந்து நின் பல் நிலா முத்தம்
தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக் கண் தாமரை தயங்க நின்று அருளாய்
பவள நன் படர்க் கீழ் சங்கு உறை பொருநல் தண் திருப் புளிங்குடி கிடந்தாய்
கவள மாக் களிற்றின் இடர் கெடத் தடத்துக் காய்சினப் பறவை ஊர்ந்தானே–9-2-5-

ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு வந்து தோற்றினாப் போலே-வந்து தோன்றி அருள வேணும்-என்கிறார் –

அனுகூலர்களைக் கண்ட காட்சியாலே-அகவாயில் அன்பு தோற்ற-தன்மைகள் வேறுபட்டவனாய்-
புன்முறுவல் செய்து நிற்கும்படியை காண வர வேண்டும் –

நின் திருக் கண் தாமரை தயங்க நின்று அருளாய் –திருக் கண்கள் உடைய ஸ்மிதம் புன் முறுவல் இருக்கிறபடி –
தயங்குகையாவது-அப்போது பிறந்த ஒளி ஆதல்-கடல் சலித்தால் போலே அசைந்து வருகிற படியைச் சொல்லிற்று ஆதல் –

தயங்க நின்று அருளாய்-முந்துற நாலடி வந்து -பின்னை அதுவும் மாட்டாதே-ஸ்தப்த்தனாய் செயல் அற்றவனாய் நிற்கும் நிலையைக் காண வேண்டும் –புது நடை அழகை ஸேவிக்கப் பிரார்திக்கிறார்

————

காய்ச்சினப் பறவை யூர்ந்து பொன்மலையின் மீமிசைக் கார்முகில் போல்
மாசின மாலி மாலிமான் என்று அங்கவர் படக் கனன்று முன்னின்ற
காய்சின வேந்தே கதிர் முடியானே கலி வயல் திருப் புளிங்குடியாய்
காய்சின வாழி சங்கு வாள் வில் தண்டேந்தி எம்மிடர் கடிவானே–9-2-6-

எம்மிடர் கடிவானே–பெருமாள் திரு நாமம் -உத்சவர் –பூமி பாலன் காய்ச்சின வேந்து -மூலவருக்கும் உத்சவர்களுக்கும் பாசுரம்
தேவ பிரான் -அரவிந்த லோசன் -பொலிந்து நின்ற பிரான் கண்டீர் -கரும் தடம் கண்ணி தாயாருக்கும் மங்களா சாசனம் உண்டே

நீர் விரும்பினவற்றை செய்ய ஒண்ணாதபடி-தடைகள் பிரபலமாக அன்றோ இருக்கின்றன -என்ன
மாலி சுமாலி மால்யவான் என்னும் இவர்களைக் காட்டிலும்-வலியவோ என் விரோதிகள் -என்கிறார் –

கதிர் முடியானே –விளங்குகின்ற திருமுடியை உடையவனே -என்றது-
நீ பாது காப்பதற்கு முடி சூடி இருக்க -நான் இழக்கவோ -என்கிறார் என்றபடி-

எம் இடர் கடிவானே -அனுபவ விரோதிகள் -தேவர் சேவை சாதிக்கப் போகுமே –அனுபவ அலாப ரூப துக்கம்-திருக்கண் தாமரை தயங்க நின்று அருளாய் –என்று மேல் பாசுரத்தோடு கூட்டி வினை முடிக்க –

————–

எம்மிடர் கடிந்து இங்கு என்னை யாள்வானே இமையவர் தமக்கும் ஆங்கனையாய்
செம்மடல் மலரும் தாமரைப் பழனத் தண் திருப் புளிங்குடிக் கிடந்தாய்
நம்முடை யடியார் கவ்வை கண்டுகந்து நாம் களித்துள நலம் கூர
இம்மட வுலகர் காண நீ யொரு நாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே–9-2-7-

வலி அற்றவர்களோடு–வலி மிக்கவர்களோடு–வாசி அறக் காப்பவனான நீ-
நாங்கள் வாழும்படி கண் எதிரே ஒரு நாள் இருக்க வேண்டும் -என்கிறார் –

நீ யொரு நாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே –
எங்கள் கண் வட்டத்திலே ஒரு நாள் இருந்து அருள வேண்டும் -என்றது –
நித்ய ஸூரிகள் எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருப்பதற்கு விஷயமான நீ-
ஒரு நாள் எங்கள் கண்ணுக்கும் விஷயமாய் இருந்தால் ஆகாதோ -என்கிறார் என்றபடி-
உன்னுடைய காட்சி அதிகாரத்தை உடைய ஒரு சிலர்க்கேயாய் இருக்க வேண்டுமோ -என்பார்-எங்கள் கண் முகப்பே -என்கிறார் –

————–

எங்கள் கண் முகப்பே யுலகர்கள் எல்லாம் இணை யடி தொழுது எழுது இறைஞ்சி
தங்கள் அன்பாரத் தமது சொல் வலத்தால் தலைச் தலைச் சிறந்து பூசிப்ப
திங்கள் சேர் மாடத் திருப் புளிங்குடியாய் திருவைகுந்தத் துள்ளாய் தேவா
இங்கண் மா ஞாலத்தி தனுளும் ஒரு நாள் இருந்திடாய் வீற்று இடம் கொண்டே–9-2-8-

பரம பதத்தில் அன்றோ-வீற்று இருத்தலின் அழகு-காட்டலாவது-என்ன –
அவ்விருப்பின் அழகினை நாங்கள் காணத்-திருப் புளிங்குடியில் ஒரு நாள் இருந்து அருள வேண்டும் –என்கிறார் –

தங்கள் அன்பாரத் தமது சொல் வலத்தால்-இடையர் கோஷ்டியில் புகுந்து -அங்கும் இருந்து -அவர்கள் சொன்ன வார்த்தையும் -இவர் சொன்ன வார்த்தையும் –
நூறு பிராயம் புகுவீர் –பொன்னாலே பூணூல் இடுவர்-பழம் உண்பீர்-பால் உண்பீர் –அழுத்த இரட்டை உடுப்பீர் –
என்பன போன்று சொல்லுகை —
வங்கி புரத்து நம்பி -விஜயஸ்வ -வெற்றி உண்டாக -என்ன-ஆண்டான் சொன்ன வார்த்தையை நினைவு கூர்வது –
அங்கு சென்றாலும் முரட்டு சம்ஸ்க்ருதம் விட்டீர் இல்லீரே-எங்கே இருந்தாலும் நாம் நாமே காணும் இங்கே எழுந்து அருளீர் –

———-

வீற்று இடம் கொண்டு வியன் கொள் மா ஞாலத்து இதனுளும் இருந்திடாய் அடியோம்
போற்றி யோவாதே கண்ணினை குளிரப் புது மலர் ஆகத்தைப் பருக
சேற்றிள வாளை செந்நெலூடுகளும் செழும் பணைத் திருப் புளிங்குடியாய்
கூற்றமாய் அசுரர் குல முதலரிந்த கொடு வினைப் படைகள் வல்லானே–9-2-9-

இவ்விருப்பில் வாசி அறியாத-இவ் உலகத்தாருக்கு
நடுவில் இருக்கிறது என் -என்னில் -ருசி உடைய நாங்கள்-அதுவே ஜீவனமாக இருக்கிற நாங்கள் -கண்டு அனுபவிக்க –என்கிறார்

நமக்கு இவை எல்லாம் இங்கே காணலாம் அன்றோ –
சாய்ந்து அருளின அழகு பெரிய பெருமாள் பக்கலிலே காணலாம்-
நின்று அருளின அழகு நம் பெருமாள் பக்கலிலே காணலாம்-
இருப்பில் உண்டான அழகு பெரிய பிராட்டியார் பக்கலிலே காணலாம் -என்று பட்டர் அருளிச் செய்வர் –

——

கொடு வினைப் படைகள் வல்லையாய் அமரர்க்கிடர் கெட வசுரர்கட்கிடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை யமுதே கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடி விணை யில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள் கூவுதல் வருதல் செய்யாயே–9-2-10-

எல்லை இல்லாத இனிமையை உடையதான-உன் திருவடிகளில் நானும் வந்து அடிமை செய்யும் படி
என்னை அங்கே அழைத்தல்-அல்லது நீ இங்கே வருதல் செய்ய வேண்டும்-என்கிறார் —

கொடு வினையேனும் பிடிக்க –
கண்கள் சிவந்து –என்ற திருவாய் மொழிக்கு பின்பு-இவர்க்கு தாம் தாழ்ந்தவர் என்னும் நினைவு -நிஹித அநுஸந்தானம் -இல்லை அன்றோ –
அவர்களும் ஸந்நிஹிதராய் -அண்மையில் இருப்பாராய்-ப்ராப்யம்-சம்பந்தமும் உண்டாய் இருக்க-
நான் இழந்து இருப்பதே -என்று-பாவியேன் -என்பாரைப் போன்று -கொடு வினையேன் -என்கிறார் –

நீ யொருநாள் கூவுதல் வருதல் செய்யாயே –
எல்லை இல்லாத இனியனாய்-அண்மையில் இருப்பவனான நீ-ஸ்வரூபத்தை நோக்குகைக்கு-
ஒரு நாள் அங்கே அழைத்தல் -இங்கே வருதல்-செய்து அருள வேண்டும்-
முற்பட வருதல் என்று இலர் ஆயிற்று-அச் சேர்க்கையை குலைக்க ஒண்ணாது என்னுமதனாலே-
விருப்பம் உடையார் பக்கல் அவனைத் தனியே விட்டு இரார்கள் அன்றோ –
அதனால் கூடக் கொடு வருவார்கள் என்னும் அதனை பற்றச் சொல்லுகிறார்-

———-

கூவுதல் வருதல் செய்திடாய் என்று குரை கடல் கடைந்தவன் தன்னை
மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல் வழுதி நாடன் சடகோபன்
நாவில் பாடல் ஆயிரத் துள்ளும் இவையும் ஓர் பத்தும் வல்லார்கள்
ஓவுதல் இன்றி யுலகம் மூன்று அளந்தான் அடி இணை யுள்ளத்தோர் வாரே–9-2-11-

நிகமத்தில் –-இத் திருவாய்மொழி கற்றார்-எப்பொழுதும் நினைக்கப் பெறுவார்-என்கிறார்-

குரை கடல் கடைந்தவன் தன்னை -கூவுதல் வருதல் செய்திடாய் என்று-ஆயிற்று இவர் சொல்லிற்று–இந்த விருப்பம் இல்லாதார்க்கும் உடம்பு நோவ கடல் கடைந்து அமுதம்-கொடுத்தவனை ஆயிற்று இவர் விரும்பியது-

உடைமை இருந்த இடம் உடையவர் வந்து கைப்பிடித்தல் தானே முறைமை -கூவுதல் -உடைமையே வருவது -முறை இல்லாமை
வருதல் -முறையாக ஆக்கவுமாம் -என்றபடி -பார்யை ஆள் இட்டு அழைக்கை முறை இல்லையே -அதுபோல் கூவுதலும் முறை இல்லை –

திருக் கண்களால் குளிர நோக்கி அருள வேண்டும்
திருவடிகளை தலைக்கு மேலே வைத்து அருள வேண்டும்
தேவரீர் எழுந்து அருளி இருக்கும் இருப்பைக் காண வேண்டும்
நாய்ச்சிமாரும் தேவருமான இருப்பைக் காண வேண்டும்
உலாவும்படி காண வேண்டும்
புன்முறுவல் இருக்கும் படி காண வேண்டும்–என்று ஆசைப் பட்ட இவருக்கு அப்போதே கிடையாமையாலே–இவற்றைப் பெற வேண்டும் என்னும் எண்ணம் தானே பேறு ஆகத் தோற்றிற்று–இதனைக் கற்றவர்களுக்கும் இந்த எண்ணம் மாறாமலே முடியச் செல்லும் என்கிறார்-மநோ ரதம் தானே புருஷார்த்தம் -என்ற படி –

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -86-அடைக்கலத் தோங்கு கமலத்தல ரயன்-வள வேழ்வுலகு -1-5-

March 27, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

என்ன என்று சொல்லி புலம்புவேன்-நீக்கியை -ஏந்தியை-கிரியை அல்ல -இரண்டாம் வேற்றுமை உருவு சேர்த்து –சோறாக்கி -சோறை ஆக்குபவன் -சோறாக்கியை போல்-தலைவனைப் பிரிந்த தலைவி இரங்கல் –துறை–கீழ் மகள் -தாய் பாசுரம்-இரண்டுக்கும் சேர்ந்து இங்குள்ள பதங்கள் நிர்வாகங்கள் உண்டு-வள வேழ்வுலகு -1-5-இதன் விவரணம் -நினைவு நைந்து பாடும் –திருவாய் மொழி–அடைக்காய் -வெற்றிலையும் பாக்கும் –அடை இலை -திருமேனி பச்சிலை –அதில் உள்ள பூ நாபி கமலம் –அதில் அலர்ந்த அயன்-அடைக்கலம் -ரஷ்ய வஸ்துவாய் -ரக்ஷிக்கிறவனையும் சொல்லலாம்-சிவன் துயரை நீக்கியவன்-அடியார் ரக்ஷிக்க திவ்ய ஆயுதங்கள் ஏந்தி உள்ளவனே-ஆஸ்ரிதர்களுக்கு அடங்கி -அடிக்கப்பட்டு அத்தாலே அலர்ந்து இருந்தவன்-அவன் இடம் குறை இல்லை–ஓங்கு -அடைக்கமலத்து ஓங்கும் கமலம் -பச்சை மா மலை போல் மேனி -அதில் உள்ள நாபி கமலம்-அடைக்கலத்து அரன் -சரண் அடைந்த ருத்ரன்-அடைக்கலத்து நீக்கி -ரக்ஷகமான பெருமாள் -துயரம் போக்குபவன்-அடைக்கலத்து அயன் -தான் வளரும் ஆதாரமாகக் கொண்ட -கர்ப்ப ஸ்தானம் என்றும் கொள்ளலாம் 

அவதாரிகை –எத்தனை ஏனும்  இருள் வந்து மேலிட்டு பாதகம் ஆனாலும் – அத் தலையில் ஒரு குறை சொல்ல ஒண்ணாத படி இறே–அவன் ஸ்வரூபத்தை நிரூபித்தால் இருக்கும்படி –மகள் நொந்த படியும்
தாயார் அவன் இடம் குறை இல்லை என்றும் கொள்ளலாம்-

இப்படி ஆர்த்தராய்ப் புலம்பினவர் ஆபத் சகன் அல்லாமையும் ஆபந் நிவ்ருத்தி பரிகரம் இல்லாமையும்
ஆஸ்ரித பவ்யன் இல்லாமையும் உதவாது ஒழிகிறானோ இப்படி இருக்க முகம் காட்டாத போதே நாம் எத்தைச் சொல்லி பிரலாபிப்பது என்று நிராசரான பிரகாரத்தை அருளிச் செய்கிறார்-இது நாயகி வார்த்தை யாகவுமாம்-

அடைக்கலத் தோங்கு கமலத்தல ரயன் சென்னி என்னும்
முடைக்கலத்து  ஊண் முன் அரனுக்கு நீக்கியை ஆழி சங்கம்
படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால்
புடைக் கலந்தானை எம்மானை என் சொல்லிப் புலம்புவனே
– – 86-தலைவனைப் பிரிந்த தலைவி வருந்துதல் –

அடை–இலையாகிய
கலந்து–இடத்திலே
ஓங்கு–உயர்ந்துதோன்றின
கமலத்து–(திருமாலின் நாபித்) தாமரை மலரிலே
அலர்–வெளிப்பட்டுத் தோன்றின
அயன்–ப்ரஹ்மாவினுடைய
சென்னி என்னும்–தலையாகிய
முடை கலந்து–முடை நாற்றமுடைய பிக்ஷாபாத்திரத்திலே
ஊண்–உணவு இரத்தலை
முன்–முன் ஒரு காலத்தில்
அரனுக்கு–சிவனுக்கு
நீக்கியை–போக்கியருளினவனும்
ஆழி சங்கம்படைக்கலம் ஏந்திய–ஸுதர்சந பாஞ்சஜந்யங்களை ஆயுதங்களாகத் திருக்கைகளிற் கொண்டுள்ளவனும்
வெண்ணெய்க்கு–வெண்ணெய்க்காக
அன்று–களவுங்கையுமாக அகப்பட்ட அந்நாளில்
ஆய்ச்சி–யசோதைப் பிராட்டி
வல் தாம்புகளால்–வலிய கயிறுகளால்
புடைக்க-அடிக்க
அலந்தானை–வருந்தினாற்போலத் தோற்றினவனும்
எம்மானே–எமது தலைவனுமான திருமாலைக் குறித்து
என் சொல்லி புலம்புவனே–நான் என்னவென்று சொல்லிப் புலம்புவனே?

வளம் மிக்க மால் பெருமை மன்னுயிரின் தண்மை
உளமுற்று அங்கூடுருவ ஓர்ந்து -தளர்வுற்று
நீங்க நினை மாறனை மால் நீடு இலகு சீலத்தால்
பாங்குடனே சேர்த்தான் பரிந்து—5–அஞ்சிறைய மட நாரையில் தூத பரேஷண வ்யாஜத்தாலே
தம் ஆற்றாமையை அவனுக்கு அறிவித்த அநந்தரம் அவன் வந்து சம்ச்லேஷித்து அருளக் கண்டு
அவன் பெருமையையும் தம் சிறுமையையும் நினைத்து ஸூ ரி போக்யனானவனை அயோக்யனான நான் கிட்டி தூஷிப்பதில் அகன்று போகை நன்று என்று தாம் அகலப் புக
ஆழ்வீர்-உம்முடைய பொல்லாமையைப் பாராதே நம்முடைய செல்லாமையைப் பாரீர் -என்று
ஆக்ரம்யா லோகன் -என்று த்ரிவிக்ரம அபதான சித்தமான தன் சௌசீல்யத்தையும்
நவநீத சௌர்ய வ்ருத்தாந்த சித்தமான தன் செல்லாமையையும் காட்டி தம்மை அவன் சேர்த்துக் கொள்ள அத்தாலே தாம் அகலுகை தவிர்ந்து பொருந்தின படியை அருளிச் செய்கிற
வள வேழு உலகின் அர்த்தத்தை வளம் மிக்க -இத்யாதியால் அருளிச் செய்கிறார் –திருவாய் பாடியிலே வெண்ணெயோபாதி இவரையும் சேர விரும்பினான் –வைகலும் வெண்ணெய் கை கலந்து யுண்டான் பொய் கலவாது என் மெய் கலந்தானே -என்னக் கடவது இறே-

அடைக்கலத் தோங்கு-சர்வேஸ்வரன் பக்கலிலே நிஷேபம் போலே யாயிற்று ப்ரஹ்மா வளருவது-(வைத்த மா நிதி அன்றோ)-கமலத்தல ரயன் –நிஷேபம் போலே என்ற இடம் –ஒரு  குறை பிறவாதபடி உணர்ந்து – நோக்குகிற படியை சொன்ன இத்தனை –-அவ்வளவு அன்றிக்கே – நேரே சர்வேஸ்வரன் பக்கலிலே பிறந்த ஜன்மத்தால் வந்த ப்ராப்தியை உடையவன் –(அஜன் யோனி சம்பந்தம் இல்லாதவன் –அயன் -அவன் இடம் நேராகப் பிறந்த புத்ரன்)-சென்னி -இத்யாதி –லோக குருவுமாய் -பிதாவுமானவன் தலையை அறுத்துப் பாதகியாய் நின்றான் -ஒருவன் –தலை அறுப்புண்டு எளிவரவு பட்டு நின்றான் ஒருவன் –இவருடைய துக்கத்தையும் போக்கினான் ஆயிற்று இவன் –அயன் சென்னி என்னும் முடைக்கலம் –பிரம்ம சிரஸ் என்றொரு நாமம் மாத்ரமேயாய் –தான் முடைக்கலமாயிற்று –பூதி கந்த பஹூளம் (துர்நாற்றம் மிக்கு )ஆகையாலே கழுகும் பருந்துமாய் தொடர்ந்து திரியும்படி யாயிற்று சஞ்சரிப்பது –முடைக்கலத்து  ஊண் முன் அரனுக்கு நீக்கியை –அதிலே உண்டு திரிகிற இத்தை முன் அரனுக்கு-நீக்கினவனை –சம்ஹர்த்தாவாய் தன் அதிகாரத்தோடு இருக்கச் செய்தே –இவ் எளிவரவு வர-
நாம் ஒருவன் ஆக்கிக் கார்யம் கொள்வான் ஒருவன் -நோவு பட விட்டு இருக்க ஒண்ணாது -என்று
அவனுடைய துக்கத்தைப் போக்கினவனை –இத்தால் –ஸ்ருஜ்யத்வ கர்ம வஸ்யத்வ ஷேத்ரஞ்சத்வங்கள் இருவருக்கும் அவிசிஷ்டம் என்றபடி –ஒருவன் தலை அறுப்புண்டு நின்றான் –ஒருவன் பாதகியாய் நின்றான் –இவன்-அவர்கள் இருவருக்கும் வந்த துக்கத்தைப் போக்கிக் கொண்டு நின்றான்

ஆழி சங்கம் படைக்கலம் ஏந்தியை –இவர்கள் இப்படி அலைந்து கொண்டு கிடந்தால் – ரஷிக்க வேண்டும் போதாக கருவி எடுக்க பார்த்து இருக்க ஒண்ணாது -என்று திவ்ய ஆயுதங்களை எப்போதும் கையிலே தரித்துக் கொண்டு நிற்கிறவனை –திருவாழி உள்ளிட்ட திவ்ய ஆயுதங்கள் ஆகிற திவ்ய ஆபரணங்களை ரஷிக்க வேண்டும்படியாக- தரித்து கொண்டு இருக்கும் ஸ்வபாவன் ஆனவனை –வெண்ணெய் இத்யாதி –பிரம்மா ருத்ராதிகளுக்கும் கூட துக்க நிவர்த்தகனாய் –அதுக்கு ஈடான பரிகரத்தையும்  உடையவனாய் -இருக்கச் செய்தே –ஆஸ்ரிதரால் தனக்கு வந்த கிலேசத்தை-பரிஹரித்து கொள்ள மாட்டாதே இருக்குமவன் –ப்ரஹ்மாதிகளுக்கும் கூட நிர்வாஹனாய் –
சர்வ ஸ்மாத் பரனாய் இருக்கிறவன் தன்னுடைய விபூதி யில் ஏக தேசத்தில் – சில அனுகூல ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தால் அல்லாது செல்லாதே -அவாப்த சமஸ்த காமனாய் இருக்கிறவனுக்கு -ஓன்று குறையாய் அது தான் நேர் கொடு நேர் கிடையாதே களவு காணப் புக்கு- வாயது கையதாக அகப்பட்டு -அதுக்கு பிரதி கிரியை பண்ண மாட்டாதே நிற்கிறவனை –அன்று –அவன் வந்து கட்டுண்டு எளியனாவது ஒரு நாள் உண்டே – அதுவும் ஒரு நாளே -(கீழ் தாய் பாசுரம் என்றால் இந்த நிர்வாகம் ) தானே வந்து கட்டுண்டு எளியனாய் இருக்கிற அன்று கிட்டப் பெறாதே -இன்று பெறுகைக்கு பிரார்த்தித்து இருப்பதே -நான் (கீழ் மகள் பாசுரம் என்றால் இந்த நிர்வாகம் ) ஆய்ச்சி –ஓர் இடைச்சியால் வந்த நலிவு பரிஹரிக்க மாட்டாதே இருப்பதே –வன் தாம்புகளால் –உரவியவை எல்லாம் அற்று அற்றுப் போக மேலே மேலே சிலவற்றை எடுத்து அடித்தாள் ஆயிற்று –-ஸ்நேஹம் (அன்புக்கும் வெண்ணெய்க்கும் ஸ்நேஹம்  )எவ்வளவு உண்டு -அவ்வளவு நிலை நிற்கும் இறே-சீற்றமும் –இடைச்சி குமைத் திறங்கள் (பெரிய திருவந்தாதி )-என்னக் கடவது இறே –புடைக்கலந்தானை –அலந்து இருக்கும் இதுக்கு மேற்பட இதுக்கு ஒரு பிரதி கிரியை இல்லை பண்ணலாவது –-அலந்தானை -அலவென்று மலர்வாய் –இவள் அடிக்க அடிக்க முகம் மலர்ந்து-இருந்த படியாகவும் –கண்ணியால் -குறும் கயிற்றால் கட்ட வெட்ட என்று இருந்தவனை (பெரிய திருமொழி)  -என்று இருந்தவன் இறே–எம்மானை –கட்டுண்டு அடியுண்டு கண்ணும் கண்ண நீருமாய் உடம்பு வெளுத்து இருந்த இருப்பைக் காட்டி என்னை அனந்யார்ஹமாக எழுதிக் கொண்டவனை –-பையவே நிலை (திருவாய் -5-10 )இறே ஈடு அழிப்பது –என் சொல்லிப் புலம்புவனே –இப்போது ஆசைப் பட்டு பெறாமையாலே புலம்ப வேண்டா நின்றது-முன்பு செய்து வைத்த  தொரு குறை -இல்லாதபடி யாலே சொல்லுகைக்கு ஒரு பாசுரம் காண்கிறிலேன் –நாம் இப்போது பெறாது ஒழிகிறது நம்முடைய க்ரம ப்ராப்தி பற்றாமை-என்று இத் தலையிலே கை வாங்கலாய் இருந்தது –அங்கனம் சொல்லலாவது ஓன்று இல்லை இறே-அத் தலைக்கு –மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித்–அயன் -அஜன் -யோனி ஜன்மாவான் அன்று –

ஆஸ்ரித விரோதி நிரசன சீலனாயும் இருந்து -ஆஸ்ரித விரோதி நிரசனத்துக்கு பரிகரமும் கொண்டு -ஆஸ்ரித ஸூலபனாயும்- பிரம்மா ருத்ராதிகள் துயரங்களையும் தீர்த்து அருளிய சர்வ ஸ்மாத் பரனாயும் இருந்து வைத்து –-அடைக்கலத் தோங்கு கமலத்தல ரயன் -தாமரைப் பூ பசிய இலையின் மீது உயர்ந்து விகஸிப்பது போலே திரு நாபித் தாமரை மலர் பசிய திருமேனி மீது எழுந்து தோன்றி இருக்குமே
அடைக்கமலமாக புகுந்த சிவனுக்கு நீக்கி -ரக்ஷகமாக இருந்து நீக்கினவன் என்றுமாம் – அடைக்கலத்தோங்கு அயன் –என்று தன்னிடம் அடைக்கலமாக வந்த நான் முக்கண் என்றுமாம் அடைக்கலம் என்றால் ரஷிப்பதற்கு உரிய பொருளும் ரக்ஷகனையும் குறிக்கும்
கமலத்து அலர் -தாமரைப் பூ என்று கொண்டால் தோன்றிய -வருவித்திக் கொள்ள வேண்டும் – முடை -கெட்ட நாற்றம்-புடைக் கலந்தானை-புடைக்க அலர்ந்தானை -பட்டர் திருகி கோஷ்ட்டியூரில் இருக்கும் பொழுது நஞ்சீயர் -பொருள் உரைக்க-ஆழ்வார் திரு உள்ளத்துக்கு உகந்த அர்த்தம் என்று புகழ்ந்தார் -அவதார பிரயோஜனம் பெற்றோமே என்று மகிழ்வான்-ஆற்றாமை மிக்கு ஆழ்வார் திருக் கல்யாண குணங்களையும் திரு நாமங்களையும் சொல்லி முறையிடுகிறார் – என் சொல்லிப் புலம்புவனே அவனது குண சேஷ்டிதங்களில் ஒன்றும் குறை இல்லாமல் எனது குறையே–வல் வினையேன் -என்றே சொல்லக் கடவேன் –

நாயகனைப் பிரிந்த நாயகி இரங்கியுரைக்கும் பாசுரம் இது. ஆபத்துக்கு உதவுந் தன்மையும் அடியார்களுடைய விரோதிகளை நிக்ரஹித்தற்கு ஏற்ற கருவிகளையுடையவனாருக்குந் தன்மையும் அடியார்க்கு எளியனாயிருக்குந் தன்மையும் எம்பெருமானுக்கு இயற்கையாகவுள்ளன;
இத்தன்மைகள் தன் பக்கலில் உதவாமையைக் குறித்துப் பராங்குசநாயகி இறங்குகிறானென்க.
அடைக்கலத்தோங்கு கமலத்தலரயன் சென்னியென்னும் முடைக்கதை தூண் முன்னரனுக்கு நீக்கியை” என்றதனால் ஆபத்துக்கு உதவுந் தன்மையும்,-“ஆழிசங்க படைக்கலமேந்தியை” என்றதனால் ஆச்ரித விரோதிகளை நிக்ரஹிப்பதற்கு ஏற்ற கருதியுடைமையும்
“வெண்ணெய்க் கன்றாய்ச்சி வன்தாம்புகளால் படைக்கலந்தானே.– என்றதனால் அடியார்க் கெளிமையும் தெரிவிக்கப்பட்டனவாம்.(என் சொல்லிப் புலம்புவனே.) சிவனுக்குத் துயரந் தீர்க்க ஆயுதமேந்தியுள்ளவனை நோக்கி என் துயரந்தீர்க்கக் கையில் கருவி கொள்ள வேணுமென்று சொல்வேனோ? ஆய்ச்சியர்க்குக் கட்டவு மடிக்கவும் எளியனானவனை நோக்கி எனக்கெளியனாக வேணுமென்று சொல்வேறோ?-யாது சொல்லிக் கூப்பிடுவே னென்கிறான். அந்தோ இத்தன்மைகள் பாவியேன் பக்கலில் உதவக் காணவில்லையே! என இரங்கியவாறு.

ஒரு காலத்திலே பரமசிவன் தன்னைப்போலவே பிரமனும் ஐந்து சிரமுடையனாயிருப்பது பலரும் பார்த்து மயங்குவதற்கு இடமாயிருக்கின்றதெனக் கருதி, அவனது சிரமொன்றைக் கொய்துவிட, அக்கபாலம் அப்படியே அவன் கையில் ஒட்டிக்கொள்ள ‘இதற்கு என்ன செய்வது? என்று கவலைப்பட, தேவர்களும், முனிவர்களும் ‘இப்பாவந்தொலையப் பிச்சை யெடுக்கவேண்டும்” என்றைக்குக் கபாலம் நிறையுமோ அன்றைக்கே இது கையைவிட்டு அகலும் என்று சொல்ல, சிவபிரான் பலகாலம்
பல தலங்களிலுஞ் சென்று பிச்சையேற்றுக் கொண்டே வருந்தித் திரிந்தும் அக்கபாலம் நீங்காதாக,
ஒருநாள் பதரிகாச்ரமத்தை அடைந்து அங்கு எழுந்தருளியுள்ள நாராயணமூர்த்தியை வணங்கி ஏற்றபோது அப்பெருமான் அக்ஷயமென்று பிக்ஷையிட, உடனே அது நிறைந்து கையை விட்டகன்றது என்பது, அயன் சென்னிகலத்து ஊண் அரனுக்கு நீக்கிய கதை.

தாமரைப்பூப் பசிய இலையின் மீது உயர்ந்து விகஸிப்பது போலத் திருநாபித் தாமரை மலர் எம்பெருமானது பசிய திருமேனியின் மீது எழுந்து தோன்றினமை “அடைக்கலத்தோங்கு கமலம்” என்றதனால் விளங்கும்.-இனி, அடைக்கலமென்பதை அரனுக்கு விசேஷணமாக்கி, அடைக்கலமாகப் புகுந்த சிவனுக்கு, என்றும்,-நீக்கி என்பதற்கு விசேஷணமாக்கி ரக்ஷகமாக இருந்து நீக்கினவனென்றும் பொருள் கொள்ளலாம். அன்றி, ‘அடைக்கலத்தோங்கு அயன்’ என் அந்வயித்து (தன் பக்கலிலே) அடைக்கலமாக வளர்கிற பிரமன் என்று உரைப்பாருமுளர்.
அடைக்கலமென்பது ரக்ஷிப்பதற்கு உரிய பொருளையும் ரக்ஷகனையுங் குறிக்கும்
‘கமலத்து அலர்’ என்பதற்கு தாமரைப்பூ எனப்பொருள் கொண்டால், தோன்றின’ என்று வருவித்துக் கொள்ளவேணும். முடை– கெட்டநாற்றம்.-படைக்கலம் – போர்க்கருவி: எம்பெருமானுக்குச் சங்குச் சக்கரங்கள் ஆபரண கோடியிலும் ஆயுத கோடியிலும் அமையும்.-படைக்கலம் ஏந்தி = படையும் கலமுமாக (ஆயுத ஆபரணங்களாக)த் தரித்தவன் என்றலும் பொருந்தும். திருவாழியாழ்வன் ஆயுத மாகலாம்;-திருச்சங்காழ்வான் எங்ஙனே ஆயுதமாகும் வகையென்னில்; ஸ்ரீபஞ்சஜக்யம் தனது பெரு முழக்கத்தால் பகைவரை அஞ்சுவித்து அழித்தலால் ஆயுதவர்க்கத்தின் பாற்படும்.அன்று ஆராய்ச்சி வன்தாம்புகளால் புடைக்க அலந்தானை= வெண்ணெய் திருடின குற்றத்திற்காக யசோதைப் பிராட்டி உரலோடு பிணைத்துத் தாம்பினால் கட்டியடிக்க வருந்திருந்தவனை என்றபடி; வருந்தி நின்றது அடிப்பதனாலுண்டான துன்பம் பொறுக்கமாட்டாமையாலன்று;-திருவாய்ப்பாடி யெங்கும் துருதுருக்கையாய்த் திரிந்து பெண்களையும் தயிர் பால் நெய் வெண்ணெண் முதலியவற்றையும்
கொள்ளைப் பெறாதபடி இங்ஙனே கட்டிப்போட்டு வைத்திருக்கிறாளே யென வருந்தியவாறு பெரிய திருவிழாக்களில் கள்ளப் பயல்களை அரசாங்கச்சேவகர்கள் சிறைபடுத்தி வைத்தாலி, ‘வேண்டினபடி திரிந்து களவு முதலிய செய்யப்பெறாமை நம்மையிப்படி சிறைப்படுதுதிவைப்பதே!’ என்று அப்பயல்கள் வருந்துவது போல.

பட்டர் திருகோட்டியூரி லெழுந்தருளியிருக்கும்போது ஒரு ஸ்வாமி வந்து ‘அடியேனுக்கு ஓருரு திருவிருத்தம் பொருளருளிச் செய்யவேணும்’ என்று பிரார்த்திக்க, ‘நம்பெருமானைப்பிரிந்த துயரத்தினால் எனக்கொன்றும் சொல்லப்போகிறதில்லை;-நஞ்சீயர் பக்கலிலே கேட்டுக்கொள்ளும் என்று சொல்லி, நஞ்சீயர்க்கு நியமிக்க, சீயரும் பொருளருளிச் செய்து வகையில்
இப்பாட்டளவிலே வந்தவாறே “புடைக்க அலந்தானை” என்கிற பாடப்படியே நஞ்சீயர் பொருளுரைக்க,
பட்டம் அதுகேட்டு ‘ஜீயா!” “அலந்தானை” என்ற பாடத்திற்காட்டிலும் “அலர்ந்தானை” என்ற பாடம்
ஆழ்வார் திருவுள்ளத்திற்கு மிகப் பொருந்தும் போரே இன்று தோன்றுகின்றது’ என்றருளிச் செய்தாராம்.
-ஆய்சச்சி அடிக்க அடிக்க முகமலர்ந்தானாம் கண்ணபிரான். (இதனை விவரிப்போம்.)
கண்ணபிரான், வெண்ணெய் களவு செய்கிற தன்னை யசோதைப்பிராட்டி அடிக்கடி தாம்பினால் கட்டி வருத்துகின்றாளென்று வீட்டிலுள்ள கயிறுகளைத் துண்டு துண்டாக அறுத்து வைத்திடுவான்; அவற்றை அவன் ஒன்றோடொன்று முடிபோட்டு ஒரு கயிறுவடிவமாக்கி அதுகொண்டு கண்ணபிரானைக் கட்டுவள்; அப்படி கட்டும்போது தன் உடம்புக்கு எட்டம் போராதபடியான
அக்கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்ட முடியாதபடி எளிதில் தன்னைத் தப்பித்துக்கொள்ள வல்லவனாயினும் தனது ஸௌசீல்யம் ஸௌலப்யம் ஆச்ரித பாரதந்திரியம் முதலிய சீலங்களை வெளியிடுவதற்கென்றே பரத்வநிலையைத் தவிர்த்து மநுஷ்ய ஸஜாதீயனாக அவதரித்திருக்கிற தான் உரலோடு கட்டுண்டு அடியுண்டிருக்கை முதலான இவ்வகைகளால்தான் அக்குணங்களை விளங்கச் செய்து கொள்ள வேணுமென்று கொண்டு, ஒரு சுற்றுக்கும் போராத தாம்பு இரண்டு மூன்று
சுற்றுக்கு போரும்படி உம்பைச் சுருக்கி அமைத்துக் கொண்டு ‘கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்பண்ணிய பெருமாயன்” என்னும்படி அவன்; ‘இங்ஙனே நம்முடையய ஸௌசீல்ய ஸௌல்ப்ய குணங்கள் விளங்கப் பெற்றோமே;-அவதார ப்ரயோஜநம் நன்கு நிறைவேறப் பெற்றதன்றோ’ என்று முகமலர்ச்சியடைந்திடுவன் என்க.-எம்பெருமான் பக்கல் ஈடுபட்டு ஆற்றாமை கொண்ட ஆழ்வார் அவனது திருக்கல்யாண குணங்களையும், திரு நாமங்களையுஞ் சொல்லி முறையிடுதல் இப்பாட்டுக்கு உள்ளுறை பொருள்.-(என்சொல்லிப் புலம்புவனே?) அவனது குணசேஷ்டிதங்களில் குறையொன்றுங் காணாமையால் எனது குறையையே நான் சொல்லக்கடலே னென்பதாம்.

அடைக்கலத் தோங்கு கமலத்தல ரயன் சென்னி என்னும் முடைக்கலத்து ஊண் முன் அரனுக்கு நீக்கியை-பசுத்த இலையாகிற இடத்திலே உயர்ந்த கமலத்திலே விகசிதனாய்த் தோன்றின
ப்ரஹ்மாவினுடைய தலை என்று சொல்லப்பட்ட முடை நாற்றத்தை யுடைய பாத்திரத்தில் ஊணை
சாப உபஹதனான காலத்தில் ஸம்ஹார கர்த்தாவான ருத்ரனுக்குப் போக்கினவனை-(பிஷாண்டர் கோயில் ஹர சாபம் போக்கிய கரம்பனூர் அருகில்)-இலையில் ஓங்கின கமலம் -என்கையாலே
பசுத்த திரு மேனியைக் காட்டுகிறது-அரனுக்கு நீக்கிவை -என்கையாலே ஸ்வ சாப ஸம்ஹாரம் பண்ண மாட்டாதவன் கிடீர் லோக ஸம்ஹாரம் பண்ண இருக்கிறான் என்றபடி-ஆழி சங்கம் படைக்கலம் ஏந்தியை கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் -பெரிய திருவந்தாதி -87-என்றும்
அடங்காரை எரி அழலம் புக வூதி–திருவாய் -4-8-8-என்றும் விரோதி நிரசன பரிகரத்தைக் கை விடாதவனை-படைக்கலம் -ஆயுதம்-(படை-என்று ஆயுதம் என்றும் அவையே கலம்-கலன் -ஆபரணம் என்றுமாம்)-நீக்கி ஏந்தி என்று சொல்லாய் இரண்டாம் வேற்றுமையாய் இருக்கிறது-வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால் புடைக் கலந்தானை-வெண்ணெய்க்காகக் களவு கையோடே அகப்பட்ட அன்று பெற்ற தாயான இடைச்சியானவள் திருமேனியின் மார்த்தவம் பாராதே
சிக்கெனத் தாம்புகள் கைக்கு எட்டியது எல்லாம் எடுத்துத் தன் கோப அநு ரூபமாகப் புடைக்க
அதுக்கு பிரதிகிரியை காணாதே அழுகையும் அஞ்சி நோக்கும் அந்நோக்கும் -பெருமாள் திருமொழி -7-8- என்னும்படி அலமருகிறவனை–எம்மானை என் சொல்லிப் புலம்புவனே – – இந்த அபதானத்தாலே எத்திறம் அபவ்யனானவன் பவ்யனாக வேணும் என்னவோ-அபரிகரனானவன் ஸ பரிகாரனாக வேணும் என்னவோ-எத்தைச் சொல்லிக் கூப்பிடுவது என்கிறார் ஆயிற்று–இது நாயகி புலம்பலுக்கும் ஒக்கும் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு–அடைக்கலத் தோங்கு-சர்வேஸ்வரன் பக்கலிலே போலே யாயிற்று ப்ரஹ்மா இருப்பது நிஷேபம் போலே என்றவிடம் குறை வராதபடி யுணர்ந்து நோக்குகின்ற படியைப் பற்றச் சொன்னது அத்தனை–கமலத்தல ரயன்-அவ்வளவு அன்றிக்கே -ஸர்வேஸ்வரன் பக்கலிலே பிறந்த ஜென்மத்தாலே வந்த ப்ராப்தியை யுடையவன்–சென்னி என்னும் முடைக்கலத்து ஊண் முன் அரனுக்கு நீக்கியை-லோக குருவுமாய் பிதாவுமானவன் தலையை அறுத்துப் பாதகியாய் நின்றான் ஒருவன்
தலை யறுப்புண்டு கிலேசியா நின்றான் ஒருவன் இவருடைய கிலேசத்தையும் போக்கினவன்–அயன் சென்னி என்னும் முடைக்கலம்-ப்ரஹ்ம சிரஸ் என்ற ஒரு நாமத்தை யுடைத்தான முடைக்கலம் ஆயிற்று-பார் ஏறி யுண்ட தலைவாய் -இரண்டாம் திரு -63-என்னும்படி கழுகும் பருந்தும் தொடர்ந்து திரியும்படிக்கு ஈடாக வாயிற்று ஸஞ்சரிப்பது-முடைக்கலத்து ஊண் முன் அரனுக்கு நீக்கியை ஆழி சங்கம் படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால் புடைக் கலந்தானை எம்மானை என் சொல்லிப் புலம்புவனே – –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-அடைக்கலத் தோங்கு கமலத்தலரயன்-கதுப்பும் கருமையும் பசுமையும் அகலமுள்ள இலை உள்ளதும் ஓங்கினதுமான செங்கமலத்தில் உத்பவித்தவன் அவனுடைய–சென்னி என்னும் முடைக்கலத்து ஊண் முன் அரனுக்கு நீக்கியை-அவனுடைய சிரஸ் கபாலமான அதி ஹேய நாற்றமுள்ள பிஷா பாத்திரத்தில் பிஷிக்கும் ருத்ரனுக்கு ஸர்வரும் பார்க்க அவர் முன்னாகவே அந்த ப்ரஹ்ம ஹத்தியைப் போக்கினவனை–ஆழி சங்கம் படைக்கலம் ஏந்தியை-திருக் கைகளிலே திருவாழி திருச்சங்கு முதலான திவ்ய ஆயுதங்களை திவ்ய ஆபரணமாகப் பூ ஏந்தினால் போல் தரித்தவனை-வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால் புடைக் கலந்தானை-வெண்ணெய்க்காகக் களவு கையோடே அகப்பட்ட அன்று பெற்ற தாயே பலவத்தான கண்ணி நுண் சிறுத் தாம்புகளால் கட்ட
உரவிடை யாப்புண்டு அவன் படைக்கப்புடைக்க முக கமல விகசநத்தோடே ஒளி விகஸநத்தை யுள்ளவனை–எம்மானை-இவைகளை எல்லாம் எனக்கு காட்டி என்னை அநந்யார்ஹம் ஆக்கிக் கொண்டவனை–என் சொல்லிப் புலம்புவனே – எத்தைச் சொல்லிப் புலம்ப வல்லேன் நான் என்கிறார் –

தாத்பர்யம்–இதில் சர்வேஸ்வரன் நம்மை ரக்ஷிக்க அவதரித்த போது ஒதுங்கிப் போன தம்மை வெறுத்து பேசுகிறார்-உமக்கு புத்ரன் சரண்யன் -நான்முகன்-ருத்ரனுடைய ப்ரஹ்மஹத்தி போக்கியும்
அங்க ஹீனனான ப்ரஹ்மாவை அதிகாரத்தில் இருந்து தள்ளி வைக்காதே தொடர்ந்தும் தங்களையே ஈஸ்வர் என்று அபிமானம் கொண்ட அவர்களுக்கு ரக்ஷகனாய் ரக்ஷண பரிகரங்களை எப்போதும் கையிலே ஏந்தி வெண்ணெய் உண்டு அபவாதம் பொறாமல் தாயான யசோதை உனது மேல் பரிவினால் கைக்கு எட்டிய தாம்பினால் உன்னை அடிக்க அத்தைத் தப்பித் போக மாட்டாமல் அலர்ந்து இருந்த உன்னை சேவிக்கப் பெறாமல் இருந்தது எனது குற்றமே என்கிறாள்

1-5-வள வேழ் உலகின் பிரவேசம் –

முதல் திருவாய்மொழியில் ‘சர்வேஸ்வரன் சர்வ ஸ்மாத் பரன் ஆகையாலே அவனைப் பற்றுவார்க்கு ஒரு குறை இல்லை,’ என்றார்;
இரண்டாந்திருவாய்மொழியால், அந்த ஆச்ரயணம் தான் புருடோத்தமனைப் பற்றுகிறது ஆகையாலே பலத்தோடே வ்யாப்தம் அல்லது இராது,’ என்றார்;
மூன்றாந்திருவாய்மொழியால், பஜிப்பார்க்காகத் தான் அவதரித்து ஸூலபனாகையாலே பஜிக்கத் தட்டு இல்லை,’ என்றார்;
நான்காந்திருவாய்மொழியால் ஸூலபனானவன் ஆனவன் தானே -அபராத சஹனாகையாலே பலத்தோடே வ்யாப்தம் அல்லது இராது ,’ என்றார்;
அயோக்ய அநுஸந்தானம் ‘தம் தாழ்வினை நினைந்து அகலுவாரையும் தன் செல்லாமையைக் காட்டிப் பொருந்த விட்டுக் கொள்ளும் சீலவான்,’ என்கிறார், இத்திருவாய்மொழியால்.

கீழ் கலங்கித் தூதுவிட்ட இடம்-ப்ரேம- அன்பின் காரியம்; இங்கு அகலப் பார்க்கிற இடம் ஞான காரியம்.அகலுவான் என்?’ என்னில்,- சேஷிக்கு – தலைவனுக்கு அதிசயத்தைத் தேடுமவர்கள் தம் தாம் விநாசத்தை அழிவினைப் பாரார்கள் அன்றே? -நான், நல்லார் தீயார் என்று நிரூபணம் பண்ணாதே எல்லார் தலையிலும் என் காலை வைத்ததைக் கண்டீரே,’
எனத் தான் திருவுலகு அளந்தருளின எளிமையைக்காட்ட,-ஒரு குணாதிக்யமோ வேண்டுவது ‘நம்மால் வரும் மேன்மையும் இவனுக்கு வேண்டா,’ என்று பின்னையும் அகலப்புக,-உம்மால் வரும் மேன்மையேயன்றோ நீர் வேண்டாதது? உம்மால் வரும் நான்தான் வேண்டுமோ, வேண்டாவோ?
நீர் தாழ்ந்தவர் என்று அகலுமதிலும் சேர்கிறது, திருவாய்ப்பாடியில் வெண்ணெயினைப் போன்று எனக்குத் தாரகங்காணும்;
இனி, நீர் அகலில், திருவாய்ப்பாடியில் வெண்ணெய் விலக்கினார் புக்க உலகம் புகுதல் திண்ணம்;
நீர் அகலுமது என்னுடைய இருப்புக்குக் கேடு-சத்தா ஹானி ,’ என்று கூறி, பின்னர்
மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் ‘நட்பு உணர்ச்சியோடு வந்து சேர்ந்த இந்த விபீடணன் -போட்கன்- வஞ்சனையுள்ளவன் ஆகவுமாம்;
நான் இவனை விடில் உளேன் ஆகேன்,’ என்று சேர்த்துக் கொண்டாற்போலவும்,கரிஷ்யே வசனம் தவ-என்று நீ கூறுகின்ற இச்செயலை நான் செய்கிறேன் என்று சொல்லப் பண்ணினாற்போலவும்,
வருந்தித் தம்மை இசை வித்து, சேர்தற்கு அவன் தான் விரும்பியவாறே -சம்ச்லேஷ உன்முகனான படியே ஸம்ஸ்லேஷித்து சேர்த்து- தலைக் கட்டினான்,’ என்கிறார்.-

இப்படி கடக முகத்தால் இவ் வாழ்வார் தம் தசையை அறிவித்த அநந்தரம் -இவர் ஆர்த்தி தீரும்படியாக –
அளவியன்ற ஏழ் உலகத்தவர் பெருமான் கண்ணன் -என்று ப்ரக்ருதமான ப்ரகாரத்திலே ஸ்வாமித்வ ஸுசீல்ய விசிஷ்டானாய்க் கொண்டு அவ்வளவிலே வந்து
சந்நிஹிதனான சர்வேஸ்வரனுடைய நிரவதிக ஸுசீல்யத்தை அருளிச் செய்வதாக தத் உபபாதகமான -1-அவனுடைய ஸர்வேஸ்வரத்வத்தையும்–2-சர்வ
காரணத்வத்தையும் –3-அசேஷ ஜன சம்ச்லேஷத்தையும் -4-விபூதி த்வய நிர்வாஹகத்வத்தையும் –5-ஆஸ்ரித அர்த்த ப்ரவ்ருத்தியையும் —
6-போக்யமான ஸ்வபாவ நாம யோகத்தையும் -7–போக்யதா ப்ரகாசகமான ஸுலபயத்தையும் -8–ஆஸ்ரித விஷய வ்யாமோஹத்தையும் –
9-ஆஸ்ரித உபகார அதிசயத்தையும் -அனுசந்தித்து
இப்படி விலக்ஷணான சர்வேஸ்வரனை அத்யந்த நிக்ருஷ்டரான நாம் அணுகுகை அவ்த்யாவஹம் –
அதிசய ஞான அணுகிலும் அங்குத்தைக்கு மாலின்ய கரம் என்று அகலப் புக
இவரைத் தன் சீலத்தைக் காட்டி ஆகவிடத் தேட ஸமாஹிதராய் அனுபவித்தவர் பின்னையும் அவ்வனுசந்தானத்தாலே அகல தன்னுடைய ஹேய ப்ராதிபட்யத்தையும்
ஆஸ்ரித வ்யாமோஹத்தையும் பிரகாசிப்பித்து ஆக்கவிட்டுக் கொள்ள ஸமாஹிதராய்
தம் பக்கல் ஈஸ்வரனுக்குப் பிறந்த உபகாரகத்வத்தையும் மேலுண்டான பாரிப்பையும் அனுபவித்து ஸந்துஷ்டாராகிறார் –

வள வேழுலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன் பின்னையும்
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய்
இளவேறேழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே
 –1-5-1-

நித்திய சூரிகட்கு -அனுபாவ்யனானவனை -அனுபவிக்கப்படும் பொருளானவனை, 
மனம் வாக்குக் காயங்களால் தூஷித்தேன் ’ என்கிறார்.-‘வானோர் இறையைக் கள்வா என்பன்’ என்று கூற நினைத்தவர், தொடங்கின வாக்கியம் முடிப்பதற்கு முன்னே தம்மை நினைத்து,  ‘அருவினையேன்’ என்கிறார்.-அருவினை’ என்னலாமோ?’ எனின்,
‘பாபம் என்பது, அநிஷ்டாவஹம் -தமக்கு விருப்பம் இல்லாததைக் கொடுப்பது’ என்று இருக்குமவர் ஆகையாலே, இறைவனை விட்டு அகன்று நீங்கியிருத்தல் தமக்கு விருப்பமாயினும் அதனைச் செய்ய ஒட்டாது தடுக்கின்றமையின் அன்பினை ‘அருவினை’ என்கிறார்.‘களவேழ்’ என்பதற்குக் ‘களவிலே வேட்கையுடையனாய்-அபி நிவிஷ்டனாய்- ஊற்றமுடையனாய்’ என்று கூறலும் ஆம்

இளஏறு ஏழும் தழுவிய – ம்ருத்யு சமமாய் -யமனுக்கு ஒத்தனவாக இருந்துள்ள இடபங்கள் ஏழனையும் ஊட்டியாக ஒருக்காலே தழுவினான். பின்னர் அவளை அடைதலால், அவள் முலையிலே அணைந்தது போன்று இருக்கையாலே  ‘தழுவிய’  என்கிறார்.
எந்தாய் என்பன் – ஏழ் எருதுகளையும் அடர்த்த செயலுக்குத் தோற்று, ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டி சொல்லும் பாசுரத்தையும் சொன்னேன்.
யுக்தி மாத்ரமேயோ சொன்ன அளவேயோ!-நினைந்து நெஞ்சாலும் தூஷித்தேன் – நிந்தித்தேன்.
அவ்வளவேயோ நைந்தே – பிறர் அறியும்படி சிதிலனாய்-காயிகத்தாலும் உடலாலும்-தூஷித்தேன் – நிந்தித்தேன்.

‘அயர்வறும் அமரர்கள் அதிபதி’ என்றேன்;-‘எத்திறம்’ என்றேன்;-பிராட்டிமார் நிலையை ப்ராப்தனாய் – அடைந்து தூது விட்டேன்’ என்று, அவற்றுக்கு அநு தபிக்கிறார் வருந்துகிறார் என்று பொருள் கூறலும்

—————

நினைந்து நைந்து உள்கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால்
நினைந்த வெல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே
மனம் செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ மாயோனே
 –1-5-2-

நெஞ்சால் நினைந்தும், வாயால் பேசியும், உடலால் நைந்தும், -தப்பச் செய்தேன் ’ என்றார் கீழ் பாசுரத்தில்;-ப்ரேமார்த்த சித்தரான -அன்பினால் நனைந்த மனத்தையுடைய ப்ரஹ்மாதிகள் அன்றோ அதுதான் சொல்லப் பெறுவர்!-தப்பச் செய்தேன் ‘ என்ற இடம் தப்பச் செய்தேன் என்கிறார் இப் பாசுரத்தில்;

அவன் இவை கொண்டு காரியங் கொள்ளுமதிலும் ‘சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி’ என்னுமாறு போன்று ‘அவனுக்கு என்று தரிக்குமதுவே’ இவர்களுக்குப் பேறாக இருக்குமாதலானும்,-பாவ பந்தம் இரண்டு தலைக்கும் உண்டு ஆதலின்,
அவன் தானும் இவை கொண்டு காரியங் கொள்ளுமதிலும் இவர்கள் தரித்துக் கொண்டு நிற்கக் காணுமதனையே பேறாக நினைத்திருப்பனாதலானும்  ‘ஏந்தி வணங்கினால்’ என்கிறார்.

நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் – தன் திருவுள்ளத்தால் விஷயீகரிக்கப்பட்ட எல்லாப் பொருள்கட்கும் காரணமாய். ‘மேல்  மனம் செய் ஞானம்’ என்று  சங்கல்ப ரூப ஞானத்தை அருளிச் செய்வதனால், ஈண்டு,  ‘நினைந்த’என்பறதற்குக் கருத்து என்?’ என்னில், காரியமாக வேறுபட்டு விரிந்த தேவர்கள் முதலான எல்லாப் பொருள்களும் அழித்து  ‘ஸதேவ’ என்று கூறும்படி இருந்த அன்று, புத்திரர் பௌத்திரர் முதலானவர்களோடு வாழ்ந்தவன் அவர்களை இழந்து தனியன் ஆயின் தன் தனிமையை நினைந்து வெறுக்குமாறு போலவும், வேறு தேசத்தை அடைந்திருக்கிற புத்திரனைத் தாய் தந்தையர்கள் நினைக்குமாறு போலவும், இவற்றினுடைய இழவை நினைப்பதொரு நினைவு உண்டு; அதனை அருளிச் செய்கிறார்.

————-

மாயோனிகளாய் நடை கற்ற வானோர் பலரும் முனிவரும்
நீ யோனிகளைப் படை என்று நிறை நான்முகனைப் படைத்தவன்
சேயோன் எல்லா வறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால்
தாயோன் எல்லா எவ்வுயிர்க்கு தாயோன் தான் ஓர் ஓருவனே 
–1-5-3-

‘நீர் நம்முடைய மேன்மையைப் பார்த்து அங்ஙனம் நெகிழப் போகாதே, நாம் தாழ நின்று எல்லாரோடும் பொருந்தும் சீல குணத்தையும் ஒரு கால் பாரீர்,’ என்று திரு உலகு அளந்தருளின சீல குணத்தை காட்டிக் கொடுக்க,
அதனை நினைந்து அகல மாட்டாதே, அணுகவுமாட்டாதே, நடுவே நின்று,அணாவாய்த்துக் காலம் கழிக்கிறார்.
‘அவனை ஒழிய அப்படிக் காலம் கழிக்க வல்லரோ?’ என்னில், 
சீர் கலந்த சொல் நினைந்து போக்கும் போது போக்க வல்லரே; சீல குண அநுசந்தானத்தால் போக்கலாமன்றே?

நாய்ச்சிமார் தொடும் போதும் பூத் தொடுமாறு போன்று கூசித் தொடும் திருவடிகளைக் கொண்டு அன்றே காடும் ஓடையும் அளந்து கொண்டான்!’ என்று ஆச்சரியப்படுகிறார்.-கடுநடை யிட்டு ஓடுகிறவர் இவன் சீல குணத்தை நினைந்து கால் தாழ்க்கிறார்-அசேஷ ஜன சம்ஸ்லேஷ ரூபமான லோக விக்ரமண ஸ்வ பாவத்தை ஈஸ்வரன் காட்டக் கண்டு விஸ்மிதராகிறார் –.தான் ஓர் ஓருவனே-இது ஒரு பிரகாரமே-மேன்மைக்கு ஒப்பு இல்லாதா போலே நீர்மைக்கும் அவதி இன்றிக்கே இருக்கிறபடி என் -என்று விஸ்மிதர் ஆகிறார் –ப்ரீதி அதிசயத்தாலே –ஒருவனே தானோர் ஒருவன் –என்று அவனைக் கொண்டாடுகிறார் –

—————–

தானோர் உருவே தனிவித்தாய்த் தன்னில் மூவர் முதலாய
வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய்
தானேர் பெரு நீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண் வளரும்
வானோர் பெருமான் மா மாயன் வைகுந்தன் எம்பெருமானே –
1-5-4-

இனி, ‘நான் அல்லேன்’ என்னிலும், தன்னுடைய சௌசீல்ய குணத்தால் என்னை விடான்,’ என்று – ஸமாஹிதராகிறார்- ‘தான் ஓர் தனி’ என்னும் மூன்று பதங்கள் -அழகிய த்ரிவித மூன்று காரணமும் தானேயாகி’ என்றபடி.

தன்னின் மூவர் முதலாய-தன்னில் -என்றது தன் பக்கலிலே என்ற படியாய் –
தன் சங்கல்ப ஞான ரூப ஞானத்தால் சேந்த்ர-என்று இந்திரனையும் கூட்டி –
பிரமன் சிவன் இந்திரன் ஆகிய மூவர் முதலாய – என்று கூறலும் ஆம்.

நெடு நாள் தன் வாசி அறியாதே போந்த எனக்கு அறிவைத் தந்து தன்னை உள்ளபடி அறிவித்தவன், தான் தந்த அறிவைக் கொண்டு நான் அகன்று போகப் புக்கால்,
அவன் விட்டு ஆறியிருப்பனோ என்பார்,‘எம்பெருமானே’ என்கிறார்.-இத்தலை இறாயா நிற்க -தன் பேறாகச் சேர விட்டுக் கொள்ளுமவன் இறே ஸ்வாமி யானவன் –இந்த ஸுசீல்யமானது அத்யந்த நிஹீனனான என்னோடே ஸம்ஸ்லேஷியா விடில் அவனுக்கு சித்தியாது -ஆதலால் ஸுசீல்ய குண சித்யர்த்தமாக இனி அவனுக்கு ஆத்மாந்தமாக சகல சேஷ வ்ருத்தியும் பண்ணுவேன் -என்கிறார் –

———-

மானேய் நோக்கி மடவாளை மார்பில் கொண்ட மாதவா
கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறிந்தாய் கோவிந்தா
வானார் சோதி மணி வண்ணா மதுசூதா நீ யருளாய் உன்
தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு வினையேனே 
–1-5-5-

இவ்வளவிலே முகம் காட்டில் பழையபடியே அகலும் -அவர் தாமே அர்த்திக்கும் தனையும் முகம் காட்டக் கடவோம் அல்லோம் -என்று அகல நிற்க -உன்னைச் சேருமாறு அருளாய் என்கிறார் –

தீம்பு சேர்வது கிருஷ்ணனுக்கே ஆகையாலே  ‘போம்பழி எல்லாம் அமணன் தலையோடே’ என்னுமாறு போன்று,கிருஷ்ணன் தலையிலே ஏறிட்டுச் சொல்லுகிறார்

அருளாய் சேருமாறு வினையேன் – கலத்தில் இட்ட சோற்றை விலக்குவாரைப் போன்று, நீ வந்து கிட்டக் கொள்ள அகலுகைக்கு அடியான பாவத்தைப் பண்ணின நான் சேருமாறு அருள வேண்டும்.-தாம் இசைந்த பின்பும் கிடையாமையாலே ‘வினையேன்’ என்கிறார்.

இத்தால் -1–ப்ரார்த்த நீயனுடைய நித்ய புருஷகார யோகத்தையும் – -2-ஆஸ்ரித வக்ரதையைக் கழிக்கும் ஆர்ஜவ ஆபாதகத்வத்தையும் -3-க்ஷண அபி நிவேசத்தையும்
-4-ப்ராப்யமான தேச விக்ரஹ வை லக்ஷண்யத்தையும் -5-பிரதிபந்தக நிவர்த்ததையும் –சொல்லிற்று ஆயிற்று –

————-

வினையேன் வினை தீர் மருந்தானாய் விண்ணோர் தலைவா கேசவா
மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா
சினை யேய் தழைய மரா மரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா
இனையாய் இனைய பெயரினாய் என்று நைவன் அடியேனே –
1-5-6-

இவர்-ஆபிமுக்யம் – எதிர்முகம் செய்தவாறே, இறைவன் அல்பம் சிறிது தாழ்த்தான்;
இவர் ‘என்னை’ இழந்தாய்? கிடாய் ’ என்கிறார்.-இவர் அபேஷித்த போதே முகம் காட்டாமையாலே அவனுடைய குண சேஷ்டிதங்கள் ஸ்ம்ருதி விஷயமாய் நலிய சிதிலர் ஆகிறார் –அகல நினைக்கிற இது உள்ளது இவர் ஒருவர்க்குமே யாதலின்‘வினையேன் வினை’என்கிறார்.

இனையாய்- ஏவம்விதமான குண சேஷ்டிதங்கள் -இவ்விதமான குணங்களையும் செயல்களையுமுடையவனே.-இனைய பெயரினாய்– அவற்றிற்கு வாசகங்களான திருப் பெயர்களை உடையவனே.-என்று நைவன் – ‘காண வேண்டும், கேட்க வேண்டும்’ என்ன மாட்டாதே – உருகுகின்றேன். அடியேனே –யார் உடைமை அழிகிறது?
இவ் வுயிர் ஏதேனும் தனக்குத் தானே உரியதாகி அழிகிறதோ, பிறர்க்கு உரிமைப்பட்டு அழிகிறதோ? உடையவர்கள் வேண்டுமாகில் தங்கள்-வஸ்துவை – பொருளை நோக்கிக் கொள்ளுகிறார்கள் என்பார்,அடியேனே’- என்கிறார்,
உன்னால் இரட்சிக்க ஒண்ணாமல் அழிகிறதோ? என்னால் இரட்சிக்கலாய் அழிகிறதோ?

இத்தால் -1-அனுபவ விரோதி நிவர்த்தகமும் –-2-அனுபாவ்ய விபூதி யோகமும் –-3-ஆஸ்ரித சத்தாதி ஹேதத்வமும்–4- தத் விஷய ஸுலப்யாதிகளும் -5-அத்தாலே வந்த உன்மேஷமும்
-6-தத் ஹேதுவான ஸ்ரீ லஷ்மி சம்பந்தமும் -7-விசுவாச ஜனகத்வமும் –-8-தன் நிபந்தந உஜ்ஜ்வல்ய அதிசயமும் –தோற்றுகிறது –

————–

அடியேன் சிறிய ஞானத்தன் அறிதலார்க்கும் அரியானை
கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை
செடியார் ராக்கை யடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கதோர் அயர்வுண்டே 
–1-5-7-

நைவன்’ என்றார்; இவரை நைவிக்க மனம் இல்லாமையாலே வந்து முகங்காட்டினான்;
அவனைப் பார்த்து ‘நம்மால் வரும் குணாதிக்யமும் -குணத்தின் மேன்மையும் -இவனுக்கு வேண்டா,’ என்று அகலுகிறார்.

அடியேன் சிறிய ஞானத்தன் – சம்சாரிகளில் அறிவு கேடர் -சர்வஞ்ஞர் -‘முற்றறிவினர்’ என்னும்படியன்றோ என் அறிவு கேடு!
‘அல்லேன்’ என்று அகலும் இவர், ‘அடியேன்’ என்கிறது, வாசனையாலே.
அன்றிக்கே , ‘அடியேன்’ என்கிறது, அடிமைக்கு இசைந்து அன்று;
ஆத்துமாவிற்கு ஞான ஆனந்தங்களைப் போன்று சேஷத்வத்தை -அடிமையையும் நிரூபமாக நினைந்திருக்கையாலே. நான்’ என்பது போன்று ‘அடியேன்’ என்கிறார் எனலுமாம்.தம்மைச் ‘சிறிய ஞானத்தன்’ என்றும், இறைவனை ‘அறிதல் ஆர்க்கும் அரியானை’ என்றும் அருளிச் செய்கிறார்-கண்ணனை- அறிய அரியனாயிருந்தும் ஆயர்கட்கும் ஆய்ச்சிகட்கும் தன்னை எளியன் ஆக்கி வைத்தவனை.

அவனையே உபாயமாகப் பற்றித் தூறு மண்டின சரீரத்தை அறுத்துக் கொள்ளும் அடியார் உண்டு கேவலர்;-அவர்கள் அடியாரோ?’ என்னில், தலைவனுக்கு அதிசயத்தை விளைக்குமவர்களே அடியார் ஆவர்;-தம்மைப் போன்று கிட்டித் தலைவனுக்குத் தாழ்வினை விளைக்கப் பாராமல், பிறவியாகிற தளையை அறுத்துக் கொண்டு கடக்க நிற்கின்றவர்கள் அவர்கள் ஆதலின், அவர்களையே அடியவர்கள் என்று இருக்கிறார்.கைவல்யாதி ப்ரயோஜனங்களைக் கொண்டு அகன்று போவார்கள் என்ன பாக்யம் பண்ணினாரோ –

அடியேன் காண்பான் அலற்றுவன்- அடியேன்’ என்று அலற்றுவன், காண வேண்டும்’ என்று அலற்றுவன். இதனின் மிக்க ஓர் அயர்வு உண்டே – உண்டியே உடையே என உகந்து ஓடும் இம் மண்டலத்தாரோடு சேர்ந்து திரிந்த -சம்சாரியாக இருந்த -நாளில் அறிவே நன்றாக இருந்தது அன்றே!
‘அது நன்றாயினவாறு என்?’ என்னில், அப்போது கடக்க நின்று பகவத் தத்துவத்தைக் குறி அழியாமை வைத்தேன்; இப்போது அன்றோ நான் கிட்டி அழிக்கப் பார்த்தது! இதனைக் காட்டிலும் அறிவு கேடு உண்டோ?-சம்சார தசையிலே அஜ்ஞ்ஞானம் தன்னை அழிக்குமது இறே இது அவனை அழிக்குமது இறே –

————————

உண்டாய் உலகு ஏழ் முன்னமே யுமிழ்ந்து மாயையால் புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர் உவலை யாக்கை நிலை எய்தி
மண் தான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்காகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண் கரைய நெய்யூண் மருந்தோ மாயோனே
 –1-5-8-

நீர் உம்மைக் கொண்டு அகலுவீராகில், திருவாய்ப்பாடியில் வெண்ணெய் விலக்கினால் புக்க உலகம் புகுவீர்,’ என்றான். அவன் கருத்தைத் தாம் அறிந்தமை தோற்ற அநுபாஷிக்கிறார் இப் பாசுரத்தில்.மாயோனே – ஆஸ்ரித ஸ்பர்சமுள்ள -‘அடியார்கள் தீண்டிய பொருளால் அல்லது தாரகம் இல்லாதபடியான- ஆஸ்ரித வியாமோஹத்தாலே – அடியார்களிடத்துள்ள பெரு மோஹத்தாலே செய்தாய் இத்தனையன்றோ?’ ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனாய்ப் புக்கு ‘வெண்ணெய் அமுது செய்ய’ என்றால் கொடார்கள் அன்றே?-மண்ணை அமுது செய்தது, அதன் சத்தைக்காக;-வெண்ணெய் அமுது செய்தது, உன் சத்தைக்காக.-மண்ணை உண்கிற போது சேஷித்தது உண்டாகில் இறே உமிழ்கிற போதும் சேஷிப்பது-

————

மாயோம் தீய வலவலைப் பெருமா வஞ்சப் பேய் வீய
தூய குழவியாய் விடப்பால் வமுதா வமுது செய்திட்ட
மாயன் வானோர் தனித்தலைவன் மலராள் மைந்தன் எவ்வுயிர்க்கும்
தாயோன் தம்மான் என்னம்மான் அம்மா மூர்த்தியைச் சார்ந்தே 
–1-5-9-

பரிவரான யசோதாதிகள் வெண்ணெய் உனக்கு அம்ருத சமம் -என்னுடைய ஸ்பர்சம் விஷ சமம் -நான் அகலுகையே உக்தம் -என்ன -பூதனை நஞ்சு பாதகம் ஆகாதாப் போலே உம்முடைய தோஷமும் பாதகம் அன்று –பெற்ற தாய் போலே வந்த பேய்ச்சி -என்று போலியும் அமையும் -என்ன-ஆகில் அகல்வேன் அல்லேன் என்று சமாஹிதர் ஆகிறார்-‘பூதனையை முடித்தது போன்று ‘நான் அல்லேன்’ என்று அகலப் புக்க
என் நிர்ப்பந்தத்தைப் போக்கினான்,

என் அம்மான் –mநான் தன்னை அகன்று முடிந்து போகாதபடி நோக்கினவன்.
இனி, ‘நித்திய சூரிகளும் மற்றும் உள்ள எல்லா ஆத்துமாக்களும் ஒரு தட்டும்
நாள் ஒரு தட்டுமாம்படி என் பக்கலிலே விசேடமான திருவருளைச் செய்தவன்’ என்பார், ‘என் அம்மான்’ என்கிறார் எனலுமாம். அம்மா மூர்த்தியைச் சார்ந்து- விலக்ஷணமான திருமேனியை யுடைய அம் மகா புருஷனைக் கிட்டி, ‘கிட்டி மாயோம் – இனி அகன்று மாயக் கடவோம் அல்லோம்; ‘பிரிகை யாவது – விநாசம்’ என்று இருக்கையாலே ‘மாயோம்’ என்கிறார்.-இது, ‘நானும் என்னோடு சம்பந்தமுடையாரும் முடியக் கடவோ மல்லோம்,’ எனப் படர்க்கையை உளப் படுத்திய உளப் பாட்டுப் பன்மை.
இனி, இறைவனை உளப் படுத்தியதாகக் கொண்டு, ‘இரண்டு தலையையும் அழித்துக் கொள்ளக் கடவோம் அல்லோம்’ என்று பொருள் கூறலுமாம்.

ஸ்வதஸ் சர்வஞ்ஞனான – தனக்குத்தானே முற்றறிவனானவனும் ‘தாய்’ என்று பிரமிக்கும்படி தோற்றின பெரிய வஞ்சனை யுடையவளான பூதனை முடியும்படியாக.-எனக்கும் அல்ல -பிறர்க்கும் அல்ல -அவனுக்கே -என்று அவள் அநந்யார்ஹம் ஆக்குகையாலே அம்ருதம் ஆயிற்று –‘பூதனையுடைய விஷம் அமிருதமாம்படி அமுது செய்தவன் தான் யார்?’ என்னில், –வானோர் தனித் தலைவன் – அயர்வு அறும் அமரர்களுக்குத் தனித் தலைவன் ஆனவன்.-மலராள் மைந்தன்-‘தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்று அமரர் ஆட் செய்வார்,’ என்கிறபடியே, -அவர்கள் விரும்பித் தொண்டுகளைச் செய்யப் பெரிய பிராட்டியாரும் தானுமாக இருக்குமவன். மைந்தன் – அவளுக்கு மிடுக்கானவன். இனி, இதற்கு, ‘அவளுடைய சேர்த்தியினாலே நித்தியமான புதிய யௌவனத்தை யுடையவன்’ என்று பொருள் கூறலுமாம்.

————–

சார்ந்த விரு வல்வினைகளும் சரிந்து மாயப் பற்று அறுத்து
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞானச் சுடராகி யகலம் கீழ் மேல் அளவிறந்து
நேர்ந்த யுருவாய் யருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே 
–1-5-10-

இவரை இப்படி இசைவித்து வைத்து, ஒரு புதுமை செய்ய வேண்டாதபடியான பரம பதத்தை
கோடிக்க-அலங்கரிக்கத் தொடங்கினான்.தீர்ந்து – தான்-க்ருதக்ருத்யனானான் – செய்ய வேண்டுவனவற்றை எல்லாம் செய்து முடித்தவனாய்.-இனி, தீர்ந்து என்பதனைத் ‘தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி’ என்று கூட்டி, ‘அல்லேன்’ என்று அகலாதே தனக்கே தீர்ந்து, தன் பக்கலிலே நெஞ்சை வைக்கும்படி திருத்தி என்று பொருள் கூறலும் ஆம்.இறைவன் இவர் பக்கல் கொண்ட அவாவின் மிகுதியால் வீடு திருத்துகையில் விளம்பிக்க, அக்கால நீட்டிப்பிற்குப் பொறாராய் ‘முனியே நான்முகனே முக்கண்ணப்பா’ என்ற திருவாய் மொழி முடிய இறைவன் தமக்குச் செய்த உபகாரத்தைச் சொல்லிக் கூப்பிட்ட கூப்பீடு உலகத்தார்க்கு எல்லாம் பெரியதோர் உபகாரமாய் முடிந்தது)நெடுமால்- இப்படி இருக்கிற நெடுமால் வீடு திருத்துவான் ஆனான். இறைவனுடைய வியாப்தியும் இவரைப் பெற்ற பின்பு – புதுக்கணித்தது -அழகு பெற்றது ஆதலின், ‘நெடுமால் -என்கிறார்.
இனி, ஒருவனைப் பிடிக்க நினைத்து ஊரை வளைவாரைப் போன்று இவரைத் திருத்துகைக்காகப் பரந்திருப்பவனாய் இருந்தான் ஆதலின், ‘நெடுமால்’ என்கிறார்-நெடுமாலே-‘முனியே நான்முகனே’ என்னும் அளவும் அவன் செய்த உபகாரத்தை அருளிச் செய்கிறார். -அவன் தெளிந்து வந்து கொடு போகப் பற்றாமல் கூப்பிடுகிறார் அன்றே நடுவெல்லாம்.என்னைத் திருத்தி -பின்னை எனக்குத் திரு நாட்டையும் தந்து அருளுகைக்காக ஆகுவதே -எம்பெருமானுடைய சர்வஞ்ஞத்வ சர்வசக்திதவ
பரம காருணிகத்வ ஆஸ்ரித வத்சலத்வம் என்ற இப்படி அபர்யந்த குணங்கள் எல்லாம் 
என்கிறார் –

————–

மாலே மாயப் பெருமானே மா மாயனே என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே –
-1-5-11-

பிடி தோறும் நெய் ஒழியச் செல்லாத ஸூகுமாரரைப் போன்று, நின்ற நின்ற நிலைகள் தோறும் இறைவன் திருவருள் ஒழிய நடக்க மாட்டாதவர் ஆதலின், ‘மால் அருளால் மன்னு சடகோபன்’ என்கிறார்.

ஸ்ரீ ஆழ்வான் ஒரு-உருவில் – முறை  ‘ஸ்ரீ பராங்குச நம்பியைப் பாலேய் தமிழர் என்கிறது;
இசைகாரர் என்றது, ஸ்ரீ ஆழ்வார் திருவரங்கப்பெருமாள் அரையரை; 
பத்தர் என்றது, ஸ்ரீ பிள்ளை யுறங்கா வில்லி தாசரை’ என்று பணித்தார். 

ஸ்ரீ ஆளவந்தார் -பாலேய் தமிழர் என்கிறது, ஸ்ரீ முதலாழ்வார்களை;
இசைகாரர் என்கிறது, ஸ்ரீ திருப்பாணாழ்வாரை;
பத்தர் என்கிறது, ஸ்ரீ பெரியாழ்வாரை’ என்று அருளிச் செய்வர்.

ஆக, இயல் அறிவார் இசை யறிவார், பகவானுடைய குணங்களில் ஈடுபட்டு இருப்பார் ஆகிற இவர்கள்,-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -85-மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து –எம்மா வீடு -2-9-

March 27, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

இதில் சரணாகதி அனுஷ்டானம் செய்கிறார்-ஆத்ம நிஷேபம்-ஷட் விதா சரணாகதி-சேஷத்வ ஞானம் -அடியேன் சேஷ பூதன் -திருவடிகளே அடைக்கலம் என்று சமர்ப்பித்து -தேவரீர் ரக்ஷித்து அருள வேணும்
பிரார்த்தனா கர்ப்பமான ஞானம் -மதி சரணாகதி-மாலைப் பொழுது கண்டு தலைவி இரங்குதல் – எம்மா வீடு -2-9-இதன் விவரணம்-அம்மா வடியேன் வேண்டுவது ஈதே –2-9-1-

இருளினுடைய தோற்றரவுக்கு நொந்தாள் ஒரு தலைமகள் வார்த்தை யாதல் –
அன்றிக்கே – இவள் தசையை அனுசந்தித்த திருத் தாயார் வார்த்தை யாதல் –

இப்படி ப்ரலாபித்தவர் தமக்கு அனுபவ யோக்யமான காலம் வந்திருக்க அனுபவம் ஸித்தியாத ஆர்த்தி அதிசயத்தாலே ஆர்த்தி தீருகைக்கு ரக்ஷகனான ஈஸ்வரன் பக்கலிலே ஆத்ம நிக்ஷேபத்தைப் பண்ணிக்
கூப்பிட்ட பிரகாரத்தை மாலை கண்டு வருந்தின தலைவி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்–அவதாரிகை -கையில் அகப்பட்ட மாணிக்கத்தைக் குரங்கானது எறியுமா போலே உதய காலத்தில் இருளாக்கிரகுரங்கால் எறியப்பட்ட மாணிக்கம் போன்ற ஆதித்யன்
அவ்விருளோடே முட்டும்படி ஆணிப்பொன் போல் சுடர் விடு மாலை என்னை நலியா நின்றது
உனக்கே அடிச்சியான ஆத்மாவாய் அடிமைப்பட்ட அடைக்கலமாக என்னை என்று அவன் தத் தத்ப் பலங்களை வெளியிடும் திரு நாமங்களால் அநு நயிக்கும் தலை மகளாய் ஆர்த்தி அதிசயத்தால் புலம்புகிறார் இதில் –

மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து இருளோடு முட்டி
ஆணிப் பொன் அன்ன சுடுர்ப்படுமாலை உலகு அளந்த
மாணிக்கமே என் மரகதமே மற்று ஒப்பாரை இல்லா
ஆணிப் பொன்னே அடியேன் அடி யாவி யடைக்கலமே  
– – -85-மாலைப் பொழுது கண்டு தலைவி வருந்துதல் –

உலகு அளந்த–உலகங்களை அளந்து கொண்ட
மாணிக்கமே–மாணிக்கம்போலச் சிறந்தவனே
என் மரகதமே–மரகதப் பச்சைப் போல் எனக்கு இனியனானவனே!
மற்று ஒப்பாரை இல்லா–தன்னை யொப்பவர் வேறு எவரையும் உடையனாகாத
ஆணிப் பொன்னே–மாற்றுயர்ந்த பொன் போல மதிப்பையும் ஒளியையுமுடையவனே!
மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்த–மாணிக்கத்தால் கருத்தரங்கு வீசியெறியப்பட்டால்
அம் மாணிக்கம் அக்குரங்கின் கையிலே அகப்பட்டு அழிதல் போன்று
ஆணிப் பொன் அன்ன சுடர் இருளொடு முட்டபடும்–மாற்றுயர்ந்த பொன்போன்ற ஒளியை யுடைய
ஸூர்ய மண்டலம் இருளோடு சென்று கிட்டித் தான் மறையப் பெற்ற
மாலை–மாலைப் பொழுதிலே
அடியேன் அடி ஆவி அடக்கலமே-இயல்பில் உனக்கு அடியவளான எனது சொந்தமா உயிர்
உனக்கே அடைக்கலப் பொருளாக ஒப்பிக்கப்பட்டது.

எம்மா வீடும் வேண்டா என் தனக்குன் தாளிணையே
அம்மா அமையும் என ஆய்ந்து உரைத்த -நம்முடைய
வாழ் முதலாம் மாறன் மலர்த் தாளிணை சூடி
கீழ்மை யற்று நெஞ்சே கிளர் –19-பிறர்க்கு அவன் மோஷ பரதன் -என்னுமத்தை உபதேசிக்கிற அளவில்-2-8–முதல்நடுவுஇறுதிஇவர் மோஷத்தை ஸ்லாகித்துக் கொண்டு பேசுகையாலே
இவருக்கு மோஷத்தில் அபேஷையாய் இருந்தது -என்று ஈஸ்வரன் அத்தைக் கொடுக்கப் புக –
தமக்கு உகப்பாகத் தரும் மோஷமும்-அஹங்கார கர்ப்பம் ஆகையாலே அபுருஷார்த்தம் -என்று அத்தை கழித்து – பரமபதஸ்தனாய் ஸூகிக்கவுமாம்-சம்சாரஸ்தனாய் துக்கிக்கவுமாம்-எனக்கு அதில் ஒரு நிர்பந்தம் இல்லை-தேவர்க்கு உறுப்பாம் அதுவே எனக்கு வடிவாம்படி பண்ணி அருள வேணும்
என்று ஸ்வ பிராப்யத்தை நிஷ்கர்ஷிக்கிற எம்மா வீட்டில் அர்த்தத்தை – எம்மா வீடும் வேண்டா –-என்று துடங்கி அருளிச் செய்கிறார்–கீழ்மை யற்று நெஞ்சே கிளர் –தத் இதர சேவை ஆகிற தாழ்ச்சி அற்று-தேவு மற்று அறியேன் -என்று அவனையும் தவிர்க்கிறார் -(தாழ்ச்சி எங்கும் தவிர்ந்து நின் தாள் இணை கீழ் வாழ்ச்சி என்றார் ஆழ்வார் -இவர் அதையும் தவிர்ந்து –கீழ்மை அற்று ஆழ்வார் மலர் தாளிணை சூடி இருப்பதே நம்முடைய வாழ் முதல் என்று அருளிச் செய்கிறார் )ஆழ்வார் சேவையாலே சத்தை பெற்று மனசே மயங்காமல் மேன்மேல் எனக் கிளர்ந்து போரு –

மாணிக்கம் கொண்டு குரங்கை விரட்ட-சூர்யன் மாணிக்கம் -மாலை குரங்கு – வீண் ஆகும் த்ருஷ்டாந்தம்-தூங்க முடியாத இரவு —மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து –குரங்கானது மாணிக்கத்தைக் கொண்டு எறியுமா போலே —பெரு விலயனான மாணிக்கத்தை குரங்கானது -அதன் சீர்மையை அறியாதே எடுத்து –கார்யம் கொள்ள ஒண்ணாதார் இடத்தே மங்கிப் போம்படி எறியுமா போலே -என்னுதல் –அன்றிக்கே –குரங்கு என்று விலங்குதலாய் –அத்தாலும் எடுத்து விநியோகம் கொள்ள-ஒண்ணாதார் இடத்தே-மங்கிப் போம்படி எறியுமா போலே என்னுதல் –-அப்போது எறிவாரை அழைத்து கொள்ளும் இத்தனை –(அசாத்திய சாத்தியமான இடத்தில் எடுக்க முடியாத இடத்தில் எறிந்தால் போல் என்ற-அர்த்தம் கொண்டு குரங்கு என்று எறிவாரை -கர்த்தாவை -அத்யாஹாரம் பண்ணிக் கொள்ள வேண்டுமே)இருளோடு -இத்யாதி –இருளோடு வந்து -சந்தித்து -மாற்றற்ற செம்பொன் போலே ஸ்லாக்யமான ஆதித்யனை ஆயிற்று முடித்துக் கொண்டு மாலை வந்து தோற்றிற்று – குரங்கு கையில் புக்கு மாணிக்கம் நசித்தால் போல் ஆயிற்று – ராத்ரிக்கு அவயவமான இருளின் கையிலே புக்கு ஆதித்யன் மாய்ந்தபடி –இனி வெறும் மாலையே யாய்ச் சொல்லும் இத்தனை ஆகாதே என்று கை வாங்கி இருக்க ஒண்ணாதபடி ஆயிற்று அவன் படி –உலகு அளந்த மாணிக்கமே –
ரஷகரான இந்த்ராதிகளும் (இந்திரன் கிழக்கு திக்பலர் தானே )தங்களால் முடியாமை கை வாங்கின-வன்றும் –தான் வந்து கைக் கொண்டு -தாமச பிரக்ருதிகளை( மஹா பலியை -நமுசி பிரக்ருதிகளை )தள்ளி நோக்குமவன் இறே –காடும் மலையுமான ஒரு விபூதியை அளந்து கொண்டது ஒரு மாணிக்கத்தை இட்டு காணும் –மாணிக்கமே –பெரு விலையனாய் இருக்கை -தன்னைப் பாராதே அழிய மாறின படி –என் மரகதமே – உடம்பிலே அணைத்தால் ஸ்ரமஹரமாய் இருக்கை-மற்று ஒப்பாரை இல்லா ஆணிப் பொன்னே –முதலிலே ஸ்லாக்யமாய்-உபமான ராஹித்யத்வத்துக்கு- மாற்று அற்ற பொன் போலே இருக்கிறவனே –அடியேன்- போக்யதையில் தோற்று- அடியேன் -என்கிறார் –அடியாவி –
தலை மகள் வார்த்தை யான போது –உனக்கு சேஷ பூதமான என்னுடைய ஆத்ம வஸ்து -என்கை –ஆத்ம சமர்ப்பணம் பண்ணுகையும்  மிகையாம்படி இறே -இவனுக்கு அத்யந்த சேஷமாய் இருக்கிறபடி –
பிரமித்த போது இறே சமர்ப்பிக்கலாவது –சமர்ப்பித்த வநந்தர ஷணம்  -என்னத்தை எவனுக்கு கொடுத்தேன் -என்று நினைக்க ஒண்ணாதபடி தன்னோடு  தான் தொற்று அற்று இறே-இருப்பது –அதவா-கிந்து சமர்ப்பயாமி தே -(ஸ்தோத்ர ரத்னம் )-உற்று எண்ணில் அதுவும் மற்று ஆங்கு அவன் தன்னது -(திருவாய் மொழி )என்னக் கடவது இறே –ஆழ்வான்-திருக்கோட்டியூர் நம்பி பாடு நின்றும் வந்த அனந்தரத்தில்-பிள்ளைப் பிள்ளாய் -என்னுள்ளான் என்ன – வேண்டும் ஸத்தாநே –ஆழ்வார் -அடியேன் உள்ளான் -என்றபடி-கண்டாயே -என்று பணித்தார் –பிள்ளைப் பிள்ளாய் -என்று ஆழ்வானைக் குறித்து நம்பி அருளிச் செய்தார் என்னவுமாம் –அன்றிக்கே-ஆழ்வான் தம்முடைய சிஷ்யரான பிள்ளை பிள்ளையைக் குறித்து அருளிச் செய்தார் -என்னவுமாம் –அடியேன் அடி யாவி –
பெண் பிள்ளை ஆவி என்னவுமாம் தாயார் வார்த்தையாக –

காலை அரும்பி பகல் எல்லாம் போதாகி மாலை மலரும் இந்நோய்–திருக்குறள் -ஆற்றாமை மிக்கு தலைவி தலைவனை உனக்கே என் உயிர் தஞ்சம் -நீயே சடக்கென வந்து அருள வேணும் -என்கிறாள்
அடியேன் அடி யாவி -திருத் தாயார் வார்த்தை என்பற்கு என் அடிமையான மகள்-ஆவி -உயிர் போலே அருமையான பெண்-அடியேனுடையாவி -பாட பேதம் –ஒருவரால் எறிய பட்டு குரங்கு மேல் விழுந்த மாணிக்கம் அதன் கையில் அகப்பட்டு அழிந்து திரும்ப மாட்டாது போலே இருளை அளிக்க அதன் மேல் விழுந்த சூ ரியான் மீலாது இரவே யாக நீண்டு போனதே –சூர்ய மண்டலம் -மாணிக்கம் -இருள் -குரங்கு மாணிக்கம் -செந்நிறமான -கரு மாணிக்கம் அபூத உவமை – இங்கு குரங்கு -இருள் என்பதால் கருங்குரங்கு என்றவாறு-அன்றியே மாணிக்கம் கொண்டு குரங்க எறிந்தால் போலே என்றுமாம் குரங்க-என்றது வளைதலாய்-உதித்த ஆதித்யன் உயர எழுந்து விழுந்து அஸ்தமித்த கடுமையைச் சொன்னன படி – ஆற்றாமை மிக்கு ஆத்மாவை சமர்ப்பிப்பதும் -மோஹ அந்தகாரம் விவேகம் -மாறி மாறி வர -சமர்ப்பித்தது அவனது அன்றோ சர்வ ரக்ஷகன் நீயே அன்றோ -வந்து காத்து அருள் என்கிறார்

மாலைப்பொழுது கண்டு வருந்திய நாயகி இரங்கி யுரைத்த பாசுரம் இது.
காலையரும்பிப் பகலெல்லாம் போதாகி, மாலை மலுருமிந்தோய்” (திருக்குறள்- பொழுது கண்டிரங்கள்-7). என்கிறபடியே-காம நோய் மிகவும் முதிர்வதற்கு உரிய காலமான மலைப் பொழுதில் ஆற்றாமை மிகுதியால் தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேறு கதியற்றவளாய்த் தலைமகள் தலைமகனைக் கருத்தி ‘உனக்கே என் உயிர் தஞ்சம்;-ஆதலால் நீயே என்னை வந்து காத்தருள வேண்டும்’ என்று முறையிடுகிறாள்.-இப் பாட்டைத் தாய் வார்த்தை யென்பார்க்கு, ‘அடியேனடியாவி’ என்பதற்கு, எனது அடிமையான மகள் என்று பொருள் கொள்ள வேணும்.-ஆவி- உயிர்போல் அருமையான பெண் என்றபடி, ஆகுபெயர்- ‘அடியேனுடையாவி’ என்பதும் பாடமாம்.-ஒருவரால் எறியப்பட்டுக் குரங்கின் மீது சென்று விழுந்த மாணிக்கமான அதன் கையில் அகப்பட்டுத் திரும்பமாட்டாது அழிவதுபோல, இருளை அழித்தற் பொருட்டு அதன் மீது சென்று வீழ்ந்த ஸூர்யன் அவ்விருளிற்பட்டு மீளாது மறைந்திட்டானெனக் கற்பனை கூறுப்பட்டது.-ஸூர்ய மண்டலத்திற்கு மாணிக்கம் உவமை; இவளுக்குக் குரங்கு உவமை. மாணிக்கம் மீளாக்காணாமற் போதற்கு ஸூர்யாஸ்தமநம் உவமை.-மாணிக்கம் நவரத்நங்களுள் ஒன்று; இது செந்நிறமுடையது. நூல்களிற் கருமாணிக்க மென வருதல் அபூதோபமையென்க. இங்கு உபமேயமாகிய இருளின் தன்மையைக் கருதி, குரங்கு, கருங்குரங்கு எனக் கொள்ளப்பட்டது.-இனி, மிகச் சிறந்த மாணிக்கத்தை அதன் சீர்மையை யறியாத குரங்கு எடுத்து எங்கேனும் மங்கிப் போம்படி எறிந்து மாய்த்துப் போக்கி விட்டாற் போல, ஸூர்யனை இருளிலேயெறிந்து போக்கின மாலைப்பொழுது என்றும் உரைக்கலாம்;
இவ்வுரையில், மாலைக்குக் குரங்கும்,ஸூர்யனுக்கு மாணிக்கமும், அதன் வீழ்தற்கு அது எறியப்படுதலும், இருளுக்கு எறியப்படுமிடமும் உவமையாம்.-அழகியமணவாள சீயருரை காண்மின்;-“அன்றியே, மாணிகக்த்தைக் கொண்டு குரங்க எறிந்தாற்போலே யென்றுமாம்.
குரங்கதலாவது வளைதலாய், உதித்த ஆதித்யன் உயர் எழுந்து விழுந்து அஸ்தமித்த கடுமையைச் சொன்னபடி” என்று இவ்வுரைக்கு, குரங்க’ என்னும் செயவெனெச்சம் தொக்க தென்க.-ஆணிப்பொன்- மாற்றறிதற்குக் கொள்ளும் உயர்தரப்பொன்; இதுக்குமேலே மாற்றில்லையென்னும்படியான சிறந்த பொன் என்றும் உரைப்பர்.-மற்று ஒப்பாரையில்லா– தனக்குத்தானே உவமையாவதன்றி ஒருபடியாலும் வேறு நிகரில்லாத என்றபடி, “தனக்குவமையில்லாதான்” என்ற திருக்குறளும் அறிக.-இதனால், தன்னையொழிந்தார் யாவரினும் தான் மேற்பட்டவனென்பது விளங்கும். “ஒத்தார் மிக்காரை யிலையாய மாமாயா” என்றார் திருவாய்மொழியிலும்.

இப்பாட்டுக்கு உள்ளுறை பொருளாவது– எம்பெருமானை யநுபவிப்பதற்கு உரிய காலம் வந்திருக்க, அவ்வநுபவம் கிடையாமையாலாகிய ஆற்றாமையின் மிகுதியால் வருந்திய ஆழ்வார், அவ்வருத்தம் தீரும்பொருட்டு ஸ்வாமயான எம்பெருமானை பக்கலிலே ஸொத்தாகிய தன் உயிரை அடைக்கலமாக ஸமர்ப்பித்தலாம். மிக்க விளக்கமுடைய விவேகம் மோஹாந்தகாரத்திலே விழுந்து அகப்படும்படியான
இந் நிலையில் உன்னைச் சரணமடைந்த இவ்வுயிருக்கு நீயேயன்றோ ரக்ஷகனென்று உரைத்தனரென்க.

மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து இருளோடு முட்டி ஆணிப் பொன் அன்ன சுடுர்ப்படுமாலை
மாற்றுடைய பொன் போலே ஒளியை யுடைய சுடரானது இருளோடே வந்து கிட்டி மாணிக்யத்தைக் கொண்டு குரங்கை எறிந்தால் அக்குரங்கின் கையிலே மாணிக்யம் அகப்பட்டால் போலே படும்படியான மாலையிலே-அன்றியே மாணிக்யத்தைக் கொண்டு குரங்கை எறிந்தால் போலே என்றுமாம்–குரங்குதலாவது வளைதலாய்-உதித்த ஆதித்யன் உயர எழுந்து விழுந்து அஸ்தமித்த கொடுமையைச் சொன்னபடி-உலகு அளந்த மாணிக்கமே-உன்னதான லோகத்தைப் பிறர் கொள்ளாதபடி எல்லை நடந்து
அநந்யார்ஹம் ஆக்கி உடைமை பெற்றவாறே உஜ்ஜ்வல ஸ்வ பாவனானவனே-என் மரகதமே-அக் காலத்தில் வடிவில் பசுமையைக் காட்டி என்னை உனக்கு ஆக்கிக் கொண்டவனே-மற்று ஒப்பாரை இல்லா ஆணிப் பொன்னே-ஸ்வ இதர ஸமஸ்த விலக்ஷணமான ஸ்வரூப ஓவ்ஜ்ஜ்வல்யத்தை யுடையவனே –அடியேன் அடி யாவி-சேஷத்வமே நிரூபகமான என்னுடைய சேஷ பூதமான பிராணனானது-யடைக்கலமே-உன் பக்கலிலே நிஷிப்தம் அன்றோ-ஆதலால் ரக்ஷணீயம் என்றதாயிற்று-இத்தால் மோஹ அந்தகாரத்தின் கையிலே அத் யுஜ்ஜ்வலமாய் உன்னதமான விவேகமானது-(குரங்கு கையில் மாணிக்கம் -இருளின் கையில் சூர்யன்)-விழுந்து அகப்படும் படியான அவஸ்தையில் உன் பக்கலிலே நிஷிப்தமான இவ் வாத்மாவுக்கு நீ யன்றோ ரக்ஷகன் என்று தம்மிலே நொந்து உரைத்தார் ஆயிற்று –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து-குரங்கானது மாணிக்கம் கொண்டு எறியுமா போலே பெரு விலையனான மாணிக்கத்தை குரங்கானது அதின் சீர்மையை அறியாதே
எடுக்க ஒண்ணாத இடத்தே மங்கிப் போம்படி எறியுமாப் போலே-அன்றிக்கே-குரங்கு என்று
விலங்குதலாய் அத்தாலும் எடுத்து விநியோகம் கொள்ள ஒண்ணாத இடத்திலே எறியுமா போலே என்னுதல்-அப்போது எறிவாரை அழைத்துக் கொள்ளுதல்-இருளோடு முட்டி ஆணிப் பொன் அன்ன சுடுர்ப்படுமாலை-இருளோடே வந்து சந்தித்து-மாற்று அற்ற பொன் போலே ஸ்லாக்யமான ஆதித்யனை மறைத்துக் கொடு மாலை வந்து தோற்றிற்று –என் பக்ஷத்தில் உள்ளாரையும் அழியச் செய்து கொண்டாயிற்று இது வந்து தோற்றிற்று-எனக்கு ஆஸ்வாஸ கரனான ஆதித்யனை முடித்துக் கொண்டாயிற்று வந்து தோற்றுகிறது-குரங்கின் கையிலே புக்க மாணிக்கம் நசித்தால் போலே யாயிற்று –ராத்திரிக்கு அவயவமான இருளின் கையில் புக்க ஆதித்யன் மாய்ந்த படி-இனி உருமாயுமாகாதே என்று கை வாங்கி இருக்க ஒண்ணாதபடி யாயிற்று அவன் படிஉலகு அளந்த மாணிக்கமே–ரக்ஷகராக விட்ட இந்த்ராதிகள் தங்களால் முடியாமை கை வாங்கின வன்று தான் வந்து கைக்கொண்டு தாமஸ ப்ரக்ருதிகளைத் தள்ளி நெருக்குமவன் இறே காடும் மலையான இந்த பூமியை அளந்தது ஒரு மாணிக்கத்தை இட்டுக் காணும்–மாணிக்கமே-பெறு விலையன் என்கை-தன்னைப் பாராதே அழிய மாறின படி–என் மரகதமே-உடம்பிலே அணைத்தால் ஸ்ரம ஹரமாய் இருக்கை–மற்று ஒப்பாரை இல்லா ஆணிப் பொன்னே-முதலிலே ஸ்லாக்யமாய்-உபமான ராஹித்யத்துக்கு மாற்று அற்ற பொன் போலே இருக்கிறவனே-அடியேன்-போக்யதையிலே தோற்று அடியேன் என்கிறார்அடி யாவி-தலை மகள் வார்த்தை யானபோது உனக்கு சேஷமான என்னுடைய ஆத்ம வஸ்துவானது என்கை
ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணும் போதும் வஸ்து நிர்தேசம் பண்ணும் போதும் சேஷத்வத்தை இட்டு அல்லது நிரூபிக்க ஒண்ணாத படியாய் இருக்கை–திருத்தாயார் வார்த்தையான போது –அடியேன் அடி-நாய்க்குட்டி என்னுமா போலே–யடைக்கலமே- இருளுக்கு அஞ்சின படியால் சொல்லுகிறாள்
அல்லது ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணுகையும் மிகையாம்படி இறே இவனுக்கு அத்யந்தம் சேஷமாய் இருக்கும் படி–பிரமித்தபோது இறே ஸமர்ப்பிக்கலாவது-ஸமர்ப்பித்த அனந்தர க்ஷணம் என்னதை அவனுக்கு கொடுத்தேன் என்று நினைக்க ஒண்ணாத படி தன்னோடு தனக்குத் தொற்று அற்றபடி இறே இருப்பது-அதவா கிம் து ஸமர்ப்பயாமி தே -ஸ்தோத்ர ரத்னம் -53-உற்று எண்ணில் அதுவும் மற்று அங்கு அவன் தன்னது –திருவாய் -7-9-10-என்னக் கடவது இறே-ஆழ்வான் திருக்கோட்டியூர் நம்பி பாடு நின்றும் வந்த அநந்தரத்திலே-பிள்ளாய் எனது உள்ளத்து என்ன வேண்டும் அவஸ்தையிலே-அடியேன் உள்ளான் -திருவாய் -8-8-2- என்று ஆழ்வார் அருளிச் செய்தபடி கண்டாயே என்று பணித்தான் –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்–மாணிக்கம் கொண்டு-மாணிக்கத்தைக் கைக்கொண்டு-குரங்கு எறிவு ஒத்து-குரங்கு எறிந்தால் போலே–இருளோடு முட்டி-முன்னுற்ற ஆதித்யன் இப்போது இருளோடு முட்டிப் பாயுமவனாய் இரா நின்றான்-ஆணிப் பொன் அன்ன சுடுர்ப்படு மாலை யிலே-இந்த மாலையாலே நான் இங்கனே பாதைப்படுவது உசிதமோ என்று அபிப்ராயம்–மேல் அநவ்சித்ய பிரகடனம் பண்ணுகிறார்
தன் ஸ்வரூப ப்ரகடனத்தால்–உலகு அளந்த மாணிக்கமே-அந்நிய பரரான அசுத்தரையும் திருவடியால் ஆக்ரமித்து உஜ்வலனாய் விளங்குமவனே-என் மரகதமே-நீ என் பரிரம்பண விஷயனான போது என் அதீனனாய் மரகத மாணிக்கம் போன்று என்னை உனக்காக்கிக் கொண்டவனே-மற்று ஒப்பாரை இல்லா ஆணிப் பொன்னே-பூசலாம் பொன்னொளி பெற்ற நிஸ் ஸமாப்யதிக திவ்ய விக்ரஹனே-அடி யாவி-உனக்கு அடிச்சியோம் தொழுத்தையோமாய்-அடியேன்-யாவதாத்ம உபக்ரமமாய் அடிமைப்பட்ட ஆத்மாவே நான்-அதுக்கும் மேலே-உன் யடைக்கலமே-த்வத் ஏக ரக்ஷயை யானவளே நான்
இப்போது உன்னைப்பிரிந்து இந்த மாலையால் நலிவு படவோ –

தாத்பர்யம்-இரவுக்கு அஞ்சின நாயகியாய்க் கொண்டு அடிக்கடி இரவும் இருளும் வந்து என்னை நலியாதபடி ரஷித்து அருள வேணும் என்று நாயகனான சர்வேஸ்வரனைச் சரணம் புகுகிறார்-விவேக சூன்யசமான குரங்கானது மாணிக்கத்தை பாழான இடத்தில் எறியுமா போல் சூர்யன் இருளை விட்டு நலிய தனக்கு ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன் அபரிச்சின்ன மரின்மை உடையவன் சர்வ ஜகத் ஸ்வாமி எனக்கு நாதன் உனக்கு சேஷமாய் உனது கையையே திருவடியையே எதிர்பார்த்து இருக்கும் அடியேனை ரக்ஷித்து அருள வேணும் என்கறார்

2-9-எம்மா வீடு பிரவேசம் –

கீழில் திருவாய் மொழியில் –நலம் அந்தம் இல்லாதோர் நாடு புகுவீர் -என்று இவர் தாமும் அருளிச் செய்து
சர்வேஸ்வரனும் இவருக்கும் இவர் பரிகரத்துக்கும் மோஷம் கொடுப்பானாகப் பாரிக்க -அத்தைக் கண்டு –
தேவரீர் எனக்கு மோஷம் தந்து அருளப் பார்த்ததாகில் இங்கனே தரப் பார்ப்பது –
அதாகிறது -உனக்கு மோஷம் கொள் -என்று எனக்காகத் தருகை அன்றிக்கே –நமக்காகக் கொள் -என்று தேவர்க்கே
யாம் படியாகத் தர வேணும் –என்று -தாம் நினைத்து இருந்தபடியை அவன் திரு முன்பே பிரார்த்திக்கிறார் –

கைங்கர்யம் பண்ணியே பொழுது போக்க வேண்டும் –கைங்கர்யம் தூண்டவே அருளிச் செயல்களும் அவற்றுக்கு வியாக்யானங்களும் –
இந்த புருஷார்த்த நிர்ணயம் இதில் -அத்தை பிரார்த்தித்தது ஒழிவில் காலம் எல்லாம் -3-3–வழு விலா அடிமை செய்ய வேண்டும் என்றாரே –மேல் –
ஸ்ரீ ராம சிகாமணி -நம்பிள்ளைக்கு- தொட்ட இடம் எல்லாம் ஸ்ரீ ராம திருஷ்டாந்தம் கொண்டு விளக்குவாறே –
தொழுது எழு-என்று தாம் நினைத்து இருந்து –தொழுது எழுகையே-அவன் திரு முன்பே அருளிச் செய்கிறார் –
ஸ்வதந்த்ரம் பாரதந்த்ரம் / ச்வார்த்ததா -பரார்த்ததா /அசித்வத் பரதந்த்ரம் -பிறருக்காகவே இருக்கும் -புஷ்பம் சந்தனம்-போலே
அம்மா அடியேன் வேண்டுவது ஈதே -நின் செம்மா பாதம் -தலை மேல் ஒல்லை -என்றே முன் நிலையாக அருளிச் செய்கிறார் –

ஆனால் இது தான் பின்னை இத்தனை நாள் நிஷ்கர்ஷியாது ஒழிவான் என்-என்னில் -அவன் மேன்மேல் என குண அனுபவத்தை
பண்ணுவிக்கையாலே-அதுக்குக் காலம் போந்தது அத்தனை அல்லது இது நிஷ்கர்ஷிக்க அவகாசம் பெற்றிலர் –
ஆனாலும் இப்போது குண அனுபவமே அன்றோ பண்ணுகிறது என்னில் -அது அப்படியே
அவன் தம் பக்கலிலே மேன்மேல் எனப் பண்ணுகிற விருப்பத்தைக் கண்டு -இவனுக்கு இந்த வ்யாமோஹம் முடிய அநுவர்த்திப்பது ஒன்றாய் இருந்தது
நாம் இவனை மீட்டாகிலும் நம்முடைய பிராப்யத்தை நிஷ்கர்ஷிப்போம் என்று பார்த்து
நீ இங்கனே நில் -என்று அவனை நிறுத்தி வைத்து ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுகிறார் –இரண்டாவது சங்கதி –

எம்பார் -இத் திருவாய்மொழி அருளிச் செய்யப் புக்கால் இருந்தவர்களை யார் என்று கேட்டுக் கதவுகளையும் அடைப்பித்து
குஹ்யமாகவும் அருளிச் செய்வது –

ப்ராப்யமாகில் இப்படி அன்றோ இருப்பது இவர் நிஷ்கர்ஷிக்க வேண்டுகிறது என் -என்னில்
சர்வேஸ்வரன் இவ்வாத்மாவுக்கு சேஷியாய்-இவனும் சேஷ பூதனுமாய் -அவனுடைய உபாய பாவமும் நித்தியமாய் இருக்கச் செய்தே
யன்றோ இவனுக்கு இன்று ச்வீகாரம் வேண்டுகிறது –சர்வ முக்தி பிரசங்கம் வாராமைக்காக –
அப்படியே அவன் ஸ்வ தந்த்ரன் ஆகையாலே நினைத்த போது நினைத்த படி கொள்வான் ஒருவன் ஆகையால் பிராப்தி சமயத்தில்
அனுபவம் இருக்கும் படியையும் நிஷ்கர்ஷித்துப் பெற வேணும் இறே-
உத்தரார்த்தத்திலும் இவ்வர்த்தத்தை சொல்லா நின்றது இறே
-த்வயம் தன்னில் நிஷ்கர்ஷிக்க வேண்டுகிறது என் என்னில் பூர்வார்த்தத்தில் சொன்ன சாதனம் சர்வ பல ப்ரதமாகையாலே
-பிரயோஜனாந்த பரராய் சரணம் புகுவாருக்கும் அவற்றைக் கொடுத்து விடுவான் ஒருவன் இறே சர்வேஸ்வரன்
இது தன்னில் ஓடுகிறது என் என்னில்-1- -முக்தனாய் நிரதிசய ஸூக அனுபவத்தை பண்ணவுமாம் -2–ஆத்மா பிராப்தியைப் பெறவுமாம் –
3–ஆத்மா வி நாசமே யாகவுமாம் -4– நரக அனுபவத்தை பண்ணவுமாம் -இவற்றில் எனக்கு ஒரு நிர்பந்தம் இல்லை-(இவை எல்லாம் அதிசய யுக்தி -பிராப்யத்தில் நோக்கு )
உனக்காய் வரும் அன்று இவை இத்தனையும் வரவுமாம் -எனக்காய் வருமன்று இவை இத்தனையும் வேண்டா–
ஆன பின்பு —தேவருக்கு உறுப்பாம் இதுவே எனக்கு வடிவாம் படி பண்ணி அருள வேணும்–என்று ஸ்வ பிராப்யத்தை நிஷ்கர்ஷிக்கிறார் –

சேஷத்வ பலம் -ஸூ பிரயோஜன நிவ்ருத்தி/-பாரதந்த்ர பலம் -ஸூ பிரயத்ன நிவ்ருத்தி –

இப்படிப் பட்ட பரிமாற்றம் தான் லோகத்தில் பரிமாறுகிறது ஓன்று அல்ல -17 லஷம் ஆண்டு களுக்கு முன்பே —
இவ்வாழ்வார் பக்கலிலே காணுதல் -இராமாயண புருஷர்களில் ஸ்ரீ பரத ஆழ்வான்-இளைய பெருமாள்
இவர்கள் பக்கலிலே காணுதல் செய்யும் அத்தனை –
பகவத் ஏக பாரதந்த்ர தயா -சேஷி க்கு அத்யந்த பிரிய -கைங்கர்ய கரணம் மாத்ரம் -ஸ்வார்த்த கர்த்ருத்வ-போக்த்ருத்வ -ரஹித -பாரதந்த்ர்யா அனுகுண குணம் -இப்படிப் பட்ட பரிமாற்றம்-
கைகேயி ராஜன் -என்ற சொல் பொறுக்க மாட்டாமே திரளிலே வந்து கூப்பிட்டான் இறே
தஸ் ஸ்ருத்வா—விலலாப சபா மத்யே -ஒரு திரளாக இருந்து என்னுடைய சேஷத்வத்தை அபஹரிப்பதே -திருட்டுக் கூட்டமாக இருந்து –
தஸ்யபிர் முஷி தே நேவா யுகத மாக் ரந்திதம் ப்ருசம் -என்னும்படி இழந்த வஸ்துவுக்கு தக்கபடியாய் இருக்கும் இறே கூப்பீடும்-
பெருமாளையும் பாரதந்த்ர்யத்தையும் அன்றோ இழந்தான் –
ஜ கர்ஹே ச -சந்த்யாவந்தனத்துக்கு பிற்பாடரை சிஷ்ட கர்ஹை பண்ணுவாரைப் போலே கர்ஹித்தான்
புரோஹிதம் -அழகியதாக இக்குடிக்கு முன்னாடி ஹிதம் பார்த்தாய் –-புரஹா ஹிதம் பஸ்யதி புரோஹிதம் –
சபா மத்யே புரோஹிதம் ஜ கர் ஹே -நியமாதி க்ரமம் ரஹசி போதயேத்-என்கிற நிலையும் பார்த்திலன் –
ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய -ஒருவனுக்கு இரண்டு வஸ்து சேஷமானால் ஒன்றை ஓன்று நிர்வஹிக்குமோ –
ஆனால் ராஜ்ஜியம் தான் என்னை ஆண்டாலோ-தர்மம் வக்தும் இஹ அர்ஹசி–பெருமாள் காடேறப் போனார் -சக்கரவர்த்தி துஞ்சினான்
-நாடு அராஜமாகக் கிடக்க ஒண்ணாது -நின்றாரில் பிரதானர் தலையிலே முடியை வைக்க வேணும் என்று பார்த்தாய் அத்தனை போக்கி
இதுக்கு விஷய பூதனான என்னைப் பார்த்து வார்த்தை சொல்லிற்று இல்லை
கதம் தசரதாஜ்ஜாதோ பவேத் ராஜ்ய அபஹாரக –அவர் பொகட்டுப் போன ராஜ்யத்தை அபஹரித்து அவரைப் பிரித்து
அனந்தரத்திலே முடிந்தவன் வயிற்றிலே பிறந்தேனாம் படி எங்கனே நான் –

பெருமாள் உள்ளப்படி தான் இருப்பதாக -ஆளுவதோ மீளுவதோ எதுவாக இருந்தாலும் -இதுவே ஸ்ரீ பரத ஆழ்வான் நிலை
அசித்வத் பாரதந்த்ரம் படி ராஜ்யமும் என்னை ஆளலாமே –
ஸ்வரூபம் பார்க்க வேண்டாமோ -ராஜ்யம் அபஹரிப்பவன் சக்கரவர்த்தி பிள்ளை யாவாரோ –

இளைய பெருமாள் நில் என்ன குருஷ்வ என்றார் இறே –
அன்வயத்தாலே தரிக்கக் கடவ வஸ்துவை வ்யதிரேகத்து நிற்கச் சொல்லுகையாவது அழிக்கை இறே
குரு என்னாதே குருஷ்வ என்றார் இறே —ஆத்மைநிவ பதம் –
ஆருடைய பிரயோஜனத்துக்கு ஆர் தான் இருக்கிறார்
உம்முடைய இழவுக்கு நீர் பதறாது இருக்கிறது என்
அநு சரம் பண்ணும் பிரகாரத்தை விதிக்கிறார்
நீர் தாம் நில் என்று அருளிச் செய்தது -நான் நிற்கச் சொல்லுகைக்கு யோக்யனாம் படி இருக்கை இறே
உம்முடைய சாயையை நில் -என்று சொல்லிற்று இலீரே -தனி சைதன்யம் -ஜீவன் -என்று நினைத்தது உம் குற்றம் –
சாயையோபாதி உம்மைப் பின் செல்வேனாக வேணும் –
நீரும் நிழலும் வாய்ந்து இருப்பதொரு பிரதேசத்தைப் பார்த்து பர்ண சாலையை அமையும் -என்ன நம் தலையில்
ஸ்வா தந்த்ர்யத்தை வைத்த போதே பெருமாள் நம்மைக் கை விட்டார் -என்று வேறு பட்டார்
ஏவ முக்தஸ்து ராமேண-இதுக்கு முன்பு எல்லாம் நம் குறையாலே இழந்தோம் என்று இருந்தோம் -இவர் தாமே நம் ஸ்வரூபம்
அழியக் கார்யம் பார்த்தார் -இனி நம் ஸ்வரூபம் என்று ஓன்று உண்டோ என்று வேறுபட்டார் –
முன் நம் குறையாலே இழந்தோம் -இப்பொழுது இவராலே இழக்கிறோமே -ஸ்வரூபம் அழிக்கப் பார்க்கிறார் –
லஷ்மண -பாரதந்த்ர்யத்தை நிரூபகமாக உடையவர் -லஷ்மி சம்பன்ன –அடையாளம் கொண்டவர் -பாரதந்த்ர்யமே நிரூபகம்
சமய தாஞ்ஜலி-நாம் நம் ஸ்வரூபத்தை அழித்துக் கொண்ட வன்று நோக்குகை யன்றிக்கே சேஷி தானே அழித்த வன்றும்
ஸ்வரூபத்தை தர வாயிற்று அஞ்சலி -சர்வ அபிமத சாதனம் ஆயிற்று
லீதா சமஷாம்-பண்ணின அஞ்சலிக்கு அந்ய பரதை பாவிக்க ஒண்ணாதவன் சந்நிதியிலே
காகுத்சம் -பிராட்டி சந்நிதியும் மிகையாம் படியான குடிப்பிறப்பை உடையவரை –
ககுஸ்த வம்சே விமுகே -கை கூப்பி வந்தால் ஏமாந்து போகமாட்டானே –
இதம் வசனம் பிரவீத் -இவ்வார்த்தையை சொல்லுவானே என்று கொண்டாடுகிறார் ருஷி
பரவா நஸ்மி -உம்முடைய அஸ்மிதை போலே அல்ல காணும் என்னுடைய அஸ்மிதை
தேவரீர் உடையவனாக உள்ளேன் நான் -உம்முடைய-அஸ்மிதை -ஸ்வா தந்த்ர்யம் வேற -நான் ஸ்வ தந்த்ரன் அல்லேன் என்று சொல்லும் ஸ்வ தாந்த்ரம் உண்டே –

இப்படிக்கொத்த பார தந்த்ர்யத்தை யாயிற்று இவர் ஆசைப்படுகிறது-
இது தான் ஒருவர் அபேஷிக்குமதுவும் அல்ல – அபேஷிப்பார் இல்லாமையாலே நாம் கொடுத்துப் போருமதுவும் அல்ல -17 லஷம் வருஷமாக —
அவ்வழி புல் எழுந்து போயிற்று காணும் -என்று அவன் அநாதரித்து இருக்க –
புருஷன் அர்த்திக்க வருமது இறே புருஷார்த்தம் ஆவது
இப் பேறு இத்தனையும் நாம் பெற்றேனாக வேணும் என்று இவர் அபேஷிக்க-அவனும் தலை துலுக்கப் பெற்றாராய்த் தலைக் கட்டுகிறார்
வகுள பூஷண பாஸ்கரர் உதயம் ஆன பொழுதே இத்தை மீண்டும் கேட்கப் பெற்றான் –

ஒன்பதாம் திருவாயமொழியிலே -ஈசுவரனுடைய மோக்ஷ பிரதத்வத்தை அனுபவித்தவர் -அந்த மோக்ஷ பிரகாரங்கள்
எல்லாவற்றுக்கும் தாத்பர்ய பூமியாவது-பகவத் பாரதந்தர்யமே என்று நிஷ்கர்ஷித்து –
1–அவன் திருவடிகளோட்டை சம்பந்தமே உத்தேச்யம் என்னும் இடத்தையும் –
2–தத் விஷய ஞானத்தில் அபேக்ஷையையும்
3–ஞான அனுரூபமான ஸ்துத் அனுபவத்தில் ஸ்ரத்தையையும்
-4-அனுபாவ்யம் ததேக பாரதந்தர்யம் என்னும் இடத்தையும்
5–அதனுடைய அவிஸ்மரணம் ஆனந்த ஜனகம் என்னும் இடத்தையும்
6—அந்த ஸ்ம்ருதி காரிதமான பாஹ்ய அனுபவ அபேக்ஷையையும்
7—நிரந்தரமான ஆந்திர அனுபவம் அதிருப்தி கரம் என்னும் இடத்தையும்
8—அல்ப கால அனுபவத்திலும் அதிசயித்த அபி நிவேசத்தையும்
9—அனுபாவ்ய விஷயத்தோடு உண்டான அபிருத்தாக் சித்தி சம்பந்தத்தையும்
10—அந்த சம்பந்தத்தைக் குலையாமையில் உண்டான அபேக்ஷையையும்
அருளிச் செய்து -மோக்ஷ பிரதனான ஈஸ்வரன் சந்நிதியில் மோக்ஷ தாத்பர்யத்தை நிஷ்கர்ஷித்து அபேக்ஷித்து அருளுகிறார் –

முதல் பாட்டில் காயிகமான பேற்றை அபேஷித்தார்
இரண்டாம் பாட்டில் மானசமான பேற்றை அபேஷித்தார்
மூன்றாம் பாட்டில் வாசிகமான பேற்றை அபேஷித்தார்
நாலாம் பாட்டில் ஸ்வரூப அனுரூபமான பிராப்யத்தை நிஷ்கர்ஷித்தார்
அஞ்சாம் பாட்டில் நீர் ஆராக இருந்து இப் பேற்றை அபேஷித்தீர் என்ன -நான் ஆராயினும் ஆயிடுக –உன்னை அனுபவித்து மகிழும்படி பண்ணி யருள வேணும் என்றார்
ஆறாம் பாட்டில் த்ரிவித கரணங்களாலும் உன்னை ப்ரீதி புரஸ் சரமாக அனுபவிக்கும் படி பண்ணி யருள வேணும் என்றார் –
ஏழாம் பாட்டில் அப்படிச் சடக்கென செய்யாமையாலே இன்னாதானார்
எட்டாம் பாட்டில் ஸ்வரூப அனுரூபமாக நீ ஷண காலம் என்னோடு அனுபவிக்கப் பெறில் பின்புள்ள காலம் எல்லாம் வேண்டேன் -என்றார்
ஒன்பதாம் பாட்டில் உன்னை அனுபவிக்க இட்டுப் பிறந்து வைத்து அது கிடையாதபடி நானே அனர்த்தத்தை சூழ்த்துக் கொண்டேன் -என்றார்
பத்தாம் பாட்டில் எனக்கு ஒரு நாளும் ஜ்ஞான விசேஷத்தைப் பண்ணித் தந்தோம் இறே என்று என்னை என் கையிலே காட்டித் தராது ஒழிய வேணும் என்றார்
நிகமத்தில் இது கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டினார் –

எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்
கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா வடியேன் வேண்டுவது ஈதே
 –2-9-1-

1-ஆழ்வீர்-மோஷத்தைக் கொள்ளும் என்றான் ஈஸ்வரன் -வேண்டா என்றார் –
2-மா வீடு கிடீர் –விலஷணமான மோஷம் கிடீர் -என்றான் -அதுவும் வேண்டா என்றார் –
3-எம் மா வீடு கிடீர் -ஐஸ்வர்யம் ஆத்ம லாபம் -என்று இருக்க வேண்டா -பரம புருஷார்த்த லஷண மோஷம் என்றான் -அதுவும் எனக்கு வேண்டா என்கிறார்

செப்பம் –செப்போம் –சொல்லோம்-நீ பிரசங்கிக்கக் கடவை யல்ல -நான் பிரதிஷேதிக்கவும் கடவேன் அல்லேன் –கொக்குவாயும் படு கண்ணியும் போலே உன் திருவடிகளும் என் தலையும் சேர வேணும்-

அதுக்கும் இதுக்கும் உள்ள வாசி பாராய்-1- -அங்கு முதலை ஓன்று –எனக்கு முதலை ஐந்து –2–அங்கு ஆயிரம் தேவ சம்வத்சரம் –இங்கு அநாதி காலம் –3–அங்கு ஒரு சிறு குழி –இங்கு பிறவி என்னும் பிறவிக்கடல் 4–அதுக்கு சரீர நாசம் –எனக்கு ஆத்மா நாசம்--5–ஆனையின் காலை யாயிற்று முதலை பற்றிற்று – இங்கு என்னுடைய நெஞ்சை யாயிற்று அருவித் தின்றிடுகிறது

சேஷத்வமே புருஷார்த்தம் -விக்ரகமே உத்தேச்யம் -ரிஷிகள் ஸ்வரூபத்தில் மண்டி -ஆழ்வார்கள் –திண் கழல் இருவர் -மிதுனம் -விட்டாலும் விடாதே

————–

ஈதே யானுன்னைக் கொள்வது எஞ்ஞான்றும் என்
மைதோய் சோதி மணி வண்ண வெந்தாய்
எய்தா நின் கழல் யான் எய்த ஞானக்
கைதா காலக் கழிவு செய்யலே 
–2-9-2-

முதல் பாட்டில் காயிகமான பேற்றை அபேஷித்தார்-இதிலே மானசமான பேற்றை அபேஷிக்கிறார்-

எய்தா நின் கழல் யான் எய்த
1-ஸ்வ யத்னத்தால் ஒருவருக்கும் பிராபிக்க ஒண்ணாத திருவடிகளை -உன்னாலே பேறு-என்று இருக்கிற நான் ப்ராபிக்கும் படி பண்ணி –அது நீர் மயர்வற மதிநலம் பெற்ற அன்றே பெற்றிலீரோ என்ன-ஞானக் கைதா –
2-இது நீ நினைத்து இருக்கும் அளவு போறாது -அது நான் பெற்றேன் என்று தெளியும்படி பண்ண வேணும்-அமிழ்ந்தினார்க்கு கை கொடுத்தால் போலே இருக்கையாலே ஜ்ஞான லாபம் –பிரத்யஷ சமானாகார ஞானம் –-ஜ்ஞானமான கையைத் தா -என்கிறார் -சர்வம் ஞான பிலவம்-தெப்பம் -கீதை –
இங்கே எம்பாருக்கு ஆண்டான் அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது-அதாவது
ஒரு கிணற்றிலே விழுந்தவனுக்கு இரண்டு பேர் கை கொடுத்தால் எடுக்குமவர்களுக்கும் எளியதாய் ஏறுமவனுக்கும் எளிதாய் இருக்கும் இறே -அப்படியே ஆகிறது என்று –
ஞானக் கை தா –3-அங்கன் அன்றிக்கே -அது பின்னை பரபக்தி பர ஞான பரம பக்திகளை உடையார் பெரும் பேறன்றோ என்ன-ஞானக் கை தா – அவற்றையும் தேவரே பிறப்பித்து தேவர் திருவடிகளைப் பெற வேணும் -செய்கிறோம் என்ன ஒண்ணாது -செய்து கொடு நிற்க வேணும் –

————-

செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் என்
கையார் சக்கரக் கண்ண பிரானே
ஐயார் கண்டம் அடைக்கிலும் நின் கழல்
எய்யாது ஏத்த அருளிச் செய் எனக்கே
 –2-9-3-

இதில் வாசிகமான பேற்றை அபேஷிக்கிறார் –உதக்ரந்தி திசையிலும் கூட உன் திருவடிகளை நான் இளையாது ஏத்தும்படி -பிரானே -கிருபை பண்ணி அருள வேணும் -என்கிறார்-பிரார்த்தித்த எனக்கே அருள் செய் -வேண்டுதல் -அதிகாரி ஸ்வபாவம் -உனது அருளே உபாயம் –

———-

எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே
 –2-9-4-

இத் திருவாய் மொழியிலே இவர் நிஷ்கர்ஷித்த பிராப்யமாவது-(முக்கரணங்களால் கைங்கர்யம் )-ஸ்ரக் சந்த நாதிகளோபாதி தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -என்று இறே
இவ்விடத்தில் எம்பார் அருளிச் செய்யும் படி –சர்வேஸ்வரன் த்ரிவித சேதனரையும் ஸ்வரூப அனுரூபமாக அடிமை கொள்ளா நின்றான் -நாமும் இப்படி பெறுவோமே -என்று –
முக்தரும் நித்யரும்-தாங்களும் ஆனந்தித்து அவனையும் ஆனந்திப்பார்கள்-அஹம் அன்னம் -என்று அவனை -ஆனந்திப்பித்து -அவன் உகந்த வழியாலே–அஹம் அந்நாத என்று தாங்களும் ஆனந்திப்பார்கள் – -பத்தர் தாங்கள் ஆனந்தியாதே-அவனை ஆனந்திப்பார்கள் –இன்புறும் இவ்விளையாட்டுடையான் –3-10-7-இறே –

மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் -தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -என்று பிரார்த்திப்பான் என்- திரு உள்ளம் ஆனபடி செய்கிறான் என்று இராதே -என்று பிள்ளை திரு நறையூர் அரையர் எம்பாரைக் கேட்க
அது கேளீர் -முன்பு பிரிந்து அன்று -பின்பு பிரிவுக்கு பிரசங்கம் உண்டாயன்று -இரண்டும் இன்றி இருக்கத் திரு மார்வில் இருக்கச் செய்தே–அகலகில்லேன் அகலகில்லேன் -என்னப் பண்ணுகிறது விஷய ஸ்வபாவம் இறே –-அப்படியே பிராப்ய ருசி பிரார்த்திக்கப் பண்ணுகிறது -என்று அருளிச் செய்தார் –எம்பார்-

எம்மா வீட்டில் எம்மா வீடாய்–ஸ்ரீ  வைஷ்ணவ சர்வ ஸ்வமுமாய் -உபநிஷத் குஹ்யமுமாய் -சர்வேஸ்வரன் பக்கலிலே-அபேஷித்துப் பெறுமதுவாய்-(ராக ப்ராப்தமாய் )-இவ்வாத்மாவுக்கு வகுத்ததுமான பார தந்த்ர்யத்தை– அவன் பக்கலிலே அபேஷிக்கிறார் –-ராக பிராப்தமுமாய் -ஸ்வரூப பிராப்தமாய் இருக்கும் -என்றவாறு -சிஷ்டாசாரமும் மூல பிரமாண சித்தமுமாயும் இருக்குமே -இத்தனையுமாய் இருப்பதால் சாரதமங்களுக்குள் சார தமம்

எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என் மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி தனக்கேயாக- ஏழு சொற்களால் —ஏழு சங்கைகள் தீர்ந்து மகிழ்கிறார் ஆழ்வார் –
முதலிலே ஆட்செய்ய -என்ன வேணும் -ஆட்செய் -என்று -ஸ்வா தந்த்ர்யத்தை வ்யாவர்த்திக்கிறது -பரதன் சங்கை தீர்ந்தது –முதல் சங்கை தீர்ந்தது –
அதில் –எனக்கு ஆட்செய் -என்ன வேணும் -எனக்கு ஆட்செய் -என்று அப்ராப்த விஷயங்களை வ்யாவர்த்திக்கிறது –இரண்டாம் சங்கை தீர்ந்தது –
அதில் எனக்கே ஆட்செய் என்று தனக்கும் எனக்கும் பொதுவான நிலையைத் தவிர்த்து -எனக்கே ஆட்செய் என்ன வேணும் -மூன்றாம் சங்கை தீர்ந்தது
இது தான் ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி நிற்க வேணும் -நான்காம் சங்கை தீர்ந்தது-க்ரியதாமிதி மாம் வத -என்கிறபடியே -இன்னத்தைச் செய் –என்று- ஏவிக் கொள்ள வேணும்
இப்படி ஒரு வார்த்தை அருளிச் செய்து நெடுங்கை நீட்டாக இருக்க ஒண்ணாது
என் மனக்கே வந்து-என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுர வேணும் -ஐந்தாம் சங்கை தீர்ந்தது-புகுந்தாலும் போக்கு வரத்து உண்டாக ஒண்ணாது-இடைவீடின்றி மன்னி -ஸ்த்தாவர பிரதிஷ்டையாக எழுந்து அருளி இருக்க வேணும் – ஆறாம் சங்கை தீர்ந்தது
இருந்து கொள்ளும் கார்யம் என் என்றால்-தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
ஸ்ரக் சந்த நாதிகளோ பாதியாகக் கொள்ள வேணும்-அது சூடுமவனுக்கும் பூசுமவனுக்கும் உறுப்பாய் -மிகுதி கழித்துப் பொகடும் அத்தனை இறே-ஒரு மிதுனமாய் பரிமாறா நின்றால் பிறக்கும் இனிமையும் இரண்டு தலைக்கும் ஒத்து இருக்கும் இறே-அங்கன் என்னுடைய ப்ரீதிக்கு நான் அன்வயித்தேன் ஆக ஒண்ணாது – ஏழாம் சங்கை தீர்ந்தது –

பரமம் சாம்யம் உபைதி -சக ப்ரஹ்மம் -சக சாம்ய -சப்தங்கள் -சாம்யா பத்தி சாஸ்திரங்கள் சொல்ல-இவர் தமக்கு அந்வயம் இல்லாமல் அவனுக்கு மட்டுமே என்கிறது என்-
ஆனந்தத்தில் சாம்யா பத்தி -கைங்கர்யத்தால் வருகிற ஆனந்தம் வேண்டாம் என்கிறார் -அவன் ஆனந்தத்தால் இவருக்கும் ஆனந்தம் –அஹம் அன்னம் அஹம் அந்நாத –சாஸ்திர வாசனையாலே -தானே அருளிச் செய்கிறார் –-ஜகத் வியாபார வர்ஜம்-ஹேது மாறுவதால் ஹர்ஷத்தில் மாறுபாடு வாராதே -பிள்ளை தமப்பன் சம்பாதித்த சொத்தை பிரீதியாக அனுபவிப்பது போலே

பிராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுகிற சமயத்திலே திரு முகத்தைப் பார்க்கில் வ்யவசாயம் குலையும் என்று கவிழ்ந்து இருந்து கையோலை செய்து கொடுக்கிறார்

வங்கி புரத்து நம்பி திருமாளிகையில் மேல் கோட்டையில் ராமானுஜர் கையோலை இன்றும் வைத்து மகிழ்கிறார்கள் –

எனக்கே கண்ணனை-தனக்கேயாக என்ற பின்புத்தை எனக்கே இறே -புருஷார்த்தம் ஆகைக்காக சொல்லுகிறது –பாரதந்த்ர ஞானம் வந்த பின்பு வரும் ஸ்வா தந்த்ர்யம் –
ஞானாதிக்யத்தால் வரும் அஜ்ஞ்ஞானம் —என்னுடைய பந்தும் கழலும் தந்து போ போலே -அடிக் கழஞ்சு பெரும்-தனக்கே என்கிறது -பாரதந்தர்ய காஷ்டாய் -எனக்கே என்கிறது -புருஷார்த்தம் –

சிறப்பே —பல கால் வேண்டா -ஒரு கால் அமையும்-அது தன்னிலும் திருவாசலைத் திருக் காப்புக் கொண்டு ஒருவர் அறியாதபடி சிறப்பாக செய்யவும் அமையும்
சிறப்பாகிறது -ஏற்றம் -அதாவது -புருஷார்த்தம் – ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தத்தைக் கொண்டருள வேணும் -என்றபடி-சிறப்பாவது -1-முக்தியும்-2- சம்பத்தும் –3-நன்றியும்
இவற்றில் நான் உன் பக்கல் கொள்ளும் மோஷம் உனக்கேயாக எனைக் கொள்ளுமதுவே –
உன் பக்கல் நான் கொள்ளும் சம்பத்து என்னவுமாம் –நன்றி என்னவுமாம் –பராங்குசனுக்கு -அவயவ பூதர் ஆனால் நாமும் பெறுவோமே-தேவும் மற்று அறியேன் என்று இருப்பார்கள் யாவரும் அவயவ பூதர்-

———–

சிறப்பில் வீடு ச்வர்க்க நரகம்
இறப்பில் எய்துக எய்தற்க யானும்
பிறப்பில் பல் பிறவிப் பெருமானை
மறப்பு ஓன்று இன்றி என்றும் மகிழ்வேனே
 –2-9-5-

ஏதேனுமாக உண்டான வஸ்து தேவர்க்கே உறுப்பாம் இதுவே வேண்டுவது -என்கிறார் –
வபுராதி ஷூ யோபி கோபி வா –மயா சமர்ப்பிதா –ஜீவன் உனக்கு உரியவன் —ஸ்தோத்ர ரத்னம் -52-என்னுமா போலே –இத்தலையில் உள்ளது எல்லாம் மறக்கலாம் -மறக்க வேண்டும் –அத்தலையில் உள்ளது ஒன்றும் நழுவ ஒண்ணாது –

என்றும் மகிழ்வேனே –மகிழ்ச்சி என்றும் அனுபவம் என்றும் பர்யாயம்-அனுபவிப்பேன் என்கிறார் –தொழுது எழு -பர்யாய சொற்கள் – ஆக -1-இத்தாலே –ஜீவாத்மா -ஸ்வரூபமும் –பெருமான் -என்கையாலே -2- சேஷித்வமும்மறப்பு ஓன்று இன்றி -என்கையாலே -3–ஜ்ஞாத்ருத்வமும்என்றும் -என்கையாலே-3- நித்யத்வமும்மகிழ்வு -என்கையாலே-4- போக்த்ருத்வமும் -போக்யமாக முதலில் இருந்து அவன் போக்கியம் கண்டு நாம் போகிக்க –ஆக -இத்தாலே –ஜீவாத்மா -ஸ்வரூபமும் வெளியிடுகிறார் –

கீழ்ப் பாட்டும் இப்பாட்டும் முன்னிலை யன்றியே ஸ்வ கத அனுசந்தானமாய் இருக்கிறது –

———-

மகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம்
மகிழ் கொள் சோதி மலர்ந்த வம்மானே
மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும்
மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே
 –2-9-6-

தேவாதி பதார்த்தங்களை உண்டாக்கினால் போலே- என்னையும் உன்னை அனுபவிப்பேனாம் படி பண்ண வேணும் -என்கிறாராதல்-
அன்றியே
தேவாதி பதார்த்தங்களுக்கு ஒரோ ஸ்வபாவம் நியதமாம் படி பண்ணினால் போலே எனக்கு உன்னை அனுபவிக்குமது-நியத ஸ்வபாவமாம்படி பண்ணி யருள வேணும் என்கிறாராதல் ஸ்வார்த்ததையே இல்லாத பேற்றைக் கேட்டீர் -லோகத்தில் இப்படி கேட்க வில்லையே அகடிதகடநா-இல்லாதவற்றை உண்டாக்கினாயே -அது போலே இத்தையும் அருளுவாய் –திருதிய விபூதியாக உண்டாக்கி அருளுவாய் –

என்னுடைய ஹிருதயம் உன்னை அனுபவித்து மகிழ்ச்சியை உடைத்தாம் படி பண்ண வேணும்-என்னுடைய வாக் வ்யவஹாரமும் அப்படியேயாகப் பண்ண வேணும்
என்னுடைய வியாபாரமும் ப்ரீதி புரஸ் சரமாக பண்ணும் கைங்கர்யமேயாக வேணும்
நானும் தனியே அனுபவித்து ப்ரீதியை உடையேனாம்படி பண்ண வேணும்
என்றும் இப்படி நான் உன்னை அனுபவிக்கும்படி வர வேணும் –
மகிழ் கொள் ப்ரீதி பூர்வகமாக அனுபவிக்கையே இப்பாட்டில் ஏற்றம் –

———–

வாராய் யுன் திருப்பாத மலர்க்கீழ்
பேராதே நான் வந்தடையும் படி
தாராதாய் உன்னை என்னுள் வைப்பில் என்றும்
ஆராதாய் எனக்கு என்றும் எக்காலே 
–2-9-7-

தம்முடைய அபி நிவேசத்தாலே -எல்லாக் காலமும் என்னை அடிமை கொள்ள வர வேணும் -என்கிறார் –தாராதாய் -என்று இத்தை அவனுக்கு நிரூபகமாகச் சொல்லுகிறார் –மயர்வற மதி நலம் அருளினான் -என்றும் –வீடு திருத்துவான் -என்றும்- கேசவன் தமர் -என்றும் அருளிய இவர்- இன்னாப்பாலே இப்படி அருளிச் செய்கிறார்-அருளாத நீர் -முன்பு சொன்னால் போலே –தாராதாய் -என்று திரு நாமம் சாத்துக்கிறார் –இந்த திரு நாமம் வேண்டாம் என்றால் வாராய்-அந்ய பரோக்தியிலே பிராப்யத்தை நிஷ்கர்ஷிக்கிறார்–வாராய்-வர வேணும்-உன் திருப் பாத மலர்க் கீழே -பேராதே யான் வந்து அடையும்படி -தாராதாய் –என்னுதல்-உன் திருப் பாத மலர்க் கீழே -பேராதே யான் வந்து அடையும்படி-வாராய் -என்னுதல்-

————-

எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று
எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்
மிக்கார் வேத விமலர் விழுங்கும் என்
அக்காரக் கனியே உன்னை யானே 
–2-9-8-

இதுக்கு ஆளவந்தார் அருளிச் செய்யும் படி -இனிக் கூறிட ஒண்ணாத படி சிறு கூறான அத்யல்ப காலத்திலும் நீ ஸ்வாமியான முறை தப்பாதபடி என் ஹிருதயத்திலே வந்து புகரப் பெறில் மற்று எக்காலத்திலும்-இது ஒழிந்த எல்லாக் காலத்திலும்
யாதொன்றும் வேண்டேன் –பின்னை இது தானும் வேண்டேன்-இத்தை எம்பெருமானார் கேட்டருளி-இது பொருள் அழகியது – இவ் வாழ்வாருடைய பிரக்ருதிக்குச் சேராது-நஹி வாசோ தரித்திர -வஸூ தேவர் -ஸ்ரீ கிருஷ்ணன் திருவவதரித்த பின் பல நூறு தானம் செய்வதாக எண்ணினால் போலே –-பெறிலும் பெறாது ஒழியிலும் சிறுகக் கோல மாட்டார் -இங்கனேயாக வேண்டும் என்று அருளிச் செய்வர்
எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் –-எல்லாக் காலத்திலும் எனக்கு சேஷியான நீ -நான் சேஷமான முறை தப்பாமே வந்து என் ஹிருதயத்திலே புகுரப் பெறில்-எக்காலத்திலும்-இக்காலம் எல்லாவற்றிலும்-மற்று யாதொன்றும் வேண்டேன் பின்னை இது ஒழிந்த மற்று ஒன்றையும் வேண்டேன் –

அக்காரக் கனியே — மற்று -எக்காலத்திலும் யான் ஒன்றும் வேண்டேன் -பிள்ளான் நிர்வாகம்
அக்காரக் கனியே மன்னில் -எக்காலத்திலும் யான் உன்னை – மற்று- யாதொன்றும் வேண்டேன்-யத்ர நான்யத்ர பஸ்யதி -அது தவிர -சுருதி சாயலில் -எம்பெருமானார் நிர்வாகம் –

———–

யானே என்னை யறியகிலாதே
யானே என்தனதே என்று இருந்தேன்
யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே 
–2-9-9-

யானே –என் இழவு பகவத் க்ருதமல்ல –அவன் எதிர் சூழல் புக்கு திரியா நிற்க –நானே கிடீர் விநாசத்தைச் சூழ்த்துக் கொண்டேன் –இருந்தேன் –இப்படி நெடுநாள் போருகிற இடத்திலே ஒரு நாள் அனுதாபம் பிறக்கவுமாம் இறே –அது அன்றிக்கே க்ருதக்ருத்யனாய் நிர்ப்பரனாய் –இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே -இருந்தேன்தீ வினையேன் வாளா விருந்தேன் 

எம் வானவர் ஏறே —நித்ய ஸூரிகள் தங்கள் சேஷத்வ அனுரூபமாக அடிமை செய்யா நிற்க அவனும் தன் சேஷித்வத்தால் வந்த உத்கர்ஷம் தோற்ற இருக்கும் இருப்பு-எம் -என்றது-எனக்கும் அவர்களோடு ஒத்த பிராப்தி உண்டாய் இருக்க இழந்து அனர்த்தப் பட்டேன் –

—————

ஏறேல் ஏழும் வென்று ஏர் கொள் இலங்கையை
நீறே செய்த நெடுஞ்சுடர்ச் சோதி
தேறேல் என்னை உன் பொன்னடி சேர்த்து ஒல்லை
வேறே போக எஞ்ஞான்றும் விடலே
 –2-9-10-

அவ்விரோதிகளைப் போக்கினாப் போலே என்னுடைய விரோதிகளையும் போக்க வேணும் –உன் பொன்னடி சேர்த்து ஒல்லைநின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து -என்று தொடங்கின அர்த்தத்தைத் தலைக் கட்டுகிறார்-தலைக்கு கட்டு -தலைக்கட்டினார் -சாடு–நான் இசைந்த போதே சடக்கெனத் திருவடிகளில் திவ்ய ரேகையோபாதி சேர்த்து அருள வேணும்
அவ்வளவும் போராது
வேறே போக எஞ்ஞான்றும் விடலே —-இவனுக்கு எல்லா உத்கர்ஷமும் பண்ணிக் கொடுத்தோம் ஆகில் இனி என் என்ன ஒண்ணாது-நீ எல்லா உயர்த்திகளும் பண்ணித் தந்தாலும் நான் எல்லாத் தாழ்வுகளும் பண்ணிக் கொள்வேன்-என்னை என் கையிலே காட்டித் தராது ஒழிய வேணும் –நெறி காட்டி நீக்காதே —

————–

விடலில் சக்கரத் தண்ணலை மேவல்
விடலில் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
கெடலில் யாயிரத்துள் இவை பத்தும்
கெடலில் வீடு செய்யும் கிளர்வார்க்கே
 –2-9-11-

நாம் ஒருவரையும் விடோம் காணும் -என்று திருக் கையில் திரு வாழியைக் காட்டினான் –ஒரு காலும் விடாத திரு வாழியைக் கையிலே உடைய சர்வேஸ்வரனைக் கவி பாடிற்று-

இப்பத்தும் கிளர்வார்க்கு கெடலில் வீடு செய்யும் வரில் பொகடேன்-கேடில் தேடேன் -என்று இருக்கை யன்றிக்கே ஸ்ரத்ததாநராய் இருப்பார்க்கு -அனர்த்த கந்த ரஹிதமாய்-
அஹங்கார மமகாரங்கள் உடைத்த தன்றிக்கே- தனக்கே யாக வேணும் -என்று இவர் பிரார்த்தபடியே இவ்வாத்மவினுடைய ஸ்வரூப அனுரூபமான பேற்றைத் பண்ணித் தரும் –

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –