ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌-15 –குணாநுபவ பாதம் –(218 – 228)-24-தஸ ஸதக பகவத் குண அநுபவ விவரண அதிகரணம் –(219–228)-ஏழாம்  பகுதி-(225) ஸ்ரீ மணவாள மா முனிகள் –

August 3, 2026

1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 234 முடிய (48)

1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-234 (27)

15 –குணாநுபவ பாதம் –218 – 228 —மொத்தம் —11– ஸூரணைகள் –இரண்டு அதிகரணங்கள்–
23 –தஸ ஸதக கத பகவத் குண தஸக அநு குண அநுபவ உபதேச அதிகரணம் —-218—ஒரே ஸூரணை
24-தஸ ஸதக பகவத் குண அநுபவ விவரண அதிகரணம் –219–228—மொத்தம் –10–ஸூரணைகள்

ஏழாம் பத்தால்-உபாய க்ருத்யதுக்கு உபேஷிதமான விசித்ர சக்தி யோகத்தாலே –யதா ஜ்ஞானம் பிறந்தவர்களுக்கு கொடுக்கக் கடவதான பரம பதத்தைத் தானே உபாயமாக கொடுக்கும் இடத்தில் –திர்யக் ஸ்தாவரங்களுக்கும் சத்ருவுக்கும் உள் படக் கொடுக்க வல்ல சர்வேஸ்வரன் திரு அடிகளை ஷண காலமும் பிரிய ஷமரும் இன்றிக்கே –சாங்க பிரபதனம் பண்ணின -தம்மை-விஷயங்களிலே மூட்டி –தன் பக்கலிலே சேராதபடி -அகற்றுமவையான -இந்திரியங்கள் நடையாடுகிற சம்சாரத்தில் -வைக்கக் கண்டு –விஷண்ணராய்க் கூப்பிட்டு –தம் தசை தாம் பேசமாட்டாதபடி -தளர்ந்து பிறரால்- மீட்க ஒண்ணாதபடி -அபருஹ் சித்தராய் —அவன் தன் விஜயங்களைக் காட்டி இவரைத் தரிப்பிக்க –அந்த தரிப்பும் சம்சாரிகள் இழவைப் பார்த்து நினைத்து சுவறி பழைய வார்த்தியே தலை எடுத்து –அனுபாவ்ய விஷயம் -ஸ்ம்ருதி விஷயமாய் ஒரு முகம் செய்து -நலிய நோவு பட்டு-இப்படி எடுப்பும் சாய்ப்புமாக கிலேசம் செல்லச் செய்தே-உபாய பூதனான உனக்கு ஞான சக்திகளிலே குறைவற்று இருக்க –எனக்கு ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வங்களிலும் ஆர்த்தியிலும் குறை வற்று இருக்க –என்னை சம்சாரத்திலே வைக்கைக்கு அடி என் என்று கேட்க –அவனும் நமக்கும் நம் உடையாருக்கும் இனிதாக திருவாய் மொழி பாடுவிக்க வைத்தோம் காணும் என்று அருளிச் செய்ய –வ்யாசாதிகள் முதல் ஆழ்வார்கள் கவி பாட உண்டாய் இருக்க நம்மைக் கொண்டு கவி பாடுவித்துக் கொள்வதே என்று அவன் பண்ணின உபகாரத்தை அனுசந்தித்து –அதுக்கு பிரதி உபகாரம் தேடிக் காணாமையாலே –இனி இது ஒழிய செய்யலாவது ஓன்று இல்லை-என்று திரு வாறன் விளையிலே-பெரிய பிராட்டியாரோடு எழுந்து அருளி இருக்கிற பேர் ஓலக்கத்திலே –திரு வாய் மொழி கேட்பித்து -அடிமை செய்வதாக மனோரதித்து –அங்கே தம் திரு உள்ளம் பிரவணம் ஆகையாலே -பரம பதத்தில் இருக்கும் இருப்பையும் உபேஷிக்கும் படி ஆனவர் –கீழ் தம்முடைய உபாய நிஷ்டை வெளி இடும்படி புகுர நின்றவர்களுக்கு –திரு வாறன் விளையே -பிராப்யம் –அங்கு எழுந்து அருளி நிற்கிறவனே உபாயம் -என்று தாம் அறுதி இட்ட பிராப்ய பிராபகங்களின் முடிவை தம் முகப்பாலே வெளி இடுகிறார் என்கிறார் —

இப்படி ப்ரபந்நரான இவர்களுடைய அநிஷ்ட நிவருத்தி பூர்வகமாக இஷ்ட ப்ராப்தியை பண்ணுகைக்கீடான ஆஸ்சர்யமான ஜ்ஞாந சக்த்யாதி, யுக்தனாகையாலே யதாஜ்ஞாநம்‌ பிறந்தவர்களுக்குக்‌ கொடுக்கக்‌ கடவதான பரமபதத்தைத்‌ தானே உபாயமாய்க்‌ கொண்டு கொடுக்குமிடத்தில்‌ சத்ருவுக்கும்‌ திர்யக் ஸ்த்தாவரங்களுக்கு முட்படக்‌ கொடுக்க வல்ல ஸர்வ ஸக்தியான ஸர்வேஸ்வரன்‌ தன்‌ திருவடிகளிலே ஸாங்க,ப்ரபதநம்‌ பண்ணின தம்மை விஷயாந்தரங்களிலே மூட்டி நஸிப்பிக்கக்‌ கடவதான இந்த்‌ரியங்கள்‌ நடையாடுகிற ஸம்ஸாரத்திலே வைக்கக்‌ கண்டு விஷண்ணராய்க்‌ கூப்பிட்டு தம்‌ தமை தாம்‌ பேச மாட்டாதே அபஹ்ருத சித்தராக அவன்‌ தன்‌ விஜயத்தைக்‌ காட்டித் தரிப்பிக்க அந்த தரிப்பும்‌ ஸம்ஸாரிகளிழவை நினைத்துச்‌ சுவறிப்‌ பழைய வார்த்தியே தலை யெடுத்து அநுபாவ்ய விஷயம்‌ ஸ்ம்ருதி விஷயமாய்‌ ஒருமுகஞ்செய்து நலிய நோவு பட்டு இப்படி க்லேஸப்படுகிற இவர்‌ உபாய பூதனாயிருக்கிற உனக்கு ஜ்ஞாந சக்திகளில்‌ குறைவற்றிருக்க எனக்கு ஆகிஞ்சந்ய அநந்யகதித்வங்களிலும்‌ ஆர்த்தியிலும்‌ குறைவற்றிருக்க என்னை ஸம்ஸாரத்திலே வைக்கைக் கடியென்‌ என்று அவனைக்‌ கேட்க அவனும்‌ நமக்கும்‌ நம்மடியார்க்கும்‌ திருவாய்மொழி பாடுகைக்கு வைத்தோங்காணும்‌ என்று தான்‌ இவரை வைத்ததுக்கு ஹேதுவை அருளிச் செய்ய முதலாழ்வார்கள்‌ வ்யாஸாதிகள்‌ கவி பாடுகைக்கு உண்டாயிருக்க நம்மைக்‌ கொண்டு கவிபாடுவித்துக்‌ கொள்ளுவதே என்று அவன்‌ பண்ணின உபகாரத்தை அநுஸந்தித்து அதுக்குப்‌ ப்ரத்யுபகாரம்‌ தேடிக்‌ தாணாமையாலே திருவாறன்விளையிலே அவன்‌ பெரிய பிராட்டியாரோடே கூட எழுந்தருளி யிருக்கிற விருப்பிலே திருவாய்மொழி பாடி அடிமை செய்யப்‌ பாரித்து அங்கே தம்முடைய திருவுள்ளம்‌ ப்ரவணமாகையாலே பரமபதத்திலிருப்பை உபேக்ஷிக்கும்படியான ப்ரகாரத்தை உடையரான இவர்‌ கீழ்‌ தம்முடைய உபாயத்தில்‌ நிஷ்டையை வெளியிடும்படி புகுர நின்றவர்களுக்கு அந்த திருவாறன்விளையில்‌ நின்றருளினவனுடைய திருவடிகளே உபாயம்‌ அத்தேஸமே ப்ராப்யமென்று தாமறுதியிட்ட ப்ராப்ய ப்ராபகங்களினுடைய முடிவைத்‌ தம்முடைய திருவுள்ளத்தில்‌ உகப்பாலே வெளியிடுகிறார்‌ என்கிறார்‌.

(1-)எண்ணிலா குணங்கள் பால துன்ப வேறவன் மாயாப் பல் யோகு செய்தி என்னும் ஆச்சர்ய சக்தி யோகத்தாலே(2)-தெளி உற்றவருக்கு ஏற்றரும் வைகுந்தத்தை அருளும்
பிராபகத்வம் புல் பா வெறும்பு பகைவனுக்கும் ஆக்கவல்ல சர்வ சக்தி பாதமகலகில்லா தம்மை(3)-அகற்றும் அவற்றின் நடுவே இருத்தக் கண்டு நலிவான் சுமடு தந்தாய் ஒ வென்று சாதன பலமான ஆக்ரோசத்தோடே பழி இட்டுக் (4)-கங்குலும் பகலும் அடைவற்ற ஆர்த்தியை கோவில் திரு வாசலிலே முறை கெட்ட கேள்வி யாக்கித் (5)-தேற்ற ஒண்ணாதபடி தோற்று ஒன்றி நிற்கப் பண்ணின பல தானம் மற்றும் கற்பார் இழவிலே சுவறி(6)-பழைய தனிமைக் கூப்பீடு தலை எடுத்து -சூழவும் பகை முகம் செய்ய -எடுப்பும் சாய்ப்புமான க்லேசம் நடக்க உபாய அதிகார தோஷம் ஒழிய மாயங்கள் செய்து வைத்த வைசித்திரியைக் கேட்க (7)-ஐச்சமாக இருத்தி உறக் கொண்ட ஸ்வ பர பிரயோஜனத்தை அருளிச் செய்ய -என் சொல்லி எந்நாள் பார் விண்ணீர் இறப்பு எதிர் எதுவும் என்கிற உபகார ஸ்ம்ருதியோடே (8)-தன் சரிதை கேள்வி யாகாமல் இன்பம் பயக்க இருந்த நிலத் தேவர் குழுவிலே பாட்டுக் கேட்பிப்பதாக கான கோஷ்டியையும் – தேவ பிரான் அறிய -மறந்தவர் (9)-சரமோ உபாய பரர் ஆனார்க்கு நீள் நகரமது -துணித்தான் சரண் அன்றி மற்று ஓன்று இலம் உள்ளித் தொழுமின் என்று பிராப்ய சாதன அவதியை ப்ரீதியாலே பிரகாசிப்பிகிறார் ஏழாம் பத்தில் —

1-எண்ணிலா குணங்கள் பால துன்ப வேறவன்-மாயாப் பல் யோகு செய்தி என்னும் ஆச்சர்ய சக்தி யோகத்தாலே–அதாவது–எண்ணிலா பெரு மாயனே-7-1-1–என்று எண்ணிறந்த ஆச்சர்ய குணங்களை உடையவனே என்றும் –குணங்கள் கொண்ட மூர்த்தி யோர் மூவராய் படைத்து அளித்து கெடுக்கும் –7-1-1- என்று சத்வாதி குண அனுகுணமான மூர்த்திகளைக் கொண்டு சிருஷ்டியாதிகளை பண்ணுபவன் என்றும் – பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய் -7-2-7–என்று இடமறிந்து சுக துக்கங்களை கல்பித்தவன் என்றும்–ஊழி தோர் ஊழி உருவும் பேரும் செய்கையும் வேறவன் வையம் காக்கும் -7-3-11-என்று கல்பம் தோறும் ரூப நாம சேஷ்டிதங்களை வேறாக உடையனாய்க் கொண்டு ஜகத்தை ரஷிக்கும் என்றும் – மாய வாமனனே -7-8-7–என்று ஆச்சர்ய சேஷ்டிதங்களை உடையவன் என்றும் –-உள்ளப் பல் யோகு செய்து -7-8-4–என்று திரு உள்ளத்தில் பல ரஷண உபாய சிந்தைகளும் பண்ணி நிற்றி என்றும்
இப்படிப் பல விதமாகச் சொல்லப் பட்ட உபாய க்ருத்யத்துக்கு அபேஷிதமான ஆச்சர்ய சக்தி யோகத்தாலே

(எண்ணிலாக்‌ கு,ணங்கள்‌ இத்யாதி,) ஆஸ்சர்ய யோக,த்தாலே “எண்ணிலாப்‌ பெரு மாயனே’ (திருவாய்மொழி 7-1-1 “குணங்கள்‌ கொண்ட மூர்த்தியோர்‌ மூவராய்ப்‌ படைத்தளித்துக்‌ கெடுக்கும்‌” (திருவாய்மொழி 7-1-11 “பால துன்பங்கள்‌ இன்பங்கள்‌ படைத்தாய்‌” (திருவாய்மொழி 7-2-7) “ஊழிதோறாழி உருவும்‌ பேரும்‌ செய்கையும்‌ வேறவன்‌ வையங்காக்கும்‌” (திருவாய்மொழி 7-3-11) “மாயா வாமனனே’ (திருவாய்மொழி 8-8-1 “உள்ளப் பல் யோகு செய்தி” (திருவாய்மொழி 7-8-4) என்று எண்ணிறந்த கல்யாண குணங்களை யுடையனாய்‌ ஸத்வாதி குண ப்ரசுரமான மூர்த்திகளைக்‌ கொண்டு ஸ்ருஷ்ட்யாதிகளைப்‌ பண்ணுமவனாய்‌ இடமறிந்து ஸுக,துக்கங்களை ஸங்கல்பிக்குமவனாய்‌ ஆஸ்ரித ரக்ஷணார்த்தமாகக்‌ கல்பந்தோறும்‌ திருமேனியும்‌ சேஷ்டிதங்களும்‌ வேறு படக்‌ கொள்ளுமவனுமாய்‌ ஆஸ்சர்ய சேஷ்டிதங்களை உடையவனுமாய்‌ ஸர்வருடையவும்‌ ரக்ஷ்ணோப சிந்தை பண்ணுமவனுமாய்‌ இப்படி உபாய க்ருத்யத்துக்கு அபேஷிதமான ஆஸ்சர்ய சக்தி யோகத்தை உடையவனாகையாலே

உண்ணி லாவிய ஐவராற் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம்
நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய்
எண்ணிலாப் பெரு மாயனே!இமையோர்கள் ஏத்தும் உலக மூன்றுடை
அண்ணலே! அமுதே! அப்பனே!என்னை ஆள்வானே!–7-1-1-எண்ணிறந்த காரியங்களை விளைக்க வற்றாய் துஸ்தரமான பிரக்ருதியை யுடையவனே -நீ வேண்டாதாரை நலிகைக்கு ப்ரக்ருதியை உபகரணமாக யுடையவன் என்கை –மமமாயா துரத்யயாஸமஸ்த கல்யாண குணாத்மகன் என்று பிள்ளான் பணிக்கும் -என்னுடைய நோய்க்கும் உன்னுடைய குணங்களுக்கும் என்ன சேர்த்தி யுண்டு

கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க் குணங்கள் படைத்து அளித்துக் கெடுக்குமப்
புண்டரிகக் கொப்பூழ்ப் புனற்பள்ளி அப்பனுக்கே

தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்லா யிரத்துள் இப்பத்தும்
கண்டு பாட வல்லார் வினை போம் கங்குலும் பகலே.–7-1-11-சத்வாதி குண அனுரூபமான வடிவை யுடைய மூவராய் – படைத்து அளித்துக் கெடுக்கும்-சதுரமிக்க அந்தர்யாமியாய் நின்று ஸ்ருஷ்டித்து ஸ்வேன ரூபேண நின்று பரிபாலனம் பண்ணி -ருத்ராந்தர்யாமியாய் சம்ஹரித்து செய்து அருளுகிற
அப்-புண்டரிகக் கொப்பூழ்ப் புனற்பள்ளி அப்பனுக்கே-ஜகத் காரணத்தயா பிரசித்தமான புண்டரீகத்தோடே கூடின திரு நாபியை யுடைய ஏகார்ணவ சாயியான சர்வ காரணனுக்கே

பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்! பற்றிலார் பற்ற நின்றானே!
கால சக் கரத்தாய்! கடலிடங் கொண்ட கடல்வண்ணா! கண்ணனே!’ என்னும்;
‘சேல்கொள் தண் புனல்சூழ் திருவரங்கத்தாய்!’ என்னும்’என் தீர்த்தனே!’ என்னும்;
கோல மா மழைக்கண் பனி மல்க இருக்கும் என்னுடையக் கோமளக் கொழுந்தே.–7-2-7-இடம் அறிந்து ஸூ க துக்கங்களை படைத்தவனே –பாலாவாக -ஸ்த்தாநே ஸ்த்தாநே யாக -பிரிந்தார் எல்லாரும் அனுபவிக்கும் இத்தை இவள் ஒருத்தியும் அனுபவிக்கப் பார்த்தால் இவளால் பொறுக்கப் போமோ -அங்கனம் இன்றிக்கே ஆஸ்ரிதர் வாழ்வும் அநாஸ்ரிதர் கெடும்படியாகவும் அன்றோ பண்ணி வைத்தது –தீமை உன்னடியார்க்குத் தீர்த்து அசுரர்க்கு தீமைகள் செய்யுமவன் அன்றோ –பண்டு கட்டின மரியாதையும் இல்லையோ இவளுக்கு –

ஊழிதோறு ஊழி உருவும் பேரும் செய்கையும் வேறவன் வையம் காக்கும்
ஆழி நீர் வண்ணனை அச்சுதனை அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன
கேழில் அந் தாதி ஓர் ஆயிரத்துள் இவை திருப் பேரெயில் மேய பத்தும்
ஆழி அம் கையனை ஏத்த வல்லார் அவர் அடிமைத் திறத்து ஆழியாரே.–7-3-11-யுகம் தோறும் ரக்ஷணத்துக்கு ஈடான ரூப நாம சேஷ்டிதங்களை வெவ்வேறாக யுடையனாய்க் கொண்டு ஜகத்தை ரக்ஷிக்கும் –பாலினீர்மை செம்பொனீர்மை-என்கிறபடியே ருஸ்யனுகுணமாக ரூப நாமாதிகளை யுடையனாயிற்று ஜகத் ரக்ஷணம் பண்ணுவது –

மாயா! வாமனனே!மது சூதா! நீ அருளாய்
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய்த்
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்
நீயாய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே!–7-8-1-மாயா!-இத் திருவாய் மொழிக்கு நிதானமான ஆச்சர்யங்களை யுடையனாய் இருக்கும் இருப்பை அனுசந்தித்து சங்க்ரஹேண சொல்லுகிறது –
வாமனனே! –ஆச்சர்யங்களுக்கு எல்லாம் உதாஹரணம் -அன்றே பிறந்து அன்றே வளர்ந்து அன்றே அர்த்தியாய் மஹாபலி யஜ்ஜ்வாடத்தில் சென்று சொல்லிற்று எல்லாம் அவன் செய்யும் படி வார்த்தை சொன்ன ஆச்சர்யங்களை நினைத்து வாமனனே என்கிறார் –மது சூதா! நீ அருளாய் ஆச்சர்யங்களுக்கு ஸ்ரீ வாமன ப்ராதுர்ப்பாவம் போலே யாயிற்று விரோதி நிரசனத்துக்கு மதுசூநத்வம்-மதுவாகிற அரசனை நிரசித்தால் போலே என் ஸம்சயத்தை அறுத்து தந்து அருள வேணும் என்கிறார்

கள்ளவிழ் தாமரைக் கண் கண்ணனே!எனக்கு ஒன்று அருளாய்
உள்ளதும் இல்லதுமாய் உலப்பில்லனவாய் வியவாய்
வெள்ளத் தடங்கடலுள் விட நாகணை மேன் மருவி
உள்ளப் பல்யோகு செய்தி இவை என்ன உபாயங்களே!–7-8-4–திரு உள்ளத்திலே பல ரக்ஷண சிந்தை பண்ணா நிற்றி –சேதன பேதத்தோபாதியும் போரும் இறே ரக்ஷண உபாய சிந்தைகளில் விதா பேதமும்

2-தெளி உற்றவருக்கு ஏற்றரும் வைகுந்தத்தை அருளும் பிராபகத்வம்-புல் பா வெறும்பு பகைவனுக்கும் ஆக்க வல்ல சர்வ சக்தி--அதாவது–தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக் கதி செய்யும் – 7-5-11-என்றும்-ஏற்றரும் வைகுந்தத்தை அருளும் 7-6-10–என்றும் பிராப்ய பிராபகங்கள் இரண்டும் தானே என்று அத்யவசித்து -பின்னை நாட்டார்கள் செயல்களைக் கண்டு ஆதல்- யுத்தி ஆபாசம் கொண்டு ஆதல் –பிற்காலியாதே நின்று – அவர்களுக்கு நிரதிசய ஆனந்த யுக்தமாய் -ஒருவராலும் ஸ்வ யத்னத்தால் ப்ராபிக்க ஒண்ணாது இருக்கிற ஸ்ரீ வைகுண்டத்தை தன் அருளால் கொடுக்கிற தன் உபாயத்தை – புற்பா முதலா புல் எறும்பாதி ஓன்று இன்றியே நற் பாலுக்கு உய்த்தனன் -7-5-1–என்றும்
நாட்டை அளித்து உய்யச் செய்து-7-5-2- -என்றும் –-சேட் பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி தாட் பால் அடைந்த-7-5-3- -என்றும் ஜ்ஞானம் லேசமில்லாத திர்யக் ஸ்தாவரங்களும் பிராதி கூல்யத்தில் முதிர நின்ற சத்ருவுக்குக்குமாம் படி பண்ண வல்ல சர்வ சக்தி யானவன் –

(தெளிவுற்றவர்க்கு ஏற்றரும்‌ வைகுந்தத்தை அருளும் ப்ராபகத்வம்‌ புற்பா வெறும்பு பகைவனுக்குமாக்க வல்ல ஸர்வஸக்தி)தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக்‌ கதிசெய்யும்‌ தெளிவுற்ற கண்ணன்‌” (திருவாய்மொழி 7-5-1 “ஏற்றரும்‌ வைகுந்தத்தை அருளும்‌” (திருவாய்மொழி 7-6-10) என்று ப்ராப்யமும்‌ ப்ராபகமும்‌ தானேயென்று அத்‌யவஸித்துப்‌ பின்பு நாட்டார்‌ செயல்‌ கண்டாதல்‌ உக்த்யாபாஸங்கள்‌ கண்டாதல்‌ பிற்காலியாதே நின்றவர்களுக்கு நிரதிஸயாநந்தமாய்‌ ஒருவராலும்‌ ஸ்வ யத்நத்தாலே ப்ராபிக்க வொண்ணாதிருக்கிற ஸ்ரீவைகுண்டத்தைத்‌ தன்னருளாலே கொடுக்கைக்குத்‌ தான்‌ உபாயமாமிடத்தில்‌ “புற்பா முதலாப்‌ புல்லெறும்பாதி ஒன்றின்றியே நற்பாலுக்குய்த்தனன்‌ ‘ (திருவாய்மொழி 7-5-1) என்றும்‌ “நாட்டை அளித்துய்யச்‌ செய்து” (திருவாய்மொழி 7-5-2 என்றும்‌ “சேட்பால்‌ பழம்‌ பகைவன்‌ சிசுபாலன்‌ திருவடி தாட்பாலடைந்த‘ (திருவாய்மொழி 7-5-3) என்றும்‌ முதலிலே ஜ்ஞாந லேஸமில்லாத திர்யக்‌ ஸ்தாவரங்களுக்கும்‌ ப்ராதி கூல்யத்திலே முதிர நின்ற ஸத்ருவுக்கும்‌ கொடுக்க வல்லனாம்படி ஸர்வ ஸக்தி யுக்தனான ஸர்வேஸ்வரன்‌

தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக்கதி செய்யும்
தெளிவுற்ற கண்ணனைத்
தென் குரு கூர்ச்சட கோபன் சொல்
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்
தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே.–7-5-11-ப்ராப்ய ப்ராபகங்கள் அவனே என்று அத்யவசித்து -பின்னை யுக்தி ஆபாச வசனங்களால் அதுக்கு குஅநந்ய பிரயோஜனராய் நிலை நின்றவர்கள் என்னுதல் –-இன்பக்கதி செய்யும்-ஸூ கரூபமான ப்ராப்யத்தைக் கொடுக்கும் –ஏஷ ஹ்யேவ ஆனந்தாதி –-தெளிவுற்ற கண்ணனைத் –நாம் இவன் கார்யம் செய்யக் கடவோம் -என்று இருக்கும் கிருஷ்ணனை -இவன் கலங்கின அன்றும் தான் தெளிந்து முடிய நடத்துமவனை

ஏற்றரு வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர்குலத்து
ஈற்றிளம் பிள்ளை ஒன்றாய்ப் புக்கு மாயங்களே இயற்றிக்
கூற்றியல் கஞ்சனைக் கொன்று ஐவர்க்காய்க் கொடுஞ்சேனை தடிந்து
ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க அரியே.-7-6-10-ஸ்வ யத்னத்தாலே பிராபிக்க ஒண்ணாத பரம பதத்தை-தன்னாலே பெற்றேன் என்று துணிந்து இருக்கிற நமக்கு அருளும் –

கற்பார் இராம பிரானை அல் லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே.–7-5-1-தேச வாசம் தானே போக ரூபமாய் இருக்கை -ராம குணங்களையே அனுபவித்து இருக்கும் என்னுதல்-சராசரம் முற்றவும்-ஸ்தாவர ஜங்க மாத்மகமான சகல பதார்த்தங்களையும் –-நற்பாலுக்கு உய்த்தனன்-நல்ல ஸ்வ பாவத்தை யுடைத்தாம் படி பண்ணினவன் –தன் சம்ச்லேஷ விஸ்லேஷமே ஸூக துக்கமாம் படி பண்ணினான் -திர்யக் யோனி கதச்சாபி சர்வோ ராமம நுவரத–என்றும் – –அபி வ்ருஷா பரிம்லா நா -என்றும் -ராம மேவா நுகச்சத்வ மஸ்ருதிம் வாபி கச்சித -என்றும் –ராமேண ரஹி தா நாந்து கிமர்த்தம் ஜீவிதம் ஹிந-என்றும் -இப்படி ஸ்வ சம்ச்லேஷ விஸ்லேஷ ஸூ க துக்கமாம் படி பண்ணிற்று ஒரு தேச விசேஷத்திலேயோ -என்ன
நான்முகனார் பெற்ற நாட்டுளே.–ப்ரஹ்மாவுக்கு அடைத்த நாட்டுள்ளே-அவனுடைய நியாமகத்வத்தையும் தவிர்த்து -சேதனருடைய கர்ம வஸ்யத்தையும் தவிர்த்து தான் கைக் கொண்டு தன்னால் அல்லது செல்லாத படி பண்ணினான் –

நாட்டிற் பிறந்தவர் நாரணற்கு ஆளன்றி ஆவரோ?
நாட்டிற் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு
நாட்டை அளித்து உய்யச் செய்து நடந்தமை கேட்டுமே.–7-5-2—போந்த கார்யம் தலைக் காட்டிற்று ஆகில் இனி போவோம் என்னாதே மீண்டும் தம்முடைய ஸுந்தரியாதிகளாலே இருந்ததே குடியாக வாழ்வித்து -தம் வரவு பார்த்து இருக்கிற ஸ்ரீ பரத ஆழ்வானையும்-அபிஷேக மஹோத்சவங்கள் காண ஆசைப்பட்ட தாய்மாரையும் -பின் தொடர வழி மாற்றிப் போந்த நாட்டையும் -கடல் ஞாலத்து அளி மிக்கான் -என்கிறபடியே நெடு நாள் ஆஸ்வசிப்பித்து-உய்யச் செய்து-தம்மைப் பெறுகைக்கு அவர்கள் பக்கல் ஒரு கைம்முதல் இன்றிக்கே அசத்சமமாய் இருக்கிறவர்களை –சந்தமேனம்-என்னும் படி பண்ணி

கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றுங் கேட்பரோ?
கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளே வையும்
சேட்பாற் பழம் பகைவன் சிசு பாலன் திருவடி
தாட்பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே .
–7-5-3-சிசுபாலன் -சாஸ்திரங்களில் சொன்ன அதிகாரி களில் ஒருத்தன் அல்லன் -விஷய வை லக்ஷண்யத்தாலே பெற்றவன் -வைது நின்னை வல்லவா பழித்தார்க்கும்- பேருளான் பெருமை பேசி ஏசினார்-தன்மை அறிவாரை அறிந்துமே .–-கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றுங் கேட்பரோ?–ஈஸ்வரனுடைய ஸ்வ பாவத்தை அறிந்தவர்கள் பக்கலிலே செவி தாழ்த்து வைத்தும் -இஸ் ஸ்வ பாவத்தை அறிந்து வைத்தும் –
இத்தால் சொல்லிற்று ஆயிற்று –ப்ராதிகூல்யமே யாத்ரையாய் இருந்தவனுக்கு -தன்னால் அல்லது செல்லாமை யுடையார் பெரும் பேற்றைக் கொடுத்தான் என்றது ஆயிற்று–

பாதமகலகில்லா தம்மை–அதாவது–அடியேன் உன பாதம் அகலகில்லேன் இறையும்-6-10-9- -என்று
தன் திருவடிகளை ஷண காலமும் அகல சக்தர் அன்றியே –-அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேன்—6-10-10-என்று சரணம் புக்க தம்மை-

(பாதமகலகில்லாத தம்மை) “அடியேனுன பாதம்‌ அகலகில்லேனிறையும்‌” (திருவாய்மொழி 6-10-9)என்று தன் திருவடிகளை க்ஷ்ண காலம்‌ அகல ஸக்தரன்றியிலே “அடிக்கீழமர்ந்து (திருவாய்மொழி 6-10-10) என்று ஸரணம்‌ புகுந்த தம்மை –

வந்தாய் போலே வாராதாய்! வாராதாய்போல் வருவானே!
செந்தாமரைக்கட் செங்கனிவாய் நாற்றோ ளமுதே! எனதுயிரே!
சிந்தா மணிகள் பகரல்லைப் பகல்செய் திரு வேங்கடத்தானே!
அந்தோ அடியேன் உனபாதம் அகல கில்லேன் இறையுமே.–6-10-9-அடியேன் -ஸ்வ ரக்ஷணத்தில் பிராப்தி இல்லாத பாரதந்தர்யத்தை யுடைய நான்-உன பாதம் அகல கில்லேன் இறையுமே.–நிரதிசய போக்யமான உன் திருவடிகளை க்ஷண காலமும் அகல ஷமன் ஆகிறிலேன்-

அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன் றில்லா அடியேன் உன் னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10–உன் திருவடிகளை அநந்ய சரண்யனான அடியேன் அநந்ய ப்ரயோஜனாயக் கொண்டு-பெரிய பிராட்டியார் புருஷகாரமாக சரணம் புகுந்தேன் – இப்போதே நிரஸ்த ஸமஸ்த பிரதிபந்தயகனாய் உன் திருவடிகளில் சர்வ காலமும் சர்வ கைங்கர்யமும் அடியேன் பண்ணப் பெற வேணும் என்கிறார் –

3-அகற்றும் அவற்றின் நடுவே இருத்தக் கண்டு–அதாவது–அகற்ற நீ வைத்த மாய வல் ஐம் புலன்கள் ஆமவை -5-7-8–என்று தன் திருவடிகளைக் கிட்டாதபடி அகற்றவற்றான இந்திரியங்களின் நடுவே –
இவ் உடம்பிலே இருக்கும் படி வைக்க கண்டு- நலிவான் சுமடு தந்தாய் ஒ வென்று சாதன பலமான ஆக்ரோசத்தோடே பழி இட்டு-அதாவது- நலிவான் இன்னும் எண்ணுகின்றாய் -7-1-1–என்றும்
அன்புருகி நிற்கும் அது நிற்கச் சுமடு தந்தாய்-7-1-10- -என்றும் – விண்ணுளார் பெருமானேயோ -7-1-5–என்றும் – முன் பரவை கடைந்து அமுதம் கொண்ட மூர்த்தீயோ-7-1-10- -என்று விளம்ப ஹேது இல்லாத உபாயத்தை பரிக்ரஹித்தால் அது பல பிரதமாம் படியும் கிடந்து கூப்பிடும் இத்தனை ஆகையாலே -கீழ் தாம் பரிக்ரஹித்த உபாயத்தின் பலமாய் வந்ததாய் – கலங்கா பெருநகரம் கலங்கி -அவனுக்கு அங்கு குடி இருப்பது அரிதாய் வந்து விழ வேண்டும் படியான சம்சாரத்தில் -அடிக் கொதிப்பால் வந்த பெரிய
ஆக்ரோசத்தோடே கூடிக் கொண்டு தம் தலையால் வந்தததையும் அவன் தலையில் ஏறிடும் படியான பிராப்தியை உணர்ந்தவர் ஆகையாலே –இந்திரியங்களை இட்டு நலிவிக்கிறாய்-நீ என்று அவன் மேல் பழி இட்டு – (பிரஜை தெருவிலே இடறித் தாய் முதுகிலே குத்துமா போலே -ஸ்ரீ வசன பூஷணம் )

(அகற்றுமவற்றின்‌ நடுவே இருத்தக்‌ கண்டு) “அகற்ற நீ வைத்த மாய வல் ஐம் புலன்கள் ஆமவை (திருவாய்மொழி 5-7-8) என்று பகவத்‌ விஷயத்தைக்‌ கிட்டாத படி அகற்றவற்றான இந்த்‌ரியங்களின்‌ நடுவே வைக்கக்‌ கண்டு (நலிவான்‌ சுமடு தந்தாய்‌ ஓவென்று சாதன பலமான ஆக்ரஸத்தோடே பழியிட்டு )நலிவான் இன்னம் எண்ணுகின்றாய் -(திருவாய் -7-1-1)அன்புருகி நிற்கும் அது நிற்கச் சுமடு தந்தாய் (திருவாய் -7-1-10) விண்ணுளார் பெருமானேயோ (திருவாய் -7-1-5) முன் பரவை கடைந்து அமுதம் கொண்ட மூர்த்தியேயோ (திருவாய் -7-1-10) என்று வ்யவதான விளம்பம் இல்லாத உபாயத்தைக் கீழே பரிக்ரஹிக்கையாலே – பிரதிகூலமான ஸம்ஸாரத்திலே பொருந்தாமையோடே தம் தலையிலே உள்ளத்தையும் அவன் தலையிலே ஏறிடும்படியான ப்ராப்தியை யுணர்ந்தவராகையாலே –சாகாம்ருகா ராவண சாயகார்த்தா ஜக்முஸ் சரண்யம் சரணம் ச ராமம் -(யுத்த -59-44)என்கிறபடியே இவரும் அவன் பரமபதத்தில் இருப்பும் குலைந்து வந்து விஷயீ கரிக்கும்படி பெரிய ஆக்ரோஸத்தோடே அவன் மேலே பழியாம்படி கூப்பிட்டு

அகற்ற நீ வைத்த மாய வல் லைம் புலன்களா மவை நன்கறிந்தனன்
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்தி கண்டாய்
பகர்க் கதிர் மணிமாட நீடு சிரீவர மங்கை வாணனே! என்றும்
புகற்கரிய எந்தாய்! புள்ளின் வாய் பிளந்தானே!–5-7-8—அத்யாச்சர்யமான செயல்களை யுடைத்தாய் ஒருவரால் தப்ப ஒண்ணாதே இருக்கிற ஐந்து இந்திரியங்களும் -நீ வேண்டாதாரை யகற்ற வைத்தாய் என்னும் இடம் வ்யக்தமாக அறிந்தேன் -மயர்வற மதி நலம் அருள பெற்றவன் ஆகையால் அழகிதாக அறிந்தேன்-

உண்ணி லாவிய ஐவராற் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம்
நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய்
எண்ணிலாப் பெரு மாயனே!இமையோர்கள் ஏத்தும் உலக மூன்றுடை
அண்ணலே! அமுதே! அப்பனே!என்னை ஆள்வானே!–7-1-1–நலிவான் -அவனைக் கிட்டாமைக்கு மேல்பட தமக்கு நலிவு இல்லை என்று இருக்கிறார்-இன்னம் -இந்திரியங்களுக்கு அலைந்து உன்னைத் சரணம் புக்க பின்பும்-எண்ணுகின்றாய்-என்னை நித்ய சம்சாரியாக்கி அகற்றும் விரகு எண்ணுகிறான் என்று இருக்கிறார்

என் பரஞ்சுடரே! என்று உன்னை அலற்றி உன் இணைத் தாமரைகட்கு
அன்புருகி நிற்குமது நிற்கச் சுமடு தந்தாய்

வன் பரங்கள் எடுத்து ஐவர் திசை வலித்து எற்று கின்றனர்
முன் பரவை கடைந்த அமுதம் கொண்ட மூர்த்தியோ–7-1-10-!–எனக்கு நிரதிசய போக்யனானவனே-அந்யோன்யம் ஒப்பாய் ஸ்ப்ருஹணீயமான உன் திருவடிகளில் உண்டான ப்ராவண்யத்தால் சிதிலனாய் நிற்கும் அந்த புருஷார்த்தத்தை ஒழிய-சுமடு தந்தாய்-இந்திரியங்கள் சுமத்தின சுமை எல்லாம் சுமைக்கைக்கு ஈடான சரீரம் ஆகிற சும்மாட்டை தந்தாய் -ராஜபுத்ரன் தலையில் முடியை வாங்கி சும்மாட்டைக் கொடுத்து வழிக்கரையிலே நிறுத்தினால் கண்டார் எல்லாரும் சுமை ஏற்றுமா போலே இ றே இந்திரியங்கள் -இந்திரிய உபாதைக்கு ஈடான பிரகிருதி சம்பந்தம்

தீர் மருந்தின்றி ஐவர் நோயடும் செக்கிலிட்டுத் திரிக்கும் ஐவரை
நேர் மருங்கு உடைத்தா அடைத்து நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்
ஆர் மருந்தினி யாகுவார்! அடலாழிஏந்தி அசுரர் வன்குலம்
வேர் மருங் கறுத்தாய்! விண்ணுளார் பெருமானேயோ!–7-1-5-நித்ய ஸூரிகளுக்கு ஓலக்கம் கொடுத்து இருக்கிற படியை அனுசந்தித்து நான் அதுக்கு அசலாவதே என்று கூப்பிடுகிறார் –ஹா ராம ஹா லஷ்மணா என்னுமா போலே உறவு முறையரான நித்ய ஸூரிகளையும் அவனையும் நினைத்து தன் ஆற்றாமையால் அங்கு சென்று கேட்க்கும் படி கூப்பிடுகிறார்-

என் பரஞ்சுடரே! என்று உன்னை அலற்றி உன் இணைத் தாமரைகட்கு
அன்புருகி நிற்குமது நிற்கச் சுமடு தந்தாய்
வன் பரங்கள் எடுத்து ஐவர் திசை வலித்து எற்று கின்றனர்
முன் பரவை கடைந்த அமுதம் கொண்ட மூர்த்தியோ–7-1-10-!–உன் திருவடிகளில் உண்டான ப்ராவண்யத்தால் சிதிலனாய் நிற்கும் அந்த புருஷார்த்தத்தை ஒழிய-இந்திரியங்கள் சுமத்தின சுமை எல்லாம் சுமைக்கைக்கு ஈடான சரீரம் ஆகிற சும்மாட்டை தந்தாய் -ராஜபுத்ரன் தலையில் முடியை வாங்கி சும்மாட்டைக் கொடுத்து வழிக்கரையிலே நிறுத்தினால் கண்டார் எல்லாரும் சுமை ஏற்றுமா போலே இறே இந்திரியங்கள் -இந்திரிய உபாதைக்கு ஈடான பிரகிருதி சம்பந்தம்–முன் கடலைக் கடைந்து ஆஸ்ரிதர் அபேக்ஷை முடிக்க ஷமனான நாதனேயோ -கடலைக் கடைந்து அம்ருதத்தை வாங்கி தேவர்களுக்கு கொடுத்து அசுர வர்க்கங்களை பறக்க அடித்தால் போலே இந்திர வஸ்யத்தையையும் பாற அடித்து தர வல்லையே –-

4-கங்குலும் பகலும் அடைவற்ற ஆர்த்தியை கோவில் திரு வாசலிலே முறை கெட்ட கேள்வி யாக்கி-(திரு விருத்தத்தில்–62-(-இதுவே கங்குலும் பகலுமாக விரிந்தது )-இறையோ இரக்கினும் ஈங்கு ஓர் பெண் பால் எனவும் இரங்காது அறையோ என நின்றதிரும் கருங்கடல் -ஈங்கு இவள் தன் நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால் முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே -பாசுரப்படி இங்கு முறை கெட்ட -என்று அருளிச் செய்கிறார் )அதாவது-கங்குலும் பகலும் அடைவற்ற ஆர்த்தியை-அதாவது–இப்படி கூப்பிட தானும் ஷமர் அன்றிக்கே -அவசந்னராய் கொண்டு -ஒரு பிராட்டி தசையை அடைந்து –கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்-இட்டகால் இட்ட கைகளாய் இருக்கும் –சிந்திக்கும் திசைக்கும் -இத்யாதிப் படியே திவாராத்ரா விபாகமற -அழுவது -தொழுவது -மோகிப்பது -பிரலாபிப்பது —அடைவு கெடப் பேசுவது -நெடு மூச்சு எறிவது -அது தானும் மாட்டாது ஒழிவது –ஸ்தப்தையாய் இருப்பது -இப்படி ஆர்த்தி விஞ்சி செல்லுகையாலே –ஆசா சிந்தா ஸ்ம்ருதி கீர்த்திர் விலாபோன்மாத விப்ரமா மோஹோ வியாதிர் ம்ருதிச்சேதி விகாரா காம ஜாதச -என்றார் போலே அவஸ்தைகளுக்கு அடைவு பிடிக்க ஒண்ணாத படி நடக்கிற ஆர்த்தியை- பெரிய பெருமாள் கண் வளர்ந்து அருளுகிற கோவில் திரு வாசலிலே பெண் பிள்ளையைப் பொகட்டு திரு தாயார் கூச்சு முறை தவிர்ந்து -தானே இவள் தசையை அவருக்குச் சொல்லி –திரு வரங்கத்தாய் இவள் திறத்து என் செய்கின்றாய் –என் செய்திட்டாய் –என் சிந்தித்தாய் –என் செய்கேன் திரு மகட்கு -என்று அவர் தம்மையே கேட்கும் படி அத்யாவசாதம் பிறந்து–அடைவற்ற அரதியை -என்ற பாடமான போது –கங்குலும் பகலும் -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே திவாராத்ரா விபாகமற அழுவது-தொழுவது -இத்யாதிகளாலே -ஆசா சிந்தாதிகளில் போலே அவஸ்தைகளுக்கு ஓர் அடைவு பிடிக்க ஒண்ணாதபடி நடக்கிற அரதியை என்று யோஜிக்கவுமாம்–

(கங்குலும் பகலும் அடைவற்ற ஆர்த்தியை கோவில் திரு வாசலிலே முறை கெட்ட கேள்வி யாக்கி)கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் (திருவாய்மொழி 7-521)இட்ட கால் இட்ட கைகளாய் இருக்கும் (திருவாய்மொழி 7-2-4)சிந்திக்கும் திசைக்கும் தேறும் கைகூப்பும் (திருவாய்மொழி 7-2-5)என்று திவா ராத்ரி விபாகமற அரதியாயத் துடிக்கும்படி அடைவுக்கெட்ட ஆர்த்தியை திருவரங்கத்தாய் இவள் திறத்து என் செய்கின்றாயே (திருவாய்மொழி 7-2-1)என் செய்திட்டாய் (திருவாய்மொழி 7-2-3) என் சிந்தித்தாயே (திருவாய்மொழி 7-2-4)என் செய்கேன் என் திருமகட்கே (திருவாய்மொழி 7-2-8)என்றும் திரு வாசலிலே பெண் பிள்ளையைப் பொகட்டுக் கூச்சு முறை தவிர்ந்து அவன் தன்னையே கேட்டுக் கூப்பிடும்படியான ஆர்த்தியாலே வந்த அவஸ்தா பேதத்தை யுடையவராய்

இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது
அறையோ என நின்றதிரும் கருங்கடல்  ஈங்கிவள் தன்
நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே
 – 62-ஊரார் சொல்லும் பழிக்கு அஞ்சி மீளும் எல்லையும் கழிந்தது-முறையோ – தத் தஸ்ய சத்ரு சம்பவேத் -என்று இருக்கும் நிலை கழிந்து – கூப்பிட்டுப் பெற வேண்டும் தசையேயாய் வந்து விழுந்தது –அரவணை -இத்யாதி –செங்கற் சீரை கட்டி கூப்பிட்டாகிலும் பெற வேண்டும் படி யாயிற்று வடிவு அழகும் படுக்கையும் –அரவணை மேல் – இவள் கடின ஸ்த்தலத்திலே கிடக்க–நீர் மெல்லிய படுக்கையை தேடிக் கிடக்கிறீரே –முகில் வண்ணனே-இத்தை எம்பார் அருளிச் செய்கிற போது –இயலைச் சொல்லுகிறவரைப் பார்த்து -இவ்வளவிலே முகம் காட்டாதே-செங்கற் சீரை கட்ட இருக்கிறவர் -முதலிகளாய்  இருப்பார் –தலையிலே பிரம்புகள் விழிலும்-முகில் வண்ணரே -என்னீர் -என்று அருளிச் செய்தார் –இருவருமான வன்று சேர நிற்கவும்- பிரிந்த வன்று தாய்க் கூற்றிலே நிற்குமவர் இறே இவர் –

கங்குலும் பகலும் கண்துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்; ‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்; இரு நிலம் கைதுழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1–உறங்கக் கடவ இரவோடு -உறங்காமைக்கு கண்ட பகலொடு வாசி அற நித்திரை என்பது ஓன்று அறிகிறிலள் -கண் துயிலாள் என்னாதே அறியாள் என்கிறது நித்திரையை அறிந்து விரோதி என்று கை விட்ட இளைய பெருமாளின் வாசி சொல்கிறது -இளைய பெருமாளுக்கு முன்பு இல்லை யாகிலும் ஜென்மத்தில் மெய்ப்பாட்டாலே பற்றி விட வேண்டிற்று -இவளுக்கு-பிரணயிநிகள் பகல் உறங்குவர்கள் -இப்படி உபய வ்யாவ்ருத்தமாய் இரவும் பகலும் உறங்காதபடி ஆனாள்-அநித்ரஸ் சததம் ராம -என்கிற உம்முடைய படியை இவள் உடையாள் ஆனாள்

இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்; எழுந்துலாய் மயங்கும் கை கூப்பும்;
‘கட்டமே காதல்’ என்று மூர்ச்சிக்கும்; ‘கடல்வண்ணா! கடியை காண்’ என்னும்;
‘வட்டவாய் நேமி வலங்கையா!’ என்னும் ‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
சிட்டனே! செழுநீர்த் திருவரங்கத்தாய்!nஇவள் திறத் தென் சிந்தித்தாயே ?–7-2-4-ஸ்வாதீனம் இல்லாமையால் தோழிமார் இட்டு வைத்த காலும் கையுமாய் இருக்கும் –விரஹம் சந்தி பந்தங்களையும் குலைத்து சிதறிக் கிடக்கிற இத்தனை –

சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும் ‘திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;
வந்திக்கும் ஆங்கே மழைக் கணீர் மல்க ‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
‘அந்திப்போ தவுணன் உடலி டந்தானே! அலைகடல் கடைந்த ஆர் அமுதே!
சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல் செய் தானே!–7-2-5–சிந்திக்கும்-உம்முடைய ஸுந்தர்யாதி குணங்களையும் உம்மோட்டை சம்ச்லேஷத்தையும் நினைக்கும் –முன்பு இவ்வநுஸந்தானம் இன்றியே யாயிற்று இருப்பது -மோஹித்தவோ பாதி இதுவும் ஒரு படி விக்ருதி இருக்கிற படி -அப்போதே காணப் பெறாமையாலே-திசைக்கும்-மோஹிக்கும்-தேறும் -ஒரு ஹேது இன்றிக்கே இருக்க தேறா நின்றாள் -இது தானும் பயாவஹமாய் இருக்கிறதாய் யாயிற்று -மோஹம் செல்லா நிற்க அபேக்ஷிதம் பெற்றாரைப் போலே தேறுகை பயாவஹம் இறே -சரம தசையில் பிறக்கும் தெளிவுக்கு அஞ்ச வேணுமே-கை கூப்பும்-தேவர் படிகளை நினைத்து ஈடுபட்டுக் கும்பிடும் -கீழே மயங்கும் -கை கூப்பும் -என்றது -இங்கே தேறும் கை கூப்பும் என்றது -அல்லாதது சஞ்சாரியாய் செல்லா நிற்க இது ஒன்றும் ஸ்திரமாக செல்லா நின்றது –ஸ்வரூப அனுபந்தியான தர்மம் ஆகையால் -நித்யாஞ்சலி புடா -என்ன கடவது இறே -ஆற்றாமையாலே

இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-அந்த சத்தவங்களுக்கு ஜலத்தை ஒழிய செல்லாதாப் போலே உம்மை ஒழிய செல்லாத இவள் திறத்து –நிறமும் இழந்து -சஞ்சாரமும் அற்று இ றே இவள் கிடக்கிறது -ஏஹி பஸ்ய சரீராணி என்று வடிவைக் காட்டுகிறாள்-திருவரங்கத்தாய்-என் செய்கின்றாயே?-பரமபதத்தில் இருப்பிலோ கேட்க்கிறது-கண்ணுக்கு விஷயமான இடத்தே அன்றோ சாய்ந்து அருளிற்று -இவள் நிறம் பெற்று செருக்கி நடக்கும்படி பண்ணப் பார்த்ததோ -தவிரப் பார்த்ததோ – இவளை அவ் வூர்ப் படியாகப் பார்த்தாயோ இவ் வூர்ப் படியாகப் பார்த்தாயோ –

இவள் திறத் தென் செய்திட்டாயே–7-2-3-இவளுக்கு இவ்வளவான தசையை விளைக்கைக்கு நீ இட்ட மருந்து என் என்கிறாள் -அதாகிறது உன் முகம் தான் மாய மந்த்ரம் தான் கொலோ-என்று வடிவு அழகை காட்டுகை இறே -இவள் கேட்க்கிறது என் எனில் அதுவாகில் அதுக்கு பிரதிகிரியையாக –த்ரை லோக்ய ராஜ்ஜியம் சகலம் ஸீதாயா நாப் நுயாத்க்கலாம் -என்கிற இவளை அவன் முன்னே நிறுத்தி இவள் பட்டது எல்லாம் அவனைப் படுத்துவாளாக நினைக்கிறாள் –

இவள் திறத் தென் சிந்தித்தாயே ?–7-2-4-பேச்சுக்கு நிலம் இல்லாத படி நோவு பட்டக் கிடக்கிற இவள் திறத்து-என் சிந்தித்தாயே -நினைத்து இருந்தது என் –ஜீவிப்பிக்க நினைத்தீரோ -முடிக்க நினைத்தீரோ -இப்படிப்பட்ட ஆற்றாமையையும் பேற்றுக்கு உடலாக நினைத்து இருக்கிறிலள் -அவன் நினைவாலே பேறு என்று இருக்கிறாள் -உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -என்ன கடவது இறே –

என் செய்கேன் என் திரு மகட்கே?–7-2-8-இப்படி அலமாக்கிற இவள் உம்மைப் பெற்று ஆளாகைக்கு நான் செய்வது என் -உம்மால் அல்லது செல்லாமைக்கு பிராட்டி அளவு அல்லள்-என் திரு மகட்கே?-அவள் உம்மை ஆசைப்பட்டு இருக்கும் -இவள் உம்மையும் அவளையும் சேர ஆசைப்பட்டு இருக்கும் –

5-தேற்ற ஒண்ணாதபடி தோற்று-ஒன்றி நிற்க பண்ணின பல தானம் மற்றும் கற்பார் இழவிலே சுவறி-அதாவது-தேற்ற ஒண்ணாதபடி தோற்று-அதாவது-அன்னையர்காள் என்னை தேற்ற வேண்டா -என்றும் –கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன் -என்று பார்ஸ்வச்தராலும் தேற்றி தரிப்பிக்க ஒண்ணாதபடி அபஹ்ருத சித்தராய் கொண்டு பாரதந்த்ர்யமும் இழந்து –(வெள்ளைச் சுரி சங்கு சாரம்)ஒன்றி நிற்க பண்ணின பல தானம் மற்றும் கற்பார் இழவிலே சுவறி-அதாவது-இப்படி விரஹ வ்யதையாலே மிகவும் தளர்ந்து இருக்கிற இவரைத் தரிப்பைக்கைகாக தன் விஜய பரம்பரையைக் காட்டிக் கொடுக்க கண்டு ப்ரீதராய் –குன்றம் எடுத்த பிரான் அடியாரோடு ஒன்றி நின்ற சடகோபன் -என்று தன் விஜயத்திலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களோடு பொருந்தி இருக்கும்படி பண்ணின பல தானமானது –(ஆழி எழ சங்கும் எழ சாரம்) கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ -என்று அவதார பிரயுக்த சௌலப் யத்தை உடையவனாய் -ப்ரிய பரனுமாய் -ஹித பரனுமாய் –தான் அங்கீகரிக்க நினைத்தாரை -நிர்ஹேதுகமாக -மோஷ பர்யந்தமாக -நடத்தும் அவனுமாகிய இவனை ஒழிய -மற்றும் ஒரு விஷயத்தை கற்பரோ –இப்படி சுலபமான இவ் விஷயத்தை சம்சாரிகள் இழப்பதே என்று அவர்கள் இழவை அனுசந்தித்து -அதிலே சுவறி-( கற்பார் ராம பிரானை அல்லால் சாரம்)

(தேற்ற ஒண்ணாத தோற்று)அன்னையர்காள் என்னைத் தேற்ற வேண்டா கண்ணபிரானுக்கு என் பெண்மை தோற்றேன் (திருவாய் மொழி -7-3-9)என்று பார்ஸ்வத்தாராலும் தேற்றி தரிப்பிக்க ஒண்ணாதபடி அபஹ்ருத சித்தராய்க் கொண்டு பாரதந்தர்யத்தையும் இழந்து (ஓன்று நிற்கப் பண்ணின பலாதாநம் )இப்படி இருக்கிற இவரைத் தரிப்பிக்கைக்காக ஈஸ்வரன் தன்னுடைய விஜய பரம்பரைகளைக் காட்டிக் கொடுக்கக் கண்டு ப்ரீதராய் –குன்றம் எடுத்த பிரான் அடியாரோடும் ஓன்று நின்ற சடகோபன் (திருவாய் மொழி -7-4-11)என்று அவர் விஜய பரம்பரைகளிலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களோடு ஒரு சேர்த்தியாக நிற்கும்படி பலாதாநம் பண்ணி (மற்றும் கற்பார் இழவிலே சுவறி )கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும்‌ கற்பரோ” (திருவாய்மொழி 7-5-1) என்று “அபவரகே ஹிரண்ய நித ம்‌ நிதா ய உபரி ஸஞ்சரந் தோ நத்‌ ரஷ்யந்தி” என்கிறபடியே அவதார ப்ரயுக்த ஸெளலப்‌யத்தை உடையனாய்‌ ப்ரிய பரனுமாய்‌ தான்‌ அங்கீகரிக்க நினைத்தாரை நிர்ஹேதுகமாக மோக்ஷ பர்யந்தம்‌ நடத்துமவனுமா யிருக்குமிவனை ஸம்ஸாரிகள் இழப்பதே -என்று அவர்களுடைய இழவை அநுஸந்தித்து அதிலே அந்த பலாதாநமும்‌ சுவறி

சேர்வன் சென்று என்னுடைத் தோழிமீர்காள்! அன்னையர்காள்!என்னைத் தேற்ற வேண்டா;
நீர்கள் உரைக்கின்றது என்னிதற்கு? நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை;
கார் வண்ணன் கார்க்கடல் ஞாலம் உண்ட கண்ண பிரான் வந்து வீற்றிருந்த
ஏர்வள ஒண் கழனிப் பழனத் தென் திருப் பேரெயில் மாநகரே.–7-3-9-கலங்கினாரோ தெளிந்தார்க்கு உபதேசிப்பார் -அஞ்ஞரோ வ்யவஸ்திதரை உபதேசத்தால் மீட்கப் பார்ப்பார் -விஷயாதீனமாய் வருகிறத்தை சாதனத்தில் செலவு எழுத்துவார்களோ எனக்கு வார்த்தை சொல்லுவார் -இவள் தன்னை மறந்து அவனையே பார்த்து சொல்லுகிறாள் -அவர்கள் அவனை மறந்து தம் தம்மையே பார்த்து மீட்க்கத் தேடுகிறார்கள்-

முனிந்து சகடம் உதைத்து மாயப் பேய் முலை உண்டு மருதிடை போய்க்
கனிந்த விளவுக்குக் கன்று எறிந்த கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன்
முனிந்து இனி என்செ ய்தீர் அன்னைமீர்காள்! முன்னி அவன் வந்து வீற்றிருந்த
கனிந்த பொழில் திருப் பேரெயிற்கே காலம் பெற என்னைக் காட்டுமினே.–7-3-5-கிருஷ்ணனுடைய பும்ஸத்வத்துக்கு என் ஸ்த்ரீத்வத்தை தோற்றேன் -விரோதி வர்க்கத்தை அழியச் செய்த ஆண் பிள்ளைத் தனத்தை காட்டி ஒரு காலும் அழியாத ஸ்த்ரீத்வத்தை அழித்தான்

குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும்
ஒன்றி நின்ற சட கோபன்
உரை செயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே–7-4-11-கோவர்த்தன உத்தாரணம் பண்ணின உபகாரகனான கிருஷ்ணன் திருவடிகளையே தஞ்சமாக நினைத்து இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களிலே தம்மையும் அந்நிய தமராக நினைத்து இருந்த ஆழ்வார் அருளிச் செய்த இது -மலையை எடுத்த அன்று மலைக்கு கீழே ஒதுங்கினவர்களை போலே சம்சாரத்துக்கு அஞ்சி கிருஷ்ணன் திருவடிகளிலே ஒதுங்குமவர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்கள் -அச் செயலுக்கு தோற்று அடிமை புக்கவர் ஆயிற்று இவர்-

கற்பார் இராம பிரானை அல் லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே.–7-5-1-நிலாத் தென்றல் சந்தனம் தண்ணீர் போலே பரார்த்தமாய் இருக்கிற விஷயத்தை ஒழிய -அதிகரிப்பார் புறம்பேயும் ஒன்றை அப்யசிப்பாரோ -அநர்த்த கரம் என்றாலும் விட ஒண்ணாத பிரிய விஷயமாய் -அபிரியம் ஆனாலும் விட ஒண்ணாத படி பத்த்யமான இவ்விஷயத்தை ஒழிய வேறு ஒன்றை அப்யஸிக்கக் கடவதோ –மற்றும் என்று -தேவதாந்தரங்களை சொல்லுகிறது அன்று -பரத்வத்தையும் அவதாரங்களையும் சொல்லுகிறது –பாவோ நான்யத்ர கச்சதி -தொழில் எனக்கு – கற்பரோ?-சேதனர் அன்றோ -எல்லாவற்றையும் விட்டு -இவ்விஷயத்தை கற்கைக்கு இங்குத்தைக்கு ஏற்றம் என் என்னில் -அது சொல்லுகிறது –மேலடைய

6-பழைய தனிமை கூப்பீடு தலை எடுத்து –-அதாவது-பாமரு மூ உலகும் படைத்த பத்மநாபாவோ-என்று தொடங்கி–தனியேன் தனை யாளாவோ – என்று ஒரு துணை அன்றிக்கே இருந்து -அவனுடைய ஜகத் காரணத்வாதிகளைச் சொல்லிக் கூப்பிடும் படி -முன்புத்தை – உண்ணிலாவியில் -கூப்பீடே மீளவும் தலை எடுத்து-

“பாமரு மூவுலகும்‌ படைத்த பற்பநாபாவோ” என்று தொடங்கி “தனியேன்‌ தனியாளாவோ” (திருவாய்மொழி 7-6-1 என்று அவனுடைய ஐகத் காரணத்வாதிகளைச்‌ சொல்லிக்‌ கூப்பிடும்படி முன்புற்றை உண்ணிலாவியில்‌ தனிமைக்‌ கூப்பீடே மீண்டும்‌ தலையெடுத்து

பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!
பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ!
தாமரைக் கண்ணாவோ!தனியேன் தனி ஆளாவோ!
தாமரைக் கையாவோ! உன்னை என்று கொல் சேர்வதுவே?–7-6-1-ஸ்தாவர ஜங்கமாத்மகமான பதார்த்தங்கள் சேர்ந்து இருந்துள்ள சகல லோகங்களையும் உண்டாக்கின திரு நாபி கமலத்தை உடையவனே-என் தாயே என்பாரைப் போலே கூப்பிடுகிறார்-தனியேன் தனி ஆளாவோ!-அக் கண் அழகே ஜீவனமாய் இருக்கிற திரளிலும் கொண்டு போகக் கண்டிலேன் -ஸ்த்ரீகளினுடைய நோக்கி ஜீவனமாய் இருக்கிற தசையில் அத் திரளிலும் கூடப் பெற்றிலேன் -த்ருதீய விபூதி போலே தனியே ஆளுகிறவனே -உன் குணங்களைக் காட்டி ஆற்றாமையை விளைத்தவனே –உன் கிருபை ஒழிய வேறு ஒன்றை அறியாதவன் நான் -உன் கிருபைக்கு நான் அல்லது இலக்கு இல்லாதபடி இருக்கிறவன் நீ என்றுமாம் –

சூழவும் பகை முகம் செய்ய--அதாவது சூழவும் தாமரை நாண் மலர்போல் வந்து தோன்றும் -என்றும் –
இணைக் கூற்றம் கொலோ அறியேன் -என்றும் – கண்ணன் கோளிழை வாண் முகமாய் கொடியேன் உயிர் கொள்கின்றதே -என்று முன்பு அனுபவித்தவனுடைய-முக அவயவ சோபையானது – விசத ஸ்ம்ருதி விஷயமாய் – பார்த்த பார்த்த இடம் எங்கும் தோன்றி நின்று நலிய- (திரு முக மண்டலத்தில் திருக்கண்கள் -திரு மூக்கு -திரு வாய் – திருப்புருவம் -திருக்காது -திருநெற்றி முதலானவை நலிவதால் சூழவும் பகை முகம் செய்ய என்கிறார் )

சூழவும்‌ தாமரை நாண் மலர் போல்‌ வந்து தோன்றும்‌ கண்டீர்‌ இணைக் கூற்றங்கொலோ அறியேன்‌” (திருவாய்மொழி 7-7-1) “கண்ணன்‌ கோளிழை வாண்முகமாய்க்‌ கொடியேனுயிர்‌ கொள்கின்றதே” (திருவாய்மொழி 7-7-8 என்று முன்பு அநுபூதமான அவனுடைய முகத்தில்‌ அவயவ ஸோபை யானது விஸத ஸ்ம்ருதி விஷயமாய்க்‌ கொண்டு பாதிக்க நலிவு பட்டு

ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங் கொலோ அறியேன்
ஆழியங் கண்ண பிரான் திருக்கண்கள் கொலோ அறியேன்
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றுங் கண்டீர்
தோழியர் காள்!அன்னைமீர்!என் செய்கேன் துயராட்டியேனே.–7-7-1-ஆசைப்பட்ட விஷயம் கிடையாது என்றாலும் மீள மாட்டாத சபலைகள் யுடைய பிராணனை முடிக்கும் -ராம சரம் போலே ஒப்பனை குறி அழியாது இருக்க பிராணனைத் துணிக்கும்-புருஷர்க்கும்-பருவம் நிரம்பி ஹிதம் சொல்லும் ஸ்த்ரீகளும் பாதை இல்லை – இணைக் கூற்றங் கொலோ -ஒரு மிருத்யுவால் முடிக்க ஒண்ணாது என்று இரண்டு மிருத்யு க்ருத சங்கேதிகளாய் வந்தால் போலே யாயிற்று இருக்கிறது-அறியேன்–சபலைகளையே நலிய வேணும் என்னும் நிர்பந்தம் இல்லையே பும்ஸாம் த்ருஷ்டா சித்த அபஹாரியும் இறே

கோளிழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்
கோளிழைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோளிழை யாவுடைய கொழுஞ்சோதி வட்டங்கொல்? கண்ணன்
கோளிழை வாண் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே.–7-7-8-தன் ஒளியே தனக்கு ஆபரணமாக உடைய திரு முகமாய்க் கொண்டு உபமான உபேமேயங்கள் மாறாகும் படி ரூபகம் முற்றின படி-கொடியேன் உயிர் கொள்கின்றதே.-எல்லாரும் உயிர் பெறும் நிலத்திலே இப்படி துக்கப் படுகைக்கு ஈடாகப் பண்ணின பாபத்தை யுடைய என் பிராணனை நலியா நின்றது-

எடுப்பும் சாய்ப்புமான க்லேசம் நடக்க–அதாவது விஜயங்களைக் காட்டித் தரிப்பித்த போது தலை சாய்ந்தும் -மீளவும் கூப்பிடும் படி தலை எடுத்தும்- இப்படி எடுப்பும் சாய்ப்பும் ஆக செல்லுகிற கிலேசம் நடவா நிற்கச் செய்தே-உபாய அதிகார தோஷம் ஒழிய மாயங்கள் செய்து வைத்த வைசித்திரியைக் கேட்க--அதாவது உபாய பூதனான உனக்கு அஜ்ஞான அசக்திகளாகிற தோஷம் இன்றிக்கே இருக்க –
சரண்யனான எனக்கு -ஆகிஞ்சன்யம்-அநந்ய கதித்வங்களும் ஆர்த்தியும் உண்டாகையாலே அதிகாரி தோஷம் இன்றிக்கே இருக்க –-பாசங்கள் நீக்கி -என்று தொடங்கி-மாயங்கள் செய்து வைத்தி –என்று
அவித்யா கர்ம வாசன ருசிகளை -சவாசனமாகப் போக்கி -உனக்கு அனந்யார்ஹ சேஷம் ஆக்கிக் கொண்ட பின்பு ஜன்ம மரணாத் யாச்சர்யங்களை உண்டாக்கி – என்னை சம்சாரத்தில் வைத்த ஆச்சர்யத்தை அருளிச் செய்ய வேணும் என்று கேட்க-(மாய வாமனன் சாரம்)

(எடுப்பும்‌ சாய்ப்புமான க்லேஸம்‌ நடக்க) தம்முடைய ஆர்த்தியாலே வருகிற எடுப்பும்‌ அவனுடைய குணாநுஸந்தாநத்தாலே வந்த சாய்ப்புமாய்க்‌ கொண்டு க்லேஸமானது உருவ நடக்க (உபாயாதிகார தோஷமொழிய மாயங்கள்‌ செய்து வைத்த வைசித்ரியைக்‌ கேட்க) உபாய பூதனாயிருக்கிற வுனக்கு அஜ்ஞாந அஸக்திகளாகிற தோஷமின்றிக்கே யிருக்க ஸரணாகதனான எனக்கு ஆகிஞ்சந்ய அநந்ய கதித்வங்களும்‌ ஆர்த்தியும்‌ உண்டாயிருக்கையாலே அதிகாரத்திலே தோஷமின்றிக்கே இருக்க “பாசங்கள்‌ நீக்கி இத்யாதி, மாயங்கள்‌ செய்து வைத்தி” (திருவாய்மொழி 7-7-5) என்று ஸம்ஸாரத்தில்‌ ஸங்கத்தை வாஸநையோடே அறுத்து உனக்கநந்யார்ஹ ஸேஷமாக்கிக்‌ கொண்டு பின்பு என்னை ஸம்ஸாரத்திலே வைத்த ஆஸ்சர்யத்தை அருளிச் செய்ய வேணுமென்று கேட்க

மாய வாமனன் -உன்னைப் பெற்று தரிக்கவும் பெறாதே இங்கே வைத்த ஆச்சர்யம் இருந்த படி என் என்ன -அவனும் ஒன்றைக் கேட்க ஒன்றை பரிஹரிப்பாரை போலே-இவ்வளவோ என் படி -என்று தன் விசித்திர விபூதி த்வத்தை காட்டி அருளக் கண்டு -இது விஸ்மயமாய் இருந்ததீ -இது இருந்த படி என் -என்று யமுனைக் கரையிலே –ஜெகதே தன்மஹாச்சர்யம் ரூபம் யஸ்ய மஹாத்மன தேனாச்சார்ய வரேணாஹம் பவதா கிருஷ்ண சங்கத -என்று அக்ரூரன் ஆச்சர்யப் பட்டால் போலே -இவரும் அவனுடைய ஜகதாகாரதையை அனுசந்தித்து விஸ்மிதர் ஆகிறார் –

பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அறக் கொண்டிட்டு நீ
வாச மலர்த் தண் துழாய் முடி மாயவனே!அருளாய்
காயமும் சீவனுமாய்க் கழிவாய்ப் பிறப்பாய் பின்னும் நீ
மாயங்கள் செய்து வைத்தி;இவை என்ன மயக்குகளே.–7-8-5-பாசங்கள் நீக்கி -அவித்யா கர்ம வாசனா ருசிகளைப் போக்கி-என்னை-விஷயாந்தரங்களிலே கால் தாழ்ந்து இருக்கிற என்னை
உனக்கே அறக் கொண்டிட்டு நீ-துயர் அறு சுடர் தொழுது எழு-என்னும் படி பண்ணி -இவருக்கு மயர்வை அறுத்து மதி நலத்தை அருளிற்று எத்தைக் கொண்டு என்னில்-வாச மலர்த் தண் துழாய் முடி மாயவனே!-சாத்தின வளையத்தின் அழகைக் காட்டி யாயிற்று இப்படி பண்ணிற்று -பரிமளத்தை யுடைத்தாய் மலரோடு கூடின சிரமஹரமான திருத் துழாய் மாலையை திருமுடியில் யுடைய ஆச்சர்ய ஸுந்தர்ய யுக்தனே –அருளாய்-இவ்வளவு புகுர நின்ற என்னை இங்கே இட்டு வைத்தது நலியவோ
காயமும் சீவனுமாய்க் -சரீரமும் ஆத்மாவுமாய்-கழிவாய்ப் பிறப்பாய் -உத்த்பத்தி விநாசங்களுமாய்
பின்னும் நீ-மாயங்கள் செய்து -சம்சாரத்தில் நசை அற்ற பின்பும் ஜென்ம மரநாத்தி யாச்சர்யங்களை யுண்டாக்கி – வைத்தி;-அவற்றோடு ஜீவிப்பித்து வைத்தீ இவை என்ன மயக்குகளே.–இவை என்ன தெரியாச் செயல்கள் -துர்ஜ்ஜேய ப்ரவ்ருத்திகள் –

7-ஐச்சமாக இருத்தி உறக் கொண்ட ஸ்வ பர பிரயோஜனத்தை அருளிச் செய்ய--அதாவது
அவன் -நமக்கும் நம் உடையாருக்கும் -போது போக்காகா உம்மைக் கொண்டு திருவாய் மொழி
பாடிவித்து கொள்ள வைத்தோம் காணும் –என்று கர்மம் அடியாக அன்றிக்கே- தன் இச்சையாலே இருத்தி –உறக் கொண்ட ஸ்வ பர பிரயோஜனத்தை அருளிச் செய்ய-அதாவது உறப் பல இன் கவி -என்கிறபடியே–தனக்கு தகுதியான கவிகளைப் பாடுவித்து கொண்ட ஸ்வ பிரயோஜனமும் – பர பிரயோஜனமுமான -வித்தை -வைத்ததுக்கு ஹேதுவாக அருளிச் செய்ய-

(ஐச்சிகமாக இருத்தி யறக்கொண்ட ஸ்வ பர ப்ரயோஜநத்தை அருளிச்‌ செய்ய) அவன்‌ நமக்கும்‌ நம்முடையார்க்கும்‌ உம்மைக்‌ கொண்டு திருவாய்மொழி பாடுவித்துக்‌ கொள்ளுகைக்காக நம்முடைய இச்சையாலே வைத்தோம்‌ காணும்‌ என்று வைத்ததுக்கு ஹேதுவை அருளிச் செய்ய

திறத்துக்கே துப்பரவாம் திரு மாலின் சீர்
இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ?
மறப்பிலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னை
உறப்பல இன்கவி சொன்ன உதவிக்கே?–
7-9-9-ஸ்வ விஷய ஞானத்துக்கு சம்பாவனை இல்லாமையால் விஸ்ம்ருதியும் இன்றிக்கே அசித்சமனான என்னை -மறந்தேன் உன்னை முன்னம் என்கிற படியே அனுதாபமும் இன்றிக்கே இருக்கிற என்னை-என்னால் தன்னை உற-யதோ வாசோ நிவர்த்தந்தே என்கிற விஷயத்தை –எல்லை உற -தனக்கு நேரே வாசகமாம் படி ஈஸ்வரனுக்கு உறும் படி என்றுமாம் இது பிள்ளான் நிர்வாஹம்-பல இன்கவி சொன்ன உதவிக்கே?சதுர்விம்சத் சஹஸ்ராணி என்றும் பாட்ட்யே-கேயே ச மதுரம் என்றும் சொல்லுமா போலே ஆயிரமுமாய் இனிதான கவி சொன்ன உபகாரத்துக்கு –திறத்துக்கு என்று தொடங்கி பருகிலும் ஆர்வனோ-

என் சொல்லி எந்நாள் பார் விண்ணீர் இறப்பு எதிர் எதுவும் என்கிற உபகார ஸ்ம்ருதியோடே--அதாவது
வியாச பராசர வால்மீகி பிரப்ருதிகள்-முதல் ஆழ்வார்கள் -உண்டாய் இருக்க – தம்மைக் கொண்டு கவி பாடு வித்த உபகாரத்தை அனுசந்தித்து –என் சொல்லி நிற்பானோ-என்றும் ,-எந்நாள் சிந்தித்து ஆர்வேனோ -என்றும் ,-பார் விண் நீர் முற்றும் கலந்து பருகிலும் ஆர்வேனோ – இறப்பு எதிர் காலம் பருகிலும் ஆர்வேனோ -என்று அவன் பண்ணின உபகாரத்தை அனுசந்தித்தால்-எங்கனே நான் தரையில் கால் பாவுவது –-அவ் உபகாரத்தை கால தத்வம் உள்ள அளவும் அனுசந்தித்தாலும் -பர்யாப்தன் ஆகிறிலேன் –-சகல ஸ்தலங்களிலும் உண்டான சகல சேதனருடையவும்-வாகாத் யுபகரணங்களை- நான் ஒருவனே யுடை யேனுமாய் — கால த்ரயத்திலும் -பேசி அனுபவித்தாலும் -த்ருப்தன் ஆவேனோ –-உதவிக் கைம்மாறு -என்று தொடங்கி –-எதுவும் செய்வது ஒன்றும் இல்லை இங்கும் அங்கும் -என்று இதுக்கு பிரத்யு உபகாரமாக ஆத்ம சமர்ப்பணைத்தைப் பண்ணுவோம் -என்னில் -அதுவும் -ததீயமாய் -இருக்கையாலே – உபய விபூதியிலும் செய்வது ஒன்றும் இல்லை என்னும் படியான உபகார ஸ்ம்ருதியோடு கூடிக் கொண்டு

(என்‌ சொல்லி எந்நாள்‌ பார் விண்ணீரிறப்பெதிர்‌ எதுவும்‌ என்கிற உபகார ஸ்ம்ருதியோடே) வ்யாஸ பராசர வால்மீகி ப்ரப்‌ருதிகள்‌ முதலாழ்வார்களள வுண்டாயிருக்கத்‌ தம்மைக்‌ கொண்டு கவி பாடுவித்துக்‌ கொண்ட உபகாரத்தை அநுஸந்தித்து “என்‌ சொல்லி நிற்பனோ” “எந்நாள்‌ சிந்தித்தார்வனோ” (திருவாய்மொழி 7-9-7) “பார்‌ விண்ணீர்‌ முற்றுங்‌ கலந்து பருகிலுமார்வனோ” (திருவாய்மொழி 7-9-7) “இறப்பெதிர்காலம்‌ பருகிலுமார்வனோ” (திருவாய்மொழி 7-9-9) என்று எங்ஙனே நான்‌ தரையில்‌ கால்‌ பாவுவது அவவுபகாரத்தைக்‌ காலதத்வ முள்ளதனையும்‌ அநுஸந்தித்தாலும்‌ பர்யாப்தனாகிறிலேன்‌. ஸகல ஸ்தலங்களிலு முண்டாயிருக்கிற ஸகல சேதநருடைய வாகாத்‌ யுபகரணங்களை நானொருவனுமே உடையேனுமாய்‌ கால த்ரயத்திலும்‌ பேசி யநுபவித்தாலும்‌ பர்யாப்தனாகிறிலேன்‌. “உதவிக் கைம்மாறு இத்யாதி. எதுவுமொன்று மில்லை செய்வதிங்குமங்கே” (திருவாய்மொழி 7-9-10) இதுக்கு ப்ரத்யுபகாரம்‌ பண்ணுமிடத்தில்‌ ஆத்மாவும்‌ ததீயமா யறிகையாலே உபய விபூதியிலும்‌ செய்யலாவது ஒன்றில்லை என்னும்படியான உபகார ஸ்ம்ருதியை உடையராய்‌

என்றைக்கும் என்னை உய்யக்கொண்டு போகிய
அன்றைக்கு அன்று என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
இன் தமிழ் பாடிய ஈசனை ஆதியாய்
நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ?–7-9-1-என் சொல்லி தரிப்பேன் -சம்சாரியாய் இருக்கிற நான் தனக்கு ஆபி முக்கியம் பண்ணுகைக்கு என் பக்கலிலே ஒரு ஹேது யுண்டு என்று தரிக்கவோ -பின்பு தன்னை ஒழிய செல்லாமை பிறக்கைக்கு என் பக்கலிலே சாதன லேசம் உண்டு என்று தரிக்கவோ -என்னைக் கொண்டு கவி பாடுவித்துக் கொண்டு தனக்கு ஓர் ஏற்றம் யுண்டாக இருக்கிற நீர்மையை கண்டால் என்னால் தரிக்கலாமோ -சாரதியாய் நின்று வென்று வெற்றியை அர்ஜுனன் தலையில் ஏறிட்டால் போலே தானே பாடி என் தலையிலே ஏறிட்டான் அத்தனை –

வைகுந்த நாதன் என் வல்வினை மாய்ந்து அறச்
செய்குந்தன் தன்னை என்னாக்கி என்னால் தன்னை
வைகுந்தனாகப் புகழ் வண் தீங்கவி
செய்குந்தன் தன்னை எந்நாள் சிந்தித்து ஆர்வனோ?–7-9-7-பண்ணின உபகாரத்தை எத்தனை நாள் அநுஸந்தித்தால் எனக்கு பரியாப்தி பிறப்பது -கால தத்வம் உள்ளதனையும் ஸ்மரித்தாலும் பரியாப்தி பிறக்குமோ -சரீர சம்பந்தம் அற்றால் இதுக்கு அவசரம் இல்லை -அதுக்கு முன்பு காலம் அல்பம் ஆகையால் பரியாப்தி பிறவாது என்கிறார் –

ஆர்வனோ ஆழி அங் கை எம்பிரான் புகழ்
பார் விண் நீர் முற்றும் கலந்து பருகிலும்
ஏர்விலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைச்

சீர் பெற இன் கவி சொன்ன திறத்துக்கே ? –7-9-8-பூமியிலும் ஊர்த்வ லோகத்திலும் ஜாலங்களிலும் உள்ள சகல சேதனர்கள் உடைய போக்த்ருத்வத்தையும் வாக்யாதி உபகரணங்களையும் துணையாக கொண்டு அனுபவித்தாலும் ஆர்வேனோ

திறத்துக்கே துப்பரவாம் திரு மாலின் சீர்
இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ?
மறப்பிலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னை
உறப்பல இன்கவி சொன்ன உதவிக்கே?–7-9-9-போன காலமும் வரும் காலமும் நான் அனுபவித்தால் தான் ஆர்வேனோ -போன காலம் அனுபவிப்பாராய்ச் சொல்லுகிறார் அல்லர் -எல்லா காலமும் அனுபவித்தாலும் ஆரார் என்கை -கீழ்ச சொன்ன ஸமஸ்த சேதனருடைய போக்த்ருத்வ சக்தியையும் கூட்டிக் கொண்டு அனுபவித்தாலும் ஆராது-எந்நாள் சிந்தித்து ஆர்வேனோ என்கிறதில் காட்டிலும் ஏற்றம் இல்லையாம் இறே 

உதவிக் கைம்மாறு என் உயிர் என்ன உற்று எண்ணில்
அதுவும் மற்று ஆங்கவன் தன்னது என்னால் தன்னைப்
பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு
எதுவும் ஓன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே.
–7-9-10-செய்யலாவது எதுவும் ஒன்றும் இல்லை -இங்கு இருந்த நாள் சங்கோசத்தாலே செய்யலாவது ஒன்றும் இல்லை யாகிலும் -சங்கோசம் அற்று முக்தன் ஆனால் பிரத்யுபகாரம் பண்ணத் தட்டில்லையே என்னில்-இங்கும் அங்கே.–இங்கு ஆனால் தேஹாத்ம அபிமான வாசனையால் செய்யலாவது உண்டோ என்று பிரமிக்கலாய் இருக்கும் -சங்கோசம் கழிந்த அளவில் செய்யலாவது ஒன்றும் இல்லை என்னும் இடம் சொல்ல வேண்டாம் இறே –ஸ்வேந ரூபேண ஆபிநிஷ்பத்யதே-என்று ஸ்வரூப ஞானம் பிறந்த இடத்தில் ஸ்வா தந்தர்ய கார்யமான ப்ரவர்த்திக்கு இடம் இல்லை –

8-தன் சரிதை கேள்வி யாகாமல் இன்பம் பயக்க இருந்த நிலத் தேவர் குழுவிலே பாட்டுக் கேட்பிப்பதாக கான கோஷ்டியையும் – தேவ பிரான் அறிய -மறந்தவர்-அதாவது-செம்பவளத் திரள் வாய் தன் சரிதை கேட்டான் -பெருமாள் திருமொழி -10-8—என்கிறபடியே –பிராட்டியை ஒழிய பெருமாள் தனி இருந்த இருப்பிலே குசலவர்கள் ஸ்ரீ ராமாயணம் கேட்பித்தாப் போல் அன்றிக்கே –இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும் இவ் ஏழ் உலகை இன்பம் பயக்க இனிது உடன் வீற்று இருந்து –என்று ஆனந்த மயனான தனக்கும் -ஆனந்த வர்தகையான பிராட்டியும் தானுமான சேர்த்தியில் –லோகம் அடங்க வாழும் படி –உபய விபூதி நாதத்வத்தால் வந்த வேறு பாடு தோற்ற எழுந்து அருளி இருந்த –நிலத் தேவர் குழு வணங்கும் சிந்தை மகிழ் திரு வாறன் விளையில்-அந்த பூ சூரரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளிலே –பிரத்யு உபகாரமாக திரு வாய் மொழி கேட்விப்பித்து அடிமை செய்ய பாரித்து –திரு வாறன் விளையில் பரத்வ விமுகமாம் படி தன் நெஞ்சு பிரவணம் ஆகையாலே –திருவாறன் விளை உறை தீர்த்தனுக்கு அற்ற பின் — சிந்தை மற்று ஒன்றின் திறத்து அல்லாத் தன்மை -தேவ பிரான் அறியும் -என்று பகவத் அனுபவ ஜனித ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக –ஹாவு ஹாவு -என்று சாம கானம் பண்ணும் பரம பதத்தில் கோஷ்டியையும் –ஸ்வதஸ் சர்வஜ்ஞனாய் -நினைவுக்கு வாய்த் தலையிலே இருந்து –எல்லோருடைய நினைவும் அறியும் அயர்வறும் அமரர்கள் அதிபதி அறிய விஸ்மரித்தவர்

(தன் சரிதை கேள்வி யாகாமல் இன்பம் பயக்க விருந்த நிலத் தேவர்‌ குழுவிலே பாட்டுக்‌ கேட்பிப்பதாக காந கோஷ்ட்டியையும் தேவ பிரானறிய மறந்தவர்‌) “செம்பவளத்‌ திரள்வாய்த்‌ தன் சரிதை கேட்டான் (பெருமாள்‌ திருமொழி 10-8) என்று நாச்சியாரை யொழிய பெருமாள் தாமே தனி இருந்த இடத்தே ஸ்ரீராமாயணம்‌ கேட்பித்த குஸ லவர்களைப்‌ போல் அன்றிக்கே –இன்பம் பயக்க வெழில்‌ மலர்‌ மாதரும்‌ தானும்‌ இவ் வேழுலகை இன்பம்‌ பயக்க நிலத் தேவர்‌ குழு வணங்கும்‌ சிந்தை மகிழ்‌ திருவாறன்விளை” (திருவாய்மொழி 7-10-1 என்று ஆநந்த மயனான அவன் தனக்குமாநந்த வர்தகையான பிராட்டியும்‌ ஸர்வேஸ்வரனுமான சேர்த்தியிலே லோகமடங்க வாழும்படி உபய விபூதி நாயகத்வத்தால்‌ வந்த வேறுபாடெல்லாம்‌ தோற்ற எழுந்தருளியிருக்கிற அவனை கரண த்ரயத்தாலும்‌ அநுபவிக்கிற பூ ஸுரரான ஸ்ரீவைஷ்ணவர்களுடைய திரட்சியை யுடைத்தான திருவாறன்விளையிலே ப்ரத்யுபகமாரமாகத்‌ திருவாய்மொழி பாடி அடிமை செய்யப்‌ பாரித்து (காந கோஷ்டியையும்‌ தேவபிரானறிய மறந்தவர்‌) “சிந்தை மற்றொன்றின்‌ திறத்ததல்லாத்‌ தன்மை தேவபிரானறியும்‌ திருவாறன்விளையுறை தீர்த்தனுக்கற்றபின்‌” (திருவாய்மொழி 7-10-10) என்று அந்தத்‌ திருவாறன்‌ விளையிலே தம்முடைய நெஞ்சு ப்ரவணமாகையாலே “ஹாவு ஹாவு ஹாவு” (தைத்திரியோபநிஷத்‌) என்று ஸாமகாநம்‌ பண்ணுகிற பரமபதத்தில்‌ கோஷ்டியையும்‌ அயர்வறுமமரர்கள்‌ அதிபதியாய்‌ ஸர்வருடைய ஹ்ருதயமும்‌ அறியும்படி ஸ்வதஸ் ஸர்வஜ்ஞனா யிருக்கிற அவனும் கூட அறியும்படி விஸ்‌மரித்த இவர்

அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி அரசு எய்தி அகத்தியன் வாய் தான் முன் கொன்றான்
தன் பெரும் தொல் கதை கேட்டு மிதிலை செல்வி உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்
செம் பவள திறல் வாய் தன் சரிதை கேட்டான் தில்லை நகர் சித்ர கூடம் தன்னுள்
எம்பெருமான் தான் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன் அமுதம் மதியோம் அன்றே— 10-8–ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகள் ஜகம் அடைய உஜ்ஜீவிக்கும் படி பெற்ற ஸ்ரீ குசலவர்கள் பேச தம்முடைய வ்ருத்தாந்தமான ஸ்ரீ இராமாயண கதையை கேட்டு அருளினவர் நித்ய வாஸம் பண்ணுகிற

இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற் றமர்ந் துறைகின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை

அன்புற் றமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களு மாகுங் கொலோ?–7-10-1–நிரதிசய ஆனந்தம் பிறக்கும் படியாக-நித்ய துக்கியான சம்சாரியானவன் -ஆனந்தமயனான தன்னோட்டை சேர்த்தியாலே ஆனந்திக்குமா போலே யாயிற்று -பிராட்டியோட்டை சேர்த்தியாலே தான் ஆனந்திக்கிற படி –அல்லி மலர் மக்கள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் -என்னக் கடவது இறே –ராமஸ்து ஸீதயாசார்த்தம்
எழில் மலர் மாதருந் தானும்ராகவோ அர்ஹதி வைதேஹீம் -என்று இறே இவளுக்கு ஏற்றம் –யஸ்ய ஜனகாத்மஜா -என்று இறே தனக்கு ஏற்றம் -எழிலை யுடைய பெரிய பிராட்டியார்அன்புற்று-இவர் திருவாய்மொழி கேட்க்கைக்கு நல்ல இடம் என்று ஸ்நே ஹத்தை பண்ணி அமர்ந்து -வேறு ஒரு பிரயோஜனத்தை கனிசியாதே-தேச வாசம் தானே பிரயோஜனமாக கொண்டு-உறைகின்ற -அவதாரம் போலே அன்றிக்கே நித்ய வாசம் பண்ணுகிற-அணி பொழில் சூழ் திரு வாறன்விளை-தர்ச நீயமான பொழில் சூழ்ந்த தேசத்தை-அன்புற்று -தேன தே தமனுவ்ரதா -என்கிறபடியே அவன் விரும்பும் தேசத்தையே விரும்பும் அத்தனை இறே -அவன் திருவாய் மொழி கேட்க்கைக்கு நல்ல இடம் என்று ஸ்நேஹித்தால் போலே நாமும் திரு வாய் மொழி கேட்ப்பிக்கைக்கு நல்ல இடம் என்று ஸ்நேஹத்தை பண்ணி-அமர்ந்து -நாமும் அநந்ய பிரயோஜனராய்–அனுகூல வ்ருத்திகளைப் பண்ணி -மநோ ரத்தத்துக்கு காலமான ஆனதுவே போகத்துக்கும் காலமாக வற்றோ –அபீதா நீம் சகலஸ் ஸ்யாத் –

சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அல்லாத்தன்மை தேவபிரான் அறியும்
சிந்தையினால் செய்வதா னறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத் தேவர் குழு வணங்கும்
சிந்தை மகிழ் திரு வாறன் விளையுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே.–7-10-10-திருவாறன் விளை ஒழிய வேறு ஒன்றில் ப்ராப்ய புத்தி இல்லை என்னும் இடம் சர்வேஸ்வரன் அறியும் –கிட்டினாரை நிரதிசய ஆனந்தி யாக்கும் தேசம் -இவ்வத்தியவசாயம் என்று தொடங்கி என்ன –யுறை தீர்த்தனுக்கு-அங்குத்தை நித்ய வாசத்தாலே தனக்கு போக்யத்தை காட்டி -புறம்பு உள்ள ருசியைப் போக்கி தன் பக்கல் ருசியை பிறப்பித்தவனுக்கு –அற்ற பின்னே- அவன் பக்கல் அநந்யார்ஹமாம் படி ருசி பிறந்த பின்பு –சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அல்லாத்தன்மை -தேவபிரான் அறியும்-

9-சரமோ உபாய பரர் ஆனார்க்கு அதாவது-கீழ் தாம் அருளிச் செய்யக் கேட்ட (அகலகில்லேன் இறையும் பாசுரத்தில்) ஸித்த சாதனத்திலே- தத் பரர் ஆனவர்களுக்கு-நீள் நகரமது -துணித்தான சரண் அன்றி மற்று ஓன்று இலம் உள்ளித் தொழுமின் என்று பிராப்ய சாதன அவதியைப் ப்ரீதியாலே பிரகாசிப்பிகிறார் ஏழாம் பத்தில் .-அதாவது –-நீள் நகரம் அதுவே மலர் சோலைகள் சூழ் திரு வாறன் விளை – வாணனை ஆயிரம்தோள் துணித்தான் சரண் அன்றி மற்று ஓன்று இலம்-என்றும்
உள்ளித் தொழுமின் தொண்டீர் -என்று நிரதிசய போக்யமான திரு வாறன் விளை யாகிற மகா நகரமே பிராப்யம்–
அங்கு எழுந்து அருளி இருக்கிற உஷா அநிருத்த கடகன் ஆனவனே அந்த பிராப்யத்துக்கு பிராபகம் – இவ்வர்த்ததில் மாறாட்டம் இல்லை -ஆகையால் இவ் அர்த்தத்தில் ருசி உடையார் புத்தி பண்ணுங்கோள் என்று – பிராப்யத்தினுடைய அவதி ததீய விஷயம் என்றும் – பிராபகத்தினுடைய அவதி அர்ச்சாவதார ஸூலபன் என்றும் – இவ்வர்த்தத்தை தம்முடைய உகப்பாலே வெளி இட்டு அருளுகிறார்- ஏழாம் பத்தில் என்கை.

(சரம உபாய பரரானார்க்கு )கீழ்‌ தாமருளிச்செய்யக்‌ கேட்ட (ஸித்‌த சாதனத்தாலே தத் பரரானார்க்கு நீள் நகரமது -துணித்தான் சரண் அன்றி மற்று ஓன்று இலம் உள்ளித் தொழுமின் என்று பிராப்ய சாதன அவதியை ப்ரீதியாலே பிரகாசிப்பிகிறார்) நீள் நகரமதுவே மலர்ச்சோலைகள் சூழ் திருவாறன்விளை வாணனை ஆயிரம் தோள் துணித்தான்‌ சரணன்றி மற்று ஒன்றிலம் உள்ளித்தொழுமின் தொண்டீர் (திருவாய் மொழி -7-10-7) என்றும் நிரதிசய போக்யமான திருவாறன்விளை யாகிற மஹா நகரே பரம ப்ராப்யம் -அங்கு எழுந்து அருளி இருக்கிற உஷா நிருத்த கடகனானவனுடைய திருவடிகளே ப்ராபகம் -இவ்வர்த்தத்தில் மாறாட்டமில்லை – ஆகையால்‌ இவ்வர்த்தத்தில்‌ ருசி யுடையராய் புத்தி பண்ணுங்கோள்‌ என்று ப்ராப்யத்தினுடைய அவதி ததீயம் என்றும் பிராபகத்தினுடைய அவதி, அர்ச்சாவதார ஸுலபனானவன்‌ திருவடிகளே என்றும்‌ இவ்வர்த்தத்தைத்‌ தம்முடைய திரு வுள்ளத்தி லுகப்பாலே வெளியிடுகிறார்‌ என்கிறார் –

நீணகரமதுவே மலர்ச் சோலைகள் சூழ் திரு வாறன்விளை
நீணகரத் துறைகின்ற பிரான் நெடுமால் கண்ணன் விண்ணவர்கோன்
வாணபுரம் புக்கு முக் கட்பிரானைத் தொலைய வெம் போர்கள் செய்து
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்றொன்று இலமே.–7-10-7-நீணக ரமதுவே-கலங்கா பெரு நகரமாய் -அபுநாராவ்ருத்தி லக்ஷணமான தேசம் திருவாறன் விளையே-மஹா நகரத்திலே நித்ய வாசம் பண்ணுகிற மஹா உபகாரகன் -விண்ணவர் கோனாய் வைத்து ஆஸ்ரிதர் பக்கலிலே வ்யாமோஹத்தாலே கிருஷ்ணனாய் வந்து அவதரித்து ஸூ லபன் ஆனவன் –-வாண புரம் புக்கு -எதிரிகள் இருந்த தேசத்திலே எடுத்து விட்டு-முக் கட் பிரானைத்-ஈஸ்வர அபிமானியாய் வாணனுடைய ரக்ஷணத்துக்கு நான் கடவன் என்று ஏறிட்டு கொண்ட ருத்ரனை –-தொலைய-இனி ரக்ஷகத்வம் வேண்டா -அத்தை பொகடும் படி வெம் போர்கள் செய்து-கொடிய யுத்தங்கள் செய்து – வாணனை ஆயிரம் தோள் துணித்தான்- பாணனுடைய பாஹு வனத்தை சேதித்து விட்டான் -உஷை பித்ரு ஹீனை யாகாமைக்கு –சரண் -அவனே அத்தேசத்தை பிராபிக்கைக்கு உபாயம் –-அன்றி மற்றொன்று இலமே.–வேறு ப்ராப்ய ப்ராபகங்கள் மாறாடக் கடவோம் அல்லோம்-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌-15 –குணாநுபவ பாதம் –(218 – 228)-24-தஸ ஸதக பகவத் குண அநுபவ விவரண அதிகரணம் –(219–228)-ஆறாம்  பகுதி-(224) ஸ்ரீ மணவாள மா முனிகள் –

August 2, 2026

1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 234 முடிய (48)

1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-234 (27)

15 –குணாநுபவ பாதம் –218 – 228 —மொத்தம் —11– ஸூரணைகள் –இரண்டு அதிகரணங்கள்–
23 –தஸ ஸதக கத பகவத் குண தஸக அநு குண அநுபவ உபதேச அதிகரணம் —-218—ஒரே ஸூரணை
24-தஸ ஸதக பகவத் குண அநுபவ விவரண அதிகரணம் –219–228—மொத்தம் –10–ஸூரணைகள்

ஆறாம் பத்தால்--தன்னுடைய பரம கிருபையாலே சர்வரும் வந்து ஆஸ்ரயிக்கும் படி இருக்கிற
சர்வ சரண்யனான சர்வேஸ்வரன் -பக்தி பாரவஸ்யத்தாலே அநந்ய கதிகளாம் தமக்கு தம் திரு அடிகளையே -நிரபேஷ உபாயமாகக் காட்டிக் கொடுக்க – அவ்வுபாயத்தில் விச்சேதம் இல்லாதபடி நடக்கிற வ்யவசாயத்தை உடையராய் – தம்முடைய வ்யவசாயத்தை கடக முகத்தாலே -இவனுக்கு அறிவித்து – வரவு தாழ்க்கையாலே தமக்கு விளைந்த -பிரணய ரோஷத்தை அவன் பரிகரிக்க –
அவன் சாமர்த்தியத்தை அனுசந்தித்து -குண அனுபவத்துக்கு பண்ணின பிர பத்தியும் பலித்தவாறே –பிராப்திக்கு பிரபத்தி பண்ணுவதாகக் கோலி – ஸித்த உபாய வர்ணம் இதர பரித்யாக பூர்வகம் ஆகையாலே பௌராணிக வசன பிரக்ரியையாலே -உபாய விரோதிகளான த்யாஜ்ய அம்சங்களை
சாவசனமாக தத் பிரசங்கமும் அசஹ்யமாம் படி விட்டு – விட்டவை எல்லாம் தமக்குப் பற்றுகை விஷயமாக நினைத்து –பரம ஆர்த்தியோடே தமக்கு உபாயமாக நினைத்து இருக்கும் -திரு உலகு அளந்தவனுடைய சர்வ சுலபமான திரு அடிகளை – நித்ய ஸூரிகளும் வந்து அனுபவிக்கும் படி வந்து நிற்கிற -திரு மலையிலே கண்டு கொண்டு – பூர்வ வாக்ய பிரக்ரியையாலே சரணம் புக்கவர் –
பத்துடை அடியவரிலே -தொடங்கி ஐஞ்சாம் பத்து அளவாக உபதேசித்த பக்தி உபாயத்தின்
துஷ்கரத்வாதி தோஷ அனுசந்தானத்தாலே சோகம் ஜனிக்கும் படியான பாகம் பிறந்தவர்களுக்கு
தம்முடைய பிரபத்தி நிஷ்டையை பிரகாசிப்பிக்கிறார்
என்கிறார்

தன்னுடைய பரம க்ருபையாலே ஸர்வரும்‌ வந்தாஸ்ரயிக்கும்படி யிருக்கிற ஸர்வ ஸரண்யனான ஸர்வேஸ்வரன்‌ பக்தி பாரவஸ்யத்தாலே அநந்ய கதிகளான இவர்க்குத்‌ தன்‌ திருவடிகளே நிரபேக்ஷோ பாயமென்னுமிடத்தைக்‌ காட்டிக்‌ கொடுக்க, அந்த உபாயத்திலே விச்சேதமில்லாதபடி வ்யவஸாயத்தை யுடையராய்த்‌ தம்முடைய வ்யவஸாயத்தை ௧டகர்‌ முகத்தாலே யவனுக்கறிவித்துத்‌ தம்முடைய விளம்ப அக்ஷமத்வத்தால்‌ வந்த இன்னாப்பைப்‌ பரிஹரித்தவனுடைய ஸாமர்த்‌யத்தை அநுஸந்தித்து குணாநுபவத்துக்குப்‌ பண்ணின ப்ரபத்தியும்‌ பலித்தவாறே ப்ராப்திக்குப்‌ ப்ரபத்தி பண்ணுவதாக ஸித்‌தோபாய ஸ்வீகாரம்‌ இதரோபாய த்யாக பூர்வகமாக வேண்டுகையாலே பெளராணிக வசந ப்ரக்ரியாலே உபாய விரோதி களான த்யாஜ்யங்களை வாஸநையோடே அவற்றினுடைய ப்ரஸங்கமும்‌ அஸஹ்யமாம்படி விட்டு விட்டவை யெல்லாம்‌ தமக்கு ப்ராப்த விஷயமே யாக்கி நிரதிஸயமான பர பக்தியோடே திருவுலகளந்த ஸர்வ ஸுலபமான திருவடிகளை நித்ய ஸூரிகளும்‌ வந்தனுபவிக்கும்படி நிற்கிற திருமலையிலே கண்டு பூர்வ வாக்ய ப்ரக்ரியையாலே ஸரணம்‌ புக்கவர்‌ பத்துடையடியவரிலே தொடங்கி அஞ்சாம் பத்தளவாக உபதேஸித்த பக்த் யுபாயத்தினுடைய துஷ்கரத்வாதி தோஷாநுஸந்தானத்தாலே ஸோகம்‌ ஐநிக்கும்படியான அதிகாரம்‌ பிறந்தவர்களுக்குத்‌ தம்முடைய ப்ரபத்தி நிஷ்டையை ப்ரகாஸிப்பிக்கிறார்‌ என்கிறார் –

(1)என்னையும் யாவர்க்கும் சுரர்க்காய் அடியீர் வாழ்மின் என்று கருணையாலே சர்வ லோக பூதேப்ய -என்றவை கடலோசையும் கழுத்துக்கு மேலுமாகாமல் உபாயத்வம் கல்வெட்டாக்குகிற சரண்யன் (2)அஜ்ஞ்ஞான சக்தி யாதாத்ம்ய ஜ்ஞானங்கள் அளவால் அன்றிக்கே அங்குற்றேன் என்னான் புணராய் என்னும் படி மெய்யமர் பக்தி பூம பலமாகவும் அநந்ய கதித்வம் உடைய தமக்கு (3) பாதமே சரணாக்க அவையே சேமம் கொண்டு ஏக சிந்தையராய் திர்யக்குகளை இட்டு ஸ்வ அபிப்ராயத்தை நிவேதித்து விளம்ப ரோஷம் உபாயத்தாலே அழிய (4) உருகாமல் வரித்ததும் நண்ணி வணங்க பலித்தவாறே சப்ரகாரமாக சக்ருத் கரணீயம் என்று புராண பௌ ராணிகர் த்யாஜ்ய அம்சம் ஆக்கின (5) சித் அசித் பிராப்ய பிராபக ஆபாசங்களைக் கை வலிந்து கை கழலக் கண்டும் எல்லாம் கிடக்க நினையாத கன்றும் ஆளீர் மேவீர் ஊதீர் என்று ததீய சேஷம் ஆக்கியும் -புறத்திட்டு காட்டி என்று பிரசங்கிக்கில் முடியும் படி விட்டு (6) தந்தை தாய் உண்ணும் சோறு மாநிதி பூவை யாவையும் ஒன்றே ஆக்கி (7)தளர்வேனோ திரிவேனோ குறுகாதோ முதல்வாவோ என்னும் ஆர்த்தியோடே (8) திரி விக்ரமனாய்க் குறள் கோலப் பிரானாய் அடியை மூன்றை இரந்த வன் கள்வன் கண் முகப்பே அகல்கொள் திசை வையம் விண்ணும் தட வந்த தடம் தாமரைகளை (9) இணைத் தாமரைகள் காண இமையோரும் வரும் படி சென்று சேர்ந்த உலகத்திலதத்தே கண்டு அகலகில்லேன் என்று பூர்வ வாக்யம் அனுசந்தித்தவர் (10) பிணக்கறத் தொ சசோக சஜாதீயர்க்குத் டங்கி வேத புனித விறுதி சொன்ன சாத்ய உபாய ஸ்ரவண (11)தந்தனன் மற்றோர் களை கண் இலம் புகுந்தேன் என்று ஸ்வ ஸித்த உபாய நிஷ்டையை உக்த்ய அனுஷ்டானங்களாலே காட்டுகிறார் ஆறாம் பத்தில் —

1-என்னையும் யாவர்க்கும் சுரர்க்காய் அடியீர் வாழ்மின் என்று கருணையாலே-சர்வ லோக பூதேப்ய -என்றவை கடலோசையும் கழுத்துக்கு மேலுமாகாமல் உபாயத்வம் கல் வெட்டாக்குகிற சரண்யன்
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளன் என்மின்களே
-6-1-10–என்று ஆர்த்த ரஷணத்திலே தீஷித்து இருக்கிறவனுக்கு -ரஷ்ய வர்க்கத்தில் நானும் ஒருத்தி உளள் என்று சொல்லுங்கோள் என்றும் –
திரு விண்ணகர் சேர்ந்த பிரான் வரம் கொள் பாதம் அல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே-6-3-7- -என்று திரு விண்ணகரிலே நின்று அருளும் அவன் திரு அடிகள் அல்லது சர்வருக்கும் வலிய புகல் அல்லை என்றும்–வன் சரண் சுரர்க்காய் -6-3-8–என்று தேவர்களுக்கு வலிய ரஷகனாம் என்றும் –
அடிக் கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்று என்று அருள் கொடுக்கும் -6-10-11–என்று
நமக்கு சேஷ பூதராய் உள்ள எல்லோரும் நமக்கு அடிகளின் கீழே -அநந்ய பிரயோஜனராய் புகுந்து
உஜ்ஜீவி யுங்கோள் என்று தன் அருளைப் பண்ணா நிற்கும் என்றும் சொல்லுகிற படி-தன்னுடைய கிருபையாலே – சர்வ லோக சரண்யாய ராகவாய மகாத்மனே நிவேதயத மாம் ஷிப்ரம் விபீஷண உபஸ்திதம்—யுத்த —17-14-என்று வந்து சரணாகதனான விபீஷண ஆழ்வான் – சர்வலோக சரண்யன் என்ற உக்தி சமுத்திர கோஷம் போலே நிரார்த்தம் ஆகாதபடியாகவும் – சக்ருதேவ பிரபன்னாயா தவாச்மீதச யாசதே அபயம் சர்வ பூதேப்ய ததாம் ஏதத் வ்ரதம் மம –யுத்த –18-33– என்று(பூதேப்ய -சர்வராலும் வரும் பயம்) சரணாகத ரஷணத்தில் தீஷிதனாய் சரண்யனான தான் செய்த யுக்தி ச ஹ்ருத்யமாகாதா படியும் – வானவர் கோனொடும் நமன்று எழும் திரு வேம்கடம் -3-3-7–என்றும் ,
எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயனை வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார் வினைச் சுடரை நந்துவிக்கும் வேம்கடம் –முதல் திருவந்தாதி-26-என்றும் — போதறிந்து வானரங்கள்–இரண்டாம் திருவந்தாதி-72–என்றும் – கண்டு வணங்கும் களிறு-மூன்றாம் திருவந்தாதி-70 -என்றும் –
நித்ய ஸூரிகள்–நித்ய சம்சாரிகள் -பிரயோஜனாந்த பரர் -அநந்ய பிரயோஜனர் –மனுஷ்யர்-திர்யக்குகள் -என்கிற வாசி அற ஆஸ்ரயிக்கலாம் படி சர்வ ஸமாச்ரயணீயனாய் நிற்க்கையாலே –
தன்னுடைய உபாயத்வம் சிலா லிகிதம் ஆகும் படி திரு மலையில் எழுந்து அருளி இருக்கிற
அநாலோசித விசேஷ சேஷ லோக சரண்யனான சர்வேஸ்வரன் –

(என்னையும்‌ இத்யாதி, சரண்யனென்கிற தளவாக) “ஏறு சேவகனார்க்கு என்னையும்‌ உளளென்மின்௧ளே” (திருவாய்மொழி 6-1-10) “யாவர்க்கும்‌ வன்‌ சரணே” (திருவாய்மொழி 6-3-7) ‘வன் சரண்‌ சுரர்க்காய்‌” (திருவாய்மொழி 6-3-8) என்று ஆர்த்த ரக்ஷ்ணத்திலே தீக்ஷித்திருக்கிறவனுக்கு ரக்ஷ்ய வர்க்கத்திலே நானுமொருத்தி உளள்‌ என்று சொல்லுங்கோள்‌ என்றும்‌, திருவிண்ணகரிலே நின்றருளினவனுடைய திருவடிகளல்லது ஸர்வர்க்கும்‌ வலிய ரக்ஷை இல்லை; தேவர்களுக்கும்‌ வலிய ரக்ஷ என்று இவர் தாமே பேசும்படி “அடிக்கீழ்‌ அமர்ந்து புகுந்து அடியீர்‌ வாழ்மின்‌ என்றென்றருள்‌ கொடுக்கும்‌” (திருவாய்மொழி 6-10-11) என்று நமக்கு ஸேஷபூதராயுள்ளா ரெல்லாரும்‌ நம்மடியின்‌ கீழே அநந்ய ப்ரயோஜநராய்ப்‌ புகுந்து உஜ்ஜீவியுங்கோள்‌ என்று அவன் தானே அருளிச் செய்யும்படியான க்ருபையாலே (ஸர்வ லோக பூதேப்‌ய: என்கிறவை கடலோசையும்‌ கழுத்துக்கு மேலுமாகாமல்‌) “ஸர்வலோக ஸரண்யாய ராகவாய மஹாத்மநே நிவேதயத மாம்‌ க்ஷிப்ரம்‌ விபீஷணமுபஸ்த்திதம்‌” ரா.யு. 17-14 என்றும்‌, “ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதிச யாசதே அபயம்‌ ஸர்வ பூதேப்‌யோ ததாமி ஏதத்‌ வ்ரதம்‌ மம” (ரா.யு. 18-33) என்றும்‌ சொல்லுகிற ஸரணாக தனுடையவும்‌ ஸரண்யனுடையவும்‌ உக்தி ஸமுத்‌ர கோஷம்‌ போலே நிரர்த்தகமாகாத படியாகவும்‌, கண்டாதுபரியாகாத படியாகவும்‌ “வானவர்‌ வானவர்‌ கோனொடும்‌ நமன்றெழும்‌ திருவேங்கடம்‌” (திருவாய்மொழி 3-3-7 என்றும்‌ “வினைச்‌ சுடரை நந்துவிக்கும்‌ வேங்கடம்‌” (முதல்‌ திருவந்தாதி 26) என்றும்‌ “வானரமும்‌ வேடுமுடை வேங்கடம்‌” நான்முகன்‌ திருவந்தாதி 47) என்றும்‌ “கண்டு வணங்கும்‌ களிறு” (மூன்றாம்‌ திருவந்தாதி 70) என்றும்‌ சொல்லுகிறபடியே நித்ய ஸூரிகளோடு நித்ய ஸம்ஸாரிகளோடு திர்யக்குகளோடு வாசியற ஆஸ்ரயிக்கலாம்படி நிற்கையாலே தன்னுடைய ஸமாஸ்ரயணீயத்வம்‌ ஸிலா லிகிதமாம்படி திருமலையிலே யெழுந்தருளி நிற்கிற அநாலோசித விஸேஷ அஸேஷ லோக ஸரண்யனான ஸர்வேஸ்வரன்‌ 

வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்!
தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திருவண்வண்டூர்
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே.–6-1-10-எங்கும் மேற்பட்ட ஆண் பிள்ளை தனத்தை யுடையவர்க்கு -ரஞ்ச நீ யஸ்ய விக்ரமை -என்று எதிரிகள் மேலிட்ட வீரம் -ரதசர்யா ஸூ சம்மத -என்று வீரர்கள் கொண்டாடின வீரம் – உம்முடைய ரஷ்ய வர்க்கத்தில் இன்னும் ஒருத்தி நோவுபடா நின்றாள் என்னுங்கோள் –

பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
வரங்கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே.–6-3-7–வரையாதே எல்லார்க்கும் ஆஸ்ரயிக்கலாம் படியான ஸ்ரேஷ்டமான திருவடிகள்-சிறியோர் பெரியோர் என்று அன்றிக்கே எல்லார்க்கும் தஞ்சமான புகல் வேறு இல்லை –அல்லாதவை ஓட்டை ஓடத்தோடு ஒழுகல் ஓடமாய் கழுத்துக் கட்டியாய் இறே இருப்பது –

வன்சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங்கூற்றமுமாய்த்
தன்சரண் நிழற்கீழ்உலகம் வைத்தும் வையாதும்
தென்சரண் திசைக்குத் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
என்சரண் என்கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே.–6-3-8–தேவ ஜாதிக்கு தன்னை அழிய மாறி ரக்ஷிக்கும் புகலாய்-தத் பிரதி கூலர்க்கு -வெங்கூற்றம் –அந்தகன் தண்ணீர் என்னும் படியான கூற்றமாய்-

அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்றென்றருள் கொடுக்கும்
படிக் கேழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங் கடத்துக் கிவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே.–6-10-11—தன் திருவடிகளின் கீழே அநந்ய பிரயோஜனராகப் புகுந்து ஸ்வரூப ஞானம் உடையோர் வாழுங்கோள் என்று முத்திரையால் அருளிச் செய்கிறாப் போலே யாயிற்று நின்று அருளுவது –மாம் ஏகம் சரணம் வ்ரஜ -மா ஸூ ச -என்றால் போலே யாயிற்று நிற்பது

சுமந்து மாமலர் நீர்சுடர் தூபம்கொண்டு.
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நமன்று எழும்திரு வேங்கடம்
நங்கட்குச்
சமன் கொள் வீடு தரும்தடங் குன்றமே.–3-3-7-நித்ய ஸூ ரிகள் -ஸ்ரீ சேனாபதி ஆழ்வானோடு என்னுதல்
தேவர்களோடு ப்ரஹ்மா என்னுதல் -அமர்ந்து -அநந்ய பிரயோஜனராய்-நமன்று எழும்–தொழுது எழு-என்னும் தம்மைப் போலே என்கை -பக்கன அபிமானராய் உத்தியோகிக்கும் திருவேங்கடம் – பிரயோஜ நான்தர பரரை-அநந்ய பிரயோஜனர் ஆக்கும் -நில மிதியாலே

எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை
வழுவா வகை நினைந்து  வைகல் தொழுவார்
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர்
மனச் சுடரைத் தூண்டும் மலை –26–இவர்கள் மூவருடைய வினைச் சுடர் உண்டு-பாபம் ஆகிற தேஜஸ் தத்வம்-அத்தை அவிக்குமாய்த்து திருமலையானது-ஐஸ்வர்ய விரோதி ஆத்ம பிராப்தி விரோதி பகவத் ப்ராப்தி விரோதி இவை யாகிற வினைச் சுடரை நெருப்பை அவித்தால் போலே சமிப்பிக்கும்-மூவர்க்கும் உத்தேஸ்ய விரோதிகளைப் போக்கும் -என்றபடி – சிலருக்கு சத்ரு பீடாதிகள் சிலருக்கு இந்த்ரிய ஜெயம்
சிலருக்கு விஸ்லேஷம் –

நன் மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும்
பொன் மணியும் முத்தமும் பூ மரமும் -பன் மணி நீர்
ஓடு பொருதுருளும் கானமும் வானரமும்
வேடுமுடை வேங்கடம் -47-திரு வருவிகள் பெருகப் புக்கால் இவை எல்லாவற்றையும் உடைத்தாய் இருக்கை-நீருக்கு இறாய்த்து மரங்களிலே ஏறுகிற வானரமும் வேடரும் -என்றுமாம் –

புகு மதத்தால் வாய் பூசிக் கீழ்த் தாழ்ந்து அருவி
உகு மதத்தால் கால் கழுவிக் கையால் -மிகு மதத்தேன்
விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே
கண்டு வணங்கும் களிறு —
–70-திருமலையிலே திர்யக்குகளும் தன்னை வணங்கும்படி
ஞானத்தை கொடுக்க வல்ல சக்தியை யுடையவன் என்கிறது -(ததாமி புத்தி யோகம் )-ஞான கார்யமான ஸமாஸ்ரயணத்தை தேச வாசத்தாலே பண்ணி வைக்கும் –(தேசோயம் ஸர்வ காம துக் -சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே-அவனே இது மூலம் அருளுகிறான் )

2-அஜ்ஞ்ஞான சக்தி யாதாத்ம்ய ஜ்ஞானங்கள் அளவால் அன்றிக்கே அங்குற்றேன் என்னான் புணராய் என்னும் படி மெய்யமர் பக்தி பூமா பலமாகவும் அநந்ய கதித்வம் உடைய தமக்கு அவித்யாதோ தேவே பரிப்புருட தயாவா விதிதயா ஸ்வ பக்தேர் பூம்நாவா ஜகதி கதிமந்யா மவிதுஷாம் கதிர் கம்யச்சாஸௌ ஹரிரிதி ஜிதந்தாஹ்வயமனோ ரஹச்யம் வியாஜக்ரே சகலு பகவான் ஸௌ நகமுனி -ஸ்ரீ பட்டர் ஸ்ரீ ஸூக்தி –(அஞ்ஞானத்தாலாவது -அளவிட்டு அறிய ஒண்ணாதாவன் என்கிற ஞானத்தாலாவது -தன் பக்தியினுடைய மேன்மையாலாவது அவனைத் தவிர வேறு உபாயம் உண்டு என்று அறியாதவர்களுக்கு இவன் பேறாகவும்-உபாயமாகவும் -ஆகிறான் என்று ஸுநக மகரிஷி ஜிதந்தே மந்திரத்தின் உள் பொருளை விரித்து உரைத்தார் )-என்று –உபாயாந்தரங்களை அறியவும்-அனுஷ்டிக்கவும் ஈடான ஜ்ஞான சக்திகள் இல்லாமையாலே -ஆதல்-பகவத் ஏக பர தந்த்ரமான ஸ்வரூபத்துக்கு-தத் ஏக உபாயத்வம் ஒழிய-தத் வ்யத்ரிக்தோ உபாயம் அன்வயம் ஆகாது என்று –உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் –5-8-3–என்னும்படியான ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞானத்தால் ஆதல்–அநந்ய கதிகளாம் அளவு அன்றிக்கே –(அஞ்ஞானத்தாலோ ஞான ஆதிக்யத்தாலோ இல்லாமல் பக்தி பாரவசயத்தால் அன்றோ ஆழ்வாராதிகள் பிரபத்தி )அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் உன்னை காணும் அவாவில் வீழ்ந்து நான் எங்குற்றேனும் அல்லேன்-5-7-2- -என்றும்-என் நான் செய்கேன் -5-8-3–என்றும்–பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராய் -6-10-4–என்று ஸாதனம் அனுஷ்டித்து முக்த பிராயனாய் இருக்கிறேன் அல்லேன் –சாதன அனுஷ்டானம் பண்ணுபவர்களில் ஒருவனாய் இருக்கிறேன் அல்லேன் –மேலும் சாதன அனுஷ்டானம் பண்ண ஒண்ணாத படி உன் சௌந்தர்யாதிகளில் ஈடுபட்டு -உன்னைக் காண வேணும் என்னும் ஆசையினால்-பலஹீனமாய் தளர்ந்து –இனி உபாய அனுஷ்டான ஷமன் அல்லேன் –உன் திருவடிகளை பெருகைக்கு என்னால் செய்யல் ஆவது இல்லை –எனக்கும் செயலுக்கும் என்ன சேர்த்தி உண்டு –முன்பு பரிகல்ப்தமான உபாயங்கள் ஒன்றும் என் பக்கல் இல்லை –நிரதிசய போக்யமான உன் திருவடிகளை நான் கிட்டும் வழி கல்பிக்க வேண்டும் என்று சொல்லும் படி –மெய்யமர் காதல்–6-8-2–என்று அவன் ஸ்வரூபத்தை அனுசந்திதாதல் –குண ஜ்ஞானத்தாலே ஆதல் —தரிக்க ஒண்ணாத படி திரு மேனியிலே அணைய வேண்டும் படியான காதல்-என்னும் படி–கீழ்ப் பத்திலே தமக்கு பிறந்த பக்தி பூமா உண்டு –பாரவச்ய ஜனகமான பக்தி அதிசயம் –அதனுடைய பலமாகவும் -உபாயாந்தரதுக்கு ஆள் அன்றிக்கே –களை கண் மற்று இலேன் -5-8-8–என்னும் படி அநந்ய கதித்வம் உடையரான தமக்கு சமாசத்தில் பக்தி பூம பலம் என்ன வேணும் –பூமா பலம் என்கிற இது -பாடச்கலனத்தாலே வந்ததாம் இத்தனை –

(அஜ்ஞாந அஸக்தியித்யாதி, அநந்ய கதித்வமுடைய தமக்கு) “அவித்‌யாதோ தேவே பரிப்‌ருட தயா வா விதி தயா ஸ்வ பக்தேர்‌ பூம்நா வா ஐகதி கதி மந்யா விதுஷாம்‌ கதிர்‌ கம்யஸ் சாஸெள ஹரிரிதி ஜிதந்தாஹ்வய மநோ : ரஹஸ்யம்‌ வ்யாஜஹ்ரே ஸ கலு பகவாந்‌ சவ்நகமுநி:” (பட்டர்‌ ஸ்ரீஸூக்தி)என்று உபாயாந்தரங்களை அறிகைக்கும்‌ அநுஷ்டிக்கைக்கு மீடான ஜ்ஞாந ஸக்திகளில்லாத அளவால்‌ வந்த அந்த உபாயாந்தரங்களில்‌ அந்வயமே யன்றிக்கே ஸ்வரூப பாரதந்த்ர்யத்தாலே பகவதேக ரஷ்யமாகை யொழிய வ்யதிரிக்தோபாயங்கள்‌ ஸ்வரூப விருத்‌தங்கள்‌ என்கிற யாதாத்ம்ய ஞானத்தாலே “யாவராலும்‌ ஒன்றும்‌ குறை வேண்டேன்‌-(திருவாய் -5-8-3) என்று அவற்றிலுண்டான அநந்வயத் தளவன்றிக்கே அங்குற்றேனல்லேன்‌ இங்குற்றேன்‌ அல்லேன்‌ உன்னைக்‌ காணும்‌ அவாவில்‌ வீழ்ந்து நான எங்குற்றேனுமல்லேன்‌‘ (திருவாய்மொழி 5-7-2) “என்‌ நான்‌ செய்கேன்‌” (திருவாய்மொழி 5-8-3) “புணரா நின்ற மரமேழ்‌ அன்றெய்த ஒரு வில் வலவாவோ” திருவாய்மொழி 6-10-5) என்று நித்ய ஸூரிகள்‌ ஸம்ஸாரத்திலே உலாவினாப் போலே ஸித்‌த ஸாதநம்‌ பண்ணி வர்த்திக்கிறேனல்லேன்‌ ஸாதநாநுஷ்டாநம்‌ பண்ணுகிறவர்களிலே ஒருவனாய்‌ வர்த்திக்கிறேனல்லேன்‌, அன்றிக்கே உன்னை அநுபவிக்கிற நித்ய ஸூரிகளிலே ஒருவனாய்‌ அங்கே வர்த்திக்கிறேனல்லேன்‌ உன்னை யொழிய ஸப்‌தாதி, விஷயாநுப,வம்‌ பண்ணுகிற ஸம்ஸாரிகளிலேயாய்‌ இங்கே வர்த்திக்கிறேனல்லேன்‌. உன்னுடைய ஸெளந்தர்யாதி களிலே ஈடுபட்டு உன்னைத் தான்‌ வேணுமென்று ஆசையாலே பல ஹீநனாய்த்‌ தளர்ந்து இனி உபாயாநுஷ்டாநம்‌ பண்ண க்ஷமனல்லேன்‌; உன்‌ திருவடிகளைக்‌ கிட்டுகைக்கு என்னால்‌ செய்யலாவதில்லை; எனக்கும்‌ செயலுக்கும்‌ என்ன சேர்த்தி யுண்டு? உன்னுடைய ரக்ஷணத்திலே அதி ஸங்கை பண்ணின மஹா ராஜருடைய ஸங்கா நிராகரணார்த்தமாக இலக்குக்‌ குறிக்க வொண்ணாதபடி திரண்டு நின்ற மராமரங்கள்‌ ஏழையும்‌ எய்த ஏக வீரனே ஓ என்று கூப்பிடும்படி “மெய் யமர்‌ காதல்‌” (திருவாய்மொழி 6-8-2) என்று அவனுடைய திருமேனியோடே யமர வேண்டும்படியாய்த்‌ தம்முடம்போடே அவனமர வேண்டும் படியாய்‌ ஸத்யமாய்ப்‌ பொருந்தி ஸ்வரூபாநுபந்தியாய்‌ கீழில்‌ பத்தில்‌ தமக்குப்‌ பிறந்த பக்தி பாரவஸ்யத்தினுடைய பலமாகவுமாம்‌. உபாயாந்தரத்துக் கன்றிக்கே “களை கண்‌ மற்றிலேன்‌” (திருவாய்மொழி 5-8-8) என்னும்படி அநந்ய கதித்வமுடைய இவர்

என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3—என்னான் செய்கேன் –
உன் திருவடிகளை பெறுகைக்கு என்னால் செய்யலாவது இல்லை -எனக்கும் செயலுக்கும் என்ன சேர்த்தி யுண்டு -ஒரு துர்ப்பலன் தலையிலே மலையை எடுத்தால் போலே இருக்கை இறே -என்னை சாதன அனுஷ்டானத்திலே மூட்டுகை யாவது -ஒரு சர்வ சக்தி நிர்வஹிக்குமத்தை நான் செய்யவோ-உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்-நானும் எனக்கு கடவனாய் -பிறரும் சக்தர் ஆனவன்றும் -உன்னால் வரும் நீ ஒழிய -என்னால் வரும் நீயும் வேண்டா -பிறரால் வரும் நீயும் வேண்டா என்கை –த்வம் ஏவ உபாயம் போதோ மே பவ –

அங்குற்றேனலேன் இங்குற்றேனலேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான்
எங்குற்றேனுமலேன்
இலங்கை செற்ற அம்மானே!
திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவர மங்கல நகருறை
சங்கு சக்கரத்தாய்! தமியேனுக்கு அருளாயே.–5-7-2—சாதனம் அனுஷ்ட்டித்து முக்த பிராயனாய் இருக்கிறேன் அல்லேன் -சாதனம் அனுஷ்டானம் பண்ணுமவர்களில் ஒருவனாய் இருக்கிறேன் அல்லேன் -மேலும் சாதன அனுஷ்டானம் பண்ண ஒண்ணாத படி ஸுந்தரியாதிகளிலே ஈடுபட்டு உன்னைக் காண வேணும் ஆசையால் பலஹீனனாய் தளர்ந்து இனி உபாய அனுஷ்டான ஷமனும் அல்லேன் –இது பூர்வர்கள் நிர்வாகம் –-அதவா – நீ இருந்த இடத்தே வந்து கிட்டி உன்னை அனுபவிக்கிறேன் அல்லேன் -உன் பக்கல் நிரபேஷராய் இருக்கிற சம்சாரிகளிலே ஒருவனாய் இருக்கிறேன் அல்லேன் -உன்னை ஒழிய தரித்து இருக்கிற சம்சாரிகளோடே பொருத்தம் யுடையேன் அல்லேன் –அங்கு வர மாட்டேன் -அபி நிவேசத்தால் இங்கு நிற்க மாட்டேன் -பிறரோடு பொருத்தம் உடையேன் அல்லேன் -என்றுமாம் –

புணரா நின்ற மரமேழ் அன் றெய்த ஒருவில் வலவாவோ!
புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ!
திணரார் மேக மெனக்களிறு சேரும் திருவேங்கடத்தானே!
திணரார் சார்ங்கத் துனபாதம் சேர்வ தடியேன் எந்நாளே.–6-10-5-புணர்ந்து நின்ற -அம்புக்கு நேரோட ஒண்ணாத படி திரண்டு நின்ற-மரமேழ் அன் றெய்த -ரக்ஷணத்தில் சங்கை பண்ணின வன்று ஏழையும் ஓர் அம்பால் அழித்த-அதி சங்கை பண்ண மழு வேந்திக் கொடுத்து ரசித்தவன் கிடீர் ஆசைப்பட்ட என்னை அநாதரிக்கிறான் -அதி சங்கையைப் போக்கி பணி கொண்டவன் கிடீர் இரந்த என்னை பணி கொள்ளாது ஒழிகிறான்-ஒருவில் வலவாவோ!-ஏக வீரனே –ஓ என்று விஷாத அதிசய ஸூ சகம் –

மையமர் வாள்நெடுங்கண் மங்கைமார் முன்பு என்கை இருந்து
நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ?
கையமர் சக்கரத்து என் கனிவாய்ப்பெரு மானைக் கண்டு
மெய்யமர் காதல் சொல்லிக் கிளிகாள்! விரைந்தோடி வந்தே.–6-8-2-திருமேனியில் அணைய வேண்டும்படியான காதல் -என் உடம்போடு அணைய வேண்டும் காதல் என்றுமாம் –காத்ரைச் சோகாபி கர்ச்சிதை சம்ஸ்ப்ருசெயம்-என்ன கடவது இறே –குண ஞானத்தால் தரிக்கும் அளவன்று என்று சொல்லுங்கோள் -என்று சீயர் அருளிச் செய்வர் -பிள்ளான் -தம்மை போல் பொய்யாய் நிலை நில்லாத காதல் அன்று என்று சொல்லுங்கோள் என்று பணிக்கும்

களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது
இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே.–5-8-8-உன்னைப் பிரிந்து படுகிற துக்கத்தை போக்கிலும் போக்கு -தவிரிலும் தவிரு -வேறு ரக்ஷகரை யுடையேன் அல்லேன் -நீ உன் கார்யம் செய்யிலும் செய் -தவிரிலும் தவிரு என் தலையில் குறை இல்லை –த்வம் ஏவ உபாய பூதோ மே பவ-என்கிற அம்சத்தில் குறை இல்லை –சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி என்கிற உன் கூறு செய்யிலும் செய் -தவிரிலும் தவிரு -துக்க நிவ்ருத்தி உம்ம தான பின்பு கிருஷியும் உம்மை தாக வேண்டாவோ என்ன-துக்கி யாகைக்கு கிருஷி பண்ணின நான் நிவர்த்தகன் ஆகவோ -ஒரு சக்தி கிருத்யத்தை நான் செய்யவோ

3-பாதமே சரணாக்க அவையே சேமம் கொண்டு ஏக சிந்தையராய்–ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் -5-7-10–என்னும்படி தன் திருவடிகளை சகாயாந்தர நிரபேஷ சாதனமாகக் காட்டிக் கொடுக்க –கழல்கள் அவையே சரணாக கொண்ட -5-8-11-என்றும் –அடி மேல் சேமம் கொள் தென் குருகூர் சடகோபன்–5-9-11-என்றும் நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும் ஏக சிந்தையனாய் –5-10-11 -என்றும் சொல்லுகிறபடி-விரோதி நிரசன சீலனானவன் திரு வடிகளையே நிரபேஷ உபாயமாகக் கொண்டு ஏக ரூப மான வ்யவசாயத்தை உடையராய் திர்யக்குகளை இட்டு ஸ்வ அபிப்ராயத்தை நிவேதித்து-வைகல் பூம் கழிவாய் வந்து மேயும் குருகினங்காள் கனிவாய் பெருமானைக் கண்டு வினையாட்டியேன் காதன்மை –கைகள் கூப்பிச் சொல்லீர்-6-1-1- -என்று தொடங்கி –ஏறு சேவகனார்க்கு என்னையும் உளன் என்மின்கள் -என்னுமதளவாக பெற்று அன்றி தரியாத அதி மாத்ர பிராவண்யம் உண்டாய் இருக்கவும்-ஸ்வ ரக்ஷண ஸ்வாந்வயத்தை சகியாத ஸ்வரூப பாரதந்த்ர்யத்தாலே –ததேக ரஷத்யத்வ வ்யவசாய ரகிதராய் இருக்கிற தம்முடைய கருத்தை –உபாப்யாமேவ பஷாப்யாம் -என்கிறபடியே ஜ்ஞான அனுஷ்டான ரூப பஷ த்வய யோகத்தாலே ப்ராப்யமான பகவத் விஷயத்தை சீக்கரமாக ப்ராபிக்கைக்கு ஈடான யோக்யதை உடையரான கடகரை இட்டு அறிவித்து –விளம்ப ரோஷம் உபாயத்தாலே அழிய இப்படி அறிவித்த அளவிலும் அவன் வரவு தாழ்க்கையால் உண்டான பிரணய ரோஷத்தாலே -வந்து மேல் விழுந்த அளவிலும் –போகு நம்பீ –கழக மேறேல் நம்பீ -என்று உபேஷித்து அவன் முகம் பாராமல் இருப்போம் என்று -சிற்றில் இழைப்பது –சிறு சோறு அடுவதாக –அது தன்னுடைய போக விரோதி ஆகையாலே –அழித்தாய் உன் திருவடியாலே -என்கிறபடியே அவன் அந்த அநாதர அந்நிய பரதைகளை தனக்கும் சரம உபாயமான திரு வடிகளாலே யுப லஷிதமான விக்ரகத்தின் உடைய வைலஷண்யத்தாலே – குலைக்க -அவனோடு பொருந்தி

தமக்கு (பாதமே சரணாக்க அவையே சேமங்கொண்டேக சிந்தையராய்‌ ) “ஆறெனெக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்‌” (திருவாய்மொழி 5-7-10) என்று தன்‌ திருவடிகளே ஸஹாயாந்தர நிரபேஷமான ஸாதநமென்னுமிடத்தைக்‌ காட்டிக் கொடுக்க; “கழல்களவையே சரணாகக்‌ கொண்ட” (திருவாய்மொழி 5-8-11 என்றும்‌, “அடிமேல்‌ சேமங்கொள்‌ தென் குருகூர்ச்‌ சடகோபன்‌” (திருவாய்மொழி 5-9-11) என்றும்‌, “நாகணை மிசை நம்பிரான்‌ சரணே சரண்‌ நமக்கென்று நாடொறு மேக சிந்தையனாய்‌” (திருவாய்மொழி 5-10-11 என்றும்‌ சொல்லுகிறபடியே விரோதி நிரஸந ஸீலனாயிருக்கிறவன்‌ திருவடிகளே நிரபேக்ஷோபாய மென்கிற ஏக ரூபமான வ்யவஸாயத்தை யுடையராய்‌ , (திர்யக்குக்களை யிட்டு ஸ்வாபிப்ராயத்தை நிவேதித்து) “வைகல் பூங்கழிவாய்‌ வந்து மேயுங்‌ குருகினங்காள்‌ வினையாட்டியேன்‌ காதன்மை கைகள்‌ கூப்பிச் சொல்லீர்‌ ” (திருவாய்மொழி 6-1-1) என்றும்‌, “சேவகனார்க் கென்னை யுமுளளென்மின்களே’ (திருவாய்மொழி 6-1-10) என்றும்‌ பெற்றல்லது தரியாத அதி மாத்ர ப்ராவண்ய முடையரா யிருக்கச்‌ செய்தேயும்‌, ஸ்வ ரக்ஷணத்தில்‌ அந்வயமில்லாத அத்யந்த பாரதந்த்ர் யத்தினாலே ததேக ரக்ஷ்யமா யிருக்குமென்கிற தம்முடைய கருத்தை, ஸூத்‌த ஸ்வபா வராய்‌ ஸாகா ஸஞ்சாரிகளாய்‌ மதுகர ப்ரக்ருதிகளாய்‌ பக்ஷபாதிகளாய்‌ ஷட்பத நிஷ்டரான கடகரை யிட்டறிவித்து (விளம்ப ரோஷ முபாயத்தாலே யழிய) இப்படியறிவித்த விடத்திலும்‌ அவன் தாழ்க்க அத்தால்‌ வந்த ப்ரணய ரோஷத்தாலே, அவன்‌ வந்து மேல்‌ விழுந்த வளவிலும்‌, “போகு நம்பீ ” (திருவாய்மொழி 6-2-2) “கழகமேறேல்‌ நம்பீ (திருவாய்மொழி 6-2-6) என்று அவனை உபேஷித்து அவன்‌ முகம்‌ பாராமலிருப்போமென்று சிற்றிலிழைப்பது சிறு சோறடுவதாக, அவனும்‌ தன்னுடைய போக விரோதி யாகையாலே “அழித்தாயுன்‌ திருவடியால்‌” (திருவாய்மொழி 6-2-9) என்கிறபடியே அந்த அநாதராந்ய பரதைகளை தனக்கும்‌ சரமோபாயமான திருவடிகளாலே உப லக்ஷிதமான விக்‌ரஹ வைலக்ஷ்ண்யத்தாலே குலைத்த அவனோடே சேர்ந்து.

ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக் கோர் கைம்
மாறு நான் ஒன்றிலேன் என தாவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெருஞ் செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை
நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!–5-7-10—ஆறு -என்று உபாயம் -சரண் என்று உபேயம் -உபாய உபேயங்கள் இரண்டும் உன் திருவடிகளேயாம் படி பண்ணினாய் என்று பிள்ளான் நிர்வஹிக்கும்–இவை இரண்டிலும் உபாயத்தையே சொல்லுகிறது என்று பட்டர் நிர்வஹிப்பர்-எனக்கு உபாயம் உன் திருவடிகளேயாம்படி பண்ணித் தந்தாய் –ஆறு -உபாயம் -உபாக்யார்த்தைக வாசக -என்கையாலே சரண் என்று உபாயம் -எனக்கு என்று -உபாயாந்தர நிஷ்டரைக் காட்டிலும் தமக்கு உள்ள வேறுபாடு சொல்லுகிறார் -நோற்ற நோன்பிலேன் என்று தொடங்கி-உபாயாந்தர சூன்யத்தையை முன்னிட்டு உபாய நிஷ்கர்ஷம் பண்ணுகிற திரு வாய் மொழி யாகையாலே அத்தையே நிகமிக்கிறது -அவதாரணத்தாலே ஏக பதத்தை நினைக்கிறது -ஈஸ்வரனை பற்றின ஊற்றத்தாலே உபாயாந்தரங்களை நெகிழ்கை ஒழிய -நாஸ்திக்யத்தாலே விடுமன்று அது விஷயாந்தர ப்ராவண்ய ஹேதுவாம் -ஒளஷத சேவை பண்ணினான் ஒருவன் சர்ப்பத்தின் வாயிலே கை கொடுத்தால் நிர்ப்பாதம் -ஒளஷத ஸ்பர்சம் இல்லாதவன் அத்தைச் செய்தால் மரண ஹேதுவாம் –

உழலை என்பில் பேய்ச்சி முலை யூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே.–5-8-11-தமக்கு உபாயமாக முன்பு பிரகாசிப்பித்த திருவடிகளையே அபிமத சித்திக்கு உபாயமாக புத்தி பண்ணிக் கொண்ட திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வாரானவர்

நாமங் களாயிர முடைய நம் பெருமானடி மேல்
சேமங் கொள் தென் குருகூர்ச் சடகோபன்
தெரிந்துரைத்த
நாமங்களாயிரத்துள் இவை பத்தும் திருவல்லவாழ்
சேமங்கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே.–5-9-11-அவனைப் பெறாதே நோவு பட நோவு பட அவன் திருவடிகளே ரக்ஷகமாகப் பற்றும் ஆழ்வார் பிராட்டி ஆற்றாமை மிக்க இடத்திலும் ராவணனை சபிய்யாதே பெருமாள் வரவை பார்த்து இருந்தால் போலே அவனுக்கு திரு நாமங்கள் போலே குண சேஷ்டிதங்களுக்கு ப்ரதிபாதகமான ஆயிரத்திலும்-ஆராய்ந்து உரைத்த இப்பத்தையும்

நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்
ஏக சிந்தையனாய்
க் குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ் வெய்துவர் வைகலுமே.–5-10-11-அனந்த சாயித்தவம் சர்வாதிக வஸ்துவுக்கு லக்ஷணம் ஆகையாலே -சர்வாதிகனே சரண்யன் என்கிறது -திரு வனந்த ஆழ்வானுடைய புருஷகார பாவம் சொல்லுகிறது என்றுமாம் –படுக்கையைச் சொல்ல படுக்கை யுடையாரைச் சொல்லிற்றாம் இறே
நம்பிரான் -ஆஸ்ரித விஷயத்தில் உபகார சீலனானவன் –-சரணே சரண் நமக்கு என்று -நமக்கு திருவடிகளே உபாயம் என்று –அவதாரணத்தாலே உபாய நைரபேஷ்யம் சொல்லுகிறது -சம்சாரிக ஸ்வ பாவங்கள் மேலிட்டு விபரீதமே பலியா நின்றாலும் இது தவிர வேறு ஒன்றில் கால் தாழாது ஒழி கை -மஹா விச்வாஸம் ஆகிறது –-நாடொறும் ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்-ஆக நூற்ற
நாள் தோறும் இதுவே மநோ ரதமான ஆழ்வார் -பகவத் குண பிரேரிதராய் தாம் உள்ராகைக்காக

வைகல் பூங்கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்!
செய் கொள் செந்நெல் உயர் திரு வண்வண்டூ ருறையும்
கை கொள் சக்கரத் தென் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே.–6-1-1-அவனுக்கு மறுக்க ஒண்ணாத அஞ்சலியைப் பண்ணுங்கோள் – பலத்தோடு வியபிசரியாத செயலைச் செய்யுங்கோள் -என்று பூர்வர்கள் நிர்வஹிப்பர்கள்-பத்தாம் பாட்டிலே யாயிற்று இன்னாப்பு பிரசங்கிப்பது-பட்டர் பத்துப் பாட்டிலும் இன்னாப்பு தோற்ற நிர்வஹித்து அருளுவார்-முன்பு போலே என்று இராதே பெரிய முதலிகள் கும்பிடுங்கோள் -கும்பிட்ட வாறே முகம் பார்ப்பார் -பின்னை முகம் மாறுவதற்கு முன்னே என் தசையைச் சொல்லுங்கோள்-கைகளை கூப்பி -கைகளை கூப்புகையாவது -சிறகுகளை விரிக்கை –
சொல்லீர்-ஒரு மஹா பாரத்துக்கு போரும் இறே-வினையாட்டியேன் காதன்மையே.-சொல்லீர்
பிரிந்தால் அவனைப் போல் அன்றியே தரிக்க மாட்டாத படி பாபம் பண்ணின என் காதன்மை சொல்லீர் -அவன் வேண்டேன் என்றாலும் விட மாட்ட தபடியான பாபம் -வந்த ஆளின் கையிலே வார்த்தை சொல்லி விடுகை அன்றிக்கே திர்யக்குகளைக் குறித்து தூது விட வேண்டும்படியான பாபத்தை பண்ணினேன் –-காதன்மை என்றவாறே -தம்மளவு என்று இராமே -என்னுடைய காதன்மை -வன் நெஞ்சர் காதல் போல் அன்றி இறே மெல்லியலார் காதல் -மெல்லியலார் காதல் அளவில்லாத என் காதன்மை சொல்லீர் -சொல்லின் தாழ்வே -வரவு தப்பாது என்று இருக்கிறாள் –

வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்!
தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திருவண்வண்டூர்
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே.–6-1-10-எங்கும் மேற்பட்ட ஆண் பிள்ளை தனத்தை யுடையவர்க்கு -ரஞ்ச நீ யஸ்ய விக்ரமை -என்று எதிரிகள் மேலிட்ட வீரம் –ரதசர்யா ஸூ சம்மத –என்று வீரர்கள் கொண்டாடின வீரம் –உம்முடைய ரஷ்ய வர்க்கத்தில் இன்னும் ஒருத்தி நோவுபடா நின்றாள் என்னுங்கோள் –

போகு நம்பீ! உன் தாமரை புரை கண்ணிணையும் செவ்வாய் முறுவலும்
ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோமே யாம்;
தோகை மா மயிலார்கள் நின்னருள் சூடுவார் செவி ஓசை வைத்தெழ
ஆகள் போகவிட்டுக் குழலூது போயிருந்தே.–6-2-2-நீர் பரப்பராய் -முதலிகளாய் -இருப்புதீர்-உறவு உடையாரைப் போலேதீண்டாதே போம் -எத்தனைபேரைத் தீண்டினீர் என்பதை அறியோம் -எங்கள் மேல் புடவை படாமே போம்-முற்பட போகு நம்பீ என்றவாறே வர நின்றான் -பின்பு போகு நம்பீ என்றவாறே தொட்டான் –

குழகி எங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்மம் ஒன்றில்லை;
பழகி யாம் இருப்போம் பரமே இத் திருவருள்கள்?
அழகியார் இவ் வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலருளர்;
கழகம் ஏறேல், நம்பி! உனக்கும் இளைதே கன்மமே.–6-2-6-எங்கள் திரளில் ஏறாதே கொள் -என்ன -எனக்கு குற்றம் என் என்ன –நம்பி!-சமதம யாதி ஆத்ம குணோபேதர் திரளில் அன்றோ நீர் புகுவது -அவர்கள் அன்றோ உம்மை கிட்ட உரியார்-சிறு பெண்கள் திரளில் புகுகை யீடன்று

உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம்கண் விழிகளின்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–6-2-9–உன் சிற்றில் அழிக்க வேண்டும் பரிகரம் அமையாதோ இதுக்கு -ஜகத் உபஸம்ஹாரம் பண்ணுவது சங்கல்பத்தாலே இறே -சங்கல்பத்தாலே யாதல் -கையாலே யாதல் அழிக்கல் ஆகாதோ

4-உருகாமல் வரித்ததும் நண்ணி வணங்கப் பலித்தவாறே -பிறந்தவாற்றிலே –அவதார அனுபவம் பெறாத இழவாலே பதற –தத் குண சேஷ்டிதங்களை அனுபவித்தாகிலும் தரிப்போம் என்று இழிந்த அளவில்-நிறந்தனூடு புக்கு என தாவியை நின்று நின்று உருக்கி உண்கின்ற -என்றும் –பையவே நிலையும் வந்து என் நெஞ்சை வுருக்குங்கள் -என்றும் –உள்ளம் உள் குடைந்து என் உயிரை உருக்கும் -என்றும் –ஊடு புக்கு எனதாவியை வுருக்கி உண்டு இடுகின்ற –என்னும்படி அவை மிகவும் சைதில்ய ஹேதுவாகையாலே -தரித்து நின்று அனுபவிக்க வல்லேனாம் படி பண்ணி அருள வேண்டும் என்று அவனை உபாயமாக வரித்தித்தும்–குரவை ஆய்ச்சியரிலே- என்ன குறை எனக்கு -என்று தொடங்கி –நண்ணி நான் வணங்கப் பெற்றேன் எனக்கு யார் பிறர் நாயகர் -என்று ப்ரீதி பூர்வகமாக அவதார குண சேஷ்டிதங்களை சர்வ காலமும் முறையிலே கிட்டி அனுபவிக்கப் பெற்ற எனக்கு யார் தான் நியாமகர் என்று கர்விக்கும் படி பலித்தவாறே ––சப்ரகாரமாக சக்ருத் கரணீயம் என்று இதர உபாய த்யாக பூர்வ கத்வமாகிற பிரகாரத்தோடே –சித்த உபாய வர்ணம் சக்ருதேவ –என்கிறபடியே -பிராப்த்திகாகவும் ஒருகால் பண்ண வேண்டும் என்று பார்த்து புராண பௌ ராணிகர் த்யாஜ்ய அம்சம் ஆக்கின பிதரம் மாதரம் தாரான் புத்ரான் பந்தூன் சகின் குருன் ரத்னானி தான தான்யானி ஷேத்ராணி ச க்ருஹானிச சர்வ தர்மாம்ச்ச சந்தய்ஜ்ய சர்வ காமாம்ச்ச சாஷரான் லோக விக்ராந்த சரணவ் சரணம் தேவ்ராஜம் விபோ-என்கிற வசனம் ஆக்னேயம் அஷ்டம் அஞ்சைவ பவிஷ்யன் நவமம் ஸ்ம்ருதம்-என்கிறபடி அஷ்டாதச புராணத்திலும் வைத்துக் கொண்டு ஒன்பதாம் புராண மாக சொல்லப் பட்ட –பவிஷ்யத் புராண சித்தம் ஆகையாலும் –புராண வித்தகர் ஆகையாலே -பௌ ராணிகரான ஸ்ரீ பாஷ்ய காரர் கத்யத்தில் -இவ் வசன பிரக்ரியையாலே -த்யாஜ்யங்களின் உடைய த்யாக பூர்வகமான சரண வரணத்தை பண்ணுகையாலும் –புராண பௌ ராணிகர் த்யாஜ்ய அம்சம் ஆக்கின -என்கிறது —இங்கன் அன்றிக்கே –இவ் அர்த்தம் புராண சித்தம் ஆகையாலும் -அது தான் புராதான புருஷ அனுஷ்டான ரூபமாக சொல்லப் படுகையாலும் -இவை இரடையும் பற்ற –புராண பௌ ராணிகர் த்யாஜ்ய அம்சம் ஆக்கின–என்று அருளிச் செய்தார் ஆகவுமாம் -சித் அசித் பிராப்ய பிராபக உபாசங்களை ஆக இப்படி புராணரும் பௌ ராணிகரும் –பிதரம் மாதரம்-என்று தொடங்கி –சாஷரான்-என்னும் அளவாக –சந்த்யஜ்ய -என்கிற இதுக்கு கர்மீ பவிக்கையாலே –வஹ்ய மாண சித்த உபாய வர்ணத்துக்கு அங்கமாக த்யாஜிக்கும் படும் அம்சம் ஆக்கின சித் வஸ்துகளும் அசித் வஸ்துக்களுமாய் உள்ள – பிராப்ய உபாசங்களையும் -பிராபக உபாசங்களையும் –இதில்-சர்வ தர்மாம்ச்ச –கீழ் -உபாயாந்தர சக காரியுமாய் -ஸூயம் பிரயோஜனம் ஆகையாலே -உபேயமுமாய் –இரண்டுக்கும் பொதுவாய் இருந்துள்ள வற்றை சொல்கிறது -எங்கனே என்னில்-மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ -என்று கொண்டு –ஈச்வரனோபாதி மாதா பிதா அனுவர்த்தனத்தையும் உபாசன அங்கமாக சாஸ்திரம் விதிக்கையாலே -மாதா பிதாக்கள் -உபாயாந்தர சக காரிகளுமாய் –அவ்வளவு இன்றிக்கே -இவர்களுடைய வியோகம் அசஹ்யமாய் இருக்கையாலே –ஸூயம் பிரயோஜனமாயும் இருப்பார்கள் —ஸ்திரீயும் சஹா தர்ம சாரினியாய் இருக்கையாலே -உபாயாந்தர சக காரியுமாய்-அபிமதையும் ஆகையாலே உபேய பூதை யுமாய் இருக்கும் புத்ரனும் –புன்நாம்னோ நரகாத் த்ராயதே இதி புத்ர – என்கிறபடி-நரக தர்சனத்துக்கு அடியான பாப விமோசன ஹேது வாகிற முகத்தாலே -உபாயாந்தர சக காரியுமாய் -தம்முடைய வியோகம் அசஹ்யாகும் படி இருக்கையாலே உபேயாமுமாயும் இருக்கும் பந்துகள்-இவனைக் குடிப் பழியாக வர்த்தியாத படி நியமித்து நல் வழியே நடத்துபவர்கள் ஆகையாலே –உபாயாந்தர சக காரிகளுமாய் -பெரும் குடி பாட்டத்தே பிறந்தோம் என்கிற செருக்காலே –உபேய பூதருமாய் இருப்பார்கள் தோழனும்- இவனுக்கு ஹிதைஷயாய் -ஹிதத்தை யே பிரவர்த்திப்பிக்கை யாலே – உபாயாந்தர சக காரியுமாய்-அபிமதனாய் இருக்கையாலே உபேயமுமாய் இருக்கும்–குருக்கள் ஆகிறார்கள்- உபயாந் தரங்களை உபதேசித்துப் போந்தவர் ஆகையால்-உபயாந்தர சக காரிகளுமாய் –உபகாரர் ஆகையாலே உபேயமுமாய் இருப்பார்கள்–ரத்னங்கள் உபாயாந்தரங்களுக்கு இதி கர்தவ்யதா சக காரகமுமாய் -மேற் சொல்லுமவற்றை அழிய மாறி ஸ்வீகரிக்க படுமவை ஆகையாலே உபேயமுமாய் இருக்கும்-தான தான்யங்களும் ஷேத்ரங்களும் அப்படியே க்ருகங்கள் வாசஸ்தான முகத்தாலே உபாயந்தரங்களுக்கு சக காரகமுமாய் –மாட மாளிகையாய் எடுக்கும் படியான அபிமதத்வத்தாலே உபேயுமாய் இருக்கும் –மேல் சர்வ தர்மாம்ச்ச -இத்யாதியாலே சாஷாத் உபாயாந்தரங்களையும் -உபேயாந்தரங்களையும் சொல்கிறது –அதில் சர்வ தர்மாம்ச்ச என்று கர்ம யோகத் உபாயங்களை சொல்கிறது –சர்வ காமாம்ச்ச -ஐ கிக பரலோக ஐஸ்வர்ய விசேஷங்களைச் சொல்கிறது–சாஷரான்-அஷர சப்த வாச்யமான கைவல்யத்தையும் அவ்வோபாதி த்யாஜ்யம் என்கிறது –ஆக இப்படி உபாயத்வேனவும் உபேயத் வேனவும் வ்யவஸ்திதங்கள் அன்றிக்கே – கீழ் சொன்ன படியே –உபாயாந்தர சக காரித்வத்தாலும்-அபிமதத் வாதிகளாலும் உண்டான பிராப்ய பிராபகங்கள் உடைய மாதா -பித்ராதிகளும் -ரத்ன தான தான்யாதிகளும் –ஆனவற்றை சித் அசித் பிராப்ய பிராபக ஆபாசங்கள் என்கிறது –அதவா -சர்வ தர்மாம்ச்ச -இத்யாதிகள்-தானும் பரம பிராப்ய பிராபகங்கள் பற்ற ஆபாசங்கள் ஆகையாலே -அவை தன்னையும் கூட்டிக் கொண்டு சொல்லவுமாம் –கை வலிந்து -இத்யாதிக்கு அனுகுணமாக ஒதுக்குகிறதே இறே உள்ளது -மேல் சொல்லுகிற வர்ணத்து அங்கமான த்யாகம் -உபாய விரோதிகள் சர்வத்தையும் –விஷயமாக உடைத்து ஆகையாலே -கை வலிந்து -இத்யாதிகளால் சொன்னது த்யாஜ்யமான இத்தனைக்கும் உபலக்ஷணம் –அப்படி ஆனால் இறே சப்ரகாரமாக சத்ருத் கரணீயம் என்றதுக்கு சேருவது ஆக இப்படி இருந்துள்ள

(உருகாமல்‌ வலித்ததும்‌ நண்ணி வணங்க பலித்தவாறே) “உகவையால்‌ நெஞ்சமுள்ளுருகி உன்‌ தாமரைத்‌ தடங்கண்‌ விழிகளின்‌ அகவலைப்‌ படுப்பான்‌ அழித்தாயுன்‌ திருவடியால்‌” (திருவாய்மொழி 6-2-9) என்றிப்படி அல்லோம்‌ என்ற நம்மைச்‌ சேர்த்துக்‌ கொண்ட தோராஸ்சர்ய மிருந்தபடி யென்‌ என்றுருக, இது தொன்று கண்டோ ஆஸ்சர்யப்படுகிறீர்‌, தன்னில் தான்‌ சேராதபடி விலக்ஷணங்களானவை நம்மோடே சேர்ந்திருக்கிறபடி பாரீர்‌ என்று தன்னுடைய விருத்‌த விபூதிகத்வத்தை நல்குரவுஞ் செல்விலே காட்டி உருகாதபடி வலிக்கப் பண்ண இவரும்‌ “நல்குரவும்‌” என்று தொடங்கி “திருவிண்ணகர்க்‌ கண்டேனே” (திருவாய்மொழி 6-3-1) என்று அத்தைக்‌ கண்டு தேறின விதுவும்‌ குரவையாய்ச்சியரிலே “என்ன குறை நமக்கே” (திருவாய்மொழி 6-4-1) என்று தொடங்கி “நண்ணி நான்‌ வணங்கப்‌ பெற்றேன்‌ எனக்கார்‌ பிறர்‌ நாயகரே” (திருவாய்மொழி 6-4-10) என்னும்படி க்ருஷ்ண குண சேஷ்டிதங்களை தரித்து நின்று அநுபவிக்கலாம்படி பலித்தவாறே. ‘உருகாமல்‌ வரித்தும்‌’ என்று பாடமானபோது பிறந்தவாற்றிலே உன்னைப்‌ பிரிந்த தஸையிலே உன்னுடைய குணாநுஸந்தாநம்‌ பண்ணி தரிக்கலாமோ வென்று பாரா நின்றேன்‌; “ஊடுபுக்கென தாவியை நின்று நின்றுருக்கி யுண்கின்ற” (திருவாய்மொழி 5-10-10) என்று அவை தானே ஸிதிலமாக்கா நின்றன-தரித்து நின்று குணாநுஸந்தாநம்‌ பண்ணும்படி பண்ணி யருள வேணுமென்றும்‌ “மற்றோர்‌ களை கணிலம்‌ காண்மின்களே” (திருவாய்மொழி 6-3-10) “(நாகணை மிசை நம்பிரான்‌ சரணே சரண்‌” (திருவாய்மொழி 5-10-11 )என்று உபாய வரணம்‌ பண்ணி அந்த வரணமும்‌ என்ன குறை யெனக் கென்று தொடங்கி “விண் மிசைத்‌ தன தாமமே புக மேவிய சோதி தன் தாள்‌ நண்ணி நான்‌ வணங்கப்‌ பெற்றேன்‌ (திருவாய்மொழி 6-4-10) என்று க்ருஷ்ண குண சேஷ்டிதங்களை திவா ராத்ர விபாகமற ப்ரீதி ப்ரேரிதனாய்க்‌ கொண்டு பேசப்‌ பெற்ற எனக்கு என்ன குறையுண்டு, பொய்யாஸநமிடுவார்‌ மல்லரை யிட்டு நெருக்கத்‌ தேடுவார்‌ எதிரம்பு கோர்ப்பாராய்க்‌ கொண்டு இருக்கற இந்த விபூதியிலிராதே “கதஸ்‌ ஸ்வம் ஸ்த்தாந முத்தமம்‌” என்கிறபடியே பரிவரேயான நிர்பய ஸ்த்தா நத்திலே எழுந்தருளின வ்ருத்தாந்தத்தை அநுஸந்தித்து முறையிலே கிட்டப்‌ பெற்ற வெனக்கு வேறு நிர்வாஹகருண்டோ என்றும்‌; கர்விக்க வேண்டும்படி பலித்தவாறே என்றுமாம்‌. (ஸப்ரகாரமாக ஸக்ருத்‌ கரணீயமென்று) இதரோபாயத்யாகமாகிற ப்ரகாரத்தோடே ஸித்‌த ஸாதந ஸ்வீகாரம்‌ “ஸக்ருதேவ” (ராயு. 18-33 என்கிற படியே ஒருக்கால் பண்ண வேணுமென்று பார்த்து. (புராண பெளராணிகர்‌ தயாஜ்யா மஸமாக்கின சித சித்‌ ப்ராப்ய ப்ராபகா பாஸங்களை) புராணேதிஹாஸங்‌களும்‌ அவற்றை உள்ளபடி யறிகையாலே பெளராணிகரான உடையவரும்‌ –பிதரம்‌ மாதரம்‌ தாராந்‌ புத்ராந்‌ பந்தூந்‌ ஸகீந்‌ குரூந்‌, ரத்நாநி தந தாந்யாநி க்ஷேத்ராணி ச க்‌ரஹாணிச, ஸர்வ தர்மாம்ஸ்ச ஸந்த்யஜ்ய ஸர்வ காமாம்ஸ்ச ஸாக்ஷராந்‌” (சரணாகதி கத்யம்‌) “பரித்யக்தா மயா லங்கா மித்ராணி ச தநாநி ச பவத்‌ கதம்‌ மே ராஜ்யஞ்ச ஜீவிதஞ்ச ஸுகாநிவை த்யக்த்வா புத்ராம்ஸ்ச தாராம்‌ ச ராகவம்‌ ஸரணம்‌ கத: (ரா.யு19-5) என்று த்யாஜ்யாம்ஸமாக்கினவற்றில்‌ பித்ராதிகளான சேதநருடைய ரக்ஷணம்‌ “மாத்ரு தேவோ பவ” (தைத்திர்யோபநிஷத்‌ இத்யாதி ப்படியே ஸாதநாந்தரத்துக்கு உபகாரகமாகையாலே ப்ராபகங்களாயும்‌ அவர்களுடைய வியோகம்‌ அஸஹ்யமாம்படி ப்ரிய விஷயமாகையாலே ப்ராப்யங்களாயு மிருக்கையாலும்‌; ரத்நாதிகள்‌ உபாயாந்தரத்துக்கு தாநாதி முகத்தாலே ஸஹகாரிகளா யிருக்கையாலே ப்ராபகங்களாயும்‌ தன்னை யழிய மாறியும்‌ இவற்றை ஆர்ஜிக்க வேண்டும்படி ஸ்வயம் ப்ரயோஜநங்க ளாகையாலே ப்ராப்யங்களா யுமிருக்கிற இந்த ப்ராப்ய ப்ராபகாபா ஸங்களை; ஸாக்ஷாத்‌ ப்ராப்ய ப்ராபகங்கள்‌ அல்லாமையாலே ஆபாஸங்களென்கிறது.

உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம்கண் விழிகளின்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–6-2-9-பிரிந்து நெஞ்சை புண் படுத்துகையால் வந்த உருகுதல் ஒழிய -எங்கள் உகவையால் நெஞ்சம் உள்ளுருகி-உன் தாமரைத் தடம்கண் விழிகளின்-அகவலைப் படுப்பான் –-தாமரைத் தடாகம் போலே மநோ ஹரமான உன்னுடைய கண்ணிலே நோக்கு ஆகிற வலையுள்ளே அகப்படுத்துகைக்காக -த்ருஷ்ட்டி பந்தத்தாலே இறே அநந்யார்ஹம் ஆக்குவது –
அழித்தாய் உன் திருவடியால்;-உன் சிற்றில் அழிக்க வேண்டும் பரிகரம் அமையாதோ இதுக்கு -ஜகத் உபஸம்ஹாரம் பண்ணுவது சங்கல்பத்தாலே இறே -சங்கல்பத்தாலே யாதல் -கையாலே யாதல் அழிக்கல் ஆகாதோ

நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே.
–6-3-1-சர்வகதனானது தமக்காக என்று இருக்கிறார் –ஒருவனை பிடிக்க சுற்றி ஒரூரை வளைப்பாரை போலே -இப்படி சர்வகதனான பெருமையை உடையனாய் வைத்து -ப்ரணய ரோஷத்தாலே அகன்று -முடிய புக்க என்னை தாழ நின்று சேர்த்துக் கொண்ட உபகாரகனை-ஓர் இடத்திலே காண ஆசைப்பட்டு ஓர் இடத்தே காண்கை அன்றிக்கே தூது விட்ட அர்ச்சாவதாரத்திலே கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –-

மண்மிசைப் பெரும்பாரம் நீங்க ஓர்பாரத மாபெரும்போர்
பண்ணிமாயங்கள் செய்துசேனையைப் பாழ்படநூற் றிட்டுப்போய்
விண்மிசைத் தன தாமமே புக மேவிய சோதிதன்தாள்
நண்ணி நான்வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே-6-4-10-அவன் திருவடிகளைக் கிட்டி நான் அனுபவிக்கப் பெற்றேன் -எனக்கு வேறு நியந்தாக்கள் உண்டோ -புருஷார்த்த காஷடையாக ததீயரை நினைக்கை யாலே-அவர்களை பிறர் என்கிறிலர்-

கூடி நீரைக் கடைந்தவாறும் அமுதம் தேவர் உண்ண அசுரரை
வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும்
ஊடு புக்கென தாவியை உருக்கி உண்டிடுகின்ற நின் தனை
நாடும் வண்ணம் சொல்லாய் நச்சு நாகணையானே!–5-10-10–தோல் புரையே போகாதே மர்மத்திலே புக்கு -அச்சேத்யயோயம் அயமதாஹ்யோயம் என்கிற ஆத்மவஸ்துவை -த்ரவ்ய த்ரவ்யமாக்கி முடித்து விடாதே ஒழிகிற யுன்னை -புருஷோத்தமன் இப்படி செய்வதே என்கிற குண பிரசங்கத்தில் சிதிலன் ஆகா நின்றேன்-

நிழல்வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்ச்
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய்
மழலை வாய்வண்டு வாழ் திரு விண்ணகர் மன்னு பிரான்
கழல்கள் அன்றி மற்றோர் களை கண்இலம்; காண்மின்களே.–6-3-10-நித்ய வாசம் பண்ணுகிற உபகாரகன் திருவடிகள் அல்லது வேறு புகல் இல்லை –மாம் ஏக சரணம் வ்ரஜ -என்கிறவன் அன்றிக்கே -திருவடிகள் தானே தஞ்சம் என்கை-காண்மின்களே.-இத்தை எல்லோரும் புத்தி பண்ணுங்கோள் –

நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்
ஏக சிந்தையனாய்க்
குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ் வெய்துவர் வைகலுமே.–5-10-11-அனந்த சாயித்தவம் சர்வாதிக வஸ்துவுக்கு லக்ஷணம் ஆகையாலே -சர்வாதிகனே சரண்யன் என்கிறது -திரு வனந்த ஆழ்வானுடைய புருஷகார பாவம் சொல்லுகிறது என்றுமாம் –படுக்கையைச் சொல்ல படுக்கை யுடையாரைச் சொல்லிற்றாம் இறே
நம்பிரான் -ஆஸ்ரித விஷயத்தில் உபகார சீலனானவன் –-சரணே சரண் நமக்கு என்று -நமக்கு திருவடிகளே உபாயம் என்று –அவதாரணத்தாலே உபாய நைரபேஷ்யம் சொல்லுகிறது -சம்சாரிக ஸ்வ பாவங்கள் மேலிட்டு விபரீதமே பலியா நின்றாலும் இது தவிர வேறு ஒன்றில் கால் தாழாது ஒழி கை -மஹா விச்வாஸம் ஆகிறது –-நாடொறும் ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்-நாள் தோறும் இதுவே மநோ ரதமான ஆழ்வார்

மண்மிசைப் பெரும்பாரம் நீங்க ஓர்பாரத மாபெரும்போர்
பண்ணிமாயங்கள் செய்துசேனையைப் பாழ்படநூற் றிட்டுப்போய்
விண்மிசைத் தன தாமமே புக மேவிய சோதிதன்தாள்
நண்ணி நான்வணங்கப் பெற்றேன்
எனக்கார் பிறர் நாயகரே-6-4-10-பொய்யாசனம் எடுவார் -பரிபாவிப்பாரான தேசத்தை விட்டுப் போய் -பரிவரேயான பரம பதத்தில்-தன தாமமே புக மேவிய சோதிகதஸ் ஸ்வம் ஸ்தானம் உத்தமம் –என்கிறபடியே தனக்கு அசாதாரணமான ஸ்தானத்தில் போய்ப் புக்கான்-தன்தாள்-நண்ணி நான் வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே- அவன் திருவடிகளைக் கிட்டி நான் அனுபவிக்கப் பெற்றேன் -எனக்கு வேறு நியந்தாக்கள் உண்டோ –புருஷார்த்த காஷ்டையாக ததீயரை நினைக்கை யாலே-அவர்களை பிறர் என்கிறிலர்-

5–கை வலிந்து கை கழல கண்டும் எல்லாம் கிடக்க நினையாத கன்றும்-(போலி உபாய உபேய பொருள்கள் தாமே கழன்று போவதையும் -உபேக்ஷித்துப் போவதுமாவையுமாக இருப்பதை –துவளில் மா மணி மாடம் -மாலுக்கு வையம் -உண்ணும் சோறு -மூன்றிலும் காணலாமே )நம்மை கை வலிந்து -6-5-7–என்றும் –இழந்தது சங்கே -6-6-1-என்றும் –இதெல்லாம் கிடக்க இனிப் போய் –6-7-9-எம்மை ஒன்றும் நினைத்து இலளே –6-7-9-இன்று எனக்கு உதாவாது அகன்ற -6-7-6–என்று சித் அசித் வர்க்கமான இவற்றைக் கை விட்டு -உறங்குவான் கைப் பண்டம் போலே –பகவத் பிரேம பாரவச்யத்தாலே தன்னடையே தன் கையில் நின்றும் நெகிழ்ந்து போக கண்டும் –சர்வான் போகான் பரித்யஜ்ய -சரணாகதி கத்யம்-என்கிற படியே இவற்றை ஒன்றாக நினையாமல் உபேஷித்து அகன்று போயும்

(கை வலிந்து கை கழலக்‌ கண்டும்‌ எல்லாம்‌ கிடக்க நினையாதகன்றும்‌) “நம்மைக்‌ கை வலிந்து” (திருவாய்மொழி 6-5-7) “இழந்தது சங்கே” (திருவாய்மொழி 6-6-1) “இதெல்லாம்‌ கடக்க இனிப்‌ போய்‌ எம்மை யொன்றும்‌ நினைத்திலளே” (திருவாய்மொழி 6-7-9) “இன்றெனக்கு உதவாதகன்ற” (திருவாய்மொழி 6-7-6) என்று சிதசித்‌ வர்க்கமான இவற்றைக்‌ கை விட்டும்‌, உறங்கினவன்‌ கையிலே எலுமிச்சம்‌ பழம்‌ போலே ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநத்தாலே தன் கையில்‌ நின்றும்‌ நெகிழும்படி கண்டு “ஸர்வாந்‌ போகாந்‌ பரித்யஜ்ய” என்கிறபடியே இவற்றை மதியாமல்‌ அகன்றும்‌ 

அன்னைமீர்! அணி மாமயில் சிறு மானிவள் நம்மைக் கை வலிந்து
என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலை வில்லி மங்கலம் என்றலால்
முன்னம் நோற்ற விதி கொலோ? முகில் வண்ணன் மாயம் கொலோ?
அவன்சின்னமும் திருநாமமும் இவள் வாயனகள் திருந்தவே.–6-5-7-இவள் பருவம் இது –நமக்கு அவ்வருகே போன ஆச்சர்யம் பாரி கோளே -மைத்ரேய என்னுமா போலே – அழகிய நிறத்தை உடையளாய் -முக்தமான மான் போலே அதி பாலையாய் இருக்கிறவள்-அழகியதாய் சிலாக்யமானமாய் இருக்கிற மயில் போலே இருக்கிற சிறுப் பெண் என்றுமாம்-முக்தையான இவள் நம்மைக் கை விஞ்சி -நம்மில் காட்டிலும் அந்தரங்கை யானாள்

மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு
நீலக் கருநிற மேக நியாயற்கு
கோலச்செந் தாமரைக் கண்ணற்கு என் கொங்கலர்
ஏலக் குழலி இழந்தது சங்கே.–6-6-1-இவள் மயிர் முடி ஒன்றுக்கும் தோற்று குமிழ் நீர் உண்ணுமவன் கிடீர் இவளை அழித்தான் -பங்களப் படை கொண்டு தனி வீரம் செய்வாரை அழிக்குமா போலே
இவளுக்குத் தோற்று -அவன் இழக்குமத்தை இவள் இழந்தாள் –சங்கு -வளை –

இன்று எனக்கு உதவாது அகன்ற இள மான் இனிப் போய்த்
தென்திசைத் தலத மனைய திருக்கோ ளூர்க்கே
சென்று தன் திருமால் திருக்கண்ணும் செவ்வாயும் கண்டு
நின்று நின்று நையும் நெடுங்கண்கள் பனிமல்கவே.–6-7-6-தன்னை பிரிந்து நோவு படுகிற இத்தசையிலே துணை இன்றிக்கே இருக்கிற எனக்கு உதவாதே கை கழிய போன -தன்னைப் பிரிந்து நோவு படும் என்று உதவுகைக்கு அன்றோ தன்னைப் பெற்றது -இத்தசைக்கு உதவாள் ஆகில் இனி எற்றைக்கு உதவ இருக்கிறாள் –இமாமவஸ்தா மா பன்னோ நேஹபஸ்யாமி ராகவம்இள மான்-உதவப் பெற்றிலோம் -என்று அனுதபிக்கவும் அறியாத பருவம்-இனிப் போய்த்-பெற்றோரை விடும் படி இவ் விஷயத்தில் அவகாஹித்த இதுக்கு மேலே என்ன ஏற்றம் பெறப் போனாள் -பெற்றோரை விட்டு பற்றுமது இறே ப்ராவண்யத்துக்கு எல்லை

காரியம் நல்லனகள் அவைகாணில் என் கண்ணனுக்கு என்று
ஈரியா யிருப்பாள் இதெல்லாம் கிடக்க இனிப்போய்ச்
சேரி பல்பழி தூஉய் இரைப்பத் திருக்கோளூர்க்கே
நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே.–6-7-9—இதெல்லாம் கிடக்க-வி லக்ஷண பதார்த்த தரிசனத்தில் அவனுக்கு என்கை -அவன் குண அனுசந்தானத்தாலே விக்ருதியாகை -இவற்றை அளவிறந்த சம்பத்தாக நினைத்து இருக்கிறாள் இவள் -கண்டதை மமேதம் என்று இராதே அவனுக்கு என்று இருக்கை இ றே சம்பத்து –இனிப்போய்ச்-பாவ சுத்தியால் துஷ்டனாம் அவனுக்கு ஓன்று செய்யப் புறப்பட்டு போனாளோ-இத்தலையில் உள்ளது ஓன்று இல்லை -அவனுக்கு வேண்டுவது ஓன்று இல்லை –எம்மை ஒன்றும் நினைத்திலளே–வழித் துணையாக நினைத்திலள் -அங்கே சென்று எதிர் கொள்ளுவாரில் ஒருத்தியாக நினைத்திலள் -பழி சொல்லுவார் கோடியாகவும் நினைத்திலள் –குரவ கிங்கரிஷ்யந்தி-என்றும் நினைத்திலள்-

ஆளீர் மேவீர் ஊதீர் என்று ததீய சேஷம் ஆக்கியும்-இதில் ததீயருக்கு போக்யமாக சமர்ப்பிக்கத் தக்க வற்றை-பொன் உலகு ஆளீரோ புவனி முழுது ஆளீரோ –நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலோடு மேவீரோ –ஓடி வந்து என் குழல் மேல் ஒளி மா மலர் ஊதீரோ-என்று தமக்கு உபாதேயமான பரம பத்தோடு ஒக்க கடகருக்கு பரிசிலாக சமர்ப்பித்தும்-

(ஆளீர்‌ மேவீர்‌ ஊதீர்‌ என்று ததீய ஷோஷமாக்கியும்‌) “பொன்னுலகாளீரோ” (திருவாய்மொழி 6-8-1 “நெய்யமரின்னடிசல்‌ நிச்சல்‌ பாலொடு மேவீரோ” (திருவாய்மொழி 6-8-2 )“ஓடிவந்தென்‌ குழல்மேலொளி மாமலரூதீரோ” (திருவாய்மொழி 6-8-3) என்று கீழ்‌ தாம்‌ விட்டவிடத்திலும்‌ தம்மை விடாதபடி பற்றிக்‌ கிடக்கிற ஆத்மாத்மீயங்களை பகவத்‌ விஷயத்தில்‌ உபகாரகரானவர்களுக்கு “ஸத்‌ குருப்யோ நிவேதயேத்‌” என்கிறபடியே ஸமர்ப்பித்து.

பொன்னுல காளீரோ? புவனிமுழு தாளீரோ?
நன்னலப் புள்ளினங்காள்! வினையாட்டியேன் நான்இரந்தேன்
முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில் வண்ணன்கண்ணன்
என்னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே.-6-8-1-ஈஸ்வர விபூதியானது விஸ்லேஷ தசையில் அவனையும் தன்னையும் சேர்ந்தார்க்கு பரிசிலாக கண்டது என்று இருக்கிறாள் -உபய விபூதியும் ஒரு மிதுனத்துக்கு சேஷம் இறே-அவ்வவஸ்தை பிறந்தால் சொல்லலாம் இ றே -நித்ய விபூதியைக் கொடுத்து பின்பு லீலா விபூதியைக் கொடுக்கிறாள் -இவளுக்கு இதிலும் நித்ய விபூதி விதேயமாய் இருக்கிற படி -அவன் அடியில் காட்டிக் கொடுத்த அடைவும் இது இ றே -அயர்வறும் அமரர்கள் அதிபதி -இலனது உடையனிது -என்றது இறே -தான் பெற்ற அடைவிலே கொடுக்கிறாள் -வி லக்ஷணமான நித்ய விபூதியைக் கொடுத்து வைத்து லீலா விபூதியைக் கொடுப்பான் என் என்னில் -பண்ணின உபகாரத் த்திலே கலங்கி கொடுக்கிறாள் –அபராவர்த்தி நாம் யாச யாச பூமி ப்ரதாயி நாம் -என்றாரைப் போலே –ஆளீரோ -உங்கள் விபூதியை அராஜமாக விட்டு வைக்கிறது என் -ஆளி கோளோ-தான் கொடுத்ததாக நினைத்து இருக்கிறிலள்

மையமர் வாள்நெடுங்கண் மங்கைமார் முன்பு என்கை இருந்து
நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ?
கையமர் சக்கரத்து என் கனிவாய்ப்பெரு மானைக் கண்டு
மெய்யமர் காதல் சொல்லிக் கிளிகாள்! விரைந்தோடி வந்தே.–6-8-2—நெய்யோடும் பாலோடும் கூடின அடிசில் -நெய்யிடை நல்லதோர் சோறு என்கிறபடிய ஆஜ்யமிஸ்ரமாய் பால்முடிவான சோறு -இன்னடிசில் –எல்லாம் கண்ணன் என்று இருக்கிறவள் இவள் உகப்பது தேடிக் கொடுக்கிறாள் -பகவத் விஷயத்தில் உபகாரகர்க்கு -யதன்ன புருஷோ பவதி -என்னும் அளவு போராது-அவர்கள் உவப்பது தேடி இட வேணும் என்கை –-நிச்சல்-பகவத் விஷயத்தில் வாசி அறிய அறிய உபகாரகரை கொண்டாடும் அத்தனை இறே –மேவீரோ -ஸ் வீகரியீரோ -என் பேறாக ஸ்வீகரிக்க வேணும் என்கை –உபாய நாந்யுபாதயா மூளா நிச பலா நிச-என்று திருவடியை முதலிகள் கொண்டாடினால் போலே

ஓடிவந்து என்குழல்மேல் ஒளிமாமலர் ஊதிரோ?
கூடிய வண்டினங்காள்! குருநாடுடை ஐவர்கட்காய்
ஆடிய மாநெடுந்தேர்ப் படைநீறுஎழச் செற்றபிரான்
சூடிய தண்துளபம்உண்ட தூமது வாய்கள்கொண்டே.–6-8-3—ஓடி வந்து -முன்பே அவற்றின் வார்த்தை கேட்க்கையில் உண்டான த்வரையாலே யாதல் -அவற்றை அனுபவிக்கையில் உண்டான த்வரையிலே யாதல் -சடக்கென வர வேணும் என்கிறாள்-என் குழல் மேல்-அவனோடே போக சாம்யம் உண்டாம் படி பண்ணைக் கட வேன் -அவன் தனக்கு தூது போனவர்களுக்கு ததிமுகன் காத்து இருக்கிற காவல் காட்டை அழிக்கக் கொடுத்தான் இறே -அவன் காவல் காட்டை அழிக்க தருகிறேன் உங்களுக்கு -என்கிறாள் –அஹமாவாராயிஷ்யாமி யுஷ் மாகம் பரிபந்தின-என்று திருவடியைப் பற்றி அழிக்கவும் வேண்டா விறே -இவளுடைய ஏஷ ஸர்வஸ்ய பூதஸ்து இருக்கிற படி -உங்களுடைய வரவால் தளிர்த்து இருக்கிற என்னுடைய குழலிலே –ஒளி மா மலர் ஊதிரோ?-ஒளியை யுடைத்தாய் சிலாக்கியமான மலரில் மதுவைப் பானம் பண்ணீரோ –ஊதிரோ?-மதுவின் ஸம்ருத்தியாலே கிண்ணகத்தில் இழிவாரைப் போலே இழிய மாட்டாதே நின்று பறக்கிற படி -உங்கள் காரியமுமாய் பர ரக்ஷணமும் ஆனால் ஆறி இருக்கிறது என் என்கை

புறத்திட்டு காட்டி என்று பிரசங்கிக்கில் முடியும் படி விட்டு என்னைப் புறத்து இட்டு இன்னும் கெடுப்பாயோ–6-9-8–என்று உனக்கு அசலாம்படி விஷயங்களிலே என்னைத் தள்ளி இன்னம் கெடுக்கப் பார்க்கிறாயோ என்றும் –பல நீ காட்டிப் படுப்பாயோ-6-9-9–என்றும் -நாட்டார் காணா விடில் பிழையோம் என்கிற விஷயங்கள் தமக்கு காணில் முடியும் படி-அத்யந்த அசக்யமாய் இருக்கையாலே -விஷயங்களைக் காட்டி என்னை முடிக்கப் பார்க்கிறாயோ என்றும் சொல்லுகையாலே –அவற்றின் பிரசங்கத்திலே ஏங்கி- மூச்சு அடங்கும் படி -பீதராய் -அவற்றை விட்டு

(புறத்திட்டுக் காட்டி யென்று ப்ரஸங்கிக்கில்‌ முடியும்படி விட்டு) “புறத்திட்டின்னம்‌ கெடுப்பாயோ பல நீ காட்டிப்‌ படுப்பாயோ” (திருவாய்மொழி 6-9-8) என்று ஸம்ஸாரிகளுக்கு போக்‌யமான ஸப்‌தாதி, விஷயங்களினுடைய தர்ஸநத்திலே ஸத்தா ஹாநி பிறக்கும்படி அஸஹ்யமாயிருக்கையாலே அவற்றை விட்டு,-

அறிவி லேனுக்கு அருளாய் அறிவார் உயிரானாய்!
வெறிகொள் சோதி மூர்த்தி! அடியேன் நெடுமாலே!
கிறிசெய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ?
பிறிதொன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே.–6-9-8—கிறிசெய்து என்னைப் -எனக்கு முன்பு செய்தது இத்தனையும் விரகு அடித்ததாம் இத்தனை இ றே -அநந்ய கதியாய் இருக்கிற என்னை பிரமிக்கும் படி ஒரு விரகு பண்ணி -அதாகிறது பேறு உன்னதான பின்பு கிருஷியும் உன்னதாக வேண்டாவோ என்கை-புறத்திட்டு-உனக்கு அசலாம் படி விஷயங்களில் தள்ளி-இன்னம் கெடுப்பாயோ?-அநாதி காலம் இழந்தது போராதோ-உன் சுவடு அறிந்த பின்பும் உனக்கு அசலாகவோ -அறிவிலேன் என்றாலும் -அருளாய் என்றாலும் கெடுக்கும் இத்தனையோ –புத்தி நாஸாத் ப்ரணச்யதி -விஷய ப்ராவண்யம் என்றும் விநாசம் என்றும் பர்யாயம் இறே-இன்னம் கெடுப்பாயோ?-பேறு அவனாலே யானாள் இழவும் அவனாலே என்னலாம் இறே -ஸ்தநந்த்ய பிரஜை கிணற்றில் விழுந்தால் -தாயார் தள்ளினாள் என்னுமா போலே

ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?
தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ.–6-9-9–பல -பைதல் கைசு -நோய் முக்கை சு -என்று தம் அளவன்றிக்கே பலவாய் இருக்கை-நீ காட்டிப் படுப்பாயோ?-ரக்ஷகனான நீ காட்டி முடிக்கப் பார்க்கிறாயோ -சப்தாதி விஷயங்களின் உடைய தர்சன மாத்திரத்திலே முடியும்படி யாயிற்று இவர் பகவத் குணங்களிலே நைந்த படி -நாம் காணாவிடில் முடியும்படியான விஷயங்கள் இவருக்கு காணில் முடியும்படி யாயிற்று

6-தந்தை தாய் உண்ணும் சோறு மாநிதி பூவை யாவையும் ஒன்றே ஆக்கி த்வமேவ மாதா ச பிதா த்வமேவ -த்வமேவ பந்துச -குருஸ் த்வமேவ த்வமேவ வித்யா த்ரவிணம் -த்வமேவ த்வமேவ சர்வம் மம தேவ-கத்ய த்ரயம் -என்கிறபடியே –தேவ பிரானையே தந்தை தாய் என்று அடைந்த -6-5-11–என்றும் -அயர்வறும் அமரர்கள் அதிபதியே மாதா பித்ராதி சர்வ பந்து— என்றும் –உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்–6-7-11–என்றும் –தாரக போஷாக போக்யங்கள் எல்லாம் சர்வ சுலபனான கிருஷ்ணனே என்றும் –வைத்த மா நிதியாம் மது சூதனையே –6-7-11- என்று ஆபத் ரஷகமாக சேமித்து வைத்த அஷயமான நிதியும் அவனே என்றும் –பூவை பைம்கிளிகள் பந்து தூதை பூம் புட்டில்கள் யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும் -6-7-3–என்றும்-லீலா உபகரணங்களால் பிறக்கும் ரசம் எல்லாம் ஸ்ரீய பதி யினுடைய திரு நாமங்களை சொல்லவே உண்டாகா நிற்கும் என்றும் –இப்படி கீழ் இட்டவை எல்லாம் பற்றுகிற விஷய மொன்றுமாக நினைத்து

(தந்தைதாயுண்ணுஞ்‌ சோறு மாநிதி, பூவை யாவை யுமொன்றே யாக்கி) “பவத்‌ கதம்‌ மே ராஜ்யஞ்ச ஜீவிதஞ்ச ஸூகாநி வை” ரா.யு என்றும்‌, “த்வமேவ மாதா ச பிதா த்வமேவ, த்வமேவ பந்துஸ் ச குரஸ்‌ த்வமேவ, த்வமேவ வித்‌யா த்‌ரவிணம்‌ த்வமேவ த்வமேவ ஸர்வம்‌ மம தேவதே வ” என்றும்‌ ‘வாஸுதேவஸ்‌ ஸர்வம்‌” (கீதை 7-) என்றும்‌ “மாதா பிதா ப்‌ராதா நிவாஸஸ் ஸரணம்‌ ஸுஹ்ருத்‌ கதிர்‌ நாராயண:” (ஸுபால உபநிஷத் )என்றும்‌ சொல்லுகிறபடியே “தேவபிரானையே தந்தை தாயென்றடைந்த‘” (திருவாய்மொழி 6-5-11) என்று அயர்வறுமமரர்களதிபதியே மாதா பித்ரு ப்ரப்‌ருதிகளான ஸர்வ வித பந்துவும்‌ என்றும்‌, ‘ உண்ணுஞ் சோறு பருகு நீர்‌ தின்னும்‌ வெற்றிலை யுமெல்லாம்‌ கண்ணன்‌” (திருவாய்மொழி 6-7-1 என்று தாரக போஷக போக்யங்க ளெல்லாம்‌ ஸர்வ ஸுலபனான கிருஷ்ணனே என்றும்‌, “வைத்த மா நிதியாம்‌ மதுசூதனையே அலற்றி” (திருவாய்மொழி 6-7-11) என்று ஆபத் ரக்ஷகமாகச்‌ சேமித்து வைத்த அக்ஷயமான நிதியும்‌ விரோதி நிரஸந ஸீலனான அவனே யென்றும்‌, “பூவை பைங்கிளிகள்‌ பந்து தூதை பூம்புட்டில்கள்‌ யாவையும்‌ திருமால்‌ திரு நாமங்களே கூவியெழும்‌’ (திருவாய்மொழி 6-7-3) என்று லோபகரணங்களால்‌ பிறக்கும்‌ ரஸமெல்லாம்‌ ஸ்ரீயபதியினுடைய திருநாமங்களைச்‌ சொல்லவே யுண்டாகா நின்றதென்றும்‌, இப்படி கீழ்‌ விட்டவை யெல்லாம்‌ பகவத்‌ விஷய மொன்றிலுமே யாக்கி, 

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண்குரு கூரவர் சடகோபன்

முந்தை ஆயிரத்துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச்சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே.–6-5-11-அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் வைத்து திருத் தொலை வில்லி மங்கலத்திலே ஸூலபனாய் இருந்தவனையே சர்வவித பந்துவும் என்று -அப்படியே பற்றுவதும் செய்தவர்

உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற்றிலையு மெல்லாம்
கண்ணன்
எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர்வளம் மிக்கவன் ஊர்வினவித்
திண்ணம் என்இளமான் புகுமுர் திருக்கோளூரே.–6-7-1-ஜீவித்து அல்லது தரிக்க ஒண்ணாத சோறு -தாஹித்தால் பானம் பண்ணி யல்லது நிற்க ஒண்ணாத தண்ணீர் -தின்றால் அல்லது புஷ்டனாக விரகு இன்றிக்கே இருக்கும் வெற்றிலையும் -தாரக போஷக போக்யம் ஆனவை எல்லாம் எனக்கு நாதனான கிருஷ்ணன் –வாஸூ தேவஸ் சர்வம் -என்று ஆயிற்று இவள் இருப்பது

வைத்தமா நிதியாம் மதுசூ தனையே அலற்றிக்
கொத்தலர் பொழில்சூழ் குருகூர்ச்சட கோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப்பத்து அவன்சேர்திருக்கோ ளூர்க்கே
சித்தம் வைத்துரைப் பார்திகழ் பொன்னுல காள்வாரே.–6-7-11-உண்டு என்ன உயிர் நிற்க்க கடவதாய் அனாயாச போக்யமாய் இஷ்ட விநியோக அர்ஹமான மஹா நிதி போலேயாய் விரோதி நிராசன ஸ்வ பாவனானவனை சொல்லி ஆர்த்தியாலே கூப்பிட்டு-

பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம்புட்டில்கள்
யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும்
என்
பாவை போய்இனித் தண்பழனத் திருக்கோளூர்க்கே
கோவைவாய் துடிப்ப மழைக்கண்ணொடு என்செய்யுங்கொலோ?–6-7-3-யாவையாலும் பிறக்கும் ரசம் எல்லாம் அவனுடைய திரு நாமத்தால் பிறக்குமாயிற்று இவளுக்கு -அவனுடைய லீலா உபகரணங்களோ பாதியும் போருமாயிற்று இவளுடைய லீலா உபகரணங்களும் -பகவான் நாமங்களை சொல்லி உஜ்ஜீவிக்கும் –திரு நாமச் சுவடு அறிந்த பின்பு லீலா உபகரண தர்சனம் -ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு ராஜ்ய தர்சனம் போலே அஸஹ்யமாய் இருக்கும் -இவளுடைய லீலா உபகரணங்கள் அவனுக்கு போக உபகரணங்களாய் இருக்கும் -இந்த லீலா உபகரணங்கள் திரு நாமத்தை சொல்லிற்று ஆனாலோ என்ன -என்று பெற்றி கேட்க -பந்து தூதை பூம் புட்டிகளால் ஏறாது என்று பிள்ளை பரிஹரித்தார் -அவற்றைத் திரு நாமத்தை சொல்லி அழைத்தால் ஆனாலோ என்னில் அது -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்று இருக்கிறதுக்குச் சேராது –

7-தளர்வேனோ திரிவேனோ குறுகாதோ முதல்வாவோ என்னும் ஆர்த்தியோடே–கோலத் திரு மாகளோடு உன்னைக் கூடாதே சாலப் பல நாள் அடியேன் இன்னம் தளர்வேனோ -என்றும் ,-தீயோடு உடன் சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ –என்றும்–கூவிக் கொள்ளும் காலம் இன்னும் குருகாதோ -என்றும் –புணரேய் நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ -என்றும்-ஜகத்துக்கு சர்வ பிரகார ரஷகனாய் –ஸ்ரீயா சார்த்தம்-என்கிறபடியே –பெரிய பிராட்டி யாரோடு எழுந்தி அருளி இருக்கிற உன்னைப் பெறப் பெறாதே –சம்சாரத்தில் இருந்து இன்னும் எத்தனை காலம் இப்படி அவசன்னனாகக் கடவேன் –திரி விக்கிரம அவதார முகத்தாலே நீயே வந்து எல்லார் தலையிலும் திருவடிகள் வைத்த உன்னைக் காண ஆசைப் பட்டு கிடையாமல் அக்நி சகாசத்தில் மெழுகு போல-ஜீவிக்கவும் பெறாதே -முடிக்கவும் பெறாதே –சம்சாரத்தில் இப்படி திரியக் கடவனோ -சர்வ சுலபமாய் -நிரதிசய போக்யமான திரு அடிகளிலே என்னை அருளப் பாடிடும் காலம் இன்னும் அணித்தாகாதோ –விரோதிகளின் கையில் அகப்படாதே -ஜகத்துக்கு வேர் பற்றான -உன்னை நோக்கித் தந்தவனே ! மானச அனுபவம் மாத்ரம் அன்றிக்கே –உன் திரு அடிகளை பிரத்யஷமாக கிட்டுவது என்றோ என்கிற ஆர்த்தி யோடே-

(தளர்வேனோ திரிவேனோ குறுகாதோ முதல்வாவோ வென்னு மார்த்தியோடே) “கோலத்‌ திருமாமகளோடு உன்னைக் கூடாதே சாலப் பல நாள்‌ அடியேனின்னம்‌ தளர்வேனோ” (திருவாய்மொழி 6-9-10) “தீயோடுடன்‌ சேர்‌ மெழுகா யுலகில்‌ திரிவேனோ” (திருவாய்மொழி 6-9-6) “கூவிக்கொள்ளுங்காலமின்னம்‌ குறுகாதோ” (திருவாய்மொழி 6-9-9) “புணரேய்‌ நின்ற மரமிண்டின்‌ நடுவே போன முதல்வாவோ” (திருவாய்மொழி 6-10-5) என்று ஸர்வ ப்ரகார ரக்ஷகனாய்‌ பெரிய பிராட்டியாரோடே யிருக்கிற உன்னைக்‌ கிட்டப் பெறாதே ஸம்ஸாரத்திலே யிருந்து எத்தனை காலம்‌ இப்படியே அவஸந்நனாகக் கடவேன்‌ என்றும்‌, த்ரிவிக்ரமாபதாநம்‌ பண்ணின வுன்னைக்‌ காண வாசைப்பட்டுக்‌ கிடையாமையாலே அக்‌நி ஸகாஸத்தில்‌ மெழுகு போலே ஸம்ஸாரத்திலே இப்படி எத்தனை காலம்‌ திரியக் கடவேன்‌ என்றும்‌, ஸர்வ ஸுலபமாய்‌ நிரதிஸய போக்யமான உன்‌ திருவடிகளிலே என்னை அருளப் பாடிடுங்காலம்‌ இன்னமணித்தாகாதோ என்றும்‌, யமளார்ஜுநங்களின்‌ நடுவே போன ஸர்வ காரண பூதனே என்றும்‌ உன்‌ திருவடிகள்‌ மாநஸாநுபவ மாத்ரமன்றிக்கே ப்ரத்யக்ஷமாகக்‌ கிட்டுவதென்றோ என்கிற ஆர்த்தியோடே 

ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப் பலநாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே!
கோலத் திருமா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பலநாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?–6-9-3-
பிராட்டியோடே கூட இருக்கிற யுன்னைக் கிட்டி அடிமை செய்யப் பெறாதே -மாதா பிதாக்களை சேர க் காணுமா போலே ஒரு மிதுனம் இறே ப்ராப்யம் -மாதா பிதாக்களை அகன்று ஸ்தநனயப் பிரஜை ஜீவிக்க வற்றோ -இருவரும் சேர்ந்த சேர்த்தி பேற்றுக்கு உறுப்பாய் அன்றோ இருப்பது –ஸஹ தர்ம ஸரீதவ -என்ன கடவது இறே-சாலப் பலநாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?–-அநாதி காலம் இழந்த நான் அநந்த காலம் இழக்கவோ-முறை அறியாத காலம் இழந்தேன் ஆகில் முறை அறிந்த காலமும் இழக்கவோ -ருசி பிறவாத காலம் இழந்தேன் ஆகில் ருசி பிறந்த பின்பும் இழக்கும் அத்தனையோ –

பாயோர் அடிவைத்து அதன்கீழ்ப் பரவை நிலமெல்லாம்
தாயோர் அடியால் எல்லா உலகும் தடவந்த
மாயோன்! உன்னைக் காண்பான் வருந்தி எனைநாளும்
தீயோடு உடன்சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ?–6-9-6-அக்னி சகாசத்திலே மெழுகு போலே -தூர இருந்து அழியாது இருத்தல் -அக்னியில் புக்கு நசித்தல் -செய்யப் பெறாதே இருக்கை -நசையின் ஸ்வ பாவத்தாலும் -விஷய ஸ்வ பாவத்தாலும் ஸைதில்யாம் நித்தியமாய் இருக்கை -ஜீவிக்கவும் பெறாதே முடியவும் பெறாதே யாதநா சரீரம் போலே குளிர்ந்த வழி இல்லாத தேசத்தே எத்தனை நாள் தட்டித் திரியக் கட வேன்-

ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?
தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ.–6-9-9-–வரையாதே எல்லார்க்கும் கொடுக்கும் நிரதிசய போக்யமான திருவடிகளில் -அழைத்துக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ –விஷயாந்தர தர்சன மாத்திரத்திலே முடியும் படி யானாலும் அணித்தாகாதோ -தாவி வையம் கொண்ட -என்கிறது உபாய அம்சம் –தடந்தாமரைகள் -என்கிறது உபேய அம்சம் –கூவிக் கொள்ளும் காலம்-என்று தாம் சென்று காண்கை அன்றிக்கே தானே அழைத்துக் காட்டுகை முறையாகையாலே கிட்டும் பிரகாரம் சொல்லுகிறது-

புணரா நின்ற மரமேழ் அன் றெய்த ஒருவில் வலவாவோ!
புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ!
திணரார் மேக மெனக்களிறு சேரும் திருவேங்கடத்தானே!
திணரார் சார்ங்கத் துனபாதம் சேர்வ தடியேன் எந்நாளே.–6-10-5-புணர்ந்து நின்ற -இரண்டும் கூடி ஓன்று என்னலாம் படி பொருந்தி நிற்க -அதிலே இடம் கண்டு போய் உன்னைத் தப்புவித்து ஜகத்தை உண்டாக்கினவனே-

8-திரி விக்ரமனாய் குரல் கோலப் பிரானே அடியை மூன்றை இரந்த வன் கள்வன் கண் முகப்பே அகல்கொள் திசை வையம் விண்ணும் தட வந்த தடம் தாமரைகளை லோக விக்ராந்த சரணவ் சரணம் தேவ்ரஜம் விபோ -என்று வசிஷ்ட சண்டாள விபாகமற வரையாதே திருவடிகளை வைக்கையாலே-சௌசீல்யமும் –உறங்குகிற பிரஜையின் முதுகைக் கட்டிக் கொண்டு கிடக்கும் தாயைப் போலே விமுகனார் தலையிலும் திரு வடிகளை வைக்கையாலே –வாத்சல்யமும் –அவதரித்து முன்னே நின்று கார்யம் செய்கையாலே –சௌலப்யமும் –தே -என்கையாலே -தன் பேறாக செய்கைக்கு உறுப்பான ஸ்வாமித்வமும் –விபோ -என்கையாலே –ஞான சக்த்யாதி குண பூர்த்தியும் -சொல்லுகையாலே –த்ரி விக்கிரம உபதானத்திலே –ஆஸ்ரயண உபயோகியாயும் -கார்ய உபயோகியாயும் –உள்ள குணங்கள் எல்லாம் பிரகாசிக்கையாலே –தெய்வ நாயகன் திரி விக்ரமன்-5-7-11-மாண் குறள் கோலப் பிரான் –5-9-6-அடியை மூன்றை இரந்தவாறும்-5-10-9-மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட வன் கள்வன்-6-1-11 -என்று-சர்வேஸ்வரனாய்-ஆஸ்ரித வத்சலனான தான் –திரு விக்கிரம உபாதானம் பண்ணுகைக்காக பெரு விலையனான அழகை-சிறாங்கித்து அனுபவிக்கலாம் படி வாமன வேஷத்தைப் பரிக்ரஹித்து கொண்டு மகாபலி யஜ்ஞ வாடத்திலே சென்று – மூன்று அடி- என்று இரந்து -தான் சொன்ன படியே அவன் செய்யும் படி விநீதமாய் ஆகர்ஷமான வடிவைக் காட்டி வசீகரித்து நின்ற மகா வஞ்சகன்- காண் மின்கள் உலகீர் என்று கண் முகப்பே நிமிர்ந்த -6-3-11-என்று நோக்கு வித்யை காட்டுவாரைப் போலே -இதோர் ஆஸ்ரயம் பாரும் கோள் என்று – லௌகிகர் எல்லோருடையவும் கண் எதிரே –அகல் கொள் வையம் அளந்த மாயன்-6-4-6-திசை ஞாலம் தாவி அளந்ததுவும் –6-5-3-வையம் அளந்த மணாளன் –6-6-1-மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மான் –6-9-2-ஓர் அடியால் எல்லா உலகும் தட வந்த –6-9-6-தாவி வையம் கொண்ட தடம் தாமரைகள்-6-9-9–என்று விஸ்த்ருதமாய் -திக்குகளோடு -கூடின பூமியையும் -உபரிதன லோகங்களையும் –தென்றல் உலவினால் போலே -ஸூகரமாம்படி –எங்கும் ஒக்கப் பரப்பி அளந்து கொண்ட சர்வ சுலபமாய் -நிரதிசய போக்யமான திரு அடிகளை –

(ப்ரபத்தி முக்‌யாதிகாரமான பரமார்த்தியை உடையராய்‌) (த்ரிவிக்ரமனென்று தொடங்கி தடந் தாமரை யென்கிற தளவாக)லோக விக்ராந்த சரணெள ஸரணம்‌ தே(அ)வ்ரஜம்‌ விபோ” என்று ஸம்ஸாரிகளுடைய தோஷங்களை போக்யமாகக்‌ கொண்டு அவர்களுடைய தண்மை பாராதே “தலை விளாக்‌ கொண்ட எந்தாய்‌” என்கிறபடியே ஒரு நீராகவும்‌ அவர்கள்‌ தாங்களே ப்ரத்யக்ஷிக்கும்படி வடிவைக்‌ காட்டி திருவடிகளை எல்லாருடைய தலைகளிலும்‌ வைக்கையாலே ஆஸ்ரயணோப யோகியான வாத்ஸல்ய ஸெளஸீல்ய ஸெளலப்‌யங்களும்‌, “தே?” என்று தன் பேறாகச்‌ செய்கைக் குறுப்பான ஸ்வாமித்வமும்‌, “விபோ” என்று கார்யோப யோகியான ஜ்ஞாந ஸக்திகளும்‌ த்ரிவிக்ரமாபதாநத்திலே ப்ரகாபபிக்கையாலே “தெய்வ நாயகன்‌ நாரணன்‌ திரிவிக்கிரமன்‌” “மாண் குறள்‌ கோலப் பிரான்‌’ (திருவாய்மொழி 5-9-6) “அடியை மூன்றை இரந்தவாறும்‌” (திருவாய்மொழி 5-10-9) “மின் கொள் சேர்‌ புரி நூல்‌ குறளாய்‌ அகல் ஞாலம் கொண்ட வன்‌ கள்வன்‌” (திருவாய்மொழி 6-1-11) என்றும்‌ ஸுூரிபோக்யனாய்‌ ஸர்வ ஸ்வாமி யானவன்‌ த்ரிவிக்ரமாபதாநம்‌ பண்ணுகைக்காகப்‌ பெரு விலையனான அழகைச்‌ சிறாங்கித் தனுபவிக்கலாம்படி வாமந வேஷ பரிக்‌ரஹம்‌ பண்ணி மஹாபலியுடைய யஜ்ஞ வாடத்திலே சென்று மூன்றடி யென்றிரந்து ப்‌ரஹ்மசாரி வேஷத்தோடே நிற்கிற மஹா வஞ்சகன்‌- “காண்மின்களுலகரென்று கண் முகப்பே நிமிர்ந்த” (திருவாய்மொழி 6-3-1 )நோக்கு வித்‌யை காட்டுவாரைப் போலே லெளகிகர்‌ ப்ரத்யக்ஷிக்கும்படி “அகல் கொள்‌ திசை வையமளந்த மாயன்‌‘ (திருவாய்மொழி 6-4-6) “திசை ஞாலம் தாவி யளந்ததும்‌” (திருவாய்மொழி 6-5-3) “வையமளந்த மணாளன்‌” (திருவாய்மொழி 6-6-1) “மண்ணும்‌ விண்ணும்‌ கொண்ட மாய வம்மான்‌’” (திருவாய்மொழி 6-9-2) “ஓரடியால்‌ எல்லா வுலகும்‌ தட வந்த” (திருவாய்மொழி 6-9-6) “தாவி வையம்‌ கொண்ட தடந் தாமரைகட்கே” (திருவாய்மொழி 6-9-9) என்று விஸ்த்ருதமாய்‌ திக்குகளோடே கூடின பூமியையும்‌ உபரிதந லோகங்களையும்‌ தென்றலுலாவினாப்‌ போலே ஸுக தரமாம்படி எங்குமொக்கப்‌ பரப்பி யளந்து கொண்ட நிரதிஸய போக்‌யமாய்‌ அதிஸுகுமாரமான திருவடிகள்‌.

தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக்
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்த ஆயிரத்துள்ளிவை தண் சிரீவர மங்கை மேய பத்துடன்
வைகல் பாடவல்லார் வானோர்க்கு ஆராவமுதே.–5-7-11-சர்வேஸ்வரனாய் -ஆஸ்ரித வத்சலனாய் -தன்னுடைமை பெறுகைக்கு அர்த்தியாய் அபேக்ஷிதம் செய்து கொடுக்குமவன் திருஅடிகளிலே

காண்ப தெஞ்ஞான்று கொலோ? வினையேன் கனிவாய் மடவீர்!
பாண் குரல் வண்டினொடு பசுந் தென்றலுமாகி எங்கும்
சேண் சினை ஓங்கு மரச் செழுங்கானல் திரு வல்லவாழ்
மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே.–5-9-6-தன்னுடைமை பெறுகைக்கு தான் அர்த்தியாய் -வடிவை குறுக விட்டு மிக்க அழகை யுடையவனாய் -ஸுலப்யத்தையும் அழகையும் திரு வல்ல வாழிலே ஆஸ்ரிதரை அனுபவிப்பித்துக் கொண்டு நிற்கிறவனுடைய நிரதிசய போக்யமான திருவடிகளை காண்பது எஞ்ஞான்று கொலோ-மலர்த்தாமரை -அப்போது அலர்ந்த தாமரை –

அடியை மூன்றை இரந்தவாறும் அங்கே நின்றாழ்கடலும் மண்ணும் விண்ணும்
முடிய ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும்
நொடியு மாறவை கேட்குந்தோறும் என் நெஞ்சம் நின்தனக்கே கரைந்துகும்
கொடிய வல் வினையேன் உனை என்று கொல் கூடுவதே.–5-10-9–இந்திரன் இழந்தது த்ரை லோக்யம் இறே -த்ரை லோக்யத்தையும் தா என்றால் இசையால் -அடி என்றால் உதாரன் ஆகையாலே இசையக் கூடும் என்று அடியை இரந்தான்-ஓர் அடிக்கு சிறையிட்டு வைக்க நினைக்கிறான் ஆகையாலே மூன்றை இரந்தான் – இரந்தவாறும்- தன்னதை அவனதாக்கி-தான் அர்த்தி யான படியும்

மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட
வன் கள்வனடி மேல்
குருகூர்ச் சடகோபன் சொன்ன
பண்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திரு வண் வண்டூர்க்கு
இன் கொள் பாடல் வல்லார் மதனர்; மின்னிடை யவர்க்கே.–6-1-11-மின்னை வென்று ஸ்யாமமான திரு மேனிக்கு பரபாகமான சேர்த்தியை யுடைத்தான திரு யஜ்ஜோபவீதத்தை யுடைய ஸ்ரீ வாமனனாய் –
வி நீதமாய் ஆகர்ஷகமான வடிவைக் காட்டி இசைவித்து -பூமிப் பரப்பை தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்ட-வன் கள்வனடி மேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன-தன் உடைமை அவனதாக்கி அவன் தந்தானாம் படி பண்ணின பண்ணின மஹா வஞ்சகன் திருவடிகளில் –-ஸ்ரீ வாமன வ்ருத்தாந்த கதனம் மின்னிடை மடவாருக்கு தோற்றுகிற தோற்றரவுக்கு ஸூ சகம் -இதில் பிறந்த பிரணய ரோஷம் மின்னிடை மடவாராக்கைக்கு ஸ்ரீ வாமனனாய் வந்து தோன்ற கிழக்கு வெளுத்த படி -மஹா பலியை அர்த்தியாய்ச் சென்று வஞ்சித்து பூமிப் பரப்பு அடைய தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்டால் போலே யாயிற்று பிரணய கோபத்தால் -அல்லோம் -என்றவர்களை திருவடிகளின் கீழே இட்டுக் கொண்ட படி

காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த
தாளிணையன்
தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணைஇன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே.–6-3-11-நோக்கு வித்யை காட்டுவரைப் போலே இது ஓர் ஆச்சர்யம் பாருங்கோள் என்று லௌகிகர் எல்லாருடையவும் கண் எதிரே வளர்ந்த திருவடிகளை யுடையவனை -உங்கள் தலையிலே திருவடிகளை வைக்க வாருங்கோள் -என்றால் இசைவார் இல்லையே

இகல்கொள் புள்ளைப் பிளந்ததும் இமிலேறுகள் செற்றதுவும்
உயர்கொள் சோலைக் குருந்தொசித்ததும் உட்பட மற்றும்பல
அகல் கொள் வைய மளந்த மாயன் என்னப்பன் தன் மாயங்களே
பகலிராப் பரவப் பெற்றேன் எனக்கென்ன மனப்பரிப்பே.–6-4-6-பரப்பை யுடைத்தான பூமி அடங்கலும் தன் திருவடிகளின் கீழே கொண்ட ஆச்சர்யத்தை யுடையவன் -வரையாதே தீண்டும் ஸ்வ பாவ சாம்யத்தாலே சொல்லுகிறார் என்னப்பன் தன் மாயங்களே -இவ் வபதானம் தமக்கு உதவ பலித்தது என்று இருக்கிறார் -ஆச்சர்ய சேஷ்டிதங்களையே

கரைகொள் பைம்பொழில் தண்பணைத் தொலை வில்லி மங்கலம்கொண்டுபுக்கு
உரைகொள் இன்மொழி யாளை நீர்உமக் காசை யின்றி அகற்றினீர்
திரைகொள் பௌவத்துச் சேர்ந்ததும் திசை ஞாலம் தாவி அளந்ததும்
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடுங்கண் நீர்மல்க நிற்குமே.–6-5-3-மஹா பலியால் பூமி அபஹ்ருதை யாயிற்று என்று கேட்டவாறே அப்படுக்கையில் பொருந்தாதே திக்குகளோடே கூடின பூமியை அநாயாசேன எல்லை நடந்து கொண்டதும்-

மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு
நீலக் கருநிற மேக நியாயற்கு
கோலச்செந் தாமரைக் கண்ணற்கு என் கொங்கலர்
ஏலக் குழலி இழந்தது சங்கே.–6-6-1-உகாதவரையும் கூட தன்னை இரப்பாளன் ஆக்கி தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்ட வ்யாமோஹத்தாலே அநந்யார்ஹம் ஆக்கி தன்னை போக்தாவானவனுக்கு

மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலங்காட்டி
மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே
நண்ணி உனைநான் கண்டு உகந்துகூத்தாட
நண்ணி ஒருநாள் ஞாலத் தூடே நடவாயே.–6-9-2–மஹா பலியாலே அபஹ்ருதமான த்ரை லோக்யத்தையும் இந்திரனுக்கு வாங்கிக் கொடுத்த –கொண்ட என்றது இந்திரன் பேறு தன் பேறாய் இருக்கிற படி -பிறந்த வன்றே ப்ரஹ்மசாரியாய் -கொடுத்து வளர்ந்த கையைக் கொண்டு இரந்து -சிறு காலைக் காட்டி அபஹரித்து பெரிய காலாலே அளந்து கொண்ட ஆச்சர்யங்கள் –-அம்மானே-இது எல்லாம் வேண்டிற்று உடையவனாகை இறே

பாயோர் அடிவைத்து அதன்கீழ்ப் பரவை நிலமெல்லாம்
தாயோர் அடியால் எல்லா உலகும் தடவந்த
மாயோன்!
உன்னைக் காண்பான் வருந்தி எனைநாளும்
தீயோடு உடன்சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ?–6-9-6–ஓர் அடியை பாய் வைத்து -பரம்ப வைத்து -அத் திருவடியின் கீழே கடல் சூழ்ந்த பூமியை எல்லாம் அளந்து கொண்டு-தாயோர் அடியால் எல்லா உலகும் தடவந்த-மற்றை ஓர் அடியால்-சகல லோகங்களையும் ஸ்பர்சித்த-தட வந்த -தடவின -தென்றல் பட்டால் போலே உஜ்ஜீவிக்கும் படி இருக்கை –மாயோன்! -ஆச்சர்ய பூதனே -இது எல்லாம் தன் பேறாகச் செய்த வ்யாமோஹத்தை உடையவன் என்கை

ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?
தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ.–6-9-9–வரையாதே எல்லார்க்கும் கொடுக்கும் நிரதிசய போக்யமான திருவடிகளில் -அழைத்துக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ –விஷயாந்தர தர்சன மாத்திரத்திலே முடியும் படி யானாலும் அணித்தாகாதோ -தாவி வையம் கொண்ட -என்கிறது உபாய அம்சம் –/தடந்தா மரை கள் -என்கிறது உபேய அம்சம் –கூவிக் கொள்ளும் காலம்-என்று தாம் சென்று காண்கை அன்றிக்கே தானே அழைத்துக் காட்டுகை முறையாகையாலே கிட்டும் பிரகாரம் சொல்லுகிறது-

9-இணைத் தாமரைகள் காண இமையோரும் வரும் படி சென்று சேர்ந்த உலகத் திலதத்தே கண்டு எந்நாளே நாம் மண் அளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு என்று -இத்யாதி படியே திரு உலகு அளந்து அருளின -சர்வ சுலபமாய்-நிரதிசய போக்யமாய்-சேர்த்தி அழகையும் உடைத்தான திரு அடிகளை நாம் காண்பது எப்போது என்று -நித்ய ஸூரிகளும் அனுபவிக்க ஆசைப் பட்டு வரும் படி-அன்று ஞாலம் அளந்த பிரான் பரன் சென்று சேர் திரு வேம்கட மா மலை -என்று திரு உலகு அளந்த செயலாலே பிரகாசிக்கிற சர்வ ஸ்மாத் பரத்வத்தை உடையவன் –அந்த ஸ்ரமம் தீர விடாயர் மடுவிலே சேருமா போலே உகந்து நிற்கிற –திலதம் உலகுக்காய் நின்ற திருவேம்கடம் -என்று லோகத்துக்கு முக்ய ஆபரணமான திரு மலையிலே கண்டு –அகலகில்லேன் என்று பூர்வ வாக்யம் அனுசந்தித்தவர் அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா -என்று புருஷகார பூதையான பெரிய பிராட்டியாரை முன்னிட்டு –நிகரில் புகழாய்-என்று தொடங்கி-திருவேம்கடத்தானே -என்னும் அது அளவாக –வாத்சல்யம் -ஸ்வாமித்வம் -சௌசீல்யம்-சௌலப்யம் -ஆகிய குணங்கள அடைவே அனுசந்தித்துக் கொண்டு –புகல் ஓன்று இல்லா -என்றும் அடியேன் -என்றும் தம்முடைய ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வ்பம் புரஸ்சரமாக உன் அடிக் கீழ் -என்று -சரணவ்-என்கிற திருவடிகளையும் –அமர்ந்து புகுந்தேன் -என்று சரணம் பிரபத்யே -என்கிற அர்த்தத்தையும் அனுசந்தித்து அருளுகையாலே –பூர்வ வாக்ய பிரக்ரியையாலே -பூர்ண பிரபதனம் பண்ணினவர்-

(இணைத் தாமரைகள்‌ காண இமையோரும்‌ வரும்படி சென்று சேர்ந்த உலகத்திலதத்தே கண்டு) “எந்நாளே நாம்‌ மண்ணளந்த” (திருவாய்மொழி 6-10-6) இத்யாதி, திருவுலகளந்தருளின ஸர்வ ஸுலபமாய்‌ நிரதிஸய போக் யமாய்ச்‌ சேர்த்தி யழகை யுடைத்தான திருவடிகளை நாம்‌ காண்பதெப்போதோ என்று நித்ய ஸூரிகளும்‌ வந்தநுபவிக்க ஆசைப்பட்டு வரும்படி “அன்று ஞாலம்‌ அளந்த பிரான்‌ பரன்‌ சென்று சேர்‌ திருவேங்கடமாமலை‘ (திருவாய்மொழி 3-3-8) என்று திருவுலகளந்தருளின ஸ்ரமந் தீர அச் செயலாலே ஸர்வ ஸ்மாத் பரனானவன்‌ விடாயர்‌ மடுவிலே சேருமாப் போலே உகந்து நிற்கிற ‘ உலகுக்குத்‌ திலதமாய்‌ நின்ற திருவேங்கடம்‌” (திருவாய்மொழி 6-10-1 என்று ஸ்ரீபூமிப் பிராட்டிக்கு முக்‌யமான ஆபரணமாயிருக்கிற திருமலையிலே கண்டு (அகலகில்லேன்‌ என்று பூர்வ வாக்ய ப்ரக்ரியையாலே அநுஸந்தித்தவர்‌) ‘ “அகலகில்லேன்‌ இறையும்‌”(திருவாய்மொழி 6-10-10) இத்யாதி புருஷகார பூதையான பெரிய பிராட்டியாரை முன்னிட்டு வாத்ஸல்யாதி, குணங்களை அநுஸந்தித்துக்‌ கொண்டு தம்முடைய அநந்ய கதித்வாநுஸந்தாந பூர்வகமாக பூர்வ வாக்ய ப்ரக்ரியையாலே பூர்ண ப்ரபதநம்‌ பண்ணினவர்‌ 

எந்நாளே நாம் மண்ணளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கென்று
எந்நாளும் நின் றிமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனமினமாய்
மெய்ந்நா மனத்தால் வழிபாடு செய்யும் திரு வேங்கடத்தானே!
மெய்ந்நான் எய்தி எந்நாள் உன்னடிகள் அடியேன் மேவுவதே?–6-10-6-நித்ய ஸூரிகள் பாசுரம் இருக்கிற படி -பரம பதத்தில் மேன்மையை அனுசந்திக்கிற நாம் சர்வ ஸூலபமான திருவடிகளைக் கிட்டுவது என்றோ -என்று -இங்குள்ளார் அங்குப் போவது மேன்மையை அனுபவிக்க -அங்குள்ளார் இங்கு வருவது சீல குண அனுபவம் பண்ண -விஷயம் உண்டாகையாலே வ்யக்தமாக அனுபவிக்க லாவது இங்கே -சங்கோசம் அற்றவர்களுக்கும்-எந்நாள் என்னும் படி இறே சீல குணத்தில் ஏற்றம்

குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர்திரு வேங்கட மாமலை

ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே.–3-3-8-இந்திரனுடைய பூமியை மஹா பலி பறித்துக் கொள்ள எல்லை நடந்து மீட்டு பூமியை ரஷித்த உபகாரகன் –-பரன் –சர்வேஸ்வரன்-சென்று சேர் திரு வேங்கட மாமலை–சேஷியானவன் விரும்புகிற தேசம் சேஷ பூதனுக்கு ப்ராப்யமாகச் சொல்ல வேணுமோ

அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன் றில்லா அடியேன் உன் னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே
.–6-10-10-வெய்யிலில் நின்று நிழலிலே ஒதுங்கினார் சொல்லுமா போலே க்ஷண மாத்ரமும் விஸ்லேஷிக்க க்ஷமை அல்லேன் என்று நிரதிசய போக்யையான பெரிய பிராட்டியார் நிரந்தர வாசம் பண்ணுகிற திரு மார்வை யுடையையாய் -பிராட்டியோட்டை பழக்கத்தால் ஆஸ்ரிதரை கைவிடாத ஒப்பில்லாத குண பிரதையை யுடையையாய் -எல்லோரோடும் அவரஜனீயமான சம்பந்தத்தையும் உடையையாய் -உன்னை அறியாதே இருக்கிற எனக்கு குணங்களை அறிவித்து அத்தாலே என்னை நடத்துவதும் செய்து திரு நாட்டில் உள்ளாரும் திருமலையில் எனக்கு ஆஸ்ரயிக்கைக்கு எளிதாம் படி வந்து நின்று அருளினவனே –-சாஸ்திரங்களில் சொல்லுகிற உபாயம் ஒன்றும் இல்லாத நான் அநந்ய பிரயோஜனனாயக் கொண்டு உன் திருவடிகளே உபாயமாகப் பற்றினேன் -புருஷார்த்த சாதனமாக என் தலையில் உள்ள வற்றை எல்லாம் தவிர்ந்து என் தலைக்கும் திருவடிகளுக்கு நடுவு விளக்கு வாய் தெரியாத படி செறிந்து புகுந்தேன் என்றுமாம் 

10-பிணக்கற தொடங்கி வேத புனித விறுதி சொன்ன சாத்ய உபாய ஸ்ரவண சசோக சஜாதீயர்க்கு (சாத்ய உபாய ஸ்ரவண சசோக சஜாதீயர்க்கு-சாதன பக்தியை கேட்டு துஷ்கரம் என்றும் அபிராப்தி என்றும் நினைத்தலால் பிறந்த சோகமுடைய தன்னை ஒத்த அதிகாரிகளுக்கு என்றவாறு )- பத்துடை அடியவரிலே –பிணக்கற அறு வகை சமயமமும் -என்கிற பாட்டிலே –வணக்குடை தவ நெறி வழி நின்று -என்று உபக்ரமித்து –வேத புனித விருக்கை நாவில் கொண்டு-ஞான விதி பிழையாமே -அச்சுதன் தன்னை மேவித் தொழுது உய்ம்மினீர்கள்–5-2-9- என்கிறது அளவாக கீழ் உபதேசித்த சாத்ய சாதன பக்தி ஸ்ரவணத்தாலே –அதினுடைய துச்சகத்வ ஸ்வரூப விரோதித்வங்களை நினைத்துப் பிறந்த சோகத்தோடு கூடி அத்தாலே-எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு-5-7-5-என்னான் செய்கேன் –5-8-3-என்று இருக்கும் தம்மோடு சஜாதீயராம் படியான அதிகாரம் பிறந்தவர்களுக்கு-

(பிணக்கறத்‌ தொடங்கி வேதப் புனித விருக்கை நாவில்‌ கொண்டு) “பூவில்‌ புகையும்‌ விளக்கும்‌ சாந்தமும்‌ நீரும்‌ மலிந்து ஞான விதி பிழையாமே அச்சுதன்‌ தன்னை மேவித்‌ தொழுதுய்ம்மினீர்கள்‌’ (திருவாய்மொழி 5-2-9) என்கிறதளவாகக்‌ கீழுபதேஸித்த ஸாத்‌ய ஸாதந பக்தி ஸ்ரவணத்தாலே அதினுடைய துஷ்கரத்வாதி தோஷாநுஸந்தா நத்தாலும்‌ ஸ்வ பாரதந்த்ர்யா நுஸந்தானத்தாலும்‌ ஸோகம்‌ பிறக்கையாலே தம்முடைய ப்ரபத்தி நிஷ்டை துணையாம் படியான அதிகாரம்‌ பிறந்தவர்களுக்கு

பிணக்கற வறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த
கணக்கற நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புறநெறி களை கட்டு
உணக்குமின் பசையற வவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே 
–1-3-5-வணக்கத்தை யுடைய பக்தி மார்க்கம் ஆகிற வழியிலே நிலை நின்று -பக்தி சரீரத்திலே மாம் நமஸ் குரு என்கையாலே–வணக்குடை -என்கிறது-தபஸ் சப்தத்தாலே பக்தியைச் சொல்லிற்று –பக்தி ஜ்ஞான விசேஷம் ஆகையாலே –யஸ்ய ஜ்ஞான மயந்தப -என்கிற ந்யாயத்தாலே என்னுதல்-இவனுடைய பிரேம மாத்ரத்தையே குவாலாக நினைத்து இருக்கும் அவன் அபிப்ராயாத்தாலே யாதல்-புற நெறிகளை கட்டு
இதுக்கு விரோதியான சப்தாதி விஷயங்களில் போகிற வழி யாகிற களையைக் கடிந்து பறித்து
இத்தை நெறி என்பான் என் என்னில் இருந்ததே குடியாகப் போகிற மஹாதபம் ஆகையாலே -துர்மார்க்கம் என்னக் கடவது இறே –உணக்கு மின்பசை யற-பறித்தாலும் கிடந்திடத்தே கிடக்குமாகில் பருவம் செய்யும் இறே-அதுக்காக சவாசனமாக விடுங்கோள் -இது செய்வது என் கொண்டு என்னில்-அவனுடைய யுணர்வு கொண்டு உணர்ந்தே தத் உக்த ஜ்ஞானம் -தத் விஷய ஜ்ஞானம் என்னுதல் –
அவனை விஷயீ கரித்த ஜ்ஞானத்தைக் கொண்டு -விலஷண விஷயத்திலே நெஞ்சை வைத்து -இவற்றின் தோஷத்தை தர்சித்து விடுங்கோள்-அவனை சரணம் புக்கு இவற்றை சவாசனமாக விடுங்கோள் எனவுமாம்-தானி சர்வாணி சம்யம்ய -மாம் ஏவ ப்ரபத்யந்தே -சரம ஸ்லோகத்தின் படியே –

மேவித் தொழுது உய்ம்மின்னீர்கள் வேதப் புனித இருக்கை
நாவிற் கொண்டு அச்சுதன் தன்னை
ஞான விதி பிழையாமே
பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழும் அடி யாரும் பகவரும் மிக்கது உலகே
.–5-2-9-அநந்ய பிரயோஜனராய் தொழுது உஜ்ஜீவியுங்கோள் -வேதத்தில் விபூதி விஷயமாக சொன்னவை அன்றிக்கே -பகவத் குணங்களையும் வடிவு அழகையும் ப்ரதிபாதியா நின்றுள்ள ஸ்ரீ புருஷ ஸூக்தாதிகளை நாக்கிலே கொண்டு –
அச்சுதன் தன்னை –-அஹ்ருதயமாக சொன்னதை ஹ்ருதயமாக நினைத்து –நத்யஜேயம் –என்னுமவன் -அகவாய் பாராதே யுக்தி மாத்ரத்தைக் கொண்டு நழுவ விடாதவனை-ஞான விதி பிழையாமே-
வேதங்களில் பிரதிபாதிக்கிற பக்தி மார்க்கம் தப்பாமே –ஞானம் என்று ஞான விசேஷமான பக்தியைச் சொல்லுகிறது –-பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து--பூவோடு கூடின புகையையும் -ஸமாராதன த்ரவ்யங்களையும் மிகுத்து –-மேவித் தொழும் அடி யாரும் பகவரும் மிக்கது உலகே.–
அநந்ய பிரயோஜனராய் தொழும் கைங்கர்ய நிஷ்டரும் – -பகவரும் -அதுக்கு ஷமர் அன்றிக்கே குண அனுபவம் பண்ணும் குண நிஷ்ட்ருமாய்க் கொண்டு லோகம் அடங்க சம்ருத்தம் ஆயிற்று –-கிடந்த இடத்தே கிடந்து குண அனுபவம் பண்ணும் ஸ்ரீ பரத ஆழ்வானையும்-தொடர்ந்து அடிமை செய்யும் இளைய பெருமாளையும் போலே இருக்குமவர்கள் –-மேவித் தொழுது உய்ம்மின்கள்-

எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? எவ்வ தெவ்வத் துளாயுமாய் நின்று
கை தவங்கள் செய்யும் கருமேனி அம்மானே!
செய்த வேள்வியர் வையத் தேவர் அறாச் சிரீவர மங்கலநகர்
கைதொழ இருந்தாய் அது நானும் கண்டேனே!–5-7-5–தம்முடைய வெறுமை திரு உள்ளத்தே படுகைக்கு திரியவும் சொல்லுகிறார் -நீ எனக்கு கைப்படும் படியாக நான் ஒரு சாதன அனுஷ்டானம் பண்ண என்பது ஓன்று உண்டோ -உன்னோபாதி நான் என்னை அறிவேனோ -என்னால் செய்யலாவது உண்டோ என்று கேட்க்கிறார் –-எனக்கு -இந்த சர்வ சக்தியைக் கண்ட வாறே -தன் கார்யம் தானே செய்து கொள்ளுகிறான் என்று இருக்கிறாயோ –

என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3–உன் திருவடிகளை பெறுகைக்கு என்னால் செய்யலாவது இல்லை -எனக்கும் செயலுக்கும் என்ன சேர்த்தி யுண்டு -ஒரு துர்ப்பலன் தலையிலே மலையை எடுத்தால் போலே இருக்கை இ றே -என்னை சாதன அனுஷ்டானத்திலே மூட்டுகை யாவது -ஒரு சர்வ சக்தி நிர்வஹிக்குமத்தை நான் செய்யவோ

11-தந்தனன் மற்றோர் களை கண் இலம் புகுந்தேன் என்று ஸ்வ ஸித்த உபாய நிஷ்டையை உக்த அனுஷ்டானங்களாலே காட்டுகிறார் ஆறாம் பத்தில் –அதாவது –திரு விண்ணகர் சேர்ந்த அப்பன் தன் ஒப்பாரில் அப்பன் தந்தனன் தன தாள் நிழல்-திரு விண்ணகர் மன்னு பிரான் கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலம் காண் மின்களே –என்கிற தம்முடைய உக்தியாலும் –(களை கண் இலம் காண் மின்களே –முன்னிலை வினைமுற்று உபதேசத்தில் நோக்கு ) அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே –என்கிற தம்முடைய அனுஷ்டானத்தாலும் -தமக்கு இந்த சித்தோ உபாயத்தில் உண்டான நிஷ்டையை பிரகாசிப்பிக்கிறார் ஆறாம் பத்தில் -என்கை

(தந்தனன்‌ களை கணிலம்‌ புகுந்தேனென்று ஸ்வ ஸித்‌தோபாய நிஷ்டையை உக்த் யநுஷ்டாங்களாலே காட்டுகிறார்‌ என்கிறார்‌) “தந்தனன்‌ தன தாள்‌ நிழலே”(திருவாய்மொழி 6-3-9) “திருவிண்ணகர்‌ மன்னு பிரான்‌ கழல்களன்றி மற்றோர் களை கணிலம்‌ காண்மின்களே‘ (திருவாய்மொழி 6-3-10) என்கிற தம்முடைய உக்தியாலும்‌ “அடிக்கீழ்‌ அமர்ந்து புகுந்து” (திருவாய்மொழி 6-10-11 என்கிற தம்முடைய அநுஷ்டானத்தாலும்‌ தமக்கிந்த ஸித்‌தோபாயத் திலுண்டான நிஷ்டையை ப்ரகாஸ்ரிப்பிக்கிறார்‌ என்கிறார்‌ ஆறாம் பத்தில்

என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்ப்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்
மின்னப் பொன்மதிள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன்
தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தன தாள்நிழலே.–6-3-9—தன் தாள் நிழல் தந்தான் -தன் பாதாச்சாயைத் தந்தான் -அழித்தாய் உன் திருவடியால் -என்கிறபடியே என் மநோ ரத்தத்தை திருவடிகளாலே அழித்து தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்டான் –

நிழல்வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்ச்
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய்
மழலை வாய்வண்டு வாழ் திரு விண்ணகர் மன்னு பிரான்
கழல்கள் அன்றி மற்றோர் களை கண்இலம்; காண்மின்களே.
–6-3-10-நித்ய வாசம் பண்ணுகிற உபகாரகன் திருவடிகள் அல்லது வேறு புகல் இல்லை -மாம் ஏக சரணம் வ்ரஜ -என்கிறவன் அன்றிக்கே -திருவடிகள் தானே தஞ்சம் என்கை-காண்மின்களே.-இத்தை எல்லோரும் புத்தி பண்ணுங்கோள் –

அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்றென்றருள் கொடுக்கும்
படிக் கேழில்லாப் பெருமானை
ப் பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங் கடத்துக் கிவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே.–6-10-11-தன் திருவடிகளின் கீழே அநந்ய பிரயோஜனராகப் புகுந்து ஸ்வரூப ஞானம் உடையோர் வாழுங்கோள் என்று முத்திரையால் அருளிச் செய்கிறாப் போலே யாயிற்று நின்று அருளுவது –மாம் ஏகம் சரணம் வ்ரஜ -மா ஸூ ச -என்றால் போலே யாயிற்று நிற்பது-படிக் கேழில்லாப் பெருமானைப்-இப்படிக்கு தனக்கு ஒப்பு இல்லாத சர்வேஸ்வரனை

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌-15 –குணாநுபவ பாதம் –(218 – 228)-24-தஸ ஸதக பகவத் குண அநுபவ விவரண அதிகரணம் –(219–228)-ஐந்தாம் பகுதி-(223) ஸ்ரீ மணவாள மா முனிகள் –

August 1, 2026

1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 234 முடிய (48)

1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-234 (27)

15 –குணாநுபவ பாதம் –218 – 228 —மொத்தம் —11– ஸூரணைகள் –இரண்டு அதிகரணங்கள்–
23 –தஸ ஸதக கத பகவத் குண தஸக அநு குண அநுபவ உபதேச அதிகரணம் —-218—ஒரே ஸூரணை
24-தஸ ஸதக பகவத் குண அநுபவ விவரண அதிகரணம் –219–228—மொத்தம் –10–ஸூரணைகள்

கீழ் சொன்ன பரத்வாதிகளால் வந்த தன்னுடைய உத்கர்ஷத்தையும் தம்தாமுடைய நிகர்ஷத்தையும் அனுசந்தித்து -அகல்வார் அளவிலும் மேல் விழுந்து – விஷயீகரிக்கும் படி பரம காருணிகனான சர்வேஸ்வரன்-கீழ் இவருக்கு பிறப்பித்த விரக்திக்கு பலமான-ஸ்வ விஷய பக்தியை-பரம்பரயா அபி விருத்தமாக்கி –-அந்த பக்தியையும் பாகவத சமாகத்தையும் உடையரான இவர் தாம் திருத்த திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களையும் -திருத்தின தம்மையும் – காண்கைக்கு வந்த நித்ய சூரிகளையும் -ஸ்வேத தீப வாசிகளுமான சித்தர்களையும் கண்டு மங்களா சாசனம் பண்ணி – திருந்தாத அசுர ராஷச பிரகிருதி களையும் – பகவத் பாகவத வைபவத்தை உபதேசித்து -திருத்தி பாகவத சமாஜ தர்சனம் இனிதாம் படியான ஜ்ஞானம் பிறந்தார்க்கு பிராப்ய த்வரைக்கு அடியான பக்தியையும் உபதேசித்து தலைக் கட்டுகிறார் என்கிறார்-

கீழ்ச் சொன்ன பரத்வாதிகளால்‌ வந்த அவனுடைய உத்கர்ஷத்தையும்‌ தம்முடைய நிகர்ஷத்தையு மநுஸந்தித்து அகல்வாரளவிலும்‌ மேல் விழுந்து விஷயீகரிக்கும்படி பரம க்ருபாவானான ஸர்வேஸ்வரன்‌ கீழிவர்க்குப்‌ பிறப்பித்த விரக்தி பலமான ஸ்வ விஷயமான பக்தியை பரம்பரயா அபிவிருத்‌தமாக்க அந்த பக்தியையும்‌ பாகவத ஸமாகமத்தை யுமுடையரான இவர்‌ திருத்தின தம்மையும்‌ திருந்தின ஸ்ரீவைஷ்ணவர்களையும்‌ காண்கைக்கு வந்த நித்ய ஸூரிகளையும்‌ ஸ்வேத த்‌வீப வாஸிகளான ஸித்‌தரையும்‌ கண்டு மங்களாஸாஸநம்‌ பண்ணி திருந்தாத ஆஸுர ப்ரக்ருதிகளையும்‌ பகவத்‌ பாகவத வைபவத்தையும்‌ உபதேஸித்துத்‌ திருத்தி பாகவத ஸமாஜம்‌ தர்ஸநீயமாம்படியான ஜ்ஞாநம்‌ பிறந்தார்க்கும்‌ ப்ராப்ய த்வரைக் கடியான பக்தியையும்‌ உபதேஸித்துத்‌ தலைக் கட்டுகிறார்‌ என்கிறார்‌-

(1-)ஆவா வென்று தானே தன் அடியார்க்கு செய்யும் தொல் அருள் என்று பரத்வாதிகளை உடையவன் எவ்விடத்தான் என்னும் பாவியர்க்கும் இருகரையும் அழிக்கும் க்ருபா பிரவாஹம் உடையவன் பொய் கூத்து வஞ்சக் களவு தவிர முற்றவும் தானாய் உன்னை விட்டு என்னப் பண்ணின விரக்தி பல பரமாத்ம ராகம் (2)-பேர் அமர் பின்னின்று கழிய மிக்கு யானே என்ன வாய்ந்து ஆற்றகில்லாது நீராய் மெலிய ஊடு புக்கு வளர (3-)விஷ வருஷ பலங்கள் கை கூடினவர் அடிமை புக்காரையும் ஆட் செய்வாரையும் காண லோக த்வீ பாந்தரங்களிலும் நின்றும் போந்த தேவர் குழாம் களைக் கண்டு காப்பிட்டு பிரகலாதர் விபீஷணர் சொல் கேளாத அரக்கர் அசுரர் போல்வாரை தடவி பிடித்து (4-)தேச கால தோஷம் போக எங்கும் இடம் கொண்ட வர்களை மேவித் தொழுது உஜ்ஜீவியும் கோள் நீங்கள் நிறுத்துகிறவர்களை தேவதைகளாக நிறுதினவனை (5)-மேவிப் பரம்பும் அவரோடு ஒக்க தொழில் யுக தோஷம் இல்லையாம் என்று விஷ்ணு பக்தி பரராக்கி கண்ணுக்கு இனியன காட்டலாம் படியானார் கண்ணிலே நோக்கிக் காணும் பக்தி சித்தாஞ்சனத்தை இடுகிறார் ஐஞ்சாம் பத்தில்-சூர்ணிகை -223.-

1-ஆவா வென்று தானே தன் அடியார்க்கு செய்யும் தொல் அருள் என்று பரத்வாதிகளை உடையவன்
எவ்விடத்தான் என்னும் பாவியர்க்கும் இருகரையும் அழிக்கும் க்ருபா பிரவாஹம் உடையவன்
ஆவா என்று அருள் செய்து
-5-1-9–என்று ஐயோ ஐயோ என்றுஎன் பக்கல் கிருபையை பண்ணி என்றும் ,
கலி யுகம் ஒன்றும் இன்றிக்கே தன் அடியார்க்கு அருள் செய்யும் -5-2-11-என்று தன் பக்கல் ந்யச்த பரர் ஆனவர்களுக்கு கலியுக தோஷம் ஒன்றும் வாராத படி கிருபை பண்ணும் என்றும் -,
பெருமானது தொல் அருளே-5-9-9- -என்று சர்வேஸ்வரனுடைய ஸ்வாபாவிக கிருபை என்று சொல்லும்படி – அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் -யானார் -எம்மா பாவியர்க்கும்
விதி வாய்க்கின்றது வாய்க்கும் கண்டீர்
-5-1-7–என்று கையும் திரு ஆழியும் ஆன அழகை நித்ய சூரிகளுக்கு காட்ஷி கொடுத்து கொண்டு – அங்கு உள்ளாருடனே பரிமாறி இருக்கிற சர்வேஸ்வரன் எவ்வளவிலே ! நித்ய சம்சாரிகளுக்கு மிவ்வருகான நான் எவ்வளவிலே !-என்று கீழ்ச் சொன்ன
பரத்வ-காரணத்வ -வியாபகத்வ -நியந்த்ருத் வாதிகளால் வந்த உத்கர்ஷத்தையும் -தங்களுடைய நிகர்ஷத்தையும் அனுசந்தித்து-

(ஆவாவித்யாதி,)“ஆவாவென்றருள்செய்து’‘ (திருவாய்மொழி 5-1-9) என்றும்‌, “தானே இன்னருள்‌ செய்து” (திருவாய்மொழி 5-1-10) என்றும்‌ “கலியுக மொன்றுமின்றிக்கே தன்னடியார்க் கருள்‌ செய்யும்‌”(திருவாய்மொழி 5-2-11 என்றும்‌ “தொல்லருள்‌ நல் வினையால்‌” (திருவாய்மொழி 5-9-10) என்றும்‌ சொல்லுகையாலே “அம்மானாழிப்பிரான்‌ அவனெவ்விடத்தான்‌ யானார்‌ எம்மா பாவியற்கும்‌ விதி வாய்க்கின்று வாய்க்கும்‌ கண்டீர்‌ (திருவாய்மொழி 5-1-7) என்று கையும்‌ திருவாழியுமான வழகை நித்ய ஸூரிகளுக்குக்‌ காட்சி கொடுத்துக்‌ கொண்டு அங்குள்ளார்‌ பரிமாற விருக்கிறவன்‌ எவ்வளவிலே, நித்ய ஸம்ஸாரிகளுக்கும் இவ்வருகான நானெவ்வளவிலேன்‌; கீழ்ச் சொன்ன அவனுடைய பரத்வ காரணத்வ வ்யாபகத்வ நியந்த்ருத்வாதிகளாலே வந்த உத்கர்ஷத்தையும்‌ தங்களுடைய நிகர்ஷத்தையும்‌ அநுஸந்தித்து

ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே.–5-1-9–ஐயோ ஐயோ என்று தன்னுடையநிரவதிக கிருபையை பண்ணி -கேசவன் தமர் தொடங்கி-கிருபையை விதி சப்தத்தால் சொல்லிப் போந்தவர் -இப் பாட்டில் அருள் என்று வெளியிடுகிறார் – அடியேனொடும் ஆனானே.– ஸ்வரூப அநு ரூபமாக சேஷியாய் வந்து கலந்தான் –

ஆனான் ஆளுடையான் என்றஃ தே கொண்டுகந்து வந்து
தானே இன்னருள்செய்து என்னை முற்றவும் தானானான்
மீனாய் ஆமையுமாய் நர சிங்கமுமாய்க் குறளாய்க்
கானார் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார்வண்ணனே.–5-1-10-தான் இருந்த இடத்தே நான் செல்லுகை அன்றிக்கே நான் இருந்த இடத்தே தானே வந்து -அர்த்தியாது இருக்க தானே தன் பேறாக கிருபை பண்ணி –

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான்கண்ணன் தன்னைக்
கலிவயல் தென்னன் குருகூர்க் காரிமாறன் சடகோபன்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக் கும்மே.–5-2-11-தன்னடியார்க்கு கலியுகம் ஒன்றும் தட்டாத படி அருள் செய்யும் -நாட்டுக்கு இட்ட நினைப்பு அன்று இறே அந்தப்புரத்துக்கு இடுவது 

கழல் வளை பூரிப்ப நாம் கண்டு கை தொழக் கூடுங் கொலோ?
குழல் என யாழும் என்னக் குளிர் சோலை யுள் தேனருந்தி
மழலை வரி வண்டுகள் இசை பாடும் திருவல்லவாழ்
சுழலின் மலி சக்கரப் பெருமானது தொல்லருளே.–5-9-9-விரோதி நிரசன த்வரையாலே மிகவும் சுழன்று வருகிற திரு வாழி யை கையிலே யுடைய சர்வேஸ்வரனுடைய -சுழல்வது போலே விளங்கா நின்றுள்ள சக்கரம் என்றுமாம் -ஸ்வாபாவிகமான அவன் பிரசாதத்தாலே –

தொல்லருள் நல் வினையால் சொலக் கூடுங்கொல்? தோழிமீர்காள்?
தொல்லருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திருநகரம்
நல்லருள் ஆயிரவர் நலனேந்தும் திருவல்லவாழ்
நல்லருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே.–5-9-10-ஸ்வாபாவிக கிருபையால் யுண்டான ஸூக்ருதத்தாலே அவனைக் கண்டு திரு நாமங்களை சொல்லக் கூட வற்றோ என்னுதல் -ஸ்வாபாவிக கிருபையால் அவனைக் காணப் பெற்று ப்ரீதியாலே யுகந்து கொண்டு திரு நாமத்தை சொல்லக் கூட வற்றோ என்னுதல் –நல்வினை -உகப்பு –

அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான்? யான் ஆர்?
எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்குங் கண்டீர்

கைம்மா துன்பொழித்தாய்! என்று கை தலை பூசலிட்டே
மெய்ம் மாலாய் ஒழிந்தேன் எம்பிரானும் என் மேலானே.–5-1-7–கையும் திரு வாழியுமான சேர்த்தியை நித்ய ஸூ ரிகளை அனுபவித்துக் கொண்டு இருக்கிற சர்வேஸ்வரன்-அவன் எவ்விடத்தான்?--அவன் எவ்வளவில் உள்ளான் -நித்ய அனுபவம் பண்ணுகிற நித்ய ஸூ ரிகளுக்கும் பரிச்சேதிக்க ஒண்ணாத படி அவ்வருகு ஆனவன்-யான் ஆர்?--நித்ய சம்சாரிகளுக்கும் இவ்வருகு ஆனவன் -உபய விபூதியும் இருவருக்கும் நடுவே -நீர் கண்ட படி என் என்னில்–எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்குங் கண்டீர்- எல்லா வகையாலும் மஹா பாபத்தை பண்ணினவர்கள் பக்கலிலும் பகவத் கிருபை -பெருகப் புக்கால் தகை இன்றியிலே பெருகும் கிடி கோள் -பகவத் கிருபை ஏறிப் பாய புக்கால் கரையிலே நின்றோம் என்ன தப்ப விரகு இல்லை—-அந்த பொய்ம்மால் போய் மெய்ம்மாலாய் நின்றேன் -அவன் செய்வது என் என்னில் –எம்பிரானும் என் மேலானே.– நான் மெய் சொன்ன அன்றோடு பொய் சொன்ன அன்றோடு வாசி அற எனக்கு உபகாரகனாய் போந்தவன் -என்னை இப்படி யாக்கின தானும் தன் பேறாக மேல் விழுந்தான் –கிருஷியும் தன்னதாயே விட்டது – மொயம்மாலாய் ஒழிந்தேன் -எம்மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர்

அகலும் படி எத்தனை யேனும் மகா பாபிகள் அளவிலும் -கர்ம அனுகுண நிர்வாகத்துக்கு
உடலான -தன் நிரந்குச ஸ்வாதந்த்ரமாகிற கரையும் – தன் அனுக்ரகம் தங்கள் பக்கல் வாராதபடி அபராதங்களே பண்ணும் இவர்கள் ஒவ்பாதிக ஸ்வாதந்த்ரம் ஆகிய கரையும் -அழிய பெருகா நிற்குமதான கிருபா பிரவாகத்தை உடைய சர்வேஸ்வரன் (கையார் சக்கரம் -சாரம் ) பொய் கூத்து வஞ்சக் களவு தவிர பொய்யே கைம்மை சொல்லி – என்று என்றே சில கூத்து சொல்ல –5-1-2-
உன்னையும் வஞ்சிக்கும் கள்ள மனம் தவிர்ந்தே –5-1-3–என்று மெய் கலவாத பெரும் பொய்யை சொல்லி -பிரேம பரவசரைப் போலே பாவித்து – ஹிருதயம் பிராக்ருத விஷயம் பிரவணமாய் இருக்க -அநந்ய பிரயோஜனரைப் போலே – உன் ஒவ்தாரத்தையும் வடிவழகையும் சஹ்ருதயமாய் சொல்லுகிறார் என்று தோற்றும்படி பலகாலும் சொல்லா நின்று கொண்டு- சர்வஜ்ஞ்ஞான உன்னையும் -பகட்டும் க்ரித்யமா உக்தமான மனசை தவிர்ந்து என்று -அவற்றை இவர் தவிரும்படி –

அகலும்படியான எத்தனையேனும்‌ மஹா பாபிகளளவிலும்‌ ஐயோ ஐயோ வென்று அர்த்தித்வ நிரபேக்ஷமாக தன் பக்கலிலே ந்யஸ்த பரரானார்க்கு கால தோஷம்‌ தட்டாதபடி பண்ணும்‌ ஸ்வாபாவிக க்ருபையை உடையனாகையாலே “விதி வாய்க்கின்று வாய்க்கும்‌” (திருவாய்மொழி 5-1-7) என்கிறபடியே தன்னுடைய நிரங்குஸ ஸ்வாதந்த்ர்யமாகிற கரையையும்‌ இவனுடைய ஒளபாதிக ஸ்வாதந்த்ர்யமாகிற கரையும்‌ அழியப்‌ பெருகும்படியான க்ருபா ப்ரவாஹத்தை யுடைய ஸர்வேஸ்வரன்‌. (பொய்க் கூத்து வஞ்சக் களவு தவிர) “பொய்யே கைம்மை சொல்லி” (திருவாய்மொழி 5-1-1 என்றும்‌ “என்றென்றே சில கூத்துச்‌ சொல்ல” (திருவாய்மொழி 5-1-2) என்றும்‌ “என்றென்றே உன்னையும்‌ வஞ்சிக்கும்‌ கள்ள மனம்‌ தவிர்ந்தே” (திருவாய்மொழி 5-1-3) என்கிறபடியே மெய் கலவாத பெரும்‌ பொய்களைச்‌ சொல்லி ஸர்வஜ்ஞனாய்‌ ஸர்வாந்தர்யாமியான உன்னையும்‌ பகட்டும்‌ க்ருத்ரிம யுக்தமான மநஸ்ஸைத்‌ தவிர்ந்தே என்று இவர்‌ தவிரும்படி

கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே! என்றென்று
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?
ஐயோ! கண்ண பிராஅன்! அறையோ! இனிப் போனாலே.–5-1-1-நல்ல வார்த்தை இறே நாமும் மெய்யாகப் பெற்றோம் ஆகில் –பொய் என்றும் -கைம்மை என்றும் -இரட்டிப்பால் மிகுதியாய் -பெரும் பொய் என்கை –அதாவது அகவாய் அறியாதாரைப் பகட்டுகை அன்றிக்கே-ஸ்வதஸ் சர்வஞ்ஞன் ஆனவனும்-மெய் என்று இருக்கும் படி சொல்லுகை -அகவாயில் நினைவு ஒழிய சொல்லக் கூடாது என்று இருக்கும் இறே அவன்

போனாய் மாமருதின் நடுவே! என் பொல்லா மணியே!
தேனே! இன்னமுதே! என்றேன்றே சில கூத்துச் சொல்லத்
தானேல் எம்பெருமான் அவன் என்னாகி ஒழிந்தான்
வானே மாநிலமே மற்றும் முற்றும் என்னுள்ளனவே.–5-1-2—ஒரு கால் சொல்லி அநு தப்பித்து மீண்டேனோ-சிலருடைய செயலை வேறே சிலர் அநு கரிக்கை-ப்ரேம பரவசையானவள் சொல்லக் கேட்ட வார்த்தையை அஹ்ருதயமாக நான் சொல்லுகை-

உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி
வள்ளல் மணி வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்
கள்ள மனம் தவிர்ந்தே
உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்
வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே –5-1-3-சர்வஞ்ஞானான நீயும் மெய் என்று பிரமிக்கும் படி –பகட்டும் க்ருத்ரியுக்தமான மனசை – அஹ்ருதயமாக இழிந்தாரையும் மேல் விழும்படி கொண்டு முழுகும் விஷயம் இறே-உன்னை -மித்ர பாவம் அடியாக -நத்யஜேயம் -என்னும் உன்னை –ப்ராப்தனாய் நிரதிசய போக்யனான உன்னை-நிதி எடுத்தால் போலே லபித்து-அசன்னேவ என்னும் படி இருக்கிற நான் உஜ்ஜீவிக்கப் பெற்றேன்

முற்றவும் தானாய் உன்னை விட்டு என்னப் பண்ணின விரக்தி பல பரமாத்ம ராகம்என்னை முற்றவும் தானான்–5-1-10–என்று இவர்க்கு சர்வ வித போக்யமும் தானாய் –-இனி உன்னை விட்டென் கொள்வனே -5-1-3–என்று நான் உன்னை விட்ட வன்றும் விடமாட்டாத உன்னை ஒழிய துராராதமாய் -வருந்தி ஆராத்திதாகிலும் கிடைப்பது ஓன்று இல்லாத விஷயங்களைப் பற்றவோ என்று இவர் தாமே பேசும் படி பண்ணின-கண்ட சதிர் கண்டு ஒழிந்தேன்-4-9-10- -என்கிறபடியே அவன் போக்யதையாலே அந்ய விஷயங்களை அடைய உபேஷிக்கும் படி -கீழில் பத்தில் பிறந்த விரக்திக்கு பலமான -பரமாத்மினி யோ ரக்த -பார்ஹஸ்பத்ய ஸ்ம்ருதி -என்கிற பரமாத்ம விஷயத்தில் ராகமானது

(முற்றவும்‌ தானாய்‌ உன்னை விட்டென்னப்‌ பண்ணின விரக்தி பல பரமாத்ம ராகம்‌) “என்னை முற்றவும்‌ தானானான்‌” (திருவாய்மொழி 5-1-10) என்று எனக்கு ஸர்வ வித போக்‌யமுமான “உன்னை விட்டென்‌ கொள்வன்‌ ” (திருவாய்மொழி 5-1-3) என்று நான்‌ விட்டவன்றும்‌ விட மாட்டாத உன்னை யொழிய துராராதமாய்‌ ஆராதித்தாலும்‌ கிடைப்ப தொன்றில்லாத விஷயத்தைப்‌ பற்றவோ என்று இவர் தாமே பேசும்படி “கண்ட சதிர்‌ கண்டொழிந்தேன்‌” (திருவாய்மொழி 4-9-10) என்கிறபடியே தன்னுடைய போக்‌யதையாலே ஸ்வ வ்யதிரிக்தங்களை யுபேக்ஷிக்கும்படி கீழில்‌ பத்தில்‌ பிறந்த விரக்திக்குப்‌ பலமான ‘ பரமாத்மநி யோரக்த: விரக்த: அபரமாத்மநி” (பார்ஹஸ்பத்ய ஸ்ம்ருதி) என்கிறபடியே அபரமாத்ம விஷயமான விரக்திக்குப்‌ பலமான பரமாத்ம விஷய ராகம்‌.

ஆனான் ஆளுடையான் என்றஃ தே கொண்டுகந்து வந்து
தானே இன்னருள்செய்து என்னை முற்றவும் தானானான்
மீனாய் ஆமையுமாய் நர சிங்கமுமாய்க் குறளாய்க்
கானார் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார்வண்ணனே.–5-1-10-உள்ளொடு புறம்போடு வாசி அற கலந்தான் -என்னுதல்–சேலேய் கண்ணி யரும் பெரும் செல்வமும் -என்ற படியே சர்வவித பந்துவும் தான் ஆனான் என்னுதல் –

உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி
வள்ளல் மணி வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்
கள்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்
வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே –5-1-3–பரமபதத்தை விட்டு ஷீராப்தியிலே என்னுடைய ரக்ஷண அர்த்தமாக -அவசர பிரதீஷனனாய் கொண்டு கண் வளர்ந்து அருளுகிறவனே-சத்ருசமான பரமபதத்தை விட்டு –விசத்ருசமான சம்சாரத்திலே என்னுடைய ரக்ஷணத்திலே அவசர பிரதீஷனான பின்பு நான் விட்ட வன்றும் என்னை விட மாட்டாத உன்னை ஒழிய
பச்சை கொண்டு பல வேளையிலே நிஷ் பிரயோஜனமாக விஷயங்களை பற்றவோ -ஆராதிக்கும் இடத்தில் துராரதரைப் பற்றவோ –

கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி
கண்ட இன்பம், தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப,
கண்ட சதிர் கண்டொழிந்தேன்; அடைந்தேன் உன் திருவடியே.–4-9-10-பார்த்து வைத்த வாய்ப்பு -உங்கள் இவருடைய அனுபவமும் நித்தியமாய் செல்லும்படி நீ பார்த்து வைத்த வாய்ப்பைக் கண்டு -அதாவது அவ் விபூதியில் உள்ளார் சந்த அனுவர்த்திகளாம் படி பண்ணி வைத்த சதிர் -அத்தைக் கண்டு
; அடைந்தேன் உன் திருவடியே.–-உன் திருவடிகளை அடையவும் பெற்றேன் 

2-பேர் அமர் பின்னின்று கழிய மிக்கு யானே என்ன வாய்ந்து ஆற்றகில்லாது நீராய் மெலிய ஊடு புக்கு வளர பேர் அமர் காதல் 5-3-4–என்று அபரி சேதமாய் பொருந்தி – பின்நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதிடும் -5-4-6–என்று பிடரி பிடித்து நின்று நெஞ்சை முடிக்கும்படியாய் – கழிய மிக்கதோர் காதல் -5-5-10–என்று பார்ஸ்வச்தர்க்கு பேசும்படி மிகவும் கை கழிந்து –

(பேரமர்‌ இத்யாதி, ஊடு புக்கு வளர) “பேரமர்‌ காதல்‌” (திருவாய்மொழி 5-3-4) “பின்னின்ற காதல்‌” (திருவாய்மொழி 5-4-6) என்று அபரிச்சேத்‌யமாய்ப்‌ பொருந்திப்‌ பிடரி பிடித்துக் கொண்டு நின்று நெஞ்சை முடிப்பதாய்க்‌ “கழிய மிக்கதோர்‌ காதலளிவள்‌” (திருவாய்மொழி 5-5-10) என்று பார்ஸ்வஸ்த்தரும்‌ பேசும்படி மிகவும்‌ கை கழிந்து

ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னை சொல் நீர்படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ! கடியனே?–5-3-4–ஊரார் பழியும் -தாயார் ஹித வசனமும் -கேளாத படியான காதல் -அமர்ந்த காதல் -தர்ம அனுபந்தியான காதல் -பெரிதான அமரை விளைத்த காதல் -ஊராரை பூசல் ஆக்கின காதல் என்னவுமாம் –ஈரம் -சங்கம் -காதல் -காமம் –சங்காத் சஞ்சாயதே காம
கடல் புரைய விளைவித்த-அப்ரமேயோ மஹா த-என்ற கடல் ஒப்பாம் அத்தனை -கிடையா விடினும் விட மாட்டாத காதல் என்கை-கடல் புரைய என்றார் முதல் -அநந்தரம் கடலின் மிகப் பெரிதால் என்றார் –பின்னை மண்டிணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -என்றார் -முடிவில் அதனில் பெரிய என் அவா -என்றார் -இது இறே காதல் பெருகின படி -இது இறே பொய் நின்ற ஞானத்திற்கு பின்பு இவ்வளவும் வர விளைத்துக் கொண்ட கார்யம் –

பின் நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால்
முன் நின்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால்
மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்
இந்நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இவ்விடத்தே?–5-4-6—புக்க இடம் புக்கு -பின்னாட்டிக் கொண்டு திரிகிற பிரேம வியாதியானது -இதுக்கு இடைந்தால் வேறு நிழல் இல்லையாய் இரா நின்றது –

கழிய மிக்கதோர் காதலள் இவள் என்று அன்னை காணக்கொடாள்
வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
குழுமித் தேவர் குழாங்கள் கைத்தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே
எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே.–5-5-10—அலைவு அற விஞ்சின காதல் என்னுதல் -நாள் கழிய கழிய விஞ்சின காதல் என்னுதல் –சோகச்சகில காலேந கச்ச தாஹ்யபக்கச்சதி -மம்ஸாபச்யதிச் காந்தா மஹான் யஹனி வர்த்ததே –-தாயார் நம்பியை நினைக்கவும் விட்டுக் கொடாள்-ஒரு விஷயத்தில் பிரவணையாக காண வல்லனே என்று இருந்தவள் -நெஞ்சையும் காவலிடா நின்றாள் -கிருஷி பண்ணினவள் தானே நிஷேதிக்கிறது -தர்மி லோபம் வரும் அளவாகையாலே

கடல் ஞாலம் செய்தேனும் யானே -5-6-1–என்று தொடங்கி –-வாய்ந்த வழுதி வள நாடன் -என்று அவனுடைய ஜகத் காரண த்வாத் அத்புத கர்மங்களை நானே செய்தேன் என்று அநுகார முகத்தாலே விஷயத்தை கிட்டி பேசும் படியாய் – உன்னை விட்டு ஒன்றும் மாற்ற கிற்கின்றிலேன் -என்று அவனை ஒழிய ஒரு ஷணமும் தரித்து இருக்க மாட்டாது படியாய் –-ஆரா அமுதே அடியேன் உடலம் நின் பால் அன்பாயே நீராய் -என்று விஷய போக்யத அதிசயத்தால் வந்த பிராவன்யத்தாலே ஞான ஆச்ரயமான ஆத்மா ஆதல் – ஞான பிரசரண த்வாரமான மனசாதல் அன்றிக்கே -ஆத்மாவுக்கு ஆயதனமான சரீரமும் சிதிலலாம் படியாய் –-வைகலும் வினையேன் மெலிய -என்று அந்த சைலிந்த்யம் தான் காதாசித்கம் அன்றிக்கே -சர்வகாலமும் மெலியும் படியாக –-நிறந்தனூடு புக்கு என தாவியை நின்று நின்று உருக்கி உண் கின்ற -என்று பகவத் குணங்கள் மர்மத்தில் புகுந்து ஆத்மாவை இடைவிடாமல் த்ரவ்ய த்ரவ்யமாக்கும் படி அவிவிருத்தமாக-

(யானே யென்ன வாய்ந்து) “கடல்‌ ஞாலம்‌ செய்தேனும்‌ யானே” (திருவாய்மொழி 5-6-1 என்றும்‌ “வாய்ந்த வழுதி வளநாடன்‌” (திருவாய்மொழி 5-6-1) என்றும்‌ “துஷ்ட காளிய” இத்யாதி. இப்படி இவனுடைய ஜகத் காரணத்வாதி, அத்‌புத கர்மங்களை நானே செய்தேன்‌ என்று அநுகார முகத்தாலே அவனை பாவித்துப்‌ பேசும்படி திட்டி (ஆற்றகில்லாது) “உன்னை விட்டொன்றும்‌ ஆற்றகிற்கின்றிலேன்‌” (திருவாய்மொழி 5-7-1) என்று அவனை யொழிய ஒரு ப்ரகாரத்தாலும்‌ ஆற்ற மாட்டாத படியாய்‌, (நீராய்‌) “ஆராவமுதே அடியேனுடலம்‌ நீராய்‌” (திருவாய்மொழி 5-8-1) என்று போக்‌யதாதிஸயத்தாலே வந்த ப்ராவண்யத்தாலே அநுபவோபகரணமான ஸரீரம்‌ ஸிதிலமாம்படியாய்‌, (மெலிய) “வைகலும்‌ வினையேன்‌ மெலிய-(திருவாய்மொழி 5-9-1 அது தான்‌ ஒருநாளன்றிக்கே ஸர்வ காலமும்‌ மெலியும்படியாய்‌, (ஊடு புக்கு வளர) “நிறந்தனூடுபுக்கெனதாவியை உருக்கி (திருவாய்மொழி 5-10-1) என்று மர்மத்திலே புக்கு ஆத்மாவை த்‌ரவ த்‌ரவ்யமாக்கி முடிக்கும்படி அபிவிருத்‌தமாய்‌ –

கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும் கடல்ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல்ஞாலம் கொண்டேனும் யானே என்னும் கடல்ஞாலம் கீண்டேனும் யானே என்னும்
கடல்ஞாலம் உண்டேனும் யானே என்னும் கடல்ஞாலத் தீசன் வந்து ஏறக்கொலோ?
கடல்ஞாலத் தீர்க்கிவை என் சொல்லுகேன்? கடல்ஞாலத்து என்மகள் கற்கின்றவே.–5-6-1–கடலோடே கூடின ஜகத்தை சஹாயாந்தர நிரபேஷமாக ஸ்ருஷ்டித்தேன் என்னும் –அஹம் க்ருத்நஸ்ய ஜகத் பிரபவ -என்னா நின்றாள் –யானே என்கிற அவதாரணத்தாலே -த்ரிவித காரணமும் ஆகை –ததா தர்சித பந்த்தா நவ் ஸ்ருஷ்ட்டி சம்ஹார கார கௌ -என்கிற ப்ரஹ்ம ருத்ராதிகளும் கரண கோடியிலேயாம் –

கூந்தல்  மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி வளநாடன் மன்னு குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ்மாலை ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெருஞ் செல்வத்தராய்த் திருமால் அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே.–5-6-11-வாய்க்கை யாவது கிட்டுகை -அதாவது பாவனா ப்ரகர்ஷத்தாலே சாஷாத் கரிக்கை-மயர்வற மதிநலம் அருள பெறுகையாலே -அநுகாரம் அவர்களை போலே அவதாரத்து அளவிலேயாய் ப்ராதேசிகம் இன்றிக்கே-
ச விபூதிகனானவனை யநுகரிக்கையாய் விபூதி அத்தியாயத்தில் சொன்ன படியே ப்ராசுர்யேண அநுகரிக்கிறாள்-
பிரகாரியான அவ்வளவும் செல்ல தன்னை யநுசந்தித்த பாவனா பிரகரக்ஷத்தாலே
அஹம் மனுரபம் ஸூ ர்யச்ச-தத்பாவ மா பன்ன–மத் தஸ் சர்வம் அஹம் சர்வம் -என்கிறபடியே அவன் பாசுரமேயாய் இருக்கத் தட்டில்லை –

நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்று
ஆற்ற கிற்கின்றிலேன்
அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே.—5-7-1-சாதனா அனுஷ்டானத்தை பண்ணி பலம் தாழ்ந்தாரை போலே பதறா நின்றேன்-என் பக்கலில் முதல் உண்டான அன்று -அது தலைக் கட்டும் தனையும் ஆறி இருக்கலாம் -அது அன்றிக்கே நீயே உபாயமான பின்பு விளம்ப ஹேது யுண்டாய் ஆறி இருக்கிறேனோ -இனி உன் திருக் குணங்களில் அவகாஹித்த பின்பு ஒரு க்ஷணமும் ஆறி இருக்க ஷமன் ஆகிறிலன் -உன் பக்கல் உபாய பாவம் அசித்தமாய் ஆறி இருக்கிறேனோ -என் பக்கல் ஆகிஞ்சன்யம் அசித்தமாய் ஆறி இருக்கிறேனோ -என் சத்தைக்கு நான் ஹேது பூதனாம் அன்று உபாயத்திலும் எனக்கு அதிகாரம் உண்டு –ஸ்வ ரக்ஷணத்தில் பிராப்தி இல்லாத ஸ்வரூப ஞானமும் புருஷார்த்தத்தில் ருசியும் ஹிதாம்சத்திலே வேண்டுவது -ஆனபின்பு ஆறி இருக்க போமோ என்கை –

ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–5-8-1-கிடைத்தது இல்லை என்று ஆறி இருக்கலாம் படியோ உன் வடிவு அழகு -இத்திரு வாய் மொழியில் இவருடைய விடாய்க்கு எல்லாம் நிதானம் இது -அனுபவியா நின்றாலும் பர்யாப்தி பிறவாத படி நிரதிசய போக்யமான விஷயத்தை இழந்து இருக்கவோ -நாள் செல்ல நாள் செல்ல விடாயைப் பிறப்பிக்கும் விஷயம் என்கை –அப்பொழுதைக்கு அப் பொழுது என் ஆரா வமுதமே -தானே தன்னை அனுபவிக்கப் பார்த்தாலும் துணை கொண்டு இழிய வேண்டி இறே இருப்பது –ஸஹ பத்நயா விசாலாஷ்யா-சர்வாதிகாரமாய் சதா ஸேவ்யமாய் பந்த நிவர்த்தகமாய் இறே இவ்வம்ருதம் இருப்பது -லோக சாரங்க மஹா முனிகளை இத்தேசத்திலே அழைப்பித்த சொல் இறே-அடியேன் என்கிறது யஸ்யாஸ்மி என்ற வசனத்தால் அன்று -போக்யதைக்கு தோற்று சொல்லுகிறார்அடியேன் உடலம் -ஞான குணகமான ஆத்மவஸ்து அழியும் அளவன்றிக்கே அசேதனமான சரீரத்து அளவும் செல்லக் கரைகை –ஆத்மவஸ்து உத்தேசியத்தில் ஈடுபட்டு அழியாமைக்கு கட்டின கரை யாயிற்று சரீரம் அதுவும் அழிந்தது என்கை

மானேய் நோக்கு நல்லீர்! வைகலும் வினையேன் மெலிய
வானார் வண் கமுகும் மது மல்லிகை கமழும்
தேனார் சோலைகள் சூழ் திரு வல்லவாழ் உறையும்
கோனாரை அடியேன் அடி கூடுவது என்று கொலோ?–5-9-1—தன்னை விஸ்லேஷிக்கும் படி மஹா பாபத்தை பண்ணின நான் நாள் தோறும் வியஸன பரம்பரையாலே அவசன்னையாய்-ஒரு நாள் மெலிய பொறுக்க மாட்டாத ம்ருது ப்ரக்ருதியானவள் கிடீர் நெடு நாள் நோவு படுகிறாள் –இமா மஸீதா கே சாந்தம் சதபத்ர நிபேஷனாம்-ஸூ கார்ஹாம் -தூக்கிதாம் -த்ருஷ்ட்வா மமாபி வ்யதி தம்மன -என்று ஒரு ராத்திரியில் வியஸனம் திருவடி பொறுக்க மாட்டிற்று இலன் இறே-வி லக்ஷண விஷயத்தை பிரிந்தால்-ஜீவிக்கவும் ஒண்ணாது முடியவும் ஒண்ணாது

பிறந்த வாறும் வளர்ந்த வாறும் பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத்
திறங்கள் காட்டி யிட்டுச் செய்து போன மாயங்களும்
நிறந்த னூடு புக்கென தாவியை நின்று நின்று ருக்கி உண்கின்ற இச்
சிறந்த வான் சுடரே! உனை என்று கொல் சேர்வதுவே?–5-10-1—தோல் புரையே போகாதே மர்மத்திலே புக்கு –துர்யோதனாதிகள் நசித்துப் போனார்கள் -பாண்டவர்கள் ராஜ்ஜியம் பெற்றுப் போனார்கள் -இவரை அந்த குண சேஷ்டிதங்கள் மர்மத்திலே நலியா நின்றது – விரஹத்தாலே அவசன்னமான என் ஆத்மாவை –எல்லாரும் மஹா பாரதத்தில் கேட்டு தயாரிக்கிறது இறே-இடை விடாதே நின்று நின்று
உருக்கி உண்கின்ற-சிதிலமாகி முடிகின்ற –முடியவும் மாட்டாதே ஜீவிக்கவும் ஒட்டாதே நலிந்த படி

3-விஷ வருஷ பலங்கள் கை கூடினவர்-இப்படி பகவத் ப்ரேமம் வளருகையாலும் -பாகவதர்களோடு கூடப் பெருகையாலும் –-சம்சார விஷ வ்ருஷச்ய த்வே பலே ஹ்யம்ருதோ பமே ,கதாசித் கேசவ பக்திஸ் தத் பக்தைர் வா சமாகம –என்று – சம்சாரமாகிற விஷ விருஷத்திலே -அம்ருதோபமா பலங்களாக சொல்லப் பட்ட பகவத் பக்தியும் – பாகவத சமாகமும் ஆகிய பல த்வயமும் கை வந்த இவர்-
அடிமை புக்காரையும் ஆட் செய்வாரையும் காண லோக த்வீ பாந்தரங்களிலும் நின்றும் போந்த தேவர் குழாங்களைக் கண்டு காப்பிட்டு – ஒன்றும் தேவிலே – மற்றை தெய்வம் நாடுதீர் –பாடி யாடி பரவிச் சென்மின்கள் –தெய்வம் மற்று இல்லை –நாயகன் அவனே –ஒன்றும் பொய் இல்லை போற்றுமினே –
அறிந்தோடுமின் –ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே –மற்றைத் தெய்வம் விளம்புதீர் –உளம் கொள் ஞானத்து வைம்மின் –
ஆட் செய்வதே -உறுவதாவது -என்று –

(விஷ வ்ருக்ஷ பலங்கள்‌ கை கூடினவர்‌) “ஸம்ஸார விஷ வ்ருக்ஸ்ய த்‌வே பலே ஹ்யம்ருதோபமே கதாசித்‌ கேஸவே பக்திஸ்‌ தத் பக்தைர்வா ஸமாகம:’ என்கிறபடியே ஸம்ஸார விஷ வ்ருக்ஷ பலம்‌ இப்படிப்பட்ட பகவத்‌ பக்தியும்‌ பாகவத ஸமாகமமான இவை இரண்டும்‌ கை புகுந்த விவர்‌. (அடிமை புக்காரையும்‌ ஆட்செய்வாரையுங்‌ காண லோக த்‌வீபாந்தரங்களில்‌ நின்றும்‌ போந்த தேவர்‌ குழாங்களைக்‌ கண்டு காப்பிட்டு) ஒன்றுந் தேவிலே ‘ பாடியாடிப்‌ பரவிச் செல்மின்கள்‌” (திருவாய்மொழி 410-9) “தெய்வம்‌ மற்றில்லை” (திருவாய்மொழி 4-10-3) “நாயகனவனே” (திருவாய்மொழி 4-10-4) “ஒன்றும்‌ பொய்யில்லை போற்றுமினே” (திருவாய்மொழி 4-10-5) ” அறிந்தோடுமினோ” (திருவாய்மொழி 4-10-6) “ஆடு புட்கொடி ஆதிமூர்த்திக் கடிமை புகுவதுவே” (திருவாய்மொழி 4-10-7) “உளங்கொள்‌ ஞானத்து வைம்மின்‌” (திருவாய்மொழி 4-10-9)”ஆட்செய்வதே உறுவதாவது” (திருவாய்மொழி 4-10-10) என்று

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர்படைத்தான்
குன்றம் போல் மணிமாடம் நீடு திருக் குருகூரதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–4-10-1-லோகம் அடங்க கும்பிடுவாரும் கும்பீடு கொள்வாருமாய் ஆழி மூழையாய் செல்லா நிற்க -இவர் ஒருத்தரையும் காண் கிறிலர் யாயிற்று
அப்ரஹ்மாத்மகமாய் இருபத்தொரு வஸ்து இல்லாமையால்

நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்,
மாட மாளிகை சூழ்ந்தழகாய திருக் குருகூரதனைப்
பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே.–4-10-2—நின்ற ஆதிப்பிரான் என்றது மிகையாய் இருக்கை-விஷ்ணோ ராயத நேவ சேத்-தேசோயம் சர்வ காம துக் –ப்ரீதி பிரேரித்தராய்ப் பாடி -அவ்வளவில் பர்யாப்தி பிறவாமையாலே அக்ரமாகப் புகழ்ந்து -இதுவே யாத்திரையாக வர்த்தியுங்கோள்-இத்தேசம் என்றால் எல்லார்க்கும் தன் திரு உள்ளம் போலே என்று இருக்கிறார்

பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக்
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர் அதனுள்
பரன் திறமன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே.–4-10-3—ஸ்வதந்திரமாய் இருபத்தொரு தெய்வம் இல்லை -தேவதைகளுடைய ஸ்வரூப நிஷேதம் பண்ணுகிறார் அல்லர் -ஈஸ்வர விபூதி யாகையாலே ஸ்வாதந்தர்ய நிஷேதம் பண்ணுகிறார்-அவனுக்கு பிரகாரம் என்று ஆச்ரயிக்கில் அவனுடைய ஆசிரயணீயத்திலே புகும்-ஸ்வதந்த்ர புத்தி பண்ணில் ஸ்வதந்திரமாய் இருப்பது ஓன்று இல்லை –தேஹ நா நாஸ்தி -யேய ஜந்தி

பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின்
தேச மாமதிள் சூழ்ந்து அழகாய திருக்குருகூர் அதனுள்
ஈசன் பால் ஓர் அவம் பறைதல் என்னாவது இலிங்கியர்க்கே?–4-10-4-அவன் என்று ஸ்ருதி பிரசித்தி -அநந்ய பரமான நாராயண அனுவாக ப்ரஸித்தியையும் –யா பரஸ்ஸ மஹேஸ்வர -என்கிற அகாரார்த்த பிரசித்தியையும் நினைக்கிறார் –-ஜகத்தாகிற காரியத்துக்கு அநுரூபமான கர்த்ருத்வத்தை கற்பிக்கிலும் இவனே நிர்வாஹகானாக வேணும் என்னவுமாம்

இலிங்கத் திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்று நும் தெய்வமுமாகி நின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக் குருகூர் அதனுள்
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே.–4-10-5-இத்தேவதைகள் பக்கல் உதகர்ஷம் எல்லாம் பொய்யாய் இருக்குமா போலே -இவ்விஷயத்தில் சொல்லுகிற உதகர்ஷத்துக்கு ஒன்றும் பொய்யில்லை-போற்றுமினே -சடக்கென ஆஸ்ரயிங்கோள் -நீங்கள் அபேக்ஷியாது இருக்க நான் சொல்லுகிறது உங்கள் துர்தசையைப் பற்ற –

போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு, உம்மை இன்னே
தேற்றி வைத்தது, எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே;
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர் அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்தறிந்து ஓடுமினே.–4-10-6-அத்தை அறிந்து மாயா தரண உபாயமான ப்ரபத்தியைப் பண்ணி சம்சாரத்தை தப்ப பாருங்கோள்-மாமேவயே பிரபத்யந்தே -என்கிறபடியே அவனையே கால் கட்டி அவனை வெல்லப் பாருங்கோள் -என்கிறார் –

ஓடி ஓடிப் பல பிறப்பும் பிறந்து, மற்றோர் தெய்வம்
பாடி ஆடிப் பணிந்து பல்படி கால் வழி ஏறிக் கண்டீர்;
கூடி வானவர் ஏத்த நின்ற திருக் குருகூரதனுள்
ஆடு புட்கொடி ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே.–4-10-7-சேஷத்வ அனுசந்தானத்தால் வந்த ஹர்ஷ ப்ரகரஷத்தாலே ஆடா நின்ற பெரிய திருவடியை ரக்ஷகத்வ க்யாபன த்வஜமாக யுடையவன் – ஆஸ்ரித ரக்ஷணத்துக்கு கொடி கட்டி ரக்ஷிக்குமவன் என்கை -கருட வாஹனத்வம் பரத்வ லக்ஷணம் இறே –
காரணந்து த்யேய என்கிறபடியே ஜகத் காரண வஸ்து இ றே உபாஸ்யம் ஆவது-அவனுக்கு அடிமை புகப் பாருங்கோள் -செய்ய வேண்டுவது ஓன்று இல்லை -பாடியாடிப் பணிந்து என்கிறது எல்லாம் வேண்டா
சர்வ ரக்ஷகனாய் -சர்வ ஜனகனாய் சர்வாந்தராமியான அவன் உடைமையை அவனுக்காக இசையை அமையும் – பல்படிகால் வழி ஏறி கண்டீர் அடிமை புகுவதுவே -என்று விதிக்கிறார் –

புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை
நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே;
கொக்கு அலர்தடம் தாழை வேலித் திருக்குருகூர் அதனுள்
மிக்க ஆதிப்பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் விளம்புதிரே!–4-10-8—சர்வாதிகனாய் -ஜகத் காரண பூதனானவன் திரு நகரியிலே ஸூ லபனாய் நிற்க-மிக்க– ஆஸ்ரயண காலத்தில் ஆஸ்ரயிப்பித்துக் கொண்டு பல வேளையில் வேறு ஒருவன் வாசலிலே கொடு போக வேண்டும் படி குறைவாளன் இன்றிக்கே இருக்கை –-மற்றைத் தெய்வம் -நாரங்களிலே ஒன்றை ஈஸ்வரன் என்று பற்றவோ -பிரகாரமாய் கொண்டு அல்லது வஸ்துத்வம் இல்லாதவற்றை பிரகாரியாக பிரமிக்கிறி கோள் இறே
விளம்புதிரே!–இவனை ஒழிய வ்யவஹார யோக்யமாய் இருப்பது ஓன்று இல்லை என்று இருக்கிறீர் –

விளம்பும் ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும்
வளங் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை
உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக்கொண்டு போகுறிலே.–4-10-9—உளம் கொள் ஞானம் -மானஸ ஞானம் -ஞானம் உதித்து பாஹ்ய இந்த்ரியங்களாலே பாஹ்ய விஷயங்களை க்ரஹிப்பதற்கு முன்பே மானஸ ஞானத்துக்கு இவ் ஊரை விஷயம் ஆக்குங்கோள்

உறுவது ஆவது எத்தேவும் எவ் வுலகங்களும் மற்றும் தன்பால்
மறுவின் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக் குருகூரதனுள்
குறிய மாண் உருவாகிய நீள்குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே.–4-10-10-குறிய-ஆஸ்ரிதற்கு கண்ணாலே முகந்து அனுபவிக்கலாம் படி தன்னை தாழ விட்ட படி – உண்டு என்று இட்ட போதொடு இல்லை என்ற போதொடு வாசி இன்றிக்கே முகம் மலர்ந்து போம் படி இரப்பிலே தகணேறினபடி-குடகு கூத்தாடுகிற போது கண்டாரோபாதி பிற்பாடராய் கேட்டார் வாய் கேட்டார்க்கும் சம காலம் போலே பிரியமாம் படி மநோ ஹரியான சேஷ்டிதத்தை யுடையவனுக்கு – அந்த சேஷ்டிதங்களே அடிமை கொள்ளும் -நீங்கள் இசையும் அத்தனையே வேண்டுவது ஆள் செய்வதே உறுவது ஆவது 

தேவதாந்தராவரத்வ பூர்வகமாக பகவத் பரத்வத்தையும் – பகவத் ஆஸ்ரயண பிரகாரத்தையும்
பகவத் கைங்கர்யமே புருஷார்த்தம் என்னும் அத்தையும் தெளிய உபதேசிக்கக் கேட்டு திருந்தி அடிமை புக்க ஸ்ரீ வைஷ்ணவர்களையும் – ஆள் செய்து ஆழிப் பிரானை சேர்ந்தவன் -என்று இப்படி திருத்துகையாலே அடிமை செய்தாரான தம்மையும் -காண்கைக்கு – வைகுந்தன் பூதங்களேயாய் –
தடம் கடல் பள்ளிப் பெருமான் தன்னுடை பூதங்களேயாய் – தேவர்கள் தாமும் புகுந்து
-என்னும்படி –
லோகாந்தரமான ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ளாரையும் – த்வீயாந்தரமான ச்வேதத் தீபத்தில் உள்ளாரையும் – நேமிப் பிரான் தமர் போந்தார் -என்கிறபடியே வந்த நித்ய சூரிகளும் –
முக்த பிராயருமான தேவர்களுடைய திரள்களை –

இப்படி உபதேஸிக்கக்‌ கேட்டுத்‌ திருந்தி அடிமை புக்க ஸ்ரீவைஷ்ணவர்களையும்‌ “ஆட்செய்தாழிப் பிரானைச்‌ சேர்ந்தவன்‌” (திருவாய்மொழி 4-10-11 என்று இப்படித்‌ திருத்துகையாலே அடிமை செய்தாரான தம்மையும்‌ காண்கைக்கு வந்த “வைகுந்தன்‌ பூதங்களேயாய்‌” (திருவாய்மொழி 5-2-5) “தடங்கடல்‌ பள்ளிப்‌ பெருமான் தன்னுடைப்‌ பூதங்களேயாய்‌” (திருவாய்மொழி 5-2-4) “தேவர்கள்‌ தாமும்‌ புகுந்து குழுமித்‌ தேவர்‌ குழாங்கள்‌” (திருவாய்மொழி 5-2-3 என்று லோகாந்தரமான ஸ்ரீவைகுண்ட,த்திலே நின்றும்‌ போந்தவர்களுமாய்‌ த்‌வீபாந்தரமான க்ஷீராப்‌தியில்‌ நின்றும்‌ போந்தவர்களுமான நித்ய ஸூரிகளான திரள்களை

ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே.–4-10-11-முறையால் சர்வேஸ்வரனைப் பற்றினவர் -அடிமை செய்வித்துத் கொள்கைக்கு யாயிற்று -கையும் திரு வாழி யும் சேர்ந்த சேர்த்தி அழகு -ஆழ்வானுடைய வ்ருத்தத்தைக் காட்டி இவரையும் வ்ருத்தவான் ஆக்கின படி-சேர்ந்தவன்-கையும் திரு வாழியும் பொருந்தினால் போலே யாயிற்று இவர் பொருந்தின படி -கெடு மரக்கலம் கரை சேர்த்ந்தால் போலே-இந்த நன்மைக்கு அடி -திரு நகரியில் பிறப்பு -ராம பக்திக்கு திரு அயோத்தியில் மண் பாடு போலே

செய்கின்ற தென் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்ற திவ்வுலகத்து
வைகுந்தன் பூதங்களே யாய் மாயத்தினால் எங்கும் மன்னி
ஐயம் ஒன்றில்லை அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்
உய்யும் வகை இல்லை தொண்டீர் ஊழி பெயர்த்திடும் கொன்றே.–5-2-5—மாக வைகுந்தம் காண்பதற்கு -என்றும் கண்ணன் விண்ணூர் தொழவே சரிகின்றது சங்கம் -என்று ஆசைப்படும் ஸ்ரீ வைஷ்ணவர்களாய்

இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
தடங்கடற் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களே யாய்க்
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பலபல பாடி
நடந்தும் பறந்தும் குனிந்தும் நாடகம் செய்கின்றனவே.–5-2-4-ஆஸ்ரித அனுக்ரஹ அர்த்தமாக திருப் பாற் கடலிலே வந்து கண் வளர்ந்து அருளினை மஹா குணத்துக்கே அற்ற ஸ்ரீ வைஷ்ணவர்களே யாய் –பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும் காலாழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -என்று இருக்குமவர்கள் –

திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருகக்
கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே.–5-2-3–தேவர்கள் என்கிறது -ஆக்கரான இந்த்ராதிகளை யன்று -இவர்களுடைய லோகத்தை கண்டால் சங்கை பண்ணும் நித்ய ஸூ ரிகளும் புகுந்தார்கள்-வா ஸூ தேவ மநோ யஸ்ய தஸ்யாந்தராயோ மைத்ரேய தேவேந்த்ராத் த்வாதிகம் பலம் –என்னக் கடவது இறே

கண்டோம் கண்டோம் -என்று கண்ணுக்கு இனியதாய் இருக்கையாலே -கண்டோம் -என்று பல காலும் சொல்லும் படி கண்டு – பொலிக பொலிக -என்று அத் திரள் அபி விருத்தம் ஆயிடுக என்று மங்களா சாசனம் பண்ணி – பிரகலாதர் விபீஷணர் சொல் கேளாத அரக்கர் அசுரர் போல்வாரை தடவி பிடித்து
த்வயி அஸ்தி மயி அஸ்தி ச –என்று பிரகலாதன் உபதேசிக்க கேட்டும் திருந்தாத அசுரனான ஹிரண்யனும் –-ப்ரதீயதாம் தாசரதாய மைதலீ –யுத்த -14-34- -என்று ஸ்ரீ விபீஷண ஆழ்வான் உபதேசிக்க கேட்டும் திருந்தாத ராஷசனான ராவணனை போலேயும் – கீழ் தாம் உபதேசத்தில் திருந்தாமல் கிடந்த ராஷச பிரக்ருதிகளும் ஆசூர பிரக்ருதிக்களுமாய் உள்ளோரை – அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்-என்று தேடிப் பிடித்து-(விஷ்ணு பரராக்கி -என்றதனுடன் முடிக்க )

கண்டோம்‌ கண்டோம்‌ கண்டோம்‌” (திருவாய்மொழி 5-2-2) என்று கண்ணுக்கினியதா யிருக்கையாலே கண்டோம்‌ என்று பல காலும்‌ சொல்லும்படி கண்டு பொலிக பொலிக பொலிக” (திருவாய்மொழி 5-2-1 என்று அத் திரள்‌ அபிவிருத்‌த மாயிடுக என்று மங்களாஸாஸநம்‌ பண்ணின விவர்‌-(ப்ரஹ்லாத விபீஷணர்‌ சொல் கேளாத அரக்கரசுரர்‌ போல்வாரைத்‌ தடவிப்‌ பிடித்து) “அரக்கரசுரர்‌ பிறந்தீர்‌ உள்ளீரேல்‌” (திருவாய்மொழி 5-2-5) என்று “த்வய்யஸ்‌தி மய்யஸ்தி” என்று ப்ரஹ்லாதாழ்வான்‌ உபதேஸிக்கக்‌ கேட்டுத்‌ திருந்தாத ஆஸூர ப்ரக்ருதியான ஹிரண்யன்‌ போல்வாரையும்‌, “ப்ரதீயதாம்‌ தாஸரதாய மைதிலீ ” (ராயு. 14-34) என்று ஸ்ரீவிபீஷணப்‌ பெருமாளுடைய உபதேஸம்‌ கேட்டுத்‌ திருந்தாத ராக்ஷஸ ப்ரக்ருதியான ராவணன்‌ போல்வாரையும்‌ தேடிப் பிடித்து.

கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே.–5-2-2—காணப் பெற்றோம் -ப்ரீதி ப்ரகாஷத்தாலே ஆவர்த்திக்கிறார்-கண்ணுக்கு இனியன கண்டோம்–-கண்ணிலும் உருப்பொலார்-கொடு உலகம் காட்டேல்-என்கிற சம்சாரத்திலே பாகவதர்களைக் கண்டு அனுபவிக்கப் பெற்றோம் –-ஆஹ்லாத சீத நேத்ராம்பு -புல கீக்ருத காத்ரவான் சதாபர குணா விஷ்டோ த்ரஷ்டவ்யஸ் சர்வ தேஹிபி

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.–5-2-1-சம்ருத்தம் யாயிற்று -முக்கால் அருளிச் செய்கிறது -வைதிகமான மங்களா சாசனமும் –சாந்தி சாந்தி சாந்தி –என்று முக்கால் சொல்லுகையாலே

செய்கின்ற தென் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்ற திவ்வுலகத்து
வைகுந்தன் பூதங்களே யாய் மாயத்தினால் எங்கும் மன்னி
ஐயம் ஒன்றில்லை அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்
உய்யும் வகை இல்லை தொண்டீர் ஊழி பெயர்த்திடும் கொன்றே.–5-2-5-அஸூர ராக்ஷஸரான நீங்கள் மனுஷ்ய வேஷத்தை கொண்டு பிறந்து கலந்து திரிகிறீர் உள்ளீர் ஆகில் -சுக சாரணர்களை போலே கடல் கரையில் ஒற்றுப் பார்க்க வந்தவர் குரங்கு வடிவைக் கொண்டு –

4-தேச கால தோஷம் போக எங்கும் இடம் கொண்ட வர்களை மேவித் தொழுது உஜ்ஜீவியுங்கோள்-
கொன்று உயிர் உண்ணும் விசாதி பகை பசி தீயன எல்லாம் நின்று இவ்வுலகில் கடிவான் நேமிப் பிரான் தமர் போந்தார்
-என்றும்-திரியும் கலி யுகம் நீங்கி தேவர்கள் தாமும் புகுந்து -என்கிறபடியே –
சரீரத்தை முடித்து -பிராண அபஹாரம் பண்ணக் கடவதான வியாதி — அப்படி செய்யும் பகை -பசி -முதலான தேச தோஷமும் – பவிஷ்யத் யதாரோத்தரம்-என்கிறபடியே பதார்த்த ஸ்வபாவங்கள் வேறு படியாயான கலி பிரயுக்தமான கால தோஷமும் – தங்கள் சஞ்சாரத்தாலே போம் படி –-இரியப் புகுந்து இசை பாடி எங்குமிடம் கொண்டன -என்கிறபடியே – பகவத் அனுபவ ஹர்ஷ பிரகர்ஷத்தாலே பெரிய ஆராவரத்தோடே -புகுந்து பிரதி கூலருக்கு இடம் இல்லாதபடி -சர்வ பிரதேசத்திலும் பரம்பினவர்களை –
மேவித் தொழுது உய்மினீர்கள் -என்று நீங்கள் அநந்ய பிரயோஜனராய் கொண்டு ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள் – அவ்வளவு போக மாட்டாதே தேவதாந்திர பிராவண்யத்தாலே பகவத் வைபவம் அறிக்கைக்கு ஈடான அளவிலி களாகில் நீங்கள் நிறுத்துகிறவர்களை தேவதைகளாக நிறுத்தினவனை
நிறுத்தி உம் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள்-என்று அவை தமக்கு ஸ்வத உத்கர்ஷம் இல்லாமையாலே -வசன ஆபாசங்களாலும் – யுக்தி ஆபசங்களாலும் -நீங்கள் சேமம் சாத்தி நிறுத்தி -புறம் பேசில் -அவர் அறியில் அபஹசிப்பார்கள் என்று -உங்கள் நெஞ்சுக்குள்ளே நீங்கள் அறிந்ததாக உபாசிக்கும் -தேவதைகளை--நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே -என்று
ராஜா வானவன் ஊர் தோறும் கூறு செய்வார்களை நிறுத்துமா போலே – உங்களுக்கு ஆஸ்ரயனீராக நிறுத்திய சர்வேஸ்வரனை

(தேஸ கால தோஷம்‌ போக எங்குமிடங்‌ கொண்டவர்களை மேவித்‌ தொழுது உஜ்ஜீவியுங்கோள்‌) “கொன்றுயிருண்ணும்‌ விசாதி பகை பசி தீயன வெல்லாம்‌ நின்றிவ் வுலகில்‌ கடிவான்‌ நேமிப் பிரான்‌ தமர்‌ போந்தார்‌ (திருவாய்மொழி 5-2-6) என்றும்‌ “திரியும்‌ கலியுகம்‌ நீங்கித்‌ தேவர்கள்‌ தாமும்‌ புகுந்து” (திருவாய்மொழி 5-2-3) என்றும்‌ சொல்லுகிறபடியே ஸரீரத்தை முடித்து ப்ராணாபஹாரம்‌ பண்ணக் கடவதான வ்யாதி பகை பசி முதலான தேஹ தோஷமும்‌ “பவிஷ்யத்யத ரோத்தரம்‌” என்கிறபடியே பதார்த்த ஸ்வபாவங்கள் வேறுபட்டு வரக்‌ கடவதான கலி ப்ரயுக்தமான கால தோஷமும்‌ தங்கள்‌ ஸஞ்சாரத்தாலே போம்படி “திரியப்‌ புகுந்திசை பாடி எங்குமிடங்‌ கொண்டனவே” (திருவாய்மொழி 5-2-3) என்கிறபடியே பகவதநுபவ ப்ரீதி ப்ரகர்ஷத்தாலே பெரிய ஆராவாரத்தை யுடைத்தாம்படி விபரீதர்க்கு இடமில்லாதபடி விஸ்ம்ருதராய்க்‌ கொண்டு “மறுத் திருமார்வனவன்தன்‌ பூதங்கள்‌ கீதங்கள்பாடி வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார்‌ மேவித்‌ தொழுதுய்ம்மினீரே’ (திருவாய்மொழி 5-2-8) என்று ஸ்ரீய:பதியாய்‌ ஸ்ரீவத்ஸ வக்ஷஸ்தனான ஸர்வேஸ்வரனுடைய குணங்களைத்‌ தங்களுக்கு ஸத்தா தாரகமாக உடையரான ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ இந்த விபூதி ஸ்வபாவத்தாலே வந்த வெறுப்பற்று எங்கும்‌ விஸ்த்ருதரானார்கள்‌. அவர்களை அநந்ய ப்ரயோஜநராய்க்‌ கொண்டு கட்டி நீங்கள்‌ உஜ்ஜீவியுங்கோள்‌; அவ்வளவு போகமாட்டாதே தேவதாந்தர ப்ராவண்யத்தாலே பகவத்‌ வைபவமறிகைக்‌கீடான அளவிலிகளாகில்‌ (நீங்கள்‌ நிறுத்துகிறவர்களை தேவதைகளாக நிறுத்தினவன்‌) “நிறுத்தி நும்முள்ளத்துக்‌ கொள்ளும்‌ தெய்வங்கள்‌” (திருவாய்மொழி 5-2-7) என்றும்‌ அஸதஸ்ய மாகையாலே பிறரறியாதபடி ராஜஸ தாமஸ யுக்தமான உங்கள்‌ நெஞ்சாலே அவற்றுக்கு ஸ்வத:உத்கர்ஷ மில்லாமையாலே நீங்கள்‌ சேமம்‌ சாத்தி நிறுத்தி த்‌யாநம்‌ பண்ணுகிற தேவதைகளை “நிறுத்தினான்‌ தெய்வங்களாக அத்‌ தெய்வ நாயகன்‌ தானே” (திருவாய்மொழி 5-2-8) என்று ராஜாவானவன்‌ ஊர் தோறும்‌ விடைச்‌ சேவகரை நிறுத்துமா போலே உங்களுக் காஸ்ரயணீயராக நிறுத்தினான்‌ அந்த ஸர்வேஸ்வரன் தானே; 

கொன்று உயிர் உண்ணும் விசாதி பகைபசி தீயன எல்லாம்
நின்று இவ் வுலகில் கடிவான் நேமிப்பிரான் தமர் போந்தார்

நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும் ஞாலம் பரந்தார்
சென்று தொழுதுய்ம்மின் தொண்டீர்! சிந்தையைச் செந்நிறுத்தியே.–5-2-6-கையும் திரு வாழி யுமான அழகிலே ஈடுபட்டு இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –-கடிவான் போந்தார் ஆனவர்கள் –அதுக்காக லோகத்தில் பூமியிலே பரந்தார்கள்–யத்ர அஷ்டாக்ஷர சமசித்தோ மஹா பாகோ மஹீயதே –இத்யாதி–சென்று அவர்களைத் தொழுது உஜ்ஜீவியுங்கோள் என்று பணிக்கும் திருமாலை ஆண்டான் –
அவர்களோடே சென்று சர்வேஸ்வரனைத் தொழுது உஜ்ஜீவியுங்கோள் என்று அருளிச் செய்வார் எம்பெருமானார் –

திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருகக்
கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே.–5-2-3—பவிஷ்யத் யத்ரோத்தரம் என்கிறபடியே -பதார்த்தங்களினுடைய ஸ்வ பாவம் மாராடி இருக்கும் கலி ஸ்வ பாவம் போய் -ஷூ த்ர தேவதைகள் பரராகவும் பர தேவதை அபரனாகவும் கடவதாய் இறே இக்காலம் இருப்பது –-தேவர்கள் தாமும் புகுந்து-
தேவர்கள் என்கிறது -ஆக்கரான இந்த்ராதிகளை யன்று -இவர்களுடைய லோகத்தை கண்டால் சங்கை பண்ணும் நித்ய ஸூரிகளும் புகுந்தார்கள்-வாஸூ தேவ மநோ யஸ்ய தஸ்யாந்தராயோ மைத்ரேய தேவேந்த்ராத் த்வாதிகம் பலம் –என்ன கடவது இறே-மண் மேல்-இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே.–-பரம பதத்தில் போலே பூமி எல்லாம் ஆரவாரப் படும்படி புகுந்து பகவத் அனுபவ ஜெனித ப்ரீதியாலே பாடி -எங்கும் தங்களுக்கு ஸ்தானமாகக் கொண்டார்கள் -பாஹ்ய குத்ருஷ்டிகளுக்கு இடம் இல்லாத படி சிஷ்யர்களும் ப்ரசிஷ்யர்களுமாய் வ்யாபித்தார்கள் –பிராகாரம் வாநரீக்ருதம்-என்கிறபடியே பிரதி கூலர்க்கு இடம் இல்லை யாயிற்று –

நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்
மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்பதெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே.–5-2-7-உங்கள் நெஞ்சிலே நீங்கள் நிறுத்திக் கொள்ளுகிற தேவதைகள் –த்யேய வஸ்துக்களை நிறுத்துகையும் த்யாதாவுக்கே பரம் என்கை –அங்குஷ்ட மாத்ர புருஷோமத்ய ஆத்மனி திஷ்ட்ட்தி-என்கிறவன் அவசர ப்ரதீஷனாய் நிற்கிறது அன்றே -யுக்த்யா ஆபாசங்களாலும் வசன ஆபாசங்களாலும் பொரி புறம் தடவி நிறுத்துகை –

இறுக்கும் இறை இறுத்து உண்ண எவ்வுலகுக்குந் தன்மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே
மறுத் திரு மார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுது உய்ம்மினீரே
.–5-2-8-பின்ன ருசிகளான -அதிகாரிகளை யுடைத்தான சர்வ லோகங்களுக்கும் -தன் சரீர பூதரான தேவதைகளை சமாராத்யராக நிறுத்தினான் –ஈஸ்வரோஹம் என்று இருப்பார் தலை வணங்குகைக்காக நிறுத்தினான் – அத் தெய்வ நாயகன் தானே--ஆஸ்ரயிப்பார்களோடு ஆஸ்ரயணீயரோடு வாசி அற எல்லார்க்கும் நிர்வாஹகன் அவன் தானே -சேதனருடைய குண அனுரூபமாக ஆராத்யராகவும் அபிமத பலப்ரதராம் படியும் பண்ணினான் –-மறுத் திரு மார்வன் –மறுவையும் திருவையும் மார்விலே உடையவன் என்னுதல்-ஸ்ரீ வத்ஸத்தை திரு மார்பிலே உடையவன் என்னுதல்-அவன் தன் பூதங்கள்- அசாதாரணமான விக்ரஹத்தின் அழகிலே தோற்று தங்கள் உளராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –கீதங்கள் பாடி-வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுது உய்ம்மினீரே.–பகவத் அனுபவ ஹர்ஷ த்தாலே பாடி -சம்சாரத்திலே இருந்தோம் என்ற வெறுப்பு இன்றிக்கே-பூமியிலே திரண்டார்கள் –-நீங்கள் அவர்களோடே கூட அநந்ய பிரயோஜனராய் தொழுது உஜ்ஜீவியுங்கோள் என்னுதல் -அவரை தொழுது உஜ்ஜீவியுங்கோள் என்னுதல்-

5-மேவிப் பரம்பும் அவரோடு ஒக்க தொழில் யுக தோஷம் இல்லையாம் என்று நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக தொக்க அமரர் குழாங்கள் –கண்ணன் திரு மூர்த்தியை மேவி — மிக்க உலகுகள் தோறும் எங்கும் பரந்தன ஒக்க தொழுகிற்று ஆகில் கலி யுகம் ஒன்றும் இல்லை-என்று
ருத்ரனோடு பிரம இந்திரன் முதலாக திரண்ட தேவதா சமூகங்கள் கிருஷ்ணனுடைய அசாதாரண விக்ரகத்தை ஸூபாஸ்ரயமாகப் பற்றி விஸ்த்ருதமான லோகங்கள் எங்கும் ஒக்கப் பரந்து விபூதி விஸ்தாரத்தை உடையவர் ஆனார்கள் .-அவர்களைப் போலே நீங்களும் அவனை ஆஸ்ரயிக்கப் பெறில் -விபரீத பிரவர்தகமான-கலி யுக தோஷம் உங்களுக்குத் தட்டாது என்று உபதேசித்து
விஷ்ணு பக்தி பரராக்கி-விஷ்ணு பக்தி பரோ தேவ -என்கிறபடியே – அரக்கர் அசுரர் -என்னும் அது போய்-தேவ சப்த வாச்யராம் படி பகவத் பக்தி பரராக திருத்தி கண்ணுக்கு இனியன காட்டலாம் படியானார் கண்ணிலே நோக்கிக் காணும்-பக்தி சித்தாஞ்சனத்தை இடுகிறார் ஐஞ்சாம் பத்தில்-அதாவது – திருந்தாதவரை திருத்தின அளவு அன்றிக்கே -முன்பே திருந்தி – கண்ணுக்கு இனியன கண்டோம் தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்னும்படி- பாகவத சமாஜ தர்சனம் இனிதாம் படி -அவ்விஷயத்தில் சாபலம் உடையராய் – உபாய அத்யாவச தசையிலே -நின்று -பிராப்ய தசையில் நிற்கிற தம்மை பொடியும் படி யானவர்களுடைய –உபாயத்வ அத்யாவச்ய அஞ்ஞானாதின் மேலே –
என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே
-என்றும் ,-மனசி விலச தாஷ்ணா பக்தி சித்தாஞ்சநேன -ஸ்ரீ குணரத்னகோசம் –12-– என்கிறபடியே சித்தாஞ்சனம் போலே கூடார்த்ததை பிரகாசிப்பதாய்- பிராப்ய வைலஷண்யத்தை விஷயீகரித்ததான பக்தியை உபதேச முகேன
உண்டாக்குகிறார் அஞ்சாம் பத்தில் என்கை-

அவனை (மேவிப்‌ பரம்புமவரோ டொக்கத்‌ தொழில்‌ யுக தோஷமில்லையா மென்று) “நக்கபிரானோ டயனு மிந்திரனும்‌ முதலாகத்‌ தொக்க வமரர்‌ குழாங்கள்‌ கண்ணன்‌ திரு மூர்த்தியை மேவி மிக்க உலகுகள்‌ தோறும்‌ எங்கும்‌ பரந்தன ஓக்கத்‌ தொழுக ஒற்றிராகில்‌ கலியுக மொன்றுமில்லை”  (திருவாய்மொழி 5-2-10) என்று ப்‌ரஹ்மேந்த்‌ர ருத்‌ராதிகளான தேவதா ஸமூஹங்கள்‌ ஸர்வ ஸுலபனான ஸர்வேஸ்வரனுடைய ஸூபாஸ்ரயமான விக்‌ரஹத்தை யாஸ்ரயித்துத்‌ தங்கள்‌ லோகங்களிலே விஸ்த்ருதரானார்கள்‌; அவர்களைப்‌ போலே நீங்களும்‌ அவனை யாஸ்ரயிக்கப்‌ பெறில்‌ விபரீத ப்ரவர்த்தகமான யுக தோஷம்‌ உங்களுக்குத்‌ தட்டாதென்று (விஷ்ணு பக்தி பரராக்கி) என்றிப்படி உபதேஸித்து “விஷ்ணு பத்தி பரோ தேவ: விபரீதஸ் ததா ஸர; என்று பகவத்‌ ப க்தி யுக்தராம்படி திருத்தி, (கண்ணுக்கினியன காட்டலாம்படி யானார்‌ கண்ணிலே நோக்கிக்‌ காணும்‌ பக்தி ஸித்‌தாஞ்ஜனத்தை இடுகிறார்‌ அஞ்சாம்‌ பத்தில்‌) “கண்ணுக்கினியன கண்டோம்‌ தொண்டீர்‌ எல்லீரும்‌ வாரீர்‌” (திருவாய்மொழி 5-2-2) என்று பாகவத ஸமாஜ தர்ஸனம்‌ இனிதாம்படி அவ் விஷயத்தில்‌ சாபலமுடையார்க்கு “என்‌ நெஞ்சினால்‌ நோக்கிக்‌ காணீர்‌ என்னை முனியாதே” (திருவாய்மொழி 5-5-2) என்று உபாய தஸையிலே நின்று ப்ராப்ய தஸையிலே நிற்கிற தம்மைப்‌ பொடியும்படியான அவர்களுடைய உபாயாத்‌யவஸாய ஜ்ஞாநத்தின் மேலே “மநஸி விலஸ தாக்ஷ்ணா பக்தி ஸித்‌தாஞ்ஜநேந” ஸ்ரீகுண ரத்ந கோசம்‌ 12) என்கிறபடியே ப்ராப்ய வைலக்ஷண்யத்தை விஷயீகரித்த பக்தியை உபதேஸிக்கிறார்‌ என்கிறார்‌ அஞ்சாம்‌ பத்தில்

மிக்க உலகுகள் தோறும் மேவிக் கண்ணன் திருமூர்த்தி
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாகத்
தொக்க அமரர் குழாங்கள் எங்கும் பரந்தன தொண்டீர்!
ஒக்கத் தொழகிற்றிராகில் கலியுகம் ஒன்றும் இலையே
.–5-2-10-பிரான் என்று ஸ்வ கோஷ்ட்டீ பிரசித்தி தொக்க -திரண்ட – சம்ருத்தமான லோகங்கள் -மிக்க யுலகுகள் -ப்ரஹ்மா தொடக்கமாக திரண்ட தேவதா சமூகங்கள் சம்ருத்தமான லோகங்கள் தோறும் தங்களுடைய ஐஸ்வர்யத்தாலே விஸ்திருதர் ஆனார்கள் –தொண்டீர்!-ஒக்கத் தொழகிற்றிராகில் கலியுகம் ஒன்றும் இலையே.-தேவதாந்த்ர சேஷ பூதரான நீங்கள் நீங்களும் அவர்களை போலே ஆஸ்ரயிப்புதி கோள் ஆகில் கலியுக ப்ரயுக்தமான சகல தோஷங்களும் நீங்கும் – தொக்க அமரர் குழாங்கள்–மிக்க வுலகுகள் தோறும் -எங்கும் பரந்தன-

கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே.–5-2-2-பெரியோரை ஒரு காலும் பிரிகிலேனே -என்னும் பாகவத விஷயத்திலே சபலர் எல்லாரும் திரளுங்கோள் –

என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே
தென்னன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திருமறுவும்
மன்னு பூணும் நான்கு தோளும் வந்தெங்கும் நின்றிடுமே.–5-5-2-நாங்களும் நம்பியை அனுபவித்தே ஸ்த்ரீத்வம் கெடாமல் இருக்கிறி லோமோ -எங்களுடைய ஹித வசனம் கேளாதே மாரு மாற்றம் சொல்லுகை போராது காண் என்ன -ஏன் நெஞ்சு போலேஅதி பிரவணமான நெஞ்சை யுடையீராய் அனுபவித்து அறியுங்கோள்–என்னை பொடியாதே -என் நெஞ்சை யுடையீராய் காணப் பெறுமன்று-பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவரே-என்று உங்களை நீங்களே பொடிவுதி கோள்-என் நெஞ்சை இரவலாக வாங்கிக் காண மாட்டி கோளோ-என்னை பொடியாதே -மாயாம் ந சேவே

மநஸி விலஸதா அக்ஷ்ணா பக்தி ஸித்தாஞ்ஜநேந
ஸ்ருதி சிரஸி நிகூடம் லக்ஷ்மி தே வீக்ஷமாணா:
நிதி மிவ மஹிமாநம் புஞ்ஜதே யே அபி தந்யா:
நநு பகவதி தைவீம் ஸம்பதம் தே பிஜாதா:–12
–பகவானுடைய திருக் கல்யாண குணங்கள் அனைத்தையும் கொண்டவளே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகியே!-உனது பெருமையைப் பற்றி வேதாந்தங்களில் நேரடியாக எதுவும் கூறப்படவில்லை என்று சிலர் கூறுவார்கள்.-ஆனால் உனது பெருமைகளை அவை மறைமுகமாகக் கூறுகின்றன. இதனைக் கண்டறிவது எப்படி? புதையலை அடைய ஸித்தாஞ்ஜநம் என்ற ஒரு வித கண் மை கொண்டு காண்பது போன்று , உனது பக்தி என்னும் கண் மை தடவினால் அந்த வேதாந்த ரகசியங்கள் எளிதாகப் புலப்படும். இதனைச் சிலர் இப்படியாகத் தங்கள் மனதால் எளிதாக அறிந்து விடுகின்றனர்.-அவர்கள் எம்பெருமானின் சம்பந்தம் பெற்றவர்கள் என்று கூறவும் வேண்டுமா? அப்படி இல்லை என்றால் அவர்களால் இவ்வாறு அறிய இயலாது அல்லவா?

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌-15 –குணாநுபவ பாதம் –(218 – 228)-24-தஸ ஸதக பகவத் குண அநுபவ விவரண அதிகரணம் –(219–228)-நாலாம் பகுதி-(222) ஸ்ரீ மணவாள மா முனிகள் –

August 1, 2026

1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 234 முடிய (48)

1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-234 (27)

15 –குணாநுபவ பாதம் –218 – 228 —மொத்தம் —11– ஸூரணைகள் –இரண்டு அதிகரணங்கள்–
23 –தஸ ஸதக கத பகவத் குண தஸக அநு குண அநுபவ உபதேச அதிகரணம் —-218—ஒரே ஸூரணை
24-தஸ ஸதக பகவத் குண அநுபவ விவரண அதிகரணம் –219–228—மொத்தம் –10–ஸூரணைகள்

கீழ் சொன்ன வியாப்தி ஆகாச வியாப்தி போல் அன்றிக்கே -நிறம் பெறும்படி – அந்த பிரவிஷ்டஸ் சாஸ்தா ஜனானாம் –ஆரணம் -3-20–என்றும் ,-ய ஆத்மா நமந்தரோ யமயதி–ப்ருஹதாரண்யம் -என்றும் –
சாஸ்தா விஷ்ணுர் அசேஷஸ்ய ஜகத –
ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-20– -என்றும் – சாஸ்தா சராசரஸ் யைக -இத்யாதிகளிலே சொல்லுகிறபடியே – ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துக்களின் -பிரவ்ருத்தி நிவ்ருதிகள்- ஸ்வாதீனமாம் படி -நியமித்து கொண்டு போருகையாலே –-சர்வ நியந்தாவாய் இருக்கிறவன் – ஒழிவில் காலத்தில் -கைங்கர்ய அபிநிவேசம் போலே – தேச கால விப்ரக்ருஷ்டமான அபதானங்களை -தத் தத் தேச கால விசிஷ்டமாக அனுபவிக்க வேண்டும் என்று – அதி சாபலம் பண்ணின இவர்க்கு -காலோபாதியை கழித்து -சமகாலம் ஆக்கி அனுபவித்து –-இவருடைய இழவைத் தீர்த்து -இவருடைய கரண த்ரய வியாபாரத்தையும் போக்யமாகக் கொள்ள –-அந்த பிரணயித்வத்திலே தோற்று – விரஹ தசையில்-சத்ருச பதார்த்தங்களையும் -சம்பந்தி பதார்த்தங்களையும் அவனாகக் கருதும்படி பித்தேறி – தேச விசேஷத்தில் அனுபவத்தை ஆசைப் பட்டு கூப்பிட –அவ் இழவு தீரும்படி –
வைகுண்டேது பரே லோகே ஸ்ரியா சார்த்தம் ஜகத்பதி ஆஸ்தே விஷ்ணு அசிந்தியாத்மா பக்தைர் பாகவதஸ் ஸஹ –
-இத்யாதிப் படியே –தேச விசேஷத்தில் பெரிய பிராட்டியாரும் தானுமே போக்தாக்களாய் இருக்கும் இருப்பைக் காட்டி அனுபவித்தாப் போலே -பிரத்யஷமாம் படி -அனுபவிப்பிக்க அனுபவித்து –-இப்படி முக்த போக்யதை மானசமாக பிராபித்து –அதுக்குப் பலமான
தேவதாந்த்ரங்களில் வைராக்யதை உடையரான இவர் –
ஐஸ்வர்ய கைவல்யங்களின் அல்ப அஸ்திரத்வ சாவதிகத்வாதி -தோஷங்களையும் – நிந்த்த்ய பதார்த்தங்களாலே சூத்திர தேவதா பஜனம் பண்ணுமத்தின் நிஹீததையும் – ப்ரசம்சா பர வாக்யங்களாலே சொல்லப்பட்டு – பகவத் விபூதி பூதராய் இருக்கச் செய்தே அவனோடு விகல்ப்பிக்கலாம் படி அவன் கொடுத்த ஐஸ்வர்யத்தை உடையராய் இருக்கிற பிரம ருத்ராதிகளுடைய அஞ்ஞனாதி களையும் – பாஹ்ய குத்ருஷ்டிகள் மதங்களின் தமோ நிஷ்டதையும் -வெளி இட்டு – தேவதாந்தரங்களை ஆஸ்ரயித்து தத் பலமும் கை கண்டிகோள் –
ஜகன் நிகரணாதி திவ்ய சேஷ்டிதங்களாலே சர்வேஸ்வரனே ரஷகன் –-அல்லாதார் அடையவம் -தத் ரஷ்ய பூதர் – என்னும் அர்த்தத்தை சாஸ்திர முகத்தால் கண்டு வைத்தும் தேற மாட்டுகிறிலிகோள் –
இப்படி நீங்கள் தேறாமைக்கு அடி -அவன் இட்ட வழக்கான -பிரகிருதி சம்பந்தம் –-தத் விமோசன உபாயமும் -அவன் திரு அடிகளில் ஆஸ்ரயணீயம் என்று அறிந்து – தத் ஆஸ்ரயணீயத்தைப் பண்ணி இத்தை தப்பப் பாருங்கோள் –-அவன் திரு அடிகளில் கைங்கர்யமே உங்களுக்கு சீரிய புருஷார்த்தம் என்று – பிரயோஜனாந்தர -தேவ தாந்திர -விரக்தி -முன்னாக -பரதேவதையும் பரம பிரயோஜனமும் அவனே – அவன் விஷயத்தில் கைங்கர்யமே -என்று உபதேசித்து பகவத் ஆஸ்ரயணீயத்தை ருசிப்பிக்கிறார் என்கிறார்-

நாலாம்‌ பத்திலே கீழ்ச் சொன்ன வ்யாப்தி ஆகாஸ வ்யாப்தி போல்‌ அன்றிக்கே-“அந்த: ப்ரவிஷ்டஸ் ஸாஸ்தா ஜநாநாம்‌ ஸர்வாத்மா” (ஆரணம்‌ 3-20) என்றும்‌-“ஆத்மாநமந்தரோ யமயதி” (ப்‌ருஹ தாரண்யகம்‌) என்றும்‌ “ஸாஸ்தா விஷ்ணு:அஸேஷஸ்ய ஐகதோ யோஹ்ருதி.ஸ்திதி .” ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌ 1-17-20 என்றும்‌ சொல்லுகிறபடியே அந்த வ்யாப்தி நிறம் பெறும்படி ஸ்வ வ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களினுடையவும்‌ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி தானிட்ட வழக்காம்படி நியமித்துக்‌ கொண்டு போருகையாலே ஸர்வ நியந்தாவான ஸர்வேஸ்வரன்‌ கீழ்‌ ஒழிவில்‌ காலத்தில்‌ கைங்கர்யாபி நிவேஸம்‌ போலே தேஸ கால விப்ரக்ருஷ்டமான அபதாநங்களை தத்தேஸ கால விஸிஷ்டமாக அநுபவிக்க வேணுமென்று இவர்க்குக்‌ காலோபாதியைக்‌ கழித்து ஸம காலமாக்கி யநுபவிப்பித்து இவருடைய இழவைத்‌ தீர்த்து இவருடைய கரண த்ரய வ்யாபாரத்தையும்‌ யோக்‌யமாக்கிக்‌ கொள்ள அந்த ப்ரணயித்வ குணத்திலே தோற்று ஸத்‌ருஸ பதார்த்தங்களையும்‌ ஸம்பந்‌தி பதார்த்தங்களையும்‌ அவனென்று பிச்சேறி தேஸ விஸேஷத்திலே அநுபவத்தை யாசைப்பட்டுக்‌ கூப்பிட்ட இவர்க்கு அவ் விழவும்‌ தீரும்படி “ஸ்ரியா ஸார்த்தம்‌ ஜகத்பதி: ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர்‌ பாகவதைஸ்‌ ஸஹ” (லைங்கம்‌) என்கிறபடியே தேஸ விஸேஷத்திலே பெரிய பிராட்டியாரும்‌ தானுமே போக்தாக்களா யிருக்கிற இருப்பை ப்ரத்யக்ஷாநுபவம் போலே அநுபவத்துக்கு விஷயமாக்க இவருமநுபவித்து மாநஸாநுபவமாகையாலே தத் பலமான பகவத்‌ வ்யதிரிக்தங்களான தேவதாந்தரம்‌ முதலானவற்றிலே வைராக்‌யத்தை உடையராயிருக்கிற இவரை ஐஸ்வர்ய கைவல்யங்களினுடைய அல்பாஸ்திரத்வாதி தோஷங்களையும்‌ நிந்த்‌ய பதார்த்தங்களைக்‌ கொண்டு ஷுத்‌ர தேவதா பஜனம்‌ பண்ணுகிற இதினுடைய தண்மையையும்‌ ப்ரஸம்ஸா பரமான வாக்யங்களாலே சொல்லப்பட்டு பகவத் விபூதி பூதராய்‌ இருக்கச்‌ செய்தே இவனோடே விகல்பிக்கலாம்படி அவனாலே தத்தமான ஐஸ்வர்யத்தை உடையராயிருக்கிற ப்‌ரஹ்ம ருத்‌ரர்களுடைய அஜ்ஞாந அஸக்தி ஸாபேக்ஷத்வாதிகளையும்‌, பாஹ்ய குத்‌ருஷ்டி மதங்களினுடைய தமோ நிஷ்டதைகளையும்‌ வெளியிட்டு தேவதாந்தரங்களை ஆஸ்ரயித்து தத்பலமும்‌ பெற்றுப்‌ போனிகோள்‌; ஸர்வேஸ்வரனுடைய ஜகந் நிகரணாதி ஸர்வ சேஷ்டிதங்களாலும்‌ ஸர்வேஸ்வரனே ரஷகன்‌ அல்லாதாரடைய ரக்ஷ்ய பூதரென்னும்‌ அர்த்தத்தை வ்யாஸ பராஸராதிகளுடைய வசநங்களாலே கண்டு வைத்தும்‌ தேற மாட்டுகிறிகோள்‌; இப்படி நீங்கள்‌ தேறாதிருக்கைக்கடி அவனிட்ட வழக்கா யிருக்கிற ப்ரக்ருதி ஸம்பந்தம்‌; தத்‌ விமோசநோபாயம்‌ அவன்‌ திருவடிகளே என்றறிந்து ஆஸ்ரயித்துத்‌ தப்பப் பாருங்கோள்‌, அவன்‌ திருவடிகளில்‌ கைங்கர்யமே உங்களுக்குச்‌ சீரிய புருஷார்த்தம்‌ என்று ப்ரயோஜநாந்தரங்களுடையவும்‌ தேவதாந்தரங்களினுடையவும்‌ விரக்தி முன்னாக பர தேவதை ஸர்வேஸ்வரனே என்றும்‌ தத்‌ விஷய கைங்கர்யமே பரம ப்ரயோஜநமென்றும்‌ உபதேஸித்து பகவத்‌ ஸமாஸ்ரயணத்தை ருசிப்பிக்கிறார்‌ என்கிறார்‌.

(1 )-ஈசனை ஈசனின் ஈசன் பால் என்ன ஏர்கொள் வானத்தும் ஆயே என்கிற வியாப்தி நிறம்பெற தனிக் கோல் செலுத்தும் -சர்வ நியந்தா –ஒழிவில் காலத்துக்கு சேர -பூர்வ போகங்களை ஒதுமால் எய்தின சாபலத்துக்கு சேர -சம காலமாக்கிப்(2-)போதால் வணங்காமை தீர்த்த பிரணயித்வத்தாலே காதல் மையல் ஏறிய பித்தாய் (3)-தேச தூரத்துக்குக் கூவியும் கொள்ளாய் என்றது தீர கண்ட சதிரையும் ஒரு நிலமாகக் காட்ட வீவில் இன்பம் கூட்டினை என்று முக்த போக மானச ப்ராப்தி பலமான தேவதாந்தர ஆத்ம ஆத்மீய லோக யாத்ரை ஐஸ்வர்ய அஷரங்களில் வைராக்கியம் -உன்னித்து உயிர் உடம்பினால் கொடு உலகம் வேட்கை எல்லாம் ஒழிந்தேன் என்ன உடையரானவர் (4)-ஒரு நாயகம் என்று ராஜ்ய ஸ்வர்க்க ஆத்ம அனுபவ அல்ப அஸ்த்ரத்வ சாவாதிகத் வாதிகளையும் (5-)ஆடுகள் இறைச்சி கரும் செஞ்சோறு ஆகிற நிந்த்யங்களாலே இளம் தெய்வத்துக்கு இழைத்தாடும் நிஹீநதையையும் (6)-பேச நின்ற தேவாத ஞான சக்தி சாபேஷத்வாதிகளையும் (7-)இலிங்கத்து விளம்பும் பாஹ்ய குத்ருஷ்டி மத தமோ நிஷ்டததையும் சொல்லி ஓடிக் கண்டீர் (8)-கண்டும் தெளிய கில்லீர் அறிந்து ஓடுமின் ஆட் செய்வதே உறுவது ஆவது என்று விரக்தி பூர்வகமாக ஆச்ரயனத்தை ஆஸ்ரயணத்தை ருசிப்பிக்கிறார் நாலாம் பத்தில் 

1 -ஈசனை ஈசனின் ஈசன் பால் என்ன ஏர் கொள் வானத்தும் ஆயே என்கிற வியாப்தி நிறம்பெற தனிக் கோல் செலுத்தும் -சர்வ நியந்தா – மருகலில் ஈசனை –4-1-10- ஈசன் ஞாலம் உண்டுமிழ்ந்த–4-3-2-
ஈசன் பாலோரவம் பறைதல் என்னாவது இலங்கியர்க்கே -4-10-4–என்று
நியந்தரு வாசக சப்தத்தாலே சொல்லும் படி –ஏர் கொள் ஏழு உலகமும் துன்னி முற்றுமாக நின்ற சோதி ஞான மூர்த்தியாய் -4-3-8–என்றும்-வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ் தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான்-4-5-9- – என்றும்-ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும் நீயே -4-9-7–என்கிற
கீழில் பத்தில் சர்வ விஷயமாகச் சொன்ன வ்யாப்தி -ஆகாச வியாப்தி போல் ஆகாமே நிறம் பெரும்படியாக – வீற்று இருந்து எழ உலகும் தனிக் கோல் செல்ல-4-5-1- -என்கிறபடி
உபய விபூதியும் தன் நியமனத்திலே ஆம் படி –தன் ஆக்ஜை நடத்துகிற சர்வ நியந்தாவான சர்வேஸ்வரன் ஒழிவில் காலத்துக்கு சேர -(பாலனாய் ஏழு உலகு -திருவாய் மொழியுடைய தாத்பர்யம் இது முதல் )-பூர்வ போகங்களை ஒதுமால் எய்தின சாபலத்துக்கு சேர -சம காலமாக்கி ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி -என்று அடிமை செய்யப் பாரிக்கிற அளவில் சர்வ தேச சர்வ அவஸ்தைகளோபாதி சர்வ காலத்திலும் வேணும் என்று கீழ் கழிந்த காலத்தில் அடிமையையும் ஆசைப் பட்டதுக்குச் சேரும் படி –
பாலனாய் ஏழு உலகு உண்டு -தொடங்கி –
தேச கால விப்ரக்ருஷ்டங்களான அவனுடைய அபதானங்களை – தத் தத் தேச கால விசிஷ்டமாக அனுபவிக்கையில் அபிநிவேசத்தாலே –
ஆதி அம் காலத்து அகலிடம் கீண்டவர் பாதங்கள் மேலணி பைம் பொற் துழாய் என்றே ஒதுமால் எய்தினள்-என்று பூர்வ காலீன போகங்களையே வாய் புலற்றும் படி பிராந்தியை அடைந்த
சாபலத்துக்கு அனுரூபமாக காலத்தினுடைய பேத வ்யவஹாரத்துக்கு உடலான உபாதியைக் கழித்து ஒரு போகி ஆக்குகையாலே -சம காலமாக்கி அனுபவிப்பித்து

(ஈசனை ஈசன்பாலென்ன ஏர்கொள் வானத்தும்‌ ஆயே என்கிற வ்யாப்தி நிறம் பெறத்‌ தனிக்கோல்‌ செலுத்தும்‌ ஸர்வ நியந்தா ) “மறுகலிலீசனை” (திருவாய்மொழி 4-1-10)’ ஈசன்‌ ஞாலமுண்டுமிழ்ந்த” (திருவாய்மொழி 4-3-2) “ஈசன்பாலோர்‌ அவம்‌ பறைதல்‌’ (திருவாய்மொழி 4-10-4) என்று நியந்த்ரு வாசகமான ஸப்தத்தாலே சொல்லும்படி ‘ஏர்கொளேழுலகமும்‌ துன்னி முற்றுமாகி நின்ற சோதி ஞான மூர்த்தியாய்‌” (திருவாய்மொழி 4-3-8) “வானத்தும்‌ வானத்துள்ளும்பரும்‌ மண்ணுள்ளும்‌ மண்ணின் கீழ்த்‌ தானத்தும்‌ எண்டிசையும்‌ தவிராது நின்றான்‌” (திருவாய்மொழி 4-5-9) “ஆயே இவ்வுலகத்து நிற்பனவும்‌ திரிவனவும்‌ நீயே” (திருவாய்மொழி 4-9-7) என்று கீழ்ப்பத்தில்‌ சொன்ன வ்யாப்தி ஆகாஸ வ்யாப்தி போலன்றிக்கே அது நிறம் பெறும்படி “வீற்றிருந்தேழுலகும்‌ தனிக்கோல்‌ செல்ல” (திருவாய்மொழி 4-5-1) என்னும்படி உபய விபூதியும்‌ தன்‌ நியமனத்திலே யாம்படி தன்‌ ஆஜ்ஞையை நடத்துகிற ஸர்வ நியந்தாவான ஸர்வேஸ்வரன்‌ (ஒழிவில் காலத்துக்குச்‌ சேர பூர்வ போகங்களை ஓதுமாலெய்தின சாபலத்துக்குச்‌ சேர ஸமகாலமாக்கி) “ஒழிவில்‌ காலமெல்லாம்‌ உடனாய்‌ மன்னி (திருவாய்மொழி 3-3-1) என்று ஸர்வதேஸ ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும்‌ அடிமை செய்ய வேணுமென்று கீழ்க் கழிந்த காலத்தில்‌ அடிமையையும்‌ ஆசைப்பட்டதுக்கு ஒக்க தேஸ கால விப்ரக்ருஷ்டங்களாயிருக்கிற அவனுடைய அபதானங்களை “மாதர் மா மண்‌ மடந்தை பொருட்டு இத்யாதி, ஒதும்‌ மால்‌ எய்தினள்‌” (திருவாய்மொழி 4-2-6) என்று தத் தேஸ கால விஸிஷ்டமாக அநுபவிக்க வேணுமென்று பிச்சேறும்படியான இவருடைய சாபல்யத்துக்குச் சேர காலோபாதியைக்‌ கழித்து வர்த்தமாந காலம்‌ போலே ஸம காலமாக்கி அநுபவிப்பித்து

குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம் விட்ட
இறுகல் இறப்பெனும் ஞானிக்கும் அப்பயன் இல்லையேல்,
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்; பின்னும் வீடு இல்லை,
மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில், வீடு அஃதே.–4-1-10-மறுகல் இல் ஈசனைப் பற்றி ஹேய ப்ரத்ய நீகனாகவும் ஞான ஏக ஆகாரகனாகவும் அனுசந்தித்து அவனோடு சஜாதீயனாகவும் ஆத்மாவை அனுசந்தித்து-மறுகல் இல்-மறுகுகிற சமயத்தில் -சரீர விஸ்லேஷ சமயத்தில் என்னவுமாம் –
விடாவிடில், வீடு அஃதே.–-இப்படி துஸ் சாதகம் ஆகையால் -ஈஸ்வர சாபேஷம் யாகையாலும் -பகவத் அனுபவத்தை குறித்து தண்ணிது யாகையாலும்-தண்ணிது ஆனது தானே ஸ்த்திரம் ஆகையால் மிகவும் அபுருஷார்த்தம் ஆகையால் -அபிராப்த புருஷார்த்தம் ஆகையால் அண்ணல் கழல்கள் குறுகுமினோ -என்று கீழ்ச் சொன்ன கைங்கர்யமே புருஷார்த்தம் –

பூசும் சாந்து என்நெஞ்சமே; புனையும் கண்ணி எனதுடைய
வாசகம் செய் மாலையே; வான் பட்டாடையும் அஃதே;
தேசமான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே;
ஈசன், ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே.–4-3-2-சர்வேஸ்வரனுக்கு -ரக்ஷகன் என்னும் பேரேயாய் உடைமை நோவு பட விட்டிட்டு இருக்குமோ -என்னில்-ஞாலம் உண்டு உமிழ்ந்த-ஜகத்துக்கு சர்வ பிரகார ரக்ஷகன்-எந்தை-அந்த ரஷானத்தாலே என்னை எழுதிக் கொண்டவன்-ஏக மூர்த்திக்கே.–
அத்விதீயமான திரு மேனியை உடையவனுக்கு-சர்வ கந்த என்கிற விக்கிரஹத்தை உடையவனுக்கு பூசும் சாந்து என் நெஞ்சம் ஆவதே என்கிறார் –

பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின்
தேச மாமதிள் சூழ்ந்து அழகாய திருக்குருகூர் அதனுள்
ஈசன் பால் ஓர் அவம் பறைதல் என்னாவது இலிங்கியர்க்கே?–4-10-4-திருக்குருகூர் அதனுள்-ஈசன் பால் –
அஜஹத் ஸ்வபாவன் ஆகையால் இஸ் ஸுலப்யத்திலேயும் மேன்மை குறையாது இருக்கிறபடி
ய பரஸ்ஸ மஹேஸ்வர -என்றும் ஈஸதே பகவா நே க -என்றும் பிராமண பிரசித்தனான சர்வேஸ்வரன்
ஈசன் ஈசானன் என்கிற இது மஹாவ்ருக்ஷம் என்னுமா போலே சமாக்கிய மாத்ரமேயாய் அர்த்தம் இன்றிக்கே இருக்கை –-ஓர் அவம் பறைதல்-அநீசரத்வ சாதகமாக ஏதேனும் ஒரு ஆபாச யுக்திகளை சொல்லுகிறது -அத்தை தாம் சொல்ல மாட்டாமையாலே -அவன் என்கிறார் –பறைதல் -ஸ்வ கோஷ்டிகளிலே ரஹஸ்யமாக சொல்லுமது ஒழிய சதாஸ்யம் அன்றிக்கே இருக்கை –என் முன்பே சொல்லுவது அன்று-என்னாவது இலிங்கியர்க்கே?–-ஆனுமா நிகர்க்கு என்ன பிரயோஜனம் உண்டு –அந்த தேவதைகளுக்கு ஓர் உத்கர்ஷம் பெற்றி கோள் அன்று – ஸமாச்ரயணத்துக்கு ஓர் பலம் பெற்றி கோள் அன்று உங்கள் அனுமானம் ஸ்ருதி சந்நிதியில் ஜீவிக்க மாட்டாது நீங்கள் சொல்லுகிற சமாக்கியை கபால மோக்ஷம் ஆகிற அர்த்த சாமர்த்யத்தின் முன்பு நிற்க மாட்டாது –

என்னது ஆவி மேலையாய்! ஏர் கொள் ஏழ் உலகமும்
துன்னி முற்றும் ஆகிநின்ற சோதி ஞான மூர்த்தியாய்!

உன்னது என்னது ஆவியும்; என்னது உன்னது ஆவியும்;
இன்ன வண்ணமே நின்றாய் என்று உரைக்க வல்லனே?–4-3-8—இவரைப் பெற்ற பிரியத்தால் வியாப்திலேயும் ஒரு புஷ்கல்யம் உண்டாயிற்று என்னுதல்-இவரைப் பெறுகையாலே விபூதி த்வயமும் புதுக் கணித்தது-துன்னி முற்றும் ஆகி நின்ற-எங்கும் ஓக்க நெருங்கி வியாபித்து நின்ற நிலை -ஜாதி வியக்தி தோறும் பரி ஸமாப்யா வர்த்திக்குமா போலே –

வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த்
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான் தனை
,
கூனற் சங்கத் தடக்கை யவனை, குடமாடியை,
வானக் கோனைக் கவிசொல்ல வல்லேற்கு இனி மாறுஉண்டோ?–4-5-9–ஸ்வர்க்கத்திலும்-அதுக்கு உள்ளாய் பெரிதாய் இருக்கிற மஹர் லோகாதிகளிலும் -பூமியிலும் -கீழ் உண்டான பாதாளாதிகளிலும்
எண் திசையும் தவிராது நின்றான் தனை,-சர்வ தேசங்களிலும் உண்டான தேவாதி சகல பதார்த்தங்களிலும் ஜாதி போலே வியக்தி தோறும் பரி சாமாப்ய வர்த்திக்கிறவனை-இத்தால் -அணு த்ரவ்யங்களிலும் விபுவான ஆகாசாதிகளிலும் வியாவ்ருத்தி சொல்கிறது – அணுவுக்கு ஸர்வத்ர வியாப்தி இல்லை -விபு த்ரவ்யத்துக்கு நியன்தருதயா வியாப்தி இல்லை

ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயே மற்று ஒருபொருளும் இன்றிநீ நின்றமையால்
நோயே மூப்பு இறப்பிறப்புப் பிணியே என்றிவை ஒழியக்
கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டேலே.–4-9-7–ஆயே -என்றது தாயே என்றதாய் -தாய் போலே பரிவனானவனே –மாதா பிதா பிராதா –நீயே ஆயே -என்று கூட்டவுமாம்-இந்த லோகத்தில் ஸ்தாவர ஜங்கமமாத்மகமாய் உள்ள சகல பதார்த்தங்களும் நீயே என்கிற சொல்லுக்கு உள்ளே யாம் படியாக -சர்வம் கல்விதம் ப்ரஹ்ம

வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான்றனைப்
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?–4-5-1-வீற்றிருந்து –-வேறு பாடு தோற்ற இருந்து
ஸ்வ வ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களும் சேஷி என்று தோற்ற இருக்கை-ஸ்வ வ்யாதிரிக்த ஸமஸ்த பதார்த்தங்களையும் சேஷமாக உடையான் ஆகையால் உண்டான ஆனந்தத்தால் வந்த இறுமாப்பு தோற்ற இருக்கை – சேதனர்க்கு பரஸ்பரம் பேதம் உண்டாகிலும் ஞான ஏக ஆகாரதையாலும் பகவத் சேஷத்வ ஆகாரதையாலும் சாம்யம் உண்டு – விபுத்வ நியந்த்ருத்வ சேஷித்தவாதிகள் இவனுக்கே உள்ளது-இருந்து -இப்படி நிர்வஹிப்பது-சுற்றும் பயணம் வந்த வன்னியம் அறுத்தோ என்னில் -தான் இருந்த இருப்பில் தனி யாணை செல்லும் படியாய் யாயிற்று இருப்பது-ஏழுலகும் – உபய விபூதியும் சொல்லிற்று ஆதல் -லீலா விபூதியை சொல்லிற்று ஆதல் –-உபய விபூதி பரமான போது சதுர்வித பிரக்ருதியும் த்ரிவித ஆத்மவர்க்கமும் லீலா விபூதி பரமான போது பாதாளாதிகளும் பூமியும் கூட ஒன்றாய் அந்தரிஷிதிகள் ஆறுமாக கடவது-அப்போது வீவில் சீர் -நித்ய விபூதியாகக் கடவது -உபய விபூதி பரமான போது கல்யாண குணமாக கடவது-தனிக்கோல் செல்ல,-தன்னுடைய அத்விதீயமான சாசனம் செல்லும் படி

ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1-சர்வ தேசத்திலும் -காட்டிலும் தொடர்ந்து அடிமை செய்த இளைய பெருமாளை போலே-மன்னி-சர்வ அவஸ்தையிலும் -உலகத்தோடு ஏகாந்தத்தோடு வாசி அற

மாதர் மா மண் மடந்தை பொருட்டு ஏனமாய்,
ஆதி அம் காலத்து அகலிடம் கீண்டவர்
பாதங்கள் மேல் அணி பைம்பொன் துழாய் என்றே
ஓதும்மால் எய்தினள்
என்றன் மடந்தையே.–4-2-6—வராஹ கல்பாதியாய் அவதாரகாலம் ஆகையாலே ஸ்லாக்யமான காலத்திலே மஹா பிருத்வியை அண்ட பித்தியினின்றும் ஒட்டு விடுவித்து அருளினவருடைய திருவடிகளில்-ரோமாந்தரஸ் த்தா முனயஸ் ஸ்துவந்தி -என்று சனகாதிகள் இட்ட திருத் துழாயை யாயிற்று இவள் ஆசைப்படுகிறது-ஓதும்மால் எய்தினள்-எப்போதும் இத்தையே சொல்லும்படியான பிரேமத்தை -பிரமத்தை -உடையவள் ஆனாள்-என்றன் மடந்தையே.– இவள் பருவத்தை கண்டார் யாயிற்று மால் எய்துவர் -அத்தலை இத்தலை யாவதே –

2-(கோவை வாயாள்-திருவாய் மொழி தாத்பர்யம் இது முதல்) -போதால் வணங்காமை தீர்த்த பிரணயித்வத்தாலே காதல் மையல் ஏறிய பித்தாய் பூவை வீயா நீர் தூவி போதால் வணங்கேனேலும் நின் பூவை வீயா மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே – என்று தொடங்கி – ஏக மூர்த்திக்கே பூம் தண் மாலை கொண்டு உன்னை போதால் வணங்கேனேலும் நின் பூம் தண் மாலை நெடு முடிக்கு புனையும் கண்ணி எனது உயிரே – என்று விரோதி நிரசனம் பண்ணுகிற அவ்வவ காலங்களிலே உதவி புஷ்பாதி உபகரணங்களை கொண்டு சிசிரோபசாரம் பண்ணப் பெற்றிலேன் ஆகிலும் -விலஷண விக்ரக யுக்தனாய் -சர்வேஸ்வரனாய் இருக்கிறவன் -என்னுடைய கரண த்ரய வியாபாராதிகளையே தனக்கு போக்ய வஸ்துகள் எல்லாமாகக் கொள்வதே ! என்று இவர் தாமே ஈடுபடும்படி பண்ணி -அவ்வவோ காலங்களில் தனக்கு உதவி அடிமை செய்யாத இழவை அவன் தீர்த்த பிரணயித்வ குணத்திலே –
காதல் மையல் ஏறினேன் -என்கிறபடியே பிரேமம் மேல் இட்டு அறிவு கலங்கினவாறே – வெள்ளக் கேடாக ஒண்ணாது என்று அவன் அல்பம் பேர நிற்க (மண்ணை இருந்து துழாவி -திருவாய் மொழி சாரம் இது முதல் )-
அவனோடு சத்ருச பதார்த்தங்களையும் சம்பந்தி பதார்த்தங்களையும் அவனாகவே கருதி பேசும்படியாக பேய்ச்சி முலை சுவைத்தார்க்கு என் பெண் கொடி ஏறிய பித்தே -என்னும்படி பித்தேறி –

(போதால்‌ வணங்காமை தீர்த்த ப்ரணயித்வத்திலே காதல் மையலேறிய பித்தாய்‌) “பூவை வீயா நீர்‌ தூவிப்‌ போதால்‌ வணங்கேனேலும்‌ நின்‌ பூவை வீயாம்‌ மேனிக்குப்‌ பூசும்‌ சாந்து என்‌ நெஞ்சமே” (திருவாய்மொழி 4-5-1என்று; “பூசுஞ்சாந்தென்‌ நெஞ்சமே இத்யாதி ஏக மூர்த்திக்கே” (திருவாய்மொழி 4-3-2) என்று விரோதி நிரஸநம்‌ பண்ணுகிற அவதார காலங்களிலே உதவி புஷ்பாத்‌ யுபகரணங்‌களைக்‌ கொண்டு ஸிஸிரோபசாரம்‌ பண்ணப்‌ பெற்றிலேனே யாகிலும்‌ ஸர்வ நியந்தாவாய்‌ ப்ரளயாத்யாபத் ஸகனானவன்‌ தன்னுடைய அத்‌விதீயமான விக்‌ரஹத்துக்கு என்னுடைய கரண த்ரய வ்யாபாரத்தையும்‌ தனக்கு போக்யமாகக்‌ கொள்ளுவதே என்று இவர் தாமே ஈடுபடும்படி இவருடைய இழவு தீர்த்த அவனுடைய ப்ரணயித்வ குணத்திலே “காதல்‌ மையலேறினேன்‌” (திருவாய்மொழி 4-3-9 என்கிறபடியே அவன் பக்கல்‌ உண்டான ப்ராவண்யாதிஸயத்தாலே அறிவழிய அது வெள்ளக்‌ கேடாகாதபடி அவன்‌ அல்பம்‌ பேர நிற்க அவனோடு ஸத்‌ருஸ பதார்த்தங்களையும்‌ ஸம்பந்தி பதார்தங்களையும்‌ அவனென்று ப்‌ரமித்து “என்‌ பெண்கொடி ஏறிய பித்தே’‘ (திருவாய்மொழி 4-4-6) என்று பிச்சேறி

கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய்! மதிள்இலங்கைக்
கோவை வீயச் சிலை குனித்தாய்! குலநல் யானை மருப்பு ஒசித்தாய்!
பூவை வீயா நீர்தூவிப் போதால் வணங்கேனேலும், நின்
பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே.
–4-3-1-நின்-பூவை வீயாம் மேனிக்குப்
பூவை ஒழியா மேனிக்கு -பூவை ஒழியச் செல்லாத மேனி என்னுதல்-பூவைவீ யுண்டு -பூவைப் பூ -அது தான் மேனி -காயாம்பூவின் தன்மை உடைத்தாகை–புஷ்ப ஹாஸ ஸூகுமாரமான திருமேனி
மேனிக்கு பூசும் சாந்து என் நெஞ்சமே
-அவ்வடிவுக்கு பூசும் சாந்து என் நெஞ்சமாய் விடுவதே –
ஸூ கந்த மேதத் –அப்படி சாந்தில் உள்மானம் புறமானம் அறியுமவனுக்கு பூசும் சாந்து என் நெஞ்சமாய் விடுவதே –

பூசும் சாந்து என்நெஞ்சமே; புனையும் கண்ணி எனதுடைய
வாசகம் செய் மாலையே; வான் பட்டாடையும் அஃதே;

தேசமான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே;
ஈசன், ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே.–4-3-2-இவருடைய பாவ பந்தம் அவனுக்கு பரிமளிதமான அங்க ராகமே யாயிற்று-வழக்கனான மாலை அன்றிக்கே ஆதரித்துச் சூடும் மாலை –என்னுடைய யுக்தி மாத்திரமே-இவர் நெஞ்சிலும் பரிமளிதம் யாயிற்று இவர் வாக்கு -வாக்கான மாலை இ றே சாந்துக்கு பூக்கட்டி இ றே மனம் கொடுப்பது-; வான் பட்டாடையும் அஃதே; ஓன்று ஒரு போக உபகாரணமாகை தவிர்ந்து -அவனுக்கு பும்ஸவதாவஹமான பரிவட்டமும் என் யுக்தி யாவதே
வான் பட்டாடையும்-பெரு விலையனான திருப் பரிவட்டம்-தேசமான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே;-தேஜஸ் கரமான திரு ஆபரணமும் என்னுடைய அஞ்சலி யாவதே-ராஜ மஹேந்த்ரன் படி போலே இவருடைய அஞ்சலி அவனுக்கு உதகர்ஷ ஹே துவாய் இருக்கிற படி

உரைக்க வல்லன் அல்லேன்; உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக்கண் என்று செல்வன் நான்? காதல் மையல் ஏறினேன்;
புரைப்பு இலாத பரம்பரனே பொய்யிலாத பரஞ்சுடரே!
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த, யானும் ஏத்தினேன்.–4-3-9—உன்னுடைய முடிவு இல்லாத பிரணயித்வத்தால் வந்த கீர்த்தியின் வெள்ளத்தின் கரையில் என்று செல்லக் கட வேன்-ஒரு காலத்திலும் முடியாதே – ஆனால் நீர் பேச உபக்ரமிப்பான் என் என்ன –ப்ரேமாந்தனாய் பிரமித்தேன்

கூத்தர் குடம் எடுத்து ஆடில்,‘கோவிந்தனாம்’எனா ஓடும்;
வாய்த்த குழல் ஓசை கேட்கில், ‘மாயவன்’ என்றுமை யாக்கும்;
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில், ‘அவன் உண்ட வெண்ணெய் ஈது’ என்னும்;
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு என் பெண் கொடி ஏறிய பித்தே!–4-4-6—தாய் உதவாத தனிமையிலே பூதனை தாய் வடிவு கொண்டு நலிய புக அவளை முடித்து தன்னை அபகரித்த உபகாரத்துக்கு தோற்றாயிற்று இவள் பிச்சேறிற்று-பூத் தரு புணர்ச்சி களிறு தரு புணர்ச்சி ஆறு தரு புணர்ச்சி –
அசிந்திதமாக கையிலே பூவைக் கொடுத்தல் -ஆணையின் கையிலே அகப்பட்டவர்களை மீட்டல் -ஆற்றிலே அமிழா நிற்க எடுத்தல் செய்தவர்களுக்கு அவர்கள் அநன்யார்ஹைகள் –தம் தாமை உண்டாக்கினவர்களுக்கு இறே அங்கு-அவன் தன்னை உண்டாக்கிக் தந்தத்துக்கு தன்னை அநந்யார்ஹம் ஆக்கினாள்-என் பெண் கொடி-நிருபாதிகமான ஸ்த்ரீத்வத்தை உடைய என் மகள் ஏறிய பிச்சு –

3-(சீலமில்லாச் சிறியேனேலும்-பொருள்)தேச தூரத்துக்கு கூவியும் கொள்ளாய் என்றது தீரக் கண்ட சதிரையும் ஒரு நிலமாகக் காட்ட தேச விசேஷத்தில் அனுபவத்தை ஆசைப் பட்டு தேச தூரத்தைப் பற்ற –
கோல மேனி காண வாராய் கூவியும் கொள்ளாயே -என்று உன் வடிவு அழகை இங்கே வந்து அனுபவிப்பித்து அருளுதல்- என்னை அங்கே அருளப் பாடு இடுதல் -செய்கிறிலை என்று -கூப்பிட்ட இழவும் தீர –(நண்ணாதார் முறுவலிப்ப சாரம்) ஒண் டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப கண்ட சதிர் கண்டு -என்று நித்ய விபூதியிலே பெரிய பிராட்டியாரும் நீயுமே போக்த்தாக்களாய் -அவ் விபூதியில் உள்ளார் அடைய போகோ உபகரண கோடியாம்படி கண்டு வைத்த நேர்பாட்டை நான் கண்டேன் என்னும்படி – கீழ் காலோ உபாதியை நீக்கி சமகாலம் ஆக்கினார் போலே -அவ் விபூதியில் அனுபவத்தையும் இங்கு இருந்தே அனுபவிக்கலாம் படி ஒரு போகியாக பிரகாசிப்பிக்க (வீற்று இருந்து ஏழு உலகம் சாரம்)-வீவில் இன்பம் கூட்டினை– என்று முக்த போக மானச ப்ராப்தி பலமான வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்ந்தனன் மேவியே -என்றும் , கூட்டரிய திருவடிகள் கூட்டினை நான் கண்டேனே –4-9-8–என்று அவனைக் கிட்டி நிரதிசய ஆனந்தியாகப் பெற்றேன் –யாவர் சிலர்க்கும் தம் தம்மால் சேர்த்து கொள்ள அரிய திருவடிகளை நான் சேரும்படி என்னைச் சேர்த்துக் கொண்டாய் – நான் அனுபவிக்கப் பெற்றேன் என்ற அது மானச அனுபவம் ஆகையாலே -இப்படி முக்தருடைய போகமான-
அவ் அனுபவத்தில் மானசமாக உண்டான பிராப்திக்குப் பலமாக – தேவதாந்திர ஆத்மா ஆத்மீய லோக யாத்ரை ஐஸ்வர்ய அஷரங்களில் வைராக்கியம் -உன்னித்து உயிர் உடம்பினால் கொடு உலகம் வேட்கை எல்லாம் ஒழிந்தேன் என்ன உடையரானவர்-உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாள்–4-6-10–என்று தன் நெஞ்சாலே மதித்து வேறு ஒரு-தெய்வத்தை தொழுது அறியாள் என்னும் படி -தேவதாந்தரங்களில் வைராக்யத்தையும் –-உயிரினால் குறைவிலமே -4-8-10–என்றும் ,
உடம்பினால் குறைவிலமே–4-8-9- -என்னும் படி ஆத்ம ஆத்மீயங்களில் வைராக்யத்தையும் –
கொடு உலகம் காட்டேல்—4-9-7-என்னும் படி லோக யாத்ரையில் வைராக்யத்தையும் -,-வேட்கை எல்லாம் விடுத்து -4-9-9–என்று சமுதாயவேனவும் ஐம் கருவி கண்ட இன்பம் ஒழிந்தேன் சிற்று இன்பம் ஒழிந்தேன்—4-9-10-
என்று ப்ருதக்தவேனவும் சொல்லும்படி ஐஸ் வர்யத்திலும் அஷர சப்த வாச்யமான ஆத்ம அனுபவ கை வல்யத்திலும் உண்டான வைராக்யத்தையும் உடையரான இவர்

(தேஸ தூரத்துக்குக்‌ கூவியும்‌ கொள்ளாய்‌ என்றது தீரக்‌ கண்ட சதிரையும்‌ ஒரு நிலமாகக்‌ காட்ட) “கோல மேனி காண வாராய்‌ கூவியும்‌ கொள்ளாயே” (திருவாய்மொழி 4-7-1) என்று உன்னுடைய வடிவழகை வந்தநுபவிப்பித்தருளுதல்‌ அங்கே அருளப்பாடிடுதல்‌ செய்கிறிலை என்று தேஸ விஸேஷத்தில்‌ அநுபவத்தை ஆசைப்பட்டுக்‌ கூப்பிட்ட இவருக்கு “ஒண்டொடியாள்‌ திருமகளும்‌ நீயுமே நிலா நிற்பக்‌ கண்டசதிர்‌ கண்டொழிந்தேன்‌” (திருவாய்மொழி 4-9-10) என்று நித்ய விபூதியிலே பெரிய பிராட்டியாரும்‌ நீயுமே போக்தாக்களாய்‌ அவ் விபூதி யிலுள்ளாரடைய போகோபகரண கோடியிலேயாம்‌ படி கண்டு வைத்த கட்டளையை நான்‌ கண்டேன்‌ என்று கீழ்‌ காலோபாதியைக்‌ கழித்து ஸம காலமாக்கினாப் போலே அவ் விபூதியிலநுபவத்தை இங்கே யிருந்தே அநுபவிக்கலாம்படி ஒரு போகியாக ப்ரகாஸிப்பிக்க (வீவிலின்பம்‌ கூட்டினை என்று முக்த போகம்‌) “வீவிலின்பம்‌ மிக எல்லை நிகழ்ந்தனன்‌ மேவியே” (திருவாய்மொழி 4-5-3) என்று அவனைக்‌ கிட்டி நிரதிஸயாநந்தியாகப்‌ பெற்றேன்‌, “கூட்டரிய திருவடிக்கள்‌ கூட்டினை நான்‌ கண்டேனே” (திருவாய்மொழி 4-9-8) என்று ஸ்வ யத்நத்தாலே கிட்டுவார்க்குக்‌ கிட்ட வரிதாயிருக்கிற திருவடிகளை உன்னருளாலே பெற விருக்கிற நான்‌ பெற்றநுபவிக்கும்படி கூட்டினாய்‌, நானுங்கண்டநுபவிக்கப்‌ பெற்றேன்‌ என்று பேசும்படியான முக்த போகமான இவ்வநுபவம்‌ மாநஸாநுபவமாய்‌ அந்த மாநஸ ப்ராப்திக்குப்‌ பலமான (தேவதாந்தராத்மாத்மீய லோக யாத்ரைஸ்வர்ய அக்ஷரங்களில்‌ வைராக்‌யம்‌ உன்னித்துயிருடம்பினால்‌ கொடுவுலகம்‌ வேட்கை யெல்லா மொழிந்தேனென்ன உடையரானவர்‌) “உன்னித்து மற்றொரு தெய்வம்‌ தொழாள்‌” (திருவாய்மொழி 4-6-10) என்று தன்னெஞ்சாலே துதித்து ஒரு தேவதைக்கு மூச்சுண்டென்று தொழுதறியாள்‌ என்று தேவதாந்தர விஷயமான வைராக்‌யத்தையும்‌ “உயிரினால்‌ குறைவிலமே” (திருவாய்மொழி 4- 8-10) “உடம்பினால்‌ குறைவிலமே’ (திருவாய்மொழி 4-8-9 என்று ஆத்மாத்மீயங்களில்‌ வைராக்‌யத்தையும்‌ “கொடு வுலகம்‌ காட்டேல்‌’ (திருவாய்மொழி 4-9-7) என்று லோக யாத்ரையில்‌ வைராக்‌யத்தையும்‌ “வேட்கை யெல்லாம்‌ விடுத்து” (திருவாய்மொழி 4-9-9) என்று ஐஸ்வர்யத்தில்‌ வைராக்‌யத்தையும்‌ “சிற்றின்பம்‌ ஒழிந்தேன்‌” (திருவாய்மொழி 4-9-10) என்று அக்ஷரமென்று சொல்லப்படுகிற ஆத்மாநுபவத்தில்‌ வைராக்‌யத்தையும்‌ உடையரான விவர்‌

சீலம் இல்லாச் சிறியே னேலும், செய்வினையோ பெரிதால்;
ஞாலம் உண்டாய்! ஞான மூர்த்தி! நாராயணா! என்று என்று
காலந் தோறும் யான் இருந்து, கைதலை பூசலிட்டால்,
கோல மேனி காண வாராய்; கூவியும் கொள்ளாயே.–4-7-1-இப்படி விடாயைப் பிறப்பிக்கும் வடிவு -விடாய்த்தார்க்கு காட்ட அன்றோ வடிவு படைத்தது -பக்தா நாம் அன்றோ –-காண-காண்கை இறே பிரயோஜனம் –சதா பஸ்யந்தி இறே-கருமுகை மாலை தேடுவார் சூட வன்றோ தேடுவது -சும்மாட்டைக் கொள்ள அன்றே-வாராய்; இப்போதும் அவன் வரவால் பெறுகை முறை என்கை -வருகிறிலை
கூவியும் கொள்ளாயே. இஷ் ஷூ த்ர ஜந்துவின் பக்கலிலே நான் செல்லவோ என்று இருந்தாயாகில் என்னை அழைத்துக் கொள்ளலாம் –அதுவும் செய்கிறிலை

கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி
கண்ட இன்பம், தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப,
கண்ட சதிர் கண்டொழிந்தேன்; அடைந்தேன் உன் திருவடியே.
–4-9-10–இவள் நித்ய அநபாயினி இறே
நீயும் அவளுமே என்னும் படி இருவருடையவும் அபிமானத்துக்கு உள்ளே ஒரு விபூதியாக அடங்கும் படி இருக்கை -நான்யோர் வித்யதேபரம்-என்னா நிற்க –வாசல்கள் தோறும் ஈஸ்வரர்களாய் இருக்கை அது போல் அன்றிக்கே இருக்கை –நிலாவுகை -வர்த்திக்கை-கண்ட சதிர் கண்டொழிந்தேன் -பார்த்து வைத்த வாய்ப்பு -உங்கள் இவருடைய அனுபவமும் நித்தியமாய் செல்லும்படி நீ பார்த்து வைத்த வாய்ப்பைக் கண்டு -அதாவது அவ் விபூதியில் உள்ளார் சந்த அனுவர்த்திகளாம் படி பண்ணி வைத்த சதிர் -அத்தைக் கண்டு-; அடைந்தேன் உன் திருவடியே.–-உன் திருவடிகளை அடையவும் பெற்றேன் –

வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்
வீவு இல் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
வீவு இல்காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப்பெற்றேன்;
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே.–4-5-3-–நித்தியமாய் நிரவதிகமான ஆனந்தத்தை உடையேன் ஆனேன்-அவனுடைய ஆனந்தத்துக்கும் தம்முடைய ஆனந்தத்துக்கும் வாசி சொல்கிறார்
மேவியே--அவனுடைய ஆனந்தம் ஸ்வதஸ் சித்தம்-என்னுடைய ஆனந்தம் -அவனை மேவி வந்தது
அவனுடைய ஆனந்தம் தான் தோன்றி-என்னுடைய ஆனந்தம் அபிஜாதம்-ஏஷ ஹ் யேவா நந்தயாதி

காட்டி நீ கரந்து உமிழும் நிலம் நீர் தீ விசும்பு கால்
ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி முட்டைக்
கோட்டையினிற் கழித்து எனை உன் கொழுஞ்சோதி உயரத்துக்
கூட்டரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே?–4-9-8-–துஷ் ப்ராபமான திருவடிகளிலே –என்னால் சாத்தியம் இன்றிக்கே நீயே தர காணுமது என்கை –எஞ்ஞான்று கூட்டுதியே?–-இன்ன நாள் செய்யக் காட்டுவோம் என்று எல்லை பெறிலும் தரிக்கலாம்-மா ஸூ ச என்று ஒரு வார்த்தை பெறிலும் ஸ்திதி தோஸ் மிக்கது ஸந்தேஹ-என்று தரிக்கலாம்-பூர்ணே சதுர்த்தசே வர்ஷே என்று நாள் எல்லை பெற்ற ஸ்ரீ பரத ஆழ்வானை போலே –விரோதியைப் போக்கிலும் தன்னைப் பற்றியே போக்க வேணும்-தன்னைப் பெறிலும் தன்னாலே பெற வேணும்-மாமேவ ப்ரத்யந்தே –தமேவ க்ரணம் கச்ச 

உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;
நும் இச்சை சொல்லி,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!
மன்னப் படுமறை வாணனை வண் துவராபதி
மன்னனை ஏத்துமின்! ஏத்துதலும்,தொழுது ஆடுமே.–4-6-10—உன்னித்து -மதித்து -நெஞ்சால் ஒன்றாக நினைத்து கிருஷ்ணனை ஒழிய வேறு ஒரு தேவதையை தொழாள்-வேறு ஒன்றை தேவதை என்று மதித்தல் தொழுதல் செய்யுமவள் அல்லள்-தேவதாந்தர்ய ஸ்பர்சம் பொறாத இவளுக்கே இந்த பரிஹாரம் பண்ணுவது

உடம்பினால் குறையில்லா உயிர்பிரிந்த மலைத்துண்டம்
கிடந்தனபோல் துணிபலவா அசுரர்குழாம் துணித்துஉகந்த
தடம்புனல சடைமுடியன் தனிஒருகூ றமர்ந்துறையும்
உடம்புடையான் கவராத உயிரினால் குறையிலமே.–4-8-10–பிராட்டி திரு மார்பை அபிமானித்து இருக்குமா போலே துர்மானிக்கும் அணையலாம் படி உடம்பு கொடுத்து இருக்குமவன்-இப்படி பொதுவான உடம்போடு என்னை அணைக்கைக்கு அவன் மேல் விழாத பின்பு என்னால் எனக்கு என்ன கார்யம் உண்டு-முன்பு ஆத்மாத்மீயங்களைவேண்டா என்றது -அதுக்கு எல்லாம் ஆச்ரயமான ஆத்மவஸ்துவும் வேண்டா என்கிறாள் –

மேகலையால் குறையில்லா மெலிவுற்ற அகல்அல்குல
போகமகள் புகழ்த்தந்தை விறல்வாணன் புயம்துணித்து
நாகமிசைத் துயில்வான்போல் உலகெல்லாம் நன்கொடுங்க
யோகுஅணைவான் கவராத உடம்பினாற் குறையிலமே.–4-8-9–இப்படி சர்வரையும் ஆதரிக்கிறவன் என்னை ஆதரியான் ஆகில் என் உடம்பைக் கட்டிக் கொண்டு கிடக்கவோ–அவன் பக்தாநாம் என்று இருக்குமா போலே இவளும் அவனது என்று இறே இருப்பது –

ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயே மற்று ஒருபொருளும் இன்றிநீ நின்றமையால்
நோயே மூப்பு இறப்பிறப்புப் பிணியே என்றிவை ஒழியக்
கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டேலே.–4-9-7-கொடிதான லோகம் -சப்தாதி விஷய ப்ரவணமாய் த்வத் விமுகமான லோகம் -த்ருஷ்ட்டி விஷம் போலே காணவே முடிவன் என்கிறார்

கூட்டுதி நின் குரை கழல்கள்; இமையோரும் தொழா வகைசெய்து,
ஆட்டுதி நீ; அரவணையாய்! அடியேனும் அஃது அறிவன்;
வேட்கை எலாம் விடுத்து எனை உன் திருவடியே சுமந்து உழலக்
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே.–4-9-9-உன்னை ஒழிந்த சகல பதார்த்தங்களிலும் உண்டான சங்கத்தை விடுவித்து -நான் எனக்கு என்று இராத படி பண்ணி-

கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி
கண்ட இன்பம், தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப,
கண்ட சதிர் கண்டொழிந்தேன்; அடைந்தேன் உன் திருவடியே.–4-9-10–சம்சாரிகளுக்கு துர் ஜேயமாய் இந்திரிய ஸூ கத்தில் காட்டிலும் பெருத்து பகவத் கைங்கர்ய ஸூ கத்தைப் பற்ற அத்யல்பமான ஆத்ம அனுபவ ஸூகம் இவற்றை-ஒழிந்தேன் -விட்டேன்

(இது முதல் பர உபதேசம் செய்து அருளியவை )-4-ஒரு நாயகம் என்று ராஜ்ய ஸ்வர்க்க ஆத்ம அனுபவ அல்ப அஸ்த்ரத்வ சா வாதிகத்வாதிகளையும் ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
-4-1-1–என்று தொடங்கி- ராஜ்ஜியம் நாம மகா வியாதி ரசிகி த்ச்யோ விநாசன பிரதாரம்வா ஸூதம் வாபி த்யஜந்தி கலு பூமிபா – என்கிற ராஜ்ய ஐஸ்வர்யத்தின் அல்பத்தையும் – குடி மன்னு மின் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள் -என்று
தே தம் புக்த்வா ஸ்வர்க்க லோகம் விசாலம் ஷீணே புண்யே மர்த்த்ய லோகம் விசந்தி–ஸ்ரீ கீதை-9-21 -என்கிற ஸ்வர்க்க அனுபவத்தின் அஸ்த்ரத்வத்தையும் –-இருகலிறப்பு-4-1-10- -என்ற ஆத்ம அனுபவத்தின் சாவதிகத்வத்தையும் – ஆதி சப்த்தாலே -துக்க மிஸ்ரத்வ -துச்சாததத்வ-நிச்சாரத்வங்களை சொல்லுகிறது-

(ஒருநாயகம்‌ என்று ராஜ்ய ஸ்வர்காத்மாநுபவ அல்பாஸ்திரத்வ ஸாவதி கத்வாதிகளையும்‌) ஒரு நாயகத்திலே ‘ஒரு நாயகமாய்‌ ஓட உலகுடனாண்டவர்‌ பெருநாடு காண இம்மையிலே பிச்சை தாம்‌ கொள்வர்‌” (திருவாய்மொழி 4-1-1 )என்று “ராஜ்யம்‌ நாம மஹா வ்யாதி : அசிகத்ஸ்யோ விநாமந: ப்‌ராதரம்‌ வா ஸுதம்‌ வாபி த்யஜந்தி கலு பூமிபா:” என்கிறபடியே ராஜ்யைஸ்வர்யத்தினுடைய அல்பதையையும்‌ ‘குடிமன்னுமின்சுவர்க்கம்‌ எய்தியும்‌ மீள்வர்கள்‌” (திருவாய்மொழி 4-1-9) என்றும்‌ “ஷீணே புண்யே மர்த்யலோகம்‌ விஸந்தி” (கீதை 9-21 என்று ஸ்வர்க்காநுப வத்தினுடைய ௮ஸ்திரத்வத்தையும்‌ “இறுகலிறப்பு” (திருவாய்மொழி 4-1-10) என்று ஆத்மாநுபவத்தினுடைய ஸாவதிகத்வத்தையும்‌-

ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்

திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ.–4-1-1-முன்பு ஸார்வ பவ்மன் என்று சொல்லுமதுவும் போய் நாய் கவர்ந்த காளான் என்று நிரூபகமாய் –-சிதைகிய பானையர்--கண்ட இடம் எல்லாம் பொளிந்து-உபயோக அர்ஹம் இன்றிக்கே பொகட்டு கிடந்தது ஒன்றை எடுக்கும் –-பண்டு பொன் காலத்தில் அல்லது ஜீவியானே-பெரு நாடு காண-முன்பு ராஜாக்கள் தங்களைக் காண அவசரம் பெறாதே நிற்கும் படி இருந்தவர்கள் இருந்ததே குடியாக திரண்டு காணும் படி–தாங்கள் சம்ருத்தராய் வாழ்ந்த தேசத்தில் உள்ளார் எல்லாரும் காணும் படி-இம்மையிலே-தாங்கள் ஜீவித்த ஜென்மத்திலே
பிச்சை தாம் கொள்வர்-முன்பு ராஜாக்களுக்கு ராஜ்யம் வழங்கும் –-இன்று பிக்ஷை தனக்குத் தேட்டமாய் இருக்கும் –-முன்பு ராஜாக்கள் ரத்நாதிகளை பச்சையாகக் கொண்டு வந்தால் அநாதரித்து இருக்குமவனுக்கு பிக்ஷை திட்டமான படி முன்பு ராஜாக்கள் கொண்டு வந்த பச்சையை ஆள் இட்டு இறே வாங்குவது

படி மன்னும் பல்கலன் பற்றோடு அறுத்து,ஐம் புலன்வென்று,
செடி மன்னு காயம் செற்றார்களும், ஆங்கு அவனை இல்லார்
குடி மன்னும் இன் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள்; மீள்வு இல்லை;
கொடி மன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ. –4-1-9-பூமியிலே போலே அன்றிக்கே தீர்க்க காலம் இருக்கலாய் விலக்ஷணமான ஸ்வர்க்கம் பெற விரகு இல்லை –

தே தம் புக்த்வா ஸ்வர்கலோகம் விஸாலம் க்ஷீணே புண்யே மர்த்யலோகம் விஸந்தி
ஏவம் த்ரயீதர்மமநுப்ரபந்நா கதாகதம் காமகாமா லபந்தே
–9-21-விரிவாகிய வானுலகத்திலே இன்புற்றுப் புண்ணியந் தீர்ந்தவுடன் மறுபடி அழிவுடைய மனித உலகத்துக்குத் திரும்புகிறார்கள்.
இப்படி மூன்று வேத முறைகளைத் தொழுவார் விருப்பங்களில் வீழ்ந்து உழல்வார்.

குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம் விட்ட
இறுகல் இறப்பெனும் ஞானிக்கும் அப்பயன் இல்லையேல்,
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்; பின்னும் வீடு இல்லை,
மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில், வீடு அஃதே.–4-1-10-இந்த சங்கோசத்தையும் மோக்ஷமாக நினைத்து இருக்கும் ஞான நிஷ்டனுக்கும்-இறுகல்-பகவத் அனுபவத்தைப் பற்ற தமக்கு சங்குசிதமாய் இருக்கை-இறப்பு -மோக்ஷம்

(தீர்ப்பாரை -சாரம் )-5-ஆடுகள் இறைச்சி கரும் செஞ்சோறு ஆகிற நிந்த்யங்களாலே இளம் தெய்வத்துக்கு இழைத்தாடும் நிஹீநதையையும் த்ரவ்யம் நிந்த்த்ய ஸூராதி தைவத மதி சூத்ரஞ்ச பாஹ்யாகமோ த்ருஷ்டிர் தேவலகாச்ச தேசிக ஜனா திக் திக் திகேஷாம் க்ரமம்-என்கிறபடி-அங்கோர் ஆடும் கள்ளும் –4-6-7- அங்கோர் கள்ளும் இறைச்சியும் –4-6-3- கரும் சோறும் மற்றை செஞ்சோறும்-4-6-4- -என்கிற சூரா மாம்ஸாதி நிந்த்ய பதார்த்தங்களைக் கொண்டு – நீர் அணங்கு ஆடும் இளம் தெய்வம்-4-6-2- -என்கிற சூத்திர தேவதைகளுக்கு களன் இளைத்து-4-6-4- -என்று அவ்வோ தேவதைகள் சந்நிதி பண்ணும் ஸ்தலங்களிலே பலி இட்டு – நீர் அணங்கு ஆடுதல் கீழ்மை-4-6-8- -என்று தைவா விஷ்டராயாடுமதின் தண்மையும்-

(ஆடு கள்ளிறைச்சி கருஞ் செஞ்சோறாகிற நிந்த்‌யங்களாலே இளந் தெய்வத்துக்கு இழைத்தாடும்‌ நிஹீநதையையும்‌) ‘அணங்குக்கருமருந்தென்று அங்கோராடும்‌ கள்ளும்பராய்‌” (திருவாய்மொழி 4-6-7) “அங்கோர்கள்ளுமிறைச்சியும்‌ தூவேன்மின்‌” (திருவாய்மொழி 4-6-3) “கருஞ்சோறும்‌ மற்றைச்‌ செஞ்சோறும்‌” (திருவாய்மொழி 4-6-4) என்று “த்‌ரவ்யம்‌ நிந்த்‌ய ஸூராதி தைவத மதி ஷூத்‌ ரஞ்ச பாஹ்யாக மோ த்‌ருஷ்டிர்‌ தேவலகாஸ்ச தேஸிகஜநா திக்‌ திக்‌தி கேஷாம்‌ க்ரமம்‌ வேதா வேதநாஸ்ச தேஸிக ஜநா ஸத்வஞ்ச வேதாந்தகம்‌ ப்‌ரஹ்ம ஸ்ரீதர மத்ர வேத,விஹிதந்‌ நிஜீவஜீவாதவே” என்கிறபடியே நிந்த்‌ய பதார்த்தங்களைக்‌ கொண்டு “நீரணங்காடும்‌ இளம்‌ தெய்வம்‌” (திருவாய்மொழி 4-6-2) என்று ஷூத்‌ர தேவதைகளுக்கு ‘ ‘கள்ளிழைத்தென்‌ பயன்‌” (திருவாய்மொழி 4-6-4) என்று அவ்வோ தேவதைகள்‌ ஸந்நிதி பண்ணுகிற ஸ்தலங்களிலே யிடுகிறவிது “நீரணங்காடுதல்‌ கீழ்மையே” (திருவாய்மொழி 4-6-8) என்று நிந்த்‌ய பதார்த்தங்களைக்‌ கொண்டு ஷூத்ர தேவதா பஜநம்‌ பண்ணுகை நிஹீநமென்னுமத்தையும்‌,

அணங்குக்கு அருமருந்து என்று,அங்கு ஓர் ஆடும் கள்ளும்பராய்,
துணங்கை எறிந்து,நும் தோள்குலைக் கப்படும் அன்னைமீர்!
உணங்கல் கெடக் கழுதை உதடு ஆட்டம்கண்டு என்பயன்?
வணங்கீர்கள் மாயப் பிரான் தமர் வேதம் வல்லாரையே.–4-6-7—அப்ராக்ருத ஸ்வ பாவையான இவளுக்கு பெறுதற்கு அரிய மருந்து என்று –இவள் வை லக்ஷண்யம் அறிந்திலி கோள் -செய்கிறதின் தண்மையும் அறிந்திலி கோள்-சூரும் அணங்கும் தெய்வப் பெண் பெயர் -என்ன கடவது இறே
அங்கு ஓர் ஆடும் கள்ளும் பராய்,- நிஷித்த த்ரவ்யங்களை பிரார்த்தித்து –பராய்-பரவி -பிரார்த்தித்து

இது காண்மின் அன்னைமீர்! இக்கட்டு விச்சி சொற் கொண்டு நீர்
எதுவானும் செய்து அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்!
மதுவார் துழாய் முடி மாயப்பிரான் கழல் வாழ்த்தினால்
அதுவே இவள் உற்ற நோய்க்கும் அரு மருந்தாகுமே.–4-6-3-துர்த்ரவ்யங்களால் வைஷ்ணவ க்ருஹத்தை தூஷியாதே கொள்ளுங்கோள்-அங்கு என்று தான் காண மாட்டாமையாலே -முகத்தை மாற வைத்து சொல்லுகிறாள்

மருந்து ஆகும் என்று,அங்கு ஓர் மாய வலவை சொற் கொண்டு,நீர்
கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும் களன் இழைத்து என் பயன்?
ஒருங்காகவே உலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட
பெருந்தேவன் பேர் சொல்லகிற்கில், இவளைப் பெறுதிரே.–4-6-4-தாமஸ அன்னமும் -அத்தோடு தோள் தீண்டியான ராஜஸ அன்னமும்-களன் இழைத்து என் பயன்?–அந்த தேவதைகள் வந்து சந்நிதி பண்ணும் நாற்சந்தி முதலான ஸ்தலங்களில் அவற்றுக்குச் சொல்லுகிற நியமங்களோடு இட்டு
என்ன பிரயோஜனம் உண்டு –களன் -களம் 

திசைக்கின்றதே இவள் நோய் இது மிக்க பெரும் தெய்வம்
இசைப்பின்றி நீர் அணங்கு ஆடும் இளம் தெய்வம் அன்று இது
திசைப்பின்றியே சங்கு சக்கரம் என்று இவள் கேட்க நீர்
இசைக்கிற்றீர் ஆகில் நன்றேயில் பெறுமிது காண்மினே –4-6-2-தேவா விஷ்டராய் ஆடுகிற ஷூத்ர தேவதை அடியாக வந்த நோய் அன்று இது

மருந்து ஆகும் என்று,அங்கு ஓர் மாய வலவை சொற் கொண்டு,நீர்
கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும் களன் இழைத்து என் பயன்?
ஒருங்காகவே உலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட
பெருந்தேவன் பேர் சொல்லகிற்கில், இவளைப் பெறுதிரே.–4-6-4-அந்த தேவதைகள் வந்து சந்நிதி பண்ணும் நாற்சந்தி முதலான ஸ்தலங்களில் அவற்றுக்குச் சொல்லுகிற நியமங்களோடு இட்டு
என்ன பிரயோஜனம் உண்டு –களன் -களம் –

வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்
பாதம் பணிந்து,இவள் நோய் இது தீர்த்துக் கொள்ளாது போய்,
ஏதம் பறைந்து,அல்ல செய்து,கள்ளூடு கலாய்த்தூஉய்,
கீத முழவிட்டு, நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே.–4-6-8–நீங்கள் தேவா விஷ்டராய் ஆடுகிற இது -உங்களுக்கு அத்யாவஹம் இது உங்கள் அளவிலே போகிறது இல்லை

(ஒன்றும் தேவும் -சாரம் )-6-பேச நின்ற தேவதா அஜ்ஞான அசக்தி சாபேஷத்வாதிகளையும்
தத குரோதபரீ தேன சம்ரக்த்ன யநேனச வாமாம்குஷ்ட ந காக்ரேனஸ் சின்னம் தஸ்ய சிரோ மயா
–ஸ்ரீ மாத்ஸ்ய புராணம் -என்றும் , யச்மா தன பராதச்ய சிரச் சின்னம் த்வயா மம தச்மச்சாபா சமாயுக்த கபாலீ த்வம் பவிஷ்யசி–ஸ்ரீ மாத்ஸ்ய புராணம் -என்றும்-தத்ர நாராயணா ஸ்ரீ மான் மயா பிஷாம் பிரயாசித—ஸ்ரீ மாத்ஸ்ய புராணம் -என்றும் ,-விஷ்ணு பிரசாததாத் சூஸ்ரோணி கபாலம் தத் சஹச்ரதா –
ஸ்புடிதம் பஹூதா யாதம் ஸ்வப்ன லப்தம் தனம்யதா
–ஸ்ரீ மாத்ஸ்ய புராணம் -என்றும் சொல்லுகிறபடியே – பிரம்மா ருத்ரனால் தலை அறுப்புண்டு -சோச்யனாய் ருத்ரனை சபிக்க -ருத்ரன்
குருசிரச் சேதநத்தாலே பாதகியாய்-பிரம சாபம் தன்னால் போக்கிக் கொள்ள போகாமையாலே – ஸ்ரீய பதியான சர்வேஸ்வரனை அர்த்திக்க -அவன் சாபத்தை போக்கினான் ஆகையாலே –-பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகன் அவனே கபால நன் மோக்கத்து கண்டு கொண்மின் –என்று வேதத்தில் பர சம்சா பரமான வாக்யங்களாலும் –ராஜச தாமச புராணங்களாலும் -பரத்வேன பேசலாம் படி – முட்டுப் பொறுத்து நின்ற -பிரம ருத்ராதிகள் ஆகிற தேவதைகள் உடைய அன்யோன்யம் –தங்களுக்கு வருகிற கிலேசம் அறியாமையும் -அந்த கிலேசம் தங்களால் தவிர்த்துக் கொள்ள
மாட்டாமையும் -அதைத் தவிர்த்து கொடுக்கைக்கு ஈஸ்வரன் வேண்டுகையும் -ஆகிற அஞான அசக்தி சாபேஷ்த்வங்களையும்–ஆதி சப்ததாலே கர்ம வஸ்யதையும்

(பேச நின்ற தேவதா ஜ்ஞாநா முக்தி ஸாபேக்ஷத்வாதி களையும்‌) “பேச நின்ற சிவனுக்கும்‌ பிரமன்‌ தனக்கும்‌ நாயகனவனே கபால நன் மோக்கத்துக்‌ கண்டு கொண்மின்‌’ (திருவாய்மொழி 4-10-4) என்று ப்ரஸம்ஸா பரமான வாக்யங்களாலும்‌ தாமஸ புராணங்களாலும்‌ பேசப்பட்டு அவற்றுக்கு முட்டுப் பொருத்து நின்ற ப்‌ரஹ்ம ருத்ராதிகளுடைய “வாமாங்குஷ்டநகாக்‌ரேண சிந்நம்‌ தஸ்ய ஸிரோ மயா” என்றும்‌ “யஸ்மாத ந பராதஸ்ய ஸிரஸ் சிந்நம்‌ த்வயா மம, தஸ்மாச்சாப ஸமாயுக்த: கபாலீ த்வம்‌ பவிஷ்யஸி த்த்ர நாராயணஸ் ஸ்ரீமாந்‌ மயா பி அசாம்‌ ப்ரயாசித: விஷ்ணு ப்ரஸாதாத்‌ ஸுஸ்ரோணி கபாலம்‌ தத்‌ ஸஹஸ்ரதா ” (மாத்ஸ்ய புராணம் )என்றும்‌ சொல்லுகிற படியே ப்ரஹ்மா ருத்‌ரனாலே தலை யறுப்புண்டு ஸோச்யனாகையாலும்‌ ருத்‌ரன்‌ குருவினுடை ஸிரஸ் சேதநத்தாலே பாதகியாய்‌ ஸர்வேஸ்வரன்‌ பக்கலிலே ஸாபேஷனாக, அந்த ஸர்வேஸ்வரன்‌ அந்த ப்‌ரஹ்மாவினுடைய ஸோகத்தையும்‌ போக்கி ருத்‌ரனுடைய ஸாபத்தையும்‌ போக்கினான்‌ என்கையாலே இவர்கள்‌ அந்யோந்யம்‌ தங்களுக்கு வருகிற க்லேஸ மறியாமையாலும்‌ வந்த க்லேஸம்‌ தாங்கள்‌ தாங்கள்‌ தவிர்த்துக்‌ கொள்ள மாட்டாத அஸக்தியாலும்‌ (இவை போமிடத்தில்‌ ஸர்வேஸ்வரனே போக்க வேண்டும் படியான ஸாபேக்ஷதையாலும்‌ இப்படி மஹாபாரத வசந ஸித்தமாக அஜ்ஞாநாஸக்தி ஸாபேக்ஷங்களையும்‌. ஆதி-ஸப்த த்தாலே அவர்களுடைய கர்ம வஸ்யதையையையும்‌

பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின்

தேச மாமதிள் சூழ்ந்து அழகாய திருக்குருகூர் அதனுள்
ஈசன் பால் ஓர் அவம் பறைதல் என்னாவது இலிங்கியர்க்கே?–4-10-4-கர்ம விதி சேஷமாகையாலே அந்நிய பரமாய் இருக்கிற அர்த்த வாதங்களால் சொல்லலாம் படி முட்டுப் பொறுத்து நிற்கிற ருத்ரனும் –
நீங்கள் ஈஸ்வரன் என்று பேசுகிற ருத்ரனுக்கும் -என்றுமாம் –-பிரமன் தனக்கும் -பிறர்க்கும்-அவனுக்கும் ஜனகனான ப்ரஹ்மாவுக்கும் –ப்ராஹ்மண புத்ரா யஜ்யே ஷ்டாய ஸ்ரேஷ்டாய-ப்ராஹ்மணச் ஸாபி ஸம்பூதச் சிவ-ருத்ரனுடைய ஈச்வரத்வம் பகவத் ப்ரஸாதயத்தம் -மஹா தேவஸ் சர்வமேத மஹாத் மாஹு தவாதமானம் தேவதேவோ பபூவ--இவர் கருத்தால் இவர்களோடு பிறரோடு வாசி இல்லை -இவரே அன்று -சத்துவம் தலை எடுத்தால் அவர்களும் அப்படியே நினைத்து இருப்பது –தவாந்தராத்மா மமசயே சந்யே தேஹி சம்ஜிஞ்சிதா -என்றான் இறே -ருத்ரனை நோக்கி ப்ரஹ்ம-நாயகன் அவனேlஅவன் என்று ஸ்ருதி பிரசித்தி -அநந்ய பரமான நாராயண அனுவாக ப்ரஸித்தியையும் –யா பரஸ்ஸ மஹேஸ்வர -என்கிற அகாரார்த்த பிரசித்தியையும் நினைக்கிறார் –-ஜகத்தாகிற காரியத்துக்கு அநுரூபமான கர்த்ருத்வத்தை கற்பிக்கிலும் இவனே நிர்வாஹகானாக வேணும் என்னவுமாம்

7-இலிங்கத்து விளம்பும் பாஹ்ய குத்ருஷ்டி மத தமோ நிஷ்டததையும் சொல்லி இலிங்கத்திட்ட -4-10-5–என்றும் , விளம்புமாறு சமயமும் -4-10-9–என்கிற பாட்டுகளில் சொல்லுகிற பாஹ்ய குத்ருஷ்டி மதங்கள் ஆவன-யன்மயம் ச ஜகத் சர்வம்—ஸ்ரீ விஷ்ணு புராணம்–1-1-5- என்ற பொதுவிலே பிரசன்னம் பண்ண –
விஷ்னோஸ் சகாசாதுத்பூதம் ஸ்ரீ விஷ்ணு புராணம்-1-1-41–என்று கோல் விழுக்காட்டாலே-உத்தரமாகை அன்றிக்கே – எருமையை ஆனையாக கவி பாடத் தர வேணும் என்பாரைப் போலே – லிங்கம் என்று ஒரு வியக்தியை நிர்தேசித்து இதுக்கு உத்கர்ஷம் சொல்லித் தர வேணும் என்று – கேட்கிறவனும் தமோ பிபூதனாய் கேட்க-சொல்லுகிறவனும் தமோ பிபூதனாய் சொல்ல – இப்படி பிரவர்த்திகமான இலிங்க புரணாதிகள்-குத்ருஷ்டி ஸ்ம்ருதிகளும் – சிலவற்றைச் சொல்லா நின்றால்-தாங்களும் சில தர்க்கங்களைச் சொல்லா நிற்கும் இத்தனை போக்கி -பிராமண அனுகூல தர்க்கம் அல்லாமையாலே –கேவலம் உக்தி சாரமாய் இருக்கிற பாஹ்ய சமயங்கள் ஆறும் என்கிற – ஷபணக பௌத்தாதிகளுடைய ஸ்ம்ருதிகளும் ஆகையாலே – ய வேத பாஹ்யாஸ் ஸ்ம்ருதய யாச்ச காச்ச குத்ருஷ்டைய தாச் சர்வா நிஷ்ப்பலா ப்ரேத்ய தமோநிஷ்டா ஹி தா ஸ்ம்ருதா –மனு ஸ்ம்ருதி-12-95-என்கிறபடியே அவற்றினுடைய தமோ நிஷ்டைதையும் சொல்லி –-ஓடிக் கண்டீர் ஓடியோடி -4-10-7–என்று தொடங்கி-வழி ஏறிக் கண்டீர் -என்று ,-கதாகதம் காமகாமா லபந்தே–ஸ்ரீ கீதை-9-21- -என்கிற படியே ஸ்வர்க்க நரகங்களிலே போவது – கர்ப்பதேற வருவதாய்க் கொண்டு –அநேக ஜன்மங்களில் பிறந்து -தேவதாந்தரங்களை திரிவித கரணங்களாலும் பல பர்யாயம் தத் ஆஸ்ரயணத்தைச் சொல்லுகிற சாஸ்திர மார்க்கத்தாலே ஆஸ்ரயித்து -அவ் ஆஸ்ரய பலமும் கண்டீர்கள்

(இலிங்கத்து விளம்பும்‌ பாஹ்ய குத்‌ருஷ்டி தமோ நிஷ்டதையையும்‌ சொல்லி) ” இலிங்கத்திட்ட புராணத்தீரும்‌” (திருவாய்மொழி 4-10-5) என்றும்‌, “விளம்புமாறு சமயமும்‌” (திருவாய்மொழி 4-10-9) என்றும்‌ சொல்லுகிறவிவை “யந்மயஞ்ச ஐகத் ஸர்வம்‌” (ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌ 1-1-5) என்று ப்ரஸ்நம்‌ பண்ண” விஷ்ணோஸ் ஸகா ஸாதுத்பூதம்‌’ (ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌ 1-1-41) என்று கோல் விழுக்காட்டிலே உத்தரமாகை யன்றிக்கே எருமையை யானையாகக்‌ கவிபாடவேணு மென்பாரைப்‌ போலே லிங்க மென்றொரு வ்யக்தியை நிர்தேஸித்து, இதுக்குத்கர்ஷம்‌ தேடிச்‌ சொல்ல வேணுமென்று கேட்கிறவனும்‌ தமோபிபூதனாய்க்‌ கேட்கச்‌ சொல்லுகிறவர்களும்‌ தமோபிபூதராய்ச்‌ சொல்ல லிங்க விஷயமாக உத்கர்ஷம்‌ தேடியிட்ட குத்‌ருஷ்டி ஸ்ம்ருதிகளென்ன, ப்ரமாணாநுகூலமான தர்க்க மல்லாமையாலே கேவலம்‌ உக்தி ஸாரமான பாஹ்யருடையவும்‌ மதங்களென்ன, இவை “யா வேத பாஹ்யா ஸ்ம்ருதய: யாச்ச காச்ச குத்‌ருஷ்டய: தாஸ் ஸர்வா நிஷ்ப்பலா: ப்ரேத்ய தமோ நிஷ்டாஹி தா: ஸ்ம்ருதா:” (மநுஸ்ம்ருதி 12-95) என்கிறபடியே தமோ நிஷ்டங்களென்னுமிடத்தையும்‌ சொல்லி, (ஓடிக்‌ கண்டீர்‌) “ஓடியோடி வழியேறிக்‌ கண்டீர்‌;” (திருவாய்மொழி 4-10-10) “கதாகதம்‌ காமகாமா லபந்தே” (6. தை 9-21 என்கிறபடியே ஸ்வர்க்க நரகங்களிலே போவது கர்ப்பத்தேற வருவதாய்க்‌ கொண்டு அநேக ஐந்மங்கள்‌ தேவதாந்தரங்களை ஸப்ரகாரமாக த்ரிவித கரணங்களாலும்‌ ஆஸ்ரயித்து அவ்வாஸ்ரயணமும்‌ முடிய நடத்தி தத்‌ பலமும்‌ கண்டிகோள்‌;

இலிங்கத் திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்று நும் தெய்வமுமாகி நின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக் குருகூர் அதனுள்
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே.–4-10-5—லிங்கம் என்று ஒரு வ்யக்தியை விசேஷித்து அதுக்கு உத்கர்ஷம் சொல்லுகையிலே ப்ரவ்ருத்தமான தாமஸ புராண நிஷ்டரும் –-சாத்விக புராணங்களில் காட்டிலும் ராஜஸ தாமஸ புராணங்களுக்கு வாசி இது –
யன்மயஞ்ச ஜகத் ப்ரஹ்மன்-என்று சாமான்யத்தில் ப்ரஸ்னமாக-விஷ்ணோஸ் ஸகாசா துத்ப்பூதம்-என்று கோல் விழுக்காட்டாலே பரிஹாரமாய் இருக்கை இறே சாத்விக புராண லக்ஷணம்
ருஷிக்கு தமஸ் பிரசுர தசையில் தமஸ் அபி பூதன் கேட்கப் பிறந்த தாகையால் அவ்வோ தேவதைகளினுடைய உதகர்ஷத்துக்கு பிரமாணம் ஆக மாட்ட்டாது

விளம்பும் ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும்
வளங் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை
உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக்கொண்டு போகுறிலே.–4-10-9—பேச்சே போக்கி உள்ளீடான அர்த்தம் ஒன்றும் இன்றிக்கே இருக்கிற பாஹ்ய சமயங்கள் ஆறும் -பிரமாணம் அனுகுணம் சுஷுக தர்க்கங்களாலே யுக்தி சாரமேயாய் இருக்கை-

ஓடி ஓடிப் பல பிறப்பும் பிறந்து, மற்றோர் தெய்வம்
பாடி ஆடிப் பணிந்து பல்படி கால் வழி ஏறிக் கண்டீர்;
கூடி வானவர் ஏத்த நின்ற திருக் குருகூரதனுள்
ஆடு புட்கொடி ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே.–4-10-7-கதா கதம் காம காம லபந்தே என்கிறபடியே கர்ம அனுகூலமாக தட்டித் திரிந்த இத்தனை இறே –சகல யோனிகளிலும் அசங்க்யாதமான ஜென்மங்களை பண்ணி –ஆத்மா நித்யன் –காலம் அநாதி -இடைவிடாமல் பிறந்து போந்த இதில் பலித்தது இறே இனி பலிப்பது – தங்களுடைய ஜென்ம பரம்பரைகள் அடைய இவர் வாயாலே கேட்க வேண்டும் படி இறே இவர்களுக்கு அவிசதமாய் இருக்கிற படி

8–கண்டும் தெளிய கில்லீர்-4-10-3- இவனுடைய ஜகன் நிகரணாதி திவ்ய சேஷ்டிதங்களை -சாஸ்த்ரத் த்வாரா பிரத்யஷித்தும் –-இவனே ஆஸ்ரயணீயன் என்று தெளிய மாட்டுகிறீலி கோள் –அறிந்து அறிந்து ஓடுமின்-4-10-6- உங்களை இங்கனே வைத்தது -சதசத் -கர்மகாரிகளான ஜந்துக்கள் அவ்வோ கர்ம
அணுகுண பலங்களை அனுபவிக்கக் கடவதான சாஸ்திர மரியாதை -அழியும் என்று –-அது தான் -மம மாயா துரத்யயா –ஸ்ரீ கீதை-7-14- என்று பிரக்ருதியை இட்டு -அவன் மயக்கி வைத்தபடி காணுங்கோள்-
ஆன பின்பு அது அவன் மாயை என்று அறிந்து –-மா மேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே -என்கையாலே -மாயா தரண உபாயமும் – அவன் திருவடிகளைப் பற்றுகை என்று அறிந்து -அவனை ஆஸ்ரயித்து இந்த மாயையை தப்பப் பாருங்கோள் –-ஆட் செய்வதே உறுவது ஆவது என்று நீள் குடக் கூத்தனுக்கு ஆள் செய்வதே உறுவதாவது -4-10-10–என்கையாலே – நிரதிசய போக்யமான சேஷ்டிதத்தை உடையவனுக்கு அடிமை செய்வதே இவ் ஆத்மாவுக்கு சீரியதும் ஸூசகமும் -என்று இப்படி உபதேசித்து விரக்தி பூர்வகமாக ஆஸ்ரயணத்தை ருசிப்பிக்கிறார் நாலாம் பத்தில் .-அதாவது –
பிரயோஜனாந்தர -தேவதாந்திர -பாஹ்ய குத்ருஷ்டி மதங்களில் – விரக்தி பூர்வகமாக –
ஜகத் காரணத்வாதிகளான பிரமாண உப பத்திகளாலே பகவத் சமாஸ்ரயனத்தை சம்சாரிகளுக்கு ருசிப்பிக்கிறார்
என்கை-

(கண்டும்‌ தெளிய கில்லீர்‌) இவனுடைய ஐகந் நிகரணாதி, திவ்ய சேஷ்டிதங்களை ஸமாஸ்த்ர த்‌வாரா ப்ரத்யக்ஷித்தும்‌ இவனே ஸர்வ ஸமாஸ்ரயணீயனென்று தெளிய மாட்டுகிறிலிகோள்‌. (அறிந்தறிந்தோடுமின்‌) உங்களை யிங்ஙனே வைத்தது ஸதஸத்கர்ம காரிகளான ஜந்துக்கள்‌ அவ்வோ கர்மங்களை அநுபவிக்கக்‌ கடவதான ஸாஸ்த்ர மர்யாதை, அழியுமென்று. “மம மாயா துரத்யயா” (கீதை 7-14) என்கிறபடியே இதுவும்‌ அவனுடைய மாயை என்றறிந்தும்‌, மாமேவ யே ப்ரபத்‌யந்தே மாயாமேதாம்‌ தரந்தி தே” (கீதை 7-14) என்கிறபடியே மாயாதரணோபாயம்‌ அவன்‌ திருவடிகளை யாஸ்ரயிக்கையே என்றறிந்து அவனை யாஸ்ரயித்துத்‌ தப்பப்‌ பாருங்கோள்‌. (ஆட் செய்வதே உறுவதாவதென்று) “நீள்குடக் கூத்தனுக்கா ட் செய்வதே உறுவது” (திருவாய்மொழி 4-10-10)என்று ஆஸ்சர்யமான குண சேஷ்டிதங்களை உடையவனுக்கு அடிமை செய்கையே இவ் வாத்மாவுக்குச்‌ சீரியதும்‌ ஸு-ஸூமும்‌ என்று (விரக்தி பூர்வகமாக ஆஸ்ரயணத்தை ருசிப்பிக்கிறார்‌ நாலாம்‌ பத்தில்‌) ப்ரயோஜநாந்தரங்கள்‌ க்ஷத்‌ர தேவதைகள்‌ பாஹ்ய குத்‌ருஷ்டிகள்‌ என்கிற இவற்றிலுண்டான விரக்தி பூர்வகமாக ஐகத் காரணத்வாதிகளான ப்ரமாணோபபத்திகளாலே பகவத் ஸமாஸ்ரயணத்தை ஸம்ஸாரிகளுக்கு உபதேஸித்து ஸூசிப்பிக்கிறார்‌ என்கிறார்‌ நாலாம் பத்தில் –

பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக்
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர் அதனுள்
பரன் திறமன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே.–4-10-3—ப்ரத்யக்ஷத்திலும் -விசதமாய் இருக்கிற தாயிற்று இவர்க்கு சாஸ்திரம்-இவ்வதி மானுஷ சேஷ்டிதங்களாலே ஆஸ்ரயணீயன் என்று அறியலாய் இருக்க சக்தர் ஆகிறிலி கோள்- இவர்கள் ஞான அஞ்ஞானங்கள் ஒழிய அர்த்தத்தில் மாறாட்டம் இல்லை என்கை –-அவர்களை ஈஸ்வரர்கள் ஆக்குதல் இவனை அநீஸ்வரன் ஆக்குதல் செய்ய ஒண்ணாதாய் இருக்கை –

போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு, உம்மை இன்னே
தேற்றி வைத்தது, எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே;
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர் அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்தறிந்து ஓடுமினே.–4-10-6-மம மாயா துரத்யயா -என்கிறபடியே தான் அகற்ற நினைத்தாரை தன் பக்கல் பிரக்ருதியை இட்டு வஞ்சித்து வைத்த படி கிடி கோள்-அது அறிந்தறிந்து ஓடுமினே.– அத்தை அறிந்து மாயா தரண உபாயமான ப்ரபத்தியைப் பண்ணி சம்சாரத்தை தப்ப பாருங்கோள் –மாமேவயே பிரபத்யந்தே -என்கிறபடியே அவனையே கால் கட்டி அவனை வெல்லப் பாருங்கோள் -என்கிறார் –

தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே
–7-14-இந்த குணமாகிய எனது தேவமாயை கடத்தற்கரியது. என்னையே யாவர் சரணடைவரோ அவர்கள் இந்த மாயையைக் கடக்கின்றார்கள்.

உறுவது ஆவது எத்தேவும் எவ் வுலகங்களும் மற்றும் தன்பால்
மறுவின் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக் குருகூரதனுள்
குறிய மாண் உருவாகிய நீள்குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே.–4-10-10-ஆஸ்ரிதற்கு கண்ணாலே முகந்து அனுபவிக்கலாம் படி தன்னை தாழ விட்ட படி –-உண்டு என்று இட்ட போதொடு இல்லை என்ற போதொடு வாசி இன்றிக்கே முகம் மலர்ந்து போம் படி இரப்பிலே தகணேறினபடி-குடகு கூத்தாடுகிற போது கண்டாரோபாதி பிற்பாடராய் கேட்டார் வாய் கேட்டார்க்கும் சம காலம் போலே பிரியமாம் படி மநோ ஹரியான சேஷ்டிதத்தை யுடையவனுக்கு –-அந்த சேஷ்டிதங்களே அடிமை கொள்ளும் -நீங்கள் இசையும் அத்தனையே வேண்டுவது ஆள் செய்வதே உறுவது ஆவது

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌-15 –குணாநுபவ பாதம் –(218 – 228)-24-தஸ ஸதக பகவத் குண அநுபவ விவரண அதிகரணம் –(219–228)-மூன்றாம் பகுதி-(221) ஸ்ரீ மணவாள மா முனிகள் –

August 1, 2026

1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 234 முடிய (48)

1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-234 (27)

15 –குணாநுபவ பாதம் –218 – 228 —மொத்தம் —11– ஸூரணைகள் –இரண்டு அதிகரணங்கள்–
23 –தஸ ஸதக கத பகவத் குண தஸக அநு குண அநுபவ உபதேச அதிகரணம் —-218—ஒரே ஸூரணை
24-தஸ ஸதக பகவத் குண அநுபவ விவரண அதிகரணம் –219–228—மொத்தம் –10–ஸூரணைகள்

மூன்றாம் பத்தால்–தத் த்ருஷ்ட்வா ததேவ அனுப்ராவிசத் -தைத்ரியம்-என்கிறபடியே – கார்ய பூத சேதன அசேதனங்களை அடைய வியாபித்து -தத்கத தோஷை ரசம் அஸ்ப்ருஷ்டனாக இருக்கையாலே
சர்வ வியாபனான சர்வேஸ்வரன்-கீழில் பத்தில் –-இவர் உபாய அனுகுணமாக நிஷ்கர்ஷித்த மோஷத்துக்கு பலமான ஸ்வ விக்ரக அனுபவத்தை இவரைப் பண்ணுவிக்க – இவர் அனுபவித்து தரித்து -அவ் அனுபவ ஜனித ப்ரீதி பிரகர்ஷத்தால் –சர்வ வித கைங்கர்யங்களும் செய்ய வேண்டும்படியான அபிநிவேசத்தை உடையராய் -தம் அபிநிவேச அனுகுணமாக -அவன் காட்டிக் கொடுத்த அவனுடைய சர்வாத்ம பாவத்தைப் பேசி -அத்தால் வந்த ப்ரீதியின் உகளிப்பை உடையராய் -அந்த பிரீதி அவன் அளவில் பர்யவசியாதே – பாகவத சேஷத்வத்தில் -எல்லை அளவும் சென்று –
அந்த பாகவதர்களுக்கு நிரூபகமான -பகவத் வைலஷண்ய அனுசந்தானத்தாலே – ஒன்றின் வ்ருத்தியை ஓன்று ஆசைப் படும் படி -சேதன சமாதியை அடைந்த – கரண க்ராமமும் தாமும் தனி தனியே அனுபவிக்கும் வேண்டும் பெரு விடாயை உடையராய் –
இதர ஸ்தோத்ரத்துக்கு அனர்ஹா கரணராய்-அவ்வளவும் அன்றிக்கே – பகவத் ஸ்தோத்தரத்துக்கு அர்ஹா கரணருமாய் பகவத் அனுபவத்துக்கு தமக்கு ஒரு பிரதி கதி தொடக்க மானவையும் அற்று நிரதிசய ஆனந்த யுக்தரானவர் –
புண்டரீ காஷனாய் -ஸூரி சேவ்யனானவனை நம்மால் ஆஸ்ரயிக்கப் போமோ -என்று சம்சாரிகள் அஞ்சி கை வாங்காமல் -மேல் விழுந்து ஆஸ்ரயிக்கும் படி –கீழ் இரண்டு பத்தாலும் உபதேசித்த -அவதார சௌலப்யம் – பரத்வ ஸ்தாநீயமாம் படி அர்ச்சாவதார சௌலப்யத்தை உபதேசித்து – அர்ச்சிராதி கதியாலே பரமபதத்தை ப்ராபிக்கும் அவனை ஒழிய இதர ஸ்தோத்ரத்திலே தாழ இழிகை நிஷ் பிரயோஜனம் -ஆன பின்பு நீங்கள் – சகல பல பிரதனுமாய் -சாம்யா பத்தி பிரதனுமான – அவன் விஷயத்திலே வாசிகமான அடிமை செய்யுங்கோள் என்று நிஹீன வ்ருத்தியான இதர சேவையை நிவர்ப்பித்து – தம்முடைய விருத்தியான வாசிக கைங்கர்யத்தில் மூட்டுகிறார் என்கிறார் ..

மூன்றாம்‌ பத்தாலே “தத்‌ ஸ்ருஷ்ட்வா ததே வாநுப்ராவிஸத்‌” (தைத்திரீய உபநிஷத்‌ )என்கிறபடியே கார்யமான சேதநாசேதநங்களை யடைய வியாபித்து தத் கத தோஷை: அஸம்ஸ்ப்ருஷ்டனாய்‌ இருக்கையாலே ஸர்வ வ்யாபகனான ஸர்வேஸ்வரன்‌ கீழ்ப்‌ பத்தாலே இவர்‌ உபயாநுகுணமாக நிஷ்கர்ஷித்த மோக்ஷத்துக்கு பலமான தன்னுடைய விக்‌ரஹாநுபவத்தை இவரைப்‌ பண்ணுவிப்பிக்க இவரும்‌ அநுபவித்து தரித்து அநுபவ ஜநித ப்ரீதி ப்ரகர்ஷத்தாலே ஸர்வ வித, கைங்கர்யங்களும்‌ செய்ய வேண்டும்படியான அபி நிவேஸத்தை யுடையராய்த்‌ தம்முடைய அபிநிவேஸ அநு குணமாக அவன்‌ காட்டிக் கொடுத்த அவனுடைய ஸர்வாத்ம பாவத்தைப்‌ பேசி அத்தாலே வந்த ப்ரீதியை யுடையராய்‌ அது அவனளவில்‌ பர்யவஸியாதே பாகவத ஸேஷத்வத்தில்‌ எல்லை யளவும்‌ சென்று அந்த பாகவதர்களுக்கு நிரூபகமான பகவத்‌ வைலக்ஷண்யா நுஸந்தாநத்‌ தாலே தாமும்‌ தம்முடைய கரண க்‌ராமங்களும்‌ சேதந ஸமாதியாலே அநுபவிக்க வேண்டும் படியான பெரு விடாயை உடையராய்‌ இதர ஸ்தோத்ரத்துக்கு அநர்ஹ கரணராய்‌ அவ்வளவே யன்றிக்கே பகவத் ஸ்தோத்ரத்துக்கு அர்ஹ கரணராய்‌ பகவதநுப வத்துக்குத்‌ தமக்கொரு ப்ரதிஹதி தொடக்கமானவையுமற்று நிரதிஸய ஆநந்த யுக்தரானவர்‌ புண்டரீகாக்ஷனாய்‌ ஸுரி ஸேவ்யனானவவனை நம்மாலே ஆஸ்ரயிக்கப் போமோ என்று ஸம்ஸாரிகள்‌ அஞ்சிக்‌ கை வாங்காதே மேல் விழுந்து ஆஸ்ரயிக்கும்படி கீழிரண்டு பத்தாலும்‌ உபதேஸித்த அவதார ஸெளலப்‌யம்‌ பரத்வ ஸ்தாநீயமாம்படி அர்ச்சாவதார ஸெளலப்‌யத்தை யுமுபதேஸித்து அர்ச்சிராதி மார்க்கத்தாலே தேஸ விஸேஷ ப்ராப்தியைப்‌ பண்ணுவிக்குமவனை யொழிய இதர ஸ்தோத்ரத்திலே தாழ விழிகை நிஷ் ப்ரயோஜநம்‌; ஆன பின்பு நீங்கள்‌ ஸகல பல ப்ரதனுமாய்‌ ஸாம்யாபத்தியைக்‌ கொடுப்பானுமா யிருக்கிற அவன்‌ விஷயத்திலே வாசிகமான வடிமை செய்யுங்கோளென்று நிஹீநதமமான இதர ஸேவையை நிவர்த்திப்பித்துத்‌ தம்முடைய வ்ருத்தியான வாசிக கைங்கர்யத்திலே மூட்டுகிறார்‌ என்கிறார் –

(1)-முழுதுமாய் எங்கணும் ஒழிவற அருவாகி நின்று தோய்விலனாம் சர்வ வியாபகன் தீர்ந்த அடியார்களை தாளிணைக் கீழ் கொள்ளும் தன் படிக்கும் (2-)நீ தந்த மா மாயப் புணர்வினை பிறப்பு அழுந்தி அலமருகின்றேன் வேரற வரிந்து எந்நாள் எங்கு வந்து தலைப் பெய்வன் என்று கழித்து புகும் தம் காதலுக்கும் சத்ருசமாக கண்டு கொள் என்னும் (3)-ஊனமில் மோஷ பலமான முடிச் சோதியில் அனுபவத்தாலே நித்ய வஸ்து நீடு பெற்று அவச்சேதம் அற்ற அடிமை செய்ய வேண்டும் படி சர்வ ஆத்ம பாவத்தைப் புகழ்ந்து (4)-சொல்லிப் பாடி ஏத்திப் பிதற்றி எழுந்தும் பரந்தும் துள்ளிக் குனித்து தடு குட்டக் கும்பிடு நட்டமிட்டு சிரிக்கக் குழைந்து நையும் ப்ரீதி உகள தம் அடியார் என்ன உடன் கூடும் சாத்யம் வளர (5-)பை கொள் பாம்பு போலே இந்திரிய வ்ருத்தி நியம மற பாடவந்த கவி அன்றிக்கே படைத்தான் ஸ்லோக க்ருத்தாய்-(6 )-குறை முட்டுப் பரி விடர் துயர் துன்பம் அல்லல் துக்கம் தளர்வு கேடுகள் இன்றி அம்ருத ஆனந்த மக்நரானவர் செய்ய தாமரைக் கண்ணன் அமரர் குல முதல் என்று அஞ்சாதபடி எளிவரும் இணைவனாம் என்றவை பரத்வமாம் படி (7-)அவனாகும் சௌலப்ய காஷ்டையை காட்டி வழியைத் தருமவன் நிற்க இழிய கருதுவது என்னாவது வேண்டிற்று எல்லாம் தரும் –தன்னாகவே கொள்ளும் கவி சொல்ல வம்மின் என்று (8 )-முக்த ஐஸ் வர்யத்தை முன்னிட்டு ஸ்வ விருத்தியை மாற்றி ஸ்வ விருத்தியில் மூட்டுகிறார் மூன்றாம் பத்தில் 

1-முழுதுமாய் எங்கணும் ஒழிவற அருவாகி நின்று தோய்விலனாம் சர்வ வியாபகன்–அதாவது
முழுதுமாய் முழுதி யன்றாய்–3-1-8-என்றும்-ஏழ்ச்சி கேடு இன்றி எங்கணும் நிறைந்த எந்தாய் -3-2-4–என்றும் ,-எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்து நின்ற -3-2-7–என்றும் ,-அளவுடை ஐம்புலன்கள் அறியா வகையால் அருவாகி நிற்கும் –3-10-10- யாவையும் யவரும் தானாய் அவரவர் சமயம் தோறும் தோய்விலன் உணர்வின் மூர்த்தி-3-4-10- -என்றும் தேச கால வஸ்துக்களால் பர்ச்சேதிக்க ஒண்ணாதபடி கார்யபூத சகல சேதன அசேதனங்களையும் வியாபித்து –-அநஸ்நன் அந்யோ அபிசாக சீதி-(இவற்றில் வேறான பர ப்ரஹ்மம் கர்மபலன்களை அனுபவிக்காமல் அதிகமாகப் பிரகாசிக்கிறான் )கடோபநிஷத் -என்கிறபடியே-தத்கத தோஷை ரச அஸ்ம்ப்ருஷ்டனாய் இருக்கையாலே வியாபகனான சர்வேஸ்வரன்

முழுதுமாயெங்கணு மொழிவற அருவாகி நின்று தோய்விலனாம்‌ ஸர்வ வ்யாபகன்‌) முழுதுமாய்‌ முழுதியன்றாய் ‘(திருவாய்மொழி 3-1-8) ‘ஏழ்ச்சிக் கேடின்றி எங்கணும்‌ நிறைந்த வெந்தாய்‌ திருவாய்மொழி 3-2-4) ” எஞ்ஞான்று மெங்கும்‌ ஒழிவற நிறைந்து நின்ற மெய்ஞ்ஞானச்‌ சோதி” (திருவாய்மொழி 3-2-7) “அளவுடை ஐம்புலன்களறியா வகையால்‌ அருவாள்‌ நிற்கும்‌ யாவையும்‌ யாவரும்‌ தானாய்‌ அவரவர்‌ சமயந்தோறும்‌ தோய்விலன்‌ (திருவாய்மொழி 3-10-10) என்று தேஸ கால வஸ்துக்களாலே பரிச்சேதிக்க வொண்ணாதபடி கார்யமான ஸகல சேதநாசேதநங்களையும்‌ வ்யாபித்து “அநஸ்நந்நந்யோ அபி சாகஸீதி” (கடோபநிஷத்‌ என்கிறபடியே தத்கத தோஷைர ஸம் ஸ்ப்ருஷ்டனாய்‌ இப்படி ஸர்வ வ்யாபகனான ஸர்வேஸ்வரன்‌ –

மாசூணாச் சுடருடம்பாய் மலராது குவியாது
மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய்
மாசூணா வான் கோலத்தமரர் கோன் வழிப்பட்டால்
மாசூணா வுனபாதம் மலர்ச்சோதி மழுங்காதே–3-1-8—முழுதுமாய் –ஸமஸ்த குண விபத்திகளையும் பிரகாரமாக உடையையாய்க் கொண்டு-முழுதியன்றாய்-அவை எல்லாம் உன் பக்கலிலே வர்த்திக்கும் படி ஆஸ்ரயமானவனே

சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளியாகி என்றும்
ஏழ்ச்சிக் கேடு இன்றி எங்கணும் நிறைந்த வெந்தாய்
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ்
வாழ்ச்சி யான் சேரும் வகையருளாய் வந்தே –3-2-4—ஏழ்ச்சி -விகாசம் –கேடு-குறைவு -சங்கோசம் -/சங்கோச விகாச ரஹிதமான ஞானம் -என்கை –எங்கணும்–எல்லா பதார்த்தங்களிலும்-கண் -இடம் –
நிறைந்த வெந்தாய்--ஜாதி -வியக்தி தோறும் -பரிசாமாபியா வர்த்திக்குமா போலே-எந்தாய் -ஒருவனைப் பிடிக்க ஊரை வளைப்பாரைப் போலே வியாப்தியும் என்னை உத்தேசித்து என்கை –
உன் பக்கலிலே அகப்படுத்திக் கொள்ளுகைக்கு விரகு தேடி உணர்ந்து என்னை வியாபித்துக் கொண்டு நிற்கச் செய்தேயும் விஷய பிரவணனாய் தப்பினேன் என்கை

எஞ்ஞான்று நாம் இருந்து இருந்து இரங்கி நெஞ்சே
மெய்ஞ்ஞானம் இன்றி வினையியல் பிறப்பு அழுந்தி
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்து நின்ற
மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே
–3-2-7–இப்படி நாம் இருந்தாலும் அவன் அஸந்நிஹிதன் ஆனால் அஞ்ஞானாதல் ஆகப் பெற்றோம் ஆகிலுமாம் இறே-சர்வ காலமும் சகல பதார்த்தங்களிலும் குறைவற வியாபித்து நிற்குமவனாய் விசதமமான ஞானத்தை உடைய கிருஷ்ணனை –நினைவுக்கு வாய்த்தலையிலே புகுந்து நம் படியை உள்ளபடி அறியுமவன் ஆனவனை-கண்ணனை -மேவுதுமே-ஸூ லபன் என்றால் அவனைக் கிட்டப் போமோ -என்னுதல்–நிர்வாஹகன் என்றால் அவனைக் கிட்டலாமோ என்னுதல் –யதா பாடம் அன்வயமாதல் -எஞ்ஞான்றும் மேவுதல்-என்னுதல் – ஏகோ அஹம் அஸ்மீதிசம் அந்நிய சேத்வம் நஹ்ருச்சயம் வேத்ஸி முனிம் புராணம் யோ வேதிதா கர்மண-பாப கஸ்ய தஸ் யாந்தி கேத்வம் வ்ருஜி நம் கரோஷி 

தளர்வு இன்றியே என்றும் எங்கும் பரந்த தனிமுதல் ஞானம் ஒன்றாய்
அளவுடை ஐம்புலன்கள் அறியா வகையால் அருவாகி நிற்கும்
வளர் ஒளி ஈசனை மூர்த்தியைப் பூதங்கள் ஐந்தை இருசுடரைக்
கிளர் ஒளி மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடு இலனே.–3-10-10-அளவுபட்ட இந்திரியங்கள் -பரிச்சின்ன விஷய க்ராஹங்கள் இறே -அவற்றுக்கு அறிய ஒண்ணாத படி அவிஷயமாக நிற்கும்

யாவையும் எவரும் தானாய் அவர் அவர் சமயந் தோறும்
தோய்வு இலன்;
புலன் ஐந்துக்கும் சொலப்படான்; உணர்வின் மூர்த்தி;
ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆதும் ஓர் பற்று இலாத
பாவனை அதனைக் கூடில், அவனையும் கூட லாமே.–3-4-10-சகல சேதன அசேதனங்களுக்கு அந்தராத்மாவாய் அவற்றினுடைய துக்கித்தவ பரிணாமித்வங்கள் தட்டாத படி யாய் இருக்கிறவன் –
சமயந் தோறும்-தோய்வு இலன்; -அசித்துக்கு பரிணாமித்வமும்-தத் ஸம்ஸ்ருஷ்ட சேதனனுக்கு துக்கித் வாதிகளும் வியவஸ்திதம் என்கை

தீர்ந்த அடியார்களைத் தாளிணைக் கீழ் கொள்ளும் தன் படிக்கும் –-அதாவது தீர்ந்த அடியவர் தம்மைத் திருத்திப் பணி கொள்ள வல்ல-3-5-11 -என்று பிராப்ய பிராககங்கள் இரண்டும் தானேயாக ஆஸ்ரயித்த ஆஸ்ரிதரை – சன்ம சன்மாந்தரம் காத்து அடியார்களைக் கொண்டு போய்-தன்மை பெறுத்தி தன் தாளிணைக் கீழ் கொள்ளும் அப்பன் -3-10-10–என்று ஜன்ம பரம்பரைகளில் புகாதபடி ரஷித்து ஆரப்த சரீர அவசானத்திலே – அர்ச்சிராதி மார்க்கத்தில் -தேச விசேஷத்தில் கொண்டு போய் –-ஸ்வ ஸ்வரூப ப்ராப்தியைப் பண்ணிக் கொடுத்து -பாத உபதானத்தோபாதி – தன் திருவடிகளின் கீழ் இட்டுக் கொள்ளும் சேஷியான தன்னுடைய ஒவ்தார்யத்துக்கும்

தீர்ந்த வடியார்களைத்‌ தாளிணைக் கீழ்க்‌ கொள்ளும்‌ தன்படிக்கும்‌) “தீர்ந்த வடியவர்‌ தம்மைத்‌ திருத்திப் பணி கொள்ள வல்ல ஆர்ந்த புகழச்சுகனை” (திருவாய்மொழி 3-5-11) என்று தன்னையே உபாயோபேயங்களென்று நிஷ்கர்ஷித்தவர்களை “சன்ம சன்மாந்தரம்‌ காத்தடியார்களைக்‌ கொண்டு போய்த்‌ தன்மை பெறுத்தித்‌ தன்‌ தாளிணைக் கீழ்க்‌ கொள்ளுமப்பனை” (திருவாய்மொழி 3-7-7) என்று இனியொரு ஐந்ம பரம்பரைகளிலே போகாதபடி ரக்ஷித்து ஆரப்‌த ஸரீராவஸாநத்திலே அர்ச்சிராதி மார்க்கத்தாலே தேஸ விஸேஷத்திலே கொடு போய்‌ ஸ்வ ஸ்வரூப ப்ராப்தியைப்‌ பண்ணிக்‌ கொடுத்து தனக்குப்‌ பாதோபதாநமாக விட்டுக்‌ கொள்ளும்படியான ஸேஷியான தன்னுடைய ஒளதார்யத்துக்கும்‌ 

தீர்ந்த அடியவர் தம்மைத் திருத்திப் பணிகொள்ள வல்ல
ஆர்த்த புகழ்அச் சுதனை
அமரர் பிரானைஎம் மானை
வாய்ந்த வளவயல் சூழ்தண் வளம் குரு கூர்ச்சட கோபன்
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப் பத்தும் அரு வினை நீறு செய்யுமே.–3-5-11-அவனே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று அத்யாவசித்த ஆஸ்ரிதரை பிரதிபந்தகங்களைப் போக்கி அடிமை கொள்ளும் சக்தியை உடையவன் –அஹம் சர்வம் கரிஷ்யாமி –என்று இருப்பாரை-க்ரியதாம் இதி மாம் வத-என்று அடிமை கொள்ளும் என்றுமாம்-ஆர்த்த புகழ் அச்சுதனை-மிக்க புகழ் -அடிமையில் நழுவ விட்டுக் கொடாதவனை

சன்ம சன்மாந்தரம் காத்து அடியார்களைக் கொண்டு போய்த்
தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ்க் கொள்ளும் அப்பனைத்

தொன்மை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக் கொள்கின்ற நம்பரே.–3-7-7—ஜென்ம பரம்பரைகளில் புகாதபடி பரிஹரித்து-அடியார்களைக்-தன் பக்கலில் சர்வ பரந்யாசம் பண்ணி இருக்குமவர்களைக் கொண்டு போய்த்-தன்மை பெறுத்தித் –ஒரு நாடீ விசேஷத்தாலே புறப்படுத்தி அர்ச்சிராதி மார்க்கத்தாலே ஒரு தேச விசேஷத்திலே கொண்டு போய்-ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யதே-என்று ஸ்வ ஸ்வரூபத்தைக் கொடுத்து-தன் தாளிணைக் கீழ்க் கொள்ளும் அப்பனைத்-சர்வாதிகனான தனக்கு சரண உபாதானத்தோ பாதி யாகக் கொள்ளும் நிருபாதிக சேஷியை

2-நீ தந்த மா மாயப் புணர்வினைப் பிறப்பு அழுந்தி அலமருகின்றேன் வேரற வரிந்து எந்நாள் எங்கு வந்து தலைப் பெய்வன் என்று கழித்து புகும் தம் காதலுக்கும்-அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வன் –3-2-1–பல் மாயப் பல்பிறவியில் படிகின்ற யான் –3-2-2–பொல்லா ஆக்கையின் புணர்வினை –3-2-3-வினை யியல் பிறப்பு அழுந்தி –3-2-7–கொடுவினை தூற்றுள் நின்று பாவியேன் பலகாலம் வழிதிகைத்து அலமருகின்றேன்-3-2-9- என்று சிருஷ்டி காலத்தில் உன்னைப் பெறுகைக்கு உடலாக நீ தந்த சரீரத்தைக் கொண்டு உன்னை நான் பெறப் பெறாதே – நான் அதன் வழியே போய் அனர்த்தத்தை சூழ்த்துக் கொண்டு -குண த்ரய பேதத்தால் -பலவகைப் பட்டு – துரத்யயையான பிரகிருதி கார்யமான தேவாதி தேஹங்களில் அவஹாகித்து – ஹேயமான சரீரத்துக்கு அடியாய் ஒன்றோடு ஓன்று பிணைந்து இருக்கிற கர்மம் அடியாக மீண்டும் பாபத்திலே கொண்டு போய் மூட்டக் கடவதான ஜன்ம பரம்பரைகளில் அழுந்தி – என்னால் அடி அறுக்கவும் அடி காண ஒண்ணாதே –புகுர வழியும் தெரியும் ஒழிய – புறப்பட வழி தெரியாத -பாபம் ஆகிற மிடைந்த தூற்றிலே அகப்பட்டு நின்று – உன்னை பிராபிக்கைக்கு ஈடான வழி காணாதே -கூப்பிட்டு அலமாவா நின்றேன் –

(நீ தந்த மாமாயப்‌ புணர்வினைப்‌ பிறப்பழுந்தி அலமருகின்றேன்‌ வேரற வரிந்து எந்நாளெங்கு வந்து தலைப் பெய்வன்‌ என்று கழித்துப்‌ புகும்‌ தம்‌ காதலுக்கும்‌) “அந்நாள்‌ நீ தந்த ஆக்கையின்‌ வழி யுழல்வேன்‌” (திருவாய்மொழி 3-2-1 “பன்மா மாயப்‌ பல் பிறவியில்‌ படிகின்ற யான்‌” (திருவாய்மொழி 3-2-2) “பொல்லா ஆக்கையின்‌ புணர்வினை அறுக்கலறா” (திருவாய்மொழி 3-2-3) “வினையியல்‌ பிறப்பழுந்தி கொடுவினைத்‌ தூற்றுள்‌ நின்று பாவியேன்‌ பல காலம்‌ வழிதிகைத் தலமருகின்றேன்‌” (திருவாய்மொழி 3-2-7) என்று ஸ்ருஷ்டி காலத்திலே உன்னை வழிபடுகைக் குடலாக நீ ஸரீரத்தைக்‌ கொடுக்க நான்‌ அதின் வழியே போய்‌ அநர்த்தத்தைச்‌ சூழ்த்துக்‌ கொண்டு ப்ரக்ருதி கார்யமான தேவ மநுஷ்யாதி, ஸரீரங்களிலே அவகாஹித்து ஹேயமான ஸரீரத்துக்கடியாய்‌ ஒன்றோடொன்று பிணைந்திருக்கிற கர்மமடியாக மீண்டும்‌ பாபத்திலே கொடு போய்‌ மூட்டக் கடவதான ஐந்ம பரம்பரைகளிலே யழுந்தி என்னால்‌ அடி யறுக்க வொண்ணாதே அடி காண வொண்ணாதே புகுர வழி தெரியுமத்தனை யொழிய புறப்பட வழி தெரியாதிருப்பதா யிருக்கிற பாபமாகிற மிடைந்த தூற்றிலே கிடந்து உன்னை ப்ராபிக்கைக்கீடான வழி காணாதே கூப்பிட்டு அலமருவா நின்றேன்‌;

முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் –3-2-1—அந்நாள் –அசித் விசிஷ்டானாய் சோஸ்ய தசா பன்னனான நாள்-நீ –என்று இழவு உள்ளதாய் முகம் காட்டின நீ-தந்த – திருவடிகளில் தலை சாய்த்து உன்னைப் பெறுகைக்கு உறுப்பாம் உடம்பை அபகரித்து –துர்லபோ மானுஷோ தேஹ -மானுஷ்யம் ப்ராப்ய -தன்னைப் பெறுகைக்கு உபகரணமும் தானே தர வேண்டி இருக்கிற படி-ஆக்கையின் வழி உழல்வேன்-விஷய ப்ராவண்யத்தை விளைத்துக் கொண்டு சரீரத்தின் வழியே போய் அநர்த்தப் பட்டேன் –உழல்வேன்-சுழி தோறும் முழுகா நின்றேன் -கரை ஏற கொடுத்த தெப்பத்தைக் கொண்டு அதன் வழியே போய் கடலிலே புகுவாரைப் போலே உடம்பின் வழியே போய் சம்சார ஆர்ணவத்திலே புக்கு நசிக்கை-

வன் மா வையம் அளந்த எம் வாமனா நின்
பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்
தொன் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ –3-2-2–நின்-பன் மா மாயம் –மம மாயா என்று உன்னுடையதாய் -தான் ஒன்றாய் இருக்க குண த்ரய பேதத்தை உடைத்தாய் துரத்யையாய் இருந்துள்ள ப்ரக்ருதி –நீ முடித்த முடியை நான் அவிழ்க்கவோ -ஸூ கத்திலே சங்கிப்பிப்பது -பிரவ்ருத்தியிலே மூட்டுவது–உணர்த்தி அறப் பண்ணுவது -ஆகிற குணங்களை தப்பவோ –-பல் பிறவியில் –பிரகிருதி சம்பந்த ப்ரயுக்தமான தேவாதி பேதங்கள்-படிகின்ற யான்-விழுகின்ற -என்னாத படி கின்ற -என்கிறது இவ்வனர்த்தத்திலே வெறுப்பு இன்றிக்கே பொருந்தி இருக்கை –வர்த்தமான நிர்த்தேசத்தால் இன்னம் தரை கண்டது இல்லை என்கை –

கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர்
யெல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்
பொல்லா வாக்கையின் புணர்வினை யறுக்கலறா
சொல்லாய் யான் உன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே –3-2-3—பொல்லா வாக்கையின் –-துரியோதனன் அளவன்று-உடம்பின் ப்ராதிகூல்யம் -அவன் பிரதிகூலனாயத் தோற்றினான்–இது அனுகூலம் போலே இருந்து யாயிற்று பிராதி கூல்யம் பண்ணுவது-எல்லா அநர்த்தமும் பண்ணினாலும் பரிணதாரானார் -பொல்லாதாகாச் செய்தாய் -என்னும் இத்தனை இறே-பகவத் ஸ்வரூப திரோதா நகரீம்-இத்யாதி
புணர்வினை யறுக்கலறா-புணர்வினை– சரீர சம்பத்துக்கு அடியான கர்மம் என்னுதல் -சரீர சம்பந்தம் என்னுதல்-அறுக்க என்றால் போகாது -ராவண சிரஸ்ஸைப் போலே முளையா நிற்கும் என்கை –

எஞ்ஞான்று நாம் இருந்து இருந்து இரங்கி நெஞ்சே
மெய்ஞ்ஞானம் இன்றி வினையியல் பிறப்பு அழுந்தி
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்து நின்ற
மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே –3-2-7-வினையியல் பிறப்பு அழுந்தி-அவித்யாதிகளை பிறப்பிக்கும் சம்சாரத்தில் மூழ்கி இருக்கிற நாம் –அவித்யாதிகள் அடியான பிறப்பில் அழுந்தி இருக்கிற நாம் என்றுமாம் –

கூவிக் கூவிக் கொடு வினைத் தூற்றுள் நின்று
பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன்

மேவி அன்று ஆ நிரை காத்தவன் உலகம் எல்லாம்
தாவிய வம்மானை எங்கினித் தலைப் பெய்வனே –3-2-9–கொடிதான பாபத்தை விளைக்க வற்றாய் புக்க இடமும் புறப்பட்ட விடமும் தெரியாததான சம்சாரத்திலே யாயிற்று நிற்கிறது-பாவியேன் – ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகள் ஸ்ரீ வால்மீகி பகவான் ஆஸ்ரம பரிசரத்திலே கூப்பிட்டால் போலே சிலர் ஐயோ என்ன கூப்பிடுகிறேனோ -என்னுதல் –உன்னைக் கிட்ட விரகு அறியாதே அலமருகைக்கு அடியான பாபத்தைப் பண்ணினேன் -என்னுதல் –-பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன்–நெடும் காலம் உன்னைப் பெறும் விரகு அறியாதே அலமரா நின்றேன்

வினைகளை வேரற பாய்ந்து –-தொன் மா வல் வினைத் தொடர்களை முதலரிந்து –3-2-2–என்று –
அநாதியாய் -அபரிச்சேதமாய் -ஸ்வ யத்னம் நிவர்த்யம் அல்லாதபடி -அதி பிரபலமான
பாபங்களினுடைய அனுபந்தங்களை மறு கிளை வாராமல் வேரற்று போம் படி ஊசி
வேரோடே அறுத்து பொகட்டு – எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவன் –3-2-1-
எங்கு வந்து அனுகிற்பன் –3-2-5- எங்கு இனி தலைப் பெய்வன் -3-2-9–என்று
நான் உன்னை கிட்டுவதற்கு நாள் அறுதி இட்டு தரவேணும் – நான் உன்னை எங்கே வந்து கிட்டக் கடவேன் – இனிக் கிட்டுகை என்ற பொருள் உண்டோ -என்று சரீர சம்பந்தத்துக்கு நொந்து – அதிலுண்டான அருசியோடே – காயம் கழித்து அவன் தாளிணைக் கீழ் புகும் காதல் 3-9-8–என்று பகவத் குண அனுபவத்தோடு -கால ஷேபத்தைப் பண்ணி -சரீரத்தை விட்டு – அவன் திருவடி களின் கீழ் புக வேணும் என்னும்படியான சேஷ பூதரான தம்முடைய ஆசைக்கும் – சத்ருசமாக கண்டு கொள் என்னும் இப்படியான இருவர் படிக்கும் தகுதியாக –
வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் என்று வீடும் தரும் நின்று நின்றே-3-9-9- -என்று ஈஸ்வரன் காட்டிக் கொடுக்கிற

வினைகளை வேரறப்‌ பாய்ந்து” (திருவாய்மொழி 3-2-1) “தொன்மா வல்வினைத்‌ தொடர்களை முதலரிந்து” (திருவாய்மொழி 3-2-2) என்று அநாதியாய்‌ மஹத்தாய்‌ என்னாலே போக்கிக்‌ கொள்ள வொண்ணாதபடி வலிதாய்‌ ஸ்ருங்கலாஞ்சலமா(?) யிருக்கிற பாப ஸமூஹங்களை உச்சி வேரோடே யரிந்து பொகட்டு “எந்நாள்‌ யானுன்னை இனி வந்து கூடுவனே–திருவாய்மொழி 3-2-1 “எங்கு வந்து அணுகிற்பனே (திருவாய்மொழி 3-2-5) “ எங்கினித்‌ தலைப் பெய்வனே (திருவாய்மொழி 3-2-9) என்று நான்‌ உன்னைக்‌ கிட்டுவதொரு நாள்‌ அறுதியிட்டுத் தர வேணும்‌ நான்‌ உன்னை எங்கே வந்து கிட்டக்‌ கடவேன்‌ இட்டுகை என்று ஒரு பொருளுண்டோ என்று ஸரீர ஸம்பந்தத்துக்கு நொந்து அதிலுண்டான அருசியோடே “காயம்‌ கழித்து அவன்‌ தாளிணைக் கீழ்ப்‌ புகும்‌ காதலன்‌‘ (திருவாய்மொழி 3-9-8) என்று பகவத் குணாநுபவத்தோடே கால க்ஷேபத்தைப்‌ பண்ணி ஸுரீரத்தை விட்டு அவன்‌ திருவடிகளிலே புக வேணும்‌ என்னும்படியான ஸேஷ பூதரான தம்முடைய ஆசைக்கு (ஸத்‌ருஸமாகக்‌ கண்டு கொள்‌ என்னும்‌) உபய ஸ்வரூபத்துக்கும்‌ அநுகுணமாக “வானவர்‌ நாட்டையும்‌ நீ கண்டு கொள்‌” (திருவாய்மொழி 3-9-9) என்று ஈஸ்வரன்‌ காட்டிக்‌ கொடுக்கிற-

முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் –3-2-1-வினைகளை–சரீர சம்பந்தத்துக்கு அடியானை பாபங்களை-வேர் அறப் பாய்ந்து--சவாசனமாகப் போக்கி –பாய்ந்து என்று சினம் தோற்றுகிறது-
ஒரு சர்வ சக்தி செய்யுமத்தை நான் செய்யவோ –

வன் மா வையம் அளந்த எம் வாமனா நின்
பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்
தொன் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ –3-2-2–தொன் மா வல்வினைத் தொடர்களை –
அநாதியாய் அநேகமாய் சர்வ சக்திக்கும் நெஞ்சு உளுக்க வேண்டும் படி பிரபலமான பாவத் தொடர்ச்சிகளை ஒன்றோடு ஓன்று அனுபந்தித்து இருக்கை –-முதல் அரிந்து--வாசனையோடு போக்கி

வந்தாய் போலே வந்து மென் மனத்தினை நீ
சிந்தாமல் செய்யா யிதுவே யிதுவாகில்
கொந்தார் காயாவின் கொழு மலர்த் திரு நிறத்த
எந்தாய் யானுன்னை எங்கு வந்து அணுகிற்பனே–3-2-5–உன்னைக் கிட்டுக்கைக்கும் கைம்முதல் இல்லாத நான் –தஸ்யைக்ஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம் -என்று நீயே அனுபவிப்பிக்கும் உன்னை -எங்கே கிட்டப் போகிறேன் –

வேயின் மலிபுரை தோளி பின்னைக்கு மணாளனை
ஆய பெரும்புகழ் எல்லை இலாதன பாடிப்போய்க்
காயம் கழித்து,அவன் தாளிணைக் கீழ்ப்புகும் காதலன்,
மாய மனிசரை என்சொல வல்லேன் என்வாய் கொண்டே?–3-9-8—இக் குணங்களை ப்ரீதி பிரேரிதனாய் சொல்லி இதுவே யாத்திரையாக -பின்னை இச் சரீரத்தை விட்டு-பாண்டரஸ்யா தபத் ரஸ்ய ச் சாயாயாம் ஜரிதம்மயா-என்று சக்கரவர்த்தி பிரஜா ரக்ஷண அர்த்தமாக சுற்றும் பயணம் திரிந்து-முத்துக் குடை நிழலிலே சரீரத்தை ஜெரிப்பித்தால் போலே பகவத் குண அனுபவத்தால் சரீரத்தை ஜெரிப்பித்து என்கிறார்–அவன் தாளிணைக் கீழ்ப்புகும் காதலன்,-அவன் பக்கலிலே பிரயோஜனாந்தரங்களை கொள்ள இராதே விலக்ஷண சரீரத்தை பெற்று தாய் முலைக்கீழ் ஒதுங்கும்-ஸ்தந்த்ய பிரஜையை போலே திருவடிகளின் கீழே ஒதுங்கிடுவன் என்னும் அபி நிவேசத்தை உடையனான நான்

வாய் கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் அல்லேன்;
ஆய் கொண்ட சீர் வள்ளல் ஆழிப் பிரான் எனக்கே உளன்;
சாய் கொண்ட இம்மையும் சாதித்து, வானவர் நாட்டையும்
நீ கண்டு கொள் என்று வீடும் தரும் நின்று நின்றே.
–3-9-9—அத்தேசம் நித்ய ஸூ ரிகளுக்கு இட்ட வழக்காய் இருக்கை-குடி இருப்பாரோ பாதி யாயிற்று ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு –-நீ கண்டு கொள் என்று –க்ருசம் தச குணம் மயா-என்று பண்டாரத்தை வளர்த்து வைத்து பெருமாள் மீண்டு எழுந்து அருளினை போது ஸ்ரீ பரத ஆழ்வான் காட்டிக் கொடுத்தால் போலே நித்ய ஸூ ரிகளோபாதி இவர் கையில் காட்டிக் கொடுக்கை-அபூர்வ லாபம் அன்றிக்கே இழந்தது கண்டானாய் இருக்கை என்றுமாம்
வீடும் தரும்-கைங்கர்ய ஸூ கத்தையும் தரும் –முக்திர் மோஷோ மஹா நந்த நின்று நின்றே.–-இப்படி முழுக்க கொடுத்தாலும் இவனுக்கு என் செய்தோம் -என்று குறைப் பட்டு இருக்கும் -என்று நம்முடைய பூர்வர்கள் நிர்வஹிப்பர்கள்-ஒரு தமிழன் அடைவடைவே என்றான்-முந்துற ஐ ஹிகத்திலே அனுபவிப்பித்து பின்பு ஒரு தேச விசேஷத்தை காட்டிக் கொடுத்து பின்பு கைங்கர்ய ஸூகத்தை கொடுக்கும்-இவை தரும் இடத்தில் சாத்மிக்க சாத்மிக்க தரும் -என்றுமாம் –

3-ஊனமில் மோஷ பலமான முடிச் சோதியில் அனுபவத்தாலே நித்ய வஸ்து நீடு பெற்று ஊனமில் மோக்கம் என்கோ-3-4-7- -என்று பிரகாரமான ஆத்ம அனுபவ மாத்ரத்தில் அன்றிக்கே -ப்ரகாரி அளவும் செல்ல அனுபவிக்கையாலே -குறைவில்லததாய் – ஸ்வரூப அனுரூபமாக -கீழில் பத்தில்-அறுதி இட்ட -பரம புருஷார்த்த லஷண மோஷத்துக்கு பலம் -பகவத் அனுபவ கைங்கர்யங்கள் ஆகையாலே –
முடிச் சோதி -3-1–என்கிற திரு வாய் மொழியிலே அவன் வடி வழகையும் ஆபரண சேர்தியையும் அனுபவித்து –அவை பரிசேதித்து அனுபவிக்க ஒண்ணாமையாலே -இது கரண சங்கோச நிபந்தனம் என்று நினைத்து – இவர் படுகிற கிலேசத்தை – விஷய வைலஷண்ய நிபந்தனம் -என்று அறிவித்து -ஈஸ்வரன் நிவ்ருத்தமாக – அவ் அனுபவத்தாலே –-நிலை பெற்றது என் நெஞ்சம் பெற்றது நீடு உயிரே -என்று நித்ய வஸ்து சத்தை பெற்று அவச்சேதம் அற்ற அடிமை செய்ய வேண்டும் படி சத்தாகார்யமும் பலிக்க வேண்டுகையாலே –

ஊனமில்‌ மோக்ஷ பலமான முடிச் சோதியில்‌ அநுபவத்தாலே நித்ய வஸ்து நீடு பெற்று) “ஊனமில்‌ மோக்கமென்கா” (திருவாய்மொழி 3-4-7) என்று ப்ரகாரமான ஆத்மாநுபவ மாத்ரத்திலன்றிக்கே ப்ரகாரியளவும்‌ செல்ல அநுபவிக்கையாலே ஸ்வரூபாநுரூபமாகக்‌ கீழில்‌ பத்தில்‌ அறுதியிட்ட பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷத்துக்குப்‌ பலமான “முடிச் சோதி’ (திருவாய்மொழி 3-1) என்கிற திருவாய்மொழியில்‌ விக்‌ரஹ வைலக்ஷண்யத்தையும்‌ ஆபரணங்களினுடைய சேர்த்தியையும்‌ அநுபவித்து அவை பரிச்சேதித் தநுபவிக்க வொண்ணா தொழிய இது கரண ஸங்கோசத்தாலேயோ என்றதிஸங்கை பண்ணின இவருடைய அதி ஸங்கையை வஸ்து வைலக்ஷண்ய நிபந்தந மென்னுமிடத்தைக்‌ காட்டி நிவ்ருத்தமாக்க அவ்வநுபவத்தாலே “பெற்றது நீடுயிர்‌ (திருவாய்மொழி 3-2-10) என்கிறபடியே நித்ய வஸ்து ஸத்தை பெற்று ஸத்தா கார்யமும்‌ பலிக்க வேண்டுகையாலே 

வானவர் ஆதி என்கோ! வானவர் தெய்வம் என்கோ!
வானவர் போகம் என்கோ! வானவர் முற்றும் என்கோ!
ஊனம்இல் செல்வம் என்கோ! ஊனம்இல் சுவர்க்கம் என்கோ!
ஊனம்இல் மோக்கம் என்கோ ஒளிமணி வண்ண னையே!–3-4-7-த்வம்ச என்னாதே ஆகல்பாவ சானமான சுவர்க்கம்-

முடிச் சோதி -3-1–-திருமலையில் போக்யதையை அனுபவியா நிற்கச் செய்தே –வட மா மலை யுச்சி என்னுமா போலே திருமலைக்கு அவயவ பூதராய் இருபத்தொரு கற்பக தரு பணைத்தால் போலே இருக்கிற அழகருடைய நிரதிசய ஸுந்தர்யத்தையும் ஆபரண சேர்த்தியையும் வேதங்கள் வைதிக புருஷர்கள் ஞானாதிகரான ப்ரஹ்ம ருத்ராதிகள் தொடக்கமானாருடைய -ஸ்தோத்ரங்களுக்கு அபூமியான மேன்மையையும் -அவற்றையும் விளாக்கொலை கொள்ளும் படியான ஆஸ்ரித பாரதந்தர்யத்தையும் அனுபவித்து விஸ்மிதர் ஆகிறார் –-அந்தாமத்து அன்பிலும் அழகு சொல்லிற்று -இங்கும் அழகாய் இரா நின்றது -இரண்டுக்கும் வாசி என் என்னில்–ஆடியாடிக்கு அனந்தரமாகையாலே – ஸ்ரக்பூஷாம் பரமயதாயதம் தான -என்று அடைவு கெட ஒப்பித்து வந்த அழகு இங்கு-இவ் வழகினுடைய ஸூ கடிதத்வத்தை அனுபவித்து விஸ்மிதர் ஆகிறார் –

ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம் -3-3-1-என்று – தேச கால அவஸ்தா பிரகாரங்களை இட்டு -அவச்சேதியாபடி – சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தைகளிலும் சர்வ வித கைங்கர்யங்களும் செய்ய வேண்டும் படியான அபிநிவேசத்தாலே – சர்வ ஆத்ம பாவத்தை (நான்காம் பத்தின் பொருள் சர்வ வியாபகத்வம் ) புகழ்ந்து தம்முடைய பாரிப்புக்கு ஈடாக தம்மை அடிமை கொள்ளும் படி கோலி – அவன் காட்டிக் கொடுத்த -சர்வாத்ம பாவத்தை –-புகழில் நல் ஒருவனிலே –
பூதங்கள் பௌதிகங்கள் உஜ்ஜ்வலமான மாணிக்யாதிகள் -ரசவத் பதார்த்தங்கள் – காநாதி சப்தராசிகள் -மோஷாதி புருஷார்த்தங்கள் -ஜகத் பிரதானரான -பிரம ருத்ராதிகள் – இவற்றுக்கு அடைய காரணமான பிரகிருதி புருஷர்கள் – இவற்றை அடைய விபூதியாக உடையவனாய் –இவற்றுக்கு அந்தராத்மாதயா வியாபித்து -தத்கத தோஷ -ரச அஸ்ம்ஸ்ப்ருஷ்டனாய்- இருக்கிற படியைப் பேசி அவ் அனுபவத்தால் பிரீதராய்-

அவச்சேதமற்று அடிமை செய்ய வேண்டும்படி “ஒழிவில்‌ காலமெல்லாம்‌ உடனாய்‌ மன்னி வழுவிலா வடிமை செய்ய” (திருவாய்மொழி 3-3-1 என்கிற பாட்டின் படியே தேஸ காலாவஸ்த்தா, ப்ரகாரங்களை யிட்டு அவச்சேதியாதபடி ஸர்வ தேஸ ஸர்வ கால ஸர்வாவஸ்த்தைகளிலும்‌ ஸர்வவித, கைங்கர்யங்களும்‌ செய்ய வேண்டும்படியான அபிநிவேஸத்தாலே (ஸர்வாத்ம பாவத்தைப்‌ புகழ்ந்து) புகழு நல்லொருவனிலே (திருவாய்மொழி 3-4) பூதங்கள்‌ பெளதிகங்கள்‌ உஜ்ஜ்வலமான மாணிக்யாதி பதார்த்தங்கள்‌ காநாதி ஸப்‌த ராஸிகள்‌ மோக்ஷாதி புருஷார்த்தங்கள்‌ ஜகத்துக்கு ப்ரதாநரான ப்‌ரஹ்ம ருத்‌ராதிகள்‌ இவற்றுக்கடைய காரணமான ப்ரக்ருதி புருஷார்த்தங்கள்‌ ஆக விவற்றை யடைய விபூதியாக வுடையனாய்‌ இவை தனக்குள்ளே அந்தராத்மதயா வ்யாபித்து தத்கத தோஷை: அஸம்ஸ்ப்ருஷ்டனா யிருக்கிற படியைப்‌ பேசி அநுபவித்து அவ்வநுபவத்தாலே ப்ரீதராய்‌ 

ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1-வழு இலா அடிமை -சர்வ சேஷ வ்ருத்தியும்
செய்ய வேண்டும்-சாஸ்த்ரங்களால் இதுவே புருஷார்த்தம் என்று அறிக்கை போராது-அனுஷ்டான பர்யந்தமாக வேணும் –-நாம்-திரு உள்ளத்தைக் கூட்டிக் கொள்ளுகிறார் ஆதல்-கேசவன் தமருக்கு பின்பு தனியர் அல்லாமை யாலே திரு உள்ளத்தோடு ஒக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கூட்டிக் கொண்டு சொல்லுகிறார் ஆதல்

புகழில் நல் ஒருவனிலே -3-4-தாம் முன்பு பிரார்த்தித்த அடிமை கொள்ளுகைக்காக எம்பெருமான் தன்னுடைய சர்வாத்ம பாவத்தை காட்டி அருளக் கண்டு-பகவத் குணங்களோ பாதி விபூதியும் ததீயத்வ ஆகாரேண உத்தேச்யம் ஆகையால் பூதங்களையும் பவ்திகங்களையும்அசாதாரண விக்ரகத்தையும் மாணிக்யாதி ஸ் ப்ருஹணீய பதார்த்தங்களையும் -போக்யமான ரஸ்யமான பதார்த்தங்களையும்
செவிக்கு இனிய காநாதி சப்த ராசிகளையும் மோஷாதி புருஷார்த்தங்களையும் ஜகத்துக்கு பிரதானரான ப்ரஹ்ம ருத்ராதிகளையும்-ஜகத்துக்கு எல்லாம் காரணமான ப்ரக்ருதி புருஷர்களை விபூதியாக உடையனாய் அந்த சரீர பூதமான விபூதியில் ஆத்ம தயா வியாபித்து ததகத தோஷை ரசம்ஸ்ப்ருஷ்டனான மாத்திரம் அன்றிக்கே ஸ்ரீ யபதியாய் இருந்துள்ள எம்பெருமானை -இவனுக்கு தகுதியாய் இருக்கிற படியையும் அனுசந்தித்து பகவத் குண அனுசந்தானம் பண்ணினால்-
கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் என்னும் கணக்கால் காயிகமான அடிமையில் ஷமர் இல்லாமையாலும்-கோவை வாயாளில் படியே எம்பெருமான் இவர் தாம் பேசின பேச்சை எல்லா அடிமையுமாக கொள்ளுவான் ஒருவன் ஆகையாலும் விபூதி வாசகமான சப்தம் விபூதி முகத்தால் அவனுக்கு பிரதிபாதகம் ஆகையாலும் விபூதி விஷயமான சப்தத்தோடு நாராயணாதி நாமங்களோடு வாசி அற்று இருக்கிற படியால் அவற்றைச் சொல்லும் சொல்லாலே சர்வ சப்தங்களாலும் அவனைச் சொல்லி –வாசகமான அடிமையில் பிரவ்ருத்தர் ஆகிறார் –

4-சொல்லிப் பாடி ஏத்தி பிதற்றி எழுந்தும் பரந்தும் துள்ளிக் குனித்துதடு குட்டக் கும்பிடு
நட்டமிட்டுசிரிக்க குழைந்து நையும் ப்ரீதி உகள எம்மானைச் சொல்லிப் பாடி –பண்கள் தலைக் கொள்ளப் பாடி –முனிவின்றி ஏத்தி –பேர் பல சொல்லிப் பிதற்றி –எழுந்தும் பறந்தும் துள்ளாதார் –
ஏத்தி குனிப்பார்-தடு குட்டமாய்-கும்பிடு நட்டமிட்டு ஆடி –உலோகர் சிரிக்க நின்றாடி – நெஞ்சம் குலைந்து நையாதே
என்று வாசிக காயிக மானச வியாபாரங்களாலே களிக்கும் படி – அந்த ப்ரீதி தலை மண்டி இட்டு செல்ல –

(சொல்லிப் பாடி யேத்திப்‌ பிதற்றி யெழுந்தும்‌ பறந்தும்‌ துள்ளிக்‌ குனித்துத்‌ தடுகுட்டக்‌ கும்பிடு நட்டமிட்டுச்‌ சிரிக்கக்‌ குழைந்து நையும்‌ ப்ரீதி யுகள) “எம்மானைச்‌ சொல்லிப் பாடி” (திருவாய்மொழி 3-5-1 “பண்கள்‌ தலைக் கொள்ளப்‌ பாடி” (திருவாய்மொழி 3-5-2”முனிவின்றி யேத்தி’ (திருவாய்மொழி 3-5-6 “பேர் பல சொல்லிப்‌ பிதற்றி” (திருவாய்மொழி 3-5-8) ‘ எழுந்தும் பரந்தும்‌ துள்ளாதார்‌‘திருவாய்மொழி 3-5-1) “ஏத்திக்‌ குனிப்பார்‌’ (திருவாய்மொழி 3-5-6) தடு குட்டமாய் (திருவாய்மொழி 3-5-3) “கும்பிடு நட்டமிட்டாடி” (திருவாய்மொழி-3-5-4)உலோகர்‌ சிரிக்க நின்றாடி உள்ளங் குழைந்து நைய” (திருவாய்மொழி 3-5-8) என்று வாசிக காயிக மாநஸங்களினாலே களித்து அந்த ப்ரீதி தலை மண்டை யிட்டு 

மொய்ம்மாம் பூம்பொழிற் பொய்கை முதலைச் சிறைப்பட்டு நின்ற
கைம்மாவுக்கு அருள் செய்த கார்முகில் போல்வண்ணன் கண்ணன்
எம்மானைச் சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார்
தம்மால் கருமம் என்? சொல்லீர், தண் கடல் வட்டத்து உள்ளீரே!–3-5-1–எம்மானைச்-அவன் வந்த போதே ஆனையின் சிறை போயிற்று -அந்நீர்மையில் இவர் சிறை பட்டார்-தன் மேன்மை பாராதே ஒரு திர்யக்க்குக்கு உதவுவதே என்று தாம் எழுதிக் கொடுக்கிறார்-சொல்லிப் பாடி-எழுந்தும் பறந்தும் துள்ளாதார்--அந்நீர்மையை வாயாலே பேசி -ப்ரீதி பிரேரித்தராய் பாடி இருந்த இடத்திலே இருக்க மாட்டாதே எழுந்து இருந்து தரையிலே கால் பாவாதே-சாசம்ப்ரம ந்ருத்தம் பண்ணாதவர்கள்
நமக்கு ஒரு ஆபத்து வந்தால் இருந்த இடத்தில் இராதே விக்ருதனாம் போதும் அவனே வேணும் –
அவன் நூறாயிரம் செய்தாலும் அவிகிருதராம் போதும் நாமே வேணும் என்று பட்டர் அருளிச் செய்வார்

தண் கடல் வட்டத்து உள்ளாரைத் தமக்கு இரையாத் தடிந்து உண்ணும்
திண் கழற்கால் அசுரர்க்குத் தீங்கு இழைக்கும் திருமாலைப்
பண்கள் தலைக் கொள்ளப் பாடிப் பறந்தும் குனித்தும் உழலாதார்
மண் கொள் உலகிற் பிறப்பார் வல்வினை மோத மலைந்தே.–3-5-2–பண்கள் உஜ்ஜவலமாம் படி -என்னுதல் -ஹர்ஷத்தாலே ஒரு பண்ணிலே எல்லாப் பண்ணும் கூடும்படி அடைவு கெடப் பாடி என்னுதல் –

மனிசரும் மற்றும் முற்றும் ஆய் மாயப் பிறவி பிறந்த
தனியன் பிறப்பிலி தன்னைத் தடங்கடல் சேர்ந்த பிரானைக்
கனியைக் கரும்பின் இன் சாற்றைக் கட்டியைத் தேனை அமுதை
முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார் முழுது உணர் நீர்மையினாரே.–3-5-6—முனிவு இன்றி-அவதாரம் ஆகிற மஹா குணத்திலே அநீஸ்வரத்வ தோஷத்தை அனுசந்திக்கிற அ ஸூ யையிலே இழியாதே-முனிவு என்று –முனித்வமாய்அவதாரத்தை அனுசந்தித்து தெளிவு உடையராய் அவிகிருதராகை இன்றிக்கே இருக்கை –ஏத்திக் குனிப்பார்-வாசிக காயிகமான விக்ருதிகளை உடையராய் இருக்கை –

வார் புனல் அம் தண் அருவி வட திரு வேங்கடத்து எந்தை
பேர் பல சொல்லிப் பிதற்றிப் பித்தர் என்றே பிறர் கூற
ஊர் பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்க நின்று ஆடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப்படுவாரே.–3-5-8—விபூதி விஷயமாகவும் ஸ்வரூப ரூப குண விஷயமாகவும் தாம் புகழு நல் ஒருவனில் -அனுபவித்தவற்றை நினைக்கிறார் –-அக்ரமமாகவும் சொல்லி

மொய்ம்மாம் பூம்பொழிற் பொய்கை முதலைச் சிறைப்பட்டு நின்ற
கைம்மாவுக்கு அருள் செய்த கார்முகில் போல்வண்ணன் கண்ணன்
எம்மானைச் சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார்
தம்மால் கருமம் என்? சொல்லீர், தண் கடல் வட்டத்து உள்ளீரே!–3-5-1–அந்நீர்மையை வாயாலே பேசி -ப்ரீதி பிரேரித்தராய் பாடி இருந்த இடத்திலே இருக்க மாட்டாதே எழுந்து இருந்து தரையிலே கால் பாவாதே-சாசம்ப்ரம ந்ருத்தம் பண்ணாதவர்கள்-நமக்கு ஒரு ஆபத்து வந்தால் இருந்த இடத்தில் இராதே விக்ருதனாம் போதும் அவனே வேணும் – அவன் நூறாயிரம் செய்தாலும் அவிகிருதராம் போதும் நாமே வேணும் என்று பட்டர் அருளிச் செய்வார்

மனிசரும் மற்றும் முற்றும் ஆய் மாயப் பிறவி பிறந்த
தனியன் பிறப்பிலி தன்னைத் தடங்கடல் சேர்ந்த பிரானைக்
கனியைக் கரும்பின் இன் சாற்றைக் கட்டியைத் தேனை அமுதை
முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார் முழுது உணர் நீர்மையினாரே.–3-5-6—ஏத்திக் குனிப்பார்-வாசிக காயிகமான விக்ருதிகளை உடையராய் இருக்கை –முழுது உணர் நீர்மையினாரே.–முழுதும் உணர்ந்த ஸ்வ பாவத்தை உடையார் ஆவார்கள் –-ஒன்றுமே கற்றிலரே யாகிலும் –ஏக விஞ்ஞாநேந சர்வ விஞ்ஞானம் -என்கிறபடியே எல்லாம் அறிந்த பூர்த்தியை உடையவர்கள் –

மலையை எடுத்துக் கல் மாரி காத்துப் பசு நிரை தன்னைத்
தொலைவு தவிர்த்த பிரானைச் சொல்லிச் சொல்லி நின்று எப்போதும்
தலையினொடு ஆதனம் தட்டத் தடு குட்டமாய்ப் பறவாதார்
அலை கொள் நரகத்து அழுந்திக் கிடந்து உழக்கின்ற வம்பரே.–3-5-3-தலை தரையிலே தட்டப் பண்ணும் அங்க விகாரத்தை உடையராய் ஸம்ப்ராந்தர் ஆகாதார் –

வம்பு அவிழ் கோதை பொருட்டா மால் விடை ஏழும் அடர்த்த
செம் பவளத்திரள் வாயன் சிரீதரன் தொல் புகழ் பாடிக்
கும்பிடு நட்டம் இட்டு ஆடிக் கோகு உகட்டு உண்டு உழலாதார்
தம் பிறப்பால் பயன் என்னே சாது சனங்க ளிடையே?–3-5-4—கும்பிடு நட்டம் இட்டு ஆடிக்-கும்பீடு நட்டம் இட்டுக் கூத்தாடி-கோகு உகட்டு உண்டு உழலாதார்-கோகு -அடைவு கேடு –உகட்டு -தலை மண்டையிட்டு –உண்டு -இதுவே ஜீவனம் ஆகி –உழலாதார்-அதுவே யாத்திரையாக இராதார்

வார் புனல் அம் தண் அருவி வட திரு வேங்கடத்து எந்தை
பேர் பல சொல்லிப் பிதற்றிப் பித்தர் என்றே பிறர் கூற
ஊர் பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்க நின்று ஆடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப்படுவாரே
.–3-5-8—மனுஷ்ய சந்நிதத்தோடு அ சந்நிதத்தோடு வாசி அற -விசேஷஞ்ஞர் உள்ள இடத்தோடு இல்லாத இடத்தோடே வாசி அற-லௌகீகர் சிரிக்க அதுவே தளமாக நின்று ஆட-ஆர்வம் பெருகிக் குனிப்பார்-அபி நிவேசம் மிக்கு விக்ருதரமாவார்கள்-அமரர் தொழப்படுவாரே.–பகவத் அனுபவத்தால் களித்து-அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்னுமவர்களாலே கொண்டாடப் படுவார்கள்

(அடுத்த செய்ய தாமரைக் கண்ணன் –திருவாய் மொழியும் பர உபதேசம் என்பதால் இதன் பொருளையும் சொன்னால் விரோதம் திருவாய் மொழியின் பொருளுடன் மேலே அருளிச் செய்வார் –
ஆகையால் பயிலும் சுடர் ஒளி -தாத்பர்யம் இங்கே )தம் அடியார் என்ன உடன் கூடும் சாத்யம் வளர
இப்படி உண்டான ப்ரீதி அவன் அளவில் பர்யவசியாதே –தம் அடியார் அடியார் தமக்கு அடியார் அடியார் தம் அடியார் அடியார் அடியோங்களே – என்று ததீய சேஷத்வத்தின் எல்லையிலே நிற்கிறவர்கள் -நமக்கு உத்தேச்யர் என்னும் படி – அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று கீழ் பத்தில் பிரார்த்தித்த சாத்தியம் -அவர்களோடு கூடி அவனை அனுபவிக்கும் அளவு அன்றிக்கே – அவன் அடியார் உடைய சேஷத்தின் எல்லை அளவும் செல்ல வளர —

(தம்‌மடியாரென்று உடன் கூடும்‌ ஸாத்‌யம்‌ வளர) இப்படி யுண்டான ப்ரீதி அவ் வளவில்‌ பர்யவஸியாதே “தம்மடியாரடியார்‌ தமக்கடியார்‌ அடியார் தம்‌ அடியார்‌ அடியோங்களே (திருவாய்மொழி 3-7-10) என்று ஸேஷத்வத்தினுடைய எல்லையிலே நிற்கும்படி “அடியார் குழாங்களை உடன்‌ கூடுவதென்று கொலோ” (திருவாய்மொழி 2-3-10) என்று கீழில்‌ பத்திலே ப்ரார்த்தித்த பாகவத ஸேஷத்வமாகிற புருஷார்த்தம்‌ அதினுடைய எல்லை யளவாக வளர

அடி ஆர்ந்த வையம் உண்டு ஆலிலை அன்ன வசஞ்செயும்
படியாதும் இல் குழவிப்படி எந்தை பிரான் தனக்கு
அடியார் அடியார் தம்மடியார் அடியார் தமக்கு
அடியார் அடியார் தம்மடியார் அடியோங்களே
.–3-7-10—தமீஸ்வரனாம் பரமம் மஹேஸ்வரம் -என்று சேஷித்வத்துக்கு அவனுக்கு அவ்வருகு இல்லாதா போலே சேஷத்வத்துக்கு தமக்கு அவ்வருகு இல்லாத படி அதன் எல்லையில் நிற்கிறார்-தம்முடைய ருசிக்கு அவதி உண்டாய் மீண்டார் அல்லர்-சந்தஸ் ஸூ முடிய வேண்டுகையாலே மீண்டாராம் அத்தனை –

களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக் கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான்நிலம் சுடர் ஆழி சங்கேந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே -2-3-10—இவன் தன்னையே அன்றிக்கே இவனுடைய ரக்ஷகத்வத்திலே தோற்று இருக்கும் ததீயர் திரள்களை –-குழாங்களையே – திரளாக வேணும் -அது தான் அநேகமாக வேணும் இவ்விஷயத்துக்கு உசாத் துணையாம் போது அசங்க்யாதராக வேணும் என்று இருக்கிறார் –உடன் கூடுவது என்று கொலோ–நான் எனக்கு என்று அகன்று நிற்க வேண்டாதே-அத் திரளில் ஒரு நீராகக் கூடுவது என்றோ-வைஷ்ணவ ஸஹவாசம் இனிது என்று இருக்கச் செய்தேயும் அஹங்காரத்தால் செய்யப் போகாது ஒழிகிறது இறே

5-பை கொள் பாம்பு போலே இந்திரிய வ்ருத்தி நியம மற-பை கொள் பாம்பேறி உறை பரனே -என்று (முடியானே -எட்டாம் திருவாயமொழியின் தாத்பர்யம் )-அவனுடைய சர்வாதிகத்வ பிரகாசமான படுக்கையாய் இருக்கும் – திரு அனந்தாழ்வான் –சஷுஸ் ஸ்ரவா -என்கிறபடியே – ஒரு கரணத்தாலே கர்ணாந்தர விருத்தியும் கொள்ளுமா போலே – நெஞ்சம் நீள் நகராக இருந்த என் தஞ்சனே -என்றும் ,
வாசகமே ஏத்த அருள் செய்யும் வானவர் தம் நாயகனே -என்றும் , கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை-என்றும் , கண்களால் காண வரும் கொல் -இத்யாதிகளாலே – வாக் பாணி சஷூர் விருத்திகளை -ஆசைப் படும்படி ஆகையாலே – இந்திரிய விருத்தி நியமமின்றிக்கே -அவனை அனுபவிக்க வேண்டும் படியான பெரு விடாயை உடையராய்-

(பைகொள்‌ பாம்பு போலே இந்த்‌ரிய விருத்தி நியமமற) “பைகொள்‌ பாம்பேறி உறை பரனே‘ (திருவாய்மொழி 3-8-4) என்று திருவனந்தாழ்வான்‌ சஷுஸ்ரவா: என்கிறபடியே ஒரு கரணத்தாலே மற்றைக்‌ கரணத்தில்‌ கார்யமும்‌ கொள்ளுமா போலே “நெடியானே என்று கிடக்கு மென்‌ நெஞ்சமே” (திருவாய்மொழி 3-8-1 “வஞ்சனே என்னு மெப்போதும்‌ என்‌ வாசகமே” (திருவாய்மொழி 3-8-2) “ஆனாயர்‌ தாயவனே என்று தடவுமென்‌ கைகளே” (திருவாய்மொழி 3-8-3) என்றித்யாதிகளாலே கரணம்‌ சேதந ஸமாதியாலே கரணாந்தர ப்ரவருத்தியையும்‌ ஆசைப் படும்படியான பெரு விடாயை உடையராய்‌-

கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை வைகலும் மாத்திரைப் போதும் ஓர் வீடு இன்றிப்
பைகொள் பாம்பு ஏறி உறை பரனே! உன்னை மெய்கொளக் காண விரும்பும் என் கண்களே.–3-8-4—இப்படி தொழுகைக்கு அடியான சர்வாதிகத்வமும் ஸ்ப்ருஹநீயத்வமும் சொல்லுகிறது –-ஸ்வ ஸ்பர்சத்தாலே விகசிதமான பணங்களை உடைய திரு வனந்த ஆழ்வான் மேலே நித்ய வாசம் பண்ணுகையாலே தகட்டில் அழுந்தின மாணிக்கம் போலே ஸ்ப்ருஹணீயமாய்-இருக்கை
அனந்த சாயி என்கிறபடியே சர்வாதிகாத்வம் சொல்லிற்று ஆகவுமாம்-உன்னை இப்படி பிராப்தனும் போக்யமுமான உன்னை

முடியானேஎ! மூவுலகும் தொழுது ஏத்தும்சீர் அடியானேஎ! ஆழ்கடலைக் கடைந்தாய்! புள்ளூர்
கொடியானேஎ! கொண்டல்வண்ணா! அண்டத்து உம்பரில் நெடியானேஎ! என்று கிடக்கும்என் நெஞ்சமே.–3-8-1-பெரிய திருவடியின் முதுகில் இருப்பைக் கண்டால் ப்ரஹ்மாதிகளுடைய ஐஸ்வர்யம் ஷூத்ரமாய்-இவனே சர்வாதிகன்-என்று தோற்றும்படி இருக்கை- வடிவு அழகோபாதி இவர்க்கு ஐஸ்வர்யமும் ஆகர்ஷகமாய் இருக்கிற படி – என்று கிடக்கும் என் நெஞ்சமே.–இப்படிகளைச் சொல்லி அச் சொல்லைத்த தலைக் கட்டாமே கிடக்கும்–உக்த்வார்யேத்தி சக்ருத்தீ நம் புனர் நோவாச கிஞ்சன -என்ற ஸ்ரீ பரத்தாழ்வானை போலே-என் நெஞ்சமே.-என் மனனே என்கிறார் அல்லர் -நான் செய்தபடி செய்ய இப்பிரஜையைக் கொண்டு என் செய்கேன் -என்கிறார் –

நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே! தண் இலங்கைக்கு இறையைச் செற்ற
நஞ்சனே! ஞாலம் கொள் வான் குறளாகிய வஞ்சனே! என்னும் எப்போதும் என் வாசகமே.–3-8-2—வஞ்சனே!-சிறு காலாலே மூவடி என்று வேண்டிப் பெரிய காலாலே இரண்டு அடியிலே அடங்கின வஞ்சனம்–கொள்வான் -என்கிறார் இந்திரன் பேறு தன் பேறாக இருக்கையாலே-வஞ்சனே! என்னும் எப்போதும் என் வாசகமே.– அவ்வஞ்சனத்தையே சர்வ காலமும் சொல்லா நின்றது என் வாக்கானாது
அவ்வஞ்சனத்தை அனுசந்தித்த பின்பு ராமாவதாரத்தில் செவ்வையிலும் போகிறது இல்லை
ஸ்வரூபம் அறியாமை செய்த இடம் இறே அவ்வவதாரம் -தன்னை அழிய மாறின இடம் இறே இது
எப்போதும்-கலியன் சோறு சோறு என்னுமா போலே

வாசகமே ஏத்த அருள் செயும் வானவர் தம் நாயகனே! நாள் இளந் திங்களைக் கோள்விடுத்து
வேய் அகம் பால் வெண்ணெய் தொடு வுண்ட ஆன் ஆயர் தாயவனே! என்று தடவும் என் கைகளே.–3-8-3—இடையாருக்கு தாய் போலே பரிவன் ஆனவனே-என்று தடவும் என் கைகளே.–-அவன் வெண்ணெய் களவு காணப் புக்க இடத்தே வழியைக் கட்டிப் பிடித்துக் கொள்ள தேடா நின்றது என் கைகள்
நவநீத ஸுர்ய வ்ருத்தாந்தத்தை அனுசந்தித்தவாறே கைகளுக்கு கண் தோற்றுகிறது இல்லை -என்னவுமாம் –ராமம் மே அநு கதாத்ருஷ்ட்டி –

பாடவந்த கவி அன்றிக்கே படைத்தான் (சொன்னால் விரோதம் -திருவாய் மொழி தாத்பர்யம் )
வாய் கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன்
–என்றும்-ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு –என்றும் –அஹம் ஸ்லோக க்ருத் அஹம் ஸ்லோக க்ருத் -என்கிற உபநிஷத்தின் படி கவி பாடுமவருமாய்-

(பாடவந்த கவி யன்றிக்கே படைத்தான்‌ ஸ்லோக க்ருத்தாய்‌) “வாய் கொண்டு மானிடம் பாட வந்த கவியேனல்லேன்‌” (திருவாய்மொழி 3-9-9) என்று இதர ஸ்தோத்ரத்துக்கநர்ஹ கரணராய்‌ “ஒன்றி யொன்றி உலகம்‌ படைத்தான்‌ கவியாயினேற்கு” (திருவாய்மொழி 3-9-10) என்று ஐகத் ஸ்ருஷ்ட்யாதி முகத்தாலே தம்முடைய ஜீவநத்துக்கு க்ருஷி பண்ணின ஸர்வேஸ்வரன்‌ விஷயத்திலே “அஹம்‌ ஸ்லோக க்ருத்‌ அஹம்‌ ஸ்லோக க்ருத்‌” (தைத்திரீய உபநிஷத்‌) என்கிற உபநிஷத்தின்படியே கவிபாடுமவருமாய்‌-

வாய் கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் அல்லேன்;
ஆய் கொண்ட சீர் வள்ளல் ஆழிப் பிரான் எனக்கே உளன்;
சாய் கொண்ட இம்மையும் சாதித்து, வானவர் நாட்டையும்
நீ கண்டு கொள் என்று வீடும் தரும் நின்று நின்றே.–3-9-9—ஸ்ருஷ்டத்வம் வனவாசாய என்கிறபடியே அவன் தன்னை ஏத்துகைக்காக தந்த வாக்கைக் கொண்டு ஷூ த்ரரைக் கவி பாட பிறந்தேன் அல்லேன்
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்கிற விஷயத்தை கவி பாடப் போமோ -என்னில் தன்னை எனக்கு விஷயம் ஆக்கித் தந்தால் கவி பாடக் குறை என் என்கிறார்

நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய்ச்
சென்று சென்றாகிலும் கண்டு,சன்மம் கழிப்பான் எண்ணி,
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?–3-9-10—ஸ்ருஷ்டிகள் பலித்ததில்லை என்று கை வாங்காதே மிகவும் ஒருப்பட்டு லோகங்களை உண்டாக்கினான்-கவி ஆயினேற்கு-கவியாயினுக்கு
அவன் ஸ்ருஷ்ட்டி பலித்து அநந்யார்ஹனான எனக்கு

6 -குறை முட்டுப் பரி விடர் துயர் துன்பம் அல்லல் துக்கம் தளர்வு கேடுகள் இன்றி அம்ருத ஆனந்த மக்நரானவர் (சன்பம் பல பல -பத்தாம் திருவாய்மொழியின் தாத்பர்யம் )-தேச விஷயத்தில் போய் அனுபவிக்க பெற்றிலேன் என்கிற குறை இல்லை – இவ் அனுபவத்துக்கு எனக்கு ஒரு பிரதிஹதி இல்லை –-அவன் விஷயத்தில் ஆன பின்பு -ஏக தேசமும் என் மனசில் துக்கம் இல்லை –வகுத்த சேஷி என்று பற்றுகையாலே எனக்கு ஒரு துக்கம் இல்லை – ருசி முன்னாக தேச விசேஷ பிராப்தி பண்ணுகிற எனக்கு -வைதிக புத்ரர்களைப் போலே – மீளில் செய்வது என் என்கிற துக்கம் இல்லை – இங்கே அவன் குணங்களை நெருங்கே புஜித்த எனக்கு -பூர்ண அனுபவம் பண்ணலாம் தேசத்தில் போகப் பெற்றிலேன் என்கிற துக்கம் இல்லை – இது அவனுடைய லீலா விபூதி என்று அறிந்த எனக்கு -இனி லீலா விபூத் அன்வயமாகிற துக்கம் இல்லை – ஸ்வ சங்கல்ப்பத்தாலே -சிருஷ்டியாதிகளை பண்ணவல்ல ஆசர்ய சக்தி யுக்தனானவனைப் பற்றின எனக்கு ஒரு துக்கம் இல்லை .. அகடி தகடனா சமர்த்தனானவனை பற்றின எனக்கு ஒரு தளர்ச்சி இல்லை – விமுக தசையில் வியாப்தி யாலும் -அபிமுக தசையில் அவதாரத்தாலும் – ரஷிக்கும் அவனைப் பற்றின எனக்கு ஒரு கேடு இல்லை -என்றபடி – சன்மம் பல பலவில் -பத்துப் பாட்டாலும் அடைவே-(குறைவிலனே –முட்டிலனே –பரிவிலனே -இடரிலனே- துயரிலனே -துன்பமிலனே -அல்லலிலனே -துக்கமிலனே-தளர்விலனே -கேடிலனே-என்று ) தாம் பேசும்படி –

(குறை முட்டுப்‌ பரிவிடர்‌ துயர்‌ துன்ப மல்லல்‌ துக்கம்‌ தளர்வு கேடுகளின்றி அம்ருதாந்த மக்‌நரானவர்‌) தேஸ விஸேஷத்தில்‌ போயநுபவிக்கப்‌ பெற்றிலேனென்கிற குறைவில்லை; இவ்வநுபவத்துக்கு எனக்கொரு ப்ரதிஹதி யில்லை, ஏகதேஸமும்‌ மநோதுக்க, மில்லை; வகுத்த ஸேஷி என்று பற்றுகையாலே எனக்கொரு துக்கமில்லை. ருசி முன்னாக தேஸ விஷேஷ ப்ராப்த பண்ணுகிற எனக்கு வைதிக புத்ரர்களைப்‌ போலே மீளில்‌ செய்வதென்‌ என்கிற துக்கமில்லை; இங்கே அவனுடைய கல்யாண கு ணங்களை நெருங்க புஜித்த எனக்கொரு தேஸ விஸேஷத்திலே போகப் பெற்றிலேன்‌ என்கிற துக்க மில்லை; இவ் விபூதி அவனுடைய லீலை என்றறிந்த வெனக்கு ஒரு தளர்த்தி யில்லை: எனக்காக ஸர்வ வ்யாபகனா யிருக்கிறவனைப் பற்றின எனக்கொரு கேடில்லை. அவனுடைய லீலா விபூத்யந்வயமாகில்‌ செய்வதென்‌ என்கிற அல்லலில்லை; ஆஸ்சர்ய பூதனான க்ருஷ்ணனைப்‌ பற்றின எனக்கொரு கேடில்லை; என்றிப்படித்‌ தாமே சொல்லும்படி

சன்பம் பல பல -பத்தாம் திருவாய்மொழியின் தாத்பர்யம் -கீழ் உபதேசித்த ஹிதம் நெஞ்சில் படாத -இப்படி ஹேயரான சம்சாரிகளைப் நடுவிலே இருந்து வைத்து பகவத் விஷயத்துக்கு அர்ஹமான கரணங்களை உடையேனாகப் பெற்றேன்-அது தன்னிலும் ஆஸ்ரித அர்த்தமாக கர்மா வஸ்யரைப் போலே சம்சாரிகள் நடுவே வந்து திருவவதரித்த திவ்ய அவதாரங்களையும் அவதார ஸித்தமான திவ்ய குணங்களையும் திவ்ய சேஷ்டிதங்களையும் அனுசந்தித்து இதுவே போது போக்கப் பெற்றேனுக்கு -இதில் காட்டில் வேண்டுவது ஓன்று உண்டோ என்று மிகவும் ப்ரீதர் ஆகிறார் – முடியானேயில் தம்முடைய ஆற்றாமையும் நித்ய ஸூ ரிகளுடைய அனுபவத்தையும் அனுசந்தித்தவாறே இழவாய் தோற்றிற்று -சொன்னால் விரோதத்தில் சம்சாரிகள் படியை பார்த்தவாறே அவ்விழவு தானே பேறாகத் தோற்றிற்று –

நன்மை உடையவன் சீர் பரவப் பெற்ற நான் ஓர் குறைவு இலனே.-3-10-1-–செவ்வையாகிற நன்மையை யுடையவனுடைய -சவ்ர்ய வீர்ய பராக்கிரமங்களை ஆஸ்ரித விஷயத்தில் ஸ்வாமித்வ வாத்சல்யங்களையும் பரக்கப் பேசி ஸ்துதிகாபி பெற்ற நான் தேசாந்திரத்திலும் காலாந்தரத்திலும் தேகாந்தரத்திலும் பகவத் விஷயத்தில் இன்ன அம்சம் அனுபவிக்கப் பெற்றிலோம் என்று ஒரு குறையுடையேன் அல்லேன் –

நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டு இலனே.– இந்த லக்ஷணத்தாலே குறைவற்ற புகழை ப்ரீதி பிரகரக்ஷத்தாலே ஏத்தியும் பாடியும் பிரேம பாரவஸ்யத்தாலே இருந்த இடத்தில் இராதே ஆடியும் வர்த்திக்கிற நான் பகவத் போகத்துக்கு ஒரு ப்ரதிஹதையை உடையேன் அல்லேன் என்கிறார் –

இறை யாகிலும் யான் என் மனத்துப் பரிவு இலனே.–3-10-3-அநந்யார்ஹமாம் படி உட்பட்ட பின்பு பரிபூர்ண விஷய அவகாஹியான நான் ஏகதேசமாகிலும் இதர விஷய சம்பாவிதமான அலாப வைகல்ய விச்சேத துக்க உத்தரத்வாதி நிபந்தமான பறிப்பானது என் மனசிலே உடையேன் அல்லேன்

அரியினை அச்சுதனைப் பற்றி யான் இறையேனும் இடர் இலனே.–3-9-4-இவனைப் பற்றின எனக்கு அல்ப துக்கமும் இல்லை – பேரன் என்று இருக்கையாலே அநிருத்த ஆழ்வானுக்கு நாலு நாள் சிறை இருக்க வேண்டிற்று-அடியேன் என்று பற்றினவன் ஆகையால் எனக்கு அதுவும்வேண்டிற்று இல்லை –

உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே.–3-10-5-சரீர சம்பந்தம் அற்றால் போகக் கடவதாய் இருக்க -இச் சரீரத்தோடு யாயிற்று இவர்களைக் கொண்டு போயிற்று
காலக்ருத பரிணாமம் இல்லாத தேசம் ஆகையால் அவ்வுடம்போடே அப்பருவத்தோடே கொண்டு வந்து கொடுத்தவனைப் பற்றுகையாலே ஒரு துக்கம் இல்லை என்கிறார் – புத்ரார்த்தியான அளவன்றியே ஸ்வரூபத்தை அறிந்து பற்றின எனக்கு ஒரு துக்கம் இல்லை என்கிறார் –

துயரம் இல் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் ஓர் துன்பம் இலனே.–3-10-6-ஹேய ப்ரத்ய நீகனாய் கல்யாண குணாத்மகனான கிருஷ்ணன் ஆகிற ஆச்சர்யவானுடைய குண சேஷ்டிதாதி பிரதையை நெருங்க அனுபவிக்கப் பெற்ற நான் ரு அப்ரீதியை உடையேன் அல்லேன் –-துன்பம் -இன்பத்துக்கு எதிர்த்தட்டான அப்ரீதி –

இன்புறும் இவ் விளையாட்டுடையானைப் பெற்று ஏதும் அல்லல் இலனே.–3-10-7-அவனுடைய அகர்ம வஸ்யத்தையை அநு சந்திக்கப் பெற்ற எனக்கு கர்ம வஸ்யன் ஆகையும்-தத் பலமான லீலா விபூதி அன்வயமும் ஆகிற துக்கமும் இல்லை என்கிறார்-நமாம் கர்மாணி லிம்பந்தி நமே கர்ம பல ஸ் ப்ருஹா-இதிமாம் யோ அபி ஜா நாதி கர்மபிர் ந சபத்யதே- மம மாயா துரத்யயா–மாமேவ யே பிரபத்யந்தே மாயாமேதாம் தரந்திதே -என்னக் கடவது இறே –


எல்லை இல் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே.–3-10-8-பிராட்டி புருஷகாரமாக சஹகார நிரபேஷமாக நம் கார்யம் செய்பவனுமாய்-ஏஷ -ஹ் யே வா நந்தயாதி -என்கிறபடியே ஆனந்த அவஹனானவனைப் பற்றின எனக்கு ஒரு துக்கமும் இல்லை என்கிறார் –

ஒக்க ஒடுங்க விழுங்க வல்லானைப் பெற்று ஒன்றும் தளர்வு இலனே.–3-10-9-சர்வ சக்தியாய் -ப்ரஹ்மாதிகளுக்கு ரக்ஷகனானவனை அனன்யா ப்ரயோஜனனாய் ஆஸ்ரயித்த எனக்கு ஒரு துக்கம் உண்டோ என்கிறார்-

கிளர் ஒளி மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடு இலனே.–3-10-10-இவன் விமுகனான அன்றும் வியாப்தியாலே சத்தையை நோக்கி இவன் ஆபிமுக்யம் பண்ணின அன்று கண்ணுக்கு தோற்ற நின்று ரக்ஷிக்குமவன் திருவடிகளை முறையிலே பற்றின எனக்கு ஒரு நாளும் ஒரு அநர்த்தம் இல்லை 

நிரஸ்த சமஸ்த கிலேசராய் -அம்ருதரான முக்தர் –பகவத் அனுபவத்தாலே ஆனந்திக்குமா போலே –
அவ் ஆனந்த சாகர மக்நரானவர் –செய்ய தாமரைக் கண்ணன் அமரர் குல முதல் என்று அஞ்சாதபடி
செய்ய தாமரை கண்ணனாய் -என்று தொடங்கி –-எஞ்சலில் அமரர் குல முதல் மூவர் தம் உள்ளும் ஆதியை அஞ்சி நீர் உலகத்து உள்ளீர்கள்-என்று –
புண்டரீகாஷத்வாதி பரத்வ சிஹ்னங்களை உடையனாவன் – ஞான சங்கோச ரஹீதரான நித்ய ஸூரிகள் திரளுக்கு நிர்வாஹன் அன்றோ –
சம்சாரிகளான நம்மால் அவனை ஆஸ்ரயிக்கப் போமோ என்று அஞ்சாதபடி-எளிவரும் இணைவனாம் என்றவை பரத்வமாம் படி எளிவரும் இயல்வினன்- இணைவனாம் எப்பொருட்கும் -என்று பத்துடை அடியவரிலும் -அணைவது அரவணை -மேலிலும் வெளி இட்ட அவதார சௌலப்யம் பரத்வ ஸ்தாநீயனாம் படி

அம்ருதரான முக்தர்‌ பகவதநுப வத்தால்‌ ஆநந்திக்குமாபோலே அவ்வாநந்த ஸாக,ரத்திலே மக்‌நரான இவர்‌ (செய்யதாமரைக்‌ ௧ண்ணன்‌ அமரர்‌ குல முதல்‌ என்று அஞ்சாதபடி) “செய்ய தாமரைக்‌ கண்ணனாய்‌” (திருவாய்மொழி 3-6-1 “எஞ்சலிலமரர்‌ குல முதல்‌ (திருவாய்மொழி 3-6-9) “அஞ்சி நீர்‌ உலகத்துள்ளீர்கள்‌ (திருவாய்மொழி 3-6) என்று புண்டரீகாஷனான ஸர்வேஸ்வரன்‌ ஜ்ஞாந ஸங்கோசமில்லாத நித்ய ஸூரிகளுடைய திரளுக்கு நிர்வாஹகனன்றோ, ஸம்ஸாரிகளான நம்மாலே அவனை ஆஸ்ரயிக்கப்‌ போமோ என்றஞ்ச வேண்டாதபடி (எளிவரு மிணைவனாம்‌ என்றவை பரத்வமாம்படி) “எளிவரும்‌ இயல்வினன்‌’ (திருவாய்மொழி 1-3-2) “இணைவனாம்‌ எப்பொருட்கும்‌” (திருவாய்மொழி 2-8-1 என்று பத்துடை யடியவரிலும்‌ அணைவதரவணையிலும்‌ வெளியிட்ட அவதார ஸெளலப்‌ யம்‌ பரத்வ ஸ்த்தாநீயமாம்படி

7-அவனாகும் சௌலப்ய காஷ்டையைக் காட்டி-நெஞ்சினால் நினைப்பவன் எவன் அவன் ஆகும் நீள் கடல் வண்ணனே -என்று மனசால் யாதொன்றை திரு மேனியாக கோலினி கோள்-அபரிசேத்ய மஹிமனான சர்வேஸ்வரன் அத்தையே தனக்கே அசாதாரமான விக்கிரகமாக விரும்பும் என்று –
யேய தாமாம் பிரபத்யந்தே தாம்ஸததைவ பஜாம் யஹம் –ஸ்ரீ கீதை -4-11 -என்றும்-அர்ச்சயஸ் சர்வ சஹிஷ்ணுர் அர்ச்சக பராதீன அகிலாத்ம ஸ்திதி-ஸ்ரீ ரெங்கராஜ ஸ்த்வம் -74–என்கிற அர்ச்சாவதார சௌலப்ய காஷ்ட்டையைக் காட்டி வழியை தருமவன் நிற்க இழிய கருதுவது என்னாவது-
ஒழிவு ஓன்று இல்லாத -என்று தொடங்கி – இழியக் கருதி ஓர் மானிடம் பாடல் என்னாவதே -என்று

யாவதாத்மபாவி பகவத் அனுபவம் தான் ஒரு சிறாங்கை என்னும் படியான அர்ச்சிராதி மார்க்கமும் தருகிறவன் -தன்னை ஒரு சொல் சொல்லுவார் யாரோ – என்று அவசர பிரதீஷனாய் நிற்க -அவனை விட்டு புறம்பே கவிபாடுகைக்கு விஷயம் தேடித் போய் –ஒரு சொல்லுக்கு பாத்தம் போராத-சூத்ர மனுஷ்யரைக் கவி பாடி முன்பு நின்ற நிலையிலும் காட்டில் தாழ இழிய நினைக்கிற இத்தால் என்ன பிரயோஜனம் உண்டு ? அத்தால் ஸ்வரூபம் பெற்றிலிகோள்வேண்டிற்று எல்லாம் தரும் – சகல பல ப்ரதோஹி விஷ்ணு -என்கிறபடியே சர்வ அபேஷிதங்களையும் தரும் –தன்னாகவே கொள்ளும்
பரம் சாம்யம் உபைதி
-என்கிறபடி – தன்னோடு சாம்யா பத்தியை கொடுக்கும் .-கவி சொல்ல வம்மின் என்று-இதுக்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை —இதர ஸ்தோத்ரம் பண்ணி உங்கள் கரணங்களை பாழே போக்காதே -வாய் படைத்த பிரயோஜனம் பெறும்படி – இவ் விஷயத்திலே கவி சொல்ல வாருங்கோள் என்று –

செய்ய தாமரைக் கண்ணனாய் உலகு ஏழும் உண்ட அவன் கண்டீர்
வையம் வானம் மனிசர் தெய்வம் மற்று மற்றும் மற்றும் முற்றுமாய்
செய்ய சூழ் சுடர் ஞானமாய் வெளிப் பட்டு இவை படைத்தான் பின்னும்
மொய்கொள் சோதியோடு ஆயினான் ஒரு மூவர் ஆகிய மூர்த்தியே.–3-6-1-தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ-என்றும்-யஞ்ஜேசோ யஞ்ஞ புருஷ புண்டரீகாக்ஷ சம்ஞ்சித –என்றும் ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் சொல்லுகிறபடியே-செவ்வியை உடைத்தாய் சிவந்த தாமரைப் பூ போலே இருக்கிற கண் அழகை உடையனாய் பிரளய ஆர்ணவத்திலே அந்தர படாத படி ஜகத்தை திரு வயிற்றில் வைத்தவன் கிடீர் – வடிவு அழகில் புண்டரீகாக்ஷத்வம் போலே குணங்களில் பிரளய ஆபத் ஸகத்வமும்

தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு தானுமாய் அவை அல்லனாய்
எஞ்சல் இல் அமரர் குல முதல் மூவர் தம்முளும் ஆதியை
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் அவன் இவன் என்று கூழேன்மின்;
நெஞ்சினால் நினைப்பான் எவன்?அவன் ஆகும் நீள்கடல் வண்ணனே.–3-6-9–எஞ்சல் ஆகிறது -சுருங்குதல் -பகவத் அனுபவத்தில் சங்கோசம் இல்லாத நித்ய ஸூரிகள் குலம் உண்டு -திரள் -அதுக்கு நிர்வாஹகனை –அவர்களுக்கு ஜீவன ஹேது வானவனை என்றுமாம் –அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள்
சர்வாதிகனை ஆச்ரயிக்கப் போமோ -என்று அஞ்சி -உலகத்தில் உள்ளீர்களான நீங்கள் கலங்கி
அவன் இவன் என்று கூழேன்மின்;-அவன் ஆகிறான் வி லக்ஷண தேசத்தில் அசாதாரண விக்ரஹ விசிஷ்டானாய் இருப்பான் ஒருவன்-இங்கு நாம் உகந்ததொரு த்ரவ்யத்தை திரு மேனியாக விரும்பும் அளவாய் இருக்கையாலே இவ்விடம் பரிச்சின்னம் -அவ்விடம் அபரிச்சின்னம் என்று ஸம்ஸியாதே
நெஞ்சினால் நினைப்பான் எவன்?-மனசாலே யாது ஒன்றை ஸ்வரூபமாக நினைத்தி கோள்
அவன் ஆகும் நீள்கடல் வண்ணனே.– அபரிச்சேதய மஹிமானான சர்வேஸ்வரன் அத்தையே தனக்கு அசாதாரண மாக விரும்பும்-ப்ரதிமாஸ் வபரப்புத்தா நாம் -என்னும் ருஷிகளைப் போலே தம் வாயால் சொல்ல மாட்டாமையாலே –அவன் இவன் என்கிறார் –

யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம்
மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா: பார்த ஸர்வஸ:
–4-11-யாவர் என்னை எங்ஙனம் வேண்டுகிறார்களோ அவர்களை நான் அங்ஙனமே சார்கிறேன். பார்த்தா, மனிதர் யாங்கணும் என் வழியையே பின்பற்றுகிறார்கள்.

ஆஸ்தாம் தே குண ராசிவத் குண பரீவாஹ ஆத்மாநம் ஜன்மனாம்
சங்க்யா பவ்ம நிகேத நேஷு அபி குடீ குஞ்சேஷு ரெங்கேஸ்வர
அர்ச்சயஸ் சர்வ ஸஹிஷ்ணு அர்ச்சக பராதீன அகில ஆத்ம ஸ்திதி
ப்ரீணீஷே ஹ்ருதயாலுபி தவ ததச் சீலாத் ஐடீ பூயதே
–-2-74-தேவர் பூமியில் உண்டான ஸ்ரீ கோயில்களிலும் மாளிகைகளும் ஆஸ்ரமங்களிலும் அஞ்ஞாபிஞ்ஞ வர்ணாஸ்ரம விபாகமற
எல்லாராலும் பாஞ்சராத்ர விதிப்படி ஆராத நீயனாய் – மத்யே சம்பாவிதங்களான அபராதங்களையும் பொறுத்து ஆசன போஜன சயனாதிகள் அவர்கள் இட்ட வழக்காய் அவர்கள் இட்டது கொண்டு திருப்தராகிறது –

8 -முக்த ஐஸ் வர்யத்தை முன்னிட்டு வழியை தரும் நாங்கள் வானவர் ஈசன் நிற்க -என்றும் ,
தன்னாகவே கொண்டு
-என்றும் சொல்லுகையாலே -இவ் விஷயத்தை கவி பாடினால் சித்திப்பது பகவத் அனுபவ பரம சாம்யா பத்தி யாதிகள் என்று -முக்த ஐஸ் வர்யமான பேற்றை முன்னிட்டு
ஸ்வ விருத்தியை மாற்றி ஸ்வ விருத்தியில் மூட்டுகிறார் மூன்றாம் பத்தில் .. அதாவது – இப்படி தம்முடைய உபதேசத்தாலே –-சேவா ஸ்வ விருத்தி ராக்யயாதா -என்று நிஹீநதரர் ஆகையாலே -ஸ்வ விருத்தியாக சொல்லப் பட்ட அப்ப்ராப்த விஷய சேவையை மாற்றி – சாயாவா சத்வமனுகச்சேத் –சா கிமர்த்தம் ந சேவ்யதே – விஹகேஸ்வர சம்ஹிதை -என்று இவ் விஷயத்தை சேவிப்பான் என்றும் -எத்தைப் பற்ற இவ் விஷயம் சேவிக்கப் படாது-ஒழிகிறது என்றும் -விதிக்கும் படி ப்ராப்தமான இவ் விஷயத்திலே –-புகழு நல் ஒருவனில் -படியே தம்முடைய வாசிக விருத்தியிலே மூட்டுகிறார்
மூன்றாம் பத்தில் என்கை-

(முக்தைஸ்வர்யத்தை முன்னிட்டு) “ஹாவு ஹாவு ஹாவு அஹமந்ந மஹமந்ந மஹமந்நம்‌’ (தைத்திர்யோபநிஷத்‌) என்று முக்தருடைய ஐஸ்வர்யமான வாசிக கைங்கர்யத்தை முன்னிட்டு (ஸ்வவ்ருத்தியை மாற்றி ஸ்வ வ்ருத்தியிலே மூட்டுகிறார்‌) “ஸேவா ஸ்வ வருத்திராக்‌யாதா தஸ்மாத்தாம்‌ பரிவர்ஜயேத்‌’ (மநு ஸ்ம்ருதி’ என்று அப்ராப்த விஷயத்திலே ஸேவை நிஹீந தரமாகையாலே அந்த ஸ்வ வ்ருத்தியை மாற்றி சாயாவாஸத்வமநுகச்சேத்‌”(மூல ஸம்ஹிதை )என்றும்‌ “ஸா கமர்த்தம்‌ ந ஸேவ்யதே” (விஹகேஸ்வர ஸம்ஹிதை 24-14) என்றும்‌ விதிக்கப் படுகிற ப்ராப்த விஷயத்திலே புகழு நல்லொருவனில் படியே தம்முடைய வாசிக வருத்தியிலே மூட்டுகிறார்‌ முன்றாம்‌ பத்தில் -என்கிறார் –

ஆக -மூன்றாம் பத்தில் –சர்வ வியாபகத்வம் -வெளியிட்டு அருளி-அவன் வண்மைக்கும் இவர் நிஷ்கர்ஷித்த ப்ராப்யத்துக்கும் அனுரூபமான மோக்ஷத்தைக் காட்டிக் கொடுக்க-அதன் பலமாக ப்ரீதி காரித கைங்கர்யங்களையும் ஒருவாறு பெற்றமையையும் அதனால் பெற்ற ப்ரீதி உள்ளடங்காமல் தலைமண்டியிட்டுச் சென்றமையையும் அவன் அளவோடு நில்லாமல் அடியார் அடியார் அடியார்கள் அளவும் செல்ல வளர்ந்தமையையும் மீண்டும் பகவத் அனுபவத்தில் விடாயைப் பெற்றமையையும்
அவனை ஸ்தோத்ரம் பண்ணி நிரதிசய ஆனந்தம் பெற்றமையையும் பரோபதேசம் செய்தமையும்
அருளிச் செய்கிறார்-என்றவாறு )

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌-15 –குணாநுபவ பாதம் –(218 – 228)-24-தஸ ஸதக பகவத் குண அநுபவ விவரண அதிகரணம் –(219–228)-இரண்டாம் பகுதி-(220) ஸ்ரீ மணவாள மா முனிகள் –

July 31, 2026

1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 234 முடிய (48)

1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-234 (27)

15 –குணாநுபவ பாதம் –218 – 228 —மொத்தம் —11– ஸூரணைகள் –இரண்டு அதிகரணங்கள்–
23 –தஸ ஸதக கத பகவத் குண தஸக அநு குண அநுபவ உபதேச அதிகரணம் —-218—ஒரே ஸூரணை
24-தஸ ஸதக பகவத் குண அநுபவ விவரண அதிகரணம் –219–228—மொத்தம் –10–ஸூரணைகள்

இரண்டாம் பத்தால்-சர்வ காரண பூதனான சர்வேஸ்வரன் கீழில் பத்திலே தமக்கு அஜ்ஞாத ஜ்ஞாபனம் பண்ண – அவனாலே தத் ஞானரான இவர் -அந்த ஞானத்துக்கு பலமான மோஷத்தை-அப்போதே பெற வேண்டும் என்று ஆசைப் பட்டுப் பெறாமையாலே – அவசன்னராக –இவருடைய அவஸாதம் எல்லாம் தீரும் படி – அவன் வந்து சம்ஸ்லேஷித்து –அந்த சம்ஸ்லேஷத்தினால் வந்த ப்ரீதியை உடையனாய் –
அந்த ப்ரீதி இவர் ஒருவர் அளவிலே பர்யவசியாதே -இவரோடு பரம்பரயா சம்பந்தம் உடையார் அளவும் வெள்ளம் இட்டு – அந்த ப்ரீதியாலே பரம புருஷார்த்த லஷண மோஷத்தை -இவர்க்கு அவன் கொடுக்கத் தேட – அந்த மோஷத்தை -அவனுடைய சேஷித்வத்துக்கும் தம்முடைய சேஷத்வத்துக்கும் அனுகுணமாம் படி நிஷ்கரிஷித்தவர்
– ஆஸ்ரயணீயான அவனுக்கு கீழ் உக்தமான பரத்வத்தை நிலை பெறுத்துவனான லக்ஷணங்களை வெளி இட்டு – தத் அனுகுணமான வசன பிரத்யஷங்களையும் தர்சிப்பித்து –ஆஸ்ரயிப்பார்க்கு ருசி பிறக்கைக்காக- த்யாஜ்யமான சம்சாரத்தின் துக்கமும்
பிராப்யமான மோஷத்தின் ஆனந்ததமும் சம்சார நிவ்ருத்தி பூர்வக-மோஷ பிராப்திக்கு உறுப்பான -சாதனத்தின் உடைய ரசமும் – முன்னாக விதிக்கிற ச குண ப்ரஹ்ம உபாசனத்தை – நிஷித்த அனுஷ்டானங்களினுடைய த்யாக பூர்வகமாக ஷேத்திர வாஸாத் யங்கங்களோடே கூட்டுகிறார்
-என்கிறார் —

இரண்டாம்‌ பத்தில்‌ ஸர்வ காரண பூதனான ஸர்வேஸ்வரன்‌ கீழிற் பத்திலே இவ்வாழ்வார்க்கு அஜ்ஞாத ஜ்ஞாபநம்‌ பண்ணி அவனாலே தத்த ஜ்ஞாநரான இவர்‌ அந்த ஜ்ஞாநத்துக்குப்‌ பலமான மோக்ஷத்தை அப்போதே பெற வேணுமென்று ஆசைப்பட்டுப்‌ பெறாமையாலே அவஸந்நராக இவருடைய அவஸாதமெல்லாம்‌ தீரும்படி அவன்‌ வந்து ஸம்ஸ்லேஷித்து அந்த ஸம்ஸ்லேஷத்தாலே வந்த ப்ரீதியை உடையராய்‌ அந்த ப்ரீதியை இவரொருவர்‌ அளவில்‌ பர்யவஸியாதே இவரோடு ஸம்பந்த ஸம்பந்த முடையாரளவும்‌ வெள்ளமிட்டு அந்த ப்ரீதியாலே பரம புருஷார்த்த லக்ஷணமான மோக்ஷத்தை இவர்க்கவன்‌ கொடுக்கத் தேட அந்த மோக்ஷத்தை அவனுடைய சேஷித்வத்துக்கும்‌ தம்முடைய ஸேஷத்வத்துக்கும்‌ அநுகுணமாம்படி நிஷ்கர்ஷித்த இவர்‌ ஆஸ்ரயணீயனான அவனுக்கு கீழ்‌ உக்தமான பரத்வத்தை நிலை பெறுத்துவனவான லக்ஷணங்களையும்‌ வெளியிட்டு ஸம்ஸாரிகள்‌ துக்க நிவ்ருத்தி பூர்வகமான மோக்ஷ ஸுக ப்ராப்திக்கு ஸாதநமாக விதிக்கப்பட்ட ஸ்வரூபாந்தர்கதமான குணோபாஸநத்தை நிஷித்‌தாநுஷ்டானங்களினுடைய த்யாக பூர்வகமாக க்ஷேத்ர வாஸாத்‌ யங்கங்களோடே கூட்டுகிறார்‌ என்கிறார்‌.

1-சோராத மூவா வேர் முதலாய்‌ உலகம்‌ படைத்தவனென்கிற சிதசித் த்ரய த்ரிவித, காரணமானவன்‌ அறியாதன அறிவிக்க உள்ளம்‌ தேறித்‌ தூ மனம்‌ மருளிலென்னும்‌ ஜ்ஞாந பலமான ஒளிக் கொண்ட மோக்ஷம்‌ தேடிவாட, -2-உலராமலாவி சேர்ந்து சிக்கனப்‌ புகுந்து ஸம்பந்தி களும்‌ சேர்தல்‌ மாறினரென்ன வாழ்வித்து உபகரிக்கிற நீந்தும்‌ கெடலில்‌ எம்மா வீட்டை உப்யாநுகுண மாக்கினவர்‌ -3-ஆஸ்ரயணீயனுக்குப்‌ பூர்வோக்த பரத்வத்தை ஸ்தாபிக்கிற ஸகலபல ப்ரதத்வ காரணத்வ ஸேஷஸாயித்வ ஸ்ரிய:பதித்வ ஸெளலப்‌யாதிகளைத்‌ திண்ணன்‌ அணைவதென்று வெளியிட்டு -4-கள்வா -தீர்த்தனென்று வசந ப்ரத்யக்ஷங்களும்‌ காட்டிப்‌ -5-புலனைந்தென்று ஸம்ஸார மோக்ஷ ஸாதந துக்காநந்த ரஸம்‌ முன்னாக விதிக்கிற அந்தர் கத குணோபாஸகத்தை மதித்துப்‌ -6-பெருக்கி முழ்கி அழுந்திக்‌ கீழ்மை வலம்‌ சூதும்‌ செய்து இளமை கெடாமல்‌ செய்யும்‌ க்ஷேத்ர வாஸ ஸங்கீர்த்தந அஞ்ஜலி ப்ரதக்ஷண கதி சிந்தநாத்‌ யங்க யுக்தம்‌ ஆக்குகிறார்‌ இரண்டாம்‌ பத்தில்‌.–சூரணை–220-

1-சோராத மூவா வேர் முதலாய் உலகம் படைத்தவன் என்கிற சித் அசித் த்ரய திரிவித காரணமானவன்-அதாவது-சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதி-2-1-11 -என்றும் ,-மூவாத் தனி முதலாய் –2-8-5–என்றும் ,-எப்பொருட்கும் வேர் முதலாய் வித்தாய் -2-8-10–என்றும் ,-பொருள் என்று இவ் உலகம் படைத்தவன் -2-10-11-என்று-லீலா விபூதியில் சங்கல்ப விசிஷ்ட வேஷத்தால் நிமித்தமாயும் – சூஷ்ம சித் அசித் விசிஷ்ட வேஷத்தால் உபாதானமாயும் — ஞான சக்தி யாதி குண விசிஷ்ட வேஷத்தாலே சஹ காரியாயும் —
இப்படி பக்த -முக்த -நித்ய ரூபமான சித் த்ரயத்துக்கும் ப்ராக்ருத அப்ராக்ருத கால ரூபமான அசித் த்ரயத்துக்கும் திரிவித காரணமும் தானே யான சர்வேஸ்வரன்

“சோராத எப்பொருட்கும்‌ ஆதியாஞ்சோதி” (திருவாய்மொழி 2-1-11) “மூவாத்தனி முதலாய்‌”  (திருவாய்மொழி 2-8-5) “எப்பொருட்கும்‌ வேர் முதலாய்‌ வித்தாய்‌” (திருவாய்மொழி 2-8-10) “பொருளென்றிவ்வுலகம்‌ படைத்தவன்‌” (திருவாய்மொழி 2-10-11 என்று பத்‌த முக்த நித்யாத்மகமான சித் த்ரயத்துக்கும்‌ ஸூத்‌த ஸத்வ மிஸ்ர ஸத்வ ஸத்வ ஸூந்யமென்கிற அசித் த்ரயத்துக்கும்‌ நித்ய விபூதியிலே அப்ராக்ருத த்‌ரவ்ய விஸிஷ்டனாய்க்‌ கொண்டு உபாதாநமாயும்‌ இச்சா விஸிஷ்ட வேஷத்தாலே நிமித்தமாயும்‌ விநியோக விஸிஷ்ட வேஷத்தாலே ஸஹகாரியாயும்‌ லீலா விபூதியில்‌ ஸுஷ்ம சிதசித் விஸிஷ்ட வேஷத்தாலே உபாதாநமாயும்‌ ஸங்கல்ப விஸிஷ்டனாய்க்‌ கொண்டு நிமித்தமாயும்‌ ஜ்ஞாந சக்த்யாதி, விஸிஷ்டனாய்க்‌ கொண்டு ஸஹ காரியாயும்‌ போருகையாலே ஸர்வத்துக்கும்‌ நிமித்தோபாதாந ஸஹகாரிகளான த்ரிவித காரணமும்‌ தானேயான ஸர்வேஸ்வரன்‌

சேராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல்
குருகூர்ச் சடகோபன்
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே –2-1-11-இப்படி இவரோடு கலந்து இவரை உளர் ஆக்குகையாலே ஓன்று ஒழியாதபடி சகல பதார்த்தங்களும் ஈஸ்வரனுமாய்-சோதிக்கே--முக மலர்த்தியும் தன்னைத்தான் படி இருந்தான்-இவர் ஒருவரையும் சோர விட்டான் ஆகில் சர்வ சேஷி யாக மாட்டானே-நிரவதிக தேஜோ ரூபமான விகிரஹத்தை உடையானான் என்றுமாம் – சர்வ ரக்ஷகத்வம் நிலை நின்றது வடிவு அழகும் புதுக் கணித்தது

ஓவாத் துயர்ப் பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன்
மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம்
தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே –2-8-5-மூவாது ஒழிகை யாவது -முசியாது ஒழிகை – இவன் தன்னைப் பெறுகைக்காக-கரண களேபரண்களைக் கொடுக்க -அவற்றைக் கொண்டு விஷய ப்ரவணராய் அநர்த்தப் படா நின்றால்-நிஷ் ப்பலமாயிற்று-என்று முசியாது ஒழிகை

சீர்மை கொள் வீடு ச்வர்க்க நரகு ஈறா
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10-த்ரிவித காரணமும் தானே யாய்-தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு ப்ராவிசத்-என்கிறபடியே சர்வ சப்த வாச்யனாய் ஜகதாகாரேண அத்விதீயனாய் நிற்கை

பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே –2-10-11-பண்ணின கிருஷிகள் தப்பினாலும் சோம்பாதே க்ருஷி பண்ணும் கார்ஷிகனைப் போலே- கொடுத்த கரணங்களைக் கொண்டு அநர்த்தத்தை விளைத்துக் கொள்ள பின்னையும் கரணங்களைத் தந்த ஜகத் காரண பூதனுடைய கல்யாண குணங்களிலே சேர்த்து

அறியாதன அறிவிக்க உள்ளம் தேறி-அறியாதன அறிவித்த அத்தா-2-3-2- -என்று இவருக்கு அஜ்ஞாதமான தத்வ ஹித புருஷார்த்தங்களை விசத தமமாக அறிவிக்க —அடியை அடைந்து உள்ளம் தேறி -2-6-8–என்று அத்தாலே இவரும் அவனைக் கிட்டி நெஞ்ளில் தெளிவை உடையவராய்-

(அறியாதன வறிவிக்க உள்ளம்‌ தேறி) “அறியாதன அறிவித்த அத்தா”(திருவாய்மொழி 2-3-2) என்று இவர்க்கஜ்ஞாதமான தத்த்வ ஹித புருஷார்த்தங்களை விஸதமாக அறிவிக்க, “அடியை அடைந்துள்ளம்‌ தேறி” (திருவாய்மொழி 2-6-8)-அத்தாலே இவரும்‌ அவனைக்‌ கிட்டி நெஞ்சிலே தெளிவை உடையராய்‌-

ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயா
ஒத்தாய் எப் பொருட்கும் உயிராய் என்னைப் பெற்ற
அத்தாயாய் தந்தையாய்த் அறியாதன யறிவித்து
அத்தா
நீ செய்தன அடியேன் அறியேனே –2-3-2–சஹி வித்யாஸ் தம் ஜநயதி -என்கிறபடியே ஆச்சார்யனாய்-ஏதத் விரதம் மம –மாம் ஏகம் சரணம் வ்ரஜ –என்னுமவன் இறே-அத்தா –ஸ்வாமி

தூ மனம் மருளில் என்னும் ஜ்ஞான பலமான ஒளிக் கொண்ட மோஷம் தேடி வாட தூ மனத்தனனாய் –2-7-8–மருளில் வண் குருகூர் வண் சடகோபன்-2-10-11 -என்று-மோஷ க ஹேது தயா பரிசுத்தமான அந்த கரணத்தை உடையராய் – அவனுடைய கல்யாண குண விஷயமான அஞ்ஞான கந்தம் இல்லாதபடி –
கீழில் பத்தில் பிறந்த தம்முடைய ஞானத்துக்கு பலம் மோஷம் ஆகையாலே –-களிப்பும் கவர்வும் அற்று பிறப்பு பிணி மூப்பு இறப்பு அற்று ஒளிக் கொண்ட சோதி மயமாய் – அடியார் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ –2-3-10–என்று பிராக்ருத விஷய லாப அலாபங்களால் வரும் கர்வ க்லேசங்களும் -ஷட் பாவ விகாரங்களும் போய் – சுத்த சத்வம் ஆகையாலே –நிரவதிக தேஜோ ரூபமான விக்ரகத்தை உடையோமாய் – நித்ய சூரிகள் திரளிலே கூடப் பெறுவது எப்போதோ என்று அந்த மோஷத்தை பெறுகையில் ஆசையாலே தேடி அப்போதே கிடையாமல்-வாடி விடும் -2-4-1-என்று
ஆஸ்ரயித்தை இழந்த தளிர் போல் வாடி

(தூமனம்‌ மருளிலென்னும்‌ ஞான பலமான) “தூ மனத்தனனாய்‌’” (திருவாய்மொழி 2-7-8)“மருளில்‌ வண் குருகூர்‌ வண் சடகோபன்‌” (திருவாய்மொழி 2-10-11) என்று-மோக்ஷ ஏக ஹேதுவாய்‌ பரி ஸூத்‌தமான அந்‌தக் கரணத்தை உடையவராய் அவனுடைய கல்யாண குண விஷயமான அஜ்ஞாந கந்த மில்லாதபடி கீழ்ப் பத்தில்‌ பிறந்த தம்முடைய ஜ்ஞானத்துக்குப்‌ பலமான (ஒளிக் கொண்ட மோக்ஷம் தேடி வாட) “களிப்பும்‌ கவர்வுமித்யாதி, ஒளிக் கொண்ட சோதியமாய்‌ அடியார்கள் குழாங்களை யுடன்‌ கூடுவதென்றுகொலோ” (திருவாய்மொழி 2-35-10) என்று ப்ராக்ருத பதார்த்தங்களினுடைய லாபாலாபங்களினால்‌ வருகிற க்லேஸ ஹர்ஷங்களுமற்று ஷட்‌பாவ விகார ரஹிதமாய்‌ நிரவதிக தேஜோ ரூபமாய அப்ராக்ருதமுமாயிருக்கிற விக்‌ரஹத்தை யுடையோமுமாய்‌ அவனுடைய ரஷகத்வத்திலே தோற்றிருக்கிற நித்ய ஸூரிகளுடைய திரளோடே கூடப் பெறுவதெப்போதோ என்று அந்த மோக்ஷத்தை ஆசைப்பட்டவர்க்கு அப்போதே கிடையாமையாலே “நாடி நாடி வாடும்‌”  (திருவாய்மொழி 2-4-1 என்று தேடிப்‌ பெறாமையாலே ஆஸ்ரயத்தை இழந்த தளிர் போலே இவர்‌ வாட,

வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே –2-7-8-பந்த ஹேது அன்றிக்கே குண அனுபவமே யாத்ரையாம் படியான நிர்தோஷ அந்தகரணாய்

பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே –2-10-11-அஞ்ஞான கந்தம் இல்லாதாராய் சர்வ பிரகார வி லக்ஷணமான திரு நகரியை உடைய பரம உதாரரான ஆழ்வார் அருளிச் செய்தது-

களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக் கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான்நிலம் சுடர் ஆழி சங்கேந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே -2-3-10–இவன் தன்னையே அன்றிக்கே இவனுடைய ரக்ஷகத்வத்திலே தோற்று இருக்கும் ததீயர் திரள்களை –-குழாங்களையே –-திரளாக வேணும் -அது தான் அநேகமாக வேணும் இவ்விஷயத்துக்கு உசாத் துணையாம் போது அசங்க்யாதராக வேணும் என்று இருக்கிறார் -நான் எனக்கு என்று அகன்று நிற்க வேண்டாதே-அத் திரளில் ஒரு நீராகக் கூடுவது என்றோ-வைஷ்ணவ ஸஹவாசம் இனிது என்று இருக்கச் செய்தேயும் அஹங்காரத்தால் செய்யப் போகாது ஒழிகிறது இறே

ஆடியாடி யகம் கரைந்து இசை
பாடிப்பாடி கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா வென்று
வாடிவாடும் இவ்வாணுதலே
–2-4-1-இவ் வவசா னத்தில் ஸர்வதா வாராது இரான் -என்று வரவுக்கு சம்பாவனை இல்லாத இடத்தே தேடுவான் என் என்னில்-நரசிங்கா –-வரவுக்கு சம்பாவனை இல்லாத இடத்திலே தோன்றினவன் ஆகையால்-பத்துடை அடியவர்க்கு பின்பு அவதாரங்களை அவ்வருகு போக மாட்டார் –-ஆணுமாய் –மத்தஸ் சர்வம் அஹம் சர்வம் -என்னும் தெளிவும் வேணுமோ உதவும் போது
முன்பு தனக்கு உதவினவன் இப்போது உதவுகிறிலனாக சொல்லுகிறாள்-நரசிங்கா வென்று வாடும்
அப்போதே உதவாமையாலே ஆஸ்ரயம் இழந்த தளிர் போலே வாடா நின்றாள் –அப்போதே உதவாமையாலே ஆஸ்ரயம் இழந்த தளிர் போலே வாடா நின்றாள் –வாடிவாடும்--அது தான் தளிரும் முறியும் -என்னும் படி வாடா நின்றாள் விச்வாஸம் குலையாமையாலே முடிய பெறுகிறிலள்-

2-உலராமல் ஆவி சேர்ந்து-உள்ளுள் ஆவி உலர்ந்து உலர்ந்து-2-4-7- -என்கிற தாபம் ஆறும் படி
அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மானுக்கு-2-5-1- -என்கிறபடியே பரம பதத்தில் பண்ணுகிற வியாமோகத்தை இவர் பக்கலிலே செய்து — கமர் பிளந்த தரையிலே நீர் பாய்ச்சுவாரைப் போலே -இவரோடு நிரவதிக சம்ஸ்லேஷத்தைப் பண்ணி – சிக்கெனப் புகுந்து- சிறிதோர் இடமும் புறப்படாத் தன்னுள்ளே -உலகுகள் ஒக்கவே விழுங்கி சிக்கனே புகுந்தான்-2-6-2- -என்று அத் அல்பமாய் இருப்பதோர் பதார்த்தமும் தன் பக்கல் நின்று பிரி கதிர் பட்டு நோவு படாதபடி தன் சங்கல்ப சஹஸ்ரைக தேசத்தில் சர்வ லோகங்களையும் ஒருக் காலே வைத்து இனி போராதபடி புகுந்து

(உலராமல்‌ ஆவி சேர்ந்து) “உள்ளுளாவி உலர்ந்துலர்ந்து” (திருவாய்மொழி 2-4-7) என்கிற இவர்‌ தாபமாறும்படி “அந்தாமத் தன்பு செய்து என்னாவி சேரம்மான்‌” (திருவாய்மொழி 2-5-1 என்கிறபடியே பரமபதத்திலே பண்ணும்‌ வ்யாமோஹத்தை இவர் பக்கலிலே பண்ணி கமர்‌ பிளந்த தறையிலே நீரைப்‌ பாய்ச்சுவாரைப்‌ போலே இவருடைய தாபமாறும்படி இவரோடே நிரதிஸய ஸம்ஸ்லேஷத்தைப்‌ பண்ணி (சிக்கெனப்‌ புகுந்து) சிறிதோரிடமும்‌ புறப்படாத்‌ தன்னுள்ளே உலகுகளொக்கவே விழுங்கி சிக்கெனப்‌ புகுந்தான்‌” (திருவாய்மொழி 2-6-2) என்கிறபடியே அத் யல்பமா யிருப்பதொரு பதார்த்தமும்‌ தன் பக்கலிலே நின்றும்‌ பிரி கதிர்ப் பட்டு நோவு படாதபடி ஸர்வ லோகங்களையும்‌ தன்னுடைய ஸங்கல்ப ஸஹஸ்ரைகதேஸத்திலே வைத்து இனி ஒருக்காலும்‌ பேராதபடி புகுந்து-

உள்ளுளாவி உலர்ந்து உலர்ந்து என்
வள்ளலே கண்ணனே என்னும் பின்னும்
வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும் என்
கள்வி தான் பட்ட வஞ்சனையே –2-4-7-ஆந்தரமான மனஸ் ஸூ க்கு தாயகமான ஆத்மா சருகாய் வருகிறபடி-உள்ளுளாவி உலர்ந்து உலர்ந்து--அந்தக் கரணத்துக்கும் அவ்வருகான ஆத்மா –
அசோஷ்யம் என்கிறதும் போயிற்று என்கிறாள் – பாவ பந்தம் அடியாக வந்த நோய் ஆகையால் குருத்து வற்றாக உலர்ந்து செல்லா நிற்கை

அந்தாமத்தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தாமரை யடிக்கள் செம்பொன் திருவுடம்பே –2-5-1-அந்தாமத்தன்பு செய்து – பரமபதத்தில் உள்ளார் எல்லார் பக்கலிலும் பண்ணும் அபி நிவேசத்தை என் பக்கலிலே பண்ணி –மஞ்சா க்ரோசந்தி இத்வத்
என்னாவி சேர் –
கமர் பிளந்த தரையிலே நீரைப் பாய்ச்சினால் போலே –உள்ளூலாவி உலர்ந்து உலர்ந்து -என்று குருத்து வற்றாக வற்றான என்னாத்மாவிலே-விடாயர் மடுவில் விழுமா போலே வந்து கலந்தான் அம்மானுக்கு--நித்ய விபூதியில் உள்ளரோபாதி லீலா விபூதியில் உள்ளாருக்கும் வந்து முகம் காட்ட வேண்டும் பிராப்தி உடையவனுக்கு இவரைப் பெற்ற பின்பு யாயிற்று அவன் சர்வேஸ்வரன் யாயிற்று –

சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற் பின்

மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் துளக்கற்ற அமுதமாய் எங்கும்
பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே –2-6-2—ஷூத்ரமாய் இருபத்தொரு பதார்த்தமும் பிறி கதிர் படாத படி தன் சங்கல்பத்தாலே சகல லோகங்களையும் ஒரு காலே வைத்து சிக்கென புகுந்தான் – இனி ஒரு காலமும் பிரியாத படி புகுந்தான் -புகுந்த பின் அவன் இருந்த படி என் என்னில் –
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் –ஞான வெள்ளத்தால் வந்த மிக்க தேஜஸை உடையவனாய்
விகசித சஹஜ சார்வஞ்ஞனாய் சேதனனுக்கு கர்ம பாரதந்தர்யத்தால் வரும் ஞானத்தில் விகாரம் -ஆஸ்ரித பாரதந்தர்யத்தால் ஈஸ்வரனுக்கு உண்டாகிறது ஆயிற்று அங்கனே ஆகில் இறே ஆஸ்ரயணீயன் ஆவது –

சம்பந்திகளும் சேர்தல் மாறினர் என்ன வாழ்வித்து-எமர் கீழ் மேல் எழு பிறப்பும் விடியா வென் நரகத்து என்றும் சேர்த்தல் மாறினார்-2-6-7- -என்று இவருடைய சம்பந்த சம்பந்திகளும் -சம்சாரான் முக்தராம் படி பண்ணி -அத்தாலே –எமர் ஏழு பிறப்பும் –கேசவன் தமர் –மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா –2-7-1–என்று என்னோடு பரம்பரயா சம்பந்தம் உடையாரும் என்னோட்டை சம்பந்தமே ஹேதுவாக பகவத் அதீயரானார்கள் – நிர்ஹேதுக பகவத் கிருபையாகிற பெரும் சதிரைப் பெற்று
ஸ்ரீ வைஷ்ணவ சம்பத்தானது ஊற்று மாறாமல் பெருகிகிற படியே ! என்றிவர் தாமே ஆச்சர்யம் படும் படி இவரை வாழ்வித்து –

(ஸம்பந்தி களையும்‌ சேர்தல்‌ மாற்றினரென்ன வாழ்வித்து) “எமர்‌ ஏழ்‌ மேல்‌ எழு பிறப்பும்‌ விடியா வெந் நரகத்து என்றும்‌ சேர்தல்‌ மாறினர்‌ ‘ (திருவாய்மொழி 2-7-1) என்று இவருடைய ஸம்பந்த ஸம்பந்‌திகளையும்‌ ஸம்ஸாராந் முக்தராம்படி பண்ணி “எமரேழ்‌ எழு பிறப்பும்‌ மா சதிரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா” (திருவாய்மொழி 2-7-1) என்று என்னுடைய ஸம்பந்தமே ஹேதுவாக என்னோடு ஸம்பந்த ஸம்பந்‌திகளும்‌ கேசவன்‌ தமராம்படி “நாராயணனாலே” (திருவாய்மொழி 2-7-1) என்கிற மா சதிரைப்‌ பெற்று ஸ்ரீவைஷ்ணவ ஸம்பத்தானது ஊற்று மாறாமல்‌ பெருகா நின்றது என்று இவர் தாமே ஆஸ்சர்யப்படும்படி இவரை வாழ்வித்து,

முடியாதது என் எனக்கேல் இனி முழு ஏழ் உலகும் உண்டான் உகந்து வந்து
அடியேனுள் புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி
செடியார் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்
விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினரே
–2-6-7-வேறு ஒன்றால் அன்றியே என்னோட்டை சம்பந்தமே ஹேதுவாக -எவ்வளவு என்னில் –கீழ் ஏழு படியும் மேல் ஏழு படியும்-விடியா வென்னரகத்து –
ஒரு நாளிலே முடிவுண்டான தண்டல் யமனது –விடியா வென்னரகம் சம்சாரம்-வென்னரகம் -நரகம் என்று புத்தி பிறக்குமதில் தண்மை தோற்றாத நரகம் இது-என்றும் சேர்த்தல் மாறினரே
என்றும் கிட்டக் கடவதான தண்மையும் தவிர்த்தார்கள்-நானும் பிரார்த்திக்க வேண்டிற்று இல்லை
அவனும் நினைப்பிட வேண்டிற்று இல்லை-என் பக்கல் அவன் பண்ணின பக்ஷபாத ராஜ குலத்தாலே மாறிக் கொண்டு நின்றார்கள் –

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா

ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே–2-7-1--அவனுடைய அவயவ ஸுந்தர்யத்திலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்-கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்-கீழ் ஏழு படிகளிலும் மேலே ஏழு படிகளிலும் என்னோட்டை சம்பந்தமே ஹேதுவாக கேசவன் தமர்கள் ஆனார்கள்-ஆழ்வார் பரிகரம் என்றாயிற்று அவன் விரும்புவது -கேசவன் தமர் என்றாயிற்று இவர் விரும்புகிறது-மாசரிது பெற்று –-கேசவன் தமர் ஆகிற பெரும் சதிரைப் பெற்று என்னுதல் –-மாதவன் என்றதே கொண்டு என்றத்தைச் சொல்லுதல் –
விதி சூழ்ந்ததால் என்று ஆகஸ்மிக பகவத் கிருபையை சொல்லுதல்-மா சதிர் -தம் தலையால் வந்ததாகில் இறே சாவதியாய் இருப்பது-இது பெற்று-காணக் காண அவன் தலையால் சுமக்கிற படி
நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா-வைஷ்ணவ சம்பத்து -ஊற்று மாறாதே மேன் மேல் எனப் பெருகி வருகிறபடி என் –-ஆக ஏழு படி கால் என்று ஓர் அளவு இல்லை – நம் அளவில் வரச் சொல்லுகிறது இறே

உபகரிக்கிற நீந்தும் கெடலில் எம்மா வீட்டை உபய அனுகுணம் ஆக்கினவர் இப்படி தம்முடைய பரம்பரை அளவும் வெள்ளம் இடுகிற தன் ப்ரீதியாலே தமக்கு அவனுபகரித்து இடுகிற
நீந்தும் துயர் இல்லா வீடு
–2-8-2–கெடலில் வீடு-2-9-11–எம்மா வீட்டுத் திறமும் -2-9-1–என்றும்
துக்க கந்த ரஹிதமாய்–அநர்த்த கந்தம் இல்லாததாய் -எவ் வகையிலும் விலஷணமான மோஷத்தை எனக்கு என்று தரில் – அந்த மோஷம் அஹங்கார கர்ப்பம் ஆகையாலே ஐஸ்வர்யகளோபாதி ஸ்வரூப விருத்தம் ஆகையாலே – அதனுடைய பிரசங்கமும் எனக்கு அசஹ்யமான பின்பு எனக்கு மோஷம் தரப் பார்த்தது ஆகில் –-நின் செம்மாபாத பறப்பு தலை சேர் தொல்லை –அம்மா அடியேன் வேண்டுவது ஈதே –2-9-1- என்று சேஷியான உன்னுடைய அகவாய் சிவந்து புறவாய் ஸ்யாமமாய் -பரம பூஜ்யமாய் –
பரம போக்யமான திரு அடிகளை -சேஷ பூதனான என் தலையிலே –-கொக்கு வாயும் படி கண்ணியும் போலே சடக்கென சேர்க்க வேணும் — சேஷியான உன் பக்கல் சேஷ பூதனான நான் அபேஷித்து பெறுவது இதுவே என்றும் –-தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே -2-9-4–என்று உபாய ஸ்வரூபத்துக்கும் அனுகுணமாக நிஷ்கரிஷித்தார்-

(உபகரிக்கிற நீந்தும்‌ கெடலில்‌ எம்மா வீட்டை உபயாநுகுணமாக்கினவர்‌) “நீந்தும்‌ துயரில்லா வீடு” (திருவாய்மொழி 2-8-2) “கெடலில்‌ வீடு” (திருவாய்மொழி 2-9-17 “எம்மா வீடு” (திருவாய்மொழி 2-9-1 என்று துக்க கந்த ரஹிதமாய்‌ அநர்த்த கந்த மில்லாததாய்‌ எவ் வகையாலும்‌ விலஷணமான மோக்ஷத்தை இவர்க்கு உபரிக்கத்‌ தேட எனக்கென்று உபகரிக்கில்‌ மோக்ஷம்‌ அஹங்கார கர்ப்ப மாகையாலே ஐஸ்வர்ய கைவல்யங்களோபாதி ஸ்வரூப விருத்‌த மாகையாலே அது த்யாஜ்யம்‌; எனக்கு மோக்ஷம்‌ தரப் பார்த்ததாகில்‌ “நின்‌ செம்மா பாத பற்புத்‌ தலை சேர்த் தொல்லை அம்மா அடியேன்‌ வேண்டுவதீதே” (திருவாய்மொழி 2-9-1 என்று அகவாய்‌ சிவந்து புறவாய்‌ கறுத்து பரம பூஜ்யமாய்‌ பரம போக்‌யமாய்‌ ஸேஷியானவனுடைய திருவடிகளை ஸேஷ பூதனானவன்‌ தலையிலே கொக்கு வாயும்‌ படு கண்ணியும் போலே சடக்கெனச்‌ சேர்க்க வேணும்‌; ஸேஷியான உன் பக்கல்‌ ஸேஷ பூதனான நான்‌ அபேக்ஷித்துப்‌ பெறுவதுமிது; “தனக்கேயாக எனைக்‌ கொள்ளுமீதே” (திருவாய்மொழி 2-9-4 என்று உபய ஸ்வரூபத்துக் கநுகுணமாக புருஷார்த்தத்தை நிஷ் கர்ஷித்த இவர்

நீந்தும் துயர்ப்பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
நீந்தும் துயரில்லா வீடு முதலாம்
பூந்தண் புனல் பொய்கை யானை யிடர் கடிந்த
பூந்தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே –2-8-2–நீந்தும் –என்றது நீத்தும் என்றபடி -நீந்தும் என்கிற வர்த்தமான நிரதேசத்தாலே துஸ்தரம் என்கை –துயரில்லா வீடு முதலாம்–துக்க கந்த ரஹிதமான மோக்ஷத்துக்கு ஹேதுவாம் -இது பிள்ளை திரு நறையூர் அரையர் நிர்வாகம்-நீந்தும் துயர்ப்பிறவி யுட்பட மற்றும் –-நீந்தும் துயரான எவ்வெவையும் இல்லா வீடு முதலாம் என்றுமாம் –-இவர் வீடு என்கிறது -சம்சார நிவ்ருத்தி மாத்ரத்தை அன்று –-ஸூக பாவைக லக்ஷனை யான பகவத் ப்ராப்தியை –
முக்திர் மோஷா மஹா நந்த -என்னைக் கடவது இறே

விடலில் சக்கரத் தண்ணலை மேவல்
விடலில் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
கெடலில் யாயிரத்துள் இவை பத்தும்
கெடலில் வீடு செய்யும் கிளர்வார்க்கே –2-9-11-ஸ்ராத்தராய் இதிலே இழிவாருக்கு இது தானே -தனக்கே யாக என்னைக் கொள்ளும் இதே -என்று நிஷ்கர்ஷித்த அஹங்கார கந்தம் இல்லாத பேற்றைக் கொடுக்கும் –

எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்

கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா வடியேன் வேண்டுவது ஈதே –2-9-1-ப்ராப்யமாய் -அகவாய் சிவந்து -அதுக்கு பரபாகமான புறா வாயில் கறுப்பை உடைத்தாய் -விகாசம் செவ்வி குளிர்த்தி நாற்றம்-இவற்றாலே நிரதிசய போக்யமான திருவடிகளை – ஆஸ்ரிதற்கு அருமைப் பட வேண்டாத படி செவ்வியதாய் பூஜ்யமான திருவடிகள் என்னவுமாம்-என் தலையிலே கொக்குவாயும் படி கண்ணியும் போலே சேர்த்து அருள வேணும்-நீ ஸ்வாமி -நான் சேஷ பூதன் –-உத்க்ருஷ்டம் என்று வேண்டுகிறேன் அல்லேன்-நிஷித்தம் என்றாலும் விட ஒண்ணாத படி எனக்கு ராக பிராப்தம் -மற்ற என்ன வேணும் என்ன-ஈதே-உன் திருவடிகளை என் தலையிலே வைக்கும் இதுவே –

எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –2-9-4—சேஷ சேஷிகள் கலந்தால் சேஷ பூதனுக்கும் வருவதொரு ரசம் உண்டு இறே-அப்படியே அன்றியே நீ உகந்த அடிமை கொண்டு அருள வேணும்
ஸ் ரக் சந்த நாதிகளைப் போலே மிக்க அம்சம் கழிக்கலாய் இருக்கை–கீழ் முன்னிலையாய் போரச் செய்தே தனக்கே என்கிறது –-முகத்தைப் பார்க்கில் நோக்கிலும் ஸ்மிதத்திலும் துவக்குண்டு அத்தாலே நிஷ்கர்ஷம் குலையும் என்று கவிழ்ந்து இருந்து கையோலை செய்து கொடுக்கிறார் –எனக்கே ஆடச்செய் -என்கிற இடம் -அந்நிய சேஷத்வத்தை தவிர்க்கிறது-தனக்கே யாக என்கிற இடம் -தன்னோடு தனக்கு உள்ள அன்வயத்தைத் தவிர்க்கிறது

3-ஆச்ரயணீயனுக்கு பூர்வோக்த பரத்வத்தை ஸ்தாபிக்கிற ஆஸ்ரயணீயான அவனுக்கு -முதல் பத்தில் சொல்லப் பட்ட -சர்வ ஸ்மாத் பரத்வத்தை –நிலை பெருத்துவனான சகல பல ப்ரதத்வ காரணத்வ சேஷ சாயித்வ ஸ்ரீ யபதித்வ சௌலப் யாதிகளை திண்ணன் அணைவது என்று வெளி இட்டு
வீடு முதல் முழுதுமாய் –என்று சகல பல பரதத்வம் – தேவும் எல்லா பொருளும் —கருத்தில் –வருத்தித்த மாயப் பிரான் -என்றும் – ஆக்கினான் தெய்வ வுலகுகள் -என்று சர்வ காரணத்வம் – ஆழி அம் பள்ளியாரே -என்ற லக்ஷணையாலே சேஷ சாயித்வம் – பூ மகள் தன்னை வேறின்றி விண் தொழத் தன்னுள் வைத்து – என்று ஸ்ரீ ய பதித்வம் – கண்ணன் கண் – கோபால கோள் அரி ஏறு -என்று அவதார சௌலப்யம் –ஆதி -சப்தத்தாலே தகும் கோலத் தாமரைக் கண்ணன் -என்று புண்டரீ காஷத்வம் –
ஏழு உலகும் கொள்ளும் – வள்ளல் வல் வயிற்று பெருமான் -என்று அகடி தகடனா சாமர்த்தியம் –
என்கிறவற்றை –
திண்ணன் வீட்டிலும் —-அணைவது அரவணை மேல்-2-8-என்று சேஷ சாயித்வம் –
பூம் பாவை ஆகம் புணர்வது -என்று ஸ்ரீ யபதி த்வம் –-இருவர் அவர் முதலும் தானே -என்று காரணத்வம் –இணைவனாம் எப்பொருட்கும் -என்று அவதார பிர யுக்த சௌலப்யம் –-வீடு முதலாம் -சகல பல ப்ரதத்வம்–ஆதி -சப்தத்தாலே-பிறவி கடல் நீந்துவார்க்கு புணைவன் – என்று மோஷ உபாயத்வம் –
ஆனை இடர் கடிந்த -என்று ஆபத்ஸஹத்வம் –-மூ உலகும் காவலோன் -சர்வ ரஷகத்வம் ஆகியவற்றை –அணைவது அரவணையிலும் -பிரகாசிப்பித்தது –அன்றிக்கே –
வீடு முதல் முழுவதுமாய் -என்று மோஷ ப்ரப்ருதய சேஷ புருஷார்த்த பிரதன் என்கையாலே சகல பல பிரதத்வத்தையும் –-மிகும் தேவும் எப்பொருளும் படைக்க –-கருத்தில் தேவும் எல்லாப் பொருளும் வருத்தித்த – தன் உந்தி உள்ளே வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர் ஆக்கினான் -என்று
காரணத்வத்தையும் –திண்ணன் வீட்டிலும் -அணைவது அரவணை மேலிலும் -என்றும் –பூம் பாவை யாகம் புணர்வது– என்றும் –இணைவனாம் எப்பொருட்கும் -என்றும்-அடைவே சேஷ சாயித்வ ஸ்ரீ ய பதித்தவ சௌலப்யங்களையும் —ஆதி சப்ததாலே -வீடு முதலாம் -என்று மோஷ பிரதத்வத்தையும் –
நலம் அந்தமிலதோர் நாடு புகுவீர் -பலமுந்து சீரில் படிமின் -என்று முமுஷ பாஷ்யத்வத்தையும்
அணைவது அரவணை -யிலும் வெளி இட்டு என்னவுமாம் —
இந்த யோஜனை இதன் பட்டோலையான க்ரந்தத்தில் இவர் அருளிச் செய்ததுவுக்கு சேருவது ..-முற்பட்ட யோஜனையில் – ஆழி அம் பள்ளியாரே -என்று சேஷ சாயித்வம் லக்ஷணை யாலே கொள்ள வேண்டுகையும் -வீடு முதலாம் -என்று மோஷத்துக்கு ஹேதுவாம் என்கிறதை பிரகரண விருத்தமாம் படி -மோஷாதி புருஷார்த்த பிரதத்வமாக சொல்லுகையும் – சகல பல பரதத்வம் என்று தொடங்கி இவர் எண்ணின அடைவுக்குச் சேர இரண்டு திருவாய் மொழியிலும் சொல்லப் போகாமையும் ஆகிற அஸ்வாரஸ்யங்களும் உண்டு

ஆஸ்ரயணீயனுக்கு பூர்வோக்த பரத்வத்தை ஸ்தாபிக்கிற) ஆஸ்ரயணீயனானவனுக்கு முதற்பத்தில்‌ சொல்லப்பட்ட ஸர்வ ஸ்மாத் பரத்வத்தை நிலை பெறுத்துவனவான (ஸகல பல ப்ரதத்வ காரணத்வ ஸேஷ ஸாயித்வ ஸ்ரீய:பதித்வ ஸெளலப்‌யாதிகளை திண்ணன்‌ அணைவது என்று வெளியிட்டு) ஸகல பல ப்ரதத்வம்‌ முதலான பரத்வ லக்ஷணங்களை “வீடுமுதல்‌ முழுதுமாய்‌” (2-2-1) மோக்ஷ ப்ரப்‌ருத் யஸேஷ புருஷார்த்த ப்ரதனாகையாலே ஸகல பல ப்ரதத்வம்‌ “தேவும்‌ எப்பொருளும்‌” (திருவாய்மொழி 2-2-4) “கருத்தில்‌ வருத்தித்த மாயப் பிரான்‌’‘ (திருவாய்மொழி 2-2-8) “ஆக்கினான்‌ தெய்வ உலகுகளே” (திருவாய்மொழி 2-2-9) என்று ஸர்வ காரணத்வம்‌, “ஆழியம்பள்ளியாரே” திருவாய்மொழி 2-2-6) என்று லக்ஷணையாலே அநந்த ஸாயித்வம்‌ “பூ மகள் தன்னை வேறின்றி விண் தொழத்‌ தன்னுள்‌ வைத்து” (திருவாய்மொழி 2-2-3) என்று ஸ்ரிய:பதித்வம்‌, ‘கண்ணன் கண்‌” (திருவாய்மொழி 2-2-1) “கோபால கோளரி” (திருவாய்மொழி 2-2-2 என்கிற அவதார ஸெளலப்‌ யம்‌ இப்படி இவ்வர்த்தங்களை  திண்ணன்‌ வீட்டிலும்‌, அணைவதரவணை மேல்‌” என்று ஸேஷஸாயித்வம்‌, “பூம்பாவை யாகம்‌ புணர்வது” (திருவாய்மொழி 2-8-1) என்று ஸ்ரீய:பதித்வம்‌, “இருவரவர்‌ முதலும்‌ தானே” (திருவாய்மொழி 2-8-1) என்று காரணத்வம்‌, “இணைவனாம்‌ எப்பொருட்கும்‌” (திருவாய்மொழி 2-8-1 என்று அவதார ப்ரயுக்தமான ஸெளலப்‌யம்‌, “வீடு முதலாம்‌” (திருவாய்மொழி 2-8-1 என்று ஸகல பல ப்ரதத்வம்‌ என்கிற இவற்றை அணைவதரவணையிலும்‌ வெளியிட்டு-

திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்
கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே –2-2-1-த்ருடம் –-வீடு முதல் முழுதுமாய்-மோக்ஷ ப்ரப்ருத்ய அசேஷ புருஷார்த்த ப்ரதனாய்-திண்ணன் வீடு முதல் முழுதுமாய்– ஒரு நாளும் அழியாத பரமபதம் தொடக்கமான சகல லோகங்களையும் உடையனாம் என்றுமாம்

தேவும் எப்பொருளும் படைக்க
பூவில் நான்முகனைப் படைத்த
தேவன் எம்பெருமானுக்கு அல்லால்
பூவும் பூசனையும் தகுமே –2–2-4–தேவ ஜாதி முதலான சகல பதார்த்தங்களையும் உண்டாக்குகைக்காக திரு நாபீ கமலத்தில் தன்னையும் மிகும்படியான சதுர்முகனை ஸ்ருஷ்டித்த –-தேவன் –-ஸ்ருஷ்ட்ருதவத்தால் வந்த த்யுதி என்னுதல்- ஸ்ருஷ்ட்டி அவனுக்கு நிலை என்னுதல் ஸுந்தர்யாதிகளால் வந்த விளக்கம் என்னுதல் –

கருத்தில் தேவும் எல்லாப் பொருளும்
வருத்தித்த மாயப்பிரானை
யன்றி யாரே
திருத்தித் திண்ணிலை மூவுலகும் தன்னுள்
இருத்திக் காக்கும் இயல்வினரே –2-2-8—தன் சங்கல்பத்திலே தேவ ஜாதி முதலாக சகல பதார்த்தங்களையும் -நிவர்த்திப்பித்த -உண்டாக்கின -ஸ்ருஷ்டித்த-மாயப்பிரானை யன்றி யாரே-
ஆச்சர்ய பூதனான சர்வேஸ்வரனை ஒழிய மற்று யார்

காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
சேர்க்கை செய்து தன்னுந்தி யுள்ளே
வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர்
ஆக்கினான் தெய்வ வுலகுகளே –2-2-9-தன்னுடைய திரு நாபீ கமலத்தில் ஸ்ருஷ்ட்ருத்வத்தில் விலக்ஷணமான ப்ரஹ்மா இந்திரன் அல்லாத தேவதைகள் தேவ லோகங்கள் இவற்றை உண்டாக்கினான் –

யவரும் யாவையும் எல்லாப் பொருளும்
கவர்வின்றித் தன்னுள் ஒடுங்க நின்ற
பவர்கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி
அவர் எம் ஆழியம் பள்ளியாரே –2-2-6--கடலைப் படுக்கையாகக் கொண்டார்-பாயலும் பள்ளியும் பாழியும் படுக்கை-எம் –-என்று தாம் இருக்கிற சம்சாரத்திலே வந்து கண் வளர்ந்து அருளிற்று -தம்மை உஜ்ஜீவிப்பைக்கு என்று –

ஏறனைப் பூவனைப் பூ மகள் தன்னை
வேறின்றி விண் தொழத் தன்னுள் வைத்து
மேறன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட

மாறனில் மிக்குமோர் தேவுமுளதே–2-2-3–அந்நிய பரரான அவர்களையும் -அநந்ய பரையான பிராட்டியையும் தரம் பாராதே ஓக்க உடம்பு கொடுத்த நீர்மைக்கு தோற்று நித்ய சூ ரிகள் தொழா நிற்பர்கள் ஆயிற்று-கூறாளும் தனி உடம்பன் -என்கிறபடியே வ்யவஸ்திதமாக உடம்பு கொடுக்கை
விண் தொழ-மஞ்சா க்ரோசந்தி -இத்யாதி -இங்கு உள்ளார் ஐஸ்வர்யம் என்று இருப்பார்கள்-அங்கு உள்ளார் சீலம் என்று தோற்று இருப்பார்கள்

திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்
கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே –2-2-1-நம்-கண்ணன்-
என்று -க்ருஷ்ண ஏவ ஹி லோகா நாம் உத்பத்திரபிசாப்ய -க்ருஷ்ண ஸ்யஹிக்ரு தேபூத மிதம் விஸ்வம் சராசரம் -என்கிற பிராமண ப்ரஸித்தியைச் சொல்லுகிறது-நம் -என்று அத்தை நமக்கு பிரகாசிப்பித்தவன்-கண் –த்ருஷ்ட்டி -நிர்வாஹகன் –களை கண் -என்று நிர்வாஹகரை சொல்லக் கடவது இறே-அல்லது இல்லையோர் கண்ணே– வேறு ஒரு த்ருஷ்ட்டி இல்லை -அர்த்தம் இன்றிக்கே -பீலிக் கண் -மாலைக் கண் -என்னுமா போலே-யுக்தி மாத்ரமாக இருப்பது ஓன்று இல்லை
கண்ணன் கண் –என்றது அன்வயத்தாலே-அல்லது இல்லையோர் கண் – என்றது வியதி ரேகத்தாலே
இல்லையோர் கண் -இது திண்ணம் –

ஏ பாவம் பரமே யேழு லகும்
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பாரார்
மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்
கோபால கோளரி யேறன்றியே –2-2-2-–கோபால கோளரி யேறன்றியே–சிறியாரை ரக்ஷிக்கும் படி சொல்லுகிறது -ஸ்ரீ நந்தகோபர் திரு மகனாய் வந்து திருவவதரித்து – அவர் சீராட்டி வளர்க்க -அத்தாலே மேனானித்து இருக்குமவன்-கோள்-என்று மிடுக்காதல் -பிரதிபக்ஷத்தை கிரஹிக்கும் என்னுதல்
இடையர்கள் உடைய சத்ருக்களை கொள்ளும் என்கை-கோளரி ஏறு –-நித்ய ஸூ ரிகளுக்கு நிர்வாஹகன் ஆனவன்-இடையருக்கு நியாம்யகனாய்ப் பெற்ற மேனாணிப்பு–அரற்குப் பிச்சை பெய்-கோபால கோளரி யேறன்றியே--ருத்ரன் பாதகி யாயிற்று-தன் நிலை குலையாத ஏற்றத்தோடே ஆயிற்று
இவன் ரக்ஷிப்பது தாழ நின்ற இடத்தே யாயிற்று ஹிமவானிலே யாதல் -திருப் பாற் கடலிலே யாதல்
யேறன்றியே-அளிப்பார் யார் –-தலை அறுப்புண்டும்-தலையை அறுத்து பாதகியாயும்-நின்ற இவர்களை ஈஸ்வரன் என்னவோ-கர்ம வஸ்யரை ஈஸ்வரராக சொல்ல ஒண்ணாது இறே

அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்
புணர்வது இருவரவர் முதலும் தானே
இணைவனாம் எப்பொருட்கும்
வீடு முதலாம்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே –2-8-1—பூ என்று அழகு -பாவை என்று ஸ்த்ரீத்வம்
நிரவாதிகமான போக்யதையும் ஸ்த்ரீத்வத்தையும் உடையாளாய் இருக்கை-தேஹ குணத்தாலும் ஆத்ம குணத்தாலும் குறைவற்று இருக்கை-யாகம்-புணர்வது –-இவருடைய ரூப குணத்திலே துவக்குண்டு ஆத்ம குணத்து அளவும் செல்ல மாட்டாது இருக்கை-இருவரவர் முதலும் தானேந ப்ரஹ்ம ந ஈசான -என்று சுருதி பிரசித்தரான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு காரண பூதன் காரணந்து த்யேயா -என்கிறபடியே உபாஸ்யனும் அவனே -ப்ரஹ்மாதிகளுக்கு காரணத்வம் இல்லை -பாவ நாத்ர யான்விதர் யாகையாலே-இணைவனாம் எப்பொருட்கும் – தேவாதி சகல பதார்த்தங்களோடும் சஜாதீயனாய் அவதரிக்கும்
அவதார பிரயோஜனம் சொல்லுகிறது-வீடு முதலாம்–மோக்ஷ ஹேதுவாகைக்காக அவதரிக்க வேண்டுகிறது-பரமபதம் சென்று அபேக்ஷிக்க நிலம் அல்லாமையாலே சஜாதீயனாய் வந்து அவதரிக்கிறது-உத்க்ருஷ்டன் ஆகில் வெகுண்டு அகலுவார்கள் -தாழப் பிறக்கில் காற்கடைக் கொள்ளுவார்கள்

4-கள்வா தீர்த்தன் என்று வசன பிரத்யஷங்களும் காட்டி–கள்வா-2-2-10–என்கிற பாட்டிலே -அவதரித்து உன் பரத்வம் தெரியாதபடி நின்றாயே ஆகிலும் எங்களுக்கு காரண பூதனான சேஷி நீயே -என்று தேவதாந்த்ரங்களில் தலைவரான பிரம ருத்ராதிகளே தங்களுக்கு காட்சி கொடுக்கைக்கு -பெரிய திரு வடியை மேல் கொண்டு புறப்பட்டால் -அவனுடைய திருவடிகளில் விழுந்து கூப்பிடா நிற்ப்பார்கள் என்று
அவனே சர்வ ஸ்மாத் பரன் என்னும் இவ் அர்த்தத்துக்கு தேவதாந்த்ரங்கள் வசனத்தையும் –
தீர்த்தனுலகு அளந்த -2-8-6-–என்கிற பாட்டிலே -ஓர் அஸ்த்ர லாபத்துக்காக புஷ்பாதிகளும் கொண்டு
ருத்ர சமாராதானம் பண்ணப் புகுகிற அர்ஜுனனைப் பார்த்து -அந்த புஷ்பங்களை நம் காலிலே பொகடு –என்று கிருஷ்ணன் அருளிச் செய்ய -அவனும் தீர்த்த பூதனான அவனுடைய -திரு உலகு அளந்த
திரு அடிகளிலே -அப்பூவை பரிமாற —-பார்த்தோ விஜேதா மதுசூதனச்ய பாதாரா விந்தார்ப்பித்த சித்ர புஷ்பம் ததர்ச கங்காதர மௌலி மத்யே பபூவ வீர கருத நிச்சி தார்த்த – என்கிறபடி தன் திருவடிகளிலே சாத்தின புஷ்பங்களோடு -சஜாதீயமான வற்றை அன்றிக்கே – அவை தன்னையே பாடே பக்கே அன்றிக்கே -ருத்ரன் தலை மேலே -ஆப்த வாக்யத்தால் அன்றிக்கே – தானே பிரத்யஷித்து –சது பார்த்தோ மகாமனா-ஸ்ரீ கீதா பாஷ்யம் -என்கிறபடியே –பேரளவு உடையவனான அவன் நிர்ணயித்த பரத்வம் மந்த மதிகளால் இன்று ஆராயும் படி இருந்ததோ என்று பிரத்யஷைத்தையும் காட்டி-

(கள்வா தீர்த்தன்‌ என்று வசந ப்ரத்யக்ஷங்களும்‌ காட்டி) “கள்வா ‘ (திருவாய்மொழி 2-2-10) என்கிற பாட்டாலே, அவதரித்து உன்னுடைய பரத்வம்‌ தெரியாதபடி நின்றாயே யாகிலும்‌ எங்களுக்குக்‌ காரண பூதனான ஸேஷி நீயே என்று தேவதாந்தரங்களில்‌ தலைவனான ப்‌ரஹ்மாதிகளே தங்களுக்குக்‌ காக்ஷி கொடுக்கைக்கு பெரிய திருவடியை மேல் கொண்டு புறப்பட்டால்‌ அவனுடைய திருவடிகளிலே விழுந்து கூப்பிடா நிற்பர்கள்‌ என்று இவ்வர்த்தத்துக்கு வசநத்தையும்‌ “தீர்த்தன்‌ உலகளந்த” (திருவாய்மொழி 2-8-6) என்கிறபாட்டிலே ஒரு அஸ்த்ர லாபத்துக்கு ஒரு தேவதையை உபாஸிக்க வேணுமென்று அர்ஜுநன்‌ சொல்ல அப்பூவை என்‌ காலிலே பொகடென்று க்ருஷ்ணன்‌ அருளிச் செய்ய “பார்த்தோ , விஜேதா மது ஸூதநஸ்ய பாதாரவிந்தார்ப்‌பித சித்ர புஷ்பம்‌ ததேவ கங்கா தர மெளலி மத்‌யே ததர்ம வீர: க்ருத நிஸ்சயார்த்த :” என்கிறபடியே தீர்த்த பூதனான ஸர்வேஸ்வரனுடைய திருவுலகளந்தருளின திருவடிகளிலே அப் பூவைப்‌ பணிமாறி அவற்றோடு ஸஜாதீய மானவை யன்றிக்கே அவை தன்னையே பாடே பக்கலிலே யன்றிக்கே ருத்‌ரன்‌ தலை மேலே ஆப்த வாக்யத்தால்‌ அன்றிக்கே தானே ப்ரத்யக்ஷித்துப்‌ பேரளவுடையனான அர்ஜுநன்‌ நிர்ணயித்த பரத்வம்‌ மந்த மதிகளாலே இன்றாராயும்படி இருந்ததோ என்கிற ப்ரத்யக்ஷத்தையும்‌ காட்டி

கள்வா எம்மையும் ஏழுலகும் நின்
னுள்ளே தோற்றிய இறைவ
என்று
வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர்
புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவரே–2-2-10–உன் ஐஸ்வர்யத்தை மறைத்து எங்களுக்குத் தெரியாதபடி வந்து நிற்கிறவனே-பரதந்த்ரனாய் தன் ஸ்வா தந்தர்யத்தை அபலிக்கை இ றே-களவாவது –
கைலாச யாத்திரையில் இது பிரகாசிக்கிறது-நமோ கண்டாய கர்ணாய நம கட கடாயச -என்று இவன் ஸ்தோத்ரம் பண்ணின படியை வாசிக்கக் கேட்ட ப்ராஹ்மணன் -ஸ்தோத்ரம் பண்ணி அறியாத வாயாகையாலே மீன் துடிக்கிறபடி பாராய் -என்றான்-நாத்தழும்ப நான்முகனும் ஈசனுமாய் முறையால் ஏத்த –என்கிறபடியே வாய் தழும்பு ஏறிக் கிடக்கிறது அன்றோ-நீ மறைத்து நிற்கிற நிலையை நாங்கள் அறிந்திலோம் ஆகில் செய்வது என்-என்கிறார்கள் –-எம்மையும் ஏழுலகும் நின்-னுள்ளே தோற்றிய இறைவ என்று- அது களவு என்னும் இடத்தை உபபாதிக்கிறார்கள் – எங்களையும் நாங்கள் இருக்கிற லோகங்களையும் உன் சங்கல்ப ஏக தேசத்தில் தோற்றுவித்த ஸ்வாமி-இது ஸ்வரூபமாய் இருக்க எங்களை ஸ்தோத்ரம் பண்ணக் கடவையோ –

தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்
சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமை

பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –2-8-6–உலகளந்த சேவடி மேல் –-அவனுடைய சர்வ ஸூ லபமான திருவடிகளில் -இது கிருஷ்ண அவதாரத்திலேயாய் இருக்க ஸ்ரீ வாமன அவதாரத்தைச் சொல்லுகிறது –
வரையாதே தீண்டுகை –இரண்டு அவதாரத்துக்கு ஒத்து இருக்கையாலே-பூந்தாமம்-சேர்த்தி –-அழகிய மாலையைச் சாத்தி -பூ மாலை என்னவுமாம்-யவையே சிவன் முடி மேல் தான் கண்டு-அந்த பூ மாலைகள் தன்னையே ருத்ரன் ஜடையில் கண்டு அவையே -தஜ் ஜாதீயங்கள் அன்றியே அவை தன்னையே சிவன் முடி மேல் -இவன் திருவடிகளில் இட்டத்தை அவன் தலையிலே கண்டான்
தான் கண்டு -அர்ஜுனன் தானே கண்டு -சுருதி யாலே யாதல் -ஆப்த வாக்யத்தாலே யாதல் அன்றிக்கே
அதாகிறது அர்ஜுனனுக்கு ஆர் அஸ்திர அபேக்ஷையாலே அத்தேவதையை அர்ச்சிக்க வேண்ட -அத்தை என் காலிலே இடு என்று இடுவித்துக் கொள்ள ஸ்வப்னத்தில் அம்மாலையை சிரஸிலிலே தரித்துக் கொண்டு வந்து அஸ்திரத்தைக் கொடுத்துப் போயிற்று-பார்த்தன் தெளிந்து ஒழிந்த--அவன் சாரதியாய் தாழ நிற்கச் செய்த்தேயும்-அதில் கலங்காதே சது பார்த்தோ மஹா ம நா என்கிற அர்ஜுனன் நிஷ் கர்ஷித்தான் அன்றோ-பைந்துழாயன் பெருமை-சர்வாதிகனுடைய பரத்வம் -சர்வாதிக வஸ்துவுக்கு லக்ஷணம் இ றே திருத் துழாயை உடையனாகை-பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே-இது பின்னை சிலரால் ஆராய வேண்டும்படி இருந்ததோ –

5-புலன் ஐந்து என்று சம்சார மோஷ சாதன துக்க ஆனந்த ரசம் முன்னாக விதிக்கிற அந்தர் குண உபாசனத்தை புலன் ஐந்து -என்கிற பாட்டில் -ஆஸ்ரயணத்தில் இழிகிறவர்களுக்கு த்யாஜ்யத்தில் -ஜிகாசையும் – பிராப்யத்தில் பிராவண்யமும் –சாதனத்தில் ருசியும் -விளையும் படி –
புலன் ஐந்து மேவும் பொறி ஐந்து நீங்கி– என்று பரிச்சின வஸ்துக்க்ராஹமான -இந்த்ரிய வஸ்யராகை
தவிர்ந்தது என்கையாலே -அல்ப அஸ்திரஸ்வாதி தோஷ துஷ்டமான சப்தாதி போகங்களை
அனுபவித்து இருக்கும் சம்சாராத்தினுடைய துக்கமும் –-நலம் அந்தமிலதோர் நாடு புகுவீர் -என்று நன்மைக்கு முடிவு இல்லாத திரு நாட்டிலே புகுவீர் என்கையாலே -மோஷத்தினுடைய ஆனந்தமும்
பலமுந்து சீரில் படிமின் -என்று -ஸூசகம் கர்த்தும் -என்கிறபடி ஸ்மர்தவ்ய விஷய சாரஸ்யத்தாலே-பல தசையில் போல சாதன தசையிலும் இனிதாய் இருக்கையாலே – பலம் முற்பட்டு இருக்கிற கல்யாண குணங்களில் பிரவணர் ஆகுங்கோள் என்கையாலே – சாதனத்தினுடையரசம் முன்னாக -சம்சார நிவ்ருத்தி பூர்வகமான -மோஷ பிராப்தி வேண்டி இருப்பார் – அசூர வர்க்கத்தை தடுமாறி முடிந்து போம் படி செற்றவன் ஆகையாலே -பிரபல பிரதி பந்தகங்களை அனாயசேன போக வல்லவனுடைய குணங்களிலே பிரவணர் ஆகுங்கோள் என்று விதிக்கிற –-தஸ்மின் யதந்தஸ் ததுபாசிதவ்யம் -என்று ப்ரஹ்ம ஸ்வரூப அந்தர்கதமான -அபஹத பாப்மத்வாதி குண உபாசனத்தை

புலனைந்தென்று ஸம்ஸார மோக்ஷ ஸாதந துக்காநந்த ரஸம்‌ முன்னாக விதிக்கிற அந்தர் குணோபாஸநத்தை) “புலனைந்து மேயும்‌ பொறியைந்து நீங்கி நலமந்தமில்லதோர்‌ நாடு புகுவீர்‌” (திருவாய்மொழி 2-8-4) என்று பரிச்சிந்ந வஸ்து க்‌ராஹகமான இந்த்‌ரிய வஸ்யராகை தவிர்ந்து நன்மைக்கு முடிவில்லாதே யிருக்கிற நாட்டிலே புக வேண்டியிருப்பீர்‌ “அலமந்து வீய அசுரரைச்‌ செற்றான்‌ பலமுந்து சீரில்‌ படிமின்‌” (திருவாய்மொழி 2-8-4) என்று தடுமாறி முடியும்படி அஸுர வர்க்கத்தை அழியச் செய்தவனுடைய கல்யாண குணங்களிலே அவகாஹியுங்கோளென்று ஸம்ஸார துக்க நிவ்ருத்தி பூர்வகமான மோக்ஷாநந்த ரஸ ப்ராப்திக்கு ஸாதனமாக விதிக்கப் படுவதாயிருக்கிற “தஸ்மிந்யதந்தஸ்‌த்து, பாஸிதவ்யம்‌” (தைத்திரீய உபநிஷத்‌ என்று ப்‌ரஹ்ம ஸ்வரூபாந்தர்கதமான அபஹத பாப்மத்வாதி குண விஸிஷ்ட வஸ்து உபாஸநத்தை-

புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே
–2-8-4-இப்படிப்பட்டவன் என்று அனுசந்தித்து சம்சார சம்பந்தம் அற்று மோக்ஷத்தை பெற வேண்டி இருப்பார்-அவன் கல்யாண குணங்களிலே அவகாஹியுங்கோள் -என்கிறார் –புகுவீர் என்கையாலே –அர்ச்சிராதி மார்க்கத்தாலே தேச பிராப்தியையும் -அதுக்கு இச்சையே அதிகாரம் என்னும் இடத்தையும் சொல்லுகிறது – விரோதி வர்க்கம் செய்வது என் என்னில் –
அலமந்து வீய அசுரரைச் செற்றான்- அஸூரசங்கங்களை தடுமாறி முடியும் படி நிரசித்தால் போலே நிரசிக்கும்-பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –ஸ்மர்த்தவ்ய விஷய சாராஸ்யத்தாலே ஆச்ரயண தசையே தொடங்கி ரசியா நிற்கிற கல்யாண குணங்களிலே அவகாஹியுங்கோள்-ஓவாதே –-அபர்வணி கடல் தீண்டல் ஆகாதே –என்னுமா போலே இதுக்கு கால நியதி இல்லை என்கை-தமக்கு ரசித்த படியால் இடைவிடாமல் அனுபவியுங்கோள் -என்கிறார்-நானும் சொன்னேன் நமரும் உரைமின் -என்னுமவர் இறே

6-மதித்து பெருக்கி மூழ்கி அழுந்தி கீழ்மை வலம் சூதும் செய்து இளமை கெடாமல் சதிரிள மடவார் தாழ்ச்சியை மதித்து – திறமுடை வலத்தால் தீவினை பெருக்கி – வல்வினை மூழ்கி நரகழுந்தி கீழ்மை செய்து வலம் கழித்து சூது என்று களவும் சூதும் செய்து கிளர் ஒளி இளைமை கெடுவதன் முன்னம் -என்று உபாசன விரோதியான -இதர விஷய பிராவண்யத்தைப் பண்ணி – அத்தாலே பாபங்களை கூடு பூரித்து -அவற்றிலே மறு நனைய மூழ்கி தரைப் பட்டு தண்மையை செய்து பலத்தை பாழ் போக்கி -பஸ்யதோகரனாய்-க்ரித்ரிமனாய் பால்யத்தை பாழ் போக்காதே –

(மதித்துப்‌ பெருக்கி மூழ்கி அழுந்திக்‌ கீழ்மை வலம்‌ சூதுஞ் செய்து இளமை கெடாமல்‌) “சதிரிளமடவார்‌ தாழ்ச்சியை மதியாது” திருவாய்மொழி 2-10-2) “திறமுடை வலத்தால்‌ தீவினை பெருக்கி” (திருவாய்மொழி 210-5) “வல்வினை மூழ்கி” (திருவாய்மொழி 2-10-9) “நரகழுந்தி” (திருவாய்மொழி 2-10-7) “கீழ்மை செய்து” (திருவாய்மொழி 2-10-6) “வலங்கழித்து” (திருவாய்மொழி 2-10-8) “சூதென்று களவும்‌ சூதும்‌ செய்து” (திருவாய்மொழி 2-10-10) “இளரொளி இளமை கெடுவதன்‌ முன்னம்‌” (திருவாய்மொழி 2-10-12) என்று உபாஸந விரோதியான இதர விஷய ப்ராவண்யத்தாலே பாபங்களைக்‌ கூடு பூரித்து அவற்றிலே மறு நனைய மூழ்கி அழுந்தி தாழ்வு பட்டு பலத்தைப்‌ பாழே போக்கி பற்யதோஹரனாய்‌ க்ருத்ரிமனாய்‌ பஸ்யதோ ஹரனாய் –க்ரித்ரமனாய் பால்யத்தைப் பாழே போக்காதே-

சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது
அதிர்குரல் சங்கத்து அழகர் தம் கோயில்
மதி தவழ் குடுமி மாலிரும் சோலை
பதியது வேத்தி எழுவது பயனே –2-10-2–சதிரிள மடவார் –-கிளர் ஓளி இளமையை உடையவர்களை இழுத்துக் கொள்ளும் முதலைகள் யாயிற்று விஷயங்கள் – கலவியால் வந்த ரசம் இரண்டு தலைக்கும் ஒத்து இருக்க த்ரவ்யத்து அளவிலே உடம்பு கொடுக்குமவர்கள் – இவ்வஞ்ஞானம் ஆகிற அநாத்ம குணத்தைக் கண்டு -அல்லென் -என்ன ஒண்ணாத படி பருவத்தை இட்டு மருட்டுவர்கள்
மடவார் -தாழ்ச்சியை மதியாது-ஸ்த்ரீகள் பக்கல் உங்களுக்கு உண்டான ப்ராவண்யத்தை பிரயோஜனமாக நினையாதே -என்னுதல் -அவர்கள் பிரவணை களாக பாவிக்கும் அத்தை மதியாதே என்னுதல்-பிரயோஜனம் இல்லாமையே அன்று -மேல் நரகம் -இங்கு பிறர் நாக்கு வளைக்கை
பக்தாநாம் த்வம் -என்று நிரதிசய போக்யமாம் இருக்கும் விஷயம் அன்றே

திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது
அற முயலாழிப் படையவன் கோயில்
மறுவில் வண் சுணை சூழ் மாலிரும்சோலை
புறமலை சாரப் போவது கிறியே –2-10-5-திறம் – ஸமூஹம்-திறள் –வலம் -பலம் – திரண்ட பலத்தாலே பிரயோஜ நான்தர பிராவண்யம் ஆகிற பாபத்தை கூடு பூரியாதே –

வழக்கென நினைமின் வல்வினை மூழ்காது
அழக்கொடி யட்டான் அமர் பெரும் கோயில்
மழக் களிற்றினம் சேர் மாலிரும் சோலை
தொழக் கருதுவதே துணிவது சூதே –2-10-9-நான் சொல்லுகையாலே ஆப்தம் என்று இருக்கையை அன்றிக்கே இது ஸ்வரூப பிராப்தம் என்று நினையுங்கோள்-வல்வினை மூழ்காது-வ்யதிரிக்த விஷயங்களில் ப்ராவண்யம் ஆகிற வலிய பாபங்களில் புக்க அவகாஹியாதே

நலமென நினைமின் நரகழுந்தாதே
நிலமுன மிடந்தான் நீடுறை கோயில்
மலமறு மதி சேர் மாலிரும் சோலை
வலமுறை எய்தி மருவுதல் வலமே –2-10-7–இத்தை விலக்ஷணமான புருஷார்த்தம் என்று நினையுங்கோள்-நரகழுந்தாதே-இதற்கு புறம்பு ஆகை யாகிற நரகத்திலே புக்கு விழாதே
நிரயோ யஸ் த்வயா வி நா –ஏதைவ நிரயா

கிறியென நினைமின் கீழ்மை செய்யாதே
உறியமர் வெண்ணெய் யுண்டவன் கோயில்
மறியோடு பிணை சேர் மாலிரும் சோலை
நெறி படவதுவே நினைவது நலமே –2-10-6-நல் விரகு என்று புத்தி பண்ணுங்கோள்-கீழ்மை செய்யாதே-
இதுக்கு புறம்பான பிரயோஜனங்களில் பிரவணர் ஆகாதே –கீழ்மை யாவது -பகவத் வியதிரிக்தங்களில் ப்ராவண்யம் இறே

வலம் செய்து வைகல் வலம் கழியாதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில்
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே –2-10-8–கரண படாவத்தை உண்டாக்கி நாள் தோறும் அந்த பலத்தை இதர விஷயங்களுக்கு உறுப்பாக்கி வியர்த்தல் ஆக்காதே-

சூதென்று களவும் சூதும் செய்யாதே
வேத முன் விரித்தான் விரும்பிய கோயில்
மாதுறு மயில் சேர் மாலிரும் சோலை
போதவிழ் மலையே புகுவது பொருளே –2-10-10–சூது -வெற்றி -நேர்பாடு என்று பார்த்து களவு காணுதல் –பஸ்யதோ ஹரணம் ஆதல் செய்யாதே ஆத்ம அபஹரணம் பண்ணுதல் –ஈஸ்வரனே ரக்ஷகன் என்று இருக்கும் சாத்விகரை யுக்தி ஆபாசங்களாலே விச்வாஸத்தைக் குலைத்தல் செய்யாதே என்றுமாம் –

கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை
தளர்விலராகில் சார்வது சதிரே –2-10-1–கிளாரா நின்றுள்ள ஒளியை உடைத்த யவ்வனம் கழிவதற்கு முன்பே கரண படவம் உள்ள போதே –பால்யம் போய் யவ்வனம் தலை வைக்கிற அளவிலே யவ்வனம் விஷயத்திலே மூட்டி நசிப்பதற்கு முன்பே என்றுமாம் –தஸ்மாத் பால்யே விவேகாத்மா யதேத ச்ரேயஸே சதா என்னக் கடவது இறே-கோ ஜா நீதே கதா கஸ்ய ம்ருத்யு காலோ பவிஷ்யதி யுவைவதர்ம புத்திஸ் ஸ்யாதே கோ அநித்தியம் ஹி ஜீவிதம்-திருமலையை ஆஸ்ரயிப்போம் -என்ற பிறந்த ஸ்ரத்தை மாளுவதற்கு முன்னே என்றுமாம் –

செய்யும் ஷேத்திர வாஸ சங்கீர்த்தன அஞ்சலி பிரதஷிண கதி சிந்தநாத் அங்க உக்தம் ஆக்குகிறார் இரண்டாம் பத்தில்-அதாவது-பால்ய ஏவ சரேத் தர்மம் -என்றும் ,-தஸ்மாத் பால்யே விவேகாத்மா யததே ஸ்ரயசே சதா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-75–என்றும் சொல்லுகிறபடியே பால்யத்தில் கர்தவ்யமான –
மாலிரும் சோலை சார்வது சதிரே – போது அவிழ் மலையே புகுவது பொருளே -என்கிற ஷேத்திர வாசம் –பதியது ஏத்தி -என்கிற சங்கீர்த்தனம்-தொழக் கருதுவதே -என்கிற அஞ்சலி-வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே -என்கிற பிரதஷணம் நெறிபட அதுவே நினைவது நலமே -என்கிற கதி சிந்தனை
ஆகிற இவை முதலான உபாசன அங்கத்தோடு சேர்க்கிறார்
இரண்டாம் பத்தில் என்கை–

செய்யும் க்ஷேத்ர வாஸ ஸங்கீர்த்தன அஞ்சலி ப்ரதக்ஷிண கதி சிந்தநாதி அங்க யுக்தமாக்குகிறார் இரண்டாம் பத்தில் –பால்ய ஏவ சரேத் தர்மம் –என்றும் தஸ்மாத் பால்யே விவேகாத்மா யததே ஸ்ரேயஸே ஸதா (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-75) என்றும் சொல்லுகிறபடியே பால்யத்திலே கர்த்தவ்யமான -சார்வது சதிரே (2-10-1)போதவிழ் மலையே புகுவது பொருளே (2-10-10)என்றும் க்ஷேத்ர வாஸம் -பதியதி ஏத்தி எழுவது (2-10-2) என்றும் ஸங்கீர்த்தனம் -தொழக் கருதுவதே (2-10-9) என்றும் அஞ்சலி -வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே (2-10-8) என்று ப்ரதக்ஷிணம் -நெறிப்பட யதுவே நினைவது நலமே (2-10-6) என்று கதி சிந்தனம் என்கிற இவை முதலான உபாசந அங்கத்தோடு சேர்க்கிறார் இரண்டாம் பத்தில் என்கிறார்-

கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை
தளர்விலராகில் சார்வது சதிரே –2-10-1--தளர்வாகிறது திருமலைக்கு புறம்பாகை- அந்த அநர்த்தம் இன்றிக்கே -திருமலையை அபாஸ்ரயமாக சென்று புகுவதுவே சதிர் –-இதர விஷயங்களை பற்றுகை இளிம்பு-சா ஹாநி

சூதென்று களவும் சூதும் செய்யாதே
வேத முன் விரித்தான் விரும்பிய கோயில்
மாதுறு மயில் சேர் மாலிரும் சோலை
போதவிழ் மலையே புகுவது பொருளே –2-10-10-போது என்று பூவாய் -திருமலையை முட்டாக்கி இடப் பூத்துக் கிடைக்கும் அத்தனை – நித்ய வசந்தமான திருமலையில் புகுகையே பிரயோஜனம் –

சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது
அதிர்குரல் சங்கத்து அழகர் தம் கோயில்
மதி தவழ் குடுமி மாலிரும் சோலை
பதியது வேத்தி எழுவது பயனே –2-10-2-தொழுது எழு என்று தம்மைப் போலே என்று இருக்கிறார்
இதுவே பிரயோஜனம் -அல்லாதது பிரயோஜன சூன்யம் –

வழக்கென நினைமின் வல்வினை மூழ்காது
அழக்கொடி யட்டான் அமர் பெரும் கோயில்
மழக் களிற்றினம் சேர் மாலிரும் சோலை
தொழக் கருதுவதே துணிவது சூதே –2-10-9–திருமலையைத் தொழுவோம் என்று மநோ ரதித்து-அத்தையே பிரயோஜனமாக அத்யவசித்து இருக்குமதுவே விஜய ஹேது –-

வலம் செய்து வைகல் வலம் கழியாதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில்
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே –2-10-8-நாமும் திருமலையில் சென்று அவர்களோடு ஒரு கோவையாய் சர்வ காலமும் அனுகூல வ்ருத்திகளை பண்ணி வர்த்திக்கும் இதுவே பிராப்தம் -என்கிறார் –

கிறியென நினைமின் கீழ்மை செய்யாதே
உறியமர் வெண்ணெய் யுண்டவன் கோயில்
மறியோடு பிணை சேர் மாலிரும் சோலை
நெறி படவதுவே நினைவது நலமே –2-10-6-திருமலைக்கு போம் வழி நெஞ்சிலே பட -என்னுதல்
உங்கள் சத்தை உண்டாக என்னுதல் –வதுவே நினைவது நலமே –அத்தையே நினைக்குமது வி லக்ஷணம் -அத்தை ஒழிந்தது எல்லாம் பொல்லாதது என்கை –

(ஆக இரண்டாம் பத்தால் காரணத்வத்தை வெளியிட்டு – அவனாலே அறியாதது அறிவிக்கப் பெற்று உள்ளம் தேறினமையும் ஞானத்தின் பலமாக மோக்ஷத்தைத் தேடி வாடினமையையும் அந்த வாட்டம் தீர விசேஷ அனுக்ரஹம் செய்து அருளி மோக்ஷத்தைக் கொடுப்பதாக இருந்தமையையும் அந்த மோக்ஷத்தின் தன்மையை ஆழ்வார் அறுதியிட்டு பேசினமையையும் உலோகோருக்கு உபதேசிக்க ஒறுப்பட்டு ச குண ப்ரஹ்ம உபாசனத்தை அங்கத்தோடே விதித்தமையையும்-தெரிவித்தபடி – )

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌-15 –குணாநுபவ பாதம் –(218 – 228)-24-தஸ ஸதக பகவத் குண அநுபவ விவரண அதிகரணம் –(219–228)-முதல் பகுதி-(219) ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

July 31, 2026

1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 234 முடிய (48)

1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-234 (27)

15 –குணாநுபவ பாதம் –218 – 228 —மொத்தம் —11– ஸூரணைகள் –இரண்டு அதிகரணங்கள்–
23 –தஸ ஸதக கத பகவத் குண தஸக அநு குண அநுபவ உபதேச அதிகரணம் —-218—ஒரே ஸூரணை
24-தஸ ஸதக பகவத் குண அநுபவ விவரண அதிகரணம் –219–228—மொத்தம் –10–ஸூரணைகள்

இதில் முதல் பத்தாலே-சர்வ ஸ்மாத் பரனான -சர்வேஸ்வரன் – தன்னுடைய நிர்ஹேதுக கிருபையால்
அஞ்ஞானத்தைப் போக்கி பக்தி ரூபான்ன ஞானத்தைக் கொடுத்து இன்னும் இவர் நம்மை விஸ்மரிக்கக் கூடும் என்று தம் பக்கல் அவன் தனக்கு உண்டான ஸ்நேஹத்தாலே விடாதே தம்முடைய
ஹ்ருதயத்திலே நிரந்தர வாசம் பண்ண
–அத்தாலே – சம்சய விபர்யய விஸ்ம்ருதி ரஹிதமான தத்வ ஞானத்தை உடையரான ஆழ்வார் – அவனுடைய குணங்களைத் தம் திரு உள்ளத்தோடே அனுபவித்து –
அவ் விஷயம் தனியே அனுபவிக்க ஒண்ணாமையாலே -சம்சாரிகளையும் பார்த்து – த்யாஜ்யமான சம்சாரத்தின் தோஷத்தையும் – தத் த்யாக பிரகாரத்தையும் உபாதேயமான பகவத் விஷயத்தின் குணத்தையும் தத் பஜன பிரகாரத்தையும் பஜன ஆலம்பமான மந்தரத்தையும் -உபதேசித்து –பஜநீயவனுடைய சௌலப்யம் -அபராத சஹத்வம் -சீலவத்தை -ஸ்வ ஆராததை – ஆஸ்ரயண ரஸ்யத்தை -ஆர்ஜவம் -சாத்ம்ய போக பரதத்வம் – பரபக்தி பரி கணைகளுக்கு ஒக்க முகம் காட்டும் சாம்யம் -ஆகிற குணங்களை தர்சிப்பியா நின்று கொண்டு –அவ் வழியாலே -பஜனத்தின் உடைய
ஸூகரத்வ ரஸ்யதைகளையும் – பஜிக்கவே சர்வ பலங்களும் சித்திக்கும் என்னும் அத்தையும்
பஜன உபக்ரமத்தில் -பஜன விரோதிகள் அடைய நசிக்கும் -என்னும் அத்தையும் அறிவித்து —ஆன பின்பு ஸ்ரீ கீதையில் அவன் அருளி செய்த பக்தி மார்க்கத்தில் நின்று தேவதாந்த்ரங்கள் பக்கல்
பரத்வ சங்கா நிவ்ருத்தி பூர்வமாக அவன் விஷயமான ஞானத்தைக் கொண்டு அவன் பக்கலிலே அநந்ய பிரயோஜனராய் பக்தியைப் பண்ணுங்கோள் என்று – தமக்கு அவன் மயர்வற மதி நலம் அருளினாப் போலே தாமும் இவர்களுக்கு அஞ்ஞான நிவ்ருத்தி பூர்வகமாக ஞான பக்திகளை உபதேசத்தாலே உண்டாக்கி பஜனத்திலே மூட்டுகிறார்
என்கிறார் —

இதில்‌ முதல்‌ பத்தாலே ஸர்வ ஸ்மாத் பரனான ஸர்வேஸ்வரன்‌ தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையாலே அஜ்ஞாநத்தை வாஸநையோடே போக்கி பத்தி ரூபாபந்ந ஜ்ஞாநத்தைக்‌ கொடுத்து இன்னமும்‌ இவர்‌ நம்மை விஸ்மரிக்கக்‌ கூடுமென்று இவர் பக்கல்‌ தனக்குண்டான ஸ்நேஹத்தாலே விடாதே இவருடைய ஹ்ருதய கமலத்திலே ஸுப்ரதிஷ்டிதனாய்க்‌ கொண்டு நிரந்தர வாஸம்‌ பண்ண இவரும்‌ அத்தாலே ஸம்ஸய விபர்யய விஸ்ம்ருதி ரஹிதமான தத்த்வ ஜ்ஞாநத்தை உடையராய்‌ அவருடைய குணங்களைத்‌ தம்முடைய திருவுள்ளத்தோடே அநுபவித்து இவ் விஷயம்‌ தனியே அநுபவிக்க வொண்ணாமையாலே ஸம்ஸாரிகளையும்‌ பார்த்து த்யாஜ்யமான ஸம்ஸாரத்தினுடைய அல்பாஸ்திரத்வாதி, தோஷங்களையும்‌ அதினுடைய த்யாக ப்ரகாரத்தையும்‌ உபாதேயமான பகவத்‌ விஷயம்‌ நிரதிஸய போக்‌யமாயிருக்கும்‌ என்னுமத்தையும்‌ அவனுடைய பஐநீயத்வத்தையும்‌ பஐநத்துக்கு ஆலம்பநமான மந்த்ரத்தையும்‌ உபதேஸித்து அந்த பஜநீயனுடைய ஸெளலப்‌யம்‌ அபராத ஸஹத்வம்‌ ஸீலவத்தை ஸ்வாராததை ஆஸ்ரயண ரஸ்யதை ஆர்ஜவம்‌ ஸாத்ம்ய போக ப்ரதத்வம்‌ பரபக்திக்கும்‌ பரிகணநைக்கும்‌ ஒக்க முகம்‌ காட்டுகிற ஸாம்யம்‌ இப்படிப்பட்ட குணங்களையும்‌ பஐநத்தினுடைய ஸூகரத்வ ரஸ்யதைகளையும்‌ பஜிக்கவே ஸர்வ பலங்களும்‌ ஸித்‌திக்கும்‌ என்னுமிடத்தையும்‌ பஜநோபக்ரமத்திலே பஜந விரோதி யடைய நஸிக்கும்‌ என்னுமிடத்தையும்‌ அறிவித்து இப்படியான பின்பு ஸ்ரீகீதையில்‌ அவன்‌ அருளிச்‌ செய்த பக்தி மார்கத்திலே நின்று தேவதாந்தரங்கள்‌ பக்கல்‌ பரத்வ ஸங்கா நிவ்ருத்தி பூர்வகமாக அவன்‌ விஷயமான ஜ்ஞாநத்தைக்‌ கொண்டு அவன்‌ பக்கலிலே அநந்ய ப்ரயோஜந பக்தியைப்‌ பண்ணுங்கோள்‌ என்று தமக்கு ஸர்வேஸ்வரன்‌ மயர்வற மதிநலம்‌ அருளினாப் போலே தாம்‌ ஸம்ஸாரிகளுக்கு அஜ்ஞாந நிவ்ருத்தி பூர்வகமாக ஞாந பக்திகளை உபதேஸித்து அவனுடைய பஜநத்திலே மூட்டுகிறார்‌ என்கிறார்‌.

(1-ஆழ்வார் அருளிச் செய்த இறைவனது குணங்களையும்-2-ஆழ்வாருக்கு அவன் செய்த உபகாரங்கள் இன்னது என்னுமத்தையும்-3-உலகோருக்கு உபதேசித்தவை இன்னது என்னுமத்தையும் ஆக மூன்று பகுதியாக அருளிச் செய்கிறார் )

1-பரபரனாய் நின்ற வளவேழ் வைப்பாமவையுள்‌ உம்பர்‌ வானவர் அதிபதி மயர்வற மன்னி மனம்‌ வைக்கத்‌ திருத்தி –2-மறக்குமென்று நல்கி விடாதே மன்ன, அயர்ப்பிலனறுத்தேன்‌ என் சொல்லி மறப்பனோ என்னும்படி தத்தவ ஜ்ஞானரானவர்‌ -3-சுடரடி யெம்பிரானை விடாது கண்டாய்‌ நீயும்‌ நானுமென்கிற ஸஹ்ருதயாநுப,வம்‌ ஸம்ஸாரிகளுக்கமாம்படி -4-வீடுமினென்று தயாஜ்யோபாதேய தோஷ குண பரித்யாக, ஸமர்ப்பண க்ரமத்தை ஸாலம்பந மந்த்ரமாக உபதேஸித்து –5-எளிதாக ௮வதரித்துப்‌ பிழைகளை ஸஹித்துப்‌ புரையறக்‌ கலந்து அல்ப ஸந்துஷ்டனாய்‌ அம்ருதமே ஒளஷதமாக்கி –6-நீர் புரையத்‌ தன்னை நியமித்து போகத்தை ஸாத்மிப்பித்து –7-பக்தி கணனைகளுக்கு ஒக்க வருமவனுடைய ஸேவைக்கு எளிமையும்‌ இனிமையுமுண்டு, –8-தொழுதால்‌ அரும்‌ பயனாயதரும்‌, உத்‌யோகத்தே வினைகளும்‌ மாளும்‌, –9-௮வனுரைத்த மார்க்கத்தே நின்று இரு பசை மலமற உணர்வு கொண்டு –10-நலம்‌ செய்வதென்று தாம்‌ மயர்வற மதிநலமருளி பஜநத்திலே சேர்க்கிறார்‌ முதற்பத்தில்‌.–சூரணை-219-

முதல் பத்தில் ..-பர பரனாய் நின்ற வள வேழ் வைப்பாம் அவையுள் உம்பர் வானவர் அதிபதி–
அதாவது-வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்-1-1-8- -என்றும் ,-ஆய் நின்ற பரன் -1-1-11-என்றும் ,
வள வேழ் உலகின் முதலாய வானவர் ஏறே-1-5-1 -என்றும் ,-வைப்பாம் மருந்தாம் -நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப் பால் அவன் -1-7-2–என்றும் ,-அவையுள் தனி முதல் -1-9-1–என்றும் ,-உம்பர் வானவர் ஆதி அம் சோதி-1-10-9- -என்றும் ,-அயர்வறும் அமரர்கள் அதிபதி-1-1-1- -என்று-

(பரபரனாய்‌ நின்ற வளவேழ்‌ வைப்பாமவையுள்‌ உம்பர் வானவரதிபதி) முழுதுண்ட பரபரன்‌” (திருவாய்மொழி 1-1-8) “ஆய்நின்ற பரபரன்‌” (திருவாய்மொழி 1-1-14 வளவேழுலகின்‌ முதலாயவா னோரிறை” (திருவாய்மொழி 1-5-1 “வைப்பாம்‌ மருந்தாம்‌ (திருவாய்மொழி 1-7-2) “நலத்தால்‌ உயர்ந்துயர்ந்து அப்பாலவன்‌” திருவாய்மொழி 1-7-2) “அவையுள்‌ தனிமுதல்‌” (திருவாய்மொழி 1-9-1 “உம்பர்‌ வானவர்‌ ஆதியஞ்சோதி” (திருவாய்மொழி 1-10-9)”அயர்வறுமமரர்களதிபதி” (திருவாய்மொழி 1-1-1 என்று –

சுரர் அறிவரு நிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என வுலகு அழித்து அமைத்து உளனே 
–1-1-8-ஈஸ்வரனாலும் -அவன் அடியாக ப்ரஹ்மாவாலும் ஸ்ருஷ்டமான பதார்த்தங்களில் ருத்ரனால் சம்ஹார்யம் ஆவது ஏகதேசம் –
சம்ஹர்த்தாவான ருத்ரனையும் -அவனுக்கு நிலம் அல்லாத மஹதாதிகளையும் அகப்பட சம்ஹரித்தவன்-பரபரன்-ஈஸ்வரன் அடியாக ஏகதேச சிருஷ்டி சம்ஹாரங்களைப் பண்ணுகிற ப்ரஹ்மாதிகள் அஸ்மாதிகளில் பரர்- அந்த ப்ரஹ்மாதிகளுக்கும் பரனாகையாலே பராத்பரன் –

கரவிசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
வரனவில் திறல் வலி யளி பொறையாய் நின்ற
பரனடி மேல் குருகூர்ச் சடகோபன் சொல்
நிரனிறை யாயிரத்து இவை பத்தும் வீடே 
–1-1-11-ஆய் நின்ற பரன்-இந்த உபய விபூதியையும் சரீரத்வத் பிரகாரமாக யுடையவன் ஆகையாலே சர்வ ஸ்மாத் பரன்

வள வேழுலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன் பின்னையும்
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய்
இளவேறேழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே
 –1-5-1-வளவியனாய் ஏழ் உலகுக்கும் காரண பூதனாய்-நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனாய் இருந்துள்ளவனை-வளவியனாகை யாவது -ஸ்வரூபாதிகளால் வந்த வைலஷண்யத்தை யுடையனாகை-

வைப்பாம் மருந்தாம் அடியாரை வல்வினைத்-துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடானவன்
எப்பால் எவர்க்கு நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே –1-7-2–வைப்பாம் –ப்ராப்யமான புருஷார்த்தமாம் –நினைத்த வகைகள் எல்லாம் அனுபவிக்கைக்கு யோக்யமாம் படி சேமித்து வைக்கும் நிதி போ லே -தன்னை ஆக்கி வைக்கும்-மருந்தாம் – விரோதியைப் போக்கி போக்த்ருத்வ சக்தியைக் கொடுக்கும் -இத்தால் பிராபகத்வம் சொல்கிறது –-நிர்வாணம் பேஷஜம் -என்னக் கடவது இறே-எப்பால் எவர்க்கு நலத்தால் உயர்ந்து உயர்ந்து-எல்லா இடத்திலும் உள்ள எல்லாரிலும் காட்டில் ஆனந்தத்தால் மேற்பட்டு-அப்பாலவன் –மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி சத குணி தோத்தர க்ரமத்தாலே ப்ரஹ்ம ஆனந்தம் அளவும் சென்று -அத்தை மனுஷ்ய கோடியில் ஆக்கி
மேல் மேல் கற்ப்பித்துக் கொண்டு ஆனந்தத்தைப் பெருக்கினாலும்-பிரமாணங்களால் வாங்மனஸ் சங்களுக்கு நிலம் அன்று என்று மீளும்படி அவ்வருகான ஆனந்தத்தை உடையவன்

இவையும் அவையும் உவவையும் இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –1-9-1—அவையுள் தனி முதல்--அவற்றின் பக்கலில் அந்தராத்மாவாய் –-தான் ஒருவனே நிர்வாஹகானாய் -நிற்கும்-எம்மான்–தன் விபூதி விஷயமாக உண்டான ஓரத்தைக் காட்டி என்னை அநந்யார்ஹன் ஆக்கினவன்–கண்ண பிரான்
இப்படிப் பட்டவன் முகம் தோற்றாத படி மறைய நிற்கை அன்றிக்கே கண்ணுக்கு விஷயமாக வந்து நிற்கும் உபகாரத்தைச் சொல்கிறது-

நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ –1-10-9–ஆக்கரான ப்ரஹ்மாதிகள் அன்றிக்கே அவ்வருக்கான நித்ய ஸூரிகளுக்கு சத்தா ஹேதுவாய்-அவர்களுக்கு அதி மநோ ஹரமுமான தேஜஸையும் உடையவனை-அவ்வடிவுக்கு போக்தாக்கள் இறே அவர்கள்-எம்பிரானை –-நித்ய ஸூரிகளுக்கு போலே தானே தாரகமாம் படி எனக்கு உபகரித்தவனை

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே 
–1-1-1-அயர்வறும்-பகவத் ஜ்ஞானத்துக்கு விச்ம்ருதி இல்லாமை ஸ்வ பாவமாய் இருக்கை-அமரர்கள் -மரணம் இன்றிக்கே இருப்பவர்கள்
அவர்களுக்கு மரணம் ஆவது பகவத் அனுபவ விச்சேதம் -அது இன்றிக்கே இருக்கை
அதிபதி-அதிகனான பதி-அசங்க்யாதரான நித்ய ஸூ ரிகள் நித்ய அனுபவம் பண்ணா நின்றாலும் பரிச்சேதிக்க ஒண்ணாத பெருமையை யுடையவன்-எவன் -நித்ய விபூதி யோகத்தாலே வந்த ஸ்ருதி பிரசித்தி-அவன் -அதுக்கு மேலே விக்ரஹத்தாலே வந்த வை லஷண்யம் சொல்லுகைக்காக உத்தேசிக்கிறது

சகல ஜகத் சர்க்காதி கர்த்ருத்வத்தாலும் – உபயவிபூதி யோகத்தாலும் — உபய விபூதி நாதத்வத்தாலும் –
பிராப்ய பிராபகவத்தாலும் — அபரிசேத்ய ஆனந்த யுக்ததையாலும் – சர்வ சரீரி தயா சர்வ சப்த வாச்யத்வத்தாலும் – நித்ய ஸூரி நிர்வாகத்தாலும் — நித்ய அசங்குஜித ஞானரானவர்கள் நித்ய அனுபவம் பண்ணா நின்றாலும் பரிசேதிக்க ஒண்ணாத பெருமை உடையவன் ஆகையாலும் – சர்வ ஸ்மாத் பரன் ஆனவன் –

ஸகல ஜகத்‌ ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார கர்த்ருத்வத்தாலும்‌ உபய விபூ,தி யோகத்தாலும்‌ உபய விபூதி நாயகத்வத்தாலும்‌ ப்ராப்ய ப்ராபகத்வத்தாலும்‌ அபரிச்சேத்‌யாநந்த, யுக்ததையாலும்‌ ஸர்வ ஸரீரித்வத்தாலும்‌ ஸர்வ ஸப்த, வாஸ்யத்வத்தாலும்‌ நித்ய ஸூரி நிர்வாஹகத்வத்தாலும்‌ பரத்வ ப்ரதிபாதகமான “உளன்‌ சுடர்மிகு சுருதி” (திருவாய்மொழி 1-1-7) என்கிறபடியே வேதாந்த வேத்‌யத்வத்தாலும்‌ ”திருவுடையடிகள்‌” (திருவாய்மொழி 6-8-11) என்று ஸ்ரீய:பதித்வத்தாலும்‌ “என்‌ செய்ய தாமரைக்கண் பெருமானார்‌‘ (திருவாய்மொழி 1-4-2 என்று புண்டரீகாக்ஷத்வத்தாலும்‌ “ஓடும் புள்ளேறி” (திருவாய்மொழி 1-8-1) என்று கருட, வாஹநத்வத்தாலும்‌ அத ஏவ ஸர்வ ஸ்மாத் பரனான ஸர்வேஸ்வரன்‌

திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள்
இவை யுண்ட சுரனே –1-1-7-சொன்ன அர்த்தங்கள் எல்லாவற்றுக்கும் பிரமாணம் நிர்த்தோஷ ஸ்ருதி என்கிறது-சுடர் மிகுகை யாவது -பௌருஷ்யத்வ நிபந்தனமான விப்ரலம்பாதி தோஷ ரஹிதமுமாய் பிரமாணாந்தரங்களைக் கொண்டு பாஹ்ய குத்ருஷ்டிகளால்
அவிசால்யமாகையாலே மிக்க தேஜச்சை யுடைத்தாகை-ஒருவரால் பண்ணப் பட்டது அன்றிக்கே என்றும் கேட்டே வருமதாகையாலே ஸ்ருதி என்கிறது –உளன்-இப்படிப்பட்ட ஸ்ருதியாலே பிரதிபாத்யனாகக் கொண்டு தோற்றினவன்-தாம் அனுசந்தித்த அர்த்தங்களுக்கு ஸ்ருதியை சாஷியாக சொல்லுகையாலே அதில் சொல்லுகிற ஸ்ரீ யபதித்வமும் நாராயண சப்த வாச்யமும் அனுசந்தித்தாராக வேணும்-இவருக்கு நிர்தோஷ ஸ்ருதியே பிரமாணம் ஆகையாலே பாஹ்யரும் ஜகத் ஈஸ்வரர்களுக்கு அந்யதா சம்பந்தம் சொல்லும் குத்ருஷ்டிகளும் அர்த்தாத் பிரதி ஷிப்தர் ஆனார்கள் 

நாளும் நின்று அடும் நம் பழமை அம் கொடு வினையுடனே
மாளும் ஒரு குறைவில்லை மனனக மலமறக் கழுவி
நாளும் நம் திருவுடையடிகள் தம் நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே
 –1-3-8-நமக்கு அபிமதமான நாள் தோறும்-நமக்கே கூறப்பட்ட ஸ்ரீ மானான ஸ்வாமியினுடைய சர்வ ஸமாச்ரயணீயமாய் போக்யமுமான திருவடிகளை ஆஸ்ரயிக்கில்

என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள் நீரலிரே
முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே
 –1-4-2–விஸ்லேஷ தசையிலே தான் வரும் தனையும் இவள் தரித்து இருக்கைக்காக -ஆத்மாத்யீங்கள் எங்கேனும் கிடக்கிலும் உன்னது அன்றோ என்கிற வார்த்தையாலே என்னுடையவர் என்கிறாள் ஐஸ்வர்யத்தாலும் வாத்சல்யத்தாலும் கலவியாலும் சிவந்த திருக் கண்களை யுடையவர் இவை எல்லாம் இவள் அனுபவித்தவை இறே
முதல் திருவாய் மொழியிலே ஐஸ்வர் யமும் -மூன்றாம் திருவாய் மொழியிலே வாத்சல்யமும் இத் திருவாய் மொழியிலே கலவியும் –பெருமானார்க்கு –
ஸ்வ பாவிகமான பௌஷ்கல்யத்துக்கு மேலே தன்னைத் தோற் பித்தத்தால் வந்த மேணானிப்பைச் சொல்லுகிறாள் –சம்ச்லேஷதசையிலே ச்நேஹகமாக நோக்கி -அந் நோக்காலே என்னை அடிமை கொண்டவனுக்கு என்றுமாம் –

ஓடும் புள்ளேறி சூடும் தண் துழாய்
நீடு நின்றவை ஆடும் அம்மானே –1-8-1-ஓடும் புள்ளேறி –-புள்ளேறி ஓடும் -பெரிய திருவடியை மேற்கொண்டு சஞ்சரியா நிற்கும்-மஹிஷிக்கு ஸ்தன பரிரம்பணம் போலே தன்னை மேற்கொள்ளுகை வாஹனத்துக்கு அபேக்ஷிதமாய் இருக்கை –மேற்கொள்ளும் அது தான் -அங்கு உள்ளார்க்கு காட்சி கொடுக்கைக்கும் –அவனுடைய ஸ்வரூப லாபத்துக்குமாய் இருக்கும்-த்வத் அங்க்ரி சம்மர்த்த கிணங்க ஸோபிநா

1-மயர்வற மன்னி மனம் வைக்க திருத்தி –-அதாவது மயர்வற மதி நலம் அருளினன்-1-1-1- -என்றும் ,
மயர்வற என் மனத்தே மன்னினான் -1-7-4–என்று ஸ்வ கேவல கிருபையாலே –ஞான அனுதய –
அந்யதா ஞான -விபரீத ஞான -ரூபமான அஞ்ஞானத்தை இவருக்கு வாசனையோடு போக்கி
பக்தி ரூபாபன்ன ஞானத்தைக் கொடுத்து –இவர் திரு உள்ளத்திலே புகுந்து – சார்ந்த இரு வல் வினைகளும் சரித்து மாயப் பற்று அறுத்து தீர்ந்து தன் பால் மனம் வைக்க திருத்தி -1-5-10–என்கிறபடியே பிரிக்க ஒண்ணாதபடி இவரோடு பொருந்தி கிடக்கிற பிரபலமான புண்ய பாப கர்மங்களையும் –பாஹ்ய விஷய ருசி வாசனைகளையும் போக்கி – அயோக்யா அனுசந்தானத்தாலே அகன்ற அளவிலும் –தன் சீலத்தைக் காட்டி இவரை மீட்டு – அல்லேன் என்று அகலாதே தனக்கே தீர்ந்து தன் பக்கல் நெஞ்கை வைக்கும் படி – தரிசு கிடந்த நிலத்தை செய்காலாகத் திருத்துவாரைப் போலே திருத்தி

(மயர்வற மன்னி மனம்‌ வைக்கத்‌ திருத்தி) “மயர்வற மதிநலம்‌ அருளினன்‌” (திருவாய்மொழி 1-1-1 “மயர்வற என்‌ மனத்தே மன்னினான்‌” (திருவாய்மொழி 1-7-4) என்று ஜீஞாநாநுதய அந்யதாஜ்ஞாந விபரீதஜ்ஞாநமான அஜ்ஞாநத்தை இவர்க்கு வாஸநையோடே போக்கி நிர்ஹேதுக க்ருபையாலே பக்தி ரூபாபந்ந ஜ்ஞாநத்தைக்‌ கொடுத்து இவர்‌ திருவுள்ளத்திலே புகுந்து “சார்ந்த இருவல் வினைகளும்‌ சரித்து மாயப் பற்றறுத்துத்‌ தீர்ந்து தன் பால்‌ மனம்‌ வைக்கத்‌ திருத்தி” (திருவாய்மொழி 1-5-10) என்கிறபடியே இவருடைய புண்ய பாப ரூப கர்மத்தை ஸவாஸநமாகப்‌ போக்கி “அருவினையேன்‌” (திருவாய்மொழி 1-5-1) என்று அயோக்‌யதாநுஸந்தாநம்‌ பண்ணி அகன்ற விடத்திலும்‌ தன்‌ ஸீலவத்தையைக்‌ காட்டிச்‌ சேர்த்துக்‌ கொண்டு இவர்‌ தாமே “மாயோன்‌” (திருவாய்மொழி 1-5-8) என்று தன் பக்கலிலே நெஞ்சை வைக்கும்படி தரிசு கிடந்த நிலத்தைச்‌ செய்காலாகத்‌ திருத்துவாரைப்போலே திருத்தி,-

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே 
–1-1-1-மயர்வு -அஜ்ஞானம் -இத்தால் ஜ்ஞான உதய -அந்யதா ஜ்ஞான -விபரீத ஜ்ஞான ரூபமான அஜ்ஞானத்தைச் சொல்லுகிறது-அற -சவாசனமாகப் போகும்படி
மதி நலம்-மதி என்று ஜ்ஞானம்-நலம் -என்று பக்தி -பக்தி ரூபாபன்ன ஜ்ஞானம் என்றபடி-அருளினன்
இத் தலையில் நன்மை தீமை பாராதே நிர்ஹேதுக கிருபையால் தந்து அருளினான்
முலைக் கடுப்பாலே தரையிலே பீச்சுமா போலே –எனக்குத் தந்து அருளினான் -என்னாது ஒழிந்தது -பகவத் விஷயீ காரத்துக்கு முன்பு தம்மை அசத் கல்பராக நினைத்து இருக்கையாலே-எவன்–இப்படி உபகாரகனான ஸ்ருதி பிரசித்தி ஆனவன்

மயர்வற என் மனத்தே மன்னினான் தன்னை -உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வில் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என் இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ –1-7-4-மயர்வற-அஞ்ஞானம் சவாசனமாக போம்படி-என் மனத்தே மன்னினான் தன்னை-அஞ்ஞானம் பின்னாட்டாத படி என் ஹிருதயத்திலே வந்து புகுந்தான்-மன்னினான் தன்னை-இனி கந்தவ்ய பூமி இல்லை என்று ஸ்த்தாவர பிரதிஷ்டை போலே இருந்தான்-

சார்ந்த விரு வல்வினைகளும் சரிந்து மாயப் பற்று அறுத்து
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞானச் சுடராகி யகலம் கீழ் மேல் அளவிறந்து
நேர்ந்த யுருவாய் யருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே –1-5-10-தன்பால் மனம் வைக்கத் திருத்தி
விரோதியைப் போக்கும் அளவு அன்றிக்கே மனஸ் ஸூ க்குத் தானே விஷயமாம் படி அண்ணி

வள வேழுலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன் பின்னையும்
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய்
இளவேறேழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே
 –1-5-1-அரு வினையேன் -வாக்கியம் பூரிப்பதற்கு முன்பே தம்முடைய மௌர்க்க்யத்தைப் பார்த்து –அரு வினையேன் -என்கிறார் -இவர் இப்போது அருவினையேன் என்கிறது -பகவத் ப்ராவண்யத்தை-இப்போது பகவத் விஷயத்தை கிட்டுகை அநிஷ்டம் ஆகையாலே கடவது இறே-அநிஷ்டாவஹம் இறே பாவம் –

உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர் உவலை யாக்கை நிலை எய்தி
மண் தான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்காகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண் கரைய நெய்யூண் மருந்தோ மாயோனே –1-5-8-மாயோனே-ஆச்சர்ய பூதனே
ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ளதொரு த்ரவ்யமே தாரகமாய் இருக்கிறதொரு ஆச்சர்யம் இருக்கிறபடி என் –

2 -மறக்கும் என்று நல்கி விடாதே மன்ன-அதாவது-மறக்கும் என்று செம்தாமரைக் கண்ணோடு -1-10-10–என்றும் , நல்கி என்னை விடான்-1-10-8–என்றும் ,-மறப்பற என்னுள்ளே மன்னினான் -1-10-10–என்கிறபடியே – இவர் இன்னமும் -நம்மை விஸ்மரிக்கக் கூடும் என்று -நிரதிசய ஸ்நேஹத்தைப் பண்ணி –இவரை விடாதே அழகிய திருக் கண்களால் குளிர நோக்கிக் கொண்டு – ஒரு நாளும் மறக்க ஒண்ணாதபடி -இவர் திரு உள்ளத்திலே -ஸ்தாவர பிரதிஷ்டையாய் இருக்க –

(மறக்குமென்று நல்கி விடாதே மன்ன) “ மறக்குமென்று செந்தாமரைக்‌ கண்ணொடு” (திருவாய்மொழி 1-10-10) “நல்கி என்னை விடான்‌” (திருவாய்மொழி 1-10-8) “மறப்பற என்னுள்ளே மன்னினான்‌” (திருவாய்மொழி 1-10-10) என்று சொல்லுகிறபடியே இவரின்னம்‌ நம்மை விஸ்மரிக்கக் கூடுமென்று நிரதிஸய வ்யாமோஹத்தைப்‌ பண்ணி இவரை விடாதே இருட்டறையிலே புகுவார்‌ சிலர்‌ விளக்கேற்றிக் கொண்டு புகுருமா போலே அழகிய திருக் கண்களோடே இவர்‌ திருவுள்ளத்தே புக்கு நிரந்தர வாஸம்‌ பண்ண

மறப்பும் ஞானமும் நான் ஒன்றும் உணர்ந்திலன்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு
மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை

மறப்பனோ இனி யான் என் மணியையே –1-10-10—அறிவுக்கு அடைவு இன்றிக்கே இருக்கிற என் பக்கலிலே அறிவைப் பிறப்பித்து-மறக்கக் கூடும் என்று பார்த்து-அழகிய திருக் கண்களால் குளிர நோக்கிக் கொண்டு-ஒரு நாளும் மறக்க ஒண்ணாத படி என்னுள்ளே ஸ்தாவர பிரதிஷடையாய் இருந்தவனை-புறம்பு ஒரு அந்நிய பரதை தோற்ற இருக்கிறிலன்-மறப்பனோ இனி – மறவாமைக்கு பரிஹாரம் அவன் கையிலே உண்டாய் இருக்க இனி மறக்க உபாயம் உண்டோ-கீழ் அநாதி காலம் நினைக்க விரகு இல்லாதாப் போலே இ றே மேல் உள்ள காலம் எல்லாம் மறக்க விரகு இல்லாத படியும்

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே
அல்லும் நன்பகலும் இடைவீடின்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே –
1-10-8-நான் ஒரு கால் தேடி விடா நின்றேன்-அவன் இடை விடாதே ஸ் நேஹியா நின்றான்-நல்கி என்னை விடான் நம்பி நம்பியே –-அபூரணனான என்னை பூர்ணனான தான் நம்பி விடுகிறிலன்-நம்பி -ஒருத்தனாக நினைத்து நம்பி அல்லும் பகலும் வீடின்றி நல்கி நம்பி என்னை விடான் மாயமே-ஆழ்வான் -நம்பியே என்று ஸ்வரத இவனையே பூர்ணன் என்பது என்பர் –

அயர்பிலன் அறுத்தேன் என் சொல்லி மறப்பனோ என்னும் படி தத்வ ஜ்ஞானர் ஆனவர் –அதாவது –
பெருநிலம் கடந்த நல் அடிப் போது அயர்ப்பிலன் -1-3-10–என்றும் ,-தூய அமுதைப் பருகி பருகி என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேன் -1-7-3–என்றும் –-எம் பிரானை என் சொல்லி மறப்பனோ-1-10-9- –என்று
குண அகுண நிரூபணம் பண்ணாதே –பூமிப் பரப்பை அளந்த பரம போக்யமான திரு அடிகளை -ஒரு காலும் விஸ்மரியேன் — நிரதிசய போக்யமான அவனை நிரந்தரம் அனுபவித்து -ஆச்சர்யமான ஜன்மம் அடியாக வரும் அஞ்ஞானத்தை போக்கப் பெற்றேன் – எனக்கு உபகாரகனான அவனை எத்தைச் சொல்லி விஸ்மரிப்பது என்னும்படி – சம்சய விபர்யய விஸ்ம்ருதி கலசாத தத்வ ஞானத்தை உடையார் ஆனவர்

(அயர்ப்பிலன்‌ அறுத்தேன்‌ என்‌ சொல்லி மறப்பனோ என்னும்படி தத்வ ஜ்ஞரானவர்‌) “பெரு நிலங் கடந்த நல்லடிப் போது அயர்ப்பிலன்‌” (திருவாய்மொழி 1-3-10) “மாயப்பிறவி மயர்வறுத்தேன்‌” (திருவாய்மொழி 1-7-3) “எம்பிரானை என் சொல்லி மறப்பனோ” (திருவாய்மொழி 1-10-9) என்று வர்ஷுகவலாஹகம் போலே ஸ்யாமமான திருமேனியை உடையவனுடைய திருவுலகளந்தருளின திருவடிகளை ஒருக்காலும்‌ விஸ்மரியேன்‌, நிரதியய போக்‌யனான அவனை ஸதா, அநுபவித்து ஆஸ்சர்யமான ஜந்மமடியாக வருகிற வஜ்ஞாநத்தைப்‌ போக்கப்‌ பெற்றேன்‌; எனக்கு உபகாரகனான அவனை எத்தைச்‌ சொல்லி விஸ்மரிப்பதென்னும்படி ஸம்ஸய விபர்யய விஸ்ம்ருதிகள்‌ இல்லாதபடி தத்வ ஜ்ஞாநத்தை யுடையரான இவர்‌-

துயக்கறு மதியில் நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும்
மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்
புயற்கரு நிறத்தனன் பெரு நிலம் கடந்த நல்லடிப் போது
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே
 —1-3-10-பூமிப் பரப்பு அடங்கலும் அநாயாசேன அளந்த-குணாகுண நிரூபணம் பண்ணாத பரம போக்யமான திருவடிகள்-மோஹித்துக் கிடக்க கடவேன் அல்லேன் பிரகர்ஷத்தாலே அக்ரமாக கூப்பிடக் கடவேன் கண்டவாறே கட்டிக் கொள்ளக் கடவேன்-நிர்மமனாய் விழக் கடவேன் -பிரயோஜன நிரபேஷமாக செய்யக் கடவேன் இப்படிச் செய்யப் பெற்றேன் என்றும் சொல்லுவர்-

ஆயர் கொழுந்தாய் அவரால் படை யுண்ணும் மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியை
தூய வமுதைப் பருகிப் பருகி என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே–1-7-3–அந்த அம்ருதம் அதிக்ருதாதிகாரம்-இது சர்வாதிகாரம் –ப்ரஹ்மசர்யாதி நியதி உண்டு அதுக்கு -இருந்த படியிலே அனுபவிக்க அமையும் இதுக்கு-பருகிப் பருகி-ஸக்ருத் சேவ்யம் அது -சதா சேவ்யம் இது
என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே-பிரகிருதி சம்பந்த பிரயுக்தமான ஜென்மத்தாலே சஞ்சிதமான அஞ்ஞானத்தை சவாசனமாகப் போக்கினேன்-அந்த அம்ருதம் சம்சாரத்தைப் பூண் கட்டும்-

நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ –1-10-9–எம்பிரானை –நித்ய ஸூரிகளுக்கு போலே தானே தாரகமாம் படி எனக்கு உபகரித்தவனை-என் சொல்லி மறப்பேனோ–குண ஹீனன் என்று மறக்கவோ
அஸந்நிஹிதன் என்று மறக்கவோ-வடிவில் பசை இல்லை என்று மறக்கவோ-மதிப்பன் அல்லன் என்று மறக்கவோ-எனக்கு உபகாரகன் அல்லன் என்று மறக்கவோ 

3 -சுடர் அடி எம்பிரானை விடாது கண்டாய் நீயும் நானும் என்கிற சஹ்ருதய அனுபவம் சம்சாரிகளுக்கு ஆம் படி-அதாவது-சுடரடி தொழுது எழு என் மனனே 1-1-1–என்றும் –எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே -1-10-3–என்றும் –நெஞ்சமே நல்லை நல்லை-1-10-4- -என்றும் –-மலராள் மணவாளனை துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய்-1-10-4–என்றும் –-கண்டாயே நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்று -1-10-5–என்றும் –-நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர் நோயும் சார் கொடான் நெஞ்சமே சொன்னேன்-1-10-6- -என்று – நிரவதிக தேஜோ ரூபமான அவன் திரு அடிகளில் -நித்ய கைங்கர்யத்தைப் பண்ணி உஜ்ஜீவிக்க பாராய் –-என் நெஞ்சே -எனக்கு பவ்யமான நெஞ்சே நமக்கு -உபகாரனான அவனைத் -தொழப் பாராய் –நெஞ்சே நீ செய்த படி மிகவும் நன்று –நான் அயோக்யா அனுசந்தானத்தாலே அகலும் போதும் ஸ்ரீ யபதி யானவனை விடாதே கிடாய் ,–நெஞ்சே அவனுடைய நிர்ஹேதுக விஷயீகாரம் இருந்த படி கண்டாயே-தொழச் சொல்லலாம் படி இருக்கிற நீயும் -தொழ சொல்லுகிற நானும் –-அயோக்யா அனுசந்தானத்தாலே-அகலாமல் இப்படியே நிற்க பெறில் –
அநாதிகால ஆர்ஜிதமான கர்மம் -விஷய பிராவண்யம் -பிரயோஜனாந்தர ஸ்ரத்தை –சாதனாந்தர சங்கம் -முதலான துரிதங்கள் ஒன்றையும் சேர விட்டுக் கொடான் –நெஞ்சே உனக்கு இப் பரமார்த்தத்தை சொன்னேன் -என்று இப்படி திரு உள்ளத்தைக் குறித்து உபதேசித்து –திரு உள்ளமும் தாமும் கூடி அனுபவித்த பகவத் அனுபவம் தனியே அனுபவிக்க ஒண்ணாது ஆகையாலும் – ஏகத் ஸ்வாது ந புஞ்சீத –என்கிறபடியே –தனியே அனுபவிக்க வல்லார் அல்லாமையாலும் – அவனோடு உள்ள சம்பந்தம் சர்வ சாதாரணம் ஆகையாலும் – பரர் அநர்த்தம் பொறாத பரம கிருபையாலும் – இவ் அர்த்தம் சம்சாரிகளுக்கும் ஆக வேணும் என்று சம்சாரிகளைப் பார்த்து

(சுடரடி எம்பிரானை விடாது கண்டாயே நீயும்‌ நானும்‌ என்கிற ஸஹ்ருதயாநுபவம்‌ ஸம்ஸாரிகளுக்குமாம்படி) “துயரறு சுடரடி தொழுதெழு என்‌ மனனே” (திருவாய்மொழி 1-1-1) “எம்பிரானைத்‌ தொழாய்‌ மட நெஞ்சமே” (திருவாய்மொழி 1-10-3) “மலராள்‌ மணவாளனைத்‌ துஞ்சும் போதும்‌ விடாது தொடர்‌ கண்டாய்‌” (திருவாய்மொழி 1-10-4) “கண்டாயே நெஞ்சே கருமங்கள்‌ வாய்க்கின்று” (திருவாய்மொழி 1-10-5) “நீயும்‌ நானும்‌ இந்நேர்‌ நிற்கில்‌ மேல்‌ மற்றோர்‌ நோயும்‌ சார்கொடான்‌” (திருவாய்மொழி 1-10-6) என்று நிரவதிக தேஜோ ரூபமான அவன்‌ திருவடிகளிலே நித்ய கைங்கர்யம்‌ பண்ணி உஜ்ஜீவிக்கப் பார்‌; எனக்கு பவ்யமான நெஞ்சே, நமக்கு உபகாரகனான அவனைத்‌ தொழப் பாராய்‌-ஸ்ரீய:பதியான ஸர்வேஸ்வரனை நான்‌ அயோக்‌யதாநுஸந்தாநம்‌ பண்ணி அகலும்போதும்‌ நீ விடாதே கிடாய்‌, அவனுடைய நிர்ஹேதுக விஷயீகாரம்‌ இருந்தபடி கண்டாயே, நீயும்‌ நானும்‌ அயோக்‌யதாநுஸந்தாநம் பண்ணி அகலாதிருக்கப் பெறில்‌ அநாதி காலார்ஜிதமான கர்மம்‌ இதர விஷய ப்ராவண்யம்‌ ப்ரயோஜநாந்தர ஸ்ரத்‌தை. உபாயாந்தர ஸங்கம்‌ அயோக்‌யதாநுஸந்தாநம்‌ தொடக்கமான விரோதிகள்‌ நம்மைக்‌ கிட்டாதபடி பண்ணுமென்று திருவுள்ளத்தைப்‌ பார்த்து உபதேஸித்துத்‌ தம்முடைய திருவுள்ளமும்‌ தாமும்‌ கூட அவனுடைய குணங்களை அநுபவித்து இப்படித்‌ திருவுள்ளத்தோடே கூட அநுபவித்த அநுபவம்‌ தனி யநுபவிக்க வொண்ணாமையாலும்‌ “ஏக ஸ்வாது ந புஞ்ஜீத” என்று இவர்‌ தனி யநுபவிக்க வல்லரல்லாமையாலும்‌ ஸம்பந்தம்‌ ஸர்வ ஸாதாரணமாகையாலும்‌ இவர்‌ பராநர்த்தம்‌ பொறாத படியான பரம க்ருபாவானாகையாலும்‌ இவ்வநுபவம்‌ ஸம்ஸாரிகளுக்குமாக வேணுமென்று ஸம்ஸாரிகளையும்‌ பார்த்து

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே 
–1-1-1-துயரறு-துயர் அற்ற என்றபடி-இவர் மயர்வு அற அவன் துயர் அற்றபடி-சுடரடி-நிரவதிக தேஜோ ரூபமான திவ்ய விக்ரஹம்-அடி -சேஷபூதர் அனுபவிக்க இழியும் துறை-தொழுது-சேஷியைக் கண்டால் பிறக்கும் வ்ருத்தி விசேஷம்-எழு-உஜ்ஜீவி-தொழப் பெறாதே போது-அசந்நேவ -என்னும்படி யாய் இ றே இருப்பது-என் மனனே-பகவத் பிரத்யாசத்தியாலே தமக்குத் திரு உள்ளத்தோடு ஒரு சம்பந்தத்தை ஆசைப் படுகிறார் –

எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனை
கொம்பராவு நுண்ணேரிடை மார்பனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே –1-10-3-–இச் சேர்த்தி அழகைக் கண்டு எம்பிரானை என்கிறார்
தொழாய் –-இவர் தொழும் வஸ்து மிதுனமாய் இறே இருப்பது-மட நெஞ்சமே–தொழுது எழு என்னலாம் படி பவ்யமான நெஞ்சே

நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனி என்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனைத்
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய்
–1-10-4—மைந்தனை –-நித்ய யவ் வன ஸ்வ பாவனை
மலராள் மணவாளனைத்-நிரதிசய போக்யையாய் இருக்கிற பிராட்டி செவ்வி கொள்ள இட்டுப் பிறந்தவனை-துஞ்சும் போதும் அயோக்கியன் என்று அகலும் போதும் – விஸ்லேஷம் விநாச பர்யாயம் -என்கை-ந ச சீதா த்வயா ஹீ நா யஸ்த்வயா சக-விடாது தொடர் – நான் விடிலும் நீ விடாதே மேல் விழுந்து அனுபவிக்கப் பார் -அவள் விடிலும் நீ தொடர பார்-கண்டாய்-இவ் வேப்பங்குடி நீரை அன்றோ நான் உன்னைக் குடிக்கச் சொல்கிறது-பிராட்டி அகலகில்லேன் இறையும்-என்கிற விஷயத்தை அன்றோ நான் அனுபவிக்கச் சொல்கிறது –

கண்டாய் நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்றோர்
எண் தானும் இன்றியே வந்தியலுமாறு
உண்டானை உலகேழுமோர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே –1-10-5—கண்டாய் நெஞ்சே –-சைதன்யத்துக்கு ப்ரசரணை த்வாரமான உனக்கு தெரியாமை உண்டோ-கருமங்கள் வாய்க்கின்று-பிரயோஜனங்கள் நேர்படப் புக்கால்-ஓர் எண் தானும் இன்றியே வந்தியலுமாறு-எண்ணிலும் வரும் -என்று இது மிகையாம் படி வந்து பலித்துக் கொண்டு நிற்கிறபடி கண்டாயே-இயலுகை– பலிக்கை

நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர்
நோயும் சார் கொடான் நெஞ்சமே சொன்னேன்

தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில்
வாயுமீசன் மணி வண்ணன் எந்தையே –1-10-6–நீயும் நானும் – தொழு என்று சொல்லலாம் படி இருக்கிற நீயும் -தொழச் சொல்லுகிற நானும் – பிரதி கூலித்துப் போந்த நீயும் -உன்னைப் பின் சென்ற நீயும்
இந்நேர் நிற்கில்-ஓர் எண் தானும் இன்றியே நிற்கில்-ந நமேயம் என்கிற நிர்பந்தத்தை தவிர பெறில்
இப்படி நின்றால் அவன் செய்வது என் என்னில் –மேல் மற்றோர்-நோயும் சார் கொடான் –-மேல் உள்ள காலம் ஒரு நோயும் சார விட்டுக் கொடான்-முன்பு பண்ணின பாப பல அனுபவம் பண்ண விட்டுக் கொடான்-விஷய பிரவணனாக விடான்-பிரயோஜ நாந்தரங்களைக் கொண்டு அகல விடான்
அயோக்கியன் என்று அகல விடான்-உபாயாந்தரங்களைப் பற்றி அகல விடான்
நெஞ்சமே சொன்னேன்--நான் உன்னை ஆராயாதே உன் அநர்த்தத்தைப் பார்த்து உனக்கு இவ்வர்த்தத்தை சொல்லிக் கொடு நின்றேன்-பகவத் விஷயம் பிறர் அறியலாகாது என்று இருக்கைக்கு திருக் கோஷ்ட்டியூர் நம்பியோடே ஒப்பர்-சொல்லிச் சமைந்து பதண் பதண் என்கைக்கு ஒரு கீதாசார்யனோடு ஒப்பர்-இதந்தே நாத பஸ்காய-சொன்னேன் –உபதேசத்தில் குறை இல்லை
பிரதி பத்தி பண்ணாது ஒழியில் இழக்கும் அத்தனை

4 வீடுமின் என்று த்யாஜ்ய உபாதேய தோஷ குண பரித்யாக சமர்ப்பண க்ரமத்தை சாலம்பன மந்த்ரமாக உபதேசித்து-அதாவது –வீடு மின் முற்றத்திலே –1-2- –வீடு மின் முற்றவும் –என்று த்யாஜ்ய ஸ்வரூபத்தையும் –-மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள் -என்று அதனுடைய அல்ப அஸ்திரத் வாதி தோஷங்களையும் நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து -என்று அதனுடைய பரித் த்யாக க்ரமத்தையும் வீடுடையான்-என்று உபாதேயமான பகவத் ஸ்வரூபத்தையும்-எல்லையில் அந்நலம் -என்று அவ் வஸ்துவினுடைய குணத்தையும்-வீடு செய்மினே –-இறை சேர்மின் –-இறைபற்று –-திண் கழல் சேர் – என்று அவ் விஷயத்தில் ஆத்மாவை சமர்ப்பிக்கும் க்ரமத்தையும்-வண் புகழ் நாரணன் -என்று அந்த சமர்ப்பண ரூப பஜனத்துக்கு ஆலம்பனமான திரு மந்த்ரதோடே உபதேசித்து

(வீடுமின்‌ என்று த்யாஜ்யோபாதேய தோஷ குண பரித்யாக ஸமர்ப்பண க்ரமத்தை ஸாலம்பந மந்தரமாக உபதேஸித்து) வீடுமின்‌ முற்றத்திலே “வீடுமின்‌ முற்றவும்‌” (திருவாய்மொழி 1-2-1 என்று த்யாஜ்ய ஸ்வரூபத்தையும்‌ “மின்னின்‌ நிலையில மன்னுயிராக்கைகள்‌’ (திருவாய்மொழி 1-2-2) என்று அதினுடைய அல்பாஸ்த்திரத்வாதி தோஷத்தையும்‌ “நீர்‌ நுமதென்றிவை வேர் முதல்‌ மாய்த்து” (திருவாய்மொழி 1-2-3) என்று அவற்றினுடைய பரித்யாக க்ரமத்தையும்‌  “வீடுடையான்‌”  (திருவாய்மொழி 1-2-2) என்று உபாதேயமான பகவத்‌ ஸ்வரூபத்தையும்‌  “எல்லையிலந்நலம்‌”  (திருவாய்மொழி 1-2-5) என்று அவ்வஸ்துவினுடைய குணத்தையும்‌ ‘ வீடுசெய்ம்மின்‌’ (திருவாய்மொழி 1-2-1 என்றும்‌ “இறை சேர்மின்‌” (திருவாய்மொழி 1-2-3) என்றும்‌ “ இறை பற்று” (திருவாய்மொழி 1-2-5) என்றும்‌ “திண் கழல்‌ சேரே” (திருவாய்மொழி 1-2-10) என்றும்‌ அவ் விஷயத்திலே ஆத்மாவை சமர்ப்பிக்கும் கிரமத்தையும்‌ “வண்புகழ்‌ நாரணன்‌” (திருவாய்மொழி1-1-2-10) என்று அந்த ஸமர்ப்பணத்துக்கு ஆலம்பநமான திருமந்த்ரத்தோடே உபதேசித்து –

வீடுமின் முற்றவும் வீடு செய்து உம்முயிர்
வீடுடை யானிடை வீடு செய்ம்மினே
 –1-2-1–விடுகிறவனுடைய த்யாஜ்யாதிசயம் தோற்றுகைக்காக முதலிலே விடுங்கோள் என்கிறார்-எத்தை விடுவது என்னும் அபேஷையிலே முற்றவும் – என்கிறார் –
அஹம் மமேதி சண்டால-சண்டாலர் குடியிருப்பை பிராமணனுக்கு ஆக்கும் போது சண்டால ஸ்பர்சம் உள்ள பதார்த்தம் அடைய த்யாஜ்யம் ஆனால் போலே -அஹங்கார கர்ப்பமாக ஸ்வீகரித்த வற்றில் த்யாஜ்யம் அல்லாதன இல்லை -என்கை-வீடு-விடுகையை -சமர்ப்பிக்கையை-செய்ம்மினே
இசையுங்கோள்-அவன் நினைவு நித்தியமாய் இருக்க நீங்கள் இசையாமல் இறே இழந்து போந்தது

மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை யுன்னுமின் நீரே –
1-2-2–மின்னின் நிலையில-மின்னுக்கு உள்ள நிலையும் இல்லை-சம்பதஸ் ஸ்வப்ன சங்காசா யௌவனம் குஸூமோபமம் தடிச்சஞ்சலமாயுச்ச கஸ்ய ச்யாஜ்ஜா நதோ த்ருதி –-அது தோற்றி நசிக்கும்-இது கர்ப்பத்தில் நசிக்கும்-தோற்றின போதே மாயக் கடவதாய் இருப்பதொரு வ்யவஸ்தை உண்டு அதுக்கு இது சில நாள் இருக்கிலும் இருக்கும் -அஸ்திரம் என்று ஹிதத்தில் ப்ரவர்த்திக்க ஒட்டாது -ஸ்திரம் என்று விச்வசிக்கப் பண்ணி நசிக்கும் –-மன்னுயிர் ஆக்கைகள்-உயிர் மன்னி விடேன் என்று பற்றிக் கிடக்கிற சரீரங்கள்-நித்யனான ஆத்மாவினுடைய சரீரங்கள் என்னவுமாம்-உயிர் என்கிற ஏக வசனத்துக்கும் ஆக்கைகள் என்கிற பஹூ வசனத்துக்கும் கருத்து -ஓர் ஆத்மாவே கர்ம அனுகுணமாக அநேக தேஹங்களிலே நலிவுபடும் என்று தோற்றுகைக்காக-

நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து இறை
சேர் மின் உயிர்க்கு அதன் நேர் நிறையில்லே–1-2-3—நீர் நுமது -என்று-அனர்த்த கரமான அஹங்கார மமகாரங்களை-நான் என்னது -என்னும் அர்த்தத்தை பிறர்க்கு உபதேசிக்கப் புக்கால் -நீங்கள் என்றும் உங்களது என்றும் இறே சொல்லுவது-அதாகிறது -அனாத்மயாத்மா புத்தியும் அஸ்வே ஸ்வ த்வய புத்தியும்-நான் என்னது — என்னில் நா வேம் இறே-அனாத்மன்யாத்ம புத்திர்யா அச்வேஸ் வமிதி யாமினி அவித்யாதரு சம்பூதி பீஜமேதத் த்விதாஸ்திதம்-என்று சம்சார பீஜத்தையும்
அச்யுதாஹன் த்வாச்மீதி சைவ சம்சார பேஜஷம் என்று பரிகாரத்தையும் சொல்லிற்று இறே –இவை வேர் முதல் மாய்த்து-இவற்றை சவாசனமாகப் போக்கி-இது அக்னி நா சிஞ்சேத்-போலே துஷ்கரம்
இவை நேராக விடும் போது பகவத் விஷயத்தைப் பற்றி விட வேணும்-அவனைப் பற்றும் போது இவற்றை விட்டு அல்லது பற்ற ஒண்ணாது

அற்றது பற்று எனில் உற்றது வீடுயிர்
செற்றது மன்னுறில் அற்றிறை பற்றே
 –1-2-5-இதர விஷயங்களிலே தொற்று அற்று -சர்வேஸ்வரனைப் பற்று என்னுதல்-ஆஸ்ரயிக்கும் போதே உன்னை பகவச் சேஷமாக அத்யவசித்து ஸ்வாமி யானவனை ஆஸ்ரயி என்னவுமாம் –-அன்றிக்கே-விபக்தியை மாறாடி இறையைப் பற்றி அத்தை அறுங்கோள் என்னவுமாம் –

எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே
 –1-2-10-வண் புகழ் –கல்யாண குணங்களையும் யுடையனாய் இருக்கை-ஈறில -என்று குணங்களுக்கு விசேஷணம் ஆகவுமாம்-நாரணன் –-நித்ய சித்த கல்யாண குணங்களோ பாதி ஜீவ சமூஹத்தையும் ஸ்வ அதீனமாக யுடையவன் ஆகையாலே -நாராயணன்
திண் கழல் சேரே —இப்படிப்பட்ட சம்பந்த ஜ்ஞானம் முன்னாகப் பற்றினாரை ஒருகாலும் விடாத திருவடிகளை ஆஸ்ரயி –

5 -எளிதாக அவதரித்து-அதாவது-ஆஸ்ரயிப்பார் -அதீந்திரியன் -என்று இறாயாத படி-பல பிறப்பாய் –எளிவரும் இயல்வினன் -1-3-2-–என்று ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாத்ய அவதார முகத்தாலே அவர்களுக்கு சுலபனாய் பிழைகளை சஹித்து-அதாவது-ஆஸ்ரயண தசையிலே சுலபனாய் -அபராதம் கண்டவாறே -கைவிடாதே –என் பிழைத்தாள் -திரு வடியின் தகவினுக்கு-1-4-7- -என்னும் படி அபராத சஹனாய் புரையறக் கலந்து-அதாவது அபராதம் கண்டு தான் இகழாத அளவு அன்றிக்கே – அயோக்யா அனுசந்தானத்தாலே தாங்களே அகல்வாரையும்-திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் – -தான் ஒருவனே –1-5-3–என்று தன் குணத்தைக் காட்டி அணுகப் பண்ணி அவர்களோடு புரை அறக் கலக்கும் சீலனாய் –-அல்ப சந்துஷ்டனாய்-அதாவது ஆஸ்ரிதரோடு ஒரு நீராகக் கலக்குமே ஆகிலும் அவன் உகக்கும் படி பச்சை இடப் போகாமையாலே -ஆஸ்ரணீயம் அரிது -என்னாதாம் படி இவன் இட்டது கொண்டு த்ருப்தன் ஆக வேண்டாத பரிபூர்ணன் ஆகையாலே –-புரிவதுவும் புகை பூவே -என்று
இவன் பக்கலில் பெற்றது கொண்டு சந்தோஷிக்கும் ஸ்வ ஆராதனாய் அம்ருதமே ஒவ்ஷதமாக்கி
அதாவது-நேர்த்தி இல்லை யாகிலும் உள்ளது தேவையாய் இருக்குமோ என்னாதபடி
அம்ருததையே ஒவ்ஷதம் ஆக்குமா போலே –-தூய அமுதைப் பருகிப் பருகி –என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேன்-1-7-3- -என்று நிரதிசய போக்யனான தன்னுடைய ஆஸ்ரயணம் ஆகையாலே –மிகவும் இனிதாயிருக்கும் அவற்றையே சம்சார வியாதி பேஷஜமாக்கி

(எளிதாக வந்தவதரித்து) “பல பிறப்பாய்‌ எளிவருமியல்வினன்‌” (திருவாய்மொழி 1-3-2) என்று அவன்‌ அதீந்த்‌ரியன்‌ என்று இறாயாதபடி ராம க்ருஷ்ணாதி ரூபேண வந்தவதரித்து ஆஸ்ரயிப்பார்க்கு ஸுலபனாய்‌ அப்படி யவதரித்து ஸூலபனானவன்‌ ஆஸ்ரிதருடைய அபராதங்களைக்‌ கண்டு கை விடுமோ என்னில்‌ அங்ஙனன்று (பிழைகளை ஸஹித்து) “என் பிழைத்தாள்‌ திருவடியின்‌ தகவினுக்கு” (திருவாய்மொழி 1-4-7) என்று அபராத ஸஹனாயிருக்கும்‌. (புரையறக்‌ கலந்து) அவன்‌ அபராத ஸஹனானாலும்‌ “அரு வினையேன்‌” (திருவாய்மொழி 1-5-1 என்று இவன் தான்‌ அயோக்‌யதாநுஸந்தாநம்‌ பண்ணி யகலிலும்‌ “திசைகளெல்லாம்‌ திருவடியால்‌ தாயோன்‌ தானோர்‌ உருவனே” (திருவாய்மொழி 1-5-3) என்றும்‌ “நெய்யூண்‌ மருந்தோ மாயோனே” (திருவாய்மொழி 1-5-8) என்றும்‌ தன்‌ செல்லாமையையும்‌ இவரோடே புரையறக்‌ கலக்கிற பலத்தையும்‌ காட்டி இவரைச்‌ சேர்த்துக் கொள்ளுந்தனை ஸீலவானாய்‌ இப்படி சேர்த்துக்‌ கொண்டால்‌ ஆஸ்ரயண மரிதாயிருக்குமோ என்னில்‌ (அல்ப ஸந்துஷ்டனாய்‌) அவன்‌ இவனிட்டது கொண்டு வயிறு வளர்க்க வேண்டாதபடி அவாப்த ஸமஸ்த காமனாய்‌ ஸ்ரீய:பதியாயிருக்கையாலே “புரிவதுவும்‌ புகை பூவே” (திருவாய்மொழி 1-6-1 என்று த்‌ரவ்ய நியதி அதிகாரி நியதி யில்லாதபடி ஆஸ்ரயணம்‌ ஸுகரமாம்படி அல்ப ஸந்துஷ்டனாய்‌ அவ்வாஸ்ரயணந் தான்‌ தேவையாயிருக்குமோ என்னில்‌ (அம்ருதமே ஒளஷத மாக்கி) “தூயவமுதைப்‌ பருகிப்‌ பருகி என்‌ மாயப் பிறவி மயர்வறுத்தேனே” (திருவாய்மொழி 1-7-3) என்று நிரதிஸய போக்‌யனான அவனுடைய ஆஸ்ரயணமாகையாலே ஸம்ஸார வ்யாதி பேஷஜமான அவ்வாஸ்ரயணம்‌ தானே இனிதாம்படி பண்ணி

எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில பல பிறப்பாய்
ஒளி வரு முழு நலம் முதலில கேடில வீடாம்
தெளிதரு நிலைமையது ஒழிவிலன் முழுவதும் இறையோன்
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே 
–1-3-2-பத்துடை அடியவர்க்கு -என்று -சோபாதிகம் அன்று இவன் எளிமை -ஜலத்துக்கு சைத்யம் போலே ஸ்வ பாவ சித்தம் எளிமையை இயல்வாக யுடையவன்-பல பிறப்பாய் – வேதம் சொல்லிலும் –பஹூதா விஜாயதே -என்னும் அத்தனை – தான் சொல்லிலும் –பஹூநிமே -என்னும் அத்தனை – உட்புக்க தம் போல்வார் சொல்லிலும் –என்நின்ற யோநியுமாய் பிறந்தாய் -என்னும் அத்தனை – பிறப்பாய் – பரார்த்தமாக தாழ நின்றோம் என்று தம் பக்கலிலும் புரை இன்றிக்கே இருக்கை –என்னக் கடவது இறே

என் பிழை கோப்பது போல் பனிவாடை ஈர்கின்றது
என் பிழையே நினைந்து அருளி யருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச் சொல்
என் பிழைக்கும் இளம் கிளியே யான் வளர்த்த நீ யலையே
 –1-4-7–என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு-ஸ்வாமியான உம்முடைய தகவினுக்கு என்ன தப்புச் செய்தாள்-அபராத சஹத்வம் ஆகிறது -ஷமை-அதுக்கு அடியான தயை -தகவாகிறது-என் பிழை அநாதி கால ஆர்ஜிதம் ஆனாலும் தம்முடைய ஷமைக்கு எவ்வளவு போரும்-கிம் கோப மூலம் மனுஜேந்திர கஸ்தேன சந்திஷ்ட்ட திவாங்நிதேச-திருவடியின் தகவினுக்கு-இழவு-பேறு தம்மதாம் படியான குடல் தொடக்கு உண்டாய் இருக்க குற்றத்தைக் கணக்கு இட்டது அமையாதோ-பிராப்திக்குப் போராது -ஷமைக்கும் போராது –

மாயோனிகளாய் நடை கற்ற வானோர் பலரும் முனிவரும்
நீ யோனிகளைப் படை என்று நிறை நான்முகனைப் படைத்தவன்
சேயோன் எல்லா வறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால்
தாயோன் எல்லா எவ்வுயிர்க்கு தாயோன் தான் ஓர் உருவனே
–1-5-3-லோகங்களை எல்லாம் திருவடிகளாலே அளந்து கொண்டவன்-நாய்ச்சிமாரும் தொடும் போது கூச வேண்டும்படியான திருவடிகளைக் கொண்டு கிடீர் காடும் ஓடையும் அளந்தது-இங்கனம் செய்வான் என் என்னில்-எல்லா எவ்வுயிர்க்கு தாயோன்-எல்லாரோடும் சம்பந்தம் ஒத்து இருக்கை-எல்லாம் என்று சாகல்ய பரம் –-எவ்வுயிர் என்று விலஷணம் அவிலஷணம் -என்று பாராது ஒழிந்தபடி-தாயோன்- தாய் போலே பரிவன் ஆனவன்-தான்ஓர் உருவனே-இது ஒரு பிரகாரமே-மேன்மைக்கு ஒப்பு இல்லாதா போலே நீர்மைக்

உண்டாய் உலகு ஏழ் முன்னமே யுமிழ்ந்து மாயையால் புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர் உவலை யாக்கை நிலை எய்தி
மண் தான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்காகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண் கரைய நெய்யூண் மருந்தோ மாயோனே –1-5-8-மண் கரைய நெய்யூண் மருந்தோ-அன்று இறே-ஆஸ்ரிதர் உகந்ததொரு த்ரவ்யத்தாலே யல்லது செல்லாமை இறே
சேஷித்தால் மருந்தாகாதோ-அன்றிக்கே-மனிசர்க்காகும் பீர்-மனுஷ்யருக்கு வரும் வைவர்ண்யம் அத்யல்பமும் சேஷியாத படி -என்னவுமாம்-மாயோனே-ஆச்சர்ய பூதனே-ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ளதொரு த்ரவ்யமே தாரகமாய் இருக்கிறதொரு ஆச்சர்யம் இருக்கிறபடி என் –

பரிவதில் ஈசனைப் பாடி –விரிவது மேவலுறுவீர்
பிரிவகையின்றி நன்னீர்த் தூயப் –புரிவதும் புகை பூவே –1-6-1-புரிவதும் நீங்கள் அருள் கொடையாகக் கொடுக்குமதுவும்-புகை பூவே-அகில் புகை -கரு முகைப் பூ என்று விசேஷியாமையாலே ஏதேனும் புகையும் ஏதேனும் புஷ்பமும் அமையும்-இது ஸ்வாராததையைப் பற்றிச் சொல்லிற்று
இவனைப் பார்த்தால் -எண்டிசையும் உள்ள பூக்களைக் கொண்டும் -என்றும் –நாடாத மலர் நாடி –
தூய நல் விரை மலர்கள் துவளற வாய்ந்து கொண்டு –
என்றும் சொல்லக் கடவது இறே-அவனைப் பார்த்தால் -கள்ளார் துளாயும்-இத்யாதிகளில் சொல்லுகிற மாத்ரமே அமையும்-ந கண்ட காரிகா புஷ்பம் தேவாய வி நிவேதயத் -என்கிற விதியாலே தவிருகிறதும் -ப்ரேம பரவசனாய்ச் சென்று பறிக்கிறவன் கையில் முள் பாயாமைக்காக என்று பட்டர் அருளிச் செய்வர்-ஸ்ரீ வராஹ புராணத்திலே ஸ்ரீ வராஹ நாயனாருக்கு முத்தக்காசை அமுதுபடியாக சொல்லிற்று –

ஆயர் கொழுந்தாய் அவரால் படை யுண்ணும் மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியை
தூய வமுதைப் பருகிப் பருகி என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே–1-7-3-தூய வமுதைப்
அந்த அம்ருதம் அதிக்ருதாதிகாரம்-இது சர்வாதிகாரம் – ப்ரஹ்மசர்யாதி நியதி உண்டு அதுக்கு -இருந்த படியிலே அனுபவிக்க அமையும் இதுக்கு-பருகிப் பருகி-ஸக்ருத் சேவ்யம் அது -சதா சேவ்யம் இது
என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே
-பிரகிருதி சம்பந்த பிரயுக்தமான ஜென்மத்தாலே சஞ்சிதமான அஞ்ஞானத்தை சவாசனமாகப் போக்கினேன்-அந்த அம்ருதம் சம்சாரத்தைப் பூண் கட்டும்-

6 -நீர் புரைய தன்னை நியமித்து-அதாவது-இனிதாய் இருக்கும் ஆகிலும் -அவன் நினைவு அறிந்து பரிமாறுகை அரிது என்னாதபடி -இவர்களைத் தன் நினைவிலே பரிமாறவித்துக் கொள்ளப் பாராதே –
நீர் புரை வண்ணன் -என்று மேட்டிலே நீரை விரகாலே ஏற்றுமா போலே இவர்கள் செவ்வை கேடும் செவ்வை யாம்படி தன்னை செவ்வியனாக நியமித்து-போகத்தை சாத்மிப்பித்து-அதாவது
இப்படி ஆனாலும் குளப்படியிலே கடலை மடுத்தார் போலே அசாத்தியமாக பரிமாறுமோ என்னாத படி —
என்னுடை சூழல் உள்ளான் -என்று தொடங்கி –உச்சி உளானே -என்னும் படி சாத்மிக்க தன்னை அனுபவிப்பித்து

அப்படி ஆஸ்ரயிக்குமிடத்தில்‌ இவர்களைத்‌ தன்‌ நினைவுக்கீடாக நியமித்துப்‌ பரிமாறுவித்துக்‌ கொள்ளுமோ என்னில்‌ (நீர் புரையத்‌ தன்னை நியமித்து) “நீடு நின்றவை ஆடுமம்மானே”  (திருவாய்மொழி 1-8-1) என்றும்‌ “அம்மானாய்ப்‌ பின்னும்‌ எம்மாண்புமானான்‌” (திருவாய்மொழி 1-8-2) என்றும்‌ “நீர் புரை வண்ணன்‌‘ (திருவாய்மொழி 1-8-11) என்றும்‌ சொல்லுகிறபடியே மேட்டிலே நீரை விரகாலே ஏத்துவாரைப்‌ போலே இவர்களுடைய செவ்வைக் கேடு செவ்வையாம்படி தன்னைச்‌ செவ்வியனாக நியமித்து இப்படிப்‌ பரிமாறுமிடத்தில்‌ குளப்படியிலே கடலை மடுத்தாப்போலே நலக்கேடு கெடும்படி பரிமாறுமோ வென்னில்‌ (போகத்தை ஸாத்மிப்பித்து) “சூழலுளானே”  (திருவாய்மொழி 1-9-1) என்று தொடங்கி “உச்சியுளானே” திருவாய்மொழி 1-9-10) என்று ஸாத்மிக்க ஸாத்மிக்கத்‌ தன்னை அநுபவிப்பித்து

ஓடும் புள்ளேறி சூடும் தண் துழாய்
நீடு நின்றவை ஆடும் அம்மானே –1-8-1-கர்ம அநு கூலமாகில் இறே-அநித்தியம் ஆவது –
ஸ்வரூபம் அநு கூலம் ஆகையால் நித்யமாகச் செல்லா நிற்கும் – அவனுக்கு இவர்களை ஒழியச் செல்லாது – இவர்களுக்கும் அவனை ஒழியச் செல்லாதுபுள் என்றும் துழாய் என்றும் சொல்லுகிற படியால் –அவை என்கிறது–ஆடும்-அவற்றோடு பரிமாறும் என்னும் இடத்தில் –ஆடும் -என்கிறது –
இரண்டு தலைக்கும் போக ரூபமாய் இருக்கையாலே
அம்மானே-நித்ய ஸூரிகளுக்கும் சம்சாரிகளுக்கும் சாதாரணமான ஸ்வாமித்வம் உண்டாய் இருக்கச் செய்தேயும் இப்படி தனித்தனியே அசாதாரணமாய் பரிமாறுகை-இப்படி பரிமாறுகைக்கு நிபந்தம் சொல்லுகிறது என்னவுமாம்
நித்ய ஸூரிகளுடைய தாரகாதிகளும் தன் நினைவிலே யாம்படியான ஏற்றத்தை உடையவன் என்றுமாம் –

அம்மானாய்ப் பின்னும் எம்மாண்பும் ஆனான்
வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணனே –1-8-2—சர்வாதிகனாய் வைத்து பின்னும் அதன் மேலே-எம் மாண்பும் ஆனான்-எல்லா அவதாரங்களையும் உடையான் ஆனான்-மாண்பு என்று அழகு –-பரத்வத்தில் காட்டில் அவதாரங்களில் அழகு மிக்கு இருக்கை –ச உஸ்ரேயான் பவதி ஜாயமான

நீர் புரை வண்ணன் சீர் சடகோபன்
நேர்தல் ஆயிரத்து ஓர்தல் இவையே –1-8-11–நீரோடு ஒத்த ஸ்வ பாவத்தை உடையவனுடைய ஆர்ஜவ குணத்தை-புரை -ஒப்பு-வண்ணம் –ஸ்வ பாவம்-நீரை வருந்தி மேட்டிலே ஏற்றினால் போலே சம்சாரிகள் விலங்கிப் போனது தனக்கு வழியாம் படி தான் செவ்வியனாகை-

இவையும் அவையும் உவவையும் இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –1-9-1-பிராட்டி அகலகில்லேன் -என்னுமவன் என் பர்யந்தத்திலே வர்த்திக்குமது தன் பேறாக இரா நின்றான் –அநாதிகாலம் இவர் இழந்த இழவு எல்லாம் தீரும் படியும் -ஸாத்மிக்கும் படியாக -சர்வ இந்த்ரியங்களாலும் -சர்வ காத்ரங்களாலும் சம்ச்லேஷிக்க அத்தை அனுபவித்து ப்ரீதர் ஆகிறார்

நெற்றியுள் நின்று என்னை யாளும் நிரை மலர்ப்பாதங்கள் சூடி
கற்றைத் துழாய் முடிக் கோலக் கண்ண பிரானைத் தொழுவார்
ஒற்றைப் பிறை யணிந்தானும் நான்முகனும் இந்த்ரனும்
மற்றை யமரரும் எல்லாம் வந்து என் உச்சி உளானே –1-9-10–ஒரு கலா மாத்ரமான சந்திரனை ஒப்பனையாக உடைய ருத்ரனும் சதுர்முகனும் இந்திரனும் மற்றும் உண்டான சர்வ தேவதைகளும்
அவர்கள் தங்கள் செல்லாமையாலே தொழா நிற்க -அவர்களை அநாதரித்து தான் என்னை ஒழியச் செல்லாதவனாய்-வந்து என் உச்சியிலே புகுந்தான் –

7-பக்திகணனை களுக்கு ஒக்க வருமவனுடைய சேவைக்கு —அதாவது-இப்படி அனுபவிக்கைக்கு ஈடாக முகம் காட்டும் அளவில் இவன் பக்கல் பிரேம அனுகுணமாகவோ செய்வது என்னாத படி – கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில் எண்ணிலும் வரும் – என்று பரம பக்திக்கும் பரிகணனைக்கும் ஒக்க வந்து முகம் காட்டும் ஸ்வபாவன் ஆனவனுடைய பஜனதுக்கு –எளிமையும் இனிமையும் உண்டு-அதாவது-எளிதாய் இனிமை அற்று இருத்தல் -இனிதாய் எளிமை அற்று இருத்தல் -அன்றிகே – கீழ் சொன்ன குண விசேஷங்களை உடையவனுடைய ஆஸ்ரயணம் ஆகையாலே –
எளிதுமாய் இனிதுமாய் இருக்கும் —-பத்துடை அடியவர்க்கு எளியவன்
-1-3-1–என்றும் ,-அமுதிலும் ஆற்ற இனியன்-1-6-6- -என்கிறவன்-தன்னை போலே ஆய்த்து தத் ஆஸ்ரயணீயமும்-ஏவம் பூத பஜனத்தாலே பல சித்தி இருக்கும் படி என் என்னில் –

(பக்தி கணனைகளுக்கு ஒக்க வருமவனுடைய ஸேவைக்கு) இப்படி அநுபவிக்குமிடத்தில்‌ “கண்ணுள்ளே நிற்கும்‌ காதன்மையால்‌ தொழில்‌ எண்ணிலும்‌ வரும்‌ என்னினி வேண்டுவம்‌” (திருவாய்மொழி 1-10-2) என்று பர பக்திக்கும்‌ பரிகணனைக்கும்‌ ஒக்க முகம்‌ கொடுக்கிற அவனுடைய ஆஸ்ரயணத்துக்கு (எளிமையும்‌ இனிமையுமுண்டு) “ பத்துடை எளியவன்‌”  (திருவாய்மொழி 1-3-1”அமுதிலுமாற்ற இனியன்‌” (திருவாய்மொழி 1-6-6) என்று ஆஸ்ரயணந்தான்‌ எளிதுமாய்‌ இனிதுமாய்‌ இருக்கும்‌; இத்தால்‌ அபேஷித்த பலங்கள்‌ ஸித்‌திக்குமோ என்னில்‌ 

கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
எண்ணிலும் வரும் என்னினி வேண்டுவம்

மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம் பிரானையே –1-10-2—அவனைப் பெறா விடில் தரியாதானாம் படியான பரம பக்தியை உடையனாய்க் கொண்டு தொழில் கண் வட்டத்தே விடாதே நிற்கும் –-இத்தலைக்காக நிற்கை யன்றிக்கே-தன் செல்லாமையோடே ஸ்தாவர பிரதிஷ்டை யாய் நிற்கும்-எண்ணிலும் வரும்- கட படாதிகள் உடைய அஸ்தி பாவத்தை இசையும் -ஈசுவரனுடைய அஸ்தி பாவத்தை இசையான்-
பஞ்ச விம்சதி தத்துவத்தையும் இசையும் -ஷட் விம்சகளை இசையான் – நம்முடைய உண்மையை இசைந்தான் இறே என்று அப்போதே வந்து முகம் காட்டும்-இவன் எண்ணின் அளவுக்கு அவ்வருகே வரும் என்னவுமாம்-என்னினி வேண்டுவம்--சர்வேஸ்வரன் ஸ்வ பாவம் இதுவான பின்பு ஹித அம்சத்தில் நமக்கு ஒரு குறை இல்லை –

பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே
 –1-3-1-பக்தி சப்தத்தால் இங்கு பர பக்த்யாதிகளைச் சொல்லுகிறது அன்று – பக்த்யுபக்ரமான அத்வேஷ மாத்ரத்தைச் சொல்லுகிறது
தாழ்ந்தாருக்கு முகம் கொடுக்கும் என்கிற குண பிரகரணம் ஆகையாலே-உடை –-இம்மாத்ரத்தைக் கனக்க யுடைமையாகச் சொல்லுகிறது –விண்ணுளாரிலும் சீரியர் -என்று இங்கே பகவத் அனுபவம்
பண்ணுவாரை நித்ய ஸூரிகளுக்கும் அவ்வருகாக நினைத்து இருக்கும் பகவத் அபிப்ராயத்தாலே –யடியவர்கு-அடியவர் என்றதும் பகவத் அபிப்ராயத்தாலே-ஆநு கூல்ய லேசம் குவாலாய் இருக்கை –
த்வயி கிஞ்சித் சமா பன்னே என்று கிட்டிற்று ஒரு குரங்கை நித்ய ஆஸ்ரிதையான பிராட்டிக்கும் அவ்வருகாக நினைத்து இருக்கையாலே-எளியவன்-பாபத்தைப் போக்குதல் -புண்யத்தைக் கொடுத்தல் -தத் பலமான ஸ்வர்க்காதிகளைக் கொடுத்தல் -தன்னைக் கொடுத்தல் செய்யுமவன் அல்லன் –
அவர்களுக்குத் தன்னைக் கையாளாக்கி வைக்கும்-பக்திக்ரீதோ ஜனார்த்தன -தூத்ய சாரத்யங்களைப் பண்ணுகையாலே ஆஸ்ரிதர்க்கு இஷ்ட விநியோக அர்ஹன் ஆனான் இறே

அமுதம் அமரர்கட்கு ஈந்த -நிமிர் சுடராழி நெடுமால்
அமுதிலும் ஆற்ற இனியன் நிமிர் திரை நீள் கடலானே –1-6-6-இவர்கள் போக்யம் என்று இருக்கிற அம்ருதத்தில் காட்டில் நிரதிசய போக்யன் ஆனவன்-வாசி அறிவார்கள் ஆகில் அவனையே கிடீர் பற்ற அடுப்பது என்கை -பிள்ளை திருவழுதி நாடு தாசர் வார்த்தை –-ஆற்ற இனியன் மிகவும் இனியன்

8-தொழுதால் அரும் பயனாய தரும்-அதாவது அவனைத் தொழுதால் வழி நின்ற வல் வினை மாள்வித்து அழிவு இன்றி ஆக்கம் தரும்-1-6-8- -என்றும் ,-தருமவரும் பயனாய -1-6-9–என்று
அவனை பஜித்தால் ப்ராப்தி பிரதி பந்தங்களையும் நிஸ்சேஷமாக போக்கி – அழிவு இல்லாத பெறுதற்கு அரிய பிரயோஜனங்களையும் தரும் ..பஜித்தால் அன்றோ தருவது -பஜன விரோதிகளும் குவாலுண்டே என்னில் உத்யோகத்தே வினைகளும் மாளும்-அதாவது நாளு நின்று அடு நம் பழைமை அம் கொடு வினை யுடனே மாளும் –என்று நாள் தோறும் நின்று இவ் ஆத்மாவை முடிக்கிற -அநாதியாய் அதி க்ரூரமான கர்மங்கள் பஜன உபக்ரமத்திலே நசிக்கும் –

(தொழுதால்‌ அரும்பயனாய தரும்‌) அவனைத்‌ தொழுதால்‌ வழிநின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி யாக்கம்‌ தரும்‌” (திருவாய்மொழி 1-6-8) “தருமவரும்பயனாய” (திருவாய்மொழி 1-6-9) என்று அவனை பஜித்தால்‌ ப்ராப்தி ப்ரதிபந்தகங்களையும்‌ நிஸ் ஸேஷமாகப்‌ போக்கி அழிவில்லாத பெறுதற்கரிய ப்ரயோஜநங்களையும்‌ தரும்‌. பஜித்தாலன்றோ தருவது, பஜந விரோதி, குவாலாகவுண்டே” என்னில்‌ (உத்யோகத்தே வினைகளும்‌ மாளும்‌) “நாளு நின்றடு நமபழமை அங்கொடு வினையுடனே மாளும்‌” (திருவாய்மொழி 1-3-8) என்று நாள் தோறும்‌ நின்று இவ்வாத்மாவை முடிக்கிற அநாதி யான அதி க்ரூரமான கர்மங்கள்‌ பஜநோபக்ரமத்திலே நஸிக்கும்‌;

கழிமின் தொண்டீர்காள் கழித்துத் தொழுமின் அவனைத் தொழுதால்
வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி யாக்கம் தருமே –1-6-8—ஸ்வயம் பிரயோஜனமான ஆஸ்ரயணத்துக்கு பலம் இருக்கிற படி – இவ்வாத்மாவுக்கு ஸ்வரூப அனுபந்தியோ -என்னும் படி இருக்கிற பிரபல கர்மங்களை சவாசனமாகப் போக்கி நடுவே நின்று பிராப்தியை விரோதிக்கிற கர்மம் என்னவுமாம்-அழிவின்றி யாக்கம் தருமே-அபுநாவ்ருத்தி லஷண மோஷமான-நிரவதிக சம்பத்தைத் தரும் -அதாவது -கைங்கர்யம் தரும் -இவ்வர்த்தத்தில் சம்சயம் இல்லை –

தரும வரும பயனாய -திருமகளார் தனிக் கேள்வன்
பெருமையுடை பிரானார் -இருமை வினை கடிவாரே–1-6-9–உபநிஷத்துக்களிலே பரம பிரயோஜனமாக பிரசித்தமானவற்றை தரும் திருமகளார் –-தர்மத்தினுடைய பரம பிரயோசனமான திருமகளார் -என்றுமாம்-அத்விதீயனான வல்லபன்-ஸ்ரீ யபதித்வ நிபந்தனமான பெருமையை யுடையவர்
ஆஸ்ரித அனுக்ரஹமே ஸ்வரூபமாய் உள்ளவர் –-புண்ய பாப ரூபமான கர்மங்களைப் போக்குவர் –

ஆனால் பஜன உபாயம் யாது என்னில்-9-அவன் உரைத்த மார்க்கத்தே நின்று இருபசை மலமற உணர்வு கொண்டு நலம் செய்வது என்று-அதாவது பிணக்கற -என்று தொடங்கி-அம் பகவன் வணக்குடை தவ நெறி வழி நின்று -என்று வைதிக சமயத்துக்கும் பாஹ்ய ஷட் சமயத்துக்கும் -தன்னில் தான் உண்டான பிணக்கு அறும் படி – வேத மாரக்கத்தை யதா நிரூபணம் பண்ணி அருளிச் செய்த -நிரவதிக வாத்சல்ய யுக்தனாய் – ஞாநாதி குண பரிபூர்ணனான கிருஷ்ணன் திரு தேர் தட்டிலே -அர்ஜுன வ்யாஜேன ஸ்ரீ கீதா முகத்தாலே –-பக்த்யா த்வந் அந்யயா சக்யா அஹம் ஏவம் விதோர்ஜுன ஜ்ஞாதும் த்ருஷ்டும் ச
தத்வேன பிரவேஷ்டும் ச பரந்தப
–ஸ்ரீ கீதை -11-54- -என்றும் ,-மந்பனா பவ மத் பக்த மத்யாஜீ மாம் நமஸ்குரு மாமே வைஷ்யசி யுக்த்வைவ மாத்மானாம் மத் பராயணா – -ஸ்ரீ கீதை-9-34-என்றும்
அருளிச் செய்த பக்தி மார்க்கத்திலே நின்று –

(அவனுரைத்த மார்க்கத்தே நின்று இருபசை மலமற உணர்வு கொண்டு நலம்‌ செய்வதென்று) பிணக்கற வித்யாதி.. “அம்ப கவன்‌ வணக்குடைத்‌ தவநெறி வழி நின்று” (திருவாய்மொழி 1-3-5) என்று பாஹ்யமான ஷட் ஸமயங்களுக்கும்‌ வைதிக ஸமயத்துக்கும்‌ தன்னில் தானுண்டான பிணக்கறும்படி வேத மார்க்கத்தை யதா, நிரூபணம்‌ பண்ணி யருளிச்‌ செய்தவனுமாய்‌ நிரவதிக வாத்ஸல்யத்தை யுடையனாய்‌ ஜ்ஞாநாதி குண பரிபூர்ணனான க்ருஷ்ணன்‌ திருத் தேர்த் தட்டிலே அர்ஜுந வ்யாஜத்தாலே ஸ்ரீ கீதா முகத்ததாலே “பக்த்யா து அநந்யயா ஸுக்ய:” (கீதை 11-54) என்றும்‌ “ மந்மநா பவ மத்பக்தோ மத்‌யாஜீ மாம்‌ நமஸ்குரு” (கீதை 9-34) என்றும்‌ அருளிச்செய்த பக்தி மார்க்கத்திலே நின்று –

பிணக்கற வறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த
கணக்கற நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புறநெறி களை கட்டு
உணக்குமின் பசையற வவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே 
–1-3-5-தனக்கு முடிவு இன்றிக்கே -எல்லார்க்கும் காரண பூதனாய் இருக்கும் ஹேய ப்ரத்ய நீகமான ஜ்ஞானாதி குண பூர்ணனாய் இருக்கை-இத்தால் -உதாரனாய் -பிராப்தனாய் -ஆப்தனாய் இருந்தவன் வார்த்தை யாகையாலே விச்வாச நீயம் என்கை –வணக்கத்தை யுடைய பக்தி மார்க்கம் ஆகிற வழியிலே நிலை நின்று -பக்தி சரீரத்திலே மாம் நமஸ் குரு என்கையாலே –வணக்குடை -என்கிறது-தபஸ் சப்தத்தாலே பக்தியைச் சொல்லிற்று –பக்தி ஜ்ஞான விசேஷம் ஆகையாலே –யஸ்ய ஜ்ஞான மயந்தப -என்கிற ந்யாயத்தாலே என்னுதல்-இவனுடைய பிரேம மாத்ரத்தையே குவாலாக நினைத்து இருக்கும் அவன் அபிப்ராயாத்தாலே யாதல்

பக்த்யா த்வநந்யயா ஸக்ய அஹமேவம்விதோऽர்ஜுந
ஜ்ஞாதும் த்ரஷ்டும் ச தத்த்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப-
-11-54-பிறிதிடஞ் செல்லாத பக்தியால் மாத்திரமே என்னை இவ்விதமாக அறிதலும், உள்ளபடி காணுதலும் என்னுட் புகுதலும் இயலும்.

மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி யுக்த்வைவமாத்மாநம் மத்பராயண:
–9-34-மனத்தை எனக்காக்கி விடு; பக்தியை எனக்காக்கு; என்னைத் தொழு. என்னைப் பரமாகக் கொள். இங்ஙனமியற்றும் தற்கலப்பு யோகத்தால் என்னையே எய்துவாய்.

நும் இரு பசை அறுத்து-1-3-7- -என்றும் ,-மனன கமல மறக் கழுவி-1-3-8- -என்றும் தேவதாந்தரங்கள் பக்கல் உங்களுக்கு உண்டான சங்கத்தை அறுத்து –இவனோ அவர்கள் ஆஸ்ரயணீயர் -என்ற சம்சயதையும் மனத்தில் நின்றும் ச வாசனமாகப் போக்கி –அவனுடை உணர்வு கொண்டு உணர்ந்து-1-3-5- -என்று தத் விஷய ஞானத்தைக் கொண்டு –

“நும்மிருபசை யறுத்து” (திருவாய்மொழி 1-3-7) என்றும்‌ “மனனக மலமறக்‌ கழுவி” (திருவாய்மொழி 1-3-8) என்றும்‌ தேவதாந்தரங்களில்‌ பண்ணுகிற பரத்வ ஸங்கை யற்று இவனோ அவர்களோ ஆஸ்ரயணீயரென்று ஸம்ஸயாக்ராந்தராகாதே வாஸநையோடே விட்டு அவனுடை உணர்வு கொண்டு தத் விஷய ஜ்ஞாநத்தைக்‌ கொண்டு-

ஓன்று என பலவென வறிவரும் வடிவினுள் நின்ற
நன்ற எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து
நன்றென நலம் செய்வது அவனிடை நம்முடைய நாளே 
–-1-3-7-நீங்கள் ஈஸ்வரதயா சங்கி த்த ப்ரஹ்ம ருத்ராதிகள் பக்கல் நசை அறுத்து-நும் இரு பசை-புருஷகதமான ரஜஸ் தமஸ் ஸூ க்களால் வந்த சங்கை ஒழிய பிரமாண கதிகளால் அவர்கள் பக்கல் ஈச்வரத்வ சங்கையும் இல்லை என்கை

நாளும் நின்று அடும் நம் பழமை அம் கொடு வினையுடனே
மாளும் ஒரு குறைவில்லை மனனக மலமறக் கழுவி
நாளும் நம் திருவுடையடிகள் தம் நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே
 –1-3-8–ஆஸ்ரயிணன் இவனோ -மற்றை யவனோ மனசில் உண்டான சம்சயத்தை சவாசனாமாகப் போக்கி-அஞ்ஜஸ் சாஸ்த்ரத்தா நச்ச சம்சயாத்மா வி நஸ்யதி

10-நன்று என நலம் செய்வது அவனிடை-1-3-7–என்று அநந்ய பிரயோஜன பக்தியை பண்ணுங்கோள் என்று-தாம் மயர்வற மதி நலம் அருளி பஜனத்தில் சேர்க்கிறார் முதல் பத்தில் ..அதாவது-சர்வேஸ்வரன் தமக்கு மயர்வற மதி நலம் அருளினாப் போலே – சம்சாரிகளுக்கு தம்முடைய கிருபையாலே -தத்வ ஹித புருஷார்த்த – விஷயமான அஜ்ஞ்ஞானத்தைப் போக்கி – ஞான பக்திகளை உபதேசித்து –
பகவத் பஜனத்தில் மூட்டுகிறார் முதல் பத்தால் என்கை-

நன்றென நலம்‌ செய்வது” (திருவாய்மொழி 1-3-7) என்று அநந்ய ப்ரயோஜந பக்தியைப்‌ பண்ணுங்கோளென்று. (தாம்‌ மயர்வற மதிநலமருளி பஐநத்திலே சேர்க்கிறார்‌ முதல்பத்தில்‌) ஸர்வேஸ்வரன்‌ தமக்கு மயர்வற மதிநலமருளினாப் போலே தாம்‌ ஸம்ஸாரிகளுக்குத்‌ தம்முடைய க்ருபையாலே தத்வ ஹித புருஷார்த்த, விஷயமாக அஜ்ஞாநத்தைப்‌ போக்கி ஜ்ஞாந பக்திகளை யுபதேஸித்து பகவத்‌ பஜநத்திலே மூட்டுகிறார்‌

ஓன்று என பலவென வறிவரும் வடிவினுள் நின்ற
நன்ற எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து
நன்றென நலம் செய்வது அவனிடை நம்முடைய நாளே 
–-1-3-7-அவன் பக்கலிலே அநந்ய பிரயோஜன பக்தியைப் பண்ணப் பாருங்கோள்-நம்முடை நாளே-க்ரமத்திலே செய்கிறோம் என்று இராதே
சரீரத்தின் உடைய நிலை இல்லாமையைப் புத்தி பண்ணி சடக்கென ஆஸ்ரயியுங்கோள்
நந்தந்த்யுதித ஆதித்யே நந்தந்த்யஸ்மிதே ரவௌ-ஆத்ம நோ நாவ புத்யந்தே மனுஷ்யா ஜீவித ஷயம்-


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌-15 –குணாநுபவ பாதம் –(218 – 228)-23 –தஸ ஸதக கத பகவத் குண தஸக அநு குண அநுபவ உபதேச அதிகரணம் —-(218) ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

July 30, 2026

1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 234 முடிய (48)

1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-234 (27)

15 –குணாநுபவ பாதம் –218 – 228 —மொத்தம் —11– ஸூரணைகள் –இரண்டு அதிகரணங்கள்–
23 –தஸ ஸதக கத பகவத் குண தஸக அநு குண அநுபவ உபதேச அதிகரணம் —-218—ஒரே ஸூரணை
24-தஸ ஸதக பகவத் குண அநுபவ விவரண அதிகரணம் –219–228—மொத்தம் –10–ஸூரணைகள்

இப்படி பத்து தோறும் உள்ள அர்த்தங்களை பர உபதேசத்துக்கு உறுப்பாக ஒருங்க விட்டு –
விஸ்தரேண மேல் -யோஜிப்பதாக திரு உள்ளம் பற்றி – பரத்வாதி குண விசிஷ்டனான சர்வேஸ்வரன் தமக்கு பிறப்பித்த தசா விசேஷங்களை பத்து தோறும் வெளி இடுகிறார் என்று ஸங்க்ரஹேண வாக்கியம் அருளிச் செய்கிறார் மேல்–இனி மேல்‌ திருவாய்மொழியில்‌ பத்துப்‌ பத்தாலும்‌ பரத்வாதி, குண விஸிஷ்டனான ஸர்வேஸ்வரன்‌ தமக்குப்‌ பிறப்பித்த தஸா விஸேஷங்களை வெளியிடுகிறார்‌ என்கிறார்‌.-

பரத்வ, காரணத்வ, வ்யாபகத்வ, நியந்த்ருத்வ, காருணிகத்வ, ஸரண்யத்வ, ஸக்தத்வ, ஸத்யகாமத்வ, ஆபத்ஸகத்வ, ஆர்த்தி ஹரத்வ விஸிஷ்டன்‌ மயர்வை யறுக்க, தத்த்வவேதந மறப்பற்று ஜ்ஞப்தி பல முக்தி தலை சேர நிஷ்கர்ஷித்து, மோக்ஷ பல வ்ருத்தி செய்ய அர்த்தித்து, புருஷார்த்த, பலாந்யருசி யொழிந்து, விரக்தி பல ராகம்‌ கழியமிக்கு, ப்ரேமபலோபாயத்தே புகுந்து, ஸாதந பலோபகாரக்‌ கைம்மாறின்றி, க்ருதஜ்ஞதாபல ப்ரதி க்ருதமானத்தை யுணர்ந்து, ஆத்மதர்ஸந பல ப்ராப்தி மரணாவதியாகப்‌ பெற்று, காலாஸத்தி பல திக்குத்‌ துணை கூட்டின தம்‌ பேற்றைப்‌ பிறரறியப்‌ பத்துத் தோறும்‌ வெளியிடுகிறார்‌.-சூரணை -218-

அதாவது-சர்வ ஸ்மாத் பரனாய்–அந்த பரத்வ பிரகாசகாம் படி சர்வ காரண பூதனாய் — லோகத்தில் காரிய காரணங்கள் போல் அன்றிக்கே -உபாதான காரணமும் தானே ஆகையாலே –-கார்ய பூத சமஸ்த வஸ்துக்களுக்கும் வ்யாபகனாய் – அந்த வியாப்தி தானே ஆகாச வ்யாப்தி போல் அன்றிக்கே அந்தர் ஆத்மா ஆகையாலே –சர்வ நியந்தாவாய் – அந்த பரத்வாதிகளைக் கண்டு வெருவ வேண்டாதபடி பரம காருணிகனாய் – இப்படி க்ருபாவான் ஆகையாலே சர்வ சரண்யனாய்– சரண்ய க்ருத்யமான -அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி -பிராப்தி கரணதுக்கு ஈடாகும் படி –சர்வ சக்தி யுக்தனாய் – அந்த சக்தியாலே நித்யமாக கல்பித்த பத்நீ பரிஜனாதிகளை உடைய வான் ஆகையாலே-சத்ய காமனாய் – அந்த போகங்களில் அந்ய பரனாய் இருந்து விடாதே -பிரளயாத்ய ஆபத்துகளில் உதவி – லீலா விபூதியை ரஷிக்கையாலே –ஆபத் சகனாய் – இப்படி ஆபத் சகன் ஆகையாலே சம்சார தாபத்தரான ஆஸ்ரிதர்க்கு ஆர்த்தி கரனாய் – இப்படி பத்து பத்தாலும் பிரதிபாதகமான பத்து குணத்தோடு கூடி இருக்கிற சர்வேஸ்வரன்-

பரத்வ காரணத்வாதி, ஸர்வ ஸ்மாத் பரனாயிருந்த பரத்வ லக்ஷணம்‌ காரணத்வத்தாலே யாகையாலே ஸர்வ காரண பூதனாயிருந்த காரணத்வம்‌ நாட்டிலுள்ள காரண கார்யங்களைப்‌ போலே ப்ருதக் ஸித்‌தனா யிருக்கை யன்றிக்கே கார்ய வஸ்துக்களிலே வ்யாபித்திருக்கையாலே ஸர்வ வ்யாபகனாய்‌ அந்த வ்யாப்தி தான்‌ ஆகாஸ வயாப்தி போலன்றிக்கே நியந்த்ருத்வேந வாகையாலே ஸர்வ நியந்தாவாய்‌ இப்படி இருக்கிற பரத்வாதிகளைக்‌ கண்டஞ்ச வேண்டாதபடி பரம காருணிகனாய்‌ இப்படிப்‌ பரம காருணிகனாகையாலே ஸர்வ ஸரண்யனாய்‌ இப்படி ஸர்வ ஸண்யனாம் போது அநிஷ்ட நிவ்ருத்தி பூர்கமான இஷ்ட ப்ராப்தியைப்‌ பண்ணிக்‌ கொடுக்க வேண்டுகையாலே அதுக்கு ஈடான ஸர்வ சக்தித்வத்தை யுடையனாய் அந்தப் ஸக்தி தன்னாலே கற்ப்பிக்கப்பட்ட நித்ய போகத்தை யுடையவனாகையாலே ஸத்யகாமனாய்‌ இப்படி நித்யபோகத்தை யுடையவனாய்க் கொண்டிருக்கையாலே லீலா விபூதியை நோவு பட விட்டு இருக்குமோ என்னில் அதனுடைய பிரளய ஆபத்தில் உதவி ரக்ஷிக்குமவனாகையாலே ஆபத் சகனாய் -இப்படி ஆபத் சகனாகையாலே ஸம்ஸார தாப ஆர்த்தரான ஆஸ்ரிதர்களுடைய ஆர்த்தியைப் போக்குமவனாகையாலே ஆர்த்தி ஹரனாய் -ஆர்த்திஹரனாய்‌ ஆக இப்படி பரத்வ காரணத்வ வியாபகத்வ நியந்த்ருத்வ காருணிகத்வ சரண்யத்வ சக்தத்வ ஸத்ய காமத்வ ஆபத் சஹத்வ ஆர்த்தி ஹரத்வ விஸிஷ்டன் -இப்படி பத்துப் பத்தாலும் பிரதி பாதிக்கப்பட்ட பரத்வாதிகளான பத்துக் குணங்களுடன் கூடியிருக்கிற சர்வேஸ்வரன்

மயர்வை அறுக்க தத்வ வேதன மறப்பற்று-அதாவது- மயர்வற மதி நலம் அருளினன் -1-1-1–என்கிறபடியே பக்தி ரூபான்ன ஞான பிரதான முகேன அஜ்ஞ்ஞானத்தை ஸ்வாசனமாக போக்க-
அதனால் தத் விஷய ஞானம் ஆகிற தத் வேதனத்தில் – மறப்பேனோ இனி யான் என் மணியை -1-10-10-– என்கிறபடியே -விஸ்ம்ருதி அற்று –ஜ்ஞப்தி பல முக்தி தலை சேர நிஷ்கரிஷித்து--அதாவது –
அந்த ஞான பலமான மோஷத்தை – நின் செம்மா பாத பற்ப்பு தலை சேர்த்து -2-9-1- -என்று –ஸ்வரூப அனுரூபமாக நிஷ்கர்ஷித்து –

(மயர்வை அறுக்க தத்வ வேதந மறப்பற்று )மயர்வற மதிநலம் அருளினன் -மயர்வற என் மனத்தே மன்னினான் -1-7-4-என்றும் சொல்லுகிறபடியே அஜ்ஞாநத்தை ஸ வாஸநமாகப்‌ போக்கி ஜ்ஞாநத்தைக்‌ கொடுக்க “மறப்பனோ இனி யான்‌ என்‌ மணியையே” (திருவாய்மொழி 1-10-10) என்று விபூதியிலில்லாதபடியான தத்வ ஜ்ஞாநத்தை யுடையராய்‌ (ஜ்ஞப்தி பல முக்தி தலை சேர நிஷ்கர்ஷித்து) அந்த தத்வ ஜ்ஞாந பலமான மோக்ஷத்தை “நின்‌ செம்மா பாத பற்புத்‌ தலை சேர்த்து”” (திருவாய்மொழி 2-9-1) என்று ஸ்வரூபாநுரூபமாக “தனக்கேயாக” (திருவாய்மொழி 2-9-4) என்று நிஷ்கர்ஷித்து-

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே 
–1-1-1-மயர்வு -அஜ்ஞானம் -இத்தால் ஜ்ஞான உதய -அந்யதா ஜ்ஞான -விபரீத ஜ்ஞான ரூபமான அஜ்ஞானத்தைச் சொல்லுகிறது-அற -சவாசனமாகப் போகும்படி-மதி நலம்-மதி என்று ஜ்ஞானம்-நலம் -என்று பக்தி -பக்தி ரூபாபன்ன ஜ்ஞானம் என்றபடி-அருளினன் இத் தலையில் நன்மை தீமை பாராதே நிர்ஹேதுக கிருபையால் தந்து அருளினான்-முலைக் கடுப்பாலே தரையிலே பீச்சுமா போலே – எனக்குத் தந்து அருளினான் -என்னாது ஒழிந்தது -பகவத் விஷயீ காரத்துக்கு முன்பு தம்மை அசத் கல்பராக நினைத்து இருக்கையாலே

மயர்வற என் மனத்தே மன்னினான் தன்னை -உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வில் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என் இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ –1-7-4-மயர்வற-அஞ்ஞானம் சவாசனமாக போம்படி-என் மனத்தே மன்னினான் தன்னை -அஞ்ஞானம் பின்னாட்டாத படி என் ஹிருதயத்திலே வந்து புகுந்தான்-மன்னினான் தன்னை-இனி கந்தவ்ய பூமி இல்லை என்று ஸ்த்தாவர பிரதிஷ்டை போலே இருந்தான்-

மறப்பும் ஞானமும் நான் ஒன்றும் உணர்ந்திலன்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு
மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை
மறப்பனோ இனி யான் என் மணியையே –1-10-10-
-அறிவுக்கு அடைவு இன்றிக்கே இருக்கிற என் பக்கலிலே அறிவைப் பிறப்பித்து மறக்கக் கூடும் என்று பார்த்து அழகிய திருக் கண்களால் குளிர நோக்கிக் கொண்டு ஒரு நாளும் மறக்க ஒண்ணாத படி என்னுள்ளே ஸ்தாவர பிரதிஷடையாய் இருந்தவனை புறம்பு ஒரு அந்நிய பரதை தோற்ற இருக்கிறிலன்-மறப்பனோ இனி –-மறவாமைக்கு பரிஹாரம் அவன் கையிலே உண்டாய் இருக்க இனி மறக்க உபாயம் உண்டோ கீழ் அநாதி காலம் நினைக்க விரகு இல்லாதாப் போலே இறே மேல் உள்ள காலம் எல்லாம் மறக்க விரகு இல்லாத படியும்

எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்

கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா வடியேன் வேண்டுவது ஈதே –2-9-1—ப்ராப்யமாய் -அகவாய் சிவந்து -அதுக்கு பரபாகமான புறா வாயில் கறுப்பை உடைத்தாய் -விகாசம் செவ்வி குளிர்த்தி நாற்றம் இவற்றாலே நிரதிசய போக்யமான திருவடிகளை – ஆஸ்ரிதற்கு அருமைப் பட வேண்டாத படி செவ்வியதாய் பூஜ்யமான திருவடிகள் என்னவுமாம்-என் தலையிலே கொக்குவாயும் படி கண்ணியும் போலே சேர்த்து அருள வேணும்
சேர்த்து -என்று ல்யப்பு அன்று -விதியாய் -சேர்த்து அருள வேணும் என்கை –ஒல்லை -ஈண்டென-

எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –2-9-4—சேஷ சேஷிகள் கலந்தால் சேஷ பூதனுக்கும் வருவதொரு ரசம் உண்டு இறே-அப்படியே அன்றியே நீ உகந்த அடிமை கொண்டு அருள வேணும்
ஸ்ரக் சந்த நாதிகளைப் போலே மிக்க அம்சம் கழிக்கலாய் இருக்கை- கீழ் முன்னிலையாய் போரச் செய்தே தனக்கே என்கிறது – முகத்தைப் பார்க்கில் நோக்கிலும் ஸ்மிதத்திலும் துவக்குண்டு அத்தாலே நிஷ்கர்ஷம் குலையும் என்று கவிழ்ந்து இருந்து கையோலை செய்து கொடுக்கிறார் –-எனக்கே ஆடச்செய் -என்கிற இடம் -அந்நிய சேஷத்வத்தை தவிர்க்கிறது-தனக்கே யாக என்கிற இடம் -தன்னோடு தனக்கு உள்ள அன்வயத்தைத் தவிர்க்கிறது-எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே – எனக்கு அசாதாரணமான சிறப்பு -ப்ராப்தனாய் பவ்யனானவனைக் கொள்ளும் சிறப்பு –-ஸ்வரூப ஞானம் உடைய நான் கொள்ளும் சிறப்பு –-சிறப்பு ஆகிறது ஏற்றம் -அதாகிறது புருஷார்த்தம் –-தனக்கே என்கிறது -பாரதந்தர்ய காஷ்டை -எனக்கே என்கிறது -புருஷார்த்தம் –

மோஷ பல வ்ருத்தி செய்ய அர்த்தித்து--அதாவது- அந்த மோஷத்துக்கு பலமான கைங்கர்ய ரூப வ்ருத்தியை- வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம் -3-3-1–என்று அர்தித்து –

(மோக்ஷ பல விருத்தி செய்ய அர்த்தித்து) அந்த ஸ்வரூபாநுரூபமான மோக்ஷத்துக்கு பலமான வ்ருத்தியை “வழுவிலா அடிமை செய்ய வேண்டும்‌ நாம்‌” (திருவாய்மொழி -3-3-1) என்று அர்த்தித்து

ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1-சர்வ சேஷ வ்ருத்தியும் செய்ய வேண்டும்-சாஸ்த்ரங்களால் இதுவே புருஷார்த்தம் என்று அறிக்கை போராது-அனுஷ்டான பர்யந்தமாக வேணும் –
நாம்-திரு உள்ளத்தைக் கூட்டிக் கொள்ளுகிறார் ஆதல்-கேசவன் தமருக்கு பின்பு தனியர் அல்லாமை யாலே திரு உள்ளத்தோடு ஒக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கூட்டிக் கொண்டு சொல்லுகிறார் ஆதல்

புருஷார்த்த பல அந்ய ஒழிந்து--அதாவது–-அந்த புருஷார்தத்துக்கு பலம் அந்ய ருசி நிவ்ருத்தி ஆகையாலே தத் பலமாக – ஐம் கருவி கண்ட இன்பம் -சிற்றின்பம் ஒழிந்தேன் -4-9-10–என்று அந்ய புருஷார்தங்களில் ருசியைத் தவிர்ந்து –

(புருஷார்த்த, பலாந்ய ருசியொழிந்து) அந்த புருஷார்த்தத்துக்குப்‌ பலம்‌ தத்‌ வ்யதிரிக்தங்களில்‌ ருசியை “‘ஐங்கருவிகண்ட இன்பம்‌ சிற்றின்பமொழிந்தேன்‌‘ (திருவாய்மொழி 4-9-10) என்று தவிர்ந்து-

கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி
கண்ட இன்பம், தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப,
கண்ட சதிர் கண்டொழிந்தேன்;
அடைந்தேன் உன் திருவடியே.–4-9-10-ரூபாதிகளை க்ரஹிக்கைக்கு கருவியான சஷூராதிகளாலே அனுபவிக்கப் பட்ட ஸூகம்-ஆத்மாவுக்கு நித்ய தர்மமான ஞானம் கர்மத்தால் சங்குசிதம் ஆகையால் உழக்காலே அளக்குமா போலே இந்த்ரியத்வாரா பிரஸ்ருதமான ஞானத்தால் வந்த ஐஹிக ஸூகம்-தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம், சம்சாரிகளுக்கு துர் ஜேயமாய் இந்திரிய ஸூ கத்தில் காட்டிலும் பெருத்து பகவத் கைங்கர்ய ஸூகத்தைப் பற்ற அத்யல்பமான ஆத்ம அனுபவ ஸூகம் இவற்றை ஒழிந்தேன் -விட்டேன்

விரக்தி பல ராகம் கழிய மிக்கு-அதாவது– அந்த இதர விஷய விரக்திக்கு பலமான பகவத் விஷய ராகம் –கழிய மிக்கதோர் காதல்-5-5-10- -என்னும் படி அதிசயித்து 

விரக்தி பல ராகம்‌ கழிய மிக்கு) அந்த விரக்தி விஷய வைராக்‌யத்துக்குப்‌ பலமான பகவத்‌ விஷயத்தில்‌ ராகம்‌ “கழிய மிக்கதோர்‌ காதலளிவள்‌” (திருவாய்மொழி 5-5-10) என்று அதிஸயித்து

கழிய மிக்கதோர் காதலள் இவள் என்று அன்னை காணக்கொடாள்
வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
குழுமித் தேவர் குழாங்கள் கைத்தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே
எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே.–5-5-10—அலைவு அற விஞ்சின காதல் என்னுதல் -நாள் கழிய கழிய விஞ்சின காதல் என்னுதல் –சோகச்சகில காலேந கச்ச தாஹ்யபக்கச்சதி -மம்ஸாபச்யதிச் காந்தா மஹான் யஹனி வர்த்ததே –தாயார் நம்பியை நினைக்கவும் விட்டுக் கொடாள்-ஒரு விஷயத்தில் பிரவணையாக காண வல்லனே என்று இருந்தவள் -நெஞ்சையும் காவலிடா நின்றாள் -கிருஷி பண்ணினவள் தானே நிஷேதிக்கிறது -தர்மி லோபம் வரும் அளவாகையாலே

ப்ரேமே பல உபாயத்தே புகுந்து--அதாவது– அந்த நிரதிசய பிரேம பலமான விளம்ப அஷமத்வத்தால் வந்த த்வரையாலே – அலர்மேல் மங்கை உறை மார்பா -உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -6-10-10–என்று உபாய வரணம் பண்ணி –

(ப்ரேம பலோபாயத்தே புகுந்து) இப்படி நிரதியய ப்ரேம பலமான விளம்ப அக்ஷமத்வத்தால்‌ வந்த த்வரையாலே “அலர் மேல்‌ மங்கை உறை மார்பா அடிக்கீழமர்ந்து புகுந்தேனே” (திருவாய்மொழி 6-10-10) என்று உபாய வரணம்‌ பண்ணி-

அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன் றில்லா அடியேன் உன் னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10—வெய்யிலில் நின்று நிழலிலே ஒதுங்கினார் சொல்லுமா போலே க்ஷண மாத்ரமும் விஸ்லேஷிக்க க்ஷமை அல்லேன் என்று நிரதிசய போக்யையான பெரிய பிராட்டியார் நிரந்தர வாசம் பண்ணுகிற திரு மார்வை யுடையையாய் -பிராட்டியோட்டை பழக்கத்தால் ஆஸ்ரிதரை கைவிடாத ஒப்பில்லாத குண பிரதையை யுடையையாய் -எல்லோரோடும் அவரஜனீயமான சம்பந்தத்தையும் உடையையாய் -உன்னை அறியாதே இருக்கிற எனக்கு குணங்களை அறிவித்து அத்தாலே என்னை நடத்துவதும் செய்து திரு நாட்டில் உள்ளாரும் திருமலையில் எனக்கு ஆஸ்ரயிக்கைக்கு எளிதாம் படி வந்து நின்று அருளினவனே –சாஸ்திரங்களில் சொல்லுகிற உபாயம் ஒன்றும் இல்லாத நான் அநந்ய பிரயோஜனனாயக் கொண்டு உன் திருவடிகளே உபாயமாகப் பற்றினேன் -புருஷார்த்த சாதனமாக என் தலையில் உள்ள வற்றை எல்லாம் தவிர்ந்து என் தலைக்கும் திருவடிகளுக்கு நடுவு விளக்கு வாய் தெரியாத படி செறிந்து புகுந்தேன் என்றுமாம் –

சாதன பல உபகார கைம்மாறு இன்றி-அதாவது- அந்த சாதன பலமான உபகாரத்துக்கு பிரத்யுபகாரமாக –-உதவி கைம்மாறு என் ஆர் உயிர் –7-9-10–என்று ஆத்ம சமர்ப்பணம் பண்ணத் தேடி –
அவ் வாத்ம வஸ்து ததீயம் என்று அறிகையாலே – அதுவும் மற்று ஆங்கு அவன் தன்னது -எதுவும் ஓன்று இல்லை செய்வது இங்கும் அங்கும் – என்று பிரத்யுபகாரம் காணாமல் தடுமாறி –

(ஸாதந பலோபகாரக் கைம்மாறின்றி) இப்படி ஸித்‌த ஸாதந பரிக்ரஹம்‌ பண்ணின இவர்‌ அந்த ஸாதந பலமான க்ருதஜ்ஞதையாலே ப்ரத்யுபகாரமாக ஆத்மாவை ஸமர்ப்பிக்கத்‌ தேடி “அதுவுமற்றாங்கவன்‌ தன்னது எதுவுமொன்றுமில்லை செய்வதிங்குமங்கே” (திருவாய்மொழி 7-9-10) என்று அவ்வாத்மா அவனுக்கு அநந்யார்ஹ ஸேஷம்‌ என்றிருக்கையாலே ப்ரத்யுபகாரம்‌ காணாதே தடுமாறி-

உதவிக் கைம்மாறு என் உயிர் என்ன உற்று எண்ணில்
அதுவும் மற்று ஆங்கவன் தன்னது என்னால் தன்னைப்
பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு
எதுவும் ஓன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே.
–7-9-10-ஆராயாதே கொடுக்கில் கொடுக்கும் அது ஒழிய ஆராய்ந்து பார்க்கில் அதுவும் அவனதாய் இருக்கும்-இப்படி கவி பாடின மஹா உபகாரகனுக்கு
எதுவும் ஓன்றும் இல்லை செய்வது -செய்யலாவது எதுவும் ஒன்றும் இல்லை -இங்கு இருந்த நாள் சங்கோசத்தாலே செய்யலாவது ஒன்றும் இல்லை யாகிலும் -சங்கோசம் அற்று முக்தன் ஆனால் பிரத்யுபகாரம் பண்ணத் தட்டில்லையே என்னில்-இங்கும் அங்கே.–இங்கு ஆனால் தேஹாத்ம அபிமான வாசனையால் செய்யலாவது உண்டோ என்று பிரமிக்கலாய் இருக்கும் -சங்கோசம் கழிந்த அளவில் செய்யலாவது ஒன்றும் இல்லை என்னும் இடம் சொல்ல வேண்டாம் இறே –ஸ்வேந ரூபேண ஆபிநிஷ்பத்யதே-என்று ஸ்வரூப ஞானம் பிறந்த இடத்தில் ஸ்வா தந்தர்ய கார்யமான ப்ரவர்த்திக்கு இடம் இல்லை –

க்ருத்ஜ்ஞதா பல ப்ரதி க்ருதமானத்தை உணர்ந்து-அதாவது–அந்த க்ருதக்ஜைக்கு பலமான பிரத்யுபகாரமாக – தோள்களை ஆரத் தழுவி என் உயிரை அறவிலை செய்தனன்-8-1-10- -என்ற ப்ரீதியாலே கலங்கி சமர்ப்பித்த ஆத்ம வஸ்துவை –-நின்ற ஒன்றை உணர்ந்தேன் -8-8-4–என்று தேகாதிகளில் விலஷணமாய்-அவனுக்கு பிரகார தயா சேஷமாக கொண்டு -அனந்யார்ஹமாய் இருக்கும் என்று அறிந்து –

(க்ருதஜ்ஞதா பல ப்ரதி க்ருதமா னத்தை உணர்ந்து) அந்த க்ருதஜ்ஞதா பலமான ப்ரத்யுபகாரம்‌ பண்ணத்‌ தேடி ஆத்ம ஸ்வரூபத்தை “நின்றவொன்றை உணர்ந்தேன்‌” (திருவாய்மொழி 8-8-4) என்று தேஹேந்த்‌ரியாதி களில்‌ விலக்ஷணமாய்‌ பகவத நந்யார்ஹ ஸேஷமாயிருக்கிற ஆகாரத்தை அறிந்து

தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த பேருதவிக் கைம்மாறா
தோள்களை யாரைத் தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ
தோள்கள் ஆயிரத்தாய் !முடிகள் ஆயிரத்தாய் ! துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் !
தாள்கள் ஆயிரத்தாய் !பேர்கள் ஆயிரத்தாய் ! தமியனேன் பெரிய வப்பனே !–8-1-10—உனக்குத் தரப் புகுகிற வஸ்து என்று மிகவும் கொண்டாடி -உபகார ஸ்ம்ருதியில் உண்டான ஹர்ஷத்தாலே அமூர்த்தமான ஆத்மவஸ்து சாவயம் போலே அணைக்கலாம் படி தடித்தது –-என்னுயிரை – விலக்ஷணமான ஆத்மவஸ்துவை –அறவிலை செய்தனன்-இஷ்ட விநியோக அர்ஹமாம் படி அற விலை செய்து தந்தேன் –தாம் முன்பு மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே -என்று சொன்ன வார்த்தையை மறந்து உபகார ஸ்ம்ருதியாலே வந்த ஹர்ஷத்தாலே பிரமித்து சொல்கிறார்
சோதீ-இவர் பண்ணின ஆத்ம சமர்ப்பணத்தாலே அவனுக்கு பிறந்த உஜ்ஜ்வல்யம் –இவர் தம்மது அல்லாத ஒன்றை ஹர்ஷத்தாலே கலங்கி கொடுத்தார் -அவன் தன்னது அல்லாத ஒன்றைப் பெற்றானாய் அத்தாலே உஜ்ஜவலன் ஆகா நின்றான் -மயர்வற மதிநலம் அருள பெற்ற இவர் கலங்க சொல்ல வேணுமோ -மயர்வற மதிநலம் அருளினான் தானே கலங்கா நின்றான்-

யானும் தானாய் ஒழிந்தானை யாதும் யவர்க்கும் முன்னோனை
தானும் சிவனும் பிரமனுமாகிப் பணைத்த தனி முதலை
தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்தித்து என்
ஊனில் உயிரில் உணர்வினில் நின்ற வொன்றை யுணர்ந்தேனே–8-8-4-என் சரீரத்திலும் பிராணனிலும் ஞானத்திலும் வ்யாப்தமான விலக்ஷணமான ஆத்மாவை தனக்கு சரீரமாக யுடையவனை அறியப் பெற்றேன் –நின்ற ஓன்று -என்கிற ஆத்ம ஸ்வரூப வாசியான சப்தம்ஆஸ்ரயமான பிரகாரி பர்யந்த அபிதானம் பண்ணுகிறது -ஸ்வ நிஷ்டம் அல்லாமையாலே பகவத் பர்யந்தமாய் இறே இருப்பது -ஆத்மாவினுடைய போக்யத்தை யாகில் சொல்லுகிறது -காரணத்வம் சொல்லுகிறது என் என்னில் –விமுகரான அவர்களை கர்ம அனுகுணமாக ஸ்ருஷ்டித்து விட்டான் – ஐஸ்வர்ய காமரான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு ஐஸ்வர்யங்களைக் கொடுத்து அதிகாரங்களை நடத்திக் கொடுத்தான் –என்னளவில் இவ்வாத்மா தனக்கு அநந்யார்ஹமாய் போக்யமாய் இருக்கிறபடியை காட்டித் தந்தான் என்கிறார் -நின்றனர் இருந்தனர் பாசுரம் போலே இஸ் சாமானாதி கரண்யத்துக்கு விசேஷண அம்சமான போக்யதையில் தாத்பர்யம் -வையதி கரண்யத்துக்கும் நாட்டார் சொல்லுகிற சுத்த பேதம் அன்று பொருள் -சாமானாதி கரண்யத்துக்கும் ஸ்வரூப ஐக்கியம் அன்று பொருள் –யாதும் யவர்க்கும் முன்னோனை–என்று தொடங்கி –என்-ஊனில் உயிரில் உணர்வினில்-நின்ற ஒன்றான – -யானும் தானாய் ஒழிந்தானை-யுணர்ந்தேனே-என்று அந்வயம் –

ஆத்ம தர்சன பல ப்ராப்தி மரணா வதியாகப் பெற்று-அதாவது–ஆத்ம தர்சன பலமான –பகவத் பிராப்தியை – மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் –என்கிறபடி சரீர அவசானத்திலே பண்ணித் தருகிறோம் என்று அவன் நாள் இட்டு கொடுக்கப் பெற்று –

(ஆத்மதர்ஸந பலப்ராப்தி மரணாவதி யாகப்‌ பெற்று) அந்த ஆத்ம தர்ஸநத்துக்குப்‌ பலமான பகவத்‌ ப்ராப்தியை “மரணமானால்‌ வைகுந்தம்‌ கொடுக்கும்‌ பிரான்‌” (திருவாய்மொழி 9-10-5) என்கிறபடியே ஸரீராவஸாநத்திலே பண்ணித்‌ தருகிறோம்‌ என்று அவன்‌ நாளிட்டுத் தர பெற்றுடையராய்‌-

சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்
தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே–9-10-5-தன் பக்கல் ந்யஸ்த பரனானவன்று தொடங்கி -இவனை ஒழிய தனக்கு செல்லாது இருக்கச் செய்தே –இவனுடைய ருசியை வர்த்தித்து -சரீர அவசானத்திலே பரம பதத்தை கொடுத்த மஹா உபகாரகன் -தன் அழகைக் காட்டி அத்தாலே இவற்றுக்கு ருசி பிறக்கும் அளவும் அவசர பிரதீஷனாய் இருக்கும் படியைச் சொல்கிறது – மரணமானால்-தனக்கு அசத்தி இல்லை -இவனுக்கு கர்த்தவ்யம் இல்லை -இவன் ருசியைக் கடாக்ஷித்து இருக்கிற அத்தனை -இப்பாட்டில் –மரணமானால் -என்றத்தைக் கொண்டே கீழ்ச் சொன்ன நிரூபணம் எல்லாம் –

காலாசத்தி பல கதிக்கு துணை கூட்டின தம் பேற்றை-அதாவது–இப்படி பிராப்தி காலம் அணித்தானதுக்கு பலம் அர்ச்சிராதி மார்க்கத்தாலே தேச விசேஷத்துக்கு ஏறப் போவதாகையாலே -அவ அர்சிராதிகதிக்கு – காள மேகத்தை இன்றி மற்று ஓன்று இல் அம் கதி -என்றும் , ஆத்தன் தாமரை அடி இன்றி மற்று இலம் அரணே -என்று பரம ஆப்தன் ஆனவன் தன்னையே துணையாகக் கூட்டின தம்முடைய பேற்றினை-

(காலாஸத்தி பல கதிக்குத்‌ துணை கூட்டின) அணித்தாக நாளிட்டுக்‌ கொடுக்கையாலே அதுக்கு பலம்‌ அர்ச்சிராதி, மார்க்கத்தாலே போகையிறே, ஆகையாலே அவ் வர்ச்சிராதி கதிக்கு “காளமேகத்தையன்றி மற்றொன்றிலம்‌ கதியே” (திருவாய்மொழி 10-1-1 என்றும்‌ “ஆத்தன்‌ தாமரையடியன்றி மற்றிலம்‌ அரணே” திருவாய்மொழி 10-1-6) என்றும்‌ சொல்லுகிறபடியே ஆபத்‌ தநமான அவன்‌ தன்னை இவருக்குத்‌ துணையாக்க அவனைத்‌ துணையாக உடையராய்‌-

தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர்
நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்
காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே-10-1-1-வழி போம் போது முன்னே ஒரு காளமேகம் வர்ஷித்திக் கொண்டு போக பின்னே போமா போலே ஸ்ரமஹரமாய் இறே இருப்பது –சர்வகந்த -என்கிற விஷயம் ஆகையால் -அவ்வாஸ நாற்றத்தை அனுபவித்திக் கொண்டு போம் அத்தனை -யன்றி மற்று ஓன்று இலம் கதியே--அவனை ஒழிய வேறு கதி உடையோம் அல்லோம் -வேறு ஒருவரை ரக்ஷகமாக உடையோம் அல்லோம் –

கூத்தன் கோவலன் குதற்று வல்லசுரர்கள் கூற்றம்
ஏத்தும் நம் கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
வாய்த்த தண் பணை வளவயல் சூழ் திரு மோகூர் ஆத்தன்
தாமரை யடி யன்றி மற்று இலம் அரணே–10-1-6-
–திரு மோகூரிலே நின்று அருளின-பரம பந்து -தான் தனக்கு அல்லாத மரண சமயத்தில் –அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி -என்னும் பரம ஆப்த தமன் –தன்னை அஞ்சின போது அவன் பக்கலிலே ந்யஸ்த பரனாம் படி யான ஆப்த தமன் –-தாமரை யடி யன்றி-அநாப்தன் ஆகிலும் விட ஒண்ணாத படி யாய்த்து -திருவடிகளில் போக்யத்தை –மற்று இலம் அரணே–வேறு சிலரை ரக்ஷகமாக யுடையோம் அல்லோம் -போக்யத்தை இல்லை யாகிலும் -அநாப்தன் ஆகிலும் புறம்பு புகல் இல்லை என்கை –

பிறர் அறிய பத்து தோறும் வெளி இடுகிறார் ..-அதாவது- பிறர் அறிந்து வாழும் படி – முதல் பத்தே தொடங்கி பத்துப் பத்தாலும் பிரகாசிப்பித்தது அருளுகிறார் என்றபடி-

(தம்‌ பேற்றைப்‌ பிறரறியப்‌ பத்துத்தோறும்‌ வெளியிடுகிறார்‌) இப்படி ஈஸ்வரன்‌ தமக்குப்‌ பண்ணிக்‌ கொடுத்த தஸைகளைப்‌ பத்துப்‌ பத்தாலும்‌ வெளியிடுகிறார்‌.

இத்தால் பரத்வாதி குண விசிஷ்டனான ஈஸ்வரன் தமக்கு பண்ணிக் கொடுத்த பேறுகளை
பலரும் அறிந்து வாழ வேண்டும் என்று பத்து பத்தாலும் பிரகாசிப்பிக்கிறார் என்று பத்து நிகமனத்துக்கு வாக்யார்த்தம் சொல்லப் பட்டதாய்த்து

மூன்றாம் பிரகரணம் முற்றிற்று.


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌-14 –விபாக, பாதம் -(214 – 217)-22 -ஸ்ரீமுக, ஸூக்தி ஸத தஸக பத்‌ய ப்ராதாந்ய-அபிப்ராய விசேஷ அதிகரணம்–(215–217)ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

July 30, 2026

1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 234 முடிய (48)

1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-234 (27)

14 –விபாக, பாதம் -214 – 217—மொத்தம் – 4– –ஸூரணைகள்- இரண்டு அதிகரணங்கள்–
21 ஸ்ரீ மூக,ஸுூக்தி தஸாவதார விபாகாதி, கரணம்‌ –214 —ஒரே -1–ஸூரணை
22 ஸ்ரீமுக, ஸூக்தி ஸத தஸக பத்‌ய ப்ராதாந்ய-அபிப்ராய விசேஷ அதிகரணம்–215–217—மொத்தம்—3–ஸூரணைகள்


இனி இப் பத்துகளையும் இவற்றின் சமுதாயமான பிரபந்தத்தையும் ஆழ்வார் ஸ்லாகித்து பேசின பாசுரங்களில் சாபிப்ராயதையை சத்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் —

ஐந்தினா டொன்பதோட ஒரு பத்து என்னுமவை போலே நூறே சொன்ன பத்து நூறு ஒராயிர மென்றதும்‌ ஸாபிப்ராயம்‌.-சூரணை-215-

(ஐந்தினோடு-என்னுமது போலே- ஒன்பதினோடு-என்னுமது போலே– ஒரு பத்து-என்னுமது போலே–
நூறே சொன்ன என்றதும்-பத்து நூறு என்றதும் ஓர் ஆயிரம் என்றதும் சபிப்ராயம் –ஒரு கருத்தை உட்க்கொண்டது -என்றவாறு )

ஐந்தினோடு-என்னுமது போலே-அதாவது-முன்னில் ஓர் ஐந்துக்கு ஒரு கருத்தும் பின்னில் ஐந்து பாட்டுக்கு ஒரு கருத்தும் -ஆகையாலே – ஐந்தினோடு ஐந்தும் வல்லார் –10-2-11-என்றும்- ஒன்பதினோடு-என்னுமது போலே-அதாவது-ஒன்பது பாட்டுக்கு ஒரு கருத்தும் ஒரு பாட்டுக்கு ஒரு கருத்தும் ஆகையாலே-ஒன்பதோடு ஒன்றுக்கும் —9-5-11- என்றும் –-ஒரு பத்து-என்னுமது போலே–அதாவது
பத்து பாட்டுக்கும் சேர ஒரு கருத்து ஆகையாலே –-பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து-3-4-11 -என்றும் சொன்னவை போலே –-நூறே சொன்ன என்றதும்--அதாவது–நூறே சொன்ன ஓர் ஆயிரம் -9-4-11-என்று கிழி கிழியாகக் கொடுப்பாரை போலே –-நூறு நூறு ஆகச் சொன்ன ஆயிரம் என்றும் –
பத்து நூறு என்றதும் –
-அதாவது- பத்து நூற்றுள் இப் பத்து -6-7-11-என்று பத்து நூறு என்றும்
இப்படி பத்துகளை பிரித்து சொன்னதும்-ஓர் ஆயிரம் என்றதும் –-அதாவது–தெரியச் சொன்ன ஓர் ஆயிரம்–6-9-11 -என்றும் –-மிக்க ஓர் ஆயிரம் –7-6-11-என்றும் –-அவாவில் அந்தாதிகள் இவை ஆயிரம்-10-10-11 -என்றும் , ஆயிரத்தை சேரச் சொன்னதும்- பத்துகள் தோறும் வெவ்வேறு கருத்தாயும்-ஆயிரத்துக்கும் சேர ஒரு கருத்தாயும் இருக்கும் படியை நினைத்து ஆகையாலே சாபிப்ராயம் என்கை

இனிமேல்‌ (ஐந்தினோடு ஒன்பதோடு ஒருபத்தும்‌ என்னுமவை போலே) “ஐந்தினோடைந்தும்‌ வல்லார்‌ ்‌ (திருவாய்மொழி 10-2-11) என்று ஐந்து பாட்டுக்கொரு அபிப்ராயம்‌ ஐந்து பாட்டுக்கொரு அபி ப்ராயமுமானாப்போலவும்‌ “ஒன்பதோடொன்றுக்கும்‌” (திருவாய்மொழி 9-5-11) என்று ஒன்பது பாட்டுக்கொரு கருத்தும்‌ ஒருபாட்டுக்கொரு கருத்துமானாப்‌ போலவும்‌ “பாடலோராயிரத்துள்‌ இவையும்‌ ஒருபத்தும்‌ வல்லார்‌ (திருவாய்மொழி 3-4-11 என்று பத்து பாட்டுக்கு ஒரு கருத்தானாப் போலவும்‌ (நூறே சொன்ன பத்து நூறு ஓராயிரம்‌ என்றதும்‌ ஸாபிப்ராயம்‌) “நூறே சொன்ன ஆயிரம்‌” (திருவாய்மொழி 9-4-11) என்றும்‌ “பத்து நூற்றுள்‌ இப்பத்து” (திருவாய்மொழி 6-7-11 என்றும்‌ சொல்லுகையாலே பத்துக்கள்‌ தோறும்‌ வேறு வேறு கருத்தாயும்‌ “அவாவிலந்தாதிகளால்‌ இவை ஆயிரமும்‌” (திருவாய்மொழி 10-10-11) என்று ஆயிரத்துக்கும்‌ ஓரபிப்ராயமாயும்‌ இப்படித்‌ தலைக்கட்டுமென்கிறார்-

அந்தமில் புகழ் அனந்த புர நகராதி தன்னை
கொந்தலர் பொழில் குருகூர் மாறன் சொல் லாயிரத்துள்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போய் அமர் உலகில்
பைந்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள் இணையே–10-2-11—கேவலம் பர உபதேசமாக ஐந்தினோடே கூட –தம்மையும் கூட்டிக் கொண்டு உபதேசித்த ஐந்தையும் அப்யஸிக்க வல்லவர்கள்-

இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைத்த பல் ஊழிக்குத்
தன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த மாயனைத்
தென் குருகூர் சடகோபன் சொல் ஆயிரத்துள் இவை
ஒன்பதோடு ஒன்றுக்கும் மூ வுலகும் உருகுமே
-9-5-11-கீழ் ஒன்பது பாட்டிலும் உண்டான வியஸனம் ஸூகம் என்னலாம் படி வியஸனம் மிக்கு இருந்த பத்தாம் பாட்டு -இவற்றை யுடைய இத்திருவாய் மொழி-ஸ்மாரக பதார்த்தங்களாலே ஜீவனத்தில் நசையோடே நோவு பட்ட ஒன்பது பாட்டோடு ஜீவனத்தில் நசை அற்ற ஒரு பாட்டுக்கும் விசேஷஞ்ஞரோடு அவிசேஷஞ்ஞரோடு வாசி இன்றிக்கே சிதிலராவார் –

கூடிவண்டு அறையும் தண்தார்க் கொண்டல்போல் வண்ணன் றன்னை
மாடுஅலர் பொழில் குருகூர் வண்சட கோபன் சொன்ன
பாடல்ஓர் ஆயி ரத்துள் இவையும்ஓர் பத்தும் வல்லார்
வீடுஇல போகம் எய்தி விரும்புவர் அமரர் மொய்த்தே.–3-4-11-பாடல் கானம் -புஷபம் பரிமளத்தோடே அலருமா போலே இசை முன்னாகத் தோற்றின ஆயிரம் இவையும் ஓர் பத்தும் வல்லார்

ஆறா மதயானை அடர்த்தவன் தன்னைச்
சேறு ஆர் வயல் தென் குருகூர் சடகோபன்
நூறே சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
ஏறே தரும் வானவர் தம் இன்னுயிர்க்கே–9-4-11-தரிப்பார்க்கு எளிதாம் படி நூறு நூறாக அருளிச் செய்த ஆயிரம் திருவாய் மொழியிலும் இத்திருவாய் மொழி வானவர் தம் இந்த உயிர்க்கு ஏறானவனை தரும் என்றும் சொல்லுவார் –

வைத்தமா நிதியாம் மதுசூ தனையே அலற்றிக்
கொத்தலர் பொழில்சூழ் குருகூர்ச்சட கோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப்பத்து அவன்சேர்திருக்கோ ளூர்க்கே
சித்தம் வைத்துரைப் பார்திகழ் பொன்னுல காள்வாரே.–6-7-11-கிழி கிழி யாய் கொடுப்பாரை போலே –
அவன் பொருந்தி வர்த்திக்கிற திருக் கோளூருக்கே நெஞ்சை வைத்து சொல்லுமவர்கள்

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-–பக்தி பலாத்காரத்தாலே பிறந்த ஆயிரம் திருவாய் மொழியிலும் -இவரைச் சொல்லுவித்த அபி நிவேசம் -ப்ரேரகனான மைத்ரேயனுடைய ஸ்த்தானத்திலே நிற்கிறது யாய்த்து –முடிந்த -அவா இல் அந்தாதி இப்பத்து -பெற்று அல்லது தரிக்க ஒண்ணாத படியான பரம பக்தியால் பிறந்தது யாய்த்து -இத் திருவாய் மொழி -கீழ் அடைய பர பக்தி பிறந்து சொல்லிற்று யாயிற்று -பரம பக்தி பிறந்து சொல்லிற்று யாயிற்று இத் திருவாய் மொழி –

இனி பத்துகள் தோறும் உபதேச பரமான ஓர் ஒரு திருவாய்மொழி பிரதானமாய் -அவ்வோ பத்துகளுக்கு அவ்வோ திருவாய்மொழியில் நோக்காய் இருக்கும்படியை சத்ருஷ்டாந்தமாக அருளி செய்கிறார் —

பாட்டுக்கு க்ரியையும்‌ பத்துக்குக்‌ கருத்தும்‌ போலே நூற்றுக்கு உபதேஸப்பத்து–சூரணை-216-

பாட்டுக்கு க்ரியை போலே-அதாவது பாட்டானால் க்ரியை (பயனிலை) யோடு தலைக் கட்ட வேண்டும் ஆகையாலே பாட்டுகள் தோறும் க்ரியா பதம் பிரதானமாக இருக்குமா போலேயும்–பத்துக்கு கருத்தும் போலே- அதாவது–ஒரொரு திரு வாய் மொழிக்கு -பரத்வம்-பஜநீயதை – சௌலப்யம் -அபராத சஹத்வம் என்றாப் போலே –(உயர்வற உயர்நலம் -பரத்வத்திலே நோக்கு -பிரதான பாசுரம் -1-1-1-
வீடுன் முற்றவும் -பஜநீயதை – எண் பெருக்கு அந்நலத்து-1-2-10– ஸுலப்யம் -பத்துடை அடியவர்க்கு எளியவன் -1-3-1-அபராத சஹத்வம் -எண் பிழையே நினைந்து அருளி அருளாத திருமாலார்க்கு -1-4-7–)
தனித் தனியே கருத்துகள் ஆகையாலே -பத்துப் பாட்டுக்குக் கருத்தான நிதானம் சொல்லும் பாட்டு பிரதானமாய் இருக்குமா போலேயும்

நூற்றுக்கு உபதேச பத்து--அதாவது-நூறு பாட்டுக்கு பர உபதேசமான பத்துப் பாட்டு பிரதானமாய் இருக்கும் என்கை —(முதல் பத்தில் வீடுமுன் முற்றவும் -இரண்டாம் பத்தில் கிளர் ஒளி இளமை -மூன்றாம் பத்தில் சொன்னால் விரோதம் -நான்காம் பத்தில் –ஒன்றும் தேவும் -ஐந்தாம் பத்தில் –பொலிக பொலிக -ஆறாம் பத்தில் -நல்குரவு செல்வமும் -ஏழாம் பத்தில் –இன்பம் பயக்க – எட்டாம் பத்தில் –எல்லியும் காலையும் -ஒன்பதாம் பத்தில் –மாலை நண்ணி -பத்தாம் பத்தில் –கண்ணன் கழலிணை )

நூறு பாட்டு பரோபதேஸமா யிருப்பதொரு திருவாய்மொழியோடே தலைக்கட்டுமென்கிறார் 

இத்தால் பாட்டுகளுக்கு க்ரியையிலும் –-பத்து பாட்டுகளுக்கு நிதானம் சொல்லும் பாட்டிலும்- தாத்பர்யமாய் இருக்குமோபாதி நூறு பாட்டுக்கும் பர உபதேசமான பத்து பாட்டிலே -தாத்பர்யமாய் இருக்கும் என்றது ஆய்த்து –

பிணங்கி அமரர் பிதற்றும் -1-6-4–என்கிறபடியே –பேர் அளவு உடைய நித்ய ஸூரிகள் -ஸ்வ ஸ்வ அநுபூத குண தாரதம்யங்களைச் சொல்லி – சரச விவாத கோலாகலம் பண்ணும்படி இருக்கிற அவனுடைய
பரத்வ சௌலப்ய பிரயுக்தமான குண விசேஷங்களைத் தனித்து தம்மால் புசித்து தலை கட்ட ஒண்ணாமையாலே-அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -2-3-10-– என்று ‘
கூட்டரான ரசஞ்சரைத் தேடின அளவில் கிடையாதபடி தூரஸ்தராக- சந்நிஹிதரான சம்சாரிகளுடைய அனாத்ம குணம் பாராதே பகவத் குணங்களில் மூட்டித் திருத்திக் கூட்டிக் கொள்ள தேட்டமாய் உபதேசத்திலே ஒருப் படுகையாலே அதிலே நோக்காக வேணும் இறே

அணங்கு என ஆடும் என் அங்கம் -வணங்கி வழி படும் ஈசன்
பிணங்கி யமரர் பிதற்றும் -குணங்கு எழு கொள்கையினானே –1-6-4–அமரர் என்கிறது -நித்ய ஸூரிகளை -ஏக ரசர் ஆனவர்களை விபிரதிபத்தி உண்டோ என்னில்-தாம்தாம் அனுபவித்த குணங்களில் ஏற்றத்தை -நான் முந்துறச் சொல்ல -நான் முந்துறச் சொல்ல -என்று-ஒருவருக்கு ஒருவர் பிணங்கா நிற்பார்கள்-பிதற்றும் – ஜ்வர சந்நிபரைப் போலே கூப்பிடா நிற்கை

களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக் கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான்நிலம் சுடர் ஆழி சங்கேந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே -2-3-10–இவனுடைய ரக்ஷகத்வத்திலே தோற்று இருக்கும் ததீயர் திரள்களை –குழாங்களையே – திரளாக வேணும் -அது தான் அநேகமாக வேணும்
இவ்விஷயத்துக்கு உசாத் துணையாம் போது அசங்க்யாதராக வேணும் என்று இருக்கிறார் –உடன் கூடுவது என்று கொலோ--நான் எனக்கு என்று அகன்று நிற்க வேண்டாதே-அத் திரளில் ஒரு நீராகக் கூடுவது என்றோ-வைஷ்ணவ ஸஹவாசம் இனிது என்று இருக்கச் செய்தேயும் அஹங்காரத்தால் செய்யப் போகாது ஒழிகிறது இறே

இவற்றில் பகவத் பக்த பரங்களாய் வரும் அவற்றுக்கு தாத்பர்யம் எது என்னும் ஆ காங்க்ஷையில் அருளிச் செய்கிறார் .-இவற்றில்‌ பகவத் பக்த பரங்களாய்‌ வருமவற்றுக்குத்‌ தாத்பர்யம்‌ ஏதென்ன, அவற்றுக்குத்‌ தாத்பர்யத்தை அருளிச் செய்கிறார்‌.-

பகவத் பக்த பரங்கள் ஆஸ்ரயண விதி சேஷங்கள் —சூரணை -217-

(ஆஸ்ரயண விதிக்கு -பகவத் பக்த பரங்கள்-பகவத் அடியார்களை பற்றிய திருப்பாசுரங்கள் -சேஷங்கள் -உறுப்புக்கள் -என்றவாறு )

பகவத் பக்த பரங்கள்-அதாவது-பயிலும் சுடர் ஒளி -முதலான பாகவத பரங்களான திருவாய்மொழிகள் –ஜ்யோதிஷ்டோமேன ஸ்வர்க்க காமோ யஜதே -என்கிற விதிக்கு பிரயாஜாதி விதிகள்
சேஷமாய் -அவற்றினுடைய அனுஷ்டானதோடே அது பல பர்யந்தமாய்த் தலைக்கட்டுமா போலே —
திரு நாரணன் தாள் காலம் பெற சிந்தித்து உய்ம்மினோ–4-1-1- –என்றும் ,
நலம் அந்தமில் நாடு புகுவீர் பலமுந்து சீரில் படிமினோ ஓவாதே -2-8-4–என்று
விதிக்கிற பகவத் ஆஸ்ரயணம் -பாகவத் ஆஸ்ரயணத்தோடு ஒழிய தலைக் கட்டாமையாலே
பகவத் ஆஸ்ரயணீய விதிக்கு சேஷங்கள் என்கை ..

அதவா-
பர உபதேச பரமான இதில் பகவத் குணங்களையும் ஜீவ குணங்களையும் பிரதி பாதிக்கிறவற்றுக்கு விநியோகம் ஏது என்ன அருளிச் செய்கிறார் — பகவத் பரங்களாயும் -தத் பக்தரான -ஜீவ பரங்களாயும் -அவ்வவ் குணங்களை பிரதி பாதிக்கிறவை -ஆஸ்ரயண விஷயத்தையும் – ஆஸ்ரயண கர்த்தாவையும்- சொல்லுகிறது ஆகையாலே-ஆஸ்ரயண விதிக்கு சேஷங்கள் இத்தனை என்கை ..ஆஸ்ரயண விதிக்கு -பகவத் பக்த பரங்கள்-பகவத் அடியார்களை பற்றிய திருப்பாசுரங்கள் -சேஷங்கள் -உறுப்புக்கள் -என்றவாறு )-

பயிலும்‌ சுடரொளி” (திருவாய்மொழி 3-7) “நெடுமாற்கடிமை” (திருவாய்மொழி 8-10) என்ற பாகவத பரங்களான திருவாய்மொழிகளுக்குக்‌ கருத்து என்னென்னில்‌, ‘ஜ்யோதிஷ்டோமேந ஸ்வர்க்க காமோ யஜேத” (யஜுஸ்‌ ஸம்ஹிதை 2-5-5) என்று ஸ்வர்க்க காமனானவன்‌ ஜ்யோதிஷ்டோமத்தைப்‌ பண்ணுவான்‌ என்கிற விதிக்கு “ப்ரயாஜைர்‌ யஜேத” இத்யாதி விதிகள்‌ ஸேஷமாய்‌ அவற்றினுடைய அநுஷ்டானத்தோடே பல பர்யந்தமாய்த்‌ தலைக் கட்டுமா போலே ‘திருநாரணன்‌ தாள்‌ காலம்‌ பெறச்‌ சிந்தித்துய்ம்மினோ” (திருவாய்மொழி 41-1) “நலமந்தமில்லதோர்‌ நாடு புகுவீர்‌ பலமுந்து சீரில்‌ படிமின்‌ ஓவாதே” (திருவாய்மொழி 2-8-4) என்கிற ஆஸ்ரயணம்‌ பாகவத ஸமாஸ்ரயணத்தோடொழிய தலைக் கட்டாமையாலே அவ்வாஸ்ரயண விதிக்கு ஸேஷமென்கிறார்‌. அன்றிக்கே பகவத் பக்த பரங்கள்‌ என்கிற இதுக்கு பகவத்‌ பரமாயும்‌ தத் பக்த பரமாயும்‌ வருமவை என்று பொருளான போது (பாட்டு க்ரியையிலே முடியுமாபோலேயும் )பத்துப்‌ பாட்டு நிதாநம்‌ சொல்லும்‌ பாட்டிலே முடியுமா போலேயும்‌ பத்துத் தோறும்‌ உபதேஸம்‌ உண்டாகையாலே) பகவத் குணங்களையும்‌ தத் பக்தனான ஜீவனுடைய குணங்களையும்‌ சொல்லுகிற விடங்களை ஆஸ்ரயண விதிக்கு ஸேஷமென்கிறார்‌. அன்றிக்கே பகவத் பக்த பரமாம்படி ஒருங்க விட்டு பரோபதேஸம்‌ பண்ணுகிற திருவாய்மொழியில்‌ என்று இதற்குத்‌ தாத்பர்யமாகக்‌ கடவதென்று ஏக வாக்யமாகச்‌ சொல்லவுமாம் –

ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ.–4-1-1-திரு நாரணன்-இடர் கெடுத்த திருவாளன் இணை அடி–தத்ர நாராயண ஸ்ரீ மான்-ஸ்ரீயபதியை ஆஸ்ரயிங்கோள்-ஒரு மிதுனம் இறே-ஆசிரயணீயமும் ப்ராப்யமும் -ஒரு மிதுனத்துக்கு இறே சேஷம் இறே இது-தாள்-சேஷ பூதம் பற்றுவது திருவடிகளை இறே-காலம் பெறச் –-ஜீவிதும் மரணாந்தம் ஹி ஜராந்தே ரூபா யவ்வனே சம்பதச்ச வி நா சாந்தா ஜானன் கோ த்ருதிமாப் நுயாத்--நாளை செய்கிறோம் என்னுமது அன்று-யன் முஹூர்த்தம் க்ஷணம் வாபி வா ஸூ தேவோ ந சிந்தயந்தே வா ஸூ தேவ தருச்சாய சாகி மர்த்தம் ந ஸேவ்யதே
சிந்தித் துய்ம்மினோ--ரக்ஷகன் என்கிற ப்ரபத்தியே அமையும் -ப்ரபத்திக்கும் இதுவே அர்த்தம் என்கிறார்-நினைவோடு வ்யாப்தமாயிற்று உஜ்ஜீவனம் இருப்பது அனர்த்தம் எல்லாருக்கும் ஒத்து இருக்கையாலே எல்லாரையும் அபேக்ஷிக்கிறார்


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌-14 –விபாக, பாதம் -(214 – 217)-21- ஸ்ரீ மூக,ஸுூக்தி தஸாவதார விபாகாதி, கரணம்‌ –(214)ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

July 29, 2026

1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 234 முடிய (48)

(1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-234 (27)

14 –விபாக, பாதம் -214 – 217—மொத்தம் – 4– –ஸூரணைகள்- இரண்டு அதிகரணங்கள்–
21 ஸ்ரீ மூக,ஸுூக்தி தஸாவதார விபாகாதி, கரணம்‌ –214 —ஒரே -1–ஸூரணை
22 ஸ்ரீமுக, ஸூக்தி ஸத தஸக பத்‌ய ப்ராதாந்ய-அபிப்ராய விசேஷ அதிகரணம்–215–217—மொத்தம்—3–ஸூரணைகள்

இனிமேல் இப் பிரபந்தம் பத்து பத்தாக அவதரித்ததின் பிரயோஜனத்தை ச த்ருஷ்டாந்தமாக அருளி செய்கிறார் —இனி மேல்‌ “பரித்ராணாய ஸாதூநாம்‌ விநாஸாய ச துஷ்க்ருதாம்‌ தர்ம ஸம் ஸ்த்தாபநார்த்தரய ஸம்பவாமி யுகே யுகே,” (கீதை 4-8) என்று ஸாது பரித்ராண துஷ்க்ருத் விநாஸநார்த்தமான பகவதவதாரம்‌ போலே இத் திருவாய்மொழியினுடைய அவதாரமுமென்கிறார்‌-

சாது சனம்‌ நண்ணா மயர்வற மாசறுக்கும்‌ தெருள்‌ கொள்ளப்‌ பத்தராவர்‌ அடிமையற வுரிய நோய்களறுக்கும்‌ உடைந்து ஏற்றரும்‌ வானின்‌ தாளின் கீழ்‌ அடிக்கீழின்பக்கதி பயக்கும்‌ ஊடுபுக்கு மூவுலகும்‌ உருகா நிற்பர்‌ என்னும்‌ ஸாம்யத்தாலே வாச்யம்‌ பத்தினாய தோற்றம்‌ போலே தோற்றங்கள்‌ ஆயிரத்தின்‌ பத்துப்‌ பத்தான இதினாவிர்ப்பாவம்‌.–சூரணை -214–

1-சாது சனம்-நண்ணா-அதாவது சாது சனத்தை நலியும் கஞ்சனை சாதிப்பதற்கு–திருவாய்-3-5-5–என்றும் – சாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்ம சமஸ்த்தாபனர்த்தாய சம்பவாமி யுகே யுகே –ஸ்ரீ கீதை -4-8- -என்றும் – இத்யாதிப் படியே சாது பரித்ராண துஷ்க்ருத் விநாசார்தமாக அவன் அவதரித்தாப் போலே – இதுவும் – நண்ணா அசுரர் நவிவெய்த நல்ல அமரர் பொலிவெய்த-திருவாய்-10-7-5- -என்று
பகவத் பிரதி பஷ பூதரான ஆசூர பிரக்ருதிகள் மண் உண்ணவும் – பகவத் பக்தி பரரான தேவ பிரக்ருதிகள் வாழவும் அவதரித்தது என்றும் —

சாது சனம்‌) “சாது சனத்தை நலியும்‌ கஞ்சனைச்‌ சாதிப்பதற்கு ஸாது, பரித்ராண துஷ்க்ருத் விநாஸநார்த்தமாக அவதரித்து–போலே திருவாய்மொழியும்‌ (நண்ணா) “நண்ணா வசுரர்‌ நவி வெய்த நல்லவமரர்‌ பொலி வெய்த எண்ணாதனகள்‌ எண்ணும்‌ நன்முனிவரின்பம்‌ தலைச் சிறப்ப பண்ணார்‌ பாடல்‌” (திருவாய்மொழி 10-7-5) என்கிறபடியே ஸாது பரித்ராண துஷ்க்ருத் விநாஸநார்த்தமாக அவதரித்து-

சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு
ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த
வேத முதல்வனைப் பாடி வீதிகள் தோறும் துள்ளாதார்
ஓதி உணர்ந்தவர் முன்னா என் சவிப்பார் மனிசரே?–3-5-5—சாது ஜனம் என்று நினைக்கிறது ஸ்ரீ வ ஸூ தேவரையும் தேவகி முதலானாரையும் தான் அவதரிக்க நினைத்த ஸ்தலத்தில் நலிந்து நெடு நாள் சிறை வைத்துப் போந்த கம்சனை நிரசிக்கைக்காக-

பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம்
தர்மஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே
–4-8–நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலை நிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன்.

நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடல்
இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–10-7-5—விபரீதஸ்ததா அஸூர -என்கிறபடியே விபரீதரான அ ஸூ ரர்கள் இஸ் ஸம்ருத்தி பொறுக்க மாட்டாமையாலே முடியவும் –கிட்டக் கடவோம் அல்லோம் -என்று இருக்கும் அஸூர வர்க்கம் — நல்ல அமரர் பொலிவு எய்த—விஷ்ணு பக்தி பரோ தேவ -என்கிறபடியே அநந்ய பிரயோஜனரான வைஷ்ணவர்கள் -இதுவே ஜீவனமாக சம்ருத்தமாகவும் -தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன் -என்றார் இறே
எண்ணா தனகள் எண்ணும் -உபய விபூதி யுக்தனுக்கு இன்னம் விபூதி வேணும் என்றும் -அசங்க்யாத குணகனுக்கு இன்னம் குணம் வேணும் என்றும் மேன் மேலே என எண்ணா நிற்குமவர்கள் –
நன் முனிவர் -ஈஸ்வரன் அடியாக தங்கள் ஸம்ருத்தியை எண்ணுமவர்கள் முனிவர் –அத்தலைக்கு ஸம்ருத்தியை எண்ணுமவர்கள் நல் முனிவர் –இன்பம் தலை சிறப்ப-திருவாய் மொழி ஒழிய வேறு ஒரு சம்பத்து வேண்டா -என்று மிகவும் ஹ்ருஷ்டராம் படியாகவும் –பண்ணார் பாடல் இன் கவிகள் -பண் மிக்கு இருந்துள்ள பாடல் -புஷ்ப்பம் பரிமளத்தோடே அலருமா போலே -திருவாய் மொழி அவதரித்த போதே பண் மினுங்கி யாய்த்து இருப்பது –இன் கவி–பண்ணுக்கு ஆஸ்ரயமான கவி தானே இனிதாய் இருக்கை –

2-மயர்வற மாசறுக்கும் தெருள் கொள்ளப் பத்தராவார்-அதாவது-மயர்வற மதி நலம் அருளினன்-திருவாய்-1-1-1–என்று அவன் அஜ்ஞ்ஞானத்தைப் போக்கி ஞான பக்திகளைக் கொடுக்குமா போலே –
இதுவும் –-ஒலி புகழ் ஆயிரத்து இப் பத்து உள்ளத்தை மாசறுக்கும்–திருவாய்-5-2-11 -என்று
மனசுக்கு மாஸான அஞ்ஞானத்தைப் போக்கி –-தெருள் கொள்ள சொன்ன ஓர் ஆயிரம்-திருவாய்-2-10-11–என்றும் ,-தூய ஆயிரத்து இப் பத்தால் பத்தராவார் -திருவாய்-6-4-11-என்றும் சொல்லுகிறபடி –ஞான பக்திகளை கொடுக்கும் .என்றும் ..

மயர்வற மதிநலம்‌ அருளினன்‌ (திருவாய்மொழி 1-1-1 என்கிறபடியே அஜ்ஞாநத்தை வாஸனையோடே போக்கி ஜ்ஞாந பக்திகளை உண்டாக்கி —மாசறுக்கும்‌ தெருள் கொள்ளப்‌ பத்தராவர்‌) “ஒலிபுகழாயிரத்திப்பத்து உள்ளத்தை மாசறுக்கும்‌” (திருவாய்மொழி 5-3-11 என்று நெஞ்சுக்கு மாசான அஜ்ஞானத்தை வாஸநையோடே போக்கி “தெருள் கொள்ளச்‌ சொன்ன ஓராயிரம்‌” (திருவாய்மொழி 2-10-11 என்றும்‌ ‘தூயவாயிரத்திப் பத்தால்‌ பத்தராவர்‌ துவளின்றிமே” (திருவாய்மொழி 6-4-11) என்றும்‌ சொல்லுகிறபடியே ஜ்ஞாந பக்திகளைக்‌ கொடுத்து

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே 
–1-1-1–மயர்வு -அஜ்ஞானம் -இத்தால் ஜ்ஞான உதய -அந்யதா ஜ்ஞான -விபரீத ஜ்ஞான ரூபமான அஜ்ஞானத்தைச் சொல்லுகிறது-அற -சவாசனமாகப் போகும்படி
மதி நலம்-மதி என்று ஜ்ஞானம்-நலம் -என்று பக்தி -பக்தி ரூபாபன்ன ஜ்ஞானம் என்றபடி-அருளினன்
இத் தலையில் நன்மை தீமை பாராதே நிர்ஹேதுக கிருபையால் தந்து அருளினான்-முலைக் கடுப்பாலே தரையிலே பீச்சுமா போலே –-எனக்குத் தந்து அருளினான் -என்னாது ஒழிந்தது -பகவத் விஷயீ காரத்துக்கு முன்பு தம்மை அசத் கல்பராக நினைத்து இருக்கையாலே-

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான்கண்ணன் தன்னைக்
கலிவயல் தென்னன் குருகூர்க் காரிமாறன் சடகோபன்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக்குமே.–5-2-11-ஒலி புகழ் -பகவத் குணங்களை வ்யக்தமாக ப்ரதிபாதித்த இப்பத்து-உள்ளத்தை மாசறுக்குமே.– அந்தகரண தோஷத்தை போக்கும் -அதாகிறது -தேவதாந்தரங்களில் பரத்வ சங்கை -பகவத் பரத்வத்தில் அதி சங்கை -ஸ்ரீ வைஷ்ணவ விஷயத்தில் சஜாதீய புத்தி -அபாகவத சம்ச்லேஷம் -பிரயோஜனாந்தர புத்தி -இப்படிப் பட்ட அந்தகரண தோஷங்களை அறுக்கும் –

பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே –2-10-11-கேட்டார்க்குத் தம்மிலும் தெளிவைப் பிறக்கும் படி அருளிச் செய்தது – தம்முடைய ஞானத்துக்கு ஆதி ஈஸ்வரன் -இவர்களுக்குத் தாம் அடியாக வந்தது –
அருளே நிரூபகமான அழகர் திருவடிகளிலே சம்சாரத்தை முடித்துச் சேர்க்கும் –

நாயகன் முழுவேழுலகுக்குமாய் முழுவேழுலகுந் தன்
வாயகம்புக வைத்துமிழ்ந்து அவையாய் அவை அல்லனுமாம்
கேசவன் அடியிணை மிசைக் குருகூர்ச்சடகோபன் சொன்ன
தூய ஆயிரத் திப்பத்தால் பத்தராவர் துவளின்றியே.–6-4-11தூய்மை யாவது -ஸ்ரீ -கிருஷ்ண விருத்தாந்தத்தில் கலப்பு அற்று இருக்கை – துவள் -குற்றம் –அதாவது பரத்வத்திலே நெஞ்சு செல்லுகை -அத்தை தவிர்ந்து ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தில் பிரவணராக பெறுவார் -திருவடி ஸ்ரீ ராமாவதாரத்தில் பிரவணராய் இருக்குமா போலே

3-அடிமை அற வுரிய-அதாவது-அடிமை அறக் கொண்டாய்-திருவாய்–4-9-6- -என்று தனக்கு அனந்யார்ஹ சேஷமாக அவன் அங்கீகரிக்குமா போலே –-இதுவும்-உரிய தொண்டர் ஆக்கும் உலகு உண்டாற்கே–திருவாய்-6-9-11 -என்று தத் அனந்யார்ஹ சேஷம் ஆக்கும் என்றும் .

அடிமை யற) அடிமை யறக்கொண்ட (திருவாய்மொழி 4-9-6) என்கிறபடியே அநந்யார்ஹ ஸேஷமாக அங்கீகரித்து -“உரிய தொண்டராக்கும்‌” (திருவாய்மொழி 6-9-11) என்கிறபடியே அங்குத்தைக்கு அநந்யார்ஹ ஸேஷமாமாக்கி 

தெரிதல் நினைதல் எண்ண லாகாத் திருமாலுக்கு
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்
தெரியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே.–6-9-11-இத் திருவாய் மொழி தானே சர்வ ரக்ஷகனுக்கு அந்தரங்க பரிகரமாகும்-

மறுக்கி வல் வலைப்படுத்திக் குமைத்திட்டுக் கொன்றுண்பர்;
அறப் பொருளை அறிந்து ஓரார்; இவை என்ன உலகியற்கை!
வெறித் துளவ முடியானே! வினையேனே உனக்கு அடிமை
அறக் கொண்டாய்
இனி என்னாரமுதே!கூய் அருளாயே.–4-9-6-முன்பு விஷயாந்தர பிரவணனாய்ப் போந்த என்னை அநந்யார்ஹமாக சேஷமாக்கிக் கொண்டாய

4-நோய்கள் அறுக்கும்-உடைந்துஅதாவது–அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே-திருவாய்-9-3-3- -என்கிறபடி- அவன் சம்சார வியாதி பேஷஜமாம் போலே-இதுவும்-உடைந்து நோய்களை ஒடுவிக்கும் –திருவாய்-1-7-11- என்று சாம்சாரிக சகல துக்கங்களையும் உரு மாய்ந்து போம் படி பண்ணும் என்றும் .

நோய்களறுக்கும்‌) “நோய்களறுக்கும்‌ மருந்தே (திருவாய்மொழி-9-3-3) என்கிறபடியே ஸம்ஸார வ்யாதி பேஷஜமாய்‌–(உடைந்து) “உடைந்து நோய்களை ஓடுவிக்குமே” (திருவாய்மொழி 1-7-11) என்று ஸாம்ஸாரிகமான ஸகல துரிதங்களையும்‌ ஸவாஸநமாகப்‌ போக்கி-

அறிந்தன  வேத அரும் பொருள் நூல்கள்
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே–9-3-3-சம்சார துரித பேஷஜம் –என்னும் இவ்வளவு அறிந்தவர்கள் –சம்சார சர்ப்ப சந்தஷ்ட நஷ்ட சேஷ்டைக பேஷஜம் –அவனுடைய போக்யதையிலே இழிந்திலர்கள் -அவனுடைய நிரபேஷ உபாய பாவத்தில் இழிந்திலர்கள் 

குடைந்து வண்டுண்ணும் துழாய் முடியானை -அடைந்து தென்குருகூர்ச் சடகோபன்
மிடைந்த சொல்தொடை ஆயிரத்து இப்பத்து உடைந்து நோய்களை ஒடுவிக்குமே –-1-7-11-இப்பத்து தானே நோய்களை உடைந்தோடும் படி பண்ணும்-நோயாகிறது -ஷூ த்ர புருஷார்த்த ருசி உடைந்து ஓடுகை-ஆஸ்ரயாந்தரங்களுக்கும் ஆகாதபடி உரு அழிகை –

5-ஏற்றரும்- வானின் –அதாவது–ஏற்றரும் வைகுந்தத்தை அருளும் நமக்கு – திருவாய்-7-6-10–என்கிறபடி-
ஸ்வ யத்னத்தால் பிராபிக்க அரிதான பரம பதத்தை அவன் கொடுக்குமா போலே – இதுவும்-வானின் மீது ஏற்றி அருள் செய்து -திருவாய்-8-4-11-என்று பரமபத பிராப்தியை பண்ணுவிக்கும் என்றும்-

(ஏற்றரும்‌) “ஏற்றரும்‌ வைகுந்தத்தை அருளும்‌ நமக்கு” (திருவாய்மொழி 7-6-10) என்று ஸ்வ யத்நத்தானாலே பெற வரிதாயிருக்கிற பரம பதத்தைக்‌ கொடுத்து–வானின் மீதேற்றி அருள் செய்து” (திருவாய்மொழி 8-4-11 என்று தேஸ விஸேஷ ப்ராப்தியைப்‌ பண்ணுவித்து,

ஏற்றரு வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர்குலத்து
ஈற்றிளம் பிள்ளை ஒன்றாய்ப் புக்கு மாயங்களே இயற்றிக்
கூற்றியல் கஞ்சனைக் கொன்று ஐவர்க்காய்க் கொடுஞ்சேனை தடிந்து
ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க அரியே.-7-6-10–ஸ்வ யத்னத்தாலே பிராபிக்க ஒண்ணாத பரம பதத்தை-தன்னாலே பெற்றேன் என்று துணிந்து இருக்கிற நமக்கு அருளும் –

தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத் திருந்துலகுண்ட வம்மானை
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ் மலர்மிசைப் படைத்த மாயோனை
கோனை வண் குருகூர் சடகோபன் சொன்ன வாயிரத்துள் இப்பத்தும்
வானின் மீதேற்றி யருள் செய்து முடிக்கும் பிறவி மா மாயக் கூத்தினையே–8-4-11-அராஜகம் ஆனால் ராஜ புத்ரன் தலையிலே முடியை வைத்து பின்னை விலங்கு வெட்டி விடுமா போலே இப்பத்து தானே முந்துற பரமபதத்தை கொடுத்து பின்னை சம்சாரம் ஆகிற மஹா நாடகத்தை அறுத்துக் கொடுக்கும் –

6-தாளின் கீழ் – அடிக் கீழ்--அதாவது–-தன் தாளின் கீழ்ச் சேர்த்து அவன் செய்யும் சேமத்தை –திருவாய்-7-5-10–என்கிறபடியே அவன் பாத உபாதானம் போலே திரு அடிக் கீழ் சேர்த்து கொள்ளுமா போலே
இதுவும்-அருளி அடிக் கீழ் இருத்தும்–திருவாய்-8-8-11 -என்று அவன் திரு அடிகளின் கீழே சேர்த்து வைக்கும் என்றும் —

தாளின்‌ கீழ்‌) “தன்‌ தாளின் கீழ்ச்‌ சேர்த்து” (திருவாய்மொழி 7-5-10) என்கிறபடியே தனக்கு பாதோபதாநமாக இட்டுக் கொண்டு–(அடிக்கீழ்‌) ‘அடிக்கீழிருத்தும்‌” (திருவாய்மொழி 8-8-1॥ என்கிறபடியே அவனுக்கு பாதோபதாநமாக்கி-

வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை
பேர்த்துப் பெருந்துன்பம் வேரற நீக்கித தன் தாளின் கீழ்ச்
சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே.–
7-5-10—அதுக்கு மேலே நித்ய கைங்கர்யத்தை கொடுத்து அருளி-அவன் செய்யும் சேமத்தை -இவனுக்கு ஒன்றும் செய்யாதாரைப் போலே என் செய்வோம் என்று இருக்கும் என்னுதல்-இக்கைங்கர்யத்துக்கு நிலவரான நித்ய ஸூரிகளோடு சேர்த்து யாவதாத்மபாவி யாக்கும் என்னுதல் எண்ணித் தெளிவுற்றே.–இம் மஹா உபகாரத்தை அனுசந்தித்து -இதுவே அர்த்தம் என்று தெளிந்து வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?

தெருளும் மருளும் மாய்த்துத் தன் திருந்து செம் பொற் கழல் அடிக் கீழ்
அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால்
அருளப் பட்ட சடகோபன் ஓராயிரத்துள் இப்பத்தால்
அருளி யடிக் கீழ் இருத்தும் நம் அண்ணல் கரு மாணிக்கமே–8-8-11-இப்பத்தை அப்யசித்தவர்களை அதுவே ஹேதுவாக-நமக்கு ஸ்வாமியாய் ஸ் ப்ருஹணீயமான வடிவு அழகை யுடையவன் -தன் கேவல கிருபையால் தன் திருவடிக் கீழே சேர்த்துக் கொள்ளும் -இப்பத்தும் கற்றவர்களை ஆழ்வாருக்கு பண்ணின கிருபையை பண்ணிச் சேர்த்துக் கொள்ளும் –

7-இன்பக் கதி- பயக்கும்--அதாவது—-இன்பக் கதி செய்யும் தெளிவுற்ற கண்ணனை -திருவாய் -7-5-11-என்றபடி- அவன் தன்னோடு அன்வயித்தார்க்கு தன்னுடைய அனுபவம் ஆகிற நிரதிசய ஆனந்த யுக்தமான பிராப்யத்தை கொடுக்குமா போலே –இதுவும் –-எங்கனே சொல்லிலும் இன்பம் பயக்கும்-திருவாய் -7-9-11-என்று ஸ்வ அன்வித சேதனருக்கு பகவத் அனுபவ ஆனந்தத்தை உண்டாகும் என்றும் 

( இன்பக் கதி) “இன்பக் கதி செய்யும்‌‘ (திருவாய்மொழி 7-5-11 என்று நிரதஸயாநந்தி யாக்கி-(பயக்கும்‌) “எங்ஙனே சொல்லிலும்‌ இன்பம்‌ பயக்குமே” (திருவாய்மொழி 7-9-1॥ என்கிறபடியே இவனுக்கு ஆநந்தத்தை உண்டாக்கி-

தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக்கதி செய்யும்
தெளிவுற்ற கண்ணனைத் தென் குரு கூர்ச்சட கோபன் சொல்
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்
தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே.–7-5-11-ப்ராப்ய ப்ராபகங்கள் அவனே என்று அத்யவசித்து -பின்னை யுக்தி ஆபாச வசனங்களால் அதுக்கு குஅநந்ய பிரயோஜனராய் நிலை நின்றவர்கள் என்னுதல் – இன்பக்கதி செய்யும்-ஸூ கரூபமான ப்ராப்யத்தைக் கொடுக்கும் –ஏஷ ஹ்யேவ ஆனந்தாதி –

இங்கும் அங்கும் திரு மால் அன்றி இன்மை கண்டு
அங்ஙனே வண் குரு கூர்ச் சட கோபன்
இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இப்பத்து
எங்ஙனே சொல்லிலும் இன்பம் பயக்குமே.–7-9-11--இப்பாவ வ்ருத்தியோடே சொன்ன இப்பத்தும் – சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும்-என்று மநோ வாக் காயங்கள் மூன்றும் பாஹ்ய விஷயங்களில் தொற்று அற்று உத்தேச விஷயத்திலே மூன்றும் இறே இவர்க்கு இருப்பது -இப்பாசுரமே அமையும் இது அப்யசித்தவர்களுக்கு -அவர்களை பார்த்து அன்று இறே ஈஸ்வரன் அங்கீ கரிப்பது -இவர் பாசுரம் என்று இவரை பார்த்து இறே-எங்ஙனே சொல்லிலும் -அஹ்ருதயமாகவுமாம்–சஹ்ருதயமாகவுமாம் -பழத்தில் வ்யபிசரியாது என்கை-இன்பம் பயக்குமே.–ஆனந்தத்தை உண்டாக்கும் -ஏஷ ஹ்யேவா நந்தயாதி -என்கிறபடியே நிரவதிகமான ஆனந்தத்தை விளைக்கும் –

8-ஊடு புக்கு -மூஉலகும்- உருகா நிற்பர்-அதாவது–ஊடு புக்கு எனது ஆவியை உருக்கி உண்டிடுகின்ற நின் தன்னை–திருவாய் -5-10-10—என்கிறபடி–அவன் தன்னை அனுபவிக்க இழிந்தாரை த்ரவ த்ரவ்யமாம்படி வுருக்குமா போலே –-இதுவும் –-ஒன்பதோடு ஒன்றுக்கு மூ உலகும் உருகும்–திருவாய்-9-5-11- -என்றும்-ஊற்றின் கண் நுண் மணல் போல் உருகா நிற்பர் நீராய்-திருவாய்- -6-8-11–என்று
சொல்லுகிறபடி -தன்னை அனுபவிக்க இழிந்தாரை த்ரவ த்ரவ்யமாக்கும் என்றும் —

(ஊடு புக்கு) “எடுபுக்கெனதாவியை உருக்கி உண்டிடுகின்ற (திருவாய்மொழி 5-10-10) என்று தன்னுடைய போக்‌யதாதிஸயத்தாலே சேதநனை த்‌ரவ த்‌ரவ்யமாம்படி உருக்குமாபோலே திருவாய்மொழியும்‌-(மூவுலகும்‌ உருகா நிற்பர்‌) ஒன்பதோடொன்றுக்கும்‌ மூவுலகும்‌ உருகுமே” (திருவாய்மொழி 9-5-11 என்றும்‌ ஊற்றின் கண்‌ நுண் மணல்‌ போல்‌ உருகா நிற்பர்‌”  (திருவாய்மொழி 6-8-11 என்றும்‌ சொல்லுகிறபடியே தன்னுடைய போக்யதையாலே சேதநரைத் த்‌ரவ த்‌ரவ்யமாக்கி-

கூடி நீரைக் கடைந்தவாறும் அமுதம் தேவர் உண்ண அசுரரை
வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும்
ஊடு புக்கென தாவியை உருக்கி உண்டிடுகின்ற நின் தனை
நாடும் வண்ணம் சொல்லாய் நச்சு நாகணையானே!–5-10-10-தோல் புரையே போகாதே மர்மத்திலே புக்கு -அச்சேத்யயோயம் அயமதாஹ்யோயம் என்கிற ஆத்மவஸ்துவை -த்ரவ்ய த்ரவ்யமாக்கி முடித்து விடாதே ஒழிகிற யுன்னை -புருஷோத்தமன் இப்படி செய்வதே என்கிற குண பிரசங்கத்தில் சிதிலன் ஆகா நின்றேன்

இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைத்த பல் ஊழிக்குத்
தன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த மாயனைத்
தென் குருகூர் சடகோபன் சொல் ஆயிரத்துள் இவை
ஒன்பதோடு ஒன்றுக்கும் மூ வுலகும் உருகுமே-9-5-11-ஒன்பது பாட்டிலும் உண்டான வியஸனம் ஸூகம் என்னலாம் படி வியஸனம் மிக்கு இருந்த பத்தாம் பாட்டு -இவற்றை யுடைய இத்திருவாய் மொழி
-ஸ்மாரக பதார்த்தங்களாலே ஜீவனத்தில் நசையோடே நோவு பட்ட ஒன்பது பாட்டோடு ஜீவனத்தில் நசை அற்ற ஒரு பாட்டுக்கும் விசேஷஞ்ஞரோடு அவிசேஷஞ்ஞரோடு வாசி இன்றிக்கே சிதிலராவார் –
கீழே நம் ஆர்த்த த்வனி கேட்டு நாட்டுக்கு நோவு பட வேண்டா -என்றார் -பின்னையும் நாட்டுக்கு ஸைதில்யமே சேஷித்து விட்டது –

மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மதுசூதபிரான் அடிமேல்
நாற்றங்கொள் பூம்பொழில் சூழ் குருகூர்ச்சட கோபன்சொன்ன
தோற்றங்க ளாயிரத்துள் இவையும்ஒரு பத்தும்வல்லார்
ஊற்றின்கண் நுண்மணல்போல் உருகாநிற்பர் நீராயே.–6-8-11-ஊற்று வாயில் சிறு மணல் போலே நீராய் சிதிலர் ஆவார் -நம் தசையை வாய் விட்டு நாட்டை அழித்தோம் ஆகாதே என்கிறார் -இத்தை பலமாகச் சொல்லிற்று -பகவத் பிரவணரைக் கண்டு ஈடுபடுகை நாட்டார்க்கு ப்ராப்யம் என்கைக்காக

என்னும் சாம்யத்யாலே வாச்யன் பத்தினாய தோற்றம் போலே தோற்றங்கள் ஆயிரத்தின் பத்துப் பத்தான இதின் ஆவிர்பாவம் — அதாவது—இப்படி அவனோடு சாம்யம் உடைத்தாகையாலே
வாச்யனான -சர்வேஸ்வரனுடைய – பத்தினாய தோற்றம் -திருச்சந்த-79-என்கிற பத்து அவதாரம் போலே – தோற்றங்கள் ஆயிரம் -திருவாய்-6-8-11-என்கிற இதனுடைய பத்து பத்தான ஆவிர்பாவம் என்கை .-இத்தால் வாச்யனான ஈச்வரனோடு பலபடியாலும் சாம்யத்தை உடைத்தது ஆகையாலே
அவன் தான் லோக ரஷண அர்த்தமாக பத்து அவதாரமாய் அவதரித்தது போலே இதுவும் லோக ரஷண அர்த்தமாக பத்துப் பத்தாக அவதரித்தது என்றது ஆய்த்து-

இப்படி ஸர்வேஸ்வரனோடு ஸாம்யத்தை உடைத்தாகையாலே (வாஸ்யன்‌ பத்தினாய தோற்றம் போலே ) தனக்கு வாஸ்யனான ஸர்வேஸ்வரனுடைய பத்தினாய தோற்றம் திருச்சந்த -79)என்கிற பத்து அவதாரமே போலே ‘தோற்றங்களாயிரம்‌ (திருவாய்மொழி 6-8-11) என்று இத்திருவாய்மொழியின்‌ பத்துப்‌ பத்தான ஆவிர்ப்பாவமுமென்கிறார் –

பத்தினோடு பத்துமாய் ஓர் ஏழினோடு ஓர் ஒன்பதாய்
பத்து நான்கு திசைக்கண் நின்ற நாடு பெற்ற நன்மையாய்ப்
பத்தினாய தோற்றமொடு ஓர் ஆற்றல் மிக்க வாதி பால்
பத்தர் ஆமவர்க்கு அலாது முக்தி முற்றல் ஆகுமே –-79-தச ப்ராதுர்பாவத்தாலே ஆவிர்பவித்து
சம்சாரிகள் பண்ணும் பரிபவதை பொறுத்து ரஷிக்கும் பூர்வஜன் பக்கலிலே-தோற்றம் ஆவது -அதீந்த்ரியனான தன்னை சஷூர் விஷயம் ஆக்குகை

மாற்றங்கள்  ஆய்ந்து கொண்டு மதுசூதபிரான் அடிமேல்
நாற்றங்கொள் பூம்பொழில் சூழ் குருகூர்ச்சட கோபன்சொன்ன
தோற்றங்க ளாயிரத்துள் இவையும்ஒரு பத்தும்வல்லார்
ஊற்றின்கண் நுண்மணல்போல் உருகாநிற்பர் நீராயே.–6-8-11-நிதியினுடைய தோற்றம் போலே இருக்கை -ஆவிர்ப்பவித்த ஆயிரம் –


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்