ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌ -11-விஸேஷ பாதம்‌-16–பகவத்‌ கீதா ஸ்ரீமூக, ஸுத்தி விஸேஷாதி கரணம்‌ (190–194)-ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

July 27, 2026

1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 234 முடிய (48)

(1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-234 (27)

11-விஸேஷ பாத : –190–194—ஒரே அதிகரணம் -மொத்தம் –5–ஸூரணைகள்
16–பகவத்‌ கீதா ஸ்ரீமூக, ஸுத்தி விஸேஷாதி கரணம்‌ 190–195-மொத்தம் –5–ஸூரணைகள்-

ஆக ஸ்ரீ கீதையோடு திரு வாய் மொழிக்கு உண்டான சாம்யம் சொல்லிற்று கீழ் . அதில் இதுக்கு உண்டான ஆதிக்யத்தை பல ஹேதுக்களாலும் சொல்கிறது மேல் … பிரதமம் வக்த்ரு வைலஷண்யத்தால் வந்த ஏற்றம் சொல்கிறது இதில் –ஆக இதுக்குக்‌ கீழ்‌ ஸ்ரீ கீதையோ டொக்கத்‌ திருவாய்மொழிக்கு ஸாம்யம்‌ சொல்லிற்று. இனி மேல்‌ இதற்குண்டான வக்த்ரு வைலக்ஷண்யமும்‌ ப்ரபந்தோதய ஹேது வைஷம்யமும்‌ உபதேஸத்தனுடைய பல வைஷம்யமும்‌, ப்ரபந்த ப்ரதிபாத்‌ய அர்த்த வைஷம்யமும்‌ சொல்லுகிறது.

அது தத்வ உபதேசம் இது தத்வ தர்சி வசனம்-சூரணை -190-

அதாவது-அந்த ஸ்ரீ கீதை பிரபந்தம் –-தத்வம் ஜிஜ்ஞா சமா நாநாம் ஹேதுபிஸ் சர்வதோமுகை
தத்வமேகோ மஹாயோகீ ஹரிர் நாராயண பர
–பாரதம் -சாந்தி பர்வம் -347-83-என்கிறபடியே – தத்வ பூதனான சர்வேஸ்வரன் தானே உபதேசித்தது -இப் பிரபந்தம் –-தத் வித்தி ப்ரனிபாதேன பரி பிரச் நேன சேவையா உபதேஷ்யந்தி தே ஞானம் ஞானிநஸ் தத்வ தர்சின –4-34-என்று ஜ்ஞான உபதேசத்துக்கு ஆப்த தமராக அவன் தான் அருளிச் செய்த தத்வ தர்சிகளில் தலைவரான ஆழ்வார் வசனம் என்கை .-இத்தால் சொல்லிற்று ஆய்த்து ..-அஹம் க்ருதஸ்னஸ்ய ஜகத பிரபவ பிரளயஸ் ததா
மத்த பரதரம் நாந்யத் கிஞ்சி தஸ்தி தனஞ்சய
–7-6-என்றும்–மா மேகம் சரணம் வ்ரஜ –18-66-என்றும்
இப்படி ஸ்வ வைபவத்தை ஸ்யமேவ அருளிச் செய்கையாலே ஸ்வ பிரசமசை போலே இருக்கையாலே -அது மந்த மதிகளுக்கு விஸ்வசநீயம் ஆகாது

(அது தத்வோபதேஸம்‌) அந்த ஸ்ரீகீதை பரதத்த்வ பூதனான க்ருஷ்ணன்‌ தானே உபதேஸித்தது.  இந்த ப்ரபந்தம்‌ (தத்த்வ தர்ஸி வசநம்‌) “தத்‌ வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஸ்நேந ஸேவயா உபதேஷயந்தி தே ஜ்ஞாநம்‌ ஜ்ஞாநிந: தத்த்வ தர்ஸிந:” (கீதை 4-34) என்று இது அவனும்‌ ஆப்த தமனாக அருளிச் செய்த தத்வ தர்ஸிகளான இவருடைய வார்த்தை. “அஹம்‌ க்ருத்ஸ்நஸ்ய ஐகத: ப்ரபவ: ப்ரலயஸ் ததா மத்த: பர தரம்‌ நாந்யத்‌ கிஞ்சிதஸ்தி தநஞ்ஜய” (கீதை 7-6 என்று ஸ்வ வைபவத்தைத்‌ தானே அருளிச் செய்கையாலே ஸ்வ ப்ரமம்ஸை போலிருக்கையாலே மந்த மதிகளுக்கு விஸ்வஸநீயமல்ல.

தத்வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஸ்நேந ஸேவயா
உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ்தத்த்வதர்ஸிந
:–4-34-அதனை வணக்கத்தாலும், சூழ்ந்த கேள்வியாலும் தொண்டு புரிவதாலும் அறிந்து கொள்.-உண்மை காணும் ஞானிகள் உனக்கு ஞானத்தை உபதேசிப்பார்கள்.

ஏதத்யோநீநி பூதாநி ஸர்வாணீத்யுபதாரய
அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜகத: ப்ரபவ: ப்ரலயஸ்ததா
–7-6–எல்லா உயிர்களுக்கும் அது காரண மென்றுணர். அதனால், நான் உலக முழுமைக்கும் ஆக்கமும் அழிவுமாவேன்.–மத்த: பரதரம் நாந்யத்கிஞ்சிதஸ்தி தநஞ்ஜய மயி ஸர்வமிதம் ப்ரோதம் ஸூத்ரே மணிகணா இவ–7-7-தனஞ்ஜயா, என்னைக் காட்டிலும் உயர்ந்த பொருள் வேறெதுவுமில்லை.-நூலில் மணிகளைப் போல் இவ்வையகமெல்லாம் என் மீது கோக்கப்பட்டது.

ஸர்வதர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ
அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸுச:–18-66-எல்லா அறங்களையும் விட்டு விட்டு என்னையே சரண் புகு. எல்லாப் பாவங்களினின்றும் நான் உன்னை விடுவிக்கிறேன். துயரப்படாதே.

சுத்த சத்வ ஜ்ஞானரான இவர்-மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம் கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே -2-2-1-என்றும் – கறுத்த மனம் ஒன்றும் வேண்டா -கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை -5-2-7–என்றும் – கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் திண்ணமா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்மினோ -9-1-10–என்று இப்படி மத்யஸ்தமாக நின்று தத் வைபவத்தை உபதேசிக்கையாலே , இது மந்த மதிகளுக்கும் விஸ்வ நீயமாய் இருக்கும் என்கிற ஆதிக்யம்

பொலிந்து நின்ற பிரான்‌ கண்டீர்‌ ஒன்றும்‌ பொய்யில்லை போற்றுமினே” (திருவாய்மொழி 4-10-5) என்று மத்‌யஸ்த்தரான இவர்‌ அருளிச்‌ செய்த இது ஆப்த வாக்யமாகையாலே விஸ்வஸநீயம்‌. ஆகை யிறே அவன் தான்‌ தத்த்வதர்ஸிகளை ப்ரஸம்ஸித்து அவர்களுபதேஸிக்குமதுவே ஜ்ஞாநம் என்கிறது –

திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்
கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே –
2-2-1-பூம் அந்தரிஷாதிகளை பிரிகதிர் படாமே தரம் பாராதே ஒரு காலே திரு வயிற்றிலே வைத்து ரஷித்த-நம்-கண்ணன்–என்று –க்ருஷ்ண ஏவ ஹி லோகா நாம் உத்பத்திரபிசாப்ய -க்ருஷ்ண ஸ்யஹிக்ரு தேபூத மிதம் விஸ்வம் சராசரம் -என்கிற பிராமண ப்ரஸித்தியைச் சொல்லுகிறது-நம் -என்று அத்தை நமக்கு பிரகாசிப்பித்தவன் கண் –-த்ருஷ்ட்டி -நிர்வாஹகன் –-களை கண் –என்று நிர்வாஹகரை சொல்லக் கடவது இறே அல்லது இல்லையோர் கண்ணே- வேறு ஒரு த்ருஷ்ட்டி இல்லை -அர்த்தம் இன்றிக்கே -பீலிக் கண் -மாலைக் கண் -என்னுமா போலே-யுக்தி மாத்ரமாக இருப்பது ஓன்று இல்லை கண்ணன் கண் –என்றது அன்வயத்தாலே
அல்லது இல்லையோர் கண் – என்றது வியதி ரேகத்தாலே-இல்லையோர் கண் -இது திண்ணம்

இலிங்கத் திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்று நும் தெய்வமுமாகி நின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக் குருகூர் அதனுள்
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே.–4-10-5-பரம பதத்தை விட்டு இவ்வருகே தாழ நிற்க நிற்க குணங்கள் மேன்மேல் என விஞ்சி வருகிற படி-சொன்னார் சொன்ன யுக்திகள் எல்லா வற்றுக்கும் அவ்வருகாய் நிற்கை என்னவுமாம்-கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே.– இத் தேவதைகள் பக்கல் உதகர்ஷம் எல்லாம் பொய்யாய் இருக்குமா போலே -இவ்விஷயத்தில் சொல்லுகிற உதகர்ஷத்துக்கு ஒன்றும் பொய்யில்லை-போற்றுமினே -சடக்கென ஆஸ்ரயிங்கோள் -நீங்கள் அபேக்ஷியாது இருக்க நான் சொல்லுகிறது உங்கள் துர்தசையைப் பற்ற –

நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்
மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்பதெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே.–
5-2-7-இதர தேவதைகள் பக்கல் பரத்வ புத்தி யாகிற தண்ணிய நெஞ்சு ஒன்றும் உங்களுக்கு வேண்டா –அஜ்ஜஞஸ் சாஸ்திரச்சா நச்சா சம்சயாத்மா
கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை-சர்வ தேவா தேவகீபுத்ர ஏவ -என்கிறபடியே கிருஷ்ணனை ஒழிய ஆஸ்ரயணீயர் இல்லை – அவனுக்கு பிரகார பூதராய் கொண்டு உளராம் அத்தனை அல்லாத தேவதைகள் –யோயோ யாம் யாம் தனும் பக்தஇறுப்பதெல்லாம் –-தேவதா ஆராதனம் -என்று தோற்றுகிற நித்ய நைமித்திக கர்மம் எல்லாம்-அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே.–- இவர்கள் அவனுக்கு சரீர பூதர் ஆனவர்கள் -அந்தராத்மா சர்வேஸ்வரன் -என்று புத்தி பண்ணி தத் சமாராதன புத்தயா பண்ணுங்கோள் -தன் திருவடிகளை பிடித்தார்க்கு தானே பலம் கொடுக்கக் கடவனாய் இருக்கும் இறே அவன் –

கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து
மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்
திண்ண மா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்ம்மினோ

எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லையே–9-1-10-கிருஷ்ணனை ஒழிய வேறு சரணம் ஆவார் இல்லை என்னும் இவ்வர்த்தத்தை ஸ்தாபிக்கைக்காகவும் -அதுக்கு உறுப்பாக பூ பாரத்தை போக்கி அருளுகைக்கும் ஸ்ரீ மதுரையிலே வந்து திருவவதாரம் பண்ணினான் -உங்களுடைய ஆத்மாத்மீயங்கள் எல்லாம் சேஷியாயும் ஸூலபனானாயும் உள்ள அவன் திருவடிகளிலே சேஷத்வேன த்ருடமாக சமர்ப்பியுங்கோள் – உண்டேல்-என்கிறது ஸ்வ பஷத்தால் இல்லை -அவர்களுடைய அந்யதா பிரதிபத்தியாலே வந்தன உண்டாகில் என்கை –எண்ண வேண்டா-அவனது நம்மதோ என்று விசாரிக்க வேண்டா –உங்களோடு உங்கள் உடைமையோடு வாசி யற அவனுக்கே சேஷம்-அதாவா-உங்களுக்கு சாத்யமானவை எல்லாம் சாதித்து தருவான் அவன் ஒழிய வேறு இல்லை –சமிதை பாதி சாவித்ரி பாதி யாய் உங்கள் தலையிலும் சிறிது கிடக்கிறது அன்று -அவனே நிரபேஷ உபாயம் -என்றுமாம் –

பிரபந்த உதய ஹேது வைலஷண்யத்தால் வந்த ஆதிக்யம் சொல்கிறது மேல் —

அது ஐவரை வெல்வித்துப்‌ பதிற்றைந்திரட்டி படச் சொன்னது; இது நாடாகத்‌ தோற்றோமென்று ஐயைந்து முடிப்பான்‌ சொன்னது.-சூரணை-191-

அதாவது ..அந்த பிரபந்தம்–அன்று ஐவரை வெல்வித்த–திருவாய் -4-6-1-என்கிறபடியே –
த்ரௌபத்யா சகிதாஸ் சர்வே நமஸ் சக்ருர் ஜனார்த்தனம் –பாரதம் ஆரண்ய –192-56- -என்று ராஜ்ய ஆ காங்க்ஷிகளாய் சரணம் புக்கு நிற்கிற பாண்டவர்களையும் – ந காங்க்ஷே விஷயம் க்ருஷ்ணே -ஸ்ரீ கீதை -1–32 – என்ற அர்ஜுனனை –கரிஷ்யே வசனம் தவ–ஸ்ரீ கீதை -18-73- -என்னப் பண்ணி யுத்தத்திலே மூட்டி -விஜயீகளாக்கி- பதிற்றைந்திரட்டி படை வேந்தர் பட -பெரிய திருமொழி -2-4-4-என்கிறபடியே -அவர்களுக்கு பிரதி பஷ பூதரான துர்யோனாதிகள் நூற்றுவரையும் முடிக்கைக்காக சொன்னது-

அது ஐவரை வெல்வித்துப்‌ பதித்தைந்திரட்டி படச்‌ சொன்னது) அந்த ஸ்ரீ கீதை “த்‌ரெளபத்யாஸ்‌ ஸஹிதாஸ் ஸர்வே நமஸ் சக்ருர்‌ ஜநார்த்த நம்‌” (பார.ஆர. 192-56) என்று ராஜ்யகாங்க்ஷிகளாய்‌ வந்து ஸரணம்‌ புகுந்த பாண்டவர்களைவரையும்‌ “அன்றைவரை வெல்வித்த” (திருவாய்மொழி 4-6-1) என்கிறபடியே “ந காங்க்ஷே விஜயம்‌ க்ருஷ்ண” (8. தை 1-32) என்ற இவனை” ஸ்திதோஸ்மி‘ ‘ (கீதை 18-73) என்னப்‌ பண்ணி யுத்தத்திலே விஜயிகளாக்கி, “பதிற்றைந் திரட்டிப்‌ படை வேந்தர் பட (பெரியதிருமொழி 2-4-4) என்று அவர்களுக்கு விரோதிகளான துர்யோதநாதிகளை முடிக்கைக்காகச்‌ சொன்னது.-

தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்!
ஓர்ப்பால் இவ் வொண்ணுதல் உற்ற நல் நோய் இது தேறினோம்;
போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த்
தேர்ப் பாகனார்க்கு
இவள் சிந்தை துழாஅய்த் திசைக்கின்றதே.–4-6-1—ந காங்ஷே விஜயம் கிருஷ்ண -என்று இவர்கள் தாங்களும் யுத்தத்துக்கு ஆளாகாத படியான நூற்றுவர் எதிரிகளாக ஐவரான பாண்டவர்கள் வெல்லும் படி பண்ணினான்-அப்பஷத்துலே யாயிற்று இவள் ஈடுபட்டது
துர்யோத நாதிகளை தோற்பிக்கிலும் இவளை தோற்ப்பிக்கை அரிதுmஅவர்களை ஸ்வாதந்த்ர அபிமானத்தாலே தோற்பிக்க ஒண்ணாது -இவளை ஸ்த்ரீத்வத்வ அபிமானத்தாலே தோற்ப்பிக்க ஒண்ணாது

ந காங்÷க்ஷ விஜயம் க்ருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகாநி ச
கிம் நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகைர்ஜீவிதேந வா-
-1-32–கண்ணா, நான் வெற்றியை விரும்புகிலேன்; ராஜ்யத்தையும் இன்பங்களையும் வேண்டுகிலேன். கோவிந்தா. நமக்கு ராஜ்யத்தால் ஆவதென்? இன்பங்களால் ஆவதென்? உயிர் வாழ்க்கையாலேனுமாவ தென்னே?

நஷ்டோ மோஹ: ஸ்ம்ருதிர்லப்தா த்வத்ப்ரஸாதாந்மயாச்யுத
ஸ்திதோऽஸ்மி கதஸந்தேஹ: கரிஷ்யே வசநம் தவ
–18-73–மயக்க மழிந்தது நின்னருளாலே, அச்சுதா, நான் நினைவு அடைந்தேன்; ஐயம் விலகி நிற்கிறேன்; நீ செய்யச் சொல்வது செய்வேன்.

தாங்காத தோர் ஆளரியாய் அவுணன் தனை வீட முனிந்தவனால் அமரும்
பூம் கோதையர் பொங்கெரி மூழ்க விளைத்தது வன்றியும் வென்றி கொள் வாளமரில்
பாங்காக முனைவரொடு அன்பளவிப் பதிற்றைந்தி ரட்டிப்படை வேந்தர் பட
நீங்காச் செருவில் நிறை காத்தவனுக்குகிடம்
மா மலையாவது நீர் மலையே–2-4-4-அற்றைக்கு நூறு ராஜாக்களை வெற்றி கொண்டு அல்லது மீளாத பூசலிலே த்ரௌபதி உடைய ஸ்த்ரீத்வத்தை பரிஹரித்தவனுக்கு 

இந்த பிரபந்தம் –-தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு -திருவாய் -2-1-7—என்று வகுத்த சேஷி பக்கலிலே எல்லோரும் அபஹ்ருத சித்தராய் போம்படியாக –-முடிப்பான் சொன்ன ஆயிரம் –திருவாய் -8-7-11–என்கிற படியே அதுக்கு விரோதியாய் இருந்துள்ள – பொங்கு ஐம்புலனும் பொறி ஐந்தும் –திருவாய் -10-7 10–இத்யாதியால் சொன்ன சதுர் விம்சதி தத்வாத் மகமான அசித்திலும் –
ஞான ஆனந்த லஷணமாய் கொண்டு ஸ்வ போக்யதையாலே தன் பக்கலிலே கால் தாழ்த்தப் பண்ணும் ஆத்மாவிலும் உண்டான சங்கத்தை முடிப்பதாக சொன்னது என்கை-இத்தால் மோஷ சாஸ்திரமே ஆகிலும் உதிக்கிற போது அன்யார்த்தமாக உதித்த குறை உண்டு அதுக்கு –மோஷார்தமாகவே உதித்த ஏற்றம் உண்டு இதுக்கு என்றது ஆய்த்து ..

(இது நாடாகத்‌ தோற்றோம்‌ என்று ஐயைந்து முடிப்பான்‌ சொன்னது) இந்த ப்ரபந்த,ம்‌ “தோற்றோம்‌ மடநெஞ்சம்‌ எம்பெருமான்‌ நாரணற்கு” (திருவாய்மொழி 2-1-7) என்று வகுத்த ஸேஷியானவன்‌ பக்கலிலே ஸர்வரும்‌ தோற்றோம்‌ என்று அநந்யார்ஹ ஸேஷ பூதராம்படி ஐயைந்தையும்‌ முடிப்பான்‌ சொன்னது. அந்த ஸேஷத்வ விரோதியான ப்ரக்ருதி ப்ராக்ருத ஸங்கத்தையும்‌ ஆத்மாவினுடைய ஸ்வாதந்த்ர்யத்தையும்‌ அறுத்து ஸம்ஸார பந்தத்தையும்‌ முடிப்பான்‌ சொன்னது ஆகையாலே அது பந்த மோக்ஷங்கள்‌ இரண்டுக்கும்‌ ஹேது. இது மோக்ஷ ஏக ஹேதுவாயிருக்கும்‌ என்கிறார் –

தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
வேற்றோர் வகையில் கொடியதாய் எனையூழி
மாற்றாண்மை நிற்றியே வாழி கனையிருளே –2-1-7—பற்றிற்று விடாத சபலமான நெஞ்சு -என்னுதல்
பவ்யமான நெஞ்சு என்னுதல்-எம்பெருமான்–அப்ராப்த விஷயத்துக்கு தோற்றோமோ – நாரணற்கு- அல்லோம் என்றாரையும் விட மாட்டாத வத்சலனுக்கு – ஸூ லபனுக்கு என்னவுமாம் ப்ராப்த விஷயத்தில் வாத்சல்யாதிகளால் இழந்தோம் என்கை –

சுடர்ப் பாம்பணை நம் பரனைத் திருமாலை
அடிச்சேர் வகை வண் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன வாயிரத்து இப்பத்தும் சன்மம்
விட தேய்ந்தற நோக்கும்
தன் கண்கள் சிவந்தே–8-7-11-சம்சார சம்பந்தத்தை அறுக்க அருளிச் செய்த ஆயிரத்திலும் இப்பத்து –அடிச்சேர்வகை –முடிப்பான் –-என்றுமாம் –

மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே
–10-7-10–சேதனனை விக்ருதனாம் படி பண்ணும் சப் தாதி விஷயங்கள் ஐந்தும் –பொறி ஐந்தும் -வறை நாற்றத்தைக் காட்டி அகப்படுத்துமா போலே சப் தாதிகளிலே மூட்டுகிற ஸ்ரோத்ராதிகள் ஐந்தும் –கருமேந்த்ரியம் -கர்ம இந்திரியங்கள் ஐந்தும் —ஐம் பூதம்--பிருதிவ்யாதி பூதங்கள் ஐந்தும் — இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே-– -இஸ் சம்சாரத்திலே இருக்கிற -இவ்வாத்மாவைத் தொற்றி இருக்கிற மூல பிரகிருதி என்ன -மஹான் அஹங்கார மனஸ் ஸூ க்கள் என்ன –இவை யாகிற உன்னுடைய மஹா மாயையை மங்க வொட்டு என்று அந்வயம் –

உபக்கிரம உப சம்கார பிரகிரியையால் வந்த வைபவம் சொல்கிறது இதில்

அங்கு நம்பி சரண் என்று தொடங்கி முடிவில் அப்ரியம் என்றது .. இங்கு பரமே என்று இழிந்து பொலிக என்று உகந்தது–சூரணை -192-

அதாவது-அந்த பிரபந்த்ததில் உபதேசம் தொடங்குகிற போது –-நாந்தகம் ஏந்திய நம்பி சரண் என்று தாழ்ந்த தனஞ்சயற்காகி–பெரிய திருமொழி –1-9-4-என்கிறபடியே , சிஷ்யஸ் தேஹம் சாதி மாம் த்வாம் பிரபன்னம்–ஸ்ரீ கீதை –2-7-என்று அர்ஜுனனுடைய அனுவர்தனம் கண்டு – ப்ரீதி யோடே உபக்ரமித்து —
நூனமச்ரத் ததாநோசி துர்மே தாச்சாசி பாண்டவ அபுத்த்யா அன்ன ஜாநீஷே தன்மே ஸூமஹத் அப்ரியம் –ஸ்ரீ அநு கீதை – (அர்ஜுனா நிச்சயம் சிரத்தை இல்லாதவனாய் இருக்கிறாய்-கெட்ட புத்தியையும் யுடையவனாய் இருக்கிறாய் – இக்காரணத்தால் அறிவின்மையால் அறியவில்லையோ அது எனக்குப் பெரிதும் விருப்பம் இல்லாதது ஆகும் )- என்று அவன் பக்கல் அனவதானம் காண்கையாலே அப்ரியத்தோடே தலைக் கட்டிற்று —

அதினுடைய உபக்ரமத்திலே “நாந்தகமேந்திய நம்பி சரண்‌ என்று தாழ்ந்த தனஞ்சயற்காகி’ (பெரியாழ்வார்‌ திருமொழி 1-9-4) என்று ‘ ஸிஷ்யஸ்தேஹம்‌ ஸமாதி, மாம்‌ த்வாம்‌ ப்ரபந்நம்‌” (கீதை 2-7) என்று ஸிஷ்யனான அர்ஜுநனுடைய அநுவர்த்தந பூர்வகமாகையாலே ப்ரீதியோடே உபக்ரமித்து, “நூநமஸ்ரத்‌ததா நோஸி துர்மேதஸ்சாஸி பாண்டவ அபுதத்‌யா யந்ந ஜாநீஷே தந்மே ஸுமஹத ப்ரியம்‌” (அனுகீதை) என்று அவன்‌ பக்கலிலே அவிஸ்வாஸத்தைக்‌ காண்கையினாலே அப்ரீதியோடே தலைக் கட்டிற்று.

நாந்தகம் ஏந்திய நம்பி சரண் என்று
தாழ்ந்த தனஞ்சயருக்காகி தரணியில்
வேந்தர்கள் உட்க விசயன் மணித் திண் தேர்

ஊர்ந்தவன் என்னை புறம் புல்குவான் உம்பர்கோன் என்னைப் புறம் புல்குவான் -1-9 4-நாந்தகம் என்னும் பேரை உடைத்தான -திருக்குற்றுடை வாளை- ஆஸ்ரித ரஷணத்தில் விளம்ப அசஹதையாலே -சர்வ காலமும் பூ ஏந்தினால் போல் – திருக் கையில் தரித்து கொண்டு –ரஷிக்கைக்கு ஈடான குணங்களால் -பூர்ணனாய் இருக்கிற நீ ரஷகனாக வேணும் என்று –பிரபதனம் செய்த அர்ஜுன பஷ பாதியாய்-பூமியில் உள்ள ராஜாக்கள் எல்லாரும் அர்ஜுனன் அளவில் பஷ பாதத்தையும்
தேரை நடத்துகிற சாமர்த்தியத்தையும் கண்டு – நாம்  இனி ஜீவிக்கை எனபது ஓன்று உண்டோ –
என்று நெஞ்சு உளுக்கும்படியாக

கார்பண்யதோ÷ஷாபஹதஸ்வபாவ:
ப்ருச்சாமி த்வாம் தர்மஸம்மூடசேதா:
யச்ச்ரேய: ஸ்யாந்நிஸ்சிதம் ப்ரூஹி தந்மே
ஸிஷ்யஸ்தேஹம் ஸாதி மாம் த்வாம் ப்ரபந்நம்
–2-7-சிறுமையாகிய குறையால் இயல்பு அழிந்தவனாய், அறம் இன்னது என்றுணராமல் மயங்கிய அறிவுடன், யான் உன்னைக் கேட்கிறேன். எது நன்றென்பதை எனக்கு நிச்சயப்படுத்திக் சொல்லுக. நான் உன் சீடன். உன்னையே சரணமெனப் புகுந்தேன். கட்டளை தருக.

இப் பிர பந்தத்தில் விமுகரைக் குறித்து கிருபையாலே உபதேசிக்கையாலே –-உபதேச உபக்ரமத்தில்
ஏ பாவம் பரமே ஏழுலகும் ஈ பாவம் செய்து அருளால் அளிப்பார் ஆர் –திருவாய் -2-2-3- -என்று
அப்ரிதியோடே உபக்ரமித்து -அவ் உபதேசம் கேட்டு ஜகத்தாக திருந்துகையாலே -இப்படி திருந்தினவர்களைக் கண்டு –-பொலிக பொலிக பொலிக –திருவாய் -5-2-1- -என்று
மங்களாசாசனம் பண்ணி –-உகந்து பணி செய்தேன்–திருவாய் -10-8-10- -என்னும் படி ப்ரீதியோடே தலைக் கட்டிற்று என்கை .

(இங்கு பரமே என்றிழிந்து பொலிக என்றுகந்தது) இவருபதேஸிக்கிற விடத்தில்‌ தாந்தராய்‌ ஸமித் பாணிகளாய்க்‌ கொண்டு அநுவர்த்திப்பாரின்றிக்கே விமுகரா யிருக்க க்ருபையாலே உபதேஸிக்கையாலே உபதேஸோபக்ரமத்திலே “ஏபாவம்‌ பரமே” (திருவாய்மொழி 2-2-1) என்று அப்ரீதியோடே உபக்ரமித்து, அவ்வுபதேஸம்‌ கேட்டு ஜகத்தாகத்‌ திருந்துகையாலே அப்படித்‌ திருந்தினவர்களைக்‌ கண்டு “பொலிக பொலிக” (திருவாய்மொழி 5-2-1) என்று மங்களாஸாஸநம்‌ பண்ணி உகப்போடே தலைக்‌ கட்டிற்று

ஏ பாவம் பரமே யேழு லகும்
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பாரார்

மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்
கோபால கோளரி யேறன்றியே –2-2-2—இவனுடைய பரத்வம் சாத்யமாய் -சாதிக்க வேண்டுவதே -என்ன பாபமோ என்கிறார் –ஏ என்றது ஓ என்றபடி -விஷயத்தை அதிசய ஸூ சகம் –-பரமே-ஞானம் பிறந்தால் குண அனுபவம் பண்ணுகை அன்றிக்கே-சிலருடைய விப்ரதிபத்தியை பரிஹரிக்கை பரமாவதே சகல சேதனருடைய பாபங்களையும் தன் கிருபையால் போக்கி ரக்ஷிப்பார் யார் –

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை

கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.–5-2-1-சம்ருத்தம் யாயிற்று -முக்கால் அருளிச் செய்கிறது -வைதிகமான மங்களா சாசனமும் -சாந்தி சாந்தி சாந்தி -என்று முக்கால் சொல்லுகையாலே
போயிற்று வல்லுயிர்ச் சாபம்--உயிரினுடைய வலிய பாபமானது போயிற்று –பாபம் ஆகிறது -அவித்யா கர்மா வாசனா ருசிகள் –இத்தை சாபம் என்கிறது அனுபவித்தால் அல்லது போகாமையாலும் -ஆகந்துகம் ஆகையாலும்-நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை-கர்மம் போகையால் கர்ம அநு குணமாக அனுபவிப்பிக்கும் நரகமும் கோப்புக் குலைந்து கட்டு அழிந்து போயிற்று –சிறை கிடப்பார் இல்லாமையால் சிறைக் கூடம் பேணா வேண்டா விறே – கர்மமும் கர்ம அனுபவ ஸ்தானமும் போகையாலே-அதுக்கு நிர்வாஹகானான யமனுக்கு இந்த சம்சாரத்தில் சாத்தியம் ஒன்றும் இல்லாத படி யாயிற்று –நமன் தமரால் ஆராய பட்டு அறியார் -ஸ்வ புருஷ மபிவீஷ்ய பாச ஹஸ்தம் –அவன் முக்த ப்ராப்ய பூமியிலே ஆராயில் ஆராயும் இத்தனை -இங்கு ஓர் அவகாசமும் இல்லை என்கை-அபாபனான தர்ம புத்திரனுக்கு ஒரு பாப லேசத்தாலே நன்றாக தர்சனம் பண்ண வேண்டிற்று இ றே -அதுவும் இல்லை இறே இவர்களுக்கு –-கலியுங் கெடும் கண்டு கொண்மின் –
அதுக்கு எல்லாம் அடியான கால தோஷமும் போயிற்றே -கலிக்கு அடைத்த காலமாய் இருக்க போகை யாவது என் என்னில் –அநுபூத அர்த்தத்திலும் சம்சயம் உண்டோ 

உற்றேன் உகந்து பணி செய்ய உன பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்

கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–10-8-10—கெடு மரக்கலம் கரை சேர்ந்தால் போலே கிட்டிக் கொடு நின்றேன் -ப்ரீதி ப்ரேரிதனாயக் கொண்டு -திருவாய் மொழி பாடி -உன் திருவடிகளை அனுபவிக்கப் பெற்றேன் – –சாதகமாய் மேல் -சாத்தியமாகச் சொல்லுகிறது அன்று -இரண்டும் ஏக காலத்திலே உள்ளதாகையாலே –ஈதே இன்னம் வேண்டுவது-இது தானே மாறி மாறி யாவதாத்ம பாவியாகச் செல்லுகை இறே –பு நரா வ்ருத்தி இன்றிக்கே ஒழிகை யாவது -மீளாது ஒழிகை -விதி போலே இருக்கிறதன்றே –எந்தாய்--இவ்வனுபவம் ஸ்வரூப அனுரூபம் என்கிறது -இத்தலைக்கு சேஷத்வமும் தேவர்க்கு சேஷித்வமும் இறே ஸ்வரூபம் -இவர் அபேக்ஷித்த படியே செய்கிறோம் என்ன –ப்ரீதராய் அருளிச் செய்கிறார் –

இத்தால் அர்ஜுனன் யுத்தே பிரவ்ருதனான மாத்ரம் ஒழிய சித்த தர்ம பர்யந்தம் உபதேசித்த பலம் சித்திக்கப் பெறாமையாலே உபதேசம் ச பிரயோஜனம் ஆய்த்து இல்லை அங்கு – அது ச பிரயோஜனம் ஆய்த்தது இங்கே என்றது ஆய்த்து-

ஆகையாலே உபதேஸம்‌ ஸப்ரயோஜநமாய்த்தது இதிலே என்கிறார் 

பிரதி பாத்ய அர்த்த கௌரவத்தால் வந்த வைபவம் சொல்கிறது இதில் 

அதில் சித்த தர்ம விதி ..-இதில் விதி அனுஷ்டானங்கள் –சூரணை -193-

அதாவது- அந்த கீதையில் –-மா மேகம் சரணம் விரஜ –ஸ்ரீ கீதை –18-66–என்ற சித்த தர்மம் மாத்ரமே உள்ளது ..-இந்த பிரபந்தத்தில் –-திரு நாரணன் தாள் காலம்பெற சிந்தித்து உய்மினோ-திருவாய் -4-1-1 -என்ற விதியும் – அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேன்-6-10-10 -என்ற அனுஷ்டானமும்- இரண்டும் காணலாம் என்கை .. -இத்தால் விதி மாத்ரம் பிரதி பாதகமான அதில் விதி அனுஷ்டானங்கள் இரண்டையும் பிரதி பாதிக்கும் இதுக்கு ஏற்றம் உண்டு என்றது ஆய்த்து ..

(அதில்‌ ஸித்‌த தர்ம விதியே) அந்த ஸ்ரீகீதைக்கு தாத்பர்யார்த்தம்‌ “மாமேகம்‌ ஸரணம்‌ வ்ரஜ” (கீதை 18-66 என்று ஸித்‌த தர்மவிதாந மொன்றுமே யாய்த்து; (இதில்‌ வித்‌யநுஷ்டாநங்கள்‌) (இந்த ப்ரபந்தத்திலே “திருநாரணன் தாள்‌ காலம் பெறச்‌ சிந்தித்துய்ம்மினோ” (திருவாய்மொழி 4-1-1 என்று விதியும்‌ அடிக்கீழ்‌ அமர்ந்து புகுந்தேனே (திருவாய்மொழி 6-10-10) என்று அநுஷ்டாநமும்‌ இரண்டும்‌ காணலாம்‌. இத்தாலே இப் ப்ரபந்தம்‌ விதி ப்ரகாஸகமான மாத்ரம்‌ அன்றிக்கே அநுஷ்டாந ப்ரகாஸகமும்‌ என்கிறார் –

ஸர்வதர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ
அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸுச
:–18-66-எல்லா அறங்களையும் விட்டு விட்டு என்னையே சரண் புகு. எல்லாப் பாவங்களினின்றும் நான் உன்னை விடுவிக்கிறேன். துயரப்படாதே.

அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன் றில்லா அடியேன் உன் னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10–சாஸ்திரங்களில் சொல்லுகிற உபாயம் ஒன்றும் இல்லாத நான்அநந்ய சரண்யனான அடியேன் அநந்ய ப்ரயோஜனாயக் கொண்டு பெரிய பிராட்டியார் புருஷகாரமாக சரணம் புகுந்தேன் – இப்போதே நிரஸ்த ஸமஸ்த பிரதிபந்தயகனாய் உன் திருவடிகளில் சர்வ காலமும் சர்வ கைங்கர்யமும் அடியேன் பண்ணப் பெற வேணும் என்கிறார் –

ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ.–4-1-1-–திரு நாரணன்-இடர் கெடுத்த திருவாளன் இணை அடி–தத்ர நாராயண ஸ்ரீ மான்-ஸ்ரீயபதியை ஆஸ்ரயிங்கோள்-ஒரு மிதுனம் இறே ஆசிரயணீயமும் ப்ராப்யமும் -ஒரு மிதுனத்துக்கு இறே சேஷம் இறே இது –தாள் சேஷ பூதம் பற்றுவது திருவடிகளை இறே-சிந்தித் துய்ம்மினோ- ரக்ஷகன் என்கிற ப்ரபத்தியே அமையும் -ப்ரபத்திக்கும் இதுவே அர்த்தம் என்கிறார்-நினைவோடு வ்யாப்தமாயிற்று உஜ்ஜீவனம் இருப்பது-அனர்த்தம் எல்லாருக்கும் ஒத்து இருக்கையாலே எல்லாரையும் அபேக்ஷிக்கிறார் –

இனி அந்த ஸ்ரீ கீதை தனக்கு உத்கர்ஷமும் இவர் அங்கீகாரத்தாலே என்கிறது இதில்-

பகவன் ஞான விதி பணிவகை என்று இவர் அங்கீகாரத்தாலே அதுக்கு உத்கர்ஷம் –சூரணை -194-

அதாவது-அந்தமில் ஆதி யம் பகவன் வணக்குடை தவ நெறி வழி நின்று –திருவாய் -1-3-5–என்றும் –
ஞான விதி பிழையாமை –திருவாய் -5-2-9–என்றும் –-பண்டே பரமன் பணித்த பணி வகையே கண்டேன் கமல மலர் பாதம் –திருவாய் -10-4-9–என்றும் பரம வைதிகரான இவர் அத்தை பிரமாணமாகக் கொள்ளுகையாலே ஆய்த்து அந்த ஸ்ரீ கீதைக்கு உத்கர்ஷம் உண்டாய்த்து என்கை-

“அம் பகவன்‌ வணக்குடைத்‌ தவநெறி” (திருவாய்மொழி 1-3-5) என்றும்‌ “அச்சுதன்‌ தன்னை ஞான விதி பிழையாமே (திருவாய்மொழி 5-2-9) என்றும்‌ “பண்டே பரமன்‌ பணித்த பணி வகையே கண்டேன்‌ கமல மலர்ப்பாதம்‌” (திருவாய்மொழி 10-4-9) என்றும்‌ ப்ராமாணிகரான இவர்‌ இத்தை இப்படி ப்ரமாணமாக அங்கீ கரிக்கையாலே யாய்த்து அந்த ஸ்ரீகீதைக்கு உத்கர்ஷம் உண்டாய்த்து என்கிறார்-

பிணக்கற வறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த
கணக்கற நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புறநெறி களை கட்டு
உணக்குமின் பசையற வவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே 
–1-3-5—அந்தமில் யாதியம் பகவன்
தனக்கு முடிவு இன்றிக்கே -எல்லார்க்கும் காரண பூதனாய் இருக்கும்-ஹேய ப்ரத்ய நீகமான ஜ்ஞானாதி குண பூர்ணனாய் இருக்கை-இத்தால் -உதாரனாய் -பிராப்தனாய் -ஆப்தனாய் இருந்தவன் வார்த்தை யாகையாலே விச்வாச நீயம் என்கை –வணக்குடைத் தவ நெறி வழி நின்று –வணக்கத்தை யுடைய பக்தி மார்க்கம் ஆகிற வழியிலே நிலை நின்று -பக்தி சரீரத்திலே மாம் நமஸ் குரு என்கையாலே –வணக்குடை -என்கிறது-தபஸ் சப்தத்தாலே பக்தியைச் சொல்லிற்று –பக்தி ஜ்ஞான விசேஷம் ஆகையாலே –யஸ்ய ஜ்ஞான மயந்தப -என்கிற ந்யாயத்தாலே என்னுதல் -இவனுடைய பிரேம மாத்ரத்தையே குவாலாக நினைத்து இருக்கும் அவன் அபிப்ராயாத்தாலே யாதல்-புற நெறிகளை கட்டு
இதுக்கு விரோதியான சப்தாதி விஷயங்களில் போகிற வழி யாகிற களையைக் கடிந்து பறித்து
இத்தை நெறி என்பான் என் என்னில் இருந்ததே குடியாகப் போகிற மஹாதபம் ஆகையாலே -துர்மார்க்கம் என்னக் கடவது இறே –

மேவித் தொழுது உய்ம்மின்னீர்கள் வேதப் புனித இருக்கை
நாவிற் கொண்டு அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமே
பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழும் அடி யாரும் பகவரும் மிக்கது உலகே.–5-2-9—அஹ்ருதயமாக சொன்னதை ஹ்ருதயமாக நினைத்து -நத்யஜேயம் -என்னுமவன் -அகவாய் பாராதே யுக்தி மாத்ரத்தைக் கொண்டு நழுவ விடாதவனை-ஞான விதி பிழையாமே--வேதங்களில் பிரதிபாதிக்கிற பக்தி மார்க்கம் தப்பாமே –ஞானம் என்று ஞான விசேஷமான பக்தியைச் சொல்லுகிறது –

கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக
பண்டே பரமன் பணித்த பணி வகையே–10-4-9-கண்டேன்–என்றும் கேட்டே போம் விஷயத்தை சாஷாத் கரிக்கப் பெற்றேன் —கமல மலர்ப்பாதம் –பிராப்தி ஒழியவே ஞான லாபமே அமையும் படியான போக்ய விஷயம் என்கிறது – காண்டலுமே-விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்–கண்ட போதே வினை என்று பேர் பெற்றவை எல்லாம் விட்டுப் போய்த்து -சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்னுமவன் அடியாக வந்ததாகையாலே தட்டில்லை இ றே –தொண்டே செய்து –பர பக்தியாதிகளை யுடையவனாய்
என்றும் தொழுது வழி ஒழுக-நித்ய கைங்கர்யத்தைப் பண்ணி -அதுவே யாத்ரையாகச் செல்லும் படி–
பண்டே பரமன் பணித்த பணி வகையே–நமக்காக இன்று அன்றிக்கே சர்வாதிகன் சர்வ சாதாரணமாக அன்று அருளிச் செய்த பாசுரத்தில் படியே –மாமேகம் சரணம் வ்ரஜ –சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்று இறே பாசுரம் 

புத்த முனியாயும் -கபில முனியாயும் சொன்ன பௌத்த சாஸ்திரமும் -சாங்க்ய சாஸ்திரமும் –
அவன் தான் அருளிச் செய்ததாய் இருக்கச் செய்தே -வைதிக பரிக்ரகம் இல்லாமை இறே
அப்ரமாணம் ஆய்த்து ..-இதி மோஹன வர்ஷ்மணா த்வயாபி க்ரதிதம் பாஹ்ய மதம் த்ருணாய மந்யே –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் – (இப்படி பிறரை மயங்கச் செய்கின்ற தேவரீராலேயே செய்யப்பட வேதங்களுக்குப் புறம்பான மதங்களை புல்லுக்குச் சமமாக நினைக்கிறேன் )-என்று பகவத் யுக்தமே யாகிலும் வேத விருத்தமானது வைதிகர் அங்கீகரியார்களே ….-வேதா விரோதித்வம் பிரகாசிப்பது வைதிக பரிகிரகத்தாலே இறே .. ஆகையால் அதுக்கு உத்கர்ஷம் இவர் அங்கீகாரத்தால் என்ன குறை இல்லை 

அல்லது புத்த முநியாயும்‌ கபிலமுநியாயும்‌ சொன்ன பெளத்த ஸாஸ்த்ரமும்‌ ஸாங்க்‌ய ஸாஸ்த்ரமும்‌ அவன்‌ சொன்னது யாகிலும் அந்த ஸாஸ்த்ரங்களுக்கு ப்ராமாணிக பரிக்‌ரஹமில்லாமையாலே இறே அவை அப்ரமாணமாய்த்து-

இதி மோஹந வர்த்மநா த்வயா அபி க்ரதிதம் பாஹ்ய மதம் த்ருணாய மந்யே
அதி வைதிக வர்ம வர்மிதாநாம் மனிதாஹே குத்ருஸாம் கிம் ஈஸ வர்த்ம
–-2-16-நீயே பாஹ்ய குத்ருஷ்டிகளை உண்டாக்கினாயே ஆகிலும் உள்ளத்தாலும் நினையேன் –கள்ள வேடத்தைக் கொண்டு போய் -என்றபடி -மோஹ விக்ரஹத்தை கொண்டு – தேவரால் -நிர்ணயிக்கப் பட்ட புத்த மதத்தை த்ருணமாக எண்ணுகிறேன்-இப்படி இருக்க வைதிகத்வ வேஷ தாரிகளான குத்ருஷ்ட்டி மார்க்கத்தை எண்ணுவேனோ -என்கிறார் – உபேக்ஷிப்பேன் என்றபடி –

இத்தால் அதுக்கு உத்கர்ஷம் இவர் பரிக்ரகம் கொண்டு சொல்ல வேணும் ..இவர் வாக்கில் பிறந்த இதுக்கு அதுவும் வேண்டாம் என்று இவ் வழியாலும் ஓர் ஆதிக்யம் சொல்லிற்று ஆய்த்து ..
ஆக ஸ்ரீ கீதை யிலும் இதுக்கு உண்டான ஆதிக்ய ஹேதுக்கள் எல்லாம் சொல்லிற்று ஆய்த்து

––——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌ -10 –ஸாம்ய பாதம்–15–பகவத்‌ கீதாஸ்ரீ முக ஸூக்தி ஸாம்யாதி கரணம்‌–(189)ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

July 27, 2026

1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 284 முடிய (48)

(1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-284 (27)

10 –ஸாம்ய பாதம் -ஒரே அதிகரணம்
15–பகவத்‌ கீதாஸ்ரீ முக ஸூக்தி ஸாம்யாதி கரணம்‌–189—ஒரே ஸூரணை

இனி மேல் இப் பிரபந்த பிரதிபாத்ய அர்த்தங்களை விஸ்த்ரேண பிரதி பாதிப்பதாக திரு உள்ளம் பற்றி ,
அதில் பிரதமத்திலே சாஷாத்க்ருத பகவத் தத்வரான இவர் –சம்சாரிகளுக்கு உஜ்ஜீவன அர்த்தம்
உபதேசம் பண்ணின இப் பிரபந்தம் –பிரதி பாத்ய அர்த்த சாம்யத்தாலே -பகவத் ப்ரணீத –
கீதோ உபநிஷத் -சமமாகச் சொல்லப் படும் என்கிறார்
-மேல் –தத்வதர்ஸிகளான இவர் பக்கலிலே இப்படி பகவத் குணாநுபவ ஜநித ப்ரீதி ப்ரகர்ஷ பலாத்காரத்தாலே அவதீர்ணமான இப்ரபந்தத்தில்‌ பரதிபாதி தமான அர்த்தங்கள்‌, தர்மஸம்ஸ்தாபநார்த்தமாக அவதரித்து கிருஷ்ணன்‌ உபய ஸேநைக்கும்‌ நடுவே அர்ஜுந வ்யாஜத்தாலே அருளிச் செய்த ஸ்ரீகீதையிலே ப்ரதிபாதிக்கப்பட்ட தத்த்வ விவேகாதிகளான அர்த்தங்களாகை யாலே இந்த ப்ரபந்தம்‌ ஸ்ரீகீதையோடொக்கும்‌ என்கிறார்‌.

மனம் செய்‌ எல்லையில்‌ ஞான வின்பத்தை நின்மலமாக வைத்தவர்‌ ஞானப் பிரானை ஞானத்து வைம்மினென்றவிது தத்வ விவேக, நித்யத்வாநித்யத்வ, நியந்த்ருத்வ, ஸெளலப்‌ய, ஸாம்ய, அஹங்கார, இந்த்‌ரிய தோஷ பல, மந ப்ராதாந்ய, கரண நியமந ஸுக்ருதி பேத, தேவாஸுர விபாக, விபூதி யோக, , விஸ்வருப தர்ஸந, ஸாங்க பத்தி, ப்ரபத்தி த்‌வை வித்‌யாதிகளாலே அன்றோதிய கீதா ஸமம்‌ என்னும்‌.–சூரணை -189–

அதாவது-மனம் செய் எல்லையில் ஞான இன்பத்தை —-எல்லாப் பொருள்களுக்கும் வித்தாய் –முதலில் சிதையாமே மனம் செய் ஞானத்து உன் பெருமை–திருவாய் -1-5-2-என்றும் –-எல்லையில் ஞானத்தன் ஞானம் அஃதே கொண்டு எல்லாக் கர்மங்களும் செய் –திருவாய் -3-10-8- -என்றும் சொல்லுகிறபடி
சர்வ காரணமாய் –அபரிசேத்யமான சங்கல்ப ரூப ஞானத்தை உடையவனாய் – சூழ்ந்த அதனில் பெரிய சுடர் ஞான இன்பம் –திருவாய் -10-10-10-–என்கிறபடியே பிரகிருதி புருஷ தத்வங்கள் இரண்டும் தன்னுள்ளே ஆகும் படி வியாபித்து – தான் அபரிசேத்யமாய் – உஜ்ஜ்வலமாய் -ஞான ஆனந்த லஷணமாய் இருக்கிற – ஸ்வரூபத்தை உடைய சர்வேஸ்வரனை – நின்மலமாக வைத்தவர் –
எனது ஆவி உள்ளே நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து -திருவாய் -4-7-7-என்று
பரிபூர்ண ஞான ஸ்வரூபனான உன்னை என் நெஞ்சுக்குள்ளே விசதமாக அனுபவித்து – என்னும் படி சாஷாத் கரித்த இவ் ஆழ்வார் –

(மனஞ் செய்‌ எல்லையில்‌ ஞான வின்பத்தை நின்மலமாக வைத்தவர்‌) “எல்லாப்பொருள்கட்கும்‌ வித்தாய்‌ முதலில்‌ சிதையாமே மனம்‌ செய்‌ ஞானத்துன்பெருமை” (திருவாய்மொழி 1-5-2) என்று ஸர்வத்துக்கும்‌ காரணமாகா நிற்கச்‌ செய்தே தான்‌ நிர்விகாரமாய்‌ “எல்லையில்‌ ஞானத்தன்‌ ‘ (திருவாய்மொழி 3-10-8 என்று அபரிச்சேத்‌யமாயிருக்கிற அவனுடைய ஸங்கல்ப ரூப ஜ்ஞாநத்தையும்‌ “சூழ்ந்ததனில்‌ பெரிய சுடர் ஞான வின்பமேயோ’ (திருவாய்மொழி 10-10-10) என்று ப்ரக்ருதி புருஷர்களிரண்டும்‌ தனக்குள்ளேயாம்படி வியாப்தமாய்‌, தான்‌ அபரிச்சேத்‌யமாய்‌ விஸத தமமாய்‌ அநந்த ரூப ஜ்ஞாநமாய்‌ இருக்கிறவனுடைய ஸ்வரூபத்தையும்‌ “நிறைந்த ஞானமூர்த்தியாயை நின் மலமாக வைத்து” (திருவாய்மொழி 4-7-7) என்கிறபடியே அந்த ஸ்வரூப ஸ்வபாவங்களிரண்டும்‌ ஜ்ஞாநமாகையாலே பரிபூர்ண ஜ்ஞாந ஸ்வருபனாயிருக்கிறவனை விஸத தமமாக ஸாக்ஷாத்கரிக்கையாலே தத்த்வ தர்ஸிகளா யிருக்கிற இவர்‌,

நினைந்து நைந்து உள்கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால்
நினைந்த வெல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே
மனம் செய் ஞானத்து உன் பெருமை
மாசூணாதோ மாயோனே –1-5-2—ஸ்வ கார்யத்தைப் பிறப்பிக்கும் போது தான் முதல் அழியாத படியான மநோ வியாபார ரூப சங்கல்ப ஞானத்தை யுடைய உன் வைலஷண்யம்-ஆனால் சங்கல்பமோ ஜகத் காரணம் -சூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் அன்றோ -என்னில்-ஆனாலும் காரணமாம் போது சங்கல்ப பூர்வகமாக வேணும்-சங்கல்ப விசிஷ்டன் காரணம் ஆனாலும் பஹூச்யாம் என்கிற சங்கல்ப ப்ராதான்யத்தாலே சொல்லுகிறது

அல்லல் இல் இன்பம் அளவு இறந்து எங்கும் அழகு அமர்சூழ் ஒளியன்
அல்லி மலர்மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான்
எல்லை இல் ஞானத்தன் ஞானம் அஃ தேகொண்டு எல்லாக் கருமங்களும் செய்
எல்லை இல் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே.–3-10-8—மன்ஸவீ என்னுமா போலே ப்ரணய தாரையில் அவளுக்கு ஆனைக்கு குதிரை வைக்க வல்ல ஞானாதிக்யத்தை உடையவன்

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-அவை இரண்டையும் வியாபித்து அவற்றுக்கு நிர்வாஹகமாய் சங்கல்ப ரூபமான ஞானத்தை யுடையவன் என்று சங்கல்ப ரூப ஞானத்தைச் சொல்லுதல் –சுடர் ஞான இன்பம் என்று பகவத் ஸ்வரூபத்தை சொல்லுதல் –

அறிந்து அறிந்து, தேறித் தேறி,யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தி
யாயை நின்மலமாக வைத்து,
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
நறுந்து ழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே.–4-7-7-தெளிந்த மனஸிலே பரிபூர்ண ஞானத்தையே ஸ்வரூபகமாக உடைய உன்னை விசதமாக அனுபவித்து-

ஞானப் பிரானை ஞானத்து வைம்மின் என்ற இது —-இரும் கற்பகம் சேர் வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லா வர்க்கும் எரி திரை வையம் முற்றும் ஏனத்து உருவாய் இடந்த –ஞானப் பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லது -திருவிருத்தம் -99-என்று பிரளய ஆர்ணவ மக்னையான பூமியை -மகா வராஹமாக -உத்தரித்த -ஞான சக்திகளையும் – ஸ்வாமித்வ பிராப்தியும் உடையவனாய் -ஸ்லோக த்வய முகத்தாலே சரமோ உபாயத்தை வெளியிடுகையாலே -ஞான உபகாரனுமாய் இருப்பவனை – ஒழிய -சர்வருக்கும் உஜ்ஜீவன ஹேதுவாய் இருப்பது ஒன்றும் இல்லை –இது நான் அறுதி இட்ட விலஷணமான அர்த்தம் – என்று பிரதம பிரபந்தத்தில் அருளிச் செய்த விஷயத்தை உபாயகமாகப் பற்றச் சொல்லுகிற அளவில் –திரு குருகூர் அதனை உளம் கொள் ஞானத்து வைமின் உம்மை உய்யக் கொண்டு போகுறில்–திருவாய் -4-10-0-என்று உஜ்ஜீவிக்க வேண்டி இருந்தீர்களாகில் –அவன் நித்ய வாசம் பண்ணுகிற தேசத்தை உங்கள் மானஸ ஜ்ஞானத்துக்கு விஷயம் ஆக்குங்கோள் என்று சம்சாரிகளை குறித்து உபதேசித்த இப் பிரபந்தம் –தர்ம சம்ஸ்தாபன அர்த்தமாக அவதரித்து அருளின ஸ்ரீ கிருஷ்ணன் – அஸ்தான ஸ்நேஹ காருண்யா தர்ம அதர்மதியா குலம் பார்த்தம் பிரபன்ன முத்திஸ்ய சாஸ்திர அவதரணம் க்ருதம்–ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் –5–என்கிறபடியே – அஸ்தானத்தே உண்டான – பந்து ஸ்நேஹ காருண்யங்களாலும் – ஸ்வ தர்மத்தில் அதர்ம புத்தியாலும் கலங்கி – நயோத்ஸ்யாமி–ஸ்ரீ கீதை -2-6- -என்று யுத்த அநிவ்ருத்தனாய் –
யச்ஸ்ரேயஸ் ஸ்யான் நிச்சிதம ப்ரூஹி தன்மே சிஷ்யத் தேஹம் சாதிமாம் த்வம் பிரபன்னம்–ஸ்ரீ கீதை –2 7-என்ற அர்ஜுனனைத் தெளிவித்து யுத்தே பிரவர்த்தன் ஆக்குகைக்கு வியாஜமாக –-அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய–திருவாய் -4-8-6- -என்கிறபடியே-லோகத்துக்கு உஜ்ஜீவன சாஸ்த்ரமாம் படி எல்லாப் பொருளும் விரித்த ஸ்ரீ கீதையில் –

ஞானப் பிரானை ஞானத்து வைம்மின்‌ என்ற இது) “இருங் கற்பகம்‌ சேர்‌ வானத்தவர்க்கும்‌ அல்லாதவர்க்கும்‌ மற்றெல்லாயவர்க்கும்‌ ஞானப் பிரானை அல்லாலில்லை நான் கண்ட நல்லதுவே” (திருவிருத்தம்‌ 99) என்று உபக்ரமித்து “உளங்கொள்‌ ஞானத்து வைம்மின்‌ உம்மை உய்யக் கொண்டு போகுறிலே” (திருவாய்மொழி 4-10-9) என்று ப்ரளயார்ணவ மக்‌நையான ஸ்ரீபூமிப் பிராட்டியை மஹா வராஹமாய்க்‌ கொண்டு எடுத்தவனுமாய்‌, ஸ்லோக த்‌வய முகத்தாலே சரமோபாயத்தை வெளியிடுகையாலே ஜ்ஞாநோபகாரகனு மாயிருக்கிறவனை யொழிய ஸர்வர்க்கும்‌ உஜ்ஜீவந ஹேதுவாயிருப்பதொன்று இல்லையான பின்பு அவன்‌ நித்ய வாஸம்‌ பண்ணுகிற தேஸத்தை உங்கள்‌ மாநஸ ஜ்ஞாநநத்துக்கு விஷய மாக்குங்கோளென்று இப்படி உபபாதிக்கிற இப் ப்ரபந்த,ம்‌ 

ஈனச் சொல்லாயினுமாக எறி திரை வையம் முற்றும்
ஏனத்துருவாய் யிடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும்
ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே –
 – 99—இரும் கற்பகம் சேர் வானத்தவர்க்கும்-அபிமத பல பிரதத்வத்தாலே வந்த பெருமையை யுடைத்தான கற்பக வ்ருக்ஷங்களினுடைய–செறிவை யுடைத்தான சுவர்க்கத்தில் வாஸத்தை யுடைய தேவர்களுக்கும்–(எனக்கே தன்னைத் தந்த கற்பகம் இல்லையே இவை)அல்லாதவர்க்கும்–அத் தேவ ஜாதி தானே உத்க்ருஷ்டம் என்னும்படியான மனுஷ்ய ஜாதீயருக்கும்–மற்று எல்லா யவர்க்கும்-இவர்களிலும் அபக்ருஷ்டரான திர்யக் ஸ்தாவர ஜாதி பேதங்களில் உள்ளார் எல்லாருக்கும்-ஞானப் பிரானை யல்லால் இல்லைஸ்திதே மனஸி -வராஹ சரம ஸ்லோகம் இத்யாதியாலே உத்தாரக ஹேதுவான ஞானத்தை உபதேசித்த ஸ்வாமியை ஒழிய இல்லை–நான் கண்ட நல்லதுவே –நான் அறுதியிட்டு நல்ல அர்த்தம் என்று தம்முடைய நிஷ்கர்ஷத்தை அருளிச் செய்தார் ஆயிற்று-

விளம்பும் ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும்
வளங் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை
உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக்கொண்டு போகுறிலே.–4-10-9-உளம் கொள் ஞானம் -மானஸ ஞானம் -ஞானம் உதித்து பாஹ்ய இந்த்ரியங்களாலே பாஹ்ய விஷயங்களை க்ரஹிப்பதற்கு முன்பே மானஸ ஞானத்துக்கு இவ் ஊரை விஷயம் ஆக்குங்கோள் -பிரயோஜனம் என் என்னில்
உம்மை உயக்கொண்டு போகுறிலே.-அசன்னேவ என்னும் படி -இருக்கிற உங்களை சந்த மேனம் ததோ விது-என்ன பண்ண வேண்டி இருந்து கோள் ஆகில் –நேய மஸ்தி என்கிறபடி தக்தப்படம் போலே இவற்றின் சத்தை சென்று அற்றது என்று இருக்கிறார் –

அஸ்தாந ஸ்நேஹ காருண்ய தர்மாதர்மதியாகுலம்
பார்த்தம்ப்ரபந்நமுத்திஶ்ய ஶாஸ்த்ராவதரணம்க்ருதம்
–5-காட்டக் கூடாத இடத்தில் ஸ்நேஹம் -காருண்யம் -தர்ம அதர்ம விவேகம் இல்லாமல் –மூன்று தோஷங்கள் –

கார்பண்யதோ÷ஷாபஹதஸ்வபாவ:
ப்ருச்சாமி த்வாம் தர்மஸம்மூடசேதா:
யச்ச்ரேய: ஸ்யாந்நிஸ்சிதம் ப்ரூஹி தந்மே
ஸிஷ்யஸ்தேஹம் ஸாதி மாம் த்வாம் ப்ரபந்நம்–2-7-
சிறுமையாகிய குறையால் இயல்பு அழிந்தவனாய், அறம் இன்னது என்றுணராமல் மயங்கிய அறிவுடன், யான் உன்னைக் கேட்கிறேன். எது நன்றென்பதை எனக்கு நிச்சயப்படுத்திக் சொல்லுக. நான் உன் சீடன். உன்னையே சரணமெனப் புகுந்தேன். கட்டளை தருக.

அறிவினால் குறையில்லா அகல் ஞாலத்தவர் அறிய,
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி,
குறிய மாண் உருவாகி, கொடுங் கோளால் நிலங்கொண்ட
கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறையிலமே.–4-8-6—பகவத் விஷயத்தில் அறிவு கொண்டு ஒரு கார்யம் இன்றிக்கே இருக்கை –-அன்ன பா நாதிகள்-பெறா விடில் செல்லாதாய் இருக்கும் அறிவு ஒன்றிலுமாயிற்று நிரபேஷராய் இறே இருப்பது-அகல் ஞாலத்தவர்-இந்த பூமிப பரப்பில் உள்ளாரில் அறிவில் குறை பட்டு இருப்பார் இல்லை –-அவர் அறிய, கல்லில் துளை யுண்டாக்கினால் போலே சம்சாரிகள் அறியும் படி –-நெறி எல்லாம் எடுத்து உரைத்த சேதன பேதத்தோ பாதி போறும் இ றே உபாய பேதமும் -கர்ம யோகம் முதலாக பிரபத்தி பர்யந்தமாக சகல உபாயங்களையும் வ்யக்தமாக உபதேசித்த படி-கர்ம ஞான பக்திகள் -அவதார ரஹஸ்யம் புருஷோத்தம வித்யை -ஸ்வரூப யாதாம்யம் -விரோதி நிவ்ருத்திக்கு பிரபத்தி -ஆத்மாபிராப்திக்கு பிராப்தி -பகவல்லாபத்துக்கு பிரபத்தி -இவற்றை அடங்க விசத்தமாக அருளிச் செய்த-நிறை ஞானத்து ஒரு மூர்த்தி,-நிறைந்த ஞானத்தை உடைய அத்விதீயமான ஸ்வரூபத்தை யுடையவன் – ஞானாதிகன் சொன்னது இறே பிரமாணம் ஆவது -எல்லாருடைய ஞானத்துக்கும் அடியானை ஞான பூர்த்தியை யுடையவன் –

1 ,2 ,3 தத்வ விவேக –-பிரதமத்தில் –தேக ஆத்மா அபிமான கார்யமான பந்து சிநேகத்தையும் –
வத பீதியையும் மாற்றுகைக்காக தத்வ ஞானத்தை உபதேசிக்கத் தொடங்கின அளவிலே –
நத்வே வாஹம் ஜாது நாசம் நத்வம் நேமே ஜநாதிபா – நசைவ நபவிஷ்யாம சர்வே வயமத பரம் –ஸ்ரீ கீதை -2-12–என்று சர்வேஸ்வரனான தன்னோபாதி சகல ஆத்மாக்களும் நித்யர் என்று அருளிச் செய்கிற வழியிலே – ஜீவ பர பேதம்–ஜீவர்களுக்கு பரஸ்பர பேதம் -ஆகிய இவற்றை தர்சிப்பித்து –
தேஹி நோஸ்மின் யதா தேக கௌமாரம் யௌவனம் ஜரா ததா தேஹாந்தர ப்ராப்தி தீரஸ் தத்ர நமுஹ்யதி -2-13-– இத்யாதியாலே – பிரகிருதி ஆத்மா விவேகத்தையும் சொல்லுகையாலே தத்வங்களினுடைய விவேகத்தையும் —

தத்த்வ விவேகம்‌) திருத் தேர்த்தட்டிலே “விஸ்ருஜ்ய ஸமரஞ்சாபம்‌ ஸோகஸம்விக்‌ந மாநஸம்‌” (கீதை 1-47) என்று பந்து ஹத்யாபீதனாய்க்‌ கொண்டு ஸோகிக்கிற அர்ஜுநனைக்‌ குறித்து அவனை “ஸ்திதோஸ்மி’ (கீதை 18-73) என்னப்‌ பண்ணுகைக்காக “நத்வேவாஹம்‌ ஜாது நாஸம்‌ நத்வம்‌ நேமே ஐநாதி பா: ந சைவ ந ப.விஷ்யாம: ஸர்வேவயமத:பரம்‌” (கீதை 2-12) என்று நீயும்‌ நானும்‌ இந்த ராஜாக்களும்‌ முன்பாக இல்லாமலுமில்லை, மேலும்‌ இல்லாமலுமில்லை என்று ஜீவ பரபேதம்‌, ஜீவர்களுக்கு பரஸ்பர பேதம்‌, “தேஹிநோஸ்மிந்‌ யதா, தேஹே கெளமாரம்‌ யெளவநம்‌ ஜரா ததா, தேஹாந்தர ப்ராப்தி: தீரஸ் தத்ர ந முஹ்யதி” (கீதை 2-13) என்றித்யாதிகளாலே ப்ரக்ருதி புருஷர்களுக்குண்டான பேதமாகிற தத்வ விவேகம்‌;

ஏவமுக்த்வார்ஜுந​: ஸங்க்யே ரதோபஸ்த உபாவிஸத்
விஸ்ருஜ்ய ஸஸரம் சாபம் ஸோகஸம்விக்நமாநஸ​:
–1-47-செருக் களத்தில் இவ்வாறு சொல்லி விட்டுப் பார்த்தன் அம்புகளையும் வில்லையும் எறிந்து போட்டுத் துயரில் மூழ்கிய மனத்தனாய்த் தேர்ப் பீடத்தின் மேலுட்கார்ந்து கொண்டான்.

நஷ்டோ மோஹ: ஸ்ம்ருதிர்லப்தா த்வத்ப்ரஸாதாந்மயாச்யுத
ஸ்திதோऽஸ்மி கதஸந்தேஹ: கரிஷ்யே வசநம் தவ
–18-73-மயக்கமழிந்தது நின்னருளாலே, அச்சுதா, நான் நினைவு அடைந்தேன்; ஐயம் விலகி நிற்கிறேன்; நீ செய்யச் சொல்வது செய்வேன்.

நத்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா:
ந சைவ ந பவிஷ்யாம: ஸர்வே வயமத: பரம்-
-2-12-இதன் முன் எக்காலத்திலும் நான் இல்லாதிருந்திலேன். நீயும் இங்குள்ள வேந்தர் யாவரும் அப்படியே. இனி நாம் என்றைக்கும் இல்லாமற் போகவும் மாட்டோம்.

தேஹிநோऽஸ்மிந்யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா
ததா தேஹாந்தரப்ராப்திர்தீரஸ்தத்ர ந முஹ்யதி
–2-13-ஆத்மாவுக்கு இவ்வுடலில் எங்ஙனம் பிள்ளைப் பிராயமும் இளமையும், மூப்பும் தோன்றுகின்றனவோ அங்ஙனமே மற்றொரு சரீரப் பிறப்புந் தோன்றுகிறது. தீரன் அதில் கலங்கமாட்டான்.

4 -நித்யத்வ அநித்யத்வ —அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தாஸ் சரீரிண அநாசினோ ப்ரமேயஸ்ய தஸ்மாத் யுத்யஸ்வ பாரத -2-18-என்றும்-நஜாயதே ம்ரியதேவா கதாசித் நாயம் பூத்வா பவிதா வாநபூயஸ் அஜோ நித்யஸ் சாஸ்வதோயம் புராணோ நஹன்யதே ஹன்யமானே சரீரே –2-20 -என்றும் ,-வாசாம்ஸி ஜீர்ணா நியதா விஹாயா நவாணி க்ருஹணாதி நரோபராணி
ததா சரீராணி விஹாய ஜீர்ணான் யன்யாமி சம்யாதி நவாணி தேஹி –2-22
-இத்யாதிகளாலே
ஆத்மா நித்யத்வ தேகா அநித்யங்களையும்-

நித்யத்வாநித்யத்வ நியந்த்ருத்வ) “அச்சேத்‌யோயமதாஹ்‌ யோயம்‌ அக்லேத்‌யோ ஸோஷ்ய ஏவ ச நித்ய: ஸர்வகதஸ்தாணுரசலோயம்‌ ஸநாதந:” (கீதை 2-24) என்றும்‌, “வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா விஹாய நவாநி க்‌ருஹ்ணாதி நரோபராணி ததா, ஸரீராணி விஹாய ஜீர்ணாந்யந்யாநி ஸம்யாதி நவாநி தேஹீ’ (கீதை 2-22, “நாஸதோ வித்‌யதே பாவோ நாபாவோ வித்‌யதே ஸத:’ (கீதை 2-16) இத்யாதிகளாலே சேதநாசேதநங்களினுடைய நித்யத்வா நித்யத்வம்

நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத:
உபயோரபி த்ருஷ்டோऽந்தஸ்த்வநயோஸ்தத்த்வதர்ஸிபி:
–2-16-இல்லாதது உண்மையாகாது. உள்ளது இல்லாததாகாது. உண்மை யறிவார் இவ்விரண்டுக்குமுள்ள வேற்றுமை யுணர்வார்.

அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தா: ஸரீரிண:
அநாஸிநோப்ரமேயஸ்ய தஸ்மாத்யுத்யஸ்வ பாரத
–2-18-ஆத்மா நித்தியன்; அழிவற்றான்; அளவிடத்தகாதான். எனினும் அவனுடைய வடிவங்கள் இறுதியுடையன என்பர். ஆதலால் பாரதா, போர் செய்.

ந ஜாயதே ம்ரியதே வா கதாசிந் நாயம் பூத்வா பவிதா வா ந பூய:
அஜோ நித்ய: ஸாஸ்வதோऽயம் புராணோ ந ஹந்யதே ஹந்யமாநே ஸரீரே
–2-20-எக்காலத்திலும் இறப்பதுமில்லை. இவன் ஒரு முறையிருந்து பின்னர் இல்லாது போவதுமில்லை.-இவன் பிறப்பற்றான்; அனவரதன். இவன் சாசுவதன்; பழையோன்;-உடம்பு கொல்லப்படுகையில் இவன் கொல்லப்படான்.

வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா விஹாய நவாநி க்ருஹ்ணாதி நரோऽபராணி
ததா ஸரீராணி விஹாய ஜீர்ணாந் யந்யாநி ஸம்யாதி நவாநி தேஹீ-2-22
-நைந்த துணிகளைக் கழற்றி யெறிந்துவிட்டு மனிதன் புதிய துணிகள் கொள்ளுமாறு போல, ஆத்மா நைந்த உடல்களைக் களைந்து புதியனவற்றை எய்துகிறான்.

அச்சேத்யோऽயமதாஹ்யோऽயமக்லேத்யோऽஸோஷ்ய ஏவ ச
நித்ய: ஸர்வகத: ஸ்தாணுரசலோயம் ஸநாதந:
–2-24-பிளத்தற் கரியவன்; எரித்தற்கும், நனைத்தற்கும், உலர்த்துதற்கும் அரியவன்; நித்தியன்; எங்கும் நிறைந்தவன்; உறுதியுடையான்; அசையாதான்; என்றும் இருப்பான்.

5 -நியந்த்ருத்வ – பூமிராபோ நலோ வாயு கம்மனோ புத்தி ரேவச – அஹங்கார இதீயம் மே பின்னா பிரகிருதி ரஷ்டதா அபரே யமித ஸ்த்வன்யாம் பிரகிருதி வித்தி மே பராம் – ஜீவபூதாம் மஹாபாஹோ யயேதம் தார்யதே ஜகத் -7-4-5-என்கிற படியே சேதன அசேதன சரீரியாய் – சர்வஸ்ய சாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்டோ மத்தஸ் ஸ்ம்ருதி ஜ்ஞாந மபோஹநஞ்ச -15-15-என்றும் – ஈச்வரஸ் சர்வ பூதானாம் ஹ்ருத்தேசேர் ஜூன திஷ்டதி ப்ராமயன் சர்வ பூதானி யந்த்ராரூடானி மாயயா-18-61- –என்றும் சொல்லுகிறபடி சர்வ ஜன ஹ்ருதிஸ்த்தனாய் -நின்று -சர்வ பிரவ்ருத்தி நிவ்ருத்திகளையும் பண்ணுவிக்கை யாகிற ஈஸ்வரனுடைய நியந்தருத்வத்தையும்

பூமிராபோநலோவாயு: கம்‌ மநோ புத்‌திரேவ அஹங்கார இதீயம்‌ மே பிந்நா ப்ரக்ருதி ரஷ்டதா வைன்‌ வலவன்‌ ப்ரக்ருதிம்‌ வித்‌தி மே பராம்‌ தீவபூதாம்‌ மஹாபாஹோ யயேதம்‌ தார்யதே ஜெகத்‌ (கீதை7-4,5) என்று சேதநா சேதநங்களை ஸாரீரமாக வுடையனாய்க் கொண்டு, “ஸர்வஸ்யசாஹம்‌ ஹ்ருதி, ஸந்நிவிஷ்டோ மத்தஸ்ம்ருதி: ஜ்ஞாநமபோஹநஞ்‌ (கீ தை 15-1) என்றும்‌, “ஈஸ்வரஸ்‌ ஸர்வ பூதாநாம்‌ ஹ்ருத்‌தே ஸோரஜ “ந திஷ்டதி ப்‌ராமயந்‌ ஸர்வபூதாநி யந்த்ராரூடாநி மாயயா (கீதை 18-61 )என்றும்‌ ஸ்வ ஸரீரபூதமான ஸர்வ ஜந்துக்களினுடைய ஹ்ருதய ப்ரதேஸத்திலே நின்று ஸகல ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளையும்‌ தானே பண்ணுவிக்கையாகிற அவனுடைய நியந்த்ருத்வம்‌;

பூமிராபோऽநலோ வாயு: கம் மநோ புத்திரேவ ச
அஹங்கார இதீயம் மே பிந்நா ப்ரக்ருதிரஷ்டதா–
7-4-மண், நீர், தீ, காற்று, வான், மனம், மதி, அகங்காரம், இவ்வெட்டு வகையாக என் இயற்கை பிரிந்து தோன்றுகிறது.-அபரேயமிதஸ்த்வந்யாம் ப்ரக்ருதிம் வித்தி மே பராம் ஜீவபூதாம் மஹாபாஹோ யயேதம் தார்யதே ஜகத்--7-5-இது என் கீழியற்கை. இதனின்றும் வேறுபட்டதாகிய என் மேலியற்கையை அறி;-அதுவே உயிராவது; பெருந்தோளாய், அதனால் இவ்வுலகு தரிக்கப்படுகிறது.

ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ மத்த: ஸ்ம்ருதிர்ஜ்ஞாநமபோஹநம் ச
வேதைஸ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ வேதாந்தக்ருத்வேதவிதேவ சாஹம்
–15-15-எல்லோருடைய அகத்திலும் நான் புகுந்திருக்கிறேன். நினைவும், ஞானமும், இவற்றின் நீக்கமும்
என்னிடமிருந்து பிறக்கின்றன. எல்லாத் தேசங்களிலும் அறியப்படும் பொருள் யான்;
வேதாந்தத்தை ஆக்கியோன் யான்; வேத முணர்ந்தோன் யானே.

ஈஸ்வர: ஸர்வ பூதாநாம் ஹ்ருத்தேஸேऽர்ஜுந திஷ்டதி
ப்ராமயந் ஸர்வ பூதாநி யந்த்ரா ரூடாநி மாயயா-
-18-61-அர்ஜுனா, எல்லா உயிர்களுக்கும் ஈசன் உள்ளத்தில் நிற்கிறான். மாயையால் அவன் எல்லா உயிர்களையும் சக்கரத்திலேற்றிச் சுழற்றுகிறான்.

6 -சௌலப்ய – தஸ்யாஹம் ஸூலப பார்த்த நித்ய யுக்தஸ்ய யோகின –என்றும்-பரித்ராணாய சாதூனாம் ,விநாசாய துஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே-4-8- -என்றும்
பக்திமான்கள் நிமித்தவாகவும் அவதார பிரயுக்தமாகவும் உண்டான அவன் சௌலப்யத்வத்தையும் ..

(ஸெளலப்‌ய) “தஸ்யாஹம்‌ ஸுலப: பார்த்த நித்ய யுக்தஸ்ய யோகி ந:” (கீதை 8-14) என்றும்‌, “பரித்ராணாய ஸாதூநாம்‌ விநாஸாய ச துஷ்க்ருதாம்‌ தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே (கீதை 19-8) என்றித்யாதியாலும்‌ பக்திமான்கள்‌ நிமித்தமாகவும்‌ அவதார ப்ரயுக்தமாகவும்‌ உண்டான அவனுடைய ஸெளலப்‌யம்‌;

அநந்யசேதா: ஸததம் யோ மாம் ஸ்மரதி நித்யஸ:
தஸ்யாஹம் ஸுலப: பார்த நித்யயுக்தஸ்ய யோகிந:
–8-14-நித்திய யோகத் திசைந்து, பிரிது நினைப்பின்றி என்னை எப்பொழுதும் எண்ணும் யோகிக்கு நான் எளிதில் அகப்படுவேன்,
பார்த்தா. ஈசன் அடியார்க்கு எளியவன். நாம் முழுமனதை அவனிடத்துத் திருப்பாமையால் அவனை அடைகிறதில்லை. பொருள் உடையவர்க்கே மேலும் பொருள் சேருவது போன்று அருள் உடையவர்க்கே மேலும் அருள் வளர்கிறது.

பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம்
தர்மஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே
-4-8-நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலை நிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன்.

7 -சாம்ய – சமோஹம் சர்வ பூதேஷு நமே த்வேஷ் யோஸ்தி நப்ரிய–9 -29-என்று அவனுடைய ஆஸ்ரத்யநீயத்வே சர்வ சாம்யத்தையும்-

(ஸாம்ய) ‘ஸமோஹம்‌ ஸர்வபூதேஷ- ந மேத்‌வேஷ்யோஸ்தி ந ப்ரிய:” (கீதை 9-29 என்று அவனுடைய ஸர்வபூத ஸமத்வம்‌;

ஸமோऽஹம் ஸர்வபூதேஷு ந மே த்வேஷ்யோऽஸ்தி ந ப்ரிய:
யே பஜந்தி து மாம் பக்த்யா மயி தே தேஷு சாப்யஹம்
–9-29-நான் எல்லா உயிர்களிடத்தும் சமமானவன். எனக்குப் பகைவனுமில்லை, நண்பனுமில்லை. -ஆனால் என்னை அன்புடன் தொழுவோர் – அன்னவர் என்னகத்தமர்ந்தார்; அவரகத்து நான் உளேன்.

8 -அஹங்கார தோஷ –அஹங்கார விமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே-3-27 -என்று அஹங்கார தோஷத்தையும் –9 -இந்திரிய பல–யததோஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஸ்சித இந்திரியாணி ப்ரமாதீனி ஹரந்தி பிரசபம் மன -2-60-என்று இந்திரிய பிராபல்யத்தையும்-

(அஹங்காரதோஷ) “ப்ரக்ருதே: க்ரியமாணா நிர்குணை: கர்மாணி ஸர்வ: அஹங்கார விமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே” (கீதை 3-27) என்று அஹங்கார தோஷம்‌; (இந்த்‌ரிய பல) “இந்த்‌ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம்‌ மந:” (கீதை 2-60) என்று இந்த்‌ரிய ப்ராபல்யம்‌ 

ப்ரக்ருதே: க்ரியமாணாநி குணை: கர்மாணி ஸர்வஸ:
அஹங்காரவிமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே
-3-27–எங்கும் தொழில்கள் இயற்கையின் குணங்களால் செய்யப்படுகின்றன. அகங்காரத்தால் மயங்கியவன், “நான் செய்கிறேன்” என்று நினைக்கிறான்.

யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஸ்சித:
இந்த்ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம் மந
:–2-50-குந்தியின் மகனே, (தவ) முயற்சியுடைய புருஷனிடத்திலே கூட, இந்திரியங்கள் வரம்பு கடந்து செல்லும் போது தம்முடன் மனத்தையும் வலிய வாரிச் செல்கின்றன.

10 -மன ப்ராதன்ய சஞ்சலம் ஹி மன க்ருஷ்ண பிரமாதி பலவத் த்ருடம் தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோ ரிவ ஸூ துஷ்கரம்-6-34-என்றும் – அசம்சயம் மஹாபாஹோ மனோ துர் நிக்ரஹம் சலம்
அப்யாசேனது கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே-6-35-
-என்றும் மற்ற இந்திரியங்களில் வைத்துக் கொண்டு மனசின் உடைய பிரதான்யத்தையும் –

(மந:ப்ராதாநய) “அஸம்ஸயம்‌ மஹாபாஹோ மநோ துர் நிக்‌ரஹம்‌ சலம்‌ அப்‌யாஸேந து கெளந்தேய வைராக்‌யேண ச க்‌ ருஹ்யதே” (கீதை 6-35) இத்யாதிகளிலே சொல்லப்பட்ட மந:ப்ராதா நீயம்‌; 

சஞ்சலம் ஹி மந​: க்ருஷ்ண ப்ரமாதி பலவத்த்ருடம்
தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸுதுஷ்கரம்
-6-34-கண்ணா, மனம் சஞ்சலமுடையது; தவறும் இயல்பினது, வலியது; உரனுடையது. அதைக் கட்டுப்படுத்துதல் காற்றைக் கட்டுவது போல் மிகவும் கஷ்டமான செய்கையென்று நான் மதிக்கிறேன்.

அஸம்ஸயம் மஹாபாஹோ மநோ துர்நிக்ரஹம் சலம்
அப்யாஸேந து கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே-
-6-35-ரீ பகவான் சொல்லுகிறான்: பெருந்தோளாய், மனம் கட்டுதற்கரியதுதான். சலனமுடையதுதான்; ஐயமில்லை.-ஆனால் குந்தியின் மகனே, அதைப் பழக்கத்தாலும், விருப்பமின்மையாலும் கட்டி விடலாம்.

11 -கரண நியமன – தானி சர்வாணி சம்யம்ய யுக்த ஆசீத மத்பர வசே ஹி யச்யேந்த்ரியாணி தஸ்ய பிரஜ்ஞா ப்ரதிஷ்டிதா -2-61- -என்றும் – சர்வத்வாராணி சம்யம்ய மனோ ஹ்ருதி நிருத்த்யச – 8-12- என்றும் கரண நியமனத்தையும் —

(கரணநியமந) “தாநி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத மத்பர: ஸர்வேந்த்‌ரியாணி ஸம்யம்ய மநோ ஹ்ருதி நிருத்ய ச (கீதை 2-61 இத்யாதிகளாலே சொல்லப்பட்ட கரண நியமநம்‌;

தாநி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத மத்பர:
வஸே ஹி யஸ்யேந்த்ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா
–2-61-அவற்றையெல்லாம் நன்றாக அடக்கி, யோகத்தில் அமர்ந்தவனாய், என்னைப் பரமாகக் கொண்டு, புலன்களை வசப்படுத்தி வைத்திருப்பவன் எவனோ, அவனுடைய அறிவே நிலைகொண்டது.

ஸர்வத்வாராணி ஸம்யம்ய மநோ ஹ்ருதி நிருத்ய ச
மூர்த்ந்யாதாயாத்மந: ப்ராணமாஸ்திதோ யோகதாரணாம்
–8-12-எல்லா வாயில்களையும் நன்கு கட்டி, மனத்தை உள்ளத்தில் நிறுத்தி, உயிரைத் தலையின் உச்சியில் நிலை யுறுத்தி யோக தாரணையில் உறுதி பெற்று,

12 -ஸூஹ்ருதி பேத –-சதுர்விதா பஜந்தே மாம் ஜனாஸ் ஸூக்ருதி நோர்ஜுன ஆர்த்தோ ஜிஞ்ஞா ஸூராரர்தாத்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப-7-16– -என்று ஸூஹ்ருதிகளுடைய பேதத்தையும் –

(ஸூக்ருதி பேத) “சதுர்விதா பஜந்தே மாம்‌ ஜநா: ஸுக்ருதிநோர்ஜுந ஆர்த்தோ ஜிஜ்ஞாஸ ரர்த்தார்த்த ஜ்ஞாநீ ச பரதர்ஷப,” (கீதை 7-16) என்று சொல்லப்பட்ட ஸுக்ருதி பேதம்‌;

சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோऽர்ஜுந
ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப
–7-16-நற்செய்கையுடைய மக்களில் நான்கு வகையார் என்னை வழிபடுகின்றனர். பரதரேறே,துன்புற்றார், அறிவை விரும்புவோர், பயனை வேண்டுவோர், ஞானிகள் என.

13 -தேவாசுர விபாக –தவௌ பூத சர்கவ் லோகேஸ்மின் தைவ ஆஸூர ஏவச-16-6-என்றும்
தைவீ சம்பத் விமோஷாய நிபாந்தயா ஸூரி மதா 16-4–
என்று தேவாசுர விபாகத்தையும்

(தேவாஸுரவிபா ௧) “த்‌வெள பூதஸர்கெள, லோகேஸ்மிந்‌ தைவ ஆஸ ஏவ ச தை வீ ஸம்பத்‌ விமோக்ஷாய நிபந்தா யாஸுரீமதா” (கீதை 16-6) இத்யாதிகளாலே சொல்லப்பட்ட தேவாஸுர விபாகம்‌;

தைவீ ஸம்பத்விமோஷோய நிபந்தாயாஸுரீ மதா
மா ஸுச: ஸம்பதம் தைவீமபிஜாதோऽஸி பாண்டவ
–16-5-தேவ சம்பத்தால் விடுதலையுண்டாம், அசுர சம்பத்தால் பந்தமேற்படும்; பாண்டவா, தேவ சம்பத்தை எய்தி விட்டாய்; துயரப்படாதே.

த்வௌ பூதஸர்கௌ லோகேऽஸ்மிந்தைவ ஆஸுர ஏவ ச
தைவோ விஸ்தரஸ: ப்ரோக்த ஆஸுரம் பார்த மே ஸ்ருணு
–16-6-இவ்வுலகத்தில் உயிர்ப்படைப்பு இரண்டு வகைப்படும். தேவ இயல் கொண்டது. அசுர இயல் கொண்டது. தேவ இயல் கொண்டதை விரித்துச் சொன்னேன் பார்த்தா, அசுர இயல் கொண்டதைச் சொல்லுகிறேன், கேள்.

14 –விபூதி யோக –-ஹந்ததே கத யிஷ்யாமி விபூதி ராத மநஸ் ஸூப பிராதான்யதஸ் குரு ஸ்ரேஷ்ட
நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே –10-9
-என்றும் ஆதித்யா நாமஹம் விஷ்ணு ஜ்யோதிஷாம்
ரவிரம்சுமான்-10-21
– -இத்யாதியால் விபூதி யோகத்தையும் –

(விபூதி யோக,) “ப்ராதாந்யத: குரு ஸ்ரேஷ்ட, நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே” (கீதை 10-10), “ஆதித்யாநாம்‌ அஹம்‌ விஷ்ணு: ஜ்யோதிஷாம்‌ ரவிரம்ஸூமாந்‌’ (கீதை 10-2) இத்யாதிகளாலே சொல்லப்பட்ட விபூதி யோகம்‌;

ஹந்த தே கதயிஷ்யாமி திவ்யா ஹ்யாத்மவிபூதய:
ப்ராதாந்யத: குருஸ்ரேஷ்ட நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே-
-10-19-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அச்ச! என் ஆத்மப் பெருமைகள் தேவத்தன்மை உடையனவே. அவற்றுள் பிரதானமானவற்றை நினக்குச் சொல்லுகிறேன். எனது விஸ்தாரத்துக்கு முடிவில்லை.

ஆதித்யாநாமஹம் விஷ்ணுர்ஜ்யோதிஷாம் ரவிரம்ஸுமாந்
மரீசிர்மருதாமஸ்மி நக்ஷத்ராணாமஹம் ஸஸீ-
-10-21-ஆதித்யர்களில் நான் விஷ்ணு; ஒளிகளில் நான் கதிர் சான்ற ஞாயிறு; காற்றுகளில் மரீசி; நக்ஷத்திரங்களில் சந்திரன்.

15 -விஸ்வரூப தர்சன –-பஸ்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹ சர்வாம் ஸ்ததா பூத விசேஷ சங்கான்
ப்ரஹ்மாணம் ஈசம் கமலா சனஸ்தம் ருஷீம்ஸ் ச சர்வான் உரகாம்ச திவ்யான் 11-15
-இத்யாதியாலே
விஸ்வரூப தர்சனத்தையும் –

(விஸ்வரூபதர்ஸந) “பஸ்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹே ஸர்வாம்ஸ்ததா பூத விஸேஷ ஸங்காந்‌ ப்‌ரஹ்மாண மீஸம்‌ கமலாஸநஸ்த்தம்‌ ருஷீம்ஸ்ச ஸர்வாநுரகாம்ஸ்ச தீப்தாந்‌ (கீதை 11-15) இத்யாதியாலே சொல்லப்பட்ட விஸ்வரூப தர்ஸநம்‌; 

பஸ்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹே ஸர்வாம்ஸ்ததா பூதவிஸேஷஸங்காந்
ப்ரஹ்மாணமீஸம் கமலாஸநஸ்தம் ருஷீம்ஸ்ச ஸர்வாநுரகாம்ஸ்ச திவ்யாந்
–11-15-அர்ஜுனன் சொல்லுகிறான்: தேவனே, நின் உடலில் எல்லாத் தேவர்களையும் காண்கிறேன், பூத வகைகளின் தொகுதிகளைக் காண்கிறேன். தாமரை மலரில் வீற்றிருக்கும் ஈசனாகிய பிரமனையும், எல்லா ரிஷிகளையும் தேவ சர்ப்பங்களையும் இங்குக் காண்கிறேன்.

16 -சாங்க பக்தி –மன்மனா பவ மத் பக்தோ மத் யாஜி மாம் நமஸ்குரு மாமே வைஷ்யசி யுக்த்வைவ மாத்மானம் மத்பராயணா -9-24–என்று அங்க சஹிதையான பக்தியையும்-

(ஸாங்க பக்தி) மந்மநாபவ மத்பக்தோ மத்‌ யாஜீ மாம்‌ நமஸ்குரு மாமேவைஷ்யஸி ஸத்யம்‌ தே ப்ரதிஜாநே ப்ரியோஸி மே” (கீதை 18-65) என்று சொல்லப்பட்ட அங்க, ஸஹிதையான பக்தி;

மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி யுக்த்வைவமாத்மாநம் மத்பராயண
:–9-34-மனத்தை எனக்காக்கி விடு; பக்தியை எனக்காக்கு; என்னைத் தொழு. என்னைப் பரமாகக் கொள். இங்ஙனமியற்றும் தற்கலப்பு யோகத்தால் என்னையே எய்துவாய்.

மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோऽஸி மே-
-18-65-உன் மனதை எனக்காக்குக. என் தொண்டனாகுக. எனக்கென வேள்விசெய்க. என்னையே வணங்குக. என்னை யெய்துவாய், உண்மை இஃதே, உனக்கிது சபதமுரைக்கிறேன், நீ எனக்கினியை.

17 -18 -பிரபத்தி த்வை இத்யாதி – தைவீ ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்தயா மாமே வயே பிரபத்யந்தே மாயா மேதாம் தரந்திதே -7-14-என்றும் தமேவ சரணம் கச்ச சர்வ பாவேன பாரத–18-62- -என்று அங்கத்வேனவும்சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸூ ச -18-66– – ஸ்வதந்த்ரவேனும் -இரண்டு படியாகவும் பிரபத்து உபதேசம் பண்ணினால் போலேயும்

(ப்ரபத்தி த்‌வைவித்‌யம்‌) தைவீஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா மாமேவயே ப்ரபத்‌யந்தே மாயாமேதாம்‌ தரந்தி தே” (கீதை 7-10), “தமேவ ஸரணம்‌ ௧ச்ச ஸர்வபாவேந பாரத (கீதை 18-62) இத்யாதியாலே சொல்லப்பட்ட அங்க ப்ரபத்தி, “ஸர்வ தர்மாந்‌ பரித்யஜ்ய” (கீதை 18-66) இத்யாதி யாலே சொல்லப்பட்ட ஸ்வதந்த்ர ப்ரபத்தியாகிற இவ்வர்த்த, விஸேஷங்களை ஸ்ரீ கீதா முகத்தாலே உபபாதித்தாப்போலே,

தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே–7
-14-இந்த குணமாகிய எனது தேவமாயை கடத்தற்கரியது. என்னையே யாவர் சரணடைவரோ அவர்கள் இந்த மாயையைக் கடக்கின்றார்கள்.

தமேவ ஸரணம் கச்ச ஸர்வபாவேந பாரத
தத்ப்ரஸாதாத்பராம் ஸாந்திம் ஸ்தாநம் ப்ராப்ஸ்யஸி ஸாஸ்வதம்-
-18-62-அர்ஜுனா, எல்லா வடிவங்களிலும் அவனையே சரணெய்து, அவனருளால் பரம சாந்தியாகிய நித்திய ஸ்தானத்தை எய்துவாய்.

ஸர்வதர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ
அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸுச
:–18-66-எல்லா அறங்களையும் விட்டு விட்டு என்னையே சரண் புகு. எல்லாப் பாவங்களினின்றும் நான் உன்னை விடுவிக்கிறேன். துயரப்படாதே.

இவரும்-1-2 -3–ஜீவ பர பேதமும்ஜீவர்களுக்குள் பரஸ்பர பேதமும் – பிரகிருதி -ஆத்மா விவேகம்-ஆகிற தத்வ விவேகத்தையும் அடியேன் உள்ளான் உடல் உள்ளான் –8-8-2-என்கிற இடத்தில் சப்தமாகவும் -ஆர்த்தமாகவும் ஜீவ பர பேதமும்,ஜீவர்களுக்குள் பரஸ்பர பேதமும் , சென்று சென்று பரம் பரமாய்-8-8-5- -என்று ஆத்மாவுக்கு தேக விலஷணத்தைச் சொல்லுகையாலே பிரகிருதி -ஆத்மா விவேகம் ஆகிற தத்வ விவேகத்தையும் —

அடியேனுள்ளான்‌ உடலுள்ளான்‌” (திருவாய்மொழி 8-8-2 என்று ஜீவ பர பேதமும்‌, ஜீவர்களுக்கு பரஸ்பர பேதமும்‌, “சென்று சென்று பரம்பரமாய்‌ யாதுமின்றித்‌ தேய்ந்தற்று நன்று தீதென்றறிவரிதாய்‌ நன்றாய்‌ ஞானங்கடந்ததே” (திருவாய்மொழி 8-8-5) என்று தேஹத்துக்கும்‌ ஜீவனுக்கும்‌ உண்டான பேதமுமாகிற தத்த்வ விவேகத்தையும்‌,

அடியேன்  உள்ளான் உடல் உள்ளான் அண்டத்தகத்தான் புறத்துள்ளான்
படியேயிது வென்றுரைக்கலாம் படியனல்லன் பரம் பரன்
கடி சேர் நாற்றத்துள்ளாலை இன்பத் துன்பக் கழி நேர்மை
ஓடியா வின்பப் பெருமையோன் உணர்விலும்பர் ஒருவனே–8-8-2—அடியேன் என்கிறது -அஹம் சப்த பர்யாயம் ஆகையால் -ஞானாநந்தங்களிலும் அந்தரங்கம் பகவத் சேஷத்வம் -என்கை –சேதனனுக்கு -திவ்யாத்ம ஸ்வரூபத்திலும் திவ்ய மங்கள விக்ரஹமே உத்தேச்யமாய் இருக்குமா போலே -ஆஸ்ரிதன் ஸ்வரூபத்தில் காட்டிலும் இவன் தேஹத்தை யாயிற்று ஈஸ்வரன் விரும்பி இருப்பது -செருக்கர் அபிமத விஷயத்தில் அழுக்கு உகக்குமா போலே – இத்தால் ஜீவ பர பேதமும் -ஜீவர்களுக்கு பரஸ்பர பேதமும் -சேஷ சேஷித்வ சம்பந்தமும் -அபரமார்த்தம் -என்றும் -ஒவ் பாதிகம் என்றும் சொல்லுகிற பக்ஷங்கள் அர்த்தாத ப்ரதி ஷிப்தங்கள் -ஆழ்வானுக்கு திருக் கோட்டியூர் நம்பி -அடியேன் உள்ளான் என்னப் பெற்ற படி என் -என்று பணித்தார் –

நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு அதன் நுண் நேர்மை அது இது என்று
ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது உணர்ந்தும் மேலும் காண்பு அரிது
சென்று சென்று பரம்பரம் ஆய் யாதும் இன்றித் தேய்ந்து அற்று
நன்று தீது என்று அறிவு அரிதாய் நன்றாய் ஞானம் கடந்ததே–8
-8-5—சென்று சென்று பரம்பரம் ஆய்-போய் போய் ஒன்றுக்கு ஓன்று மேலாய் இருக்கிற அன்ன மயாதிகளுக்கும் பரமாய்-யாதும் இன்றித் தேய்ந்து அற்று-அவற்றின் ஸ்வ பாவம் ஒன்றும் தட்டாத படி அவற்றோடு அற தொற்று அற்று
நன்று தீது என்று அறிவு அரிதாய்-தேகம் -தேஹத்தைக் காட்டிலும் இந்திரியம் -அத்தைக் காட்டிலும் மனஸ் ஸூ -அதில் காட்டிலும் பிராணன் -அதில் காட்டிலும் புத்தி -என்கிறதில் வை லக்ஷண்யம் உண்டாகிறாப் போலே -ப்ராக்ருதங்களில் உண்டான நன்மை தீமைகள் சொல்ல ஒண்ணாது இருக்கை
நன்றாய் -இவற்றில் காட்டில் அதி வி லக்ஷணமாய்-ஞானம் கடந்ததே–இந்திரிய ஞானத்துக்கு எட்டாது இருக்கும் – கீழில் அவை ஒன்றுக்கு ஓன்று நெடு வாசி உண்டாய் இருக்கச் செய் தேயும் ஏக பிராமண கம்யத்வ சாம்யம் உண்டு -அதுவும் இல்லை என்கிறது இப்பாட்டில் –-இப்பாட்டில் –சாங்க்யத்தில்-தத்வ சங்க்யானக்ரமத்தால்-ஆத்ம ஸ்வரூபத்தை சொல்லும்படியைச் சொல்லிற்று-

4 — நித்யத்வ -அநித்யத்வங்களையும்-மின்னின் நிலையிலே மன் உயிர் ஆக்கைகள்-1-2-2- -என்றும் –
உள்ளதும் இல்லதும் -1-2-8–என்றும் சித் அசித் தத்வங்களின் நித்யத்வ -அநித்யத்வங்களையும்-

மின்னின்‌ நிலையில மன்னுயிர்‌ ஆக்கைகள்‌” (திருவாய்மொழி 1-1-2), “உள்ளதும்‌ இல்லதும்‌”(திருவாய்மொழி 1-2-8) என்று ஆத்மாவினுடையவும்‌ அசித்தினுடையவும்‌ நித்யத்வாநித்யத்வங்களையும்‌,

மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை யுன்னுமின் நீரே –
1-2-2-நெடும் காலம் பழகின விஷயங்களை விட ஒண்ணுமோ -என்னில் அஸ்த்ரத்வாதி தோஷங்களை அனுசந்திக்கவே விடுகை எளிது என்கிறார்–மின்னுக்கு உள்ள நிலையும் இல்லை-சம்பதஸ் ஸ்வப்ன சங்காசா யௌவனம் குஸூமோபமம் தடிச்சஞ்சலமாயுச்ச கஸ்ய ச்யாஜ்ஜா நதோ த்ருதி –-அது தோற்றி நசிக்கும்-இது கர்ப்பத்தில் நசிக்கும்-தோற்றின போதே மாயக் கடவதாய் இருப்பதொரு வ்யவஸ்தை உண்டு அதுக்கு-இது சில நாள் இருக்கிலும் இருக்கும் -அஸ்திரம் என்று ஹிதத்தில் ப்ரவர்த்திக்க ஒட்டாது -ஸ்திரம் என்று விச்வசிக்கப் பண்ணி நசிக்கும் –

இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு
எல்லையில் அந்நலம் புல்கு பற்று அற்றே
 –1-2-4–நச்வரமான அசேதனத்தின் ஸ்வ பாவமும் –
ஏக ரூபனான சேதனன் படியும் இன்றிக்கே இருக்கும் அவன் ஸ்வ ரூபம்-இல்லது என்று துச்சத்வம் இத்யாத்வங்களை சொல்லுகிறது அன்று -நச்வரதையைச் சொல்லுகிறது-உள்ளது என்று அஸ்தித்வ மாத்ரத்தை சொல்லுகிறது அன்று -நித்யதையைச் சொல்லுகிறது

5–நியந்தருத்வத்தையும்-உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்து-1-1-7- -என்றும் –
கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்து -1-1-19–என்றும்
சேதன அசேதன சரீரியாய் நின்றனர்-1-1-6- -இத்யாதிப் படியே அவற்றின் சகல பிரவ்ருத்தி நிவ்ருத்திகளும் ஸ்வ ஆதீனம் ஆகும் படி இருக்கிறவனுடைய நியந்தருத்வத்தையும்-

உடல் மிசை உயிரெனக்‌ கரந்து எங்கும்‌ பரந்துளன்‌’ (திருவாய்மொழி 1-1-7) என்றும்‌, “கரந்தசிலிடந்தொறும்‌ இடந்திகழ்‌ பொருடொறும்‌” (திருவாய்மொழி 1-1-10) என்றும்‌ அந்த சேதநாசேதநங்கள்‌ ஸரீரமாகத்‌ தான்‌ ஸரீரியாய்க்‌ கொண்டு “நின்றனர்‌” (திருவாய்மொழி 1-1-6) இத்யாதி யாலே ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள்‌ ஸ்வாதீநமாம்படி இருக்கிற அவனுடைய நியந்த்ருத்வத்தையும்‌

திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7—சரீரத்தில் ஆத்மாவைப் போலே தாரகனுமாய் -நியந்தாவுமாய் -சேஷியுமாய் பூத இந்த்ரிய அந்தகரண புருஷாக்யம்ஹி யஜ்ஜகத் ச ஏவ சர்வ பூதாத்மா விஸ்வ ரூபோ யதோஸ் அவ்யய–கரந்து-வ்யாப்த பதார்த்தங்களுக்குத் தெரியாமே-எங்கும் பரந்து
உள்ளும் புறமும் வியாபித்து-இவை யுண்ட சுரனே-பிரளய தசையில் இவற்றை சம்ஹரித்த சர்வேஸ்வரன்

நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றும் ஓர் இயல்வினர் என நிலனைவரியவர்
என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே
 –1-1-6-ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள் பகவத் சங்கல்ப அதீனைகள் என்று சாமா நாதி கரண்யத்திலே சொல்லுகிறது –

பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன்
பரந்த வண்டமிதென நில விசும்பு ஒழிவறக்
கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே –
1-1-10—கரந்த சிலிடம் தொறும்- அதி ஷூத்ர சரீரங்களிலும்-இடம் திகழ் பொருள் தொறும்-தத் அந்தர்வர்த்திகளாய் ஸ்வயம் பிரகாசமான ஆத்மாக்கள் தோறும்-கரந்து–அன்யைரத்ருஷ்டனாய் இருக்கை-எங்கும் பரந்துளன்-இப்படி சமஸ்த வஸ்துக்களிலும் வியாபித்து இருக்கும்

6 -அவனுடைய சௌலப்யத்தையும்-பத்துடை அடியவர்க்கு எளியவன் -1-3-1–என்றும் –
பல பிறப்பாய் எளிவரும் இயல்வினன் -1-3-2- -என்றும் ஆசா லேசம் உடையாரை பற்றவும் அவதார பிரயுக்தமாகவும் உண்டான அவனுடைய சௌலப்யத்தையும்-

பத்துடை யடியவர்க்கு எளியவன்‌ (திருவாய்மொழி 1-3-1) என்றும்‌, “பல பிறப்பாய்‌ எளிவருமியல்வினன்‌ ‘ (திருவாய்மொழி 1-3-2) என்றும்‌ ஆஸா லேஸமுடையவர்க்கு ஸுலபன்‌ என்றும்‌, அவதரித்து ஸுலபனாயென்றும்‌ சொல்லுகிற அவனுடைய ஸெளலப்‌ யத்தையும்‌, 

பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே
 –1-3-1–பத்து -பக்தி -பத்து என்று பக்தியைக் காட்டுமோ -என்னில் எட்டினோடு இரண்டு என்னும் கயிற்றினால் மனம் தனைக் கட்டி -என்னக் கடவது இறே பக்தி சப்தத்தால் இங்கு பர பக்த்யாதிகளைச் சொல்லுகிறது அன்று – பக்த்யுபக்ரமான அத்வேஷ மாத்ரத்தைச் சொல்லுகிறது தாழ்ந்தாருக்கு முகம் கொடுக்கும் என்கிற குண பிரகரணம் ஆகையாலே
உடை – இம்மாத்ரத்தைக் கனக்க யுடைமையாகச் சொல்லுகிறது –விண்ணுளாரிலும் சீரியர் -என்று இங்கே பகவத் அனுபவம்-பண்ணுவாரை நித்ய ஸூரிகளுக்கும் அவ்வருகாக நினைத்து இருக்கும் பகவத் அபிப்ராயத்தாலே –

எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில பல பிறப்பாய்
ஒளி வரு முழு நலம் முதலில கேடில வீடாம்
தெளிதரு நிலைமையது ஒழிவிலன் முழுவதும் இறையோன்
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே 
–1-3-2—பத்துடை அடியவர்க்கு -என்று -சோபாதிகம் அன்று இவன் எளிமை -ஜலத்துக்கு சைத்யம் போலே ஸ்வ பாவ சித்தம் எளிமையை இயல்வாக யுடையவன்-பல பிறப்பாய் – வேதம் சொல்லிலும் –பஹூதா விஜாயதே -என்னும் அத்தனை – தான் சொல்லிலும் –பஹூநிமே -என்னும் அத்தனை – உட்புக்க தம் போல்வார் சொல்லிலும் –என்நின்ற யோநியுமாய் பிறந்தாய் -என்னும் அத்தனை – பிறப்பாய் – பரார்த்தமாக தாழ நின்றோம் என்று தம் பக்கலிலும் புரை இன்றிக்கே இருக்கை –என்னக் கடவது இறே

7 -சாம்யத்தையும்-பற்றிலன் ஈசன் முற்றவும் நின்றனன் –1-2-6–என்று அவனுடைய ஆஸ்ரணியத்வே சாம்யத்தையும்-(போற்றார் உயிரினும் போற்றுநர் உயிரினும் மாற்றே மாற்றல் இலையே நினக்கு
மாற்றோரும் இலர் கேளிரும் இலர் எனும் வேற்றுமை இன்றது போற்றுநர்ப் பெறினே–பரிபாடல் -4-51/54-)

முற்றவும்‌ நின்று” (திருவாய்மொழி 1-2-6) என்று ஆஸ்ரயணீயத்வே ஸர்வஸமனாய்‌ நின்றானென்று சொல்லப்பட்ட அவனுடைய ஸாம்யத்தையும்‌,

பற்றிலன் யீசனும் முற்றவும் நின்றனன்
பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே –
1-2-6-பற்றிலன் பற்று -உண்டு சங்கம் –-அத்தை வாசஸ் ஸ்தானமாக யுடையவன் –பற்றிலன்-பற்று இலான்-பற்றிலே உள்ளான் -என்னவுமாம் -சங்க ஸ்வ பாவன் -என்றபடி –யீசனும் – ஈஸ்வரனும் ஈஸ்வரத்வத்தை தவிர்க்க ஒண்ணாமை யாலே கிடக்கும் அத்தனை இஸ் சங்கம் குணம் ஆகைக்காகக் கிடக்கிறது பயப்படுகைக்கு உடல் அன்று-பிரசாத பரமௌ நாதௌ முற்றவும் நின்றனன்–சமோஹம் சர்வ பூதேஷு -என்கிறபடியே ஆஸ்ரயணீத்வே சர்வ சமானாய் இருக்கை

8 -அஹங்கார தோஷத்தையும்-நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து -1-2-3–என்று
சம்சார ஹேது அதுவே சொல்லுகையாலே –அஹங்கார தோஷத்தையும்-

நீர் நுமதென்றிவை வேர்முதல்‌ மாய்த்து” (திருவாய்மொழி 1-2-3) என்று அஹங்கார தோஷத்தையும்‌,

நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து இறை
சேர் மின் உயிர்க்கு அதன் நேர் நிறையில்லே
–1-2-3—நீர் நுமது -என்று அனர்த்த கரமான அஹங்கார மமகாரங்களை-நான் என்னது -என்னும் அர்த்தத்தை பிறர்க்கு உபதேசிக்கப் புக்கால் -நீங்கள் என்றும் உங்களது என்றும் இறே சொல்லுவது-அதாகிறது -அனாத்மயாத்மா புத்தியும் அஸ்வே ஸ்வ த்வய புத்தியும்-நான் என்னது — என்னில் நா வேம் இறே-அனாத்மன்யாத்ம புத்திர்யா அச்வேஸ் வமிதி யாமினி அவித்யாதரு சம்பூதி பீஜமேதத் த்விதாஸ்திதம்-என்று சம்சார பீஜத்தையும்
அச்யுதாஹன் த்வாச்மீதி சைவ சம்சார பேஜஷம் என்று பரிகாரத்தையும் சொல்லிற்று இறே –இவை வேர் முதல் மாய்த்து- இவற்றை சவாசனமாகப் போக்கி-இது அக்னி நா சிஞ்சேத்-போலே துஷ்கரம்
இவை நேராக விடும் போது பகவத் விஷயத்தைப் பற்றி விட வேணும் அவனைப் பற்றும் போது இவற்றை விட்டு அல்லது பற்ற ஒண்ணாது-ஆகையாலே இதரே தராஸ் ராயக்ரச்தம்
ஆனால் இதற்குப் பொருள் என் -என்னில் -ஆச்சார்ய சேவையாலும் சாஸ்திர அப்யாசத்தாலும் இவை அபுருஷார்த்தம் என்று அத்யவசிக்கை இரண்டு வ்ருஷம் சேர நின்றால்-ஒன்றிலே குட்டமிட்டுப் பெருங்காயத்தை வைத்தால் மற்றையது நிற்க இது க்ரமத்தால் உலர்ந்து போமா போலே -இந்த ஜ்ஞானம் பிறந்தால் இவை ஸ்வ கார்யம் செய்ய மாட்டாது-பீஜான் யக் ந்யுபதக்தானி -இத்யாதி
ரஷகன் அவசர ப்ரதீஷனாய் இருக்க இவன் பக்கலிலே விலக்காமை யுண்டானால் விரோதி போகிக்கு தட்டில்லை என்கை –

9 -இந்திரிய பலத்தையும்-விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம் புலன்-7-1-6- -என்று இந்திரிய பலத்தையும்-

விண்ணுளார்‌ பெருமாற்கு அடிமை செய்வாரையும்‌ செறும்‌ ஐம்புலன்‌” (திருவாய்மொழி 7-1-6) என்று இந்த்‌ரிய பலத்தையும்‌,

விண்ணுளார் பெருமாற் கடிமை செய்வாரையும் செறும் ஐம்புலனிவை
மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால்?
பண்ணுளாய்!கவி தன்னுளாய்!பத்தி யினுள்ளாய்! பரமீசனே! வந்தென்
கண்ணுளாய்! நெஞ்சுளாய்! சொல்லுளாய்!ஒன்று சொல்லாயே.–7-1-6—அயர்வறும் அமரர்கள் அதிபதிக்கு அவர்களோடே கூட அடிமை செய்ய ருசி உடையாரையும் விஷயங்களில் மூட்டி நலியும் இந்திரியங்கள் இவை -விரக்தனான விச்வாமித்ரனையும் கைங்கர்ய ருசி உடைய மஹாராஜரையும் கூட நலிந்து இ றே -விண்ணுளாராய்-சர்வ ஸ்வாமி யாய் இருக்கிறவனுக்கு அடிமை செய்ய வேணும் என்று இங்கே வரிலும் -எனக்கு என்னப் பண்ணும் இந்திரியங்கள் -பெரிய திருவடி பிராட்டிமாரையும் தேவரையும் நான் வஹித்தேன்-என்றான் இறே 

10 -மனோ பிரதான்யத்தையும்-மனத்தை வலித்து -5-1-4-என்று மனோ நியமத்தின் சொல்லுகையாலே மனோ பிரதான்யத்தையும்-

என்றும்‌ ஏத்துதல்‌ மனம்‌ வைம்மினோ” (திருவாய்மொழி 3-6-3) என்று மந: ப்ராதாந்யத்தையும்‌

என் கொள்வன் உன்னை விட்டு என்னும் வாசகங்கள் சொல்லியும்
வன் கள்வனேன் மனத்தை வலித்துக் கண்ண நீர் கரந்து
நின் கண் நெருங்க வைத்தே எனது ஆவியை நீக்க கில்லேன்
என் கண் மலினம் அறுத்து என்னைக் கூவி அருளாய் கண்ணனே –5-1-4—மனத்தை வலித்து-
விஷயங்களின் நின்றும் மனசை நிவர்ப்பித்து -நான் இந்திரிய ஜெயம் பண்ண நினைக்கை யாவது -அவன் என்னை மேலிடுகை -இந்திரியாணி பிரமாதீ நீ ஹரந்தி பிரசபம் மன-

பரவி வானவர் ஏத்த நின்ற பரமனைப் பரஞ்சோதியைக்
குரவை கோத்த குழகனை மணி வண்ணனைக் குடக்கூத்தனை
அரவம் ஏறி அலைகடல் அமருந் துயில் கொண்ட அண்ணலை
இரவும் நன் பகலும் விடாது என்றும் ஏத்துதல் மனம் வைம்மினோ.–3-6-3-எப்போதும் ஏத்துகையிலே மனசை வைக்க அமையும் -தானே கொண்டு முழுகும் -பின்னை உபதேசிக்க வேண்டா –

11 -கரண நியமனத்தையும்-உள்ளம் உரை செயல் உள்ள விம் மூன்றையும் உள்ளிக் கெடுத்து -1-2-8–என்று கரண நியமனத்தையும்-

உள்ள முரை செயல்‌ உள்ள விம்‌ மூன்றையும்‌ உள்ளிக் கெடுத்து” (திருவாய்மொழி 1-2-8) என்று கரண நியமநத்தையும்‌,

உள்ளம் உரை செயல் உள்ள விம்மூன்றையும்
உள்ளிக் கெடுத்து
இறை உள்ளில் ஒடுங்கே –1-2-8—மநோ வாக் காயங்கள் உரை செயல் அன்று -தத் ஆஸ்ரயமான கரணங்களை நினைக்கிறது – உள்ள இன்று தேட வேண்டா -சம்பன்னமாய் இருக்கை
விம்மூன்றையும் சந்நிஹதங்களும் விதேயங்களுமான இம்மூன்றையும் இவற்றுக்கு அவ்வருகே ஓன்று தேட வேண்டா -இவையே அமையும் –ஈச்வராய நிவேதிதும் -என்று நிரூபித்தால் பகவத் விஷயத்தில் சமர்ப்பிக்கைக்காக வாய் இருக்கும்-கெடுத்து-அவற்றுக்கு உண்டான பாஹ்ய விஷய ப்ராவண்யத்தைத் தவிர்த்து

12 -ஸூஹ்ருதி பேதத்தையும் –பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்-4-1-1– -என்கையாலே ஆர்த்தனான பிரஷ்டை ஐஸ்வர்ய காமன் இறுகல் இறப்பு-4-1-10– என்னும் -என்கையாலே ஜிஜ்ஞாசுவான கேவலன் –-குணம் கோள் நிறை புகழ் மன்னர் -4-1-8–இத்யாதியாலே
அர்த்தார்த்தியான அபூர்வ ஐஸ்வர்ய காமன்-திரு நாரணன் தாள் காலம் பெற சிந்தித்து உய்ம்மின்-4-1-1- -என்கையாலே ஜ்ஞாநியாகிற பகவத் சரணார்த்தி -என்கிற ஸூஹ்ருதி பேதத்தையும் –

பெருநாடு காண இம்மையிலே பிச்சை தாம்‌ கொள்வர்‌” (திருவாய்மொழி 4-1-1) என்கையாலே ஆர்த்தனாகிற ப்‌,ரஷ்டைஸ்வர்ய காமன்‌, இறுகலிறப்பென்கையாலே ஜிஜ்ஞாஸுவான கேவலன்‌, ‘குணங்கொள்‌ நிறைபுகழ்மன்னர்‌’ (திருவாய்மொழி 4-1-8) இத்யாதியாலே அர்த்தார்த்தியான அபூர்வைஸ்வர்ய காமன்‌ “திரு நாரணன்‌ தாள்‌ காலம் பெறச்‌ சிந்தித்துய்ம்மினோ” (திருவாய்மொழி 4-1-1) இத்யாதியாலே சொல்லப்பட்ட ஜ்ஞாநியாகிற பகவச் சரணார்த்தி என்கிற ஸுக்ருதி பேதத்தையும்‌,

பெருநாடு காண இம்மையிலே பிச்சை தாம்‌ கொள்வர்‌” (திருவாய்மொழி 4-1-1) என்கையாலே ஆர்த்தனாகிற ப்‌,ரஷ்டைஸ்வர்ய காமன்‌, இறுகலிறப்பென்கையாலே ஜிஜ்ஞாஸுவான கேவலன்‌, ‘குணங்கொள்‌ நிறைபுகழ்மன்னர்‌’ (திருவாய்மொழி 4-1-8) இத்யாதியாலே அர்த்தார்த்தியான அபூர்வைஸ்வர்ய காமன்‌ “திரு நாரணன்‌ தாள்‌ காலம் பெறச்‌ சிந்தித்துய்ம்மினோ” (திருவாய்மொழி 4-1-1) இத்யாதியாலே சொல்லப்பட்ட ஜ்ஞாநியாகிற பகவச் சரணார்த்தி என்கிற ஸுக்ருதி பேதத்தையும்‌,

ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ.–4-1-1-முன்பு ராஜாக்கள் தங்களைக் காண அவசரம் பெறாதே நிற்கும் படி இருந்தவர்கள் இருந்ததே குடியாக திரண்டு காணும் படி–தாங்கள் சம்ருத்தராய் வாழ்ந்த தேசத்தில் உள்ளார் எல்லாரும் காணும் படி இம்மையிலே தாங்கள் ஜீவித்த ஜென்மத்திலே பிச்சை தாம் கொள்வர்-முன்பு ராஜாக்களுக்கு ராஜ்யம் வழங்கும் – இன்று பிக்ஷை தனக்குத் தேட்டமாய் இருக்கும் – முன்பு ராஜாக்கள் ரத்நாதிகளை பச்சையாகக் கொண்டு வந்தால் அநாதரித்து இருக்குமவனுக்கு பிக்ஷை திட்டமான படி முன்பு ராஜாக்கள் கொண்டு வந்த பச்சையை ஆள் இட்டு இறே வாங்குவது இப்போது இவன் அபேக்ஷையே போக்கி இடுவார் இல்லை-

குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம் விட்ட
இறுகல் இறப்பெனும் ஞானிக்கும் அப்பயன் இல்லையேல்,
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்; பின்னும் வீடு இல்லை,
மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில், வீடு அஃதே.–4-1-10—இந்த சங்கோசத்தையும் மோக்ஷமாக நினைத்து இருக்கும் ஞான நிஷ்டனுக்கும்-இறுகல்-பகவத் அனுபவத்தைப் பற்ற தமக்கு சங்குசிதமாய் இருக்கை-இறப்பு -மோக்ஷம்-அப்பயன் இல்லையேல்,– எம்பெருமானை சுபாஸ்ரயமாக பற்றா விடில் ஆத்ம அனுசந்தானம் பண்ண ஒண்ணாது-இவர் தாம் பிரயோஜனமாக நினைத்து இருக்கிறதை யாயிற்று அவன் ஆத்ம ப்ராப்திக்கு சாதனமாகப் பற்றுகிறது

குணங்கொள் நிறை புகழ் மன்னர் கொடைக்கடன் பூண்டிருந்து
இணங்கி உலகு உடன் ஆக்கிலும்,
ஆங்கு அவனை இல்லார்
மணங்கொண்ட போகத்து மன்னியும் மீள்வர்கள்; மீள்வு இல்லை;
பணங்கொள் அரவணையான் திரு நாமம் படிமினோ.–4-1-8—குணவான்களாய் குண வத்தா பிரதையையும் உடையராய் இருக்கை-குணவான் ஆகிலும் அப்ராப்தான் ஆகில் உபேக்ஷிப்பார்கள்
மன்னர் -அபிஷிக்த ஷத்ரிய புத்ரராகை-பிறப்பித்தார் ஆகிலும் கிட்டுவார் இல்லையே லுப்தனாகில்
கொடைக்கடன் பூண்டிருந்து–கொடுக்கையே ஸ்வ பாவமாய் இருப்பது -உதாரமாய் கொடை வழங்கினாலும் மேன்மை பாவித்து இருக்குமாகில் பொருத்தம் இன்றிக்கே இருக்கும் இறே
இணங்கி-எல்லோரோடும் பொருந்தி வர்த்திக்கை-உலகு உடன் ஆக்கிலும்,-லோகத்தை தங்களோடு சேர்த்துக் கொண்டார்களே யாகிலும் –ராமோ ராஜ்யம் உபாசித்தவா -என்னக் கடவது இறே-ஆங்கு அவனை இல்லார் அவன் பிரசாதம் அடியாக பெறாதார்க்கு ராஜ்யம் தான் கிடையாது

13 -தேவ அசுர விபாகத்தையும்-அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் –5-2-5–என்றும் , நண்ணா அசுரர் –நல்ல அமரர் -10-7-5–என்று தேவ அசுர விபாகத்தையும்-

“தேவர்கள்‌ தாமும்‌ புகுந்து அரக்கரசுரர்‌ பிறந்தீருள்ளீரேல்‌” (திருவாய்மொழி 5-2-5) என்று தேவாஸூர விபாகத்தையும்‌,

செய்கின்ற தென் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்ற திவ்வுலகத்து
வைகுந்தன் பூதங்களே யாய் மாயத்தினால் எங்கும் மன்னி
ஐயம் ஒன்றில்லை அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்
உய்யும் வகை இல்லை தொண்டீர் ஊழி பெயர்த்திடும் கொன்றே.–5-2-5-அஸூர ராக்ஷஸரான நீங்கள் மனுஷ்ய வேஷத்தை கொண்டு பிறந்து கலந்து திரிகிறீர் உள்ளீர் ஆகில் -சுக சாரணர்களை போலே கடல் கரையில் ஒற்றுப் பார்க்க வந்தவர் குரங்கு வடிவைக் கொண்டு –

நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–10-7-5-விபரீதஸ்ததா அஸூர -என்கிறபடியே விபரீதரான அஸூரர்கள் இஸ் ஸம்ருத்தி பொறுக்க மாட்டாமையாலே முடியவும் –கிட்டக் கடவோம் அல்லோம் -என்று இருக்கும் அஸூர வர்க்கம் —-நல்ல அமரர் பொலிவு எய்தவிஷ்ணு பக்தி பரோ தேவ -என்கிறபடியே அநந்ய பிரயோஜனரான வைஷ்ணவர்கள் -இதுவே ஜீவனமாக சம்ருத்தமாகவும் –தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன் -என்றார் இறே

14 -விபூதி யோகத்தையும்-புகழு நல் ஒருவன் -3-4-1–என்றும் –-நல் குரவும்-6-3-1- -என்றும் – மாயா வாமனன்-7-8-1- -என்றும் – இவைகளில் விபூதி யோகத்தையும்

புகழு நல்லொருவனென்கோ திருவாய்மொழி 3-4-1) என்று தொடங்கி ‘நல்குரவும்‌ செல்வும்‌” (திருவாய்மொழி 6-3-1 “மாயா வாமனனே” (திருவாய்மொழி 7-8-1 என்கிற திருவாய்மொழிகளிலே சொல்லப்பட்ட விபூதி யோகத்தையும்‌,

புகழு நல் ஒருவன் -3-4-தாம் முன்பு பிரார்த்தித்த அடிமை கொள்ளுகைக்காக எம்பெருமான் தன்னுடைய சர்வாத்ம பாவத்தை காட்டி அருளக் கண்டு பகவத் குணங்களோ பாதி விபூதியும் ததீயத்வ ஆகாரேண உத்தேச்யம் ஆகையால் பூதங்களையும் பவ்திகங்களையும்அசாதாரண விக்ரகத்தையும் மாணிக்யாதி ஸ் ப்ருஹணீய பதார்த்தங்களையும் -போக்யமான ரஸ்யமான பதார்த்தங்களையும் செவிக்கு இனிய காநாதி சப்த ராசிகளையும் மோஷாதி புருஷார்த்தங்களையும் ஜகத்துக்கு பிரதானரான ப்ரஹ்ம ருத்ராதிகளையும் ஜகத்துக்கு எல்லாம் காரணமான ப்ரக்ருதி புருஷர்களை விபூதியாக உடையனாய் அந்த சரீர பூதமான விபூதியில் ஆத்ம தயா வியாபித்து ததகத தோஷை ரசம்ஸ்ப்ருஷ்டனான மாத்திரம் அன்றிக்கே ஸ்ரீ யபதியாய் இருந்துள்ள எம்பெருமானை -இவனுக்கு தகுதியாய் இருக்கிற படியையும் அனுசந்தித்து பகவத் குண அனுசந்தானம் பண்ணினால்- கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் என்னும் கணக்கால் காயிகமான அடிமையில் ஷமர் இல்லாமையாலும் -கோவை வாயாளில் படியே எம்பெருமான் இவர் தாம் பேசின பேச்சை எல்லா அடிமையுமாக கொள்ளுவான் ஒருவன் ஆகையாலும்
விபூதி வாசகமான சப்தம் விபூதி முகத்தால் அவனுக்கு பிரதிபாதகம் ஆகையாலும் விபூதி விஷயமான சப்தத்தோடு நாராயணாதி நாமங்களோடு வாசி அற்று இருக்கிற படியால் அவற்றைச் சொல்லும் சொல்லாலே சர்வ சப்தங்களாலும் அவனைச் சொல்லி –வாசகமான அடிமையில் பிரவ்ருத்தர் ஆகிறார்

நல் குரவும்-6-3--நாம் சேராத வற்றை எல்லாம் சேர்த்து ஆள வல்லோம் காணும் -என்று தன் விருத்த விபூதி கத்வத்தைக் காட்டக் கண்டு -முன்பு பிரிவாலே வந்த அவசாதத்துக்கு உதவிற்றிலன் -என்று வெறுத்தவர் -சர்வ கதனாய்-தத்கத தோஷ ரசம் ஸ்ப்ருஷ்டனாய் ஸமஸ்த கல்யாண குணாத்மகனான இவனே நமக்கு ப்ராப்யமும் ப்ராபகமும் மற்றும் உள்ள சர்வ வித பந்துவும் என்று அவன் பெருமையை அனுபவித்து ப்ரீதராய் கொண்டு பேசுகிறார்

மாயா வாமனன்-7-8–-எனக்கு இத்தோடு பொருந்தாமை யுண்டாய் உன்னை ஒழியச் செல்லாமை யுண்டாய் இருக்க -முடியும் விரகு இன்றியிலே உன்னைப் பெற்று தரிக்கவும் பெறாதே இங்கே வைத்த ஆச்சர்யம் இருந்த படி என் என்ன -அவனும் ஒன்றைக் கேட்க ஒன்றை பரிஹரிப்பாரை போலே
-இவ்வளவோ என் படி -என்று தன் விசித்திர விபூதி த்வத்தை காட்டி அருளக் கண்டு -இது விஸ்மயமாய் இருந்ததீ -இது இருந்த படி என்

15 -விஸ்வரூப தர்சனத்தையும் –-நீராய் நிலனாய் தீயாய் காலாய் நெடுவானாய் சீரார் சுடர்கள் இரண்டாய் சிவனாய் அயனாய் –6-9-1–என்று விஸ்வரூப தர்சனத்தையும் –

“நீராய்‌ நிலனாய்த்‌ தீயாய்க்‌ காலாய்‌ நெடுவானாய்‌ சீரார்‌ சுடர்களிரண்டாய்ச்‌ சிவனாய்‌ அயனானாய்‌” (திருவாய்மொழி 6-9-1) என்று விஸ்வரூப தர்ஸனத்தையும்‌

நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்
கூரார் ஆழி வெண்சங் கேந்திக் கொடியேன்பால்
வாராய்! ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே.
–6-9-1-நீராய் நிலனாய் என்கிற அசித் பதார்த்தத்தோடு -சிவனாய் அயனாய் -என்கிற ஈஸ்வர அபிமானிகளோடு வாசி அற்று இருக்கிற தாயிற்று ஈஸ்வர பாரதந்தர்யம் –இப்படி ஜகதா காரதையைக் காட்டி தன்தோமேயென்ன-அது போராது -அசாதாரண விக்ரஹத்தை காட்ட வேணும் என்கிறார்

16 -சாங்க பக்தியையும்-வணக்குடை தவ நெறி வழி நின்று புற நெறிகளை கட்டு உணக்குமின் பசையற-1-3-5-என்றும் – மேவித் தொழுது உய்மினீர்கள் வேதப் புனித விருக்கை நாவில் கொண்டு அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமை-5-2-9-என்றும் – மாலை நண்ணி –காலை மாலை –கமல மலர் இட்டு-தொழுது எழுமினோ -9-10-1–என்றும் –சாங்க பக்தியையும் –

வணக்குடைத்‌ தவநெறி வழிநின்று புறநெறிகளைகட்டு உணக்குமின்‌ பசையற அவனுடை உணர்வுகொண்டுணர்ந்தே” (திருவாய்மொழி 1-3-5) என்றும்‌, “நன்றெனநலம்‌ செய்வது அவனிடை” (திருவாய்மொழி 1-3-7) என்றும்‌ “மேவித் தொழுதுய்ம்மினீர்கள்‌ வேதப் புனிதவிருக்கை நாவில்‌ கொண்டச்சுதன் தன்னை ஞானவிதி பிழையாமே” (திருவாய்மொழி 5-2-9) என்று அங்க ஸஹிதமான பக்தி யோகத்தையும்‌,

பிணக்கற வறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த
கணக்கற நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புறநெறி களை கட்டு
உணக்குமின் பசையற வவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே 
–1-3-5—வணக்கத்தை யுடைய பக்தி மார்க்கம் ஆகிற வழியிலே நிலை நின்று -பக்தி சரீரத்திலே மாம் நமஸ் குரு என்கையாலே–வணக்குடை – என்கிறது தபஸ் சப்தத்தாலே பக்தியைச் சொல்லிற்று – பக்தி ஜ்ஞான விசேஷம் ஆகையாலே –யஸ்ய ஜ்ஞான மயந்தப -என்கிற ந்யாயத்தாலே என்னுதல் இவனுடைய பிரேம மாத்ரத்தையே குவாலாக நினைத்து இருக்கும் அவன் அபிப்ராயாத்தாலே யாதல் –புற நெறிகளை கட்டு
இதுக்கு விரோதியான சப்தாதி விஷயங்களில் போகிற வழி யாகிற களையைக் கடிந்து பறித்து
இத்தை நெறி என்பான் என் என்னில் இருந்ததே குடியாகப் போகிற மஹாதபம் ஆகையாலே -துர்மார்க்கம் என்னக் கடவது இறே –

ஓன்று என பலவென வறிவரும் வடிவினுள் நின்ற
நன்ற எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து
நன்றென நலம் செய்வது அவனிடை நம்முடைய நாளே 
–-1-3-7-அவன் பக்கலிலே அநந்ய பிரயோஜன பக்தியைப் பண்ணப் பாருங்கோள்-நம்முடை நாளே-க்ரமத்திலே செய்கிறோம் என்று இராதே சரீரத்தின் உடைய நிலை இல்லாமையைப் புத்தி பண்ணி சடக்கென ஆஸ்ரயியுங்கோள்

மேவித் தொழுது உய்ம்மின்னீர்கள் வேதப் புனித இருக்கை
நாவிற் கொண்டு அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமே

பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழும் அடி யாரும் பகவரும் மிக்கது உலகே.–5-2-9-அநந்ய பிரயோஜனராய் தொழுது உஜ்ஜீவியுங்கோள் -வேதத்தில் விபூதி விஷயமாக சொன்னவை அன்றிக்கே -பகவத் குணங்களையும் வடிவு அழகையும் ப்ரதிபாதியா நின்றுள்ள ஸ்ரீ புருஷ ஸூக்தாதிகளை நாக்கிலே கொண்டு –-அச்சுதன் தன்னை – அஹ்ருதயமாக சொன்னதை ஹ்ருதயமாக நினைத்து -நத்யஜேயம் -என்னுமவன் -அகவாய் பாராதே யுக்தி மாத்ரத்தைக் கொண்டு நழுவ விடாதவனை-ஞான விதி பிழையாமே--வேதங்களில் பிரதிபாதிக்கிற பக்தி மார்க்கம் தப்பாமே –ஞானம் என்று ஞான விசேஷமான பக்தியைச் சொல்லுகிறது 

மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக்
காலை மாலை கமல மலர் இட்டு
நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே–9-10-1-சர்வேஸ்வரன் திருவடிகளைக் கிட்டி ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கப் பாருங்கோள்-ஆஸ்ரயணீயத்துக்கு கால நியதி இல்லை -என்கிறது -ஆதி நடுவந்திவாய் -என்கிறபடியே சர்வ காலத்துக்கும் உப லக்ஷணம் –சர்வ புஷ்ப்பங்களுக்கும் உப லக்ஷணம் -நீங்கள் விரும்பின பிராகிருத த்ரவ்யமே அமையும் என்கை –நீர்-அதிகாரிகளும் முன்புத்தை நீங்களே யமையும்

17 –18 –இரண்டு வகையான பிரபத்தியும் உபதேசிக்கையாலே-அவனுடை உணர்வு கொண்டு உணர்ந்து -1-3-5–என்று அவன் அருளி செய்த பிரபத்தி ரூப ஞானத்தை சகாயமாக கொண்டு அத்தை அறிந்து என்கையாலே – பக்தி அங்கத் வேனவும் – மற்று ஓன்று இல்லை-9-1-7–என்றும் – சரணமாகும் -9-10-5-என்கிற வற்றால் ஸ்வதந்திர வேனேவும் – இரண்டு வகையான பிரபத்தியும் உபதேசிக்கையாலே

“சரணமாகும்‌ தனதாளடைந்தார்க்‌ கெல்லாம்‌” (திருவாய்மொழி 8-10-5) என்றும்‌ “மற்றொன்றில்லை” (திருவாய்மொழி 9-1-7) என்கிற பாட்டிலும்‌ சொல்லப்பட்ட ப்ரபத்தி த்‌வைவித்‌யத்தையும்‌

பிணக்கற வறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த
கணக்கற நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புறநெறி களை கட்டு
உணக்குமின் பசையற வவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே 
–1-3-5-தத் உக்த ஜ்ஞானம் -தத் விஷய ஜ்ஞானம் என்னுதல் – அவனை விஷயீ கரித்த ஜ்ஞானத்தைக் கொண்டு -விலஷண விஷயத்திலே நெஞ்சை வைத்து -இவற்றின் தோஷத்தை தர்சித்து விடுங்கோள்–அவனை சரணம் புக்கு இவற்றை சவாசனமாக விடுங்கோள் எனவுமாம்

மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர் க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ

குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன் வடமதுரைப் பிறந்தான்
குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே–9-1-7—மற்று ஓன்று இல்லை -இத்தோடு ஓக்க வேறு எண்ணலாவது இல்லை -என்னுதல் -இப்போது இத்தைச் சொல்லி வேறு ஒரு போது வேறு ஒன்றை சொல்லுகிறான் என்று இருக்க வேண்டா என்னுதல் –-சுருங்கச் சொன்னோம்-இது தன்னையும் பரப்பு அறச் சொன்னோம் -பிரதிபத்திக்கு அவிஷயமாம் படி அன்றியே ஸூ க்ரஹமாகச் சொன்னோம்
மா நிலத்து -இதுக்கு அதிகாரிகள் சம்சாரத்திலே -இவ்வர்த்தத்துக்கு அண்ணியார் பரமபதத்தில் உள்ளார்கள் ஆகிலும் உபதேசத்துக்கு அதிகாரிகள் சம்சாரிகள் என்கை –-எவ் உயிர் க்கும்-இது அதிக்ருதா அதிகாரம் அன்று -சர்வாதிகாரம் – சிற்ற வேண்டா -ஆயாசிக்க வேண்டா -சிற்றுதல் -சிதறுதலாய் -பரக்க வேண்டா என்கை – சிந்திப்பே அமையும்கண்டீர்கள் அந்தோ-யுக்தி நிரபேஷமாக சிந்தா மாத்திரமே அமையும் கிடி கோள் – அந்தோ-இவ்விலக்ஷண விஷயத்தை இழப்பதே -என்னுதல் -இது ஸூ லபம் என்றால் காற்கடைக் கொள்ளுகைக்கு உறுப்பாவதே என்னுதல் –

சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்
தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே–9-10-5-ஜென்மத்தாலும் வ்ருத்தத்தாலும் ஞானத்தாலும் குறைய நின்றாரே யாகிலும் -தன் திருவடிகளை உபாயமாகப் பற்றினார்க்கு எல்லாம் ரக்ஷகனாம் -கீழ் மூன்று பாட்டாலும் சொன்ன பக்தி யோகம் அதிக்ருதாதிகாரம்-இதில் சொன்ன பிரபத்தி -சர்வாதிகாரம் -என்கிறது –

ஏதத் பிரதி பாத்யர்த்த சாம்யத்தைக் கொண்டு-மாயோன் அன்று ஓதிய வாக்கு–நான்முகன் –71 -என்கிற
ஸ்ரீ கீதை உடன் ஒக்க சொல்லப் படும் என்கை ..

ஆக இவ்வர்த்த விஸேஷங்களை ப்ரபந்தத்திலே ப்ரதிபாதிக்கக்‌ காண்கையாலே “மாயன்‌ அன்றோதிய வாக்கை” (நான்முகன்‌ திருவந்தாதி 71) என்கிற ஸ்ரீ கீதையோடொக்கும்‌ என்கிறார்‌

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற -மாயன் அன்று
ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில்
ஏதிலாராய் மெய்ஞ்ஞானம் இல்-71-—எம்பெருமான் தன்னை ஆஸ்ரயிக்கைக்கு – ஆஸ்ரிதர்க்கு பவ்யனாய் அணியனாயும்- அநாஸ்ரிதர் எட்ட ஒண்ணாத படி மிகவும் பெரியனாய்க் கொண்டு
சேயனாய் -அதி தூரஸ்தனாயும் இருக்கும்-கிருஷ்ணனுமாய் ஸ்ரீ மத் த்வாரகைக்கு அதிபதியுமாய் நிற்கும் பெருமையை யுடையானவன் –அன்று அருளிச் செய்த ஸ்ரீ கீதையை அப்யசியார்-உலகத்திலேதிலராய்-லோகத்தில் அந்யராய் ஒரு நன்மைகளை யுடையார் அன்றிக்கே என்றுமாம்
மெய் ஞானமில் – மெய்யான ஞானம் இல்லை –

பிரபத்தி த்வை இத்யாதிகளாலே -என்கிற இடத்தில்-ஆதி -சப்தத்தாலே ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மாமேதி சோர்ஜுனா–4-9-என்றார் போலே
இவை பத்தும் வல்லார் அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அம் சிறை-1-3-11- -என்று
சொன்ன அவதார ரஹச்ய வைபவம் – பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி –
ததஹம் பக்த்வுபஹ்ருத மஸ்நாமி பிரயதாத்மன
-9-26– என்றார் போலே – பிரிவகை இன்றி நன்னீர் தூயப் புரிவதுவும் புகை பூ-1-6-1–என்று சொன்ன அவன் ஸ்வ ஆராதத்தை முதலாக கீழ் அனுக்தங்களையும் – தேக ஆத்மா அபிமானிகளை க்ரமத்திலே பிராப்ய சாதனங்களின் எல்லையில் மூட்டுகையும் – சாத்யோ உபாயங்களில் பரந்து சித்தோ உபாயத்தை மறைத்து உபதேசிக்கும் இடத்தில்
வைபவம் தோற்ற வெளி இடுகையுமான வற்றையும் நினைக்கிறது .

ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத:
த்யக்த்வா தேஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோऽர்ஜுந
–4-9-எனது தெய்வத்தன்மை கொண்ட பிறப்பும் செய்கையும் இங்ஙனமென்பதை உள்ளபடி யுணர்வோன்-உடலைத் துறந்த பின்னர் மறுபிறப்பு எய்துவதில்லை. அர்ஜுனா! அவன் என்னை எய்துகிறான்.

அமரர்கள் தொழுது எழு அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே
–1-3-11-சிறையில் இருந்த ராஜகுமாரன் தலையிலே அபிஷேகத்தை வைத்து பின்னை சிறையை வெட்டி விடுவாரைப் போலே நித்ய ஸூரிகள் வரிசையைக் கொடுத்து பின்னை சம்சார அஞ்சிறையை கழிக்கும் ஈஸ்வரன் ஆதி வாஹிகரோடு விரஜையில் சென்று ஸூஷ்ம சரீர விதூ நனம் பெறுவார்-

பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி
ததஹம் பக்த்யுபஹ்ருதமஸ்நாமி ப்ரயதாத்மந-
9-26-இலையேனும், பூவேனும், கனியேனும், நீரேனும் அன்புடனே எனக்கு அளிப்பவன் ஆயின், முயற்சியுடைய அன்னவன் அன்புடன் அளித்ததை உண்பேன் யான்.

பரிவதில் ஈசனைப் பாடி –விரிவது மேவலுறுவீர்
பிரிவகையின்றி நன்னீர்த் தூயப் –புரிவதும் புகை பூவே
–1-6-1-பரிவதில் ஈசனைப்-ஹேய ப்ரத்ய நீகனான சர்வேஸ்வரனை-பரிவு என்று துக்கமாதல் -பஷபாதம் ஆதல் –-உபாசகனுக்கு துக்கேன ஆஸ்ரயிக்க வேண்டியிருக்குமதுவும் -ஆஸ்ரயணீயனுக்கு ஹேயம்- குருவாக ஆஸ்ரயித்தன் பக்கலிலே பஷபதித்து -லகுவாக ஆஸ்ரயித்தன் பக்கலிலே நெகிழ்ந்து இருத்தல் செய்யுமதுவும் ஆஸ்ரயணீய வஸ்துவுக்கு ஹேயம்–இவை இல்லாமையாலே ஹேய ப்ரத்ய நீகன்-என்கை–ஹேய ப்ரத்ய நீகதை புக்க விடத்தே கல்யாண குணங்களும் புகக் கடவதாகையாலே இது அதுக்கும் உப லஷணம்
ஈசனை – இவன் இடுவதில் குறையுள்ளது தன் குறையாம் படி இருக்கிற சம்பந்தத்தைச் சொல்லுகிறது –இழவு பேறு தன்னதாம் படி இருக்கும் சம்பந்தத்தை யுடையவனை-ஆஸ்ரயணீயனும் ப்ராப்யனும் ஆகையிறே-உபய வாக்யத்திலும் நாராயண சப்த பிரயோகம் பண்ணிற்று-அல்லாதார் துராராதர் ஆகையாலே அநாஸ்ரயணீயர் –

–——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌ -9 –ஸ்ரீ ஸூக்தி வைப ,வ பாதம்-14 –பகவத் அநுபவ ப்ரீதி காரித ஸ்ரீ முக, ஸூக்தயதி கரணம்‌– (187 -188)-ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

July 26, 2026

1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 284 முடிய (48)

(1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-284 (27)

9 –ஸ்ரீ ஸூக்தி வைப ,வ பாதம் -ஒரே அதிகரணம் 187–188—மொத்தம் –2-ஸூரணைகள்
14 –பகவத் அநுபவ ப்ரீதி காரித ஸ்ரீ முக, ஸூக்தயதி கரணம்‌– 187 -188-மொத்தம் –2-ஸூரணைகள்-

இத் திருப்பதிகளில் பிராவண்யம் இவர்க்கு உண்டாய்த்து எப்போது ? இவர் தாம் பிரபந்தம் அருளி செய்யத் தொடங்கிற்று எத்தனை திரு நஷத்த்ரத்து அளவில் ? இது தனக்கு போக்த்ரு நியமமுண்டோ ?
இதின் போக்யதை தான் இருக்கும் படி எங்கனே ? என்னும் ஆ காங்க்ஷையில் அருளிச் செய்கிறார் மேல்

இவற்றில் பிராவண்யம் இவள் பரமே என்ன உண்டாய் ஷோடசகலா பூரணமான சந்திர மண்டலம் போலே பதினாறு நஷத்ரம் நிரம்பினவாறே தேவ போக்யமானவதில் அம்ருதம் போல் அன்றிக்கே என்னாத் தமிழர் இசைகாரர் முதற் பத்தர் வானவர் என் அம்மான் பார் பர வென்னும் படி சேஸ்வர விபூதி போக்யமான பாலோடு அமுதன்ன மென் மொழி முகம் செய்தது–சூரணை -187-

(இத் திருப்பதிகளில் பிராவண்யம் இவர்க்கு உண்டாய்த்து எப்போது ?–-இவற்றில் பிராவண்யம் இவள் பரமே என்ன உண்டாய்
இவர் தாம் பிரபந்தம் அருளி செய்யத் தொடங்கிற்று எத்தனை திரு நஷத்த்ரத்து அளவில் ?–ஷோடசகலா பூரணமான சந்திர மண்டலம் போலே பதினாறு நஷத்ரம் நிரம்பினவாறே –
இது தனக்கு போக்த்ரு நியமமுண்டோ ?–தேவ போக்யமானவதில் அம்ருதம் போல் அன்றிக்கே என்னாத் தமிழர் இசைகாரர் முதற் பத்தர் வானவர் என் அம்மான் பார் பர வென்னும் படி சேஸ்வர விபூதி
இதின் போக்யதை தான் இருக்கும் படி எங்கனே ?-பாலோடு அமுதன்ன மென் மொழி)

அதாவது-இவ் அர்ச்சாவதார ஸ்தலங்களிலே ப்ராவண்யம் –இவள் பரமே என்ன உண்டாய்–முலையோ முழு முற்றும் போந்தில –பெருமான் மலையோ திரு வேம்கடம் என்று கற்கின்ற வாசகம் இவள் பரமே –திருவிருத்தம் -60–என்னும் படி பருவம் நிறம்புவதர்க்கு முன்னே உண்டாய் — பதினாறு கலைகளாலும் பரி பூர்ணமான சந்திர மண்டலம் போலே பதினாறு நஷத்ரம் பூர்ணமான வாறே–தேவ போக்யமானவதில் அம்ருதம் போல் அன்றிக்கே-அதாவது-கிருஷ்ண பஷே அமரைஸ் சஸ்வத் பீயதே வை ஸூதாமய–ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-11-22-என்கிறபடியே தேவர்களுக்கு போக்கியம் ஆகையாலே -போக்த்ரு நியமம் உடைத்தான அந்த சந்திர மண்டல அம்ருதம் போல் அன்றிக்கே — பொருந்தா வானுறை நாள்களை நாள் தொறும் புணர்வோன் அருந்த வானவர்க்கு ஆரமுது அன்புடன் அளிப்போன்-வில்லி பாரதம் ஆதி பர்வம்-என்னாவில் இன் கவி –திருவாய் -3-9-1-என்றும் -( இத்தால் ஆழ்வாருக்கும் இதன் இனிமை சொல்லி ) பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரம் –திருவாய் -1-5-11–என்றும் –தூ முதல் பத்தர்க்கு–திருவாய் –7-9-3- -என்றும் -(இவற்றால் கற்பவர்களுக்கு இனிமை )
கேட்டாரார் வானவர்கள்–திருவாய் -10-6-11- -என்றும் –-தென்னா வென்னும் என்னம்மான் -என்றும் -திருவாய் -10-7-5–பார் பரவின் கவி–திருவாய் -7-9-5- -என்றும் சொல்லுகிறபடி ஸ்வ பர விபாகம்-ஸூரி சம்சார விபாகம்–ஈச ஈசி தவ்ய விபாகம் அற- ஈஸ்வரனோடே இரண்டு விபூதியும் புஜிக்கைக்கு யோக்யமாய் –பாலோடு அமுதன்ன ஆயிரம்–திருவாய் -8-6-11– -என்றும் – அமுத மென்மொழி–திருவாய் –5-6-2- -என்கிறபடியே வாச்ய வாசக சம்ச்லேஷ ரசத்தால் -பாலும் அமுதும் கலந்தால் போலேயாய் –
போக்யத அதிசயத்தாலும் – புஜித்தார்க்கு நித்யத்வத்தை கொடுக்கையாலும் – அம்ருத சமமாய் –
அதில் வ்யாவ்ருத்தமான மார்த்வத்தை உடைத்தான சப்தம் இவர் முகோத்கதமாய்த்து
என்கை-

இவற்றில்‌ ப்ராவண்யம்‌ இவள்பரமே என்ன வுண்டாய்‌) இத் திருப்பதிகளில்‌ நிற்கிற நிலையில்‌ இவர்க்கு உண்டான ப்ராவண்யம்‌ “பெருமான்‌ மலையோ திஸ்ருவேங்கடமென்று கற்கின்ற வாசகம்‌ இவள்‌ பரமே” (திருவிருத்தம்‌ 60) என்று நிஷேதகரும்‌ ஆஸ்சர்யப்படும்படி உண்டாய்-பதினாறு கலையும்‌ நிறைந்தால்‌ சந்த்‌ரன்‌ பூர்ணனாமாப் போலே இவரும்‌ திருவவதரித்தவன்று தொடங்கி …… த்தோடே யிருந்து பகவதநுபவத்தைப்‌ பண்ணி அந்த பகவதநுபவத்தாலே பூர்ணராய்க்‌ கொண்டு பதினாறு திருநக்ஷத்ரம்‌ நிரம்பினவாறே அந்த சந்த்‌ரன்‌ பக்கலுண்டான அம்ருதம்‌ தேவர்களுக்கே போக்யமாகையாலே அதிக்ருதாதிகாரமுமாய்‌ அந்த சந்த்‌ரனுக்கு வ்ருத்‌தி ஷயமுண்டாகையாலே பூர்ணனான காலத்திலல்லது கிடையாமையாலே ஸக்ருத் ஸேவ்யமுமாய்‌ தேஹத்தைப்‌ பூண் கட்டுமதாகையாலே ஸம்ஸார வர்த்தகமாயிருக்கும்‌ அது போலன்றிக்கே -(என்னாத்‌ தமிழர்‌ இத்யாதி மென்மொழி முகம் செய்து ) என்நாவிலின் கவி (திருவாய் -3-9-1) என்னுமா போலே தமிழர் இசைகாரர்‌ பத்தர் பரவும் ஆயிரம் (திரு -1-5-11) என்றும் தூ முதல் பத்தருக்குத் தான் தன்னைத் சொன்ன (திருவாய் -7-9-3) என்றும் கேட்டாரார் வானவர்கள் (திரு 10-6-11) என்றும்‌-தென்னா வென்னுமென்னம்மான்‌”  (திருவாய்மொழி-10-7-5) என்றும் பார்பரவின்கவி’ (திருவாய்மொழி 7-9-5) என்றும்‌ சொல்லுகிறபடியே  தம்மோடு பிறரோடு ஈஸ்வரனோடு வாசியற ஸர்வஜந போக்‌யமாகையாலே ஸர்வாதிகாரமுமுமாய்‌ அந்த சந்த்‌ரனைப்‌ போலே விருத்‌தி க்ஷயங்களின்றிக்கே காதல்‌ கடல்புரைய” (திருவாய்மொழி 5-3-4) ‘ காதல்‌ (கடலின்‌) மிகப்‌ பெரிது”(திருவாய்மொழி 7-3-6) “அதனில்‌ பெரிய என்னவா” (திருவாய்மொழி 10-10-10) என்கையாலே விருத்‌தியேயாய்‌, ஸதா போக்‌யமுமாய்‌, “உயிரின்‌ மேலாக்கை ஊனிடை யொழிவிக்குமே” (திருவாய்மொழி 3-2-11 என்று மாம்ஸாஸ்ருகாதி மயமான ஸரீர ஸம்பந்தத்தை யறுத்து ஸம்ஸார நிவர்த்தகமாமளவே யன்றிக்கே மேலை வைகுந்தத்து இருத்தும்‌” (திருவாய்மொழி 8-6-11) என்று அப்ராக்ருத திவ்யதேஸ ப்ராப்தியையும்‌ பண்ணித் தரவற்றான “பாலோடமுதன்ன வாயிரம்‌(திருவாய்மொழி 8-6-11) என்றும்‌ “அமுதமென்மொழி‘ (திருவாய்மொழி 6-5-2) என்றும்‌ சொல்லுகிற படியே அம்ருத ரூபமாய்‌ அதிலும்‌ அதிமார்த்தவத்தை யுடைத்தான சொற்களாலானவை முகோத்கமாயிற்றின’ என்கிறார் –

முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே
 – 60–அல்லாத அவயவங்களினுடைய-நிரம்பாமையைச் சொல்லி வைத்து  இதனுடைய பெருமையைச் சொன்னால் விரூபமாகாதோ -என்று ஜீயர் கேட்க –இதிலும் சிறுமையே காணும் சொல்கிறது –இங்கனே சொல்லலாவது தானும்  இன்று -(பால்யத்தில்)-நாளை-இது தானும் சொல்லப் போகாது -என்று அருளிச் செய்தார் — இப்படி விசதமாக பார்க்கிறது இந்த பால்யத்தில்-இத்தனை –யௌவனம் குடி புகுந்தால் ஒறுக்கிப் பார்க்குமது ஒழிய இப்படி நன்றாகப் பாராள் –ஆகையால் இதுவும் பால்யத்துக்கு ஸூசகம் என்றபடி-உண்மையில் நாயகி யவ்வன பருவத்தை அடைந்து இருந்தும் அன்பு மிகுதியால் இவளது இளமையை தோற்றுகிறது-

சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ!
என் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனா என்று வண்டு முரல் திரு வேங்கடத்து
என் ஆனை என் அப்பன், எம்பெருமான் உளனாகவே.–3-9-1—என் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்-யஸ் யை தே தஸ்ய -என்கிறபடியே தம்மைப் போலே தம்முடைய நாவும் அவனுக்கு அநந்யார்ஹ சேஷம் -என்கிறார் – நாப்படைத்த கார்யம் கொண்டேன் நான் ஒருவனுமே யன்றோ -என்கிறார் –இவள் இராப்பகல் வாய் வெரீஇ -என்னும் படியான நா விறே-இன்கவி – அவனுக்கு இனிதாகை யாலே தமக்கும் இனிதாய் இருக்கிறபடி –-சேஷிக்கு இனிதான வழியாலே தனக்கு இனிதாகை இ றே -சேஷத்வத்தினுடைய எல்லை-யான்-அநந்யார்ஹ சேஷ பூதனான நான்
ஒருவர்க்கும் கொடுக்கிலேன்-அத்யந்த பரதந்த்ரமாக சொல்லி வைத்து கொடுக்கிலேன் என்பான் என் என்னில் -அவன் தான் இத்தாலே அநேகம் பெற்றானாய் இருக்கையாலே புறம்பு கொடேன் என்கையாலே இங்குத்தைக்கே அநந்யார்ஹம் என்கை கொடுக்கிலேன் -கொடுக்க ஷமன் அல்லேன்-

மாலே மாயப் பெருமானே மா மாயனே என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே –-1-5-11—பாலேய் தமிழர்-பாலோடு ஒத்து உள்ள தமிழ் அறிவார்-இசைகாரர்-இசை அறிவார்-பத்தர் பரவும்-சர்வேஸ்வரனும் ஆழ்வாருமான பரிமாற்றத்திலே கால் தாழ்ந்து இருக்குமவர்கள்-பாலேய் தமிழர் -என்கிறது முதல் ஆழ்வார்களை
இசைகாரர் -என்கிறது ஸ்ரீ மதுர கவிகள் போல்வாரை பத்தர் -என்கிறது பெரியாழ்வார் போல்வாரை
ஸ்ரீ பராங்குச நம்பி -ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் பிள்ளை யுறங்கா வல்லி தாசர் போல்வர் என்னுமாம் -ஆழ்வான் ஓர் உருவிலே
பரவும் ஆயிரத்தின் அக்ரமாக கூப்பிடுகை-

ஆ முதல்வன் இவன் என்று தன் தேற்றி என்
நா முதல் வத்து புகுந்து நல் இன்கவி
தூமுதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்
வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ!–7-9-3—தூமுதல் பத்தர்க்குத்-அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூ ரிகளும் -கேட்டாரார் வானவர்கள் -என்கிறபடியே வித்தராம் படி என்னுதல் -சம்சாரத்தில் தலையான முமுஷுக்கள் என்னுதல்-தான் தன்னைச் சொன்ன-என்னை உபகரணமாகக் கொண்டு -கர்த்தாவும் தானேயாய் -கர்மீபவிப்பானும் தானே யானான்-என்-வாய் முதல் அப்பனை-எனக்கு வாய்த்த -காரண பூதனான -உபகாரகனை-

காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே–10-6-11—பாட்யே கே யே ச மதுரம் -என்கிறபடியே இசையோடு புணர்ப்புண்ட தமிழ்த்தொடை –நித்ய ஸூ ரிகள் இத்தைக் கேட்டால் பர்யாப்தர் ஆகார் -இப்பாடுகிறது உள்ளீடானவன் சீலத்தாலேயே என்னில் –பாசுரத்துக்காக என்கிறது –ஸம்ஸ்ரவே மதுரம் -என்கிறபடியே செவியே தொடங்கி ரசிக்கும்-செஞ்சொல்லே–-நினைவும் சொல்லும் செயலும் ஒருபடிப் பட்ட சொல்லு -சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினால் -ஏன்னா செந்தமிழ் பத்தும் என்றார் இறே –

நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–10-7-5—ப்ரீதிக்குப் போக்கு வீடாக ஆளத்தி வையா நின்றான் –ஏதத் சாம காயன் நாஸ்தே-என்று பகவத் லாபத்தில் ப்ரீதிக்கு போக்குவிட்டு சேஷ பூதன் சொல்லக் கடவத்தை –அவாக்ய அநாதர –என்கிற தான் ப்ரீதி பிரகரஷத்தாலே அந்த பூர்த்தி குலைந்து சொல்லுகிறான் இறே –என் அம்மான் –ஸூத வசனம் ரசிக்குமா போலே சம்பந்தம் இறே ரசிகைக்கு அடி –திரு மால் இரும் சோலையானே-இவரைக் கவி பாடுவித்த தேசம் திருமலை யாய்த்து –

சீர் கண்டு கொண்டு திருந்து நல் இன் கவி
நேர்பட யான் சொல்லும் நீர்மை இலாமையில்
ஏர்வுஇலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைப்
பார் பரவு இன் கவி பாடும் பரமரே.–7-9-5--விசேஷஞ்ஞரோடு அவிசேஷஞ்ஞரோடு வாசி அற எல்லாரும் வாய் புலற்றும் படியான இனிய கவி என்னுதல் –பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரம் -என்கிறபடியே யாதல் –-பரமரே.நதத் சமச்சாப்யதி கச்ச த்ருச்யதே -என்கிற பிரமாணம் கொண்டு அறிய வேண்டா -என்னை இட்டுக் கவி பாடுவித்துக் கொண்ட இத்தைக் கொண்டே பரத்வம் நிச்சயித்துக் கொள்ளலாம்-

சோலைத் திருக் கடித் தானத்துறை திரு
மாலை மதிட் குருகூர்ச் சடகோபன் சொல்
பாலோடு அமுதன்ன ஆயிரத்திப் பத்தும்
மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே-8-6-11-பாலோடு அமுது அன்ன ஆயிரம் என்னுதல் -இப்பத்து என்னுதல் -வாஸ்ய வாசகங்கள் யுடைய சேர்த்தி இருக்கிற படி –பால் என்கிறது –சோலை திருக் கடித்தானத்து உறை-திருமால் என்கிற வாஸ்யத்தை –அமுது என்கிறது சடகோபன் சொல் என்கிற வாசகத்தை -இது ஆளவந்தார் நிர்வாஹம் –

குமுறுமோசை விழவொலித் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
அமுத மென்மொழி யாளை நீர்உமக் காசை யின்றி அகற்றினீர்
திமிர்கொ டாலொத்து நிற்கும் மற்றிவள் தேவ தேவபிரான்என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர்மல்க நெக்கொசிந்து கரையுமே.–6-5-2—இவள் பேச்சைக் கேட்டால் போன உயிரும் மீளுமாயிற்று –மென் மொழிஅம்ருதத்தில் வியாவ்ருத்தி-ஸ்ரவண யோக்யமாய் இராதே அம்ருதம்மதுரா மதுரா லாபா என்று இவள் பேச்சைக் கேட்க ஆசைப்பட்டு இருக்குமவன் பெற்றுப் போனான் -நீங்கள் ஆசை இல்லாமையால் அகற்றினி கோள் -தம் தாமுக்கு அனர்த்தத்தை தாம் தாமே விளைத்துக் கொள்ளுவார் உண்டோ -அகற்றுகை யாவது –அகலும் படி பண்ணினி கோள் என்கை –அதாவது இவ் ஊரில் புக்க பின்பு இவர்களோடு வார்த்தை சொல்லாத தவிர்ந்தாள் யாயிற்று-

ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னை சொல் நீர்படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனி நம் கண்ணன்
தோழீ! கடியனே?–5-3-4—ஊரார் பழியும் -தாயார் ஹித வசனமும் -கேளாத படியான காதல் –அமர்ந்த காதல் -தர்ம அனுபந்தியான காதல் -பெரிதான அமரை விளைத்த காதல் -உஊராரை பூசல் ஆக்கின காதல் என்னவுமாம் –ஈரம் -சங்கம் -காதல் -காமம் –சங்காத் சஞ்சாயதே காம –கடல் புரைய விளைவித்த-அப்ரமேயோ மஹா த-என்ற கடல்தி ஒப்பாம் அத்தனை -கிடையா விடினும் விட மாட்டாத காதல் என்கை-கடல் புரைய என்றார் முதல் -அநந்தரம் கடலின் மிகப் பெரிதால் என்றார் –பின்னை மண்டிணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -என்றார் –முடிவில் அதனில் பெரிய என் அவா -என்றார் -இது இறே காதல் பெருகின படி -இது இறே பொய் நின்ற ஞானத்திற்கு பின்பு இவ்வளவும் வர விளைத்துக் கொண்ட கார்யம் –காரமர் மேனி –எருவும் நீரும் உண்டானாலும் வர்ஷம் வேணும் இ றே -வ்ரஷூக வலாஹம் போலே சிரமஹரமான வடிவு-நம் கண்ணன்
விரூபனானாலும் விட ஒண்ணாத பவ்யதையை-இவ்வடிவும் பவ்யதையும் யாயிற்று புறம்பு உள்ளோரோட்டை தொக்கை அறுத்ததும் -அபரிச்சின்னமான காதலை விளைத்ததும் –நம் கண்ணன் -கிருஷ்ணன் என்றால்பெண்களுக்கு கையாள் என்று பிரசித்தம் இறே-

காலம் பெற என்னைக் காட்டுமின்கள் காதல் கடலின் மிகப் பெரிதால்
நீல முகில் வண்ணத்து எம்பெருமான் நிற்கு முன்னே வந்தென் கைக்கும் எய்தான்
ஞாலத்தவன் வந்து வீற்றிருந்த நான் மறை யாளரும் வேள்வி ஓவாக்
கோலச் செந்நெற்கள் கவரி வீசும் கூடு புனல் திருப் பேரெயிற்கே.–7-3-6—காதல் கடல் புரைய விளைவித்த என்ற அளவு அன்று -மடலூரப் புக்க போது விலக்கினவர்கள் தாங்களே கொண்டு போய் காட்ட வேண்டும் தசை இறே இது -அதுக்கு ஹேது என் என்ன –நீல முகில் வண்ணத்து எம்பெருமான்-நிற்கு முன்னே வந்து -சிரமஹரமான வடிவை காட்டி யாயிற்று ஆசையை வளர்த்தது -அவன் காதலுக்கு கிருஷி பண்ணா நிற்க என்னால் ஸ்த்ரீத்வத்தை நோக்கி இருக்கப் போமோ-

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10–தத்வ த்ரயத்தையும் விளாக் குலை கொண்டு அது குளப்படி யாம்படி பெரிதான என்னுடைய அபி நிவேசத்தை -அதிலும் பெரிய உன்னுடைய அபி நிவேசத்தைக் காட்டி வந்து சம்ச்லேஷித்தாயே -என்னுடைய கூப்பீடும் ஒருபடி போம்படி பண்ணுவதே –அங்கே பரதம் ஆரோப்ய முதித பரிஷஸ்வஜே -என்று மீண்டு புகுந்து ஸ்ரீ பரத ஆழ்வானை மடியிலே வைத்து உச்சி மோந்து உகந்தால் போலே யாய்த்து இவருடைய விடாயும் கெடும்படி வந்து கலந்தது–

சோலைத் திருக் கடித் தானத்துறை திரு
மாலை மதிட் குருகூர்ச் சடகோபன் சொல்
பாலோடு அமுதன்ன ஆயிரத்திப் பத்தும்
மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே-8-6-11-
-இப்பத்தும் –வியந்து — மேலை வைகுந்தத்து இருத்தும் –சம்சாரத்தில் இத்தை அப்யசிப்பான் ஒருவன் உண்டாவதே என்று விஸ்மயப்பட்டு-சர்வாதிகமான பரம பதத்தில் கொடு போய் வைக்கும் –மாயக் கூத்தன் நடையாடாத தேசத்திலே வைத்து -ஒரு நாளும் பிரியாத அனுபவத்தை கொடுக்கும்

உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக்
குயில்கொள் சோலைத் தென்குருகூர்ச் சடகோபன்
செயிர்இல்சொல் இசைமாலை ஆயிரத்துள் இப்பத்தும்
உயிரின்மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே.–
3-2-11—-செயிர் -குற்றம் -இல் -இல்லாமை -ஆக நிர்த்தோஷமான சப்த சந்தர்ப்பத்தை உடைய ஆயிரம்-இப் பத்துக்கு குற்றம் இல்லாமை யாவது -எங்கு இனித் தலைப் பெய்வன் -என்று மெய்யாய் இருக்கை உயிரின்மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே.–
சரீர சம்பந்த ஹேதுவான கர்மத்தைப் போக்கும் –

இவர் பக்கல் பிரபந்தம் அவதரிக்க தொடங்கின காலத்தை அருளிச் செய்தார் கீழ் .. இது தான் அவதரிக்கிற அளவில் -இப்படி நாம் அவனைக் கவி பாட வேணும் -என்று சங்கல்ப்பித்து இருந்து பாடினாரோ -என்னும் ஆ காங்க்ஷையில் இதின் அவதரண க்ரமத்தை அருளிச் செய்கிறார் மேல் -இப்படி போக்‌யமான ஸப்த ப்ரவ்ருத்தி மாத்ரமே யன்றிக்கே பரபக்தி ப்ரேரிதமாய்க்‌ கொண்டு அந்த ஸப்‌த ஸந்தர்ப்ப ரூபமான ப்ரபந்தமாய்க்‌ கொண்டு அவதரித்ததென்கிறார்‌.-

அதாவது-நீர் பாலாய்–பால் நெய்யாய் –நெய் அம்ருதமாய் -அத்தாலே நிரம்பினதோர் ஏரி
பொறாமல் நெளித்து உடையுமா போலே —-மயர்வற மதி நலம் அருளினன்
-1-1-1–என்கிற இடத்தில்
கர்ம ஞான அனுக்ருஹீதையான பக்தியின் ஸ்தானத்திலே -பகவத் பிரசாதமாய் — அது அடியாக பர பக்தி தொடங்கி – பிறக்கையாலே -ஞானம் முதலிலே பர பக்தி ரூபமாய் – பர பக்தி ஆனது பர ஞானமாய் –பர ஞானம் பரம பக்தியாய் – அச்யுத பக்தி தத்வ ஜ்ஞான அம்ருதாப்தி பரிவாஹ ஸூபைர் வாசோபி -ஸ்தோத்ர ரத்னம் -3-என்கிறபடியே – அந்த பர பக்தியாதிகளாய் நிறைந்த ஜ்ஞானம் ஆகிற அம்ருதாப்தி யானது –ஆஸ்ரயம்-அழியாமல் -பரீவாக அபேஷை பிறந்து –நிமியும் வாயோடு கண்கள் நீர் மல்க —திருவாய் -6-5-2–என்கிறபடி –நெளிகிற வாய் கரையிலே – மிடைந்த சொல் தொடை –திருவாய் -1-7-11–என்கிறபடியே – சொற்கள் தான் நாம் இங்குத்தைக்கு கிஞ்சித் கரித்தோம் ஆக வேணும் -என்று
என்னைக் கொள் என்னைக் கொள் –என்று மேல் விழுகையாலே -நெருங்கிக் கொண்டு – மொழி பட்டோடும் கவி அமுதம் –திருவாய் -8-10-5–என்கிற படியே வசன ரூபமாய் பிரவஹித்து இப்படி
பரபக்த்யாத்ய அவஸ்தா த்ரயாபன்ன பக்தி ப்ரேரிதமாய் அவதரிக்கையாலே –-அவாவில் அந்தாதிகள் இவை ஆயிரமும் -திருவாய் -10-10-11-– என்று பக்தி பலாத்காரத்தாலே பிறந்த அந்தாதியான ஆயிரம் என்று நிரூபகமாம் படியாய்த்து என்கை —

(நீர்பால்‌ நெய்யமுதாய்‌) நீர்‌ பாலாய்‌, பால்‌ நெய்யாய்‌, நெய்‌ அம்ருதமாய்‌, அவ் வம்ருதத்தாலே நிரம்பினதோர்‌ ஏரி நெளிக்குமா போலே, ஜ்ஞாநம்‌ பக்தியாய்‌, பக்தி பரபக்தியாய்‌, பரபக்தி பரஜ்ஞாநமாய்‌, பரஜ்ஞாநம்‌ பரமபக்தியாய்‌ “அச்யுத பக்திதத்த்வ ஜ்ஞாநாம்ருதாப்‌தி, பரிவாஹ ஸூபை ர்‌ வசோபி:,” (ஸ்தோத்ர ரத்நம்‌ 3) என்கிறபடியே அந்த பரபக்த்யாதிகளாலே நிறைந்திருப்பதொரு ஜ்ஞாநாம்ருதாப்‌தியானது (நிமிகிற வாய்க்கரை மிடைந்து) பரீவாஹாபேககை பிறந்து “நிமியும்‌ வாய்‌” (திருவாய்மொழி
6-5-2) என்கிற வாய்க்கரையை “மிடைந்த சொல்‌ தொடை” (திருவாய்மொழி 1-7-11)
என்கிறபடியே நெருக்கி அதிக்ரமித்து “மொழிபட்டோடும்‌ கவியமுதம்‌”(திருவாய்மொழி 8-10-5 என்று சொற்களாய்க்‌ கொண்டு ப்ரவஹித்து (அவாவிலந்தாதிஎன்று பேர்‌ பெற்றது) ‘அவாவிலந்தாதிகளால்‌ இவையாயிரமும்‌” (திருவாய்மொழி-10-10-19 என்று பரபக்த்யாதிகளாலே “சொல்லப்பட்ட ஆயிரம்‌” (திருவாய்மொழி-8-10-11) என்று லோகத்திலே ப்ரஸித்‌த மாய்த்தென்கிறார் –

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே 
–1-1-1-மயர்வு -அஜ்ஞானம் -இத்தால் ஜ்ஞான உதய -அந்யதா ஜ்ஞான -விபரீத ஜ்ஞான ரூபமான அஜ்ஞானத்தைச் சொல்லுகிறது-அற -சவாசனமாகப் போகும்படி
மதி நலம்-மதி என்று ஜ்ஞானம்-நலம் -என்று பக்தி -பக்தி ரூபாபன்ன ஜ்ஞானம் என்றபடி-அருளினன்
இத் தலையில் நன்மை தீமை பாராதே நிர்ஹேதுக கிருபையால் தந்து அருளினான்-முலைக் கடுப்பாலே தரையிலே பீச்சுமா போலே –எனக்குத் தந்து அருளினான் -என்னாது ஒழிந்தது -பகவத் விஷயீ காரத்துக்கு முன்பு தம்மை அசத் கல்பராக நினைத்து இருக்கையாலே-

பூயோ நமோ’பரிமிதாச்யுத பக்தி தத்வ
ஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹ ஶுபைர் வசோபி: |
லோகே’வதீர்ண பரமார்த்த ஸமக்ர பக்தி
யோகாய நாதமுநயே யமிநாம் வராய ||–3—பகவானிடத்தில் எல்லை இல்லாத பக்திக் கடலில் இருந்து பெருகிய மங்களகரமான வார்த்தைகள் மற்றும் உண்மை ஞானம் வந்து பிறந்ததைப் போலே இருப்பவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவரே சிறந்த குறிக்கோள்.-அவர் பூர்த்தியையும் பக்தி யோகத்தையுமுடையவர். யோகிகளில் சிறந்தவர். அவருக்கு மீண்டும் என் வணக்கங்கள்.

குமுறுமோசை விழவொலித் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
அமுத மென்மொழி யாளை நீர்உமக் காசை யின்றி அகற்றினீர்
திமிர்கொ டாலொத்து நிற்கும் மற்றிவள் தேவ தேவபிரான்என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர்மல்க நெக்கொசிந்து கரையுமே.–6-5-2—அந்த சீலவத்யையை சொல்லப் புக்கு தலைக் கட்ட மாட்டாதே உதடு நெளிக்கும்-உதடு நெளிக்கிற வாயோடு கண்ண நீர் மல்க –-நெக்கு -சிதலையுமாய் –-ஒசிந்து -பரவசையுமாய் –-கரையும் -நீராகா நின்றாள்-நெக்கொசிந்து கரையுமே.-பெரு வெள்ளத்தில் கரையானாது நெகிழ்ந்து ஒட்டு விட்டு ஒசிந்து பொசிந்து அவயவியாகாத படி கரைந்து போமா போலே அழிந்து போகா நின்றாள் -இப்படி இவள் கரையா நிற்க வன் நெஞ்சரான நாம் இதுக்கு பாசுரம் இடுவது மீட்க்கத் தேடுவது ஆகா நின்றோம் இறே-

குடைந்து வண்டுண்ணும் துழாய் முடியானை -அடைந்து தென்குருகூர்ச் சடகோபன்
மிடைந்த சொல்தொடை ஆயிரத்து இப்பத்து உடைந்து நோய்களை ஒடுவிக்குமே –-1-7-11-செறிந்த சொல் தொடையை உடைய-தனித் தனியே என்னைக் கொள் என்னைக் கொள்-என்று மேல் விழுந்த சொல் என்னவுமாம்–இப்பத்து தானே நோய்களை உடைந்தோடும் படி பண்ணும்-நோயாகிறது -ஷூ த்ர புருஷார்த்த ருசி-உடைந்து ஓடுகை-ஆஸ்ரயாந்தரங்களுக்கும் ஆகாதபடி உரு அழிகை

வழி பட்டு ஓட அருள் பெற்று மாயன் கோல மலர் அடிக்கீழ்
சுழி பட்டு ஓடும் சுடர்ச் சோதி வெள்ளத்து இன்புற்று இருந்தாலும்
இழி பட்டு ஓடும் உடலினில் பிறந்து தன் சீர் யான் கற்று
மொழி பட்டு ஓடும் கவி அமுதம் நுகர்ச்சி உறுமோ முழுதுமே–8-10-5-அவை உள் அடங்காமையாலே சொல்லாய் ப்ரவாஹியா நின்றுள்ள-கவி அமுதம்-நுகர்ச்சி உறுமோ முழுதுமே–திருவாய் மொழி யாகிற அம்ருதத்தை அனுபவிக்கையோடு ஒக்குமோ –

நல்ல கோட்பாட்டுலகங்கள் மூன்றின் உள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை அந்தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப்பட்ட வாயிரத்துள்
இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே–8-10-11-வேதம் போலே தான் தோன்றி அன்றிக்கே இருக்கை–இப்பத்தையும் அப்யஸிக்க வல்லார்கள்- -பாகவத சேஷத்வம் -அத்தோடு த்கார்ஹஸ்த்த்யத்தை நடத்துவார்கள் –-ச புத்ர பவ்த்ரஸ் ச கண என்கிறபடியே ச பரிகரமாக பாகவத சேஷத்வத்தை அனுபவிக்கக் கடவர்கள் –

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-–பக்தி பலாத்காரத்தாலே பிறந்த ஆயிரம் திருவாய் மொழியிலும் -இவரைச் சொல்லுவித்த அபி நிவேசம் -ப்ரேரகனான மைத்ரேயனுடைய ஸ்த்தானத்திலே நிற்கிறது யாய்த்து –பெற்று அல்லது தரிக்க ஒண்ணாத படியான பரம பக்தியால் பிறந்தது யாய்த்து -இத் திருவாய் மொழி -கீழ் அடைய பர பக்தி பிறந்து சொல்லிற்று யாயிற்று -பரம பக்தி பிறந்து சொல்லிற்று யாயிற்று இத் திருவாய் மொழி ––இவற்றை அறிந்தவர்கள் சம்சாரத்திலே பிறந்து வைத்தே நித்ய ஸூ ரிகளோடே ஒப்பர்கள் –

–——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌ -8–கு,ண பாதம் (156–186 )- 13- திவ்ய தேஸ -அர்ச்சாவதார விஸேஷ கு,ணாதி கரணம்‌– (159 —186)ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

July 26, 2026

1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 284 முடிய (48)

(1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-284 (27)

8–கு,ண பாதம் —156–186 மொத்தம் -31-ஸூரனைகள்
12 சதுர்தவ்த்யாதி, கரணம்‌ 156 –158—மொத்தம்-3–ஸூரனைகள்
13 திவ்ய தேஸ பா-அர்ச்சாவதார விஸேஷ கு,ணாதி கரணம்‌– 159 —186—மொத்தம்–28–ஸூரனைகள்

இப்படி அர்ச்சாவதாரத்தில் எல்லாம் பூர்ணம் ஆகில் எல்லா திருப் பதிகளிலும் எல்லா குணங்களும் ஒக்க பிரகாசிக்குமோ என்னும் ஆ காங்க்ஷையிலே பரத்வாதிகளுக்கு அசாதாரணாமாயும் -சாதாரணாமாயும் இருக்கும் குணங்களில் ஓர் ஒரோ குணம் ஒரோ திருப் பதியிலே பிரதான்யேந பிரகாசிக்கும் படியை – இவ் ஆழ்வார் அனுபவித்த திருப்பதிகள்-(30 ) தோறும் தர்சிப்பிக்கிறார் மேல்–அதில் பிரதமத்தில் பரத்வாதிகளுக்கு அசாதாரானாமான ஒரோ குணம் பிரதான்யேந பிரகாசிக்கும்
திருப்பதிகளை அருளிச் செய்யக் கோலி அகில திவ்ய தேச பிரதானமான கோயிலில் பிரகாசிக்கிற குணத்தை ஆதியிலே அருளிச் செய்கிறார் —அதில்‌ எல்லா ஸ்தலங்களிலும்‌ எல்லா குணங்களும்‌ பரிபூர்ணமே யாகிலும்‌ கோயில்‌ முதலான திவ்ய தேசங்களிலே பரத்வாதிகளுக்கு அஸாதாரணமான ஓரோ குணங்கள்‌ ப்ராதாந்யேந ப்ரகாஸிக்குமென்கிறார்‌-

வன்பெரு வானக முதலுய்ய இனிதாகத்‌ திருக் கண்கள்‌ வளர்கின்ற திருவாளன்‌ திருப்பதி, வடிவுடை, கடலிடம்‌, கட்கிலீ என்னுமவற்றில்‌ இவள்‌ திறத்தென் கொலோ வென்பிக்கிற வ்யூஹ ஸெளஹார்த்த ப்ரதாநம்‌.-சூரணை-159-

அதாவது-வன் பெரு வானகம் முதல் உய்ய –-வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய –பெருமாள் திருமொழி-1-10-என்று முதலில் ப்ரஹ்ம லோகத்தில் எழுந்து அருளி– பின்பு பூ லோகத்தில் எழுந்து அருளிய கட்டளையிலே – நைத்திக பிரளயத்துக்கு இளையாத ப்ரஹ்ம லோகம் முதலாக இவ் அருகு உண்டான உபரிதன லோகங்களும் அங்குள்ள ப்ரஹ்மாதிகளும் பூமியும் இங்குள்ள மனுஷ்யரும் உஜ்ஜீவிக்கும் படியாக —இனிதாகத் திருக் கண்கள் வளர்கின்ற திரு வாளன் திருப்பதி –-திரு வாளன் இனிதாக திருக் கண்கள் வளர்கின்ற திரு அரங்கம் -பெரியாழ்வார் -4-9-10-என்றும் –திருவாளன் திருப்பதி-பெரியாழ்வார் -4-8-10 -என்றும் சொல்லுகிற படி-திரு உள்ளம் உகந்து கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ யபதி உடைய திருப் பதியான கோயிலானது-

வன்பெரு வானகமுய்ய அமரருய்ய மண்ணுய்ய மண்ணுலகில்‌ மனிசருய்ய” (பெருமாள்‌ திருமொழி 1-10) என்று உபய விபூதியும்‌ உஜ்ஜீவிக்கும்படி “திருவாளன்‌ இனிதாகத்‌ திருக்கண்கள்‌ வளர்கின்ற திருவரங்கம்‌” (பெரியாழ்வார்‌ திருமொழி 4-9-10) என்றும்‌ “தென்னாடும்‌ வடநாடும்‌ தொழ நின்ற திருவரங்கம்‌ திருப்பதி” (பெரியாழ்வார்‌ திருமொழி 4-9-11) என்றும்‌ சொல்லுகிற ஸ்ரீய:பதியான ஸர்வேஸ்வரன்‌ திருவுள்ளமுகந்து கண் வளர்ந்தருகிற பெரிய திருப்பதியான கோயிலிலே,

வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய
துன்பம் மிகு துயர் அகல அயர் ஒன்றில்லா சுகம் வளர அக மகிழும் தொண்டர் வாழ
அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும் அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள்
இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும் இசைந்த உடனே என்று கொலோ விருக்கும் நாளே ?—1-10—நைமித்திக பிரளய ஆபத்துக்கு இளையாத ப்ரஹ்ம லோகம் முதலாக மேலுண்டான லோகங்கள் உய்ய –
அங்குண்டான ப்ரஹ்மாதிகளும் ஜீவிக்க வாய்த்து ப்ரஹ்ம லோகத்தில் ஸ்ரீ கோயில் ஆழ்வார் எழுந்து அருளி இருந்த படி –ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்காக-அங்கு நின்றும் இங்கு ஏற எழுந்து அருளுகையாலே
பூமியும் பூமியில் உண்டான சேதனரும் உஜ்ஜீவிக்க

செரு ஆளும் புள் ஆளன் மண் ஆளன்  செரு செய்யும் நாந்தகம் என்னும்
ஒரு வாளன் மறை யாளன் ஓடாத படை ஆளன் விழுக்கை ஆளன்
இரவாளன் பகலாளன் என்னை ஆளன்  ஏழுலகப் பெரும் புரவாளன்
திருவாளன் இனிதாக திருக் கண்கள் வளர்கின்ற திருவரங்கமே 4-9 -10-ஸ்ரீ பெரிய பிராட்டியாரை திவ்ய மகிஷியாக உடையவன் –கீழ் சொன்ன லோகத்தை எல்லாம் ஆளுவது இருவருமான சேர்த்தியிலே ஆய்த்து-ஸ்ரீ ஷீராப்தி தொடக்கமான ஸ்தலங்களில் எல்லா வற்றிலும் காட்டில் அபிமத சித்திக்கு உடலான தேசம் -என்று திரு உள்ளத்தில் உகப்போடே கூட கண் வளர்ந்து அருளுகிற கோயில் ஸ்ரீ திருவரங்கமே –ஷீராப்தேர் மண்டலாத் பானோர் யோகினாம் ஹ்ர்தயாதபி ரதிம் கதோ ஹரிர் யத்ர தஸ்மாத் ரங்கமிதி  ஸ்ம்ர்தம்-என்னக் கடவது இறே-

பருவரங்கள் அவை பற்றி படை யாலித்து எழுந்தானை
செருவரங்க பொருது அழித்த திருவாளன் திருப்பதி மேல் 
திருவரங்க தமிழ்மாலை விட்டு சித்தன் விரித்தன கொண்டு 

இருவரங்கம் எரித்தானை ஏத்த வல்லார் அடியோமே -4 -8-10 –வீரஸ்ரீ யை உடையவன் திருப்பதி விஷயமாக –தேசிகரான ஸ்ரீ பெருமாளைச் சொன்னது எல்லாம் -உபசர்ஜன (அப்ரதான) கோடியிலேயாய் – அத் தேசமே ஆய்த்து   இத் திருமொழிக்கு விஷயம் 

கைந்நாகத் திடர் கடிந்த கனல் ஆழி படை வுடையான் கருதும் கோயில்
தென்னாடும் வடநாடும் தொழ நின்ற திருவரந்தத் திருப்பதியின் மேல்
மெய்நாவன் மெய்யடியான் விட்டு சித்தன் விரித்த தமிழ் உரைக்க வல்லார்
எஞ்ஞான்றும்   எம்பெருமான் இணை அடிக் கீழ் இணை பிரியாது இருப்பர் தாமே – 4-9 -11-திராவிட பாஷா ப்ரதானமான தென்னாடும் – சம்ஸ்க்ருத பாஷா பிரதானமான வட நாடும் இருந்ததே குடியாக தொழும்படி நின்ற ஸ்ரீ திருவரங்கம் என்கிற திருநாமத்தை உடைத்தான ஸ்ரீ திருப்பதி விஷயமாக-

(பிணி யரங்க வினையகலப் பெரும் காலம் தவம் பேணி
மணி யரங்க நெடு முடியாய் மலர் யயனை வழி பட்டுப்
பணி யரங்கப் பெரும் பாயல் பரஞ்சுடரை யாம் காண
அணி யரங்கம் தந்தானை அறியாதார் அறியாதார்
–ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார்-

கொடியாடு மணிமாட அயோத்தி மூதூர் குடி துறந்து திருவரங்கம் கோயில் கொண்ட நெடியோனே–திருவரங்கக் கலம்பகம் -)

வடிவுடை கடலிடம் கட்கிலி ( காகுத்தா ) என்னும் அவற்றில் –-வடிவுடை வானோர் தலைவனே (பரத்வ அனுபவமும் ) -என்றும் –-கடலிடம் கொண்ட கடல் வண்ணா (வ்யூஹ அனுபவமும் )-என்றும் –-கட்கிலி உன்னைக் காணுமாறு அருளாய் (அந்தர்யாம்ய அனுபவமும்)-என்றும்-காகுத்தா கண்ணனே ( அவதார விபவ அனுபவம் ) -என்றும் சொல்லுகிற படி தோன்றும் பரத்வாதிகளில் வைத்துக் கொண்டு-இவள் திறத்து என் கொலோ என்பிக்கிற வியூஹ சௌஹார்த்த பிரதானம் –இவள் திறத்து என் சிந்தித்தாய் -என்றும் –-என் கொலோ முடிகின்றது இவட்கே -என்றும் – இவளுடை ஆட்டத்தில் தேவரீர் சிந்தித்தது என் ? இவள் கார்யம் என்னாய் முடிய கடவது ?-என்று சொல்லும்படி பண்ணுகிற பாற் கடல் யோக நித்தரை சிந்தை செய்யும் வியூஹ குணமான சௌஹார்த்தத்தை பிரதானமாக உடைத்தாய் இருக்கும் என்கை —இஸ் ஸ்தலத்திலே வியூஹ சௌஹார்த்தமே பிரதான்யேன பிரகாசிக்கும் என்ற படி –

(வடிவுடைக்‌ கடலிடங்‌ கட்கிலீயென்னுமவற்றில்‌) “வடிவுடை வானோர்‌ தலைவனே” (திருவாய்மொழி 7-2-10) என்றும்‌, “கடலிடங்கொண்ட கடல் வண்ணா” (திருவாய்மொழி 7-2-7 என்றும்‌, “கட்கலி உன்னைக்‌ காணுமாறருளாய்‌” (திருவாய்மொழி 7-2-3) என்றும்‌ “காகுத்தா கண்ணனே” (திருவாய்மொழி 7-2-3) என்றும்‌ “திருவரங்கத்தாய்‌” (திருவாய்மொழி 7-2-4) என்றும்‌ பரத்வாதிகள்‌ ஐந்தும்‌ ப்ரகாஸித்ததேயாகிலும்‌ (இவள்‌ திறத்தென்‌ கொலோ என்பிக்கிற) “இவள் திறத்தென்செய்கின்றாய்‌” (திருவாய்மொழி 7-2-1 “இவள் திறத்து என்‌ சிந்தித்தாய்‌’ (திருவாய்மொழி 7-2-4) “என்கொலோ முடிகின்றதிவட்கு” (திருவாய்மொழி 7-2-2) என்று ‘இவள்‌ திறத்து தேவர்‌ செய்தருள நினைத்ததேது? இவள்‌ கார்யமென்னாய்‌ முடியக் கடவது என்று கேட்கையாலே “பாற் கடல்‌ யோக நித்திரை சிந்தை செய்த” (திருவாய்மொழி 2-6-5) என்று ஸர்வருடையவும்‌ ரக்ஷணோபாய சிந்தை பண்ணுகிற வ்யூஹத்தில்‌ ப்ரகாஸிக்கிற ஸெளஹார்த, குணம்‌ ப்ராதாந்யேந ப்ரகாஸிக்குமென்கிறார் –

முடிவிவள் தனக்கு ஒன்று அறிகிலேன்’ என்னும்; ‘மூவுல காளியே!’ என்னும்;
‘கடி கமழ் கொன்றைச் சடையனே!’ என்னும்; ‘நான்முகக் கடவுளே!’ என்னும்;
வடிவுடை வானோர் தலைவனே!’ என்னும்; ‘வண் திரு வரங்கனே!’ என்னும்;
அடி யடையா தாள் போல் இவள் அணுகி அடைந்தனள் முகில்வண்ணன் அடியே.–7-2-10–உன்னோடே ஒத்த வடிவை யுடைய நித்ய ஸூ ரிகளுக்கு நிர்வாஹகன் ஆனவனே-

பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்! பற்றிலார் பற்ற நின்றானே!
கால சக் கரத்தாய்! கடலிடங் கொண்ட கடல்வண்ணா! கண்ணனே!’ என்னும்;
‘சேல்கொள் தண் புனல்சூழ் திருவரங்கத்தாய்!’ என்னும்’என் தீர்த்தனே!’ என்னும்;
கோல மா மழைக்கண் பனி மல்க இருக்கும்nஎன்னுடையக் கோமளக் கொழுந்தே.–7-2-7—-நீ எங்களை காலம் பார்த்து அன்றோ கிடக்கிறது –ஒரு கடல் கடலிலே சாய்ந்தால் போலே அணித்தாக திருப் பாற் கடலிலே சாய்ந்தில்லையோ-

வட்கிலள் இறையும் ‘மணிவண்ணா!’ என்னும்; வானமே நோக்குமை யாக்கும்
‘உட்குடை அசுரர் உயிரெலாம் உண்ட ஒருவனே!’ என்னும் உள் ளுருகும்;
கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய் காகுத்தா! கண்ணனே!’ என்னும்;
திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்’ இவள் திறத் தென் செய்திட்டாயே–7-2-3-பாஹ்ய சஷூஸூக்கு அவிஷயமான நீ நான் உன்னைக் காணும் படி கிருபை பண்ணி அருள வேணும்-நசஷூஷா பஸ்யதி –என்கிறது தாம் தாமே காண இழிவாருக்கு –தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம் -என்று அவன் தானே காட்டும் அன்று அவ்வருமை இல்லை -சிலருக்கு சதா தர்சனம் பண்ணைக் கொடுத்திலையோ – ‘கட்கிலீ! -கண்ணுக்கு இலீ என்றபடி -இப்படி அரிதான பொருளை நாம் சிலர்க்கு அருளிற்று உண்டோ என்ன-காகுத்தா! –ரூப ஓவ்த்தார்ய குணை பும்ஸாம் என்றும் ரூப சம்ஹ நனம் லஷ்மீம் என்றும் நாகரீகருக்கும் வான வாசிகளுக்கும் காட்டிக் கொடு திரிந்திலையோ-ஒரு கால் செய்தது கொண்டோ என்ன –-கண்ணனே!’ என்னும்;ஆயாந்தம் புண்டரீகாக்ஷம் வீக்ஷ மாணா குருஸ் த்த்ரிய-என்றும் தாஸாம் ஆவிர்பூத் என்றும் இடைச்சிகளுக்கும் அகப்பட காட்டிக் கொடு திரிந்திலையோ

இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்; எழுந்துலாய் மயங்கும் கை கூப்பும்;
‘கட்டமே காதல்’ என்று மூர்ச்சிக்கும்; ‘கடல்வண்ணா! கடியை காண்’ என்னும்;
‘வட்டவாய் நேமி வலங்கையா!’ என்னும் ‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
சிட்டனே! செழுநீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறத் தென் சிந்தித்தாயே ?–7-2-4-சிரமஹரமான கோயிலிலே நில மிதியாலே தண்ணளி மிக்கு இருக்கிற நீர்-இவள் திறத்து -பேச்சுக்கு நிலம் இல்லாத படி நோவு பட்டக் கிடக்கிற இவள் திறத்து-என் சிந்தித்தாயே -நினைத்து இருந்தது என் –ஜீவிப்பிக்க நினைத்தீரோ -முடிக்க நினைத்தீரோ -இப்படிப்பட்ட ஆற்றாமையையும் பேற்றுக்கு உடலாக நினைத்து இருக்கிறிலள் -அவன் நினைவாலே பேறு என்று இருக்கிறாள் –உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -என்ன கடவது இறே –

கங்குலும் பகலும் கண்துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்; ‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்; இரு நிலம் கைதுழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-அந்த சத்தவங்களுக்கு ஜலத்தை ஒழிய செல்லாதாப் போலே உம்மை ஒழிய செல்லாத இவள் திறத்து –நிறமும் இழந்து -சஞ்சாரமும் அற்று இறே இவள் கிடக்கிறது –ஏஹி பஸ்ய சரீராணி என்று வடிவைக் காட்டுகிறாள்-திருவரங்கத்தாய்-என் செய்கின்றாயே?-பரமபதத்தில் இருப்பிலோ கேட்க்கிறது-கண்ணுக்கு விஷயமான இடத்தே அன்றோ சாய்ந்து அருளிற்று -இவள் நிறம் பெற்று செருக்கி நடக்கும்படி பண்ணப் பார்த்ததோ -தவிரப் பார்த்ததோ – இவளை அவ் வூர்ப் படியாகப் பார்த்தாயோ இவ் வூர்ப் படியாகப் பார்த்தாயோ –

என் செய்கின் றாய்? என் தாமரைக் கண்ணா! என்னும் கண்ணீர் மல்க இருக்கும்
என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய்! என்னும் வெவ் வுயிர்த் துயிர்த் துருகும்
முன் செய்த வினையே முகப்படாய் என்னும் முகில்வண்ணா! தகுவதோ என்னும்
முன் செய்திவ் வுலகம் உண்டு மிழ்ந் தளந்தாய்! என் கொலோ முடிகின்றது இவட்கே?–7-2-2-இவள் இடையாட்டத்தில் நீ செய்யப் பார்த்த படி என் என்னுதல் இவளுடைய தசை என்னாய் விடக் கடவதோ என்னுதல் -இவள் என்கிறது நீர் ரஷித்த ஜகத்துக்கும் -இவளுக்கும் உண்டான நெடுவாசி அறியீரோ -அநந்ய பரையாய்-அநந்ய கதியாய் -அபலையாய் இருக்கிற இவள் இடையாட்டத்தில் என் செய்து அருள நினைத்து அருளினீர் -என்கிறாள் –

உய்ந்து போந்து என் உலப்பிலாத வெந்தீ வினைகளை நாசம் செய்து உனது
அந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ
ஐந்து பைந்தலை யாடரவணை மேவிப் பாற் கடல் யோக நித்திரை
சிந்தை செய்த வெந்தாய் உன்னைச் சிந்தை செய்து செய்தே
–2-6-5-திருப் பாற் கடலிலே ஜகத் ரக்ஷண சிந்தாத்மக யோக நித்திரை பண்ணி அருளினை சேதனர் உடைய உஜ்ஜீவன பிரகாரம் ஆதல் –ஆத்மாநம் வாஸூதேவாக்யம் சிந்தையன் மதுஸூதன-என்கிறபடியே தன்னை அனுசந்தித்தல் ஆதல்

இனி கோவிலுக்கு அனந்தரம் சொல்லப் படுவதான திருமலையில் பிரகாசிக்கிற குணத்தை அருளிச் செய்கிறார் —

மண்ணோர் விண்ணோர் வைப்பில்‌ போகின்ற ஏழுலகுக்குயிர் பாசம்‌ வைத்த நிகரில்‌ வாத்ஸல்யம்‌ உஜ்ஜ்வலம்‌.–சூரணை -160-

( வைப்பு -திருமலை -போகின்ற எழு உலகுக்கு உயிர் -அந்தர்யாமி -அதன் குணம் வாத்சல்யம் –
வாத்சல்யத்துக்கு விசேஷணங்கள் -பாசம் வைத்த என்பதும் நிகரில் என்பதும் – ஒழிவில் காலம் -உலகமுண்ட பெருவாயா திருவாய்மொழிகளில் இருந்து அருளிய ஸ்ரீ ஸூக்திகள் வைப்பில் வாத்சல்யம் உஜ்ஜ்வலம் என்று அன்வயம் )

அதாவது-மண்ணோர் விண்ணோர் வைப்பில் –கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு–திருவாய்-1-8-3 -என்றும் –தண்ணருவி வேம்கடமே வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு -நான்முகன்-45–என்றும் – உபய விபூதி உள்ளோர்க்கும் சேமித்து வைத்த நிதி போல் பிராப்யமாய் இருக்கிற திரு மலையில் –

(மண்ணோர்‌ விண்ணோர்‌ வைப்பில்‌) “கண்ணாவான்‌ என்றும்‌ மண்ணோர்‌ விண்ணோர்க்கு”  (திருவாய்மொழி 1-8-3) என்றும்‌, “தண்ணருவி வேங்கடமே வானோர்க்கும்‌ மண்ணோர்க்கும்‌ வைப்பு” (நான்முகன்‌ திருவந்தாதி 45) என்றும்‌ உபய விபூதி யிலுள்ளார்க்கும்‌ ஆபத்‌ தநமாய்‌ நிற்கிற திருமலையில்‌ நிலையிலே-

கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு
தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே –1-8-3-சம்சாரிகளோடு நித்ய ஸூ ரிகளோடு வாசி இல்லை –அரை க்ஷணம் தங்கள் கார்யம் நிர்வஹித்துக் கொள்ள மாட்டாமைக்கு-கண்ணாகைக்காக என்னுதல்-கண்ணாம் அவன் என்னுதல்-கண் -என்று நிர்வாஹகன் –-சஷூர் தேவா நாம் உதமர்த்தயா நாம் -என்கிற ஸ்ருதி அர்த்தத்தின் படியே சொல்கிறார்-

புரிந்து மலரிட்டுப் புண்டரீகப் பாதம்
பரிந்து படுகாடு நிற்ப -செரிந்து எங்கும்
தான் ஓங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு-45-குளிர்ந்த திரு அருவிகளை யுடைய திருமலையே-
திரு நாட்டில் உள்ளாருக்கும் சம்சாரிகளுக்கும் வைப்பு -பரம ப்ராப்யம் –

போகின்ற ஏழு உலகுக்கு உயிர்ப் பாசம் வைத்த நிகரில் வாத்சல்யம் உஜ்ஜ்வலம்-போகின்ற காலங்கள் -போய காலங்கள் போகு காலங்கள் தாய் தந்தை உயிர் ஆகின்றாய்–திருவாய்-2-6-10 -என்றும் –
கண்ணா ஏழு உலகுக்கு உயிராய எம் கார் வண்ணனை–பெரிய திருமொழி-1-9-10- -என்றும் – சொல்லுகிறபடி -சர்வ காலமும் சர்வ ஆத்மாக்களுக்கும் சர்வ வித பந்துமாய்க் கொண்டு – சர்வருக்கும் ஆத்மாவாய் இருக்கிற அந்தர்யாமி உடைய குணமாய் இருப்பதாய் –-என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதி—திருவாய்-3-3-4-என்றும் – நிகரில் புகழாய் -திருவாய்-6-10-10- -என்றும் –
மிகவும் தண்ணியனாய் இருக்கிற என் பக்கலிலே சங்கத்தை பண்ணினான் என்றும் – ஒப்பில்லா புகழை உடையவனே என்றும் சொல்லப்பட்ட -வாத்சல்யம் – பரம் சுடர் ஜோதி -என்று வடிவிலே தொடை கொள்ளலாம் படி உஜ்ஜ்வலமாய் இருக்கும் என்கை —

(போகின்றவேழுலகுக்குயிர்‌) “போகின்ற காலங்கள்‌ போய காலங்கள்‌ போகு காலங்கள்‌ தாய்தந்தை உயிராகின்றாய்‌” (திருவாய்மொழி 2-6-10 என்றும்‌, “கண்ணாயேழுலகுக்கு உயிராய எங்கார் வண்ணனை‘ (பெரிய திருமொழி 1-9-10) என்றும்‌ சொல்லுகிறபடியே ஸகல காலமும்‌ ஸர்வாத்மாக்களுக்கும்‌ ஸர்வவித பந்துவுமாய்க்‌ கொண்டு ஸர்வர்க்கும்‌ ஆத்ம பூதனாயிருக்கிற அந்தர்யாமித்வத்தில்‌ ப்ரகாஸிப்பதாய்‌-(பாசம்‌ வைத்த நிகரில்‌ வாத்ஸல்யம்‌ உஜ்ஜ்வலம்‌) ‘ என் கண்‌ பாசம்‌ வைத்த” (திருவாய்மொழி 3-3-4) “நிகரில்‌ புகழாய்‌” (திருவாய்மொழி 6-10-10) என்று அத்யந்தம்‌ தண்ணியனாயிருக்கிற என் பக்கலிலே ஸங்கத்தைப்‌ பண்ணினான்‌ என்னும்‌ ஒப்பிலாத புகழை உடையவனே என்று சொல்லுகிற வாத்ஸல்யம்‌ “வேங்கடத்தெழில்‌ கொள்‌ சோதி” (திருவாய்மொழி 3-3-2 என்றும்‌ “நிலவும்‌ சுடர்‌ சூழொளிமூர்த்தி” (திருவாய்மொழி 6-10-7) என்றும்‌ “”பரஞ்சுடர்ச்சோதி”  (திருவாய்மொழி 3-3-4) என்றும்‌ சொல்லுகிறபடியே உஜ்ஜ்வலமாய்க்‌ கொண்டு பிரகாஸிக்கும் என்கிறார் –

போகின்ற காலங்கள் போய காலங்கள் போக் காலங்கள் தாய் தந்தை உயிரா
கின்றாய்
உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ
பாகின்ற தொல் புகழ் மூ வுலகுக்கும் நாதனே பரமா தண் வேங்கட
மேகின்றாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே –2-6-10—கால த்ரயத்தாலும் தாயும் தமப்பனும் செய்யும் நன்மைகளும்-உயிராகின்றாய் –-ச பித்ராச பரித்யக்த –என்று அவர்கள் விடும் அளவிலும் தான் தனக்குப் பார்க்கும் நன்மைகளையும் செய்யுமவனே-இச் சேதனர் அநாதி காலம் தன விநாசத்தையே சூழ்த்துக் கொள்ள -முகம் தோற்றாத படி நின்று சத்தையை நோக்கி போந்தவன் அல்லையோ –

கண்ணா யேழ் உலகுக்கு உயிராய வெங்கார் வண்ணனை
விண்ணோர் தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை
திண்ணார் மாடங்கள் சூழ் திரு மங்கையர் கோன் கலியன்
பண்ணார் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே-1-9-10—சகல லோகங்களுக்கும் த்ருஷ்டி  பூதனாய் சத்தா ஹேதுவான பிராணனாய்-அதுக்கு மேலே என்னை அனுபவிக்கைக்காக மேகம் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையவனாய் ஏழு உலகத்து உள்ளோரோபாதி நித்ய ஸூரிகளும் ஒரு மூலையிலே புகுந்து ஏத்துகிற திருமலையை வாஸஸ் ஸ்தானமாக உடைய வேதைக சமதி கம்யனை யாயிற்று கவி பாடிற்று–நித்ய ஸூரிகள் -பரமபதத்தை விட்டு -திருவேங்கடமுடையானையும் விட்டு -திருமலையையும் விட்டு இங்குள்ள பொழில்களை ஸ்தோத்ரம் பண்ணுகிறார்கள்

ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திரு வேங்கடத் தானுக்கு?
நீசனேன் நிறைவு ஒன்றுமிலேன் என்கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.–3-3-4-
–வானவர்க்கு ஈசன் ஆனவன் என் கண் பாசம் வைத்தான்
அவர்களோடு கலந்து அவர்கள் சத்தைக்காக என்னோடு கலந்து தனக்கு சத்தை உண்டாக்குகைக்காக
தன் விஷயத்தில் பாசம் உண்டாம் படி என்னைப் பண்ணினான் என்றும் சொல்லுவார்-என்னோட்டை கலவியாலே அது உஜ்ஜவலனமாம் படி சங்கத்தாலே கலந்தான் என்னும் இடம் வடிவில் தோற்றி இருக்கை-

அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன் றில்லா அடியேன் உன் னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10–இப்படி இருக்கிறவள் தானே சிதகு உரைக்கும் அன்றும் அவளுடனே மன்றாடும் குணமிகுதியின் விசேடம் சொல்லுகிறது. என்றது,
‘என்னடியார் அது செய்யார்’ என்று என்னைப் பற்றினார்க்கு அது இல்லை காண் என்கிறது என்றபடி.
‘இல்லை, நான் இப்போது இன்ன குற்றம் செய்யக் கண்டேன்’ என்று காட்டிக் கொடுத்தாலும், ‘ஆனால் என்? தர்மம் அதர்மம் பரலோகம் என்னும் இவற்றை இல்லை என்று செய்கிறார்களோ? தங்களை அறியாதே நிகழும் குற்றங்கட்கு நாம் உளோம் என்றன்றோ செய்கிறது’ என்கை. இவளுடைய உயர்வுக்கு அடி சொல்லும் போது அவனைப் பற்றிச் சொல்லலாம்;-அவனுடைய உயர்வுக்கு ஒன்று தேடிச் சொல்லலாவது இல்லையாதலின், ‘நிகரில்’ என்கிறது. இதுவோ தான் பொருளின் தன்மை இருக்கும்படி.-

ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–
3-3-1-அர்ச்சிராதி கதியாலே-ஓரு தேச விசேஷத்திலே விலக்ஷண சரீரத்தைப் பெற்று அனுபவிக்கக் கடவ இவன்-இச் சரீரத்தோடு அனுபவிக்கலாம் படி ஸூ லபனாய் நிற்கிற திருமலையிலே-எழில் கொள் சோதி எந்தை –-துர்லபன் ஆகிலும் விட ஒண்ணாத வடிவு அழகு -அந்த நிலம் மிதியாலே நிறம் பெற்ற அழகு-விரூபன் ஆனாலும் விட ஒண்ணாத பிராப்தி -எந்தை -என்கிறது -ஸுலப்யத்தாலும் அழகாலும் தோற்பித்த படி சொல்லிற்று –-தந்தை தந்தைக்கே-
பரம சேஷி யானவனுக்கு –ப்ராப்ய பிரதானமான திரு மந்திரத்தில் உள்ளது எல்லாம் சொல்லுகிறது இப்பாட்டாலே –

உலகம் உண்ட பெருவாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே!
நிலவும் சுடர்சூழ் ஒளி மூர்த்தி! நெடியாய்! அடியேன் ஆருயிரே!
திலதம் உலகுக் காய்நின்ற திருவேங் கடத்தெம் பெருமானே!
குல தொல் அடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே.–6-10-1—-உள்ளு மண்ணீடாய் புறம்பு ஒளியூட்டி இருக்கை அன்றிக்கே உள்வாயோடு புறவாயோடு வாசி அற ஒளியேயாய் இருக்கிற படி-

ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திரு வேங்கடத் தானுக்கு?
நீசனேன் நிறைவு ஒன்றுமிலேன் என்கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.
–3-3-4-என்னோட்டை கலவியாலே அது உஜ்ஜவலனமாம் படி
சங்கத்தாலே கலந்தான் என்னும் இடம் வடிவில் தோற்றி இருக்கை-

பாசம் வைத்த நிகரில் வாத்சல்யம் -என்கையாலே-ஒழிவில் காலம் எல்லாம் –-உலகம் உண்ட பெரு மாயன்- இரண்டையும் சேர்த்துப் பிடித்து அருளிச் செய்தமை தோற்றுகிறது–

கோவிலுக்கு அனந்தரம் திரு மலையை சொல்லுகை தேட்டமாகில் ,இரண்டு திரு மலையையும் ஒவ்வாதோ ?–தெற்குத் திரு மலை விஷயமான கிளர் ஒளி இளமை-கீழே கிடக்க –-ஒழிவில் காலத்தில் -சொன்ன வடக்குத் திருமலையை அருளிச் செய்வான் என் என்னில் –-பரத்வாதிகளுக்கு அசாதாரணமான குண பிரகாசமான ஸ்தலங்களை அருளிச் செய்கிற பிரகரணமாகையாலே
தெற்கு திரு மலையில் பிரகாசிக்கிற குணம் இதற்குச் சேர்த்தி இல்லாதது கொண்டு –-கிளர் ஒளி இளமை யை -செஞ்சொல் கவியோடு சேர்த்து அருளுவதாக விட்டு வைத்து – இது முதலாக அருளிச் செய்தார் இத்தனை —

இனி -ஒழிவில் காலத்துக்கு -பின்பு திருப்பதி விஷயமான திரு வாய் மொழி –-ஒன்றும் தேவு -ஆகையாலே ,திரு நகரியிலே பிரகாசிக்கிற குணத்தை அருளி செய்கிறார் .–

உபய பிரதான பிரணவமான உறை கோவிலிலே எத் தேவும் என்னும் பரே சத்வம் பொலியும்-சூரணை -161-

(பர ஈசத்துவம் -பரேசத்வம்-பொலியும் என்றது -பொலிந்து நின்ற பிரான் -உத்சவர் திரு நாமம் என்பதால் )

அதாவது-உபய பிரதான பிரணவமான உறை கோவிலிலே — ஒமித்யாத்மானம் யுஞ்ஜீத (ஓம் என்று சொல்லி ஆத்மாவைத் தியானம் செய்யக் கடவன் )-என்றும் – ஒம் காரோ பகவான் விஷ்ணு (ஓம் என்பது பகவானாகிய ஸ்ரீ விஷ்ணு)-என்றும் -சொல்லுகிறபடியே சப்தார்தங்களில் உடைய பிரதான்யத்தாலே ஜீவ ஈஸ்வரர்கள் இருவருக்கும் வாசகமாய் கொண்டு இருவருடையவும் பிரதானம் தோன்றுவிக்கிற பிரணவம் போலே ஆழ்வாருடையவும் -பொலிந்து நின்ற பிரான் உடையவும் ஆக்ஜை இரு புரிந்து நடக்கையாலே – உபயர் உடையவும் பிரதானம் தோற்றுவிக்கும் படி இருப்பதாய் –அவன் மேவி உறை கோவில்-திருவாய்-4-10-2 -என்று பரம பதத்தில் சம்சாரிகள் இழவை நினைத்து உள் வெதுப்போடே இருக்குமா போலே அன்றி – அவர்களுக்கு அணித்தாக வந்து நிற்கப் பெறுகையாலே உள் வெதுப்பு அற்று வர்த்திக்கிற ஸ்தலமான திரு நகரியிலே —

(உபய ப்ரதாந ப்ரணவமான உறை கோயிலில்‌) “ப்‌ரஹ்மணேத்வா மஹஸ ஓமித்யாத்மாநம்‌ யுஞ்ஜீத” என்றும்‌ “ஒங்காரோ பகவாந்‌ விஷ்ணு: என்றும்‌ சொல்லுகிறபடியே ப்ரணவம்‌ ஜீவேஸ்வரர்களிருவர்க்கும்‌ வாசகமாய்க்‌ கொண்டு உபயருடையவும்‌ ப்ராதாநீயம்‌ தோற்ற விருக்கிறாப் போலே பொலிந்து நின்ற பிரானுடையவும்‌ ஆழ்வாருடையவும்‌ திவ்யாஜ்ஞை இருபுரிந்து நடக்கையாலே உபயருடையவும்‌ ப்ராதாந்யம்‌ தோற்றுவதாய்‌ “அவன்‌ மேவி உறைகோயில்‌” (திருவாய்மொழி 4-10-2 என்று ஆழ்வாரை விஷயீ கரிக்கலான தேஸமாகையாலே பரமபதத்தில்‌ உள் வெதுப்புத்‌ தீர்ந்து அவன்‌ வர்த்திக்கிற திருநகரியில்‌ நிற்கிற நிலையிலே-

நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்,
மாட மாளிகை சூழ்ந்தழகாய திருக் குருகூரதனைப்
பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே.–4-10-2—இவற்றை உண்டாக்கினவன் ஆஸ்ரயண அர்த்தமாக பொருந்தி வர்த்திக்கிற தேசம்-பரமபதத்தில் கரம்பு அறுக்க வேண்டாமையாலே சந்நிதி மாத்திரமே அமையும்-ரக்ஷக அபேக்ஷை உள்ளத்து இங்கேயேயாகையாலே-பொருந்தி வார்த்தைக்கும் தேசம் என்கை –நல்ல படுக்கையும் போக்யங்களும் உண்டாய் இருக்க தொட்டில் கால் கிடை அல்லது பொருந்தாத தாய் போலே 

எத் தேவும் என்னும் பரே சத்வம் பொலியும் –-எத் தேவும் எவ் உலகங்களும் மற்றும் தன்பால் மறுவில் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நிற்கும் வண்ணம் நிற்கவே திரு குருகூர் அதனுள் குரிய மாணுருவாகிய நீள் குடக் கூத்தன்–திருவாய்-4-10-10- -என்று ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துகளுக்கும்– ஸ்வ அசாதரண விக்ரகத்தோபாதி தனக்கே பிரகாராம் படி இருக்கிற ஐஸ் வர்யத்தோடு கூட திருக் குருகூரில் சுலபனாய் வந்து நின்றான் என்று சொல்லப்பட்ட-திருக்குருகூர் அதனுள் பரன் –திருவாய்-4-10-3–என்றும் ,-திரு குருகூர் அதனுள் ஈசன் திருவாய்-4-10-4–என்றும்–சுலபனான நிலையில் -பிரகாசிக்கிற பரத்வ லஷணமான ஈஸ்வரத்வம் –-பொலிந்து நின்ற பிரான்-என்கையாலே அவிருத்தம் ஆகா (விளங்கா) நிற்கும் என்கை–

(எத்தேவு மென்னும்‌ பரே ஸத்வம்‌ பொலியும்‌) ‘உறுவதாவதெத்தேவும்‌ எவ்வுலகங்களும்‌ மற்றும்‌ தன்பால்‌ மறுவில்‌ மூர்த்தயோடு (இத்தனையும்‌ நின்ற வண்ணம்‌ நிற்கவே” (திருவாய்மொழி 4-10-10) என்றும்‌, திருக் குருகூரதனுள்‌ பரன்‌” (திருவாய்மொழி 4-10-3) என்றும்‌ “திருக்குருகூரதனுள்‌ ஈசன்‌” (திருவாய்மொழி 4-10-4) என்றும்‌ “பொலிந்து நின்ற பிரான்‌” (திருவாய்மொழி 4-10-5) என்றும்‌ சொல்லுகிறபடியே ஸ்வ வ்யதிரிக்த ஸமஸ்தமும்‌ தனக்கு ஸரீரமாமிடத்தில்‌ அப்ராக்ருத விக்‌ரஹத்தோடொக்கும்படி தான்‌ ஸரீரியா யிருக்கிற பரத்வத்தில்‌ ப்ரகாஸிக்கிற நியந்த்ருத்வ குணம்‌ அபி வ்ருத்‌தமாம் என்கிறார் –

உறுவது ஆவது எத்தேவும் எவ் வுலகங்களும் மற்றும் தன்பால்
மறுவின் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக் குருகூரதனுள்
குறிய மாண் உருவாகிய நீள்குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே
.–4-10-10—செய்கையில் செந்நெலும் கரும்பும் இசலி வளரா நிற்கிற திரு நகரி-இவ் ஊரில் பதார்த்தங்களில் ஒன்றில் ஓன்று குறைந்து இருப்பது இல்லை –-குறிய மாண் உருவாகிய நீள்குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே.– குறிய-ஆஸ்ரிதற்கு கண்ணாலே முகந்து அனுபவிக்கலாம் படி தன்னை தாழ விட்ட படி –-உண்டு என்று இட்ட போதொடு இல்லை என்ற போதொடு வாசி இன்றிக்கே முகம் மலர்ந்து போம் படி இரப்பிலே தகணேறினபடி
குடகு கூத்தாடுகிற போது கண்டாரோபாதி பிற்பாடராய் கேட்டார் வாய் கேட்டார்க்கும் சம காலம் போலே பிரியமாம் படி மநோ ஹரியான சேஷ்டிதத்தை யுடையவனுக்கு –-அந்த சேஷ்டிதங்களே அடிமை கொள்ளும் -நீங்கள் இசையும் அத்தனையே வேண்டுவதுஆள் செய்வதே உறுவது ஆவது -என்று அந்வயம்-

பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக்
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர் அதனுள்
பரன்
திறமன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே.–4-10-3-பரமபதத்திலும் வியாப்தியிலும் காட்டில் திருநகரியில் நின்ற நிலையிலே பரத்வம் மிக்கு இருக்கிற படி-மனுஷ்யத்வே பரத்வத்துக்கும் அவ்வருகே ஓன்று இறே இது-வஸ்துவுக்கு குணாதிக்யத்தாலே யாகில் உத்கர்ஷம்-அது மிக்க இடத்திலே பரத்வம் உறைத்து தோற்றக் கடவது இறே

பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின்
தேச மாமதிள் சூழ்ந்து அழகாய திருக்குருகூர் அதனுள்
ஈசன்
பால் ஓர் அவம் பறைதல் என்னாவது இலிங்கியர்க்கே?–4-10-4–அஜஹத் ஸ்வபாவன் ஆகையால் இஸ் ஸுலப்யத்திலேயும் மேன்மை குறையாது இருக்கிறபடி-ய பரஸ்ஸ மஹேஸ்வர -என்றும் ஈஸதே பகவா நே க –என்றும் பிராமண பிரசித்தனான சர்வேஸ்வரன்-ஈசன் ஈசானன் என்கிற இது மஹா வ்ருக்ஷம் என்னுமா போலே சமாக்கிய மாத்ரமேயாய் அர்த்தம் இன்றிக்கே இருக்கை –

இலிங்கத் திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்று நும் தெய்வமுமாகி நின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக் குருகூர் அதனுள்
பொலிந்து நின்ற பிரான்
கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே.–4-10-5-சேதன அசேதன விபாகம் அற பொலிந்து நின்ற பிரானுக்கு அனுகூல வ்ருத்திகளை பண்ணுமாயிற்று-அதனுள்-பொலிந்து நின்ற பிரான்-பரம பதத்தை விட்டு இவ்வருகே தாழ நிற்க நிற்க குணங்கள் மேன்மேல் என விஞ்சி வருகிற படி-சொன்னார் சொன்ன யுக்திகள் எல்லா வற்றுக்கும் அவ்வருகாய் நிற்கை என்னவுமாம்-கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே.–-இத் தேவதைகள் பக்கல் உதகர்ஷம் எல்லாம் பொய்யாய் இருக்குமா போலே -இவ்விஷயத்தில் சொல்லுகிற உத்கர்ஷத்துக்கு ஒன்றும் பொய்யில்லை-போற்றுமினே -சடக்கென ஆஸ்ரயிங்கோள் -நீங்கள் அபேக்ஷியாது இருக்க நான் சொல்லுகிறது உங்கள் துர்தசையைப் பற்ற –

இதுக்கு பின் திருப்பதி விஷயமான திருவாய்மொழி -எங்கனயோ -ஆகையாலே – திருக் குருங்குடியில் பிரகாசிக்கிற குணத்தை அநந்தரம் அருளிச் செய்கிறார் —

வைஷ்ணவ வாமநத்தில்‌ நிறைந்த நீலமேனியின்‌ ருசிஜநக விபவ லாவண்யம்‌ பூர்ணம்‌-சூரணை -162-

அதாவது-திருக்குறுங்குடி என்னாதே வைஷ்ணவ வாமநத்திலே என்றது ஸாபிப்ராயம்-அதாவது வாமன அவதாரத்திலே தன்னுடைமை பெறுகுகைக்கு அர்த்தி ஆனாப் போலே – அர்த்தியாய் நின்று ஸ்ரீ பாஷ்ய காரர் பக்கல் வேதாந்தார்தம் கேட்டு சிஷ்யனாய் – நாமும் நம் இராமானுசனை உடையோம் – என்கையாலே ஸ்ரீ வைஷ்ணவ நம்பி என்ற திருநாமமாய்- வாமன அவதார அம்சமாக -புராண சித்தராய் இருக்கிற நம்பி உடைய திருப்தி என்கை —அன்றிக்கே –-அறியக் கற்று வல்லவர் வைட்டணவர்-என்று இத் தேச விஷயமான திருவாய் மொழியை கற்றவர்கள் வைஷ்ணவர் என்கையாலே வைஷ்ணவர்கள் உடையதாய் -வாமன ஷேத்ரமாய் இருக்கும் தேசத்தில் என்னுமாம்-வாமன அவதார பிரசங்கத்துக்கு பிரயோஜனம் -விபவ லாவண்யம் பூர்ணம் -என்கிறதுக்கு உடலாக விபவ அன்வயத்தை உணர்த்துகையும் – குறியவன் குடி குறும்குடி – என்னும் அர்த்தத்தை தெரிவிக்கையும் –

அறிவரிய பிரானை ஆழி அம் கையனையே அலற்றி
நறிய நன்மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துளிவை பத்தும் திருக்குறுங்குடி யதன்மேல்
அறியக் கற்று வல்லார் வைட்ணவர் ஆழ்கடல் ஞாலத்துள்ளே.–5-5-11—பரம பதத்திலும் அவதாரங்களிலும் திருக்குறுங்குடி நிலையிலே அழகாலும் சீலத்தாலும் உண்டான ஏற்றம் அறிந்து கற்க வல்லவர்கள் -குணாதிக்யம் இறே வஸ்துவுக்கு ஏற்றம் -வியக்தமாக கற்க வல்லார்கள் என்றுமாம்
மரு பூமியான சம்சாரத்திலே -உகந்து அருளின ஏற்றம் அறியுமவர்கள் நித்ய ஸூரிகளோடு ஒப்பார்கள்-

ஆக இப்படி இருந்துள்ள திருக் குறும்குடியுள் –-நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியோடும் நிறைந்து என்னுள்ளே நின்று ஒழிந்தான் -திருவாய்-5-5-7-என்றும் , நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே -திருவாய்-5-5-6-என்றும் சொல்லுகிறபடியே -இவர் உள்ளத்தில் வேறு ஒன்றுக்கும் இடம் அறும் படி -பிரகாசிக்கிற – காள மேக நிபச்ஸ்யமமான விஹ்ரஹத்தின் உடைய –செல்கின்றது என் நெஞ்சம்–திருவாய்-5-5-1-என்கிறபடி – மேன் மேலும் அனுபவ ருசி ஜனகமாய்
ரூபவான் ஸூபக ஸ்ரீ மான்–ஸூ ந்தர-34-30- -என்றும்-ரூப சம்ஹனனம் லஷ்மீம் ஸுகுமார்யம் ஸூவேஷதாம் தத்ருஸூ விஸ்மிதாகாரா ராமஸ்ய வன வாஸின-ஆரண்ய-1-13-என்றும் – விபவத்தில் பிரகாசிக்குமதாய் சொன்ன –சமுதாய சோபையான -லாவண்யம்- நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த திருவாய்-5-5-7-என்கையாலே பூரணமாய் இருக்கும் என்கை –

(வைஷ்ணவ வாமநத்தில்‌) வைஷ்ணவ வாமனமான திருக்குறுங்குடியில்‌ நிற்கிற நிலையிலே  (நிறைந்த நீலமேனியின்‌) “நீலமேனியும்‌ நான்கு தோளும் என்நெஞ்சம் நிறைந்தனவே”  (திருவாய்மொழி 5-5-6) என்று, இவர்‌ திருவுள்ளத்திலே ப்ரகாஸிக்கும்படியான காளமேக நிபாஸ்யமமான விக்‌,ரஹத்தினுடைய (ருசி ஜநக விபவ லாவண்யம்‌ பூர்ணம்‌ ) “செல்கின்ற தென்‌ நெஞ்சமே” (திருவாய்மொழி 5-5-1 என்று ருசியைப்‌ பிறப்பிப்பதாய்‌ “பும்ஸாம் த்‌ருஷ்டி சித்தாபஹாரிணம்‌‘ (ரா.௮.3-29 , “ரூபவாந்‌ ஸுபக ஸ்ரீமாந்‌ கந்தர்ப இவ மூர்த்திமாந்‌” (ரா. ஸு.34-30) “ஸாக்ஷாந்‌ மந்மத மந்மத,:” (ஸ்ரீபாகவதம்‌ 10-32-2 என்றும்‌ சொல்லுகிறபடியே ஸஜாதீயரையும்‌ மடலெடுக்கும்படி பண்ண வற்றான விபவத்தில்‌ ப்ரகாஸிக்கிற “நிறைந்த சோதி வெள்ளம்‌ சூழ்ந்த நீண்ட பொன் மேனி (திருவாய்மொழி 5-5-7) என்கிற லாவண்யம்‌-நம்பி என்கையாலே பூர்ணம்‌” என்கிறார் 

நிறைந்த வன்பழி நம்குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்
சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும்
நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான்
நேமி அம் கை உளதே.–5-5-7—அபரிச்சின்னமான தேஜஸ்ஸினுள்ளே உன்நேயமாம் படி யாயிற்று திரு மேனி இருப்பது -இது தேஜஸ்ஸினுள்ளே வடிவு தான் அபரிச்சேதயமான போக்யதையை யுடையதாய் நித்ய ஸ்ப்ருஹா விஷயமாய் இருக்கை –-நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் நேமி அம் கை உளதே.–-இந்த விக்ரஹத்தோடே நெஞ்சு நிறையும்படி நின்றான் -அவன் நிறைவைக் குறைக்கில் அன்றோ என் பழியைக் குறைப்பது –நேமி அம் கை உளதே.–-அல்லாத அழகுகள் எல்லா வற்றிலும் மிகுதியாய் யாயிற்று கையும் திரு வாழியும் இருப்பது -வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும் படியான திருக் கையிலே திரு வாழி யானால் மீட்கப் போமோ –

மேலும் வன்பழி நங்குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்
சோலை சூழ் தண் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
கோல நீள்கொடி மூக்கும் தாமரைக் கண்ணும் கனிவாயும்
நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே.
–5-5-6–அழகு மிக்க கொடி போலே இருக்கிற மூக்கும் -அழகு கொழுந்து விட்ட தொரு கொடி போலே இருக்கை–அக் கொடி பூத்தால் போலேயாய் – தாமரைப் பூப் போலே இருக்கிற திருக் கண்களும் -அது ஒரு பலத்தை உண்டாக்கினால் போலே கனி போலே இருக்கிற திருவதரமும்-இவற்றுக்கு பரபாகமாய் -தாமரை இலை போலே இருக்கிற திரு மேனியும் –கற்பக தரு பணைத்தால் போலே மநோ ஹரமாய்-அவ் வழகைக் காத்தூட்ட கடவ தோள்களும் –என் நெஞ்சம் நிறைந்தனவே.–ஹித வசனம் கேட்க்கைக்கு நெஞ்சில் இடம் இல்லை

எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்!
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என்நெஞ்சமே.–5-5-1—ஜாதி வியக்தி தோறும் பரிசமாப்ய வர்த்திக்குமா போலே நெஞ்சு அழகு தோறும் செல்லா நின்றது –-செல்கின்றது -இன்னமும் தறை கண்டது இல்லை –-நாங்களும் அவ்வழகை அனுபவித்து அன்றோ இருக்கிறது என்ன –என் நெஞ்சமே –அவன் தானே காட்டக் கண்டு அனுபவித்த என் நெஞ்சு -உங்கள் வார்த்தை கேட்க்கைக்கு நெஞ்சுடையாரை யன்றோ ஹிதம் சொல்லி மீட்பது –

இப்படி பரத்வாதிகளுக்கு அசாதாரணமான ஓர் ஓர் குணங்கள் பிரதானயேன பிரகாசிக்கும் ஸ்தலங்களை அருளிச் செய்த அநந்தரம் – மற்றும் உண்டான குணங்களில் -ஓர் ஓன்று -பிரதான்யேன பிரகாசிக்கும் ஸ்தலங்களை ஸ்ரீவர மங்கை முதலாக -திரு பேர் நகர் எல்லையாக -திருவாய்மொழி அடைவிலே அருளி செய்கிறார் மேல் —

ருசி விவஸர்க்குப்‌ பாதமே சரணாக்கும்‌ ஒளதார்யம்‌ வானமாமலையிலே கொழுந்து விடும்‌.-சூரணை -163-

(ருசி விவசர் -ருசியினால் பரவசப்பட்டவர்கள் )அதாவது-கீழ் சொன்ன லாவண்யத்தாலே ஒருவரும் நிவர்த்திப்பிக்க ஒண்ணாதபடி பிறந்த ருசியாலே பரவசராய்–அநந்ய கதி யானவர்களுக்கு
ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்-
திருவாய்-5-7-10- -என்னும்படி திரு அடிகளையே உபாயமாகக் கொடுக்கும் –-கருளப் புட்கொடி சக்கரப்படை வான நாட -என் கார் முகில் வண்ணா-திருவாய்-5-7-3–என்கிற ஒவ்தார்ய குணம் ஸ்ரீவர மங்கலத்து அவர் கை தொழ உறை வான மா மலை –திருவாய்-5-7-6–என்று ஸ்ரீ வர மங்கையில் எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ வானமா மலை பக்கலிலே –
(ஸ்ரீ வர மங்கை–திவ்ய தேச திரு நாமம்-ஸ்ரீ வானமா மலை -அங்கு எழுந்து அருளி இருக்கும் பெருமாள் திரு நாமம் -) வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்தே-திருவாய்-5-7-7- -என்கிறபடி
தானே வந்து இடம் கொண்டு தன்னை உபகரிக்கும் படி கொழுந்து விட்டு வளரும் என்கை–

(ருசி விவஸர்க்கு) இப்படி லாவண்யத்தாலே பிறராலும்‌ நிவர்த்திப்பிக்க வொண்ணாதபடி அந்த ருசியாலே பரவஸரானவர்களுக்கு, (பாதமே சரணாக்கும்‌ ஒளதார்யம்‌) “ஆறெனக்கு நின்‌ பாதமே சரணாகத்‌ தந்தொழிந்தாய்‌’ என்று திருவடிகளை உபாயமாகப்‌ பண்ணித் தந்த ஒளதார்யம்‌ (வானமாமலையிலே கொழுந்து விடும்‌) சிரீவரமங்கலநகரிலே நிற்கிற வானமாமலை பக்கலிலே “வானவர்‌ கொழுந்து” (திருவாய்மொழி 5-7-7) என்கிறபடியே கொழுந்து விட்டு அபிவ்ருத்‌தமாம்‌” என்கிறார்–

ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக் கோர் கைம்
மாறு நான் ஒன்றிலேன் என தாவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெருஞ் செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை
நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!–5-7-10—ஆறு -என்று உபாயம் -சரண் என்று உபேயம் -உபாய உபேயங்கள் இரண்டும் உன் திருவடிகளேயாம் படி பண்ணினாய் என்று பிள்ளான் நிர்வஹிக்கும்–இவை இரண்டிலும் உபாயத்தையே சொல்லுகிறது என்று பட்டர் நிர்வஹிப்பர்-எனக்கு உபாயம் உன் திருவடிகளேயாம்படி பண்ணித் தந்தாய் –ஆறு -உபாயம் -உபாக்யார்த்தைக வாசக -என்கையாலே சரண் என்று உபாயம் -எனக்கு என்று -உபாயாந்தர நிஷ்டரைக் காட்டிலும் தமக்கு உள்ள வேறுபாடு சொல்லுகிறார் –நோற்ற நோன்பிலேன் என்று தொடங்கி-உபாயாந்தர சூன்யத்தையை முன்னிட்டு உபாய நிஷ்கர்ஷம் பண்ணுகிற திரு வாய் மொழி யாகையாலே அத்தையே நிகமிக்கிறது அவதாரணத்தாலே ஏக பதத்தை நினைக்கிறது -ஈஸ்வரனை பற்றின ஊற்றத்தாலே உபாயாந்தரங்களை நெகிழ்கை ஒழிய -நாஸ்திக்யத்தாலே விடுமன்று அது விஷயாந்தர ப்ராவண்ய ஹேதுவாம் -ஒளஷத சேவை பண்ணினான் ஒருவன் சர்ப்பத்தின் வாயிலே கை கொடுத்தால் நிர்ப்பாதம் -ஒளஷத ஸ்பர்சம் இல்லாதவன் அத்தைச் செய்தால் மரண ஹேதுவாம் –

கருளப் புட்கொடி சக்கரப் படை வானநாட என் கார் முகில் வண்ணா
பொருள் அல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்
தெருள் கொள் நான் மறை வல்லவர் பலர் வாழ் சிரீவர மங்கல நகர்க்கு
அருள் செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே –5-7-3—என் கார் முகில் வண்ணா
ஸ்தல விசேஷம் பாராதே என் பக்கலிலே உதார குணத்தை காட்டி அருளினவனே –என் அளவு பாராதே பிரயோஜன நிரபேஷமாக பண்ணின படி –

ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா! என்றும் எனை ஆளுடை
வான நாயகனே! மணி மாணிக்கச் சுடரே!
தேனமாம் பொழில் தண் சிரீவர மங்கலத்தவர் கை தொழ உறை
வான மாமலையே! அடியேன் தொழ வந்தருளே.
–5-7-6—தேன் மிக்கு இருந்துள்ள மாம் பொழிலை யுடைத்தாய் சிரமஹரமான சி ரீ வர மங்கல நகரில் உள்ளார் கை தொழும் படி இருக்கிற –வான மாமலையே!-நித்ய ஸூரிகள் அனுபவிக்கும் அபரிச்சேதயமான வடிவு அழகை இவ்வூரில் உள்ளார் அனுபவிக்கலாம் படி கொடுத்துக் கொண்டு இருக்கிறவனே-இவ்விருப்பில் பரமபதத்தில் மேன்மை எல்லாம் இவருக்கு தோன்றா நின்றது என்கை-அடியேன் தொழ வந்தருளே.–-அநந்ய கதியான நானும் அடிமை செய்யும் படி என் முன்னே உலாவி அருள வேணும் -சந்நிஹிதனாய் எழுந்து அருளி இருக்கிற படி கண்டேன் -என் முன்னே உலாவி அருள வேணும் என்கிறார் –

களை கணற்றாரை யுருக்கும்‌ மாதுர்யம்‌ குடமூக்கிலே ப்ரவஹிக்கும்‌.-சூரணை -164-

அதாவது-களைகண் அற்றாரை -இத்யாதி –-களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் –திருவாய்-5-8-8-என்று ரஷகாந்தர பிரதிபத்தி நிவ்ருத்தி பிறந்தாரை-நீராய் அலைந்து கரைந்து உருக்குகின்ற-திருவாய்-5-8-1- -என்று சிதிலராம் படி பண்ணுகிற ஆராவமுதமான மாதுர்யம் – குடமூக்குக் கோயிலாகக் கொண்டு -இரண்டாம் திருவந்தாதி –97-என்ற குடமூக்கு என்னும் கும்பகோணத்தில் மேன்மேலும் ஆராமல் புசிக்கும் படி பெருகா நிற்கும் என்கை —

(களை கணற்றாரை) “நோற்ற நோன்பிலேன்‌ நுண்ணறிவிலேன்‌” (திருவாய்மொழி 5-7-1) என்கிறபடியே தம்முடைய பக்கலிலும்‌ கைம்முதலற்று, “களைவாய்‌ துன்பம்‌ களையாதொழிவாய்‌ களை கண்‌ மற்றிலேன்‌” (திருவாய்மொழி 5-8-8) என்று ரக்ஷகாந்தர ப்ரதிபத்தி நிவ்ருத்தி பிறந்தாரை (உருக்கும்‌ மாதுர்யம்‌) நீராயலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே ஆராவமுதே” (திருவாய்மொழி 5-8-1 என்று சிதிலராக்கும்படியான மாதுர்யம்‌. (குடமூக்கிலே ப்ரவஹிக்கும்‌) குடமூக்கில்‌ கோயிலாக்‌ கொண்டு” (இரண்டாம்‌ திருவந்தாதி 97) என்கிற கும்பகோணத்திலே ப்ரவஹிக்கும்‌ என்கிறார் –

நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்று
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே.—5-7-1—நோன்பிலேன் என்னாதே-நோற்ற நோன்பிலேன் -என்கிறது -பல வியாப்தமாம் படி யனுஷ்டித்தமாய் இருபத்தொரு கர்மம் இல்லை என்கிறது -என் ஆற்றாமையால் சில யுண்டானாலும் சக்ரவர்த்தியுடைய புத்ர காமேஷிடி போலே யாதல் -ஸ்ரீ வஸூ தேவருடைய அநந்த விரதம் போலே பல வியாப்தமாய் இருபத்தொரு தர்மம் இல்லை –ந தர்ம நிஷ்டோஸ்மி-என்கிற இடத்தில் தர்மம் இல்லை என்னாதே தர்ம நிஷ்டை இல்லை என்றால் போலே –நுண்ணறிவிலேன்-அறிவிலேன் என்னாதே -நுண்ணறிவிலேன்-என்றது ஸ்வரூப ஞான பூர்வகமாக பர ஸ்வரூபத்தை சாஷாத்கார பர்யந்தமாக அறியும் அறிவை அறிவை யுடையேன் அல்லேன் -கர்மம் இல்லை என்ற போதே -தத் சாத்தியமான ஞானம் இல்லை என்னும் இடம் அர்த்த ஸித்தமாய் இருக்க ஞானம் இல்லை என்றது என் என்னில்-பூர்வ ஜென்மத்தில் கர்மத்தை அனுஷ்ட்டித்து தத் பலமான ஞானம் இந்த ஜென்மத்தில் நைசர்க்கிகமாக பிறக்கலாம் இறே -அத்தாலே சொல்லிற்று -அன்றிக்கே-புராணங்களில் தனித் தனியே கர்ம ஞானங்களே சாதனமாக சொல்லுகையாலே சொல்லிற்று ஆகவுமாம்- பக்தி இல்லை என்னாது ஒழிவான் என் என்னில் -பக்தி யாகிறது ஞான விசேஷம் ஆகையாலே ஞானத்தை சொன்ன போதே அத்தையும் சொல்லிற்று ஆயிற்று 

களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது
இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே.–5-8-8—உன்னைப் பிரிந்து படுகிற துக்கத்தை போக்கிலும் போக்கு -தவிரிலும் தவிரு -வேறு ரக்ஷகரை யுடையேன் அல்லேன் -நீ உன் கார்யம் செய்யிலும் செய் -தவிரிலும் தவிரு என் தலையில் குறை இல்லை –த்வம் ஏவ உபாய பூதோ மே பவ-என்கிற அம்சத்தில் குறை இல்லை –சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி என்கிற உன் கூறு செய்யிலும் செய் -தவிரிலும் தவிரு -துக்க நிவ்ருத்தி உம்ம தான பின்பு கிருஷியும் உம்மை தாக வேண்டாவோ என்ன-துக்கி யாகைக்கு கிருஷி பண்ணின நான் நிவர்த்தகன் ஆகவோ -ஒரு சக்தி கிருத்யத்தை நான் செய்யவோ-

ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–5-8-1—சேதன அசேதன விபாகம் அற அழிக்க வல்ல உன் பக்கலிலே -அபி வ்ருஷாபரிம்லாநா–உபதப்தோ தகா நத்ய-அன்பாய் -அசித் த்ரவ்யம் அன்றியே -பிரமத்தை இட்டுச் செய்தது என்னலாம் படி இருக்கை -அன்னமயமாய் இருக்கை அன்றிக்கே ப்ரேமமயமாய் இருக்கை -காதல் குருகூர் சடகோபன் இறே-சரீரமானது கட்டுக் குலைந்து-அன்பாய் –அது தான் போய் -நீராய் -அலைந்து கரையும் படி யுருக்கிற்று-உருக்குகின்ற -இத்தலை அழியா நிற்க அத்தலை முதலடி இட்டதில்லையாய் இருக்கை-நெடுமாலே!-சர்வேஸ்வரன் என்னுதல் -போக்யதையின் மிகுதியைச் சொல்லுதல் -வ்யோமோஹ அதிசயத்தை சொல்லுதல் -இப்படி ஸைதில்யத்தை பிறப்பியா நின்று வைத்து எட்டாது இருக்கிறவன் என்னுதல் –தன் போக்யத்தையாலே ஸைதில்யத்தை பிறப்பியா நிற்கை என்னுதல் -தன் வ்யோமோஹ அதிசயத்தை காட்டி ஸைதில்யத்தை பிறப்பியா நிற்கிறவன் என்னுதல்-

எங்கள் பெருமான் இமையோர் தலைமகன் நீ
செங்கண் நெடுமால் திரு மார்பா -பொங்கு
பட மூக்கின் ஆயிர வாய்ப் பாம்பணை மேல் சேர்ந்தாய்
குட மூக்கில் கோயிலாகக் கொண்டு–97-–விஸ்த்ருதமான படங்களையும் பகவத் அனுபவ ஜனித ஹர்ஷத்துக்குப் போக்குவிட ஆயிரம்  வாயையும் மூக்கையும் யுடைய திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிறவன் –திருக் குடந்தையைக் கோயிலாகக் கொண்டு -பரமபதம் போலே –
குடமூக்கில்   கோயிலாகக் கொண்டு எங்கள் பெருமான் ஆனான் –

மெலிவிலும் சேமம் கொள்விக்கும் கிருபை தென்னகரிலே நித்யம்-சூரணை -165-

அதாவது-கீழ் சொன்ன நிரதிசய போக்யமான விஷயத்தை சீக்கிரமாக கிட்டு அனுபவிக்கப் பெறாமையாலே –வைகலும் வினையேன் மெலிய -திருவாய்-5-9-1–என்று நாள் தோறும் மெலியும் அளவிலும் – நாமங்களுடைய நம் பெருமான் அடிமேல் சேமம் கொள் தென் குருகூர்ச் சடகோபன்-திருவாய்-5-9-11 -என்று அவனே ரஷகன் என்று அத்யவசித்து இருக்கும் படி பண்ணும்- ( சேமம் -காவல் )
சுழலில் மலி சக்கரப்பெருமானது தொல் அருளே திருவாய்-5-9-9–என்கிற கிருபை-திரு வல்ல வாழ் சேமம் கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே –திருவாய்-5-9-11-தொல் -தொன்மை- பழைமை ஆகையாலே -நித்தியமாய் இருக்கும் என்கை —

கீழ்ச் சொன்ன மாதுர்யாதிகளைக்‌ கிட்டி அநுபவிக்கப் பெறாமையாலே துக்க ஸீலராய்‌ வைகலும்‌ வினையேன்‌ மெலிய” (திருவாய்மொழி 5-9-1) என்று மெலிவாரையும்‌ “அடிமேல்‌ சேமங்கொள்‌ தென் குருகூர்ச்‌ சடகோபன்‌” (திருவாய்மொழி 5-9-11 என்றும்‌ “தொல்லருள்‌ நல்வினை” (திருவாய்மொழி 5-9-10) என்றும்‌ “சேமங்கொள் தென்னகர்‌’ (திருவாய்மொழி 5-9-11) என்றும்‌ சொல்லுகிறபடியே அவனே ரக்ஷகனென்று அத்‌யவஸிக்கலாம்படி யிருக்கிற க்ருபை தென்னகரான திருவல்லவாழிலே நிற்கிற நிலையிலே தொன்மை பழமையாய்‌ அத்தாலே நித்யமென்கிறார்–-

மானேய் நோக்கு நல்லீர்! வைகலும் வினையேன் மெலிய
வானார் வண் கமுகும் மது மல்லிகை கமழும்
தேனார் சோலைகள் சூழ் திரு வல்லவாழ் உறையும்
கோனாரை அடியேன் அடி கூடுவது என்று கொலோ?–5-9-1—தன்னை விஸ்லேஷிக்கும் படி மஹா பாபத்தை பண்ணின நான் நாள் தோறும் வியஸன பரம்பரையாலே அவசன்னையாய்-ஒரு நாள் மெலிய பொறுக்க மாட்டாத ம்ருது ப்ரக்ருதியானவள் கிடீர் நெடு நாள் நோவு படுகிறாள் –இமா மஸீதா கே சாந்தம் சதபத்ர நிபேஷனாம்-ஸூ கார்ஹாம் -தூக்கிதாம் -த்ருஷ்ட்வா மமாபி வ்யதி தம்மன -என்று ஒரு ராத்திரியில் வியஸனம் திருவடி பொறுக்க மாட்டிற்று இலன் இறே-விலக்ஷண விஷயத்தை பிரிந்தால்-ஜீவிக்கவும் ஒண்ணாது முடியவும் ஒண்ணாது-

நாமங் களாயிர முடைய நம் பெருமானடி மேல்
சேமங் கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
நாமங்களாயிரத்துள் இவை பத்தும் திருவல்லவாழ்
சேமங்கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே.–5-9-11—திரு வல்ல வாழ் யாகிற சேமமுடைத்தான தென்னகரிலே கூட்டிச் சொல்லுவார்-தென்னகர் ராஜாவை இட்டு தென்னகர் என்னுதல் -தெற்குத் திக்கில் நகர் என்னுதல்

கழல் வளை பூரிப்ப நாம் கண்டு கை தொழக் கூடுங் கொலோ?
குழல் என யாழும் என்னக் குளிர் சோலை யுள் தேனருந்தி
மழலை வரி வண்டுகள் இசை பாடும் திருவல்லவாழ்
சுழலின் மலி சக்கரப் பெருமானது தொல்லருளே
.–5-9-9—விரோதி நிரசன த்வரையாலே மிகவும் சுழன்று வருகிற திரு வாழி யை கையிலே யுடைய சர்வேஸ்வரனுடைய -சுழல்வது போலே விளங்கா நின்றுள்ள சக்கரம் என்றுமாம் -ஸ்வாபாவிகமான அவன் பிரசாதத்தாலே –

தொல்லருள் நல் வினையால் சொலக் கூடுங்கொல்? தோழிமீர்காள்?
தொல்லருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திருநகரம்
நல்லருள் ஆயிரவர் நலனேந்தும் திருவல்லவாழ்
நல்லருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே.–5-9-10—ஸ்வாபாவிக கிருபையால் யுண்டான ஸூ க்ருதத்தாலே அவனைக் கண்டு திரு நாமங்களை சொல்லக் கூட வற்றோ என்னுதல் -ஸ்வாபாவிக கிருபையால் அவனைக் காணப் பெற்று ப்ரீதியாலே யுகந்து கொண்டு திரு நாமத்தை சொல்லக் கூட வற்றோ என்னுதல் –நல்வினை -உகப்பு –தன்னுடைய ஸ்வாபாவிகமான நீர்மையை உபய விபூதியும் அனுபவிக்கும் படி பழையதாக விரும்பி வர்த்திக்கும் தேசம் –நித்ய ஸூரிகளும் சம்சாரிகளுக்கு முகம் கொடுத்து நிற்கிற சீலவத்யையை இங்கே வந்து அனுபவிப்பர்கள்-

வ்யவசாயஜ்ஞர் ரக்ஷண ஸ்தைர்யம் பம்போத்தர தேசஸ்தம்–சூரணை -166-

(வ்யவசாயஜ்ஞர்-ஆர்த்த ரஷணத்தில் அவனுடைய வ்யவசாயத்தை யதாவாக அறிந்து இருக்குமவர்
தேசஸ்தம்-நிலை பெற்று நிற்கும்)-அதாவது-ராமஸ்ய வ்யவஸா யஜ்ஞா லஷ்மணஸ்ய தீ மத நாத்யர்த்தம் ஷூப்யதே தேவீ கங்கேவ ஜலதாகமே –ஸூ ந்தர -16-4–(ஸ்ரீ ராம லஷ்மணர்களுடைய எண்ணங்களை மழைக்கால கங்கையைப் போன்று அதிகமாக கலங்க வில்லை ) -என்று
சொல்லப்பட்ட பிராட்டியைப் போலே-ஏறு சேவகனார்க்கு என்னையும் உளன் என்மின்களே -திருவாய்-6-1-10-–என்று ஆர்த்த ரஷணத்தில் தன்னுடைய வ்யவசாயத்தை யதாவாக அறிந்து இருக்குமவர்களுடைய ரஷணத்தில் –மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சன –யுத்தம் -18-3-
ஏதத் வ்ரதம் மம -யுத்தம் -18-33 -என்கிறபடியே அனுகூலராலும் சலிப்பிக்க ஒண்ணாத படி இருக்கும் அவனுடைய ஸ்தைரிய குணம் – (திரு வண் வண்டூர் புணர்த்த பூம் தண் துழாய் முடி நம் பெருமானைக் கண்டு -6-1-5–ரக்ஷணத்துக்கு அன்றோ தலைமாலை சாத்திக் கொண்டு இருக்கிறான் ) தேறு நீர் பம்பை வடபாலைத் திரு வண் வண்டூர் -திருவாய்-6-1-10-என்று பம்பையாகிற ஆற்றுக்கு வடகரையான திரு வண் வண்டூரிலே நிலை பெற்று நிற்கும் என்கை —

(வ்யவஸாயஜ்ஞர்‌ ரக்ஷணஸ்தைர்யம்‌) “சரணே சரண்‌” (திருவாய்மொழி 5-10-11 என்கிற அத்‌யவஸாயத்தை “ஜ்ஞாந ஸம்பந்ந:’ என்றறிகைக்கீடான ஸர்வஜ்ஞதையை உடையவனுடைய, “ஏறு சேவகனார்‌’ (திருவாய்மொழி 6-1-10) என்று அவர்களுடைய ரக்ஷணத்தில்‌ “மித்ரபாவேந ஸம் ப்ராப்தம்‌ நத்யஜேயம்‌ கதஞ்சந” (ரா.யு18-3, “ஸக்ருதேவ”(ரா.யு18-33) இத்யாதிகளிலே ப்ரகாஸிப்பதாய்‌ அநுகூலராலும்‌ குலைக்க வொண்ணாத படியான ஸ்தைர்யம்‌ (பம்போத்தர தேஸஸ்தம்‌) “தேறு நீர்ப் பம்பை வடபாலைத்‌ திருவண்வண்டுர்‌’ (திருவாய்மொழி 61-10) என்று விரஜைக் கரை யென்னுமா போலே திருப் பம்பை யாற்றுக்கு வடகரையிலே திருவண்வண்டூரிலே ஸுஸ்திரம்‌ என்கிறார் –-

நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்
ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ் வெய்துவர் வைகலுமே.–5-10-11—நமக்கு திருவடிகளே உபாயம் என்று –அவதாரணத்தாலே உபாய நைரபேஷ்யம் சொல்லுகிறது -சம்சாரிக ஸ்வ பாவங்கள் மேலிட்டு விபரீதமே பலியா நின்றாலும் இது தவிர வேறு ஒன்றில் கால் தாழாது ஒழிகை -மஹா விச்வாஸம் ஆகிறது 

உணர்த்தல் ஊடல் உணர்ந்து உடன் மேயும் மடவன்னங்காள்!
திணர்த்த வண்டல்கள்மேல் சங்குசேரும் திருவண்வண்டூர்
புணர்த்த பூந்தண் துழாய்முடி நம்பெருமானைக் கண்டு

புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே.–6-1-5–தொடுக்கப் பட்டு தர்ச நீயமாய் சிரமஹரமான திருத் துழாயை திரு முடியில் யுடையனாய் அத்தாலே என்னை அநன்யார்ஹை யாக்கினவனைக் கண்டு – நம் பாடு வருகைக்கு உறுப்பாக ஓப்பியா நிற்கும் -நீங்கள் அறிவிக்கும் அத்தனையே குறை -அன்றிக்கே பிரிவை ஒன்றாக நினையாதே வளையம் வைத்து ஒப்பித்து நமக்கு அபவ்யமாய் இருக்கிறவரை -என்றுமாம் –

வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்!
தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திருவண்வண்டூர்
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே.–6-1-10–வட பார்ஸ்வத்திலே –கடலுக்கு தென்பால் இருக்கிற பிராட்டியை போல் யாயிற்று இவள் இருக்கிற இருப்பு-எதிர் இல்லாத போரை ராவணனையும் அவன் அரணாக இட்ட மதிலையும் துகளாகச் செற்று – ருஷிகள் குடியிறுப்பு பெற்றோம் -பிராட்டி உடன் கூடப் பெற்றோம் இலங்கை விபீஷண விஷயமாகப் பெற்றோம் என்று உகந்த-எங்கும் மேற்பட்ட ஆண் பிள்ளை தனத்தை யுடையவர்க்கு –ரஞ்ச நீ யஸ்ய விக்ரமை -என்று எதிரிகள் மேலிட்ட வீரம் ரதசர்யா ஸூ சம்மத -என்று வீரர்கள் கொண்டாடின வீரம் – உம்முடைய ரஷ்ய வர்க்கத்தில் இன்னும் ஒருத்தி நோவு படா நின்றாள் என்னுங்கோள் –

விளம்ப விரோத மழிக்கும்‌ விருத்‌த கடநா ஸாமர்த்‌யம்‌ நன்னகரிலே விஸ்தீர்ணம்‌.–சூரணை -167-

அதாவது-க்ரம பிராப்தி பற்றாமல் படுகிற த்வரைக்கு ஈடாகக் கடுக வந்து முகம் காட்டாமையால்- விளம்பித்து வருகையாலே –-போகு நம்பீ –திருவாய்-6-2-1-என்றும் –-கழகம் ஏறேல் நம்பீ –திருவாய்-6-2-6–என்றும் – பிரணய ரோஷத்தால் வந்த விரோதத்தை-அழித்தாய் வுன் திரு அடியால் -திருவாய்-6-2-9–என்று அழித்துப் பொகட்ட விருத்தங்களை கடிப்பிக்க வல்ல சாமர்த்தியம் –-நல்குரவும் செல்வமும்-திருவாய்-6-3-1- -என்று தொடங்கி –தன்னில் சேராதவற்றைச் சேர்த்துக் கொண்டு நிற்கிற விருத்தி விபூதி யோகத்தை பிரகாசிப்பித்த –திரு விண்ணகர் நன்னகரே-திருவாய்-6-3-2- -என்று நன்னகரான திரு விண்ணகரத்தில்- பல்வகையும் பரந்த-திருவாய்-6-3-1- -என்கிறபடி பரந்து இருக்கும் என்கை –( விஸ்தீர்ணம்-பல்வகையும் பரந்த )

(விளம்ப விரோத மழிக்கும்‌ விருத்‌த கடநா ஸாமர்த்‌யம்‌) இப்படி வ்யவஸிதராயிருக்கச்‌ செய்தேயும்‌ ஈஸ்வரன்‌ முகம்‌ காட்டாமல்‌ விளம்பிக்கையாலே “போகு நம்பீ” (திருவாய்மொழி 6-2-1 என்றும்‌ “கழகமேறேல்‌ நம்பீ” (திருவாய்மொழி 6-2-6) என்றும்‌ இவர்களுக்கு ப்ரணய ரோஷத்தாலே வந்த விரோதத்தை, “அழித்தா யுன்‌ திருவடியால்‌” (திருவாய்மொழி 6-2-9) என்கிறபடியே அழிக்கும் படியான ‘நல் குரவும்‌ செல்வும்‌ நரகும்‌ சுவர்க்கமுமாய்‌” (திருவாய்மொழி 6-3-1 என்று தொடங்கி -தன்னில் தான்‌ சேராத தாரித்‌ர்யம்‌ ஐஸ்வர்யம்‌ என்கிற விருத்‌தங்களைத்‌ தனக்கு விபூதியாமிடத்து இவற்றினுடைய விரோதங்களைத்‌ தன் பக்கலிலே சேர்த்துக்‌ கொள்ளும்படியான அ கடித க டநா ஸாமர்த்‌யம்‌ நன்னகரான திரு விண்ணகரிலே நிற்கிற நிலையிலே “பல்வகையும்‌ பரந்த பெருமான்‌” (திருவாய்மொழி 6-3-1 என்று பரக்கக்‌ காணலாம்‌ –

மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நான தஞ்சுவன்
மன்னுடை இலங்கை அரண்காய்ந்த மாயவனே!
உன்னுடைய சுண்டாயம் நானறிவன் இனியது கொண்டு செய்வதென்?
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!–6-2-1—உயிரை வைத்துப் போ என்பாரைப் போலே -அவன் மாட்டான் என்று அறிந்து மர்மஜ்ஜை யாகையாலே தந்து போ என்கிறாள் -இவர்கள் தொட்டு அளைந்து என்று இறே அவன் ஆதரிக்கிறது -இவளும் அவன் தொட்டு அளைந்ததைக் கொண்டு தரித்து கிடைக்காக தந்து போ என்கிறாள் –நான் தருவேனோ -இவை ஒழிய எனக்குச் செல்லுமோ என்றான் –

குழகி எங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்மம் ஒன்றில்லை;
பழகி யாம் இருப்போம் பரமே இத் திருவருள்கள்?
அழகியார் இவ் வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலருளர்;
கழகம் ஏறேல், நம்பி! உனக்கும் இளைதே கன்மமே.–6-2-6–எங்கள் திரளில் ஏறாதே கொள் -என்ன -எனக்கு குற்றம் என் என்ன –நம்பி!-சமதம யாதி ஆத்ம குணோபேதர் திரளில் அன்றோ நீர் புகுவது -அவர்கள் அன்றோ உம்மை கிட்ட உரியார்-சிறு பெண்கள் திரளில் புகுகை யீடன்று என்ன -ஆனால் நான் செய்ததுக்கு நிவாரகர் உண்டோ –

உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம்கண் விழிகளின்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–6-2-9—உன் சிற்றில் அழிக்க வேண்டும் பரிகரம் அமையாதோ இதுக்கு -ஜகத் உபஸம்ஹாரம் பண்ணுவது சங்கல்பத்தாலே இறே -சங்கல்பத்தாலே யாதல் -கையாலே யாதல் அழிக்கல் ஆகாதோ-

நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
பல்வகையும் பரந்த பெருமான்
என்னை ஆள்வானைச்
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே.–6-3-1—அநிஷ்டமான தாரித்யாதிகளோடு இஷ்டமான ஐஸ்வர்யாதிகளோடு -வாசியற -ததீயத் ஆகாரத் வேண-இவருக்கு உத்தேசியமாய் இருக்கும் இறே -இதில் தோஷ அம்சம் அஸஹ்யம் அன்றோ என்னில் -தன்னை தேஹ விசிஷ்டனாக அனுசந்தித்த போது த்யாஜ்யமாம் –சேஷத்வ விசிஷ்டனாக அனுசந்தித்த போது உபாதேயமாகக் கடவது -ராஜ புத்திரனுக்கு பிதாவினுடைய ஓலக்கத்தோடு சிறைக் கூட்டத்தோடு வாசியற பிதாவின் ஐஸ்வர்யம் என்று இருக்கும் இறேபல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்-இப்படி விபூதி முகத்தாலே பல படியும் விஸ்ருத்தனானவன் –நாஸ்த்யந்தோ விஸ் தரஸ்ய மே என்று தன் விபூதிக்கு எல்லையில்லை என்று இறே தானும் சொல்லுவது –

கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய்த்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்க்
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர்
தெண்திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே.–6-3-2-–தெளிந்த திரையை யுடைத்தான ஜலத்தாலே சூழப்பட்ட திரு விண்ணகர் -பரமபதம் உத்தேச்யம் ஆனவாறே -விரஜை உத்தேச்யம் ஆமா போலே -அவ்வூர் உத்தேச்யம் ஆனவாறே அங்கு உள்ள ஜல ஸம்ருத்தியும் உத்தேச்யமாய் இருக்கிறது இறே இவர்க்கு –-நன்னகரே-கலங்கா பெருநகரம் இதற்கு சத்ருசம் அன்று -விடாய்த்த இடத்திலே விடாய் தீரலாம் படி இருக்கிற ஏற்றம் உண்டு இறே இதுக்கு –

௧டித கடக விகடநா பாந்தவம்‌ அவ்வூரிலே த்‌விகுணம்‌.–சூரணை -168-

(கடிதர் -சேர்க்கப்படுபவர் -கடகர்-சேர்ப்பவர் -விகடநா பாந்தவம் -பொருந்தாமையைச் செய்யும் உறவு முறை ) அதாவது-பிரான் இருந்தமை காட்டினீர்–திருவாய்-6-5-5 -என்கிற கடகராலே தன் பக்கல் கடிதர் ஆனார்க்கும் கடகர் ஆனார்க்கும் , இவளை நீர் இனி அன்னைமீர் உமக்கு ஆசையில்லை விடுமினோ-திருவாய்-6-5-1-என்னும்படி-விகடநையை பண்ணுவதான –-தேவ பிரானையே தந்தை தாய் என்று அடைந்த –திருவாய் -6-5-11-என்கிற அவனுடைய பாந்தவம் –அவ்வூர் திரு நாமம் கேட்பது சிந்தையே -திருவாய்-6-5-10–என்று தோழி யானவள் திரு துலை வில்லி மங்கலம் என்று தான் சொல்லும் போது
பெண் பிள்ளை சொன்னார் போல் இனிதாய் இராமையாலே –அவ்வூர் -என்று சொல்லப் பட்ட தேசத்திலே -தேவ பிரானும்-அரவிந்த லோசனுமாய் – நின்று இருந்து உறையும் இரட்டைத் திருப்பதி ஆகையாலே இரட்டித்து இருக்கும் என்கை — விகடநா பாந்தவம் -என்றது -விகடநா கர பாந்தவம் என்றபடி —

(கடிதகடநா பாந்தவம்‌) “தொலை வில்லி மங்கலம்‌ கொண்டு புக்கு இழை கொள்‌ சோதிச்‌ செந்தாமரைக்‌ கண் பிரான்‌ இருந்தமை காட்டினீர்‌’(திருவாய்மொழி 6-5-5) என்று பகவத்‌ விஷயத்திலே கடிப்பித்த கடகரான மாதா பிதாக்களோடும்‌ உமக்காசை யில்லை விடுமினோ” (திருவாய்மொழி 6-5-1, நம்மைக்‌ கை வலிந்து என்ன வார்த்தையும்‌ கேட்குறாள்‌” திருவாய்மொழி 6-5-7 என்று பொருந்தாமையைப்‌ பிறப்பித்த அவனுடைய பாந்தவம்‌ “தேவபிரானையே தந்தை தாய் (திருவாய்மொழி-6-5-11) என்று அவனுடைய பரம பாந்தவம்‌ (அவ்வூரிலே த்‌விகுணம்‌.அவ்வூர் திரு நாமம் (திருவாய்-6-5-10) என்று திருவில்லித்தொலை மங்கலமான அவ்வூரிலே-தேவபிரான் அரவிந்த லோசனன் என்றும் நின்றிருந் துறையும்‌” (திருவாய்மொழி 6-5-10) என்றும் இரட்டைத் திருப்பதி யாகையாலே இரட்டித் திருக்‌க்கும் என்கிறார் –

குழையும் வாண்முகத் தேழையைத் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
இழைகொள் சோதிச் செந்தாமரைக்கண் பிரான் இருந்தமை காட்டினீர்
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடன்று தொட்டுமை யாந்திவள்
நுழையுஞ் சிந்தையள் அன்னைமீர்தொழும் அத்திசை உற்று நோக்கியே.–6-5-5—பிரான் -பக்தானாம் என்கிற வடிவு-இருந்தமை காட்டினீர்-கிடையை காட்டுதல் -நின்றமையைக் காட்டுதல் -அன்றிக்கே இருந்தபடியை காட்டினி கோள் -கிடந்தான் ஆகில் –கிடந்ததோர் கிடக்கை -என்பார்கள் -நின்றான் ஆகில் நிலையார நின்றான் -என்பார்கள் -இருந்தான் ஆகில் பிரான் இருந்தமை காட்டினீர் என்பார்கள் -இருந்தபடியே உத்தேசியமாம் இத்தனை-காட்டினீர் -தானே கண்டு மீள மாட்டாதே –நோக்கி இருந்த படி கண்டாயே -முறுவல் இருந்தபடி கண்டாயே -என்று காட்டிக் கொடுத்து கெடுத்தி கோளே-

துவளில்மா மணி மாடமோங்கு தொலைவில்லி மங்கலம்தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்! உமக்காசை இல்லை விடுமினோ;
தவள ஒண்சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண்மலர்க் கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறுமே.–6-5-1–தொழும் இவளை -ஞானா நந்தங்களுக்கு முன்னே நிரூபகம் இறே பாரதந்தர்யம் -தொழுகையே நிரூபகமாய் இருக்கிறவளை –தாஸோஹம் வாஸூ தேவஸ்ய -ப்ராஞ்சலீம் ப்ரஹவமாஸீனம் -ஒன்றை உருகு பதத்தில் பிடித்தால் வலித்தாலும் அப்படியே உருவ நிற்கும் ஆயிற்று–நீர் -இவளுடைய ப்ராவண்யத்தில் சாதனா புத்தி பண்ணுகிற நீங்கள் –இனி -இவளுக்கு இவ் ஊரைக் காட்டின பின்பு-அன்னைமீர்!-ப்ராப்த யவ்வனை யானாலும் -பெற்றோம் என்கிற ப்ராப்தியைக் கொண்டு மீட்கப் போமோ –அவ்வருகு பட்டாலும் நியந்தரு தையைக் கொண்டு மீட்கவோ-உமக்காசை இல்லை விடுமினோ; வகுத்தவன் கைக் கொண்டால் உமக்கு ஆசை இல்லை –ஹிதம் சொல்லுவதை பெற்ற எங்களை விடுங்கோள் –

அன்னைமீர்! அணி மாமயில் சிறு மானிவள் நம்மைக் கை வலிந்து
என்ன வார்த்தையும் கேட்குறாள்
தொலை வில்லி மங்கலம் என்றலால்
முன்னம் நோற்ற விதி கொலோ? முகில் வண்ணன் மாயம் கொலோ?
அவன்சின்னமும் திருநாமமும் இவள் வாயனகள் திருந்தவே.–6-5-7—இவள் பருவம் இது –நமக்கு அவ்வருகே போன ஆச்சர்யம் பாரி கோளே –மைத்ரேய என்னுமா போலே –அழகிய நிறத்தை உடையளாய் -முக்தமான மான் போலே அதி பாலையாய் இருக்கிறவள்-அழகியதாய் சிலாக்யமானமாய் இருக்கிற மயில் போலே இருக்கிற சிறுப் பெண் என்றுமாம்-முக்தையான இவள் நம்மைக் கை விஞ்சி -நம்மில் காட்டிலும் அந்தரங்கை யானாள்-என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலை வில்லி மங்கலம் என்றலால்-தொலை வில்லி மங்கலம் என்கை ஒழிய ஏதேனும் ஒரு வார்த்தையும் கேட்க்கிறீலள் -என்னுடைய வார்த்தையும் கேட்க்கிறீலள் -உங்களை மறைத்ததும் சொல்லுவது எனக்கு இறே –அவ் வூரை நான் சொல்லிலும் கேட்க்கும் –

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண்குரு கூரவர் சடகோபன்

முந்தை ஆயிரத்துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச்சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே.–6-5-11—மநோ வாக் காயங்கள் மூன்றும் -ஒருபடிப்பட அவன் பக்கலிலே ப்ரவணமாய் இருக்கிற படி –இரங்கி -என்றும் –மணி வண்ணாவோ என்று கூவுமால் -என்றும் –தன் கரங்கள் கூப்பித் தொழும் -என்றும் -மூன்றாலும் இவருக்கு உண்டான இவருக்கு உண்டான பிராவண்ய அதிசயம் இறே இது திருவாய் மொழியிலே சொல்லிற்று-தேவ பிரானையே தந்தை தாய் என்றடைந்த–அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் வைத்து திருத் தொலை வில்லி மங்கலத்திலே ஸூலபனாய் இருந்தவனையே சர்வவித்த பந்துவும் என்று -அப்படியே பற்றுவதும் செய்தவர்-

பின்னை கொல்?நிலமாமகள்கொல்? திருமகள்கொல்? பிறந்திட்டாள்
என்ன மாயங்கொலோ? இவள்நெடு மால்என்றே நின்று கூவுமால்
முன்னி வந்தவன் நின்றிருந் துறையும் தொலை வில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும் அவ்வூர்த் திருநாமம் கேட்பது சிந்தையே
.–6-5-10-தன்னுடைய வ்யாமோஹத்துக்கு அவன் கிருஷி பண்ணின படி -முற்பாடானாய் வந்து -அவன் நிற்பது இருப்பதாகாக் கொண்டு நித்ய வாசம் பண்ணா நிற்கும் வூர் -பசியன் சோறு தாழ்த்தால்படுமா போலே-சென்னியால் வணங்கும் அவ்வூர்த் திருநாமம் கேட்பது சிந்தையே.–-தன் கரங்கள் கூப்பித் தொழுகையும் பிரார்த்த்யமான படி -இருந்த இடத்தே இருந்து தலையை சாய்க்கும் படி ஆனாள்-இவள் அகவாய் ஓடுகிறது -அவ் வூர் திரு நாமம் கேட்க்கையிலே -திரு நாமத்தை கேட்க வல்லேனே என்று ஆயிற்று இவள் மநோ ரதம்-இவள் வாயால் சொல்லக் கடவ திரு நாமத்தை நாம் சொல்லிக் கெடுக்க கடவோம் அல்லோம் -என்று அவ் வூர் என்கிறாள் –

(இங்கு கடிதர் -ஆழ்வார் -கடகர் -தோழிமார் -தொலை வில்லி மங்கலம் தொழும் இவளை நீர் இனி அன்னைமீர் உமக்கு ஆசையில்லை விடுமினோ -என்று சிந்தையாலும் சொல்லாலும் செய்கையாலும் தேவபிரானையே தந்தை தாய் என்று அடைந்தார் அன்றோ )(பட்டர் -அழகிய மணவாள பெருமாள் -என்றும் சோமாசி ஆண்டான் -எம்பெருமானார் -என்றும் –அனந்தாழ்வான் -திருவேங்கடமுடையான் என்றும் -பராங்குச நாயகி -தொலை வில்லி மங்கலம் -என்றும் – பர கால நாயகி -திருக்கண்ண புரம் என்றும் -சொல்லுவதில் உள்ள இனிமை அத்விதீயம் – திருத்தாயார் அவ்வாறு சொல்ல மாட்டாமையாலே அவ்வூர் என்கிறாள் )

கை முதல் இழந்தார் உண்ணும் நிதியின் ஆபத் சகத்வம் புகுமூரிலே சம்ருத்தம்––சூரணை -169-

கை முதல் இழந்தார்-அதாவது-ஏலக் குழலி இழந்தது சங்கே–திருவாய்-6-6-1 -என்று தொடங்கி –
கற்புடை யாட்டி இழந்தது கட்டே –திருவாய்-6-6-10–என்று பிராப்ய அலாப நிபந்தனமான ஆர்த்தியால் வந்த பாரவச்யத்தாலே – பிராப்ய பிராபக பாசங்கள் எல்லாம் தன்னடையே விட்டு கழிகையாலே -கைமுதல் அற்றவர்கள் –உண்ணும்-அதாவது-உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்-திருவாய்-6-7-1- -என்று தாரக போஷக போக்யங்கள் எல்லாம் தானேயாக புஜிக்கும்-
நிதியின் ஆபத் சகத்வம்–அதாவது-வைத்த மா நிதியாம் மது ஸூதனை –திருவாய்-6-7-11 -என்று
ஆபத் ரஷகமாக சேமித்து வைத்த மகா நிதி போல் இருக்கிறவனுடைய ஆபத் சஹத்வம் – புகுமூரிலே சம்ருத்தம்–-அதாவது-திண்ணம் என் இள மான் புகுமூர் திருக் கோளூரே-திருவாய்-6-7-1- -என்று
பிராப்ய ருசி பிறந்தார்க்கு பிரவேஷ்டமாய் இருக்கும் திருக் கோளூரிலே –செல்வம் மல்கி யவன் கிடந்த திருக்கோளூர்க்கே– திருவாய்-6-7-4–என்று ரஷ்ய வர்க்கத்தினுடைய ரஷணமே தனக்கு நிரதிசய சம்பத்தாக நினைத்து வந்து கிடைக்கையாலே சம்ருத்தம் என்கை ..(சம்ருத்தம் -நிறைவு)-

(கைம்முதலிழந்தார்‌ உண்ணும்‌ நிதியின்‌ ஆபத்ஸகத்வம்‌) ” ஏலக்குழலி இழந்தது சங்கே (திருவாய்மொழி 6-6-1 என்று இப்பாலுண்டான ப்ராப்யாபாஸ் ப்ராபகாபாஸங்களைக்‌ கைவிட்டவர்களுக்கு, “உண்ணுஞ் சோறு பருகும்‌ நீர்‌ தின்னும்‌ வெற்றிலையும்‌ எல்லாம்‌ கண்ணன்‌” (திருவாய்மொழி 6-7-1 என்று தாரக போஷக போக்யங்கள்‌ தானேயாம்படியான “வைத்தமாநிதி” (திருவாய்மொழி 6-7-1 என்று ஒருகாலும்‌ தொலையாதபடியான நிதியாயிருக்கிறவனுடைய ஆபத் ஸகத்வம்‌ (புகுமூரிலே ஸம்ருத்‌தம்‌) “புகுமூர்‌ திருக்கோளூர்‌ (திருவாய்மொழி 6-7-1 என்று இவர்களுக்கு ப்ரவேஷ்டவ்யமான திருக்கோளூரிலே நிற்கிற நிலையிலே “செல்வம்‌ மல்க” (திருவாய்மொழி 6-7-4,) என்று ஸம்ருத்‌த மாயிருக்கும்‌ என்கிறார்‌–

ஏலக் குழலி இழந்தது சங்கே–திருவாய்-6-6-1 -என்று தொடங்கி – கற்புடை யாட்டி இழந்தது கட்டே –திருவாய்-6-6-10–என்று பிராப்ய அலாப நிபந்தனமான ஆர்த்தியால் வந்த பாரவச்யத்தாலே –திருத் தாயார் இவளுடைய வலயாதிகள் காணக் காண சிதிலமாய் போகிற படியைக் கண்டு -அவற்றைத் தனித் தனியே சொல்லி கூப்பிடுகிறாள் -நகர பத்த நாதிகள் வேவப் புக்காள்-அது விழுந்தது உது விழுந்தது என்னுமா போலே விரஹ அக்னியால் தன் மக்கள் இழந்தவற்றைச் சொல்லுகிறாள்-கீழில் திருவாய் மொழியில் அலாப தசையோபாதி கிடையாது என்றாலும் விட மாட்டாத படி தன்னுடைய மநோ வாக் காயங்கள் இவ்விஷயத்தில் அதி பிரவணமான படி சொல்லிற்று-இதில் அந்த அலாபத்தால் வந்த பாரவஸ்யத்தை சொல்லுகிறது 

உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற்றிலையு மெல்லாம்
கண்ணன் எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி

மண்ணினுள் அவன் சீர்வளம் மிக்கவன் ஊர்வினவித்
திண்ணம் என்இளமான் புகுமுர் திருக்கோளூரே.–6-7-1—ஜீவித்து அல்லது தரிக்க ஒண்ணாத சோறு -தாஹித்தால் பானம் பண்ணி யல்லது நிற்க ஒண்ணாத தண்ணீர் -தின்றால் அல்லது புஷ்டனாக விரகு இன்றிக்கே இருக்கும் வெற்றிலையும் -தாரக போஷக போக்யம் ஆனவை எல்லாம் எனக்கு நாதனான கிருஷ்ணன் -வாஸூ தேவஸ் சர்வம் -என்று ஆயிற்று இவள் இருப்பது–திண்ணம் என்இளமான் புகுமுர் திருக்கோளூரே.–என் வயிற்றில் பிறப்பாலும்-இவள் படியாலும் இவள் புகுமூர் திருக் கோளூரே –இது ஸூ நிச்சிதம்-மரு பூமியிலே தண்ணீர் போலே இ றே சம்சாரத்தில் திருக் கோளூர்-

கொல்லை என்பர்கொலோ? குணம்மிக்கனள் என்பர்கொலோ?
சில்லைவாய்ப் பெண்கள் அயற்சேரி உள்ளாரும் எல்லே!
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே
மெல்லிடை நுடங்க இளமான் செல்ல மேவினளே.–6-7-4–இவர்கள் சொல்லிற்று சொல்லுகிறார்கள் என்று அவள் செய்வது செய்தாள் -சம்பத்தானது கரை புரண்டு வரும்படியான தேசம்-அவன் கிடந்த திருக்கோளூர்க்கே-தன் பெருமையைப் பாராதே ஆர்த்த ரக்ஷண அர்த்தமாக வந்து கண் வளர்ந்து அருளுகிற தேசம்-

வைத்தமா நிதியாம் மதுசூ தனையே அலற்றிக்
கொத்தலர் பொழில்சூழ் குருகூர்ச்சட கோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப்பத்து அவன்சேர்திருக்கோ ளூர்க்கே
சித்தம் வைத்துரைப் பார்திகழ் பொன்னுல காள்வாரே.–6-7-11—உண்டு என்ன உயிர் நிற்க்க கடவதாய் அனாயாச போக்யமாய் இஷ்ட விநியோக அர்ஹமான மஹா நிதி போலேயாய் விரோதி நிரசன ஸ்வ பாவனானவனை சொல்லி ஆர்த்தியாலே கூப்பிட்டு

சென்று சேர்வார்க்கு உசாத் துணை யறுக்கும்‌ ஸெளந்தர்யம்‌ மாநகரிலே கோஷிக்கும்‌.-சூரணை -170-

சென்று சேர்வார்க்கு-அதாவது-தென் திரு பேரையில் சேர்வன் சென்றே- திருவாய்-7-3-8–என்று
க்ரம பிராப்தி பற்றாத பிரேம அதிசயத்தாலே ஹித பரர் வார்த்தை கேளாதே சென்று பிரவேசிப்பது என்னும் படியானவர்களுக்கு –உசாத் துணை அறுக்கும்–அதாவது-என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் -உழந்து இனி யாரைக் கொண்டு என் உசாகவோ-திருவாய்-7-3-4- -என்னும் படி
உசாத் துணையான நெஞ்சை அபஹரிக்கும் –சௌந்தர்யம்–அதாவது-செஞ்சுடர் நீள் முடித் தாழ்ந்ததாயும் சங்கோடு சக்கரம் கண்டு உகந்தும் தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும் -திருவாய்-7-3-3-என்று சொன்னவனுடைய சௌந்தர்யம் –-மா நகரிலே கோஷிக்கும்--அதாவது-தென் திரு பேரெயில் மா நகரே–திருவாய்-7-3-9- -என்று மகா நகரான தென் திரு பேரையில் –-எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு -திருவாய்-7-3-4–என்கிறபடியே – அவ் விஷயத்தை அனுபவித்த ஹர்ஷ பிரகர்ஷத்தால் அங்குள்ளோர் பாடுகிற சாம கோஷத்தாலே தெரியும் என்கிறபடி ..

“தென்திருப்பேரையில்‌ சேர்வன்‌ சென்றே” (திருவாய்மொழி 7-3-8) என்று இப்பாலுள்ளவர்களைக்‌ கைவிட்டுச்‌ சென்று ப்ரவேஸிக்குமவர்களுக்கு “என்‌ நெஞ்சினாரும்‌ அங்கே யொழிந்தார்‌ உழந்தினியாரைக்‌ கொண்டென்னுசாகோ” (திருவாய்மொழி 7-3-4) என்றும்‌, “முழங்கு சங்கக்கையன்‌ மாயத்தாழ்ந்தேன்‌” (திருவாய்மொழி 7-3-4 என்றும்‌ உசாத் துணையான நெஞ்சையும்‌ அபஹரிக்கும்படியான “செங்கனிவாயின்‌” (திருவாய்மொழி 7-3-3) இத்யாதியில்‌ சொல்லுகிற ஸெளந்தர்யத்தை “தென்திருப்பேரெயில்‌ மாநகர்‌” (திருவாய்மொழி 7-3-9) என்று மஹாநகரமான திருப்பேரையில்‌ நிற்கிற நிலையிலே “எழுந்த நல்வேதத்தொலி நின்றோங்கு” (திருவாய்மொழி 7-3-4) என்கிறபடியே அவ்வூரில்‌ ஸாமவேத, கோஷந்தானே சொல்லா நின்ற தென்கிறார் –

கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடிக் கார்க்கடல் வண்ணனோடு என் திறத்துக்
கொண்டலர் தூற்றிற்றது முதலாக் கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ!
மண் திணி ஞாலமும் ஏழ்கடலும் நீள் வீசும்புங் கழியப் பெரிதால்;
தெண் திரை சூழ்ந்தவன் வீற்றிருந்த தென் திருப் பேரெயில் சேர்வன் சென்றே.–7-3-8—இப்படி காதல் கரை புரண்டதாகில் செய்யப் பார்த்தது என் என்ன-தெண் திரை சூழ்ந்தவன் வீற்றிருந்த-தென் திருப் பேரெயில் சேர்வன் -இக்காதலுக்கு விஷயம் சந்நிஹிதம் இல்லாமையால் வந்த வெக்காயம் தீர சிரமஹரமாய் அவன் குறைவற்று இருக்கிற தேசத்திலே போய்ப் புகக் கடவேன்-சென்றே. சேர்வன் -இனி எதிரே அவன் வரிலும் மீளேன் -அவனைச் சேருகை அன்று உத்தேச்யம் -அங்கே சென்று கிட்டுகை –

இழந்த எம்மாமைத் திறத்துப் போன என் நெஞ்சினாரு மங்கே ஒழிந்தார்
உழந் தினி யாரைக் கொண் டென் உசாகோ!
ஓதக் கடல் ஓலி போல எங்கும்
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன் அன்னையர்காள்! என்னை என் முனிந்தே.–7-3-4–அவன் இழவாளனாய் நாம் இழவு பரிஹரிக்கை யன்றிக்கே நாம் இழவாளர் ஆவதே -என்று அபிமானித்து போன நெஞ்சை வினைத் தலையிலே படை யறுத்து கொள்வாரை போலே படை யறுத்துக் கொண்டான் -லங்கையை அரண் அழிக்கைக்கு ஸ்ரீ விபீஷணனை பெற்றால் போலே -என்னுடைய ஸ்த்ரீத்வம் ஆகிற அரண் அழிக்கைக்கு உள் ஆள் பெற்றோம் என்று நெஞ்சை படை யறுத்துக் கொண்டான் இலங்கையின் அளவன்றிக்கே ஸ்த்ரீத்வ அபிமானத்துக்கு அவன் அஞ்சி இருப்பது – நெஞ்சினார் -அங்குத்தை ராஜ குலத்தாலே என்னை மறந்தார் -பெற்றாரைக் கொண்டு வ்ருத்த கீர்த்தனம் பண்ணி யாகிலும் தரிக்க வேண்டாவோ என்ன-உழந் தினி யாரைக் கொண் டென் உசாகோ!-உழந்து -வருந்தி -இனி என் நெஞ்சை இழந்த பின்பு –வருந்தினால் தான் வார்த்தை கேட்ப்பார் உண்டோ —எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு-வேத த்வனி வந்து செவிப்படா நிற்க வேறு போது போக்க போமோ -எங்கும் எழுந்த – சார்வதரிகமாக பரவா நிற்கை -இது நடையாடாதோர் இடம் பெற்றால் இ றே போது போக்கி தரிக்கலாவது –நல் வேதத்து ஒலி -சாம வேத த்வனி –வேதா நாம் சாம வேதோஸ்மிநின்று ஓங்கு -இடைவிடாதே மிக்கு நிற்கை-தென் திருப் பேரெயில் வீற்றிருந்த-முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன்-வேத த்வனி ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்திலே ப்ரத்வனிக்க -அதில் ப்ரதி த்வனியும் வேத கோஷமுமாய் இரட்டித்து செல்லா நிற்கை -அவனுடைய ஸ்மித வீக்ஷணாதிகளிலே மீள ஒண்ணாத படி அகப்பட்டேன் –

செங்கனி வாயின் திறத்ததாயும் செஞ்சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும்
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்

திங்களும் நாளும் விழா வறாத தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ! நாணும் நிறையும் இழந்ததுவே.–7-3-3—பிரிகிற போது தன் ஆற்றாமையும் வரவ தாழாமையும் தொடக்கமான -தாழ்வு சொல்லுகிற திருவதரத்தில் பழுப்பிலே யாயிற்று நெஞ்சு தோற்றது -அப்போதை தாழ்வுகள் ஒரு மஹா பாரதத்துக்கு போரும் என்கை -தர்ச நீயமாய் உபய விபூதிக்கும் கவித்த முடியை காட்டி யாயிற்று -என்னை எழுதிக் கொண்டது -தன் சேஷித்வத்தின் எல்லையைக் காட்டி யாயிற்று சேஷத்வத்தில் நிறுத்திற்று –சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும்–ஆயுதமும் ஆபரணமு மாய் இருக்கிற ஆழ்வார்களுடைய சேர்த்தியைக் கண்டு உகந்தும்-
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்-தன்னோட்டை சம்பந்தம் எல்லாம் தோற்றும் படி நோக்கின கண் அழகிலே அநந்யார்ஹ சேஷமாயும்-

சேர்வன் சென்று என்னுடைத் தோழிமீர்காள்! அன்னையர்காள்!என்னைத் தேற்ற வேண்டா;
நீர்கள் உரைக்கின்றது என்னிதற்கு? நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை;
கார் வண்ணன் கார்க்கடல் ஞாலம் உண்ட கண்ண பிரான் வந்து வீற்றிருந்த
ஏர்வள ஒண் கழனிப் பழனத் தென் திருப் பேரெயில் மாநகரே.–7-3-9-–தென் திருப் பேரெயில் ஆகிற மஹா நகரத்திலே சென்று சேர்க்கை தவிரேன் -என்னை தேற்ற வேண்டா —

ப்ரவண சித்தம்‌ பரத்வ விமுகமாக்கும்‌ ஆரந்த வ்ருத்‌தி நீணகரிலே.–சூரணை-171-

ப்ரவண சித்தம்-அதாவது-தீ வினை உள்ளத்தின் சார்வல்ல வாகித் தெளி விசும்பு ஏறல் உற்றால்
திரு வாறன் விளை அதனை மேவி வலம் செய்து கை தொழக் கூடும் கொல் என்னும் என் சிந்தனை–
திருவாய்-7-10-9–என்று –அவித்யாதிகள் பிரத்யக் வஸ்துவான ஆத்மாவில் பற்றற போய் -தெளிவை விளைப்பதான பரம பதத்தை ப்ராபிக்கை வந்து கிட்டினாலும் என் நெஞ்சானது -திரு வாறன் விளை யாகிற இத் தேசத்தைக் கிட்டி – அனுகூல வ்ருத்தி பண்ணிக் கையாலே தொழக் கூடுமோ என்னா நிற்கும் என்று தன் பக்கல் பிரவணரானவர்கள் சித்தத்தை –பரத்வ விமுகமாக்கும்-அதாவது
சிந்தை மற்று ஒன்றின் திறத்து அல்லாத் தன்மை தேவ பிரான் அறியும்-திருவாய்-7-10-10- -என்று
பரம பதத்தின் பேர் சொல்லுகையும் அசஹ்யமாம் படி பரத்வத்தில் விமுகமாகப் பண்ணும் –
ஆநந்த வ்ருத்தி-அதாவது–இன்பம் பயக்க எழில் மாதரும் தானும் இவ் எழ உலகை இன்பம் பயக்க இனிதுடன் வீற்று இருந்து –திருவாய்-7-10-1–என்கிற ஆநந்த வ்ருத்தி –-நீண் நகரிலே–அதாவது
திரு வாறன் விளை என்னும் நீள் நகரம் அதுவே -திருவாய்-7-10-6–என்றும்-திருவான் விளை நீள் நகரத்து உறைகின்ற பிரான் -திருவாய்-7-10-7- என்றும் நீள் நகரான திரு வாறன் விளையில் வ்யக்தம் என்ற படி –

(ப்ரவண சித்தம்‌ பரத்வ விமுகமாக்கும்‌ ஆநந்த வருத்தி) “தீவினை உள்ளத்தின்‌ சார்வல்ல இத்யாதி, “என்றுமென்‌ சிந்தனை” (திருவாய்மொழி 7-10-9) என்று அவித்‌யாதிகள்போய்‌ பரமபத ப்ராப்தியிலே ஒருப்பட்டாலும்‌ த்ரிவித கரணங்களாலும்‌ ஸர்வரும்‌ வந்தாஸ்ரயிக்கும்படியான திருவாறன்‌ விளையிலே புக்கு அடிமை செய்ய வேணும்‌ என்னா நின்றதென்‌ நெஞ்சானது என்று தன் பக்கல்‌ ப்ரவணமான சித்தத்தை “சிந்தை மற்றொன்றின்‌ திறத்ததல்லாத்‌ தன்மை” (திருவாய்மொழி 7-10-10 என்று பேருங்கூட அஸஹ்யமாம்படி பரத்வத்தையும்‌ உபேக்ஷிக்கும்படி பண்ணவற்றான, “இன்பம்‌ பயக்க எழில்மலர்‌ மாதரும்‌ தானும்‌ இவ்வேழுலகை இன்பம்‌ பயக்கவினிதுடன்‌ வீற்றிருந்து” (திருவாய்மொழி 7-10-1 என்கிற ஆநந்த வ்ருத்‌தி நீணகரான திருவாறன் விளையிலே காணலாமென்கிறார் –

தீ வினை உள்ளத்தின் சார்வல்லவாகித் தெளி விசும்பு ஏறலுற்றால்
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று
யாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனை
மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல்?’ என்னுமென் சிந்தனையே
.–7-10-9—அவித்யாதிகள் ஆத்மாவை ஸ்பர்சியாத படி யாய் -மனஸ் ஸூ நிர் தோஷமாய் என்றபடி-தெளி விசும்பு -இங்கு உள்ளார் அங்கு செல்லிலும் தெளிவைப் பிறப்பிக்கும் தேசம் -அவனே வரிலும் சோக மோஹங்களை விளைக்கும் இது -இருள் தரும் மா ஞாலம் இ றே இது -தெளி விசும்பு சுத்த சத்வம் அது –-ஏறலுற்றால்-போக ப்ராப்தமானால் -கிடைப்பதானால் –நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்றுயாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனை-மநோ வாக் காயங்களாலே நித்ய ஸூ ரிகளும் பயின்று ஆஸ்ரயிக்குமதாய்-நிரதிசய போக்யமான திருவாறன் விளையை -தீ வினை உள்ளத்தின் சார்வு அல்லவாகி -என்ன வேண்டாத நித்ய நிர்தோஷர் படுகாடு கிடக்கிற தேசம் என்கை-மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல்?’ என்னுமென் சிந்தனையே.–கிட்டி அனுகூல வ்ருத்திகளை பண்ண வற்றே என்னா நின்றது என் மனஸ்ஸூ –பாவோ நான்யத்ர கச்சதி -என்று என் வசம் அல்ல என் மனஸ்ஸூ –

தீ வினை உள்ளத்தின் சார்வல்லவாகித் தெளி விசும்பு ஏறலுற்றால்
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று
யாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனை
மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல்?’ என்னுமென் சிந்தனையே
.–7-10-9—மநோ வாக் காயங்களாலே நித்ய ஸூ ரிகளும் பயின்று ஆஸ்ரயிக்குமதாய்-நிரதிசய போக்யமான திருவாறன் விளையை-கிட்டி அனுகூல வ்ருத்திகளை பண்ண வற்றே என்னா நின்றது என் மனஸ்ஸூ –பாவோ நான்யத்ர கச்சதி -என்று என் வசம் அல்ல என் மனஸ்ஸூ –

இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற் றமர்ந் துறைகின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை
அன்புற் றமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களு மாகுங் கொலோ?
–7-10-1–அன்புற்று-இவர் திருவாய்மொழி கேட்க்கைக்கு நல்ல இடம் என்று ஸ்நே ஹத்தை பண்ணி –அமர்ந்து -வேறு ஒரு பிரயோஜனத்தை கனிசியாதே-தேச வாசம் தானே பிரயோஜனமாக கொண்டு-உறைகின்ற -அவதாரம் போலே அன்றிக்கே நித்ய வாசம் பண்ணுகிற-அணி பொழில் சூழ் திரு வாறன்விளை-தர்ச நீயமான பொழில் சூழ்ந்த தேசத்தை-அன்புற்று -தேன தே தமனுவ்ரதா -என்கிறபடியே அவன் விரும்பும் தேசத்தையே விரும்பும் அத்தனை இறே -அவன் திருவாய் மொழி கேட்க்கைக்கு நல்ல இடம் என்று ஸ்நே ஹித்தால் போலே நாமும் திரு வாய் மொழி கேட்ப்பிக்கைக்கு நல்ல இடம் என்று ஸ்நே ஹத்தை பண்ணி-அமர்ந்து -நாமும் அநந்ய பிரயோஜனராய்–அனுகூல வ்ருத்திகளைப் பண்ணி -மநோ ரத்தத்துக்கு காலமான ஆனதுவே போகத்துக்கும் காலமாக வற்றோ –அபீதா நீம் சகலஸ் ஸ்யாத் –

ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீவினை உள்ளித் தொழுமின் தொண்டீர்!
அன்றங்கு அமர்வென்று உருப்பிணி நங்கை அணி நெடுந் தோள் புணர்ந்தான்
என்றும் எப்போதும் என்நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக் கின்ற பிரான்
நின்ற அணி திரு வாறன்விளை என்னும் நீணக ரமதுவே.–7-10-6-
–அந்த மணக்கோலத்தோடு என்னுடைய ஹ்ருதயத்தில் இருக்கிற உபகாரகன்-நின்ற அணி திரு வாறன்விளை என்னும் நீணக ரமதுவே.–ஹ்ருதயத்தில் நிற்கிறவன் கண்ணுக்கு விஷயமாம் படி வந்து நிற்கிற தர்ச நீயமான திருவாறன் விளை யாகிற மஹா நகரம் அதுவே -உள்ளித் தொழுமின் தொண்டீர்!-ஒன்றும் நில்லா – முற்றவும் தீவினை கெடும்-

ஸாதரரைப்‌ பரிசழிக்கும்‌ சேஷ்டித ஆஸ்சர்யம்‌ குளத்தே கொடி விடும்‌.–சூரணை -172-

(சாதரரை -அன்பினை யுடையவர்களை கொடி விடும் -மிக்குத் தோன்றும்-திருக் குளந்தை-இப்பொழுது பெரும் குளம் என்ற திருநாமம் இந்த திவ்ய தேசத்துக்கு )

அதாவது-ஆழி வலவனை ஆதரித்து –கூடச் சென்றேன்–திருவாய்-8-2-4- -என்று தன் பக்கல் ஆதாரத்தோடு கூடி இருப்பவரை-பரிசு அழிக்கும்–அதாவது- பல் வளையார் முன் பரிசு அழிந்தேன் -திருவாய்-8-2-4–என்னும்படி-ஸ்த்ரீத்வ பிரகாரமான லஜ்ஜாதியை அழிக்கும்-மாயக் கூத்தன்-திருவாய்-8-2-4-என்கிற சேஷ்டித ஆச்சர்யம் –மாடக் கொடி மதிள் தென் குளந்தை -திருவாய்-8-2-4-என்ற திருக் குளந்தையில் இதற்கு என்று கட்டின மாடக் கொடி முகேன பிரகாசிக்கும் என்கை–

(ஸாதரரைப்‌ பரிசழிக்கும்‌ சேஷ்டிதாஸ்சர்யம்‌] “கூடச் சென்றேன்‌‘ இத்யாதி- ஆதரித்து” கூடச்சென்றேன்‌’ என்று இப்படி ஆதரமுடையாரை ‘பல்வளையார் முன்‌ பரிசழிந்தேன்‌‘ (திருவாய்மொழி 8-2-4) என்று பரிசழிக்கும்படியான மாயக் கூத்தென்கிற சேஷ்டிதாஸ்சர்யம்‌ (குளத்தே கொடிவிடும்‌) தென் குளந்தையிலே “மாடக்‌ கொடி” (திருவாய்மொழி 8-2-4) என்று கொடி யெடுத்து ப்ரகாஸிக்கும்‌ என்கிறார்‌-

கூடச் சென்றேன் இனி என் கொடுக்ககேன் கோல் வளை நெஞ்சத்து தொடக்கம் எல்லாம்
பாடற்று ஒழிய இழந்து வைகல் பல்வளையார் முன்பு பரிசு இழந்தேன்
மாடக் கொடி மதிள் தென் குளந்தை வண் குடபால் நின்ற மாயக் கூத்தன்
ஆடற் பறவை யுயர்த்த வெல் போர் ஆழி வலவனை யாதரித்தே–8-2-4–கூடச் சென்றேன்-சம்ச்லேஷ அர்த்தமாக சென்றேன் -ஸ்வரூபத்தை அழிய மாறி யன்றோ நான் சென்றது-வைகல்-பல்வளையார் முன்பு -என்றும் ஓக்க பலவகைப் பட்ட வளையை யுடைய ஸ்த்ரீகள் முன்பே –அவனையும் என்னையும் குண ஹானி சொல்லக் கடவ ஸ்த்ரீகள் எதிரே-பரிசு இழந்தேன்-பரிசு -பிரகாரம் -என்னுடைய பிரகாரம் -ஸ்த்ரீத்வ பிரகாரம் -அத்தை இழந்தேன் -கழற்றி பூணுமவற்றை அவர்கள் தரித்து இருக்க கழற்ற ஒண்ணாத படி ஆபரணமாய் இருக்கிற லஜ்ஜாதிகளை இழந்தேன் –-மாடக் கொடி மதிள் தென் குளந்தை-மாடங்களையும் கொடியோடு கூடின மதிள்களையும் யுடைத்தாய் -தெற்குத் திக்குக்கு சிலாக்யமான திருக் குளந்தையில்–வெல் போர்-ஆழி வலவனை யாதரித்தே–யுத்தத்தில் வெற்றியோடு அல்லது மீளாத திரு வாழி யை வலவருகே யுடையவனை ஆதரித்து –

ஸ்ரம மனம்‌ சூழும்‌ ஸெளகுமார்ய ப்ரகாசம்‌ ஆய்ச் சேரியிலே.–சூரணை-174-

ஸ்ரம மனம் சூழும்-அதாவது-பணியா அமரர் பணிவும் பண்பும்–திருவாய்-8-3-6–இத்யாதி படி –
பரம பிரேம யுக்தரான நித்ய சூரிகள் பரிசர்யை பண்ண பரம பதத்தில் இருக்கும் அவன் – நிரதிசய சௌகுமாரமான திரு மேனியோடே சம்சாரிகளுடைய துக்கத்தைப் போக்குகைக்காக – தன் வாசி அறியாத இந்த லோகத்தில் வந்து அவதரித்து –அடியார் அல்லல் தவிர்ப்பது –திருவாய்-8-3-7–படி தான் நீண்டு தாவுவது –திருவாய்-8-3-7-ஆகையால் வந்த ஸ்ரமத்தை அனுசந்தித்த மனசானது -வ்யாகுலிதமாய்-பிரமிக்கும்படியான –சௌகுமார்ய பிரகாசம்-அதாவது-ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்—திருவாய்-8-3-3-என்று பூ யேந்தினாப் போலே இருக்கும் திரு ஆழி திரு சங்கை ஏந்துவதும் மலை சுமந்தார் போல் வன் பாரமாக தோற்றும் படி இருக்கிறவன் சௌகுமார்ய பிரகாசம் –-ஆய்ச் சேரியிலே-
அதாவது-உடைய நங்கையார் பிறந்தகம் ஆகையாலே -ஆழ்வாருக்கு ஆய்ச் சேரியாய் இருப்பதாய் –
உருவார் சக்கரம் சங்கு சுமந்து இங்கு உம்மோடு ஒருபாடு உழல்வான் ஓர் அடியானும் உளன் என்று
வண் பரிசாரத்து இருந்த என் திரு வாழ் மார்பற்கு என் திறம் சொல்லார்
-—திருவாய்-8-3-7–என்ற
திருப் பரிசாரத்தில் காணப் படும் என்கை —

(ஸ்ரம மனம்‌ சூழும்‌ ஸெளகுமார்ய ப்ரகாமம்‌) பணியா வமரர்‌ இத்யாதி. “திரு நீல மணியார்‌ மேனியோடு என்‌ மனம் சூழ வருவாரே (திருவாய்மொழி 8-3-6) என்று அந்த சேஷ்டிதத்தாலுள்ள ஸ்ரமம்‌ இவர்‌ நெஞ்சிலே சூழ வரும்படியான ஸெளகுமார்யம்‌ “ஆழியும்‌ சங்கும்‌ சுமப்பார் தாம்‌” (திருவாய்மொழி 8-3-3) என்று அப்ராக்ருத விக்‌ரஹத்தினுடைய ஸெளகுமார்ய ப்ரகாஸம்‌-

பணியாவமரர் பணிவும் பண்பும் தாமேயாம்
அணியாராழியும் சங்கமுமேந்துமவர் காண்மின்
தணியா வெந்நோய் உலகில் தவிர்ப்பான் திரு நீல
மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே
–8-3-6–பணியாவமரர் -வேறே சிலரை பணிய சம்பாவனை இல்லாத நித்ய ஸூ ரிகள் -முன்பு அஸேவ்யர் காலிலே குனிந்து ஒரு நாளிலே அனுகூலித்து-அழுக்கு உடம்பு எச்சில் வாய் என்று அனுதபித்து -பின்பு அவன் காலிலே குனிந்தவர்கள் அல்லர் –பணிவும் பண்பும் தாமேயாம்-அவர்கள் பணிவுக்கும் ஞானாதி குணங்களுக்கும் தாமே விஷயமாய் இருக்குமவர்–திரு நீல-மணியார் மேனியோடு -நீல மணி போலே சிரமஹரமாய் ஸூகுமாரமான வடிவோடே -இங்கே வர வேண்டினால் அவ்வடிவைக் கொண்டு வர வேணுமோ
என் மனம்-அந்த ஸூகுமாரமான வடிவோடே சம்சாரத்தில் உலவா நின்றான் என்று அறிந்த என் மனசானது-சூழ வருவாரே--சுழன்று வரும் படி வருகிறவர் –தணியா வெந்நோய் –தவிர்ப்பான் -உலகில் -வருவார் என்றுமாம் –

வருவார் செல்வார் வண் பரிசாரத்து இருந்த என்
திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வதென்
உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும்மோடு
ஒருபாடு உழல்வான் ஓரடியானும் உளன் என்றே-8-3-7-
–அழகு மிக்கு இருந்துள்ள ஆழ்வார்களை சாதரமாக தரித்து என்னுதல் -திரு மேனிக்கு எல்லாம் வேறு ஆபரணம் வேண்டாதே தானே ஆபரணமாக போரும்படியான ஆழ்வார்கள் என்னுதல் -இங்கு -ஒரு நாடாக பரியும் தேசம் இ றே அது -பரிவாரும் இன்றிக்கே இருக்கும் தேசத்திலே-உம்மோடு-ஒருபாடு உழல்வான்-இடைவிடாதே ஒரு பார்ஸ்வத்தை பற்றி திரிவான் -ஒரு பார்ஸவத்துக்கு இளைய பெருமாள் உளர் இறே-ஓரடியானும் உளன் என்றே–அநந்ய பரனாய் இருப்பான் ஒருவன் உளன் என்று -ச மஹாத்மா ஸூ துர்லப-என்று கை வாங்கி இருப்பர் –ஒருவன் உளன் என்று என் திறம் சொல்லார் -செய்வது என் –

ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை
தாளும் தோளும் கைகளை யாரத் தொழக் காணேன்
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–8-3-3—ஆபரணமான திவ்யாயுதங்கள் -அவன் ஸுகுமார்யத்தாலே மலை எடுத்தால் போலே சுமையாய் தோற்றுகிறது இவர்க்கு -எதிரிகளுக்கு அஸ்திரமாய் -அனுபவிப்பார்க்கு ஆபரணமாய் இருக்கிறதை -ஸுகுமார்யத்தை அனுசந்தித்த இவருக்கு மலையாய் இருக்கிறது-தாம் -தம்மைப் பார்த்துக் கொள்ள வேண்டாவோ -எப்போதும் கை கழலா நேமியான் அன்றோ -நிரூபகங்கள் ஆனவை சுமையோ என்ன -அது தானே செய்கிறது –
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை-வாளும் வில்லும் கொண்டு பின்னே செல்லுகைக்கு இளைய பெருமாள் மாத்திரம் ஒருவர் உண்டானாலோ –-ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்-வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை-என்கிறது பரிவரான நீர் இவற்றுக்கு ஆள் அன்றோ என்று தம்மை ஏவுகைக்காக –

மஹா மதிகள் அச்சம் கெட்டு அமரும் சௌர்யாதிகள் சிற்றாறிலே கொழிக்கும் .–சூரணை -175-

மஹா மதிகள்-அதாவது-சம்ஸ்பருசன்னாசனம் ஸௌரே விதுரஸ்ஸ மஹாமதி -பாரதம் -உத்யோக பர்வம் –– என்கிறபடியே – சௌகுமார்ய அனுசந்தானத்தாலே அவனுக்கு எங்கே என்ன தீங்கு வருகிறதோ என்று – அஸ்தானே பய சங்கை பண்ணும் மஹாமதிகள்– அச்சம் கெட்டு-அதாவது
வார் கடா வருவி யானை –கஞ்சனைத் தகர்த்த சீர் கொள் சிற்றாயன் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு எங்கள் செல் சார்வு-திருவாய்-8-4-1 என்று தங்களுக்கு நிர்பய ஸ்தானமான புகலாக நினைத்து பயம் கெட்டு –(அங்கு அமரர் பேண-அவர் நடுவே வாழ் திரு மாற்கு இங்கு ஓர் பரிவர் இல்லை என்று அஞ்ச –திருவாய் மொழி நூற்று அந்தாதி -73-என்றும்-வாராமல் அச்சம் இனி மால் தன் வலியினையும் சீரார் பரிவருடன் சேர்த்தியையும் – பாரும் என தான் உகந்த மாறன் –திருவாய் மொழி நூற்று அந்தாதி -அமரும்-அதாவது-திரு சிற்றாற்றங்கரையானை –முக்கண் அம்மானை நான் முகனை அமர்ந்தேன்-திருவாய்-8-4-10–என்று ப்ரஹ்ம ருத்ரர்களுடைய சத்தாதிகள் ஸ்வாதீனமாம் படி இவர்களை பிரகாரமாக உடைய பெருமையை உடையவனாய் வைத்து ஸூலபனாய் வந்து நிற்கும் அவனை – அவனுக்கு என் வருகிறதோ -என்று பட்ட மறுகுதல் தீர்ந்து -கிட்டி அனுபவிக்கப் பெற்றேன் என்று ஹ்ருஷ்டராம் படியான —சௌர்யாதிகள்-அதாவது-வார் கடா வருவி-இத்யாதியாலே சொன்ன குவலயாபீட சாணூர முஷ்டிக கம்சாதி நிரசன பிரகடித ஸௌர்யாதிகள்-சிற்றாறிலே கொழிக்கும் –-அதாவது-திருச் செங்குன்றூரிலே திருச் சிற்றாறு என்கிற திருப் பதியில்- திரு ஆற்றுக்குளே மணி முக்தாதிகள் கரையிலே கொழித்து தோற்றுமா போலே பிரகாசிக்கும் என்கை —ஸௌர்யாதிகள் -என்ற இடத்தில்

ஸம்ஸ்ப்ருயந்நாஸநம்‌ சவ்ரே: விதுர: ஸ: மஹாமதி:” (பார. உத்‌). இப்படி ஸர்வஸக்திக்கும்‌ பரியும்படியான மஹாமதிகள்‌ ஸெளகுமார்ய அநுஸந்தாநத்தாலே இவனுக்கு எங்ஙனே என்ன தீங்கு வருகிறதென்று அஞ்சுகிறவிவர்‌ “எங்கள்‌ செல் சார்வே” (திருவாய்மொழி 8-4-1) என்று எங்களைப்‌ போல்வார்க்கு நிர்பயஸ்த்தா மென்று அச்சம்‌ கெட்டு “நான்முகனை அமர்ந்தேனே (திருவாய்மொழி 8-4-10) என்று இவர்‌ அமர்ந்து ஸுஸ்திரராம்படியான “வார்கடாவருவி” (திருவாய்மொழி 8-4-1) என்று தொடங்கி, குவலயாபீட நிரஸநாதி களாலுண்டான (சவ்ர்யாதிகள்‌) சவ்ர்யாதிகள்‌ திருச்செங்குன்றூரிலே திருச்சிற்றாற்றிலே ஆறு என்கிற ஸமாதி யாலே கொழிக்கும்‌-என்கிறார்‌.

வார்கடா வருவி யானை மா மலையின் மருப்பிணைக் குவடிறுத்துருட்டி
ஊர் கொள் திண் பாகனுயிர் செகுத்து அரங்கின் மல்லரைக் கொன்று சூழ் பரண் மேல்
போர் கடா வரசர் புறக்கிட மாடமீ மிசைக் கஞ்சனைத் தகர்த்த
சீர்கொள் சிற்றாயன் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு எங்கள் செல் சார்வே
–8-4-1-புலி நின்ற தூறு போலே பிரதிகூலருக்கு அஞ்ச வேண்டும் வூர்-எங்கள் செல் சார்வே–மஹா ராஜர் -பெரியாழ்வார் -ஸ்ரீ விதுரர் -தாம் -இங்கனம் ஒத்த பரிவர்களுக்கு -நிர்ப்பய ஸ்தானம் என்று புகும் புகல்–கீழ் இவருக்கு ஓடின பயம் நீங்கிற்று என்னுமது இயல் தழைப்பிலே தெரிந்து இருக்கிற படி கண்டதே

அமர்ந்த நாதனை யவரவராகி அவரவர்கருளும் அம்மானை
அமர்ந்த தண் பழனத் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றறாங்கரையானை
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி அவனிதேவர் வாழ்வு
அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை நான்முகனை யமர்ந்தேனே–8-4-10-–இத்தேசத்தில் பொருந்தி வர்த்திக்கிற ஆச்சர்யமான அழகை யுடையவனை -ப்ரஹ்மாதிகளுடைய சத்தாதிகளுக்கு நிர்வாஹகன் ஆனவனை -ப்ரஹ்ம ருத்ராதிகளை பலகாலும் சொல்லுகிறது -இவனுடைய சர்வ நிர்வாஹகத்வம் தோற்றுகைக்காகவும்-நிர்வாஹயங்களில் ஒன்றால் நலிவு யுண்டாக்க கூடாது என்கைக்காகவும்
யமர்ந்தேனே-ஸர்வேச்வரத்வத்தை அனுசந்தித்து -கீழ் ஓடின பயம் தீர்ந்து -அவனைக் கிட்டப் பெற்றேன் -என்கிறார் –

சாத்ய ஹ்ருதிஸ்னாயும் சாதனம் ஒருக்கடுக்கும் க்ருதஜ்ஞதா கந்தம் தாயப் பதியிலே–சூரணை -176-

(ஒருக்கடுத்தல் -ஒருங்க அடுத்தல் -ஆழ்வார் திரு உள்ளத்தில் நித்ய வாஸம் போலவே-திவ்ய தேசத்திலும் ஆசை கொண்டு நித்ய வாஸம் என்றவாறு–திருமாலிருஞ்சோலை மலையே என்கிறபடியே உகந்து அருளினை நிலங்கள் எல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை-இவனுடைய சரீர ஏக தேசத்திலே பண்ணும் -அங்குத்தை வாஸம் சாதனம் -இங்குத்தை வாஸம் சாத்யம்- கல்லும் கனைகடலும் என்கிறபடி இது சித்தித்தால் அவற்றில் ஆதரம் மட்டமாய் இருக்கும் – இளம் கோயில் கை விடேல் என்று இவன் பிரார்த்திக்க வேண்டும்படியாய் இருக்கும் -ஸ்ரீ வசன பூஷணம் )

அதாவது-சாத்யம் கைப் பட்டால் சாதனத்தில் இழிவார் இன்றிக்கே இருக்க –-திருக் கடித் தானமும் என்னுடைச் சிந்தையும் ஒருக்கடுத்து உள்ளே உறையும் பிரான்-திருவாய்-8-6-2- -என்று சாத்தியமான ஆழ்வார் திரு உள்ளத்திலே வாஸம் லபித்தது இருக்கச் செய்தேயும் ,-இத்தைப் பெற்றது அத் தேசத்தில் நிலையாலே அன்றோ என்று சாதனமான திருக் கடித் தானத்தையும் அடுத்து பிடித்து வர்த்திக்கும் படியான க்ருதஜ்ஞாத பரிமளம் — திருக் கடித்தான நகரும் தான தாயப் பதி—திருவாய்-8-6-8-என்று
தனக்கு தாயப் ப்ராப்தமான ஸ்தானமாக நினைத்து இருக்கும் திருக் கடிதானத்தில் என்கை ..
க்ருதஜ்ஞதா கந்தம் -என்றது-கடித்தானம்-என்று மணத்தை உடைத்தான ஸ்தானம் என்கையாலே 

திருக் கடித்தானமும்‌ என்னுடைச்‌ சிந்தையும்‌ ஒருக்கடுத்‌துள்ளே உறையும்‌ பிரான்‌ கண்டீர்‌ (திருவாய்மொழி 8-6-2) என்று ஸாத்‌யமான ஆழ்வாருடைய திருவுள்ளம்‌ தனக்கு இருப்பிடமாக உடையனாயிருக்கச்‌ செய்தேயும்‌ இவ்வா ழ்வார்‌ திருவுள்ளத்தைப்‌ பெறுகைக்கு ஸாதநமான திருக்கடித்தானத்தையும் -அடுத்துப் பிடித்து வர்த்திக்கும்படியான (க்ருதஜ்ஞதா கந்தம்‌ தாயப்பதியிலே) திருக்கடித்தான நகரம்‌ “தனதாயப்பதி” (திருவாய்மொழி 8-6-8) என்று அவனுக்கு தாயப்ராப்தமான திருக்கடித்தானத்திலே என்கிறார்‌. கடித்தானம்‌ வாசப் பொழில்‌ என்றும்‌ சொல்லுகையாலே கந்தமென்கிறது.

திருக் கடித்தானமும் என்னுடைச் சிந்தையும்
ஒருக்கடுத்துள்ளே உறையும் பிரான் கண்டீர்

செருக்கடுத்தன்று திகைத்த வரக்கரை
உருக்கெட வாளி பொழிந்த வொருவனே–8-6-2-ஒருங்கவடுத்து -அதாவது ஓக்க நினைக்கை -திருப்பதியையும் என் ஹிருதயத்தையும் ஓக்க ஆதரித்து –

தான நகர்கள் தலைச் சிறந்து எங்கும்
வானிந்நிலம் கடல் முற்றும் எம் மாயற்கே
ஆனவிடத்தும் என்நெஞ்சம் திருக் கடித்
தான நகரும் தனதாய்ப் பதியே–8-6-8-
–னக்கு தாய ப்ராப்தமான ஸ்த்தானமாக விரும்பி இரா நின்றான் –

அவகாஹித்தாரை அனந்யார்ஹமாக்கும் நாயக லஷணம் வளம் புகழு மூரிலே குட்டமிடும்–சூரணை -176-

அவகாஹித்தாரை-அதாவது-அப்பன் திருவருள் மூழ்கினள்–திருவாய்-8-9-5-என்று தன் பிரசாதத்தாலே மருனனைய அவகாஹித்தாரை –-அனந்யார்ஹமாக்கும்-அதாவது- அருமாயன் பேர் அன்றி பேச்சு இலள்–திருவாய்-8-9-1–என்றும் –திருப் புலியூர் புகழ் அன்றி மற்று –பரவாள் இவள் நின்று இராப் பகல் -திருவாய்-8-9-9-–என்றும் – திரு புலியூர் நின்ற மாயப் பிரான் திரு அருளாம் இவள் நேர் பட்டது -திருவாய்-8-9-10–என்னும் படி அனந்யார்ஹம் ஆக்குமதாய் –நாயக லஷணம்--அதாவது-
கருமாணிக்க மலை மேல் மணித் தடம் தாமரைக் காடுகள் போல் -திருவாய்-8-9-1–என்றும் –
துன்னு சூழ் சுடர் ஞாயிறும் அன்றியும் பல் சுடர்களும் போல்-திருவாய்-8-9-2- -இத்யாதிகளால் சொன்ன
அவயவ சோபை ஆபரண சோபை முதலான நாயக லஷணம் ..-வளம் புகழு மூரிலே குட்டமிடும்--அதாவது-திருப் புலியூர் வளம் புகழும் -திருவாய்-8-9-3-என்று இவர் கொண்டாடும் படியான ஐஸ் வர்யத்தை உடைய திருப் புலியூரிலே பூரணமாம் என்கை ..-குட்டமிடும் -என்றது -குட்ட நாடு -என்னும் அத்தை நினைத்து ..

“அப்பன்‌ திருவருள்‌ மூழ்கினளே” (திருவாய்மொழி 8-9-5) என்று இப்படித்‌ தன்னுடைய க்ருபையிலே மறு நனைய மூழ்கினாரை “அருமாயன்‌ பேரன்றிப்‌ பேச்சிலள்‌” (திருவாய்மொழி 8-9-1) என்றும்‌, “திருப்புலியூர்‌ புகழன்றி மற்று பரவாளிவள்‌’ (திருவாய்மொழி 8-9-9) என்றும்‌ “மாயப்பிரான்‌ திருவருளாம்‌ இவள்‌ நேர்பட்டதே” (திருவாய்மொழி 8-9-10) என்றும்‌ சொல்லுகிறபடியே அநந்யார்ஹராக்கும்‌ அவயவ ஸோபை, ஆபரண ஸோபை, தொடக்கமான நாயக லக்ஷணம்‌; “திருப்புலியூர்‌ வளம்‌ புகழும்‌” (திருவாய்மொழி 8-9-3) என்று இவர்‌ கொண்டாடும்படியான ஐஸ்வர்யத்தை யுடைத்தான திருப்புலியூரிலே; குட்ட நாடு என்கையாலே குட்டமிடும்‌ என்கிறார் –

புனையிழைகள் அணிவும் ஆடையுடையும் புது கணிப்பும்
நினையும் நீர்மையதன்று இவட்கிது நின்று நினைக்கப் புக்கால்
சுனையினுள் தடந்தாமரை மலரும் தண் திருப் புலியூர்
முனைவன் மூவுலகாளி அப்பன் திருவருள் மூழ்கினளே–8-9-5–ஐஸ்வர்யத்தாலும் குறைவறப் பெற்றேன் -என் தன் ப்ரீதியால் சொல்லுகிறாள் -அவனுடைய –திருவருள் மூழ்கினளே––கடல் கொண்ட வஸ்துவை யன்றோ நீங்கள் மீட்கப் பார்க்கிறது-

கருமாணிக்க மலை மேல் மணித் தடந்தாமரைக் காடுகள் போல்
திரு மார்பு வாய் கண் கை உந்தி காலுடை யாடைகள் செய்ய பிரான்
திருமால் எம்மான் செழு நீர் வயல் குட்ட நாட்டுத் திருப் புலியூர்
அருமாயன் பேரன்றிப் பேச்சிலள் அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ–8-9-1–திருப் புலியூரில் வர்த்திக்கிற பெறுதற்கு அரிய ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை யுடையவனுடைய -திரு அயோத்யையில் உள்ளார்க்கு சக்கரவர்த்தி திரு மகனை போலே யாயிற்று இவனும் –பேரன்றிப் பேச்சிலள்-பர வ்யூஹ விபவங்களிலே திரு நாமங்களை சொல்லுகிறிலள்-

பரவாள் இவள் நின்று இராப்பகல் பனி நீர் நிறக் கண்ணபிரான்
விரவாரிசை மறை வேதியரொலி வேலையின் நின்று ஒலிப்ப
கரவார் தடந்தொறும்தாமரைக்கயம் தீவிகை நின்றலரும்
புரவார் கழனிகள் சூழ் திருப் புலியூர்ப் புகழ் அன்றி மற்றே–8-9-9—பரவாள் இவள் நின்று இராப்பகல்-இவள் அடைவு கெட பேசா நின்றாள் -இராப்பகல் பேசா நின்றாள் -இதுக்கு வேறு பிரமாணம் தேட வேணுமோ -இவள் யுக்தியே அன்றோ பிரமாணம் –திருப் புலியூர்ப் புகழ் அன்றி மற்றே–வேத கோஷமும் வேதார்த்த விசார யுக்தர் கோஷமும் -அலர்ந்த தாமரை பொய்கைகளாலே அலங்க்ருதமான வயலுமான  திருப் புலியூர் புகழ் அன்றி மற்று பரவாள் இவள் நின்று இராப்பகல்-

அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம்தண் துழாய் கமழ்தல்
குன்ற மா மணி மாட மாளிகைக் கோலக் குழாங்கள் மல்கி
தென் திசைத் திலதம் புரை குட்ட நாட்டுத் திருப் புலியூர்
நின்ற மாயப் பிரான் திருவருளாம் இவள் நேர் பட்டதே
–8-9-10—தெற்கில் திக்குக்கு திலகம் போலே இருக்கிற குட்ட நாட்டுத் திருப் புலியூரில் நின்று அருளின ஆச்சர்ய பூதன் -அவனுக்கு இவள் போராள் -என்னும் படி குணாதிக்கண் -இவளுக்கு அவன் போரான் என்று அன்றோ நீங்கள் இருக்கிறது அவனுக்கு இவள் போராள் என்று அன்றோ அவ் வூரார் வார்த்தை –-திருவருளாம்-இவள் நேர் பட்டதே–அவன் பிரசாத்துக்கு சத்ருசமான பாத்ரமானவளாக வேணும் –அன்றி மற்று ஓர் உபாயம் என் -இவள் அம்தண் துழாய் கமழ்தல்

அன்னைமீரிதற் கென் செய்கேன் அணி மேருவின் மீதுலவும்
துன்னு சூழ் சுடர் நாயிறும் அன்றியும் பல் சுடர்களும் போல்
மின்னு நீண் முடி யாரம் பல்கலன் தானுடை யெம்பெருமான்
புன்னை பூம் பொழில் சூழ் திருப் புலியூர் புகழும் இவளே–8-9-2—அழகிதான மேருவின் மேல் சஞ்சரியா நிற்பானுமாய்-காண்கிற அளவன்றிக்கே நெருங்கி சூழ்ந்த தேஜஸ்ஸை யுடைய வி லஷணனான ஆதித்யனும்-அன்றியும் பல் சுடர்களும் போல்-மற்றும் அப்படியே இருக்கிற நக்ஷத்ராதி தேஜோ பதார்த்தங்களும் போலே-

போக்ய பாக த்வரை தெளிந்த சந்தைக்கு முன்னில் மூன்றிலும் ப்ரகடம் —சூரணை -177-

போக்ய பாக த்வரை-அதாவது-பசி கனத்தவன் அன்னம் பக்குவம் ஆவதற்கு முன்னே பதற்றத்தாலே அதுக்கு அணித்தாக வந்து கிடப்பது -இருப்பது-நிற்பது -ஆம் போலே – போக்ய பூதரான ஆழ்வாருக்கு பரம பக்தி ஆகிற பாகம் பிறக்கும் அளவுக்கும் அவனுக்கு உண்டான த்வரை –தெளிந்த சந்தைக்கு முன்னில் மூன்றிலும் ப்ரகடம் — தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே -திருவாய்-9-2-4–என்கிற சந்தைக்கு முன் சொன்ன புளிக்குடி கிடந்தது வரகுண மங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று –என்று
கிடப்பது இருப்பது நிற்பதான – திருப் புளிங்குடி–திரு வரகுணமங்கை –திரு வைகுந்தம் -ஆகிற திருப்பதி மூன்றிலும் தெரியும் என்கை -(என்னில் முன்னம் பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்-திருவாய் -9-6 10—என்று ஆழ்வாரை போக்யமாக கொண்டமை அருளிச் செய்கிறார் )

பசித்த புருஷன்‌ அந்நம்‌ பக்வமாமளவும்‌, நிற்பது, இருப்பது, கிடப்பதாமாபோலே இப்படி அநந்யார்ஹராகையாலே போக்‌யமான ஆழ்வார்க்கு பரமபக்தியாகிற பாகம்‌ பிறக்குமளவும்‌ போக்தாவான ஸர்வவேஸ்வரனுக்குண்டான த்வரை “தெளிந்த என்‌ சந்தை” என்கிற சந்தைக்கு முன்னில்‌ “புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கையிருந்து வைகுந்தத்துள்‌ நின்று” (திருவாய்மொழி 9-2-4) என்கிற திருப்பதி மூன்றிலும்‌ கிடப்பது இருப்பது நிற்பதாகையாலே ப்ரகடமாய்த்‌ தோற்றுமென்கிறார் –

புளிங்குடிக் கிடந்து வர குணமங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே
என்னை ஆள்வாய் எனக்கு அருளி
நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்பப்
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வாராயே–9-2-4—திருப் புளிங்குடியிலே -கிடந்ததோர் கிடக்கை -என்னும் அழகைக் காட்டும் -திரு வர குண மங்கையிலே -பிரான் இருந்தமை காட்டினீர் -என்னும் இருப்பில் அழகைக் காட்டியும் -ஸ்ரீ வைகுண்டத்தில் -நிலையார நின்றான் -என்னும் நின்ற அழகைக் காட்டியும் -அன்றோ என்னை புகுர நிறுத்திற்று -இவை எல்லாம் நான் இரக்கவோ செய்தது -அயோக்கியன் என்று அகலாத படி கண்கள் சிவந்திலே என் ஹிருதயம் தெளிந்தவாறே -அத்தைக் கை விடாதே நிரந்தர வாஸம் பண்ணி –

வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்

கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10—நான் பாரித்த அளவும் அன்றிக்கே நான் பாரித்த காலத்துக்கு முன்பே பாரித்து –ஆச்சார்ய விஷயீ காரத்துக்கு பின்பு இ றே இவருடைய பாரிப்பு -/ சம்பந்தத்துக்கு திரஸ்கார ஹேது இல்லாமையால் -அவனுடைய பாரிப்பு சத்தா ப்ரயுக்தம் இறே
தான் என்னை–விபுவாய் ஸ்வதந்த்ரனான தான் -அணு பரிமாணனாய் பரதந்த்ரனான என்னை –
முற்றப் பருகினான்-தன் குண சேஷ்டிதாதிகளைக் காட்டி -என்னை நீராக்கி -நிச்சேஷமாகப் பருகினான் –வஸசா சாந்வயித்வைநம் லோச நாப்யாம் பிபன்நிவ -என்கிறபடியே -இத்தலையை அழித்துப் பரிமாறினான் -என்கிறபடியே –விழுங்குமவன் காணில் -என்று இறே இவர் பாரித்தது-

போகத்தில் தட்டு மாறும் சீலம் காட்கரையிலே கரை அழிக்கும்–சூரணை -178-

போகத்தில் தட்டு மாறும் சீலம்-அதாவது-இப்படி போக்ய பூதரான ஆழ்வாருடன் கலந்து பரிமாறும் இடத்தில் –-ஆள் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயன் -திருவாய்-9-6-7–என்றும் –-ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது -திருவாய்-9-6-9–என்றும் பேசும்படி அத் தலை இத் தலையாய் சேஷி சேஷ பாவம் மாறாடும் சீல குணம் –காட்கரையிலே கரை அழிக்கும்--அதாவது–திரு காட்கரை மருவிய மாயன் தன் மாயம் நினை தொரு-திருவாய்-9-6-1- -என்று வித்தராய்ப் பேசின திருகாட்கரையிலே கரை அழியப் பெருகும் என்கை — கரை அழிக்கும் என்கிறது -காட்கரை -என்கிற சமாதியாலே ..

இப்படி போக்‌யமான ஆழ்வாரோடே கலந்து பரிமாறுமிடத்து, “ஆட்கொள்வானொத்து என்‌ உயிருண்ட மாயன்‌” (திருவாய்மொழி 9-6-7) என்றும்‌, “ஆருயிர்‌ பட்டது எனதுயிர்‌ பட்டது” (திருவாய்மொழி 9-6-9) என்றும்‌, “தான்‌ என்னை முற்றப்‌ பருகினான்‌” (திருவாய்மொழி 9-6-10) என்றும்‌, அத்தலை யித்தலையாய்‌ ஸேஷ ஸேஷி பாவம்‌ மாறாடும்படியான ஸீலம்‌ திருக்காட்கரையிலே நிற்கிற நிலையிலே, கரை என்ற ஸமாதியாலே இருகரையுமழியப்‌ பெருகும்‌ என்கிறார் –-

காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–9-6-7—அடிமை கொள்வாரைப் போலே புகுந்து – என் உயிர் உண்ட மாயனால்-என்னை வெறும் தரை யாக்கின ஆச்சர்ய பூதனாலே -கீழே திருவருள் என்று மறைத்துச் சொன்ன வார்த்தையை வெளியிடுகிறார் -கிட்டின போது தாழ நின்று மின்மினி பரக்க பரிமாறும் ஆச்சர்யம்-

ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது
பேர் இதழ்த் தாமரைக் கண் கனிவாயது ஓர்
கார் எழில் மேகம் தென் காட் கரை கோயில் கொள்
சீர் எழில் நால் தடம் தோள் தெய்வ வாரிக்கே–9-6-9—நான் பட்ட பாட்டை நித்ய ஸூரிகளில் சிலர் பட்டார் யுண்டோ -பகவத் குணங்களுக்கு அபூமியாய் இருக்கிற சம்சாரத்தில் நான் பட்ட பாடு நித்ய விபூதியில் உள்ளார் பட்டார்களோ –இங்கு எனது உயிர் பட்டது –அங்கே ஆருயிர் பட்டது –என்று அருளிச் செய்வர் எம்பெருமானார் -நவோடையான ஸ்த்ரீக்கு அனுபவத்தில் புதுமையாலே ஆர்த்தி மிக்கு இருக்கும் இறே -என்று நம்பிள்ளைக்கு நஞ்சீயர் அருளிச் செய்வர் –

உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி
பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
தெருவு எல்லாம் காவி கமழ் திருக் காட்கரை
மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே–9-6-1-
-பரத்வத்தில் காட்டிலும் அவதாரத்தில் காட்டிலும் ஏற்றம் சொல்லுகிறது –பரத்வம் நெடும் கை நீட்டு -அவதாரம் காலாவதியை யுடைத்தது-மாயன் -ஆச்சர்யமான ஸுந்தரியாதிகளை யுடையவன் –-தன் மாயம் -கிட்டின போது தாழ நின்று பரிமாறின படி-நினைதொறே–ஊரை நினை தோறும் / ஸுந்தர்யத்தை நினைதொறும் / ஒரு ஊரும் ஒரு வடிவும் இல்லாதாரைப் போலே தாழ நின்ற சீலத்தை நினைத்த தோறும் /-பஹு பிரகாரத்தாலே அனுபவிப்பிக்க வல்லவன் அவன் -ஒன்றிலே கால தத்வம் உள்ளதனையும் கால் தாழ்ந்து புதியராய் அனுபவிக்க வல்லார் இவர் -அப்பொழுதைக்கு அப் பொழுது என்னாரா வமுதம் -என்றவர் இறே –

வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்

கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10—என்னில் முன்னம்-பாரித்துத்--நான் பாரித்த அளவும் அன்றிக்கே நான் பாரித்த காலத்துக்கு முன்பே பாரித்து –ஆச்சார்ய விஷயீ காரத்துக்கு பின்பு இறே இவருடைய பாரிப்பு -/சம்பந்தத்துக்கு திரஸ்கார ஹேது இல்லாமையால் -அவனுடைய பாரிப்பு சத்தா ப்ரயுக்தம் இறே-தான் என்னை–விபுவாய் ஸ்வதந்த்ரனான தான் -அணு பரிமாணனாய் பரதந்த்ரனான என்னை –முற்றப் பருகினான்-தன் குண சேஷ்டிதாதிகளைக் காட்டி -என்னை நீராக்கி -நிச்சேஷமாகப் பருகினான் -வஸசா சாந்வயித்வைநம் லோச நாப்யாம் பிபன்நிவ -என்கிறபடியே -இத்தலையை அழித்துப் பரிமாறினான் -என்கிறபடியே –விழுங்குமவன் காணில் -என்று இறே இவர் பாரித்தது-

மஹாத்மாக்கள் விரஹம் சஹியாத மார்த்த்வம் வளத்தின் களத்தே கூடு பூரிக்கும் .-சூரணை-179-

(இங்கு திவ்யாத்ம ஸ்வரூப மார்த்வம் -கீழே திவ்ய மங்கள விக்ரஹ மார்த்வம்-வளம் -செல்வம் -அடியாருக்கு செல்வம் -கூடு பூரிக்கும் -நிறைந்து இருக்கும் )

மஹாத்மாக்கள் விரஹம் சஹியாத மார்த்த்வம்-அதாவது-தமரோடு அங்கு உறைவார்க்கு—திருவாய்-9-7-2-என்று-தம் பரிஜனங்களோடே அங்கே நித்ய வாஸம் பண்ணுகிறவர்க்கு என்கிற படி –சக்ருத் த்வதாகார விலோகநாசயா த்ருணீக்ருதா நுத்தம புக்தி முத்திபி மஹாத்மபிர் மாமவலயோக்யதாம் நய க்ஷணே பிதேயத் விரஹோதி துஸ் ஸஹ -ஸ்தோத்ர ரத்னம் -55- -என்கிறபடியே – தம்முடைய விக்ரகத்தை ஒருகால் காண வேணும் என்னும் ஆசையினால்- அநுத்தமான போக மோஷங்களையும் த்ருணீகரித்து இருக்கும் மஹாத்மாகளோட்டை விரஹம் சகியாமை யாகிற மார்த்த்வம்-
வளத்தின் களத்தே கூடு பூரிக்கும்
-அதாவது-மூழிக் களத்து வளத்தினை-பெரிய திருமடல் -129- விளக்கினை -என்றும் பாட பேதம் உண்டு என்பர் இதில் -என்று ஆஸ்ரிதருக்கு சம்பத்தாய் இருக்கும் ஸ்வபாவம் ஆனவன் திரு மூழிக் களத்தில் கூடுகட்டி நிற்கும் என்கை —கூடு பூரிக்கும் என்றது -களம்-என்கிற சமாதியாலே —

“தமரோடங்குறைவார்‌’ (திருவாய்மொழி 9-7-2) “என்றும்‌ “ஸக்ருத்வதாகாரேத்யாதி, க்ஷணேபி தே யத்‌ விரஹோ அதி துஸ்ஸஹ (ஸ்தோத்ர ரத்நம்‌ 55 -என்றும்‌ சொல்லுகிறபடியே தன்னுடைய விக்‌ரஹத்தை ஒருகால்‌ காண வேணுமென்கிற ஆசையாலே போக மோக்ஷங்களையும்‌ த்ருணீகரித்திருக்கிற மஹாத்மாக்களோட்டை விரஹம்‌ தனக்கு அதிதுஸ்ஸஹமாம்படியான அவனுடைய மார்தவம்‌, அதாகிறது நெஞ்சில்‌ மென்மை. மூழிக்களத்து விளக்கினை” (பெரியதிருமடல்‌ 129) என்கிற  திருமூழிக்களத்திலே நிற்கிற நிலையிலே, களம்‌ என்கிற ஸமாதியாலே கூடு பூரிக்கும்‌ என்கிறார் ––

நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய்
அமர் காதல் குருகினங்காள் அணி மூழிக் களத்து உறையும்
எமராலும் பழிப்புண்டு இங்கு என் தம்மா விழிப்புண்டு
தமரோடு அங்கு உறைவார்கு தக்கிலமே கேளீரே –9-7-2-–தம் பரிஜனங்களோடே அங்கே நித்ய வாஸம் பண்ணுகிற தமக்கு நாங்கள் ஆகோமோ என்று கேளுங்கோள்–தாமும் தமக்கு நல்லாருமாய் இருக்கிற இருப்புக்கு -அடியார்கள் –குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ-என்று இருப்பார் ஆகாரோ -என்று கேளுங்கோள் —

ஸக்ருத் த்வதாகார விலோகநாஶயா
த்ருணீ க்ருதாந் உத்தம புக்தி முக்திபி: |
மஹாத்மபிர் மாம் அவலோக்யதாம் நய
க்ஷணே’பி தே யத்விரஹோ’திதுஸ்ஸஹ: ||-
-56–உன்னுடைய பிரிவைத் தாங்க முடியாதவர்களான, எத்தனை இன்பங்களும் மோக்ஷமும் பெற்றிருந்தாலும் உன்னுடைய திருமேனியை ஒரு முறை பார்ப்பதைக் கருதினால், அவற்றைப் புல்லைப் போல மதிப்பவர்களான சிறந்த வைஷ்ணவர்களின் கருணைப் பார்வைக்கு நான் இலக்காகும் தகுதியை எனக்குக் கொடு..

என்னை மனம் கவர்ந்த வீசனை வானவர் தம்
முன்னவனை மூழிக் களத்து விளக்கினை ———-129–திரு மூழிக் களத்திலே மிகவும் விளங்கா நின்று உள்ளவனை-வளத்தினை -என்று பாடமான போது-சம்பத் ஆனவனை -என்றுமாம் –

பிரிந்த துன்பக் கடல் கடத்தும் விஷ்ணு போத ஆந்ரு சம்ச்யம் நாவாயிலே நிழல் எழும் ..-சூரணை -180-

பிரிந்த துன்பக் கடல்-அதாவது-அன்புடையாரை பிரிவுறு நோய் -நாச்சியார் -5-4–என்றும் –துன்பக் கடல் புக்கு –நாச்சியார் -5-4-என்றும் சொல்லுகிறபடியே – எமராலும் பழிப் புண்டு அணி மூழிக் களத்து உறையும் –தம்மால் இழிப்புண்டு இங்கு என்–திருவாய்-9-7-2-என்றும் –தாம் தம்மைக் கொண்டு அகல்தல் தகவன்று என்று உரையீர் -திருவாய்-9-7-9–என்றும் , மிகமேனி மெலிவெய்தி மேகலையும் ஈடழிந்து என் அகமேனி ஒழியாமே-திரு மூழிக் களத்தார்க்கு தகவன்று என்று உரையீர்–திருவாய்-9-7-10- -என்றும்
இப்படி மென்மேலும் அழ விடும்படி தன்னைப் பிரிகையால் வந்த துக்க சாகரத்தை நிஸ்தரிப்பிக்கும் –கடத்தும் விஷ்ணு போத ஆந்ரு சம்ச்யம்-அதாவது-விஷ்ணு போதம் விநா நாந்யத் கிஞ்சிதஸ்தி பராயணம்-ஸ்ரீ விஷ்ணு தர்மம் -என்கிற விஷ்ணு போதமான அவனுடைய-ஆவா அடியான் இவன் என்று அருளாய்–திருவாய்-9-8-7- -என்று அபேஷிக்கலாம் படி இருக்கும் ஆஸ்ரித விஷய கிருபையாகிற ஆந்ருசம்ச்யம் – நாவாயிலே நிழல் எழும்- அதாவது-நாவாய் உறைகின்ற-திருவாய்-9-8-7- -என்று
அவன் நித்ய வாஸம் பண்ணுகிற திரு நாவாயிலே உள்ளு நிற்கிற வஸ்துவின் ஸ்வபாவம் இதுவோ என்று அறியலாம் படி அவ்வூரின் பேராலே நிழல் எழும் என்கை .

நாவாய் போலே இருக்கிற அவன் வர்த்திக்கும் தேசம் ஆகையாலே நாவாய் என்று ஊருக்கு பேராய் இருக்கிறது என்று கருத்து ..– விஷ்ணு போதத்வம் இத்தாலே பிரகாசித்தால் -அதுக்கு உடலான ஆந்ருசம்சயம் தன்னடடையே தோன்றும் இறே..காருண்யே நான்ரு ஸம்ஸயேன–ஸூந்தர -15-49–( கருணையாலும் அடியார்கள் விஷயத்தில் செய்யும் அருளாலும் )- கருணை வேறு அருள் வேறு என்பதற்கு பிரமாணம் -என்று விபஜித்துச் சொல்லி – ப்ரணஷ்டேதி காருண்யம் ஆஸ்ரிதேத் யாந்ருசம்ஸதா –ஸூ ந்தர –15-50–(பெண் காப்பாற்றப்பட வில்லையே என்ற கருணையாலும் நம்மை ஆஸ்ரிதவர்களைக் காப்பாற்ற வில்லையே என்கிற ஆந்ர் சம்ஸ்யத்தாலும் ஸ்ரீ ராமபிரான் வருந்தினார் ) -என்கையாலே .. ஆந்ரு சம்சயம் ஆவது -ஆஸ்ரித விஷய கிருபை- (நாவாய் உறைகின்ற நாரண நம்பீ ஆ ஆ அடியான் இவன் என்று அருளாயே -என்பதால் ஆந்ரு சம்ஸ்யம்-துன்பக்கடல் புக்கு வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன் -நாச்சியார் -படியே விஷ்ணு போதம் -விஷ்ணுவாகிற தோணி – ).

(பிரிந்த துன்பவித்யாதி ) “அன்புடையாரைப்‌ பிரிவுறுநோய்‌ துன்பக்‌ கடல்‌ புக்கு” நாச்சியார்‌ திருமொழி 5-4) என்றும்‌, ” யஸ்த்வயா ஸஹ ஸஸ்வர்க்கோ, நிரயோ யஸ்த்வயா விநா” (ரா.௮.30-18) என்கிறபடியே தன்னைப்‌ பிரிகையாகிற துக்க ஸாகரத்திலே அழுந்துமவர்களை “ஸம்ஸாரார்ணவ மக்‌நாநாம்‌ விஷயாக்ராந்த சேதஸாம்‌ விஷ்ணு போதம்‌ விநா நாந்யத்‌ கிஞ்சிதஸ்தி பராயணம்‌” (விஷ்ணு தர்மம்‌ என்கிறபடியே அக்கரைப் படுத்துவதான விஷ்ணு போதத்தினுடைய, “ஆவாவடியான்‌ இவனென்றருளாய்‌” (திருவாய்மொழி 9-8-7) என்கிற ஆந்ருஸம்ஸ்யம்‌ திருநாவாயிலே நிற்கிற நிலையிலே நிழலெழும்‌, “கொந்தார்‌ மலர்ச்‌ சோலைகள்‌ சூழ்‌” (திருவாய்மொழி 9-8-10) என்று சோலையைச்‌ சொல்லுகையாலே நிழலெழும்‌ என்கிறார் –

என்புருகி இனவேல் நெடும் கண்கள் இமை பொருந்தா பல நாளும்
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன்
அன்புடையாரைப் பிரிவுறு நோயது நீயுமறிதி குயிலே
பொன்புரை மேனிக் கருளக் கொடி யுடைப் புண்ணியனை வரக் கூவாய்–5-4-தோல் புரையே போகை அன்றிக்கே -எலும்பானதும் உருகி–அன்புடையாரைப் பிரிவுறு நோயது நீயுமறிதி குயிலே
பிரிவாற்றாமையாலே படுகிற வியசனம் நீ அறியாமை இல்லை இறே –-சேர இருக்கச் செய்தே நீயும் அறிதி என்னும் படி எங்கனே என்னில் சம்ஸ்லேஷம் ஆகில் விஸ்லேஷாந்தமாக அல்லது இராது என்று இருக்குமவள் ஆகையாலே சொல்லுகிறாள் – தனக்குத் துன்பக் கடலை விளைத்தான் இறே அவன்

நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய்
அமர் காதல் குருகினங்காள் அணி மூழிக் களத்து உறையும்
எமராலும் பழிப்புண்டு இங்கு என் தம்மா விழிப்புண்டு
தமரோடு அங்கு உறைவார்கு தக்கிலமே கேளீரே –9-7-2-காதாசித்க சம்ச்லேஷமே ஹேதுவாக பந்துக்கள் கை விட்டார்கள் –காதாசித்கமாக சம்ச்லேஷித்த அளவிலே தாமும் உபேக்ஷித்தார் –பந்துக்கள் கை விட்டதே ஹேதுவாக கைக்கொள்ள வேணும் -பிற்பட்டார்க்கும் காட்டிக் கொடுக்க வந்து நிற்கிற நிலையாகையாலும் கைக் கொள்ள வேணும் -இரண்டும் என்னளவில் உபேஷா ஹேது வாவதே –இங்கு என்-இவ்விருப்புக்கு என்ன பிரயோஜனம் உண்டு -சரீர சமனந்தரத்திலே ஒரு தேச விசேஷத்தில் பெற வேண்டித்தான் ஆறி இருக்கிறேனோ -என்று தன்னில் விஷணை யாய் -பின்னையும் தன் செல்லாமையாலே அவற்றைக் குறித்து வார்த்தை சொல்லுகிறாள்-

பூந்துழாய் முடியார்க்கு பொன் ஆழிக் கையார்க்கு
ஏந்து நீர் இளங்குருகே திரு மூழிக் களத்தார்க்கு
ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர்க் கண் நீர் ததும்ப
தாம் தம்மைக் தம்மைக் கொன்டு அகல்தல் தகவன்று என்று உரையீரே–9-7-9-தாம்-கீழ் சொன்ன அழகையும் சீலத்தையும் யுடைய தாம் –தம்மைக் கொன்டு அகல்தல்-தமக்கு அகல வேண்டினால் -இவ்வடிவைப் பிரிந்தார் பிழையார்-என்று தம்மை வைத்து அன்றோ போவது -தம்மைக் கண்ணாடி புறத்திலே கண்டு அறிவரே-தம்மைப் பிரிந்த தசைக்கு உதவுகைக்கு அன்றோ தம்மைக் கண்டது -இமாம் அவஸ்தாம் ஆபன்னோ நேஹ பச்யாமி ராகவும் –தகவன்று என்று உரையீரே–மென்மையும் பிரணயித்தவமும் போனால் தாயையும் குடி போக வேணுமோ –நிர்த்தயர் செய்யுமத்தை செய்தார் என்று சொல்லுங்கோள் -ஸ்த்ரீவதம் என்றால் அஞ்சாதார் செய்யுமத்தை செய்தார் என்று சொல்லுங்கோள்–என்கிறாள் –

கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய்
தேவா சுரம் செற்றவனே திருமாலே
நாவாய் உறைகின்ற என் நாரண நம்பீ
ஆவா அடியான் இவன் என்று அருளாயே–9-8-7-—-ரக்ஷகனானவன் தூரஸ்தனாகை யன்றிக்கே ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக திரு நாவாயிலே நித்ய வாஸம் பண்ணுகிறவனே – என் நாரண நம்பீ-அதுக்கு உறுப்பாக -ஆஸ்ரித வத்சலனாய் -அவர்களுக்கு உறுப்பாகப் பெற்றோமே -என்று அத்தாலே பூர்ணனானவனே -ஆஸ்ரித ரக்ஷணத்தை நினைத்து சர்வ அந்தர்யாமி யானவன் என்றுமாம் அநந்ய கதியான இவன் ஐயோ நோவு படுவதே -என்று கிருபை பண்ணி யருள வேணும் –ஸோ அஹம் தே தேவ தேவேச நார்ச்ச நாதவ் ஸ்துதவ்நச சாமர்த்த்யவான் க்ருபா மாத்ர மநோ வ்ருத்தி ப்ரஸீத மே –இவன் நமக்கு அசாதாரணன் என்று சம்பந்தத்தைப் பார்த்து கிருபை பண்ணி அருள வேணும் -என்றுமாம் –

அந்தோ அணுகப் பெறு நாள் என்று எப்போதும்
சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன்
கொந்தார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வந்தே உறைகின்ற எம்மா மணி வண்ணா–9-8-10-
–கொத்து மிக்க மலரை யுடைத்தான சோலைகளாலே சூழப் பட்டு இருந்துள்ள திரு நாவாயிலே -நித்ய வசந்தமான சோலைகளை யுடைத்தாகையாலே -நிரதிசய போக்யமான தேசம் என்கை –வந்தே உறைகின்ற எம்மா மணி வண்ணா–ஒரு தேசத்திலே சென்றே காணக் கடவதான வடிவைக் கொண்டு -ஆஸ்ரித அர்த்தமாக வந்து -நித்ய வாஸம் பண்ணுகிறவனே -அவ்வடிவை எனக்கு கட்டாத வன்று உன் வரவு அஸத் சமம் அன்றோ -என்கை –

ஸரண்ய முகுந்தத்வம்‌ உத்பலாவதகத்திலே ப்ரஸித்‌தம்‌.–சூரணை-181-

(உத்பலாவதகம் –உத்பல -அவத்-அகம் -அவத் -காப்பாற்றுதல் -முமுஷுக்களைக் காப்பாற்றும் இடம் )

சரண்ய முகுந்தத்வம்-அதாவது-சரணமாகும் தனது தாள் அடைந்தார்க்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் –திருவாய்-9-10-5-என்று கீழ் சொன்ன விசேஷத்தாலே எல்லார்க்கும் சரண வர்ண அர்ஹனாய் இருக்கும் அவனுடைய மோஷ ப்ரதத்வம்-உத்பலாவதகே திவ்யே விமாநே புஷ்கரேஷணம் சௌரி ராஜம்மஹம் வந்தே சதா சர்வாங்க ஸூந்தரம் –என்கிற படியே திருக் கண்ண புரத்தில் – உத்பலாவதகம் என்கிற பேரை உடைத்தான திவ்ய விமாநத்தில் நிற்கிற நிலையில் எல்லாரும் அறியலாம் படி பிரசித்தம் என்கை —முகுந்தத்வம் ஆவது முக்தி பூமி ப்ரதத்வம்
வைகுந்தம் கொடுக்கும் பிரான்
என்கையாலே -ஆய்த்து இவர் இப்படி அருளிச் செய்தது ..
பலம் என்று மாம்சமாய் –உத்பலர் என்று மாம்சல தேகராய் இருக்கை அன்றிக்கே சரீர சோஷணத்தாலே உத்கத மாம்சராய் கொண்டு -உபேஷித தேகராய் இருக்கும் முமுஷுக்களாய் -தேஷாம் மமாவதோ வாஸம் உத்பலாவதகம்விது –என்கிறபடியே அவர்களுக்கு ரஷகன் எழுந்து அருளி நிற்க்கையாலே -உத்பலாவதகம் -என்று அங்குத்தை திவ்ய விமானத்துக்கு பேர் ஆகையாலே -ஆய்த்து –மோஷ ப்ரதத்வம் அந்த ஸ்தலத்திலே பிரசித்தம் என்றது

“சரணமாகும்‌ தனதாளடைந்தார்க் கெல்லாம்‌ மரணமானால்‌ வைகுந்தம்‌ கொடுக்கும் பிரான்‌” (திருவாய்மொழி 9-10-5) என்று இப்படி ஸரண்யனான அவனுடைய மோக்ஷ ப்ரதத்வம்‌ உத்பலாவதகே திவ்யே விமாநே புஷ்கரேக்ஷணம்‌ சவ்ரிராஜமஹம்‌ வந்தே, ஸதா ஸர்வாங்க ஸுந்தரம்‌” (திருக்கண்ணபுரம்‌ ஸ்தலபுராணம்‌?) என்று திருக்கண்ணபுரத்திலே உத்பலாவதக மென்னும்‌ பேரையுடைத்தான திவ்ய விமாநத்தில்‌ நிற்கிற நிலையிலே ப்ரஸித்தம் என்கிறார் –-

சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்

அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்
தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே–9-10-5–ஜென்மத்தாலும் வ்ருத்தத்தாலும் ஞானத்தாலும் குறைய நின்றாரே யாகிலும் -தன் திருவடிகளை உபாயமாகப் பற்றினார்க்கு எல்லாம் ரக்ஷகனாம் -கீழ் மூன்று பாட்டாலும் சொன்ன பக்தி யோகம் அதிக்ருதாதிகாரம்-இதில் சொன்ன பிரபத்தி -சர்வாதிகாரம் -என்கிறது –மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்-தன் பக்கல் ந்யஸ்த பரனானவன்று தொடங்கி -இவனை ஒழிய தனக்கு செல்லாது இருக்கச் செய்தே -இவனுடைய ருசியை வர்த்தித்து -சரீர அவசானத்திலே பரம பதத்தை கொடுத்த மஹா உபகாரகன் -தன் அழகைக் காட்டி அத்தாலே இவற்றுக்கு ருசி பிறக்கும் அளவும் அவசர பிரதீஷனாய் இருக்கும் படியைச் சொல்கிறது – மரணமானால்-தனக்கு அசத்தி இல்லை -இவனுக்கு கர்த்தவ்யம் இல்லை -இவன் ருசியைக் கடாக்ஷித்து இருக்கிற அத்தனை -இப்பாட்டில் –மரணமானால் -என்றத்தைக் கொண்டே கீழ்ச் சொன்ன நிரூபணம் எல்லாம் –

மார்க்க பந்து சைத்யம் மோகனத்தே மடு விடும்–சூரணை-182-

அதாவது-இப்படி மோஷ பிரதனனான தன்னுடைய பிரசாதத்தாலே -மோஷ பூமிக்கு போவார்க்கு –
காள மேகத்தை அன்றி மற்று ஒன்றிலம் கதி–திருவாய்-10-1-1 –என்றும் – ஆப்தன் (ஆத்தன்)- தாமரை அடி இன்றி மற்றிலம் அரணே–திருவாய்-10-1-6-–என்னும் படி ஆப்தனாய் கூடக் கொண்டு போம் மார்க்க பந்து வானவனுடைய-சுரி குழல் கமலக் கண் கனி வாய் காள மேகம்–திருவாய்-10-1-1 -என்றும் – அவனடி நிழல் தடம்–திருவாய்-10-1-2 -என்றும்-மரகத மணித் தடம்—திருவாய்-10-1-8 -என்றும்
சொல்லும் படி இருந்துள்ள சம்சாரிக சகல தாப ஹராமான சைத்யம் (சைத்யம் -குளிர்ச்சி -காளமேகம்-தடம்-என்பதால் ) அம்ருத பிரதான சமயத்திலே அசுரர்களை மோஹித்த இடம் ஆகையாலே மோகன ஷேத்ரமான திரு மோகூரிலே நிறைந்து நிலை பெற்று இருக்கும் என்கை –மடுவிடும் -என்றது மரகத மணித் தடம்-என்கிற சமாதியாலே

இப்படி மோக்ஷ ப்ரதனாமிடத்தில்‌ முக்தி மார்க்கமான அர்ச்‌சிராதி மார்க்கத்துக்குத் துணையான “ ஆத்தன் தாமரையடியன்றி மற்றிலம்‌ அரணே” (திருவாய்மொழி 10-1-6) என்றும் -ஆப்த பந்துவானவனுடைய சுரிகுழல்‌ கமலக்‌ கண்கனிவாய்‌ காளமேகத்தை யன்றி மற்றிலம்‌ கதியே” (திருவாய் -10-1-1-) என்றும்‌,அவனடி நிழல் தடமன்றி யாமே (திருவாய்மொழி 10-1-2) என்றும்‌ ஸாம்ஸாரிகமான தாபத்தை ஆற்றவற்றான ஸைத்யம்‌ மோஹந க்ஷேத்ரமான திருமோகூரிலே, மரகத மணித்தடம்‌” (திருவாய்மொழி 10-1-8) என்கிற ஸமாதியாலே மடுவிடும்‌ என்கிறார் –-

தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர்
நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச்
சுரி குழல் கமலக் கண் கனி வாய்
காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே-10-1-1--அசூரரை அழியச் செய்யுமா போலே என் விரோதிகளை துணிக்க வல்ல தோள்களை யுடையவன் –-கஜம் வா வீஷ்ய ஸிம்ஹம் வா வ்யாக்ரம் வா வனமாஸ்ரிதா -நா ஹார யதி சந்த்ராஸம் பாஹு ராமஸ்ய சமஸ்ரிதா-என்னக் கடவது இறே —விடு காதாய் கிடந்தாலும் தோடிட்ட காது என்று தெரியுமா போலே -தோள்களைக் கண்ட போதே விரோதி நிரசன சீலம் என்று தோற்றி இருக்கும் என்கை –சுரி குழல்–இவன் பின்னே வழியே போமிடத்து திருக் குழலை ஒரு கால் பேண நெடு நாள் சம்சாரத்தில் பட்ட கிலேசம் எல்லாம் தீரும் படி யாய்த்து இருப்பது -கேசவ கிலேச நாசன –-கமலக் கண் கனி வாய்-பந்தம் எல்லாம் தோற்றும் படியான நோக்கும் ஸ்மிதமும் இருக்கிற படி –சம்சாரத்திலே பொய்யருடைய நோக்கிலும் ஸ்மிதத்திலும் பட்ட நோவு எல்லாம் ஆறும் படி இறே இருப்பது –கச்சதாம் தூர  மத்வானம் த்ருஷ்ணா மூர்ச்சித சேதஸாம் -பாதேயம் புண்டரீகாக்ஷ நாம சங்கீர்த்தன அம்ருதம் – வழி போம் போது முன்னே ஒரு காளமேகம் வர்ஷித்திக் கொண்டு போக பின்னே போமா போலே ஸ்ரமஹரமாய் இறே இருப்பது –சர்வகந்த -என்கிற விஷயம் ஆகையால் -அவ்வாஸ நாற்றத்தை அனுபவித்திக் கொண்டு போம் அத்தனை -யன்றி மற்று ஓன்று இலம் கதியே--அவனை ஒழிய வேறு கதி உடையோம் அல்லோம் -வேறு ஒருவரை ரக்ஷகமாக உடையோம் அல்லோம் –

இலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின்
அலம் கலம் கண்ணி ஆயிரம் பேருடை யம்மான்
நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர்
நலம் கழல் அவனடி நிழல் தடம் அன்றி யாமே–10-1-2—அவனுடைய பாதச் சாயை யாகிற பொய்கையை ஒழிய —யாம் -இலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும்–அவன்தானே வத்யதாம் என்றாலும் புறம்பு புகலற்று இருக்கிற படி –

கூத்தன் கோவலன் குதற்று வல்லசுரர்கள் கூற்றம்
ஏத்தும் நம் கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
வாய்த்த தண் பணை வளவயல் சூழ் திரு மோகூர் ஆத்தன்
தாமரை யடி யன்றி மற்று இலம் அரணே
–10-1-6—திரு மோகூரிலே நின்று அருளின-பரம பந்து -தான் தனக்கு அல்லாத மரண சமயத்தில் –அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி -என்னும் பரம ஆப்த தமன் –தன்னை அஞ்சின போது அவன் பக்கலிலே ந்யஸ்த பரனாம் படி யான ஆப்த தமன் – தாமரை யடி யன்றி-அநாப்தன் ஆகிலும் விட ஒண்ணாத படி யாய்த்து -திருவடிகளில் போக்யத்தை –மற்று இலம் அரணே–வேறு சிலரை ரக்ஷகமாக யுடையோம் அல்லோம் -போக்யத்தை இல்லை யாகிலும் -அநாப்தன் ஆகிலும் புறம்பு புகல் இல்லை என்கை –

துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின்
உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே–10-1-8-–சக்கரவர்த்தி பெற்ற நீல மணி போலே இருக்கிற தடாகத்தினை -அடைந்து வந்து அடியவர் தொழுமின்-பதி தரு மருவாபீ வாரிவத் சர்வ போக்யம் -என்கிற படி அனுகூலர்களுக்கு ரக்ஷகமாய் –காகுத்ஸத்த பாதால முகே புதன்ச -என்கிறபடியே உகவாதற்கு நாசகமாய் இறே இருப்பது –மயா த்வம் சம நுஜ்ஜஞாதோ கச்ச லோகான் அநுத்தமான் -என்று பக்ஷியைப் போக விட்டார் இறே –

ஸஸைன்ய புத்ர ஸிஷ்ய ஸாத்‌ய ஸித்‌த பூ ஸுரார்ச்சநத்துக்கு முக நாபி பாதங்களை த்‌வார த்ரயத்தாலே காட்டும்‌ ஸாம்யம்‌ அநந்தஸயநத்திலே வ்யக்தம்‌.–சூரணை -183-

(ச சைந்ய சாத்ய அர்ச்சனத்துக்கு முகத்தையும்- – ச புத்ர -ஸித்த அர்ச்சனத்துக்கு நாபியையும் –
ச சிஷ்ய பூ சுர அர்ச்சனத்துக்கு பாதங்களையும் த்வார த்ரயத்தாலே காட்டும் – சாம்யம் அநந்த சயநத்திலே வ்யக்தம் )

அதாவது-அமரர் கோன் அர்ச்சிகின்று அங்கு அகப் பணி செய்வர் விண்ணோர் -திருவாய்-10-2-6-– என்கிற சேநாசகிதரான சேனை முதலியார் ஆகிற –யத்ர பூர்வே சாத்யா-புருஷ ஸூக்தம் –என்கிற
நித்ய ஸூரிகளின் தலைவரான சாத்யர் உடையவும் —-அமரார் திரிகின்றார் கட்கு ஆதி—திருவாய்-10-2-6- -என்கையாலே புத்ரர்களான ப்ரமாதிகளான சித்தர் உடையவும் – படமுடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண நடமினோ நமர்கள் உள்ளீர்–திருவாய்-10-2-8- -என்று இவர் உபதேசம் கேட்ட சிஷ்யர்களான பூஸூரர் உடையவும் – அர்ச்சனதுக்கு திரு முகமும் திரு நாபியும் திரு அடிகளும் ஆகிய இவற்றை திரு வாசல் மூன்றாலும் தர்சிப்பிக்கிற நித்ய ஸூரிகள் சம்சாரிகள் என்று விசேஷம் பாராத சாம்ய குணம் திரு வநந்த புரத்திலே கண் வளருகிற பிரகாரத்தாலே வ்யக்தமாய் இருக்கும் என்கை —

(ஸஸைந்ய) “அமரர்கோனர்ச்சிக்கின்று அங்ககப்‌ பணி செய்வர்‌ விண்ணோர்‌” (திருவாய்மொழி 10-2-6) என்கிற ஸேநா ஸஹிதரான ஸேநை முதலியாராகிற ஸாத்‌யர்‌, (புத்ர) உலகுயிர்‌ தேவும்‌ மற்றும்‌ படைத்த” (திருவாய்மொழி 10-2-7) என்று சொல்லுகையாலே புத்ரர்களான ப்‌ரஹ்மாதி தேவதைகளாகிற ஸித்‌தர்‌, (ஸிஷ்யர்‌) “நடமினோ நமர்களுள்ளீர்‌ அனந்தபுரநகர்‌ புகுதுமின்றே” (திருவாய்மொழி 10-2-8) என்று இவர்‌ உபதேஸிக்கக்‌ கேட்ட ஸிஷ்யர்களாகிற பூஸுரர்‌ என்கிற இவர்கள்‌ மூவரும்‌ அர்ச்சிக்கைக்கு முக நாபி பாதங்களை திருவாசல்‌ மூன்றாலும்‌ காட்டுகையாலே நித்ய ஸூரிகளோடு நித்ய ஸம்ஸாரிகளோடு வாசியற முகம்‌ கொடுக்கும்‌ ஸாம்யம்‌ திருவனந்தபுரத்தில்‌ கண் வளருகிற கிடை யழகிலே ஸுவ்யக்தமாகக்‌ காணலாமென்கிறார்

அமரராய்த் திரிகின்றார் கட்கு ஆதிசேர் அனந்த புரத்து
அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர்

நமர்களோ சொல்லக் கேண்மின் நாமும் போய் நணுக வேண்டும்
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே-10-2-6—மனுஷ்யாதிகளில் காட்டில் -சில நாள் ஏற இருக்கிற இத்தைக் கொண்டு தங்களை நித்யர் என்று அபிமானித்து இருக்கிறவர்களுக்கு –திரிகின்றார்கட்கு–மனுஷ்யாதிகளில் காட்டில் பந்தனம் கனத்து இருக்கச் செய்தேயும் நிர்ப்பயராய் திரியா நிற்பார்கள் -மநுஷ்யர்களுடைய விரக்திக்கு அவர்கள் பரிஹரித்த அளவு இறே த்யஜிக்க வேண்டுவது -ப்ரஹ்மாவுக்கு சதுர்த்தசி புவனமும் த்யஜிக்க வேணுமே-ஆதி சேர் அனந்த புரத்து–காரண பூதன் வர்த்திக்கிற தேசத்திலே –ஸ்ரீ சேனாபதி ஆழ்வான் அடிமை செய்யும் இடத்தில் கை நீட்டுவார் நித்ய ஸூரிகள்–

துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவு மற்றும்
படைத்த வெம் பரம மூர்த்தி
பாம்பணைப் பள்ளி கொண்டான்
மடைத் தலை வாளை பாயும் வயல் யணி யனந்த புரம்
கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடு வினை களையலாமே–10-2-7-லோகத்தையும் தேவ ஜாதியையும் மற்றும் உண்டான ஆத்மாக்களையும் யுண்டாக்கினவன் -இவை அதிப்ரவ்ருத்த மான வன்று சம்ஹரித்து -பின்பு புருஷார்த்த உபயோகியான கரணங்களைக் கொடுத்து ரஷித்த-ஆச்ரித பவ்யனான சர்வேஸ்வரன் –

கடுவினை களையலாகும் காமனைப் பயந்த காளை
இடவகை கொண்ட தென்பர் எழில் அணி அனந்த புரம்
படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
நடமினோ நமர்கள் உள்ளீர் நாமும் உமக்கு அறியச் சொன்னோம்
–10-2-8—ஸ்வ ஸ்பர்சத்தாலே விஸ்திருத பணனான திருவனந்த ஆழ்வான் மேலே நிரந்தரமாக கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திருவடிகளைக் காண –பயின்ற-என்று வீசு வில்லிட்டு எழுப்பிலும் எழுப்ப ஒண்ணாத படி இறே படுக்கை வாய்ப்பு இருப்பது-நடமினோ நமர்கள் உள்ளீர்-என்னோடு குடல் துவக்கு உடையார் அடைய நடவுங்கோள்-நாமும் உமக்கு அறியச் சொன்னோம்வரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற கரியான் கழல் காணக் கருதும் கருத்தே -என்று சபலரான நாம் –ஏகம் துக்கம் ஸூகஞ்ச நவ் -என்னும் படி இருக்கிற உங்களுக்கு நெஞ்சிலே படச் சொன்னோம் –

மோஷ தாநத்திலே பிரணத பாரதந்த்ர்யம் வளம் மிக்க நதியிலே கரை புரளும்–சூரணை -184-

மோஷ தாநத்திலே பிரணத பாரதந்த்ர்யம்-அதாவது-அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே -திருவாய்-10-6-1-என்றும் –விண்ணுலகு தருவானாய் விரைகின்றான் விதி வகையே-திருவாய்-10-6-3- -என்றும் இப்படி சர்வ சமனானவன் ஆஸ்ரிதர்க்கு மோஷ பிரதானம் பண்ணும் அளவில்
அவர்கள் விதித்த படி செய்வானாய் நிற்கிற ஆஸ்ரித பாரதந்த்ர்யம் – வளம் மிக்க வாட்டாற்றான்–திருவாய்-10-6-3- -என்று ரஷ்ய வர்க்கம் குறைவற்ற தேசம் ஆகையாலே அவனுக்கு சம்பத்து மிக்கு இருக்கிற திரு வாட்டாற்றிலே அமர்யாதமாக பிரவகிக்கும் என்கை .. கரை புரளும் என்றது ஆறு என்கிற சமாதியாலே —

“அருள்தருவா னமைகின்றான்‌ அது நமது விதி வகையே’” (திருவாய்மொழி 10-6-1என்றும்‌,  “விண்ணுலகம்‌ தருவானாய்‌ விரைகின்றான்‌ விதிவகையே” திருவாய்மொழி 10-6-3) என்றும்‌, இப்படி ஸர்வ ஸமனானவன்‌ ஆஸ்ரிதர்க்கு மோக்ஷத்தைக்‌ கொடுக்குமிடத்தில்‌ அவர்கள்‌ விதித்தபடியே செய்யக் கடவோமென்கிற ஆஸ்ரித பாரதந்த்ர்யம்‌ “வளம்மிக்க வாட்டாற்றான்‌’ (திருவாய்மொழி 10-6-3) என்று திருவாட்டாற்றிலே நிற்கிற நிலையிலே, ஆறென்கிற ஸமாதியாலே கரை புரளும்‌ என்கிறார் 

அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1—ஆஸ்ரிதர் எல்லார் பக்கலிலும் பண்ணும் அருளை -என் பக்கலிலே பண்ணுமவனாகச் சமைந்து நின்றான் –அஸ்மா பிஸ் துல்யோ பவது -என்னுமவர்கள் இறே இவர்கள் -ஸ்வதந்த்ரனாகில் தருகிறான் — இனிக் குறை என் என்னில் –
அது நமது விதி வகையே–அது நாம் சொல்லச் செய்வானாக நினைத்து இரா நின்றான் -அது நம்முடைய  பாக்யாதி குணம் இறே -என்றாய்த்து பூர்வர்கள் நிர்வாஹம் -இது பிரகரணத்தோடு சேராது –நாம் விதித்த படியே செய்வானாக நினைத்து இரா நின்றான் -என்று அருளிச் செய்தார் எம்பெருமானார் -தன் பக்கல் குறைவற்று இருந்தாலும் இத் தலையில் இச்சை பார்த்து இருக்கும் இறே –சொல் வகையே என்னாதே- விதி வகையே -என்றது –தானே தருமது வித்யதிக்ரமம் -என்று இருக்கை யாலே-

நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி
மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே

எண்ணினவாறு ஆகா இக் கருமங்கள் என் நெஞ்சே –10-6-3—பரம பதத்தில் காட்டில் ஸம்ருத்தி மிக்கு இருந்துள்ள திரு வாட்டாற்றை நிரூபகமாக யுடையவன் —வளம் –சம்பத்து -ரஷ்யம் குறைவற்ற தேசம் ஆகையால் ரக்ஷகனுக்கு சம்பத்து மிக்கு இருக்கும் இங்கு -கைங்கர்யத்துக்கு விச்சேதம் இல்லாமையால் சேஷ பூதனுக்கு சம்பத்து மிக்கு இருக்கும் அங்கு –வந்து –நாம் செல்ல வேண்டும் தேசம் அடங்க தானே வந்து –இன்று -நம் பக்கல் இதுக்கு அடியாக இருப்பது ஓன்று நென்னேற்று இல்லை -இன்று இங்கனே விடியக் கண்டது அத்தனை –விண்ணுலகம் தருவானாய்–பரம பதத்திலே செல்லப் பெறுகை யன்றிக்கே -ஆண்மின்கள் வணக்கம் -என்ற பொதுவும் இன்றிக்கே த்ரிபாத் விபூதியையும் நமக்கே தருவானாய் இரா நின்றான் –விரைகின்றான் –சா பேஷாரான நாம் ஆறி இருக்க -நிரபேஷனானவன்-பதறா நின்றான் –முன்பு இவர் விரைந்த போது ஒரு கார்யார்த்தமாக வைத்தானாய் -அது தலைக் கட்டின வாறே -விசத்ருசமான விபூதி இவருக்குத் தரம் அன்று என்று பதறா நின்றான் –தொடங்கின அப்போதே தலைக் கட்ட வல்ல சர்வ சக்திக்கு பதற வேண்டுகிறது என் என்னில்
விதி வகையே--நாம் விதிக்கத் தருவானாக வேண்டி இரா நின்றான் –

த்யாஜ்ய தேக வியாமோகம் மருள்கள் கடியும் மயல் மிகு பொழிலிலே தலைக்கும்–சூரணை -185-

த்யாஜ்ய தேக வியாமோகம்-அதாவது
முமுஷுக்களுக்கு த்யாஜ்யமான தேகத்திலே –சரம தேகம் ஆகையாலே – மகிஷி யினுடைய உச்சிஷ்டத்தை விரும்பும் ராஜ புத்ரனைப் போலே –வஞ்சக் கள்வனாய் நெஞ்சும் உயிரும் உள் கலந்து–திருவாய்-10-7-1 –என்றும் –மாய வாக்கை இதனுள் புக்கு –திருவாய்-10-7-3–என்கிறபடியே-
இதன் தோஷம் பாராமல் உள் புகுந்து –திரு மால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே–திருவாய்-10-7-8–இத்யாதிப் படி உகந்து அருளின நிலங்கள் எல்லா வற்றிலும் பண்ணும் விருப்பத்தை இதில் ஏக தேசத்தில் பண்ணி-மங்க ஒட்டு -உன் மா மாயை -திருவாய்-10-7-10- -என்று கால் கட்டி விடுவிக்க வேண்டும் படி அவனுக்கு உண்டான வியாமோகம்-மருள்கள் கடியும் மணி மலை திருமாலிருஞ்சோலை மலையே -திருவாய்-10-7-7-என்று சர்வருடைய அஞ்ஞானத்தை ஸ்வாசனமாக போக்குவதாய் –மயல் மிகு பொழில் சூழ் மால் இரும் சோலை–திருவாய்–2-10-3 -என்று போக்யதா பிரகர்ஷத்தாலே போக்தாக்களை பிச்சேற்ற வற்றான சோலையை உடைய தெற்கு திருமலையிலே சம்ருதமாய் செல்லும் என்கை .-பொழில் -என்கிற சமாதியாலே ஆய்த்து -தழைக்கும் -என்றது ..

(த்யாஜ்யதே ஹவ்யாமோஹம்‌) ‘ மாய வாக்கை இதனுள்‌ புக்கு” (திருவாய்மொழி 10-7-3) என்று ஆழ்வாருக்கு த்யாஜ்யமான தேஹத்திலே புகுந்து திருமாலிருஞ்‌ சோலை இத்யாதிப்படியே தேஸ விஸேஷத்திலே பண்ணுமாதரத்தையும்‌ இதிலே பண்ணி இவர்‌ “மங்கவொட்டு” (திருவாய்மொழி 10-7-10) என்று கால் கட்டும்படி அவனுக்குண்டான வ்யாமோஹம்‌ (மருள்கள்‌ கடியும்‌ மயல்மிகு பொழிலிலே தழைக்கும்‌) “மருள்கள்‌ கடியும்‌ மணி மலை” (திருவாய்மொழி 10-7-7) என்று ஸர்வருடையவும்‌ அஜ்ஞாநத்தை ஸவாஸநமாகப்‌ போக்குமதாய்‌ ‘ மயல்மிகு பொழில்சூழ்‌ மாலிருஞ்சோலை” (திருவாய்மொழி 2-10-3) என்று போக்த்தாக்கள்‌ அடைவு கெடும்படி பிச்சேற்ற வற்றாயிருக்கிற தெற்குத்‌ திருமலையில்‌ நிற்கிற நிலையிலே; சோலை என்கிற ஸமாதியாலே தழைக்கும்‌ என்கிறார்—

செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் திருமால் இரும் சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து
நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே–10-7-1-களவு காணா நிற்கச் செய்தே மெய் என்னலாம் படி இருக்கை –என் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும் -என்றார் இறே -களவைக் களவு காணா நிற்கும் –மா மாயன் -இப்படி அறிந்து ஒருவருக்கும் தப்ப ஒண்ணாத படியான ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை யுடையவன் -நீர் அகப்பட்ட துறை ஏது என்ன –மாயக் கவியாய்--ஆச்சர்ய அவஹமான கவி பாடுவித்துக் கொள்ள -என்ற ஒரு பேரையிட்டுக் கொண்டு யாய்த்து வந்து கிட்டிற்று -தண்ணீர் என்ற ஒரு பேரையிட்டு அபிமத விஷயத்தை கிட்டுவாரைப் போலே -கவி பாடுவித்துக் கொள்ளுகை என்று ஒரு வியாஜ்யம் -கிட்டுக்கையே பிரயோஜனம் -தான் இருந்த இடத்திலே சென்று நாம் இருக்கை இன்றிக்கே -நாம் இருந்த இடத்திலே தான் வந்து கவி பாடுவித்துக் கொள்கை இறே சீலம் ஆவது –வந்து செய்தது என் என்ன –வந்து என்-நெஞ்சும் உயிரும் உள் கலந்து–நெஞ்சு என்று -சரீரத்துக்கு உப லக்ஷணம் –உயிர் என்கிறது ஆத்மாவை -சரீரத்தோடு ஆத்மாவோடு வாசியற புகுத்தி தன் பேறாக அவகாஹியா நின்றான் -முறை அத்தலை இத்தலையாய் என்னை சிரஸா வஹியா நின்றான் –நின்றார் அறியா வண்ணம்-கலவிக்கு தேசிகரான பிராட்டி திருவனந்த ஆழ்வான் முதலானோர்க்கும் அபூமியாம் படி யாய்த்து என்னோடு கலந்து -ஆருயிர் பட்டது எனதுயிர் பட்டது -என்றார் இறே –என்-நெஞ்சும் உயிரும் அவை உண்டு –தேஹாத்ம விவேகம் பண்ண அறியாதே யாய்த்து புஜித்தது–சேதனனையும் அசித்தோபாதி பரதந்தனாக்கி புஜித்தான் –உருவமும் ஆருயிரும் உடனே யுண்டான் -என்கிறபடியே எனக்கு என்ன மாட்டாமைக்கு -அசித்தோபாதி யாய்த்து சேதனனும் –
தானே யாகி -போகத்தில் இழிகிற போது இருவராய் இழிந்து -எதிர்த்தலையைத் தோற்பித்து -போக்தாவும் அபிமானியும் தானே யானான் –நிறைந்தானே–அவாப்த ஸமஸ்த காமன் ஆழ்வாரைப் பெறுவதற்கு முன்பு குறைவாளனாய் -இவரைப் பெற்ற பின்பு -பூர்ணன் ஆனான் –க்ருதக்ருத்யஸ் ததா ராம –இது விறே புரையற்ற சீலமாவது –

என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர்
தென்னன் திருமால் இரும் சோலைத் திசை கூப்பிச் சேர்ந்த யான்
இன்னம் போவேனே கொலோ என் கொல் அம்மான் திருவருளே–10-7-3—இத்தலையை எங்கும் புக்கு அனுபவித்தானாய் விடுகை அவனுக்கு ஏற்றமாம்படியாய் இருக்கிறது –யஸ்ய சா ஜனகாத்மஜா –அப்ரமேயம் ஹி தத் தேஜ–என் மாய ஆக்கை இதனுள் புக்கு–அதி ஷூத்ரமான என் சரீரத்தில் புக்கு தனக்கு உத்தேச்யமான ஆத்மாவளவன்றியே-அழுக்கு உடம்பு -என்று தன்னை கால் காட்டித் தவிர்ப்பித்து கொள்ள வேண்டும் படி த்யாஜ்யமான சரீரத்தையே விரும்பா நின்றான் – இதனுள் புக்கு-இது இது என்று இவர் இறாய்க்க அவன் மேல் விழா நின்றான் என்கை –புகுந்து என்னாதே  புக்கு -என்கிறது அத்தோடு தமக்கு தொற்று அற்று இருக்கிற படி தோற்றுகைக்காக-மங்க வொட்டு-என்று அவன் அனுமதி பார்த்து இருக்கும் இ றே –என்றும் அசித்தோடும் முகம் பழகின இவர் இறாய்க்க -ஹேய பிரதி படனானவன் இ றே மேல் விழா நின்றான் –-என்னை முற்றும் தானேயாய் நின்ற--ஆத்மாவோடு சரீரத்தோடு வசி யறப் புக்கு வியாபித்து தானே அபிமானியாய் நின்றான் -என்னுடைய அஹங்கார மமகாரங்களும் விஷயம் இல்லாத படி நின்றான் –

அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும்
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும்
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை
மருள்கள் கடியும் மணி மலை திருமால் இரும் சோலை மலையே–10-7-7-கைங்கர்ய விரோதிகளான அவித்யாதிகளைப் போக்குமதாய்-ஸ்வயம் புருஷார்த்தமான திருமலை -திருமலையை ஒழியவே ப்ராப்யம் யுண்டு என்று இருக்கும் நினைவை போக்குமிடம் என்றுமாம்-

திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–10-7-8-தெற்கில் திருமலையையும் திருப் பாற் கடலையும் என் உத்தம அங்கத்தையும் -ஓக்க விரும்பா நின்றான் –பரமபதத்தையும் -வடக்கில் திருமலையையும் -என் சரீரத்தையும் ஓக்க விரும்பா நின்றான் –-ஸ் ரியா சார்த்தம் ஜகத் பத்தி -என்கிறபடியே அம் மிதுனத்துக்குத் தகுதியான தேசம் –இத்தேசங்களிலே பண்ணுகிற விருப்பம் தம் திருமேனியில் பண்ணுகிற விருப்பத்துக்கு சத்ருசம் அல்லாமையாலே தம்முடைய அவயவங்கள் தோறும் புக்கு அனுபவியா நின்றான் –

மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே–10-7-10—ஒருவராலும் தப்ப ஒண்ணாத படி -நீ பந்தித்த பிரக்ருதியை மங்க இசை –த்யாஜ்யம் என்று அறிந்த பின்பு உம்முடைய சரீரத்தை நீரே உபேக்ஷிக்கும் அத்தனை யன்றோ -நம் இசைவு என் என்ன -சர்வ சக்தியான நீ பிணைத்த பிணையை அசக்தனான நான் -அவிழ்க்கவோ –மம மாயா துரத்யயா –என்றிலையோ–

பயனல்ல செய்து பயனில்லை நெஞ்சே
புயல் மழை வண்ணர் புரிந்துறை கோயில்
மயல் மிகு பொழில் சூழ் மாலிரும் சோலை
அயன்மலை யடைவது அது கருமமே –2-10-3-போக்யதையாலும் இருட்சியாலும் புக்கார் மிகவும் மதி மயங்கும் படியான திருச் சோலை-ப்ராப்ய பூமியிலே கலக்கம் ஆகையால் ப்ராப்ய அந்தர்கதம் இறே

அங்கீகரிக்க அவகாசம் பார்க்கும் ஸ்வாமித்வம் பெரு நகரிலே பேர் பெற்றது -சூரணை -186-

அதாவது-திரு மால் இரும் சோலை மலை என்றேன் என்னத் திரு மால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்-திருவாய்-10-8-1-என்று ஸ்வ அங்கீகாரத்துக்கு உடலான ஸூஹ்ருத லவ லேஸம் இல்லாதவரையும் – மடி மாங்காய் இடும் போலே -என்னூரைச் சொன்னாய் –இத்யாதியான
அஞ்ஞான ஸூஹ்ருதங்களை ஆரோபித்தும் அங்கீகரிக்க இடம் பார்க்கும் அவனுடைய ஸ்வாமித்வம் –
பெருவரை மதிள்கள் சூழ்ந்த பெரு நகர் அரவணை மேல்–
பெரிய திருமொழி-5-9-3–என்று கண் வளர்ந்து அருளுகிற திருப்பேர் நகரில் பிரசித்தம் என்கை-

“திருமாலிருஞ்சோலை மலை என்றேனென்னத்‌ திருமால்‌ வந்து என்‌ நெஞ்சு நிறையப் புகுந்தான்‌”  (திருவாய்மொழி 10-8-1 என்று இவரை விஷயீகரிக்க அவகாஸம்‌ பார்த்து மடிமாங்காயிட்டும்‌ விஷயீகரிக்க வேணு மென்கிற ஸ்வாமித்வம்‌ “பெருநகரரவணை மேல்‌” (பெரியதிருமொழி 5-9-3) என்கிற திருப்பேர்‌ நகரில்‌ கண் வளர்ந்தருளுகிற விடத்தே ப்ரஸித்‌தம்‌ என்கிறார் –

திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்

குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால்
திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே-10-8-1—அஹ்ருதயமாகச் சொன்னது தன்னையும் சஹ்ருதயம் ஆக்குவாரும் அருகே உண்டு –வந்து -நம்மை அங்கே அழைத்துக் கார்யம் கொள்ளுகை அன்றிக்கே –நாம் இருந்த இடத்தே வருவதே –சாபேஷன் இருந்த இடத்திலே பூர்ணன் வருவதே -சர்வருக்கும் அபிகம்யனானவனுக்கு நான் அபிகமயனாவதே –ஸோ அப்யகச்சன் மஹா தேஜோ சபரீம் என் நெஞ்சம் -உக்திக்கு அசஹகாரியான என் நெஞ்சம் — நிறையப் புகுந்தான்-விஷயாந்தரங்களுக்கு அவகாசம் இல்லாத படி பாழ் தீரப் புகுந்தான் –

ஒருவனை யுந்திப் பூ மேல் ஓங்குவித் தாகம் தன்னால்
ஒருவனைச் சாபம் நீக்கி உம்பராள் என்று விட்டான்
பெரு வரை மதிள்கள் சூழ்ந்த பெரு நகர ரவணை மேல்
கரு வரை வண்ணன் தன் பேர் கருதி நான் உய்ந்தவாறே –5-9-3–பெரு வரை என்னலாம் படி மதிள்களால் சூழப்பட்டு கலங்கா பெரு நகர் உடன் ஒக்கச் சொல்லலாம் படி உள்ள திருப்பேர் என்னும் பெரு நகரில் திரு அனந்தாழ்வான் மேல் அஞ்சன மலை போல் சாய்ந்து அருளி-

ஆக திருப் பதிகள் தோறும் ,ஒரோ குணம் பிரத்யேன பிரகாசிக்கும் என்னும் இடம் இவர் அனுசந்தித்த திருப்பதிகள் எல்லாவற்றிலும் தர்சிப்பித்தார் ஆய்த்து- 

–——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌ -8–கு,ண பாதம் (156–186 )-12 சதுர்தவ்த்யாதி, கரணம்‌ (156 –158)- ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

July 24, 2026

1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 284 முடிய (48)

(1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-284 (27)

8–கு,ண பாதம் —156–186 மொத்தம் -31-ஸூரனைகள்
12 சதுர்தவ்த்யாதி, கரணம்‌ 156 –158—மொத்தம்-3–ஸூரனைகள்
13 திவ்ய தேஸ -அர்ச்சாவதார விஸேஷ கு,ணாதி கரணம்‌– 159 —186—மொத்தம்–28–ஸூரனைகள்

பேற்றுக்கு அடி இவர்கள் ஆகையாலே ப்ராப்யத்தில் த்வரை தோன்ற பல காலும் தூது விடுவர் –
இனி இப்படி இவர் தூது விடும்படி முகம் காட்டாமைக்கு ஹேதுவையும் — தூது விடுகைக்கு பற்றாசையும் அதுக்கு விஷயத்தையும் தூது நாலுக்கும் –வகை இட்டு அருளி செய்கிறார் மேல் —

(இவர்தாம்‌ தூது விடுகையாவது ப்ராப்யருசியால்‌ வந்த விளம்பாக்ஷமத்வத்தாலே ஆசார்ய த்‌வாரா உபாயோபேய ப்ரார்த்தநை பண்ணுகை. “கைகள்‌ கூப்பிச்‌ சொல்லீர்‌” (திருவாய்மொழி 6-1-1, “பாதம்‌ கைதொழுது பணியீர்‌ (திருவாய்மொழி 6-1-2), “இரங்கி நீர்‌ தொழுது பணியீர்‌ (திருவாய்மொழி 6-1-3) என்றும்‌, “திருவடிக்கீழ்‌ குற்றேவல்‌” (திருவாய்மொழி 1-4-2 “வாடாத மலரடிக்கீழ்‌ வைக்கவே வகுக்கின்று” (திருவாய்மொழி 1-4-9) என்றும்‌ சொல்லக் கடவது இறே –இனிமேல்‌ இவர்‌ இப்படித்‌ தூது விடும்படி முகம்‌ காட்டாதிருக்கைக்கு ஹேதுக்களையும்‌ தூது விடுகைக்குப்‌ பற்றாசையும்‌ அது தனக்கு விஷயத்தையும்‌ அருளிச்செய்கிறார்‌-

தம்பிழையும்‌ சிறந்த செல்வமும்‌ படைத்த பரப்பும்‌ தமரோட்டை வாஸமும்‌ மறப்பித்த க்ஷமா தீக்ஷா ஸாரஸ்ய ஸெளந்தர்யங்களை உணர்த்தும்‌ வ்யூஹ விபவ பரத்வ த்‌வய அர்ச்சைகள்‌ தூது நாலுக்கும்‌ விஷயம்‌.-சூரணை–156-

(தம் பிழையை மறப்பித்த க்ஷமையை உணர்த்தும் வியூகம் முதல் தூது-அஞ்சிறைய மட நாராய் –
சிறந்த செல்வம் மறப்பித்த -தீக்ஷையை உணர்த்தும் விபவம் இரண்டாம் தூது -வைகல் பூம் கழிவாய்-
படைத்த பரப்பு -மறப்பித்த -சாரஸ்யத்தை உணர்த்தும் -பரதவ த்வய —பரத்வத்தையும் அந்தர்யாமித்வத்தையும் சொன்னபடி -மூன்றாம் தூது-பொன்னுலகு ஆளீரோ–தமரோட்டை வாசத்தை மறப்பித்த ஸுந்தர்யத்தை உணர்த்தும் அர்ச்சை-நாலாவது தூது -எம் கானல் அகம் கழிவாய் -என்றபடி )

அதாவது-தம் பிழை மறப்பித்த ஷமையை உணர்த்தும் வியூகம் முதல் தூதுக்கு விஷயம்–அஞ்சிறைய மட நாரையில் –1-4— என் பிழையே நினைந்து அருளி –1-4-7–என்று தன் மேன்மையால் இத் தலையில் தண்மை பாராதே வந்து கலந்தான் –கலக்க கொள்ள நம் தோஷ தர்சனத்தை பண்ணிப் பிரிந்து நம் அபராதத்தை பார்த்து தன் ஷமையை மறக்கையாலே – இத் தலையை நினையாது இருந்தான் அத்தனை– அவன் தன்னுடைய அபராத சஹத்வத்தை அறிவிக்க வரும் – என்று அறுதி இட்டு
என் பிழைத்தாள் திரு அடியின் தகவினுக்கு –1-4-7–என்று அபராத சஹத்வம் பற்றாசாக
கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும் கடலாழி அம்மானை கண்டக்கால் இது சொல்லி —1-4-10-என்று ஜகத் ஸ்ருஷ்ட்டி யர்தமாக ஏகார்ணவத்திலே கண் வளர்ந்து அருளினவனுக்கு
சிருஷ்டி பிரயோஜனம் –விசித்ரா தேக சம்பத்தி ஈச்வராய நிவேதிதம்—ஸ்ரீ விஷ்ணு தர்மம் -என்கிறபடியே திரு அடிகளில் அடிமை கொள்ளுகை அன்றோ -என்று இத்தைச் சொல்ல வேண்டும் என்று வியூகத்தில் தூது விடுகையால் தம் பிழை மறப்பித்த ஷமையை உணர்த்தி விட்ட வியூகம் பிரதம தூதுக்கு விஷயம்

தம்பிழை யானது மறப்பித்த க்ஷ்மையை உணர்த்தும்‌ ப்ரதம தூதுக்கு விஷயம்‌ வ்யூஹம்‌ என்கிறது ப்ரதம தூதான அஞ்சிறைய மடநாரையிலே (திருவாய்மொழி 1-4). “என்பிழையே நினைந்தருளி அருளாத திருமாலார்க்கு” (திருவாய்மொழி 1-4-7) என்று வ்யாமோஹாதிஸயத்தாலே மேல் விழுந்து விஷயீகரித்தான்‌; ஸர்வஜ்ஞனாகையாலே தோஷ தர்ஸனம்‌ பண்ணினான்‌; பிரிந்தவாறே இதுவோ இதினளவென்று பிரிந்திருந்தானத்தனை. எங்களபராதத்தைக்‌ கண்டு கைவிடுமளவன்று. “என்‌ பிழைத்தாள்‌ திருவடியின்‌ தகவினுக்கு என்று ஒரு வாய்‌ சொல்‌” (திருவாய்மொழி 1-4-7) என்று அவர்க்கு அபராத, ஸஹத்வ மென்பதொரு குணமுண்டு அத்தை யறிவிக்கவே வரும்‌ என்று அபராத, ஸஹத்வம்‌ பற்றாசாக, “கடலாழி நீர்தோற்றி அதனுள்ளே கண்வளரும்‌ அடலாழி யம்மானைக்‌ கண்டக்கால்‌ இதுசொல்லி விடல்‌” (திருவாய்மொழி 1-4-10) என்று இல்லாத வஸ்துவை உண்டாக்குகைக்காக ஏகார்ணவத்திலே கண் வளர்ந்தருளுகிறவனுக்கு உண்டாக்கின வஸ்துவுக்கு ஒரு குண தாநம் பண்ணலாகாதோ -என்று சொல்லென்று வ்யூஹத்திலே தூது விடுகிறார் –

என் பிழை கோப்பது போல் பனிவாடை ஈர்கின்றது
என் பிழையே நினைந்து அருளி யருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச் சொல்
என் பிழைக்கும் இளம் கிளியே யான் வளர்த்த நீ யலையே
 –1-4-7–எலும்பிலே துளைத்து நூலைக் கோக்குமா போலே-பாவ கப்ரதிமோ வவௌ-என்கிறபடியே பண்டு குளிர்ந்து போரும் வாடை இப்போது பாதகம் ஆகிறபடி–ஈரா நின்றது -விரஹ க்ருசையாய் இருக்கிறதின் மேலே பாதக வர்க்கம் நலிகிற படி
பத்மசௌ கந்திகவஹம்--வாடை நலிந்த படி போராது என்று கீழாண்டை சிகையை யாயிற்று கணக்கு இடுகிறது-அவிஜ்ஞ்ஞாதா வாகை தவிர்ந்து இப்போது சஹாஸ்ராம்சு -என்கிறபடியே தோஷத்தில் சர்வஜ்ஞ்ஞாராய் யாயிற்று இருக்கிறது-என் பிழை பார்த்துக் கை விட்டு –ந கச்சின் ந அபராத்த்யாதி -என்னும் அவளோடு அணைய இருக்கிறாரோ நம் அபராதங்களைப் பொறுப்பிக்கும் பிராட்டி சந்நிதியில் அறிவி என்னவுமாம் -அபராதங்களைக் கணக்கு இடுகைக்கு அவளும் கூட்டுப் போல காண் -என்றும் சொல்வர்-ஸ்வாமியான உம்முடைய தகவினுக்கு என்ன தப்புச் செய்தாள்-அபராத சஹத்வம் ஆகிறது -ஷமை-அதுக்கு அடியான தயை -தகவாகிறது என் பிழை அநாதி கால ஆர்ஜிதம் ஆனாலும் தம்முடைய ஷமைக்கு எவ்வளவு போரும்-கிம் கோப மூலம் மனுஜேந்திர கஸ்தேன சந்திஷ்ட்ட திவாங்நிதேச-இழவு-பேறு தம்மதாம் படியான குடல் தொடக்கு உண்டாய் இருக்க குற்றத்தைக் கணக்கு இட்டது அமையாதோ பிராப்திக்குப் போராது -ஷமைக்கும் போராது –ஒரு வார்த்தை சொல்லு-பருவத்தாலும் நிறத்தாலும் வாயின் பழுப்பாலும் பேச்சின் இனிமையாலும் சர்வதா சத்ருசம் ஆகையாலே உன் வடிவைக் காட்டி எலும்பை இழைக்கிற நீ ஒரு வார்த்தை சொன்னால் என்ன தப்பு உண்டாம் என்னவுமாம்-கலந்தார் செய்யுமவற்றை வயிற்றில் பிறந்தாரும் செய்வாரோ-நிவாகர் அல்லாத ஸ்வ தந்த்ரர் செயலை நீயும் செய்யவோ-

உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய்
கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும்
அடலாழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லி

விடலாழி மட நெஞ்சே வினையோம் ஓன்றாம் அளவே –-1-4-10–அகாதமான நீரை யுடைத்தான கடலைத் தோற்றுவித்து -அப ஏவ சசர்ஜா தௌ-என்கிறபடியே ஏகார்ணவத்தை சிருஷ்டித்து-இப்பால் உண்டான ஸ்ருஷ் ட்யாதிகளுக்காக அதிலே கண் வளரும் இப்போது காரணத்வம் சொல்லுகிறது – இத்தை உண்டாக்கினவன் அறிவித்தால் விடான் என்கைக்காக –ஆஸ்ரித விரோதி நிரசன சீலமான திரு வாழியை யுடைய சர்வேஸ்வரனை கண் வளரும் அடலாழி அம்மானை என்று காரண அவஸ்தையிலும் நித்ய விபூதி விக்ரஹம் திவ்யாயுதம் இவற்றினுடைய சத்பாவம் சொல்லிற்று-கண்டக்கால் இது சொல்லி-கீழ் வைக்கவே வகுக்கின்று -என்ற வார்த்தையைச் சொல்லி

சிறந்த செல்வம் மறப்பித்த தீஷையை உணர்த்தும் விபவம் இரண்டாம் தூதுக்கு விஷயம் –
வைகல் பூம் கழி வாயில்
-6-1–சிறந்த செல்வம் மல்கு திரு வண் வண்டூர் உறையும் —6-1-3-என்று
ஆர்த்த ரஷணம் பண்ண வாரா நிற்கச் செய்தே -திரு வண் வண்டூரின் ஐஸ்வர்யத்தைக் கண்டு கால் தாழ்ந்து தன் ஆர்த்த ரஷண தீஷையை மறைக்கையாலே -நம்மை நினையாது இருந்தான் அத்தனை –
ஆர்த்த ரஷணம் ஒரு தலை யானால் மற்று ஒன்றில் கால் தாழும் அவன் அல்லாமையால் – அத்தை அறிவிக்க வரும் என்று –புணர்த்த பூம் தண் துழாய் முடி நம் பெருமானைக் கண்டு –6-1-5–என்று
ஆர்த்த ரஷண தீஷத்வம் பற்றாசாக மாறில் போர் அரக்கன் மதிள் நீர் எழ செற்று உகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளன் என்மின்களே
–6-1-10–என்று பிராட்டி நிமித்தமாக ராவணனுக்கு வாச பூமியான இலங்கையில் அரணை துகள் ஆக்கின ஏக வீரனான சக்கரவர்த்தி திரு மகனுக்கு- ரஷ்ய வர்க்கத்தில் நானும் ஒருத்தி உண்டு என்று சொல்லுங்கோள் என்று விபவத்தில் தூது விடுகையாலே
சிறந்த செல்வம் மறப்பித்த தீஷையை உணர்த்தி விட்ட விபவம்- இரண்டாம் தூதுக்கு விஷயம்
.-

சிறந்த செல்வமானது மறப்பித்த தீஷையை யுணர்த்தும் இரண்டாவது தூதுக்கு விபவம் விஷயம் விடுகிற விஷயம்‌ என்கிறது வைகல்‌ பூங்கழிவாயில்‌ (திருவாய்மொழி 6-1. “சிறந்‌த செல்வம்மல்கு திருவண்வண்டுருறையும்‌” (திருவாய்மொழி-6-1-3- என்றும் ஆர்த்த ரக்ஷணம்‌ பண்ணி வாரா நிற்கச்‌ செய்தே திருவண்வண்டூரிலே போக்‌யதையிலே கால் தாழ்ந்து நம்மை மறந்திருத்தான் இத்தனை
மாறில் போரரக்கன்‌ மதிள்நீறெழச்‌ செற்றுகந்த ஏறு சேவகனார்க்கு என்னையும்‌ உளள்‌’ (திருவாய்மொழி 6-1-10), “ஏதத்‌ வ்ரதம்‌ மம” (ரா.யு. 18-33 என்று ஆர்த்த ரக்ஷணத்திலே தீக்ஷித்திருப்பானாய்‌ ஆர்த்த ரஷணமொரு தரையானால்‌ அஸ்தமிதாந்யபாவம்‌ என்றிருப்பானொருவன்‌ ஆகையாலே நம்முடைய ஆர்த்தியை அறிவிக்கவே வரும் என்று ஆர்த்த ரக்ஷணம் பற்றாசாக -அரக்கன் மதிள் நீறெழச் செற்றுகந்த ஏறு சேவகனார் (திருவாய்மொழி 6-1-10) என்று பிராட்டி நிமித்தமாக ராவணனுக்கு வாஸ பூமியான லங்கையை பஸ்மஸாத்தாக்கின ஏகவீரனான சக்ரவர்த்தி திருமகனுக்குச்‌ சொல்லுங்கோளென்று விபவத்திலே தூது விடுகிறார் –

திறங்களாகி எங்கும் செய்களூ டுழல் புள்ளினங்காள்!
சிறந்த செல்வ மல்கு திரு வண் வண்டூருறையும்
கறங்கு சக்கரக்கை க் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
இறங்கி நீர் தொழுது பணியீர் அடியேன் இடரே.–6-1-3—உன் தசையை அறிந்து வந்து உதவாதவன் நாங்கள் சொன்னவாறே வர புகுகிறானோ என்ன -அவன் குறை அன்று -அவ் வூரில் ஐஸ்வர்யம் நினைக்க ஒட்டாது என்று இருக்கிறாள்-

உணர்த்தல் ஊடல் உணர்ந்து உடன் மேயும் மடவன்னங்காள்!
திணர்த்த வண்டல்கள்மேல் சங்குசேரும் திருவண்வண்டூர்
புணர்த்த பூந்தண் துழாய்முடி நம்பெருமானைக் கண்டு
புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே.–6-1-5—தொடுக்கப் பட்டு தர்ச நீயமாய் சிரமஹரமான திருத் துழாயை திரு முடியில் யுடையனாய் அத்தாலே என்னை அநன்யார்ஹை யாக்கினவனைக் கண்டு –நம் பாடு வருகைக்கு உறுப்பாக ஓப்பியா நிற்கும் -நீங்கள் அறிவிக்கும் அத்தனையே குறை -அன்றிக்கே பிரிவை ஒன்றாக நினையாதே வளையம் வைத்து ஒப்பித்து நமக்கு அபவ்யமாய் இருக்கிறவரை -என்றுமாம் –

வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்!
தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திருவண்வண்டூர்
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே.–6-1-10--எதிர் இல்லாத போரை ராவணனையும் அவன் அரணாக இட்ட மதிலையும் துகளாகச் செற்று – ருஷிகள் குடியிறுப்பு பெற்றோம் -பிராட்டி உடன் கூடப் பெற்றோம் இலங்கை விபீஷண விஷயமாகப் பெற்றோம் என்று உகந்த-எங்கும் மேற்பட்ட ஆண் பிள்ளை தனத்தை யுடையவர்க்கு –ரஞ்ச நீ யஸ்ய விக்ரமை -என்று எதிரிகள் மேலிட்ட வீரம் –ரதசர்யா ஸூ சம்மத -என்று வீரர்கள் கொண்டாடின வீரம் – உம்முடைய ரஷ்ய வர்க்கத்தில் இன்னும் ஒருத்தி நோவுபடா நின்றாள் என்னுங்கோள் –

படைத்த பரப்பு மறப்பித்த சாரஸ்யத்தை உணர்த்தும் பரத்வ த்வயம் மூன்றாம் தூதுக்கு விஷயம் –
பொன்னுலகு ஆளீரில்
-6-8–முன்னுலகங்கள் எல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன் என்னலம் கொண்ட பிரான் தனக்கு –6-8-1-என்று ஸ்ருஷ்டமான ஜகத்தின் பரப்பை ரஷிக்கிற பராக்காலே ஆஸ்ரிதரோடு தனக்கு உண்டான ஐக ரச்யத்தை மறந்து – அது கொண்டு தம்மை நினையாது இருந்தான் அத்தனை .-தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கன்றி நல்கான்-6-8-6–என்று
ஆஸ்ரிதரோடு ஏக ரசனாகையாலே அத்தை அறிவிக்க வரும் என்று- ஐக ரசம் பற்றாசாக
வானவர் கோனைக் கண்டு யாதும் இதுவோ தக்கவாறு என்ன வேண்டும்-6-8-5-என்று-பரத்வத்திலும்-எங்கு சென்றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்மின் –6-8-5-என்று அதீந்திரிய தயா பரத்வ சத்ருசவான அந்தர்யாமித்வத்திலும் ,தூது விடுகையாலே – படைத்த பரப்பு மறப்பித்த சாரஸ்யத்தை உணர்த்தி விட்ட பரத்வ த்வயம் மூன்றாம் தூதுக்கு விஷயம்-

படைத்த பரப்பானது மறப்பித்த ஸாரஸ்யத்தை உணர்த்தும்‌ மூன்றாம்‌ தூதுக்கு பரத்வ த்‌வயம்‌ விஷயம்‌ என்கிறது பொன்னுலகாளீரில்‌ (திருவாய்மொழி 6-8). “முன்னுலகங்க ளெல்லாம்‌ படைத்த முகில் வண்ணன்‌ கண்ணன்‌ என்‌ நலங் கொண்ட பிரான்‌ (திருவாய்மொழி 6-8-1 )என்று விபூதி ரக்ஷணத்திலே பராக்கை உடையவனாகையாலே நம்மை மறந்திருந்தான்‌ அத்தனை; “தன்‌ மன்னு நீள்கழல்மேல்‌ தண்டுழாய்‌ நமக்கன்றி நல்கான்‌” திருவாய்மொழி 6-8-6) என்று ஆஸ்ரிதரோடு ஏக ரஸனாயிருக்கிற ஆகாரத்தை அறிவிக்கவே வரும்‌ என்று ஐகரஸ்யம்‌ பற்றாசாக, ‘ வானவர் கோனைக்‌ கண்டு யாமிதுவோ தக்கவாறு” (திருவாய்மொழி 6-8-4) என்று பரத்வத்திலும்‌, “எங்குச்‌ சென்றாலும்‌ கண்டு” (திருவாய்மொழி 6-8-5) என்றும்‌ “யாவையுமாய்‌ யாவருமாய்‌ நின்ற மாயன்‌” (திருவாய்மொழி 6-8-7) என்றும் சொல்லுகிறபடியே அத்‌விதீயமுமாய்‌ நித்யமுமாயிருக்கையாலே பரத்வ ஸத்‌ ருஸமான அந்தர்யாமித்வத்திலும்‌ தூது விடுகிறார்‌

பொன்னுல காளீரோ? புவனிமுழு தாளீரோ?
நன்னலப் புள்ளினங்காள்! வினையாட்டியேன் நான்இரந்தேன்
முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில் வண்ணன்கண்ணன்
என்னலங் கொண்ட பிரான்
தனக்கு என் நிலைமை உரைத்தே.-6-8-1–ஸ்ருஷ்ட்டி காலத்தில் வரையாதே சகல லோகங்களையும் உண்டாக்கினவன்-அழிந்தவற்றை உண்டாக்கினவன் உண்டான வஸ்துவை அழிக்குமோ-உண்டாக்கும் இடத்தில் தரமிடாதவன் தன்னைப் பெற வேணும் என்று இருப்பாரே தரம் விடுமோ-முகில் வண்ணன்-தரம் இட்டாலும் விட ஒண்ணாத வடிவு -தன் பேறாக கொடுக்குமவன் என்றுமாம் – கண்ணன்-ஆஸ்ரிதற்கு தன்னைக் கையாள் ஆக்குமவன்-என்னலங் கொண்ட பிரான் தனக்கு-என்னை சர்வ ஸ்வாபஹாரம் பண்ணினவன் -என்னை அநந்யார்ஹம் ஆக்கின உபகாரகன் –என்னுடைய ஸ்த்ரீத்வத்தை அழித்து-தூது போகைக்கு உங்கள் காலிலே விழும்படி பண்ணினவனுக்கு-

நுங்கட்கு யான்உரைக்கேன் வம்மின் யான்வளர்த்த கிளிகாள்!
வெங்கட் புள்ளூர்ந்து வந்து வினையேனை நெஞ்சம்கவர்ந்த
செங்கட் கருமுகிலைச் செய்யவாய்ச் செழுங்கற்பகத்தை
எங்குச்சென் றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்மினே!–6-8-5-–கீழே வானவர்கோனைக் கண்டு என்கிறபடியே லோகத்தில் அன்றிக்கே ஏகாந்த ஸ்தலத்தில் சென்றாகிலும் வார்த்தை சொல்லுங்கோள் -அங்கனம் அன்றியிலே-அநே நைவ ஹிவே கேந கமிஷ்யாமி ஸூ ராலயம் -என்கிறபடியே -பரமபதத்தில் கண்டிலோம் -என்று மீளாதே வ்யூஹ விபாவாதிகள் எங்குத் தேடியாகிலும் கண்டு சொல்லுங்கோள்

தூமது வாய்கள்கொண்டு வந்து, என்முல்லைகள்மேல் தும்பிகாள்!
பூமது உண்ணச் செல்லில் வினையேனைப் பொய்செய்தகன்ற
மாமது வார்தண் துழாய்முடி வானவர் கோனைக்கண்டு
தாம்இதுவோ தக்கவாறு என்னவேண்டும் கண்டீர் நுங்கட்கே.–6-8-4-
-திருக் குழலிலே செவ்வியாலே மிகவும் மது தாரையை யுடைத்தான திருத் துழாயாலே அலங்க்ருதமான திரு முடியை யுடையவன் –அகன்ற மாமது வார்தண் துழாய்முடி-இவள் பரிசரம் அடங்க சருகாய் கிடக்க பிரிவே நீராக அவன் வைத்த வளையம் மது சொரிகிறது இறே-வானவர் கோனைக்கண்டு-அவ் வழகை நித்ய ஸூரிகளை அனுபவிப்பித்துக் கொண்டு இருக்குமவனை -புதியாரை நோவு பட விட்டு பழையாருக்கு ஓலக்கம் கொண்டு இரா நின்றான் -த்வயி கிஞ்சித் சமா பன்ன என்கிற இது யுக்தி மாத்ரமாய் விட்டது இ றே –கண்டு -நீங்கள் முன்பே காணப் பெறுகிறி கோள் இறே –தாம்இதுவோ தக்கவாறு -நாம் தக்கோரான படி இதுவோ -என்னுங்கோள் -ஸ்த்ரீவதம் பண்ணிப் போந்து -பிரிவு அறியாத அந்தரங்கருக்கு ஓலக்கம் கொடுத்து ஆன்ரு சம்சயம் கொண்டாடிக் கொண்டு இருக்குமதுவோ தக்கோர்மை

என்மின்னு நூல்மார்வன் என்கரும்பெருமான் என்கண்ணன்
தன்மன்னு நீள்கழல்மேல் தண்துழாய் நமக்கன்றி நல்கான்
கன்மின்கள் என்று உம்மை யான் கற்பியா வைத்த மாற்றம்சொல்லிச்
சென்மின்கள் தீவினையேன் வளர்த்த சிறு பூவைகளே!–6-8-6—அவனுடைய ஐகரஸ்யம் சொல்லுகிறாள் -ஆஸ்ரிதர் இருந்த இடத்து அளவும் செல்லும் திருவடிகள் -என்னுதல் -அளவிறந்த போக்யதை உடைய திருவடிகள் என்னுதல் -திருவடிகளில் பொருந்தி சிரமஹரமான திருத் துழாயில் செவ்வி நமக்கு அல்லது கொடான் –இனியது கண்டால் ஸ் வார்த்தம் என்று இராதே பக்தானாம் என்று இருக்குமவன் -அதாவது ஆஸ்ரிதரோடு ஏக ரசனாய் இருக்கை

தமரோட்டை வாசம் பிறப்பித்த சௌந்தர்யத்தை உணர்த்தும் அர்ச்சை நாலாம் தூதுக்கு விஷயம்
எம் கானலில்
-9-7–தமரோடு அங்கு உறைவார்க்கு–9-7-2–என்று – தம்மை உகந்த பாகவதர்களோட்டை சேர்த்தியில் இனிமையாலே–பிரிந்தார்க்கு பிராணன் கொண்டு இருக்க ஒண்ணாத படியான தன் சௌந்தர்யத்தை மறந்து – அது கொண்டு பிரித்திட்டு வைத்துப் போய் நம்மை நினையாது இருந்தார் அத்தனை – இவ் வடிவழகை பிரிந்தார் தரிப்பாரோ என்று அவ் அழகை அறிவித்து விட்டால் வராது இரார் என்று –-செக்கமலத்து அலர் போலும் கண் கை கால் செங்கனி வாய் அக்கமலத்து இலை போலும் திரு மேனி அடிகளுக்கு -தக்கிலமே -கேளீர்கள் -9-7-3–என்றும் – பூம் துழாய் முடியார்க்கு -என்று தொடங்கி-தாம் தம்மை கொண்டு அகல்தல் தகவன்று –9-7-9–என்றும்-சௌந்தர்யம் பற்றாசாக -திரு மூழிக் களத்தாருக்கு -என்று ,அர்ச்சாவதாரத்தில் தூது விடுகையாலே தமரோட்டை வாசம் பிறப்பித்த சௌந்தர்யத்தை உணர்த்திவிட்ட அர்ச்சை நாலாம் தூதுக்கு விஷயம்

தமரோட்டை வாஸம்‌ மறப்பித்த ஸெளந்தர்யத்தையுணர்த்தும்‌ நாலாம்‌ தூதுக்கு அர்ச்சாவதாரம்‌ விஷயமென்கிறது எங்கானலில்‌ (திருவாய்மொழி 9-7). “தமரோடங்குறைவார்க்கு” (திருவாய்மொழி 9-7-2) என்று தம்மையுகந்த பாகவதரோட்டைச்‌ சேர்த்தியில்‌ இனிமையாலே நம்மை மறந்திருந்தானத்தனை. “பூந்துழாய்‌ முடியார்க்கு” என்று தொடங்கி “தாம்‌ தம்மைக்‌ கொண்டகல்தல்‌ தகவன்று” (திருவாய்மொழி 9-7-9) என்று தம்முடைய ஸெளந்தர்யத்தை அநுபவித்துப்‌ பிரிந்தார்‌ தரிக்க வல்லார்களோ என்று ஸெளந்தர்யத்தை உணர்த்தவே வரும்‌ என்று ஸெளந்த,ர்யம்‌ பற்றாசாக, திருமூழிக்களத்தாருக்கு என்று அர்ச்சாவதாரத்திலே தூது விடுகிறார் –

நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய்
அமர் காதல் குருகினங்காள் அணி மூழிக் களத்து உறையும்
எமராலும் பழிப்புண்டு இங்கு என் தம்மா விழிப்புண்டு
தமரோடு அங்கு உறைவார்கு தக்கிலமே கேளீரே –9-7-2-–தம் பரிஜனங்களோடே அங்கே நித்ய வாஸம் பண்ணுகிற தமக்கு நாங்கள் ஆகோமோ என்று கேளுங்கோள்–தாமும் தமக்கு நல்லாருமாய் இருக்கிற இருப்புக்கு –அடியார்கள் –குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ-என்று இருப்பார் ஆகாரோ -என்று கேளுங்கோள்

தக்கிலமே கேளீர்கள் தடம் புனல் வாய் இரை தேரும்
கொக்கினங்காள் குருகினங்காள் குளிர் மூழிக் களத்து உறையும்
செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக்கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே–9-7-3-–அவர்களுக்கு உஜ்ஜீவனமான வடிவு -அவயவங்களை பரபாகமான செந்தாமரை இலைபோலே யாய்த்து திரு மேனி -வெண்டாமரை என்னில் விஜாதீயம் என்று –அக்கமலம் -என்கிறது —அடிகளுக்கு –வடிவு அழகையும் அவயவ சோபையையும் காட்டி எழுதிக் கொண்டவர்க்கு இவ் வடிவுக்குத் தோற்று வைவர்ணயத்தை தரித்து இருப்பார் யோக்யர் அல்லரோ என்று கேட்ட ப் பாருங்கோள் –

பூந்துழாய் முடியார்க்கு பொன் ஆழிக் கையார்க்கு
ஏந்து நீர் இளங்குருகே திரு மூழிக் களத்தார்க்கு
ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர்க் கண் நீர் ததும்ப
தாம் தம்மைக் தம்மைக் கொன்டு அகல்தல் தகவன்று என்று உரையீரே–9-7-9-–திருமுடிக்கு ஒப்பனையான வளையம் இருக்கிற படி-பொன் ஆழிக் கையார்க்கு-திரு முடிக்கு வளையம் போலே யாய்த்து திருக்கைக்கு திரு வாழி –தாம்-கீழ் சொன்ன அழகையும் சீலத்தையும் யுடைய தாம் – தம்மைக் கொன்டு அகல்தல்-தமக்கு அகல வேண்டினால் -இவ்வடிவைப் பிரிந்தார் பிழையார்-என்று தம்மை வைத்து அன்றோ போவது -தம்மைக் கண்ணாடி புறத்திலே கண்டு அறிவரே-தம்மைப் பிரிந்த தசைக்கு உதவுகைக்கு அன்றோ தம்மைக் கண்டது -இமாம் அவஸ்தாம் ஆபன்னோ நேஹ பச்யாமி ராகவும் –
தகவன்று என்று உரையீரே–மென்மையும் பிரணயித்தவமும் போனால் தாயையும் குடி போக வேணுமோ –நிர்த்தயர் செய்யுமத்தை செய்தார் என்று சொல்லுங்கோள் -ஸ்த்ரீவதம் என்றால் அஞ்சாதார் செய்யுமத்தை செய்தார் என்று சொல்லுங்கோள்–என்கிறாள் –

இப்படி பல இடங்களிலும் தூது விட்டால் ப்ராப்ய வஸ்த்வைக்யம் குலையாதோ என்கிற சங்கையிலே -பரத்வாதிகளில் ஸ்தல பேதம் ஒழிய வஸ்து பேதம் இல்லை என்னும் அத்தை ச த்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் மேல் —இப்படிப்‌ பரத்வாதிகளிலே தூது விட்டால்‌ இவற்றுக்கு விஷய பேதமுண்டோ என்னில்‌, பகலிருக்கை தொடக்கமான ராஜ நீதி போலே ஸ்தல பேதமொழிய வஸ்த்வைக்யத்தினாலே விஷய பேதமில்லை என்கிறார்‌-

பகல் ஓலக்கம் இருந்து – கறுப்பு உடுத்து – சோதித்து – காரியம் மந்த்ரித்து வேட்டை ஆடி ஆராமங்களிலே விளையாடும் ராஜ நீதி யாதும் சோராமல் செங்கோல் நடாவுகிற பாரளந்த என்னும் மூன்று முடிக்கு உரிய இளவரசுக்கு விண் மீது என்கிற ஐந்திலும் காணலாம்–சூரணை -157-

(பகல் ஓலக்கம் இருக்கும் ராஜ நீதி-கறுப்பு உடுத்து சோதிக்கும் ராஜ நீதி –காரியம் மந்த்ரிக்கும் ராஜ நீதி –வேட்டை ஆடும் ராஜ நீதி-ஆராமங்களிலே விளையாடும் ராஜ நீதி -என்று கொண்டு -ராஜ நீதி -முறை பிரகாரம் -என்றபடி-வேறு வேறு காலங்களிலே-செங்கோல் நடாவுகிற- ஒரே அரசன் செய்வது போலே
விண் மீது என்கிற ஐந்திலும் காணலாம்-என்றபடி )

அதாவது-பகல் ஓலக்கம் இருந்து-சகல பரிஜன சேவ்யனாய்க் கொண்டு தம் வீறு தோற்ற பகல் ஓலக்கம் இருக்கையும் கறுப்பு உடுத்துச் சோதித்து ராஜ்யத்தில் உள்ளோர் தோஷ குணங்கள் அறிகைக்காக -ராத்ரியிலே பிறர் அறியாத படி கறுப்பு உடுத்தி நகர சோதனம் பண்ணுகையும் – கார்யம் மந்த்ரித்து – ராஜ்யத்தில் சிஷை ரஷைகளுக்காக கார்ய விசாரம் செய்கையும் வேட்டை யாடி பின் துஷ்ட சத்வ நிரசன அர்த்தமாக வேட்டை ஆடுகையும் – ஆராமங்களிலே விளையாடும் ராஜ நீதி – அந்த ஸ்ரமம் தீர பூம் தோப்புகளிலே அபிமத விஷயங்களோடு விளையாடுகிற ராஜ நீதியானது –ஆதும் சோராமல் செங்கோல் நடாவுகிற பாரளந்த என்னும் மூன்று முடிக்கு உரிய இளவரசுக்கு – பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்கு ஆதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான் செங்கோல் உடைய திரு அரங்கச் செல்வனார் –நாச்சியார் –11-3-என்றும் –அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் இருளார் வினை கெட செங்கோல் நடாவுதீர்–திருவிருத்தம்-33- -என்றும் சொல்லுகிறபடி உபய விபூதியிலும் ஏக தேசமும் சேஷியாத படி -தன்னுடைய திவ்ய ஆக்ஜையை நடத்துபவனாய் –
பாரளந்த பேரரசே எம் விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்த ஓர் அரசே–திருவிருத்தம்-80- -என்று
சொல்லப்பட்ட -சௌலப்ய -பரத்வ -பிரணயித்வங்களாலே -வந்த மூன்று முடிக்கு-(பாரளந்த பேரரசே-என்பதால் சௌலப்யம் -எம் விசும்பரசே என்பதால் பரத்வம் -எம்மை நீத்து வஞ்சித்த ஓர் அரசே–என்பதால் -பிரணயித்வம் -என்றவாறு )உரிய வான் இளவரசனான சர்வேஸ்வரனுக்கு விண் மீது என்கிற ஐந்திலும் காணலாம் –

(பகலோலக்கமிருந்து) ஒரு ராஜாவானால்‌ மந்த்ரிகள்‌ முதலான ஸர்வரும்‌ ஸேவிக்க ஓலக்கமிருந்து, (கருப்புடுத்துச்‌ சோதித்து) நாட்டிலுள்ள குற்றங்குறைகளாராய்கைக்குப்‌ பிறரறியாதபடி கருப்புடுத்து நகரி ஸோதநை வந்து அந்த நாட்டில்‌ ஸிஷை ரக்ஷைகளுக்காக வ்ருத்‌த, மந்த்ரிகளும்‌ தானுமாய்‌ கார்ய விசாரங்களைப்‌ பண்ணியும்‌, துஷ்ட ஸத்வ நிரஸநார்த்தமாக வேட்டையாடியும்‌, அந்த ஸ்ரமம்‌ தீரப்‌ பூந் தோப்புக்களிலே விளையாடக்‌ கடவதான ராஜநீதி (ஆதும்‌ சோராமல்‌ செங்கோல்‌ நடாவுகிற பாரளந்த வென்னும்‌ மூன்று முடிக்குரிய இளவரசுக்கு) “பொங்கோதம்‌ சூழ்ந்த புவனியும்‌ விண்ணுலகும்‌ அங்காதும்‌ சோராமே ஆள்கின்ற எம்பெருமான்‌ செங்கோலுடைய திருவரங்கச்‌ செல்வனார்‌ (நாச்சியார்‌ திருமொழி 11-3 என்றும்‌, “இருளார்‌ வினைகெடச்‌ செங்கோல்‌ நடாவுதிர்‌” (திருவிருத்தம்‌ 33) என்றும்‌ உபய விபூதியிலும்‌ ஏகதேஸமும்‌ ஸேஷியாதபடி தன்னுடைய திவ்யாஜ்ஞையை நடத்துமவனாய்‌, “பாரளந்த பேரரசே எம்விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே (திருவிருத்தம்‌ 80) என்று ஸெளலப்‌யம்‌ பரத்வம்‌ ப்ரணயித்வம்‌ என்றும்‌ சொல்லப்படுகிற மூன்று முடிக்குரிய வானிளவரசுக்கு (விண்மீதென்ற ஐந்திலும்‌ காணலாம்‌) 

பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்
அங்காதும் சோராமே ஆள்கின்ற வெம்பெருமான்
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார்
எங்கோல் வளையால் இடர் தீர்வர் ஆகாதே –11-3-ஓதம் கிளர்ந்த கடலை வெளியாக உடைய பூமியும்
மரியாதையில் ஒன்றும் குறைந்து இல்லை இறே அங்கு பூமிக்கு மேலே விஞ்சி வாரா நிற்கச் செய்தேயும்- கரை ஏற மாட்டாதே கிடக்கிறது இறே கடல்-ஒரு மரியாதை இல்லாத த்ரிபாத் விபூதியும்-உபய விபூதியிலும் ஒரு குறை பிறவாமே நிர்வஹித்துக் கொண்டு போருகிற- அழிந்த வன்று தன மேலே ஏறிட்டுக் கொண்டு நோக்கியும்- உண்டாக்கின வன்று தன் நிலையிலே நிறுத்தியும் -நடத்தியும் –
இவ் விபூதியை நித்ய சம்ஸ்லேஷத்தாலே சத்தியைக் கொடுத்து நோக்கும் அவ் விபூதியை –என்னை ஒரு மூன்றாம் விபூதியாக ஆளா நின்றான் – சப்தாதிகளாலே களிக்கும் படி பண்ணி வைத்தான் இவ் விபூதியை தன்னை அனுபவித்துக் களிக்கும் படி பண்ணி வைத்தான் அவ் விபூதியை–நான் இங்கு உள்ளாருக்கும் கூட்டன்றிக்கே –அங்கு உள்ளாருக்கும் கூட்டன்றிக்கே-நடுவே நோவுப்படும்படி பண்ணி வைத்தான் என்னை ஒருத்தியையுமே –தம்முடைய ஆஜ்ஞா அனுவர்த்தனம் -ஸ்வ சங்கல்பத்தினாலே நடத்துமது போராது என்று கோயிலிலே வந்து சாய்ந்தவர்-

அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும்
இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர் ஈங்கு ஓர் பெண் பால்
பொருளோ எனும் இகழ்வோ? இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ
தெருளோம் அரவணையீர் ! இவள் மாமை சிதைக்கின்றதே 
–33–மோஹ அந்தகார ஸஹ சரிதமான விபரீத விருத்தங்கள் போம்படி ஸங்கல்ப ரூபமான ஆஜ்ஜையை நடத்தா நிற்புதீர்-

சீரரசாண்டு  தன் செங்கோல் சில நாள் செலீஇக் கழிந்த
பார் அரசு ஒத்து மறைந்தது நாயிறு பாரளந்த
பேரரசே எம் விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்த
ஓரரசே அருளாய் இருளாய் வந்து உறுகின்றதே
 – -80—–பார் அளந்த பேர் அரசே –இருளின் கையில் அகப்பட்ட ஆதித்யனை மீட்கும் போது – மகா பலி-கையிலே அகப்பட்ட பூமியை மீட்டவனே வேணும் போலே காணும் –அளந்த –பூமிப் பரப்படைய அளந்த திருவடிகளைக் கொண்டு இவ்விருளையும் அளந்தால் ஆகாதோ –இருளார் வினை கெட இறே-(39 ) செங்கோல் நடத்துகிறது –(அளப்பது ஸ்வ அதீனமாக்குவது )பேரரசே –-எளிய செயல்கள் செய்யுமவன் அல்லனே –செய்யுமவை அடங்க பெருத்தாயிற்று இருப்பது –எம் விசும்பரசே –பகவத் விஷயத்தில் ஜ்ஞானம் பிறந்த பின் சம்சாரத்தில் காட்டில் பரம பதம் அணித்தாய் காணும் இவருக்கு இருப்பது –பொன் உலகு ஆளீரோ -என்று முதல்-அதுவே இறே கொடுத்தது –எம்மை நீத்து வஞ்சித்து ஓரரசே – உபய விபூதிக்கும் தனித் தனியே கடவனோபாதி- என்னை அகற்றி-முடிக்கைக்கும் தனி முடி சூடி இருக்கிறவனே -என்று பிள்ளான் –(என்று எம்பார் என்றும் சிலர் சொல்வர் )என்னை அகற்றி -அது செய்கிற போது பிரியேன்  என்று வைத்து பிரிந்து – இஸ் ஸ்வபாவதுக்கு புறம்பு-என்னோடு ஒப்பார் யார் -என்று இருக்கிறவன் ஆயிற்று — என்னால் அல்லது செல்லாதவரை பொகட-வல்லார் யார் – என்னோபாதி  இல்லையே -என்று இதுக்கும் தனி முடி சூடி இருக்கிறவன் ஆயிற்று-என்று பட்டர்-

விண் மீது இருப்பாய் –திருவாய் -6-9-5–என்று-வைகுண்டேது பரே லோகே ஸ்ரியா ஸார்த்தம் ஜகத் பத்தி
ஆஸ்தே விஷ்ணு ரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் சஹ-
என்கிற படியே பகல் கண்டேன்–இரண்டாம் திருவந்தாதி-81–என்கிற ஒரு பகலான பரமபதத்திலே – ஒண்டொடியாள் திரு மகளும் தானுமாய்–திருவாய்-4-9-10- நித்ய முக்தர் சேவிக்க ஓலக்கம் இருக்கையும் –

“விண்‌ மீதிருப்பாய்‌” (திருவாய்மொழி 6-9-5) “பகல் கண்டேன்‌ நாரணனைக்‌ கண்டேன்‌” (இரண்டாம்‌ திருவந்தாதி- 81 )என்றும்‌ “வைகுண்டே து பரே லோகே ஸ்ரியாஸார்த்தம்‌ ஜகத்பதி: ஆஸ்தே விஷ்ணுர் அசிந்த்யாத்மா பக்தைர்‌ பாகவதைஸ்‌ ஸஹ” என்றும்‌ ஒரு பகலான பரம பதத்திலே பிராட்டிமாரும்‌ தானும்‌ நித்ய முக்தர்‌ ஸேவிக்க ஓலக்கமிருந்தும்‌,-

விண்மீ திருப்பாய்! மலைமேல் நிற்பாய்! கடற்சேர்ப்பாய்!
மண்மீ துழல்வாய்! இவற்றுள் எங்கும் மறைந்துறைவாய்!
எண்மீ தியன்ற புறஅண் டத்தாய்! எனதாவி
உண்மீ தாடி உருக்காட் டாதே ஒளிப்பாயோ!–6-9-5—பரமபதத்தில் நித்ய ஸூ ரிகளுக்கு அழகு ஓலக்கம் கொடுத்துக் கொண்டு இருக்கிறவனே- நித்ய ஸூ ரிகளுக்கும் சம்சாரிகளுக்கும் ஓக்க அனுபவிக்கலாம் படி திருமலையில் நின்று அருளினவனே – திருமலையில் நிலை போலே பிரகாசிக்கிறதாயிற்று இவருக்கு பரமபதத்தில் இருப்பும் பரமபதத்தில் மேன்மையும் அறியாதே திருமலையில் நீர்மையும் அறியாதே இருக்கிற ப்ரஹ்மாதிகளுக்கு ஆஸ்ரயணீயன் ஆகைக்கும்-அனுபவிப்பைக்கும் -திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளினவனே-அத்தனை அளவில்லாத சம்சாரிகளுக்காக சஜாதீயனாய் வந்து அவதரித்து -மார்விலே அம்பேற்று சோக மோகங்களை அனுபவித்து ரக்ஷிக்குமவனே-காண்கையும் அஸஹ்யமாய் இருப்பார்க்கு முகம் தோற்றாத படி நின்று சகல பதார்த்தங்களின் உடைய சத்தையை நோக்கினவனே-அசங்க்யேயமான பாஹ்ய அண்டங்களுக்கும் இப்படியே ரக்ஷகன் ஆனவனே-அசங்க்யேயமான பாஹ்ய அண்டங்களுக்கும் இப்படியே ரக்ஷகன் ஆனவனே-

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே -மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி யொளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு -81-காள ராத்ரியாய் செல்லாதே விடியக் கண்டேன் –-வடுகர் வார்த்தை போலே தெரிகிறது இல்லை – எங்களுக்கு தெரியும் படி சொல்லீர் என்ன –அஸ்தமிதியாத ஆதித்யனைக் கண்டேன்–

இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் -என்று-யமாத்மா ந வேத -என்கிறபடியே – வ்யாப்த பதார்த்தங்களுக்கு தெரியாத படி அந்தர்யாமியாய் –உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் அறிகையும்-திருமாலை-34 —

இவற்றுளெங்கும்‌ மறைந்துறைவாய்‌‘ (திருவாய்மொழி 6-9-5) என்றும்‌ “யமாத்மா ந வேத என்றும்‌ சொல்லுகிறபடியே வ்யாப்ய பதார்த்தங்களுக்குத்‌ தெரியாதபடி அந்தர்யாமியாய்‌ நின்று ஆராய்ந்தும்‌,-

கடல் சேர்ப்பாய் -என்று-பாற்கடல் யோக நித்தரை செய்து சேதன ரஷோ உபாயங்களை சிந்திக்கையும் –
(மந்த்ர ஆலோசனையைச் சொன்னபடி
),

கடல்‌ சேர்ப்பாய்‌” (திருவாய்மொழி 6-9-5) என்றும்‌, “பாற்கடல்‌ யோக நித்திரை சிந்தை செய்த வெந்தாய்‌” (திருவாய்மொழி 2-6-5) என்றும்‌ சேதநருடைய ரக்ஷணோபாயங்களை மந்த்ரித்தும்‌-

உய்ந்து போந்து என் உலப்பிலாத வெந்தீ வினைகளை நாசம் செய்து உனது
அந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ
ஐந்து பைந்தலை யாடரவணை மேவிப் பாற் கடல் யோக நித்திரை
சிந்தை செய்த வெந்தாய்
உன்னைச் சிந்தை செய்து செய்தே –2-6-5–திருப் பாற் கடலிலே ஜகத் ரக்ஷண சிந்தாத்மக யோக நித்திரை பண்ணி அருளினை-சேதனர் உடைய உஜ்ஜீவன பிரகாரம் ஆதல் –ஆத்மாநம் வாஸூதேவாக்யம் சிந்தையன் மதுஸூதன-என்கிறபடியே தன்னை அனுசந்தித்தல் ஆதல்

அனந்தரம்-மண் மீது உழல்வாய் -என்று ரக்ஷண அர்த்தமாக வந்து அவதரித்து-களிறும் புள்ளும் உடன் மடிய வேட்டையாடி வருவான்–நாச்சியார்–14-9–என்கிறபடியே ஆஸ்ரித விரோதி துஷ்ட சத்வ நிரசனமாகிற வேட்டை யாடுகையும் -(விபவத்தைச் சொன்னபடி)-

அநந்தரம்‌ சேதந ரக்ஷணார்த்தமாக மண்மீதுழல்வாய்‌” (திருவாய்மொழி 6-9-5) என்றும்‌ “களிறும்‌ புள்ளும்‌ உடன் மடிய வேட்டையாடி வருவான்‌” நாச்சியார்‌ திருமொழி 14-9) என்றும்‌ ராம க்ருஷ்ணாதி ரூபேண அவதரித்து ஆஸ்ரித விரோதிகளான ராவண கும்ப கர்ணாதி துஷ்ட ஸத்வ நிரஸநமாகிற வேட்டையாடியும்‌,-

நாட்டைப் படை என்று அயன் முதலா தந்த நளிர் மா மலருந்தி
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் தன்னைக் கண்டீரே
காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய
வேட்டை யாடி வருவானை விருந்தாவனத்தே கண்டோமே ––14-9—பையல்கள் கிடந்த தூறுகள் எல்லாம் புக்கு தேடி-தேனுகன்-குவலயா பீடம்-பகா ஸூரன் -இவர்களடைய -ஏகோத்யோகத்திலே -உடன் மடிய-
நிரஸ்தர் போலே இருக்க வாய்த்து அழியச் செய்தது –

மலை மேல் நிற்பாய் -என்று –விரோதி நிரசன ஸ்ரமம் ஆர நிரதிசய போக்யங்களான –-ஆராமம் சூழ்ந்த கோவில்-சிறிய திருமடல் -71- என்றபடி -திரு மலை முதலான தேசங்களிலே ரசோத்தரமாக வசிக்கையும்
ஆகிய இவை ஐந்திலும் காணலாம் என்கை–

“மலை மேல்‌ நிற்பாய்‌” (திருவாய்மொழி 6-9-5) என்றும்‌ “ஆராமம்‌ சூழ்ந்த” (சிறியதிருமடல்‌ 71 என்றும்‌ அந்த விரோதி நிரஸநத்தாலுண்டான ஸ்ரமம்‌ ஆறும்படி கோயில்‌ திருமலை முதலான தேஸங்களிலே நிற்கையாலும்‌ காணலாம்‌. –

பேராலி தண் கால் நறையூர் திருப் புலியூர்
ஆராமம் சூழ்ந்த வரங்கம் கண மங்கை
காரார் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம்–உகந்து அருளின தேசங்கள் எல்லாம் பகல் இருக்கையாய் ஆஸ்ரித ரஷணததுக்கு ஏகாந்த ஸ்தலம் என்று கோயிலிலே நித்ய வாஸம் பண்ணுகிறானாய் இருக்கிறது – வன்பெரு வானகம் உய்ய -இத்யாதியில் சொல்லுகிறபடியே
அங்கே சென்று என் வடிவைக் காட்டி என்னுடைய ரஷணம் பண்ணின படி பாருங்கோள் என்கிறேன்-

இத்தால் பரத்வாதிகளிலே ஸ்தல பேதம் ஒழிய வஸ்து பேதம் இல்லாமை காட்டப் பட்டது–

ஆக இத்தால்‌ பரத்வாதிகளுக்கு ஸ்தல பேதமொழிய விஷய பேதமில்லை என்கிறார் –

ஆனால் ஐந்திலும் ஒத்து இருக்கை அன்றிக்கே இவர் அர்ச்சாவதாரத்தில் மண்டி இருப்பான் என் என்னும் ஆ காங்ஷையிலே இதன் குண பூர்த்தியை அருளிச் செய்கிறார் மேல்–இந்த பரத்வாதி களிலுண்டான குணங்களெல்லாம்‌ அர்ச்சாவதாரத்திலே ப்ரகாஸிக்குமென்கிறார்‌ இனிமேல்‌.–

தமருகந்த அடியோமுக்கே யென்னும்‌ பின்னானார்‌ வணங்குமிடத்திலே எல்லாம்‌ பூர்ணம்‌.-சூரணை -158-

அதாவது-தமர் உகந்த எவ் உருவம் அவ் உருவம் தானே தமர் உகந்த எப் பேர் மற்று அப் பேர்-முதல் திருவந்தாதி -44 -என்று ஆஸ்ரிதர் உகந்த த்ரவ்யங்களே தனக்கு திரு மேனியாகவும் – அவர்கள் உகந்த திரு நாமங்களே தனக்கு திரு நாமமாகவும் -கொண்டு இருக்கும் என்றும் –-அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே -பெரிய திருமொழி-4-9-5 -என்று தேச கால கரண விப்ரக்ருஷ்டதைகளால் பரத்வாதிகளில் அணுகைக்கு ஆள் அன்றிக்கே அநந்ய கதிகளாய் இருக்கிற எங்களுக்கு – ருசி பிறந்த போதே – நினைத்த வகைகள் எல்லாம் அனுபவிக்கைக்காக அன்றோ திரு இந்தளூரில் வந்து நிற்கின்றது என்று சொல்லப்பட்ட- பின்னானார் வணங்கும் சோதிதிரு மூழிக் களத்தனாய் –திரு நெடும் தாண்டகம் -10–என்று அவதாரங்களுக்கு பிற்பாடர் ஆனவர்களுக்கு அனுபாவ்யமான அர்ச்சா அவதாரத்திலே –சர்வம் பூர்ணம் சஹோம்-உபநிஷத் -என்கையாலே –
பரத்வாதிகளில் அனுபாவ்யமான குணங்கள் எல்லாம் பூர்ணம் என்கை —ஆக இப்படி ஆஸ்ரித ஆதீன ஸ்வரூப ஸ்தித்யாதிகமாய்-அடியோமுக்கே-என்னும் படி –கறை விழுந்த இடமான – அர்ச்சா அவதாரத்தில் முற்பட்டவற்றில் உள்ளவையும் காணலாம் ஆகையாலே –சிந்தை மற்று ஒன்றின் திறத்து அல்லாத் தன்மை தேவ பிரான் அறியும்-திருவாய்–7-10-10- என்னும் படி மண்டி இருப்பார் என்று கருத்து–

“தமருகந்தது எவ்வுருவம்‌ அவ்வுருவம்‌ தானே தமருகந்தது எப்பேர்‌ மற்றப்பேர்‌’ (முதல்‌ திருவந்தாதி 44) என்று ஆஸ்ரிதருகந்த திரவயங்களே திருமேனியாகவும்‌ அவர்கள்‌ உகந்த திருநாமங்களைத்‌ தனக்குத்‌ திருநாமமாகவும்‌ கொண்டு, “அடியோமுக்கே எம்பெருமான்‌ அல்லீரோ நீர்‌ இந்தளூரீரே’ (பெரிய திருமொழி 4-9-5) என்றும்‌, “பின்னானார்‌ வணங்கும்‌ சோதி திருமூழிக்களத்தானாய்‌” (திருநெடுந்தாண்டகம்‌ 10) என்றும்‌ ஆஸ்ரிதாதீந ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகளை உடையனாய்‌, அவதாரங்களுக்குப்‌ பிற்பாடராகையாலே அநுபவிக்கப்‌ பெறாத வாஸ்ரிதர்‌ இழவாதபடி தன்னை அநுபவிப்பித்துக்‌ கொடு நிற்கிற அர்ச்சாவதாரத்திலே பரத்வாதிகளில்‌ அநுபாவ்யமான குணங்களெல்லாம்‌ ‘ஸர்வம்‌ பூர்ணம்‌ ஸஹோம்‌’ என்கையாலே பரிபூர்ணமென்கிறார் –

தமருகந்த   தெவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்த தெப்பெர் மற்றப்பேர்
தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையா திருப்பரே
அவ்வண்ணம் ஆழியானாம் ——44–தனக்கு சத்தா பிரயுக்தமான நாராயணாதி நாமங்களை ஒழிய
இவன் உகந்திட்ட இதுவே தனக்குத் திரு நாமமாக நினைத்து இருக்கும்–ஸ்ரஷ்டாவாய் நியாமகனாய் இருக்கிறவன் ஸ்ருஜ்யனுமாய் நியாம்யனுமாய்-இவர்கள் சத்தாதிகளும் நாமரூபங்களும் தன் அதீனமானாப் போலே தனக்கு சர்வமும் ஆஸ்ரித அதீனம்-சென்றால் குடையாம் -என்று இவன் அவனுக்கு இருக்குமா போலே அவன் இவனுக்கு இருக்கும் அவனது பிரணயித்வம்–ஆஸ்ரித பரதந்த்ரம் இவனது ஸ்வரூபம் –

தீ எம்பெருமான் நீர் எம்பெருமான் திசையும் இரு நிலனுமாய்
எம்பெருமானாகி நின்றால் அடியோம் காணோமால்
தாய் எம்பெருமான் தந்தை தந்தையாவீர் அடியோமுக்கே
எம்பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே 
—4-9-5-அநந்ய கதிகளாய் இருக்கிற எங்களுக்கு
ருசி பிறந்த போதே நினைத்த படிகள் எல்லாம் அனுபவிக்கைக்கு அன்றோ தேவரீர் திரு இந்தளூரிலே வந்து கிட்டி நிற்கிறது –பூ அலறும் போதை செவ்வி பார்த்து பறித்து கொடு வாரா நிற்பாரைப் போலே
ருசி பிறந்த போதே அடிமை கொள்ளுகைக்கு ஈடாக காலம் பார்த்து அன்றோ தேவரீர் இங்கே வந்து நிற்கிறது –பரத்வம் நித்ய ஸூரிகளுக்கு அனுபாவ்யமாய் இருக்கும்-வ்யூஹம் ப்ரஹ்மாதிகள் உடைய கூக்குரல் கேட்கைக்கு ஈடாக இருக்கும் ராம கிருஷ்ணாதி அவதாரம் தசரத வசுதேவாதிகள் உடைய பாக்ய பலமாய் இருக்கும்-உகந்து அருளின நிலங்கள் – தங்களுக்கு ஹிதம் இன்னது என்று அறியாதே
சம்சாரம் த்யாஜ்யம் என்று அறியாதே சர்வேஸ்வரன் பிராப்யன் என்று அறியாதே இருக்கிற சம்சாரிகளுக்கே முகம் கொடுக்கைகாகவாய் இருக்கும் இறே
–குருடருக்கு வைத்த இறையிலியில்
விழித்தாருக்கு பிராப்தி இல்லை இறே –பின்னானார் வணங்கும் சோதி -என்னக் கடவது இறே-

–——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌ – 7-ஒளபம்ய பாதம் –11-அந்யாபதேஸ -ஸ்வாபதேஸ அதி கரணம்‌ -133–155-ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

July 24, 2026

(1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 284 முடிய (48)

(1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-284 (27)

7-ஒளபம்ய பாதம் – 122–155—மொத்தம் 34 ஸூரணைகள் -இதில் இரண்டு அதிகரணங்கள் —
10-ப,க,வந்நாயி கெளபம்யாத்‌,யதி, கரணம்‌–122–132–மொத்தம் – 11 ஸூரணைகள்
11-அந்யாபதேஸ -ஸ்வாபதேஸ அதி கரணம்‌ —-133–155– மொத்தம் —23-ஸூரணைகள்

ஏவம் பூத பக்தி தசையில் இவர் பெண் பேச்சாக பேசும் இடத்தில் –தோழி தாய் மகள் என்று த்ரி விதமாக பேசுகிற இதுக்கு கருத்து என் என்னும் அபேஷையில் அத்தை பிரகாசிப்பிகிறார் மேல் —ஆனால்‌ பக்தி தஸையில்‌ பெண் பேச்சாகில்‌ பிராட்டி ஒருத்தியாகப்‌ பேசுகை ப்ராப்தம்‌, தோழி தாய்‌ மகள்‌ என்கிற த்ரைவித்‌யமான பேச்சுக்கு தாத்பர்யம்‌ என்‌ என்னில்‌, இந்த அதி ப்ராவண்யத்துக்கு ஸஹகாரியாயும்‌, நிரோதகமாயுமிருக்கிற ஸம்பந்த உபாயங்‌களில்‌ ஜ்ஞாந வ்யவஸாயங்களென்ன, அந்த ப்ராவண்யத்துக்கு விஷயமான உபேயத்‌தில்‌ த்வரை யென்ன இவற்றைத்‌ தோழி தாயார்‌ மகள்‌ என்கிறார்‌

சம்பந்த உபாய பலங்களில் உணர்த்தி துணிவு பதற்றம் ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைகளுக்கு
தோழி தாயார் மகள் என்று பேர் —சூரணை -133-

(சம்பந்தத்தில் -உணர்த்தி ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு-தோழி என்று பெயர் –
உபாயத்தில் -துணிவு ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு தாயார் என்று பெயர் –
பலத்தில்- பதற்றம் ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு மகள் என்று பெயர் )

சம்பந்தத்தில் -உணர்த்தி ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு-தோழி என்று பெயர் –-அதாவது –
தோழி ஆவாள்-நாயக நாயகிகளை இணக்கிச் சேர்க்குமவள் ஆகையாலே –-திரு மந்த்ரத்தில் பிரதம பதத்தால் ஈஸ்வரனோடு ஆத்மாவுக்கு சொல்லப் பட்ட அநந்யார்ஹ சேஷத்வாதி சம்பந்த ஞானமே -அவனோடு இந்த ஆத்மா சேருகைக்கு ஹேது ஆகையால்-அந்த சம்பந்த ஞானம் ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு தோழி என்றும் –

தோழியாவாள்‌ நாயகநாயகிகளை இணக்கிச்‌ சேர்க்குமவளாகையாலே திருமந்தரத்தில்‌ ப்ரதம பதமான ப்ரணவத்தில்‌ அகாரத்தாலே சொல்லப்பட்ட, காரணமாய்‌ ரக்ஷகமாய்‌ ஸேஷியாய்‌ ஸ்ரீய: பதியாயிருக்கிற பகவத் ஸ்வரூபத்துக்கும்‌, தத் ப்ரதி ஸம்பந்தியாய்‌, கார்யத்வ- ரஷ்யத்வ ஸேஷத்வங்களை ஸ்வரூபமாக உடைத்தாய்‌, ப்ரக்ருதே: பரமாய்‌, ஜ்ஞாநாநந்த மயமாய்‌, ஞாந குணகமாயிருக்குமென்று மகாரத்தாலே சொல்லப்பட்ட ஆத்ம ஸ்வரூபத்துக்கும்‌ சதுர்த்தியாலும்‌ உகாரத்தாலும்‌ சொல்லப்பட்ட நிருபாதிக ஸேஷத்வ-அநந்யராஹ ஸேஷத்வாதி,ஸம்பந்தத்தை விஷயீகரித்த ஜ்ஞாநத்தைத்‌ தோழி என்றும்‌,

உபாயத்தில் -துணிவு ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு தாயார் என்று பெயர் –-அதாவது தாயார் ஆவாள்-பெற்று வளர்த்த பெண் பிள்ளை ப்ராப்த யவ்வனையாய் நாயக விஷயத்திலே அதி மாத்திர ப்ராவண்யத்தாலே- அவன் இருந்த இடம் ஏறப் போக வேணும் என்று பதறும் அளவிலும் – அவன்தானே வரக் கண்டு இருக்கை ஒழிய – படி கடந்து புறப்படுகை குல மரியாதைக்கு போராது என்று நிஷேதித்து போருமவள் ஆகையாலே – சித்தோ உபாயத்தை பற்றினவர்களுக்கு ப்ராப்தி விளம்ப ஹேது இல்லாமையாலே – சீக்கிரமாக ப்ராப்யத்தை பெற வேணும் என்கிற அந்த த்வரையினுடைய உத்பத்தியாதிகளுக்கு பிரதம ஹேதுவாய் – அந்த த்வரை பிராப்ய வைலஷண்ய தர்சனத்தாலே -க்ரம பிராப்தி பற்றாமல் முறுகி நடக்கும் அளவில் – இது பிரபன்ன குல மரியாதைக்குச் சேராது என்று நிசேஷித்து – சேஷியானவன் தானே வந்து விஷயீகரிக்கக் கண்டு இருக்க வேண்டும் என்று -இதின் துடிப்பை அடக்கப் பார்க்கிற மத்யம பத பிரதிபாதித -உபாயத்யவசாயம் -ஆகிற -பிரஜ்ஞா அவஸ்தையை தாயார் என்றும்-

தாயாராவாள்‌ நாயகன் பக்கலிலே அதி மாத்ர ப்ராவண்யம்‌ பெண் பிள்ளைக்கு உண்டானாலும்‌ நாயகன் தானே வந்து பரிக்‌ரஹித்துக் கொண்டு போமதொழியப் படி கடந்து புறப்படுகை குல மர்யாதைக்குப்‌ போராதென்று அவளை நிஷேதித்து அவன் வரவு பார்த்திருக்குமவளாகையாலே, ஸம்பந்த ஜ்ஞாந ஸமநந்தரம்‌ ஸம்பந்தாநுரூபமான பரிமாற்றத்திலே த்வரை உண்டானாலும்‌, ஸ்வ ப்ரவ்ருத்தியில்‌ இழிகை நமஸ்ஸில்‌ சொன்ன பாரதந்த்ர்யத்துக்கு விருத்‌தமாகையாலே அத்தை நிவர்த்திக்க, அதில்‌ ஸாப்‌தமாகவும்‌, ஆர்த்தமாகவும்‌ சொல்லுகிற பகவதேகோபாயத்வத்தாலே ப்ராப்ய ஸித்‌தி, என்கிற அத்‌யவஸாய ஜ்ஞாநத்தைத்‌ தாயார்‌ என்றும்‌,

பலத்தில்- பதற்றம் ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு மகள் என்று பெயர்-அதாவது-தலை மகள் ஆவாள் –இயற்கையிலே புணர்ந்து நாயகனின் வைலஷண்யத்தில் ஈடு பட்டு – குல மரியாதைகளையும் பாராதே கிட்டி அல்லாது தரியேன் என்னும் பதற்றத்தை உடையவள் ஆகையாலே பிரதம மத்யம பதங்களால் அறுதி இடப் பட்ட சேஷியாய்-சரண்யன் ஆனவனுக்கு – சரம பத ப்ரோக்தமான -ஸ்வரூப ரூப குண விபூதிகளால் வந்த வைலஷண்யத்தை அனுசந்தித்து – தத் அனுபவ விளம்ப அஷமத்வத்தாலே-தத் ஏக உபாயத்வ அத்யாவசத்தையும் அதிக்ரமித்துக் கிட்டி அனுபவித்து அல்லது தரிக்க மாட்டாதபடி நடக்கிற பிராப்ய த்வரை ஆகிற பிரஜ்ஞா அவஸ்தைக்கு மகள் என்று பேர் இட்டு சொல்வது என்கை —

தலைமகளாவாள்‌, இயற்கையிலே புணர்ந்து நாயகன் வைலக்ஷண்யத்திலே ஈடுபட்டு, குல மர்யாதைகளையும்‌ பாராதே கிட்டியல்லது தரியேன்‌ என்னும்‌ பதற்றத்தை உடையாளொருத்தி யாகையாலே, நாராயண பதத்தாலே சொல்லப்பட்ட ஸேஷியாய்‌, ஸரண்யனானவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளால்‌ வந்த வைலக்ஷண்யத்தை அநுபவித்து அத்தால்‌ வந்த விளம்ப அக்ஷமத்வத்தாலே ததேகோபாயத்வாத்‌ யவஸாயத்தையும்‌ அதிக்ரமித்துக் கிட்டி, அநுபவித்து அநுபவ ஜநித ப்ரீதிகாரிதமான கைங்கர்யத்தை இப்போதே பெற வேணுமென்கிற த்வராஜ்ஞாநத்தைத்‌ தலைமகள்‌ என்றும்‌ சொல்லும்‌,

ஞான அவஸ்தைகள் என்னாமல் பிரஜ்ஞா அவஸ்தைகள் என்றது-திரிவித அவஸ்தையும் இவருக்கு சர்வ காலமும் உண்டு என்று தோற்றுகைக்காக–-பிரஜ்ஞா த்ரைகாலிகீ மதா – என்னக் கடவதிறே–பத த்ர்யார்த்த ஞானமும் திரு உள்ளத்தில் எப்போதும் உண்டாய் இறே இருப்பது .

““ஸ்ம்ருதிர் வ்யதீத விஷயா மதிராகாமி கோசரா ! புத்திஸ் தாத்காவிகீ ப்ரோக்தா ப்ரஜ்ஞா துரைகாலிகீ மதா” என்று அதீத-அநாகத-வர்த்தமாந-விஷய ஜ்ஞாநத்தை ஸ்ம்ருதிமதி-புத்‌தி, என்று சொல்லுகையாலே பூர்வமேவ உண்டாயிருக்கிற ஸம்பந்தத்தை விஷயமாக உடைத்தா யிருக்கிற ஜ்ஞாநத்தை ஸ்ம்ருதி என்றும்‌, மேல் வரக் கடவதான கைங்கர்யத்தில்‌ த்வராஜ்ஞாநத்தை மதி என்றும்‌, ஸம்பந்த, ஜ்ஞாந ஸமநந்தரம்‌ யாவத்‌ பல ப்ராப்தி நடக்கக் கடவதான உபாயத்வாத்‌ யவஸாயத்தை புத்தி என்றும்‌ சொல்ல வேண்டி யிருக்க, ப்ரஜ்ஞாவஸ்தைகள்‌ என்பானென்‌? என்னில்‌, மூன்றும்‌ ஏக காலிகமாக நடக்கையாலே ஓரொன்றினுடைய ப்ராதாந்யம்‌ தோற்றப்‌ பேசுகையாலே ப்ரஜ்ஞாவஸ்தைகள்‌ என்றது.-ஆக இப்படி ஸ்வ ஸ்வரூப-பரஸ்வரூப -ஸம்பந்த ஜ்ஞாநம்‌, ஈஸ்வரைகோபாயத்வத்தில்‌ வ்யவஸாயம்‌, பலமான கைங்கர்யத்தில்‌ த்வரை இவையாகிற ப்ரஜ்ஞாவஸ்தைகளுக்குத்‌ தோழி தாயார்‌ மகள்‌ என்று சொல்லுகிறது என்கிறார்‌-

இவ் அவஸ்தைகள் மூன்றும் இவர் பேச்சிலே தோன்றுமோ என்னும் அபேஷையிலே –-தோழி தாய் மகள் பேச்சான திரு வாய் மொழிகளிலே இவை தெரியும் என்னும் அத்தை-ஸூக்ரஹமாக வரைந்து அருளிச் செய்கிறார் மேல்–இனி மேல்‌ மூன்று தஸையின்‌ பேச்சினுடைய ப்ரகாரங்களையும்‌ அவ்வோ தஸைகளில்‌ திருவாய்மொழி இன்னதென்னுமத்தையும்‌ அருளிச் செய்கிறார்‌-

ஸகி, வெறி விலக்கி ஆசை யறுத்து அறத்தொடு நின்ற மூன்றில்‌ அநந்யார்ஹத்வமும்‌, வாடி மெலிந்து பித்தேறி ஏறப் பேசிக்‌ கட்டிழந்தகன்று சார்வதே வலித்தமை ஸாதநமாமோ என்று மாதா அஞ்சி முறைப்பட்டு முறை யிடுகிற ஏழில்‌ அத்‌யவஸாயமும்‌, புத்ரி பலகால்‌ ஆள் விட்டு ஆற்றாமை சொல்லிக்‌ கவராதவை விட்டு, இரைக்க மடலெடுத்துக்‌ கண் புதையப்‌ போக்கற்று, உருதெஞ்சுள்ளெழக்‌ கூடுதாள்தேடித்‌ தாழ்த்ததுக்கு ஊடி, உசாத் துணேயற்றுச்‌ சூழவும்‌ பகைமுகம்‌ செய்யத் தடை நில்லாதே புயக்கற்று மாலையும்‌ காலையும்‌ பூசலிடுகிற பதினேழில்‌ த்வரையும்‌ தெரியும்‌.–சூரணை -134–

சஹி வெறி விலக்கி ஆசை அறுத்து அறத்தொடு நின்ற மூன்றில்-(தீர்ப்பாரை யாமினி- துவளில் மா மணி மாடம் – கரு மாணிக்க மலை ) அனந்யார்ஹத்வம்-சம்பந்த ஞானம் தெரியும்–வெறி விலக்கி-
அதாவது-எம்பெருமானோடே இயற்கையில் புணர்ந்து பிரிந்து ஆற்றாமையால் – மோகங்தையாகக் கிடக்கிற பிராட்டி தசையைக் கண்டு தாய் மார் கலங்கி – இவள் நோயையும் அதுக்கு நிதானத்தையும் -பரிகாரத்தையும் அறியாதே – பிரதிபன்ன பாஷிணியாய் இருப்பாள் ஒரு கட்டுவிச்சி சொல்லைக் கொண்டு – இந்த நோய்க்கு பரிகாரமாகக் கருதி –வெறியாடல் உற –இவள் பிரகிருதி அறியும் உயிர்த் தோழி அநந்யார்ஹையான இவளுக்கு அந்ய ஸ்பர்சம் சஹியாது- நாம் இதை விலக்காது ஒழியில் -இவளை இழக்க வரும் என்று பார்த்து – அப்போது நிரூபித்து அறிந்தாளாக இவள் நோவையும் -அதுக்கு நிதானத்தையும் அவர்களுக்கு சொல்லி – தத் உசித பரிகாரங்களையும் விதித்து- அங்கோர் கள்ளும் இறைச்சியும் தூவேல்மின் –என்றும் – உணங்கல் கெட கழுதை உதட்டாட்டம் கண்டு என் பயன் -இத்யாதிகளால் வெறியை விலக்கின பாசுரத்தாலே–பிராப்ய த்வரை தசையில் அவசாதம் அடியாக – உபாயத்வ அத்யவாசம் கலங்கி–தர்மேன பாபம் அபநுததி -தைத்ரியம் -– ( பலத்தில் விருப்பம் இல்லாமல் கர்மங்களை செய்வதனால் பாவத்தைப் போக்கடிக்கிறான் )என்கிறபடியே – தர்ம அனுஷ்டானத்திலே துக்க ஹேதுவை போக்கலாம் என்பார் வார்த்தையைக் கொண்டு – இவ் அவசாதத்தை பரிஹரிக்கலாமோ என்று தேவதாந்தர்யாமி பரமான கர்ம கபாலங்களிலே பிரவர்திக்கத் தேட – அவ்வளவிலே சம்பந்த ஞானம் ஆனது இவ் அவசதம் கர்ம பலம் அன்றிக்கே ஆகஸ்மிக பகவத் கடாஷம் பலமாக – அசாதாராண விக்ரக விசிஷ்டனாவனை அனுபவிக்கையால் உண்டான பிராவண்யம் கார்யம் ஆகையாலே இதுக்கு அது பரிஹாரம் அன்று – அநந்யார்ஹ சேஷத்வதுக்கு விருத்தம் ஆகையால் ஸ்வரூப நாசமுமாம் — அந்ய ஸ்பர்சத்தை நிவர்ப்பித்த –தீர்ப்பாரை யாமினியும் –

வெறி விலக்காவது – இயற்கையிலே புணர்ந்து பிரிந்த தலைமகள்‌ மோஹங்‌கதையாய்க்‌ கிடக்க, அவளுடைய பந்துக்கள்‌ இது க்ஷுத்‌ர தேவதைகளால் வந்ததோ என்று ஸங்கித்து இத்தை பரிஹரிப்பதாக வெறியாடலுற அவ்வளவில்‌ இவள்‌-ப்ரக்ருதியறிந்த உயிர்த்தோழியானவள்‌ “இது க்ஷுத்‌ர தேவதைகளால்‌ வந்ததன்று; இது ஒரு விஷயத்தில்‌ ஸங்கத்தாலே வந்தது” என்று அத்தை விலக்கிஅதுக்கு யோக்‌யமான பரிஹாரத்தைச்‌ சொல்லுகை,-இத்தால்‌ ஸம்ஸாரகாந்தாரத்திலே ஸப்‌தாதிகளாகிற போக்‌யோபஜீவதத்துக்காக ஸ்வர்க்க -நரக-கர்ப்பங்களாகிற போக ஸ்தலங்களிலே ஸஞ்சரிக்கிறவனுமாய்‌, பாரதந்ர்த்ர்ய- போக்யதா-அநந்யார்ஹத்வங்களாலே ஸ்த்ரீத்வத்தை உடையனான ஆத்மாவை அவ் விடத்திலே ஆத்ம ம்ருக யாத்ரா வ்யாஜத்தாலே ஸஞ்சரிக்கிற ஈஸ்வரன்‌ “ஏவம்‌ ஸம்ஸ்ருதி சக்ரஸ்தே, ப்‌ராம்யமாணே ஸ்வ கர்மபி,: | ஜீவே துக்கா குலே விஷ்ணோ: க்ருபா காப்யுபஜாயதே?” என்றும்‌, ““நாஸெள புருஷ காரேண”’ இத்யாதியிற்படியே கடகரும்‌, ஜ்ஞாபகருமன்றியிலே உபயருடையவும்‌ தர்ம ப்ரயுக்தமாக கடாக்ஷிக்க, அத்தாலே இத்தலைக்கு முண்டான க்ரம ப்ராப்தி பற்றாத அதி ப்ராவண்யத்‌தாலே வந்த கலக்கத்தாலே ததேகோபாயத்வாத்‌யவஸாயம்‌ குலைந்து ‘இந்த ப்ராவண்ய ஹேது எது? ப்ராவண்ய கார்யமான கலக்கத்தை பரிஹரிக்கலாவது எத்தாலே?’ என்று தேவதாந்தர்யாமி பரமான கர்ம கலாபங்களாலே பரிஹரிக்கலாமோ என்று ஸங்கிக்க, ஸம்பந்த ஜ்ஞாநம்‌, ‘அநத்யார்ஹமான இவ்வஸ்துவிலுண்டான இந்த ப்ராவண்யம்‌ நிர்ஹேதுக க்ருபா கார்யமாகையாலே ததேகோபாயத்வத்தாலே பரிஹரிக்கலா மத்தனை யல்லது தத்‌ வ்யதிரிக்தங்கள்‌ பரிஹாரமாகாத வளவேயன்றிக்கே அநத்யார்ஹ ஸேஷத்வாதி ஸம்பந்தங்களுக்கு விருத்‌தமாகையாலே ஸ்வரூபத்துக்கு நாஸகமாகையாலே இவை நிவர்த்யங்கள்‌” என்று அந்ய ஸ்பர்ஸத்தை நிவர்த்திப்பிக்கிற வெறி விலக்காகிற *தீர்ப்பாரை யாமினியிலும்‌.

இது திருவாய்மொழி யால சொல்லிற்று யாயிற்று –அஞ்ஞான தசையிலும்-தேவதாந்த்ர ஸ்பர்சமும்-ததீய ஸ்பர்சமும் விநாச ஹேதுவாய் அத்தசையிலும் பகவத் ஸ்பர்சமும் பாகவத ஸ்பர்சமும் சத்தா தாரகமாம் படி இவருடைய வைஷ்ணத்வம் அதிசயித்தபடி சொல்லுகிறது –

ஆசை அறுத்து –அதாவது-திரு துலைவில்லி மங்கலத்திலே அதி பிரவணையாய் இருக்கிற பெண் பிள்ளையை மீட்கப் பார்க்கிற தாய்மாரைக் குறித்து தோழி யானவள்- இவளை நீர் இனி அன்னைமீர் உமக்கு ஆசை இல்லை-என்று நீங்களே அன்றோ திரு துலைவில்லி மங்கலத்தில் கொண்டு புக்கு இப் பிராவண்யத்தை விளைத்தீ கோள் – இனி பிராப்த விஷய பிரவணையான இவளை உங்களால் மீட்கப் போகாது – ஆன பின்பு- இவள் பக்கல் உங்களுக்கு ஆசை அற அமையும் என்ற பாசுரத்தாலே –அர்ச்சாவதார சுலபமான விஷயமே உபாயம் ஆகையாலே எப்போதும் இதிலே நோக்காய் இருக்கும் அத்யாவசியம் – அவ் விஷய வைலஷண்யத்தை விஷயீகரித்த பிராவண்ய கார்யமான த்வரை
உபாயத்திலே அன்வயிக்கிறதோ என்னும் அதி சங்கையால் – அத்தை நிவர்ப்பிக்கத் தேட –
அவ்வளவிலே சம்பந்த ஞானம் சேஷ வஸ்து கதமான இப் பிராவண்யம் சேஷி உகப்புக்கு
விஷயமாம் அல்லது உபாய கோடியில் அன்யவியாது — பிராப்த விஷய வைலஷண்யம் அதீனமாக வந்தது ஆகையாலே நிவர்த்திக்கவும் போகாது — இத்தை ஸ்வ நிவர்த்யமாக நினைத்து இருக்கிற ஸ்வாதந்த்ர்யம் அத்யந்த பாரதந்த்ரம் ஆகிற ஸ்வரூபத்துக்கு விருத்தம் ஆகையாலே த்யாஜ்யம் என்று ஸ்வ ஸ்பர்சத்தை நிவர்ப்பித்த துவளில் மா மணியும் —

(ஆசை யறுத்து)திருத் தொலை வில்லி மங்கலத்திலே அதி ப்ரவணையாயிருக்கிற இவளை மீட்கப் பார்க்கிற தாய்மாரைக் குறித்துத்‌ தோழியானவள்‌ ‘நீங்களே யன்றோ திருத் தொலை வில்லி மங்கலத்திலே கொடு புக்கு அதி ப்ராவண்யத்தை விளைத்திகோள்‌; இனி உங்களால்‌ ப்ராப்த விஷய ப்ரவணையான இவளை மீட்கப் போகாது; ஆன பின்பு இவள் பக்கல்‌ நீங்கள்‌ ஆசை யறுங்கோள்‌’ என்று ஆசை யறுக்கிறது.-இத்தால்‌ உபாயாத்‌யவஸாயமானது உபேய வைலக்ஷண்யத்தை முன்னிட்டுக் கொண்டல்லது இராமையாலே அந்த உபேய வைலக்ஷண்யத்தை விஷயீகரித்த ப்ராவண்ய கார்யமான த்வரை உபாயத்திலே அந்வயிக்கிறதோ என்னும்‌ அதி ஸங்கையாலே அந்த ப்ராவண்யத்தை வ்யவஸாயம்‌ நிவர்த்திப்பிக்கத் தேட இந்த ப்ராவண்யம்‌ ஸேஷ வஸ்துகதமாகையாலே ஸேஷியினுடைய ப்ரியோபயோகியாமத்தனை யல்லது உபாயத்தில்‌ அந்வயியாதென்கிற ஸங்கையை நிவர்த்திப்பிக்கிறது-ஸம்பந்த ஜ்ஞாநம்‌.–இத்தால்‌ ப்ராப்த விஷய வைலக்ஷண்யாதீநமாக உண்டான அந்த ப்ராவண்யத்தை, “இது ஸ்வரூபாதிரேகியாய்க் கொண்டு ஸாதநத்திலே அந்வயிக்குமாகில்‌ “தத் தஸ்ய ஸத்‌ருஸம்‌ பவேத்‌”” (ரா.ஸு.. 39 -30) என்றிருக்கிற ஸ்வரூபத்துக்கு விருத்‌தமாம்‌; ஆகையாலே இது நிவர்த்யம்‌” என்று இந்த ப்ராவண்யம்‌ ஸ்வ நிவர்த்யம்‌ என்று தடுக்க, இவ்வுபாயாத்‌யவஸாயத்தில்‌ ஸ்வாதீநதாப்ரதிபத்தியை பரேச்சாநுகுண விநியோகார்‌ஹதா ரூபமான ஸேஷத்வ ஜ்ஞாந மானது, ஸேஷ வஸ்துகதமாய்‌, ஸேஷியினுடைய வைலக்ஷண்யாதீநமான இது ஸேஷிக்கு அதிஸயகரமாகையாலே ஸ்வரூபாதிரேகியன்று; தாரகமாகையாலே ஸ்வ நிவர்த்யமுமன்று. இத்தை ஸ்வ நிவர்த்யமாக நினைத்திருக்கையாகிற ஸ்வாதந்த்ர்யம்‌ கீழ்ச் சொன்ன ஸ்வரூபத்தோடு விருத்‌தமாகையாலே த்யாஜ்யம்‌ என்று ஸ்வ ஸ்பர்ஸத்தை நிவர்த்திப்பிக்கிற *துவளில்‌ மா மணியிலும்‌.

இது திருவாய் மொழிக்கு கீழ் எல்லாம் -சர்வேஸ்வரனைப் பேசினார் -இத்திரு வாய் மொழியிலே தம்மை பேசுகிறார் –-யதோ வாசோ நிவர்த்தந்தே-என்கிற விஷயத்தை விளாக்குலை கொண்டு -பேசுகைக்கு தாம் அல்லது இல்லாதா போலே – இவ்விஷயத்தில் தம் விஷயத்தை பேசுகைக்கும் தாம் அல்லது இல்லை யாயிற்று –இனி இவளை மீட்க முடியாது -நீங்களும் இவள் வழியே ஒழுக பாருங்கோள் -என்று தோழி வார்த்தையாகச் செல்லுகிறது – இத்தால் சேஷத்வம் சத்தா ப்ரயுக்தமானவோபாதி ப்ராவண்யமும் சத்தா ப்ரயுக்தம் என்னும் இடத்தை நிர்வஹிக்கிற தாயிற்று –

அறத்தொடு நின்ற-அதாவது-தலைமகள் பருவத்தை கண்ட பந்து ஜனங்கள் ஸ்வயம் வரத்துக்கு ராஜ லோகத்தைத் திரட்டுகைக்காக மண முரசு அறைவிக்க–திரு புலியூரிலே நாயனாரோடே இவளுக்கு கலவி உண்டாய்த்து என்னும் இடத்தை இவள் வடிவிலும் பேச்சிலும் உண்டான வேறுபாட்டாலே அறிந்த உயிர் தோழி யானவள் – இத் த்வனி பெண் பிள்ளை செவியில் படுமாகில்-மானிடவர்க்கு என்று பேச்சு படில் வாழாத தன்மையளாய் இருக்கிற இவளை கிடையாது — ஏற்க்கவே பரிக்ரஹிக்க வேணும் என்று இவள் பந்து ஜனங்களைக் குறித்து இவளுக்கு திருப் புலியூரில் நாயனாரோடே சம்ஸ்லேஷம் ப்ரவ்ருத்தம் ஆயிற்று போலே இரா நின்றது – தத் குண சேஷ்டிதங்களையே வாய் புலற்றா நின்றாள் –ஆன பின்பு நீங்கள் செய்கிறது தர்மம் அல்ல என்ன– ஆகில் இவளுக்கு தக்க அவயவ சோபை ஆபரண சோபை முதலான நாயக லஷணங்கள் அவனுக்கு உண்டோ என்ன – அவை எல்லாம் குறை இல்லை –அவை ஒன்றும் இல்லை யாகிலும் -இவள் அங்கே அநந்யார்ஹை ஆனமைக்கு அடையாளம் ஸூ வ்யக்தமாக காணலாம் –ஆன பின்பு இத்தை தவிறுங்கோள் என்று மத்யஸ்தையாய் நின்று தர்மம் சொல்லுகிறாளாய்-அந்த மணத்தை விலக்கின பாசுரத்தாலே பிராப்ய த்வரையின் உடைய பரிபாகத்தை உபாயத்வ அத்யவசாய தசையில் நின்று தரிசித்த அநந்தரம் -அது பகவத் அநந்யார்ஹை ஆனமை அறியாதே – அந்ய விஷயத்துக்கும் அர்ஹமோ என்று நிரூபிக்க – அவ்வளவிலே சம்பந்த ஞானம் -இதுக்கு அந்ய சேஷத்வ பிரசங்கமும் ஸ்வரூப நாசகம் –சேஷியானவனுடைய போக்யதையாலும் அது தன்னை ஒழியவும் நிருபாதிக சேஷத்வத்தாலும் இவ் வஸ்து அவனுக்கு சேஷம் என்று அறுதி இட்ட –கரு மாணிக்க மலை-8-9-யுமாகிற தோழிப் பேச்சான இம் மூன்று திரு வாய் மொழியிலும் அனந்யார்ஹ சேஷத்வம் தோன்றும் என்கை

(அறத்தொடு நின்ற) அறத்தொடு நிற்கையாவது – தலைமகளுடைய பருவத்தையும்‌, வடிவில்‌ வேறுபாட்டையும்‌ கண்ட பந்துக்கள்‌ ஸ்வயம்வரத்துக்கு ராஜ லோகத்தைத்‌ திரட்டுகைக்கு மணமும்‌ செறிவிக்க, இவளுடைய உயிர்த் தோழியானவள்‌ கேட்டு, “இது இவள் செவிப்படில்‌ இவளைக் கிடையாது இத்தை ஏற்கவே பரிஹரிக்க வேணும்‌” என்று இவளுடைய பந்து ஜநங்களைப் பார்த்து “இவளுக்குத்‌ திருப்புலியூர் நாயனாரோடே ஸங்கம்‌ உண்டு போலே இரா நின்றது; ஆன பின்பு நீங்கள்‌ செய்கிறது தர்மமல்ல” என்ன, “ஆனால்‌ இவளுக்குத் தக்க அவயவ ஸோபை தொடக்கமான நாயக லக்ஷணங்கள்‌ அவனுக்குண்டோ” என்ன, ‘அவை எல்லாத்தாலும்‌ ஒரு குறையில்லை. அவையொன்று மில்லையே யாகிலும்‌ இவள்‌ அவனுக்கு அநந்யார்ஹையானாள்‌ என்னுமிடத்துக்கு அடையாளம்‌ ஸுவ்யக்தமாகக்‌ காணலாம்‌. ஆன பின்பு நீங்கள்‌ செய்கிற விது அதர்மம்‌” என்று மத்‌யஸ்தையாய்க் கொண்டு தர்மம்‌ சொல்லுகிறாளாய்‌ அந்த மணத்தை விலக்குகை.
ஆக இத்தால்‌ ப்ராப்ய த்வரையினுடைய பரிபாகத்தை அநுஸந்தித்த உபாயாத்‌யவஸாயம்‌, “இந்த த்வரை அப்ராப்த விஷயாவலம்பியோ?” என்று அதி ஸங்கை பண்ண, ஸம்பந்த,ஜ்ஞாநம்‌, “இது ப்ராப்தனான ஸேஷி விஷயீகாரத்தாலே உண்டானது, இதுக்கு அப்ராப்த விஷய ஸங்கையும்‌ ஸ்வரூப நாஸகரம்‌; இனி அந்த ஸேஷியினுடைய போக்‌யதையாலும்‌, அந்த போக்‌யதை ஒழியவே நிருபாதிக ஸேஷித்வத்தாலும்‌ இவ் வஸ்து அவனுக்கு அநந்யார்ஹம்‌” என்று அந்த அதி ஸங்கையை நிவர்த்திப்பிக்கிற *கரு மாணிக்க மலையிலும்‌, 

ப்ரீதியில் அந்யாபதேசம் உள்ளத்து இத்திரு வாய் மொழியே -என்று ஆழ்வான் நிர்வஹிக்கும்–அறத்தோடு நின்று அவர்கள் செய்கிறவற்றை -நீங்கள் கேட்க்கிற அளவுள்ள – இவை எல்லாம் குறைவற்ற விஷயம் -இவை ஒன்றுமே இல்லையே யாகிலும் இவள் தான் அங்கே அநன்யார்ஹை ஆனாள்-நீங்கள் செய்கிற இவற்றை தவிருங்கோள் -என்று -விலக்குகிற தோழி வார்த்தையாய் இருக்கிறது –-மண விலக்கு-என்பதோர் கிளவித் துறை இது -திருமந்த்ரத்திலே தனக்கும் பிறருக்குமாய் இருக்கும் இருப்பை கழித்து அநன்யார்ஹா சேஷத்வத்தை சொல்லக் கடவது இறே -அது இங்குச் சொல்லுகிறதுகீழில் திருவாய்மொழியில் அநந்யார்ஹ சேஷத்வம் சொல்லிற்று –-இதில் அந்நிய சேஷத்வமும் ஸ்வ ஸ்வாதந்தர்யமும் அபுருஷார்த்தம் என்கிறது-ஒரு கன்யகை யானால் ஒருவருக்கேயாய் இருக்கையும் -ஒருவனுக்கே யானால் -பிறர்க்கு உரிய அல்லளாய் இருக்கையும் இறே ஸ்வரூபம் –

ஆக இத்தால்-வெறி விலக்கியும் ,-ஆசை அறுத்தும் , அறத்தோடு நின்றும் – இவ் வஸ்து -அந்ய சேஷமும் அன்று –ஸ்வ சேஷமும் அன்று -பகவத் ஏக சேஷம் என்று சொன்ன இம் மூன்று திரு வாய் மொழியும் -சம்பந்த ஜ்ஞான தசையில் பேச்சு என்னும் இடம் சம்பிரதி பன்னம் என்பது ஆயிற்று —

ஆகத்‌ தோழிப் பேச்சான மூன்று திருவாய்மொழியிலும்‌ இவ்‌ வாத்மா தர்மி தர்ம விபாகமற அந்ய ஸேஷமுமன்று; ஸ்வஸேஷமுமன்று;பகவத் அநந்யார்ஹ ஸேஷமாயிருக்குமென்று ஸம்பந்த ஜ்ஞாந தஸையில்‌ பேச்சாயிருக்கிறது.

வாடி மெலிந்து பித்தேறி ஏறப் பேசிக் கட்டு இழந்து அகன்று சார்வதே வலித்தமை
ஸாதனம் ஆமோ என்று மாதா அஞ்சி முறைப்பாட்டு முறை இடுகிற ஏழில் அத்யாசசாயமும் –
-அதாவது
வாடிஆடி ஆடி– -யிலே– வாடி வாடும்-2-4-1– -என்று அடியார்கள் குழாங்களை உடன் கூடப் பெறாமையாலே வந்த கிலேசத்தால் ஆஸ்ரயத்தை இழந்த தளிர் போல் வாடி–
மெலிந்துபாலனாய் ஏழ் உலகிலே- கண்ணன் கழல் துழாய் பென் செய் பூண் மென்முலைக்கு என்று மெலியும்-4-2-1-என்று கை கழிந்தவற்றை ஆசைப்பட்டு மெலிந்து-
பித்தேறி – மண்ணை இருந்து துழாவி- யிலே –என் பெண் கொடி ஏறிய பித்தே-4-4-1- -என்னும்படி
சத்ருச பதார்த்தங்களையும் -சம்பந்தி பதார்த்தங்களையும் அவனாக நினைத்து கிட்டும் படி பித்தேறி –
ஏறப்பேசி-கடல் ஞாலத்திலே –ஈசன் வந்து ஏறக் கொலோ -5-6-1–என்று ஆற்றமையாலே அனுகரிக்கிரமை அறியாதே -ஈஸ்வரன் ஆவேசித்தானோ என்னும் படி அவனாகவே பேசி —
கட்டு அழிந்து-மாலுக்கு வையத்திலே –கற்புடை யாட்டி இழந்தது கட்டே-6-6-1- -என்னும்படி
பகவத் அலாப கிலேசத்தாலே கட்டடங்க இழந்து —
அகன்று –-உண்ணும் சோற்றிலே–இன்று எனக்கு உதவாது அகன்று-6-7-1- -என்று தன்னைப் பிரிந்து
கிலேசப் படுகிற இவ் ஆபத்து தசையிலே எனக்கு உதவாதே போனாள் என்னும் படி அகன்று —
சார்வதே வலித்தமை-கங்குலும் பகலிலே –சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த தையல்-7-2-1–என்னும் படி அவனைக் கிட்டி அவன் சந்நிதியில் முடிய வேணும் என்று வியவசிதை ஆனமை
உபாசகருக்கு பரபக்தி தசையில் உண்டாகும் க்லானி கார்ச்யாதிகள் போல சாதனத்தில் மூதலிடுமோ என்று மாதாவானவள் அஞ்சி – அவன் தன்னையும் வினவ வந்தவர்களையும் குறித்து வாடா நின்றாள்- மெலியா நின்றாள் -என்றார் போலே முறைப் பட்டு –-முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே–திருவிருத்தம் -62- என்று அத்தலையில் கிருபை ஒழிய இவள் பக்கல் உள்ளவை ஒன்றும் ஹேது இல்லை .. ஆன பின்பு இவளை இப்படி துடிக்க விட்டு இருக்கை உம்முடைய கிருபைக்கும் ரஷகத்வதுக்கும் போருமோ என்று கூப்பிடும் ஏழு திரு வாய் மொழிகளிலும் – உபாயத்வ அத்யவாசம் தோன்றும் என்கை-இத்தால் தாய் பேச்சான ஏழு திரு வாய் மொழியும் உபாயத்வ அத்யாவசாய தசையில் பேச்சு என்னும் இடம் ஸ்பஷ்டம் என்ற படி —

(வாடி மெலிந்து என்று தொடங்கி) – (எழில்‌ அத்‌யவஸாயமும்‌) *ஆடியாடியில்‌ “வாடி வாடுமிவ்வாணுதல்‌”’ (திருவா. 2 – 4 – 1) என்று ஆஸ்ரயத்தை ஓழிந்த தளிர் போலே வாடா நின்றாளென்றும்‌, *பாலனாயேழுலகில்‌ ”பொன் செய்பூண் மென்முலைக்கென்று மெலியும்‌” (திருவா. 4 – 2 – 10) என்று பகவத்‌ போக்யதையை அநுபவிக்க வேணுமென்று மெலியா நின்றாளென்றும்‌, *மண்ணை யிருந்து துழாவியில்‌ ““என் பெண்‌ கொடி யேறிய பித்தே”’ (திருவா. 4 – 3 – 7) என்று என் பெண் பிள்ளை அவனோடு ஸத்‌ருஸ பதார்த்தங்களையும்‌ ஸம்பந்தி பதார்த்தங்களையும்‌ அவனாகச்‌ சொல்லும்படி பிச்சேறினாள்‌ என்றும்‌, *கடல் ஞாலத்திலே ““ஈசன் வந்தேறக்கொலோ”’ (திருவா. 5-0 1) என்று ஆற்றாமையாலே அநுகரிக்கிறாள்‌ என்று அறிய மாட்டாதே ஸர்வேஸ்வரன்‌ இவள் பக்கலிலே ஆவேஸித்தாப் போலே பேசா நின்றாள்‌ என்றும்‌, *மாலுக்கு வையத்தில்‌ “கற்புடை யாட்டி இழந்தது கட்டே”’ (திருவா. 6 – 6 – 10) என்று அறிவுடையாளான இவள்‌ ஸர்வேஸ்வரனை ஆசைப்பட்டு ஸர்வத்தையும்‌ இழந்தாள்‌ என்றும்‌, உண்ணும் சோற்றிலே ““எனக்குதவாதகன்ற இளமான்‌” (திருவா. 6 – 7 – 6) என்று தன்னைப் பிரிந்து க்லேஸப்படுகிற இவ்வாபத்‌ தஸையில்‌ எனக்குதவாதே அகன்றாள்‌ என்றும்‌, *கங்குலும்‌ பகலில்‌ ‘“சந்தித்துன்சரணம்‌ சார்வதே வலித்த தையல்‌” (திருவா. 7 – 2 – 5) என்று உன்‌ திருவடிகளைக் கிட்டி உன் முன்னே முடிய வேணுமென்று வ்யவஸிதையானாள என்றும்‌ சொல்லுகிற இவளுடைய விரஹ கார்யத்தையும்‌, அந்த விரஹக்‌லேஸத்தாலே அடைவு கெடப் பேசுகையும்‌, பெற்றல்லது தரியாத அதிமாத்ர ப்ராவண்யமும்‌, உபாஸகனுக்கும்‌ உபாயாநுஷ்டாந துஷ்கரதையாலும்‌, பக்தி பாரவஸ்யத்தாலும்‌ ப்ராப்த வைலக்ஷண்யாநுஸந்தாநத்தாலும்‌ அவை உண்டாகுமாகையாலே இவளுக்கும்‌ இவை ஸாதநத்திலே அந்வயிக்கில்‌ ததேகோபாயத்வத்துக்கு விருத்‌தமா மென்று மாதா அஞ்சி, “முறையோ அரவணை மேல்‌ பள்ளி கொண்ட முகில்வண்ணனே”’ (திருவிரு. 60) என்று தேவர் க்ருபை யொழிய இவள்பக்கல்‌ உள்ளவை யோன்றும்‌ ஹேது வல்ல; ஆனபின்பு இவளை இப்படித்‌ துடிக்கவிட்டிருக்கை தேவரீருடைய க்ருபைக்கும்‌, ரக்ஷகத்வத்துக்கும்‌ போருமோ என்று சொல்லிக்‌ கூப்பிடுகிற தாய்ப் பேச்சான. ஏழு திருவாய்மொழிகளிலும்‌ உடாயாத்‌யவஸாயமான தஸையில்‌ பேச்சுத் தோன்றும்‌.

ஆடியாடி யகம் கரைந்து இசை
பாடிப்பாடி கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா வென்று
வாடிவாடும் இவ்வாணுதலே –2-4-1-சர்வ தேசத்திலும் அவன் வரவை ஆராய்ந்து பலகாலும் பார்த்து -எங்கும் தோற்ற வல்ல நரஸிம்ஹ ரூபத்தை யுடையவன் என்று -அவ்வளவிலும் வரக் காணாமையாலே வாட்டத்தின் மேல் வாட்டமாம் படி தளரா நிற்கும் –

என் செய்கேன்? என்னுடைப் பேதை,என் கோமளம்,
என் சொல்லும் என் வசமும் அல்லள்; நங்கைமீர்!
மின்செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய்
பொன்செய் பூண் மென்முலைக்கு என்று மெலியுமே
.–4-2-10—விரஹத்தாலே துவண்ட முலைக்கு வேணும் என்று சொல்ல நினைத்து முடியச் சொல்ல மாட்டாதே மெலியா நின்றாள்-மணி மிகு மார்பினில் முல்லை போது என் வன முலை கமழ்வித்து -என்கிற படியே ஸ்ரீ கௌஸ்துபம் தன் முலையிலே அழுந்த அணைக்க ஆயிற்று இவள் ஆசைப்படுகிறது –மெலியுமே.–இவள் மெலியா நின்றாள் -நான் என் செய்கேன் -இவளுடைய அவஸ்தை இருக்கிற படியால் இவளைக் கிடைக்க மாட்டாதாய் இரா நின்றது-நான் எங்கனே ஜீவிக்கக் கட வேன்-என்கிறாள் –

கூத்தர் குடம் எடுத்து ஆடில்,‘கோவிந்தனாம்’எனா ஓடும்;
வாய்த்த குழல் ஓசை கேட்கில், ‘மாயவன்’ என்றுமை யாக்கும்;
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில், ‘அவன் உண்ட வெண்ணெய் ஈது’ என்னும்;
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு என் பெண் கொடி ஏறிய பித்தே!–4-4-6—தாய் உதவாத தனிமையிலே பூதனை தாய் வடிவு கொண்டு நலிய புக அவளை முடித்து தன்னை அபகரித்த உபகாரத்துக்கு தோற்றாயிற்று இவள் பிச்சேறிற்று-பூத் தரு புணர்ச்சி களிறு தரு புணர்ச்சி ஆறு தரு புணர்ச்சி –
அசிந்திதமாக கையிலே பூவைக் கொடுத்தல் -ஆணையின் கையிலே அகப்பட்டவர்களை மீட்டல் -ஆற்றிலே அமிழா நிற்க எடுத்தல்-செய்தவர்களுக்கு அவர்கள் அநன்யார்ஹைகள் -தம் தாமை உண்டாக்கினவர்களுக்கு இறே அங்கு-அவன் தன்னை உண்டாக்கிக் தந்தத்துக்கு தன்னை அநந்யார்ஹம் ஆக்கினாள்-என் பெண் கொடி-நிருபாதிகமான ஸ்த்ரீத்வத்தை உடைய என் மகள் ஏறிய பிச்சு 

கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும் கடல்ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல்ஞாலம் கொண்டேனும் யானே என்னும் கடல்ஞாலம் கீண்டேனும் யானே என்னும்
கடல்ஞாலம் உண்டேனும் யானே என்னும் கடல்ஞாலத் தீசன் வந்து ஏறக்கொலோ?
கடல்ஞாலத் தீர்க்கிவை என் சொல்லுகேன்? கடல்ஞாலத்து என்மகள் கற்கின்றவே.–5-6-1-சர்வ ஸ்ரஷ்டாவாய் -சகல அந்தர்யாமியாய் -சர்வ ஆபத் சகனானவன் வந்து ஆவேசித்தானோ -அறிகிறிலேன்-

பொற்பமை நீண்முடிப் பூந்தண் துழாயற்கு
மற்பொரு தோளுடை மாயப் பிரானுக்கு
நிற்பன பல்லுருவாய் நிற்கு மாயற்கு என்
கற்புடை யாட்டி இழந்தது கட்டே
.–6-6-10-அறிவுடையாளாய் இருக்கிற என் பெண் பிள்ளை இழந்தது ஸ்த்ரீத்வ மரியாதை-கட்டு -மரியாதை -கடடடஙக என்றுமாம் 

இன்று எனக்கு உதவாது அகன்ற இளமான் இனிப்போய்த்
தென்திசைத் தலத மனைய திருக்கோ ளூர்க்கே
சென்று தன் திருமால் திருக்கண்ணும் செவ்வாயும் கண்டு
நின்று நின்று நையும் நெடுங்கண்கள் பனிமல்கவே.–6-7-6—தன்னைப் பிரிந்து நோவு படுகிற இத் தசையிலே துணை இன்றிக்கே இருக்கிற எனக்கு உதவாதே கை கழியப் போன -தன்னைப் பிரிந்து நோவு படும் என்று உதவுகைக்கு அன்றோ தன்னைப் பெற்றது -இத் தசைக்கு உதவாள் ஆகில் இனி எற்றைக்கு உதவ இருக்கிறாள் –இமாமவஸ்தா மா பன்னோ நேஹபஸ்யாமி ராகவம்இளமான்-உதவப் பெற்றிலோம் -என்று அனுதபிக்கவும் அறியாத பருவம்-

சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும் ‘திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;
வந்திக்கும் ஆங்கே மழைக் கணீர் மல்க ‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
‘அந்திப்போ தவுணன் உடலி டந்தானே! அலைகடல் கடைந்த ஆர் அமுதே!
சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல் செய் தானே!–7-2-5-–தெளிவுடைய சிறுக்கனுக்கு உன்னை அழிய மாறி உதவினாய -ப்ரயோஜனாந்தர பரருக்கு உடம்பு நோவக் கடல் கடைந்தாய் -உன்னை அல்லாது அறியாத இவளை அறிவு கெடுத்து வைத்தாய் -உன் திருவடிகளைக் கிட்டி முடிய வேணும் என்று துணிந்து இருக்கிற இப் பெண்ணை என்னுதல் -உன்னைக் கண்டு உன் எதிரே முடிய வேணும் என்று பிராணனை தரித்து இருக்கிற இவளை என்னுதல் –நசாஸ்ய மாதா நபிதா நஸான்ய –மானஸ அனுபவமே அன்றி உன்னைக் கிட்டி பாஹ்ய சம்ச்லேஷம் பண்ணினேன் ஆக வேணும் என்று துணிந்து இருக்கிற இவளை என்னுதல் –மையல் செய்தானே –உன்னைக் காட்டாதே இவளை மதி கெடுத்தவனே –

இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது
அறையோ என நின்றதிரும் கருங்கடல்  ஈங்கிவள் தன்
நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே
 – 62–தத் தஸ்ய சத்ரு சம்பவேத் -என்று இருக்கும் நிலை கழிந்து – கூப்பிட்டுப் பெற வேண்டும் தசையேயாய் வந்து விழுந்தது -செங்கற் சீரை கட்டி கூப்பிட்டாகிலும் பெற வேண்டும் படி யாயிற்று வடிவு அழகும் படுக்கையும்-நீ படுக்கை வாய்ப்பு அறிந்து கிடக்க இவள் பாடாற்ற மாட்டாத இது கிரமமோ–முறையோ என்று க்ரம ஹானியை ஸூசிப்பித்துக் கூப்பிட்ட படி–1-ஸ்ரம ஹரமாய்–2-தர்ச நீயமாய்–3-உதாரமான வடிவை யுடைய நீ-இவள் ஆர்த்தி தீர உபகரியாதது முறையோ என்று தோழியானவள் தன் ஆற்றாமையாலே தலைவனை யுட் கொண்டு விளித்து யுரைத்தாள் யாயிற்று–இத்தால் அநந்த க்லேச பாஜனமாய் கோரமான ஸம்ஸார ஸாஹரத்தினுடைய கோலாஹலத்தைக் கண்டு ஆழ்வார் ஈடுபாட்டுக்கு அஞ்சின ஸூஹ்ருத்துக்களால் இது பரிஹரிக்க அரிது என்று நினைத்து ஆழ்வாருடைய ஸ்வரூபம் ஈஸ்வரனுடைய கிருபா ஏக ரஷ்யம் ஆகையால் ரக்ஷகரான பெரிய பெருமாளைக் குறித்துத் தங்கள் ஆர்த்தி தோற்ற விண்ணப்பம் செய்த பாசுரமாய் இருக்கிறது —

புத்ரி பலகால் ஆள் விட்டு ஆற்றாமை சொல்லி கவராதமை விட்டு
இரைக்க மடல் எடுத்து -கண் புதைய போக்கற்று உரு நெஞ்சுள் எழக் கூடு நாள் தேடி
தாழ்த்ததுக்கு ஊடி உசாத் துணை அற்று சூழவும் பகை முகம் செய்ய தடை நில்லாதே
புயக்கற்று மாலையும் காலையும் பூசல் இடுகிற பதினேழில் த்வரை யும் தெரியும் —

அதாவது –-புத்ரி பல கால் ஆள் இட்டு தலைமகள் ஆனவள்- அஞ்சிறை மடநாராய்-1-4-
வைகல் பூம் கழி-6-1– பொன் உலகு ஆளீர்-6-8– எம் கானல்-9-7– என்கிற நாலு திரு வாய் மொழிகளிலும் க்ரம ப்ராப்தி பற்றாமல் தூது விட்டு —
ஆற்றாமை சொல்லி –-வாயும் திரை உகளிலே –2-1-ஆற்றாமை சொல்லி அழுவோமை –
என்று சகல பதார்த்தங்களும் பகவத் அலாபத்தாலே நோவு படுவதாக கருதி அவற்றை சம துக்கிகளாக கொண்டு அழுது-
கவராதவை விட்டு –-ஏறாளும் இறையோனில்-4-8– மாறாளன் கவராத மணிமாமை குறைவிலம்-என்று அவன் விரும்பாதவற்றை உபேஷித்து-
இரைக்க மடல் எடுத்து –மாசறு சோதியிலே-5-3- –நாடும் இரைக்கவே–நாம் மடலூர்த்தும் என்று ஜகத் ஷோபம் பிறக்கும் படி மடலூர்வன் என்று
கண் புதைக்கப் போக்கற்று--ஊர் எல்லாம் துஞ்சியிலே -5-4–பின் நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால் முன்னிற்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால் –என்றே பிரேம வியாதியும் ,
ராத்ரியாகிற கல்பமும் கிருத சங்கேதிகளாய் சூழப் பொருகையாலே , போக்கடி அற்று –
உரு நெஞ்சுள் எழ
-எங்கனே யோ அன்னைமீர் காள் -திருவாய்மொழியிலே -5-5– –சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதோர் உரு என் நெஞ்சுள்ளும் எழும் –என்று தேஜஸ் தரங்கம் மத்யே உன்நேயமான
அப்ராக்ருத விக்ரகம் பிரிதி அப்ரிதி சமமாம் படி உரு வெளிப்பாடே நெஞ்சில் பிரகாசிக்க –
கூடு நாள் தேடி-மானேய் நோக்கிலே-5-9- –திரு வல்ல வாழ் உறையும் கோனாரை அடியேன் கூடுவது என்று கொல் ?-என்று அவனை கூடும் நாளை பிரார்த்தித்து -இப்படி பிரார்தியா நிற்கவும் தாழ்ந்து வந்தவாறே –
தாழ்த்ததுக்கு ஊடி-மின்னிடை மடவாரிலே-6-2- –போகு நம்பீ -என்று பிரணய ரோஷத்தால் ஊடி
உசாத்துணை அற்று-வெள்ளை சுரி சங்கிலே -7-3–என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் இனி யாரை கொண்டு என் உசாகோ –என்று அபஹ்ருத சித்தை ஆகையாலே உசாத் துணையும் இன்றி —
சூழவும் பகைமுகம் செய்ய-ஏழையர் ஆவியிலே –7-7 –கண்ணன் கோள் இழை வாண் முகமாய் கொடியேன் உயிர் கொள்கின்றவே –என்று உரு வெளிப்பாட்டாலே பாதக வர்க்கம் ஒருமுகமாய் நலிய –
தடை நில்லாதே –நங்கள் வரி வளை யிலே-8-2- –காலம் பல சென்றும் காண்பது ஆணை உங்களோடு எங்கள் இடை இல்லை- என்று ஹிதம் சொல்கிற தோழிமார் அன்னைமாரை அதிகிரமித்து –
புயக்கற்று-இன் உயிர் சேவலிலே–9-5 –இழை நல்ல வாக்கையும் பெய்யவே புயக்கற்றது –-என்று போலி கண்டு நொந்து முடிகையிலே வ்யவசிதையாய்
மாலையும் காலையும் பூசல் இடுகிற-மல்லிகை கமழ தென்றலிலே-9-9- -சந்த்யா காலத்தில் கிருஷ்ணனை பசுக்களின் முற் கொழுந்தில் வரக் காணாமல் பாதக பதார்த்தங்களால் நலிவு பட்டு –
வேய் மரு தோள் இணையிலே-10-3- –பிராத காலத்தில் கிருஷ்ணன் பசு மேய்க்க போனானாக அதி சங்கை பண்ணி -அவன் முகத்தை பார்த்து -நீ பசு மேய்க்கப் போனால் நலியக் கடவ பாதக பதார்த்தங்கள் -நலியா நின்றது என்று கூப்பிடுகிற பதினேழு திரு வாய் மொழிகளிலும் பிராப்யத் த்வரை தோன்றும் என்கை —இத்தால் தலைமகள் பேச்சான பதினேழு திரு வாய் மொழிகளும்
பிராப்ய த்வரை தசையில் பேச்சு என்னும் இடம் வ்யக்தம் என்ற படி —

(புத்ரி) தலைமகளானவள்‌, (பலகால்‌ ஆள்விட்டு) *அஞ்சிறைய மடநாரை (திருவா. 1 4), *வைகல் பூங் கழிவாய்‌ (திருவா. 6 – 1), *பொன்னுலகாளீரோ (திருவா. 6 – 8), *எங் கானல்‌ (திருவா. 9 – 7) என்கிற நாலு திருவாய்மொழிகளிலும்‌ க்ரம ப்ராப்தி பற்றாமல்‌ தூது விட்டு, (ஆற்றாமை சொல்லி) *’ஆற்றாமை சொல்லி அழுவோமை”’ (திருவா. 2 – 1 7) என்று *வாயும் திரையுகளிலே ஸகல பதார்த்த,ங்களும்‌ பகவதலாபத்தாலே நோவு படுகிறனவாக க்லேஸித்து, (கவராதவை விட்டு) *ஏறாளுமிறையோனிலே “மாறாளன்‌ கவராத மணி மாமை குறைவிலமே”‘ (திருவா. 4 – 8 – 1) என்று அவன் விரும்பாத ஆத்மாத்மீயங்கள்‌ வேண்டா என்று உபேக்ஷித்து, (இரைக்க மடலெடுத்து) *மாசறு சோதியிலே ““யாமடலூர்ந்தும்‌ … நாடுமிரைக்கவே”” (திருவா, 5 – 3 – 10) என்று ஜகத் க்ஷோபம்‌ பிறக்கும்படி மடலூரக்கடவேனென்று, (கண் புதையப் போக்கற்று) *ஊரெல்லாம்‌ துஞ்சியிலே ‘“பின்னின்ற காதல் நோய்‌ நெஞ்சம்‌ பெரிதடுமால்‌ முன்னின்‌றிராவூழி கண்புதைய மூடிற்றால்‌”” (திருவா, 5 – 4- 6) என்று ப்ரேம வ்யாதியும்‌, ராத்ரியாகிற கல்பமும்‌ க்ருத ஸங்கேதிகளாய்க்கொண்டு சூழப் பொருகையாலே போக்கடியற்று.
(உருநெஞ்சுள்ளெழ) *எங்ஙனேயோவிலே “*சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோருரு என்னெஞ்சுள்ளெழும்‌”
 (திருவா. 5 – 5- 10) என்று தேஜஸ்தரங்க மத்‌யே உந்நேயமான அப்ராக்ருத விக்‌ரஹம்‌ நெஞ்சிலே ப்ரகாஸிக்கும்படியான உருவு வெளிப்பாட்டாலே ப்ரீத்ய ப்ரீதி ஸமமாய்‌, (கூடுநாள் தேடி) *மானேய் நோக்கியிலே ““திருவல்லவாழுறையும்‌ கோனாரை அடியேனடி கூடு வதென்று கொலோ”” (திருவா. 5 – 9 – 1) என்று அவன்‌ திருவடிகளைக் கிட்டும்‌ நாளை ப்ரார்த்தித்து (தாழ்த்ததுக்கு ஊடி) இப்படி ப்ரார்த்திக்கச்‌ செய்தேயும்‌ தாம்‌ தாழ்த்தவாறே *மின்னிடை மடவாரிலே ”போகு நம்பி’‘ (திருவா. 6 2 – 2) என்று ப்ரணய ரோஷத்தாலே ஊடி-(உசாத் துணையற்று) *வெள்ளைச் சுரி சங்கிலே ““என்னெஞ்சினாருமங்கே ஒழிந்தார்‌ ஆரைக்‌ கொண்டென் னுசாகோ”’ (திருவா. 7 – 3 – 4) என்று அபஹ்ருத சித்தையாகையாலே உசாத் துணையுமின்றிக்கே, (பகைமுகம்செய்ய) *ஏழையராவியிலே “கண்ணன்‌ கோளிழை வாண்முகமாய்க்‌ கொடியேனுயிர்‌ கொள்கின்றதே’‘ (திருவா. 7 – 7 – 8) என்று உரு வெளிப்பாட்டாலே பாதக வர்க்கங்களெல்லாம்‌ ஒருமுகமாய்‌ நலியத் தேட நில்லாதே, *நங்கள் வரிவளையிலே ”காலம் பல சென்றும்‌ காண்பதாணை உங்களோடெங்களிடையில்லை”’ (திருவா. 8 – 2 – 7) என்று அதிமாத்ர ப்ராவண்ய மாகாதென்‌று நிஷேதிக்கிற தோழிமாரையும் தாமரையும் அதிக்ரமித்து -புயக்கற்று –இன்னுயிர் சேவலிலே -இழை நல்ல வாக்கையும் பையவே புயக்கற்றது (திருவாய் -9-5-10) என்றும் முடிகையிலே வ்யவசிதையாய் (மாலையும் காலையும் பூசலிடுகிற ) மல்லிகை கமழ் தென்றலிலும் -வேய் மரு தோளிணையிலும் -சந்த்யா காலத்தில் கிருஷ்ணனைப் பசுக்களின் முற் கொழுந்தில் வரக் காணாமையாலும்-அக்காலத்தில் பாதக பதார்த்தங்களாலும் பார்த்து, “நீ பசுமேய்க்கப்போனால்‌ நலியக்கடவதான டாத, க பதார்த்தங்களும்‌ நோவு பட்டுக் கூப்பிட்டும் ப்ராத காலத்திலே கிருஷ்ணன் பசு மேய்க்க்கப் போனானாக அதி சங்கை பண்ணி கிருஷ்ணன் முகத்தைப் பார்த்து நீ பசு மேய்க்கப் போனால் நலியக் கடவதான பாதக பதார்த்தங்களும் நலியாநின்றது” என்று கூப்பிட்டும்‌, இப்படித் தலைமகள் பேச்சான பதினேழு திருவாய்மொழியிலும்‌ க்ரம ப்ராப்தி பற்றாதபடியான அதிமாத்ர ப்ராவண்ய கார்யமான ப்ராப்ய த்வரை தோன்றும்

அஞ்சிறை மடநாராய்–1-4-அவன் தானே வரப் பற்றாமையாலே -அவன் வராமைக்கு அடி நம் பக்கல் உண்டான அபராதம் என்று பார்த்து -அவனுடைய அபராத சஹத்வத்தை அறிவிக்கவே வரும் என்று -தன் உத்யானத்திலே பஷிகளைத் தூது விடுகிறாள் –தன்னுடைய சேஷத்வத்தை அனுசந்தித்தால் -தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று அவன் செய்தபடி கண்டு இருக்கலாம்-அத்தலையில் வைலஷண்யத்தை அனுசந்தித்தால் தூது விட்டு அல்லது இருக்க ஒண்ணாது

வைகல் பூம் கழி-6-1-இவர் தம்முடைய ஹிதத்தோ பாதி ஜகத்தினுடைய ஹிதத்துக்கும் கடவ-அது பற்றாமையாலே ஆற்றாமை மீதூர்ந்து-கலந்து பிரிந்து பிரிவாற்றாமையாலே திரு வண் வண்டூரில் -வாராமைக்கு அடி -திரு வண் வண்டூரில் போக்யதையாலே -நம் ஆற்றாமையை அறிவிக்க வரும் என்று பார்த்து-தூது விடுகிறாள் ஒரு பிராட்டி பேச்சாலே இவர் தம் தசையை யருளிச் செய்கிறார்-

பொன் உலகு ஆளீர்-6-8–அஞ்சிறைய மட நாறையில்-அபராத சஹத்வம் பற்றாசாகத் தூது விட்டாள்
வைகல் பூங்கழியிலே சர்வ ரக்ஷகனானவன் திரு வண் வண்டூரில் போக்யத்தையாலே கால் தாழ்த்தான் அத்தனை – நம் ஆர்த்தியை அறிவிக்க வரும் என்று அவன் சர்வ ரக்ஷகத்வம் பற்றாசாக தூது விட்டாள் இதில் தன் ஐஸ்வர்ய பரப்பால் மறந்து இருந்தான் அத்தனை –ஆஸ்ரிதரோடு ஏக ரசனாய் இருக்கும் -என்று ஐக ரஸ்யம் பற்றாசாக தூது விடுகிறாள் -தக்கோர்மை பற்றாசாக தூது விடுகிறாள் என்று பிள்ளான் பணிக்கும் –

எம் கானல்-9-7–அஞ்சிறைய மட நாரையில்-இத்தலையில் அபராதத்தாலே வாராது ஒழிந்தான் அத்தனை -என்று அவனுடைய அபராத சஹத்வம் பற்றாசாக தூது விட்டார் –
வைகல் பூங்கழி வாயில்-நல்லது கண்டால் கால் தாழுமவன் ஆகையால் மறந்து இருந்தான் அத்தனை
நம் ஆர்த்தியை அறிவித்தால் தன்னிமையிலே நெஞ்சு வைப்பான் ஒருவன் அல்லன் என்று அது பற்றாசாகத் தூது விட்டார்
பொன்னுலகாளியில்-ஐஸ்வர்ய பரப்பாலே மறந்து இருந்தான் அத்தனை –ஆஸ்ரிதரோடு ஏகரசன் என்று அறிவிக்கவே வரும்-என்று ஐக ரஸ்யம் பற்றாசாக தூது விட்டார்
இதில் தனக்கு நல்லாரை விட மாட்டாமையாலே வாராது இருந்தானாம் அத்தனை –தன் வடிவு அழகு அது -குணங்கள் அவை -ஆன பின்பு பிரிந்தார்க்கு ஜீவித்து இருக்கப் போமோ என்று அவ் வடிவு அழகும் குணங்களும் பற்றாசாகத் தூது விடுகிறது –

வாயும் திரை உகளிலே –2-1-நாரையாகில் வெளுத்து இருக்கையும் -காற்றாகில் சஞ்சரிக்கையும் முதலான ஸ்வ பாவங்கள் இவற்றுக்கு நியதம் என்று அறியாதே-வியதிரேகத்திலே சேதன அசேதன விபாகம் அற ஆற்றாமையை விளைக்க வல்ல விஷயம் -என்னுமத்தை புத்தி பண்ணி அவற்றுக்குமாக வெறுக்கிறார்பாட்டுத் தோறும் எம்மே போல் -என்கிறது இவற்றுக்குத் தனித் தனி உண்டான ஆற்றாமை இவர்க்கு ஒரு வகைக்கு போறும் அத்தனை என்கைக்காக–

ஏறாளும் இறையோனில்-4-8–அவனுகுக்காக கண்ட என்னுடைய ஆத்மாத்மீயங்கள் அவனுக்கு ஆதரணீயம் அன்றாகில் எனக்கும் அவற்றால் கார்யம் இல்லை என்று அவற்றால் தாம் நசை அற்ற படியை அந்யாபதேசத்தால் அருளிச் செய்கிறார்-கோவை வாயாள் -திருவாய் மொழியில் படி விரும்பினவன் இப்படி உபேக்ஷித்த பின்பு என்னாலும் என் உடைமையாலும் எனக்குத் தான் என்ன கார்யம் உண்டு என்கிறாள் – ஆத்மாத்மீயங்களை அவன் விரும்பின வழியாலே விரும்ப வாயிற்று பிராப்தம் –அல்லது தான் உகந்த வழியாலே விரும்புமது தேஹாத்ம அபிமானத்தோடே ஒக்கும் அத்தனை – முந்துற ஆத்மாவை வேண்டேன் என்னாதே-உடைமையை வேண்டேன் -என்றது -இவள் தன்னிலும் இவள் உடைமையை அவன் விரும்புகையாலே அவன் விரும்புன அடைவே உபேக்ஷிக்கிறாள்-என்னுடைமையை வேண்டேன் என்று திரளச் சொல்லாதே வ்யக்தி தோறும் வேண்டேன் என்கிறது என் என்னில் – அவன் வ்யக்தி தோறும் விரும்புகையாலே -நதேஹம் ந பிராணன் -நஹிமே ஜீவிதே நார்த்த-ந தேவ லோகா க்ரமணம்

மாசறு சோதியிலே-5-3- ஏறாளும் இறையோனில்-தமக்குப் பிறந்த இழவே தலையெடுத்து -ஆற்றாமையால் மடல் எடுத்தாலும் கிட்டுவோம் -என்று துணிகிறாள் –-ஏறாளும் இறையோனில்-அவன் விரும்பாத ஆத்மாத்மீயங்கள் வேண்டேன் என்று தன்னை முடிக்கப் பார்த்தாள்-அது அவனது ஆகையால் முடிந்தது இல்லை –இதில் அத்தலையே பிடித்து அழிக்கத் தொடங்கினாள் – அங்கு உயிரினால் குறைவிலம் -என்று உயிரை வேண்டா என்றாள் –இங்கு உயிருக்கும் உயிரை வேண்டேன் என்கிறாள்–இதில் அவன் ஸ்வரூபத்தை அழிக்கப் பார்க்கிறாள் –அவன் தானே மேல் விழ-தம்மோட்டை கலவி அவனுக்கு அவத்யம்-என்று அகன்றவர் தம்மைப் பாராதே -வழி யல்லா வழி யாகிலும் அவனோடே சம்ச்லேஷிப்போம் என்று தமக்குப் பிறந்த தசா விசேஷத்தை அந்யாபதேசத்தால் அருளிச் செய்கிறார்

யாமடல் ஊர்ந்தும் எம் ஆழி அங்கைப் பிரானுடைத்
தூமடல் தண்ணத் துழாய் மலர் கொண்டு சூடுவோம்
யாமடம் இன்றித் தெருவு தோறு அயல் தையலார்
நாமடங்காப் பழி தூற்றி நாடும் இரைக்கவே.–5-3-10--அவன் ஊரார் கவ்வை பரிஹரியானாகில் நாடாகப் பழி சொல்லும் படி பண்ணுகிறேன் -ஜகத் ஷோபத்தை பண்ண கடவேன் -இந்நாட்டுக்கு ஓர் பேர் இறே உண்டாகப் புகுகிறது – ஒருத்தி ஒருவனை படுத்திற்று இ றே -ஒருவன் முகம் காட்டிற்று இலன் -என்னும்படி பண்ணுகிறேன் -ஒருவன் உளன் ஆகில் ஒருத்தி உடம்பு இங்கனம் இருக்க அடுக்குமோ ஜகத்து நிரீஸ்வரம் என்னும்படி பண்ணுகிறேன் -கலந்த என் வார்த்தையில் காட்டிலோ வடிவு இல்லாத வேதத்தின் வார்த்தை –எல்லாரையும் நாஸ்திகர் ஆகும் படி பண்ணுகிறேன்-நாடும் இரைக்கவே–யாம் மடலூர்தம் -தூமடல் தண்ணத் துழாய் மலர் கொண்டு சூடுவோம்-

பின் நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால்
முன் நின்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால்

மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்
இந்நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இவ்விடத்தே?–5-4-6—புக்க இடம் புக்கு -பின்னாட்டிக் கொண்டு திரிகிற பிரேம வியாதியானது -இதுக்கு இடைந்தால் வேறு நிழல் இல்லையாய் இரா நின்றது –நெஞ்சை மிகவும் நோவு படுத்தா நின்றது –பாதகம் பாத்யத்தின் அளவன்று-என்கை -அக்னி போல் தனக்கு ஆச்ரயமான நெஞ்சை தக்தமாக்கா நின்றது –பதார்த்தங்கள் தோற்றாத படி முன்னே நின்று ராத்ரியாகிற கல்பம் கண்ணை மறையா நின்றது –பிரேம வியாதியும் ராத்திரியும் முன்பும் பின்புமாய் க்ருத சங்கேதங்களாய் நலிகிற படி உட்கண்ணும் அழிந்து புறக் கண்ணும் அழிந்தது -க்ராஹகமுமாய் ப்ரகாசகமுமான கண்ணை க்ராஹ்ய மான இருள் மறையா நின்றது

கழிய மிக்கதோர் காதலள் இவள் என்று அன்னை காணக்கொடாள்
வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
குழுமித் தேவர் குழாங்கள் கைத்தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே
எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே.–5-5-10-
உஜ்ஜவலமாய் தோற்றுகிற அத்விதீயமான விக்ரஹம்-இன்னார் என்று அறியேன் என்கிறபடியே நித்ய அபூர்வமாய் இருக்கும் வடிவு -தேஜஸாம் ராசி மூர்ஜ்ஜிதம்-அத்திரளோடே அவ்வடிவு என் நெஞ்சில் பிரகாசியா நின்றது -அது நாங்கள் காண்கிறி லோமே என்ன –ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கும் அறிய ஒண்ணாது -த்வரை இல்லார்க்கு அறிய ஒண்ணாது -எனக்கு மறக்க ஒண்ணா தாப் போலே பிறர்க்கு நினைக்க ஒண்ணாது

மானேய் நோக்கு நல்லீர்! வைகலும் வினையேன் மெலிய
வானார் வண் கமுகும் மது மல்லிகை கமழும்
தேனார் சோலைகள் சூழ் திரு வல்லவாழ் உறையும்
கோனாரை அடியேன் அடி கூடுவது என்று கொலோ?–5-9-1-–
கோனாரை என்று நாராயண சப்தம் –அடியேன் என்று பிராணவார்த்தம் –பிராட்டியான தசையோடு தாமான தசையோடு வாசி யற இவர்க்கு சேஷத்வம் ஒருபடிப் பட்டு இருக்கிற படி-அடி கூடுவது என்கிறது சதுர்த்த்யர்த்தம் –என்று கொலோ என்கிறது ப்ராப்ய த்வரையாலே வாக்ய சேஷத்தால் வந்த பிரார்த்தனை –அணைக்க வேணும் என்னும் ஸ்தானத்தில் அடி கூடுவது என்கிறார் இறே-

போகு நம்பீ! உன் தாமரை புரை கண்ணிணையும் செவ்வாய் முறுவலும்
ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோமே யாம்;
தோகை மா மயிலார்கள் நின்னருள் சூடுவார் செவி ஓசை வைத்தெழ
ஆகள் போகவிட்டுக் குழலூது போயிருந்தே.–6-2-2–நீர் பரப்பராய் -முதலிகளாய் -இருப்புதீர்-உறவு உடையாரைப் போலேதீண்டாதே போம் -எத்தனை பேரைத் தீண்டினீர் என்பதை அறியோம் -எங்கள் மேல் புடவை படாமே போம்-முற்பட போகு நம்பீ என்றவாறே வர நின்றான் -பின்பு போகு நம்பீ என்றவாறே தொட்டான் 

இழந்த எம்மாமைத் திறத்துப் போன என் நெஞ்சினாரு மங்கே ஒழிந்தார்
உழந் தினி யாரைக் கொண் டென் உசாகோ
! ஓதக் கடல் ஓலி போல எங்கும்
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன் அன்னையர்காள்! என்னை என் முனிந்தே.–7-3-4-லங்கையை அரண் அழிக்கைக்கு ஸ்ரீ விபீஷணனை பெற்றால் போலே -என்னுடைய ஸ்த்ரீத்வம் ஆகிற அரண் அழிக்கைக்கு உள் ஆள் பெற்றோம் என்று நெஞ்சை படை யறுத்துக் கொண்டான்-இலங்கையின் அளவன்றிக்கே ஸ்த்ரீத்வ அபிமானத்துக்கு அவன் அஞ்சி இருப்பது –நெஞ்சினார் -அங்குத்தை ராஜ குலத்தாலே என்னை மறந்தார் -பெற்றாரைக் கொண்டு வ்ருத்த கீர்த்தனம் பண்ணி யாகிலும் தரிக்க வேண்டாவோ என்ன-உழந் தினி யாரைக் கொண் டென் உசாகோ!-உழந்து -வருந்தி -இனி என் நெஞ்சை இழந்த பின்பு –வருந்தினால் தான் வார்த்தை கேட்ப்பார் உண்டோ -கேட்ப்பார் உண்டால் தான் என்ன வார்த்தை சொல்லுவது-

கோளிழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்
கோளிழைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோளிழை யாவுடைய கொழுஞ்சோதி வட்டங்கொல்? கண்ணன்
கோளிழை வாண் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே.
–7-7-8–தன் ஒளியே தனக்கு ஆபரணமாக உடைய திரு முகமாய்க் கொண்டு உபமான உபேமேயங்கள் மாறாகும் படி ரூபகம் முற்றின படி-.-எல்லாரும் உயிர் பெறும் நிலத்திலே இப்படி துக்கப் படுகைக்கு ஈடாகப் பண்ணின பாபத்தை யுடைய என் பிராணனை நலியா நின்றது-

மாலரி கேசவன் நாரணன் சீ மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று
ஓலமிட வென்னைப் பண்ணி விட்டிட்டு ஒன்றுமுருவுஞ் சுவடுங்காட்டான்
ஏல மலர்க்குழல் அன்னைமீர்காள் ! என்னுடையத் தோழியர்காள் ! என் செய்கேன் ?
காலம் பல சென்றும் காண்பதாணை உங்களோடும் எங்களிடை இல்லையே–8-2-7--காலம் எல்லாம் கூடாவாகிலும் கண்டு அல்லது மீளேன் -சொல்லலாம் இத்தனை அல்லது செய்யப் போமோ -என்ன –ஆணை –அவனுடைய ஆணை -விடுகிறவர்களோடு சம்பந்தம் இல்லாமையால் அவர்கள் ஆணை இடாளே-இப்படி இவள் ஆணை இடைச் செய்தேயும் தங்கள் சாபலத்தாலே சில சொல்லப் புக
உங்களோடும் எங்களிடை இல்லையே–உங்களோடு எனக்கு ஒரு சம்பந்தம் இல்லை -நீங்கள் ஒன்றும் சொல்ல வேண்டா -என்கிறாள்-

எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம்
பழன நல் நாரைக் குழாங்கள் காள் பயின்று என் இனி
இழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது
தழை நல்ல இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைக்கவே-9-5-10–ஆபரணத்தாலே அழகிதான சரீரம் என்னுதல் -ஆபரணம் பூண்டால் போலே இருக்கிற வி லக்ஷண சரீரம் என்னுதல்-பையவே புயக்கு அற்றது-க்ரமேண பசை அற்றது என்னுதல் –க்ரமத்தில் போகத் தொடங்கிற்று என்னுதல்–புயத்தல் என்று போதல் ஆதல் –புயக்கு-என்று ஆகர்ஷகம் ஆதல் –

மல்லிகை கமழ தென்றலிலே-9-9-திருவாய்ப்பாடியிலே பெண்கள் எல்லாம் ஒரு ராத்திரியில் கிருஷ்ண விரஹத்தால் பட்ட நோவை இவர் ஒருவருமே படுகிறார் -என்று ஆளவந்தார் அருளிச் செய்வார்-ஒரு ஸந்த்யையில் அவர்கள் பட்ட நோவை படுகிறார் என்று அருளிச் செய்வர் எம்பெருமானார் –
ஸந்த்யையாவது எம்பெருமான் தம்மை விஷயீ கரிப்பதற்கு முன்பு உண்டான அல்ப காலம் –அப்போதே லபிக்கப் பெறாமை -மாலைப் பூசல்அன்றோ  இது –

வேய் மரு தோள் இணையிலே-10-3-இன்னுயிர்ச் சேவலிலும்-மல்லிகை கமழ் தென்றலிலும் படும் வியசனத்தை -அவன் சந்நிதியில் பட -அத்தைப் பார்த்து –நாம் போகக் கடவோம் அல்லோம் -நாம் போக நினைப்பதும் செய்திலோம்-என்று தான் போகாமையை இவள் நெஞ்சிலே படுத்த -அத்தாலே தரித்தாள் ஒரு பிராட்டி பேச்சாலே தம் தசையை அருளிச் செய்கிறார் – எம்மா வீட்டில் தம்முடைய தாதார்த்தயத்தை ஆசைப் பட்டார்–இதில் அவன் ஸம்ருத்தியை ஆசாசிக்கும் இதுவே புருஷார்த்தம் –என்கிறார் –

ஆனால் தோழி என்றும் தாய் என்றும் சொல்லுகிறது – சம்பந்த ஞானத்தையும் – உபாயத்வ அவசாயத்தையும் ஆகில் ,தத் விஷயமான பன்மை சொலவுக்கு தாத்பர்யம் எது என்னும் ஆ காங்ஷையில் அருளி செய்கிறார் மேல் —ஆனால்‌ தோழி என்றும்‌, தாய்‌ என்றும்‌ சொல்லுகிறது ஸம்பந்த ஜ்ஞாநத்தையும்‌ உபாயாத்‌யவஸாய ஜ்ஞாநத்தையுமாகில்‌ இவற்றினுடைய பன்மைக்கு தாத்பர்யம்‌ என்‌ என்னில்‌; அந்த ஸம்பந்த உபாயங்களினுடைய வித பேதங்களை விஷயீகரித்த ஜ்ஞாந வ்யவஸாயங்களினுடைய பேதத்தாலே சொல்லுகிறதென்கிறார்‌ 

தோழிமார் அன்னையர் என்கிற பன்மை ரஷகத்வாதி பந்த வாத் சல்யாதி வ்யவசாய புத்தி பேதத்தாலே–சூரணை -135-

(தோழிமார் என்கிற பன்மை ரஷகத்வாதி பந்த புத்தி பேதத்தாலே–
அன்னையர் என்கிற பன்மை வாத் சல்யாதி வ்யவசாய புத்தி பேதத்தாலே )

அதாவது – தோழிமார்களும் அன்னையரும்–5-5-9 -என்றும் அன்னையரும் தோழியரும்-5-4-5 -என்றும்
தோழிமார் விளையாட போதுமின் என்ன -6-2-8-என்றும் அன்னையர் நாண -5-3-8–என்றும்
ஊர் என் சொல்லில் என் தோழிமீர் -5-3-6–என்றும் எங்கனயோ அன்னைமீர்காள்-5-5-1- -என்று

இப்படி தோழி,தாய் விஷயமாக சொல்லுகிற பன்மை திரு மந்த்ரத்தில் சொல்லுகிற படியே -இவ் ஆத்மாவோடு ஈஸ்வரனுக்கு ரஷகத்வ ,சேஷித்வ ,காரணத்வ ,சரீரி-இத்வாதி சம்பந்தங்கள் பலவும் உண்டாகையாலே – அவ்வோ சம்பந்தங்களை விஷயீகரித்த ஞானத்தின் உடைய பேதத்தாலும் –உபாய பூதனான அவனுடைய -வாத்சல்ய -ஸ்வாமித்வ –சௌசீல்ய -சௌலப்ய ஞான சக்தி கிருபாதிகளை பற்றி வரும் வ்யவசாய ரூபமான ஞானத்தின் உடைய பேதத்தாலும் என்கை —புத்தி சப்தம் ஞான வாசி–
புத்திர் மநீஷா திஷணா தீ பிரஜ்ஞா சேமுஷீ மதி-அமரகோசம் – -என்னக் கடவதிறே ..
இத்தால் சம்பந்த ஞானத்துக்கும் உபாயத்வ அத்யாவசாயத்துக்கும் விஷய பேதத்தாலே -வ்யக்தி பேதம் உண்டாகையாலே – தத் விஷய பன்மை பிரயோகத்துக்கு கொத்தை இல்லை என்றபடி –

ஊரென் சொல்லிலென்‌ தோழிமீர்‌”’ (திருவா, 5 – 3 – 9), எங்னேயோ அன்னைமீர்காள்‌”’ (திருவா. 5 – 5 4 1), ”அன்னையரும்‌ தோழியரும்‌” (திருவா, 8 – 4-5), “ஏலமலர்க் குழலன்னைமீர்காள்‌”’ (திருவா. 8 – 2 – 3); ““என்னுடைத்‌ தோழியர்காள்‌”” (திருவா. 8 – 2 – 7) என்று தோழிமாரையும்‌, தாய்மாரையும்‌ பலவாகச் சொல்லுகிறது – ரக்ஷகத்வாதி,பந்த வாத்ஸல்யாதி வ்யவஸாய புத்‌தி பேதத்தாலே; ‘ரஷக ரக்ஷ்ய ஸம்பந்தம்‌, சேஷ சேஷி ஸம்பந்த,ம்‌, பித்ரு புத்ர ஸம்பந்தம்‌, பர்த்ரு பார்யா ஸம்பந்தம்‌, ஜ்ஞாத்ரு ஜ்ஜேய ஸம்பந்தம் ஸ்வ ஸ்வாமி ஸம்பந்தம்‌, ஸாரீர ஸரீரி ஸம்பந்தம்‌, ஆதார ஆதேய ஸ்ம்பந்தம்‌, நியந்த்ரு நியாம்ய ஸம்பந்தம் , போக்த்ரு போக்‌ய ஸம்பந்தம்‌’ என்று இவை முதலான ஸம்பந்தங்களை விஷயீகரித்த ஜ்ஞாநங்கள்‌ பலவாகையாலே அவற்றையும்‌, வாத்ஸல்யம்‌, ஸ்வாமித்வம்‌, ஸெளஸீல்யம்‌, ஸெளலப்யம்‌, ஜ்ஞாநம்‌, பக்தி, க்ருபை, ப்ராப்தி, பூர்த்தி என்கிற குண அநுஸந்தாநத்தாலே அந்த வ்யவஸாய புத்‌திகளும்‌ பலவாகையாலே பன்மையாகச்‌ சொல்லுகிறதென்கிறார்

முன்னின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர்
மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
சென்னி நீண்முடி ஆதியாய உலப்பில் அணி கலத்தன்
கன்னல் போல் அமுதாகி வந்து என் நெஞ்சம் கழியானே.–5-5-9-துணையாவாரோடு பொடிவாரோடு வாசி அற பொடியத் தொடங்கிற்று-இவள் துணிவைக் கண்டவாறே உகப்பாரோடு, பொடிவாரோடு வேற்றுமை அறப் பொடியத் தொடங்கினார்கள்.-

ஆர் என்னை ஆராய்வார்? அன்னையரும் தோழியரும்
நீர் என்னே என்னாதே நீளிரவும் துஞ்சுவரால்
கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால்
பேர் என்னை மாயாதால் வல்வினையேன் பின் நின்றே.–5-4-5-இவளுடைய அவசாதிசயம் தாய்மாரோடு தோழிமாரோடு வாசி அற சொல்லும் படி யாய் விட்டது -என் நினைவே நினைவாய் இருப்பார்க்கும் -நிஷேதிப்பார்க்கும் வாசி யற்றது

பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர்ஞான மூர்த்தினாய்!
இணக்கி எம்மை எம்தோழிமார் விளையாடப் போதுமின் என்னப்போந்தோமை
உணக்கி, நீ வளைத்தால், என்சொல்லார் உகவாதவரே?–6-2-8–உன்னோட்டை கலவி அபாயம் என்று அறியாதே எங்களை உன்னோடே சேர்த்து –இவ்வளவாக விளைத்தவர்களை சொல்லாதே உன்னைத் சொல்லுகிறது என்-பகவத் விஷயத்தில் வைஸத்யம் பிறந்தால் உபகாரகரை கொண்டாடும் என்னும் அர்த்தம் இறே உள்ளோடுகிறது-நித்யம் யதீய சரனவ் சரணம் மதியம் –எம் தோழிமார் -சஜாதீயராய் இறே இருப்பது

பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து மருதிடை
போய் முதல் சாய்த்துப் புள்வாய் பிளந்து களிறு அட்ட
தூ முறுவல் தொண்டைவாய்ப் பிரானை எந்நாள் கொலோ?
நாம் உறுகின்றது தோழீ! அன்னையர் நாணவே.–5-3-8–நாம் உறுகின்றது தோழீ!
நாம் என்றோ கிட்டுவது -யாம் -பேறு இருவருக்கும் ஒத்து இருக்கிற படி -சோகாஸ் யாஸ்ய கதா பாரம் ராகவோ அதிகமிஷ்யாதி-அன்னையர் நாணவே.–-அவனுக்கு குண ஹானி சொல்லுகிற தாய்மார் லஜ்ஜிக்கும் படி -இவள் தான் அவனைப் பெற்ற தனக்கு வரும் லாபம் ஒழிய -இவனையே நாம் இப்படிச் சொல்லிற்று என்று அவர்கள் லஜ்ஜித்து கவிழ்ந்து நிற்கை உத்தேச்யம் என்று இருக்கிறாள் –

தலை மகள் என்கிறது -பிராப்ய த்வரை ஆகில் தலை மகளுக்கு சொல்லும் பருவம் ஏழும் இங்கு
கொள்ளும் படி என் என்னும் அபேஷையில் அருளி செய்கிறார் .-தலைமகளுக்கும்‌ இந்த பக்தியினுடைய அவஸ்தா பேதங்களினாலே பேதை முதலான பருவங்கள்‌ உண்டென்கிறார்‌

அபிலாஷா சிந்தனா அனுஸ்மிர்த்தி இச்சா ருசி பர பரம பக்திகளிலே பேதை முதலான பருவம் கொள்ளும் -சூரணை -136-(பர பரம பக்தி -பக்தி -பர பக்தி -பரம பக்தி )

அபிலாஷா-அதாவது-அனுபாவ்ய விசேஷ பிரேம தர்சனத்தில் பிறக்கும் ஆசை ஆகிற அபிலாஷையும் .
சிந்தனா-த்ருஷ்டமான அவ் விஷயத்தில் உண்டாம் ஸ்மரணம் ஆகிற சிந்தைனையும் ,
அனு ஸ்ம்ருதி-அந்த ஸ்மரணம் அநவரதம் நடக்கை ஆகிற அனு ஸ்ம்ருதியும்
இச்சா-அவ் விஷயத்தை அவசியம் அனுபவித்தே நிற்க வேணும் என்னும் ஆசை ஆகிற இச்சையும் ,
ருசி-அவ் ஆசை தானே ரசாந்தரத்தால் மாற்ற ஒண்ணாத படி முதிருகையாகிற ருசியும்
பர பக்தி-அவ் விஷயத்தில் சம்ஸ்லேஷ விஸ்லேஷங்களே சுக துக்கங்களாகிற பரபக்தியும் –
பரம பக்தியும்-அவ் விஷயத்தின் விஸ்லேஷத்தில் சத்தை கிடவாது ஒழிகை யாகிற பரம பக்தியும்
ஆகிற ஏழு அவஸ்தையிலும்
பேதை பெதும்பை மங்கை மடந்தை அரிவை தெரிவை பேர் இளம் பெண்-என்கிற ஏழு பருவமும் தலைமைகளான பிராப்ய த்வரைக்கு கொள்ளும் என்ற படி–இத்தால், பக்தி ரூபையான பிராப்ய த்வரைக்கு பக்தியின் உடைய பிரதம தசை-(அபிலாஷை ) தொடங்கி சரம தச பர்யந்தமான -( பரம பக்தி )அவஸ்தா விசேஷங்களிலே பர்வ சப்தகமும் கொள்ளலாம் என்றது ஆயிற்று —

அபிலாஷையாவது ப்ரதம தர்ஸநத்தில்‌ பிறக்கும்‌ ஆசை. சிந்தனையாவது – த்‌ருஷ்டமான விஷயத்தில்‌ உண்டான ஸ்மரணம்‌. அநு ஸ்ம்ருதியாவது – அந்த ஸ்மரணம்‌ இடை விடாமல்‌ நடக்கை. இச்சையாவது – அவ் விஷயத்தை அவஸ்யம்‌ அநுபவிக்க வேணுமென்கிற ஆசை. ருசியாவது – ரஸாந்தரத்தால்‌ மாற்ற வொண்ணாதபடி அந்த ஆசை முதிருகை. பரபக்தி யாவது – அந்த வஸ்துவினுடைய ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களே ஸூக துக்கங்களாகை. பரமபக்தி யாவது – அவ்வஸ்துவினுடைய விஸ்லேஷத்தில்‌ ஸத்தை கிடையாதொழிகை. ஆகையாலே இந்த அவஸ்தா பேதங்களினாலே பேதை முதலான்‌ பருவம்‌ கொள்ளக் கடவது என்கிறார்‌.

இனி தலை மகளான அவஸ்தையிலே வர்ணிக்கும் அவயவ விசேஷங்கள் எவை என்னும் ஆ காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் மேல்–மேல்‌ அந்தத்‌ தலைமகளுக்குச்‌ சொல்லுகிற அவயவ வைலக்ஷண்யம்‌ இவ் வாத்மாவினுடைய ஜ்ஞாந விகாஸாதிகளாகக்‌ கடவதென்கிறார்‌ 

மயில் பிறை வில் அம்பு முத்துப் பவளம் செப்பு மின் தேர் அன்னம் தெய்வ உரு விகாஸ சுத்தி தாந்தி
ஞான ஆனந்த அனுராக பக்த்ய அணுத்வ போக்யதா கதிகளை உடைய அக மேனியின் வகுப்பு —சூரணை -137-

மயில் -விகாசம் –பிறை -சுத்தி –வில் -தாந்தி -அம்பு -ஞானம் –முத்து -ஆனந்தம் –பவளம் -அநு ராகம் -செப்பு -பக்தி -மின் -அணுத்துவம் /தேர் -போக்யதை-அன்னம் -கதி/அகமேனி -ஆன்ம ஸ்வரூபம்-என்றவாறு –

மயில் விகாசம்-அதாவது-தோகை மா மயிலார்கள் –6-2-2–என்று ஸ்திரீகளை மயிலாக சொல்கிறது –
அகல பாரா விஸ்த்ருதியை இட்டாகையாலே -அத்தால் இங்கு ஆத்மாவினுடைய ஞான விகாசத்தைச் சொல்லுகிறது —

தோகைமாமயிலார்கள்‌”்‌ (திருவா. 6 – 2 – 2) என்று ஸ்த்ரீகளை மயில்‌ என்பது – அளகடாரத்தினுடைய விஸ்த்ருதியைப் பற்றவாகையாலே, ஆத்மாவினுடைய ஜ்ஞாந விகாஸத்தைச்‌ சொல்லுகிறது

போகு நம்பீ! உன் தாமரை புரை கண்ணிணையும் செவ்வாய் முறுவலும்
ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோமே யாம்;
தோகை மா மயிலார்கள் நின்னருள் சூடுவார் செவி ஓசை வைத்தெழ
ஆகள் போகவிட்டுக் குழலூது போயிருந்தே.–6-2-2—தோகை மா மயிலார்கள் -இது ஒரு மயிர்முடி இருக்கும் படியே -என்றான் -நீ போலி கண்டு பிரமிக்கும் படி மயிர் முடி யுடையார் ஆர் –அங்கனம் சிலர் உண்டோ ஏன் –நின்னருள் சூடுவார்-உன்னோடே சம்ச்லேஷித்து பிரிவில் இப்படி பிச்சேறும் படி பண்ணினவர்கள் -அவர்களை பிரிந்து நோவு படாதே அவர்களோடே சம்ச்லேஷி என்ன – அவர்களைக் கிட்டும் அளவும் இங்கனே இருக்கிறேன் என்று திகைத்து இருந்தான் -அவர்களோடே கிட்டும் விரகு என்-என்று இருக்கிறாய் யாகில் -அவர்களை கிட்டும் விரகு சொல்லுகிறேன் கேள் என்ன -அது

பிறை -சுத்திபிறை உடை வாணுதல்–பெரிய திருமொழி -2-9-9–என்று நெற்றியை பிறையாகச் சொல்லுகையாலே அதன் தாவள்யத்தை இட்டு –ஸ்வாதந்த்ர்ய அந்ய சேஷத்வங்கள் தோஷ ஸ்பர்சம் அற்று இருக்கும சுத்தியைச் சொல்கிறது —

““பிறை யுடை வாணுதல்‌” (திருமோழி 2 – 9 – 9) என்று ஸ்தரீகளுடைய நெற்றியைப்‌ பிறையாகச்‌ சொல்லுகையாலே, அதினுடைய தாவள்யத்தையிட்டு அந்த ஜ்ஞாநத்தினுடைய ஸூத்‌தி யோகத்தைச்‌ சொல்லுகிறது.

பிறை யுடை வாணுதல் பின்னை திறத்து முன்னே ஒரு கால் செருவில் உருமின்
மறை யுடை மால் விடை ஏழு அடர்த்தாற்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி
கறை யுடை வாள் மற மன்னர் கெடக் கடல் போல் முழங்கும் குரல் கடுவாய்
பறை யடைப் பல்லவர்கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே—2-9-9—ஒளியை உடைத்தான
நுதலை உடைய நப்பின்னைப் பிராட்டிக்காக முன்பு ஒருநாள் யுத்தத்திலே

வில் -தாந்திவிற்புருவக்கொடி–திருவாய் -6-6-6–என்று புருவத்தை வில்லாக சொல்கிறது -வளைவு இட்டு ஆகையாலே – பாஹ்யாப் அந்தர கரண நியமன ரூப தாந்தியை சொல்லுகிறது

“விற் புருவக் கொடி”‘ (திருவா. 6 – 6 – 6) என்று புருவத்தின்‌ வளைவாலே வில்லாகச்‌ சொல்லுகையாலே, அது கொண்டு ஜ்ஞாநத்தினுடைய தாந்தி ரூபதையைச்‌ சொல்லுகிறது.

கற்பகக் காவன நற்பல தேளாற்கு
பொற்சுடர்க் குன்றன்ன பூத்தண் முடியற்கு
நற்பல தாமரை நாண்மலர்க் கையற்குஎன்
விற்புரு வக்கொடி தோற்றது மெய்யே.–6-6-6–வில் போலே இருக்கிற புருவத்தை உடைய என் பெண் -ப்ரஹ்மாஸ்திரத்தை கொண்டு முடிந்து கிடப்பாரைப் போலே ஜய ஹேதுவான பரிகரத்தை கொண்டு கிடீர் தோற்றது -ஊர்த்தவம் மாஸன்ன ஜீவிஷ்யே-என்னும் வடிவைக் காட்டி ந ஜீவேயம் க்ஷணம் அபி -என்னப் பண்ணும் வடிவைக் கிடீர் கொண்டது-

அம்பு -ஞானம்-அம்பன்ன கண்ணாள் – என்று கண்ணை லஷ்ய பாதியான அம்பைச் சொல்லுகையாலே –தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு–முதல் திருவந்தாதி –67-என்று தனக்கடைத்த விஷயத்தை அவலம்பித்த ஞானத்தைச் சொல்கிறது —

”அம்பன்ன கண்ணாள்‌” (திருமொழி 6 – 8 – 6) என்று கண்ணை அம்பாகச்‌ சொல்லுகிறது – லக்ஷ்யபாதியாகையாலே, அத்தாலே விஷய க்‌ராஹியான ஜ்ஞாநத்தைச்‌ சொல்லுகிறது,

உம்பர் உலகோடு உயிர் எல்லாம் உந்தியில்
வம்பு மலர் மேல் படைத்தானை மாயோனை
அம்பன்ன கண்ணாள் அசோதை தன் சிங்கத்தை
நம்பனை நாடி நறையூரில் கண்டேனே –6-8-6–பிள்ளை உறங்கா வல்லி தாசர் பிள்ளைக்கு தாய் வழி ஆகாதே கண் -என்று அருளிச் செய்வர் –

பெயரும் கருங்கடல் நோக்கும் ஆறு ஒண் பூ
உயரும் கதிரவன் நோக்கும் -உயிரும்
தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு –
67—ஞானம் ஆகில் ஸ்ரீ யப்பதியை அறியும் அத்தனை
மற்று ஒன்றை அறியாது –தத் ஞானம் அஞ்ஞானம் அது அந்யதுக்தம் –வித்யா அன்யா சில்பை நை புணம்–(ஸ்ரீ விஷ்ணு புராணம் )என்னும் படியே-

முத்து -ஆனந்தம்-முத்தன்ன வெண் முறுவல்-என்று முறுவலை முத்தாகச் சொல்லுகையாலே –
முத் ப்ரீதி பிரமதோ ஹர்ஷா –அமரகோசம் -என்கிற படியைக் கொண்டு அவ் விஷய அனுபவத்தால்
உண்டான ஆனந்தத்தைச் சொல்லுகிறது–

முத்தன்ன வெண் முறுவலை முத்தாகச்‌ சொல்லுகிறது – அதினுடைய ஒளியையும்‌, நீர்மையையும்‌ இட்டாகையாலே, ““முத்ப்ரீதி ப்ரமதோ ஹர்ஷ?” என்று அந்த ஜ்ஞாநத்தினுடைய ஆநந்த ரூபதையைச்‌ சொல்லுகிறது. 

பவளம் -அநு ராகம்-பவள வாயாள்–நாச்சியார் -5-8-என்று அதரத்தை பிரவாளமாக சொல்கிறது சிவப்பை இட்டு ஆகையாலே அவ் விஷயத்தை பற்றி உண்டான அனுராகத்தை சொல்கிறது —

பவள வாயாள்‌”‘ (திருமொழி 4 – 8 – 1) என்று அதரத்தை ப்ரவாளமாகச்‌ சொல்லுகிறது – சிவப்பை யிட்டாகையாலே, பகவத்‌,விஷயத்தில்‌ அந்த ஜ்ஞாநத்தினுடைய அநுராகதையைச்‌ சொல்லுகிறது.

கவள யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் காமரு சீர்க்
குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும்
தவள மாட நீடு நாங்கைத் தாமரையாள்  கேள்வன் என்றும்
பவள வாயாள் என் மடந்தை   பார்த்தன் பள்ளி பாடுவாளே –4-8-1-அவள் வாய் புலத்தும் படி அவயவ சோபை –இவள் உகப்பு மிகுந்த படி-அவன் இடம் ஆசை முதல் படி -திவ்ய தேச திரு நாமம் சொல்லி அதிலே இழிவது சரம பர்வம் –

செப்பு -பக்தி-செப்பன்ன மென் முலை-திருப்பாவை -20- -என்று பரிணதமான முலையை செப்பாகச் சொல்லுகையாலே – சேஷி விரும்பி மேல் விழும் படி பரிணதையான பக்தியை சொல்கிறது —

செப்பன்ன மென்முலை”” (திருப்பாவை 20) என்று முலைகளைச்‌ செப்பாகச்‌ சொல்லுகையாலே, ஸேஷிக்கு போக்‌யமாம்படி அந்த ஜ்ஞாநம்‌ பக்தி ரூபாபந்நமானமையைச்‌ சொல்லுகிறது.

முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பமுடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பன்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்–20-செப்புப் போலே சந்நிவேசம்-நிதி இட்டு வைக்கும் செப்புப் போலே அவன் கிடைக்குமிடம் – மலராள் தனத்துள்ளான் -என்னக் கடவது இறே-செப்புக்கு உள்ளே பொதிந்து வைத்த ஆபரணம் நினைத்த போதே பூணக் கிடையாதாப் போலே செப்பு போலே இருக்கிற ஸந்நிவேசத்தை யுடைத்தான அவள் முலையிலே அழுந்திக் கிடக்கிறவனை நமக்கு கிடைக்கப் புகா நின்றதோ

மின் -அணுத்துவம்-மின்னனைய நுண் மருங்குல்–பெரியாதிருமொழி -3-9-5-என்று இடையை மின்னாக சொல்கிறது –-நுண்மையை இட்டு ஆகையாலே -கீழ் சொன்ன ஞான அவஸ்த விசேஷங்களுக்கு
எல்லாம் ஆதாரமான ஆத்ம ஸ்வரூபத்தின் அணுத்வம் சொல்கிறது —

“மின்னனைய நுண் மருங்குல்‌”’ (திருமொழி 3 – 9 – 5) என்று இடையின்‌ நுண்மையையிட்டு மின்னாகச் சொல்லுகையாலே ஆத்மாவினுடைய அணுத்வம்‌ சொல்லுகிறது. 

தேர் -போக்யதை-தேரணங்கு அல்குல்-பெரிய திருமொழி 1-4-6– என்று நிதம்ப வைலஷண்யம் போக்தாவுக்கு போக்யமாய் இருக்கும் ஆகையாலே –தேனும் பாலும் கன்னலும் அமுதுமாக தித்தித்து –திருவாய் -4-3-10–என்கிறபடியே சேஷிக்கு மிகவும் ரசாவஹமாம் படி இருக்கிற ஆத்ம வஸ்துவின் போக்யதை சொல்கிறது —

“தேரணங்கல்குல்” என்று நிதம்பத்தினுடைய விஸ்த்ருதியைச்‌ சொல்லுகையாலே ஆத்மாவினுடைய போக்‌யதையைச்‌ சொல்லுகிறது.

தேரணங்கல்குல் செழும் கயல் கண்ணி திறத்து ஒரு மறத் தொழில் புரிந்து
பாரணங்கிமிலேறேழு முன்னடர்த்த பணி முகில் வண்ணன் எம்பெருமான்
காரணம் தன்னால் கடும் புனல் கயத்த கரு வரை பிள வெழக் குத்தி
வாரணம் கொணர்ந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே—–1-4-6-தேரானது பொருந்தி ஒப்பாய் நின்றுள்ள அல்குலை உடையளாய்-நிதம்ப பிரதேசத்தை உடையளாய்

யானுமேத்தி ஏழுலகும் முற்றுமேத்தி பின்னையும்
தானுமேத்திலும் தன்னை யேத்த வேத்த வெங்கு எய்தும்
தேனும் பாலும் கன்னலும் அமுதமாகித் தித்திப்ப
யானும் எம்பிரானையே ஏத்தினேன் யானுய்வானே –4-3-10–சர்வ ரஸ-என்கிற ரஸ்யத்தையாலும் தன பிரணயித்வ குணத்தை அபகரித்த உபகார ஸ்ம்ருதியாலும் இழிந்தேன்-திருப்பாவாடை ரசித்தது என்னா தன் வயிறு அறியாதே பரிச்சேதிக்க இழிவார் உண்டோ -என்னில் கலியர் மேல் விழும் போது விவேகித்தோ இழிவது

அன்னம் -கதி-அன்னம் அன்ன நடையாள்–பெரிய திருமொழி -3-7-9-என்று அன்னத்தை ஒப்பிடுகிறது நடை அழகுக்கு ஆகையாலே – சேஷரும் ததீயரும் ஸ்லாகிக்கும் படி ஸ்வரூப அனுரூபமாக நடக்கை ஆகிற கதியை சொல்கிறது —

“பெடையன்ன மென நடந்து” (திருமொழி 3 – 7 – 5), “தூவிசேரன்னமன்ன நடையாள்‌”’ (திருமொழி 3 – 7 – 9) என்று நடையை யிட்டு அன்னமாகச்‌ சொல்லுகையாலே, ஆத்மாவினுடைய ஸேஷத்வாநுரூபாநுஷ்டாநத்தைச்‌ சொல்லுகிறது.

தாய் எனை என்று இரங்காள் தடந்தோளி தனக்கமைந்த
மாயனை மாதவனை மதித்து என்னை யகன்ற இவள்
வேயன தோள் விசிறிப் பெடையன்ன மென நடந்து
போயின பூங்கொடியாள்
புனலாலி புகுவர் கொலோ ?–3-7-5-வேயன தோள் விசிறிப் – மூங்கில் போன்று இருந்துள்ள தோள் வீசி (இடைப்பெண்கள் கையை வீசியே நடப்பார்கள் அன்றோ )பெடை யன்ன மென நடந்து – வெறும் அன்னம் எனில் ஆண் நாறும் என்று -பெடை யன்னம் -என்றாள் (ஆண் நாறும் -பும்ஸ்த்வ கந்தம் வீசும்)

காவியங்கண்ணி எண்ணில் கடி மா மலர்ப் பாவை யொப்பாள்
பாவியேன் பெற்றமையால் பணைத் தோளி பரக்கழிந்து
தூவி சேர் அன்னம் அன்ன நடையாள் நெடுமாலொடும் போய்
வாவி யந்தண் பணை சூழ் வயலாலி புகுவர் கொலோ ?–3-7-9-தூவி சேர் அன்னம் அன்ன நடையாள்
நடையாலே பிச்சேற்ற வல்லள்-நெடுமாலொடும் போய் – நடைக்கு பிச்சேறி வ்யாமோஹிக்குமவள்

ஆக இப்படி மயில் பிறை இத்யாதி வர்ண னார்ஹ அவயவ விசேஷ யுக்தமாய் –-என் தெய்வ உருவின் சிறு மான் –திருவாய் -4-4-2- -என்று அப்ராக்ருதமாகச் சொன்ன ரூபமானது – ஞான விகாஸ சுத்யாதிகளுக்கு ஆஸ்ரயமாய் –-அகமேனி-என்று ஆந்தரமாய் இருக்கிற ஆத்ம ஸ்வரூபத்தின் வகுப்பு என்ற படி — வகுப்பு ஆவது–தர்மி தர்ம வைசிஷ்டியாலே -ஏவம் பூத ரூபக அர்ஹமாம் படி இருக்கிற கட்டளை —

ஆக இத்தால்‌, “என்‌ தெய்வ வுருவில்‌ சிறுமான்‌”’ (திருவா. 4 – 4 – 2) என்று அப்ராக்ருத ஸ்வபாவமாய்‌, *“’அகமேனியொழியாமே” (திருவா. 9 – 7 – 10) என்று ஸர்வேஸ்வரனுக்கு அந்தரங்க, ஸரீரமான ஆத்மாவுக்கு அவயவ பூதமான ஜ்ஞாநத்தினுடைய பிதைகள்‌ என்கிறார் –

பெய் வளைக் கைகளைக் கூப்பி, ‘பிரான் கிடக்கும் கடல்’ என்னும்;
செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டி, ‘சிரீதரன் மூர்த்தி ஈது’ என்னும்;
நையும் கண்ணீர் மல்க நின்று, ‘நாரணன்’ என்னும்; அன்னே!என்
தெய்வ உருவிற் சிறுமான் செய்கின்றது ஒன்று அறியேனே.
–4-4-2–என்-தெய்வ உருவிற்-சத்ருசமாகவும் சம்பந்தியாகவும் உள்ள பதார்த்தங்களை அவனாக அனுசந்திக்க நித்ய ஸூரிகள் வடிவு போலே இவள் வடிவும் அப்ராக்ருதமாய் இருக்கிறபடி–சிறுமான்-அவர்களைக் காட்டில் இவளுக்கு வாசி –பருவத்தாலே இளையளாய் முக்தையாய் இருக்கும் – அவர்கள் பிரதம ஜா யே புராணா-என்னும் படி இறே இருப்பது-

தகவன்று என்று உரையீர்கள் தடம் புனல் வாய் இரை தேர்ந்து
மிக வின்பம் பட மேவும் மெல் நடைய அன்னங்காள்
மிக மேனி மெலிவு எய்தி மேகலையும் ஈடு அழிந்து என்
அகமேனி ஒழியாமே
திரு மூழிக் களத்தார்க்கே–9-7-10—என்-அகமேனி ஒழியாமே–புறம்பு கழலுமவை கழன்றது -அகவாயில் ஸ்வரூபம் கழலுவதற்கு முன்பே -நான் முடிவதற்கு முன்னே -என்கை –

கீழ் பிராப்ய த்வரையை அன்றோ தலை மகளாகச் சொல்லிற்று –அவயவ வர்ணனையில் ஆத்ம
ஸ்வரூப பரமாகச் சொல்லுவான் என் என்னில்—மூன்று அவஸ்தையும் இவர் தமக்கே ஆகையாலே –
தத் தத வவஸ்தைகளோடேச் சேர்ந்த வேஷத்தால் சகலமும் இவர் தாமேயாக நின்று பேசுகையாலே –
பிராப்ய த்வரையை அடைந்து நிற்கிற இவர் ஸ்வரூபத்துக்கே தலை மகளான நிலை ஆகையாலே -அப்படி சொல்லக் குறை இல்லை-

ஆக தோழி தாய் என்னும் அவஸ்தைகளில் சொல்லும் பஹு வசனத்துக்கு விஷயங்களையும் –
தலை மகளான அவஸ்தையில் சொல்லும் பருவங்களையும் – அவயவ வர்ணனைகளையும்
தர்சிப்பித்தாராய் நின்றார் கீழ் ..-இவ் அவஸ்த த்ரயத்தின் உடைய வ்ருத்தி விசேஷங்களை எல்லாரும்
அறியும் படி பிரகாசிப்பிகிறார்
மேல் -இனி மேல் கீழ்ச் சொன்ன அவஸ்தா த்ரயத்தினுடைய வ்ருத்தியைச்‌ சொல்லுகிறது—

சூழ்ச்சி அகற்றினீர் என்னும் பழி இணக்கி எங்கனே என்னும் மேல் எழுத்து முன்னின்றாய் இவளை நீரென்னும் இருபடை மெய்க்காட்டு நீர் என்னே என்னும் உடன்பாடு இடை இல்லை என்னும் உதறுதல்
இருந்து இருந்து நடந்தாள் என்னும் கொண்டாட்டம் அவஸ்தா த்ரய வ்ருத்தி–சூரணை -138-

சூழ்ச்சி அகற்றினீர் என்னும் பழி-அதாவது- தோழிமார் பலர் கொண்டு போய்ச் செய்த சூழ்ச்சியை யார்க்கு உரைக்கேன் -பெரியாழ்வார் -3-7-4–என்று தோழிமார் அன்றோ இவளைக் கொடு போய் அவ் விஷயத்தில் அகப்படுத்தி – இப்படி ஆக்கினார்கள் என்று தாயானவள் தோழிமார் மேல் பழி இடுவது —துலைவில்லி மங்கலம் கொண்டு புக்கு அமுத மென் மொழியாளை நீர் உமக்கு ஆசை இன்றி அகற்றினீர் –திருவாய் -6-5-2-என்று அவ்வூரிலே கொண்டு புக்கு – விஷயத்தைக் காட்டி நீங்களே அன்றோ இப்படி கை கழியப் பண்ணினீர்கள் என்று தோழியானவள் தாயார் மேல் பழி இடுவதும் –

“தோழிமார் பலர்‌ கொண்டு போய்ச் செய்த சூழ்ச்சியை யார்க்குரைக்கேன்‌”” (பெரியா. திரு. 3 – 7 – 4) என்று தாயார்‌ தோழிமார் மேலே பழியிட, * அமுத மென் மொழியாளை நீருமக்காசை யின்றியகற்றினீர்‌”” (திருவா. 6 – 5- 2) என்று தோழி தாய்மார் மேல்‌ பழியிட,

ஏழை பேதையர் பாலகன் வந்து என் பெண் மகளை எள்கித்
தோழிமார் பலர் கொண்டு போய்ச் செய்த சூழ்ச்சியை யார்க்கு உரைக்கேன்
ஆழியான் என்னும் ஆழம் மோழையில் பாய்ச்சி அகப்படுத்தி
மூழை  உப்பு அறியாதது என்னும் மூதுரையும் இலளே – 3-7- 4—அணியார் ஆழி (8-3-)-என்கிற படியே
சர்வ ஆபரணங்களும் தானேயாக போரும்படியான -திரு ஆழியை உடையவன் என்று -பிரசித்தமாய் –
ஒருவரால் நிலை கொள்ள ஒண்ணாதபடியாய் இருப்பதாய் – அகப்பட்டாரை உள் வாங்கிக் கொள்ளும் கீழாறு போலே இருக்கிற விஷயத்திலே –உள்ளூற தள்ளி அகப்படும்படி பண்ணி செய்த க்ருத்ரிம வியாபாரத்தை யார்க்கு சொல்வேன்

குமுறுமோசை விழவொலித் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
அமுத மென்மொழி யாளை நீர்உமக் காசை யின்றி அகற்றினீர்

திமிர்கொ டாலொத்து நிற்கும் மற்றிவள் தேவ தேவபிரான்என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர்மல்க நெக்கொசிந்து கரையுமே.–6-5-2–ஓத்துச் சொல்வார் -சங்கீர்த்தனம் பண்ணுவார் -பாடுவாராய் -எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாதபடி விரவிக் கொண்டு எழுகிற த்வனியைக் கொண்டு திரு நாளிலே ஆரவாரம் பரமபதத்தில் கொண்டு புக்கி கோளாகிலும் மீட்கலாயிற்று-கொண்டு புக்கு-இவள் அறியாதே இருக்க நீங்களே கொண்டு புக்கு –-அமுத மென்மொழி யாளை நீர்உமக் காசை யின்றி அகற்றினீர்-இவள் பேச்சைக் கேட்டால் போன உயிரும் மீளுமாயிற்று -மென் மொழி -அம்ருதத்தில் வியாவ்ருத்தி-ஸ்ரவண யோக்யமாய் இராதே அம்ருதம்-மதுரா மதுரா லாபா என்று இவள் பேச்சைக் கேட்க ஆசைப்பட்டு இருக்குமவன் பெற்றுப் போனான் -நீங்கள் ஆசை இல்லாமையால் அகற்றினி கோள் -தம் தாமுக்கு அனர்த்தத்தை தாம் தாமே விளைத்துக் கொள்ளுவார் உண்டோ -அகற்றுகை யாவது –அகலும் படி பண்ணினி கோள் என்கை –அதாவது இவ் ஊரில் புக்க பின்பு இவர்களோடு வார்த்தை சொல்லாத தவிர்ந்தாள் யாயிற்று

இணக்கி எங்கனே என்னும் மேல் எழுத்து-அதாவது-இணக்கி எம்மை எம் தோழிமார் விளையாட போந்துமின் என்னப் போந்தோமை –திருவாய் -6-2-8– என்று உன்னை வெறுக்கிறது என்?-இணைக்கு பார்வையாய் நின்று உன் பக்கலிலே அகப்படுத்தின தோழி மாராலே வந்தது அன்றோ இது எனபது —எங்கனயோ அன்னைமீர்காள் என்னை முனிவது நீர் -5-5-1-என்று எனக்கு அவ் விஷயத்தைக் காட்டி -இப் ப்ராவண்யத்தை விளைத்த தாய்மாரான நீங்கள் என்னை பொடிகிறபடி எங்கனே தான் என்பதாய்- கீழ் சொன்ன பழி இரண்டுக்கும் தலைமகள் மேல் எடுத்து இடுகையும் –

““இணக்கி எம்மை யெம்‌ தோழிமார்‌ விளையாடப்‌ போதுமின்‌ என்னப்போந்தோமை”‘ (திருவா. 6 – 2 – 8) என்றும்‌, ‘‘எங்ஙனேயோ அன்னைமீர்காளென்னை மூனிவது நீர்‌?” (திருவா. 5 – 5 – 1) என்றும்‌ தலைமகள்‌, “உங்களாலே யன்றோ எனக்கு இந்த ப்ராவண்யம்‌ உண்டாய்த்து‘ என்று பழி இரண்டுக்கும்‌ மேலெழுத்திட.

பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர்ஞான மூர்த்தினாய்!
இணக்கி எம்மை எம்தோழிமார் விளையாடப் போதுமின் என்னப்போந்தோமை
உணக்கி, நீ வளைத்தால், என்சொல்லார் உகவாதவரே?–6-2-8—உன்னோட்டை கலவி அபாயம் என்று அறியாதே எங்களை உன்னோடே சேர்த்து –இவ்வளவாக விளைத்தவர்களை சொல்லாதே உன்னைத் சொல்லுகிறது என்-பகவத் விஷயத்தில் வைஸத்யம் பிறந்தால் உபகாரகரை கொண்டாடும் என்னும் அர்த்தம் இ றே உள்ளோடுகிறது-நித்யம் யதீய சரனவ் சரணம் மதியம் -எம் தோழிமார் -சஜாதீயராய் இறே இருப்பது-விளையாடப் போதுமின் என்னப்போந்தோமை--கிருஷ்ணன் உண்டு என்று அறிந்தோம் ஆகில் வாரோம் –இவ்வகப்பாட்டை அறிந்து இருந்தோம் ஆகில் வாராது ஒழியல் யாயிற்று

எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்!
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என்நெஞ்சமே.–5-5-1–இஸ் ஸுந்தர்யத்திலே மூட்டின நீங்களே மீட்கப் பார்க்கிற படி எங்கனேயோ –நீங்கள் கற்பித்தது பலிக்கப் பூக்கவாறே பொடியும் இத்தனையோ –நீர் -என் பிரகிருதி அறியும் நீங்கள் –என்னை முனிவது-என்னுடைய பிராவண்யத்துக்கு அடியான நம்பியுடைய வடிவு அழகை அன்றோ இன்னாதாவது -உங்களையும் மறந்து -என் ப்ரக்ருதியையும் மறந்தால் விஷயத்தையும் மறக்க வேணுமோ-முனிவது–எங்ஙனேயோ-கொண்டாட வேண்டும் தசையில் போடுவது எங்கனேயோ

முன்னின்றாய் இவளை நீரென்னும் இருபடை மெய்க்காட்டு-(இருபடை மெய்க்காட்டு- இரண்டு பக்கங்களிலும் சேர்ந்து பேசுதல் -ஒரு சமயம் தாய் பக்கல் சேர்ந்து கொண்டு தலைவியை முனைவது -ஒரு சமயம் தலைவி பக்கல் சேர்ந்து கொண்டு தாயை வெறுப்பது )-முன்னின்றாய் என்று தோழி மார்களும் அன்னையரும் முனிதீர்––திருவாய் -5-5-9-என்னும் படி-இதுக்கு முன்பு ஒருவர் கண் படாமல் வளர்ந்து போன நீ இப்பொழுது எல்லோரும் காண புறப்பட்டு முன்னே நின்றாய் என்று தோழிமார் தாய் மாரோடு கூடி நின்று தலை மகளைப் பொடிவது-இவளை நீர் அன்னைமீர் உமக்கு ஆசை இல்லை விடுமினோ –திருவாய் -6-5-1- என்று தாய்மாருக்கு கார்ய உபதேசம் பண்ணுவாரைப் போலே தோழி தலை மகளுக்குத் துணை செய்வதாகக் கொண்டு இரண்டு தலைக்கும் ஓர் ஒரு போது சஹகரிக்கை யாகிற இரு படை மெய்க்காட்டும் –

முன்னின்றாயென்று தோழிமார்களும்‌ அன்னையரும்‌ முனிதிர்‌”” (திருவா. 5 – 5 – 9) என்று தோழி தாய்மாரொடே கூடி நின்று தலைமகளைப் பொடிந்தும்‌, **தொலை வில்லி மங்கலம்‌ தொழுமிவளை நீரினி அன்னைமீர்‌ உமக்காசையில்லை விடுமினோ”? (திருவா. 6 – 5 – 1) என்று தோழி, தாய்மார்க்கு கார்யோபதேஸம்‌ பண்ணுவாரைப் போலே தலைமகளுக்கும்‌ ஸஹகரித்தும்‌ இப்படி(இருபடை மெய்க்காட்டு.)

முன்னின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர்
மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
சென்னி நீண்முடி ஆதியாய உலப்பில் அணி கலத்தன்
கன்னல் போல் அமுதாகி வந்து என் நெஞ்சம் கழியானே.–5-5-9-ஒருவராலும் காண ஒண்ணாதபடி வர்த்திக்கும் ஸ்த்ரீத்வத்தை யுடையவள் யாயிற்று இவள் –யா நசக்யா புராத்ரஷ்டும் பூதைராகாசனகாபி -என்னும்படி இருக்குமவள் இறே –துணையாவாரோடு பொடிவாரோடு வாசி அற பொடியத் தொடங்கிற்று

துவளில்மா மணி மாடமோங்கு தொலைவில்லி மங்கலம்தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்! உமக்காசை இல்லை விடுமினோ;

தவள ஒண்சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண்மலர்க் கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறுமே.–6-5-1-பர வியூஹ விபவங்களிலே தொழுதவள் அல்லள்-அது தன்னிலும் உள்ளு நிற்கிற அரவிந்த லோசன் அளவாகில் அன்றோ மீட்கலாவது-அவனோடே சம்பந்தம் உள்ள இடம் எங்கும் புக்கு அவகாஹித்தவளை மீட்கப் போமோ -விஷயம் பரோஷமாய்-எட்டாது காண் என்று மீட்கவோ -ப்ரத்யக்ஷ விஷயம் பரிச்சின்னம் என்று மீட்கவோ-தொழும் இவளை -ஞானா நந்தங்களுக்கு முன்னே நிரூபகம் இ றே பாரதந்தர்யம் -தொழுகையே நிரூபகமாய் இருக்கிறவளை –தாஸோஹம் வாஸூ தேவஸ்ய -ப்ராஞ்சலீம் ப்ரஹவமாஸீனம் -ஒன்றை உருகு பதத்தில் பிடித்தால் வலித்தாலும் அப்படியே உருவ நிற்கும் ஆயிற்று
நீர் -இவளுடைய ப்ராவண்யத்தில் சாதனா புத்தி பண்ணுகிற நீங்கள்-இனி -இவளுக்கு இவ் ஊரைக் காட்டின பின்பு-அன்னைமீர்!-ப்ராப்த யவ்வனை யானாலும் -பெற்றோம் என்கிற ப்ராப்தியைக் கொண்டு மீட்கப் போமோ –அவ்வருகு பட்டாலும் நியந்தரு தையைக் கொண்டு மீட்கவோ
உமக்காசை இல்லை விடுமினோ;-வகுத்தவன் கைக்கு கொண்டால் உமக்கு ஆசை இல்லை

நீர் என்னே என்னும் உடன்பாடு-அதாவது-அன்னையரும் தோழியரும் நீர் என்னே என்னாதே நீளிரவும் துஞ்சுவரால்–திருவாய் -5-4-5–என்று தாய் மாறும் தோழியரும் இத் தசையில் என்னை ஆஸ்வசிப்பியாதே இரவு முழுக்க உறங்கா நின்றார்கள் என்று தாய்மாரோடும் தோழி மார்களோடும் தலை மகளுக்கு உண்டான உடன்பாடும் ( உறவு கொண்டாடுதல் ) –

(நீரென்னேயென்னு முடன்பாடு) ““அன்னையரும்‌ தோழியரும்‌ நீரென்னே யென்னாதே நீளிரவும்‌ துஞ்சுவரால்‌”‘ (திருவா. 5 – 4 – 8) என்று தலைமகள்‌ தாய்மாரொடும்‌ தோழிமாரோகும்‌ உடன்பாடாக வார்த்தை சொல்ல;

ஆர் என்னை ஆராய்வார்? அன்னையரும் தோழியரும்
நீர் என்னே என்னாதே நீளிரவும் துஞ்சுவரால்

கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால்
பேர் என்னை மாயாதால் வல்வினையேன் பின் நின்றே.–5-4-5—இவளுடைய அவசாதிசயம் தாய்மாரோடு தோழிமாரோடு வாசி அற சொல்லும் படி யாய் விட்டது -என் நினைவே நினைவாய் இருப்பார்க்கும் -நிஷேதிப்பார்க்கும் வாசி யற்றது-அன்னையரும் தோழியருமான நீங்கள் -என்னே என்னாதே -என் பட்டாய் என்னாதே என்னுதல்-அன்றியே நீர் -இது ஒரு நீர்மையே –அவனுக்கு தன்னை ஒழியச் செல்வதாய் இருக்க -அவனை ஒழிய தனக்குச் செல்லாத படியாய் இருக்கிற இது ஒரு ஸ்வ பாவமே என்னே -இது ஒரு ஆச்சர்யம் ஆதல் –

இடை இல்லை என்னும் உதறுதல்-அதாவது அன்னைமீர்காள் என்னுடை தோழி மீர்காள் என் செய்கேன்– -8-2-7- என்ற அளவில் அவர்கள் எங்களைக் கேட்கில் மீள அமையும் என்ன –-உங்களோடு எங்கள் இடை இல்லை-8-2-7–என்று இவ் விஷயத்தில் நின்றும் மீட்க நினைக்கிற உங்களோடு எனக்கு சம்பந்தம் இல்லை என்று இரு தலையும் உதறுகையும்-

(இடை யில்லை யென்னு முதறுதல்‌) அவர்கள்‌, “நீ எங்கள் வார்த்தை கேட்கில்‌ மீளவமையும்‌’ என்ன, ”உங்களோடு எங்களிடையில்லையே”’ (திருவா. 8 – 2 – 7) என்று ‘நீங்கள்‌ இவ் விஷயத்தினின்றும்‌ மீட்கத் தேடில்‌ உங்களுக்கும்‌ எனக்கும்‌ ஒரு ஸம்ப,ந்தமில்லை” என்று அவர்களை அதிக்ரமிக்க,

மாலரி கேசவன் நாரணன் சீ மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று
ஓலமிட வென்னைப் பண்ணி விட்டிட்டு ஒன்றுமுருவுஞ் சுவடுங்காட்டான்
ஏல மலர்க்குழல் அன்னைமீர்காள் ! என்னுடையத் தோழியர்காள் ! என் செய்கேன் ?
காலம் பல சென்றும் காண்பதாணை உங்களோடும் எங்களிடை இல்லையே–8-2-7-உங்களோடு எனக்கு ஒரு சம்பந்தம் இல்லை -நீங்கள் ஒன்றும் சொல்ல வேண்டா -என்கிறாள் –

இருந்து இருந்து நடந்தாள் என்னும் கொண்டாட்டம்-அதாவது-இருந்து இருந்து அரவிந்த லோசனன் என்றே நைந்து இரங்கும்-6-5-8- -என்று ஒருகால் அரவிந்த லோசனன் என்னும் போது பல ஹாநியாலே நடுவே பலகால் இளைத்து இருந்து இருந்து – அவன் கண் அழகுக்கு வாசகமான அத் திரு நாமத்தைப் பல காலும் சொல்லி சிதிலையாய் அழியா நின்றாள் என்று இவள் பிராவண்யத்தைக் கண்டு தோழிமார் கொண்டாடுவது —திரு கோளூர்க்கே நேர் இழை நடந்தாள்-6-7-9–என்று அவன் வர்த்திக்கிற தேசத்தை குறித்துப் போனாள் என்று அமைந்து இருக்க பகவத் ப்ராவண்ய அதிசயத்தைப் பற்ற பஹுமானம் பண்ணி- நடந்தாள்- என்று தாயார் கொண்டாடுகிற இதுவும் –

(இருந்திருந்து நடந்தாள்‌ என்னும்‌ கொண்டாட்டம்‌) ‘“இருந்திருந் தரவிந்தலோசன என்றென்றே தைந்திரங்குமே” (திருவா. 6 – 5 – 8) என்று தோழி கொண்டாட்டமும்‌, “நேரிழை நடந்தாள்‌ எம்மை ஒன்றும்‌ நினைத்திலளே”” (திருவா. 6 – 7 – 9) என்று தாயார்‌ கொண்டாட்டமுமான

திருந்து வேதமும் வேள்வியும் திரு மா மகளிரும் தாம்மலிந்து
இருந்து வாழ்பொருநல் வடகரை வண்தொலை வில்லி மங்கலம்
கருந்தடங் கண்ணி கைதொழுத அந்நாள் தொடங்கி இந்நாள்தொறும்
இருந்திருந்து அரவிந்தலோசந! என்றென்றே நைந்திரங்குமே.–6-5-8--ஒரு கால் அரவிந்த லோசனன் என்னும் போது நெடும் போது கூடிப் பெரு வருத்தத்தோடே சொல்ல வேண்டி இருக்கை –என்றென்றே – இருக்க மாட்டாதே நிரந்தரமாக சொல்லா நின்றாள் -அவ் வழி யாலே அழகையும் குணங்களையும் நினைத்து நையா நின்றாள் -இரங்குமே-சரீரத்து அளவு அன்றிக்கே நெஞ்சம் சிதிலமாகா நின்றது –

காரியம் நல்லனகள் அவைகாணில் என் கண்ணனுக்கு என்று
ஈரியா யிருப்பாள் இதெல்லாம் கிடக்க இனிப்போய்ச்
சேரி பல்பழி தூஉய் இரைப்பத் திருக்கோளூர்க்கே
நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே.–6-7-9—திருக் கோளூரிலே போகையாலே போனாள் என்னாதே-நடந்தாள் என்கிறாள் -வயிற்றில் பிறந்தாரே யாகிலும் பகவத் விஷயத்தில் ஓர் அடி வர நின்றால் கௌரவித்து வார்த்தை சொல்ல வேணும் என்கை -வழித் துணையாக நினைத்திலள் -அங்கே சென்று எதிர் கொள்ளுவாரில் ஒருத்தியாக நினைத்திலள் -பழி சொல்லுவார் கோடியாகவும் நினைத்திலள் –குரவ கிங்கரிஷ்யந்தி-என்றும் நினைத்திலள்-

இவை அனைத்தும்)தோழி தாயார் மகள் என்ற அவஸ்தய த்ரயத்தின் வியாபாரம் என்கை –

இவை அவஸ்தா த்ரய வ்ருத்தி.

இதில் பழி மேல் எழுத்து -என்கிற இரண்டாலும் – அகிஞ்சித் கரஸ்ய சேஷத்வானுபத்தி ( கைங்கர்யம் செய்யாதவனுக்கு சேஷத்வம் சித்தியாது )– என்கிறபடி- சேஷ வ்ருத்த அந்வயம் இல்லாத போது -சேஷத்வ சித்தி இல்லாமையாலே சேஷ வ்ருத்தியிலே நோக்காய் இருக்கும்–சம்பந்த ஞானம் பிராப்ய ருசிக்கு ஹேதுவாகையாலும் விலஷண குண விக்ரக விசிஷ்டனாய் உபேயமாய் இருக்கிற வஸ்து தன்னையே தத் பிராப்ய உபாயமாக பரிகிரஹிக்கையாலே – உபாயத்வ அத்யவசாயம் உபேய வைலஷண்யத்தை முன்னிட்டுக் கொண்டு இருக்கையாலே உபேய ருசிக்கு ஹேதுவாய் இருக்கையாலும் – இவற்றில் ஓர் ஒன்றை பார்த்தால் இதுவே பிராப்யா த்வரை ஹேது என்னும் படி இருக்கையும் – பிராப்ய த்வரை வேஷம் தன்னை நிரூபித்தாலும் அவை இரண்டும் அடியாக இது வந்தது என்று தோற்றும் படி இருக்கையும் சொல்லுகிறது — இப்படி சம்பந்த ஞானமும் உபாயத்வ அத்யாவசமும் பிராப்ய தசைக்கு காரணமாக இருக்கிற இது பிரதம தசை ..

இத்தால்‌ இந்த வ்ருத்திகளினுடைய அவஸ்தா த்ரயத்துக்கும்‌ ஸ்வாபதேஸம்‌ – “சூழ்ச்சி அகற்றினீர்‌’ என்று அந்யோந்யம்‌ பழியிடுகிற வித்தால்‌ சேஷத்வ ஜ்ஞாநம்‌ ஸேஷ வ்ருத்தி பர்பந்தமா யல்லதிராமையாலே அந்த ஸம்பந்த ஜ்ஞாநம்‌ ப்ராப்ய ருசிக்கு ஹேது என்றும்‌, உபாயாத்‌யவஸாயம்‌ உபேய வைலக்ஷண்யத்தை முன்னிட்டுக் கொண்டல்லதிராமையாலே அந்த அத்‌யவஸாயம்‌ உபேய ருசிக்கு ஹேது வென்றும்‌, மேலெழுத்து என்று ப்ராப்ய த்வரை தன்னை நிரூபித்தாலும்‌ இது ஸம்பந்த உபாயங்களிரண்டாலும்‌ வந்ததென்று சொல்லுகிற வித்தாலும்‌, ஸம்பந்த ஜ்ஞாநமும்‌ உபாயாத்‌யவஸாயமும்‌ ப்ராப்ய த்வரைக்கு ஹேது வென்று அந்த ஸம்பந்த உபாயங்களிரண்டினுடையவும்‌ ப்ராதாந்யம்‌ தோற்றி நிற்கிறது.

இருபடை மெய்காட்டு உடன்பாடு -என்கிற இரண்டாலும்-சம்பந்த ஞானம் ஆனது சேஷத்வம் ஸ்வரூபம் ஆன பின்பு -சேஷி தானே வந்து விஷயீகரிக்கக் கண்டு இருக்கை ஒழிய –-தான் பதருகை ஸ்வ பிரயோஜனத்தில் முதலிடுகையாலே ஸ்வரூப விருத்தம் என்னும் ஆகாரத்தாலே –-ஸ்வ பிரவ்ருத்தி நிவர்தகமான உபாயத்வ அத்யாவசத்துக்கு சஹகரித்தும் ,-இவ் அதி பிராவண்யம் உபாயத்தில் முதலிடில் செய்வது என் என்று இத் த்வரையை நிவர்த்திக்கப் பார்க்கிற உபாயத்வ அத்யாவசத்தை –
பிராப்த விஷயத்தில் பிராவண்யம் ஸ்வரூப அதிரேகி இல்லாமையாலே -இது நிவர்த்த நீயமும் அன்று —நிவர்திப்பிக்கத் தானும் போகாது என்று நிவர்தனோத் உத்யோகத்தைக் குலைத்து பிராப்ய த்வரைக்கு சஹகரித்தும் இப்படி இரண்டுக்கும் அனுகூலிக்க தக்கதாய் இருக்கும் படியும் – சேஷிக்கு அதிசயகரமான கைங்கர்யத்தில் அன்வயிப்பது எப்போது என்னும் அத்தாலும் – சித்தோ உபாயத்தை பற்றினார்க்கு விளம்ப ஹேது இல்லாமையாலே சீக்கிரமாக பிராப்யத்தை பெற வேணும் என்னும் அத்தாலும் செல்லுகிற பிராப்ய த்வரைக்கு -சம்பந்த ஞானமும் -உபாயத்வ அத்யாவச்யமும் -அனுகூலமாய் இருக்கும் படியையும் சொல்லுகிறது —இப்படி சம்பந்த ஞானம் உபய சக காரி ஆவது- பிராப்ய த்வரைக்கு நிராவ்தகங்களான சம்பந்த ஞான உபாயத்வ அத்யாவசயங்கள் முக பேதேண தத்தத் அனுகூலங்கள் ஆகிறது மத்யம தசை —

ப்ரதம தஸையில்‌ – வ்ருத்தி இருபடை மெய்க்காட்டென்கிற வித்தால்‌ ஸம்பந்த ஜ்ஞாநமானது ஸேஷத்வம்‌ ஸ்வரூபமான பின்பு அந்த ஸேஷி தானே வந்து விஷயிகரிக்கக்‌ கண்டிருக்கு மத்தனை யல்லது தான்‌ த்வரிக்கை ஸ்வரூப விருத்‌தம்‌ என்று உபாயாத்‌யவஸாயத்துக்கு ஸஹ்கரித்தும்‌, ஸேஷத்வம்‌ வ்ருத்தி பர்யந்தமாகையல்லது ஸித்‌தியாதென்று அந்த வ்ருத்தியில்‌ ருசியை விளைக்கையாலே ப்ராப்ய த்வரைக்கு ஸஹகரித்தும்‌, உடன்பாடென்கிற வித்தால்‌ ப்ராப்யம்‌ ஸம்பந்தாநுகுணமாகவும்‌ வேண்டுகையாலே ப்ராப்ய த்வரை இவை யிரண்டும்‌ கூடி நின்ற படி சொல்லிற்று.

உதறுதல், கொண்டாட்டம் ,என்கிற இரண்டாலும் இப்படி அனுகூலமாய்த் தோற்றி இருக்கிற சம்பந்த ஞானமும் உபாயத்வ அத்யவசாயமும் க்ரம பிராப்தியே அமையும் என்று பிராப்ய த்வரைக்கு நிவர்தகமாம் அளவில் – த்வரை இரண்டையும் அதிகிரமித்து போம் படியும் அப்படி த்வரை அதிகிரமித்த காலத்தில் , சம்பந்த ஞானமும் உபாயத்வ அத்யவசாயமும் அவத்யமாய் தோற்றுகை அன்றிக்கே
ஸ்லாக்யமாம் இருக்கும் படியைச் சொல்லுகிறது — இப்படி பிராப்ய த்வரை சம்பந்த ஞானம் உபாயத்வ அத்யவசாயமும் அதிகிரமிக்கையும் -அது தான் ஸ்லாக்கியம் ஆகையுமாகிற இது சரம தசை

ஆக இருபடை மெய்க்காட்டு உடன்பாடென்கிற இரண்டாலும்‌ ஸம்பந்த ஜ்ஞாநம்‌ உபாய வ்யவஸாயம்‌ உபேய ருசி என்கிற இவற்றில்‌ சேர்ந்து நின்றது மத்‌யம தஸையில்‌ வ்ருத்தி-உதறுதல்‌ கொண்டாட்டம்‌ என்கிற இரண்டாலும்‌ ப்ராப்ய த்வரையானது ஸம்பந்த உபாயங்களை அதிக்ரமிக்க, பலதஸையில்‌ ஸ்வரூபம்‌ ப்ராப்யாநுகு,ணம்‌ என்னுமிடத்தையும்‌, ‘“எம்மை யொன்றும்‌ நினைத்திலளே”” (திருவா. 6 – 7 – 9) என்று உபாயாத்‌யவஸாய ஸத்‌பாவம்‌ இல்லை யென்னுமிடத்தையும்‌ சொல்லுகிறது, சரம தஸையில்‌ வ்ருத்தி;

ஆக சம்பந்த ஞானம் உபாயத்வ அத்யவஸாயம் பிராப்ய த்வரை ஆகிற அவஸ்த த்ரயத்தின் உடைய வ்ருத்தி விசேஷங்களை சர்வரும் அறிந்து அனுசந்திக்கும் படி ஸங்க்ரஹேன அருளி தர்சிப்பத்தார் ஆய்த்து–

ஆக அவஸ்த_த்ரய வ்ருத்தி –

இவ் அவஸ்தா த்ரயத்தில் தாய் என்றும் மகள் என்றும் சொல்லுகிற அவஸ்தைகளில் ஸ்வ ஸ்வ சத்ருக்களும் பந்துக்களுமாக சொல்லுகிறது யாரை என்னும் ஆ காங்ஷையிலே அருளிச் செய்கிறார் —

தாயார் ஏதலர் உற்றீர்கள் என்னும் சாத்திய சித்த சாதன நிஷ்டரை மகள் நம்முடைய ஏதலர் யாமுடைத் துணை என்னும் சித்த சாதன சாத்திய பரரை-சூரணை-139-

(தாயார் ஏதலர் என்னும் சாத்திய சாதன நிஷ்டரை-செய்யும் சாதனங்களில் – கர்ம ஞான பக்தி பிரபத்திகளில் – ஊன்றி இருப்பவர்களை – -என்றும் -தாயார் உற்றீர்கள் என்னும் சித்த சாதன நிஷ்டரை—அவனையே சித்த சாதனமாகக் கொண்டு உபயாந்தரங்கள் சம்பந்தம் இல்லாவர்கள் -என்றும் -மகள் நம்முடை ஏதலர் என்னும் சித்த சாதன பரரை-என்றும் மகள் யாமுடைத் துணை என்னும் ஸாத்ய பரரை என்றும் )

தாயார் ஏதலர் என்னும் சாத்திய சாதன நிஷ்டரை-அதாவது –தாயாரான உபாய அத்யவஸாய தசையில்
ஏதலர் முன்னா என் நினைந்து இருந்தாய் -பெரிய திருமொழி -2-7-5-என்று சத்ருக்களாகவும் –
உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுவேன் நான்–திருவாய் -5-6-7- -என்று பந்துக்களாகவும் சொல்லும்
ஸித்த ஸாதன நிஷ்ட பிரதிகூலரான சாத்ய சாதன நிஷ்டையரையும் , அனுகூலரான ஸித்த சாதன நிஷ்டரையும் –

தாயாரான உபாயாத்‌யவஸாய தஸையில்‌ ஸ்வரூபம்‌ ப்ராப்யாநுகு,ணம்‌ என்னுமிடத்தையும்‌, ”எம்மை யொன்றும்‌ நினைத்திலளே ” (திருவா. 6-9- 7) என்று உடாயாத்‌யவஸாய ஸத்‌ பாவமில்லை என்னுமிடத்தையும்‌ சொல்லுகிறது ஆரை என்னில்‌, ஸித்‌த ஸாதநத்துக்கு எதிர்த் தட்டான உபாயாந்தர நிஷ்டரையும்‌, அநுகூலரான ஸித்‌த ஸாதந நிஷ்டரையும்‌ சொல்லுகிறது-

ஓதிலும் உன் பேர் அன்று மற்று ஓதாள் உருகும் நின் திரு வுரு நினைந்து
காதன்மை பெரிது கையற வுடையள் கயல் நெடுங்கண் துயில் மறந்தாள்
பேதையன் பேதை பிள்ளைமை பெரிது தெள்ளியள் வள்ளி நுண் மருங்குல்
ஏதலர் முன்னா வென் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே-2-7-5—பிள்ளைத் தனமும்-தெள்ளியமும்–அப்ரயோஜகம் –வடிவு போருமாயிற்று -கை விட ஒண்ணாமைக்கு-ஆசைப்பட்டாய் இறே — அழகிதாய உண்டாயுது இறே என்று ஏசுகிற சத்ருக்கள் முன்பே –உகவாதார் முன்பே நம்முடையார் நோவுபட விட்டுப் பார்த்திருக்குமது நமக்கு போராது என்று இருக்கக் கடவ நீர் இவளிடை யாட்டத்தில் நினைந்து இருந்தது என் –நதேநுரூப-நாத ந அநுரூப -ஸ்தோத்ர ரத்னம்-ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு ஆகில் போரும் என்னவுமாம் –-இப்படி கைவிட்டு இருக்குமது உமக்கு போராது-

உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும் உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும்
உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும் உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும் உற்றாரிலி மாயன் வந்து ஏறக்கொலோ?
உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான்? உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றவே.–5-6-7-ஆனாலும் பந்துக்களான எங்களுக்கு சொல்ல வேண்டாவோ என்னில்-பந்துக்களாக அமையுமோ -விஷயம் சொல்லாக வேண்டாவோ -உறவு முறையான உங்களுக்கு என்ன பாசுரத்தை சொல்லிச் சொல்லுவேன்-

காரியம் நல்லனகள் அவைகாணில் என் கண்ணனுக்கு என்று
ஈரியா யிருப்பாள் இதெல்லாம் கிடக்க இனிப்போய்ச்
சேரி பல்பழி தூஉய் இரைப்பத் திருக்கோளூர்க்கே
நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே.–6-7-9-திருக் கோளூரிலே போகையாலே போனாள் என்னாதே-நடந்தாள் என்கிறாள் -வயிற்றில் பிறந்தாரே யாகிலும் பகவத் விஷயத்தில் ஓர் அடி வர நின்றால்கௌரவித்து வார்த்தை சொல்ல வேணும் என்கை -வழித்துணையாக நினைத்திலள் -அங்கே சென்று எதிர் கொள்ளுவாரில் ஒருத்தியாக நினைத்திலள் -பழி சொல்லுவார் கோடியாகவும் நினைத்திலள் -குரவ கிங்கரிஷ்யந்தி-என்றும் நினைத்திலள்-

மகள் நம்முடைய ஏதலர் என்னும் சித்த சாதன பரரை--அதாவது மகளான பிராப்ய த்வரா தசையில் –
நம்முடைய ஏதலர் முன்பு நாணி –திருவாய் -8-2-1–என்று- அந்தரங்க சத்ருக்களாயும் –யாமுடைத்துணை என்னும் தோழி மார் -திருவாய் -9-9-5–என்று ஸ்வ சமான சுக துக்கரான பந்துக்களாகவும் சொல்லும்
பகவத் ஏக பரராய் இருக்க செய்தேயும் -தத் உபாய பாவத்தில் ஊன்றி நின்று – இத் த்வரை பாரதந்த்ர்யதுக்கு சேராது என்று நிஷேதிக்கும் -ஸித்த சாதன பரரையும் — தன்னைப் போல் உபேய பாவத்தில் ஊன்றி உடன்பாடராய் இருக்கும் சாத்திய பரரையும் என்கை —

(மகள்‌ நம்முடை ஏதலர்‌ யாமுடைத் துணை என்னும்‌) மகள்‌ என்று சொல்லுகிற ப்ராப்ய த்வரா தஸையில்‌ “நம்முடை ஏதலர்‌ முன்பு நாணி?” (திருவா. 8 – 2 – 1) என்று அந்த விரோதிகளாகவும்‌,யாமுடைத் துணையென்னும்‌ தோழிமாரும்‌”’ (திருவா. 9 – 9 – 5) என்று தன்னோடு ஸம ஸுக துக்கிகளான பந்துக்களாகவும்‌ சொல்லுகிறது ஆரை என்னில்‌, தன்னைப் போலே பகவத்‌ விஷயமொன்றிலும்‌ இழிந்திருக்கச் செய்தேயும்‌ அத்தை ப்ராப்யம்‌ என்று கொள்ளாதே ப்ராபகம்‌ என்று கொள்ளுகிற ஸித்‌த ஸாதந நிஷ்டரையும்‌, தன்னைப்‌ போலே ப்ராப்யமென்றிருக்கிற ஸாத்‌ய பரரையும்‌ சொல்லுகிறது –

நங்கள் வரி வளை யாயங்களோ நம்முடை ஏதலர் முன்பு நாணி
நுங்கட்கு யான் ஓன்று உரைக்கும் மாற்றம் நோக்குகின்றேன் எங்கும் காண மாட்டேன்
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன் தடமுலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன்
வெங்கண் பறவையின் பாகன் எங்கோன் வேங்கட வாணனை வேண்டிச் சென்றே–8-2-1–தோழிமார் ஹிதம் சொல்லி இப்போது மீட்கப் பார்க்கிறார்கள் ஆகிலும் பேறும் இழவும் விழுக்காட்டில் ஒத்து இருக்கையாலே -நம்முடைய ஏதலர் -என்கிறாள் -ஏதலர் -சத்ருக்கள் -இவர்களுக்கு சத்ருக்கள் இல்லை இறே -ஹிதம் சொல்லி மீட்கப் புகுகிற தாய்மார் யாயிற்று சத்ருக்கள் -ஏதலர் முன்பு நாணி -சத்ருக்கள் முன்பு லஜ்ஜித்து-நுங்கட்கு-தோழிமாரான உங்களுக்கு நான் ஒரு வார்த்தை சொல்ல வேணும் என்று ஆராய்ந்து பாரா நின்றேன் –எங்கும் காண மாட்டேன்-இதுக்கு ஒரு பாசுரம் இட்டு சொல்ல வேணும் என்று பார்த்த இடத்து ஒருபடியாலும் க்ஷமை ஆகிறி லேன்

யாமுடை நெஞ்சமும் துணையன்றாலோ ஆ புகு மாலையும் ஆகின்றாலோ
யாமுடை ஆயன் தன் மனம் கல்லாலோ அவுனுடைத் தீங்குழல் ஈருமாலோ
யாமுடைத் துணை என்னும் தோழி மாரும் எம்மின் முன்னவனுக்குமாய் வராலோ
யாமுடை யார் உயிர் காக்குமாறு என் அவனுடை யருள் பெறும் போதரிதே–9-9-5—நமக்குத் பரதந்த்ரை களாய் உசாத் துணை என்னும்படியான தோழிமாரும் அவன் விஷயமாக ஈடுபடுகிற எனக்கு முன்னே -இவளுக்கு அவன் உதவப் பெறுகிறது இல்லை -என்று அவன் பொருட்டு ஈடுபடா நிற்பார்கள்

கீழில் வாக்யத்தில்-சூழ்ச்சி -என்றும் இதில்-ஏதலர்-என்றும் மற்றை ஆழ்வார்கள் சந்தைகளையும் கூட்டி எடுத்தது ஆழ்வார்கள் எல்லாரும் ஏக கண்டர் ஆகையாலே அருளிச் செயல்களுக்கு எல்லாம் இந்த ஸ்வாபதேசம் ஒக்கும் என்று தோற்றுகைக்காக–

இந்த பிரசங்கத்தில் அருளிச் செயலில் , வரும் பல அந்யாபதேசங்களுக்கும் ஸ்வாபதேசங்களை அருளிச் செய்கிறார் மேல்-பல வாக்யங்களாலே —

நாலயலார் அயல் சேரியார் உபாய சதுஷ்ட அந்தர்யாமித்வ பரர்-சூரணை -140-

(நாலயலார்-உபாய சதுஷ்ட-பரர்-அயல் சேரியார்-அந்தர்யாமித்வ பரர்-)-நாலயலார் உபாய சதுஷ்ட பரர்-
அதாவது நாலயலாரும் அறிந்து ஒழிந்தார்—நாச்சியார் -12-2-என்கிற நாலயலாரும் ,-அயல் சேரியார்-அந்தர்யாமித்வ பரர்-அதாவது-நானக் கரும் குழல் தோழிமீர்காள் அன்னையர்கள் அயல் சேரியீர் காள் –திருவாய் -7-3-2-என்கிற அயல் சேரியாரும் -ஆகிறார் கர்ம ஞான பக்தி பிரபத்தி களாகிற உபாய சதுஷ்டத்திலும் ஊன்றி இருக்கும் அவர்களும் – அர்ச்சாவதாரிகளில் அபேஷை அற்று தேவதாந்தர்யாமித்வதிலே ஊன்றி இருக்கும் அவர்களும் என்கை —

”நாலயலாருமறிந்தொழிந்தார்‌] (நா.தி.12 – 2) என்றும்‌, “*அயற்சேரியுள்ளாருமெல்லே” (திருவா. 6 – 7 – 4) என்றும்‌ நாலசலாகவும்‌, அயல் தெருவாகவும்‌ சொல்லுகிறது ஆரை என்னில்‌, கர்ம ஜ்ஞாந பக்தி ப்ரபத்தி என்கிற நான்கு உபாய நிஷ்டரையும்‌, பரத்வம்‌ முதலான மற்றை நாலிடத்திலும்‌ உறவற்று கேவலம்‌ ஸ்வரூபாந்தர்யாமியளவிலே உறைத்திருக்குமவர்களையும்‌ சொல்லுகிறது –

நாணி யினியோர் கருமம் இல்லை நால் அயலாரும் அறிந்து ஒழிந்தார்
பாணியாது என்னை மருந்து செய்து பண்டு பண்டு ஆக்க யுறுதிர் ஆகில்
மாணியுருவாய் யுலகளந்த மாயனைக் காணில் தலை மறியும்
ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில் ஆய்ப்பாடிக்கே என்னை யுய்த்திடுமின்--12-2-இது தான் பிறர் அறியாமைக்கே தான் பரிஹரிக்கப் பார்க்கிறது – இது அறியாதார் சிலர் உண்டாய் பரிஹரிக்க வேணுமே-இவள் தான் முந்துற அறியாமே பரிஹரித்து அநந்தரம் அதுக்கு அசலில் உள்ளார் அறியாமல் பரிஹரித்து அநந்தரம் அதுக்கு அசலில் உள்ளார் அறியாமல் பரிஹரித்து – இப்படி போரா நிற்கச் செய்தே ஓர் அசல் அறிந்து- மற்ற வசல் அறிந்து -அவ்வளவில் அடங்காதே அவ் ஊரில் உள்ளவர்கள் அறிந்து அது தான் புற வெள்ளம் இட்டு அவ் வழியாலே எங்கு உள்ளார்களும் அறிந்தார்கள் ஆய்த்து-இவள் தான் திருக் கோட்டியூர் நம்பியை போலே -பகவத் விஷயம் ஒருவரால் அறியலாகாது என்று மறைத்துக் கொடு போருமவள் ஒருத்தி போலே காணும்-

கொல்லை என்பர்கொலோ? குணம்மிக்கனள் என்பர்கொலோ?
சில்லைவாய்ப் பெண்கள் அயற்சேரி உள்ளாரும் எல்லே!
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே
மெல்லிடை நுடங்க இளமான் செல்ல மேவினளே.–6-7-4–சிலுகு வாரிகளான நம் சேரியில் உள்ளாரும் -அயல் சேரியான அந்நிய ஸ்த்ரீகளும் -வசன பரரானவர்களும் -அவர்களுக்கு உடல் அன்றியே -இருந்த வூரில் இருக்கும் மானிடர் எத்தவங்கள் செய்தார் கொலோ -என்னும் ப்ரேமார்த்த சித்தரும்-எல்லே!-என்னே என்று ஆச்சர்யம் ஆதல் -சொல்லுகிறவர்களைக் குறித்து சம்போதானம் ஆதல் 

நானக் கருங்குழல் தோழிமீர் காள்! அன்னையர் காள்! அயற் சேரியீர் காள்!
நான் இத் தனி நெஞ்சம் காக்க மாட்டேன் என் வசம் அன்று இது இராப்பகல் போய்த்
தேன் மொய்த்த பூம்பொழில் தண் பணை சூழ் தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
வானப் பிரான் மணி வண்ணன் கண்ணன் செங்கனி வாயின் திறத்ததுவே.–7-3-2—நானம் என்று கந்தம் -இவள் தளராமைக்காக தோழிமார் தரித்து காட்டின படி-அன்னையர் காள்! அயற் சேரியீர் காள்!நான் இத் தனி நெஞ்சம் காக்க மாட்டேன்-தோழிமாரோடு-தாயமாரோடு -அந்நியரோடு வாசி அற ஹிதம் சொல்லத் தொடங்கினார்கள் -ஏக கண்டைகளான தோழிமாரோடு அந்நியரோடு வாசி அற இவள் ஆற்றாமை பிரசித்தமான படி -பகவத் ப்ராவண்யத்தாலே உங்களில் வ்யாவருத்தையான என்னைக் காட்டில் ப்ரவணம் ஆகையால் ஸ்வ தந்திரமான நெஞ்சை நோக்க மாட்டேன்-

பிரபத்தி பரரையும் அசலாகச் சொல்லலாமோ என்கிற சங்கையிலே அருளி செய்கிறார் மேல்-ஆனால்‌ ப்ரபத்தி நிஷ்டரையும்‌ அசலாகச்‌ சொல்லுமோ என்னில்‌,

கீழை மேலை வடக்கில் அவை புறம்பாக தன் பற்று உள் அசல் .–சூரணை-141-

(கீழை மேலை வடக்கில் அவை புறம்பு அசலாக -தன் பற்று உள் அசல் .)கீழை மேலை வடக்கில் அவை புறம்பு அசலாக — -..அதாவது .-கீழை அகத்து தயிர் கடைய–பெருமாள் 6-2– -என்றும் –
மேலை அகத்து நங்காய் வந்து காண்மின்கள்–பெரிய திருமொழி -10 -7 -2– -என்றும் –
வடக்கிலகம் புக்கிருந்து மின் போல் நுண் இடை யாள் ஒரு கன்னிகையை வேற்றுவம் செய்து வைத்த–பெரியாழ்வார் 3-1-2-என்றும்-கிரியையும் -தர்சனமும் -அனுபவமும் ஆகிய கர்ம யோகமும் -ஞான யோகமும் -பக்தி யோகமும் – ஸித்த சாதன பரருக்கு புறவாசலாய்
தன் பற்று உள் அசல் – அதாவது – அவ் விஷயம் தன்னில் ஸ்வ கத ஸ்வீகாரம் உள் அசலாய் இருக்கும் என்ற படி–(தயிர்கடைதல் -கிரியை -கர்மயோகம் -வந்து காண்மின் -காண்கை-ஞானயோகம் -வேற்று உருவம் செய்து வைத்த -வேற்று உருவம் படுதல் பக்தி யோகம் -மூன்றும் உபாயாந்தரங்கள்-அசல் பகை -பிரபத்தி ஸ்வகத ஸ்வீகாரம் உள்பகை )(மேம்பொருள் போக விட்டு -மெய்ம்மையை மிக உணர்ந்து -ஆம்பரிசு அறிந்து கொண்டு -ஐம்புலன் அகத்து அடக்கி – காம்பறத் தலை சிரைத்து -உன் கடைத்தலை இருந்து வாழும் சோம்பராம் நிலைக்கு முரண்பட்டது ஆதலால் தன் பற்று உள் அசல் என்கிறார்-அசல் -அயல் -பகை என்றவாறு )

“கீழையகத்துத் தயிர் கடைய”* (பெரு.தி. 6 – 2) இத்யாதி யாலே சொல்லுகிற கர்ம நிஷ்டரையும்‌, ‘“மேலையகத்து நங்காய்‌ வந்து காண்மின்கள்‌” (திருமொழி 10 – 8 – 2) என்று சொல்லுகிற ஜ்ஞாந யோக நிஷ்டரையும்‌, ““வடக்கிலகம்‌ புக்கிருந்து மின் போல்‌ நுண்ணிடையாளொரு கன்னியை வேற்றுருவம்‌ செய்து வைத்த அன்பா” (பெரியா. தி. 3 – 1 – 2) என்றும்‌ சொல்லுகிற பக்தி யோக நிஷ்டரர்க்கும்‌ ஸித்‌த ஸாதந நிஷ்டரர்க்குப்‌ புறவாசலாகையாலும்‌ இவ் விஷயத்திலே இழிந்திருக்கச் செய்தேயும்‌ தன் பற்றை உபாயமென்றிருக்குமவர்கள்‌ உள்ளசலாயிருக்கையாலும்‌ சொல்லுகிறது-

கெண்டை ஒண் கண் மடவாள் ஒருத்தி கீழை அகத்து தயிர் கடைய
கண்டு ஒல்லை நானும் கடைவன் என்று கள்ள விழியை விழித்து புக்கு
வண்டு அமர் பூம் குழல் தாழ்ந்து உலாவ வாண் முகம் வேர்ப்ப செவ்வாய் துடிப்ப
தண் தயிர் கடைந்திட்ட வண்ணம் தாமோதரா! மெய் அறிவன் நானே 6-2—பாவன பிரகர்ஷத்தாலே -ஸ்ரீ திருவாய்ப்பாடியிலே -ஒரு அகமும் உண்டாய் — அதுக்கு கீழை அகமுமாய்ச் செல்லுகிறது காணும் இவர்க்கு –நீ தான் மூலையடியே நடந்தது வேறு ஒரு இடத்தேயோ –என்னகத்துக்கு கீழை அகத்தன்றோ

காலை எழுந்து கடைந்த விம்மோர் விற்கப் போகின்றேன் கண்டே போனேன்
மாலை நறுங்குஞ்சி நந்தன் மகன் அல்லால் மற்று வந்தாரும் இல்லை
மேலை யகத்து நங்காய் வந்து காண்மின்கள் வெண்ணெயே யன்றிருந்த
பாலும் பதின் குடம் கண்டிலேன் பாவியேன் என் செய்கேன் என் செய்கேனோ –10-7-2-வந்தாருக்கு அறிவிக்குமது தவிர்ந்து அழைத்துக் காட்ட வேண்டும் அளவாய் வந்து விழுந்தது –கடைந்து சேமித்து வைத்த வெண்ணெயே அன்றிக்கே கடைகைக்கு யோக்யமான பாலும் கூடக் கண்டிலேன் –

பொன் போல் மஞ்சனமாட்டி யமுதூட்டிப் போனேன் வரும் அளவு இப்பால்
வல் பாரச் சகடம் இறச் சாடி வடக்கிலகம் புக்கு இருந்து
மின் போல் நுண் இடையாள் ஒரு கன்னியை வேற்று உருவம் செய்து வைத்த

அன்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-2 –இவ் வகத்துக்கு வட அருகில் அகத்திலே புக்கு இருந்து –-மின் போல் நுண் இடையாள் ஒரு கன்னியை – மின் போலே நுண்ணியதான இடையை உடையளாய்-நவ யவ்னையாய் இருப்பாள் ஒருத்தியை-சம்போக சிஹ்னங்களாலே விகர்த வேஷையாம்படி பண்ணி வைத்த-

ஊரார் நாட்டார் உலகர் கேவல ஐஸ்வர்ய காம ஸ்வதந்த்ரர்-சூரணை -142-

ஊரார்-கேவலர் –அதாவது-ஊரார் இகழிலும்–சிறிய திருமடல் – –என்றும் –-ஊரவர் கவ்வை –திருவாய் –5-3-4–என்றும் – நாட்டார் -ஐஸ்வர்யா காமர்-நாட்டாரோடு இயல் ஒழிந்து–திருவாய் -10-6-2- -என்றும் –
உலகர் -ஸ்வ தந்த்ரர் எங்கள் கண் முகப்பே உலகர்கள் எல்லாம் திருவாய் -9-2-8–என்றும் – இம் மட உலகர் –திருவாய் -9-2-7–என்றும்- ஊரும் நாடும் உலகமும்–திருவாய் -7-7-2 -என்கிற இடங்களில்
ஊரார் –என்பது ஆத்ம பிராப்தி காமரான கேவலரை – நாட்டார் -என்பது புத்ர பசு அஸ்வ அன்னாதிகளான இக லோக ஐஸ்வர்ய காமரை — உலகார் –என்பது ஸ்வர்க்காதி பரலோக ஐஸ்வர்ய காமரான ஸ்வதந்த்ரரை–என்கை —

”ஊரும்‌ நாடுமுலகமும்‌”‘ (திருவா, 6 – 7 – 2) என்றும்‌, “ஊரவர்‌ கவ்வை” (திருவா, 8 – 3 – 4) என்றும்‌, ”நாட்டாரோடியல் வொழிந்து ”* (திருவா, 10 – 6 2) என்றும்‌, ““எங்கள் கண் முகப்பே உலகர்கள்‌”‘ (திருவா. 9 – 2 8) என்றும்‌ சொல்லுகிற இது – ஊரார்‌ என்று கேவலரையும்‌, நாட்டார்‌ என்று புத்ர பங்வந்நாதிகளான ஐஹலெளகிக ஐஸ்வர்ய காமரையும்‌, உலகத்தவர்‌ என்று ஸ்வர்க்காதி பர லோக ஐஸ்வர்ய காமரான ஸ்வதந்த்ரரையும்‌ சொல்லுகிறது.-

ஊரார் இகழ்ந்திடப் பட்டாளே மற்று எனக்கு இங்கு
ஆரானும் கற்பிப்பார் நாயகரே நான் அவனை–அப்படி அவன் பின்னே போனவளை ஊரார் கொண்டாடின வித்தனை யல்லது பழி சொன்னார் உண்டோ –

செங்கண் நெடியானை தேன் துழாய்த்
தாரானை தாமரை போல் கண்ணானை எண்ணரும் சீர்ப்
பேராயிரமும் பிதற்றி பெரும் தெருவே
ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான்
வாரார் பூம் பெண்ணை மடல்-ஊரார் இகழ்ந்து இடப் பட்டாளே-என்று அவளை ஊரார் கொண்டாடினால் போலே-என்னையும் தலையாலே சுமப்பார்கள் -சுமவாதே இகழ்ந்தார்களே யாகிலும் –-ஊராது ஒழியேன் நான் – இவர்கள் கொண்டாடாதே பழி சொன்னார்களே யாகிலும் நான் மடலூருகை தவிரேன்

ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னை சொல் நீர்படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ! கடியனே?–5-3-4–ஊரார் சொல்லுகிற பழியை ப்ரேமத்துக்கு எருவாக இட்டு -பிராதி கூல்ய-நிவ்ருத்தி பிறந்து -இவ்விசயத்தே கை வைத்த அன்றே பழி சொல்லாத தொடங்கினார்கள் –விபீஷணஸ்து தர்மாத்மா நது ராக்ஷஸ சேஷ்டித்த -என்றாள் இறே ஒருத்தி -நான் மறக்கப் பார்த்தாலும் -அவர்கள் ஸ்மாரகராய் அவத்யக்கரராக நின்றார்கள் -இவர்களால் இறே எனக்கு தரித்து இருக்க லாயிற்று

ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்றக் கற்பு வான் இடறி
சேரும் நல் வளம் சேர் பழனத் திருக் கோளூர்க்கே
போருங்கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே –6-7-2–தான் இருந்த ஊரும்-அத்தோடு சேர்ந்த நாடும் -அத்தோடு சேர்ந்த லோகமும் -ராமாவதாரத்திலும் ஒரு ஊர் இறே திருந்திற்று -இங்கு லோகே அவ தீர்ண பாமர்த்த சமக்ர பக்தி யோகாயா -என்கிறபடியே யாயிற்று திருத்துகை –அங்கே பரம சாம்யா பன்னரைத் தேடித் போகிறாள் ஆகில் தான் திருத்தினார் ஆகாதோ –அரவிந்த லோசனன் என்றும் -மட்டவிழ் தண்ணம் துழாய் -என்றும் விரை மட்டலர் தண் துழாய் -என்றும் சொல்லா நிற்கை -ப்ரீதி பிரேரிதராய் அக்ரமாகச் சொல்லுகை –ஜாமதகன் யஸ்ய ஜல்பத –என்கிற படியே -இப்படி லோகம் அடங்க அக்ரமமாக சொல்லும் படி பண்ணி –

எம்மிடர் கடிந்து இங்கு என்னை யாள்வானே இமையவர் தமக்கும் ஆங்கனையாய்
செம்மடல் மலரும் தாமரைப் பழனத் தண் திருப் புளிங்குடிக் கிடந்தாய்
நம்முடை யடியார் கவ்வை கண்டுகந்து நாம் களித்துள நலம் கூர
இம்மட வுலகர் காண நீ யொரு நாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே–9-2-7-அஞ்ஞரான சம்சாரிகள் அனுபவிக்கும் படி எங்கள் கண் வட்டத்தில் ஒரு நாள் இருந்து அருள வேணும் -நித்ய ஸூரிகளுக்கு சதா தர்சனமான விஷயம் நீ ஒரு நாள் எங்கள் கண்ணுக்கு விஷயமாய் இருந்தால் ஆகாதோ -உன்னுடைய தர்சனம் அதிக்ருதாதிகாரமாக வேணுமோ –

எங்கள் கண் முகப்பே யுலகர்கள் எல்லாம் இணை யடி தொழுது எழுது இறைஞ்சி
தங்கள் அன்பாரத் தமது சொல் வலத்தால் தலைச் தலைச் சிறந்து பூசிப்ப
திங்கள் சேர் மாடத் திருப் புளிங்குடியாய் திருவைகுந்தத் துள்ளாய் தேவா
இங்கண் மா ஞாலத்தி தனுளும் ஒரு நாள் இருந்திடாய் வீற்று இடம் கொண்டே–9-2-8—எங்கள் கண் முகப்பே இருக்க வேணும் -அது செய்து அருளும் இடத்தில் லௌகீகர் எல்லாம் திருவடிகளின் சேர்த்தி அழகை கண்டு திருவடிகளிலே விழுவது எழுவதாய் ஆஸ்ரயித்து –

வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானைப்
பாட்டாயே பல பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே–10-6-2–அஹங்கார மமக வச்யரோடு தொற்றற்ற படி கண்டாயே -இவை என்ன உலகு இயற்கை –கொடு உலகம் காட்டேல்-என்னப் பண்ணின படி கண்டாயே –நிருபாதிக சர்வ ரக்ஷகனைக் கிட்டப் பெற்றோம் -நிருபாதிக சர்வ பந்துவைக்க கிட்டப் பெற்றோம்-

கேவலரை ஓர் ஊராக ( ஊராராக ) சொல்லுவான் என் ? என்கிற சங்கையில் அருளி செய்கிறார் —கேவலனையும்‌ ஓரூராகச்‌ சொல்லுவானென்‌ என்னில்‌,–

இறுகல் இறப்புக்கும் இறந்தால் தங்குமூர் ஒக்குமே–சூரணை-143-

(இறுகல் இறப்பு-சுருங்கிய குறைந்த மோக்ஷம் -கைவல்யம் )இறுகல் இறப்புக்கும்-அதாவது-அபரிச்சின்ன ஸ்வரூப ரூப குண விபூதி பர ப்ரஹ்ம அனுபவம் போல் அன்றிக்கே அநுபூத ஆத்ம அனுபவம் மாத்ரம் ஆகையாலே –இறுகல் இறப்பு -என்கிற சங்கோச ரூபமான மோஷத்துக்கும் –இறந்தால் தங்குமூர் ஒக்குமே–அதாவது-ஜரா மரண மோஷாய மாம் ஆஸ்ரிதய யதந்தியே-ஸ்ரீ கீதை -7-29- -என்கிற படியே ஜரா மரணாதிகளில் அந்வயம் அன்றி இருந்து அனுபவிக்கும் போது ஸ்ருஷ்ட்டி ,
சம்ஹாரங்களுக்கு கர்மீபவிக்கும் பிரகிருதி மண்டலத்துக்கு அவ்வருகான பரம ஆகாசத்தில் இருந்து அனுபவிக்க வேண்டுகையாலே –யோகி நாம் அம்ருதம் ஸ்தானம் ஸ்வாத்ம சந்தோஷ காரிணீம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-6-38-– என்கையாலே –-இறந்தால் தங்குமூர் அண்டமே -பெரிய திருமொழி 7-2-10–என்கிற படி பிரகிருதி சம்பந்தம் அற்றால் – போய் வசிக்கும் தேசம் ஒக்கும் என்ற படி —

“எல்லாம் விட்ட இறுகலிறப்பு’” (திருவா. 4 – 1 – 10) என்று ஐஸ்வர்யத்தையும்‌ -பகவதநுபவத்தையும்‌ விட்டு ஆத்மாநுபவ மாத்ரமான ஸங்கோசத்தை மோக்ஷமென்று சொல்லுகிற கேவலனுக்கு அவ் வநுபவம்‌ நித்யமாம் போது “ஜரா மரண மோக்ஷாய”‘ (கீதை) என்று அதுக்கு விரோதி யான ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களுக்கு கர்மீ பவிக்கைக் கடியான ப்ரக்ருதி ப்ராக்ருத ஸம்பந்தம்‌ அற வேண்டுகையாலே ““யோகிநாமம்ருதம்‌ ஸ்தாநம்‌ ஸ்வாத்ம ஸந்தோஷ காரிணாம்‌”” என்கிறபடியே “இறந்தால்‌ தங்குமூரண்டமே கண்டு கொண்மின்‌”” (திருமொழி 10 – 2 – 10) என்று அவனுக்கு வஸ்தவ்யம்‌ தேஸ விஸேஷமாக வேண்டுகையாலே ஊர்‌ என்கிறார் –

குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம் விட்ட
இறுகல் இறப்பெனும் ஞானிக்கும் அப்பயன் இல்லையேல்,
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்; பின்னும் வீடு இல்லை,
மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில், வீடு அஃதே.–4-1-10-இந்த சங்கோசத்தையும் மோக்ஷமாக நினைத்து இருக்கும் ஞான நிஷ்டனுக்கும்-இறுகல்-பகவத் அனுபவத்தைப் பற்ற தமக்கு சங்குசிதமாய் இருக்கை-இறப்பு -மோக்ஷம்

ஜராமரணமோக்ஷõய மாமாஸ்ரித்ய யதந்தி யே
தே ப்ரஹ்ம தத்விது: க்ருத்ஸ்நமத்யாத்மம் கர்ம சாகிலம்
-7-29-மூப்பினின்றும் மரணத்தினின்றும் விடுபடுமாறு என்னை வழிபட்டு முயற்சி செய்வோர் அது என்ற பிரம்மத்தை யுணர்வார்;
ஆத்ம ஞான முழுதையும் உணர்வார்; செய்கையனைத்தையு முணர்வார்.

அங்கு வானவர்க்கு ஆகுலம் தீர அணி இலங்கை யழித்தவன் தன்னைப்
பொங்கு மா வலவன் கலிகன்றி புகன்ற பொங்கத்தம் கொண்டு இவ்வுலகினில்
எங்கும் பாடி நின்று ஆடுமின் தொண்டீர் இம்மையே இடரில்லை இறந்தால்
தங்குமூர் அண்டமே கண்டு கொண்மின்
சாற்றினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ—10-2-10-இச் சரீர அநந்தரம் இருக்கும் இடம் பரம பதம் – அது தான் அனுபவத்தால் அறிந்து கொள்ளும் அத்தனை – எல்லாரும் அறியச் சொன்னோம் –

சிறு சீரார் சுளகுகள் உபய விவேக பரிகரம்-சூரணை-144-

( சிறு சுளகு உபய விவேக பரிகரம்–சீரார் சுளகு உபய விவேக பரிகரம்-)சிறு சுளகு-அதாவது
சிறு சுளகு மணலும் கொண்டு –நாச்சியார் -2-8–என்றும்–சீரார் சுளகு-அதாவது-சீரார் சுளகில் சில நெல் பிடித்து எறியா -சிறிய திருமடல் -21-என்றும் சொல்லுகிற இடங்களில் சிறு சுளகாவது நுண் மணலையும் பெரு மணலையும் பிரிப்பது ஒன்றாகையாலே தேக ஆத்மா விவேகத்துக்கு பரிகரமான பிரமாணம் —சீரார் சுளகாவது -இவளுக்கு இவ் வியாமோகத்தை விளைத்தார் யார் என்று ஆராய்கிற
அளவிலே –சில நெல் பிடித்து எறியா-என்று தொடங்கி –பேர் ஆயிரம் உடையான் என்றாள் – என்று
தேவதாந்தரங்கள் அன்று –சர்வேஸ்வரன் என்று விவேகிக்கிற போதைக்கு -உபகரணம் ஆகையாலே –
ஆத்மா பரமாத்மா விவேகத்துக்கு பரிகரமான பிரமாணம் என்கை —உபய விவேகமாவது த்யாஜ்யோ உபாதேய ரூபோ அபய வஸ்து விவேகம் ஆகையாலே பிரகரண உசிதமாக இப்படிச் சொல்லத் தட்டு இல்லை —

”சிறு சுளகும்‌ மணலுங் கொண்டு”’ (நா.தி. 2 – 8) என்று சிறு சுளகாவது – பெரு மணலையும்‌ நுண் மணலையும்‌ பிரிப்பதொன்றாகையாலே தேஹாத்ம விவேகத்துக்கு பரிகரமான ப்ரமாணம்‌, ”சீரார் சுளகில்‌ சில நெல்‌ பிடித்தெறியா” (சிறியதிரு மடல்‌) என்று தொடங்கி ““பேராயிரமுடையானென்றாள்‌”’ என்று இவளுக்கு இவ் வ்யாமோஹத்தை விளைத்தான்‌ ஸர்வேஸ்வரனாகையாலே, சீரார்‌ சுளகென்பது ஆத்ம பரமாத்ம விவேகத்துக்கு பரிகரமாய்ப்‌ போருகிற ப்ரமாணம் –

வட்ட வாய்ச் சிறு தூதையோடு சிறு சுளகும் மணலும் கொண்டு
இட்ட மாவிளையோடு வோங்களைச் சிற்றில் ஈடழித்து என் பயன்
தொட்டுதைத்து நலியேல் கண்டாய் சுடர்ச் சக்கரம் கையில் ஏந்தினாய்
கட்டியும் கைத்தாலின்னாமை அறிதியே கடல் வண்ணனே2-8–இவற்றினுடைய விசித்திர சந்நிவேசம் இருந்தபடி கண்டாயே-இவற்றைக் கொண்டு எங்களுடைய இச்சைக்கு ஒருவரால் பிரதிஹதி பண்ண ஒண்ணாத படி விளையாடுகிற எங்களை

அது கேட்டு-காரார் குழல் கொண்டைகட்டுவிச்சி கட்டேறி
சீரார் சுளகில் சில நெல் பிடித்து எறியா
வேரா விதிர் விதிரா மெய் சிலிரா
அங்கு ஆரலங்கல் ஆனமையால் ஆய்ந்து கை மோவா
பேர் ஆயிரம் உடையான் என்றாள்சீரார் சுளகில்சுளகுக்கு சீர்மை யாவது -பதர் அறுத்து மணியும் மணியாக்கிப் பதரும் பதராக்குமது இறே –இச் சுளகும் -தேவதாந்த்ரங்கள் ஆகிற கூளத்தையும் பதரையும் அறுத்து-மணியே மணி மாணிக்கமே -என்கிற மணியைக் காட்டப் புகுகிறாள் இறே – ஆகையால் -சீரார் சுளகு –கை மோவா-பாவனா பிரகர்ஷத்தாலே –விரை குழுவு நறும் துளவம் மெய் நின்று கமழும் –என்கிறபடியே கை திருத் துழாய் நாறும் இறே-பேர் ஆயிரம் உடையான் என்றாள் –
நாமம் பலவுமுடைய நம்பி இறே இப்படி பண்ணினாலும்-பேர் ஆயிரம் உடையான் என்றாள் – ஓன்று தோற்றிற்று இரண்டு தோற்றிற்று நாலு தோற்றிற்று பத்து தோற்றிற்று நூறு தோற்றிற்று-ஆயிரம் பேர் தோன்றா நின்றதீ -என்றாள் –பேர்த்தேயும் -காரார் திருமேனி காட்டினாள் – அவனது காளமேகம் போன்ற திரு மேனியை உவமையாக காட்டினாள் – ஸ்ரமஹரமான மேகத்தைக் காட்டி வடிவைக் காட்டினாள் –காரார் திரு மேனி கண்டதுவே காரணமாக விறே இவள் தான் இப்படிப் பட்டது-

மாலை கங்குல் காலை பகல் ரஜஸ் தமஸ் சத்வ சுத்த சத்வ ஜ்ஞானங்கள் —சூரணை -145-

மாலை –அதாவது .-செங்களம் பற்றி நின்று எல்கு புன் மாலை-திருவிருத்தம் -77—செல்கதிர் மாலை–திருவாய் –9-9-1 -இத்யாதிகளில் சொல்லுகிற மாலையாவது –-ரஜஸ் ஞானம் –-அதாவது –-ராகோத்தரமாய் -பதார்த்தங்கள் விசதமாக பிரகாசியாமை கொண்டு அயதாபிரதிபதிக்கு உறுப்பாய் இருக்கும் சந்த்யா காலம் ஆகையாலே – பதார்த்தங்களில் அந்யதா பிரதி பத்திக்கு உறுப்பான ராஜச ஞானம் —

மாலையும்‌ வந்தது ” (திருவா. 9 – 9 – 10) என்றும்‌, ”செங்களம்பற்றி நின்றெள்கு புன் மாலை ”? (திருவிரு. 77) என்றும்‌ சொல்லுகையாலே, மாலையாவது – ஸந்த்‌யை; அது ராகோத்தரமா யிருப்ப தொன்றாகையாலே ராஜஸ ஜ்ஞாநம்‌,

திங்களம் பிள்ளை புலம்பத் தன் செங்கோலரசு பட்ட
செங்களம் பற்றி நின்று எள்கு    புன்மாலை தென் பாலிலங்கை
வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா
நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே
 –  -77—தமக்கு உண்டான ஞான பிரகாசமும் துயர் அடையும் படி விவேகமும் குலைந்து-பக்தியே விஞ்சி ஆற்றாமையே விளைக்கும் கொடிய காலம்- புலம்பிற்று என்னும் படியாக சிவந்த கிரணங்கள் நடப்பாகிற செங்கோலை யுடைய தன்னரசான ஆதித்யன் பட்ட ரக்தத்தாலே சிவந்த களம் என்னலாம்படியான செக்கர் வானத்தைப் பற்றி நின்று ஈடுபடுகிறது என்னலாம் படி புல்லிதாய் உறாவித் தோற்றின மாலையானது–

மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ வண் குறிஞ்சி இசை தவரும் ஆலோ
செல்கதிர் மாலையும் மயக்கும் ஆலோ செக்கர் நன் மேகங்கள் சிதைக்கும் ஆலோ
அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ –9-9-1—செல்லப்பட்டு இருந்துள்ள கதிரை  யுடைத்தான மலையானது மயங்கப் பண்ணா நின்றது -அஸ்தமியா நின்றுள்ள ஆதித்யனை யுடைய ஸந்த்யையானது மோஹிப்பியா நின்றது -புடைவையை வாயிலே கொடுத்து நலிவாரைப் போலே ஓடுகிற வியசனத்துக்கு போக்கு விட்டு கூப்பிட ஒண்ணாத படி உணர்த்தி அழியும் படி மோஹிப்பியா நின்றது-

மாலையும் வந்தது மாயன் வாரான் மா மணி புலம்ப வல்லேறு அணைந்த
கோல நன் நாகுகள் உகளுமாலோ கொடியன குழல்களும் குழறுமாலோ
வாலொளி வளர் முல்லை கரு முகைகள் மல்லிகை யலம்பி வண்டாலுமாலோ
வேலையும் விசும்பில் விண்டு அலறுமாலோ என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே–9-9-10-மாலையையும் அவனையும் கூடப் பிணைத்து விட்டாள் போலே காணும் -அவன் வருவதாக குறித்துப் போன காலமும் வந்தது -தான் வருகிறிலன் – மாயன் –தன்னைக் காணவே பிரதி கூலங்கள் எல்லாம் அனுகூலமாம் படி தோற்றும் ஆச்சர்ய பூதன் வரக் காண்கிறிலன்-

கங்குல்-அதாவது-சூழ்கின்ற கங்குல் —திருவிருத்தம் -72–செல்கின்ற கங்குல்–திருவாய் -5-4-10– கங்குல் நாழிகை–பெரிய திருமொழி -9-5-3–இத்யாதிகளில் சொல்லுகிற கங்குல் ஆவது – பதார்த்தங்கள் ஒன்றும் தோற்றாது படியாய் -ஏதேனும் தோற்றுமது உண்டாகில் – விபரீதமாகத் தோற்றும் படி இருக்கும் திமிரோபஹத ராத்திரி காலம் ஆகையாலே – தமஸ் ஞானம் –அதாவது-ஜ்ஞாதவ்ய பிரகாசமும் இன்றியே -விபரீத பிரதி பத்திக்கு ஹேதுவாய் இருக்கும் தாமச ஜ்ஞானம்-

“கங்குல்‌ நாழிகை ஊழியில்‌” (திருமொழி 9- 5 – 3) என்றும்‌, ”செல்கின்ற கங்குல்வாய்‌”” (திருவா. 5 – 4 – 10) என்றும்‌ கங்குல்‌ என்பது – மத்‌ய ராத்ரி; அது தமோ பூதமாயிருக்கையாலே தாமஸ ஜ்ஞாதம்‌.

சூழ்கின்ற கங்குல் சுருங்காவிருளின்  கருந்திணிம்பை
போழ்கின்ற திங்களம் பிள்ளையும் போழ்க துழாய் மலர்க்கே
தாழ்கின்ற நெஞ்சத்தொரு தமியாட்டியேன் மாமைக்கின்று
வாழ்கின்றவாறு இதுவோ வந்து தோன்றிற்று வாலியதே 
– 72–பிரளயம் கோக்குமா போலே எங்கும் ஒக்க தானே வந்து சூழ்ந்தது –-இது ஓர் இடத்திலேயாய்-மற்றொரு இடத்தில் ஒதுங்க நிழலாம் படி இருக்கை அன்றிக்கே–கங்குல் சுருங்கா  இருளின் –இன்னதினை போதை-இருள் செறிந்து வரக் கடவது –இன்னதினை போதை அதாகக் கடவது -என்று ஓர் மரியாதை உண்டு இறே – அது இன்றிக்கே இரா நின்றது –கரும் திணும்பை –கறுத்த நிறத்தை உடைய திணும்பை என்ற ஒரே சொல்லாய்- அத்தால் திண்மையை சொல்லுகிறது – இருளினுடைய புற இதழைக் கழித்து – அகவாயில் திண்மையான-வயிரத்தை சேர பிடித்தால் போல் இருக்கிறது

காலையும் மாலை யொத்துண்டு கங்குல் நாழிகை யூழியின் நீண்டுலாவும்
போல்வதோர் தன்மை புகுந்து நிற்கும் பொங்கழலே   யொக்கும் வாடை சொல்லில்
மாலவன் மா மணி வண்ணன் மாயம் மற்றுளவை வந்திடா முன்
கோல மயில் பயிலும் புறவில் குறுங்குடிக்கே யென்னை உய்த்திடுமின் —9-5-3–ராத்ரியில் நாழிகை யானது கல்பத்தில் காட்டிலும் இருக்கிற ஸ்வ பாவமானது கிட்டி நில்லா நின்றது –

நின்று ருகுகின்றேனே போல நெடு வானம்
சென்றுருகி நுண் துளியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்
அன்றொரு கால் வையம் அளந்த பிரான் வாரான் என்று
ஒன்றொரு காற் சொல்லாது உலகோ உறங்குமே.–5-4-10–முடிவு இன்றிக்கே நிரந்தரமாக உருகுகிற என்னை போலே மஹாதத்த்வமான ஆகாசம் சென்று அற்று நுண் துளியாய் உருகிச் செல்லுகிற ராத்திரியில் சகல பதார்த்தங்களும் அவகாச பிரதானம் பண்ணும் மஹா தத்வம் அழிகிற படிக்கும் வேறு த்ருஷ்டாந்தம் இல்லை –என்னை சொல்லும் அத்தனை -அளவுடையார் எல்லாம் அழிகிற காலம் ஆகாதே –

காலை சத்வ ஞானம்-அதாவது-காலை எழுந்து இருந்து —நாச்சியார் -9-8–காலை நன் ஜ்ஞானத் துறை படிந்து -திருவிருத்தம் -93-இத்யாதிகளில் சொல்லப் படுகிற காலை யாவது – ப்ரஹ்ம முகூர்த்தம் ஆகையாலே சத்வோத்தரமாய் -இருள் நீங்கி வெளி செறித்து வருகிற ப்ராத காலம்-ஆகையாலே பதார்த்த யதா பிரதிபத்திக்கு உறுப்பாக இருக்கும் சாத்விக ஜ்ஞானம் –

““காலையெழுந்திருந்து” (நா.தி. 9 – 8) என்று காலையாவது – ப்ராத காலம்‌; அது ப்‌ராஹ்ம முஹுர்த்தமாய்‌ ஸத்த்வோத்தர காலமாகையாலே ஸாத்த்விக ஜ்ஞாநம்‌.

காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்
மாலை வெய்யோன் பட வையகம் பரவுவர் அன்ன கண்டும்
காலை நன் ஞானத் துறை படிந்தாடிக் கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் அவன் மைப்படியே –
 – -93 —காலை –சத்வோத்தரமான காலையிலே –நல் ஞானம் –ஞானம் ஆகில்-பகவத் விஷயத்தை பற்றி அன்றி இராது இறே –ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -(முதல் திருவந்தாதி )என்னக் கடவது இறே –தத் ஜ்ஞானம் அஞ்ஞானம் அதோன்யதுக்தம் (பராசர மகரிஷி )- என்றும் –வித்யான் யாசில் பகை புணம் – புறம்பே ஒன்றை அறிந்ததோடு துன்னம் பெய்ய அறிந்ததோடு வாசி இல்லை இறே –துறை படிந்தாடி –ஜ்ஞானம் ஆகிற இத் தீர்த்தத்திலே புக்கு அவஹாகித்து –

காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ
சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான்
ஆலினிலைப் பெருமான் அவன் வார்த்தை வுரைக்கின்றவே –9-8—கரிய குருவிக் கணங்கள்-
வடிவாலும் பேச்சாலும் உபகரிக்குமவை யாய்த்து –அவன் முன்னடி தோற்றாதே வரும்படியைச் சொல்லி-ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே -திருவாய் -6-7-2-விறே பண்ணிக் கொண்டு இருப்பது –சிறியாத்தான் பணித்ததாக நஞ்சீயர் அருளிச் செய்யும் படி – இவள் பிறந்த ஊரில் திர்யக்குகளுக்குத் தான் வேறு போது போக்கு உண்டோ கண்ணுறக்கம் தான் உண்டோ –என்று-ப்ராஹ்மே முஹூர்த்தே சோத்தாய சிந்தையே தாத்மனோ ஹிதம் ஹரிர் ஹரிர் ஹரிரிதி
வ்யாஹரேத் வைஷ்ணவ புமான்
-வங்கி புரத்து நம்பி நித்ய கிரந்தம் –என்னுமா போலே யாய்த்து

பகல் சுத்த சத்வம்பகல் கண்டேன்—இரண்டாம் திருவந்தாதி -81-இத்யாதிகளில் சொல்லும் பகலாவது –
பதார்த்தங்களை சம்சய விபர்யமற விசதமாக பிரகாசிக்கும் காலம் -ஆகையாலே – நாரணனை கண்டேன்-இரண்டாம் திருவந்தாதி -81-என்கிற படியே சமஸ்த குண விக்ரக விபூதி விசிஷ்டனான சர்வேஸ்வரனை சம்யக் சாஷாத் கரிக்கிற சுத்த சத்வ ஜ்ஞானம் என்கை —

““பகல் கண்டேன்‌ நாரணனைக் கண்டேன்‌”‘ (இ.திரு. 71) என்று, பகலாவது – ஸகல பதாார்த்தங்களையும்‌ யதா தர்ஸநம்‌ பண்ணுவிப்பதொரு காலமாகையாலே குண விக்‌ரஹ விபூதி விஸிஷ்டனான ஸர்வேஸ்வரனை யதாவாக ஸாக்ஷாத் கரிக்கிற ஸூத்‌த ஸத்த்வ ஜ்ஞாநம்‌.

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே -மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி யொளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு -81–விடிவு கண்டேன் – முன்படங்க இருள் போலே காணும் –
காளராத்திரியாய்ச் செல்லாதே விடியக் கண்டேன் – ஸூ ப்ரபாதா ச மே நிசா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-17-2-ஓர் இரவும் ஒரு பகலுமே யுள்ளது -எம்பெருமானை அறிவதற்கு முன்பும் பின்பும் – முன்பு பகல் கலவாது – பின்பு இரவு கலவாது –வடுகர்   வார்த்தை போலே  தெரிகிறது இல்லை – எங்களுக்குத்  தெரியும்படி சொல்லீர் -என்னச் சொல்லுகிறார் –அஸ்தமியாத ஆதித்யனைக் கண்டேன் –-உறங்காத என்னையும் கண்டேன் –அநாதி மயயா ஸூ ப்த-என்கிற உறக்கம் பிரகிருதி அன்று இறே-இளைய பெருமாளுடைய ஸ்தா நீயன் ஆத்மா – அங்கும் –சதா பஸ்யந்தி ஜாக்ருவாம் சமிந்ததே –ருக் அஷ்ட -1-2-7-சவிபூதிகனான சர்வேஸ்வரனை  கண்டேன் – உபய விபூதி யுக்தன் இறே -போக்குவரத்து இல்லாத ஆதித்யன் – நியாம்யனானவன் அல்லன் -நியாமகன் – பீஷோதேதி ஸூர்ய-தைத் ஆன -8-என்றும் –
சாஸ்தா ஜனா நாம் -தைத் ஆற -3-11-என்றும் சொல்லக் கடவது இறே –

இத்தால் அந்யதா ஜ்ஞானம் (ரஜஸ் ) -விபரீத ஜ்ஞானம் ( தமஸ் ) -யதாஜ்ஞானம் ( சத்வம் ) -தத் பலமான
சாஷாத்கார ஜ்ஞானம் ( சுத்த சத்வம் ) என்கிற வற்றைச் சொன்ன படி-

இத்தால்‌ அந்யதா ஜ்ஞாநம்‌, விபரீத ஜ்ஞாதம்‌, யதாஜ்ஞாதம்‌, தத் பலமான ஸாக்ஷாத்கார ஜ்ஞாநம்‌ என்கிற இவற்றைச்‌ சொல்லுகிறது –

நிலா முற்றம் பிரஜ்ஞா பிரசாதம் என்னும் எல்லை நிலம் —சூரணை -146-

நிலா முற்றம்-அதாவது-நீணிலா முற்றத்து நின்று அவள் நோக்கினாள்–பெரிய திருமொழி -8-2-2 என்கிற நிலா முற்றமாகிறது – பிரஜ்ஞா பிரசாதம் என்னும் எல்லை நிலம் – அதாவது-பிரஜ்ஞா பிரசாதமாருஹ்ய அசோஸ்யஸ் சோசகான் ஜநான் , பூமிஸ்தாநிவ சைலஸ்த்தோ ஹ்யஞ்ஞான் பிரஜ்ஞா பிரபஸ்யதி –பாரதம் -சாந்தி பர்வம் -150-11- (திருமந்திர யதார்த்த ஞானமாகிய உயர்ந்த மாடியில் ஏறி தன்னைப்பற்றி வருத்தம் அற்ற ஞானி அறிவில்லாமல் உழலும் சம்சாரிகளை மலைமேல் இருப்பவன் பூமியில் உள்ளவர்களை பார்ப்பது போலே பார்க்கிறான் ) என்கிறபடியே – உத்துங்கமாக நின்று சர்வத்தையும் தர்சிக்கைக்கு உறுப்பாக சொல்வதால் அதில் நின்று தர்சித்த அளவிலே –
காணுமோ கண்ண புரம் என்று காட்டினாள்—பெரிய திருமொழி -8-2-2-என்கையாலே , ததீய விஷயமே பரம பிராப்யம் என்று பிறர்க்கும் பிரகாசிக்கும் படி சரம அவதியான பரம புருஷார்த்த ஜ்ஞானம் என்கை-

*“நீணிலா முற்றத்து நின்றிவள்‌ நோக்கினாள்‌” (திருமொழி 8 – 2 – 2) என்று நிலா முற்றமாகச்‌ சொல்லுகிறது – “’ப்ரஜ்ஞா ப்ராஸாத, மாருஹ்யா ஸோச்யஸ் ஸோசகாந்‌ ஜநாந்‌ ! பூமிஸ்தாநிவ ஸைலஸ்தோ ஹ்யஜ்ஞாந்‌ ப்ராஜ்ஞ ப்ரபஸ்யதி’‘ என்று சொல்லுகிறபடியே “காணுமோ கண்ண புரமென்று ‘காட்டினாள்‌”’ (திருமொழி 8 – 2 – 2) என்று சொல்லுகையாலே ததீயரை ப்ராப்யர்‌ என்கிற எல்லை நிலமான புருஷார்த்த ஜ்ஞாநத்தை என்கிறார் –

நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள்
காணுமோ கண்ண புரம் என்று காட்டினாள்

பாணனார் திண்ணம் இருக்க வினி யிவள்
நாணுமோ நன்று நன்று நறையூரர்க்கே –8-2-2—மனுஷ்ய சஞ்சாரம் இல்லாத பிர தேசத்திலே இவளைக் கொடு போய் இட்டு வைக்கவே மீளக் கூடும் என்று நினைத்து நீணிலா முற்றத்து வைத்துக் கொடு போய் வைத்தாள் –அம் மனுஷ்யர்கள் உடைய வார்த்தையும் கூட செவிப் படாதபடி ஒக்கத்தை உடைத்தான நிலா முற்றம் – முமுஷுவானவன் சரீர சம்பந்தாதிகள் உள்ள இடத்து குத்சையும் பயமும் வர்த்தியா நிற்கச் செய்தேயும் பதார்த்தங்களின் உடைய சந்நிதியில் கால் தாழ்கைக்கு யோக்யதை உண்டாம் இறே–சரீர சம்பந்தம் கிடைக்கையாலே – தத் பரிஹார அர்த்தமாக விவிக்த சேவியாய் வர்த்திப்பான் என்று சொல்லிற்று இறே-அப்படியே தானும் பூர்வார்த்த நிஷ்டையாகையாலே தன் மகளுக்கு இந்த அதி பிராவண்யம்  உண்டாகைக்கு  அடி சம்சர்க்க தோஷம் இறே என்று நினைத்து
நிர்மானுஷ்யமான நீணிலா முற்றத்திலே வைத்தாள் –அந் நிலா முற்றத்தைக் கண்டவாறே –கொற்றப் புள் ஓன்று ஏறி மன்றூடே வந்து -8-1-8-அனந்யார்ஹம் ஆக்கி பிரதம சம்ஸ்லேஷம் பண்ணின இடம் போலே இருந்ததீ -என்று இட்ட கால் இட்ட கைகளாய் இருந்த இவள் எழுந்து இருந்து தரித்து நின்றாள்-இதுவே போலே காணும் -ஆச்சார்ய உபதிஷ்டமான யதார்த்த ஞானம் பிறப்பதற்கு முன்பு விஷயாந்தரங்களில் படும் கண் கலக்கமும் – பின்பு வகுத்த விஷயத்தில் வந்து புகுந்தால் அதஸோ அபயம் கதோ பவதி -என்று நிர் பயனாய் தரித்து நிற்கும் நிலையும் -அவ்வளவே அன்றிக்கே
லோக தர்சனமும் பண்ண ஷமை யானாள் –சுற்றும் கண்ணை யோட்டிப் பார்த்தவாறே திருக் கண்ண புரம் கண்ணுக்கு விஷயம் ஆயிற்று –-அல்லாத பிரதேசங்கள் கிடக்க திருக் கண்ண புரம் கண்ணுக்கு விஷயமாக வேண்டுவான் என் என்னில் – இவளுக்கு அபிமதம் சௌரிப் பெருமாள் பக்கலிலே ஆகையாலும் – இவள் தான் லஷ்யத்தை உடையாள் ஆகையாலும் திருக் கண்ண புரம் கண்ணுக்கு விஷயம் ஆயிற்று –தொண்டீர் எல்லீரும் வாரீர் -திருவாய் -5-2-2-என்றாப் போலே கண்ணால் கண்டவர்கள் அடங்க நீங்கள் கண்ண புரத்தை காணி கோள்-என்னா நின்றாள் – உனக்கு அதி மாத்ர பிராவண்யம் ஆகாது காண் என்று நிஷேதிக்கிற தாயையும் கூட திருக் கண்ண புரத்தைப் பாராய் -என்றாள்-நல்லது கண்டால் தனியே அனுபவிக்கும் பிரகிருதி அன்றே –

— —

கலை வளை அஹம் மம கிருதிகள் —சூரணை -147-

( கலை அஹம் கிருதி -வளை மம கிருதி )அதாவது –-கைவளையும் மேகலையும் காணேன் -திரு நெடும் தாண்டகம் -22-என்றும் கலையாளா அகல் அல்குல் கன வளையும் கையாளா –பெரிய திருமொழி -5-5-2–இத்யாதிகளில் சொல்லுகிற கலையும் வளையுமான – பகவத் அனுபவ விரோதி ஆகிற அஹங்காரமும் -மம கிருதியும் என்கை-அஹங்காரம் மமகாரங்கள் இரண்டும் பகவத் அனுபவ விரோதி ஆகையால் இறே-மத்யம பதத்தாலே இவை இரண்டையும் கழித்து கொண்டு த்ருதீய பதத்தாலே பகவத் அனுபவம் சொல்லிற்று கழல் வளை பூரிப்ப யாம் கண்டு ,கை தொழக் கூடும் கொலோ –திருவாய் -5-9-9-–என்றும் ,-ஈண்டிய சங்கும் நிறையும் கொள்வான்-திருவாய் -8-2-2-என்றும் , தூதுரைத்தல் செப்புதிரேல் சுடர் வளையும் கலையும் –திருவாய் -9-7-6–என்கிற இடங்களிலே த்யாஜ்யமான அஹம் மம காரங்கள் அன்றிகே ,-சேஷோஹம்- என்னுடைய திருவரங்கர் -என்றார் போலே இருந்துள்ள அஹம் மம தைகளைச் சொல்லிற்றாகக் கொள்ளலாம் ஆகையாலே அங்குத்தைக்கும் இதுவே ஸ்வாபதேசமாக கொள்ளக் குறை இல்லை —

 ‘“கை வளையும்‌ மேகலையும்‌ காணேன்‌ கண்டேன்‌ கனமகரக் குழை யிரண்டும்‌ நான்கு தோளும்‌”’ (திருநெடு. 22) என்றும்‌, ““கலையாளாவகலல்குல்‌ கன வளையும்‌ கையாளா என்செய்கேன் நான்‌” (திருமொழி 5 – 5 – 2) என்றும்‌ கலை வளையாகச்‌ சொல்லுகிறது – பகவதநுபவ விரோதியான அஹங்கார மமகாரங்களை-

நைவளம் ஓன்று ஆராயா நம்மை நோக்கா
நாணினார் போல் இறையே நயங்கள் பின்னும்
செய்வளவில் என் மனமும் கண்ணும் ஓடி
எம்பெருமான் திருவடிக் கீழ் அணையை இப்பால்
கைவளையும் மேகலையும் காணேன் கண்டேன்
கனமகரக் குழை இரண்டும் நான்கு தோளும்
எவ்வளவு உண்டு எம்பெருமான் கோயில் என்றேற்கு
இது வன்றோ எழில் ஆலி என்றார் தாமே–22-கை வளையும் இத்யாதி – அகம் ஒடுக்குண்டு போனால் கண்டது ஏது காணாதது ஏது என்று கேட்பாரைப் போலே அவன் வந்து கலந்த போது கலவியின் பலமாய்க் கொண்டு நீ காணாதது ஏது கண்டது ஏது என்னச் சொல்கிறாள் –த்ர்ஷ்டம் அத்ர்ஷ்டமாய் அத்ர்ஷ்டம் த்ர்ஷ்டம் ஆய்த்து –கை வளையும் –வளை கழல்வது விரஹத்தின் பின்பு அன்றோ -வளை போய்த்து என்பான் என் என்னில் – சம்ஸ்லேஷ ரசத்தால் பூரித்து வெடித்துப் போய்த்து -என்கை –மேகலையும் – மேகலை கண்டிலேன் என்கை -அசதஸ்யம் அன்றோ என்னில் – அத்தசையில் பரியட்டம் மாறாட்டத்தாலே என் பரியட்டப் பட்டும் கண்டிலேன் -என்கை-அவன் பரியட்டம் தன் கையில் இருக்க கண்டாள் இத்தனை இறே –காணேன் – புக்கவிடம் அறிந்திலேன் –இத்தால் -ஸ்வாபதேசத்தில் வந்தால் –அஹங்கார மமகார நிவ்ருத்தியை சொல்லிற்றாய்  இருக்கும் இறே –ஸ்வரூப ஜ்ஞானம் போதில் விரோதியான அஹங்கார மமகாரங்கள்-போக வேளையில் வந்தால் வஸ்த்ரம் என்றும் வளை என்றும் பேரிடக் கடவதாய் இருக்கும் – நான் போக்தா என்று இருத்தல் – எனக்கு போக்யம் என்று இருத்தல் -செய்யுமது ஸ்வரூபம் அன்று இறே – போஜ்யமாய் இருக்கை இறே ஸ்வரூபம் –(உபாய விரோதி, ப்ராப்ய விரோதி, புருஷார்த்த விரோதி என் மூன்று வகையான இடையூறுகளும் தொலைந்து
“உன்றன்னோடுற்றோமே யாவோ முனக்கே நாமாட்செய்வோம், மற்றைநங்காமங்கள்மாற்று“ என்கிற
பிரார்த்தனை பலித்தமை சொன்னவாறு.-‘நான் போக்தாவன்று, எனக்குப் போகமன்று; போக்தாவும். அவனே, போகமும் அவனுடையதே‘ என்ற ஸ்வரூப தத்துவத்தின் அநுஸந்தானம் முதிர்ந்தமை சொல்லிற்றாயிற்று.)-காணேன் – தன் விரோதியைக் கழித்துக் கொள்ளுதல் அவனைப் பற்றிப் போக்கித் தர வேணும் என்று அபேஷித்தல் – செய்தால் இறே விரோதி போனது அறிவது –தான் போகத்தில் அந்ய பரையாய் இருக்க அவன் போக்கப் போனவை ஆகையாலே கண்டிலேன் -என்கிறாள்

கலையாளா வகலல்குல்  கன வளையும் கை யாளா என் செய்கேன்  நான்
விலையாளா வடியேனை வேண்டுதியோ  வேண்டாயோ என்னும் மெய்ய
மலையாளன் வானவர் தம் தலையாளன் மராமரம் ஏழு எய்த வென்றிச்
சிலையாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சிந்திக்கேனே –5-5-2–கன வளையும் கை யாளா – ஸ்லாக்கியமான வளை கையிலே தங்குகிறது இல்லை –என் செய்கேன்  நான்- இவள் பர்யட்டப் பண்பும் கையும் வளையுமே ஜீவனமாய் இருக்கக் கடவ நான் எத்தைச் செய்வேன் –1-பர்யட்டத்தையும் வளையும் தங்கும்படி பண்ணுவேனோ-2-இவளை ஈடுபடாதபடி பண்ணுவேனோ- 3-அவனை ஆளாகக் கொள்ளும்படி பண்ணுவேனோ- எத்தைச் செய்வேன் –

கழல் வளை பூரிப்ப நாம் கண்டு கை தொழக் கூடுங் கொலோ?
குழல் என யாழும் என்னக் குளிர் சோலை யுள் தேனருந்தி
மழலை வரி வண்டுகள் இசை பாடும் திருவல்லவாழ்
சுழலின் மலி சக்கரப் பெருமானது தொல்லருளே.–5-9-9—கையில் தொங்காதே கழலுவது இடுவது ஆகிறவளை-அவன் வந்த ஹர்ஷத்தாலே பூர்ணமாம் படி விடாய் பட்ட நாம் கண்டு தொழும் படி அவன் இரங்க கூடவற்றோ -விஸ்லேஷத்திலே வளை கழலுவது தனக்கே யானாலும் காட்சி எல்லாருக்கும் ஒத்து இருக்கும் இறே-கழல் வளை பூரிப்ப –யாம் கண்டு கை தொழ க் கூடும் கொலோ-அவ்வண்டுகள் போலே களித்து அனுபவிக்க வல்லோமோ –

வேண்டிச் சென்று ஓன்று பெறுகிற்பாரில் என்னுடைத் தோழியர் நுங்கட்கேலும்
ஈண்டு இது உரைக்கும்படியை அந்தோ காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்
காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன் விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால்
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான் எத்தனை காலம் இளைக்கின்றேனே ?–8-2-2-–அவன் பக்கலிலே திரண்ட வேலையையும் அடக்கத்தையும் அவன் பக்கலிலே கொள்ளுகைக்காக -தன் பக்கல் தொங்காதவை எல்லா வற்றுக்கும் புகல் அங்கே என்று இருக்கும் –இவ்வாசையோடே எத்தனை காலம் யுண்டு இளைத்து போருகிறது-

தூதுரைத்தல் செப்புமின்கள்-தூ மொழி வாய் வண்டினங்காள்
போதிரைத்து மது நுகரும்-பொழில் மூழிக் களத்து உறையும்
மாதரைத் தம் மார்பகத்தே-வைத்தார்க்கு என் வாய் மாற்றம்
தூதுரைத்தல் செப்புதிரேல்-சுடர் வளையும் கலையுமே–9-7-6--என் பாசுரமான தூத வாக்யத்தைச் சொல்லப் பார்த்தி கோளாகில் -என்னுடைய அழகிய வளையும் கலையும் சிதிலமான படியைச் சொல்லுங்கோள் -செப்புவுதி கோளாகில் அது தானே எனக்குச் சுடர் வளையும் களையுமே -அறிவிக்குமதுவே குறை -வரவு தப்பாது -என்கை –

பட்டம் சூடகம் ஆவன பராவர குருக்கள் பூட்டும் ஆத்மா பூஷணங்கள் —சூரணை -148-

(பராவரம் -பர அவரம்-முன்னரும் பின்னரும் -பஞ்ச ஸம்ஸ்காரத்துக்கு -முன்னும் பின்னும் /
குருக்கள் -ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி )-பட்டம் சூடகம் ஆவன–அதாவது-பட்டம் கட்டி பெற்றோடு பெய்து இவள் பாடகமும் சிலம்பும் இட்டமாக வளர்த்து எடுத்தேனுக்கு -பெரியாழ்வார் -3-7-6-என்றும் –
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே பாடகமே என்றனைய பல் கலனும் யாம் அணிவோம் –திருப்பாவை -27- என்றும் சொல்லுகிற ஆபரணங்கள் ஆவன –-பராவர குருக்கள் பூட்டும் ஆத்மா பூஷணங்கள் — அதாவது-க்ருஷ்ணாங்க்ரி துளஸீ மௌலி பட்டம் க்ருஷ்ணாபி வந்தனம் குண்டலே க்ருஷ்ண சரித ஸ்ரவணம் கங்கண அஞ்சலி –( ஸ்ரீ கண்ணபிரான் திருவடித் திருத் துழாய் நமக்கு கிரீடம் -அவனை சேவிப்பதே பட்டாடை – அவன் சரித்ரங்களைக் கேட்பதே குண்டலங்கள் -கை கூப்பி வணங்குவதே வளையல்கள் )என்கிறபடியே – பிரதமத்தில் இவ் ஆத்மாவை அங்கீகரித்த ஆசார்யன் உண்டாக்கும் நாம ( இராமானுஜ தாஸ்ய நாமம் ) ரூபங்களும் ( -சங்கு சக்கர லாஞ்சனையும் -பன்னிரு திருமண் தரித்த ரூபம் )- பகவத் வந்தனாதிகளும் ( திருவாராதன க்ரமும் )- பின்பு அவ் ஆச்சார்யா வைபவத்தை உணர்த்தி அவன் உண்டாக்கும் சேஷத்வ ஜ்ஞானாதிகளும் ஆகிற ஆத்மா அலங்காரங்கள் என்கை —

”பட்டங்கட்டிப் பொற்றோடு பெய்திவள்‌ பாடகமும்‌ சிலம்பும்‌ இட்டமாக வளர்த்து” (பெரியா. திரு. 3- 7 – 6) என்றும்‌, “சூடகமே தோள் வளையே” (திருப்பாவை 27) என்று தொடங்கி இவற்றாலே சொல்லுகிற ஆபரணங்களாவன – ‘“க்ருஷ்ணாங்கரி துளஸீ மெளளி: பட்டம்‌ க்ருஷ்ணாபிவந்தநம்‌ ! குண்டலே க்ருஷ்ண சரித ஸ்ரவணம்‌ கங்கணோஞ்ஜலி:” என்கிறபடியே ப்ரதமத்திலே இவளை அங்கீகரித்த ஆசார்யன்‌ உண்டாக்குமவை. இவ் வாத்மாவுக்கு அலங்காரமா யிருக்கிற நாம ரூபங்களும்‌, பகவத்‌ வந்தநாதிகளும்‌, பின்பு அவ்வாசார்ய வைபவத்தை உணர்த்தினவன்‌ உண்டாக்கின ஸேஷத்வ ஜ்ஞாநாதிகளும்‌ என்கிற இவை –

பட்டம் கட்டப் பொன் தோடு பெய்திவள் பாடகமும் சிலம்பும்
இட்டமாக வளர்த்து எடுத்தேனுக்கு
என்னோடு இருக்கலுறாள்
பொட்டப் போய் புறப்பட்டு நின்று   இவள் பூவைப் பூ வண்ணா என்னும்
வட்ட வார் குழல் மங்கைமீர் இவள் மால் உருகின்றாளே -3 -7-6 –லலாட பூஷணமான பட்டத்தை கட்டி –
கர்ண பூஷணமான பொன்னின் தோட்டை இட்டு-பாத பூஷணமான பாடகத்தையும் சிலம்பையும் இட்டு –
பெய்து -என்கிற கிரியை இங்கும் அன்வயிக்க கடவது-இவை தான் சர்வ பூஷணங்களுக்கும்  உப லஷணம்-நியமித்து வளர்க்கை அன்றிக்கே – இவளுடைய இஷ்டத்திலே வளர்த்து நிலத்திலே நடக்க விடாமல் – ஒக்கலையிலே எடுத்துக் கொண்டு திரிந்த எனக்கு-

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா வுன்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெரும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பல் கலனும் யாம் அணிவோம்
ஆடை யுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்–27–சூடகமே- பிரதமத்தில் ஸ்பர்சிக்கும் கைக்கிடும் ஆபரணம்-பரம பிரணயி ஆகையாலே தன தலையிலே வைத்துக் கொள்ளும் கை –-அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் -என்று இவர்களுக்கு அவன் சொல்லுமா போலே சொல்லி மார்பிலும் தலையிலும் வைத்துக் கொள்ளும் கை இடும் சூடகம் –வெள்ளி வளைக் கை பற்ற என்கிறபடியே – அநன்யார்ஹைகளாய் பிடித்த கைகளை இறே முதல் ஆபரணம் பூட்டுவது – (பாணி கிரஹணம் முதல் அன்றோ )-தோள் வளையே-கையைப் பிடித்த அனந்தரம் – அணைக்கும் தோள்களில் கிடந்து அவன் கழுத்தில் உறுத்தும் ஆபரணம் – அவன் நாண் தழும்பின் சரசரப்பு முலைகளுக்கு உத்தேசியமானவோபாதி- இவர்களுடைய வளைத் தழும்பும் அவன் தோளுக்கு ஆசையாய் இருக்கும் இறே-தோடே தங்கள் கைக்கும் தங்கள் தோளுக்கும் ஆபரணம் போல் அன்றே – அவன் தோளுக்குப் பூணும் ஆபரணமும் பூண வேணும் – இவர்களுடைய காதுப் பணியும் செவிப் பூவும் பட்ட விமர்த்தத்தாலே வந்த சோபையைக் கோட் சொல்லும் இறே அவன் தோள்கள் –கண்டேன் கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும்-என்று அவனுடைய கரண பூஷணம் அவன் தோள்களுக்கு ஆபரணம் ஆனால் போலே இவர்களுக்கு காதுப் பணியும் செவிப்பூவும் தோள்களுக்கும் அலங்காரமாய் இறே இருப்பது –செவிப் பூவே-அணைத்த அனந்தரம் ஆக்ரணத்துக்கு (முகந்து பார்க்க )விஷயமான இடம்-பாடகமே-அணைத்தால் துவண்டு விழுமிடம் – அஸி தேஷணை ஆகையாலே- ஜிதந்தே புண்டரீ காக்ஷ -என்று அவன் தோற்று விழும் இடம்

இனி லீலா உபகரணாதிகளாகச் சொல்லப் படும் அவற்றுக்கு ஸ்வாபதேசம் அருளிச் செய்கிறார் மேல் —போக உபகரணமாகவும்‌ சொல்லப்படுகிறவற்றுக்கு ஸ்வாபதேஸம்‌ அருளிச் செய்கிறார்‌.-

பந்து கழல் பாவை குழமணன் யாழ் தென்றல் மதியம் அடிசல சாந்தம் பூணகில் சிற்றில் தூதை
முதலாவான- குண த்ரய விசித்திர கர்ம சூத்தரத்தாலே கட்டி லீலையாக பிரேரிக்க விழுந்து எழுந்தும்
சுழன்றும் உழன்றும் பறிபட்டும் அற்ப சாரமாம் அவையுமாய் மதியம் என்னில் விட்டு அகலவும் ,
ததீயம் என்னில் இகழ்வு அறவும் முனிவதும் இக்காலமீதோ என்னப்படும் பொங்கு ஐம் புலனில்
போக்யாதி சமூகம் –சூரணை -149-

பந்து கழல் பாவை குழமணன் யாழ் தென்றல் மதியம் அடிசல சாந்தம் பூணகில் சிற்றில் தூதை முதலாவான-அதாவது – பந்தும் கழலும் தந்து போகு நம்பீ -திருவாய் -6-2-1-என்றும் –
கன்ம மன்றேங்கள் கையில் பாவை பறிப்பது–திருவாய் -6-2-7- -என்றும் –
குழகி எங்கள் குழமணன் கொண்டு -திருவாய் -6-2-6-என்றும் ,
யாழ் நரம்பு–திருவாய் -9-9-7- -என்றும் –
தைவந்த தண் தென்றல் –திருவாய் -5-4-8–என்றும் –
மேவு தண் மதியம் –திருவாய் -9-9-4–என்றும் –
இன் அடிசிலொடு பால் அமுதூட்டி -நாச்சியார் -5-5-என்றும் ,
சாந்தமும் பூணும் –பெரிய திருமொழி -2-7-3–என்றும் –
சீருற்ற வகில் புகை–திருவாய் -9-9-7–என்றும் –
எங்கள் சிற்றிலும்–திருவாய் -6-2-9- -என்றும் –
வட்ட வாய் சிறு தூதை–நாச்சியார் –2-8-என்றும் இத்யாதிகளில் சொல்லுகிற- லிலோ உபகரண போக்ய போகோ உபகரணாதிகளான-

”பந்தும்‌ கழலும்‌ தந்து போகு நம்பீ”: (திருவா. 6 – 2 – 1) என்று பந்து கழல்‌ என்பது – போக ஸ்தாநமாகிற ஸ்தூல ஸூக்ஷ்ம ஸரீரங்களை- ““கன்மமன்றெங்கள்‌ கையில்‌ பாவை பறிப்பது?” (திருவா. 6 – 2- 7) என்றும்‌, ”குழகி யெங்கள்‌ குழமணன் கொண்டு”” (திருவா. 6 – 2 – 6) என்றும்‌ சொல்லுகையாலே பாவை குழமணன்‌ என்பது – போக்த்ரு வர்க்கமான ஸ்த்ரீ புருஷ விபாகத்தை. ““சீருற்ற அகில் புகை யாழ்‌ நரம்பு” (திருவா. 9 – 9- 7) என்றும்‌, “தைவந்த தண் தென்றல்‌’” (திருவா. 5 – 4 – 8) என்றும்‌, ‘“மேவு தண் மதியம்‌” (திருவா. 9 – 9 – 4)-என்றும்‌, “இன்னடிசிலொடு பாலமுதூட்டி ”’ (நா.தி. 5 – 5) என்றும்‌, “சாந்தமும்‌” பூணும்‌ சந்தனக் குழம்பும்‌”” (திருமொழி 2 – 7 – 3) என்றும்‌ சொல்லுகிற யாழ்‌ தென்றல்‌ மதியம்‌ அடிசில்‌ சாந்தம்‌ பூண்‌ அகில்‌ என்கிறவை ஸப்‌தாதிகளான போக்‌யங்கள்‌. சிற்றில்‌ ‘ என்பது – போக ஸ்தாநம்‌, தூதை என்பது – பதார்த்தங்களை இட்டு வைப்பதொன்‌றாகையாலே போக உபகரணங்களுக்கு உப லக்ஷணம்‌,

மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நான தஞ்சுவன்
மன்னுடை இலங்கை அரண்காய்ந்த மாயவனே!
உன்னுடைய சுண்டாயம் நானறிவன் இனியது கொண்டு செய்வதென்?
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!–6-2-1-என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!–
இவை யாரதாக நினைத்துக் கொண்டு போகிறாய் -நீ நினைக்கிறவர்களவை இல்லை காண் -என்னுடைய பந்தும் கழலும் கிடாய் -ஸ்வரூபத்தை பார்த்தாலும் மமகாராம் த்யாஜ்யம் –த்வயஷ ரஸ்து பவேன் ம்ருத்யு என்கிறபடியே ப்ரணய தாரையில் வந்தாலும் -உன்னது என்னது -என்கைக்கு மேல் இல்லை உறவு அறுதிக்கு -தானே பொகட்டு போம் என்று –என்னுடைய -என்கிறாள் -அவனும் யஸ்யை தே தஸ்ய தத்த நம் அன்றோ -ஸ்வரூப ஞானம் உடைய உன்னுடைய மமகார விஷயம் அடங்கலும் என்னதன்றோ என்று போகாத தொடங்கினான் –-தந்து போகு நம்பீ!–-உயிரை வைத்துப் போ என்பாரைப் போலே -அவன் மாட்டான் என்று அறிந்து மர்மஜ்ஜை யாகையாலே தந்து போ என்கிறாள் –இவர்கள் தொட்டு அளைந்து என்று இறே அவன் ஆதரிக்கிறது -இவளும் அவன் தொட்டு அளைந்ததைக் கொண்டு தரித்து கிடைக்காக தந்து போ என்கிறாள் –நான் தருவேனோ -இவை ஒழிய எனக்குச் செல்லுமோ என்றான் –-நம்பீ -முதலிகள் அன்றோ -உமக்கு புக்க இடம் எங்கும் பந்தும் கழலும் அன்றோ –ஷோடச ஸ்த்ரீ சஹஸ்ராணி என்கிற படியே அபிமத விஷயங்கள் ஓன்று இரண்டா -நடக்கலாகாதோ – சப்தத்துக்கு பொருள் சொல்லுகை அன்றிக்கே யுக்தி பிரதியுக்தியாலே நினைவைச் சொல்லுகிற இது விறே இத் திருவாய் மொழிக்கு கருத்து -திருப் பாவைக்கு எல்லே இளங்கிளியே பாட்டுப் போலே இத் திருவாய் மொழியும் பாவ பிரதானம் என்னும் இடத்தைக் காட்டுகிறது

கன்மமன்று எங்கள் கையில் பாவை பறிப்பது கடல்ஞாலம் உண்டிட்ட
நின்மலா! நெடியாய்! உனக்கேலும் பிழை பிழையே;
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி; அது கேட்கில்என்னைமார்
தன்மம் பாவம் என்னார்; ஒரு நான்று தடிபிணக்கே.–6-2-7–எங்கள் கையில் பாவையை பறிப்பது கார்யம் அன்று -நீ நினைக்கிறவர்களது அல்லாமையாலே உனக்கு ஒரு பிரயோஜனம் இல்லை –எங்கள் அனுமதி இல்லாமையால் பறிக்கப் போகாது –தன்னுடைய சக்தி கொண்டு அழிக்கலாவது எதிரிகள் ஆகில் இறே-அபலைகள் கையில் அத்தை பறிக்க சக்தன் அல்லனே -ஒரு கலத்தில் உண்பாரை போலே அவர்கள் கையிலும் தன் கையிலும் இருக்குமாகில் இறே பிரயோஜனம் உள்ளது -பிரயோஜனம் இல்லாமையே அன்று -உனக்கு குண ஹானியாய் வரும்-

குழகி எங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்மம் ஒன்றில்லை;
பழகி யாம் இருப்போம் பரமே இத் திருவருள்கள்?
அழகியார் இவ் வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலருளர்;
கழகம் ஏறேல், நம்பி! உனக்கும் இளைதே கன்மமே.–6-2-6—பாவீ இது ஆரதாக எடுத்தாய் -எங்களது காண் நீ நினைக்கிறவர்களது அன்று காண் -என்கிறாள் -எங்களது என்றவாறே பொகட்டுப் போம் என்று சொன்னாள்-அது தான் அவனுக்கு விருப்பத்துக்கு உடலாயிற்று –எங்கள் அனுமதி வேண்டாவோ உனக்கு என்ன –எனக்கு நிவாரகர் உண்டோ -நான் செய்தது செய்யலாம் அன்றோ என்ன – கோயின்மை செய்து கன்மம் ஒன்றில்லை;நிவாரகர் இல்லை என்னா -அடிக் கழிவான செயல்களை செய்தால் உனக்கு ஒரு கார்யம் இல்லை -நீ நினைக்கிறவர்களது அல்லாமையாலே உனக்கு ஒன்றும் வாயாது –எங்கள் அனுமதி இல்லாமையாலும் பிரயோஜனம் இல்லை –பிரயோஜனம் இல்லை யாவது என் -இது தானே பிரயோஜனம்-

ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள் ஆர் உயிரவள் அன்றிக் கூர் தண் வாடை
காரொக்கும் மேனி நம் கண்ணன் கள்வம் கவர்ந்தவத் தனி நெஞ்சம் அவன் கண் அக்தே
சீருற்ற அகில் புகை யாழ் நரம்பு பஞ்சமா அம் தண் பசுஞ்சாந்து அணைந்து
போருற்ற வாடை தண் மல்லிகைப் பூப் புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ–9-9-7—பிரதானமான வாடையை ஒழியவே பாதக பதார்த்தங்கள் அஹம் அஹமிகயா மேல் விழுந்து நலிகிற படியைச் சொல்கிறது –சீர் உறுகையாவது-அழகு மிக்கு இருக்கை –அதாகிறது பரிமளிதமாய் க்ராண இந்திரியத்தை நலியும் அளவன்றிக்கே -கண்ணையும் நலியும் படியான -தர்ச நீயமான அகில் புகை –யாழ் நரம்பு -பண் பட்டு இருந்துள்ள யாழ் -பஞ்சமம் ஆகிற பண் –

தெய்வங்காள் என் செய்கேன்? ஓர் இரவு ஏழ் ஊழியாய்
மெய் வந்து நின்று எனதாவி மெலிவிக்கும்
கை வந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்
தை வந்த தண் தென்றல் வெம்சுடரில் தான் அடுமே.–5-4-8—குளிர்ந்த காலத்திலே வந்த குளிர்ந்த தென்றல் –தை வருகை யாவது -தடவுகையாய் -காந்தனுடைய ஸ்பர்சத்துக்கு ஸ்மாரகமான தென்றல் என்றுமாம் —

பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ வாடை தண் வாடை வெவ்வாடை யாலோ
மேவு தண் மதியம் வெம் மதியமாலோ மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி யாலோ
தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டுதைத்த எம் பெண்மை யம் பூவி தாலோ
ஆவியின் பரமல்ல வகைகளாலோ யாமுடை நெஞ்சமும் துணை யன்றாலோ–9-9-4—நாட்டார் தாபத்துக்கு அஞ்சி நிலாவில் ஒதுங்கக் காண்கையாலே தானும் அதிலே ஒதுங்கப் பார்த்தாள்-அவனும் அக்னிமய சந்திரன் ஆகா நின்றான் –

மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் உறைவான் தன்
பொன்னடி காண்பதோர் ஆசையினால் என் பொரு கயல் கண் இணை துஞ்சா
இன்னடிசிலொடு பாலமுதூட்டி எடுத்த வென் கோலக் கிளியை
உன்னோடு தோழமைக் கொள்ளுவன் குயிலே உலகளந்தான் வரக் கூவாய்–5-5–பிறரோடு தோழமை கொள்ளுகைக்கு அவகாசம் இல்லாதபடி ஸ்லாகித்து கொண்டு போருகிற என் கிளியை–-இங்கே ஒரு குறை உண்டாகில் அன்றோ பிறர் தோழைமை நாடுவது-இப்படி நான் உபாலாளநம் பண்ணிக் கொண்டு போருகிற கிளையை -உன்னோடு தோழமை கொள்ளுவிப்பன் –அதுக்கு கடவள் தானே -நியமிப்பேன் -என்றவாறு-

சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும் தட முலைக் கணியிலும் தழலாம்
போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும் பொரு கடல் புலம்பிலும் புலம்பும்
மாந் தளிர் மேனி  வண்ணமும் பொன்னாம் வளைகளும் இறை நில்லா என் தன்
ஏந்திழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இட வெந்தை யெந்தை பிரானே -2-7-3–எங்களால் நோக்கும் காலம் கழிந்தது )வாளா நோக்கும் காலம் எல்லை கழிந்தது-பழகப் புதைத்து ஆறி குளிர்ந்த சாந்தும் முத்தாராமும் சந்தனக் குழம்பும் –நிதானம் அறியாதே நாம் இருந்து பரிஹாரம் பண்ணுகை யாவது என் என்று முன்பு எல்லாரும் கை வாங்கி இருப்பார்கள் – பின்னையும் இவள் பக்கல் ஒரு வாசி இன்றிக்கே நோவு படக் காண்கையாலே இனி நாட்டார் செய்யுமவற்றை ஆகிலும் செய்து பார்ப்போம் என்று இவற்றைக் கொண்டு சிசு ரோபசாரம் பண்ணப் புகுவர்கள்  – புக்கால் அவை தானே இந்தனளமாய் வேவா நிற்கும் –

ஆர் உயிரவள் அன்றிக் கூர் தண் வாடை காரொக்கும் மேனி நம் கண்ணன் கள்வம்
கவர்ந்தவத் தனி நெஞ்சம் அவன் கண் அக்தே சீருற்ற அகில் புகை யாழ் நரம்பு
பஞ்சமா அம் தண் பசுஞ்சாந்து அணைந்து போருற்ற வாடை தண் மல்லிகைப் பூப்
புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ–9-9-7-பிரதானமான வாடையை ஒழியவே பாதக பதார்த்தங்கள் அஹம் அஹமிகயா மேல் விழுந்து நலிகிற படியைச் சொல்கிறது –சீர் உறுகையாவது-அழகு மிக்கு இருக்கை –அதாகிறது பரிமளிதமாய் க்ராண இந்திரியத்தை நலியும் அளவன்றிக்கே -கண்ணையும் நலியும் படியான -தர்ச நீயமான அகில் புகை –யாழ் நரம்பு -பண் பட்டு இருந்துள்ள யாழ் -பஞ்சமம் ஆகிற பண் –தண் பசுஞ்சாந்து –ஆறிக் குளிர்ந்து செவ்வி அழியாத சாந்து –அணைந்து-இவற்றைக் கூட்டிக் கொண்டு –

உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம்கண் விழிகளின்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–6-2-9—எங்கள் லீலைகளைக் கண்டு ப்ரீதனாய் -நின் முகத்தில் ஒளி திகழ முறுவல் செய்து நிற்க -நாங்கள் சிற்றிலை தொட்டுக் கொண்டு இருந்து கடைக் கண்ணாலே உன்னைப் பார்த்துக் கொண்டு இருக்க வைத்திலையே -முழுக்க பார்க்கில் எல்லோரையும் பாதி யுமாமே -பிரணயியைப் பார்ப்பது கடைக் கண்ணாலே இறே –உன்னுடைய லீலை போலே என்று இருந்தாயோ எங்களுடைய லீலையை –கர்ம நிபந்தம் ஆகையால் த்யாஜ்யம் இறே இது -உன்னோடே சம்ஸ்லேஷியன் என்று நான் பண்ணின சங்கல்பத்தை அழகாலே அழித்தாய்-லீலைகளைத் திருவடிகளாலே அழித்தாய் என்று இன்னாதாகிறாள்-

வட்ட வாய்ச் சிறு தூதையோடு சிறு சுளகும் மணலும் கொண்டு
இட்ட மாவிளையோடு வோங்களைச் சிற்றில் ஈடழித்து என் பயன்
தொட்டுதைத்து நலியேல் கண்டாய் சுடர்ச் சக்கரம் கையில் ஏந்தினாய்
கட்டியும் கைத்தாலின்னாமை அறிதியே கடல் வண்ணனே–2-8-இவற்றினுடைய விசித்திர சந்நிவேசம் இருந்தபடி கண்டாயே-இவற்றைக் கொண்டு எங்களுடைய இச்சைக்கு ஒருவரால் பிரதிஹதி பண்ண ஒண்ணாத படி விளையாடுகிற எங்களை-ஓர் அவயவி ஆக்கிக் காண  ஒண்ணாத படி – மறுமுட்டுப் பெறாதபடி அழிக்கிற இத்தால் என்ன பிரயோஜனம் உண்டு – இது தானே யன்றோ பிரயோஜனம் என்று வாராத் தொட்டான் –

குண த்ரய விசித்திர கர்ம சூத்தரத்தாலே கட்டி லீலையாக பிரேரிக்க-அதாவது-அஜாமேகாம் லோஹித சுச்ல க்ருஷ்ணாம்–தைத்ரியம் என்கிறபடியே செந்நூல் வெண்ணூல் கருநூல் உடைய – ஸ்தாநேயான குண த்ரயத்தோடே-ஹரே விஹரசி கிரீடா கந்துகைரிவ ஐந்துபி த்வம் ந்யஞ்சத்பிஸ் கர்ம சூத்ரோ உபாபாதிதை –ஸ்ரீ விஷ்ணு தர்மம் — என்கிற படியே விசித்திரமான கர்ம சூத்தரத்தால் கட்டி –
ஹரே விஹரிசி க்ரீடாகந்து கைரிவ ஜந்துபி -என்கிற படியே ஈஸ்வரன் தன்னுடைய லீலைக்கு உறுப்பாக –அஜ்ஞோ ஜந்துரநீ சோய மாத்மனஸ் ஸூக துக்கயோ ஈஸ்வர ப்ரேரிதோ கச்சேத் ஸ்வர்கம் வா ஸ்வ ப்ரேமாவா–பாரதம் சாந்தி பர்வம் –12-36–என்கிறபடியே – அஜ்ஞனாய் அசக்தனான இவன் -கர்ம அனுகுணமாக உபரித லோகாதிகளிலே போவது – மீளுவதாம் படி ஸ்வ சங்கல்ப்பத்தால் பிரேரிக்க –

(குண த்ரய விசித்ர கர்ம ஸூத்ரத்தாலே கட்டி) பந்தானது – வெண்ணூல்‌ செந்நூல்‌ கருநூலாலே கட்டியிருப்ப தொன்றாகையாலே, ப்ரக்ருதியும்‌, ‘‘லோஹித ஸுக்ல க்ருஷ்ணாம்‌”’ (தை.௨..) என்று ஸத்த்வ ரஜஸ் தமஸ்ஸூக்களாலே விசித்ரமாய்‌. “த்வம்‌ ந்யஞ்சத்‌ பீருதஞ்சத்‌, பிர் கர்ம ஸூத்ரோபபாதி,தைச | ஹரே விஹரஸி க்ரீடா கந்து, கைரிவ வஸ்துபி?”’ என்கிறபடியே கர்ம ஸூத்ரத்தாலே கட்டி.-

விழுந்து எழுந்தும்-அதாவது-த்வம் நியஞ்சத்பி ருதஞ் சத்பி–ஸ்ரீ விஷ்ணு தர்மம் -என்கிற படியே தாழ விழுந்தும் உயர எழுந்தும் –சுழன்றும் உழன்றும்-அதாவது-ஏவம் சம்ஸ்ருதி சக்ரஸ்தே ப்ராம்யமாணே ஸ்வ கர்மபி -அஹிர் புத்ன்ய சம்ஹிதை -என்கிற படியே-சக்கர பிரமம் போலே சுழன்றும் –
யமாலய மஹா சூல மாதுர் ஜடர தோல்பத யாதாயாதா சஹாஸ்ராணாம் முனே ஜீவஸ்ய சாதனம்-என்கிறபடியே ஒரு கால் போனதிலே அநேக பர்யாயம் போவதும் வருவதுமாய் உழன்று
போகிற ஆத்மவோட்டை அன்வயத்தாலே விழுந்து எழுகை முதலான ஸ்வபாவ யுக்தமாய் –
பறிபட்டும்-அதாவது-பந்து பறித்து–பெரிய திருமொழி -10-7-5 -என்கிறபடியே-ஈஸ்வரன் தன்னுடைய போக விரோதி என்று வலிய விடுவிக்க விடு பட்டும்-

(வீலையாக ப்ரேரிக்க விழுந்‌தெழுந்தும்‌ சுழன்றுழன்றும்‌) ““அஜ்ஞோ ஜந்துர நீஸோய மாத்மநஸ்ஸுக துக்கயோ ச | ஈஸ்வர ப்ரேரிதோ கச்சேத்‌ ஸ்வர்க்கம்‌ வா ஸ்வ ப்‌ரமேவ வா’” என்கிறபடியே அஜ்ஞனாய்‌ அஸக்தனா யிருக்கிற இவன்‌ கர்மாநுகுணமாக ஈஸ்வரன்‌ ப்ரேரிக்க, ்‌ யமாலய மஹாஸூலே மாதுர் ஜடர தோல்பதா ! யாதா யாத ஸஹஸ்ராணாம்‌ முநே ஜீவஸ்ய ஸாதநம்‌ 1! க்வசித் கதஈசித் ஸ்வர்க்கஸ்ய புநாபதந துர்கதோ ‘‘ என்கிறபடியே ஸ்வாக்க, -நரக-கர்ப்பங்களிலே தட்டித் திரிந்து பறிபட்டு, ““பந்து பறித்து”” என்கிறபடியே ஈஸ்வரன்‌ தன்னுடைய போக விரோதி, என்று விடுவிக்க விட்டும்‌.-

தந்தை புகுந்திலன் நான் இங்கு இருந்திலேன் தோழிமார் ஆரும் இல்லை
சந்த மலர்க் குழலாள் தனியே விளையாடும் இடம் குறுகி
பந்து பறித்துத் துகில் பற்றிக் கீறிப் படிறன் படிறு செய்யும்
நந்தன் மதலைக் கிங்கு என் கடவோம் நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ —10-7-5—அவர்களோடு சென்று கிட்டி பந்தைப் பறித்தும் பரியட்டங்களைக் கிழித்தும் –பின்பு சொல்ல ஒண்ணாத படி களவு செய்யும் –பிரபுக்கள் கீழே குடி இருக்க ஒண்ணாதே சாதுக்களுக்கு –

அற்ப சாரமாம் அவையுமாய்-அதாவது-அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன் –திருவாய் -3-2-6–என்கிறபடியே பகவத் விஷயத்தில் நின்று அகற்றுமது ஒழிய தன்பக்கல் புஜிக்கலாவது ஓன்று இல்லாதபடி -அல்ப ரசங்களாய் இருக்குமவையாய் –

(அற்ப சாரமாமவையுமாய்‌) ““அற்ப சாரங்களவை சுவைத் தகன்று ஓழிந்தேன்‌”’ (திருவா. 3 – 2- 6) என்கிறபடியே ஸப்‌தாதிகள்‌ பகவத்‌ விஷயத்தினின்றும்‌ அகற்றுமதொழியத்‌ தன் பக்கல்‌ புஜிக்கலாவ தொன்றில்லாதபடி அல்ப ஸாரங்களாய்‌.-

கிற்பன் கில்லேன் என்றிலன் முன நாளால்
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்
பற்பல்லாயிரம் உயிர் செய்த பரமா நின்
நற் பொற் சோதித் தாள் நணுகுவது எஞ்ஞான்றே –3-2-6—அற்ப சாரங்கள்-உன்னை இழப்பிக்க வேண்டுவது உண்டு -அனுபவிக்கலாவது ஓன்று இல்லை –அவை -இப்படி இருப்பன அநேகம்
சுவைத்து-இவை எல்லா வற்றாலுமாக நா நனைய பெற்றதோ என்னில்-நாவில் பசை கொடுத்து கை கொடுத்து புஜிக்க வேண்டும்படி இருக்கை – இத்தால் பெற்றது ஏது என்ன-அகன்று ஒழிந்தேன்
சர்வ சக்தியான உனக்கும் எட்டாதபடி கை கழிந்தேன்-நான் என்னை முடித்துக் கொண்டேன்-உடைய நீ எடுத்துக் கொள்ளில் கொள்ளும் இத்தனை நீர் நின்ற நிலை அசமாதேயம் என்னும் படி யாய் இருந்ததீ

மதியம் என்னில் விட்டு அகலவும் ,-அதாவது –-மதீயம்-என்று ஸ்வ சம்பந்தத்தை இட்டு பார்க்கும் போது –
சிற்றில் மென் பூவையும் விட்டு அகன்ற–பெரிய திருமொழி -3-7-8- -என்கிறபடி த்யாஜ்யங்களாய் –
ததீயம் என்னில் இகழ்வு அறவும்-அதாவது-ததீயம் என்று தத் சம்பந்தத்தை இட்டு காணும் போது
இகழ்வில் இவ் வனைத்தும்–திருவாய் -3-4-1- -என்கிறபடி- கட்டடங்க உபாதேயமுமாவையாய்-

(மதீயமென்னில்‌ விட்டகலவும்‌) இவற்றை பகவதீயத்வாகார மொழிய மதீயமென்று பார்த்த போது “சிற்றில்‌ மென் பூவையும்‌ விட்டகன்ற செழுங்கோதை”” (திருமொழி 3 – 7 – 8) என்கிற படியே த்யாஜ்யங்களாய்‌. (ததீயமென்னில்‌ இகழ்வறவும்‌) ததீயத்வாகாரத்தாலே கண்ட போது ““இகழ்விலிவ்வனைத்துமென்கொ?” (திருவா. 3 – 4 – 1) என்கிறபடியே கட்டடங்க உபாதேயங்களாயும்‌.-

முற்றிலும் பைங்கிளியும் பந்தும் ஊசலும் பேசுகின்ற
சிற்றில் மென் பூவையும் விட்டகன்ற செழும் கோதை தன்னைப்
பெற்றிலேன் முற்றிழையை பிறப்பிலி பின்னே நடந்து
மற்றெல்லாம் கை தொழப் போய் வயலாலி புகுவர் கொலோ ?–3-7-8—சிறு கூட்டிலே நின்று பேசா நின்ற மிருது ஸ்வபாவமான பூவையையும் விட்டகன்ற-லிலோ உபகரணங்களை விட்டு அவனைப் பற்றின பின்பு உடம்பிலே பிறந்த பௌஷ்கல்யம்

புகழும் நல் ஒருவன் என்கோ! பொரு இல் சீர்ப் பூமி என்கோ!
திகழும் தண் பரவை என்கோ தீ என்கோ! வாயு என்கோ!
நிகழும் ஆகாசம் என்கோ! நீள் சுடர் இரண்டும் என்கோ!
இகழ்வு இல் இவ் வனைத்தும் என்கோ! கண்ணனைக் கூவு மாறே.–3-4-1—ஓன்று ஒழியாமே எல்லாம் என்னுதல் -உபாதேய தமமான எல்லாம் என்னுதல் –

முனிவதும் இக்காலமீதோ என்னப்படும் பொங்கு ஐம் புலனில் போக்யாதி சமூகம் –-அதாவது
அன்னை முனிவது மன்றிலின் குரலீர்வதும்–பெரிய திருமொழி -11-2-5 -என்றும் இத்யாதி படியையும் –
பனிப்பியல்வாக உடைய தண் வாடை இக்காலம் இவ்வூர் பனிப்பியல்வு எல்லாம் தவிர்ந்து எரி வீசும் – திருவிருத்தம் -5- என்கிற படியே அவனை ஒழியக் கண்ட போது பிரதி கூலங்களாகவும் –
அவ்வாடை ஈதோ வந்து தண் என்றதே –திருவிருத்தம் -27-என்று அவனோடு சேர்ந்து கண்ட போது
அனுகூலங்களாகச் சொல்லப் படுபவையான-பொங்கு ஐம் புலனும்–திருவாய் -10-7-10- -என்கிற பாட்டில் சொல்லப் பட்ட போக்ய போக உபகரண போகஸ்தானம் சமூகம் என்ற படி —

(முனிவதுமிக்காலமீதோ என்னப்படும்‌) “அன்னை முனிவதும்‌ அன்றிலின்‌ குரலீர்வதும்‌ இத்யாதி, (திருமொழி 11 – 2 – 5), இக்காலமிவ்வூர்ப் பனிப்பியல்வெல்லாம்‌ தவிர்ந்தெரி வீசும்‌” (திருவிரு. 5) என்கிறபடியே அவனை யொழியக் கண்டபோது ப்ரதிகூலங்களாயும்‌, ““அவ்வாடை ஈதோ வந்து தண்ணென்றதே”” (திருவிரு. 27) என்று அவனோடே சேர்த்துக் கண்ட போது அநுகூலங்களாயுமிருக்கிற. (பொங்கைம் புலனில்‌ போக்‌யாதி ஸமூஹம்‌) பொங்கைம்புலன்‌ என்கிற பாட்டிற் சொல்லுகிற போக்‌ய-போக்த்ரு வர்க்க, -போக உபகரண-போக ஸ்தாநங்களைச்‌ சொல்லுகிறதென்கிறார்‌.

அன்னை முனிவதும் அன்றிலின் குரல் ஈர்வதும்
மன்னு மறி கடல் ஆர்ப்பதும் வளை சோர்வதும்
பொன்னம் கலை அல்குல் அன்னம் மென்னடைப் பூங்குழல்
பின்னை மணாளர் திறத்த மாயின பின்னையே —11-2-5—அவன் ஊர் பகை விளைத்து விட்டான் ஆகில்
நாம் இவற்றை வெறுக்கிறது என் – பரிவுடைய தாய் முனிகிறதும்- நானும் அவனுமாய் இருந்த போது அனுகூலமான அன்றிலின் உடைய த்வனி பாதகம் ஆகிறதும் –

பனிப்பியல்வாக உடைய தண் வாடை இக்காலம் இவ் ஊர்ப்
பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்து எரி வீசும் அம்தண் அம் துழாய்
பனிப்புயல் சோரும் தடங்கண்ணி மாமைத் திறத்துக் கொலாம்
பனிப்புயல் வண்ணன் செங்கோல் ஒரு நான்று தடாவியதே
–5–இக் காலத்திலே-இத் தேசத்திலே-இதுக்கு ஸ்வபாவ பேதம் பண்ணுகின்றவன் ஆகையாலே- அவனுக்காக நின்றபடி-பதார்த்தங்கள்
ஸ்வ பாவ பேதமும்-ஸ்வரூப பேதமும் பண்ணிக் கொண்டே யாகிலும் இவளை அழிக்க நினைத்த படி-(தத்துவமும் தகவும் இல்லை -கிருபையும் ரக்ஷகத்வமும் இல்லையே அவனுக்கு )அவன் தனக்கு ஸ்வரூப ஸ்வ பாவங்கள் வேறு பட்டால் அவனைப் பின் செல்லுகிறவற்றைச் சொல்ல வேணுமோஇக்காலம் இவ் ஊர்-–முன்பு இப்படி இல்லை -விஸ்லேஷத்திலே –ஆழ்வார் நிலை கண்டு ஊரெல்லாம் இப்பாடு படுவதால் இவ்வூர் –இக் காலத்திலும் இவ் வூரிலும்–காலாந்தரத்திலும் இல்லை–தேசாந்தரத்திலும் இல்லை முற் காலம் தானும் காணாமையாலே இக்காலம் என்கிறாள்–இவளுக்கு என்னாதே-இவ்வூருக்கு என்றது-இவள் ஆற்றாமையைக் கண்ட ஊரார் தங்களுக்கும் வாடை தபிக்கையாலே-பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்து–பனிப்பிக்கிற இயல்பை ஏக தேசமும் சேஷியாத படி விட்டு—எரி வீசும்-வாயோர் அக்னி (தைத்ரியம் -1-2-5 ) என்று தன் கார்யமான அக்னியின் குணத்தைப் பஜியா நின்றது-வீசும்-ஒளிக்க வேண்டாத படி போன இடம் எல்லாம் தூவா நின்றது-

சேமம் செம் கோன் அருளே செருவாரும் நட்பாகுவர் என்று
ஏமம் பெற வையம் சொல்லும் ,மெய்யே பண்டு எல்லாம் மறை கூய்
யாமங்கள் தோறும் எரி வீசும் நம் கண்ணன் அம் தண் அம் துழாய்
தாமம் புனைய ,அவ் வாடை ஈதோ வந்து  தண் என்றதே
 –27–அவ் வாடை ஈதோ வந்து தண் என்றதே –அவ்வாடை நாம் அறியும்படி வந்து இப்பொழுது சீதளமாய் இரா நின்றது என்று தலைவி ஆற்றாமை தீரத் தலை மகன் இரவிடத்துக் கலந்தமை தோற்றுவித்ததாயிற்று –அவ் வாடை ஈதோ வந்து அவ்வாடையே இப்போதாக வந்ததாய்-தண் என்றதே-ஸூக ஸீதமாய் இரா நின்றதே –

மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே
–10-7-10—பொங்கு ஐம் புலனும்-சேதனனை விக்ருதனாம் படி பண்ணும் சப் தாதி விஷயங்கள் ஐந்தும் –-பொறி ஐந்தும் -வறை நாற்றத்தைக் காட்டி அகப்படுத்துமா போலே சப் தாதிகளிலே மூட்டுகிற ஸ்ரோத்ராதிகள் ஐந்தும் –கருமேந்த்ரியம் -கர்ம இந்திரியங்கள் ஐந்தும் —ஐம் பூதம்--பிருதிவ்யாதி பூதங்கள் ஐந்தும் —இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே-– -இஸ் சம்சாரத்திலே இருக்கிற -இவ்வாத்மாவைத் தொற்றி இருக்கிற மூல பிரகிருதி என்ன -மஹான் அஹங்கார மனஸ் ஸூ க்கள் என்ன -இவை யாகிற உன்னுடைய மஹா மாயையை மங்க வொட்டு என்று அந்வயம் –

இதில்-செந்நூல் வெண்ணூல் கருநூல் சமைக்க பட்ட பந்தாகச் சொல்லிற்று போக ஸ்தானமான தேகம்
என்னும் இடம் மேலில் வர்ணித்ததில் தெரியும்-
கழலாவது -சிறுகி அஞ்சாக இருக்கும் ஆகையாலே போக உபகரணமான பஞ்ச இந்திரியங்கள் ..பாவை குழமனங்கள் ஆவன -லிலோ உபகரண விசேஷங்கள்–யாழ், தென்றல், மதீயம் ,அடிசில் ,சாந்தம் . பூண் ,அகில் -ஆவன போக்யங்களான சப்தாதி விஷயங்கள் .. இதில் பூண் அகில் – என்பன ரூப கந்தங்களில் பேதை-சிற்றில்-கொட்டகை-போக ஸ்தானம்- தேகமும் வாசஸ்த்தான க்ருகாதிகளும் போக ஸ்தான விசேஷம் இறேதூதை யாவது -சிறு சோறு அடுகைக்கு உபகரணம் ஆகையாலே இந்திரிய வ்யதிரிதங்களான போக உபகரணங்களுக்கு உபலஷணம் — போக ஸ்தான தேகத்தையும் போக உபகரண இந்திரியங்களையும் பந்து கழல் இத்யாதியாலே லிலோ உபகரணமாக சொல்லுகிறது – லீலையாவது தாதாத் விக ரசமான வியாபாரம் ஆகையாலே -தாத்ருச வ்யாபாரத்துக்கு இவை உபகரணமாக இருக்கையாலே —ஆகையால் இவை அனைத்தும் பொங்கு ஐம் புலனில் போக்யாதி சமூகம்– என்னக் குறை இல்லை —

இரண்டாம் பிரகரணம் முற்றிற்று-

மூன்றம் பிரகரணம் –

இனி பகவத் விஷயத்தில் தூது விடுகிற பஷிகளுக்கு ஸ்வாபதேசம் ஏது என்னும் ஆ காங்க்ஷையிலே அத்தை அருளிச் செய்கிறார் மேல் —இனிமேல்‌ இவர்‌ தூதுவிடுகிற பக்ஷி முதலானவை எவை என்னில்‌,

சேர்ப்பாரைப் பஷிகளாக்கி ஜ்ஞான கர்மங்களை சிறகு என்று குரு ச ப்ரஹ்மச்சாரி புத்ர சிஷ்ய ஸ்தானே பேசும் –சூரணை -150-

அதாவது-சேர்ப்பாரைப் பஷிகளாக்கி –பகவத் விஷயத்தில் கடகராம் அவர்களை பஷிகளாகப் பிரதி பத்தி பண்ணி — ஜ்ஞான கர்மங்களை சிறகு என்று —–வீசும் சிறகால் பறத்தீர்—திரு விருத்தம் -54-என்றும்-அஞ்சிறைய மட நாராய் –திருவாய் -1-4-1–இத்யாதிகளாலே–உபாப்யாமேவ பஷாப்யாம் ஆசாசே பஷிணாம் கதி ததைவ ஞான கர்மப்யாம் ப்ராப்யதே புருஷோத்தம -என்கிறபடியே பகவத் விஷயத்தில் சீக்ர பிராப்த்திக்கு உறுப்பான அவர்களுடைய ஞான விருத்தங்களை பஷங்கள் என்று சொல்லி –குரு ச ப்ரஹ்மச்சாரி புத்ர சிஷ்ய ஸ்தானே பேசும் –-நீயும் நின் அஞ்சிறைய சேவலுமாய்
ஆவா என்று எனக்கு அருளி
-1-4-1–என்றும் –-இது சொல்லி அருள ஆழி வரி வண்டே -1-4-6-என்றும் –
வந்து மேயும் குருகினங்காள் —-கைகள் கூப்பிச் சொல்லீர் -6-1-1–என்றும் –-உடன் மேயும் மட அன்னங்காள் –அடியேனுக்கும் போற்றுமினே –6-1-5–என்றும் – நன்னலப் புள்ளினங்காள் வினையாட்டியேன் யான் இரந்தேன் -6-8-1—என்றும் , என் முல்லைகள் மேல் தும்பிகாள்–யாமிதுவோ தக்கவாறு என்ன வேண்டும் கண்டீர் -6-8-4–என்றும் – செங்கால மட நாராய் –குடக்கூத்தர்க்கு என் தூதாய் –நுமரோடே -நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ -9-7-1–என்றும் – கொக்கினங்காள் குருகினங்காள் தக்கிலமே கேளீர்கள்-9-7-3 –இத்யாதிகளாலே குருக்களுடையவும் -ச ப்ரஹ்மச்சாரிகளுடையவும் —-இளம் கிளியே நான் வளர்த்த நீ அலையே -திருவாய் -1-4-7-என்றும் –
நீ அலையே சிறு பூவாய்–திருவாய் -1-4-8- -என்றும் –யான் வளர்த்த கிளிகாள்–திருவாய் -6-8-5–என்றும் –
தீ வினையேன் வளர்த்த சிறு பூவைகளே -திருவாய் -6-8-6–இத்யாதிகளால் புத்ரர்களுடையவும் சிஷ்யர்கள் உடையவும் ஸ்தானே சொல்லும் என்கை —

(சேர்ப்பாரைப்‌ பக்ஷிகளாக்கி) பகவத்‌ விஷயத்தில்‌ கடகரைப்‌ பக்ஷிகளாக்கி, (ஜ்ஞாந கர்மங்களைச்‌ சிறகென்று) “உபாப்‌ யாமேவ பக்ஷாப்‌யாமாகாமே பக்ஷிணாங்கதி: ததைவ ஜ்ஞாந கர்மப்‌யாம்‌ ப்ராப்யதே புருஷோத்தம:” என்கிறபடியே ஜ்ஞாந கர்மங்களைச்‌ சிறகாக உடையரான குரு ஸப்‌ரஹ்மசாரி ஸிஷ்ய புத்ர ஸ்தாநீயரா யுள்ளாரைப்‌ பக்ஷி முதலானவையாகப் பேசக்கடவது –-

வீசும் சிறகால் பறத்தீர் விண்ணாடு நுங்கட்கு எளிது
பேசும்படி யன்ன பேசியும் போவது நெய் தொடு வுண்
டேசும்படி யன்ன செய்யும் எம்மீசர் விண்ணோர் பிரானார்
மாசின் மலரடிக் கீழ் -எம்மை சேர்விக்கும் வண்டுகளே
 -54 —வீசுகையாவது –1-அசைந்து வருகையை சொல்லுவது-2-வேகத்தை சொல்லுதல்-3-பரந்து இருக்கையை சொல்லுதல்–சிறகால் பறத்தீர் –-தனக்கு சிறகும் இன்றியே கால் கொண்டு ஆயிற்று நடப்பது –-அது தானும் இட்ட கால் இட்ட கையாய் – திருவாய்மொழி -7-2-4-இறே தான் இருக்கிறது–

அஞ்சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின்
அஞ்சிறைய சேவலுமாய் யாவா என்று எனக்கு அருளி
வெஞ்சிறைப்புள் உயர்த்தார்க்கு என் விடுதூதாய்ச் சென்றக்கால்
வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ 
–1-4-1–பிரஜைக்கு தாய் முலையிலே கண் ஓடுமா போலே தனக்கு உபகாரமான சிறகிலே யாயிற்று முற்படக் கண் வைத்தது –
ஆச்சார்யனுடைய ஞானத்தை அனுமித்து சிஷ்யன் உபசத்தி பண்ணுமா போலே கடகருடைய பரிகரவத்தையை அறிந்து பற்ற வேணும் இறே-அம் -என்று அழகு –சிறை -என்று சிறகு -அழகிய சிறகை யுடைய தன்னைப் போலே உறாவி இராதே-சேவலோட்டை சம்ச்லேஷத்தாலே செந்தலித்து இருக்கை-ச பங்காம நலங்காராம் விபத்மாமிவ பதமி நீம் -என்று இறே தன் தசை -சம்ச்லேஷத்தாலே துவண்டு தூது போகைக்கு யோக்யமாய் இருக்கை-நாண் மடம் அச்சம் -என்று ஸ்த்ரீத்வமாய்-பிரியில் வியசனம் அறியும் தன் இனத்தைப் பார்த்து சொல்லுகிறாள் என்னவுமாம் –ஆவா வென்று எனக்கு அருளி-என் தசையைப் பார்த்து ஐயோ ஐயோ என்று-ஏஹி பஸ்ய சரீராணி -என்று தன் வடிவைக் காட்டுகிறாள்-அருளி -கிருபை பண்ணி இரப்புக்குச் செய்தாகை அன்றிக்கே உங்கள் பேறாக அருளி –

அருளாத நீர் அருளி யவராவி துவரா முன்
அருளாழிப் புட்கடவீர் யவர் வீதி ஒரு நாள் என்று
அருளாழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
அருளாழி வரி வண்டே யாமும் என் பிழைத்தோமே
–1-4-6—அருளாழிப் புட்கடவீர் அவர் வீதி ஒருநாள் என்று வார்த்தையைச் சொல்லி அருள வேணும் –அருளாழி வரி வண்டே-கம்பீர ஸ்வ பாவத்தையும் -சரீரத்தில் வரியையும் யுடைய வண்டு -என்னுதல்-வட்டமான வரியை யுடைய வண்டு என்னுதல்
ஸ்ரமஹரமாய் அழகிதான வண்டு என்னுதல்-வட்டமாகப் பறக்கிறது என்னுதல்-கடகருடைய ஆத்ம குணத்தோ பாதி ரூப குணமும் உத்தேச்யம் என்கை-

வைகல் பூங்கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்!
செய் கொள் செந்நெல் உயர் திரு வண்வண்டூ ருறையும்
கை கொள் சக்கரத் தென் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே.–6-1-1—வழி பறிக்கும் தேசத்தில் வந்து உதவினால் போலே இறே நீங்கள் சந்நிதி பண்ணின படி –பம்பா தீரே ஹநுமதா சங்கத -ஆள் இட்டு அறிவிக்க வேண்டும் தசையிலே நீங்களே வந்து-வந்து மேயும் -நான் அபேக்ஷியாது இருக்க –க்ருஹே புக்தம சங்கிதம் -என்னுமா போலே இறே நீங்கள் செய்தது -என் கார்யம் செய்த பின் இனி உங்கள் கார்யம் செய்ய வேண்டாவோ -இவள் கார்யம் இங்கே வந்து மேய்கை-மேயும் குருகினங்காள் -உபவாச க்ருசையாய் இருக்க என் கார்யம் புஷ்கலமாய் இருக்கிற உங்களுக்கு செய்ய வேண்டாவோ -இரவு உண்டார்க்கு உண்ணாதார் கார்யம் செய்கை பரம் அன்றோ –

உணர்த்தல் ஊடல் உணர்ந்து உடன் மேயும் மடவன்னங்காள்!
திணர்த்த வண்டல்கள்மேல் சங்குசேரும் திருவண்வண்டூர்
புணர்த்த பூந்தண் துழாய்முடி நம்பெருமானைக் கண்டு
புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே.–6-1-5—உடன் மேயும் மடவன்னங்காள்!
பிரிவில் இறே சூழ்த்துக் கொடுக்க வேண்டுவது என்று உடனே திரியா நின்றது -இப்படி தூரதர்சியாய் இருப்பார்க்கு அன்றோ விச்சேதியாமல் அனுபவிக்கலாவது-மேயும் -இதம் மேத்ய மிதம் ஸ்வாது -என்னா நின்றன -ஊடல் உணர்தல் புணர்தல் -என்ற இம் மூன்றிலும் இவற்றுக்கு புணர்தலேயாய் சொல்லுகிறபடி –ஊடல் உணர்தல் புணர்தல் இவை மூன்றும் காமத்தால் பெற்ற பயன் -என்று மூன்றையும் பிரயோஜனமாக சொன்னார்கள் தமிழர்-மட வன்னங்காள்-மடப்பம் -துவட்சி-சம்ச்லேஷம் அடங்க வடிவில் தொடை கொள்ளும் படி இருக்கை –துவட்சி பேடைக்கு ப்ரக்ருதி –சேவலுக்கு கலவியால் யுண்டாய் இருக்கிற படி -பரஸ்பரம் பவ்யதை யாகவுமாம் –அடியேனுக்கும் போற்றுமினே.-அவ் ஊர் உங்களையும் விஸ்மரிப்பிக்கும் -உங்கள் பரிகரமான என்னையும் நினையுங்கோள் -அவனை மறக்கும் படி பண்ணின தேசம் அன்றோ -போற்றுகை யாவது கௌரவித்து சொல்லுகை -தொழுத கைகளும் நீங்களுமாய் எனக்காகவும் ஒரு வார்த்தை சொல்ல வேணும்-கைகள் கூப்பிச் சொல்லீர் -பாதம் கை தொழுது பணியீர் -என்று பிராட்டியான தசையிலும் இவர்க்கு ஸ்வரூபம் மாறாதே செல்லுகிற படி-

பொன்னுல காளீரோ? புவனிமுழு தாளீரோ?
நன்னலப் புள்ளினங்காள்! வினையாட்டியேன் நான்இரந்தேன்
முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில் வண்ணன்கண்ணன்
என்னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே.-6-8-1—அழகிய நீர்மையை உடைய புள்ளினங்காள் -இருவருமான சேர்த்தியை ஒழிய வேறும் ஒன்றைத் தரவோ -என்று சிரித்து இருந்தன –அர்த்ததச்ச மயாபிராப்தா தேவராஜ்யா தயோ குணா ஹதசத்ரும் விஜயிநம் ராமம் பச்யாமி ஸூஸ்த்திதம்புள் -நீர்மையோபாதி கமன பரிகரமும் உண்டாக்கப் பெற்றது–இனங்காள் -ப்ரேரிப்பாரும் அருகே உண்டு என்கை -திஷூ சர்வா ஸூ மார்க்கந்தே -என்று எல்லா திக்கிலும் போக விடலாம் படி திரளாக இருந்தபடி என்றுமாம்-வினையாட்டியேன்-கைப்பட்டவனை விட்டு உங்கள் காலிலே விழும்படியான பாபத்தை பண்ணினேன்-நான் இரந்தேன்தர்மதபரி ரக்ஷிதா -என்று அவன் இரந்து தூது விடும்படி அறிவுதி கோள் இறே -உபய விபூதி கொடுத்தாலும் விசத்ருசம் என்று இரப்புக்கு காரியம் செய்கிறிளோம் என்றுமாம் –க்ருத்ஸ்நாம்வா ப்ருதிவீம் தத்யான் ந தத்துல்யம் கதஞ்சன -இறே

தூமது வாய்கள்கொண்டு வந்து, என்முல்லைகள்மேல் தும்பிகாள்!
பூமது உண்ணச் செல்லில் வினையேனைப் பொய்செய்தகன்ற
மாமது வார்தண் துழாய்முடி வானவர் கோனைக்கண்டு
தாம்இதுவோ தக்கவாறு என்னவேண்டும் கண்டீர் நுங்கட்கே.–6-8-4—நான் வளர்க்கிற முல்லைகள் மேலே வர்த்திக்கிற தும்பிகாள் -இவள் உறாவுகையாலே பேணி நீர் வார்ப்பார் இல்லாமையால் உறாவின முல்லைகள் மேலே பட்டினி விடுகிறவை இ றே -என்னோடே ஓக்க நோவு பட பிறந்த நீங்கள் என் பரிசரத்தில் முல்லைகள் என்றுமாம் -இவள் வர்த்திக்கிற எல்லை அடங்க சருகாய் இறே கிடக்கிறது -சுத்தமாய் இனிய பேச்சுக்களைக் கொண்டு சென்று —வந்து,-வரவு செலவை காட்டுகிறது –நாம் தக்கோரான படி இதுவோ -என்னுங்கோள் -ஸ்த்ரீவதம் பண்ணிப் போந்து -பிரிவு அறியாத அந்தரங்கருக்கு ஓலக்கம் கொடுத்து ஆன்ரு சம்சயம் கொண்டாடிக் கொண்டு இருக்குமதுவோ தக்கோர்மை-என்னவேண்டும் கண்டீர் -அப் பேர் ஓலக்கத்தில் பெரிய மதிப்பனைக் கண்டு வைத்து இப்படிச் சொல்ல வேணுமோ என்னாதே இவ்வார்த்தை இத்தனையும் சொல்ல வேணும் –வாசா தர்மம் அவாப் நுஹி

எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும்
கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய்
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே—9-7-1–சிவந்த காலை யுடைய -என் மடியிலே இருக்கும் கால் போலே இருந்ததீ -நான் தலையிலே வைத்துக் கொள்ளப் புகுகிற காலும் –மட நாராய் -பவ்யமான நாராய் -உபகாரகரான உங்களுடைய காலை உபக்ருதையாய் உஜ்ஜீவிக்க இருக்கிற என் தலையிலே -இவளுடைய தலையிலே வைக்க கண்டதாய்த்து இவற்றின் கால் -இவற்றினுடைய காலை வைக்க கண்டதாய்த்து இவள் தலை -இரண்டும் பரார்த்தமாகக் கண்டதாய்த்து
கெழுமீரோ -அவனுக்கு சேஷமாக்கின போதே கடகர்க்கு சேஷமாகையாலே என் விதி கொண்டு வைக்க வேண்டா விறே -என் தலை மேலே சேரி கோளே-நுமரோடேச புத்ரஸ் பவ்த்ரஸ் ச கண-என்கிறபடியே சபரிகரமாக –ஆச்சார்ய வாதாச்சார்ய புத்தரே வ்ருத்தி –என்னக் கடவது இறே –

தக்கிலமே கேளீர்கள் தடம் புனல் வாய் இரை தேரும்
கொக்கினங்காள் குருகினங்காள் குளிர் மூழிக் களத்து உறையும்
செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக்கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே–9-7-3—ஓர் அறுதி பெறக் கேட்டுப் போருங்கோள் -அவர் வேணும் என்னில் -நாமும் நம் பிராணனை நோக்கவும் -அவர் வேண்டா -என்றாகில் -நாமும் ஒன்றிலே துணியும்படியும் நிச்சிதமாகக் கேட்டுப் போருங்கோள்-யாம் கபீ நாம் சஹஸ்ராணி -என்கிறபடியே கண்ணால் கண்ட வற்றை அடைய ஏவுகிறாள் -சிலவற்றைப் போக விட்டோம் -அத்தாலே நம் கார்யம் தலைக் கட்டும் -என்று ஆறி இருக்கும் விஷயம் அன்றே –

என் பிழை கோப்பது போல் பனிவாடை ஈர்கின்றது
என் பிழையே நினைந்து அருளி யருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச் சொல்
என் பிழைக்கும் இளம் கிளியே யான் வளர்த்த நீ யலையே
 –1-4-7–பருவத்தாலும் நிறத்தாலும் வாயின் பழுப்பாலும் பேச்சின் இனிமையாலும் சர்வதா சத்ருசம் ஆகையாலே உன் வடிவைக் காட்டி எலும்பை இழைக்கிற நீ ஒரு வார்த்தை சொன்னால் என்ன தப்பு உண்டாம் என்னவுமாம்-கலந்தார்-செய்யுமவற்றை வயிற்றில் பிறந்தாரும் செய்வாரோ நிவாகர் அல்லாத ஸ்வ தந்த்ரர் செயலை நீயும் செய்யவோ-

நீயலையே சிறு பூவாய் நெடுமாலார்க்கு என் தூதாய்
நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்து ஒழிந்தாய்
சாயலோடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனியுனது
வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே
–1-4-8—என் அவசாதத்தைச் சென்று சொல் என்ன -செருக்கு அடித்து இருந்தாய் நீ யன்றோ -இதுக்குச் சொன்னாளோ என்னில் கீழில் அவற்றுக்குச் சொல்லிற்று எல்லாம் இதுக்கும் சொல்லிற்று என்று இருக்கிறாள் -கலக்கத்தின் மிகுதியால்
இன்று என் அவசாதத்தைக் கண்டு தளர்ந்து இருக்கிற நீ யன்றோ அன்று செருக்கு அடித்தாய் என்றுமாம் –உன் பால்யம் நம் கார்யம் கெடுத்தது இல்லையோ-

நுங்கட்கு யான்உரைக்கேன் வம்மின் யான்வளர்த்த கிளிகாள்!
வெங்கட் புள்ளூர்ந்து வந்து வினையேனை நெஞ்சம்கவர்ந்த
செங்கட் கருமுகிலைச் செய்யவாய்ச் செழுங்கற்பகத்தை
எங்குச்சென் றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்மினே!–6-8-5—அவன் பரிகரம் போலே செருக்கி இருக்க பிறந்தி கோளோ நீங்கள் -ரக்ஷகர் தேட்டமான தசையில் ரக்ஷணத்திலே ப்ரவர்த்தியாது செருக்கு அடித்து இருக்கலாமோ -தன்னைத் தோற்றி ரஷ்ய ரஷிய நியதி அற்றது இறே-

என்மின்னு நூல்மார்வன் என்கரும்பெருமான் என்கண்ணன்
தன்மன்னு நீள்கழல்மேல் தண்துழாய் நமக்கன்றி நல்கான்
கன்மின்கள் என்று உம்மை யான் கற்பியா வைத்த மாற்றம்சொல்லிச்
சென்மின்கள் தீவினையேன் வளர்த்த சிறு பூவைகளே!–6-8-6–என் கார்யம்நானே தலைக் கட்ட வேண்டி -இதுக்கு உங்களை தூதாக விட வேண்டும்படி பாபத்தை பண்ணினேன் -நானும் அவனும் கூட உங்களுக்கு அபிமதம் தேடித் தருகை ஒழிய -என் அபிமதத்துக்கு உங்களைபோக விடும் படியான பாபத்தை பண்ணினேன் என்றுமாம் –

இனி இந்த பஷிகளில் அவாந்தர பேதங்களுக்கு ஸ்வாபதேசம் அருளிச் செய்வதாக திரு உள்ளம் பற்றி இதில் அன்னமாய் சொல்லுகிறது யாரை என்னும் ஆ காங்க்ஷையில் அருளிச் செய்கிறார் மேலே –குண ஸாம்யத்தாலே ஆசார்ய ஸ்தாநீயரா யுள்ளாரை அன்னமென்கிற தென்கிறார்‌,-

விவேக முகராய் நூல் உரைத்து அள்ளலில் ரதி இன்றி அணங்கின் நடையைப் பின் சென்று
குடை நீழலிலே கவரி அசையச் சங்கமவை முரல வரி வண்டு இசை பாட மானஸ பத்மாசனத்திலே இருந்து விதியினால் இடரில் அந்தரமின்றி இன்பம் படக் குடிச் சீர்மை யிலே யாதல் பற்றற்ற பரம ஹம்ஸராதலான நயாசலன் மெய்நாவன் நாத யாமுன போல்வாரை அன்னம் என்னும் —சூரணை -151-

அதாவது-விவேக முகராய்–ஹம்சோ யதா ஷீர மிவாம்புமிஸ்ரம்-என்கிறபடியே – ஹம்சமானது நீர ஷீர விபாகம் பண்ணுமா போலே – சார அசார விவேக உன்முகராய்-நூல் உரைத்து – அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்த–பெரிய திருமொழி -11-4-8 -என்று ஹம்ச ரூபியாய் சாஸ்திர பிரதானம் பண்ணினால் போலே – ஸ்ரோதாக்களைக் குறித்து சாஸ்த்ரங்களை உபதேசித்து-அள்ளலில் ரதி இன்றி
நபத்நாதி ரதிம் ஹம்ச கதாசித் கர்த்த மாம்பசி– என்கிறபடியே – ஹம்சமானது கர்தம ஜலத்தில் பொருந்தாது போலே – வன் சேற்று அள்ளல்–பொய் நிலத்து அழுந்தார்—திருவிருத்தம் -100-என்கிறபடி
சம்சாரகர் தமத்தில் பொருத்தம் உடையர் அன்றிக்கே –-அணங்கின் நடையை பின் சென்று –
அன்னம் பெய் வளையார் தம் பின் சென்று
-பெரிய திருமொழி -6-5-5-என்கிறபடி ஹம்சமானது ஸ்திரீகளின் நடையை கண்டு தானும் அப்படி நடக்குகைக்காக பின் செல்லுமா போலே –
அன்ன நடைய வணங்கு-பெரிய திருமடல் -7–என்று ஹம்ச கதியான பிராட்டி உடைய அனந்யார்ஹ சேஷத்வாதிகளையும் புருஷகார பாவமாகிற நடையை அனுகரித்து –

(விவேக முகராய்‌) அன்னமாவது நீர ஷீர விபாகம்‌ பண்ணுமதொன்றாகையாலே ஸாராஸார விவேகோந்முகராய்‌. (நூலுரைத்து) “அன்னமதாயன்றங்கற நூலுரைத்த” (பெரியதிருமொழி 11-4-8) என்று ஹம்ஸ ரூபியாய்க்‌ கொண்டு ஸமாஸ்த்ர ப்ரதாநம்‌ பண்ணினாப் போலே இவர்களும்‌ ஸ்ரோதாக்களைக்‌ குறித்து ஸாஸ்த்ரங்களை யுபதேஸித்து. (அள்ளலில்‌ ரதியின்றி) “ராகாதி தூஷிதே சித்தே நாஸ்பத, மது ஸூதந: நபத்‌ நாதி ரதிம்‌ ஹம்ஸ: கதா சித்‌ கர்த்த மாம்பஸி’ (விஷ்ணுதர்மம்‌ 9-11) என்று அந்த அன்னமானது கர்தம ஜலத்திற்‌ பொருந்தாதாப்‌ போலே “அழுந்தார்‌ வன் சேற்றள்ளல்‌ பொய்ந் நிலத்தே” (திருவிருத்தம்‌ 100) என்று ஸம்ஸார கர்தமத்திலே பொருத்த முடையரன்றிக்கே. (அணங்கின்‌ நடையைப்‌ பின் சென்று) “அன்னநடைய வணங்கே” (பெரிய திருமடல்‌ 7 என்றும்‌, “அன்னம்‌ பெய் வளையார் தம்‌ பின்‌ சென்று” (பெரியதிருமொழி 6-5-5) என்றும்‌ சொல்லுகையாலே அநந்யார்ஹ ஸேஷத்வாதிகளாலும்‌, புருஷகார பாவத்தாலும்‌ ஹம்ஸ கதியான பெரிய பிராட்டியாரைப்‌ பின் சென்று-

முன்னுலகங்கள் ஏழும் இருள் மண்டி யுண்ண முதலோடு  வீடும் அறியாது
என்னிது வந்தது என்ன விமையோர் திசைப்ப எழில் வேதம் இன்றி மறைய
பின்னையும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி இருள் தீர்த்து இவ் வையம் மகிழ
அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்தவது நம்மை யாளும் அரசே –11-4-8-–தன்னைக் கண்டார் எல்லாரும் ஆனந்த நிர்பரராம் படியாக கேட்பார் உபசத்தி பண்ண மாட்டாமையாலே இழக்க வேண்டாத
திர்யக்காய் – ( தானே தாழ நின்று )சாரதியாய் உபதேசித்தால் போலே ஹிதானுசந்தானம் பண்ணக்  கடவ அவனே ரஷகன் –

நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர்
வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல்லார் தொடையில் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம்
பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே
 – – 100—–1-பிறப்பாம் பொல்லா –ஜன்மமாகிற பொல்லா –ஜ்ஞாநானந்த லஷணமாய் –ஈஸ்வர சேஷமாய் இருக்கிற-ஆத்ம வஸ்து –அதுக்கு அநு ரூபம் அன்று இறே -அசித் சம்சர்க்கம் –2-அரு வினை –கர்ம பரம்பரையாலே மேன்மேல் என அது தன்னை வர்த்திப்பித்து பூண் கட்டுமதாய் இருக்கை –3-மாய –ருசி வாசனைகளைப் பிறப்பிப்பதாய்–4-வன் சேறு –தோய்ந்தார் பின்பு கரை கழுவ வேண்டும்படியாய் இருக்கை-5-அள்ளல் –கால் இட்டால் கீழே சுரிக்கும்படியாய் இருக்கை–6-பொய் நிலம் –அது தான் கீழ் தரை இன்றிக்கே இருக்கை –இப்படி இருக்கிற சம்சாரத்தில் அழுந்தார்கள் ––பொல்லாததுமாய்-அருவினையாய் – மாயமுமாய் -பொய் நிலமுமாய் இருக்கிற பிறப்பாகிற வன் சேற்று அள்ளலில் அழுந்தார் – என்று அந்வயம்–

விடை ஏழ்  வென்று மென் தோள் ஆய்ச்சிக்கு அன்பனாய்
நடையால் நின்ற மருதம் சாய்ந்த நாதனூர்
பெடையோடு அன்னம் பெய் வளையார் தம் பின் சென்று
நடையோடு இயலி நாணி யொளிக்கும் நறையூரே–6-5-5—அன்னமானது பேடையோடே கூட
அங்குத்தை ஸ்திரீகள் உடைய நடை அழகைக் கண்டு தானும் அப்படியே நடக்கைக்காக பின் செல்லும்
அந்நடை அழகு தனக்கு வாராமையாலே லஜ்ஜித்து அருகே ஒதுங்கா நிற்கும் –

அன்ன நடைய வணங்கேய் அடி இணையைத்—————7
தன்னுடைய அம் கைகளால் தான் தடவத் தான் கிடந்ததோர்
உன்னிய யோகத் துறக்கம் தலைக் கொண்ட—————8–அன்னத்தோடு ஒத்த நடையை யுடையளாய்
சம்போகார்த்தமாக நாயகன் முன்னே நாலடி நடந்தால் அவன் இதுக்கு அவ்வருகு பின்னை ஒன்றுக்கு ஆளாகாத படி இருக்கை-அப்ராக்ருதமான ஸ்வ பாவத்தை உடைத்தாய் இருக்கை –-தேவ தாபிஸ் சமா -பால -77-30-என்கிறபடியே பிராட்டி பிள்ளைகள் மூவர்க்கும் தைவமாய் இருந்தாள் பெருமாளுக்கு மன காந்தையாய் இருந்தாள் ஆக நால்வர்க்கும் ஒக்குமாயிற்று ஆஸ்ரயணீயை யாமிடத்து –இப்படி அப்ராக்ருத ஸ்வ பாவையாய் இருக்கிற இவளும் கூட கூசும்படி அதி ஸூகுமாரமான திருவடிகள் –

குடை நீழலிலே கவரி அசைய சங்கமவை முரல வரி வண்டு இசை பாட மானஸ பத்மாசனத்திலே இருந்து —அன்ன மென் கமலத்து அணி மலர் பீடத்து அலை புனல் இலை குடை நீழல் வீற்று இருக்கும் –பெரிய திருமொழி -9-1-5 -என்றும் –-செந்நெல் ஒண் கவரி அசைய வீற்று இருக்கும் -பெரிய திருமொழி -9-1-5-என்றும் –-சங்கமவை முரல செங்கமல மலரை ஏறி–பெரிய திருமொழி -7-8-2- -என்றும் –
வரி வண்டு இசை பாட அன்னம் பெடையோடு உடன் நாடும் –பெரிய திருமொழி -7-5-9-என்றும் –
மன்னு முதுநீர் அரவிந்த மலர் மேல்-பெரிய திருமொழி –என்றும் சொல்லுகிற ஹம்சமானது
மேலே எழுந்த தாமரை இலை குடையாகவும் – பக்வ பலமான செந்நெலின் அசைவு கவரியாகவும் –
சங்குகளின் தொனி ஜய கோஷமுமாகவும் – வண்டுகளின் மிடற்றோசை பாட்டாகவும் ,-பெற்று
மானஸ சர பத்மம் ஆசனமாக இருக்குமா போலே-

குடை நீழலிலே கவரி யசைய) ‘அன்னமென்‌ கமலத் தணி மலர்ப்பீடத்து அலை புனலிலைக்குடை நீழல்‌ செந்நெலொண் கவரி அசைய வீற்றிருக்கும்‌” (பெரிய திருமொழி 9-1-5) என்றும்‌, “சங்கமவை முரலச்‌ செங்கமல மலரை யேறி” (பெரிய திருமொழி 7-8-2) என்றும்‌, “வரிவண்டிசைபாட அன்னம்‌ பெடையோடுடனாடும்‌” (பெரிய திருமொழி 7-5-9) என்றும்‌ மாநஸ பத்‌மாஸநத்திலே யிருந்து அன்னமானது மேலே எழுந்த தாமரையிலை குடையாகவும்‌, பக்வ பலமான செந்நெல்லினுடைய அசைவுகள்‌ கவரியாகவும்‌ சங்குகளினுடைய த்‌வநி தூர்ய கோஷமாகவும்‌ வண்டுகளுடைய மிடற்றோசை பாட்டாகவும்‌ மாநஸ ஸரஸ்ஸில்‌ பத்‌மம்‌ ஆஸநமாகவும்‌ அன்னம்‌ இருக்குமாபோலே 

மன்னவன் பெரிய வேள்வியில் குறளாய் மூவடி நீரொடும் கொண்டு
பின்னும் ஏழு உலகம் ஈரடியாகப் பெரும் திசை யடங்கிட நிமிர்ந்தோன்
அன்ன மென் கமலத் தணி மலர்ப் பீடத் தலை புனலிலைக் குடை நீழல்
செந்நெல் ஒண் கவரி யசைய வீற்று இருக்கும் திருக் கண்ணங்குடி யுள் நின்றானே
—9-1-5—அன்னமானது தன் கால் பொருக்கும் படி மிருதுவான கமலத்தில் உண்டான அழகிய பீடத்தில்
அலைகிற புனலிலே உண்டான இலை யாகிற குடை நிழல் கீழே-செந்நெல் யானது சாமரம் வீச
ஐஸ்வர்யத்தால் உண்டான வ்யாவர்த்தி அடைய தோற்றும்படி இரா நின்றதாயிற்று –

முன்னிவ் வுலகேழும் இருள் மண்டி யுண்ண முனிவரோடு தாநவர்கள் திசைப்ப வந்து
பன்னு கலை நாலு வேதப் பொருளை எல்லாம்  பரி முகமாய் அருளிய வெம் பரமன் காண்மின்
செந்நெல் மலி கதிர்க் கவரி வீசச் சங்க மவை முரலச் செங்கமல மலரை ஏறி
அன்னமலி  பெடையோடு மமரும்
செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த யமரர் கோவே –7-8-2–செந்நெலின் உடைய  கனத்த கதிரானது கவரி வீச –அங்கே ஊருகிற சங்கங்கள் ஆனவை த்வநிக்க-செவ்வி பெற்ற அலர்ந்த தானரைப் பூவை படுக்கையாகக் கொண்டு அதின் மேல் ஏறி -அன்னமானது அப்பூம் படுக்கையிலே போக ஸ்ரோதஸ்ஸில் தன்னை விஞ்சின பெடையோடு ஒக்க சாய்கிற நிரவதிக சம்பத்தை உடைய – அங்குத்தை திர்யக்குகளும் அகப்பட போக பிரதாநமாய்த்து இருப்பது  –

என் ஐம் புலனும் எழிலும் கொண்டு இங்கே நெருநல் எழுந்து அருளிப்
பொன்னங் கலைகள் மெலி வெய்தப் போன புனிதரூர் போலும்
மன்னு முது நீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட
அன்னம் பெடையோடு உடனாடும் அணியார் வயல் சூழ் அழுந்தூரே
 –7-5-9—ஜல சர சத்வங்கள் மன்னி இருக்கிற –பழையதாய் மாறாத ஜலத்தை உடைய பொய்கைகளில் உண்டான தாமரைப் பூக்களின் மேலே மது பானம் பண்ணின தர்ச நீயமான நிறத்தை உடைத்தான வண்டினங்கள் ஆனவை – செருக்குக்கு போக்கு விட்டு இசை பாட –அதனுடைய பாட்டுக்கு சேர அன்னமானது பெடையோடே ஒக்க ஆட நிற்கும் –

அக் கமலத்திலை போலும் திரு மேனி அடிகள் –திருவாய் -9-7-3-என்று பத்ம பத்ர நிபஸ்யாமளமான திருமேனியை சம்சார துக்கார்த்த தாபம் வராத படி தங்களுக்கு ஒதுங்க நிழலாய் உடையவராய் –
அஹம் அன்னம் தைத்ரியம் -என்னும் படி பரி பக்குவ ஜ்ஞானரானவர்கள் அனுகூல வ்ருத்தி செய்ய
சுத்த ஸ்வாபவர் ஸ்துத்திக — சாராக்ராஹிகள் சாம கானம் பண்ண –-குரு பதாம் புஜம் த்யாயேத் -என்கிற படி ஆச்சார்ய சரண யுகங்களை அனவரதம் நெஞ்சுக்குள்ளே கொண்டு இருக்கும் சிஷ்யர்கள் உடைய ப்ரஹ்ம குருவுக்கு இருப்பிடமான போதில் கமல வென் நெஞ்சம்–பெரியாழ்வார் -5-2-8- -என்கிற மானஸ பத்மத்தை வஸ்தவ்யமாய் உடையராய் —

அக்கமலத்திலை போலும்‌ திருமேனி’ (திருவாய்மொழி 9-7-3 என்று பத்‌ம பத்ர நிப ஸ்யாமமான திருமேனியைத் தங்களுக்கு ஒதுங்க நிழலாக உடையராய்‌ பரிபூர்ண ஜ்ஞாநர்‌ அநுகூல விருத்திகளைப்‌ பண்ண ஸூத்‌த ஸ்வபாவர்‌ ஸ்தோத்ரம்‌ பண்ண ஸாரக்‌ராஹிகள்‌ ஸாமகாநம்‌ பண்ண, “போதிற்‌ கமல வன்னெஞ்சு’ (பெரியாழ்‌-திரு- 5-2-8) என்கிறபடியே ஸிஷ்யர்களுடைய மாநஸ பத்‌மத்தை வாஸஸ்தாநமாக உடையராய்‌-

தக்கிலமே கேளீர்கள் தடம் புனல் வாய் இரை தேரும்
கொக்கினங்காள் குருகினங்காள் குளிர் மூழிக் களத்து உறையும்
செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக்கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே–9-7-3-அவர்களுக்கு உஜ்ஜீவனமான வடிவு -அவயவங்களை பரபாகமான செந்தாமரை இலைபோலே யாய்த்து திரு மேனி -வெண்டாமரை என்னில் விஜாதீயம் என்று –அக்கமலம் -என்கிறது —அடிகளுக்கு –வடிவு அழகையும் அவயவ சோபையையும் காட்டி எழுதிக் கொண்டவர்க்கு இவ் வடிவுக்குத் தோற்று வைவர்ணயத்தை தரித்து இருப்பார் யோக்யர் அல்லரோ என்று கேட்கப் பாருங்கோள் –

ஏதங்கள் ஆயின எல்லாம் இறங்க விடுவித்து என்னுள்ளே
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து
போதில் கமல வல் நெஞ்சம் புகுந்தும் என் சென்னித் திடரில்
பாத இலச்சினை வைத்தார்
பண்டு அன்று பட்டினம் காப்பே -5- 2-8 ––போது -அறிவு-இல் -இருப்பிடம்
கமலம் -ஹிருதய கமலம்-வன்மை -அந்தர்யாமியையும் அறிய ஒட்டாத வலிமை-ஞான பிரசவ த்வாரமான நெஞ்சை இருப்பிடமாக உடைய கமலம் புகுந்தும் – இப்படிக்கொத்த நெஞ்சுக்கு உள்ளே புகுந்து திருத்தின படி

விதியினால் இடரில் அந்தமின்றி இன்பம் பட குடி சீர்மை யிலே இத்யாதி-விதியினால் பெடை மணக்கும் அன்னங்காள் –திருவாய் -1-4-3- -என்றும் –இடரில் போகம் மூழ்கி இணைந்தாடும் மட அன்னங்காள் –திருவாய் -6-1-4- -என்றும் – அந்தரம் ஒன்றும் இன்றி -6-8-10–என்றும் –
மிக இன்பம் பட மேவும் -9-7-10–என்றும் சொல்லுகிற படி சாஸ்த்ரோக்தமான பிரகாரத்திலே –

(விதியினால்‌ இடரில்‌ இத்யாதி குடிச் சீர்மையிலே யாதல்‌) “விதியினால்‌ பெடை மணக்கும்‌” (திருவாய்மொழி 1-4-3) என்றும்‌, “இடரில்‌ போகம்‌ மூழ்கி இணைந்தாடும்‌ மடவன்னங்காள்‌” (திருவாய்மொழி 6-1-4) என்றும்‌, “அந்தரமொன்றுமின்றி அலர்மேலசையும்‌” (திருவாய்மொழி 6-8-10) என்றும்‌ “மிகவின்பம்‌ படமேவும்‌ மென்னடைய அன்னங்காள்‌” (திருவாய்மொழி 9-7-10) என்றும்‌ சொல்லுகிறபடியே வித்‌யுக்த ப்ரகாரத்திலே-

விதியினால் பெடை மணக்கும் மென்னடைய அன்னங்காள்
மதியினால் குறள் மாணாய் வுலகிரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல்வினையே மாளாதோ வென்று ஒருத்தி
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே –
1-4-3–என் பாக்யத்தால் பேடையோடே சம்ச்லேஷிக்கும் –-பேடையின் கருத்து அறிந்து உகப்பிக்கும்-என் ஆற்றாமைக்கு மேலே -நீங்களும் பிரிந்து இருந்து -உங்களைக் கூட்டுகையிலே யத்னம் பண்ண வேண்டாது ஒழிந்தது என் பாக்யம் இறே
உங்கள் பாக்யத்தால் இறே சம்ச்லேஷமே யாத்ரையாக பெற்றது என்னவுமாம்-சம்போகத்தாலே வந்த துவட்சியால் ஆகர்ஷகமான நடையை யுடையவையாகை – தாரை யுடைய புறப்பாடு போலே இருந்ததீ உங்கள் புறப்பாடும் –

இடரில் போகம் மூழ்கி இணைந்தாடும் மட அன்னங்காள்?
விடலில் வேத ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்
கடலின் மேனிப்பிரான் கண்ணனை நெடுமாலைக் கண்டு
உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே.–6-1-4—விஸ்லேஷ கந்தம் இல்லாத சம்ச்லேஷ ரசத்தில் அவகாஹித்து போகத்துக்கு ஏகாந்தமான வனத்திலே போந்து சம்போகம் செல்லா நிற்க -ராவணன் வந்து தோற்றினால் போலே இருக்கை யன்றிக்கே சம்போகத்துக்கு எல்லையில் செல்லப் பெற்றப் படி-இணைந்தாடும்-ஒரு தலை நோவு பட்டு தூது விட வராதே -இரண்டு தலையும் ஓக்க களிக்கப் பெறுவதே -ஒன்றுக்கு ஓன்று பவ்யமாகக் கொண்டு சஞ்சரிக்கை – பேதைக்கு மார்த்த்வம் ஜென்ம சித்தம் -சேவலுக்கு கலவியால் அதின் படி யுண்டாயிற்று

வந்திருந்து உம்முடைய மணிச்சேவலும் நீருமெல்லாம்
அந்தரம் ஒன்றுமின்றி அலர்மேல் அசையும் அன்னங்காள்!

என்திரு மார்வற்குஎன்னை இன்னவாறிவள் காண்மின்என்று
மந்திரத் தொன்றுணர்த்தி உரையீர்மறு மாற்றங்களே.–6-8-10—அழையாது இருக்க நீங்களே வந்து -மஹா ராஜர் இருந்த இடத்தே வந்து உபகரித்தவரைப் போலே இருந்ததீ உங்கள் நீர்மை -இருந்து -என் ஆர்த்திக்கு எல்லாம் உடன் கேடராய் இருந்து-உம்முடைய மணிச்சேவலும் நீரும்-சிலாக்யமாய் பவ்யமான சேவலும் -அப்படியே இருக்கிற நீரும் –பிரிந்து தானும் உடம்பு வெளுத்து பேடையையும் உடம்பு வெளுக்கப் பண்ணும் சேவலைப் போல் அன்றிக்கே இருக்கை -எல்லாம் -ச புத்ர பவ்த்ரம் ச கண என்கிறபடியே சபரிகரமாக-அந்தரம் ஒன்றுமின்றி -சம்போகத்துக்கு வர்த்தகமான பிரிவும் இன்றிக்கே
அலர்மேல் அசையும் அன்னங்காள்!-பூவின் மேல் கலவியால் வந்த ப்ரீதியோடே சஞ்சரிக்கிற அன்னங்காள் -மிதுனம் ஆனால் பூவிலும் சஞ்சரிக்கலாம் ஆகாதே-

தகவன்று என்று உரையீர்கள் தடம் புனல் வாய் இரை தேர்ந்து
மிக வின்பம் பட மேவும் மெல் நடைய அன்னங்காள்
மிக மேனி மெலிவு எய்தி மேகலையும் ஈடு அழிந்து என்
அகமேனி ஒழியாமே திரு மூழிக் களத்தார்க்கே–9-7-10-மிக வின்பம் பட மேவும் -இன்பம் கரை புரளும் படி அன்றோ நீங்கள் சம்ச்லேஷிக்கிறது-பிரிவு தேட்டமாம் படி உன்மஸ்தக ரசமாய் சொல்லுகிறபடி -விஸ்லேஷியா விடில் இரண்டு ஆஸ்ரயமும் அலியும் படி யாய்த்து இவை பரிமாறுகிற படி –
மெல் நடைய அன்னங்காள்-கலவியின் மிகுதி நடையிலே தொடை கொள்ளலாம் படி சர சஞ்சாரம் இருக்கிற படி –

சாம்சாரிக சகல துரிதங்களும் தட்டாத படியும் – ஒரு விச்சேதமும் வாராத படியும் – மென் மேலும் ஆனந்தம் அபி விருத்தம் ஆகும் படியும்-குடி சீர்மையில் அன்னங்காள்–திரு விருத்தம் -29–என்கிற படியே
பார்யா புத்ரர்களாதி யோடு இருந்து பகவத் அனுபவம் பண்ணுகிற-நளிர்ந்த சீலன் நயாசலன்–பெரியாழ்வார் -4-4-8–என்று சொல்லப் பட்ட செல்வ நம்பிமெய்நாவான் மெய்யடியான் விட்டு சித்தன்–பெரியாழ்வார் -4-9-1- -என்கிற பெரியாழ்வாரைப் போலேயும் ,-பற்று அற்றார்கள் –பெருமாள் -1-4-என்றும்
சிற்றயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினார் அற்ற பற்றார் -திருச்சந்த -52-என்றும்
சொல்லுகிறபடி சம்சாரிக சகல சங்கமும் அற்று , உத்தம ஆஸ்ர்ரமிகளாய் பரம ஹம்ச சப்த வாஸ்யரான
நாத முனிகள், யாமுன முனிகள் போல்வாரையும் – இந்த குண சாம்யத்தை இட்டு அன்னம் என்று சொல்லும்
என்கை —

ஸாம்ஸாரிக ஸகல து.:க்கங்களும்‌ தட்டாதபடியாகவும்‌ ஒரு விச்சேதமும்‌ வாராதபடியாகவும்‌ மேல்மேலென ஆநந்தமபி விருத்தமாம்படி யாகவும்‌, “குடிச்சிர்மையிலன்னங்கள்‌’ (திருவிருத்தம்‌ 29) என்கிறபடியே புத்ர தாராதிகளோடே யிருந்து பகவதநுபவம்‌ பண்ணுகிற “நளிர்ந்த சீலன்‌ நயாசலன்‌” (பெரியாழ்‌.திரு. 4-4-8) என்று சொல்லுகிற செல்வ நம்பி, “மெய்ந்நாவன்‌ மெய்யடியான்‌ விட்டுசித்தன்‌” (பெரியாழ்‌.திரு. 4-9-11) என்கிற பெரியாழ்வார்‌ போல்வாரையும்‌, (பற்றற்ற பரமஹம்ஸரான ) “பற்றற்றார்‌ பயிலரங்கம்‌” (பெருமாள்‌ திருமொழி 1-4) என்று ஸாம்ஸாரிக ஸகல ஸங்கத்தையும்‌ விட்டு உத்தமாஸ்ரமிகளாய்‌ பரம ஹம்ஸராயிருக்கிற நாதமுனிகள்‌ யாமுந முனிகள்‌ போல்வாரை அன்னம்‌ என்கிறது என்கிறார்–

இன்னன்ன தூதெம்மை ஆள் அற்ற பட்டு இரந்தாள் இவள் என்று
அன்னன்ன சொல்லாப் பெடையொடும் போய் வரும் நீலம் உண்ட
மின்னன்ன மேனி பெருமான் உலகில் பெண் தூது செல்லா
அன்னன்ன நீர்மை கொலோ? குடிச் சீர்மையில் அன்னங்களே 
–29—குடிப் பிறப்பால் வந்த சீர்மை–அன்னங்களானவை பெண் பிறந்தாருக்கு ஒப்புச் சொல்லலாம் படி குடியில் சீர்மை கண்டிலோம் என்றபடி–குடிச் சீர்மையாவது-அப்போதைக்கு அப்போது விஸ்லேஷ வியஸனம் வர அது அறிகை-அது இல்லாத இவ்வன்னங்கள் என் தசையை அறிந்து சொல்லுமோ-அப்படி பிரம ஸ்வ பாவம் யுள்ளது சொல்லுமே என்பது அவ்வன்னத்தில் இன்னாப்பு என்னோடு கலந்தவனே பிரிவால் வியஸனப்படாமலே என் தூதரைக் கண்டும் இருக்கிறான் என்பதான இன்னாப்பு அவனில் –

நளிர்ந்த சீலன் நயாசீலன் அபிமான துங்கனை நாள் தோறும்
தெளிந்த செல்வனை சேவகம் கொண்ட செம்கண் மால் திருக் கோட்டியூர்
குளிர்ந்து உறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவார் உள்ள நாட்டினில்
விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ள கிலார்களே -4- 4-8 –குளிர்ந்த சீலத்தை உடைய செல்வ நம்பி – ஈஸ்வரன் சீலம் கொதித்து இருக்கும் –-அதுக்கு அடி -வாள் கொள் நீள் மழு வாளி உன்னாகத்தான் –  என்றும் – ஆளாராய்த் தொழுவாரும் அமரர்கள்-என்றும் துர் மாநியான  ருத்னனும் -சாவாமைக்கு மருந்து தின்னும் தேவ ஜாதியும் இறே இவனுக்கு அடிமை செய்வது-நயா சலன்
நயம் -என்று நீதியை சொல்லுகிறது-அங்கும் –நீதி வானவன் -என்னக் கடவது இறே-அசலன் –
நீதிக்கு குலைதலிலாதவன்–சேஷ சேஷி பாவ சம்பந்தம்-ஒண் டொடியாள் திரு மகளும் நீயும் –என்கிற படி அடைவு பட்டு இறே அங்கு இருப்பது-

கைந்நாகத் திடர் கடிந்த கனல் ஆழி படை வுடையான் கருதும் கோயில்
தென்னாடும் வடநாடும் தொழ நின்ற திருவரந்தத் திருப்பதியின் மேல்
மெய்நாவன் மெய்யடியான் விட்டு சித்தன் விரித்த தமிழ் உரைக்க வல்லார்
எஞ்ஞான்றும்   எம்பெருமான் இணை அடிக் கீழ் இணை பிரியாது இருப்பர் தாமே – 4-9 -11–மெய்யே  சொல்லும் நாவை உடையவன் –அசத்தியம் எனபது ஒன்றும் கலவாத நாவை உடையவன் -என்கை
பொய் மொழி ஒன்றில்லா மெய்ம்மையாளன் -என்னுமா போலே –இத்தால் ஸ்ரீ பகவத் வைபவம் 
ஸ்ரீ தேச வைபவம் கீழ் அருளிச் செய்தவை ஒன்றிலும் ஒரு பொய் இல்லாமை சொல்கிறது-மெய்யடியான் –அநந்ய பிரயோஜனான அடியான்-அடியான் என்று பேர் இட்டு பிரயோஜனத்துக்கு அடி ஏற்கும் அவர்கள் பொய் அடியார் இறே – சேஷத்வம் ஸ்வரூபம் ஆனால் – சேஷிக்கு அதிசயத்தை விளைக்கும் அது ஒழிய ஸ்வ அதிசயம் தேடுகை சேராது இறே-அங்கன் இன்றிக்கே சேஷிக்கு மங்களத்தை ஆஸாசித்து கொண்டு திரியும் ஸ்வபாவர்  ஆகையாலே தம்மை மெய்யடியான் என்கிறார்-இவை இரண்டும் தாம் அருளிச் செய்த வசனங்களை அப்யசிப்பார்க்கு ஆப்திக்கு உடலாக அருளிச் செய்தார் ஆய்த்து-விட்டு சித்தன் அரவத்த அமளிப் படியே ஸ்ரீ சர்வேஸ்வரனை தம் உள்ளத்திலே வைத்து கொண்டு இருக்கிறவர்

மாவினை வாய் பிளந்து உகந்த மாலை வேலை வண்ணனை என் கண்ணனை வன் குன்றம் ஏந்தி
ஆவினை அன்று உய்ய கொண்ட ஆயர் ஏற்றை அமரர்கள் தம் தலைவனை அம் தமிழ் இன்ப
பாவினை அவ் வடமொழியை பற்றற்றார்கள் பயில் அரங்கத்து அரவு அணை பள்ளி கொள்ளும்
கோவினை நாவுற வழுத்தி என் தன் கைகள் கொய்ம் மலர் தூ என்று கொலோ கூப்பும் நாளே—-1-4—தன்னையே பற்றி புறம்புள்ளவற்றை அநந்ய பிரயோஜனர் நித்ய வாஸம் பண்ணுகிற ஸ்ரீ கோயிலிலே
ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிற நாதனை-நாத் தழும்பு ஏறும்படி ஸ்தோத்ரங்களைப் பண்ணி-கை தழும்பு ஏறும்படி புஷ்பாத் யுபகரணங்களைப் பணிமாறி அஞ்சலி பண்ணப் பெறுவது என்றோ –

பொற்றை யுற்ற முற்றல் யானை போர் எதிர்ந்து வந்ததைப்
பற்றி உற்று மற்றதன் மருப்பு ஒசித்த பாகனூர்
சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினார்
அற்ற பத்தர் சுற்றி வாழும் அம் தண் நீர் அரங்கமே –52—புருஷார்த்தாந்தரங்களிலும் சாதநாந்தரங்களிலும் பற்று அற்று பெரிய பெருமாளே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று இருக்குமவர்கள் –த்ரிதண்ட தாரிகளாய் பகவத் விஷயத்தில் ஏகாந்த ஹ்ர்தயராய் பகவத் வ்யதிர்க்தங்களை த்ரணமாக புத்தி பண்ணும் சந்நியாசிகள் என்றுமாம்-சுற்றி வாழும் – சர்வ அவஸ்தையிலும் விடாதே கோயில் வாசமே வாழ்வாக இருக்குமவர்கள் என்னுதல் -தேச ஸம்ர்த்தியை மநோரதித்து அதுவே போக்யமாக நினைத்து இருக்குமவர்கள் என்னுதல் –சுற்றல்-எண்ணல்-

வண்டு தும்பிகள் என்கிறது யாரை என்று அருளி செய்கிறார் மேல்–

என் பெறுதி என்ன பிரமியாது உள்ளத்துளூறிய மது வ்ரதமாய் தூமது வாய்கள் கொண்டு
குழல் வாய் வகுளத்தின் சாரம் க்ரஹித்துத் தே தென வென்று ஆளம் வைத்துச் சிறு கால் எல்லியம் போது குறிஞ்சி மருள் காமரம் கந்தாரம் தலைக் கொள்ளப் பாடித் துன்னிட்டு நெருக்க நீக்கென்று கடந்து புகும் தகைவறப் புக்கு வண்டு ஒத்து இருண்ட குழலிலே சங்கை அற மருவி அருளாத யாம் என்று ஓடி வந்து வாசமே ஊதி வண்டே கரியான தெய்வ வண்டோடே சேர்விக்கும் சேமமுடை நாரதர் முனி வாஹனர் தம்பிரான்மார் போல்வாரை வண்டு தும்பி என்னும்–சூரணை-152-

அதாவது-என் பெறுதி என்ன பிரமியாது-கோல் தும்பீ ஏரார் மலர் எல்லாமூதி நீ என் பெறுதி–பெரியாழ்வார் -8-4-5 – என்று நிவர்திப்பிக்க வேண்டும் படி- அப்ராக்ருத விஷயங்களை போக்கியம் என்று பிரமியாதே-(இது ஒன்றே வண்டுகளும் தும்பிகளுக்கும் இவருக்கும் உண்டான வாசி -மேல் எல்லாம் ஒற்றுமைகள் _-உள்ளத்துளூறிய மது வ்ரதமாய் –உளம் கனிந்து இருக்கும் அடியவர் உள்ளத்துளூறிய தேனை -பெரிய திருமொழி -4-3-9-என்று தன்னுடைய சௌந்தர்ய சீலாதிகளை நினைத்து ஹிருதயம் பக்குவமாய் இருக்கும் சேஷ பூதருடைய ஹிருதயத்தில் ஊறிய தேனை -என்கிற பகவத் விஷயம் ஆகிற மதுவை விரும்பி –-த்வாம் ருதஸ்யந்தினி பாத பங்கஜே நிவேசிதாத்மா கதமன்யதிச்சதி – ஸ்திதேரேவிந்தே மகரந்த நிர்ப்பரே மது வ்ரதோ நேஷூரகம் ஹி வீஷதே – ஸ்தோத்ர ரத்னம் -27-என்கிறபடி- மற்று ஒன்றை புரிந்து பாராதே இத்தை புஜிக்கையே வ்ரதமாக உடையவராய் —

(என்பெறுதியென்ன ப்‌,ரமியாது) ஏரார்‌ மலரெல்லாமூதி நீ என்பெறுதி (பெரிய
திருமொழி 8-4-5) என்று நிவர்த்திப்பிக்க வேண்டாதபடி அப்ராப்த போக்யங்களிலே
ப்ரவணரன்றிக்கே, (உள்ளத்துளூறிய மது வ்ரதமாய்‌) “உளங்கனிந்தருக்கும்‌ பெரிய திருமொழி 4-3-9) என்று அடியவர்‌ தங்கள்‌ உள்ளத்துள்‌ ஊறிய தேனை ( பகவத்‌ விஷயத்திலே பக்வமான ஸ்நேஹத்தை உடையராயிருக்கிற ஸ்ரீவைஷ்ணவர்களுடைய திருவுள்ளத்திலே ஊறியிருப்பதாய்‌ “ஸாஹிஸ்ரீரம்ருதாரகிற மதுவை ஸதாம்‌” என்று நிரதிஸய போக்‌யமான பகவத்‌, குணமாகிற மதுவை “தவாம்ருதஸ்யந்திநி” என்று தொடங்கி “மதுவ்ரதோ நேஷுரகம்‌ ஹி வீக்ஷதே (ஸ்தோத்ர ரத்நம்‌ 27) என்கிறபடியே புஜிக்கையே வ்ரதமாக உடைத்தாய்‌.-

ஏரார் மலரெல்லா மூதி நீ என் பெறுதி
பாரார் உலகம் பரவப் பெரும் கடலுள்
காராமையான கண்ண புரத் தெம்பெருமான்
தாரார் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ —8-4-5–ஒன்றிலே உன் அபேஷை குறைவறக் கிடக்கிறது அன்றே – நிறம் கொண்டு பிரமிக்கிற இத்தனை இறே உள்ளது – எங்கும் புக்கும் ஆத்ம ரஷணம்  பண்ணினாய் -என்னும் வார்த்தை கேட்கப் பெற்றிலையே –பூமிக்கு செவ்வி பெற்று இருந்துள்ள
திருத் துழாயிலே தாழ்ந்தூதாய் –

களம் கனி வண்ணா கண்ணனே என்தன் கார் முகிலே என நினைந்திட்டு
உளம் கனிந்து இருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்து ஊறிய தேனைத்
தெளிந்த நான்மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
வளம் கொள் பேரின்பம் மன்னி நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே–4-3-9–ஸ்ரமஹரமான வடிவை எனக்கு முற்றூட்டாக்கினவனே -என்று நினைத்து ஹிருதயமானது பக்வமாய் இருக்கும் சேஷ பூதர் இடைய ஹிருதயத்தில் ஊறிய தேன் போலே நிரதிசய போக்யன் ஆனவனை-

தவாம்ருதஸ்யந்திநி பாத பங்கஜே
நிவேஶிதாத்மா கதம் அந்யதிச்சதி? |
ஸ்திதே’ரவிந்தே மகரந்தநிர்ப்பரே
மதுவ்ரதோ நேக்ஷுரகம் ஹி வீக்ஷதே |
|-ஶ்லோகம் 27 –-அதிகமான தேனைப் பெருக்கும் உன்னுடைய திருவடிகளில், உன்னுடைய க்ருபையினால் பதிந்திருக்கும் என் மனம், வேறு விஷயங்களை எப்படி ஆசைப்படும்? தேன் நிறைந்த சிவந்த தாமரை இருக்கும்பொழுது, ஒரு வண்டானது முள்ளிப்பூவை விரும்பாதன்றோ?

தூ மது வாய்கள் கொண்டு — சூடிய தண் துளபம் உண்ட தூ மது வாய்கள் கொண்டு -என்று பகவத் போக்யதா அனுபவத்தாலே பரிசுத்தமான இனியதான வாயைக் கொண்டு ..-குழல் வாய் வகுளத்தின் சாரம் க்ரஹித்து என் குழல் மேல் ஒளி மா மலரூதீரோ -திருவாய் -6-8-3–என்கிறபடியே
நாள் கமழ் மகிழ் மாலை மார்பர் –4-10-11–ஆகையாலே வகுள தாரரான ஆழ்வார் உடைய
வைகுந்த மன்னாள் குழல் வாய் விரை போல் விண்டுகள் வாரும் மலருளவோ நும் வியலிடத்தே–திருவிருத்தம் –55 -என்று பரத்வாதிகள் போக்யதையும் பரிச்சின்னம் என்னும் படியான திருக் குழலிலே வைத்த – ஒளி மா மலரான-வகுளத்தின் சாரத்தை கிரஹித்து அவ்வழியாலே இத் தலையில் போக்யத்தை அனுபவித்து

(தூ மது வாய்கள்‌ கொண்டு) “தண்டுளவமுண்ட தூமது வாய்கள்‌ கொண்டு” (திருவாய்மொழி 6-8-3) என்று பகவத்‌ போக்யதையை அநுபவிக்கையாலே பரி ஸூத்‌தமாய்‌ இனிதான வாயைக்‌ கொண்டு. (குழல்‌ வாய்‌ வகுளத்தின்‌ ஸாரம்‌ க்‌ரஹித்து) “ஓடிவந்தென்‌ குழல்‌ மேல்‌ ஒளிமாமலர்‌ ஊதீரோ” (திருவாய்மொழி 6-8-3) என்றும்‌, “வைகுந்த மன்னாள்‌ குழல்வாய்‌ விரைபோல்‌ விண்டு கள்வாரும்‌ மலருளவோ நும்‌ வியலிடத்தே” (திருவிருத்தம்‌ 55) என்றும்‌, மணிவண்டு வகுளத்தின்‌ மலர்மேல்‌ வைகு” (பெரிய திருமொழி 6-6-1 என்றும்‌, ‘நாட்கமழ்‌ மகிழ்மாலை மார்பினன்‌” (திருவாய்மொழி 4-10-11) என்றும்‌ பரத்வாதி களிலே போக்‌யதையையும்‌ பரிச்சிந்ந மென்னும்படியாய்‌ பகவதநுபவ ஜநித ப்ரீதியாலே விஸ்த்ருதமாயிருக்கிற ஆழ்வாருடைய போக்‌யதையை புஜித்து.-

ஓடிவந்து என்குழல்மேல் ஒளிமாமலர் ஊதிரோ?
கூடிய வண்டினங்காள்! குருநாடுடை ஐவர்கட்காய்
ஆடிய மாநெடுந்தேர்ப் படைநீறுஎழச் செற்றபிரான்
சூடிய தண்துளபம்உண்ட தூமது வாய்கள்கொண்டே.–6-8-3—சாரார்த்தியம் பண்ணும் போது வைத்த வளையத்தில் மது பானம் பண்ணின -அவதாரங்களில் ஏதேனும் ஒன்றாலே வளையம் வைக்கிலும் அவ்வஸ்தையை பிராப்பித்து அனுகூலிக்கிறது-திருத் துழாயாக கடவது-தூமது வாய்கள்கொண்டே.–அம்மதுவை பானம் பண்ணுகையாலே சுத்தமாய் தேனை யுடைய வாய்களோடே கூட -இனிதான பேச்சை யுடைத்தாய் இருக்கை என்றுமாம் -வாய் -வார்த்தை –த்ருஷ்டா சீதா என்றால் போலே -என்னையும் மது பானம் பண்ணுவித்து நீங்களும் மது பானம் பண்ணுங்கோள்-

ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே.–4-10-11–நாள் தோறும் கமலா நின்றுள்ள திரு மகிழ் மாலையை திரு மார்பிலே யுடையவர்-நண்ணாதார் முறுவலிப்ப -திருவாய் மொழியில் சம்சாரிகள் கிலேசத்தை அனுசந்தித்து திரு உள்ளம் வாடின வாறே இட்ட மாலையும் வாடிற்று-பகவத் பரத்வத்தை உபதேசித்து -இவர்களுக்கு ஒரு குறை இல்லை -என்று திரு உள்ளமுகந்தவாறே அதுவும் செவ்வி பெற்றது

வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித் துழல் வீர்க்கு ஓன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய்
மண்டுகளாடி வைகுந்த மன்னாள் குழல்வாய் விரை போல்
விண்டுகள் வாரும் மலருளவோ நும்வியலிடத்தே
–55–வைகுந்தம் அன்னாள் –காதா சித்தமாக அவன் வந்து ரஷித்து போம் இவ் விபூதி போல் அன்றியிலே –அவன் சதா சன்னதி பண்ணுகிற அவ்விபூதியோடு ஒத்து -உள்ளவள் இறே இவள் – தன் சன்னதியிலே வேறு ஒன்றின் உடைய போக்யதை நெஞ்சில் படாதபடி இருக்கும் அவன்–இப்படி ஆபத்து வந்து உதவ வேண்டாத படி அவனுடைய அழியாத தேசம் போலே இருக்கிறவளுடைய–குழல்வாய் விரை போல்–புஷ்பாதியாலே வந்தேறியான பரிமளம் அன்றியே ஸ்பா விகமான குழலின் பரிமளம் போலே (கந்தம் கமழும் குழலீ அன்றோ இவள் )-விண்டு எங்கும் ஒக்கப் பரம்பி-கள் வாரும்-மதுஸ் யந்தியாய்க் கொண்டு ஆனந்திப்பியா நிற்கும்-மலருளவோ நும் வியலிடத்தே-நீங்கள் ஸஞ்சரிக்கிற பரந்த தேசத்திலே இப்படிக்கொத்த பூவும் உளதோ-

தே தெனவென்று ஆளம் வைத்து – வரி வண்டு தே தென வென்று இசை பாடும் –பெரிய திருமொழி -4-1-1-யாழின் இசை வண்டு இனங்கள் ஆளம் வைக்கும் –பெரியாழ்வார் -4-8-6–என்கிற படியேஇப்படி பகவத் பாகவத போக்யதைகளை அனுபவித்து -செருக்குக்குப் போக்கு வீடாக ஆளத்தி வைத்து-(இத்தால் யாழில் இசை வேதத்து இயல்களை வாயாரப் பாடிக் கொண்டு இருக்கும்படியைச் சொன்னவாறு )

தேதெனவென்று ஆளம்‌ வைத்து) வரி வண்டு தேதெனவென்று இசைபாடும்‌” (பெரிய திருமொழி 4-1-1) என்றும்‌, “யாழினிசை வண்டினங்கள்‌ ஆளம்‌ வைக்கும்‌ அரங்கம்‌” (பெரியாழ்‌.திரு. 4-8-6 என்றும்‌ இப்படி பகவத்‌ பாகவத குணங்களை அனுபவித்து உண்டான செருக்குக்குப்‌ போக்குவீடாக ஆளத்தி வைத்து,

போதலர்ந்த பொழில் சோலைப் புறம் எங்கும் பொரு திரைகள்
தாதுதிர வந்தலைக்கும் தட மண்ணித் தென் கரை மேல்
மாதவன் தான் உறையுமிடம் வயல் நாங்கை வரி வண்டு
தேதென என்று இசை பாடும் திருத் தேவனார் தொகையே–4
-1-1-வரியை உடைத்தான வண்டானது முக்தர் சாம கானம் பண்ணுமா போலே தேதென என்று இசை பாடா நின்றுள்ள திருத் தேவனார் தொகை-

கீழ் உலகில் அசுரர்களை கிழங்கு இருந்து கிளராமே 
ஆழி விடுத்தவருடைய கருவழித்த வழிப்பனூர்  
தாழை மடலூடு உரிஞ்சித் தவள வண்ண பொடி அணிந்து   
யாழினிசை வண்டினங்கள் ஆளம் வைக்கும் அரங்கமே – 4-8- 6-அந்த ஹர்ஷ பிரகர்ஷத்தாலே –
யாழ் ஓசை போல் இருக்கிற இனிய இசையை உடைய -வண்டின் உடைய திரள் ஆனவை
பாடுகைக்கு அடிக் கொண்டு  தென தென என்று ஆளத்தி வையா நிற்கும்   அரங்கமே

சிறு கால் எல்லியம் போது குறிஞ்சி மருள் காமரம் கந்தாரம் தலைக் கொள்ள பாடித் — (இத்தால் -எம்மானைச் சொல்லிப் பாடி -பண்கள் தலைக் கொள்ளப் பாடி – வேத முதல்வனைப் பாடி -கொண்டு இருத்தலைச் சொன்னவாறு ) அறுகால் வரி வண்டுகள் ஆயிரம் நாமம் சொல்லி சிறு காலை பாடும் –பெரியாழ்வார் -4-2-8–என்றும் –-எல்லியம் போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி –பெரியாழ்வார் -4-8-8–என்றும்-வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும் -பெரிய திருமொழி -2-1-2-என்றும் –
வண்டினங்கள் காமரங்கள் இசை பாடும் -பெருமாள் -8-4-என்றும் –-கந்தார மன் தேனிசை பாட-பெரிய திருமொழி -3-8-1 -என்றும் – என்கிறபடியே காலோசிதமான பண்களை –-பண்கள் தலைக் கொள்ளப் பாடி-திருவாய் -3-5 2–என்கிற படி தலைமை பெறும் படி பாடி —

(சிறுகாலெல்லியம் போது குறிஞ்சி மருள்‌ காமரம்‌ கந்தாரம்‌ தலைக் கொள்ளப்‌ பாடி) “அறுகால்‌ வரிவண்டுகள்‌ ஆயிரநாமஞ்சொல்லி சிறுகாலைப்‌ பாடும்‌”, (பெரியாழ்‌.திரு. 4-2-8)-எல்லியம்போது இருஞ்சிறைவண்டு எம்பெருமான்‌ குணம்‌ பாடும்‌” (பெரியாழ்‌- திரு- 4-8-8 “வண்டு குறிஞ்சி மருளிசைபாடும்‌” (பெரிய திருமொழி 2-1-2), “வண்டினங்கள்‌ காமரங்களிசைபாடும்‌” (பெருமாள்‌ திருமொழி 8-4), “கந்தாரமந்தேனிசைபாட” (பெரிய திருமொழி 3-8-1), “பண்கொள் தலைக்‌ கொள்ளப்‌ பாடி” (திருவாய்மொழி 3-5-2 என்று காலோசிதமான பண்களிலே பண்கள்‌ தலைமேற்‌ பொரும்படி பாடி,

குறுகாத மன்னரை கூடு கலக்கி வெம் கானிடை
சிறு கால் நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன் மலை
அறுகால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லி
சிறுகாலை பாடும்
தென் திரு மால் இரும் சோலையே – 4-2 -8—ஷட் பதங்களான அழகிய வண்டுகள் –
இத்தால் இவற்றின் உடைய ரூப குணங்கள் சொல்லிற்று–தேவோ நாம சகஸ்ரவான் -என்று(பேர் ஆயிரம் உடைய பீடு உடையான் ) அவனுடைய ஆயிரம் திரு நாமங்களையும் சத்வோத்தரமான காலத்திலே ப்ரீதிக்கு போக்கு வீடாகப் பாடா நிற்கும்

வல் எயிற்று கேழலுமாய் வாள் எயிற்று சீயமுமாய் 
எல்லை இல்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தானூர்  
எல்லியம் போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி 
மல்லிகை வெண் சங்கூதும்
மதிள் அரங்கம் என்பதுவே – 4-8- 8—அறுகால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லி சிறு காலை பாடும் -(4-2-8)–என்றாரே அங்கே  இங்கே இப்படி அருளிச் செய்கிறார் –இத்தால் 
திவ்ய தேசங்களில் வர்த்திக்கும் வண்டுகள் ஆனவை -கால அனுகுணமாக பண்களிலே  பகவத் குணங்களை நியமேன பாடும்படி சொல்லுகிறது – -அந்திப் போதிலே  -பெரிய சிறகை உடைத்தான வண்டுகள் ஆனவை –பகவத் பிரவணமான விஷயங்களுடைய ரூப குணங்களும் உத்தேஸ்யம் என்று இருக்குமவர் ஆகையாலே இவற்றினுடைய சிறகை வர்ணித்து கொண்டு  அருளிச் செய்கிறார் –சர்வ ஸ்வாமியான பெரிய பெருமாளுடைய கீழ் சொன்ன ஆஸ்ரித ரஷணங்களால் உண்டான திவ்ய குணங்களை ப்ரீதி ஹர்ஷத்தாலே பாடி  -மல்லிகை பூவாகிய வெள்ளிய சங்கை ஊதா நிற்கும் –அதாவது – சாயங்கால புஷ்பமான மல்லிகையினுடைய பூவை அது இருந்து ஊதும் போது  அந்த பூவானது அலருவதுக்கு முன்பு – தலை குவிந்து – மேல் பருத்து – காம்படி நேர்ந்து -வெளுத்த நிறத்தை உடைத்தாய் -சங்கு  போலே இருக்கையாலே  வெள்ளிய சங்கை இருந்து ஊதுமா போலே இருக்கும் ஆய்த்து –அத்தைப் பற்ற இப்படி  அருளிச் செய்கிறார் 

உறவு சுற்றம் என்று ஓன்று இலா ஒருவன் உகந்தவர் தம்மை
மண் மிசைப் பிறவியே கெடுப்பான் அது கண்டு என் நெஞ்சம் என்பாய்
குறவர் மாதர்களோடு வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும் வேங்கடத்து
அறவனாயாக்ற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-2-குறப் பெண்களோடு கூட வண்டுகள் ஆனவை குறிஞ்சி இந்தளம் என்கிற பண்ணைப் பாடா நிற்கிற –

தாமரை மேல் அயன் அவனை படைத்தவனே! தயரதன் தன்
மா முதலாய்! மைதிலி தன் மணவாளா வண்டினங்கள்
காமரங்கள் இசை பாடும் கண புரத்து என் கருமணியே!
ஏமருவும் வெம் சிலை வலவா! ராகவனே! தாலேலோ– 8-4–வண்டினங்கள்-காமரம் -என்கிற பண்ணிலே -இசை பாடுகிற ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே சந்நிஹிதன் ஆனவனே-

நந்தா விளக்கே ! அளத்தற்கு அரியாய் ! நர நாரணனே ! கரு மா முகில் போல்
எந்தாய் ! எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம் எத்திசையும்
கந்தாரம் அந்தேன் இசைபாட மாடே களி வண்டு மிழற்ற நிழல் துதைந்து
மந்தாரம் நின்று மண மல்கு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே !–3-8-1–பார்த்த பார்த்த இடம் எங்கும் காந்தாரம் என்கிற பண்ணை-அந்தேனை உண்டு தர்சநீயமான வடிவை உடைத்தாய் -தேன் என்று பேரை உடைத்தான வண்டுகள் ஆனவை மதுபானம் பண்ணி இசை சொல்ல –அதனுடைய பர்யந்த்தே சம்ச்லேஷத்தால் ஹ்ருஷ்டமாய் களிக்கிற வண்டுகள் ஆனவை –நிரம்பா மென் சொல்லாலே ஆலத்தி வைக்க-

தண் கடல் வட்டத்து உள்ளாரைத் தமக்கு இரையாத் தடிந்து உண்ணும்
திண் கழற்கால் அசுரர்க்குத் தீங்கு இழைக்கும் திருமாலைப்
பண்கள் தலைக் கொள்ளப் பாடிப் பறந்தும் குனித்தும் உழலாதார்
மண் கொள் உலகிற் பிறப்பார் வல்வினை மோத மலைந்தே.–3-5-2–பண்கள் உஜ்ஜவலமாம் படி -என்னுதல் -ஹர்ஷத்தாலே ஒரு பண்ணிலே எல்லாப் பண்ணும் கூடும்படி அடைவு கெடப் பாடி என்னுதல் –

துன்னிட்டு நெருக்க நீக்கு என்று கடந்து புகும் தகைவற புக்கு –(இத்தால் வண்டுகள் மிக நெருக்கமான இடங்களிலும் தடை இன்றி செல்லும் -தன் இனமான பொருள்களோடு நட்பு கொள்ளும் –இறைவன் சந்நிதியில் அச்சம் சிறிதும் இன்றி நிற்கும் –அவ்வாறே இவர்களும் நேச நிலைக்கதம் நீக்கு என்று சொல்லி -பொன்னியியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு- அங்குள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களோடே சேர்ந்து -அஞ்ச வேண்டிய அபராதம் சிறிதும் இல்லாமையால் சங்கை இல்லாமல் ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி நிற்பார்கள் -என்கிறது )-பின்னிட்ட சடையானும் பிரமனும் இந்திரனும் துன்னிட்டு புகலரிய –பெருமாள் -4-3-என்றும் –சுந்தரர் நெருக்க –திருப்பள்ளி எழுச்சி –7-என்றும் –சொல்லுகிறபடியே திரு வாசலிலே சேவாபரர்கள் நிறைந்து -தலை நுழைக்க ஒண்ணாத படி நெருக்க – நேச நிலை கதவம் நீக்கு–திருப்பாவை –16 -என்று திரு வாசல் காப்பானை திருக் கதவு திறக்க வேணும் என்று அபேஷித்து ,
பொன்னியியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு -பெரிய திருமடல் –73-என்கிறபடி- திருஷ்ட்டி சித்த அபஹாரம் பண்ணும் திரு வாசல் அழகிலே துவக்கு ஒண்ணாதே – அத்தை கடந்து புக வேண்டுகையாகிற தகைவு அற – பாடுவாரான அந்தரங்கதை யாலும் ஏகாக்ர சித்ததையாலும் போய்ப் புக்கு-வண்டு ஒத்த இருண்ட குழலில் சங்கை அற மருவி – வண்டு ஒத்த இருண்ட குழல்-பெரியாழ்வார் -2-5-7-என்கிறபடியே -ஸ்வசமான விஷயம் உள்ள இடத்தில் சேர்ந்து –-நீ மருவி அஞ்சாதே நின்று–திரு நெடும் தாண்டகம் -26- என்கிறபடி நிச்சங்கமாக அவனுக்கு சமீப வர்திகளாய்–

(துன்னிட்டு நெருக்கி நீக்கென்று ) “துன்னிட்டுப்‌ புகலரிய வைகுந்த நீள்வாசல்‌” (பெருமாள்‌ திருமொழி 4-3), “சுந்தரர்‌ நெருக்க விச்சாதரர்‌ நூக்க” (திருப்பள்ளியெழுச்சி 7) என்றபடி திருவாசல்களிலே “நேச நிலைக் கதவம்‌ நீக்கு” திருப்பாவை 16) என்றும் “பொன்னியலுமாடக்‌ கவாடம்‌ கடந்து புக்கு” (பெரியதிருமடல்‌ 73) என்கிறபடியே தகைவறப்‌ புக்கு (வண்டொத்திருண்ட குழலிலே மங்கையற மருவி) “நீ மருவி அஞ்சாதே நின்று” (திருநெடுந்தாண்டகம்‌ 26) என்று பாடுமவர்களாகையாலே ஸங்கையற பகவத்‌ ஸமீப வர்த்தியாய்‌ மருவி-

பின் இட்ட சடையானும் பிரமனும் இந்த்ரனும்
துன்னிட்டு புகல் அரிய
வைகுண்ட நீள் வாசல்
மின் வட்ட சுடர் ஆழி வேம்கட கோன் தான் உமிழும்
பொன் வட்டில் பிடித்து உடனே புக பெறுவேன் என ஆவேனே– 4-3—பின்னப் பட்ட சடையான் என்னுதல் –
பின்னே நாலப்பட்ட சடையான் -என்னுதல்-பின்னே வர்த்திக்கக் கடவன் இறே புத்ரன்-அப்படியே ப்ரஹ்மாவின் பின்னே நிற்கும் சடையான் என்னுதல் –இவனுக்கு ஜனகனான ப்ரஹ்மாவும்-ச ப்ரஹ்ம ச சிவ -என்றால் இவர்களோடு ஒக்க – சேந்திர-என்னும்படியான இந்த்ரனும்-ஒருவருக்கு ஒருவர் முன்பு போக வேண்டி இருக்கையாலே புக வரிதாய் இருக்கிற வைகுந்த நீள் வாசலிலே –

அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ அரும் தவ முனிவரும் மருதரும் இவரோ
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ எம்பெருமான் உன் கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க இயக்கரும் மயங்கினர் திரு வடி தொழுவான்
அந்தரம் பாரிடம் இல்லை மற்று இதுவோ அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே--7—சுந்தரர் நெருக்க)தேவ ஜாதியிலே ஒரு பே,தம். ” சுந்தரம்’ என்று அழகாய் அத்தாலே பாடுவாரென்னவுமாம். சுந்தரரென்று கந்தர்வர்,(விச்சாதரர் நூக்க) அதிலே முன்கை வலியராயிருப்பார் சிலர்.

நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
கோயில் காப்பானே கொடித் தோன்றும் தோரண
வாசல் காப்பானே மணிக் கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறிமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே யம்மா நீ
நேச நிலைக் கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்–16-அது உன்னிலும் பரிவுடைத்தான கதவு எங்களால் தள்ளப் போகாது நீயே திறக்க வேணும் – என்கிறார்கள்-கம்சன் பரிகரம் அடைய பிரதி கூலமாய் இருக்குமா போலே திருவாய்ப்பாடியிலே சேதன அசேதன விபாகம் இன்றியிலே எல்லாம் அனுகூலமாய்த்து இருப்பது-படியாய்க் கிடந்தது உன் பவளவாய் காண்பேனே -என்னுமா போலே –அணைய ஊர புனைய –ஸ்தாவர ஜென்மங்களை பெருமக்கள் ஆதரிப்பார்கள் அன்றோ–

மன்னு மறையோர் திரு நறையூர் மா மலை போல்
பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு ——–73
என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் நோக்குதலும்
மன்னன் திரு மார்பும் வாயும் அடி இணையும் ————74–மலையைக் கொடு வந்து நெருங்க வைத்தால் போலே யாய்-அதி ஸ்லாக்கியமாய் ஸ்ப்ருஹநீயமான மாடங்களில் உண்டான –அவன் காண்கை-
அவ வாளம் காலை தப்பின படி பல ஹானிக்கு முன்னே புகும் இத்தனை என்னுடைய படபாக்னி குளிர –

பிண்டத் திரளையும் பேய்க்கிட்ட நீர் சோறும்
உண்டற்கு வேண்டி நீ ஓடித் திரியாதே
அண்டத்த அமரர் பெருமான் அழகமர்
வண்டு ஒத்து  இருண்ட  குழல் வாராய் அக்காக்காய்
மாயவன்தன் குழல் வாராய் அக்காக்காய் -2 5-7 –அழகு பொருந்தி இருந்துள்ள வண்டு போலே
சுருண்டு இருண்டு இருக்கிற குழல்களை வாராய்-

தேமருவு பொழிலிடத்து மலர்ந்த போதைத் தேனதனை வாய் மடுத்து உன் பெடையும் நீயும்
பூ மருவி யினிதமர்ந்து பொறியிலார்ந்த அறுகால சிறு வண்டே தொழுதேன் உன்னை
ஆ மருவி நிரை மேய்த்த யமரர் கோமான் அணியழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று
நீ மருவி அஞ்சாதே நின்றோர் மாது நின் நயந்தாள் என்று இறையே இயம்பிக் காணே -26—ஆ மருவி நிரை மேய்த்தவன் ஆகையாலே திர்யக் ஜாதியான உனக்கு முகம் தரும் நீ சென்று கிட்டி –நீ மருவி –
என்னைப் போல் அவனுடைய ஸ்லாக்கியத்தைக் கண்டு வைத்தும் அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே-என்று அவர் பக்கலிலே அதஸ்மிம் ஸ்தத் புத்தி பண்ணி -பிற்காலியாதே அவனோடு பொருந்தி –அஞ்சாதே நின்று- அமரர் கோமானாய் இருக்கிற படியைப் பார்த்து அஞ்சாதே ஆ மருவி நிரை மேய்த்த படியைப் பார்த்து தரித்து நின்று –அங்கன் இன்றியே-அஞ்சாதே நின்று –-மகிஷி பக்கலில் நின்றும் வந்தார்கள் என்று தோற்றும் படி மேலிட்டு நின்று வார்த்தை சொல்லுங்கோள் என்கிறாள் ஆகவுமாம் – மேலிட்டு வார்த்தை சொல்லும் போதே என் பக்கல் நின்று வருகிறார்கள் என்று இருக்கும்-

அருளாத யாம் என்று ஓடி வந்து வாசமே ஊதி- –அருளாத நீ அருளி–திருவாய் -1-4-6 -என்றும் ,
யாமிதுவோ தக்கவாறு–திருவாய் –6-8-4-என்றும் , இத்தலையில் ஆர்த்தியை அவனுக்கு அறிவித்து –
ஓடி வந்து என் குழல் மேல் ஒளி மா மலர் ஊதீரோ-திருவாய் -6-8-3 -என்று அவனோடு கூட வர இராதே முந்துறவே ஓடி வர வேண்டும் என்று அபேஷித்து விட்ட படியே – இத்தலையில் ஆர்த்திக்கு ஈடாக அவன் வரவை அறிவிக்க விரைந்து வந்து —தங்கள் வரவாலே -இத்தலையில் வந்த செவ்வியை அனுபவித்து –பூம் துளவ வாசமே வண்டு கொண்டு வந்து ஊதுமாகில் –பெரிய திருமொழி -11-1-9-என்கிற படியே
அத் தலையில் தாங்கள் அனுபவித்த போக்யதையை –தங்கள் வாக்காலே -வரவாலே இத் தலைக்கு பிரகாசிப்பியா நின்று கொண்டு ஆஸ்வசிப்பித்து-

(அருளாதயாமென்று ஓடிவந்து வாசமேயூதி) “அருளாத நீரருளி” (திருவாய் 1-4-6) என்றும்‌, யாமிதுவோ தக்கவாறு (திருவாய்மொழி 6-8-4) என்றும்‌, “ஓடிவந்தென்‌ குழல்மேல்‌’ (திருவாய்மொழி 6-8-3) என்றும்‌, துளவின் வாசமே வண்டு கொண்டு வந்தூதுமாகில்‌” (பெரிய திருமொழி 11-1-9) என்றும்‌ இத்தலையிலார்த்தியை அவனுக்கறிவித்து அவனுடைய விஷயிகாரத்தை இத்தலைக்குண்டாக்க இத்தலையில்‌ ஸெளமநஸ்யத்தைத்‌ தாங்களநுபவித்து அத்தலையில்‌ போக்‌யதையாலே இத்தலையை ஆஸ்வஸிப்பித்து–

அருளாத நீர் அருளி யவராவி துவரா முன்
அருளாழிப் புட்கடவீர் யவர் வீதி ஒரு நாள் என்று
அருளாழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
அருளாழி வரி வண்டே யாமும் என் பிழைத்தோமே–1-4-6-அவள் பக்கல் அருளக் கடவோம் அல்லோம் என்று சங்கல்பித்து இருக்கிற நீர் -மயர்வற மதிநலம் அருளினன்-என்று ஓரடி போகமாட்டாதே நெஞ்சு உருகின இவர்-அருளாத நீர் என்னும் போதைக்கு என்ன அபஸ்மார விசேஷம் அறிகிலோம் -என்று பிள்ளான் – அருளாத நீர் என்று திரு நாமம் சாற்றுகிறாள் -என்று சீயர்-அவள் தய நீய தசையைக் கண்டு அருள வேணும் – இதுக்கு முன்பு இப்படி தய நீயர் இல்லாமையாலே கிருபை பண்ணாது இருக்கிற நீர் என்னவுமாம்

தூமது வாய்கள்கொண்டு வந்து, என்முல்லைகள்மேல் தும்பிகாள்!
பூமது உண்ணச் செல்லில் வினையேனைப் பொய்செய்தகன்ற
மாமது வார்தண் துழாய்முடி வானவர் கோனைக்கண்டு
தாம்இதுவோ தக்கவாறு என்னவேண்டும் கண்டீர் நுங்கட்கே.–6-8-4-நாம் தக்கோரான படி இதுவோ -என்னுங்கோள் -ஸ்த்ரீவதம் பண்ணிப் போந்து -பிரிவு அறியாத அந்தரங்கருக்கு ஓலக்கம் கொடுத்து ஆன்ரு சம்சயம் கொண்டாடிக் கொண்டு இருக்குமதுவோ தக்கோர்மை-அப் பேர் ஓலக்கத்தில் பெரிய மதிப்பனைக் கண்டு வைத்து இப்படிச் சொல்ல வேணுமோ என்னாதே இவ்வார்த்தை இத்தனையும் சொல்ல வேணும் –வாசா தர்மம் அவாப் நுஹி–கலந்து வைத்து பொகட்டு போனவனில் காட்டில் -ஆற்றாமையை முகம் காட்டின உங்கட்க்கு இத்தனையும் செய்ய வேண்டாவோ-

ஓடிவந்து என்குழல்மேல் ஒளிமாமலர் ஊதிரோ?
கூடிய வண்டினங்காள்! குருநாடுடை ஐவர்கட்காய்
ஆடிய மாநெடுந்தேர்ப் படைநீறுஎழச் செற்றபிரான்
சூடிய தண்துளபம்உண்ட தூமது வாய்கள்கொண்டே.–6-8-3—முன்பே அவற்றின் வார்த்தை கேட்க்கையில் உண்டான த்வரையாலே யாதல் -அவற்றை அனுபவிக்கையில் உண்டான த்வரையிலே யாதல் -சடக்கென வர வேணும் என்கிறாள்-என்குழல்மேல்-அவனோடே போக சாம்யம் உண்டாம் படி பண்ணைக் கடவேன் -அவன் தனக்கு தூது போனவர்களுக்கு ததிமுகன் காத்து இருக்கிற காவல் காட்டை அழிக்கக் கொடுத்தான் இறே -அவன் காவல் காட்டை அழிக்க தருகிறேன் உங்களுக்கு -என்கிறாள் –அஹமாவாராயிஷ்யாமி யுஷ் மாகம் பரிபந்தின-என்று திருவடியைப் பற்றி அழிக்கவும் வேண்டா விறே -இவளுடைய ஏஷ ஸர்வஸ்ய பூதஸ்து இருக்கிற படி -உங்களுடைய வரவால் தளிர்த்து இருக்கிற என்னுடைய குழலிலே –ஒளிமாமலர் ஊதிரோ?-ஒளியை யுடைத்தாய் சிலாக்கியமான மலரில் மதுவைப் பானம் பண்ணீரோ –ஊதிரோ?-மதுவின் ஸம்ருத்தியாலே கிண்ணகத்தில் இழிவாரைப் போலே இழியமாட்டாதே நின்று பறக்கிற படி -உங்கள் காரியமுமாய் பர ரக்ஷணமும் ஆனால் ஆறி இருக்கிறது என் என்கை-

கெண்டை ஒண் கண்ணும் துயிலும் எந்நிறம்
பண்டு பண்டு போல் ஒக்கும் மிக்க சீர்
தொண்டரிட்ட பூம் துளவின் வாசமே
வண்டு கொண்டு வந்தூதும் ஆகிலே –
11-1-9–அநந்ய பிரயோஜனரான ஸ்ரீ வைஷ்ணவர்கள்
இட்ட திருத் துழாயில் பரிமளத்தை வண்டு கொண்டு வந்து ஊதுமாகில் –அங்குத்தைக்கு பரிவர் உண்டு -என்று அறிந்தால் இறே இவளுக்கு கண் உறங்குவதும் பழைய நிறம் வருவதுவும் 

வண்டே கரியான தெய்வ வண்டோடே சேர்விக்கும்-இத்யாதி –கொங்குண வண்டே கரியாக வந்தான் -பெரிய திருமொழி -9-3-4-என்கிறபடி சாகாக்ர சார க்ராஹியாய்-ஷட்பத நிஷ்டராய்–பஷ த்வய யோகத்தாலே – அப்ரதிஹத கதியானவரை முன்னிட்டு அங்கீகரிக்குமவனாய் —தூவியம் புள்ளுடை தெய்வ வண்டு -திருவாய் -9-9-4-என்று வேதாந்த்ய வேத்யன் என்று தோற்றும் படி – கருட வாஹனாய் ,சார க்ராஹியாய் இருக்கிற சர்வேஸ்வரனுடன் சேர்விக்கும் —-சேமமுடை நாரதன் -பெரியாழ்வார் -4-9-5-என்று ப்ரஹ்ம பாவனை ஏக நிஷ்டதையாய் ஆகிற ரஷையை உடையவனாய் – பகவத் குண அனுபவ ஹர்ஷ பிரகர்ஷத்தாலே நிருத்த கீத பரனாய் இருக்கும் ஸ்ரீ நாரத ப்ரஹ்ம ரிஷி — லோக சாரங்க மகா முநிகளால் வஹிக்க படுகையாலே முனிவாஹனர் என்று நிரூபிதரான திருப் பாண் ஆழ்வார் ,
திரு வாய் மொழி இசையே தங்களுக்கு போக்யமாய் இருக்கிற தம்பிரான்மார் போல்வாரை
இக் குண சாம்யத்தாலே ,வண்டு என்றும் தும்பி என்றும் சொல்லும் என்கை–-தும்பி ஆவது ப்ருங்க ஜாதியிலே .. ஓர் அவாந்தர பேதம் — ஆகையால் இறே –வண்டினங்காள் தும்பிகாள் -என்று ஏக ஸ்தலத்திலே இரண்டையும் பிரிய அருளிச் செய்தது-

(வண்டே கரியான தெய்வ வண்டோடே சேர்விக்கும்‌) “கொங்குண் வண்டே கரியாக (பெரிய திருமொழி 9-3-4) என்று ஸாகாக்ர ஸாராஸார க்‌ராஹியாய்‌ ஷட்பத நிஷ்டராய்‌ பக்ஷத்‌ வயத்தை உடைத்தாகையாலே அப்ரதிஹதக தியான மது கரத்தை முன்னிட்டு ௮ங்‌கீ கரிப்பானுமாய்‌ ‘தூவியம்‌ புள்ளுடைத்‌ தெய்வவண்டு’ (திருவாய்மொழி 9-9-4) என்று வேதாந்தவேத்‌யனாய்‌ “தமீஸ்வராணாம்‌ பரமம்‌ மஹேஸ்வர: என்கிற ஸார க்‌ராஹியாயிருக்கிற ஈஸ்வரனோடே சேர்க்கிற “சேமமுடை நாரதனார்‌’ (பெரியாழ்‌.திரு. 4-9-5) என்று பகவத்‌ குணாநுபவ ஜநித ஹர்ஷத்தாலே ந்ருத்த கீத பரனாயிருக்கிற ஸ்ரீநாரத ப்‌ரஹ்மருஷி, முநிவாஹநரென்கிற திருப்பாணாழ்வார்‌, திருவாய்மொழி பாடுகையே தங்களுக்கு போக்‌யமாயிருக்கிற தம்பிரான்மார்‌ போல்வாரை வண்டு தும்பி என்னும்‌ என்கிறார்‌. இவர்களை ஸ ப்‌ரஹ்மசாரிகளென்கிறது அநுபாவ்ய விஷயத்தில்‌ ஐக்யத்தினாலே-

கொங்குண் வண்டே கரியாக வந்தான் கொடியேற்கு முன்
நங்கள் ஈசன் நமக்கே பணித்த மொழி செய்திலன்
மங்கை நல்லாய் தொழுதும்  எழு போயவன் மன்னுமூர்
பொங்கு முந்நீர்க்  கரைக்கே  மணி யுந்து புல்லாணியே —-9-3-4–தானும் யானுமே என்னும் படிக்கு ஈடாக வந்தான் –(வண்டு -அவன் கோஷ்ட்டி -துளஸீ பீதாம்பரம் போல் அவன் உடனே இதுவும் சேர்த்தி –
பொதுவான சாக்ஷி இல்லையே-கடக சமாஸ்ரயணம் பண்ண வில்லையே – )தன் வளையத்திலே மது பானம் பண்ணுகிற வண்டே சான்றாம்படி வந்தான்-உபவாச க்ருசர் முகம் பார்த்து வார்த்தை சொல்லார்கள் இறே சுகமே ஜீவித்து இருக்கும் இவர்கள்-அவை உண்டு உடுத்து சுகமே காலம் போக்குகிறன விறே-நக்குண்டார் நாவிழார் -என்று அவன் பக்கலிலே ஜீவித்தவை நமக்காக வார்த்தை சொல்லுமோ –

பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ வாடை தண் வாடை வெவ்வாடை யாலோ
மேவு தண் மதியம் வெம் மதியமாலோ மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி யாலோ
தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டுதைத்த எம் பெண்மை யம் பூவி தாலோ
ஆவியின் பரமல்ல வகைகளாலோ யாமுடை நெஞ்சமும் துணை யன்றாலோ–9-9-4-பெரிய திருவடியை யுடைய-தெய்வ மாகிற வண்டாலே ஆத்தசாரமான என்னுடைய பெண்மையாகிற பூ -ஏவம் விதமாய் ஏவம்விதமாய் நலிவு படா நின்றது –படுக்கை பாதகம் ஆனவாறே புறம்பே புறப்பட்டாள் -ஸ்வரூப அனுபந்தியான ஸ்த்ரீத்வம் சிதிலமாகத் தொடங்கிற்று —தூவி -சிறகு -அழகிய சிறகை யுடையனாய் தர்ச நீய வேஷமான பெரிய திருவடியுடைய முதுகிலே வந்தாயத்து ஸ்த்ரீத்வத்தை அழித்தது -கருட வாஹனன் இ றே பரதேவதை யாவான் –இது என்கிறது -ஸ்த்ரீத்வம் அழிந்த படி பேச்சுக்கு நிலம் அல்ல என்கிறது-

ஆமையாய் கங்கையாய் ஆழ் கடலாய் அவனியாய்  அரு வரைகளாய்
நான்முகனாய் நான்மறையாய் வேள்வியாய் தக்கணையாய் தானும் ஆனான்
சேமமுடை நாரதனார்   சென்று சென்று துதித்து இறைஞ்சக் கிடந்தான் கோயில்
பூ மருவிப் புள்ளினங்கள் புள்ளரையன் புகழ் குழறும் புனல் அரங்கமே -4 9-5 –சேமம் -ரஷை-சேமம் உடையன் ஆகையாவது – கர்ம பாவனை அன்றிக்கே பிரம பாவனா நிஷ்டனாய் இருக்கை-நாரதனார் -என்றது –சர்வ சம்சய நிர்முக்தோ  -நாரதஸ் சர்வ தர்ம வித் -என்று ஞான ஆதிக்யத்தாலும் – பகவத் சன்னதியிலே வந்தவாறே பாடுவது ஆடுவது ஆக நிற்கும் பிரேம அதிசயத்தால்  உண்டான
கௌரவ அதிசயத்தாலே –

கிளி பூவை முதலானவகையாக சொல்வது -யாரை என்னும் அபேஷையிலே அருளிச் செய்கிறார் மேலே —

கண்வலைப்படாதே அகவலைப்பட்டு வளர்த்தெடுப்பார்‌ கையிருந்து தயிர்‌ நெய்யமர்‌ பாலமுதுண்டு ஒருமிடறாய்ப்‌ போற்றி ஒரு வண்ணம்‌ திருந்த நுவலாததுக்கு என்பிழைக்கும்‌ நீயலையே நல்வளம்‌ துரப்பனென்னு மவற்றுக்கும்‌ உகந்து சொல்லெடுத்துச்‌ சோர்ந்தவாறே கற்பியா வைத்த மாற்றம்‌ கைகூப்பி வணங்கப்பாடி ஆலியா அழையா பராபிமாநத்திலே ஒதுங்கின நம்பிக்கன்பர்‌ தலைமீதடிப் பொடி உடையவருடையார்‌ போல்வாரைக்‌ கிளி பூவை குயில்‌ மயிலென்னும்‌.–சூரணை -153-

அதாவது –கண் வலைப் படாதே அக வலைப் பட்டு –மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு -திருமாலை -16–என்று ஸ்திரீகளுடைய த்ருஷ்டியாகிற வலையுள் அகப் பட்டு அனர்த்தப் படாதே –
தாமரை தடம் கண் விழிகளின் அகவலை படுவான் –திருவாய்மொழி–6–2–9–என்கிற படியே-
தப்பாமல் அகப்படுத்திக் கொள்ளும் சர்வேஸ்வரனுடைய தாமரை போன்ற திரு கண்களின்
நோக்காகிற வலைக்குள்ளே அகப்பட்டு –

“மாதரார்‌ கயற்கணென்னும்‌ வலையுள்‌ பட்டு” (திருமாலை 16 என்று இதர விஷயங்களினுடைய த்‌ருஷ்டியாகிற வலையிலே அகப்பட்டு அநர்த்தப்படாதே “தாமரைத்‌ தடங்கண்‌ விழிகளின்‌ அகவலைப்‌ படுப்பான்‌” (திருவாய்மொழி 6-2-9) என்றும்‌ “யம்‌ பஸ்யேத்‌’ என்றும்‌ ப்ரேக்ஷ்யே கஞ்சித்‌ கதாசந என்றும்‌ “அமலங்களாக விழிக்கும்‌ திருவாய்மொழி 1-9-8) என்றும்‌ சொல்லுகிறபடியே ஸகல பாப க்ஷபண நிபுணங்களாய்‌ ஸம்ஸார தாபமெல்லாம்‌ ஆறும்படி செவ்வி குளிர்த்தி நாற்றங்களாலே தாமரைப்‌ பூப்போலே யிருக்கிற பகவத் கடாஷமென்கிற வலையிலே அகப்பட்டு –

சூதனாய்க் கள்வனாகித் தூர்தரோடு இசைந்த காலம்
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை
போதரே என்று சொல்லிப் புந்தியுள் புகுந்து தன பால்
ஆதரம் பெருக வைத்தான் அழகனூர் அரங்கம் அன்றே–16-ஸ்திரீகள் உடைய கயல் போலே முக்தமாய் இருந்துள்ள கண்ணாகிற வலையிலே அகப்பட்டு கால் வாங்க மாட்டாத என்னை –ஜாதி மாத்ரமே பற்றாசாக மேல் விழும் அது ஒழிய ஜன்ம வ்ருத்தங்களாதி அறியான் – கண்ணின் உடைய ஆகர்ஷகத்வமே அறியும் அத்தனை – அகவை மயிர்க்கத்தியாய் -இவனை ஒழிய தங்களுக்கு செல்லாமை தோற்றும்படி யாய்த்து பார்ப்பது –கண் என்று பேரால் – வலையின் கார்யமே யாய்த்து பலிப்பது – இது தானும் மணி வலை இறே-கண்ணுக்குளே மணியும் உண்டு இறே-அத்தைப் பற்றி வலை என்கிறது – புறம்பு கால் ஒண்ணாதபடி கண்ணைக் காட்டி தான் கிட்டாதே அகல நிற்கும்-அதுக்கடி கிட்டினவன் அபிநிவேசத்தோடே போக உபகரணங்களைக் கொண்டு இழிந்த இவன்
தனக்கு ச்நாநீயம் கொண்டு புறப்பட வேண்டும்படி இவன் தண்மை இருப்பது – இவன் தான் அவிவிவேகி ஆகையாலே அகவை ஆராய மாட்டாதே வாய்கரையிலே அழுந்தி நோவு படா நிற்கும் –வலையுள் பட்டு அழுந்துவேனை – மீண்டு கால் வாங்க ஒண்ணாது-அது தன்னில் அனுபாவ்யம் ஓன்று இல்லை கிடந்தது உழைக்கும் இத்தனை விஷய பிராவணயத்தால் சித்தித்தது கிலேசமேயாய் விட்டது –

கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே
அமலங்களாக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி
கமலத்தயன் நம்பி தன்னைக் கண்ணுத லானொடும் தோற்றி
அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி என் நெற்றி உளானே –1-9-9-அவன் திருக் கண்களால் நிர் தோஷனாம் படியும் -காண வல்லேனாம் படியும் விசேஷ கடாக்ஷத்தைப் பண்ணினான்

வளர்த்து எடுப்பார் கை இருந்த –-(கிளி வளர்க்கிறவர்கள் கையில் இருப்பது போலே ஞானமூட்டிய ஆச்சார்யர் ஆதீனத்தில் இருப்பவர்கள் என்றபடி ) வளர்த்ததனால் பயன் பெற்றேன் -திரு நெடும் தாண்டகம் -14-என்றும் ,-எடுத்த என் கோலக் கிளியை –நாச்சியார் திருமொழி -5–5–என்றும் ,
மங்கைமார் முன்பு என் கை இருந்து –திருவாய்மொழி-6-8-2—என்றும் சொல்லுகிறபடியே ஸ்வரூப வர்த்தகராய் உபலாலித்து நோக்கிக் கொண்டு – இட்டமாக வளர்த்து எடுத்துப் போருமவர்கள் கை வசமாய்-

(வளர்த்தெடுப்பார்‌ கையிருந்து) “வளர்த்ததனால்‌ பயன்‌ பெற்றேன்‌ ‘திருநெடுந்தாண்டகம்‌ 14) என்றும்‌ ‘ எடுத்தவென்‌ கோலக்‌ கிளி” நாச்சியார்‌ தி மொழி 5-5) என்றும்‌, மங்கைமார்முன்பென்கையிருந்து” (திருவாய்மொழி 6-8-2 )என்றும் உபலாலித்து ரக்ஷிக்கிறவர்களுடைய கை வஸமாய்‌

முளைக் கதிரைக் குறும் குடியுள் முகிலை
மூவா மூ வுலகும் கடந்து அப்பால் முதலாய்  நின்ற
அளப்பரிய ஆராமுதை யரங்கமேய யந்தணனை
யந்தணர் தம் சிந்தையானை
விளக்கொளியை மரகதத்தைத் திருத் தண் காவில்
வெக்காவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக வென்று
மடக்கிளியைக் கை கூப்பி வணங்கினாளே -14-இது சொன்ன திரு நாமம் தனக்கு தாரகமாய் இருக்கையாலே உன்னை வளர்த்த பிரயோஜனம் பெற்றேன் என்கிறாள் – ஆபத் சகனானவன் ஆபத்தை விளைத்துப் போனான்-அத் தசையிலும் நீ ஆபத் சகமாகப் பெற்றேன் என்கிறாள்

மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் உறைவான் தன்
பொன்னடி காண்பதோர் ஆசையினால் என் பொரு கயல் கண் இணை துஞ்சா
இன்னடிசிலொடு பாலமுதூட்டி எடுத்த வென் கோலக் கிளியை
உன்னோடு தோழமைக் கொள்ளுவன் குயிலே உலகளந்தான் வரக் கூவாய்–5-5–பிறரோடு தோழமை கொள்ளுகைக்கு அவகாசம் இல்லாதபடி ஸ்லாகித்து கொண்டு போருகிற என் கிளியை– இங்கே ஒரு குறை உண்டாகில் அன்றோ பிறர் தோழைமை நாடுவது இப்படி நான் உபாலாளநம் பண்ணிக் கொண்டு போருகிற கிளையை -உன்னோடு தோழமை கொள்ளுவிப்பன் – அதுக்கு கடவள் தானே -நியமிப்பேன் -என்றவாறு-குயில் -ஆசார்யன் – தானே ஆசார்யனுக்கு அடிமை யாகி என் உடைமைகளையும் அவனுக்கு அடிமை ஆக்குவேன் -அரும் பொருள் த்வனிக்கும் –-கொள்ளுவன்-என்னாதே கொள்விப்பன் -என்றது – அந்த கிளியைப் போலே உன்னையும் உபலா ளிப்பன்-என்றபடி -சாதனத்வ சங்கா நிவ்ர்த்யர்த்தம் கார்யம் -கூவுகை -அல்பம் -பேறு அதிகம் -சம்ஸ்லேஷம் நித்யமாய் நிரதிவகமாய் இருக்குமே –

மையமர் வாள்நெடுங்கண் மங்கைமார் முன்பு என்கை இருந்து
நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ?
கையமர் சக்கரத்து என் கனிவாய்ப்பெரு மானைக் கண்டு
மெய்யமர் காதல் சொல்லிக் கிளிகாள்! விரைந்தோடி வந்தே.–6-8-2-அவனுக்கு தன்னேராயிரம் பிள்ளைகள் போலே இவளுக்கும் தன் பருவத்தில் தோழிமார் உண்டாய் இருக்கிறதாயிற்று-முன்பு-எல்லாரும் சூழ இருந்து கொண்டாட-என்கை இருந்து-அவர்கள் ஆதரிக்க விட்டுக் கொடேன் -அவர்கள் ஓலக்கம் இருக்கும் அத்தனை -என் கையிலே இருக்க வேணும் – என்கை இருந்து-தன் கையை மதித்த படி –அடிச்சியோம் தலை மீசை நீ அணியாய்-என்கிறது அவனுக்கும் உண்டாகையாலே அவன் தலையில் இருக்கக் கடவ கை –அத்தை உங்களுக்கு பாத பீடம் ஆக்கக் கடவேன் -உபய விபூதியையும் கொள்ளுங்கோள் என்றார் கீழ் –உபாயவிபூதி உக்தன் தலையிலே இருக்கக் கடவ கையை உங்களுக்கு பாதபீடம் ஆக்கக் கட வேன் -என்கிறாள் இதில் –

தயிர் நெய்யமர் பாலமுதுண்டு –-தயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து -திருவாய்மொழி–9-5-8–என்றும் – நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலோடு மேவீரோ –-திருவாய்மொழி–6-8-2-என்றும் –
இன்னடிசிலோடு பாலமுதம் ஊட்டி –நாச்சியார் திருமொழி -5–5-என்றும்- சொல்லுகிறபடி -அவர்கள் காலோசிதமாகவும் -பாக அனுகுணமாகவும் – உபதேஷ்யந்தி தே ஜ்ஞானம் –ஸ்ரீ கீதை –4–34–என்கிறபடியே உபதேச முகேன தாரக போக்யங்களான பகவத் குணாதிகளை அனுபவிக்க அனுபவித்து- ஒரு மிடறாய் –ஆச்சர்யர்களோடு ஏக கண்டராய்-

தயிர்ப்பழம்‌ சோற்றொடு பாலடிசிலும்‌ தந்து” (திருவாய்மொழி 9-5-8) என்றும்‌ “நெய்யமரின்னடிசில்‌ நிச்சல்‌ பாலொடும்‌” (திருவாய்மொழி 6-8-2) என்றும்‌, “இன்னடிசிலொடு பாலமுதூட்டி” (நாச்சியார்‌ திருமொழி 5-5) என்றும்‌ சொல்லுகிறபடியே அவர்கள்‌ காலோசிதமாகவும்‌, பாகாநுகுணமாகவும்‌ “உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம்‌” (கீதை 4-34) என்கிறபடியே பகவத்‌ குணங்களை ஆசார்யர்கள்‌ அநுபவிப்பிக்க அநுபவித்து (ஒருமிடறாய்‌) ‘ஆசார்யர்களோடு ஏக கண்டராய்‌,

உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர்
குயிற் பைதல் காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்
தயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து சொல்
பயிற்றிய நல் வளம் ஊட்டினீர் பண்பு உடையீரே –9-5-8–தயிரும் பழம் சோறும் -பாலும் வெஞ்சோறும் அவ்வவ காலங்களுக்கு உசிதமாகத் தந்து திரு நாமங்களை கற்பித்ததற்கு பிரதியுபகாரம் பண்ணினி கோள்-

மையமர் வாள்நெடுங்கண் மங்கைமார் முன்பு என்கை இருந்து
நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ?
கையமர் சக்கரத்து என் கனிவாய்ப்பெரு மானைக் கண்டு
மெய்யமர் காதல் சொல்லிக் கிளிகாள்! விரைந்தோடி வந்தே.–6-8-2–நெய்யோடும் பாலோடும் கூடின அடிசில் -நெய்யிடை நல்லதோர் சோறு என்கிறபடிய ஆஜ்யமிஸ்ரமாய் பால்முடிவான சோறு -இன்னடிசில் -எல்லாம் கண்ணன் என்று இருக்கிறவள் இவள் உகப்பது தேடிக் கொடுக்கிறாள் -பகவத் விஷயத்தில் உபகாரகர்க்கு -யதன்ன புருஷோ பவதி -என்னும் அளவு போராது-அவர்கள் உவப்பது தேடி இட வேணும் என்கை –

மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் உறைவான் தன்
பொன்னடி காண்பதோர் ஆசையினால் என் பொரு கயல் கண் இணை துஞ்சா
இன்னடிசிலொடு பாலமுதூட்டி எடுத்த வென் கோலக் கிளியை
உன்னோடு தோழமைக் கொள்ளுவன் குயிலே உலகளந்தான் வரக் கூவாய்–5-5-பிறரோடு தோழமை கொள்ளுகைக்கு அவகாசம் இல்லாதபடி ஸ்லாகித்து கொண்டு போருகிற என் கிளியை– இங்கே ஒரு குறை உண்டாகில் அன்றோ பிறர் தோழைமை நாடுவது-இப்படி நான் உபாலாளநம் பண்ணிக் கொண்டு போருகிற கிளையை -உன்னோடு தோழமை கொள்ளுவிப்பன் – அதுக்கு கடவள் தானே -நியமிப்பேன் -என்றவாறு-

தத்வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஸ்நேந ஸேவயா
உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ்தத்த்வதர்ஸிந
:-4-34-அதனை வணக்கத்தாலும், சூழ்ந்த கேள்வியாலும் தொண்டு புரிவதாலும் அறிந்து கொள்.-உண்மை காணும் ஞானிகள் உனக்கு ஞானத்தை உபதேசிப்பார்கள்.

போற்றி ஒரு வண்ணம் திருந்த –-போற்றி யான் இரந்தேன் புன்னை மேலுறை பூம் குயில்காள் -திருவாய்மொழி–6-1-6–என்றும் – ஒரு வண்ணம் சென்று புக்கு எனக்கு ஓன்று உரை ஒண் கிளியே –திருவாய்மொழி–6-1-7–என்றும் – திருந்தக் கண்டு எனக்கு ஓன்று உரையாய் ஒண் சிறு பூவாய் -திருவாய்மொழி–6-1-8-என்றும் கடக புத்தி பண்ணி ஆதரித்த தசையிலும் –

(போற்றி ஒருவண்ணமித்யாதி) போற்றியானிரந்தேன்‌ புன்னைமேலுறை பூங்குயில்காள்‌’ திருவாய்மொழி 6-1-6) என்றும்‌, “ஒருவண்ணம்‌ சென்று புக்கு எனக்கொன்றுரை ஒண்கிளியே” திருவாய்மொழி 6-1-7) என்றும்‌, “திருந்தக்‌ கண்டெனக்கொன்றுரையாய்‌ ஒண்சிறு பூவாய்‌ ்‌ (திருவாய்மொழி 6-1-8) என்றும்‌ ஆதரித்துக் கொண்டு போந்த தஸையோடு,-

போற்றி யான் இரந்தேன் புன்னை மேலுறை பூங் குயில்காள்!
சேற்றில் வாளை துள்ளும் திரு வண் வண்டூ ருறையும்
ஆற்றல் ஆழி யங்கை அமரர் பெருமானைக் கண்டு
மாற்றம் கொண்டருளீர் மையல் தீர்வதொரு வண்ணமே.–6-1-6-புன்னையின் கீழே நின்று குயில்களுக்கு மங்களா சாசனம் பண்ணுகிறாள் -ஏகாந்தமாக அனுபவிக்கிற சேர்த்தி நித்தியமாக வேணும் -தன் ஆர்த்தி கண்டு இரங்குகைக்கு பாசுரம் இது என்று இருக்கிறாள் –-யான் இரந்தேன் -ஸீதாம் உவாஸ-என்கிறபடியே புருஷகாரத்வாரா -எல்லாராலும் இரக்கப் படும் நான் இரந்தேன் -நியமிக்கிறேன் அல்லேன் -இரக்கிறேன்-இரப்பார் கார்யம் செய்து தர வேணும் என்னும் நினைவாலே-புன்னை மேலுறை பூங் குயில்காள்! வைமா நிகரைப் போலே மனுஷ்ய கந்தம் தட்டாத படி உயர வர்த்திக்கை -இசை இ றே உயர்த்தியை காட்டுகிறது -நெய்தல் நிலத்தில் புன்னை படர்ந்து அன்றோ இருப்பது என்னில் –பணைத்து ஓங்கி இருக்கும் என்கிறது –வானார் வ ண் கமுகு என்றும் சேண் சினை ஓங்கு மரம் -என்றும் சொல்லுகையாலே -நெருப்பிலே சஞ்சரிப்பாரை போலே புன்னைப் பூவிலே வர்த்தியா நின்றன -அக்னி ஸ்தம்பனம் யுடையார்க்கு வர்த்திக்கலாம் இறே-உறை -பூவின் மேலே நித்ய வாசம் பண்ணா நின்றன –நைஷா பஸ்யதி ராக்ஷஸ்யோ நே மான் புஷப பல த்ருமான் என்று ராக்ஷஸே தர்ச நத்தோபாதி நினைத்து இருக்கும் தன்னைப் போல் அன்றே கலவியால் உள்ள புஷ்கல்யம் வடிவிலே தொடை கொள்ளலாம் படி இருக்கை –

ஒரு வண்ணம் சென்று புக்கு எனக்கொன்றுரை; ஒண்கிளியே!
செரு ஒண் பூம்பொழில்சூழ் செக்கர் வேலைத் திருவண்வண்டூர்
கரு வண்ணம் செய்யவாய் செய்யகண் செய்யகை செய்யகால்
செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே.–6-1-7–வழியிலே நெஞ்சை அபஹரிக்கும் போக்யதையை யுடைத்து அதில் கால் தாழாதே ஒருபடி சென்று புக்கு –ச ததந்த புரத்வாரம் சமதீத்ய -என்னுமா போலே ஐஸ்வர்ய தரங்களாலே புகுகை அரிது வருந்தி புக்கு என்னவுமாம் –இப்போது முதலிகள் பிரம்பு வந்து விழும் அதுக்காக பிற்காலியாதே மேல் விழுங்கோள் என்கை எனக்கொன்றுரை; ஒண்கிளியே!நிவேதியத மாம் -என்கிறபடியே வடிவைக் காட்டுகிறாள் -அங்குத்தை வார்த்தை கேட்டால் அல்லது தரிக்க மாட்டாது எனக்கு -ஒரு நல் வார்த்தை சொல்லு – சஹசரத்தோடே கூடி இருக்கையாலே அழகு பெற்று இருக்கிற கிளியே -மௌக்த்யமும் பேச்சும் வாயில் பழுப்பும் வடிவில் பசுமையும் அவனோடு போலியாய் இருக்கையாலே உன்னைக் கண்டு கொண்டு இருக்க அமைந்தது என்றுமாம் –

திருந்தக் கண்டு எனக்கு ஒன்றுரையாய்; ஒண் சிறு பூவாய!
செருத்தி ஞாழல் மகிழ் புன்னை சூழ் தண் திரு வண் வண்டூர்
பெருந் தண் தாமரைக் கண் பெரு நீண் முடி நாற்றடந்தோள்
கருந் திண் மா முகில் போல் திருமேனி அடிகளையே.–6-1-8—பிறருக்கு சொல்லலாம் படி விசதமாகக் கண்டு-எனக்கு ஒன்றுரையாய்; -நீ வந்து சொல்லும் வார்த்தை கேட்டால் தரிக்க இருக்கிற எனக்கு -ஒரு வார்த்தை கேட்டு வந்து சொல்லாய்-ஒண் சிறு பூவாய!-அழகுக்கு ஒரு கிளி யோடு ஒத்து -பால்யமும் அத்தால் வந்த லாகவமும் இதுக்கு ஏற்றம் -போக விடுகை மிகை என்னும் படி கண்டு கொண்டு இருக்கும் அழகை யுடைத்தாய் -தூது போகைக்கு கார்ய காலத்தில் வடிவை சிறுக்க வேண்டாத படி -ஏற்கவே சிரமம் செய்து இருக்கிற லாகவத்தையும் யுடைத்தாகை –

நுவலாததுக்கு என் பிழைக்கும் நீ அலையே நல் வளம் – நோய் எனது நுவல்–திருவாய்மொழி–1-4-8–என்று என் ஆர்த்தியை சீக்கிரமாக போய் அவனுக்கு அருவி என்ன செய்தே செய்யாததற்கு –
என் பிழைக்கும் இளம் கிளியே நான் வளர்த்த நீ அலையே –திருவாய்மொழி-1-4-7–என்றும் –
நீ அலையே சிறு பூவாய் –நுவலாதே இருந்து ஒழிந்தாய் -திருவாய்மொழி-1-4-8–என்றும் – ஸ்மாரக பதார்த்தங்கள் பாதகமாகிற அளவில் -அருகு இருந்து திரு நாமத்தைச் சொன்னது பொறாமல்-
சொல் பயற்றிய நல் வளமூட்டினீர் பண்புடையீரே -திருவாய்மொழி–9-5-8—என்றும் – இன்னானதான தசையிலும்-துரப்பன் என்னும் அவற்றுக்கும் உகந்து –-இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்து நின்றும் துரப்பன்—நாச்சியார் திருமொழி-5-10–என்று அநாராதித்த தசையிலும் -சொன்ன இன் சொற்களும் வெம் சொற்களும் ஆகிறவற்றுக்கும்- வகுத்த விஷயத்தில் நிக்ரஹ அனுக்ரஹங்கள் இரண்டும் அங்குத்தைக்கு விநியோக பிரகாரம் – என்னும் நினைவாலே உகந்து —

“நோயெனது நுவல்‌ என்ன நுவலாதே இருந்தொழிந்தாய்‌” திருவாய்மொழி 1-4-8) என்றும்‌, என்‌ பிழைக்கும்‌ இளங்கிளியே யான்‌ வளர்த்த நீயலையே” (திருவாய்மொழி 1-4-7) என்றும்‌ இன்னாதான தஸையோடு,“சொல்‌ பயிற்றிய நல்வளமூட்டினீர்‌ பண்புடையீர்‌” திருவாய்மொழி 9- -5-8) என்றும்‌, “நாராயணனை வரக் கூவாயேல்‌ இங்குற்று நின்றும்‌ துரப்பன்‌” (நாச்சியார்‌ திருமொழி 5-10) என்றும்‌ அநாதரித்து தஸையோடு வாசியற வகுத்த விஷயத்தில்‌ நிக்‌ரஹாநுக்‌ரஹங்களிரண்டும்‌ அங்குத்தை விநியோக,ப்ரகாரமாகையாலே இவற்றுக்கும்‌ உகந்து,-

நீயலையே சிறு பூவாய் நெடுமாலார்க்கு என் தூதாய்
நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்து ஒழிந்தாய்
சாயலோடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனியுனது
வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே
–1-4-8—நோயெனது நுவல் என்ன- நோயைச் சொல் என்ன -இவள் நோய் என்றால் வியாவர்த்தமாய் யாயிற்று இருப்பது ஸ்ரீ பரதாழ்வான் நோய் என்றால் சாதுர்த்திகமாய் இராதே –ஜடிலம் –புத்ரவ்யாதிர் நதே கச்சித்-சம்சாரிகளுக்கு சப்தாதி விஷயங்களில் இழவு பேறாகையாலே பகவத் விச்லேஷம் அறியார்கள்–நுவலாதே இருந்து ஒழிந்தாய்--நோய் அறியாமை சொல்லாது இருந்தாய் இல்லை-நான் ஏவாமை அன்று-செல்வப் பிள்ளைத்தனம் அடித்து இருந்தாய் அத்தனை இறே-அத்தலையில் வ்யாமோஹம் அது-இத்தலையில் நோவு இது
இரண்டு தர்மியையும் ஓர் உக்தி மாத்ரத்தாலே நோக்கலாய் இருக்க வன்றோ நீ ஆறி இருந்தது-

என் பிழை கோப்பது போல் பனிவாடை ஈர்கின்றது
என் பிழையே நினைந்து அருளி யருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச் சொல்
என் பிழைக்கும் இளம் கிளியே யான் வளர்த்த நீ யலையே
 –1-4-7—பருவத்தாலும் நிறத்தாலும் வாயின் பழுப்பாலும் பேச்சின் இனிமையாலும் சர்வதா சத்ருசம் ஆகையாலே உன் வடிவைக் காட்டி எலும்பை இழைக்கிற நீ ஒரு வார்த்தை சொன்னால் என்ன தப்பு உண்டாம் என்னவுமாம்-கலந்தார் செய்யுமவற்றை வயிற்றில் பிறந்தாரும் செய்வாரோ-நிவாகர் அல்லாத ஸ்வ தந்த்ரர் செயலை நீயும் செய்யவோ-

உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர்
குயிற் பைதல் காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்
தயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து சொல்
பயிற்றிய நல் வளம் ஊட்டினீர் பண்பு உடையீரே
–9-5-8—தயிரும் பழம் சோறும் -பாலும் வெஞ்சோறும் அவ்வவ காலங்களுக்கு உசிதமாகத் தந்து திரு நாமங்களை கற்பித்ததற்கு பிரதியுபகாரம் பண்ணினி கோள்-நல் வளம் ஊட்டினீர் -நல்ல சம்பத்தை புஜிப்பித்தி கோள் -நான் காலம் தோறும் உங்களுடைய ரக்ஷணம் பண்ணிப் போந்தேன் -நீங்களும் இவ்விடங்களில் நலிந்து போந்தி கோளே-பண்பு உடையீரே –பிராப்தியும் பவ்யத்தையும் கிடக்க சால நீர்மை யுடையீராய் இருந்தி கோள் -ரக்ஷக விஷயத்தில் நிர்த்தயராய் இருந்தி கோள் -பண்பு -குணம்

சொல்லெடுத்து சோர்ந்தவாறே-சொல்லெடுத்து தன் கிளியை சொல்லே என்று துணை முலை மேல் துளி சோர சோர்கின்றாளே–-திரு நெடும் தாண்டகம் –13- என்று திருநாமத்தைச் சொல்ல-உபக்ரமித்து பல ஹானியாலே ஒரு சொல் சொல்லும் போது மலை எடுக்கும் போலேயாய்- அதுவும் மாட்டாதே -பரவசகாத்ரனரவர் ஆனவாறே —கற்பியா வைத்த மாற்றம்-கன்மின்கள் என்று உம்மை யான் கற்பியா வைத்த மாற்றம்–திருவாய்மொழி-6-8-6–என்கிறபடியே , முன்பே கற்பித்து வைத்த சொல்லான திரு நாமத்தைச் சொல் என்ன –கை கூப்பி வணங்கப் பாடி–திரு மாலைப் பாடக் கேட்டு வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக என்று மடக் கிளியை கை கூப்பி வணங்கினாளே –திரு நெடும் தாண்டகம் –14–என்று கற்பித்தவர் தாங்கள் உபகார ஸ்ம்ருத்தி பண்ணி-அனுவர்த்திக்கும் படி ப்ரீதி பிரேரிதராய் சொல்லி –

“சொல்லெடுத்துத்‌ தன்‌ கிளியைச்‌ சொல்லே யென்று துணைமுலைமேல்‌ துளிசோரச்‌ சோர்கின்றாளே’ (திருநெடுந்தாண்டம்‌ 13) என்று திருநாமத்தைச்‌ சொல்ல உபதேஸித்து பல ஹாநியாலே ஒரு சொல்‌ சொல்லும் போது மலை யெடுக்குமா போலேயாய்‌ அதுவும்‌ மாட்டாதே பரவஸகாத்ரை யானவாறே (கற்பியா வைத்த மாற்றங்‌ கைகூப்பி வணங்கப்பாடி) “கன்மின்கள்‌ என்று உம்மை யான்‌ கற்பியா வைத்த மாற்றம்‌” (திருவாய்மொழி 6-8-8) என்று ஆசார்யருசி பரிக்‌ருஹீதமான திருநாமங்களை, “திருமாலைப்‌ பாடக்‌ கேட்டு வளர்த்ததனால்‌ பயன்‌ பெற்றேன்‌ வருக வென்று மடக்கிளியைக்‌ கைகூப்பி வணங்கினாளே” (திருநெடுந்தாண்டகம்‌ 14 என்று அவ்வாசார்யர்‌ தாமே அநுஸந்திக்கும்படி ப்ரீதி ப்ரேரிதராய்ப்‌ பாடி.

கல்லெடுத்து கன்மாரி காத்தாய் என்னும்
காமரு பூம் கச்சி ஊரகத்தாய் என்னும்
வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும்
வெக்காவில் துயில் அமர்ந்த வேந்தே என்னும்
மல்லடர்த்து மல்லரையன் அட்டாய் என்னும்
மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா என்னும்
சொல்லெடுத்து தன் கிளியைச் சொல்லே என்று
துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே-13-–சப்தோச்சாரணம் மலை எடுத்தால் போலே இருக்கிறது காணும் இவளுக்கு-அவன் மலை எடுக்கிற போதை அவனுடைய சக்தியை நினைந்து –கல்லெடுத்து –என்றாள் –-தன் அளவில் வந்தவாறே வாய் விடுகைக்கும் சக்தி அற்று இருந்தபடி –தான் விரும்பி வளர்த்த கிளியை –பாவை பேணாள் -என்றது போக்யமாக தோற்றினவாறே பாவையை அநாதரித்தாள் –இதுக்கு திருநாம ஸ்பர்சம் உண்டாகையாலே ஆதரிக்கிறாள்-பரிக்ரஹங்களில் வந்தால் ஸ்வரூபேண த்யாஜ்யம் இல்லை -ஸ்வரூபேண- உபாதேயமும் இல்லை இறே -பிரதிகூலம் ஆன போது சர்வமும் த்யாஜ்யமாகக் கடவது-அனுகூலமான போது சர்வமும் உத்தேச்யமாகக் கடவது இறே –

என்மின்னு நூல்மார்வன் என்கரும்பெருமான் என்கண்ணன்
தன்மன்னு நீள்கழல்மேல் தண்துழாய் நமக்கன்றி நல்கான்
கன்மின்கள் என்று உம்மை யான் கற்பியா வைத்த மாற்றம் சொல்லிச்
சென்மின்கள்
தீவினையேன் வளர்த்த சிறு பூவைகளே!–6-8-6—நீங்கள் அபேக்ஷியாது இருக்க -நான் சொல்லுங்கோள் என்று -ரஷ்யங்களான உங்களை -ரஷகை யான நான் -கற்பித்து வைத்த மாற்றம் -தண்துழாய் நமக்கன்றி நல்கான்-என்கின்ற மாற்றத்தை என்னுதல் -இதுவோ தக்கவாறு என்று கற்பித்த மாற்றத்தை என்னுதல்-சொல்லிச் சென்மின்கள் -அவனுக்கு மறுமாற்றத்துக்கு அவகாசம் இல்லாத படி -கிட்டினால் -என்று இராதே -வழியே பிடித்து சொல்லிக் கொண்டு செல்லுங்கோள்-

முளைக் கதிரைக் குறும் குடியுள் முகிலை
மூவா மூ வுலகும் கடந்து அப்பால் முதலாய்  நின்ற
அளப்பரிய ஆராமுதை யரங்கமேய யந்தணனை
யந்தணர் தம் சிந்தையானை
விளக்கொளியை மரகதத்தைத் திருத் தண் காவில்
வெக்காவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக வென்று
மடக்கிளியைக் கை கூப்பி வணங்கினாளே -14--திரு நாமம் சாத்மித்த படியாலே அவகாசத்திலே கிஞ்சித் கரிக்க பெற்றோமே என்கிற ப்ரீதி பிரகர்ஹத்தாலே சொல்ல –கேட்டு – ப்ரீதி ப்ரேரிதையாய்க் கொண்டு கேட்டு–சொல்லே என்று சோர்கின்றாள் -என்று முன்பு திரு சொன்ன இடத்தில் கேட்ப்பாரைப் பெற்றது இல்லை –-இப்போது சாம்யை யாகையாலே கேட்பாரைப் பெற்றது என்கிறாள் – செல்வன் நாரணன் என்ற சொல் கேட்டலும் – என்னுமா போலே –இது சொன்ன திரு நாமம் தனக்கு தாரகமாய் இருக்கையாலே உன்னை வளர்த்த பிரயோஜனம் பெற்றேன் என்கிறாள் – ஆபத் சகனானவன் ஆபத்தை விளைத்துப் போனான் அத் தசையிலும் நீ ஆபத் சகமாகப் பெற்றேன் என்கிறாள்

ஆலியா அழையா — ஆலியா அழையா அரங்கா என்று –பெருமாள் திருமொழி –3–2–என்கிற படியே
ஆனந்தத்தோடு திரு நாமத்தைக் கொண்டு -போது போக்குமவர்களாய்–(மயில்கள் மேகத்தைக் கண்டவாறே தோகையை விரித்து ஆனந்தமாக விளையாடுவது போலே இவர்களும் கார்முகில் போல் வண்ணன் கண்ணன் யெம்மானைக் கண்டு கூத்தாடுமவர்கள் என்றபடி )பர அபிமானத்தில் ஒதுங்கின –தேவு மற்று அறியேன்–கண்ணி நுண் சிறுத் தாம்பு -2–என்கிற படி –ஆச்சார்யா அபிமானம் ஆதல் – பாகவத் அபிமானம் ஆதல்-ஆகிய பர அபிமானத்தில் ஒதுங்கினவரான –(குயில்களுக்கு பரப்ருதம்-பிறரால் வளர்க்கப்படுகிறது – என்ற பெயர் வடமொழியில் உண்டே அதே போலே ஆச்சார்யர் பாகவதர்கள் அபிமானத்தில் ஒதுங்கி அவர்களால் வளர்க்கப்படுபவர்கள் என்றபடி )

(ஆலியாவழையா) “குயில்‌ நின்றால்‌” (கண்ணிநுண்சிறுத்தாம்பு 10) என்றும்‌ “ஆலியாவழையாவரங்கா” (பெருமாள்‌ திருமொழி 3-2 என்றும்‌ சொல்லுகிறபடியே அவ்வநுபவத்தாலே வந்த ஹர்ஷத்தை உடையராய்‌, (பராபிமானத்திலே ஒதுங்கி) “தேவு மற்றறியேன்‌” (கண்ணிநுண்‌- 2) என்று ஆசார்யாபிமானத்திலே ஒதுங்கின

பயனன் றாகிலும்  பாங்கலராகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கன்பையே-10—இவரை அவகாஹித்த திர்யக்குகளும் களித்து வர்த்திக்கும் படி-இவர் ஆற்றாமையாலே ஒரு காலத்திலேயே காண வாராய் என்று கூப்பிடுவதுமொரு பாசுரம் உண்டு–ஹர்ஷத்தாலே யாவர் நிகர் அகல் வானத்தே -என்று களித்துச் சொல்லுவதும் ஒரு பாசுரம் உண்டு–இரண்டு பாசுரத்துக்கும் குயில் யாயிற்று பயிற்ருவன-இவர் பேச்சைக் கேட்க செவி ஏற்றாலே அவையும் இவர் பாசுரத்தைச் சொல்லும் யாயிற்று–சாகா சம்பந்தம் உண்டாகையாலே அக்குயில்கள் திருவாய் மொழியைப் யாய்த்து பாடுவது (சாகா சம்பந்தம் -கிளை சம்பந்தம் ஆயிரம் பாசுரங்கள் சம்பந்தம் ) –அவை பாடும் குயில்கள் ஆகையாலே தம்பிரான்மாரைப் போலே ஆழ்வாருக்கு திருவாய் மொழி பாடுவான வாய்த்து-(விண்ணப்பம் செய்வார் முன்னே  இரண்டு பேர் சேவிக்க –அத்தை அரையர் அனுவதிக்குமா போலே ஆழ்வார் முன்னே முன்னுரு அனுசந்திக்க -குயில்கள் தம்பிரான் பாட ஆழ்வாரும் கூட பாடுகிறார் என்றவாறு ) ஒரு தேச சம்பந்தத்தாலே செவ்வாய்க் கிளி நான்மறை பாடுமானால்-(தில்லை திருச் சித்ரகூடம்    பாசுரம் கலியன் ) இத்தேச வர்த்திகளுக்குத் திருவாய் மொழி பாடச் சொல்ல வேண்டா விறே- தாம் மதுர வாக்காகை யாலே மதுர வாக்கான குயிலை இட்டுப் பொழிலை சிறப்பிக்கிறார்

நூலினேர் இடையார் திறத்தே நிற்கும்
ஞாலம் தன்னோடும் கூடுவது இல்லை யான்
ஆலியா அழையா அரங்கா! என்று
மால் எழுந்து ஒழிந்தேன் என் தன் மாலுக்கே 3-2..–இவர்கள் அப்ராப்த விஷயத்திலே படும் பாடெல்லாம் ப்ராப்த விஷயத்தே படுமவன் நான் என்கிறார் -ப்ரீதி பிரகர்ஷத்தாலே இருக்க மாட்டாதே –ஸ்ரீ பெரிய பெருமாள் திரு நாமத்தைச் சொல்லி அடைவு கெடக் கூப்பிட்டு-

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே-2-–வேண்டா என்கிறேன் அன்று-வ்யுத்பத்தி இல்லாமை
பாவோ நான்யத்ர கச்சதி -அன்யத்ர என்றால் போலே மற்று அறியேன் என்கிறார்-விட்ட விஷயத்தின் பேர் சொல்லாமைக்கு-மற்று அறியேன் என்கிறது எத்தை என்னில் -கீழ் விட்டவற்றை எல்லாம் என்கிறார்-ஐஸ்வர்யம் என்ன -ஆத்மலாபம் என்ன -அவற்றை விட்டு பகவல் லாபத்தளவிலும் நில்லாதே அதின் எல்லையான ஆழ்வார் அளவும் போந்தவர் ஆகையாலே அவற்றை எல்லாம் நினைக்கிறார் –ஆகையாலே நான் தேவதையாக வ்யுத்பத்தி பண்ணிற்று ஆழ்வாருக்கு மேற்பட இல்லை-ஆனால் என்னப்பன் என்று கீழே பகவத் விஷயத்தை ஸ்வாமி யாக அனுசந்தித்தீரே என்ன
அது ஆழ்வார் ஆதரித்த விஷயம் என்று ஆதரித்தேன் இத்தனை போக்கி தேவதா பிரதிபத்தி பூர்வகமாகச் சொன்னேன் அன்று

நம்பிக்கு அன்பர் –தலை மீது அடிப் பொடி –உடையவர் உடையார் -போல்வாரை – தென் குருகூர் நகர் நம்பிக்கு அன்பன் –கண்ணி நுண் சிறுத் தாம்பு-11-என்றுஆசார்யரான ஆழ்வார் விஷயத்திலே பிரேமமே நிரூபகமாம் படி இருக்கும் ஸ்ரீ மதுர கவிகள் —-நாவலிட்டு உழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே –திருமாலை –1–என்று திரு நாமத்தை அண்டை கொண்ட பலத்தாலே யமாதிகள் தலையிலே அடி இடும் படி செருக்கை உடையவராய் –பாகவதர்களுக்கு பாத தூளி போல பரதந்த்ரராய் -இதுவே நிரூபகமான தொண்டர் அடி பொடி ஆழ்வார் — இராமானுசன் உடையார் -என்றே
நிரூபகம் ஆகும் படி உடையவருக்கு பரதந்தரரான ஆழ்வான் -ஆண்டான் -எம்பார் -அருளாள பெருமாள் எம்பெருமானார் -முதலானவரைகளை போல்வாரை –கிளி பூவை குயில் மயில் -என்னும் – குண சாம்ய நிபந்தனமாக கிளி என்றும் பூவை என்றும் – குயில் என்றும் -மயில் என்றும் சொல்லும் என்ற படி
பூவையாவது -நாகண வாய்ப்புள் – மயிலை தூது விட்டமை இன்றிக்கே இருக்க -அத்தை சஹ படித்தது –
யான் வளர்த்த கிளிகாள் பூவைகாள் குயில்காள் மயில்காள்–திருவாய்மொழி–8-2-8–என்று
ஸ்தலாந்தரத்திலே அருளிச் செய்கையாலே அதுக்கும் இதுவே ஸ்வாபதேசம் என்று அறிவிக்கைக்காக —

(நம்பிக்கன்பர்‌) “தென்குருகூர்‌ நம்பிக்கன்பரான (கண்ணிநுண்‌- 11 ஸ்ரீமதுரகவிகள்‌. (தலைமீதடிப்பொடி) “நாவலிட்டுழிதருகின்றோம்‌ நமன்றமர்‌ தலைகள்‌ மீதே” (திருமாலை 1 என்று திருநாமத்தை அண்டை கொண்ட பலத்தாலே யமாதிகள்‌ தலையிலே அடியிடும்படியான செருக்கை உடையராய்‌, “அடியார்க்கென்னை ஆட்படுத்தாய்‌’” (அமலனாதிபிரான்‌ 1 என்கிற ஸ்ரீதொண்டரடிப்பொடிகள்‌. (உடையவருடையார்‌ போல்வாரை) இராமானுசனுடையார்‌ என்று சொல்லப்படுகிற ஆழ்வான்‌ ஆண்டான்‌ எம்பார்‌ அருளாளப்‌ பெருமாள் எம்பெருமானார்‌ போல்வாரான ஆச்சார்ய பரதந்த்ரராய் இருப்பாரை குயில்‌ மயில்‌ என்னும்‌)

அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெலாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -11–பகவத் விஷயத்து அளவன்றிக்கே ததீயர் அளவிலும் அன்றிக்கே ஆச்சார்ய விஷயத்திலே சக்தராய்-இவருடைய பகவத் ஜ்ஞான பக்த்யாதிகள் ஆகிற ஆத்ம குணம் கண்டாய்த்து இவருக்கு ஸ்நேஹம பிறந்தது-அவருக்கு பகவத் ப்ரேமம் ஸ்வரூப பிரயுக்தமாய் -ஆராத காதல் குருகூர்ச் சடகோபன் என்று நிரூபகம் ஆனால் போலே-இவருக்கும் ஆழ்வாருக்கு நல்லவர் ஆனவர் என்று நிரூபகம் -அவர் பிரணவ நமஸ் ஸூ க்கள் இரண்டிலும் நிஷ்டராய்ப் போருவர்-இவர் மத்யம பதத்திலே நிஷ்டராய் இருப்பர்-

காவலில் புலனை வைத்து கலி தன்னைக் கடக்கப் பாய்ந்து
நாவலிட்டு உழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே
மூவுலகு உண்டு உமிழ்ந்த முதல்வ நின் நாமம் கற்ற
ஆவலிப்புடைமை கண்டாய் அரங்க மா நகர் உளானே -1–முன்பே யமாதிகள் பேர் கேட்க அஞ்சிக் கிடந்தவர் –திருநாமத்தை அண்டை கொண்ட பலத்தாலே யமன் வாசலிலே சென்று அறை கூவுகிறார் -இப்போது –வாலி பேர் கேட்க அஞ்சி சுரமடைந்து கிடந்த மகாராஜர் – பெருமாளை அண்டை கொண்ட பலத்தாலே கிஷ்கிந்தா த்வாரத்திலே சென்று அறை கூவினாற் போலே –அங்கு நாமி பலம் –
இங்கு நாம பலம் –

அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன்
விண்ணவர் கோன்  விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீண் மதிள் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே ——1—இவ் வஸ்துவின் சீர்மையாலே இது நம்மளவில் அடங்காது-நம் அடியார்க்கு ஆம் இத்தனை -என்று அவர்களுக்காக்கினான் என்கிறார் –
அடியார் -தம் பக்கலிலே சேஷி ப்ரதாரராய் இருக்குமவர்கள் –என்னை –-ப்ரக்ருதிக்கு அடிமை செய்து போந்த என்னை – தந்தத்தின் சீர்மை அறியாத என்னை – தேஹாத்ம அபிமாநிகள் தீண்டாத என்னை –
நன்மைக்கு தனக்கு அவ்வருகு இல்லாதது போலே தீமைக்கு எனக்கு அவ்வருகு இல்லாத என்னை –ஆள் படுத்த – அவர்களோடு ஒப்பூண் உண்ண வைத்திலன் -அவர்களுக்கு சேஷம் ஆக்கினான்
பகவத் சேஷத்து அளவில்  நின்றால் மீள சங்கை உண்டு – பாகவத் சேஷத்தளவும் சென்றால் மீளப் போகாதே-உகப்பாலே வருமது ஆகையாலே -ஒரு ஷேத்ரம் பத்து எட்டு க்ரயம் சென்றால் மீள விரகு இல்லை –தான் சேஷித்வதினுடைய எல்லையில் நின்றால்  போலே -சேஷத்வத்தின் எல்லையில் என்னை வைத்தான் –

இடையில்லை யான் வளர்த்த கிளிகாள்! பூவைகாள் ! குயில்காள் ! மயில்காள் !
உடைய நம்மாமையும் சங்கும் நெஞ்சும் ஒன்றும் ஒழிய வொட்டாது கொண்டான்
அடையும் வைகுந்தமும் பாற் கடலும் அஞ்சன வெற்புமவை நணிய
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி அவனவை காண் கொடானே–4-2-8–முன்பு இவள் ஆதரித்தவை அவனுடைய லீலா உபகரங்களிலும் குவால் இ றே -அவை எல்லா வற்றிலும் நசை அற்ற படி-

நாரை கொக்கு குருகு-என்று சொல்கிறது யாரை என்னும் அபேஷையில் அருளிச் செய்கிறார் மேல் –

ஆசறு தூவி என்னும் பாஹ்யாப் யந்தர ஸூத்தியோடே திரை உகளும் வ்யசன வ்யதை யற்றுத்
தாய் வாயில் உண்ணும் பிள்ளைக்கு இரை தேடி வைகலுடன் மேய்ந்து நுங்கால் பைம்கானம் என்று
ப்ரஹ்ம ரதம் பண்ணி கொடுத்தவை கொண்டு நல்ல பதத்தையும் வேண்டேன் என்னும் தனிப் பெறும் பித்தர் நம் முதலிகள் போல்வாரை நாரை கொக்கு குருகு என்னும் —சூரணை -154-

அதாவது-ஆசறு தூவி என்னும் பாஹ்யாப் யந்தர ஸூத்தியோடே–-ஆசறு தூவி வெள்ளைக் குருகே –திருவாய்மொழி–6-8-8–என்று பழிப்பு அற்ற சிறகை உடைத்தாய் -உள்ளும் புறமும் ஒக்க -நிர்மலமாய் இருக்கும் குருகே -என்று சொல்லப் பட்ட –ய ஸ்மரேத் புண்டரீகாஷம் ஸ பாஹ்யாப்யந்தரஸ் சுசி-என்கிறபடி(செந்தாமரைக் கண்ணனை தியானம் செய்பவன் உள்ளும் புறமும் தூய்மை உள்ளவன் ஆவான் ) பாஹ்யாப்யந்தர சுத்தி யோடு கூட –

“ஆசறுதூவி வெள்ளைக்‌ குருகே” (திருவாய்மொழி 6-8-8) என்று ஆசறுகை அந்த:கரண ஸூத்‌தியாய்‌, “வெள்ளைக்‌ குருகே” (திருவாய்மொழி 6-8-8) என்று பாஹ்ய ஸூத்‌தியாய்‌, “(அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்தாம்‌ கதோபி வா ய ஸ்மரேத்‌ புண்டரீகாக்ஷம்‌ ஸ பாஹ்யாப்‌யந்தரஸ் ஸூசி: என்கிற பாஹ்யாந்தர ஸூத்‌தியை உடையராய்‌,-

பாசற வெய்தி இன்னே வினையேன் எனைஊழி நைவேன்?
ஆசறு தூவி வெள்ளைக்குருகே! அருள்செய் தொருநாள்
மாசறு நீலச் சுடர்முடி வானவர் கோனைக்கண்டு
ஏசறும் நும்மை அல்லால் மறுநோக்கிலள் பேர்த்துமற்றே.–6-8-8-ஆசறு தூவி -பழிப்பு அற்ற சிறகு
வெள்ளைக்குருகே! -வடிவும் மனசும் நிர்மலமாகை-பர அநர்த்தம் பொறுக்க மாட்டாது ஒழிகை -மனஸ்ஸூக்கு நைர்மால்யம்-புறம் போல் உள்ளும் கரியான் -என்கிறவனுக்கு எதிர் தட்டாய் இருக்கை

திரை உகளும் வ்யசனவ்யதை யற்று–வாயும் திரை உகளும் கானல் மட நாராய் –திருவாய்மொழி-2-1-1–என்று ஆமிஷை காக்ரா சித்தத்தையாலே நாரையானது திரைகள் வந்து கிட்டி மேலே தாவிப் போகா நிற்கிற கானலிலே சலியாமல் இருக்குமா போலே –கிரயோ வர்ஷா தாராபிர் ஹன்யமானா ந விவ்யது
அபிபூயமானா வ்யசனைர் யதா தோஷஜா சேதச
– –ஸ்ரீ மத் பாகவதம் –10–20-15–என்கிறபடியே
பகவத் ஏகாக்ர சித்தையாலே சம்சார சமுத்திர தரங்கங்களான தாப த்ரய ரூப வ்யசனங்கள் அஹமஹமிகாய வந்து மேலிடா நின்றாலும் -அதுக்கு இடையாதே-

(திரையுகளும்‌ வ்யஸந வ்யதையற்று) வாயும்‌ திரையுகளும்‌” (திருவாய்மொழி 2-1-1 )என்று “கிரயோ வர்ஷ தாராபி,: ஹந்யமாநா ந விவ்யது: அபி பூயமாநா வ்யஸநைர்‌ யதா தோ கஜ சேதஸ:” (ஸ்ரீபாகவதம்‌ 10-2015) என்று பகவத்‌ விஷயத்திலே நெஞ்சு ஊன்றுகையாலே ஸம்ஸார துஃக்கோர்மிகளானவை அஹமஹமிகயா மேலிடா நின்றாலும்‌, சலியாதே.

வாயும் திரையுகளும் கானல் மடநாராய்
ஆயும் அமருலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
நோயும் பயலைமையும் மீதூர எம்மே போல்
நீயும் திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே –2-1-1—வாய் கை -கிட்டுகை-உழலுகை மேலே மேலே போகை-அலை கடல் நீர் குழம்ப வகுடாடவோடி-இத்யாதி-மலை போல் வருகிற திரைகளால் சலிப்பிக்க ஒண்ணாத படி தன் ஆமிஷம் கிட்டும் தனையும் பேராதே இருக்கை- தன் நாயகன் ஒருவனையும் நினைத்து இவ்வருகு உண்டான துக்க பரிபவங்களைப் பொறுத்து இருக்கிற இருப்புக்கு போலியாக நினைத்து இருந்தாள்-பகவத் த்யான பரர் இருக்குமா போலே –க்ரயோ வர்ஷ தாராபி –கானல் –
நெய்தல் நிலம் -பிரிந்தார் இரங்கும் இடம் நெய்தல் நிலம் -அத்தாலும் தன் ஆற்றாமை அவற்றுக்கும் உண்டு என்று இருக்கிறாள்-நெய்தலுக்கு பூதம் -ஜலம்-கூடும் இடம் குறிஞ்சி -பூதம் ஆகாசம் -பிரியும் இடம் பாலை -பூதம் தேஜஸ் ஸூ -ஊடலுக்கு ஸ்தானம் மருதம் -பூதம் வாயு-மடநாராய்–மடப்பம் -பற்றிற்று விடாதே ஒழிகை-கிராமணிகள் யாகங்களும் பண்ணி பவித்ரங்களும் முடிந்திட்டு -தார்மிகர் -என்னும் படி திரியா நிற்பார்கள் இறே-பாரா ஹிம்சை பண்ணா நிற்கச் செய்தே-அப்படியே தான் நினைத்த ஆமிஷம் கிட்டும் தனையும் ஷூத்ர மத்ஸ்யங்கள் மேலிட்டாலும் அநாதரித்து இருக்கை

தாய் வாயில் உண்ணும் பிள்ளைக்கு இரை தேடி –-தாய் வாயில் கொக்கின் பிள்ளை வெள்ளிற வுண்ணும் -பெரிய திருமொழி -9–6–1–என்றும் –பழனக் கழனி அதனுள் போய் புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடும் –பெரிய திருமொழி -5–1–2–என்றும் , சொல்லுகிற படி கொக்கு தன் வாயாலே எடுத்து கொடுக்க -ஜீவித்து இருக்கும் தன் பிள்ளைக்கு வாய்க்கு அடங்கும் இரை தேடி இடுமா போலே –
தங்கள் வாக்காலே உபகரிக்கும் பகவத் விஷயத்தை -உப ஜீவித்து இருக்கும் குழை சரக்கான சிஷ்யர்களுக்கு பாக அனுகுணமாக சாத்ம்யமான பகவத் விஷயார்தங்களை சாஸ்த்ரங்களிலே ஆராய்ந்து உபகரித்து –

(தாய்‌ வாயிலுண்ணும்‌ பிள்ளைக்கிரைதேடி) “தாய்வாயில்‌ கொக்கின்‌ பிள்ளை வெள்ளிறவுண்ணும்‌” (பெரியதிருமொழி 9-6-1 என்றும்‌, “புள்ளுப்பிள்ளைக்கிரை தேடும்‌” (பெரியதிருமொழி 5-1-2) என்றும்‌, கொக்கானது தன்‌ பிள்ளைக்கநுகுணமாக இரைதேடி யிடுமாபோலே முறைகெடாமல்‌ அநுபவிக்க விருக்கிற ஸிஷ்யர்களுடைய ப்ரக்ருதிக்கநுகுணமான பகவத்‌ விஷயத்தை ஸகல ஸாஸ்த்ரங்களிலும்‌ ஆராய்ந்து அருளிச் செய்து-

அக்கும் புலியின தளமுடையார் அவரொருவர்
பக்கம் நிற்க நின்ற பண்பரூர் போலும்
தக்க மரத்தின் தாழ்சினை ஏறி தாய் வாயில்
கொக்கின் பிள்ளை வெள்ளிற  வுண்ணும்
குறுங்குடியே —9-6-1–அங்கு நிற்கிற அவன் படி
அங்குத்தை ஸ்தாவரங்களுக்கும் உண்டாயிற்று –-தக்க மரத்தின்-ஒரு முள் பற்றை அன்றிக்கே பாலார்க்கும் தவழ்ந்து ஏறலாம் படி இருக்கிற அங்குத்தை வருஷங்களின் படி -என்று பட்டர் அருளிச் செய்ததாக பிரசித்தம் இறே 

கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்துப்
பொள்ளைக் கரைத்த போதகத்தின்  துன்பம் தவிர்ந்த புனிதன் இடம்
பள்ளச் செறுவில் கயல் உகள பழனக் கழனி யதனுள் போய்
புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடும் புள்ளம் பூதங்குடி தானே–5-1-2-–ஆலவாய் உடையான் கேட்க பட்டர் அருளிச் செய்தார் என்று நாம் பிரசித்தமாக சொல்லிப் போருமது  இறே-கயல் உகளா நின்றதாகில்
புள்ளுக்குத் தேடித் போக வேண்டுகிறது என் -என்ன-பிள்ளை -அவ்விடம் அறிந்தது இல்லையோ
பிள்ளைக்கு அன்றோ தேடுகிறது நில மிதியாலே அவை தான் தூணும் துலாமும் ( உத்தரமும் ) போலே வளர்ந்து இருக்கும் அதில் இதுக்கு சாத்மிக்கும் அவை தேடித் போகா நிற்கும் –

வைகலுடன் மேய்ந்து –-வைகல் பூம் கழிவாய் வந்து மேயும் குருகினங்காள் –திருவாய்மொழி -6-1-1–என்றும் –காதல் மென் படையோடு உடன் மேயும் கருநாராய் —திருவாய்மொழி –6-11-2-என்றும் –
சொல்லுகிற படி -சர்வ காலமும் -போக ஸ்தலங்களிலே தாங்களே சென்று – தங்களைப் பிரியில் தரியாத ப்ரேமம் உடைய சிஷ்யர்கள் உடனே கூடி பகவத் குண அனுபவம் பண்ணி –

(வைகலுடன்‌ மேய்ந்து) _வைகல்பூங்கழிவாய்‌ வந்து மேயும்‌ குருகினங்காள்‌’ (திருவாய்மொழி 6-1-1 என்றும்‌ காதல்‌ மென்பெடையோடு உடன்மேயும்‌ கருநாராய்‌” (திருவாய்மொழி 6-1-2 என்றும்‌ சொல்லுகிறபடியே ஸர்வகாலமும்‌ அநுகூலரான ஸிஷ்ய புத்ர்களோடே பகவத்‌ குணங்களை அநுபவித்து–

வைகல் பூங்கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்!
செய் கொள் செந்நெல் உயர் திரு வண்வண்டூ ருறையும்
கை கொள் சக்கரத் தென் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே.–6-1-1—நாள் தோறும் -நாயக வ்யாவ்ருத்தி -காதா சித்கமாக கலந்து பொகட்டு போனவனை போல் அன்று இ றே நாள் தோறும் முகம் காட்டுகிற நீங்கள் — தர்ச நீயமான கழி என்னுதல் -பூத்த கழி என்னுதல் –கழிவாய்-கழி இடத்தே -கழியிலே -பிரிந்தவன் பாதகனாகை அன்றிக்கே இருந்த தேசமும் பாதகமாகை-இருவர் கூட அனுபவிக்கும் இடம் தனித்தால் ம்ருத்யுசமமாய் இறே இருப்பது –வந்து -வழி பறிக்கும் தேசத்தில் வந்து உதவினால் போலே இ றே நீங்கள் சந்நிதி பண்ணின படி -பம்பா தீரே ஹநுமதா சங்கத -ஆள் இட்டு அறிவிக்க வேண்டும் தசையிலே நீங்களே வந்து-வந்து மேயும் -நான் அபேக்ஷியாது இருக்க -க்ருஹே புக்தம சங்கிதம் -என்னுமா போலே இ றே நீங்கள் செய்தது -என் கார்யம் செய்த பின் இனி உங்கள் கார்யம் செய்ய வேண்டாவோ -இவள் கார்யம் இங்கே வந்து மேய்கை-மேயும் குருகினங்காள் -உபவாச க்ருசையாய் இருக்க என் கார்யம் புஷ்கலமாய் இருக்கிற உங்களுக்கு செய்ய வேண்டாவோ -இரவு உண்டார்க்கு உண்ணாதார் கார்யம் செய்கை பரம் அன்றோ – இளங்காள்-இருவராய் இருப்பார்க்கு தனியார் கார்யம் செய்ய வேண்டாவோ -பெருமாள் தனிமையில் மஹா ராஜரும் பரிகரமும் தோற்றினால் போலே யாயிற்று தனிமையில் இவை வந்து முகம் காட்டின படி

காதல் மென் பெடையோடு உடன் மேயுங் கருநாராய்!
வேத வேள்வி ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்
நாதன் ஞாலமெல்லாம் உண்ட நம்பெருமானைக் கண்டு
பாதம் கைதொழுது பணியீர் அடியேன் திறமே.–6-1-2—காதலே நிரூபகமாக யுடைத்தாய் -விரஹ சஹம் அல்லாத பேடை பிரியவும் பொறாதே கலக்கவும் பொறாதே இருக்கை –-உடன் மேயும் -பிரிந்தால் வருமது எல்லாம் அறிந்து பரிமாறா நின்றன -உணர்த்த டலு டுணர்ந்து இறே – அந்வயத்திலே-வ்யதிரேகத்தில் வருமது எல்லாம் அறிந்து பரிமாறா நின்றன -இரண்டுக்கும் வாய் அலகு ஒன்றால் பிறக்கும் கார்யம் பிறவா நின்றது -நான் உபவாச க்ருசையாய் இருக்க -இதம் மேத்யமிதம்ஸ்வாது-என்கிறபடி புஜிக்க உங்களுக்கு பிராப்தி யுண்டோ -நாட்டில் பிறந்து பொகட்டு போகாதாரும் சிலர் யுண்டாகாதே-கரு நாராய் -பிரிவுக்கு பிரசங்கம் இல்லாமையால் தன்நிறம் பெற்று இருக்கிற படி -பிரிந்தவன் வடிவுக்கு ஸ்மாரகமாய் இருக்கிறபடி

நும் கால் பைம் கானம் என்று ப்ரஹ்ம ரதம் பண்ணி –-நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ–திருவாய்மொழி -9-7-1–என்றும் , பைம் கானம் ஈது எல்லாம் உனதே யாகி பழன-மீன் கவர்ந்து உண்ணத் தருவன் —திரு நெடும் தாண்டகம் –27- என்றும் சொல்லுகிறபடி தங்கள் பக்கல் உபஜீவித்த சிஷ்யர்கள் உபகார ஸ்ம்ருதியாலே சிரஸா வகிக்கை ஆகிற ப்ரஹ்ம ரதம் பண்ணிக் கொடுத்தவை கொண்டு –
சரீரமர்த்தம் ப்ராணாஞ்ச சத் குருப்யோ நிவேதயத்-என்கிற -க்ரமத்திலே சாதரமாக சமர்ப்பித்தவற்றை அங்கீகரித்து –நல்ல பதத்தையும் வேண்டேன் என்னும் -இத்யாதி –-நல்ல பதத்தால் மனை வாழ்வார் –திருவாய்மொழி -8-10-11–என்று பாகவத கைங்கர்யத்துக்கு உறுப்பான கார்ஹஸ்யத்தையும் –
சம்சார வெக்காயம் அடியான பயத்தாலே –-இன்பமரும் செல்வமும் இவ் வரசும் யான் வேண்டேன் –பெருமாள் திருமொழி -3-9–என்று உபேஷிக்கும் அவர்களாய் உள்ள – அம் கை ஆழி அரங்கன் அடி இணை தங்கு சிந்தை தனி பெரும் பித்தரான –ஸ்ரீ குலசேகர பெருமாள் – ஆச்சர்ய பதஸ்தரான நம் முதலிகள் போல்வாரை – குண சாம்யத்தால் நாரை என்றும் -கொக்கு என்றும் -குருகு என்றும் சொல்லும் என்கை-

(நுங்கால்கள்‌ பைங்கானம்‌ என்று ப்‌ரஹ்ம ரதம் பண்ணிக்‌ கொடுத்தவை கொண்டு) “நுங்கால்கள்‌ என்‌ தலைமேல்‌ ‘கெழுமீரோ நுமரோடே” திருவாய்மொழி 9-7-1) என்றும்‌, “பைங்கானம்‌ ஈதெல்லாம்‌ உனதே யாகப்‌ பழன மீன் கவர்ந்துண்ணத்‌ தருவன்‌ (‘திருநெடுந்தாண்டகம்‌ 27 )என்றும்‌ இவர்கள்‌ பக்கல்‌ உப ஜீவித்த ஸிஷ்யர்கள் உபகார ஸ்ம்ருதியால் ப்ரஹ்ம ரதம் பண்ணி –ஸாரீரமர்த்தம்‌ ப்ராணஞ்ச ஸத் குருப்யோ நிவேதயத் (விஹகேச்வரஸம்ஹிதை) என்று ஆத்மாத்மீயங்களை முகமலர்த்தியோடே கொடுக்கக்‌ கைக்கொண்டு நல்ல பதத்தையும்‌ வேண்டேன்‌ என்னும்‌ தனிப்பெரும்‌ பித்தர்‌ (நல்ல பதத்தால் மனை வாழ்வர்‌” (திருவாய்மொழி 8-10-11) என்று பாகவத கைங்கர்யத்துக்‌கு உறுப்பான -கார்ஹஸ்த்யத்தையும்‌ ஸம்ஸார வெக்காயத்தாலுண்டான அச்சத்தாலே இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன் (பெருமாள் -4-5) என்று உபேக்ஷிக்குமவருமாய்‌, “அங்கை யாழி அரங்கன்‌ அடியிணைத்‌ தனிப் பெரும்‌ பித்தன்‌” (பெருமாள்மொழி 4-5) என்று சொல்லப்படுகிற ஸ்ரீகுலஸேகரப் பெருமாள்‌(நம்‌ முதலிகள்‌ போல்வாரை) நம்‌ முதலிகள்‌ என்கிறது பட்டர்‌, நஞ்சீயர்‌, நம்பிள்ளை, திருத்தமப்பனார்‌ பிள்ளை, பெரியவாச்சான்பிள்ளை, திருத்தமையனார் பிள்ளை இவர்கள் போல்வாரை நாரை கொக்கு குருகென்னும்‌-என்கிறார் –

எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும்
கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய்
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே—9-7-1-–உபகாரகரான உங்களுடைய காலை உபக்ருதையாய் உஜ்ஜீவிக்க இருக்கிற என் தலையிலே -இவளுடைய தலையிலே வைக்க கண்டதாய்த்து இவற்றின் கால் -இவற்றினுடைய காலை வைக்க கண்டதாய்த்து இவள் தலை -இரண்டும் பரார்த்தமாகக் கண்டதாய்த்து-கெழுமீரோ -அவனுக்கு சேஷமாக்கின போதே கடகர்க்கு சேஷமாகையாலே என் விதி கொண்டு வைக்க வேண்டா விறே -என் தலை மேலே சேரி கோளே
நுமரோடேச புத்ரஸ் பவ்த்ரஸ் ச கண-என்கிறபடியே சபரிகரமாக –ஆச்சார்ய வாதாச்சார்ய புத்தரே வ்ருத்தி –என்னக் கடவது இறே 

செங்கால மட நாராய் இன்றே சென்று
திருக் கண்ணபுரம் புக்கு என் செங்கண் மாலுக்கு
என் காதல் என் துணைவர்க்கு உரைத்தி யாகில்
இது வொப்பது எமக்கு இன்பம் இல்லை நாளும்
பைம் கானம் ஈதெல்லாம் உனதே யாகப்
பழன மீன் கவர்ந்து உண்ணத் தருவன்
தந்தால்
இங்கே வந்து இனிது இருந்து உன் பெடையும் நீயும்
இரு நிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே–27—நாளும் -இத்யாதி –ஆசார்யன் ஒருக்கால் உபகரித்து விட்டால் சிஷ்யன் யாவதாயுஷம் அனுவர்த்திக்கக் கடவன் -என்கை-பைம் கானமீது எல்லாம் – தன் அபிமானத்தில் கிடந்தத்தைக் கொடுக்கும் அத்தனை இறே செய்யலாவது – பரப்பை உடைத்தான கடல் கரை சோலை அடைய – பிரிந்தார் இரங்கும் இடம் நெய்தல் ஆகையால் கடல் கரையில் தான் இருக்கையாலே – பைம் கானமீதெல்லாம் –என்கிறாள் –ஈ தெல்லாம் –=தன் கண்ணால் கண்ட பிரதேசத்தை அடையக் கொடுக்கிறாள் – என் விபூதி அடங்கலும் தருவன் -என்கிறாள் – இது உபய விபூதிக்கும் உப லஷணம்-பொன் உலகு ஆளீரோ புவன முழுது ஆளீரோ -என்னக் கடவது இறே

நல்ல கோட்பாட்டுலகங்கள் மூன்றின் உள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை அந்தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப்பட்ட வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே–8-10-11-பாகவத சேஷத்வம் -அத்தோடு த்கார்ஹஸ்த்த்யத்தை நடத்துவார்கள் – கொண்ட பெண்டிர் மக்களேச புத்ர பவ்த்ரஸ் ச கண என்கிறபடியே ச பரிகரமாக பாகவத சேஷத்வத்தை அனுபவிக்கக் கடவர்கள் –

அங்கை ஆழி அரங்கன் அடியிணை
தங்கு சிந்தைத் தனிப் பெரும் பித்தனாம்

கொங்கர் கோன் குலசேகரன் சொன்ன சொல்
இங்கு வல்லவர்க்கு ஏதம் ஓன்று இல்லையே–3-9—ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் திருவடிகளிலே-ஸ்ரீ பெருமாள் திருவடிகளுக்கு அவ்வருகு கந்தவ்ய பூமி இல்லாமையாலே அங்கே தங்கு சிந்தையை உடைய-பகவத் விஷயத்திலே இவர்களோபாதி பித்தேறினார் வேறு ஒருவர் இல்லாமையும் –
சிலவரால் மீட்க ஒண்ணாமையுமான பித்தனாம்-

கம்ப மத யானை கழுத்தகத்தின் மேல் இருந்து
இன்ப மரும் செல்வமும் இவ் அரசும் யான் வேண்டேன்
எம்பெருமான் ஈசன் எழில் வேம்கட மலை மேல்
தம்பகமாய் நிற்கும் தவம் உடையன் ஆவேனே –4-5–அங்கே இருந்து எல்லா போகங்களும் புஜிக்கும் சம்பத்தும் அதுக்கு அடியான ராஜ தர்மமும் யான் வேண்டேன் –

நன்னீல மகன்றில்காள் -திருவாய்மொழி -1-4-4—என்று மகன்றில்களையும் தூது விட்டமை ஒத்து இருக்கச் செய்தே அதுக்கு ஸ்வாபதேசம் அருளிச் செய்யாது ஒழிந்தது – அதில் இப்படி பரக்கச் சொல்லத் தக்கது இல்லாமையாலும் இந்த நியாயத்திலே தத் சமான குணரைச் சொல்லிக் கொள்ளும் இத்தனை அன்றோ என்னும் அதைப் பற்றவும்– மகன்றிலாவது -அன்றிலிலே ஒரு அவாந்தர பேதம்-ஆக இப்படி தூது பிரகரணத்திலே சொல்லுகிற பஷ்யவாந்தரங்களுக்கு ஸ்வாபதேசம் அருளி செய்தார் ஆய்த்து

இனி மேல் இப் பிரகரணத்தில் மேகமாக அருளிச் செய்தது யாரை என்னும் ஆ காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் மேல் —

பூண்ட நாள் சீர்க்கடலை யுட் கொண்டு திருமேனி நன்நிறம் ஒத்து உயிரளிப்பான்‌ தீர்த்தகரராய்‌ எங்கும்‌ திரிந்து, ஜ்ஞாந ஹ்ரதத்தைப்‌ பூரித்துத்‌ தீங்கின்றி வாழ நிதி சொரிந்து, கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து, வெளுத்தொளித்துக்‌ கண்டுகந்து , பரஸம்ருத்‌தியே பேறான அன்புகூரும்‌ அடியவர்‌, உறையிலிடாதவர்‌, புயற்கை அருள்மாரி, குணந்திகழ்‌ கொண்டல்‌ போல்வாரை மேகமென்னும்‌.சூரணை-155-

அதாவது-பூண்ட நாள் சீர் கடலை உள் கொண்டு — வர்ஷிக்கைக்கு உடலான காலங்களிலே கடலிலே புக்கு அதில் நீரைப் பருகி கொண்டு இருக்கும் -மேகம் போலே –-நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்-பூண்ட நாள் எல்லாம் புகும் -மூன்றாம் திருவந்தாதி -69-என்றும் – திரு மால் சீர்க் கடலை உள் பொதிந்த சிந்தனையேன் –பெரிய திருவந்தாதி -69–என்றும் – சொல்லுகிறபடி -விடிந்த நாள் எல்லாம் அவன் கண் வளர்ந்து அருளுகிற கடலிலே புகுந்து ஸ்ரீ யபதியான அவனுடைய கல்யாண சாகரத்தை
மன வுள் கொண்டு –பெரிய திருமொழி –7–3–1–என்கிற படியே உள்ளே அடக்கி கொண்டு —

(பூண்டநாள்‌ சீர்க்கடலை உட்கொண்டு) “மற்பொன்ற நீண்டதோள்‌ மால்‌ கிடந்த நீள்கடல்‌ நீராடுவான்‌ பூண்டநாளெல்லாம்‌ புகும்‌” (முதல்‌ திருவந்தாதி 69) என்றும்‌, “சீர்க்கடலை யுள்பொதிந்த சிந்தனையேன்‌” (பெரியதிருவந்தாதி 69) என்றும்‌ பகவத்‌ விஷயத்திலே அவகாஹித்தவன்று தொடங்கி, கல்யாண குண ஸாகரத்தைப்‌ பருகி –

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் -மற்பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும்
—–69—அவன் சாய்ந்த கடலிலே நாடோறும் அவகாஹிக்கப் பாரும் கோள் –
அவனோடு ஸ்பர்சம் உள்ள தீர்த்தங்கள் எல்லா வற்றுக்கும் உபலஷணம்-

அகம் சிவந்த கண்ணினராய் வல்வினை யாராவார்
முகம் சிதைவராம் அன்றே முக்கி மிகும் திரு மால்
சீர்க் கடலை யுள் பொதிந்த சிந்தனையேன் தன்னை
ஆர்க்கு அடலாம் செவ்வே யடர்த்து –69—குணா நாமா கரோ மஹான் -என்று அபரிச்சின்ன விஷயத்தைப் பரிச்சின்னம் ஆக்கினேன் (கிஷ்கிந்தா தாரை வார்த்தை குணங்களுக்கு எல்லாம் இருப்பிடம் என்கிறாள்-உள் பொதிந்த என்கையாலே பரிச் சின்னம் ஆக்கினேன் என்கிறது )

சினவில் செங்கண் அரக்கர் உயிர் மாளச் செற்ற வில்லி என்று கற்றவர் தந்தம்
மனம் உட் கொண்டு என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மா முனியை  மரம் ஏழ்   எய்த மைந்தனை
நனவில் சென்றார்க்கும் நண்ணற்கு அரியானை நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியைக்
கனவில் கண்டேன் இன்று கண்டமையால் என் கண் இணைகள் களிப்பக் களித்தேனே -7-3-1-அறிவுடையரான யோகிகள் ஆனவர்கள் தம் ஹிருதயத்திலே கொண்டு எல்லா காலத்திலும் எல்லா அவஸ்தையிலும் ஒருபடிப்பட நின்று ஏத்த அவர்களுக்கு எல்லாம் செய்தும் பின்னையும் ஒன்றும் செய்யாதானாய் பெரும் தனிசு பட்டால் போலே -இவர்களுக்கு செய்யல் ஆவது என் -என்று
இவற்றை அனுசந்திக்குமவனை –

திரு மேனி நன்னிறம் ஒத்து –-திரு மால் திரு மேனி ஒக்கும் –திரு விருத்தம் –32–என்றும் –
கண்ணன் பால் நன்னிறம் கொள் கார் –பெரிய திருவந்தாதி -85–என்றும் – சொல்லுகிறபடியே மேகமானது அவன் திரு மேனி ஒத்ததாய் இருக்கும் நிறத்தை உடைத்தாய் இருக்குமா போலே
விக்ரக வர்ணத்தால் அவனோடு சாம்யாபன்னராய் –

(திருமேனி நன்னிறமொத்து) “மேகங்களோ உரையீர்திருமால்‌ திருமேனியொக்கும்‌ யோகங்கள்‌” (திருவிருத்தம்‌ 32 )என்றும்‌, “என்னுடைய கண்ணன் பால்‌ நன்னிறங்கொள்‌ கார்‌” (பெரிய திருவந்தாதி 85) என்றும்‌ சொல்லுகிற படியே ஸ்வரூப குணத்தாலும்‌ ரூப குணத்தாலும்‌ அவனோடு ஸாம்யாபத்தியை உடையராய்‌,-

மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி யொக்கும்
யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர் உயிர் அளிப்பான்
மாகங்கள் எல்லாம் திரிந்து நன்னீர்கள் சுமந்து நுந்தம்
ஆகங்கள் நோவ வருத்தும் தவமா மருள் பெற்றதே 
–32–யோகங்கள் உங்களுக்கு –பரார்த்தமாய் விலக்ஷணமாய் இருக்கிற இவ் வடிவு எங்கே பெற்றி கோள்–அவனும் அவளும் பிரிந்து வெளுத்த வடிவு இன்றியிலே அவனும் அவளுமாக கலந்து புகர்த்த வடிவு எங்கே பெற்றி கோள்-திருவைப் பிரிந்த மாலின் வெளுத்த வடிவு என்னுடையது-திருவுடன் கூடிய மாலின் வர்ணம் உங்களது –நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி -என்னுமதுக்கு அவ் வருகான வடிவு எங்கே பெற்றி கோள்-

தங்கா முயற்றிய வாய்த் தாழ் விசும்பின் மீது பாய்ந்து
எங்கே புக்கு எத் தவம் செய்திட்டன கொல் -பொங்கோதத்
தண்ணம் பால் வேலை வாய்க் கண் வளரும் என்னுடைய
கண்ணன் பால் நல் திறம் கொள் கார்–85-
–கிளர்ந்த திரையை யுடைத்தாய்க் குளிர்ந்து இருந்த திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற என் கண்ணனுடைய விலக்ஷண நிறத்தைக் கொள்ளுகிற மேகங்கள் எவ்விடத்தே புக்கு என்ன தபஸ்ஸூ பண்ணிற்றினவோ-தனக்கு என்று இல்லாமல் பர உபகாரார்த்தமாகவே இருப்பதால் தபஸ்ஸில் ஸ்வ அர்த்தம் இல்லையே-

உயிர் அளிப்பான் தீர்த்தகரராய் எங்கும் திரிந்து – உயிர் அளிப்பான் மாகங்கள் எல்லாம் திரிந்து -திரு விருத்தம் –32-என்று மேகமானது வர்ஷ முகேன -பிராணி ரஷணம் பண்ணுகைக்காக – விஸ்த்ருமான ஆகாசப் பரப்பு எங்கும் சஞ்சரிக்குமா போலே – சம்சாரிகளான ஆத்மாக்களை ரஷிக்கைகாக
தீர்த்தகரராமின் திரிந்து –இரண்டாம் திருவந்தாதி –14–என்றும் ,-தீதில் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து –பெருமாள் திருமொழி –2–6–என்றும்-சொல்லுகிறபடியே -லோக பாவனராய் -உஜ்ஜீவன மார்க்க பிரதர்சகராய் கொண்டு-சர்வத்ர சஞ்சாரம் பண்ணி-

(உயிரளிப்பான்‌ தீர்த்தகரராய்‌) “உயிரளிப்பான்‌ மாகங்கள்‌ எல்லாம்‌ திரிந்து” (திருவிருத்தம்‌ 32) என்றும்‌ “தீர்த்தகரராமின்‌ திரிந்து” (இரண்டாம்‌ திருவந்தாதி 14) என்றும்‌ “தீதில்‌ நன்னெறிகாட்டி எங்கும்‌ திரிந்து” (பெருமாள்‌ திருமொழி 2-6 என்றும்‌ சொல்லுகிறபடியே லோக ரக்ஷணார்த்தமாக எங்கும்‌ ஸஞ்சரித்து, பகவத்‌ குணங்களை வர்ஷித்து, எல்லாரையும்‌ பரிஸூத்‌தராக்கி,–

பண்டிப்பெரும் பதியை யாக்கி பழி பாவம்
கொண்டிங்கு வாழ்வாரைக் கூறாதே எண்டிசையும்
பேர்த்த கர நான்குடையான் பேரோதிப் பேதைகாள்
தீர்த்த கரராமின் திரிந்து—14-ஜகத்துக்கு அடங்க ஸூபாவஹமாய்க் கொண்டு திரியுங்கோள் –
திரிதலால் தவமுடைத்து இத்தரணி தானே –பெருமாள் திருமொழி -10-5-தீதில் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து -பெருமாள் திருமொழி -2-6-அவனாலும் செல்லாத -திருத்த முடியாத -நிலத்தை அவன் பேரைக் கொண்டு செலுத்திடு கோள்–அவர்கள் தாங்களும் கெட்டு பிறரையும் கெடுக்குமா போலே இவர்கள் தாங்களும் க்ருதார்த்தராய் நாட்டையும் க்ருதார்த்தம் ஆக்குகிறபடி –

ஆதி அந்தம் அநந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான்
பாத மா மலர் சூடும் பத்தி இலாத பாவிகள் உய்ந்திட
தீதில் நல் நெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே
காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே –2-6—தீமையோடு கூடின நெறி யன்றிக்கே -சேதனர் நல் வழி போம் படி தாங்கள் ஆஸ்ரயித்துக் காட்டி-புகக் கடவது அல்லாத தேசம் எங்கும் புக்கு சஞ்சரித்து-

ஜ்ஞானஹ்ரதத்தை பூரித்து –மேகம் வர்ஷித்தாலே தடாகாதிகள் நிறைக்குமா போலே –-ஜ்ஞானஹ்ரதே த்யான ஜலே ராக த்வேஷ மலாபஹே ய ஸ்நாதி மானசே தீர்த்தே ஸ யாதி பரமாம் கதிம் -என்று
மானஸ தீர்த்த வர்ணனத்திலே , சொன்ன ஜ்ஞானம் ஆகிற வர்ணனத்தை -தாங்கள் வர்ஷிக்கிற பகவத் குண ஜலங்களாலே நிறைத்து —

(ஜ்ஞாந ஹ்ரதத்தைப்‌ பூரித்து) “ஜ்ஞாந ஹ்ரதே, த்‌யாந ஜலே ராக த்‌வேஷமலாபஹே, ய: ஸ்நாதி மாநஸே தீர்த்தே, ஸ யாதி பரமாம்‌ கதிம்‌” என்கிறபடியே ஜ்ஞாநமாகிற தடாகத்தை பகவத்‌ கு,ணங்களாலே பூரித்து–

தீங்கின்றி வாழ நிதி சொரிந்து – தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து –திருப்பாவை -3–என்றும் – வாழ உலகினில் பெய்திடாய் –திருப்பாவை -3–என்றும் , மாமுத்த நிதி சொரியும் –நாச்சியார் திருமொழி –8–2–என்றும் சொல்லுகிற படியே -அநர்த்த கந்தம் இன்றிக்கே –அகிலரும் உஜ்ஜீவிக்கும் படி-
பகவத் குண ரத்னங்களை வர்ஷித்து-

(தீங்கின்றி வாழ நிதி சொரிந்து) தீங்கின்றி நாடெல்லாம்‌ திங்கள்‌ மும்மாரி பெய்து” (திருப்பாவை 3) என்றும்‌, வாழ உலகினில்‌ பெய்திடாய்‌” (திருப்பாவை 4) என்றும்‌, “மாமுத்த நிதி சொரியும்‌” (நாச்சியார்‌ திருமொழி 8-2) என்றும்‌ அநர்த்த கந்த மின்றியே எல்லாரும்‌ உஜ்ஜீவிக்கும்படி பகவத்‌ கு,ணங்களை வர்ஷித்து,-

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெரும் செந்நெலூடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத
தேங்காதே புக்கிருந்து தீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய் –3-யத்ர அஷ்டாக்ஷர ஸம்ஸித்தோ-மஹாபாகோ -மஹீயதே -ந தத்ர சஞ்சரிஷ்யந்தி வியாதி துர்பிக்ஷ தஸ்கரா –அவித்யாதி சகல துரிதங்களும் போய்-
இவர்கள் தாங்களும் முதல் தன்னிலே நாராயணனே -என்று துணிந்து இறே இழிந்து –சத்வோத்தரமான காலத்திலே- அனன்யார்ஹ சேஷத்வ- அநந்ய சரணத்வ
அநந்ய போக்யத்வங்கள் ஆகிற-ஆகார த்ரய ஜ்ஞானம் உண்டாய்- அத்தாலே அபிவிருதங்களாய்-ஓர் ஊருக்கு ஒருவரே போரும்படியான சேதனர் உடைய நடுவிலே தத் சம்பந்திகளாய்த்த தேக தாரகரான ஆத்ம வர்க்கங்கள்-களிப்பிலே துள்ளா நிற்க–

ஆழி மழைக் கண்ணா ஓன்று நீ கை கரவேல்
ஆழி யுட்புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
பாழியம் தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம் புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்–4–சரம் போலே முடிக்க ஒண்ணாது –-அங்கு எதிரிகளான ராக்ஷசர் மேல் விட்டால் போலே அன்றிக்கே ஜகத்தடைய வாழ வேணும் லௌகிகர் எல்லாம் ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்து வாழும்படி–லௌகிகர் இடங்களில்-பகவத் குண கதாம்ருதத்தை வர்ஷிக்கக் கடவாய்

மா முத்த நிதி சொரியும் மா முகில்காள் வேங்கடத்துச்
சாமத்தின் நிறம் கொண்ட தாளாளன் வார்த்தை என்னே
காமத் தீயுள் புகுந்து கதுவப் பட்டிடைக் கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே—8-2-என்னைத் தோற்றி ஒரு ஔதார்யம் படைக்க வேண்டாவோ உங்களுக்கு-பரானுக்ரஹமே சீலமாய் இருக்குமவர்கள் அன்றோ நீங்கள் – பெரு விலையனான முத்துக்களையும் பொன்னையும் சொரியுமாய்த்து –அதாவது பிறர் இரக்க கொடுக்கை யன்றிக்கே தன் ஆஸ்ரயம் கொண்டு தரிக்க மாட்டாமல் கொடுப்பாரைப் போலே யாய்த்து கொடுப்பது
முலைக் கடுப்பாலே தரையிலே பீச்சுவாரைப் போலே –

கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து —ஒவ்தார்ய அதிசயத்தாலே உபகரித்ததை நினையாதே –
இன்னமும் உபகரிக்க பெற்றிலோம் ! நாம் செய்தது போருமோ ? என்று லஜ்ஜித்து-வெளுத்து ஒளித்து
உபகரிக்கப் பெறாத போது – உடம்பு வெளுத்து ஒளித்து(அர்த்த விசேஷங்களை உபதேசிக்கப் பெறாத பொழுது உடம்பு வெளுத்து மறைந்து வெளியே முகம் காட்டாமல் ஸூவ அனுபவ பரர்களாய் ஏகாந்த சீலர்களாய் இருப்பதைத் தெரிவித்த படி – ) கண்டு உகந்து பர சம்ருத்தியே பேறான – உபகரிக்கும் தசையில் எதிர் தலையில் சம்ருத்தி கண்டு உகந்து – அந்த பர சம்ருத்தி தங்களுக்கு பேறாக நினைத்து இருக்கிற-

(கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து வெளுத்தொளித்துக்‌ கண்டுகந்து பர ஸம்ருத்‌தியே பேறான) ஒளதார்யாதிஸயத்தாலே பிறருக்குபகரித்து அத்தை நினையாதே ‘மேலும்‌ உபகரிக்கப்‌ பெற்றிலோம்‌ என்று இழவாளராய்‌ எதிர்த்தலையில்‌ ஸம்ருத்‌தி யைக்‌ கண்டுகந்த அதுலே தங்களுக்குப்‌ பேறாக நிலைத்திருக்க–

அன்பு கூறும் அடியவர் – ஆங்கு அரும்பி கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவரான- பெரிய திருமொழி -2–10–4––முதல் ஆழ்வார்கள்- (ஆங்கு அரும்பி கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர் –
அடியவர் என்று பொய்கையார் -பர பக்தி நிலை -ஞான பிரதம நிலை — அன்பு கூறும் அடியவர் என்று பூதத்தாழ்வார் பர ஞான நிலை -தர்சன-சாஷாத்காரம் பெற்றவர்கள் – அரும்பி கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர் -பேயாழ்வார் -பரம பக்தி நிலை -பிராப்தி தசை -என்றவாறு )

(அன்புகூரும்‌ அடியவர்‌)ஆங்கரும்பிக்‌ கண்ணீர் சோர்ந்து அன்பு கூரும்‌” (பெரிய திருமொழி 2-10-4) அடியவர்களான முதலாழ்வார்கள்‌ –

தாங்கரும் போர் மாலி படப் பறவை யூர்ந்து தராலத்தோர் குறை முடித்த தன்மையானை
ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர்கட்கு ஆரமுதமானான் தன்னை
கோங் கரும்பு சுர புன்னை குரவர் சோலைக் குழா வரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டு
தீங்கரும்பு கண் வளரும் கழனி சூழ்ந்த திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–2-10-4-ஸ்வ விஷயத்தில் பிரேமத்தால்-கண்ண நீர் அரும்பி -அது தான் கண்ணை விட்டு சோர -பிரேம பரவசராய் இருக்கும் சேஷ பூதருக்கு நிரதிசய போக்யனானவனை–முதல் ஆழ்வார் விஷயம் ஆயனே கரும்பு-

உறையில் இடாதவர் – உருவின வாள் உறையில் இடாதே -ஆதி மத்திய அந்தம் தேவதாந்திர வரத்வ –பிரதிபாதன -பூர்வகமாக பகவத் பரத்வத்தை வுபபாதிக்கும் திரு மழிசைப் பிரான்

(உறையிலிடாதவர்‌) உருவின வாள்‌ உறையிலிடாதே ஆதி,மத்‌யாவஸாநம்‌ தேவதாந்தரங்களினுடைய அவரத்வ ப்ரதிபாதந பூர்வமாக பகவத் பரத்வத்தை உபபாதிக்கிற திருமழிசைப்பிரான்‌-

புயற்கை அருள் மாரி –-காரார் புயற்கை கலி கன்றி –பெரிய திருமொழி–3-2-10-என்றும் ,
அருள் மாரி –பெரிய திருமொழி–3-4-10–என்றும் ,ஒவ்தார்யத்தில் மேக சத்ருசராய் கொண்டு கிருபையை வர்ஷிக்கும் திரு மங்கை ஆழ்வார்-

(புயற்கை அருள்மாரி) “காரார்‌ புயற்கைக்‌ கலிகன்றி” (பெரிய திருமொழி 3-2-10) என்றும்‌, “அருள்மாரி” (பெரிய திருமொழி 3-4-10) என்றும்‌ ஒளதார்யத்திலே மேக ஸத்‌ருஸராய்க்‌ கொண்டு க்ருபையை வர்ஷிக்கிற திருமங்கையாழ்வார்‌-

சீரார் பொழில் சூழ்ந்து அழகாய தில்லைத் திருச் சித்ரகூடத்துறை செங்கண் மாலுக்கு
ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப அலை நீர் உலகுக்கு அருளே புரியும்
காரார் புயல் கைக் கலிகன்றி குன்றா வொலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார்
பாரார் உலகம் அளந்தான் அடிக் கீழ்ப் பல காலம் நிற்கும்படி வாழ்வர் தாமே–3-2-10-பரம உதாரரான திரு மங்கை ஆழ்வார் குறையாத ஓசை உடைத்தாக அருளிச் செய்த திரு மொழி பத்தும் வல்லார்
ப்ருதீவி பிரசுரமான லோகத்தை அளந்த திருவடிகளில் கீழே காலம் எல்லாம் வர்த்திக்கும்படி
வாழ்வாராகப் பெறுவர்–கைங்கர்ய ஸ்ரீ விச்சேதம் இல்லாமல் பெரும் தாளுடை பெருமான் அடிக்கீழ் பிரியாது இருப்பாரே –

செங்கமலத் தயன் அனைய மறையோர் காழிச் சீராம விண்ணகர் என் செங்கண் மாலை
அங்கமலத் தடம் வயல் சூழ் ஆலி நாடன் அருள் மாரி யரட்ட முக்கி யடையார் சீயம்
கொங்கு மலர் குழலியர் கோன் மங்கை வேந்தன் கொற்ற வேல் பரகாலன் கலியன்
சொன்ன
சங்க முகத் தமிழ் மாலை பத்தும் வல்லார் தடம் கடல் சூழ் உலக்குக்கு தலைவர் தாமே–3-4-10-அனுகூல வர்க்கத்துக்கு சர்வ ஸ்வதானம் பண்ணுமவர்-சத்ருக்களை வந்து அணுக ஒண்ணாதபடி சிம்ஹம் போலே அநபிபவ நீயர் ஆனவர் –-எல்லார்க்கும் ஸ்ப்ருஹணீயனரானவர் திருமங்கைக்கு பிரதானராய் உள்ளவர்

குணம் திகழ் கொண்டல்–இராமானுச நூற்றந்தாதி -60—என்று குண உஜ்ஜ்வலமான மேகமாகச் சொல்லப் பட்ட எம்பெருமானார் —போல்வாரை மேகம் என்னும் – இந்த குண சாம்யத்தை இட்டு மேகம் என்று சொல்லும் என்ற படி

குணந்திகழ்‌ கொண்டல்‌” (இராமானுச நூற்றந்தாதி 60 )ஆன உடையவர்‌ போல்வாரை மேகம்‌ என்னும்‌ என்கிறார்‌.-

உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகம் தொறும் திரு வாய் மொழியின்
மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தொறும் மா மலராள்
புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும்
குணம் திகழ் கொண்டல் இராமானுசன் என்னும் குலக் கொழுந்தே – -60 –குணம்-அறிவு முதலிய ஆத்ம குணம் கொண்டல்-வள்ளன்மையால் வந்த ஆகு பெயர் . மேகம் போலே ஆத்ம குணங்களை அனைவருக்கும் வழங்கும் வள்ளல் -என்றபடி .

–——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌ – 7-ஒளபம்ய பாதம் –10-ப,க,வந்நாயி கெளபம்யாத்‌,யதி, கரணம்‌–(122–132)-ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

July 17, 2026

(1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 284 முடிய (48)

(1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-284 (27)

7-ஒளபம்ய பாதம் – 122–155—மொத்தம் 34 ஸூரணைகள் -இதில் இரண்டு அதிகரணங்கள் —
10-ப,க,வந்நாயி கெளபம்யாத்‌,யதி, கரணம்‌–122–132–மொத்தம் – 11 ஸூரணைகள்
11-அந்யாபதேஸ -ஸ்வாபதேஸ அதி கரணம்‌ —-133–155– மொத்தம் —23-ஸூரணைகள்

இப்படி கேவலம் ஸ்திரீ சாம்யமே அன்றிக்கே –-நாரீணாம் உத்தமையான பிராட்டி யோடு சாம்யமும் பரிசுத்த ஆத்ம ஸ்வரூபதுக்கு உண்டு என்னும் அத்தை ஸ்பஷ்டமாக அருளிச் செய்கிறார் மேல் ..கேவலம்‌ ஸ்த்ரீத்வ ஸாம்யமே யன்றிக்கே பரிஸூத்‌தமான ஸ்வரூபத்தினுடைய யாதாத்ம்யத்துக்குப்‌ பெரிய பிராட்டியாரோடு அநந்யார்ஹத்வாதிகளாலே ஸ்வரூப ஸாம்யம்‌ உண்டென்கிறார்‌

இன்பும் அன்பும் முற்படுவது கொழுந்து விடுவதாகிற-கடி மா மலர் பாவையோடு-உள்ள சாம்ய ஷட்கத்தாலே–சூரணை -122-

இன்பு முற்படுவது-அதாவது –-நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை -4-5-8–என்று
இன்று ஆஸ்ரயித்த நமக்கும் — நித்ய சூரிகளுக்கும் அவ் அருகாய் ,ரூப குணத்தாலும் ,ஆத்ம குணத்தாலும் பூர்ணயாய் இருக்கும் பிராட்டிக்கும் இன்பனாம் -என்ற இடத்தில் –முற்பட இங்கே இன்பனாய் பின்பாயிற்று அவளுக்கு ஸ்நேஹிப்பது என்னும் படி – பிராட்டிக்கு முன்பே இவர் பக்கல் இன்பன் ஆவது –இன்பனாவது -அன்பு கொழுந்து விடுவதாகிறது –-அதாவது-கோல மலர் பாவைக்கு அன்பாகிய என் அன்பே 10-10-7–என்று-நிரதிசய போக்யையான பிராட்டிக்கு அன்பன் ஆகையாலே அவள் பரிக்ரஹமான என் பக்கலிலும் அன்பனாவனே என்னும் படி — அவள் பக்கல் பண்ணின ஸ்நேஹம் இவர் அளவும் வளர வருவதாய் – இப்படி இன்பு முற்படுகிறது அன்பு கொழுந்து விடுகிறது ஆகிறது –கடிமா மலர் பாவை ஒப்பாள்–பெரிய திருமொழி -3-7-9–என்று-பரிமள பிரசுரமான பூவில் பிறப்பாலும் , நிருபாதிக ஸ்த்ரீத்வத்தாலும் நிரதிசய போக்ய பூதையான பிராட்டியோடு ஒக்க சொல்லலாம் அவள் என்னும்படி பிராட்டியோடு இத் தலைக்கு உள்ள சாம்யத்துக்கு உடலான –
1-அனந்யார்ஹ சேஷத்வம்-2-அநந்ய சரணத்வம்-3-அநந்ய போக்யத்வம்-4-சம்ஸ்லேஷத்தில் தரிக்கை
5-விஸ்லேஷத்தில் தரியாமை-6-ததேக நிர்வாஹ்யத்வம்-ஆகிற ஆறு பிரகாரத்தால்
என்கை .-இன்பன் -என்றது ஸ்நிக்தன் என்றபடி ..ஆகையால் அன்போ பாதி இன்பும் சிநேக வாசி ஆகையாலே ஸ்நேஹம் முற்படுவது -கொழுந்து விடுகிறது என்றபடி–-இன்பும் அன்பும் -இரண்டு போல சொல்லிற்று –
முற்படுதலும் ,கொழுந்து விடுதலும் சொல்லுகிற ஸ்தலங்களிலே சிநேக வாசக தயா ப்ரயுக்த சப்தங்கள் இவை ஆகையாலே இரண்டு சந்தையும் தோற்றுகைக்காக –பிராட்டியோடு உள்ள என்ன அமைந்து இருக்க -கடி மா மலர் பாவை யோடு உள்ள – என்றது – அந்த சந்தையிலே பிராட்டி சாம்யம் முக்த கண்டமாக சொல்லி இருக்கையாலும் ,-கந்தல் கழிந்த ஸ்வரூபத்தை உடையோர் எல்லோரையும் இப்படிச் சொல்லுகிறது – ஸ்வரூப அனுபந்தியான இஸ் சாம்ய ஷட்கத்தாலே என்று அறிவிக்கைக்காகவும் —சாம்யத்தாலே என்னாது சாம்ய ஷட்கத்தாலே என்றது –-1-நிரூபகத்வம்
2-அனுரூபத்வம்-3-அபிமதத்வம்-4-சேஷத்வ சம்பந்த த்வாரபாவம்-5-புருஷகாரத்வம்
6-ப்ராப்ய பூரகத்வம் முதலான ஸ்வாப விசேஷங்கள் தத் அசாதாரணங்கள் ஆகையாலே

 (இன்பும்‌ அன்பும்‌ முற்படுவது கொழுந்து விடுவதாகிறது) “நமக்கும்‌ பூவின் மிசை நங்கைக்குமின்பனை”’ (திருவா. ச – 5 – 8) என்று – இன்று ஆஸ்ரயித்த நமக்கும்‌ நித்ய ஸூரிகளுக்கும்‌ அவ்வருகாய்‌, ரூப குணத்தாலும்‌ ஆத்ம குணத்தாலும்‌ பரிபூர்ணை யாயிருக்கிற பெரிய பிராட்டி யார்க்கும்‌ இன்பனாமிடத்தில்‌ “இங்கே இன்பனாயாய்த்துப்‌ பின்னே அவளுக்கு ஸ்நேஹிப்பது’ என்று பிராட்டிக்கு முன்னே தன்பக்கல்‌ இன்பனாவது, ‘*கோல மலர்ப்‌ பாவைக்கன்பாகிய என்‌ அன்பேயோ?‘” (திருவா. 10 -10 -7) என்று – நிரதிஸய போக்‌ யதைக வேஷையான பெரிய பிராட்டியாருக்கு அன்பனாகையாலே அவள் பரிக்‌ரஹமான என் பக்கலிலும்‌ அன்பனானவன்‌ என்று பெரிய பிராட்டியார் பக்கல்‌ அவனுக்‌குண்டான அன்பு தம்மளவாக வர்த்திப்பதாய்‌, இப்படி இன்பு முற்படுவது, அன்பு கொழுந்து விடுவதாகிறது. (கடி மா மலர்ப் பாவையோடுள்ள ஸாம்ய ஷட்கததாலே) “காவியங் கண்ணி யெண்ணில்‌ கடி மாமலர்ப்பாவை யொப்பாள்‌” (திருமொழி 3 – 7 – 9) என்றும்‌, “காவி?” என்று செங்கழுநீராய்‌, செவ்வரியாலும்‌, கடைக் கண்ணில்‌ சிவப்பாலும்‌ செங்கழுநீர் போன்ற கண்ணழகை உடையள்‌ என்கையாலே ராகோத்தரமான ஜ்ஞாநத்தை உடையள்‌ என்றபடி.-இத்தால்‌ மேற் சொல்லப்படுகிற அநந்யார்ஹ ஸேஷத்வ ஜ்ஞாநாதி ஷட்கத்துக்கும்‌ உப லக்ஷணம்‌. அது என்‌ என்னில்‌, ”கடிமாமலர்ப்பாவை யொப்பாள்‌”’ என்று – இவளை ஆராயில்‌ பரிமள ப்ரசுரமான தாமரையை இருப்பிடமாக உடையளாய்‌, நிருபாதிகமான ஸ்த்ரீத்வத்தை உடையளாகையாலே ரூப குணத்தாலும்‌, ஆத்ம குணத்தாலும்‌ பூர்ணையாய்க் கொண்டு நிரதிஸய போக்‌யையாயிருக்கிற பெரியபிராட்டியாரோடொக்கச்‌ சொல்லலாம்படியான அநந்யார்ஹ ஸேஷத்வமும்‌, அநந்ய ஸரணத்வமும்‌, அநந்ய போக்யத்வமும்‌, ஸ்ம்ஸ்லேஷத்தில்‌ தரிக்கை, விஸ்லேஷத்தில்‌ தரியாமை, ததேக நிர்வாஹ்யத்வம்‌ என்கிற ஆறு ப்ரகாரத்தாலே என்கிறார்‌; இனி அபிமதத்வம்‌, அநுகூலத்வம்‌, நிருபகத்வம்‌, ஸேஷத்வ ஸம்பந்த த்‌வாராபாவம்‌, புருஷகாரத்வம்‌, ப்ராப்ய பூரகத்வம்‌ என்கிற இவை முதலான ஸ்வபாவ விஸேஷங்கள்‌ பெரியபிராட்டியாருக்கே அஸாதாரணமா யிருக்குமிறே

நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானைத் தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொல்மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனியாவர் நிகர் அகல் வானத்தே?–4-5-8–இன்று தன் திருவடிகளை ஆஸ்ரயித்த நமக்கும் – நித்ய சம்சாரிகளுக்கும் இவ்வருகான நமக்கும் -நீசனேன் நிறை ஒன்றும் இலேன் -என்றார் இறே-பூவின்மிசை நங்கைக்கும்-நித்ய ஸூரிகளுக்கும் அவ்வருகாய்-ரூப குணத்தாலும் ஆத்ம குணத்தாலும் பூர்ணையாய் இருந்துள்ளவளுக்கும் புஷ்பத்தில் பரிமளத்தை வகுத்தால் போலே இருந்துள்ள ஸுகுமார்யத்தையும் போக்யத்தையும் உடையவள்-இத்தலை நிறைவு இன்றிக்கே இருக்கிறாய் போலே யாயிற்று அத்தலையில் குறைவற்று இருக்கிற படி-இன்பனை-ஸ்நேஹித்து இனியனாம் இடத்தில் முற்பட்டு இருப்பது நம் பக்கலிலே-த்வயி கிஞ்சித் சமாபன்னே-ஒருத்தருக்கு பிரஜைகள் பலரானால் அவிலக்ஷணர் பக்கலிலே இறே -ஸ்நேஹம் மிக்கு இருப்பது

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7–பிராட்டி பக்கல் ஸ்நேஹ அதிசயத்தாலே -அந்த ஸ்நேஹமே ஹேதுவாக அவள் பரிக்ரஹமான என் பக்கலிலே அதி பிரவணன் ஆனவனே –சரம தசையில் இவர் அருளிச் செய்த வார்த்தை ரகசியத்தின் படி இருந்தபடி கண்டாயே என்று சீயரைக் குறித்து பட்டர் அருளிச் செய்தார் –பிராதி கூல்யத்தை கனக்கப் பண்ணினார் பக்கலிலும் நாலடி வர நின்றதுவே ஹேதுவாக ரக்ஷகனாம் ஈஸ்வரன் என்னும் இடம் காக விபீஷணாதிகள் பக்கல் கண்டது இறே-க்ருபயா பர்யபாலயாத் — என்றும் நத்யஜேயம் என்றும் அவ்வளவு அன்றிக்கே தனி இருப்பில் தர்ஜன பர்ச நாதிகளாலே நலிந்த ராக்ஷஸிகள் பக்கல் திருவடி எதிர்க்க –க குப்யேத்-கார்யம் க் ருணம் ஆர்யேனே நகச்சின் நபராத்யதி -என்னும் நீர்மை இறே பிராட்டி நீர்மை –

காவியங்கண்ணி எண்ணில் கடி மா மலர்ப் பாவை யொப்பாள்
பாவியேன் பெற்றமையால் பணைத் தோளி பரக்கழிந்து
தூவி சேர் அன்னம் அன்ன நடையாள் நெடுமாலொடும் போய்
வாவி யந்தண் பணை சூழ் வயலாலி புகுவர் கொலோ ?–3-7-9—ஈஸ்வரனைக் காட்டில் பிராட்டி
அஸி தேஷணை-என்னும் ஏற்றத்தை உடையாள் ஆனாப் போலே-பிராட்டியில் ஏற்றம் இவளுக்கு -காவியங்கண்ணி -என்று இருவரையும் சேர அனுபவிக்கிற கண் இறே இவளுடைய கண்கள் –
(அத் திரு அவனைப் பற்றும் இத் திரு இருவரைப் பற்றும் )

இப்படி ஆறு பிரகாரத்தாலே பரிசுத்த ஆத்ம ஸ்வரூபத்துக்கு தத் சாம்யம் உண்டாகையாலே
பிராட்டி தசை இவருக்கு வந்தேறி அல்லாமையை பிரகாசிப்பித்தாராய் நின்றார் கீழ்– ஏவம் பூதாகாரத்தாலே பெரிய பிராட்டியாரோடு உள்ள சாம்யமே அன்றிக்கே – தம்முடைய பாவ விசேஷங்களால் பகவத் அபிமத திவ்ய மகிஷிகளான பிராட்டிமார் மூவரோடும் இவருக்கு உண்டான சாம்யம் இவர் பாசுரங்களிலே பிரகாசிக்கும் என்கிறார் மேல்-இப்படிப்‌ பெரிய பிராட்டியாரோடு ஸாம்யம்‌ சொன்னவள வன்றிக்கே நிரதிஸய போக்‌யதையை உடைய பிராட்டிமார்‌ மூவரோடும்‌ இவர்க்கு ஸாம்யம்‌ உண்டு என்னுமாகாரம்‌ இவருடைய பாசுரங்களிலே ப்ரகாஸிக்கு மென்கிறார்‌-

உண்ணாது கிடந்தோர் மாயையினால் என்னும் வீறுடைய முடிக்கு உரியரோடு இத் திரு மண்ணேர் அன்ன ஒண்ணுதல் பின்னை கொல் என்கிற ஒப்பு தென்பால் நெடுமாடம் கடும் சிலை அம்பெரி யூட்டி
நீறு எழ வெரித்த பெரும் தோற்றத்து ஆர் உயர் காகுத்தன் ஆதி அம் காலம் மண் புரை பொன் மாதின் துகளாடி எருது ஏழ் தழீ இச் சறையினார் என்னுமவற்றிலே தோன்றும்–சூரணை -123-

(உண்ணாது என்னும் வீறுடைய முடிக்கு உரியரோடு இத் திரு என்கிற ஒப்பு –1-தென்பால் 2-நெடுமாடம் 3-கடும் சிலை 4-அம்பெரி 5-யூட்டி 6-நீர் எழ 7-வெரித்த 8-பெரும் தோற்றத்து 9-ஆர் உயர் காகுத்தன்-என்னுமவற்றிலே தோன்றும் –கிடந்து என்னும் வீறுடைய முடிக்கு உரியரோடு மண்ணோர் அன்ன ஒண்ணுதல் என்கிற ஒப்பு – 1-ஆதி அம் காலம் 2-மண் புரை 3-பொன் மாதின் 4-துகளாடி-என்னுமவற்றிலே தோன்றும்– ஓர் மாயையினால் என்னும் வீறுடைய முடிக்கு உரியரோடு பின்னை கொல் என்கிற ஒப்பு- 1-எருது ஏழ் தழீ 2-இச் சறையினார் என்னுமவற்றிலே தோன்றும் )- (பட்ட மஹிஷிகள் மூவரும் என்பதால் மூவரும் முடிக்கு உரியர் )உண்ணாது என்னும் –அதாவது – உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடறுத்து பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்ற பேதெல்லாம் –நாச்சியார் -11-7–என்கிறபடி ஜனக குல சுந்தரியான தன்னைப் பிரிந்த போது –கம்பீர சத்ய சம்பன்ன க்ருபாவான் அவிகத்தன பரகீய குணக்ராஹீ தீரா தாத்தோ நிகத்யதே-என்கிறபடி -தீரோத்த நாயகன் ஆகையாலே ,
விகார ஹேதுக்கள் உண்டானாலும் தைர்யத்தாலே புறம் தோன்றாது இருக்கும் சக்கரவர்த்தி திரு மகனை – ந மாம்சம் ராகவோ புங்க்தே -ந மது சேவிதே அநித்ரஸ் சததம் ராம –நைவ தம்சான் ந மசகான்–ஸூந்தர -36-42-/44 –இத்யாதிப் படியே – (அநஸ்நன் -உபநிஷத் பரத்வம் உண்ணாமல் இருப்பதே ஸ்வரூபம் – இங்கு அவதார தசையில் உண்ணுவாரே பிராட்டி உடன் கூட இருந்தால் ) ஊணும் உறக்கமும் அற்று -கடித்ததும் ஊர்ந்ததும் அறியாதபடி பண்ண வல்ல வைலஷண்யத்தால் -வந்த

(உண்ணாது என்று தொடங்கி). ‘“உண்ணாதுறங்கா தொலி கடலை ஊடறுத்துப்‌ பெண்ணாக்கை ஆப்புண்டு தாமூற்ற பேது” என்றும்‌, “’ந மாம்ஸம்‌ ராகவோ பு,ங்க்தே ந சாபி மது ஸேவதே”’ (ரா. ஸு, 36 – 41), ”அநித்‌ரஸ்ஸதம்‌ ராமஸ் ஸுப்தோபி ச நரோத்தம: (ரா.ஸு. 36 – 44), “நைவ தம்ஸாந் ந மஸகாதந் ந கீடாந்த ஸரீஸ்ருபாந்‌ ! ராகவோபநயேத்‌, கத்ராத்‌ தவத்‌ கதேநாந்தராத்மநா” (ரா.ஸு., 36 -42) என்கிறபடியே தீரோதாத்த நாயகனான சக்ரவர்த்தித் திருமகனையும்‌ தன்னுடைய விஸ்லேஷத்தில்‌ ஊணுமுறக்கமுமற்று, கடித்ததும்‌, ஊர்ந்ததும்‌ அறியாதபடி பண்ணவல்ல வைலக்ஷ்ண்யத்தால்‌ வந்த வீறுடையளாய்‌, –

உண்ணாது உறங்காது ஒலி கடலை யூடறுத்து
பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்றபேதெல்லாம்
திண்ணார் மதிள் சூழ் திருவரங்கச் செல்வனார்
எண்ணாதே நம்முடைய நன்மைகளே எண்ணுவரே–11-7-ந மாம்சம் ராகவோ புங்க்தே ந சாபி மது சேவதே-என்கிறபடியே பார்த்து பரிந்தூட்டுமவள் போனால் -இனி யார் அவரைப் பரிந்தூட்ட – மா மலர் மங்கை மணம் உண்டு இருந்தான் இறே அவள் போனால் இவனுக்கு ஊண் இல்லை இறே –அநித்ரஸ் சததம் ராம -என்கிறபடியே – கண் உறக்கம் அற்று ஊண் உறக்கம் அற்று-ஸூக்ரீவம் சரணம் கத –என்று
கண்ட காபேயர் கால்களிலே விழுந்து-ஓதம் கிளர்ந்த கடலை ஊடறுத்து-கூறு அறுத்து அடைத்து –
சமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்தும் அர்ஹதி -யுத்த -19-30-என்று ராஷசனுக்கு சிஷ்யராய்ப் புக்கு -அவன் சொல்லக் கடலை சரணம் புக்கு –பிராட்டி வடிவிலே பத்தராய்-ஒரு பெண் கொடியாலே கட்டுண்டு – ஆக்கை -சரீரம்-கொடி இரண்டு பொருளும்-தாம் பட்ட எளிமை எல்லாம் பண்ணாதே-

வீறுடைய முடிக்கு உரியரோடு-அதாவது –வீறு உடையவளாய் –-சர்வேஸ்வர சாம்ராஜ்யத்தில் அவனோடு ஒக்க முடி சூடுகையாலே –முடிக்கு உரியளான ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடும் ,–கிடந்து என்னும் வீறுடைய முடிக்கு உரியரோடு-அதாவது-கிடந்து இருந்து நின்று அளந்து —திருவாய் -2-8-7-என்கிற பாட்டின் படி (விராதன் ஸ்தோத்ரம் -அரவாகி சுமத்தியால் -இத்யாதி ) சர்வஜ்ஞனாய் , அவாப்த சமஸ்த காமனான சர்வேஸ்வரனை -பஹு பிரகாரமாகத் தன்னை அனுபவித்தாலும் – பர்யாப்த்தன் ஆகாதபடி பிச்சேற்ற வல்ல வைலஷண்ய பிரயுக்தமான வீறு உடையளாய்- ஸ்ரீ பெரிய பிராட்டியாரோபாதி முடிக்கு உரியளான ஸ்ரீ பூமி பிராட்டியாரோடும் —

ஸர்வேஸ்வர ஸாம்ராஜ்யத்தில்‌ அவனோடொக்க அபிஷிக்தை யாகையாலே முடிக்குரியளா யிருக்கிற ஜநக குல ஸுந்தரியான பெரிய பிராட்டியாரோடும்‌“கிடந்திருந்து நின்றளந்து ” (திருவா. 2 – 8 – 7) என்கிற பாட்டின் படியே ஸர்வஜ்ஞனான ஸர்வேஸ்வரனையும்‌, பஹு ப்ரகாரமாகத்‌ தன்னை அநுபவித்தாலும்‌ பர்யாப்தனாகாதபடி பிச்சேற்ற வல்ல வைலக்ஷண்யத்தை உடையளாய்ப்‌ பெரிய பிராட்டியாரோபாதி முடிக்கு உரியளான ஸ்ரீபூமிப் பிராட்டியாரோடும்‌

கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு
இடந்திடும்
தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பார் என்னும்
மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பரே –2-8-7—கிடந்து – திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின படியாதல் – அஞ்சலிம் பிராங்முக க்ருத்வா பிரதிசிஸ்யே மஹோததே -என்று கடல் கரையிலே கண் வளர்ந்து அருளின படியாதல் இருந்து –உடஜே ராம மாசீ நம் அபித பாவ கோபமம்-என்று சித்ர கூடத்தில் இருப்பு நின்று –அவஷ்டப்ய ச திஷ்டந்தம் ததர்ச தனுரூர்ஜிதம் ராமம் ராமாநுஜஞ்சைவ பர்த்துச்சைவா நுஜம் சுபா -என்று ராவண வதம் வீர ஸ்ரீயோடே நின்ற நிலை – அளந்து -மஹா பாலி அபஹரித்த பூமியை எல்லை நடந்து மீட்டுக் கொண்டு கேழலாய்க் -பூமியை பிரளயம் கொள்ள -தன் மேன்மை பாராதே நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு கீழ்ப் புக்கு-இடந்திடும்-
அண்ட புத்தியில் புக்கு ஒட்டு விடுவித்துக் கொண்டு ஏறின படி தன்னுள் கரக்கும்- பிரளய ஆபத்தில் பிரளயம் தனக்கு தெரியாத படி திரு வயிற்றில் வைத்துக் காக்கும் –-உமிழும்- இவை என் பட்டனவோ என்று உமிழ்ந்து பார்க்கும் 

ஓர் மாயையினால் என்னும் வீறுடைய முடிக்கு உரியரோடு-அதாவது-ஓர் மாயையினால்- ஈட்டிய வெண்ணெய் –திருவிருத்தம் -21-இத்யாதிப் படியே நித்ய சூரிகள் சமாராதன பரராய் நிற்க -அவர்கள் அறியாதபடி அத்தை உபேஷித்து தாழ்வுக்கு எல்லையான இடைக் குலத்திலே – ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து பிறந்து தன்னைப் பெறுகைக்கு சுல்கமாக விட்ட மிருத்யு சமன்களான ருஷபங்களின் கொம்பின் இடையிலே கருமாறி பாய்ந்தார் போல் தன்னைப் பேணாமல் சென்று விழும் படி பண்ண வல்ல வைலஷண்ய வீறு உடையளாய் – முற்பட்ட மகிஷிகளோ பாதி முடிக்கு உரியளான ஸ்ரீ நப்பின்னை பிராட்டியாரோடும்-

(ஓர்‌ மாயையினால்‌ இத்யாதி,) நித்ய ஸூரிகள்‌ ஸமாராதந பரராய் நிற்க, அவர்களையும்‌ உபேக்ஷித்துத்‌ தாழ்வுக் கெல்லையான இடைக் குலத்திலே க்ருஷ்ணனாய் வந்து பிறந்து, அவள் தன்னைப்‌ பெறுகைக்கு ஸூல்கமாக இட்டு ம்ருத்யு ஸமங்களான ருஷபங்களின்‌ கொம்பிலே கருமாறிப் பாய்ந்தாப் போலே தன்னைப் பேணாமல்‌ சென்று விழும்படி அவனைப் பிச்சேற்ற வல்ல வைலக்ஷண்யத்தை உடையளாய்‌ அவர்களோபாதி முடிக்குரியளான நப்பின்னைப் பிராட்டியோடும்‌.

சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி வானோர்கள் நன்னீர்
ஆட்டி அம் தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்தி மிலேற்றுவன் கூன்
கூட்டிடை ஆடின கூத்து அடல் ஆயர் தம் கொம்பினுக்கே
 –21-ஓர் மாயையினால்- அத்வதீயமான ஆச்சர்யம் –அவ்விடம் அங்கனே செல்லா நிற்க செய்தே ,-திரு ஆய்ப்பாடியிலே அனுகூலர் பக்கல் வெண்ணெய் உண்டாய் இருந்தது என்று நாரதராதிகள்-சொல்ல — தனது சங்கல்பத்தால் கிடைக்கும் வெண்ணெய் விட-கோபிமார் ஸ்பர்சத்தால் கிடைக்கும் வெண்ணெயில் விருப்பம் கொண்டு ,-தூபம் உண்டாகிய புகையிலே தன்னை மறைத்து – ஸதா பஸ்யந்தி ஸூரய -என்று இருக்கிறவர்களை-கண்ணில் மணல் தூவின படிமாயைமாயா வயுனம் ஞானம் என்கிற படியே இச்சை-அப் புகை நிழலிலே ஒளித்துப் போருவாரைப் போலே அத்விதீயமான தனது அபிநிவேச சங்கல்பத்தினாலேதம் கொம்பினுக்கே-அம் கொம்போடே பொரலாம் ஆகில் ,  -இக் கொம்புகளோடே பொருதல் என்றே வேணும் என்று பொருதான்-கரு மாறி பாய்ந்தாலும் பேற்றுக்கு தக்கது போராதாய் இருக்கிற படி–ஜனகானாம் குலே கீர்த்தி மா ஹரிஷ்யதி மேசுதா–என்னும் படியே  —சீதை பிராட்டியால் ஜனகன் குலத்துக்கு கீர்த்தி உண்டானது போல் –பால காண்டம் -68-21–நம் கொம்பினுக்கே -அக் குலத்தை எல்லாம் உண்டாக்க பிறந்த படி-ஆயர் பன்மை -கொம்பு ஒருமை -இதுக்கு இந்த பிரமாணம் – பிரபலரான கோப குலத்தில் பிறந்த நப்பின்னை பிராட்டிக்கு நாம் போக்தா ஆக வேணும் என்று
ஸய்யாசனம் இது

இத் திரு என்கிற ஒப்பு –அதாவது –மாயோன் திறத்தனளே இத் திரு–திருவாய் -4-4-7-என்றும்
அநந்ய ராகவேணாஹம்–ஸூந்தர -21-15-என்கிறபடியே – சர்வ தசையிலும் ( தேறியும் தேறாமல் இருந்தும்) அவன் திறம் அல்லது அறியாளான ஸ்ரீ மகா லஷ்மியோடு விகல்பிக்கலாம் ஸ்வபாவையான இவள் என்றும் – (அத்திரு அவனைப் பற்றும் ஏக சேஷித்வம் -இத்திரு இருவரைப் பற்றும் -மிதுன சேஷித்வம் அத்திரு மார்பில் ஏறும் -இத்திரு திருவடி விடாமல் இருக்கும் )மண்ணோர் அன்ன ஒண்ணுதல் என்கிற ஒப்பு-அதாவது-உண்டும் உமிழ்ந்து கடாய மண்ணோர் அன்ன ஒண்ணுதல்—திருவிருத்தம் -49-என்று ஸ்ரீ பூமி பிராட்டியாரோடு ஒத்த வைலஷண்யத்தை உடையவள் என்றும் ,-பின்னை கொல் என்கிற ஒப்பு–அதாவது-பின்னை கொல் நில மா மகள் கொல் திரு மகள்கொல் —திருவாய் -6-5-10-என்று-ஸ்ரீ நப்பின்னை பிராட்டியோ ? ஸ்ரீ பூமி பிராட்டியோ ?ஸ்ரீ பெரிய பிராட்டியாரோ ?-என்று சொல்லும்படி இவர்க்கு உண்டான சாம்யம் –

(இத்திரு மண்ணேரன்ன பின்னைகொல்‌ என்கிற் ஒப்பு) “’தேறியும்‌ தேறாதும்‌ மாயோன் திறத்தனளே இத்திருவே”’ (திருவா. 4 – 4 – 7), “மண்ணேரன்ன ஒண்ணுதலே ”’ (திருவிரு. 50), பின்னை கொல்‌ நில மா மகள் கொல்‌’‘ (திருவா. 6 – 5 – 10) என்று தேறின தஸையோடு தேறாத தஸையோடு வாசியற ““அநத்யா ராக, வேணாஹம்‌”” (ரா. ஸு. 21 – 16) என்கிறபடியே அவனை யல்லது அறியாள்‌ இத்திரு என்றும்‌, ஸ்ரீபூ,மிப்பிராட்டி யாரோடொத்த வைலக்ஷ்ண்யத்தை உடையாள்‌ என்றும்‌, ‘நப்பின்னைப் பிராட்டியாரோ? ஸ்ரீபூமிப்பிராட்டியாரோ? பெரிய பிராட்டியாரோ?’ என்று விகல்பிக்கலாம்படி இவர்க்குண்டான ஸாம்யம்‌-

ஏறிய பித்தினோடு ‘எல்லா உலகும் கண்ணன் படைப்பு’ என்னும்’
நீறு செவ்வே இடக் காணில், நெடுமால் அடியார்’ என்று ஓடும்;
நாறு துழாய்மலர் காணில்,‘நாரணன் கண்ணி ஈது’ என்னும்;
தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே இத் திருவே.–4-4-7-–நீறு செவ்வே -என்ற இடம் -தேறாமை-நாரணன் கண்ணி ஈது என்ற இடம் -தேற்றம் – கோவை வாயாள் திருவாய்மொழி -தேற்றம் -இத்திருவாய்மொழி -தேறாமை-மாயோன் திறத்தனளே-ஞானம் அப்ரயோஜனமாம் படி ஆச்சர்யமான பிரணயித்வத்தை உடையவன் திறத்தனள்-இத் திருவே-இத்திரு என்றும் அத்திரு என்றும் விகல்பிக்கலாம் படி இருக்கிறது-அநபாய நிகளாய் இருக்கிற ஆகாரம் இருவருக்கும் ஒக்கும்
அவளுக்கு அவனே உத்தேச்யன் இருவரும் உத்தேச்யரான ஏற்றம் உண்டே இவளுக்கு

பின்னை கொல்?நிலமாமகள்கொல்? திருமகள்கொல்? பிறந்திட்டாள்
என்ன மாயங்கொலோ?
இவள்நெடு மால்என்றே நின்று கூவுமால்
முன்னி வந்தவன் நின்றிருந் துறையும் தொலை வில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும் அவ்வூர்த் திருநாமம் கேட்பது சிந்தையே.–6-5-10—நப்பின்னை பிராட்டி பிறந்திட்டாளோ -அங்கனம் இன்றிக்கே ஸ்ரீ பூமி பிராட்டி பிறந்திட்டாளோ -எல்லாருக்கும் இவ் வேற்றங்களைக் கொடுக்கும் பிராட்டி தான் பிறந்திட்டாளோ -என்பார்கள் பூர்வர்கள் –
சர்வேஸ்வரனுக்கு சம்பத்தாய் இருக்கிறவள் பிறந்தாளோ-அதுக்கு விளை பூமியாய் இருக்கிறவள் பிறந்தாளோ -அவ் விளை பூமியினுடைய பல ஸ்வரூபமாய் இருக்கிறவள் பிறந்தாளோ –
அங்கனம் இன்றியே அவர்களுக்கும் இவள் படி இல்லாமையால் அவர்களோடு ஒப்பு அன்று -லோகம் எல்லாம் வாழ்க்கைக்கு இவள் ஒருத்தி பிறந்தாள் என்றுமாம் –விஷ்ணு நா சத்ருஸோ வீரயே -என்றால் போலே நாய்ச்சிமார் பக்கலிலும் ஒரு வகைக்கு ஒப்பு சொல்லலாம் படி இருக்கையாலே கதிர் பொறுக்குகிறாள் -உபமான ம சேஷானாம் ஸாதூ நாம் யஸ் சதாபவத் -என்கிறபடியே எல்லாருக்கும் இவரை ஒப்பாகச் சொல்லலாம் –இவருக்கு ஒப்பாவார் ஒருவரும் இல்லை

பண்டும் பல பல வீங்கிருள் காண்டும் இப்பாயிருள் போல்
கண்டும் அறிவதும் கேட்பதும் யாமிலம் காள வண்ண
வண்டுந்துழாய் பெருமான் மதுசூதனன் தாமோதரன்
உண்டும் உமிழ்ந்தும் கடாய  மண்ணேர் அன்ன  ஒண்ணுதலே -49–பிரளய ஆபத்தில் திரு வயிற்றிலே வைத்தும்-அநந்தரத்திலே உமிழ்ந்தும்-ரக்ஷிக்கப் பட்டுப் போந்த பூமியினுடைய அழகுக்கு ஸத்ருசமான ஒள்ளிய நுதலை யுடையவளே-மண்ணேர் அன்ன-நேர் அழகு-அன்ன -நிகரானகடாய -என்று-நடத்துதலாய் நிர்வஹிக்கை-அதாவது ரஷிக்கை–அன்றியே-கடாய் என்று கடத்தலாய் அளக்கையைச் சொல்லுகிறது ஆகவுமாம்

தென்பால் நெடுமாடம் கடும் சிலை அம்பெரி யூட்டி நீறு எழ வெரித்த பெரும் தோற்றத்து
ஆர் உயர் காகுத்தன்-என்னுமவற்றிலே தோன்றும் –1-தென்பால் –
-அதாவது-தென் பால் இலங்கை வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே–திருவிருத்தம்-77- -என்று சக்கரவர்த்தித் திரு மகனைப் பிரிந்து பாதக பதார்தங்களாலே நோவு படுவது-
2-நெடு மாடம் – அதாவது-வாழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ இலங்கை
குழா நெடு மாட மிடித்த பிரானார் கொடுமைகளே
–திருவிருத்தம் -36-–என்று பிரணயித்வம் இல்லையானால் சாமான்ய கிருபையும் இல்லையோ ? என்று கொடுமை சொல்லுவது —
(வாடை இரவு நான் நான் என்று போட்டி போட்டி கொண்டு நையப்பண்ண இந்த வார்த்தை )
3-கடும் சிலை –-அதாவது – காயும் கடும் சிலை என் காகுத்தன் வாரானால் ?—திருவாய் -5-4-3-என்று
எதிரிகள் தான் கண் பார்க்கிலும் , கண் பாராத வில்லை உடைய காகுத்தன் -இத் தசையில் வருகிலன் என்று வெறுப்பது —இராத்திரி வசனம் -காகுத்தன் -சத்யவாதி வம்சத்தில் பிறந்தும் வரவில்லையே என்று வெறுப்பது )
4-அம்பெரி-அதாவது –-இலங்கை நகர் அம்பெரி உய்த்தவர் தாளினை மேல் அணி வம்பவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள் நம்பும் –திருவாய் -4-2-8 –என்று இலங்கையை சர அக்நியால் தக்தம் ஆக்கினவர் திரு அடிகளில் திரு துழாயை ஆசைப் படுவது –
5-ஊட்டி-அதாவது-தீ முற்ற தென் இலங்கை ஊட்டினான் தாள் நயந்த யாம் உற்றது உற்றாயோ ?-திருவாய் -2-1-3-என்று இலங்கைக்கு எல்லாம் அக்நிக்கு விருந்து இட்டவன் திரு அடிகளை ஆசைப் பட்ட
நான் பட்டது பட்டாயோ என்று சம துக்கிகளைக் கட்டிக் கொண்டு அழுவது ,
6-நீறு எழ-அதாவது-மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழ செற்று உகந்த ஏறு சேவகனார்க்கு என்னையும் உளன் என்மின்களே-6-1-10-என்று எதிரில்லாத போரை உடைய ராவணன் தனக்கு அரணாக இட்ட மதிளைத் துகளாக்கி பொகட்ட பிரசித்தமான சேவகத்தை உடையவருக்கு-ரஷ்ய வர்க்கத்தில் நானும் ஒருத்தி உண்டு என்று சொல்லுங்கோள் என்று தூது விடுவது –
(கௌசல்யா லோக பார்த்தா -என்ற பிராட்டி வார்த்தை லோகத்தில் நானும் ஓன்று அன்றோ
அங்கு திருவடி -இங்கு மிதுன பறவைகள் -சேர்த்தி இன்பமும் கலவி வியசனமும் அறியும் )7-எரித்த-
அதாவது –கிளர் அரக்கன் நகர் எரித்த களி மலர் துழாய் அலங்கல் கமழ் முடியன் கவராத அறிவினால் குறைவிலம்-4-8-5-என்று –(மதுரா மதுரா லாபம்-வால்மீகி -கிளி மொழியாள் இங்கு )ஐஸ்வர் யோத்தகனான ராவணனுடைய நகரத்தை தக்தமாக்கி முடி சூடி வளையம் வைத்து இருக்கிறவன்
விரும்பாத அறிவினால் என்ன கார்யம் உண்டு என்று அவனுக்கு உறுப்பு இல்லாதவற்றை உபேஷிப்பது–
8-பெரும் தோற்றத்து-அதாவது –காண் பெரும் தோற்றத்து என் காகுத்த நம்பிக்கு என் பூண் புனை மென் முலை தோற்றது பொற்பே -6-6-9-–என்று கண்ணுக்கு இனியதாய் அபரித்சேத்ய போக்யமான சந்நிவேசத்தையும் குண பூர்த்தியையும் உடைய சக்கரவர்த்தி திரு மகனுக்கு இவள் தன் அழகை இழந்தாள் என்னும்படி அவனை ஆசைப் பட்டு அழகு அழிவது —
9-ஆர் உயிர் காகுத்தன்-அதாவது – என் ஆர் உயிர் காகுத்தன் நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன் நின் பசும் சாம நிறத்தன் கூட்டுண்டு நீங்கினான் சிறு கிளி பைதலே இன் குரல் நீ மிழற்றேல் -9-5-6–என்று விஸ்லேஷத்தில் தரிக்க ஒண்ணாதபடி எனக்கு பிராண பூதனான சக்கரவர்த்தி திருமகன் என்னோடு கலந்து வைத்து பிரிந்தான் –-இத் தசையில் அவனுக்கு போலியான உன் வடிவாலே நலிகிறதுக்கு மேல் பேச்சாலும் ( உருவத்தால் நலிவதற்கும் மேலே ) நலியாதே கொள் என்று கிளியைப் பார்த்து நிஷேதிப்பதாய் கொண்டு பேசின 9-பாசுரங்களிலும் –

(தென்பால்‌ இத்யாதி, ) “தென்பால்‌”’ (திருவிரு. 77), “இலங்கைக்குழா நெடுமாடம்‌ இடித்தபிரானார்‌ கொடுமைகளே”‘ (திருவிரு. 36), ““காயுங்கடுஞ்சிலை என்‌ காகுத்தன்‌ வாரானால்‌”‘ (திருவா. 5 – 4- 3), “இலங்கைநகர்‌ அம்பெரி உய்த்தவர்‌” இத்யாதி, (திருவா. 4-2- 8), ‘தீழுற்றத் தென்னிலங்கை ஊட்டினான்‌ தாள்‌ நயந்த யாமுற்றதுற்றுயோ? (திருவா. 2 – 1 – 3), “மாறில்‌ போரரக்கன்‌’” இத்யாதி, (திருவா. 6 – 1 – 10) ”கினிமொழியாள் காரணமா?’ இத்யாதி, (திருவா. 4 – 8 – 5), ““என்னாருயிர்க் காகுத்தன்‌” இத்யாதி, (திருவா. 9 – 5 – 6) என்று சக்ரவர்த்தித் திருமகனான அவ் வவதாரத்தையும்‌, அவ் வவதாரத்‌திலுண்டான அபதாநங்களையும்‌ அநுபவிக்கவேணும்‌ என்று ஆசைப்பட்டுப்‌ பேசின இப்பாசுரங்களிலும்‌

திங்களம் பிள்ளை புலம்பத் தன் செங்கோலரசு பட்ட
செங்களம் பற்றி நின்று எள்கு    புன்மாலை தென் பாலிலங்கை
வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா
நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே
 –  -77—ஆர்யர்கள் இழந்த மிலேச்ச பூமியான தெற்குத் திக்கில் அறிவுடையார் நடை யாடாத இலங்கையை வெவ்விய களமாம் படி பண்ணி ராவண வத அனந்தரமாக –பவான் நாராயணோ தேவ -என்று ப்ரஹ்மாதிகள் ஸ்துதிக்கும் படி நின்ற உபகாரகர் ஆனவர் –துழாய் துணையா –அவர் தோளில் மாலையைப் பெற வேணும்-என்ற ஆசைப்பட்ட இதுவே பரிகரமாகக் கொண்டு –நங்களை இத்யாதி –தன் இழவுக்கு கூப்பிடுகை அன்றிக்கே – நம்மை நலிகைக்கு கூப்பிடுகிறதாய் இருந்தது இறே –நங்களை மாமை கொள்வான் – நிறம் கொள்வாருக்கு நிறம் தான் வேண்டாவோ – தன் இழவுக்கு கூப்பீடும் கிடக்கச் செய்தே  – பண்டே குறை பட்டு நொந்து இருக்கிற நம்மை நலிகைக்கு பாரிக்கிற பாரிப்பாய் இருந்ததீ –

துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தாரது பெயரா
எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும் ஈங்கு இவளோ
வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ இலங்கைக்
குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே
 –36–ஹேய ப்ரத்ய நீகரான தமக்கு தம்மை உகந்தாருடைய ஹேயத்தையும் போக்கிக் கொண்டு அருள வேண்டாவோ-பிரணயித்வம் வேண்டாவாகில் ஸ்வரூபமும் வேண்டாவோ –(ரக்ஷணம் கிருபை தானே ஸ்வரூபம் )ஆபத்து நிமித்தமாக ரக்ஷித்தான் ஆகில் -பிரளய ஆபத்தில் இங்கு உண்டான சாதன சம்பத்தி -ஆழ்வாருடைய ஆற்றாமை -பொய்யானதோ-கிருபை கருணையும் சாதன சம்பத்தி -இங்கு இல்லாமல் போனதோ–ஆபத்து நிமித்தமாக தாம் இரங்காது ஒழிகைக்கு பரதந்த்ரரோ–எங்களுக்குப் புறப்படில் குற்றம் – தங்களுக்கு புறப்படாது ஒழியில் குற்றம் –வரில் எங்கள் சேஷத்வம் அழியும்-வராது ஒழியில் தம்முடைய சேஷித்வம் அழியும் –

நீயும் பாங்கல்லை காண் நெஞ்சமே! நீளிரவும்
ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்
காயும் கடும் சிலை என் காகுத்தன் வாரானால்
மாயும் வகை அறியேன் வல் வினையேன் பெண் பிறந்தே.–5
-4-3—பிரதி பக்ஷத்தை தக்தமாக்குவதாய் -பெருமாள் கண் பார்க்கிலும் கண் பாராத சிலை –அவஷ்டப்ய மஹத்தநு-வில்லை அணைக்கவே பணி போரும்படி இ றே இருப்பது –என் காகுத்தன் வாரானால்-பிராட்டிக்கு உதவியது தனக்கு உதவிற்று என்று இருக்கிறாள் -ஒரு நாள் ஓர் ஆபத்தில் உதவினார்க்கு பின்பு உதவல் ஆகாதோ -தயரதற்கு மகன் தன்னை யன்றி மற்றிலேன் தஞ்சமாகவே என்னக் கடவது இறே-கீழே கண்ணனும் வாரானால் -என்றாள்-அபி ஷிக்த ஷத்ரிய புத்ரன் அல்லேன்-என்ற அவன் வரத் தவிர்ந்தாலும்-முடி சூடி நோக்கிப் போந்த குடியிலே பிறந்ததற்கு வர வேண்டாவோ-சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற மனத்துக்கு இனியானை -என்றார்கள் இறே -பெண்கள் இருந்த இடத்தே சென்று விரோதியைப் போக்கினவன் வருகிறிலன் –அபியாதா ப்ரஹர்த்தாச-என்ன கடவது இறே –

கொம்பு போல் சீதை பொருட்டு, இலங்கை நகர்
அம்பு எரி உய்த்தவர் தாள் இணை மேல் அணி
வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள்
நம்புமால்;
நான் இதற்கு என்செய்கேன் நங்கைமீர்?–4-2-8—சந்த்ர ஆதித்யர்களும் புகப் பயப்படுமூர்
சர அக்னியை புக பிறப்பித்தவர் -கேவல அக்னி சோற்றை வேவிக்குமது ஒழிய பிரவேசிக்க கூசுமூர்
கையாலே சர அக்னியை பிரவேசிப்பித்தான்-யதா ராகவா நிர்முக்த சர -என்று திருவடி புகிலும் சரஸ்த நீயானாக இறே புகுந்தது-வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள்-நம்புமால்;-பரிமளத்தை உடைத்தாய் இருக்கும் என்னுதல் -நித்ய அபூர்வமாய் இருக்கும் என்னுதல் –-பண்டு ஒருத்திக்கு உதவினவன் எனக்கு உதவானோ என்று ஆசைப்படா நின்றாள்-அசாதாரண விக்ரஹத்தை இதர சஜாதீயம் ஆக்கினால் போலே ஏதேனும் ஒரு புஷபத்தை சாத்தினாலும் திருத் துழாய் இதர சஜாதீயமாக ஆயிற்றாகக் கடவது-நான் இதற்கு என்செய்கேன்-கிருஷ்ணனைப் போலே சாதாரணன் அன்றிக்கே ஏக தாரா வ்ரதன் திருவடிகளில் திருத் துழாயை எங்கே தேடுவேன்-அவளும் அவனுமான சேர்த்தியிலே ஆசைப்பட்டாள் என்று அறிகிறிலள்-

காமுற்ற கையறவோடு எல்லே யிராப்பகல்
நீ முற்றக் கண் துயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்
தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான் தாள் நயந்த
யாமுற்ற துற்றாயோ
வாழி கனை கடலே –2-1-3—தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான்-
அக்னி வயிறு நிறைய ஊட்டினான் -என்னுதல்-இலங்கையை முற்ற தீ யூட்டினான் என்னுதல் –
ஒருத்தியைப் பெறுகைக்கு மார்விலே அம்பு ஏற்றவன் அவளுடைய அந்தப்புர பரிகரத்துக்கு உதவானோ -என்று நீயும் ஆசைப் பட்டாயோ-தாள் நயந்த-யாமுற்ற துற்றாயோ –-அவன் திருவடிகளை ஆசைப்பட்டு நான் பட்டது பட்டாயோ-தாள் நயந்தாரோடு தோள் நயந்தாரோடு வாசி இல்லை
அவனுடைய பிரணயித்தவ குணத்திலேயோ நீயும் அகப்பட்டது

வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்!
தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திருவண்வண்டூர்
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே
.–6-1-10-எதிர் இல்லாத போரை ராவணனையும் அவன் அரணாக இட்ட மதிலையும் துகளாகச் செற்று – ருஷிகள் குடியிறுப்பு பெற்றோம் -பிராட்டி உடன் கூடப் பெற்றோம் இலங்கை விபீஷண விஷயமாகப் பெற்றோம் என்று உகந்த-ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே.-எங்கும் மேற்பட்ட ஆண் பிள்ளை தனத்தை யுடையவர்க்கு -ரஞ்ச நீ யஸ்ய விக்ரமை -என்று எதிரிகள் மேலிட்ட வீரம் –ரதசர்யா ஸூ சம்மத -என்று வீரர்கள் கொண்டாடின வீரம் –உம்முடைய ரஷ்ய வர்க்கத்தில் இன்னும் ஒருத்தி நோவுபடா நின்றாள் என்னுங்கோள் –

தளிர் நிறத்தால் குறையில்லாத் தனிச்சிறையில் விளப்புற்ற
கிளி மொழியாள் காரணமாக் கிளர் அரக்கன் நகர் எரித்த
களி மலர்த் துழாய் அலங்கல் கமழ் முடியன் கடல் ஞாலத்து
அளி மிக்கான்
கவராத அறிவினால் குறையிலமே.–4-8-5—தாயையும் தமப்பனையும் சேர இருக்க ஒட்டாதே பிரித்த மிகையை யுடையவன்-நகர் எரித்த ராவணனுடைய சம்ருத்தமான நகரத்தை தக்தமாக்கினவன்-களி மலர்த் துழாய் அலங்கல் கமழ் முடியன் கடல் ஞாலத்து-ராவண வத அநந்தரம் மீண்டு எழுந்து அருளி -முடி சூடி வைத்த வளையமும் தாமுமாய் இருந்த படி-தேனை யுடைத்தாய் மலர்ந்து இருந்துள்ள திருத் துழாய் மாலையால் கமழா நின்றுள்ள திரு முடியை உடையவன்-களி -தேன் -அலங்கல் -மாலை-அவள் இதர சஜாதீயனாய் வந்து அவதரித்தால் அது திருத் துழாயும் அங்குத்தைக்கு அனுரூபமான புஷபங்களாகக் கடவது-அவன் கரு முகை மாலை சூடினும் அத்தையே சொல்லாக கடவது-பாண்டியன் ஏதேனும் ஒன்றைச் சூடிலும் வேப்பம்பூ என்ன கடவது இறே-கடல் ஞாலத்து அளி மிக்கான்--சம்சாரிகள் பக்கலிலே தண்ணளி மிக்கவன்-தேவர்கள் பிராட்டியை பிரிப்பது இளைய பெருமாளை பிரிப்பதாய் எழுந்து அருளிவிக்கும் படி இறே-சம்சாரிகள் நோவைக் கண்டு தண்ணளியால் எழுந்து அருளி இருக்கும்-

மாண்பமை கோலத்து எம் மாயக் குறளற்கு
சேண்சுடர்க் குன்றன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு
காண்பெருந் தோற்றத்து எம் காகுத்த நம்பிக்குஎன்
பூண்புனை மென்முலை தோற்றது பொற்பே.–6-6-9-
–கண்ணுக்கு இனியதாய் அபரிச்சேத்யமான போக்யமான சந்நிதியை யுடையவன் என்னுதல் –ஜென்ம ராமஸ்ய ஸூ மஹத் -என்கிற அவதாரம் ஆதல் -குண பூரணமான சக்கரவர்த்தி திருமகனுக்கு –என் பூண்புனை மென்முலை தோற்றது பொற்பே.–பூண் என்று ஆபரணமாய் அத்தாலே அலங்க்ருதமாய் விரஹ சஹம் அல்லாத முலையை யுடையவள் -பொற்பு என்று அழகு –-பூம் புணை மென் முலை என்கையாலே ஒப்பனையால் வந்த அழகை இழந்தாள் -அவனைத் தோற்பிக்கும் முலையை உடையவள் கிடீர் தோற்றாள்-

நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளிப் பைதலே
இன் குரல் நீ மிழற்றேல்
என் ஆர் உயிர்க் காகுத்தன்
நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன்
நின் பசுஞ்சாம நிறத்தன் கூட்டு உண்டு நீங்கினான்–9-5-6–இன் குரல்–கூரிய வேல் -என்னுமா போலே –
நீ மிழற்றேல் -நிரம்பா மென் சொல்லாலே என்னை முடியாதே கொள் -மாத்ரு வதத்திலேயும் ப்ரவர்த்திப்பார் உண்டோ –என் ஆர் உயிர்க் காகுத்தன்-வ்யதிரேகத்தில் தரிக்க அரிதாம் படி இறே கிட்டின போது பரிமாறின படி -தயரதற்கு மகன் தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாக -என்று இறே இவர் இருப்பது –-உன்னுடைய சிவந்த வாய் போலே இருக்கும் வாயை யுடையவன் -உபமானத்தைச் சொல்லி சேர்த்து விடுமது ஒழிய உபமேயம் தன்னை பேச முடியாது-உன்னைப் போலே சிவந்த கண்ணையும் கையையும் திருவடிகளையும் உடையவனே –உன்னுடைய குளிர்ந்த ஸ்யாமமான நிறத்தை யுடையவன்-

ஆதி அம் காலம் மண் புரை பொன் மாதின் துகளாடி-என்னுமவற்றிலே தோன்றும்–
அதாவது-1-ஆதி அம் காலத்து-அதாவது –-ஆதி அம் காலத்து அகல் இடம் கீண்டவர் பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே ஒதுமால் எய்தினாள்-4-2-6-–என்னும்படி வராஹ கல்பாதியில் மகா பிருதிவியை அண்ட பித்தியில் நின்று ஒட்டு விடுவித்து எடுத்தவனுடைய திரு அடிகளில் திருத் துழாய் என்றே பலகாலம் ஓதும் படி பிச்சேறுவது–
2-மண் புரை-அதாவது –மண் புரை வையம் இடந்த வராகற்க்கு –என் கண் புனை கோதை இழந்தது கற்பே –6-6-5–என்னும்படி அவனை ஆசைப் பட்டு அறிவு இழப்பது —
3-பொன் மாதின்-அதாவது –ஞாலப் பொன் மாதின் மணாளன் துழாய் நங்கள் சூழ் குழற்கே
ஏலப் புனைந்து என்னைமார் எம்மை நோக்குவது என்று கொல்
-திரு விருத்தம் –40– என்று
ஸ்ரீ பூமிப் பிராட்டி செவ்வி கொள்ள விட்டு பிறந்தவன் சூடின திருத் துழாயை பந்துக்கள் ஆனவர்கள் ஏற்கவே கொண்டு வந்து நம் குழலிலே சூட்டி நம்மை ரஷிப்பது என்றோ என்பது —
4-துகளாடி-அதாவது –-ஏனம் ஒன்றாய் மண் துகளாடி வைகுந்தம் அந்நாள் (அன்ன அவள்) குழல் வாய்
விரைபோல் விண்டு கள்வாரும் மலர் உளவோ நும் வியலிடத்தே
—திருவிருத்தம் -55-என்று
(நீர் பூ -அம்பஸ்யா பாரே பரத்வம் -நிலப்பூ புவனஸ்ய மத்யே -வ்யூஹம் மரத்தில் ஒண் பூ நாகஸ்ய ப்ருஷ்டே– மஹதோ மஹீயான் -நலம் பாராட்டு துறை -ஆழ்வாரை போலே எங்குமே இல்லையே ஸ்வா பதேசம் ) அத்வதீய வராஹமாய் -பிரளயங்கதையான பூமியை எடுத்த போது , வடிவில் பெருமையால் –
திரு வயிற்றில் கிடக்கிற பூமி ஒரு துகள் மாத்ரம் என்னும்படி – நின்றவனுடைய அபதானத்தை
அனுபவித்து இருக்கிற இவள் போக்யதை உபய விபூதியிலும் உண்டோ என்று விசேஷஜ்ஞர் ஸ்லாக்கிக்கும் படியைப் பிரகாசிப்பதாய்க் கொண்டு பேசின 4-பாசுரங்களிலும் –

(ஆதியங்காலம்‌ இத்யாதி,) ““ஆதியங் காலத்தகவிடங் கீண்டவர்‌”” (திருவா. 4 – 2 – 6), “மண்புரை” இத்யாதி, (திருவா. 6 – 6 – 5), “மண்ணளந்த – செவ்வாய்‌ ”” இத்யாதி, (5 4 – 4), ““ஞாலப் பொன் மாதின்‌ மணாளன்‌” இத்யாதி, (திருவிரு. 50), “ஏனமொன்றாய்‌ மண்துகளாடி”’ இத்யாதி, (திருவிரு. 55) என்று ஸ்ரீவராஹ ப்ராதுர் பாவத்தையும்‌ அதில்‌ அபதாநங்களையும்‌ அநுபவிக்க ஆசைப்பட்டுப் பேசின இவர் பாசுரங்களிலேயும்‌.-

மாதர் மா மண் மடந்தை பொருட்டு ஏனமாய்,
ஆதி அம் காலத்து அகலிடம் கீண்டவர்
பாதங்கள் மேல் அணி பைம்பொன் துழாய் என்றே
ஓதும்மால்
எய்தினள் என்றன் மடந்தையே.–4-2-6—வராஹ கல்பாதியாய் அவதாரகாலம் ஆகையாலே ஸ்லாக்யமான காலத்திலே மஹா பிருத்வியை அண்ட பித்தியினின்றும் ஒட்டு விடுவித்து அருளினவருடைய திருவடிகளில்-ரோமாந்தரஸ் த்தா முனயஸ் ஸ் துவந்தி -என்று சனகாதிகள் இட்ட திருத் துழாயை யாயிற்று இவள் ஆசைப்படுகிறது-ஓதும்மால் எய்தினள்-எப்போதும் இத்தையே சொல்லும்படியான பிரேமத்தை -பிரமத்தை -உடையவள் ஆனாள்-

பண்புடை வேதம் பயந்த பரனுக்கு
மண்புரை வையம் இடந்த வராகற்கு
தெண்புனற் பள்ளிஎம் தேவபி ரானுக்குஎன்
கண்புனை கோதை இழந்தது கற்பே.
–6-6-5—பிறருடைய ஸ்வரூப சித்யர்த்தமாக -தன்னை அழிய மாறுபவன் –மானமிலா பன்றியாம் தேசு -என்ன கடவது இறே -மண் மிகுதி சொல்லிற்று எடுக்கையில் அருமை தோற்றுகைக்காக–இழந்தது கற்பே-சர்வருக்கும் ஞான பிரதனான தனக்கும் கூட அறிவு கொடுக்குமவள் அறிவைக் கிடீர் இழந்தது -கற்பு கல்வி -அதாவது -ஞானம் –

கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய குழாம் விரிந்த
நீல கங்குல் களிறு எல்லாம்  நிறைந்தன நேரிழையீர்
ஞால பொன் மாதின் மணாளன் துழாய் நாங்கள் குழல் சூழற்க்கே
ஏலப் புனைந்து என்னைமார் எம்மை நோக்குவது என்று கொலோ
 -40–அவன் தனி இருந்தது அன்று கிடீர் நான் இந்நோவு படுகிறது –ஸ்லாக்கியமான ஸ்ரீ பூமிப் பிராட்டியும் தானும் கூட இருக்கிற இருப்பிலே –-நிதி உடையார்-எல்லா விநியோகமும் கொள்ளுகிறோம் என்று அஞ்சாது இருக்குமா போலே-இவளுக்கும்-இவள் உண்டு என்று சொல்லி அஞ்சாது இருக்கலாய் இறே இருப்பது –கோலத் திருமா மளோடு கூடி சாலப் பலகால் உயிர்கள் உகந்து காப்பவன் அன்றோ-அவளும் நின் ஆகத்தின் இருப்பதும் அறிந்தும் ஆகிலும் ஆசை விடாதவள் அன்றோ–மாதின் மணாளன் –இவளுடைய போக்யதையாலே பிச்சேறி இறே இருப்பது –இவள் பக்கலில் இவனுக்கு உண்டான வியாமோகம் இத்தனையும் தனக்கு உறுப்பு என்று இருக்கிறாள் (அல்லி மலர் மகள் போக மயக்குகள் -அம்மான் )துழாய் இத்யாதி – அவனுடைய பிரமச்சரியத்தே சூடின மாலை அன்றிக்கே – அவனும் அவளுமாக துகைத்த மாலையை ஆசை படுகிறாள் –ராஜ குமரன் புழுகு  நெய்யிலே பூவை தோய்த்து சூடுமா போலே- இவன் தான் –சர்வ கந்த சர்வ ரச தத்வம் இறே –வாசம் செய் பூம் குழலாள் -திருவாய்மொழி -10-10-2-என்று அங்குத்தைக்கும் வாசம் கொடுக்கும் படி இறே இவள் இருப்பது – அப்படி பட்ட மிதுனமாய் இருக்கும் இருப்பிலே சூடி துகைத்தைதை இறே இவள் ஆசைப் படுகிறது-

வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித் துழல் வீர்க்கு ஓன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய்
மண்டுகளாடி வைகுந்த மன்னாள் குழல்வாய் விரை போல்
விண்டுகள் வாரும் மலருளவோ நும்வியலிடத்தே
–55—அத்விதீயமான மகா வராஹமாய் –இப் பூமியை தன் திருவடிகளால் துகைத்து – அது தன்னை அடைய-தன் திரு மேனியிலே செருக்காலே எங்கும் ஏறிட்டு கொண்டவன் –வைகுந்த மன்னாள் –-வைகுந்தம் அன்னாள் –காதா சித்தமாக அவன் வந்து ரஷித்து போம் இவ் விபூதி போல் அன்றியிலே –அவன் சதா சன்னதி பண்ணுகிற அவ்விபூதியோடு ஒத்து -உள்ளவள் இறே இவள் – தன் சன்னதியிலே வேறு ஒன்றின் உடைய போக்யதை நெஞ்சில் படாதபடி இருக்கும் அவன்–அம்பஸ்ய பாரே-புவனஸ்ய மத்யே -நாகஸ்ய ப்ருஷ்டே மஹதோ மஹீயான் அணுவில் அணுவாய் –(நாராயண உபநிஷத் ) என்னக் கடவது இறே –-அம்பஸ்ய -வியூகம்–புவனஸ்ய -விபவம் -அர்ச்சை–நாகஸ்ய -பரம்–மஹதோ மஹீயான் அணுவில் அணுவாய் –அந்தர்யாமி-இவையே இங்கு மூன்று வித மலர்கள் என்று உரைக்கப்பட்டன –பாட்டுக் கேட்க்கும் இடம்-கூப்பீடு கேட்க்கும் இடம் -வளைத்த இடம் -குதித்த இடம் –எல்லாம் வகுத்த இடமே-

எருது ஏழ் தழீ இச் சறையினார் என்னுமவற்றிலே தோன்றும்-அதாவது – 1-எருது எழ தழீ இ
அதாவது –எருது எழ தழீ இக்கொளியார் கோவலனார் குடக் கூத்தனார் தாளிணை மேல் அணி தண் அம் துழாய் என்றே நாளு நாள் நைகின்றது-4-2-5–என்னும்படி ஏறு தழுவுகை முதலான அபதானங்களை உடைய ஸ்ரீ கிருஷ்ணன் திரு அடிகளில் திருத் துழாயை ஆசைப் பட்டு நாள் தோறும் சைல்யத்தை அடைவது –
2-சறையினார்- அதாவது –கறையினார் துவர் உடுக்கை கடையாவின் கழி கோல் கை சறையினார்
கவராத தளிர் நிறத்தால் குறைவிலம்
-4-8-4–என்று கோப வேஷ தரனாய் ரஷ்ய வர்க்கத்தின் உடைய ரஷணத்துக்கு தன் உடம்பு பேணாமல் திரியும் ஸ்ரீ கிருஷ்ணன் விரும்பாத ஸ்நிக்தமான நிறம் எனக்கு வேண்டாம் என்பதாய் பேசின-2- பாசுரங்களிலும் தோன்றும் என்றபடி ..

எருதேழ்தழீஇச்சறையினார்‌ இத்யாதி,) ““எருதேழ்தழீஇ” (திருவா. 4 – 2 – 5) என்று தொடங்கி *‘நாளு நாள்‌ நைகின்றதால்‌”” என்றும்‌, ‘“நிறைவினால்‌ குறைவில்லா” (திருவா, 4 – 8 – 4) என்று தொடங்கி *’சறையினார்‌ கவராத தளிர் நிறத்தால்‌ குறைவிலமே”” என்று நப்பின்னைப் பிராட்டியார்‌ ஆசைப்பட்ட க்ருஷ்ணாவதாரத்தையும்‌, அதில்‌ அபதாநங்களையும்‌ அநுபவிக்க ஆசைப்பட்டுப்‌ பேசின இப் பாசுரங்களிலேயும்‌ ப்ரகாஸிக்குமென்கிறார்-

தோளி சேர் பின்னை பொருட்டு எருது ஏழ்தழீஇக்
கோளியார், கோவலனார்,குடக் கூத்தனார்
தாள் இணை மேல் அணி தண் அம்துழாய் என்றே
நாளும் நாள் நைகின்றதால்
என்றன் மாதரே.–4-2-5—எருதுகள் ஏழையும் தழுவிக் கொள்ளுமவர் -அவளை பெறுகைக்கு ஹேது வாகையாலே போக ரூபமாய் இருந்தபடி –-கோவலனார்,குடக் கூத்தனார்-தாள் இணை மேல் அணி தண் அம்துழாய் என்றே- அவனைப் பெறுகைக்கு ஈடான ஆபி ஜாத்யத்தையும் செருக்கையும் உடையவர் – வில்லை முறித்தாலும் இஷுவாகு வம்ஸயர்க்கு அல்லது பெண் கொடாத ஜனகனைப் போலே எருது ஏழு அடர்த்தாலும் இடைத் தனத்தில் புரை உண்டாகில் பெண் கொடார்கள் இறே-அவளுக்கு உதவின கிருஷ்ணன் திருவடிகளில் திருத்துழாயை யாயிற்று இவள் ஆசைப் பட்டது-நாளும் நாள் நைகின்றதால் –ஒரு நாள் நைகைக்கு ஆஸ்ரயம் பொறாத மார்த்வத்தை உடையவள் நாள் தோறும் நாள் தோறும் நையா நின்றாள்-ஆச்ரயத்தையும் கொடுத்து நையப் பண்ணும் விஷயம் இறே

நிறையினால் குறைவில்லா நெடும் பணைத் தோள் மடப்பின்னை
பொறையினால் முலை யணைவான் பொரு விடை ஏழு அடர்த்த உகந்த
கறையினார் துவர் உடுக்கைக் கடையாவின் கழி கோல் கை
சறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவிலமே –4-8-4-
–கறை மிக்கு துவரூட்டின -சிவந்த தோலாயிற்று -உடுக்கை -இடையர் காட்டிலே போனால் முன் கிழியாமைக்கு உடுக்கும் உடைத் தோலைச் சொல்லுகிறது –துவர் என்னைச் செய்தே-கறையினார் என்கிறது -காட்டில் பழங்களை அறுத்து இடுகையாலே கறை மிக்கு இருக்கை –கடையாவின் – கடியாவையும் -கறக்கும் மூங்கில் குழாயையும்-கழி கோல் கை-கழி கோல் ஆகிறது -வீசு கோல்-கடையாவையும் -வீசு கோலையும் கையிலே உடையவர்-காலத்தில் கறக்க ஒட்டாத பசுக்களை பாங்கான போது கறைக்கக்கு ஒரு கடை யாவையும் -அபவ்யமான பசுக்களை நியமிக்கைக்கு ஒரு வீசு கோலையும் கொண்டு திரிகை –
கழி கோல் -கன்றுகள் பசுக்களோடு போனால் முலை உண்ணாமைக்கு வாயிலே கட்டும் கொறுக் கோல் என்றுமாம்-சறையினார் -சறைகை மணி என்று ஒரு மணி -இடையர் அரையிலே சேர்த்துக் கட்டி பசுக்கள் த்வனி வழியே வருகைக்காக முன்னே ஓடுவார்கள் –அத்தை உடையவர் என்னுதல் –
சறை என்று தாழ்வாய்-தாழ்ந்த இடை ஜென்மத்தில் பிறந்தவர் என்னுதல்-சறாம்பி இருக்கையாய் உடம்பை பேணாது இருக்கை என்னுதல்-பசுக்களின் பின்னே திரிகையாலே தன்னைப் பேண அவசரம் இன்றிக்கே இருக்கை –ரஷ்ய வர்க்கத்தின் உடைய ரக்ஷணத்துக்காக தன்னைப் பேணாத வடிவை யாயிற்று இவள் ஆசைப் படுகிறது-அவன் விரும்பாத தளிர் நிறத்தால் என்ன பிரயோஜனம் உண்டு
கீழ் மணிமாமை என்ற இடம் -அழகிய நிறம் என்றது இங்கு தளிர் நிறம் என்றது -ஸ்நிக்தமான நிறத்தைச் சொல்லுகிறது –

இத்தால் திவ்ய மகிஷிகள் மூவரோடும் இவருக்கு உண்டான சாம்யம் ,
ஸ்ரீ ஜனக குல சுந்தரியான பிராட்டிக்கு அசாதாரணமான ஸ்ரீ ராமாவதார தத் அபாதானங்களிலும் ,
ஸ்ரீ பூமிப்பிராட்டிக்கே அசாதாரணமான ஸ்ரீ வராஹ நாயனார் அபாதானங்களிலும்
ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்கு அசாதாரணமான ஸ்ரீ கிருஷ்ண அவதார அபாதானங்களிலும் ,
( ஸ்ரீ ருக்மிணி ஸ்ரீ சத்யபாமை போல்வாரும் இவர்களும் உண்டே என்னில்- சரணாகதிக்கு ஸ்ரீ நப்பின்னை பிராட்டி உடன் தானே – உந்து குத்து முப்பத்து மூன்று பாசுரங்களில் கண்டோமே )
அந்த பிராட்டிமார் தங்களைப் போலே அதி மாத்ர பிரவணராய் அருளிச் செய்த அவ்வவ திவ்ய ஸூக்திகளிலே அபி வ்யக்தம் என்றது ஆயிற்று —

இப்படி பிரதான மகிஷிகளான இவர்களோடு உள்ள சாம்யமே அன்றிக்கே இவர்களை உபேஷித்தும் தங்களை உகக்கும் படி அவனுக்கு அபிமதைகளான திரு ஆய்ப்பாடியில் பெண்களுடையவும் –
அவர்களையும் தங்கள் பேச்சு அழகாலே அவன் மறக்கும் படி பண்ணும் ஸ்ரீ மதுரையில் பெண்களுடையவும் – நரக வத அநந்தரம் பரிஹிரகித்த ஸ்ரீ மத் த்வாரகையிலே பதினாறாயிரம் தேவிமாருடையவும் பாவங்கள் ( பக்தி தன்மைகள் ) இவர்க்கு உண்டு என்னும் இடமும் – இவர் தம் பேச்சில் தோன்றும் என்கிறார் —(கீழே மூவர்-பிரதான முடிக்கு உரியர் இதில் மூ இடங்களிலும் உள்ளோர் உடன் சாம்யம் )அவ்வளவே யன்றிக்கே, ப்ரதாந மஹிஷிகளான இவர்களையும்‌ உபேக்ஷித்து வந்து மேல் விழும்படியான வைலக்ஷண்யத்தை உடையரான திருவாய்ப்பாடியில்‌ பெண்களுடைய பாவமும்‌, அவர்களையும்‌ தங்கள்‌ பேச்சழகாலே மறப்பிக்கும் படியான ஸ்ரீமதுரையில் பெண்களுடைய பாவமும்‌, நரகவத,அநந்தரம்‌ பரிக்‌ரஹித்த “கோப ஸ்த்ரீ ஸஹஸ்ராணி” (வி. பு. 5 – 31 – 18) என்கிற ஸ்ரீமத்‌ த்‌வாரகையில்‌ பதினாறாயிரம்‌ தேவிமார்களுடைய பாவமும்‌ இவர்க்குண்டான ஆகாரம்‌ இவர் பேச்சிலே தோன்றும்‌ என்கிறார்‌-

இவர்கள் தேடி நிற்கப் பொய்கை முது மணல் முல்லைப் பந்தல் முற்றம் மச்சொடு மாளிகை அவ்வவ்விடம் புக்கு வாரிச் சிதைத்துப் பறித்துக் கிழித்துக் கோயின்மை குறும்பு செய்து அல்லல் விளைத்துக் கவரும் உகக்கு நல்லவர் முழிசி ஆவர் என்னும் தேன் மொழியாலே கோகுலத்தை மறப்பிக்கும் நகர ஸ்திரீகள் நரகனைத் தொலைத்துக் கவர்ந்த பதினாறு பல்லாயிரம் எண்ணிறந்தார்
பாவம் கடல் ஞாலம் மின்னிடை மல்லிகை வேய்மரு பேய் முலை முனிந்து மற்பொரு விறல் கஞ்சனை
மங்க நூற்ற வாயும் தீர்ப்பார் என்னுமவற்றிலே தோன்றும்-சூரணை-124-

(இவர்கள் தேடி நிற்கப் பொய்கை முது மணல் முல்லைப் பந்தல் முற்றம் மச்சொடு மாளிகை அவ்வவ்விடம் புக்கு வாரிச் சிதைத்துப் பறித்துக் கிழித்துக் கோயின்மை குறும்பு செய்து அல்லல் விளைத்துக் கவரும் உகக்கு நல்லவர் பாவம் கடல் ஞாலம் மின்னிடை மல்லிகை வேய்மரு பேய் முலை முனிந்து-என்னுமவற்றிலே தோன்றும்--முழிசி ஆவர் என்னும் தேன் மொழியாலே கோகுலத்தை மறப்பிக்கும் நகர ஸ்திரீகள் பாவம்-மற்பொரு விறல் கஞ்சனை என்னும வற்றிலே தோன்றும்-
நரகனைத் தொலைத்துக் கவர்ந்த பதினாறு பல்லாயிரம் எண்ணிறந்தார் பாவம் மங்க நூற்ற வாயும் தீர்ப்பார் என்னுமவற்றிலே தோன்றும்–என்றபடி இவர்கள் –கீழே -தேவிமார் மூவரும் -இங்கு-மூன்று ஸ்தானங்கள் உகக்கும் நல்லவர் -ஆயர் குலத்துக் கோபிமார்கள் -நகர ஸ்த்ரீகள்)–இவர்கள் தேடி நிற்க
அதாவது -ஸ்ரீ வடமதுரை பெண்கள்-தேடித் திரு மா மகள் மண் மகள் நிற்க-பெரிய திருமொழி -10-8-9- காதில் கடிப்பிட்டு (பிரணய ரோஷ பதிகம் )என்கிறபடியே பிரதான மகிஷிகளான இவர்கள் தன்னைத் தேடி நிற்கும் படி இவர்களை உபேஷித்து–பொய்கை முது மணல் முல்லைப் பந்தல் முற்றம் மச்சொடு மாளிகை அவ்வவ்விடம் புக்கு-அதாவது –-இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய் –நாச்சியார் -3-2–முது மணல் குன்றேறி –பெரியாழ்வார் -1-10-8–முல்லையின் பந்தர் நீழல் மன்னியவளை புணரப் புக்கு –பெருமாள் -6-8–முற்றத் தூடு புகுந்து–நாச்சியார் -2-9–மச்சொடு மாளிகை ஏறி–பெரியாழ்வார் -2-7-3-
அவ்வவ்விடம் புக்கு அவ்வாயர் பெண்டிர்க்கு அணுக்கனாய்-பெரியாழ்வார் -3-2-5-என்கிறபடியே
இவர்கள் ஜலக்ரீடை பண்ணும் இடம்- விளையாடும் இடம் – மற்றும் அவர்கள் இச்சா அனுகுணமாக திரளவும் தனியாவும் இருக்கும் இடங்களான – பொய்கை–மணல் குன்று -முல்லைப் பந்தல்-முற்றம் –
மச்சொடு மாளிகை அவ்வவ ஸ்தலங்களில் சென்று புக்கு –

தேடித் திருமாமகள்‌ மண்மகள்‌ நிற்ப”? (திருமொழி 10 – 8 – 9) என்று இப்படி ப்ரதாந மஹிஷிகளான இவர்களும்‌ தேடி நிற்கும்படி இவர்களை உபேஷித்து வந்து, (பொய்கை முது மணல்‌ முல்லைப் பந்தல்‌ முற்றம்‌ மச்சொடு மாளிகை அவ்வவ்விடம்‌ புக்கு வாரிச்‌ சிதைத்துப்‌ பறித்துக்‌ கிழித்துக்‌ கோயின்மை குறும்புசெய்து அல்லல்‌ விளைத்துக்‌ கவரூமூகக்கும்‌ நல்லவர்‌) (பொய்கை) !”இப்பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்‌”: (நா. தி. 3 2), “மூத்தவை காண முதுமணற்குன்றேறி”” (பெரியா. தி. 1 – 10 – 8) , “முல்லையின்‌ பந்தர் நீழல்‌ மன்னி அவளைப்‌ புணரப் புக்கு”” (பெருமா.தி. 6 – 8), “முற்றத்தூடு புகுந்து நின்முகங்காட்டிப்‌ புன்முறுவல்‌ செய்து”? (நா. தி. 2 – 9), “மச்சொடு மாளிகையேறி’” (பெரியா. தி. 2 – 7 – 3), “அவ்வவ்விடம் புக்கவ்வாயர்‌ பெண்டிர்க் கணுக்கனாய்‌”’ (பெரியா. தி. 3 – 2 – 5) என்று அவர்கள்‌ ஜலக்ரீடை பண்ணுமிடம்‌, அவர்கள்‌ விளையாடுமிடம்‌, அவ்வோவிடங்களிலே புக்கு-“

ஆடி அசைந்து ஆய் மடவாரொடு நீ போய்க்
கூடிக் குரவை பிணை கோமளப் பிள்ளாய்
தேடித் திரு மா மகள் மண் மகள் நிற்ப
ஏடி இது என் இது என் இது என்னோ —10-8-9-அகலகில்லேன் இறையும் என்று அவர்கள் ஆசைப் பட்டு நிற்க –

இது என் புகுந்தது இங்கு அந்தோ இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்
மதுவின் துழாய் முடி மாலே மாயனே எங்கள் அமுதே
விதி இன்மையால் அது மாட்டோம் வித்தகப் பிள்ளாய் விரையேல்
குதி கொண்டு அரவில் நடித்தாய் குருந்திடைக் கூறை பணியாய்-3-2-நீயும் நாங்களுமாய் ஜல கிரீடை பண்ணிப் போரும் பொய்கையோ இது –இது அறிந்து நீ வந்தபடி எங்கனே – நாங்கள் உன்னைக் கூடக் கொண்டு போந்திலோம்- இட்ட அடியையும் அழித்து அன்றோ நாங்கள் போந்தது -நீ இங்கு வந்த வழி என் –ஆனை நின்ற பொய்கையாய் வந்தாய் அல்லை — ஆர்த்த நாதம் வழி காட்ட வந்தாய் அல்லை –எவ்வாறு வந்தாய் –காளியன் நின்ற பொய்கையாய் வந்தாய் அல்லை – அநு கூலன் கிடந்த பொய்கையாய் வந்தாய் அல்லை –பிரதிகூலன் கிடந்த பொய்கையாய் வந்தாய் அல்லை-நீ வந்த வழி என் 

மூத்தவை காண முது மணல் குன்று ஏறி
கூத்து வந்து ஆடி குழலால் இசை பாடி
வாய்த்த மறையோர் வணங்க இமையவர்
ஏத்த வந்து என்னைப் புறம் புல்குவான் எம்பிரான் என்னைப் புறம் புல்குவான் -1 9-8 –எல்லாருக்கும் தெரியும்படியான மணல் குன்றின் மேல் ஏறி முதுமையால்-கிளர்த்தியை சொல்லுகிறது

என்னை வருக என குறித்திட்டு இன மலர் முல்லையின் பந்தர் நீழல்
மன்னி அவளை புணர புக்கு
மற்று என்னை கண்டு உழறா நெகிழ்ந்தாய்
பொன் நிற ஆடையை கையில் தாங்கி பொய் அச்சம் காட்டி நீ போதியேலும்
இன்னம் என் கையகத்து ஈங்கு ஒரு நாள் வருதியேல் என் சினம் தீர்வன் நானே– 6-8-பரப்பு மாறப் பூத்த முல்லைப் பந்தலின் கீழே எக்காலத்தில் இடம் குறித்து விட்டான் என்று தெரியாது – அவள் அங்கே குடில் கட்டி காத்துக் கிடக்கிறது -அவளோடு சம்ச்லேஷிக்கப் புக்கு-ஒரு மஹா பாரதத்தை பாரித்துக் கொண்டு புக்கு இவளைக் கண்டவாறே கலங்கி எழுந்து இருந்தான் –

முற்றத்தூடு புகுந்து நின் முகம் காட்டிப் புன் முறுவல் செய்து
சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக் கடவையோ கோவிந்தா
முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற நீண்டு அளந்து கொண்டாய் எம்மைப்
பற்றி மெய்ப் பிணக்கிட்டக்கால் இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார் –2-9–இவன் கோலுகிறபடி சாலப் பொல்லாதாய் இருந்தது – இவன் கண் வட்டத்தில் நிற்கில் தீம்பு செய்கை தவிரான் – அதில் காட்டில் மறைய நிற்கை நன்று -என்று எல்லாரும் திரண்டு சமேத்ய மந்த்ரயித்வா து சர்வே சங்கத புத்தய–ஊசுஸ்ச மநஸா ஜ்ஞாத்வா வ்ருத்தம் தசரதம் ந்ருபம் -அயோத்யா -2-20-என்கிறபடியே சமயம் பண்ணி – அது செய்யும் இடத்து எல்லாரும் திரளப் போவோமாகில் இவன் அடி ஒற்றிக் கொண்டு வரும் -என்று பார்த்து ஒருவர் ஒருவராகப் போய் பஞ்ச லஷம் குடியில் உள்ளார் எல்லாரையும் கொள்வதொரு முற்றத்திலே புக்கு கதவுகளையும் -தலை வாசல் தொடங்கி அடைத்து கணையங்களையும் ஏறிட்டு
இவனுக்கு புகுர வழி இல்லாத படி பண்ணிக் கொண்டு இருந்தார்கள் –இவனுக்கு புகுருகைக்கு வழி தேட வேண்டா இறே-இட்ட இலச்சினை அழியாது இருக்க வெண்ணெய் குடி போமா போலே நினைவு இன்றிக்கே இருக்க தாங்கள் அவன் கையிலே அபஹ்ருதைகள் ஆனார்கள் இம் முற்றத்திலே தங்கள் திரளின் நடுவில் வந்து நிற்கக் கண்டார்கள்-நாம் இவனை மறைத்துப் போந்தோம் என்று இருந்தோம் -அழகிதாய் இருந்தது இவன் நமக்கு முற்பட்டுக் கொடு நின்றான் -என் செய்தோம் ஆனோம்
இவன் கையிலே அகப்பட்டோம் – இனி இவனுக்கு தென்பட்டோம் ஆகாமல் கழியும் விரகு ஏதோ என்று பார்த்து ஒரு போக்குக் காணாமல் லஜ்ஜித்து கவிழ் தலையிட்டார்கள்நின் முகம் காட்டிப் – எல்லாரையும் தனித் தனியே முகத்தை எடுத்து – ஏன் வந்தோம் இறே பிற்பட்டோமே -கூட வரப் பெற்றிலோமே –
எவ்வழியே வந்தி கோள்-கால்கள் நொந்தது இறே -என்றால் போலே சிலவற்றைச் சொன்னான்
நம் நினைவு தப்புவதே -என்று தங்கள் தோல்வியை அனுசந்தித்து லஜ்ஜித்தார்கள்-புன் முறுவல் செய்து- அத்தை அறிந்து -ஸ்மிதம் பண்ணினான் – நாம் இவனுக்குத் தோற்று லஜ்ஜித்தோம் ஆனமை அவன் அறியல் ஆகாது – புறம்பே அந்ய பரர ஆனோம் ஆவோம் என்று அங்கேயே இருந்து சிற்றில் இழைக்கப் புக்கார்கள் –இங்கேயே நம் சந்நிதியிலே இருந்து அந்ய பரதை பண்ணுவதே -என்று சிவிட்கு என்னா நினைக்கைக்கு நெஞ்சும் கூடாதே – வ்யாபரிக்கைக்கு கையும் கூடாத படியாகச் சிலவற்றைச் செய்தான் –

மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள் தம் இடம் புக்கு
கச்சோடு பட்டைக் கிழித்து காம்பு துகில் அவை கீறி
நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள் திருவேம்கடத்து எந்தாய்
பச்சை தமநகத்தோடு பாதிரிப் பூ சூட்ட வாராய் 2-7 3–மச்சு -நடு நிலம்-மாளிகை -மேல் நிலம்
மச்சொடு கூட மாளிகையில் சென்று ஏறி பெண்கள் இருக்கிற இடங்களிலே புக்கு அவர்கள் முலைக் கச்சோடே அதற்கு மேலீடான பட்டுக்களையும் கிழித்து-பணிப் புடவைகள் ஆனவற்றையும் கிழித்து
காம்பு துகில் -விளிம்பில் பணி உடன் சேர்ந்த புடவை(பணி -கரை -எழுத்து போன்ற செயல்கள் ) நாள் தோறும் தீம்புகள் செய்யுமவனே – வளர வளர தீம்பு மிகை ஏறிச் செல்லா நின்றது இறே

அவ்வவிடம் புக்கு அவ்வாயர் பெண்டிர்க்கு அணுக்கனாய்
கொவ்வைக் கனிவாய் கொடுத்து கூழமை செய்யாமே
எவ் வுஞ்சிலை உடை வேடர் கானிடைக் கன்றின் பின்
தெய்வத் தலைவனைப் போக்கினேன் எல்லே பாவமே -3-2-5- மச்சொடு மாளிகை நிலவரை முதலான அவ்வவ ஸ்தலங்களிலே பிறர்க்கு தெரியாதபடி சென்று புக்கு –அவ்வவ ஸ்தலங்களில் இருந்த இடை பெண்களுக்கு அந்தரங்கனாய் – அதாவது – அவர்கள் புத்ய அதீனமாக தன்னைத் சமைத்து வைக்கை

வாரிச் சிதைத்துப் பறித்துக் கிழித்து-அதாவது-துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும் –பெரிய திருமொழி -3-8-8–பந்து பறித்து துகில் பற்றி –பெரிய திருமொழி -10-7-5–கச்சோடு பட்டை கிழித்து–பெரியாழ்வார் -2-7-3- -என்கிறபடியே குடைந்து நீராடுவார்கள் கூறைகளை வாரிக் கொள்வது – இட்டமா விளையாடுவார்கள் இழைத்த சிற்றிலைச் சிதைப்பது – பந்து கழல் முதலிய லீலா உபகரணங்களை பறிப்பது – அவர்களோடு இட்டீடு கொண்டு பட்டுகள் கச்சுகள் எட்டினவற்றை பற்றி வலித்து கிழிப்பதாய்-

துகில் வாரியும்‌ சிற்றில்‌ சிதைத்தும்‌”” (திருமொழி 3 – 8 – 8), ““பந்து பறித்துத்‌ துகில்‌ பற்றிக்‌ கீறி” (திருமொழி 10 – 7 – 5) என்றும்‌ அவர்களுடைய துகிலை வாரியும்‌, அவர்களுடைய லீலா ஸ்தாநங்களை அழித்தும்‌, அவர்களுடைய வீலோபகரணங்களைப்‌ பற்றிக்‌ கொண்டும்‌,

துளையார் கரு மென் குழல் ஆய்ச்சியர் தம் துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும் முற்றா
இளையார் விளையாட்டோடு காதல் வெள்ளம் விளைவித்த அம்மானிடம் வேல் நெடுங்கண்
முளை வாள் எயிற்று மடவார் பயிற்று மொழி கேட்டிருந்து முதிராத இன் சொல்
வளைவாய கிள்ளை மறைபாடு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-8—அவர்கள் அரையிலே இட்டு வைத்த பர்யட்டங்களை மசி மயிலீ கூறை தாராய்–நாச்சியார்-3-9- -என்னும்படி
வாரிக் கொண்டு போய் குருந்திலே ஏறியும் தீமை செய்யும் சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேல் -என்னும்படி சிற்றில் சிதைத்தும்-

தந்தை புகுந்திலன் நான் இங்கு இருந்திலேன் தோழிமார் ஆரும் இல்லை
சந்த மலர்க் குழலாள் தனியே விளையாடும் இடம் குறுகி
பந்து பறித்துத் துகில் பற்றிக் கீறிப் படிறன் படிறு செய்யும்
நந்தன் மதலைக் கிங்கு என் கடவோம் நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ —10-7-5—அவர்களோடு சென்று கிட்டி பந்தைப் பறித்தும் பரியட்டங்களைக் கிழித்தும் –பின்பு சொல்ல ஒண்ணாத படி களவு செய்யும் –பிரபுக்கள் கீழே குடி இருக்க ஒண்ணாதே சாதுக்களுக்கு –

மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள் தம் இடம் புக்கு
கச்சோடு பட்டைக் கிழித்து காம்பு துகில் அவை கீறி
நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள் திருவேம்கடத்து எந்தாய்
பச்சை தமநகத்தோடு பாதிரிப் பூ சூட்ட வாராய் 2-7 3- –அவர்கள் முலைக் கச்சோடே அதற்கு மேலீடான பட்டுக்களையும் கிழித்து-பணிப் புடவைகள் ஆனவற்றையும் கிழித்து-காம்பு துகில் -விளிம்பில் பணி உடன் சேர்ந்த புடவை (பணி -கரை -எழுத்து போன்ற செயல்கள் ) நாள் தோறும் தீம்புகள் செய்யுமவனே வளர வளர தீம்பு மிகை ஏறிச் செல்லா நின்றது இறே

கோயின்மை குறும்பு செய்து-அதாவது-கோயின்மை செய்து கன்மம் ஒன்றில்லை –திருவாய் -6-2-6-
குறும்பு செய்வானோர் மகனைப் பெற்ற –நாச்சியார் -12-3–என்னும்படி நியாமகர் அற்ற ஸ்வதந்த்ரன் செய்யும் அத்தையும் – நியாமகர் கீழ் அடங்காமல் மூலை அடியே நடத்துவார் செய்யும் அத்தையும் செய்து –

கோயின்மை செய்து கன்மமொன்றில்லை” (திருவா. 6 – 2 – 6), “குறும்பு செய்வானோர்‌ மகனைப் பெற்ற”? (நா. தி. 12 – 3), ‘“கொள்ளை கொள்ளிக் குறும்பனை”’ (நா. தி, 13 – 8) என்றும்‌, அராஜகமாய்‌, ஸ்வதந்த்ரமான செயலைச் செய்து,

குழகி எங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்மம் ஒன்றில்லை;
பழகி யாம் இருப்போம் பரமே இத் திருவருள்கள்?
அழகியார் இவ் வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலருளர்;
கழகம் ஏறேல், நம்பி! உனக்கும் இளைதே கன்மமே.–6-2-6—நிவாரகர் இல்லை என்னா -அடிக் கழிவான செயல்களை செய்தால் உனக்கு ஒரு கார்யம் இல்லை -நீ நினைக்கிறவர்களது அல்லாமையாலே உனக்கு ஒன்றும் வாயாது –எங்கள் அனுமதி இல்லாமையாலும் பிரயோஜனம் இல்லை –பிரயோஜனம் இல்லை யாவது என் -இது தானே பிரயோஜனம் -பிரயோஜனத்துக்கு பிரயோஜனம் உண்டோ –

தந்தையும் தாயும் உற்றாரும் நிற்கத் தனி வழி  போயினாள் என்னும் சொல்லு
வந்த பின்னைப் பழி காப்பரிது மாயவன் வந்து உருக்காட்டுகின்றான்
கொந்தளமாக்கிப் பரக்கழித்துக் குறும்பு செய்வானோர் மகனைப் பெற்ற
நந்த கோபாலன் கடைத் தலைக்கே நள்ளிருட்கண் என்னை யுய்த்திடுமின்–12-3—ஸ்ரீ நந்தகோபர் தம்முடைய ராஜ்யத்தில் வன்னியம் அடிக்கைக்காக நோன்பு நோற்றுப் பிள்ளை பெற்றாராய்
அது கண்டி கோளே-அவன் இவனை நியமியாதே இருக்கிறபடி-

உள்ளே உருகி நைவேனை உளளோ இலளோ என்னாத
கொள்ளை கொள்ளிக் குறும்பனை கோவர்த்த நனைக் கண்டக்கால்
கொள்ளும் பயன் ஓன்று இல்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எறிந்து என்னழலைத் தீர்வேனே–13-8—என் பக்கல் தயை பண்ணத் தவிர்ந்தால் என்னிடை யாட்டம் ஆராயாது ஒழிந்தால் ஆகாதோ- என்னை சர்வ ஸ்வாபஹாரம் பண்ண வேணுமோ – (கொள்ளை கொள்ளி -குறும்பன் -இரண்டு விசேஷணங்கள் )

அல்லல் விளைத்து--அதாவது – அல்லல் விளைத்த பெருமான் -நாச்சியார் -13-10–என்ற படி பேர் ஆரவாரம் விளைத்து –-கவரும் –-அதாவது –-ஆயர் பாடிக் கவர்ந்து உண்ணும் –நாச்சியார் -14-2–என்று திரு ஆய்ப்பாடியிலே – பெண்களை அடைய முற்றூட்டாக விரும்பிப் புஜிக்கும் என்ற படி-உகக்கு நல்லவர்-அதாவது அவன் ( அவனால் ) விரும்பப் படுபவர்களாய் அத்தாலே நீ உகக்கும் நல்லவர்–திருவாய் -10-3-8–என்னும் படி அவன் உகப்புக்கு விஷயமான வைலஷண்யத்தை உடையவர்கள் என்று நிரூபகமாய் இருக்கிற திரு ஆய்ப்பாடியில் பெண்களுடைய பாவம் இவருக்கு உண்டு என்னும் இடம் –

“அல்லல்‌ விளைத்த பெருமான்‌?” (தா. தி. 13 – 10) என்கிறபடியே ஆரவாரத்தை விளைத்து-“முன்கைவளை கவர்ந்தாய்‌”” (திருமொழி 10 – 9 – 2), “நீ உகக்கு நல்லவரொடுமுழிதந்து “‘ (திருவா. 6 – 2 – 6) என்றும்‌ அவன்‌ இப்படி மேல் விழ வேண்டும்படியான வைலக்ஷ்ண்‌யத்தை யுடைய திருவாய்ப்பாடியில்‌ பெண்களுடைய பாவம்‌. 

அல்லல் விளைத்த பெருமானை ஆயர்பாடிக்கு அணி விளக்கை
வில்லி புதுவை நகர் நம்பி விட்டுசித்தன் வியன் கோதை
வில்லைத் தொலைத்த புருவத்தாள் வேட்கை யுற்று மிக விரும்பும்
சொல்லைத் துதிக்க வல்லார்கள் துன்பக் கடலுள் துவளாரே–13-10—பஹவோ ந்ருப கல்யாண குணகணா புத்ரச்ய சந்தி தே--அயோத்யா -2-26-என்று திரு அயோ த்யை ராம குணங்களிலே கையடியுண்டு -ஈடுபட்டு – மற்று ஓன்று அறியாது இருக்குமா போலே யாய்த்து திரு வாய்ப்பாடியில் உள்ளார் கிருஷ்ணன் தீம்பிலே கையடி யுண்டார்களாய் இருக்கும் படி -ஊரை மூலையடியே நடந்து -வெண்ணெய் பெண்கள் இவை களவு போய்த்து-என்றும் பாலும் பதின் குடம் கண்டிலேன் –பெரிய திரு -10-7-2-என்று சொல்லும் படி பெரிய ஆரவாரத்தைப் பண்ணி யாய்த்து வார்த்திப்பது 

அனுங்க வென்னைப் பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்துண்ணும்
குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே
கணங்களோடு மின் மேகம் கலந்தால் போலே வனமாலை
மினுங்க நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே–14-2—பட்டி மேயும்படி தன்னைச் சொல்கிறது -அகங்களிலே சிறை செய்து வைத்து அவற்றையே யாய்த்து விரும்பி அமுது செய்வது-
தன்னை ஆசைப் பட்டாரை உபேஷித்துப் போந்தான்-இப்போது ஆசைப் பட்டு இறே நோவு படுகிறது

மன்றில் மலிந்து கூத்து வந்தாடி மால் விடை ஏழும் அடர்த்து ஆயர்
அன்று நடுங்க வா நிரை காத்த ஆண்மை கொலோ வறியேன் நான்
நின்ற பிரானே நீள் கடல் வண்ணா நீ யிவள் தன்னை நின் கோயில்
முன்றில் எழுந்த முருங்கையில் தேனா முன் கை வளை கவர்ந்தாயே —10-9-2-ரஷகத்வத்தில் முற்பாடனாய் இருக்கும் நீ உன்னுடைய ரஷகத்வமும் போராத படியான த்வரை  உடைய இவளை –
கையும் வளையுமான சேர்த்தி கண்டு கொண்டாடும் நீயே அனுபவித்து விடப் புக்காயோ -கோயிலில் உள்ள முருங்கை மரத் தேன் போலே இருக்கும் இவளை (முருங்கை மரத் தேன் எளிதாக எடுக்குமா போல் இவள் வளையல்களையும் எளிதாகப் பறித்தாயோ )

அசுரர்கள் தலைப்பெய்யில் எவன் கொல் ஆங்கு என்று ஆழும் என்னார் உயிர் ஆன் பின் போகல்
கசிகையும் வேட்கையும் உள் கலந்து கலவியும் நலியும் என் கை கழியேல்
வசி செய் உன் தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக வுடையும் காட்டி
ஓசி செய் நுண்ணிடை இள வாய்ச்சியர் நீ யுகக்கும் நல்லவரோடும் உழி தராயே-10-3-8-வடிவு அழகும் பருவமும் ஒழியவே நீ உகந்த நன்மையை யுடையவர்கள் -அவர்களோடு கூட என் கண் வட்டத்தில் சஞ்சரிக்க அமையும்-

கடல் ஞாலம் மின்னிடை மல்லிகை வேய்மரு பேய் முலை முனிந்து-என்னுமவற்றிலே தோன்றும்–
கடல் ஞாலம்-
அதாவது – கிருஷ்ண விரஹம் ஆற்றமாட்டாமல்-துஷ்ட காளிய திஷ்டாத்ரா கிருஷ்ணோ ஹமி திசபரா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-27–-க்ருஷ்ணோஹம் ஏஷ லலிதம் விரஜாம் யாலோக்ய தாங்தி -இத்யாதிப் படியே –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-27– அவர்கள் அனுகரித்தாப் போலே இவர் அவனைப் பிரிந்து ஆற்றாமையாலே அனுகரித்த – கடல் ஞாலத்திலும் -5-8–திருவாய் மொழியிலும்
மின்னிடை-அதாவது –-அந்ய விஷயத்தில் பரப்பனாகையாலும் அபேஷித சமயத்தில் வாராமல்
அவன் விளம்பித்து வந்தால் ,அவர்கள் ஊடினாப் போலே இவரும் அவனோடு ஊடின- மின்னிடை மடவாரிலும் -6-2-திருவாய்மொழியிலும்
மல்லிகை –அதாவது –பகல் எல்லாம் பசு மேய்க்கப் போய் அவற்றுடன் வரும் கண்ணனை பசுக்களின் முற் கொழுந்தில் காணாதே பிற் குழையில் வருகிறவன் வரப் பற்றாமல் ஒரு சந்த்யையிலே பஞ்ச லஷம் குடியில் பெண்களும்-பாதக பதார்த்தங்களுக்கு இடைந்து கூப்பிட்டாப் போலே இவர் கூப்பிட்ட மாலைப் பூசலான – மல்லிகை கமழ் தென்றலிலும்-9-9-திருவாய் மொழியிலும்
வேய் மரு--அதாவது – இரவு எல்லாம் கிருஷ்ண சம்ஸ்லேஷம் பண்ணி இருந்து போது விடிந்தவாறே அவன் பசு மேய்க்கப் போகும் காலம் என்னும் நினைவாலே அவனை அணைத்துக் கொண்டு இருக்க
செய்தே போனானாகவே கருதி பாதக பதார்த்தங்களும் சம்ஸ்லேஷ தசையில் அவன்
பரிமாற்றங்களும் புறம்பும் உள்ளும் நின்று நலிகிற நலிவை அவர்கள் அவன் தனக்கு சொல்லிக் கூப்பிட்டாப் போலே இவர் கூப்பிட்ட காலை பூசலான – வேய் மரு தோளிணை-10-3-திருவாய் மொழியிலும் –
பேய் முலை முனிந்து-அதாவது தனக்கு பாதங்ககங்களாய் வந்து கிட்டின -பூதனா சகட யமளார்ஜுனாதிகளை நினைவை அவை தன்னோடு போக்கி – தன்னை நமக்காகா நோக்கித் தந்த உபாகரனை – நான் கிட்டுவது என்றோ என்னும் – அப்படி செய்த கிருஷ்ணனான உபகாரனுக்கு என் ஸ்த்ரீத்வம் இழந்தேன் என்றும் சொன்ன பேய் முலை உண்டு-5-3-8–(மாசறு சோதி மடலூர முயன்ற பதிகம்) முனிந்து சகடம் உதைத்து-7-3-5-(நிகரில் முகில் வண்ணன் -அவன் முனிவுக்கு அகப்பட்ட நான்
உங்கள் முனிவுக்கு மீழுவேனோ -ஹிதம் பிரியம் அவனது- உங்களது அஹிதம் அபிரியம் ) என்கிற பாட்டுகளிலும் தோன்றும் ..

(கடல் ஞாலம்‌ மின்னிடை மல்லிகை வேய் மரு பேய் முலை முன்னின்று) என்று – “துஷ்ட காளிய திஷ்டராத்ர க்ருஷ்ணோஹமிதி சாபரா”’ (வி. பு. 5 – 13 – 27), “க்ருஷ்ணோஹமேஷ லலிதம்‌ வ்ரஜாம்யாலோக்ய தாம்‌ கதிர” என்று அவர்கள்‌ அநுகரித்தாப் போலே ““கடல் ஞாலம்‌ செய்தேனும்‌ யானே யென்னும்‌”” (திருவா. 5 – 6 – 1) என்று இவரும்‌ அநுகரிக்கையாலும்‌, *மின்னிடை மடவாரிலே அவனோடே ஊடுகையாலும்‌, *மல்லிகை கமழ்‌ தென்றலிலே பகல் போதெல்லாம்‌ பசுமேய்க்கப் போன க்ருஷ்ணனைப்‌ பசுக்களின்‌ முற்கொருந்தில்‌ காணாதே பிற்கழையிலே வருமளவில்‌ பற்றாமல்‌ ஒரு ஸந்த்‌யையில்‌ திருவாய்ப்பாடியில்‌ பஞ்ச லக்ஷம் குடியில்‌ பெண்களுடைய ஆற்றாமையை இவரொருவரு முடையராய்க் கொண்டு பேசுகையாலும்‌*வேய்மருதோளிணையில்‌ ராத்ரியெல்லாம்‌ க்ருஷ்ண ஸம்ஸ்லேஷம்‌ ப்ரவ்ருத்தமாய்‌ அவன்‌ பசு மேய்க்கப் போகிற ப்ராதசகாலம்‌ வந்தவாறே அவன்‌ அணைத்துக் கொண்டிருக்கச் செய்தேயும்‌, அவன்‌ விஸ்லேஷித்தானாக அதிசங்கைபண்ணி அவனுடைய முகத்தைப்‌ பார்த்துத்‌ தம்முடைய ஆற்றாமையைப்‌ பேசுகையாலும்‌, *“பேய்முலை யுண்டு சகடம் பாய்ந்து” (திருவா. 5 – 3 – 8), “முனிந்து சகடமுதைத்து”” (திருவா. 7 – 3 – 5) என்கிற பாட்டுக்களிலே பூதநா சகட யமளார்ஜுநாதிகளை நிரஸித்த க்ருஷ்ணனை கிட்டுவதென்றோ என்றும்‌, அப்படிப்பட்ட க்ருஷ்ணனுக்கு என்னுடைய ஸ்த்ரீத்வத்தைத்‌ தோற்றேன்‌ என்றும் சொல்லுகிற பேச்சுக்களிலே இவர்க்கு உண்டென்னுமாகாரம்‌ தோன்றும்‌.

கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்-ப்ரவேஸம்-கீழ் ப்ரீதி அப்ரீதி சமமாக சென்றது -இதில் அப்ரீத் யம்சமே தலை எடுத்து -ஸ்மரித்து தரித்ததும் போய் ஆத்ம தாரணம் பண்ண முடியாமையாலே -அநுகரித்து தரித்த கோபிமார்களை போலே -அநு காரமாய்ச் செல்லுகிறது

6-2-மின்னிடை மடவார்கள்-ப்ரவேஸம்-ஸ்வரூப அன்விதம் இன்றியே தமக்கு வந்தேறியான
வைமுக்யத்தைக் களித்து அபிமுகீகரித்துக் கொண்ட ஆகாரத்தை ப்ராணாய ரோஷத்தாலே விழுகையாய் அவன் வந்தாலும் முகம் கொடேன் என்று தோழிமாரோடு கூட லீலா பிரசாங்கத்தாலே அந்நிய பரத பாவனை பண்ணி இருக்கிற கோபிகையை அநு நயித்து ஊடல் தீர்த்த ஆபீமுக்யம் பண்ணுவித்துக் கொண்டு ஸம்ஸ்லேஷித்த ஆகாரம் ஆகிற அந்யாப தேசத்தாலே அருளிச் செய்கிறார்

9-9-மல்லிகை கமழ் தென்றல் -ப்ரவேஸம்--திருவாய்ப்பாடியிலே பெண்கள் எல்லாம் ஒரு ராத்திரியில் கிருஷ்ண விரஹத்தால் பட்ட நோவை இவர் ஒருவருமே படுகிறார் -என்று ஆளவந்தார் அருளிச் செய்வார் முன்பே ஆற்றாமையாலே தற்பு அற்று இருக்கிறவர் ஆகையால் அத்தனை ஆடல் கொடுக்கைக்கு ஆஸ்ரயம் இல்லை-ஒரு ஸந்த்யையில் அவர்கள் பட்ட நோவை படுகிறார் என்று அருளிச் செய்வர் எம்பெருமானார் – ஸந்த்யையாவது எம்பெருமான் தம்மை விஷயீ கரிப்பதற்கு முன்பு உண்டான அல்ப காலம் –மாலைப் பூசல் அன்றோ இது —

10-3-வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ-ப்ரவேஸம்-போது விடிந்தவாறே – பண்டு என்றும் இக்காலத்தில் பிரியக் கண்ட வாஸனையாலே -அவன் பசு மேய்க்கப் போகிறானாக அதி சங்கை பண்ணி–போனானாக அத்யவசித்து -நீயும் பிரிந்தாய் -நீ பிரிந்தால் நலியக் கடவ பதார்த்தங்களும் நலியா நின்றன –-பசு மேய்க்கப் போமது எனக்கு அநபிமதம் -நீ போக வேண்டா என்று சொல்ல ஒண்ணாத படி என்னுடைய நாக்கு நீர் அற்று வாரா நின்றது -நான் நினைத்ததை சொல்ல வல்லேனாம் படி உன்னுடைய அணி மிகு தாமரைக் கையை என் தலை மேலே வைத்து அருளி -உன்னுடைய திருக் கண்களாலே நோக்கி அருள வேணும் -அஸூர ராக்ஷசர் சஞ்சாரத்தால் -சப்ரமாதமான காட்டில் பசு மேய்க்கப் போகாது ஒழிய வேணும்–மாதா பிதா பிராதா -என்று இவ்வாத்மாவுக்கு சர்வவித பந்துவும் என்று உணர்ந்தால் தன் இழவில் காட்டில் இவனுக்கு பரிய வேண்டும்படி யாயத்து இருப்பது –
ஆனபின்பு நீ போகில் நான் உளனாக மாட்டேன் -என்று இன்னுயிர்ச் சேவலிலும்-மல்லிகை கமழ் தென்றலிலும் படும் வியசனத்தை-அவன் சந்நிதியில் பட -அத்தைப் பார்த்து -நாம் போகக் கடவோம் அல்லோம் -நாம் போக நினைப்பதும் செய்திலோம்-என்று தான் போகாமையை இவள் நெஞ்சிலே படுத்த -அத்தாலே தரித்தாள் ஒரு பிராட்டி பேச்சாலே தம் தசையை அருளிச் செய்கிறார் –எம்மா வீட்டில் தம்முடைய தாதார்த்தயத்தை ஆசைப் பட்டார்- -இதில் அவன் ஸம்ருத்தியை ஆசாசிக்கும் இதுவே புருஷார்த்தம் -என்கிறார் –

பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து மருதிடை
போய் முதல் சாய்த்துப் புள்வாய் பிளந்து களிறு அட்ட
தூ முறுவல் தொண்டைவாய்ப் பிரானை எந்நாள் கொலோ?
நாம் உறுகின்றது தோழீ! அன்னையர் நாணவே.–5-3-8-பூதனை யுடைய முலை வழியே பிராணனை முடித்து -அந்த அவசாதத்தை தப்பி ரக்ஷையாக நிறுத்தின சகடம் தானே அஸூரா வேசத்தாலே மேல் விழ-அத்தை நிரசித்து -தவழ்ந்து போகா நிற்க முன்னே நின்ற யமளார்ஜ்ஜுனங்களின் நடுவே போ அவ்வாபத்தை தப்பி தன்னைக் கொண்டு தப்புகை அன்றிக்கே அஸூர விஷ்டமான குருந்தை வேரோடு பறித்து -பகாசூரனை நிரசித்து -குவலயா பீடத்தை முடித்த-

முனிந்து சகடம் உதைத்து மாயப் பேய் முலை உண்டு மருதிடை போய்க்
கனிந்த விளவுக்குக் கன்று எறிந்த கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன்
முனிந்து இனி என்செ ய்தீர் அன்னைமீர்காள்! முன்னி அவன் வந்து வீற்றிருந்த
கனிந்த பொழில் திருப் பேரெயிற்கே காலம் பெற என்னைக் காட்டுமினே.–7-3-5-ஸ்தந்யார்த்தியாய் சீற -அதுக்கு இலக்காய் சகடாசூரன் முடிந்து போனான் -ஸ்தந்யார்த்தியாய் சீற அதிலே நசித்தான் -சகடம் மேலிடப் புக்க வாறே சீறி என்றுமாம் -கிருஷ்ணனுடைய பும்ஸத்வத்துக்கு என் ஸ்த்ரீத்வத்தை தோற்றேன் -விரோதி வர்க்கத்தை அழியச் செய்த ஆண் பிள்ளைத் தனத்தை காட்டி ஒரு காலும் அழியாத ஸ்த்ரீத்வத்தை அழித்தான்

முழிசி ஆவர் என்னும் தேன் மொழியாலே கோகுலத்தை மறப்பிக்கும் நகர ஸ்திரீகள் பாவம்
அதாவது-ஸ்ரீ மாலாகாரரும் கூனியும் கொடுத்த திரு மாலையையும் சாந்தையும் சாத்திக் கொண்டு –
ராஜ மார்க்கத்தில் எழுந்து அருளி குவலயா பீடம் நிரசனம் பண்ணி நிற்கிற போது –
முழுசி வண்டாடிய –பெரிய திருமொழி -2-8-7-ஆவர் இவை செய்வது அறிவார் -பெரிய திருமொழி -3-3-7–என்கிற பாட்டுகளில் சொல்லுகிற படி ஒப்பனை அழகிலும் வடிவு அழகிலும் .குவலயா பீட நிரசின சேஷ்டிதங்களிலும் தோற்று – சக்க்ய பஸ்யத க்ருஷ்ணஸ்ய முகமத்ய ருணேஷணம் கஜ யுத்த க்ருதா யாஸஸ் வேதாம்பு கணி காசிதம்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-20-53– -இத்யாதிப் படியே அந்யோன்யம் தங்களில் பேசுகிற-மழறு தேன் மொழி -திருவாய் -6-2-5–என்கிறபடியே மழலை தேன் போல இனிதான பேச்சுக்களாலே – மதுரம் பிராப்ய கோவிந்த -கதம் கோகுல மேஷ்யதி நகர ஸ்திரீ கலா லாப
மதுஸ் ரோத்ரண பாஸ்யதி
-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-8-13–என்று ,mகோகுலத்தில் பெண்கள் பேசும்படி அவன் கோகுலத்தை மறக்கப் பண்ணும் ஸ்ரீ மதுரையில் உள்ள பெண்களின் பாவம் இவருக்கு உண்டு என்னும் இடம்

(முழுசியாவரென்னும்‌ தேன்மொழியாலே கோகுலத்தை மறப்பிக்கும்‌ நகர ஸ்த்ரீகள்‌ என்று) க்ருஷ்ணன்‌ ஸ்ரீமாலாகார க்ருஹ்த்திலே திருமாலை சாத்தி, கூனி பக்கலிலே சாந்து சாத்தி, ராஜ மார்க்கத்தாலே எழுந்தருளி, குவலயாபீட நிரஸநம்‌ பண்ணி நின்றருளின போது, ““முழுசி வண்டாடிய தண்டுழாய்‌”’ (திருமொழி 2 – 8 – 7), ““ஆவரிவை செய்தறிவார்‌ (திருமொழி 3 – 3 – 7) என்கிற பாட்டுக்களில்‌ சொல்லுகிறபடியே “ஸக்‌ய பஸ்யத க்ருஷ்ணஸ்ய முகமத்யருணே க்ஷணம்‌ ! கஜயுத்‌த க்ருதாயாஸஸ் வேதாம்பு கணிகாசிதம்‌’” (வி. பு. 5 – 20 – 54) என்று ஒப்பனை யழகிலும்‌, வடிவழகிலும்‌, குவலயாபீட நிரஸநமாகிற சேஷ்டிதத்திலும்‌ தோற்று, “மழறு தேன் மொழியார்கள்‌’” (திருவா. 6 – 2 – 8) என்று அந்யோந்யம்‌ தங்களிலே பேசுகிற மழலைத் தேன் போலே இனிதான பேச்சுக்களினாலே ““மதுராம்‌ ப்ராப்ய கோவிந்த கதம்‌ கோகுலமேஷ்யதி ! நகர ஸ்த்ரீகலாலாபமது ஸ்ரோத்ரேண பாஸ்யதி” (வி. பு. 5 – 18 – 14) என்று கோகுலத்தில்‌ பெண்கள் தானே பேசும்படி அவனை அந்த கோகுலத்தை மறக்கும்படி பண்ணும்‌ ஸ்ரீமதுரையில்‌ பெண்களுடைய பாவம்‌.

முழுசி வண்டாடிய தண் துழாயின் மொய்ம் மலர்க் கண்ணியும் மேனி யஞ்சாந்து
இழுசிய கோலம் இருந்தவாறும் எங்கனம் சொல்லுகேன் ஓவி நல்லார்
எழுதிய தாமரை யன்ன கண்ணும் ஏந்து எழில் ஆகமும் தோளும் வாயும்
அழகியதாம் இவரார் கொல் என்ன அட்ட புயகரத்தேன் என்றாரே–2-8-7—கிண்ணகத்தில் இழிவாரைப் போலே வண்டுகள் ஆனவை மதுபான மத்தமாய் களித்தாடா நின்றுள்ள திருத் துழாயினுடைய செறியத் தொடுத்த மாலையும்-

ஆவர் இவை செய்தறியார் அஞ்சன மா மலை போலே
மேவு சினத்து அடல் வேழம் வீழ முனிந்து அழகாய
காவி மலர் நெடும் கண்ணார் கை தொழ வீதி வருவான்
தேவர் வணங்கு தண் தில்லைத் சித்திர கூடத்துள்ளானே–3-3-7—ஆனைத்தொழில்கள் சேஷ்டிதங்கள் செய்வது அறிவார் யார்-எவர் இவை செய்வது அறிவார்-இப்படிப்பட்ட -ஜென்ம கர்ம மே திவ்யம்-அறிவார் இல்லை ஆழ்வார் நொந்து எத்தனை உபதேசித்தாலும் திருத்துவார் இல்லையே
அன்றிக்கே-ஆஸ்ரிதற்காக இப்படி செயல்களை செய்தவர் யார் இல்லை
அன்றிக்கே-மதுரைப் பெண்கள் ஈடுபாடாய் -கை கூப்பிச் சொன்ன படி-

கழறேல் நம்பி! உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும் ; திண்சக்கர
நிழறு தொல்படையாய்! உனக்கு ஒன்று உணர்த்துவன் நான்
மழறு தேன் மொழியார்கள் நின்னருள் சூடுவார் மனம் வாடி நிற்க எம்
குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே.–6-2-5—போலி கண்டு இப்படி உன்னை பிச்சேற பண்ணினவர்கள் ஆரோ –மழறு தேன்-மழலைத் தேன் -கலங்கின தேன் போலே இருந்துள்ள பேச்சு அழகை யுடையவர்கள் –ஆரோ என்றவாறே நீங்களே என்றோ எங்கள் தங்கள் தலையிலே ஏறிடப் புகுகிறானோ என்று நின்னருள் சூடுவார் -என்கிறார் –

மற்பொரு விறல் கஞ்சனை என்னும வற்றிலே தோன்றும்-அதாவது-மற்பொரு–மற்பொரு தோளுடை மாயப் பிரானுக்கு என் கற்புடை யாட்டி இழந்தது கட்டே -திருவாய் -6-6-10-என்று பிரபலரான மல்லரோடு தோளில் சாந்து அழியாதபடி மல்லை பொருத ஆச்சர்ய பூதனான உபாகரனுக்கு அறிவுடையாளாய் இருக்கிற என் பெண் தனக்குள் அடங்கலும் இழந்தாள் என்றும் –-விறல் கஞ்சனை-அதாவது
விறல் கஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மை தஞ்சம் என்று இவள் பட்டனவே -திருவாய் -2-4-8–என்று
பெரு மிடுக்கனான கம்சனை அவன் வஞ்சனை அவனோடு போம் படி பண்ணினவரே ! உம்மையே தனக்கு தஞ்சம் என்று இவள் பட்ட வெள்ளம் என் தான் என்று தமக்கு பரிவானவர்கள் சொன்ன பாசுரத்தாலே –மல்லரையும் கம்சனையும் நிரசித்த கண்ணனை அச் சுவடோடே அனுபவிக்க ஆசைப்பட்டமையை பேசின பாசுரத்தில் தோன்றும்

(மற்பொரு விறல் கஞ்சனை)”மற்பொரு தோளுடை – மாயப் பிரானுக்கு” (திருவா. 6 – ப – 10) இத்யாதி – சாணூர முஷ்டிக நிரஸநம்‌ பண்ணின ஆஸ்சர்ய பூதனான க்ருஷ்ணனுககு அறிவை யுடையளான என்னுடைய பெண் பிள்ளை எல்லாத்தையும்‌ இழந்தாள் என்றும்‌, ““விறற் கஞ்சனை வஞ்சனை செய்தீரும் மைத்தஞ்சமென்றிவள்‌ பட்டனவே”’ (திருவா. 2 4 – 8) என்று பெரு மிடுக்கனான கம்ஸனை நிரஸித்த உம்மைத் தஞ்சமென்று விஸ்வஸித்த இவளை நீர்‌ இப்படிப்‌ படுத்துவதே என்றும்‌, சாணூர முஷ்டிகரையும்‌ கம்ஸனையும்‌ நிரஸித்து நின்ற க்ருஷ்ணனை ஆசைப்படுகையாலே இவர்க்கு உண்டென்னுமாகாரம்‌ தோன்றும்‌.

பொற்பமை நீண்முடிப் பூந்தண் துழாயற்கு
மற்பொரு தோளுடை மாயப் பிரானுக்கு
நிற்பன பல்லுருவாய் நிற்கு மாயற்கு என்
கற்புடை யாட்டி இழந்தது கட்டே.
–6-6-10—வந்து திருவவதரித்து மற்பொரு தோளை யுடையவன் – மாயப் பிரானுக்கு-சாத்தின சாந்து அழியாத படி மல் பொருத ஆச்சர்யம் -சாவத்தகர்த்த சாந்தணி தோள் சதுரன் இறே -மற்றும் ஆச்சர்யமான உபகாரகங்களைப் பண்ணினவன் என்றுமாம்-நிற்பன பல்லுருவாய் நிற்கு மாயற்கு – -ஸ்தாவர ஜங்கமாத்மக சகல பதார்த்தங்களும் அந்தர்யாமியாக நிற்கிற ஆச்சர்ய பூதனுக்கு-என்-கற்புடை யாட்டி — .–மிக்க அறிவுடைய என் மகள் -தத் தஸ்ய சத்ருசம்பவேத்-என்று இருக்கும் அறிவு இறே-இழந்தது கட்டே-தனக்கு உள்ளவற்றை நேராகக் காட்டி இவள் பக்கல் உள்ளவற்றை நேராகக் கொண்டான் –கட்டு என்று மரியாதையாய் அத்தை இழந்தாள் என்றுமாம் –

வஞ்சனே என்னும் கை தொழும் தன்
நெஞ்சம் வேவ நெடிதுயிர்க்கும் விறல்
கஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மைத்
தஞ்சம் என்று இவள் பட்டனவே –2-4-8-
–மிடுக்கை உடைய கஞ்சனை அவன் நினைத்த நினைவு அவன் தன்னோடே போம்படி வஞ்சித்தீர் –ஆணுமாய் மிடுக்கனுமாய் எதிரியுமான அவன் பட்டது படுவதே
பெண்ணுமாய் அபலையுமாய் உம்மை உகந்தவள்-உம்மைத்-தஞ்சம் என்று – அதஸ்மின் தத் புத்தி பண்ணி அந்தர பட்டாள்–தஞ்சமாகிய தந்தை தாய் என்னும் -சர்வ ரக்ஷகனை காதுகரைச் சொல்லுமா போலே சொல்லுகிறாள் இறே -மக்களுடைய தசையைப் பார்த்து-இவள்-விறலுக்கு எதிர்தலையான இவள்-பட்டனவே – எதிரிகளா பாதி முடியப் பெற்றால் அல்லள்-சம்சாரிகளோ பாதி அகல இருக்கப் பெற்றிலள்-நித்ய ஸூரிகளோ பாதி அனுபவிக்கப் பெற்றிலள் எங்களைப் போலே தத் தஸ்ய சத்ரு சம்பபவேத் -என்னும் அளவில் இருக்கப் பெற்றிலள்-என் வழி வராதே உம்மைத் தஞ்சமாகப் பற்றின இவளை எத்தனை படுத்த வேணும் தான் –

நரகனைத் தொலைத்த கரதலத்த– என்றும் ,-நரகன் தன்னை சூழ் போகி வளைத்து எறிந்து கன்னி மகளிர் தம்மைக் கவர்ந்த -என்றும் சொல்லுகிறபடி நரகாசுரன் கன்னிகைகளாக கொண்டு வந்து திரட்டி வைக்க -அவனை நிரசித்துப் பொகட்டுப் பரிக்கிரஹித்தவர்களாய்-பதினாறாம் ஆயிரவர் தேவிமார் –
பல்லாயிரம் பெரும் தேவிமார் – எண்ணிறந்த பெரும் தேவிமார் –
என்கிறபடி – ஆயிரம் இரண்டாயிரம் இல்லாமையாலே பல்லாயிரம் என்றும் , எண்ணிறந்த என்றும் சொல்லப் படுபவராய்-ஷோடச ஸ்திரீ சஹச்ராணி- என்று புராண சித்தரான பதினாறாயிரம் தேவிமார் பாவம் இவர்க்கு உண்டு என்னும் இடம்

(நரகனைத்‌ தொலைத்துக்‌ கவர்ந்த பதினாறு பல்லாயிரம்‌ எண்ணிறந்தார் பாவம்‌) ‘நரகனைத் தொலைத்த கரதலத்த மதியின்‌ கருத்தோ?” (திருமொழி 10 – 9 – 4), மன்னு நரகன் தன்னைச் சூழ் போகி வளைத்தெறிந்து கன்னி மகளிர் தம்மைக் கவர்ந்த கடல்‌ வண்ணன்‌”? (பெரியா. தி. 4 – 3 – 4) என்றும்‌, ‘“பதினாறாமாயிரவர்‌ தேவிமார்‌ பணிசெய்ய” (நா. தி. 7 – 9), “பல்லாயிரம்‌ பெருந்தேவிமார்‌” (பெரியா. தி. 4- 1 – 6) என்று நரகாஸூரவத அநந்தரம்‌ பரிக்‌ரஹித்த பதினாறாயிரம்‌ தேவிமார் பாவமும்‌.

மல்கிய தோளும் மானுரியதளும் உடையவர் தமக்குமோர் பாகம்
நல்கிய நலமோ நரகனைத் தொலைத்த  கர தலத்தது அமைதியின் கருத்தோ
அல்லியங் கோதை யணி நிறம் கொண்டு வந்து முன்னே நின்று போகாய்
சொல்லி யென் நம்பி இவளை நீ யுங்கள் தொண்டர் கைத் தண்டு என்றவாறே –10-9-4—நரகனான அசுரனை நிரசித்த கையில் மிடுக்கை நினைத்தோ –

மன்னு  நரகன் தன்னை சூழ் போகி வளைத்து எறிந்து
கன்னி மகளிர் தம்மை கவர்ந்த கடல் வண்ணன்
மலை
புன்னை செருந்தியொடு புன வேங்கையும் கோங்கும் நின்று
பொன்னரி மாலைகள் சூழ் போகி மால் இரும் சோலை அதுவே – 4-3- 3—நிரசிக்க கடவோம் – என்று
நிரசிக்கும் பிரகாரமும் – திரு உள்ளத்திலே விசாரித்து – சத்ய பாமை பிராடியாரோடு கூட பெரிய திருவடியை மேல் கொண்டு – திரு ஆழி தொடக்கமான திவ்ய ஆயுதங்களோடு ப்ராக்ஜ்யோதிஷா புரத்திலே எழுந்து அருளி – தப்ப ஒண்ணாதபடி -அவனை வளைத்து கொன்று –சூழ்ச்சியாவது -விசாரம்-வளைத்தல் -போக்கறுத்தல்-எறிதல்-சேதித்தலாய்-திரு ஆழியாலே அறுத்துப் பொகட்டமையை சொல்லுகிறது-அவன் தான் பாணி க்ரஹனம் பண்ணுவதாக அங்கும் இங்கும் தெரிந்து -திரிந்து -பொறுக்கிக் கொண்டு வந்து திரட்டி வைத்த  கன்னிகைகளான பதினாறாயிரத்து ஒரு நூறு ஸ்திரீகளையும் கைக் கொண்டு போந்து ஸ்ரீ மத் த்வாரகையில் பாணிக் க்ரஹனம் பண்ணி தனக்கு தேவிமார் ஆக்கி அருளின-

பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்ச புணர் முலை வாய் மடுக்க
வல்லானை மா மணி வண்ணனை மருவும் இடம் நாடுதிரேல் 
பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு பவளம் எறி துவரை  
எல்லாரும் சூழ சிங்காசனத்தே இருந்தானைக் கண்டார் உளர் – -4 -1-6 – நரக வத அநந்தரம் கொண்டு வந்து கைக் கொண்ட ஓர் ஒருவருமே-ஸ்ரம ஹரமாம் படி சமுத்ரமானது திரைக்கையாலே சேவிக்கிற ஸ்ரீ மத் த்வாரகையிலே தேவிமார் எல்லாரும் சூழச் சிங்காசனத்தே ரஸோத்தரானாய் இருந்தவனை
ஏகாசன பரிச்சேத்யனாய் இருந்து எல்லாரையும் ஏகாசனத்தே இருந்தாரைப் போலே உகப்பித்த ஆச்சர்யத்தோடே கண்டார் உளர் –

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
மது வாயில் கொண்டால் போலே மாதவன் தன் வாயமுதம்
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ யுண்டக்கால்
சிதையாரோ வுன்னோடு செல்வப் பெரும் சங்கே–7-9-எத்தனை பேரை வாய்க்காவல் இட்டால் தான் உனக்கு வயிறு வளர்க்கலாவது பதினாறாமாயிரம் பேர் இது அனுபவிப்பதாக அவசரம் பார்த்து இருக்க –

நூற்றுவரை அன்று மங்க நூற்ற நிகரில் முகில் வண்ணன் நேமியான் என்நெஞ்சம் கவர்ந்து எனை ஊழியான்-என்று துரியோதனாதிகள் மண் உண்ணும் படி மந்தரித்த கிருஷ்ணனுக்கு நெஞ்சு பறி கொடுத்தமை சொன்னதிலும் – துரி யோதனாதிகளை நிரசிக்கைக்காக அவன் எழுந்து அருளின போது அவர்கள் பிரிவாற்றாமையால் -கண்ணாஞ் சுழலை இட்டு –குரரி விலபசி த்வம் வீத நித்ரா நசேஷ ச்வபதி ஜகதி ராத்ராமீச்வர க்ரச்தபோதே வயமிவி சகி கச்சித் காட நிர்வின்ன சேதா நளின நயன ஹாசோ தார லீலேஷன ந–இத்யாதிகளாலே ப்ரலாபித்தால் போலே – நாரை அன்றில் தொடக்கமான வற்றுக்கு வெளுப்பு -விரஹ கூப்பாடு ,முதலானவை நித்ய ஸ்வாபம் என்று அறியாதே தமக்கு போலே பகவத் விரஹஜமான வைவர்ண்யாதிகளாகக் கருதி , அவற்றுக்காக தாம் நோவு பட்டு பிரலாபித்த வாயும் திரை உகளிலும்தேர்பாகனார்க்கு இவள் சிந்தை துழாய் திசைக்கின்றதே –என்று
ஆஸ்ரிதருக்காக சாரத்தியம் பண்ணினவனை அனுபவிக்கைக்கு இவள் அந்த கரணம் கலங்கி அறிவு கெடுகிறது என்று ஆஸ்ரிதருக்காக சாரத்தியம் பண்ணினவனை அனுபவிக்கைக்கு இவள்
அந்த கரணம் கலங்கி அறிவு கெடுகிறது என்று தொடங்கி வண் துவராவதி மன்னனை ஏத்துமின் -ஏத்தலும் தொழுது ஆடுமே என்று ஸ்ரீமத் த்வாரகைக்கு நிர்வாகனான அவனை மங்களாசாசனம் பண்ண இவள் நோவு பரிஹ்ருதமாம் என்று தலைக் கட்டின –தீர்ப்பாரை யாம் இனியிலும் தோன்றும் என்றபடி-

(மங்க நூற்ற வாயும்‌ தீர்ப்பாரென்னுமவற்றிலே தோன்றும்‌) ““நூற்றுவரை அன்று மங்க நூற்ற” (திருவா. 7 – 3 – 10) இத்யாதி, – துர்யோதநாதிகள்‌ மண்ணுண்ணும்படி மந்த்ரித்த க்ருஷ்ணன்‌ என்‌ நெஞ்சை அபஹரித்தான்‌ என்றும்‌, ‘“குரரி விலபஸி த்வம்‌ வீத நித்‌ரா ந ஸேஷே ஸ்வபதி ஜகதி ராத்ர்யா மீஸ்வரக்‌ ரஸ்த போதே, ! வயமிவ ஸகி, கச்சித்‌ காட நிர்விண்ண சேதா நளிந நயந ஹாஸோதார லீலே க்ஷணேந ” (பாக,.10) இத்யாதிகளால்‌ ஸ்ரீமத்‌ த்‌வாரகையில்‌ பெண்கள்‌ க்ருஷ்ண விஷயத்திலே பேசினாப் போலே *வாயுந்திரையுகளிலே நாரை அன்றில்‌ தொடக்கமானவற்றுக்கு தாவள்யாதி ஸ்வபாவங்கள்‌ நியதம்‌ என்றறியாதே அவையும்‌ தம்மைப் போல்‌ நோவு படுகிறனவாகக் கொண்டு தாம்‌ நோவு படுகையாலும்‌, *தீர்ப்பாரை யாமினியிலே ‘*தேர்ப்பாகனார்க்கிவள்‌ சிந்தை துழாய்த் திசைக்கின்றதே ” (திருவா. 4 – 6 – 1) என்று அவனுடைய ஸாரத்‌ய வேஷத்தில்‌ அகப்பட்டு இவள்‌ நெஞ்சு கலங்கினாள்‌ என்று தொடங்கி, ““’வண்டுவராபதி மன்னனை ஏத்துமின்‌” (திருவா. 4 – 6 10) என்று ஸ்ரீமத்‌ த்‌வாரகைக்கு நிர்வாஹகனானவனை மங்களா ஸாஸதம்‌ பண்ணவே இவர் வ்யாதி பரிஹ்ருதமாம்‌ என்று தலைக் கட்டுகையாலே இவர்க்கு உண்டானமை தோன்றும்‌.

நகரமும் நாடும் பிறவும் தேர்வேன் நாண் எனக்கு இல்லை என் தோழிமீர் காள்!
சிகர மணி நெடு மாட நீடு தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
மகர நெடுங்குழைக் காதன் மாயன் நூற்று வரை யன்று மங்க நூற்ற
நிகரில் முகில் வண்ணன் நேமியான் என் நெஞ்சங் கவர்ந்து எனை ஊழியானே–7-3-10—துரியோதனாதிகளை முதல் அற அழியச் செய்தவன் சிலரை அழிக்க நினைத்தாள் முதல் அற அழிக்கும் அவன் -ஆயுதம் எடுக்க ஓட்டோம் என்ன மந்திரத்தால் அழியச் செய்கை-

தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்!
ஓர்ப்பால் இவ் வொண்ணுதல் உற்ற நல் நோய் இது தேறினோம்;
போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த்
தேர்ப் பாகனார்க்கு இவள் சிந்தை துழாஅய்த் திசைக்கின்றதே
.–4-6-1–இப்படிப் பட்ட ஆஸ்ரய பாரதந்தர்யத்திலே யாயிற்று இவள் மோஹித்தது-அவனுடைய சாராத்ய வேஷம் இவள் வடிவிலே நிழல் இட்டு தொடருகின்றது இல்லையோ-இவள் சிந்தை -கடல் கலங்கிற்று என்றால் -மந்திரத்தால் என்று அறிய வேண்டாவோ இவள் அந்தக்கரணம் கலங்கி மதி கெடுகிறது கிருஷ்ணனைப் பெறுகைக்காக

உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;
நும் இச்சை சொல்லி,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!
மன்னப் படுமறை வாணனை வண் துவராபதி
மன்னனை ஏத்துமின்! ஏத்துதலும்,தொழுது ஆடுமே.–
4-6-10—இப்படி ஓலைப் புறத்தே கேட்டுப் போகாமே கண்டு அனுபவிக்கலாம் படி ஸ்ரீ மத் துவாரகைக்கு ராஜாவாகப் பிறந்தவனே-வாய் படைத்த பிரயோஜனம் பெறும்படி ஏத்துங்கோள்-அவனை ஆஸ்ரயிக்கக் கடவ நீங்களே ஷூ த்ர தேவதையின் காலிலே விழுவுதி கோள்-உங்கள் ஸ்வரூப லாபமே அன்று-அதாஸோ அபயங்கதி பவதி -என்கிறபடியே ஏத்தின சம நந்தரத்திலே ப்ரபுத்தையாய் வியாபார க்ஷமையுமாம்-இவள் உணர்ந்தாள் செய்வது தொழுதல் விக்ருதை யாதல் போலே காணும்-நீர் ஏறுண்டு மோஹித்தார்க்கு நீரே பரிஹாரமாம் போலே நோவுக்கு அடியானை கிருஷ்ணனுடைய குண கீர்த்தனமே பரிஹாரம் என்று கருத்து –

இப்படி பிரதான மகிஷி களோடும் மற்றும் பகவத் பரிக்ரஹம் உடையாரோடும் இவருக்கு சாம்யம் உண்டே ஆகிலும் – அல்லாதார் எல்லாம் இவர் ஒருவருக்கு ஒப்பாம் இத்தனை ஆகையாலே சர்வதா சாம்யம் ஜனக குல சுந்தரியான பிராட்டி யோடு என்கிறார் அடுத்து —ஆகக் கீழ்‌, ப்ரதாந மஹிஷிகளான மூவரோடும்‌ மற்றும்‌ பகவத் பரிக்‌ரஹ முடையாரோடும்‌ ஆழ்வாருக்கு ஸாம்யமுண்டென்று சொல்லிற்றாய்த்து. இவர்களெல்லாரும்‌ இவர்க்கு ஒரு புடைக்கு ஒப்பாய்‌ ஸர்வதா ஸாம்யமுள்ளது ஜநக குல ஸுந்தரியான பெரிய பிராட்டியாரோடே என்கிறார்‌-

இரான் எனில் நசவாகக் குழைத்தவன் பின் தொடர விருந்த வன் சிறையிலும் விதி தன் புணைவன் என்று ஜீவிதாதிகளால் குறைவின்றி மாயும் வகை விஷ சஸ்த்ரங்கள் தேடி வில் வலவா ஹா என்று
இரக்க மொழாக் கொடுமைகள் சங்கித்து என்னையும் ஜீவந்தீம் என்று ஆள்விட்டுச் சுடரை அடைந்து
அகலகில்லா முற்றுவமை பெருமகளோடே.–சூரணை -125-

(1–இரான் எனில் நசவாகக் குழைத்தவன் பின் தொடர விருந்த வன் சிறையிலும்–சிறை வாசம் –
அங்கு இவளே சிறையில் -இங்கு அவன் வைக்க
2–விதி தன் புணைவன் என்று–சிறை வாசத்திலும் பர உபதேசம்-ராவணன் திருந்தவில்லை – இங்கு ஊரும் நாடும் தன்னைப் போலே ஆக்கி
3–ஜீவிதாதிகளால் குறைவின்றி-அத் தலைக்கு உருப்பில்லாத ஆத்மாத்மீயங்களை உபேஷிக்கையாலும்–மால் விரும்பாத அங்கு -திருமால் விரும்பாத இவர்
4 -மாயும் வகை விஷ சஸ்த்ரங்கள் தேடி –முடியும் வகை தேடுகையாலும்
5–வில் வலவா ஹா என்று-அவன் வீரப்பாட்டைச் சொல்லிக் கூப்பிடுகையாலும்-
6 -இரக்க மொழாக் கொடுமைகள் சங்கித்து -என்கிற படி நைர்குண்ய சங்கை பண்ணுகையாலும்
7–என்னையும் ஜீவந்தீம் என்று ஆள்விட்டு -ஆற்றாமை தோற்றதூது விடுகையாலும்-
8 -சுடரை அடைந்து-அநாதியான பிரகாரதயா சேஷத்வத்தாலே – அவனோடு தாம் நித்ய சம்யுக்தராய் பேசுகையாலும்–
பிரபாவை அடைந்து என்று இருந்தால் பிராட்டி ஆழ்வார் இருவர் வார்த்தைகளும் இருக்கும் –
இங்கு முற்று உவமை என்பதால் ஒன்றையும் மட்டும் தானே சொல்ல வேண்டும்
அகலகில்லா முற்றுவமை பெருமகளோடே.–அகலகில்லேன் சீதா வாக்கியம் தானே –
இப்படிகளால் பிரிவில் தரியாமை இறே இச் சூர்ணையில் ப்ராசுர்யேன பிரதி பாதிக்கப் பட்டது -)

இரான் எனில் நசவாகக் குழைத்தவன் பின் தொடர விருந்த வன் சிறையிலும்-அதாவது-
இரான் எனில் நசவாக-அதாவது–நச சீதா த்வயா ஹீநா நஸா அஹம் அபி ராகவா முஹூர்த்தம் அபி ஜீவாவோ ஜலான் மத்ஸ்யா விவோத் த்ருத்வ –அயோத்யா -53-31– -இத்யாதி ஸ்லோகத்தின் படி
ஜலாதுத்ருமான மத்ஸ்யம் போலே விஸ்லேஷத்தில் சத்தா ஹானி பிறக்கும்படி –-மனச்வீ தத்கதஸ் தத்ய–பால –77-25- -என்று-ஜாதி குணங்கள் த்ர்வ்யத்துக்கு பிரகாரமாய் பிரிக்க ஒண்ணாதபடி இருக்குமா போலே-பிரிக்க ஒண்ணாதபடி ஒரு நீராக கலந்த சக்கரவர்த்தி திருமகன் –-உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடருத்து –நாச்சியார் -11-7–-லங்கத்வாரத் அளவும் பின் தொடர்ந்து வரும் படியாக –தனிச் சிறையில் விளப்புற்ற–திருவாய் -4-8-5- -என்கிறபடி-ஒருத்தி சிறை இருந்து ரஷிக்கும் படியே -என்று லோஹம் அடையக் கொண்டாடும் படி தேவ ஸ்திரிகள் சிறையை விடுவிக்கைக்காக பிராட்டி தனிப் பட்டு சிறை இருந்தாப் போலே –இரான் எனில் நச ஆக-அதாவது-மராமரம் எய்த மாயன் என்னுள் இரான் எனில் -பின்னை யான் ஒட்டுவேனோ –திருவாய் -1-7-6- என்று சக்கரவர்த்தி திருமகன் என் பக்கல் இரேன் என்று அகலுமாகில் பின்னை நான் தொங்குவேனோ என்று விரஹத்தில் சத்தா ஹானி பிறக்கும் படியாக –

இரானெனில்‌ ந ச ஆக என்று தொடங்கி). ‘“மராமர மெய்த மாயவன்‌ என்னுளிரானெனில்‌ பின்னை யானொட்டுவேனோ ”‘ (திருவா. 1- 7- 6) என்றும்‌, ““ந ச ஸீதா த்வயா ஹீநா ந சாஹமபி ராகவ ! மூஹூரர்த்தமபி ஜீவாவோ ஜலாந் மத்ஸ்யா விவோத்‌ த்‌ருதெள’* (ரா. ௮.) என்று சக்ரவர்த்தித் திருமகனைப் பிரியில்‌ ஜலாதுத த்‌ருதமான மத்ஸ்யம் போலே முடியும்படியான பிராட்டியைப் போலே,இவரும்‌ அவனைப் பிரியில்‌ தாம்‌ உளராகாதபடி-

உண்ணாது உறங்காது ஒலி கடலை யூடறுத்து
பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்றபேதெல்லாம்
திண்ணார் மதிள் சூழ் திருவரங்கச் செல்வனார்
எண்ணாதே நம்முடைய நன்மைகளே எண்ணுவரே–11-7–ந மாம்சம் ராகவோ புங்க்தே ந சாபி மது சேவதே-என்கிறபடியே-பார்த்து பரிந்தூட்டுமவள் போனால் -இனி யார் அவரைப் பரிந்தூட்ட –
மா மலர் மங்கை மணம் உண்டு இருந்தான் இறே-அவள் போனால் இவனுக்கு ஊண் இல்லை இறே –உறங்காது – அநித்ரஸ் சததம் ராம -என்கிறபடியே – கண் உறக்கம் அற்று ஊண் உறக்கம் அற்று
ஸூக்ரீவம் சரணம் கத –என்று கண்ட காபேயர் கால்களிலே விழுந்து-ஒலி கடலை யூடறுத்து-ஓதம் கிளர்ந்த கடலை ஊடறுத்து-கூறு அறுத்து அடைத்து – சமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்தும் அர்ஹதி -யுத்த -19-30-என்று ராஷசனுக்கு சிஷ்யராய்ப் புக்கு -அவன் சொல்லக் கடலை சரணம் புக்கு –

தளிர் நிறத்தால் குறையில்லாத் தனிச்சிறையில் விளப்புற்ற
கிளி மொழியாள் காரணமாக் கிளர் அரக்கன் நகர் எரித்த
களி மலர்த் துழாய் அலங்கல் கமழ் முடியன் கடல் ஞாலத்து
அளி மிக்கான் கவராத அறிவினால் குறையிலமே.–4-8-5—பிரபையையும் ப்ரபாவனையும் பிரித்தால் போலே பெருமாளை பிரிந்து ராக்ஷஸே மத்யத்திலே நிருத்தையாய் இருந்த படி-விளப்புற்றகிருசா மனஸ நே நச-என்று திருவடியால் பெருமாளுக்கு சொல்லப் பட்டவள்-தேவ ஸ்த்ரீகள் காலில் விலங்கு கழற்றுகைக்கு தான் சிறை இருந்தாள் என்று லோகத்தில் ப்ரஸித்தியானவள் என்றுமாம் –
கிளி மொழியாள் காரணமாக்மதுரா மதுரா லாபா -என்று அவள் பேச்சை அவன் வார்த்தை வழியே நினைத்து அவள் நிமித்தமாக-கிளர் அரக்கன் தாயையும் தமப்பனையும் சேர இருக்க ஒட்டாதே பிரித்த மிகையை யுடையவன்

பிரான் பெரு நிலம் கீண்டவன் பின்னும் விராய் மலர்த்துழாய் வேய்ந்த முடியன்
மராமரம் எய்த மாயவன் என்னுள் இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ –1-7-6—ரக்ஷணத்திலே அதிசங்கை பண்ணினவனுக்கு மழு வேந்திக் கொடுத்தும் அவன் காரியத்தை முடியச் செய்யும் வியாமோஹ அதிசயத்தை உடையவன்–இப்படி ஆஸ்ரிதர் தன் பக்கலிலே சேருகைக்கு க்ருஷி பண்ணுமவன் என் பக்கல் இரான் என்னில்-எனில் -என்கையாலே -விட சம்பாவனை இல்லை என்கை
பின்னை யான் ஒட்டுவேனோ பின்னை நான் இசைவேனோ பின்னை நான் தொங்குவனோ -என்னும் ஆச்சான் –

குழைத்தவன்-அதாவது-இலங்கை செற்றாய்—- உன்னை என்னுள்ளே குழைத்த எம் மைந்தா –திருவாய் -2-6-9-என்கிறபடி , ஏக தத்வம் என்னலாம் படி சம்ஸ்லேஷித்தவன்–பின் தொடர இருந்த வன் சிறையிலும்--அதாவது-பிரிவில் தம் ஆற்றாமை குளப்படியாம் படி கடல் போன்ற ஆற்றாமையோடே விண்ணுலகம் தர விரைந்து – தாம் இருந்த இடத்து ஏற வரும்படி –-வன் சிறையில் அவன் வைக்கில் -திருவாய் -1-4-1-என்கிறபடியே – சம்சாரிகள் சிறையை விடுகிக்கைக்காக அவன் சம்சாரத்தில் இருக்க இருந்த வன் சிறையிலும் –

*இலங்கை செற்றாய்‌ உன்னை என்னுள்ளே குழைத்த வெம் மைந்தா”” (திருவா. 2 – 6 – 9) என்று இவரோடு ஏக தத்த்வ மென்னலாம்படி ஸம்ஸ்லேஷித்த சக்ரவர்த்தித் திருமகன்‌ லங்கா த்‌வாரத்தளவும்‌ அவளைத் தேடிப் பின்‌ தொடர்ந்தாப் போலே *““எதிர் சூழல் புக்கு’ (திருவா. 2 – 7 – 6) என்று இவர் பிறந்த ஜந்மங்கள் தோறும்‌ தானும்‌ பின் தொடரும்படி அவள்‌ ராவண பவநத்திலே சிறை யிருந்‌தாப் போலே இவரும்‌ “வன்சிறையில்‌ அவன் வைக்கில்‌’” (திருவா. 1 – 4 – 1) என்று ஸம்ஸாரத்திலே சிறையிருந்த விடத்தில்‌-

எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் இலங்கை செற்றாய் மராமரம்
பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா
கொந்தார் தண் அம் துழாயினாய் அமுதே உன்னை என்னுள்ளே குழைந்த வெம்
மைந்தா
வானேறே இனி எங்குப் போகின்றதே –2-6-9—சம்பந்த ஞான விரோதி வர்க்கம் இலங்கை பட்டது பட்டது-மஹா ராஜரை இசைவித்தால் போலே யாயிற்று இவரை இசைவித்தது –-கலக்கிற இடத்தில் -ஏக தத்வம் என்னலாம் படி யாயிற்று கலந்தது-என்னோடே கலக்கப் பெற்ற இத்தாலே நவீக்ருத யுவன ஸ்வ பாவன் ஆனவனே-அஸ் ப்ருஷ்ட சம்சார கந்தரை அனுபவிப்பித்தால் போலே யாயிற்று இவரை அனுபவிப்பித்தது-நித்ய ஸூரிகளை விடில் அன்றோ என்னை விடலாவது -போகிலும் கூடப் போக வேண்டும்படி யன்றோ கலந்தது –

மது சூதனை யன்றி மற்றிலேன் எத்தாலும் கருமமின்றி
துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே –2-7-6—நான் இழவுக்கு யத்னம் பண்ணிப் போந்த காலம் எல்லாம் என்னைப் பெறுகைக்கு அவன் கிருஷி பண்ணிப் போருகையாலே பெற்றேன்
எதிரான சூழல் -என்னை அகப்படுத்திக் கொள்ளுகைக்கு ஈடான திரு வவதாரங்கள்-எனக்கும் பிறருக்குமாக அன்றிக்கே எனக்கே அருள்கள் பண்ணும்படி-சர்வேஸ்வரனாய் வைத்து ஸ்ரீ வாமனனாய் சகல லோகங்களையும் திருவடியின் கீழே இட்டுக் கொண்டவனை – அது பரதசை என்னும்படி எனக்கு என்னவே விதி சூழ்ந்தது-தம்மை விஷயீ கரித்து அல்லது அவனை இருக்க ஒட்டாமையாலே அவனுடைய க்ருபா குணத்தை விதி என்கிறது -ச தம் நிபதிதம் 

அஞ்சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின்
அஞ்சிறைய சேவலுமாய் யாவா என்று எனக்கு அருளி
வெஞ்சிறைப்புள் உயர்த்தார்க்கு என் விடுதூதாய்ச் சென்றக்கால்
வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ 
–1-4-1–பிரணயிநி பாடு நின்றும் வந்தவர்களை சிறையிடுவான் ஒரு மூர்க்கனும் உண்டோ-இனி சிறை யாகிறது -இவர்கள் வார்த்தையை அநாதரிக்கை-இவர்களைக் கண்ட போதே துணுக் என்று –மதுரா மதுராலாபா கிமாஹ மமபாமி நீ -என்னாமை இறே-நைவ தம்சான் நமசகான் -என்று ஆதரியாது ஒழியுமோ-வைக்கில்
அநாதரிக்க பிரசங்கம் இல்லை -சிரஸா வஹிக்கும் என்று கருத்து –அங்கனே யாகில் அது உங்கள் பேறு அன்றோ – பரார்த்தமாகச் சிறை இருக்கை கிடப்பது ஒன்றோ -என்று இருக்கிறாள்-தேவ ஸ்த்ரீகளுக்காக தான் சிறை இருந்தவள் இறே –

விதிதன் புணைவன் என்று-அதாவது —அச் சிறை இருப்பிலும் அவள் -விமுகனான ராவணனுக்கு –
விதிதஸ் சஹ தர்மஞ்ச்ஞஸ் சரணாகத வத்சலா தேன மைத்ரீ பவது தே யது ஜீவிதுமிச்சசி ஸூந்தர -21–20–என்று நீ பிராணனோடு இருக்க வேண்டி இருந்தாய் ஆகில் -சரணாகத தர்மஜ்ஞருமாய் -சரணாகத வத்சலருமாய் – பிரசித்தராய் இருக்கும் பெருமாளோடே உறவு பண் என்று ஹிதோ உபதேசம் பண்ணினாப் போலே —புணைவன் என்று-அதாவது – இவரும் விமுகரான சம்சாரிகளுக்கு –புணைவன் பிறவி கடல் நீந்துவார்க்கே –திருவாய் -2-8-1–என்று சம்சார சமுத்திர திதீஷர்களுக்கு தன் நிஸ்தரண உபாயம் அவன் என்று ஹித உபதேசம் பண்ணுகையாலும்-

ப்ரதிகூலனான ராவணனுக்கு “‘விதிதஸ்ஸ ஹி தர்மஜ்ஞஸ் சரணாகத வத்ஸல:। தேந மைத்ரீ பவது தே யதி ஜீவிதுமிச்சஸி”’ (ரா. ஸு. 21 – 20) என்று ஹிதம்‌ சொன்னாப் போலே இவரும்‌ ப்ரதிகூலரான ஸம்ஸாரிகளுக்கு புணைவன்‌ பிறவிக் கடல்‌ நீந்துவார்க்கே’‘ (திருவா. 2 – 8 – 1) என்று ஹிதமருளிச்‌ செய்கையாலும்‌.-

அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்
புணர்வது இருவரவர் முதலும் தானே
இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே –2-8-1—சம்சாரம் ஆகிறது ஒரு கடல் -அது நம்மால் கடக்க அரிது -ஒரு சர்வ சக்தியைப் பற்றி கடக்க வேணும் -என்று நினைப்பார்க்கு ப்ரதி பூவாய்த் தலைக் கட்டிக் கொடுக்கும் –சர்வ பர நிர்வாஹகன் இறே– ப்ரதி பூ-விஷ்ணு போதம் என்கையாலே தெப்பம் என்னவுமாம் 

ஜீவிதாதிகளால் குறைவின்றி –அதாவது-அவள்-நஹிமே ஜீவிதே நார்த்தோ நைவார்த்தைர் நச பூஷணை வசந்த்யா ராஷசீ மத்யே விநா ராமம் மஹாரதம் –ஸூ ந்தர –26-5- என்று பெருமாளைப் பிரிந்து ராஷசிகள் நடுவில் இருக்கிற எனக்கு பிராணாதிகளால் என்ன பிரயோஜனம் என்று
தத் விநியோகத்துக்கு புறம்பானவற்றை உபேஷித்தாப் போலே இவரும் –-மாறாளன் கவராத மணிமாமை குறைவிலம்-4-8-1–என்று தொடங்கி அத் தலைக்கு உருப்பில்லாத ஆத்மாத்மீயங்களை உபேஷிக்கையாலும்-

ஜீவிதாதிகளால்‌ குறைவின்றி)“ந ஹி மே ஜீவிதே நார்த்தோ நை வார்த்தைர்‌ ந ச பூஷணை??’ (ரா. ஸு.)என்று மஹா ரதரான சக்ரவர்த்தித் திருமகனை யொழிய ராக்ஷஸிகள் நடுவே இருக்கிற எனக்கு என்‌ ஆத்மாத்மீயங்களால்‌ என்ன ப்ரயோஜநம்‌ உண்டென்று பிராட்டி அவற்றை உபேக்ஷித்தாப் போலே ”மாறாளன்‌ கவராத மணிமாமை குறைவிலமே”” (திருவா. 4 – 8 – 1) என்று தொடங்கி, ”உயிரினால்‌ குறைவிலமே””, (திருவா. 4 – 8- 10), “உடம்பினால்‌ குறைவிலமே”‘ (திருவா, 4 – 8 – 9 9) என்று இவரும்‌, அவனுக்குறுப்பல்லாத நானும்‌ என்னுடைமையும்‌ வேண்டா என்று ஆத்மாத்மீயங்களை உபேக்ஷிக்கையாலும்‌.-

ஏறு ஆளும் இறையோனும், திசைமுகனும், திருமகளும்,
கூறு ஆளும் தனி உடம்பன், குலம் குலமா அசுரர்களை
நீறு ஆகும் படியாக நிருமித்து, படை தொட்ட
மாறாளன் கவராத மணிமாமை குறைஇலமே.–4-8-1--அவனுகுக்காக கண்ட என்னுடைய ஆத்மாத்மீயங்கள் அவனுக்கு ஆதரணீயம் அன்றாகில் எனக்கும் அவற்றால் கார்யம் இல்லை என்று
அவற்றால் தாம் நசை அற்ற படியை அந்யாபதேசத்தால் அருளிச் செய்கிறார்-ஆத்மாத்மீயங்களை அவன் விரும்பின வழியாலே விரும்ப வாயிற்று பிராப்தம் –அல்லது தான் உகந்த வழியாலே விரும்புமது தேஹாத்ம அபிமானத்தோடே ஒக்கும் அத்தனை –முந்துற ஆத்மாவை வேண்டேன் என்னாதே-உடைமையை வேண்டேன் -என்றது -இவள் தன்னிலும் இவள் உடைமையை அவன் விரும்புகையாலே அவன் விரும்புன அடைவே உபேக்ஷிக்கிறாள்-என்னுடைமையை வேண்டேன் என்று திரளச் சொல்லாதே வ்யக்தி தோறும் வேண்டேன் என்கிறது என் என்னில் – அவன் வ்யக்தி தோறும் விரும்புகையாலே –நதேஹம் ந பிராணன் -நஹிமே ஜீவிதே நார்த்த-ந தேவ லோகா க்ரமணம்

மாயும் வகை விஷ சஸ்த்ரங்களை தேடி-அதாவது – , அவள் ஆற்றாமையின் அதிசயத்தாலே –
விஷஸ்ய தாதா நஹி மேஸ்தி கச்சித் சஸ்த்ரஸ்ய வா வேஸ்மநி ராஷசஸ்ய -ஸூந்தர –28-16-என்று
உயிர்க் கொலையாக்கி வைத்தவனுடைய க்ருஹத்தில் நற் கொலை ஆக்குவது இத்தனை விஷம் தருவார் இல்லையோ ?-விஷம் போலே சிறிது போது நின்று கொல்லுகை அன்றிக்கே , அப்போதே முடிப்பதொரு சஸ்த்ரம் தருவார் இல்லையோ ?-என்று முடியும் வகை தேடினாப் போலே இவரும் –மாயும் வகை அறியேன்–திருவாய் -5-4-3-என்று முடியும் வகை தேடுகையாலும் —

(மாயும்‌ வகை விஷ ஸஸ்த்ரங்கள் தேடி) “மாயும்‌ வகை யறியேன்‌ வல் வினையேன்‌”? (திருவா-4 – 8 – 1) என்றும்‌, ‘“விஷஸ்ய ததா ந ஹி மேஸ்தி கஸ்சித்‌ ஈஸ்த்ரஸ்ய வா வேஸ்மநி ராக்ஷஸஸ்ய ”” (ரா.ஸு.) என்று உயிர்க் கொலையாக்கி வைத்த ராவண க்‌ருஹத்திலே நற் கொலையாக்குவ தித்தனை விஷம்‌ தருவாரில்லையோ? விஷம் போலே நின்று கொல்லுகை யன்றிக்கே அப்போதே முடிப்பதொரு ஸஸ்த்ரம்‌ தருவாரில்லையோ? என்று பிராட்டி முடியும்‌ வகை தேடினாப் போலே இவரும்‌ மாயும்‌ வகை தேடுகையாலும்‌

நீயும் பாங்கல்லை காண் நெஞ்சமே! நீளிரவும்
ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்
காயும் கடும் சிலை என் காகுத்தன் வாரானால்
மாயும் வகை அறியேன் வல் வினையேன் பெண் பிறந்தே.–5-4-3—அபிமதர் வாரா விட்டால் முடிகை இறே பிரியம் அதுக்கு விரகு அறிகிறிலன் –காலோ ஹி துரதிக்ரம -என்றாள் இறே பிராட்டி-வல் வினையேன் –
அவன் வாராமைக்கு அடியான பாபத்தை பண்ணினேன் -முடியவும் அரிதான பாபத்தை பண்ணினேன் -பாபம் மரண ஹேது வன்றிக்கே ஜீவிக்கைக்கு ஹேது வாய் இருக்குமது யாகாதே -ஜீவிக்கை தேட்டமான போது அரிதாம் -முடிகையும் தேட்டமான போது அரிதாம் -அநிஷ்டாவஹம் பாபம் இத்தனை இறே-பெண் பிறந்தே –முடிகையும் ஜீவிக்கையும் ஸ்வ அதீனம் இல்லாத ஜன்மத்தே பிறந்தேன் -எல்லா வளவிலும் அவனை நோக்க வேண்டும் ஜென்மம் இறே — முடியும் போது ஆண் பிள்ளையுமாய் ஸ்வ தந்திரனுமான சக்ரவர்த்தி போல்வார் வேணும் ஆகாதே –

ஹா வில் வலவா என்று –அதாவது அவள் அதிமாத்ர துக்கிதையாய் ரஷகரான பெருமாள் உடைய சௌர்யாதிகளை நினைத்து –ஹா ராமா–ஸூந்தர -28-8- -என்று கூப்பிட்டாப் போலே -இவரும் –
புணரா நின்ற மரம் எழ அன்று எய்த ஒரு வில் வல வா வோ-6-10-5- -என்று அவன் வீரப்பாட்டைச் சொல்லிக் கூப்பிடுகையாலும்-

(வில் வலவா ஹா என்று) ”புணரா நின்ற மரமேழன்றெய்த ஒரு வில் வலவாவவோ”? (திருவா. 6 – 10 – 5) என்று – “ஹா ராம ஹா லக்ஷ்மண ஹா ஸுமித்ரே ஹா ராம மாதஸ் ஸஹ மே ஜநந்யா । ஹா ராம ஸத்ய வ்ரத தீர்க்க, பாஹோ ஹா பூர்ண சந்த்‌ர ப்ரதிமாந வக்தர”’ (ரா.ஸு.), “ஹா ஜிவ லோகஸ்ய ஹித ப்ரியஸ்ய வத்‌யம்‌ ந மாம்‌ வேத்ஸி ஹி ராக்ஷஸாநாம்‌”” (ரா. ஸு.) என்று பிராட்டி பெருமாளுடைய சவ்ர்யாதிகளைச்‌ சொல்லிக்‌ கூப்பிட்டாப் போலே இவரும்‌ கூப்பிடுகையாலும்‌.

புணரா நின்ற மரமேழ் அன் றெய்த ஒருவில் வலவாவோ!
புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ!
திணரார் மேக மெனக்களிறு சேரும் திருவேங்கடத்தானே!
திணரார் சார்ங்கத் துனபாதம் சேர்வ தடியேன் எந்நாளே.–6-10-5—புணர்ந்து நின்ற -அம்புக்கு நேரோட ஒண்ணாத படி திரண்டு நின்ற-மரமேழ் அன் றெய்த -ரக்ஷணத்தில் சங்கை பண்ணின வன்று ஏழையும் ஓர் அம்பால் அழித்த-அதி சங்கை பண்ண மழு வேந்திக் கொடுத்து ரஷித்தவன் கிடீர் ஆசைப்பட்ட என்னை அநாதரிக்கிறான் -அதி சங்கையைப் போக்கி பணி கொண்டவன் கிடீர் இரந்த என்னை பணி கொள்ளாது ஒழிகிறான்- ஒரு வில் வலவாவோ!ஏக வீரனே -ஓ என்று விஷாத அதிசய ஸூ சகம் –

இரக்கம் எழா கொடுமைகள் சங்கித்து – அதாவது-அவள் தன் ஆற்றாமைக்கு உதவ வந்து முகம் காட்டாமையாலே ,-க்யாத ப்ராஞ்ச க்ருதஞ்சச் சசா னுக்ரோசச ராகவ ஸத் வ்ருத்தோ நிரநுக்ரோசாஸ்
சங்கே மத் பாக்ய ஸங்க்ஷ்யாத்
ஸூந்தர –26-13- -என்று பெருமாளை நிர்க் குணராக சங்கித்தாப் போலே -இவரும்-இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன் அரக்கன் இலங்கை செற்றீர்க்கே –திருவாய் -2-4-3–
வாழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனே ! இலங்கை குழா நெடும் மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே –திருவிருத்தம் –36-என்று இத் தசையில் கிருபை பண்ணாமல் இருக்கிற கொடுமையாலே –அறிவொன்றும் சங்கிப்பன்–திருவாய் -8-1-7–என்கிற படி நைர்குண்ய சங்கை பண்ணுகையாலும் ..

இரக்கமெழாக் கொடுமைகள்‌ ஸங்கித்து) ”க்‌,யாத: ப்ராஜ்ஞ க்ருதஜ்ஞஸ்ச ஸாநுக்ரோஸஸ் ச ராகவ? | ஸத்‌ வ்ருத்தோ நிரதுக்‌ரோ ஸஸ்ஸங்கே மத்‌ பாக்‌ய ஸங்ஷயாத்‌” (ரா.ஸு.]என்று பெருமாளை நிர்க்‌ருணாராக ஸங்கியா நின்றேன்‌, என்னுடைய பாக்‌ய ஹாநியாலே என்று பிராட்டி அப்படி ஸங்கித்தாப்போலே, இவரும்‌ ”இரக்கமெழீரிதற்கென்செய்கே ன்‌” (திருவா. 2 ௨4 – 3) என்றும்‌, ‘“இலங்கைக் குழா நெடு மாடம்‌ இடித்த பிரானார்‌ கொடுமைகளே?”? (திருவிரு. 36) என்றும்‌, ”அறிவொன்றும்‌ சங்கிப்பன் வினையேன்‌ ‘‘ (திருவா. 9 – 1 – 4) என்றும்‌ சொல்லுகிறபடியே அவரை நிர்க்ருணராக ஸங்கிக்கையாலும்‌,

இரக்க மனத்தோடு எரியணை
அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள்
இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன்
அரக்கன் இலங்கை செற்றீருக்கே
–2-4-3––இரக்கம் உடையீர் ஆகிறிலீர் – பிரணயித்தவம் குடி போனால் வழி போக்கருக்கு உண்டான அம்சமும் போக வேணுமோ -இப்போது உதவாமையாலே இரக்கம் இல்லை என்று இருக்கிறாள் –இதற்கு என் செய்கேன்- இவளை உருக்காது ஒழிய பண்ணவோ-உம்மை இரங்கப் பண்ணவோ-அரக்கன் இலங்கை செற்றீருக்கே-உமக்கு இரக்கம் இன்றிக்கே ஒழிந்தால் இவள் இரங்குவதை ஒன்றைச் செய்து வைக்க வேணுமோ-ஒரு பிரணியி நிக்கு உதவினவன் நமக்கு உதவானோ என்று ஈடுபட நின்றாள்-புழு குறித்தது எழுத்து ஆனால் போலே ஓன்று வாய்த்தத்தைக் கொண்டு அந்யார்த்தம் என்று இராதே நோவு படுகிறாள் – அரக்கன் இலங்கை செற்றீருக்கே-இவள் இரக்க மனத்தோடு -எரியணை-அரக்கும் மெழுகும் ஒக்கும்-நீர் இரக்கம் எழீர் -நான் இதற்கு என் செய்கேன் –

துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தாரது பெயரா
எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும் ஈங்கு இவளோ
வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ இலங்கைக்
குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே
 –36––ஒருத்திக்காக கடலை யடைத்து- இலங்கையை ராமன் என்றும் லஷ்மணன் என்றும் எழுத்து வெட்டின அம்புகளை புக விட்டு குட்டிச் சுவரும் மட்டைத் தெங்குமாக்கி மூலையடி போகப் பண்ணின இந்த உபகாரகனுடைய இந்த நீர்மை எல்லாம் எங்கே குடி போயிற்றோ -என்று எம்பார் அருளிச் செய்தார் –இதுவும் அழகியது-ஒன்றாய் உண்டாய் இருக்கலாகாது என்று அஸூயையாலே அழித்தான் அத்தனை காண் –ஒருத்திக்காக உதவினன் அல்லன் காண் -என்பர் திருமலை நம்பி –

இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதோ நீ யின்னே யானால்
சிறந்த நின் தன்மை யது விது வுது வென்று அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்
கறந்த பால் நெய்யே ! நெய்யின் சுவையே ! கடலினுளமுதமே !அமுதிற்
பிறந்த இன் சுவையே ! சுவையது பயனே பின்னை தோள் மணந்த பேராயா !–8-1-7–சரீரகதமான துக்கம் ஆத்மாவுக்கு ஆனால் போலே எல்லாருடைய துக்கங்களும் பிரகாரியான உன்னது என்றும் -சம்பந்த ஞானம் ஒன்றுமே யாயிற்று எனக்கு உஜ்ஜீவன ஹேதுவாக நினைத்து இருப்பது -அது ஒன்றிலும் அதி சங்கை பண்ணா நின்றேன் –

என்னையும் ஜீவந்தீம் என்று ஆள் விட்டு –அதாவது – அவள்– ஜீவந்தீம் மாம் எதா ராமஸ் சம்பாவயதி கீர்த்திமான் தத்த்வயா ஹனுமன் வாச்யோ வாசா தர்ம மவாப்நுஹி—ஸூந்தர -39-10-என்று
சத்தையோடு கிடக்கிற என்னை இச்சத்தை போவதற்கு முன்னே யாதொருபடி பெருமாள் வந்து
நோக்கிக் கொள்வார் அப்படி அவருக்கு விண்ணப்பம் செய் என்று தூது விட்டாப் போலே -இவரும் –
ஏறு சேவகனாருக்கு என்னையும் உளள் என்மின்களே -6-1-10-என்று என் சத்தை கிடந்தமையை அவனுக்கு அறிவியுங்கோள் -என்று ஆற்றாமை தோற்ற தூது விடுகையாலும்-

(என்னையும்‌ ஜீவந்திமென்று ஆள்விட்டு) ”ஜீவந்திம்‌ மாம்‌ யதா ராமஸ் ஸம்பா வயதி கீரத்திமாந்‌ | தத்த்வயா ஹநுமந்‌ வாச்யோ வாசா தர்மமவாப்றுஹி’” (ரா.ஸு.) என்று தம்முடைய ரக்ஷ்ய வர்க்க,த்திலே நானுமொருத்தி உளேனாகப் பெருமாளுக்கு விண்ணப்பம்‌ செய்‌ என்று பிராட்டி ஆள்விட்டாப் போலே, இவரும்‌ ‘“மாறில் போரரக்கன்‌ மதிள்‌ நீறெழச் செற்றுகந்த ஏறு சேவகனார்க் கென்னை யுமுளளென்மின்கள்‌’” (திருவா. 6 1 – 10) என்று ஆர்த்த ரக்ஷணத்திலே தீஷித்தவர்க்கு ஆர்த்தரிலே நானும்‌ ஒரு ஆர்த்தை யுளேனாகச்‌ சொல்லுங்கோள்‌ என்று பிராட்டியைப் போலே சதுஷ்பாத்தா யிருப்ப தொன்றைத் தூதுவிடுகை யன்றிக்கே ஷட் பத,ங்களாய்‌, பக்ஷ பாதத்தை உடையனவாய்‌, ஸாகா ஸஞ்சாரிகளாய்‌, மதுகர வ்ருத்திகளுமாய்‌, அத ஏவ ஸாரக்‌ராஹிகளாயிருப்பார்‌ பலரையும்‌ தூது விடுகையாலும்‌.

வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்!
தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திருவண்வண்டூர்
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே.–6-1-10-–எதிர் இல்லாத போரை ராவணனையும் அவன் அரணாக இட்ட மதிலையும் துகளாகச் செற்று –-ருஷிகள் குடியிறுப்பு பெற்றோம் -பிராட்டி உடன் கூடப் பெற்றோம் இலங்கை விபீஷண விஷயமாகப் பெற்றோம் என்று உகந்த-எங்கும் மேற்பட்ட ஆண் பிள்ளை தனத்தை யுடையவர்க்கு -ரஞ்ச நீ யஸ்ய விக்ரமை -என்று எதிரிகள் மேலிட்ட வீரம் –ரதசர்யா ஸூ சம்மத -என்று வீரர்கள் கொண்டாடின வீரம் – உம்முடைய ரஷ்ய வர்க்கத்தில் இன்னும் ஒருத்தி நோவுபடா நின்றாள் என்னுங்கோள் –

சுடரை அடைந்து – அதாவது – அவள்- அநந்ய ராகவேணாஹம் பாஸ்கரேண ப்ராயாத –ஸூந்தர -21-15-என்று ஆதித்யனோடு பிரபை போலே நான் பெருமாளோடு அனந்யையாய் இருப்பன் என்றார் போலே –இவரும் – அரக்கியை மூக்கு ஈர்ந்தாயை –சுடரை–அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே -திருவாய் -2-3-6–என்று அநாதியான பிரகாரதயா சேஷத்வத்தாலே – அவனோடு தாம் நித்ய சம்யுக்தராய் பேசுகையாலும்–

(சுடரை யடைந்து) “ அநந்யா ராகவேணாம்‌ பாஸ்கரேணே ப்ரபாயதா” (ரா.ஸ. 21 – 15) என்று பிராட்டி தன்னை அநந்யையாகப்‌ பேசினாப் போலே, இவரும்‌ “அரக்கியை மூக்கீர்ந்தாயை சுடரை – அடியே னடைந்தேன்‌ முதல் முன்னமே”’ (திருவா. 2 – 3 -6) என்று தம்மை அநந்யார்ஹமாகப்‌ பேசுகையாலும்‌-

சேர்ந்தார் தீ வினைகட்கு அரு நஞ்சைத் திண் மதியைத்
தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாதவருயிரை
சோர்ந்தே போகல் கொடாச் சுடரை அரக்கியை மூக்கு
ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதன் முன்னமே –2
-3-6—சூர்ப்பணகையை அழித்தால் போலே அழித்துக் கொடுக்க வல்ல உன்னை–உனக்கு சேஷபூதமான ஸ்வரூபத்தை யுடைய நான் -முதலுக்கு முன்னே அடைந்தேன் அல்லவோ –மயர்வற மதிநலம் அருளுவதற்கு முன்னே பிராப்தி உண்டு அல்லவோ என்று கருத்து –

அகலகில்லா-அதாவது – அவள்-அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா -திருவாய் -6-10-10-என்கிறபடியே உன்னை ஷண காலமும் அகல சக்தை அல்லேன் என்னுமா போலே -இவரும் – அடியேன் உனது பாத கமலம் அகலகில்லேன் இறையும் -6-10-9-என்று உன்னை ஷண காலமும் பிரிய சக்தன் அல்லேன் என்கையாலும் —

(அகலகில்லா)’அகலகில்லலே னிறையுமென்றலர்மேல் மங்கை யுறை மார்பா”‘ (திருவா. 6 – 10 – 10) என்று பெரிய பிராட்டியார்‌ அவனுடைய திருமார்வைப் பறறி அகல ஸக்தை யல்லே னென்னுமாப் போலே, “அடியேனுனபாத மகலகில்லேன்‌” (திருவா. 6 – 10 -9) என்று இவரும்‌ அவன் திருவடிகளைப் பற்றி அகல ஸக்தனல்லேனென்கையாலும்‌–

அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன் றில்லா அடியேன் உன் னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10-

வந்தாய் போலே வாராதாய்! வாராதாய்போல் வருவானே!
செந்தாமரைக்கட் செங்கனிவாய் நாற்றோ ளமுதே! எனதுயிரே!
சிந்தா மணிகள் பகரல்லைப் பகல்செய் திரு வேங்கடத்தானே!
அந்தோ அடியேன் உனபாதம் அகல கில்லேன் இறையுமே.–6-10-9-–ஆற்றாமையும் அபேக்ஷையும் எனக்கே பரமாவதே-அடியேன் -ஸ்வ ரக்ஷணத்தில் பிராப்தி இல்லாத பாரதந்தர்யத்தை யுடைய நான்
உன பாதம் அகல கில்லேன் இறையுமே.–நிரதிசய போக்யமான உன் திருவடிகளை க்ஷண காலமும் அகல ஷமன் ஆகிறிலேன்-

முற்றுவமை பெருமகளோடே –அதாவது – இவருக்கு சர்வதா சாதுர்சயம்-பெருமைகள் பேதை மங்கை–பெரிய திருமொழி -6-5-5–என்கிற பெரிய பிராட்டியாரோடே– என்ற படி —இரான் எனில் நசவாக -தொடங்கி-அகலகில்லா -என்று தலைக் கட்டுகையாலும் – ஜீவிதாதிகளால் குறைவருதி முதலாக ஆள்விடுகை ஈறாக நடுச் சொன்னவையும் விரஹ துக்க அசஹத்வ கார்யங்கள் ஆகையாலும் ,
பிரிவில் தரியாமை இறே இச் சூர்ணையில் ப்ராசுர்யேன பிரதி பாதிக்கப் பட்டது 

முற்றுவமை *பெரு மகள் பேதை மங்கை தன்னோடே என்கிறார்‌. அவள்‌ மார்வைப் பற்றி அகலகில்லேனென்னும்‌; இவர்‌ தாளைப் பற்றி அகலகில்லேனென்பர்‌. இதுவே இருவர்க்கும்‌ வாசி. ஆனாலும்‌ அவளைப் பற்ற இவர்க்குக்‌ கால் கூறு ஏற்றமுண்டிறே –

கருமகள் இலங்கையாட்டி பிலம் கொள் வாய் திறந்து தன் மேல்
வருமவள் செவியும் மூக்கும் வாளினால் தடித்த வெந்தை
பெருமகள் பேதை மங்கை தன்னொடும் பிரிவிலாத
திருமகள்
மருவு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-5—நிருபாதிக ஸ்த்ரீத்வத்தை உடையவள் -பெருமகள்–பிறர் குற்றம் அறிகைக்கு அறிவு இல்லாதபடி இருக்கிறவள் -பேதை -மங்கை-ஸ்ரீ பூமிப் பிராட்டியை சொன்னபடி (வஞ்சப் புகழ்ச்சி ) அகலகில்லேன் இறையும் -என்கிறபடியே ஒருகாலும் பிரியக் கடவள் அன்றிக்கே இருக்கிற-பெரிய பிராட்டியார்-ஸ்ரீ பூமிப் பிராட்டியாரும் பெரிய பிராட்டியாரும் நித்ய வாசம் பண்ணா நின்றுள்ள திரு நாங்கூர்-

இப்படி பிராட்டியோபாதி பிரியில் தரியாமைக்கு இவர் ஒருவருமேயோ ? பின்னையும் உண்டோ என்னும் ஆகாங்ஷையில் அருளிச் செய்கிறார் மேல் —இனிமேல்‌, மற்றும்‌ பகவத் ப்ரத்யாஸத்தியை யுடையரான லக்ஷ்மண-பரத-ஸத்ருக்‌ந-தஸரத,-யஸோதா – ப்ரஹ்லாத-விபிஷண-மாருதி அர்ஜுநன்‌ என்கிற இவர்களோடு ஸாம்யமுண்டென்கிறார்‌.-

பிரியில் இலேனுக்கு இளம் கோவும் அக் குளத்தில் மீன் இறே–சூரணை -126-

அதாவது-நிருபாதிக சேஷியானவனை பிரியில் –நின்னால் இலேன் காண்–2-3-7- என்று இலர் ஆகைக்கு –நேர் இழையும் இளம் கோவும் பின்பு போக -பெருமாள் -9-2–என்ற படி பிராட்டியோபாதி பின் தொடர்ந்து போன இளைய பெருமாளும் -நிறுத்தி போவதாகப் பெருமாள் அருளிச் செய்த போது –-நச சீதா த்வயா ஹீநா நஸா அஹம் அபி ராகவா முஹூர்த்தம் அபி ஜீவாவோ ஜலான் மத்ஸ்யா விவோத் த்ருத்வ –அயோத்யா -53-31- -என்கையாலே அந்த ஜலத்தில் மத்ஸ்யம் இறே என்கை–இத்தால் பிராட்டியை போலே -பிரியில் முடிகைக்கு இளைய பெருமாளும் இவரும் ஒக்கும் என்றது ஆய்த்து–
(ப்ராசங்கிகமான சூர்ணிகை இது -அதனால் இவரும் இளைய பெருமாளும் என்று வியாக்யானம் –
மேலே பலருடன்–தம்பிகள் மூவர் -நெருங்கிய பக்தர் ஆறு பெயர் – இவர்களுடன் சாம்யமும் உத்கர்ஷமும் அருளிச் செய்யப் போகிறார்-பக்தியின் தன்மைகளை சொல்லி இவருடைய சஹஜ பக்திக்கு மெருகூட்டுகிறார் இவற்றால் )

(பிரியிலிலேனுக்கு) அவனைப் பிரியுமளவில்‌ ‘‘நின்னலாலிலேன்‌ காண்‌”” (திருவா. 2 – 3 – 7) என்று இவரைப் போலே ஸத்தை அழிகைக்கு (இளங்கோவும்‌) “*நேரிழையுமிளங்கோவும்‌’‘ (பெருமா.தி. 9 – 2) என்றும்‌, “ந சாஹமபி ராகவ”’ (ரா.அ.53-31) என்று – பிராட்டியோ டொக்கத்‌ தம்மை ஏக ப்ரக்ருதியாகச்‌ சொன்ன இளைய பெருமாளும்‌. (அக் குளத்தில்‌ மீனிறே) கீழ்‌ ப்ரஸ்துதமான ஜலாந்‌ மத்ஸ்யமிறே.-இத்தால்‌ அவனைப் பிரியில்‌ தரியாமைக்குப்‌ பிராட்டியும்‌ இளைய பெருமாளும்‌ இவருமொக்குமென்றபடி. இத்தால்‌ இளைய பெருமாள் ஸாம்யம்-

முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே
பன்னலார் பயிலும் பரனே பவித்திரனே
கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா
நின்னலால் இலேன் காண் என்னை நீ குறிக்கொள்ளே–2-3-7--உன்னை ஒழிய ரக்ஷகரை உடையேன் அல்லேன் என்னுதல்-உன்னை ஒழிய தரிக்க மாட்டேன் என்னுதல்-என்னை –-வை தர்மயம் நேஹா வித்யதே –என்று தம்மைக் காட்டுகிறார்-நீ குறிக்கொள்ளே–திரு உள்ளம் பற்ற வேணும் –

வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இரு நிலத்தை வேண்டாதே விரைந்து ,வென்றி
மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து மா ஒழிந்து வானமே மேவி
நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும் இளம் கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ! எம்பெருமான்! என் செய்கேனே
?– 9-2–நீர் போய்ப் புக்காலும் புகுகைக்கு தகாதவர்களை கூடக் கொண்டு-கால் நடை நடந்து அறியாத நீர் இவர்களையும் கூடக் கொண்டு பொல்லாத காட்டிலே போனீர் – என்னாயனே நான் என் செய்கேன் –

இனிமேல் பகவத அநந்யராய் சகஜ பக்திகராய் இருக்கும் லஷ்மண பரத சத்ருக்நர்கள் படியும் –
பகவத் ப்ரத்யா சன்னராய் தத் பக்தி யுக்தரான –தசரத- யசோதா -பிரகலாத -விபீஷண-மாருதி -பார்த்தன் படிகளும் – இவர் பக்கல் உண்டு என்னும் அத்தை -தனித் தனியே அடைவே தர்சிப்பிக்கிறார் திருஷ்ந்த தார்ஷ்டாங்கள் இரண்டுக்கும் தனித் தனியே வாசகம் இடாதே இரண்டும் ஒரு சந்தர்ப்பத்திலே பலிக்கும் படி வாக்யத்தை சுருக்கி அருளிச் செய்கையாலே ,த்ருஷ்டாந்த்தத்தில் ஆதல்-தார்ஷ்டாந்திகத்தில் ஆதல் -வசனம் இல்லாதவற்றுக்கு பிரதிகோடிக்கு அனுகுணமாகக் கூட்டி நிர்வகிக்கக் கடவது ..இந்த ந்யாயம் இப் பிரபந்தத்தில் இப்படி வந்த ஸ்தலங்களுக்கு எல்லாம் ஒக்கும்-

அழுந்தொழும்‌ ஸ்நேஹ பாஷ்பாஞ்ஜலியோடே ருசிர-ஸாநுக்‌களில்‌ கூவிக் கொள்ளும்‌ பிரியா வடிமைக்குச்‌ சரணே சரண்‌ என்று வாளும்‌ வில்லுங் கொண்டு பந்துவும்‌ பிதாவுமவரே என்கையும்‌, அன்னை யென் செய்யிலென்‌ ராஜ்யமும்‌ யானே என்று பெருஞ்‌ செல்வமும்‌ இச்சியாமல்‌ வேண்டிச் சென்று திருவடியே சுமந்து விரைந்து வருமளவும்‌ கண்ண நீர்‌ பங்கமாக நிலந் துழாவிக்‌ குடிக் கிடந்த கையறவும்‌ கோதிலடிமை உறுமோ என்பித்த புலங்கொள்‌ நித்ய ஸத்ரு விசிந்தநமுமான ப்‌ராதாக்கள்‌, அப்பொழுதைக்கப் பொழுது போனாய்‌ என்னும்‌ மாதா பிதாக்கள்‌, செந்தீ தண் காற்று இள நாகம்‌ முதலான பகையறச் சிந்தை செய்து எங்குமுளனென்னும்‌ பள்ளிப்‌ பிள்ளை, முற்றவிட்டு மற்றிலேனென்னும்‌ தர்மாத்மா வாளி பொழிந்த நிர்குண விஸ்வாத்மா உள்ளே உறைய ஊக வீர சரிதம்‌ கற்பார்‌ பாவம்‌ மற்றிலேன்‌ என்னும்‌ ராம தாஸன்‌ பல்வகையும்‌ கண்டு வெண் சங்கேந்தின ரூபபரனான ஸ்வேதன்‌ முதலானார் படிகளும்‌ காணலாம்‌.–சூரணை -127-

(அழும் தொழும் ஸ்நேக பாஷ்ப அஞ்சலியோடு-ருசிரசாநுக்களிலே கூவிக் கொள்ளும் பிரியா அடிமைக்கு சரணே சரண் என்று வாளும் வில்லும் கொண்டு பந்துவும் பிதாவும் அவரே என்கையும்–
இதுவரை இளைய பெருமாள் தன்மையைச் சொல்லி –அன்னை என் செய்யில் என் ராஜ்யமும் யானே என்று பெரும் செல்வமும் இச்சியாமல் வேண்டிச் சென்று திரு அடியே சுமந்து விரைந்து வரும் அளவும் கண்ண நீர் பங்கமாக நிலம் துழாவி குடி கிடந்த கையறவும் ,–-இதுவரை பரதாழ்வான் தன்மை –கோதில் அடிமை உறுமோ என்பித்த புலன் கொள் நித்ய சத்ரு விசிந்தன முமான–-இதுவரை சத்ருக்கனன் தன்மை –பிராதாக்கள்-மூவரையும் சொல்லி-அப்பொழுதைக்கு அப்பொழுது போனாய் என்னும்
மாதா பிதாக்கள்-யசோதா பிராட்டியாரையும் சக்கரவர்த்தியையும் சொன்ன படி-செந்தீ தண் காற்று இள நாகம் முதலான பகை அற சிந்தை செய்து எங்குமுளன் என்னும் பள்ளிப் பிள்ளை-ப்ரஹ்லாதனைச் சொன்னபடி –முற்றவிட்டு மற்றிலேன் என்னும் தர்மாத்மா-ஸ்ரீ விபீஷண ஆழ்வானைச் சொன்னபடி –வாளி பொழிந்த நீர் குண விச்வாத்மா உள்ளே வுறைய வீர சரிதம் ஊணாக கற்பார் பாவம் மற்றிலேன் என்னும் ராம தாசன்-திருவடியைச் சொன்னபடி –பல் வகையும் கண்டு வெண் சங்கு ஏந்தின ரூபபரனான ஸ்வேதன்-அர்ஜுனனைச் சொன்னபடி – முதலானார் படிகளும் காணலாம்-)

அழும் தொழும் ஸ்நேக பாஷ்ப அஞ்சலியோடு ருசிரசாநுக்களிலே ( அழகிய மலைத் தாழ்வரைகளிலே )
கூவிக் கொள்ளும் பிரியா அடிமைக்கு சரணே சரண் என்று வாளும் வில்லும் கொண்டு பந்துவும் பிதாவும் அவரே என்கை--அதாவது-அழும் தொழும் இத்யாதி -அதாவது –-இளைய பெருமாள்-பால்யாத் பிரப்ருதி ஸூஸ் நிக்த-பால -18-27- -என்கிறபடி பால்யமே தொடங்கி பிரியில் தரிக்காத ஸ்நேஹத்தாலே
பாஷ்ப பர்யா குலமுக–அயோத்யா -31-1- ( கண்ணநீரால் கலங்கிய முகமுடைய )என்றும் –ப்ரஹ்வாஞ்சலி புடம் ஸ்திதம்-அயோத்யா -16-26-என்றும் -சொல்லுகிறபடி- விஸ்லேஷ பிரசங்கஜமான சோக வேகத்தாலே சொரிகிற பாஷ்பத்தோடே -ஸ்வரூப பிரகாசமான அஞ்சலியும் கையுமாகக் கொண்டு –ஸ்வயந்து ருசிரே தேசே க்ரியதாமித மாம் வாத–ஆரண்ய -15-7- -என்றும் ,-பவாம்ஸ்து சஹா வைதேஹ்யா கிரிஸ அநுஷூ ரம்ஸ்யதே அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வபதஸ் சதே—அயோத்யா -31-25-என்றும் சொல்லுகிறபடியே–திருச் சித்ர கூட கிரி தாழ்வரை முதலான ருசிர தேசங்களிலே – பிராட்டி உடன் தேவரீர் ஸ்வைரமாக எழுந்து அருளி இருக்க சர்வ வித கைங்கர்யங்களையும் அடியேன் செய்ய வேண்டும் – அது செய்யும் இடத்தில் ஏவிப் பணி கொண்டு அருள வேண்டும் என்று பிரார்த்தித்து -அப்படி-ஏவிப் பணி கொள்ளச் செய்யப் படுமதாய்-
குருஷ்ய மாம் அனுசரம் -அயோத்யா -31-23-என்கிறபடி- விச்சேதமாய் பின் தொடர்ந்து செய்யும் அடிமை தொழிலைப் பெருகைக்காக –ச பிராதுஸ் சரணவ் காடாம் நிபீட்ய ரகுநந்தன சீதா முவாசாதியஸா ராகவஞ்ச மஹா வ்ரதம் —அயோத்யா -31-2- என்கிறபடியே -சாயுதராய்க் கொண்டு பெருமாளைப் பின் சென்று – பிராதா பர்த்தா ச பந்து ச பிதா ச மம ராகவா –அயோத்யா -58-31–என்று தமக்கு சர்வ வித பந்துவும் பெருமாளே என்றால் போலே –

அழுந் தொழும்‌ ஸ்நேஹ பாஷ்பாஞ்ஜலியோடே) ”பால்யாத் ப்ரப்ருதி ஸுஸ்நிக்‌த(ரா. பா, 18 – 27) என்றும்‌, ”பாஷ்பபர்யாகுலமுக,?”‘ (ரா. ௮. 33 – 1) என்றும்‌, ‘*ப்ரஹ்‌வாஞ்ஜலிபுடம்‌ ஸ்திதம்‌” (ரா. ௮. 16 – 26) என்றும்‌ இளைய பெருமாள்‌ பெருமாளைப்‌ பிரியில்‌ தரியாத ஸ்நேஹத்தாலே கண்ணும்‌ கண்ண நீருமாய்‌, அஞ்ஜலி ஹஸ்தராய்க்‌ கொண்டு ‘‘குருஷ்வ மாமநுசரம்‌ வைதர்ம்யம்‌ நேஹ வித்யதே’‘ (ரா. ௮. 31 – 24) என்றும்‌, ““ஸ்வயந்து ருசிரே தேஸே கரியதாமிதி மாம்‌ வத,” (ரா. ஆ, 785 – 7) என்றும்‌, “பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே ! அஹம்‌ ஸர்வம்‌ கரிஷ்யாமி ஜாக்‌ரதஸ் ஸ்வபதஸ்ச தே” (ரா. அ. 31 – 27) என்றும்‌ சொல்கிறபடியே என்னை அநு சரனாகப்‌ பண்ண வேணுமென்று ப்ரார்த்தித்துச் செய்கிற அடிமைக்கு உபாயமாக “’ஸ ப்‌ராதும் சரணெள காடம்‌ நிபீட்‌ய ரகுநந்தநச । ஸீதாமுவாசாதியஸா ராகவஞ்ச மஹா வ்ரதம்‌’ ்‌ (ரா. அ. 31 – 2) என்று நாச்சியார்‌ புருஷகாரமாகத்‌ திருவடிகளைக்‌ கட்டிக் கொண்டு ”அக்‌ரத? ப்ரயயெள ராமஸ் ஸீதா மத்‌யே ஸுமத்‌யமா। ப்ருஷ்டதஸ்ச தநுஷ்பாணி: லக்ஷ்மணோநுஜகாம ஹூ”? (ரா. ஆ. 11 – 1) என்று ஸாயுதராய்க் கொண்டு அவரைப் பின் சென்று “‘ப்‌ராதா பர்த்தா ச பந்து,ர்ீச பிதா ச மம ராகவ?”‘ (ரா.௮.58-34) என்று பெருமாளை எல்லா உறவுமாகப்‌ பற்றினாப் போலே,

இவரும் – அறியாக் காலத்துள்ளே அடிமை கண் அன்பு செய்வித்து -2-3–3 என்கிறபடியே
பருவம் நிரம்புதர்க்கு முன்பே பிரியில் தரியாதபடி பிறந்த ஸ்நேகத்தால்-அழும் தொழும்-7-2-8 -என்று –
விஸ்லேஷம் பொறாமல் கண்ணும் கண்ண நீரும் கையும் அஞ்சலியுமாய் –திரு வேம்கடத்து எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கு –ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு இலா அடிமை செய்ய வேண்டும் -3-3-1-என்று,-மொய்த்த சோலையும் -மொய் பூம் தடம் தாழ் வரையுமான-3-3-10– போக ஸ்தலங்களை உடைய திரு மலையில் –அலர் மேல் மங்கை உறை மார்பன் –6-10-10–ஆகையாலே
பிராட்டியோடு கூடி ரசோத்தரமாய் இருக்கிற பரம சேஷி யானவனுக்கு -சர்வதேச – சர்வ கால -சர்வ அவஸ்தைகளிலும் சர்வ சேஷ வ்ருத்திகளையும் பண்ண வேணும் — அது தன்னிலும்-முகப்பே கூவிப் பணி கொள்வாய்-8-5-7—என்று சந்நிதியிலே

இவருமப்படியே (அழுந் தொழுமித்யாதி, – பிரியா வடிமைக்கு) ”அழுந்தொழும்‌”்‌ (திருவா. 7 – 2- 8) என்று அழுவது தொழுவதாய்‌, “திருவேங்கடத்தெழில்கொள்சோதி எந்தை தந்தை தந்தைக்கு – ஒழிவில் காலமெல்லாம்‌ உடனாய்‌ மன்னி வழுவிலா வடிமை செய்ய வேண்டும்‌ நாம்‌”’ (திருவா, 3 – 3 – 1) என்று திருமலையிலே நின்றருளின பரம ஸ்வாமிக்கு ஸர்வதேஸ ஸர்வ கால-ஸர்வாவஸ்தோசிதமான ஸர்வஸேஷ வ்ருத்திகளையும்‌, “முகப்பே கூவிப் பணி கொள்ளாய்‌‘” (திருவா, 8 – 8 – 7) என்கிறபடியே ஏவி அடிமை கொள்ள வேணுமென்று ப்ரார்த்தித்து,ஏவிப் பணி கொள்ள வேணும் என்று பிரார்த்தித்து-

அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று
அறியாமை வஞ்சித்தாய் எனதாவியுள் கலந்தே –2-3-3—அறிவுக்கு சம்பாவனை இல்லாத பால்யத்திலே -பிராப்தி பலமான அடிமையிலே ஸ்நேஹத்தை பிறப்பித்து வைத்தாய்-

கொழுந்து வானவர்கட்கு!’ என்னும்’குன்றேந்திக் கோ நிரை காத்தவன்!’ என்னும்;
அழும் தொழும் ஆவி அனல வெவ்வுயிர்க்கும்; ‘அஞ்சன வண்ணனே!’ என்னும்;
எழுந்து நின்று மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்; ‘எங்ஙனே நோக்குகேன்?’ என்னும்;
செழுந்தடம் புனல் சூழ் திருவரங் கத்தாய்! என் செய்கேன் என் திரு மகட்கே?–7-2-8–அழும் -வரையாதே ரக்ஷிக்குமவனுடைய ரக்ஷணத்துக்கு புறம்பு ஆவதே -என்று அழும் -பாலர் செய்வதும் செய்யும் என்னுதல் ஸ்நே ஹிகள் செய்வதும் செய்யும் என்னுதல்-தொழும் -புகல் அற்றார் செய்வதும் செய்யும் என்னுதல் -வேதாந்த ஞானம் உடையார் செய்வதும் செய்யும் என்னுதல்

ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1-சர்வ தேசத்திலும் -காட்டிலும் தொடர்ந்து அடிமை செய்த இளைய பெருமாளை போலே-மன்னி-சர்வ அவஸ்தையிலும் -உலகத்தோடு ஏகாந்தத்தோடு வாசி அற-வழு இலா அடிமை -சர்வ சேஷ வ்ருத்தியும் செய்ய வேண்டும்-சாஸ்த்ரங்களால் இதுவே புருஷார்த்தம் என்று அறிக்கை போராது-அனுஷ்டான பர்யந்தமாக வேணும் –

வைத்த நாள்வரை எல்லை குறுகிச் சென்று,
எய்த்து, இளைப்பதன் முன்னம் அடைமினோ
பைத்த பாம்பணையான் திரு வேங்கடம்
மொய்த்த சோலை மொய் பூந்தடந் தாள்வரை.
–3-3-10–ஸ்வ ஸ்பர்ஸ ஸூ காதி அதிசயத்தால் விகசிதமான பணங்களை உடைய திரு அனந்த ஆழ்வானைக் காட்டிலும் விரும்பி வர்த்திக்கிற திரு மலை-திரு மலையை திரு அனந்த ஆழ்வானாக வும் சொல்லக் கடவது–செறிந்த சோலையையும் -பரப்பு மாறப் பூத்த பொய்கையும் உடைய திருத் தாழ் வரையை –

அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன் றில்லா அடியேன் உன் னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10–வெய்யிலில் நின்று நிழலிலே ஒதுங்கினார் சொல்லுமா போலே க்ஷண மாத்ரமும் விஸ்லேஷிக்க க்ஷமை அல்லேன் என்று நிரதிசய போக்யையான பெரிய பிராட்டியார் நிரந்தர வாசம் பண்ணுகிற திரு மார்வை யுடையையாய்-

வந்து தோன்றாயன்றேல் உன் வையம் தாய மலரடிக் கீழ்
முந்தி வந்து யான் நிற்ப முகப்பே கூவிப் பணி கொள்ளாய்
செந்தண் கமலக் கண் கை கால் சிவந்த வாயோர் கரு நாயிறு
அந்தமில்லாக் கதிர் பரப்பி அலர்ந்தது ஒக்கும் அம்மானே–8-5-7—க்ரியதாம் இதி மாம் வத -என்று கண் முகப்பே அடிமை கொள்ள வேணும் -குண ஞானத்தால் தரித்து இருக்கும் ஸ்ரீ பரத ஆழ்வான் ப்ரக்ருதி யல்லேன் –ஜலான் மத்ஸ்யா விவோத்தருதவ் -என்னும் இளைய பெருமாள் பிரக்ருதியான என்னை அடிமை கொண்டு அருள வேணும் –

அப்படியே ஏவிக் கொள்ளப் படுமதாய்–பிரியா அடிமை-5-8-7–என்கிறபடியே – யாவாதாத்மா அனுவர்தியான கைங்கர்யத்தைப் பெருகைக்கு உபாயமாக-நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு-5-10-11–என்று புருஷகாரம் முன்னாக அவன் திரு அடிகளைப் பற்றி –-வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்று இல்லை-8-3-3–என்று திவ்ய ஆயுதங்களைக் கொண்டு தாம் பின்னே செல்ல ஆசைப் பட்டு –சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் -நன் மக்களும் -மேலாத் தாய் தந்தையும் அவரே -5-1-8–என்று சேஷியான சர்வேஸ்வரனே தமக்கு மாதா பித்ராதி சர்வ வித பந்து என்கையாலும்

““பிரியா வடிமை என்னைக் கொண்டாய்‌?! (திருவா. 5 – 10 – 11) என்று விச்சேதியாதபடியான கைங்கர்யத்துக்கு (சரணே சரணென்று) ““நாகணை மிசை நம்பிரான்‌ சரணே சரண் தமக்கு ‘” (திருவா. )என்று அவன்‌ திருவடிகளை உபாயமென்று அத்‌யவஸித்து“வாளும்‌ வில்லும்‌ கொண்டு பின் செல்வார்‌ மற்றில்லை’‘ (திருவா. 8 – 3 ஃ- 3) என்று அவற்றைக் கொண்டு தாம்‌ பின்னே திரிய ஆசைப்பட்டு. (பந்துவும்‌ பிதாவும்‌ அவரே என்கையும்‌) ““சேலேய்‌ கண்ணியரும்‌ பெருஞ் செல்வமும்‌ நன் மக்களும்‌ மேலாத் தாய்‌ தந்தையுமவரே இனியாவார்‌” (திருவா. 5 – 1 – 8) என்று ஸர்வேஸ்வரனே எல்லா உறவு முறையாகப்‌ பற்றுகையாலும்‌-

அரியேறே! என்னம் பொற் சுடரே! செங்கட் கருமுகிலே!
எரியேய் பவளக்குன்றே! நால்தோள் எந்தாய்! உனதருளே
பிரியா அடிமை என்னைக் கொண்டாய்! குடந்தைத் திருமாலே!
தரியேன் இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே.–5-8-7—அருளாலே என்னுதல் –அருள் ஏய்ந்த -அருளோடு கூடின என்னுதல் –நிர்ஹேதுக கிருபையால் என்னை ஆத்மாந்த தாஸ்யத்திலே ஸ் வீகரித்தாய் -கைங்கர்யம் கொள்ளும் போதும் கிருபை முன்னாக வேண்டி இருக்கையாலே அத்தோடு கூடின அடிமை என்றுமாம் –அடிமை கொள்ளுகைக்காக பிராட்டியோடே கூட திருக் குடந்தையில் வந்து காண் வளர்ந்து அருளுகிறவனே -ஒரு தேச விசேஷத்தில் என்ன வேண்டாத படி -தேசத்தில் குறை இல்லை -ஸ்ரீ யபதி யாகையாலே ப்ராப்யத்தில் குறையில்லை –பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா -என்ற இளைய பெருமாளை போலே பற்றுகிறார் –

நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்
ஏக சிந்தையனாய்க்
குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ் வெய்துவர் வைகலுமே.–5-10-11-அனந்த சாயித்தவம் சர்வாதிக வஸ்துவுக்கு லக்ஷணம் ஆகையாலே -சர்வாதிகனே சரண்யன் என்கிறது -திரு வனந்த ஆழ்வானுடைய புருஷகார பாவம் சொல்லுகிறது என்றுமாம் –படுக்கையைச் சொல்ல படுக்கை யுடையாரைச் சொல்லிற்றாம் இறே
நம்பிரான் -ஆஸ்ரித விஷயத்தில் உபகார சீலனானவன் –-சரணே சரண் நமக்கு என்று -நமக்கு திருவடிகளே உபாயம் என்று –அவதாரணத்தாலே உபாய நைரபேஷ்யம் சொல்லுகிறது -சம்சாரிக ஸ்வ பாவங்கள் மேலிட்டு விபரீதமே பலியா நின்றாலும் இது தவிர வேறு ஒன்றில் கால் தாழாது ஒழி கை -மஹா விச்வாஸம் ஆகிறது –-நாடொறும் ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்-ஆக நூற்ற
நாள் தோறும் இதுவே மநோ ரதமான ஆழ்வார் -பகவத் குண பிரேரிதராய் தாம் உள்ராகைக்காக-

ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை

தாளும் தோளும் கைகளை யாரத் தொழக் காணேன்
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–8-3-3—உபய விபூதியிலும் பரிகைக்கு ஓர் ஆளில்லை -தனியே ஒருத்தரை ஆள வேணும் என்று இருக்கிறார் -நித்ய ஸூ ரிகள் பகவத் அனுபவத்தில் அந்நிய பரர் -சம்சாரிகள் சப்தாதி விஷய பரர்-ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்–ஆபரணமான திவ்யாயுதங்கள் -அவன் ஸுகுமார்யத்தாலே மலை எடுத்தால் போலே சுமையாய் தோற்றுகிறது இவர்க்கு -எதிரிகளுக்கு அஸ்திரமாய் -அனுபவிப்பார்க்கு ஆபரணமாய் இருக்கிறதை -ஸுகுமார்யத்தை அனுசந்தித்த இவருக்கு மலையாய் இருக்கிறது-தாம் -தம்மைப் பார்த்துக் கொள்ள வேண்டாவோ -எப்போதும் கை கழலா நேமியான் அன்றோ -நிரூபகங்கள் ஆனவை சுமையோ என்ன -அது தானே செய்கிறது –-வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை-வாளும் வில்லும் கொண்டு பின்னே செல்லுகைக்கு இளைய பெருமாள் மாத்திரம் ஒருவர் உண்டானாலோ – ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்-வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை-என்கிறது

மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித் தொழுஉம்
மாலார் வந்து இனநாள் அடியேன் மனத்தே மன்னினார்
சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே.–
5-1-8–அடியேன் மனத்தே மன்னினார்–சம்பந்தம் அடியாக மனசிலே செறிந்தார் -இனி நீர் செய்யப் பார்த்தது என் என்ன-போக்யைகளான ஸ்த்ரீகளும் -அதுக்கு உறுப்பான நிரவதிக சம்பத்தும் -குணவான்களான புத்திரர்களும் பரிவுடைய தாயும் தந்தையும் ஆவார் அவரே -க்லேசகரமான-அவ்வோ பந்துக்களாலே க்லேசப் பட வேண்டா -மாதா பிதா பிராதா -அஹம்தாவத்-

அன்னை என் செய்யில் என் ராஜ்யமும் யானே என்று பெரும் செல்வமும் இச்சியாமல் வேண்டிச் சென்று திரு அடியே சுமந்து விரைந்து வரும் அளவும் கண்ண நீர் பங்கமாக நிலம் துழாவி குடி கிடந்த கையற வுடைய பிராதாவின் படியும்-அதாவது –அன்னை என் செய்யில் என் ராஜ்யமும் யானே
அதாவது –ஸ்ரீ பரத ஆழ்வான்,பெருமாள் திரு முடி சூடி இருக்க தாம் அடிமை செய்து வாழப்
பெறாதபடி அவரைக் காட்டிலே அகல விடுத்து தம் மேலே ஸ்வாதந்த்ர்யத்தை ஆரோபித்த கொடுமையால் –-ஹன்யா மஹமிமாம் பாபம் கைகேயீம் துஷ்ட சாரிணீம்–அயோத்யா -78-22- -என்று
மாதாவானவளை சீறி உபேஷித்து ஸ்வாதந்திர அசஹதை தோற்ற –-ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய –அயோத்யா –82-12- என்று ராஜ்யமும் நானும் பெருமாளுக்கு சேஷம் என்று –பெரும் செல்வமும் இச்சியாமல்–அதாவது –-ம்ருதேது தஸ்மின் பரதோ வசிஷ்ட பிரமுகைர் த்விஜை–நியுஜ்யமானோ ராஜ்யாய நைச்சத் ராஜ்ஜியம் மஹாபல -பால -1-33-என்கிற படியே- வசிஷ்டாதி புரோகிதர் நீ ராஜாவாக வேணும் என்று நியோகியா நிற்க – இஷ்வாகூண மியம் பூமிஸ் ச சைல வநகா நனா –கிஷ்கிந்தா 18-6- -என்று மகா ஐஸ்வர்யத்தையும் இச்சியாதே-

(அன்னை என்‌ செய்யிலென்‌ இத்யாதி.) ஸ்ரீபரதாழ்வான்‌ பெருமாளுடைய திருவபிஷேகத்தைக்‌ கைகேயி விலக்கின சீற்றத்தாலே “*ஹந்யாமஹமிமாம்‌ பாபாம்‌ கைகேயீம்‌ துஷ்டசாரிணீம்‌” (ரா. அ. 78 – 22) என்கிறபடியே கைகேயியைச் சீறி உபேக்ஷித்து “’ராஜ்யஞ்சாஹஞ்ச ராமஸ்ய’” (ரா. அ. 82 – 12) என்று – ராஜ்யமும்‌ நானும்‌ பெருமாளுக்கு ஸேஷமென்றும்‌, “ம்ருதே து தஸ்மிந்‌ பரதோ வஸிஷ்ட ப்ரமுகைர்‌ த்‌விஜைச ! நியுஜ்யமாநோ ராஜ்யாய நைச்சத்‌,ராஜ்யம்‌ மஹாபலா ”? (ரா. படா. 1 – 33) என்றும்‌ வஸிஷ்டாதி,புரோஹிதர்‌ ராஜாவாக வேணுமென்று அபேக்ஷிக்க, ““இக்ஷ்வாகூணாமியம்‌ பூமிஸ் ஸ ஸைல வந காநநா ।”” (ரா. கி. 18 – 6) என்கிற மஹதைஸ்வர்யத்தை இச்சியாதே,-

வேண்டிச் சென்று-அதாவது -பெருமாளை மீட்டிக் கொண்டு வந்து திரு அபிஷேகம் பண்ணுவிக்கையிலே அபேஷை தோன்ற –-ஏபிச்ச சசிவைஸ் சார்த்தம்–அயோத்யா –104-12- -என்கிறபடி –அவர் திரு அடிகளில் சென்று –அயாசாத் பிராதரம் ராமம் –பால -1-35- என்கிற படியே மீண்டு எழுந்து அருள வேண்டும் என்று அபேஷித்த இடத்தில்–திருவடியே சுமந்து –அதாவது-அவர் அது செய்யாதே –
பாதுகே சாஸ்ய ராஜ்யாய ந்யாசம் தத்வ புன புன –பால -1-37–என்கிறபடியே-திருவடி நிலையைக் கொடுத்து அருள –-ததஸ்து சிரஸா க்ருத்வா பாதுகே பரதஸ் ததா ஆருரோஹ ரதம் ஹ்ருஷ்டஸ் சத்ருனநேன சமன்வித –அயோத்யா -113-1-என்கிற படியே அத் திருவடிகளை சிரஸா வகித்துக் கொண்டு ஹ்ருஷ்டராய் மீண்ட போது–விரைந்து வரும் அளவும் கண்ண நீர் பங்கமாக நிலம் துழாவி-அதாவது –
சிரஸா யாசதஸ் தஸ்ய வசனம் நக்ருதம் மயா –யுத்த –124-9-என்கிற இழவு திரு உள்ளத்தில் கிடக்கிறதாலே – நமே ஸ்நானம் பஹூமதம் வஸ்த்ராண்ய பரணா நிச , தம் விநா கைகேயீ புத்ரம் பரதம் தர்ம சாரிணீம் இத ஏவ யதா ஷிப்ரம் – பிரதிகச்சாம தாம் புரீம் -அயோத்யா மாகதோ ஹ்யேஷா பந்தா பரமதுர்கம –யுத்த -124-6-/7என்று நம் பிள்ளை பரதனை ஒழிய குளியல் ஒப்பித்தல் செய்யக் கடவோம் அல்லோம் – சீக்கிரமாக இனி அங்கே செல்லலாம்படி என் என்று பெருமாள் த்வரையோடே மீண்டு எழுந்து அருளும் அளவும் – பங்க திக்தஸ்து ஜடிலோ பரத -யுத்த -127-4-என்கிறபடியே கண்ண நீரால் உண்டான சேற்றிலே தரைக் கிடை கிடைக்கையாலே – பங்க திக்தராய் –குடி கிடந்த கையறவும்
அதாவது –மூத்தார் இருக்க இளையார் முடி சூடக் கடவர் அல்லர் என்ற இஷ்வாகு குல மரியாதை தப்பாமல் நோக்கிக் கொண்டு –-ச காமம் அனவாப்யைவ –பால -1-38–என்கிறபடி தாம் ஆசைப் பட்ட பொருள் கை புகுராத இழவோடே இருந்தால் போலே –

அயாசத்‌,ப்‌ராதரம்‌ ராமமார்ய பாவ புரஸ்க்ருதச” (ரா. பதா, 1 – 35) என்று பெளர ஜநங்களோடே பெருமாள் திருவடிகளிலே சென்று மீண்டெழுந்தருளவேணும்‌ என்றபேக்ஷிக்க, ““பாதுகே சாஸ்ய ராஜ்யாய ந்யாஸம்‌ தத்த்வா புந புந” (ரா. பா 1 -37) என்று அவரும்‌ அப்படிச் செய்யாதே திருவடி நிலையைக்‌ கொடுத்துவிட.-““பாதுகே தே புரஸ்க்ருத்ய’‘ (ரா. யு. 124 – 4) என்று அத் திருவடி நிலையை முன்னிட்டுக்‌ கொண்டிருந்து, ““பமிரஸா யாசதோ யஸ்ய வசநம்‌ ந க்ருதம்‌ மயா”‘ (ரா. யு. 121 – 19) என்கிற இழவு திருவுள்ளத்திலே கிடக்கையாலே ““ந மே ஸ்நாநம்‌ பஹுமதம்‌ வஸ்த்ராண்யாபரணாநி ச (தம்‌ விநா கைகயீ புத்ரம்‌ பரதம்‌ தர்ம சாரிணம்‌”’ (ரா. யு. 121 6) என்று – நாம்‌ பிள்ளை பரதனை யொழியக்‌ குளித்தல்‌ ஒப்பித்தல்‌ செய்யக் கடவோமல்‌லோமென்று பெருமாள்‌ த்வரையோடே மீண்டு வருமளவும்‌ ”பங்கதிக்‌தஸ்து ஜடில?”’ (ரா. யு. 124 -4 ) என்று கண்ணீராலுண்டான சேற்றிலே தரைக் கிடை கிடந்து இக்ஷ்வாகு குல மர்யாதை தப்பாமலிருந்து, “க்ருதம்‌ தஸ குணம்‌ மயா” (ரா. யு. 127 – 56) என்று பெருமாளுடைய திவ்யைஸ்வர்யத்தை ஒன்று பத்தாகப்‌ பெருக்கி, ”ஸ காம மநவாப்‌யைவ”’ (ரா.ப.. 1 – 38) என்று தாம்‌ ஆசைப்பட்ட பொருள்‌ கைப்படாத இழவோடே இருந்தாப்‌ போலே-

இவரும் பகவத் பிராவண்ய அதிசயத்தாலே – வழி அல்லா வழி எல்லாம் கிட்டும் அத்தனை – என்கிற த்வரைக்கு இடம் கொடாமல் – விலக்கும் மாதாவை சத்ரு பஷமாகக் காண்கையாலே –-அன்னை என் செய்யில் என்-அதாவது-அன்னை என் செய்யில் என்-5-3-6-என்று ஜீவிக்கில் என் -முடியில் என் -என்று சீறி உபேஷித்து –-ராஜ்யமும் யானே என்று – யானே என் தனதே -2-9-9–என்கிற ஸ்வாதந்த்ர்ய அசஹராய்க் கொண்டு – யானே நீ என் உடைமையும் நீயே-2-9-9- -என்று ஆத்மா ஆத்மீயங்கள் இரண்டும் அங்குத்தைக்கு சேஷம் என்று –பெரும் செல்வம் இச்சியாமல் –அதாவது –-கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பு-4-9-4- என்று மென் மேலும் சம்ருத்தமாய் வரும் நிரவதிக ஐஸ்வர்யத்தையும் அக்நி சமமாகக் கொண்டு –

இவரும்‌ அப்படியே “அன்னை என்‌ செய்யிலென்‌”’ (திருவா. 5 – 3 – 6) என்று – தாயார்‌ முடியிலென்‌? பிழைக்கிலென்‌? என்று உபேக்ஷித்து (ராஜ்யமும்‌ யானே என்று) யானே நீ என்னுடைமையும்‌ நீயே”” (திருவா. 2 – 9 – 9) என்று ஆத்மாத்மீயங்கள்‌ அவனுக்கு சேஷமென்று. (பெருஞ்செல்வமும்‌ இச்சியாமல்‌) ““கொள்ளென்று கிளர்ந்தெழுந்த பெருஞ்செல்வம்‌ நெருப்பு?” (திருவா, 4 – 9 – 4) என்று ஐஸ்வர்யத்தை அக்‌நி ஸமமாகக் கண்டு,-’ஜங்கருவிகண்ட இன்பம்‌ – ஓழிந்தேன்‌ ”” (திருவா. 4- 9 – 10) என்கிறபடியே உபேஷித்து.-

அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்!
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே.–5-3-6—கீழே தாயார் பொறாள்-என்ன பொறாதே செய்வது என் -என்றது –இதில் –அவள் என் செய்யும் -என்று வ்யவசிதை யானாள்-என்றால் -அவள் ஜீவியாள் கிடாய் –என்ன ஜீவிக்கில் என் –முடியில் என் -என்கிறாள்-என்னை -தாயார் பிழையாள்-ஊரார் பழி சொல்லுவார்கள் கிடாய் -என்ன மீளாத என்னை –

யானே என்னை யறியகிலாதே
யானே என்தனதே என்று இருந்தேன்

யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –2-9-9—அவனுக்கு கலக்கம் இல்லாமையால் -தன்னைத் தருகைக்கு எதிர் சூழல் புக்கு திரிய -நான் என்னை முடிய சூழ்த்துக் கொண்டேன்-தேஹாத்ம அபிமானத்தாலே என்னை அவனுக்கு பிரகாரம் என்று அறிந்திலேன்-ஈஸ்வரோஹம் என்று இருந்தேன்-இவன் நான் என்றால் ஈஸ்வரனுக்கு கிட்ட அரிதாய் இறே இருப்பது-நானும் எனக்கு உரியேன் இன்றிக்கே இருக்க எனக்கு ஒரு உடைமையும் உண்டாக நினைத்து இருந்தேன்-தேகத்தை ஆத்மாவாகவும் -ஈஸ்வர விபூதியை என் உடைமை யாகவும் இந்த விபரீத அஞ்ஞானமே யாய் இருந்தேன்-இப்படி ஸ்வரூபம் நசித்துக் கிடைக்க அனுதாபம் இன்றிக்கே க்ருதக்ருத்யனாய் இருந்தேன்-அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று இருக்கை பிராப்தமாய் இருக்க ஒரு கார்யம் இல்லாதாரைப் போலே இருந்தேன்-அர்த்த தத்வம் இங்கனே யன்றோ என்ன-நானும் உனக்கு பிரகாரமே –-என் உடைமையும் உனக்கு பிரகாரமே

கொள் என்று கிளர்ந்து எழுந்து பெருஞ்செல்வம் நெருப்பாகக்
கொள் என்று தமம் மூடும்; இவை என்ன உலகியற்கை!
வள்ளலே! மணிவண்ணா! உனகழற்கே வரும்பரிசு,
வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே.–4-9-4—இவன் அர்த்தியாது இருக்க தானே -என்னைக் கொள் என்னைக் கொள் என்று மேல் மேல் எனக் கிளர்ந்து வருகிற நிரவதிக சம்பத்தானது –
நிச்சேஷமாக நசிக்க -என்னுதல் -தனக்கு விநாச ஹேதுவாக -என்னுதல்

கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி
கண்ட இன்பம், தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்
,
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப,
கண்ட சதிர் கண்டொழிந்தேன்; அடைந்தேன் உன் திருவடியே.–4-9-10–ரூபாதிகளை க்ரஹிக்கைக்கு கருவியான சஷூராதிகளாலே அனுபவிக்கப் பட்ட ஸூகம்-ஆத்மாவுக்கு நித்யதர்மமான ஞானம் கர்மத்தால் சங்குசிதம் ஆகையால் உழக்காலே அளக்குமா போலே இந்த்ரியத்வாரா பிரஸ்ருதமான ஞானத்தால் வந்த ஐஹிக ஸூகம்-தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,-சம்சாரிகளுக்கு துர் ஜேயமாய் இந்திரிய ஸூகத்தில் காட்டிலும் பெருத்து பகவத் கைங்கர்ய ஸூகத்தைப் பற்ற அத்யல்பமான ஆத்ம அனுபவ ஸூகம் இவற்றை-ஒழிந்தேன் -விட்டேன்

வேண்டிச் சென்று-அதாவது-வேம்கட வாணனை வேண்டிச் சென்று -8-2-1–என்று திருச் சித்ர கூடத்தில் இருந்தால் போலே திரு மலையில் இருக்கிறவனை யதா மனோ ரதம் அனுபவிக்கைக்காக அபேஷித்து சென்று –திருவடியே சுமந்து-அதாவது-தம் அபேஷிதம் அவன் அப்போதே செய்யாதே ஒரு சைவத்ய முகத்தாலே – திரு அடியே சுமந்து உழல கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை-4-9-9- -என்று திரு அடிகளைத் தந்தாய் என்று ஹ்ருஷ்டராம் படி பண்ணி விட – அப்படி அவன் கொடுத்த திரு அடிகளை சிரஸா வஹித்து

 (வேங்கடவாணனை வேண்டிச் சென்று) அவனை அநுபவிக்க வேணுமென்று வேண்டிச் சென்று இவர்‌ அபேக்ஷித்தபடி கிடையாமையாலே. (திருவடியே சுமந்து) “திருவடியே சுமந்துழலக்‌ கூட்டரிய திருவடிக்கள்‌ கூட்டினை’” (திருவா. 4 – 9 – 9) என்று அவன்‌ திருவடிகளை ஸிரஸா வஹிப்பிக்க ஸிரஸா வஹித்து.-

நங்கள் வரி வளை யாயங்களோ நம்முடை ஏதலர் முன்பு நாணி
நுங்கட்கு யான் ஓன்று உரைக்கும் மாற்றம் நோக்குகின்றேன் எங்கும் காண மாட்டேன்
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன் தடமுலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன்
வெங்கண் பறவையின் பாகன் எங்கோன் வேங்கட வாணனை வேண்டிச் சென்றே–8-2-1–பரமபதத்தில் இருப்பை ஆசைப் பட்டேன் அல்லேன் -நமக்கு காட்சி தருகைக்கு வர நின்ற இடத்திலே-வேண்டிச் சென்றே–நம்மை ஆசைப்பட்டு நிற்கிறவனை காண ஆசைப்பட்டுச் சென்று -அவன் தான் வரக் கண்டு இருக்கை அன்றிக்கே -அவன் இருந்த தேசத்தளவும் சென்று -அபேக்ஷிதம் பெறாமையாலே சங்கம் சரிந்தன -சென்று -பால் சென்றால் போலே சென்று என்றுமாம் 

கூட்டுதி நின் குரை கழல்கள்; இமையோரும் தொழா வகைசெய்து,
ஆட்டுதி நீ; அரவணையாய்! அடியேனும் அஃது அறிவன்;
வேட்கை எலாம் விடுத்து எனை உன் திருவடியே சுமந்து உழலக்
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே
.–4-9-9-ருசியுடைய என்னை உன் திருவடிகளிலே கைங்கர்யம் பண்ணி வர்த்திக்கும் படி-அந்நிய சாத்தியமான திருவடிகளிலே கூட்டினாய் -கேட்டார் வாய் கேட்க்கை யன்றிக்கே நான் அனுபவிக்க பெற்றேன் ஆகையால் அறிந்தேன்-

விரைந்து வரும் அளவும்-அதாவது-வீடு திருத்தப் போனவன் விண்ணுலகம் தர விரைந்து வரும் அளவும் – கண்ண நீர் கைகளால் இறைக்கும் இரு நிலம் கை துழாவிருக்கும்-7-2-1- -என்கிற படி
கண்ண நீர் வெள்ளத்தால் உண்டான சேற்றிலே இருந்து ஆற்றாமையாலே நிலம் துழாவி –குடிக் கிடந்த கையறவும்-அதாவது–குடி கிடந்து ஆக்கம் செய்து-9-2-2-என்கிறபடி பிரபன்ன குலத்தில் செய்து போரும் மரியாதை தப்பாமல் – காமுற்ற கையறவோடு -2-1-3-என்கிற படி தாம் ஆசைப் பட்ட பொருள் கை புகுராத இழவோடு இருக்கையாலும்-

வீடு திருத்துவான்‌போய்‌ விண்ணுலகம்‌ தருவானாய்‌ விரைந்து வருமளவும்‌. (கண்ணநீர்‌ பங்கமாக்கி) *“கண்ணநீர்‌ கைகளாலிறைக்கும்‌”’ (திருவா. 7 – 2 – 1) என்று கண்ணநீர்‌ வெள்ளமிட இருந்து. (நிலந்துழாவி) ”இருநிலம்‌ கைதுழாவிருக்கும்‌”” (திருவா. 7 – 2 – 1) என்று ஆற்றாமையாலே நிலம்‌ துழாவி (குடிக்கிடந்த) ““குடிக்கிடந்தாக்கம்‌ செய்து” (திருவா. 9 – 2 – 2) என்கிறபடியே ப்ரபந்ந குலத்தில்‌ செய்து போருகிற மர்யாதையைத்‌ தப்பாமலிருந்து. (கையறவும்‌) “காமுற்ற கையறவோடு”” (திருவா. 2 – 1 – 3) என்று ஆசைப்பட்ட பொருள்‌ கைபுகுராத இழவோடே இருக்கையாலும்‌-

கங்குலும் பகலும் கண்துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்; ‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்; இரு நிலம் கைதுழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1—கண்ண நீர் கைகளால் இறைக்கும்;-கண் உறங்காமையாலே போது போக்கு அரிதாய் -அதினாலே கண்ண நீர் வெள்ளம் இடத் தொடங்கிற்று -இவ்வாற்றாமையில் அவன் வாராது ஆழியான் -என்று அத்யவசித்து -வரும் போது காண்கைக்கு கண்ண நீர் பகையாக ஒண்ணாது என்று அத்தை மாற்றப் பாரா நின்றாள் -கடலைக் கையாலே இறைக்கத் தொடங்குவாரைப் போலே இது என்ன சாஹசம் என்கிறாள் -கடல் கொண்ட கண்ணீர் அறிவி செய்யா நிற்கும் இறே -இவள் கண்ணும் கண்ண நீரும் தாயாருக்கு சுபாஸ்ரயமாய் யாயிற்று இருக்கிறது –கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் –இவள் தர்சன விரோதி என்று மாற்றப் பார்க்கிறாள் இத்தனை –இரு நிலம் கைதுழா இருக்கும்;-இம் மஹா பிருத்வி எல்லாம் கைகளால் துழாவா நின்றாள் இறே -பூமிப பரப்பு அடங்க ஒரு பாஜனத்துக்கு உட்பட்ட சந்தனம் போலே யாயிற்று இவள் கைக்கே படுகிறது -சர்வ சக்தியே வேண்டா வாகாதே பூமியை அளக்க -ஆற்றாமையாலும் அளக்கலாம் ஆகாதே –

குடிக் கிடந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த வடிமைக்குக் குற்றேவல் செய்து உன் பொன்
அடிக் கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி நீ யொருநாள்
படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கணியாய்
கொடிக்கொள் பொன் மதில் சூழ் குளிர் வயல் சோலைத் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-2—குடிக்கு ஈடாக வர்த்தித்து -குல மரியாதை தப்பாதே வர்த்திக்கை -இஷுவாகு வம்சயரில் -கநிஷ்டர் முடி சூடி அறிவார் இல்லை -என்றான் இ றே-ஸ்ரீ பரதாழ்வான்–ஆக்கம் செய்து-குடியில் பண்டு இல்லாத நன்மைகளை யுண்டாக்கி –பங்கதிக் தஸ்து ஜடில -என்கிறபடியே ஜடாவல்கலமும் கண்ணும் கண்ண நீருமாய் இருக்கை –

கோதில் அடிமை உறுமோ என்பித்த புலன் கொள் நித்ய சத்ரு விசிந்தன முமான பிராதா படியும்-அதாவது ஸ்ரீ சத்ருன ஆழ்வான் –கச்சதா மாதுல குலம் பரதேன தத அநக சத்ருனோ நித்ய சத்ருனோ நீத ப்ரீதி புரஸ் க்ருத –அயோத்யா -1–1 என்கிற படியே பாகவத சேஷத்வமே பரம புருஷார்த்தம் என்று ஸ்ரீ பரத ஆழ்வானுக்கே சேஷ பூதனாய் – அவருடைய பாவநத்வ போக்யத்வங்களிலே கால் தாழ்ந்து –
ரூப ஒவ்தார்ய குனைஸ் பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம்-அயோத்யா 3-28- என்கிறபடியே வயிர உருக்காய் — ஆண்களையும் பெண் உடை உடுத்தும் பெருமாளுடைய வடிவழகில் துவக்குண்ணாதே-
பரத அனுவர்த்தியில் போகாத படி தன் பக்கலில் துவக்க வற்றும் என்னும் அத்தாலே – தம்முடைய நிஷ்டைக்கு அது நித்ய சத்ரு என்று அறுதி இட்டு இருக்கச் செய்தே – ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு உகப்பு ஆகையாலே – உத்தேச்ய ப்ரீதி என்று புரிந்து பெருமாள் வடி வழகில் நெஞ்சு சென்று
-விதிச்தயந்த்–
அயோத்யா -89-3- -என்ற படி எப்போதும் அதை மனசில் கொண்டு இருப்பது போல் –

(கோதிலடிமை உறுமோ என்பித்த) ஸ்ரீஸத்ருக்‌நாழ்வான்‌ “கச்சதா மாதுல குலம்‌ பரதேந ததா அநக,சத்ருக்‌, நோ நித்ய சத்ருக்‌நோ நீத: ப்ரீதி புரஸ்க்ருத”” (ரா. அ. 1 – 1) என்று – ““அநக’, “*நித்ய சத்ருக்‌ந’” என்று ஸ்ரீபரதாழ்வானுடைய பாவநத்வ போக்‌யத்வங்களிலே கால் தாழ்கையாலே “பும்ஸாம்‌ த்‌ருஷ்டி சித்தாபஹாரிணம்‌”‘ (ரா. அ. 3 – 29) என்று ஸஜாதீயரையும்‌ ஈடுபடுத்தவற்றான பெருமாளுடைய விக்‌ரஹத்திலே துவக்குண்ணாதே, அந்த வடிவழகுதான்‌ பரதாநுவ்ருத்தியில்‌ போகாதபடி துவக்க வற்றாகையாலே நித்ய ஸத்ருவாக நினைக்கிறாப் போலே.–

இவரும் –கோதில் அடிமை –அதாவது –-கோதில் அடியார் -8-10-9–என்று பிரதம அவதியில் நிலை போல் அன்றிக்கே -ஸ்வரூபத்தின் உடைய எல்லை நிலம் ஆகையாலே-கோதில் அடிமை-என்று சொல்லப் படுகிற பாகவத சேஷத்தின் உடைய ரசம் –உறுமோ என்பித்த-அதாவது-அவன் அடியார் சிறு மா மனிசராய் என்னை ஆண்டார் —இங்கே திரிய 8–10-3– அவர்களைத் தவிர்ந்து –செம் தாமரைக் கண் திரு குறளன் நறு மா விரை நாண் மலர் அடிக் கீழ் புகுதல் –பாவியேனுக்கு –உறுமோ ?-8-10-3– என்று சொல்லுவிக்கப் பட்டதாய் – சர்வ இந்திரிய அபஹார ஷமம் ஆகையாலே அந்த பாகவத சேஷ நிஷ்டா விரோதியான பகவத் விக்ரகத்தை உத்தேச்ய ப்ரீதி என்னும் அத்தைப் பற்ற – திரி தந்தாகிலும் கண்ணி நுண்-3–படியே மீண்டு –புலன் கொள் வடிவு என் மனத்ததாய்-8-10-4- -என்று எப்பொழுதும் தம் மனசுக்கு விஷயமாய் கொண்டு இருக்கையாலும் –விசிந்தனம்-என்கிற இதுக்கு இப்படி வியாக்யானம் பண்ணிற்று – இதின் பட்டோலை ஆனதிலே –உறுமோ என்று நித்ய சத்ருவை வென்று –
புலன் கொள் வடிவை விசிந்தயனாய் இருக்கும் -என்று – விசின்தயன் என்ற ஒரு வசனம் உண்டாகவும் எடுத்து –
இப்படி இவர் தாமே அருளிச் செய்து வைக்கையாலே . .. இவ்விடத்திலும் சிந்தனம் என்னாமல் விசிந்தனம் என்றது அவ் வசன ஸூசகம் இறே..-விசிந்தனம் என்ற வசனம் -இன்ன இடத்தில் என்று த்ருஷ்டம் ஆய்த்து இல்லை– வந்த இடத்திலே கண்டு கொள்வது — (அயோத்யா -89-3-நாஹம் ஸ்வபிமி ஜாகர்மி தமே வார்யம் விசிந்தயன்-என்கிற பாடம் பின்பு நாஹம் ஸ்வபிமி ஜாகர்மி ராமமே வாநு சிந்தயன்-என்கிற பாடமாக மாறிற்று என்பர் )

இவரும்‌ ““கோதிலடிமை”’ (திருவா. 8 – 10 – 9) என்று சொல்லப்படுகிற பாகவத ஸேஷ்த்வ ரஸம்‌ (உறுமோ என்பித்த) ““அவனடியார்‌ சிறு மா மனிசராய்‌ என்னை யாண்டார்‌ இங்கே திரிய – அதுவன்றி உலக மூன்றுமுடன்‌ நிறைய சிறுமாமேனி நிமிர்த்த என்‌ செந்தாமரைக்‌ கண்‌ திருக்குறளன்‌ – நறுமா விரை நாண் மலரடிக்கீழ்ப் புகுதல்‌ – பாவி யேனுக்குறுமோ’” (திருவா. 8 – 10 – 3) என்னும்படி பண்ண அந்த பாகவத ஸேஷத்வ ரஸத்தாலே. (புலங்‌கொள்‌ நித்ய சத்ரு விசிந்தநமும்‌) ““புலங்கொள் வடிவு’” (திருவா. 8 – 10 – 4) என்று ஸர்வேந்த்‌ரி யாபஹார க்ஷமமான வடிவழகையும்‌ உபேக்ஷிக்கையாலும்‌.

தமர்கள் கூட்ட வல்வினையை நாசம் செய்யும் சதிர் மூர்த்தி
அமர் கொள் ஆழி சங்கு வாள் வில் தண்டாதி பல்படையன்
குமரன் கோல வைங்கணை வேள் தாதை கோதில் அடியார் தம்
தமர்கள் தமர்கள் தமர்களாம் சதிரே வாய்க்க தமியேற்கே–8-10-9-
–அப்பருவத்துக்கும் அழகுக்கும் தோற்று இருக்கும் அநந்ய பிரயோஜனரான ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய அடிமையில் முடிந்த நிலம் ஆக வேணும் -இந்த மிக உயர்ந்த புருஷார்த்தம் என்றும் ஒக்க வாய்க்க வேண்டும்-என்பார் -சதிரே வாய்க்க -என்கிறார்-தமியேற்கே–சென்ற காலத்திலும் ஸ்ரீ சத்ருகன ஆழ்வானைத் தேடித் பிடிக்க வேண்டி-இருக்கையாலே -இப்பொழுது நடக்கும் காலத்திலும்- தமக்கு உபமானம் இன்றிக்கே இருக்கை

உறுமோ பாவியேனுக்கு இவ்வுலக மூன்றுமுடன் நிறைய
சிறுமா மேனி நிமிர்ந்த எம் செந்தாமரைக் கண் திருக் குறளன்
நறு மா விரை நாள் மலரடிக் கீழ் புகுதல் அன்றி அவன் அடியார்
சிறுமா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே
-8-10-3—ஸ்ரீ வாமனனுடைய ஸுந்தர்ய சேஷ்டிதாதிகளிலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்-ப்ரபாவங்களைப் பார்த்தால் -பரிச்சேதிக்கப் போகாதே -வடிவைப் பார்த்தால் நம்மோடு ஒக்கச் சொல்லலாம் படி இருக்கை -சர்வேஸ்வரன் மனுஷ்ய சஜாதீயனாய் முகம் கொடுத்து கொண்டு இருக்குமா போலே யாயிற்று இவர்களும்-என்னை யாண்டார்-இங்கே திரியவே-கண் வட்டத்தில் சஞ்சரியா நிற்க –அன்றி-அவர்களைத் தவிர்ந்து —நறு மா விரை நாள் மலரடிக் கீழ்—உறுமோ பாவியேனுக்கு–இவருடைய கண்ணி நுண் சிறுத் தாம்பு இருக்கிற படி -ஸ்ரீ மதுரகவிகளுக்கும் அடி இது இறே -பொய் நின்ற ஞானம் தொடங்கி முனியே நான்முகன் அளவும் அனுவர்த்தித்த விடத்து ஆழ்வார் தமக்கு பிரயோஜன ரூபமாக சொன்ன பயிலும் சுடர் ஒளி-நெடுமாற்கு அடிமை யே தமக்கு தஞ்சமாக பற்றினார் -யான்யஸ்மாகம் ஸூ சரிதாநி -என்ன கடவது இறே –

இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என் இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்த
செங்கோ லத்த பவள வாய்ச் செந்தாமரைக் கண் என் அம்மான்
பொங்கு ஏழ் புகழ்கள் வாய ஆய் புலன் கொள் வடிவு என் மனத்தது ஆய்
அங்கு ஏய் மலர்கள் கைய ஆய் வழி பட்டு ஓட அருளிலே–8-10-4–சர்வ இந்திரிய அபஹார ஷமமான வடிவு என் மனசிலே சந்நிஹிதமாய்-

கீழ் சொன்ன ஆகாரங்களை உடையரான இளைய பெருமாள்-ஸ்ரீ பரத ஆழ்வான் ஸ்ரீ சத்ருகன ஆழ்வான் ஆகிய திரு தம்பிமார் மூவர் படியும் இவர் பக்கலிலே காணலாம் —

(ஆன ப்‌ராதாக்கள்‌) இப்படியிருந்துள்ள இளையபெருமான்‌, ஸ்ரீபரதாழ்வான்‌, ஸ்ரீஸத்ருக்‌நாழ்‌வான்‌ என்கிற ப்‌ராதாக்கள்‌.

அப்பொழுதைக்கு அப்பொழுது போனாய் என்னும் மாதா பிதாக்கள் படியும் காணலாம்-அதாவது –
அப்பொழுதைக்கு அப்பொழுது என்னும் பிதா அதாவது –சக்கரவர்த்தி –ந ததர்ப்ப சமாயாந்தம் பஸ்ய மானோ நராதிப–அயோத்யா -3-29- -என்கிற படியே வைத்த கண் வாங்காதே உத்தரோத்தர அனுபவியா நிற்கச் செய்தே -ஒருகாலும் த்ருப்தன் ஆகாமல் அநுபுபூஷுவாய் செல்லுமா போலே –இவரும் –
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு -இத்யாதிப் படி யாவத் காலம் அனுபவியா நின்றாலும் அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதம் –2-5-4- என்று அனு ஷணம் எனக்கு அதிருப்தி கரமான போக்ய வஸ்து என்று மேன்மேலும் அபிநிவிஷ்டர் ஆகையாலும்-

(அப்பொழுதைக்கப்பொழுது போனாய்‌ என்னும்‌ மாதா பிதாக்கள்‌) “ந ததர்ப்ப ஸமாயாந்தம்‌”” (ரா. ௮. 3 – 30) என்று பெருமாளை ஸர்வ காலமும்‌ அநுபவியா நிற்கச்‌ செய்தேயும்‌ பர்யாப்தனாகாத சக்ரவர்த்தியைப் போலே இவரும்‌ ”அப்பொமுதைக்கப்‌பொழுதென்‌ ஆராவமுதம்‌” (திருவா. 2 – 5 – 4) என்று ஸர்வ காலமும்‌ அநுபவியா நிற்கச் செய்தேயும்‌ பர்யாப்தி பிறவாத அபிநிவேஸத்தை உடையராகையாலும்‌,-

எப்பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும்
அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம் கை கமலம்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி ஊழி தொறும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே –2-5-4-
–க்ஷண காலமும் -கலா காஷ்டாதிகளாலும் பேதிக்க ஒண்ணாத அத்யல்ப காலம் அனுபவிப்பது-ஒரு நாள் அனுபவிப்பது -ஒரு மாசம் அனுபவிப்பது -ஒரு சம்வத்சரம் அனுபவிப்பது-கல்பம் தோறும் கல்பம் தோறும் அனுபவிப்பது -இப்படி கால தத்வம் உள்ளதனையும் அனுபவியா நின்றாலும் பூர்வ க்ஷணத்தில் அனுபவம் போலே அன்றியே உத்தர க்ஷணத்தில் அனுபவம் இருப்பது – ஊழி ஊழி -மேல் போக்கு இல்லாமையால் மடிக்கிறார்-தாரா வாஹிக ஞானத்தில் கால உபஷடம்பாதிகளால் வருவதொரு பேதம் உண்டு இறே ஞானத்துக்கு-
அது போல் அன்றிக்கே அனுபவித்த ஒன்றை அனுபவித்தால் போலே நித்ய அபூர்வமாய் இருக்கை-

போனாய் என்னும் மாதா –அதாவது –யமளார்ஜுனயோர் மத்யே ஜகாம – ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-6-15-என்று கிருத சங்கேதமாய் நலிய வந்து நின்ற யமளார்ஜுனர் நடுவே கிருஷ்ணன் போன போது
யசோதை பிராட்டி ஓடிச் சென்று , எடுத்து கொள்ளா நிற்க – மருதுகளின் பெருமையையும் ,இவன் மவ்க்யத்தையும் கண்டு வயிறு எரிந்தி கொண்டு முகத்தைப் பார்த்து – இப் பெரிய மருதிகளின் நடுவே போனாயே -என்று வெறுத்தார் போலே –இவரும் – அதீத கால ஸ்மிதமாய் இருக்கவும் சம காலத்தில் போலே பிரகாசிக்கையாலே – அப்படி வயிறு எரிந்து கொண்டு –-போனாய் மா மருதின் நடுவே -5-1-2-என்கையாலும்-பிதாவும் மாதாவுமான அவர்கள் இருவர் படியும் இவர் பக்கல் காணலாம் என்கை-

போனாய் மாமருதின் நடுவே! என் பொல்லா மணியே!
தேனே! இன்னமுதே! என்றேன்றே சில கூத்துச் சொல்லத்
தானேல் எம்பெருமான் அவன் என்னாகி ஒழிந்தான்
வானே மாநிலமே மற்றும் முற்றும் என்னுள்ளனவே.–5-1-2—போனாய் -யாமலார்ஜுனங்கள் நடுவே போன போது யசோதை பிராட்டி ப்ரேமத்தாலே சொன்ன வார்த்தையை -ப்ரேம கந்தம் இன்றிக்கே இருக்கிற நான் சொன்னேன் –-போனாய் -கை கழிந்தது -இனி பிரதிகிரியை இல்லை -பல அனுபவமே என்று இருக்கிறார் -பூத காலமாய் இருக்க இவருக்கு வர்த்தமான காலம் போலே இருக்கிறது –ஈஸ்வரன் கொடுத்த ஞான வைஸத்யம் இவருக்கு வயிறு எரிச்சலுக்கு உறுப்பாயிற்று -நலிய வந்தவை தான் நலிய பற்றாமை தானே சென்று புக்கான் என்கிறார்-மா மருது-மஹா அசுரர்கள் வடிவுக்குத் தகுதியாக ஆவிர்பவித்த மருதுகள்-இவன் மௌக்யத்தை அறிந்து பணைத்தவை என்றுமாம் -அவ்வருகே சாய்ந்தவை இப்பெரிய வடிவோடே உள்ளே சாய்ந்தனவாகில்-என்னாவக் கடவது என்கிறார் –
நடுவே போனாய் –இருவரும் க்ருத சங்கேதர்களாய் இருக்க -ஒன்றிலே துளை கண்டு போனாய் போலே யாயிற்று போனது- புணர் மருதம் இறே – மௌக்யத்தாலே ஓர் அருகு ஒதுங்க அறியானே -யாமளார்ஜ்ஜுன யோர் மத்யே ஜகாம என்று ருஷி வயிறு பிடிக்கிறான் -இவர் மா மருதுவின் நடுவே போனாய் என்கிறார்

போனாய்‌ மா மருதின்‌ நடுவே”’ (திருவா. 5 – 1 – 2) என்று யமளார்ஜநங்களின்‌ நடுவே போன போது யஸோதைப் பிராட்டி வயிறெரிந்தாப் போலே இவரும்‌ அதீத காலமாயிருக்கச் செய்தேயும்‌ ஸம காலத்திற் போலே வயிறு பிடிக்கையாலும்‌.

செந்தீ தண் காற்று இள நாகம் முதலான பகை அற சிந்தை செய்து எங்குமுளன் என்னும் பள்ளிப் பிள்ளை படியையும் காணலாம் –-அதாவது ஸ்ரீ பிரஹ்லாதன் –நாக்நிர் தஹதி நைவாயம் சஸ்த்ரைஸ் சின்னோ ந சோரகை ஷயம் நீதோ நவாதேன ந விஷேண ந க்ருத்யா––ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-19-58-என்றும் – சத்வா சக்தமதி கிருஷ்னே தஸ்ய மானோ மஹோரகை நவி வேதாத்மனோ காத்ரம் தத் ஸ்முருத் யாஹ்லாத சம்ஸ்தித–ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-38- -என்கிறபடி அக்நி முதலானவை பாதகம் ஆகாத படி – சர்வ பூதாத்மகே தாத ஜகந்நாதே ஜகன் மயே பரமாத்மனி கோவிந்தே மித்ராமித்ர கதா குத – ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-19-36- என்று மித்ரா அமித்ரா அவகாசம் அற சர்வமும் பகவத் ஆத்மகதயா
அனுகூலமாக அனுசந்தித்து –எங்கும் உளன் கண்ணன் -2-8-9–என்கிறபடியே – உர்வ்யாமஸ்தி- ஸ்ரீ விஷ்ணு புராணம் – தொடங்கி -சர்வத்ராஸ்தி-என்று பிறர்க்கும் உபதேசித்தால் போலே

(செந்தீ தண்காற்று இத்யாதி, ) ““நாக்‌நிர்தஹதி தைவாயம்‌ மஸ்தரைஸ்சிந்நோ மஹோரகை.। க்ஷயம்‌ நீதோ ந வாதேந ந விஷேண நக்ருதயயா”‘ (வி. பு. 1 – 19-59), “ஸத்வாஸக்தமதி: கருஷ்ணே தஸ்ய மாநோ மஹோரகை, ! ந விவேதாத்மநோ காத்ரம்‌ தத்ஸ்ம்ருத் யாஹ்லாத,ஸம்ஸ்தித?’” (வி. பு. 1 – 17 – 39) என்று அக்‌நி முதலான பாதக பதார்த்தங்களும்‌ தன்னை பாதியாதபடி **ஸர்வ பூதாத்மகே தாத ஜகந்நாதே, ஜகந்மயே । பரமாத்மநி கோவிந்தே, மித்ராமித்ரகதா குத?” (வி. பு. 1 – 19 – 37) என்று ஸர்வத்தினுடையவும்‌ பகவதாத்மகத்வாநு ஸந்தாநத்தாலே ஸத்ரு மித்ர விபாகமற ஸர்வமும்‌ தனக்கு அநுகூலமாக அநுஸந்தித்து, “எங்குமுளன்‌ கண்ணன்‌” (திருவா. 2 8 – 9) என்கிறபடியே ‘“உர்வ்யாமஸ்தி”” என்று தொடங்கி ““ஸர்வத்ராஸ்தி’‘ என்று பிறர்க்கு உபதேஸிக்கவும்‌ வல்லனாய்‌, “’பள்ளியிலோதி வந்ததன்‌ சிறுவன்‌”, “பிள்ளையைச் சீறி” (திருமொழி 2 – 8 -8) என்று சொல்லப்படுகிற பள்ளிப் பிள்ளையான ஸ்ரீப்ரஹ்லாத ஆழ்வானைப் போலே.-

எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கில்லை யால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என்
சிங்கப்பிரான் பெருமை யாராயும் சீர்மைத்தே –2-8-9—சர்வேஸ்வரன் சர்வகதன் என்றான் -இதுவாயிற்று அவன் சொன்ன தப்பு –மயா ததாமிதம் சர்வம் ஜகத் அவ்யக்த மூர்த்தி நா -என்றும்-நத தஸ்தி விநாயத் ஸியாத் மயா பூதம் சராசரம் -என்று அவன் தானே சொன்னதை யாயிற்று இவன் சொல்லிற்று –-இவ் வர்த்தத்தை சத்ருக்கள் சொல்லிலும் ஆதரிக்க வேணும்-இவன் பருவத்தாலும் சம்பந்தத்தாலும் ஏதேனும் ஒன்றை சொல்லிலும் ஆதரிக்க வேணும் –

பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் வாயில் ஓர் ஆயிர நாமம்
ஒள்ளியவாகிப் போத வாங்கு அதனுக்கு ஒன்றுமோர் பொறுப்பிலனாகி
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்பப் பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய்
தெள்ளிய சிங்கமாகிய தேவைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே—-2-3-8—பள்ளி ஓதும் பருவத்தில் சொன்னவை அடங்கலும்-சிரஸா வஹிக்க வேண்டும்படி இருக்கும் –-இதாயிற்று பருவம் -இருந்தபடி –
அதுக்கு மேலே தன் வயிற்றில் பிறந்த பிரஜை சொன்னவை அடையப் பொறுக்க வேணும் –திரு நாமம் சொன்னதுவே ஹேதுவாக வயிற்றில் பிறந்தவனை கை விட்டான் அவன் – திரு நாமம் சொன்னாரோடே தமக்கு சம்பந்தமாக நினைத்து இருக்கிறபடியாலே –பிள்ளையை –என்கிறார்-கோபத்தாலே செய்வது அறியாதே தூணைத் தட்ட –

இவரும் –செந்தீ தண் காற்று இள நாகம் முதலான பகை அற-அதாவது –-அறியும் செம்தீயை தழுவி அச்சுதன் என்னும் மெய்யே வாள் எறியும் தண் காற்றை தழுவி என்னுடை கோவிந்தன் என்னும் -4-4-3–என்றும் போம் இள நாகத்தின் பின் போய் அவன் கிடக்கை ஈது என்னும் -4-4-5-என்று அக்நி முதலான பாதக பதார்த்தங்கள் பகவதாத்மகத்வேன அனுகூலமாம் படி — என் முன்னை கோளரியே —-உன்னை சிந்தை செய்து —-என் முன்னை தீ வினைகள் முழு வேர் அரிந்தனன் யான் — முடியாதது என் எனக்கு -2-6-6-என்று அவனை அனவரதம் அனுசந்தானம் பண்ணி

இவரும்‌ (செந்தீ தண்காற்று இத்யாதி, பகையறச்சிந்தைசெய்து) ”அறியும்‌ செந்தீயைத் தமுவி அச்சுதனென்னும்‌ மெய்வேவாள்‌ எறியும்‌ தண் காற்றைத்‌ தழுவி என்னுடைக்‌ கோவிந்தனென்னும்‌”” (திருவா. 4 – சீ – 3), ““போமிள நாகத்தின்‌ பின் போய்‌ அவன்‌ கிடக்கை ஈதென்னும்‌’” (திருவா. 4 – 4- 5) என்றும்‌ அப்படியே அக்‌நி முதலான பாதக பதார்த்தங்களும்‌ பகவதாத்மகத்வாநுஸந்தாநத்தாலே அநுகூலமானபடி, “என்‌ முன்னைக்‌ கோளரியே – உன்னைச் சிந்தை செய்துசெய்து – என்‌ முன்னைத் தீவினைகள்‌ முழுவேரரிந்தனன்‌ – முடியாததென்‌ எனக்கேலினி”’ (திருவா. 2 – 6 – 6) என்று அதுஸந்தித்து,

அறியும் செந்தீயைத் தழுவி,‘அச்சுதன்’ என்னும்;மெய் வேவாள்;
எறியும் தண் காற்றைத் தழுவி, ‘என்னுடைக் கோவிந்தன்’ என்னும்;

வெறி கொள் துழாய் மலர் நாறும் வினையுடை யாட்டியேன் பெற்ற
செறிவளை முன்கைச் சிறுமான் செய்கின்றது என்கண்ணுக்கு ஒன்றே?–4-4-3—தாஹகம் என்று அறிந்து போருமத்தை தழுவா நின்றாள்-மந்த்ர யவ்ஷாதிகளாலே பிரதிபந்தக சக்தி தான் உண்டாயத் தழுவுகிறாள் அன்றே-தேஜஸாம் ராசி மூர்ஜ்ஜிதம் -என்று ஒளி உடைமையை பார்த்து தழுவா நின்றாள் –பொரு நீர்க் கடல் தீப்பட்டு எங்கும் திகழும் எரியோடு செல்வது ஒப்ப -என்னுமா போலே-மாணிக்கப் படி சாத்தி வந்து தன்னோடே அணைவதாக நிற்கிறானாக கொண்டு தழுவா நின்றாள் –-அச்சுதன்’ என்னும்;-இத்தசையிலே வந்து சந்நிஹிதனாய்-என்னை மங்காமே நோக்கினான் என்னா நின்றாள்
எல்லா அவஸ்தையிலும் உள்ளவர்கள் உடைமையை நழுவ விடாதார்கள் இறே-மெய் வேவாள்;
அதக்த காத்ரையாய் இரா நின்றாள்-இவள் பிரமித்தால் அது தன் கார்யம் செய்தால் ஆகாதோ –
பஸ்யாமி பத்மாஸ் தரணாஸ் த்ருதானி சீதானி சர்வாணி திஸாம் முகாநி –என்னக் கடவது இறே-
சீதோ பவ என்றாரும் இல்லை கிடீர் –சீதோ பவ என்றவள் தானே இறே இங்கனே செய்கிறாள்

எங்கும் உளன் என்னும்-அதாவது-கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்துளன் –1-1-6-என்று அவனுடைய சர்வகதத்வத்தை பிறரும் அறியும்படி அருளிச் செய்கையாலே- பள்ளிப்பிள்ளைப் படியும் காணலாம் – அதாவது பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் -பெரிய திருமொழி -2-3-8-என்றும் பிள்ளையைச் சீறி-பெரிய திருமொழி -2-3-8– -என்றும் சொல்லப் பட்ட
பள்ளிப் பிள்ளையான பிரகலாதன் படியும் இவர் பக்கல் காணலாம்–

உன்னைச் சிந்தை செய்து செய்து உன் நெடுமா மொழியிசை பாடியாடி என்
முன்னைத் தீ வினைகள் முழு வேரரிந்தனன் யான்
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட என்
முன்னைக் கோளரியே முடியாதது என் எனக்கே –2-6-6—அநாதி கால சஞ்சிதமான கர்மங்களை -சவாசனமாகப் போக்கினேன்-யான்–யான் என்கிறது பேறு தம்மைதான படியால் விரோதியை நீ போக்கினை படி என் என்ன -நரசிம்ஹமமாய் ஹிரண்யனைப் போக்கினால் போலே-உன்னைச் –
வகுத்தவனுமாய் -உபகாரகனுமான உன்னை–ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு உபகரித்ததும் தமக்கு என்று இருக்கிறார்-ஆஸ்ரிதரிலே ஒருவருக்குச் செய்தது தனக்குச் செய்ததாக நினைத்து இராத வென்று பகவத் சம்பந்தம் இல்லையாம் அத்தனை-முடியாதது என் எனக்கே –-ஆஸ்ரித ப்ரதிஞ்ஞா சமயத்திலே உன்னை அழிய மாறி தோற்றுவாயான பின்பு பெறாதது உண்டோ -எல்லாம் பெற்றேன் அல்லேனோ-

“’கரந்தசிலிடந்தொறுமிடந்திகழ்பொருள் தொறும்‌ கரந்தெங்கும்‌ பரந்துளன்‌”’ (திருவா. 1 – 1 – 10) என்று அவனுடைய ஸர்வகதத்வத்தை அருளிச் செய்கையாலும்‌

முற்றவிட்டு மற்றிலேன் என்னும் தர்மாத்மா-ஸ்ரீ விபீஷண ஆழ்வான் படியம் காணலாம்-அதாவது
ஸ்ரீ விபீஷண ஆழ்வான்-த்யக்த்வா புத்ராம்ஸ் ச தாராம்ஸ்ச ராகவம் சரணம் கத –யுத்த -17-14-.-என்றும் –
பரித்யக்தா மயா லங்கா மித்ரானி ச தநாநி ச பவத்கதம் மே ராஜ்யஞ்ச ஜீவிதஞ்ச ஸூகாநிவை –யுத்த -19-5-என்று இலங்கையோடு கூட புத்திர தாராதிகள் சர்வத்தையும் விட்டு சக்கரவர்த்தி திரு மகனே தமக்கு எல்லாம் என்று பற்றினால் போலே–இவரும் –-பாதம் அடைவதன் பாசத்தாலே மற்ற வன் பாசங்கள் முற்ற விட்டு -8-2-11–என்று சம்சாரிக சகல சங்கங்களையும் ஸ வாசனமாக விட்டு –
தயரதற்க்கு மகனை தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாகவே-3-6-8 -என்று சக்கரவர்த்தி திருமகனையே தமக்கு சர்வ பிரகார ரஷகனாக பற்றுகையாலே- விபீஷணஸ்து தர்மாத்மா ந து ராக்ஷஸ சேஷ்டித –ஆரண்ய –17-23-– என்று தர்ம புத்தி உடையவன் மாத்ரம் அன்றிக்கே –
ராமோ விக்ரஹவான் தர்ம-ஆரண்ய –37-13- -என்று சொல்லப் பட்ட தர்ம ஸ்வரூபனான
சக்கரவர்த்தி திரு மகனையே தனக்கு தாரகமாக உடையவன் ஆகையாலே – தர்மாத்மா என்று விசேஷஞர் சொல்லும் ஸ்ரீ விபீஷண ஆழ்வான் படியும் இவர் பக்கல் காணலாம்-

(முற்றவிட்டும்‌ மற்றிலேன்‌ என்னும்‌ தூர்மாத்மா) ‘பரித்யக்தா மயா லங்கா மித்ராணி ச தநாநி ச | பவத்‌ கதம்‌ மே ராஜ்யஞ்ச ஜீவிதஞ்ச ஸுகாநி வை”’ (ரா. யு. 19 – 5), “த்யக்த்வா புத்ராம்ஸ்ச தாராம்ம்ச ராகவம்‌ ஸரணம்‌ ௧த ச’” (ரா. யு. 17 – 16) என்றும்‌ லங்கையோடே கூட புத்ர தாராதிகளான ஸர்வத்தையும்‌ விட்டு எல்லாம்‌ சக்ரவர்த்தித்‌ திருமகனாகப் பற்றின ‘“விபீஷணஸ்து தர்மாத்மாந து ராக்ஷஸ சேஷ்டித?’”” (ரா. ஆ. 17 24) என்ற, “ராமோ விக்‌,ரஹவாந்‌ தர்ம?” (ரா. ஆ. 37 -13) என்று தர்ம ஸ்வரூபமான சக்ரவர்த்தித் திருமகனைத்‌ தனக்கு தரரகமாக உடையனாகையாலே தர்மாத்மா என்று சொல்லப்படுகிற ஸ்ரீவிபீஷணப் பெருமாளைப் போலே இவரும்‌. (முற்றவிட்டு) “பாதமடைவதன்பாசத்தாலே மற்ற வன் பாசங்கள்‌ முற்ற விட்டு” (திருவா. 8 – 2 – 11) என்று ஸாம்ஸாரிகமான ஸகல ஸங்கத்தையும்‌ ஸவாஸநமாக விட்டு. (மற்றிலேன்‌ என்று) தயரதற்கு மகன் தன்னை யன்றி மற்றிலேன்‌ தஞ்சமாகவே”’ (திருவா. 3 – 6 – 8) என்று சக்ரவர்த்தித் திருமகனையே தஞ்சமாகப்‌ பற்றுகையாலும்‌.

பாதமடை வதன் பாசத்தாலே மற்றவன்பாசங்கள் முற்ற விட்டு
கோதில் புகழ்க் கண்ணன் தன்னடி மேல் வண் குருகூர் சடகோபன் சொன்ன
தீதில் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவையுமோர் பத்திசை யோடும் வல்லார்
ஆதுமோர் தீதிலராகி இங்கு மங்கு மெல்லாம் அமைவார்கள் தாமே–8-2-11—திருவடிகளில் கிட்டுகையில் உண்டான சங்கத்தால் புறம்பு உண்டான வலிய சங்கங்களை நிச்சேஷமாக விட்டார் -இதுவாயிற்று இத்திருவாய் மொழியிலே சொல்லிற்று யாயிற்று -புறம்புள்ள பற்று அற்று திருவடிகளிலே ஆசைப்பட்டவர் அல்லர் -மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு -என்கிறபடியே திருவடிகளிலே சங்கத்தால் உபாதிகமான பாஹ்ய சங்கத்தை தவிர்ந்தவர்

வாளி பொழிந்த நிர்க்குண விச்வாத்மா உள்ளே வுறைய வீர சரிதம் ஊணாக கற்பார் பாவம் மற்றிலேன் என்னும் ராம தாசன் படியும் காணலாம் –-அதாவது திருவடி –-நிர்குண பரமாத்மா ஸௌ தேஹந்தே வ்யாப்ய திஷ்டதி -பாரதம் –ஆரண்யம் -149-8–என்கிறபடியே விரோதி வர்க்கத்தை கிழங்கு எடுக்கையாலே ஏறிட்ட நாண் இறங்கிட்டு –-பவான் நாராயணோ தேவ -யுத்த -130-13-என்கையாலே பரமாத்ம சப்த வாச்யனாய் கொண்டு – விஸ்வாத்மாநம்-தைத்ரியம் -என்கிறபடியே விச்வத்துக்கும் ஆத்ம பூதனாய் இருக்கிற சக்கரவர்த்தி திரு மகனைத் தன்னுள்ளே உடையவனாய் –-சோத்ரை வஹந்த ஹனுமான் பரமாம் விமுக்தம் புத்த்யா விதூய சரிதம் தவ சேவ தேசவ் –அதிமானுஷ ஸ்தவம் -32-என்கிறபடியே சக்கரவர்த்தி திரு மகனின் வீர சரித்ரத்தைப் போக்யமாக உடையனாய் –-ஸ்நேஹோ மே பரமோ ராஜம்ஸ்த்வயி நித்யம் ப்ரதிஷ்டித பக்திஸ் ச நியதா வீர பாவோ நான் யத்ர கச்சதி– உத்தர காண்டம் –40-15-என்று குணத்தாலும் சரத்தாலும் , அனுகூலரையும் பிரதி கூலரையும் ஜெயிக்கும் வீரரான சக்கரவர்த்தி திரு மகன் அளவிலே எப்போதும் பிரதிஷ்டமாய்-இதுக்கு மேல் இல்லை என்கிற ஸ்நேகத்தாலும் , நியதியான பக்தியாலும் -இவ் விஷயத்தை விட்டு பரத்வத்தில் தன் நெஞ்சு போகாமை
சொல்லுகிற இடத்தில் -பரத்வத்தின் பேரும் சொல்லுகை அசஹ்யமாய் –அன்யத்ர – என்னும்படி –
சக்கரவர்த்தி திருமகனை அல்லாது அறியேன் என்று இருந்தால் போலே

(வாளிபொழிந்த இத்யாதி, ) “நிர்குண பரமாத்மாஸெள தேஹம்‌ தே வ்யாப்ய திஷ்ட,தி”’ (பா. ஆ. 147 – 8) என்று – ஏறிட்ட நாணை இறங்கிட்ட சக்ரவர்த்தித் திருமகனைத்‌ தனக்குள்ளே உடையனாய்‌, “*ஸோத்ரைவ ஹந்த ஹநுமாந்‌ பரமாம்‌ விமுக்திம்‌ புத்‌த்‌யா விதூய சரிதம்‌ தவ ஸேவதேஸெள”’ (அதிமாநு. 32) என்று அந்த சக்ரவர்த்தித்‌ திருமகனுடைய வீரசரிதத்தை போக்‌யமாக உடையனாய்‌, “ஸ்நேஹோ மே பரமோ ராஜம் ஸ்த்வயி நித்யம்‌ ப்ரதிஷ்டித | பக்திஸ் ச நியதா வீர பாவோ நாந்யத்ர கச்சதி” (ரா.௨.40-16) என்று சக்ரவர்த்தித் திருமகனுடைய வீர சரிதத்தை போக்‌,யமாக உடையனான திருவடியைப் போலே.

இவரும்-வாளி பொழிந்த நீர் குண விச்வாத்மா உள்ளே வுறைய-அதாவது-செருக்கடுத்து அன்று திகைத்த அரக்கரை உருக்கெட வாளி பொழிந்த ஒருவன் திருக் கடித் தானமும் என்னுடை சிந்தையும் ஒருக்கடுத்து உள்ளே உறையும் பிரான் கண்டீர் -8-6-2-என்று மூல பலம் மூதலறும் படி சர வர்ஷத்தை வர்ஷித்த ஏக வீரனான சக்கரவர்த்தி திருமகனை தன் உள்ளே உடையவராய் ,-வீர சரிதம் ஊணாக
-அதாவது-கணை நாணில் ஓவாத் தொழில் சார்ங்கன் தொல் சீரை நன் நெஞ்சே ஓவாதே ஊணாக ஊண் -பெரிய திருவந்தாதி -78-என்கிற படி அவனுடைய வீர சரித்ரத்தையே போக்யமாய் உடையவராய் –கற்பார் பாவம் மற்றிலேன் என்னும்-அதாவது-கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ-7-5-1–என்று பிரிய ஹிதங்கள் பற்ற ஒன்றை கற்கும் அவர்கள் ரமணீயனும் உபாகரனுமாய் இருக்கும்
சக்கரவர்த்தி திரு மகனை ஒழிய பரத்வாதிகளையும் அவதாராந்தரங்களையும் கற்பரோ என்று
தமக்கு இவ் விஷயத்தில் உண்டான பிராவண்ய அதிசயத்தாலே பரத்வாதிகளை கழிக்கிற இடத்தில் அவற்றின் பேர் சொல்லுகையும் அசஹ்யமாய் –மற்றும் -என்னும் படி –தயரதற்க்கு மகன் தன்னை அன்றி மற்றிலேன்-3-6-8- -என்று இருக்கையாலே-தாசோஹம் கோசலேந்த்ரஸ்ய–ஸூந்தர –43-9- -என்று
ராம தாசனாய் இருக்கும் திருவடி உடைய படியும் இவர் இடம் காணலாம் 

இவரும்‌ (கற்பார் பாவம்‌ மற்றிலேன்‌) ““கற்பாரிராமபிரானையல்லால்‌ மற்றும்‌ கற்பரோ”’ (திருவா. 7 – 5 – 1) என்று ப்ரிய ஹிதங்களிலொன்றைக்‌ கற்குமவர்களைப் பற்ற உன்னைக்‌ கற்குமவர்கள்‌ சக்ரவர்த்தித் திருமகனை யொழியப்‌ பரத்வாதிகளையும்‌, அவதாராந்தரங்களையும்‌ கற்பரோ என்று தமக்கு இவ்விஷயத்திலுண்டான ப்ராவண்யத்தாலே “சிந்தை மற்றொன்றின்‌ திறத்ததல்லா’” (திருவா. 7 – 11 – 10) என்று பரத்வத்தின்‌ பேருங்கூட அஸஹ்யமாம்படி “தயரதற்கு மகன் தன்னை யன்றி மற்றிலேன்‌ தஞ்சமாகவே”’ (திருவா.3 – 6 – 8) என்று அந்த சக்ரவர்த்தித் திருமகனையே தஞ்சமாகப்‌ பற்றுகையாலும்‌.-

திருக் கடித்தானமும் என்னுடைச் சிந்தையும்
ஒருக்கடுத்துள்ளே உறையும் பிரான் கண்டீர்
செருக்கடுத்தன்று திகைத்த வரக்கரை
உருக்கெட வாளி பொழிந்த வொருவனே
–8-6-2-ஒருங்கவடுத்து -அதாவது ஓக்க நினைக்கை -திருப்பதியையும் என் ஹிருதயத்தையும் ஓக்க ஆதரித்து –உள்ளே உறையும்-என் மனசிலே நித்ய வாஸம் பண்ணா நின்றான் -விரோதி செய்தது என் என்ன -அது ராக்ஷசர் பட்டது பட்டது-யுத்த கண்டூதி வர்த்தித்து திகைத்த வரக்கரை-சக்கரவர்த்தி திருமகனை வெல்ல நினைத்த மதி கேடரான ராக்ஷஸரை –அன்று -ந நமேயம்-என்ற அன்று –உருக்கெட -சின்னம் பின்னம் சரைர்த்தக்தம் –வாளி பொழிந்த-சர வர்ஷம் வவர்ஷஹ ஒருவனான –பிரான் கண்டீர் -ஏக வீரனான உபகாரகன் கண்டீர் 

துணை நாள் பெருங்கிளையும் தொல் குலமும் சுற்றத்
திணை நாளும் இன்புடைத்தா மேலும் -கணை நாணில்
ஓவாத் தொழில் சார்ங்கன் தொல் சீரை நல் நெஞ்சே
ஓவாத ஊணாக வுண்
–78–அம்பானது நாணில் இடைவிடாதே வியாபிக்கிற வில்லை யுடையவன்-என்றும் ஆஸ்ரிதர் கார்யம் மாறாதே செய்து போருமவருடைய கல்யாண குணங்களை-ஸோபாதிக பந்துக்களுக்கும் நிருபாதிக பந்துக்களுக்கும் வாசி யறியும் நெஞ்சே-விச்சேதம் இல்லாத போகமாக புஜி-

கற்பார் இராம பிரானை அல் லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே.–7-5-1-ஒருவன் ஒன்றைக் கற்பது -அப்போதை இனிமைக் காதல் -விபாகத்தில் புருஷார்த்தத்தை தரும் என்றாதல் இறே –பிரியவாதீச பூதா நாம் என்றும் –ராமோ ராமோ ராம இதி -என்றும் –லோகா நாம் த்வம் பரோ தர்ம -என்றும் –ராமோ விக்ரஹவான் தர்ம -என்றும் பிரிய ஹிதங்கள் இரண்டும் ஒரு தலைத்த விஷயமாய் -நிலாத் தென்றல் சந்தனம் தண்ணீர் போலே பரார்த்தமாய் இருக்கிற விஷயத்தை ஒழிய -அதிகரிப்பார் புறம்பேயும் ஒன்றை அப்யசிப்பாரோ -அநர்த்த கரம் என்றாலும் விட ஒண்ணாத பிரிய விஷயமாய் -அபிரியம் ஆனாலும் விட ஒண்ணாத படி பத்த்யமான இவ்விஷயத்தை ஒழிய வேறு ஒன்றை அப்யஸிக்கக் கடவதோ –மற்றும் என்று -தேவதாந்தரங்களை சொல்லுகிறது அன்று -பரத்வத்தையும் அவதாரங்களையும் சொல்லுகிறது -பாவோ நான்யத்ர கச்சதி

துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய் அவை அல்லனாய்
உயர நின்றது ஓர் சோதியாய் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் தனை
அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன் தனைத்
தயரதற்கு மகன் தனையன்றி மற்றிலேன் தஞ்சமாகவே.–3-6-8-–ராவண வத சமனந்தரத்திலே முதலிகளிலே சிலரை காணாது ஒழிய தேவதைகளைக் கொண்டு மீட்டும் ஒரு பாலனுக்கு அகால ம்ருத்யு வர அம்பாலே மீட்டுக் கொடுத்தும் செய்த சக்கரவர்த்தி திருமகனை அன்றி –ததவ் கௌசிக புத்ராய -என்று ராஜ்யத்தை தந்தேன் என்னா அத்தை தவிர்ந்து காடு ஏறப் போம் என்னா ஒரு சம்சாரிக்கு இஷ்ட விநியோக அர்ஹன் ஆனவனை –-பவான் நாராயணோ தேவ -என்று ஈஸ்வர அபிமானிகள் தங்கள் வந்து சொன்னால் ஆத்மா நம் மானுஷம் மன்யே என்னுமவன் –-மற்றிலேன் தஞ்சமாகவே.-மற்று என்று பகவத் வியக்த்ரந்தரங்களை நினைக்கிறார் –தஞ்சம் -ஆபத் தனம் –

பல் வகையும் கண்டு வெண் சங்கு ஏந்தின ரூப பரனான ஸ்வேதன் படியையும் காணலாம் –-அதாவது
அர்ஜுனன்-பஸ்யாமி தேவாம் ஸ்தவ தேவ தேஹே சர்வாம் ஸ்ததா பூத விசேஷ சங்கான்
ப்ரஹ்மாணம் ஈசம் கமலாசனஸ்தம் ருஷீம்ச ச சர்வம் உரகாம் ச தீப்தான்
-ஸ்ரீ கீதை -11-15-என்று
விஸ்வரூபம் கண்ட அநந்தரம் –-அத்ருஷ்ட பூர்வம் ஹ்ருஷிதோஸ்மி த்ருஷ்ட்வா பயேன ச பிரவ்யதிதம் மனோமே ததேவ மே தர்சய தேவ ரூபம் ப்ரசீத தேவேச ஜகன் நிவாச -11-45-என்றும்-கிரீடிநிம் கதினம் சக்ர ஹஸ்தம் இச்சாமி த்வாம் த்ரஷ்டுமஹம் ததைவ தேனைவ ரூபேண சதுர் புஜேன சஹஸ்ர பாஹோ பவ விச்வமூர்த்தே–11-46–என்று திவ்ய சஷுஸ்ஸாலே -இப்போது கண்ட விஸ்வரூபம் -அத்ருஷ்ட பூர்வதையாலும் – உக்ரதையாலும் -ஹர்ஷ பயங்கள் இரண்டையும் விளைவிக்கையாலே – சதத ஹர்ஷ ஹேதுவாய் -பூர்வ பரிசிதமுமான ஸௌம்ய ஸ்வரூபத்தை காண ஆசைப் பட்டு சதுர் புஜமுமாய் -சங்கு சக்கர கதா தரமுமான திவ்ய விக்ரகத்தைக் காட்ட வேணும் என்று – தத் தர்சன தத் பரனாய் அபேஷித்தால் போலே –

(பல்வகையுங்கண்டு வெண் சங்கேந்தின ரூபபரனான ஸ்வேதன்‌) *“பண்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹே ஸர்வாம்ஸ்ததா பூதவிபேஷஸங்காந்‌ ! ப்‌ரஹ்மாணமீஸம்‌ கமலாஸநஸ்த ம்ருஷீம்ஸ்ச ஸர்வாநுரகாம்ஸ்ச தீப்தாந்‌”” (கீதை 11 – 15) என்று விஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரித்த அநந்தரம்‌ தன்னால்‌ அமைத்தநுபவிக்க வொண்ணாமையாலே *’க்ருதாஞ்ஜலிர்வேபமாநச கிரீடீ”” (கீதை 11 – 35) என்று பீ.தியாலே நடுங்கி அஞ்ஜலி ஹஸ்தனாய்க்கொண்டு ““கிரீடிநம்‌ கதிநம்‌ சக்ர ஹஸ்தமிச்சாமி த்வாம்‌ த்‌ரஷ்டு மஹம்‌ ததைவ । தேநைவ ரூபேண சதுர்புஜேந ஸஹஸ்ர பாஹோ பவ விஸ்வமூர்த்தே”’ (கீதை 11 – 46) என்று ஸங்க சக்ர கதா தரமாய்‌ அஸாதாரணமான உன்னுடைய விக்ரஹத்தைக்‌ காட்ட வேணுமென்று அவ்வடிவிலே தத் பரனாய்‌ அபேக்ஷித்த அர்ஜுநனைப்போலே.

இவரும் –பல்வகையும் கண்டு-அதாவது –-நல்குரவும்–6-3-1-என்று தொடங்கி-பல்வகையும் பரந்த பெருமானை—திரு விண்ணகர் கண்டேனே -என்று வ்ருத்த விபூதி யுக்தனாய் கொண்டு விபூதி முகத்தால் பல படியாக விஸ்த்ருதனாய் இருக்கிறவனைக் கண்டு –நீராய் நிலனாய்–6-9-1-என்று தொடங்கி- சிவனாய் அயனானாய் -என்று கார்ய காரணங்கள் இரண்டையும் சரீரமாக கொண்டு நீ ஜகத் ஆகாரயனாய் இருக்கும் இருப்பைக் காட்டித் தந்தாய் ஆகிலும் இத்தால் நான் பெற்றது உன்னாதான வஸ்துக்களை என்னது என்றும் -பிறரது என்று இருக்கும் விப்ரதிபத்தி போய் -உன்னதே சகலம் என்று இருக்கிற மாத்ரம் – இது எனக்கு ஆகர்ஷமாய் அனுபாவ்யமாய் இருக்கிறது இல்லை —
ஆன பின்பு -கூராழி வெண் சங்கு ஏந்தி —வாராய்–என்று சங்கு சக்கர தரமான உன் அசாதாரண விக்ரகத்தோடே என் முன்னே வர வேண்டும் என்று – அசாதாரண விக்ரக அனுபவ தத் பரராய் அபேஷிக்கையாலே –சினப் போர் ஸ்வேதன்-நான் முகன்-27- -என்று சொல்லப் பட்ட அர்ஜுனன் படியும் இவர் பக்கல் காணலாம் என்கை — ஸ்வேதன் என்றது -ஸ்வேத வாஹனன் என்ற படி– (வெள்ளைப்புரவி தேர் விசயர்க்காய் )

இவரும்‌ “நல்குரவும்‌” (திருவா. 6 – 3 – 1) என்று தொடங்கி “’பல்வகையும்‌ பரந்த பெருமானை – திருவிண்ணகர்க் கண்டேன்‌’” என்று விருத்‌த விபூதி யுக்தானானவனைக்‌ கண்டு. (வெண் சங்கேந்தின) “நீராய்‌ நிலனாய்‌”’ (திருவா. 6 – 9 – 1) என்று தொடங்கி, *“சிவனாயயனானாய்‌” என்று கார்ய காரணங்களிரண்டையும்‌ ஸரீரமாகக் கொண்டு நீ ஜகச் சரீரனா யிருந்தாயே யாகிலும்‌, அத்தால்‌ நான்‌ பெற்றது “விபூதி என்னதுமல்ல, பிறரதுமல்ல; உன்னதே” என்கிற ப்ரதிபத்தி யொழிய எனக்கு-அநுபாவ்யமாகிறதில்லை. ஆனபின்பு எனக்கு அநுபாவ்யமாம்படி “கூராராழிவெண்சங்‌கேந்தி – வாராய்‌”’ (திருவா. ‘ 6 – 9 – 1) என்று சங்க,சக்ர கதா தரனான உன்னுடைய அஸாதரண விக்ரஹத்தோடே வரவேணுமென்று அபேக்ஷிக்கையாலும்‌-

நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
பல்வகையும் பரந்த பெருமான்
என்னை ஆள்வானைச்
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே.–6-3-1-பதார்த்த சங்கோச ரூப தாரித்ர்யம் –கீழே பகவத் அனுபவ தாரித்ர்யம் தத் விகாச ரூபமான சம்பத் துக்க ஸ்தானம் சுக ஸ்தானம்-ஆய்-ஒவ் ஒரு இரட்டையிலும் சேர்த்துக் கொண்டு-எதிர்த் தலையைச் சாய்க்கும் -சாத்ரமும் பகைமை -குணம் இங்கு -குணம் ஸ்தானம் பொருள் – முடிக்கும் விஷம் உஜ்ஜீவிக்கும் அமிர்தம்-பல் வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்-வியாப்தன் -என்னை இந்த ஆகாரத்தை பிரகாசிப்பித்தது -காட்டி 

நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்
கூரார் ஆழி வெண்சங் கேந்திக் கொடியேன்பால்
வாராய்! ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே.
–6-9-1-அண்ட காரணமான பூத பஞ்சகங்களையும் ஸ்ருஷ்டித்து -ஸமேத்யான் யோன்ய சம்யோகம் -என்கிறபடியே ஒன்றாகச் சேர்த்து -பூதேப்யோ அண்டம் -என்கிறபடியே அண்டத்தை ஸ்ருஷ்டித்து -ஸ்ருஷ்டமான அண்டத்துக்கு -பிரகாசகரான சந்த்ர சூர்யர்களை ஸ்ருஷ்டித்து-பிரகாசகராயும் போஷகராயும் இருக்கை-அண்டரருஷ்டாவாக ப்ரஹ்மாவையும் -இவை அதிப்ரவர்த்தமான போது அழிக்கைக்கு ருத்ரனையும் ஸ்ருஷ்ட்டித்தான் –தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு ப்ராவிஸத்-தத் அநு பிரவேஸ்ய ஸச் சத்யச்சா பவத் என்கிறபடியே –சாமா நாதி கரண்யம் அநு பிரவேச க்ருதம் –-நீராய் நிலனாய் என்கிற அசித் பதார்த்தத்தோடு -சிவனாய் அயனாய் -என்கிற ஈஸ்வர அபிமானிகளோடு வாசி அற்று இருக்கிற தாயிற்று ஈஸ்வர பாரதந்தர்யம் -இப்படி ஜகதா காரதையைக் காட்டி தன்தோமேயென்ன-அது போராது -அசாதாரண விக்ரஹத்தை காட்ட வேணும் என்கிறார்-காட்டும் இடத்திலும் ஒப்பனையோடே காட்ட வேணும் -பிரதிபக்ஷத்தின் மேலே ஏவ சாணையில் இட்டால் போலே கூர்மை மிக்கு இருக்கிற திரு வாழி -ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தில் வெளுப்போடே திரு வாழி யிலே கூர்மையோடு வாசி அற இவருக்கு அழகுக்கு உறுப்பாய் இருக்கிறது இறே –

முதலானோர் என்றது –உபமான மசேஷானாம் சாதூனாம் யஸ்ஸதா பவேத் –ஸ்ரீ விஷ்ணு புராணம் –1-15-156– என்கிறபடி எல்லோருக்கும் தம்முடைய ஒரோ வகைகளாலே உபமான பூமியாய் இருக்கும் அவர் ஆகையாலே – இன்னமும் ஞானிகள் ஆனவர்கள் பலர் படியும் இவர் பக்கலிலே காணலாம் என்று தோற்றுகைக்காக –பிராட்டிமாரோடு சாம்யம் சொன்ன போது ஸ்ரீ கோபிமார் முதலானாரோடு சாம்யம் சொன்னாவோ பாதி இறே-லஷ்மணாதிகளோடு சாம்யம் சொன்ன பின்பு தசரதாதிகளோடே இவர்க்கு உண்டான சாம்யம் சொன்ன இதுவும்-

இப்படி இளையபெருமாள்‌ முதலானவர்களெல்லாரோடும்‌ ஸாம்யம்‌ சொல்லிற்று.

ஆக இப்படி நித்ய ஸூரிகளில் தலைவராய் தொடர்ந்து அடிமை செய்யப் பிறந்த லஷ்மணாதிகளோடும்-
நித்ய சம்சாரிகளிலே அந்ய தமராய் வைத்து பகவத் பிரத்யாசன்னராய் பெற்ற தசரதாதிகளோடும்
இவர்க்கு உண்டான சாம்யத்தை அருளிச் செய்தார் கீழ்– அவர்கள் அனைவரிலும் இவருக்கு உண்டான ஏற்றத்தை அருளிச் செய்கிறார் மேல் -இனிமேல்‌ இவர்களெல்லார்க்கும்‌ இவரோடு ஏகதா ஸாம்யமல்லது ஸர்வதா ஸாம்யமில்லை என்று அவர்களில்‌ இவருக்குண்டான வ்யாவ்ருத்தியை அருளிச்‌ செய்கிறார்‌

குழலில் நெஞ்சும் அருகலில் சுவையுமான இவர் அவர்கள் அளவு அல்லர்-சூரணை -128-

குழலில் நெஞ்சும்-அதாவது-குழல் கோவலூர் மடப்பாவையும் திருவிருத்தம் -3–என்கிற பாட்டில் சொல்லுகிற படி – பிராட்டியாரும் நித்ய சூரிகளும் – அவனுமான திரளிலே பற்றின நெஞ்சினராய்-

குழற்கோவலர்‌ மடப்பாவையும்‌”’ (திருவிரு. 3) என்கிற பாட்டிற்படி மஹிஷீ த்ரயத்துக்கும்‌ வல்லபனாய்‌ பூஷணாயுத, விஸிஷ்டனாய்க் கொண்டு ஸர்வ ஸ்வாமியாய்‌, கருடவாஹநனான ஸர்வேஸ்வர விஷயத்தில்‌ அவகாஹித்த என்னுடைய நெஞ்சானது அவனுடைய பரத்வத்தைக் கண்டு மீளுமோ? போக்‌யதையையும்‌, ஸெளலப்‌யத்தையும்‌ கண்டு நிற்குமோ? என்னும்படியான நெஞ்சை யுடையராய்‌, அத்தால்‌ *அப் புள்‌ளின்‌ பின் போன தனி நெஞ்சமே”’ (திருவிரு. 4) என்கையாலே இவருடைய திருவுள்ளம்‌ ப்ரமாணாநுஸாரியாய்க்‌் கொண்டு ப்ரமாண ஸார ப்ரதிபாத்‌,யமான ஸ்வாராதத்வ ரக்ஷகத்வ- போக்‌யத்வங்களிலே கால் தாழ்ந்து மேன்மை முதலாக நீர்மை ஈறாக அவகாஹித்ததென்றபடி.

அருகலில் சுவையுமான-அதாவது-அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன் –திருவாய் -1-9-3-என்ற பாட்டில் சொல்லுகிறபடியே பிராட்டிமாரோடும் -திருவடி- திரு அனந்தாழ்வான் முதலான நித்ய ஸூரிகளோடும் ஒரோ வகையில் பரிமாறும் அவன் அவர்களோடு பரிமாறுமா போலே ஒரு வழியாய் வந்த ரசத்தை தந்து விடுகிறலன் என் அளவில் — அவர்கள் எல்லார் பக்கலிலும் பண்ணும் ஆதரத்தை என் பக்கலிலே பண்ணா நின்றான் என்னும் படி எல்லா வழிகளாலும் உள்ள சம்ஸ்லேஷ ரசத்தை அவன் தமக்கு விளைக்கையாலே போக ரசமும் விஞ்ச பெற்றவரான இவர் –

அருகவிலாய”’ (திருவா. 1 – 9- 3) என்கிற பாட்டிற்படி ஹேய ப்ரத்ய நீகனாய்‌, கல்யாண குணங்களை யுடையனாய்‌, நித்ய ஸூரிகளுடைய ஸத்தாதிகளுக்கெல்லாம்‌ காரண பூதனாய்‌, விலக்ஷண விக்‌ரஹ யுக்தனாய்‌, புண்டரீகாக்ஷனாய்‌, கருடவாஹநனாய்‌, ஸ்ரீய:பதியான ஸர்வேஸ்வரன்‌, பிராட்டி நித்ய ஸூரிகளெல்லாரோடும்‌ ஓரோ வகைகளாலே பரிமாறும்‌ பரிமாற்றமெல்லாம்‌ என்னொருவனோடே பரிமாறி அத்தால்‌ வந்த ரஸத்தை எனக்குத்தந்து பின்னையும்‌ விட க்ஷமனாகிறிலன்‌ என்னும்படியான ரஸத்தை யுடையராய்‌,

இவர்-அவர்கள் அளவு அல்லர்-–ஓர் ஓர் அவதாரம் மாத்ரத்திலும் கேவலம் அவன் தன் அளவிலும் பற்றின நெஞ்சை உடையவராய் – பகவத் ப்ராவண்யமும் காதாசித்கமாய் விஷயாந்திர பிராவண்யமும் கலசி இருப்பாரும் – இதர விஷய வைராக்ய பூர்வகமாக எப்போதும் நடந்து செல்லும் பகவத் ப்ராவண்யம் உண்டாயும் – ததீயரும் அவனுமான சேர்த்தியில் ரசம் அறியாதருமான தசரதாதிகளும் –
பரத்வ அவதார விபாகம் அற அவஹாஹித்த நெஞ்சை உடையவராயும் ஒரு வழியால் வந்த ரசத்தை பெற்று இருக்கும் லஷ்மணாதிகளுமான அவர்களில் அத்யந்த வ்யாவிருத்தர் என்கை-(அநேக அவதாரம்-பரத்வாதிகள்-ததீய பர்யந்தம்-வைராக்யம் மிக்கு-காதாசித்கமாக இல்லாமல் எப்பொழுதும்
இவை இவருக்கு மட்டுமே )ஆக லஷ்மணாதிகள் தசரதராதிகளோடும் இவருக்கு உள்ள சாம்யத்தை
தர்சித்தால் போலே -அவர்களில் இவருக்கு உண்டான ஆதிக்யத்தையும் தர்சிப்பித்தார் ஆயிற்று .—

இப்படிப்பட்ட சுவையையும்‌ நெஞ்சையுமுடைய இவர்‌, பகவத்‌ விஷயத்தில்‌ ப்ராவண்யம்‌ காதசித்கமாய்‌, புறம்பே பரந்த நெஞ்சை யுடையராய்‌, விஷயாந்தரங்களிலும்‌ ரஸஜ்ஞராய்ப்‌ போருகிற இவர்களளவல்லர்‌ என்கிறார்‌. ஆக இதுக்குக் கீழ்‌ பகவத் ப்ரத்யாஸந்நரான லக்ஷ்மணாதிகளோடு இவ்வாழ்வாருக்கு ஸாதர்ம்ய வைதர்ம்யங்களிரண்டும்‌ சொல்லிற்றாய்த்து –

குழல் கோவலர் மடப்பாவையும் மண் மகளும் திருவும்
நிழல் போல்வனர் கண்டு நிற்கும் கொல் மீளும் கொல் தண்ணம் துழாய்
அழல் போல் அடும் சக்கரத்தண்ணல் விண்ணோர் தொழக் கடவும்
தழல் போல் சினத்த அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே
–திரு விருத்தம் -3–மகிஷி த்ரத்துக்கும் வல்லபனாய் திவ்ய ஆயுத விசிஷ்டானாய் சர்வ ஸ்வாமியாய் கருட வாஹனான ஸ்ரீ சர்வேஸ்வரன் இடத்தில் -அவஹாகித்த நெஞ்சு-தனி நெஞ்சு -நிற்கும் கொல் மீளும் கொல் – பரத்வம் கண்டு மீளுமோ போக்யம் ஸுலப்யம் கண்டு நிற்குமோ –புள்ளின் பின் போன தனி நெஞ்சம் -இவர் திரு உள்ளம் பிரமாண அனுசரியாய்க் கொண்டு – பிரமாண சார ப்ரதிபாத்யமான அவன் ஸூராதன் ரக்ஷகன் போக்யன் பரத்வன் –-நிழல் போல்வனர் இருப்பதால் -பரத்வ பரமாகவும் ஸுலப்ய பரமாகவும் இரண்டு நிர்வாகம் –-கோவலர் மடப்பாவை -ஸுலப்யம்-மண் மகள் -திரு பரத்வம் -ரக்ஷகன் –-பிரமாணம் தானே ரக்ஷகன்-பரத்வம் ஸுலப்யம் என்று அனைத்தும் சொல்லும்-ஆகவே இந்த திரு விருத்த பாசுரம் காட்டுவது அனைத்தையும் ஆழ்வார் திரு உள்ளம் கொண்டது –-மேன்மை முதலாக நீர்மை இறுதியாக தாழ்ந்தது-நப்பின்னைப் பிராட்டியை முதலில் சொல்வதானால் மேன்மையை விட நீர்மைக்கு உள்ள மேம்பாட்டு சொல்லிற்றுஅப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே -மங்களா ஸாஸன பரர் –அருளாழி புள் -அங்கு பரிவர் உண்டே என்று விஸ்லேஷத்திலும் மகிழ்கிறாள் இவள் கத கத என்னும் அவனையும் குளிரப் பண்ணிப் புறப்படுமே இவன் )-பரிகர பூதனான ஆழ்வானிலும் பரிகரவானான ஈஸ்வரனிலும் விரோதி விஷயத்தில் சீற்றம் கால அக்நி போலே இருக்கும் படியான மஹா ப்ரபாவனாய் இருந்துள்ள பெரிய திருவடியின் பின்னே எனக்கு முந்துற்றுப் போன தனி நெஞ்சமே

அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நன்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொருசிறைப் புள்ளுவந்தேறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே –1-9-3-ஒரு வகைப் பட்ட ரசத்தை அனுபவிப்பித்து விடுகிறிலன் –-நித்ய ஸூரிகள் எல்லார் பக்கலிலும் பண்ணும் ஓரத்தை என் பக்கலிலே பண்ணா நின்றான்-என்னோடு உடனே–நித்ய விபூதி நிர்வஹணமும் இங்கே இருந்து -என்னும் படி என்னை விடுகிறிலன் –ஹேய ப்ரத்ய நீகனாய் -கல்யாண குணங்களை உடையவன் -நித்யர் சத்தாதிகளுக்கு காரணன்–நீல நல் மேனி -செம் தாமரைக் கண்ணன் -கருட வாஹனன் -ஆறு பேருடன் பரிமாறும் பரிமாற்றம் எல்லாம் இவருடன் பரிமாறி ––ஆறு பேர் உடன் உள்ள கதி இவருக்கு மட்டும் என்றவாறு –

இப்படிப்பட்ட குழலின் பாட்டின் படி நெஞ்சையும் – அருகலியா சீர் பாசுரம் படி சுவையையும் உடைய இவர் -வ்யாவருத்தர் அன்றோ –சா தர்ம்யமும் வை தர்ம்யமும் சொன்னார் இவற்றால் –

இப்படிப் பட்ட நெஞ்சையும் சுவையும் உடைய இவர் தம்முடைய அபிநிவேசத்தாலே – அவன் பிறவிக்கு அனுகுணமாக பிறந்து அநேக அனுவ்ருத்திகளை பண்ணும் பிராட்டிமாரையும் – அசேஷ சேஷதை கரதிகராய் அநேகதாபாவித்து அநேக வித கைங்கர்யங்களைப் பண்ணும் அநந்த வைனதேயாதிகளையும் அவர்கள் தாம் என்னலாம் படி பாவிப்பார் என்கிறார் –இப்படி ஸாம்யம்‌ சொல்லுகிற மாத்ரமே யன்றிக்கே தம்முடைய பாவத்தாலும்‌ வ்ருத்திகளாலும்‌ பிராட்டிமாரையும்‌, திருவடி திருவநந்தாழ்வான்‌ தொடக்கமானவர்களையும்‌ தாம்‌ அவர்களாக பாவிப்பர்‌ என்கிறார்‌-

எற்றைக்கும் என்றது தோன்றப் பிறந்து ஒப்புவித்து வீசிக் காப்பிட்டு காட்டுக்கு முற்பட்டு தர்மம் சொல்லிக் கேட்டு சிஷ்யா தாஸி பக்தைகளாய் பாடி வருடி இன்று வந்து என்பாரையும் சென்றால் ஊரும் நிவாஸ தாஸ பேதம் கொள்வாரையும் தாம் அவராக பாவிப்பார்-சூரணை -129-

எற்றைக்கும் என்றது தோன்ற-அதாவது-ஸ்ரீ பூமிப் பிராட்டி அவதாரமான ஆண்டாள் பிரார்த்தனை மூவருக்கும் ஒக்கும் ஆகையாலே – எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆள் செய்வோம் ––திருப்பாவை -29–என்று அநேக ஜன்மங்கள் பிறந்து– உனக்கு சேஷ சேஷி-பாவம் ஆகிய உறவை உடையோமாய் -உனக்கே உகப்பான அடிமைகளை நாங்கள் செய்ய வேணும் என்று அபேஷித்தமை தோன்ற –-தேவத்வே தேவதேஹேயம் மனுஷ்யத்வேச மானுஷீ
விஷ்ணோர் தேக அனுரூபம் வை கரோத் ஏஷாத் மநஸ் தநூம்
-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-145–என்கிறபடியே ஈஸ்வரன் லோக ரஷண அர்த்தமாக தேவ மனுஷ்யாதி சஜாதியனாய் அவதரிக்கும் அளவில் – அவன் கொண்ட வடிவுக்கு அனுரூபமான வடிவு கொண்டு தோற்றுமவள் ஆகையாலே –
ராகவத் வேபவத் சீதா —ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-144–என்கிற படியே அவன் சக்கரவர்த்தி திரு மகனாய் அவதரித்த போது தானும் ஸ்ரீ ஜனக மகராஜனின் மகளாய் அவதரித்து —

“எற்றைக்குமேழேழ்‌ பிறவிக்குமுன்றன்னோடுற்றோமேயாவோம்‌”‘ (திருப்பாவை 29) என்று அபேக்ஷித்தமை தோன்ற “‘ராகவத்வேபவத்ஸீதா ருக்மிணீ க்ருஷ்ணஜந்மநி । அந்யேஷு சாவதாரேஷு விஷ்ணோரேஷாநபாயிநீ”’ (வி.பு. 1 – 9 – 144) என்கிறபடியே அவன்‌ வந்தவதரித்த அவதாரங்கள் தோறும்‌ தாமுமவதரித்து-

சிற்றம் சிறுகாலே  வந்து உன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்–29—திரு நாட்டிலே இருக்கவுமாம் ஆஸ்ரித சஜாதீயனாய்க் கொண்டு சம்சாரத்தில் பிறக்கவுமாம்-அதில் ஒரு நிர்பந்தமும் இல்லை-காட்டிலும் படை வீட்டிலும் ஒக்க இளைய பெருமாள் அடிமை செய்தாப் போலே யாக வேணும் –நீ பிறவாது இருக்கும் இடத்திலும் பிறந்து திரியும் இடத்திலும் கூடத் திரியும் அத்தனை

ஒப்புவித்து-அதாவது-வராஹா ருதி ராபேண ஸூசிநாச ஸூகந்தினா அனுலப்தம் பரார்த்யேன சந்தநேன பரந்தபம்-அயோத்யா -16-9- என்கிற படியே திரு அபிஷேக அர்த்தமாக அலங்கரித்து –
வீசி –அதாவது-ஸ்திதயா பார்ஸ்வதஸ் சாபி வாலவ்ய ஜன ஹஸ்தாய உபேதம் சீதயா பூயச் சித்ரயா சசினம் யதா- அயோத்யா –16-10- என்கிறபடியே- அப்போது அருகே சேவித்து நின்று -திரு வெண் சாமரம் பணி மாறி – அநந்தரம் சக்கரவர்த்தி மாளிகைக்கு எழுந்து அருளின போது –-பதி சம்மானித சீதா பர்த்தாரம் அஸி தேஷணா ஆத்வார மனுவவ்ராஜா மங்கள அந்ய பிதத்நுஷீ –அயோத்யா -16-21-என்றும்
பூர்வம் திசம் வஜ்ரதரோ தஷிணாம் பாது தேயம வருண பஸ்சி மாமாசம் தநேசஸ் தூத்தராம் திசம்–அயோத்யா –16-24- என்கிறபடியே பெருமாள் வடிவழகைக் கண்டு இது நமக்கு தொங்கப் புகுகிறதோ என்னும் வயிறு பிடியாலே – அந்த புர த்வாரம் அளவும் பின் சென்று மங்களாசாசனம் பண்ணி காட்டுக்கு முற்பட்டு-அதாவது-தத் அநந்தரம் காட்டுக்கு எழுந்து அருளிய போது –அக்ரதஸ்தே கமிஷ்யாமி ம்ருத்னந்தீ குச கண்டசான் –அயோத்யா -27-6–என்று தான் முற்பட்டு-தர்மம் சொல்லி
அதாவது-ஸ்ரீ தண்டகாரண்யத்தில் எழுந்து அருளி இருக்கிற போது அவர் ஆயுதங்களைத் தரித்து கொண்டு நிற்கிற நிலையைக் கண்டு ,-நஹிமே ரோசதே வீர கமனம் தண்டகான் ப்ரிதி காரணம் தத்ர வஷ்யாமிவ தந்த்யாஸ் ஸ்ரூயதாம் மம – த்வம் ஹி பாண தனுஷ் பாணி ப்ராத்ரா சஹ வனம் கத த்ருஷ்ட்வா வனசரான் சர்வான் கச்சித் குர்யாச் சரவ்வயம் – ஷத்ரியாணாஞ்ச ஹி தனுர்குதா ச ஸ்யேந்த நாநிச சமீபதஸ் ஸ்திதம் தேஜோ பல முச்ச்ரயதே ப்ருசம்—ஆரண்ய -9-13 /-14-/15— என்று- இவர் சாயுதராய் நிற்கில் ஆரேனையும் மேல் விழுந்து பிரமாதம் விளையக் கூடும் என்று பயப்பட்டு
தர்மாதர்த்த பிரபவதே தர்மாத் பிரபவதே ஸூகம்–ஆரண்ய -9-30–இத்யாதியால்- சர்வத்துக்கும் தர்மமே மூலம் என்ற இடத்தை ஸ்மர்பித்து -ஆன பின்பு -ஆயுதத்தை வைத்து தாபச வேஷத்தோடு தர்மத்தை
அனுஷ்டிக்க அமையும் என்று தர்மோ உபதேசத்தையும் பண்ணின பெரிய பிராட்டியாரையும்

(ஒப்பித்தென்று) ‘திருவபிஷேக மஹோத்ஸவத்துக் கீடாம்படி பெருமாளை அலங்கரித்து. (வீசி) ‘“ஸ்திதயா பார்றவதஸ்சாபி வாலவ்யஜதஹஸ்தயா ! உபேதம்‌ ஸுதயா பூயஸ்சித்ரயா ஸஸிநம்‌ யதா” என்று திருவெண்சாமரம்‌ பரிமாறி. (காப்பிட்டு) ““பதிஸம்மாநிதா ஸீதா பர்த்தாரமஸிதேக்ஷ்ணா । ஆத்‌வாரமநுவவ்ராஜ மங்களாந்யபிதத்‌யுஷீ”, ““பூர்வாம்‌ திஸம்‌ வஜ்ரதரோ தக்ஷிணாம்‌ பாது தே யம? । வருண? பஸ்சி மாமாஸம்‌ தநேசஸ்தூத்தராம்‌ திஸம்‌”” என்று பெருமாள் வைலக்ஷண்யத்தைக் கண்டு இவ்வழகு தமக்குத்‌ தொங்கப்‌ புகுகிறதோ என்னும்‌ வயிறுபிடியாலே மங்களாஸாஸநம்‌ பண்ணி.
(காட்டுக்கு முற்பட்டு) “அக்‌ரதஸ்தே கமிஷ்யாமி ம்ருத்‌,நந்தீ குஸ கண்டகாந்‌” என்று பெருமாள்‌ வநத்துக்கு எழுந்தருளுகிறபோது தான்‌ முற்பட்டு. (தர்மம்‌ சொல்லி) பெருமாள்‌ தண்டகாரண்யத்திலே கையும்‌ வில்லுமாய்க் கொண்டு நின்ற நிலையைக் கண்டு இவர்‌ ஸாயுத,ராய்‌ நிற்கில்‌ ஆரேனையும்‌ மேல்விழுந்து ப்ரமாத,ம்‌ விளையக்கூடுமென்று பயப்பட்டு, பெருமாளைப் பார்த்து “நாயன்தே, தர்மமூலமாயிருக்கும்‌ ஸர்வமும்‌, ஆன பின்பு தேவரீர்‌ ஆயுதத்தை வைத்து தாபஸ வேஷத்தோடே தர்மத்தை அநுஷ்டிக்க அமையும்‌” என்று தர்‌மோபதேஸத்தையும்‌ பண்ணினாள்‌ பிராட்டி.-

கேட்டு சிஷ்யா தாஸி பக்தைகளாய்-அதாவது-அஹம் சிஷ்யாச தாஸி ச பக்தாச த்வயி மாதவ மத் க்ருதே சர்வ பூதானாம் லகு உபாயம் வத பிரபோ –கைசிக புராணம் -என்று-ஸ்ரீ வராஹா நாயனார் பக்கலிலே பர தர்மம் கேட்டு தன் மூலமாக சிஷ்யையும் தாசியும் பக்தையுமாய் –பாடி-அதாவது-உன் தன்னைப் பாடி–திருப்பாவை –27-என்கிற படியே கவி பாடி –-வருடி –-அதாவது – திருமகளும் புவியும் செம்பொன் திருவடி இணை வருட–பெரிய திருமொழி -7-8-1- -என்கிறபடி பெரிய பிராட்டியாரோபாதி அவன் திருவடிகளைப் பிடித்து –-இன்று வந்து –-அதாவது-இன்று வந்து இத்தனையும் அமுது செய்திட பெறில் நான் ஓன்று நூறாயிரம் கொடுத்து பின்னும் ஆளும் செய்வன்-நாச்சியார் -9-7-என்று தன்னை கைங்கர்யம் கொண்டால் ,-அதுக்கு பிரத் உபகாரம் பண்ணுவன் என்ற ஸ்ரீ பூமி பிராட்டியாரையும்

(தர்மம்‌ கேட்டு) ஸ்ரீபூ,மிப்பிராட்டியார்‌ ஸகலதர்மங்களையும்‌ ஸ்ரீவராஹ நாயனார்‌ பக்கவிலே கேட்டு. (ஸிஷ்யா தாஸீ பக்தைகளாய்‌) “அஹம்‌ ஸிஷ்யா ச தாஸீ ச பக்தா ச த்வயி மாதவ | மத் க்ருதே ஸர்வபூதாதாம்‌ லகூபாயம்‌ வத ப்ரபோ ‘ என்று ஸிஷ்யா தாஸீ பக்தையாய் விஸேஷ தர்மத்தையும்‌ கேட்டு.(பாடி) “பாடிப் பறைகொண்டு”’ (திருப்பாவை 27) என்கிறபடியே க்ருஷ்ணனைப் பாடுவதும்‌ செய்தாள்‌. (வருடி) இவர்களிருவரும்‌ ”ஒருமதிமுகத்து மங்கையரிருவரும்‌ மலரன அங்கையின் முப்பொழுதும்‌ வருட” (திருவெழு.), ”செங்கமலத்திருமகளும்‌ புவியும்‌ செம்பொன்திருவடியினிணை வருட ” (திருமொழி 7 – 8 – 1) என்று இருவரும்‌ திருவடியை வருடினார்கள்‌. ‘“இன்றுவந்தித்தனையும்‌ அமுதுசெய்திடப்பெறில்‌ நான்‌ ஒன்று நூறாயிரமாகக்‌ கொடுத்துப்‌ பின்னுமாளும்‌ செய்வன்‌”’ (நா. தி. 8 – 7) என்று தம்மைக்கொண்டு கைங்கர்யம்‌ கொண்டால்‌ அதுக்கு ப்ரத்யுபகாரமும்‌ பண்ணுவர்‌ என்கிறார்‌.

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா வுன் தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெரும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பல் கலனும் யாம் அணிவோம்
ஆடை யுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்–27–ஹிரண்யாய நம -என்கை தவிர்ந்து வகுத்த உன்னுடைய பேரை-ஸுயம் பிரயோஜனமாகச் சொல்லப் பெறுவதே -என்கை – கோபீ ஜன வல்லபனான உன்னை பாடுகையே எங்களுக்கு பிரயோஜனம் போரும் -என்னவுமாம் –பெண்கள் புணர்ப்பே தாரகமாகப் பாடித் திரியும் உன்னைப் பாடுகையே பிரயோஜனம்

நின்னீரடி யொன்றிய மனத்தால் ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும் மலரன அங்கையின் முப்பொழுதும் வருட அறி துயில் அமர்ந்தனைதம்முடைய அபேஷிதம் பெறுகைக்கு புருஷகாரம் யுண்டு என்கிறார் –எனக்குப் புருஷகாரம் இல்லாமே இழக்கிறேனோ

செங்கமலத் திருமகளும் புவியும் செம் பொன் திருவடியின் இணை வருட முனிவர் ஏத்த
வங்கமலி தடம் கடலுள் அநந்தன் என்னும்  வரி அரவின் அணைத் துயின்ற மாயோன் காண்மின்
எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம் ஐந்து வேள்விகளும் கேள்விகளும்   இயன்ற தன்மை
அங்கமலத் தயன் அனையார் பயிலும் செல்வத் தணி  யழுந்தூர் நின்றுகந்த வமரர்  கோவே –7-8-1—ஆஸ்ரிதர் உடைய சர்வ அபராதங்களையும் பொறுப்பிக்கும் பெரிய பிராட்டியாரும் –அப் பொறைக்கு உவாத்தான ஸ்ரீ பூமிப் பிராட்டியாரும் –ஸ்ப்ருஹணீயமாய்-ஒன்றுக்கு ஓன்று ஒப்பான திருவடிகளை வருட –

இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நான்
ஓன்று நூராயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வன்

தென்றல் மணம் கமழும் திரு மால் இருஞ்சோலை தன்னுள்
நின்ற பிரான் அடியேன் மனத்தே வந்து நேர் படிலே –9-7–நான் பிரார்த்திக்கிற இன்று வந்து உவந்து —
என் இரப்பு மாறாமைக்கு ஓன்று செய்தானாய் விடுகை அன்றிக்கே தனக்கு இது ஒழியச் செல்லாமை உடையானாய்க் கொண்டு உவந்து அமுது செய்திடப் பெறில்-நூறு தடாவில் வெண்ணெயும் நூறு தடா நிறைந்த அக்கார வடிசிலையும்–அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும் தயிர் வாவியும் நெய் அளறும் அடங்கப்ம் பொட்டத் துற்று –பெரியாழ்வார் -3-5-1-அமுது செய்திடப் பெறில்-இதுவே இவளுக்கு பேறு
பின்னையும் அவனுக்குக் கொடுக்கும் அத்தனை – அவன் அமுது செய்தால் கொள்ளும் பிரயோஜனம் என் என்னில்-பிராப்ய த்வரையாலே கைங்கர்யம் செய்யத் துடிக்கும் நான் அவன் ஆசைப்பட வேண்டும் என்று பிரார்த்திக்கிற நான்-நூறு தடாவுக்கும் நூறாயிரம் தடாவாகக் கொடுத்து-அவன் உகந்து கொடுக்கிற நான் ஆசைப் பட்டத்தை விடுவேனோ-வேறு ஓன்று பெறுமதில் காட்டிலும் அடிமை செய்யும் இத்தனை யாகாதே தான் அவன் விரும்பி இருப்பது – புதியது ஓன்று பெறுமதில் காட்டிலும் -பழையதாய் இழந்தது பெற்றால் அன்றோ அவன் உகப்பது-வழு விலா வடிமை செய்ய வேண்டும் நாம் –திருவாய் -3-3-1-என்று தமப்பனார் பாரித்து இருக்குமதே காணும் -இவளும் ஆசைப் படுகிறது

சென்றால் நிவாஸ தாஸ பேதம் கொள்வாரையும்--அதாவது-சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் நின்றால் மரவடியாம்-நீள் கடலுள் என்றும் புணையாம் மணி விளக்காம் பூம் பட்டாம் புல்கும் அணையும் திருமாற்கு அரவு –முதல் திருவந்தாதி-53- என்கிற பாட்டிலும் –-நிவாஸ சய்யா ஆசன பாதுக அம்ஸூக உபாதான வர்ஷாத பவாரணாதிபி சரீர பேதைஸ் தவ சேஷதாம் கதைர் யதோசிதம் சேஷ இதீரி தேஜநை -ஸ்தோத்ர ரத்னம் -40- ஸ்லோகத்திலும் சொல்லுகிறபடி -பகவத் விநியோக அனுகுணமாக சத்ர சிம்ஹாசன பாதுகாம் சுகாதி சரீர பேதம் கொண்டு சகலவித கைங்கர்யங்களையும் செய்யும் திரு அனந்தாழ்வானையும்

(சென்றால்‌ ஊரும்‌ நிவாஸ)திருவநந்தாழ்வான்‌ ‘“சென்றால்‌ குடையாம்‌’” (மூ.திருவ. 59) என்கிறபடியே ““நிவாஸ ஸய்யாஸந பாதுகாம் ஸூகோபதாந வர்ஷாத பவாரணாதி.பிர் ஸாரீரபேதை ஸ்தவ ஸேஷதாம்‌ க,தைர்ய தோசிதம்‌ ஸேஷ இதீரிதே ஜநை?”’ (ஸ்தோ. ர.40) என்று ஸர்வேஸ்வரனுடைய விநியோகத்துக்கு அநுகுணமாக ஸாரீர பேதங்களைக்‌ கொண்டு அஸேஷ ஸேஷவ்ருத்திகளையும்‌ பண்ணினார்‌.

சென்றால் குடையாம் யிருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும்
புணையாம் மணி விளக்காம் பூம் பட்டாம் புல்கு
மணையாம்  திருமாற் கரவு 
——53-ஸ்ரீ யபதிக்கு-கட்டிப் பொன் போலே எல்லா வடிவையும் ஆக்கிக் கொள்ளலாம் படி இருக்கிற படி-அரவு –தான் ஒரு சேதனன் என்று கூச வேண்டாத படி-தன்னை அமைத்த படி -ராஜ நிவேசனங்களிலே கூனர் குறளரைப் போலே —

ஊரும் தாஸ பேதம் கொள்வாரையும்-அதாவது –-ஊரும் புள் கொடியும் அக்தே—திருவாய் -10-2-3-என்கிற சந்தையிலும் –-தாஸஸ் சஹா வாஹனம் ஆசனம் த்வஜோ யஸ்தே விதானம் வ்யஜனம் த்ரயீ மய உபஸ்திதம் தேன புரோ கருத்மதா த்வதங்கரி சம்மர்த்த கினாங்க சோபினா –ஸ்தோத்ர ரத்னம் -41- ஸ்லோகத்திலும் சொல்லுகிற படி – வாகன த்வஜ விதான வ்யஜனாதி தேக பேதங்களைக் கொண்டு சகல வித கைங்கர்யங்களைச் செய்யும் பெரிய திருவடி போலேயும் —

ஊரும்‌ புட்கொடியுமக்தே” (திருவா. 10 – 2 -3) என்றும்‌, ”தாஸஸ்ஸகா வாஹநமாஸநம்‌ த்வஜோ யஸ்தே விதாநம்‌ வ்யஜநம்‌ த்ரயீமய? । உபஸ்திதம்‌ தேந புரோ கருத்மதா த்வதங்க்‌ரி ஸம்மர்த்த, கிணாங்கஸோபிநா’? (ஸ்தோ. ர.41) என்று பெரியதிருவடி நாயனார்‌ வாஹந த்‌வஜாதி முகத்தாலே ஸகலவித, கைங்கர்யங்களையும்‌ பண்ணினார்‌.

ஊரும் புள் கொடியும் அக்தே உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான்
சேரும் தண்ணனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில்
தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறியச் சொன்னோம்
பேரும் ஓர் ஆயிரத்துள் ஓன்று நீர் பேசுமினே-10-2-3—–வாஹனமானது பெரிய திருவடி /கொடியும் அக்தே -இது நித்ய ஸூரிகளுக்கும் உப லக்ஷணம் -இது நித்ய ஸூரிகளுக்கு கொடுத்து வைக்கும் நாநா ரஸ அனுபவத்தை -இன்று செல்லுமவனுக்கும் கொடுக்கும் என்னுமிதுக்காக சொல்கிறது

தாம் அவராக பாவிப்பார்--அதாவது-இவரும் –-பின்னை கொல் நிலமா மகள் கொல் திருமகள் கொல் பிறந்திட்டாள்-திருவாய் -6-5-10-என்கிறபடியே பிறந்து பிராட்டிமார் தசையிலே நின்று பேசும் படியான பல பாவ வ்ருத்திகளையும் ,-ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்–திருவாய் -3-3-1–என்று சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தைகளிலும் உசிதமான சகல சேஷ வ்ருத்திகளையும் பண்ண வேணும் என்னும் அபிநிவேச அதிசயத்தை உடையவர் ஆகையாலே –
பிராட்டிமாரையும் -அனந்தாதிகளான ஸூரிகளையும் -அவர்களுக்கும் தமக்கும் ஒரு விசேஷம் அற
அவர்கள் தாமாகவே பாவிப்பார் என்ற படி —

அப்படியே இவரும்‌ ““பிறந்திட்டாள்‌”” (திருவா. 6 – 5- 10) என்கிறபடியே பிறந்து அந்த நாச்சிமார்‌ மூவரையும்‌ திருவநந்தாழ்‌வானையும்‌, பெரியதிருவடியையும்‌ தாமவர்களாகப் பாவிப்பர்‌ என்கிறார்-

பின்னை கொல்?நிலமாமகள்கொல்? திருமகள்கொல்? பிறந்திட்டாள்
என்ன மாயங்கொலோ? இவள்நெடு மால்என்றே நின்று கூவுமால்
முன்னி வந்தவன் நின்றிருந் துறையும் தொலை வில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும் அவ்வூர்த் திருநாமம் கேட்பது சிந்தையே.–6-5-10–நப்பின்னை பிராட்டி பிறந்திட்டாளோ -அங்கனம் இன்றிக்கே ஸ்ரீ பூமி பிராட்டி பிறந்திட்டாளோ -எல்லாருக்கும் இவ் வேற்றங்களைக் கொடுக்கும் பிராட்டி தான் பிறந்திட்டாளோ -என்பார்கள் பூர்வர்கள் –
சர்வேஸ்வரனுக்கு சம்பத்தாய் இருக்கிறவள் பிறந்தாளோ-அதுக்கு விளை பூமியாய் இருக்கிறவள் பிறந்தாளோ -அவ் விளை பூமியினுடைய பல ஸ்வரூபமாய் இருக்கிறவள் பிறந்தாளோ –
அங்கனம் இன்றியே அவர்களுக்கும் இவள் படி இல்லாமையால் அவர்களோடு ஒப்பு அன்று -லோகம் எல்லாம் வாழ்க்கைக்கு இவள் ஒருத்தி பிறந்தாள் என்றுமாம் –விஷ்ணு நா சத்ருஸோ வீரயே -என்றால் போலே நாய்ச்சிமார் பக்கலிலும் ஒரு வகைக்கு ஒப்பு சொல்லலாம் படி இருக்கையாலே கதிர் பொறுக்குகிறாள் –உபமான ம சேஷானாம் ஸாதூ நாம் யஸ் சதாபவத் -என்கிறபடியே எல்லாருக்கும் இவரை ஒப்பாகச் சொல்லலாம் -இவருக்கு ஒப்பாவார் ஒருவரும் இல்லை

இப்படி இவருக்கு இவ் அவஸ்தை விளையும் படி -ஈஸ்வர விக்ரக வைலஷண்யம்-இவர் பும்ஸ்த்வத்தை அழித்து -ஸ்த்ரீத்வ பாவனையை ஜனிப்பததற்க்கும்-இத் திரு மேனியோடு இவருக்கு இவ் விஷயத்தில் அநேக வித அனுவ்ருத்திகள் உண்டானதுக்கும் – திரௌபதி கௌசல்யைகள் படிகளை திருஷ்டாந்தமாக சொல்லாமோ என்னும் ஆ காங்ஷையிலே – இதுக்கு அவற்றை திருஷ்டாந்தம் ஆக்குகை ஸ்தூலம் என்னும் இடத்தை தர்சிப்பிக்கிறார்-இவர்க்கு இந்த நாச்சிமாருடைய பாவமும்‌ இந்த விருத்தி பேதத்தில்‌ அபி, நிவேஸமு முண்டானபடி எங்ஙனே என்னில்‌, அப்ராக்ருதமான விக்‌ரஹம்‌ பும்ஸ்த்வத்தை அழித்து ஸ்த்ரீத்வத்தை உண்டாக்கினதுக்கும்‌, அநுரூப ப்ராப்தமான அவ் விஷயத்தி லுண்டான வ்ருத்த்யபி நிவேஸத்துக்கும்‌, ப்ராக்ருதமாய்‌ ஓளபாகிகமா யிருக்கிற விஷயங்களி லுண்டான வற்றை த்‌ருஷ்டாந்தமாக்குகை ஸ்தூலம்‌ என்கிறார்‌-

எழுவதோர் உரு அழிக்கச் செய்கிற வழு இலா அடிமைக்கு பாஞ்சாலி படுத்துமதும் கௌசல்யை அனுவ்ருத்தியும் ஒப்பாக்குகை பரிசு-சூரணை –130-

(எழுவதோர் உரு அழிக்க -அதுக்கு-பாஞ்சாலி படுத்துமது ஒப்பாக்குகை பரிசு-என்றும் செய்கிற வழு இலா அடிமைக்கு கௌசல்யை அனுவ்ருத்தியும் ஒப்பாக்குகை பரிசு-என்றும் – பரிசு -ஸ்தூலம்–சிறுபான்மை -)எழுவதோர் உரு அழிக்க-அதாவது-குழுமித் தேவர் குழாங்கள் சோதி கை தொழச் சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதோர் உரு என் நெஞ்சினுள்ளே எழும்–திருவாய் -5-5-10- -என்று தேஜோ ராசி மத்யே உன்நேயமாம் படி இருப்பதாய் –பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம் -அயோத்யா –3-28-என்கிறபடியே – வயிர உருக்காய் ஆண்களையும் பெண்ணுடை உடுத்துமதான அவனுடைய அப்ராக்ருத விக்ரகம் இவருடைய பும்ஸ்த்வத்தை அழித்து ஸ்த்ரீத்வ பாவனையை விளைத்ததற்கு-பாஞ்சால்யா பத்ம பத்ராஷ்யா ஸ்னாயந்த்யா ஜகனம் கனம் யாஸ் த்ரியோ த்ருஷ்ட வத்யஸ்தா பும்பாவம் மனசா யயு—பாரதம் -என்கிறபடியே ப்ராக்ருதமாய் மாம்சாஸ்ருகாதி மயமான தேகத்தை உடைய திரௌபதி ஸுவ தேக ஸுந்தர்யத்தாலே சஜாதீயரை ஸ்த்ரீத்வத்தை அழித்து பும்ச பாவத்தை அடைவித்ததையும் –

(எழுவதோருரு அழிக்க) *’சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோருரு (திருவா. 5 – 5 – 40) என்று தேஜஸ்தரங்கங்களுக்கு நடுவே உந்நேயமான ‘‘பும்ஸாம்‌ த்‌ருஷி சித்தாபஹாரிணம்‌”” (ரா.௮. 3 – 29) என்று ஸஜாதீயரையும்‌ விஜாதீயராக்க வற்றான அப்ராக்ருத விக்‌ரஹம்‌ இவருடைய பும்ஸ்த்வத்தை அழிக்க, இவர்க்குண்டான ஸ்த்ரீத்வத்‌துக்கும்‌. (வழுவிலா அடிமைக்கு) ஸ்வரூப ப்ராப்தமான அவ்விஷயத்தில்‌ இவர்க்கு உண்டான வ்ருத்தி பேதங்களுக்கும்‌ (பாஞ்சாலி படுத்துமதும்‌) ”பாஞ்சால்யா: பத்‌ம பத்ராக்ஷ்யா: ஸ்நாயந்த்யா ஜகநம்‌ ௧நம்‌ । யா ஸ்தரியோ த்ருஷ்டவத்யஸ்தா: பும்பாவம்‌ மநஸா யயு: ” என்று ப்ராக்ருதமாய்‌, பூதிகந்தியாய்‌, மாம்ஸாஸ்ருகாதி மல மயமான த்‌ரெளபதி,யினுடைய ஸரீரம்‌ ஸஜாதீயருடைய ஸ்த்ரீத்வத்தை அழித்து பும்பாவத்தை அடைவித்தத்தையும்‌.

கழிய மிக்கதோர் காதலள் இவள் என்று அன்னை காணக்கொடாள்
வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
குழுமித் தேவர் குழாங்கள் கைத்தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே
எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே
.–5-5-10—உஜ்ஜவலமாய் தோற்றுகிற அத்விதீயமான விக்ரஹம்-இன்னார் என்று அறியேன் என்கிறபடியே நித்ய அபூர்வமாய் இருக்கும் வடிவு –தேஜஸாம் ராசி மூர்ஜ்ஜிதம்–அத்திரளோடே அவ்வடிவு என் நெஞ்சில் பிரகாசியா நின்றது -அது நாங்கள் காண்கிறி லோமே என்ன -ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கும் அறிய ஒண்ணாது -த்வரை இல்லார்க்கு அறிய ஒண்ணாது -எனக்கு மறக்க ஒண்ணா தாப் போலே பிறர்க்கு நினைக்க ஒண்ணாது 

செய்கிற வழு இலா அடிமைக்கு-அதாவது-நிருபாதிக சேஷியான அவன் விஷயத்தில் நிரதிசய பிரேமத்தால் – வழு இலா அடிமை செய்ய –3-3-1– என்கிற படியே தம்முடைய பாவ விசேஷங்களால் -இவர் செய்கிற நானாவித வ்ருத்திகளுக்கு–யதா யதா ஹி கௌசல்யா தாஸீ வச்ச சகீவச பார்யாவத் பகிநீவச்ச மாத்ருவச் சோப திஷ்டதி –அயோத்யா -12-68–என்கிறபடி-கௌசல்யார் ஒவ்பாதிக பர்த்ரு விஷயத்தில் அவஸ்த அனுகுணமாக பண்ணின பாவ விசேஷ பிரயுக்த கதி பய அனுவர்த்தியையும் திருஷ்டாந்தம் ஆக்குகை ஸூ சத்ருசம் அல்லாமையால் -ஸ்தூலம் என்ற படி.–இத்தால் ஒரு புடை ஒப்பு சொல்வோம் என்றாலும் -இதுக்கு அது பற்றாது என்றது ஆயிற்று

““யதா யதா ஹி கெளஸல்யா தாஸீவச்ச ஸ்கீவச பார்யாவத்‌ பகி நீவச்ச மாத்ருவச்சோபதிஷ்டதி” (ரா.அ. 12 – 68) என்று கெளஸலையார்‌ ஓளபாதிகமான பர்த்ரு விஷயத்தில்‌ தத்ததாவஸ்த அநுகு,ணமாகப்‌ பண்ணின அநுவ்ருத்தியையும்‌ த்‌ருஷ்டாந்தமாக்குகை அதில்‌ ஸ்தூலம்‌ என்கிறார் –

ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1-சர்வ சேஷ வ்ருத்தியும் செய்ய வேண்டும்-சாஸ்த்ரங்களால் இதுவே புருஷார்த்தம் என்று அறிக்கை போராது-அனுஷ்டான பர்யந்தமாக வேணும் –
நாம்-திரு உள்ளத்தைக் கூட்டிக் கொள்ளுகிறார் ஆதல்-கேசவன் தமருக்கு பின்பு தனியர் அல்லாமை யாலே திரு உள்ளத்தோடு ஒக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கூட்டிக் கொண்டு சொல்லுகிறார் ஆதல்-

இப்படி அவஸ்தாந்தராபந்னர் ஆனாலும் தாமான தன்மையால் செல்லும் அபிநிவேசமும் – இவருக்குக் குறையாது என்னும் அத்தை சத் திருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார்–ஆனால்‌ தாமான தன்மையும்‌ பிராட்டிமார் தஸையுமுண்டான இதில்‌ தாமான தன்மையில்‌ அபிநிவேஸம்‌ அளவு பட்டிருக்குமோ? என்னில்‌; ஆறு பெருகா நின்றால்‌ பல வாய்த்தலை களிலும்‌ போரா நிற்கச்செய்தே, தானும்‌ கடலில்‌ போரும்‌ அம்ஸம்‌ குறையாதிருக்குமாப்‌ போலே பிராட்டிமார் தஸையோடும்‌, தாமான தன்மையோடும்‌ வாசியற அபி நிவேவம்‌ கரை புரண்டு பகவத்‌ விஷயத்தை அவகாஹிக்கும்‌ என்கிறார்‌

பெருக்காறு பல தலைத்து கடலை நோக்குமா போலே நெக்கொசிந்து கரைந்து அலைந்து இடிந்து உடைய பெருகு காதல் கடல் இடம் கொண்ட கடலை பஹுமுகமாக அவஹாகிக்கும்-சூரணை -131-

பெருக்காறு பல தலைத்து கடலை நோக்குமா போலே-அதாவது கிண்ணகம் எடுத்த ஆறு பல தலையாய் பரந்து செல்லா நிற்க தனக்கு ஒரு குறைவு இன்றியே –பெயரும் கரும் கடலே நோக்கும் ஆறு-முதல் திருவந்தாதி -67-என்கிறபடியே தனக்கு புகலான கடலை நோக்கிச் சென்று புகுமா போலே-நெக்கொசிந்து கரைந்து அலைந்து இடிந்து உடைய-அதாவது-நெக்கொசிந்து கரையும் –6-5-2-
நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே -5-8-1–நினைதொறும் சொல்லும்தொறும் நெஞ்சு இடிந்து உகும் –9-6-2-என் மனம் உடைவதும் அவர்க்கே-9-3-6–என்று உடை குலைப் பட்டு சிதிலராய் பரவசராய் த்ரவீ பூதராய் நிலை கலங்கி நெஞ்சு கட்டு அழிந்து உருக் குலைந்து போம் படி –

(பெருக்காறு என்று தொடங்கி), (பெருக்காறு பல தலைத்துக்‌ கடலை நோக்குமாப்போலே நெக்கொசிந்து கரைந்து அலைந்து இடிந்து உடையப்‌ பெருகு காதல்‌) ““நினைந்தென்னுள்ளே நின்று நெக்கு”! (பெரியா. தி. 5 – 4 – 8), ”நிமியும்‌ வாயொடு கண்கள்‌ நீர் மல்க நெக்கொசிந்து கரையும்‌”? (திருவா. 6 – 5- 2), ”என்‌ மனம்‌ உடைவதும்‌ அவர்க்காகவே”‘ (திருவா. 9-3 – 6) என்று அபிநிவேஸத்துக்குக்‌ கரைப் பற்றான நெஞ்சானது விட்டுச் சரிந்து கரைந்து அலைந்து இடிந்து உடைந்து ஸிதிலமாய்ப் போம்படி-

பெயரும் கருங்கடல் நோக்கும் ஆறு ஒண் பூ
உயரும் கதிரவன் நோக்கும் -உயிரும்
தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு –67—ஆறானது பூர்ணமாய் சலியா நின்ற கடலையே நோக்கா நின்றது-ஆறு கடலை நிறைக்கைக்கு அன்று புகுகிறது -புக்கு அல்லது தான் தரிக்க மாட்டாமை

அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து என்
மனந்தனுள்ளே வந்து வைகி வாழ செய்தாய் எம்பிரான்
நினைந்து என்னுள்ளே நின்று நெக்கு கண்கள் அசும்பு ஒழுக
நினைந்து இருந்தே சிரமம் தீர்த்தேன் நேமி நெடியவனே – 5-4 -8—இவர் பிராயச்சித்த குடி போலே –
அவர்கள் ஏற்றத்தையும் – தம்முடைய தண்மையும் நினைத்து கூசாதபடி பண்ணின படியும் – இவர்கள் பக்கல் ஆதரம் குளப்படி என்னும் படி தம் பக்கல் கடல் போலே அவன் பண்ணின ஆதர அதிசயத்தையும் இவர் தண்மை பாராதே இவர் நெஞ்சினில் புகுந்தபடியையும் –நினைத்து – என்னிலே நினைந்து நின்று-நெக்கு – நினைதொறும் நெஞ்சு இடிந்து உகும் -என்கிறபடியே நெஞ்சு சிதிலமாகி-கண்கள் அசும்பு ஒழுக – உள் உருகினது புற வெள்ளம் இட்டபடி –அசும்பு ஒழுக -அசறுபாய-நினைந்து இருந்தே சிரமம் தீர்த்தேன் –நீ பண்ணின உபகார பரம்பரைகளை அனுசந்தித்து சிரமம் தீர்ந்தேன் –-ஓடியாடின இளைப்பு எல்லாம் இருந்த இடத்தே இருந்து ஆறி இருந்தேன்-

குமுறுமோசை விழவொலித் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
அமுத மென்மொழி யாளை நீர்உமக் காசை யின்றி அகற்றினீர்
திமிர்கொ டாலொத்து நிற்கும் மற்றிவள் தேவ தேவபிரான் என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர்மல்க நெக்கொசிந்து கரையுமே.–6-5-2-–அந்த சீலவத்யையை சொல்லப் புக்கு தலைக் கட்ட மாட்டாதே உதடு நெளிக்கும்-உதடு நெளிக்கிற வாயோடு கண்ண நீர் மல்க –நெக்கு -சிதலையுமாய் –ஒசிந்து -பரவசையுமாய் –கரையும் -நீராகா நின்றாள்-நெக்கொசிந்து கரையுமே.-பெரு வெள்ளத்தில் கரையானாது நெகிழ்ந்து ஒட்டு விட்டு ஒசிந்து பொசிந்து அவயவியாகாத படி கரைந்து போமா போலே அழிந்து போகா நின்றாள் -இப்படி இவள் கரையா நிற்க வன் நெஞ்சரான நாம் இதுக்கு பாசுரம் இடுவது மீட்க்கத் தேடுவது ஆகா நின்றோம் இறே-

ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–5-8-1—சரீரமானது கட்டுக் குலைந்து-அன்பாய் –அதுதான் போய் -நீராய் -அலைந்து கரையும் படி யுருக்கிற்று-உருக்குகின்ற -இத்தலை அழியா நிற்க அத்தலை முதலடி இட்டதில்லையாய் இருக்கை-நெடுமாலே!-சர்வேஸ்வரன் என்னுதல் -போக்யதையின் மிகுதியைச் சொல்லுதல் -வ்யோமோஹ அதிசயத்தை சொல்லுதல் -இப்படி ஸைதில்யத்தை பிறப்பியா நின்று வைத்து எட்டாது இருக்கிறவன் என்னுதல் –தன் போக்யத்தையாலே ஸைதில்யத்தை பிறப்பியா நிற்கை என்னுதல் -தன் வ்யோமோஹ அதிசயத்தை காட்டி ஸைதில்யத்தை பிறப்பியா நிற்கிறவன் என்னுதல்-

நினைதொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும்
வினை கொள் சீர் பாடிலும் வேம் எனது ஆர் உயிர்
சுனை கொள் பூஞ்சோலைத் தென் காட்கரை என் அப்பா
நினைகிலேன் நான் உனக்கு ஆள் செய்யும் நீர்மையே –9-6-2—நினைக்க உபக்ரமிப்பர் -அந்நினைவே யாய்ச் செல்ல ஒண்ணாத படி பலஹானி மிகும் -மறக்க மாட்டார் -திரியட்டும் நினைக்க என்று இழிவார் -இப்படி பல காலும் நினைக்க உபக்ரமித்து தலைக் கட்ட மாட்டாதே செல்லுகிற படி – சொல்லும் தொறும் -நினைக்க அரிய விஷயம் சொல்ல ஒண்ணாது என்னும் இடம் சொல்ல வேண்டாது இருக்க சொல்லும் தொறும் -என்கிறது -என்னும் எப்போதும் என் வாசகம் -என்கிற படியே மனஸ் சஹகாரம் ஒழிய வாசனையால் வாக்கு பேசாத தொடங்கும் -செவி வன்மையாக புக்கு நெஞ்சை அழிக்கும்
நெஞ்சு இடிந்து உகும்-நெஞ்சு கட்டு அழிந்து நீராகா நின்றது –பெருக்காற்றில் கறை இடிந்து விழுந்து பின்பு நீராய் கரைந்து போமா போலே சிதிலம் ஆகா நின்றது

அடைவதும் அணியார் மலர் மங்கை தோள்
மிடைவதும் அசுரர்க்கு வெம்போர்களே
கடைவதும் கடலுள் அமுதம் என் மனம்
உடைவதும் அவற்கே யொருங்காகவே–9-3-6-
—என்னுடைய மனஸ்ஸூ ஒருமடைப்பட உடை குலைப்பட நிற்பதும் ஏவம் வித சேஷ்டிதங்களை யுடையவனுக்கே –

பெருகு காதல்-அதாவது-பெருகுமால் வேட்கை–9-6-1–கழிய மிக்கதோர் காதல்–5-5-10– என்கிறபடியே கரை அழியப் பெருகின காதல் ஆனது-கடல் இடம் கொண்ட கடலை பஹுமுகமாக அவஹாகிக்கும்
அதாவது-கடல் இடம் கொண்ட கடல் வண்ணா –7-2-7–என்கிறபடியே ஒரு கடல் ஒரு கடலிலே சாய்ந்தார் போலே -திரு பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின ஸ்ரமஹரமான வடிவை உடைய பெரிய பெருமாள் ஆகிற அபரிசேத்ய வஸ்து வத்தமான தன்மையாலும் அவஸ்தாந்திர பத்தியாலும் உண்டான பேதத்தாலே பலமுகமாக சென்று அவஹாக்கிக்கும் என்கை -இத்தால் உக்த வஷ்யமாண அவஸ்தைகளுக்கு எல்லாம் உடலான இவருடைய பக்தி வைபவம் பிரதிபாதிக்க பட்டது —

“*பெருகு காதலடியேன்‌”’ (திரு மொழி 5 – 2 – 9) என்று இவருடைய அபரிச்சேத்‌யமான பக்தியான ஆறானது. (கடலிடங்கொண்ட கடலை) க்ஷீராப்‌திஸாயியாய்‌, ஸர்வேஸ்வரனாய்‌, ஸ்ரமஹரமான வடிவை யுடைய பெரிய பெருமாளாகிற கடலைப்‌ பலமுகமாக அவகாஹிக்கும்‌ என்கிறார் –

உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி
பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
தெருவு எல்லாம் காவி கமழ் திருக் காட்கரை
மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே–9-6-1-ஆத்மாவுக்கு பொறுக்க ஒண்ணாத படி அபி நிவேசம் பெருகா நின்றது -அணு பரிமாணமாக இவ்வஸ்துவின் அளவன்றிக்கே ஆறு பெருகுமா போலே மேன்மேல் என பெருகா நின்றது –ஆலும் ஓவும் விஷாத அதிசய ஸூசகம் —நெஞ்சம் உருகுமால் –வேட்க்கையும் பெருகுமால்-என்று தம்மால் நியமிக்க ஒண்ணாத விஷாதம் தோற்றச் சொல்லுகிறார்
என் செய்கேன் -நெஞ்சு உருகாத படி தரிப்பேனோ -பெருகுகிற அபி நிவேசத்தை அமைப்பேனோ -இதுக்கு அடியான அவன் குணங்களை தவிர்ப்பேனோ-தொண்டனேன்-அதுக்கு அடியான என் சாபல்யத்தை தவிர்ப்பேனோ -சாபலம் அபூமி என்று கை வாங்க ஓட்டுகிறது இல்லை -மறந்து தரிக்க வொட்டுகிறது இல்லை –

பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்! பற்றிலார் பற்ற நின்றானே!
கால சக் கரத்தாய்! கடலிடங் கொண்ட கடல்வண்ணா! கண்ணனே!’ என்னும்;
‘சேல்கொள் தண் புனல்சூழ் திருவரங்கத்தாய்!’ என்னும்’என் தீர்த்தனே!’ என்னும்;
கோல மா மழைக்கண் பனி மல்க இருக்கும் என்னுடையக் கோமளக் கொழுந்தே.–7-2-7–நீ எங்களை காலம் பார்த்து அன்றோ கிடக்கிறது –ஒரு கடல் கடலிலே சாய்ந்தால் போலே அணித்தாக திருப் பாற் கடலிலே சாய்ந்தில்லையோ

பெருகு காதல் அடியேன் உள்ளம்
உருவப் புகுந்து ஒருவரூர் போல்
அருகு கைதை மலரக் கெண்டை
குருகு என்றும் அஞ்சும் கூடலூரே–5-2-9—நாள் செல்ல நாள் செல்ல ஆற்றுப் பெருக்கு போலே பெருகா நின்றுள்ள காதலை உடைய அடியேனுடைய ஹிருதயமானது உருகும்படி யாகப் புகுந்த அத்விதீயனானவன் வர்த்திக்கிற தேசம் போலே இருந்தது – ( உருக்கவே புகுந்தார் )-

கழிய மிக்கதோர் காதலள் இவள் என்று அன்னை காணக்கொடாள்
வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
குழுமித் தேவர் குழாங்கள் கைத்தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே
எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே.–5-5-10-அலைவு அற விஞ்சின காதல் என்னுதல் -நாள் கழிய கழிய விஞ்சின காதல் என்னுதல் –சோகச்சகில காலேந கச்ச தாஹ்யபக்கச்சதி -மம்ஸாபச்யதிச் காந்தா மஹான் யஹனி வர்த்ததே –

இவருடைய பக்தி தான் சாஸ்த்ரங்களில் சொல்லுகிறபடியே சக்ரமமாய் -சாத்ம்யமாய் -ஏக முகமாய் இராமல் இப்படி அமர்யாதமாய் -அசாத்தியமாய் -அநேக முகமாய் நடப்பான் என் என்னும் ஆ காங்ஷையில் அருளிச் செய்கிறார் —இப்படி இரா நிற்கிற இவருடைய பக்தி தான்‌ ஸக்ரமமாயிருக்கமோ? என்னில்‌, இவருடைய பக்திக்கு “ந ஸாஸ்த்ரம்‌ நைவ ச க்ரம:‘” என்கிறபடியே தேஸ விஸேஷத்தில்‌ பக்தி போலே இதுவும்‌ வைதமல்லாமையாலே க்ரமாபேக்ஷை இல்லை என்கிறார்‌-

அச்சேத்யம் என்னும் அது ஈரும் வேம் ஈரியாய் உலர்த்த வென்னப் பட சித்தம் சித்தாய் அல்லேன் என்று நீங்க கரணங்கள் முடியானேயில் அவையாக உடலம் ஆத்ம தர்மம் கொள்ள காற்றும் கழியும் கட்டி அழக்
கொண்ட பெரும் காதலுக்கு பத்திமை நூல் வரம்பில்லையே —சூரணை –132-

அச்சேத்யம் என்னும் அது–அதாவது–அச்சேத்யோய மதாஹ்யோயம் அக்லேத்யோ சோஷ்ய ஏவச–ஸ்ரீ கீதை -2-24- -என்று-சேதன தகன க்லேதன சோஷன நர்ஹமாக சொல்லப் படும் ஆத்ம வஸ்து –
ஈரும்-சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை சேர் திருவாக எம்மாவி ஈரும் -9-9-6–என்று பிராட்டியோடு ருத்ராதிகளோடு வாசி அற உடம்பு கொடுக்கும் அவனுடைய சீலம் ஸ்மாரகமாய் என் ஆத்மாவை ஈரா நின்றது என்றும் —-வேம்- வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கு –10-3-7–என்று என் ஆத்மாவானது நெருப்பில் இட்ட மெழுகு போலே உருக் குலைந்து வேவா நின்றது என்றும் –ஈரியாய்கண்ணனுக்கு என்று ஈரி யாய் -6-7-9–என்று நல்லது கண்டால் கிருஷ்ணனுக்கு என்று அனுசந்ததாலே ஆர்த்தரதை அடையும் -என்றும் –-உலர்த்த –வேட்கை நோய் மெல்லாவி உள் உலர்த்த -2-1-10–என்று பிரேம வியாதி யானது மிருது ஸ்வாபமான ஆத்மாவை குருத்து வற்றாக உலர்த்த என்றும் – இப்படி சேதன ஆத்யர்ஹம் ஆயிற்று என்று ஸ்வயமேவ சொல்லும்படியாக –

(அச்சேத்‌யமென்று தொடங்கி). **௮ச்சேத்‌யோ யமதாஹ்யோயமக்லேத்‌யோ ஸோஷ்ய ஏவ ச?” (கீ,. 2 – 24) என்று சேதந-தஹந-ப்லாவந-ஸோஷணாதிகளுக்கு அயோக்‌யமா யிருக்கிற ஆத்ம வஸ்து. (ஈரும்‌ வேம்‌ ஈரியாய்‌ உலர்த்த என்னப்பட) “சிவனொடு பிரமன்‌ வண்திருமடந்தை சேர்‌ திருவாக மெம்மாவி ஈரும்‌” (திருவா. 9 – 9- 6), ‘‘வேம்‌ எமதுயிரழல்‌ மெழுகிலுக்கு”” (திருவா. 10 – 3-6) ”கண்ணனுக் கென்‌றீரியாயிருப்பாள்‌”‘ (திருவா. 6 – 3 – 6), “’வேவாரா வேட்கை நோய்‌ மெல்லாவி உள்ளுலர்த்த”‘ (திருவா. 2 -.1 – 1) என்று அவனுடைய ஸீல குணம்‌ என்‌ ஆத்மாவை ஈரா நின்றது என்றும்‌, அக்‌நி ஸகாஸத்துக்குள்ளே புகுந்த மெழுகு போலே என்‌ ஆத்மாவானது தக்‌தமாகா நின்றது என்றும்‌, விலக்ஷண பதார்த்தங்களைக்‌ காணில்‌ கண்ணனுக்கு என்று த்‌ரவீ பூதையாகா நின்றாள்‌ என்றும்‌, ப்ரேம வ்யாதியானது என்‌ ஆத்மாவைக்‌ குருத்து பற்றாக உலர்த்தா நின்றது என்றும்‌, இப்படி சேதநாதிகளுக்கு யோக்‌யமாய்த் தென்று இவர் தாமே சொல்லும்படியாக ஆத்ம வஸ்து பாஹ்ய பதார்த்தங்களாலே சேதநாதிகளுக்கு அயோக்‌யமென்றது இத்தனை போக்கி, தன்னிலும்‌ அச்சமான பகவத்‌ குணங்கள்‌ புக்கழிக்க, அழியாதாகில்‌ இதுதான்‌ ஜ்ஞாந-. த்‌ரவ்யமன்றியிலே ஒழியுமிறே-

அவனுடை யருள் பெறும் போதரிதால் அவ்வருள் அல்லன வருளும் அல்ல
அவன் அருள் பெறுமள வாவி நில்லாது அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன்
சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை சேர் திரு வாகம் எம்மாவி ஈரும்
எவன் இனிப் புகுமிடம் எவன் செய்கேனோ ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள்–9-9-6-பிராட்டியோடு -அந்நிய பரரான ருத்ராதிகளோடு வாசி அற உடம்பு கொடுக்கும் சீலம் ஸ்மாரகமாய் நித்தியமான ஆத்மாவை முடியா நின்றது -அந்நிய பரர்க்கு எளிதான உடம்பு கிடீர் எனக்கு அரிதாய்த்து –
எவன் இனிப் புகுமிடம் -சர்வ சாதாரணமான உடம்பை இழந்தால் இனி எங்கே போய் தரிப்பது –அவன் உடம்பு கிட்டிற்று இல்லை என்னா ஹிதம் சொல்லுகிற உங்கள் உடம்பைப் பற்றித் தரிக்கவோ-

வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கு வெள் வளை மேகலை கழன்று வீழ
தூ மலர்க்கண் இணை முத்தம் சோரத் துணை முலை பயந்து என தோள்கள் வாட
மா மணி வண்ணா உன் செங்கமல வண்ண மென் மலரடி நோவ நீ போய்
ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு அசுரர்கள் தலைப் பெய்யில் எவன் கொல் ஆங்கே–10-3-7-எங்கள் உபதேசம் கொண்டாகிலும் அறியாய் –எமது உயிர் -உனக்கு இல்லை என்னும் இடம் கண்டோம் இறே-

காரியம் நல்லனகள் அவை காணில் என் கண்ணனுக்கு என்று
ஈரியா யிருப்பாள்
இதெல்லாம் கிடக்க இனிப் போய்ச்
சேரி பல்பழி தூஉய் இரைப்பத் திருக்கோளூர்க்கே
நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே.–6-7-9-பதார்த்தங்களில் நல்லனவற்றைக் காணில் -ஒன்றிலும் கண் வைப்பது இல்லை -கண்டாள் ஆகில் எனக்காக தன்னை யோக்கி வைத்த கிருஷ்ணனுக்கே என்னும் –-ஈரியா யிருப்பாள் -கிருஷ்ணனுக்கு என்றால் மேல் ஒன்றும் சொல்ல மாட்டாதே -அவன் குணங்களை அனுசந்தித்து நீராய் இரா நின்றாள் –ஈரித்து இருக்கும் -ஆர்த்த ஹ்ருதையாய் இருக்கும்

வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்
மாவாய் பிளந்த மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே –2-1-10—ஒரு கால் வெந்து சமையக் கடவது அன்றிக்கே -அக்னி நேவாக் நி பர்வத -என்கிறபடியே வெந்த இடமே இந்தநமாக தஹியா நிற்கிற காதல்
அளவில்லாத வேட்க்கை நோய்-மெல்லாவி – பாத்தம் போராத ஆத்மாவை -அதாஹ்யமாய் இருப்பது கேவல அக்னி யாகில் இறே-யுள்ளுலர்த்த- கூடோ அக்னி ரிவ பாதபம் -கோடாரத்தில் பற்றின அக்னி போலே குருத்து வற்றாக வற்றுவிக்க-ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்- வேவேரா வேட்க்கை நோயாகைக்கு அடி இருக்கிற படி-இடை விடாதே சர்வ காலமும் உன் குணங்களைக் காட்டி என்னை உன் பக்கலிலே விழ விட்டு நீ கடக்க நின்றாய்-விழ விட்டுக் கொண்டாய் என்னவுமாம்

சித்தம் சித்தாய் அல்லேன் என்று நீங்க-அதாவது-என் நெஞ்சு என்னை நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி –8-2-10-என்று அசேதனமான சித்தம் சேதன சமாதி அடைந்து அவன் விஸ்லேஷித்து போன உனக்கு கரணமாக அல்லேன் என்று-சம் ந்யஸ்தம் மயா-என்கிறபடி உறவறச் சொல்லி தம்மை விட்டு நீங்க-

(சித்தம்‌ சித்தாய்‌ அல்லேனென்று நீங்க) என்னெஞ்சென்னை நின்னிடையே னல்லேனென்று நீங்கி” (திருவா, 8 – 2 – 10) என்று அசேதநமான சித்தமானது சேதந ஸமாதியாலே இவரை ““ஸந்ந்யஸ்தம்‌ மயா”’ என்று விட்டு நீங்க,-

என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள் யானினிச் செய்வதென் என்னெஞ்சென்னை
நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி
நேமியும் சங்கு மிரு கைக்கொண்டு
பன்னெடுஞ் சூழ் சுடர் ஞாயிற்றோடு பால் மதி ஏந்தி யோர் கோல நீல
நன்னெடும் குன்றம் வருவதொப்பான் நாண் மலர்ப்பாத மடைந்ததுவே-8-2-10–என்னெஞ்சு -எல்லா அவஸ்தையிலும் இதுக்கு முன்பு எனக்கு பவ்யமாய்ப் போந்த என் நெஞ்சு-என்னை-தன்னைக் கொண்டு ஜீவித்து இருக்கிற என்னை-நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி-உன்னோடு எனக்கு அடைவில்லை என்று அகன்று -இதயுக்த்வாபருஷம் பண்ணிப் போயிற்று -பிராப்தி சொல்லி மீட்க ஒண்ணாத படி ஸந்நயஸ்தம் மயா என்று போயிற்று -உங்களுக்கு நான் நிற்கிற நிலையிலே இறே என் நெஞ்சு எனக்கு அவ்வருகே போனபடி

கரணங்கள் முடியானேயில் அவையாக-அதாவது-பாஹ்ய கரணங்கள் –முடியானே -3-8-திருவாய் மொழியில் படியே சேதன சமாதியாலே ஒரு கரணத்தினுடைய வ்ருத்தியை கரணாந்தரம் ஆசை படும் படி விடாய்க்க-உடலம் நின் பால் அன்பாயே நீராய் அலைந்து கரைய -5-8-1-என்று பகவத் பிரேம பாரவச்யத்தால் ஆத்மா சிதிலமாய் போகாதபடி கட்டின கரியான சரீரம் த்ரவ்யம்(பொன் ) இருந்த குகையும் உருகுமா போலே அன்பும் அதுக்கு ஆஸ்ரயமான ஓன்று என்று இரண்டு அன்றியே – அன்பு தான் ஒரு வடிவு கொண்டால் போலே உத்தரோத்தரம் சைதில்யத்தை அடைந்து ஆத்ம தர்மத்தை ஏறிட்டு கொள்ள –

(கரணங்கள்‌ முடியானேயிலவையாக) “முடியானேயிற்படியே சேதந ஸமாதியாலே விடாய்த்த கரணங்களை உடையராய்‌. (உடலம்‌ ஆத்மதர்மம்‌ கொள்ள) ‘“அடியேனுடலம்‌ நின்பாலன்பாயே நீராயலைந்து கரைய”’ (திருவா. 5 – 8 – 1) என்று த்‌ரவ்யமிருந்த குஹை உருகுமாப் போலே ஆத்மா பகவத் ப்ரேம வஸ்யதையாலே ஸிதிலமாகாதபடி கட்டின கரையான ஸரீரமானது அந்தராத்மாவைப் போலே பகவத் ப்ராவண்யத்தை உடைத்தாய் கொண்டு ஸிதிலமாக.-

முடியானே -3-8-திருவாய் மொழியில்--ஓன்று ஒன்றே சர்வ இந்திரிய வ்ருத்தியை ஆசைப்படுகிற
தம்முடைய கரண க்ராமமும் அப்படியே விடாய்த்த தாமும் – நாம் அவனை என்றோ காண்பது என்று துர்பிக்ஷ காலத்தில் தரித்ரனாய்-பஹு பிரஜனானவன் பிரஜைகள் பசிக்கும் தன பசிக்கும் ஆற்றாமே
கூப்பிடுமா போலே ஆபரணங்களையும் திவ்ய ஆயுதங்களையும் இவற்றுக்கு ஆச்ரயமான வடிவு அழகையும் குணங்களையும் சேஷ்டிதங்களையும் உடையவனாய் காணப் பெறுவது என்றோ என்று கேட்டார் அடைய நீர்ப் பண்டமாம் படி கூப்பிடுகிறார் –

ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே!

சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–5-8-1—அடியேன் என்கிறது யஸ்யாஸ்மி என்ற வசனத்தால் அன்று -போக்யதைக்கு தோற்று சொல்லுகிறார்-அடியேன் உடலம் -ஞான குணகமான ஆத்மவஸ்து அழியும் அளவன்றிக்கே அசேதனமான சரீரத்து அளவும் செல்லக் கரைகை -ஆத்மவஸ்து உத்தேசியத்தில் ஈடுபட்டு அழியாமைக்கு கட்டின கரை யாயிற்று சரீரம் அதுவும் அழிந்தது என்கை
நின்பால் அன்பாய் நீராய் அலைந்து கரைய உருக்கு கின்றநின்பால் – சேதன அசேதன விபாகம் அற அழிக்க வல்ல உன் பக்கலிலே –அபி வ்ருஷாபரிம்லாநா–உபதப்தோ தகா நத்யஅன்பாய் -அசித் த்ரவ்யம் அன்றியே -பிரமத்தை இட்டுச் செய்தது என்னலாம் படி இருக்கை -அன்னமயமாய் இருக்கை அன்றிக்கே ப்ரேமமயமாய் இருக்கை –காதல் குருகூர் சடகோபன் இறே-சரீரமானது கட்டுக் குலைந்து-அன்பாய் –அதுதான் போய் -நீராய் -அலைந்து கரையும் படி யுருக்கிற்று-உருக்குகின்ற -இத்தலை அழியா நிற்க அத்தலை முதலடி இட்டதில்லையாய் இருக்கை-நெடுமாலே! சர்வேஸ்வரன் என்னுதல் -போக்யதையின் மிகுதியைச் சொல்லுதல் -வ்யோமோஹ அதிசயத்தை சொல்லுதல் -இப்படி ஸைதில்யத்தை பிறப்பியா நின்று வைத்து எட்டாது இருக்கிறவன் என்னுதல் –தன் போக்யத்தையாலே ஸைதில்யத்தை பிறப்பியா நிற்கை என்னுதல் -தன் வ்யோமோஹ அதிசயத்தை காட்டி ஸைதில்யத்தை பிறப்பியா நிற்கிறவன் என்னுதல்

காற்றும் கழியும் கட்டி அழக்-அதாவது-கடலும் மலையும் விசும்பும் துழாய் –2-1-4–இருளின் திணி வண்ணம் மா நீர்க் கழியே -2-1-8- -இத்யாதிகளின் படியே-காற்றுக்கு சதத கதித்வமும் கழிக்கு ஏறுவது வடிவதாகவும் நித்ய ஸ்வபாவம்என்று அறியாதே – அவற்றுக்கு அவை பகவத் விரஹ கிலேச ஜனிதமாகக் கருதி – அசேதனமான அவற்றை தமக்கு சக துக்கிகளாகக் கொண்டு –-எம் ஆற்றாமை சொல்லி அழுவோமை-2-1-7–என்று தாம் அவற்றைக் கட்டிக் கொண்டு கிடந்தது கதருமாம் படிகொண்ட பெரும் காதலுக்கு பத்திமை-அதாவது –அலர் தூற்றிற்றது முதலாகக் கொண்ட என் காதல்-7-3-8– -என்றும் –மயல் பெரும் காதல்-4-4-10—என்றும் சொல்லுகிறபடி -பிறர் பழி சொல்லுவதே எருவாக பணைத்து செல்லுமதாய் – (ஊரவர் கவ்வை எருவாக அன்னை சொல் நீராக நீளும் இந்நோய் -திருக்குறள் ) க்ருத்ய அக்ருத்யம்-தெரியாதபடி – அறிவு கேட்டை விளைவிப்பதான அபரிசேத்ய பக்திக்கு

(காற்றும்‌ கழியும்‌ கட்டியழ) “கடலும்‌ மலையும்‌” இத்யாதி, (திருவா. 2-1. 4), “எம்‌ ஆற்றாமை சொல்லி அழுவோமை’: (திருவா, 2 – 1 – 7) என்று வாயுவுக்கு ஸதத கதித்வம்‌ ஸ்வாபாவிகமென்றும்‌, கழிக்கு ஏறுதல்‌ வடிதல்‌ செய்கை ஸ்வாபாவிகமென்றும்‌, மற்றும்‌ நாரை தொடக்கமானவற்றுக்கு அவ்வோ ஸ்வபாவம்‌ நியதமென்றும்‌ அறியாதே தம்மைப் போலே பகவத்‌ விஸ்லேஷத்தாலே இவையும்‌ நோவு படுகிறனவாக இவற்றோடே க்லேஸிக்கும் படியாகக்‌ கொண்ட பெருங்காதலுக்கு, ”அலர்‌ தூற்றிற்றது முதலாக்‌ கொண்ட என் காதல்‌” (திருவா. 7 – 3 – 8) என்று இப்படியிருக்கிற இவருடைய அபரிச்சேத்‌யமான பக்திக்கு.-

கடலும் மலையும் விசும்பும் துழாய் எம் போல்
சுடர் கொள் இராப்பகல் துஞ்சாயால் தண் வாடாய்
அடல் கொள் படை யாழி அம்மானைக் காண்பான் நீ
உடலம் நோய் உற்றாயோ ஊழி தோர் ஊழியே –2-1-4—பரப்பு உடைத்தான் கடலோடே-நிர் விவரமான மலையோடு -அபரிச்சின்னமான ஆகாசத்தோடு -வாசி அறத் துழாவி –-காரார் திரு மேனி காணும் அளவும் போய் -என்று ஷீராப்தி யோடு -திருமலையோடு -பரமபதத்தோடு வாசி அறத் தேடுவார்க்கு போலியாய் இருக்கிற படி –-தவ் வனானி கிரீன் சைவ சரிதச்ச சராம்ஸிச நிகிலேந விசின்வா நவ் ஸீதாம் தசரதாத் மஜவ் –

தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே

வேற்றோர் வகையில் கொடியதாய் எனையூழி
மாற்றாண்மை நிற்றியே வாழி கனையிருளே –2-1-7—எங்கள் ஆற்றாமையைச் சொல்லிக் கூப்பிடுகிற எங்களை – நாங்கள் பெறுகிறது உண்டோ – நீ பொறுக்க மாட்டாதே ஸாத்ரவம் கொண்டாட -அவனைப் பெறவோ-போன நெஞ்சைப் பெறவோ-எங்கள் தரியாமையாலே அழப் பெறோமோ–நீ நடுவே-
உனக்கு பாத்ய பாதக பாவ சம்பந்தம் இன்றிக்கே இருக்கச் செய்தே-வேற்றோர் வகையில் கொடியதாய் சத்ருக்கள் படியிலும் கொடியதாக செய்யா நின்றாய்-வகை -பிரகாரம் –-கொடிதாய்-கொடிதான படியை உடையையாய்-

இருளின் திணி வண்ணம் மா நீர்க் கழியே போய்
மருளுற்று இராப்பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
உருளும் சகடம் உதைத்த பெருமானார்
அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே –2-1-8—இருள் செறிந்தால் போலே இருக்கிற பெரு நீரை உடைய கழியே-போய்-மருளுற்று –மிகவும் அறிவு கெட்டு-உள்ளுள்ளவை எல்லாம் கலங்கி
மயர்வற மதி நலம் அருளப் பெற்ற அவ்வளவு எல்லாம் கலிங்கினார்க்கு போலியாய் இருக்கை –

கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடிக் கார்க்கடல் வண்ணனோடு என் திறத்துக்
கொண்டலர் தூற்றிற்றது முதலாக் கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ!

மண் திணி ஞாலமும் ஏழ்கடலும் நீள் வீசும்புங் கழியப் பெரிதால்;
தெண் திரை சூழ்ந்தவன் வீற்றிருந்த தென் திருப் பேரெயில் சேர்வன் சென்றே.–7-3-8–என் வை வர்ணயத்தைக் கண்டு -இவள் நிறத்தை இழக்கும் போது அந்நிறத்தை உடையனுக்கு ஆக வேணும் என்று கொண்டார்கள் -அவன் அழகிலே இவள் அகப்பட்டாள் என்கை-அலர் தூற்றிற்றது-பழி தூற்றினார்கள்-அது முதலாக்-கொண்ட என் காதல் -அது அடியாக -அதுவே எருவாக -இடம் கொண்ட -ஊரவர் கவ்வை எருவிட்டு -என்ன கடவது இறே-என் காதல் உரைக்கில் தோழீ!யதோ வாசோ நிவர்த்தந்தே -என்கிற பகவத் ஆனந்தத்துக்கு அவதி உண்டாகிலும் இக்காதலுக்கு பாசுரம் இட்டுச் சொல்லப் போகாது -தோழீ -அவன் காதலின் பெருமை சொல்லி அது அடியாக என் காதலுக்கு கிருஷி பண்ணின நீ படும் பாடு அறிவுதியே-

அயர்க்கும்;சுற்றும் பற்றி நோக்கும்; அகலவே நீள் நோக்குக் கொள்ளும்;
வியர்க்கும்; மழைக் கண் துளும்ப வெவ் வுயிர் கொள்ளும்;மெய் சோரும்;
பெயர்த்தும்‘கண்ணா!’என்று பேசும்; ‘பெருமானே, வா!’என்று கூவும்;
மயற் பெருங் காதல் என் பேதைக்கு என் செய்கேன் வல் வினையேனே?–4-4-10—மதி கெடுகைக்கு உடலான அதி பிரமத்தை உடையவள்-ஆசா லேசம் உடையார்க்கு அனுபவிக்கலாம் வி லக்ஷண விஷயம் கிடீர் இவளுக்கு விபரீத பலம் ஆயிற்று-இவளுடைய அதி மாத்ர ப்ரேமம் பேற்றுக்கு உடலாகை அன்றிக்கே மயலுக்கு உறுப்பாவதே-

நூல் வரம்பு இல்லையே-அதாவது-அத்யந்த பக்தி யுக்தா நாம் -ந சாஸ்திரம் நைவ ச க்ரமம்- என்கிற தேச விசேஷத்தில் -அனுபவ உபகரண பக்தி போலே சென்ற படி கண்டு இருக்கும் அத்தனை அல்லது –பக்திமைக்கு அன்பு உடையேன் ஆவதே –திருக் கூறும் தாண்டகம் -10- என்கிறபடி நூல் பிடித்து பரிமாறும் படி வரம்பு கட்ட ஒண்ணாது இறே என்கை–இத்தால் – வா ஆத்மா அரே த்ரஷ்டவ்ய ஸ்ரோதவ்ய மந்தவ்ய நிதித்யாசிதவ்ய-என்கிற விதி பிரேரிதியாய் – சேதன சாத்யையாய் -க்ரம பரிணாமினி யான பக்தி போல் அன்றிக்கே அதற்க்கு எதிர் தட்டாய், கரை அழிந்து செல்லுகிற இது சாஸ்திர மரியாதையின் கீழ் அடங்காதது என்றது ஆயத்து-

(பத்திமை நூல் வரம்பில்லையே) ”ந ஸாஸ்த்ரம்‌ நைவ ச க்ரம:’‘ என்று தேஸ விஸேஷத்தில்‌ அநுபவோபகரணமான பக்தி போலே இவருடைய பக்திக்கு, ஸாதந பக்தி போலே வைதமாகையும்‌ க்ரமா பேஷையும்‌ இல்லை யிறே.

சித்தமும் செவ்வை நில்லாது என் செய்கேன் தீ வினையேன்
பக்திமைக்கு அன்புடையேன் ஆவதே பணியாய் எந்தாய்
முத்தொளி மரகதமே முழங்கொளி முகில் வண்ணா என்
அத்த நின் அடிமை அல்லால் யாதும் ஒன்றும் அறிகிலேனே–10—என் தன் அளவன்றால் யானுடைய அன்பு -என்னும்படியே-நூல் பிடித்த பக்தியை அளவாக்க வேணும் –-அளவிறந்த பத்தியை மாற்றி நூல் பிடித்த செவ்வே அனுபவிக்கக் கூடிய பக்தியை அளவாக்க –மட்டமாக்க -வேணும்-பக்தியை உண்டாக்கின நீயே அளவு படுத்த வேணும் –(அளவு கடந்த ஆசை நிலைமைக்குப் பத்திமை யென்று பெயர்;-ஓரளவிலே நிற்கிற ஆசை நிலைமைக்கு அன்பு என்று பெயர் என்பதாகக் கொள்க.–இப்போது ஆழ்வாருடைய ஆசையின் நிலைமை எல்லை கடந்த அவஸ்தையிலே நிற்பதால் ‘இப்படிப்பட்ட பத்திமையைக் கொண்டு என்னால் பாடாற்றப் போகவில்லை,-இந்த நிலைமையை மாற்றி வெறும் அன்பு நிலைமையையே தந்திடாய்‘ என்று வேண்டிக் கொள்ளுகிறார்.

ஆக-
ஞானத்தில் தம் பேச்சு–என்று தொடங்கி – இவ்வவளவும் ஞான தசையில் தாமான தன்மையாலும்
பிரேம தசையில் ஸ்த்ரீத்வ ரூபேணவும் பேசுவர் என்றும் –
ஸ்த்ரீத்வம் ஆத்மாவுக்கு வந்தேறி அல்லாமையாலே இவருக்கு இது ஸ்வாபாவிகம் என்றும் –
அது தான் சாமான்யம் அன்றிக்கே ஆறு பிரகாரத்தாலே லஷ்மி சமர் என்றும் –
மற்றை பிராட்டிமார் பகவத் பரி க்ரஹம் உடையோர் எல்லோரோடும் சாம்யம் உடையவர் என்றும் –
சர்வதா சாம்யம் இவருக்கு லஷ்மி யோடே என்றும் –
மற்றும் பகவத் அனந்யராயும் பகவத் பிரத்யாசன்னராயும் உள்ள லஷ்மணாதிகள் தசரதாதிகள் படியும் இவருக்கு உண்டு என்றும் –
அவர்களில் இவர் வ்யாவிருத்தர் என்றும் —
பிராட்டிமாரையும் அனந்தாதிகளையும் அவர்கள் தாமாகவே பாவிப்பார் என்றும் –
இந்த பாவனா ஹேதுவான இவருடைய ஸ்த்ரீத்வ வரலாற்றுக்கும் – அநேக விருத்திகளில் அபிநிவேசதுக்கும் திரௌபதி கௌசல்யாதிகள் படிகளை திருஷ்டாந்தம் ஆக்குகை ஸ்தூலம் என்றும் –
இந்த பாவ வ்ருத்திகளுக்கு மூலமான பக்தி பிரகாரங்களையும் சொல்லிற்று ஆய்த்து-

ஆக இதுக்குக் கீழ்‌ –ஜ்ஞாந தஸையில்‌ தாமான தன்மையிலே பேசுவர்‌; ப்ரேம தஸையில்‌ ஸ்த்ரீ ஸ்வபாவத்தாலே பேசுவர்‌ என்றும்‌, அந்த ஸ்த்ரீத்வம்‌ இவர்க்கு ஸ்வாபாவிகம்‌ என்றும்‌, ஸ்த்ரீத்வந்தான்‌ ஸாமான்யமன்றிக்கே அநந்யார்ஹ ஸேஷத்வாதிகளாலே பிராட்டியோடொப்பர்‌ என்றும்‌, மற்றுமுண்டான பிராட்டிமார்‌ பகவத் பரிக்‌ரஹமுடை யாரெல்லாரோடும்‌ ஒப்பர்‌ என்றும்‌ ஸர்வதா ஸாம்யமுன்ளது பெரிய பிராட்டியாரோடே என்றும்‌, மற்றும்‌ பகவத் ப்ரத்யாஸந்நரான லக்ஷ்மணாதிகள் படியும் இவர்க்கு உண்டென்றும்‌, அவர்களிலும்‌ வ்யாவ்ருத்தர்‌ என்றும்‌, அவர்களோடு ஸாம்யமன்றிக்கே அவர்களைத்‌ தாமாக பாவிப்பர்‌ என்றும்‌, இந்த பாவ வ்ருத்திகள்‌ இவர்க்கு உண்டாகைக்கு நிதாநம்‌ இன்னதென்னுமிடத்தையும்‌, இந்த பாவ வ்ருத்திகளுக்கு அடியான பக்தி ப்ரகாரங்களையும்‌ சொல்லி நின்றது கீழ்‌. ஆக இத்தால்‌ பக்தி தஸையில்‌ இவர்‌ பேச்சிருக்கும் படி சொல்லிற்று-

–——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌ – 6 -ப,க்திபாதம்-9-ஜ்ஞாந ப,க்த் யவஸ்தா ஸூக்தி அதிகரணம் –(118-121)-ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

July 14, 2026

(1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 284 முடிய (48)

(1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-284 (27)

6 — ப,க்திபாதம் -—97–121—-25-இதிலே 2 அதிகரணங்கள்
8–ஜ்ஞாந ப,க்த்யதி கரணம்‌ 97 –117—மொத்தம் -21 —ஸூரணைகள்
பகுதி -1-97-101-ஸூரணைகள்–பகுதி -2–102–117-ஸூரணைகள்-
9-ஜ்ஞாந ப,க்த் யவஸ்தா ஸூக்தி அதிகரணம் –118-121—மொத்தம் –4 —ஸூரனைகள் –

இப்படி ஈஸ்வரன் வளர்த்துக் கொண்டு போருகிற ஞான பிரேமங்களை உடையரான இவருடைய ஞான தசையிலும் ,பிரேம தசையிலும் ,உண்டான பேச்சுக்கள் இருக்கும் படி எங்கனே என்ன அருளிச் செய்கிறார் மேல் .. (பக்தி என்பதை ப்ரேமம் என்று அருளி -பக்தி முற்றிய தசை -ப்ரேமம் என்ற உரு எடுத்து -)ஆனால்‌ இவர்க்கு இந்த ஜ்ஞாந தஸையில்‌ பேச்சேது? ப்ரேம தஸையில்‌ பேச்சேது? என்னில்‌,-

ஜ்ஞானத்தில் தம் பேச்சு பிரேமத்தில் பெண் பேச்சு–சூரணை –118-

அதாவது -ஜ்ஞான தசையில் தாமான தன்மையிலே நின்று பேசுவர் .. பிரேம தசையிலே அவஸ்தாந்திர பன்னராய் பெண் பேச்சாய்ப் பேசுவர் என்கை-( ஞானத்தில் ஆண் பேச்சு என்னாமல்-தன் பேச்சு என்றது இந்த பிறவியில் கொண்ட ஆண் ரூபம் என்று-மேலே சொல்லப் போகும் கருத்துக்கு ஸூ சகம் -மணி வல்லிப் பேச்சு வந்தேறி இல்லையே )-ஜ்ஞாநத்தில்‌ தம்‌ பேச்சு, ப்ரேமத்தில்‌ பெண் பேச்சு என்கிறார் –

இப்படி தெளிவும் கலக்க முமான இத் தசைகளிலே பேச்சில் பேதம் ஒழிய ஸ்வரூபத்திலும் பேதம் உண்டோ என்ன அருளிச் செய்கிறார் —பேச்சில்‌ வைஷம்யமொழிய ஸ்வரூபத்தில்‌ மாறாட்டமில்லை என்கிறார்‌ –

தேறும் கலங்கி என்று தேறியும் தேறாது ஸ்வரூபம் குலையாது–சூரணை -119-

(ஞானம் ப்ரேமம் -தெளிவும் கலக்கமும் என்கிற வார்த்தைகளால் ) ஸ்வரூபம் -சேஷத்வ பாரதந்தர்யம்
ஆண் பெண் -ரூபம் தானே)–தேறும்-அதாவது-தேறும் கை கூப்பும் -7-2-5–என்றும்-(உய்ந்த பிள்ளை கெட்டேன்-என்பர் இவள் தேறும் என்பதே – சரம தசையில் பிறக்கும் தெளிவுக்கு அஞ்ச வேண்டும் என்பர் நஞ்சீயர் )கலங்கி –அதாவது – கலங்கிக் கை தொழும்-2-4-4- -என்றும்-தெளிந்த தசையிலும் ,கலங்கின தசையிலும் , சேஷத்வ பிரகாசமான அஞ்சலி மாறாமையாலே ,-தேறியும் தேறாதும் –
பிண்டத்வ கடத்வ கபாலத்வ சூர்ணத்வங்கள் ஆகிற அவஸ்தாந்தரங்களை பஜித்தாலும் , ம்ருத்தான ஆகாரத்துக்கு அழிவில்லாதால் போலே (மண் பிண்டம் குடம் ஓடு பொடி எல்லாமே மண் தானே )
தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனள் இத் திருவே -4-4-7- -என்கிறபடியே , தெளிந்த தசையோடு கலங்கிய தசையோடு வாசி அற உபய அவஸ்தையிலும் ,சேஷத்வ ரூபமான ஸ்வரூபம் நிலை குலையாது என்ற படி 

“சிந்திக்கும்‌ திசைக்கும்‌ தேறும்‌ கை கூப்பும்‌’” (திருவா. 7 – 2 – 5), “கலங்கிக்‌ கை தொழும்‌ நின்றிவள்‌” (திருவா. 2 – 4 – 4) என்றும்‌, ‘‘தேறியும்‌ தேறாது மாயோன்‌ திறத்தனளே இத் திருவே” (திருவா. 4 – 4- 7) என்றும்‌ பிண்டத்வ-கடத்வ-கபாலத்வ காபாலிகத்வாத்‌,-யவஸ்தைகளில்‌ ம்ருத்தான ஆகாரம்‌ அநுவர்த்திக்குமாப் போலே தெளிந்த (தேறின – பா. போதோடு கலங்கின போதோடு வாசியற இரண்டவஸ்தையிலும்‌ அஞ்ஜலி ஹஸ்தையாய்க் கொண்டு “அவனை யல்லதறியாள்‌” என்கையாலே ஜ்ஞாந தஸையில்‌ தாமான தன்மையோடு ப்ரேம தஸையில்‌ பிராட்டிமார் பேச்சான அவஸ்தையோடு வாசியற சேஷத்வத்தில்‌ கலக்கமற்று ஏக ரூபமாயிருக்கு மென்கிறார் 

சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும் ‘திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;
வந்திக்கும் ஆங்கே மழைக் கணீர் மல்க ‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
‘அந்திப்போ தவுணன் உடலி டந்தானே! அலைகடல் கடைந்த ஆர் அமுதே!
சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல் செய் தானே!–7-2-5–ஒரு ஹேது இன்றிக்கே இருக்க தேறா நின்றாள் -இது தானும் பயாவஹமாய் இருக்கிறதாய் யாயிற்று -மோஹம் செல்லா நிற்க அபேக்ஷிதம் பெற்றாரைப் போலே தேறுகை பயாவஹம் இறே -சரம தசையில் பிறக்கும் தெளிவுக்கு அஞ்ச வேணுமே-கை கூப்பும்-தேவர் படிகளை நினைத்து ஈடுபட்டுக் கும்பிடும் -கீழே மயங்கும் -கை கூப்பும் -என்றது -இங்கே தேறும் கை கூப்பும் என்றது -அல்லாதது சஞ்சாரியாய் செல்லா நிற்க இது ஒன்றும் ஸ்திரமாக செல்லா நின்றது –ஸ்வரூப அனுபந்தியான தர்மம் ஆகையால் -நித்யாஞ்சலி புடா -என்ன கடவது இறே –ஆற்றாமையாலே-

இலங்கை செற்றவனே யென்னும் பின்னும்
வலம் கொள் புள்ளுயர்த்தாய் என்னும் உள்ளம்
மலங்க வெவ்வுயிர்க்கும் கண்ணீர் மிகக்
கலங்கிக் கை தொழும் நின்றிவளே –2-4-4-கலங்கிக் கை தொழும் – பிரணயி கை தொழுவது கலங்கி இறே-நின்றிவளே –-நின்று -கை தொழுகை மாறாது ஒழிகை – இவள் -தொழுவித்துக் கொள்ளக் கடவ இவள் இறே தொழுகிறாள்

ஏறிய பித்தினோடு ‘எல்லா உலகும் கண்ணன் படைப்பு’ என்னும்’
நீறு செவ்வே இடக் காணில், நெடுமால் அடியார்’ என்று ஓடும்;
நாறு துழாய்மலர் காணில்,‘நாரணன் கண்ணி ஈது’ என்னும்;
தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே இத் திருவே.–4-4-7-நீறு செவ்வே -என்ற இடம் -தேறாமை-நாரணன் கண்ணி ஈது என்ற இடம் -தேற்றம் –கோவை வாயாள் திருவாய்மொழி -தேற்றம் -இத்திருவாய்மொழி -தேறாமைமாயோன் திறத்தனளே-ஞானம் அப்ரயோஜனமாம் படி ஆச்சர்யமான பிரணயித்வத்தை உடையவன் திறத்தனள்-இத் திருவே-இத்திரு என்றும் அத்திரு என்றும் விகல்பிக்கலாம் படி இருக்கிறது-அநபாய நிகளாய் இருக்கிற ஆகாரம் இருவருக்கும் ஒக்கும்
அவளுக்கு அவனே உத்தேச்யன்-இருவரும் உத்தேச்யரான ஏற்றம் உண்டே இவளுக்கு

ஆனால் இவர்க்கு அவஸ்தாந்த்ரம் -ஆவது எது என்னும் அபேஷையில் அருளிச் செய்கிறார் .–ஆனால்‌ பின்னை அவஸ்தாந்தரம்‌ கூடின படி என்‌ என்னில்‌-ஆனால்‌ பின்னை அவஸ்தாந்தரம்‌ கூடின படி என்‌ என்னில்‌ – ஸ்வரூபத்திலும்‌ ஸ்வரூபாநுரூபமான வருத்தி ப்ரார்த்தனையிலும்‌ வாசியில்லை. தம்‌ பேச்சும்‌ பிராட்டிமார்‌பேச்சுமான இவ்வளவே அவஸ்தாந்தரம்‌-

அடியோம் தொடர்ந்து குற்றேவல் அடிச்சியோம் அடிக் கீழ் குற்றேவல் ஆகை அவஸ்தாந்த்ரம்-சூரணை -120-

அடியோம்-அதாவது-அடியோம் போற்றி ஓவாதே -9-2-9-என்றும் ,-தொடர்ந்து குற்றேவல்--அதாவது-
தொடர்ந்து குற்றேவல் செய்து-9-2-3- -என்று தாமான தன்மையில் சொல்லுமோ பாதி–அடிச்சியோம்-
அதாவது- அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் –10-3-6–என்றும் , அடிக் கீழ் குற்றேவல்- அதாவது-
திரு அடிக் கீழ் குற்றேவல் முன் செய்த -1-4-2–என்று சொல்லுகையாலே , ஸ்வரூபத்திலும் ,ஸ்வரூப அநுரூப வ்ருத்தி பிரார்த்தனையிலும் பேதம் இல்லை ..-பிராட்டியான பாவனையாலே ,தம் பேச்சான இது போய் ,பெண் பேச்சாகை இவர்க்கு அவஸ்தாந்த்ரம் ஆவது என்ற படி .. அடியோம் தொடர்ந்து குற்றேவல் -என்று தம் பேச்சாலே சொல்லுகிற இது அடிச்சியோம் அடிக் கீழ் குற்றேவல்-என்று பெண் பேச்சாகை இவருக்கு அவஸ்தாந்த்ரம் ஆவது என்று வாக்யத்துக்கு சொல் படுத்தும் க்ரமம் –(வாக்ய அந்வயம் என்றவாறு )(ஸ்வரூபத்திலும் வ்ருத்தி கைங்கர்யத்திலும் பேதம் இல்லையே – ஆண் தன்மையில் பாடினாலும் நாயகி பாவமாக பாடினாலும் சேஷத்வத்துக்கும் கைங்கர்யத்துக்கும் இரண்டு அவஸ்தைகளும் ஆக நான்கு பாசுரங்கள் காட்டி வியாக்யானம் )

ஸ்வரூபத்திலும்‌ ஸ்வரூபாநுரூபமான வ்ருத்தி ப்ரார்த்தனையிலும்‌ வாசியில்லை. தம்‌ பேச்சும்‌ பிராட்டிமார்‌ பேச்சுமான இவ்வளவே அவஸ்தாந்தரம்-

வீற்று இடம் கொண்டு வியன் கொள் மா ஞாலத்து இதனுளும் இருந்திடாய் அடியோம்
போற்றி யோவாதே
கண்ணினை குளிரப் புது மலர் ஆகத்தைப் பருக
சேற்றிள வாளை செந்நெலூடு களும் செழும் பணைத் திருப் புளிங்குடியாய்
கூற்றமாய் அசுரர் குல முதலரிந்த கொடு வினைப் படைகள் வல்லானே–9-2-9—சேஷித்வத்தால் வந்த வேறுபாடு தோற்றும் படி விஸ்மய நீயமான மஹா பிருத்வியான இதிலேயும் இருந்திடாய் -உன்னைக் கொண்டு கார்யம் இன்றிக்கே அந்நிய பாரமான சம்சாரத்திலே -உன்னை ஒழிய செல்லாமை யுடையார் இருக்குமது உனக்கு ஏற்றமோ -இதில் உமக்கு பிரயோஜனம் என் என்னில் –-அடியோம்-அநந்ய பிரயோஜனரான நாங்கள் –-போற்றி –அவ்விருப்பு நித்யமாகச் செல்ல வேணும் என்று மங்களா சாசனம் பண்ணி –-யோவாதே-உச்சி வீடு விடாதே–கண்ணினை குளிரப்-கமர் பிளந்த கண்கள் விடாய் கெட்டுக் குளிரும் படி–புது மலர் ஆகத்தைப் பருக–செவ்விப் பூ போலே இருக்கிற திருமேனியை அனுபவிக்கும் படியாக –புஷ்ப்ப ஹாஸ ஸூ குமாரமான வடிவை -லோசநாப்யாம் பிபன் நிவ –என்கிறபடியே நிரந்தரமாக அனுபவிக்கப் பெறுகை –

கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி உன் திரு வுடம்பு அசைய
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி
தடம் கொள் தாமரைக் கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ வுலகும் தொழ விருந்து அருளாய் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-3—இத்தசையில் செய்யப்படுவது இது -என்று உணர்த்தி அந்தரங்க வ்ருத்தியைப் பண்ணி -பெருமாள் தமக்கு அபிமதங்களில் அவஹிதர் அன்றிக்கே இருந்த போதும் -இவ்வடிமையைக் கொண்டு அருள வேணும் -என்று வடிம்பிட்டு இளைய பெருமாள் அடிமை செய்தால் போலே –தொல்லடிமை-ஆத்மாவுக்கு ஸ்வாபாவிகமான வடிமை -மம சஹஜ கைங்கர்ய விதய -என்கிறபடியே வழி வரும் தொண்டரோர்க்கு அருளி-நெறி தப்பாதே வருகிற அடியோங்களுக்கு கிருபை பண்ணி – இம் மூன்று பாட்டிலும் தம்முடைய யோக்யதையைச் சொன்னால் போலே இருக்கும் -அது அன்று சொல்கிறது -ஒருவருக்கே சேஷமாய் இருப்பாரை வேறு முகம் பார்ப்பார் யுண்டோ என்று தம்முடைய அநந்ய கதித்வத்தை சொல்கிறார்

அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் ஆழி அம் கண்ணா உன் கோலப் பாதம்
பிடித்து அது நடுவு உனக்கு அரியையரும் பலர் அது நிற்க எம் பெண்மை ஆற்றோம்
வடித்தடம் கண் இணை நீரும் நில்லா மனமும் நில்லா எமக்கு அது தன்னாலே
வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே–10-3-6—அளவிட ஒண்ணாத ஸ்வ பாவத்தை யுடையையாய் தர்ச நீயனான ஸ்ரீ கிருஷ்ணனே – உன்னுடைய அலங்கார உத்தமமான திருவடிகளை அநந்யார்ஹைகளான எம் தலை மேலே நீ வைத்து அருள வேணும் 

என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள் நீரலிரே
முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே
 –1-4-2–திருவடியின் கீழ் அந்தரங்க வ்ருத்தி பண்ணுகைக்கு ஏற்கவே ப்ரவர்த்திக்க பெறாத நான் அகன்றே போம் அத்தனையோ –-முன் செய்ய முயலுகை யாவது -அதுக்கு ஈடான பாக்யத்தைப் பண்ணுகை-க்ரியதாமித மாம்வத -என்றும் – முகப்பே கூவிப் பணி கொள்ளாய் -என்றும் சொல்லுகிறபடியே கண் வட்டத்தில் நின்று பண்ணுகைக்கு ஈடாக முயலாத நான் அகன்றே போம் இத்தனையோ என்றுமாம் -தந்தாமுக்கு என்ன ஓன்று இல்லாதார் தய நீயர் அன்றோ என்று கருத்து-த்வத்க்ருபா சங்கு சந்தீ-என்னக் கடவது இறே –

ஆனால் இவர்க்கு தம் பேச்சு அன்றோ ஸ்வாபாவிகம்– பிராட்டிமார் தசையை ப்ராபித்து பேசும் பெண் பேச்சு வந்தேறி அன்றோ என்ன- — பகவத் ஏக பரதந்த்ர்யமுமாய் பகவத் ஏக போகமுமாய் — இருக்கும் ஆத்ம வஸ்துவுக்கு ஸ்திரீ சாதர்ம்யம் ஸ்வரூப அனுபந்தி ஆகையாலே தத் பிரயுக்தமான பேச்சு
இவருக்கு வந்தேறி அன்று என்னும் இடத்தை ரூபகவத்வேன (உருவகப்படுத்தி) அருளிச் செய்கிறார்
மேல் —(பவாடவி வர்ணனம் -பாரதம்-இருளில் சூழ்ந்து அவிவேகம் -விவாக ஞானம் இல்லாமல் –
பஹுதா சந்தத துக்க வர்ஷினி -ஆளவந்தார் திருவடி ஆச்சார்யர் -உப்புக்கடல் பாவ சாகரம் போன்ற உருவகங்கள் உண்டே )ஆனால்‌ இவர்க்குத் தாமான தன்மை ஸ்வாவிகமாய்‌, பிராட்டி மார் தன்மை வந்தேறி யாயிருக்குமோ? என்னில்‌; ப,க,வதே.க பரதந்தரமுமாய்‌, ப,க,வதே,க போக,மூமாயிருக்கிற ஆத்ம வஸ்துவுக்கு ஸ்த்ரீத்வம்‌ வந்தேறி யல்லாமையாலே பிராட்டிமார் தன்மை ஸ்வாபாவிகம்‌ என்கிறார்

வித்யை தாயாகப் பெற்று பாலுமமுதுமான திரு நாமத்தாலே திருமகள் போல வளர்த்த தஞ்சமாகிய தந்தை மற்றொருவர்க்குப்‌ பேச்சுப் படாமல்‌, விஸ்வபதி லோக பர்த்தா என்னும்‌ மணவாளரை நாலிரண்டிழை கொண்டு முப்புரியான ப்‌ரஹ்ம ஸூத்ர பந்தத்தோடே வரிப்பிக்கப்‌ பரம் புருடன்‌ கைக் கொண்ட பின்‌ சதுர்த்தியுள் புக்கு இடையீடு நடுக் கிடக்கும்‌ நாள் கழித்து ஜந்ம பூமியை விட்டகன்று சூழ்விசும்பிற் படியே உடன் சென்று குடைந்து நீராடி வியன் துழாய்‌ அஞ்சனத்தின்‌ நீறு நானப் பொடி பீதக வாடை பல்கலன் கொண்டு நோக்கி அலங்கரித்துப்‌ பல்லாண்டிசைத்துக்‌ கவரி செய்ய நிறை குட விளக்கமேந்தி இள மங்கையர்‌ எதிர் கொள்ள வைகுந்தம்‌ புக்கிருந்து வாய் மடுத்துப்‌ பெரும்‌ களிச்சியாக வானவர்‌ போக முண்டு கோப்‌புடைய கோட்டுக்கால்‌ கட்டில்‌ மிதித்து ஆரோஹித்து பரத-அக்ரூர-மாருதிகளை பரிஷ்வங்கித்த மணி மிகு மார்விலே குரு மா மணியா யணையும்‌ வஸ்துவுக்கு மணிவல்லிப் பேச்சு வந்தேறியன்று.–சூரணை -121-

வித்யையைத் தாயாகப் பெற்று- அதாவது — சஹி வித்யாதஸ் தம் ஜனயிதி -ஆபஸ்தம்ப சூத்ரம்-16–17-என்கிற படியே ஆசார்யன் திரு மந்திர முகேன ஸ்வரூப ஞானத்தை உண்டாக்கின போது இவ் ஆத்மா சத்பாவம் ஆகையாலே , வித்தையை மாதாவாகக் கொண்டு இவ் ஆத்ம வஸ்துவை ஜனிப்பித்து-

‘“ஸ ஹி வித்‌,யாதஸ்தம்‌ ஜநயதி தச் ச்‌,ரேஷ்ட,ம்‌ ஜந்ம” (ஆப.தர்ம.) என்றும்‌, “உத்பாத,க ப்‌,ரஹ்மபித்ரோ ர்க.,ரீயாந்‌ ப்‌,ரஹ்மதா பிதா” என்றும்‌ சொல்லுகையாலே ஆசார்யன்‌ திருமந்த்ர முகத்தாலே ஸ்வரூப ஜ்ஞாநத்தை உண்டாக்க, தத,நந்தரம்‌ இவனுடைய ஸத்‌,பாவமாகையாலே வித்‌,யை தாயாகப் பெற்று,

பாலும் அமுதுமான திரு நாமத்தாலே திரு மகள் போல் வளர்த்த –-அதாவது தேனும் பாலும் அமுதுமாய திரு மால் திருநாமம் -பெரிய திருமொழி -6-10-6–என்கிற போக்ய பதார்த்தமான திரு மந்த்ரத்தாலே
திரு மகள் போல் வளர்த்த–அதாவது — திரு மகள் போலே வளர்த்தேன் -பெரியாழ்வார் -3-8-4-என்கிற படி – அனந்யார்ஹ சேஷத் வாதிகளாலே ஸ்ரீ லஷ்மி சத்ருசமாக வளர்த்துக் கொண்டு போந்த-

“தேனும்‌ பாலுமமுதுமாய திருமால்‌ திருநாமம்‌”‘ (திருமொழி 7 – 10 – 6) என்ற போக்‌ய பதார்த்த,த்தாலே “திருமகள் போல வளர்த்தேன்‌”? (பெரியா. திரு. 3 – 8 – 4) என்கிறபடியே அநந்யார்ஹ அபேஷத்வாதி,களாலே பிராட்டியோ டொக்கச்‌ சொல்லும்படி வளர்த்துக் கொண்டு போந்த

கான  வெண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர்
மானம் அழித்து நின்ற வென்றி யம்மான் எனக்கு என்றும்
தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம்

நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே —6-10-6–எனக்கு சர்வ வித போக்யமுமான-ஸ்ரீ யபதி உடைய திரு நாமத்தை –மிதுனமான வேஷமே காணும் இவர்க்கு  ரசிப்பது –
ரமா மாணா வநே த்ரய -என்னுமா போலே – (தண்டகாரண்யத்தில் –சித்ரகூடம் அடைந்து -அழகான இடம் பெருமாளும் பிராட்டியும் – சேர்ந்து இருப்பதை கண்டு இளைய பெருமாள் மகிழ்ந்து போல் இங்கும் )

ஒரு மகள் தன்னை உடையேன் உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போலே வளர்த்தேன் செம்கண் மால் தான் கொண்டு போனான்
பெரு மகளாய் குடி வாழ்ந்து  பெரும் பிள்ளை பெற்ற யசோதை
மருமகளை கண்டு உகந்து மணாட்டுப் புறம் செய்யும் கொலோ -3-8-4—கடி மா மலர் பாவை ஒப்பாள் என்கிறபடியே (நாயனார் -ஸாம்ய ஷட்கம்)1-அநந்யார்ஹ சேஷத்வம்-2-அநந்ய சரண்யத்வம்-3-அநந்ய போக்யத்வம்-4-சம்ஸ்லேஷத்தில் தரிக்கை-5-விஸ்லேஷத்தில் தரியாமை-6-ததேக நிர்வாகத்வம் )
சர்வருக்கும் வை லஷணத்துக்கு  உபமான பூமியாய் புருஷகார யுக்தையான-நாரீணா முத்தமையோடே சதர்ச -ஸ்வபாவ்யை  யாம்படி வளர்த்தேன் –

தஞ்சமாகிய தந்தை--அதாவது-தேஹோத்பாதகனாய் -ச பித்ரா ச பரித்யக்த ஸூ ரைஸ்ச சமஹர்ஷபி த்ரீன் லோகான் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத –ஸூந்தர -38-32– -இத்யாதி படியே ஆபத் தசைகளில் கை விடும் பிதாவை போல் அன்றிக்கே –-பூதாநாம் யோவ்யய பிதா -சஹஸ்ர நாமம் -என்கிறபடி
சம்பந்தம் கண் அழிவு அற்று இருக்க – பவ மோஷண யோஸ் த்வ யைவ ஜந்து க்ரியதே–ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -உத்தர -88- -என்னும் படி சம்சார மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் இருக்கும் பிதாவைப் போலும் அன்றிக்கே – ஸ்வரூப உத்பாதகனாய் -ஒரு தசையிலும் கை விடாதே -ஹிதைஷியாய் – உஜ்ஜீவன ஏக பரனாய்க் கொண்டு மோஷைக ஏக ஹேதுவாய் இருக்கையாலே ஆபத் ரஷகனான ஆச்சர்யனான பிதா-

““தஞ்சமாகிய தந்தை தாய்‌’‘ (திருவா. 3 – 6 – 9) என்று தேஹோத் பாத,கனாய்‌ ஆபத் காலங்களிலே *“ஸ பித்ரா ச” (ரா.ஸு. 38 – 32) இத்யாதிகளிற் படியே கை விடுமவனைப்‌ போலன்றிக்கே ““பூ,தாநாம்‌ யோவ்யய? பிதா’” (பாரதம்‌) என்கிற ஸம்ப,ந்த, முண்டாயிருக்கச் செய்தேயும்‌ ஸம்ஸார மோக்ஷங்களிரண்டுக்கும்‌ பொதுவான பிதாவைப் போலுமன்றிக்கே மோஷ ஏக ஹேதுவாய்‌ எல்லா அவஸ்தையிலும்‌ இவனுடைய உஜ்ஜீவநத்திலே தோக்காய்‌, இவனுடைய ஹிதைஷியாய்ப் போருகிற ஆசார்யனாகிற பிதா-

தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு தானுமாய் அவை அல்லனாய்
எஞ்சல் இல் அமரர் குல முதல் மூவர் தம்முளும் ஆதியை
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் அவன் இவன் என்று கூழேன்மின்;
நெஞ்சினால் நினைப்பான் எவன்?அவன் ஆகும் நீள்கடல் வண்ணனே.–3-6-9–ஷாம காலம் வந்தால் தூற்றடியிலே வைத்துப் போதல் -விற்று உண்ணுதல் செய்யுமவர்களைப் போல் அன்றிக்கே அழிய மாறி நோக்கும் தாயும் தந்தையாய்-அவ்யய பிதா -தந்தை யானவன் தாய் ஆக மாட்டான் –ஸர்வேஷாமேவ லோகா நாம் பிதா மாதாச மாதவ – தங்களை தஞ்சமாகிய தானுமாய் –
வயிறு நொந்த போதாக கழுத்திலே கயிற்றை இட்டு கொள்ளும் தானும் அன்ரியிலே இருக்கை
அவை அல்லனாய்- தந்தை தாய் தான் என்னும் இவ்வளவு அன்றியே அல்லாத பந்து வர்க்கமுமாய்
எஞ்சல் இல் அமரர் குல முதல்-எஞ்சல் ஆகிறது -சுருங்குதல் -பகவத் அனுபவத்தில் சங்கோசம் இல்லாத நித்ய ஸூ ரிகள் குலம் உண்டு -திரள் -அதுக்கு நிர்வாஹகனை – அவர்களுக்கு ஜீவன ஹேது வானவனை என்றுமாம் –

மற்று ஒருவருக்குப் பேச்சுப் படாமல் –அதாவது –மற்று ஒருவருக்கு என்னை பேசல் ஒட்டேன்–பெரியாழ்வார் -3-4-5- -என்றும் ,-மானிடவர்க்கு பேச்சுப் படில் –நாச்சியார் -1-5-என்கிற அந்ய சேஷத்வ பிரசங்கம் வாராதபடி —

மற்றொருவர்க்குப்‌ பேச்சுப் படாமல்‌) “’மற்றொருவர்க் கென்னைப் பேச வொட்டேன்‌” (பெரியா. தி.3- 4.5), “மானிடவர்க்கென்னு பேச்சுப் படில்‌ வாழகில்லேன்‌”‘(நா.தி. 1 – 5) என்று அந்ய சேஷத்வ ப்ரஸங்கமும் வாராதபடி.

சுற்றி நின்று ஆயர் தழைகள் இட சுருள் பங்கி நேத்ரத்தால் அணிந்து
பற்றி நின்று ஆயர் கடைத்தலையே பாடவும் ஆடவும் கண்டேன் அன்றிப்பின்
மற்று ஒருவர்க்கு என்னைப் பேசல் ஒட்டேன் மாலிரும் சோலை எம் மாயற்கு அல்லால்
கொற்றவனுக்கு இவள் ஆம் என்று எண்ணிக் கொடுமின்கள் கொடீராகில் கோழம்பமே – 3-4-5–இப்படிப் பட்டவனுக்கு ஒழிய -வேறு ஒருவர்க்கு என்று -என்னை சொல்ல ஒட்டேன் – நீங்கள் நினைத்து இருக்கிறது செய்யல் ஆவது இல்லை – நீங்கள் வாய் விடில் நான் முடிவன்-மனிடர்வர்க்கு என்று பேச்சு படில் வாழகில்லேன்(நாச்சியார் 1-5-) -என்னுமா போலே சொல்லுகிறாள் –

வானிடை வாழும் அவ் வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்த வவி
கானிடைத் திரிவதோர் நரி புகுந்து கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப
ஊனிடை யாழி சங்கு உத்தமர்க்கு என்று உன்னித் தெழுந்த என் தட முலைகள்
மானிடர்வர்க்கு என்று பேச்சுப் படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே –1-5–நானும் அறியாது இருக்க –அவனும் அறியாது இருக்க – மனுஷ்யம் மாத்ரமாய் இருப்பாருக்கு என்று நாட்டிலே இங்கனே ஒரு சப்தம் பரிமாறும் ஆகில்- அது என் காதில் விழா விடிலும் – எனக்கு சத்தை இல்லை கிடாய் –என்கிறாள்
பிறருக்காய் இருக்கும் இருப்பு -சத்த்யா பாதகமாய் இருந்த படி —

விஸ்வபதி லோக பர்த்தா என்னும் மணவாளரை -அதாவது –பதிம் விஸ்வஸ்ய –புருஷ ஸூக்தம் -என்றும் ,-கௌசல்யா லோக பர்த்தாரம் –ஸூந்தர -38-55–என்று பதி சப்ததாலும் -பர்த்ரு சப்தத்தாலும் -சர்வ லோக நாயகராகச் சொல்லப் படுகிற-மணவாளரை – பணவாள் அரவணை பற்பல காலமும் பள்ளி கொள்ளும் மணவாளரை –நாச்சியார் -10-6- என்கிற அழகிய மணவாளரை –

(விஸ்வபதி லோக பர்த்தா வென்னும்‌ மணவாளரை) ““பதிம்‌ விஸ்வஸ்ய”’ (தை.நா. 11) என்றும்‌, “கெளஸல்யா லோக பர்த்தாரம்‌”” (ரா.ஸு, 38 – 56) என்றும்‌, ”பணவாளரவணைப் பற்பல காலமும்‌ : பள்ளி கொள்‌ மணவாளர்‌’‘ (நா.தி. 10 – 6) என்றும்‌ சொல்லுகிறபடியே ப்ராப்த சேஷியாய்‌, ஸர்வ ரக்ஷகனானவனை.-

கண மா மயில்காள் கண்ணபிரான் திருக் கோலம் போன்று
அணி மா நடம் பயின்று ஆடுகின்றீர்கு அடி வீழ்கின்றேன்
பண மாடரவணைப் பற்பல காலமும் பள்ளி கொள்
மண வாளர் நம்மை வைத்த பரிசிது காண்மினே–10-6–தம்மோட்டை ஸ்பரசத்தாலே விகசிதமான பணங்களை உடையவனாய்-நித்ய அனுபவத்தாலே களித்து வர்த்திக்கிற திரு வநந்த ஆழ்வானைப் படுக்கையாக உடையவர்-தம் உடம்போடு அணைய ஆசைப் பட்டாருக்கு உடம்பு கொடுக்குமவர் –பற்பல காலமும் பள்ளி கொள் மண வாளர் – அவர் அநாதி காலம் கூடிப் பண்ணின கிருஷி பலம் அன்றோ நானுங்கள் காலைப் பிடிக்கிறது-மணவாளர் -என்கையாலே – பெரிய பெருமாள் போலே காணும் இவளை இப்பாடு படுத்தினார் –

நால் இரண்டு இழை கொண்டு முப்பிரியான ப்ரஹ்ம ஸூத்திர பந்தத்தோடு வரிப்பிக்க
அதாவது –எட்டு இழையாய் மூன்று சரடாய் இருப்பதொரு மங்கள ஸூத்திரம் போலே -(முமுஷுப்படி )
எட்டு அஷரமாய் – மூன்று பதமாய் ,ஈஸ்வர சம்பந்த பிரகாசமான திருமந்தரம் ஆகிற மங்கள ஸூத்தர சம்பந்தத்தோடே-பாணிம் க்ருஹ்ணீஷ் வ பாணி நா -பால –73-26-என்கிறபடி வரிக்கும் படி பண்ண –

(நாலிரண்டிழை கொண்டு முப் புரியான ப்‌ரஹ்ம ஸுத்ர ப,ந்த,த்தோடே வரிப்பிக்க) “எட்டிழையாய்‌ மூன்று சரடாயிருப்பதொரு மங்கல ஸத்ரம் போலே எட்டுத்‌ திருவெழுத்தாய்‌, மூன்று பதமாய்‌, ஸர்வேஸ்வரனோடு அவிநாபூத ஸம்பந்த, ப்ரகஸகமான திருமந்த்ரமாகிற மங்கல ஸூத்ர ப ந்தத்தோடே “பாணிம் க்‌ருஹ்ணீஷ்வ பாணிநா” (ரா. படா, 23 – 27) என்று அவன்‌ வரிக்கும்படி பண்ண-

பரம் புருடன் கைக் கொண்ட பின்-அதாவது –பரம் புருடா நீ என்னைக் கைக் கொண்ட பின் -பெரியாழ்வார் -5-4-2–என்கிறபடியே பரம புருஷனான மணவாளர் பரிக்ரஹித்த அநந்தரம் –சதுர்தியுள் புக்கு –அதாவது –விவாஹா அநந்தரம் சேஷ ஹோம பர்யந்தமான சதுர் திவசத்திலும் அகலுதலும் அணுகலும் அற்று,-அனந்யார்ஹ சேஷத்வ அனுகுணமாக பரிமாற்றத்துக்கு அர்ஹம் என்னும் அளவைப் பிரகாசித்துக் கொண்டு இருக்குமோபாதி,பிரணவோக்தமான அனந்யார்ஹ சேஷத்வத்தில்
கண் அழிவு அற அங்கீகரிக்கையாலும் , தத் அனுகுணமாக கிட்டிப் பரிமாறப் பெறாமையாலும் ,
அகலுதலும் அணுகலும் அற்று கைங்கர்ய பிரார்த்தனையோடு சொல்லும் சரம சதுர்த்தி யிலே உள் புக்கு –

(பரம்புருடன்‌ கைக் கொண்ட பின்‌) ““பறவை யேறு பரம் புருடா நீ என்னைக் கைக் கொண்ட பின்‌” (பெரியா. தி. 8 – 4 – 2) என்று கருட வாஹநனான புருஷோத்தமன்‌ கைக் கொண்ட அநந்தரம்‌. (சதுர்த்தி,யுள் புக்கு) விவாஹாநந்தரம்‌ ஸேஷ ஹோம பர்யந்தமான சதுர்‌திவஸம் போலே ப்ரதம சதுர்த்தி,யிலே சொல்லப்பட்ட ஸேஷத்வ ஜ்ஞாநாநந்தரம்‌ சரம சதுர்த்தியில்‌ சொல்லுகிற கைங்கர்ய ப்ரார்த்தனையில்‌ அந்வயித்து.-

பறவை ஏறு பரம் புருடா நீ என்னைக் கை கொண்ட பின்
பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும் பதம் ஆகின்றதால்
இறவு செய்யும்  பாவக்காடு தீக்கொளீஇ  வேகின்றதால்
அறிவை என்னும் அமுதவாறு தலைப் பற்றி வாய்க் கொண்டதே -5- 4-2 –பெரிய திருவடியை வாகனமாக உடைய புருஷோத்தமனே – திரு வேம்கடமுடையான் பெரிய திருவடி மேலே எழுந்து அருளி வந்து இவரை பரம பதத்துக்கு கொடு போகையிலே த்வரிக்கிற படி–விரோதி நிவ்ருத்தியை பிறப்பித்ததும்
திரு வேம்கடம் உடையான் பெரிய திருவடி மேல் வந்து இறே –நீ – ஆஸ்ரித சம்ச்லேஷ ஏக ஸ்வ-ஸ்வபாவனான  நீ-என்னை – விளிக்கும் கண் இலேன் நின் கண் மற்று அல்லால் –என்றும்-உனக்கு பணி செய்து இருக்கும் தவம் உடையேன் (5-3-2 )-என்றும் அங்கோர் நிழல் இல்லை நீரும் இல்லை -என்றும் – அநந்ய கதியுமாய் – அநந்ய உபாயனுமாய் – அநந்ய போகனுமான என்னை –அங்கீகரித்த பின்பு-நான் உன்னைப் பற்றும் போது  இறே – ஜன்மாந்தர சஹஸ்ரங்களிலே தபோ ஞான சமாதி ரூபேண பிறப்பது-நீ என்னைக் கை கொண்ட பின் – எல்லாம் ஏக காலத்திலே பிறக்கும் இறே –

இடை ஈடு நடுக் கிடக்கும் நாள் கழித்து –அதாவது –தம்பதிகள் இருவரும் -ஏக சய்யைலே வர்த்திக்கச் செய்தே -அந்யோன்ய ஸ்பர்ச யோக்யதை இல்லாதபடி -இடையீடரான சோமாதிகள் நடுவே கிடக்கும் நாள் போலே – சேஷத்வ ஞானமும் சேஷவ்ருத்தி பிரார்த்தனையும் உண்டாகையாலே , இரண்டு தலைக்கும் அண்ணிமை உண்டாய் இருக்கவும் -சேர்ந்து பரிமாற ஒண்ணாதபடி – நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பில் இட்டு-திருவாய் -5-1-5- -என்கிறபடியே அனுபவ விரோதியாய் இடையீடான சரீரம் நடுவே கிடக்கிற நாலு நாளையும் –நாள் கடலை கழிமின் -திருவாய் -1-6-7- – என்கிற படியே கழித்து –

(இடையீடு நடுக் கிடக்கும்‌ நாள்‌ கழித்து) ஒரு படுக்கையிலே தம்பதிகளிருவரு மிருக்கச செய்தே ஸோமாதீகளான மூவர்களும்‌ நடுவே இருக்கையாலே இவர்களுக்கு ஸ்பர்ஸ யோக்‌,யதை இல்லாதாப் போலே சேஷத்வ ஜ்ஞாநமும்‌ சேஷ வ்ருத்தி ப்ரார்த்தனையும்‌ உண்டாயிருக்கச்‌ செய்தே, “நண்ணியும்‌ நண்ணாகில்லேன்‌ நடுவே யோருடம்பிலிட்டு”’ (திருவா, 5 – 1 5) என்று ப,க,வத_நுப,வ விரோதி,யாய்‌, இடையீடான ஸரீரம்‌ கிடக்கும்‌ நாலு நாள்‌ ப,க,வத,நுப,வம்‌ கூடாமையாலே அந்நாலு நாளையும்‌ “’நாள்கடலைக் கழிமின்‌”‘ (திருவா. – 7) என்று கழித்து.

கண்ண பிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை
நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பிலிட்டுத்
திண்ணம் அழுந்தக் கட்டிப் பல செய்வினை வன் கயிற்றால்

புண்ணை மறைய வரிந்து என்னைப் போர வைத்தாய் புறமே.–5-1-5—கிட்டியும் கிட்டாதார் கணக்கு ஆனேன் -பேறாக சொல்லுகிறது ஞான பலத்தை –பெறாமை யாகிறது -ஞான அனுகூலமான பிராப்தி இல்லாமை -அது இன்றிக்கே ஒழிகிறது என் என்னில் -அசித் சம்சர்க்கத்தாலே-சம்சாரத்திலே நீ வைக்கையாலே-என்கிறார் –-நடுவே ஓர் உடம்பிலிட்டுத்--சரீர சம்பந்தம் அநாதி யாய் இருக்க -நடுவே என்பான் என் என்னில் இவ்வாத்மாவுக்கு ஸ்வரூப அனுபந்தி இல்லாமையாலும் கர்ம உபாதிகம் ஆகையாலும்-பகவத் பிரசாதத்தால் விடக் காண்கையாலும் – முத்துக்கு மாலினியம் அநாதியாய் இருக்க ஒரு நாளிலே கடைந்து தெளியக் காண்கையாலே-ஸ்வரூப அதிரேகி -என்று தோற்றுமா போலே பகவத் அர்ஹமான வஸ்துவுக்கு மாம்ஸாஸ் ருங்மயமான அசித்தோடே என்ன சேர்த்தி உண்டு –
பெருமாளோடு அனுபவிக்கப் பாரித்த பிராட்டி முன்பே ராவணன் தோற்றினால் போலே இருக்கிறதாயிற்று இவருக்கு சரீர சம்பந்தம் -சம்சர்க்கம் ஒழிய ஆச்ரயத்தோடு ஒரு சம்பந்தம் இல்லை என்கை – திண்ணம் அழுந்தக் கட்டிப் பல செய்வினை வன் கயிற்றால்-பலவாய்ச் செய்யப்பட்டு வலிதான பாபம் ஆகிற பாசத்தால் த்ருடமாக நெருக்க கட்டி புண்ணை மறைய வரிந்து என்னைப் போர வைத்தாய் புறமே.– சரீரகத தோஷம் தெரியாதபடி பண்ணி -அக்வாயைப் பார்த்தால் காக்கை நோக்கும் படியாய் இருக்கை-தோலின் கை பாணி புறத்தால் வந்த வழு மூட்சியைப் பார்த்து ஸ் ப்ருஹை பண்ணும் படி இறே பண்ணி வைத்தது –-என்னை -ஸ்வ ரக்ஷணத்தில் அப்ராப்தனாய் அசக்தனாய் இருக்கிற என்னை-போர வைத்தாய் புறமே.–அனுபவத்தில் பாரித்து இருக்கிற பிராட்டியை அசோகா வனிகையிலே வைத்தால் போலே -இவர்களுக்கு சம்சாரிகள் நடுவே இருக்கிற இருப்பு

நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்-தோள்கள் தலை துணி செய்தான்
தாள்கள் தலையில் வணங்கி நாள் கடலைக் கழிமினே –1-6-7—திருவடிகளிலே நிர்மமனாய் வணங்கி
நாள் கடலைக் கழிமினே –ஜ்ஞானம் பிறந்தால் ப்ராப்தி அளவும் -ஒரு பகல் ஆயிரம் ஊழி-என்னுமா போலே கால ஷேபம் அரிதாய் இறே இருப்பது-திருவடியைப் போலே தசரதாத் மஜனுடைய வீர சரிதத்தை அனுசந்தித்துக் காலத்தைப் போக்குவது-அன்றிக்கே சக்கரவர்த்தி திருமகனை ஆஸ்ரயித்து சம்சார ஆர்ணவத்தை மாற்றிக் கொள்ள பாருங்கோள் என்கிறார் என்றுமாம்

ஜன்ம பூமியை விட்டு அகன்று –அதாவது –முற்றிலும் பைம் கிளியும் பந்துமூசலும் பேசுகின்ற சிற்றில் மென்பூவையும் விட்டகன்ற செழும் கோதை -பெரிய திருமொழி -3-7-8-என்கிறபடியே ஒருவராலும் விட அரிதான ஜன்ம பூமியான சம்சார விபூதியை முன்பு ஆதரணீயமான போந்த வஸ்துக்களோடே கூடப் புரிந்து பாராமல் விட்டு நீங்கி ..-அன்றிக்கே–அன்று நான் பிறந்திலேன் -திருச்சந்த –64-என்னும் படி கிடந்த தனக்கு ஆசார்யன் திரு மந்தரத்தால் உண்டான ஜன்மம் பெற்றது இங்கே ஆகையாலே ஜன்ம பூமியான இவ் விபூதியை பகவத் அனுபவ ப்ராவண்யத்தாலே – முற்றிலும் பைம் கிளியே –இத்யாதி படியே –முன்பு ஆதரணீயமான போந்த வஸ்துக்களோடே கூட விட்டகன்று என்னவுமாம் ..
பிறந்தகம் விட்டு புக்ககத்துக்கு போகிறதாக சொல்லுகிற இந்த ரூபகத்துக்கு இது மிகவும் சேரும் இறே-

(ஜந்ம பூ,மியை விட்டகன்று) “முற்றிலும்‌ பைங்கிளியும்‌ பந்துமூசலும்‌ பேசுகின்ற சிற்றில்‌ மென் பூவையும்‌ விட்டகன்ற செழுங்கோதை”‘ (திருமொழி 3 – 7 – 8) என்று ஒருவராலும்‌ விட வொண்ணாத ஜந்ம பூ,மியான ஸம்ஸார விபூ,தியை விட்டகன்று.

முற்றிலும் பைங்கிளியும் பந்தும் ஊசலும் பேசுகின்ற
சிற்றில் மென் பூவையும் விட்டகன்ற செழும் கோதை தன்னைப்

பெற்றிலேன் முற்றிழையை பிறப்பிலி பின்னே நடந்து
மற்றெல்லாம் கை தொழப் போய் வயலாலி புகுவர் கொலோ ?–3-7-8–சிறு கூட்டிலே நின்று பேசா நின்ற மிருது ஸ்வபாவமான பூவையையும் விட்டகன்ற-லிலோ உபகரணங்களை விட்டு அவனைப் பற்றின பின்பு உடம்பிலே பிறந்த பௌஷ்கல்யம்-முன்னே போக விட்டு கடைப் பணியும் கொக்கு வாய் கூட்டமும்
கண்டு பின்னே போகப் பெற்றிலேன்

நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து
அன்று வெக்கணைக் கிடந்தது என்னிலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே –64—நான் திருவடிகளில் தலை சாய்க்கைகாக ஸ்ர்ஷ்டி காலத்தில் நாம ரூபங்களை தந்து அருள –விஷயாந்தர ப்ராவண்யத்தால் அனுபவிக்கப் பெற்றிலேன் –ஆத்மாவுக்கு ஜன்மம் ஆகிறது ஜ்ஞான லாபம் ஆகையாலே அஜ்ஞனனாய்ப் போனேன்-பிறந்த பின்பு மறந்திலேன் – அவன் க்ர்ஷியாக எனக்கு அறிவு பிறந்தபின் மறந்து அறியேன் –

சூழ் விசும்பிற் படியே உடன் சென்று-அதாவது –-சூழ் விசும்பு-10-9-1–என்கிற திரு வாய் மொழியில் சொல்லுகிறபடியே அர்ச்சிராதி மார்க்கத்தாலே வழி உள்ளார் அடைய சத்கரிக்க – அங்கு அவனோடும் உடன் சென்று -நாச்சியார் -6-10-என்கிறபடி–நயாமி-ஸ்ரீ வராஹ சரமம்–என்கிற நாயகன் முன்பே போக -பின்னே போய் –குடைந்து நீராடி- –அதாவது – குள்ளக் குளிர குடைந்து நீராடி -திருப்பாவை -13-என்கிறபடியே பர்த்ரு கிருஹத்துக்கு போகிற பெண் அவ்வூர் எல்லையிலே சென்றவாறே அவர்கள் குளிப்பாட்ட குளிக்குமா போலே அம்ருத வாஹிநியான விரஜையிலே -இப்பால் உள்ள அழுக்கு அறும்படி நீராடி –

(சூழ்‌ விசும்பிற் படியே) ““சூழ் விசும்பு’” என்கிற திருவாய்மொழியில் படியே அர்ச்சிராதி,மார்க்கஸ்த,ரா யிருக்கிற அர்ச்சிராதி,புருஷர்களடைய அடைவே ஸத்கரிக்க. (உடன்‌ சென்று) “அங்கவனோடுடன் சென்று”? (நா. தி. 6 – 9) என்கிறபடியே அவன்‌ முன்னே போகப்‌ பின்னே போய்‌. (குடைந்து நீராடி) “’குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே”” (திருப்பாவை 13) என்கிறபடியே பர்த்ரு க்‌,ருஹத்துக்குப் போம்‌ பெண்ணை அவ்வூர்க்‌குளக் கரையில்‌ குளிப்பாட்டக் கடவர்களிறே, அப்படியே விரஜைக் கரையிலே இப்பாலுள்ள அழுக்கறும்படி நீராடி

சூழ் விசும்பு -பிரவேசம் –வேதாந்தங்களில் பிரசித்தமான அர்ச்சிராதி கதி மார்க்கத்தையும் -சரீர விஸ்லேஷ சமயத்தில் வரும் கிலேசம் எல்லாம் ஆறும் படி தானே வந்து முகம் காட்டும் படியையும் –
மார்க்கஸ்தரான புருஷர்களுடைய ஸத்காரங்களையும் -அம்மாக்கத்தாலே போய்ப் புகக் கடவ பரம பதத்தையும் நித்ய ஸூரிகள் வந்து ஆதரிக்கும் படியையும் -பிராட்டிமாரும் ஸ்ரீ வைகுண்ட நாதனும் எதிரே வந்து ஆதரிக்கும் படியையும் – நித்ய ஸூரிகள் சேவிக்க பிராட்டிமாரோடு வீற்று இருந்து அருளுகிற படியையும் –பரம ப்ராப்யரான நித்ய ஸூ ரிகள் நடுவே தாமே ஆனந்த நிர்ப்பரராய் இருக்கும் படியையும் காட்டி அருளக் கண்டு ப்ரீதராய் -அத்தை அந்யாபதேசத்தாலே பேசி அனுபவிக்கிறார்

குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலம் செய்து மண நீர்
அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனைமேல்
மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்–6-10—அவற்றை வீதியிலே தானும் தோழன்மாருமாக ஆனை ஏறி வந்தான் என்றது இறே-இப்போது-தானும் அவனுமாக அங்கே ஆனைக் கழுத்திலே புக்கு வலமாக வந்து-இருவரையும் கூட வைத்து – உடன் மண நீராட்டினார்கள் யாய்த்து

புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்
பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுப்
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளந் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்குடைந்து நீராடாதே-கிருஷ்ண விரஹ ஆற நீராடப் போகாதே நமக்கு கிருஷ்ண விச்லேஷம் பிறவாமைக்கும் கிருஷ்ண குணங்களிலே அவஹாகித்து அனுபவிக்கப் பெறாதே–அவனைப் பிரிந்த வ்யசனம் எல்லாம் நிஸ் சேஷமாய் போம்படி  கால ஷேப கூடத்திலே பிரவேசித்து பகவத் அனுபவத்தைப் பண்ணாதே –

வியன் துழாய் அஞ்சனத்தின் நீறு நானப்பொடி பீதகவாடை பல்கலன் கொண்டு நோக்கியர் அலங்கரித்து –அதாவது –-குளித்தேறின பெண்ணைப் பர்த்ரு பந்துக்களான ஸ்திரீகள் வந்து அலங்கரிக்குமா போலே –-வியன் துழாய் கற்பு என்று சூடும் -மூன்றாம் திருவந்தாதி -69-என்றும் ,
ஆரார் அயிர் வேல் கண் அஞ்சனத்தின் நீர் அணிந்து–சிறிய மடல் -10-என்றும் ,-மெய் திமிரு நானப் பொடி –பெரியாழ்வார் -1-4-9–என்றும் ,-உடுத்துக் களைந்த நின் பீதகவாடை-திருப்பல்லாண்டு -9-என்றும் ,-பல் கலனும் யாம் அணிவோம் -திருப்பாவை -27-என்கிறபடியே-அலங்கார உபகரணங்களான திவ்ய மால்ய -திவ்ய அஞ்சன -திவ்ய சூர்ண –திவ்ய வஸ்த்ர -திவ்ய ஆபரணங்களை –-தம் பஞ்ச சதான் யப்சரஸாம் பிரதிதாவந்தி சதம் மாலா ஹஸ்தா –சதம் அஞ்சன ஹஸ்தா -சதம் சூரண ஹஸ்தா
-சதம் வாசோ ஹஸ்தா -சதம் பூஷண ஹஸ்தா
–கௌஷீதகி-என்கிறபடியே ஏந்திக் கொண்டு –
மானேய் நோக்கியரான-5-8-1– திவ்ய அப்சரஸ் ஸூக்கள் எதிரே வந்து –-தம் ப்ரஹ்ம அலங்காரேண அலங்குர்வந்தி- கௌஷீதகி – என்கிறபடியே-போக்த்ரு பூத ஈஸ்வர போக்யமாம் படி அலங்கரித்து-

வியன்துழாய்‌ அஞ்சனத்தின்‌ நீறு என்று தொடங்கி) ““வியன்துழாய்க்கற்பென்று சூடும்‌” (மூ.திரூவ. 69), “’ஆராரயில் வேற்கணஞ்சனத்தின்‌ நீறணிந்து’‘ (சி.மடல்‌),, “மெய்திமிரு நானப்பொடி “” (பெரியா.தி. 1-49), ‘“பெருமானரையில்‌ பீதக வண்ணவாடை” (நா.தி. 13 – 1), “பல்கலனும்‌ யாமணிவோம்‌”’ (திருப்பாவை 27) என்றும்‌, “தம்‌ பஞ்சஸ தாந்ய ப்ஸரஸாம்‌ ப்ரதிதா வந்தி மதம்‌ மாலா ஹஸ்தா? ஸதம்‌ சூர்ண ஹஸ்தா? தம்‌ வாஸோ ஹஸ்தா?”’ (கெளஷீ- உப.) என்று குளக்கரையிலே பர்த்தாவினுடைய பந்துக்கள்‌ வந்து அலங்கரிக்குமாப்‌ பாலே திவ்யாலங்காரோப கரணங்களை ஏந்திக்‌ கொண்டு மானேய்‌ நோக்கிகளான ஐந்நூறு திவ்யாப்ஸரஸ்ஸூக்கள்‌ எதிரே வந்து “தம்‌ ப்‌,ரஹ்மாலங்காரேணா லங்குர்வந்தி” (கெளஷீ- உப.) என்கிறபடியே பர விநியோகார்ஹமாம்படி அலங்கரித்து.

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும்
கருங்குழல் மேல் -மற்பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும் —–69—ஏதேனும் ஒரு பூவைச் சூட நினைத்தாள் ஆகில்-காட்டுப் பூ சூடாள்–தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம்-என்கிறபடியே விஸ்மயமான திருத் துழாய் அல்லது குழலிலே வையாள்–கற்பு என்று பாதி வ்ரத்யம் –

ஆராயில் வேற்கண் – அஞ்சனத்தின் நீர் அணிந்து – சீரார் செழும் பந்து -கொண்டு அடியா நின்றேன் நான் –அழகும் கூர்மையும் ஆர்ந்த கண் –அழகுக்கு இடுகிறது அன்று இறே –மங்களார்த்த மாக அஞ்சனம் இட்டு –அயில் வேல் கண் அஞ்சனத்தின் நீர் அணிந்து – கடைந்த பாத்திரத்திலே நெய் இட்டால் போலே 

மெய் திமிரும் நானப் பொடியோடு  மஞ்சளும்
செய்ய தடம் கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும்
வெய்ய கலைப்பாகிக் கொண்டு  உவளாய் நின்றாள்
அய்யா அழேல் அழேல் தாலேலோ அரங்கத்து அணையானே தாலேலோ -1 3-9 –திருமேனியில் மர்திக்கைக்கு ( ஈசுவதற்கு ) ஈடான -சந்தன கஸ்தூரி கர்பூராதி சுகந்த தரவ்ய சமுதாய சூர்ணத்தோடே நிறம் பெற சாத்த தக்க மஞ்சள் பொடியும் –

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா வுன்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெரும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பல் கலனும் யாம் அணிவோம்
ஆடை யுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்–27–யாம் அணிவோம் –-ஆபரணங்களுக்கு அழகு கொடுக்க வல்ல அவயவங்களிலே கிடந்து தானும் நிறம் பெற்று – பூட்டின தானும் நிறம் பெற்று போம்படி வடிவு படைத்த நாங்கள் –இவ் வெல்லை வரும் வளவு இறே மலரிட்டு நாம் முடியோம் என்றது –
நாம் முடியோம் என்றால் பூட்ட மாட்டான்-அணிவோம் என்றால் பூட்டாது இருக்க மாட்டான் — அவன் அலங்கரிக்கைக்கு இவர்கள் அனுமதியே அமையும்-

பல்லாண்டு இசைத்து கவரி செய்ய –-அதாவது – தொக்கு பல்லாண்டு இசைத்து கவரி செய்வர் ஏழையரே –திருவாய் -7-6-11–என்கிறபடியே இவ் விஷயத்தில் கிஞ்சித் கரிக்கையில் உண்டான சாபலம் தோற்ற திரள நின்று மங்களாசாசனம் பண்ணி சாமரம் பணிமாற-நிறை குடம் விளக்கம் ஏந்தி இள மங்கையர் எதிர் கொள்ள –அதாவது –அலங்குருதையாய் உபலால நத்தோடே செல்லுகிற பெண் -பர்த்ரு கிருஹத்தை அணுகச் சென்றவாறே – அங்குள்ள ஸ்திரீகள் மங்கள தீபாதிகளை ஏந்திக் கொண்டு எதிரே வந்து சத்கரிக்குமா போலே – நிதியும் நற் சுண்ணமும் நிறை குட விளக்கமும் மதி முக மடந்தையர் ஏந்தினர் –10-9-10–என்கிறபடியே மங்கள அவஹமான பூர்ண கும்பாதிகளைத் தரித்துக் கொண்டு , சதிர் இள மங்கையர் தாம் வந்து எதிர் கொள்ள-10-9-10- என்கிறபடியே நித்ய யவ்வன ஸ்வபாவைகளான வேறு சில திவ்ய அப்சரஸ்ஸூகள் எதிர் கொள்ள –

(பல்லாண்டிசைத்துக் கவரி செய்ய) இவர்கள் விஷயத்தில்‌ சாபலத்தாலே மங்களாஸாஸநம்‌ பண்ணிச்‌ சாமரமிட. (நிறைகுட விளக்கமேந்தி இளமங்கையரெதிர் கொள்ள] “நிதியும்‌ நற்சுண்ணமும்‌ நிறைகுடவிளக்கமும்‌ மதிமுக மடந்தையர்‌”‘ (திருவா. 10 – 9-10) என்று மங்களாவஹமான மங்கள தீப பூர்ண கும்பங்களையும்‌ தரித்துக் கொண்டு. “சதிரிளமங்கையர்‌ தாம்‌ வந்தெதிர் கொள்ள”” (நா.தி. 6 – 5) என்று நித்ய நவயெளவந ஸ்வபாவைகளான வேறே சில திவ்யாப்ஸரஸ்ஸுக்கள்‌ எதிர் கொள்ள.

புக்க அரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த
சக்கரச் செல்வன் தன்னைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன
மிக்க ஒர் ஆயிரத்துள் இவை பத்தும் வல் லார் அவரைத்
தொக்குப் பல்லாண்டிசைத்துக் கவரி செய்வர் ஏழையரே.–7-6-11-
பகவத் விஷயத்தில் உள்ளன வெல்லாம் சொன்ன இப்பத்தை கற்றவர்களை-தொக்குப் -திரண்டு-பல்லாண்டிசைத்துக் -மங்களா சாசனம் பண்ணி-கவரி செய்வர் ஏழையரே.–ஈஸ்வரன் பக்கல் பண்ணக் கடவ அசாதாரண பரிசரியையும் பண்ணுவர்கள் மதி முக மடந்தையர் -நெடு நாள் சம்சாரத்தில் பட்ட கிலேசம் எல்லாம் போம்படி ஆதரிப்பர்கள் –

விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–10-9-10-
–அவ்வளவில் பகவத் பரி சாரிகைகள் வந்து எதிரே நிற்பார்கள் -வைஷ்ணவர்களுக்கு நிதியான திருவடி நிலைகளையும் -திருச் சுண்ண பிரசாதத்தையும் -நிறை குடங்களையும் -மங்கள தீபங்களையும் ஏந்தி-மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–தேசாந்திரம் போன பிரஜை வந்து கிட்டினால் தாய் முகம் குளிர்ந்து இருக்குமா போலே ஹர்ஷத்தாலே பூர்ண சந்திரனைப் போலே இருக்கிற முகங்களை யுடையவர்கள் வந்து எதிர் கொண்டார்கள் –

கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்தி
சதிரள மங்கையர் தாம் வந்து எதிர் கொள்ள
மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டெங்கும்
அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்—-6-5–சதிரள மங்கையர் தாம் வந்து எதிர் கொள்ள
நிறை குட விளக்கமும் மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே –திருவாய் மொழி -10-9-10-என்னக் கடவது இறே-தங்கள் பருவத்தாலும் வடிவு அழகாலும் தங்களையே எல்லாரும் கடாஷிக்கும் படி இருக்கிறவர்கள் தாங்கள் கவிழ்ந்து முன்னடியைப் பார்த்து கொடு வந்து எதிர் கொள்ள –

வைகுந்தம் புக்கிருந்து –அதாவது – உபலால நத்தொடு சென்ற பெண் பர்த்ரு க்ரஹத்திலே புகுருமா போலே – மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கிருப்பார் -நாச்சியார் -3-10–என்கிறபடியே – ஸ்ரீய பதி யானவனுக்கு போக ஸ்தானமான ஸ்ரீ வைகுண்டத்தை ப்ராபித்து -அவனோடு கூடி இருந்து –வாய் மடுத்து பெரும் களிச்சியாக வானவர் போகமுண்டு-அதாவது – பர்த்ரு க்ரஹத்திலே பெண் வந்த பின்பு , தம்பதிகளும் மற்றும் உள்ள பந்துக்களும் கூடி இருந்து பெரும் களிச்சி உண்ணுமா போலே —
அடியார்கள் குழாங்களும்-2-3-10- அவனுமாக இருக்கிற சேர்த்தியிலே –அடியேன் வாய் மடுத்து பருகிக் களித்தேன் -2-3-9–என்று பெரும் களிச்சியாக பெரும் முழு மிடறு செய்து –கட்டு எழில் வானவர் போகம் உண்பாரே –6-6-11–என்கிறபடியே – நித்ய சூரிகள் புஜிக்கிற போகத்தை – சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ராஹ்மணா விபிச்சதா –தைத்ரியம் –என்கிறபடியே புஜித்து –

(வைகுந்தம்‌ புக்கிருந்து) ‘“மன்னிய மாதவனோடு வைகுந்தம்‌ புக்கிருப்பார்‌” (நா.தி. 3 10) என்று ஸ்ரீயபதியான ஸர்வேஸ்வரனோடே தேஸ விஸேஷ ப்ராப்திபண்ணி. (வாய்‌ மடுத்துப் பெருங் களிச்சியாக வானவர் போகமுண்டு) பின்பு பர்த்ரு க்‌ருஹத்திலே தம்பதிகளும்‌ மற்றுமுள்ள பந்துக்களும்‌ பெருங்களிச்சி யுண்ணக் கடவரிறே; அப்படியே ““அடியேன்‌ வாய் மடுத்துப் பருகிக்‌ களித்தேன்‌” (திருவா. 2 – 3 – 9) என்றும்‌, ““கட்டெழில்‌ வானவர்‌ போகமுண்பாரே”” (திருவா, 6 – 6 – 11) என்றும்‌ நித்ய ஸூரிகளுடைய போகத்தை அவர்களோடொக்க முழு மிடறு செய்து ““ஸோஸ்நுதே ஸர்வாந்‌ காமாந்‌ ஸஹ ப்‌ரஹ்மணா விபஸ்சிதா’‘ (தை. உப.) என்கிறபடியே புஜித்து.

கன்னியரோடு எங்கள் நம்பி கரியபிரான் விளையாட்டை
பொன்னிய மாடங்கள் சூழ்ந்த புதுவையர் கோன் பட்டன் கோதை
இன்னிசை யால் சொன்ன மாலை ஈரைந்தும் வல்லவர் தாம் போய்
மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கிருப்பாரே–3-10—நித்தியமான ஸ்ரீ வைகுண்டத்திலே போய்
ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரன் உடன் கூட நித்ய அனுபவம் பண்ணப் பெறுவர்-

களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக் கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான்நிலம் சுடர் ஆழி சங்கேந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே -2-3-10—இவன் தன்னையே அன்றிக்கே இவனுடைய ரக்ஷகத்வத்திலே தோற்று இருக்கும் ததீயர் திரள்களை –-குழாங்களையே –
திரளாக வேணும் -அது தான் அநேகமாக வேணும்-இவ்விஷயத்துக்கு உசாத் துணையாம் போது அசங்க்யாதராக வேணும் என்று இருக்கிறார் –

கடிவார் தண்ணம் துழாய்க் கண்ணன் விண்ணவர் பெருமான்
படிவானம் இறந்த பரமன் பவித்ரன் சீர்
செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்தாடி
அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே
–2-3-9—வாயும் திரையுகளில் தூறு மண்டின கிலேசம் எல்லாம் போம்படி சாம்சாரிக துரிதம் என்னவுமாம்-படிந்து -சென்று கிட்டி குடைந்து -எங்கும் புக்கு
ஆடி -அவகாஹித்து-அடியேன் வாய் மடுத்துப் பருகிக் -பெரு விடாயோடே அனுபவித்து
களித்தேனே-இதர விஷய ஸ்பர்சம் துக்கமே யானால் போலே-பகவத் குண அனுபவம் களிப்பே யாகக் கடவது –

கட்டெழில் சோலை நல் வேங்கட வாணனைக்
கட்டெழில் தென்குரு கூர்ச்சட கோபன்சொல்
கட்டெழில் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர்
கட்டெழில் வானவர் போகம் உண்பாரே.
–5-6-11–பெரிய வானவர் -போக விசேஷணம் ஆகவுமாம் -சம்சாரத்தில் போகம் கர்ம நிபந்தம் ஆகையால் அல்பமாய் அஸ்திரமாய் இருக்கும் இறே -ஸ்வரூப அனுரூபம் ஆகையால் சம்ருத்தமாய் நித்தியமாய் இருக்கை –

கோப்புடைய கோட்டுக் கால் கட்டில் மிதித்து ஆரோஹித்து – அதாவது – பர்த்ரு சம்ச்லேஷத்துக்குப் படுக்கையிலே ஏறுமா போலே – கோப்புடைய சீரிய சிங்காசாசனம்-திருப்பாவை -23-என்றும்
கோட்டுக் கால் கட்டில் –திருப்பாவை 19-என்றும் சொல்லுகிற படி உபய விபூதியும் தொழிலாக வகுப்புண்டு சர்வ ஆஸ்ரயமான திவ்ய பர்வங்கத்திலே – தமேவம் வித் பாதேநாத் யாரோஹதி -கௌஷீதகி -1-5-என்கிறபடியே பாத பீடத்திலே அடி இட்டு ஏறி –பாரத அக்ரூர மாருதிகளை பரிஷ்வங்கித்த மணி மிகு மார்பிலே –அதாவது – தம் சமுதாப்ய காகுஸ்தஸ் சிரஸ்யாஷிபதம் கதம்
அங்கே பாரதமா ரோப்ய முதித பரிஷச்வஜே –
என்றும் –சோப்யேனம் த்வஜ வஜ்ராப்ஜக்ருத சிஹ்நேன பாணினா சம்ச்ப்ருஸ் யாக்ருஷ்யச ப்ரீத்யா ஸுகாடம் பரிஷஸ்வஜே –யுத்த -130-39–என்றும் ,
ஏஷ சர்வஸ்வ பூதஸ்து பரிஷ்வங்கோ ஹனுமதா மயா காலமிமம் ப்ராப்ய தத்தஸ் தஸ்ய மஹாத்மன -யுத்த -1–13– என்றும் சொல்லுகிறபடி , ஸ்ரீ பரத ஆழ்வானையும் அக்ரூரரையும் திருவடியையும் ஆதரித்து அணைத்துக் கொண்ட – மணி மிகு மார்பு-10-3-5– -என்று ஸ்ரீ கௌஸ்துபம் நிறம் பெரும் படி அழகிய திரு மார்பிலே ..

(கோப்புடைய கோட்டுக்கால்‌ கட்டில்‌ மிதித்து ஆரோஹித்து) பின்பு பர்த்ரு ஸம்ஸ்லேஷத்துக்குப்‌ படுக்கையிலே ஏறக் கடவதிறே; அப்படியே ““கோப்புடைய சிங்காசனம்‌” ( திருப்பாவை 23) என்றும்‌, ““குத்துவிளக்கெரியக்‌ கோட்டுக்கால்‌ – மெத்தென்ற பஞ்ச சயனத்தின்மேலேறி”” (திருப்பாவை 19) என்றும்‌ சொல்லுகிறபடியே உபய விபூ,தியும்‌ தொழிலாக வகுப்புண்ட ஸர்வாஸ்சர்ய மயமான சீரிய சிங்காசனத்திலே “’தமேவம் வித்‌பாதே,நாத்‌, யாரோஹதி” (கெளஷீ. 1 – 5) என்கிறபடியே பாத பீடத்திலே அடியிட்டேறி,(பரதாக்ரூரமாருதிகளைப்‌ பரிஷ்வங்கித்த மணிமிகுமார்விலே) “அங்கே பரதமாரோப்ய முதித பரிஷஸ்வஜே”’ (ரா. யு. 130 – 41) என்றும்‌, “ஸோப்யேநம்‌ த்‌வஜ வஜ்ராப்ஜ க்ருத சிஹ்நேந பாணிநா । ஸம்ஸ்ப்ருஸ்யாக்ருஷ்ய ச ப்ரீத்யா ஸுகாட,ம்‌ பரிஷஸ்வஜே”” (வி.பு. 5 – 18 – 2) என்றும்‌, ““ஏஷ ஸர்வஸ்வபூ,தஸ்து பரிஷ்வங்கோ ஹநூமத?”’ (ரா. யு. 1 – 13) என்றும்‌, ஸ்ரீபரதாழ்வானையும்‌, அக்ரூரனையும்‌, திருவடியையும்‌ அணைத்த மணி மிகு மார்விலே – ஸ்ரீகௌஸ்துப,மும்‌ நிறம்பெறும்படி அழகுமிக்க திருமார்பிலே,

மாரி மலை முழஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க வெப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப் பூ வண்ணா வுன்
கோயில் நின்று இங்கனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
கார்யம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்–23—சராசரங்களை அடைய தொழிலாக வகுப்புண்டிருக்கை – உபய விபூதியும் தொழிலாக வகுப்புண்டிருக்கை -என்னவுமாம் தர்ம ஜ்ஞானாதிகளாலும் அதர்ம அஜ்ஞானாதிகளாலும் கோப்புடைய சிம்ஹாசனம் -என்றுமாம் –உபய விபூதியில் உண்டான சராசர பதார்த்தங்களை அடங்கலும் தொழிலாக வகுப்புண்டு இருக்கை-சீரிய சிங்கத்துக்கு சத்ருசமான ஆசனம்-ஓர் அணு சென்று அடியிடிலும் கிருஷ்ணனோடு ஸாம்யா பத்தியைக் கொடுக்கும் ஆசனம் –

குரு மா மணியாய் அணையும் வஸ்துவுக்கு –அதாவது –-குரு மா மணிப் பூண் –பெரியாழ்வார் -1-3-10-என்று ஸ்லாக்கியமாய் ஈஸ்வரத்வ சிஹ்நமான ஸ்ரீ கௌஸ்துபத்தோ பாதி போக்யமாய் தேஜஸ்கரமாய்க் கொண்டு அணிகிற ஆத்ம வஸ்துவுக்கு (திரு மார்பில் சம்பந்தத்தால் மணிக்கு ஏற்றம் -புருடன் மணி வரமாக -ஸ்ரீ தேசிகன்)–மணி வல்லி பேச்சு வந்தேறி அல்ல – அதாவது – வண் பூ மணி வல்லி –திருவிருத்தம் –9 -என்று உதாரமாய் போக்யமாய் தனக்குத் தானே ஆபரணமாம் படி அழகியதாய் கொள் கொம்பு பெறா விடில் தலை எடுக்க மாட்டாமை தரைப் பட்டு கிடக்கும் கொடி போன்றவள் என்கிற ஸ்த்ரீத்வ பிரயுக்தமாய் வரும் பேச்சு வந்தேறி அன்று —ஸ்வாபாவிகம் என்ற படி
பெண் பேச்சு என்ன அமைந்து இருக்க மணி வல்லி பேச்சு என்றது – மணி மிகு மார்பில் மணியாய் அணையும் -என்றதோடு ஒக்க -மணி வல்லி –என்றால் சொற் கட்டளையால் வரும் ரசம் உண்டாகையாலே –இத்தால் ஸ்த்ரீத்வம் ஆத்மாவுக்கு ஸ்வபாவிகம் ஆகையாலே ,அத்தை
உள்ளபடி தர்சித்த இவர்க்கு தத் பிரயுக்தமான பேச்சு ஸ்வபாவிகம்
என்று சொல்லிற்று ஆய்த்து-

(குருமாமணியாயணையும்‌ வஸ்துவுக்கு) ஸ்லாக்‌யமாய்‌, ஸர்வேஸ்வரத்வ சிஹ்நமான அந்த ஸ்ரீகெளஸ்துபத்தோபாதி அவனுக்கு போக்‌யமுமாய்‌, தேஜஸ்கரமுமாய்க்‌ கொண்டு அணைகிற ஆத்ம வஸ்துவுக்கு. (மணிவல்லிப் பேச்சு வந்தேறியன்று) ““வண்பூ மணி வல்லி யாரே பிரிபவர் தாம்‌”’ (திருவிரு. 9) என்று உதாரமாய்‌, அழகு மிக்கதாய்‌, ஸ்லாக்‌யமான கொடி போன்றவள்‌ என்கிற ஸ்த்ரீத்வ ப்ரயுக்தமாய்‌ வருகிற பேச்சு வந்தேறி யன்று, ஸ்வாபாவிகம்‌ என்கிறார்‌.

பெரு மா உரலில் பிணிப்பு உண்டு இருந்து அங்கு
இரு மா மருதம் இறுத்த இப்பிள்ளை
குரு மா மணிப் பூண் குலாவித் திகழும்
திரு மார்வு இருந்தவா காணீரே
சேய் இழையீர் வந்து காணீரே -1-2-10–கௌஸ்துப ஆபரணம் -ஸ்ரேஷ்டமாய் ஸ்லாக்கியமான ஆபரணம் –கௌஸ்துபம் -நீல நாயகம் -ஜீவாத்மாவுக்கு பிரதிநிதி
அஸ்திர பூஷண அதிகாரம் – பரத அக்ரூர மாருத -பிரக்ருதிகளை ஆலிங்கனம்-திகழ்கின்ற திரு மங்கை திரு மார்பு -அலர்மேல் மங்கை உறை மார்பன்-துளஸீ பிராட்டி கௌஸ்துபம் -பரமன் பறை சாற்றும்
கூர்ம வியாக்ர ஐம்படைத்தாலி -எளிமை பறை சாற்றும் )

திண் பூஞ்சுடர்  நுதி நேமி யஞ்செல்வர் விண்ணாடனைய
வண்  பூ மணி வல்லி யாரே பிரிபவர் தாம் இவையோ
கண் பூங்கமலம் கருஞ்சுடராடி வெண் முத்தரும்பி
வண் பூங்குவளை மடமான் விழிக்கின்ற மாயிதழே
–9–மணி வல்லி –தனக்குத் தான் ஆபரணமாய் இருக்கிற படி-நாயகன் கழுத்தைக் கட்டிக் கொண்டு இருக்க வேண்டிய கொடி –-கழுத்தைக் கட்டிக் கொண்டு கண்ணும் கண்ண நீருமாய் இருக்கிறபடி –-ஒரு கொம்பிலே சேர்க்க வேண்டி இருக்க நிலக்கிடை கிடக்கிற படி –(துவண்டு அன்றோ கிடக்கிறாள் )ஆரே பிரிபவர் தாம்-பிரணயித்வம் இல்லாமை யாகிலும் சைதன்யம் இல்லையோ –வண் பூ மணி வல்லி-–ஆழ்வார் திரு நாமம் –மணி வல்லிப் பேச்சு வந்தேறி அன்றேகோல் தேடி ஓடும் கொழுந்தே போன்றதே மால் தேடி ஓடும் மனம் -பாரதந்தர்யமே வடிவானவள்-வண் பூ மணி வல்லி-தர்ச நீயமான புஷ்போத் கமத்தை உடைத்தாய் ஸ்லாக்யமான கொடி போன்றவளை (பூ மலர்ந்த கொடி )

–——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌ – 6 — ப,க்திபாதம்-8–ஜ்ஞாந ப,க்த்யதி கரணம்‌ -பகுதி-2-(102-117)-ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

July 14, 2026

(1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 284 முடிய (48)

(1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-284 (27)

6 — ப,க்திபாதம் -—97–121—-25-இதிலே 2 அதிகரணங்கள்
8–ஜ்ஞாந ப,க்த்யதி கரணம்‌ 97 –117—மொத்தம் -21 —ஸூரணைகள்
பகுதி -1-97-101-ஸூரணைகள்–பகுதி -2–102–117-ஸூரணைகள்-
9-ஜ்ஞாந ப,க்த் யவஸ்தா ஸூக்தி அதிகரணம் –118-121—மொத்தம் –4 —ஸூரனைகள் –

இங்கன் அன்றிக்கே ,இவருடைய இந்த பரம பக்தி -கர்ம ஞான பக்திகள் ஆகிய சாதன த்ரயத்தையும் ,
இஜ் ஜென்மத்திலே அனுஷ்டிக்கையாலே யாதல் , பூர்வ ஜென்மங்களில் அப்யாசத்தாலே ஆதல் ,
உண்டானதாலோ என்கிற சங்கையில் , இரண்டு படியாலும் வந்தது அன்று என்னும் இடத்தை இவர் தம்முடைய உத்திகளாலே சாதிக்கிறார்-
இவருடைய பரபக்தி ஜந்மாந்தரங்களிலே கர்ம ஜ்ஞாநாதிகளை அநுஷ்டித்து தத் பலமாய்க் கொண்டு வந்ததானாலோ என்னில்‌, ஜந்மாந்தரங்களில்‌ அவை தமக்கு இல்லை என்னுமிடம்‌ தாமே அருளிச் செய்தார்‌ என்கிறார்‌

இடகிலேன்-நோன்பறிவிலேன் கிற்பன் கீழ் நாள்கள்-என்கையாலே சாதன த்ரய பூர்வ அப்யாசஜம்
அல்ல-சூரணை-102-

(இடகிலேன் என்கையாலே-நோன்பறிவிலேன் என்கையாலே-கிற்பன் என்கையாலே-கீழ் நாள்கள் என்கையாலே-சாதன த்ரய ஜம் அல்ல -பூர்வ அப்யாச ஜம் அல்ல- அப்யாஸ ஜம் -செய்து போந்த வாற்றால் உண்டாவது )-இடகிலேன் என்கையாலே –அதாவது –இடகிலேன் ஓன்று அட்டகிலேன் ஐம்புலன் வெல்லகில்லேன் கடவனாகிக் காலம் தோறும் பூப்பறித்து ஏத்தகில்லேன் —
தடவுகின்றேன் எங்குக் காண்பன் சக்கரத்து அண்ணலையே திருவாய் -4-7-9-
-பசித்தாருக்கு சோற்றை இடுதல் ,தாஹித்தாருக்கு தண்ணீர் வார்தல் செய்தேன் ஆகில்-யஜ்ஞோ தான தப கர்ம -ஸ்ரீ கீதை -18-5–என்கிற படியே ,–தானமும் கர்ம யோக அந்தர் பூதமாகையாலே கர்ம யோகத்திலே நிவேசிப்பிக்கலாம் ,,அது செய்ய மாட்டுகிறேலேன் – இந்திரியங்களை விஷயத்தில் போகாத படி நியமித்தேன் ஆகில் ,
ஞான யோகத்தில் நிவேசிப்பிக்கலாம் –அதுவும்செய்ய மாட்டுகிறலேன்,-நியதனாய் கொண்டு சாஸ்த்ரோக்தமான காலங்களிலே , புஷ்பயாதி உப கரணங்களை சம்பாதித்துக் கொண்டு ஆராதித்து ஸ்துத்திதேன் ஆகில் பக்தி சரீரத்தில் நிவேசிப்பிக்கலாம் அதுவும் செய்ய மாட்டுகிறலேன் என்றும் –

““இடகிலேன்‌ ஒன்றட்டகில்லேன்‌ ஐம்புலன்‌ வெல்லகில்லேன்‌ கடவனாகிக் காலந் தோறும்‌ பூப்பறித்‌தேத்த கில்லேன்‌’” (திருவா. 4 – 7 – 9) என்று பகவத்‌ விபூதி பூதர்‌ என்று அந்ந பாநாதிகளை பூதங்களுக்கு இட்டுக்கொடுபோரில்‌ கர்ம யோகத்திலே நிவேஸிப்பிக்கலாம்‌, இந்த்‌ரிய ஜயம்‌ பண்ணினேனகில்‌ ஜ்ஞாந யோகத்திலே நிவேஸிப்பிக்கலாம்‌. ஸாஸ்த்ரோக்தமான ப்ரகாரங்களிலே புஷ்பாத்‌ யுபகரணங்களைக்‌ கொண்டு பகவத் ஸமாராதநம்‌ பண்ணினேனாகில்‌ பக்தி யோகத்திலே நிவேஸிப்பிக்‌கலாம்‌. இவை இத்தனையும்‌ செய்யப்‌ பெற்றிலேன்‌ என்றும்‌,

இடகிலேன் ஒன்று; அட்டகில்லேன்; ஐம்புலன் வெல்லகிலேன்;
கடவனாகிக் காலந்தோறும் பூப்பறித்து ஏத்தகிலேன்;
மடவல் நெஞ்சம் காதல் கூர, வல்வினையேன் அயர்ப்பாய்த்
தடவுகின்றேன்; எங்குக் காண்பன் சக்கரத்து அண்ணலையே?
–4-7-9—இடகிலேன் ஒன்று; அட்டகில்லேன்-பசித்தார்க்கு சோற்றை இடுதல் -தாஹித்தார்க்கு தண்ணீர் வார்த்தல் செய்ய மாட்டு கிறிலேன்-யஞ்ஞா தான தப கர்ம – என்கிறபடியே தானம் கர்ம யோகாந்தர்பூதமாய் இருக்க -அதுக்கு ஆள் ஆகிறிலேன்-என்கை –ஐம்புலன் வெல்லகிலேன்;-அர்த்த லோபத்தாலே அவை செய்யா விட்டால் இந்திரியங்கள் விஷயத்தில் பட்டி புகாத படி நியமிக்க மாட்டிற்று இலேன்-கடவனாகிக் -நியதனாய்
காலந்தோறும் பூப்பறித்து ஏத்தகிலேன்;-சமாராதனத்துக்கு விஹிதமான காலத்தில் -திருப் பள்ளித் தாமம் பறித்தல் பரிமாறுதல் செய்யப் பெற்றிலேன் –சததம் கீர்த்த யந்த-என்கிறபடி திரு நாம சங்கீர்த்தனம் பண்ணிற்று இலேன்-இவை உண்டாயிற்றாகில் பக்தி சரீரத்தில் நிவேசிக்கலாம் -அதுவும் இல்லை என்கிறார் -இவற்றினுடைய ஸ்வரூப நிஷேதம் பண்ணுகிறது அன்று –உபாயத்வத்தை நிவேதிக்கிறது –மட வல் நெஞ்சம்-மட வென்று மென்மை-பகவத் குண பிரசங்கத்தில் சிதிலமாகை
வல் நெஞ்சம் -பகவத் குணங்களில் விழுந்தால் ஈஸ்வரனாலும் மீட்க முடியாது இருக்கை –காதல் கூர, -ஸ்நேஹம்-மிக வல்வினையேன் – பிரேம அனுரூபமாக காணப் பெறாத படி பாபத்தை பண்ணின நான் –காதலுக்கு விஷயம் பெற்றேன் அல்லேன்-இத்தை அகஞ்சுரிப் பகுத்தப் பெற்றேன் அல்லேன் –
ஆசா லேசம் உடையோருக்கு முகம் கொடாதவனாய் இழந்தேன் அல்லேன் -என் பாபம் இருந்தபடி என்
அயர்ப்பாய்த் தடவுகின்றேன்-அறிவு கேட்டை உடையேனாய் முன்னே வந்து நின்றாலும் காண முடியாத படி தடவா நின்றேன்-நத்வா பச்யாமி கௌசல்யே -என்கிறபடியே-எங்குக் காண்பன்--ஒரு கைம்முதல் இன்றிக்கே இருக்க கூப்பிடா நின்றேன் -எங்கே காணப் பெறுகிறேன்-சக்கரத்து அண்ணலையே?– கையும் திரு வாழியுமான சேர்த்தியிலே யாயிற்று இவர் அகப்பட்டது –

நோன்பு அறிவிலேன் என்கையாலும் –அதாவது நோற்ற நோன்பிலேன் ,நுண் அறிவிலேன்–5-7-1–என்று
பல வ்யப்தமாம் படி அனுஷ்டிதமான கர்ம யோகம் உடையவன் அல்லேன் -அது இல்லாமையாலே ,
சூஷ்ம ரூபமான ஜீவ பர விஷய ஞான யோகத்தை உடையேன் அல்லேன் –ஆகையால் உபய சாத்யை யான பக்தி இல்லை என்னும் இடம் அர்த்தா சித்தம் என்று அருளிச் செய்கையாலே வர்த்தமான ஜென்மத்தில் கர்ம ஞான பக்திகள் ஆகிய சாதன த்ரய அனுஷ்டானத்தால் உண்டானது அல்ல

”நோற்ற தோன்பிலேன நுண்ணறிவிலேன்‌”’ (திருவா. 5 – 7 – 1) என்று பலத்தோடே வ்யாப்தமாய்‌ இருப்பதொரு கர்மத்தை அநுஷ்டிக்கப் பெற்றிலேன்‌; ஆத்ம யாதாத்ம்ய ஜ்ஞாந பூர்வகமான பகவஜ் ஜ்ஞாநத்தை உடையேனல்லேன்‌- ஆக இவை இல்லாமையாலே உபய ஸாத்‌யமான பக்தியை உடையேனல்லேன்‌ என்றும்‌

நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்று
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே.—5-7-1—நோற்ற நோன்பிலேன்-நோன்பிலேன் என்னாதே-நோற்ற நோன்பிலேன் -என்கிறது -பல வியாப்தமாம் படி யனுஷ்டித்தமாய் இருபத்தொரு கர்மம் இல்லை என்கிறது -என் ஆற்றாமையால் சில யுண்டானாலும் சக்ரவர்த்தியுடைய புத்ர காமேஷிடி போலே யாதல் -ஸ்ரீ வஸூ தேவருடைய அநந்த விரதம் போலே பல வியாப்தமாய் இருபத்தொரு தர்மம் இல்லை –ந தர்ம நிஷ்டோஸ்மி-என்கிற இடத்தில் தர்மம் இல்லை என்னாதே தர்ம நிஷ்டை இல்லை என்றால் போலே –நுண்ணறிவிலேன்-அறிவிலேன் என்னாதே –நுண்ணறிவிலேன்-என்றது ஸ்வரூப ஞான பூர்வகமாக பர ஸ்வரூபத்தை சாஷாத்கார பர்யந்தமாக அறியும் அறிவை அறிவை யுடையேன் அல்லேன் –கர்மம் இல்லை என்ற போதே -தத் சாத்தியமான ஞானம் இல்லை என்னும் இடம் அர்த்த ஸித்தமாய் இருக்க ஞானம் இல்லை என்றது என் என்னில்-பூர்வ ஜென்மத்தில் கர்மத்தை அனுஷ்ட்டித்து தத் பலமான ஞானம் இந்த ஜென்மத்தில் நைசர்க்கிகமாக பிறக்கலாம் இறே -அத்தாலே சொல்லிற்று –அன்றிக்கே-புராணங்களில் தனித் தனியே கர்ம ஞானங்களே சாதனமாக சொல்லுகையாலே சொல்லிற்று ஆகவுமாம்-பக்தி இல்லை என்னாது ஒழிவான் என் என்னில் –பக்தி யாகிறது ஞான விசேஷம் ஆகையாலே ஞானத்தை சொன்ன போதே அத்தையும் சொல்லிற்று ஆயிற்று

கிற்பன் என்கையாலே-அதாவது கிற்பன் கில்லேன் என்று இலன் முன நாளால் -3-2-6–என்று முன்பு உண்டான காலம் எல்லாம் -குர்யாத்-( செய்யத்தகும் ) -என்று நன்மை செய்ய அடுக்கும் என்றால் ,வல்லேன் என்று இசைந்திலேன் –-ந குர்யாத் ( செய்யத்தக்கது )-என்று தீமை செய்யல் ஆகாது என்றால் ,மாட்டேன் என்று தவிர்ந்திலேன் — இப்படி விஹிதத்தை செய்யாமல், நிஷிதத்தை செய்து போந்தேன் என்றும் –

(கிற்பன்‌ கீழ்நாள்கள்‌ என்கையாலே) “கிற்பன்‌ கில்லேன்‌ என்றிலன்‌ முனநானால்‌”’ (திருவா. 8 – 2 – 6] விஹிதததைச்‌ செய்து அவிஹிதத்தைத் தவிர்‌’ என்கிற விடத்தில்‌ அப்படிச்‌ செய்கிறேன்‌ என்னாதே விஹிதத்தைத் தவிரந்து அவிஹிதத்தைச் செய்து போந்தேன் நெடுங் காலம்‌ என்றும்‌-

கிற்பன் கில்லேன் என்றிலன் முன நாளால்
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்
பற்பல்லாயிரம் உயிர் செய்த பரமா நின்
நற் பொற் சோதித் தாள் நணுகுவது எஞ்ஞான்றே –3-2-6—கிற்பன்-அல்ப யத்னமாய் பஹு பலமான ஸூ க்ருதத்தைச் செய் என்றால் ஓம் என்று இசைந்து இலேன்-மித்ர பாவத்தாலே அபுநாவ்ருத்தி லக்ஷணமான போகத்தை பெறலாம் என்றால் அத்தைச் செய்வேன் என்று இலேன்-கில்லேன் என்றிலன்--இப்போது அல்பமாய் மேலே பஹ்வநர்த்தமாய் இருக்கிற விஷய ப்ராவண்யத்தை தவிர்க்கும் என்றால் -அத்தை தவிர்வேன் -என்று இலேன் – இப்படி செய்கிறது எத்தனை நாள் போரும் என்ன-முன நாளால் -நீ விசேஷ கடாக்ஷம் பண்ணுவதற்கு முன்பு எல்லாம் 

கீழ் நாள் என்கையாலே – அதாவது –-தெரிந்து உணர்வு ஓன்று இன்மையால் தீ வினையேன் –ஆழி அம் கையானை ஏத்தாது அயர்த்து —வாழா இருந்து ஒழிந்தேன் கீழ்–பெரிய திருவந்தாதி -82–என்று பகவத் விஷயத்தை அறியும் ஆராயும்-ஞானம் ஒன்றையும் இல்லாமையாலே , பகவத் அனுபவ போக்யமான காலத்தை பாழே போக்கிய பாவியேன் – பிராட்டி சொன்னது செய்தல் அல்லது ,நிற்க மாட்டாமையாலே ,மாயா மிருகத்தை அன்று பின் பற்றிப் போன –அருகாழியை திருகையிலுடைய சர்வேஸ்வரனை மங்களாசாசனம் பண்ணப் பெறாதே அறிவு கெட்டு வ்யர்தமே இருந்து விட்டேன் கீழ் உள்ள காலம் எல்லாம்-என்று அருளிச் செய்கையாலே பூர்வ ஜென்மங்களில் அப்யாசத்தால் உண்டானதும் அல்ல என்கை-

”ஆழியங்கை அம்மானை ஏத்தாதயர்த்து – தீவினையேன்‌ வாளா விருந்தொழிந்தேன்‌ கீழ் நாள்களெல்லாம்‌’” (பெரியதிருவ. 82) என்றும்‌, ஸர்வாதிகனான ஸர்வேஸ்வரனை மங்களாஸாஸநம்‌ பண்ணாதே விஸ்மரித்து அநாதி காலம்‌ வ்யர்த்தமே இருந்தேன்‌ என்கையாலும்‌, இப்படி ஜந்மாந்தரங்களில்‌ தமக்கு கர்ம ஜ்ஞாநாதிகளில்‌ அந்வயமில்லை என்று அருளிச் செய்கையாலே. (ஸாதந த்ரய பூர்வாப்‌யாஸ ஜமல்ல) ஐத்மாந்தரங்களில்‌ கர்ம ஜ்ஞாந பக்த்திகளை அநுஷ்டி,த்து தத்பலமாய்‌ வந்த பக்தியன்று என்கிறார் –

தெரிந்த உணர்வு ஓன்று இன்மையால் தீ வினையேன் வாளா
இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம்
கரந்த உருவின்
அம் மானை அந் நான்று பின் தொடர்ந்த ஆழி யங்கை
அம்மானை ஏத்தாது அயர்த்து–82—அது பத்து-இது எட்டு என்னும் ஞானம் இத்தனை அல்லது
பகவத் விஷயத்தை ஆராயும் ஞானம் ஒன்றும் இல்லாமையால்-தத் ஞானம் அஞ்ஞானம் அதோந்ய துக்தம் வித்யாந்யா சில்பநை புணம் (ஸ்ரீ விஷ்ணு புராணம் )-என்னும் ஞானம் யுண்டாகையால்-தீ வினையேன்-பகவத் அனுபவ யோக்யமான காலத்தைப் பாழே போக்கின பாபத்தைப் பண்ணினேன்-வாளா இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் குனியக் குறுணி பற்றும் காலம் எல்லாம் வ்யர்த்தமே இருந்தேன் (ஆனுகூல்ய லேசம் இருந்தாலே பேறு என்றவாறு )அவதரித்து அல்ப அநுகூலயத்திலே விஷயீ கரிக்கும் காலம் போயிற்று என்று தாத்பர்யம்-வடிவைக் கரந்து வர்த்திக்கிற அம் மாய மானை
அன்று தொடர்ந்த அருகாழியைக் கையிலே யுடைய ஸர்வேஸ்வரனை இளைய பெருமாளும் உதவாத தசையில் ஏத்தப் பெறுவது அறிவு கெட்டுக் கிடந்த நான் பழுதே போக்கினேன்-

இன்னமும் இவர் தம்முடைய திவ்ய ஸூக்தி விசேஷத்தாலே இது தன்னை வ்யக்தீகரிக்கிறார்-ஜந்மாந்தரங்களிலே ஸாதித்துப் பெற்றதன்றாகிலும்‌ இந்த ஜந்மத்திலே சில தாள்‌ ஸாதித்துப் பெற்றதானாலோ என்னில்‌, அதுவுமல்ல என்கிறார்‌

இப் பிறப்பே சில நாளில் என்ற போதே இரண்டும் கழியும்-சூரணை-103-

அதாவது-இப் பிறப்பே–சில நாளில் என்ற போதே-குறிக் கொள் ஞானங்களால் எனை ஊழி செய்தவமும் , கிறிக் கொண்டு இப் பிறப்பே சில நாளில் எய்தினன் யான்—திருவாய் -2-3-8- -என்று
யம நியமாத்ய வஹிதராய் கொண்டு சம்பாதிக்க வேண்டும்-வேதன த்யாநோபாச நாத்யவஸ்தா விசேஷங்களான ஜ்ஞானங்களாலே அநேக கல்பம் கூடி ஸ்ரவணமாய் ,மனனமாய் , த்ருவ அனு ஸ்ம்ருதியாய் வரக் கடவ பக்தி யோகமாகிற தபசினுடைய பலத்தை ஒரு யத்னமும் இன்றிக்கே இருக்க –
நல் விரகானவனாலே -இஜ் ஜென்மத்திலே -அதிலும் அல்ப காலத்திலேயே பெற்றேன் என்கையாலே –இரண்டும் கழியும் –-அதாவது-ஜென்மாந்தர அப்யாசஜம் என்றும் ,-இஜ் ஜென்மத்திலே சாதன அனுஷ்டானஜம் என்றும்-சொல்லுகிற இரண்டும் போம் என்ற படி —-இப் பிறப்பே -என்றும் -சில நாள்களில் -என்றும் இரண்டையும் அருளிச் செய்தது ஜென்மாந்தர அப்யாசத்தையும் இஜ் ஜென்மத்தில் சிரகால சாத்தியமான வற்றில் அன்வயத்தையும் வ்யாவர்த்திக்கைக்கா இறே-

அன்றிக்கே –இடகிலேன்–நோன்பு அறிவிலேன் -கிற்பன் -சில நாளில் -இத்யாதி வாக்யத்தில் எடுத்த சந்தைகள் எல்லாத்தாலும் பூர்வ ஜென்ம சித்தமான சாதன த்ரய அப்யாச பலம் இல்லாமையை சாதித்தாகவும் , அது இல்லையாகில் ,இஜ் ஜென்மத்தில் அவற்றை அப்யசித்து ,வந்தததனாலோ என்கிற சங்கை வர- பூர்வ ஜென்மங்களிலும் இஜ் ஜென்மத்திலும் இவருக்கு அவற்றில் அன்வயம் இல்லை என்னும் இடத்தை-இப் பிறப்பே -இத்யாதி -யான இவருடைய ஸ்ரீ ஸூக்தி விசேஷத்தாலே தர்சிப்பியா நின்று கொண்டு ,-உபய சங்கையும் சேரத் தள்ளுகிறார் என்று இங்கனே யோஜிக்கவுமாம் ..

இந்த யோஜனையைப் பற்றவும் , பூர்வ யோஜனையே இதனுடைய பட்டோலையான பெரிய படிக்கு சேருவது-

““குறிக் கொள் ஞானங்களால்‌ எனை யூழி செய்தவமும்‌ கிறிக் கொண்டிப் பிறப்பே சிலநாளிலெய்தினன்‌ யான்‌” (திருவா. 2 – 8 – 8) என்று யம நியமாத்‌யவஹிதராய்க்‌ கொண்டு ஸம்பாதிக்க வேண்டும்‌ வேதந-த்‌யாந-உபாஸநாத்‌, யவஸ்தா விஸேஷங்களான ஜஞாநங்களாலே அநேக கல்பம்‌ கூடி ஸ்ரவணாமாய்‌, மநநமாய்‌-த்ருவாநுஸ்ம்ருதியாய்‌, வரக் கடவதான தப பலத்தை ஒரு யத்நமின்றியிலே இருக்க நல் விரகனான அவனாலே இஜ் ஜந்மத்திலே, அது தன்னிலும்‌ அல்ப காலத்திலே பெற்றேனென்கைஃ யாலே ஐந்மாந்தர ஸாத்‌யமுமல்ல; இஜ் ஜந்மத்திலும்‌ ஸாதித்து வந்ததுமல்ல என்கிறார் –

குறிக் கொள் ஞானங்களால் எனை யூழி செய் தவமும்
கிறிக் கொண்டு இப்பிறப்பே சில நாளில் எய்தினன் யான்

உறிக் கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான் பின்
நெறிக் கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித் துயர் கடிந்தே –2-3-8—குறிக் கொள் ஞானங்களால் – யம நியமாதி க்ரமத்தாலே அவஹிதராய்க் கொண்டு சம்பாதிக்கும் பக்தி ரூபாபன்ன ஞானங்களாலே
வேதன உபாசன த்யாநாத்ய அவஸ்தா விசேஷங்களாலே -பலவாகச் சொல்லுகிறது-எனை யூழி செய்தவமும்-கிறிக் கொண்டு –அநேக கால சாத்தியமான புருஷார்த்தத்தை -அநாயாசேன பெறலாவது ஒரு நல் விரகைப் பெற்று-தபஸ் –என்று தத் பலத்தைச் சொல்லுகிறது-கிறி என்று பகவத் பிரசாதம்
இப்பிறப்பே சில நாளில் எய்தினன்--இஜ் ஜென்மத்தில் -அது தன்னிலும் அல்ப காலத்திலேயே பெற்றேன்-யான்--ஒரு புருஷார்த்தம் உண்டு என்று அறியாத நான்

ஆனால் இவருக்கு இந்த பக்தி உண்டாகுகைக்கு ஹேது என் என்னும் ஆ காங்க்ஷையிலே –பல போக்தாவான ஈஸ்வரன் கிருஷி பலன்-என்னும் அத்தை –ஷேத்ரமும் ,கர்ஷகனும் ,க்ருஷியும் ,தத் பலமுமாக ரூபித்து கொண்டு அருளிச் செய்கிறார் –ஆனால்‌ இவர்க்கு இந்த பக்தி உண்டாகைக்கு ஹேது ஏதென்னில்‌ பல போக்தாவான ஸர்வேஸ்வரனுடைய க்ருஷிபலம்‌ என்னுமிடத்தை க்ஷேத்ரமும்‌, கர்ஷகனும்‌, க்ருஷியும்‌, தத்பலமுமான வேஷத்தாலே அருளிச் செய்கிறார்‌

1-பெரும்பாழில்‌ ஷேத்ரஜ்ஞன்‌ பெருஞ்செய்‌ கலியாரேவ ஆளும்‌ வன் குறும்பர்‌ குடியேறிப் பெருங்குடியும்‌ தங்கள்‌ கருத்துள்ளே யாக்கிப்‌ படிந்துண்ணும்‌ போகத்தே தூராதே யொறுக்கெணுப்‌ போகத்துக்குக்‌ காவல் செய்து குமைத்துத்‌ திரித்து வீழ்த்து வலித்‌தெற்றி அருவியறுத்துக்‌ கடனாயின இறுப்பிக்கப்‌ பாழ்த்த விதி யானவாறே –2-தன் பால்‌ மனம்‌ வைப்பிப்பதாகத்‌ தேய்ந்தற மன்னி ஒள் வாளுருவி வினைத் தூற்றை வேரறுவித்துத்‌ தீக் கொளீஇக்‌ கவ்வை எருவிட்டு அமுதவாறு தலைப் பற்றி ஈரியாய்க் கசிந்ததிலே ஈரநெல்‌ வித்தி –3-எழு நாற்றுக் களையையும்‌ வேர் முதல் மாய்த்துப்‌ பட்டிச் சேவதக்கி மீதுகொள்ளாமல்‌ குறிக்கொள்வித்துக்‌ கடல்புரைய விளைந்து தலை வணக்கினவாறே –4-நாளுநாள்‌ கோட்குறையாக நின்றாரறியாமல்‌ குணங்கொண்டு ஆராமை யுண்டு காலக்கழிவாலே திலத்துகாமல்‌ பற்றறுத்துத்‌ தண்டாலடித்துப்‌ பதரறுத்துப்‌ போர்த்த தோல் விடுத்து ஸுக்ஷ்மவொட்டும்‌ நீரிலே கழுவி வேறோர்‌ கலத்திட்டு பைந்தொடி மடந்தையரைக் கொண்டு ஷட்‌ குண்ரஸாந்நமாக்கி வானோர்க்காரா வமுதானவாறே முற்றுமுண்ண முன்னம்‌ பாரித்து –5-உழுவதோர்‌ நாஞ்சில் கொண்டு பெருக முயலும்‌ பத்தி யுழவன்‌ க்ருஷி பலமிறே-சூரணை -104–

(பெரும் பாழ்-மூலப் பிரக்ருதி –ஷேத்ரஞ்ஞன் -ஆன்மா –பெரும் செய் -மனம் -வயலாக உருவகம் )பெரும் பாழில் ஷேத்ரஜ்ஞன் பெரும் செய் –அதாவது – முடிவில் பெரும் பாழ்–திருவாய் -10-10-10-என்று நித்தியமாய் -அபரிச்சேதமாய் , சேதனருக்கு போக மோஷங்களை விளைத்துக் கொள்ளலாம் நிலமான பிரகிருதி தத்வத்தில் –-ஷேத்ரஜ்ஞன் ஆகிற பக்த சேதனுடைய ,-நெஞ்சப் பெரும் செய் -5-3-4-என்று பக்திக்கு விளை நிலமான மனஸ் ஆனது –பாழ்த்த விதி ஆனவாறே -என்றதோடு இதுக்கு சம்பந்தம் -பாழ் படுகைக்கு அடி சொல்லுகிறது நடு உள்ளது அடங்கலும் –

(பெரும்பாழில்‌ க்ஷேத்ரஜ்ஞன்‌) “முடிவில்‌ பெரும்பாழேயோ”” (திருவா. 10 – 10 – 10) என்று அபரிச்சேத்‌,யமாய்‌, சேதநர்க்கு போக மோக்ஷங்களை விளைத்துக்‌ கொள்ளுகைக்கு நிலமான மூல ப்ரக்ருதியிலே பத்‌தனான சேதநன்‌, “நெஞ்சப்‌ பெருஞ் செய்யுள்‌” (திருவா. 5 – 3 – 4) என்று பகவத்‌ பக்திக்கு விளை நிலமான சேதநருடைய நெஞ்சாகிற பெரும்‌ செய்யிலே-

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10–ஸ்வ கார்யமான மஹத்தாதிகளைப் பத்துத் திக்கிலும் புக்கு எங்கும் வியாபிக்க -நித்தியமாய் அபரிச்சேதயமாய் -சேதனர்க்கு புருஷார்த்தத்தை விளைத்துக் கொள்ளலாம் நிலமான பிரகிருதி தத்துவத்துக்கு ஆத்மாவானவனே

ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னை சொல் நீர்படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ! கடியனே?–5-3-4–நெஞ்சமாகிற பெரிய செய்யிலே. கலவியும் பிரிவும் என்னும் இவற்றாலே புடைபடுத்திப் பரமபதத்தைப் போன்று பரப்புடைத்தாம் படி பெருக்கினானாதலின் ‘நெஞ்சப் பெருஞ் செய்யுள்’ என்கிறாள்.-ஆக, ஊரார் அலராகிற எருவை இட்டு, தாயாராலே எப்பொழுதும் பேசப்படுகின்ற ஹித வசனமாகிற நீரை நிறுத்தி, ஆசையாகிய நெல்லை வித்தி முளைத்த நெஞ்சமாகிற பெரிய விளை நிலத்துக்குள்ளே என்றபடி.

கலியார் ஏவ ஆளும் வன் குறும்பர் குடி ஏறி –அதாவது – ஏவினார் கலியார் நலிக என்று என் மேல்—பெரிய திருமொழி -1-6-8-என்கிறபடியே கலியுகமாகிற வன்னியன் -இவனை நலியும் கோள் -என்று ஏவ ,
ஆளும் வன் குறும்பர் –அதாவது –மனம் ஆளும் ஓர் ஐவர் வன் குறும்பர் -பெரிய திருவந்தாதி -51-என்கிறபடியே – சேதன சேஷமான மனஸை -தங்களுக்கு சேஷம் ஆக்கி கொண்டு நடத்தும் அவர்களாய் –முன் கை மிடுக்கராய் -அத்வீதியராய் இருந்துள்ள இந்திரியங்களாகிய குறும்பர் –குடியேறி –-அதாவது –கோவாய் ஐயர் என் மெய் குடியேறி -பெரிய திருமொழி -7-7-9-என்கிற படியே இச் சேதனனுக்கு நியாமகராய் கொண்டு , தேஹத்திலே குடி புகுந்து ,-கலியார் ஏவ -என்றது-இந்திரியங்கள் உடைய நலிவுக்கு கலி காலம் பிரவர்தகம் ஆகையாலே –கலியார் -என்றும் -ஐவர்-என்றும் -சேதன சமாதியாலே சொல்லுகிறது .-தனக்கு என்ன ஆக்ரஹம் உடையாரைப் போலே ,நலிகிற கொடுமையைப் பற்ற —
கலியார் என்று -ரேபாந்தமாக ஆழ்வார் அருளிச் செய்தது கலி காலத்துக்கு அஞ்சினபடி யாலே இறே

(கலியாரேவ) ““ஏவினார்‌ கலியார்‌ நலிக’” (திருமொழி 1 – 6 – 8) என்று கலியுகமாகிற வறியன்‌ தன்‌ படரான இந்த்‌ரியங்களை ப்ரேரிக்க. (ஆளும்‌ வன் குறும்பர்‌) “’மனமாளுமோரைவர்‌ வன்குறும்பர்‌”’ (பெ.திருவ.51) என்று ப்ரதாந கரணமான மநஸ்ஸையும்‌ தங்கள் வஸமாக்கிக் கொண்டு ஆளுமவர்களுமாய்‌ முன்கை மிடக்கருமாய்‌ அநியாம்‌யருமான அத்‌விதீயரை வரும்‌ ““பொய்யாலைவரென்‌ மெய் குடி யேறி”” (திருமொழி 7 7 – 9) என்கிறபடியே குடியேறி-

ஏவினார் கலியார் நலிக வென்று என் மேல் எங்கனே வாழுமாறு ஐவர்
கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் குறுங்குடி நெடும் கடல் வண்ணா
பாவினாரின் சொல் பன் மலர் கொண்டு உன் பாதமே பரவி நான் பணிந்து என்
நாவினால் வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்–1-6-8–கலியார் என்கிறார் ஆயிற்று -கலி காலத்துக்கு அஞ்சினபடியாலே —

மனமாளும் ஓர் ஐவர் வன் குறும்பர் தம்மை
சினமாள்வித்து ஓர் இடத்தே சேர்த்து -புனமேய
தண் துழாயான் அடியைத் தான் காணும் அஃது அன்றே
வண் துழாம் சீரார்கு மாண்பு –51–பள்ளிகள் கலஹம் போலே – ஈஸ்வரனுக்கு ஆத்மா சேஷமாய் –
ஆத்மாவுக்கு மனஸ்ஸூ சேஷமாய்-மனஸ்ஸூ போன வழியே போகக் கடவதான இந்திரியங்கள் இருக்கும் முறை அன்றிக்கே மனஸ்ஸை இந்திரியங்கள் ஆளும்படி இருக்கை-வன் குறும்பர்-மனஸ்ஸைத் தங்கள் போன வழியே கொடு போக வல்லராய் இருக்கை-இன்னதனை த்ரவ்யத்துக்கு அரசு செய்வாரைக் கிடைக்கும் என்னும் வன்னியரைப் போலே

கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறிக் கூறை சோறு இவை தா என்று குமைத்துப்
போவார் நானவரைப் பொறுக்க கில்லேன் புனிதா புட் கொடியாய் நெடு மாலே
தீவாய் நாகணையில் துயில்வானே திருமாலே இனிச் செய்வது ஓன்று அறியேன்
ஆவா வென்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே–7-7-9-நீ சேஷியாமது தவிர்ந்து இவை எனக்கு நியாமகமாய்க் கொண்டு வந்து என் சரீரத்திலே குடி புகுந்தது –

பெரும் குடியும் தங்கள் கருத்துள்ளே ஆக்கி –அதாவது –முன்னின்று முறை போக்கும் பெரும் குடி போலே (இங்கு பெரும் குடி என்றது மனத்தினை ) தங்களுக்கு பிரதானமான மனசையும் –
ஐம்புலன் கருதும் கருத்துள்ளே திருத்தினேன் மனத்தை –பெரிய திருமொழி -1-1-8–என்கிறபடியே –
தாங்கள் நினைத்த வழியே ஒழுகும் படியாகப் பண்ணி-படிந்து உண்ணும் போகத்தே –அதாவது
படிந்துண்டும் போகத்தே தூராதே பொருக் கொணா போகத்து காவல் செய்து –பெரிய திருமொழி -1-6-2-
புலன் படிந்து உண்ணும் போகம் -என்று விஷயங்களிலே அவஹாகித்து புஜிக்கிற போகத்தில் –தூராதே-தூராக் குழி-திருவாய்-5-8-6- -என்ற படி ஒரு காலும் பூர்ணம் ஆகாதே –பொருக் கொணா போகத்து-பொறுத்து கொண்டு இருந்தால் பொறுக்க ஓணாப் போகாமே நுகர்வான்-என்கிறபடியே –பெரிய திருமொழி -7-7-7-இவற்றால் வந்த நலிவை ஆற்றி இருப்போம் என்றால் ,ஆற்ற ஒண்ணாத படி ,
விஷய போகங்களை புஜிக்க வேணும் என்று –காவல் செய்து – கடியார் காளையர் ஐவர் புகுந்து காவல் செய்த அக்காவலை -பெரிய திருமொழி -7-7-8– -என்கிற படி க்ரூரராய் ,நலிய நலிய- இளகிப் பதியா நின்ற பருவத்தை உடையராய்க் கொண்டு ,இவனைச் சிறை செய்து 

பெருங்குடியும்‌ தங்கள்‌ கருத்துள்ளே யாக்கி) ““ஐம்புலன்கருதும்‌ கருத்துளே திருத்தினேன்‌ மனத்தை?” (திருமொழி 1 – 1 – 8) என்கிறபடியே ப்ரதாந கரணமான மநஸ்ஸாகிற பெருங்குடியும்‌ தங்கள்‌ கருத்துள்ளேயாம்படிபண்ணி. (படிந்துண்ணும்‌ போகத்தே தூராதே) *’புலம்படிந்துண்ணும்‌ போகமே பெருக்கிப் போக்கினேன்‌’ (திருமொழி 1 – 6 – 2) என்று ஸப்‌தாதி விஷயங்களிலே அவகாஹித்து பஜிக்கிற போகத்தை அபி வ்ருத்‌தமாக்கி. “’தூராக்குழி”’ (திருவா. 5 – 8 – 6) என்கிறபடியே அத்தால்‌ ஒருகாலும்‌ பர்யாப்தி பிறவாதே. (பொறுக்கொணுப்‌ போகத்துக்குக்‌ காவல்‌ செய்து) ”பொறுத்துக் கொண்டிருந்தால்‌ பொறுக் கொணாப் போகமே நுகர்வான்‌ புகுந்து” (திருமொழி 7 – 7 – 7) என்று சேதநனாலே பொறுக்கப் போகாத ஸப்‌தாநுபவத்துக்கு, “கடியார்‌ காளையர்‌ ஐவர்‌ புகுந்து காவல் செய்த”” (திருமொழி 7 – 7 – 8) என்று நெஞ்சில்‌ க்ரெளர்யத்தை உடையராய்‌, பதிக்க பாதிக்க மேலே இளகிப் பதித்து வருகிற அந்த விஷயங்கள்‌ {இந்த்‌ரியங்கள்‌] கீழே சொன்ன போகத்துக்கு விருத்‌,த,மான பகவத்‌ ஸம்ரம்பமாகிற்‌ ராஜபரிகரம்‌ புகுராதபடி காவல்செய்து.

கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும் கருத்துளே திருத்தினேன் மனத்தை
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை பெரு நிலத்தார் உயிர்க்கு எல்லாம்
செற்றமே வேண்டித் திரி தருவேன் தவிர்ந்தேன் செல் கதிக்கு உய்யுமாறு எண்ணி
நல் துணையாக பற்றினேன் அடியேன் நாராயணா என்னும் நாமம் —1-1-8–மனத்தை பர விஷயமாக்கி -விஷயங்களிலே ப்ரவணம் ஆகிற பாஹ்ய இந்திரியங்களை காதாசித்கதமாய் ஆகிலும் விஷயங்களில் நின்றும் மாற்றி -ப்ரத்யக் விஷயம் ஆக்கினால் நல் வழி போகுகைக்கு உறுப்பாம் இறே –ஸ்தோத்ராதி இந்திரியங்கள் விஷயங்களிலே இழிந்து தான் நினைத்த வழியிலே கொடு போய் –
மனசையும் அதுக்கு உறுப்பாக்கி போந்தேன்-விஷய ப்ரவணர் ஆனவர்கள் விஷய ப்ராவண்யம் போராது என்று ஔஷத சேவை பண்ணி இருப்பார்கள் இறே-அப்படியே விஷயங்களிலே மனசை வலிய மூட்டிப் போந்தேன்-

சிலம்படி யுருவில் கரு நெடும் கண்ணார் திறத்தனாய் அறத்தையே மறந்து
புலம்படிந்து உண்ணும் போகமே பெருக்கிப் போக்கினேன் பொழுதினை
வாளா
அலம் புரி தடக்கை யாயனே மாயா வானவர்க்கு அரசனே வானோர்
நலம் புரிந்து இறைஞ்சுன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் -1-6-2—ஸ்திரீகளுக்கு வழி பறித்திடுமது மறக்க ஒண்ணாதே- தன்னுடைய உஜ்ஜீவனத்துக்கு உபாயமானத்தையே யாயிற்று வருந்தி மறப்பது –கொண்டி திரியும் பசுப் போலே-இந்த்ரியங்கள் தான் விஷயங்களில் மண்டி யாயிற்று இருப்பது முதல் தன்னிலே –அதுக்கு மேலே-விஷய சந்நிதி உள்ள இடத்திலே வர்த்தித்து
இந்த்ரியங்களுக்கு விஷயங்களிலே போக்யதா புத்தியைப் பிறப்பித்து-அவை அவற்றில் மேல் விழுந்து புஜிக்கும் படி – அத்தால் வந்த போகத்தைப் பெருக்கி –பகவத் விஷயத்தில் அடிக் கழஞ்சு பெற்று ( மதிப்பு பெற்று )செல்லக் கடவ காலத்தை வ்யர்த்தமே போக்கினேன்-

சூழ் கண்டாய் என் தொல்லை வினையை அறுத்துன்னடி சேறும்
ஊழ் கண்டிருந்தே தூராக் குழி தூர்த்து எனை நாளகன்றிருப்பன்
வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்! வானோர் கோமானே!
யாழி னிசையே! அமுதே! அறிவின் பயனே! அரிஏறே!–5-8-6—உன் திருவடிகளை சேரும் முறைமை கண்டு வைத்தே துஷ்பூரமான இந்திரியங்களுக்கு இரை தேடியிட்டு எத்தனை நாள் அகன்று இருக்கக் கட வேன் – இப்படி ஆறி இருக்கப் பார்த்தால் முறையை அறிவித்தது என் –மயர்வற மதி நலம் அருளிற்றிலை யாகில் நானும் ஆறி இருக்கலாயிறே-பூர்ணே சதுர்த்தசே-வர்ஷே -என்று ஓர் அவதி பெறினும் பெற்றதோடு ஒக்கும்

கறுத்துக் கஞ்சனை அஞ்ச முனிந்தாய் கார் வண்ணா கடல் போல் ஒளி வண்ணா
இறுத்திட்டான் விடை ஏழும்  முன் வென்றாய் எந்தாய் அந்தரம் ஏழுமும்  ஆனாய்
பொறுத்துக் கொண்டு இருந்தால் பொறுக்க ஒணாப் போகாமே நுகர்வான் புகுந்து ஐவர்
அறுத்துத் தின்றிட வஞ்சி நின்னடைந்தேன்
அழுந்தூர் மேல் தின்ற வம்மானே–7-7-7-இவற்றால் வந்த நலிவை ஆற்றி இருப்போம் என்றால் ஆற்ற ஒண்ணாதபடி போகங்களைப் புஜிக்க வேணும் என்று ஐவர் நெருக்கி புஜிப்பிக்க அவர்களுக்கு அஞ்சி உன் திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –

நெடியானே கடியார் கலி நம்பீ நின்னையே நினைந்து இங்கு இருப்பேனைக்
கடியார் காளையர் ஐவர் புகுந்து காவல் செய்த அக் காவலைப் பிழைத்துக்
குடி போந்து உன்னடிக் கீழ் வந்து புகுந்தேன்
கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி
அடியேனைப் பணி யாண்டு கொள் எந்தாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே–7-7-8—நெஞ்சில் நன்மை இன்றிக்கே பிறரை நலிய நலிய இளகிப் பதியா நின்ற பருவத்தை யுடைய ஐவர் வந்து புகுந்து சிறை செய்கிற –த்யக்த்வா புத்ராம் ச தாராம் ச ராகவம் சரணம் கத –என்கிறபடியே-அவற்றைத் தப்பி உன் திருவடிகளிலே சரணம் புகுந்தேன்-

குமைத்து திரித்து வீழ்த்து வலித்து எற்றி அருவி அறுத்துக் கடனாயின இறுப்பிக்க –அதாவது –
குமைத்து – கூறை சோறு இவை தா என்று குமைத்துப் போகார்-பெரிய திருமொழி -7-7-9- -என்றும் ,
திரித்து-செக்கலிட்டு திரித்துக்கும் ஐவர் –திருவாய் -7-1-5–என்றும் ,-வீழ்த்து–கொடு வன் குழியினில் வீழ்க்கும் ஐவர் –திருவாய் -7-1-9-என்றும் ,வலித்து-எற்றி–ஐவர் திசை திசை வலித்து எற்றுகின்றனர் –திருவாய் -7-1-10–என்றும் ,-அருவி–ஐவர் அருவித் தின்றிட–பெரிய திருமொழி -7-7-1- என்றும் –
அறுத்து–ஐவர் அறுத்துத் தோன்றிட –பெரிய திருமொழி –7-7-7-என்றும் -என்கிறபடியே
தனக்கு அபீஷ்டமானவற்றை தா என்று துகைத்து இழுத்து , சரீரமாகிற செக்கிலே இட்டு ,சுழற்றி க்ரூரமாய் , கரையேற ஒண்ணாதபடி இருக்கும் விஷயங்கள் ஆகிற படு குழியில் தள்ளி ,
அவை தான் அநேகங்களாக ஸ்வ ஸ்வ விஷயங்களிலே கொடு போகைக்காக ,
நாலு திக்கிலும் இழுத்து ,நலிந்து அருவித் தின்னுமா போலேயும் ,அறுத்து தின்னுமா போலேயும் ,
என் விஷயத்தைக் காட்டு -என் விஷயத்தைக் காட்டு -என்று நெருக்கி , இப்படி பஹுவிதமாகத் தண்டித்து –
கடனாயின இறுப்பிக்க –-அதாவது –பொருள் இன்பம் என இரண்டும் இறுத்து என் ஐம்புலன்கட்குக் கடனாயின –பெரிய திருமொழி -6-2-1-என்று ஸ்ரோத்ராதிகளுக்கு ,பிராப்தமாய் இருக்கிற அர்த்த காமங்கள் என்று சொல்லப் படுகிற ,இரண்டையும் கடமை இருப்பாரை போலே அவற்றாலே பரி பூதனாய்க் கொடுத்துப் போந்தேன் என்னும் படி தங்களுக்கு பிராப்த கரங்களை இறுப்பித்து கொள்ள

(குமைத்துத்திரித்து வீழ்த்தி வவித்தெற்றி அருவியறுத்தென்றும்‌) ‘“கூறைசோறிவை தாவென்று குமைத்துப்போகார்‌” (திருமொழி 7 – 7 – 9) என்றும்‌, ”செக்கிலிட்டுத திரிக்குமைவரை”’ (திருவா. 7 – 1 – 5) என்றும்‌, ‘*கொடுவன்குழியனில்‌ வீழ்க்குமைவரை” (திருவா. 7 – 1 – 9) என்றும்‌, “(திசைதிசை வவித்தெற்றுகின்றனர்‌”” (திருவா. 7 – 1 – 10) என்றும்‌, “’அருவித்தின்றிட அஞ்சி நின்னடைந்தேன்‌”’ (திருமொழி 7 – 7 – 1) என்றும்‌, “ஐவரறுத்துத்தின்றிட அஞ்சி”? (திருமொழி 7 – 7 – 7) என்றும்‌ சொல்லுகிறபடியே இப்படி ஆராய்ச்சியற்றுத்‌ தங்கள்‌ வறமானவாறே பலபடியாலும்‌ தண்டித்து. (கடஞுயின இறுப்பிக்க) ““பொருளின்பமென இரண்டுமிறுத்தேன்‌ ஐம்புலன்கட்கடனாயின”’ (திருமொழி 6 – 2 – 1) என்று ஸ்ரோத்ராதி,களுக்கு ப்ராப்தமாயிருக்கிற அர்த்த காமங்கள்‌ என்று சொல்லப்படுகிற இரண்டையும்‌ கடமை யிறுப்பாரைப் போலே அவற்றாலே பரிபூ,தனாய்க்‌ கொடுத்துப் போந்தேன்‌ என்று அவற்றுக்கு ப்ராப்தங்களை இறுப்பித்துக்‌ கொள்ள.

கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறிக் கூறை சோறு இவை தா என்று குமைத்துப்
போவார் நானவரைப் பொறுக்க கில்லேன்
புனிதா புட் கொடியாய் நெடு மாலே
தீவாய் நாகணையில் துயில்வானே திருமாலே இனிச் செய்வது ஓன்று அறியேன்
ஆவா வென்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே–7-7-9—நீ சேஷியாமது தவிர்ந்து இவை எனக்கு நியாமகமாய்க் கொண்டு வந்து என் சரீரத்திலே குடி புகுந்தது -நான் ( வகுத்த ப்ராப்தமான திருவடிகளையே )கூறையும் சோறுமாக நினைத்து இருக்கும் அது ஒழிய வேறு சிலவற்றைத் தா வென்று என்னை நெருக்கி ஒரு ஷணமும் கால் வாங்கு கிறிலர்கள் –
நான் அவர்களுடைய நலிவைப் பொறுக்க மாட்டு கிறிலேன் –

தீர் மருந்தின்றி ஐவர் நோயடும் செக்கிலிட்டுத் திரிக்கும் ஐவரை
நேர் மருங்கு உடைத்தா அடைத்து நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்
ஆர் மருந்தினி யாகுவார்! அடலாழிஏந்தி அசுரர் வன்குலம்
வேர் மருங் கறுத்தாய்! விண்ணுளார் பெருமானேயோ!–7-1-5—ஐவர் நோயடும் செக்கிலிட்டுத் திரிக்கும் ஐவரை-சப்தாதிகள் இவ்வாத்மாவை முடிக்கும் சரீரம் -அதிலே பிரவேசித்து நெருக்கும் ஸ்ரோத்ராதிகளை -சரீரத்தில் பிரவேசிப்பித்து சப்தாதிகளை காட்டி நெருக்குகிற ஸ்ரோத்ராதிகளை –

குல முதல் அடுந் தீவினைக் கொடு வன் குழியினில் வீழ்க்குமைவரை
வல முதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய்
நில மு தல் இனி எவ்வுலகுக்கும் நிற்பன செல்வன எனப்பொருள்
பல முதல் படைத்தாய்! என்கண்ணா! என் பரஞ்சுடரே!–7-1-9–இப்படிப்பட்ட மஹா பாபங்களை விளைக்க வற்றாய் -கொடிதாய் -துஷ் பரிஹரமாய் –வலிய குழி -புக்கால் கால் வாங்க ஒண்ணாத சப் தாதிகளிலே -புகத் தள்ளும் ஸ்ரோத்ராதிகளை

என் பரஞ்சுடரே! என்று உன்னை அலற்றி உன் இணைத் தாமரைகட்கு
அன்புருகி நிற்குமது நிற்கச் சுமடு தந்தாய்
வன் பரங்கள் எடுத்து ஐவர் திசை வலித்து எற்று கின்றனர்
முன் பரவை கடைந்த அமுதம் கொண்ட மூர்த்தியோ–7-1-10-!–நீ தந்த பிரக்ருதியோட்டை கர்ம சம்பந்தமே ஹே துவாக துர்பரமான விஷயங்களை சுமத்தி ஐந்து இந்திரியங்களும் திக்கு தோறும் வலித்து நலியா நின்றன-

திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா
உருவச் செஞ்சுடராழி வல்லானே உலகுண்ட ஒருவா திரு மார்பா
ஒருவருக்கு ஆற்றி உய்யும் வகை அன்றால் உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது
அருவித் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன்
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே —7-7-1—ரஷகனான உன்னில் காட்டிலும் பாதக வர்க்கம் அணித்தாய் நின்று நலியா நின்றன – கர்ம வச்யன் ஆகையாலே கர்ம க்ருதங்கள் சேர்ந்தே இருக்கும்-நீ அவசரம் பார்த்து புகுந்தாய் -இவை சஹஜங்கள்–உண்ணிலாய 7-1–என்னுமா போலே ஒருவர் இருவர் இன்றிக்கே சேதன சமாதியால் நலியா நின்றுள்ள ஐந்து இந்த்ரியங்கள் என் பக்கல் வந்து புகுந்து என்னை நெருக்கி ஒரு ஷணமும் கால் வாங்குகிறவன வில்லை-என்னுடைய விஷயத்தைக் காட்டு -என்னுடைய விஷயத்தைக் காட்டு என்று இவை தனித் தனியே அலைத்து நெருக்க-அவற்றுக்கு அஞ்சி வந்து-சர்வ ஸ்வாமியான  உன் திருவடிகளிலே சரண ரஷணத்தில் அதிகரித்த உனக்கு அத்தை முடிய நடத்த வேண்டாவோ –

கறுத்துக் கஞ்சனை அஞ்ச முனிந்தாய் கார் வண்ணா கடல் போல் ஒளி வண்ணா
இறுத்திட்டான் விடை ஏழும்  முன் வென்றாய் எந்தாய் அந்தரம் ஏழுமும்  ஆனாய்
பொறுத்துக் கொண்டு இருந்தால் பொறுக்க ஒணாப் போகாமே நுகர்வான் புகுந்து ஐவர்
அறுத்துத் தின்றிட வஞ்சி நின்னடைந்தேன்
அழுந்தூர் மேல் தின்ற வம்மானே–7-7-7—இவற்றால் வந்த நலிவை ஆற்றி இருப்போம் என்றால் ஆற்ற ஒண்ணாதபடி போகங்களைப் புஜிக்க வேணும் என்று ஐவர் நெருக்கி புஜிப்பிக்க அவர்களுக்கு அஞ்சி உன் திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –

பொறுத்தேன் புன் சொல் நெஞ்சில் பொருள் இன்பம் என இரண்டும்
இறுத்தேன் ஐம்புலன் கட்கனாயின
வாயிலொட்டி
யறுத்தேன் யார்வச் செற்றமவை தன்னை மனத் தகற்றி
வெறுத்தேன் நின் அடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே —6-2-1—சிலரை பந்துக்களாக நினைத்து இருந்தால் அவர்களுக்கு உபகரிக்கும் போது அர்த்தம் வேணுமே – பிறரைக் கவி பாடுவது அர்த்தத்துக்காக விறே-ஆகையால் ஸ்தோத்ராதிகளுக்கு பிராப்தமாய் இருக்கிற அர்த்த  காமங்கள்   என்று சொல்லப் படுகிற இரண்டையும் கடமை இருப்பாரைப் போலே அவற்றாலே பரி பூதனாய்க் கொடுத்துப் போந்தேன்–இப்படி அர்த்த க்ரஹணம் பண்ணப் புக்கால் அதுக்கு சஹாகரித்தவர்களுக்கு ஸ்நேஹித்து வாழ்விக்கக் கடவன் என்றும்-அதுக்கு விரோதத்தை பண்ணினாரைச் செற்று முடிக்க கடவன் என்றும்-பிரதிஞ்ஞை பண்ணி அந்த சங்கல்பத்தை அனுஷ்டானம் பர்யந்தம் ஆக்கி தலைக் கட்டிப் போந்தேன்-பொருள் இன்பம் இரண்டும் இறுத்தேன் –

பாழ்த்த விதி யானவாறே –அதாவது – இப்படி ஆகையாலே ,வாழ்த்தி அவன் அடியை பூ புனைந்து ,நின் தலையை தாழ்த்து , இரு கை கூப்பு என்றால் ,கூப்பாத பாழ்த்த விதி –பெரிய திருவந்தாதி –84-என்கிற படியே வகுத்த சேஷியானவனை வாழ்த்தி ஆராதித்து ,வணங்கி கும்பிடுகைகள் ஆகிற , இவற்றில் ஒன்றிலும் ,அன்வயியாமையாலே , தத் அங்கீகார பற்றாசான ஸூஹ்ருத கந்தம் அற்று ,மனஸ் பாழ் பட்டவாறே –—

(பாழ்த்த விதியானவாறே) “வாழ்த்தி அவனடியைப்‌ பூப் புனைந்து நின்‌ தலையைத்‌ தாழ்த்திருகை கூப்பென்றால்‌ கூப்பாத பாழ்த்த விதி’” (பெ.திருவ. 84) என்று இப்படி இந்த்‌ரிய பாரவஸ்யதையாலே ஒரு கரணமும்‌ ப,க,வத்‌, விஷயத்தில்‌ ப்ர வணமாகாத படியாய்‌, நெஞ்சில்‌ ப,க,வத் ஸ்மரண லேஸமுமின்றிக்கே ஈஸ்வரன்‌ எடுக்கைக்குப்‌ பற்றாசாக ஒரு நன்மையும்‌ இல்லாதபடி யானவாறே.

வாழ்த்தி யவனடியைப் பூ புனைந்து நின் தலையைத்
தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் கூப்பாத -பாழ்த்த விதி

எங்குற்றான் என்றவனை ஏத்தாத என்னெஞ்சமே
தங்க தான் ஆம் ஏலும் தங்கு–84—உன் தலையை அவன் திருவடிகளில் தாழ்ந்து இரண்டு திருக்கையையும் கூப்பு என்றால் கூப்பாதே-எங்குச் சென்றாகிலும் கண்டு -திருவாய் –6-8-5-என்னும்படி
ஆதரத்தோடே அவனை ஏத்தாத நெஞ்சமே அவனைப் பற்றாதே கால் பாவலாம் ஆகில் தங்கு-பாழ்த்த விதி என்று-தம்முடைய அகலுகையைச் சொல்லி வெறுக்கவுமாம்-பிராப்தி பிரதிபந்தகமான கர்ம வைகல்யத்தைச் சொல்லவுமாம்

2-தன் பால் மனம் வைப்பிபதாக தேய்ந்து அற மன்னி –( இது தொடங்கி -ஈர நெல் வித்தி முடிய -பயிர் செய்யும் இறைவன் பாழ் பட்ட மனமாகிய வயலைச் செப்பன் இட்டுப் பக்தியாகிற நெல்லை விதைத்தமை ) அதாவது –தன் பால் மனம் வைக்க திருத்தி –திருவாய் -1-5-10-என்கிறபடியே இந்திரிய அவஸ்தையாலே இப்படி பட்ட பாழ் பட்ட மனஸை –பயிர் படும் படி தன் பக்கல் வைக்கப் பண்ணுகைக்காக – தேய்ந்தற மன்னி– அதாவது –எனது ஏழை நெஞ்சாளும் திருந்தாத ஓர் ஐவரை தேய்ந்தற மன்னி இருந்தான் –திருவாய் -8-7-2-என்கிற படி-கண்டது எல்லாத்திலும் சபலமாய் இருக்கிற மனஸை ,அதுவே பற்றாசாக பொதி எடுத்து ஆளா நிற்ப்பராய், எத்தனையேனும் பலவான்கள் திருத்தப் புக்காலும் திருந்தாதே இனி இப்படி ஓர் ஐவர் இல்லை என்னும்படி இருக்கிற இந்திரியங்கள் ஆகிற ஐவர் ஷயித்து , முடிந்து போம் படி , ஆசன பலத்தாலே குறும்பரை அழிக்கும் ராஜாக்களைப் போலே ,
ஸ்தாவர பிரதிஷ்டையாய் இருந்து

“தன்பால்‌ மனம்‌ வைக்கத் திருத்தி”” (திருவா. 1 – 5 – 10) என்கிறபடியே இந்த்‌ரியங்களாலே அபஹ்ருதமான மநஸ்ஸைத்‌ தன்‌ வஸமாக்குவதாக, ““எனதேழை நெஞ்சாளும்‌ திருந்தாத ஓரைவரைத் தேய்ந்தற மன்னி’” என்று பிடித்தார்க்குப்‌ பிழையாத படி சபலமான நெஞ்சைத் தங்கள்‌ வஸமாக்கிக் கொண்டு ஆளுகிற அதிகரான இந்த்‌,ரியங்‌களாகிற கள்ளர் பள்ளிகளைத்‌ தான்‌ போக்கு வரத்தா யிருக்கில்‌ ஜயிக்க வொண்ணாதென்று அவர்கள்‌ க்ஷ்யித்து நஸிக்கும்படி ஸ்தாவர ப்ரதிஷ்டை,யாயிருந்து

சார்ந்த விரு வல்வினைகளும் சரிந்து மாயப் பற்று அறுத்து
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞானச் சுடராகி யகலம் கீழ் மேல் அளவிறந்து
நேர்ந்த யுருவாய் யருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே –1-5-10—விரோதியைப் போக்கும் அளவு அன்றிக்கே மனஸ்ஸூக்குத் தானே விஷயமாம் படி அண்ணி

இருந்தான் கண்டு கொண்டே எனதேழை நெஞ்சாளும்
திருந்தாத வோரைவரைத் தேய்ந்தற மன்னி

பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்
தருந்தானருள் தான் இனி யானறியேனே-8-7-2—கண்டது எல்லாவற்றிலும் -சபலமாய் இருக்கிற என் நெஞ்சை -அதுவே பற்றாசாக இந்திரியங்கள் பணி கொள்ளாத தொடங்கிற்று – திருந்தாத-அநாதி காலம் சர்வ சக்தி திருத்தப் பார்த்த இடத்திலும் திருந்தாத வன்மையையுடைய திருந்தாத வன்மையையுடைய இந்திரியங்கள் – வோரைவரைத்-இப்படி பண்ணுகைக்கு இன்னம் ஓர் ஐவர் இல்லை -இவற்றால் பட்ட நலிவின் மிகுதியால் சேதன சமாதியால் சொல்லுகிறார்-தேய்ந்தற மன்னி-இருந்தான் -பிராகிருத விஷயங்களிலே பற்று அறும் படி வந்து புகுந்து இருந்தான் –பிராகிருத விஷயங்களில் பற்று நேராக க்ஷயிக்கும் படி தன் வடிவு அழகைக் காட்டிக் கொண்டு புகுந்து இருந்தான் விஷயாந்தரங்களிலும் வடிவு அழகிலே இறே இவன் துவக்குண்டு இருப்பது –ராஜாக்கள் சத்ருக்களை ஆசன பலத்தால் அழிக்குமா போலே இந்திரியங்களுக்கு விஷயங்களில் பற்று அரும்படி புகுந்து இருந்தான்

ஒள் வாள் உருவி வினைத் தூற்றை வேர் அறுவித்து –அதாவது – நீ பணித்த அருள் என்னும் ஒள் வாள் உருவி—பெரிய திருமொழி -6-2-4-என்கிற படியே – மா மேகம் சரணம் விரஜ–ஸ்ரீ கீதை – -என்று என்னுடைய பிரசாதத்தையே ,உனக்கு உஜ்ஜீவன ஹேதுவாக அத்யவசி என்ன – ஸ்திதோஸ்மி கத சந்தேக–ஸ்ரீ கீதை -18–66 -என்னும் படி -சகல சந்தேகங்களையும் துணித்து பொகட வற்றாய் –சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி–ஸ்ரீ கீதை -என்று அருளிச் செய்த படி , சர்வ பாபங்களையும் சேதிக்கைக்கு சமர்ததுமான ஒண்மை உடைய கிருபை ஆகிற வாளை அப்ரிதகதமாக்கி பக்தி யாகிற பயிருக்கு விளை நிலமாகக் கல்பிதமாய் இருந்துள்ள மனஸ் பாழே கிடந்தது போம் படி-கொடு வினை தூறு -திருவாய்-3-2-9-என்கிற படியே -இவனால் அடி காணவும் அறுக்க ஒண்ணாதாகவும் மூடின பாபமாகிய தூற்றை –வினைகளை வேரற –திருவாய்-3-2-1–என்றும்-வல் வினை தொடர்களை முதல் அரிந்து -திருவாய்-3-2-2–என்றும் சொல்லுகிற படி மறு கிளை உண்டாகாத படி வாசனா ருசிகள் ஆகிற ஊசி வேரோடும் ,பக்க வேரோடும் ,அறுப்பித்து வினை தூற்றை ,வேர் அறுத்து -என்னாதே –வேர் அறுவித்து -என்கையாலே நிஜர்த்தமும் தோற்றுகிறது –-வினை அறுக்கையில் , பிரயோஜக கர்த்ருத்வம் ஈஸ்வரனுக்கும் ,சாஷாத் கர்த்ருத்வம் கிருபைக்கும் ஆகலாம் இறே-(மோக்ஷயிஷ்யாமி –னிச்சாலே நானும் வேண்டா -நீயும் வேண்டா -அவை தன்னடையே விட்டுப் போகும் காண் –முமுஷுப்படி -பிறவினையைக் காட்டும் விகுதி இருப்பதால் )

(ஒள் வாளுரூவி வினைத் தூற்றை வேரறுவித்து) இப்படி இந்த்‌,ரியங்களாகிற சோரராலே ஆக்ரமிக்கப் படுகையாலே பாபமாகிற தூறு மண்டின அந்த ஸ்தலத்தை, “நீ பணித்த அருளென்னும்‌ ஒள் வாளுருவி எறிந்தேன்‌’‘ (திருமொழி 6 – 2 – 4) என்று “’மாமேகம்‌”‘ என்ற என்னுடைய ப்ரஸாதத்தையே உனக்கு உஜ்ஜீவந ஹேதுவாக அத்‌,யவஸி – என்ன, ““ஸ்தி,தோஸ்மி க.த ஸந்தேஹ கரிஷ்யே வசநம்‌ தவ?” (கீதை 18 – 73) என்னும்படி ஸம்மயங்களை யடையத்‌ துணித்துப்‌ பொகட வற்றாய்‌, ‘ஸர்வ பாபேப்‌, யோ மோக்ஷ யிஷ்யாமி”’ என்று அருளிச் செய்தபடியே அந்த பாபமாகிற தூற்றை சே,தி,க்‌கைக்கு ஸமர்த்த,மான தன்னுடைய பரம க்ருபை யாகிற வாளை உருவி, “’கொடுவினைத்‌ தூற்றுள் நின்று?’ (திருவா. 3 – 2 – 9) என்று இவனால்‌ அடிக் காணவும்‌ அடி யறுக்கவும்‌ அரிதாய்ப்‌ புகும்‌ வழி அறியுமித்தனை யொழியப்‌ புறப்பட வழி தெரியாதிருப்பதா யிருக்கிற தூற்றை, ““வினைகளை வேரற” ( திருவா. 3 – 2 – 1) என்றும்‌, “தொன் மா வல் வினைத்‌ தொடர்களை முதலரிந்து”” (திருவா. 3 – 2 – 2) என்றும்‌ சொல்லுகிறபடியே மீண்டு கிளையாதபடி ருசி வாஸனை யாகிற ஊசி வேரோடும்‌ பக்க வேரோடும்‌ அறுத்துப் பொகட்டு

பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின்னுதவாவது
அறிந்தேன் நீ பணித்த வருள் என்னும்  ஒள் வாள் உருவி
எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர வெறிந்து வந்து
செறிந்தேன்
நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே —6-2-4—அவன் பணித்த மாமேகம் -என்ற வார்த்தை ஆய்த்து-அருள் என்கிறது என் என்றால்-என்னுடைய பிரசாதத்தையே உன்னுடைய உஜ்ஜீவன ஹேதுவாக அத்யவசி என்றான் இறே–ஒள் வாள்-சம்சயங்களை அடைய துணித்துப் பொகட்டு-நஷ்டோ மோஹ -ஸ்ம்ரித் லப்த -ஸ்திதி தோஸ்மி கத சந்தேக கரிஷ்யே -என்னப் பண்ண வற்றாய் இருக்கை-

கூவிக் கூவிக் கொடு வினைத் தூற்றுள் நின்று
பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன்
மேவி அன்று ஆ நிரை காத்தவன் உலகம் எல்லாம்
தாவிய வம்மானை எங்கினித் தலைப் பெய்வனே –3-2-9–கொடிதான பாபத்தை விளைக்க வற்றாய் புக்க இடமும் புறப்பட்ட விடமும் தெரியாததான சம்சாரத்திலே யாயிற்று நிற்கிறது-

முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் –3-2-1—வெந்நாள்--ஞானம் பிறந்தால் இப்பிரக்ருதி சம்பந்தத்தோடே இருக்கிற நாள் அசோகவ நிகையிலே பிராட்டி இருந்தால் போலே-நோய் வீய–நோய் என்று சரீர சம்பந்தம் ஆதல் -விஸ்லேஷம் ஆதல் -வீய முடிய-வினைகளை–சரீர சம்பந்தத்துக்கு அடியானை பாபங்களை-வேர் அறப் பாய்ந்து–சவாசனமாகப் போக்கி -பாய்ந்து என்று சினம் தோற்றுகிறது–ஒரு சர்வ சக்தி செய்யுமத்தை நான் செய்யவோ –

வன் மா வையம் அளந்த எம் வாமனா நின்
பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்
தொன் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ –3-2-2––அநாதியாய் அநேகமாய் சர்வ சக்திக்கும் நெஞ்சு உளுக்க வேண்டும் படி பிரபலமான பாவத் தொடர்ச்சிகளை ஒன்றோடு ஓன்று அனுபந்தித்து இருக்கை –முதல் அரிந்து–வாசனையோடு போக்கி-நின் மா தாள் சேர்ந்து –-பிராப்தமாய் -ஸூ லபமாய் நிரதிசய போக்யமான திருவடிகளை கிட்டி -என்கிற ஸ்தானத்தில் சேர்ந்து என்கிறது கெடு மரக்கலம் கரை சேர்ந்தால் போலே இருக்கை

தீக் கொளீ இ-அதாவது-வெட்டின காட்டை சுட்டிப் பொகட்டுமா போலே ,மோஷ இஷ்யாமி -என்கிற
கிருபா ப்ரயுக்த சங்கல்பத்தாலே ,முந்துற அடி அறுத்த வற்றை –-இறவு செய்யும் பாவக் காடு தீக் கொளீ வேகின்றதால் –பெரியாழ்வார் -5-4-2–என்று இவ் ஆத்மாவை முடிக்கிற கர்ம சந்தானம் நெருப்பு கொழுந்தி வேகா நின்றது என்னும் படி ..-யாதேஷீ கா தூல மக்னவ் ப்ரோதம் ப்ரதூயேத
ஏவம் ஹாஸ்ய சர்வே பாப்மான ப்ரதூயந்தே
-சாந்தோக்யம் -5-24–3 –என்கிற படி-( தீயிலிட்டு தூசு போலே )உரு மாய்ந்து போம் படி தக்த மாக்கி —கவ்வை எரு இட்டு-அதாவது-ஊரவர் கவ்வை எரு இட்டு–திருவாய் -5-3-4- -என்கிற படியே பகவத் ஆபிமுக்யம் பிறந்த அளவிலே , இவன் பாகவதன் ஆனான் என்று சம்சாரிகள் சொல்லும் பழி மொழியை பக்தி ஆகிற பயிருக்கு வர்த்தகமான எருவாக இட்டு –அமுதவாறு தலை பற்றி-அதாவது –அறிவை என்னும் அமுதவாறு தலைப் பற்றி வாய் கொண்டது –பெரியாழ்வார் -5-4-2–என்கிற படியே ,-ஜ்ஞானம் ஆகிற அமுத நதியை ,வாயளவாய் தலைக்கு மேலே போம் படி ,பெருகப் பண்ணி —

(தீக்கொளீஇ) ““இறவு செய்யும்‌ பாவக்காடு தீக்கொளீஇ வேகின்றதால்‌”” (பெரியா. தி. 5- 4- 2) என்று ‘அஸந்நேவ ஸ பவதி?” என்கிறபடியே இவ் வாத்மாவுக்கு விநாஸத்தைப்‌ பண்ணுகிற பாபமாகிற காட்டை, ‘“இஷீகாதூல மக்‌,நெள ப்ரோதம்‌ ப்ரதூ,யேத, ஏவம்‌ ஹாஸ்ய ஸர்வே பாப்மாநஃ ப்ரதூ,யந்தே” (சா. 5 – 24 – 0), “போய பிழையும்‌ புகுதருவானின்றனவும்‌ தீயினில்‌ தூசாகும்‌”’ (திருப்பாவை 5) என்கிறபடியே வேம்படி பண்ணி, ‘*ஊரவர் கவ்வை எருவிட்டு” (திருவா. 5 – 3 – 4) என்று ப,க,வதபி,முக்‌,யம்‌ பிறந்தவளவிலே இவனை பாக, வதனென்று ஸம்ஸாரிகள்‌ சொல்லுகிற பழி மொழியை ப,க,வத்‌,ப,க்தி வர்த்த, கமான எருவாக இட்டு. (அமுதவாறு தலைப் பற்றி) ”அறிவை யென்னு மமுதவாறு தலைப் பற்றி வாய்க் கொண்டது’” (பெரியா. தி. 5 – 4 – 2) என்று ஜ்ஞாநமாகிற அம்ருத 

பறவை ஏறு பரம் புருடா நீ என்னைக் கை கொண்ட பின்
பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும் பதம் ஆகின்றதால்
இறவு செய்யும்  பாவக்காடு தீக்கொளீஇ  வேகின்றதால்
அறிவை என்னும் அமுதவாறு தலைப் பற்றி வாய்க் கொண்டதே -5- 4-2 ––இவ் ஆத்மாவை முடிக்கிற கர்ம சந்தானம் பெரு நெருப்பு கொழுந்தி வெந்திட்டதால்-ஸ்ரீ ஆழ்வாரும் ஸ்ரீ ஈஸ்வரனும் சம்ச்லேஷித்த அளவிலே அனுமதி வேண்டாதே வெந்தது ஆய்த்து – காண்டா வனம் வெந்தால் போலே-ஞானம் அம்ர்தமாகிற ஆறு பெருகி   வாய் அளவாய் தலைக்கு மேல் போகா நின்றது-அதனில் பெரிய என் அவா -என்றபடி-அநு கூல ஞானம் ஆகிற பெருக்காறு-எல்லாம் மென்மேலே ஒரு முகமாய் பெருக்கிடா நின்றது –

மாயனை மன்னு வட மதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்–5--உத்தர பூர்வாகக்ங்கள்-பால் குடித்து வியாதி போக்குமா போலே – இனியது அனுபவிக்க இன்னாதது குலையும்

ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னை சொல் நீர்படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்

பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ! கடியனே?–5-3-4-ஊரார் சொல்லுகிற பழியை ப்ரேமத்துக்கு எருவாக இட்டு -பிராதி கூல்ய-நிவ்ருத்தி பிறந்து -இவ்விசயத்தே கை வைத்த அன்றே பழி சொல்லாத தொடங்கினார்கள் –விபீஷணஸ்து தர்மாத்மா நது ராக்ஷஸ சேஷ்டித்த -என்றாள் இறே ஒருத்தி -நான் மறக்கப் பார்த்தாலும் -அவர்கள் ஸ்மாரகராய் அவத்யக்கரராக நின்றார்கள் -இவர்களால் இறே எனக்கு தரித்து இருக்க லாயிற்று

ஈரி யாய் கசிந்ததிலே – அதாவது –கண்ணனுக்கு என்று ஈரி யாய் இருப்பாள் -திருவாய் -6-7-9–என்றும் ,-கசிந்த நெஞ்சினளாய் –திருவாய் -6-7-8–என்றும் சொல்லுகிற படி அந்த ஞான வாரியாலே -( வெள்ளத்தால் )– நல்லது கண்டால் அவனுக்கு என்னும் அனுசந்தானத்தாலே -ஆர்தரதை விளையும் படி ,–ஈர நெல் வித்தி--அதாவது –சங்கமாகிற நெல்லை விதைத்து .நெஞ்சு பதம் செய்து ,செவ்வி வாய்த்த வாறே அந் நெஞ்சிலே–3-எழு நாற்றுக்களையும் வேர் முதல் மாய்த்து ( எழு நாற்று -என்ற இதில் தொடங்கி தலை வணக்கினவாறே -வரை மனமாகிய வயலிலே விதைத்த பக்தியாகிற நெல் முளைத்துக் கருவிலே ஈன்று காய்த்து முற்றின படியை சொல்லிற்று )-அதாவது – செய்தலை எழு நாற்று –பெரியாழ்வார் -3-7-9-என்கிறபடியே ,-தத் பிரத்யாசன்னமாய் , ததேக பரதந்த்ரமாய் ,ததேக போக்யமாய் ,வளருகிற இப் பயிரில் ,–வேர் முதல் மாய்த்து–அதாவது –-கர்த்ருத்வ போக்த்ருத்வ புத்தியை விளைக்கும் அஹங்கார மம காரங்களாகிய களையையும் –நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து–திருவாய் -1-2 3–என்கிறபடியே வூசி வேரோடே பறித்து பொகட்டு–

(ஈரியாய்க் கசிந்ததிலே) “’கண்ணனுக் கென்று ஈரியா யிருப்பாள்‌”” (திருவா. 6 – 7 – 9) என்றும்‌, ”கசிந்த நெஞ்சினளாய்‌ ”” (திருவா. 6 – 7 – 8) என்றும்‌, அந்த ஜ்ஞாந வாரியாலே நெஞ்சு பதஞ் செய்து செவ்வி வாய்த்தவாறே. (ஈர நெல் வித்தி) ஸங்க,மாகிற நெல்லை விரைத்து. (எழு நாற்றுக்களையையும்‌ வேர் முதல்‌ மாய்த்து) ‘“செய்த் தலை யெழு நாற்று”’ (பெரியா. தி. 3 – 7 – 9) என்று சொல்லுகிற அந்தப் பயிரிலுண்டான ““நீர் நுமதென்றிவை வேர் முதல்‌ மாய்த்து ”’ (திருவா. 1 – 2- 3) என்று அஹங்கார மமகாரமாகிற களையை ஊசி வேரொடு பறித்துக் பொகட்டு

காரியம் நல்லனகள் அவைகாணில் என் கண்ணனுக்கு என்று
ஈரியா யிருப்பாள்
இதெல்லாம் கிடக்க இனிப்போய்ச்
சேரி பல்பழி தூஉய் இரைப்பத் திருக்கோளூர்க்கே
நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே.–6-7-9–கிருஷ்ணனுக்கு என்றால் மேல் ஒன்றும் சொல்ல மாட்டாதே -அவன் குணங்களை அனுசந்தித்து நீராய் இரா நின்றாள் -ஈரித்து இருக்கும் -ஆர்த்த ஹ்ருதையாய் இருக்கும்

கைத் தலத்துள்ள மாடழியக் கண்ணாலங்கள் செய்து இவளை
வைத்து வைத்து கொண்டு  என்ன வாணிபம் நம்மை வடுப்படுத்தும்
செய்த் தலை எழு நாற்றுப் போலே   அவன் செய்வன செய்து கொள்ள
மைத் தட முகில் வண்ணன் பக்கல் வளர விடுமின்களே – 3-7-9—செய்த் தலையிலே விளைந்த நாற்று
உடையவன் வேண்டினபடி விநியோகம் கொள்ளுமா போலே இவளையும் அவன் வேண்டினபடி செய்து கொள்ள

நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து இறை
சேர் மின் உயிர்க்கு அதன் நேர் நிறையில்லே–1-2-3—அனர்த்த கரமான அஹங்கார மமகாரங்களை-இவற்றை சவாசனமாகப் போக்கி-இது அக்னி நா சிஞ்சேத்-போலே துஷ்கரம்-இவை நேராக விடும் போது பகவத் விஷயத்தைப் பற்றி விட வேணும்-அவனைப் பற்றும் போது இவற்றை விட்டு அல்லது பற்ற ஒண்ணாது-ஆகையாலே இதரே தராஸ் ராயக்ரச்தம்-ஆனால் இதற்குப் பொருள் என் -என்னில் -ஆச்சார்ய சேவையாலும் சாஸ்திர அப்யாசத்தாலும் இவை அபுருஷார்த்தம் என்று அத்யவசிக்கை
இரண்டு வ்ருஷம் சேர நின்றால்-ஒன்றிலே குட்டமிட்டுப் பெருங்காயத்தை வைத்தால் மற்றையது நிற்க இது க்ரமத்தால்-உலர்ந்து போமா போலே –இந்த ஜ்ஞானம் பிறந்தால் இவை ஸ்வ கார்யம் செய்ய மாட்டாது

பட்டி சேவை அதக்கி-அதாவது – களை பறித்தாலும் போராதே , பட்டி புகாமல் நோக்கினால் இறே பயிர் தலைப் பெற்றுச் செல்லுவது –ஆகையாலே –வன் புலச் சேவை அதக்கி—பெரியாழ்வார் -5-2-3-என்கிற படி , விஷயாந்தரங்களிலே பிரவணமாய் ,பகவத் பக்தியை தலை அழிக்கை யாலே , பக்தி யாகிற இப் பயிருக்கு பட்டியான இந்திரியங்கள் ஆகிற சேக்கள் உடைய ஸ்வைர சஞ்சார ஹேதுவான கர்வத்தைப் போக்கி —மீது கொள்ளாமல் குறிக் கொள் வித்து –அதாவது – பயிர் பல பர்யந்தம் ஆனாலும் ,பலிதாம் சத்தை ,ராத்ரிசரர் அபஹரிக்க யோக்யதை உண்டாகையாலே ,ரஷை பண்ணுவிக்க வேணும் ஆயத்து ..-அப்படியே –விளைந்த தானியமும் ராக்கதர் மீது கொள்ள கிலார்கள்–பெரியாழ்வார் -4-4-8–என்கிற படி
அனந்யார்ஹமாம்படி–அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் –திருவாய் -5-2-5-என்று ராஷச பிரக்ருதிகளும் , ஆசூர பிரக்ருதிகளுமாகச் சொல்லலாம் படியான அபாகவாத ஜனங்கள் -எங்களுக்கும் இவன் ஸ்நேஹீ -என்று இருக்கும் அவ் வழியாலே ,-இத்தை அபஹரிக்கைக்கு அவகாசம் அற -பக்தியாகிற பயிர் விளைந்து இருக்கும் நெஞ்சுக்கு –-குறிக்கொள்வித்து –-அதாவது-பக்தியாகிற பயிர் விளைந்து கிடக்கிற நெஞ்சுக்கு – பறவை அரையா உறகல் பள்ளி அறைக் குறிக் கொள்மின் -பெரியாழ்வார் -5-3-9-என்கிற படியே காவல் அடைத்து —

(பட்டிச் சேவதக்கி ) வன் புலச்சேவை யதக்கி -பெரியா -5-2-3 என்கிறபடியே அந்தப் பயிருக்குப் பட்டியான இந்த்ரியங்களாகிற சேக்களினுடைய ஸ்வைர ஸஞ்சார ஹேதுவான கர்வத்தைப் போக்கி (மீது கொள்ளாமல் ) விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ள கிலார்கள் -பெரியா -4-4-8- என்று அந்த பக்தியாகிற தானியம் அப்ராப்த விஷயத்திலே போகாதே –பள்ளியறை குறிக்கொள் மின் -என்று காவலடைத்து –(கடல் புரைய விளைத்து ) 

வயிற்றில் தொழுவைப் பிரித்து வன் புல சேவை அதக்கி
கயிற்றும் அக்கும் ஆணி கழித்து காலிடை பாசம் கழற்றி
எயிற்றிடை மண் கொண்ட எந்தை யிராப் பகலா ஓதுவித்து என்னை
பயிற்றிப் பணி செய்யக் கொண்டான் பண்டன்று பட்டினம் காப்பே -5- 2-3 –இந்திரியங்கள் ஆகிற வலிய சேக்களை அதக்கி -நெருக்கி – சேவதக்குவார் -போலே -என்னக் கடவது இறே-காவலில் புலனை வைத்து -(திருமாலை -1 )

நளிர்ந்த சீலன் நயாசீலன் அபிமான துங்கனை நாள் தோறும்
தெளிந்த செல்வனை சேவகம் கொண்ட செம்கண் மால் திருக் கோட்டியூர்
குளிர்ந்து உறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவார் உள்ள நாட்டினில்
விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ள கிலார்களே -4- 4-8 ––இதுக்கு ஏகாந்தமான குணங்களை சிநேகத்தோடு சொல்லுவார்  உள்ள நாட்டினுள்-அவர்கள் அளவல்ல-அவர்கள் சம்பந்தம் உடையவர் அளவல்ல-அவர்கள் இருந்த ஊர் அளவல்ல – அவ்  வூரோடே சேர்ந்த நாட்டினுள் விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ள கிலார்களே–தனக்கும் தம் பந்துக்களுக்கும் என்னல் இறே அவர்கள் கொள்ளுவது-பகவத் பாகவத விஷயங்களுக்கு என்றால் அவர்களுக்கு கொள்ள சக்தி இல்லை
புனத்தினைக் கிள்ளி புதுவவி காட்டி வுன் பொன் அடி வாழ்க (5-3 )-என்று இறே இவர்கள் இருப்பது –

செய்கின்ற தென் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்ற திவ்வுலகத்து
வைகுந்தன் பூதங்களே யாய் மாயத்தினால் எங்கும் மன்னி
ஐயம் ஒன்றில்லை அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்
உய்யும் வகை இல்லை தொண்டீர் ஊழி பெயர்த்திடும் கொன்றே.–5-2-5—அஸூர ராக்ஷஸரான நீங்கள் மனுஷ்ய வேஷத்தை கொண்டு பிறந்து கலந்து திரிகிறீர் உள்ளீர் ஆகில்-

கடல் புரைய விளைந்து தலை வணக்கினவாறே –அதாவது –காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி –திருவாய் -5-3-4–என்கிறபடியே எருவும் நீரும் உண்டானாலும் , மேல் வர்ஷம் இல்லாத போது பயிர் தலை குளிர்ந்து வளராது என்று ,காள மேக நிபஸ்யமான வடிவழகை , வர்ஷித்து வளர்க்கையாலே ,அந்த பக்தி ஆகிற பயிர் கடல் போலே ,அபரிசேத்யமாம்படி பலித்து .-தலை வணக்கினவாறே –அதாவது –வரம்பற்ற கதிர்ச் செந்நெல் தாள் சாய்த்துத் தலை வணக்கும் –பெரியாழ்வார் -4-9-8–என்கிற படி பலித்த பயிரானது பரி பக்குவமாய் தலை வணங்குமா போலே ,
பலிதமான அதனுடைய பரிபாக நிபந்தனமான ஆர்த்தியால் வந்த பாரவச்யம் பிறந்தவாறே —நாளு நாள் கோள் குறையாத நின்றார் அறியாமல் குந்தம் கொண்டு ஆராமை உண்டு-( நாளு நாள்-இது முதல் முன்னம் பாரித்து முடிய விளைந்த நெற்களை உரிய காலத்திலே அறுத்து –நெற்களை வேறாகப் பிரித்து-பின் அரிசியாக்கி -பின் சோறாக்கி – உண்டு பயன் பெற்றமயைச் சொன்னபடி ) –அதாவது –
பத்தி பரிமாணம் சொன்ன இத்தால் பலித்தது – தத் ஆஸ்ரயமான ஆத்ம வஸ்து பகவத் போக்யமாம் படி திருந்தினமை இறே –ஆகையால் –

காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி -5-3-4- என்று எருவும் நீரும் உண்டானாலும் மேல் வர்ஷம் இல்லாதபோது பயிர் அபி விருத்த மாகாமையாலே காளமேக நிபஸ்யமான வடிவழகாலே அபரிச்சேதயமான சமுத்திரம் போலே அந்தப் பக்தியாகிற பயிரை அபி விருத்தமாக்கி (தலை வணக்கினவாறே ) வரம்புற்ற கதிர்ச் செந்நெல் தாள் சாய்த்துத் தலை வணக்கும் -பெரியா -4-9-8-என்கிறபடியே அந்தப் பக்தி பரிபாகத்தாலே பலித்த பயிரானது தலை வணக்குமா போலே ஆர்த்தியால் வந்த பாரவஸ்யம் விளைந்தவாறே

ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னை சொல் நீர்படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனி
நம் கண்ணன் தோழீ! கடியனே?–5-3-4—ஊரார் பழியும் -தாயார் ஹித வசனமும் -கேளாத படியான காதல் -அமர்ந்த காதல் -தர்ம அனுபந்தியான காதல் -பெரிதான அமரை விளைத்த காதல் -உஊராரை பூசல் ஆக்கின காதல் என்னவுமாம் –ஈரம் -சங்கம் /காதல் -காமம் –சங்காத் சஞ்சாயதே காம கடல் புரைய விளைவித்த-அப்ரமேயோ மஹா த-என்ற கடல்தி ஒப்பாம் அத்தனை -கிடையா விடினும் விட மாட்டாத காதல் என்கை-கடல் புரைய என்றார் முதல் -அநந்தரம் கடலின் மிகப் பெரிதால் என்றார் –பின்னை மண்டிணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -என்றார் -முடிவில் அதனில் பெரிய என் அவா –என்றார் –இது இறே காதல் பெருகின படி -இது இறே பொய் நின்ற ஞானத்திற்கு பின்பு இவ்வளவும் வர விளைத்துக் கொண்ட கார்யம் –

உரம் பற்றி இரணியனை உகிர் நுதியால் ஒள்ளிய மார்பு உறைக்க ஊன்றிச்
சிரம் பற்றி முடி இடிய கண் பிதுங்க வாய் அலரத் தெழித்தான் கோயில்
உரம் பெற்ற மலர்க் கமலம் உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட
வரம் புற்ற கதிர் செந்நெல் தாள் சாய்த்து தலை வணங்கும் தண் அரங்கமே -4- 9-8 –சேற்று வாய்ப்பாலே உரம்பெற்று இருக்கிற தாமரைப் பூவானது –திரு உலகு அளந்து அருளின போது-மேல் எடுத்த திருவடிகளைப் போலே கிளற வளர்ந்து பிரகாசியா நிற்க-அப்போது –லங்கைஸ் சூராணாம் -என்கிறபடியே தேவர்கள் முதலானவர்கள் திரண்டு காலை நீட்டி தலையை வணங்கி தண்டன் இட்டு கிடந்தால் போலே –

4-நாளு நாள் வந்து என்னை முற்றவும் தான் உண்டான்–திருவாய் -9-6-8- -என்றும் ,-கோட் குறை பட்டது என் ஆர் உயிர் —திருவாய் -9–6-7–என்றும் ,-நின்றார் அறியா வண்ணம் என் நெஞ்சும் உயிரும் அவை உண்டு-10-7-1- -என்கிற படியே-ஒரு நாள் புசித்து விடுகை அன்றிக்கே ,நாள் தோறும் வந்து புஜியா நிற்கச் செய்தே .பின்னையும் , பர்யாப்தன் அன்றிக்கே படுகிற அலமாப்பு கண்டு ,இத் தலையிலே சிறிது தொங்கிற்று உண்டு என்று நிரூபித்து அறிய வேண்டும் படியாக இப் பரிமாற்றத்தில் தலை நின்று- பிராட்டி ,திருவடி ,திரு அனந்த் தாழ்வான் -முதலானாரும் அறிய மாட்டாதபடி , பெரும் பசியர் ஆனவர்கள் விளைந்த நெல்லை சேர அறுத்து கொண்டு போய் , புஜிக்கப் பற்றாமே முற்றின வளைவுகளை குந்தம் கொண்டு புசிக்குமா போலே , முக்தனான வாறே ,பின்னை சேரப் புஜிக்க பற்றாத தன் அபிநிவேசத்தால், இந்த சரீரதோடே இருக்கச் செய்தே விளைந்த பரிபாக அனுகுணமாக – மனக்காராமை மன்னி உண்டிட்டாய் —திருவாய் -10-10-6-என்கிறபடியே , மனசுக்கு ஒரு காலும் திருப்தி பெறாதே மென் மேலும் விரும்பி புசித்து —

(நாளு நாள் கோள் குறையாக நின்றாரறியாமல்‌ குந்தங் கொண்டு ) “நாளுநாள்வந்தென்னை முற்றவும்‌ தானுண்டான்‌”’ (திருவா. 9 – 6 -8)என்றும்‌, ““கோட் குறைபட்டது என்னாருயிர்‌ கோளுண்டே’‘ (திருவா. 9 – 6 – 7) என்றும்‌, ““என்னெஞ்சுமுயிரு முள் கலந்து நின்றாரறியா வண்ணம்‌ என்னெஞ்சு முயிருமவை யுண்டு”” (திருவா. 10 – 7 – 1) என்றும்‌ சொல்லுகிறபடியே நாள் தோறும்‌ பு,ஜியா நிற்கச் செய்தே பர்யாப்தனன்றியிலே அவனுடைய அலமாப்புக் கண்டு இத் தலையிலே சிறிது உண்டென்று நிரூபிக்கலாம்படி யாயும்‌, ப,க,வத,நுப, வத்தில்‌ தலை நின்ற பிராட்டி திருவடி திருவநந்தாழ்வான்‌ தொடக்கமானவர்களும்‌ அறிய வொண்ணாதபடி குந்தங் கொண்டு பு,ஜித்தும்‌. (ஆராமை யுண்டு) “மனக்காராமை மன்னி உண்டிட்டாய்‌’” (திருவா. 10 – 10 & 6) என்று இப்படிக்‌ குந்தங் கொள்ளுகையாலே அபர்யாப்தனாம்படி புஜித்து ,

கோள் உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான்
நாளும் நாள் வந்து என்னை முற்றவும் தானுண்டான்
காள நீர் மேகம் தென் காட் கரை என் அப்பற்கு
ஆள் அன்றே பட்டது என் ஆர் உயிர் பட்டதே–9-6-8—ஒரு நாள் அனுபவித்து நம்மது அன்றோ என்று கை வாங்கி இருக்கை அன்றிக்கே நாள் தோறும் நாள் தோறும் அபூர்வமாக அனுபவியா நின்றான் –
என்னை முற்றவும் தானுண்டான்-சம்சாரத்திலே அணு பரிமாணமான இவ்வஸ்துவை விபுவான தான் விளாக்குலை கொண்டு அனுபவித்தான் என்கிற இது தனக்கு ஏற்றமாம் படி கௌரவியா நின்றான் –

காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–9-6-7—என்னாத்மாவை நிச்சேஷமாக புஜிக்க செய் தேயும் இத்தலையிலே சிறிது சேஷித்தது –அவன் சாபேஷனாய்ப் போகையாலே இத்தலையிலே சிறிது சேஷித்தது என்று இருக்கிறார் -இப்போது இருந்து கிலேசப்படக் காண்கையாலே சிறிது தொடங்கிற்று உண்டு என்கிறார் -ஒரு சர்வஞ்ஞான் இல்லாத ஒன்றிலே இத்தனை வியாமோஹம் பண்ணக் கூடாது என்று இருக்கிறார் –

செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் திருமால் இரும் சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே
–10-7-1-கலவிக்கு தேசிகரான பிராட்டி திருவனந்த ஆழ்வான் முதலானோர்க்கும் அபூமியாம் படி யாய்த்து என்னோடு கலந்து –ஆருயிர் பட்டது எனதுயிர் பட்டது -என்றார் இறே –என்-நெஞ்சும் உயிரும் அவை உண்டு –தேஹாத்ம விவேகம் பண்ண அறியாதே யாய்த்து புஜித்தது–சேதனனையும் அசித்தோபாதி பரதந்தனாக்கி புஜித்தான் –உருவமும் ஆருயிரும் உடனே யுண்டான் -என்கிறபடியே எனக்கு என்ன மாட்டாமைக்கு -அசித்தோபாதி யாய்த்து சேதனனும் –-போகத்தில் இழிகிற போது இருவராய் இழிந்து -எதிர்த்தலையைத் தோற்பித்து -போக்தாவும் அபிமானியும் தானே யானான் –நிறைந்தானே–அவாப்த ஸமஸ்த காமன் ஆழ்வாரைப் பெறுவதற்கு முன்பு குறைவாளனாய் -இவரைப் பெற்ற பின்பு -பூர்ணன் ஆனான்-

எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்

புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6-விரும்பி நிரந்தரமாக புஜித்தாய்-இனி உண்டு ஒழியாய்-நீ தொடங்கின காரியத்தை நடுவே குறை கிடைக்க விடாதே விஷயீ கரித்தே விடாய் -நீ ஆரம்பித்த காரியத்தில் குறை கிடப்பது உண்டோ -நீ இவ்வளவு புகுர நிறுத்துகைக்கு நான் சஹகரித்தது உண்டோ மேல் நான் ஓன்று செய்கைக்கு

காலக் கழிவாலே நிலத்து உகாமல் பற்று அறுத்து –அதாவது –காலக் கழிவு செய்யேல்–திருவாய் -2-9-2–என்றும் ,-மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல—பெரிய திருமடல் -என்றும் சொல்லுகிற படி பரிபக்வமான இவ் வஸ்து ,கால ஷேபத்தால் தரைப் பட்டு மங்கிப் போகாமல் ,-பற்று அறுத்து –
அதாவது – வினை பற்று அறுக்கும்-பெரிய திருமொழி -11-4-9- -என்கிற படி – பிராப்தி விரோதமான கர்மங்களை அறுத்து –தண்டால் அடித்து பதர் அறுத்து – அதாவது – அறுத்த நெல் கதிரை தடியாலே அடித்து பதறும் மணியும் பிறிக்குமா போலே-அருள் என்னும் தண்டால் அடித்து -பெரிய திருவந்தாதி -26-என்கிறபடி தன் உடைய கிருபை என்னும் த்ருட தர சாதனத்தாலே ,நெல்லோடு ஒக்க விளைந்து இருப்பதாய் , அசாரமான பதர் போல் இருக்கிற ஆத்ம அனுபவத்தில் ருசியை அறுத்து –போர்த்த தோல் விடுத்து –அதாவதுஅந் நெல்லில் உமியை விடுவிக்குமா போலே , போர்த்த பிறப்போடு நோயோடு மூப்பொடு இறப்பவை பேர்த்து ––திருவாய் -7-5-10- என்கிற படி , ஆத்மாவை பொதிந்து கொண்டு கிடப்பதாய் ,ஆதிவ்யாதிகளுக்கும் (மனத்தின் சோர்வும் சரீர நோயும் ) ,ஷட் பாவ விகாரங்களுக்கும் ,அடியான ஸ்தூல தேகத்தினுடைய ,விமோசனத்தைப் பண்ணி —

காலக் கழிவாலே நிலத்துகாமல்‌ பற்றறுத்து) ‘”காலக் கழிவு செய்யேலே”’ (திருவா. 2-9 – 2) என்றும்‌, மன்னும்‌ வறுநிலத்து வாளாங் குகுத்தது போல்‌”‘ (பெ.மடல்‌] என்றும்‌, இப்படி பக்வமான ஸமதந்தரம்‌ கால க்ஷேபத்தாலே மங்கிப் போகாதபடி, ‘ வினை பற்றறுக்கும்‌”’ (திருமொழி 11 – 4 – 9) என்றும்‌, “*வினைகள்‌ பற்றறுதல்‌” (திருச்ச. 74) என்றும்‌ சொல்லுகிறபடியே ப்ராப்தி விரோதி,யான கர்மங்களை அறுத்து, அருளென்னும்‌ தண்டாலடித்து‘” (பெ.திருவ. 26) என்றும்‌, அவனுடைய பரம க்ருபையாலே நெல்லோடே கூடி விளைந்திருப்பதாய்‌, அஸாரமான பதர் போலே இருக்கிற ஆதமாநுப,வத்தில்‌ ருசியை யறுத்து, (போர்த்த தோல் விடுத்து) “போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடிறப்பவை பேர்த்து” (திருவா. 7 – 5 – 10) என்கிறபடியே ஆதி,வ்யாதி, களுக்கும்‌ ஷட்‌,பாவ விகாரத்துக்குமடியான ஸ்தூ,ல தே,ஹத்தையும்‌ கழற்றி

ஈதே யானுன்னைக் கொள்வது எஞ்ஞான்றும் என்
மைதோய் சோதி மணி வண்ண வெந்தாய்
எய்தா நின் கழல் யான் எய்த ஞானக்
கைதா காலக் கழிவு செய்யலே –2-9-2--செய்கிறோம் என்ன ஒண்ணாது செய்து கொடு நிற்க வேணும் –

மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல் ———-89
என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும்–தனக்காகக் கண்டது அன்றிக்கே பிறர்க்காக கண்ட வஸ்து பிறர்க்கு ஆகப் பெறாதே தானே நின்று –வெறு நிலத்திலே நிஷ் பிரயோஜனமாகப் பொகடுமா போலே விழுந்த தரை தன்னிலே – விநியோகம் கொள்ளுகைக்கு யோக்யமாய் இருப்பதொரு வஸ்துவும் இன்றிக்கே பாழே பொகட்டால் போலே நல் நறு வாசம் தான் இருக்கிறபடி –

துணை நிலை மற்று எமக்கோர் உளது என்று இராது தொழுமின்கள் தொண்டர் தொலைய
உண முலை முன் கொடுத்த வுரவோளதாவி உகவுண்டு வெண்ணெய் மருவி
பணை முலை யாயர் மாதர்  உரலோடு கட்ட அதனோடும் ஓடி அடல் சேர்
இணை மருது இற்று வீழ நடை கற்ற தெற்றல் வினை பற்று அறுக்கும் விதியே —11-4-9–ஓன்று என்னலாம் படி நின்ற மருதுகள் முறிந்து விழும்படியாக நடை கற்ற தெள்ளியவன் நம்முடைய பாபத்தை ச வாசனமாக போக்கும் இது நிச்சிதம் -கர்ம பலன்களை -ருசி வாசனைகள் உடன் போக்குவான் என்றபடி-

அறிந்து அறிந்து வாமனன் அடி இணை வணங்கினால்
செறிந்து எழுந்த ஞானமோடு செல்வமும் சிறந்திடும்
மறிந்து எழுந்த தெள் திரையுள் மன்னு மாலை வாழ்த்தினால்
பறிந்து எழுந்து தீ வினைகள் பற்று அறுதல் பான்மையே –74—பகவத் ப்ராப்தி பந்தகங்களாய் -ஸ்வ ஆஸ்ரயித்தில் வேர் விழுந்தவை அவற்றை விட்டு-பறிந்து போய்-மறுவல் இடாதபடி வாசனையோடே போம்படி பண்ணுகை–அவன் ஓர் ஏற்றம் செய்தானாக அன்றிக்கே ப்ரக்ர்தியாய் இருக்கை-இதுவும் -சர்வ பாபேப்யோ மோஷ யிஷ்யாமி -என்கிறபடியே கைங்கர்யத்துக்கும் உப லஷணம் –

யானும் என் நெஞ்சமும் இசைந்து ஒழிந்தோம் வல் வினையைக்
கானும் மலையும் புகக் கடிவான் தானோர்
இருளன்ன மா மேனி எம் மிறையார் தந்த
அருள் என்னும் தண்டால் அடித்து —26-
–மற்று ஓன்று காணாமல் ஸ்ரம ஹரமான வடிவை யுடைய என் ஸ்வாமியுடைய ப்ரஸாதமாகிற தண்டாலே ஹிம்ஸித்து (மற்று ஓன்று காணாமல்-வினையைப் போக்குகைக்கு வேறே ஒரு உபாயம் காணாமல் அவன் அருளாலே போக்கினான் என்றபடி )

வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை
பேர்த்துப் பெருந்துன்பம் வேரற நீக்கி
த தன் தாளின் கீழ்ச்
சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே.–7-5-10—ஆத்ம ஸ்வரூபம் தெரியாத படி அறிவு கெடுக்கும் ஜென்மம் என்ன -அது புக்க இடத்தே புக்க கடவதான வியாதி என்ன -அத்தை பொறுத்தாலும் அவர்ஜனீயமாய் வரக் கடவதான மூப்பு என்ன -அதுக்கு எல்லையான மரணம் என்ன -இவற்றை அடைய –பேர்த்துப் –விரகர் நெடும் சுவ போக்க வேண்டும் படி இ றே அதின் கனம்-அஹம் சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்றான் இறே –பெருந்துன்பம் வேரற நீக்கித -ஆத்ம அனுபவம் ஆகிற மஹா துக்கத்தை வாசனையோடு போக்கி -ப்ரக்ருதி ப்ராக்ருதங்களுக்கு அஸ்த்தர்ம் என்பதொரு நன்மை உண்டு -அபுருஷார்த்தம் ஸ்திரமானத்துக்கு மேல் இல்லை இறே மஹா துக்கம் –
தன் தாளின் கீழ்ச்-சேர்த்து -அதுக்கு மேலே நித்ய கைங்கர்யத்தை கொடுத்து அருளி

சூஷ்ம ஓட்டும் நீரிலே கழுவி-அதாவது – அநந்தரம் தண்டுலத்தை தவிடு அற கழுவுமா போலே ,ஸ்தூல தேஹம் போனாலும் , தான் போகக் கடவதன்றிக்கே ,சம்சரண ஹேதுவாய்க் கொண்டு , போந்ததாய் ,பகவத் அனுபவ விரோதியாய் இருக்க செய்தே ,விரஜா பர்யந்த கமன சாதனமாய் கிடந்த சூஷ்ம சரீரத்தையும் ,-தத்தோய ஸ்பர்ச மாத்ரென -என்கிற படியே –விரஜா ஜல ஸ்பர்சத்தாலே வாசனா ரேணுக்களுடன் போக்கி ,-கர்ம சம்பந்தம் அறுகையாலே ,சூஷ்ம சரீரம் இருக்கைக்கு ஹேது இல்லாமையால் ,இங்கே கழித்து விடலாய் இருக்க செய்தே ,விரஜா பர்யந்தம் இவனுக்கு கமன சாதனமாக ஈஸ்வரன் தன் இச்சையாலே வைத்து ,விரஜையிலே உள் புக்கவாறே கழித்து விடும் – -என்று இறே நம் ஆச்சார்யர்கள் அருளிச் செய்வது ..-சூஷ்ம பிரகிருதி சம்பந்தம் கிடக்கும் அளவும் ,வாசனா ரேணுவும் கிடக்கையாலே , அதுவும் அப்போது ஆய்த்து நிவ்ருத்தம் ஆவது ..-விரஜைக்கு சென்று கிட்டி , வன் சேற்று அள்ளலையும் வாசனா ரேனுவையும் கழுவி-என்றார் இறே (–ஸ்ரீ பிள்ளைலோகாச்சார்யாரும் அர்ச்சிராதி கிரந்தத்தில் )-வேறோர் கலத்து இட்டு-அதாவது-சீரார் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை வேரார் நுதல் மடவாள் வேறோர் கலத்திட்டு –சிறிய திருமடல் -30- என்கிறபடியே ,ஸ்தூல சூஷ்ம ரூபியான பிரக்ருதியில் நின்றும் விவேகித்து வாங்கின இவ் ஆத்ம வஸ்துவை அமானவ கர ஸ்பர்சத்தாலே ,அப்ராக்ருத தேஹத்திலே பிரவேசிப்பித்து-

ஸூஷ்ம வொட்டும்‌ நீரிலே கழுவி) ஸ்தூ,ல தே,ஹம்‌ போனாலும்‌ ஸம்ஸரிக்கைக்கு யோக்‌,யமாகையாலே ப,க,வத,நுப,வ விரோதி,யுமாய்‌, விரஜாதீர பர்யந்தமாக இவ்வாத்மாவுக்கு க,மந ஸாத,நமுமாய்‌, துஷம் போலே ஸ்வரூபத்தைப் பற்றிக் கிடக்கிற ஸுக்ஷ்ம ப்ரக்ருதியையும்‌ ‘*தத்தோய ஸ்பர்ஸ மாத்ரேண”‘ என்கிறபடியே விரஜா ஜல ஸ்பர்பத்தாலே வாஸநா ருசிகளோடே போம் படி கழுவி. (வேறோர் கலத்திட்டு) “சீரார்‌ தயிர்‌ கடைந்து வெண்ணெய்‌ திரண்டதனை வேரார்‌ நுதல்‌ மடவாள்‌ வேறோர்‌ கலத்திட்டு”” (சி.மடல்‌) என்று ஸ்தூ,ல ஸூக்ஷ்மமான ப்ரக்ருதியினின்றும்‌ விவேகித்து எடுக்கப் பட்டு ப,க,வத்‌, விநியோக அர்ஹமான ஆத்ம ஸ்வரூபத்தை அமாநவ கர ஸ்பர்ஸத்தாலே அப்ராக்ருத விக்‌,ரஹ ப்ரவேஸத்தைப் பண்ணி வைத்து

சீரார் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை
வேரார் நுதல் மடவாள் வேரோர் கலத்திட்டு
நாரார் உறி ஏற்றி நன்கமைய வைத்ததனைவேரோர் கலத்திட்டு – வெண்ணெய் பரிமாறும் கலத்திலே இட்டு வைக்கில் நாற்றமே குறியாக அறியும் என்று த்ரவ்யாந்த்ரம் பரிமாறும் கலத்திலே இட்டு வைத்தாள் காணும்

பைம்தொடி மடந்தையரை கொண்டு ஷட் குண ரச அன்னமாக்கி-அதாவது –-அணைவர் போய் அமரர் உலகில் பைம்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள் இணை–திருவாய் -10-2-11- -என்கிறபடியே ,
தம் பஞ்ச சதான்யப்சரசாம் பிரதிதாவந்தி சதம் மாலா ஹஸ்தா -இத்யாதி பிரகரேன-வந்து எதிர் கொண்டு -தம் ப்ரஹ்ம அலங்காரேண அலங்குர்வந்தி -கௌஷீதகீ –1-35– என்று தங்கள் கையாலே இவ் ஆத்ம வஸ்துவுக்கு ப்ரஹ்ம அலங்காரத்தைப் பண்ணி , சத்கரிக்கும் திவ்ய அப்சரஸூகளைக் கொண்டு ,தன்னுடைய போகத்துக்கு அர்ஹகாம் படி ,அலங்கரிப்பியா நின்று கொண்டு ,-ஸ்வேன ரூபேண அபிநிஷ்பத்யதே -சாந்தோக்யம் -என்கிறபடி ஸ்வரூப ஆவிர்பாவம் பிறந்து ,முன்பு திரோஹிதமாய் கிடந்த ஆத்ம குணங்கள் எல்லாம் பிரகாசிக்கப் பெற்று இருக்கிற இத் ஆத்ம வஸ்துவை
ஞானாதி ஷட் குணங்களாகிற ஷட் ரச யுக்தமாய்-அஹம் அன்னம்–தைத்ரியம் –என்கிற அன்னம் ஆம் படி ,அவர்கள் கர ஸ்பர்சத்தால் பக்குவம் ஆக்கி , சேஷ வஸ்துகமான ஞான சக்த்யாதி ஷட் குணங்களும் ,சேஷி விநியோகத்துக்கு உறுப்பு ஆகையாலே ,இக் குணங்களோடு கூடி –அஹம் அன்னம் – என்று இருக்கும் இவ் வஸ்து அவனுக்கு அறுசுவை அடிசிலாய் இறே இருப்பது

(பைந்தொடி மடந்தையரைக் கொண்டு ஷட்‌குண ரஸாந்நமாக்கி] ‘அணைவர் போயமருலகில்‌ பைந்தொடி மடந்தையர் தம்‌ வேய் மரு தோளிணை”’ (திருவா. 10 – 2 -11) என்று “ஸதம்‌ மாலா ஹஸ்தா?” (கெளஷீதகீ) இத்யாதியாலே சொல்லப்படுகிற திவ்யாப்‌ஸரஸ்ஸுக்களைக் கொண்டு பகவத்‌ போக யோக்‌யமாம்படி அலங்கரித்து, “ஸ்வேந ரூபேணாபி நிஷ்பத்‌யதே”‘ என்று ஸ்வ ஸ்வரூபாவிர்பாவத்தைப்‌ பெறுவிக்கையாலே ஸ்வருப கதமாயிருக்கச் செய்தே முன்பு திரோஹித மாயிருக்கிற ஜஞாந ஸக்தயாதிகளும்‌, அபஹத பாப்மத்வாதிகளும்‌ ப்ரகாஸித்து இவை ஸேஷவஸ்துகதமாகையாலே ஸேஷி விநியோகத்துக் குறுப்பாகையாலே அந்த குண விஸிஷ்டமான ஆத்ம வஸ்துவைத்‌ தனக்கு போக்‌,யமாக்கி

அந்தமில் புகழ் அனந்த புர நகராதி தன்னை
கொந்தலர் பொழில் குருகூர் மாறன் சொல் லாயிரத்துள்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போய் அமர் உலகில்
பைந்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள் இணையே–10-2-11-
–பரம பதத்தில் சதம் மாலா ஹஸ்தா -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே அப்சரஸ் ஸூ க்களுடைய கொண்டாட்டத்துக்கு விஷய பூதராவார் –முடியுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள –என்றத்தோடு — வேய் மரு தோள் இணையை அணைவர்-என்கிற இத்தோடு வாசி இல்லை மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே -என்னக் கடவது இறே-

வானோர்க்கு ஆரா அமுதம் ஆனவாறே -அதாவது – வானோர்க்கு ஆரா அமுதே -திருவாய் -5-7-11-என்கிறபடி ,-வைகுந்தன் தமர் எமர் எமதிடம் புகுது -திருவாய் -10-9-9–என்பது –விதி வகை புகுந்தனர்-10 -9 -10—-என்பது-பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர் -10-9-10-இத்யாதி படி ஆதரிக்கும் நித்ய ஸூரிகளுக்கு பரம போக்யமாம் படி ஆனவாறே —முற்றும் உண்ண முன்னம் பாரித்து -அதாவது-என்னை முற்றும் உயிர் உண்டு-10-7-3- -என்கிற படி இத் ஆத்ம வஸ்துவை முழுக்க புஜிப்பதாக –என்னில் முன்னம் பாரித்து -9-6-10–என்கிறபடி- இத் ஆத்ம வஸ்துவுக்கு ருசி பிறப்பதற்கு முன்னே பிடித்து பாரித்து –

(வானோர்க் காராவமுதான வாறே) நித்ய ஸூரிகளுக்கும்‌ போக்யமானவாறே. (முற்றுமுண்ண முன்னம்‌ பாரித்து) “என்னை முற்றுமுயிருண்டு” (திருவா, 10 – 9 -10) என்றும்‌, “என்னில்‌ முன்னம்‌ பாரித்து”’ (திருவா. 9 – 6 -10) என்றும்‌ சொல்லுகிறபடியே இவனை புஜிப்பதாக இவனிலும்‌ முன்னே பாரித்து-

தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக்
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்த ஆயிரத்துள்ளிவை தண் சிரீவர மங்கை மேய பத்துடன்
வைகல் பாடவல்லார் வானோர்க்கு ஆராவமுதே.–5-7-11--சாபிப்ராயமாக கற்கும் அவர்கள் -சர்வ காலமும் நித்ய ஸூரிகளுக்கு போக்ய பூதராவார் -அதுக்கு அடி-உபாய உபேயங்கள் இரண்டும் ஈஸ்வரன் என்று இருக்குமது அவர்களுக்கு அபிமதம் ஆகையாலே-

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–10-9-9—பரமபதத்தைச் சென்று கிட்டின அளவிலே திரு வாசல் காக்கிற முதலிகள் -ஸ்ரீ வைகுண்ட நாதனுடையார் எங்களுக்கு ஸ்வாமிகள் -எங்கள் பதத்தைக் கொள்ள வேணும் என்றாய்த்து அவர்கள் பாசுரம் -பயிலும் திருவுடையார் யாவராலும் எம்மையாளும் பரமர் -என்ற இவரைப் போலே யாய்த்து அங்குள்ளாரும் இருப்பது -திருவாசல் முதலிகள் எதிரே வந்து சத்கரித்து -கையைக் கொடுத்து -கொண்டு புக்கு தங்கள் கைபுடைகளிலே இருத்தி பிரம்பையும் கொடுப்பார்கள் ஆயத்து-சென்று புகுகிறவர்களுக்கும் கைங்கர்யமே உத்தேச்யம் -அங்கு இருக்கிறவர்களுக்கு கைங்கர்யமே யாத்திரை -ஆகையால் இவர்கள் கொள்வதும் அவர்கள் கொடுப்பதும் அது -புகுது என்றது -புகுதுக -என்றபடி

விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–10-9-10–தங்கள் ஆசனங்களில் இவர்களை வைத்து தங்கள் தாழ்ச்சி தோற்றது தறையிலே இருந்து -தங்கள் மஹிஷிகள் நீர் வார்க்க -இவர்கள் ஸ்ரீ பாதத்தை விளக்கினார்கள் –

வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்

கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10—நான் பாரித்த அளவும் அன்றிக்கே நான் பாரித்த காலத்துக்கு முன்பே பாரித்து –ஆச்சார்ய விஷயீ காரத்துக்கு பின்பு இறே இவருடைய பாரிப்பு -சம்பந்தத்துக்கு திரஸ்கார ஹேது இல்லாமையால் -அவனுடைய பாரிப்பு சத்தா ப்ரயுக்தம் இறே
தான் என்னை–விபுவாய் ஸ்வதந்த்ரனான தான் -அணு பரிமாணனாய் பரதந்த்ரனான என்னை –
முற்றப் பருகினான்-தன் குண சேஷ்டிதாதிகளைக் காட்டி -என்னை நீராக்கி -நிச்சேஷமாகப் பருகினான் –வஸசா சாந்வயித்வைநம் லோச நாப்யாம் பிபன்நிவ -என்கிறபடியே -இத்தலையை அழித்துப் பரிமாறினான் -என்கிறபடியே –விழுங்குமவன் காணில் -என்று இறே இவர் பாரித்தது

5-உழுவதோர் நாஞ்சில் கொண்டு , பெருக முயலும் பக்தி உழவன் கிருஷி பலம் இறே -( இதுக்கு மேல் எல்லாம் சர்வேஸ்வரனை உழவனாக உருவகம் செய்து அருளிற்று )-அதாவது-உழுவதோர் படையும் –பெரியாழ்வார் -4-7-5–என்றும் ,-ஒற்றை குழையும் நாஞ்சிலும் –பெரிய திருமொழி -8-8-8–என்கிறபடி
இவர் கர்ஷகன் என்று தோற்றும் படி க்ருஷி சாதனத்தைக் கையிலே கொண்டு , அரியது எளியதாகும் ஆற்றலால் மாற்றி பெருக முயல்வாரைப் பெற்றால்–இரண்டாம் திருவந்தாதி -22-என்கிறபடியே ,அரிதான தன் திரு அடிகளில் பிராப்தியும் எளிதாகும் படி ,இவ் ஆத்ம உஜ்ஜீவனத்துக்கு மிகவும்
யத்னியா நிற்கும் ஸ்வபாவனாய்-பக்தி உழவன்–நான்முகன் -23–என்கிற படி .–இவ் ஆத்மாவுக்கு ஸ்வ விஷய பக்தியை விளைக்கைக்கு கிருஷி பண்ணித் திரியும் சர்வேஸ்வரனுடைய – கிருஷி பலமிறே இவ் ஆழ்வாருக்கு உண்டான இப் பக்தி- என்றபடி –இத்தால் இவருடைய பக்தி உத்பத்தி காரணம்- பகவத் கிருஷி -என்றது ஆய்த்து-

(உழுவதோர்‌ நாஞ்சில்கொண்டு பெருக முயலும்‌ பத்தி யுழவன் க்ருஷிபலமிறே) “உழுவதோர்‌ படையும்‌” (பெரியா. தி. 4 – 7 – 5), “ஒற்றைக் குழையும்‌ நாஞ்சிலும்‌”” (திருமொழி 8 – 8 – 9) என்று க்ருஷி ஸாதநத்தைக் கொண்டு, ‘“அரியதெளிதாகுமாற்றலால்‌ மாற்றிப்‌ பெருக முயல்வாரைப்பெற்றுல்‌” (இ.திருவ. 22) என்று அரிதான பகவத்‌ ப்ராப்தியும்‌ எளிதாம்படி இவனுடைய உஜ்ஜீவநத்துக்கு மிகவும்‌ க்ருஷி பண்ணுகிற *பத்தி யுழவன்‌”‘ (நா. திருவ. 23) என்கிற பக்திக்கு க்ருஷி பண்ணுகிற ஸர்வேஸ்வரனுடைய க்ருஷி பலமாய்க்‌ கொண்டு உண்டாய்த்து இவருடைய பக்தி என்கிறார்‌. ஆக இத்தால்‌ இவருடைய பக்தி போக்தாவான ஸர்வேஸ்வரனுடைய க்ருஷி பலம்‌ என்றதாய்த்து-

உழுவதோர்  படையும் உலக்கையும் வில்லும் ஒண் சுடர் ஆழியும் சங்கும்
மழுவோடு வாளும் படைக்கலமுடைய மால் புருடோத்தமன் வாழ்வு
எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப் பொழுது அளவினில் எல்லாம்
கழுவிடும் பெருமைக் கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே – 4-7-5-கலப்பையும்–இவற்றை ஆயுதமாக உடைய

ஒற்றைக் குழையும் நாஞ்சிலும் ஒரு பால் தோன்றத் தான் தோன்றி
வெற்றித் தொழிலார் வேல் வேந்தர் விண் பால் செல்ல வெஞ்சமத்து
செற்ற கொற்றத் தொழிலானைச் செந்தீ மூன்றும் இல்லிருப்ப
கற்ற மறையோர் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-8–ஒரு காது குழையும்
கலப்பையும் ஒரு கால் தோன்ற தான் வந்து –

அரியது எளிதாகும் ஆற்றலால் மாற்றி
பெருக முயல்வாரைப் பெற்றால் –கரியதோர்
வெண் கோட்டு மால் யானை வென்றி முடித்தது அன்றே
தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து—-22--அரியதாவது -பெறுதற்கு அரிதான பகவல் லாபமும் -பகவத் பஜனமும் – இவை இரண்டும் எளிதாகும் -என் செய்தால் -என்னில் –ஆற்றலாலே -என்கிறது-சக்தியாலே -என்னுதல் –பொறையாலே   என்னுதல் –சக்தியான போது அவனுக்கு சக்தி வைகல்யம் இல்லாமையாலே இவன் பரத்தை தன் பக்கலிலே மாற்றிக் கொண்டு இவனுடைய பேற்றுக்கு பிரதி பந்தகங்கள் ஆனவற்றையும் போக்கி தன்னைக் கொடுக்கைக்கு யுடலாகிறது –-இவன் தலையிலே ஒரு தேவை இடுகிறது என் — எல்லாம் நாமே ஏறிட்டுக் கொண்டு செய்வோம் என்பான் ஒரு பர சக்தியைப் பெற்றால் – இவன் அசக்தி தீரத் தன் சக்தியைக் காட்டி ரஷிக்கை –அன்றிக்கே –பொறை யானபோது
இவன் பெறாமைக்கு பண்ணி வைக்கும் ப்ராதி கூல்யங்களை தன் கிருபையாலே பொறுத்துக் கொடுக்கைக்கு யுடலாய் இருக்கை-இவனுடைய சர்வ ரஷணங்களையும் தன் தோளிலே ஏறிட்டுக் கொண்டு இவனுக்குப் பேற்றிலே அந்வயமாம் படி –தன் பேறாகக் கொண்டு ஆஸ்ரிதன் பக்கல் உள்ள அல்ப அனுகூல்யத்தை – அஜ்ஞனாய் அசக்தனானவன் இத்துணை செய்து உகக்கப் பெற்றோம் -என்று
மிகவும் உத்சாஹிப்பாரைப் பெற்றால் அரியது எளியதாகும்-இத்தாலே அவனாலே அவனைப் பெறுதல் -தம்மாலே அவனை இழத்தல் -என்றபடி

வித்தும் இட வேண்டும் கொலோ விடை யடர்த்த
பத்தி யுழவன் பழம் புனத்து -மொய்த்து எழுந்த
கார்மேகம் அன்ன கருமால் திருமேனி
நீர் வானம் காட்டும் நிகழ்ந்து –23-–பகவத் விஷய பக்திக்கு இவன் செய்ய வேண்டுவது ஓன்று யுண்டோ –பிரதிபந்தகங்களைத் தானே போக்கி –ருசியைப் பிறப்பித்து –பக்தியை விளைப்பானான-எம்பெருமானுமாய்ப் பழையதான சம்சாரப் பரப்பில் பழம் புனம் என்கிறது – விளைந்து வருகிற நிலத்தில் உதிரியே முளைக்குமாபோலே ஈஸ்வரன் சம்சார பிரவாஹத்தைப் பண்ணி வைத்த படியாலே
யாத்ருச்சிகமாக ஸூஹ்ருதங்கள் பிறக்கும் என்று கருத்து –அவன் வடிவைக் காண வேணும் என்கிற அபேஷை  பிறக்கிற பின்னோடே- திரண்டு எழுந்த கார் காலத்தில் மேகம் போலே கறுத்து இருக்கிற நிறத்தை யுடைய சர்வேஸ்வரன் திரு மேனியை நீர் கொண்டு எழுந்த காளமேகமானது காட்டும்-அன்றிக்கே – சம்சாரம் ஆகிற பழம் புனத்திலே ஈர நெல் வித்தி -என்கிறபடியே விஷய ருசி யாகிற விதையைத் தான் தேடி இட வேணுமோ-அவன் வடிவோடு போலியான தன் வடிவைக் காட்டி
தத் விஷய ருசியை வர்ஷூ கவலாஹம் தானே முன்னின்று ப்ராபிய நிற்கும் -என்றுமாம் –

இப்படி இத் தலையில் நன்மை அற்று இருக்கச் செய்தே ஈஸ்வர கிருஷி பலிக்கக் கண்ட இடம் உண்டோ என்ன -அருளிச் செய்கிறார் மேல் –இப்படி இத்தலையில்‌ ஒரு நன்மை யின்றிக்கே யிருக்க ஈஸ்வரனுடைய கிருஷி பலித்தவிடமுண்டோ வென்னில்‌, கோஸல தேஸத்திலுண்டான ஸ்தாவர ஜங்கமங்‌களையும்‌ கோகுலத்திலுண்டான சராசரங்களையும்‌ ஸ்வ ஸம்ஸ்லேஷ விஸ்லேஷைக ஸுக துக்கராம்படி பண்ணக் கண்டோமிறே என்கிறார்‌-

கோசல கோகுல சராசரம் செய்யும் குணம் ஓன்று இன்றியே அற்புதம் என்னக் கண்டோம்-சூரணை -105

(கோசல சராசரம் ஓன்று இன்றியே என்னக் கண்டோம்-என்றும்-கோகுல சராசரம் செய்யும் குணம் அற்புதம் என்ன கண்டோம்-என்றும் )-கோசல சராசரம் ஓன்று இன்றியே என்னக் கண்டோம்-
அதாவது–த்வாம் ஆமனந்தி கவய கருணா ம்ருதாப்தே ஞான க்ரியா பஜன லப்யம் அலப்யம் அந்யை ஏதேஷு கேன ,வரத உத்தர , கோசலஸ்தா பூர்வம் சாதுர்வம் அபஜந்த ஹி ஜந்தவஸ் த்வாம்–ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் -69–என்கிற படியே , அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் – ஓன்று இன்றியே நல் பாலுக்கு உய்த்தனன் –திருவாய் -7-5-1- என்று திரு அயோத்யாதி கோசல தேச வர்திகளான சராசரங்கள் எல்லாம் நிர்ஹேதுகமாக ,-ராமோ ராமோ ராம இதி ,பிரஜாநாம் அபவன் கதா , ராம பூதம் ஜகத பூத் ராமே ராஜ்யம் பிரசாசதி –யுத்த –131-96–என்றும் ,-அபிவிருஷா பரிம்லானாஸ் ச புஷ் பாங்குர கோரகா
விஷயேதே மஹா ராஜா ராம வியசன கர்சிதா உபதப் தோதகா நத்ய பல் வலானி சராம்சிச
பரிசுஷ்க பலாசாநி வநான் யுபவ நாசிச –
அயோத்யா -59-4-5—(சுமந்திரன் தசரதனுக்கு சொன்னவை)–என்றும்-அகால புலினோ வருஷா சர்வேசாபி மதுரஸ் ரவா யுத்த –127-17–இத்யாதி படியே-ஸ்வ சம்ச்லேஷ விஸ்லேஷ ஏக சுக துக்கங்கள் ஆகிற நல்ல ஸ்வாபத்தை உடையதாம் படி நடத்தினான் என்றும் –

“த்வாமாமநந்தி கவய? கருணாம்ருதாப்‌ தே, ஜ்ஞாந க்ரியா பஐந- லப்‌யமலப்‌யமந்யை
ஏதேஷு கேந வரதோரத்தர கோஸல ஸ்தா பூர்வம்‌ ஸதூர்வ- மப ஜந்த ஹி ஜந்தவஸ்த்வாம்‌’” 
(வரத,.ஸ்த. 69) என்றும்‌, “அயோத்தியில்‌ வாழும்‌ சராசரம்‌ முற்றவும்‌ – ஒன்றின்றியே நற் பாலுக்குய்த்தனன்‌” (திருவா. 7 – 5 – 1) என்றும்‌ கோஸல தே,ஸத்திலுண்டான சராசரங்களடைய “அபி வ்ருக்ஷாச பரிம்லாநாஸ் ஸ புஷ்பாங்குர கோரகா? உபதப்தோதகா நத்‌ய பல்வலாநி ஸராம்ஸி ச ப பரிஸூஷ்க பலாஸாநி வநாந் யுபவநாநி ச (ரா. ௮. 59 – 8), ““விஷயே தே மஹாராஜ ராம வ்யஸந கர்ஸிதா?”, என்றும்‌, “அகால பலிநோ வ்ருக்ஷா ச” (ரா. யு. 127 – 18) என்றும்‌, “ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாமபவந்‌ கதர? ! ராமபூ,தம்‌ ஜகத பூத்‌ ராமே ராஜ்யம்‌ ப்ரஸாஸதி”? (ரா. உ.) என்றும்‌ ஒரு ஹேது வின்றியிலே ஸ்வ ஸம்ஸ்லேஷ விஸ்லேஷைகஸுக துக்க ராகவும்‌.

கற்பார் இராம பிரானை அல் லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே
.–7-5-1—நல்ல இடத்தை யுடைய திரு அயோத்யையில் -நில மிதி தானே ராம பக்தியை விளைப்பிக்கும் என்கை -தேசோயம் சர்வ காமதுக்–ராகவார்த்தே பராக் ராந்தா நபிராணே குருதேதயாம் -என்னுமவர்கள்-வாழும்-வர்த்திக்கும் என்னும் ஸ்தாநத்திலே வாழும் என்கிறது -தேச வாசம் தானே போக ரூபமாய் இருக்கை -ராம குணங்களையே அனுபவித்து இருக்கும் என்னுதல்-சராசரம் முற்றவும்-ஸ்தாவர ஜங்க மாத்மகமான சகல பதார்த்தங்களையும் –-நற்பாலுக்கு உய்த்தனன்-நல்ல ஸ்வ பாவத்தை யுடைத்தாம் படி பண்ணினவன் –தன் சம்ச்லேஷ விஸ்லேஷமே ஸூக துக்கமாம் படி பண்ணினான் -திர்யக் யோனி கதச்சாபி சர்வோ ராமம நுவரத–என்றும் – -அபி வ்ருஷா பரிம்லா நா -என்றும் -ராம மேவா நுகச்சத்வ மஸ்ருதிம் வாபி கச்சித -என்றும் -ராமேண ரஹி தா நாந்து கிமர்த்தம் ஜீவிதம் ஹிந-என்றும் -இப்படி ஸ்வ சம்ச்லேஷ விஸ்லேஷ ஸூ க துக்கமாம் படி பண்ணிற்று ஒரு தேச விசேஷத்திலேயோ -என்ன-நான்முகனார் பெற்ற நாட்டுளே.–ப்ரஹ்மாவுக்கு அடைத்த நாட்டுள்ளே-அவனுடைய நியாமகத்வத்தையும் தவிர்த்து -சேதனருடைய கர்ம வஸ்யத்தையும் தவிர்த்து தான் கைக்கு கொண்டு தன்னால் அல்லது செல்லாத படி பண்ணினான் –

கோகுல சராசரம் செய்யும் குணம்-அதாவது-கோகுலத்தில் உண்டான சராசரங்கள் எல்லாம் –அவன் ஒருவன் குழலூதின போது , மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் மலர்கள் வீழும் , வளர் கொம்புகள் தாழும் , இரங்கும் கூம்பும் , திரு மால் நின்ற நின்ற பக்கம் நோக்கி அவை செய்யும் குணமே -பெரியாழ்வார் –3-6-10–என்றும் ,-மருண்டு மான் கணங்கள் மேய்க்கை மறந்து மேய்ந்த புல்லும் கடை வாய் வழி சோர , இரண்டு பாலும் துளங்கா புடை பெயரா எழுது சித்திரங்கள் போல நின்றனவே –பெரியாழ்வார் -3-6-9–என்றும் ,-பறைவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படு காடு கிடப்ப ,
கறைவையின் கணங்கள் கால் பரப்பிட்டு கவிழ்ந்து இறங்கி செவி யாட்ட கில்லாவே
-பெரியாழ்வார் -3-6-8–என்றும்-கோவலர் சிறுமியர் இளம் கொங்கை குதுகலிப்ப ,உடல் உளது வீழ்ந்து எங்கும்
காவலும் கடந்து கயிறு மாலையாகி வந்து கவிழ்ந்து நின்றனரே
–பெரியாழ்வார் -3-6-1– -என்கிறபடி
சைதன்ய பிரசரணம் இல்லாத வ்ருஷங்களோடு சைதன்யம் லேசம் உள்ள திர்யக்கு களோடு ,
சைதன்ய விசேஷார்ஹா மனுஷ்ய ஜாதியாரான சிறு பெண்களோடு , (வலக்கை இடக்கை அறியாத இடைப்பெண்கள்–என்பதால் அர்ஹ சப்தம் ) வாசி அற நிர்ஹேதுகமாக பகவத் பிராவண்ய பரவசங்கள் ஆனவை கண்டு – நங்கை மீர்காள் ஓர் அற்புதம் கேளீர்-ஸ்ரீ பெரியாழ்வார் -3-6-1-என்று விஷேஷஜ்ஞர்-(ஸ்ரீ பெரியாழ்வார்-) வித்தராய் சொல்லும்படியாகக் கண்டோம் என்கை–

கோகுலங்களிலுண்டான சராசரங்களிலே சைதந்ய ப்ரஸரண மில்லாத வ்ருக்ஷங்களும்‌, “அவனொருவன்‌ குழலூதின போது மரங்கள் நின்று மது தாரைகள் பாயும்‌ மலர்கள்‌ வீழும்‌ வளர் கொம்புகள்‌ தாழும்‌ இரங்கும்‌ கூம்பும்‌ திருமால்‌ நின்ற நின்ற பக்கம்‌ நோக்கி அவை செய்யும்‌ குணமே” (பெரியா.தி. 3 – 6 – 10) என்றும்‌, சைதந்ய லேஸமுடைய திஸ்ர்யக்குக்களும்‌ “மருண்டு மான் கணங்கள்‌ – கால் பரப்பிட்டுக் கவிழ்ந்திரங்கிச்‌ செவி யாட்டகில்லாவே”” (பெரியா. தி, 3 – 6 – 6) என்று திர்யக் ஸ்தாவரங்கள்‌ அந்யோந்யம்‌ ஸ்வபாவங்கள்‌ மாறாடும்படி பண்ணி, “நங்கைமீர்களிதோரற்புதம்‌ கேளீர்‌” (பெரியா-3 – 6 – 1) என்று இதோராஸ்சர்யமென்று விஸேஷஜ்ஞர்‌ சொல்லும்படியாகக்‌ கண்டோமிறே என்கிறார்‌.

கரும் கண் தோகை மயில் பீலி அணிந்து கட்டி நன்கு உடுத்த பீதக வாடை 
அரும் கல வுருவின் ஆயர் பெருமான் அவன் ஒருவன் குழலூதின போது 
மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் மலர்கள் வீழும் வளர் கொம்புகள்  தாழும்  
இரங்கும் கூம்பும்  
திருமால் நின்ற நின்ற பக்கம் நோக்கி யவை செய்யும் குணமே -3- 6-10 ––தேவ மனுஷ்ய திர்யக் ஜாதிகள் உருகின அளவு அன்றிக்கே – அசேதனங்களான வ்ருக்ஷங்களானவை ஒரு படிப்பட நின்று – உள்ளுருகினமை தோற்ற மது தாரைகள் பாயா நிற்கும் –கொம்பில் நிற்கிற பூக்கள் எல்லாம் நிலை குலைந்து வீழா நிற்கும்-மேலே வளருகிற சாகைகள் ஆனவை கீழே படியா நிற்கும்-தன்னிலே நின்று அலைந்து ஈடுபடா நிற்கும்-ஸ்ரீ யபதி யானவன் உலாவி உலாவி நின்று குழலூதின வழியே அவன் நின்ற நின்ற  பார்ஸ்வங்களை நோக்கி – – அஞ்சலி செய்வாரைப் போலே தாழ்ந்த கொம்புகளை குவியா நிற்கும் -அவை செய்தபடி குணம் இருந்தபடி -என் தான்-என்று ஆச்சர்யப் படுகிறார்-

திரண்டு எழு தழை மழை முகில் வண்ணன் செங்கமல மலர் சூழ் வண்டினம் போலே 
சுருண்டு இருண்ட குழல் தாழ்ந்த  முகத்தால் ஊதுகின்ற  குழலோசை வழியே 
மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த புல்லும் கடை வாய் வழி சோர 
இரண்டு பாடும் துலுங்கா புடை பெயரா வெழுது சித்திரங்கள் போலே  நின்றனவே
-3-6-9-மான்   திரள்கள் ஆனவை -சஜாதீய விஜாதீய விபாகாதிகள் தோன்றாபடி அறிவு அழிந்து – தனக்கு தாரகமாக எப்போதும் செய்து போரும் மேய்கையை தவிருகை அன்றிக்கே -விஸ்மரித்து – மேயக் கவ்வின புல்லும் -இறக்குதல் உமிழ்தல் செய்ய மாட்டாதே  பார- பர-வச்யத்தால் கடை வாய் வழியே நழுவி விழ -முன்னும் பின்னுமான இரண்டு அருகும் அசையாதே – பக்கங்களிலும் போகவும் மாட்டாதே  –சித்திரத்தில் எழுதினவை போல் – ஒரு வியாபாரம் அற்று நின்றன 

சிறு விரல்கள் தடவி பரிமாற செம்கண் கோட செய்ய வாய் கொப்பளிக்க 
குறு வெயர்ப் புருவம் கூடலிப்ப கோவிந்தன் குழல் கொடூதின போது 
பறைவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படு காடு கிடப்ப 
கறைவையின் கணங்கள் கால் பரப்பி இட்டுக் கவிழ்ந்து இறங்கி செவி ஆட்ட கில்லாவே
-3-6-8 – பஷிகளினுடைய திரள்கள்-தம் தாமுடைய வஸ்தவ்ய ஸ்தலங்களை விட்டு-குழலோசை வழியே ஊதுகிறவன் அளவும் வந்து சூழ்ந்து கொண்டு – வெட்டி விழுந்த  காடு போலே பரவசமாய் கிடக்க -பசுக்களினுடைய திரள்கள் ஆனவை-பாரவச்யத்தாலே கால்களை பரப்பி-தலைகளை மிகவும் நாற்றிக் கொண்டு-செவியை இசைக்கில் இசைக்கு பிரதிபந்தகம் ஆம் -என்று  செவியை ஆட்டவும் மாட்டாதே நின்றன —

நாவலம் பெரிய தீவினில் வாழு நங்கைமீர்கள் இதோர் அற்புதம் கேளீர்
தூவலம் புரி உடைய திருமால்  தூய வாயில் குழலோசை வழியே
கோவலர் சிறுமியர் இளம் கொங்கை குதுகுலிப்ப வுடல் உள் அவிழ்ந்து எங்கும்
காவலும் கடந்து கயிறு மாலையாகி வந்து கவிழ்ந்து நின்றனரே -3 6-1 
–கோ வல்லர் -கோ ரஷணத்திலே சமர்த்தர் ஆனவர்களுடைய சிறுப் பெண்கள்-தங்கள் வசத்தில் நில்லாதபடி பரிணதமான முலைகளானவை – தங்களைப் பிற்பாடராக்கி நாங்கள் முன்னே போகிறோம் -என்று கௌதூஹலம் பண்ண –இளம் கொங்கை -சொல் கேளா பிரஜைகள் ஆய்த்து -கொங்கையில் குதுகுலிப்பு மாத்ரம் அன்றிக்கே – கொங்கைக்கு ஆஸ்ரயமான சரீரமும் – சர்வேந்த்ரியங்களுக்கும் பிரதானமான மனசும் கட்டுக் குலைந்து –எங்கும் உள்ள காவலையும் கடந்து – அதாவது அறைக்குள்ளே இட்டு -தாய்மார் அணைத்துக் கொண்டு -கதவுகளையும் அடைத்து – புறக் காவலாக வேண்டும் பந்துக்களும் கிடக்க –
அந்த காவல்களை எல்லாம் – சூத்திர பாஷாணங்களைப் போலே ஒரு சரக்காக நினையாமல் கடந்து -கயிற்றிலே ஒழுங்கு பட சேர்த்த மாலைகள் போலே நிரை நிரையாக வந்து –இவனைச் சூழ்ந்து கொண்டு நின்றார்கள்-அன்றிக்கே – குழலோசை வழியே வந்து -இவனைக் கண்டவாறே -லஜ்ஜித்து –
கவிழ்தலை இட்டு -( சூழ்ந்து )-நின்றார்கள் என்னுதல் எதிர் செறிக்க மாட்டாமல் கவிழ்தலை இட்டு நின்றார்கள் -என்னுதல்-

இத்தால் பகவத் நிர்ஹேதுக ,விஷயீகாரம் இப்படி பலிக்கக் காண்கையாலே , ஆழ்வார் உடைய பக்தியும் ,பகவத் நிர்ஹேதுக கிருஷி பலம் என்னத் தட்டு இல்லை என்றது ஆய்த்து-ஆக இத்தால்‌, சைதந்யாசைதந்யங்களிரண்டும்‌ தன்னில்‌ பதார்த்த வைஷம்யத்துக்கு ஹேதுவாமித்தனை யொழிய பகவத்‌ விஷயீகாரத்துக்கு ஹேதுவாகக்‌ காணாமையாலே இவர்க்குப்‌ பிறந்த பக்தி பகவந் நிர்ஹேதுக விஷயீகாரத்‌தாலே என்றதாயிற்று.-

ஆனால் இப்படி நிர்ஹேதுகமாக -விஷயீகரிக்கும் அளவில் ,எல்லோரையும் விஷயீகரிக்கலாய் இருக்க ,
இங்கனே இவர் ஒருவரை விஷயீகரிக்கைக்கு அடி என்ன என்னும் அபேஷையிலே-நிரந்குச ஸ்வதந்த்ரனானவன் ஈச்வரஸ்த்வ செருக்காலே செய்யும் அவற்றுக்கு அடி ஆராயப் படாது என்னுமத்தை லௌகிக த்ருஷ்டாந்தத்தாலே தர்சிப்பிக்கிறார் மேல்– (ந்யோஜ்யம் -பர அநுயோஜ்யம்-இரண்டும் இல்லாதது அன்றோ நிரங்குச ஸ்வா தந்திரம் – இன்னத்தை செய் செய்யாதே என்றும் எதனால் இப்படி செய்தாய் என்று கேட்க முடியாது-சத்ருஞ்சயன் -அயோத்யா தேச யானை பெயர் )-ஆனால்‌ ”ஸமோஹம்‌ ஸர்வபூதேஷு ந மே த்‌வேஷ்யோஸ்தி ந ப்ரிய?” (கீதை 9 – 26) என்கிறபடியே ஸர்வ ஸமனுமாய்‌, பரதுக்கம்‌ ஸஹியாதபடியான பரம க்ருபையை உடையனான ஸர்வேஸ்வரன்‌ ஸர்வரோடும்‌ தனக்கு ஸம்பந்தம்‌ ஒத்திருக்க, அவர்களிலே ஒருவனை நிர்ஹேதுகமாக விஷயீகரித்தான்‌ என்றால்‌ அவனுக்கு வைஷம்ய நைர்க்‌ருண்யங்‌கள்‌ வாராதோ என்னில்‌ நிருபாதிக ஸர்வ ஸேஷியுமாய்‌, ஸ்வதந்த்ர ஸ்வாமியுமாய்‌, அத ஏவ உபய விபூதியையும்‌ ஸ்வாதீநமாகவும்‌, ஸ்வார்த்தமாகவும்‌ உடைய ஸர்வேஸ்வரன்‌ ஸ்வகீயமான வற்றிலே ஒன்றை ஸ்வ விநியோகார்த்தமாக இப்படி நிர்ஹேதுகமாக விஷயீகரிக்கும் போது வைஷம்ய நைர்க்‌ருண்யங்களை யிட்டு நிவாரகர்‌ இல்லை என்னும்‌ அர்த்தத்தை லோக த்‌ருஷ்டாந்த த்‌வாரா அருளிச் செய்கிறார்‌.

பட்டத்துக்கு உரிய யானையும் அரசும் செய்யுமவை ஆராயாது-சூரணை -106-

(கழு மலத்து யாத்த களிறும் கருவூர் விழுமியோன் மேல் சென்றதனால் –
விழுமிய வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால தீண்டா விடுதல் அரிது )அதாவது
அராஜகமான தேசத்திலே ,பட்டத்துக்கு உரிய யானையைக் கண்ணைக் கட்டி விட்டால் ,
அவ் ஆனை எடுத்தவன் ஒருவன் ராஜாவாக்கும் அளவில் ,அல்லாதார் எல்லாரும் கிடக்க ,இவனை இப்படி அது எடுக்கைக்கு அடி என் என்றும் ,ராஜா ஆனவன் தன் செருக்காலே ஒருத்தியை தன் மகிஷியாக பரிக்ரஹிக்கும் அளவில் , இங்கன் ஒத்த ஸ்திரீகள் பலரும் உண்டாய் இருக்க ,இவளை இப்படிப் பரிகிரஹிக்க அடி என் என்றும் ஆராய்வார் இல்லை என்ற படி —இத்தால் சொல்லிற்று ஆயிற்று-ஸ்வாதந்தைர்யம் ஐஸ்வர்யம் அபர் அனுரோஜ்ய மாஹு –ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்–55-என்கிறபடியே பர்யனுயோஜ்யம் அல்லாத ஐஸ்வர்ய ஸ்வாதந்தரனாய் – (ரூப பிரகாரம் பரிமாணம் க்ருத வியவஸ்தை அனைத்துக்கும் அனைவருக்கும் செய்த நீ- சத்தை அசத்தாக்கும் அசத்தை சத்தாகும் அபரிமித சக்தன் நீ – உனது செல்வமே ஸ்வாதந்தர்யம் தானே)
பவ மோஷண ,யோஸ் த்வயைவ ஜந்து கிரியதே—ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் உத்தர -88-என்கிறபடியே –
ஸூவாதீன பந்த மோஷனாய் ,( அடங்குவார் இல்லாத ஸ்வா தந்தர்யத்தால் )
வேண்டின போது வேண்டின வஸ்துவை வேண்டினபடி யாக்க வல்லனுமான சர்வேஸ்வரன் ,
அஹேதுகமாய் இருக்க ,ஆதார விஷயமாம் படி , பட்டத்துக்கு உரிய ஆனையும் ,அரசும் ,செய்யும் அவை போலே , ஸ்வாதீனமுமாய் ,ஸ்வார்தமுமாய்-( ஸ்வ பிரயோஜனமாய் ) ஆத்ம வஸ்துக்களில் ,ஓர் ஒன்றை ,
ஈஸ்வரத்துவ செருக்குக்கு அடியான ஸ்வ இச்சையாலே ,ஸ்வ விநியோக அர்ஹஹாம் படி , விஷயீகரித்தால் , அல்லாத ஆத்மா வஸ்துக்கள் எல்லாம் கிடக்க ,இவ் வஸ்துவை இவன் இப்படி விஷயீகரிப்பான் என் என்று இதுக்கு அடி ஆராயப் படாது என்கை –

தான்‌ செய்தது தான்‌ இட்ட வழக்காம்படி நிரங்குஸ ஸ்வதந்த்ரமான ஆனை, யாரேனுமொருவனை எடுக்க, அவனே ராஜாவாகவும்‌ அந்த ராஜா பரிக்‌ரஹித்தவளே ராஜ மஹிஷியுமா மிடத்தில்‌ இப்படி ஆவானென்‌? என்று ஆராய்வாரில்லை யிறே. அப்படியே-“’ரூபப்ரகார பரிணாம க்ருத வ்யவஸ்த,ம்‌ விஸ்வம்‌ விபர்யஸிதுமந்யத ஸச்ச கர்த்தும்‌ | ஷாம்யந்‌ ஸ்வபாவ நியமம் கிமுதீ க்ஷஸே த்வம்‌ ஸ்வாதந்த்ர்ய மைஸ்வர மபர்யநு யோஜ்யமாஹு ” (வை.ஸ்த. 55), ““படுநைக வராடிகேவ க்லுப்தா ஸ்தலயோ? காகணிகா ஸுவர்ண கோட்யோ | பவமோக்ஷ்ண்யோஸ் த்வயைவ ஐந்து கரியதே ரங்க நிதே, த்வமேவ பாஹி”’ (ர. ஸ்த. உ. 88) என்று உபயமும்‌ தானிட்ட வழக்காம்படி நிரங்குச ஸ்வதந்தரனானவன்‌ செய்யுமவை ஆராயப் படாதிறே என்கிறார் –

இங்கன் சொல்லுவான் என் ?–இவர் தமக்கு ஜ்ஞாத ஸூஹ்ருதங்கள் அன்றோ இல்லை என்றது ..
யாத்ருச்சிகாத் யஜ்ஞாத ஸூஹ்ருதங்கள் அடியாக அங்கீகரித்தான் ஆனாலோ என்ன ,
அருளிச் செய்கிறார் – (யதேச்சையாக நடந்தது யாதிருச்சிகம் -ப்ராசங்கிக்கம் பேச்சுவாக்கில் ஏதோ சொன்னது – ஆனு ஷங்கிகம்-திருடன் வில்லாளி முன்பே போனவர் மூவருக்கும் அறியாமல் – காப்பாற்றப்பட்டதால் -அஞ்ஞாத ஸூஹ்ருதங்கள் ஆழ்வார் சர்வஞ்ஞர் -அனைத்தும் அறிந்து பாடியவர் -இவை இருந்தால் பாடி இருப்பார் –அனைத்தையும் திருப்புளிய மரம் அடியிலே காட்டி அருளினான் –
தெரியாமல் வந்து தலை மேல் விழும் ஸூஹ்ருதங்கள் இல்லை )-அப்படிச் சொல்லுவானென்‌? இவர் தமக்கு ஜ்ஞாத ஸுக்ருதமன்றோ இல்லை என்றது? யாத்‌ருச்சிகாதிகளான அஜ்ஞாந ஸுக்ருதமடியாக அவன்‌ விஷயீகரித்தானாகத்தட்டென்‌ ? என்னில்‌, ஸ்வ பர விபாகமற ஸர்வத்தையும்‌ ஸாக்ஷாத்கரித் தருளிச் செய்தவர்க்கு யாத்‌ருச்சிகாதிகள்‌ உண்டாகில்‌ ப்ரகாஸிக்குமிறே. இவர்க்கு அஜ்ஞாதமாவது பூர்வாவஸ்தையிலிறே. உத்தராவஸ்தையிலும்‌ அஜ்ஞாதமாகில்‌ மயர்வற மதிநலம்‌ அருளப்‌ பெற்றாரில்லையாவரிறே.-

முந்நீர் வாழ்ந்தார் சூட்டும் கோவை ஆழி என்கிற சாஷாத் க்ருத ஸ்வ பர வ்ருத்தந்தார்க்கு யாத்ருச்சிகாதிகள் உண்டாகில் தோன்றும் —சூரணை -107-

(முந்நீர் என்கிற ஸ்வ வ்ருத்தந்தார்க்கு–வாழ்ந்தார் -என்கிற பர வ்ருத்தந்தார்க்கு–சூட்டும்-என்கிற -பரம பதத்தில் உள்ளோர் வ்ருத்தாந்தையும்-கோவை ஆழி என்கிற ஈஸ்வர வ்ருத்தாந்தங்களையும் பர -பர ப்ரஹ்மத்தையும் பிறரையும் குறிக்கும் யாத்ருச்சிகாதிகள் பற்றி பாடவில்லை -ஆகையால் தோன்றவில்லை -ஆகையால் இல்லை என்றவாறு )-முந்நீர் என்கிற ஸ்வ வ்ருத்தந்தார்க்கு-அதாவது
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே-3-2-1- -என்று தொடங்கி சர்வேஸ்வரன்-விசித்ரா தேக சம்பத்தி ஈஸ்வராய நிவேதிதம் பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்த பாதாதி ஸம்யுதா –ஸ்ரீ விஷ்ணு தத்வம் -இத்யாதிப் படியே-ஸ்வ சரண கமல சமாஸ்ரயணனே உபகரணமான கரண களேபரங்களை இவ் ஆத்மாவுக்கு உண்டாக்கி , உஜ்ஜீவிப்பைக்கையே பிரயோஜனமாக ஜகத் ஸ்ருஷ்ட்டியைப் பண்ண ,நான் அவன் தந்த சரீரத்தைக் கொண்டு , அவனை ஆஸ்ரயிக்கை அன்றிக்கே -( ஆக்கையின் வழி உழல்வேன் ),அதன் வழியே ஒழிகி சம்சாரித்து போந்தேன் என்று , ஸ்வ வ்ருத்தாந்தையும் ,

“முந்நீர் ஞாலம்‌ படைத்த எம்‌ முகில் வண்ணனே” (திருவா. 3 – 2 – 1) என்று தொடங்கி அவன்‌ சேதநருடைய உஜ்ஜீவநார்த்தமாக ஜகத் ஸ்ருஷ்ட்யாதி வ்யாபாரங்களைப்‌ பண்ணின படியையும்‌, தாம்‌ அவன்‌ கொடுத்த தேஹத்தைக் கொண்டு அதன் வழியே ஒழுகி ஸம்ஸரித்துப் போந்த படியையும்‌,

முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் –3-2-1—தய நீய தசையைக் கண்டு -இவை கரணங்களை பெற்று கரை மரம் சேர வேணும் -என்று தயா பரதந்த்ரனாய் ஸ்ருஷ்டித்த படி – கர்ம அனுகுணமாக ஸ்ருஷ்டியாகிலும் யவ்கபத்யம் அனுக்ரஹக்ருதம் என்கை-எம் – ஸ்ருஷ்ட்டி சர்வ சாதாரணம் ஆகிலும் இவர் தமக்காக என்று இருக்கிறார் -எங்கும் ஓக்க வர்ஷித்தாலும் அது கொண்டு விளைத்துக் கொண்டவன் -எனக்காக -என்று இருக்குமா போலே-எல்லாருக்கும் ஓக்க அவன் செய்தாலும் க்ருதஞ்ஞான் எனக்காக -என்று இருக்கும் இறே-முகில் வண்ணனே–மேகம் ஜல ஸ்தல விபாகம் இன்றிக்கே வர்ஷிக்கிறது பிரதியுபகாரம் கொள்ளுகைக்கு அன்று இறே-பஹுஸ்யாம் என்று தன் பேறாக ஸ்ருஷ்டிக்கை –-அந்நாள் –-அசித் விசிஷ்டானாய் சோஸ்ய தசா பன்னனான நாள்
நீ –என்று இழவு உள்ளதாய் முகம் காட்டின நீ-தந்த – திருவடிகளில் தலை சாய்த்து உன்னைப் பெறுகைக்கு உறுப்பாம் உடம்பை அபகரித்து –துர்லபோ மானுஷோ தேஹ -மானுஷ்யம் ப்ராப்ய -தன்னைப் பெறுகைக்கு உபகரணமும் தானே தர வேண்டி இருக்கிற படி-ஆக்கையின் வழி உழல்வேன்
விஷய ப்ராவண்யத்தை விளைத்துக் கொண்டு சரீரத்தின் வழியே போய் அநர்த்தப் பட்டேன் –-உழல்வேன்-சுழி தோறும் முழுகா நின்றேன் -கரை ஏற கொடுத்த தெப்பத்தைக் கொண்டு அதன் வழியே போய் கடலிலே புகுவாரைப் போலே உடம்பின் வழியே போய் சம்சார ஆர்ணவத்திலே புக்கு நசிக்கை
வெந்நாள்--ஞானம் பிறந்தால் இப்பிரக்ருதி சம்பந்தத்தோடே இருக்கிற நாள் அசோகவ நிகையிலே பிராட்டி இருந்தால் போலே-நோய் வீய- நோய் என்று சரீர சம்பந்தம் ஆதல் -விஸ்லேஷம் ஆதல் –வீய முடிய-வினைகளை-சரீர சம்பந்தத்துக்கு அடியானை பாபங்களை-வேர் அறப் பாய்ந்து–சவாசனமாகப் போக்கி -பாய்ந்து என்று சினம் தோற்றுகிறது–ஒரு சர்வ சக்தி செய்யுமத்தை நான் செய்யவோ –
எந்நாள்--இன்ன நாள் என்று ஓர் அவதி பெற்றார் ஆகிலும் அத்தை பற்றி கொண்டு இருப்பர்
யான் – உன்னை பெறுகைக்கு தந்த உபகரணத்தை அழித்துக் கொண்ட நான் –-உன்னை–என் பேற்றுக்கு போக்கடி சொல்ல வேணும் -என்று வளைக்கலாம் படி இருக்கிற உன்னை-இனி வந்து கூடுவேன்--நீ தந்த கைம்முதலையும் அழித்துக் கொண்ட பின்பு கிட்டுகைக்குப் போக்கடி உண்டாகில் சொல்ல வேணும் -என்கிறார் 

வாழ்ந்தார் -என்கிற பர வ்ருத்தந்தார்க்கு-அதாவது-வாழ்ந்தார்கள் வாழ்ந்தது -4-1-6–என்று தொடங்கி ,முன்பு ஜீவித்தர்கள் வாழ்ந்த பிரகாரம் , மகா வர்ஷா ஜல புத் புத்தம் போலே -நசிந்து நசிந்து அதிபதித்தார்கள் என்னும் அது ஒழிய சிருஷ்டி காலம் தொடங்கி ,இன்றளவும் வர ஜீவித்தவர்கள் ஒரு படிப் பட ஜீவித்தே ,போந்தார்கள் என்னும் இவ் அர்த்தம் தான் இல்லை என்று – ஐஸ்வர்யவான்களாய் முன்பு ஜீவித்தவர்கள் வ்ருத்தாந்தையும் ,

வாழ்ந்தார்கள்‌ வாழ்ந்தது”” (திருவா. & – 1 – 6) என்கிற பாட்டிற்படியே முன்பு ஜீவித்தவர்களாகச்‌ சொல்லுமவர்கள்‌ ஜலபுத்‌புதம் போலே நஸித்து அதே கதியிலே போனார்கள்‌ என்னுமதொழிய ஒருபடிப்பட ஜீவித்துப்‌ போந்தார்கள்‌ என்னுமர்த்தம்‌ இல்லை என்னுமதுவும்‌,

வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை மொக்குளின் மாய்ந்து மாய்ந்து
ஆழ்ந்தார்
என்று அல்லால், அன்று முதல் இன்று அறுதியா
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பது இல்லை ; நிற்குறில்
ஆழ்ந்தார் கடற் பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ.–4-1-6–லோகத்தில் ஜீவித்தவர்கள் ஜீவித்தது இவர் வி நாசமாக நினைத்து இருக்குமத்தை இ றே அவர்கள் வாழ்வாக நினைத்து இருக்கிறது
இன்னம் கெடுப்பாயோ -என்றார் இறே இவர் –-மாமழை மொக்குளின்பெரு மழைக் குமிழி போலே -ஜல புத்புத வத்சமம் -மா மழை என்கிறது அநந்தரம் விழும் துளியோடே வசிக்கும் என்கைக்காக-மாய்ந்து மாய்ந்து-நசித்து நசித்து-ஆழ்ந்தார் என்று அல்லால், அன்று முதல் இன்று அறுதியா-வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பது இல்லை ;-ஜீவித்த நாள் பண்ணின பாபத்தாலே அதோ கதியில் விழுமது ஒழிய ஸ்ருஷ்ட்டி காலமே தொடங்கி இற்றை அளவும் வர ஜீவித்தவர்கள் ஒருபடிப்பட ஜீவித்தார்கள் என்னும் அர்த்தம் தான் முதலிலே இல்லை -அர்த்தம் தான் முதலிலே உண்டாகில் இறே இவர்களுக்கு உண்டு இல்லை என்ன வேண்டுவது

சூட்டும்-அதாவது –-சூட்டு நன் மாலைகள் –திரு விருத்தம் -21–என்று தொடங்கி ,-பரமபத வாசிகள் சாமாராதன உபகரணங்களைத் தரித்துக்கொண்டு , சாமாராதனம் பண்ணி நிற்கச் செய்தே
அத்தை உபேஷித்து திரு ஆய்ப் பாடியிலே வெண்ணெயை விரும்பி வந்து அவதரித்ததை சொல்லுகையாலே , பரம பதத்தில் உள்ளோர் வ்ருத்தாந்தையும் –

‘சூட்டு நன் மாலைகள்‌’” (திருவிரு. 20) என்று தொடங்கி – ஒரு விபூ,தியாக ஸமாராதநோந்முகராய்‌ உப கரணங்களைக் கொண்டு நில்லா நிற்கச் செய்தே அத்தை உபேஷித்துத்‌ திருவாய்ப்பாடியில்‌ திரண்ட வெண்ணெயை அசிந்திதமாக புஜிக்கையிலுண்டான இச்சையாலே கருஷ்ணனாய்‌ வந்தவதரித்து நப்பின்னைப்‌ பிராட்டிக்காக ருஷபங்கள்‌ ஏழையும்‌ அடர்த்தான்‌ என்றும்‌-

சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி வானோர்கள் நன்னீர்
ஆட்டி அம் தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்தி மிலேற்றுவன் கூன்
கூட்டிடை ஆடின கூத்து அடல் ஆயர் தம் கொம்பினுக்கே
 –21-அங்கு நடந்தவற்றையும்-இங்கு நடந்தவற்றையும் பிரத்யக்ஷமாகக் கண்டு அன்றோ அருளிச் செய்கிறார்

கோவை –அதாவது-கோவை வாயாள் பொருட்டு-4-3-1- -என்று தொடங்கி –-தேச கால விப்ரக்ருஷ்டங்களான ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாத்வ்யவதாரங்களில் விரோதி நிரசன அபதானங்களை ,
தத் தத் தேச காலங்களில் போலே தர்சித்து ,நீ இப்படி விரோதி நிரசனம் பண்ணுகிற தசைகளில் ,
உதவி சிசிரோபசாரம் பண்ணப் பெற்றிலேன் ஆகிலும் , என்னுடைய ஹ்ருதயாதிகளே உனக்கு போக உபகரணனாம் படி என் பக்கலிலே வ்யாமுக்தனாவதே ! என்கையாலும் .

““கோவை வாயாள் பொருட்டு”’ (திருவா. 4 – 3 – 1) என்று தொடங்கி -ராமக்ருஷ்ணாத்‌ யவதாரங்களைப் பண்ணி விரோதி நிரஸநம்‌ பண்ணுகிற தஸைகளிலே உதவி ஸிஸிரோபசாரம்‌ பண்ணப்‌ பெற்றிலேனாகிலும்‌ என்னுடைய ஸத்தாதிகளெல்லாம்‌ தனக்கு போக உபகரணமாகக்‌ கொள்ளும்படி என் பக்கலிலே வ்யாமுக்‌தனானானென்றும்‌.

கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய்! மதிள்இலங்கைக்
கோவை வீயச் சிலை குனித்தாய்! குலநல் யானை மருப்பு ஒசித்தாய்!
பூவை வீயா நீர்தூவிப் போதால் வணங்கேனேலும், நின்
பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே.
–4-3-1-நப்பின்னை பிராட்டியையும் ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளையும் பிரணயிநி களாக உடையனாய் இருக்க என் சத்தையே தனக்கு எல்லாமாகக் கொள்வதே -என்கிறார்–புஷ்ப ஹாஸ ஸூகுமாரமான திருமேனிக்கு பூசும் சாந்து என் நெஞ்சமாய் விடுவதே –

ஆழி –அதாவது – ஆழி எழ-7-4-1- -என்று தொடங்கி , த்ரை விக்ரமணம் ,சமுத்திர மதனம் ,பூமி யுத்தரணம் ,ஜகன் நிகரணம் ,பாரத சமர நிர்வகணம் (கை அறவு -நிர்மாணம் என்றவாறு) ஹிரண்ய நிரசனம் ,ராவண வதம் ,பாணாகர சேதனம் ,ஜகத் ஸ்ருஷ்ட்டி ,கோவர்த்தன உத்தோரணம் ஆகிய பூர்வ சரிதங்களையும் , பத்துப் பத்தாக பேசுகையாலும் , ஈஸ்வர வ்ருத்தாந்தங்களையும் –

ஆழியெழச்சங்கு’” (திருவா. 7 – 4- 1) என்று தொடங்கி – அவனுடைய த்ரைவிக்ரமாபதாநம்‌-அம்ருதமதநம்‌, பூம்யுத்‌தரணம்‌, மஹா ப்ரளயவ்ருத்தாந்தம்‌, ஹிரண்ய நிரஸநம்‌, ராவண வத,ம்‌, பாணனுடைய பாஹாுவநச்சேதந ப்ரகாரம்‌, ததநந்தரம்‌ ஜகத் ஸ்ருஷ்டி ப்ரகாரம்‌, கோவர்த்‌தநோத்‌தரணம்‌ இப்படிப்‌ பத்தும் பத்தான விஜய பரம்பரைகளையும்‌,

ஆழியெழச்சங்கு’” (திருவா. 7 – 4- 1) என்று தொடங்கி–தான் க்ரமத்தாலே பண்ணின அபதானங்களை ஒரு காலே காட்டி அருளக் கண்டு தரித்த ஆழ்வார் -திரு உலகு அளந்து அருளுகை தொடக்கமான அவனுடைய விஜய பரம்பரையை -மயர்வற மதி நலம் அருள பெற்றவர் ஆகையால் சமகாலத்தில் அனுபவித்தவர்களை போலே அனுபவித்து எம்பெருமானை ஏத்தி ஹ்ருஷ்டராகிறார் –அவனுடைய த்ரைவிக்ரம வியாபாரத்தையும்-அம்ருத மதனத்தையும்-பூமி உத்தரணத்தையும் -ஜெகன் நிகரணத்தையும் -பாரத சமர ப்ரவர்த்தகத்வத்தையும்- ஹிரண்ய வாதத்தையும்-லங்கா பங்கத்தையும்-பாண யுத்தத்தையும்-ஜகத் ஸ்ருஷ்ட்டி பிரகாரத்தையும்- கோவர்த்தன உத்தரணத்தையும்-அனுசந்தித்து -ஏவம்வித விஜய ஆபத்தான விசிஷ்டனான சர்வேஸ்வரனுடைய விரோதி நிரசன சாமர்த்தியத்தை அனுசந்தித்து அருளுகிறார் 

என்கிற சாஷாத்க்ருத பர வ்ருத்தந்தார்க்கு-யாத்ருச்சிகாதிகள் உண்டாகில் தோன்றும் –அதாவது-ஒரு உபாதி அற ஒரு போகியாக சாஷாத்தாக அருளிச் செய்கிற இவருக்கு அஜ்ஞாதமான ஓன்று இல்லாமையாலே , தம்மை ஈஸ்வரன் அங்கீ கரிக்கைக்கு அடியான ,யாத்ருச்சிகாதி ஸூஹ்ருதங்கள் உண்டாகில் , அல்லாதவற்றோ பாதி பிரகாசிக்கும் இறே என்ற படி ..இத்தால் பிரகாசித்ததாகில் அருளிச் செய்வர் –அப்படி அருளிச் செய்யக் காணாமையாலும், கேவல நிர்ஹேதுக,பிரசாத பிரகாசக வசனங்கள் பலவும் அருளிச் செய்தமை காண்கையாலும் – ( வெறிதே அருள் செய்தமையை விளக்கும் அருளிச் செயல்கள் பல உண்டே ) அவையும்-யாத்ருச்சிகாதிகள்- இவர்க்கு இல்லை என்றது ஆய்த்து

இப்படி ஸ்வ பர விபாகமற ஸர்வத்தையும்‌ ஸாக்ஷாத்கரித்துப்‌ பேசின இவர்க்குத்‌ தம்மை விஷயீகரித்தது யாத்‌ருச்சிகாதி, ஸுக்ருதமடியாக என்னுமது உண்டாகில்‌ ப்ரகாஸிக்குமிறே என்கிறார்

இப்படி அங்கீகார ஹேதுவாய் இருப்பதொரு ஸூஹ்ருதம் இல்லை யாகிலும் ,-அத்வேஷ ஆபிமுக்யங்கள் ,ஸூஹ்ருதம் அடியாக ஆனாலோ என்ன ,அருளிச் செய்கிறார் மேல் —இப்படி அங்கீ காரத்துக்கு ஹேதுவாயிருப்பதொரு ஸுக்ருதமில்லையே யாகிலும்‌, அத்‌வேஷாபிமுக்‌,யங்கள்‌ ஸுக்ருதமடியாக ஆனாலோ என்னில்‌, அந்த அத்‌வேஷாபிமுக்‌யங்களும்‌ அவனாலே உண்டாய்த்தென்று இவர் தாமே அருளிச் செய்தாரிறே

செய்த நன்றி தேடிக் காணாதே-கெடுத்தாய் தந்தாய் என்ற அத்வேஷ ஆபிமுக்யங்களும் சத் கர்மத்தால்
அல்ல -சூரணை -108-

(கெடுத்தாய் என்ற அத்வேஷமும் ( மருவித் தொழும் மனம் உடைத்தாய் இருத்தல் )- தந்தாய் என்ற ஆபீமுக்யமும் ( தீ மனம் இல்லாதவனாக இருத்தல் )ஸத் கர்மத்தால் அல்ல என்றபடி
ஈஸ்வர ஸுஹார்த்தம் -யாதிருச்சா ஸூஹ் ருதம் -விஷ்ணு கடாக்ஷம்-அத்வேஷம் -ஆபி முக்கியம் –
போன்ற -8 -படிக்கட்டுகள் முன்பே பார்த்தோம் –ஸூஹ்ருத தேவர் அவனுக்கே அசாதாரணப் பெயர்- வார்த்தா மாலை )-செய்த நன்றி தேடிக் காணாதே –அதாவது – வாட்டாற்றாருக்கு என் நன்றி செய்தேனா என் நெஞ்சில் திகழ்வதுவே-10-6-8–என்று சர்வேஸ்வரன் தம்மை விஷயீகரிக்கைக்கு உடலாக தாம் செய்த ஸூஹ்ருதம் ஏதேனும் உண்டோ என்று ,தேடிக் காணாதே –கெடுத்தாய் என்ற அத்வேஷமும் -தந்தாய் என்ற ஆபீமுக்யமும்--அதாவது –என்னைத் தீ மனம் கெடுத்தாய் -2-7-8–என்றும் , மருவித் தொழும் மனமே தந்தாய்-2-7-7- -என்று (வரிசை கிரமும் இல்லாமல் அன்றோ அருளிச் செய்கிறார் -இவை அவன் மூலம் வந்தமையால் ) தீ மனம் போக்குகையாகிற அத்வேஷமும் , மருவித் தொழும் மனம் உண்டாக்குகை யாகிற ஆபிமுக்யமும் , இரண்டும் அவனாலே உண்டாய்த்து என்று ,தாமே நிஷ்கரிஷ்க்கையாலே , அத்வேஷ ஆபிமுக்யங்களும் சத் கர்மம் அடியாக வந்தது அன்று என்கை
(ததாமி புத்தி யோகம் -தந்தாய் தேஷாம்–சதத யுக்தாயாம் ப்ரீதி பூர்வகம் மேல் விழுந்து தாதாமி புத்தி யோகம் -தந்தாய் அனுகம்பார்த்தம் -தமஸை -நாசயாமி -கெடுத்தாய் -ஞான தீபேண பாஸ்கரா- கீதையிலும் -இவை இரண்டும் உண்டே –-அருள் கொண்டு ஆயிரம் இந்த தமிழ் பாடினான் அன்றோ)

”வாட்டாற்றார்க்கெந்நன்றி செய்தேனா என்னெஞ்சில்‌ திகழ்வதுவே” (திருவா. 10 – 8 – 8) என்று ஸர்வேஸ்வரன்‌ தம்மை விஷயீகரித்ததுக்கு ஹேது தேடிக் காணாதே. (கெடுத்தாய்‌ தந்தாய்‌ என்று) “என்னைத்‌ தீ மனங்கெடுத்தாய்‌”” (திருவா. 2 – 7 – 8), “மருவித் தொழும்‌ மனமே தந்தாய்‌” (திருவா. 2 – 7 – 7) என்று சொல்லுகிற அத்‌வேஷாபிமுக்‌யங் களிரண்டும்‌ அவனாலே உண்டாய்த் தென்று தாமே அருளிச் செய்கையாலே அவையும்‌ ஸத் கர்ம மடியாக வந்ததன்று என்கிறார்

மெய்ந்நின்ற கமழ் துளவ விரை ஏறு திரு முடியன்
கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது புனல்
மைந்நின்ற வரை போலும் திரு உருவ வாட்டாற்றாற்கு
எந்நன்றி செய்தேனோ என்நெஞ்சில் திகழ்வதுவே–10-6-8-
–என்ன நன்மை செய்தெனாக –பெரிய வுடையாரைப் போலே என்னை அழிய மாறினேனோ –திருவடியைப் போலே தனியிடத்தில் உதவினேனோ –தன்னுடைய ஆஞ்ஞா ரூபமான விஹிதங்களை அனுஷ்டித்தேனோ –என் நெஞ்சில் புகுந்த பின்பு விளங்கினான் என்னும் படி விரும்பிற்று —

திரிவிக்ரமன் செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய்
உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளி
பரவிப் பணிந்து பல்லூழி யூழி நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே –2-7-7--இப்படி பலகாலும் நினைத்தும் அடைவு கெடப் பேசியும் குண பரவசனாய் வணங்கி இப்படி கால தத்வம் உள்ளதனையும்-போக்யமும் பிராப்தமுமாய் உன் திருவடிகளையே அநந்ய ப்ரயோஜனமாய்க் கொண்டு அடிமை செய்யும் மனசையே தந்தாய்-விஷயாந்தரங்கள் அஸ்திரமுமாய் அபோக்யமும் ஆகையால் சஞ்சலம் ஹி மன-என்னும் படி இறே இருப்பது –-வல்லை காண் என் வாமனனே — சுக்கிராதிகள் வார்த்தை செவிப்படாத படி மஹா பலியை வடிவு அழகால் வஞ்சித்தால் போலே என்னை அநந்யார்ஹனாக்கிக் கொள்ள வல்லை காண்
இச் சக்தியை உடையவனுக்கு முடியாதது உண்டோ –

வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே –2-7-8-–பந்த ஹேது அன்றிக்கே குண அனுபவமே யாத்ரையாம் படியான நிர்தோஷ அந்தகரணாய் ஜென்மம் ஆகிற துழதி உண்டு -தூர்த்துக்கம் -அது போம்படியாக-விஷயாந்தர ஸ்பர்சியான நெஞ்சைப் போக்குவதும் செய்தாய்
ஸ்ரீ யபதியாகையாலே பூர்ணனான எனக்கு உன்னால் ப்ரத்யுபகாரமாக செய்யலாவது ஒன்றும் காண்கிறிலேன்- பிரதிபகாரம் பண்ணி அல்லது நிற்க மாட்டுகிறிலேன் –

ஆனால் பரம பக்திக்கு ,முகம் காட்டுமோ பாதி ,பரி கணனைக்கும் முகம் காட்டும் என்றார் இறே – இவர் தாம்-அந்த பரிகணனை தான் இவர்க்கு உண்டால் ஆய்த்தோ என்ன -அருளி செய்கிறார் மேல் —ஆனால்‌ பரமபக்திக்கு முகம்‌ காட்டுமாப் போலே பரிகணனைக்கும்‌ முகம் காட்டும்‌ என்றாரிறே இவர் தாமே-ஆகையாலே அந்த பரிகணனை இவர்க்கு உண்டாய்த்தானாலோ என்னில்‌, அதுவுமில்லை என்று தாமே அருளிச்செய்தாரிறே என்கிறார்‌ மேல்‌.

எண்ணிலும் வரும் கணனைக்கு எண்டானும் இல்லை –சூரணை -109-(கணனை–எண்ணுதல் )-

எண்ணிலும் வரும் கணனைக்கு—அதாவது –எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவம்–1-10-2-என்றது ,
ஈஸ்வரன் குண ஆதிக்யம் சொன்ன இத்தனை போக்கி , அந்த பரகணனைக்கு தம்மோடு அந்வயம் இல்லாமை கண்டு –எண்டானும் இல்லை –அதாவது –நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்று ,ஓர் எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு கண்டாயே -1-10-5-–என்று காரியங்கள் பலிக்கும் இடத்து ,எண்ணிலும் வரும் -என்றது தான் மிகை யாகும் படி ஓர் எண் தானும் இன்றி இருக்கச் செய்தே ,பலித்துக் கொடு நிற்கிறபடி கண்டாய் என்று , தம் திரு உள்ளத்துக்கு மூதலிக்கையாலே,அதுவும் இவர்க்கு இல்லை என்கை –

“எண்ணிலும்‌ வரும்‌ என்னினி வேண்டுவம்‌”” (திருவா, 1 – 10 – 2) என்று பரமபத்தி யுக்தர்க்கு முகம் காட்டுமாப் போலே பரிகணனைக்கு முகம்‌ காட்டும்‌ என்னுமிடம்‌ ஈஸ்வரனுடைய குணாதிக்யம்‌ சொல்லிற்றத்தனைபோக்கி, அந்த பரிகணனையும்‌ தமக்கில்லை என்னுமிடத்தை “கருமங்கள்‌ வாய்க்கின்று ஒரெண்டானுமின்றியே வந்தியலுமாறு – கண்டாயே” (திருவா. 1 – 10- 5) என்று – கார்யங்கள்‌ ஸித்‌திக்குமிடத்தில்‌ ”எண்ணிலும்‌ வரும்‌” என்றது தானும்‌ மிகையாம்படி  ‘“ஓரெண்டானுமின்றியே”” என்று அந்த எண் தானுமின்றியே பலித்துக் கொடு நின்றபடி கண்டாயே என்று அதுவுமில்லை என்று தாமே பேசினாரிறே

கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
எண்ணிலும் வரும் என்னினி வேண்டுவம்
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம் பிரானையே –1-10-2-கட படாதிகள் உடைய அஸ்தி பாவத்தை இசையும் -ஈசுவரனுடைய அஸ்தி பாவத்தை இசையான்–பஞ்ச விம்சதி தத்துவத்தையும் இசையும் -ஷட் விம்சகளை இசையான் – நம்முடைய உண்மையை இசைந்தான் இறே என்று அப்போதே வந்து முகம் காட்டும் இவன் எண்ணின் அளவுக்கு அவ்வருகே வரும் என்னவுமாம்-

கண்டாய் நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்றோர்
எண் தானும் இன்றியே வந்தியலுமாறு

உண்டானை உலகேழுமோர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே –1-10-5–எண்ணிலும் வரும் –என்று இது மிகையாம் படி வந்து பலித்துக் கொண்டு நிற்கிறபடி கண்டாயே-இயலுகை பலிக்கை-

அது தான் வேணுமோ ? தமக்கு அனுமதி இச்சைகள் உண்டாக அருளிச் செய்தாரே ? அவை தான் ஹேது ஆனாலோ என்ன -அதுவும் அவனாலே உண்டானது என்கிறார் —ஆனால்‌ தமக்கு அநுமதீச்சைகள்‌ உண்டாக அருளிச் செய்தாரே- அவைதான்‌ ஹேதுவானாலோ என்னில்‌, அவையும்‌ அவனாலே உண்டானவையாகையாலே ஹேது அன்று என்கிறார்‌-

மதியால் இசைந்தோம் என்னும் அனுமதி இச்சைகள் இருத்துவம் என்னாத என்னை இசைவித்த
என் இசைவினது–சூரணை -110-

மதியால் என்னும் அனுமதி -என்றும் -இசைந்தோம் என்னும் இச்சை -என்று கொண்டு
அனுமதி இச்சைகள் இசைவினது-இசைவு தானாக இருக்கின்ற இறைவனுடையது -என்றபடி
என் இசைவு என்று ஈஸ்வரனைச் சொல்லி -என் இசைவினது-ஈஸ்வரன் கர்த்தவ்ய பலன் என்றபடி
ஆழ்வார் க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் போலே அவனும் ஆழ்வார் இசைவு -திரு நாமம் அவனுக்கு சாத்துகிறார்
)

மதியால் என்னும் அனுமதி – அதாவது – வைத்தாய் மதியால் எனது உள்ளத்து அகத்தே-8-7-10- -என்று
அனுமதி மாத்ரத்தாலே அவனை என் நெஞ்சுக்குள்ளே வைத்தேன் என்று- தமக்கு உளதவாகச் சொன்ன அனுமதியும்–இசைந்தோம் என்னும் இச்சை-அதாவது – யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் -பெரிய திருவந்தாதி-என்று விரோதியை போக்கும் படியாக நானும் என் நெஞ்சும் இசைந்தோம் என்றும் ,தமக்கு உளவாகச் சொன்ன இச்சையும் –

வைத்தேன்‌ மதியால்‌ எனதுள்ளத்‌தகத்தே”” (திருவா. 8 – 7 – 10) என்றும்‌, “யானுமென்னெஞ்சு மிசைந்தொழிந்தோம்‌ (பெ.திருவ. 26) என்றும்‌, அனுமதி மாத்ரத்தாலே அவனை என்‌ தெஞ்சுக்குள்ளே வைத்தேன்‌ என்றும்‌, விரோதியைப்‌ போக்குவானாக யானும்‌ என்‌ நெஞ்சும்‌ இசைந்‌தொழிந்தோம்‌ என்றும்‌ தமக்கு அநுமதீச்சைகள்‌ உண்டாகச்‌ சொன்னாரே என்னில்‌; அந்த அநுமதீச்சைகளும்‌

வைத்தேன் மதியால் எனது உள்ளத்தக்கத்தே
எய்த்தே ஒழிவேன் அல்லேன் என்றும் எப்போதும்
மெய்த்தேய் திரை மோது தண் பாற் கடலுளால்
பைத்ததேய் சுடர்ப் பாம்பணை நம் பரனையே –8-7-10–அனுமதியாலே என்னெஞ்சினுள்ளே வைத்தேன் -அனுமதி மாத்ரத்துக்கு உள்ள பலாதிக்யம் என் -அவன் ஹ்ருதயஸ்த்தனான பின்பு பிரிந்து துக்கப் படுகிறேன் அல்லேன் -இது எத்தனை குளிக்கு நிற்கும் -என்ன –என்றும் எப்போதும்-சர்வ திவசத்திலும் -சர்வ அவஸ்தையிலும்

யானும் என் நெஞ்சமும் இசைந்து ஒழிந்தோம் வல் வினையைக்
கானும் மலையும் புகக் கடிவான் தானோர்
இருளன்ன மா மேனி எம் மிறையார் தந்த
அருள் என்னும் தண்டால் அடித்து —26—இத் தலையில் குறைவற்றது-பொருந்தாத தலையும் பொருந்திற்று-பொருந்துமவன் பொருந்தச் சொல்ல வேண்டா இறே-அவன் மேல் விழ –
என்னுடைய விலக்காமையே கர்த்ருத்வம் 

இருத்துவம் என்னாத என்னை –அதாவது யான் ஒட்டி என்னுள் இருத்துவம் என்றிலன் -1-7-7–என்று
அவன் தம்முள்ளே புகுந்து இருப்பதாக கேட்ட அளவிலே நான் இசைந்து , என்னுடைய ஹிருதயத்திலே இருத்துவோம் என்று இலேன் என்ற படி .. அவனை உள்ளே இருத்துவோம் என்று இசையாத தம்மை இசைவித்த என் இசைவினது – அதாவது-இசைவித்து என்னை-5-8-9–என்கிற படி வருந்தி இசையப் பண்ணி –மயர்வறவற என் மனத்தே மன்னினான் தன்னை என் இசைவினை-1-7-4– நான் அல்லேன் என்று அகலாத படி என் இசைவு தானாய்ப் புகுந்தவனை என்னும் படி யத்தனித்த ஈஸ்வரனுடைய கிருஷி பலம் என்கை —(மன்னினான் தன்னை -இரண்டாம் வெறுமையாக சொல்லி வந்து அடுத்து – –என் இசைவினை-விடுவேனோ – பெருமாளையே இந்த சப்தத்தால் அருளிச் செய்கிறார் )

யானொட்டி என்னுள்‌ இருத்துவமென்றிலன்‌‘ (திருவா. 1 – 7- 7) என்று, நான்‌ அவனை என்னுள்ளே இருக்க வொட்டேன்‌ என்று ப்ரதிஜ்ஞை பண்ண, தான்‌ “அத்ய மே மரணம்‌ வாபிதரணம்‌ ஸாகரஸ்ய வா”’ (ரா. யு. 21 – 87) என்று ப்ரதிஜ்ஞை பண்ணினாப் போலே ப்ரதிஜ்ஞை பண்ணி, ஸ்வதந்த்ரமான நெஞ்சை அபஹரித்து ஸரீரத்‌தோடே கலந்து, பின்பு ஆத்மாவோடே கலந்து, இப்படி யத்நம்‌ பண்ணி, ““இசைவித்‌சென்னை” (திருவா. 8 – 8 – 9) என்று என்னை இசையும்படி பண்ணினான்‌ என்றும்‌, இசைவித்த மாத்ரமே யன்றியிலே, ‘“என்னிசைவினை”” (திருவா. 1 – 7 – 4) என்று இசைவு தானும்‌ தானேயாய்‌ நின்றவனுடைய க்ருஷி பலம்‌ என்கிறார்

யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன் தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
ஊனொட்டி நின்று என்னுயிரில் கலந்து இயல் வானொட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே–1-7-7–நான் இசைந்து என் ஹிருதயத்திலே இருத்துவேன் என்றிலேன்-இசைவு என்னாலே வந்ததாகில் அன்றோ விடுகை என்னாலே வந்ததாவது-இசைவு இன்றிக்கே இருக்கக் கிட்டின படி என் என்னில் –
நிரபேஷனான தான் -உம்முடைய பக்கலிலே இருக்கை தவிரேன் -என்று ப்ரதிஜ்ஜை பண்ணி வந்து
அத்ய மே மரணம் வா அபி தரணம் ஸாகரஸ் யவா-எனக்கு பவ்யமாய் -தன்னாலும் திருத்த ஒண்ணாத படி ஸ் வ தந்திரமான நெஞ்சை வஞ்சித்து தன்னுடைய சீலாதி குணங்களாலும் வடிவு அழகாலும் என்னை அறியாமே அகப்படுத்தி-

இசைவித் தென்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே!
அசைவில் அமரர் தலைவர் தலைவா! ஆதிப் பெரு மூர்த்தி!
திசைவில் வீசும் செழுமா மணிகள் சேரும் திருக்குடந்தை
அசைவில் உலகம் பரவக் கிடந்தாய்! காண வாராயே.–5-8-9—நெடுநாள் விமுகனான என்னையும் அடிமையிலே இசைவித்து -என் இசைவுக்கு எதிர் சூழல் புக்குத் திரிந்த உனக்கு அபேக்ஷிதம் செய்யக் குறை என் -நான் அர்த்தியாதே இருக்க என் கார்யம் செய்த நீ இன்று இரக்கச் செய்தே விளம்பிக்கிறது ஏன்-உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே!-பரகு பரகு என்று திரியாத படி உன் திருவடிகளே விஷயமாம் படி பண்ணுமவனே -என்கை -நிழலும் அடி தாறுமானோம் என்கிறபடியே மிதியடியாம் படி ஸ்ரீ சடகோபனாக்கி -பெறும் காற்றில் பூளை போலே யாதானும் பற்றி நீங்கும் விரோதமாய் இறே முன்பு வர்த்தித்தது-அம்மானே –இசைவே தொடங்கி இவர் கார்யம் தானே செய்ய வேண்டும் பிராப்தி

மயர்வற என் மனத்தே மன்னினான் தன்னை -உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வில் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என் இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ –1-7-4–அப்படி இருக்கிறவன் என்னையும் அவர்களோடு ஒக்கப் பண்ணுகைக்கு இசைவும் தானாய் வந்து புகுந்தான்-என் சொல்லி யான் விடுவேனோ-என்ன கண் அழிவைச் சொல்லி -நான் கை வாங்குவது –
அஞ்ஞானம் அனுவர்த்தித்து விடவோ –-அஸந்நிஹிதன் என்று விடவோ –-அந்நிய பரன் என்று விடவோ – நன்மைகளை பண்ணித் தந்திலன் என்று விடவோ – பிரதியுபகாரம் கொள்ள இருந்தான் என்று விடவோ – மேன்மை போராது என்று விடவோ – இசைவுக்கு கிருஷி பண்ணினேன் நான் என்று விடவோ – எத்தைச் சொல்லி விடுவது –

இவை ஒன்றும் இல்லை ஆகிலும் ,-மாதவன்-என்றும் -திரு மால் இரும் சோலை மலை -என்றும் ,
சொன்ன உக்தி மாத்ரங்களை பற்றாசாக கொண்டு விஷயீகரித்தானாக அருளிச் செய்கையால் ,அவை தான் உண்டோ என்ன , அவை பேற்றுக்கு அடியாக சொல்ல தக்கவை அன்று என்னும் இடத்தை ,மற்றும் இவற்றோடு சக படிதங்களாக தக்க வற்றையும் கூட்டிக் கொண்டு அருளிச் செய்கிறார் மேல் —ஆனாலும்‌ இவர்‌ தம்முடைய ப்ரபந்தத்திலே ஹேது ஸூசகமாகச் சில உக்திகள்‌ உண்டாயிரா நின்றதே என்னில்‌, அவையும்‌ ஹேது அன்றென்னுமிடத்தைப்பல படியாலும்‌ உப பாதிக்கிறார்‌ –
(திரு மால் இரும் சோலை ஊரைச் சொன்னாய் -பேரைச் சொன்னாய் -மாதவன் -இவற்றுடன் சக படிதங்களாக ஸ்ரீ வசன பூஷணத்தில் உள்ளவைஅடியார்க்கு ஒதுங்க நிழல் கொடுத்தாய் -அவர்கள் விடாய் தீர்த்தாய் -அஃஞ்ஞான ஸூ ஹ்ருதங்களாய் சக படிதங்களாக என்றவாறு -அபுத்தி பூர்வகமாக வைதிக புத்திரர்கள் திரும்ப -விரஜை அருகில் போனாலும் இவர்கள் உள்ளே போகாதது போக இச்சை இல்லாத காரணம் )

மாதவன் மலை நீர் நிழல் என்று ஏறிடுமது வ்யாவ்ருத்த் யுக்தி அன்யார்த்தம்-அ புத்தி பூர்வகம்
அ வி ஹிதம்-பல வி சத்ருசம் -பலாந்தர ஹேது —சூரணை -111-

(மாதவன் மலை-என்று ஏறிடுமது வ்யாவ்ருத்த் யுக்தி–வேறுபாட்டினை அறிவிக்கும் சொற்கள் –
நீர் நிழல் என்று ஏறிடுமது அன்யார்த்தம்-வேறு ஒன்றின் பொருட்டு – அ புத்தி பூர்வகம்-நினைவு இன்றிக்கே சொல்லுதல்-அ விஹிதம்-சாஸ்த்ரங்களால் விதிக்கப்படாதவை -பல விசத்ருசம்-பலனுக்கு ஒத்ததாகாதவை -பலாந்தர ஹேது –அல்ப பலன்களுக்கு ஹேது )-மாதவன் என்று-அதாவது –
மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது யாதவங்களும் சேர் கொடேன் என்று என்னுள் புகுந்து இருந்து தீது அவன் கெடுக்கும் அமுதம் –திருவாய் -2-7-3–என்று அந்தப் புர வாஸிகள் சொல்லும் -மாதவன்-என்கிற திரு நாமத்தை அஹ்ருதயமாக சொன்ன அளவில் , அத்தையே குவாலாக கொண்டு ,அல்லாத திரு நாமங்களுக்கும் – இதுக்கும் வாசி அறியாத என்னை விஷயீகரித்து ,
என்னுள்ளே புகுந்து (அதுக்கும் மேலே மன்னி )இருந்து , சகல கர்மங்களையும் போக்கினான் என்றும் –மலை என்று –அதாவது-திரு மால் இரும் சோலை மலை என்றேன் என்ன ,திரு மால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -10-8-1–என்று ஓர் ஓர் தேசங்களில் ,மலைகளை சொல்லா நின்றால் ,ஒரோ விசேஷங்களை இட்டுச் சொல்லுமோ பாதி ,யாத்ருச்சிகமாக (யஸ்ய கச்ச இதி யச்சா யதேச்சையாக)-திரு மால் இரும் சோலை மலை-என்னும் காட்டில் தான் உகந்து அருளின திருமலையின் பேரை விரும்பி சொன்னேன் ஆகக் கொண்டு நிரபேஷனான தான் பிராட்டி யோடு கூட வந்து என்னுள்ளே பரி பூரணமாக புகுந்தான் என்று சொல்லும் படி —(மானத்து வண்டலுழ வோர் எழுத்தின் வடிவுற்ற சீர் மானத் துவண்ட வினையாளராயினும் மால் வளர்வி மானத்து வண்டலமா மரங்கம் வழியா வரினும் மானத்து வண்டமர் தார் அண்டராம்பதம் வாய்க்கு மங்கே –திருவரங்கத்து மாலை ) மாதவன் என்று நம் பேரைச் சொன்னான் -என்றும் திரு மால் இரும் சோலை மலை என்று நம் ஊரைச் சொன்னான்– என்றும்
எறிடுகிற இவை –
(பெருமாள் ஆழ்வார் தலையிலே ஸூஹ்ருதத்தை ஏறிடுகிறான் என்றபடி )- ஈஸ்வரன் உகந்த திரு நாமம் என்றும் , அவனுகந்து வர்த்திக்கிற திருமலை என்று சொன்னவை அல்ல – பேருக்கும் பேருக்கும் ,மலைக்கும் மலைக்கும் வ்யாவ்ருத்தி சொன்ன மாத்ரம் —

“மாதவனென்றதே கொண்டு என்னை யினி இப்பாற் பட்டது’” (திருவா. 2 – 7 – 3) என்றும்‌, “திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்னத் திருமால்‌ வந்தென்‌ தெஞ்சு நிறையப் புகுந்தான்‌ (திருவா. 10- 8- 1) என்றும்‌ இப்படி அந்தப்புரத்திலுள்ளார்‌ சொல்லும்‌ பாசுரத்தை அஹ்ருதயமாகச் சொன்ன வளவிலே இத்திருநாமத்துக்கும்‌ அல்லாத திருநாமத்துக்கும்‌ வாசி யறியாத என்னை விஷயீகரித்து என்‌ விரோதிகளைப்‌ போக்கினான்‌ என்றும்‌, திருமலையின்‌ பேரைச்‌ சொன்னேனாக ஸ்ரீய பதியான ஸர்வேஸ்வரன்‌ என்னுடைய அஹ்ருதயமான உக்தியையே பற்றாசாகக்‌ கொண்டு விஷயீகரித்தான்‌ என்றும்‌.

மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது
யா தவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்திருந்து
தீதவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரை கட்குன்றம்
கோதவமிலன் கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே –2-7-3—மாதவன் என்கிற யுக்தி மாத்ரத்தையே கொண்டு -என் பக்கல் அஹ்ருதயமான யுக்தி மாத்திரமே உள்ளது-அத்தை அந்தப்புரத்தில் உள்ளார் வார்த்தை யாகையாலே சஹ்ருதயமாகவும் -அநேக ஆயாச சாத்தியமான ஆச்ரயணமாகவும் கொண்டு
என்னை –-கேவல நாராயண சப்தத்துக்கும் இதுக்கும் வாசி அறியாத என்னை-இனி போன காலமே போரும் -இனி விடேன் என்னா நின்றான் –பழுதே பல காலும் போயின -என்று ஈஸ்வரனைக் கிட்டின சேதனர் இருக்கும் இருப்பை தான் இரா நின்றான் –இப்பால் பட்டது-அணைக்கு கிழக்குப் பட்ட நீரோ பாதி இறே போன காலம் -இனி மேல் உள்ள காலம் ஆகிலும் ஒரு பொல்லாங்கும் சேர வீட்டுக் கொடேன் என்று –

திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்

குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால்
திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே-10-8-1–சிலர் ஒரு மலையைச் சொல்லும் இடத்தில் ஒரு விசேஷணத்தை இட்டுச் சொல்ல வேணும் –அம் மாத்ரம் சொன்னேன் அத்தனை என்று இரா நின்றார் இவர் -இவ் விசேஷணத்தை இட்டுச் சொல்லிற்று தன் பக்கல் ஆதரத்தாலே என்று இரா நின்றான் அவன் –என்ன -மனஸ் சஹகாரம் இல்லை -யுக்தி மாத்திரமே என்று இருக்கிறார் –ராவணன் தம்பிக்கு மித்ர பாவமே அமையும் என்று இருக்கிறவன் -இவருக்கு உக்திக்கு அவ்வருகு ஓன்று வேணும் என்று இருக்குமோ –சேஷத்வம் ஸ்வரூபம் ஆகில் -உபாய பாவம் நம் தலையிலே கிடந்ததாகில் -அத்வேஷம் உண்டாகில் -நம் பேறாக விஷயீ கரிக்கைக்கு உக்திக்கு அவ்வருகு உண்டோ -என்று இரா நின்றான் அவன் –திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்—திருமால் –அஹ்ருதயமாகச் சொன்னது தன்னையும் சஹ்ருதயம் ஆக்குவாரும் அருகே உண்டு – வந்து -நம்மை அங்கே அழைத்துக் கார்யம் கொள்ளுகை அன்றிக்கே –நாம் இருந்த இடத்தே வருவதே –சாபேஷன் இருந்த இடத்திலே பூர்ணன் வருவதே -சர்வருக்கும் அபிகம்யனானவனுக்கு நான் அபிகமயனாவதே –ஸோ அப்யகச்சன் மஹா தேஜோ சபரீம் – என் நெஞ்சம் -உக்திக்கு அசஹகாரியான என் நெஞ்சம் — நிறையப் புகுந்தான்-–விஷயாந்தரங்களுக்கு அவகாசம் இல்லாத படி பாழ் தீரப் புகுந்தான் –

நீர் நிழல் என்று ஏறிடுமது-அதாவது-மற்றும் இவற்றோடு சஹபடிதமாய் போருமவையான –-என் அடியார் விடாயை தீர்த்தாய் –அவர்களுக்கு ஒதுங்க நிழலைக் கொடுத்தாய் –என்று ஏறுடுகிற இவை
அன்யார்த்தம்
–அதாவது -தன் பயிர் தீயாமைக்காக நீர் உள்ள இடத்தில் நின்றும் நெடும் துலை இட்டு இறைக்கிறதும் , தனக்கு சூது சதுரங்கம் பொருகைக்கும் ,காற்று வரவுக்கு இருக்கையும் ஆக விரிவு உண்டாக புறம் திண்ணை கட்டி வைக்கிறதும் ஒழிய ,-பாகவதர்கள் விடாயைத் தீர்க்கைக்கும் , அவர்களுக்கு ஒதுங்க நிழல் ஆகைக்கும் செய்கிறது அல்லாமையாலே அன்யார்த்தம்-அபுத்தி பூர்வகம்
அதாவது-இவை தான் இத்தனையும் இத் தலையில் நினைவின்றி இருக்க , அவன் அடி தேறி இடுகிற அவை ஆகையாலே ,புத்தி பூர்வகமும் அல்ல.

(நீர்‌ நிழல்‌ என்று) “என்னடியார்‌ விடாயைத்‌ தீர்த்தாய்‌ அவர்களுக்கு ஒதுங்க நிழல்‌ கொடுத்தாய்‌” என்றாப் போலே இவை விஷயீகார ஹேது வானாலோ என்னில்‌; மாதவன்‌, மலை என்றது இரண்டும்‌ வ்யாவ்ருத்த் யுக்தி- அதாவது – இந்தத் திருநாமத்துக்கும்‌ அல்லாத திருநாமங்களுக்கும்‌ வாசி அறிந்து ஸ்ரீயப்பதியுடைய திருநாமம்‌ என்று சொன்னதன்று-இப் பேருககும்‌ அப்பேருக்கும்‌ வேறுபாடு சொன்ன மாத்ரம்‌. ”திருமாலிருஞ்சோலைமலை”’ என்றது – ஸர்வேஸ்வரனுக்கு இது வஸ்தவ்ய பூ,மி என்று சொன்னதன்று; ஒரோ தேஸங்களில்‌ மலைகளைச்‌ சொல்லுவார்‌, “கொல்லி மலை”, *குலை மலை’ என்று சொல்லுவாரைப் போலே இம் மலைக்கும்‌ அம் மலைக்கும்‌ வேறுபாடு தோற்றச்‌ சொன்னவித்தனை. (நீர்‌ நிழல்‌ என்னுமவை அந்யார்த்த,ம்‌) அதாவது – தன்‌ பயிருக்காக ஏற்றமிரைத்தும்‌ சூதுச துரங்கத்துக்காக விரிவுண்டாக அகம்‌ கட்டியும்‌ செய்கிறானத்தனைபோக்கி, பாகவதர்கள்‌ விடாய்‌ தீருகைக்கும்‌, ஒதுங்குவார்‌ ஓதுங்குகைக்குமன்றிறே; ஒரு வைஷ்ணவன்‌ அந்நீரிலே துளி நீர்‌ அள்ளக் காணுதல்‌, அந்நிழலிலே ஒருவன்‌ ஒதுங்கக்‌ காணுதல்‌ செய்யில்‌ தடியிட்டு விலக்குவர்களிறே. இவை யெல்லாம்‌ சேர அபுத்தி பூர்வம்‌ இந்த உக்தி வ்ருத்திகளிரண்டும்‌ இவர்க்கு புத்‌தி பூர்வமல்ல.

அவிஹிதம்-அதாவது-இவை தான் பல ஹேதுதயா சாஸ்திர விஹிதங்களும் அன்று-பல வித்ருசம் அதாவது-பகவத் விஷயமாகிற மகா பலத்துக்கு இவை சத்ருசம் அல்ல –பலாந்தர ஹேது-அதாவது
இவை உண்டாய்த்தாகில் இவ் அருகே சில அல்ப பிரயோஜனங்களுக்கு , ஹேதுவாம் இத்தனை என்கை –ஆகையால் இவை பகவத் அங்கீஹார ஹேதுவாக மாட்டாது என்று கருத்து 

(அவிஹிதம்‌) இவை தான்‌ மோக்ஷ ஹேதுக்களென்று ஸாஸ்த்ர விதியுமில்லை. (பல விஸத்‌ருஸம்‌) பகவத்‌ விஷயீகார மஹா பலத்துக்கு இவை ஸத்‌ருஸமுமன்று. (பலாந்தரஹேது] இவை உண்டாயிற்‌றாகில்‌ இப் பாலுண்டான அல்ப ப்ரயோஜநத்துக்கே ஹேதுவாமித்தனை போக்கி, அந்த மஹாபலத்துக்கு ஹேதுவாகவும்‌ மாட்டாது. ஆகையால்‌ இவை ஹேதுவாகமாட்டாது –

கீழே –யாத்ருச்சிகாதிகள் உண்டாகில் தோன்றும் -சூரணை -107–என்றதுவும்-இங்கே மாதவன்-இத்யாதியாலே -அவன் ஏறிடத் தக்கவை சில உண்டாக ,இவர் தம்முடைய உக்தியாலே , கண்டு எடுத்து கழிக்கிற இதுவும் தன்னில் சேரும்படி எங்கனே என்னில் ,-யாத்ருச்சிகாதிகள் தான் பலவும் உண்டாகையாலே ,-அத்யுத்கடங்கலாய் (உயர்ந்தவையாய் ), மகா பலத்துக்கு உறுப்பாய் , வந்து விழும் அவையும் , ஆபாசங்களாய் இருக்கும் அவையும் உண்டாகையாலே , அத்யுத்கடங்கலாய் , அவனுக்கு ஹேதுவாகக் கொள்ளலாம் படி இருக்கும் அவற்றை கீழே சொல்லிற்றாகி , ஆபாசங்களாய் ,அவன் ஆரோபித்து கொள்ளத் தக்கவற்றை இங்கே சொல்லிற்று என்று விபஜித்து கொள்ளும் அளவில் விரோதம் இல்லை–

இவற்றை ஹேதுவாக நினைத்திருந்தாராகில்‌ ““மதிநல மருளினன்‌?” (திருவா. 1 – 1 – 1) என்றும்‌, “ஓஒ? எண்டானுமின்றியே வந்தியலுமாறு’” (திருவா, 1 – 10 – 5) என்றும்‌, ““எனதாவி யுள் கலந்த”” (திருவா. 2 – 3 – 4) என்றும்‌, ”நீசனேன்‌ நிறை வொன்றுமிலேன்‌ என் கண்‌ பாசம்‌ வைத்த பரஞ்சுடர்ச்சோதி” (திருவா. 3 – 3 – 4) என்றும்‌, ‘“அதுவுமவனதின்னருளே” (திருவா. 8 – 8 – 3) என்றும்‌, “வெறிதே அருள் செய்வர்‌”” (திருவா. 9 – 7 – 8) என்றும்‌, “ இன்றென்னைப் பொருளாக்கித் தன்னை என்னுள்‌ வைத்தான்‌”? (திருவார்‌. 10 – 8 – 8) என்றும்‌, “‘பொருளல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்‌” (திருவா. 5 – 7 – 3) என்றும்‌, “நடுவே வந்துய்யக் கொள்கின்ற நாதன்‌” (திருவா. 1 – – 3) என்றும்‌, ‘“என்னைத்‌ தீ மனங் கெடுத்தாய்‌”’ (திருவா. 2 – 7 – 8) என்றும்‌, மருவித் தொழும்‌ மனமே தந்தாய்‌?” (திருவா. 2 – 7 – 7) என்றும்‌, ““வரவாறொன்‌றில்லையால்‌ வாழ்வினிதால்‌”” (பெ.திருவ. 56) என்றும்‌ இப்படி நிர்ஹேதுகமாக விஷயீகரித்தான்‌ என்றருளிச் செய்த ஸ்வ வாக்யங்கள்‌ பலவற்றோடும்‌ வ்யாஹதமாமே.-இப்படி இவரை அஹேதுகமாக விஷயிகரிக்க வேண்டுவானென்‌ என்னில்‌ “த்வம்‌ மே அஹம்‌ மே” என்று ஸம்பந்தத்தை ஏறிட்டு இவரை வலியப் பிடிக்க, இவர்‌ இறாய்த்த விடத்திலும்‌ வழக்குப் பேசி, அவ்வளவிலும்‌ அகப்படா தொழிய, மஹாபலிக்குத் தன்‌ வடிவழகைக் காட்டி வஸீ கரித்து லோகத்தை அதிக்ரமித்துக் கொண்டாப் போலே தன்‌ வடிவழகைக் காட்டி இவரை வாய் மாளப் பண்ணி விஷயீகரிக்கும்படி அவனை க்ருபை கால் கட்டிற்று என்கிறார் 

ஆனால் இவரை இப்படி நிர்ஹேதுகமாக விஷயீகரிக்க வேண்டுவான் என் என்னும் அபேஷையிலே அருளிச் செய்கிறார் மேல்-

இவன் நடுவே அடியான் என்று ஓலைப் படா பிரமாணம் பஷ பாதி ஸாஷி வன் களவில் அனுபவமாக
இந்திர ஞாலங்கள் காட்டிக் கொள்ள காப்பார் அற்று விதி சூழ்ந்தது–சூரணை -112-

(இவன் -சர்வேஸ்வரன் -ஓலைப் படா பிரமாணம்-வேதம்-இவன் நடுவே ( வந்து )அடியான் என்று-காட்டி-
நாம் ஓலைப் படா பிரமாணம்-என்று- சொல்ல-அவன் ஸாஷி-என்று-காட்டி–நாம் பஷ பாதி -என்று சொல்ல-இப்படி காட்டியதைக் கூட்டி வியாக்யானம்-வன் களவில் அனுபவமாக- இந்திர ஞாலங்கள் காட்டிக் கொள்ள-காப்பார் அற்று விதி சூழ்ந்தது–பகவத் கிருபாவையே விதி என்கிறார்)-அதாவது
இப்படி ஒன்றை ஆரோபித்தாகிலும் ,விஷயீகரிக்கும் இவன் ,-நடுவே –-அதாவது –-நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதன் -1-7-5–என்கிற படியே ,-நாதன் ஆகையால் நிர்ஹேதுகமாக வந்து –-அடியான் என்று –அதாவது –அடியான் இவன் என்று எனக்கு ஆர் அருள் செய்யும் நெடியான் -9-4-10 –என்றும்-த்வம் மே -என்கிறபடியே-இவன் என் அடியான் என்று பிடிக்க ,-அஹம் மே -என்கிற படி -அதுக்கு இவர் இசையாமல் , என்னை நீ உன் அடியான் என்றது எத்தாலே -என்ன – (த்வம் மே அஹம் மே குதஸ் தத் ததபிகுதஸ் இதம் வேத மூல பிரமாணாத் ஏதச்சா நாதி ஸித்தாத் அநு பாவ விபவாத் ஸோபி சாக்ரோச ஏவ ஸ்யாத் க்வாக்ரோசஸ் கஸ்ய கீதா திஷு மம விவிதஸ் கோத்ர ஸாஷீ ஸூதீ அந்த த்வத் பக்ஷபாதீ ச இதி ந்ருகலஹே ம்ருக்யமத்யஸ்த வத்வம் –ஸ்ரீ பட்டர் ஸ்ரீ ஸூக்தி –) இதம் வேத மூல பிரமாணாத் -என்கிறபடியே இவரை இசைவிக்கைக்காக–ஓலைப் படா பிரமாணம்--அதாவது–பதிம் விச்வச்ய–புருஷ ஸூக்தம் -என்றும்-பிராதந ஷேத்ரஜ்ஞ பதி –ஸ்வேதா உபநிஷத் -என்றும்-ஷராத்மானாவ் வீஷதே தேவ ஏக–ஸ்வேதா உபநிஷத் -என்றும் இத்யாதிகளாலே சேதன அசேதனங்கள் அடைய தனக்கு சேஷம் என்னும் இடத்தை பிரதிபாதிக்கிற வேதத்தை பிரமாணமாக காட்ட , அது எழுதா மறை ஆகையாலே , அது ஓலைப் படா பிரமாணம் என்று இவர் அத்தை அந்யதாகரித்து , தம்முடைய அநாத்ய அனுபவத்தை பிரபலமாக கொண்டு நிற்கையாலே-

(இவன்‌ நடுவே அடியான்‌ என்று தொடங்கி). “நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதன்‌” (திருவா. 1 – 7 – 5) என்றும்‌, ”அடியானிவனென்‌றெனக்காரருள்‌ செய்யும்‌” (திருவா. 9 – 4 – 10) என்றும்‌ நாதனாகையாலே நிர்ஹேதுகமாக வந்து இவர்க்கிசைவின்றிக்கே இருக்கச் செய்தே “இவன்‌ என்‌ அடியான்‌” என்று பிடிக்க, அதுக்கு, இவர்‌ இசையாதொழிய, இவர்‌ இசைகைக்காக ‘“பதிம்‌ விஸ்வஸ்ய” இத்யாதிகளைக்‌ காட்ட, அது எழுதா மறையாகையாலே அது ஓலைப் படா ப்ரமாணம்‌ என்று அத்தையும்‌ இவர்‌ அந்யதாகரிக்க,-

விடுவேனோ என் விளக்கை என் ஆவியை –நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை
தொடுவே செய்து இள வாய்ச்சியர் கண்ணினுள்ளே விடவே செய்து விழிக்கும் பிரானையே –1-7-5–அசன்னேவ ச பவதி-என்கிறபடியே உரு மாய்ந்து போன என் ஆத்மாவை-நடுவே வந்து-விஷய பிரவணனாய் போகா நிற்க நடுவே வந்து -நிர்ஹேதுகமாக என்னவுமாம்-வந்து– நான் இருந்த இடத்தே தானே வந்து-உய்யக் கொள்கின்ற-அஸத் கல்பனான என்னை -சந்தமேனன் ததோ விது-என்னப் பண்ணின படி-கொள்கின்ற-கொண்டு விட்டிலன்-மேன் மேல் எனக் கொள்ளா நிற்கிற அத்தனை-நாதனை-உய்யக் கொள்கைக்கு நிபந்தனம் சொல்லுகிறது-இழவு பேறு தன்னதான குடல் துடக்கைச் சொல்லுகிறது

அடியான் இவன் என்று எனக்கு ஆர் அருள் செய்யும்
நெடியானை
நிறை புகழ் அம் சிறைப் புள்ளின்
கொடியானைக் குன்றாமல் உலகம் அளந்த
அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே–9-4-10—மேல் பண்ணப் புகு கிற உதார குணம் பிராப்தம் என்று தோற்றுகைக்காக –அடியான் -என்று ஒரு பேரை இட்டு யாயிற்று உபகரித்தது-எனக்கு ஆர் அருள் செய்யும்-நெடியானை -கொள்ளுகிற என்னளவு அன்றிக்கே தன்னளவில் உபகரித்த சர்வேஸ்வரனை-பெரிய திருவடியை விஷயீ கரித்தால் போலே என்னை விஷயீ கரித்தவன்-

பஷ பாதி ஸாஷி–அதாவது-ஆட்சியிலும் பிரபலமான துடர்ச்சியை முன்னிட்ட அளவிலே – அதுக்கும் ஸாஷி யார் என்று கேட்டவாறே –ஸூதீச்யாத்-என்கிறபடி ,-தத்வ தர்சிகளான ஞானிகளைக் காட்ட – த்வத் பஷ பாதி ச -என்கிறபடியே அவர்கள் உனக்கு பஷ பாதிகள் என்று அதுக்கும் இவர் கண் அழிவு சொல்லுகையாலே –வன் களவில் அனுபவமாக அதாவது-வன் கள்வனேன் –5-1-4-என்று விஷயீகார அநந்தரம்-அநாதி காலம் தாம் அஹம் மம -என்று இருந்து போன அனுபவம் ,-ஆத்மா அபஹாரம் ஆகிற வலிய களவாலே வந்தது என்று இவர் அனுதபிக்கும் படி –-இந்திர ஞாலங்கள் காட்டி இவ் எழ உலகும் கொண்ட -9-5-6–என்று-இந்திர ஞாலங்கள் போலே ,திருஷ்ட்டி சித்த அபகாரிகளான-வடிவழகையும் ,சீலத்தையும் , சேஷ்டிதையையும் காட்டி,வாய் மாளப் பண்ணி , ஆசூர பிரக்ருதியான மகா பலி-என்னது என்று இருந்த லோகத்தைத் தன்னதாக்கிக் கொண்டால் போலே இவரையும் வடிவழகையும் சீலாதிகளையும் காட்டி வாய் மாளப் பண்ணி இவர்-என்னது -என்று இருந்த ஆத்மாவை தன்னதாக்கிக் கொள்ளும் படியாக –காப்பார் அற்று –அதாவது-விதி வாய்க்கின்று காப்பார் யார்–5-1-1 -என்று
கிருபா ஜனிகையான இவள் காக்கவோ ?-கிருபா பரதந்த்ரனான நீ காக்கவோ ?-கிருபா பாத்ரமான நான் காக்கவோ -என்னும் படி ஒருவரால் நிவாகரிக்க ஒண்ணாத படி பெருகுவதாய் , ஸ்வதந்த்ரனான தன்னாலும் தப்ப ஒண்ணாத படி இருக்கையாலே , விதி சப்த வாச்யையாய் இருந்துள்ள கிருபைவிதி சூழ்ந்தது--அதாவது–எனைத்தோர் பிறப்பும் —-எதிர் சூழல் புக்கு எனக்கே அருள்கள் செய்ய – அம்மான் திரிவிக்ரமனை –விதி சூழ்ந்தது -2-7-6–என்று-அநேக ஜன்மங்கள் நான் பிறந்த பிறவிக்கு எதிராகப் பிறந்து கொடு வந்து , எனக்கு ஒருவனுக்கே தன் பிரசாதங்களை பண்ணும் படியாக – சர்வேஸ்வரனாய் வைத்து த்ரிவிக்ர அபதான முகத்தாலே எல்லார் தலையிலும் திரு அடிகளை வைத்த ஸூசீலனை ,
கிருபை சூழ்ந்தது என்னும் படி இவரை அங்கீகரித்து அல்லது நிற்க ஒண்ணாது வளைத்துக் கொண்டது என்கை–காட்டிக் கொள்ள -என்கிற இடத்தில்-காட்டி-என்கிற இது –-பிரமாணம் காட்டிக் கொள்ள-ஸாஷி காட்டிக் கொள்ள-இந்திர ஞாலங்கள் காட்டிக் கொள்ள – என்று-சர்வாந்தர அன்விதமாய் கிடக்கிறது

இவர்‌ அடியானானமைக்கு தத்த்வ தர்மிகளான ஜ்ஞாநிகள்‌ ஸாக்ஷியாக உண்டீ என்ன; அவர்களும்‌ உனக்கு பக்ஷபாதிகள்‌ என்று ப்ரதி வசநம் பண்ண, ஆனால்‌ “இவ் வஸ்து உம்மதானபடி எங்ஙனே?” என்று பகவதபிப்ராயமாக, “அநுபவவிபவாத்‌”” என்கிறபடியே “அஹம்‌ மம” என்று அநாதி, காலம்‌ அநுபவித்துப் போந்தேன்‌ என்று ப்ரபல ப்ரமாணமான அநுபவத்தைக் காட்ட, ப்ரமாண ஸாக்ஷிகளும்‌ ஆக்ரோஸ முண்டாயிருக்கச் செய்தே அநுபவித்துப் போந்த இது ““வன்கள்வனேன்‌” (திருவா. 5 – 1 – 4) என்று ஸர்வஜ்ஞனானவனையும்‌ க்ருத்ரிமித்துப்‌ போந்தேன்‌ என்று விஷயீகாராநந்தரம்‌ தாமே பேசும்படி இவர்‌ க்ருத்ரிமத்திலே அநுபவித்தாராம்படி ‘*இந்திர ஞாலங்கள் காட்டி இவ்வேழுலகுங்கொண்ட. நந்திரு மார்வன்‌”! (திருவா. 9 – 5 – 5) என்று ஐந்த்‌ரஜாலிகம்‌ காட்டுவாரைப் போலே சிறுப்பது பெருப்பதான வடிவழகைக் காட்டி, மன்னை மனங்கொள்ள வஞ்சித்து தெஞ்‌சுருக்கி’ ” (பெ. மடல் ) என்கிறபடியே ஆஸூர ப்ரக்ருதியான மஹாபலியை வாய் மாளப் பண்ணி ஸகல ஜகத்தையும்‌ ஆக்ரமித்துக் கொண்டாப் போலே, வடிவழகைக் காட்டி வாய்மாளப்‌ பண்ணி விஷயீகரிக்கும்படி, (காப்பாரற்று) ”விதிவாய்க்கின்று காப்பாரார்‌ – ஐயோ கண்ண பிரான்‌ அறையோ இனிப் போனாலே”’ (திருவா. 5 – 1 – 1) எனறு – கிருபை பெருகுமிடத்தில்‌ க்ருபா பரதந்த்ரனான நீ காக்கவோ? க்ருபா ப்ரேரிகையான அவள்‌ காக்கவோ? க்ருபா விஷயமான நான்‌ காக்கவோ? இந்த கருபையைத் தப்பி நீ போனாயாகில்‌ “அறையோ அறை” என்று நிவாரகரில்லாதபடி விதி சூழ்ந்தது. ”எதிர் சூழல்‌ புக்கெனைத்தோர்‌ பிறப்பும்‌ எனக்கே அருள்கள்‌ செய்ய – அம்மான்‌ திருவிக்கிரமனை விதி சூழ்ந்தது”” (திருவா. 2 – 7 – 6) என்று அநேக ஜந்மங்கள்‌ இவர் பிறவிகளுக்கு எதிரே பிறந்து கொடு வந்து இவரை விஷியீகரிக்கும்படி விரோதி நிரஸந ஸீலனான ஸர்வேஸ்‌வரனை, இவரை விஷயீகரித்தல்லது நிற்க வொண்ணாத படியான க்ருபை கால் கட்டிற்று என்கிறார்‌-

என் கொள்வன் உன்னை விட்டு என்னும் வாசகங்கள் சொல்லியும்
வன் கள்வனேன் மனத்தை வலித்துக் கண்ண நீர் கரந்து
நின் கண் நெருங்க வைத்தே எனது ஆவியை நீக்க கில்லேன்
என் கண் மலினம் அறுத்து என்னைக் கூவி அருளாய் கண்ணனே –5-1-4—களவாவது -பரத்வ வ்யாபஹாரம்-வலிய களவாவது –சோரேணாத் மாப ஹாரிணா-என்கிறபடியே பகவத் சேஷமான ஆத்மவஸ்துவை அபஹரிக்கை-த்ரவ்யங்களில் தலையான வஸ்து -ஆத்மவஸ்து -உடையவன் சர்வாதிகன் -அகவாய் இப்படி இருக்கையாலே யுக்தி மாத்ரமான ஆனு கூல்யம் கொண்டு என் விரோதியைப் போக்க ஷமன் அல்லேன் என்கிறார் மேல்-மனத்தை வலித்து--விஷயங்களின் நின்றும் மனசை நிவர்ப்பித்து -நான் இந்திரிய ஜெயம் பண்ண நினைக்கை யாவது -அவன் என்னை மேலிடுகை –இந்திரியாணி பிரமாதீ நீ ஹரந்தி பிரசபம் மன-கண்ண நீர் கரந்து- விஷய அனுபவத்தால் வந்த கண்ண நீரை மாற்றி -விஷய ப்ராவண்யம் சாஸ்த்ர உபதேசத்தால் போமோ -உன் போக்யதையைக் காட்டினால் அன்றோ அந்தக் கண்ண நீர் மாறுவது –

அந்தரம் நின்று உழல்கின்ற யானுடைப் பூவைகாள்
நும் திறத்து ஏதும் இடை இல்லை குழறேன்மினோ
இந்திர ஞாலங்கள் காட்டி இவ் ஏழ் உலகும் கொண்ட
நம் திரு மார்வன்
நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான்–9-5-5–கண்டார்க்கு விட ஒண்ணாத வடிவையும் -சீலத்தையும் -சேஷ்டிதத்தையும் காட்டி -இவை நிலை நில்லாமையாலே பொய் காண் -என்கிறாள் –-இவ் ஏழ் உலகும் கொண்ட-பிறர் உடைமை கொள்ளும் இடத்தில் சேஷியாத படி கொள்ளுமவன் –-நம் திரு மார்வன் -பிரணயித்தவத்தால் வந்த ப்ரஸித்தியை எனக்கு காட்டி –பிராட்டியோடு பழகிற்றும் பிரணயியாய் அன்று -அத்தைக் காட்டி கண்டாரை அகப்படுத்திக் கொள்ளுகைக்காக -சில பொய்களைக் காட்டி மஹா பலி பக்கலிலே நின்றும் பூமியைக் கொண்டால் போலே கலந்து பரிமாறுகிறான் என்று தோற்றும் படி சில பொய்களைச் செய்து விஸ்லேஷிக்கை -என்னை முடிக்கைக்கு உபாயம் என்றுமாம் 

ஒன்னா வசுரர் துளங்கச் செல நீட்டி
மன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்துத் ———112
தன்னுலக மாக்குவித்த தாளானை –
–அவ்வளவிலே எதிரிட்டு வந்த நமுசிப் ப்ரப்ருதிகளை-ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படி பண்ணி-அவனை ஆகாசத்திலே சுழற்றி எரிந்து அவ்வளவும் செல்லப் பரப்பி-பழையதாய் மகாபலி தான் அடி இட்டுப் போந்த ராஜ்யத்தை-சிறு காலைக் காட்டி மூவடி மண் தர வேணும் என்று இரந்து-கையிலே நீர் விழுந்த அனந்தரத்திலே பெரிய அடியாலே அளந்த வஞ்சனையைச் சொல்லுகிறது –

கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே! என்றென்று
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?
ஐயோ! கண்ண பிராஅன்! அறையோ! இனிப் போனாலே.–5-1-1-
விதி என்று பகவத் கிருபை –கர்ம பரதந்த்ரனுக்கு கர்மம் அனுபவித்து அல்லது நிற்க ஒண்ணா தோபாதி -அவனுக்கும் கிருபா பரதந்த்ரன் ஆகையால் கிருபை பண்ணி அல்லது நிற்க ஒண்ணாமை யாலே விதி என்கிறது -பகவத் கிருபை கரை புரள புக்கால் நிவாரகர் உண்டோ –காப்பது ஏது என்னாதே காப்பார் யார் என்கிறது -பல போக்தாவான இவனாலும் -கிருபா ஜனகை யான அவனாலும் ஒண்ணாது என்கை –ஸ்வ தந்த்ரனான அவனாலும் ஒண்ணாது -ஸ்வ தந்தர்யத்திலும் விஞ்சி இ றே கிருபை இருப்பது -இவனால் கிருபையை விஞ்சைக் குற்றம் செய்ய ஒண்ணாது -அவனால் ஸ்வ தந்தர்யத்தால் குற்றம் கண்டு கை விட ஒண்ணாது -நிரங்குச மான ஸ்வ தந்தர்யத்தை யுடைய நம்மால் தடுக்கத் தட்டு என் என்ன-ஐயோ!-ஸ்வ தந்தர்யத்தை நினைத்தோ -கிருபையை விஞ்சி கால் வாங்கி காண் -இனி என்கிறார்-ஐயோ என்றது ஹர்ஷத்தாலே -கிருபையின் கீழ் குற்றம் காண ஞானம் இல்லை -விட சக்தி இல்லை-கண்ண பிராஅன்! அறையோ! இனிப் போனாலே.–ஓர் இடைச்சி கையிலே  கட்டுண்ட தசையில் அந்த பந்தத்தை தப்ப விரகு அறியாதே சக்தியும் இன்றிக்கே இருந்த நீயோ போகப் புகுகிறாய்-கண்ணபிரான் என்று சம்புத்தி -இனிப்போனால் அறையோவறை -அனுக்ரஹ சீலனான உனக்கும் -மெய் என்று பேரிடலாவதொரு பொய் என் பக்கலிலே உண்டான பின்பு போகலாமோ-மித்ர பாவம் பெற்றால் -நத்யஜேயம் என்னும் உனக்குப் போகலாமோ -ஸூ க்ரீவ மஹா ராஜரைப் போலே அறை கூவுகிறார் –

மது சூதனை யன்றி மற்றிலேன் எத்தாலும் கருமமின்றி
துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே
–2-7-6—நான் இழவுக்கு யத்னம் பண்ணிப் போந்த காலம் எல்லாம் என்னைப் பெறுகைக்கு அவன் கிருஷி பண்ணிப் போருகையாலே பெற்றேன்
எதிரான சூழல் -என்னை அகப்படுத்திக் கொள்ளுகைக்கு ஈடான திரு வவதாரங்கள்-எனக்கே யருள்கள் செய்ய- எனக்கும் பிறருக்குமாக அன்றிக்கே எனக்கே அருள்கள் பண்ணும்படி –-யம்மான் திரிவிக்ரமனையே –-எனக்கு என்னவே விதி சூழ்ந்தது சர்வேஸ்வரனாய் வைத்து ஸ்ரீ வாமனனாய் சகல லோகங்களையும் திருவடியின் கீழே இட்டுக் கொண்டவனை – அது பரதசை என்னும்படி எனக்கு என்னவே விதி சூழ்ந்தது தம்மை விஷயீ கரித்து அல்லது அவனை இருக்க ஒட்டாமையாலே அவனுடைய க்ருபா குணத்தை விதி என்கிறது -ச தம் நிபதிதம் 

எல்லாம் செய்தாலும் ஏவம் பூத கிருபை தான் அநாதி காலம் இவாத்மா விஷயமாக பெருகாமல் ,இன்று பெருகும் அளவில் ,இதுக்கு ஓர் அடி வேண்டுகையாலே இதுக்கு உடலாகக் கற்பிக்க லாவதொரு ஸூஹ்ருதம் இல்லையோ என்ன-அருளிச் செய்கிறார்–ஆகையாலே இவர் தாமே “நிர்ஹேதுகமாக விஷயீகரித்தான்‌’ என்று அர்த்தத்தை அறுதியிட்ட பின்பு விஷயீகார ஹேதுவான ப்ரதம ஸுஹருதமும்‌ அவனை யல்லதில்லை என்கிறார்‌ மேல்‌-

வரவாறில்லை வெறிதே என்று அறுதி இட்ட பின் வாழ் முதல் என்கிற ஸூஹ்ருதம் ஓழியக்
கற்பிக்கலாவது இல்லை-சூரணை-113-

வரவாறு இல்லை என்று-அதாவது- வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால்—பெரிய திருவந்தாதி -56-என்று இது வந்த வழி இன்னது என்று இதற்க்கு சொல்ல லாவது ஒரு ஹேதும் இல்லை- பேறும் மிகவும் இனிதாய் இரா நிற்கும் என்றும் –வெறிதே அருள் செய்வர் செய்வார்கட்கு- திருவாய் -8-7-8-என்று-தாம் செய்ய நினைத்தவர்களுக்கு -நிர் ஹேதுகமாக கிருபை பண்ணுவர் என்றும் –இப்படி விஷயீகாரம் நிர் ஹேதுகம் என்று தாமே அறுதி இட்ட பின்பு –வாழ் முதல் என்கிற ஸூஹ்ருதம்-
அதாவது –தனியேன் வாழ் முதலே–திருவாய் -2-3-5- -என்று சம்சாரத்தில் ஒரு துணை இன்றிக்கே இருக்கிற என்னுடைய அனுபவத்துக்கு பிரதம ஸூஹ்ருதம் ஆனவனே -என்று தம்முடைய பேற்றுக்கு மூல ஸூஹ்ருதமாக இவர் அருளிச் செய்த அவன் தன்னை ஒழிய வேறு கற்பிக்கலாவதொரு ஸூஹ்ருதம் இல்லை என்கை–அன்றிக்கே – யாத்ருச்சிகளாதிகள் உண்டாகில் தோன்றும்–107–என்று அஜ்ஞாத ஸூஹ்ருதமும் இவருக்கு இல்லை என்றவாறே-இப்படி நேராகக் கழிக்க வேணுமோ ?-
அநாதி காலம் அங்கீகரியாதவன் இன்று செய்கையாலும் அல்லாத ஆத்மாக்கள் எல்லாம் கிடக்க , இவரை இப்படி விஷயீகரிக்கையாலும், இதற்கு உடலானது ஏதேனும் ஒரு ஸூஹ்ருதம் இவர்க்கு உண்டாகக் கூடும் என்று கார்யத்தை இட்டு அனுமித்ததாகிலும் , கல்பிக்க லாவது ஓன்று இல்லையோ என்ன- அப்படி கல்பிக்க லாவது இல்லை என்னும் இடத்தை ,விஸ்த்ரேண பிரதி பாதிக்கிறார் என்று சங்கதி ஆக்கி-செய்த நன்றி தேடிக் காணாதே -சூரணை -108-தொடங்கி-வெறிதே என்று அறுதி இட்ட பின் 113-என்னும் அளவும் ஏக வாக்யமாய் கொண்டு-இவ் ஆழ்வார் கருத்தைச் சொல்லி கொண்டு செல்கிறதாய் –-1-என் நன்றி செய்தேனா -என்று பகவத் அங்கீகாரத்துக்கு உடலாக தாம் செய்த ஸூஹ்ருதம் உண்டோ என்றி தேடிக் காணாதே – அங்கீகாரத்துக்கு உடலானது இல்லை ஆகில் –
2-அத்வேஷ ஆபிமுக்யங்களுக்கு தக்க தான் உண்டோ என்னில் , அவையும் அவனாலே வந்தது –
3-சத் கர்மத்தால் வந்தது அல்ல–எண்ணிலும் வரும் -என்று பரிகணனை தான் உண்டோ என்னில்- அதுக்கு எண்டானும் இல்லை-.. 4-வைத்தேன் மதியால்-யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் –
என்கிற அனுமதி இச்சைகள் தானும் உண்டோ என்னில்-அவையும் அவன் உண்டாக்கினது —
5-மாதவன் என்றதே கொண்டு –திரு மால் இரும் சோலை மலை என்றேன் என்ன -இத்யாதிகளால் –
ஈஸ்வரன் வலியவே எறிடிகிறவைகள் இவை –வ்யாவ்ருத்தி யுக்தாதிகள் ..-இவன் நடுவே வந்து-அடியான் என்று பிடித்து-பிரமாண சாஷிகள் காட்டி அவை கார்யகரம் ஆகாத அளவில் வடிவு அழகைக் காட்டி இப்படி இவ் வஸ்துவை ஸ்வ தீனம் ஆக்கி கொள்ளும் படி இவனை நிவாகரர் அற்ற கிருபை சூழ்ந்தது –6-இவ் விஷயீகாரத்துக்கு-வரவாறு ஓன்று இல்லை -வெறிதே அருள் செய்த இத்தனை-என்று
இவர் தானே அறுதி இட்ட பின்பு –-7-தனியேன் வாழ் முதலே –என்று தம் பேற்றுக்கு மூல ஸூஹ்ருதமாக
இவர் அருளிச் செய்த ஈஸ்வரன் தன்னை ஒழிய இவருக்கு வேறு ஒரு கற்ப்பிக்க லாவதொரு ஸூஹ்ருதம் இல்லை -இங்கனே யோஜிக்கவுமாம் –-இந்த யோஜனை இதின் பட்டோலையான கிரந்தத்தில் இவர் அருளிச் செய்த மரியாதைக்கு சேரும்

“வரவாறொன்றில்லையால்‌ வாழ்‌வினிதால்‌”” (பெ. திருவ. 56) என்று பேற்றுக்கு ஒரு ஹேதுவின்றியிலே இருக்கச்‌ செய்தே அப்பேறு மிகவும்‌ இனிதாயிருந்ததென்றும்‌, ““வெறிதே அருள் செய்வர்‌ செய்வார்கட்குகந்து”” (திருவா. 8 – 7 – 8) என்று ”செய்வார்களுக்கு உகந்து வெறிதே அருள் செய்வர்‌’‘ என்கையாலே தான்‌ அங்கீகரிக்க வேண்டினார்க்குத்‌ திருவுள்ளத் தோடே உகந்து நிர்ஹேதுகமாக க்ருபை பண்ணுமென்று இப்படி இவ் விஷயீகாரம்‌ திர்ஹேதுக மென்று தாமே அறுதி யிட்டபின்‌ (வாழ்முதல்‌ என்ற ஸுஹ்ருதமொழியக்‌ கற்பிக்கலாவதில்லை) இவ் விஷயீகாரத்துக்கு ஹேதுவான மூல ஸூஹ்ருதம்‌ *‘பொழிலேமழுமேனமொன்றாய்‌ நுனியார்‌ கோட்டில்‌ வைத்தாய்‌ – தனியேன்‌ வாழ் முதலே”’ (திருவா. 2 – 3 – 5) என்று ப்ரளயார்ணவ மக்‌னையான ஸ்ரீபூமிப்பிராட்டியை நீருக்கும்‌ சேற்றுக்கும்‌ இறாயாத வடிவைக் கொண்டு உத்‌தரிப்பித்து, தனியே ஸம்ஸாரார்ணவ மக்‌நனாய்‌ ஒரு கைம்முதலில்லாத என்னுடைய உஜ்ஜீவநத்துக்கு ப்ரதம ஸுஹ்ருதமானவனே என்று அருளிச்செய்த ஞானப்பிரானை யொழிய வேறு கல்பிக்கலாவதில்லை என்கிறார்‌.

வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால் எல்லே
ஒருவாறு ஒருவன் புகாவாறு -உருமாறும்
ஆயவர் தாம் சேயவர் தாம் அன்று உலகம் தாயவர் தாம்
மாயவர் தாம் காட்டும் வழி–56—இன்ன வழியாக வந்ததென்று தெரியாது;—அடி இல்லை யாகில் பலம் சுருங்கி இருக்குமோ என்னில்–பலம் அதிகமாய் இருக்கும்-பலன் போக்யமாயிரா நின்றது;-ஆச்சரியம்-தன்னுடைய ஸ்வரூப ஸ்வ பாவங்களை அழியமாறும்-எல்லா உபாயங்களையும் விட்டு என்னையே பற்று என்கை-போக்தாவினுடைய உபாய அனுஷ்டானங்களை அவர்க்காகத் தான் அனுஷ்ட்டிக்கும் என்று கருத்து எல்லாம் விட்டு என்னைப் பற்று என்னும் இவர்–அன்று உலகம் தாயவர் தாம் மாயவர் தாம் காட்டும் வழி நினைத்த போது தாமே வந்து கிட்டுமவர்-இப்படி ஆச்சர்ய பூதரானவர் காட்டும் உபாயம் வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால்-

இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாத வெந்தாய்
கனிவார் வீட்டின்பமே என் கடல் படா வமுதே
தனியேன் வாழ் முதலே பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய் யுனபாதம் சேர்ந்தேனே –2-3-5—எனக்கு இப் பேற்றுக்கு அடியான பிரதம ஸூ க்ருதத்துக்கு உத்பாதகன் ஆனவனே-பந்துக்கள் நடுவே இருக்கிறவர் -தனியேன் -என்கிறார் இறே
வழி பறிக்காரர் நடுவே நின்றால் அவர்கள் துணை யாகார் இறே-எனக்கு என்று இருப்பார் நடுவே இருக்கை இறே இவருக்கு தனிமை நம்மை அத்தலைக்கு ஆக்கி வைக்கை இறே இவருக்கு வாழ்வு

ஆக இதுக்கு கீழ்-இவர் பிரபாவத்தையும் ,-அதுக்கடி பகவத் நிர்ஹேதுக கடாஷம் என்னும் அத்தையும்,
அத்தால் இவருக்கு உண்டான பக்தியின் வ்யாவர்த்தியையும் ,-அது தான் கர்ம ஜ்ஞான சாத்யை அல்லாமையையும் , இவரை ஈஸ்வர அங்கீகரித்ததற்கு கேவல கிருபை ஒழிய ஹேது அந்தரம் இல்லாமையையும் சொல்லிற்று ஆய்த்து-

ஆக, இதுக்குக்கீழ்‌ இவருடைய ப்ரபாவத்தையும்‌, ப்ரபாவத்துக்கடி பகவந் நிர்ஹேதுக கடாக்ஷம்‌ என்னுமிடத்தையும்‌, அந்த கடாக்ஷமடியாக இவர்க்குண்டான பக்தியினுடைய வ்யாவ்ருத்தியையும்‌, அந்த பக்தி தான்‌ கர்ம ஜ்ஞாந ஸாத்‌யையுமல்ல, அதுக்கடியான யாத்‌ருச்சிகாதிகளுமில்லை, கேவல நிர்ஹேதுக க்ருபையாலே உண்டாயிற்றென்னுமிடத்தையும்‌ அருளிச் செய்து தலைக்கட்டினாராய்த்து –

இப்படி நிர்ஹேதுக விஷயீகார பாத்ர பூதரான இவருடைய பக்தி பகவத் கிருபை ஏக லப்தையாய் இருந்தாலும் , உபாகசனுக்கு கர்ம ஜ்ஞான ஜனிதையான பக்தியோபாதி இவருக்கு பிராப்தி சாதனம் இதுவோ என்ன -அருளிச் செய்கிறார் மேல்–ஆனால்‌, உபாஸகனுக்கு கர்ம ஜ்ஞாநங்களாலே ஸாத்‌யையான பக்தி பகவத் ப்ராப்திக்கு ஸாதநமாகக்‌ கண்டோம்‌, இவர்க்கு நிர்ஹேதுக க்ருபையாலே பக்தி உண்டாயிற்றாகில்‌ பகவத் ப்ராப்திக்கு இது ஸாதநமானாலோ என்னில்‌, அந்த பக்த் யுத்பத்தி ஹேதுவான க்ருபை தானே ப்ராப்திக்கும்‌ ஸாதநம்‌ என்கிறார்‌ மேல்‌

நலம் அருளினன்-என் கொல் என்று-ஆமூல சூடம்-அருளால் மன்னும் இவர்க்கு-அன்புக்கு அடி யானதுவே-அடி சேருகைக்கும் சாதனம்-சூரணை-114-

(அன்புக்கு அடி என்றது பக்திக்கு அடி என்றவாறு-அன்புக்கு அடி -பக்திக்கு காரணம் ஈஸ்வர கிருபையே -அதுவே அடி -ஈஸ்வர திரு அடி- சேருகைக்கும் அடி-காரணம் ) நலம் அருளினான் என்று-அதாவது
மயர்வற மதி நலம் அருளினன்-1-1-1- -என்று தம்முடைய பக்தி உத்பத்தி காரணம் , கேவல பகவத் கிருபை என்று உபக்ரமித்து –என் கொல் என்று –அதாவது –என் கொல் அம்மான் திரு அருள்கள்-10-7-4–(பன்மை -உபகார பரம்பரைகள் -ஆ மூல -ஆதி அந்தமாக அருள்கள்) (நன்கு என் உடலம் கை விடான் -என் மகங்காரம் -இத்தை சாத்தியமாக கொண்டு அதனாலே கொண்டான் –நாங்கள் குன்றம் கை விடான் -இத்தை சாதன புத்தியாக கை விடான் ) என்னும் அளவாக –ஞான தசையோடு -வர்ண தசையோடு–பிராப்தி தசையோடு -வாசி அற-ஆமூலசூடம்-அருளால் மன்னும் இவர்க்கு-அதாவது
மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்-1-5-11-என்று பிடி தோறும் நெய் ஒழிய செல்லாத சுகுமாரரை போலே , நின்ற நிலை தோறும் அவன் அருள் கொண்டே தரிக்க வேண்டும் ஸ்வபாவர் ஆன இவர்க்கு – ( இன்ப மாரிக்கு -அடி தோறும் அர்ச்சை -அருள் மாரிக்கு அடி தோறும் அருள் -அர்ச்சாவதாரமே அருளின் சரம தசை ) அன்புக்கு அடி யானதுவே அடி சேருகைக்கும் சாதனம்-
அதாவது-ஆரா அன்பில் அடியேன் உன்னடி சேர் வண்ணம் அருளாய்-6-10-2–என்கையாலே ,-நலம் அருளினன் -என்று பக்தி காரணமாக சொன்ன கிருபையே-அடி சேருகை யாகிற பிராப்த்திக்கும் சாதனம் என்ற படி –

“மயர்வற மதிநலமருளினன்‌ ”‘ (திருவா. 1 – 1 – 1), “ஆவா வென்றருள்‌ செய்து” (திருவா. 5 – 1 – 9), “’தானே இன்னருள்‌ செய்து” (திருவா. 5 – 1 – 10), ‘“அதுவுமவனதின்னருளே”‘ (திருவா. 0 – ப – 3), ”என்கொலம்மான் திருவருள்கள்‌”‘ (திருவா, 10 – 7 -4) என்று ஜஞாந தஸையோடு, உபாயதஸையோடு, ப்ராப்தி தஸையோடு வாசியற ஆமூலசூடம்‌ அருளால்‌ ”மன்னு குருகூர்ச் சடகோபன்‌”’ (திருவா, 1 – 5 -11) என்று தொடங்கி – ஸுகுமாரராயிருப்பார்‌ பிடி தோறும்‌ ‘நெய்‌’ என்னுமாப் போலே அவனுடைய அருளை யொழியச்‌ செல்லாத இவர்க்கு. (அன்புக் கடியானதுவே அடி சேருகைக்கும்‌ ஸாதநம்‌) ““அறியாக் காலத்துள்ளே அடிமைக் கணன்பு செய்வித்து’” (திருவா. 2- 3 – 3) என்று அறிவு நடையாடுகைக்கு யோக்யதை யில்லாத அதி பால்யததிலே அன்பை விளைத்தானென்றும்‌, ““ஆராவன்பிலடியேனுன்னடி சேர்‌ வண்ணமருளாயே” (திருவா. 6 – 10 – 2) என்கையாலே அந்த பக்திக்கடியான கிருபையே பகவத் ப்ராப்திக்கு சாதநம் என்கிறார் –

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே –1-1-1–மயர்வு -அஜ்ஞானம் -இத்தால் ஜ்ஞான உதய -அந்யதா ஜ்ஞான -விபரீத ஜ்ஞான ரூபமான அஜ்ஞானத்தைச் சொல்லுகிறது-அற -சவாசனமாகப் போகும்படி-மதி நலம்-மதி என்று ஜ்ஞானம்-நலம் -என்று பக்தி -பக்தி ரூபாபன்ன ஜ்ஞானம் என்றபடி-அருளினன்-இத் தலையில் நன்மை தீமை பாராதே நிர்ஹேதுக கிருபையால் தந்து அருளினான்-முலைக் கடுப்பாலே தரையிலே பீச்சுமா போலே –எனக்குத் தந்து அருளினான் -என்னாது ஒழிந்தது -பகவத் விஷயீ காரத்துக்கு முன்பு தம்மை அசத் கல்பராக நினைத்து இருக்கையாலேஎவன்–-இப்படி உபகாரகனான ஸ்ருதி பிரசித்தி ஆனவன்-

ஆனான் ஆளுடையான் என்றஃ தே கொண்டுகந்து வந்து
தானே இன்னருள்செய்து என்னை முற்றவும் தானானான்
மீனாய் ஆமையுமாய் நர சிங்கமுமாய்க் குறளாய்க்
கானார் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார்வண்ணனே.–5-1-10—என்னை அடிமை கொள்வான் ஆனான் என்கிற இந்த யுக்தி மாத்ரத்தையே குவாலாகக் கொண்டு -இப்படி சொல்லுகைக்கு தான் பண்ணின க்ருஷியை மறந்தான் -என்னுடைய யுக்தி மாத்ரத்தையே குவாலாக நினைத்தான் -பலம் பூஜிக்கிற நான் அன்றிக்கே உகப்பும் தன்னதே யாயிற்று-வந்து-தானே இன்னருள் செய்து- தான் இருந்த இடத்தே நான் செல்லுகை அன்றிக்கே நான் இருந்த இடத்தே தானே வந்து -அர்த்தியாது இருக்க தானே தன் பேறாக கிருபை பண்ணி –-என்னை முற்றவும் தானானான்-உள்ளொடு புறம்போடு வாசி அற கலந்தான் -என்னுதல்–சேலேய் கண்ணி யரும் பெரும் செல்வமும் -என்ற படியே சர்வவித பந்துவும் தான் ஆனான் என்னுதல் –

உணர்விலும் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறல் பொருட்டு என்
உணர்வினுள்ளே யிருத்தினேன் அதுவுமவன தின்னருளே
உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பினவும் பழுதேயாம்
உணர்வைப் பெற ஊர்ந்திறவேறி யானும் தானாய் ஒழிந்தானே–8-8-3—வைத்தேன் –மதியால் –என்றது தான் இறே -அவனை என்னுடைய ஞானத்துக்கு விஷயம் ஆக்கினேன் -இச்சித்தேன் என்கை -இச்சை தான் ஸ்வ ஆதீனமோ என்னில் –அதுவுமவன தின்னருளே-அந்த இச்சை தானும் பிறந்தது அவன் பிரசாதத்தாலே –நின்ற நின்ற வளைவுகள் தோறும் -இவ்வளவு அவனாலே பிறந்தது -என்னும்படியாய் யாயிற்று இருப்பது -அவனுடைய நிருபாதிக ஸுஹார்த்தம் -தன் பொன்னடிக்கு கீழ் இருத்தும் வியந்து -என்று ப்ராப்ய ப்ராபகன் அவனே என்று அருத்தித்து -என்றது இறே -அத்தை இ றே இங்குச் சொல்கிறது –

என் கொல் அம்மான் திருவருள்கள் உலகும் உயிரும் தானேயாய்
நன்கு என் உடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி
தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமால் இரும் சோலை
நங்கள் குன்றம் கை விடான் நண்ணா அசுரர் நலியவே–10-7-4—சர்வேஸ்வரனுக்கு என் பக்கல் யுண்டாய் இருந்துள்ள பிரசாத அதிசயத்துக்கு அவதி என்னா – உலகும் உயிரும் தானேயாய்-சகல லோகங்களும் சகல ஆத்மாக்களும் தான் இட்ட வழக்காய் இருக்கிறவன் தனக்கு ஒரு குறை யுண்டாய் -இப்படிப் படுகிறானோ –நன்கு என் உடலம் கை விடான்-செருக்கர் நீச ஸ்த்ரீகள் கால் கடையிலே துவளுமா போலே என்னுடம்பை விரும்பி விடுகிறிலன் –எனக்கு மமதா விஷயம் என்னுமதுவே ஹேதுவாக விடுகிறிலன்-ஞாலத்தூடே நடந்து உழக்கி--பூமி எங்கும் உலாவி -எல்லார் தலைகளிலும் திருவடிகளை வைத்து திரு உலகு அளந்து அருளிற்று -தம்மைப் பெறுகைக்கு கிருஷி பண்ணி என்று இருக்கிறார் -சர்வ சாதாரணன் வியாபாரம் ஆகையால் சம்பந்தம் அறிந்தால் எனக்கு என்னலாம் இறே –திரு உலகு அளந்து அருளுகை ஒரு வியாஜ்யமாய் -ஆழ்வாரை அனுபவிக்கைக்கு ஏகாந்தமான ஸ்தலம் ஏதோ என்று ஆராய்ந்து திரு மலையிலே நின்று அருளினான்–

மாலே மாயப் பெருமானே மா மாயனே என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே –-1-5-11—அவனும் தன் வியாமோஹத்தால் யாயிற்று இவரைச் சேர்த்துக் கொண்டது-அவன் தன் செல்லாமையைக் காட்டி சேர்த்து கொண்ட படியைக் கண்டு ப்ரீதராய்-அது உள்ளடங்காமையாலே வழிந்து புறப்பட்ட இத் திருவாய்மொழி க்கு உண்டான லோக பரிக்ரஹத்தைச் சொல்லுகிறது-

அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று
அறியாமை வஞ்சித்தாய் எனதாவியுள் கலந்தே –2-3-3—அறிவு கேட்டைப் பண்ண வற்றாய்-துஸ்தரமான சம்சாரத்திலே இருக்கிற என்னை –அடியேன் -என்கிறது -அஹம் சப்த பர்யாயம் – அறிவுக்கு சம்பாவனை இல்லாத பால்யத்திலே -பிராப்தி பலமான அடிமையிலே ஸ்நேஹத்தை பிறப்பித்து வைத்தாய்–இங்கே வைத்து பகவத் விஷயத்தை அவஹாகிப்பித்தது-அத்தாலே ஒரு தேச விசேஷத்திலே பெறும் பேறு சாத்மிக்கைக்காகவும்- ப்ராப்யத்தில் த்வரை விஞ்சுக்கைக்காகவும் இறே-அந்நிய பரமான என் ஆத்மாவில் புகுந்து -தன் குண சேஷ்டிதாதிகளாலே வசீகரித்து –-அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று-அறியாமை வஞ்சித்தால் போலே – எனதாவியுள் கலந்தே-
அறியா மா மாயத்து அடியேனை-அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து- வைத்தாயால்-என்று அந்வயம்

கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல்லசுரர் குலமெல்லாம்
சீறா எரியும் திருநேமி வலவா! தெய்வக் கோமானே!
சேறார் சுனைத்தா மரை செந்தீ மலரும் திருவேங் கடத்தானே!
ஆறா அன்பில் அடியேன் உன்னடி சேர் வண்ணம் அருளாயே.–6-10-2--சுனைகள் அறாக்கயம் ஆகிறாப் போலே யாயிற்று இவருக்கு அன்பு மாறாதே இருக்கிற படி -க்ரம பிராப்தி பற்றாத படியான ப்ரேமம் இறே-உன்னடி சேர் வண்ணம் அருளாயே.–உன் திருவடிகளிலே சேர்ந்து அடிமை செய்யும் படி என் பக்கலிலே கிருபை பண்ணி அருள வேணும் –நீ வந்து திரு மலையிலே அவசர பிரதீஷனாய் இருக்க -உன்னைப் பெற வேணும் என்னும் ருசி எனக்கு உண்டாய் இருக்க நான் கூப்பிடுகை மிகை அன்றோ

இப்படி ப்ராப்தி சாதனம் கிருபையே ஆகில் ,-இன் நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்ற போதே ,
இவர் அபேஷிதம் செய்து விடலாய் இருக்க ,இவரை வைத்து (உறாமை என்றாலும் சம்சாரத்தில் வைத்து ) ஸ்வ சம்ஸ்லேஷ விஸ்லேஷங்களாலே ,(ஆத்ம ஞானம் வந்த பின்பு -விஸ்லேஷத்தில் தானே பக்தி வளரும் ) ஞான பக்திகளை வளர்த்தது ஏதுக்கு ஆக என்னும் ஆ காங்ஷையாலே அருளி செய்கிறார் மேல் —இப்படி பரம க்ருபாவானானவன்‌ இவர்க்கு ஸம்ஸ்லேஷ விஸ்‌லேஷங்களினாலே ஸோக ஹர்ஷங்களை விளைவித்ததுக்கு ப்ரேயாஜநம்‌ என்‌ என்னில்‌, இவர்க்கு தேஸ விஸேஷத்தில்‌ அநு பவம்‌ ஸாத்மிக்கைக்காக ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களினாலே ஐஞாந பக்திகளை வளர்த்து ஸ்ரமம்‌ செய்வித்தபடி என்கிறார்‌-

புணர் தொறும் என்னக் கலந்து பிரிந்து ஞான பக்திகளை வளர்த்தது கனம் குழை இடக் காது பெருக்குதலும் மாச உபவாசி போஜன புறப் பூச்சும் போலே ஆற்ற நல்ல மா போகச் சிரமமாக —சூரணை -115-

புணர் தொறும் என்னக் கலந்து பிரிந்து-அதாவது – தடமுலை புணர் தொறும் புணர்ச்சிக்கு ஆரா சுக வெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க்கச் சூழ்ந்து அது கனவென நீங்கி ஆங்கே அகவுயிரகம் அகம் தோறும் உள் புக்கு ஆவியின் பரமல்ல வேட்கை அந்தோ –திருவாய் -10-3-2-(காலைப் பூசல் ) இத்யாதியாலே சம்ஸ்லேஷிக்கும் தொறும் ,சம்ஸ்லேஷத்தக்கு தக்க அளவில்லாத சுக சாகரமானது ,
அபரித்சேத்யமான ஆகாசத்தையும் கடந்து ,அவ் அருகு பட்டு ,விபூதி த்வயத்தையும்
விளாக் குலை கொள்ள வல்ல அறிவையும் முழுத்தும் படி பெருகி ,-இப்படிப் பெருகின இது —
விஸ்லேஷ பிரசங்கத்திலே (பிரியவே இல்லாமல் இருந்தாலும் )-பெருக்காறு வற்றி அடி சுடுமா போலே ,
ஸ்வப்ன கல்பம் என்னலாம் படி ,வற்றிப் போய் -அத் தசையில் பிராண ஸ்தானமான ஹிருதயத்தில் பூர்வ சம்ஸ்லேஷத்தால் உண்டான , புடை தொறும் உள்ளே புகுந்து ,ஆஸ்ரயமான ஆத்மாவுக்கு பொறுக்க ஒண்ணாத படி ,அபிநிவேசம் பெருகி வாரா நின்றது என்று ,சொல்லும் படியாக கலப்பது பிரிவதாய்- கலவியாலே ஜ்ஞானத்தையும் பிரிவாலே பக்தியையும் வளர்த்தது –( ஒரே பாசுரத்தாலே இரண்டையும் காட்டி அருளுகிறார் )கனம் குழை இடக் காது பெருக்குதல் போலே-அதாவது –-கனத்த பணி இடுகைக்கு இடமாம் படி ,நூல் இட்டு திரி இட்டு குதும்பை இட்டு காது பெருக்குமா போலேயும்-மாச உபவாசி போஜன புறப் பூச்சு போலே-அதாவது-மாசோ உபவாசிகளுக்கு ,பிரதமத்தில் போஜனத்தை இடில் பொறாது என்று, சோற்றை அறைத்து உடம்பிலே பூசி ,பொரி கஞ்சி கொடுத்து , பொரி கூழ் கொடுத்து ,ஒடுக்கத்திலே போஜனத்தை பொறுப்பிக்குமா போலவும்–

“புணர்‌ தொறும்‌” (திருவா. 10 – 3 – 2) என்கிற பாட்டில்‌ ஸம்ஸ்லேஷிக்குந் தோறும்‌ அந்த ஸ்ம்ஸ்லேஷ்த்தின்‌ அளவல்லாத ஸுக ஸாகரம்‌, அபரிச்சிந்நமான ஆகாயத்தையும்‌ கடந்து அது தானும்‌ இதுக்குள்ளேயாம்படியான இவருடைய ஜஞாநமும்‌ தனக்குள்ளேயாம்படி வ்யாப்தமான அந்த ஸுகம்‌, அவனுடைய விஸ்லேஷத்திலே பெருக்காறு அடிச்சுடுமாப் போலே ஸ்வப்ந ஸமமாய்ப் போய்‌ அந்த ஸுகம்‌ போனவிடமெல்லாம்‌ வ்யாப்தமாய்க் கொண்டு அணு பரிமாணமான ஆத்மாவின்‌ அளவல்லாத அபிநிவேஸம்‌ பெருகிற்றென்று சொல்லும்படி ஸம்ஸ்லேஷித்து ஜ்ஞாநத்தை வளர்த்து, விஸ்லேஷித்து பக்திகளை வளர்த்தது. (கனங்குழையிடக்‌ காது பெருக்குதலும்‌ மாஸோபவாஸி போஜநப் புறப் பூச்சும் போலே) கனத்த பணிகளிடுகைக்குக்‌ காது பெருக்குவாரைப்‌ போலேயும்‌, மாஸோபவாஸிகளுக்கு அப்போதே அஸநத்தை இடில்‌ ஸாத்மியா தென்று ஸரீரத்திலே அந்நத்தை அறைத்துப்‌ பூசியும்‌ கஞ்சியைக்‌ கொடுத்தும்‌, குழம்பு கொடுத்தும்‌ ஸாத்மிப்பிப்பாரைப் போலேயும்‌-

தகவிலை தகவிலை யே நீ கண்ணா தடமுலை புணர்தொறும் புணர்ச்சிக்கு ஆராச்
சுகவெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க்கச் சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே
அக உயிர் அகம் அகம் தோறும் உள் புக்கு ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ

மிக மிக இனி உன்னை பிரிவை ஆமால் வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே–10-3-2—அணைக்கிறது பிரிகைக்கு இறே -என்று கை நெகிழ்ந்த இடத்தில் உடம்பு வெளுக்கும் -அதுக்கு பரிஹாரார்த்தமாக திரிய அணைக்கும் -ஆக இப்படி அதிசங்கையும் பரிஹாரமுமாய் செல்லும் இத்தனை யாய்த்து--தடமுலை –என்றது -போக்தாவால் உண்டு அறுக்க ஒண்ணாத போக்யதா பிரகர்ஷம் -மலராள் தனத்து உள்ளான் –இத்யாதி –புணர்ச்சிக்கு ஆராச்-சுகவெள்ளம் -கலவியின் அளவில்லாத ஸூக சாகரம் -கலக்கும் இடத்தில் இருவருக்கும் அனுரூபமாய் இறே ஸூகம் இருப்பது –அவன் ஸ்வரூபம் இயத்தா ரஹிதமாய் இருக்குமா போலே யாய்த்து போக்யதா பிரகர்ஷமும்-அதனில் பெரிய அவா விறே இவளது –விசும்பு இறந்து அறிவை மூழ்க்கச்-சூழ்ந்து -அந்த ஸூகம் அபரிச்சின்னமான ஆகாசத்தைக் கடந்து -மயர்வற மதி நலம் அருள பெற்ற அறிவையும் மூழ்த்தும் படி பெருகிற்று என்னுதல் –-விசும்பு -என்று பரம பதம் –அறிவு -ஆகிறது -உபய விபூதியையும் விளாக் குலை கொள்ளும் தன்னறிவு என்னுதல்
அது கனவு என நீங்கி-ஸ்வப்ன கல்பம் என்னலாம் படி வற்றிப் போய் -இந்திர ஜாலங்கள் என்றும் கனவு என்றும் அஸ்திரங்களை சொல்லக் கடவது இறே -கலந்த போது ஸூகம் அபரிச்சின்னமாய் இருக்கும் –பிரித்விக் கண்டவாறே பெருக்காறு அடிச் சுடுமா போலே துக்கமும் அபரிச்சின்னமாய் இருக்கும் –
ஆங்கே-அத்தசையிலே-அக உயிர்-பிராண ஸ்தான மான ஹ்ருதயம்-அகம் அகம் தோறும் உள் புக்கு-ஹ்ருதயத்தில் உண்டான அவகாசம் தோறும்–முன்புள்ள சம்ச்லேஷ விஸ்லேஷங்களாலே ஹிருதயம் புடை பட்டு இறே இருப்பது -அவ்வவகாசகங்களின் உள்ளே சென்று புக்கு —=ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ– ஆச்ரயத்தின் அளவன்றிக்கே அபி நிவேசம் பெருகி வாரா நின்றது –சம்ச்லேஷ ஸூகம் புக்க இடம் எங்கும் ஆற்றாமை யாய்த்து -அணு பரிமாணமாக ஆத்மாவால் பொறுக்கும் அளவன்று ஆசை -ஸூ கமும் துக்கமும் ஸ்வரூபேணா வஸ்திதியும்-என்று மூன்று –ஸ்வரூபேணா வஸ்திதியில் நிற்கிறது இல்லை –அந்தோ -இது உனக்கு-உபதேசிக்க வேண்டுவதே —-கலவியில் இருவரும் கூடக் கலந்து பிரிவால் ஆற்றாமை உனக்கு உபதேச கம்யமாவதே-கலவிக்கு இருவராய் -நோவு ஒரு தலைக்கே யாவதே

ஆற்ற நல்ல மா போகச் சிரமமாக –அதாவது-ஆற்ற நல் வகை காட்டும் அம்மான் -திருவாய் -4-5-5–என்று-எனக்கு பொறுக்க பொறுக்க தன் குண சேஷ்டிதாதிகளைக் காட்டி ,(மஹா க்ரம மஹதி அநு பூர்வி -படிக்கட்டு ) அவ் வழியாலே என்னை அடிமை கொண்டவன் என்னும் படி , பகவத் அனுபவம் கனாக் கண்டு அறியாத இவர்க்கு-எம்மா வீடு-2-9-1–என்றும்-கட்டு எழில் வானவர் போகம்-6-6-1–என்றும் சொல்லுகிறபடியே எவ் வகையாலும் , விலஷணமாய் கொண்டு , கட்டடங்க (நிரஸ்தமான-யதா சைத்தனம் உப்புக்கட்டி போலே )நன்றாய் இருப்பதாய் அபரிசின்ன ஞான சக்திகரான நித்ய சூரிகள் அனுபவிக்கிற ,போகத்தை முதலிலே கொடுக்கில் சாத்மியாது என்று கருதி , அது சாத்மிக்கைக்காக சிரமம் செய்வித்த படி என்கை -(.மா போகத்தை சிரமம் செய்து கொடுத்தார் என்றவாறு )ஆன பின்பு ஞான பக்திகளை வளர்த்தது பிராப்தி சாதனதயா அன்று ( அனுபவத்துக்காக என்றபடி )என்று கருத்து ..-மாசோ உபாசிக்கு புறப் பூச்சு மாத்ரத்தால் ,போஜனம் பொறாமையால் ,புறப் பூச்சு சொன்ன இது மற்றைய வற்றுக்கும் உப லஷணம்–மா போகம் -என்றது -மா வீடு -வானவர் போகம்-என்கிறசந்தைகளில் ஆதி அந்தங்களை சேர்த்து சொன்ன படி —

(ஆற்றநல்ல மா போகச் சிரமமாக) “*ஆற்ற நல்ல வகை காட்டுமம்மான்‌ ” (திரு-4-5-5) என்றும்‌, அர்ஜுநனுக்கு ஸாத்மிக்க ஸாத்மிக்க அர்த்தம்‌ அருளிச் செய்தாப் போலே எனக்கும்‌ ஸாத்மிக்க ஸாத்மிக்கத்‌ தன்னுடைய பரத்வாதிகளை அநுபவிப்பித்தான்‌ என்று இவர்‌ அருளிச் செய்தபடியே பகவதநுபவம்‌ என்று கனாக் கண்டறியாத இவர்க்கு “எம்மா வீடு”’ (திருவா. 2 – 9 – 1) என்றும்‌, “மா போகம்‌”’ என்றும்‌ சொல்லுகிறபடியே எல்லாப்படியாலும்‌ விலக்ஷணமாய்‌, ““கொள்ள மாளா இன்ப வெள்ளம்‌”” (திருவா. 4 – 7 – 2) என்கிறபடியே அதிஸயித ஜ்ஞாந ஸக்திகரான நித்ய ஸூரிகளாலும்‌ துலைத்தநுபவிக்க வொண்ணாதபடி அபரிச்சேத்‌யமாயிருக்கிற தன்னோட்டை அநுபவத்தை முதலிலே ப்ரகாஸிப்பிக்கில்‌ இவரைக் கிடையாதென்றும்‌, அவ்வநுபவம்‌ ஸாத்மிக்கைக்காகச்‌ சிரமம்‌ செய்வித்தபடி என்கிறார்-

ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை அமரர் தம்
ஏற்றை எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை
மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன்;
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே.–4-5-5—ஆற்ற-அமைய -பொறுக்க பொறுக்க
நல்ல வகை காட்டும் அம்மானை-தன் குண சேஷ்டிதங்களை அனுபவிப்பித்தவன் –-தன் படிகளை ஒரு காலே காட்டில் குளப் படியில் கடலை மறுத்தால் போலே இவருடைய ஆஸ்ரயம் சிதிலமாம்-இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை என்ற போதே வீற்று இருந்து ஏழு உலகை அனுபவிப்பித்தால்-இவரை கிடையாது என்று இறே இவ்வளவும் கொண்டு போந்தது –-அம்மானை அமரர் தம்-ஏற்றை-
சர்வேஸ்வரனாய் -நித்ய ஸூ ரிகளை போக்தாக்களாய் உடையனாய் வைத்து -தனக்கு ஒரு குறை உடையனாய் அன்று -போக்தாக்கள் இல்லாமை அன்று – ஷூ த்ரனாய் ஷூ த்ர விஷயங்களில் கால் கிடையிலே கிடந்த என்னை க்ரமேண அனுபவிப்பித்த மஹா உபகாரகனை–அர்ஜுனனுக்கு -உபதேஸித்தால் போலே தன் குண சேஷ்டிதங்களை எனக்கு சாத்மிக்க சாத்மிக்க அனுபவிப்பித்த மஹா உபகாரகனை-பண்ணின உபகாரகத்துக்கு பிரதிபகாரம் காணாமையாலே ஏத்தினேன் -அது திருவாய்மொழி யாயிற்று-நாள் தோறும் ஆனந்தத்தை உடையேன் ஆனேன் – வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவி -என்னும்படி யானேன்

எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்
கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா வடியேன் வேண்டுவது ஈதே –2-9-1—எம்மா வீட்டுத் திறமும் செப்பம்–வீடு -மோக்ஷம் மா வீடு -உத்க்ருஷ்டமான மோக்ஷம் -அவித்யா நிவ்ருத்தம் மாத்திரம் அன்று-எம்மா வீடு -எல்லா பிரகாரத்தாலும் உத்க்ருஷ்டமான மோக்ஷம் கிடீர் என்ன -ஆனாலும் அபேக்ஷை இல்லை –-வீட்டுத் திறமும் -வீட்டிடை யாட்டம் – செப்பம்-செப்போம்-சொல்லோம்- என் கருத்து அறிக்கைக்காக -நீ கொள் -என்றும் நாம் வேண்டா -என்றும் நிஷேத அர்த்தமாகவும் பிரசங்கிக்க காட்டுவோம் அல்லோம் – ஒரு தமிழன் –எம்மா வீட்டு விகற்பங்களும் செவ்வியவாம் -என்றான் -அப் பக்ஷத்தில் சாலோக்ய ஸாரூப்ய சாமீப்ய சாயுஜ்யம் -என்கிற இவை எல்லாம் இம் மோக்ஷத்தில் உண்டாகை–உமக்குச் செய்ய வேண்டுவது என் என்ன – நின்-செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்-ப்ராப்யமாய் -அகவாய் சிவந்து -அதுக்கு பரபாகமான புறா வாயில் கறுப்பை உடைத்தாய் -விகாசம் செவ்வி குளிர்த்தி நாற்றம்
இவற்றாலே நிரதிசய போக்யமான திருவடிகளை – ஆஸ்ரிதற்கு அருமைப் பட வேண்டாத படி செவ்வியதாய் பூஜ்யமான திருவடிகள் என்னவுமாம் என் தலையிலே கொக்குவாயும் படி கண்ணியும் போலே சேர்த்து அருள வேணும்

கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோது இல தந்திடும் என்
வள்ளலேயோ!
வையம் கொண்ட வாமனாவோ!’ என்று என்று
நள் இ ராவும் நன்பகலும் நான் இருந்து,ஓலம் இட்டால்
கள்ள மாயா! உன்னை என்கண் காணவந்து ஈயாயே.–4-7-2—கொள்ள மாளாத ஆனந்த சமுத்திரத்தை -அனுபவிக்க அனுபவிக்க குறையாது இருக்கை-வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் -என்றது இறே -அது ஆகிறது-கோது இல தந்திடும்-ஆனந்தத்துக்கு கோதாகிறது -அனுபவித்தால் அமையும் என்று இருத்தல் -புறம்பே ஒன்றை அபேக்ஷித்தல் செய்கை – அது இன்றிக்கே ஒழிகையாவது -மேன் மேல் என அபேக்ஷை வர்த்திக்கையும் -இதர விஷய வைராக்ய ஜனகமாகையும்–கோதில-வ்யதிரேகத்தில் மோஹிப்பிக்கை–என் வள்ளலேயோ – நிர்ஹேதுகமாக அபகரித்து வைத்து கூப்பிட பேசாது இருக்கிறது என்-உன் பேறாக அபகரித்து அபகரித்து இப்போது என் பேறாக கூப்பிடப் பண்ணுகிறது என் -இப்படிக் கூப்பிட பண்ண நினைத்தால் வீற்று இருந்து ஏழு உலகில் படியை அனுபவிப்பத்தது என்-வையம் கொண்ட வாமனாவோ!’-வையம் கொண்ட பின்பும் -வாமன வேஷமே யாய்த்து-இவருக்கு பட்டு இருப்பது –-உன்னை இந்திரன் இரக்க-அத்தியாய உபகரிக்குமவன் அல்லையோ-எனக்கு நீ இரந்து தந்து இன்று நான் இரக்க இருக்கிறது என்-என்று என்று
இந்திரனைப் போலே ஒரு பிரயோஜனாந்தரத்தைக் கொண்டு போகிறார் அல்லரே-அவ்வடிவும் நீர்மையையும் இறே இவர்க்குப் பேறு

கட்டெழில் சோலை நல் வேங்கட வாணனைக்
கட்டெழில் தென்குரு கூர்ச்சட கோபன்சொல்
கட்டெழில் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர்
கட்டெழில் வானவர் போகம் உண்பாரே.–6-6-11--பெரிய வானவர் -போக விசேஷணம் ஆகவுமாம் -சம்சாரத்தில் போகம் கர்ம நிபந்தம் ஆகையால் அல்பமாய் அஸ்திரமாய் இருக்கும் இறே -ஸ்வரூப அனுரூபம் ஆகையால் சம்ருத்தமாய் நித்தியமாய் இருக்கை –

ஆனால் ஞான பக்திகளை வளர்த்தது அதுக்காகிறது –முனியே நான் முகனே -அளவும் மானச அனுபவம் ஒழிய ,ப்ரத்யஷ அனுபவம் இல்லாத இவர்க்கு -இவற்றை வளர்க்கைக்கு உறுப்பாக
வரும் சம்ச்லேஷ விச்லேஷங்கள் ஆகிற இவை எவை என்ன அருளிச் செய்கிறார் மேல் -இவர்க்கு இங்கு ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களாகச்‌ சொல்லுகிறவை எவை என்னில்‌, ப்ரத்யக்ஷ ஸமாநாகாரமான மாநஸாநுபவமும்‌, அவ்வநுபவத்தை பாஹ்ய ஸம்ஸ்லேஷாபேக்ஷை பண்ண, அது கிடையாமையாலே மாநஸாநுபவத்துக்கு வந்த கலக்கமும்‌ என்கிறார்‌ மேல்‌ 

இவற்றால் வரும் சம்ஸ்லேஷ விஸ்லேஷங்கள் ஆகிறன எளியனாய் நிற்கும் அரியனாய் எய்தான் என்கிற தர்சன சமமான மானச அனுசந்தானமும் திண் கொள்ளப் பொறாத மனஸ் சைதில்யமும் -சூரணை -116-

(சம்ஸ்லேஷமாவது-எளியனாய் நிற்கும் அரியனாய் எய்தான் என்கிற தர்சன சமமான மானச அனுசந்தானம்-ஞானத்தால்-மானஸ சாஷாத்காரம்-மனசில் நினைவின் நீட்சியால்-
விஸ்லேஷமாவது திண் கொள்ள பொறாத மனஸ் சைதில்யம் -என்றவாறு
பாஹ்ய சம்ச்லேஷ அபேக்ஷையாலே -கலங்கி உள்ளத்தில் உள்ள சம்ச்லேஷ -மானஸ சாஷாத்காரமும் கலங்கி -விஸ்லேஷம் – கண்ணுக்கு தெரிந்து – புத்திக்கு எட்ட வில்லை -மண்டோதரி -த்வம் அப்ரமேய) அதாவது – கீழ்ச் சொன்ன இக் கார்யங்கள் அடியாக வரும் சம்ஸ்லேஷமும் , விஸ்லேஷமும் ஆகிறன-
எளியனாய்
– அதாவது – கருத்துக்கு நன்றும் எளியனாய்-3-6-1- –என்றும் ,-நிற்கும் –-அதாவது –
நிற்கும் முன்னே வந்து –7-3-6–என்று , நெஞ்சுக்கு மிகவும் விசததம அனுபவ விஷயமாய் கொண்டு ,
என் முன்னே வந்து நிற்கும் என்றும் , அரியனாய்- அதாவது –-கண்கள் காண்டற்கு அரியனாய்-3-6-1- -என்றும் ,-எய்தான் –அதாவது –என் கைக்கும் எய்தான்-7-3-6–என்று-கண்ணுக்கு அவிஷயமாய் கொண்டு ,கையால் அணைக்கைக்கு எட்டு கிறிலன் என்றும் , சொல்லுகிற பிரத்யஷ அனுகூல்யமான மானஸ அனுசந்தானமும் ,-திண் கொள்ளப் பொறாத மனஸ் சைதில்யம்-அதாவது கண் கட்கு திண் கொள்ள ஒரு நாள் அருளாய் நின் திரு உருவே -5-10-7- -என்று (தாஹார்த்தன் நாக்கு நனைக்க கேட்பது போலே ஒரு நாள் அருளாய்- நின் திரு உருவே-இது உன்னதோ -அருளால் நோக்கிக் கொண்டு இருக்க –பக்தாநாம் அன்றோ ) அபேஷிதமான பாஹ்ய அனுபவம் பெறாமையாலே- ஆந்த்ர அனுபவமும் ,
அடி மண்டியோடே கலங்கும் படி அந்தக் கரண சைதில்யமும் என்கை-

அந்த ஜஞாந பக்திகளை வளர்த்தத்தால்‌ வரும்‌ ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களாகிறனவை எவை என்னில்‌, (எளியனாய்‌ நிற்கும்‌ அரியனாய்‌ எய்தான்‌ என்கிற தர்ஸந ஸமமான மாதஸாநுஸந்தாநமும்‌) “கருத்துக்கு நன்றுமெளியனாய்‌”‘ (திருவா. 8 – 6 – 11), “நிற்கும்‌ முன்னே வந்து”‘ (திருவா-7 – 2 – 6), “கண்கள்‌ காண்டற்கரியனாய்‌”’ (திருவா. 3 – 6 – 11), ““கைக்குமெய்தான்‌” (திருவா. 3 – 6 – 11) என்றும்‌ சொல்லுகையாலே என்னுடைய ஹ்ருதயத்திலே மிகவும்‌ எளியனாய்க் கொண்டு என் முன்னே நிற்கும்‌ என்றும்‌, என்‌ கண்ணுக்கு அவிஷயமாய்க் கொண்டு கையாலே அணைக்கைக்கு எட்டுகிறிலன்‌ என்றும்‌ சொல்லுகிற ப்ரத்யக்ஷ ஸமாநாகார மாநஸாநுஸந்தாநமும்‌, (திண் கொள்ளப் பெறாத மநஸ் ஸைதில்யமும்‌) அந்த மாநஸாநுபவ வைஸத்‌யத்தாலே “என்‌ கண்கட்குத்திண்கொள்ள ஒருநாள்‌ அருளாயுன்‌ திருவுருவே”’ (திருவா. 5 – 10 – 7) என்று பாஹ்ய ஸம்ஸ்லேஷாபேக்ஷை பண்ணி அது கிடையாமையாலே அம் மாநஸாநுபவத்துக்கு வரும்‌ குலைதலும்‌ ்‌ என்கிறார்‌.-

கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
மண்கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள்செய்யும் வானவர் ஈசனைப்
பண்கொள் சோலை வழுதி வளநாடன் குருகைக்கோன் சடகோபன் சொல்
பண்கொள் ஆயிரத்து இப் பத்தால் பத்தராகக் கூடும் பயிலுமினே.–3-6-11–கண்ணுக்கு விஷயம் அன்றிக்கே அகவாயிலே மிகவும் பிரகாசிக்கிற படி –-இவருக்கு எங்கும் இதுவே சம்ச்லேஷ விஸ்லேஷங்களுக்கு பிரயோஜம்-சம்ச்லேஷம் ஆகிறது -மானஸ அனுபவம் -விஸ்லேஷம் ஆகிறது -பாஹ்ய சம்ச்லேஷ அபேக்ஷையாலே மானஸ அனுபவத்துக்கு வரும் குலைதல்-

காலம் பெற என்னைக் காட்டுமின்கள் காதல் கடலின் மிகப் பெரிதால்
நீல முகில் வண்ணத்து எம்பெருமான் நிற்கு முன்னே வந்தென் கைக்கும் எய்தான்
ஞாலத்தவன் வந்து வீற்றிருந்த நான் மறை யாளரும் வேள்வி ஓவாக்
கோலச் செந்நெற்கள் கவரி வீசும் கூடு புனல் திருப் பேரெயிற்கே.–7-3-6-சிரமஹரமான வடிவை காட்டி யாயிற்று ஆசையை வளர்த்தது -அவன் காதலுக்கு கிருஷி பண்ணா நிற்க என்னால் ஸ்த்ரீத்வத்தை நோக்கி இருக்கப் போமோ –முன்னே வந்து நிற்கை பொல்லாதோ என்னவந்தென் கைக்கும் எய்தான்-உரு வெளிப்பாடு அன்றிக்கே கையாலே அணைக்க எட்டினால் அன்றோ அழகிது –வார்த்தை சொல்லாமை அன்றிக்கே அணைக்கைக்கும் எட்டுகிறிலன் -தான் மேல் விழுந்து அணையாமை அன்றிக்கே நான் மேல் விழுந்து அணைக்கைக்கும் எட்டு கிறிலன்-ஆனால் செய்யப் படுவது என் என்ன -அவன் வந்து இருக்கிற ஊரிலே கொண்டு போய் விடாய் பாருங்கோள்

ஒண் சுடரோ டிருளுமாய் நின்றவாறும் உண்மை யோடின்மையாய் வந்து என்
கண் கொளா வகை நீ கரந்து எனைச் செய்கின்றன
எண் கொள் சிந்தையுள் நைகின்றேன் என் கரிய மாணிக்கமே! என் கண் கட்குத்
திண் கொள ஒருநாள் அருளாய் உன் திருவுருவே.–5-10-7-
என் கண்ணுக்கு அவிஷயமாய்-மறக்க ஒண்ணாத படி நெஞ்சிலே விசதமாக நின்று என்னை நீ செய்கிறவற்றுக்கு அவதி இல்லை –-எண் கொள் சிந்தையுள் நைகின்றேன்-நினைக்க மநோ ரதிக்கிற அளவிலே சிதிலனாகா நின்றேன்
என் கரிய மாணிக்கமே!-ஸைதில்யத்தை பார்த்து மீள ஒண்ணாத வடிவு அழகு -அவ்வடிவை எனக்கு முற்றூட்டு ஆக்கினவனே-என் கண் கட்குத்-தமக்கு முன்னே என்று கொல் கண்கள் காண்பது என்னும்படி விடாய்க்கும் கண்கள்-திண் கொள ஒருநாள் அருளாய் உன் திருவுருவே.-த்ருடமாக காணலாம் படி -ஸ்வப்ன தர்சனம் போலே மானஸ அனுபவம் மாத்திரம் அன்றிக்கே ஸூ த்ருட ப்ரத்யக்ஷமாம் படி -விடாயான் ஒரு கால் நாக்கு நனைக்க வேணும் என்னுமா போலே -அப்ராப்த விஷயத்தையோ நான் ஆசைப்படுகிறது –பக்தா நாம் என்கிற வடிவை அன்றோ-

ஆனால் அபிமத விஷய சம்ஸ்லேஷ விஸ்லேஷங்கள் புண்ய பாப நிபந்தனமாக வன்றோ ,
லோகத்தார்க்கு வருவது ..லோக வ்யாவ்ருத்தரான இவருக்கு (மாறன் அன்றோ )இவை வருகைக்கு நிதானம் எது என்னும் அபேஷையிலே அருளி செய்கிறார்–அபிமத விஷயத்தில்‌ ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களிரண்டும்‌ நாட்டார்க்கு புண்ய பாப பலமாயன்றோ உண்டாகிறதென்னில்‌; அந்த பாபங்கள்‌ வாஸனையோடே போகப்‌ பெற்ற இவர்க்கு ப்ரிய ஹித பரனான ஈஸ்வரன் தானே நடத்தும்‌ என்கிறார்‌.-

புண்ணியம் பாபம் , புணர்ச்சி பிரிவை அவை சரித்தவர்க்கு ப்ரிய ஹித பரன் தான் துளக்கற எங்கும்
தழைக்க நடத்தும் –சூரணை -117-

( புண்ணியத்தால் புணர்ச்சி–துளக்கற நடத்தும்-பாபத்தாலே பிரிவு -எங்கும் தழைக்க நடத்தும் -லோகம் எல்லாம் வாழ நான் படுகிறேன் என்றபடி-சரித்தவர் -இறைவனால் புண்ணிய பாபங்களை போக்கப் பட்டவர்-ப்ரிய ஹித பரன் தான் –பிரிய பரன் தான் -சம்ஸ்லேஷம் நடத்திக் காட்டி -என்றும் –-ஹித பரன் தான் என்றும்-விஸ்லேஷம் நடத்திக் காட்டி ஆழ்வாரது சம்ஸ்லேஷமும் விஸ்லேஷமும் புண்ய பாப பலனால் இல்லை -அவனது க்ருத்யம் என்றவாறு )-அதாவது
புண்ணியம் பாபம் புணர்ச்சி பிரிவு என்று இவையாய் –6-3-4- என்கிறபடி நாட்டார்க்கு புண்ணிய பாப பலமாய் கொண்டு வருகிற சம்ஸ்லேஷ விஸ்லேஷங்களை-அவை சரித்தவர்க்கு –அதாவது – சார்ந்த இரு வல் வினைகளையும் சரித்து -1-5-10–என்று-தில தைலவத் தாரு வஹ்னி வத் -கத்யத்ரயம் -என்கிறபடி ஆத்மாவோடு பிரிக்க ஒண்ணாத படி பொருந்திக் கிடக்கிற புண்ய பாப ரூபமான பிரபல
கர்மங்களை விரகர் நெடும் சுவர் தள்ளுவாரைப் போலே ,தான் போக்குகையாலே அவை இரண்டும் அற்று இருக்கும் இவர்க்கு ,-( கர்மங்கள் இல்லாமலே லீலா விபூதியில் இருப்பது ஈஸ்வர இச்சையால் அன்றோ )பிரியா பரன் ஹித பரன் தான்-அதாவது-ப்ரிய பரனும் ,ஹித பரனுமான ஈஸ்வரன் தான் ஞான பக்திகளை வளர்க்கையில் நினைவாலே —( நிரங்குச ஸ்வ தந்த்ரன் அன்றோ நியமன சாமர்த்யத்துக்காக ஈஸ்வர சப்தம் இங்கு ) துளக்கமற -அதாவது-துளக்கம் அற்று அமுதமாய் எங்கும் பக்க நோக்கு அறியான் என் பைம் தாமரை கண்ணன் -2-6-2–என்று விபூதி ரஷணத்தைப் பற்ற வரும் அந்ய பரதை கலசாத படி அத்தை ( கடாக்ஷத்தை-)ஒருங்க விட்டுக் கொண்டு வந்து , இனி போராதபடி என்னுளே புகுந்து அத்தாலே -விகஸித சஹஜ சார்வஜ்ஞனுமாய் – (இதுக்கு முன்பு ஆழ்வாரை பெறாமல் மழுங்கிய -சகஜம் இல்லாமல் -சர்வஞ்ஞனாய் இல்லாமல் ) அபி ஷிஷ்ய ச லங்காயாம் ராக்ஷஸேந்திரம் விபீஷணம் க்ருதக்ருத்தயஸ் ததா ராமோ விஜ்வர பிரமுமோத ஹா -கிஷ்கிந்தா –1-85—என்கிற படி – உள் நடுக்கமும் தீர்ந்து ,எனக்கு நிரதிசய போக்யனுமாய் , நாய்ச்சிமாரையும் புரிந்து பாராமல் ,என்னையே பார்த்து கொண்டு இதனாலே திரு கண்களும் செவ்வி பெற்று , (முன்பு வெறும் கண்ணனாக இப்பொழுது தானே பைம் தாமரைக் கண்ணன் ) இப்படி என்னுடன் கலந்து இருந்தான் என்று ,இவர் ப்ரீதராம் படியாகவும் ,-எங்கும் தழைக்க நடத்தும்–அதாவது –தழை நல்ல வின்பம் தலைப் பெய்து எங்கும் தழைக்க –9-5-10–என்று விஸ்லேஷ வ்யசனத்தாலே நான் முடியா நின்றேன் ..
இனி என் துக்கம் காணாமையாலே ,லோகம் எல்லாம் விஸ்தீரணமாய் ,நன்றான சுகத்தை பெற்று -சம்ருத்தமாகக் கடவது என்னும் படி அதி மாத்ர துக்க நிமக்னராம் படியாகவும் ,நடத்திக் கொண்டு போரும் என்ற படி-

(புண்ணியம்‌ பாவம்‌ புணர்ச்சி பிரிவை) “புண்ணியம்‌ பாவம்‌ புணர்ச்சி பிரிவென்றிவையாய்‌”’ (திருவா. 6 – 3 – 4) என்று நாட்டார்க்கு புண்ய பாப பலமாய்க் கொண்டு வருகிற ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களை, (அவை சரித்தவர்க்கு ) சார்ந்த இரு வல்வினைகளும்‌ சரித்து மாயப்‌ பற்றறுத்து”‘ (திருவா. 1 – 5 – 10) என்று ஆத்மாவோடே பிரிக்க வொண்ணாதபடி சேர்ந்திருக்கிற புண்ய பாப ரூபமான ப்ரபல கர்மங்களை விரகர்‌ நெடுஞ்சுவர்‌ தள்ளுமாப்‌ போலே ஒருகாலே வாஸனையோடே போம்படி ஈஸ்வரன்‌ போக்குகையாலே அவை இல்லாத இவர்க்கு, (ப்ரிய ஹித பரன் தான்‌ துளக்கற எங்கும்‌ தழைக்க நடத்தும்‌) ப்ரிய பரனாய்க் கொண்டு ஜ்ஞாநத்தை வர்த்திப்பித்தும்‌ ஹித பரனாய்க் கொண்டு பக்தியை வர்த்திப்பித்தும்‌ போருகிற ஈஸ்வரன் தானே.[சிக்கென இத்யாதி,]துளக்கற்றமுதமாய்க் கொண்டு “எங்கும்‌ பக்க நோக்கறியான்‌”” (திருவா, 2 – 6 – 2) என்று விபூதி வ்யாபாரத்தை ஒருங்க விட்டுக் கொண்டு வந்து என்‌னுள்ளே சிக்கெனப்‌ புகுந்து அத்தாலே விகஸித ஸஹஜ ஸார்வஜ்ஞ்யனுமாய்‌, “விஜ்வர?? (ரா. பா. 1 -85) என்கிறபடியே உள் நடுக்கம்‌ தீர்ந்து நிரதிஸய போக்‌யனுமாய்‌ நாச்சிமாரையும்‌ புரிந்து பராமல்‌ என்னளவிலே நிரந்தரமாக கடாக்ஷிக்கையாலே திருக் கண்களும்‌ செவ்வி பெற்று இப்படி என்னுள்ளே இருந்தான்‌ என்றும்‌, *‘தழை நல்ல இன்பம்‌ தலைப்பெய்தெங்கும்‌ தழைக்கவே” (திருவா. 9 – 5 – 10) என்று ‘விஸ்லேஷ வ்யஸநத்தாலே நான்‌ முடியா நின்றேன்‌, என்னுடைய க்லேஸம்‌ கண்டு ஜகத்து கலேஸிக்க வேண்டாவே” என்றும்‌, தீப்பாய்வார்‌ “நாடு வாழ, நகரி வாழ ‘ என்று வாழ்த்துமாப் போலே “ஜகத்தெங்கும்‌ ஆநந்தமானது அபிவ்ருத்‌தமாயிருக்க‘ என்று தாம்‌ முடிகையிலே வ்யவஸிதராயும்‌ இப்படித்‌ தாமே பேசும்படி நடத்திக் கொண்டு போரும்‌ என்கிறார்‌.

புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்று இவையாய்
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய்
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
கண்ணன் இன்னருளே கண்டு கொண்மின்கள் கைதவமே.–6-3-4-ஸூ க துக்க ஹேதுவான புண்ய பாபங்களும் -தத் பல பூதமான அபிமத சம்ச்லேஷ விஸ்லேஷங்களும்–எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய்-அநு கூல விஷயமான எண்ணமும் -பிரதி கூல விஷயமான விஸ்ம்ருதியும் -ஸத்பாவ அஸத் பாவங்களுமாய் –அல்லனாய்-புண்ய பாவங்களை அனுபவியா நிற்க செய்தே தான் அகர்ம வஸ்யனாய்-

சார்ந்த விரு வல்வினைகளும் சரிந்து மாயப் பற்று அறுத்து
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்

ஆர்ந்த ஞானச் சுடராகி யகலம் கீழ் மேல் அளவிறந்து
நேர்ந்த யுருவாய் யருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே –1-5-10-இவ்வாத்மாவுக்கு ஸ்வரூப அனுபந்தியோ என்னலாம் படி பொருந்தி இருக்கை-விரு வல்வினைகளும் சரிந்து
இருவகைப்பட்ட புண்ய பாப ரூபமான கர்மங்களை விரகர் நெடும் சுவர் தள்ளுமா போலே அநாயாசேன போக்கி-வல்வினை-சர்வ சக்தியானவனும் அனுசந்தித்தால் நெஞ்சு உளுக்க வேண்டும்படி இருக்கை
சார்ந்த-எள்ளும் எண்ணெயும் போலே சேர்ந்து இருக்கை-மாயப் பற்று அறுத்து விஷயங்களில் ருசி வாசனைகளைப் போக்கி மாயை -அஜ்ஞ்ஞானம் –அத்தாலே ருசியை நினைக்கிறது –பற்று -வாசனை
தீர்ந்து
-க்ருதக்ருத்யனாய் என்னுதல் அநந்ய பிரயோஜனனாய் என்னுதல் –-தன்பால் மனம் வைக்கத் திருத்தி-விரோதியைப் போக்கும் அளவு அன்றிக்கே மனஸ் ஸூ க்குத் தானே விஷயமாம் படி பண்ணி
வீடு திருத்துவான்-பரமபதத்தை கோடிக்கத் தொடங்குவான்-அதாகிறது -ஆழ்வார் எழுந்து அருளி இருக்கிற மகோத்சவத்தாலே ஒரு புதுமை தோற்றி இருக்கை-

சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற் பின்
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் துளக்கற்ற அமுதமாய் எங்கும்
பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே –2-6-2-
–ஆடியாடியில் ஆற்றாமையால் வந்த உள் நடுக்கம் தீர்ந்தானாய் இரா நின்றான் -விஜ்வர என்னக் கடவது இறே-அமுதமாய்-
பிரமுமோத ஹ
-என்கிறபடியே தன் உகப்பாலே எனக்கு நிரதிசய போக்யனாய் அவன் தன்னை அனுபவித்து இனியனாய் இருக்கும் இருப்பு இறே இவர்க்கு போக்யம்-எங்கும்-பக்க நோக்கு அறியான்-
பிராட்டி பின்னே வந்து அணைத்தாலும் விலங்கப் பார்க்கிறிலன் –-இங்கே ஆளவந்தாருக்கு குருகைக் காவல் அப்பன் அருளிச் செய்த வார்த்தை-என் பைந்தாமரைக் கண்ணனே–ஆடியாடியிலே ஆற்றாமையால் வந்த தாபம் தீர்ந்து திருக் கண்களும் குளிர்ந்த படி –

எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம்
பழன நல் நாரைக் குழாங்கள் காள் பயின்று என் இனி
இழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது
தழை நல்ல இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைக்கவே-9-5-10-–ஈஸ்வர விபூதி சம்ருத்தமாக வேணும் என்கிறாள் –நல்கித்தான் காத்தளிக்கும் பொழில் -இறே -தாம் தாம் முடிய நினைப்பார் நாடு வாழ்க என்பாரைப் போலே -சொல்லுகிறாள் என்று ஆளவந்தார் நிர்வாஹம் -நான் பட்ட பாடு நாடு படாது ஒழிய வேணும் -என்று எம்பெருமானார் –நான் முடிய என்னார்த்தி காணாதே லோகம் அடைய பிழைக்கும் -என்று பட்டர் –

–——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌ – 6 — ப,க்திபாதம்-8–ஜ்ஞாந ப,க்த்யதி கரணம்‌ -பகுதி-1-(97-101)-ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

July 11, 2026

(1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 284 முடிய (48)

(1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-284 (27)

6 — ப,க்திபாதம் -—97–121—-25-இதிலே 2 அதிகரணங்கள்
8–ஜ்ஞாந ப,க்த்யதி கரணம்‌ 97 –117—மொத்தம் -21 —ஸூரணைகள்
பகுதி -1-97-101-ஸூரணைகள்–பகுதி -2–102–117-ஸூரணைகள்-
9-ஜ்ஞாந ப,க்த் யவஸ்தா ஸூக்தி அதிகரணம் –118-121—மொத்தம் –3 —ஸூரனைகள் –

தன்னாக்குகை யாவது என் என்ன அருளி செய்கிறார்-

அதாவது மயர்வற மதி நலம் அருளுகை—சூரணை -97-

அது என்றது -தன்னாக்க – என்றதை பராமர்சிக்கிறது .. மயர்வற மதி நலம் அருளுகை -ஆவது அஞ்ஞானம் ச வாசனமாக போக்கி பக்தி ரூபாபன்ன ஞானம் கொடுக்கை – ( ஸ்வரூப ஐக்கியம் இல்லை -விபு இல்லை –கீழே தனக்கு ஒத்த ஞான சக்திகளைக் கொடுத்தார் – இங்கு ஞானம் கனிந்த நலம் )

அதாவது – தன்னாக்குகையாவது என்றபடி. தன்னாக்குகையாவது – தான்‌ “*மயர்வறமதிநல மருளினன்‌” என்று தாமே அருளிச்‌ செய்யலாம்படி அஜ்ஞாநத்தை ஸவாஸநமாகப் போக்கி பக்திரூபாபந்ந ஜ்ஞாதத்தைத்‌ தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையாலே கொடுக்கை

அது தன்னை விசதமாக அருளிச் செய்கிறார் மேல்- (அது -மயர்வற மதி நலம் அருளுகையாவது )-அஜ்ஞாநத்தைப் போக்கி பக்தி ரூபாபந்ந ஜ்ஞாநத்தைக்‌ கொடுக்கையாவது – பகவஜ்‌ ஜ்ஞாந விரோதியான நாலு வகைப்பட்டிருக்கிற அஜ்ஞாநம்‌ போய்‌ ஜ்ஞாந ப்ரஸரண த்‌வாரமான மநஸ்ஸு அவித்‌யாதி களாலே திரோஹித மாகையாலே குண்டிதமாய்‌, தந் நிவ்ருத்தியிலே விகஸிதமாய்க் கொண்டு மேல் நோக்கிக்‌ கிளருகிற ஜ்ஞாநத்தை பரம பக்தி பர்யந்தமாக வளர்க்கை என்கிறார்‌.

இருள் துயக்கு மயக்கு மறப்பு என்கிற (ஞானத்தை) அனுதய சம்சய விபர்யய விஸ்ம்ருதிகள் அற்று
மலர்மிசை எழுகிற ஞானத்தை-காதல் அன்பு வேட்கை அவா என்னும் சங்க காம அனுராக ஸ்நேகாத்ய அவஸ்தா நாமங்களோடே பரம பக்தி தசை ஆக்குகை –சூரணை-98-

அதாவது–மயர்வற மதி நலம் அருளுகை ஆகிறது தான் –இருள் தருமா ஞாலம் –-இருள் தீர்ந்து இவ் வையம் மகிழ -என்று இருள் என்கிற சப்தத்தால் சொல்லப் படும் ஞான அனுதயமும் –துயக்கன் மயக்கன்–இத்யாதி ஸ்தலங்களில் துயக்கு என்கிற சப்தத்தால் சொல்லப் படும் ஸ்தானுர்வா புருஷோவா -என்கிற படியே க்ராக்ய வஸ்துவை இன்னது என்று நிச்சயிக்க மாட்டாத சம்சயமும் –மயக்கு -என்கிற சப்தத்தால் சொல்லப்படும்-ரஜ்ஜு சுக்த்யாதி விஷய சர்ப்ப ரூப்யாதி புத்தி போலே
அதஸ்மின் தத் புத்தி ஆகிற விபர்யமும்
-(கயிறை பாம்பாக / சுக்தி -முத்துச்சிப்பி – ரூப்யம் வெள்ளி )-மறுப்பும் ஞானமும் –திருவாய் -1-10-10-என்றும்-மறப்பற என்னுள் மன்னினான் -திருவாய் -1-10-10–இத்யாதிகளில் போலே-மறப்பு -என்று சொல்லப் படும் பூர்வ அனுபூத விஷயமாய் அனுபவ சம்ஸ்கார மாத்ரஜமான ஞானத்தின் உடைய அபாவம் ஆகிற விஸ்ம்ருதியும்-ஆக இந்த சதுர் வித -சங்கோச அவஸ்தையும் அற்று –

(இருள்‌ துயக்கு மயக்கு மறப்பென்கிற) ”இருளார்‌ வினை கெட”‘ (திருவிரு. 33), துயக்கின்றித் தொழுதுரைத்த’” (திருவா. 3 – 1 – 11), “மயக்குடை மாயைகள்‌” (திருவா. 1 – 3 – 10), “மறப்பற என்னுள்ளே மன்னினான்‌”” (திருவா. 1 – 10 – 10) என்கிற ஜ்ஞாநாநுதயமென்ன, ‘ஸ்தாணுர்வா புருஷோ வா’ என்று வஸ்துவை யதாவாக க்‌ரஹிக்க வொட்டாதிருக்கிற ஸம்மயமென்ன, ரஜ்ஜுவில்‌ ஸர்ப்ப புத்‌தியும்‌, ஸ்தாணுவில்‌ புருஷ புத்‌தியும் போலே வஸ்துவை விபரீதமாக க்‌ரஹிக்கை யாகிற விபர்யயமென்ன, அநுபூத விஷய ஜ்ஞாந திரோதாந ரூபமான விஸ்ம்ருதி யென்ன, இப்படிச் சொல்லுகிற அஜ்ஞாநத்தை வாஸனையோடே போக்கி.

அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும்
இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர் ஈங்கு ஓர் பெண் பால்
பொருளோ எனும் இகழ்வோ? இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ
தெருளோம் அரவணையீர் ! இவள் மாமை சிதைக்கின்றதே –33–மோஹ அந்தகார ஸஹ சரிதமான விபரீத விருத்தங்கள் போம்படி ஸங்கல்ப ரூபமான ஆஜ்ஜையை நடத்தா நிற்புதீர்

வியப்பாய வியப்பில்லா மெய்ஜ்ஞான வேதியனை
சயப்புகழார் பலர் வாழும் தடம் குருகூர் சடகோபன்
துயக்கின்று தொழுதுரைத்த வாயிரத்துள் இப்பத்தும்
உயக்கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே -3-1-11-துயக்காவது -மனம் திரிபு -சம்சய விபர்யய ரஹிதமான சம்யக் ஞானத்தால் கண்டு ப்ரீதி பிரேரிதரராய் தொழுது-அந்த ப்ரீதி வழிந்த சொல்லான ஆயிரத்திலும் இப்பத்து

துயக்கறு மதியில் நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும்
மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்
புயற்கரு நிறத்தனன் பெரு நிலம் கடந்த நல்லடிப் போது
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே —1-3-10-துயக்கறு மதியுண்டு -சம்சய விபர்யய ரஹிதமான அந்தக்கரணம்-அத்தை யுடையார் ஆகையாலே யதா ஜ்ஞானத்தை யுடைய தேவர்களை மதி கெடுக்கும் படி தெரியாத குண சேஷ்டிதங்களை யுடைய ஆச்சர்யமான அவதாரங்களுக்கு எல்லை இன்றிக்கே இருக்கை

மறப்பும் ஞானமும் நான் ஒன்றும் உணர்ந்திலன்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு
மறப்பு என்றும் ஞானம் என்றும் ஒன்றும் அறிந்திலேன் நான்
மறப்பனோ இனி யான் என் மணியையே –1-10-10—ஒரு சேதனனாய் நினைத்தேனோ மறக்கைக்கு
நினைவு நான் அடியாக வரில் அன்றோ மறுப்பும் நான் அடியாக வருவது -அசித் கல்பன்–அறிவுக்கு அடைவு இன்றிக்கே இருக்கிற என் பக்கலிலே அறிவைப் பிறப்பித்து-மறக்கக் கூடும் என்று பார்த்து
அழகிய திருக் கண்களால் குளிர நோக்கிக் கொண்டு ஒரு நாளும் மறக்க ஒண்ணாத படி என்னுள்ளே ஸ்தாவர பிரதிஷடையாய் இருந்தவனை புறம்பு ஒரு அந்நிய பரதை தோற்ற இருக்கிறிலன்-மறவாமைக்கு பரிஹாரம் அவன் கையிலே உண்டாய் இருக்க இனி மறக்க உபாயம் உண்டோ
கீழ் அநாதி காலம் நினைக்க விரகு இல்லாதாப் போலே இறே மேல் உள்ள காலம் எல்லாம் மறக்க விரகு இல்லாத படியும்

மலர்மிசை எழுகிற ஞானத்தை-அதாவது – மனனகமல மற மலர் மிசை எழு தரும் –திருவாய் -1-1-2-என்கிற படியே (மனன் அகம் மலம் கீழ் சொன்ன நாலும் ) மன பரிசுத்தியாலே விகசிதமாய் கொழுந்து விட்டு – தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -முதல் திருவந்தாதி -67–என்கிற படி
பிராப்த விஷயமான தன்னை நோக்கி கிளருகிற ஞானத்தை –காதல் என்னும் சங்கத்தை -(சினேகா அங்குரம் -தொடக்க நிலை அங்குரார்ப்பணம்– முளை ) அதாவது – உளப் பெறும் காதல் –திருவிருத்தம் -59- நேரிய காதல்-திருவாசிரியம் -2- காணக் கழி காதல் –இரண்டாம் திருவந்தாதி -56–கழிய மிக்கதோர் காதல் –திருவாய் -5-5-10–காதல் கடல் புரைய –திருவாய் -5-3-4- காதல் கடலினும் மிக்க பெரியதால் –திருவாய் -7-3-6- காதல் உரைக்கில்–நீள் விசும்பும் கழிய பெரிதால்-திருவாய் -7-3-8– மெய்யமர் காதல் –திருவாய் -6-8-2–என்றும்- (காதல் என்ற சொல்லால் சொல்லப்படும் -ஒரு பொருளைப் பார்க்கும் இடத்தில் முதல் முதலில் மனதில் தோன்றும் ஸ்நேஹத்தின் முளையாய் இருக்கும் சங்கமும் )

(மலர்மிசை எழுகிற ஜ்ஞாநத்தை) “’மனனகமலமற மலர்மிசை எழுதரும்‌” (திருவா, 1 1 – 2) என்று ஜ்ஞாந ப்ரஸரண த்‌வாரமான மநஸ்ஸைப்‌ பற்றிக்‌ கிடக்கிற “’காம ச க்ரோதஸ் ச லோப,ய்ச ஹர்ஷோ மாநோ மதோ க்‌ரூணா । விஷாதஸ்சாஷ்டம? ப்ரோக்த இத்யேதே மநஸோ மலா?” என்று சொல்லப்படுகிற காம க்ரோதாதி ரூபமாய்‌ அஷ்டவிதமான மல நிவ்ருத்தியாலே விகஸிதமாய்க்கொண்டு மேல் நோக்கிக்‌ கிளருகிற ஜ்ஞாநத்தை. (காதல்‌ அன்பு வேட்கை அவா என்னும்‌) ““நொந்தாராக் காதல்‌’” (திருவா. 2 – 1 – 9) என்றும்‌, ‘“ஆரா வன்பு”’ (திருவா. 6 – 10- 2) என்றும்‌, “பெருகு மால் வேட்கை” (திருவா. 9 – 6 – 1) என்றும்‌, “அதனில்‌ பெரிய என்னவா?” (திருவா. 10 – 10 – 10) என்றும்‌ சொல்லப்படுகிற – வஸ்து தர்ஸநத்திலே ப்ரதம பாவியாய்‌, ஸ்நேஹாங்குரரூபமான ஸங்கமென்ன,

அன்பு என்னும் காமம் –அதாவது –அன்பு சூட்டிய –திருவிருத்தம் -2- அன்பில் இன்பு –திருவாசிரியம்-2-
அன்பே பெருகும் மிக –பெரிய திருவந்தாதி -8–என்றும்-ஆரா அன்பு –திருவாய் மொழி -என்றும்
அன்பு என்று சொல்லப்படும் –சங்காத் சஞ்சாயதே காம -ஸ்ரீ கீதை -2-62–என்றபடி (சங்கத்தின் பின் தோன்றும் பார்க்கப்பட்ட பொருளை அனுபவித்தால் அல்லது நிற்க ஒண்ணாதபடி
இருக்கும் முதிர்ந்த நிலையான காமம் )-வேட்கை என்னும் அநு ராகம்-அதாவது-வேவாரா வேட்கை நோய் –திருவாய் -2-1-10- பெருகுமால் வேட்கையும் –திருவாய் -9-6-1- ஆவியின் பரமல்ல வேட்கை–திருவாய் -10 -3 -2— -என்றும் (வேட்கை என்று சொல்லப்படும் -காமத்தின் காரியமாய் -அனுபவிக்கப்படுகின்ற பொருளின் மேல் ஆசையானது இடைவீடு இன்றியே இருக்கும் அநு ராகமும் -)அவா என்னும் ஸ்நேஹம்- அதாவது – அவா வொருக்கா வினையோடும் –திருவிருத்தம் -64–காண்பான் அவாவுவன் –திருவிருத்தம் -84–சூடுதற்கு அவா –திருவாசிரியம் -2-
அதனில் பெரிய என் அவா-திருவாய் -10-10-10- -என்றும் இப்படி பல இடங்களிலும் –காதல்-அன்பு- வேட்கை- அவா –என்று சொல்லப் படுகிற விஷய தர்சனத்தில் – (அப்பொருளை மேலும் மேலும் அனுபவிக்குமது ஒழிய விட்டுப் பிடிக்கப் பற்றாதபடி அந்த அநுராகத்தின் பின் விளையும் ஸ்நேஹமும் )

மனனக மலமற மலர் மிசை எழு தரும்
மனன் உணரளவிலன் பொறியுணர் யவையிலன்
இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும்
இனன் இலன் எனன் உயிர் மிகு நரையிலனே –1-1-2–மலமற-யோக அப்யாசத்தாலே மனசில் உண்டான அவித்யாதி தோஷங்கள் கழியக் கழிய –அவை யாவன –காம க்ரோதச்ச லோபச்ச ஹர்ஷ மாநமதா குணா விஷாதச்சாஷ்டம ப்ரோக்த இத்யேத மனசா மலா-ஆத்ம ஸ்வரூபமும் நித்தியமாய் ஞானமும் நித்யம் ஆகையால் (உயிர்களும் அழிவற்றவை; ஞானமும் அழிவற்றது; ஆகையால்,) இத் தோஷம் ஸ்வரூப கதமுமல்ல -ஞான கதமும் அல்ல – ஆத்மாவினுடைய தர்மபூத ஞானத்துக்கு (தோற்றம் மறைவுகளை வழங்குவது-)உதய அஸ்தமய வியவஹாரம் பண்ணுகிறது-ஞானம் ப்ரஸ்ருதி த்வாரத்தைப் பற்ற வாயிற்று – ஆக,ப்ரஸ்ருதி த்வாரமான மனத்தினைப் பற்றிக் கிடக்கின்ற தோஷமானது –

அளப்பரும் தன்மைய ஊழி யங்கங்குல் அந் தண் அம் துழாய்க்கு
உளப் பெரும் காதலின் நீளிய வாயுள ஓங்கு முந்நீர்
வளப் பெரு நாடன்   மது சூதன் என்னும் வல்வினையேன்
தளப் பெரு நீள் முறுவல் செய்ய வாய தட முலையே -59–அழகிய குளிர்ந்த திருத் துழாய்க்கு என்னுள்ளத்திலே வளருகிற காதல் போலே நீளிய வாயுள்ளன–காதலுக்கு முடிவு காணாதவோ பாதி கங்குலுக்கும் முடிவு காண ஒண்ணாது என்கை (கங்குலும் காதலும் முடிவு காண ஓண்ணாமை -) அதனில் பெரிய என் அவா -10-10-10-பெரியத்தில் பெரியது என்னும் அத்தனை பகவத் தத்துவத்தையும் விளாக்குலை கொண்டது இறே இவ்வவா பகவத் ஆனந்தத்தைப் பரிச்சேதிக்கப் பார்த்து அவை பட்டது படும் அத்தனை யாயிற்று-

உலகு படைத்து உண்ட எந்தை அறை கழல் சுடர் பூம் தாமரை சூடுதற்கு அவாவு ஆர்
உயிர் உருகி யுக்க நேரிய காதல் அன்பில் இன்பீன் தேறல் அமுத
வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு ஒரு பொருள்க்கு அசைவோர் அசைக திரு வோடு மருவிய
இயற்க்கை மாயாப் பெரு விறல் உலகம் மூன்றினோடு நல் வீடு பெறினும்
கொள்வது எண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே ?-2––அத்தலையில் வை லக்ஷண்யத்தை அனுசந்தித்தவாறே அச்சேத்யமான ஆத்ம வஸ்து த்ரவ்ய த்ரவ்யமாய் ஓர் அவயவி யாக்கிக் காண ஒண்ணாத படி மங்கிற்று ஆயிற்று –பக்தி பரவசரான படியை அருளிச் செய்கிறார்–நேரிய காதல்
அந்த அவாவானது விலக்ஷணமான தொரு சங்கத்தையும் பிறப்பித்தது–அன்பில் இன்பு-த்யாயதோ விஷயாந் பும்ஸஸ் சங்கஸ் தேஷுப ஜாயதே சங்காத் சஞ்ஜாயதே காம -காமாத் க்ரோதோ அபி ஜாயதே –ஸ்ரீ கீதை -2-62- (விஷயங்களை இடைவிடாமல் எண்ணும் மனிதனுக்கு அவற்றில் அதிகமான சேர்க்கை –சங்கம் -உண்டாகிறது அந்த சங்கத்தினால் காமம் உண்டாகிறது காமத்தினால் கோபம் ஏற்படுகிறது) என்கிறபடியே அந்த சங்கம் தான் ஓர் அன்பைப் பிறப்பித்தது

காணக் கழி காதல் கை மிக்குக் காட்டினால்
நாணப் படும் என்றால் நாணுமே –பேணிக்
கருமாலைப் பொன் மேனி காட்டா முன் காட்டும்
திருமாலை நாங்கள் திரு —56—சர்வேஸ்வரனை காண மிகா நின்ற காதல் விஞ்சிக் காட்டினால்
நீ சேஷி நான் சேஷபூதன் என்னும் முறையிலே நிற்கப் போமோ – கண்டால் அல்லது கழியாதே காதல் என்றுமாம் – ஸாபராதன் என்று மீளவும் போகாது

நொந்தாராக் காதல் நோய் மெல்லாவி உள்ளளுலர்த்த
நந்தா விளக்கமே நீயும் அளியத்தாய்
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் எம்பெருமான்
அந்தாமத் தண் துழாய் ஆசையால் வேவாயே –2-1-9—இடைவிடாதே உருவ நலிகிற பிரேம வியாதி
பிரேம வியாதிக்கு உள்ளது ஓன்று இறே இது-மெல்லாவி –
விளக்கின் பிரக்ருதியின் மார்த்வம் போலே இருக்கும் ஆத்மாவும் என்று இருக்கிறாள்-அதாகிறது -பகவத் குண அனுசந்தானத்தாலே நைந்து இருக்கை-உள்ளளுலர்த்த- தோல் புரை அன்றிக்கே -உள்ளே குருத்து வற்றாக வற்றுவிக்க

கழிய மிக்கதோர் காதலள் இவள் என்று அன்னை காணக்கொடாள்
வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
குழுமித் தேவர் குழாங்கள் கைத்தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே
எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே.–5-5-10—அலைவு அற விஞ்சின காதல் என்னுதல் –நாள் கழிய கழிய விஞ்சின காதல் என்னுதல் -சோகச்சகில காலேந கச்ச தாஹ்யபக்கச்சதி -மம்ஸாபச்யதிச் காந்தா மஹான் யஹனி வர்த்ததே –

ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னை சொல் நீர்படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ! கடியனே?–5-3-4—பேரமர் காதல்- ஊரார் பழியும் -தாயார் ஹித வசனமும் -கேளாத படியான காதல் -அமர்ந்த காதல் -தர்ம அனுபந்தியான காதல் -பெரிதான அமரை விளைத்த காதல் -உஊராரை பூசல் ஆக்கின காதல் என்னவுமாம் –-ஈரம் -சங்கம் -காதல் -காமம் –சங்காத் சஞ்சாயதே காமகடல் புரைய விளைவித்த-அப்ரமேயோ மஹா த-என்ற கடல்தி ஒப்பாம் அத்தனை -கிடையா விடினும் விட மாட்டாத காதல் என்கை-கடல் புரைய என்றார் முதல் -அநந்தரம் கடலின் மிகப் பெரிதால் என்றார் –பின்னை மண்டிணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -என்றார் -முடிவில் அதனில் பெரிய என் அவா -என்றார் –இது இறே காதல் பெருகின படி -இது இறே பொய் நின்ற ஞானத்திற்கு பின்பு இவ்வளவும் வர விளைத்துக் கொண்ட கார்யம்

காலம் பெற என்னைக் காட்டுமின்கள் காதல் கடலின் மிகப் பெரிதால்
நீல முகில் வண்ணத்து எம்பெருமான் நிற்கு முன்னே வந்தென் கைக்கும் எய்தான்
ஞாலத்தவன் வந்து வீற்றிருந்த நான் மறை யாளரும் வேள்வி ஓவாக்
கோலச் செந்நெற்கள் கவரி வீசும் கூடு புனல் திருப் பேரெயிற்கே.–7-3-6—காதல் கடல் புரைய விளைவித்த என்ற அளவு அன்று –மடலூரப் புக்க போது விலக்கினவர்கள் தாங்களே கொண்டு போய் காட்ட வேண்டும் தசை இறே

கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடிக் கார்க்கடல் வண்ணனோடு என் திறத்துக்
கொண்டலர் தூற்றிற்றது முதலாக் கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ!
மண் திணி ஞாலமும் ஏழ்கடலும் நீள் வீசும்புங் கழியப் பெரிதால்;

தெண் திரை சூழ்ந்தவன் வீற்றிருந்த தென் திருப் பேரெயில் சேர்வன் சென்றே.–7-3-8—யதோ வாசோ நிவர்த்தந்தே -என்கிற பகவத் ஆனந்தத்துக்கு அவதி உண்டாகிலும் இக்காதலுக்கு பாசுரம் இட்டுச் சொல்லப் போகாது -தோழீ -அவன் காதலின் பெருமை சொல்லி அது அடியாக என் காதலுக்கு கிருஷி பண்ணின நீ படும் பாடு அறிவுதியே-மண் திணி ஞாலமும் ஏழ்கடலும்-நீள் வீசும்புங் கழியப் பெரிதால்;-உரைக்கில் என்கிறது என் –காதல் கடலில் மிகப் பெரிதால் என்றில்லையோ என்ன -அது முகப்பில் வார்த்தை -பெரியத்தில் எல்லா வற்றிலும் பெரியது என்னும் இத்தனை -மண்ணாலே நெருங்கின பூமி -கடினையான பூமி என்கிறபடி -அத்தையும் சூழ்ந்த கடல் ஏழும் -அவற்றுக்கு எல்லாம் அவகாசமான ஆகாசமும் இவை இத்தனைக்கும் அவ்வருகு பட்டு இருக்கை 

மையமர் வாள்நெடுங்கண் மங்கைமார் முன்பு என்கை இருந்து
நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ?
கையமர் சக்கரத்து என் கனிவாய்ப்பெரு மானைக் கண்டு
மெய்யமர் காதல் சொல்லிக் கிளிகாள்! விரைந்தோடி வந்தே.–6-8-2—மெய்யமர் காதல் சொல்லிக்-திருமேனியில் அணைய வேண்டும்படியான காதல் -என் உடம்போடு அணைய வேண்டும் காதல் என்றுமாம் –காத்ரைச் சோகாபி கர்ச்சிதை சம்ஸ்ப்ருசெயம்-என்ன கடவது இறே –குண ஞானத்தால் தரிக்கும் அளவன்று என்று சொல்லுங்கோள் -என்று சீயர் அருளிச் செய்வர் -பிள்ளான் -தம்மை போல் பொய்யாய் நிலை நில்லாத காதல் அன்று என்று சொல்லுங்கோள் என்று பணிக்கும்

செழு நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப சேயரிக் கண்
அழுநீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ
முழுநீர்  முகில் வண்ணன் கண்ணன் விண்ணாட்டவர் மூதுவராம்
தொழுநீர் இணையடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே —-2—குண ஜிதரால் விழுவது காலில் இறே–சூட்டிய -என்பான் என் என்னில்-வாசகம் செய் மாலையே – என்னுமா போலே (சாத்தின- பாடிய- போல் இல்லாமல் சூட்டிய என்பதால் பா மாலை -அன்பு மாலை )-ஆழ்வார் அன்பு திருவடிகளுக்கு அலங்காரம் –சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில் சொல்லு சொல்லு என்று சுற்றும் இருந்து ஆர் வினவிலும் வாய் திறவாதே அந்த காலம் அடைவதன் முன்  மார்வம் என்பதோர் கோவில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி  ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார்க்கு அரவர் தண்டத்தில் உய்யலும் ஆமே – 4-5 -3-

உலகு படைத்து உண்ட எந்தை அறை கழல் சுடர் பூம் தாமரை சூடுதற்கு அவாவு ஆர் உயிர் உருகி யுக்க நேரிய காதல் அன்பில் இன்பீன் தேறல் அமுத வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு ஒரு பொருள்க்கு அசைவோர் அசைக திரு வோடு மருவிய இயற்க்கை மாயாப் பெரு விறல் உலகம் மூன்றினோடு நல் வீடு பெறினும் கொள்வது எண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே ?-2–நேரிய காதல்-அந்த அவாவானது விலக்ஷணமான தொரு சங்கத்தையும் பிறப்பித்தது–அன்பில் இன்பு –த்யாயதோ விஷயாந் பும்ஸஸ் சங்கஸ் தேஷுப ஜாயதே சங்காத் சஞ்ஜாயதே காம -காமாத் க்ரோதோ அபி ஜாயதே –ஸ்ரீ கீதை -2-62-
(விஷயங்களை இடைவிடாமல் எண்ணும் மனிதனுக்கு அவற்றில் அதிகமான சேர்க்கை -சங்கம் -உண்டாகிறது-அந்த சங்கத்தினால் காமம் உண்டாகிறது காமத்தினால் கோபம் ஏற்படுகிறது) என்கிறபடியே அந்த சங்கம் தான் ஓர் அன்பைப் பிறப்பித்தது

அருகும் சுவடும் தெரி யுணரோம் அன்பே
பெருகும் மிக இது என் பேசீர்
-பருகலாம்
பண்புடையீர் பாரளந்தீர் பாவியேம் கண் காண்பரிய
நுண்புடையீர் நும்மை நுமக்கு –8—ஆகிலும் உமக்கு (உம் விஷயத்தில் ) அன்பு மிகா நின்றது
இதுக்கு அடி சொல்லீர்-(ஆழ்வார் கேள்வி இது பெருமாள் கேள்வி அல்ல -நஞ்சீயர் தெளிவிக்கிறார் )

கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல்லசுரர் குலமெல்லாம்
சீறா எரியும் திருநேமி வலவா! தெய்வக் கோமானே!
சேறார் சுனைத்தா மரை செந்தீ மலரும் திருவேங் கடத்தானே!
ஆறா அன்பில் அடியேன்உன்னடி சேர் வண்ணம் அருளாயே.–6-10-2—சுனைகள் அறாக்கயம் ஆகிறாப் போலே யாயிற்று இவருக்கு அன்பு மாறாதே இருக்கிற படி -க்ரம பிராப்தி பற்றாத படியான ப்ரேமம் இறே-

வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்
மாவாய் பிளந்த மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே –2-1-10—ஒரு கால் வெந்து சமையக் கடவது அன்றிக்கே –அக்னி நேவாக்நி பர்வத -என்கிறபடியே வெந்த இடமே இந்தநமாக தஹியா நிற்கிற காதல்
அளவில்லாத வேட்க்கை நோய்-மெல்லாவி –பாத்தம் போராத ஆத்மாவை -அதாஹ்யமாய் இருப்பது கேவல அக்னி யாகில் இறே-யுள்ளுலர்த்த- கூடோ அக்னி ரிவ பாதபம் -கோடாரத்தில் பற்றின அக்னி போலே குருத்து வற்றாக வற்றுவிக்க-

உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி
பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
தெருவு எல்லாம் காவி கமழ் திருக் காட்கரை
மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே–9-6-1—ஆத்மாவுக்கு பொறுக்க ஒண்ணாத படி அபி நிவேசம் பெருகா நின்றது -அணு பரிமாணமாக இவ்வஸ்துவின் அளவன்றிக்கே ஆறு பெருகுமா போலே மேன்மேல் என பெருகா நின்றது –ஆலும் ஓவும் விஷாத அதிசய ஸூ சகம் —நெஞ்சம் உருகுமால் –வேட்க்கையும் பெருகுமால்-என்று தம்மால் நியமிக்க ஒண்ணாத விஷாதம் தோற்றச் சொல்லுகிறார்-

தகவிலை தகவிலை யே நீ கண்ணா தடமுலை புணர்தொறும் புணர்ச்சிக்கு ஆராச்
சுகவெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க்கச் சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே
அக உயிர் அகம் அகம் தோறும் உள் புக்கு ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ
மிக மிக இனி உன்னை பிரிவை ஆமால் வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே–10-3-2—ஆச்ரயத்தின் அளவன்றிக்கே அபி நிவேசம் பெருகி வாரா நின்றது –சம்ச்லேஷ ஸூ கம் புக்க இடம் எங்கும் ஆற்றாமை யாய்த்து -அணு பரிமாணமாக ஆத்மாவால் பொறுக்கும் அளவன்று ஆசை -ஸூகமும் துக்கமும் ஸ்வரூபேணா வஸ்திதியும்-என்று மூன்று –ஸ்வரூபேணா வஸ்திதியில் நிற்கிறது இல்லை –
அந்தோ -இது உனக்கு-உபதேசிக்க வேண்டுவதே —-கலவியில் இருவரும் கூடக் கலந்து பிரிவால் ஆற்றாமை உனக்கு உபதேச கம்யமாவதே-கலவிக்கு இருவராய் -நோவு ஒரு தலைக்கே யாவதே

இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகளந்த
திருத் தாளிணை நிலத் தேவர் வணங்குவர் யாமுமவா
ஒருக்கா வினையொடும்
எம்மோடும் நொந்து கனியின்மையின்
கருக்காய் கடிப்பவர் போல் திருநாமம் சொல் கற்றனமே – -64–அவா ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து –சப்தாதி விஷயங்களில் உண்டான அவாவை –பகவத் விஷயத்தில் ஒருங்க பண்ண ஒட்டாத பாபத்தோடும்- அத்தை அனுஷ்டித்த என்னோடும் கூட நொந்து – இப்படி இருப்பதொரு பாபம் உண்டாவதே – இத்தை அனுஷ்டிக்கைக்கு-நான் ஒருவன் உண்டாவதே -என்று நொந்து

தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழு வினுள்ளும்
ஐய நல்லார்கள் குழிய விழவினும் அங்கங்கெல்லாம்
கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பானவாவுவன் நான்
மைய வண்ணா மணியே முத்தமே என் தன் மாணிக்கமே – -84—அவாவுவன் நான் –ஆசைக்கு கண் உண்டோ -(யுக்த அயுக்த விவேக ஞானம் இருக்காதே ஆசைக்கு ) காண வேணும் -என்று ஆசைப்படும் இத்தனை போக்கி – காண அரிது -என்று அறிய மாட்டேன் –காண அரிதாகில் காண வேணும் என்று ஆசையைப் பிறப்பித்து உம்மை சிஷித்து விட்டாரா என்ன –மைய வண்ணா -இத்யாதி – விஷய தோஷம் இறே இதுக்கு அடி என்கிறார் –நல் சரக்கை இழந்து ஆறி இருப்பார்களோ –

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10--–தத்வ த்ரயத்தையும் விளாக் குலை கொண்டு அது குளப்படி யாம்படி பெரிதான என்னுடைய அபி நிவேசத்தை -அதிலும் பெரிய உன்னுடைய அபி நிவேசத்தைக் காட்டி வந்து சம்ச்லேஷித்தாயே -என்னுடைய கூப்பீடும் ஒருபடி போம்படி பண்ணுவதே –அங்கே பரதம் ஆரோப்ய முதித பரிஷஸ்வஜே -என்று மீண்டு புகுந்து ஸ்ரீ பரத ஆழ்வானை மடியிலே வைத்து உச்சி மோந்து உகந்தால் போலே யாய்த்து இவருடைய விடாயும் கெடும்படி வந்து கலந்தது–

அவஸ்தா நாமங்களோடே பரம பக்தி தசை ஆக்குகை – அதாவது – பிரதமபாவியாய்–ஸ்நேக அங்குரமான –சங்கமும் – சங்காத் சஞ்சாயாத காம -என்கிற படியே தத் அனந்தர ஜாதமாய்-அவ் விஷயத்தை அனுபவித்து அல்லாது நிற்க ஒண்ணாதபடி இருக்கும் தத் விபாக தசையான காமமும்
தத் கார்யமாய் -அனுபாவ்ய விஷய ராக அவிச்சேத ரூபமான அனுராகமும் – தத் அநந்தரம் அவ் விஷயத்தை உத்தரோத்தரம் அனுபவிக்கும் அது ஒழிய விட்டுப் பிடிக்க பற்றாத படி விளையும் ஸ்நேஹமும் , முதலான அவஸ்தைகளுக்கு -அனுரூபமான நாமங்களை உடைத்தாய்க் கொண்டு
பரம பக்தி தசா பர்யந்தம் ஆகும் படி பண்ணுகை என்கை —காதல் அன்பு வேட்கை அவா -என்னும் இவை-சங்காத் உத்தர உத்தர அவஸ்தைகளுக்கு –வாசகமாய் இருக்க –முன் பின் கலந்து வந்ததே ஆகிலும் எல்லா அவஸ்தைகளும் இவருக்கு எப் பொழுதும் பிரகாசித்து இருக்கையாலே –
அப்போதைக்கு அப்போது தம் ஆற்றாமைக்கு ஈடாக பேசுகிறது ஆகையாலே விரோதம் இல்லை —ஆக இத்தால் சொல்லிற்று ஆய்த்து –மயர்வற மதி நலம் அருளுகை ஆவது – அஞ்ஞான அபிதையாக சாஸ்திர சித்தமான அனுதயாதி சதுர் வித சங்கோச அவஸ்தையும் அற்று – விகசிதமாய் கொழுந்து விட்டு -விஷய உன்முகமாக கிளருகிற ஞானத்தை – ஸ்நேக பிரதம அங்குரமான சங்கம் முதலான உத்தர உத்தர விபாக ரூப அவஸ்தைகளுக்கு அனுரூபமான காதல் இத்யாதி நாமங்களைப் பஜித்து ,
பிரேம சீமா பூமியான பரம பக்தி தசா பன்னமாகும் படி பண்ணுகை என்றது ஆய்த்து
—ஆக கீழ்-
அத்ரி ஜமதக்னி -சூரணை -92 – இத்யாதி வாக்யத்தில் சொன்ன சங்கைக்கு மூலம்-இவர் பிரபாவம் என்றும்- அது தனக்கு ஹேது -பகவத் நிர்ஹேதுக கடாஷம் என்றும் கடாஷத்தினுடைய சக்தியும்
இவரை இப்படி கடாஷித்தது லோக ஹித அர்த்தமாக என்றும் – கடாஷிக்கை யாவது மயர்வற மதி நலம் அருளுகை என்றும் – அது தன்னின் பிரகாரமும் சொல்லப் பட்டது .

“ஸங்காத் ஸஞ்ஜாயதே காம?” (கீதை 2 – 62) என்கிற அதினுடைய பரிபாகமான காமமென்ன; அதினுடைய அவிச்சேத,ரூபமான அநுராகமென்ன, அநந்தரம்‌ அவ் வஸ்துவை அநுபவித்தல்லது நிற்க வொண்ணாத அபி நிவேஸ ரூபமான ஸ்நேஹமென்ன, இவை தொடக்கமான இப்படி அவஸ்தராநுரூுபமான நாமங்களை உடைத்தாய்க் கொண்டு பரம பக்தி பர்யந்தமாக அபி,வ்ருத்‌தமாம்படி பண்ணுகை என்கிறார்‌. ஆக- இதுக்குக்‌ கீழ்‌, பகவத் கடாக்ஷமடியாக இவருக்கு அஜ்ஞாந நிவ்ருத்தி பூர்வகமாய்க்‌ கொண்டு உண்டான பக்தி ரூபாபந்ந ஜ்ஞாநம்‌ பரமபக்தி பர்யந்தமாக அபி வ்ருத்‌தமான படி சொல்லிற்று

இனி மேல் இவருடைய இந்த பக்தி தான் கர்ம ஞான சாத்யையாய் – பகவத் பிராப்தி சாதன பூதையாய் இருக்கும் உபாசகர் பக்தியிலும் – பிரபன்னர் பகவான் பக்கல் அர்த்தித்து பெறும் கைங்கர்ய உபகரண பக்தியிலும் வ்யாவிருத்தை என்னும் இடம் அறிவிக்கைக்காக – பிரதமம் சாதன பக்தி வேஷத்தை தர்சிப்பிகிறார் இதில் –இனிமேல்‌ இவருடைய இந்த பக்தி கர்ம ஜ்ஞாந ஸாத்‌யையாய்‌, உபாஸந ரூபையான ஸாதந பக்தியோ? அன்றிக்கே ஸித்‌த,ஸாதந பரிக்‌ரஹம் பண்ணினவர்கள்‌ கைங்கர்‌யோப கரணமாக அபேஷித்துப் பெற்ற பக்தியோ? என்னில்‌; உபயமுமன்று, ஸஹஜையாய்‌, ஸத்தா ப்ரயுக்தையான வ்ருத்த்யுபகரண பக்தி என்கிறார்-(அதில்-ஜந்மாந்தர ஸஹ்ஸ்ர நற்றவங்களாலே) என்கிற சூர்ணையாலே உபாஸந ரூபையான பக்தி வுடைய வேஷத்தை அருளிச் செய்கிறார்‌.

1-ஜென்மாந்தர சஹஸ்ர நல் தவங்களாலே க்யாத குலங்களிலே பிறந்து
2-எழுதி வாசித்து தத்வஜ்ஞராய்
3-குளித்து ஓதி உரு எண்ணும் அந்தி ஐ வேள்வி அறு தொழில்களால் மிக்கு
4-ஊன் வாடப் பொருப்பிடைத் தான் வருந்தி
5-துன்ப வினைகளை விடுத்து
6-விவேக சமாதிகள் வளர
7-எட்டு நீக்கி
8-எட்டும் இட்டு
9-எட்டினாய பேதப் பூவில் சாந்தோடு
10-தேவ கார்யம் செய்து
11-உள்ளம் தூயராய்
12-வாரி புன் புல வகத்தினுள் இளைப்பினை அடையவே விளக்கினைக் கண்டு
13-யோக நீதி நண்ணி அறம் திகழும் மறையோர் மனம் தன்னுள் அமர்ந்து உறையும் அரும் பெறும் சுடரை கண்கள் சிவந்ததிற்படியே மனவுட்கொண்டு
14-நிரந்தரம் மறவாமை தொடக்கறா ஸ்ம்ருதியாய் கனவில் மிக்க தர்சன சமமாய் ஆகத்து புல்கு மத்யர்த்த பிரியமாய் வைகும் சிறப்பு விட்டு குற்றேவல் என்னாத அநந்ய பிரயோஜனமாய்
வேதன உபாசன சேவாத்யானாதிகள் என்று சொல்லும் அது சாத்திய சாதன பக்தி யாக சாஸ்திர சித்தம்-சூரணை -99-

(க்யாத குலங்களில் -புகழ் நிறைந்த மேல் குலங்களில் –விளக்கினை -இங்கு ஆத்மாவை –அரும் பெரும் சுடர் -இங்கு பரமாத்மாவை-உள்ளம் தூயராய் –முடிய கர்மத்தைச் சொல்லி -யோக நீதி நண்ணி -முடிய ஞானத்தைச் சொல்லுகிறது)-1-ஜென்மாந்தர சஹஸ்ர நல் தவங்களாலே -அதாவது –
ஜென்மாந்தர சஹஸ்ரேஷு தபோ ஞான சமாதிபி : நராணாம் ஷீண பாபானாம் கிருஷ்ண பக்தி பிரஜாயதே –ஸ்ம்ருதி –என்றும்-ஒன்றி நின்று நல் தவம் செய்து ஊழி ஊழி தோறு எல்லாம்–திருச்சந்த –75 -என்றும் சொல்லுகிற படியே ஜென்மாந்திர சஹஸ்ரங்களிலே த்ரிவித பரித்யாக பூர்வமாக –பகவத் சமாராதன ரூபேண அனுஷ்டிதங்களான சத் கர்மங்களாலே –க்யாத குலங்களில் பிறந்து –-அதாவது
ஸூசினாம் ஸ்ரீ மதாம் கேஹே யோக ப்ரஷ்டோபி ஜாயதே-அதவா யோகிநாமேவ குலே மஹதி தீமதாம்-ஸ்ரீ கீதை -6-41– (-யோகத்தின் ஆரம்ப காலத்தில் யோகத்தில் நின்றும் நழுவினவன் பரிசுத்தர்களும் ஸ்ரீ மான்களுமானவர்களுடைய குலத்தில் பிறக்கிறான் – அன்றிக்கே யோகம் செய்கின்றவர்களும் சிறந்த ஞானிகளுமானவர்களுடைய பெரிய குலத்தில் பிறக்கிறான் ) என்றும்-ஜெனித்வாஹம் வம்சே மஹதி ஜகதி க்யாத யசசாம் சுசினாம் யுக்தாநாம் குண புருஷ தத்வ ஸ்திதி விதாம்—ஸ்தோத்ர ரத்னம் -61–
( நான் உலகில் பிரசித்தமான கீர்த்தியை யுடையவர்களும் பரிசுத்தர்களும் யோகம் செய்து கொண்டு இருப்பவர்களும் குணமயமான பிரகிருதி ஆத்மா இவற்றின் உண்மை நிலையை அறிந்தவர்களும் ஆனவர்களுடைய குலத்திலே பிறந்து ) என்றும் சொல்லுகிறபடி – தத்வ வித்துகளாய் -பரம யோகிகள் என்று ஜகத் பிரசித்தம் ஆனவர்கள் உடைய குலங்களில் பிறந்து –

(ஜந்மாந்தர ஸஹஸ்ர நற்றவங்களாலே) “’ஜந்மாந்தர ஸஹஸ்‌ரேஷு தபோ ஜ்ஞாந ஸமாதிபி,ச | நராணாம்‌ க்ஷீண பாபாதாம்‌ க்ருஷ்ணே பக்தி? ப்ரஜாயதே“‘ (லக்‌வத்ரி ஸ்ம்ருதெள) என்றும்‌, ‘“ஒன்றி நின்று நற்றவம்‌ செய்தாழியூழிதோறெலாம்‌” (திருச்ச. 75) என்றும்‌, “அநேக ஜந்ம ஸம்ஸித்‌த,?”’ (கீதை 6 – 45) என்றும்‌ சொல்லுகிறபடியே ஜந்மாந்தர ஸஹஸ்ரங்களிலே பலாபிஸந்தி ரஹிதமாய்‌, பகவத் ஸமாராதந ரூபமான ஸத் கர்மங்களாலே, (க்‌யாத குலங்களிலே பிறந்து) “*ஸூசீநாம்‌ ஸ்ரீமதாம்‌ கேஹே யோக,ப்‌ரஷ்டோ அபி,ஜாயதே” (கி,தை 6 – 41) என்றும்‌, “ஜநித்வாஹம்‌ வம்ஸே மஹதி ஜகதிக்யாத யமஸாம்‌ ஸூசீநாம்‌ யுக்தாநாம்‌ குண புருஷ தத்த்வஸ்தி,திவிதாம்‌”‘ ( ஸ்தோ, 7.61) என்றும்‌ சொல்லுகிறபடியே தத்த்வஜ்ஞாநிகளாய்‌, பரமயோகிகள்‌ என்றும்‌ ப்ரஸித்‌தரானவர் ஸ்தலங்களிலே வந்து பிறந்து.

ஒன்றி நின்று நல் தவம் செய்து ஊழி ஊழி தோறேலாம்
நின்று நின்றவன் குணங்களுள் உள்ளி உள்ளம் தூயராய்
சென்று சென்று தேவ தேவர் உம்பர் உம்பர் உம்பராய்
அன்றி எங்கள் செங்கண் மாலை யாவர் காண வல்லரே –75—சஞ்சலம் ஹி மந க்ர்ஷ்ண -என்கிறபடியே விஷயாந்தரங்களிலே மண்டி -அவற்றில் நின்றும் மீட்க அரிதான நெஞ்சை -பகவத் விஷயத்தில் உத்தேச்ய புத்தியாலே மீட்ட –அம் மனஸ்சோடே பகவத் விஷயத்தில் ஒன்றி நின்று –நல் தவம் செய்து-
தபஸ் என்று –யஜ்ஞே நதாநேந தபஸா நாஸ கேந -என்றும் – யஜ்ஞோ தாநம் தபஸ் கர்மநத்யாஜ்யம் கார்யமே வதத் -என்றும் -சொல்லுகிற கர்மங்களுக்கும் உபலஷணம் –நல் தவம் என்று – ஜீவ பர யாதாம்ய ஜ்ஞான பூர்வகமாகவும் த்ரிவித பரித்யாக பூர்வகமாகவும் – அனுஷ்டிக்கும் கர்ம யோகத்தை சொல்லுகிறது –ஊழி ஊழி தோறேலாம் – புதுப் புடைவையில் அழுக்கு கழற்றுமா போலே -அந்த கர்மத்தாலே விரோதி பாபம் போகும் இடத்தில் –ஜந்மாந்தர சஹஸ்ரேஷூ -இத்யாதி படியே கால தைர்க்யத்தை சொல்லுகிறது-நின்று நின்றவன் குணங்களுள் உள்ளி- க்ரமத்தாலே பரம பாவநனாய் இருந்துள்ளவன் குணங்களை அனுசந்தித்து -இத்தால்- விவேக விமோகாதி சாதனா சப்தங்களில் அப்யாசத்தை சொல்லுகிறது –-க்ரமத்தாலே அநவரத பாவநையும் சொல்லுகிறது –உள்ளம் தூயராய் –
உக்தமான கர்ம யோகத்தாலும் பகவத் குண அப்யாசத்தாலும் மநஸா விசுத்தேந -என்றும்-மநஸா  க்ராஹ்யா -என்றும் -சொல்லுகிறபடியே –சென்று சென்று-த்ருவாநு ஸ்ம்ர்தி -என்றும் -நிதித்யாஸிதவ்ய -என்றும் -சொல்லுகிறபடி க்ரமத்தாலே அநவரத பாவனை அளவும் சென்று –பரிசுத்த அந்த கரணராய்-சூரிகள் அளவும் செல்ல சோபன க்ரமத்தாலே -பரபக்தி பரஜ்ஞான பரம பக்தி ரூபத்தாலே
உத்க்ர்ஷ்டராய் பெறுவது ஒழிய

ப்ராப்ய புண்யக்ருதாம் லோகாநுஷித்வா ஸாஸ்வதீ​: ஸமா​:
ஸுசீநாம் ஸ்ரீமதாம் கேஹே யோகப்ரஷ்டோऽபிஜாயதே-
-6-41-யோகத்தில் தவறியவன், புண்ணியம் செய்வோரின் உலகங்களை யெய்தி, அங்கு கணக்கில்லாத வருஷங்கள் வாழ்ந்து, தூய்மையுடைய செல்வர்களின் வீட்டில் பிறக்கிறான்.

ஜநித்வா’ஹம் வம்ஶே மஹதி ஜகதி க்யாதயஶஸாம்
ஶுசீநாம் யுக்தாநாம் குணபுருஷ தத்த்வ ஸ்திதி விதாம் |
நிஸர்கா தேவ த்வச்சரண கமலைகாந்த மநஸாம்
அதோ’த: பாபாத்மா ஶரணத! நிமஜ்ஜாமி தமஸி ||–61
-புகலிடம் கொடுக்கும் ஸ்வாமியே! நான் பரிசுத்தமான, உன்னுடன் எப்பொழுதும் இருக்க விரும்புபவர்களான, சித் மற்றும் அசித் ஆகியவற்றின் ஸ்வரூபத்தையும் தன்மைகளையும் நன்கு உணர்ந்தவர்களான, உன் திருவடிகளிலேயே எப்பொழுதும் தன்கள் மனதை வைத்திருக்கும் சிறந்தவர்களான, ப்ரஸித்தமான புகழை உடைய பெரியோர்கள் அவதரித்த, உயர்ந்த வம்சத்தில் பிறந்திருந்தாலும், பாபமே வடிவெடுத்தவனாகையாலே, இந்த ப்ரக்ருதியில் ஆழமாக மூழ்கிக் கொண்டிருக்கிறேன்.

2-எழுதி வாசித்து தத்வஜ்ஞராய் –அதாவது –-தெரித்து எழுதி வாசித்து கேட்டும் -நான்முகன் -63-என்கிறபடியே பகவத் விஷயத்தை அனுசந்தித்து தத் விஷயமான சப்தங்களை லிகிப்பது வாசிப்பது பிறர் சொல்ல கேட்பதாய் கொண்டு இந்த சாஸ்திர அப்யாச முகேன பிறந்த தத்வ ஞானமுடையராய் –3-குளித்து ஓதி உரு எண்ணும் அந்தி ஐ வேள்வி அறு தொழில்களால் மிக்கு –அதாவது – குளித்து மூன்று அனலை ஓம்பும் –திருமாலை -25-என்கிறபடியே -உபாசன அங்கமான -நித்ய கர்ம அனுஷ்டான உபயுக்தமாய் இருந்துள்ள காய சுத்யர்த்தமான ஸ்நானத்தை பண்ணி –-ஓதி உரு எண்ணும் அந்தி–முதல் திருவந்தாதி -33- -என்றும் –ஐ வேள்வி —பெரிய திருமொழி -3-8-4-என்றும்-அறு தொழில் அந்தணர் –திரு எழு கூற்று இருக்கை -என்றும் -சொல்லுகிற சந்த்யாவந்தன காயத்ரி ஜபம் என்ன –
தேய யஜ்ஞம் -பித்ரு யஜ்ஞம் -பூத யஜ்ஞம் -மனுஷ்ய யஜ்ஞம் -ப்ரஹ்ம யஜ்ஞம் -ஆகிய பஞ்ச மகா யஜ்ஞங்கள் என்ன-அத்யயன –அத்யாபன -யஜன -யாஜன -தான -பிரதிக்ரகங்கள் -ஆகிய ஷட் கர்மங்கள் என்ன- இப்படி இருந்துள்ள நித்ய நைமித்திக கர்ம அனுஷ்டானங்களால் பரி பூரணராய்-

(எழுதி வாசித்து தத்த்வஜ்ஞராய்‌) “தெரித்தெழுதி வாசித்தும்‌ கேட்டும்‌”” (நான்‌.திரு. 63) என்று ஸாஸ்த்ராப்‌யாஸத்துக்கு யோக்‌யமான அக்ஷர ஸிக்ஷையென்ன, அந்த அக்ஷர ராஸி க்‌ரஹண ரூபமான வேத அப்‌யாஸமென்ன, அந்த வேதத்தினுடைய அர்த்த,விஜ்ஞாநத்துக்குறுப்பான ஸாஸ்த்ராப்‌யாஸமென்ன, உபயத்தினுடையவும்‌ அர்த்த ஸ்ரவணமென்ன; அவற்றாலே பிறந்த தத்த்வ ஜ்ஞாநத்தை யுடையராய்‌. (குளித்து) உபாஸந அங்கமான நித்யகர்மாநுஷ்டாநத்துக்கு உபயுக்தமாக காய ஸூத்‌த்‌, யர்த்த,மான ஸ்நாநத்தைப்பண்ணி. (ஓதி உருவெண்ணுமந்தி ஐவேள்வி) ஸந்த்‌யாவந்தந காயத்ரீ ஜப-பஞ்ச மஹா யஜ்ஞங்களைப்பண்ணி. (அறு தொழில்களால் மிக்கு) “அறு தொழி லந்தணர்‌” (திருவெழுகூ.)என்று யஜந-யாஜத-அத்‌யயந–அத்‌யாபந-தாந-ப்ரதிக்‌ரஹங்களென்கிற ஷட்கர்மங்களாலே பூர்ணராய்‌-

தரித்து இருந்தேனாகவே தாரா கணப் போர்
விரித்துரைத்த வென்னாகத்துன்னை-தெரித்து எழுதி
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்
பூசித்தும் போக்கினேன் போது-63-–ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவனை ஆஸ்ரித பஷபாதியான உன்னை –தெரித்து -இத்யாதி –அர்த்தத்தை நிர்ணயியா -அத்தை எழுதி வாசித்தும்-பிறர் சொல்லக் கேட்டும் திருவடிகளிலே நிர்மமனாய் வணங்கியும்-அதுவே ஸ்வ பாவமாம்படியும் தத்தத் காலங்களிலே சமாராதானம் பண்ணியும் போது போக்கினேன் தெரித்து -அனுசந்தித்து -என்றுமாம் –

குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள் அந்தண்மை தன்னை
ஒளித்திட்டேன் என் கண் இல்லை நின் கணும் பக்தனும் அல்லேன்
களிப்பது என் கொண்டு நம்பி கடல் வண்ணா கதறுகின்றேன்
அளித்து எனக்கு அருள் செய் கண்டாய் அரங்க மா நகர் உளானே –25-கர்ம ஜ்ஞானங்கள் இரண்டும் இல்லையாய் இருக்க – உபய சாத்யமான பக்தி இல்லை என்னும் இடம் சொல்ல வேணுமோ -என்னில் –
ஜன்மாந்தர சஹஸ்ரேஷூ தபோ ஜ்ஞான சமாதிபி நராணாம் ஷீண பாபாநாம் க்ர்ஷ்னே பக்தி பிரஜாயதே-என்கிறபடியே உண்டாகலாம் இறே – அதுவும் இல்லை என்கை –கதறுகின்றேன் –
அந் நிலையிலே தான் நிற்கப் பெற்றேனா –சாதன அனுஷ்டானம் பண்ணி பலம் தாழ்ந்தால் கூப்பிடுவாரைப் போலே ஸ்ரவண கடுகமாக கூப்பிடா நின்றேன் –

நகர மருள் புரிந்து நான்முகற்குப் பூ மேல்
பகர மறை பயந்த பண்பன் பெயரினையே
புந்தியால் சிந்தியா தோதி யுரு வெண்ணும்
அந்தியா லாம் பயன் அங்கு என்
–33–ஸ்வா பாவிக சம்பந்தத்தை அனுசந்தித்து அவனை உகப்பியாதே
–எம்பெருமானை அகலுகையே பலித்து விடுவது —அவன் குணங்களுக்கு வாசகமான திரு நாமம்- ஓதி இத்யாதி – அஹ்ருதயமாகப் பண்ணும் ஆயாச ரூபமான கர்மத்தைப் பற்றுவதே –

சிறையார் உவணப் புள் ஓன்று ஏறி அன்று திசை நான்கும் நான்கும் இரிய செருவில்
கறையார் நெடு வேல் அரக்கர் மடியக் கடல் சூழ் இலங்கை கடந்தான் இடந்தான்
முறையால் வளர்க்கின்ற முத்தீயர் நால் வேதர் ஐ வேள்வி யாறங்கர் ஏழின் இசையோர்
மறையோர் வணங்கப் புகழ் எய்து நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே !–3-8-4- நாலு வேதத்தை உத்தரிப்பாராய் பஞ்ச மகா யஞ்ஞாத்ய அனுஷ்டானங்களில் — சப்த ரசங்களையும் உள்ளபடியே அறிந்து இருக்கும் பிராமணர்-

முத்தீ நான்மறை ஐவகை வேள்வி அரு தொழில் அந்தணர் வணங்கும் தன்மையை-அறு தொழில் –யஜனம் -யாஜனம் -அத்யயனம் -அத்யாபனம் -தானம் -ப்ரதிக்ரஹம் -என்கிற ஷட் கர்மங்களை யுடையரான-அத்யயனம் பண்ணுகை -பண்ணுவிக்கை-யஜிக்கை -யஜிப்பிக்கை -தானம் பண்ணுகை கொள்ளுகை-என்றால் போலே சொல்லுகிற இவற்றைத் தொழிலாக யுடையரான ப்ராஹ்மாணருக்கு ஆஸ்ரயணீயனாய் இருக்கும் படி சொல்லிற்று-

4-ஊன் வாட பொருப்பிடை தாம் வருந்தி –அதாவது-ஊன் வாட உண்ணாது உயிர் காவல் இட்டு -பெரிய திருமொழி -3-2-1-என்றும்-பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து நெருப்பிடையே நிற்கவும்–மூன்றாம் திருவந்தாதி -78–என்றும்-வீழ் கனியும் ஊழ் இலையும் என்னும் இவையே நுகர்ந்து -உடலம் தாம் வருந்தி—பெரிய திருமடல் -12-என்றும்-சொல்லுகிற படி நித்ய கர்மாதிகளை அவிகலமாக அனுஷ்டிக்கையாலே தபசர்ய யோக்யதை பிறந்தவாறே -காய சோஷன அர்த்தமாக -அசநத்தை குறைத்து – பிராண தாரணத்துக்கு தக்க அளவாக்கி -உஷ்ண காலத்திலேயே பர்வதாக்ரத்திலும் –
பஞ்ச அக்னியில் மத்தியிலும் நின்றும் -சீத காலங்களில் அகாக்யமான தடாகங்களில் மூழ்கிக் கிடந்தும் –ஜீர்ண பர்ண பல அசநராயும் –இப்படி தபச் சர்யையாலே சரீரத்தை சோஷிப்பித்து ( வாடச் செய்து )–

-“ஊன்வாட உண்ணாதுயிர்காவலிட்டு”” (திருமொழி 3 – 2 – 1) என்று அவிகலமான நித்யகர்மாநுஷ்ட,ாநத்தாலே தபம்சர்யைக்கு யோக்‌,யமானவாறே தத,ர்த்த, மான காயபோஷணார்த்த_மாக நிராஹாரராய்‌, அவ்வளவிலும்‌ ப்ராணத,ரணார்த்த, மாக அப்‌, க்ஷ்ணவாயுப,க்ஷணங்களைப்பண்ணி. (பொருப்பிடைத்தாம்‌ வருந்தி) ”பொருப்பிடையே நின்றும்‌ புனல்குளித்தும்‌ ஐந்து நெருப்பிடையே நிற்க” (மூ.திருவ. 76) என்றும்‌, ‘‘வீழ்‌ கனியுமுழிலையுமென்னுமிவையே நுகர்ந்துடலம்‌ தாம்‌ வருந்தி” (பெ.திருமடல்‌) என்றும்‌ சொல்லுகிறபடியே க்‌,ரீஷ்மகாலங்களில்‌ பர்வதாக்‌,ரத்திலே நின்றும்‌, பஞ்சாக,நிமத்‌,யே நின்றும்‌, பபீதகாலங்களிலே அறாக்கயமான தடாகங்களிலே மூழுகிக்கிடந்தும்‌, ஜீர்ணபர்ணப,லாரநராயும்‌ இப்படி தபஸ்சர்யையாலே மாரீரத்தை ஸோஷிப்பித்து.

ஊன் வாட உண்ணாது உயிர் காவலிட்டு உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து
தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா தமதா இமையோர் உலகாள கிற்பீர்
கானாட மஞ்சைக் கண மாட மாடே கயலாடு கானீர்ப் பழனம் புடை போய்
தேனாட மாடக் கொடியாடு தில்லைத் திருச் சித்ர கூடம் சென்று சேர்மின்களே–3-2-1—மாம்சமானது குறைய-( இடை சிறுத்து வைராக்யம் மிக்கு ) அசன வசநாதிகளைக் குறைத்து பிராணங்களைப் போகாதபடி அப்பஷண வாயு பஷணங்களாலே கால் கட்டி சரீரத்தை விட்டுப் போகாத இந்திரியங்கள் ஐந்தும் ஸ்வ ஸ்வ விஷயங்களைப் பெறாமையாலே நொந்து ஈடுபடும் படி தாங்கள் மேன்மேலும் கிலேசிக்கும்படி தபஸு பண்ண வேண்டா

பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும்
ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா
-விருப்புடைய
வெக்காவே சேர்ந்தானை மெய்ம் மலர் தூயக் கை தொழுதால்
அக்காவே தீ வினைகள் ஆய்ந்து ——-76—பனி நாள் மலைகளில் (நின்றும் பனி நாளில் )பொய்கைளிலே புக்குக் குளித்து–கோடை நாள் பஞ்சாக்கினி மத்யஸ்தனாய் நிற்கவும் வேண்டா –(வேண்டா என்று முன்னிலையாகச் சொல்வதே போதுமே-நீர் வேண்டா என்று குறிப்பிட்டுச் சொல்வான் என்னில் நம்மைப் பெறவே அவன் கோர மா தவம் செய்கின்றான் என்பதை காட்டவே -)

தொன்னெறியை வேண்டுவார் வீழ் கனியும் ஊழிலையும் –12
என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தித்
துன்னும் இலைக் குரம்பைத் துஞ்சியும் வெஞ்சுடரோன் —-13
மன்னு மழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும்-
இன்னதோர் தன்மையராய் ஈங்குடலம் விட்டு எழுந்து —-14வீழ் கனியும் – தானே விழுந்து பசை அற்ற கனியும்-ஊழிலையும் – முளையிலே விழுந்த இலையும் – முற்றிப் பழுத்த சருகான இலையும் –என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தித்- அதாவது -சருகு இலை தின்றும்  காயும் கிழங்கும் தின்றும் இ றே தபஸ் ஸூ அனுஷ்டிப்பது-அவதாரணத்தாலே-ஒரு வ்ரத சமாப்தி பிறந்து பின்னை ஒரு வ்ரத ஆரம்பித்ததின் முன்னே யாகிலும்-ஏகவாரம் அன்னம் புஜித்ததும் இல்லை என்று தோன்றுகிறது  –
இத்தால் அநவரத காயக் கிலேசம் சொல்லுகிறது-நுகர்ந்து – அந்த சாதனத்தில் பண்ணின ஆதரம் தோற்ற போக்யதை உண்டானது போலே இருக்க புஜிககை-உடலம் தாம் வருந்தி – அபிமத விஷயத்தைக் கண்டு இங்கே அனுபவிக்கலாய் இருக்கிற சரீரத்தை கிலேசிப்பித்து-தாம் வருந்தி
இவனுடைய கர்மம் கொண்டு போய் கிலேசிப்பித்தல் தைவம் கொண்டு போய் கிலேசிப்பித்தல் செய்யும் அது ஒழிய தாமே கிலேசிப்பித்து-

5-துன்ப வினைகளை விடுத்து –அதாவது – கீழ் சொன்ன கர்ம அனுஷ்டானத்தாலே மேவு துன்ப வினைகளை விடுத்து -திருவாய் -3-2-8-என்கிற படியே-தில தைலாதிவத்-( எள்ளில் எண்ணெய் போன்று ) ஆத்மாவோடு பிரிக்க ஒண்ணாத படி பொருந்திக் கிடக்கிற துக்க ஹேதுவான பாபங்களை –தர்மேன பாப மபநுததி-தைத்ரியம் – ( நாள்தோறும் செய்யவேண்டிய கர்மங்களைச் செய்கையாலே பாவங்களை போக்குகிறான் ) -என்கிற படியே போக்கி –

(துன்ப வினைகளை விடுத்து) ““மேவுதுன்பவினைகளை விடுத்தும்‌”” (திருவா. 3 – 2 – 8) என்று கீழ்ச்சொன்ன கர்மாநுஷ்டாநத்தாலே ”திலதைலவத்‌,தாருவஹ்நிவத்‌’” (ஸர.க.த்‌,யம்‌) என்கிறபடியே ஆத்மாவோடு பிரிக்கவொண்ணாதபடி பொருந்திக் கிடக்கிற து,2க,ஹேதுவான பாபங்களை “த,ர்மேண பாபமபநுத,தி” (தை. உப.) என்கிறபடியே க்ஷயிப்பித்து.-

மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்
ஓவுதல் இன்றி யுன் கழல் வணங்கிற்றிலேன்
பாவு தொல் சீர்க் கண்ணா வென் பரஞ்சுடரே
கூவிகின்றேன் காண்பான் எங்கு எய்தக் கூவுவனே –3-2-8—இவ்வாத்மாவுக்கு நிரூபகமோ என்னும்படி பொருந்தின சாம்சாரிகமான துக்கத்தை விளைவிப்பதான தத் பிராப்தி விரோதிகளை
-தர்மேண பாபமப நுதி-என்று விகித அனுஷ்டானத்தாலே போக்கவும் மாட்டிற்று இலேன்
நிதித்யாசி திவ்ய -என்கிறபடியே அனவ்ரத பாவன ரூபமான பக்தியை பண்ணப் பெற்றிலேன் –

6-விவேக சமாதிகள் வளர –விவேகாதிகள் -சமாதிகள் -வளர –அதாவது – இப்படி பிரதிபந்தக பாப நிவ்ருத்தியாலே மனசுத்தி ஹேதுவான விவேகாதி சப்தகமும் – சம தம நியதாத்மா சர்வபூதானுகம்பீ -(சமம் தமம் இவற்றில் நியமத்துடன் கூடிய மனத்தை யுடையவன் எல்லா உயிர்கள் இடத்திலும் அருள் பொருந்தினவன் )இத்யாத் யுக்த சம தமாதிகளும் அபிவிருத்தமாக .. ( விவேகம் -விமோகம் -அப்பியாசம் -கிரியை -கல்யாணம் -அநவசாதம் -அநுத் தர்ஷம் )–இதில் விவேகமாவது –( சரீரத்தின் தூய்மை )
ஜாத்ய ஆஸ்ரய நிமித்த அதுஷ்டாத் அன்னாத் காய சுத்திர் விவேக -போதாயன விருத்தி –(சாதி – ஆஸ்ரயம் – நிமித்தம் – என்ற மூன்று குற்றங்கள் இல்லாத அன்னத்தால் காயசுத்தி-சரீரத்தின் தூய்மை – ஏற்படும் ) என்கிறபடியே – ஜாதி துஷ்டமும் -ஆஸ்ரய துஷ்டமும் நிமித்த துஷ்டமும் இன்றிக்கே இருந்துள்ள அன்னத்தால் உண்டான காய சுத்தி –ஜாதி துஷ்டங்கள் ஆனவை -களஞஜ்க்ரஞ்ச நாதிகள் ( வெங்காயம் காளான் என்கிற நாய்க்குடை போல்வன ) ..ஆஸ்ரய துஷ்டங்கள் ஆனவை -அபிசச்த பதித சண்டாளாதிகள் உடைய த்ரவ்யம் –(அபிசஸ்தன்-பிறரால் இகழப்படுபவன் -பதிதன் -தன் நிலையில் நின்றும் இழிந்தவன் -சண்டாளாதிகள் -கர்ம ஜாதி சண்டாளர்கள் )ஆஸ்ரயம் என்றது -த்ரவ்ய ஸ்வாமியான புருஷனைச் சொல்லுகிறது ..-நிமித்த துஷ்டம் ஆவது -உச்சிஷ்ட கேசாத் யுபஹதம் ஆனது (எச்சில் மயிர் கல் முதலியவற்றுடன் கூடிய பொருள் ) இந்த த்ரிவித தோஷமும் இல்லாத ஆகாரத்தின் விவேசந பலமான காய சுத்தியிலே-விவேக சப்தம் உபசாரனோக்தம்–அன்றிக்கே – விவிக்த ஆகார சேவையாலே ராஜச தாமச ஹாராப்யாயித தேஹத்தில் காட்டில் ஸ்வ தேஹத்தினுடைய விவேசனம் விவேகம் என்னவுமாம் —சுத்தி யாவது -அகத்தே பயோ விவேசனம் இறே ( அசுத்தங்கள் நின்றும் பிரித்து அறிதல் ) காய சுத்தி -என்ற இடத்தில் காய சப்தத்தால் அந்த கரணத்தை சொல்லுகிறது –
ஆகார சுத்தவ் சத்வ சுத்தி-சாந்தோக்யம் -என்று சுருதி சொல்லிற்று –சத்வமாவது அந்த கரணம் இறே —
அபயம் சத்வசம் சுத்தி -ஸ்ரீ கீதை –16-1-( சத்துவத்துக்குத் தூய்மை பயம் அற்று இருத்தல் )என்றும் –
சத்வானுரூப சர்வஸ்ய ஸ்ரத்தா பவதி -ஸ்ரீ கீதை -17-3-–(எல்லாருக்கும் ஸ்ரத்தையானது சத்வத்துக்குத் தகுதியாக உண்டாகிறது ) என்றும் சொல்லுகிற இடங்களிலும் –சத்வ சப்தம் அந்த கரணம் வாசியாக ஸ்ரீ பாஷ்ய காரர் அருளிச் செய்தார் இறே — ஆகை இறே விவேகமாவது -ஆகார சுத்தவ் சத்வ சுத்தி-என்கிற படியே அந்த கரண சுத்திக்கு அடியான அன்ன சுத்தி என்று ஸ்ரீ ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தது .விமோகமாவது -விமோக காமாநபிஷ்வங்க-போதாயன விருத்தி –என்கிற படி காமத்தில் அநபிஷ்வங்கம்..-யாதொரு விகாரத்தாலே விஷயத்தை புஜியாது நிற்க மாட்டான் -அந்த விகாரம்-அபிஷ்வங்கம் — காமத் க்ரோதோபீஜாயதே -ஸ்ரீ கீதை –2-62 –இத்யாதி வசனத்தாலே குரோத அத்யபாவமும் இவ் இடத்தில் பலிதம் –அப்யாசமாவது – ஆரம்பண சம்சீலனம் புன புன அப்யாசக-போதாயன விருத்தி – -என்கிற படி-த்யான அலம்பனமான வஸ்துவிலே பலகாலம் பரிசீலனம் பண்ணுகை –-ஆரம்பணம் என்றது -ஆலம்பனம் என்ற படி- இவ் இடத்தில் ஆலம்பனம் ஆவது-ஸூபாஸ்ரயம் –( தியானத்துக்கு உரிய பொருளை )–கிரியையாவது -பஞ்ச மகா யஜ்ஞாத்ய அனுஷ்டானம் -சக்தித க்ரியா-போதாயன விருத்தி – -என்கிறபடியே-பஞ்ச மகா யக்ஞாதி நித்ய கர்மங்களை வல்ல அளவும் அனுஷ்டிக்கை –கல்யாணமாவது -சத்யார்ஜவ தயா தான ஹிம்சாநபித்யா கல்யாண நி ”–போதாயன விருத்தி – –என்கிற படியே – சத்யம், ஆர்ஜவம் ,தயை தானம் ,அஹிம்சை, அனபித்யை – ஆகிற இவை கல்யாணம் எனப்படும் –-இதில் சத்யம் -பூத ஹிதம் ..ஆர்ஜவம்-மனோ வாக் காய ஏக ரூப்யம் . தயை-ஸ்வார்த்த நிரபேஷை–பர துக்க அசஹிஷ்ணுத்வம் –-தானம்-லோபராஹித்யம்-அஹிம்சை- கரண த்ரேயேண பர பீடா நிவ்ருத்தி அபித்யை-பர கீயே ஸ்வ புத்தி -பிறர் பொருளை தனது பொருளாகக் கருதுதல் )அன்றிக்கே நிஷ் பல சிந்தை யாதல் -பரக்ருத அபகார சிந்தை ஆதலுமாம் .-அது இல்லாமை- அநபிதியைஅனவசாதமாவது -தேச கால வைகுண்யாத் -சோக வஸ்த்வாத்ய நுசம்ருதேச்ச தஜ்ஜம் சைதன்யம் அபாஸ்வரத்வம் மனச அவஸாத-போதாயன விருத்தி -–என்கிறபடியே
தேச கால வைகுண்யத்தாலும்(குணக் கேட்டினாலும் ) சோக ஹேதுவாயும் பய ஹேதுவாயுமாய் உள்ள வஸ்துக்களில் அனுசம்ருதியால் உண்டான தைன்யமாகிற மனசினுடைய அபாஸ்ரத்வம் ,அவசாதம் ஆகையாலே ,அதனுடைய விபர்யயம்-சோக வஸ்து என்றது -சோக நிமித்த வஸ்து என்ற படி –அதாவது அதீதமான புத்ர மரண ஆதி- ஆதி சப்ததாலே -பய நிமித்தமான ஆகாமி வஸ்து விவஷிதம் – சோகம்-அதீத விஷயமாய்-பயம்-ஆகாமி விஷயமாய் இறே இருப்பது–அபாஸ்த்ரத்வம் என்கிற இது -தைன்ய சப்த விவரணம் ..தைன்யமாவது – அபீஷ்ட கார்ய பிரவர்த்ய ஷமத்வம் –பாஸ்வரத்வ விரோதி என்று தைன்ய விசேஷணம் ஆகவுமாம்– அனுத்தர்ஷம் ஆவது –தத்வி பர்யயஜா துஷ்டி ருத்தர்ஷ -என்கிற படி
தேச கால ஷாட் குண்யத்தாலும் பிரியவஸ்த்வாத்ய அனு ஸ்ம்ருதியாலும் உண்டான துஷ்டி உத்கர்ஷம் ஆகையாலே அதனுடைய விபர்யயம் –அதாவது ஹர்ஷ ஹேதுகள்–உண்டானாலும் அப்ரீதனாகது ஒழிகை- (பாஸ்வரம் -விளக்கம் -தெளிவு -அபாஸ்வரம் -தெளிவின்மை -தைன்யம் -வறுமைத் தன்மை )இனி–சமாதிகளில் – -அதாவது – சமம் ஆவது அந்த கரண நியமனம் – தமம் ஆவது பாஹ்ய கர்ண நியமனம் சமச் சித்த பிரசாந்திஸ் ஸ்யாத் தமச்சேந்திரிய நிக்ரஹ – என்னக் கடவதிறே–
ஷமா சத்யம் தமச் சம –என்கிற இடத்தில்-தமோ பாக்ய கரணானம் அநர்த்த விஷயேப்யோ நியமனம் -சம – அந்த கரணச்ய ததாவித நியமனம் –என்று இறே ஸ்ரீ பாஷ்ய காரர் அருளிச் செய்தது –-மாறி சொல்லும் இடங்களும் உண்டு ..-ஆத்ம குணங்களில் பிரதானங்கள் இறே இவை … சாந்தோ தாந்த உபரதஸ் திதிஷூ சமாஹிதோ பூத்வா ஆத்மன்யேவ ஆத்மானம் பச்யேத்–ப்ருஹதாரண்யம் -6-4-23-
( மனத்தினை அடக்கி புற இந்திரியங்களை அடக்கி காம்யகர்மங்களில் ஆசை இல்லாதவனும் பொறுமை யுள்ளவனும் சமாதானம் யுடைய மனத்தினையும் யுடையவனாகி இந்த உயிரினிடத்திலே பரம்பொருளை பார்க்கக் கடவன் )-என்கையாலே , உபாசனத்தில் இழியும் அவனுக்கு ,பிரதம அபேஷிதங்கள் இவையாக இறே சுருதியும் சொல்லிற்று ..-மற்றும் உள்ள ஆத்ம குணங்களுக்கும் எதா யோகம் அர்த்தம் கண்டு கொள்வது ..-ஆக இப்படி இருந்துள்ள விவேகாதிகளும் சமாதிகளும் மேன்மேலும் அபிவிருத்தமாய் வளர –

(விவேகமாமாதிகள்‌ வளர) இப்படி பாப விமோசநம்‌ பிறந்தவாறே மநோ நைர்மல்ய ஹேதுவான விவேக-விமோகாப்‌,யாஸ க்ரியா கல்யாணாநவஸா தநுத்‌த,ர்ஷங்களும்‌, ““ஸமதம நியதாத்மா ஸர்வ பூதாநுகம்பீ விஷய ஸுக விரக்தோ ஜ்ஞாந த்‌ருஷ்டி ப்ரபந்ந ச । அநியதநியதாந்தோ நைவ ருஷ்டோ ந ஹ்ரூஷ்டச ப்ரவஸித இவ கேஹே வர்த்ததே யஸ்ஸ முக்தச”” என்கிற ஸமாதி,களும்‌ அபி,வ்ருத்‌தமாக.-இதில்‌ விவேகமாவது – “’ஜாத்யாஸ்ரய நிமித்தாது,ஷ்டாத,ந்நாத் காயமாத்‌திர் விவேக” (போதாயந) என்கிற காய ஸூத்‌திக்கடியான அந்ந ஸூத்‌தி,.-விமோகமாவது – காமாநபி,ஷ்வங்க,ம்‌. அப்‌,யாஸமாவது -““ஆரம்பண ஸம்ஸபீலநம்‌ புந புநரப்‌யாஸ?”’ என்று த்‌,பாநாலம்பநவஸ்துவிலே பலகாலும்‌ பரிஸீலநம்‌ பண்ணுகை.  க்ரியையாவது  “பஞ்ச மஹா யஜ்ஞாத்‌,யநுஷ்டாநம்‌ ஸக்திதா க்ரியா?” என்று நித்ய கர்மங்களை வல்லவளவும்‌ அநுஷ்டிக்கை, கல்யாணமாவது – ““ஸத்யார்ஜவத யாதாநா ஹிம்ஸாநபி,த்‌,பா கல்யாணாநி” என்கிற ஸத்யார்ஜவத, யாத,நா ஹிம்ஸாதி,கள்‌. அநவஸாத,மாவது **ஸோக ஹேதுஷு மநஸ? கேத,ராஹித்யம்‌ அநதவஸாத,” என்கிறபடியே ஸோகஹேதுக்கள்‌ உண்டானாலும்‌ நெஞ்சு தளராதிருக்கை. அநுத்‌தர்ஷமாவது – ““தத்‌ விபர்யயஜா துஷ்டி: – உத்‌தர்ஷச தத்‌,விபர்யய? – அநுத்‌த.ர்ஷ?’” என்று ஹர்ஷ ஹேதுக்கள்‌ உண்டானாலும்‌ அதி ப்ரீதனாகாதொழிகை –

7-எட்டு நீக்கி-அதாவது-ஈனமாய எட்டும் நீக்கி –திருச்சந்த -114–என்று ஞான சங்கோசதயா ஆத்மாவுக்கு குறையான அவித்யாதிகள் ஐந்தும் ,( அவித்யை -செருக்கு -இராகம் -த்வேஷம் அபிநிவேசம் ) சரீர சம்பந்த பிரயுக்தமான தாப த்ரயங்களும் ஆகிற எட்டையும் போக்கி —துன்ப வினைகளை விடுத்து -அதாவது –கீழேயும் கர்ம விமோசனம் சொல்லிற்றே என்னில் – அங்கு சொல்லிற்று ஞான உத்பத்தி விரோத பிராசீன கர்ம மாதரம் ஆகையால் விரோதம் இல்லை – அன்றிக்கே ஆத்மாவுக்கு பொல்லாங்கை பண்ணுவதான-காம குரோத லோப மோஹ மத மாத்சர்ய அஞ்ஞான அசூயை ஆகிய எட்டையும் போக்கி என்னவாம்-காமம் ஆவது-அர்தித்த பதார்த்தம் அனுபவித்து அல்லாது நிற்க ஒண்ணா தசை –குரோதமாவது -அதின் கார்யமாய் அர்தித்த பதார்த்த அலாபத்தில் சந்நிஹிதர் பக்கல் பிறக்கும் சீற்றம் ..-லோபம் ஆவது –சந்நிஹிதர் பதார்த்தத்தில் அதி பிராவண்யம் ..-மோஹம் ஆவது கர்தவ்ய அகர்தவ்யங்களை விவேகிக்க மாட்டாது ஒழிகை .-மதம் ஆவது அர்தாதி லாபத்தில் வரும் களிப்பு-மாத்சர்யம் ஆவது-பர சமிர்தியை பொறாமையை அனுஷ்டான பர்யந்தமாக நடத்துகை ..
அஞ்ஞானம் ஆவது -இவற்றால் மேல் வரும் அநர்த்தம் நிரூபியாமை ..அசூயை ஆவது -குணங்களில் தோஷத்தை ஆவிஷ்கரிக்கை ..-ஏவம் பூதங்களான இவற்றைப் போக்கி என்ற படி –

(எட்டு நீக்கி) ‘ஈனமாய எட்டு நீக்கி” (திருச்ச. 114) என்கிறபடியே ஆத்மாவுக்குப்‌ பொல்லாங்கைப்‌ பண்ணக் கடவதான ‘காம-க்ரோத,- லோப, -மோஹ-மத, -மாத்ஸர்ய-அஜ்ஞாத-அஸூயைகள்‌ என்கிறவற்றை விட்டு. –

ஈனமாய எட்டும் நீக்கி ஏதமின்றி மீது போய்
வானமாள வல்லையேல் வணங்கி வாழ்த்து என்னெஞ்சமே
ஞானமாகி நாயிறாகி ஞாலம் முற்றும் ஓர் எயிற்றில்
ஏனமாய் இடந்த மூர்த்தி யெந்தை பாதம் எண்ணியே -114-சேதனர்க்கு குறையான அவித்யாதிகள் ஐந்தையும் சரீர சம்பந்த பிரயுக்தமான தாபத் த்ரயங்களையும் நீக்கி – இவை இவனுக்கு ஜ்ஞான சங்கோசம் என்கையாலே –ஈனம் -என்கிறது –

8-எட்டும் இட்டு-அதாவது –இன மலர் எட்டும் இட்டு –பெரிய திருமொழி -1-2-7-என்றும் –கந்த மா மலர் எட்டும் இட்டு –பெரிய திருமொழி -3-5-6-என்றும் -சொல்லுகிற படி ஓர் ஒரு அஷரங்கள் பரிமளோத்தரமான புஷ்பம் போலே அவனுக்கு போக்யமாம் படி இருக்கையாலே , அஷ்ட வித புஷ்பம் சமர்பிப்பாரை போலே திரு மந்த்ரத்தை அனுசந்தித்து ,-அவன் பெயர் எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே–திருச்சந்த –77 -என்றும் –ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் எட்டு எழுத்தும் வாரமாக ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே –திருச்சந்த –78-என்றும் சொல்லக் கடவதிறே
அன்றிக்கே –அஹிம்சா பிரதமம் புஷ்பம் ,புஷ்பம் இந்திரிய நிக்ரக -சர்வ பூத தயா புஷ்பம் , ஷமா புஷ்பம் விசேஷத-ஞானம் புஷ்பம் தப -புஷ்பம் த்யானம் -புஷ்பம் தவைவச சத்யம் அஷ்ட வித புஷ்பம் விஷ்ணோ பிரதீகரம் பவேத் -என்கிற படியே அஹிம்சாத் அஷ்ட வித புஷ்பங்களையும் இட்டுமாம் —கீழே விவேக சமாதிகள் என்றதில் அந்தர் பூதங்களானவை இதிலும் வந்ததாகிலும் ஈஸ்வரனுக்கு இவற்றை போக்யத்வேன அனுசந்தித்து அனுஷ்டிக்கையைச் சொல்கிறது ஆகையாலே விரோதமில்லை –ஆகையிலே இவற்றை புஷ்ப சமர்பணமாக சொல்கிறது —

(எட்டுமிட்டு) “கந்தமாமலரெட்டுமிட்டு” (திருமொழி 3 – 5.- 6), “இனமலரெட்டுமிட்டு’” (திருமொழி 1 – 2 – 7) என்கிறபடியே “அஹிம்ஸா ப்ரதமம்‌ புஷ்பம்‌ புஷ்பமிந்த்‌ரிய நிக்‌ரஹ?। ஸர்வபூததயா புஷ்பம்‌ க்ஷமா புஷ்பம்‌ விஸேஷத: । ஜஞாநம்‌ புஷ்பம்‌ தப? புஷ்பம்‌ தயாநம்‌ புஷ்பம்‌ ததைவ ச ! ஸத்யமஷ்டவிதம்‌ புஷ்பம்‌ விஷ்ணோ: ப்ரீதிகரம்‌ பவேத்‌” என்கிறபடியே அஹிம்ஸாதிகளான அஷ்டவித, புஷ்பங்களை இட்டு. இந்த அஹிம்ஸாதிகள்‌ திருவுள்‌ளத்துக்கு உகப்பாகையாலே புஷ்பமென்கிறது –

கார் கொள் வேங்கைகள் கன வரை தழுவிய கறி வளர் கொடி துன்னி
போர் கொள் வேங்கைகள் புன வரை தழுவிய பூம் பொழில் இமயத்துள்
ஏர் கொள் பூஞ்சுனைத் தடம் படிந்து இன மலர் எட்டும் இட்டு இமையோர்கள்
பேர்கள் ஆயிரம் பரவி நின்றடி தொழும் பிரிதி சென்று அடை நெஞ்சே —1-2-7—அஹிம்ஸாதிகளான  புஷ்பங்கள் எட்டும் இட்டு(அஹிம்சா-பிரதமம் இந்திரிய நிக்ரஹம் சர்வ பூத ஹிதம் ஷமா தானம் தபஸ்
த்யானம் சத்யம் -அஷ்ட விதம் விஷ்ணுவுக்கு பிரிய தர்மம்
)-அன்றிக்கே –செங்கழுநீர் செண்பகம் இருவாட்சி பாதிரி புன்னை குறுக்கத்தி கருமுகை தாமரை என்றாப் போலே பிரதானமாய் இருப்பன எட்டும் ஆதல்-அஷ்டாங்க பிரணாமத்தை சொல்லுதல் ஆதல் –-மனஸ் புத்தி அஹங்காரம் தலை கால்கள் கைகள்- அத்தை மலர் என்னும்படி என் – என்னில் பூவோபாதி அவனுக்கு ஸ்ப்ருஹா விஷயமாய் இருக்கும் ஆகில் இறே – சூட்டினேன் சொன் மாலை -என்னுமா போலே –
அன்றிக்கே  கீழில் திரு மொழியில் திரு மந்த்ரம் பிரஸ்துதம் ஆகையாலே திரு வஷ்டாஷரத்தை சொல்லிற்று ஆதல் –

கந்த மா மலர் எட்டும் இட்டு நின் காமர் சேவடி கை தொழுது எழும்
புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்
சந்தி வேள்வி சடங்கு நான்மறை ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும்
அந்தணாளரறா அணியாலியம்மானே –3-5-6—கந்த வத்தான விலஷண புஷ்பங்கள் எட்டையும் இட்டு –
அவை யாவன – கருமுகை -கற்பகம் -நாழல் -மந்தாரம் -சௌகந்தி -செங்கழுநீர் – தாமரை -கைதை
ஸ்வாபதேசம் – பரம போக்யமான திரு மந்தரத்தால் பிரதிபாத்யமான வஸ்துவின் பக்கலில் தன்னை சமர்ப்பித்து – சர்வ கந்த -என்கிற வஸ்து ஆகையாலே – உன்னுடைய ஸ்ப்ருஹணீயமான சிவந்த திருவடிகளை கையாலே தொழுது உஜ்ஜீவிக்க வேணும் என்னும் அத்யவாசாயத்தை உடைய என்னுடைய ஹிருதயத்திலே –

எட்டும் எட்டும் எட்டுமாய் ஒரு ஏழும் ஏழும் ஏழுமாய்
எட்டு மூன்று ஒன்றுமாகி நின்ற வாதி தேவனை
எட்டினாய பேதமோடு இறைஞ்சி நின்றவன் பெயர்
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே –77-–கீழ்ச் சொன்ன ஜகத் அந்தராத்ம பாவத்துக்கு வாசகமான மந்த்ராந்தந்தரங்களில் காட்டில் திரு அஷ்டாஷரத்தை வாயாலே உச்சரிக்குமவர்கள் –வல்லர் வானம் ஆளவே –அர்த்தத்தை மனசாலே அனுசந்தித்தும் –வாயாலே சப்தத்தை உச்சரித்தும் –
சாரீரமான ப்ரணாமத்தை பண்ணியும்-இப்படி மநோ வாக் காயங்களாலே பஜிக்குமவர்கள் இட்ட வழக்கு பரமபதம் -என்கை-

சோர்விலாத காதலால் தொடக்கறா மனத்தராய்
நீர் அராவணைக் கிடந்த நின்மலன் நலம் கழல்
ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் எட்டு எழுத்தும்
வாரமாக வோதுவார்கள் வல்லர் வானம் ஆளவே –78—ஷீராப்தி நாதன் திருநாமமான திருவஷ்டாஷரத்தையும் –-ஏஷ நாராயண ச ஸ்ரீ மான் -என்றும் – நாராயணனே நமக்கே பறை -தருவான் என்றும் – பவான் நாராயணோ தேவ -என்றும் – தர்மி  புக்க விடம் எங்கும் இத்திருநாமம் பிரதம அபிதாநமாய் இருக்கும் -என்கை–நமோ நாராயணா யேதி மந்தரைக சரணா வயம் –என்கிறபடியே
தன் நிஷ்டராய்க் கொண்டு சொல்லுமவர்கள் – பரமபததுக்கு நிர்வாஹகராக வல்லர் -என்கிறார் –

9-எட்டினாய பேத பூவில் சந்தொடு தேவ கார்யம் செய்து –அதாவது – எட்டினாய பேதமோடு இறைஞ்சி -திருச்சந்த -77-என்கிற படியே-மநோ புத்ய அபிமாநேன சஹன்யச்ய தராதலே கூர்ம வச்சதுர : பாதான் சிரஸ் தத் ரைவ பஞ்சமம் -என்கிற படியே , பக்நாபிமானனாய் விழுகையும் , மநோ புத்திகளுக்கு ஈஸ்வரனே விஷயம் ஆகையும் , பாத த்வயங்களும் ,கர த்வயங்களும் ,சிரசும் பூமியிலே பொருந்துகுகை யாகிற அஷ்டாங்க பிரமாணத்தைப் பண்ணி ,-

(எட்டினாய பேதம்‌) ““எட்டினாய பேதமோடிறைஞ்சி’* (திருச்ச. 77) என்கையாலே “மநோ புத்தி அபிமாநேந ஸஹ ந்யஸ்ய தராதலே ! கூர்மவச் சதுர ச பாதந்‌ ஸிரஸ்‌ தத்ரைவ பஞ்சமம்‌” என்றும்‌, “*உரஸா ஸிரஸா த்ருஷ்ட்யா வசஸா மநஸா ததா ॥ பத்‌ப்‌யாம்‌ கராப்‌யாம்‌ ஜாநுப்‌யாம்‌ ப்ரணா மோஷ்டாங்க, ஈரித?‘ என்றும்‌, பக்நாபிமாநனாய்‌ விழுகையும்‌, மநோ புத்‌திகளுக்கு ஈஸ்வரனையே விஷயமாக்குகையும்‌, பாணித்‌வயமும்‌, பாத த்‌வயமும்‌, ஸிரஸ்ஸும்‌ பூமியிலே பொருந்துகையாகிற அஷ்டாங்க ப்ரணாமத்தைப் பண்ணி.

எட்டும் எட்டும் எட்டுமாய் ஒரு ஏழும் ஏழும் ஏழுமாய்
எட்டு மூன்று ஒன்றுமாகி நின்ற வாதி தேவனை
எட்டினாய பேதமோடு இறைஞ்சி நின்றவன் பெயர்
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே –77-எட்டினாய பேதமோடு இறைஞ்சி நின்று
அஷ்டாங்க ப்ரணாமத்தை பண்ணி அம்முகத்தாலே ஆஸ்ரயித்து நின்று பிரணாமத்துக்கு அஷ்டாங்கதை யாவது –-பக்ன அபிமாநியாய் விழுகையும் மநோ புத்திகளுக்கு ஈச்வரனே விஷயம் ஆகையும்-பத த்வய கர த்வயங்களும் கூர்மவத் பூமியிலே பொருந்துகையும்-

பூவில் புகையும் விளக்கும் சாந்தும் நீரும் மலிந்து –திருவாய் -5-2-9-என்றும் சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல வாய்ந்து கொண்டு –திருவாய் -10-2-10-என்கிற படியே புஷ்பாங்கராதிகளான சாமராதந உபகரணங்களைப் பல சங்க கர்துவங்களாகிற-துராலும் ,மயிரும் ,புழுவும் படாத படி ஆராய்ந்து மிகவும் சம்பாதித்து கொண்டு ,-10-தேவ கார்யம் செய்து–பெரியாழ்வார் -4-4-1 -என்கிற படியே பகவத் சமாராதனத்தை செய்து –11-உள்ளம் தூயராய் –அதாவது –-ஒன்றி நின்று நல் தவம் செய்து ,ஊழி ஊழி தோறு எல்லாம்நின்று , நின்றவன் குணங்கள் உள்ளி உள்ளம் தூயராய்—திருச்சந்த -75-என்கிற படியே , நித்ய கர்ம அனுஷ்டானம் தொடங்கி,பகவத் ஆராதன பர்யந்தமாக பண்ணும் , த்ரிவித பரித்யாக பூர்வகமான கர்ம அனுஷ்டானத்தாலும் ,பகவத் குண அனுசந்தாதாலும் – காஷயே கர்மபி :பக்வே ததோ ஜ்ஞானம் ப்ரவர்த்ததே –( கர்மங்களைச் செய்வதனால் பாபம் அழிந்த அளவில் பின்னர் ஞானம் தோன்றுகிறது )-என்கிற படி ஜ்ஞான யோகார்ஹமாம்படி ம்ருதீத கஷாயர் ஆகையாலே ,பரிசுத்த அந்த கரணராய்-

(பூவில்‌ சாந்தொடு தேவ காரியம்‌ செய்து) “பூவில்‌ புகையும்‌ விளக்கும்‌ சாந்தமும்‌ நீரும்‌ மலிந்து ” (திருவா. 5 – 2 – 9), “சாந்தொடு விளக்கம்‌ தூபம்‌ தாமரை மலர்கள்‌ நல்ல ஆய்ந்து தொண்டு” (திருவா. 10 – 2 – 10) என்று ஸமாராதநோபகரணங்கள்‌ மிகுத்துக் கொண்டு அநந்ய ப்ரயோஜநராய்‌, ““தேவ காரியம்‌ செய்து” (பெரியா. திரு. 4 – 4 – 1) என்கிறபடியே பகவத் ஸமாராதநத்தைப் பண்ணி -(உள்ளம்‌ தூயராய்‌) ““ஒன்றி நின்று நற்றவம்‌ செய்தூழியூழி தோறெலாம்‌ நின்று நின்றவன்‌ குணங்களூள்ளி உள்ளம்‌ தூயராய்‌” (திருச்ச. 75) என்கிறபடியே நித்யகர்மாநுஷ்டாநம்‌ முதலாக பகவத் ஸமாராதந மெல்லையாக பல சங்க கர்த்ருத்வ த்யாக பூர்வகமாக உண்டான கர்மாநுஷ்டாநத்தாலும்‌ பகவத்‌ குணாநுஸந்தாநத்தாலும்‌ ““கஷாயே கர்மபிர் பக்வே ததோ ஜ்ஞாநம்‌ ப்ரகாஸதே”” என்கிறபடியே கர்மாநுஷ்டாநத்தாலே ம்ருதிதகஷாயனானவாறே ஜ்ஞாந விகாஸத்துக்கடியான மநோ நைர்மல்யத்தை உடையராய்-

மேவித் தொழுது உய்ம்மின்னீர்கள் வேதப் புனித இருக்கை
நாவிற் கொண்டு அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமே
பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழும் அடி யாரும் பகவரும் மிக்கது உலகே.–5-2-9-பூவோடு கூடின புகையையும் -ஸமாராதன த்ரவ்யங்களையும் மிகுத்து –அநந்ய பிரயோஜனராய் தொழும் கைங்கர்ய நிஷ்டரும் ––அதுக்கு ஷமர் அன்றிக்கே குண அனுபவம் பண்ணும் குண நிஷ்ட்ருமாய்க் கொண்டு- லோகம் அடங்க சம்ருத்தம் ஆயிற்று –

மாய்ந்து அறும் வினைகள் தாமே மாவதா வென்ன நாளும்
ஏய்ந்த பொன் மதிள் அனந்த புர நகர் எந்தைக்கு என்று
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல
ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே–1
0-2-10-அங்குத்தைக்கு தகுதியான
மதிலை யுடைய திருவனந்த புரத்திலே வர்த்திக்கிற என் ஸ்வாமிக்கு என்று புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்க வல்லார் அந்தமில் புகழினாரே–அமரர் ஆவார் என்கிற அளவன்றிக்கே –விண்ணுளாரிலும் சீரியர் ஆவார் –

நா அகார்யம் சொல்லிலாதவர் நாள் தோறும் விருந்து ஒம்புவார்
தேவ கார்யம் செய்து வேதம் பயின்று வாழ் திருக் கோட்டியூர்
மூவர் காரியமும் திருத்தும் முதல்வனை சிந்தியாத அப்
பாவ காரிகளைப் படைத்தவன் எங்கனம் படைத்தான் கொலோ -4- 4-1 –இவர்களுக்கு உகப்பாக பகவத் சமாராதனம் பண்ணிப் போருமவர்கள் –திரி தந்தாகிலும் –என்னக் கடவது இறே

ஒன்றி நின்று நல் தவம் செய்து ஊழி ஊழி தோறேலாம்
நின்று நின்றவன் குணங்களுள் உள்ளி உள்ளம் தூயராய்
சென்று சென்று தேவ தேவர் உம்பர் உம்பர் உம்பராய்
அன்றி எங்கள் செங்கண் மாலை யாவர் காண வல்லரே –75-உக்தமான கர்ம யோகத்தாலும்
பகவத் குண அப்யாசத்தாலும் மநஸா விசுத்தேந -என்றும் –மநஸா க்ராஹ்யா -என்றும் -சொல்லுகிறபடியே பரிசுத்த அந்த கரணராய்

12-வாரிப் புன்புல வகத்தினுள் இளைப்பினை அடைவே விளக்கினை கண்டு – அதாவது பிரகீர்னே விஷயாரண்யே பிரதாவந்தம் பிரமாதிகம் , ஜஞாநான்குசேன க்ருஹ்நீயாத் வஸ்ய இத்திரிய தந்தினம்
( பரந்து இருக்கிற விஷயமாகிற காட்டிலே ஓடிக் கொண்டு இருப்பதும் அகப்பட்டாரைக் கொல்லுவதுமான இந்த்ரியங்களாகிற யானையை த்யாஜ்ய உபாதேய ஞானம் ஆகிற அங்குசத்தால் வசப்படுத்த வேண்டும் ) என்று விஸ்தீரணமான விஷய அடவியிலே ஓடா நிற்ப்பதாய் ,அகப்பட்டாரை கொல்லுமதான இந்திரியமாகிற யானையை , த்யாஜ்யோ உபாதேய விவேக ஞானம் ஆகிற அங்குசத்தால் ,வஸ்யமாகப் பண்ணுவான் என்கிற படியே –-வாரிச் சுருக்கி மத களிறு ஐந்தினையும் சேரி திரியாமல் செந்நிறீஇ –முதல் திருவந்தாதி -47–என்று மதித்த யானைகளை தண்ணீரிலே செறுப்பிக்குமா போலே ,இந்திரியங்கள் ஆகிற மத ஹஸ்திகளை விஷய அனுபவம் ஆகிற போகத்தை குலைத்து -அவ்வவளவும் அன்றிக்கே – விஷயங்கள் நடமாடும் இடத்தில் போகாதே -பிரத்யக் வஸ்து விஷயமாகை ஆகிற செவ்வியிலே நிறுத்தி என்றும் –புன்புல வழி அடைத்து ,அரக்கு இலச்சினை செய்து ,நன் புல வழி திறந்து ,ஞான நல் சுடர் கொளீ இ-திருச்சந்த -76- -என்று அல்ப அஸ்த்ராதித்வ தோஷ துஷ்டமான சூத்திர விஷயங்களை பற்றிப் போகிற இந்திரிய மார்க்கத்தை நிரோதித்து ,
அவற்றினுடைய சூத்திர அனுசந்தத்தாலே ,வாசனா அனுவர்தியும் அறும் படி ,அத்தை உறைப்பித்து ,
விலஷண விஷயத்தில் இந்திரிய மார்க்கத்தைப் பிரகாசிப்பித்து நன்றான ஞான பிரபையும் மிகவும் உண்டாக்கி என்றும் –ஐம்புலன் அகத்தினுள் செறுத்து –திரு எழு கூற்று இருக்கை -என்று
ஸ்ரோத்ராதி இந்திரியங்கள் ,சப்தாதி விஷயங்களில் போகாமே உள்ளே அடக்கி என்றும் சொல்லுகிற படியே -நிக்ருஹிதேந்திரிய க்ராமராய்-( க்ராமம் கூட்டம் )-இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி அளைப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே விளக்கினை விதியில் காண்பார் மெய்மையைக் காண்கிற்பாரே–திருக்குறும் தாண்டகம் -18–என்கிற பாட்டில் சொல்லுகிற அடைவிலே –
அவித்யா அஸ்மித ரக த்வேஷா அபிநிவாச பஞ்ச கிலேச–யோக சூத்ரம் –
( அறியாமை செருக்கு ஆசை த்வேஷம் அபிமானம் -என்னும் இவை ஐந்து கிலேசங்கள் ) -என்று சொல்லுகிற கிலேசங்களின் சஞ்சாரத்தைத் தவிர்த்து ,
நாத்யுச்சரிதம் ..நாதிநீசம்–ஸ்ரீ கீதை –6-11–இத்யாதிகளில் சொல்லுகிற படியே ஓர் ஆசனத்தே இருந்து ,
சம்ப்ரேஷ்ய நாசிகாக்ரம் ஸ்வம் திசச்சா நவ லோகயன்-ஸ்ரீ கீதை -6-13- என்னும் படியே ,
நாசாக்ரன்யச்த ( நாச அக்ர ந்யஸ்த ) லோசனராய் ,ஓர் அளவில் நில்லாத இந்திரியங்களை பிரத்யக்கு ஆக்கி , த்யேயமான பகவத் விஷயத்தில் சிநேகத்தை வைத்து ,விடாமல் அனுசந்தித்து , சுடர் விட்டு தோன்றுகிற ஞானத்தாலே ,ஸ்வயம் பிரகாசமான ஆத்ம ஸ்வரூபத்தை , சாஸ்த்ரோத்ரா பிரகாரத்தாலே சாஷாத் கரித்து , சத் கர்ம அனுஷ்டானத்திலே ஷீண பாபனாய் நிர்மல அந்த கரணனானவனுக்கு பகவத் சாஷாத் கரத்துக்கு உறுப்பாக விளையும் யோக ஜன்ய ஞானம் தான் பிரதமம் ஆத்ம ஸ்வரூபத்தை தர்சித்து கொண்டிறே மேல் போவது ..விளக்கினை விதியில் காண்பார்-என்கிற இது பகவத் சாஷாத் காரமாக பூர்வர்கள் வியாக்யானம் பண்ணி வைத்தார்கள் ஆகிலும் ,இவர் ஆத்ம பரமாகவே அருளிச் செய்தார் என்று கொள்ள வேணும் – பகவத் த்யான தர்சனங்களை மேலே சொல்லுகையாலே —விதியில் காணும் பிரதம மத்திய தசைகளை சூரனை -23–என்று ஆத்ம பரமாகவே இறே கீழும் இவர் அருளிச் செய்தது .. யோஜனா பேதங்களும் உண்டாய் இருக்கும் இறே –

(வாரிப்புன்புலவகத்தினுள்‌) “வாரிசுருக்கி மதக்களிறைந்தினையும்‌ சேரி திரியாமல்‌ செந்நிரீ, ‘ (மூ.திருவ. 47) என்றும்‌, ““புன்புலவழியடைத்தரக்கிலச்சினை செய்து நன்புல வழி திறந்து ஞானநற்கூடர் கொளீஇ”” (திருச்ச. 76) என்றும்‌, ”ஐம்புலனகத்தினுள்‌ செறுத்து” (திருவெழு.) என்றும்‌, ”ப்ரசீர்ணே விஷயாரண்யே ப்ரத வந்தம்‌ ப்ரமாதிநம்‌ ! ஜ்ஞாநாங்குஸேந க்ருஹ்ணியாத்‌ வஸ்யமிந்த்‌ரிய தந்திநம்‌”” என்கிறபடியே இந்த்‌ரியங்களாகிற மமூதிதமான ஆனைகளை த்யாஜ்யோபாதேய விவேக ஜ்ஞாநமாகீற அங்குஸத்‌தாலே வணக்கி, விஷயங்களாகிற சேரியில்‌ திரியாதபடி பகவத்‌ விஷயமாகிற யதா ஸ்தாநமாகிற தறியிலே சேர்த்தென்றும்‌, இந்த்‌ரியங்களை ஷூத்‌ர விஷயங்களிலே போகாதபடி வாஸனையோடே விடுவித்து ப்ராப்த விஷயத்திலே மூட்டி ஜ்ஞாநமாகிற ப்ரகாஸமான தீபத்தைக்‌ கொளுத்தி. இப்படி நிக்‌ருஹீதேந்த்‌ரிய க்‌ராமராய்‌, (இளைப்பிணை யடைவே விளக்கினைக் கண்டு) “இளைப்பினை இயக்கம்‌ நீக்கி இருந்து முன்னிமையைக் கூட்டி அளப்பிலைம்புலனடக்கி அன்பவர்‌ கண்ணே வைத்துத்‌ துளக்கமில்‌ சிந்தை செய்து தோன்றலும்‌ சுடர் விட்டாங்கே விளக்கினை விதியிற்காண்பார்‌‘” (திருக்குறு. 18) . என்றும்‌ சொல்லுகிறபடியே யோகாப்‌யாஸ விரோதியாயிருந்துள்ள யாதாயாதங்களை மாற்றி ஓர் ஆஸந விஸேஷங்களிலே இருந்து நாஸாக்‌ரந்பஸ்த லோசநனாய்‌, இந்த்ரியங்களை நியமித்து த்‌யேய வஸ்துவின்‌ பக்கலிலே நிரதிஸயமான ஸ்நேஹத்தைப் பண்ணி ததநந்தரம்‌ ஸ்வயம் ப்ரகாஸமாய்க்‌ கொண்டு தோற்றுகிற ஆத்ம ஸ்வரூபத்தை ஸாஸ்த்ரோக்த ப்ரகாரத்திலே ஸாக்ஷாத்கரித்து.

வாரி சுருக்கி மதக் களிறு ஐந்தினையும்
சேரி திரியாமல் செந்நிறீஇ கூரிய
மெய்ஞ்ஞானத்தால் உணர்வார் காண்பரே மேலொரு நாள்
கைந்நாகம் காத்தான் கழல்
—–47–மத்த கஜம் போலே தாம் கண்டபடி காடு பாய்கிற ஸ்ரோத்ராதிகளை –பின்னையும் கண்ணுக்கு இலக்காம் இடத்திலே திரியுமாகில் விழ விட்டுக் கொள்ளக் கடவதாய் இருக்கும் இறே-யானை-அப்படியே இவற்றை ஜெயித்தாலும் விஷயங்களுக்கு ஏகாந்த ஸ்தலங்களிலே
இவை போகாத படி ஒக்க நிறுத்தினால் பின்னைப் பிறக்குமது கூரிய மெய் ஞானமாய் இருக்குமாய்த்து -அதாவது ஸூஷ்மார்த்தத்தை க்ரஹிக்கவும் வற்றாய் தர்மி க்ராஹகமுமாய் இருக்கும் யாய்த்து –அது தான் விஹித கர்மங்களை பலாபிசந்தி ரஹிதமாக அனுஷ்டித்து ஷீண பாபனாய்    – ஆத்மா யாதாம்ய ஞானம் உண்டாய் ஈஸ்வர பாரதந்த்ர்யமும் உண்டாம் என்னும் இடத்தையும் அறிந்து-உபாசனம்  த்ருவாஸ்ம்ருதி -தர்சன சாமாநாகாரதா பிரத்யஷதாபத்தி என்றும்-விசதே தத நந்தரம்-கீதை -18-55-என்று சொல்லுகிறபடியே-அப்படிப் பட்ட ஜ்ஞானத்தை உடையவர்கள் அவனைக் காண்பார்கள்  –

புன்புல வழி அடைத்து அரக்கு இலச்சினை செய்து
நன் புல வழி திறந்து ஞான நற் சுடர் கொளீ இ
என்பில் எள்கி நெஞ்சு உருகி யுள் கனிந்து எழுந்தது ஓர்
அன்பில் அன்றி ஆழி யானை யாவர் காண வல்லரே –76-ஷூத்ர விஷயங்களைப் பற்றி போருகிற இந்த்ரிய வ்யாபாரத்தை நிரோதித்து –சப்தாதி விஷயங்களினுடைய ஷூத்ரதையை அனுசந்தித்து -வாசநையும் -அனுவர்த்தியாத படி –பலவான் இந்த்ரிய க்ராமோ வித்வாம் ஸம்பி கர்ஷதி –என்று ஜ்ஞானாதிகர்களையும் வாசனை நலியும் இறே -அதுவும் பிரவாதபடி பண்ணி –விலஷண விஷயத்தில் இந்த்ரிய மார்க்கத்தை பிரகாசிப்பித்தது இவ்வாத்மாவுக்கு ப்ராப்தமாய் –ஸூ ஸூ கம் கர்த்தும் -என்கிறபடியே சாதனை வேளையே தொடங்கி ரசிக்கும் பகவத் விஷயமே இந்த்ரியங்களுக்கு விஷயமாக்கி -என்கை-நன்றாக ஞானப் பிரபையை மிகவும் உண்டாக்கி ஈஸ்வரனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை -ஸ்வ ஜ்ஞானத்துக்கு விஷயமாம்படி பண்ணி –

ஐம்புலன் அகத்தினுள் செறுத்து நான்குடன் அடக்கி முக்குணத்து இரண்டவை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று ஆங்கு இரு பிறப்பு அறுப்போர் அறியும் தன்மையை –கர்ம யோகத்தை அங்கமாக யுடைத்தான உபாயம் சொல்லப் படுகிறது –சஷூராதி இந்த்ரியங்களை சப்தாதி விஷயங்களிலே போகாமே உள்ளே அடக்கி-மநோ-புத்தி-சித்த அஹங்காரங்களையும்-செறுத்து-ஆஹார நித்ரா
பயம் ஐதுனங்கள் -உடல் உறவு -இவற்றைத் தவிர்த்து என்றுமாம் –

இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற் பாரே
–18-அவித்யா அஸ்மிதா ராக த்வேஷா அபிநிவேஸா க்லேஸா – என்றும் சொல்லுகிற கிலேசங்கள் உடைய சஞ்சாரத்தைத் தவிர்த்து –நாத்யுச்ச்ர்தம் -இத்யாதியில்-சொல்லுகிறபடியே ஓர் ஆசனத்தே இருந்து –அளவிறந்த இந்த்ரியங்களை பிரத்யக்காக்கி –அவிச்சின்ன ஸ்ம்ருதி ரூபமான பக்தியைப் பண்ணி –இப்படி சுடர் விட்டு தோன்றும்
ஜ்ஞானத்தாலே –வேதங்களாலே ஜோதி ரூபனாக பிரதிபாதிக்கப் பட்ட விளக்கை-சாஸ்த்ரங்களில் விதித்தபடியே உபாசித்து அவனைக் காண்பார் –என்றும் உளனாய் இருக்கிற சர்வேஸ்வரனை
காண வல்லரே -காண -மாட்டார் -என்றபடி –அதவா – இப்படி யோக சாஸ்த்ரத்தில் சொல்லுகிறபடியே
உபாசித்துக் காண்பாருக்கு காணலாம் -என்றுமாம் –அங்க பிரபத்தி இல்லாமல் காண மாட்டார் என்றபடி–

13-யோக நீதி நண்ணி-அதாவது –நன்று இருந்து யோக நீதி நண்ணுவார்கள்–திருச்சந்த -63- என்கிற படி யோகம் ஆகிற உபாயத்தாலே கிட்டி ,-அறம் திகழ் மறையோர் மனம் தன்னுள் அமர்ந்து உறையும் அரும் பெரும் சுடரை ,கண்கள் சிவந்ததில்-படியே மன உள் கொண்டு –-அதாவது மறம் திகழும் மனம் ஒழித்து ,,வஞ்சம் மாற்றி ,வன் புலன்கள் அடக்கி-இடர்பார துன்பம் துறந்து ,இரு முப்பொழுது ஏத்தி ,எல்லை இல்லா தொன் நெறிக் கண் நிலை நின்ற தொண்டரான அறம் திகழ் மனத்தவர் தம் கதியை–பெருமாள் திருமொழி -1-7-என்று கொலையும் சினமும் கொடுமையாகிய மறத்தால் விளங்கா நின்றுள்ள மனசை வாசனையோடு போக்கி , பொய்யை தவிர்ந்து ,வன் புல சேக்களை பட்டி புகாமே கட்டி ,மிக்க துக்கத்தை விளைப்பதான –பாரமாய பழ வினையை பற்று அறுத்து – ஸ்லாக்கியமாய் இருந்துள்ள -ஆதி நடு அந்தி -ஆகிய மூன்று பொழுதிலும் ஏத்தி ,அளவிறந்த பழைய மரியாதையிலே ,சிலவரால் கலக்க ஒண்ணாத படி ..நிலை நின்ற வைஷ்ணவர்களான ,ஆந்ரு சம்ச்யோஜ்வல சித்தருக்கு பரம ப்ராப்யன் ஆனவன் என்றும் –மறையோர் மனம் தன்னுள்-அதாவது – மறையோர் மனம் தன்னுள் விண்ணுளார் பெருமானை—பெரிய திருமொழி -7-3-7-என்று பிராமணர் ஹிருதயங்களை தனக்கு வாசஸ் ஸ்தானமாய் உடையனாய் இருக்கும் -அமரர்கள் அதிபதியை -என்றும் ,-மா தவமானவர் தங்கள் சிந்தை அமர்ந்து உறைகின்ற எந்தை—பெரிய திருமொழி -2-1-1-என்றும் , மகா தபஸை உடையராய் இருக்கும் மனுஷ்யர்களுடைய ஹிருதயங்களில் , அநந்ய பிரயோஜனனாய் கொண்டு நித்ய வாசம் பண்ணுகின்ற ஸ்வாமி என்றும் -சொல்லுகிற படி , பரி சுத்த அந்த கரணரான பரம யோகிகள் ஹிருதயங்களிலே –அரும் பெரும் சுடரை –அதாவது ஆரமார்வன் அரங்கன் என்னும் அரும் பெரும் சுடர் ஒன்றினைச் சேரும் நெஞ்சினர்–பெருமாள் திருமொழி -2-7-என்னும் படி , ஆபரணாத் அலங்குருதனாய் அத்யுஜ்வலமான விக்ரகத்தோடே எழுந்து அருளி இருக்கும் சர்வேஸ்வரனை —கண்கள் சிவத்தில் படியே –அதாவது – கண்கள் சிவந்து–திருவாய் -8-8-1- –என்கிற பாட்டில் சொல்லுகிற படி அவயவ சோபை–ஆபரண சோபை –ஆயுத சோபை களோடு காள மேக நிபஸ்யமாய் இருந்துள்ள திவ்ய விக்ரஹத்துடனே–-மன உள் கொண்டு-கற்றவர் தம் தம் மன உள் கொண்டு – பெரிய திருமொழி -7-3-1–என்று அறிவு உடையரான யோகிகள் ஆனவர்கள் தம் தம் ஹிருதயங்களில் கொண்டு என்ற படி ..
ஹிருதய கமலத்தில் த்யானம் பண்ணி –

(யோக நீதி நண்ணி) என்று யோகம்‌ தலை நின்று. (அறந்திகமும்‌ மறையோர்‌ மனந்தன்னுள்‌ அமர்ந்துறையும்‌ அரும்பெருஞ்சுடரை) ‘*மறந்திகழு மனமொழித்து வஞ்சமாற்றி ஐம்புலன்களடக்கி இடர்ப்பாரத்துன்பம்‌ துறந்து இருமுப்பொழுதேத்தி எல்லை யில்லாத தொன்னெறிக் கண்‌ நிலை நின்ற தொண்டரான அறந்திகழு மனத்தவர்தம்‌ கதியை” (பெருமாள்‌ திரு. 1 – 7) என்றும்‌, “மறையோர் மனந்தன்னுள்‌” (திருமொழி 7 – 8 – 7) என்றும்‌, ““மாதவமானவர் தங்கள்‌ சிந்தை”’ (திருமொழி 2 – 1 – 1) என்றும்‌, ”ஆரமார்வனரங்கனென்னுமரும்பெருஞ்சுடரொன்றினைச்‌ சேரும்‌ நெஞ்சினராகி’” (பெருமாள்திரு. 2 – 7) என்றும்‌ சொல்லுகிறபடியே பரமயோகி,களுடைய ஹ்ருதயங்களிலே அதி ப்ரகாபமமான விக்‌ரஹத்தோடே எழுந்தருளியிருக்கிற ஸர்வேஸ்வரனை.
(கண்கள் சிவந்திற் படியே மனவுட் கொண்டு) ““கண்கள் சிவந்து’ (8-8 -1)-என்கிற பாட்டின் படியே அவயவ ஸோபையோடும்‌ ஆபரண ஸோபையோடும்‌ கூடி காளமேக நிபஸ்யாமமாயிருக்கிற விலக்ஷண விக்‌ரஹத்தை ““கற்றவர் தந்தம்‌ மனவுட்‌ கொண்டு” (திருமொழி 7 – 3 – 1) என்கிறபடியே ஹ்ருதய கமலத்திலே த்‌யாநம் பண்ணி.

மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி ஐம்புலன்கள் அடக்கி இடர் பார துன்பம்
துறந்து இரு முப் பொழுது ஏத்தி எல்லை இல்லா தொன் நெறி கண் நிலை நின்ற தொண்டரான
அறம் திகழும்  மனத்தவர் தம் கதியை
பொன்னி அணி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
நிறம் திகழும் மாயோனை கண்டு என் கண்கள் நீர் மல்க என்று கொலோ நிற்கும் நாளே ?—-1-7—மறம்–கொலையும் -சினமும் -கொடுமையும் – இவற்றால் விளங்கா நின்ற மனஸை வாசனையோடு போக்கி –பொய்யைப் போக்கி-வன்புலச் சேக்களை பட்டி புகாமே கட்டி-

பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற பாலையாகி இங்கே புகுந்து என்
கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான் கொண்ட பின் மறையோர் மனம் தன்னுள்
விண்ணுளார் பெருமானை எம்மானை வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல்
வண்ணன் மா மணி வண்ணன் எம் அண்ணல் வண்ணமே அன்றி வாய் யுரையாதே –7-3-7-தன் உள்-வாசஸ் ஸ்தானம்-பிராமணர் உடைய ஹிருதயங்களைத் தனக்கு வாசஸ் ஸ்தானமாய் உடையனாய் –

வானவர் தங்கள் சிந்தை போல என்னெஞ்சமே யினிதுவந்து மா தவ
மானவர் தங்கள் சிந்தை அமர்ந்து உறைகின்ற வெந்தை

கான வரிடு காரகில் புகை ஓங்கு வேங்கடம் மேவி மாண் குற
ளான வந்தணற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-1—மஹா தபசை  உடையவராய் இருக்கிற மனுஷ்யர்கள் உடைய ஹிருதயங்களிலே – அநந்ய பிரயோஜனனாய்க் கொண்டு
நித்ய வாஸம் பண்ணுகிற ஸ்வாமி –(நாம் செய்வதை அவன் அன்றோ செய்கிறான் )

கார் இனம் புரை மேனி நல் கதிர் முத்த வெண்ணகை செய்ய வாய்
ஆர மார்வன் அரங்கன் என்னும் அரும் பெரும் சுடர் ஒன்றினை
சேரும் நெஞ்சினராகி சேர்ந்து கசிந்து இழிந்த கண்ண நீர்களால்

வார நிற்ப்பவர் தாள் இணைக்கு ஒருவாரம் ஆகும் என் நெஞ்சமே –2-7—பெரிய வரை மார்வில் பேராரம் பூண்டு -என்று -ஐஸ்வர்ய பிரகாசகமாம் படி இட்டுப் பூண வேண்டும்படி உள்ள ஹாரத்தையும்-திரு மார்பிலே உடையராய் இருக்கிற-ஸ்ரீ பெரிய பெருமாள் என்று -உபய விபூதியிலும் பிரசித்தராய்
நிரவதிக தேஜோ ரூபராய் அத்விதீயரானவரை-அவர் வந்து கிட்டும் போது விலக்காமை யடியாகப் -பிறந்த பக்தியை உடையராய்-அவனைக் கிட்டி நிரதிசய பக்தி உக்தராய் கண்ணும் கண்ண நீருமாய் இருக்கும் அவர்களுக்கு பக்தி பாரவச்யத்தாலே இறே என்று அங்குத்தைக்கும் இவர்களுக்குமாய் நில்லாதே இவர்களுடைய திருவடிகளுக்கு-அநந்ய பிரயோஜனமாய் நில்லா நின்றது என் நெஞ்சு –

கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து கனிந்து -உள்ளே
வெண் பலிலகு சுடரிலகு விலகு மகர குண்டலத்தன்
கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சாரங்கன்
ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேன் உள்ளானே–8-8-1-தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அஷிணீ-என்று கண்கள் ஆகிறது சிவந்து இறே இருப்பது –இப்போது சிவந்து -என்கிறது -மாயக் கூத்தனில் விஸ்லேஷத்தாலே விவர்ணம் ஆனது -சம்ச்லேஷித்த பின்பு தன் நிறம் பெற்ற படி -கண்ணிலே துவக்குண்டு கால் வாங்க மாட்டாதே இருக்கிற இருப்பு இசையில் காணும் இத்தனை-ஆஸ்ரித சம்ச்லேஷத்தில் அவிக்ருதனாகில் ஆஸ்ரயணீயன் அன்றிக்கே ஒழியும் இறே -அவனும் கடல் உடைந்தால் போலே தன்னளவில் விக்ருதனாகக் கடவது இறே-அலைந்து வருகை யாவது இவரைப் பெற்ற பெற்றாலே -இங்கனம் சம்பவிப்பதே -என்று திரு முடியை அசையா நிற்கை –உள்ளானே––யுவா குமாரா –என்று கேட்டே போம்படியான அழகு -வயிர பேழை திறந்தால் போலே அவயவ சோபையும் ஆபரண சோபையும் ஆயுத சோபையுமாய்-மிளிரா நின்றதாயிற்று –

சினவில் செங்கண் அரக்கர் உயிர் மாளச் செற்ற வில்லி என்று கற்றவர் தந்தம்
மனம் உட் கொண்டு
என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மா முனியை  மரம் ஏழ்   எய்த மைந்தனை
நனவில் சென்றார்க்கும் நண்ணற்கு அரியானை நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியைக்
கனவில் கண்டேன் இன்று கண்டமையால் என் கண் இணைகள் களிப்பக் களித்தேனே -7-3-1–அறிவுடையரான யோகிகள் ஆனவர்கள் தம் ஹிருதயத்திலே கொண்டு-எல்லா காலத்திலும் எல்லா அவஸ்தையிலும்-ஒருபடிப்பட நின்று ஏத்த அவர்களுக்கு எல்லாம் செய்தும் பின்னையும் ஒன்றும் செய்யாதானாய் பெரும் தனிசு பட்டால் போலே -இவர்களுக்கு செய்யல் ஆவது என் -என்று
இவற்றை அனுசந்திக்குமவனை –

14-நிரந்தரம் மறவாமை துடக்கறா ஸ்ம்ருதியாய் –அதாவது-நிரந்தரம் நினைப்பதாக–திருச்சந்த -101- -என்றும் ,-மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாய்-பெரிய திருமொழி -3-5-4-என்றும் சொல்லுகிற படியே அந்த த்யானதுக்கு விச்சேதமும் விஸ்மிருதியும் அற்று –துடக்கறா மனத்தராய் – அதாவது –
சோர்விலாத காதலால் துடக்கறா மனத்தராய் -திருச்சந்த -78–என்று சர்வ காலமும் விஷயாந்தரங்களால் அபஹ்ருதம் ஆகாத பிரேமத்தை உடையார் ஆகையாலே , தத் சம்ச்லேஷ வியோகைக சுக துக்காராம் படி -சத்வ சுத்தவ் த்ருவா ஸ்ம்ருதி –சாந்தோக்யம் — ( அந்தக்கரணம் தூய்மை அடைந்தால் இடையறாத த்யானம் உண்டாகும் )-என்கிற படி , த்யேய வஸ்துவில் துடக்கறாமல் த்ருவ அனு ஸ்ம்ருதியாய் –கனவில் மிக்க தர்சன சமமாய்-அதாவது – கனவில் மிக கண்டேன்-இரண்டாம் திருவந்தாதி -81- -என்று இந்திரியங்களால் கலக்க ஒண்ணாதபடி மானச ஜ்ஞானத்தாலே ,அழகிதாக கண்டேன் என்னலாம் படி-ஸா ச ஸ்ம்ருதிர் தர்சன சமானகார – ஸ்ரீ பாஷ்யம் -லகு சித்தாந்தம் –( அந்த நினைவு தானும் கண்ணால் நேரே காண்பது போலே இருப்பது ஓன்று )என்கிற படி அது தான் பிரத்யஷா சாமானகாரமாய் –ஆகத்து புல்கும் அத்யந்த பிரியமாய்-அதாவது –அப்படி தர்சனம் ஆனது தான் –ஞானத்தால் ஆகத்து அணைப்பார்க்கு-திருவாய் -10-4-6-என்றும் ,-ஆகத்து அணைப்பார் அணைவரே -முதல் திருவந்தாதி -32-என்றும் ,-எல்லையில் அந்நலம் புல்கு–திருவாய் -1-2-4 -என்றும்
ஆர்வம் புரிய பரிசினால் புல்கில்—முதல் திருவந்தாதி -50-என்னும் படி , அங்கனா பரிஷ்வங்கம் போலே -பிரியோ ஹி ஞானின அத்யர்தமஹம் -ஸ்ரீ கீதை -7-17–என்கிற ஸ்மிர்தவ்ய விஷய சாரத்தாலே ,தானும் அத்யர்த்த பிரியமாய் —

(நிரந்தரம்‌ மறவாமை) “நிரந்தரம்‌ நினைப்பதாக”’ (திருச்ச. 101) என்றும்‌, “மன்னு சேவடிக்கே மறவாமை” (திருமொழி 3 – 5 – 7) என்றும்‌ சொல்லுகிறபடியே அந்த த்‌யாநத்துக்கு விஸ்ம்ருதியும்‌ விச்சேதமுமின்றிக்கே. (துடக்கு ஸ்ம்ருதியாய்‌) “சோர்‌விலாத காதலால்‌ துடக்கறா மனத்தராய்‌”’ (திருச்ச. 78) என்கிறபடியே ஸர்வ காலமும்‌ விஷயாந்தரங்களால்‌ அபஹ்ருதமாகாத ப்ரேமத்தை உடையராகையாலே தத்‌ ஸம்ஸ்லேஷ வியோகைக ஸூக துக்கராய்‌, பகவத் ஸ்ம்ருதி ஸந்ததி ரூபேண செல்லா நின்றால்‌ விச்சேதமில்லாத த்‌ருவாநு ஸ்ம்ருதி ரூபமாய்‌, “ஸத்த்வாத்‌ தெள த்‌ருவா ஸ்ம்ருதி: ஸ்ம்ருதிலம்பே, ஸர்வக்‌ரந்தீ நாம்‌ விப்ரமோக்ஷி’‘ (சாந் 7 – 26 – 2) என்னக் கடவதிறே. (கனவில் மிக்க தர்ஸந ஸமமாய்‌) “கனவில்‌ மிகக்கண்டேன்‌’” (இ. திருவ. 81) என்கிறபடியே அந்த ஸ்ம்ருதி ப்ரத்யக்ஷ ஸமாநாகாரையாய்‌. (ஆகத்துப்‌ புல்கும்‌ அத்யர்த்த ப்ரியமாய்‌) ஆகத்தணைப் பாரணைவரே” (மு.திருவ. 32) என்றும்‌, “ஆர்வம்‌ புரிய பரிசினால்‌ புல்கில்‌” (மூ.திருவ. 50) என்றும்‌ சொல்லுகிறபடியே அந்த தர்சந ஸமாநாகாரையான ஸ்ம்ருதிதான்‌ அந்த த்‌யேய வஸ்துவை ஹ்ருதயகமலத்திலே அணைக்கும்படி ஸ்மர்த்தவ்ய விஷய ஸாரஸ்யத்தாலே தானும்‌ அத்யர்த்த, ப்ரிய ரூபையாய்

இரந்து உரைப்பது உண்டு வாழி ஏமம் நீர் நிறத்தம்மா
வரம் தரும் திருக் குருப்பில் வைத்ததாகில் மன்னு சீர்ப்
பரந்த சிந்தை ஒன்றி நின்று நின்ன பாத பங்கயம்
நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே -101-சப்தாதி விஷயங்களில் போந்த என்னுடைய மனஸ் – மற்று ஒன்றில் போகாதே –உன் பக்கலிலே ஒன்றி நின்று –ப்ராப்தமுமாய் – நிரதிசய போக்யமும் ஆகையாலே -ஆகர்ஷகமுமான உன் திருவடிகளை-அம் மனஸ் நிரந்தரமாக நினைக்க வற்றாம்படி நீ திரு உள்ளமாக வேணும் –என் நினைவும் -என் செயலும் -அகிஞ்சித்கரம்உன் நினைவுக்கே பல வ்யாப்தி உள்ளது -என்கை –

மின்னின் மன்னு நுடங்கிடை மடவார் தம் சிந்தை மறந்து வந்து நின்
மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால்

புன்னை மன்னு செருந்தி வண் பொழில் வாய் அகன் பணைகள் கலந்து எங்கும்
அன்னம் மன்னு வயல் அணி யாலி யம்மானே–3-5-4-அப்ராப்த விஷயங்களில் உண்டான வாஞ்சையை தவிர்த்து பிராப்த விஷயத்தை ஆசைப்படப் பண்ணின இது தான் போரும் இறே உபகாரம்-அவற்றை நானே கை விட்டு உன் பக்கலிலே வந்து சதைகரூபமான உன் திருவடிகளிலே-எனக்கு மறவாமை யாகிற பேறு உண்டாம்படியாக – நான் அபேஷிக்க அன்றிக்கே தண்ணீர் பந்தல் வைப்பாரோபாதி நிர்ஹேதுகமாக செய்து அருளினாய் –

சோர்விலாத காதலால் தொடக்கறா மனத்தராய்
நீர் அராவணைக் கிடந்த நின்மலன் நலம் கழல்
ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் எட்டு எழுத்தும்
வாரமாக வோதுவார்கள் வல்லர் வானம் ஆளவே –78—சர்வ காலமும் -விஷயாந்தரங்களால் அபஹ்ர்தம் ஆகாத பிரேமத்தை உடையவர் ஆகையாலே -அதாவது பிரேம அதிசயத்தாலே தத் சம்ச்லேஷ விஸ்லேஷ துக்க ரஹிதராகை –பகவத் ஸ்ம்ர்த்தி சந்ததி ரூபேண செல்லா நின்றால் விச்சேதம் இல்லாத நெஞ்சை உடையராய் –சத்வ சுத்தௌ த்ருவா ஸ்ம்ர்தி -என்றும் – ஸ்ம்ரதிலம் பேசர்வகரந்தீநாம் விபர மோஷ -என்கிற அளவைச் சொல்லுகிறது-நீர் அராவணைக் கிடந்த நின்மலன் நலம் கழல் –
இப்படி பிரேமத்தை விளைக்கும் விலஷண விஷயமான சுபாஸ்ரயத்தை சொல்லுகிறது –

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே -மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி யொளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு -81-–அஸ்தமிதியாத ஆதித்யனைக் கண்டேன்-பிரத்ய பிஜ்ஞார்ஹமாக கண்டேன் –வடிவில் திகழா நின்ற திரு ஆழியையும் ஒளி திகழா நின்றுள்ள திருவடிகளையும் உடையவனுடைய பரம பதத்தில் திகழா நின்ற ஜோயோதிசை உடைத்தான திருமேனியைக் கண்டேன்

இமையாத கண்ணால் இருள் அகல நோக்கி
அமையாப் பொறி புலன்கள் ஐந்தும் நமையாமல்
ஆகத் தணைப்பார் அணைவரே ஆயிர வாய்
நாகத் தணையான் நகர் -32–
–கீழ்ச் சொன்ன படியே இந்த்ரிய ஜெயம் பண்ணிற்று இலர்களே யாகிலும் சேஷத்வ ஜ்ஞானத்தை யுடையராய்க் கொண்டு அவனை ஹ்ருதயத்தில் வைத்துஅனுசந்திக்குமவர்கள் அன்றிக்கே அப்படி இந்த்ரிய ஜெயத்தை பண்ணாதே ஈஸ்வரன் ஒருவன் உளன் என்று மாத்ரம் உடையார்க்கு என்றதாகவுமாம்-அத் தேசத்தைச் சென்று ப்ராபிக்கலாமோ  – அவன் மேல் விழா நின்றால் இறாயாதார்-என்றுமாம் –முக்த ப்ராப்ய வஸ்து இருக்கிறபடி-பர்யங்க வித்யையில் சொல்லுகிறபடியேயாய் இருக்கிறது – அங்கு உள்ளார் எல்லார் அடிமைக்கும் உப லஷணம்-

இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு
எல்லையில் அந்நலம் புல்கு பற்று அற்றே
 –1-2-4-அபிமத விஷயத்தை அணைத்தால் போல் ஆஸ்ரயணம் தான் இனிதாய் இருக்கையாலே புல்கு என்கிறார்

அரிய புலன் ஐந்தடக்கி ஆய் மலர் கொண்டு ஆர்வம்
புரிய பரிசினால் புல்கில்
பெரியனாய்
மாற்றாது வீற்றிருந்த மாவலி பால் வண் கை நீர்
ஏற்றானைக் காண்பது எளிது ——50—ஸ்நேஹம் மிக்க பிரகாரத்தாலே-அணையில் – ஆஸ்ரயணம் தானே போக்ய்மாய் இருக்கிறபடியாலே-நல்லது கண்டால் ஆசைப் படுமோபாதி இவ் விஷயத்திலும் ஆசை பிறக்க அமையும்–தான் அர்த்தியாய்க் கொண்டு சென்று நிற்குமவன் ஆய்த்து – ஆகையாலே அவனை ஆஸ்ரயிக்கும் இடத்திலே ஒரு அருமை தட்டாது-என்கிறார் –

வைகும் சிறப்பு விட்டு குற்றேவல் என்னாத அநந்ய பிரயோஜனமாய் –அதாவது –-நின் புகழில் வைகும் தம் சிந்தையிலும் ,மற்று இனிதோ நீ அவர்க்கு வைகுந்தம் என்று அருளும் வான்–பெரிய திருவந்தாதி -53- என்று உன்னுடைய கல்யாண குணங்களிலே விச்சேதம் இன்றியே செல்லுகிற சிந்தையிலும்
காட்டிலும் இனிதோ நீ அவருக்கு நன்றாக சொல்லிக் கொடுக்கும் பரம பதம் என்றும் –சிறப்பு விட்டு-
அதாவது – உலகு படைத்து இத்யாதி–அமுத வெள்ளத்ததானாம் சிறப்பு விட்டு –ஒரு பொருட்கு அசைவோர் அசைக நல் வீடு பெறினும் கொள்வது எண்ணுமோ தெள்ளியீர் குறிப்பு–-திருவாசிரியம் -2-என்று பரத்வ ஸுலப்யாதிகளாலே பரிபூர்ணனான சர்வேஸ்வரன் நிரதிசய போக்யமான திரு அடிகளை அனுபவிக்கையில் உண்டான அபிநிவேசத்தில் -த்ரவீபூதமாய் ,ஓர் அவயவியாக காண ஒண்ணாத படி மங்கின ஆத்ம வஸ்துவிலே , அந்த ஆதாரம் அடியாக பிறந்த விலஷணமான சங்க காமத்ய அவஸ்தைகளை உடைய பக்தியால் விளைகிற நிரதிசய ரசத்திலே உளனாகையாகிற லாபத்தை விட்டு -சூத்திர புருஷார்தங்களுக்கு கிலேசப் படுவார் அங்கனே கிலேசப் படுக – ஸ்லாக்கியமான ஐஸ்வர்யம் ,–அதில் விலஷணமான ஆத்ம அனுபவம் –அவ்வளவு இன்றிக்கே பர விலஷணமான மோஷம் -இவற்றைப் பெருமளவு ஆனாலும் ,சார அசார விவேக ஜ்ஞர்களுடைய ஹிருதயத்தில் அவற்றை ஸ்வீகரிக்கவும் நினைவு உண்டோ என்றும் —குற்றேவல் என்னாத அநந்ய பிரயோஜனமாய்-உனது பாலே போர் சீரில் பழுத்து ஒழிந்தேன் மேலால் பிறப்பின்மை பெற்று அடிக் கீழ் குற்றேவல் அன்று மறப்பின்மை யான் வேண்டும் மாடு–பெரிய திருவந்தாதி -58-என்று உன்னுடைய ஸ்மர்யமான தசையே தொடங்கி இனிதான குணங்களிலே பழுத்து ஒழிந்தேன் –பின்பு ஒருகால் பிறவாமை பெற்று ,திரு அடிகளில் நித்ய கைங்கர்யம் பண்ணுகை அன்று எனக்கு வேண்டுவது .. பிறந்த ஞானத்துக்கு மறப்பின்மை எனக்கு வேண்டும் தனமானம் -என்றும் சொல்லுகிற படி-இவ் அனுசந்தானத்தாலே ,தேச விசேஷத்தில் அனுபவத்தையும் உபேஷிக்கும் படி தானே பரம பிரயோஜனமாய் ரசிக்கையாலே ,அநந்ய பிரயோஜனமாய்-வேதன உபாசன சேவா த்யானாதிகள் என்று சொல்லும் அது சாத்திய சாதன பக்தியாக சாஸ்திர சித்தம்-அதாவது-வேதனம் என்றும் , உபாசனம் என்றும் ,சேவை என்றும் ,த்யானம் என்றும் , ஏவமாதி சொற்களால் சொல்லப் படுகிற பக்தியானது – உபய பரிகர்மித ஸ்வாந்தச்ய –ஆத்மசித்தி( கர்மம் ஞானம் இரண்டாலும் அலங்கரிக்கப்பட்ட அந்தக் கரணத்தை யுடையவனுக்கு )-என்கிற படியே , கர்ம ஞான சம்ஸ்க்ருத அந்த கரணனுக்கு பிறக்கும் அது ஓன்று ஆகையாலே -சேதன சாத்தியமாய் – பகவத் பிரசாதந உபாயதயா – தத் பிராப்தி சாதனமான பக்தியாக – ச உப ப்ரும்ஹண வேதாந்த சாஸ்த்ரத்தில் ( இதிகாச புராணங்களுடன் கூடிய வேத சாஸ்திரத்தில் ) சொல்லப் பட்டது என்கை-

(வைகும்‌ சிறப்பு விட்டுக்‌ குற்றேவ லென்னாத அநத்ய ப்ரயோஜநமாய்‌) “’நின் புகழில்‌ வைகும்‌ தம்‌ சிந்தையிலும்‌ மற்றினிதோ நீ அவர்க்கு வைகுந்தமென்றருளும்‌ வான்‌?” (பெரியதிருவ. 53) என்றும்‌, “’உலகு படைத்துண்ட வெந்தை”” (திருவாசி.2) என்று தொடங்கி, ”அமுத வெள்ளத்தானாம்‌ சிறப்புவிட்டு ஒருபொருட்கசைவோரசைக நல்வீடு பெறினும்‌ கொள்வதெண்ணுமோ தெள்ளியோர்‌ குறிப்பே” என்றும்‌, “மேலால்‌ பிறப்பின்மை பெற்றடிக்கீழ்க்‌ குற்றேவலன்று மறப்பின்மை யான்‌ வேண்டும்‌ மாடு’* (பெரியதிரூவ. 58) என்றும்‌ சொல்லுகிறபடியே இவ்வநுஸந்தாந ரஸத்தாலே தேஸா விஸேஷத்திலநுபவத்தை உபேஷிக்கும்படி தானே பர மப்ரயோஜநமாம்படி இருக்கையாலே அநந்ய ப்ரயோஜநமாய்‌.. (வேத,ந-௨ பாஸந-ஸேவா-த்‌யாநாதி களென்னுமவை) வேதநம்‌, உபாஸநம்‌, ஸேவை, த்யாநம்‌, த்‌ருவாநுஸ்ம்ருதி, தர்சந ஸமாநாகாரம்‌, பக்தி என்றும்‌ சொல்லப்படுகிறவை யாகையாலே இந்த ப,க்தி ஸாத்‌ய ஸாதந பக்தியாக ஸாஸ்த்ர ஸித்‌தம்‌. ‘உபய பரிகர்மித ஸ்வாந்தஸ்ய ஐகாந்திகாத்யந்திக பக்தியோகைகலப்‌ய”(ஆத்மஸித்‌தி,) என்று கர்ம ஜ்ஞாந ஸம்ஸ்க்ருதாந்தா கரணனுக்குப்‌ பிறக்கும தொன்றாகையாலே ஸாத்‌,யமாய்‌, பகவத் ப்ரஸாதநோபாயமாகையாலே ஸாதநமான பக்தி என்று ஸாஸ்த்ரங்களாலே சொல்லப்பட்டதென்கிறார்‌. ஆக இத்தால்‌ சேதநனாலே ஸாத்‌யமாய்‌, உபாய ரூபமான பக்தி விஸேஷம்‌ சொல்லிற்று –

ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு
என் செய்வன் என்றே இருத்தி நீ நின் புகழில்
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ யவர்க்கு
வைகுந்தம் என்று அருளும் வான்–53-
–உன் புகழிலே தங்குகிற சிந்தையில் காட்டில் இனிதோ
நீ போரப் பொலியச் சொல்லிக் கொடுக்கிற பரமபதம்-ஸித்தத்துக்கு இடை நிற்குமோ ஸாத்யம்
இதுக்கு அது யுக்தி ஸாரமே காரணம்-குண அனுபவ யோக்கியமான இந்த ஜென்மத்தில் காட்டில் பரம பதம் ஸ்லாக்யம் என்கைக்குக் காரணம் பரமபதம் யுக்தி சாரமாய் இருப்பதே என்று யதா ஸ்ருத பங்க்தி தாத்பர்யம் –

உலகு படைத்து உண்ட எந்தை அறை கழல் சுடர் பூம் தாமரை சூடுதற்கு அவாவு ஆர்
உயிர் உருகி யுக்க நேரிய காதல் அன்பில் இன்பீன் தேறல் அமுத
வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு ஒரு பொருள்க்கு அசைவோர் அசைக திரு வோடு மருவிய
இயற்க்கை மாயாப் பெரு விறல் உலகம் மூன்றினோடு நல் வீடு பெறினும்
கொள்வது எண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே
?-2–-இம் மேன்மையாலும் நீர்மையாலும் வடிவு அழகாலும் விளைந்த பரபக்தியாதிகளை மேலே விளக்கி அருளுகிறார் –அவ்வுடம்போடே இருக்கச் செய்தே பெறக் கடவதான பரபக்தியாதிகளோடே இவை ஒவ்வாதே நிற்கிற இடம் -(ஒவ்வாது என்ற இடம் )- விசார விஷயமோ –சார அசார விவேகம் பண்ணி இருப்பார்க்கு மநோ ரதத்துக்கு விஷயம் அல்ல-சார அசார விவேகஞ்ஞர் நல்லதுக்கு தீயத்துக்கும் தரமிட்டுப் -பிரித்து அறிந்து – இருப்பார்கள்

மாலே படிச் சோதி மாற்றேல் இனி உனது
பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன் –மேலால்
பிறப்பின்மை பெற்று அடிக் கீழ் குற்றேவல் அன்று
மறப்பின்மை யான் வேண்டும் மாடு –58-
–ஸம்ஸார நிவ்ருத்தி பூர்வகமாகப் பரம பதத்திலே உன் திருவடிகளிலே அடிமை செய்கை யன்று எனக்கு தனம்-பரமபதத்தில் நீ இருக்கும் இருப்பை மறவாமை
பரமபதத்திலே போனால் அல்லது மறவாமை இல்லாமையாலே பரம பதமும் வேண்டினாராய்ப் பலித்தது-இவருக்கு மறப்புத் தான் உண்டோ என்னில் ப்ரக்ருதி ஸம்பந்தம் உடையார்க்கு வருமது நமக்கும் வாராதோ என்று பயப்படுகிறார்-ஊரடைய வெந்து கொண்டு வாரா நின்றால் நம் அகம் ஒன்றும் பிழைக்கும் -என்று பயம் கெட்டு இருப்பார் உண்டோ –

இப்படி உபாசன ரூபமாய் -உபாயமுமாயும் -இருந்துள்ள இது போல் அன்றிக்கே , உபேய பூத கைங்கர்ய உபகரணமாக பிரபன்னர் பகவான் பக்கல் அபேஷித்து பெரும் பக்தி விசேஷத்தை பிரதி பாதிக்கிறார் மேல் –இனி உபேயமான கைங்கர்யோப கரணமாய்‌, ப்ரார்த்‌யமான பக்தி விஸேஷம்‌ சொல்லுகிறது மேல்‌-

ஸ்வீக்ருத சித்த சாதனர்–இத்தை சாத்தியமாக இரக்க பிராப்திக்கு முன்னே சித்திக்கும்–சூரணை-100-(இத்தை -பக்தியை )

அதாவது
த்வத் பாத மூலம் சரணம் பிரபத்யே -ஸ்தோத்ர ரத்னம் -22-என்றும் ,-த்வத் பாதாரவிந்த யுகளம் சரண மஹம் பிரபத்யே–கத்யத்ரயம் – -என்றும் சொல்லுகிறபடி , ஸ்வீகரிக்க பட்ட சித்த சாதனத்தை உடையவர்கள்..-இத்தை –-அதாவது – இந்த பக்தியை போஜனத்துக்கு ஷூத்து போலே கைங்கர்யத்துக்கு உபகரணம் ஆகையாலே , பிராப்யமான கைங்கர்யத்தோபாதி இதுவும் நமக்கு பிராப்யம் என்று புத்தி பண்ணி , பகவத் பக்திம் அபீ பிரயச்சமே -ஸ்தோத்ர ரத்னம் -54-என்றும் ,
ஸ்தான த்ரயோதித பரபக்தி யுக்தம் மாம் குருஷ்வ-சரணாகதி கத்யம் -என்றும் ,-பரபக்தி ,பரஞான ,பரம பக்தி ஏக ஸ்வாபம் மாம் குருஷ்வ–சரணாகதி கத்யம் -என்றும் சொல்லுகிற படி பகவான் பக்கலிலே அர்த்திக்க-இமாம் பிரக்ருதிம் ஸ்தூல சூஷ்ம ரூபம் விஸ்ருஜ்ய ததா நீ மேவ-சரணாகதி கத்யம் –இத்யாதியிலே சொல்லுகிற படி – சரீர வியோகசம அநந்தரம் பகவத் பிராப்தி பண்ணுவதற்கு முன்னே சித்திக்கும் என்கை –

’த்வத் பாத மூலம்‌ ஸரணம்‌ ப்ரபத்‌யே”” (ஸ்தோ,ர.22) என்றும்‌, ‘“ஸ்ரீமந்‌ நாராயண சரணாரவிந்த,ம்‌ ஸரணமஹம்‌ ப்ரபத்‌யே”” (ஸ -கத்யம்‌) என்றும்‌, “லோக விக்ராந்த சரணென ஸரணம்‌ தே அவ்ரஜம் விபோ ”” (ப,வி.பு.) என்றும்‌ சொல்லுகிறபடியே இப்படி ஸித்‌த ஸாதந ஸ்வீகாரம்‌ பண்ணினவர்கள்‌ இத்தை ஸாத்‌யமாக இரக்க, இந்த பக்தி கைங்கர்யோபகரணமாய்க் கொண்டு ப்ராப்யாந்தர் கதமாகையாலே “‘பகவத்‌ பக்திமபி ப்ரயச்ச, மே!” (ஸ்தோ.ர.) என்றும்‌, ‘பரபக்தி பரஜ்ஞாந பரமபக்த்யேக ஸ்வபாவம்‌ மாம்‌ குருஷ்வ”’ (ர.கத்‌யம்‌) என்றும்‌ சொல்லுகிறபடியே இந்த பக்தியை ஸாத்‌யமாக அவன் பக்கலிலே அபேஷிகிக்க, ப்ராப்திக்கு முன்னே ஸித்திக்கும்‌, இது கைங்கர்யத்துக்கு பூர்வ பாவியாகையாலே பகவத் பிராப்திக்கு முன்னே ஸித்‌திக்கும்‌ என்கிறார்‌.

ந தர்மநிஷ்டோ’ஸ்மி நசாத்மவேதீ
நபக்தி மாம்ஸ்த்வச் சரணாரவிந்தே |
அகிஞ்சநோ’நந்யகதிஶ் ஶரண்ய!
த்வத் பாத மூலம் ஶரணம் ப்ரபத்யே |
|–22–சரணடையத் தகுந்த ஸ்வாமியே! நான் கர்ம யோகத்தில் நிலையாக இல்லை; என்னிடத்தில் ஆத்ம ஞானமும் இல்லை;-என்னிடத்தில் உன் திருவடிகள் விஷயமான பக்தியும் இல்லை; இப்படி வேறு உபாயமும் புகலும் இல்லாத நான்,-உன் திருவடிகளையே உபாயமாக உறுதியாக ஏற்றுக் கொள்கிறேன்.

பர பக்தி பர ஜ்ஞான பரம பக்த்யேக ஸ்வபாவம் மாம் குருஷ்வசூரணை -15பர பக்தியும் -அதன் கார்யமான பர ஜ்ஞானமும் -அதன் கார்யமான பரம பக்தியும் – எனக்கு யாவதாத்மா பாவியாக உண்டாக வேணும் -என்கிறார்

மச் சரணார விந்த யுகள  ஐகாந்திக ஆத்யந்திக பர பக்தி பர ஜ்ஞான பரம பக்தி விக்ன – நிரதிசய போக்யமான என் திருவடிகளில் நித்தியமாய் ஏக ரூபமாய் செல்லுகிற பர பக்தி பர ஜ்ஞான பரம பக்தி களுக்கு இடைச் சுவரான முன் சொன்னவற்றை உடையீராய்–மச் சரணாரவிந்த யுகள ஐகாந்திக ஆத்யந்திக பர பக்தி பர ஜ்ஞான பரம பக்தி – இது காணும் பெரும் பேறு

அவபோதிதவாநிமாம் யதா
மயி நித்யாம் பவதீயதாம் ஸ்வயம் |
க்ருபயைததநந்ய போக்யதாம்
பகவந்! பக்திம் அபி ப்ரயச்ச மே ||-
-54-என் ஸ்வாமியே! எப்படி உன்னுடைய நிர்ஹேதுக க்ருபையால் என்னுடைய சேஷத்வத்தை எனக்கு அறிவுறுத்தினாயோ, அதேபோல வேறு எங்கும் கிடைக்காத, உன்னிடத்தில் பக்தி செய்யும் அந்த இனிய அனுபவத்தையும், நீயே அளிக்க வேண்டும்.

இனி இவ் ஆழ்வாருடைய பக்தி விசேஷம் இருக்கும் படியை அறிவிக்கிறார் …

இது உபயமும் அன்றிக்கே-அறியாக் காலத்தே-ஒக்கப் பிறந்து-தழுவி-நின்று-கட்டமே-நோயாய்
உலர்த்தி-வீழ்ந்து-அலப்பாய்-த்யாக ஸ்வீகார நிஷ்டா ஹானிகள் ஆக்கி சத்தா போக விருத்தி உபகரணம் ஆவது ஓன்று-சூரணை -101-

( இது -ஆழ்வாருடைய பக்தியானது -சாதன ஸாத்ய பக்திகள் போலே அன்றே –சத்தைக்கும் போகத்துக்கும் கைங்கர்ய உபகரணம் என்றவாறு )-அதாவது-கீழ் உக்தையான இவ் ஆழ்வார் உடைய பக்தி ,-ஸ்வ யத்தன சாத்யையாய் உபாய பூதையாய் இருக்கும் பக்தியும் ,-உபாய பரிக்ரஹ அனந்தர அபேஷிக்க உபாய பலமாய் வரும் பக்தியும் ஆகிற-நடுவில் சொல்லுகிற இரண்டும் அன்றிக்கே –
அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து -திருவாய் -2-3-3–என்றும்
பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ்நிக்த லஷ்மனோ லஷ்மி வர்த்தன –பால -18-27- -என்கிற படியே
அறிவுக்கு சம்பாவனை இல்லாத பால்யத்திலே ,பிராப்தி பலமான அடிமையிலே , அதி பிராவண்யத்தை பிறப்பித்தது என்னும் படி திருத் துழாய்க்கு மணம் போலே ஒக்கப் பிறந்து –

(இது உபயமுமின்றிக்கே) இவருடைய பக்தி உபாஸகர்‌ கர்ம ஜ்நாநங்களாலே ஸாதித்து பகவத் ப்ரஸாதத்துக்கு ஸாதநமாகக்‌ கொள்ளுகிற பக்தியுமன்றிக்கே, ஸித்‌த ஸாதந பரிக்‌ரஹம்‌ பண்ணினவர்கள்‌ கைங்கர்யோபகரணமாக அபேஷித்துப்‌ போருகிற பக்தியுமன்றிக்கே; (அறியாக் காலத்தே ஒக்கப் பிறந்து] ‘அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண்‌ அன்பு செய்வித்து’” (திருவா. 2 – 8 – 3) என்றும்‌, ““பால்யாத் ப்ரப்‌ரதி ஸுஸ்நிக்‌த.”” (ரா.] என்றும்‌ சொல்லுகிறபடியே அறிவு நடையாடுகைக்கு யோக்‌யதை யில்லாத அதிபால்யத்திலே கைங்கர்யத்தைப்‌ பெற்றல்லது நிற்க வொண்ணாத அதிமாத்ர ப்ராவண்யத்தை விளைத்தான்‌ என்று சொல்லும்படி ”ஸஹஜ பக்திரஸ்மாகம்‌”‘ என்று ஸஹஜையாய்‌,

அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று
அறியாமை வஞ்சித்தாய் எனதாவியுள் கலந்தே –2-3-3-அறிவு கேட்டைப் பண்ண வற்றாய்-துஸ்தரமான சம்சாரத்திலே இருக்கிற என்னை – அடியேன் -என்கிறது -அஹம் சப்த பர்யாயம் – அறிவுக்கு சம்பாவனை இல்லாத பால்யத்திலே -பிராப்தி பலமான அடிமையிலே ஸ்நேஹத்தை பிறப்பித்து வைத்தாய்–இங்கே வைத்து பகவத் விஷயத்தை அவஹாகிப்பித்தது-அத்தாலே ஒரு தேச விசேஷத்திலே பெறும் பேறு சாத்மிக்கைக்காகவும்- ப்ராப்யத்தில் த்வரை விஞ்சுக்கைக்காகவும் இறே
போக்யதை மிக்கு இருக்கிறபடி 

தழுவி நின்று –அதாவது — தழுவி நின்ற காதல் தன்னால் -திருவாய் -4-7-11–என்று விடுவேன் என்றாலும் ,விட ஒண்ணாத படி உடன் வந்தியாய்-கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும் –திருவாய் -7-2-4-என்றும் ,-வேட்கை நோய் கூர –9-6-7- என்று அநுபாவ்ய விஷயத்தை யதா மனோரதம் அனுபவிக்கப் பெறாத போது ,போஜனம் பெறாத தசையிலே பசி போலே , கஷ்டம் எனபது -வியாதி என்பதாம் படி -வெறுப்பை விளைத்து –உலர்த்தி –அதாவது –வேவரா வேட்கை நோய் மெல்லாவி உள் உலர்த்த –2-1-10-என்றும் ,-வீழ்ந்து –அதாவது – உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து –5-7-2-என்றும் ,-அலப்பாய்-
அதாவது –உன்னைக் காண்பான் நான் அலப்பாய் –5-8-4-என்றும் ,சொல்லுகிற படி அசோஷ்யமான ஆத்ம வஸ்துவைக் குருத்து வற்றாம் படி சோஷிப்பித்து ,-கடலிலே விழுந்தால் போல் கரை ஏற ஒண்ணாத படி அபிநிவேச ரூபமான தன்னுள்ளே ஆழ்ந்து போக்யமான ,அவ் விஷயத்தை காண வேண்டும் என்று அலமாக்கப் பண்ணி –

*‘தழுவி நின்ற காதல்‌ ”” (திருவா. 4 – 7 -11) என்று உடன் வந்தியாய்‌, கட்டமே காதல்‌” (திருவா. 7 – 2 – 4) என்றும்‌, ““வேட்கை தோய் கூர” (திருவா. 9 – 6 7) என்றும்‌ அபி, நிவேஸாநுகுணமாக அநுபவம்‌ ஸித்‌தியாமையாலே இது கஷ்டம்‌ என்று சொல்லும்படி வ்யாதி ரூபமாகையாலே பாத,கமாய்‌, ““வேவாரா வேட்கை தோய்‌ மெல்லாவி உள்ளுலர்த்த”” (திருவா. 2 – 1 – 10) என்றும்‌, “உன்னைக் காணுமவாவில்‌ வீழ்ந்து” (திருவா. 5 – 7 – 2) என்றும்‌, ““உன்னைக் காண்பான்‌ நானலப்பாய்‌”” (திருவா. 5 – 8 – 4) என்றும்‌ அஸோஷ்யமான ஆத்ம வஸ்துவை ஸோஷிப்பித்து, அபி நிவேஸத்திலே ஆழ்ந்து, காண வேணுமென்று அலமாக்கப் பண்ணி.

இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்; எழுந்துலாய் மயங்கும் கை கூப்பும்;
கட்டமே காதல்’ என்று மூர்ச்சிக்கும்; ‘கடல்வண்ணா! கடியை காண்’ என்னும்;
‘வட்டவாய் நேமி வலங்கையா!’ என்னும் ‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
சிட்டனே! செழுநீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறத் தென் சிந்தித்தாயே ?–7-2-4—அமுத வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு -என்று ப்ரேமமே புருஷார்த்தம் என்று இருக்கிற இவள் -ப்ரேமம் போலே தண்ணிதாய் இருபத்தொரு இல்லை என்னா நின்றாள் -இது ரசிப்பது இவ்விஷயத்தின் உடைய லாப ஹேது வான போது இறே -விஸ்லேஷத்தில் நலிவுக்கு உடலாகையாலே தண்ணிது என்கிறாள் -இது கட்டம் என்னும் காட்டில் இதுக்கு பரிஹாரம் பிறந்தது ஆகாமையாலே மூர்ச்சிக்கும் –

தழுவி நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன்றனைக்
குழுவு மாடம் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல்
வழு விலாத ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இப்பத்தும்
தழுவப் பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே.–4-7-11–நான் விடுவேன் என்னிலும் விட ஒண்ணாத உடன் வந்தியானஅதிமாத்ர ப்ரேமத்தாலே

காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–9-6-7-அபி நிவேசம் மிகும் படி அனுசந்தித்து
கரைந்து உகும்--சிதிலமாய் -ஓர் அவயவி பிரதிபத்தி பண்ண ஒண்ணாத படி உகும் –

வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்
மாவாய் பிளந்த மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே –2-1-10—ஒரு கால் வெந்து சமையக் கடவது அன்றிக்கே -அக்னி நேவாக் நி பர்வத -என்கிறபடியே வெந்த இடமே இந்தநமாக தஹியா நிற்கிற காதல்
அளவில்லாத வேட்க்கை நோய்-மெல்லாவி –பாத்தம் போராத ஆத்மாவை -அதாஹ்யமாய் இருப்பது கேவல அக்னி யாகில் இறே-யுள்ளுலர்த்த- கூடோ அக்னி ரிவ பாதபம் -கோடாரத்தில் பற்றின அக்னி போலே குருத்து வற்றாக வற்றுவிக்க

அங்குற்றேனலேன் இங்குற்றேனலேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான்
எங்குற்றேனுமலேன் இலங்கை செற்ற அம்மானே!
திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவர மங்கல நகருறை
சங்கு சக்கரத்தாய்! தமியேனுக்கு அருளாயே.–5-7-2–சாதனம் அனுஷ்ட்டித்து முக்த பிராயனாய் இருக்கிறேன் அல்லேன் -சாதனம் அனுஷ்டானம் பண்ணுமவர்களில் ஒருவனாய் இருக்கிறேன் அல்லேன் -மேலும் சாதன அனுஷ்டானம் பண்ண ஒண்ணாத படி ஸுந்தரியாதிகளிலே ஈடுபட்டு உன்னைக் காண வேணும் ஆசையால் பலஹீனனாய் தளர்ந்து இனி உபாய அனுஷ்டான ஷமனும் அல்லேன் -இது பூர்வர்கள் நிர்வாகம் –அதவா – நீ இருந்த இடத்தே வந்து கிட்டி உன்னை அனுபவிக்கிறேன் அல்லேன் -உன் பக்கல் நிரபேஷராய் இருக்கிற சம்சாரிகளிலே ஒருவனாய் இருக்கிறேன் அல்லேன் -உன்னை ஒழிய தரித்து இருக்கிற சம்சாரிகளோடே பொருத்தம் யுடையேன் அல்லேன் –அங்கு வர மாட்டேன் -அபி நிவேசத்தால் இங்கு நிற்க மாட்டேன் -பிறரோடு பொருத்தம் உடையேன் அல்லேன் -என்றுமாம் –

செலக் காண்கிற்பார் காணு மளவும் செல்லும் கீர்த்தியாய்!
உலப்பிலானே! எல்லா உலகு முடைய ஒருமூர்த்தி!
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான் நான்
அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே
.–5-8-4-க்ரம பிராப்தி பற்றாதபடி ஸ்நேஹித்து இருக்குமவர்கள் -அவர்களதான திருக் குடந்தையில் அவர்களை பிரிய மாட்டாமையாலே உடம்போடு கண்டு அனுபவிக்கலாம் படி கண் வளர்ந்து அருளுகிறவனே-ஆஸ்ரித வத்சலனான உன்னை காண் கைக்காக -அத்தலை இத்தலையாய் நீ என்னை காண பட்ட அளவன்று-நான் உன்னை காண் கைக்கு பட்டது-அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே-அலமந்து -விஷயம் சந்நிஹிதமாய் இருக்கச் செய்தே-ஆகாசத்தை பார்க்கிறது -நினைத்த பரிமாற்றம் பெறாமையாலே ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு உதவ வந்து தோற்றினால் போலே -தம் தசையைப் பார்த்து தோற்றுகிறானோ என்று பார்த்து -என்னுடைய நிராலம்பநதையைப் பார்த்து என்னுமாம் ஆண்டான் வரக் காணா மையாலே ஸ்நே ஹிதிகள் செய்வதும் செய்யா நின்றேன் -க்ருபணர் செய்வதும் செய்யா நின்றேன் -சபலர் செய்வதும் செய்யா நின்றேன் -விரக்தர் செய்வதும் செய்யா நின்றேன்

தியாக ஸ்வீகார நிஷ்டா ஹானிகளாக்கி –அதாவது –தியாக நிஷ்டைக்கு ஹானி யாக்கி – ஸ்வீ கார நிஷ்டைக்கு ஹானி ஆக்கி –என்று கொண்டு-தியாக நிஷ்டா ஹானியாக்கி-அதாவது –
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்-5-8-3- -என்கிற படியே இதர உபாய பரித்யாக பூர்வமாக அவனே உபாயம் என்று அறுதி இட்டு இருக்கும் இவரை–குதிரியாய் மடலூருதும்-5-3-9- -என்றும்-மடலூர்ந்தும் எம்மாழி அம் கைப் பிரானுடைத் தூ மடல் தண் அம் துழாய் மலர் கொண்டு சூடுவோம்-5-3-10- -என்னும்படி த்யஜித்த உபாயத்தில் மூட்டுகையாலே -த்யாக நிஷ்டா ஹானியையும் ,-

என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3—நானும் எனக்கு கடவனாய் -பிறரும் சக்தர் ஆனவன்றும் -உன்னால் வரும் நீ ஒழிய -என்னால் வரும் நீயும் வேண்டா -பிறரால் வரும் நீயும் வேண்டா என்கை -த்வம் ஏவ உபாயம் போதோ மே பாவ –

நாணும் நிறையும் கவர்ந்து என்னை நன்நெஞ்சம் கூவிக்கொண்டு
சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான் தன்னை
ஆணை என் தோழீ! உலகு தோறு அலர் தூற்றி ஆம்
கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே.–5-3-9-–என்னாலான மிறுக்குகள் செய்து –கோணை-மிறுக்கு-அதாவது மடல் கொண்டு புறப்பட்டவாறே எதிரே வரும் –சென்று கும்பிடக் கடவேன்-குதிரியாய்-என்று தடை இல்லாப் பெண் -அடங்கா ஸ்திரீயாய் –குதிரி என்று ஆபரணம் இட்டு வைக்கும் செப்பாய் -இவளுக்கு ஆபரணம் -நாணும் நிறையும் இ றே -அவை போகையாலேகேவல சரீர மாத்ரமாய் செல்லக் கட வேன்-குதிரி -குதிரையை யுடையவள்-பனை மடலை குதிரையாக யுடையவள் என்றுமாம் –மடல் ஊர்துமே.-இரண்டு தலையையும் நோக்கி இருந்தது அமையும் –இனி மடலூர்ந்தே விடக் கடவேன் –

யாமடல் ஊர்ந்தும் எம் ஆழி அங்கைப் பிரானுடைத்
தூமடல் தண்ணத் துழாய் மலர் கொண்டு சூடுவோம்

யாமடம் இன்றித் தெருவு தோறு அயல் தையலார்
நாமடங்காப் பழி தூற்றி நாடும் இரைக்கவே.–5-3-10-செய்யக் கடவது அல்லாததை செய்தே யாகிலும் –தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று இருக்கக் கடவ நாம் மடலூர்ந்தே யாகிலும் -இங்கு மடலாக நினைக்கிறது -பெற்று அன்று தரியாத உபேய த்வரையும்-அதுக்கு அடியான உபாய வை லக்ஷண்ய அனுசந்தானமும் உபாயம் தன்னாலே பேறு என்ற துணிவும் -வேறு ஒன்றை உபாயமாக நினையாமையும் -க்ரம பிராப்தி பற்றாமையும் -மடலாய்ச் செல்லுகிறது-மடலைக் கொடு புறப்பட்டால்-எதிரே வந்து என் கையில் மடலை வாங்கி தன் தோளில் மாலையை வாங்கி என் தோளில் இடில் இறே அவனுக்கு நிறம் உள்ளது -இல்லையாகில் அவன் படும் பாடு பாராய் -செவ்வி மாலை சூடக் காண் நான் வேண்டி இருக்கிறது -என் தோளில் மாலை பாராய் சரு கான படி -அத்தலையை அழித்து ஆகிலும் பெற கடவோம்

ஸ்வீ கார நிஷ்டைக்கு ஹானி ஆக்கி
அதாவது –ஆறு எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் -5-7-10–என்றும்-கழல்கள் அவையே சரணாகக் கொண்ட–5-8-11- -என்றும் ,-அடி மேல் சேமம் கொள் தென் குருகூர் சடகோபன் -5-9-11-என்றும் ,
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் -5-10-11–என்றும் ,-அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே-6-10-10 -என்று-நோற்ற நோன்பு-5-7– பதிகம் தொடங்கி அடுத்து அடுத்து பிரபத்தி பண்ணும்படி ஆக்குகையாலே
சக்ருதேவஹி ,சாஸ்த்தார்த்த க்ருதோயம் ,தாரயேன் நரம்-ஸ்ரீ லஷ்மீ தந்திரம் –-சக்ருதேவ பிரபன்னாய தவாஸ் மீதிசயாசதே அபயம் சர்வ பூதேப்ய தாதாமி ஏதத் விரதம் மம –யுத்த –18-33- –இத்யாதிகளில் சொல்லுகிற படியே சக்ருத் கர்தவ்யமான ஸ்வீகாரத்தில் ,நிஷ்ட ஹானியையும் உண்டாக்கி.-

(த்யாக ஸ்வீகார நிஷ்டா ஹாநிகளாக்கி) த்யஜித்த உபாயத்திலே மூட்டி, த்யாக நிஷ்டையைக் குலைத்து, ஸக்ருத்‌ ஸ்வீகாரம்‌ அமைந்திருக்க *நோற்ற தோன்பு தொடங்கி, அடுத்தடுத்து ப்ரபத்தி பண்ணுகையாலே ஸ்வீகாரத்தில்‌ நிஷ்டையைக் குலைத்து. 

ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக் கோர் கைம்
மாறு நான் ஒன்றிலேன் என தாவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெருஞ் செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை
நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!–5-7-10-ஆறு -என்று உபாயம் -சரண் என்று உபேயம் -உபாய உபேயங்கள் இரண்டும் உன் திருவடிகளேயாம் படி பண்ணினாய் என்று பிள்ளான் நிர்வஹிக்கும்--இவை இரண்டிலும் உபாயத்தையே சொல்லுகிறது என்று பட்டர் நிர்வஹிப்பர்-எனக்கு உபாயம் உன் திருவடிகளேயாம்படி பண்ணித் தந்தாய்ஆறு -உபாயம் -உபாக்யார்த்தைக வாசக -என்கையாலே சரண் என்று உபாயம் –எனக்கு என்று -உபாயாந்தர நிஷ்டரைக் காட்டிலும் தமக்கு உள்ள வேறுபாடு சொல்லுகிறார் –நோற்ற நோன்பிலேன் என்று தொடங்கி-உபாயாந்தர சூன்யத்தையை முன்னிட்டு உபாய நிஷ்கர்ஷம் பண்ணுகிற திரு வாய் மொழி யாகையாலே அத்தையே நிகமிக்கிறது -அவதாரணத்தாலே ஏக பதத்தை நினைக்கிறது -ஈஸ்வரனை பற்றின ஊற்றத்தாலே உபாயாந்தரங்களை நெகிழ்கை ஒழிய -நாஸ்திக்யத்தாலே விடுமன்று அது விஷயாந்தர ப்ராவண்ய ஹேதுவாம் -ஒளஷத சேவை பண்ணினான் ஒருவன் சர்ப்பத்தின் வாயிலே கை கொடுத்தால் நிர்ப்பாதம் -ஒளஷத ஸ்பர்சம் இல்லாதவன் அத்தைச் செய்தால் மரண ஹேதுவாம் –

உழலை என்பில் பேய்ச்சி முலை யூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே.–5-8-11—தமக்கு உபாயமாக முன்பு பிரகாசிப்பித்த திருவடிகளையே அபிமத சித்திக்கு உபாயமாக புத்தி பண்ணிக் கொண்ட திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வாரானவர்-

நாமங் களாயிர முடைய நம் பெருமானடி மேல்
சேமங் கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த

நாமங்களாயிரத்துள் இவை பத்தும் திருவல்லவாழ்
சேமங்கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே.–5-9-11-தேவோ நாம சஹஸ்ரவான் என்கிறபடியே குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திரு நாமங்களை யுடையவன் ஆகையாலே சர்வேஸ்வரனாக பிரசித்தனானவன்-அவனைப் பெறாதே நோவு பட நோவு பட அவன் திருவடிகளே ரக்ஷகமாகப் பற்றும் ஆழ்வார் பிராட்டி ஆற்றாமை மிக்க இடத்திலும் ராவணனை சபியாதே பெருமாள் வரவை பார்த்து இருந்தால் போலே அவனுக்கு திரு நாமங்கள் போலே குண சேஷ்டிதங்களுக்கு ப்ரதிபாதகமான ஆயிரத்திலும்-ஆராய்ந்து உரைத்த இப்பத்தையும்-

நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்
ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்

ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ் வெய்துவர் வைகலுமே.–5-10-11—அனந்த சாயித்தவம் சர்வாதிக வஸ்துவுக்கு லக்ஷணம் ஆகையாலே -சர்வாதிகனே சரண்யன் என்கிறது -திரு வனந்த ஆழ்வானுடைய புருஷகார பாவம் சொல்லுகிறது என்றுமாம் –படுக்கையைச் சொல்ல படுக்கை யுடையாரைச் சொல்லிற்றாம் இறே
நம்பிரான் -ஆஸ்ரித விஷயத்தில் உபகார சீலனானவன் –சரணே சரண் நமக்கு என்று -நமக்கு திருவடிகளே உபாயம் என்று –அவதாரணத்தாலே உபாய நைரபேஷ்யம் சொல்லுகிறது -சம்சாரிக ஸ்வ பாவங்கள் மேலிட்டு விபரீதமே பலியா நின்றாலும் இது தவிர வேறு ஒன்றில் கால் தாழாது ஒழி கை -மஹா விச்வாஸம் ஆகிறது –நாடொறும் ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்-ஆக நூற்ற
நாள் தோறும் இதுவே மநோ ரதமான ஆழ்வார் -பகவத் குண பிரேரிதராய் தாம் உள்ராகைக்காக-

அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன் றில்லா அடியேன் உன் னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10-உன்னடிக் கீழ் -விக்ரஹ யோகம் சொல்லுகிறது-அமர்ந்து -செறிந்து -சஹகாரி வ்யவதானம் இன்றிக்கே ஒழிகை
புகுந்தேனே.–போக்கு வரவு யுண்டாய் அன்று -புத்தி கதியாய் அத்யாவசாயத்தை சொல்லுகிறது

சத்தா போக விருத்த உபகரணம்-ஆவது ஓன்று–சத்தைக்கும் போகத்துக்கும் விருத்திக்கும் உபகரணமாவது ஓன்று உண்டு பகவத் விஷயத்தை நினையாமை என்றும் ,சத்தா ஹானி என்றும் இரண்டு இல்லை என்று இருக்கும் இவருக்கு –அநவரத தத் விஷய நினைவு -ஸ்மரண -ஹேது ஆகையாலே-சத்தைக்கும் – எல்லாம் கண்ணன்-6-7-1- -என்று இருக்கும் இவருக்கு தத் விஷய அன்பு ருசியை மென் மேலும் விளைக்கையாலே போகத்துக்கும் –-வழு இலா அடிமை செய்ய வேண்டும் -3-3-1-என்று இருக்கும் இவருக்கு , அசேஷ சேஷ தைக ரதித்வதுக்கு உடலாகையாலே வ்ருத்திக்கும் உபகரணமாய் இருக்கும் என்கை –அன்றிக்கே –சத்தா போகேத்யாதிக்கு -நா கிஞ்சித் குர்வதச் சேஷத்வம்—ஸ்தோத்ர ரத்னம் -46-என்று கிஞ்சித் கரியாத வஸ்துவுக்கு சேஷத்வம் இல்லை என்கையாலே ,சேஷத்வ ஏக நிரூபணியனான இவனுடைய சத்தை -கிஞ்சித் காரத்திலே ஆதலால் இவனுக்கு சத்தா ஹேதுவாய்-தனக்கே ஆக எனைக் கொள்ளும் ஈதே -2-9-4- -என்றும்-உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் -10 -3 -9—-என்றும்-கதா பிரகர்ஷா இஷ்யாமி- ,ஸ்தோத்ர ரத்னம் -46-இத்யாதிகளின் படியே – இது தான் பரம பிரயோஜனமாய் பண்ணும் அதாகையாலே அவனுக்கு போகமாய் இருக்குமதான கைங்கர்ய வ்ருத்திக்கு உபகரணமாய் இருப்பது என்றுமாம்–ஆக கீழ்ச் செய்தது ஆயிற்று –இவருடைய பக்தி சாதித்து பெற்றதும் அன்று-அபேஷித்து பெற்றதும் அன்று-
சஹஜையாய் ,சத்தாதிகளுக்கு ,உபகரணமாய் இருப்பது ஓன்று என்றது ஆய்த்து –

(ஸத்தா போக வ்ருத்த் யுபகரமானதொன்று) ““நாகிஞ்சித்குர்வதஸ் ஸேஷத்வம்‌”’ (வேதாஸம்‌) என்று ஸேஷத்வைக நிரூபணீயமான இவருடைய ஸத்தை கிஞ்சித்காரத்தாலே யாகையாலே இவருடைய ஸத்தா ஹேதுவாய்‌, “’தனக்கேயாக”’ (திருவா. 2 – 9 – 4) என்றும்‌, “உன்தன்‌ திருவுள்ள மிடர்கெடுந்தோறும்‌”” (திருவா. 10 – 3 – 9) என்றும்‌ “*கதாத்‌, ரக்ஷ்யதி மாம்‌ பதி” (ரா.ஸு.) என்றும்‌, ”கதா ப்ரஹர்ஷயிஷ்யாமி” (ஸ்தோ.ர. ) என்றும்‌, “உன்னாகமுற்றுமகத்தடக்கி ஆவி யல்லல்‌ மாய்த்ததே”” (திருவா. 4 – 3 – 3) என்றும்‌ ஸர்வேஸ்வரனை பலியாகச்‌ சொல்லுகையாலே அவனுக்கு போகமாயிருக்கிற கைங்காயத்துக்கு உபகரணமாயிருப்பதொரு பக்தி என்கிறார்‌. ஆக, இதுக்குக் கீழ்‌ இவருடைய பரபக்தி ஸாதித்துப்‌ பெற்ற பக்தியுமன்று, அபேக்ஷித்துப்‌ பெற்ற பக்தியுமன்று, ஸஹஜையாய்‌, ஸத்தா ப்ரயுக்தையான பக்தி என்றார் –

உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற்றிலையு மெல்லாம்
கண்ணன்
எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர்வளம் மிக்கவன் ஊர்வினவித்
திண்ணம் என்இளமான் புகுமுர் திருக்கோளூரே.–6-7-1–ஜீவித்து அல்லது தரிக்க ஒண்ணாத சோறு -தாஹித்தால் பானம் பண்ணி யல்லது நிற்க ஒண்ணாத தண்ணீர் -தின்றால் அல்லது புஷ்டனாக விரகு இன்றிக்கே இருக்கும் வெற்றிலையும் -தாரக போஷக போக்யம் ஆனவை எல்லாம் எனக்கு நாதனான கிருஷ்ணன் -வாஸூ தேவஸ் சர்வம் -என்று ஆயிற்று இவள் இருப்பது-

ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்

தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1-சர்வ தேசத்திலும் -காட்டிலும் தொடர்ந்து அடிமை செய்த இளைய பெருமாளை போலே-மன்னி-சர்வ அவஸ்தையிலும் -உலகத்தோடு ஏகாந்தத்தோடு வாசி அற-வழு இலா அடிமை -சர்வ சேஷ வ்ருத்தியும் செய்ய வேண்டும்-சாஸ்த்ரங்களால் இதுவே புருஷார்த்தம் என்று அறிக்கை போராது-அனுஷ்டான பர்யந்தமாக வேணும் – நாம்-திரு உள்ளத்தைக் கூட்டிக் கொள்ளுகிறார் ஆதல் கேசவன் தமருக்கு பின்பு தனியர் அல்லாமை யாலே திரு உள்ளத்தோடு ஒக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கூட்டிக் கொண்டு சொல்லுகிறார் ஆதல்

எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –2-9-4—சேஷ சேஷிகள் கலந்தால் சேஷ பூதனுக்கும் வருவதொரு ரசம் உண்டு இறே-அப்படியே அன்றியே நீ உகந்த அடிமை கொண்டு அருள வேணும்
ஸ்ரக் சந்த நாதிகளைப் போலே மிக்க அம்சம் கழிக்கலாய் இருக்கை- கீழ் முன்னிலையாய் போரச் செய்தே தனக்கே என்கிறது – முகத்தைப் பார்க்கில் நோக்கிலும் ஸ்மிதத்திலும் துவக்குண்டு அத்தாலே நிஷ்கர்ஷம் குலையும் என்று கவிழ்ந்து இருந்து கையோலை செய்து கொடுக்கிறார் –
எனக்கே ஆடச்செய் -என்கிற இடம் -அந்நிய சேஷத்வத்தை தவிர்க்கிறது
தனக்கே யாக என்கிற இடம் -தன்னோடு தனக்கு உள்ள அன்வயத்தைத் தவிர்க்கிறது-

உகக்கும் நல்லவரோடும் உழி தந்து உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள்
வியக்க இன்புறுதும்
எம் பெண்மை ஆற்றோம் எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்
மிகப் பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு நின்று உழி தருவர் கஞ்சன் ஏவ
அகப்படில் அவரோடும் நின்னொடு ஆங்கே அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ–10-3-9-எங்களை போல் அன்றிக்கே -நீ உகக்கும்படியான வி லக்ஷணை களோடு சஞ்சரித்து -அவர்களோடே பரிமாறப் பெற்றிலோம் என்று திரு உள்ளத்தில் யுண்டான விடாயால் வந்த துக்கம் கெடும் தோறும் –
நாங்கள்-வியக்க இன்புறுதும்–புறம்புள்ளாரைப் போல் அன்றியே -உன் உகப்பே பிரயோஜனமாக நாங்கள் -மிகவும் உகப்புதோம்-மிகுதி எதில் காட்டில் என்னில்-எங்களோடு கலக்குமதில் காட்டில் -என்னுதல்–உன்னில் காட்டில் நீ உகந்தவர்களை உகப்புதோம் -என்னுதல் –
எம் பெண்மை ஆற்றோம்-உன் உகப்புக்கு புறம்பாய் வரும் ஸ்த்ரீத்வம் எங்களுக்கு அஸஹ்யம் -அது வேண்டா –

பவந்த மேவாநுசரந் நிரந்தரம்
ப்ரஶாந்த நிஶ்ஶேஷ மநோரதாந்தர: |
கதா’ஹம் ஐகாந்திக நித்ய கிங்கர:
ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாதஜீவித: ||–46-மற்ற எல்லா விஷயங்களிலுமிருக்கும் ஆசையை அடியோடு விட்டு உன்னையே தொடரும்படி இருந்து, எப்பொழுதும் உனக்கு நித்ய கைங்கர்யம் செய்து உனக்கு ஆனந்தத்தைக் கொடுத்து என் வாழ்கைக்கும் ஒரு பயனைப் பெறுவேன்?

–——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்