1) பூர்வ த்,விகம் – ஸூரி வைபவம் 1 முதல் 186 வது ஸூத்ரம் வரை (186)
(2) உத்தர த்,விகம் – ஸூரி ஸுக்த்தி வைபவம்– 187 முதல் 234 முடிய (48)–
1) ப்ரத, மோத், யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம் 1-38 (38)
(2) த்,விதீயோத், யாய: – க்,ரந்த, கர்த்ரு வைப,வம் 39 – 186 (148)
(3) த்ருத்யோத், யாயம் – க்,ரந்தாந்தர தார தம்ய வைப,வம் 187-207 (21)
(4) சதுர்த்தே ரத், யாயம் -கிரந்த, ப்ரதிபாத்,ய க்ரம வைப,வம் 208-234 (27)
15 –குணாநுபவ பாதம் –218 – 228 —மொத்தம் —11– ஸூரணைகள் –இரண்டு அதிகரணங்கள்–
23 –தஸ ஸதக கத பகவத் குண தஸக அநு குண அநுபவ உபதேச அதிகரணம் —-218—ஒரே ஸூரணை
24-தஸ ஸதக பகவத் குண அநுபவ விவரண அதிகரணம் –219–228—மொத்தம் –10–ஸூரணைகள்
ஒன்பதாம் பத்தால்–இப்படி அவாப்த சமஸ்த காமன் ஆகையாலே –இத்தலையில் ஒன்றும் அபேஷிக்காமல் -பிரளயாதி ஆபத்துகளிலே உதவி ரஷிக்கும் ஆபத் சகனான சர்வேஸ்வரன் –கீழ் பிரகாசிப்பித்த ஆத்ம தர்சனதுக்கு பலம்-ஸ்வரூப அனுரூபமான பிராப்த்யத்தை அனுபவிக்கை ஆகையாலே –அவ் அனுபவத்தில் உண்டான த்வரையாலே -ஷண காலம் விளம்பம் பொறுக்க மாட்டாமல் –ஆர்த்தரான தமக்கு -ஆரப்த சரீர அவசானத்திலே -பேறாகக் கடவது -என்று நாள் அவதி இட்டு கொடுக்கப் பெற்றவர் –கீழ் தாம் உபதேசித்துத் திருந்தினவர்கள் ஒழிய -அல்லாதாரையும் விட மாட்டாத பரம கிருபையாலே -யதா அதிகாரம் சர்வ உபாயங்களையும் அருளிச் செய்கிறார் –என்கிறார்-
இப்படி அவாப்த ஸமஸ்த காமத்வத்தால் வந்த நைரபேக்ஷ்யத்தாலே அபேக்ஷா நிரபேக்ஷமாக ப்ரளயாத்யாபத் தஸைகளிலே உதவி ரக்ஷிக்கும் ஆபத் ஸகனான ஸர்வேஸ்வரன் கீழ் ப்ரகாஸிப்பித்த ஆத்ம தர்ஸநத்துக்கு பலம் ஸ்வ ஸ்வரூபாநுரூபமான ப்ராப்யாநுபவமாய் அவ்வநுபவத்திலுண்டான த்வரையாலே க்ஷண கால விளம்பம் பொறுக்க மாட்டாமல் ஆர்த்தரான இவர்க்கு ஆரப்த ஸரீராவஸாநத்திலே பேறாகக் கடவதென்று நாளிட்டுக் கொடுக்கப் பெற்ற இவர் கீழ்த் தாமுபதேஸித்த ஹித வசநம் கேட்டுத் திருந்தினவர்களை யொழிய அல்லாதாரையும் விடமாட்டாத தம்முடைய க்ருபையாலே யதாதிகாரம் ஸர்வோபாயங்களையும் அருளிச் செய்கிறார் என்கிறார்.
1-எண்டிசையும் அகல் ஞாலம் எங்கும் அளிக்கின்ற ஆலின் மேலென்னும்படி நித்ய போக பாத லீலோபகரணத்தின் லயாதிகளைப் போக்குமாபத்ஸகன் -2-ஆருயிரென்னப் படுத்தின ஆத்ம தர்ஸந பலாநுபவ பரம்பரையைக் கூவுதல் வருதலென்று முடுகவிட்டு –3-ஏகமெண்ணிக் காணக் கருதி எழ நண்ணி நினை தொறும் உருகி யலற்றிக் கவையில் மனமின்றி, பதினாலாண்டு பத்து மாஸம் ஒருபகல் பொறுத்தவர்கள் ஒரு மாஸ தின ஸந்த்யையில் படுமது க்ஷணத்திலேயாக இரங்குகிற த்வரைக் கீடாக -4-இனிப் பத்திலோன்று தஸம தஸையிலே பேறென்று நாட் கடலாகத் தம்பிக் கிட்டதாகாமல் நாளை வதுவை போலே நாளிடப் பெற்றவர் –5-இம் மடவுலகர் கண்டதோடு பட்ட அபாந்தவ-அரக்ஷக-அபோக்ய-அஸு௧,-அநுபாய ப்ரதி ஸம்பந்தியைக் காட்டி –6-மற்றொன்று கண்ணனல்லால் என்கிற வைகல் வாழ்தலான ஸித்தோபாயம், –7-அதில் துர்பல புத்திகளுக்கு மாலை நண்ணி காலை மாலை விண்டு தேனை வாடாமலரிட்டு அன்பராம் ஸாங்க பக்தி, அதில் அஸக்தர்க்குத் தாளடையும் ப்ரபத்தி –8-அதில் அஸக்தர்க்கு உச்சாரண மாத்ரம், ஸர்வோபாய ஸூந்யர்க்கு இப் பத்தும் பாடியிடும் தண்டனென்று கீதாசார்யனைப் போலே அதிகாராநுகுணம் நெறி யெல்லாம் உரைக்கிறார் ஒன்பதாம் பத்தில்.–
1-எண் திசையும் அகல் ஞாலம் அளிக்கின்ற ஆலின் மேல் என்னும் படி நித்ய போக பாத லீலா உபகரணத்தின் லயாதிகளை போக்கும் ஆபத் சகன்-(பாத லீலா உபகரணம் -நித்ய போகமான பரமபதத்தை நோக்காக காள் கூறாக இருக்கும் லீலா விபூதி -என்றவாறு) அதாவது-எண் திசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்-9-1-1- -என்றும் ,அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான்-அவனே அஃது உண்டு உமிழ்ந்தான் அளந்தான்-9-3-2- -என்றும் அகலிடம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து எங்கும் அளிக்கின்ற வாயன்-9-9-2- -என்றும் ஆலின் மேலால் அமர்ந்தான்-9-10-1- -என்றும் சகல லோகங்களையும் பிரளயம் கொள்ளாமல் ஏற்கவே -திரு வயிற்றில் வைத்து நோக்கி அழிந்தவற்றை மீண்டும் உண்டாக்கியும் –ஹிரண்யாஷனாலே தள்ளுண்டு அண்ட பித்தியிலே சேர்ந்த பூமியை ஒட்டு விடுவித்து எடுத்தும் மகா பலி பலாத்கரித்து ஆளுகிற தசையிலே -எல்லை நடந்து மீட்டும் –இப்படி பிரளயாதி ஆபத்துகளில் உதவி ரஷித்தவன் என்னும் படி —கீழ்ச் சொன்ன சத்ய காமத்வத்தால் வந்த நைரபேஷ்யம் தோற்ற -இத் தலையில் அபேஷம் அற –பிரதுபகாரம் நினையாமல் -வரையாதே -தன் பேறாக நோவு படும் அளவுகளிலே உதவி –பாதோஸ்ய விஸ்வா பூதானி த்ரிபாதாஸ் யாம்ருதம் திவி -புருஷ ஸூக்தம்–என்கிறபடியே அம்ருத சப்தத்தால் சொல்லும்படி -நித்ய போகமான-த்ரிபாத் விபூதியைப் பற்ற அல்பம் ஆகையாலே பாத சப்தத்தால் சொல்ல பட்ட லீலா உபகரணமான இவ் விபூதியில் லயாதிகளை போக்கும்
(எண்டிசையும் அகல் ஞாலம் எங்கும் அளிக்கின்ற இத்யாதி,) “எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்” (திருவாய்மொழி 9-1-1 “அவனே அகல் ஞாலம் படைத்திடந்தான் அவனே அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான்” (திருவாய் மொழி 9-3-2 “அகலிடம் படைத் திடந்துண்டுமிழ்ந் தளந்து எங்கும் அளிக்கின்ற ஆயன்” (திருவாய்மொழி 9-9-2) “ஆலின் மேலாலமர்ந்தான்’ (திருவாய்மொழி 9-10-1) என்று ஸகல லோகங்களையும் ஸஹகாரி நிரபேக்ஷமாக ப்ரளயாத்யாபத்துக்களிலே உதவி ரக்ஷிக்கும் என்கையாலே கீழ்ச் சொன்ன ஸத்ய காமத்வத்தால் வந்த நைரபேக்ஷ்யத்தாலே “பாதோஸ்ய விஸ்வா பூதாநி திரிபாதஸ்யாம்ருதம் திவி (புருஷ ஸூக்தம்) அந்த நித்யவிபூத்யேக தேஸமான லீலா விபூதிக்குண்டான ஆபத்துக்களிலே அபேக்ஷா நிரபேக்ஷமாக உதவித் தன் பேறாக ரக்ஷிக்கும் ஆபத் ஸகத்வனான ஸர்வேஸ்வரன்
கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்
கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை
எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்
தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே–9-1-1—பத்துத் திக்கிலும் உண்டான சகல சேதனரையும் பிரிகதிர் படாமல் திரு வயிற்றிலே வைத்து ரஷித்தவன்-இவற்றின் பக்கல் ஒன்றும் இல்லாத அன்று ரக்ஷிக்குமவன் -பிரளய ஆபத்தில் ரஷிக்கைக்கு ஒரு கை முதலும் இல்லை -அர்த்தித்தவமும் இல்லை இறே –ரஷிக்கைக்கு தான் அறிந்த ஆபத்தும் சம்பந்தமுமே இறே வேண்டுவது -அப்போது விலக்குகைக்கு பரிகரமும் இல்லையே –பிரான் -உபகார சீலனானவன் –
அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான்
அவனே அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான்
அவனே யவனும் அவனுமவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே–9-3-2—விஸ்திருதமான பூமியை ஸ்ருஷ்டித்து –பிரளயம் கொண்ட பூமியை மஹா வராஹமாய் எடுத்தானும் அவனே –அவதாரணத்தாலே ஸ்ருஷ்ட்யாதிகளில் சஹகாரி நைரபேஷ்யம் சொல்லுகிறது – அவனே அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான்— பிரளயம் கொள்ளாத பூமியை வயிற்றிலே வைத்து வெளிநாடு காண உமிழ்ந்து -அபஹ்ருதமான பூமியை எல்லை நடந்து மீட்டுக் கொண்டான் அவனே –இந்த அவதாரணத்தாலே ஆபத் சகத்வாதி ரக்ஷகத்வத்திலும் சஹகாரி நைரபேஷ்யம் சொல்லுகிறது –-அவனே யவனும் அவனுமவனும்–ப்ரஹ்ம ருத்ர இந்த்ரர்களுடைய ஸ்வரூப ஸ் திதி ப்ரவ்ருத்திகள் அவன் இட்ட வழக்கு -ச ப்ரஹ்ம ச சிவஸ் சேந்த்ர –ஸ்ருஷ்ட்டி ஸ்தித்யந்த-இத்யாதி என்கிற பிராமண ப்ரசித்தியால் சொல்லுகிறார் –-அவனே மற்று எல்லாமும் -பிரதானரோடு அபிரதானரோடு வாசி யற சேதன அசேதனங்களும் அவன் ஆதீனமே
அறிந்தனமே–ப்ரஹ்மாதிகள் -ஈஸ்வரோஹம் -என்று இருக்கையும் -அவர்களை ஆஸ்ரயிப்பாருமாய் செல்லா நிற்க நீர் அவனே என்றது என் கொண்டு என்னில் -மயர்வற மதிநலம் அருள பெற்றதால் அறிந்தேன் -என்கை –
புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ புலம்புறு மணி தென்ற லாம்ப லாலோ
பகலடு மாலை வண் சாந்த மாலோ பஞ்சமம் முல்லை தண் வாடை யாலோ
அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்
இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான் இனி இருந்து என்னுயிர் காக்குமாறு என்–9-9-2––பரப்பை யுடைத்தான பூமி உரு மாய்ந்து போக -அத்தை யுண்டாக்கி பிரளய ஆபத்தில் அகப்படாதே வயிற்றிலே வைத்து நோக்கி -வெளிநாடு காண உமிழ்ந்து -பிரபலர் அபகரித்த அளவிலே எல்லை நடந்து மீட்டுக் கொண்டு இப்படி வரையாதே ரஷிக்கையே ஸ்வ பாவமாக இருக்குமவன் –இருந்ததே குடியாக ரக்ஷிக்குமவன் கிடீர் மஹிஷி நோவு பட உதவாது இருக்கிறவன் –-வாயன்-–கிருஷ்ண ஏவஹி லோகா நாம் -என்கிறபடியே -ஜகத் காரண பூதன் –மாயோன்–ரக்ஷண அர்த்தமான ஆச்சர்ய சக்தி உக்தன் –
மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக்
காலை மாலை கமல மலர் இட்டு நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே–9-10-1–சர்வ லோகங்களையும் வயிற்றிலே வைத்து ஒரு பவனான ஆலந்தளிரிலே கண் வளர்ந்து அருளினவன் -உங்கள் விரோதி நிரசனங்கள் துர்க்கடன்களே யாகிலும் கடிப்பிக்க வல்லன் என்கை —அவன் இணை அடிகளையே இறைஞ்சுமின் –
2-ஆர் உயிர் என்னப் படுத்தின ஆத்ம தர்சன பல அனுபவ பரம்பரையை கூவுதல் வருதல் என்று முடுக விட்டு-அதாவது இருந்தும் வியந்தில் -8-7–தம்மோடு கலந்த கலவியை ஸ்மரிப்பிக்க வித்தராய் –
பேசுகிற அளவிலே –அவன் தட்டு மாறி -நின்று பரிமாறின சீலத்தில் ஈடுபட்டு – ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது -9-6-9–என்று என் ஆத்மா பட்டது – நித்ய அனுபவம் பண்ணுகிற நித்ய சூரிகள் ஸ்வரூபம் தான் பட்டதோ என்னும் படியாக – தாம் மேல் விழுந்து அனுபவித்த -ஆத்ம வைலஷண்யத்தை
கீழில் பத்தில் யாதாவாகக் காட்டக் கண்டு -அதுக்கு பலம்-ஸ்வரூப அனுரூபமான பிராப்யத்தை அனுபவிக்கை ஆகையாலே – சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய் -என்றும் –
பாத பங்கயமே தலைக்கு அணியாய்-என்றும் – உன் தாமரை மங்கையும் நீயும் இடம் கொள் மூ உலகும் தொழ இருந்து அருளாய் -என்றும் – கனி வாய் சிவப்ப நீ காண வாராய் -என்றும் – நின் பன்னிலா முத்தம் தவழ கதிர் முறுவல் செய்து நின் திரு கண் தாமரை தயங்க நின்று அருளாய் -என்றும்-
திருப் பவளத்தை திறந்து -ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேண்டும் – திரு கண்களால் குளிர நோக்கி அருள வேண்டும் – திரு அடிகளை என் தலை மேல் வைத்து அருள வேண்டும் – தேவரீரும் பிராட்டியும் சேர்ந்து கூட எழுந்து அருளி இருக்கிற இருப்பை எனக்கு காட்டி அருள வேண்டும் – என் முன்னே நாலடி உலாவி அருள வேண்டும் அனுகூல தர்சனத்திலே பிறக்கும் ஸ்மிதம் காண வேண்டும் -என்று இப்படி
அனுபவ பரம்பரையை ஆசைப் பட்டு -க்ரம பிராப்தி பற்றாமையாலே –-கூவுதல் வருதல் செய்யாய் -என்று நிரதிசய போக்யமான உன் திரு அடிகளில் நான் வந்து அடிமை செய்யும் படி என்னை அங்கே அழைத்தல்- நீ இங்கே வருதல்-செய்து அருள வேணும் என்று – இப்படி முடுக விட்டு–
(ஆருயிரென்னப்படுத்தின இத்யாதி.) “ஆருயிர் பட்டது எனதுயிர் பட்டது” (திருவாய்மொழி 9-6-9) என்று என்னாத்மா பட்டது நித்ய விபூதியிலுள்ளாரா ரேனும் பட்டாருண்டோ என்று இவர் தாமே பேசும்படி அவன் மேல் விழுந்து அநுபவிக்கைக்கு அடியாக கீழில் பத்தில் ஆத்ம ஸ்வரூபத்தை யதாவாகக் கண்டவதுக்குப் பலம் ஸ்வரூபாநுரூபமான ப்ராப்யத்தை யநுபவிக்கையாய், அதிலே த்வரை விளைகையாலே “தாமரைக் கண்களால் நோக்காய்” (திருவாய்மொழி 9-2-1 “பாத பங்கயமே தலைக்கணியாய்” (திருவாய்மொழி 9-2-2 “உன் தாமரை மங்கையும் நீயும் இடங்கொள் மூவுலகும் தொழ இருந்தருளாய்” (திருவாய்மொழி 9-2-3), “கனிவாய் சிவப்ப நீ காண வாராய்” (திருவாய்மொழி 9-2-4) “நின் பன்னிலா முத்தம் தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக் கண் தாமரை தயங்க நின்றருளாய்” (திருவாய்மொழி 9-2-5) என்று என்னார்த்தி தீரத் திருக் கண்களாலே குளிர நோக்கி யருள வேணும், திருவடிகளை என் தலையிலே வைத்தருள வேணும், தேவரீரும் பிராட்டிமாரும் கூட எழுந்தருளி யிருக்கிற இருப்பை எனக்குக் காட்டி யருள வேணும், என் முன்னே நாலடி உலாவி யருள வேணும், அநுகூல தர்ஸனத்திலே பிறக்கும் ஸ்மிதம் நான் காண வேணும், ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும், என்றிப்படி அநுபவ பரம்பரைகளை ஆசைப்பட்டு அது க்ரம ப்ராப்தமாகாமல் கூவுதல் வருதல் செய்யாயே என்று நிரதிஸய போக்யமான உன்னுடைய திருவடிகளிலே நானும் வந்தடிமை செய்யும்படி என்னை அங்கே அழைத்தல் இங்கே வருதல் செய்தருள வேணும் என்று இப்படி முடுக விட்டு–
இருந்தும் வியந்தில் -8-7-அவன் தம் பக்கல் பண்ணின வ்யாமோஹத்தில் அதிசங்கை பண்ணி -மெய் என்று தெளிந்து அந்த வியாமோஹத்தை பேசி ஹ்ருஷ்டராகிறார்-இத்திருவாய் மொழி யில் லாபத்துக்கு க்ருஷி பண்ணின படியாய் இருக்கிறது கீழ் எல்லாம் –-இது ஸ்திரமாகைக்கு வேலி படைக்கிறார் மேல் – சர்வேஸ்வரன் ஸ்வதந்த்ரன் என்று உபபாதித்தது கீழ் அங்கனம் அன்றிக்கே ஆஸ்ரித பாரதந்தர்யமே அவனுக்கு ஸ்வரூபம் என்கிறது இத்திருவாய் மொழியிலே –
ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது
பேர் இதழ்த் தாமரைக் கண் கனிவாயது ஓர்
கார் எழில் மேகம் தென் காட் கரை கோயில் கொள்
சீர் எழில் நால் தடம் தோள் தெய்வ வாரிக்கே–9-6-9—நான் பட்ட பாட்டை நித்ய ஸூரிகளில் சிலர் பட்டார் யுண்டோ -பகவத் குணங்களுக்கு அபூமியாய் இருக்கிற சம்சாரத்தில் நான் பட்ட பாடு நித்ய விபூதியில் உள்ளார் பட்டார்களோ –இங்கு எனது உயிர் பட்டது –அங்கே ஆருயிர் பட்டது –என்று அருளிச் செய்வர் எம்பெருமானார் -நவோடையான ஸ்த்ரீக்கு அனுபவத்தில் புதுமையாலே ஆர்த்தி மிக்கு இருக்கும் இறே -என்று நம்பிள்ளைக்கு நஞ்சீயர் அருளிச் செய்வர் –
பண்டை நாளாலே நின் திரு வருளும் பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால் குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1-சோதி வாய் திறந்து -பூ அலருமா போலே யாயிற்று வாய் திறந்து அருளிச் செய்யும் போது திருமுகத்தில் பிறக்கும் செவ்வி –மாமக்ரூரேதி வஹ்யதி என்று வார்த்தை அளவிலே யாயிற்று அக்ரூரன் அனுபவித்தது -தத் காலத்திலே திரு முகத்தில் செவ்வியும் உத்தேச்யமாய் இருக்கிறதாயிற்று இவர்க்கு –உன்-தாமரைக் கண்களால் நோக்காய்--வார்த்தை யில் தோற்றாத பந்தமும் நோக்கிலே அனுபவிக்கும் படி குளிர நோக்கி யருள வேணும் –அவலோக நதா நேந பூயோ மாம்பால யாவ்யய
குடிக் கிடந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த வடிமைக்குக் குற்றேவல் செய்து உன் பொன்
அடிக் கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி நீ யொருநாள்
படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கணியாய்
கொடிக்கொள் பொன் மதில் சூழ் குளிர் வயல் சோலைத் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-2-படிக்களவாக நிமிர்த்த-பூமிக்கு அளவாக நிமிர்த்த -சதைக்க ரூபமான திருவடிகளை நிமிர்த்த ஆச்சர்யத்தோ பாதி போருமாயிற்று பூமி யளவிலே குசை தாங்கின படி-நின் பாத பங்கயமே தலைக்கணியாய்-சர்வ ஸூ லபனான -உன்னுடைய நிரதிசய போக்யமான திருவடிகளை என் தலைக்கு ஆபரணமாம் படி பண்ணி யருள வேணும் -குணாகுண நிரூபணம் பண்ணாதே எல்லார் தலையிலும் வைத்த திருவடிகளை அநந்ய பிரயோஜனனான நான் இழக்கவோ -ருசி இல்லார் தலையிலே வைத்த திருவடிகளை ருசி உடைய என் தலையிலே வைக்கலாகாதோ-பூமிக்கு அளவான திருவடிகளை என் தலைக்கு அளவாக்க லாகாதோ –கோலமாம் என் சென்னிக்கு -என்று இருக்கிற என் தலையில் வைக்கலாகாதோ -இந்த சீலம் காதாசித்கமாய் இழக்கிறேனோ
கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி உன் திரு வுடம்பு அசைய
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி
தடம் கொள் தாமரைக் கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ வுலகும் தொழ விருந்து அருளாய் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-3—பொய்கையை விழுங்கின தாமரை போலே இடமுடைத்தான திருக் கண்களாலே குளிர நோக்கி-நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்-நீ எழுந்து அருளி இருந்து -உணர்ந்து அருளும் போதை செவ்வியை அனுபவிக்க வேணும் -மாரி முலை முழைஞ்சில் -என்கிறபடியே –உன் தாமரை மங்கையும் நீயும் -பிராட்டியும் தேவரும் சேர இருந்து -எனக்கு காட்டித் தர வேணும் –பங்கயத்தாள் திருவருளும் –என்று ஆஸ்ரயண தசையாகையாலே புருஷகார பாவத்தை சொல்லிற்று கீழ் -அடிமை செய்யும் இடத்திலும் இருவரும் சேர்ந்த சேர்த்தியிலே அடிமை செய்யக் கடவது -என்னுமத்தை பற்றச் சொல்லுகிறது இங்கு
இடம் கொள் மூ வுலகும்-இடமுடைத்தான சகல லோகங்களில் உள்ளாரும்-தொழ விருந்து அருளாய்-அநந்ய பரரைப் போலே முறையிலே தொழ இருக்கும் இருப்பை நான் கண்டு அனுபவிக்க வேணும் –
புளிங்குடிக் கிடந்து வர குணமங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி
நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்பப்
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வாராயே–9-2-4–தெளிந்த நீரை முகக்கையாலே தர்ச நீயமான மேகமானது பவளத்தைப் பூத்தால் போலே யாயிற்று திரு வதரத்தில் பழுப்பு இருப்பது –இவர் சமப்ரமத்தைக் கண்டு அவன் பண்ணும் ஸ்மிதம் இருக்கிற படி –-நீ காண வாராயே–நான் காண நீ வர வேணும் -என் எதிரே உன் நடை அழகு காண வேணும் -அவன் கூத்து இருக்கிற படி -வல்லார் ஆடினால் போலே இறே நடை அழகு இருப்பது –
பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வந்து நின் பல் நிலா முத்தம்
தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக் கண் தாமரை தயங்க நின்று அருளாய்
பவள நன் படர்க் கீழ் சங்கு உறை பொருநல் தண் திருப் புளிங்குடி கிடந்தாய்
கவள மாக் களிற்றின் இடர் கெடத் தடத்துக் காய்சினப் பறவை ஊர்ந்தானே–9-2-5-அவாக்ய அநாதரா என்கிறபடியே ஒன்றுக்கும் விக்ருதன் ஆகாத நீ -அனுகூல தர்சனத்தாலே அகவாயில் பந்தம் தோற்ற விக்ருதனாய் ஸ்மிதம் பண்ணி நிற்கும் படியைக் காண வேணும் –பல் நிலா முத்தம்-பல்லாகிற நிலாவை யுடைய திரு முத்து நிரையானது-தவழ் கதிர் முறுவல் செய்து-கதிர் தவழும் படி -கதிர் புறப்படும் படி -முறுவல் செய்து-நின் திருக் கண்–தாமரை தயங்க நின்று அருளாய்-திருக் கண்கள் ஆகிற தாமரை விளங்க நாலடி வந்து -முடிய வர மாட்டாதே ஸ்தப்தனாய் நிற்கும் நிலையைக் காண வேணும் -கண்ணினுடைய ஸ்மிதம் இருக்கும் படி –தயங்குகை -தத் காலத்தில் ஒளி யாதல் -கடல் சலித்தால் போலே அசைந்து வருகிறபடி யாதல் –
கொடு வினைப் படைகள் வல்லையாய் அமரர்க்கிடர் கெட வசுரர்கட்கிடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை யமுதே கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடி விணை யில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள் கூவுதல் வருதல் செய்யாயே–9-2-10-நிரதிசய போக்யனாய் ஸந்நிஹிதனான நீ சத்தையை நோக்குகைக்காக ஒரு நாள் அங்கே அழைத்தல் -இங்கே வருதல் செய்து அருள வேணும் -வருதல் என்கிற இத்தை முந்துற சொல்லாது ஒழிந்தது அந்த சமுதாயத்தை காண வேணும் என்னும் நசையாலே –
3-ஏகம் எண்ணிக் காணக் கருதி எழ நண்ணி நினைதொறும் உருகி அலற்றி கவையில் மனம் இன்றி–அதாவது (ஓராயிரமாய் -திருவாய்மொழியில்)மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் இராப் பகல் இன்றியே –என்று அவன் நித்ய வாசம் பண்ணுகிற பரமபதத்தைக் காண்கையிலே சர்வ காலமும் ஏக ரூபமாய் மனோரதித்து –(மையார் கருங்கண்ணி திருவாய்மொழியில்)காணக் கருதும் என் கண்ணே – என்று பெரிய பிராட்டியாரோடும் -திவ்ய ஆயுதங்களோடும் -திவ்ய விக்ரகத்தோடும் –கூடி இருக்கிறவனைக் காண வேண்டும் என்று ஆசை பட்டு –(இன்னுயிர்ச் சேவலும் திருவாய்மொழியில் )எழ நண்ணி நாமும் நம் வான நாடோடு ஒன்றினோம் –என்று ஸ்மாரக பதார்த்த தர்சனத்தில் நோவு படுகையாலே -முடிந்து போகையிலே ஒருப் பட்டு –(உருகுமால் நெஞ்சம் திருவாய்மொழியில் )திரு காட்கரை மருவிய மாயன் தன் மாயம் நினை தொறு-நெஞ்சம் உருகுமால் -என்று அவன் அனுபவ தசையில் பரிமாறின சீலாதிகளை நினைக்கும் தோறும் அனுபவ உபகரணமான நெஞ்சு சிதிலமாய் கரைந்து –(எம் கானல் அகம் கழிவாய் திருவாய்மொழியில் )தமரோடு அங்கு உறைவார்க்குத் தக்கிலமே கேளீரே -என்று தூத பிரேஷண முகத்தாலே – கிளி மொழியாள் அலற்றிய சொல் – என்று ஆற்றாமையாலே அக்ரமமாகக் கூப்பிட்டு –(அறுக்கும் வினையாயின திருவாய்மொழியில்)கவையில் மனமின்றி கண்ணீர்கள் கலுழ்வன் -என்று இரு தலைத்த நெஞ்சு இன்றிக்கே -ஏகாக்ர சித்தராய் (மல்லிகை கமழ் தென்றல் திருவாய்மொழியில்)பதினாலாண்டு பத்து மாசம் ஒரு பகல் பொறுத்தவர்கள் ஒரு மாச தின சந்த்யையில் படுமது ஷணத்திலே யாக விரங்குகிற த்வரைக்கு ஈடாக பெருமாளைப் பிரிந்து பதினாலாண்டு பொறுத்து இருந்த ஸ்ரீ பரதாழ்வான் –பூர்ணே சதுர்தச வர்ஷே பஞ்சம்யாம் லஷ்மணாக்ரஜ –யுத்த -127-1—என்று அவதி கழிந்த ஒரு நாளில் பட்ட கிலேசமும் —பத்து மாசம் பொறுத்து இருந்த பிராட்டி –மாஸாத் ஊர்த்தவம் ந ஜீவிஷ்யே –ஸூந்தர –40 -10–(இன்னம் ஈண்டொரு திங்கள் இருப்பல் யான் நின்னை நோக்கிப் பகர்ந்து நீதியோய்-பின்னை ஆவி பிடிக்கின்றிலேன் அனந்த மன்னன் ஆணை இதனை மனக்கொள் நீ –ஸ்ரீ கம்பநாட்டாழ்வார் )-என்று திருவடி இடம் சொல்லி விட்ட அநந்தரம் -அவ்வொரு மாசத்தில் பட்ட கிலேசமும் –கிருஷ்ணன் பசு மேய்க்கப் போக ஒரு பகல் எல்லாம் பொறுத்து இருந்த ஸ்ரீ கோபிமார்-அவன் பசுக்களின் பின் குழையிலே வாரா நிற்க – முற் கொழுந்தில் காணாமையால் ஒரு சந்த்யையில் பட்ட கிலேசம் எல்லாம் –ஒரு ஷணத்திலே யாம் படி –அவனை விட்டு அகல்வதற்க்கே இரங்கி -என்று ஈடு படுகிற த்வரைக்கு ஈடாக-
(ஏகமெண்ணி இத்யாதி) “கவையில் மனமின்றி” (திருவாய்மொழி 9-8-3) “மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகமெண்ணும் இராப் பகலின்றியே” (திருவாய்மொழி 9-2-7) என்று அவன் நித்ய வாஸம் பண்ணுகிற பரமபதத்தைக் காண்கையிலே ஸர்வ காலமும் ஏக ரூபமாக மநோ ரதித்து -காணாக் கருதும் என் கண்ணே (திருவாய்மொழி 9-4-1) என்று பெரிய பிராட்டியாரோடும் திவ்யாயுதங்களோடும் திவ்ய விக்ரஹத்தோடும் கூடி யிருக்கிற அவனைக் காண வேணுமென்று ஆசைப் பட்டு “எழ நண்ணி நாமும் நம் வானநாடனோடொன்றினோம்” (திருவாய்மொழி 9-5-10) என்று ஸ்மாரக பதார்த்த, தர்ஸநத்திலே நோவு படுகையாலே முடிந்து போகையிலே ஒருப்பட்டு “நினைதொறும் சொல்லுந் தொறும் நெஞ்சிடிந்துகும்” (திருவாய்மொழி 9-6-9) “உருகுமால் நெஞ்சம் உயிரின் பரமன்றி பெருகுமால் வேட்கையும்” (திருவாய்மொழி 9-6-1) என்று, அவனுடைய அனுபவத்தை நினைக்கும் தொறும் அநுபவ உபகரணமான நெஞ்சானது ஸிதிலமாய்க் கரைய “தக்கிலமே கேளீர்கள்” (திருவாய்மொழி 9-7-2 )என்று ஆள் விட்டு “கிளிமொழியாளலற்றிய சொல்” (திருவாய்மொழி 9-7-111) என்று ஆற்றாமையாலே அக்ரமமாகக் கூப்பிட்டு “கவையில் மனமின்றிக் கண்ணீர்கள் கலுழ்வன்’ திருவாய்மொழி 9-8-3) என்று இருதலைத்த நெஞ்சின்றிக்கே கண்ணீர் காட்டாறு போலே பெருக (பதினாலாண்டு இத்யாதி, இரங்குகிற த்வரைக்கீடாக) பெருமாளைப் பிரிந்து பதினாலாண்டு பொறுத்திருந்த ஸ்ரீபரதாழ்வான் அந்த அவதி கழிந்த ஒருநாள் பட்ட க்லேஸமும், பத்து மாஸம் பிரிந்து பொறுத்திருந்த பிராட்டி “மாஸாதூரர்த்வம் ந ஜீவிஷ்யே” (ரா.ஸு. 40-10) என்று ஒரு மாஸத்தில் பட்ட க்லேஸமும், க்ருஷ்ணன் பசு மேய்க்கப் போக ஒரு பகலெல்லாம் அவனைப் பிரிந்து பொறுத்திருந்த ஸ்ரீகோபிமார் ஸந்த்யா காலத்திலே பசுக்களின் முற் கொழுந்திலே காணாமல் அவர்கள் பட்ட க்லேஸமுமெல்லாம் அவனை “விட்டகல்வதற்கே யிரங்கி அணி குருகூர்ச் சடகோபன்” என்று ஒரு க்ஷணத்திலே யாம்படி யீடுபடுகிற தம்முடைய த்வரைக்கீடாக
எவைகோல் அணுகப் பெறும் நாள் என்று எப்போதும்
கவை யில் மனம் இன்றி கண்ணீர்கள் கலுழ்வன்
நவை இல் திரு நாரணன் சேர் திருநாவாய்
அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே–9-8-3—நான் வந்து கிட்டப் பெறும் நாள் எவை என்று
எப்போதும்-ஒரு கால் இத்தைச் சொல்லி அல்லாத போது அந்நிய பரதை பண்ணுகிறேனோ –
கவை யில் மனம் இன்றி -அது தன்னிலும் இதுவும் முகாந்தரமுமாய்ச் செல்லுகிறதோ -இரு தலைத்த நெஞ்சு இன்றியே –கண்ணீர்கள் கலுழ்வன்-கண்ணீர்கள் வெள்ளமிட விருப்பன்
ஆகம் சேர் நரசிங்கமதாகி ஓர்
ஆகம் வள்ளுகிரால் பிளந்தான் உறை
மாகவைகுந்தம் காண்பதற்கு என் மனம்
ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே–9-3-7-என் மனஸ்ஸூ ஒருபடிப்பட நினையா நின்றது -சேதனர்க்கு இரா ஒரு காரியமும் பகல் ஒரு காரியமும் இருக்கும் இறே -இவருக்கு அஹோ ராத்ர விபாகம் அற இதுவேயாய்ச் செல்லா நின்றது –சமா த்வாதச தத்ராஹம் ராக வஸ்ய நிவேசனே புஞ்சானம் அநு ஷான் போகான் சர்வகாம ஸம்ருத்தி நீ –என்று பிராட்டி திரு அயோத்யையை நினைத்தால் போலே யாயிற்று இவர் திரு உள்ளத்துக்கு பரமபதம் ஸ்வ தேசமாய் இருக்கிற படி –
மையார் கருங்கண்ணி கமல மலர்மேல்
செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே
வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும்
கையா உனைக் காணக் கருதும் என் கண்ணே–9-4-1-சங்க சக்ர கதா தர –ஸ்ரீ வத்ஸ வக்ஷ-என்கிற வடிவையுடைய உன்னை-காணக் கருதும் -காண ஆசைப்படா நின்றது -இவ்வஸ்துவைப் பார்த்தால் கண்டு கொண்டே இருக்கை இறே சத்ருசம் -நித்ய ஸூரிகளும் சதா தர்சனம் இறே பண்ணுவது –
என் கண்ணே–சம்சாரிகளில் இவர்க்கு உள்ள வியாவ்ருத்தி போருமாயிற்று -இவரில் காட்டில் இவருடைய கண்ணுக்கு –
எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம்
பழன நல் நாரைக் குழாங்கள் காள் பயின்று என் இனி
இழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது
தழை நல்ல இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைக்கவே-9-5-10-போக்கிலே ஒருப்பட்டு நாமும் நம் வான நாடனொடு ஒன்றினோம் -கடலைக் குளப்படியிலே மடுத்தால் போலே தன்னை இலக்காக்கி இத் தலையை வெறும் தறையாக்கி தன்னைக் கொண்டு அகன்றான் -நாமும் அயர்வறும் அமரர்கள் அதிபதியோடே ஒரு மிடறு ஆனோம் -நித்ய ஸூரிகளும் அவனுமாய் இருந்து நம்மை முடிக்க எண்ணின் படியே நாமும் இசைந்தோம் -அவன் முடிக்க நினைக்க நாம் ஜீவிக்க எண்ணி இடக்கைப் புரி முறுக்குகை தவிர்ந்து நாமும் முடிகையிலே துணிந்தோம் -நித்ய ஸூரிகளும் ச்சந்தா அனுவர்த்திகள் ஆகையால் அவன் கருத்தே கருத்தாய் இருப்பார்கள் இறே –
நினைதொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும்
வினை கொள் சீர் பாடிலும் வேம் எனது ஆர் உயிர்
சுனை கொள் பூஞ்சோலைத் தென் காட்கரை என் அப்பா
நினைகிலேன் நான் உனக்கு ஆள் செய்யும் நீர்மையே –9-6-2—நினைதொறும்-நினைக்க உபக்ரமிப்பர் -அந்நினைவேயாய்ச் செல்ல ஒண்ணாத படி பலஹானி மிகும் -மறக்க மாட்டார் -திரியட்டும் நினைக்க என்று இழிவார் -இப்படி பல காலும் நினைக்க உபக்ரமித்து தலைக் கட்ட மாட்டாதே செல்லுகிற படி –
சொல்லும் தொறும் -நினைக்க அரிய விஷயம் சொல்ல ஒண்ணாது என்னும் இடம் சொல்ல வேண்டாது இருக்க சொல்லும் தொறும் -என்கிறது -என்னும் எப்போதும் என் வாசகம் -என்கிற படியே மனஸ் சஹகாரம் ஒழிய வாசனையால் வாக்கு பேசாத தொடங்கும் -செவி வன்மையாக புக்கு நெஞ்சை அழிக்கும்-நெஞ்சு இடிந்து உகும்-நெஞ்சு கட்டு அழிந்து நீராகா நின்றது -பெருக்காற்றில் கறை இடிந்து விழுந்து பின்பு நீராய் கரைந்து போமா போலே சிதிலம் ஆகா நின்றது
உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி
பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
தெருவு எல்லாம் காவி கமழ் திருக் காட்கரை
மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே–9-6-1-அனுபவத்துக்கு பிரதம உபகரணமான மனஸ் தத்வம் சிதிலமாகா நின்றது -அனுபவிக்கைக்கும் அனுபவத்தி நிர் வ்ருத்தராகைக்கும் நெஞ்சு வேணுமே –தொழுது எழு என்கைக்கும் -நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர் நோயும் சார் கொடான் என்கைக்கும் நெஞ்சு வேணும் இறே -நீஞ்சப் புக்கவனுக்கு வாய் கரையிலே தெப்பம் ஒழுகுமா போலே பரிகரமாக நெஞ்சு சிதிலமாகா நின்றது -எதிர்தலையும் யுண்டாம் படி பரிமாற அறியான் -அனுபவத்துக்கு இருவர் வேண்டும் என்று இரான் –-உயிரின் பரம் அன்றி-பெருகுமால் வேட்கையும் –ஆத்மாவுக்கு பொறுக்க ஒண்ணாத படி அபி நிவேசம் பெருகா நின்றது -அணு பரிமாணமாக இவ் வஸ்துவின் அளவன்றிக்கே ஆறு பெருகுமா போலே மேன்மேல் என பெருகா நின்றது –ஆலும் ஓவும் விஷாத அதிசய ஸூசகம் —நெஞ்சம் உருகுமால் –வேட்க்கையும் பெருகுமால்-என்று தம்மால் நியமிக்க ஒண்ணாத விஷாதம் தோற்றச் சொல்லுகிறார்-என் செய்கேன் -நெஞ்சு உருகாத படி தரிப்பேனோ -பெருகுகிற அபி நிவேசத்தை அமைப்பேனோ -இதுக்கு அடியான அவன் குணங்களை தவிர்ப்பேனோ-தொண்டனேன்-அதுக்கு அடியான என் சாபல்யத்தை தவிர்ப்பேனோ -சாபலம் அபூமி என்று கை வாங்க ஓட்டுகிறது இல்லை -மறந்து தரிக்க வொட்டுகிறது இல்லை –
நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய்
அமர் காதல் குருகினங்காள் அணி மூழிக் களத்து உறையும்
எமராலும் பழிப்புண்டு இங்கு என் தம்மா விழிப்புண்டு
தமரோடு அங்கு உறைவார்கு தக்கிலமே கேளீரே –9-7-2-தம் பரிஜனங்களோடே அங்கே நித்ய வாஸம் பண்ணுகிற தமக்கு நாங்கள் ஆகோமோ என்று கேளுங்கோள்–தாமும் தமக்கு நல்லாருமாய் இருக்கிற இருப்புக்கு –அடியார்கள் –குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ-என்று இருப்பார் ஆகாரோ -என்று கேளுங்கோள் —
ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை
ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்
வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அழிவு இல்லா ஆயிரத்து இப்பத்தும் நோய் அறுக்குமே–9-7-11–அவன் அவ்வூரில் ஒழியில் தரிக்க மாட்டாதாப் போலே -அவனை ஒழிய தரிக்க மாட்டாதவள் -என்கை –-அணி மழலைக் கிளி மொழியாள் -அழகியதாய் முக்தமான கிளியின் பேச்சுப் போலே இருக்கிற பேச்சை யுடையவள் –
அலற்றிய சொல்-தன் ஆற்றாமையால் அக்ரமமாகச் சொன்ன பாசுரத்தை
எவைகோல் அணுகப் பெறும் நாள் என்று எப்போதும்
கவை யில் மனம் இன்றி கண்ணீர்கள் கலுழ்வன்
நவை இல் திரு நாரணன் சேர் திருநாவாய்
அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே–9-8-3-எவைகோல் அணுகப் பெரும் நாள் என்று -நான் வந்து கிட்டப் பெறும் நாள் எவை என்று-எப்போதும்-ஒரு கால் இத்தைச் சொல்லி அல்லாத போது அந்நிய பரதை பண்ணுகிறேனோ – கவை யில் மனம் இன்றி -அது தன்னிலும் இதுவும் முகாந்தரமுமாய்ச் செல்லுகிறதோ -இரு தலைத்த நெஞ்சு இன்றியே –
அவனை விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லா அணி யிழையாய்ச்சியர் மாலைப் பூசல்
அவனை விட்டகல்வதற்கே யிரங்கி அணி குருகூர்ச் சடகோபன் மாறன்
அவனியுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு
அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின் தொண்டீர் அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே–9-9-11-அவனுடைய பிரிவால் நோவு பட்டு அருளிச் செய்த ஆழ்வார் -அவர்கள் எல்லாரும் பட்ட கிலேசத்தை இவர் ஒருவருமே பட்டார் என்கை –
4-இனிப் பத்தில் ஓன்று தசம தசையிலே பேறு என்று-அதாவது-நயன பிரீதி பிரதமம் சிந்தா போகஸ் ததோனு சங்கல்ப நித்ராஸ் சேதஸ் தநுதா விஷய விரக்திஸ் த்ரபாநாச உந்மாதோ மூர்ச்சா ம்ருதி ரித்யேதா ச்மரதசா தசைவ ஸ்யு-என்றும்-பிரதமஸ் தவபிலாஷ ஸ்யாத் த்விதீயம் சிந்தனம் பவேத் அநு ஸ்ம்ருதிஸ் த்ருதீயந்து சதுர்த்தம் குண கீர்த்தனம் -உத்யோக பஞ்சமம் ப்ரோக்த பிரலாப ஷஷ்ட உச்யதே உன்மாதஸ் சப்தமோ ஞேய அஷ்டமோ வ்யாதிருச்யதே நவமே ஜடாத சைவ தசமம் மரணம் ததா -என்றும்-காட்சி முதலாச் சாக்காடு ஈறாக் காட்டிய பத்தும் கை வரும் எனினே மெய்யுறு புணர்ச்சி எய்துதற்கு உரித்தே –நம்பியகப்பொருள் -என்றும்-வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல் ஆக்கம் செப்பல் நாணுவரை இறத்தல் நோக்குவம் எல்லாம் அவையே போறல் மறத்தல் மயக்கம் சாக்காடு என்றச் சிறப்புடை மரபினவை கழவென மொழிப–தொல்காப்பியம்-என்றும் சொல்லுகிறபடி -காமுகராய் இருப்பார்க்கு தசம அவஸ்தையிலே மரணமாம் போலே –நம் பக்கல் பரபக்தி உக்தரான உமக்கும் நம்மை பெறாவிடில் முடியும் படியான பரம பக்தி தசை –பத்தாம் பத்திலே -பிறக்கத் தேடுகிறது –ஆகையால் கீழ் சொன்ன விளம்பம் இல்லை –இனி உள்ளது பத்தில் ஓன்று தசம தசையான மரண அவஸ்தையிலே பேறு என்று நாட் கடலாக தம்பிக் கிட்டதாகாமல் நாளை வதுவை போலே நாள் இடப் பெற்றவர் நாட் கடலை கழிமின்-1-6-7- –என்கிறபடியே -விரஹ வ்யசனத்தாலே ஒருநாள் கடல் போலே துச்தரமாம் படி –பூர்ணே சதுர்தசே வர்ஷே -யுத்த -127-1–என்று தம்பியான ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு நெடுக நாள் இட்டு கொடுத்தால் போல் ஆகாமே –நாளை வதுவை மணம் என்று நாள் இட்டு -நாச்சியார்-6-2-– என்று இன்று எனில் வெள்ளக் கேடாம்-சில நாள் கழித்து எனில் வறட்கேடாம் என்று நினைத்து – நாளை என்று நாச்சியாருக்கு நாள் இட்டால் போலே – மரணமானால் -என்று ஆரப்த சரீர அவசானத்திலே -பேறாக -அவன் தானே நாள் இட்டு கொடுக்க பெற்று ஹ்ருஷ்டர் ஆனவர் –
(இனிப் பத்திலொன்று தஸம தஸையிலே பேறென்று) “நயந ப்ரீதி: ப்ரதமம் சித்தா போகஸ் ததோநு ஸங்கல்ப: நித்ராச் சேதஸ் தநுதா விஷய விரக்திஸ் த்ரபாநாமா: உந்மாதோ, மூர்ச்சா மரணம் இத்யேதா ஸ்மரதஸா தஸைவ ஸ்யு:, ப்ரதமஸ் த்வபிலாஷ: ஸ்யாத் த்விதீயம் சிந்தநம் பவேத் அநுஸ்ம்ருதிஸ் த்ருதீயந்து சதுர்த்தம் குண கீர்த்தநம் உத்யோக: பஞ்சம: ப்ரோக்த: ப்ரலாப: ஷஷ்ட உச்யதே உந்மாத.ஸ் ஸப்தமோ ஜ்ஞோய: அஷ்டமோ வ்யாதி ருஸ்யதே நவமே ஜடதா சைவ தஸமம் மரணம் ததா,” என்று காமுகராயிருப்பார்க்கு தஸமமாவஸ்தையிலே மரணமாமா போலே நம் பக்கல் பரபக்தி யுக்தரான உமக்கு நம்மைப் பெறா விடில் முடியும்படி பரம பக்தி தஸையான பத்தாம் பத்திலே பெறக் கடவதென்று (நாட் கடலாகத் தம்பிக்கிட்ட தாகாமல் நாளை வதுவை போலே நாளிடப் பெற்றவர்) “நாட்கடலைக் கழிமினே” (திருவாய்மொழி 1-6-7) என்று ஒரு நாள் ஒரு கடல் போலே விஸ்லேஷ வ்யஸநத்தாலே துஸ்தரமாம்படி ‘பூர்ணே சதுர்தமே வர்ஷே” (ராயு. 127-1 என்று தம்பியான ஸ்ரீ பரதாழ்வானுக்கு நெடுக நாளிட்டுக் கொடுத்தாப் போலே யன்றியே “நாளை வதுவை மணமென்று நாளிட்டு” (நாச்சியார் திருமொழி 6-2) என்று இன்றென்னில் வெள்ளக்கேடாம் சிலநாள் கழித்தென்னில் வறட்கேடாமென்று “நாளை” என்று நாச்சியார்க்கு நாளிட்டாற் போலே “மரணமானால் வைகுந்தம் கொடுக்கும்” (திருவாய்மொழி 9-10-5) என்று ஆரப்த ஸரீராவதியாக அவனாலே நாளிட்டுக் கொடுக்கப் பெற்று ஹ்ருஷ்டரான இவர்
நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்-தோள்கள் தலை துணி செய்தான்
தாள்கள் தலையில் வணங்கி நாள் கடலைக் கழிமினே –1-6-7-திருவடிகளிலே நிர்மமனாய் வணங்கி
நாள் கடலைக் கழிமினே –ஜ்ஞானம் பிறந்தால் ப்ராப்தி அளவும் -ஒரு பகல் ஆயிரம் ஊழி-என்னுமா போலே கால ஷேபம் அரிதாய் இறே இருப்பது-திருவடியைப் போலே தசரதாத் மஜனுடைய வீர சரிதத்தை அனுசந்தித்துக் காலத்தைப் போக்குவது-அன்றிக்கே சக்கரவர்த்தி திருமகனை ஆஸ்ரயித்து சம்சார ஆர்ணவத்தை மாற்றிக் கொள்ள பாருங்கோள் என்கிறார் என்றுமாம்-நாழ் -குற்றம்
நாளை வதுவை மணம் என்று நாளிட்டு
பாளை கமுகு பரிசிடைப் பந்தல் கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பானோர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்—6-2–நாள் நெடுக விட்டால் ஆற்ற மாட்டாள்
இன்று என்னில் வாய் புகு நீராய்த் தரிக்க மாட்டாள் –
சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்
தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே–9-10-5-தன் பக்கல் ந்யஸ்த பரனானவன்று தொடங்கி -இவனை ஒழிய தனக்கு செல்லாது இருக்கச் செய்தே -இவனுடைய ருசியை வர்த்தித்து -சரீர அவசானத்திலே பரம பதத்தை கொடுத்த மஹா உபகாரகன் -தன் அழகைக் காட்டி அத்தாலே இவற்றுக்கு ருசி பிறக்கும் அளவும் அவசர பிரதீஷனாய் இருக்கும் படியைச் சொல்கிறது – மரணமானால்-தனக்கு அசத்தி இல்லை -இவனுக்கு கர்த்தவ்யம் இல்லை -இவன் ருசியைக் கடாக்ஷித்து இருக்கிற அத்தனை -இப்பாட்டில் –மரணமானால் -என்றத்தைக் கொண்டே கீழ்ச் சொன்ன நிரூபணம் எல்லாம் –
5-இம் மட உலகர் கண்ட தோடு பட்ட அபாந்த வாரா ஷகா போக்யா சுக அனுபாய பிரதி சம்பத்தியைக் காட்டி அதாவது-சரம உபாய உபேய பர்யந்தமாக -தாம் அருளிச் செய்த ஹித வசனம் கேட்டு –(சரம உபேயம் -அர்ச்சாவதாரம்) திருந்தினவர்களை ஒழிய -அல்லாதாரையும் விட மாட்டாத தம்முடைய கிருபையால் –இம் மட உலகீர் -9-2-7–என்று சம்சாரத்தில் அறிவு கேடர் ஆனவர்களுக்கு –கொண்ட பெண்டிர் -என்று தொடங்கி –சந்நிதியிலே ஸ்நேகிக்கும் அது ஒழிய காணாத போது ஸ்நேகம் ஓன்று இன்றிக்கே இருக்கிற பார்யா புத்ராதிகள் பந்துக்கள் அன்று —பிரளய ஆபத் சகனானவனே பரம பந்து என்றும் —துணையும் சார்வும் –பொருள் கை உண்டாய் –அரணமாவர் -என்ற பாட்டுகளாலே –அவனை ஒழிந்தார் தாங்கள் உபகாரரைப் போலே -பிரயோஜனம் உள்ள போது பந்துக்களாய் கொண்டாடி –ஆபத்து வந்தவாறே கண்ணற்று உபேஷிப்பார்கள்–ஆகையால் அவர்கள் ரஷகர் அல்லர் –தன்னுடைய ரஷணத்தில் அதி சங்கை பண்ணினாரையும் விஸ்வசிப்பித்து ரஷிக்கும் அவனே–அவதார முகத்தால் ஸூலபனாய் -ரஷண அனுரூபமான குணங்களை உடையவனாய் – -அவனை ஒழிய வேறு ரஷகன் இல்லை –ஸ்திரம் என்று தம்மைத் தாமே சம்மதித்து -என்று தொடங்கி -தங்களுக்கு போக்யைகளாக சம்பாதித்த ஸ்திரீகள் ஆபத்து வந்த வாறே உபேஷிப்பர்கள் —ஏக பிரகாரமாக சந்நிக்தனாய் இருப்பவன் அவனே- ஆன பின்பு -அவர்கள் போக்யர் அல்லர் —அவனே நிரதிசய போக்யன் என்றும் –இல்லை கண்டீர் இன்பம்-என்று தொடங்கி துக்கங்களிலே சில வற்றை ஸூகம் என்று பிரமிக்கும் இத்தனை போக்கி அவனை ஒழிய ஸூக ரூபமாய் இருப்பது ஓன்று இல்லை என்றும் – யாதும் இல்லை மிக்கு அதனில்-என்று தொடங்கி அவனை ஒழிய வேறு ஒன்றை ரஷகம் என்று பற்றினவர்கள் பண்டை நிலையும் கெட்டு அனர்த்தப் பட்டு போவர்கள் –ஆன பின்பு அவனை ஒழிய உபாயம் இல்லை என்றும் -இப்படி-அவனை ஒழிந்தாருடைய அபந்துவத்தையும் -அரஷகத்வத்தையும் –அபோக்யத்வத்தையும் —அஸூகத்வத்தையும் –அனுபாயத்வத்தையும் –அதுக்கு பிரதி கோடியான -அவனுடைய –பரம பந்துத்வத்தையும் –நிருபாதிக ரஷகத்வத்தையும் –நிரதிசய போக்யதையும் –ஸூக ரூபத்தையும் –நிரபேஷ உபாயத்வத்தையும் –தர்சிப்பித்து-இம் மட உலகருடைய அபாந்தவாதிகள் பிரதி சம்பந்தியை அவர்களுக்குக் காட்டி என்று வாக்ய யோஜன க்ரமம்–
(இம் மடவுலகர் கண்டதோடு பட்ட இத்யாதி, ப்ரதி ஸம்பந்தியைக் காட்டி) சரமோபாயோபேய பர்யந்தமாக தாமருளிச் செய்த ஹித வசநம் கேட்டுத் திருந்தனவர்களை யொழிய அல்லாதாரையும் விடமாட்டாத தம்முடைய க்ருபையாலே “இம் மடவுலகர்’ (திருவாய்மொழி 9-2-7 என்று ஸம்ஸாரத்தில் அறிவு கேடரானவர்களையும் பார்த்து, “கொண்ட பெண்டிர்’ (திருவாய்மொழி 9-1-1 என்று தொடங்கி த்ரவ்யாதிகளாலே ஸம்பாதிக்கப் பட்டு ஸந்நிதி யிலே ஸ்நேஹித்திருக்கு மதொழிய காணாத போது ஸ்நேஹமொன்று மின்றிக்கே மிருக்கிற புத்ரதாராதிகள் பந்துக்களன்று ப்ரளயாபத் ஸகனானவனே பரமபந்து வென்று துணையும் சார்வும் (திருவாய்மொழி 9-1-2) இத்யாதி “பொருள் கை” (திருவாய்மொழி 9-1-3) இத்யாதி, “அரணமாவர்” (திருவாய்மொழி 9-1-4) இத்யாதி, அவனை யொழிந்தார் தாங்கள் உபகாரகரைப் போலே ப்ரயோஜநமுள்ள போது பந்துக்களாய்க் கொண்டாடி ஆபத்து வந்தவாறே கண்ணற்று உபேஷிப்பர்கள். ஆகையாலே இவர்கள் ரக்ஷகரல்லர். நிர்ஹேதுகமாக ஆபத் ஸகனான க்ருஷ்ணனை யொழிய வேறு ரக்ஷகரில்லை. “சதிரம்’” (திருவாய்மொழி 9-1-5) இத்யாதி தங்களுக்கு போக்யைகளாக ஸம்பாதித்த ஸ்த்ரீகள் ஆபத்து வந்தவாறே உபேஷிப்பர்கள். ஏக ப்ரகாரமாக ஸ்நிக்தனா யிருப்பானவனே. ஆனபின்பவனே நிரதிஸய போக்யன். “இல்லை கண்டீர் இன்பம்” (திருவாய்மொழி 9-1-5) என்று துக்க மிஸ்ரமான சிலவற்றை ஸுக மென்று ப்ரமிக்கிற வத்தனை போக்கி அவனை யொழிய ஸுக ரூபமாயிருப்ப தொன்றில்லை. “யாதுமில்லை” (திருவாய்மொழி 9-1-9) இத்யாதி. இவனை யொழிய வேறே யொருவனை ரஷகமென்று பற்றினவர்கள் பண்டை நிலையுங் கெட்டு அநர்த்த ப்பட்டுப் போவர்கள்; ஆன பின்பு அவனை யொழிய உபாயமில்லை என்று அவனை யொழிந்த வற்றினுடைய அபாந்துத்வத்தையும், அரக்ஷகத்வத்தையும், அபோக்யத்வத்தையும், அஸுகத்வத்தையும், அநுபாயத்வத்தையும் அவர்களுக்கு உபதேஸித்து
எம்மிடர் கடிந்து இங்கு என்னை யாள்வானே இமையவர் தமக்கும் ஆங்கனையாய்
செம்மடல் மலரும் தாமரைப் பழனத் தண் திருப் புளிங்குடிக் கிடந்தாய்
நம்முடை யடியார் கவ்வை கண்டுகந்து நாம் களித்துள நலம் கூர
இம்மட வுலகர் காண நீ யொரு நாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே–9-2-7–அஞ்ஞரான சம்சாரிகள் அனுபவிக்கும் படி எங்கள் கண் வட்டத்தில் ஒரு நாள் இருந்து அருள வேணும் -நித்ய ஸூரிகளுக்கு சதா தர்சனமான விஷயம் நீ ஒரு நாள் எங்கள் கண்ணுக்கு விஷயமாய் இருந்தால் ஆகாதோ -உன்னுடைய தர்சனம் அதிக்ருதாதிகாரமாக வேணுமோ –
கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்
கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை
எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்
தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே–9-1-1-எல்லாருடைய பந்துத்வமும் சோபாதிகம் ஆகையால் -ஆபத் சகனும் நிருபாதிக பந்துவான எம்பெருமானையே பற்றி உஜ்ஜீவிக்க வேணும் -என்கிறார்-அடியோமாய் உஜ்ஜீவிக்கை ஒழிய நம்மதாய் அவனுக்கு கொடுக்க வேண்டுவது ஒன்றும் இல்லை -சேஷத்வத்தை இசையும் அத்தனை -சேஷத்வம் ஸ்வரூபம் ஆகையால் அத்தை அறிகை உஜ்ஜீவனம் -சேஷத்வத்தை இழக்கை இறே நாசமும்-இல்லை கண்டீர் துணையே -வேறே துணை உண்டாய் இருக்க இவனைப் பற்றச் சொல்லுகிறேன் அல்லேன் -இவனைப் பற்றி ஸ்வரூபம் பெறுதல் -இல்லையாகில் இல்லையாம் அத்தனை -அந்வயத்தாலே சாதித்து வ்யதிரேகத்தாலே த்ருடீ கரிக்கிறார் –
துணையும் சார்வும் ஆகுவார் போல் சுற்றத்தவர் பிறரும்
அணையவந்த வாக்கம் உண்டேல் அட்டைகள் போல் சுவைப்பர்
கணை யொன்றாலே யேழ் மராமும் எய்த எம் கார் முகிலை
புணை என்று உய்யப் போகல் அல்லால் இல்லை கண்டீர் பொருளே-9-1-2-உபகாரகரைப் போலே இருந்து ஸ்வ பிரயோஜனங்களையே தலைக் கட்ட நினைக்குமவர்களை ஒழிய -நிர்ஹேதுகமாக ஆபத்சகனைப் பற்றுங்கோள் -என்கிறார்-ஆகுவார் போல்-தாங்கள் அபந்துக்கள் ஆனபடியே கடக்க நிற்பதும் செய்யாதே – ரக்ஷகர் என்று பிரமிக்கும் படி வர்த்திப்பர்கள் –-சுற்றத்தவர் பிறரும்-பந்துக்களோடு வாசி இன்றிக்கே –அணைய வந்த வாக்கம் உண்டேல்-கைக்கு எட்டின சம்பத்து உண்டாகில் -இவன் பக்கலிலே ஒரு பிரயோஜனம் தங்களுக்கு உண்டாம் என்று தோற்றி இருக்கில் என்னுதல் -தங்கள் பக்கலிலே இவனுக்கு ஒரு பிரயோஜனம் உண்டு என்று தோற்றி இருக்கில் என்னுதல் –
பொருள் கையுண்டாய்ச் செல்லக் காணில் போற்றி என்று ஏற்றி எழுவர்
இருள் கொள் துன்பத்தின்மை காணில் என்னே என்பாருமில்லை
மருள் கொள் செய்கை யசுரர் மங்க வடமதுரைப் பிறந்தார்க்கு
அருள் கொள் ஆளாய் யுய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரணே-9-1-3-எம்பெருமானை ஒழிய மற்று உள்ளார் எல்லாம் பிரயோஜனம் உள்ள போது பந்துக்களாய் கொண்டாடி -இவனுக்கு ஆபத்து வந்தால் பார்ப்பாரும் இல்லை -ஆன பின்பு நிருபாதிகமாக எல்லாருக்கும் ஆபத் சகனாய் இருக்க கிருஷ்ணனையே பஜியுங்கோள் -அவனை ஒழிய வேறு ரக்ஷகர் இல்லாது -என்கிறார் –என்னே என்பாருமில்லை-ஐயோ என்ன கடவாரும் இல்லை -என்று சீயர் அருளிச் செய்வர் -பிள்ளை திரு நறையூர் அரையர் அர்த்தித்தவனுக்கு இட்டே தரித்ரனாய் -இவனுடைய சர்வஸ்வத்தையும் கொண்டு சம்ருத்தரானவர்கள் –என் என்ற மாத்திரத்திலே இவனுடைய பந்து என்று ஜீவிக்கலாய் இருக்குமாகில் அதிலும் லோபிகளாய் ஓர் இன் சொல்லுச் சொல் சொல்லார் -என்பர் –
அரணம் ஆவர் அற்ற காலைக்கு என்று என்று அமைக்கப் பட்டார்
இரணம் கொண்டு தெப்பர் ஆவர் இன்றி இட்டாலும் அக்தே
வருணித்து என்னே வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
சரண் என்று உய்யப் போகல் அல்லால் இல்லை கண்டீர் சதிரே–9-1-4-சிலரை ஆபத்சரென்றே அர்க்காதிகளாலே நெடு நாள் ஆஸ்ரயித்து வைத்தால் -ஆபத்து வந்தவாறே கண்ணற்று உபேக்ஷிப்பர் -நிர்ஹேதுகமாக அவன் வந்து அவதரித்து ஆபத்சகானான வனே ஆஸ்ரயணீயன் என்கிறார் –கைமுதல் அற்ற அன்றைக்கு ரக்ஷகனாவான் ஒருவன் வேணும் என்று இயற்றி உள்ள காலத்திலே பச்சை இட்டு ஆஸ்ரயித்து -தனக்கு அபாஸ்ரயமாக சமைத்து வைத்தவர்கள் -அவர்கள் ஆபத்துக்கு உதவும்படி என் என்னில் – இரணம் கொண்டு தெப்பர் ஆவர்-முன்பு பச்சை கொண்டதுவும் கடவிய தனம் கொண்டாராய் -ஆபத்து வந்தவாறே உபேக்ஷித்து க்ருதக்நராயப் போவார்கள் –-தெப்பர் ஆவர்-நம்மத்தை நாம் கொண்டோம் -என்று இருக்கும் புல்லியராவர்–இன்றி இட்டாலும் அக்தே-பச்சை இட்டு ஆஸ்ரயியா விட்டாலும் ஆபத்து வந்தால் கை விடுவாரை கிடைக்கும் –ஆபத்து வந்தால் -பொகட்டுப் போகைக்கு பச்சை இட வேண்டாவே -அவர்கள் தாங்கள் நடுவே முடிந்து இவர்களுக்கு உதவாதே போனாலும் பலம் அதுவே என்றுமாம் –-வருணித்து என்னே-வ்யர்த்த கதையை பரக்க சொல்லுகிறதுக்கு என்ன பிரயோஜனம் உண்டு -க்ருதக்நரான சம்சாரிகள் படியை அனுசந்தித்து என்ன பலம் உண்டு
சதுரமென்று தம்மைத் தாமே சம்மதித் தின்மொழியார்
மதுரபோகம் துற்றவரே வைகி மற்றொன்றுறுவர்
அதிர்கொள் செய்கை யசுரர் மங்க வடமதுரைப் பிறந்தார்க்கு
எதர் கொள் ஆளாய் யுய்யல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே–9-1-5-தங்களை பெறா விடில் தரிக்க மாட்டாத படி ஸ்நிக்த்தை களான ஸ்த்ரீகளாலே ஆபத்துக்கள் வந்தால் இகழப் படுவர் -ஆனபின்பு என்றும் ஏக பிரகாரமாக ஸ்நிக்தனான எம்பெருமானை ஆஸ்ரயிங்கோள் -என்கிறார் –சதிராக வாழா நின்றோம் என்று -இருந்ததே குடியாக -எல்லாரும் தம்மை இப்படி இ றே நினைத்து இருப்பது – தம்மைத் தாமே-சம்மதித்து -தங்களை தாங்களே இசைந்து -இயற்றி யுடையனானவன் -நம்மை சதிரன் என்று அங்கே நினைப்பிடு -என்னும் -இவ்வசதஸ்ய ப்ரவ்ருத்திக்கு வேறு சஹகரிப்பார் இல்லாமையால் தாமே மேல் எழுத்து இட்டுக் கொடு வர வேணும் –-இன் மொழியார்-இனிய பேச்சை யுடையவர்களுடைய –அகவாய் மயிர்க்கத்தியாய் இருக்க பேச்சில் இனிமையாலே வசீகரிப்பர்கள் –-மதுர போகம் துற்றவரே-மதுரமான போகங்களை அவர்களைக் கொண்டு நெருங்க புஜித்தவர்களே-வைகி மற்றொன்றுறுவர்-போக யோக்யதை போனவாறே அவர்களால் த்யஜிக்கப் படுவார்கள் -போக யோக்யதையான யவ்வனமும் கை தொடுமானமான அர்த்தமும் மாண்டாலும் இவனுக்கு ச்ரத்தை மாறாது இறே -இவன் மேல் விழ அவர்கள் நிஷேதிக்க இவன் படும் எளிமைகளை வாயாலே அருளிச் செய்ய மாட்டாமையாலே மற்று ஓன்று -என்கிறார்
யாதும் இல்லை மிக்கதனில் என்று என்று அது கருதி
காது செய்வான் கூதை செய்து கடை முறை வாழ்க்கையும் போம்
மாதுகிலின் கொடிக் கொள் மாட வடமதுரைப் பிறந்த
தாதுசேர் தோள் கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரணே–9-1-9–எம்பெருமானை ஒழிய வேறு ஓன்று ரக்ஷகம் உண்டு என்று பற்றினவர்கள் -பண்டு நின்ற நிலையும் கெட்டு அநர்த்தப் பட்டு போவார்கள் -ஆனபின்பு இவன் போக்கி சரணம் இல்லை என்கிறார் –பகவத் வ்யதி ரிக்தமாய் இருப்பது ஒன்றைப் பற்றி இது ஒழிய வேறு ரக்ஷகமாய் இருபத்தொரு ஒன்றும் இல்லை என்று சொல்லி அத்தை ரக்ஷகமாகப் பற்றி -சமர்த்தோ த்ருச்யதே கச்சித -என்கிற பிரதிபத்தியை அதிலே வேணும் என்று பண்ணி இருக்கை – காது செய்வான் கூதை செய்து-காது பெருக்கப் புக்கு பண்டு உள்ள யோக்கியதையும் கெடுத்து கூதை யாக்கினால் போலே கடை முறை வாழ்க்கையும் போம்-தண்ணிய முறையான வாழ்க்கையும் அழியும் -ஆபத்தில் அது ரக்ஷகம் ஆகாது –அதின் பக்கலிலே ந்யஸ்த பரனாகையாலே தான் செய்து கொள்ளும் அத்தையும் இழக்கும் –தாதுசேர் தோள் கண்ணன் அல்லால்-வைஜயந்தி உள்ளிட்ட தோள் மாலைகளால் அலங்க்ருதமான கிருஷ்ணனை ஒழிய வேறு பிரயோஜனம் வேண்டாம் என்கை-இல்லை கண்டீர் சரணே-புறம்பு ரக்ஷகம் இல்லை கிடி கோள் –
மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர் க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ
குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன் வடமதுரைப் பிறந்தான்
குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே–9-1-7-பகவத் ஸமாச்ரயணீயத்தின் உடைய எளிமையையும் இனிமையையும் அருளிச் செய்கிறார் –மா நிலத்து -இதுக்கு அதிகாரிகள் சம்சாரத்திலே -இவ்வர்த்தத்துக்கு அண்ணியார் பரமபதத்தில் உள்ளார்கள் ஆகிலும் உபதேசத்துக்கு அதிகாரிகள் சம்சாரிகள் என்கை –எவ் உயிர் க்கும்-இது அதிக்ருதா அதிகாரம் அன்று -சர்வாதிகாரம் –
சிற்ற வேண்டா -ஆயாசிக்க வேண்டா -சிற்றுதல் -சிதறுதலாய் -பரக்க வேண்டா என்கை – சிந்திப்பே அமையும்–கண்டீர்கள் அந்தோ-யுக்தி நிரபேஷமாக சிந்தா மாத்திரமே அமையும் கிடி கோள் – அந்தோ-இவ்விலக்ஷண விஷயத்தை இழப்பதே -என்னுதல் -இது ஸூ லபம் என்றால் காற்கடைக் கொள்ளுகைக்கு உறுப்பாவதே என்னுதல் –குற்றம் அன்று-ஒரு நன்மை இல்லை யானாலும் ஓர் அநர்த்தத்தை விளையாதே -ப்ராதர்த்தே வேதி கிருஷ்ணேதி-இவ்வுபாயத்துக்கு பலம் இல்லை யானாலும் தானே பிரயோஜனம் போரும் என்கை – எங்கள் பெற்றத் தாயன்-வடமதுரைப் பிறந்தான்–ஆஸ்ரிதர்க்காக பசு மேய்க்கும் ஆயன் ஆனவனாக வடமதுரைப் பிறந்தவன் -என்னுதல் – குற்றமில் சீர் கற்று -ஹேய ப்ரத்ய நீகமான கல்யாண குணங்களை அப்யஸித்து என்னுதல் -பிறப்பிலும் சேஷ்டிதங்களிலும் புரை யற்று இருக்கை என்னுதல் –அஹம் வோ பாந்தவோ ஜாத – வைகல்-வாழ்தல் கண்டீர் குணமே–கற்பது ஒரு கால் –வாழ்ச்சி நித்தியமாய் இருக்கும் -வாழ்தல் கண்டீர் குணமே–வாழ்தல் கிடீர் இவ்வாத்மாவுக்கு யுக்தம் -அல்லாதவை எல்லாம் அப்ராப்தம் என்கை
6-மற்று ஓன்று கண்ணன் அல்லால் என்கிற வைகல் வாழ்தலான சித்தோபாயம்-அதாவது-
மற்று ஓன்று இல்லை சுருங்க சொன்னோம்- மா நிலத்து எவ் உயிர்க்கும் சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள்-என்று இதுக்கு மேல் சொல்லல் ஆவது ஓன்று இல்லை –-இது தன்னை ஸூக்ரகமாக சொன்னோம் –மகா பிருத்வியில் சகல ஆத்மாக்களுக்கும் இது தனக்கு பரக்க ஆயாசிக்க வேண்டா – சிந்தா மாத்ரமே அமையும் –கேளி கோள் -என்கையாலே – தனக்கு மேல் ஓன்று இன்றியே இருப்பதாய் ஸங்க்ரஹேன உபதேசிக்கலாய் – சர்வாதிகாரமாய் – வரண ஸூகரமுமாய் -இருக்குமதாய் –கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் -என்று மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்று கிருஷ்ணனை ஒழிய வேறு உபாயம் இல்லை என்கையால்- சித்தமாய் பரம சேதனமாய் சர்வ சக்தியாய் நிர் பயமாய்
ப்ரப்தமாய் சகாயாந்தர நிர பேஷமாய் இருக்குமதாகவும் சொல்லப் படுமதாய் வட மதுரை பிறந்தான் குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல்-என்கிற யாவதாத்மபாவியான -குண அனுபவத்துக்கு உடலான -சித்தோ உபாயத்தை உபதேசித்தும் –
(மற்றொன்று கண்ணனல்லால் என்கிற வைகல் வாழ்தலான ஸித்தோபாயம்)”மற்றொன்றில்லை சுருங்கச் சொன்னோம்”திருவாய்மொழி 9-1-7) என்று இதுக்கு மேலொன்று இன்றியிலே யிருப்பதாய் ஸம் ஷேபேண வுபதேஸிக்கலாம் படியுமாய் ஸர்வாதிகாரமுமாய் ஸ்வரூபாநுரூபமுமாய் ஸுகரமுமாய் நிரதிஸய போக்யமுமாய் “கண்ணனல்லா லில்லை கண்டீர் சரண்” (திருவாய்மொழி 9-1-9 என்று “மாமேகம் ஸரணம் வ்ரஜ” (கீதை 18-66) என்று திருத் தேர்த்தட்டிலே நின்றருளிச் செய்த க்ருஷ்ணனை யொழிய வேறு நிரபேக்ஷோபாயமில்லை. இவ்வுபாயந்தான் “வைகல் வாழ்தல் கண்டீர் குணம்” (திருவாய்மொழி 9-1-7) என்று யாவதாத்ம பாவி யநுபவம் என்று ஸித்தோபாயத்தை அவர்களுக்குபதேஸித்தும்–
7-அதில் துர் பல புத்திகளுக்கு மாலை நண்ணி காலை மாலை விண்டு தேனை வாடா மலர் இட்டு அன்பராம் சாங்க பக்தி – அதாவது- சக்ருதேவ ஹி சாஸ்தார்த்த க்ருதோயம் தார என்னரம் நராணாம் புத்தி தெவ்பல்யா துபாயாந்தர மிஷ்யதே –என்கிறபடியே அந்த சித்தோ உபாயத்தில் மகா விசுவாசம் பிறக்கைக்கு அடியான பாக்கியம் இல்லாமையாலே -இதர உபாய பரித்யாக பூர்வகமாக அதில் இழிகையில் விசுவாசம் இல்லாமை யாகிற புத்தி துர் பல்யம் உடையவர்களுக்கு – மாலை நண்ணி தொழுது எழுமினோ –காலை மாலை கமல மலர் இட்டு நீர் – விண்டு வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின் – தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின் –தனதன்பர்க்கு -என்று பக்தி யுக்தராய் கொண்டு சர்வ காலமும் புஷ்ப்யாதி உபகரணங்களாலே -அவனை சமாராதனம் பண்ணி அவன் பக்கலிலே பக்தி நிஷ்டர் ஆகுங்கோள் -என்று அங்க சகிதையான பக்தியை உபதேசித்தும்
அதில் அசக்தருக்கு தாள் அடையும் பக்தி அதில் துஷ்கரத்வம் -விளம்ப பயம் -ஆகிய வற்றால் அனுஷ்டிக்க சக்தர் அல்லாதவருக்கு – சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் -என்று நிவ்ருத்தி சாத்தியம் ஆகையாலே ஸூகரமாய் சர்வாதிகாரமுமாய்
சரீர அவசானத்திலே பல பிரதமுமான பிரபத்தியை வெளி இட்டும்–
(அதில் துர்பல புத்தி களுக்கு) “ஸக்ருதேவஹி ஸமாஸ்த்ரார்த்த,: தப்நாம் பயநா முக: நராணாம் புத்தி தெளர்பல்யாத் உபாயாந்தர மிஷ்யதே” என்று அந்த ஸித்தோ பாயத்தில் மஹா விஸ்வாஸம் பிறக்கைக் கடியான பாக்யமின்றிக்கே ஸாத்யங்களான உபாயாந்தரங்களில் ருசி குலையாமையாலே அவன் பல ப்ரதனாமோ என்று புத்தி தெளர்ப்பல்ய முடையார்க்கு (மாலை நண்ணிக் காலை மாலை விண்டு தேனை வாடா மலரிட்டு அன்பராம் ஸாங்க பக்தி) “மாலை நண்ணித் தொழுதெழுமினோ காலை மாலை கமல மலரிட்டு நீர்” (திருவாய்மொழி 9-10-1) “விண்டு வாடா மலரிட்டு நீரிறைஞ்சுமின்” (திருவாய்மொழி 9-10-3) “தேனை வாடா மலரிட்டு நீரிறைஞ்சுமின்” (திருவாய்மொழி 9-10-4) “தனதன்பர்க்கு” (திருவாய்மொழி 9-10-5) என்று நிரதிஸய ப்ரீதி யுக்தராய்க் கொண்டு ஸர்வ காலமும் புஷ்பாத் யுபகரணங்களைக் கொண்டு அவனை ஸமாராதநம் பண்ணி அவன் பக்கலிலே பக்தியைப் பண்ணுங்கோள் என்று அங்க ஸஹிதையான பக்தியை உபதேஸித்தும் (அதிலஸத்தர்க்குத் தாளடையும் ப்ரபத்தி) அதில் துஷ்கரத்வத்தாலே அநுஷ்டிக்க ஸக்தி இல்லாதார்க்கு “சரணமாகும் தனதாளடைந்தார்க்கெல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும்” (திருவாய்மொழி 9-10-5) என்று ஸர்வாதிகாரமுமாய் ஸரீராவஸாநத்திலே பலமுமான ப்ரபத்தியை வெளியிட்டும்
மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக்
காலை மாலை கமல மலர் இட்டு நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே–9-10-1-உங்களுடைய சகல துக்கங்களும் போம்படி திருக் கண்ண புரத்திலே நின்று அருளின எம்பெருமானை ஆஸ்ரயிங்கோள் -என்று இத் திருவாய் மொழியில் சொல்லுகிற ஆச்ரயணத்தை சங்க்ரஹேண அருளிச் செய்கிறார் –காலை மாலை – ஆஸ்ரயணீயத்துக்கு கால நியதி இல்லை -என்கிறது -ஆதி நடுவந்திவாய் -என்கிறபடியே சர்வ காலத்துக்கும் உப லக்ஷணம் –கமல மலர் இட்டு–சர்வ புஷ்ப்பங்களுக்கும் உப லக்ஷணம் -நீங்கள் விரும்பின பிராகிருத த்ரவ்யமே அமையும் என்கை –-நீர்-அதிகாரிகளும் முன்புத்தை நீங்களே யமையும் –
தொண்டீர் நும் தம் துயர் போக நீர் ஏகமாய்
விண்டு வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின்
வண்டு பாடும் பொழில் சூழ் திருக் கண்ணபுரத்து
அண்ட வாணன் அமரர் பெருமானையே–9-10-3-சாபலமுடைய நீங்கள் துக்கம் கெட உபய விபூதி உக்தனாய் திருக் கண்ண புரத்திலே நின்று அருளினவனை அநந்ய பிரயோஜனராய் கொண்டு ஆஸ்ரயிங்கோள் என்கிறார்-தொண்டீர் -ஆசாலேசமுடைய நீங்கள் என்னுதல் –அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று இருக்கும் நீங்கள் என்னுதல்-நும் தம் துயர் போக -துயரும் வ்ருத்தமாய் இறே இருப்பது -விஷய ப்ராவண்யத்தால் வந்த துக்கம் என்னுதல் -இறைஞ்சப் பெறாத தன்னுடைய விரஹத்தால் வந்த துக்கம் என்னுதல்-நீர் ஏகமாய்-நீங்கள் அநந்ய பிரயோஜனராய் -என்னுதல் -நீங்கள் எல்லாம் ஒரு மிடறாய் என்னுதல் –தொண்டர் என்கையாலே எல்லாரும் ஒரு மிடறு ஆகலாம் இ றே
விண்டு வாடா மலர் ரிட்டு நீர் இறைஞ்சுமின்—அலரத் தொடங்கின அளவாய் கழிய அலர்ந்து வாடாத பூ -செவ்விப் பூவைக் கொண்டு ஆஸ்ரயிங்கோள்
மானை நோக்கி மடப்பின்னை தன் கேள்வனைத்
தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்
வானை உந்தும் மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
தான் நயந்த பெருமான் சரண் ஆகுமே–9-10-4-தேனை -நிரதிசய போக்யமானவனை -இது இ றே நான் உங்களுக்குச் சொல்லுகிற வேப்பங்குடி நீர் –வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்-செவ்விப் பூவையிட்டு ஆஸ்ரயிங்கோள் -தேனையையும் செவ்விப் பூவையையும் சேர்க்கை போலே காணும் ஆஸ்ரயணம் ஆவது –
சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்
தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே–9-10-5-பக்தி யோகத்தால் அவனை ஆஸ்ரயிக்க ஷமர் இன்றிக்கே தன் திருவடிகளே உபாயமாகப் பற்றினார் திறத்து செய்து அருளும் படியை அருளிச் செய்கிறார் –மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்-தன் பக்கல் ந்யஸ்த பரனானவன்று தொடங்கி -இவனை ஒழிய தனக்கு செல்லாது இருக்கச் செய்தே -இவனுடைய ருசியை வர்த்தித்து -சரீர அவசானத்திலே பரம பதத்தை கொடுத்த மஹா உபகாரகன் -தன் அழகைக் காட்டி அத்தாலே இவற்றுக்கு ருசி பிறக்கும் அளவும் அவசர பிரதீஷனாய் இருக்கும் படியைச் சொல்கிறது – மரணமானால்-தனக்கு அசத்தி இல்லை -இவனுக்கு கர்த்தவ்யம் இல்லை -இவன் ருசியைக் கடாக்ஷித்து இருக்கிற அத்தனை -இப்பாட்டில் –மரணமானால் -என்றத்தைக் கொண்டே கீழ்ச் சொன்ன நிரூபணம் எல்லாம் –தனது அன்பர்க்கு அன்பாகுமே-தனக்கு ஸ்நேஹிகள் ஆனவர்கள் பக்கல் அதி பிரவணானாம் –அன்பாகுமே–அன்புடையன் என்று பிரிக்க ஒண்ணாத படி அன்பு தானே ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கை –
8-அதில் அசக்தருக்கு உச்சாரண மாத்ரம்- அதாவது உபாய பல்குத்வ பல கௌரவ விரோதி பூய ஸ்தவங்களாகிற சங்காத்ரயத்தாலே அதில் வ்யவசாயதுக்கு உடலான சக்தி இல்லாதார்க்கு –
திருக் கண்ண புரம் சொல்ல நாளும் துயர் பாடு சாராவே -என்று வசனத்தை பற்றாசாக பிடித்து அவன் திருத்திக் கொள்ளும் படியான உச்சாரண மாத்ரத்தை வெளி இட்டும் சர்வ உபாய சூன்யருக்கு இப் பத்தும் பாடி யிடும் தொண்டன் என்று உச்சாரணம் தனக்கும் தாமாக ஒரு பாசுரம் இட்டு சொல்ல ஷமர் அன்றிக்கே – கீழ் சொன்ன உபாயங்கள் எல்லா வற்றிலும் -அயோக்யராய் இருப்பார்க்கு – இப்பத்தும் பாடி யாடி பணிமின் அவன் தாள்களையே -என்று இத் திரு வாய் மொழியை பிரீதி பிரேரராய்க் கொண்டு பாடி அவன் திருவடிகளில் விழுங்கோள் என்று–ஸ்ரீ கீதாச்சர்யனைப் போலே அதிகார அனுகுணம் நெறி எல்லாம் உரைக்கிறார் ஒன்பதாம் பத்தில் ..-அதாவது ஸ்ரீ கீதோ உபநிஷதாச்சர்யன் தன்னுடைய பரம கிருபையால்–நெறி எல்லாம் எடுத்து உரைத்த –4-8-6-என்கிறபடியே சேதனருடைய ருசி அனுகுணமான உபாயங்கள் எல்லாவற்றையும் உபதேசித்தாப் போலே இவரும் பிராப்தி அணித்தவாறே சம்சாரிகள் ஒருவரும் இழக்க ஒண்ணாது என்கிற கிருபையால் எல்லாம் எடுத்து உரைத்து – அவ்வவருடைய அதிகார அனுகுணமாக உபாயங்கள் எல்லாம் உபதேசித்து அருளுகிறார் ஒன்பதாம் பத்தில் என்கை-
(அதிலஸக்தர்க்கு உச்சாரண மாத்ரம்) உபாய பல்குத்வம் பல கெளரவ விரோதி பூயஸ்த்வங்களாகிற ஸங்கா த்ரயத்தாலே அதில் வ்யவஸாயத்துக் கடியான ஸக்தி யில்லாதார்க்கு “திருக்கண்ணபுரம் சொல்ல நாளும் துயர் பாடு சாராவே” (திருவாய்மொழி 9-10-10) என்று உச்சாரண மாத்ரத்தை வெளியிட்டும் (ஸர்வோபாயர்க்கும் இப்பத்தும் பாடியிடும் தண்டனென்று) கீழ்ச் சொன்ன உபாயாங்க ளெல்லாவற்றிலும் அயோக்யராயிருப்பார்க்கு“இப்பத்தும் பாடியாடிப் பணிமின் அவன் தாள்களே” (திருவாய்மொழி 9-10-11 )என்று இத் திருவாய்மொழியை ப்ரீதி ப்ரேரிதராய்க் கொண்டு பாடி அவன் திருவடிகளிலே விழுங்கோளென்று கீதோபநிஷதா சார்யன் தன் பரம க்ருபையாலே“நெறி யெல்லாம் எடுத்துரைத்த” (திருவாய்மொழி 4-8-6) என்கிறபடியே ருச்யநுகுணமான உபாயங்கள் எல்லாவற்றையும் வெளியிட்டாற் போலே இவர் தமக்கு ப்ராப்தி அணித்தானவாறே ஸம்ஸாரிகள் இழக்க வொண்ணாதென்று பார்த்து அவ்வவருடைய அதிகாராநுகு ணமாந உபாயங்கள் எல்லாவற்றையும் வெளியிடுகிறார் என்கிறார்.
இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை
அல்லி மாதர் அமரும் திரு மார்பினன்
கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
சொல்ல நாளும் துயர் பாடு சாராவே –9-10-10—ப்ரீதி அதிசயத்தாலே மீளவும் ஸ்வலாபத்தைச் சொல்லி பக்தி -பிரபத்யாதி அனுஷ்டானங்களுக்கு ஷமர் அல்லர் ஆகில் திருக் கண்ண புரம் என்று வாயாலே சொல்ல-உக்தியாலேயே – ஸமஸ்த துக்கங்களும் போம் -என்கிறார் –திண்ணிதான மதிலை யுடைய திருக் கண்ண புரத்தை – –வாயாலே சொல்லவே -பக்தியில் இழிகைக்கு பரிகரமும் இன்றிக்கே -ப்ரபத்திக்கும் வியவசாயம் இல்லாதார் -திருக் கண்ண புரம் என்று வாயாலே சொல்ல -ஸமஸ்த துக்கங்களும் போம் –
பாடு சாரா வினை பற்று அற வேண்டுவீர்
மாட நீடு குருகூர்ச் சடகோபன் சொல்
பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே–9-10-11-நிகமத்தில் பிரதிபந்தகங்கள் சவாசனமாக போக வேண்டி இருக்கில் இத்திருவாய் மொழியை ப்ரீதி பூர்வகமாகக் கொண்டு அவன் திருவடிகளை ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –அநாப்தர் சொல்லிலும் விட ஒண்ணாத போக்யத்தை யுடைத்தான இப்பத்து -புஷ்ப்பம் பரிமளத்தோடே அலருமா போலே இசையோடக் கூடப் பாடின தமிழ் –ப்ரீதி பூர்வகமாகப் பாடி -இருந்த இடத்திலே இருக்க ஒட்டாதே ஆடி ப்ரீதி பிரேரித்தராய்க் கொண்டு அவன் திருவடிகளிலே விழுங்கோள் -இது அன்றோ நான் உங்களைக் குடிக்கச் சொல்லுகிற வேப்பங்குடி நீர் –
அறிவினால் குறையில்லா அகல் ஞாலத்தவர் அறிய,
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி,
குறிய மாண் உருவாகி, கொடுங் கோளால் நிலங்கொண்ட
கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறையிலமே.–4-8-6–கல்லில் துளை யுண்டாக்கினால் போலே சம்சாரிகள் அறியும் படி –-நெறி எல்லாம் எடுத்து உரைத்த-சேதன பேதத்தோ பாதி போறும் இ றே உபாய பேதமும் -கர்ம யோகம் முதலாக பிரபத்தி பர்யந்தமாக சகல உபாயங்களையும் வ்யக்தமாக உபதேசித்த படி-கர்ம ஞான பகுதிகள் -அவதார ரஹஸ்யம் புருஷோத்தம வித்யை -ஸ்வரூப யாதாம்யம் -விரோதி நிவ்ருத்திக்கு பிரபத்தி -ஆத்மாபிராப்திக்கு பிராப்தி -பகவல்லாபத்துக்கு பிரபத்தி -இவற்றை அடங்க விசத்தமாக அருளிச் செய்த-நிறை ஞானத்து ஒரு மூர்த்தி,நிறைந்த ஞானத்தை உடைய அத்விதீயமான ஸ்வரூபத்தை யுடையவன் –-ஞானாதிகன் சொன்னது இறே பிரமாணம் ஆவது -எல்லாருடைய ஞானத்துக்கும் அடியானை ஞான பூர்த்தியை யுடையவன் –
–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்