ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
சந்திரன் துன்பம் கொடுப்பதில் ஆச்சர்யம் இல்லையே-தாமரையை மூடுவித்து ஆம்பலை அலர்விக்குமே -வெளுத்த வளையை -விஷம் போல் -துன்பம் படுத்துவது வியப்போ தலைவனது மாலை பெறாது வருந்தும் தலைவி சந்த்ரனைக் கண்டு வருந்துதல் — உலகு அளந்தவன் உடைய ஸுலப்யம் ஸுசீல்யம் சொல்லும் பாசுரம்-ஓராயிரமாய் -9 -3-இதன் விவரணம்-மனமே யுன்னை வல்வினையேன் இரந்து கனமே சொல்லினேன் இது சோரேல் கண்டாய்-புனமேவிய பூம் தண் துழாய் அலங்கல்-இனமேதும் இலானை அடைவதுமே –9-3-5- -அங்கும் உண்டே-சீலம் எல்லையிலான் அடி மேல் அணி கோல நீள் குருகூர்ச் சடகோபன் சொல் மாலை யாயிரத்துள் இவை பத்தினின் பாலர் வைகுந்தம் ஏறுதல் பான்மையே –9-3-11- நிகம பாசுரத்தில் ஸுசீல்யம் பாடினது உண்டே அங்கும் உண்டே
சந்த்ரோதயத்தில் நோவு படுகிறாள் ஒரு பிராட்டி தன் நெஞ்சைக் குறித்து –சந்த்ரனுக்கு இங்கனே எளிய செயல்கள் செய்கை ஸ்வ பாவம் காண்- நீ இதுக்கு சோகியாதே கொள் -என்று ஆஸ்வசிப்பிக்கிறாள் –
இப்படியான பின்புடையாரும் ஆச்சர்யப்படும்படியான ஞான வைலக்ஷண்யத்தை யுடையவர்-இதுக்கு அநுரூபமான பகவத் அனுபவம் ஸித்தியாமையாலே தமக்கு உண்டான ப்ரகாஸமும் ( ஞானம் மதி சந்திரன் ) ப்ரதிகூலமான பிரகாரத்தை தலைவனான ஸர்வேஸ்வரனுடைய திருத்துழாய் மாலையிலே நசை பண்ணி சிதிலமான நெஞ்சைக் குறித்து சந்திரனுடைய விகாஸத்துக்கு ஆற்றாளாய்த் தலைவி வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-அவதாரிகை- சந்த்ர உதயத்திலே நோவு படுகிறாள் ஒரு பிராட்டி தன் நெஞ்சைக் குறித்து இச்சந்திரனுக்கு இங்கனே எளிய செயல் செய்கை ஸ்வபாவம் காண் இதுக்கு சோகியாதே கொள் -என்று ஆஸ்வஸி ப்பிக்கிறாள்
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-அவதாரிகை-இப்படியுள்ள ப்ரஹ்ம வித்துக்களில் இவருடைய பரிவால் வந்த ஸ்மரணம் பிரிவாற்றாத் தலைமகள் ஆக்க அப்போதே இவள் வளை கழலப் பண்ணும் வெண் திங்கள் உதிக்க அத்தைக் கண்ட இவருடைய நெஞ்சு ஐயோ என்று சோகிக்க அப்போதில் நையும் நீ வெண் திங்கள் நம் வளை கழலப் பண்ணுமத்துக்கு ஆச்சர்யப்படவும் சோகிக்கவும் வேண்டா-அவன் அல்ப விகாசகனும் அதிக சங்கோசகனும் காண் என்று விஷம் பரந்தால் போல் வியாபிக்கும் நிலவுக்குத் தளர்ந்தவளாய்த் தன் நெஞ்சுக்கு அருளிச் செய்கிறாள் இதில்
இடம் போய் விரிந்து இவ் உலகளந்தான் எழிலார் தண் துழாய்
வடம் போதினையும் மட நெஞ்சமே நங்கள் வெள் வளைக்கே
விடம் போல் விரிதல் இது வியப்பே வியன் தாமரையின்
தடம் போதொடுங்க மெல் ஆம்பல் அலர்விக்கும் வெண் திங்களே – -76 – வடம் போதில் -பாட பேதம்-தலைவனது மாலை பெறாது வருந்தும் தலைவி சந்த்ரனைக் கண்டு வருந்துதல் —
இடம்போய் விரிந்து–எல்லாவிடங்களிலும்போய் வளர்ந்து
இ உலகு அளந்தான்–இவ்வுலகத்தை அளந்து கொண்டவனுடைய
எழில் ஆர்–அழகு நிறைந்த
தண்–குளிர்ந்த
துழாய்போது வடம்–திருத்துழாய் மலர் மாலையைப் பெறும் பொருட்டு
இனையும்-வருந்துகிற
மட நெஞ்சமே–பேதைமையுடைய மனமே!
வியல் தாமரையின் தடபோது–சிறந்த பெரிய தாமரைமலர்
ஒடுங்க–குவிய
மேல் ஆம்பல்–புல்லிய ஆம்பலை
அலர்விக்கும்–அலரச் செய்கிற
வெள் திங்கள்–வெள்ளிய சந்திரன்
நங்கள் வெள்வனைக்கே வடம் போல் விரிதல் இது–நமது வெளுத்த வளைகளைக் கழலச்
செய்வதற்காகவே விஷம்போல ஒளி பரப்புதலாகிய இது
வியப்பே–ஓர் ஆச்சரியமோ?
ஓரா நீர் வேண்டினவை உள்ளதெல்லாம் செய்கின்றேன்
நாராயணன் அன்றோ நான் என்று –பேருரவைக்
காட்ட அவன் சீலத்தில் கால் தாழ்ந்த மாறன் அருள்
மாட்டி விடும் நம்மனத்து மை–83-உம்முடைய பேற்றுக்கு நீர் பிரார்த்திக்க வேணுமோ –நாமே பிரார்த்திதுச் செய்ய வேண்டும்படி அன்றோ நமக்கு யுண்டான ஸ்ரீ நாராயணத்வ பிரயுக்தமான ரக்த ஸ்பர்சம் – ஆன பின்பு நாமே உம்முடைய சர்வ அபேஷிதங்களையும் செய்யக் கடவோம் -என்று
அவன் அருளிச் செய்ய தனது பெருமை பாராதே-எனது சிறுமை பாராதே-இப்படி அருளிச் செய்வதே
இது ஒரு சீலம் இருக்கும் படியே -என்று அவனுடைய சீல குணத்திலே வித்தராகிற ஓர் ஆயிரத்தில் அர்த்தத்தை-ஓரா நீர் வேண்டினவை -இத்யாதியாலே அருளிச் செய்கிறார்-சீல குணத்திலே ஆழம் கால் பட்டு அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் அருள் உண்டு – கிருபை –அந்த கிருபை –மாட்டி விடும் நம் மனத்து மை – நம்முடைய அஞ்ஞானத்தை நிச்சேஷமாகப் போக்கும் –
இடம் போய் விரிந்து--பள்ளம் உள்ள இடம் எங்கும் வெள்ளம் பரக்குமா போலே –அவகாசம் உள்ள இடம் எங்கும் போய் வளர்ந்து – இந்த லோகத்தை அளந்து கொண்டவனுடைய –எழிலார் தண் துழாய்-உண்டு —இதுக்கு எல்லாமாக முதலியாராக இட்ட மாலை –அவன் திரு மேனியிலே ஸ்பர்சத்தாலே அழகியதாய் குளிர்ந்து இருந்துள்ள திருத் துழாய் மாலையிலே செவ்வியைப் பெற வேணும் என்று ஆசைப்பட்டு
பெறாமையால் தளரா நிற்பதாய் –அதன் அருமை -சொன்னால் கேளாதே -பற்றினத்தை விடாதே -கிடக்கிற நெஞ்சே -(மட நெஞ்சமே)-வடம் என்று மாலையாய் போது என்று புஷ்பமாய் – இத்தாலே செவ்வியைச் சொல்லி அதற்க்கு ஆசைப் படுகிறாள் என்றது ஆய்த்து –நங்கள் இத்யாதி –நம்முடைய சங்கு வளையின் மேலே விஷம் போலே பரக்கும் இது ஒரு விஸ்மயமோ –வெள் வளைக்கே –தம் தாமுக்கு பிராப்தியாய் உள்ள இடங்களிலே நலிகை முறை இறே –தானும் வெண் திங்களாய் –
இதுவும் வெள் வளை யாகையாலே –நிறத்திலே சாம்யம் கொண்டு -நலியலாம் இறே –வியன் தாமரை இத்யாதி –வாசி அறியாதார் என் செய்யார்கள் –விஸ்மயநீயமான தாமரையினுடைய பெருத்த பூவானது ஒடுங்கவும் – ஷூத்ரமுமாய் புல்லிதமுமான ஆம்பல் அலரும்படியாகவும் பண்ணுமதான வெண் திங்கள் –நங்கள் வெள் வளைக்கே விடம் போலே விரிதவிது வியப்பே –முதலியாராக -ஸ்வாமி ஆகைக்காக-
சந்திரன் தாமரையை வருத்தி மூடச் செய்து ஆம்பலை அலர்த்துவது போலே -தாமரைக்கு தலைவன் ஸூரியன் மறைந்த இடத்தில் தலைவனை பிரிந்த என்னை வருத்தி கை வளைகள் கழல பண்ணுவதில் ஆச்சர்யம் இல்லையே-வடம் போதினையும்-போது வடம் இனையும் -மாலையைப் பெரும் பொருட்டு வருந்துகிற –வடம் போதில் நையும் என்றும் பிரித்து அதே பொருள் விடம் போல் விரிதல் -நம்மை கொலை செய்யவே தோன்றியது என்றபடி-
ஸ்வாபதேசம் – பேறு பெறாத நிலையில் தமக்கு உண்டான விவேகமும் பிரதிகூலமாய் வருத்தும் தன்மையை ஆழ்வார் திரு உள்ளத்தை நோக்கி கூறுதலாம்-இடம் போய் விரிந்து இவ் உலகளந்தான் எழிலார் தண் துழாய்-வடம் போதினையும் மட நெஞ்சமே-சர்வ ஸூலபனானவனுடைய
போக்யதையில் ஈடுபட்டு பூர்ண அனுபவம் கிடைக்காமல் வருந்தும் இள மனமே – வியன் தாமரையின்-தடம் போதொடுங்க மெல்லாம் பலலர்விக்கும் வெண் திங்களே-சிறந்த பொருள்களை வெளிக் காட்டாமல் இழிந்த பொருள்களை வெளிக்காட்டுகிற விவேகம்-நங்கள் வெள் வளைக்கே-விடம் போல் விரிதல் இது வியப்பே –நம் சுத்தமான அடிமைத் தன்மையை குலைக்க பரப்பும் இது ஆச்சர்யமோ –நாயகனது மாலைபெறாமல் வருந்துகின்ற நாயகி மதிக்கு இரங்கி நெஞ்சொடு கூறல் இது.
எல்லாவிடங்களிலுஞ் சென்று வளர்ந்து இந்தவுலகத்தை அளந்து கொண்டவனான ஸர்வேச்வரனுடைய திருத்துழாய் மாலையைப் பெறும்பொருட்டு வருத்திக் கிடக்கிற நெஞ்சமே! சந்திரன், சிறப்பில்லாத ஆம்பலினிடத்து அன்பு வைத்து அதற்கு மகிழ்ச்சி தந்து சிறந்த தாமரையை அழிக்கும் அற்ப குண முடையவனாதலால் அவன் நமது அழகிய கைவளைகளைக் கழலச் செய்தல் ஒரு வியப்பன்று என்கிறாள். இது சந்திரோபாலம்பம். -தாமரைக்குத் தலைவனான ஸூர்யன் கண் மறைந்த விடத்து அத்தாமரையை வருத்துகிற இவனுக்கு, தலைவனைப் பிரிந்த எம்மை வருத்துதல் இயல்பே என்றவாறு.-வடம்போதினையும் = ‘வடம்போது இனையும்’ என்று பிரிப்பதன்றி, வடம்போதில் நையும் எனவும் பிரிக்கலாம்; பொருள் ஒன்றே.–மடநெஞ்சமே! = தூலபமான பொருளில் பற்றுவைத்ததோடு அப்பற்றை என்றும் விடமாட்டாமல் வீணே வருந்துகின்ற நெஞ்சமே! என்றவாறு, ‘விடம்போல் விரிதல் என்றது- விஷம் கொலைசெய்வது போல நம்மைக் கொலை செய்வதற்காகவே வந்து தோன்றல் என்றபடி;-ஆகவே இவ்வுலமை- வருத்துந் தன்மை பற்றியதேயன்றி நிறம்பற்றியதன்று. வியப்பே = ஏ- எதிர்மறை; வியப்பன்று என்றவாறு.–இதற்கு உள்ளுறை பொருளாவது– பேறு பெறாத நிலையில் தமக்குண்டான விவேகமும், பிரதிகூலமாய் வருத்துந் தன்மையை-ஆழ்வார் தமது திருவுள்ளத்தை நோக்கிக் கூறுதலாம். (இடம் போய் + மடநெஞ்சமே!) ஸவஸகூலபனான ஸர்வேச்வரனுடைய
போக்யதை முதலியவற்றறில் ஈடுபட்டுப் பூர்ணாநுபவங் கிடையாமை பற்றி வருத்தம் இளமனமே!
(வியல் தாமரையின் தடம்போது ஒடுங்க மெல்ஆம்பல் அலர்விக்கும் வெண்திங்கள்) சிறந்த பொருள்களை வெளிக்காட்டாமல் இழிந்த பொருட்களை வெளிக்காட்டுகிற விவேகம். (எங்கள் வென்வளைக்கே விடம்போல் விரிதல் இது வியப்பே) நமது சுத்தமான அடிமைத் தன்மையையும் குலைப்பதாகப் பரவுகிற விது ஆச்சரியமோ! என்று ஆழ்வார் திருவுள்ளத்தில் க்லேசத்தோடு அருளிச் செய்தராயிற்று.
இடம் போய் விரிந்து இவ் உலகளந்தான் எழிலார் தண் துழாய் வடம் போதினையும் மட நெஞ்சமே– அவகாசம் யுள்ள இடம் எல்லாம் சென்று பரம்பி இந்த லோகத்தை அளந்து கொண்டவனுடைய வெற்றி அழகாலே புனையப்பட்ட செவ்வித் திருத்துழாயினுடைய தொடையு ண்ட பூந்தாரிலே சிதிலமாய்
பற்றிற்று விடமாட்டாமல் ஈடுபடா நிற்கிற நெஞ்சமே-வடம் -என்று தொடை-–நங்கள் வெள் வளைக்கே விடம் போல் விரிதல் இது வியப்பே வியன் தாமரையின்-தடம் போதொடுங்க மெல் ஆம்பல் அலர்விக்கும் வெண் திங்களே – வியன் தாமரையின் தடம் போது ஒடுங்க மெல் ஆம்பல் அலர்விக்கும் வெண் திங்கள்-நாங்கள் வெண் வளைக்கே விடம் போலே விரிதல் இது வியப்பே என்று அந்வயம்-பெரிய வைலக்ஷண்யத்தை யுடைத்தான தாமரையினுடைய இடமுடைத்தான பூவானது மொட்டிக்கும்படி அல்பமான ஆம்பலை அலர்விக்கும் வெளுத்த சந்த்ரனானவன் நம்முடைய வெளுத்த வளைக்கு விஷம் போலே பரம்புகிற இது ஆச்சர்யமோ என்று நெஞ்சைக் குறித்து இரங்கி உரைத்தாள் யாயிற்று–இத்தால் ஸர்வ ஸூலபனாய் ஸூ சீலனான ஸர்வேஸ்வரனுடைய சேஷித்வ போக்யத்வாதி குண உன்மேஷத்திலே ஈடுபட்ட திரு உள்ளத்தைக் குறித்து நிரதிசயமான போக்ய விகாஸத்தை ஸங்கோசிப்பித்து அர்வா சீத விகாஸம் பண்ணிப் போருகிற இந்தப் ப்ரகாஸ விகாஸமானது
நம்முடைய கையில் ஸூத்த ஸ்வ பாவமான மினுக்கத்தையும் குலைப்பதாக ப்ரசரிக்கிற இது ஆச்சர்யமோ என்று வெறுத்து உரைத்தாள் ஆயிற்று –
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம்-இடம் போய் விரிந்து பள்ளமுள்ள இடம் எங்கும் போய் வெள்ளம் பரக்குமா போலே அவகாசமுள்ள இடம் எங்கும் பரந்து-இவ் உலகளந்தான் எழிலார் தண் துழாய்-இந்த லோகத்தை அளந்து கொண்டவனுடைய எழிலார் தண் துழாய் யுண்டு இதுக்கு எல்லாமாக முதலியாய் இட்டமவை அவன் திருமேனியிலே ஸ்பர்சத்தாலே அழகியதாய்க் குளிர்ந்து இருந்துள்ள திருத்துழாய்-வடம் போதினையும் மட நெஞ்சமே-வடமாகிற பூவை இச்சித்துப் பெறாமல் சிதிலமாய் இருக்கிற திருத்துழாய் மாலையில் செவ்வியைப் பெற வேணும் என்று ஆசைப்பட்டுப் பெறாமையாலே தளரா நிற்பதாய் அதில் அருமை சொன்னால் கொள்ளாதே பற்றிற்று விடாதே கிடக்கிற நெஞ்சே–நங்கள் இத்யாதி-நம்முடைய சங்கு வளையின் மேலே விஷம் போலே பரக்கும் இது ஒரு விஸ்மயமோ-வெள் வளைக்கே விடம் போல் விரிதல் இது வியப்பே-தம் தாமுக்கு பிராப்தி யுள்ள இடங்களிலே நலிகை முறைமை இறே தானும் வெண் திங்களாய் இதுவும் வெள் வளையாகையினாலே நிறத்தில் ஸாம்யம் கொண்டு நலியலாம் இறே-வியன் தாமரையின் தடம் போதொடுங்க மெல்லாம் பலலர்விக்கும்
வாசி அறியாதார் என் செய்யார்-விஸ்மய நீயமாய் இருந்துள்ள தாமரையினுடைய பெருத்த பூவானது ஒடுங்கும்படியாகவும் ஷூத்ரமாய்ப் புல்லிதான ஆம்பல் அலரும்படியாகவும் பண்ணும்படியான-வெண் திங்களே –வெள் வளைக்கே விடம் போல் வருமிது வியப்பே-
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-வியாக்யானம்–இடம் போய் விரிந்து இவ் உலகளந்தான் எழிலார் தண் துழாய் வடம் போதினையும் மட நெஞ்சமே-அவகாசம் உள்ள இடம் எல்லாம் சென்று பரம்பி இந்த லோகத்தை அளந்து கொண்ட அவனுடைய விபூதி த்வய ஆதி ராஜ்ய அர்ஹமான செவ்வித் திருத்துழாய்த் திருமாலைக்குஅழகு பெறுத்தும் குஸூ மங்களில் பாடிய ஆசைப்பட்டு அது கிடையாமையாலே நைந்து இருக்கிற எனக்கு பவ்யமான நெஞ்சமே அவன் துஸ் ஸ்வ பாவத்தைக் கேளாய்–வியன் தாமரையின் தடம் போதொடுங்க மெல்லாம் பலலர்விக்கும் வெண் திங்களே –
இந்த வெளுத்த சந்த்ரனான இவன் விஸ்மய நீயமும் விசாலமுமான தடாகங்களில் யுள்ள கமலங்கள் எல்லாம் முகிளிதமாம் படி அதி ம்ருதுவும் அதி அல்பமுமான ஆம்பல்களை விகசிப்பிக்குமவன் அன்றோ-ஏவம் பூதன் நங்கள் வெள் வளைக்கே விடம் போல் விரிதல் இது வியப்பே நம்முடைய வளைகள் கழலுமதுக்குத் தன் நிலவால் விஷம் போலே விஸ்த்ருதனாமது இது நமக்கு ஓர் விஸ்மயமோ-ஆளும் பரமன் -திருவாய் -3-7-2-என்றும்-அளிக்கும் பரமன் -திருவாய் -3-7-6-என்றும்
பேர் பெற்ற நம் இறைவன் நமக்குத் தன் எழிலார் தண் துழாய் வடத்தைத் தந்தால் நாம் நையோமே
அப்போது நம் வளை கழலப் பண்ண வல்லவன் அல்லனே என்கிறாள் —
ஸ்வாபதேசம்-இத்தால் -திரு வுலகு அளந்து அருளின போது சாத்தின அச்செவ்வி மாலை
இப்போது பெற வேணும் என்று ஆசைப்பட்டுப் பெறாமையாலே அநுகூல பதார்த்தங்கள் அடைய பாதகமான படியைச் சொல்லுகிறது–
தாத்பர்யம்--இந்நாயகி திருவிக்ரமனாக எங்கும் ஆக்ரமித்த -திருவிக்ரமன் –புருஷோத்தமன் அணிந்த திருத்துழாய்க்கு ஆசைப்பட்டு கிடைக்காமல் தளர்ந்து இருக்க-அதுக்கும் மேலே சந்திரனும் வந்து நலிய
அது கிடைக்காமல்-கிடைக்க அரிது என்று பலவாறு உரைக்கிலும் கேளாமல் பிடிவாதமாக நெஞ்சு
அதிலேயே அபி நிவேசம் மிக்கு இருக்க-சந்திரனும் இந்த சமயத்தில் ‘வெளுத்த வளை என்று -சஜாதீய பதார்த்தம் -என்று நலிய-வருத்தம் படும் விஸ்லேஷ சந்திரன் நலிவது ஆச்சர்யமோ-தாமரையை மூடப் பண்ணும் -மகான்களை நலிய பண்ணுவதுக்கு த்ருஷ்டாந்தம்-ஆம்பல் மலரை அலர்விக்கும் -தாழ்ந்தவர்களை உயர்த்தும் -ஸ்வ பாவன் அன்றோ -ஆகவே நம்மை நலிவதில் ஆச்சர்யம் இல்லையே -என்கிறாள்
9-3-ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்-ப்ரவேஸம்-
நீர் இங்கனே விரும்பிக் கேட்க வேண்டுமோ-நம்முடைய குடல் துவக்கை அறியீரோ -என்ன
அதனை-நினைந்தும் சொல்லியும் இனியர் ஆகிறார் –
நாராயணனே நங்கள் பிரான் -என்றத்தை கடாக்ஷித்து சுருக்கமாக பிரவேசம் அருளிச் செய்தார் –
கூவுதல் வருதல் செய்யாய் -என்று வேண்டிக் கொண்டார் மேல் –யார் வேண்டிக் கொள்ள வேண்டியதை யார் வேண்டிக் கொள்ளுகிறார் –
உம்முடைய லாபத்துக்கு நாம் வேண்டிக் கொள்ளும்படி அன்றோ-உம்மோடு நமக்கு உண்டான இரத்த சம்பந்தம் –குடல் துவக்கு –
ஆனபின்பு நீர் விரும்பியவை அனைத்தையும் செய்யக் கடவோம்-நீர் வெறுக்க வேண்டா -என்று சமாதானம் செய்தான் –
இவரும் சமாதானத்தை அடைந்தார் –
மையல் ஏற்றி மயக்க உன் முகம் மாய மந்த்ரம் தான் கொலோ-நாச்சியார் திரு மொழி -2-4-என்னக் கடவது இறே-
ஸ்ரீ கௌசல்யார் ஒரே பிள்ளையை உடையாளான நாம் உம்மைப் பிரிந்து தனி இருக்க மாட்டேன்-கூட வருவேன் இத்தனை -என்று பின் தொடர-
புரிந்து பார்த்து -அம்மையீர் நீர் என்னைப் பின் தொடருகிற இடம் தர்மத்துக்கு குறைவு வரும் காண் -என்று
முகத்தை பார்த்து ஒரு வார்த்தை அருளிச் செய்ய-மீட்பதற்குப் போன இவர் மங்களா சாசனம் செய்து மீண்டாரே அன்றோ –
இப்படி அன்றோ -அவனுடைய பார்வைகளும் -மையல் ஏற்றி -வார்த்தைகளும் -பெருமாள் வார்த்தைகள் -இருக்கும்படி –
அவன் வார்த்தை சொன்னால் பின்னை அவன் வழியே போக வேண்டும்படியாய் அன்றோ இருப்பது –அம்மான் பொடி போலே அன்றோ –
இதே போலே தான் ஸ்ரீ சீதா பிராட்டி வார்த்தை கேட்டு -பெருமாள் உடன் கூட்டி சென்றார் -இதுவும் அவனுக்கு இவள் போட்ட அம்மான் பொடி –
ஆக –
அவன் நாராயணனாய் இருக்கிற இருப்பை நினைந்தார் –நாராயணன் அவனே
அந் நாராயண மந்த்ரத்தின் உடைய பொருளை ஆராய இழிந்தவாறே-
ஒரு பொருளுக்கும் தன்னுடைய பேறு இழவுகட்கு வேண்டிக் கொள்ளுதற்கு தனக்கு சம்பந்தம் இல்லாமலே இருந்தது –
இப்படி இருக்கிறவன் தம் பக்கலிலே விசேடக் கடாஷம் செய்த படியையும்- நங்கள் பிரான் அவனே-
இந்த நாராயண மந்த்ரத்தின் அர்த்தத்துக்கு எல்லையான அவன் சீல குணத்தையும் நினைத்தார்-கடைவதும் கடலுள் அமுதம்
நினைந்தவாறே -இப்படி சீல குனமுடையவனை இப்பொழுதே காண வேண்டும் என்னும் விருப்பம் பிறந்தது-என் மனம் ஏகம் என்னும் இராப்பகல் –
அதில் தமக்கு அவன் இருந்த இடத்தளவும் கால்நடை தராதபடிக்கு ஈடாயிற்று-
அவனுடைய சீலம் முதலான குணங்களிலே ஈடுபட்டு தாம் துவக்கு உண்டபடி –சீலம் எல்லை இலான் –
இனித்தான் இவர் போனாலும் ஒரு கைங்கர்யத்தை செய்கை மிகையாம்படி இருப்பான் ஒருவனாய் இருந்தான் அவன்-
சுணை கேடன்-ஓதி நாமம் குளித்து -உச்சி தன்னால் —-நமக்கே நலம் ஆதலின் -தொழுது எழுதும் என்னும் இது மிகை –
இவர்தாம் ஓன்று செய்து அனுபவிக்க வல்லவர் அன்றிக்கே இருந்தார் –
அவனுடைய சீல குணங்களிலே கால் தாழ்ந்து இருக்குமவர் ஆகையாலே –
இப்படிப் பட்டவனுடைய சீல குணத்தின் மிகுதியைச் சொல்லி-தலைக் கட்டுகிறது இத் திருவாய் மொழி-
அன்றிக்கே-
முதல் பாசுரத்தால் பிராப்யமாக இருந்துள்ள ரூபம் -திரு மேனி வைலக்ஷண்யம் -இரண்டாம் பாட்டால் அதற்கு ஆதாரமான
ஸ்வரூபம் அடியேன் உள்ளான் -அகாரத்தால் -சேஷி -காரணம் -அழகன் -ஸ்வரூபத்தால் மேம்பட்ட -அர்த்த பலத்தால் வந்த
ஸ்ரீ யபதித்தவமும்-அகாரம் ரக்ஷணம் ரஷிக்கும் பொழுது பிராட்டி சம்பந்தம் வேணும் –
மூன்றாம் பாட்டில் முதல் பாதியால் -அவனது அருளால் –உணர்வின் உள்ளே நிறுத்தினேன் -அதுவும் அவனது இன்னருள் -ரக்ஷகத்வம்
காரணத்வத்தையும் -சப்த காரணம் அகாரம் -சுத்தமான உபாயத்வத்தையும் அருளிச் செய்து -அகரார்த்தம் அருளிச் செய்தார் ஆயிற்று –
கண்கள் சிவந்து -என்ற திருவாய் மொழியிலே பிரணவத்தின் அர்த்தத்தை அருளிச் செய்தார்-
அத் திருவாய் மொழியிலே முதல் இரண்டரை பாசுரங்களிலே-அகாரார்தம் -அகாரத்தின் பொருளை -அருளிச் செய்தது-
மேல்-ஒன்றரைப் பாசுரங்களாலே நான்காம் வேற்றுமையின் பொருளையும் -அடிமைத் தன்மையும் –
மகாரத்தின் பொருளையும் -யானும் தானாய் ஒழிந்தான் -அத்யந்த சேஷன் -அநந்யார்ஹ சேஷ பூதன் -அருளிச் செய்தார்-
நன்று -இது அடிமையாம் தன்மை -இது அவனுக்கே உரிமையாம் தன்மை -இது அவற்றுக்கு இடமாய் இருக்கிற ஆத்துமா-
என்று பிரித்து சொல்லாமல்-மகாரத்தின் பொருளாய் இருக்கின்ற ஆத்துமாவோடு கூட்டியே அருளிச் செய்தது என் -எனில்-
அவற்றைத் தனித் தனியே பிரித்து அருளிச் செய்யாதது
நான்காம் வேற்றுமையின் அர்த்தமும்–சேஷத்வம் -உகாரத்தின் அர்த்தமும்-அநந்யார்ஹத்வம் -ஆத்துமாவை விட்டுப் பிரிந்து
தனித்து இராமையாலே கூட அருளிச் செய்தார் -என்க –-
நர நாராயணன் -நியத பிரகாரம் -சரீர தயா -சாமான்ய கரண்யம் –
அதற்க்கு மேல நான்கு பாசுரங்களாலே-மகாரத்தால் சொல்லப்படுகின்ற ஆத்துமாவின் உடைய ஞான ஆனந்தங்கள்
முதலிய வற்றின் சிறப்பினை அருளிச் செய்தார்
மேல் இரண்டு பாசுரங்களாலே-இம்முறையில் பிரணவத்தின் அர்த்தத்தை நினையாத-வேதத்துக்கு புறம்பான
புறச் சமயத்தாரையும்-அகச் சமயத்தார் ஆகிற குத்ருஷ்டிகளையும் மறுத்தார் –
ஆக –
கண்கள் சிவந்து -என்ற திருவாய் மொழியாலே பிரணவத்தின் அர்த்தத்தை அருளிச் செய்து –
மேல்
கருமாணிக்க மலை -நெடுமாற்கு அடிமை -என்னும்-இரண்டு திருவாய் மொழி களாலும்
-நம –என்றதன் அர்த்தத்தை அருளிச் செய்தார்
எங்கனே எனின் –
சொல்லால் கிடைக்கின்ற பொருளும்-பொருளால் கிடைக்கின்ற பொருளும்
என்னும் இரண்டு வகையான பொருள்களும் கூறப்படும் -நம -என்ற சொல்லுக்கு-
அவற்றுள் சொல்லால் -கிடைக்கும் பொருளை -கரு மாணிக்க மலை -என்னும் திருவாய் மொழியில் அருளிச் செய்து
பொருளால் கிடைக்கும் பொருளை -நெடுமாற்கு அடிமை -என்னும் திரு வாய் மொழியில் அருளிச் செய்தார்-
நம -என்பதன் சொற்பொருள் -நானஎனக்கு உரியன் அல்லேன் -என்பதே அன்றோ –
ஒரு கன்னியானால் ஒருவனுக்கேயாய் இருக்கையும்-தான் தனக்கு உரியன் அன்றிக்கே இருக்கையும்-அன்றோ ஸ்வரூபம் –
அதனை அருளிச் செய்தார் கரு மாணிக்க மலை என்ற திருவாய் மொழியில்-
பொருள் ஆற்றலால் கிடைக்கும் பொருள் -அவன் அடியார்க்கு அடிமை பட்டு இருத்தல்-
அதனை அருளிச் செய்தார் – நெடுமாற்கு அடிமை -என்ற திருவாய் மொழியில்-
அதற்கு மேல்-கொண்ட பெண்டிர் -என்ற திருவாய் மொழியில்-நாராயண மந்த்ரத்தின் பொருளை அருளிச் செய்தார்
யாங்கனம் எனின் –
நாராயண பதத்துக்கு பொருள்-
தத் புருஷ சமாஹம் -ஸ்வாமித்வம் -நும்மது ஆகும் அவன் அன்றி மற்று இல்லை -தொண்டரோமாய் -பாசுரங்களால் –
-பஹு வ்ருஹீ சமாஹம் -வாத்சல்யம் -வண் புகழே -என்றும் -கணை ஒன்றாலே ஏழு மரமும் எய்த
உபாயத்வம் -கண்ணன் அல்லால் இல்லை கண்டீர்
உபேயத்வம்-குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே
வியாபகத்வம் -நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லை
என்னும் இவை முதலானவைகள் அன்றோ –
அதற்கு மேல்
பண்டை நாளால் -என்கிற திருவாய் மொழியில் ஆய -என்னும் நான்காம் வேற்றுமையும்-அர்த்தத்தை அருளிச் செய்தார்
நான்காம் வேற்றுமைக்கு பொருள் -கைங்கர்யத்தை பிரார்த்தித்தல் அன்றோ –
பிரணவத்தின் பொருளும்
நம -என்ற சொல்லின் பொருளும்
எங்கும் பரந்து இருத்தலும் -பரந்து இராமையும் –
வாசு தேவன் -விஷ்ணு -என்னும் வியாபக மந்த்ரங்களிலும் உண்டு-
அதில் தாம் ஆதரித்து அருளியது -திரு எட்டு எழுத்தே -என்னுமதனை-ஓர் ஆயிரமாய் -என்னும் இத் திருவாய் மொழியிலே
அருளிச் செய்கிறார்-இங்கனம் -நடுவில் திரு வீதிப் பிள்ளை -அருளிச் செய்வர் –
அர்த்தத்தை மட்டும் அருளிச் செய்யாமல் சப்தம் -நாராயண -தனிச் சிறப்புடன் அருளிச் செய்து -ஆப்த உபதிஷ்டம்-
சரம சதுர்த்தியில் -ஆய -தாதரத்தே சதுர்த்தி -சேஷத்வம் லுப்த சதுர்த்தி -அவனையே பிரதானமாக என்று சொல்லி –
இது பிரார்த்தனா சதுர்த்தி -கைங்கர்யம் பிரார்த்திக்கிறது -அநந்யார்ஹ சேஷத்வம் சித்திக்க பிரார்த்திக்க வேண்டுமே –
சேஷத்வம் நிலை நாட்டும் கைங்கர்யம் -சகல வித கைங்கர்யங்களையும் –பிரார்த்திக்க வேண்டுமே –
அவனும் சித்தம் -கைங்கர்யமும் சித்தம் -ஆய பிரார்த்தனா கர்ப்பம் –
தத் பிரார்த்தனா உபபத்தி பலத்தாலும் -பிரார்த்தனா சதுர்த்தி என்பது சித்திக்கும் –
மூன்றாம் திருவாய் மொழியிலே
கீழே கைங்கர்ய பிரார்த்தனையைப் பண்ணி கூவுதல் வருதல் செய்ய வேணும் -என்று அபேக்ஷிக்க –
அவனும் தன் நிருபாதிக பந்யத்தாலே-நீர் அபேக்ஷிக்க வேணுமோ நம்முடைய கார்யம் செய்கைக்கு என்று
தன்னுடைய பிரகார பிரகாரி சம்பந்த தயோதகமான நாராயணத்வத்தை பிரகாசிப்பிக்கக் கண்டு –
கார்யமான சர்வ லோக ரக்ஷண ரசமர்த்தமாயுள்ள
திவ்ய நாம சம்பத்தையும்
ரக்ஷணாதி வியாபாரத்தையும்
அகில வேத வேத்யதா பிரகாரத்தையும்
நித்ய ஸூரி போக்யதையையும்
அதனுடைய நிருபம வைலக்ஷண்யத்தையும்
அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி ஹேதுவான ஸ்ரீ லஷ்மீ சம்பந்தத்தையும்
பிரபல அநிஷ்ட பஞ்சநத்வத்தையும்
அபீஷ்ட தேச வர்த்தித்தவத்தையும்
ஆஸ்ரயண மிகையான அதிசயித்த சீலத்வத்தையும்
அதனுடைய வாசா மகோசர மஹத்தையையும்
அனுசந்தித்து எவம்வித ஸ்வ பாவனான சர்வேஸ்வரனை ஆசைப்பட்டு அவனுடைய சீலத்திலே வித்தராய்
அனுபவம் தன்னிலும் அஷமரான பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –
ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்
பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்
கார் ஆயின காள நல் மேனியினன்
நாராயணன் நங்கள் பிரான் அவனே–9-3-1-
அவன் நாராயணன் அன்றோ-நம் விருப்பத்தை முடித்தல் நிச்சயம்-என்று தம் திரு உள்ளத்தை குறித்து அருளிச் செய்கிறார் —
ஓர் ஆயிரமாய் அளிக்கும் –ஒவ்வொரு திருப் பெயரே ஆயிரம் முகத்தாலே எண்ணிறந்த வகைகளில் –காக்க வல்லதாய் இருக்கும் –
அவன் தூரஸ்தான் ஆனாலும் இது கிட்டி நின்று ரக்ஷிக்கும் –
இது தானே யோக்யதை பண்ணிக் கொடுக்கும் -வேறே யோக்யதை சம்பாதிக்க வேண்டாமே
உலகு ஏழ் அளிக்கும் –ஷிபாமி -அசுர யோனிக்யில் தள்ளினாலும் தள்ளுவார் -இவை அளிப்பது மட்டுமே செய்யும் -ஓர் உலகம் மாத்ரம் அன்றிக்கே-எல்லா உலகங்களையும் பாதுகாக்கும் –
புத்திரன் இறக்க அதனாலே வருந்திய –கோயிலாய்த்தான்-பட்டர் திருவடிகளிலே வந்து தன்-
சோகம் எல்லாம் தோற்ற விழுந்து கிடக்க-அவர் அருளிச் செய்த வார்த்தையை நினைப்பது-
நீ நம்முடைய திருப் பெயர் சாற்றின பிள்ளை இறந்தான் என்று அன்றோ துக்கப் படுகிறாய் -அதற்கு துக்கப் பட வேண்டா-
அந்த பெயரை உடைய நாம் இருந்தோமே -என்று
தம்மைப் போலே ஒரு விக்ரஹத்தை ஏறி அருளப் பண்ணி-அவர்க்கு கொடுத்து அருளினார் -என்பது சரித்ரம் –
நங்கள் பிரான் அவனே –-நம்மை காப்பாற்று கின்றவனான உபகாரகன் அவனே-
கூவுதல் வருதல் செய்திடாய் -என்று நம் பேற்றுக்கு நாம் பிரார்த்திக்க- நமக்கு உரிமை இல்லை என்கிறது –அவனே -என்கிற ஏகாரத்தாலே –
நம்மோட்டை குடல் துவக்கு -அயன சம்பந்தம் அறியீரோ–அயனம் ஆஸ்ரயம் பற்றி இருப்பதால் நாராயணன்-நாரங்களை அவன் ஆஸ்ரயித்து இருக்கிறான்
எவ் உயிர்க்கும் தாயாக –அத்தை அனுசந்தித்து இனியர் ஆகிறார் –
அசிஷ்ட பரிக்ரகமும் அபூர்த்தியும் உண்டே -விஷ்ணு வாஸூதேவ மந்திரங்களுக்கு –
————–
அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான்
அவனே அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான்
அவனே யவனும் அவனுமவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே–9-3-2-
அனைத்தும் பொதுச் சொல் -இதில் -கீழே -நாராயணன் நங்கள் பிரான் அவனே-மேலே சொல்லப் பட்ட நாராயணன்-என்னும் திருப் பெயரின்-பொருளை -அருளிச் செய்கிறார்-
அவனே -என்ற ஏ காரத்தால்-படைத்தல் முதலான கார்யங்களில் வேறு-ஸஹகாரி துணைக் காரணம் இல்லாமையைச் சொல்லுகிறது –
ஸ ப்ரஹ்மா ஸ சிவ ஸ இந்த்ரா —ஸ அஷர பரம ஸ்வராட் –-என்கிற பிரசித்தியைப் பற்றிச் சொல்லுகிறார்
ஆக-இரண்டு பாசுரங்களாலும்-திரு மந்தரத்தையும் அதன் பொருளையும் அருளிச் செய்தாராய் நின்றார்
———–
அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள்
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே–9-3-3-
உபாயமாக ஆபத்து போக்க வல்ல என்று தானே -அனுபவிக்கும் விருந்து என்று அடியேன் தானே அறிந்தேன் –
போக்யத்தை சீலாதிகளை அவன் கட்டக் கண்டு அறிந்தோம் -அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே-என்று கீழே சொல்லிய படி –
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹ-ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபி பேதி குத்ஸ ஸ நேதி-தைத்ரியம் -என்றும்
யஸ்யாமதம் தஸ்ய மதம் அவிஜ்ஞாதம் விஜா நதாம்-கௌஷீதகி- -வாக்குக்கும் மனசுக்கும் எட்டாமல் -அறிவதற்கு அரியன் என்றே அறிந்த வேத வைதிக புருஷர்கள்
அஹம் வேதிமி மஹாத்மநாம் – ராமம் சத்ய பராக்ரமம் -வசிஷ்டர் அபி -வைதிகர் –அரியை வணங்கி அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே—
சா பேஷ உபாயம் -வணங்கினால் செய்வான் -நிரபேஷ உபாயன் என்று கூட அறியவில்லையே
பிறவித் துன்பத்துக்கு மருந்து -என்னும் இவ்வளவே அறிந்தார்கள்-அவனுடைய இனிமையில் இழிந்திலர்கள்
வேதங்களும்-வேதார்த்தங்களை அறிந்த முனிவர்களும்-அறிந்த அளவு அன்றிக்கே
நான் அவனை முழுதும் அறியும் படி-எனக்குத் திருவருள் புரிந்தான் –என்று இனியர் ஆகிறார்-
————-
மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று
பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்
கருந்தேவன் எம்மான் கண்ணன் விண்ணுலகம்
தருந்தேவனை சோரேல் கண்டாய் மனமே–9-3-4-
1-நித்ய ஸூரிகளுக்கு இனியனாய் வைத்து–2-கிருஷ்ணனாய் வந்து அவதரித்து-
3-நம்மையும் அவர்கள் நடுவே வைப்பானாய் இருக்கிறவனை-விடாதே காண் -என்று-மூன்று ஆகாரங்கள் –
திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்
திவ்ய விக்ரகம் -காட்டி என்னை அடிமை சாசனம் எழுதிக் கொண்ட ஸுலப்யன் –
அந்நிய பரத்தையாதல் -அயோக்கியன் நைச்சிய அனுசந்தானம் பண்ணி போகாமல்
போகத்தை மட்டுப் படுத்தி -பரிகரம் -பொறுக்க பொறுக்க -கோபிகளுக்கு தன்னை மறைத்தால் போலே
சோரேல் கண்டாய் மனமே –அவனை உடம்பு வெளுக்க பண்ணாதே காண் -நெஞ்சே-இவன் விடுகையாவது-அவனுக்கு இழவு போலே காணும்-
————–
மனமே யுன்னை வல்வினையேன் இரந்து
கனமே சொல்லினேன் இது சோரேல் கண்டாய்
புனமேவிய பூந்தண் துழாய் அலங்கல்
இனமேதும் இலானை அடைவதுமே–9-3-5-
மனமே அவனை விடாதே காண் -என்றார் மேல்-
அவ்வார்த்தையை ஒலக்க வார்த்தையாக-நினைத்திராதே காண்-என்கிறார் இப்பாசுரத்தில்
வல்வினையேன்-பகவானை அடைவதை முறையாலே அடைவோம் என்று-இராதபடி பாவத்தைச் செய்தேன் –-விளம்பம் சஹியாத பாவம்-
கனம் -பொன் -சீரிய பொருளைச் சொன்னேன் -என்றபடி –-திடமாகவே சொன்னேன்-என்றுமாம் -உனக்கு மிக மேலான பொருளைச் சொன்னேன் என்க –
எதனை தான் நீர் இப்படி சோரேல் என்று சொல்லுகிறது -என்ன-
புனமேவிய பூந்தண் துழாய் அலங்கல் –எல்லை இல்லாத இனியனாவனை பற்றுதலை சோரேல் என்கிறேன் -என்கிறார் –
புனத்தில் மேவி இருப்பதான அழகை உடைய திருத் துழாய் மாலையை-உடையவன் ஆகையாலே ஒப்பு இன்றிக்கே இருக்கிறவனை
அத் தோள் மாலையை உடையனாகை அன்றோ அறப் பெரியன் ஆகையாவது-
ஒரு திரு முளைத் திரு நாளிலே -ப்ரஹ்மோஸ்தவம் – இப்பாட்டை அருளிச் செய்தது-
முன்னாள் -கையார் சக்கரத்துக்கு -ஆழ்வார் திருநாள் -–புறப்பட்டு அருளினபடி திரு உள்ளத்தில் கிடக்க
புனம் மேவிய பூந்தண் துழாய் அலங்கல் இனம் ஏதும் இல்லான் ஆகையாவது-நேற்றுப் புறப்பட்டு அருளின படி அன்றோ -என்று அருளிச் செய்தார் –
சேனை முதலியார் புறப்பாட்டை பெருமாள் புறப்பாடாக அருளிச் செய்தார் -நஞ்சீயர் என்ற படி -திருத் துழாய் மாலை சூடி இருப்பதால் –
ஐப்பசி கார்த்திகை ப்ரஹ்மோத்சவம் இருந்து இருக்க வேண்டும் -ஆழ்வார் திருநாள் -மார்கழி மாசம் என்பதால் –
———–
அடைவதும் அணியார் மலர் மங்கை தோள்
மிடைவதும் அசுரர்க்கு வெம்போர்களே
கடைவதும் கடலுள் அமுதம் என் மனம்
உடைவதும் அவற்கே யொருங்காகவே—9-3-6-
திரு மார்புக்கு எல்லாம் தானே ஆபரணமாய் போரும்படி இருப்பாளாய்–லஷ்மீ விசிஷ்டன் -அநிஷ்ட நிவ்ருத்தி -இஷ்ட பிராப்தி -ஆகாரத்ரயம்
இவர் திரு உள்ளம் உடைகுலைப் படுகைக்கு காரணங்கள் இவை –அடைந்த படியால் மிடைந்த படியால் கடைந்த படியால் ஒரு மடைப் பட உடைந்ததே
அவன் பனிக் கடலை கடைய-இவர் மனக்கடல் உடையப் புக்கது
அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி -ஹேதுவான –ஸ்ரீ லஷ்மி சம்பந்தம் -அவளுக்கு வல்லபன் –அறிந்து மனம் இழந்தேன்
தம்முடைய உபதேசம் பலித்து-இவ்விஷயத்தில் திரு உள்ளம் உருக் குலையா நின்றது –என்று இனியர் ஆகிறார்-
——
ஆகம் சேர் நரசிங்கமதாகி ஓர்
ஆகம் வள்ளுகிரால் பிளந்தான் உறை
மாகவைகுந்தம் காண்பதற்கு என் மனம்
ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே–9-3-7-
பிரபல அநிஷ்ட -பஞ்சகன் -வார்த்தைக்கும் பிராப்ய பூமி-நித்ய வாஸம் செய்கிற-பரம பதத்தை சென்று காண வேண்டும்-என்னா நின்றது -என் நெஞ்சு-என்கிறது
ஆகம் சேர் நரசிங்கமதாகி –-நர வடிவும் சிங்க வடிவும்-சேர்ப்பாலும் கண்ட சக்கரையும் போலே பொருந்திய-நரசிங்கமாய்
அன்றிக்கே-நரசிங்கத்தின் உடைய இவர் நெஞ்சிலே சேர்ந்த படி -என்னுதல் -என்றது –
ப்ரஹ்ம தண்ட பிரகாசானாம் வித்யுத் சத்ருச வர்ச்சசாம்-ஸ்மான் ராகவ பாணாநாம் விவ்யதே ராஷசேச்வர-யுத்தம் -60-3-
இராகவன் உடைய பாணங்களை நினைத்துக் கொண்டு -என்கிறபடியே- மறக்க ஒண்ணாதபடி திரு உள்ளத்திலே சேர்ந்த படியை சொன்னவாறு
அன்றிக்கே-இரண்டு வடிவு களையும் சேர்த்துக் கொடு வந்து தோன்றின போது-ஸ்தம்பே சபாயாம் -தோன்றின போது –
இவர் மனத்துக்கு இனியதாய் சேர்ந்து இருந்த படியைச் சொன்னவாறுமாம் –
மாகவைகுந்தம் காண்பதற்கு –அந் நரசிங்கம் வசிக்கிற முழஞ்சு காண ஆயிற்று-ஆசைப் படுகிறது-
————–
இன்றிப் போக இருவினையும் கெடுத்து
ஒன்றி யாக்கை புகாமை உய்யக் கொள்வான்
நின்ற வேங்கடம் நீணிலத் துள்ளத்து
சென்று தேவர்கள் கை தொழுவார்களே--9-3-8-
ஆசன்னமாக அவன் வர்த்திக்கும் –ஸ்ரீ வைகுண்ட விரக்தாய -அவன் வர்த்திக்கும் அபீஷ்ட திவ்ய தேசம் –
இச் சரீர சம்பந்தம் அற்றால் சென்று அனுபவிக்கைக்கு -பரம பதம் வேண்டுமோ-அது மாக வைகுந்தம் இது நீள் நிலம் –
இச் சரீரத்தோடு இருந்து கொண்டே அனுபவிக்கத் தகுந்த-திருமலை இம் மண் உலகிலே உள்ளது அன்றோ –திருமலையை உடைத்தது ஆகையாலே உளதாய-பெருமையை நோக்கி -நீள் நிலம் -என்கிறார் –
சென்று கை தொழுவார்கள் தேவர்கள் – அவ்வளவு தூரம் கால் நடை தந்து போக வல்லார்-புண்யம் மிக்கவர் அன்றோ–அவனுடைய சீலம் முதலான குணங்களை நினைத்து சொல்கிறார்-இவர் சக்ரவர்த்தி போல் பிரியாமல் சேர்ந்து இருந்தே துன்பம் -ஸுசீல்யம் படுத்தும் பாடு ஆழ்வாருக்கு –
அன்பினாலே மூடப் பட்டார்க்கு-அவ் உலகத்தோடு இவ் உலகத்தோடு-வாசி அற்றதே அன்றோ -எட்டாமைக்கு –திருப் புளிங்குடியும் திருமலையும் பரம பதமும் இவருக்கு ஒரே மாதிரி தானே இதனால் –
——–
தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு
எழுது மென்னுமிது மிகை யாதலில்
பழுதில் தொல் புகழ்ப் பாம்பணைப் பள்ளியாய்
தழுவுமாறு அறியேன் உன தாள்களே–9-3-9-
ஆச்ரயண உத்தியோகமும் அதிகம் -ஸூ பிரயத்தனம் கூடாதே-முயன்றால் க்ஷமிக்க மாட்டான் அவன் -பிராப்தி இல்லையே –
முயற்சி செய்ய ஷமர் அல்லர் ஆழ்வார் -சக்தி இல்லையே -கால் ஆளும் கண் சுழலும் அன்றோ
அவன் திரு முன்னர் முறையாக அடிமை செய்ய-ஒண்ணாத படி அழிக்கும் அவனுடைய
சீல குணத்தைச் சொல்லுகிறது -என்று-நம் உடையவர்கள் அருளிச் செய்வார்கள் –
தழுவுமாறு அறியேன் உன தாள்களே–உன் திருவடிகளை அணையும் விரகு அறிகிலேன் –
வலி இல்லாமையாலே முதலிலே கிட்டுதல் அரிது-கிட்டினாலும்-சீலத்தின் மேன்மையை நினைத்தால்-ஓர் அடிமை செய்ய இயலாதவனாக இருக்கிறேன் –
———-
தாள தாமரையான் உனதுந்தியான்
வாள் கொள் நீள் மழு வாளி உன்னாகத்தான்
ஆளராய்த் தொழுவாரும் அமரர்கள்
நாளும் என் புகழ் கோ உனசீலமே–9-3-10-
தாஸ்ய சுவடே அறியாத -அடிமையின் இனிமையை அறியாத-பிரமன் முதலாயினோர்கட்கும்
பற்றப் படுமவனாய்-இருக்கிற உன்னுடைய சீலம்-என்னால் புகழ்ந்து முடிக்க ஒண்ணாது -என்கிறார்
அநந்ய சரண்யத்வ லக்ஷணமான (வேறு ஒருவரையும் அடைகலமாகப் பற்றாமையை-தெரிவிக்கிற)-
தொடை ஒத்த துளவமும் கூடையுமாக -புகுந்து இருக்கிறான் அல்லனே –
——-
சீலம் எல்லை இலான் அடிமேல் அணி
கோல நீள் குருகூர்ச் சடகோபன் சொல்
மாலை ஆயிரத்துள் இவை பத்தினின்
பாலர் வைகுந்தம் ஏறுதல் பான்மையே–9-3-11-
நிகமத்தில்-இத் திருவாய் மொழி கற்றார்-பரம பதத்தே செல்லுதல்-ஆச்சர்யம் அன்று –பிராப்தம் -தக்கதே –என்கிறார் –
ஸ்வ பாவம் -இயற்க்கை -ஜகத் ரக்ஷணம் -ஸ்ரீ யபதித்தவம்-இவை எல்லாம் ஸ்வ பாவம் – வாத்சல்யாதிகள் பிரபாவம் என்றவாறு –
இத் திருவாய்மொழி சொல்லப் பட்டது –அமர்யாத-சாஸ்திரத்துக்கு மீறிய எல்லை இல்லா -சீல குணத்தின் மேம்பாட்டை ஆயிற்று- அதனை முடித்துக் காட்டுகிறார் -சீலம் எல்லை இலான் -என்று
ஆயிரத்துள் இவை பத்தினின் பாலர் –இப்பத்தின் பக்கத்தில் உளராமவர் -என்றது-
இப்பாசுரங்களை ஒருகால் சொல்லுதல்-
இவற்றைப் பாடம் செய்தல்-
இவற்றைப் பொருள் அறிவோடு படித்தல் –-என்னும் இவற்றில் ஒரு வழியாலே இதில் சம்பந்தம் உடையவர் -என்றபடி –
வைகுந்தம் ஏறுதல் பான்மையே –-பரம பதத்தில் செல்லுதல் இயல்பாகவே இருக்கும் –-யாங்கனம் -எனின்
மாக வைகுந்தம் காண்பதற்கு ஏகம் எண்ணினார் இவர் –
இப்பாசுரங்களில் யாதானும் ஒரு வகையில் சம்பந்தம் உள்ளவர்களுக்கு- பிரார்த்தித்துப் பெற வேண்டுவது தானாகவே கிடைக்கும்- பிராப்தம் என்பதாம் –
தமப்பன் செல்வம் மகனுக்கு-தாய பாகமாக அடைய வேண்டியதாகவே-இருக்கும் அன்றோ –
——————–——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –