ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
வைதிகர்கள் தானே அவனது திவ்ய மங்கள விக்ரஹத்தையும் செந்தாமரைக்கண்ணும் அறிவார்கள்
உள்ளத்தில் இருந்து காட்சி கொடுப்பான்-இருத்தும் வியந்து -8-7–இதன் விவரணம்–தலைவியைக் கண்ட பாங்கன் -மீண்டு -தலைவனைக் யடுத்து வியந்து கூறல் —தோழன் இடம் தலைவியின் ஏற்றம் சொல்லி தேக ஆத்ம குணங்களைக் காணச் சொல்ல-அவன் சென்று மீண்டு வியந்து -வைதிகரான உன்னைப் போல்வார் தானே இவள் அழகைக் காணலாம்-இருவர் பெருமையையும் சொல்லும் பாசுரம் இது -அன்றோ –வைதிகரே-உயர் சிறப்பு ஏவகாரம் -வைதிகர் மட்டுமே அறிய முடியும்–சீதா வைபவம் அறியாத திருவடி –-மோதிரம் கொடுத்து அனுப்பி காண வைக்க-அவளைக் கண்ட பின் துஷ்கரம் க்ருதவான் ராமன்-இவளைப் பிரிந்து இன்னும் உயிர் உடன் உள்ளானே என்று அருளிச் செய்தது போல்
கண்டனன் -மூன்று பண்புகள் சேர்ந்து-கற்பு நற்பிறப்பு இத்யாதிகள் புகழ்ந்து அருளிச் செய்தானே –
அவதாரிகை – துர்மானத்தாலே இழப்பாரும் அறிவு கேட்டாலே இழப்பாருமாகா நிற்பர்கள் -என்றார் (கீழ் இரண்டு பாசுரங்களால் -உமக்கு குறை இல்லையே -என்ன –எனக்கும் ஒரு குறை உண்டாக்கி வைத்தாயே –முன்னடி தோற்றாதபடி -மயர்வற மதி நலம் அருளினாயே –பக்தி ரூபாபன்ன ஜ்ஞானத்தை-இறே அருளிற்று –அந்த பக்தி பாரவஸ்யத்தாலே சொல்ல மாட்டுகிறிலேன் என்னுதல் –
வள வேழ் உலகின் படியே ( 1-5 )அயோக்யா அனுசந்தானத்தாலே ஓன்றும் சொல்ல மாட்டுகிறிலேன் என்னுதல் –
தலைவியைக் கண்ட பாங்கன் மீண்டு தலைவனை அடுத்து வியந்து கூறல்
மாலை நல் நாவில் கொள்ளார் -என்று நாட்டாரைப் பழித்தீர் -நீர் தாம் நம்மை யுள்ளபடி அறிந்து சொன்னீரே என்று ஈஸ்வர அபிப்ராயமாக-விலக்ஷணரான வைதிகர் அன்றோ அது செய்ய வல்லார்
நான் அவர்கள் போன வழியே போமவன் அன்றோ -என்று அருளிச் செய்கிறார் –
மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும் வைதிகரே
மெய்ப்படியால் உன் திருவடிச் சூடும் தகைமையினார்
எப்படி யூராமி லைக்கக் குருட்டாமிலைக்கும் என்னும்
அப்படி யானும் சொன்னேன் அடியேன் மற்று யாது என்பனே — – 94-தலைவியைப் பார்த்த தோழன் தலைவனிடம் வியந்து பேசுதல் –
மை படி மேனியும்–நீல நிறம் செறிந்த திருமேனியையும்
செம் தாமரை கண்ணும்–செந்தாமரை மலர் போன்ற திருக் கண்களையு முடைய
உன்–உனது
திரு அடி–திருவடித் தாமரை மலர்களை
வைதிகரே–வைதிகர்கள் தாமே
மெய் படியால்–உண்மையான நெறியால்
சூடும்–தம் தலைமேற்கொண்டு வணங்கும்படியான
தகைமையினார்–தன்மையுடையவர்கள்;
எப்படி ஊர் ஆ மிலைக்க குருடு ஆ மிலைக்கும் என்னும் அப்படி–எப்படி (வெளியில் மேய்ந்துமீண்டு) ஊர்வந்து சேர்ந்த
(கண்தெரியாத) பசுக்கள் (இடமறிந்து) கனைக்கக் குருட்டுப் பசுவும் கூடக் கனைக்கும்மென்று (உலகம்) சொல்லுமோ, அப்படியே
யானும் சொன்னேன்–யானும் உன்னைத் துதித்தேன்.
அடியேன் மற்று யாது என்பன்–அடியவனான நான் வேறு என்ன வென்று சொல்லுவேன்?
இருந்தவன் தான் வந்து இங்கு இவர் எண்ணம் எல்லாம்
திருந்த விவர் தம் திறத்தே செய்து -பொருந்தக்
கலந்து இனியனாய் இருக்கக் கண்ட சடகோபர்
கலந்த நெறி கட்டுரைத்தார் கண்டு –77–இவர் -வெள்ளக் கேட்டாலே அழியாதபடி ஸ்ரீ திருக் கடித்தானத்தே இருப்பைக் காட்டி சம்ஸ்லேஷ ரசத்தை சாத்மிப்பித்த –அநந்தரம்-ஸ்வ விஷயத்தில் அர்த்தித்வ பிரமுகரான இவர் மநோ ரதத்தை எல்லாம் தான் இவர் பக்கலிலே பண்ணிக் கொண்டு-இவரோடு பூர்ண சம்ஸ்லேஷம் பண்ணி அந்த சம்ச்லேஷ ஜனித ஹர்ஷ பிரகர்ஷத்தாலே புதுக்கணித்த திவ்ய அவயவங்களையும் நீல பர்வதம் போலே ஒளி இருக்கிற வடிவையும் இருக்கிறபடியை மண்டி அனுபவித்து ஹ்ருஷ்டராய் செல்லுகிற -இருத்தும் வியந்தில் அர்த்தத்தை இருந்தவன் தான் வந்து -இத்யாதியால் அருளிச் செய்கிறார்
மைப்படி மேனியும் –அஞ்சனத்தின் படியான திரு மேனியும் –-கண்டார்கள் கண் குளிரும்படியான-வடிவும் –பட்டர் ஒருகால் இவ்விடத்தை அருளிச் செய்யா நிற்க –-பிள்ளை விழுப்பர் அரையரும் -ஆப்பான் திருவழுந்தூர் அரையரும் -இருந்தார்களாய் –-அனுசந்தித்தார் நெஞ்சில் இருள் படியும் படியான-திரு மேனியும் -என்று அருளிச் செய்ய –நஞ்சீயர் –இன்னார் என்று அறியேன்–என்னப் பண்ணுகை யாகாதே -என்று அருளிச் செய்து அருள –(பொன்னார் சார்ங்கம் யுடைய அடிகளை இன்னார் என்று அறியேன் -சார்ங்க பாணி உள்ளத்தில் அமர்ந்து இருட்டாக்கி அருளச் செய்ததற்கு பிரமாணம்)-இவ்வார்த்தை சொன்னார் யார் -என்ன -ஜீயர் -என்று அவர்கள் சொல்ல –நூற்றுப் பதின் காதத்து அவ்வருகே பிறந்து –இவ்வளவும் வந்து –இன்று நமக்கு இத்தை உபகரிப்பதே -என்று கொண்டாடி அருளினாராம் –மைப்படி –காதல் மையலை உண்டாக்கும் படியான திரு மேனி
பொன்னார் சார்ங்கம் உடைய யடிகளை இன்னார் என்று அறியேன் –செந்தாமரை கண்ணும் –
அகவாயில் குண பிரகாசமான திருக் கண்களும் –வைதிகர் இத்யாதி –இப்போது -வைதிகர் என்கிறது –
வேதத்தில் பூர்வ பாக நிஷ்டர் –கேவலம் கிரியா கலாபம்-கொண்டு பெற இருக்குமவர்கள் –
ப்ரஹ்மத்தின் உடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளுக்கு பிரதிபாதகமான-உபரிதன பாக நிஷ்டர் அன்றிக்கே –கர்ம பாகத்தையே பற்றி நிற்குமவர்கள் –அங்கனன்றிக்கே – நிதித்யாசிதவ்ய -என்று விதேயமாய் வரும் நூல் பிடித்த பக்தியை உடையவர்களைச் சொல்லிற்றாகவுமாம் –அவனுடைய குண அனுசந்தானத்தாலே கலங்கி அடைவு கெடும் அது அன்றிக்கே இருக்குமவர்கள் — இப்படி இருக்குமவர்களே மெய்யான பிரகாரத்தாலே உன் திருவடியை-ஆஸ்ரயிக்கும் ஸ்வபாவத்தை உடையவர் –ஆனால் பின்னை நீர் சொன்னபடி எங்கனே -என்ன –-எப்படி இத்யாதி –ஊரில் பசுக்கள் வந்து-புகுரப் புக்கால் எப்படி சம் ப்ரமிக்கும் அந்த சம் ப்ரம ஹேது இன்னது என்று அறியாதே –
குருட்டுப்-பசுவும் சம் ப்ரமியா நிற்கும் இறே –அப்படி யானும் சொன்னேன் – அளவுடையார் சொல்லும்-விஷயம் அன்றோ – நாம் என் -என்று பாராதே -நானும் பாசுரத்தை சொன்னேன் –அடியேன் மற்று யாது என்பனே –இதுக்கு மேற்பட பர தந்த்ரனுமாய் -பக்தி பரவசுமான நான்-அடைவு பட ஒன்றைச் சொல்லி தலைக்கட்ட வல்லேனோ –அன்றிக்கே அயோக்யா அனுசந்தானம் பண்ணி அகலுகிற நான் அங்குத்தைக்கு சத்ருசமாக ஒன்றைச் சொல்லித் தலைக் கட்ட வல்லேனோ –நெஞ்சு பிச்சேரும்படியான விக்ரக வை லஷண்யம்-அயோக்யா அனுசந்தானமே ஸ்வ ரசமான தாத்பர்யம்–ஊருக்கு வரும் பசு கன்றை நினைத்து கத்துமா போலே குருட்டு பசுவும் கத்துவது போலே நீ அளித்த பக்தியால் உன் ஸ்வரூபாதிகளில் விழித்து மதி மயங்கி கிடக்கிற நான் உன்னை ஸ்மரித்து ஸ்வ தந்த்ரித்து ஒன்றைச் சொல்ல வல்லேன் -என்கிறார்-
விலக்ஷணமான அதிகாரிகள் உன்னை உள்ளபடி அறிந்து பேச -நான் அவர்கள் வழி தொடர்ந்து செல்வேன் –கண் தெரிந்த பசுக்கள் ஊர் புகுந்து சேர -அந்த மகிழ்ச்சிக்கு ஈடாக கனைத்தலும் செய்ய -கண் இல்லாத குருட்டுப் பசுவும் கனைப்பது போலே வேத வைதிக புருஷர்கள் சொன்ன பாசுரங்களைக் கேட்டு நானும் சொன்னேன்-சொல்லுவதற்கு அடியான சம்பந்தம் -பக்தி பாரவஸ்யம் உள்ள நான் ஞானம் சக்தியால் பேசினேன் அல்லேன்-இந்த பாசுரம் ஒட்டியே ஸ்ரீ பட்டரும் ஸ்ரீ குண ரத்ன கோசத்தில்-இத்யுக்தி கைதவச தேன விடம்பயாமிதா நம்ப ஸத்ய வஸஸ புருஷான் புராணான்-யத்வா நமே புஜபலம் தவ பாத பத்ம லாபே-ஸ்லோகம் அருளிச் செய்தார் –
மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும்-என்று அவளுக்கு ஏற்ற வடிவு அழகு உடையாய் நீ என்றும் வைதிகரே-மெய்ப்படியால் உன் திருவடிச் சூடும் தகைமையினார்-அவளைக் கண்டு ஆறி இருந்த நீ வைதிகரால் கொண்டாடப் படுபவன் என்றும் –எப்படி யூராமி லைக்கக் குருட்டாமிலைக்கும் என்னும்-
அப்படி யானும் சொன்னேன் -என்று அவ் வடிவின் சிறப்பையும் உன் திண்மையும் உணராது நாட்டார் போலே முன்பு உன்னை பழித்தேன்-குருட்டுப் பசு கனைப்பது போலே என்றும்-அடியேன் -அந்த பிழையை ஷமிப்பதற்கு ஏற்ற நிலை யுடையேன் நான் என்றும்-மற்று யாது என்பனே –அவள் வடிவு அழகைக் கண்டும் கலக்கம் அடையாது திண்மையாய் இருக்கும் இத்தை பாராட்டிக் கூறும் விதத்தால் அன்றி எங்கனம் வர்ணிப்பேன் -என்றவாறு –கீழ்ப்பாட்டில் ‘மாலை நன்னாவிற்கொள்ளார் நினையாரவன் மைப்படியே’ என்று உலகத்தாரைப் பழித்த ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ‘நீர்தாம் நம்மை உள்ளபடியறிந்து சொல்ல வல்லீரோ?’ என்று திருவுள்ளம் பற்றினதாக ஆழ்வார் கருதி,
‘பிரானே! உலக்ஷணரான வைதிகர்களே உன்னை உள்ளபடியறிந்து செல்லவல்லார்; நான் அவர்கள் போன வழியே போவதற்கு மாத்திரமே உரியன்’ என்று இப்பாட்டால் விண்ணப்பஞ்செய்கிறார்.-கண்டார் கண்குளிரும்படியான உனது திருமேனியையும் சிவந்த தாமரைமலர் போலேயிருக்கிற திருக்கண்களையுமுடையான உன்னுடைய திருவடித் தாமரை மலர்களை, கேட்டார் வாய்க் கேட்கைன்றியே மெய்யாகக் கண்டு தலைமேற்கொண்டு அநுபவிக்குந் தன்மையுடையவர்கள் யாரென்னில், வேதவேதாந்த ஞானத்திற் சிறந்த மஹான்களேயாவர்,-அறிவாளியான நானும் அவர்களைப் போலே ஏதோ சில சொல்லுகிறேனே. இஃது என்னென்னில்,-நன்றாகக் கண்தெரிந்த பசுக்கள் ஊர்புகுந்து சேர்ந்தவாறே நிலை கண்டு மகிழ்ந்து அந்த மகிழ்ச்சிக்குப் போக்குவீடாகக்
கனைத்தல் செய்ய கண்ணில்லாத குருட்டுப் பசுவும் அதுகேட்டுத் தான் இன்னதென்றறியாமலே ஒக்கக் கனைக்குமென்று உலகம் சொல்லுகிற விதமாகவே வேதகவைதிக புருஷர்கள் சொன்ன பாசுரத்தைக் கேட்டுவைத்து நானுஞ்சொன்னேனத்தனை;-செல்லுதற்கு அடியான் ஸம்பந்தமுடையவனும் பக்தி பரவசப்பட்டவனுமான நான் அப்படியல்லாமல் என் ஞானத்தாலே கண்டு என் சக்தியாலே சொன்னேனென்னவல்லேனோ? என்றாராயிற்று. இப்பாசுரத்தை ஒருபுடை திருவுள்ளம்பற்றி
ஸ்ரீகுணரத்நகோசத்தில் பட்டம் அருளிச்செய்த ‘இத்யுக்திகைதவசதேக விடம்பயாமி தாநம்ப! ஸத்யவசஸ: புருஷாந்புரணார்- யத்வா நமே புஜபலம்தவ பாரதபத்மவாபே’ என்ற ச்லோகம் இங்கு ஸ்மரிக்கத்தாகும்.-(புராண புருஷனே (எம்பெருமானே)! உண்மையான வாக்குடையவனே! உனது பாத கமலங்களைச் சேரும் பாக்கியம் எனக்குக் கிடைக்குமானால், எனது கைகளின் வலிமை (புஜபலம்) உனக்குச் சேவை செய்வதற்கே பயன்படும்” என்பது இதன் பொருளாகும்)
இதி உக்தி கைதவ சதேந விடம்பயாமி
தாந் அம்ப ஸத்ய வசஸ: புருஷாந் புராணாந்
யத்வா ந மே புஜ பலம் தவ பாத பத்ம
லாபே த்வம் ஏவ சரணம் விதித: க்ருதா அஸி–60-
ஹே அம்ப இத்யுக்தி கைத வசதேந –போட்கனான அடியேன் பல பல நைச்ய யுக்திகளை சொல்வதால்
தான் சத்ய வசச புருஷான் புராணான் விடம்பயாமி—நீசனேன் நிறை ஒன்றும் இலேன் –
நானோ நாநா விதம் நரகம் புகும் பாவம் செய்தேன்–ஈவிலாத தீ வினைகள் எத்தனை செய்தனன் கொல்-என்று அநு சந்திக்கும் –ஸ்ரீ பராங்குச பரகாலாதி ஆழ்வார்களும் ஆளவந்தார் போன்ற பூர்வாச்சார்யர்களையும் அநு கரிக்கிறேன் அத்தனை ஒழிய ச ஹ்ருதயமாக நைச்ய அநு சந்தானம் பண்ணினேன் அல்லேன்
உக்தி கைதவ சதேந –கள்ளத் தனமாக நூற்றுக் கணக்கில் செய்யும் நைய அநு சந்தானங்களால்-
உண்மையில் தம் பக்கல் ஒரு கைம்முதலும் இல்லாதவன் –
அத்தலையில் திருவருளே தஞ்சம் என்றே இருப்பவன் என்கிறார் மேல் –
யத்வா தவ பாத பத்ம லாபே மே புஜ பலம் ந -நைச்ய அனுசந்தான அநு கரணம் அத்தனை போக்கி
என் திறத்தில் ஒரு சாமர்த்தியமும் இல்லையே –
புஜ பலம்-தோள் மிடுக்கு பொருளாயினும் சாமர்த்தியம் என்பதே பொருள் இங்கு –
சர்வாத்மநா அடியேன் அசமர்த்தன் என்றதாயிற்று
விதித த்வமேவ சரணம் க்ருதா அஸி –தேவரீர் நிர்ஹேதுகமாக அருள் செய்ய விதி வாய்த்தது என்கை –
தாயே! ஸ்ரீரங்கநாயகீ! இப்படியாக நான் பல விதமான கள்ளத்தனம் நிறைந்து,
நூற்றுக்கணக்கான தவறுகள் உடையவனாக இருக்கிறேன். இருந்தாலும் உனது அருள் பெற்றவர்களும், உண்மையை கூறுபவர்களும் ஆகிய ஆழ்வார்கள் முதலான முன்னோர்கள் கூறியதையே பின்பற்றி நிற்கிறேன்(இப்படிக் கூறுவதும் ஒரு வகையில் பொய் என்கிறார்).
எனக்கு உனது திருவடிகளைப் பிடித்துக் கொள்வதற்கு இதைவிட வேறு எந்த உபாயமும் இல்லை.
வேறு புகலிடம் இல்லாத எனக்கு உனது கருணையால் நீயே புகலிடமாக உள்ளாய்.–இங்கு இவர் கூறுவது என்ன? நான் ஆசார்யர்களின் வாக்குகளைப் பின்பற்றுவதாகக் கூறுவது ஒரு பொய்யே ஆகும். இருந்தாலும் அவர்களை நான் தொழுகிறேன் என்ற காரணத்திற்காகவாவது காப்பாற்ற வேண்டும் என்றார்.–ஆசார்யர்களைத் தொழுகிறேன் என்னும் காரணத்தை முன்னிட்டாவது தன்னைக் காக்க வேண்டும் என்று வேண்டி நிற்கும் ஸ்ரீபராசரபட்டர், திருவரங்கத்தில் உள்ளபடி சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே
இப்பாட்டுக்கும் கிளவித்துறை வகையில்பொருள் சொல்ல வேண்டில், ‘தலைவியைக் கண்ட பாங்கன் மீண்டு தலைவனையடுத்து வியந்து கூறல் இது’ என்று கொள்க. அதாவது- இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து பிரிந்த தலைமகன் தான் அத்தலைமகளை மீண்டுஞ் சேரவிரும்பி அவளது அழகு முதலியவற்றைத் தன் உயிர்த் தோழனிடம் பாராட்டிக்கூற, அது கேட்டு‘ஒரு மங்கை காரணமாக நீ இங்ஙனம் மெலிதல் தகாது’ என்று அவனை இடித்துரைத்த தோழன் அவனால் மீண்டும்
அவ்வடியின் சிறப்பை மிக எடுத்துக் கூறிக் கழற்றெதிர் மறுக்கப்படட்பின் அவனைச் சமாதானப்படுத்தி,
அவன் சொன்ன குறிப்பின்படியே தான் சென்று பூஞ்சோலையில் அவளைக் கண்டு அவளது ரூபலாவண்ய ஸௌந்தர்யாதிகளை நேரில் நோக்கி வியந்து ‘இத்தன்மையுடையவளைக் கண்டு பின் காமவேதனையால் மிக வந்தாது சிறிதும், ஆகியிருத்தல் எத்துணைப் பெரியோர்க்கும் ஆகாதே;
இப்படிப்பட்டவர்களைக் கண்டு பிரிந்தும் ஒருவாறு ஆறியிருக்கிறவனை நான் முன்பு ஆராய்ச்சி யின்றி இடித்துரைத்தேனே! என்று நொந்து இகழ்ந்ததற்கு இரங்கி,விரைந்து மீண்டு வந்து தலைவனை நோக்கிக் கூறியது இது.–“மைப்படி மேனியும் செந்தாமரைக்கண்ணும்” என்ற அடைமொழிகளால், அவ்வழகியைச் சேர்தற்கு ஏற்ற வடிவழகுடையாய் நீ யென்றும், ‘வைதிகரே மெய்ப்படியாலுன் திருவடிசூடும் தகைமையினார். என்றதனால், அவ்வழகியாளைக் கண்டும் ஒருவாரு ஆறியிருந்த நீ
ஞானனுட்டானமுடைய வைதிகர்களாலுந் தலைமேற்கொண்டு நன்கு மதித்துக் கொண்டாடத் தக்கவனென்றும்,-‘எப்படி யூராமிலைக்கக் குருட்டாமிலைக்குமென்னும் அப்படி யானுஞ்சொன்னேன்’ என்றனதனால், அவ்வடிவத்தின் சிறப்பையும் உனது மனத்திண்மையையும் நோக்காது உலகத்திற் சாதாரணமான ஒரு தீயொழுக்கத்திலிழிவாரை அவர் நண்பர் கட்டுரைத்து மறுக்கிற வழக்கின்படியே நான் உன்னைமுன்பு இடித்துரைத்தது கண் தெரிகிற பசுக்கள் கனைத்தவாறே குருட்டுப் பசுவும் கனைத்தன்போல-அறியா மரபாற் செய்த தென்றும், ‘அடியேன்’ என்றதனால், அப்பிழையை நீ க்ஷமிப்பதற்கேற்ற நிலையுடையேன் யானென்றும்,‘மற்று யாதென்பனே?’ என்றதனால், அவ்வடிவழகைக் கண்டும் முழுக்கலக்கமடையாது. சிறிது துணிவுற்றிருந்த உனது
திண்மையை இங்ஙனம் பாராட்டிக் கூறும் விதத்தாலன்றி அவ்வடிவத்தின் சிறப்பை யான்
எங்ஙனம் வருணித்துக் கூறவல்லேனென்றுங் கூறினானாயிற்று..
மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும்-அஞ்ஜனத்தின் வடிவு போலே இருக்கிற திருமேனியையும்
அதுக்குப் பரபாகமாய்ச் சிவந்த தாமரை போலே இருக்கிற திருக்கண்களையும்–வைதிகரே–நீல தோயத -தைத்ரியம் என்றும்-யதா கப்யாஸம் புண்டரீகம் -சாந்தோக்யம் என்றும் திரு வடிவையும் திருக் கண்ணையும் வேதத்தில் சொல்லுகிறபடி அறியுமவர்களே-மெய்ப்படியால்-கேட்டார் வாய்க் கேட்கை அன்றிக்கே-மெய்யாகக் கண்டபடியாலே-உன் திருவடிச் சூடும் தகைமையினார்-பிராப்தமுமாய்
போக்யமுமான உன்னுடைய திருவடிகளை-சிரஸா வஹித்து அனுபவிக்கும் ஸ்வ பாவத்தை யுடையவர்கள்-எப்படி யூராமி லைக்கக் குருட்டாமிலைக்கும் என்னும் ஊர் அணைந்த ஆக்கள் கன்று நிலை கண்டு கனைக்க–கண்ணில்லாத ஆவும் அது கேட்டு ஒக்கக் கனைக்கும் என்று லோகம் யாதொருபடி சொல்லும்–அப்படி யானும் சொன்னேன்-அந்த ப்ரகாரத்திலே வேத வைதிக புருஷர்கள் சொன்ன பாசுரத்தைக் கேட்டு நானும் சொன்னேன்–அடியேன்-சொல்லுகைக்கு அடியான உறவையுடைய நான்-மற்று யாது என்பனே — அல்லது என் ஞானத்தாலே கண்டு என் சக்தியாலே சொன்னேன் என்ன வல்லேனோ என்றார் ஆயிற்று
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்–குருட்டா மிலைக்கும் என்னும் அப்படி யானும் சொன்னேன்-அடியேன் மற்று யாது என்பனே உனக்கே அடிமைப்பட்ட நான் என்முன் சொல்லிச் சொல்லும் நான் நீ சொல்லுவியாத மற்று எத்தைச் சொல்லுவேன் என்கிறார் –
தாத்பர்யம்–இதில் தேவர்கள் அபிமானத்தாலும் மற்றவர்கள் அஞ்ஞானத்தால் பேச மாட்டாமல் உள்ளது போல் இவரும் பக்தி பாரவசயத்தால் பேச இருப்பதை அருளிச் செய்கிறார்
வேத யுக்தமான உன்னுடைய ஸ்வரூபாதிகளை அறிந்து சாஸ்திரம் விதித்தபடியே த்யானம் செய்த பக்தர்கள் உள்ளம் புகுந்து அஞ்சன மலையுடன் செந்தாமரைக் கண்ணுடன் பரவசம் ஆக்குவான்
ஸ்யாமம் அதி சுந்தரம் உள்ளுள்ள வாத்சல்யம் கண்ணில் வெளியில் கசிந்து பரிவாஹம் ஆகுமே
தியானித்து ப்ராப்யமான உனது திருவடிகளை சிரஸா வகிப்பார் என்னால் முடியாதே யாகிலும்
காலையில் மேய்க்கப் போன பசு கன்றை நினைத்து கனைத்து வருமா போல் அறியாத குருட்டுப்பசு கனைக்குமா போல் நானும் சொன்னேன் இப்படி அல்லது நீ அளித்த பக்தியால் மதி மயங்கி கிடைக்கும் நான் ஸ்வ தந்திரமாக ஒன்றும் சொல்ல வல்லேன் அல்லேன் என்கிறார்
8-7-இருத்தும் வியந்து என்னைத் தன் பொன்னடிக் கீழ் -ப்ரவேஸம் –
கீழ் அடைய இத் திருவாய் மொழியில் பேற்றுக்கு கிருஷி செய்தபடி –மேல் இப் பேற்றுக்கு வேலியாய் இருக்கிறது-மேம் பொருள் போல் ரத்னம்
இத் திருவாய்மொழியில் செய்கிறது என் என்னில் –
தாம் அனாதிகாலம் புத்தி பூர்வகமாக செய்து போந்த பாவங்கள் முழுதுதினையும் மறந்து-
தம்மாட்டு பத்தி பிறந்த பின்பு-
அறியாமலே செய்து போந்த பாவங்களை காணா கண்ணிட்டு-
இவர் தம்முடைய பேற்றுக்கு அவன் தானே முயற்சி செய்து-இவருக்கு பிறந்த விடாய் தீரும்படி கலந்து
இது தான் இவருக்கு உபகரித்தானாய் இருக்கை அன்றிக்கே தன் பேறாய் இருக்கிறபடியை -நினைத்து
தானே அர்த்தியாய் விரும்பினவனாய்-தன் பேறாக வந்து கலந்தவனை-
நாம் இரப்பாளராகக் கூப்பிட்ட இடம்-என் செய்தோம் ஆனோம் என்று நாணம் கொண்டு-
ஒரு சம்சாரி சேதனன் பக்கல் சர்வேஸ்வரன் செய்யும் அங்கீகாரம் இருக்கும்படியே இது -என்று வியப்பு அடைந்தவர் ஆயினார்-
அங்கனம் வியப்பு அடைந்தவராய்-பகவத் அங்கீ காரத்தால் பெற்ற பேற்றுக்கு த்ருஷ்டாந்தம் –
இராகவன் அபயத்தைக் கொடுத்த அளவிலே இராவணன் தம்பியான விபீஷணன் வணங்கினான் -என்றபடியே
ராகவேண அபயம் தத்தே ஸன்னத-(நன்று வணங்கினான்) ராவணானுஜ விபீஷண மகா ப்ராஞ்ஞா பூமிம் சமவலோகயன் -யுத்தம் -1901-
இராவணன் பின் பிறந்த நாம் இரகு குலத்தில் உள்ளார்க்கு ஆளாக புக நின்றோமே -என்று இருந்தவன்
பெருமாள் பாடு நின்றும் அருள்பாடிட்டு வந்தவாறே-என்னையே இப்படி கைக் கொண்டு அருளுவது –
அவன் பின் பிறந்த தண்மை எங்கே போயிற்று -என்று
வேர் அற்ற மரம் போலே கூட வந்த நால்வரோடும் திருவடிகளிலே வந்து தரைப் பட்டாப் போலேயும்-
இராம குணங்கள் நடையாடாத அசோக வனத்திலே திருவடி சென்று சேர்ந்து கேட்ட போதே-
இனிமையான வார்த்தையை வைதேகிக்கு சொன்னார் -என்றபடியே-
ஏவம் பஹூவிதம் சிந்தாம் சிந்தயித்வா மகாகபி சம்சரவே மதுர வாக்கியம் வைதேஹ்யா வ்யாஜகாரா ஹா -சுந்தர -31-1-
பிராட்டி உள்ளாம்படி இராம நாம சங்கீர்தனத்தை செய்ய –இந்நிலத்தில் இது நடப்பது ஓன்று அன்று –
இது மனத்தின் விகாரத்தால் வந்த மயக்கமோ அன்று
காற்றின் செயலால் வந்த மயக்கமோ – அன்று
இது பிரிந்தாருக்கு வந்த மயக்கமோ – அன்று
அனைவருக்கும் வரும் கானல் நீர் போன்ற மயக்கமோ என்று பல படிகளால் ஐயம் கொண்டு
முன்னே நின்று வார்த்தை சொல்லா நின்றான்-
இது கேட்டு நாம் வேறுபடுகிற தன்மையும் உண்டு – ஆன பின்பு இது மெய்யாம் இத்தனை -என்று-
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள்-தெளிந்து ஹ்ருஷ்டை யானால் ஆனால் போலேயும் –
கிம் து ஸ்யாத் சித்த மோஹ அயம் பவேத் வாத்கதி து இயம் உன்மாதஜ விகாரோவா ஸ்யாத் இயம் ம்ருகத்ருஷ்ணினா -சுந்தர -34-25-
ஆழ்வார் சங்கித்து (மருள் தானீதோ மாய மயக்கு மயக்கே–8-7-3-)அங்கன் அல்ல மெய் தான் ப்ரீதராய்(தூய சுடர்ச் சோதி தனதென்னுள் வைத்தான்
தேசந்திகழும் தன் திருவருள் செய்தே-8-7-4-)
அத்வேஷம் பிறப்பித்து -த்வேஷம் இல்லாமை முதல் படி வெறுப்பு இல்லாமை
ஆவி முக்கியம் உண்டாக்கி –
தன்னால் அல்லாது செல்லாமையை பிறப்பித்து
மேன்மை பாராமல் தாழ நின்று கலந்து
தாழ நின்று பரிமாறும் ஆஸ்ரித பாரதந்த்ர்யம் -ஹ்ருஷ்டர் ஆக பேசுகிறார்
உயர்ந்த திருவாய்மொழி -இது என்பர்–இதுக்கு ஒத்த திருவாய்மொழி இல்லை என்பர்-
நமக்கு ஆசை அதிகம் நினைத்தோம்
எம்பெருமான் தமக்கு செய்யும் உபகாரம் துடிப்பை – சந்தோஷமாக அருளிச் செய்த திருவாய்மொழி-
ரத்னம் போலே இது -மேம் பொருள் போக விட்டு -த்வயார்த்த பிரதி பாதித்த படியால் -மேலே மூடி -கீழே பொட்டி போலே-
ஏழாம் திருவாய் மொழியில் –
திருக் கடித்தானத்திலே எழுந்து அருளி இருந்த சர்வேஸ்வரன் தம்முடைய திரு உள்ளத்திலே ஸமஸ்த விரோதிகளும்
கழியும்படி புகுந்து பரிபூர்ணமாக எழுந்து அருளக் கண்டு
அவன் தானே அர்த்தியாய்ப் புகுந்த படியையும்
அவனுடைய விரோதி நிவர்த்தகத்வத்தையும்
அஞ்ஞான தமோ நிரசனத்தையும்
அதுக்கு அடியான அத்யுஜ்ஜ்வல விக்ரஹ யோகத்தையும்
ஸூஸ்த்திர ஸ்த்திதியையும்
அத்தாலே பிறந்த திவ்ய அவயவ சோபையையும்
அவ் வழகினுடைய அநு பாவ்ய அதிசயத்தையும்
நிர்ஹேதுக உபகாரகத்வத்தையும்
அதிசயித உபகாரகத்தினுடைய அனுசந்தேயத்வத்தையும்
நித்ய அநு பாவ்ய பரத்வத்தையும்
அனுசந்தித்து ஏவம் பூதனான சர்வேஸ்வரன் தன திரு உள்ளத்தில் புகுந்து இருக்கிற அதிசயித
வ்யாமோஹத்திலே விஸ்மிதராய் இது பிரமமோ மாயாதி விகாரமோ என்று சங்கித்து
நம் அளவில் விப்ரலம்பியான் என்று தெளிந்து இது ஒரு உபகார அதிசயமே
என்று அத்யந்தம் ஹ்ருஷ்டராகிறார் –
இருத்தும் வியந்து என்னைத் தன் பொன்னடிக் கீழ் என்று
அருத்தித் தெனைத்தோர் பல நாள் அழைத்தேற்கு
பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து என் தன்
கருத்தை யுற வீற்றிருந்தான் கண்டு கொண்டே-8-7-1-
இத் திருவாய் மொழியிலே தமக்கு உண்டான லாபத்தை-சுருங்க அருளிச் செய்கிறார்
இதனால்-பிராப்ய பிராபகங்களைச் சொல்லுகிறது –யாங்கனம் எனின் –
தன் பொன்னடி -என்று பிராப்ய ஸ்வரூபம் சொல்லிற்று-
இருத்தும் -என்று-பிராபகனும் அவனே என்று சொல்லிற்று-
வியந்து இருத்தும் -என்று தன் பேறாக இருத்தும் –
அருத்தித்து –சேதனனான வாசிக்கு இத்தனையாவது வேண்டும் அன்றோ –அதிகாரி ஸ்வரூபம்
அழைத்தேற்கு–அழைக்கவும் கூட மாட்டாத இவனையே நாம் அழைத்தது –
அழைத்தேற்கு-இவன் காதலை அறியாதே தாழ்த்தான் ஆகவும்-நாம் காதலை உடையோமாகவும்-
நினைத்துக் கூப்பிட்டு என்ன கார்யம் செய்தோம் -என்கிறார் காண் -என்று பிள்ளான் பணிப்பர்
அத்தலையில் காதலை நினைத்தால்-விரும்புதலும் கூட அன்றோ மிகையாய் இருப்பது –
என் தன் கருத்தை யுற –
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -2-9-4-என்னும்-என் நினைவைத் தான் கைக் கொண்டான் –
வீற்றிருந்தான் –இவரைப் பெற்றதால் உண்டான வேறுபாடு வடிவிலே தோற்ற-கிருதக்ருத்தியனாய் இரா நின்றான் –-அபி நிவேசம் மிக்கு -வேறு பாடு தோன்ற பூர்ண அவலோகநம் செய்து இருந்தானே
கண்டு கொண்டே –பெரிய நோய்க்கு தப்பின புத்திரனை-தாய் தந்தையர்கள் பார்த்துக் கொண்டு இருக்குமா போலே
மாயக் கூத்தா -என்ற திருவாய்மொழி யிலே-விடாய்க்கு தப்பினவர் என்று பார்த்துக் கொண்டே இருந்தான் –
——–
இருந்தான் கண்டு கொண்டே எனதேழை நெஞ்சாளும்
திருந்தாத வோரைவரைத் தேய்ந்தற மன்னி
பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்
தருந்தானருள் தான் இனி யானறியேனே-8-7-2-
நான் இந்த்ரியங்களுக்கு கட்டுப்பட்டு இருந்த தன்மையை-தன் அழகாலே தவிர்த்து
என்னை அங்கீகரித்த உபகாரத்துக்கு ஒவ்வாது–ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உடைய ஆபத்தை நீக்கிய தன்மையும்-என்கிறார்–உம்மைத் தொகை –
இந்திரியங்கள் அழகிலே ஈடுபட்டு நலிவதால் அழகைக் கொண்டே விஷயீ கரித்து அருளினான் –
மொத்தமாக ஆழ்வாரை விழுங்கி –அசத் சமமாக திருவடிக்கு கீழ் சேர்த்துக் கொண்டானே —
போதரே என்று சொல்லிப் புந்தியில் புகுந்து தன்பால்-ஆதரம் பெருக வைத்த அழகன் -திருமாலை -16 -அன்றோ-
பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான் தருந்தானருள் தான்-பெருமான் தான் தரும் அருள் தான் –
தரும் என்கிற இது – தந்த -தருகின்ற -தரும் -என-முக்காலத்திலும் சொல்லலாய் இருக்கையாலே-தரும் அருள் -என்கிறார்
அடியாருக்கு செய்ததும் தமக்குச் செய்ததாக அன்றோ இவர் நினைத்து இருப்பது-ஆதலின் -கொடுத்த என்னாது -தரும் -என்கிறார்-
இனி யானறியேனே-எனக்கு உதவின பின்பு-நான் அதனை ஒன்றாக நினைத்து இரேன்
யான் நோவு பட்டது பல ஆண்டுகள்-அகப்பட்ட பொய்கை அளவுக்கு உட்பட்டது
முதலை ஓன்று
காலம் அநாதி
அகப்பட்டது பிறவிப் பெரும்கடல்-குட்டத்து கோள் முதலை அது
முதலை ஐந்து
இதனை மீட்டுக் கொண்ட மகா குணத்துக்கு-ஒரு குணமாய்ற்றதோ
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் பக்கலிலே செய்த அருளை இட்டு-புறம்பு உள்ளாரைப் பிரித்து வேறு படுத்தினார்-
தமக்குச் செய்த அருளை இட்டு அதனையே பிரித்து வேறுபடுத்துகிறார்-
—————
அருள் தான் இனி யான் அறியேன் அவன் என்னுள்
இருள் தானற வீற்றிருந்தான் இதுவல்லால்
பொருள் தான் எனில் மூ வுலகும் பொருள் அல்ல
மருள் தானீதோ மாய மயக்கு மயக்கே–8-7-3-
எல்லாவற்றாலும் நிறைவுற்றவனாக இருக்கின்றவனான சர்வேஸ்வரன்
தம் பக்கல் இப்படி காதலைச் செலுத்துவது கூடாதது ஓன்று என்று-ஐயம் கொண்டு
இவ் வனுபவம் மயக்கம் முதலானவைகளாலே பிறந்ததோ -என்கிறார்-
அவன் என் மனத்திலே அறிவின்மை யாகிற இருள் எல்லாம் புகும்படி-
பெறாப் பேறு பெற்றானாய்-அவ் வேறுபாடு தோற்ற இரா நின்றான்-இனி எனக்கு வேறு ஓன்று தோற்றுமோ-
இதுவல்லால் பொருள் தான் எனில் மூ வுலகும் பொருள் அல்ல –
இதற்கு திருமலை ஆண்டான் பணிக்கும் படி –
உலகத்தார் செல்வங்களில் தலையாக சொல்லுவது-மூன்று உலகத்து செல்வதை அன்றோ –
அதுவும் எனக்கு ஒரு சரக்கு அன்று -என்கிறார் -எனபது-ஆழ்வாருக்கு -என்றவாறு –
அங்கன் அன்றிக்கே
என்னுடைய மனத்திலே புகுந்து எழுந்து அருளி இருக்கிற இருப்பு ஒழிய
வீற்றிருந்து ஏழு உலகும் தனிக் கோல் செல்ல இருக்கும் இருப்பும்
தனக்கு ஒரு ஐஸ்வர்யமாக நினைத்து இருக்குமோ என்று பார்த்தால்
அதுவும் ஒரு சரக்காக நினைத்து இருக்கின்றிலன் எம்பெருமான் –என்று எம்பெருமானார் அருளிச் செய்வர் –
இதுவே -சர்வேஸ்வரனின் காதலின் பெருக்கைக் கூறும் -இடத்துக்கு பொருந்துவது –
இதில் இதுவே தனக்கு பரம புருஷார்த்தம் என்று இருந்தான் –
மூ உலகும் பொருள் அல்ல -ஆழ்வாருக்கும் எம்பெருமானுக்கும் என்று இரண்டு நிர்வாகங்கள்
நெடுநாள் இந்த சரீரத்தைக் கொடுத்து அறிவு கொடுத்தான் –பிராமாயன் சர்வ பூதாநி யந்த்ரா ரூபாயா மாயையா —
இப்போது தன்னுடைய காதலாலே என்னை மயங்கச் செய்தான் –
———
மாய மயக்கு மயக்கான் என்னை வஞ்சித்து
ஆயன் அமரரர்க்கு அரி ஏறு எனதம்மான்
தூய சுடர்ச் சோதி தனதென்னுள் வைத்தான்
தேசந்திகழும் தன் திருவருள் செய்தே-8-7-4-
அவன் என்னை மயங்கச் செய்தான் அல்லன்-என் உள்ளே கலந்து அருளினானே-இதிலே ஓர் ஐயம் இல்லை -என்கிறார்-
வைகலும் வெண்ணெய் கை கலந்து -உண்டு -என் மெய்யுள் கலந்தானே
ஆயன் அமரரர்க்கு அரி ஏறு எனதம்மான் – நித்ய ஸூரிகளுக்கு அவ்வருகான ஏற்றத்தை உடையனாய் வைத்து-கிருஷ்ணனாய் வந்து அவதரித்து
என்னுடைய அடிமையை நிர்வகித்த-பரம ஆப்தன் -என்னை வஞ்சித்து மாய மயக்கு மயக்கான் –திரு மோகூர் ஆப்தன் -வழித் துணை பெருமாள் –
புறம்பு ஒருவருக்கு இன்றிக்கே-தனக்கே உரியதான அருள் ஆதலின்-தன் திரு வருள் -என்கிறார் –
தான் வேறு ஒரு சாதனத்தைக் கொண்டு சாதித்துக் கொள்ளப் படாதவன் –என்னும்படியைக் கொண்டு என் உள்ளே பிரகாசிப்பித்தான்
ஆதலின் –என்னுள் வைத்தான் -என்கிறார்
குற்றங்கட்கு எல்லாம் எதிர்தட்டாய்-வேறுபட்ட சிறப்பினை உடைய ஒளி உருவமாய்-சுத்த சத்வ மயமாய்-தனக்கே உரியதான வடிவை என்னுள் வைத்தான்-
திகழும் தன் திருவருள் செய்து உலகத்தார்
புகழும் புகழ் தானது காட்டித் தந்து என்னுள்
திகழும் மணிக் குன்றம் ஒன்றே ஒத்து நின்றான்
புகழும் புகழ் மற்று எனக்கும் ஓர் பொருளே–8-7-5-
ஒருவர் பெரும் பேறே என்று உலகம் அடங்க கொண்டாடும்படி-என் உள்ளே வந்து நின்று அருளினான்
அதனால் வந்த புகழை அல்லது-இவனுடைய மற்று உள்ள புகழையும் ஒன்றாக மதியேன் -என்கிறார்-
திகழும் தன் திருவருள் செய்து – பிறர் உடைய அளவுக்கு உட்பட்ட அருள் போலே அன்றிக்கே
இரண்டு தலைக்கும் நிறமாம்படியான-தன் திருவருளை என் பக்கலிலே செய்து –
நிர்ஹேதுகம் ஆனதால் அபேஷா நிரபேஷம் அவனுக்கு -அத்யந்த பரதந்த்ரம் சித்திக்கும் இவருக்கு –
———
பொருள் மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் சீர்க்கத்
தருமேல் பின்னை யார்க்கவன் தன்னைக் கொடுக்கும்
கரு மாணிக்கக் குன்றத்துத் தாமரை போல்
திரு மார்வு கால் கண் கை செவ்வாய் யுந்தியானே–8-7-6-
எனக்கு தன்னை ஒழிய வேறு ஒன்றனைத் தந்து விட்டால்-புறம்பு தன்னை வேறு ஒருவர் கொள்வார் இல்லாமை எனக்குத் தந்தானோ-
என் பக்கலிலே காதலால் தந்து அருளினான் -என்கிறார்
கரு மாணிக்கக் குன்றத்துத் தாமரை போல் திரு மார்வு கால் கண் கை செவ்வாய் யுந்தியானே-கரு மாணிக்க குன்றம் -திரு மேனிக்கு திருஷ்டாந்தம்
தாமரை போல் -அவயவ சோபைக்கு திருஷ்டாந்தம்
திரு மார்வு -புருஷகாரமான பிராட்டி எழுந்து அருளி இருக்க்கிற திரு மார்வு
கால் -அச் சேர்த்திக்கு தோற்று விழும் திருவடிகள்
கண் -திருவடிகளில் விழுந்தாரை குளிர நோக்கும் கண்
கை -அவர்களை எடுத்து அணைக்கும் கை
செவ்வாய் -இன்சொற்களைச் சொல்லும் திரு அதரம்
உந்தி -அனுபவிக்கத் தக்க திரு உந்தி –உந்தி மேலதன்றோ –அமலனாதி -3-என்னக் கடவது அன்றோ
——–
செவ்வாய் யுந்தி வெண் பல் சுடர்க் குழை தம்மோடு
எவ்வாய்ச் சுடரும் தம்மில் முன் வளாய்க் கொள்ள
செவ்வாய் முறுவலோடு எனதுள்ளத்திருந்த
அவ்வாயன்றி யானறியேன் மற்றருளே–8-7-7-
அவன் தம்மோடு கலந்த கலவியினாலே உவகையனாய்-அது தன் பேறாக முறுவல் செய்த திருப் பவளத்தை-அனுபவித்துப் ப்ரீதர் ஆகிறார் –
தம்மில் முன் வளாய்க் கொள்ள –
ஒன்றுக்கு ஓன்று நான் நான் என்று-தம்மில் தாம் முற்பட்டு ஆழ்வாரை வளைத்துக் கொள்ள –
அதாவது-நான் நான் என்பதற்காக முற்பட்டு ஆழ்வாரை வளைத்துக் கொள்ள -என்னுதல்-
அன்றிக்கே-முற்பட்டு என்னை வளைத்து கொள்ள -என்னுதல் –
செவ்வாய் முறுவலோடு எனதுள்ளத்திருந்த –
அவாகீ -அநாதர -என்று இருக்கக் கூடிய பரம் பொருள்-இவரைப் பெற்று இது தன் பேறு என்று தோற்ற-முறுவல் செய்தபடி-
பூ அலரும் போது எங்கும் ஒக்க செவ்வி பிறக்குமாறு போலே-திவ்ய அவயவங்கள் தோறும் ஒரு வேறுபாடு பிறக்கும்படி யாயிற்று புன் முறுவல் பூத்தது –
———-
அறியேன் மற்றருள் என்னை யாளும் பிரானார்
வெறிதே யருள் செய்வர் செய்வார்கட்குகந்து
சிறியேனுடைச் சிந்தையுள் மூவுலகும் தன்
நெறியா வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரே–8-7-8–
அவன் தம்மோடு வந்து கலக்கைக்கு அடி-அவனுடைய திருவருள் காரணம்-என்கிறார்
சாதனமாக ஒன்று-ம் எதிர் பார்க்க மாட்டார்அதிகாரி ஸ்வரூபம் வேண்டுமே -பல அனுபவ யோக்யதை -உண்பதற்கு பசி போலே-போஜனத்துக்கு ஷூத்து போலே –நிர்ஹேதுகமாக பிரதம அனுக்ரகம் -ருசி வளர்த்துக் கொள்வது நமது கர்தவ்யம்-ஹேது அவன் உகப்பு -ஆசை அதிகாரி யோக்யதை –
அத்தனை அல்லது-பேற்றுக்கு சாதனமாக சொல்ல ஒண்ணாதே அன்றோ –
பிரியதம ஏவ ஹி வரணீயோ பவதி -ஸ்ரீ பாஷ்யம்-ஜிஜ்ஜாஸூ அதிகரணத்தில் –
அவனே எல்லாமாக நினைத்து வேறு ஒன்றையும் கெடுக்காத அநந்ய பிரயோஜனர் பிரிய தமர் -அவர்களை வரிப்பான் –
அவன் இதுவரை மூவுலகுக்கும் அவ்வருகாகா நினைத்திரா நின்றான்-
இவர் தம்மை மூவுலகுக்கும் இவ்வருகாக நினைத்திரா நின்றார்-
————
வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரும் யவரும்
வயிற்றில் கொண்டு நின்ற ஒரு மூவுலகும் தம்
வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மாலை
வயிற்றில் கொண்டு மன்ன வைத்தேன் மதியாலே-–8-7-9-
வயிற்றில்
1-தாய் போல் நோக்கி
2-ஸ்வரூப ஏக தேசத்தில்
3-ஸங்கல்ப ஏக தேசத்தில்
4-அகவாயில் -உள்ளத்தில் கொண்டு
சர்வ பிரகார ரக்ஷணத்வம் ஸூ ஸ்திரமாக எனது நெஞ்சிலே -மாறாமல் -வைத்தேன்
வயிற்றில் கொண்டு மன்ன வைத்தேன் மதியாலே-இசைவித்து என்ற அவன் அருளினை மதியால் -அனுமதியாலே புத்தியால்
விலக்காத படி உள்ளத்திலே மன்னும் படிக்கு வைத்தேன் –
அவன் அங்கு இங்கு சலிக்காத படி பேராத படி வைத்தேன்
இப்படி அவன் அங்கீகரித் ததற்கு நீர் செய்தது என் என்னில் –அனுமதி மாத்ரம் செய்தேன் இத்தனை -என்கிறார் —
நிர்ஹேதுகமான விஷயீ காரத்துக்கு -அனுமதி மாத்திரமே வேண்டுவது –
அத்வேஷம் ஒன்றுமே வேண்டுவது இதுவே தானே பத்துடை அடியவர்க்கு எளியவன் பார்த்தோம் –
தம் வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மாலை–தம்முடைய நினைவில் ஆயிரத்தில் ஒரு கூற்றாலே நடத்திக் கொண்டு என்னுதல் –
அன்றிக்கே –
வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரையும் யாவரையும்-தம் வயிற்றில் கொண்டு- நின்ற ஒரு மூவுலகையும் தம் வயிற்றில் கொண்டு –என்று பிரித்துச் சொல்லுதல் –நின்ற வண்ணம் நின்ற மாலை-இவற்றை அடைய தன் வயிற்றில் கொண்ட இடத்திலும் ஒரு விகாரம் இன்றிக்கே நின்ற சர்வேஸ்வரனை –
மன்ன வைத்தேன் மதியாலே –இதற்கு –இவன் படியை அறிந்து கொண்டேன் -என்கிறார் என்று நடாதூர் அம்மாள் பணிப்பர்–
நிர்ஹேதுகமாக அருள் செய்வார் -நின்ற வண்ணம் -விகாரம் இல்லாமல் -பிரகாரங்கள் உடன் தான் சேர்ந்து இருந்தான்
சர்வ பிரகார ரக்ஷகன் -என்கிற ஞானத்தால்-இருதயத்தில் வைத்தேன் -என்றபடி –
அன்றிக்கே
மதி -அனுமதி -என்று ஆக்கி–அனுமதி மாத்ரத்திலே -என்பர் பட்டர் –என்றது
அவன் புகுகிற இடத்தில் விலக்கு அற்றிலன் -என்றபடி-அனுமதி அதிகாரி ஸ்வரூபம் –
மதியால் இசைந்தோம் என்னும் அனுமதி இச்சைகள் இருத்துவம் என்னாத என்னை இசைவித்த என் இசைவினது -ஆசார்ய ஹிருதயம் ஸ்ரீ ஸூக்தி-
——-
வைத்தேன் மதியால் எனது உள்ளத்தக்கத்தே
எய்த்தே ஒழிவேன் அல்லேன் என்றும் எப்போதும்
மெய்த்தேய் திரை மோது தண் பாற் கடலுளால்
பைத்தேய் சுடர்ப் பாம்பணை நம் பரனையே –8-7-10-
சர்வ ஸ்மாத் பரன் ஷீராப்தி நாதன் -ஸுஹார்த்தம் –வ்யூஹ ஸுஹார்த்தம் பிரதானம் பாஞ்ச ராத்ரம் -ஸ்ரீ ரெங்கம்
என் நெஞ்சுக்குள் வைத்து இடை விடாமல் அனுபவிப்பேன் –வைத்ததுக்கு பலன்-இந்தப்பாசுரத்தில்
வைத்தேன் மதியால் எனது உள்ளத்தக்கத்தே -மீண்டும் சொல்லி அனுமதி முக்கியம் என்பதை காட்டி –
என் உணர்வில் உள்ளே நிறுத்தினேன் -அதுவும் அவனது இன்னருள் -ராஷா பேஷாம் ப்ரதீக்ஷிதே
எதிர் பார்க்கிறான் -உபாயம் இல்லை –அதிகாரி ஸ்வரூபம்-புருஷ சாபேஷமுமாய் புருஷகார சாபேஷமுமாய் தானே பேறு கிட்டும்
எம்பெருமான் சபரிகரமாக என்னுள் புகுந்தான் -பாற் கடல் -பாம்பணை –
அவனை நான் இனி ஒரு நாளும் விஸ்லேஷித்து துக்கப் படேன் -மாயக் கூத்தாவில் பெரிய சிரமம் பட்டார் –
பேற்றுக்கு அடி கிருபை -இழவுக்கு அடி கர்மம்–கர்மமும் கிருபையும் அனுபவித்துத் தானே தீர வேண்டும்
பைத்ததேய் சுடர்ப் பாம்பணை நம் பரனையே–நம் பராத் பரனையே மதியால் வைத்தேன்
சுடர் பாம்பணை பள்ளியாக கொண்ட மேன்மை
புண்டரீகாக்ஷத்வம் —சிக்கென செங்கண் மாலே -திருவடியால் அளந்தோமே என்று சேர்த்துக் கொண்டான் –
தாவி –கொண்டோம் – சேவியேன் உன்னை அல்லால் -விட மாட்டேன் என்றதும் பிறந்த செங்கண் மால் -இப்பொழுது மலர்ந்த –
ஸ்ரீ யபதித்தவம் -இத்யாதி எப்பொழுதும் பரத்வம் -இங்கு திரு அநந்த ஆழ்வான் மேலே சயனித்ததால் வந்த பரத்வம்
இத்தை நமக்கு பிரகாசிப்பித்தவன் -பரன் –
வ்யூஹ மூர்த்தி வடிவைக் காட்டி -கண் முன்னே அருளினான் –
அரவித்தமளி -படுக்கை உடன் -அழகிய பாற் கடல் -உடன்அரவிந்த பாவையும் தானும் புகுந்து –
——–
சுடர்ப் பாம்பணை நம் பரனைத் திருமாலை
அடி சேர் வகை வண் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன வாயிரத்து இப் பத்தும் சன்மம்
விட தேய்ந்தற நோக்கும் தன் கண்கள் சிவந்தே–8-7-11-
ஆழ்வார் பாட அவன் பார்த்துக் கொண்டே இருக்க -அவனை பார்த்து ஆழ்வார் பாட -ராகம் -சிவந்து -இந்த காதலே உஜ்ஜீவனம்
நிகமத்தில்-இப் பத்தானது தன்னைக் கற்றவர்கள் உடைய-பிறவிக்கு த்ருஷ்ட்டி விஷம் –
சன்மம் தேய்ந்து அற-கண்கள் சிவந்து நோக்கும் -விடம் நோக்கும் விடம் -த்ருஷ்ட்டி விஷம் —கண்ணில் விடமுடைய தொரு பாம்பு போலே-
திட்டியின்(த்ருஷ்டியின் )விடமன்ன கற்பின் செல்வியை-விட்டிலையோ இது விதியின் வண்ணமே -கம்பர் கும்பகர்ண வதைப் படலம் -60
சன்மம் விட தேய்ந்தற நோக்கும் தன் கண்கள் சிவந்தே–கண் கொத்திப் பாம்பு போலே கண்களில் விஷம் வைத்துக் கொண்டு இந்த திருவாய் மொழி முடிக்கும் –
அடி சேர் வகை வண் குருகூர்ச் சடகோபன் முடிப்பான் சொன்ன வாயிரத்து -அடி சேரும் வகையை முடிப்பதற்காக-சேர்வதில் கால விளம்பம் இல்லாமல் – ன்றும் சன்மம் முடிப்பான் சொன்ன ஆயிரத்து இப்பத்தும் என்றும் கொண்டு அநிஷ்ட நிவ்ருத்தி
சுடர்ப் பாம்பணை நம் பரனைத் திருமாலை-பரியங்க வித்யை -அநந்த போகிநே ஸ்ரீ சயா ஆஸீனம் -முக்த ப்ராப்ய போகம் இஷ்ட பிராப்தியும் உண்டே
ஞான ஆநந்தங்கள் அன்று இவருக்கு நிரூபகம்-அடிமையே ஆயிற்று-நிரூபகம்
அடிச்சியாம் அடியோம் -சேஷத்வமே ஸ்வரூப நிரூபகம் ஆழ்வாருக்கு -எல்லா அவஸ்தைகளிலும் –என்பரே-
——————–——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –