ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
அடுத்த பாசுரம் சரணாகதி பாசுரம்-இதில் கண்ணாலே கண்டது போல் கூப்பிடுகிறாள்-துறையடைவு-தலைவி தலைவனைக் காண விரைதல்–-எங்கே காண்பேன் -இந்தக்கூட்டத்திலா -கோபிமார்கள் -ரிஷிகள் -அரசர்கள் ராஜஸூய யாகம் -தானம் கொடுக்கும் குழுவிலா –-நேராக ஏகாந்தமாக ஸேவை சாதிப்பான் என்று அறிவிலியாக நினைந்து -காணாமல்-மையார் கருங்கண்ணி -9–4-இதன் விவரணம்-இங்கும் திருவாழி திருக்கையுடன் சேவிக்க ஆசை உண்டே–வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும்
கையா உனைக் காணக் கருதும் என் கண்ணே–9-4-1-கரு மாணிக்கம் இல் பொருள் உவமை மாணிக்கமே -சிவந்தே தானே இருக்கும்-முத்து போல் குளிர்ந்தும் இருப்பானே –
அவதாரிகை –-இவள் மோஹித்த அநந்தரம் -அரத்தியாய் ஓர் இடத்தில் தரியாதே –பகவத் அலாபத்தாலே-அங்கே இங்கே தடுமாறி கூப்பிட்டு கொண்டு திரிகிறபடியை சொல்கிறது –
க்வசிதுத் பரமதேவகாத் க்வசித் விப்ரமதே பலாத் ச்வசின்மத்தஇவாபாதி காந்தான் வேஷணதத்பர –முகில் வண்ணன் பேர் கிளறிக்கிளறிப் பேசி நைந்து போனாள் கீழே மூவாறு மாதம் மோஹித்தவர் அன்றோ-தமோ குணத்தால் வந்த மோஹம் அல்லவே-அதே போல் இங்கும்-உப ரதி ஒய்வு-அரதி -பரபரத்து ஓர் இடத்தில் இருக்க ஒட்டாமல்-அங்கே இங்கே -ராமாவதாரம் கிருஷ்ணாவதாரம்-சீதாப் பிராட்டி எங்கே எங்கே என்று விப்ரமதே மயங்கி -பித்துப் பிடித்தால் போல் காந்தையைத் தேடித் தரியாமல் இருந்தது போல் –
இப்படி பரிவரும் வெறுக்கும் படி ஆர்த்தரான இவர் போக்ய பூதனான ஸர்வேஸ்வரனைக் காண ஆசைப்பட்டுத் தம்மிலே அவனை நோக்கி ப்ரலாபித்த ப்ரகாரத்தை நாயகி யானவள் நாயகனான ஸர்வேஸ்வரனைப் புறம்பே திரளிடை யாகிலும் காண ஆசைப்பட்டுப் புலம்பின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்–அவதாரிகை–இதுக்கு மேல் தன் கணவனைக் காணாமல் பொறுக்க மாட்டாத நாயகியாய் கோப ஸ்த்ரீ சங்க ஸேவ்யனான கண்ணனாயும் – அத்வர்ய் வாதிகளோடு மஹா சாவாத்யரோத் சாயாதிக்ருதனான சக்ரவர்த்தி திருமகனாயும் திவ்ய அப்சரஸ் சங்க திவ்ய ஸூரி சங்க பரிசரண விஷய பரமபத நிலயனாயும் மற்றும் அங்கங்காக தத் தத் சங்க சேவ்யனாயும் காண அவாவைப் பெற்று அவனில் தன் ப்ரீத்யபி வ்யஞ்ஜகமான திரு நாமங்களை உரக்கச் சொல்லி
விமுக்த லஜ்ஜையாய்க் கூப்பிடுகிறார் இதில்
தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழு வினுள்ளும்
ஐய நல்லார்கள் குழிய விழவினும் அங்கங்கெல்லாம்
கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பானவாவுவன் நான்
மைய வண்ணா மணியே முத்தமே என் தன் மாணிக்கமே – -84-தலைவி தலைவனைக் காண விரைதல்–
மைய வண்ணா–மையுடைய நிறம் போன்ற கரிய திருநிறமுடையவனே!
மணியே முத்தமே என்றதன் மாணிக்கமே–நீலமேணியும் முத்தும் மாணிக்கமும் போல
நிறத்தையும் அழகையும் ஒளியையும் உடைய எம்பெருமானே!
தையல் நல்லார்கள்–அழகிய ஸ்த்ரீகள்
குழாங்கள் குழிய குழுவினுள்ளும்–கூட்டமாய்க் கூடின திரளினுள்ளே யாயினும்
ஐய நல்லார்கள்–சிறந்தவர்களான நல்லபுருஷர்கள்
குழிய விழவினும்–திரண்ட திருவிழாக்களிலாயினும்-உத்ஸவங்களிலும்
அங்கு அங்கு எல்லாம்–இன்னும் அப்படிப்பட்ட திரள்களெல்லாவற்றிலுமாயினும்
கைய பொன் ஆழி வெண் சங்கொடும்–கைகளிலுள்ள பொன்னிறமான சக்கரத்துடனும் வெண்ணிறமான சங்கத்துடனும்
நான் காண்பான் அலாவுவன்–நான் (உன்னைக்) காண ஆசைப்பட நின்றேன்.
மையார் கண் மா மார்பில் மன்னும் திருமாலை
கையாழி சங்கு டனே காண வெண்ணி -மெய்யான
காதலுடன் கூப்பிட்டுக் கண்டு உகந்த மாறன் பேர்
ஓத வுய்யுமே இன்னுயிர்–84–கீழ் – சீலாதிகனாய் -அதுக்கு ஊற்றுவாயான ஸ்ரீ பிராட்டியோடு நித்ய சம்யுக்தனாய் –இரண்டு இடத்திலும் அழகு பெற தரித்த ஸ்ரீ ஆழ்வார்களை யுடையனான-ஸ்ரீ எம்பெருமானை அனுபவிக்க வேணும் என்று தாமும் தம்முடைய கரண க்ராமங்களுமாக விடாய்த்துக் கூப்பிட தூணிலே தோற்றி சிறுக்கனுக்கு உதவினாப் போலே மானசமாகத் தோற்றி தன் குணங்களை அனுபவிப்பிக்க அத்தை அனுபவித்து ஹ்ருஷ்டராகிற -மையார் கரும் கண்ணியில் அர்த்தத்தை
மையார்கண் மா மார்பில் மன்னும் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -இப்படி பகவத் விஷய பக்தியை உடைய ஸ்ரீ ஆழ்வார் திருநாமத்தை அனுசந்திக்கவே விலஷணமான ஆத்ம வஸ்து உஜ்ஜீவிக்கும் –
தையல் நல்லார் இத்யாதி –தையல் நல்லார் உண்டு -ஸ்திரீ ரத்னங்கள் —அவர்கள் குழாம் உண்டு -திரள்–அத் திரள்கள் திரண்ட திரளினுள்ளும் –-பெண்கள் திரள்களைக் கண்டவாறே -திருக் குரவை-என்று இருப்பாராய் -ஆயிற்று இவர் –ஐய நல்லார் இத்யாதி —அறவோர் அரும் தவத்தோரையர்-என்று பண்டித வாசகங்கள் –ஐய நல்லார் உண்டு –பண்டிதரில் நல்லாராய் இருக்குமவர்கள் –அவர்கள் குழிய விழவிலும் -தீர்க்க சத்ரங்கள் -மற்றையில் -அவற்றுக்காக திரள இருப்பர்கள் இறே –தீர்க்க சத்திரம் -என்றது யாகாதிகளை–அவற்றிலும்-ஸ்ரீ தண்ட காரண்யத்தில் ருஷிகள் திரள் போலே இருக்கிற வற்றிலும் –சமாஜேஷூ மஹத் ஸூச -என்னுமா போலே –அங்கு அங்கு எல்லாம் –-அவற்றோடு போலியான விடங்கள் எல்லாவற்றிலும் –கைய இத்யாதி –திரு ஆழி இன்றிக்கே -மனிச்சேயான அவதாரத்தோடு- அவற்றை மறைத்த அவதாரத்தோடு வாசி யற திவ்ய ஆயுதங்களோடு காண ஆசை பட்டாய்-இற்றே இருப்பது –-ஆசூர பிரக்ரதிகளுக்கு அன்றோ மறைத்தது – எனக்கு காணத் தட்டு என் என்று-இருப்பாராயிற்று –ஜாநாது மாவதாரம் தே கம்சோயம் திதி ஜன்மஜ (ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-13–)சத் ப்ரக்ருதி யானவன் -தேனைவ ரூபேண சதுர் புஜேன சஹஸ்ர பாஹோ பவ விஸ்வ மூர்த்தே -என்றான் இறே –அவாவுவன் நான் –ஆசைக்கு கண் உண்டோ -(யுக்த அயுக்த விவேக ஞானம் இருக்காதே ஆசைக்கு ) காண வேணும் -என்று ஆசைப்படும் இத்தனை போக்கி – காண அரிது -என்று அறிய மாட்டேன் –காண அரிதாகில் காண வேணும் என்று ஆசையைப் பிறப்பித்து உம்மை சிஷித்து விட்டாரா என்ன –மைய வண்ணா -இத்யாதி –
விஷய தோஷம் இறே இதுக்கு அடி என்கிறார் –நல் சரக்கை இழந்து ஆறி இருப்பார்களோ –மைய வண்ணா -கண்டார் கண்ணிலே அஞ்சனம் எளிதினால் போல் குளிர்ந்து இருக்கும்படி –மைப்படி மேனியான் அஞ்சன வண்ணன் அன்றோ அவன் –மணியே –அப்படியே இருக்கச் செய்தே -முடிந்து ஆளலாய் இருக்கிறபடி –முத்தமே -உடம்பிலே ஏறிட்டுக் கொண்டால் விடாய் எல்லாம் தீரும்படி இருக்கை –என் தன் மாணிக்கமே -பெரு விலையனாய் இருக்கை ––மைய வண்ணா குளிர்ச்சி – கண்ணுக்கு மட்டும் இது-முத்தமே -குளிர்ச்சி -உடம்பிலே ஏறிட்டுக் கொள்ளும்படி அன்றோ–இவ் வாழ்வாருக்கு மோஹம் ஆவது –எத்திறம் -என்ற இடத்தில் சௌலப்யம் குணம் மாத்ரம் அனுபவம்–முகில் வண்ணன் விஷயத்தில் அழுந்தின அனுபவம் மாத்ரமே – அது இருந்த இடத்தில் இருக்க ஒட்டாதே-கிளப்பி விட -தேடிக் கூப்பிடுகிறார் –அபரிச்சின்ன வைபாவனாய் இருக்கச் செய்தேயும் -ஆஸ்ரிதர்க்கு அத்யந்த சுலபனாய் கண்டார் கண் குளிரும்படி -சம்சார தாபம் ஆறும்படி –அஞ்சன கிரி போல் திரு மேனி உடைய-சௌலப்யம் அனுபவித்து –அவனைக் காண வேணும் த்வரையில் அருளிச் செய்கிறார் –சௌலப்யம் அழகையும் காட்டி -கோபிமார் திரளில் ரசக் கிரீடை பண்ணின படியையும் தண்ட காரண்யத்தில் ருஷிகள் கோஷ்டியில் வீற்று இருந்த படியையும் – சகல திவ்ய ஆயுத சோபை உடன் – காண ஆசை கொண்டு அருளுகிறார் –
மைய வண்ணா மணியே முத்தமே என் தன் மாணிக்கமே–அவனையே முன்னிலை படுத்தி பேசி -நாயகனையே இடையூறாக நினைத்து பேசி குரவைக் கூத்தாடும் மகளிர் கூட்டத்திலும் -தர்ம புத்திரர் ராஜ ஸூய யாகம் செய்யும் மஹா புருஷர்கள் குழாங்களிலும் இருப்பவன் ஆகையால் தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழு வினுள்ளும்-ஐய நல்லார்கள் குழிய விழவினும் அங்கங்கெல்லாம்-கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பானவாவுவன் நான்-என்கிறார் – பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு பவ்வம் ஏறி துவரை எல்லாரும் சூழ சிங்காசனத்தே இருந்தானைக் கண்டார் உளர் –
காந்தள் முகிழ் விரல் சீதைக்காக்கிக் கடுஞ்சிலை சென்று இறுக்க வேந்தர் தலைவன் சனகராசன் தன வேள்வியில் கண்டார் உளர் -பெரியாழ்வார் பாசுரங்கள் –மணியே முத்தமே என் தன் மாணிக்கமே – –முத்தினை மணியை மணி மாணிக்க வித்தினை சென்று விண்ணகர்க் காண்டுமே -திருமங்கை ஆழ்வார்-தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழு-பரதந்த்ரராய் இருக்கும் -பிரபன்ன கோஷ்ட்டி
ஐய நல்லார்கள் குழு-யாகம் பல செய்யும் கைங்கர்ய கோஷ்ட்டி புறம்பே திரள்களில் ஆகிலும் காண ஆசைப்பட்ட நாயகி பாசுரம் –குழாங்கள் குழிய குழு-என்கையாலே சமூகம் பலவாய்ச் சேர்ந்த சமுதாயம் -நாயகி நாயகனைக் காண விரைந்து பேசும் பாசுரம் இது. நாயகனுடைய விரஹத்தை ஆற்றாத நாயகி, அவனை என் காதலின்படி தனியே ஏகாந்தத்திற் கண்டு கூடிக் குலவி இன்புற கிடையாதாயினும் ஆண்களும் பெண்களும் பலர் கூடிய கூட்டத்தினிடையில் எங்கேனுங் காணக் கிடக்குமாயினும் அது கொண்டு ஆறியிருப்பேனென்று கருதிச் சொல்லுகிறாளென்க.-“மையவண்ணா மணியே முத்தமே என்றன் மாணிக்கமே!” என்று முன்னிலையாகக் கூறியிருப்பது எங்ஙனே எனின்;-நாயகனையே இடையறாது நினைத்துக் கொண்டிருந்து நினைப்பு மிகுதியால் அவனை எதிரில் நிற்கிறாய் போலப் பாவித்து முன்னிலைப்படுத்திக் கூறினபடி,–திருவாய்ப்பாடியிலுள்ள ஆயர் மங்கையர் கூடியாடுங் குரலைக் கூத்துப் போன்ற மகளிர் குழாத்திலும், தருமபுத்திரர் செய்த ராஜஸூய யாகம் போன்ற மஹா புருஷர்களின் குழாத்திலும் எழுந்தருளி யிருப்பதற்குத் தகுதியுடைமைபற்றி“கையனல்லார்கள் குழாங்கள் நான்” என்றது. எம்பெருமான் பெண்களின் திரளிலும் மஹாபுருஷர்களின் கோஷ்டிகளிலும்
ஸேவிக்கத் தகுந்தவனென்பதை ‘பல்லாயிரம் பெருந்தேவிமாரோடு பௌவமேற்துவரை,
எல்லாருஞ் சூழச் சிங்காசனத்தே யிருந்தாளைக் கண்டாருளர்” “காந்தள் முகிழ்விரல்ருளர்” என்ற பெரியாழ்வார் பாசுரங்களாலு முணர்க.–தையல் நல்லார்கள்- ஸ்திரீகளுட் சிறந்தவர் என்றும், ஐயநல்லார்கள்- ஆர்ய ச்ரேஷ்டர் என்றுங் கொள்க.-தையல் நல்லார்கள் நல்- தையலார்கள் என மாறுதலுமாம். ‘குழிய’ என்றது குழுவிய என்றவாறு.-(தழுவிய என்பது தழிய என்றும், கெழுவிய என்பது கெழிய என்றும் வருதல்போல. (சீவக சிந்தாமணி-சுரமஞ்சரியாரிலம்பகம் 32.) “தமிழ் கழியசாலவர்” (கந்தபுராணம்-அசுரக் காண்டம்) ‘தனது மாடே, தழிய காவலரை நோக்கி” ” (கந்தபுராணம்-அசுரக் காண்டம்)“கெழிய ராகுவுங் கேதுவும்” என்ற இடங்களில் ‘தழிய’ ‘கெழிய’ என்ற பிரயோகங்கள் காண்க.)கைய’ என்பதும் ‘மைய’ என்பதும் குறிப்புப் பெயரெச்சங்கள். மணியே முத்தமே மாணிக்கமே யென உபமானத்தை உபமேயமாகவே சொன்னது உபசார வழக்கு.-“முத்தினை மணியை மணி மாணிக்க வித்தினைச், சென்று விண்ணகர்க் காண்டுமே” எனத் திருமங்கையாழ்வார் பாசுரத்திலும்
இம்மூன்று உவமைகள் ஒருங்கே கூறப்படுதல் காண்க.-நெஞ்சென்னும் உட்கண்ணால் எம்பெருமானை ஸேவிக்கப் பெற்ற ஆழ்வார் அப்பெருமானை மீண்டும் எங்கேனும் காண ஆசைப்பட்டு அவனை நோக்கித் தன்னிலே யுரைத்த வார்த்தை இதற்கு உள்ளுறை பொருள்.–‘தையனல்லர்கள் குழாங்கள் குழிய குழு’ என்பதற்கு ஸ்வாபதேசம்- பரதந்திரராயிருக்குந் தன்மையையே ப்ரதானமாகவுடைய
ப்ரபந்தர்களின் கோஷ்டி எனவும் ‘ஐயநல்லார்கள் குழு’ என்பதற்கு ஸ்வாபதேசம்- யாகம் முதலிய தொழில்களை நடத்து மியல்புடைய கைங்கர்ய ப்ரவ்ருத்தி ‘சீலர்களின் கோஷ்டி எனவும் கொள்வர்.-இப் பாட்டின் அழகிய மணவாள சீயருரையில்- நாயகியானவள் நாயகனுடைய ஸர்வேச்வரனைப் புறம்பே திரளிடையாகிலுங்காண ஆசைப்பட்டுப் புலம்பின பாசுரம்’ என்றதும் ‘துழாங்கள் குழிய குழு’ என்கையாலே ‘அந்த’ ஸமூஹந்தான் பலவாய்ச்சேர்ந்த ஸமுதாயத்தைச் சொல்லுகிறது’ என்றதும்,‘இந்தக்கிளவி, “மள்ளர் குழீஇய விழவினாலும், மகளிர் தழீஇய துணங்கையானும், யாண்டுங்கணேன் மாண்டக்கோனை” என்ற அகந்தமிழிலுஞ் சொல்லப்பட்டது’ என்றதும் இங்கு அறியத்தக்கன.-மேலெடுத்துக் காட்டிய மேற்கோள் குறுந்தொகை. இது நச்சினார்க் கிளியராலும் “உயிரினுஞ் சிறந்ததன்று” என்ற தொல்விழவினாலும், மகளிர் தழீஇய துணக்கையாலும் யாண்டுங்காணேன் மாண்டக்கோனை, யானுமோராடுகள மகளே யென்கைக் கோடீரிலங்குவளை ஞெகிழ்ந்த, பீடுகெழுகுரிசிலுமாடுகள மகனே’ என்பது நொதுமலர்வரைவுழித் தோழிக்குத் தலைமகள் அறத்தொடு நின்றது; ஆதிமந்தி
தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழு வினுள்ளும்-விலக்ஷணை களான நாரீ ஸமூஹங்களானவை திரண்ட திரட்சி யுள்ளும்-குழாங்கள் குழிய குழு-என்கையாலே அஸ் ஸமூஹம் தான் பலவாய்ச் சேர்ந்த சமுதாயத்தைச் சொல்லுகிறது-ஐய நல்லார்கள் குழிய விழவினும்-பூஜ்யரான விலக்ஷண புருஷர்கள் திரண்ட மஹா உத்ஸவத்திலும்–அங்கங்கெல்லாம்-அவ்வவ் விடங்கள் எல்லாவற்றிலும்–கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பானவாவுவன் நான்-போக்யத்வ
ரக்ஷகத்வங்களுக்கு ஸூசகமாய் கற்பகக் கவடு விழுந்தால் போலே திருக்கைக்கு அலங்காரமாய்
ஒவ்ஜ்வல்ய விசிஷ்டமான திருவாழியோடும் அத்யந்த பரி ஸூத்தமான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தோடும்
கூடக் காண வேணும் என்று ஆசைப்படா நிற்பன்–வந்து காண்கைக்குக் கால்நடை தாராத நான்-கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -இவருக்கு காரார் காணும் அளவு போய் -ஆடல்மா குதிரையில் கானால் விடேன் என்றவர் திருமங்கை ஆழ்வார்—மைய வண்ணா-ஆசை யற்று இருக்க ஒட்டாத வடிவழகை யுடையவன்–மணியே-துர்லபன் என்று மீள ஒண்ணாத படி முடிந்து ஆளவானவனே-முத்தமே-நீர்மை இல்லை என்று தவிர வேண்டாதபடி முழு நீர்மை யுடைய ஸூத்த ஸ்வ பாவனே-என் தன் மாணிக்கமே-பிரகாஸ குண அதிசயத்தாலே என்னை உன் அநு ராகத்திலே அகப்படுத்திக் கொண்டவனே -என்று அவன் ஸ்வ பாவங்களைச் சொல்லிப் புலம்பினாள் ஆயிற்று-இந்தக் கிளவி
மள்ளர் குளீஇய விழவினானும் மகளிர் தலீஇய நுணங்கை யானும் யாண்டும் காணேன் மாண் தக்கோனை -என்று அகத் தமிழிலும் சொல்லப் பட்டது-(குறுந்தொகை பாடல் )இத்தால் நமக்கு போக்ய பூதனான கிருஷ்ணனை கோபீ ஜன மத்யத்திலும் வித்வ ஜ்ஜன மயத்தை யுடைத்தான யாகாதி மஹா உத்ஸவத்திலும் அசாதாரண சிஹ்னங்களோடே அனுபவிக்க ஆசைப்பட்டமை சொன்னார் ஆயிற்று-அன்றிக்கே பாரதந்தர்ய காஷ்டா நிஷ்டரான பிரபத்தி நிஷ்டர் ஸமூஹத்திலும் கர்ம கலாபாதி ப்ரவ்ருத்தி சீலரான கைங்கர்ய நிஷ்டர் ஸமூஹத்திலும் காண ஆசைப்பட்டார் ஆகவுமாம்-(கர்மமும் கைங்கர்யத்தில் புகும்)அன்றியே இரண்டும் ப்ராப்ய தசையிலேயாய் வைகுண்டே து பர லோகே –பக்தைர் பாகவதை ஸஹ -லிங்க புராணம் என்றும்-அமரரும் முனிவரும் -திருவாய் -10-9-9-என்றும்
சொல்லுகிறபடியே குண பரதந்த்ரரும் கைங்கர்ய வ்ருத்தி சீலருமான ஸூரி சங்கங்களைச் சொல்லிற்று ஆகவுமாம்
தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழு வினுள்ளும்-நல் ஸ்த்ரீகள் கூட்டமாய்க் கூடின கூட்டத்திலும்-ஐய நல்லார்கள் குழிய விழவினும்– ஸத் புருஷர்களாய்க் கூடிச் செய்யும் உத்ஸவங்களிலும்-அங்கங்கெல்லாம்-இப்படியாக அங்கங்காக உள்ள சங்கங்களில் எல்லாம்–கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பானவாவுவன் நான்-திருக்கைத் தலங்களுக்கு அழகு பெறுத்தும் அழகுள்ள திருவாழி ஆழ்வானோடும் திருச்சங்கு ஆழ்வானோடும் காண வேணும் என்று மிக்க அவனைப் பெற்ற நான்-மைய வண்ணா -கரு வளர் மேனியாய்க் கண்ணுக்கு இட்டுக் கொள்ளவான மை போன்றவனே-மணியே ஸ்வாதீன நீல ரத்னம் போன்றவனே-முத்தமே-கருணை யாகிற தெளி நீரால் அதிசயித்து எங்களை வெள்ளுயிராக்க வல்லவனே-என் தன் மாணிக்கமே–எனக்கு ஸர்வதோமுக நிரதிசய அதிசய நாயகனே என்று ஸ்வயமேவ புலம்புகிறார் —
தாத்பர்யம்–இதில் சர்வேஸ்வரனுடைய ஸுலப்ய அதிசயத்தை அனுசந்தித்து அவனைக் காண வேணும் என்னும் த்வரையால்-ஓ ஸ்வாமியே நீயோ அபரிச்சின்ன வைபவம் -மேன்மை கொண்டவனாய் இருந்தும் -அளவில்லா முடியாத பெருமை -இருந்தாலும்-ஆஸ்ரிதருக்கு ஸூலபனாய்
கண்ணுக்கு குளிர்த்தியாய் கண்டவர் சம்சார தாபம் தீரும்படி அஞ்சன வண்ணனே ஸுலப்யம் அழகைக் காட்டி என்னை நின்ற இடத்தில் நிற்க ஒட்டாமல் பண்ணி திவ்ய ஆயுதங்கள் தரித்து ராஸக்ரீடை பண்ணிய இடங்களிலும் தண்டகாரண்யத்தில் ரிஷிகள் குழுவில் வீற்று இருந்த படியிலும் காண ஆசைப்பட்ட எனக்கு அப்பொழுது உள்ளாருக்கு சேவை சாதித்தால் போல திவ்ய ஆயுதங்கள் தரித்து
என்னை க்ருதார்த்தனாக ஆக்கி அருள வேணும் என்று பிரார்த்திக்கிறார்
9-4-மையார் கருங்கண்ணி கமல மலர்மேல்செய்யாள்-ப்ரவேஸம்-
இறைவனுடைய ஸ்வா தந்த்ர்யத்துக்கு அடி -அவன் தானே இருக்கும்-
அவனுடைய சீலம் முதலான குணங்களுக்கு அடி -பிராட்டியே இருக்கும் –
சீலம் முதலான குணங்கள் வந்தவாறே-ஸ்வா தீனம் இன்றிக்கே ஒழிகிறதோ -என்னில்-நிரூபித்தால்
அந்த ஸ்வா தந்த்ரியத்தைப் போன்று-இவளுடைய சேர்த்தி-நித்தியமாய் இருக்கையாலே –
அங்கனமாய் இராது -காரணம் பற்றி வந்தது ஆனாலும் –
பாஷ்ய காரர் மேலே ஸ்ரீ வல்லப என்று நினைத்து-ஸ்வரூபத்தை நிரூபிக்கிற இடத்தில்-
ஞானம் ஆனந்தம் இவற்றுக்கு முன்பு ஸ்ரீய பதி என்றாரே அன்றோ –கீதா பாஷ்யத்தில் –
ஸ்ரீய பதி – நிகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதாநாநந்த
ஞான ஆனந்த ஏக ஸ்வரூப ––இத்யாராப்ய –ஸ்வ அபிமத அநுரூப நித்ய நிரவத்ய ஸ்வரூப ரூப குண விபவ
ஐஸ்வர்ய சீலாத்ய-அநவதிக அதிசய அசங்கேய கல்யாண குண கண ஸ்ரீ வல்லப–
இப்படி இருக்கிறவனுடைய-சீல குணத்தையும்(சீலம் எல்லை இலான் அடிமேல் அணி கோல நீள் குருகூர்ச் சடகோபன் சொல்)
அதற்கடியான திருமகள் கேள்வனாய் இருக்கும் தன்மையையும் -(அடைவதும் அணியார் மலர் மங்கை தோள் )
அருளிச் செய்தார் மேல் திருவாய் மொழியிலே –
கடுக பெற வேண்டும்படி-குணங்களால் மேம்பட்டவனுமாய்-பெறுவிப்பாரும் அருகிலே உளராய் இருக்கையாலே
இப்போதே பெற வேண்டும்படியான ஆசை பிறந்தது –அப்போதே பெறக் காணாமையாலே-விஷயத்துக்கு தகுதியாக விடாய்த்தார்-
பெற வேண்டும்படி குணங்களால் மேம்பட்டவனுமாய்-பெறுவிப்பாரும் அருகே உளராய்- இருக்கப் பெறாவிட்டால் ஆறி இருக்க போகாதே அன்றோ –
ஆகையாலே-
முடியானே -என்ற திருவாய்மொழியின் வாசனையாலே-அறிவுடைப் பொருள்களைப் போன்று தனித் தனியே
கரணங்களும் விடாய்க்க -தாமும் விடாய்க்கிறார் -முதல் ஐந்து பாசுரங்களில்-
வீற்று இருந்து ஏழ் உலகு -திருவாய்மொழி வாசனை 6-7-8-பாசுரங்களில்-
என்றைக்கும் என்னை -திருவாய்மொழி வாசனை -9-பாசுரத்தில்
செஞ்சொற் கவிகாள் –திருவாய்மொழி வாசனை –10-பாசுரத்தில்
இதுதான் எல்லா திருவாய் மொழி களோடும் கூடி இருப்பது ஒன்றாயிற்று -என்றது-கலம்பகம் மாலை போலே –
முடியானே /வீற்று இருந்து ஏழ் உலகு /என்றைக்கும் என்னை /செஞ்சொற் கவிகாள்
என்னும் திருவாய் மொழிகளில் ஓடுகிற எண்ணங்களை உடைத்தாய் இருப்பது ஆயிற்று -என்றபடி-
இப்படி இந்த்ரியங்களும் தனித் தனியே விடாய்க்க -(கண்ணே -என் கருத்தே -உன்னை உள்ளும் என் உள்ளம் –)இப்படி இந்த்ரியங்களும் தனித் தனியே விடாக்க(பேதுறுவன்-)
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உடைய துயரத்துக்கு தோற்றின-அது தான் காலம் தாழ்த்து வந்தான் என்னலாம்படி
ஆற்றாமைக்கு காலம் தாழ்த்துத் தோற்றாமல்-தூணிலே வந்து தோற்றினால் போலே -நரசிங்கமாய் –தோற்ற வேண்டும் படி ஆயிற்று –
இப்படிப் பட்ட
தம் நிலையையும்
அதற்கு அடியான விடாயையும்-
விடாய் அறிந்து அதற்கு உதவ வந்து அவன் முகம் காட்டின படியையும் நினைத்து உவகையினராய்-(என் உள்ளம் உகந்தே)
நான் கிருதக் கிருத்தியன் ஆனேன்-(கண்டு கொண்டேனே)
அடிமை செய்யப் பெற்றேன்-(தொண்டர்க்கு அமுது உண்ண)
வாழ்ந்தேன்-(உய்ந்தவாறே)
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் எல்லாம் நான் உபகாரகனாம் படி ஆனேன்
இது ஒருவன் பெரும் பேறு இருந்தபடியே -என்று தமக்கு பிறந்த லாபத்தை நினைத்து இனியராய் அதனைப் பேசித் தலைக் கட்டுகிறார்-
நாலாம் திருவாய் மொழியில் கீழே அவன் ஸீலாதிசயத்தை அனுபவித்து சிதிலரானவர் –
ஸீலவானாய் ஸ்ரீ யபதியானவனை அனுபவிக்க வேணும் என்று அபி நிவேசித்து அந்த அபி நிவேச அனுரூபமான
ஸ்ரீ மஹா லஷ்மீ விசிஷ்டத்வத்தையும்
அத்ய அபி நிவேச விஷயத்வத்தையும்
ஆஸ்ரித ரக்ஷகத்வத்தையும்
அசேஷ பிரதி சம்பந்தித்வத்தையும்
காரணத்தவாதி குண யோகத்தையும்
பரமபத நிலயத்வத்தையும்
ஹ்ருஷ்ட யதிசயத்தையும்
சர்வ அந்தராத்மாதிகளையும்
கிஞ்சித்க்கார விஷயத்வத்தையும்
நிருபாதிக சம்பந்தத்தையும்
அனுசந்தித்து ஏவம் வித பூதனானவனை அனுபவிக்க வேணும் என்கிற ஆகாங்ஷையாலே தம்மோடு கரணங்களோடு வாசியற
ஈடுபட்ட இவருடைய ஆர்த்தி தீர்க்கும்படி முகம் காட்ட அனுபவித்து ஸந்துஷ்டராய்
ஆஸ்ரித அனுபாவ்யமான திருவாய் மொழியை அவன் திருவடிகளில் பாடி உஜ்ஜீவிக்கப் பெற்றேன் என்று மிகவும் ஹ்ருஷ்டராகிறார் –
மையார் கருங்கண்ணி கமல மலர்மேல்
செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே
வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும்
கையா உனைக் காணக் கருதும் என் கண்ணே–9-4-1-
விஷய த்ரயம் -விசிஷ்ட த்ரயம் -பிராட்டி -திவ்ய ஆயுதங்கள் -திவ்ய விக்ரக விசிஷ்டன்
மையார் கருங்கண்ணி – வேறு ஒரு பொருளைக் கொண்டு அழகு செய்ய வேண்டாதபடி-இயல்பான அழகினை உடையதாய்-ஆயிற்றுத் திருக் கண்கள் இருப்பன –
இனி மங்களத்தின் பொருட்டு தரிக்கும் இத்தனையேயாம் அஞ்சனம்-
கருங்கண்ணி -என்னா நிற்கச் செய்தே –மையார் -என்னும் போது-மங்களத்தின் பொருட்டு தரிக்கப் படுத்தல் எனபது தானே போதரும் அன்றோ –
திரு மார்வினில் சேர் திருமாலே – தாமரைப் பூவில் வாசனையும் தாதும் அடிக் கொதித்தால்- உன் மார்வில் அடி மாறி இட வேண்டும்படி-மார்வு படைத்தவனே-
இவள் இவ்வேற்றம் எல்லாம் கொண்டும் அம்மார்வுக்கு அவ்வருகே போக மாட்டாள்-
அவ்வகலம் எல்லாம் இனிமையாக இருக்கையாலே-அவ்வருகு போக வேண்டாவே– அகலம் மார்வு -விரிந்து இருத்தல் சிலேடை-
திருமாலே-இவள் -மார்பில் படும் பாட்டினை – இவளுடைய எல்லா உறுப்புகளிலும் பிச்சு ஏறி இருக்குமாயிற்று அவனும் –
அவனுடைய திருக் கண்கள் சிவந்தனவாய் அன்றோ இருப்பன
அவன் இவளை எப்போதும் பார்த்துக் கொண்டே இருப்பதனால் –- அவன் கண்களின் சிவப்பு இவள் மேல் ஊறி இவள் திருமேனி சிவந்து இருக்கும் –
இவள் அவனை எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருக்கையாலே- இவள் கண்களின் கருமை அவன் திருமேனியில் பரந்து-அவன் திருமேனி கருமையாய் இருக்கும் –
இவளுக்கு திருக் கண்கள் குளிர்ந்து இருக்கும் -கருமை -குளிர்ச்சி கிருபை-அவனுக்கு வாத்சல்யம் விஞ்சி இருக்கும்
அவனுடைய சேர்க்கையால் ஆயிற்று இவளுக்கு தண்ணளி விஞ்சி இருப்பது
இவளுடைய சேர்க்கையால் ஆயிற்று அவனுக்கு வாத்சல்யம் விஞ்சி இருப்பது-
காணக் கருதும் என் கண்ணே-அவனை ஆசைப் படுவார் ஆசைப் படுவது ஒரு கார்யம் கொள்ள அன்று-காண ஆயிற்று
திரு வேங்கடத்தானைக் காண அன்றோ —காரார் திரு மேனி காணும் அளவும் அன்றோ – சதா பஸ்யந்தி ஸூரைய-நித்ய ஸூரிகளும் இத்தனை -அன்றோ
என் கண்ணே–நமக்கு நேத்ர பூதரான இவரைக் காட்டிலும் இவர் திருக் கண்களுக்கு-முக்கியமானவர்களாய் இருக்கும் ஏற்றம் உண்டே அன்றோ அவர் நேத்ரத்துக்கு
——-
கண்ணே உன்னைக் காணக் கருதி என்நெஞ்சம்
எண்ணே நின்று இயம்பும் கொண்ட சிந்தையதாய்
விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்பு அரியாயை
நண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பேனே – -9-4-2-
ஆழ்வார் என்னைப் பார்க்கட்டும் என்று நீ தானே சங்கல்பம் கொள்ள வேண்டும் -கரணியும் நீயே -கரணங்களும் நீயே -உபாய மும் உபேயமும் நீயே -என்றபடி –
தமக்கும்-தம்முடைய மனதுக்கும் உண்டான-சாபல்யத்தை-காதல் பெருக்கை-அருளிச் செய்கிறார்-
கண்ணே உன்னைக் காணக் கருதி-அவனாலேயே அவனைப் பெறுமவர் அன்றோ இவர்-கண்ணே –எனக்கு கண் ஆனவனே–பிரபன்ன ஜன கூடஸ்தர் -நாலாயிர ஆழ்ந்த பொருள் இதுவே –
பேற்றிலே உள்ள நியதியைப் போன்றே -அதனைப் பெறுதற்கு உரிய-வழியிலும் இவருக்கு உள்ள நியதியும் –
கண்ணே -என்கையாலே – வழியும் அவனே -என்பதனைச் சொல்லிற்று-
உன்னைக் காண -என்கையாலே பேறும் அவனே -என்பதனைச் சொல்லிற்று-
எண்ணே கொண்ட -என்கையாலே -அந்த வழியைக் கொண்டு-இந்த பேற்றினைப் பெற வேண்டும் என்று- இருக்கும் அதிகாரியினுடைய வாழ்க்கை இருக்கிறபடி சொல்லிற்று –
ஆத்மா யோசித்து -மனஸ் சிந்தித்து -கையால் செய்வதை -மூன்றும் மனஸ் செய்யும் ஆழ்வாருக்கு –
உபாயமும் அவனே உபேயமும் அவனே –இத்தை உணர்ந்து – ப்ரீத்தி காரித கைங்கர்யம் அவன் கொடுக்க -விருப்பம் ஆசை ஒன்றே நமக்கு க்ருத்யம் -அதிகாரி ஸ்வரூபம் இதுவே –
எண்ணே நின்று இயம்பும் கொண்ட சிந்தையதாய்–பஹு சங்க்யாதம் -மநோ ரதம் -கொண்டு -ஐந்து வேலைக்கு காரர்கள் உண்டே
ஐந்து விருப்பங்களும் மனஸ் கொள்ளலாமே -காண்கையிலும் பிரதி பந்தம் போகையிலும் -அடிமை செய்வதிலும் -அபி நிவேசம்
நண்ணாது ஒழியேன் -என்பதற்கு-
1-அவனைக் கிட்டாத போது நான் தரியேன் -என்று பொருள் அருளிச் செய்வர் ஆய்த்தான் -பட்டரின் சிஷ்யர் –
அங்கன் அன்றிக்கே-
2-நண்ணாது ஒழியேன் -என்கிற இடம் மகா விசுவாசத்தை சொல்லுகிறது-
தேவர்கள் வேறுபட்ட சிறந்த தேசத்தில் இருக்கையாலே கிரமத்திலே எடுக்கலாம்-
அங்கன் அன்றிக்கே இவ் உலகத்தில் அகப்பட்டு நிற்கிற இவரை அன்றோ கடுக எடுக்க வேண்டுவது-
எடுக்க வேண்டும் நிலத்தில் இருந்தேன் –எடுக்க வேண்டும் என்று இருந்தேன்-
எடுப்பான் தானாய் இருந்தான்-எடுத்தால் பெறுவது தன்னையாய் இருந்தது–ஆன பின்பு-எனக்கு என்ன கண் அழிவு உண்டு –
—————-
அழைக்கின்ற அடி நாயேன் நாய் கூழை வாலால்
குழைக்கின்றது போல் என் உள்ளம் குழையும்
மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய்
பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே–9-4-3-
ஆர்த்தியே பற்றாசாக -ஆஸ்ரித ரக்ஷகனான உன்னுடைய -கிருபை பொழிவது பகவான் ஆனபடியால் -நிர்ஹேதுக -காரணம் –
ஆர்த்தி இருந்தால் தான் பொழிவார் -ஆர்த்திக்காக பொழிய வில்லை -ஆர்த்தி -அதிகாரி ஸ்வரூபம் -உன் குணத்துக்கு புறம்பு ஆனேனோ –என்கிறார்-
பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே – அருள் -பிழைக்கின்றது – என்று பேதுறுவனே –
வரையாதே காத்த மகா குணம் எனக்கு உதவாமையாலே அதனை இழக்கப் புகா நின்றாய் என்று- பேகணியா நின்றேன் -என்று ஆளவந்தார் அருளிச் செய்யும்படி –
அதனை எம்பெருமானார் கேட்டருளி
இது பொருள் அழகிது-ஆனால் இது இப்போது இவர்க்கு ஓடுகிற நிலைக்கு சேராது-
ஆனபின்பு-பசுக்களும் ஆயர்களும் மழையிலே நோவு படாதபடி மலையை எடுத்து மறித்த-இம் மகா குணத்துக்கு
நான் புறம்பு ஆகிறேனோ-என்று பேதுறா நின்றேன் -என்கிறார் என்று அருளிச் செய்தார்
அவ்வருள் அவனை தப்பி போகிறது -ஆளவந்தார் நிர்வாகம்-
அவ்வருள் இவரை தப்பிப் போகிறது -எம்பெருமானார் நிர்வாகம்-
————–
உறுவது இது என்று உனக்கு ஆட்பட்டு நின் கண்
பெறுவது எது கொல் என்று பேதையேன் நெஞ்சம்
மறுகல் செய்யும் வானவர் தானவர்க்கு என்றும்
அறிவது அரிய அரியாய அம்மானே–9-4-4-
உறுவது இது என்று உனக்கு ஆட்பட்டு நின் கண்-சேஷத்வமே ஏற்புடைத்து -பிரதி சம்பந்தி -உனக்கு தாஸ்ய அனுமதியைப் பண்ணி
இசைந்து –இசைவித்து உன் தாழ் இணைக்க கீழ் இருத்தும் அம்மானே
நின் கண் பெறுவது எது கொல் என்று –ஆத்மாவின் ஸ்வரூபத்தையும் உணர்ந்து –சீரியதும் கைங்கர்யமே என்றும் அறிந்து –
அநந்ய பிரயோஜனருக்கு சர்வேஸ்வரன் வேறு ஒன்றையும்-கொடுப்பான் ஒருவன் அல்லன் என்றும் அறிந்து இவர்
உன் பக்கல் பெறுவது எது கொல் -என்கைக்கு காரணம் என் என்னில்-
க்ரமத்தில் செய்கிறோம் என்று சொல்லிக் கொண்டே இருந்து-சம்சாரத்தில் இருக்கும் இருப்பையே கொடுத்து விடப் போகின்றாயோ-
அன்றி-என் விரைவு அறிந்து சடக்கு என முகம் காட்டுகிறோயோ –என்கைக்காக சொல்லுகிறார் என்பது –ஆர்த்த பிரபன்னர் அன்றோ ஆழ்வார் –
கஜேந்திரன் அநாதி காலம் இழந்து காணப் பெற்றான் -பரதன் கண்டு இழந்து 14 சம்வத்சரம் பொறுத்து பெறப் பெற்றான் -எனக்கு என்ன ஆகுமோ
மறுகல் செய்யும் வானவர் தானவர்க்கு என்றும்—அறிவது அரிய அரியாய அம்மானே-அசாதாரண சம்பந்தம் உண்டே -அனைவருக்கும்
சாமான்யம் அதி தைவதம் -யாராலும் அறிய முடியாத போது நின்ற பொன் அம் கழல்-ஆஸ்ரித சுலபன் சர்வேஸ்வரன் இரண்டு ஆகாரங்களை
எவராலும் அறிய முடியாமல் – -வாசாம் அகோசரம் –அரியாய அம்மானே —ஸ்வாமி -நரசிம்மம் –
பின்னை அவன் இதற்கு செய்த மாற்று என் என்னில் –தன் சௌலப்யத்தை காட்டுகை அன்றோ -என்றது-எளியோமாகையும் ஒரு கோடி உண்டாக நீர் சொன்னீர் ஆகில்-
நீர் தாம் அக் கோடியில் உள்ளார் ஒருவராய் இருந்தீர் ஆகில்-உமக்கு இனி-நாம் கைப் புகுந்தோம் என்று இருக்கை அமையாதோ -என்கிறான் -என்றபடி-
நரசிம்கனாய் வந்ததால் எளியவன் -பிரகலாதன் போலே எளியவனாய் இருக்க கை புகுந்தோம் என்று அன்றோ இருக்கக் கடவது –
——-
அரியாய அம்மானை அமரர் பிரானைப்
பெரியானைப் பிரமனை முன் படைத்தானை
வரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற
கரியான் கழல் காணக் கருதும் கருத்தே–9-4-5-
கழல் காணக் கருதும் கருத்தே-என் மனமானது காண வேண்டும் என்று விரையா நின்றது-கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள இரண்டு பாசுரங்கள்
படுக்கைக்கு பரபாகமான வடிவும்-அதற்கு பரபாகமான திருவடிகளும்-ஆகிய இவற்றை ஆயிற்று காண ஆசைப் படுகிறது
எளியோமான கோஷ்டி பேறு கை புகா நிற்க எதனால் பதற்றம் -என்ன-நெஞ்சு காண துடிக்கிறதே என்கிறார் இதில்
———
கருத்தே உன்னைக் காண கருதி என் நெஞ்சத்து
இருத்தாக இருத்தினேன் தேவர்கட்கு எல்லாம்
விருத்தா விளங்கும் சுடர் சோதி உயரத்து
ஒருத்தா உன்னை உள்ளும் என் உள்ளம் உகந்தே –9-4-6-
காண ஆசைப் பட்ட அளவிலே-அவன் தம்முடைய திரு உள்ளத்திலே புகுந்தருள தம்முடைய மனம் உகந்து-அனுபவிக்கிறபடியை-அருளிச் செய்கிறார் —
கருத்தே உன்னைக் காண கருதி-எனக்கு மிடுக்கான உன்னைக் காண ஆசைப் பட்ட அளவிலே-முகம் காட்டினாய் –
இவ் விறைவனை அடைவதற்கு ருசியே அமையும் -என்றபடி –
கண்ணே உன்னைக் காண கருதி -என்றார் மேல்-கருத்தே உன்னைக் காணக் கருதி -என்கிறார் இங்கே
இதனால் இவருக்கு கண்ணும் கருத்தும் அவனே -ஞானமும் சக்தியும் அவனே -ஆயினமையைத் தெரிவித்த படி
என் நெஞ்சத்து இருத்தாக இருத்தினேன் –மறுகல் செய்த நெஞ்சிலே -மறுகல் இல் ஈசனை
பரம பதத்தில் இருக்குமாறு போலே இருத்தினேன்-இவர் பக்கல் இசைவு பெற்றிலோம் என்று இருக்குமவன்
இத்தனை இசைவு பெற்றால்-பின்னை தள்ளிக் கதவு அடைத்தாலும் போகானே அன்றோ –
———-
உகந்தே யுன்னை உள்ளும் என்னுள்ளத்து அகம்பால்
அகந்தான் அமர்ந்தே யிடங்கொண்ட வமலா
மிகுந்தானவன் மார்வகலம் இரு கூறா
நகந்தாய் நரசிங்கமதாய வுருவே–9-4-7-
ஆர்த்தி சாந்தி அடைந்து அனுபவிக்கப் பெற்றதை இது முதல் நான்கு பாசுரங்களால் -அருளிச் செய்கிறார்
தூணிலே தோற்றி-பிரகலாதனுடைய துன்பத்தை தீர்த்தால் போன்று தம் துன்பத்தை தீர்த்த படியை நினைந்து-ஏத்துகிறார்
அடியார்கள் ஸூளுறவு செய்த காலத்தில் வந்து-தோற்றுமவன் ஆகையால்-
தூணிலே தோற்றினால் போலே வந்து தோற்றி-மனத்தின் இடம் எல்லாம் புகுந்து-
கமர் பிளந்த இடம் எங்கும் நீர் பாய்ச்சுமாறு போலே-நிரம்ப என்னை அனுபவிப்பித்தான் –என்கிறார் என்பது –
நரசிம்ம ராகவா யாதவ ரெங்கேந்திர ஸிம்ஹம் உபாஸ்ம ஹே -ஆத்மா தானே பக்தர்கள் -பிரகலாதன் -விபீஷணன் -அர்ஜுனன்
திருப் பாண் ஆழ்வார் -நலிவுப்பட கிளர்ந்த சிங்கங்கள்
———-
உருவாகிய ஆறு சமயங்கட்கு எல்லாம்
பொருவாகி நின்றான் அவன் எல்லாப் பொருட்கும்
அருவாகிய வாதியைத் தேவர்கட்கு எல்லாம்
கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே–9-4-8-
சர்வ அந்தராத்மா -சர்வ காரணன் -சர்வ சுலபனான -உன்னைக் காணப் பெற்றேன் -கண்டு கொண்டேனே –
அவதாரத்துக்கு பிற்பாடராய் இருக்க-கண்டு கொண்டேன் -என்கிறார் -இதற்கு கருத்து என் -என்னில் –
அன்பினால் நனைந்த மனத்தினர்க்கு என்றும் காணலாம்
அவதார சம காலத்திலும் காண ஒண்ணாது சிசுபாலன் முதலாயினர்க்கு-
புறச் சமயங்களால் அசைக்க முடியாதவனாய்-எல்லாப் பொருள்கட்கும் அந்தர்யாமியாய்க் கொண்டு-எல்லாரையும் நியமிக்கின்றவனாய்
பிரமன் முதலாயினார்க்கும் காரணனாய் இருந்து வைத்து-அடைந்தார்க்கு சுலபன் ஆனவனைக்-காணப் பெற்றேன் -என்கிறார்
———–
கண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து
பண்டை வினை ஆயின பற்றோடு அறுத்துத்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே –9-4-9-
நிதான பாசுரம் -பக்தாம்ருதம் -ஒரே பாசுரத்தில் திருமந்த்ரரார்த்தம் அனைத்தும் அருளிச் செய்து-வாயால் கைங்கர்யம் -வாசிக கிஞ்சித் காரம்
பிரதம பதம் -அநந்யார்ஹ சேஷ பூதன் -நம-விரோதி போக்கி -பிரதி சம்பந்தித்தவம் -நாராயணா-அடியேன்-மந்த்ர தாத்பர்யம் ததீய சேஷத்வம் சொல்லிற்று ஆயிற்று
என் கண்ணினை–பக்தி ரூபாபன்ன ஞானம் -இரண்டு கண்கள்
சொல் மாலைகள் சொல்லப் பெற்றேன்–அடியார்கட்கு அடிமை யாதலை-எல்லையாக உடைய பேற்றினைப் பெற்றேன் –
பெற்ற பேற்றின் கனம் இருந்த படியாலே-இது தான் தோன்றியான கைப்பற்று (ஸ்வ யத்னம் )அடியாக வந்தது ஓன்று அன்று –
————
அடியான் இவன் என்று எனக்கு ஆர் அருள் செய்யும்
நெடியானை நிறை புகழ் அம் சிறைப் புள்ளின்
கொடியானைக் குன்றாமல் உலகம் அளந்த
அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே–9-4-10-
நிருபாதிக சம்பந்தம் உடையவனைக் கிட்டி -சேஷத்வத்துக்கு குடல் துவக்கே உபாதி-கிருதார்த்தன் ஆனேன்-என்கிறார் –
எனக்கு ஆர் அருள் செய்யும் நெடியானை-கொள்ளுகிற என் அளவு அன்றிக்கே-தன் அளவிலே அருள் செய்த சர்வேஸ்வரனை –
குன்றாமல் உலகம் அளந்த அடியானை –குணத்தையும் குணம் இல்லாமையையும்-நிரூபணம் செய்யாதே -உலகம் அளந்த பொன்னடி –திரு உலகு அளந்து அருளினாப் போலே
ஒரு காரணமும் இல்லாமல் நிர்ஹேதுகமாக —அம் சிறைப் புள்ளின் கொடியானை-பெரிய திருவடியை அங்கீ கரித்தால் போலே என்னை அங்கீ கரித்தான்
———-
ஆறா மதயானை அடர்த்தவன் தன்னைச்
சேறு ஆர் வயல் தென் குருகூர் சடகோபன்
நூறே சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
ஏறே தரும் வானவர் தம் இன்னுயிர்க்கே–9-4-11-
ஏறே தரும்-ஏற்றினைத் தரும்–இத் திருவாய்மொழி-தன் இனிமையினால்-நித்ய ஸூரிகள் மனத்தினைப் புண்படுத்தும் -ஏறான சர்வேஸ்வரனைத் தரும் -என்னுதல்-என்கிறார்
——————–——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –