ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
விளரி -உச்ச ஸ்வர கண்ட த்வநி-ஸப்த ஸ்வரங்களில் ஓன்று -தைவதம் -ஒலி -உச்ச ஸ்தாயீ
குரல்-துத்தம் கைக்கிளை உழை-இனி விளரி தாரம் -என்று ஷட்ஜ ருஷப காந்தார மத்யம பஞ்சம
தைவத நிஷாதங்கள் ஆகிற ஸப்த ஸ்வரத்துக்கும் பேராகையாலே ஆறாம் ஸ்வரமான தைவதத்தை விளரி என்கிறது-அன்றில் -கிரௌஞ்ச மிதுனம் -வாய் அலகு விட்டால் ஒலிக்கும்-சிந்தனை- பசலை-மெலிவு -அழுந்தல் -மொழி பிதற்றல் -மரணம் -காமம் -ஷட்பாவம் -இருந்து பிழைக்க முடியாத தசை -இறந்தே –முடிந்ததே பிழைக்கும் மரண தசையை நெருங்கி உள்ளவள் -வீட்டில் உள்ள பனை மரம் -இல் பொருள் உவமை அதில் தாமரை இதழ்கள் வைத்துக் கட்டிய கூடு அதுக்கு உள்ள அன்பு இவருக்கு இல்லையே–
உரு வெளிப்பாட்டாவே நோவு படா நிற்கச் செய்தே –அதுக்கு மேலே –முற்றத்திலே ஒரு பனையாய் –
அப் பனையில் தொங்கிற்று ஒரு அன்றில் –தான் வாய் அலகை பேடையோடு கோத்து கொண்டு இருக்கிற இத்தை நெகிழ்ந்தவாறே கூப்பிட கடவதாய் – அதனுடைய ஆர்த்த த்வனியில் இவள் மோஹித்து கிடக்க –இத்தைக் கண்டு –இதன் த்வனி இருக்கிற படி இது –இவளுடைய ஆற்றாமை இருந்தபடி இது –இவளுடைய மார்த்வம் இருக்கிறபடி இது –இவை எல்லாம் இருந்தபடியாலே இவள் உளளாக அபிமதம் கை புகுந்து –இவள் ப்ரீதையாய் இருக்கக் காண மாட்டோம் ஆகாதே -என்று
இங்கனே தாயார் உடைய வார்த்தையாய் இருக்கிறது -பட்டர் –இவ்விடத்தை அருளிச் செய்யா நிற்க -நஞ்சீயர் – ஸ்ரீ ராமாயணத்தில் இவ்விடத்துக்கு போலியாக சொல்லலாம் இடம் உண்டோ -என்று கேட்க –இளைய பெருமாள் காட்டிலே கொண்டு போய் பிராட்டியை விட்டுப் போந்த அநந்தரம்- அவளுடைய ஆர்த்த த்வனி கேட்ட ஸ்ரீ வால்மீகி பகவானுக்கு திருத் தாயார் படி உண்டாக சொல்லலாம் -என்று அருளிச் செய்தார் –
இப்படி இவருடைய சைத்திலயத்தைக் கண்ட பரிவர் ஆஸந்நமான பாதக சந்நிதி இருந்தபடியால் இவர் தரித்து இருக்க அரிதாய் இருந்தது என்று வெறுத்து உரைத்த பாசுரத்தை நாயகன் பிரிவாற்றாத் தலைவி தளர்த்தியைக் கண்டு-இனி இவளுக்கு இருக்கை அரிது என்று இரங்கி உரைத்த தாய் வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –
விளரிக் குரலன்றில் மென்பெடைமேகின்ற முன்றிற் பெண்ணை
முளரிக் குரம்பையிதுயிதுவாக முகில் வண்ணன் பேர்
கிளறிக் கிளறிப் பிதற்றும் மெல்லாவியும் நைவும் எல்லாம்
தளரிற் கொலோ அறியேன் உய்யலாவது இத் தையலுக்கே – – -83 –அன்றிலின் குரலுக்கு தலைவி தளர்வதைக் கண்டு தோழி இரங்குதல் –
விளரி–விளரியென்னும் இசையை யுடைய-உச்ச ஸ்வர கண்ட த்வநி
குரல்–குரலையுடைய
அன்றில்–அன்றிற்பறவை
மெல் பெடை–மெல்லிய (தனது) பேடையை விரும்பித் தழுவுதற் கிடமான
மூன்றில் பெண்ணை முளரி குரம்பை–முன் வாசலிலுள்ள பனை மரத்திலுள்ளதும் முட்களை யரிந்து செய்யப்பட்டதுமான கூடு-முன்றில் பெண்ணை -முற்றத்தில் உண்டான பனை மரம்-முளரி குரும்பை -தாமரை பூவினால் செய்யப்பட கூடு
மெல் ஆவியும்–(இவளது) மெலிவடைந்த உயிரும்
நையும்–(உடம்பின் ) இளைப்பும்
எல்லாம்–என்னும் இவையாவும்
இது இது ஆக–இப்படி எங்கும் எதிரில் அருகில் இருக்க,
(இவ் வன்றிலைக் காணுதலாலும் இதன் குரலைக் கேட்டலாலும் ஆற்றாமைத் துயரம் மிக்கு)
முகில்வண்ணன் பேர் கிளரி கிளரி பிதற்றும்–காள மேக நிறத்தனான தம் தலைவனது திருநாமங்களை
(வலியின்மையால் வருந்தியெடுத்தெடுத்துக் கூறி வாய்பிதற்றும் படியான
தளரின் கொலோ–முழுவதும் தளர்ந்தொழிந்தாலோ
இ தையலுக்கு–இம்மகளுக்கு
உய்யல் ஆவது–(அவன் வந்து சேர) உஜ்ஜீவந முண்டாவது?
அறியேன்–அறிகிறேனில்லை.
உண்ணிலா வைவருடன் யிருத்தி யிவ்வுலகில்
எண்ணிலா மாயன் எனை நலிய -எண்ணுகின்றான்
என்று நினைந்து ஓலமிட்ட இன் புகழ் சேர் மாறன் என
குன்றி விடுமே பவக் கங்குல்—61-உலகமுண்ட பெரு வாயனிலே ஸ்ரீ திரு வேங்கடமுடையான் திருவடிகளிலே ஆர்த்தி பரவசராய்- பூர்ண பிரபத்தி பண்ணினவர்-தொடங்கின கார்யம் தலைக் கட்டினால் அல்லது கார்யம் செய்யோம் -என்று இருக்கும் நிரந்குச ஸ்வதந்த்ரனான ஈஸ்வரன்
பழையபடியே தம்மை சம்சாரத்திலே வைக்கக் கண்டு சம்சாரம் ஆகிற சிறைக் கூடத்திலே புண்ய பாபங்கள் ஆகிற இரு விலங்கை இட்டு இந்த்ரியங்கள் ஆகிற படர் கையிலே கண் பாராமல் நலியுங்கோள் என்று காட்டிக் கொடுத்து நம் எளிவு கண்டு சிரித்துக் கொண்டு ஸ்ரீ திரு நாட்டிலே தானும் நித்ய ஸூரிகளுமாக இருக்கிறான் என்று அனுசந்தித்து தம்முடைய ஆர்த்தி அதிசயத்தையும்-
ரஷகத்வ உபாய யோகியானவன் குணங்களையும் அவன் திரு முகத்தைப் பார்த்து சொல்லா நின்று கொண்டு கேட்டார்க்கு தரிப்பு அரிதாம் படி கூப்பிடுகிற உண்ணிலாவிய -யின் அர்த்தத்தை உண்ணிலா ஐவர் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –பாதம் அகலகில்லாத் தம்மை அகற்றுவற்றின் நடுவே இருத்தக் கண்டு -நலிவான் – சுமடு தந்தாய் -ஒ -என்று சாதன பலமான ஆக்ரோசத்தோடே-பழி இட்டு – என்று இறே ஸ்ரீ அழகிய பெருமாள் நாயனார் அருளிச் செய்தது–கேட்க்கைக்கு இனியதாய் ஸ்லாக்கியமான யஸஸ்ஸை யுடைய ஸ்ரீ ஆழ்வார் -என்று அனுசந்திக்க –இவ் உக்தி மாத்ரத்தாலே-சம்சாரம் ஆகிற காளராத்ரி நசித்து விடும்-இது நிச்சயம் –குன்றுதல் -குறைதல்-ஸ்ரீ ஆழ்வாரைப் போலே-அமுதம் கொண்ட மூர்த்தியோ -என்று கூப்பிடுகை அன்றிக்கே அவர் திரு நாமத்தைச் சொல்லவே-விடியா வென்னரகான சம்சாரத்துக்கு விடிவு பிறக்கும் —
விளரிக் குரல் அன்றில்–விளரி என்று உச்சமான த்வனிக்கு பெயர் – -உயர்ந்த த்வனியை உடைத்தாம் படி கார்யப்பாட்டால் கூப்பிடுகிற அன்றிலினுடைய-மென்பெடை-கலக்கும் போதும் பூ தொடுமா போலே தீண்டும்படி யாயிற்று மார்த்வம் –இம் மார்த்வத்திலே விரஹமுமானால் பாடாற்றப் போகாது இறே-மேகின்ற –மேவா நிற்கிற –நித்ய சம்ஸ்லேஷமாய் செல்லா நிற்கும் இறே – அநபாயினிக்கு ஸ்மாரகமாய் இருக்கிறபடி –முன்றில் பெண்ணை –முன்றில் என்று முற்றத்துக்கும் வாசலுக்கும் பெயர்-முற்றத்துப் பனை நடலாமோ என்று இவ் விடத்துக்கு நிர்வஹியா நிற்கச் செய்தேவங்கி புரத்து நம்பியை சிலர் கேட்க – அதுவோ இவள் கார்யம் தளிரும் முறியுமாய் செல்லுகிறது-என்று பணித்தாராம் –(அநர்த்தப்பட்டுப் போனதுக்கு இதுவே ஹேது என்றவாறு ) முன்றில் தனி நின்ற பெண்ணை மேல் கிடந் தீர்கின்ற வன்றிலின் கூட்டை- பிரிக்க கிற்பவர் யார் கொலோ -பெரிய திரு மொழி – 11- 2- 1- –அவனை கொடு வருவர் யாரோ -என்கிறபடி இறே –(நம்மாழ்வார் அங்கி பாசுரம் போல் அங்க பேசுறதுக்கு இதுவும் )அல்லது பிரிப்பன பிரித்து கூட்டுவன கூடித் திரிகிறாள் அன்றே இவள்-முளரிக் குரம்பை –-இதனுடைய சௌகுமார்யத்துக்கு ஈடாக – தாமரை இலைகளையும் பூக்களையும்-கொடு வந்து – கூடாக பண்ணிவிக்கும் இறே –அன்றிக்கே –முளரி -என்று முள்ளாய் –முள்ளாலே செய்த-கூடு என்னவுமாம் –இது இதுவாக –இக் கூடு கூடாக –இது இப்படி குடில் கட்டி கொண்டு போந்து – பாதகமாய் அற்ற பின்பு-மென் பெடையோடே மேவா நின்றுள்ள விளரி குரல் அன்றிலினுடைய முன்றில் பெண்ணை–முளரிக் குரம்பை இது இதுவாக –முகில் வண்ணன் பேர் கிளறிக் கிளறிப் பிதற்றும் –
முகில் வண்ணன் திரு நாமத்தை கிளர்ந்து கிளர்ந்து-ஜல்ப்பிக்கிற ஜல்பமும்-மெல்லாவியும் – சிறுது போதும் இஜ் ஜல்பத்துடன் தான் செல்லுகிறதோ என்று இருக்க – அதுவும் இல்லாதபடி-ஹிருதயத்தில் உண்டான தளர்த்தியும் –நைவும் –அதுக்கு மேலே–இவளுடைய சைதில்யமும்-எல்லாம் – இவை எல்லாம் மிகுந்தபடியால் –தளர்வு இத்யாதி-இத் தையலுக்கு உய்யலாவது –இப் பெண் பிள்ளைக்கு ஜீவிக்கலாவது -தளரிற் கொலோ –இஜ் ஜல்பம் இன்றிக்கே ஒழியும்படி வரும் தளர்த்தி யாவது -முடிகை இறே –முடியிலாகாதே -இவளுக்கு பிழைக்கல் ஆவது -அறிகிறிலேன்-
அன்றில் -கிரௌஞ்சம் -காம உத்தீபகமாய் -விரக வேதனையை வளர்ச்சி செய்யுமே-காவார் மடல் பெண்ணை அன்றில் அரி குரலும் -என்றும் –பெண்ணை மேல் பின்னும் அவ்வன்றில் பெடை வாய்ச் சிறு குரல் –என்றும் திருமங்கை ஆழ்வார் –சமஸ்க்ருதம் -சப்த ஸ்வரங்கள் -ஷட்ஜம் -ரிஷபம் -காந்தாரம் -மத்தியமம் -பஞ்சமம் -தைவதம் -நிஷாதம் -போலெ-தமிழில் குரல் -துத்தம் -கைக்கிழை-உழை-இளி-விளரி -தாரம் -என்னும் ஏழு இசை-விளரி -தைவதம் -என்பர் -கிரௌஞ்சம் -க்வணதி -மத்யமம் -என்பதால் -விளரி -மத்யமம் ஸ்வரம் என்றும் சொல்வர்-விளரி என்னும் ஒரு பண்ணும் உண்டு-மென் பெடை-பிரிவு பொறாத ஸுகுமார்யத்தை யுடைய பெடை –முளரிக் குரம்பை-முட்களை அரிந்து செய்யப்பட கூடு -தாமரை இலை பூக்களையும் கொண்டு வந்து செய்த கூடு என்றுமாம்
இது இது -கட்புலனாகும் பலவற்றை சொன்னபடி –-விளரிக் குரலன்றில் மென்பெடை மேகின்ற முன்றிற் பெண்ணை-முளரிக் குரம்பை யிதுயிதுவாக-என்றதை பின் பற்றியே திரு மங்கை ஆழ்வாரும் –முன்றில் பெண்ணை மேல் முளரிக் கூட்டகத்து அன்றிலின் குரல் அடரும் என்னையே -பெரிய திரு மொழி -11-1-6–ஆவியின் நைவும் –பாகவதர்கள் எம்பெருமான் திரு நாமங்களை சொல்லி புலம்ப ஆழ்வார் நெஞ்சம் தளர்ந்து நைந்த தன்மையைக் கண்டு – இவருக்கு தேஹ விநியோகம் ஆன பின்போ எம்பெருமான் வந்து இவரைச் சேர்த்துக் கொள்வது -என்று வெறுத்து கூறுகிறார்கள் –பிரிவாற்றாத தலைவியின் தளர்ச்சி கண்டு தோழி இரங்கிக் கூறம் பாசுரம் இது. காம விரஹத்தாலுண்டாகும் வேதனைகளுள் சிந்தனை பசலை மேனி மெலிவு அழுங்கல் மொழி பல பிதற்றல் முதலிய பலவும் இவளுக்கு நிகழ்ந்தாய் விட்டன;-இது வரையிலும் இவளுடைய தலைவன் இவளை வந்துகூடி உய்யச் செய்யக் காண்கின்றிலேன்;-இனி மரணமொன்றே நிகழாது நிற்பது; அதுவும் நிகழ்ந்த பின்பு தான் இவளை வந்து கூடி உய்யச் செய்வதாகவிருக்கிறானோ? என்று தோழி இரங்குகின்றாள்.-இதனால்,இனி இவளுக்கு ஜீவித்திருத்தல் அரிதாம் என்றவாறு.–வடநூலார் க்ரௌஞ்ச மென்று கூறுவதே அன்றிற்பறவையாகாது; இது எப்பொழுதும் ஆணும் பெண்ணும் கூடியே நிற்கும்;
கணநேரம் ஒன்றை ஒன்று விட்டுப் பிர்ந்தாலும் அத்துயரத்தைப் பொறாமல் ஒன்றையொன்று இரண்டு மூன்றுதரம் கத்திவிட்டு அதன் பின்பும் தன் துணையைக் கூடா விட்டால் உடனே இறந்து படும். (பகல் முழுவதும் புணர்ந்திருந்து இரவிற் பிரிந்து வருந்துவதாகிய சக்கரவாகப் பறவையும் அன்றிலெனப்படுவது உண்டு.) அன்றிலும் அதன் குரலும் காமாத் தீபகமாய்ப் பிரிந்தார்க்கு
விரஹ வேதனையை வளரச் செய்யுமென்க. இப் பறவையைப் பனைமரத்தில் வாழ்வதாகவே பலரும் பலவிடத்துங் கூறுவர்;-“காவார்மடற் பெண்ணையன்றி லரிகுரலும்” “பெண்ணைமேற் பின்னுமவ்வன்றிற் பெடை வாய்ச் சிறுகுரல்” என்பன திருமங்கையாழ்வார் பாசுரஙகள்.-ஸம்ஸ்க்ருதத்தில், ஷட்ஜம் ரிஷபம் காந்தாரம் மத்தியமம் பஞ்சமம் தைவதம் நிஷாதம் என்னும் ஸப்த ஸ்வரங்கள்-தமிழில் முறையே குரல் துத்தம் கைக்கிளை உழை இளி யிளரிதாரம் என்னும் ஏழிசை யெனப்படுதலால் விளரி யென்றது.-தைவத மென்னும் ஸ்வரமென்னலாம்; அன்றி, வடமொழி நிகண்டில் “க்ரௌஞ்ச: க்வணதி மத்யமம்” என்றதால் அன்றில் மத்யம்மென்னும் ஸ்வரத்தை யொலிக்கிறதென்று தெரிதலால் விளரி யென்பதற்கு மத்யம ஸ்வரமென்று பொருள் கொள்ளுதலும் ஒன்று. விளரியென ஓர் பண்ணுமுண்டு.—மென்பெடை = பிரிவுபொறாத ஸௌகுமார்யத்தையுடைய பேடை. ‘முளிரிக்குரம்பை’ என்பதற்கு- தாமரையிலைகளையும் பூக்களையும் கொண்டு வந்து செய்த கூடு என்று உரைப்பாருமுளர். ‘இது வலிது- நட்புலனாகும் பலவற்றைச் சுடடியது.
* மாறன் பணித்த தமிழ் மறைக்கு ஆறங்கங்கூற அவதரித்த வீறுடைய திருமங்கையாழ்வார், இங்கு,
“அன்றில் மென்பெடைமேகின்ற முன்றில் பெண்ணை முளரிக் குரம்பையிது” என்றதையடியொற்றி (பெரியதிருமொழி 11-1-6) “முள்நிற் பெண்ணைமேல் முளிரிக் கூட்டகத்து அன்றிலின் குரல் அடருமென்னையே” என அருளிச் செய்திருத்தல் காண்க.—மேகின்ற- மேவுகின்ற. குரம்பை- குடம்பை. மூன்றில்- இல்முன் என்பது முன்பின்னாகமாறித் தொக்க மரூஉமுடிபு;-தொல்காப்பியம் எழுத்ததிகாரம் புள்ளிமயங்கியலில் (60)“முன்னென்கிளவி முள்ளர்த்தோன்றும், இல்லென்கிளறி மிசை றகர மொற்றல், கொல்லின் மருங்கின் மரீஇய மரபே” என்றது காண்க:-இதனை இலக்கணப் போலியில் அடக்குவர் இக்காலத்தார். தையல்- அழகு; அதனையுடையவளுக்கு ஆகுபெயர்.-‘பிதற்றும்’ என்பதற்கு முதனிலைத் தொழிற்பெயராக, பிதற்றுதலும், என்றுரைக்கவுமாம்.-‘ஆவியும் நையும்,’ ‘ஆவியின் நையும்’ என்பட பாட பேதங்கள்.—இப்பாட்டுக்கு உள்ளுறை பொருளாவது- பாகவதநுபவம் பெறாமையால் ஆழ்வார் தளர்தலைக்கண்ட அன்பர்-‘பாதகமான லௌதிக பதார்த்தங்கள் அருகிலிருத்தலால் இவர் ஆறியிருப்பது அரிதாயிந்தது’ என்று கூறுதலாம்.-இவர் தம் இருக்கிற விடத்திலே அருகிலுள்ளார் சிலர் எம்பெருமானைச் சேர்ந்து அநுபவிக்கப் பெறுதலைக்கண்டு தமக்கு
அத்தன்மை கிடைத்திடாமையாலே ஆற்றாமைமிக்கு எம்பெருமான் திருநாமங்களை வாய்மாறாமல் எடுத்துக்கூறி புலம்பி, நெஞ்சந்தளர்ந்து நைகிற தன்மையைக் கண்டு ‘இங்ஙனம் மெலிகிற இவர்க்கு தேஹவியோகம் ஆனபின்போ எம்பெருமான் வந்து இவரைச் சேர்த்துக் கொள்வது!’ என்ற வெறுக்கக் கூறினரென்க
ஆறாம் ஸ்வரமான தைவதத்தை விளரி என்கிறது–விளரி என்று-ஒரு பண் என்றும் சொல்வர்-மென் பெடை மேகின்ற-புணர்ச்சியிலே துவண்டு மெல்லிதான பேடையோடே மேவிப் போருகிற-முன்றிற் பெண்ணை-முற்றத்திலே பனையிலே-முளரிக் குரம்பை யிதுயிதுவாக-முள்ளை அரிந்து செய்யப்பட்ட இந்தக் கூடு இவ் வன்றிலுக்கு இருப்பிடமாக–முளரிக் குரம்பை என்று -தாமரையாலே செய்த கூடு என்னிலுமாம்-முகில் வண்ணன் பேர் கிளறிக் கிளறிப் பிதற்றும்-இதினுடைய ஆர்த்தி ஸ்வரத்தாலே ஸ்மரித்து ஸ்யாமளமாய் ஸ்ரம ஹரமாய் இருக்கிற காள மேகம் போலே இருக்கிற வர்ணத்தை யுடைய
ஸர்வேஸ்வரனுடைய ஒவ்தார்ய ஸூசகமான திரு நாமங்களை பல ஹானியாலே வருந்தி எடுத்து எடுத்து அக்ரமாகச் சொல்லும்படியான-மெல்லாவியும்-மெலிந்து சென்று அற்ற பிராணனும்-நைவும்
அதுக்கு அடியான சரீர ஸைதில்யமும்-எல்லாம் தளரிற் கொலோ-ஓன்று ஒழியாமல் முடிந்தாலோ–அறியேன் உய்யலாவது இத் தையலுக்கே-இந்தப் பெண் பிள்ளைக்கு உஜ்ஜீவிக்கலாவது அறிகிறிலேன்–அறிகிறிலேன் -என்கையாலே-முடியவுமாம் -அவனைப் பெற்று ஆஸ்வஸிக்கவுமாம் என்று கருத்து–இத்தால் தாம் இருக்கிற தேசத்திலே ஆசன்னமாக போக ப்ரஸக்தரானாரைக் கண்டு
தம்முடைய போக அலாபத்தாலே அது ஸ்மாரகமாக ஆர்த்தி விஞ்சி பிரலாபிக்கிற பிரகாரத்தைக் கண்டவர்கள் இவருக்கு போக சித்தி இல்லாத அளவிலே இவர் முடிந்து பிழைக்கும் அத்தனையோ
என்று வெறுத்து உரைத்தார் ஆயிற்று –
முளரிக் குரம்பை என்று யிதுயிதுவாக முகில் வண்ணன் பேர் கிளறிக் கிளறிப் பிதற்றும் மெல்லாவியும் நைவும் எல்லாம் தளரிற் கொலோ அறியேன் உய்யலாவது இத் தையலுக்கே
ஸ்வா பதேசம் –இத்தால் ஆழ்வார் படியை கண்டவர்களுக்கு யாதநா சரீரம் போலே க்லேசமே யாகாதே இவர்க்கு உள்ளது –இச் சரீரத்தோடு பகவல் லாபம் உண்டாய் இவர் தரித்து இருக்க காண மாட்டோம் ஆகாதே- இஸ் சரீர விஸ்லேஷத்துக்கு பின்பு ஆகாதே இவர்க்கு ஆஸ்வாசம் உள்ளது -என்று தோற்ற-இருக்கிறபடியைச் சொல்கிறது –விளரிக் குரல் –இது வேதார்த்த அர்த்தம் என்பதால் ஸ்ரீ இராமாயண போலி கேட்டாராம் ஜீயர் –-தூ நிலா முற்றத்தில் ஒரு பனை இருக்க பிரசக்தி உண்டோ -என்பதற்கு ஐதிகம் –தளிரும் முறிவும் –நாயகன் அடிக்கடி வருகையும் முற்றத்தில் படுக்கையும் நிலவுமாய் போகம் நடக்கிறதோ- இரவும் பகலும் பாதகமாய் செல்ல -அனைவரும் கிலேசித்து இருக்க —
பனையை வெட்டி முற்றத்தை-அழகாய் பேணுவாரும் உண்டோ-
தாத்பர்யம்–கீழே உரு வெளிப்பாட்டுக்கு தளர்ந்ததுக்கு மேல் அன்றிலும் உச்ச ஸ்வர ஒலியால் கூப்பிட
மோஹித்த திருத்தாயார் பாசுரம்–முற்றத்தில் பனை மரத்தில் நன்றாக கூடு கட்டி நித்ய சம்ஸ்லேஷம் நடவா நிற்க பிரிய நேரிடுமோ என்று அதி சங்கை பண்ணி கூப்பிட்டது போல் இவளும் நாயகன் உடன் கூடி இருக்கவே விஸ்லேஷத்தில் அதி சங்கை பண்ணி உன்னை விட்டு ஒரு ஷணமும் இருக்க வல்லேன் என்று அவன் சொன்னவற்றை நினைத்து முகில் வண்ணன் வாசகமான திரு நாமங்களை மீண்டும் மீண்டும் அக்ரமமாக பிதற்றி அனுசந்திக்க – இவளது நெஞ்சும் தளர்ந்து உடலும் மெலிய
மறு சரீரம் எடுத்து ஸூகப்படுமது ஒழிய இந்த சரீரத்துடன் அனுபவிக்க மாட்டாள் போல் உள்ளதே என்கிறாள் திருத்தாயார்–
அரும் பதம்-இது -உச்ச ஸ்தாயீ-பேர் பிதற்றுவது -வேதாந்தம் அர்த்தம் இப்படி சொல்லலாமோ என்னில்
பிராட்டி இரண்டாம் பிரிவில் ஸ்ரீ வால்மீகி பகவான் ப்ரீய பரராய் உதவினது போல் என்று பட்டர் ஜீயருக்குக் காட்டி அருளினார்-இனி அவதார சமாப்தி அநந்தரம் தான் சீதா பிராட்டி கூடினாள் அன்றோ
அதே போல் இவளும் இவ்விடம்புடன் கூட மாட்டாள் என்று அத்தைக் காட்டி அருளிய படி –
7-1-உண்ணி லாவிய ஐவராற் குமை தீற்றி-ப்ரவேஸம்–
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் அர்த்த பஞ்சக பரமாக அருளிச் செய்வார் முன்பே பார்த்தோம்
பரமாத்மா ஸ்வரூபம் முதல் இரண்டும் –
சேதன ஸ்வரூபம் ஸ்வ அடுத்த இரண்டிலும்
உபாயம் ஸ்வரூபம் அடுத்த இரண்டிலும் –
அநிஷ்ட ஹானி விரோதி ஸ்வரூபம் 7/8 பதிகம்
இந்திரியங்கள் படுத்தும் பாடு இதில் அருளுகிறார் –
மேல் 9/10 பதிகம் இஷ்ட பிராப்தி –
சர்வ சக்தித்வம் அருளிச் செய்கிறார் ஏழாம் பத்தில்
முதற்பத்தால், பகவத் கைங்கரியம் புருஷார்த்தம் என்று அறுதியிட்டார்;
இரண்டாம் பத்தால். அந்தக் கைங்கரியத்தில் களையறுத்தார்;
மூன்றாம் பத்தால், களையறுக்கப்பட்ட அந்தக் கைங்கரியமானது பாகவத சேஷத்துவ பரியந்தமான பகவத்கைங்கரியம் என்றார்;
நான்காம் பத்தால், இப்படிப்பட்ட கைங்கரியத்திற்கு விரோதிகள் ஜஸ்வரிய கைவல்யங்கள் என்றார்;
ஐந்தாம் பத்தால், அந்த விரோதிகளைப் போக்குவானும் அவனே என்றார்;
ஆறாம் பத்தால், விரோதிகளை அழிக்கும் இயல்பினனான சர்வேஸ்வரன் திருவடிகளிலே சரணம் புக்கார்;
இப்படிப் பெரிய பிராட்டியார் முன்னிலையாகச் சரணம் புக்க விடத்திலும்,
தக்தப் பட நியாயம் போலே சம்சாரம் தொடருகிறபடியைக் கண்டு நோவுபடுகிறார் இந்த ஏழாம் பத்தால்.
தக்தபடம் – எரிந்து போன வஸ்திரம். ‘மடிப் புடைவை வெந்தால் உண்டையும் பாவும் ஒத்துக் கிடக்கும்:
காற்று அடித்தவாறே பறந்துபோம்’என்பது, ஸ்ரீ வசனபூஷணம்,2-ஆம் பிரகரணம், சூ. 191.
‘அமர்ந்து புகுந்தேன்’ என்று தம்மால் ஆன அளவும் புகுர நின்றார்.
பின்பு அவனைப் புகுர நிற்கக் கண்டிலர்.
‘இனிக் கைவிடப் பார்த்தான் ஆகாதே’ என்று விழுந்து கிடந்து கூப்பிடுகிறார்.
விளம்பத்திற்குக் காரணம் இல்லாத சாதனத்தைப் பற்றி நின்றவன்,
அது பலத்தைக் கொடுக்குந்தனையும் கிடந்து கூப்பிடுவானத்தனை அன்றோ?
இவர்தாம் மேலே செய்ததாயிற்றது, திருவேங்கடமுடையான் திருவடிகளிலே
பெரிய பிராட்டியார் முன்னிலையாகத் தம்முடைய
ஆகிஞ்சந்யத்தை விண்ணப்பஞ்செய்து கொண்டு சரணம் புக்காராயன்றோ இருக்கிறது?
அது, ‘மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே.’-என்பது, ஸ்ரீ கீதை, 7 : 14.
‘என்னையே எவர்கள் சரணம் அடைகிறார்களோ, அவர்கள் இந்த மாயையினைத்தாண்டுகிறார்கள்,’ என்கிறபடியே,
கடுகப் பலித்துக் கொடு நிற்கக் கண்டிலர்.
இனி, ‘நம்மைக் கைவிடப் பார்த்தான் ஆகாதே’ என்று இன்னாதாகிறார்.
பக்தி-அங்க பிரபத்தி -கீதையில் -பக்தி ஆரம்ப விரோதிகளை போக்க –
பிரபத்தி -ஸ்வ தந்த்ர பிரபத்தி -ஆர்த்தன் திருப்தன் இரண்டு வகை –
ஸர்வ பாபேப்யோ மோக் ஷயிஷ்யாமி –பாப சப்தம் கீதைப்படி –வேற ரகஸ்ய த்ரயப்படி வேறே –
இங்கு மோக்ஷ விரோதி பாபங்கள் விவஷிதம்
—–
கீழே சுருக்கமான பிரவேசம்
இனி அத்தையே விரித்து அருளிச் செய்கிறார்
‘சர்வேஸ்வரன் திருவருள் செய்வதற்கு வேண்டுவன,
1-சம்சாரத்தினுடைய தண்ணிமை நெஞ்சிலே படுதல்
2-சர்வேஸ்வரனுடைய வைலக்ஷண்யத்தை நினைத்தல்,
3-சரணாகதி செய்தல் என்னும் இவற்றிற்கு மேற்பட இல்லை அன்றோ?’ என்று
சம்சாரத்தின் ஸ்வபாவத்தை நினைத்துப் போக்கடி அற்று அவ்வடியைப் பற்றிச் சரணம் புக்கார்;
புக்க இடத்திலும் தாம் விரும்பிய காரியத்தைச் செய்யாமையாலே,
சரணம் புக்கார் மேலே வேல்காரரை ஏவித் துன்புறுத்தும்
அருளற்றவரைப் போலேயாக அவனை நினைத்து அஞ்சினவராய்,
இவ்வளவிலும் பலிக்கக் காணாமையாலே, -இந்திரியங்கள்-வேல் என்றபடி –
‘வைப்பனாக வைத்த பிரஹ்மாஸ்திரம் வாய் மடிந்தது காண்! என்று கூப்பிடுகிறார்.
‘இனித்தான், ஷிபாமி -‘தள்ளுகிறேன்’ என்பதும். -தாதாமி ‘கொடுக்கிறேன்’ என்பதும். இரண்டே யன்றோ?-
அவற்றுள், ‘தள்ளுகிறேன்’ என்னுமளவிலே யன்றோ நாம்’ என்றிருந்தார்.
‘அது என்? இவர்க்குக் ‘கொடுக்கிறேன்’ என்ற புத்தி யோகத்தைச் செய்து கொடுத்தானே?’ என்னில்,
‘அதுவும் நோவு படுகைக்கு உடலாகத் தந்தான்’ என்றிருக்கிறார்.
தம்முடைய சத்தி கொண்டு பெற இருந்தார் அல்லர்;
அவனுக்குச் சத்தி இல்லாமல் இழக்கிறார் அல்லர்; பேற்றுக்கு வேண்டுவது முன்பே செய்து நின்றார்;
‘ஆன பின்பு,இவர்க்கு இப்போது இழக்க வேண்டுவது இல்லை அன்றோ?
ஆயின், பலியாது ஒழிவான் என்?’ என்னில்,
‘இவர் குறையால் வைத்தாலன்றோ பலித்தது இல்லையாவது?
நமக்காக இருக்கிற பின்பு இவர் இங்கே இருந்தால் நல்லது,’ என்றிருந்தான்.
அவனும் இவரைக் கொண்டு ஒரு காரியம் கொள்ள அன்றோ எண்ணி இருக்கிறது?
அதுவும் ஒழிய, இவருடைய திருமேனி இறுதியானதாகையாலே, இவர் சரணாகதி செய்த இடத்திலும்,
இவர் திருமேனியில் தனக்குப் பிராவண்யத்தாலே காரியம் செய்திலன்.
இவர் திருமேனியில் அவனுக்கு உண்டான பிராவண்யத்தைக் கண்டே அன்றோ
‘மங்க ஒட்டு’10. 7 : 10. என்று அவனைக் காற்கட்டிற்றும்?
மெய்யான பிரேமம் உண்டானால் இங்ஙன் அல்லது இராதே. -மெய் சரீரம் உண்மை -சாடு
இது பிரகிருதி ஆயிற்றே அவனுக்கு. -சாடு– ஸ்வபாவம் -மூல பிரகிருதி
அவன் தம்மைக் கொண்டு கொள்ள இருக்கிற காரியத்தை இதில் பொருந்துவாரைக் கொண்டு
கொண்டால் ஆகாதோ என்றாயிற்று இவர் நினைத்திருக்கிறது.
இதில் பொருந்துவாரை’ என்றது, திருமழிசைப் பிரான் போல்வாரை.-
‘செய்து கொடுத்த ஞான லாபம் இவர் தரித்திருப்பதற்குக் காரணமாம்,’ என்றிருந்தான் அவன்;
அதுதானே விரைவதற்குக் காரணமாயிற்று இவர்க்கு. ‘கிரமத்திலே காரியம் செய்கிறோம்’ என்றிருந்தான் அவன்;
அதுத ன்னையே கொண்டு ‘நம்மைக் கைவிட நினைத்தான்’ என்றிருக்கிறார் இவர்.
நித்திய விபூதியையும் திவ்விய மங்கள விக்கிரஹத்தையும் கண்ணாற்கண்டு,
‘அங்கே போய் அப்படியே அநுபவிக்க வேணும்’ என்னும் பதற்றத்தை யுடைய இவர்க்கு.
சம்சாரம் ததீயமாயிருப்பதும் ஓர் ஆகாரம் உண்டு’ என்னும் ஞான மாத்திரத்தாலே தரித்திருக்கப் போகாதே.
‘யானும் நீ தானாய்த் தெளிதோறும் நன்றும் அஞ்சுவன் நரகம் நான் அடைதல்’திருவாய்மொழி. 8. 1 : 9.–
என்றே அன்றோ இவர் இருப்பது?
1-இப்படி இருக்கிற தம்மையும்,
2-‘அவனுக்குப் பாதுகாக்கப்படும் பொருள் குறைவற்று இருக்கிறபடியையும்,
3-காக்கும் தன்மை ஸ்வரூபமாயிருக்கிறபடியையும்,
4-காத்தற்குத் தொடர்பு இருக்கிறபடியையும்,
5-தமக்கு இவற்றில் தொடர்பு அற்று இருக்கிறபடியையும்,
1-ஆர்த்தி உடன் பிரபத்தி பண்ணிய தம்மையும்
2-உலகம் மூன்று உடையாய்
3-கடல் ஞாலம் காக்கின்ற
4-அண்ணலே
5-வல முதல் கெடுக்கும் வரமே தந்து –
சத்துவம் முதலான குணங்கள் அவற்றிற்கு அடியான
கர்ம தேஹ இந்திரியங்கள் இவற்றிற்கு அடியான மூலப்பகுதி மஹான் அஹங்காரம் அதன் காரியமான விஷயங்கள்
அவித்யை கருமம் வாசனை ருசி ஆகிய இவை எல்லாம் அவனுக்கு வசப்பட்டவைகளாய் இருக்கிறபடியையும் நினைத்து,
‘விஷயங்களும் இந்திரியங்களும் நடையாடுகிற சம்சாரத்தே வைத்த போதே
இவற்றுக்கு நம்மை இரையாக்கிப் போகட நினைத்தானித்தனை:
‘தள்ளுகிறேன்’ என்கிற கூட்டத்திலே புக்கோம்.
‘இனித்தான், இவன் பரிகரங்கள் கண்டதும் நம்மை அகற்றுகைக்கு உறுப்பாக.
அவற்றுள், நித்திய விபூதியில் ஓலக்கம் இருக்கிறது, நாம் படுகிற நலிவு கண்டு அங்குள்ளாருடனே கூடச் சிரித்திருக்கைக்கு;
லீலாவிபூதி கண்டது நமக்குச் சிறைக் கூடமாக.
மயர்வற மதிநலம் அருளிற்றும், அல்லாதாரைப் போன்று சுகமே இராமல் துடித்து நோவு படுகைக்காக’ என்று அறுதியிட்டு,
அவன் திருவடிகளிலே தலையை மடுத்து, கேட்டார் அடங்கலும் நீராம்படி கிடந்து கூப்பிடுகிறார்.
‘மின்னிடை மடவார்’ என்ற திருவாய்மொழியில், ஒரு பிராட்டியின் நிலையை அடைந்தாராய்ப் பிரணய ரோஷம்
தலை எடுத்துச் சொன்னவை எல்லாம் பிறர் வாயாலே சொன்னாற்போலே இருக்கையாலே,
ஆழ்வாரான தன்மையிலே நின்று இன்னாதாம்படியான நிலை விளைந்தது இவர்க்கு.
இவர். எல்லா அளவிலும் ஸ்ரீஜனகராஜன் திருமகளாரோடு ஒப்பார் ஒருவராயிற்று. என்றது,
அத்தலையில் குறை இடுவார் ஒருவர் அன்றிக்கே ‘இவற்றுக்கெல்லாம் அடி நம்முடைய பாபம்’ என்றிருப்பார் ஒருவர் என்றபடி.
இங்ஙனே இருக்கக்கடவ இவர், அவன் தலையிலே குறையை ஏறிட்டுக் கூப்பிடுகிறார் அன்றோ அந்த நிலை விளைகையாலே?
‘இவர் தாம் தம்மாலே வந்ததனை அவன் தலையிலே ஏறிடுவான் என்?’ என்னில்,
சம்பந்தத்தை உணர்ந்தால், இத்தலையாலே வந்ததனையும் அவன் பக்கலிலே ஏறிடலாய் இருக்கும் அன்றோ?
குழந்தை கிணற்றிலே விழுந்தால், ‘தாயானவள் தள்ளினாள்’ என்னக கடவாதாயிருக்கும். என்றது.
‘தாயானவள் கண்களிலே வெண்ணெய் இட்டுப் பார்த்திருந்தாளாகில் இக்குழந்தை விழுமோ?
இவள் நோக்காமை அன்றோ கேடுற்றது?’ என்று கொண்டு அவள் தலையில் குறை சொல்லக் கடவதாய் இருக்கும் என்றபடி.
உதங்கன் கிருஷ்ணன் பக்கலிலே வந்து, ‘உனக்கு இரு திறத்தாரோடும் சம்பந்தம் ஒத்திருக்கச் செய்தே,
பாண்டவர்களை அழிக்காமல் துரியோதனாதியர்களை அழித்தாய்; இப்படிச் சார்வு செய்யப் போமோ?’ என்றாற்போலே
வார்த்தைகள் சிலவற்றை அவன் சொல்ல, கிருஷ்ணனும் அவர்கள் குறைகளை எல்லாம் சொல்லி,
‘அவர்கட்குத் தருமத்தில் ருசி இல்லை காண் என்ன,
‘நீ பின்னை அவர்களுக்குத் தருமத்தில் ருசி உண்டாக்கிக் கொடாது ஒழிவான் என்?’ என்றான் அன்றோ?
பல நீ காட்டிப் படுப்பாயோ?’,
‘கிறிசெய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ?’ திருவாய். 6. 9. 9. ஷ 6 9 : 8.-என்று சொல்லுகிறபடியே
அவற்றின் அண்மையும் சகிக்க முடியாதபடியாய், இனி, தாம் அறியாதிருக்கச் செய்தேயும்
பகவத் விஷயத்தில் பிரவணமான ‘முடியானே’ என்ற திருவாய்மொழியிற் கூறப்பட்ட உறுப்புகளையுடைய
இவர்க்கு இந்திரியங்கட்கு வசப்படுதல் உண்டு என்னுமிடம் மேலே கூறியதோடு முரணாகாதோ?’ என்னில்,
பக்கத்து வீடு நெருப்புப் பற்றி வேவா நின்றால், தமது தமது வீடுகளைப் பாதுகாத்துக் கொள்ளாமல் இருப்பவர் இலர் அன்றோ?
புற்றின் அருகே பழுதை கிடந்தாலும் ‘பாம்பு’ என்று நினைத்து மயங்கக் கூடியதாய் இருக்கும் அன்றே?
அங்குத்தைக்கும் இங்குத்தைக்கும் பொதுவான உடம்போடே இருக்கிறபடியைக் கண்டார்:
உலகத்தார் முழுதும் இந்திரியங்களுக்கு வசப்பட்டவராய்க் கிடந்து நோவுபடுகிற படியையும் கண்டார்:
‘இது நம்மளவும் வரின் செய்வது என்?’ என்று அஞ்சிக் கூப்பிடுகிறார்.
ஸாகா ம்ருகா – பூசலிலே புக்கு அங்கு உண்டான பழக்கம் இன்றிக்கே இருக்கை.
பணையோடு பணை தத்தித் திரியுமவை அன்றோ? ராவண ஸாயகார்த்தா; –
‘தேவத்யமாநா: பதிதாக்ரய வீரா: நாநத்யமா நாபய ஸல்ய வித்தா:
ஸாகாம்ருகா ராவண ஸாய கார்த்தா: ஜக்மு: ஸரண்யம் ஸரணம் ஸ்மராமம்’-என்பது, ஸ்ரீராமா. யுத். 59 : 45.
‘வாநரா:’ என்னாமல், ‘ஸாகா ம்ருகா:’ என்று விசேடித்ததற்கு பாவம் அருளிச் செய்கிறார்,
திசைப் பாலகர்களையுங்கூட அச்சமுறுத்தி வளர்ந்தவன் கையில் அம்புகள்.
ஜக்மு: ஸரண்யம் ஸரணம் ஸ்மராமம் – தங்களுடைய ஆபத்தை அறிந்து போக்கக் கூடியவனையும் பார்த்துப் பற்றினார்கள்.
‘அரக்கர்களால் துன்புறுத்தப்பட்ட வானரங்களுடைய பெரிய கூட்டமானது,
பாதுகாக்கின்றவனும் சக்கரவர்த்தி திருமகனுமான பெருமாளைச் சரணமாக அடைந்தது,’ என்கிறபடியே,
‘ராக்ஷஸை: வத்யமாநாநாம் வாநராணாம் மஹாசமூ:
ஸரண்யம் ஸரணம் யாதா ராமம் தஸரதா த்மஜம்’-என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 17.
முதலிகள் அடங்கலும் அரக்கர்கள் வாயிலே கிடந்து பெருமாளைச் சரணம் புக்காற்போலே,
இவரும் மனம் ஆளும் ஓர் ஐவர் வன்குறும்பரான இந்திரியங்களுக்குப் பயப்பட்டுக் கூப்பிடுகிறார்.
‘பிரியமான ஜனங்களைப் பாராதவளும், அரக்கியர்களின் கூட்டத்தைப் பார்ப்பவளும், தன் கூட்டத்தால் விடப்பட்டதும்
நாய்க் கூட்டத்தால் சூழப்பட்டதுமான பெண் மான் போன்றிருப்பவளும்’ என்கிறபடியே,
ப்ரியம்ஜநம் அபஸ்யந்தீம் பஸ்யந்தீம் யராக்ஷஸீகணம்
ஸ்வகணேந ம்குகீம் ஹீநாம் ஸ்வகணை; ஆவ்ருதாமிவ’-என்பது, ஸ்ரீராமா. சுந். 15 : 24.
‘மயிலி யற்குயின் மழலையாள் மானினம் பேடை
அயிலெ யிற்றுவெம் புலிக்குழாத் தகப்பட்ட தன்னாள்’-என்பது, கம்பரா. சுந். காட்சிப். 4.
ஸ்ரீஜனகராஜன் திருமகள் பட்டது படுகிறார்.
பிள்ளை திருநறையூர் அரையர் ‘இப்பாசுரங்களில் முன் அடிகள் இரண்டும், புலியின் வாயிலே அகப்பட்ட குழந்தை
தாய் முகத்திலே விழித்துக் கொண்டு புலியின் வாயிலே கிடந்து நோவுபடுமாறு போலே இருக்கிறது,’ என்று பணிப்பர்.
‘தாவத் ஆர்த்தி:’ என்ற ஸ்லோகத்திற்படியே, சரணம் புக்கால் தம்மை இன்னாதாகச் சம்பந்தம் இல்லையே:
அவனை இன்னாதாமித்தனை அன்றோ?
திருமலையிலே புகுந்து கிட்டி நின்றதுவும் இவர்க்குப் பேற்றுக்குக் காரணமாதல் தவிர்ந்து
கூப்பிடுகைக்குக் காரணமாயிற்றித்தனை அன்றோ?
பரமாத்மா ஸ்வரூபம் முதல் இரண்டும் –
சேதன ஸ்வரூபம் ஸ்வ அடுத்த இரண்டிலும்
உபாயம் ஸ்வரூபம் அடுத்த இரண்டிலும் –
அநிஷ்ட ஹானி விரோதி ஸ்வரூபம் 7/8 பதிகம்
இந்திரியங்கள் படுத்தும் பாடு இதில் அருளுகிறார் –
மேல் 9/10 பதிகம் இஷ்ட பிராப்தி –
ஏழாம் பத்தில் — கீழ் இரண்டு பத்தாலே உபாய ஸ்வரூப சோநத்தையும் -தத் ஸ்வீ காரத்தையும் அருளிச் செய்து –
மேலே ஏழாம் பத்தாலும் எட்டாம் பத்தாலும்-உபாய நிவர்த்யமான விரோதி ஸ்வரூபத்தையும் –
தன் நிவ்ருத்தி பிரகாரத்தையும் அருளிச் செய்கிறார் -அதில் விரோதி ஸ்வரூப பரமான இப்பத்தாலே –
நிவர்த்யமான விரோதியாயுள்ள சரீர இந்திரியாதிகள் நிவர்த்தகனான ஈஸ்வரன் இட்ட வழக்கு என்னுமத்தையும்
விரோதி நிவ்ருத்தி பிறவாத போது ப்ராப்ய கத ப்ராவண்யம் ஆர்த்தி ஜனகம் என்னுமத்தையும்
ஆர்த்தி சமிப்பது அபி நிவிஷ்டனான ஈஸ்வரனுடைய தேச ப்ராப்தியாலே என்னுமத்தையும்
ஆர்த்தி ஹேதுவான விரோதியானது ஜகத் ரக்ஷண ஹேதுவான விஜய அபதானங்களை யுடைய சர்வ சக்திக்கே நிவர்த்த நீயம் என்னுமத்தையும்
ரக்ஷகனான அவனை ஒழிய வேறு நிவர்த்தகர் இல்லை என்னும் இடம் சம்மதம் என்னும்படியையும்
சர்வ ஸ்ரஷ்டாவான அவனுடைய காலைக் கட்டிக் கூப்பிட்டு விரோதியைக் கழித்துக் கொள்ள வேணும் என்னுமத்தையும்
உரு வெளிப்பாடான அனுபவம் நடக்கச் செய்தேயும் அலாப ஜெனிதையான ஆர்த்தி விரோதி கார்யம் என்னுமத்தையும்
விசித்ர விரோதி நிவர்த்தனத்தில் விசித்ர விபூதி விசிஷ்டனான விசித்ர சக்தி யுக்தனே வேணும் என்னுமத்தையும்
விரோதி விஸிஷ்ட வேஷத்தில் வாசிக்க கைங்கர்யம் கொண்ட ப்ரீதி அதிசயத்தாலே விரோதியை விஹஸ்தமாக்கின ஹர்ஷத்தையும்
ப்ராப்ய விஷயத்தில் ப்ராவண்யம் அதிசயித்தால் பிரதிபந்தகம் உபாய பூதன் போக்கும் என்னுமத்தையும் –
அருளிச் செய்து
விரோதியினுடைய ஸ்வரூபத்தை சோதித்து அருளினார் –
இதில் முதல் திருவாய் மொழியில் -கீழே -ப்ராப்த்யர்த்தமாக -சரணாகதியை யனுஷ்டித்த இவர்க்கு
பிராப்தி விரோதி நிவ்ருத்யர்த்தமாக பிரதிபந்தக ப்ராபல்யத்தைப் பிரகாசிப்பிக்க –
காட்டிப் படுப்பாயோ –இன்னம் கெடுப்பாயோ -என்று பாண்டே அஞ்சி இருக்கிற இவர் பிரதிபந்தகமான தேஹ இந்திரியாதிகளுடைய
அதி ப்ரவ்ருத்தியை அபரோக்ஷித்து-அதிசயித ஆர்த்தியை யுடையராய் -விரோதி நிவர்த்தகனான ஈஸ்வரனுடைய
சம்பந்தாதி குண பவ்ஷ் கல்யத்தையும்
போக்யதா அதிசயத்தையும்
ரக்ஷணார்த்த வியாபாரத்தையும்
அகடிதகடநா சாமர்த்த்யத்தையும்
விரோதி நிராசன ஸ்வ பாவத்தையும்
சர்வ பிரகார சந்நிதியையும்
யரும் தொழில் செய்தும் ஆஸ்ரித கார்யம் செய்யும் படியையும்
அசாதாரண சிஹ்நாதி யோகத்தையும்
சகல ஜகத் ஸ்ரஷ்ட்ருத்வாதிகளையும்
சாரா ஸங்க்ரஹண சாமர்த்யத்தையும்
அனுசந்தித்து -ஏவம் வித ஸ்வ பாவனான நீ உனக்கு விதேயமான சரீர இந்திரியாதிகள் என்னை நலியக் கண்டு
நிவர்த்திப்பியாதிருந்தாய் -என்று அந்நிய விசேஷம் அடியாகப் பெரிய ஆர்த்தியோடே கூப்பிடுகிறார் –
உண்ணி லாவிய ஐவராற் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம்
நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய்
எண்ணிலாப் பெரு மாயனே!இமையோர்கள் ஏத்தும் உலக மூன்றுடை
அண்ணலே! அமுதே! அப்பனே!என்னை ஆள்வானே!–7-1-1-
சுக அனுபவத்திற்கு உரியனவான திருவடிகளையுடைய உன்னை நீ அறிதி அன்றோ?’ என்பார், ‘உன் பாத பங்கயம்’ என்கிறார்.-என்றது, ‘அடி அறியாமல் தான் அகற்றுகிறாய் அன்றே-சம்சாரத்தில் அருசி பிறவாதார்க்கும் விட ஒண்ணாதபடி போக்கியமான திருவடிகளை.-நலிவான் –நண்ணாமை என்றும், நலிவு என்றும் இரண்டு இல்லை இவர்க்கு;
திருவடிகளைக் கிட்டாது ஒழிகையே இவ் வாத்துமாவுக்கு நலிவு. -தொழுகையே எழுகை போலே இந்தக் கொடுமையான வகையே நலிவான்.-‘அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேன்’ என்ற பின்பும்.
பாண்டவர்கள் காரியத்தை எண்ணினாற்போலே, இங்குக் காரியம் செல்லா நிற்கச் செய்தே, மந்திரமும் செல்லுகிறபடி.-‘இவரை நம் பக்கலினின்றும் பிரித்தோமாம் விரகு என்னோ?’ என்று சிந்திக்கிறான் என்றிருக்கிறார்.எண்ணிறந்த செயல்களைச் செய்யவற்றாய், நீ வேண்டாதாரைச் சிறை இட்டு நலியக்கடவதானபிரகிருதியைப் பரிகரமாகவுடையவனே!
அன்றிக்கே,-‘எண்ணிறந்த மஹா ஆச்சரியமான குணங்களை யுடையவனே!’ என்று பிள்ளான் பணிக்கும்படி. ‘இப்படிக் குணவானாயிருக்கிற உனக்கு என்னை நலிகைக்கு என்ன சேர்த்தி உண்டு?’ விடு நகங்கட்டி நலியா நிற்கச் செய்தே ‘தண்ணீர்’ என்பாரைப் போலே, அவன் குணங்களைச் சொல்லுகிறபடி.
உலக மூன்றுடை-அண்ணலே!-சர்வ லோகங்களையும் உடைய ஸர்வேஸ்வரனே -சர்வ ரக்ஷகத்வத்தைக் காட்டிற்றும் நம்மைக் கை விடான் என்று இருக்கைக்காக வன்றோ
அமுதே!-போக்யதையை அறிவித்ததும் மேல் விழுகைக்காக அல்லவோ-அமுதே – அவன் தன்னுடைய இனிமையைக் காட்டிற்றும் தம்மை அனுபவிப்பிக்கைக்கு அன்று; புறம்பு ஒன்று பொருந்தாதே நோவு பட என்றிருக்கிறார்.-அப்பனே –உபகாரகனே -உபகாரத்தை காட்டிற்றும் இவ்வளவு உபகரித்தவன் இனி கை விடுமோ என்று இருக்கைக்காக–‘இப்படி உபகாரகனானவன் நலியா நின்றானோ?’ என்று நம்பும்படி செய்து பின்பு அபகரித்தற்காகக் காட்டினான் என்றிருக்கிறார்.-என்னை ஆள்வானே – ன் இசைவு இன்றிக்கே இருக்க என் கார்யம் உனக்கே பரமாக ஏறிட்டுக் கொண்டதுவும் நான் கை விடான் என்று இருக்கைக்காக அன்றோ–பிராங் நியாயம் பலிக்கும் என்றிருக்கைக்காகக் காட்டினான் என்றிருக்கிறார்.
‘இதற்கு முன்பெல்லாம் நம்மை நிர்வஹித்துக் கொண்டு போந்தது நாமும் சில செய்தோ?
அப்படியே மேலும் நம் காரியம் அவன் செய்யும்,’ என்றிருக்கைக்காகச் செய்தானத்தனை;
நினைவு வேறே என்றிருக்கிறார். ‘என்னை ஆள்வானே! நலிவான் இன்னம் எண்ணுகின்றாய்’ என்கிறார்.-
—————
என்னை ஆளும் வன்கோ ஓரைந்திவை பெய்து இராப்பகல் மோது வித்திட்
டுன்னை நான் அணு காவகை செய்து போதி கண்டாய்
கன்னலே! அமுதே! கார்முகில் வண்ணனே!கடல்ஞாலம் காக்கின்ற
மின்னு நேமியினாய்!வினையேனுடை வேதியனே!–7-1-2-
என்னை ஆளும் வன் கோ – என்னை நோக்குவாய் நீயாய், பணி கொள்வார் வேறே சிலர் ஆவதே! அத்தலை இத்தலை ஆயிற்றுக் காண்.-ஈஸ்வரன் என்பான் ஒருவன் உண்டாய்,
அவனுக்கு ஆத்துமா சேஷமாய்,-அவனுக்கு மனம் அந்தரங்கத் துணையாய்,
அதற்கு இந்திரியங்கள் சேஷமாகை தவிர்ந்து கலகத்தில் பள்ளிகள் போலே என்னை இந்திரியங்கள் ஆளும்படி ஆவதே!-வன்கோ – பிரபலருமாய் வந்தேறிகளானவர்களுக்குப் பணி செய்து வெறுத்தேன்.-எல்லா நற்குணங்களையுமுடைய சர்வேஸ்வரன் சேஷியாகை தவிர்ந்து, குணம் இல்லாதவர்கள் சேஷிகள் ஆவதே?’-ஒருவனுக்குச் சேஷமாதல் தவிர்ந்தது’ என்பார், ‘ஐந்து’ என்கிறார்.-ஸ்ரீபிரஹ்லாதனை பாம்புகளைக் கூட விட்டுக் கட்டி நலிந்தாற்போலே இருக்கிறது காணும், இவற்றை உண்டாக்கி என் பக்கலிலே நீ விட்டது.
உன்னை அனுபவிக்க வேணும் என்று போந்த பிராட்டியை மாய மானைக் காட்டிப் பிரித்து,
ஒற்றைக் கண்ணன், ஒற்றைக் காதள் இவர்களை கைகளிலே காட்டிக் கொடுத்து
உன்னைக் கொண்டு அகன்றாற்போலே காண் இதுவும்!
கடல் ஞாலம் காக்கின்ற மின்னு நேமியினாய் – ‘போதி கண்டாய்’ என்று யார் கால் கட்ட நீ அன்று நோக்கிற்று!-‘இந்திரியங்களாலே நோவுபட்டோம்’ என்று இவர்கள் அபேக்ஷித்த போதோ நீ நோக்கிற்று! நீ இனியன் என்று அறியாதரையுங்கூட நோக்குமவன் அல்லையோ? கடலோடு கூடின பூமியைக் கண்களிலே வெண்ணெய் இட்டுக்கொண்டு நோக்கும் தன்மையன் அல்லையோ? ‘காத்தல் தான் காதாசித்கமோ உனக்கு?’ என்பார், ‘காக்கின்ற’ என்று நிகழ்காலத்தாற் கூறுகின்றார்.-மின்னு நேமியனாய் –-இயற்றி-யத்னம்- உண்டு என்னா, சங்கற்பத்தால் நோக்குமவனோ?-ஆசிலே வைத்த கையும் நீயுமாயன்றோ நோக்குவது? -ஆசு -பிடி -ஆயுதம்-உருவின வாள் உறையில் இடாதே அன்றோ நோக்குவது? விளங்கா நின்றுள்ள திருவாழி. –-கிருபையால் மிக்கு இருக்கும் திரு ஆழி
வினையேனுடை வேதியனே –-ஊர்ப் பொதுவாயிருக்கிற நீ. என்னளவிலே வந்தவாறே வேதங்களாலேயே அறியப்படுகின்றவனானாய். இன்று இருந்து ஓலைப்புறத்திலே கேட்கும்படியான பாபத்தைச் செய்வதே நான்!- சிசுபாலனுக்கு சஷூவுக்கு விஷயம் ஆனாயே-
————
வேதியா நிற்கும் ஐவரால் வினையேனை மோதுவித்து உன திருவடிச்
சாதியா வகை நீ தடுத்து என் பெறுதி அந்தோ
ஆதி ஆகி அகல் இடம் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட
சோதி நீள் முடியாய் தொண்டனேன் மது சூதனனே –7-1-3-
வேதியா நிற்கும் – வேதனையே செய்யா நிற்கும்.-அழகிதாக எல்லா நிலைகளிலும் அடிமை செய்ய ஆசைப்பட்டேன்.-‘உடனாய் மன்னி’ திருவாய்மொழி, 3. 3 : 1.-என்று பாரித்த எல்லாம் இவற்றுக்குப் பணி செய்கைக்கு ஆவதே!-எல்லா நிலைகளிலும் அடிமை செய்ய ஆசைப்பட்டுச் சொன்ன எல்லாம் இவற்றின் பக்கலிலே ஆனபடியைத் தெரிவித்தபடி.
என்ன உறவின் கனந்தான்! தம்முடைய குற்றத்துக்கும் அவனை வெறுக்கும்படி காணும் சம்பந்தம் இருக்கிறபடி.-சாதநாநுஷ்டானம் செய்து பலத்துக்குத் தடை செய்வாரைச் சொல்லுமாறு போலே சொன்னபடி பாரீர். உன் திருவடிகளைச் சாராதபடி தகைந்து,
என் பெறுதி – என் சொரூபம் அழியுமித்தனையோ வேண்டுவது?
நான் படுகிற வியசனத்தால் உனக்கு ஒரு பிரயோஜனம் உண்டாகில் எனக்கு அதுவே அமையும்; உனக்காக இருக்குமதன்றோ எனக்கு வேண்டுவது?-துர்வாசர் வர, ‘பெருமாளுக்கு ஒரு துன்பம் வர ஒண்ணாது’ என்று தம் நோவு பாராதே விடை கொண்டார் அன்றோ?-என் பெறுதி –-நீ, சொன்ன சொல் தவறாதவன் ஆகைக்காக ஸ்ரீபரதாழ்வானைப் பிரித்து வைத்தாய், என் இருப்புக்கு உனக்கு என்ன பிரயோஜனம் உண்டு?
தொண்டனேன் மதுசூதனனே – இவன் இரட்சகன் என்னுமிடத்துக்கு முன்னே ஒன்று தேடிச் சொல்ல வேணுமோ? மதுவைப் போக்கினாற்போலே நான் இந்திரியங்கட்குக் கட்டுப்பட்டிருத்தலை இன்று இருந்து போக்கினவன் அன்றோ?
தன் படிகளைக் காட்டி எனக்குப் புறம்பு உண்டான வாசனையைப் போக்கி-
இன்று கைக்கு எட்டாதிருக்கிற இதுவே அன்றோ குறை?-
——–
சூது நான் அறியா வகைச் சுழற்றி ஓர் ஐவரைக் காட்டி உன்னடிப்
போது நான் அணுகா வகை செய்து போதி கண்டாய்
யாதும் யாவரும் இன்று நின்னகம் பால் ஒடுக்கி ஓர் ஆலினீளிலை
மீது சேர் குழவி! வினையேன் வினை தீர் மருந்தே!–7-1-4-
நான் உறுவது அறியாதபடி –சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் விஷயங்களைக் காட்டி மயங்கச் செய்து-‘உன்மத்தங்காய் தின்னப்பண்ணி’ –உன்னடிப்போது நான் அணுகா வகை செய்து –உன் திருவடிகளாகிற செவ்விப்பூக்களை நான் கிட்டாதபடி செய்து. என்றது,
‘மயிர் கழுவி-பிரபத்தி செய்த பின்பு- இருக்கிறவனைச் செவ்விப்பூச் சூடாமல் தடுப்பாரைப் போலே’-வினையேன் வினைதீர் மருந்தே – பாபமே நிரூபகமான என்னுடைய பாபத்தைப் போக்கும் மருந்தாம் வல்லவனே! என்னுடைய ஐம்புல இன்பங்களில் உண்டாகும் ஈடுபாட்டினைப் போக்கி என்னை இப்படித் துடிப்பித்தவன் அல்லையோ?-
————-
தீர் மருந்தின்றி ஐவர் நோயடும் செக்கிலிட்டுத் திரிக்கும் ஐவரை
நேர் மருங்கு உடைத்தா அடைத்து நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்
ஆர் மருந்தினி யாகுவார்! அடலாழிஏந்தி அசுரர் வன்குலம்
வேர் மருங் கறுத்தாய்! விண்ணுளார் பெருமானேயோ!–7-1-5-
இந்திரியங்கள் பாதகம் ஞானம் கொடுத்தேன் -இத்துடன் காலம் போனால் -என் செய்கேன் -திருவடி கிடைக்காமல் –‘ஆனால், நம் படி இதுவாகில், உமக்கு ஒரு பரிகாரம் தேடிக்கொண்டாலோ?’ என்றான்;-ஆர்மருந்து இனி ஆகுவார்–என் இடையாட்டம் பிறரைக்கொண்டு காரியம் இல்லை: நான் நோவுபடாநின்றேன்.-நீ கை வாங்கினாய். ஆன பின்பு எனக்கு ஒரு இரட்சகர் உளரோ?-நானும் பிறரும் இல்லாத அன்று நீ உண்டு: நீ விட்ட அன்று யார் உண்டு?-நானும் கையும் திருவாழியுமாய் இருந்தேனாகில் நான் என்னை நோக்கிக் கொள்ளேனோ?-நித்திய ஸூரிகளும் அவனும் பிராட்டியுமாகப் பரம பதத்திலே இருக்கிறபடியே நினைத்து
விண்ணுளார் பெருமானேயோ–அங்கே கேட்கும்படி கிடந்து கூப்பிடுகிறார். -பகல் ஓலக்கம் -சாம கானம் கேட்டு ரசிக்கவோ –-ஹா ராம! ஹா லக்ஷ்மண! ஹா ஸூமித்ரே!’ என்று பிராட்டி தனியே கிடந்து கூப்பிட்டாற்போலே, பரமபதத்திலே இருப்பும் அணி கலங்கும்படி கூப்பிடுகிறார்.
————-
விண்ணுளார் பெருமாற் கடிமை செய்வாரையும் செறும் ஐம்புலனிவை
மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால்?
பண்ணுளாய்!கவி தன்னுளாய்!பத்தி யினுள்ளாய்! பரமீசனே! வந்தென்
கண்ணுளாய்! நெஞ்சுளாய்! சொல்லுளாய்!ஒன்று சொல்லாயே.–7-1-6-
சம்சாரத்திலே முமுக்ஷூக்களாய்க் கைங்கரியத்திலே மூழ்கி இருக்கக் கடவரானவர்களையும் செறும்-பெரிய திருவடியையும் அகப்பட ‘எனக்கு’ என்னப் பண்ணிற்றே அன்றோ? -அவன் தான் அவதரித்துச் சோகிப்பது மோகிப்பதானாற்போலே ஆயிற்று இவர்களும்.-இவர்தாம் விண்ணுளாரில் ஒருவரே அன்றோ?
இவற்றுக்குத் தந்நிலமாவது, நான் இவை இருந்த இடம் தேடிச் சென்று கழுத்திலே கயிறு இட்டுக் கொடு நிற்கவல்லேன் ஒருவனாவது;-இங்ஙனே இருக்கிற என்னைப் பெற்றால் இவை என் செய்யா?-காற்றை ஓரிடத்தில் கட்டிவைக்கில்,’ அன்றோ மனத்தினை நியமிக்கலாவது?’-இந்திரியங்களை அடக்குதல் அரிது’ என்று சொல்லுகிறாயாகில் நம் பக்கலிலே மனத்தினை வை’ என்று அருளிச் செய்த நீயும் விட்டால்’ என்னலுமாம்.
உனக்குச் சக்தி இல்லாமையினாலேயோ நான் இழக்கிறது?’-பண்ணுளாய் –
என் துன்ப ஒலியைக் கேளாதிருக்கிறாய் அல்லையே.-கவி தன்னுளாய்-
என்னுடைய ஆர்த்தியை உட்கொண்ட சொற்களைக் கேளாதிருக்கிறாய் அல்லையே?-பத்தியினுள்ளாய்-இப்படிச் சொல்லுவிக்கிற ஆற்றாமையை அறியாதிருக்கிறாய் அல்லையே?-பரம் ஈசனே–உனக்கு முடியாதது ஒன்று உண்டாக அதனைச் செய்யாமாட்டாது இருக்கிறாய் அல்லையே?-உன் சேஷித்துவம் ஏறிப் பாயாத இடம் உண்டோ?
உன் இருப்பில் எனக்கு ஐயம் உண்டோ?-என் கண் காண வந்து ஒன்று சொல்லுகை அன்றோ எனக்குத் தேட்டம்? செய்த காரியத்தில் குறை உண்டு என்கிறேன் அல்லேன்;-நீ செய்யாத காரியத்தை அன்றோ சொல்லுகிறது-எனக்காக நாலடி நடந்து வந்து, ‘நீ அஞ்சாதே கொள்’ என்று, என்னை,-மாஸூச:- துக்கப்படாதே என்ன வேணும்.-
————
ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத ஓர் ஐவர் வன் கயவரை
என்று யான் வெல்கிற்பன் உன் திருவருள் இல்லையேல்?
அன்று தேவர் அசுரர் வாங்க அலைகடல் அரவம் அளாவி ஓர்
குன்றம் வைத்த எந்தாய்! கொடியேன் பருகு இன்னமுதோ!–7-1-7-
கொடியேன் பருகு இன்னமுதே--தேவர்களை போலே நித்யத்வத்தைக் கொள்ளாதே உன்னையே ஆசைப்படுகிற எனக்கு நிரதிசய போக்யனானவனே -தேவர்களை போலே உப்புச் சாற்றில் திருப்தனாகப் பெற்றிலேன் -தோளும் தோள் மாலையுமாய் கடலைக் கடைந்த போதை அழகாயிற்று இவருக்கு அம்ருதம் -இவருடைய அமிருதம் விசஜாதீயமாய் இருக்கிற படி –கடைந்தனையே ஆசைப்படப் பெற்றிலேன்.
அன்றிக்கே,-நீ செய்தது கொண்டு திருப்தனாக வேண்டி இருக்க, ‘அட்டது ஒழியச் சுட்டது கொண்டு வா,’ என்று-உன்னை நிர்ப்பந்திக்கும்படியான பாவத்தைச் செய்துள்ளேன் என்னுதலுமாம்.-நீ உபேஷித்தால் அதி பலமான இந்த்ரியங்களை என்னால் வெல்ல முடியுமோ என்கிறார் –
————–
இன்னமு தெனத் தோன்றி ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த
முன்னம் மாயமெல்லாம் முழு வேர் அரிந்து என்னை யுன்
சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்தேத்திக் கை தொழவே அருள் எனக்கு
என்னம்மா! என்கண்ணா!இமையோர்தம் குலமுதலே!–7-1-8-
தொடக்கித்தில் அமிர்தம் போலாம்;பரிணாம நிலையில் விஷத்தைப் போலாம்-ஓர் ஐவர்-
தனித்தனியே பிரபலமாய் ஒப்பற்றவையாய் இருக்கிற சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் விஷயங்கள் ஐந்தும்.-அநாதியான சம்சாரத்தை எல்லாம்.வாசனையோடே போக்கி உன் சின்னமும் திருமூர்த்தியும்--தவள ஒண்சங்கு சக்கரம் என்றும்,-‘வலக்கை ஆழி இடக்கைச் சங்கம்’ என்றும்,-‘அரவிந்தலோசனன்’ என்றும் சொல்லுகிறபடியே,
திவ்விய ஆயுதங்களையும் அவற்றுக்கு ஒப்பாயிருக்கிற திருமேனியையும்.-சிந்தித்து ஏத்திக் கை தொழவே அருள் எனக்கு- இவற்றை நெஞ்சாலே நினைத்து’ உள்ளடங்காமல் வாய் விட்டுத் துதி செய்து, பின்னைத் திருவடிகளில் விழுகைக்குத் தகுதியாக எனக்கு அருளவேணும்.-என் அம்மா–எனக்குத் தாய் போல் பரிவன் ஆனவனே!-என் கண்ணா–
அந்தப் பரிவை அநுஷ்டான பரியந்தமாக்கினவனே!-இமையோர்தம் குலமுதலே--மனம் வாக்குக் காயம் என்னும் இம்மூன்றும் ஒருங்கி உன் பக்கலிலே பிரவணமாம்படி-ஒரு நாட்டுக்குச் செய்து கொடுத்த நீ, அதனை என் ஒருவனுக்கும் செய்யத் தட்டு என்?
————-
குல முதல் அடுந் தீவினைக் கொடு வான் குழியினில் வீழ்க்குமைவரை
வல முதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய்
நில மு தல் இனி எவ்வுலகுக்கும் நிற்பன செல்வன எனப்பொருள்
பல முதல் படைத்தாய்! என்கண்ணா! என் பரஞ்சுடரே!–7-1-9-
பூமி தொடக்கமாக மற்றும் எல்லா லோகங்களுக்கும் ஸ்தாவர ஜங்கமாத்மகமாய் உள்ள அநேக பதார்த்தங்களையும் முதலிலே படைத்தாய் -ஸ்ருஷ்டிக்கு பிரயோஜனம் மோஷமான பின்பு அது தான் பெற வேண்டாவோ-இந்த்ரியங்களுடைய பலத்தை வாசனையோடு போக்க வல்லேனாம் படி பிரசாதங்களை பண்ணி அருள வேணும்-என்கண்ணா! என் பரஞ்சுடரே!–எனக்கு பவ்யனாய் நிரதிசய போக்யனுமாய் உள்ளவனே -சர்வ சக்தியாய் எனக்கு பவ்யனாய் போக்யனான நீயே இந்திரிய உபாதையை போக்கி அருள வேணும்-
———–
என் பரஞ்சுடரே! என்று உன்னை அலற்றி உன் இணைத் தாமரைகட்கு
அன்புருகி நிற்குமது நிற்கச் சுமடு தந்தாய்
வன் பரங்கள் எடுத்து ஐவர் திசை வலித்து எற்று கின்றனர்
முன் பரவை கடைந்த அமுதம் கொண்ட மூர்த்தியோ–7-1-10-!–
என்னை அனுபவிக்கைக்கு உறுப்பாகச் சரீரத்தைத் தந்தாயானாய் நீ;-அதுதானே எனக்கு இழவுக்கு உடலாயிற்று.-இராஜபுத்திரன் தலையில் முடியை வாங்கிச் சும்மாட்டைக் கொண்டு வழியிலே நின்றால், அடி அறியாதார் சுமை எடுத்துக் கொண்டு போமாறு போலே யாயிற்று,-பகவானுடைய அனுபவத்துக்கு ஈடாகக் கொடுத்த சரீரம் இந்திரியங்களுக்குப் பணி செய்யும்படியாய் விட்டது.-வலியில்லாதான் ஒருவன் தலையிலே மிக்க பாரத்தைச் சுமத்திச் சுற்றும் நின்று தந்தாம் வழியே இழுத்துக் கொண்டுபோகத் தேடுமாறு போலே காணும் இவையும்.-பெரிய தோள்களை யுடையவனே! (மூர்த்தி -தோள்களைச் சொன்னவாறு )என்னுடைய இந்திரியங்களைப் பாற அடித்துப் பொகட்டு, கடல் கடைந்த போதை ஒப்பனையோடே கூடின வடிவினைக் காட்ட வல்லையே!
————-
கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க் குணங்கள் படைத்து அளித்துக் கெடுக்குமப்
புண்டரிகக் கொப்பூழ்ப் புனற்பள்ளி அப்பனுக்கே
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்லா யிரத்துள் இப்பத்தும்
கண்டு பாட வல்லார் வினை போம் கங்குலும் பகலே.–7-1-11-
படைத்து அளித்துக் கெடுக்கும் –-ரஜோ குணத்தையுடையனாய்க் கொண்டு படைத்து,
தமோ குணத்தை யுடையனாய்க் கொண்டு அழித்து,-சத்துவ குணத்தை யுடையனாய்க் கொண்டு இவற்றை அடையக் காத்துக் கொடு நிற்கிறபடி.-‘அப்புண்டரிகக் கொப்பூழ்’ என்கையாலே,-பிரமன் சிவன் முதலாயினோர் காரியம் என்னுமிடமும்,-அவன் காரணன் என்னமிடமும் சொல்லிற்று. –தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் –
விஷயங்களையும் இந்திரியங்களையும் நினைத்த நெஞ்சாரல் தீர, சேஷத்துவத்தினுடைய எல்லை நிலத்திலே போய் நிற்கிறார்;-தாபத்தாலே வருந்தினவன் மடுவிலே தாழ இழியுமாறு போலே.-கண்டு பாட வல்லார் –இவருடைய நிலையை நினைத்தால் பாடப் போகாதே அன்றோ?-கண்டு –-நமக்குத் தஞ்சம் என்று நினைத்து.-வினை போம் கங்குலுப் பகலே –இரவு பகலில் வினை போம்.-இராப்பகல் மோதுவித்திட்டு’ என்ற துயரம் போம்.-திவா ராத்திரி இந்திரிய வச ஹேதுவான பாபங்கள் போகும் –-நம்மை அறியாமலே இரவிலே பாபங்கள் போகுமே -கனவில் படும் சுகம் துக்கம் புண்ய பாப பயன் என்பர் –திவா ராத்ரம் இந்திரிய வஸ்யத்தைக்கு ஹேதுவான பாபம் போம்-திவா ராத்ரம் அடிமை செய்கைக்கு விரோதியான பாபம் போம்-
——————–——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –