ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌ -ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌– ஸ்ரீ திருநாராயணபுரம்‌ அரையர் -ஸ்ரீ உ .வே .ஸ்ரீ ராம சர்மா ஸ்வாமிகள்-பகுதி-3–

June 9, 2026

15 –குணாநுபவ பாத 3-பஞ்சதஸ — 4 – 3 –இரண்டு அதிகரணங்கள்– 218 – 228 ——11–

23 –தஸ ஸதக கத பகவத் குண தஸக அநு குண அநுபவ உபதேச அதிகரணம் —-218—–1-

இனி மேல்‌ திருவாய்மொழியில்‌ பத்துப்‌ பத்தாலும்‌ பரத்வாதி, குண விஸிஷ்டனான ஸர்வேஸ்வரன்‌ தமக்குப்‌ பிறப்பித்த தஸா விஸேஷங்களை வெளியிடுகிறார்‌-

218-பரத்வ, காரணத்வ, வ்யாபகத்வ, நியந்த்ருத்வ, காருணிகத்வ, ஸரண்யத்வ, ஸக்தத்வ, ஸத்யகாமத்வ, ஆபத்ஸகத்வ, ஆர்த்தி ஹரத்வ விஸிஷ்டன்‌ மயர்வை யறுக்க, தத்த்வவேதந மறப்பற்று ஜ்ஞப்தி பல முக்தி தலை சேர நிஷ்கர்ஷித்து, மோக்ஷ பல வ்ருத்தி செய்ய அர்த்தித்து, புருஷார்த்த, பலாந்யருசி யொழிந்து, விரக்தி பல ராகம்‌ கழியமிக்கு, ப்ரேமபலோபாயத்தே புகுந்து, ஸாதந பலோபகாரக்‌ கைம்மாறின்றி, க்ருதஜ்ஞதாபல ப்ரதி க்ருதமானத்தை யுணர்ந்து, ஆத்மதர்ஸந பல ப்ராப்தி மரணாவதியாகப்‌ பெற்று, காலாஸத்தி பல திக்குத்‌ துணை கூட்டின தம்‌ பேற்றைப்‌ பிறரறியப்‌ பத்துத் தோறும்‌ வெளியிடுகிறார்‌.

இப்படி ஈஸ்வரன்‌ தமக்குப்‌ பண்ணிக்‌ கொடுத்த தஸைகளைப்‌ பத்துப்‌ பத்தாலும்‌ வெளியிடுகிறார்‌.

24-தஸ ஸதக பகவத் குண அநுபவ விவரண அதிகரணம் –219–228—–10–

219-பரபரனாய் நின்ற வளவேழ் வைப்பாமவையுள்‌ உம்பர்‌ வானவர் அதிபதி மயர்வற மன்னி மனம்‌ வைக்கத்‌ திருத்தி மறக்குமென்று நல்கி விடாதே மன்ன, அயர்ப்பிலனறுத்தேன்‌ என் சொல்லி மறப்பனோ என்னும்படி தத்தவ ஜ்ஞானரானவர்‌ சுடரடி யெம்பிரானை விடாது கண்டாய்‌ நீயும்‌ நானுமென்கிற ஸஹ்ருதயாநுப,வம்‌ ஸம்ஸாரிகளுக்கமாம்படி வீடுமினென்று தயாஜ்யோபாதேய தோஷ குண பரித்யாக, ஸமர்ப்பண க்ரமத்தை ஸாலம்பந மந்த்ரமாக உபதேஸித்து எளிதாக ௮வதரித்துப்‌ பிழைகளை ஸஹித்துப்‌ புரையறக்‌ கலந்து அல்ப ஸந்துஷ்டனாய்‌ அம்ருதமே ஒளஷதமாக்கி நீர் புரையத்‌ தன்னை நியமித்து போகத்தை ஸாத்மிப்பித்து பக்தி கணனைகளுக்கு ஒக்க வருமவனுடைய ஸேவைக்கு எளிமையும்‌ இனிமையுமுண்டு, தொழுதால்‌ அரும்‌ பயனாயதரும்‌, உத்‌யோகத்தே வினைகளும்‌ மாளும்‌, ௮வனுரைத்த மார்க்கத்தே நின்று இரு பசை மலமற உணர்வு கொண்டு நலம்‌ செய்வதென்று தாம்‌ மயர்வற மதிநலமருளி பஜநத்திலே சேர்க்கிறார்‌ முதற்பத்தில்‌.

220-சோராத மூவா வேர் முதலாய்‌ உலகம்‌ படைத்தவனென்கிற சிதசித் த்ரய த்ரிவித, காரணமானவன்‌ அறியாதன அறிவிக்க உள்ளம்‌ தேறித்‌ தூ மனம்‌ மருளிலென்னும்‌ ஜ்ஞாந பலமான ஒளிக் கொண்ட மோக்ஷம்‌ தேடிவாட, உலராமலாவி சேர்ந்து சிக்கனப்‌ புகுந்து ஸம்பந்தி களும்‌ சேர்தல்‌ மாறினரென்ன வாழ்வித்து உபகரிக்கிற நீந்தும்‌ கெடலில்‌ எம்மா வீட்டை உப்யாநுகுண மாக்கினவர்‌ ஆஸ்ரயணீயனுக்குப்‌ பூர்வோக்த பரத்வத்தை ஸ்தாபிக்கிற ஸகலபல ப்ரதத்வ காரணத்வ ஸேஷஸாயித்வ ஸ்ரிய:பதித்வ ஸெளலப்‌யாதிகளைத்‌ திண்ணன்‌ அணைவதென்று வெளியிட்டு கள்வா -தீர்த்தனென்று வசந ப்ரத்யக்ஷங்களும்‌ காட்டிப்‌ புலனைந்தென்று ஸம்ஸார மோக்ஷ ஸாதந துக்காநந்த ரஸம்‌ முன்னாக விதிக்கிற அந்தர் கத குணோபாஸகத்தை மதித்துப்‌ பெருக்கி முழ்கி அழுந்திக்‌ கீழ்மை வலம்‌ சூதும்‌ செய்து இளமை கெடாமல்‌ செய்யும்‌ க்ஷேத்ர வாஸ ஸங்கீர்த்தந அஞ்ஜலி ப்ரதக்ஷண கதி சிந்தநாத்‌ யங்க யுக்தம்‌ ஆக்குகிறார்‌ இரண்டாம்‌ பத்தில்‌.

221-(1)-முழுதுமாய் எங்கணும் ஒழிவற அருவாகி நின்று தோய்விலனாம் சர்வ வியாபகன் தீர்ந்த அடியார்களை தாளிணைக் கீழ் கொள்ளும் தன் படிக்கும் (2-)நீ தந்த மா மாயப் புணர்வினை பிறப்பு அழுந்தி அலமருகின்றேன் வேரற வரிந்து எந்நாள் எங்கு வந்து தலைப் பெய்வன் என்று கழித்து புகும் தம் காதலுக்கும் சத்ருசமாக கண்டு கொள் என்னும் (3)-ஊனமில் மோஷ பலமான முடிச் சோதியில் அனுபவத்தாலே நித்ய வஸ்து நீடு பெற்று அவச்சேதம் அற்ற அடிமை செய்ய வேண்டும் படி சர்வ ஆத்ம பாவத்தைப் புகழ்ந்து (4)-சொல்லிப் பாடி ஏத்திப் பிதற்றி எழுந்தும் பரந்தும் துள்ளிக் குனித்து தடு குட்டக் கும்பிடு நட்டமிட்டு சிரிக்கக் குழைந்து நையும் ப்ரீதி உகள தம் அடியார் என்ன உடன் கூடும் சாத்யம் வளர (5-)பை கொள் பாம்பு போலே இந்திரிய வ்ருத்தி நியம மற பாடவந்த கவி அன்றிக்கே படைத்தான் ஸ்லோக க்ருத்தாய்-(6 )-குறை முட்டுப் பரி விடர் துயர் துன்பம் அல்லல் துக்கம் தளர்வு கேடுகள் இன்றி அம்ருத ஆனந்த மக்நரானவர் செய்ய தாமரைக் கண்ணன் அமரர் குல முதல் என்று அஞ்சாதபடி எளிவரும் இணைவனாம் என்றவை பரத்வமாம் படி (7-)அவனாகும் சௌலப்ய காஷ்டையை காட்டி வழியைத் தருமவன் நிற்க இழிய கருதுவது என்னாவது வேண்டிற்று எல்லாம் தரும் –தன்னாகவே கொள்ளும் கவி சொல்ல வம்மின் என்று (8 )-முக்த ஐஸ் வர்யத்தை முன்னிட்டு ஸ்வ விருத்தியை மாற்றி ஸ்வ விருத்தியில் மூட்டுகிறார் மூன்றாம் பத்தில் ..

222-(1 )-ஈசனை ஈசனின் ஈசன் பால் என்ன ஏர்கொள் வானத்தும் ஆயே என்கிற வியாப்தி நிறம்பெற தனிக் கோல் செலுத்தும் -சர்வ நியந்தா –ஒழிவில் காலத்துக்கு சேர -பூர்வ போகங்களை ஒதுமால் எய்தின சாபலத்துக்கு சேர -சம காலமாக்கிப்(2-)போதால் வணங்காமை தீர்த்த பிரணயித்வத்தாலே காதல் மையல் ஏறிய பித்தாய் (3)-தேச தூரத்துக்குக் கூவியும் கொள்ளாய் என்றது தீர கண்ட சதிரையும் ஒரு நிலமாகக் காட்ட வீவில் இன்பம் கூட்டினை என்று முக்த போக மானச ப்ராப்தி பலமான தேவதாந்தர ஆத்ம ஆத்மீய லோக யாத்ரை ஐஸ்வர்ய அஷரங்களில் வைராக்கியம் -உன்னித்து உயிர் உடம்பினால் கொடு உலகம் வேட்கை எல்லாம் ஒழிந்தேன் என்ன உடையரானவர் (4)-ஒரு நாயகம் என்று ராஜ்ய ஸ்வர்க்க ஆத்ம அனுபவ அல்ப அஸ்த்ரத்வ சாவாதிகத் வாதிகளையும் (5-)ஆடுகள் இறைச்சி கரும் செஞ்சோறு ஆகிற நிந்த்யங்களாலே இளம் தெய்வத்துக்கு இழைத்தாடும் நிஹீநதையையும் (6)-பேச நின்ற தேவாத ஞான சக்தி சாபேஷத்வாதிகளையும் (7-)இலிங்கத்து விளம்பும் பாஹ்ய குத்ருஷ்டி மத தமோ நிஷ்டததையும் சொல்லி ஓடிக் கண்டீர் (8)-கண்டும் தெளிய கில்லீர் அறிந்து ஓடுமின் ஆட் செய்வதே உறுவது ஆவது என்று விரக்தி பூர்வகமாக ஆச்ரயனத்தை ஆஸ்ரயணத்தை ருசிப்பிக்கிறார் நாலாம் பத்தில் 

223-(1-)ஆவா வென்று தானே தன் அடியார்க்கு செய்யும் தொல் அருள் என்று பரத்வாதிகளை உடையவன் எவ்விடத்தான் என்னும் பாவியர்க்கும் இருகரையும் அழிக்கும் க்ருபா பிரவாஹம் உடையவன் பொய் கூத்து வஞ்சக் களவு தவிர முற்றவும் தானாய் உன்னை விட்டு என்னப் பண்ணின விரக்தி பல பரமாத்ம ராகம் (2)-பேர் அமர் பின்னின்று கழிய மிக்கு யானே என்ன வாய்ந்து ஆற்றகில்லாது நீராய் மெலிய ஊடு புக்கு வளர (3-)விஷ வருஷ பலங்கள் கை கூடினவர் அடிமை புக்காரையும் ஆட் செய்வாரையும் காண லோக த்வீ பாந்தரங்களிலும் நின்றும் போந்த தேவர் குழாம் களைக் கண்டு காப்பிட்டு பிரகலாதர் விபீஷணர் சொல் கேளாத அரக்கர் அசுரர் போல்வாரை தடவி பிடித்து (4-)தேச கால தோஷம் போக எங்கும் இடம் கொண்ட வர்களை மேவித் தொழுது உஜ்ஜீவியும் கோள் நீங்கள் நிறுத்துகிறவர்களை தேவதைகளாக நிறுதினவனை (5)-மேவிப் பரம்பும் அவரோடு ஒக்க தொழில் யுக தோஷம் இல்லையாம் என்று விஷ்ணு பக்தி பரராக்கி கண்ணுக்கு இனியன காட்டலாம் படியானார் கண்ணிலே நோக்கிக் காணும் பக்தி சித்தாஞ்சனத்தை இடுகிறார் ஐஞ்சாம் பத்தில்-

224-(1)என்னையும் யாவர்க்கும் சுரர்க்காய் அடியீர் வாழ்மின் என்று கருணையாலே சர்வ லோக பூதேப்ய -என்றவை கடலோசையும் கழுத்துக்கு மேலுமாகாமல் உபாயத்வம் கல்வெட்டாக்குகிற சரண்யன் (2)அஜ்ஞ்ஞான சக்தி யாதாத்ம்ய ஜ்ஞானங்கள் அளவால் அன்றிக்கே அங்குற்றேன் என்னான் புணராய் என்னும் படி மெய்யமர் பக்தி பூம பலமாகவும் அநந்ய கதித்வம் உடைய தமக்கு (3) பாதமே சரணாக்க அவையே சேமம் கொண்டு ஏக சிந்தையராய் திர்யக்குகளை இட்டு ஸ்வ அபிப்ராயத்தை நிவேதித்து விளம்ப ரோஷம் உபாயத்தாலே அழிய (4) உருகாமல் வரித்ததும் நண்ணி வணங்க பலித்தவாறே சப்ரகாரமாக சக்ருத் கரணீயம் என்று புராண பௌ ராணிகர் த்யாஜ்ய அம்சம் ஆக்கின (5) சித் அசித் பிராப்ய பிராபக ஆபாசங்களைக் கை வலிந்து கை கழலக் கண்டும் எல்லாம் கிடக்க நினையாத கன்றும் ஆளீர் மேவீர் ஊதீர் என்று ததீய சேஷம் ஆக்கியும் -புறத்திட்டு காட்டி என்று பிரசங்கிக்கில் முடியும் படி விட்டு (6) தந்தை தாய் உண்ணும் சோறு மாநிதி பூவை யாவையும் ஒன்றே ஆக்கி (7)தளர்வேனோ திரிவேனோ குறுகாதோ முதல்வாவோ என்னும் ஆர்த்தியோடே (8) திரி விக்ரமனாய்க் குறள் கோலப் பிரானாய் அடியை மூன்றை இரந்த வன் கள்வன் கண் முகப்பே அகல்கொள் திசை வையம் விண்ணும் தட வந்த தடம் தாமரைகளை (9) இணைத் தாமரைகள் காண இமையோரும் வரும் படி சென்று சேர்ந்த உலகத்திலதத்தே கண்டு அகலகில்லேன் என்று பூர்வ வாக்யம் அனுசந்தித்தவர் (10) பிணக்கறத் தொ சசோக சஜாதீயர்க்குத் டங்கி வேத புனித விறுதி சொன்ன சாத்ய உபாய ஸ்ரவண (11)தந்தனன் மற்றோர் களை கண் இலம் புகுந்தேன் என்று ஸ்வ ஸித்த உபாய நிஷ்டையை உக்த்ய அனுஷ்டானங்களாலே காட்டுகிறார் ஆறாம் பத்தில் —

225-(1-)எண்ணிலா குணங்கள் பால துன்ப வேறவன் மாயாப் பல் யோகு செய்தி என்னும் ஆச்சர்ய சக்தி யோகத்தாலே(2)-தெளி உற்றவருக்கு ஏற்றரும் வைகுந்தத்தை அருளும்
பிராபகத்வம் புல் பா வெறும்பு பகைவனுக்கும் ஆக்கவல்ல சர்வ சக்தி பாதமகலகில்லா தம்மை(3)-அகற்றும் அவற்றின் நடுவே இருத்தக் கண்டு நலிவான் சுமடு தந்தாய் ஒ வென்று சாதன பலமான ஆக்ரோசத்தோடே பழி இட்டுக் (4)-கங்குலும் பகலும் அடைவற்ற ஆர்த்தியை கோவில் திரு வாசலிலே முறை கெட்ட கேள்வி யாக்கித் (5)-தேற்ற ஒண்ணாதபடி தோற்று ஒன்றி நிற்கப் பண்ணின பல தானம் மற்றும் கற்பார் இழவிலே சுவறி(6)-பழைய தனிமைக் கூப்பீடு தலை எடுத்து -சூழவும் பகை முகம் செய்ய -எடுப்பும் சாய்ப்புமான க்லேசம் நடக்க உபாய அதிகார தோஷம் ஒழிய மாயங்கள் செய்து வைத்த வைசித்திரியைக் கேட்க (7)-ஐச்சமாக இருத்தி உறக் கொண்ட ஸ்வ பர பிரயோஜனத்தை அருளிச் செய்ய -என் சொல்லி எந்நாள் பார் விண்ணீர் இறப்பு எதிர் எதுவும் என்கிற உபகார ஸ்ம்ருதியோடே (8)-தன் சரிதை கேள்வி யாகாமல் இன்பம் பயக்க இருந்த நிலத் தேவர் குழுவிலே பாட்டுக் கேட்பிப்பதாக கான கோஷ்டியையும் – தேவ பிரான் அறிய -மறந்தவர் (9)-சரமோ உபாய பரர் ஆனார்க்கு நீள் நகரமது -துணித்தான் சரண் அன்றி மற்று ஓன்று இலம் உள்ளித் தொழுமின் என்று பிராப்ய சாதன அவதியை ப்ரீதியாலே பிரகாசிப்பிகிறார் ஏழாம் பத்தில் —

226-தேவிமார்‌ பணியா நேர்பட்ட நல்ல கோட்பாடு என்‌னும் படி சக்தியாலே நித்யமாகக்‌ கல்பித்த பத்நீ பரிஜநாதிகளை யுடைய ஸத்ய காமன்‌ கொண்ட வாக்‌ வ்ருத்தியையும்‌ மறப்பிக்கும்‌ கலக்கமும்‌ ஸங்கையும்‌ அச்சமும் தீர, தலைச்‌ சிறப்பத்‌ தந்தவதில்‌ க்ருதஜ்ஞதா பல ப்ரத் யுபகாரமாக வேந்தர்‌ தலைவன்‌ கந்யகாதநம்‌ போலே ஆரத் தழுவி அற விலை செய்த ஆத்ம லாபத்தாலே அதீவ விளங்கிப்‌ பணைத்து ஜந்ம பாஸம் விட்டு ஆத்‌வாரம்‌ ஆளுமாளாரென்று பரிந்து அநுருபனோடே அமர்ந்து பிரிவில் க்ருபண தசையாகத் துவரும் ஸீதா குணங்களாலே ப்ரீதி வர்த்தித்து தித்திக்க உள்ளே உறைந்து கண்டு கொண்டிருந்து அமாநுஷ போகமாக்கினவன்‌ மூன்று தத்துக்குப்‌ பிழைத்த அரு வினை நோய்‌ மறுவலிடாமல்‌ சிறியேனென்றதின்‌ பெருமையைக்‌ காட்ட தேஹாதிகளில்‌ பரமாய்‌ கன்று நினைக்கில்‌ லக்ஷ்மீ துல்யமாய்‌ அவர்க்கே குடிகளாம்‌ பரதந்த்ர ஸ்வரூபத்தை அநுஸந்தித்தவர்‌ ஸ்வ ஸாதந ஸாத்‌யஸ்தர்‌ இரு கரையராகாமல்‌ மண்ணவரும்‌ வானவரும்‌ நண்ணுமத்தையே குறிக் கொண்மின்‌ உள்ளத்தென்று ப்ராப்ய ஏக பரராக்குகிறார்‌ எட்டாம் பத்திலே –

227-எண்டிசையும்‌ அகல் ஞாலம்‌ எங்கும்‌ அளிக்கின்ற ஆலின்‌ மேலென்னும்படி நித்ய போக பாத லீலோபகரணத்தின்‌ லயாதிகளைப்‌ போக்குமாபத்ஸகன்‌ ஆருயிரென்னப் படுத்தின ஆத்ம தர்ஸந பலாநுபவ பரம்பரையைக்‌ கூவுதல்‌ வருதலென்று முடுகவிட்டு ஏகமெண்ணிக்‌ காணக் கருதி எழ நண்ணி நினை தொறும்‌ உருகி யலற்றிக்‌ கவையில்‌ மனமின்றி, பதினாலாண்டு பத்து மாஸம்‌ ஒருபகல்‌ பொறுத்தவர்கள்‌ ஒரு மாஸ தின ஸந்த்‌யையில்‌ படுமது க்ஷணத்திலேயாக இரங்குகிற த்வரைக்‌ கீடாக இனிப் பத்திலோன்று தஸம தஸையிலே பேறென்று நாட் கடலாகத்‌ தம்பிக்‌ கிட்டதாகாமல்‌ நாளை வதுவை போலே நாளிடப்‌ பெற்றவர்‌ இம் மடவுலகர்‌ கண்டதோடு பட்ட அபாந்தவ-அரக்ஷக-அபோக்ய-அஸு௧,-அநுபாய ப்ரதி ஸம்பந்தியைக்‌ காட்டி மற்றொன்று கண்ணனல்லால்‌ என்கிற வைகல்‌ வாழ்தலான ஸித்‌தோபாயம்‌, அதில்‌ துர்பல புத்‌திகளுக்கு மாலை நண்ணி காலை மாலை விண்டு தேனை வாடாமலரிட்டு அன்பராம்‌ ஸாங்க பக்தி, அதில்‌ அஸக்தர்க்குத்‌ தாளடையும்‌ ப்ரபத்தி அதில்‌ அஸக்தர்க்கு உச்சாரண மாத்ரம்‌, ஸர்வோபாய ஸூந்யர்க்கு இப் பத்தும்‌ பாடியிடும்‌ தண்டனென்று கீதாசார்யனைப்‌ போலே அதிகாராநுகுணம்‌ நெறி யெல்‌லாம்‌ உரைக்கிறார்‌ ஒன்பதாம்‌ பத்தில்‌.

228-சுரிகுழல்‌ அஞ்சனப்‌ புனல் மைந்நீன்ற பொல்லாப் புனக்‌ காயாவென்னும்‌ ஆபத்திற் கொள்ளும்‌ காம ரூப கந்த, ரூபத்தாலே ப்ரபந்நார்த்தி ஹரனானவன்‌ அருள் பெறும்‌ போதணுக விட்டதுக்குப்‌ பலமான வானேறும்‌ ௧திக்கு அண்ட மூவுலகும்‌ முன்னோடிக்‌ கால்‌ விழுந்திடத்தே நிழல்‌ தடங்களாக்கி அமுதமளித்த தயரதன்‌ பெற்ற கோவலனாகையாலே வேடன்‌, வேடுவிச்சி, பஷி , குரங்கு, சராசரம்‌, இடைச்சி, இடையர்‌, தயிர்த் தாழி, கூனி, மாலாகாரர்‌, பிணவிருந்து, வேண்டடிசில்‌ இட்டவர்‌, அவன் மகன்‌, அவன் தம்பி, ஆனை, அரவம்‌, மறையாளன்‌, பெற்ற மைந்தனாகிற பதினெட்டு நாடன்‌ பெருங்கூட்டம்‌ நடத்தும்‌ ஆத்தனை வழித் துணையாக்கி அறியச் சொன்ன ஸுப்ரபாதத்தே துணை பிரியாமல்‌ போக்கொழித்து மீள்கின்றதில்லை யென்று நிச்சித்திருந்தவர்‌ ஸஞ்சிதம்‌ காட்டும்‌ தஸையானவாறே முந்துற்ற நெஞ்சுக்குப்‌ பணி மறவாது மருளொழி நகு கைவிடேலென்று க்ருத்யாக்ருத்யங்களை விதித்து நெஞ்சு போல்வாரைத்‌ தொண்டீரென்றழைத்து, வலம்‌ செய்து எண்ணுமின்‌ பேசுமின்‌ கேண்மின்‌ காண்மின்‌ நடமின்‌ புகுதுமென்று கர்த்தவ்யம்‌ ஸ்மர்த்தவ்யம்‌ வக்தவ்யம்‌ ஸ்ரோதவ்யம்‌ த்‌ரஷ்டவ்யம்‌ கந்தவ்யம்‌ வஸ்தவ்யமெல்லாம்‌ வெளியிட்டுப்‌ பிணக்கறவைச்‌ சார்வாக நிகமித்து எண்பெருக்கிலெண்ணும்‌ திருநாமத்தின்‌ ஸப்‌தார்த்தங்களைச்‌ சுருக்கி மாதவனென்று த்‌வயமாக்கி, கரண த்ரய ப்ரயோக வ்ருத்தி ஸம்ஸாரிகளுக்குக்‌ கையோலை செய்து கொடுத்துச்‌ செஞ்சொற் கவிகளுக்குக்‌ கள்ள வழி காவலிட்டு மனம்‌ திருத்தி வீடு திருத்தப்‌ போய்‌ நாடு திருந்தின வாறே வந்து விண்ணுலகம்‌ தர விரைந்து அத்தை மறந்து குடிகொண்டு தாம்‌ புறப்பட்ட வாக்கையிலே புக்குத்‌ தான நகர்களை அதிலே வகுத்துக்‌ குரவை துவரைகளில்‌ வடிவு கொண்ட சபலனுக்கு தேஹ தோஷம்‌ அறிவித்து மாயையை மடித்து வானே தரக்‌ கருதிக்‌ கருத்தின் கண்‌ பெரியனானவனை இன்று ௮ஹேதுகமாக ஆதரித்த நீ அநாத்‌ யநாதர ஹேது சொல்லென்று மடியைப்‌ பிடிக்க இந்த்‌ரிய கிங்கரராய்க்‌ குழி தூர்த்துச்‌ சுவைத்தகன்றீர்‌ என்னில்‌, அவை யாவரையும்‌ அகற்ற நீ வைத்தவை யென்பர்‌; அது தேஹ யோகத்தாலே யென்னில்‌ அந் நாள்‌ நீதந்த சுமடென்பர்‌: முன் செய்த முழு வினையாலே என்னில்‌, அது துயரமே உற்ற விருவினை உன்‌ கோவமும்‌ அருளுமென்பர்‌ ; ஈவிலாத மதியிலேன்‌ என்னும்‌ உம்மதன்றோ கர்த்ருத்வ போக்த்ருத்வங்களென்னில்‌, ஆங்காரமாய்ப்‌ புக்குச்‌ செய்கைப்‌ பயனுண்பேனும்‌ கருமமும்‌ கரும பலனுமாகிய நீ கர்த்தா போக்தா என்பர்‌; யானே எஞ்ஞான்றும்‌ என்றத்தாலே யென்னில்‌; அயர்ப்பாய்ச்‌ சமய மதி கொடுத்து உள்ளம்‌ பேதம்‌ செய்கை உன்‌ தொழிலென்பர்‌: ஜீவ ப்ரக்ருதி சைதந்யம்‌ நீங்கும்‌ வ்ரத ஹேது; அகமேனியி லழுக்கறுக்கை அபிமாநி க்ருத்யம்‌; தான்‌ நல்கும்‌ பந்தம்‌ நிருபாதிகம்‌; ஸெளஹார்தம்‌ எஞ்ஞான்றும்‌ நிற்கும்‌; பிணக்கிப்‌ பேதியாத ஜஞாநாதி வைகல்யமில்லை; ஏகமூர்த்தியில்‌ அல்லல் மாய்த்த யத்ந பலித்வங்கள்‌ நம்மது; நாம்‌ தனி நின்ற ஸ்வதந்த்ரரென்று அவன அறிந்தனமே யென்னும்‌ ஸர்வஜ்ஞரிவர்‌; நெறி காட்டி அருகும்‌ சுவடும்‌ போலே இதுவும்‌ நிருத்தரமென்று கவிழ்ந்து நிற்க, அமந்த்ரஜ்ஜோத்ஸவ கோஷம்‌ போலே ஏறப்‌ பெறுகிற எழுச்சியை ஸூசிப்பிக்கிற மேக ஸ்முத்‌ர பேரீ கீத காஹள ஸங்காஸீஸ் ஸ்துதி கோலாஹலம்‌ செவிப்‌ பட்டவாறே ஸாக்ஷாத்கரித்த பர ப்ராப்திக்குத்‌ தலை மிசையாய்‌ வந்த தாள்களைப்‌ பூண்டு போகாமல்‌ தடுத்துத்‌ திருவாணை யிட்டுக்‌ கூசம்‌ செய்யாத செய்திப்‌ பிழை பற்றுக்‌ கொம்பற்ற கதி கேடு போர விட்ட பெரும்பழி; புறம் போனால்‌ வருமிழவு, உண்டிட்ட முற்றீம்பு, அன்பு வளர்ந்த அடியுரம்‌, உயிருறவு முதலளவு துரக்கைகளாலே பெறா வாணை அல்லவாக்கின பேரவா குளப்படியாம்படி கடல்‌ போன்ற ஆதரத்தோடே சூழ்ந்து தாபங்களை ஹரித்தமையை வெளியிடுகிறார்‌ பத்தாம்‌ பத்தில்‌.

16 –முக்திபாத–ஷோட்ஸ — 4-4 –மூன்று அதிகரணங்கள் -229 – 234 ———–6 –
25–ஆர்த்த ப்ரபந்ந ஸூரி ஸரீர வியோகா பாவ காரணாதி கரணம்‌ –229—— 1

இனிமேலிவர்‌ ப்ரதமத்திலே ஆர்த்தராய்க்‌ கொண்டு ஸரணம்‌ புக்க போதே விரோதியை விடுவித்து பேற்றோடே தலைக் கட்டிக்‌ கொடாதே இவரை இவ்வளவாக வைக்கைக் கடியேதென்னில்‌ அதுக்கு நாலஞ்சு ஹேதுக்களை அருளிச் செய்து அவை எல்லாவற்றிலும்‌ இவர்க்குப்‌ பிறந்த பரமபக்தியை வெளியிடுகைக்காக வைத்தான்‌ என்கிறார்‌.

229-உறாமையோடே உற்றேன்‌ ஆக்காது ஒழிந்தது, நாடு திருந்த நச்சுப்‌ பொய்கை ஆகாமைக்கு, ப்ரபந்தம்‌ தலைக் கட்ட, வேர்சூடுவார்‌ மண் பற்றுப் போலே என்னுமவற்றிலும்‌ இனி இனியென்று இருபதின் கால்‌ கூப்பிடும்‌ ஆர்த்தி அதிகார பூர்த்திக் கென்னுமது முக்‌யம்‌.

26– பர ப,க்த்யாதி, நிரூபண ஸ்தாநாதிகரணம்‌ 230 – –233—–4–

ஆர்த்திக்கடியான பரபக்தி பரஜ்ஞாந பரமபக்திகளினுடைய தஸைகள்‌ எந்தெந்த திருவாய்மொழிகள்‌ என்ன- அத்தை அருளிச்செய்கிறார்‌

230-கமலக்கண்ணனென்று தொடங்கிக்‌ கண்ணுள்‌ நின்றிறுதி கண்டேனென்ற பத்தும்‌ உட்கண்ணாலேயாய்‌, காண்பான வாவுதல்‌ அதிலிரட்டி யாகையாலே கண்டு களிப்ப வளவும்‌ பரஜ்ஞாந கர்ப்ப பரபக்தி.

231-இருந்தமை யென்றது பூர்ண பரஜ்ஞாநம்‌.

232-முடிந்த அவாவென்றது பரமபக்தி.

233-இவை ஜ்ஞாந -தர்ஸந – ப்ராப்தி அவஸ்த்தைகள்‌.

27 –திவ்ய ப்ரபந்த, தாத்பர்ய ப,க,வத்‌-ப்ரஸாதாதி கரணம்‌ –234 ———1

234-அவித்‌யா நிவர்த்தக ஜஞாந பூர்த்தி ப்ரத பகவத் ப்ரஸாதாத்‌ மோக்ஷ லாபம்‌ என்கை மயர்வற வீடுபெற்றவென்ற ப்ரபந்த ஏக அர்த்‌யம்‌.

அநிஷ்டமான அஜ்ஞாந நிவ்ருத்தி பூர்வகமாக இஷ்டமான மோக்ஷத்தை ப்ராபிக்கை என்று ஓரர்த்தம்‌

ஆக, 1-ஸர்வேஸ்வரன்‌ அஜ்ஞரான சேதநர்க்‌குத் தன் கிருபையாலே புருஷாரத்த ஜஞாநம்‌ உண்டாகைக்கு ஸாஸ்த்ர பிரதானம் பண்ணினமையும்
2-அந்த ஸாஸ்த்ரம்‌ கொண்டு புருஷார்த்த ஞானம் பிறக்கை அரிதென்று தாத்பர்யமான திருமந்த்ரத்தை வெளியிட்டமையும்
3-அந்த ஸாஸ்த்ர தாத்பர்யங்களுக்கு விஷயபேதம்‌ தொடக்கமான ஷைம்யங்களையும்‌,
4-உபயத்திலும்‌ நிஷ்டரான அதிகாரிகளுடைய பரகாரங்களையும்‌,
5-அந்த வ்யாஜத்தாலே ப்ரஸக்தமான திருவாய்மொழியினுடைய வைபவத்தையும்‌,
6-அதுக்கு வக்தாக்களான ஆழ்வார்களுடைய ப்ரபாவத்தையும்
7-அந்த ப்ரபாவத்துக் கடியான பகவந் நிர்ஹேதுக கடாக்ஷத்தையும்‌,
8-அந்த கடாக்ஷமடியாக இவர்க்குண்டான ஜ்ஞாந பக்திகளையும்‌,
9-அந்த ஜ்ஞாந பக்தி தஸைகளில்‌ இவர பேசும்‌ பேச்சுக்களையும்‌,
10-அந்த பக்தி தஸையில்‌ பகவத் ப்ரேம யுக்தர் எல்லாரோடும்‌ இவர்க்குண்டான ஸாம்யத்தையும்‌,
11-அந்த பக்தி தஸையில்‌ பேசும் அந்யாபதேஸங்களுக்கு ஸ்வாபதேஸங்களையும்‌,
12-அந்த பக்திக்கு விஷயமான திவ்ய தேஸங்களில்‌ நிற்கிற எம்பெருமான்களுடைய குணங்களையும்‌,
13-அந்த குண விஸிஷ்ட வஸ்துவிலுண்டான அநுபவ ஜநித ப்ரீதி ப்ரேரிதமாய்க்‌ கொண்டு ப்ரபந்தங்கள்‌ அவதரித்தமையையும்‌,
14-தத்வார்த்த,ப்ரதி பாதந பரமான திருவாய்மொழி ப்ரபந்தத்துக்கு ஸ்ரீகீதா ஸாம்ய முண்டான படியையும்‌,
15-அந்த கீதையில்‌ காட்டில்‌ இதுக்குண்டான வ்யாவ்ருத்தியையும்‌,
16-இதில்‌ இவர்‌ உபதேஸிக்கிற விஷய பேதத்தையும்‌,
17-அவ்வோ விஷயங்கள்‌ தோறும்‌ உபதேஸிக்கிற அர்த்த விஸேஷங்களையும்‌,
18-அந்த வ்யாஜத்தாலே உபதேஸ விஷயமான ஸிஷ்ய லக்ஷணத்தையும்‌,
19-இந்த லக்ஷணமில்லாதார்க்கு உபதேஸிக்கைக் கடியான இவருடைய க்ருபையையும்‌,
20-இப்படி இவர்‌ க்ருபையாலே உபதேஸிக்கையாலே அவவுபதேஸம்‌ பலித்தபடியையும்‌,
21-உபதேஸிக்கிற இப் ப்ரபந்தங்கள் தான்‌ தத்வ ஹித புருஷார்த்த ப்ரதிபாதகமான ரஹஸ்ய த்ரயார்த்த மென்னு மிடத்தையும்‌,
22-அந்த ரஹஸ்ய த்ரயத்திலும்‌ ப்ரதிபாதிக்கப்படுகிற அர்த்த பஞ்சகங்களும்‌ இந்த ப்ரபந்தங்களிலே ஸங்க்‌ரஹ விஸ்தர ரூபேண சொல்லப்படுகிற ப்ரகாரத்தையும்‌,
23-ப்ரபந்த ஆரம்பங்களில்‌ உண்டான லக்ஷணங்களில்‌ ப்ரபந்தாதியிலுண்டாயிருக்கிற ப்ரகாரத்தையும்‌,
24-ஸாது பரித்ராணாதிகளாலே ஜகத் ரக்ஷணார்த்தமான பகவதவதாரம்‌ போலே ஜகத் ரஷணார்த்தமாக இப்ப்ரபந்தம்‌ அவதரித்த தென்னுமிடத்தையும்‌, 25-திருவாய்மொழியில்‌ பத்துப் பத்தாலும்‌ ப்ரதிபாதிக்கப்பட்ட எம்பெருமானுடைய பரத்வாதி குணங்களையும்‌,
25-அக் குண விஸிஷ்டனான ஸர்வேஸ்வரன்‌ அந்தப் பத்துப் பத்தாலுமிவ் வாழ்வார்க்கு தத்வ ஜ்ஞாநம்‌ முதலாக ப்ராப்தி பர்யந்தமாகப்‌ பிறப்பித்த தஸா விஸேஷங்களையும்‌,
26-இவர் தாம்‌ பிறரைக்‌ குறித்து உபதேஸித்த ப்ரகாரங்களையும்‌,
27-இவர்‌ ப்ரதமத்திலே ஆர்த்தி பிறந்திருக்கச் செய்தே ஈஸ்வரனிவரை வைக்கைக்கு ப்ரதாந அப்ரதாந ஹேதுக்களையும்‌,
28-இவர்க்குப்‌ பிறந்த பரபக்தி பரஜ்ஞாந பரமபக்திகளாகிற தஸா விஸேஷங்களையும்‌,
29-அஜ்ஞாந்‌ நிவ்ருத்தி பூர்வகமாக ஜ்ஞாந ப்ரதனான பகவானுடைய ப்ரஸாதமே மோக்ஷ ஹேது என்னுடத்தையும்‌,
30-அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட மோக் ஷப்ராபணமே பரபந்த தாத்பர்யமென்னுமத்தையும்‌
அருளிச் செய்து தலைக் கட்டி யருளினார்

————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌ -ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌– ஸ்ரீ திருநாராயணபுரம்‌ அரையர் -ஸ்ரீ உ .வே .ஸ்ரீ ராம சர்மா ஸ்வாமிகள்-பகுதி-2–

June 9, 2026

6 — ப,க்திபாதம் -ஷஷ்ட? 2-2 —97–121—-25-
8–ஜ்ஞாந ப,க்த்யதி கரணம்‌ 97 –117—-21 —
9-ஜ்ஞாந ப,க்த் யவஸ்தா ஸூக்தி அதிகரணம் –118-121—–3 —

7-ஒளபம்ய பாத,3 – ஸப்தம; 2 – 3 -இரண்டு அதிகரணங்கள் —122–155—34
10-ப,க,வந்நாயி கெளபம்யாத்‌,யதி, கரணம்‌–122–132– 11
11-அந்யாபதேஸ -ஸ்வாபதேஸ அதி கரணம்‌ —-133–155– —23-

8–கு,ண பாத, – அஷ்டம: 2-4 —156–186—-31-
12 சதுர்தவ்த்யாதி, கரணம்‌ 156 –158—-3–
13 திவ்ய தேஸ பா-அர்ச்சாவதார விஸேஷ கு,ணாதி கரணம்‌– 159 —186—–28–

9 –ஸ்ரீ ஸூக்தி வைப ,வ பாத, – நவம–3 – 1 –ஒரே அதிகரணம் 187–188—–2-
14 –பகவத் அநுபவ ப்ரீதி காரித ஸ்ரீ முக, ஸூக்தயதி கரணம்‌– 187 -188—2-

10 –ஸாம்ய பாத தஸம 3-2—189—-1–
13–பகவத்‌ கீதாஸ்ரீ முக ஸூக்தி ஸாம்யாதி கரணம்‌–189—1–

11-விஸேஷ பாத : – ஏகாதஸ –3-3 –190–194—–5–
16–பகவத்‌ கீதா ஸ்ரீமூக, ஸுத்தி விஸேஷாதி கரணம்‌ 190–195—–5–

2 –ப்ரயோஜந பாத –த்‌வாதஸ –3 – 4 –195–207–13–
17–ஸ்ரீமுக, ஸூக்த் யுபதேஸ -பாத்‌ர-ரீதி-நீத்யர்த்த, விஸேஷா -லக்ஷண –காரண -ஸ பலத்வாதிகரணம் –195–207–13–

13 –உபதேஸ பாத :-த்ரயோதஸ — 4 – 1 –மூன்றுடன் அதிகரணங்கள் கொண்ட பாதம் — 208 –213—–6–
18– ரஹஸ்ய த்ரயார்த்த உபதேஸாதி, கரணம்‌ —208–210—–3-
19 –அர்த்த, பஞ்சக ஸங்க்‌,ரஹ-விவரணாதி,கரணம்‌ -211 -212—2
20-மங்க லாசரண-ஸத்வத் தத்த்வாதி கரணம்‌-213–1–

14 –விபாக, பாத. – சதுர்தஸ — 4 – 2 –இரண்டு அதிகரணங்கள்– 214 – 217—– 4–
21 ஸ்ரீ மூக,ஸுூக்தி தஸாவதார விபாகாதி, கரணம்‌ –214 —-1–
22 ஸ்ரீமுக, ஸூக்தி ஸத தஸக பத்‌ய ப்ராதாந்ய-அபிப்ராய விசேஷ அதிகரணம்–215–217——3–

6 — ப,க்திபாதம் -ஷஷ்ட? 2-2 —97–121—-25-
8–ஜ்ஞாந ப,க்த்யதி கரணம்‌ 97 –117—-21 —

97-அதாவது மயர்வற மதிநலமருளுகை.

அஜ்ஞாநத்தைப் போக்கி பக்தி ரூபாபந்ந ஜ்ஞாநத்தைக்‌ கொடுக்கையாவது – பகவஜ்‌ ஜ்ஞாந விரோதியான நாலு வகைப்பட்டிருக்கிற அஜ்ஞாநம்‌ போய்‌ ஜ்ஞாந ப்ரஸரண த்‌வாரமான மநஸ்ஸு அவித்‌யாதி களாலே திரோஹித மாகையாலே குண்டிதமாய்‌, தந் நிவ்ருத்தியிலே விகஸிதமாய்க் கொண்டு மேல் நோக்கிக்‌ கிளருகிற ஜ்ஞாநத்தை பரம பக்தி பர்யந்தமாக வளர்க்கை என்கிறார்‌.

98-இருள்‌ துயக்கு மயக்கு மறப்பு என்கிற அநுதய-ஸம்மய-விபர்யய-விஸ்ம்ருதிகளற்று, மலர்மிசை எழுகிற ஜ்ஞாநத்தைக்‌ காதல்‌ அன்பு வேட்கை அவா என்னும்‌ ஸங்க-காம-அநுராக,ஸ்நேஹாத்‌,யவஸ்தா நாமங்களோடே பரமபக்தி தஸை யாக்குகை.–

பகவத் கடாக்ஷமடியாக இவருக்கு அஜ்ஞாந நிவ்ருத்தி பூர்வகமாய்க்‌ கொண்டு உண்டான பக்தி ரூபாபந்ந ஜ்ஞாநம்‌ பரமபக்தி பர்யந்தமாக அபி வ்ருத்‌தமான படி சொல்லிற்று-இனிமேல்‌ இவருடைய இந்த பக்தி கர்ம ஜ்ஞாந ஸாத்‌யையாய்‌, உபாஸந ரூபையான ஸாதந பக்தியோ? அன்றிக்கே ஸித்‌த,ஸாதந பரிக்‌ரஹம் பண்ணினவர்கள்‌ கைங்கர்‌யோப கரணமாக அபேஷித்துப் பெற்ற பக்தியோ? என்னில்‌; உபயமுமன்று, ஸஹஜையாய்‌, ஸத்தா ப்ரயுக்தையான வ்ருத்த்யுபகரண பக்தி என்கிறார்-(அதில்-ஜந்மாந்தர ஸஹ்ஸ்ர நற்றவங்களாலே) என்கிற சூர்ணையாலே உபாஸந ரூபையான பக்தி வுடைய வேஷத்தை அருளிச் செய்கிறார்‌.

99-ஜந்மாந்தர ஸஹஸ்ர நற்றவங்களாலே க்‌யாத குலங்களிலே பிறந்து, எழுதி வாசித்து தத்த்வஜ்ஞராய்‌, குளித்து ஓதி உருவெண்ணும்‌ அந்தி, ஐ வேள்வி அறு தொழில்களால்‌ மிக்கு, ஊன்‌ வாடப்‌ பொருப்பிடைத்‌ தாம்‌ வருந்தி, துன்ப வினைகளை விடுத்து, விவேகமாமாதிகள்‌ வளர, எட்டு நீக்கி, எட்டுமிட்டு, எட்டினாய பேதப் பூவில்‌ சாந்தொடு தேவ- காரியம்‌ செய்து உள்ளம்‌ தூயராய்‌, வாரிப் புன்புலவகத்தினுள்‌ இளைப்பினை அடைவே விளக்கினைக்‌ கண்டு, யோக நீதி நண்ணி, அறந்திகழுமறையோர்‌ மனந்தன்னுள்‌ அமர்ந்துறையும்‌ அரும்பெரும்‌ சுடரை *கண்கள் சிவந்திற்படியே மனவுட்கொண்டு நிரந்தரம்‌ மறவாமை துடக்கறா ஸ்ம்ருதியாய்‌, கனவில் மிக்க தர்ஸந ஸமமாய்‌, ஆகத்துப் புல்கும்‌ அத்யர்த்த,ப்ரியமாய்‌, வைகும்‌ சிறப்பு விட்டுக்‌ குற்றேவல்‌ என்னாதே அநந்ய ப்ரயோஜநமாய்‌, வேதந-உபாஸந- ஸேவா-த்‌யாநாதிகள்‌ என்று சொல்லுமது ஸாத்‌ய ஸாதந பக்தியாக ஸாஸ்த்ர ஸித்‌,த,ம்‌.

101-இது உபயமுமின்றிக்கே அறியாக் காலத்துள்ளே ஓக்கப்‌ பிறந்து தழுவி நின்று கட்டமே நோயா யுலர்த்தி வீழ்ந்தலப்பாய்‌ த்யாக ஸ்வீகார நிஷ்டா ஹாநிகளாக்கி ஸத்தா போக வ்ருத்த் யுபகரணமான ஒன்று.

இவருடைய பரபக்தி ஸாதித்துப்‌ பெற்ற பக்தியுமன்று, அபேக்ஷித்துப்‌ பெற்ற பக்தியுமன்று, ஸஹஜையாய்‌, ஸத்தா ப்ரயுக்தையான பக்தி என்றார் –இவருடைய பரபக்தி ஜந்மாந்தரங்களிலே கர்ம ஜ்ஞாநாதிகளை அநுஷ்டித்து தத் பலமாய்க் கொண்டு வந்ததானாலோ என்னில்‌, ஜந்மாந்தரங்களில்‌ அவை தமக்கு இல்லை என்னுமிடம்‌ தாமே அருளிச் செய்தார்‌ என்கிறார்‌-

102-இடகிலேன்‌ நோன்பறிவிலேன்‌ கிற்பன்‌ கீழ் நாள்கள்‌ என்கையாலே ஸாதந த்ரய பூர்வாப்‌யாஸ ஜமல்ல.

ஜந்மாந்தரங்களிலே ஸாதித்துப் பெற்றதன்றாகிலும்‌ இந்த ஜந்மத்திலே சில தாள்‌ ஸாதித்துப் பெற்றதானாலோ என்னில்‌, அதுவுமல்ல என்கிறார்‌-

103-இப் பிறப்பே சில நாளில்‌ என்ற போதே இரண்டும்‌ கழியும்‌.

ஆனால்‌ இவர்க்கு இந்த ப,க்தி உண்டாகைக்கு ஹேது ஏதென்னில்‌ பல போக்தாவான ஸர்வேஸ்வரனுடைய க்ருஷிபலம்‌ என்னுமிடத்தை க்ஷேத்ரமும்‌, கர்ஷகனும்‌, க்ருஷியும்‌, தத்பலமுமான வேஷத்தாலே அருளிச் செய்கிறார்‌-

104-பெரும்பாழில்‌ ஷேத்ரஜ்ஞன்‌ பெருஞ்செய்‌ கலியாரேவ ஆளும்‌ வன் குறும்பர்‌ குடியேறிப் பெருங்குடியும்‌ தங்கள்‌ கருத்துள்ளே யாக்கிப்‌ படிந்துண்ணும்‌ போகத்தே தூராதே யொறுக்கெணுப்‌ போகத்துக்குக்‌ காவல் செய்து குமைத்துத்‌ திரித்து வீழ்த்து வலித்‌தெற்றி அருவியறுத்துக்‌ கடனாயின இறுப்பிக்கப்‌ பாழ்த்த விதி யானவாறே தன்பால்‌ மனம்‌ வைப்பிப்பதாகத்‌ தேய்ந்தற மன்னி ஒள் வாளுருவி வினைத் தூற்றை வேரறுவித்துத்‌ தீக் கொளீஇக்‌ கவ்வை எருவிட்டு அமுதவாறு தலைப் பற்றி ஈரியாய்க் கசிந்ததிலே ஈரநெல்‌ வித்தி எழுநாற்றுக்களையையும்‌ வேர் முதல் மாய்த்துப்‌ பட்டிச் சேவதக்கி மீதுகொள்ளாமல்‌ குறிக்கொள்வித்துக்‌ கடல்புரைய விளைந்து தலை வணக்கினவாறே நாளுநாள்‌ கோட்குறையாக நின்றாரறியாமல்‌ குணங்கொண்டு ஆராமை யுண்டு காலக்கழிவாலே திலத்துகாமல்‌ பற்றறுத்துத்‌ தண்டாலடித்துப்‌ பதரறுத்துப்‌ போர்த்த தோல் விடுத்து ஸுக்ஷ்மவொட்டும்‌ நீரிலே கழுவி வேறோர்‌ கலத்திட்டு பைந்தொடி மடந்தையரைக் கொண்டு ஷட்‌ குண்ரஸாந்நமாக்கி வானோர்க்காரா வமுதானவாறே முற்றுமுண்ண முன்னம்‌ பாரித்து உழுவதோர்‌ நாஞ்சில் கொண்டு பெருக முயலும்‌ பத்தி யுழவன்‌ க்ருஷி பலமிறே-

இப்படி இத்தலையில்‌ ஒரு நன்மை யின்றிக்கே யிருக்க ஈஸ்வரனுடைய கிருஷி பலித்தவிடமுண்டோ வென்னில்‌

105-கோஸல கேகுல சராசரம்‌ செய்யும்‌ குணமொன்றின்றியே அற்புதமென்னக்‌ கண்டோம்‌.

ஆனால்‌ ”ஸமோஹம்‌ ஸர்வபூதேஷு ந மே த்‌வேஷ்யோஸ்தி ந ப்ரிய?” (கீதை 9 – 26) என்கிறபடியே ஸர்வ ஸமனுமாய்‌, பரதுக்கம்‌ ஸஹியாதபடியான பரம க்ருபையை உடையனான ஸர்வேஸ்வரன்‌ ஸர்வரோடும்‌ தனக்கு ஸம்பந்தம்‌ ஒத்திருக்க, அவர்களிலே ஒருவனை நிர்ஹேதுகமாக விஷயீகரித்தான்‌ என்றால்‌ அவனுக்கு வைஷம்ய நைர்க்‌ருண்யங்‌கள்‌ வாராதோ என்னில்‌ நிருபாதிக ஸர்வ ஸேஷியுமாய்‌, ஸ்வதந்த்ர ஸ்வாமியுமாய்‌, அத ஏவ உபய விபூதியையும்‌ ஸ்வாதீநமாகவும்‌, ஸ்வார்த்தமாகவும்‌ உடைய ஸர்வேஸ்வரன்‌ ஸ்வகீயமான வற்றிலே ஒன்றை ஸ்வ விநியோகார்த்தமாக இப்படி நிர்ஹேதுகமாக விஷயீகரிக்கும் போது வைஷம்ய நைர்க்‌ருண்யங்களை யிட்டு நிவாரகர்‌ இல்லை என்னும்‌ அர்த்தத்தை லோக த்‌ருஷ்டாந்த த்‌வாரா அருளிச் செய்கிறார்‌.
(பட்டத்துக்குரிய ஆனையும்‌ அரசும்‌ செய்யுமவை ஆராயாது)-106-

107-முந்நீர்‌ வாழ்ந்தார்‌ சூட்டும்‌ கோவை ஆழி என்கிற ஸாக்ஷாத்க்ருத ஸ்வ பர வ்ருத்தாந்தர்க்கு யாத்‌ருச்சிகாதிகள்‌ உண்டாகில்‌ தோன்றும்‌.

108-செய்தநன்றி தேடிக் காணாதே கெடுத்தாய்‌ தந்தாய்‌ என்ற அத்‌வேஷாபிமுக்‌,யங்களும்‌ ஸத் கர்மத்தாலல்ல.

109-எண்ணிலும்‌ வரும்‌ கணனைக்கு எண்டானுமிலீலை.

110-மதியால்‌ இசைந்தோம்‌ என்னும்‌ அநுமதி-இச்சைகள்‌ இருத்துவம்‌ என்னாத என்னை இசைவித்த என்னிசைவினது.

111-மாதவன்‌ மலை நீர்‌ நிழல்‌ என்றேறிடுமது, வ்யாவ்ருத்த் யுக்தி, அந்யார்த்தம்‌, அபுத்‌தி பூர்வகம்‌, அவிஹிதம்‌, பலவிஸத்‌ருஸம்‌, பலாந்தரஹேது.

இவன்‌ நடுவே அடியான்‌ என்று ஓலைப்படா ப்ரமாணம்‌ பக்ஷபாதி ஸாஷி வன் களவில்‌ அநுபவமாகிற இந்திர ஞாலங்கள்‌ காட்டிக்‌ கொள்ள காப்பாரற்று விதி சூழ்ந்தது.–112-

113-வரவாறில்லை, வெறிதே என்று அறுதி யிட்டபின்‌ வாழ் முதல்‌ என்கிற ஸுஹ்ருதமொழியக்‌ கற்பிக்கலாவதில்லை.

ஆக, இதுக்குக்கீழ்‌ இவருடைய ப்ரபாவத்தையும்‌, ப்ரபாவத்துக்கடி பகவந் நிர்ஹேதுக கடாக்ஷம்‌ என்னுமிடத்தையும்‌, அந்த கடாக்ஷமடியாக இவர்க்குண்டான பக்தியினுடைய வ்யாவ்ருத்தியையும்‌, அந்த பக்தி தான்‌ கர்ம ஜ்ஞாந ஸாத்‌யையுமல்ல, அதுக்கடியான யாத்‌ருச்சிகாதிகளுமில்லை, கேவல நிர்ஹேதுக க்ருபையாலே உண்டாயிற்றென்னுமிடத்தையும்‌ அருளிச் செய்து தலைக்கட்டினாராய்த்து –

ஆனால்‌, உபாஸகனுக்கு கர்ம ஜ்ஞாநங்களாலே ஸாத்‌யையான பக்தி பகவத் ப்ராப்திக்கு ஸாதநமாகக்‌ கண்டோம்‌, இவர்க்கு நிர்ஹேதுக க்ருபையாலே பக்தி உண்டாயிற்றாகில்‌ பகவத் ப்ராப்திக்கு இது ஸாதநமானாலோ என்னில்‌, அந்த பக்த் யுத்பத்தி ஹேதுவான க்ருபை தானே ப்ராப்திக்கும்‌ ஸாதநம்‌ என்கிறார்‌ மேல்‌

114-நலமருளினன்‌ என்கொல்‌ என்று ஆமூலசூட.ம்‌ அருளால்‌ மன்னுமிவர்க்கு அன்புக்கடியானதுவே அடி சேருகைக்கு ஸாதநம்‌.

இப்படி பரம க்ருபாவானானவன்‌ இவர்க்கு ஸம்ஸ்லேஷ விஸ்‌லேஷங்களினாலே ஸோக ஹர்ஷங்களை விளைவித்ததுக்கு ப்ரேயாஜநம்‌ என்‌ என்னில்‌, இவர்க்கு தேஸ விஸேஷத்தில்‌ அநு பவம்‌ ஸாத்மிக்கைக்காக ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களினாலே ஐஞாந பக்திகளை வளர்த்து ஸ்ரமம்‌ செய்வித்தபடி என்கிறார்‌

115-புணர்தொறுமென்னக் கலந்து பிரிந்து ஜ்ஞாந பக்திகளை வளர்த்தது கனங்குழையிடக்‌ காது பெருக்குதலும்‌, மாஸோபவாஸி போஜநப் புறப்பூச்சும் போலே ஆற்ற நல்ல் மாபோகச் சிரமமாக.

இவர்க்கு இங்கு ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களாகச்‌ சொல்லுகிறவை எவை என்னில்‌, ப்ரத்யக்ஷ ஸமாநாகாரமான மாநஸாநுபவமும்‌, அவ்வநுபவத்தை பாஹ்ய ஸம்ஸ்லேஷாபேக்ஷை பண்ண, அது கிடையாமையாலே மாநஸாநுபவத்துக்கு வந்த கலக்கமும்‌ என்கிறார்‌ மேல்‌

116-இவற்றால்‌ வரும்‌ ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களாகிறன எளியனாய்‌ நிற்கும்‌ அரியனாய்‌ எய்தான்‌ என்கிற தர்ஸந ஸமமான மாநஸாநுஸந்தாநமும்‌ திண் கொள்ளப் பெறாத மநஸ் ஸைதில்யமும்‌.

அபிமத விஷயத்தில்‌ ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களிரண்டும்‌ நாட்டார்க்கு புண்ய பாப பலமாயன்றோ உண்டாகிறதென்னில்‌; அந்த பாபங்கள்‌ வாஸனையோடே போகப்‌ பெற்ற இவர்க்கு ப்ரிய ஹித பரனான ஈஸ்வரன் தானே நடத்தும்‌ என்கிறார்‌

117-புண்ணியம்‌ பாவம்‌ புணர்ச்சி பிரிவை அவை சரித்தவர்க்கு ப்ரிய ஹித பரன் தான்‌ துளக்கற எங்கும்‌ தழைக்க நடத்தும்‌.

9-ஜ்ஞாந ப,க்த் யவஸ்தா ஸூக்தி அதிகரணம் –118-121—–3 —

118-ஜ்ஞாநத்தில்‌ தம் பேச்சு, ப்ரேமத்தில்‌ பெண் பேச்சு.

119-தேறும்‌ கலங்கி என்றும்‌ தேறியும்‌ தேறாதும்‌ ஸ்வரூபம்‌ குலையாது

120-அடியோம்‌ தொடர்ந்து குற்றேவல்‌ அடிச்சியோம்‌ அடிக் கீழ்க்‌ குற்றேவலாகை அவஸ்தாந்தரம்‌.

121-வித்யை தாயாகப் பெற்று பாலுமமுதுமான திருநாமத்தாலே திருமகள் போல வளர்த்த தஞ்சமாகிய தந்தை மற்றொருவர்க்குப்‌ பேச்சுப் படாமல்‌, விஸ்வபதி லோக பர்த்தா என்னும்‌ மணவாளரை நாலிரண்டிழை கொண்டு முப்புரியான ப்‌ரஹ்ம ஸூத்ர பந்தத்தோடே வரிப்பிக்கப்‌ பரம் புருடன்‌ கைக்கொண்ட பின்‌ சதுர்த்தியுள் புக்கு இடையீடு நடுக் கிடக்கும்‌ நாள் கழித்து ஜந்ம பூமியை விட்டகன்று சூழ்விசும்பிற் படியே உடன்சென்று குடைந்து நீராடி வியன் துழாய்‌ அஞ்சனத்தின்‌ நீறு நானப் பொடி பீதக வாடை பல்கலன் கொண்டு நோக்கி அலங்கரித்துப்‌ பல்லாண்டிசைத்துக்‌ கவரி செய்ய நிறை குட விளக்கமேந்தி இளமங்கையர்‌ எதிர் கொள்ள வைகுந்தம்‌ புக்கிருந்து வாய் மடுத்துப்‌ பெரும்‌ களிச்சியாக வானவர்‌ போகமுண்டு கோப்‌புடைய கோட்டுக்கால்‌ கட்டில்‌ மிதித்து ஆரோஹித்து பரத-அக்ரூர-மாருதிகளை பரிஷ்வங்கித்த மணி மிகு மார்விலே குரு மா மணி யாயணையும்‌ வஸ்துவுக்கு மணிவல்லிப் பேச்சு வந்தேறியன்று.

7-ஒளபம்ய பாத,3 – ஸப்தம; 2 – 3 -இரண்டு அதிகரணங்கள் —122–155—34
10-ப,க,வந்நாயி கெளபம்யாத்‌,யதி, கரணம்‌–122–132– 11-

கேவலம்‌ ஸ்த்ரீத்வ ஸாம்யமே யன்றிக்கே பரிஸூத்‌தமான ஸ்வரூபத்தினுடைய யாதாத்ம்யத்துக்குப்‌ பெரிய பிராட்டியாரோடு அநந்யார்ஹத்வாதிகளாலே ஸ்வரூப ஸாம்யம்‌ உண்டென்கிறார்‌-

122-இன்பும்‌ அன்பும்‌ முற்படுவது கொழுந்து விடுவதாகிறது கடிமா மலர்ப் பாவையோடுள்ள ஸாம்ய ஷட்கத்தாலே.

இப்படிப்‌ பெரியபிராட்டியாரோடு ஸாம்யம்‌ சொன்னவளவன்றிக்கே நிரதிஸய போக்‌யதையை உடைய பிராட்டிமார்‌ மூவரோடும்‌ இவர்க்கு ஸாம்யம்‌ உண்டு என்னுமாகாரம்‌ இவருடைய பாசுரங்களிலே ப்ரகாஸிக்குமென்கிறார்‌-

123-உண்ணாது கிடந்தோர் மாயையினால்‌ என்னும்‌ வீறுடைய முடிக்குரியாரோடு இத்திருமண்ணேரன்ன ஒண்ணுதல்‌ பின்னை கொல்‌ என்கிற ஒப்பு தென் பால்‌ நெடு மாடம்‌ கடுஞ்சிலை அம்பெரியூட்டி நீறைழவெரித்த பெருந்தோற்றத் தாருயிர்க் காகுத்தன்‌ ஆதியங்கால மண்புரை பொன்மாதின்‌ துகளாடி எருதேழ்தழீஇச்‌ சறையினார்‌ என்னுமவற்றிலே தோன்றும்‌.

அவ்வளவே யன்றிக்கே, ப்ரதாந மஹிஷிகளான இவர்களையும்‌ உபேக்ஷித்து வந்து மேல் விழும்படியான வைலக்ஷண்யத்தை உடையரான திருவாய்ப்பாடியில்‌ பெண்களுடைய பாவமும்‌, அவர்களையும்‌ தங்கள்‌ பேச்சழகாலே மறப்பிக்கும் படியான ஸ்ரீமதுரையில் பெண்களுடைய பாவமும்‌, நரகவத,அநந்தரம்‌ பரிக்‌ரஹித்த “கோப ஸ்த்ரீ ஸஹஸ்ராணி” (வி. பு. 5 – 31 – 18) என்கிற ஸ்ரீமத்‌ த்‌வாரகையில்‌ பதினாறாயிரம்‌ தேவிமார்களுடைய பாவமும்‌ இவர்க்குண்டான ஆகாரம்‌ இவர் பேச்சிலே தோன்றும்‌ என்கிறார்‌ 

124-இவர்கள்‌ தேடி நிற்கப்‌ பொய்கை முதுமணல்‌ முற்றம்‌ முல்லைப்‌ பந்தல்‌ வாரிச் சிதைத்துப்‌ பறித்துக்‌ கிழித்து மச்சொடு மாளிகை அவ்வவ்விடம்‌ புக்கு கோயின்மை குறும்பு செய்து அல்லல்‌ விளைத்துக்‌ கவரும்‌ உகக்கு நல்லவர்‌ மூழுசி ஆவரென்னும்‌ தேன்‌ மொழியாலே கோகுலத்தை மறப்பிக்கும்‌ நகர ஸ்த்ரீகள்‌ நரகனைத்‌ தொலைத்துக்‌ கவர்ந்த பதினாறு பல்லாயிரம்‌ எண்ணிரந்தார் பாவம்‌ கடல் ஞாலம்‌ மின்னிடை மல்லிகை வேய்மரு பேய்முலை முனிந்து மற்பொரு விறற்கஞ்சனை மங்கநூற்ற வாயும்‌ தீர்ப்பாரென்னுமவற்‌நிலே தோன்றும்‌.

ஆகக் கீழ்‌, ப்ரதாந மஹிஷிகளான மூவரோடும்‌ மற்றும்‌ பகவத் பரிக்‌ரஹ முடையாரோடும்‌ ஆழ்வாருக்கு ஸாம்யமுண்டென்று சொல்லிற்றாய்த்து. இவர்களெல்லாரும்‌ இவர்க்கு ஒரு புடைக்கு ஒப்பாய்‌ ஸர்வதா ஸாம்யமுள்ளது ஜநக குல ஸுந்தரியான பெரிய பிராட்டியாரோடே என்கிறார்‌ –

அவள்‌ மார்வைப் பற்றி அகலகில்லேனென்னும்‌; இவர்‌ தாளைப் பற்றி அகலகில்லேனென்பர்‌. இதுவே இருவர்க்கும்‌ வாசி. ஆனாலும்‌ அவளைப் பற்ற இவர்க்குக்‌ கால் கூறு ஏற்றமுண்டிறே –

இனிமேல்‌, மற்றும்‌ பகவத் ப்ரத்யாஸத்தியை யுடையரான லக்ஷ்மண-பரத-ஸத்ருக்‌ந-தஸரத,-யஸோதா – ப்ரஹ்லாத-விபிஷண-மாருதி-அர்ஜுநன்‌ என்கிற இவர்களோடு ஸாம்யமுண்டென்கிறார்‌.-

126-பிரியிவிலேனுக்கு இளங்கோவும்‌ அக் குளத்தில்‌ மீனிறே.

127-அழுந்தொழும்‌ ஸ்நேஹ பாஷ்பாஞ்ஜலியோடே ருசிர-ஸாநுக்‌களில்‌ கூவிக் கொள்ளும்‌ பிரியா வடிமைக்குச்‌ சரணே சரண்‌ என்று வாளும்‌ வில்லுங் கொண்டு பந்துவும்‌ பிதாவுமவரே என்கையும்‌, அன்னை யென் செய்யிலென்‌ ராஜ்யமும்‌ யானே என்று பெருஞ்‌ செல்வமும்‌ இச்சியாமல்‌ வேண்டிச் சென்று திருவடியே சுமந்து விரைந்து வருமளவும்‌ கண்ண நீர்‌ பங்கமாக நிலந் துழாவிக்‌ குடிக் கிடந்த கையறவும்‌ கோதிலடிமை உறுமோ என்பித்த புலங்கொள்‌ நித்ய ஸத்ரு விசிந்தநமுமான ப்‌ராதாக்கள்‌, அப்பொழுதைக்கப் பொழுது போனாய்‌ என்னும்‌ மாதா பிதாக்கள்‌, செந்தீ தண் காற்று இள நாகம்‌ முதலான பகையறச் சிந்தை செய்து எங்குமுளனென்னும்‌ பள்ளிப்‌ பிள்ளை, முற்றவிட்டு மற்றிலேனென்னும்‌ தர்மாத்மா வாளி பொழிந்த நிர்குண விஸ்வாத்மா உள்ளே உறைய ஊக வீர சரிதம்‌ கற்பார்‌ பாவம்‌ மற்றிலேன்‌ என்னும்‌ ராம தாஸன்‌ பல்வகையும்‌ கண்டு வெண் சங்கேந்தின ரூபபரனான ஸ்வேதன்‌ முதலானார் படிகளும்‌ காணலாம்‌.

இப்படி இளையபெருமாள்‌ முதலானவர்களெல்லாரோடும்‌ ஸாம்யம்‌ சொல்லிற்று.-இனிமேல்‌ இவர்களெல்லார்க்கும்‌ இவரோடு ஏகதா ஸாம்யமல்லது ஸர்வதா ஸாம்யமில்லை என்று அவர்களில்‌ இவருக்குண்டான வ்யாவ்ருத்தியை அருளிச்‌செய்கிறார்‌

128-குழவில்‌ நெஞ்சும்‌ அருகவில்‌ சுவையுமான இவர்‌ அவர்களளவல்லர்‌.

இப்படி ஸாம்யம்‌ சொல்லுகிற மாத்ரமே யன்றிக்கே தம்முடைய பாவத்தாலும்‌ வ்ருத்திகளாலும்‌ பிராட்டிமாரையும்‌, திருவடி திருவநந்தாழ்வான்‌ தொடக்கமானவர்களையும்‌ தாம்‌ அவர்களாக பாவிப்பர்‌ என்கிறார்‌-

129-எற்றைக்கும்‌ என்றது தோன்றப்‌ பிறந்து ஒப்பித்து வீசிக்‌ காப்பிட்டுக்‌ காட்டுக்கு முற்பட்டு தூமம்‌ சொல்லிக்‌ கேட்டு ஸிஷ்யா -தாஸீ-பக்தைகளாய்ப்‌ பாடி வருடி இன்று வந்தென்பாரையும்‌ சென்றாலூரும்‌ நிவாஸ-தாஸ-பேதம்‌ கொள்வாரையும்‌ தாம்‌ அவனாக பாவிப்பர்‌.

இவர்க்கு இந்த நாச்சிமாருடைய பாவமும்‌ இந்த விருத்தி பேதத்தில்‌ அபி, நிவேஸமு முண்டானபடி எங்ஙனே என்னில்‌, அப்ராக்ருதமான விக்‌ரஹம்‌ பும்ஸ்த்வத்தை அழித்து ஸ்த்ரீத்வத்தை உண்டாக்கினதுக்கும்‌, அநுரூப ப்ராப்தமான அவ் விஷயத்திலுண்டான வ்ருத்த்யபி நிவேஸத்துக்கும்‌, ப்ராக்ருதமாய்‌ ஓளபாகிகமா யிருக்கிற விஷயங்களிலுண்டானவற்றை த்‌ருஷ்டாந்தமாக்குகை ஸ்தூலம்‌ என்கிறார்‌-

130-எழுவதோருரு அழிக்க, செய்கிற வழுவிலா அடிமைக்குப்‌ பாஞ்சாலி படுத்துமதும்‌ கெளஸல்யாதநுவ்ருத்தியும்‌ ஓப்பாக்குகை பரிசு.

ஆனால்‌ தாமான தன்மையும்‌ பிராட்டிமார் தஸையுமுண்டான இதில்‌ தாமான தன்மையில்‌ அபிநிவேஸம்‌ அளவு பட்டிருக்குமோ? என்னில்‌; ஆறு பெருகா நின்றால்‌ பல வாய்த்தலை களிலும்‌ போரா நிற்கச்செய்தே, தானும்‌ கடலில்‌ போரும்‌ அம்ஸம்‌ குறையாதிருக்குமாப்‌ போலே பிராட்டிமார் தஸையோடும்‌, தாமான தன்மையோடும்‌ வாசியற அபி நிவேவம்‌ கரை புரண்டு பகவத்‌ விஷயத்தை அவகாஹிக்கும்‌ என்கிறார்‌

131-பெருக்காறு பலதலைத்துக்‌ கடலை நோக்குமாப் போலே நெக்‌கொசிந்து கரைந்து அலைந்து இடிந்து உடையப்‌ பெருகு காதல்‌ கடலிடங்கொண்ட கடலை பஹுமுகமாக அவகாஹிக்கும்‌.

இப்படி இரா நிற்கிற இவருடைய பக்தி தான்‌ ஸக்ரமமாயிருக்கமோ? என்னில்‌, இவருடைய பக்திக்கு “ந ஸாஸ்த்ரம்‌ நைவ ச க்ரம:‘” என்கிறபடியே தேஸ விஸேஷத்தில்‌ பக்தி போலே இதுவும்‌ வைதமல்லாமையாலே க்ரமாபேக்ஷை இல்லை என்கிறார்‌-

132-அச்சேத்‌யமென்னுமது ஈரும்‌ வேம்‌ ஈரியாய்‌ உலர்த்த என்னப்பட சித்தம்‌ சித்தாய்‌ அல்லேனென்று நீங்க கரணங்கள்‌ முடியானேயிலவையாக உடலம்‌ ஆத்மதர்மம்‌ கொள்ள காற்றும்‌ கழியும்‌ கட்டி யழக்‌ கொண்ட பெருங் காதலுக்குப்‌ பத்திமை நூல்‌ வரம்பில்லையே.

11-அந்யாபதேஸ -ஸ்வாபதேஸ அதி கரணம்‌ —-133–155– —23-

ஆனால்‌ பக்தி தஸையில்‌ பெண் பேச்சாகில்‌ பிராட்டி ஒருத்தியாகப்‌ பேசுகை ப்ராப்தம்‌, தோழி தாய்‌ மகள்‌ என்கிற த்ரைவித்‌யமான பேச்சுக்கு தாத்பர்யம்‌ என்‌ என்னில்‌, இந்த அதி ப்ராவண்யத்துக்கு ஸஹகாரியாயும்‌, நிரோதகமாயுமிருக்கிற ஸம்பந்த உபாயங்‌களில்‌ ஜ்ஞாந வ்யவஸாயங்களென்ன, அந்த ப்ராவண்யத்துக்கு விஷயமான உபேயத்‌தில்‌ த்வரை யென்ன இவற்றைத்‌ தோழி தாயார்‌ மகள்‌ என்கிறார்‌-

133-ஸம்பந்த உபாய பலங்களில்‌ உணர்த்தி துணிவு பதற்றமாகிற ப்ரஜ்ஞா வஸ்தைகளுக்குத்‌ தோழி தாயார்‌ மகள்‌ என்று பேர்‌.

இனிமேல்‌ மூன்று தஸையின்‌ பேச்சினுடைய ப்ரகாரங்களையும்‌ அவ்வோ தஸைகளில்‌ திருவாய்மொழி இன்னதென்னுமத்தையும்‌ அருளிச் செய்கிறார்‌-

134- ஸகி, வெறி விலக்கி ஆசை யறுத்து அறத்தொடு நின்ற மூன்றில்‌ அநந்யார்ஹத்வமும்‌, வாடி மெலிந்து பித்தேறி ஏறப் பேசிக்‌ கட்டிழந்தகன்று சார்வதே வலித்தமை ஸாதநமாமோ என்று மாதா அஞ்சி முறைப்பட்டு முறை யிடுகிற ஏழில்‌ அத்‌யவஸாயமும்‌, புத்ரி பலகால்‌ ஆள் விட்டு ஆற்றாமை சொல்லிக்‌ கவராதவை விட்டு, இரைக்க மடலெடுத்துக்‌ கண் புதையப்‌ போக்கற்று, உருதெஞ்சுள்ளெழக்‌ கூடுதாள்தேடித்‌ தாழ்த்ததுக்கு ஊடி, உசாத் துணேயற்றுச்‌ சூழவும்‌ பகைமுகம்‌ செய்யத் தடை நில்லாதே புயக்கற்று மாலையும்‌ காலையும்‌ பூசலிடுகிற பதினேழில்‌ த்வரையும்‌ தெரியும்‌.

ஆனால்‌ தோழி என்றும்‌, தாய்‌ என்றும்‌ சொல்லுகிறது ஸம்பந்த ஜ்ஞாநத்தையும்‌ உபாயாத்‌யவஸாய ஜ்ஞாநத்தையுமாகில்‌ இவற்றினுடைய பன்மைக்கு தாத்பர்யம்‌ என்‌ என்னில்‌; அந்த ஸம்பந்த உபாயங்களினுடைய வித பேதங்களை விஷயீகரித்த ஜ்ஞாந வ்யவஸாயங்களினுடைய பேதத்தாலே சொல்லுகிறதென்கிறார்‌ –

135-தோழிமார்‌ அன்னையர்‌ என்கிற பன்மை ரக்ஷகத்வாதி, பந்த வாத்ஸல்யாதி வ்யவஸாய புத்‌தி பேதத்தாலே.

தலைமகளுக்கும்‌ இந்த பக்தியினுடைய அவஸ்தா பேதங்களினாலே பேதை முதலான பருவங்கள்‌ உண்டென்கிறார்‌-

136-அபிலாஷா-சிந்தந-அநு ஸ்ம்ருதி-இச்சா -ருசி-பர- பரம பக்திகளிலே பேதை முதலான பருவம்‌ கொள்ளும்‌.

மேல்‌ அந்தத்‌ தலைமகளுக்குச்‌ சொல்லுகிற அவயவ வைலக்ஷண்யம்‌ இவ் வாத்மாவினுடைய ஜ்ஞாந விகாஸாதிகளாகக்‌ கடவதென்கிறார்‌

137-மயில்‌ பிறை வில்‌ அம்பு முத்து பவளம்‌ செப்பு மின்‌ தேர்‌ அன்னம்‌ தெய்வவுரு விகாஸ ஸூத்‌தி, தாந்தி ஜ்ஞாநாநந்தாநுராக,.பக்த் யணுத்வ போக்‌யதா கதிகளை யுடைய அகமேனியின்‌ வகுப்பு.

இனி மேல் கீழ்ச் சொன்ன அவஸ்தா த்ரயத்தினுடைய வ்ருத்தியைச்‌ சொல்லுகிறது

138-சூழ்ச்சி அகற்றினீர்‌ என்னும் பழி, இணக்கி எங்ஙனே என்னும்‌ மேலெழுத்து, முன்னின்றாய்‌ இவளை நீரென்னும்‌ இருபடை மெய்க்‌ காட்டு, நீரென்னேயென்னு முடன்பாடு, இடையில்லை யென்னுமுதறுதல்‌, இருந்திருந்து நடந்தாளென்னும்‌ கொண்டாட்டம்‌ அவஸ்தா த்ரய வ்ருத்தி.

139-தாயார்‌, ஏதலர்‌ உற்றார்கள்‌ என்னும்‌ ஸாத்‌ய ஸித்‌த ஸாதந நிஷ்டரை; மகள்‌, நம்முடை ஏதலர்‌ யாமுடைத் துணை என்னும்‌ ஸித்‌த ஸாதந ஸாத்‌ய பரரை.

140-நாலயலார்‌ அயற்சேரியார்‌ உபாய சதுஷ்டயாந்தர்யாமித்வ பரர்‌.

ஆனால்‌ ப்ரபத்தி நிஷ்டரையும்‌ அசலாகச்‌ சொல்லுமோ என்னில்‌,

141-கீழை மேலை வடக்கிலவை புறம்பாகத்‌ தன்பற்றுள்ளசல்‌.

142-ஊரார்‌ நாட்டார்‌ உலகர்‌ கேவல ஐஸ்வர்ய காம ஸ்வதந்தரர்‌.

கேவலனையும்‌ ஓரூராகச்‌ சொல்லுவானென்‌ என்னில்‌, (இறுகலிறப்புக்கும்‌ இறந்தால்‌ தங்குமூரொக்குமே)-143-

144-சிறு சீரார்‌ சுளகுகள்‌ உபய விவேக பரிகரம்‌

145-மாலை கங்குல்‌ காலை பகல்‌ ரஜஸ்‌ தமஸ்‌ ஸத்த்வ ஸூத்‌த-ஸத்தவ ஜ்ஞாநங்கள்‌.

146-நிலா முற்றம்‌ ப்ரஜ்ஞா ப்ராஸாத மென்னு மெல்லை நிலம்‌.

147-கலை வளை அஹம்‌ மம க்ருதிகள்‌.

148-பட்டம்‌ சூடகமாவன பராவர குருக்கள்‌ பூட்டும்‌ ஆத்ம பூஷணங்கள்‌.

149-பந்து கழல்‌ பாவை குழமணன்‌ யாழ்‌ தென்றல்‌ மதியம்‌ அடிசில்‌ சாந்தம்‌ பூண்‌ அகில்‌ சிற்றில்‌ தூதை முதலாவன குண த்ரய விசித்ர கர்ம ஸுூத்ரத்தாலே கட்டி லீலையாக ப்ரேரிக்க விழுந்தெழுந்தும்‌ சுழன்‌றுழன்றும்‌ பறிபட்டும்‌ அற்பசாரமாமவையுமாய்‌, மதீயமென்னில்‌ விட்டகலவும்‌ ததீயமென்னில்‌ இகழ்வறவும்‌ முனிவதும்‌ இக் காலம்‌ ஈதோ என்னப்படும்‌ பொங்கைம்புலனில்‌ போக்‌யாதி ஸமூஹம்‌.

இனிமேல்‌ இவர்‌ தூதுவிடுகிற பக்ஷி முதலானவை எவை என்னில்‌,

150-சேர்ப்பாரைப்‌ பஷிகளாக்கி ஜ்ஞாந கர்மங்களைச்‌ சிறகென்று குரு ஸப்‌ரஹ்மசாரி புத்ர ஸிஷ்ய ஸ்தாநே பேசும்‌.

குண ஸாம்யத்தாலே ஆசார்ய ஸ்தாநீயரா யுள்ளாரை அன்னமென்கிற தென்கிறார்‌

151-விவேக முகராய்‌ நூலுரைத்து அள்ளலில்‌ ரதியின்றி அணங்கின்‌ நடையைப்‌ பின் சென்று குடை நீழலிலே கவரி யசையச்‌ சங்கமவை முரல்‌ வரிவண்டிசை பாட மாநஸ பத்‌மாஸநத்திலே யிருந்து விதியினால்‌ இடரில்‌ அந்தரமின்றி இன்பம்‌ படக்‌ குடிச் சீர்மையிலே யாதல்‌ பற்றற்ற பரம ஹம்ஸராதலான நயாசலன்‌ மெய்ந்நாவன்‌ நாத யாமுநர்‌ போல்வாரை அன்னமென்னும்‌.

152-என் பெறுதி யென்ன ப்‌ரமியாது உள்ளத்துளுறிய மது வ்ரதமாய்‌ தூமது வாய்கள்‌ கொண்டு குழல் வாய்‌ வகுளத்தின்‌ ஸாரம்‌ க்‌ரஹித்துத்‌ தேதெனவென்று ஆளம் வைத்துச்‌ சிறுகாலெல்லியம்போது குறிஞ்சி மருள்‌ காமரம்‌ கந்தாரம்‌ தலைக்‌ கொள்ளப்‌ பாடித்‌ துன்னிட்டு நெருக்க நீக்கென்று கடந்து புதம்‌ தகைவறப்‌ புக்கு வண்டொத்திருண்ட குழலிலே றங்கையற மருவி அருளாத யாமென்றோடி வந்து வாசமே யூதி வண்டே கரியான தெய்வ வண்டோடே சேர்விக்கும்‌ சேமமுடை நாரதன்‌ முனி வாஹனர்‌ தம்பிரான்மார்‌ போல்வாரை வண்டு தும்பியென்னும்–-

153-கண்வலைப்படாதே அகவலைப்பட்டு வளர்த்தெடுப்பார்‌ கையிருந்து தயிர்‌ நெய்யமர்‌ பாலமுதுண்டு ஒருமிடறாய்ப்‌ போற்றி ஒரு வண்ணம்‌ திருந்த நுவலாததுக்கு என்பிழைக்கும்‌ நீயலையே நல்வளம்‌ துரப்பனென்னு மவற்றுக்கும்‌ உகந்து சொல்லெடுத்துச்‌ சோர்ந்தவாறே கற்பியா வைத்த மாற்றம்‌ கைகூப்பி வணங்கப்பாடி ஆலியா அழையா பராபிமாநத்திலே ஒதுங்கின நம்பிக்கன்பர்‌ தலைமீதடிப்பொடி உடையவருடையார்‌ போல்வாரைக்‌ கிளி பூவை குயில்‌ மயிலென்னும்‌.

154-ஆசறு தூவி என்னும் பாஹ்யாப் யந்தர ஸூத்தியோடே திரையுகளும் வ்யஸந வ்யதை யற்றுத்‌ தாய் வாயிலுண்ணும்‌ பிள்ளைக்‌கிரை தேடி வைகலுடன்‌ மேய்ந்து நுங்கால்‌ பைங்கானமென்று ப்‌ரஹ்மரதம் பண்ணிக் கொடுத்தவைகொண்டு நல்லபதத்தையும்‌ வேண்டேனென்னும்‌ தனிப்பெரும்‌பித்தர்‌ நம்முதலிகள்‌ போல்வாரை நாரை கொக்கு குருகு என்னும்

155- பூண்ட நாள் சீர்க்கடலை யுட் கொண்டு திருமேனி நன்நிறம் ஒத்து உயிரளிப்பான்‌ தீர்த்தகரராய்‌ எங்கும்‌ திரிந்து, ஜ்ஞாந ஹ்ரதத்தைப்‌ பூரித்துத்‌ தீங்கின்றி வாழ நிதி சொரிந்து, கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து, வெளுத்தொளித்துக்‌ கண்டுகந்து , பரஸம்ருத்‌தியே பேறான அன்புகூரும்‌ அடியவர்‌, உறையிலிடாதவர்‌, புயற்கை அருள்மாரி, குணந்திகழ்‌ கொண்டல்‌ போல்வாரை மேகமென்னும்‌.

8–கு,ண பாத, – அஷ்டம: 2-4 —156–186—-31-
12 சதுர்தவ்த்யாதி, கரணம்‌ 156 –158—-3–

இனிமேல்‌ இவர்‌ இப்படித்‌ தூது விடும்படி முகம்‌ காட்டாதிருக்கைக்கு ஹேதுக்களையும்‌ தூது விடுகைக்குப்‌ பற்றாசையும்‌ அது தனக்கு விஷயத்தையும்‌ அருளிச்செய்கிறார்‌-

156-தம்பிழையும்‌ சிறந்த செல்வமும்‌ படைத்த பரப்பும்‌ தமரோட்டை வாஸமும்‌ மறப்பித்த க்ஷமா தீக்ஷா ஸாரஸ்ய ஸெளந்தர்யங்களை உணர்த்தும்‌ வ்யூஹ விபவ பரத்வ த்‌வய அர்ச்சைகள்‌ தூது நாலுக்கும்‌ விஷயம்‌.-

இப்படிப்‌ பரத்வாதிகளிலே தூது விட்டால்‌ இவற்றுக்கு விஷய பேதமுண்டோ என்னில்‌, பகலிருக்கை தொடக்கமான ராஜ நீதி போலே ஸ்தல பேதமொழிய வஸ்த்வைக்யத்தினாலே விஷய பேதமில்லை என்கிறார்‌-

157-பகலோலக்கமிருந்து , கறுப்புடுத்துச்‌ சோதித்து, காரியம்‌ மந்த்ரித்து, வேட்டையாடி, ஆராமங்களிலே விளையாடும்‌ ராஜநீதி ஆதும்‌ சோராமல்‌ செங்கோல்‌ நடாவுகிற பாரளந்த வென்னும்‌ மூன்று முடிக்குரிய இளவரசுக்கு விண்மீதென்கிற ஐந்திலும்‌ காணலாம்‌.

இந்த பரத்வாதி களிலுண்டான குணங்களெல்லாம்‌ அர்ச்சாவதாரத்திலே ப்ரகாஸிக்குமென்கிறார்‌ இனிமேல்‌.-

158-தமருகந்த அடியோமுக்கே யென்னும்‌ பின்னானார்‌ வணங்குமிடத்திலே எல்லாம்‌ பூர்ணம்‌.


13 திவ்ய தேஸ பா-அர்ச்சாவதார விஸேஷ கு,ணாதி கரணம்‌– 159 —186—–28–

அதில்‌ எல்லா ஸ்தலங்களிலும்‌ எல்லா குணங்களும்‌ பரிபூர்ணமே யாகிலும்‌
கோயில்‌ முதலான திவ்ய தேசங்களிலே பரத்வாதிகளுக்கு அஸாதாரணமான ஓரோ குணங்கள்‌ ப்ராதாந்யேந ப்ரகாஸிக்குமென்கிறார்‌-

159-வன்பெரு வானக முதலுய்ய இனிதாகத்‌ திருக் கண்கள்‌ வளர்கின்ற திருவாளன்‌ திருப்பதி, வடிவுடை, கடலிடம்‌, கட்கிலீ என்னுமவற்றில்‌ இவள்‌ திறத்தென் கொலோ வென்பிக்கிற வ்யூஹ ஸெளஹார்த்த ப்ரதாநம்‌.-

160-மண்ணோர் விண்ணோர் வைப்பில்‌ போகின்ற ஏழுலகுக்குயிர் பாசம்‌ வைத்த நிகரில்‌ வாத்ஸல்யம்‌ உஜ்ஜ்வலம்‌.

161-உபய ப்ரதாந ப்ரணவமான உறை கோயிலில்‌ எத்தேவு மென்னும்‌ பரே ஸத்வம்‌ பொலியும்‌.

162-வைஷ்ணவ வாமநத்தில்‌ நிறைந்த நீலமேனியின்‌ ருசிஜநக விபவ லாவண்யம்‌ பூர்ணம்‌.

163-ருசி விவஸர்க்குப்‌ பாதமே சரணாக்கும்‌ ஒளதார்யம்‌ வானமாமலையிலே கொழுந்து விடும்‌.

164-களை கணற்றாரை யுருக்கும்‌ மாதுர்யம்‌ குடமூக்கிலே ப்ரவஹிக்கும்‌.

165-மெலிவிலும்‌ சேமம்‌ கொள்விக்கும்‌ க்ருபை தென்னகரிலே நித்யம்‌.

166-வ்யவஸாயஜ்ஞர்‌ ரக்ஷண ஸ்தைர்யம்‌ பம்போத்தர தேஸஸ்த்தம்‌.

167-விளம்ப விரோத மழிக்கும்‌ விருத்‌த கடநா ஸாமர்த்‌யம்‌ நன்னகரிலே விஸ்தீர்ணம்‌.

168-௧டித கடக விகடநா பாந்தவம்‌ அவ்வூரிலே த்‌விகுணம்‌.

169-கைம்முதலிழந்தாருண்ணும்‌ நிதியின்‌ ஆபத் ஸகத்வம்‌ புகுமூரிலே ஸம்ருத்‌தம்‌.–

170-சென்று சேர்வார்க்கு உசாத் துணை யறுக்கும்‌ ஸெளந்தர்யம்‌ மாநகரிலே கோஷிக்கும்‌.

171-ப்ரவண சித்தம்‌ பரத்வ விமுகமாக்கும்‌ ஆரந்த வ்ருத்‌தி நீணகரிலே.

172-ஸாதரரைப்‌ பரிசழிக்கும்‌ சேஷ்டித ஆஸ்சர்யம்‌ குளத்தே கொடிவிடும்‌.

173-ஸ்ரமமனம்‌ சூழும்‌ ஸெளகுமார்ய ப்ரகாமம்‌ ஆய்ச்சேரியிலே.

174-மஹாமதிகள்‌ அச்சம்‌ கெட்டு அமரும்‌ சவ்ர்யாதிகள்‌ சிற்றாற்றிலே கொழிக்கும்‌.

175-ஸாத்‌ய ஹ்ருதிஸ்த்தனாயும்‌ ஸாதநம்‌ ஒருக்கடுக்கும்‌ க்ருதஜ்ஞதாகந்தம்‌-தாயப் பதியிலே

176-அவகாஹித்தாரை அநந்யார்ஹமாக்கும்‌ நாயக லக்ஷணம்‌ வளம்‌ புகழுமூரிலே குட்டமிடும்‌.

177-போக்ய பாக த்வரை தெளிந்த சந்தைக்கு முன்னில்‌ மூன்றிலும்‌ ப்ரகடம்‌.

178-போகத்தில்‌ தட்டுமாறும்‌ ஸீலம்‌ காட்கரையிலே கரையழிக்கும்‌.

179-மஹாத்மாக்கள் விரஹம்‌ ஸஹியாத மார்தவம்‌ வளத்தின்‌ களத்தே கூடு பூரிக்கும் –

180-பிரிந்த துன்பக்‌ கடல்‌ கடத்தும்‌ விஷ்ணுபோதாந்ருஸம்ஸ்யம்‌ நாவாயிலே நிழலெழும்‌.

181-ஸரண்ய முகுந்தத்வம்‌ உத்பலாவதகத்திலே ப்ரஸித்‌தம்‌.

182-மார்க்க பூந்து ஸைத்யம்‌ மோஹநத்தே மடுவிடும்‌.

183-ஸஸைன்ய புத்ர ஸிஷ்ய ஸாத்‌ய ஸித்‌த பூ ஸுரார்ச்சநத்துக்கு முக நாபி பாதங்களை த்‌வார த்ரயத்தாலே காட்டும்‌ ஸாம்யம்‌ அநந்தஸயநத்திலே வ்யக்தம்‌.

184-மோக்ஷதாநத்தில்‌ ப்ரணத பாரதந்த்ர்யம்‌ வளம்மிக்க நதியிலே கரைபுரளும்‌.

185-த்யாஜ்ய தேஹ வ்யாமோஹம்‌ மருள்கள்‌ கடியும்‌ மயல்மிகு பொழிலிலே தழைக்கும்‌.

186-அங்கீ,கரிக்க ௮வகாஸம்‌ பார்க்கும்‌ ஸ்வாமித்வம்‌ பெருககரிலே பேர் பெற்றது,

9 –ஸ்ரீ ஸூக்தி வைப ,வ பாத, – நவம–3 – 1 –ஒரே அதிகரணம் 187–188—–2-
14 –பகவத் அநுபவ ப்ரீதி காரித ஸ்ரீ முக, ஸூக்தயதி கரணம்‌– 187 -188—2-

187-இவற்றில்‌ ப்ராவண்யம்‌ இவள்‌ பரமே யென்ன வுண்டாய்‌ ஷோடஸ கலா பூர்ணமான சந்த்‌ர மண்டலம்‌ போலே பதினாறு திருநஷத்ரம்‌ நிரம்பினவாறே தேவ போக்யமானவதில்‌ அம்ருதம்‌ போலன்றிக்கே என்னாத்‌ தமிழர்‌ இசைகாரர்‌ முதற்பத்தர்‌ வானவர்‌ என்னம்மான்‌ பார்பரவென்னும்படி ஸேஸ்வர விபூ,தி போக்‌யமான பாலோடமுதன்ன மென்மொழி முகம்‌ செய்தது.

இப்படி போக்‌யமான ஸப்த ப்ரவ்ருத்தி மாத்ரமே யன்றிக்கே பரபக்தி ப்ரேரிதமாய்க்‌ கொண்டு அந்த ஸப்‌த ஸந்தர்ப்ப ரூபமான ப்ரபந்தமாய்க்‌ கொண்டு அவதரித்ததென்கிறார்‌.

188-நீர்‌ பால்‌ நெய்யமுதாய்‌ நிரம்பின வேரி நெளிக்குமா போலே பரபக்த்யாதி மய ஜ்ஞாநாம்ருதாப்‌தி நிமிகிற வாய்கரை மிடைந்து மொழி பட்டு அவாவிலந்தாதி என்று பேர் பெற்றது.

10 –ஸாம்ய பாத தஸம 3-2—189—-1–
13–பகவத்‌ கீதாஸ்ரீ முக ஸூக்தி ஸாம்யாதி கரணம்‌–189—1–

தத்வதர்ஸிகளான இவர் பக்கலிலே இப்படி பகவத் குணாநுபவ ஜநித ப்ரீதி ப்ரகர்ஷ பலாத்காரத்தாலே அவதீர்ணமான இப்ரபந்தத்தில்‌ பரதிபாதி தமான அர்த்தங்கள்‌, தர்மஸம்ஸ்தாபநார்த்தமாக அவதரித்து கிருஷ்ணன்‌ உபய ஸேநைக்கும்‌ நடுவே அர்ஜுந வ்யாஜத்தாலே அருளிச் செய்த ஸ்ரீகீதையிலே ப்ரதிபாதிக்கப்பட்ட தத்த்வ விவேகாதிகளான அர்த்தங்களாகை யாலே இந்த ப்ரபந்தம்‌ ஸ்ரீகீதையோடொக்கும்‌ என்கிறார்‌. 

189-மனம்செய்‌ எல்லையில்‌ ஞான வின்பத்தை நின்மலமாக வைத்தவர்‌ ஞானப் பிரானை ஞானத்து வைம்மினென்றவிது தத்வ விவேக, நித்யத்வாநித்யத்வ, நியந்த்ருத்வ, ஸெளலப்‌ய, ஸாம்ய, அஹங்கார, இந்த்‌ரியதோ,ஷபல, மந ப்ராதா,ந்ய, கரண நியமந ஸுக்ருதி பேத, தேவாஸுரவிபாக, விபூதி யோக, , விஸ்வருபதர்ஸந, ஸாங்கபத்தி, ப்ரபத்தி த்‌வை வித்‌யாதிகளாலே அன்றோதிய கீதா ஸமம்‌ என்னும்‌.

11-விஸேஷ பாத : – ஏகாதஸ –3-3 –190–194—–5–
16–பகவத்‌ கீதா ஸ்ரீமூக, ஸுத்தி விஸேஷாதி கரணம்‌ 190–195—–5–

இதுக்குக்‌ கீழ்‌ ஸ்ரீ கீதையோ டொக்கத்‌ திருவாய்மொழிக்கு ஸாம்யம்‌ சொல்லிற்று. இனி மேல்‌ இதற்குண்டான வக்த்ரு வைலக்ஷண்யமும்‌ ப்ரபந்தோதய ஹேது வைஷம்யமும்‌ உபதேஸத்தனுடைய பல வைஷம்யமும்‌, ப்ரபந்த ப்ரதிபாத்‌ய அர்த்த வைஷம்யமும்‌ சொல்லுகிறது.-

190-அது தத்த்வோபதேஸம்‌; இது தத்த்வதர்ஸி வசநம்‌.

191-அது ஐவரை வெல்வித்துப்‌ பதிற்றைந்திரட்டி படச் சொன்னது; இது நாடாகத்‌ தோற்றோமென்று ஐயைந்து முடிப்பான்‌ சொன்னது.

192-அங்கு நம்பி சரணென்று தொடங்கி முடிவில்‌ அப்ரிய மென்றது; இங்கு பரமே யென்றிழிந்து பொலிக வென்று உகந்தது.

193-அதில்‌ ஸித்‌த தர்மவிதியே; இதில்‌ வித்‌யநுஷ்டாநங்கள்‌.

அந்த கீதை தனக்கும் உத்கர்ஷம் இவருடைய பரிக்ரஹத்தாலே என்கிறார்

194-பகவன்‌ ஞானவிதி பணிவகையென்று இவரங்கீ காரத்தாலே அதுக்கு உத்கர்ஷம்

12 –ப்ரயோஜந பாத –த்‌வாதஸ –3 – 4 –195–207–13–
17–ஸ்ரீமுக, ஸூக்த் யுபதேஸ -பாத்‌ர-ரீதி-நீத்யர்த்த, விஸேஷா -லக்ஷண –காரண -ஸ பலத்வாதிகரணம் –195–207–13–

இனி மேல்‌ அவனுடைய ௨பதேஸம்‌ ஸங்குசித விஷயம்‌; இவருடைய உபதேஸம்‌ அஸங்குசித விஷயமென்கிறார்‌ –

195-வேத வேத்‌ய வைதிகோபதேஸம்‌ ஆவித்‌யரளவிலே; அஜ்ஞர்‌ ஜ்ஞாநீகள்‌ ஜ்ஞாந விஸேஷ யுக்தர்‌ ஸர்வஜ்ஞனென்னாமல்‌ இவர்‌ திருத்துவர்‌.

திருத்துகையாவது அஜ்ஞாதஜ்ஞாபநம்‌ பண்ணுகையிறே. அதில்‌ இவ்வதிகாரிகளுக்கு உபதேஸிக்கும்‌ அர்த்த விஸேஷங்கள்‌ எவை யென்னில்‌,

196-அறியாதார்க்கு உய்யப் புகுமாறும்‌, இக்கரை யேறினார்க்கு இன்ப வெள்ளமும்‌, நிலை அறியாதாருக்கு ஆழங்காலும்‌ , கரையேற்றுமவனுக்கு நாலாறும்‌ அறிவிக்க வேணும்‌.

இனி அவர்களுக்கு இவ்வர்த்தங்கள்‌ ஜ்ஞாதமாகைக்கு ஹேதுவையும்‌, இவர்களுக்கு இவ்வர்த்த விஸேஷங்களை உபதேஸிக்கைக்கு ஹேதுவையும்‌ அவ்வர்த்த விஸேஷங்கள்‌ தன்னையும்‌ அருளிச் செய்கிறார்‌.

197-அவன்‌ முனிந்தார்க்குத்‌ தாம்‌ கண்டது; தம்மை முனிவார்க்குத்‌ தம்‌ கண்‌; காணாதது காண்பார்க்குக்‌ கண்மாறும்‌ இடம்‌; ராகாந்த னுக்கு மாயாதோஷம்‌ இவர்‌ காட்டுமவை.

ஆனால்‌ அஜ்ஞர்களுக்கு உபதேஸிக்குமா போலே இவர்களெல்லார்க்கும்‌ எப்போதுமொக்கவும்‌ உபதேஸிப்பரோ என்னில்‌, 

198-ஸாதந ஸாத்‌யஸ்த, மத்‌யஸ்தரை விட்டு அவற்றில்‌ கலங்கும்‌ ஜீவேஸ்வரர்க்கு வீடுமின்‌ நினைமின்‌ பிடித்தேன்‌ விடுவேனோ வைத்தெழ வூது வாடிநிற்கக்‌ கன்மமன்று ஆன்பின்‌ கைகழியேல்‌ உழிதராய்‌ என்‌ சொற்‌ கொள்‌ என்று இவர்‌ பலகாலும்‌ ஹிதாஹிதங்கள்‌ சொல்லுவர்‌.

ஆனால்‌ இருவர்க்கும்‌ பலகாலும்‌ ஹிதாஹிதங்கள்‌ சொல்லுகைக்கு ஹேது என்னென்னில்‌, இவர்க்குண்டான ஜ்ஞாந ப்ரேமங்கள்‌ என்கிறார்‌.-

199-கதிர் ஞான மூர்த்திக்கு உணர்த்துவது ப்ரேமத்தாலே; தமமூடுவார்க்கு வேட்கை யெழுவிப்பது ஜ்ஞானத்தாலே.

இவர்களளவில்‌ இவர்க்குண்டான ஜ்ஞாந ப்ரேமங்கள்‌ இரண்டாலும்‌ பர துக்கம்‌ ஸஹியார்‌ என்னுமிடம்‌ சொல்லுகிறது மேல்‌-

200-உயிர்‌ மாய்தல்‌ ஆழுமென்னாருயிர்‌ என்னும்‌ பர துக்கம்‌ ஸஹியாமை இரண்டிலுமுண்டு.

இன்னும்‌ இவ்வளவன்றிக்கே ஸ்வ ஸரீரத்திலே ஸர்வர்க்கும்‌ பரிவு நடக்கையாலே அவனுக்கு ஆத்ம பூதரான இவர்‌ அவனுக்குப்‌ பரியக் கடவர்‌ என்னுமிடமும்‌ தோன்றும்‌ என்கிறார்‌ மேல்‌.

201-என்னதுன்னதாவியிலே அறிவாராத்மா என்று அவன்‌ மதம்‌ தோன்றும்‌.

202-இருத்துமெண்டானாய்ப்‌ பொய் கலவாது அன்பு செய்து பற்றிலனாய்‌ ஷூத்‌த்‌ருட்‌ பீடித நிர்த்தநரைப்‌ போலே கண்டு கொண்டுண்டு பருகிப்‌ பரிஜனாதிகளோடே தன்னைத் தந்து என் செய்வன்‌ என்றே யிருந்து அகில பரத்தையும்‌ ஸமர்ப்பிக்க அது சுமந்து அல்லு நன்பகலும்‌ போகு என்றாலும்‌ அகல்வானுமல்லனாய்‌, போகேலென்றால்‌ உகப்பையும்‌ தவிர்ந்து விதி வகையே நடத்துமவனே உபதேஸ ஸத் பாத்ரம்‌.

ஆனால் ஸம்ஸாரிகளில் விரக்தராய்‌ இப்படி அநுவர்த்தநமுடையார்க்கு உபதேஸிக்கும் அர்த்தத்தை பகவத் விமுகராய்‌ ப்ரயோஜநாந்தர பரராய் தன் பக்கல் அநு வர்த்தனமும் இன்றிக்கே இருக்கிற ஸம்ஸாரிகளையும்‌ பார்த்து இவர்‌ மேல் விழுந்து உபதேசிப்பான் என் என்னில் அவனோடிவர்களுக்குண்டான ஸம்பந்தத்தை அறிகையாலும் இவர்கள்‌ துக்கம் கண்டு பொறுக்க மாட்டாதே க்ருபையாலும்‌ உபதேஸிப்பர்‌ என்கிறார்‌-

203-நண்ணாதார்‌ மெய்யிலூன்‌ ஆசை நிர்வேதத்தோடே ஆஸ்திக்ய அமாநீத்வாதிகள்‌ விஞ்சின ப்ரணிபாத அபிவாதந பரிப்ரஸ்ந ஸேவா பரர்க்கு உளங்கொள்‌ பேசுமளவன்றென்னும்‌ அர்த்தத்தை வம்மின்‌ விரோதம்‌ ஈனச் சொல்‌ எவ்வுயிர்க்கு மறிய வென்று ௮டைவுகெட அதபஸ்கர்க்கு உபதேஸிக்கிறது ஞாலத்தார்‌ பந்த புத்தியும்‌ அநர்த்தம்‌ கண்டு ஆற்றாமையும்‌ மிக்க க்ருபையுமிறே .

மற்றும் இப்படி உபதேசிப்பார் பலரும் உண்டோ என்னும் ஆ காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் .

தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவர்க்கும் இவர் அடி பணிந்தவர்க்குமே இவை உள்ளது .–204-

ஆனால்‌ இப்படி விமுகராயிருக்கிற ஸம்ஸாரிகளுக்குத்‌ தம்முடைய க்ருபையாலே இவருபதேஸிக்கிறாராகில்‌, இவ்வுபதேஸம்‌ பலித்தமை உண்டோ என்னில்‌, இவர்‌ க்யாதி லாப, பூஜா நிரபேக்ஷராய்க்‌ கொண்டு பகவத்‌ கைங்கர்யமாக உபதேஸிக்க ஜகத்தாகத்‌ திருந்துகையாலே தம்முடைய தனிமைக்கும்‌ ஸம்ஸாரிகளுடைய தனிமைக்கும்‌ எம்பெருமானுடைய தனிமைக்கும்‌ க்லேஸப்பட்ட இவருடைய இழவுகளும்‌ தீரப் பெற்றதென்கிறார்‌.

205-க்யாதி லாப, பூஜாபேக்ஷையற மலர்‌ நாடி ஆட்செய்ய உய்யக்‌ கொண்டு ஆரைக்‌ கொண்டு வாளும் வில்லும்‌ கொண்டு என்கிற இழவுகள்‌ தீரப்பெற்றது.

206-ப்‌ரஹ்மநிஷ்டரும்‌ ஸம்வத்ஸர வாஸிகளுமாகில்‌ ஏ பாவம்‌ பயனன்றாகிலும்‌ சேராது.

ஆனால்‌ அபரிச்சே,த்‌,யமாய்‌ நிரதிஸயபோக்யமான பகவத்‌ விஷயத்தை அநுப விக்கிற இவர்‌ பரோபதேஸம்‌ பண்ணுகிறார்‌ என்னும்போது, இவர்க்கு அவ்வநுபவம்‌ கூடினபடி எங்கனே என்னில்‌, இவருடைய அநுபவ பரீவாஹ ரூபமான சொற்கள் தானே பரோபதேஸமாயிருக்கையாலே உள்ளே அநுபவமானது செல்லா நிற்கச்‌ செய்தே பரோபதேஸமாயிருக்கும்‌ என்கிறார்‌.-

207-மெய்க்நின்று மங்கவொட்டுக்கு நடுவு அநுபவ கர்ப்‌போபதேஸம்‌.

இது தான்‌ ஸ்வாநுபவகர்ப்ப, பரோபதேஸமாய்‌ பரோபதேஸ முகத்தாலே ஸ்வாநுபவமாயிருக்கையாலே எல்லா அவஸ்தையிலும்‌ இவர்க்கு அநுபவத்தில்‌ குறை யில்லை

13 –உபதேஸ பாத :-த்ரயோதஸ — 4 – 1 –மூன்றுடன் அதிகரணங்கள் கொண்ட பாதம் — 208 –213—–6–
18– ரஹஸ்ய த்ரயார்த்த உபதேஸாதி, கரணம்‌ —208–210—–3-

ஆனால்‌ இந்நாலு ப்ரபந்தத்தாலும்‌ இவருபதேஸிக்கும் வர்த்தம்‌ ஏதென்னில்‌

208-இவற்றுக்கு மந்த்ரவித்‌யநுஸந்தாந ரஹஸ்யங்களோடே சேர்த்தி.

அவற்றில்‌ ப்ரதிபாதிக்கிற அர்த்த பஞ்சகம்‌ இவற்றிலே ப்ரதிபாதிதமாகிறபடி எங்ஙனே என்னில்‌

209-அளிப்பானடியேனடைக்கலம்‌ சூடிய பொய்‌ யாதானும்‌ அழுந்தாரென்று ஸ்வரூப விரோதி நிவ்ருத்திகளையும்‌ தாமரை யுந்திப்‌ பெருமா மாயனாளாகவே வாழியவென்று ப்ராப்ய பலங்களையும்‌, நெறி காட்டி மனத்துக் கொண்டு கண்ணனாலடித்துக்‌ கண்டிலமால்‌ யாதாகிலென்று உபாயத்தையும்‌ சொன்னவை மந்த்ர ஸ்லோகங்களோடே சேரும்‌.

திருவிருத்தம்‌ திருவாசிரியம்‌ திருவந்தாதி என்கிற மூன்றும்‌ அர்த்த பஞ்சகத்தையும்‌ ப்ரதிபாதிக்கையாலே அவை மூன்றும்‌ அர்த்த பஞ்சகத்தை ப்ரதிபாதி,க்கிற திருமந்த்ரத்தினுடையவும்‌ சரம ஸ்லோகத்தினுடையவும்‌ அர்த்த மாயிருக்கிறது –

திருவாய்மொழி த்‌வயத்தில்‌ அர்த்தத்தை ப்ரதிபாதிக்கையாலே தீர்க்க ஸரணாகதி என்கிறார்‌.

210-த்வயார்த்தம்‌ தீர்க்க ஸரணாகதி யென்றது ஸாரஸங்க்‌ரஹத்திலே.

19 –அர்த்த, பஞ்சக ஸங்க்‌,ரஹ-விவரணாதி,கரணம்‌ -211 -212—2

இனி மேல்‌ திருமந்த்ரத்திலும்‌ சரம ஸ்லோகத்திலும்‌ ஸங்க்‌ரஹேண ப்ரதிபாதிக்கப்பட்ட அர்த்த பஞ்சகத்தை த்‌வயத்திலே விவரித்தாப் போலே திருவிருத்தம்‌ திருவாசிரியம்‌ திருவந்தாதி என்கிற மூன்று ப்ரபந்தத்திலும்‌ ஸங்க்‌ரஹேண சொல்லப்பட்ட அர்த்த பஞ்சகத்தை த்‌வயத்தினுடைய ஸ்தாநேயாயிருக்கிற இத்‌ திருவாய்மொழியிலே விஸ்த்ருதமாகச்‌ சொல்லுகையாலே அர்த்த பஞ்சகமும்‌ இதுக்கு ப்ரமேயமென்றும்‌ அந்த அர்த்த பஞ்சகத்திலும்‌ வைத்துக்‌ கொண்டு உபாயோபேயங்களிரண்டுமே இதுக்கு ப்ரமேயமென்றும்‌ அவை தன்னிலும்‌ உபாயமொன்றுமே இதுக்கு ப்ரமேயமென்றும்‌ சொல்லக்‌ கடவதென்கிறார்‌.-

211-மூன்றில்‌ சுருக்கிய ஐந்தையும்‌ உயர்‌ திண்‌ அணை ஒன்று பயில்‌ ஏறு கண்‌ ௧ரு வீடு சொன்னால்‌ ஒருக்‌ கொண்ட நோற்ற நாலும்‌ எம்மா ஒழிவில்‌ நெடு வேய்‌ என்கிற இருபதிலே விஸதமாக்கி எண்பதிலே பரப்புகையாலே ஐந்தையும்‌ அருளினன்‌ வீடு பெற்ற வென்கையாலே ஐந்திலுமிரண்டையும்‌, தொழுது களித்தேன்‌ சொல்லுப்‌ பெற்றேன்‌ பணிசெய்யென்கிற முக்த லக்ஷண வ்ருத்தியாலே இரண்‌ டிலொன்றையும்‌ இதுக்கு ப்ரமேயமென்னும்‌.-

திருமந்த்ரமும்‌ த்‌வயமும்‌ முதல்‌ பதங்களிலே ஸங்க்‌ரஹமாய்‌ ஒழிந்தவிடம்‌ அவற்றினுடைய விவரணமா யிருக்குமா போலே திருவிருத்தமும்‌ திருவாய்மொழியும்‌ முதல்‌ பாட்டுக்களிலே ஸங்க்‌ரஹமாயிருக்கும்‌ என்கிறார்‌ மேல்‌.-

212-ரஹஸ்யத்துக்கோரெழுத்தும்‌ அதுக்கோருருவும்‌ போலே யானவற்றிலே இமையோரதிபதி அடியேன்‌ மனனே பொய்‌ மயர்வு பிறந்தருளினன்‌ விண்ணப்பம்‌ தொழுதெழென்ற பஞ்சகத்தோடே அவித்‌யாதி ஸ்வரூப ஸ்வபாவாத்மேஸ்வர பந்த ரக்ஷண க்ரம குண விக்ரஹ விபூதி யோக ததீயாபி மாநோபதேஸ விஷய அந்யாபதேஸ ஹேத்வாதிகளும்‌ ஸங்க்‌ருஹீதம்‌

20-மங்க லாசரண-ஸத்வத் தத்த்வாதி கரணம்‌-213–1–

ப்ரபந்த ஆரம்பத்திலே அந்த ப்ரபந்தத்தினுடைய அவிக்‌ந பரி ஸமாப்த்யர்த்தமாகவும்‌ சொல்லக் கடவதான ஆஸீர் நமஸ்க்ரியா வஸ்து நிர்தேஸம்‌ என்கிற இவை இப் ப்ரபந்த ஆரம்பத்திலுமுண்டோ என்னில்‌,

213-அடி தொழுதெழென்ற இதிலே வஸ்து நிர்த்தேஸ நமஸ்கார ஆஸீஸுக்களும்‌ உண்டு.

14 –விபாக, பாத. – சதுர்தஸ — 4 – 2 –இரண்டு அதிகரணங்கள்– 214 – 217—– 4–
21 ஸ்ரீ மூக,ஸுூக்தி தஸாவதார விபாகாதி, கரணம்‌ –214 —-1–

“பரித்ராணாய ஸாதூநாம்‌ விநாஸாய ச துஷ்க்ருதாம்‌ தர்ம ஸம் ஸ்த்தாபநார்த்தரய ஸம்பவாமி யுகே யுகே,” (கீதை 4-8) என்று ஸாது பரித்ராண துஷ்க்ருத் விநாஸநார்த்தமான பகவதவதாரம்‌ போலே இத் திருவாய்மொழியினுடைய அவதாரமுமென்கிறார்‌ –

214-சாது சனம்‌ நண்ணா மயர்வற மாசறுக்கும்‌ தெருள்‌ கொள்ளப்‌ பத்தராவர்‌ அடிமையற வுரிய நோய்களறுக்கும்‌ உடைந்து ஏற்றரும்‌ வானின்‌ தாளின் கீழ்‌ அடிக்கீழின்பக்கதி பயக்கும்‌ ஊடுபுக்கு மூவுலகும்‌ உருகா நிற்பர்‌ என்னும்‌ ஸாம்யத்தாலே வாச்யம்‌ பத்தினாய தோற்றம்‌ போலே தோற்றங்கள்‌ ஆயிரத்தின்‌ பத்துப்‌ பத்தான இதினாவிர்ப்பாவம்‌.


22 ஸ்ரீமுக, ஸூக்தி ஸத தஸக பத்‌ய ப்ராதாந்ய-அபிப்ராய விசேஷ அதிகரணம்–215–217——3–

215-ஐந்தினாடொன்பதோட ஒருபத்து என்னுமவை போலே நூறே சொன்ன பத்து நூறு ஒராயிரமென்றதும்‌ ஸாபிப்ராயம்‌.

216-பாட்டுக்கு க்ரியையும்‌ பத்துக்குக்‌ கருத்தும்‌ போலே நூற்றுக்கு உபதேஸப் பத்து.

217-பகவத்‌ பத்த பரங்கள்‌ ஆஸ்ரயண விதி, ஸேஷங்கள்‌.

பகவத் குணங்களையும்‌ தத் பக்தனான ஜீவனுடைய குணங்களையும்‌ சொல்லுகிற விடங்களை ஆஸ்ரயண விதிக்கு ஸேஷமென்கிறார்‌. அன்றிக்கே பகவத் பக்த பரமாம்படி ஒருங்க விட்டு பரோபதேஸம்‌ பண்ணுகிற திருவாய்மொழியில்‌ என்று இதற்குத்‌ தாத்பர்யமாகக்‌ கடவதென்று ஏக வாக்யமாகச்‌ சொல்லவுமாம் –

————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌ -ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌– ஸ்ரீ திருநாராயணபுரம்‌ அரையர் -ஸ்ரீ உ .வே .ஸ்ரீ ராம சர்மா ஸ்வாமிகள்-பகுதி-1–

June 9, 2026

ஸ்ரீ ஸூரி ஸூக்தி-ஸ்ரீ ப்‌ரஹ்ம ஸாஸ்திரம்‌ – ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌ -ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌
[| திருநாராயணபுரம்‌ அரையர் ஸ்ரீஉ வே ஸ்ரீராம சர்மா ஸ்வாமிகள் ]

(1 -ஸாஸ்த்ர ப்‌ரதாநாதி,கரணம்‌(ஸாஸ்த்ராரப்‌, யாதி, கரணம்‌) 1 – 15 —-15
2 ஸாஸ்த்ர தாத்பர்ய ப்ரதாநாதி, கரணம்‌- 16—1
3 –ஸாஸ்த்ர தாத்பர்ய விஷய விஸேஷாதி, கரணம்‌ —17 – 18 —2
4 ஸாஸ்த்ர தாத்பர்ய நிஷ்டாசாராதி கரணம்‌ —19 – 38 –20-
5– க்‌ரந்த,-தத் கர்த்ரு வைப, வாதி, கரணம்‌ —39 – 74 –36-
6—ஸூரி ப்ராமாண்ய விஸேஷாதி கரணம்‌(ப்ரமாத்ரு வைபவம் ) 75 – 93 –19-
7-ப,க,வத் கடாக்ஷ விஸேஷாதி கரணம்‌ 94–96—-3-)

இந்தக் கிரந்தம்‌
த்‌விக த்‌வயமாகவும்‌,
அத்‌யாய சதுஷ்டயமாகவும்‌,
ஷோடச பாதமாகவும்‌,
ஸப்த விம்சத் யதிகரணமாகவும்‌

பிரிவுகளை உடையது.

(1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 284 முடிய (48)

(1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-284 (27)

பாத-அதிகரண க்ரம-சூர்ணைகள் -முதல் -முடிய -மொத்தம் –
1 -ஸாஸ்த்ராரம்ப, பாத. ப்ரத,ம 1-1 —–1-15
1 -ஸாஸ்த்ர ப்‌ரதாநாதி,கரணம்‌
(ஸாஸ்த்ராரப்‌, யாதி, கரணம்‌) 1 – 15 —-15

2 தாத்பர்ய மூலபாத, – த்‌,விதீய 1 – 2 —16 –1
2 ஸாஸ்த்ர தாத்பர்ய ப்ரதாநாதி, கரணம்‌- 16—1

3 –விஷய பாத, – த்ருதீய 1-3— 17 – 18 —2
3 –ஸாஸ்த்ர தாத்பர்ய விஷய விஸேஷாதி, கரணம்‌ —17 – 18 —2

4 –ஆசார பாத.; – சதூர்த்த- 1-4– 19 – 38— 20
4 ஸாஸ்த்ர தாத்பர்ய நிஷ்டாசாராதி கரணம்‌ —19 – 38 –20-

5 –ஸூரி வைபவ பாத, – பஞ்சம– 3அதிகரணங்கள் இதில் – 1 —39 – 96— 58–
5– க்‌ரந்த,-தத் கர்த்ரு வைப, வாதி, கரணம்‌ —39 – 74 –36-
6—ஸூரி ப்ராமாண்ய விஸேஷாதி கரணம்‌(ப்ரமாத்ரு வைபவம் ) 75 – 93 –19-
7-ப,க,வத் கடாக்ஷ விஸேஷாதி கரணம்‌ 94–96—-3-

6 — ப,க்திபாதம் -ஷஷ்ட? 2-2 —97–121—-25-
8–ஜ்ஞாந ப,க்த்யதி கரணம்‌ 97 –117—-21 —
9-ஜ்ஞாந ப,க்த் யவஸ்தா ஸூக்தி அதிகரணம் –118-121—–3 —

7-ஒளபம்ய பாத,3 – ஸப்தம; 2 – 3 -இரண்டு அதிகரணங்கள் —122–155—34
10-ப,க,வந்நாயி கெளபம்யாத்‌,யதி, கரணம்‌–122–132– 11
11-அந்யாபதேஸ -ஸ்வாபதேஸ அதி கரணம்‌ —-133–155– —23-

8–கு,ண பாத, – அஷ்டம: 2-4 —156–186—-31-
12 சதுர்தவ்த்யாதி, கரணம்‌ 156 –158—-3–
13 திவ்ய தேஸ பா-அர்ச்சாவதார விஸேஷ கு,ணாதி கரணம்‌– 159 —186—–28–

9 –ஸ்ரீ ஸூக்தி வைப ,வ பாத, – நவம–3 – 1 –ஒரே அதிகரணம் 187–188—–2-
14 –பகவத் அநுபவ ப்ரீதி காரித ஸ்ரீ முக, ஸூக்தயதி கரணம்‌– 187 -188—2-

10 –ஸாம்ய பாத தஸம 3-2—189—-1–
13–பகவத்‌ கீதாஸ்ரீ முக ஸூக்தி ஸாம்யாதி கரணம்‌–189—1–

11-விஸேஷ பாத : – ஏகாதஸ –3-3 –190–194—–5–
16–பகவத்‌ கீதா ஸ்ரீமூக, ஸுத்தி விஸேஷாதி கரணம்‌ 190–195—–5–

12 –ப்ரயோஜந பாத –த்‌வாதஸ –3 – 4 –195–207–13–
17–ஸ்ரீமுக, ஸூக்த் யுபதேஸ -பாத்‌ர-ரீதி-நீத்யர்த்த, விஸேஷா -லக்ஷண –காரண -ஸ பலத்வாதிகரணம் –195–207–13–

13 –உபதேஸ பாத :-த்ரயோதஸ — 4 – 1 –மூன்றுடன் அதிகரணங்கள் கொண்ட பாதம் — 208 –213—–6–
18– ரஹஸ்ய த்ரயார்த்த உபதேஸாதி, கரணம்‌ —208–210—–3-
19 –அர்த்த, பஞ்சக ஸங்க்‌,ரஹ-விவரணாதி,கரணம்‌ -211 -212—2
20-மங்க லாசரண-ஸத்வத் தத்த்வாதி கரணம்‌-213–1–

14 –விபாக, பாத. – சதுர்தஸ — 4 – 2 –இரண்டு அதிகரணங்கள்– 214 – 217—– 4–
21 ஸ்ரீ மூக,ஸுூக்தி தஸாவதார விபாகாதி, கரணம்‌ –214 —-1–
22 ஸ்ரீமுக, ஸூக்தி ஸத தஸக பத்‌ய ப்ராதாந்ய-அபிப்ராய விசேஷ அதிகரணம்–215–217——3–

15 –குணாநுபவ பாத 3-பஞ்சதஸ — 4 – 3 –இரண்டு அதிகரணங்கள்– 218 – 228 ——11–
23 –தஸ ஸதக கத பகவத் குண தஸக அநு குண அநுபவ உபதேச அதிகரணம் —-218—–1-
24-தஸ ஸதக பகவத் குண அநுபவ விவரண அதிகரணம் –219–228—–10–

16 –முக்திபாத–ஷோட்ஸ — 4-4 –மூன்று அதிகரணங்கள் -229 – 234 ———–6 –
25–ஆர்த்த ப்ரபந்ந ஸூரி ஸரீர வியோகா பாவ காரணாதி கரணம்‌ –229—— 1
26– பர ப,க்த்யாதி, நிரூபண ஸ்தாநாதிகரணம்‌ 230 – –233—–4–
27 –திவ்ய ப்ரபந்த, தாத்பர்ய ப,க,வத்‌-ப்ரஸாதாதி கரணம்‌ –234 ———1

இதி ஸ்ரீராம நாம்நேஹ யாதவாத்‌ரி நிவாஸிநா
த்ராவிட ப்‌ரஹ்ம ஸூத்ராணாம்‌ விபாகஸ் ஸம் ப்ரதர்ஸித
ஸ்வபாநுப பாத்‌ர ஸூத்‌தாஷ்ட மீஜ்யேஷ்டாபு,த, வாஸரே
யதாத்‌ யயநமக்‌,ரே ப்ரகரணைஸ் ஸ்யாத்‌ ப்ரபஞ்சநம்

ஆசார்ய ஸ்வாந்த வக்தாரம்‌ அபி ராமவராபிதம்‌!
ஸ்ரீக்ருஷ்ண தநயம்‌ வந்தே, ஐகத்‌ குருவராநுஜம்‌ ॥

பணவாளரவணைப்‌ பள்ளி பயில் பவர்க்கெவ்வுயிரும்‌
குண போகமென்று குருகைக் கதிபனுரைத்ததுய்ய
உணர்பாவினுட்பொருள்‌ ஒன்றுமறியா உலகறிய
மணவாளன் மாறன்‌ மனமூரைத்தான்‌ வண்முடும்பை வந்தே.

மாதவத்தோன் மாறன்‌ மனங்கூறும்‌ மணவாளன்‌
தோதவத்தித்‌ தூய் மறையோரான பெற்றார்‌ – நீதியினா
லாங்கவர்‌ தாள்‌ சேர்‌ பெற்றார்‌ ஆயி மணவாளமுனி
பூங்கமலத் தாள்கள்‌ நெஞ்சே போற்று

ஆசார்ய ஹ்ருத,யஸ்யார்த்தாஸ் ஸகலா யேந தர்ஸிதா: !
ஸ்ரீஸாநு தாஸ மமலம்‌ தே,வராஜம்‌ தமாஸ்ரயே ॥

த்‌,ராவிட ஆம்நாய ஹ்ருத.யம்‌ கு,ருபர்வ க்ரமாக,தம்‌ ।
ரம்ய ஜாமாத்ரு தே,வேந தர்ஸிதம்‌ க்ருஷ்ண ஸூநுதா

த்ராவிட வேதமான படியாலே பலவான அர்த்தங்களை உடைத்தாய்‌, பரந்திருக்கையாலே இதில்‌ தாத்பர்யம்‌ எல்லார்க்கும்‌ ப்ரதிபத்தி பண்ணப் போகாதென்று பார்த்து, இதில்‌ அர்த்த, விஸேஷங்களையும்‌, இவற்றில்‌ இவ்வாழ்வார்க்குத் திருவுள்ளக்‌ கருத்து இன்னபடிப் பட்டிருக்குமென்று, இவ்வாசார்ய ருசி பரிக்‌ருஹீதமான அர்த்தமே எல்லார்க்கும்‌ தஞ்சம்‌ என்னுமிடத்தையும்‌, இவர்‌ தம்முடைய பரம க்ருபையாலே-ஆசார்ய பரம்பரா ப்ராப்தமான அர்த்த விஸேஷங்களை எல்லார்க்கும்‌ ப்ரதிபத்தி யோக்‌யமாம்படி ஸங்க்‌ரஹேண இவ்வாசார்ய ஹ்ருதய ப்ரபந்த முகத்தாலே அருளிச் செய்‌கிறார்

இதில்‌ முதல்‌ சூர்ணையாலே பரம காருணிகனான ஸர்வேஸ்வரன்‌ “*தத் ஸ்ருஷ்ட்வா” என்கிறபடியே ஜகத் ஸ்ருஷ்டியைப்‌ பண்ணி ஸ்ருஷ்ட்யநந்தரம்‌ அஜ்ஞாந அந்தகாரா வ்ருதரான சேதநர்‌ ஜ்ஞாந ப்ரகாஸத்தை உடையராய்‌ அஜ்ஞாநம்‌ நீங்கி, வேதாந்த வேத்‌யனாய்‌, நித்யனாய்‌, ஸ்வயம் ப்ரகாஸனாய்‌ இருந்துள்ள தன்னைக்‌ கண்டு ஸாராஸார விவேகம்‌ பண்ணுகைக்கு ஸகல ஸாஸ்த்ர ஸங்க்‌,ரஹமாய்‌, ஸகல ஸப்‌தங்களும்‌ தன்னுடைய கார்யமாகையாலே தான்‌ காரணமாய்‌, ஸகலார்த்த,ப்ரகாஸகமான அகாரத்தில் நின்றும்‌ விஸ்த்ருதமான ஸாஸ்த்ரங்களைத் தன்‌ க்ருபையாலே வெளியிட்டருளினான்‌ என்கிறார்

பாத-அதிகரண க்ரம-சூர்ணைகள் -முதல் -முடிய -மொத்தம் –
1 -ஸாஸ்த்ராரம்ப, பாத. ப்ரத,ம 1-1 —–1-15
1 -ஸாஸ்த்ர ப்‌ரதாநாதி,கரணம்‌
(ஸாஸ்த்ராரப்‌, யாதி, கரணம்‌) 1 – 15 —-15

காருணிகனான சர்வேஸ்வரன் –அறிவிலா மனிசர் உணர்வு என்னும் சுடர் விளக்கு ஏற்றி-
பிறங்கு இருள் நீங்கிமேல் இருந்த நந்தா வேத விளக்கை கண்டு-நல்லதும் தீயதும்-விவேகிக்கைக்கு மறையாய் விரிந்த துளக்கமில் விளக்கில் கொளுத்தின ப்ரதீபமான-கலைகளை நீர்மையினால் அருள் செய்தான்–சூர்ணிகை 1

ஆக இத்தால்‌ “ஹர்த்தும்‌ தமஸ் ஸத.,ஸதீ ச விவேக்துமீஸோ மாநம்‌ ப்ரதீ,பமிவ காருணிகோ ததாதி” (ர.ஸ்தவே -2-1) என்கிறபடியே ஸம்ஸாரிகள்‌ அஜ்ஞாந நிவருத்தி பூர்வகமாக ஜ்ஞாந ப்ரகாநத்தை உடையராய்‌ ஸாராஸார விவேகம்பண்ணி உஜ்ஜீவிக்கைக்காக ஸாஸ்த்ர ப்ரதாநம்‌ பண்ணினதுக்கடி நிர்ஹேதுக க்ருபை என்றதாய்த்து-

விவேக பலம்‌ வீடு பற்று.சூர்ணிகை –2-

த்யாஜ்ய உபாதேயங்கள்‌ ஸுக, துக்க,ங்கள்‌.–3-

இவற்றுக்கெல்லை இன்பு துன்பளி பன் மா மாயத் தழுந்துகையும்‌, களிப்பும்‌ கவர்வு மற்றுப்‌ பேரின்பத் தின்புறுகையும்‌–4-

அநந்த க்லேச நிரதிசய ஆனந்த ஹேது மறந்தேன் அறியகிலாத உணர்விலேன் ஏணிலேன் அயர்த்து என்றும் உய்யும் வகை நின்ற ஒன்றை நன்கு அறிந்தனன் உணர்வினுள்ளே ஆம் பரிசு என்றும்
சொல்லுகிற ஞாதவ்ய பஞ்சக ஞான -அஞ்ஞானங்கள் 
–5-

ஆக, கீழ்ச் சொன்ன ஸம்ஸார ஸம்பந்தத்துக்கும்‌ மோக்ஷ ப்ராப்திக்கும்‌ ஹேது ‘ஜ்ஞாநாந்‌ மோக்ஷம்‌, அஜ்ஞாநாத் ஸம்ஸாரம்‌’ என்று அறியப்படுமதான அர்த்த, பஞ்சக ஜ்ஞாநமும்‌, தத் அஜ்ஞாநமும்‌ என்றதாய்த்து.

இவற்றுக்குக்‌ காரணம்‌ இரண்டில்‌ ஒன்றினில்‌ ஒன்றுகைகள்‌.–6-

இத்தால்‌ அர்த்த, பஞ்சக ஜ்ஞாநாஜ்ஞாந காரணம்‌ ஸத்த்வாஸத்த்வ ப்ராசர்யங்கள்‌ என்றபடி,

ஸத்த்வாஸத்த்வ நிதாநம்‌ – இருள் தரும்‌ அமலங்களாக என்னும்‌ ஜந்ம ஜாயமாந கால கடாக்ஷங்கள்‌.–7-

இவற்றுக்கு மூலம்‌ –இரு வல்லருள் நல் வினைகள்‌.–8-

கர்ம க்ருபா பீஜம்‌, பொய்ந் நின்ற அருள் புரிந்த என்கிற அவித்‌,யா ஸெளஹார்த்த.ங்கள்‌.–9-

ஏதந் நிமித்தம்‌ முன்னமே முதல் முன்னமேயான அசித் , அயநா நாதி, ஸ்ம்பந்தங்கள்‌–10-

இவை கிட்டமும்‌ வேட்டு வேளானும் போலே ஒண் பொருள்‌ பொருளல்லாத(வை) என்னாதே நானிலாத யானுமுளனாவன்‌ என்கிற ஸாம்யம்‌ பெறத் தின்றூதி அந்தமும்‌ வாழ்வுமாகிற ஹாநி ஸத்தைகளை உண்டாக்கும்‌.–11-

ஒன்று கூடினதாய்ப்‌ பற்றறுக்க மீண்டொழிகையாலே பழவடியேன்‌ என்னுமதொன்றுமே ஒழிக்க ஓழியாதது.-12-

இந்த உதரத் தரிப்பு த்ரை கு,ண்ய விஷயமானவற்றுக்கு ப்ரகாஸகம்‌.-13-

ஆக, இந்த உதரத் தரிப்பு த்ரைகுண்ய விஷய மானவற்றுக்கு ப்ரகாஸகம்‌ என்கிற இத்தால்‌ ருச்யநுரூப புருஷார்த்தங்களையும்‌ தத்‌ ஸாதநங்களையும்‌ விதிக்கிற ஸாஸ்த்ர ப்ரதாநத்துக்கு அடி இந்த ஸம்பந்தம்‌ என்றதாய்த்து.கீழ் ‘ நீர்மையினாலருள்செய்தான்‌”’ (திருமொழி 1 -8 – 5) என்று சொன்ன ஸாஸ்த்ர ப்ரதாநத்துக்கு ஹேது சொல்லிற்று ஆய்த்து

வத்ஸலையான மாதா பிள்ளை பேகணியாமல்‌ மண் தின்ன விட்டு ப்ரத்யெளஷதம்‌ இடுமாப் போலே எவ் வுயிர்க்கும்‌ தாயிருக்கும்‌ வண்ணமான இவனும்‌ ருசிக் கீடாகப்‌ பந்தமும்‌ பந்த மறுப்பதோர்‌ மருந்தும்‌ காட்டுமிறே.14-

அது தானும்‌ ஆஸ்திக்ய விவேகம்‌ அந்ய ஸேஷத்வ ஸ்வ ஸ்வாதந்த்ர்ய நிவ்ருத்தி பாரதந்த்ர்யங்களை உண்டாக்கின வழி.–15-

2 தாத்பர்ய மூலபாத, – த்‌,விதீய 1 – 2 —16 –1
2 ஸாஸ்த்ர தாத்பர்ய ப்ரதாநாதி, கரணம்‌- 16—1

இனி மேல்‌ ஸாஸ்த்ர ப்ரதிபாத்‌யமான அர்த்த விமேோஷங்களை ஸங்க,ரஹேண ப்ரதிபாதியா நின்று கொண்டு ஏவம் வித,மான ஸாஸ்த்ரத்தினுடைய ௮ப்‌யாஸத்துக்கு ஐம்பூ, த்‌வீபாதி, தேஸ தேஹாதி,ஸாபேக்ஷதயா ஜ்ஞாதும்‌ அஸக்யமாயிருக்குமென்று இப்படி ஸாபேக்ஷமன்றிக்கே, நித்ய நிரபேக்ஷமாய்‌, அத ஏவ ஸூகரமுமாய்‌, ஸாஸ்த்ர தாத்பர்யமுமான திருமந்தரத்தை ஸ்ரீபதரிகாஸ்ரமத்திலே வெளியிட்டருளினான்‌ என்கிறார்‌

சதுர் விதமான தே,ஹ-வர்ண- ஆஸ்ரம-அதிகார- ப,ல- மோக்ஷ -ஸாதந ,-கதி- யுக.- தர்ம-வ்யூஹ-ரூப-க்ரியாதிகளை அறிவிக்கிற பாட்‌டுப் பரப்புக்கு – பெரிய தீவினில்‌ ஒன்பதாம்‌ கூறும்‌, மானிடப்‌ பிறவியும்‌, ஆக்கை நிலையும்‌, ஈரிரண்டிலொன்றும்‌, இளமையும்‌, இசைவுமுண்டாய்‌, புகுவரேலும்‌ என்கிறதுக்குள்ளே விக்‌நமற, நின்றவா நில்லா ப்ரமாதியைக் கொண்டு அறக்கற்கை அரிதென்றிறே வேத ஸார-உபநிஷத் ஸார தர அநுவாக-ஸார தம காயத்ரியில்‌ முதலோதுகிற பொருள் முடிவான சுருக்கைத்‌ தெய்வ வண்டாய்‌, அன்னமாய்‌, அமுதம்‌ கொண்டவன் -ஸாகை களிலும்‌, ஓதம் போல் கிளர்‌ நால் வேதக்‌ கடலிலும்‌, தேனும்‌ பாலும்‌ அமுதுமாக எடுத்துப்‌ பெரு விசும்பருளும்‌ பேரருளாலே சிங்காமை விரித்தது –16-

3 –விஷய பாத, – த்ருதீய 1-3— 17 – 18 —2
3 –ஸாஸ்த்ர தாத்பர்ய விஷய விஸேஷாதி, கரணம்‌ —17 – 18 —2

முனிவரை இடுக்கியும்‌ முந்நீர் வண்ணனாயும்‌ வெளியிட்ட ஸாாஸ்த்ர தாத்பர்யங்களுக்கு விஸிஷ்ட நிஷ்க்ருஷ்ட வேஷங்கள்‌ விஷயம்‌.–17-

தோல் புரையே போமதுக்குப்‌ பழுதிலா யோக்‌யதை வேணும்‌ ; மனமுடையீர்‌ என்கிற ஸ்ரத்‌தையே அமைந்த மர்ம ஸ்பர்ஸிக்கு நானும்‌ நமரும்‌ என்னும்படி ஸர்வரும்‌ அதிகாரிகள்‌.–18-

இத்தால்‌ ஸாஸ்த்ரம்‌ அதி க்ருதாதிகாரமா யிருக்கும்‌ ; ஸாஸ்த்ர தாத்பர்யமான திருமந்த்ரம்‌ ஸர்வாதிகாரமென்றதாய்த்து –

4 –ஆசார பாத.; – சதூர்த்த- 1-4– 19 – 38— 20
4 ஸாஸ்த்ர தாத்பர்ய நிஷ்டாசாராதி கரணம்‌ —19 – 38 –20-

இனி மேல்‌ ஸாஸ்த்ரோப லக்ஷிதமான பக்தி நிஷ்டனுடையவும்‌, தாத்பர்யோப லக்ஷிதமான பிரபத்தி நிஷ்டனுடையவும்‌ ப்ரதிபத்திகளைச்‌ சொல்லுகிறது

ஸாஸ்த்ரிகள்‌ தெப்பக் கையரைப் போலே இரண்டையு மிடுக்கிப்‌ பிறவிக் கடலை நீந்த, ஸாரஜ்ஞர்‌ விட்டத்தி லிருப்பாரைப் போலே இருகையும்‌ விட்டுக்‌ கரை குறுகும்‌ காலமெண்ணுவர்கள்‌.-19-

இவர்களுக்கு அவ்வதி,காரமுண்டாகைக்கு ஹேதுவான ஸ்வரூப ஜ்ஞாந தாரதம்யத்தைச்‌ சொல்லுகிறது

இவை ஸ்வரூபத்தை உணர்ந் துணர்ந் துணரவும்‌ உணர்வைப்‌ பெற வூர மிக உணர்வு முண்டாம்‌.–20-

ததீய ஸேஷத்வ பர்யந்தமாக உணர ப்ரபந்நனுக்கு இந்த ப்ரதிபத்தி உண்டாம் –

ஸேஷத்வ போக்த்ருத்வங்கள் போலன்றே பாரதந்த்ர்ய போக்யதைகள்‌.-21-

ஜ்ஞாந சதுர்த்தி,களின் மேலே யிறே ஆநந்த ஷஷ்டிகளுக்கு உதயம்‌.–22-

இனிமேல்‌ இந்த ஸ்வரூப ஜ்ஞாநத்தினுடையவும்‌ ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநத்தினுடையவும்‌ அத்யந்த வைஷம்யம்‌ சொல்லுகிறது

முளைத்தெழுந்த ஸூர்ய துல்ய யாதாத்ம்ய சரமம்‌ விதியில்‌ காணும்‌ . ப்ரதம மத்‌யம தஸைகளைப்‌ பகல் விளக்கும்‌ மின்மினி யுமாக்கும்‌.–23-

24-நாலிலொன்று பரவர்த்தகம்‌ ; ஒன்று நிவர்த்தகம்‌.–24-

முற்பாடர்க்கு க்ரியாங்கமானவை இரண்டும்‌, செயல் தீர்ந்தார்‌ வ்ருத்தியில்‌ ஸ்வ நிர்பந்த மறுக்கும்‌.–25-

கர்ம கைங்கர்யங்கள்‌ ஸத்யாஸத்ய-நித்யாநித்ய-வர்ண தாஸ்யாநுகுணங்கள்‌.–26-

இவற்றுக்கு விதி, ராக,ங்கள்‌ ப்ரேரகங்கள்‌.–27-

28-மண்டினாரும்‌ மற்றையாரும்‌ ஆஸ்ரயம்‌.-

இத்தால்‌ கர்மத்துக்கு ஆஸ்ரயம்‌ உபாஸகர்‌, கைங்கர்யத்துக்கு ஆஸ்ரயம்‌ ப்ரபந்நர்‌ என்றபடி-

அருள் முடிய நிறுத்தி அடைய நின்றதும்‌ நல்லதோரருள்‌ தன்னாலே நன்றுமெளியனாகிறதும்‌ விஷயம்‌,–29-

30-இவற்றாலே ஸாதாரணம்‌ அஸாதாரணம்‌ என்னும்‌.

31-ஜாத் யாஸ்ரம தீஷைகளில்‌ பேதிக்கும்‌ த,ர்மங்கள் போலே அத்தாணிச் சேவகத்தில்‌ பொதுவானது நழுவும்‌.

இனி கர்ம நிஷ்டனிற் காட்டில்‌ கைஙகர்ய நிஷ்ட,னுக்குள்ள வைஷம்யம்‌ சொல்லுகிறது-

32-ஸாதந ஸாத்‌யங்களில்‌ முதலும்‌ முடிவும்‌ வர்ண தர்மிகள்‌ தாஸ வ்ருத்திகள்‌ என்று துறை வேறிடுவித்தது.

33- வேத வித்துக்களும்‌ மிக்க வேதியரும்‌ சந்தஸாம்‌ மாதாவாலும்‌, அதுக்கும்‌ தாயாய்த்‌ தாயினுமாயின செய்யுமத்தாலும்‌ பிறப்பிக்குமது இருவர்க்கும்‌ ஸ்ரேஷ்ட ஜந்மம்‌.

34-அந்தணர்‌ மறையோர்‌ என்றும்‌, அடியார்‌ தொண்டர் என்றும் இவர்களுக்கு நிரூபகம்‌

35-ஒரு தலையில்‌ க்‌ராம குலாதி வ்யபதேஸம்‌ குலந்தரும்‌ மாசில்‌ குடிப்பழி என்று பதியாகக கோயிவில்‌ வாழுமென்பர்கள்‌.

36-விப்ரர்க்கு கேரத்ர சரண ஸூத்ர கூடஸ்தர்‌ பராஸர பாராஸர்ய போதாயநாதி,கள்‌; ப்ரபந்ந ஜந கூடஸ்தர்‌ பராங்குசா பரகால யதிவராதிகள்‌.

இனிமேல்‌ விப்ரரூம்‌ ப்ரபந்நருமான இவர்களிருவர்க்கும்‌ ப்‌ராஹ்மண்ய ஸித்‌தி, ஹேது எது? வைஷ்ணவத்வ ஸித்‌தி, ஹேது ஏது? என்னச்‌ சொல்லுகிறார்‌

37-அத்‌யயந ஜ்ஞாநாநுஷ்டாநங்களாலே ப்‌ராஹ்மண்யமாகிறாப்‌ போலே சந்தங்களாயிரமும்‌ அறியக் கற்று வல்லரானால்‌ வைஷ்ணவத்வ ஸித்‌தி,

38–இந்த உட்பொருள்‌ கற்றுணர்ந்து மேலைத் தலைமறையோ ராகாதாரை அயல் சதுப்பேதிமார்‌ என்று உத்பத்தி நிரூபிக்கும்‌.

5 –ஸூரி வைபவ பாத, – பஞ்சம– 3அதிகரணங்கள் இதில் – 1 —39 – 96— 58–
5– க்‌ரந்த,-தத் கர்த்ரு வைப, வாதி, கரணம்‌ —39 – 74 –36-
6—ஸூரி ப்ராமாண்ய விஸேஷாதி கரணம்‌(ப்ரமாத்ரு வைபவம் ) 75 – 93 –19-
7-ப,க,வத் கடாக்ஷ விஸேஷாதி கரணம்‌ 94–96—-3-

5– க்‌ரந்த,-தத் கர்த்ரு வைப, வாதி, கரணம்‌ —39 – 74 –36-

39-“எவ்வுலகத் தெவ்வெவையும்‌’” என்கையாலே வேதம்‌ பஹு விதம்‌.

40-இதில்‌ ஸம்ஸ்க்ருதம்‌, த்‌ராவிடம்‌ என்கிற பிரிவு ருகாதி பேதம்‌ போலே.

41-செந்திறத்த தமிழென்கையாலே ஆகஸ்த்யமும்‌ அநாதி..

42-வடமொழி மறை என்றது தென்மொழி மறையை நினைத்திறே.

43-வேத,சதுஷ்டய-அங்கோபாங்க,ங்கள்‌ பதினாலும்போலே, இந்‌ நூலுக்கும்‌ இருந் தமிழ் நூற் புலவர் பனுவலாறும்‌, மற்றை எண்மர்‌ நன் மாலைகளும்‌.

45-வேத நூல்‌, இருந் தமிழ் நூல்‌, ஆஜ்ஞை, ஆணை, வசையில்‌, ஏதமில்‌, ௬ருதி, செவிக்கினிய, ஓதுகின்றதுண்மை, பொய்யில் பாடல்‌, பண்டை, நிற்கும்‌, முந்தை, அழிவில்லா என்னும்‌ லக்ஷணங்கள் ஓக்கும்‌.

46-‘“சொல்லப்பட்ட”” என்றதில்‌ கர்த்ருத்வம்‌ “ஸ்ம்ருதி – அத்தை ஸ்வயம்பு படைத்தான்‌’ என்றது போலே

47-நால் வேதங்கண்ட புராண ருஷி-மந்த்ர தர்மிகளைப்‌ போலே இவரையும்‌ ருஷி, முனி, கவி என்னும்‌.

48-“படைத்தான்‌ கவி” என்ற போதே இதுவும்‌ யதா பூர்வ கல்பதமாமே.

44-ஸகல வித்‌யாதிக வேதம் போலே இதுவும்‌ திவ்ய ப்ரபந்த, ப்ரதாநம்‌.

49-உறக்கம்‌ தலைக் கொண்ட பின்னை மறை நான்குமுணர்ந்த தங்களப்பனோடே ஓதின சந்தச் சதுமுகன்‌ சலங்கலந்த வெண் புரி நூல்‌ மானுரி திரிதந்துண்ணும்‌ காமனுடல்‌ இருக் கிலங்கு ஜயேஷ்ட புத்ராதிகளுக்‌கு மறை பயந்தாப் போலே ஆதுமில்‌ காலத் தெந்தையான வாய்‌ முதலப்பன்‌ பிரம குருவாய்‌ இராப் பகல்‌ முன் சொல்லக் கற்றனமே என்ற இவரும்‌ நாவினால்‌ நன்மையால்‌ என்று ஓத வல்ல பிராக்களை **கண்மின்கள்‌’” என்று சொல் பயிற்ற, வேதம்‌ ஓதுவாரோத்தாகையாலே அதர்வணாதிகள் போலே இதுவும்‌ பேர் பெற்றது.

50-இயற்பா மூன்றும்‌ வேத த்ரயம் போலே; பண்ணார் பாடல்‌ பண்புரை இசை கொள்‌ வேதம் போலே. :

51-ருக்கு ஸாமத்தாலே ஸ ரஸமாய்‌, ஸ்தோப,த்தாலே பரம்புமாப்‌ போலே சொல்லார்‌ தொடையல்‌ இசை கூட்ட அமர் சுவை ஆயிரமாயிற்று.

52-சந்தோகனென்று ஸாமாத்யமாகாமல்‌ முதலிலே பிரித்து யாழ்‌ பயில்‌ காந ஸ்வரூபியை *பாலையாகி”” என்று விஸேஷிக்கையாலே வேத கீதச்சாமி நானென்ன ஸாமந் தோன்ற உத்‌ கீத ப்ரணவத்தை ப்ரத மத்திலே மாறாடி சரமகதி முடிவாகத்‌ தொண்டர்க்கமுதென்ன தேவாந்நமாக்கி மஹா கோஷ நல் வேத வொலி போலே மஹாத்‌,யயந மென்னப்‌ பாடுகையாலே இத்தை சாந்தோக்‌ய ஸமமென்பர்கள்‌.

அதிலே சொல்லுகிற அந்தராதித்யவித்‌யை தொடக்கமான வற்றையும்‌ இதிலே சொல்லுமென்று கொண்டு முற்பட்ட யோஜனையை அருளிச் செய்கிறார்‌ மேல்‌

53-புரவியேழொரு காலுடைய தேரிலே திருச் சக்கர மொத்து கால சக்கரச் செங்கோல்‌ நடாவி ஜ்யோதிஸ் சக்ரவொளி சுருக்கி அக்‌நீஷோமீய தோஜோம்ருதத்துக் கூற்றும்‌- மந்தேஹர்க்குச்‌ செந்தீயும்‌, முக்தி மார்க்கத் தலை வாசலும்‌, கண்ணாவான்‌ கண்ணில்‌ பிறந்த கண்மணியும்‌, த்ரயீ மயமுமான மண்டலத்திலே தண்டாமரை சுமக்க தோள்‌ வளையும்‌ குழையும்‌, திருச் செய்ய முடியும்‌ ஆரமும்‌ படையும்‌, திகழும்‌ பொன் மேனியும்‌, செஞ்சுடர்த் தாமரைக் கண்ணுமாய்‌, அணி நிற மூர்த்தி ஈதென்னும்படி இரண்டையும்‌ தன்னிறமாக்குகிற செய்யாளான வித்‌யையோடே அருக்கன்‌ மேவின ஸதாத்‌யேய தேஜஸ்ஸின்‌ ஸாம ரஸோத்‌ காந நாமமுள்ளுறையான ஆத்‌யந்தங்‌களாலே ஓராயிரமாமவற்றிலே ஒன்றை ஆயிர முகத்தினா லருளின தீர்த்தம் போலே தீர்த்தங்களாயிரமுமாக விஸ்தரிக்கிறாரென்று வேத குரூபதேஸம்‌

ஆக, ‘“வ்வுலகத்தெவ்வெவையும்‌”’ என்று தொடங்கி, இவ் வாழ்வார்‌ அருளிச் செய்த ப்ரபந்தங்கள்‌ நாலுக்கும்‌ வேத ரூபத்வமும்‌, அங்கோபாங்க ஸஹிதத்வமும்‌, ஸாஸ்த்ரதவம்‌ முதலான வேத லக்ஷணங்களும்‌ இவற்றினுடைய நித்யத்வ-அபெளருஷேயத்வமும்‌, இந்நாலு ப்ரபந்தங்களுக்கும்‌ நாலு வேத ஸ்தாநேயான ப்ரகாரத்தையும்‌, அதில்‌ திருவாய்மொழி ஸாம ஸாமாந்ய மன்றிக்கே, சந்தோக,ஸாமோபநிஷத் தாயிருக்கிற ப்ரகாரத்தையும்‌, அதில்‌ விசேஷ லக்ஷணங்களையும்‌ சொல்லுகையாலே இப்ப்ரபந்தத்‌துக்கு வேத,ஸாம்யம்‌ சொல்லா நின்றது –

இனி மேல்‌ ஸ்வரூபாதிகளை விஸத, மாகச்‌ சொல்லுகிற ஸ்ரீபாஞ்சராத்ராதிகளைப் போலே விக்‌ரஹத்தை விஸதமாகச்‌ சொல்லுகிற வேதத்துக்கு இப் ப்ரபந்தம்‌ விவரண ரூபமாயிருக்கும்‌ என்பாரு முண்டென்கிறார்‌-

54-அன்றிக்கே, ஸ்வரூப கு,ண விபூ,தி சேஷ்டிதங்களை விஸமமாக்‌குகிற பஞ்சராத்ர புராணேதிஹாஸங்கள்‌ போலே நீலபாரூபோக்தி தெரியச் சொன்ன வேத உப ப்ருூம்ஹணமென்பர்கள்‌.

55-கல்பாதி,யில்‌ தோற்றிற்று வர்ணிக்கும்‌ சதுர்முகன்‌ சந்தஸ்ஸும்‌ மோஹ ஸாஸ்த்ர ப்ரவர்த்தகன்‌ பிணச்சுடலை வெந்தார்‌ அக்கும்‌ ஆறும்‌ அணிந்து ஏறேறிச் சுழன்றாடும்‌ ஆலமமர்‌ பிச்சுத் தெளிந்து தான்‌ வணங்குமாறுரைக்கக் கேட்ட ஸஜாதீயர் ப்ரஸாதமும்‌ ஆர்ஷ மூலம்‌.

56-பரம ஸத்த்வத்தோடே உள்ளி உரைக்கும்‌ நிறை ஞானத்தயனாம்‌ சிவனாம்‌ திருமாலருள் கொண்டு இவர்‌ பாடினார்‌.

57–கருவுள்‌ வேறலாமை அரன்‌ அயன்‌ எனச் செய்யுமவை போலே மூவுருவாம்‌ முதல்வன்‌ துப்பரவாலே பரம கவிகளால்‌ பாடுவியாது நேர் படச் சொல்லும்‌ நீர்மையிலா என்னைத் தன்னாக்கி என்‌ நா முதல்‌ வந்து புகுந்து தப்புதலறத்‌ தன்னை வைகுந்தனாகத்‌ தன்‌ சொல்லால்‌ தானே துதித்து மலக்கு நாவியல்‌ மொய்ய சொல்லால்‌ சொல்ல வல்லேனென்று நானும்‌ சொல்லி நாடும்‌ கையெடுக்கும்படி என்‌ சொல்லால்‌ யான் சொன்ன இன் கவி யென்பித்தா னென்றாரிறே.

இதுக்குக் கீழ்‌ ப்ரபந்த, மூல வைலக்ஷண்யம்‌ சொல்லிற்று. இனி மேல்‌ வக்த்ரு வைலக்ஷண்‌யம்‌ சொல்லுகிறது

58-தர்ம வீர்ய ஜ்ஞாநத்தாலே தெளிந்து ஹ்ருஷ்டராய்‌ மேலே மேலே தொடுப்பாரைப் போலன்றே அருளின பக்தியாலே உள் கலங்கிச்‌ சோகித்து, மூவாறு மாஸம்‌ மோஹித்து, வருந்தி, ஏங்கித்‌ தாழ்ந்த சொற்களாலே நூற்கிற விவர்‌.

இனி மேல்‌ இந்த ருஷிகளிற் காட்டில்‌ இவர்க்கு ஸம்ஸாரத்தில்‌ நசை யறுகையாலுண்டான வைலக்ஷண்யம்‌ சொல்லுகிறது

59-ஸ்வாத்‌,யாய யோக,ங்களைக்‌ கற்றும்‌ தெளிந்தும்‌ கண்டமை மைப்பாலே ஓதி உணர்ந்தவர்‌ இன்றும்‌ ஆஸா பாஸ பத்‌தர்‌.

60-அவர்களுக்குக்‌ காயோடென்னுமவையே தாரகாதிகள்‌; இவர்க்கு எல்லாம்‌ கண்ணனிறே.

61-அழுநீர் துளும்பக்‌ கடலும்‌ மலையும்‌ விசும்பும்‌ துழாய்‌ திருமால்‌ என்று “எங்கே காண்கேன்‌!* என்னுமிவரலமாப்பு அவர்களுக்கு புத்ர வியோகத்திலே.

62-பல ஸாதந தேவதாந்தரங்களில்‌ இவர்கள் நினைவு பேச்சிலே தோன்றும்‌.

இதுக்கு கீழ்‌ வக்த்ரு வைலக்ஷண்யம்‌ சொல்லிற்று – இனி மேல்‌ ப்ரபந்த, வைலக்ஷண்யம்‌  சொல்லுகிறது-அவர்கள் ப்ரபந்தங்களுக்கு கதாந்தர ப்ரஸ்தாவமுண்டு; இதுக்கில்லை என்னா நின்றுகொண்டு இதினுடைய ஸார தமத்வம்‌ சொல்லுகிறார்‌

63-ராமாயணம்‌ நாராயண கதை என்று தொடங்கி கங்கா காங்கேய ஸம்பவாத்‌ய ஸத் கீர்த்தநம்‌ பண்ணின எச்சில் வாய்‌ ஸூத்‌தி பண்ணாமல்‌ ““திருமாலவன் கவி’” என்ற வாயோலைப் படியே மாற்றங்களாய்ந்து கொண்டு உரிய சொல்‌ வாய்த்தவிது – வேதாதிகளில்‌ பெளருஷ-மாநவ-கீ,தா- வைஷ்ணவங்கள்-போலே அருளிச் செயலில்‌ ஸாரம்‌.

இவ்வாழ்வார்களுடைய ப்ரபந்தங்களும்‌ பரஸ்பர விருத்‌தங்களாயிருக்குமோ என்ன, இவர்களெல்லாரும்‌ ஏக கண்டராகையாலே எல்லாம்‌ ஏகரர்த்த ப்ரதிபாதகங்களுமாய்‌, எல்லா ப்ரபந்தங்களும்‌ இவருடைய ப்ரபந்தத்தைப்‌ பின் செல்லும்படியான வைபவத்தை உடைத்தாய்‌, இத்தோடு சேராத ஸாஸ்த்ரங்களெல்லாம்‌ த்யாஜ்யங்களா யிருக்குமென்று இதினுடைய ப்ராமாண்யம்‌ சொல்லுகிறது

64-குரு சிஷ்ய க்‌ரந்த,விரோதங்களை பரமதாதிகளாலே பரிஹரியாமல்‌ செஞ் சொல்‌, செந்தமிழ்‌, இன் கவி, பரவி, அழைக்கும்‌ என்று அந்யோத்யம்‌ கொண்டாடிப் பேசிற்றே பேசும்‌ ஏக கண்டரில்‌ “என்னில்‌ மிகு” என்னுமிவருரை கொளின்மொழி கொண்டு ஸாஸ்த்ரார்த்தங்கள்‌ நிர்ணயிக்க வேண்டுகையாலே வலங் கொண்ட இதுக்குச்‌ சேராதவை மநு விபரீதங்கள் போலே.

65- பாஷ்யகாரர்‌ இது கொண்டு ஸூத்ர வாக்யங்கள்‌ ஒருங்கவிடுவர்‌.

66-அதுக்கு மூலம்‌ ““விதயஸ்ச’” என்கிற பரமாசார்ய வசநம்‌.(ஸ்தோ. ர. 20)

67-ஆப்திக்கு இவர்‌ “சுருதி, மார்க்கண்டேயன்‌, பார்த்தன்‌” என்கிற இவை வ்யாஸ மநு ப்‌,ரஹ்மவாதிகளை வேதம்‌ சொல்லுமாப் போலே.

68-பாரத கீதைகளின்‌ வேதோபநிஷத்த்வம் போலே இதுவும்‌ வ்யாக்‌யை யானாலும்‌ வேத ரஹஸ்யமாம்‌.

69-உதாத்தாதி -பத-க்ரம-ஜடா-வாக்ய-பஞ்சாதி-பாத-வ்ருத்த ப்ரஸ்ந -காண்ட,-அஷ்டக-அத்‌யாய- அம்ஸ -பர்வாத்‌ யலங்காரங்கள்‌ போலே, எழுத்து, அசை, சீர்‌, பந்தம்‌, அடி, தொடை, நிரைநிரை, ஒசை, தளை, இனம்‌, யாப்பு, பா, துறை, பண்‌, இசை, தாளம்‌, பத்து, நூறு, ஆயிரம்‌ முதலான செய் கோலம்‌ இதுக்குமுண்டு.-

ஆக இதுக்குக் கீழ்‌ வேதத்தினுடையவும்‌, தது,பப்‌ரும்ஹணத்தினுடையவும் ஸ்தாநத்திலே யாக்கி அவற்றினுடைய ஸப்‌த லக்ஷணங்களும்‌ அர்த்த லக்ஷணங்களும்‌ அருளிச் செய்தார்‌. இனி மேல்‌ ப்ரமேய பூதனான ஸர்வ ஸ்மாத் பரனுடைய அவதார டரம்‌பரையில்‌ எல்லையான அர்ச்சாவதாரம் போலே ப்ரமாண வேதாவதாரத்தினுடைய எல்லை இத் திருவாய்மொழி என்கிறார்‌

70-அதவா வேத வேத்‌ய ந்யாயத்தாலே பரத்வபரமுது வேதம்‌ வ்யூஹ வ்யாப்த் யவதரணங்களில்‌ ஓதின நீதி கேட்ட மநு படுகதைகளாய்‌ ஆக மூர்த்தியில்‌ பண்ணிய தமிழானவாறே வேதத்தை த்‌ராவிடமாகச்‌ செய்தாரென்னும்‌.

71-மண்ணாடின ஸஹ்ய ஜலம்‌ தோதவத்திச் சங்கணித் துறையிலே துகில் வண்ணத் தெண்ணீராய்‌ அந்தஸ்தத்தைக் காட்டுமாப் போலே அல்ப ஸ்ருதர்‌ கலக்கின ஸ்ருதி நன்ஞானத்துறை சேர்ந்து தெளிவுற்று ஆழ் பொருளை அறிவித்தது.

இனிமேல்‌ அந்த ப்ரதாநமான வேதத்திற் காட்டிலும்‌ இதினுடைய அவதார ரூபமான திருவாய்மொழிக்கு இவருடைய ஸ்பர்ஸத்தாலே வந்த ஏற்றம்‌ சொல்லுகிறது

72-மேகம்‌ பருகின ஸமுத்‌ராம்பு போலே நூற் கடல் சொல்‌ இவர்‌ வாயனவாய்த் திருந்தினவாறே ஸர்வதா ஸர்வோபஜீவ்யமாமே.

73-ம்ருத்‌ கடம்‌ போலன்றே பொற்குடம்‌.

74-பெரும் புறக் கடலும்‌, ஸ்ருதி ஸாக,ரமும்‌ அலைத்தாழ்ந்து ஓடுமிடங்களில்‌ அயோக்‌யர்க்குச்‌ சமைத்த மடுவும்‌, சாய் கரகமும்‌ மாந மேய சரமம்‌.

இத்தால்‌ **பரத்வபரமுதுவேதம்‌’” என்று தொடங்கின அர்த்தங்களை உபபாதி,த்து அவ் வர்த்தத்துக்கெல்லை அர்ச்சாவதாரமும்‌ திருவாய்மொழியுமென்று நிகமித்தாராய் ஆய்த்து –

6—ஸூரி ப்ராமாண்ய விஸேஷாதி கரணம்‌(ப்ரமாத்ரு வைபவம் ) 75 – 93 –19-

ப்ரமாண ப்ரமேயங்களை ஸஹ படித்து இந்த ப்ரஸங்கத்திலே இவற்றோடே சேர்த்து ப்ரமாத்ரு வைபவத்தை அருளிச் செய்கிறார்‌-மேலெல்லாம்‌ இதில்‌ ப்ரமாண ப்ரமேயங்களினுடைய எல்லையான அர்ச்சாவதாரத்தினுடையவும்‌, திருவாய்மொழியினுடையவும்‌ த்‌ரவ்ய பாஷா நிரூபணத்தோடொக்கு மென்று இவற்றை ஸித்‌தவத் கரித்து இவற்றோடொக்கும்‌ ப்ரமாதாக்களின்‌ ஜந்ம நிரூபணம்‌ என்கிறார்‌-

75-வீட்டின்ப-இன்பப் பாக்களில்‌ த்‌ரவ்ய பாஷா நிரூுபண ஸமம்‌ இன்பமாரி யிலாராய்ச்சி,

76-பேச்சுப் பார்க்கில்‌ கள்ளப் பொய்ந் தூல்களும்‌ க்‌ராஹ்யங்கள்‌; பிறவி பார்க்கில்‌ அஞ்சாமோத்தும்‌ அறு மூன்றும்‌ கழிப்பனாம்‌.

இதுக்குக்‌ கீழ்‌ கருஷ்ண த்‌வைபாயநனான வ்யாஸனோடும்‌, க்ருஷ்ணனேடும்‌ உண்டான ஜந்ம ஸாதர்ம்யம்‌ சொல்லி, “‘க்ருஷ்ண க்ருஷ்ண த்‌வைபாய நோத்பத்திகள்‌ போலன்றே’‘ என்று – இனி மேல்‌ வைதர்ம்யம்‌ சொல்லுகிறது,

77–கிருஷ்ண க்ருஷ்ண த்வைபாய நோத்பத்திகள்‌ போலன்றே க்ருஷ்ண த்ருஷ்ணா தத்த்வ ஜந்மம்‌.

78-பெற்றும்‌ பேறிழந்தும்‌ கன்னிகை யானவளும்‌ எல்லாம்‌ பெற்றாளாயும்‌, தத்துக் கொண்டாள்‌ என்பர் நின்றார்‌ என்னுமளவும்‌ நெடுங்‌ காலமும்‌ நங்கைமீர்‌ என்னுமிவர்க்கு நேரன்றே.-

79-மீந நவநீதங்கள்‌ கந்திக்குமிடமும்‌ வெறி கொள் துழாய்‌ கமழுமிடமூம்‌ தன்னிலொக்குமோ

80-ஆற்றில்‌ துறையில்‌ ஊரிலுள்ள வைஷம்யம்‌ வாசா மகேசரம்‌.

81-தேவத்வமும்‌ நிந்தை யானவனுக்கு ஒளி வரும்‌ ஜநிகள் போலே ப்‌ரஹ்ம ஜந்மமும்‌ இழுக்கென்பார்க்குப்‌ பண்டை நாளில்‌ பிறவி உண்ணாட்டுத் தேசிறே.

82-ஜநக-தஸரத,-வஸுதேவ-குலங்களுக்கு மூத்த பெண்ணும்‌, நடுவில்‌ பிள்ளையும்‌, கடைக் குட்டியும்‌ போலே இவரும்‌ பிறந்து புகழும்‌ ஆக்கமும்‌ ஆக்கி அஞ்சிறை யுமறுத்தார்

83–ஆதித்ய-ராம திவாகர-அச்யுத பாநுக்களுக்குப்‌ போகாத உள்‌ளிருள்‌ நீங்கி, சோஷியாத பிறவிக் கடல்‌ வற்றி, விகஸியாத போதில்‌ கமல மலர்ந்தது வகுள பூஷண பாஸ்கரோதயத்திலே.

84-வம்ஸ பூ,மிகளை உத்‌தரிக்கக்‌ கீழ்க் குலம்‌ புக்க வராஹ கோபாலரைப்‌ போலே இவரும்‌ நிமக்‌நரை உயர்த்தத் தாழ இழிந்தார்‌.

ஆக, வீட்டின்பமென்று தொடங்கி, இவ்வளவும்‌ வர மந்த மதிகளுடைய ஸங்கா நிராகரணார்த்த மாக ‘ப்ரமாண ப்ரமேயங்களினுடைய சரமாவதியான அர்ச்சாவதாரத்தினுடையவும்‌ திருவாய்மொழியினுடையவும்‌ த்‌ரவ்ய பாஷா நிரூபணத்தோடொக்கும்‌ ஆழ்வாருடைய உத்பத்தி நிரூபணமும்‌’ என்று இவருடைய உத்பத்தி நிரூபணத்தால்‌ வரும்‌ ப்ரத்யவாயத்தையும்‌, வ்யாஸாதிகளைப் பற்ற இவருடைய அவதார வைலக்ஷண்‌யத்தையும்‌, அவதாரம்‌ பரார்த்த,ம்‌ என்னுமிடத்தையும்‌, இப்படி மஹா ப்ரபாவரான இவர்‌ தாழ அவதரிக்கைக்கு ஹேதுவையும்‌ அருளிச்செய்தார்

இனிமேல்‌ ஆழ்வாருடைய வைபவத்துக்கு உறுப்பாக ஸாமாந்யேந பாகவத வைபவத்தைப்‌ பல உதாஹரணங்களாலும்‌ அருளிச் செய்கிறார்‌. அதில்‌, அவர்கள்‌ ஐத்ம வ்ருத்த ஜ்ஞாநங்களால்‌ குறைய நின்றார்களே யாகிலும்‌ பகவத்‌ பக்தரானார்களாகில்‌ அவர்கள்‌ ஸர்வ உத்க்ருஷடரென்றும்‌, அவர்கள்‌ உத்க்ருஷ்ட ஜந்மாக்களாலே அநுவர்த்த நீயரென்றும்‌, அவர்களுடைய ஸம்பந்தமே உத்தாரக மென்றும்‌, அவர்கள் விஷயத்தில்‌ பகவானுடையவும்‌, பகவதீயருடையவும்‌ ஆதர ப்ரகாரத்தையும்‌, அநு வர்த்த நீயரான ப்ரகாரத்தையும்‌,- அவர்களுடைய ஸ்பர்ஸாதிகளே பாவநம்‌ என்னுமிடத்தையும்‌, ப்ரமேய பூதனுடையவும்‌, ப்ரமாதாக்களினுடையவும்‌, உக்த் யநுஷ்டாநங்களாலே வெளியிடுகிறார்‌.

85–ம்லேச்சனும்‌ பக்தனானால்‌ சதுர்வேதிகள்‌ அநுவர்த்திக்க அறிவு கொடுத்து, குல தைவத்தோ டொக்கப்‌ பூஜை கொண்டு பாவந தீர்த்த, ப்ரஸாதனாம்‌ என்கிற திருமுகப் படியும்‌, விஸ்வாமித்ர -விஷ்ணுசித்த -துளஸீ ப்‌ருத்யரோடே உள் கலந்து தொழு குலமானவன்‌ நிலையார்‌ பாடலாலே ப்‌ராஹ்மண வேள்விக் குறை முடித்தமையும்‌, கீழ் மகன்‌ தலை மகனுக்கு ஸம ஸஹாவாய்த்‌ தம்பிக்கு முன் பிறந்து வேலும்‌ வில்லுங் கொண்டு பின் பிறந்தாரைச் சோதித்துத்‌ தமையனுக்கு இளையோன்‌ ஸத்‌ பாவம்‌ சொல்லும்படி ஏக குலமானமையும்‌, தூது மொழிந்து நடந்து வந்தவர்களுடைய ஸம்யக் -ஸகுண-ஸஹ போஜநமும்‌, ஒரு பிறவியிலே இரு பிறவியானா ரிருவர்க்கு தர்ம ஸூநு ஸ்வாமிகள்‌ அக்‌ர பூஜை கொடுத்தமையும்‌, ஐவரில்‌ நால்வரில்‌ மூவரில்‌ முற்பட்டவர்கள்‌ ஸந்தேஹியாமல்‌ ஸஹஜரோடே புரோடாஸமமாகச்‌ செய்த புத்ர க்ருத்யமும்‌, புஷ்ப த்யாக போக மண்டபங்‌களில்‌ பணிப் பூவும்‌ ஆல வட்டமும்‌ வீணையுங் கையுமான அந்தரங்கரை முடி மன்னவனும்‌ வைதிகோத்தமரும்‌ மஹா முனியும்‌ அநுவர்த்தித்த க்ரமமும்‌, யாக,அநுயாக உத்தர விதிகளில்‌ காய அந்ந ஸ்தல ஸூத்‌தி பண்ணின வ்ருத்‌தாசாரமும்‌ அறிவார்க்கிறே ஜந்ம உத்கர்ஷ அபகர்‌ஷங்கள்‌ தெரிவது.

கீழ்‌ ஜந்ம வ்ருத்த ஜ்ஞாநங்களால்‌ குறைய நின்றார்களேயாகிலும்‌ பகவதீ யரானார்‌களாகில்‌ அவர்கள்‌ ஸர்வோத்க்ருஷ்டராய்க்கொண்டு உபாதேயரென்னு மிடத்தைச்‌ சொல்லிற்று–இனிமேல்‌ பகவஜ் ஜ்ஞாநமின்றியிலே இருக்கிற அஜ்ஞர்‌ ப்‌ரமிக்கிற கேவல வர்ணாதிகள்‌ வ்யர்த்தமாகையாலே த்யாஜ்ய மென்னுமிடத்தை ஸ ப்ரமாணமாக அருளிச் செய்கிறார்‌ –

86-அஜ்ஞர்‌ ப்‌ரமிக்கிற வர்ணாஸ்ரம வித்‌யா வ்ருத்தங்களை கர்த்தப ஜந்மம்‌, ஸ்வபசாதமம்‌, ஸில்பநைபுணம்‌, பஸ்மாஹுதி, ஸவவிதவா லங்காரமென்று கழிப்பர்கள்‌.

இனி மேல்‌ பகவத்‌ விநியோகார்ஹமாயும்‌, பகவத் ஸம்பந்தத்தை உடைத்தாயு மிருக்கிற திர்யக் ஸ்தாவரங்களே யாகிலும்‌ மிகவும்‌ உத்க்ருஷ்டங்களென்னுமிடத்தை ““வாசிகை பக்ஷி மிருகதாம்‌ மாநஸைரந்த்ய ஜாதிதாம்‌ | ஸாரீரஜை: கர்ம தோஷைர்யாதி ஸ்தாவரதாம்‌ நர” (மநு) என்று வாசிக காயிக பலமாய்க் கொண்டு அல்லாதார்க்கு வரக்‌ கடவதான திர்யக் ஸ்தாவர ஜந்மங்கள்‌ போலன்றிக்கே, பகவத்‌ விநியோகார்ஹமாய்‌, பகவத் ஸம்பந்தத்தை உடைத்தாயுமிருக்கிற திர்யக் ஸ்தாவரங்களே உபாதேயமென்று மஹாத்மாக்களாலே பரிக்‌ரஹிக்கவும்‌ ஆதரிக்கவும்‌ படுகையாலே தந் முகேந ப்ரகாஸிப்பிக்கிறார்‌-

87-அணைய ஊர புனைய அடியும்‌ பொடியும் பட பர்வத பவநங்களிலே ஏதேனுமாக ஜதநிக்கப் பெறுகிற திர்யக் ஸ்தாவர ஜந்மங்களைப்‌ பெரு மக்களும்‌ பெரியோரும்‌ பரிக்‌ரஹித்து ப்ரார்த்திப்பர்கள்‌.

இனி மேல்‌ ஸேஷேத்வத்துக்குப்‌ புறம்பான ஆத்மாவையும்‌ அநாதரிக்கிறவர்களுககு ஓளபாதிகமான வர்ணாதிகளை அநாதரிக்கச்‌ சொல்ல வேணுமோ? என்கிறார்‌

88-ஸேஷத்வ பஹிர்பூத ஜஞாநாநந்த மயனையும்‌ ஸஹியாதார்‌ த்யாஜ்யோபாதியை ஆதரியார்களே.

இந்த வர்ணத்தினுடைய ஓளபாதிகத்வத்தை உதாஹரண முகத்தாலே வெளியிடுகிறார்‌-

89-இதின்‌ ஓளபாதிகத்வம்‌ ஒரு ராஜா தன்னை மறை முனிவனாக்கினவன்‌ நீசனாக்குவித்த ராஜாவை வாரே உறுப்பாக யதிப்பித்து ஸ்வர்க்க மேற்றின போதே தெரியும்‌.

கீழ்‌ பகவத் ஸம்பந்த, ஜஞாந ரஹிதமான உத்க்ருஷ்ட ஜந்மம்‌ அபக்ருஷ்ட மாகையாலே அதினளவிலே நிற்கிற ப்ரமாதாக்கள்‌ அநுபாதேயரென்றும்‌, பகவத் ஸம்பந்த ஜ்ஞாந முகத்தாலே அபக்ருஷ்ட ஜந்மம்‌ உத்க்ருஷ்ட ஜந்மமாகையாலே அதிலே நிற்கிற ப்ரமாதாக்கள்‌ உபாதேயரென்றும்‌ சொல்லா நின்றது. இனி மேல்‌ ப்ரமாதாக்களளவே யன்றிக்கே ப்ரமாண-ப்ரமேய-ப்ரமாதாக்கள்‌ மூன்றிலும்‌ த்யாஜ்யமுமுண்டு, உபாதேயமுமுண்டு; அப்படி உபாதேயமான ப்ரமாண-ப்ரமேயங்களோடு விகல்பிக்கலாம்‌ படியான அந்த ப்ரமாதாக்களுடைய வைபவத்தை ப்ரமாணங்களும்‌ ப்ராமாணிகரும் சொல்லா நிற்க, அத்தை அறியாதே மந்த மதிகளாய்க் கொண்டு ஜந்ம நிரூபணம்‌ பண்ணுமவர்கள்‌ அத பதிப்பர்களென்று கீழே ““வீட்டின்ப வின்பப்பாக்களில்‌ த்‌ரவ்ய பாஷா நிரூபண ஸமம்‌ இன்பமாரியிலாராய்ச்சி” என்று உபக்ரமித்த அர்த்தத்தை நிகமிக்கிறார்‌ (மா வுருவில்‌ கள்ள வேடம்‌ என்று தொடங்கி].

90- மாவுருவில்‌ கள்ள வேடம்‌, திருந்து வேதமலமான மானிடம்‌ பாடல்‌, ஸர்வ வர்ண ஸூத்‌ரத்வம்‌, காடு வாழ் சாதியில்‌ கடல் வண்ணன்‌ வேடம்‌, தென்னுரையில்‌ ஹரி கீர்த்தி, ஸ்வபசரில்‌ பத்தி பாசனமும்‌ அறிவார்‌ ஆரார்‌ அமரரென்ன ஏற, அறியாதார்‌ சாதி யந்தணர்களேலும்‌ தகர விழுவர்‌.

இப்படி பாகவத ஸாமாந்யத்தாலே ஆழ்வாருடைய உத்பத்தி நிரூபிக்கலாகாது என்கிற மாத்ர மன்றிக்கே, ஆழ்வாருடைய அவதாரம்‌ வ்யாஸ ஸூகாதி களாலும்‌ ப்ரகாஸிப்பிக்கப்‌ பட்ட தென்கிறார்‌ மேல்‌.-

91-தமிழ் மா முனி திக்கு ஸரண்ய மென்றவர்களாலே க்வசித்‌ க்வசித்‌ என்று இவராவிர்பாவம்‌ கலியும்‌ கெடும் போலே ஸூசிதம்‌.

இப்படி அருளிச் செய்கிற இவருடைய அவதார வைபவத்தைப் பார்த்து பகவதவதாரங்களில்‌ ஸ்வருபேண அவதாரமோ? ஆவேஸாவதாரமோ? நித்யரோ? முக்தரோ? ஸித்‌தரோ? தம்முடைய ஜந்மாந்தர ஸஹஸ்ர புண்ய ஸஞ்சயங்களாலே வந்தவரோ? ஈஸ்வரனுடைய பாக்‌ய பலத்தாலே வந்தவரோ? என்று அதி ஸங்கிப்பர்கள்‌ என்கிறார்‌ –

92–அத்ரி-ஜமதக்‌நி-பங்க்திரத,-வஸு-நந்த, ஸூநுவானவனுடைய யுக,-வர்ண-க்ரமாவதாரமோ? வ்யாஸாதி வத் ஆவேஸமோ? மூதுவர்‌ கரை கண்டோர்‌ சீரியரிலே ஒருவரோ? முன்னம்‌ நோற்ற அனந்தன் மேல்‌ புண்ணியங்கள்‌ ப,லித்தவரோ? என்று ஸங்கிப்பர்கள்‌,

இப்படி இவர்கள்‌ சங்கிக்கைக்கு ஹேது என்னென்னில்‌, இவருடைய ப்ரபாவம்‌ கண்டு என்கிறார்‌ மேல்‌.

93-இதுக்கு மூலம்‌ – யான்‌ நீ என்று மறுதலைத்து வானத்து மண் மிசை மாறும்‌ நிகருமின்றி நிலயிடம்‌ தெரியாதே தெய்வத்தினம்‌ ஒரு வகைக் கொப்பாக இனத் தலைவன்‌ அந்தாமத்தன்பு செய்ய, சேர்ந்தமைக் கடையாளம்‌ உளவாக உகந்துகந்து திமிர் கொண்டாலொத்து நாட்டியல் வொழித்து ஸடரை யோட்டி மதாவலிப்தர்க்கு அங்கு மிட்டு நடாவிய கூற்றமாய்‌, தீயன மருங்கு வாராமல்‌ கலி யுகம்‌ நீங்கிக்‌ கித யுகம்‌ பற்றிப்‌ பட்டெழுபோதறி யாதிருந்த ப்ரபாவம்‌.

7-ப,க,வத் கடாக்ஷ விஸேஷாதி கரணம்‌ 94–96—-3-

இவர்க்கு இந்த ப்ரபாவமுண்டாகைக் கடி என்‌ என்னில்‌, ஸ்ருஷ்ட்யாதி முகத்தாலே ஸம்ஸாரிகளுடைய உஜஜீவநத்துக்கு கிருஷி பண்ணுகிற ஈஸ்வரன்‌ ஸஜாதீயரைக்‌ கொண்டு இவர்களைத்‌ திருத்த வேணு மென்று பார்த்து அதுக்காளாவாரை ஸம்ஸாரத்தில்‌ கிடையாத தஸையிலே தேவ மநுஷ்யாதி சரீரங்களிலே பரவேஸித்து, ததநுஸாரிகளாய்க் கொண்டு ஜந்ம பரம்பரைகளிலே இழிந்த ஸம்ஸார ஸாகர மத்‌யஸ்தரான இவர்‌ பக்கலிலே நிர்ஹேதுகமாகப் பண்ணின விஸேஷ கடாக்ஷமென்கிறார்‌ –

94-இதுக்கு ஹேது – ஊழி தோறும்‌ சோம்பாது ஒன்றிப்‌ பொருளென்றளி மகிழ்ந்து முற்றுமாய் நின்று நூலுரைத்து யோகு புணர்ந்து கண் காண வந்து ஆள் பார்க்கிறவன்‌ உலகினதியல்வை நல்வீடு செய்ய இணக்குப் பார்வை தேடிக்‌ கழறலர் ஞானமுருவின மூழுதுமோட்டின பெருங் கண்‌ எங்குமிலக்கற்று அன்பொடு தோக்கான திசையிலே ஆக்கையில்‌ புக்குழன்று மாறிப் படிந்து துளங்குகிறவர்‌ மேலே படப்‌ பக்க நோக்கறப் பண்ணின விஸேஷ கடாக்ஷம்‌.

இத்தால்‌ கீழ்ச் சொன்ன அவருடைய ப்ரபாவத்துக்கு ஹேது பகவத் கடாக்ஷம்‌ என்றதாய்த்து.நித்ய ஸம்ஸாரியாய்ப்‌ போந்தாரொருவர்க்கு ப,க,வத் கடாக்ஷத்தாலே ஸாம்ஸாரிக ஸகல பாபங்களும்‌ போய்‌ இந்த ப்ரபாவமெல்லாம்‌ உண்டாகக் கூடுமோ என்னில்‌; ஸபரி முதலானாரை பரி ஸூத்‌,த,மாக்கின ஸர்வேஸ்வரனுடைய தி,வ்ய கடாக்ஷம்‌ அவஸ்ய மநுபோக்தவ்யமான ஸகல பாபங்களையும்‌ நஸிப்பிக்குமிறே என்கிறார்‌

95-ஸ்ரமணீ-விது,ர-ருஷிபத்நிகளைப்‌ பூதராக்கின புண்ட,ரீகாக்ஷ்ன நெடுநோக்கு சாபமிழிந்தென்னப்பண்ணுமிறே.

ஸர்வேஸ்வரன்‌ இவரை இப்படி நிர்ஹேதுகமாக கடாக்ஷித்ததுக்கு ப்ரயோஜநம்‌ என்‌ என்னில்‌, லோக ஹிதார்த்தமாக என்கிறார்‌-

96-கோவ்ருத்‌திக்கு நெரிஞ்சியைப்‌ புல்லாக்கினவன்‌ ஐகத்‌திதார்ததமாக “எனக்கே நல்லவருள்கள்‌” என்னும்படி ஸர்வ ஸெளஹார்த்த,ப்ரஸாதத்தை ஒரு மடை செய்து இவரைத் தன்னாக்க, லோகமாகத்‌ தம்மைப் போலாக்கும்படி யானார்‌.

————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ உ .வே .வேளுக்குடி ஸ்வாமிகள் -அருளிச் செய்த -எண்ணிலும் வரும்-எண் தானும் இன்றியே வந்தியலுமாறு ஸ்ரீ கண்ணன்–

June 9, 2026

கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
எண்ணிலும் வரும் என்னினி வேண்டுவம்
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம் பிரானையே
–1-10-2-–

சர்வ ஜெகதீஸ்வரனான எம்பெருமான் தன்னுடைய அபி நிவேசத்தாலே என்னுடைய மநோ ரதத்தை விஞ்சும்படி என்னுடைய கண்கள் தொடக்கமாக யுள்ள சர்வ கரணங்களுக்கும் போக்யமாக இனி நமக்கு வேண்டுவது உண்டோ -என்கிறார் –அஸ்தி ப்ரஹ்மேதி சேத்வேத-என்று ஸத்பாவ சிந்தா மாத்ரத்திலும் அவன் வசத்திலே வரும்படியாய் இருக்கும் –எண்-சிந்திப்பு-சிந்திப்பே அமையும் -9–1–7-என்கிற ப்ரபதன ஸுகர்யம்-எண்ணிலும் வரும் -என்று நினைவில் காட்டில் மிகவும் கைவரும்–பரி கணனையோடு பரம பக்தியோடு வாசி அற முகம் கொடுக்கும் என்று அக்குணத்திலே ஈடுபடுகிறார் –நம்முடைய உண்மையை இசைந்தான் இறே என்று அப்போதே வந்து முகம் காட்டும்-இவன் எண்ணின் அளவுக்கு அவ்வருகே வரும்-சர்வேஸ்வரன் ஸ்வ பாவம் இதுவான பின்பு ஹித அம்சத்தில் நமக்கு ஒரு குறை இல்லை –இருபத்து நான்காவது தத்துவம்-அசித்து, இருபத்தைந்தாவது தத்துவம்-ஆத்துமா,
இருபத்தாறாவது தத்துவம் ஈஸ்வரன் என்றால், ‘நம்முடைய உண்மையையும் இவற்றைப் போன்று இசைந்தான் அன்றே?’ என்று வந்து முகங்காட்டுவான்–இருபத்துநான்கு, இருபத்தைந்து, இருபத்தாறு’ என்று எண்ணினால், ‘இருபத்தாறு யானே’ என்று வருவான்-நம்முடைய எண்ணை மிஞ்சி வரும்-‘வரும்
வந்தால் நிற்குமது இல்லை; இவன் ‘போ’ என்ற போதும் அதற்கும் தகுதியாக வரும் என்பார் ‘வரும்’

109-எண்ணிலும்‌ வரும்‌ கணனைக்கு எண்டானுமிலீலை.
ஆனால்‌ பரமபக்திக்கு முகம்‌ காட்டுமாப் போலே பரிகணனைக்கும்‌ முகம் காட்டும்‌ என்றாரிறே இவர் தாமே-ஆகையாலே அந்த பரிகணனை இவர்க்கு உண்டாய்த்தானாலோ என்னில்‌, அதுவுமில்லை என்று தாமே அருளிச்செய்தாரிறே என்கிறார்‌ மேல்‌. (எண்ணிலும்‌ வரும்‌ கணனைக்கு எண்டானுமில்லை) “எண்ணிலும்‌ வரும்‌ என்னினி வேண்டுவம்‌”” (திருவா, 1 – 10 – 2) என்று பரமபத்தி யுக்தர்க்கு முகம் காட்டுமாப் போலே பரிகணனைக்கு முகம்‌ காட்டும்‌ என்னுமிடம்‌ ஈஸ்வரனுடைய குணாதிக்யம்‌ சொல்லிற்றத்தனைபோக்கி, அந்த பரிகணனையும்‌ தமக்கில்லை என்னுமிடத்தை “கருமங்கள்‌ வாய்க்கின்று ஒரெண்டானுமின்றியே வந்தியலுமாறு – கண்டாயே” (திருவா. 1 – 10- 5) என்று – கார்யங்கள்‌ ஸித்‌திக்குமிடத்தில்‌ ”எண்ணிலும்‌ வரும்‌” என்றது தானும்‌ மிகையாம்படி  ‘“ஓரெண்டானுமின்றியே”” \என்று அந்த எண் தானுமின்றியே பலித்துக் கொடு நின்றபடி கண்டாயே என்று அதுவுமில்லை என்று தாமே பேசினாரிறே

கண்டாய் நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்றோர்
எண் தானும் இன்றியே வந்தியலுமாறு
உண்டானை உலகேழுமோர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே
–1-10-5-எண்ணிலும் வரும் -என்கிறது தானும் மிகை யானபடி கண்டாயே -என்று அவன் படியை மூதலிக்கிறார் –

தன் திறத்தில் எண்ணுகை தானும் இன்றியே இருக்கச் செய்தே எம்பெருமான் தம்மை ஆகஸ்மிகமாக விஷயீ கரித்த படியைச் சொல்லுகிறார் –எண் தானும் இன்றியே வந்தியலுமாறு–நினைவு தானும் இன்றியிலே நமக்கு கைவந்து நடக்கிற பிரகாரம் கண்டாயே –-எங்கனே என்னில் அபேஷா நிரபேஷமாக –-உண்டானை உலகேழுமோர் மூவடி–கொண்டானை–உலகம் எல்லாவற்றையும் பிரளய ஆபத்தில் திரு வயிற்றிலே வைத்து அத்விதீயமான த்ரிவிக்ரம அபதா நத்தாலே அநந்யார்ஹம் ஆக்கிக் கொண்டவனை –கண்டு கொண்டனை நீயுமே –ஆபி முக்கிய பிரசங்கம் இல்லாத நீயும் லபிக்கப் பெற்றாய் இறே –பழம் கிணறு கண் வருகிறது என் –-நீ அவனைக் காண எங்கே எண்ணினாய்-பிரளய ஆபத்தில் பிரதி கூலிகைக்கு பரிகரம் இல்லை-(விலக்குகைக்கு பரிகரமாவது – விஷய ப்ராவண்யம்-ஸ்வரூப யோக்யதை யாதல் என்றுமாம் –)பிரதி கூலிகைக்கும் பரிகரம் உடைய நீ யன்றோ பெற்றாய் –பிரளயத்தில் அகப்பட்ட உலகத்திற்குத் தடுப்பதற்கு வழி இல்லை;-உலகத்தை அளக்கிற காலத்தில் அறிந்து தடுப்பதற்கு அங்குச் சமயம் இல்லை;-அறிந்தால் விலக்கி இருப்பார்கள் அன்றே? அசங்கிதமாக வருகையாலே பேசாதிருந்தார்கள் இத்தனை,-அவ்வாறு அன்றி விலக்குதற்கு எல்லா வழிகளையும் பெற்றிருந்த நீ விலக்காதிருந்தமையே அருமை’ என்பார்,  ‘நீயும்’ என உம்மை கொடுத்து ஓதுகின்றார்.


ப்ரஹ்மம் -கடவுள் -இறைவன் -பரத்வம் அறிந்து வணங்கி -எம்பிரான் எந்தை என்னுயிர் எளிமை நினைத்து நெருங்குவோம் -கண்ணன் -அஹம் மாம் -இரண்டையும் காட்டுமே

1-உள்ளத்தால் எண்ணினால் நினைத்தால் வரும்
2- எண்ணம் இல்லாவிட்டாலும் வரும்
3-ஓன்று இரண்டு மூன்று இவ்வாறு எண்ணிக் கொண்டு வந்தாலும் வரும்-

பரம புருஷார்த்தம் -ஸ்ரீ வைகுண்டம் -எம்பெருமான் பதம் -அத்விதீயம் -ஓன்று
கண்ணன் கோபாலனாக கோயிலே கொண்டுள்ள ஸ்தலங்கள் -இரண்டு –
ஸ்ரீ தேவி பூ தேவி நீளா தேவி பிரதான திவ்ய தேசங்கள் –மூன்று
பிரசித்த போக புஷ்ப தியாக ஞான மண்டபங்கள் -நான்கு
பஞ்ச கிருஷ்ண ஷேத்ரங்கள் -ஐந்து
விண்ணகர் என்று கொண்டாடப்படும் திவ்ய ஸ்தலங்கள் -ஆறு
முக்தி அளிக்கும் ஷேத்ரங்கள் -ஏழு
ஸ்வயம் வ்யக்த ஷேத்ரங்கள் -எட்டு
பகவத் ராமானுஜரின் வாழ்க்கையோடு பிணைந்து இருக்கும் ஷேத்ரங்கள் -ஒன்பது
ஆழ்வார்களின் திருவவதார ஸ்தலங்கள் -பத்து

ஸ்வயம் பாதம் ப்ரசார்ய ஸ்ரித்து ரிதஹரம் தக்ஷிணம் குஞ்சயித்வா
ஜானுன்யாதாய ஸவ்யேதர மிதரபுஜம் நாக போக நிதாய

பஸ்ஸாத் பாஹுத் வயேந ப்ரதிப டஸமநே தாரயன் சங்க சக்ரே
தேவீ விபூஷாதி ஜூஷ்டோ ஜநயது ஜகதாம் சர்ம வைகுண்ட நாத

ஆத்ம பரமாத்ம ஞானம் பக்தி தொண்டு ஆகியவற்றுக்கு குறைவற்ற ஸ்தலம் -ப்ரளயத்திலும் அழியாதது -கர்மங்களைத் தொலைத்து அர்ச்சிராதி மார்க்கத்தில் சென்ற ஆத்மா திரும்பி வருவதில்லை -பரமபத நாதனை ஆதிசேஷனில் அமர்ந்துள்ளார் –

வீர நாராயணப் பெருமாள் -மாடு கன்றோடு சேவை -ஸ்ரீ மன் நாதமுனிகள் ஸ்ரீ ஆளவந்தார் திருவவதார ஸ்தவம் -ஸ்ரீ நாதமுனிகளுக்கு -அருளிச் செயல்களைக் காட்டிக் கொடுத்த ராஜகோபாலன் –பெரியவாச்சான் பிள்ளை -தென்னானாய் வடவானாய் -இத்யாதி பாசுரம் சமர்ப்பித்து அபிமானித்த ஸ்தலம்
லஷ்மீ நாத ஸமாரம்பாம் நாத யாமுன மத்யமாம்
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்

மன்னார்குடி -ராஜகோபாலன் -ருக்மிணி ஸத்யபாமையோடு ஸ்ரீ வித்யா ராஜ கோபாலன் -32-திருக்கோல தர்சனம் ரிஷிகளுக்கு காட்டிக் கொடுத்து அருளினவன் –தக்ஷிண துவாரகை
உன்னுத்து மற்றொரு தெய்வம் தொழாள் அவனையல்லால்
நும்மிச்சை சொல்லி நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்
மன்னப்படு மறை வாணனை வண் துவராபதி
மன்னனை ஏத்துமின் ஏத்தலும் தொழுதாடுமே -4-6-10-மா முனிகள் ஸமர்ப்பித்து அபிமானித்து ஸ்தலம்

ஸ்ரீ தேவிக்கு பிரதான ஸ்தவம் -ஸ்ரீ ஸ்வேத கிரி என்னும் ஆதி திருவெள்ளறை -புண்டரீகாக்ஷப் பெருமாளுடன் சேவை -கிருத யுகத்திலே சிபி சக்ரவர்த்திக்காக ஸ்ரீ வராஹ ரூபத்தை காட்சி கொடுத்தருளிய ஸ்தலம்

நாச்சியார் ஆண்டாள் பிரதான ஸ்தவம் ஸ்ரீ வில்லிபுத்தூர் -பூதேவி நமக்காக குன்றாத வாழ்வான் வைகுந்தம் வான் போகந் தன்னை இகழ்ந்து ஆண்டாளாக திருத்துழாய்த் தோட்டத்தில் எடுத்து பெரியாழ்வார் திருமகளானார் –

நாச்சியார் கோயில் -நீளா தேவிக்குப் ப்ரதானம் -வஞ்சுளவல்லித்தாயார் -திருநம்பிக்கை நாச்சியார் -நறையூர் நம்பி சங்கர்ஷண ப்ரத்யும்ன அநிருத்தன் அனைவருடன் சாளக்கிராம திருமேனியுடன் சேவை ஸாதிக்கிறார் -திருமங்கை யாழ்வாருக்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்தருளிய பெருமாள்

1-போக மண்டபம் -ஸ்ரீ ரெங்கம் -பூ லோக வைகுண்டம் -பதின்மர் பாடும் பெருமாள் –
2-புஷ்ப மண்டபம் –சிந்து பூ மகிழும் திருவேங்கடம் -திருமலை -தோ மாலை பிரஸித்தம் -குறும்பறுத்த நம்பி வைபவம் -அநந்தான் பிள்ளை வைபவம் –
3-தியாக மண்டபம் -அத்தியூரான் புள்ளை யூர்வான் –திருக்கச்சி நம்பி ஆறு வார்த்தைகள் -ஆலவட்டம் கைங்கர்யம்
4-ஞான மண்டபம் -திரு நாராயண புரம் -கிருதயுகத்தில் தத்தாத்ரேயராக அவதரித்து வேதங்களை உபதேசித்து அருளிய ஸ்தலம் -த்ரேதா யுகத்தில் ராமனாலும் த்வாபர யுகத்தில் கண்ணனாலும் ஆராதிக்கப்பட்ட பெருமாள் -யதிராஜர் எழுந்தருளி ஞான பக்தி வளர்த்தருளிய ஸ்தலம் -யதிராஜ சம்பத்குமார் ப்ரஸித்தம்

பஞ்ச கிருஷ்ண ஷேத்ரங்கள்
1-திருக்கண்ணங்குடி
-கண்ணனூர் கண்ணபுரம் -64 சதுர்யுக ங்களாக சேவை -சவுரி ராஜர் ஐதிக்யம் -அமாவாசை தோறும் திருக் கைத்தல சேவை -விபீஷணனுக்காக -திருமங்கை ஆழ்வாருக்கு திருவெட்டு எழுத்து அர்த்தம்- கற்ப்பித்தார்
2-திருக்கண்ணங்குடி -வசிஷ்டர் ஆராதனப் பெருமாள் –தாமோதர நாராயணன் -லோக நாயகித் தாயார் -திருமங்கை ஆழ்வாருக்கு உதவின நான்கு -தீரா வழக்கு-உறங்காப்புளி -ஊராக்கிணரூ -காயா மகிழ் -இங்கு பிரசித்தம்
3-திருக்கோவலூர் -த்ரிவிக்ரமப் பெருமாள் ஆயனாக சேவை ஸாதிக்கும் ஸ்தலம் -மிருகண்டு மகரிஷி முதல் ஆழ்வார்கள் ப்ரத்யக்ஷம் –
4-திருக்கண்ண மங்கை–பெரும் புறக் கடல்-அபிஷேக வல்லித் தாயாராய் திருமணம் செய்தருளிய ஸ்தலம் -அடியார்களை உயிராகக்கொண்ட பத்தராவிப் பெருமாள் -ஸ்ரீ கிருஷ்ண மங்கள க்ஷேத்ரம் –
5-திருக் கபிஸ்தலம் -ஆற்றங் கரைக் கிடக்கும் கண்ணன் –
கஜேந்திர மோக்ஷம் திருவடிக்குக் காட்டி-ரமாமணித் தாயார் ஸமேத கஜேந்திர வரதன்

மண்ணகத்திலேயே ஆறு விண்ணகர் திவ்ய ஸ்தலங்கள்
1-திருவிண்ணகர்
-ஒப்பிலி அப்பன் -உப்பிலி அப்பன் -பொன்னப்பன் மணியப்பன் -முத்தப்பன் -என்னப்பன் –
2-திருக் காழிச் சீராம விண்ணகரம் -தாடாளன் -சீர் பெருகி பாபம் கழிகிற படியாக இந்தத் திருநாமம் – ஸித்தாஸ்ரமம் போல் இருப்பதால் ராம விண்ணகரம் என்றும் வழங்கப்படுகிறது –
3-திரு நந்திபுர விண்ணகரம் —ஸ்ரீ நாதன் கோயில் –செண்பக வல்லித் தாயார் ஸமேத ஜெகந்நாதப் பெருமாள்
4-திரு அரிமேய விண்ணகரம் -பொருள் வெண்ணெய் நம்முள்ளம் கோபிகள் ஸ்பர்சம் பட்ட த்ரவ்யங்கள் -நம் பாபங்கள் அனைத்தையுமே அபகரிப்பதால் அரி -மூலவர் குடமாடு கூத்தன் -கோவர்த்தன கிரிநாதனே இங்கு எழுந்தருளி உள்ளார் –
5-திரு வைகுந்த விண்ணகரம் -வீற்று இருந்த திருக்கோலம் -ஸ்வேதகேது இங்கு கைங்கர்யம் செய்து முக்தி பெற்றான் –
6-திரு பரமேஸ்வர விண்ணகரம் -முகுந்தவல்லித்தாயார் ஸமேதரராய் வீற்று இருந்த திருக்கோலம்-நடு தளத்தில் சயனத் திருக்கோலம் -மேல் தளத்தில் நின்ற திருக்கோலம் –

முக்தி தரும் ஷேத்ரங்கள் -ஏழு
1-அயோத்யா
-சரயு நதிக்கரை -அபராஜிதா
2-மதுரா -யமுனைக்கரையில் மதுரமான ஸ்தலம் -பாபங்களை மதனம் பண்ணி -கடைந் தெடுத்துப் போக்கி -புண்ணியங்களை அளித்து முக்தி தரும் -கீதையில் தான் பிராணத்தையும் வளர்ந்ததையும் த்யானித்தாலே அந்தப் பிறவியலே மறு பிறவியில்லா மோக்ஷம் அடைவான் -என்று அருளிச் செய்துள்ளான் அன்றோ –
3-மாயா -ஹரித்வாரம் -தேவ பிரயாக் கர்ண ப்ரயாக் -ருத்ர ப்ரயாக் -விஷ்ணு ப்ரயாக் -திருப்பிரிதி -பத்ரிநாத் அனைத்து ஸ்தலங்களுக்கும் தலைவாசல் -கங்கை கங்கையை என்னும் வாசகத்தினாலேயே கடு வினைகள் களையலாமே –
கங்கா த்வாரே குசா வர்தே பில்வகே நீல பர்வதே
ஸ்நாத்வா கநக லே தீர்தே புநர் ஜென்ம ந வித்யதே

வியத்தகு ஆற்றல் உள்ள படியாக இது மாயா என்றும் பெயர் பெற்றது -12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்ப மேளா நடைபெறும் இடம் –
4-காசி -வாரணாஸீ –
அன்யாநி முக்திக் ஷேத்ராணி காசீ ப்ராப்தி கராணி ச
காசீம் ப்ராப்ய விமுச்யதே நான்யதா தீர்த கோடிபி
காசீ காசீதி ஜபதோ யஸ்ய ஸம்ஸ்தி திஸ்
அந்யத்ராபி ஸதஸ்தஸ்ய புரோ முக்தி ப்ரகாஸதே —

வர்ணா மற்றும் அஸீ நதிகளுக்கு இடையில் -வாராணஸீ -ஆத்ம விஷயங்களை எல்லாம் –காசயதி ப்ரகாசயதி– விளங்கு வைக்கும் ஸ்தலம்-பிந்து மாதவனாக சேவை
5-காஞ்சீ -திருக்கச்சி -க -ப்ரஹ்மா யாகம் செய்து அஞ்சித்த-தொழுத ஸ்தலம் -ஸத்ய விரத க்ஷேத்ரம் -புண்யகோடி விமானம் -ஒரு புண்ணியம் கோடி புண்ணியமாக வளர்ந்து முக்தியை அளிக்கும் –
6-அவந்திகா -உஜ்ஜைன் -ஸூதாமா என்னும் குசேலருடன் ஸாந்தீபனி மகரிஷியிடம் 64 கலைகளையும் கற்ற ஸ்தலம் -ஷிப்ரா நதிக்கரையில் உள்ளது -12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா நடைபெறும் -இவ்வூரின் வாழியே கடக ரேகை ஓடுகிற படியாக விக்ரமாதித்ய மன்னர் காலத்தில் வானவியல் வல்லுநர்கள் இங்கு கூடிய கால க்ரஹ நிர்ணயம் செய்தனர் –
7-துவாரகா -முக்திக்கு வாசல் -கோமதி நதிக்கரையில் உள்ளது த்வாரகாதீசனாக சேவை ஸாதித்து அருளுகிறான் —

ஸ்வயம் வ்யக்த ஷேத்ரங்கள் -எட்டு
1-ஸ்ரீ ரெங்கம்
காவேரீ விரஜா சேயம் வைகுண்டம் ரெங்க மந்திரம்
ஸ வாசூ தேவோ ரெங்கேச ப்ரத்யக்ஷம் பரமம் பதம்
விமானம் ப்ரணவாகாரம் வேத ஸ்ருங்கம் மஹாத்புதம்
ஸ்ரீ ரெங்க ஸாயீ பகவத் ப்ரணவார்த்ஹ ப்ரகாசக

பூ லோக வைகுண்டம் –
ஸம்ஸாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன் என்று கிடக்கிறான் –
2- ஸ்ரீ முஷ்ணம் –ஸ்ரீ தேவி பூ தேவி யுடன் ஒரே கல்லில் கரப்ப க்ருஹத்தில் -சங்கு சக்கரம் ஏந்தி சேவை -முத்தக்காசு கோரைக்கிழங்கு பிரஸாதம் ஸமர்பிக்கப் படுகிறது –
ஸ்வேதம் ஸூ தர்சந தராங்கித பாஹு யுக்மம்
தம்ஷ்ட்ராகரால வதனம் தரயா ஸமேதம்
ப்ரஹ்மாதி பிர் ஸூர கணை பரி ஸேவ்யமானம்
த்யாயேத் வராஹ வபுஷம் நிக மைக வேத்யாம்

3-திருவேங்கடம் –
ஸ்ரீ ஸேஷாசல கருடாசல வேங்கடாத்ரி நாராயணாத்ரி வ்ருஷபாத்ரி வ்ருஷாத்ரி முக்யாம்
ஆக்யாம் த்வதீய வஸதே ரநிசம் வதந்தி ஸ்ரீ வேங்கடாசலபதே தவ ஸூ ப்ரபாதம்

பத்து புராணங்களும் பேசும் பெருமை -கண்ணாவான் விண்ணோர்க்கும் மண்ணோர்க்கும் –
4-சாளக்கிராமம்
மம தத் ரோஸதே ஸ்தாநம் கிரி கூட ஸி லோச்சய சாளக்ராம இதி க்யாதம் பக்த ஸம்ஸார மோக்ஷணம்
சாளக்ராம ஸிலாரூபீ தவ கர்ப கத ஸதா திஷ்டாமி தவ புத்ரத்வே பக்தா நுக்ரஹ காரணாத்

கண்டகி நதியின் பிரார்த்தனைக்கு ஏற்ப மடியில் தோன்றியருலி -இங்கு அமர்ந்த திருக்கோலத்தில் முக்திநாதனாக தர்சனம் அருளுகிறார்
5-நைமிசாரண்யம்
ததோ கச்சேத ராஜேந்திர மிஸ் ரகம் தீர்த முத்தமம்
தத்ர தீர்தா நி ராஜேந்த்ர மிஸ்ரிதாநி மஹாத்மநா
வ்யாஸேன ந்ருப சார்தூலத் விஜார்த மிதி நஸ் ஸ்ருதம்
ஸர்வ தீர்தே ஷு ஸ ஸ்நாதி மிஸ்ரகே ஸ்நாதி யோ நர

இங்கு காடாகவே தர்சனர் -ஒரு நிமிஷ நேரத்திலே அசுரர்களை அழித்தவன்
ஸூத மகரிஷி புராணங்கள் ஸுநகர் போன்ற முனிவர்களுக்கு அமர்ந்து உபதேசித்து அருளினார் -அயோத்யா மன்னர்களுக்கு யாக பூமியாக விளங்கிய ஸ்தலம்-

6-வானமா மலை -ஸ்ரீ வைகுண்டம் போல் வீற்று இருந்த திருக்கோலம் -சிரீவர மங்கை ஸமேதனாய் தெய்வநாயகன் -ரோமச முனிவருக்கு ப்ரத்யக்ஷம் -நித்ய எண்ணெய் தைலக்காப்பு –
7–புஷ்கரம் –
யதா ஸூராணாம் ஸர்வேஷாம் ஆதிஸ்து புருஷோத்தம
ததைவ புஷ் கரம் ராஜன் தீர்தா நாம் ஆதி ருச்யதே –

தீர்த்த வடிவமாகவே சேவை -நான்முகனுக்கும் கோயில் உண்டு -அவர் ஒரு அரக்கனை தமது கையிலே உள்ள தாமரையை வீசி அழிக்க -அது 52 பகுதிகளாகி இணைந்து புஷ்கரம் எனப்படுகிறது
8-பதரிகாச்ரமம்
யோவதீர்ய ஆத்ம நோம் ஸேந தாஷாயண்யாம் து தர்மத
லோகா நாம் ஸ்வஸ்தயே அத்யாஸ்தே தபோ பதரிகாஸ்ரமே

அலகானந்தா நதிக்கரையில் இலந்தை மரத்தடியில் தவம் செய்யும் திருக்கோலம் -நர நாராயணனாக -சிஷ்ய ஆச்சார்யனாக அஷ்டாக்ஷரம் உபதேஸித்து அருளிய திவ்ய க்ஷேத்ரம் -அக்ஷய திருதீயை முதல் தீபாவளி வரையே திறந்திருக்கும் -பின்னர் பனி மூடி விடும்

ஸ்ரீ ஸ்வாமி ராமானுஜ சரித்திர ஷேத்ரங்கள் ஒன்பது –
1-ஸ்ரீ பெரும்பூதூர்
-பிங்கள வர்ஷம் -1017-சித்திரை வளர்பிறை பஞ்சமி திதி வியாழக்கிழமை திருவாதிரை நக்ஷத்திரத்தில் திரவவதாரம் -சிவனின் பூத கணங்களால் கட்டப்பட்டதால் பூத புரீ -திருவவதார மண்டலத்தில் 74 ஆச்சார்யர்களின் திருவுருவங்களும் சேவை உண்டு
2-திருப்புட்குழி -வறுத்த பயறு முளைக்க வைக்கும் -மரகத வல்லித் தாயார் ஸமேத விஜய ராகவப் பெருமாள் -யாதவப்பிரகாசரிடம் கல்வி கற்ற ஸ்தலம் -பெரிய திருவுடையாருக்கு ஸம்ஸ்காரங்களைச் செய்த க்ஷேத்ரம்
3-மதுராந்தகம் –பெரிய நம்பிகளால் சமாஸ்ரயணம் பெற்றார் -ஏரி காத்த பெருமாள் மந்த்ர உபதேசம் பெற்ற ஆத்மாவைத் திருக்கல்யாணம் செய்தருளிய ஸ்தலம் –

4-தொண்டனூர் -நம்பி நாராயணப்பெருமாள் நின்ற திருக்கோலம் -ஆதிசேஷனாக ஆயிரம் புரவாதிகளை வாதத்தில் வென்றார்
5-ஸிம்ஹாசலம் -பக்த பிரகலாதனை ரக்ஷிக்க ஸிம்ஹ முகம் –ஸ்ரீ வராஹ நரஸிம்ஹர் -இங்கு ஸ்ரீ பாஷ்யம் உபதேசித்து அருளினார்
6- ஸ்ரீ கூர்மம்
நாரதரிடம் கூர்ம மந்த்ர உபதேசம் பெற்ற ஸ்வேத மஹாராஜாவுக்கு ப்ரத்யக்ஷம்
7-புரீ -புருஷோத்தமன் க்ஷேத்ரம்
8-ப்ரயாக் ராஜ் -திரிவேணி சங்கமம் -வேணி மாதவப் பெருமாள் சேவை –

த்ரிதண்டம் -தத்வத்ரயம் விளக்கி உபதேசம்
9-கயா -கயன் என்னும் அசுரனை அடக்கி கதாதரப் பெருமாளாக தர்சனம் -பால்குனி நதி தீர்த்தம் பிண்ட பிரதானம் –

ஆழ்வார்கள் திருவவதார ஸ்தலங்கள் பத்து
1-பொய்கையாழ்வார்
துலாயாம் ஸ்ரவணே ஜாதம் காஞ்சியாம் காஞ்சனா வாரிஜாத்
த்வாபரே பஞ்ச ஜன்யாம்சம் சரோ யோகிநாம் ஆஸ்ரயே

திருவெஃகா -சொன்ன வண்ணம் பொற்றாமரைக் குளத்தில் ஐப்பசி திருவோணம் அவதாரம் -பாஞ்சஜன்ய அம்சம் –

2-பூதத்தாழ்வார் -திருக்கடல் மல்லை –
துலாத நிஷ்டா ஸம் பூதம் பூதம் கல்லோல மாலிந
தீரே புல்லோத் பலே மல்லா புர்யாமீடே கதாம்சகம்
ஸ்தல சயனப் பெருமாள்
ஐப்பசி அவிட்டம் கதையின் அம்சம்
3-பேயாழ்வார் –
துலாஸ தனி ஷக்ஜாதம் மயூர பிரிகைரவாத்
மஹாந்தம் மஹாதாக்யாதாம் வந்தே ஸ்ரீ நந்தகாம்சகம்
ஐப்பசி சதயம் –மயூரவல்லித் தாயார் சமேத கேசவப் பெருமாள் சேவை சாதித்தருளும் மைலாப்பூரில் கிணற்றில் செவ்வல்லிப் பூவில்

4-திருமழிசை ஆழ்வார்
மகாயாம் மகர மாஸே சக்ராம்சம் பார்க்கவோத்பவம்
மஹீசார புராதீசம் பக்திசாரம் அஹம் பஜே
திருச்சக்கர அம்சம் -தை மகம்
5-நம்மாழ்வார்
வருஷயே து விசாகாயாம் குருகாபுரி காரிஜம்
பாண்டிய தேசே கலே ராதவ் சடாரிம் ஸைன்யபம் பஜே
கலிபிறந்து 42 நாள் வைகாசி விசாகம்
மதுரகவியாழ்வார்
மேஷே சித்ரா ஸமுத்பூதம் பாண்டியதே சே கணாம்சகம்
ஸ்ரீ பராங்குச ஸத் பக்தம் மதுரம் கவிம் ஆஸ்ரயே
திருக்கோளூரில் கணாம்சம் -சித்திரை மாதம் சித்திரை நக்ஷத்ரம்
6-குலசேகரப்பெருமாள்
கும்பே புனர்வசவ் ஜாதம் கேரளே சோள பட்டணே
கௌஸ்துப அம்சம் தராதீசம் குலசேகரம் ஆச்ரயே
திருவஞ்சிக்களம் –

7-பெரியாழ்வார்
மிதுநீ ஸ்வாதி ஜம் விஷ்ணோரதாம்சம் தன்வின புரே
ப்ரபத்யே ஸ்வ ஸூரம் விஷ்ணோர் விஷ்ணு சித்தம் புரஸ் ஸிகம்
ஆனி ஸ்வாதி -பெரிய திருவடி -அம்சம்
ஆண்டாள்
கற்கடே பூர்வ பல்குன்யாம் துளஸீ காந நோத் பவாம்
பாண்டிய விஸ்வம்பராம் கோதாம் வந்தேறி ஸ்ரீ ரெங்க நாயகீம்
பூமா தேவி அம்சம் -திருவாடிப்பூரம் –
8-தொண்டரடிப் பொடி ஆழ்வார்
கோதண்டே ஜ்யேஷ்ட நக்ஷத்ரே மண்டங்குடி புரோத்பவாம்
சோளோர்வ்யாம் வானமால அம்சம் பக்த பத்ரேணும் ஆஸ்ரயே
திருமண்டங்குடியில் மார்கழி கேட்டை
9-திருப்பாணாழ்வார்
விருஸ்சிகே ரோஹிணி ஜாதம் ஸ்ரீ பாணம் நிசுளாபுரே
ஸ்ரீ வத்ஸ அம்சம் காயகேந்த்ரம் முனிவாஹனம் ஆஸ்ரயே
திரு உறையூரில் கார்த்திகை ரோஹிணி
10-திருமங்கையாழ்வார்
விருஸ்சிகே கிருத்திகா ஜாதம் சதுஷ்கவி சிகாமணிம்
ஷட் பிரபந்த க்ருதம் சார்ங்க மூர்த்திம் கலிஹம் ஆஸ்ரயே
சார்ங்கம் அம்சம் -திருக் கார்த்திகை -திருக் கார்த்திகையில் அவதாரமே -இவர் மட்டுமே 47 திவ்யதேசங்களை மங்களாசாசனம் பண்ணி அருளி உள்ளார் -குமுதவல்லி நாச்சியாருடன் சேவை –


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

இரண்டாம் அத்யாயம் -மூன்றாம் பாதம்-ஆறாம் அதிகரணம் –பரா யத்த அதிகரணம்-

June 8, 2026

ஜீவாத்மாவுக்கு -ஜானாமி அறிவு நிலை -ஆசைப்படும் நிலை -முயற்சி செய்யும் நிலை -மூன்றும் உண்டு –

தூண்டுபவன் ப்ரஹ்மம் -நாம் பரதந்த்ரன் எல்லா அவஸ்தையிலும் -தூண்டுவது –
ஸாமான்ய காரணம் -விசேஷ காரணம் -விதை வயல்
முதல் பிரவிருத்திக்கு விசேஷ காரணத்தை ப்ரஹ்மம் கொஞ்சம் தானாகவே நிறுத்தி கர்மம் அடியாக செய்விக்கிறான் –

அந்த செயலுக்கு விசேஷ காரணமாக இருப்பதை விட்டுக் கொடுக்கிறான்–அதுவும் அவனது இன்னருளே-நாமும் ஆடுகள் அல்லவே -அவன் ஆட்டு இடையன் அல்லனே -ததாமி புத்தி யோகம் ஷிபாமி -அடக்குவார் இல்லாத ஸ்வா தந்திரம் உண்டே –

ஸ்ருஷ்டியாதி முகங்களாலே க்ருஷீ பண்ணினவன் அவனே –
அவன் அருளிய ஸாஸ்த்ர முகத்தாலும் -ஆச்சார்யர் உபதேச கடாக்ஷம் மூலமாகவும் -ஆத்ம ஞானம் பெற்று ஆத்ம குணங்களை வளர்த்து
இவ்வாறு இருவரும் சேர்ந்தே வியாபாரிக்கிறோம்

நானும் கர்த்தா அவனும் கர்த்தா -என்னை எதிர்பார்த்து இருக்கும் கர்த்தா -நான் கொடுத்த கரண களேபரங்களைக் கொண்டு -சேர்ந்து செய்வதையே பஞ்ச ஹேது –
இத்தையே வேதங்கள் விதிப்பது வீணாகாமல் போக ‘
மங்க ஒட்டு உன் மா மாயை -அவனுக்கும் உபதேசிக்கிறார்

ஸ்ருதி ப்ரகாசகர் நிர்வாகம் இப்படி இருந்தாலும்
வாதி கேசரி ஜீயர் -பாபம் கர்மம் செய்பவரை அனுமதிப்பதும் தூண்டுவதும் அவனுக்கு கொத்தை ஆகும் என்பதால் ‘பாப கர்ம விஷயத்தில் உதாசீனனாகவே உள்ளார் என்று நிர்வஹிப்பர்

நடாதூர் அம்மாள் -தத்வ சாரம் ஸ்லோகம் அடிப்படையில் வாதி கேசரி ஜீயர் தீப பிரகாசம் கிரந்தத்தில்
ஆதவ் ஈஸ்வர தத்தவ் புருஷ ஸ்வா தந்தர்ய சக்தியால் ஸ்வயம் அந்த அந்த ஞானம் -விருப்பம் பிரயத்தனம் மூன்றையும் வளர்த்துக் கொண்டு இருக்கிறான்
தத்ர உபேஷ்ய -ததோ அநு மஸ்ய -பெருமான் இருக்க-

தடுக்க சாமர்த்தியம் இருக்க செய்யாமல் இருந்தால் வைஷம்யம் நைர் க்ருண்யம் வருமே என்னில்

பாபம் வழியில் செல்பவனுக்கு நிக்ரஹம் புண்ய வழியில் செல்பவனுக்கு அனுக்ரஹம் அளிக்கிறான்
குற்றம் தட்டாது –
பகவான் தூண்டுவது அவனவன் கர்மம் அடிப்படையிலே தான் –
யோஜனா பேதங்கள் உண்டு இதில் -விசேஷ காரணத்வம் -மூன்றிலும் ப்ரஹ்மமே -இல்லை முதலில் ஸாமான்ய காரணத்தவம் என்பது பற்றியே யோஜனா பேதம்

பல நீ காட்டிப் படுக்காதே நெறி காட்டி நீக்காதே என்டர் சொல்லாமே

கிடாம்பி அப்புள்ளார் -புருஷார்த்தம் அளிப்பவன் -இவன் தாழ்ந்த ஒன்றை அர்த்திக்க- அத்தையே தானே அவன் அளிக்க வேண்டும் -ஆகவே குறை வராதே

அதிகரண சாராவளியில் தேசிகன் -இது ரீதி பங்கம் -முதல் முயற்சியிலும் தூண்டுகிறான் -கர்மாதீனம் என்பதால் குறை இல்லை

——–

தத் இதம் ஆஹ —

அதிஷ்டாநம் ததா கர்தா கரணம் ச ப்ருதக்விதம்–
விவிதாஸ்ச ப்ருதக் சேஷ்டா தைவம் சைவாத்ர பஞ்சமம்–৷৷18.14৷৷

அத்ர அதிஷ்டாநம் ச-அவை இடமும்,
கர்தா ச-செயலை செய்பவன்,
ப்ருதக்விதம் கரணம் ச-பலவிதக் கரணங்கள்,-கர்ம இந்திரியங்கள்
விவிதா: ப்ருதக் சேஷ்டா ச-வெவ்வேறு வகைப்பட்ட செயல் முறைகள்,
தைவம் ச பஞ்சமம்-இயற்கை என ஐந்து (காரணங்கள்).

ஸரீர வாங்மநோபிர்யத்கர்ம ப்ராரபதே நர–
ந்யாய்யம் வா விபரீதம் வா பஞ்சைதே தஸ்ய ஹேதவ—৷৷18.15৷৷

நர: ஸரீர வாக் ‌மநோபி:-மனிதன் உடம்பாலும் வாக்காலும் மனத்தாலும்,
யத் கர்ம ப்ராரபதே-எந்தச் செயலைத் தொடங்கினாலும்,
ந்யாய்யம் வா விபரீதம் வா-அது நியாயமாயினும் விபரீதமாயினும்,
தஸ்ய ஏதே பஞ்ச ஹேதவ:-அதற்கு இந்த ஐந்துமே காரணங்கள்.

சாஸ்திரத்தில் சித்திப்பதாகவோ -சாஸ்திரத்தில் தடுக்கப்பட்டதாகவோ உலா யாதொரு கர்மத்தை
உடலாலும் வாக்காலும் மனதாலும் மனிதன் தொடங்குகிறானோ அந்தக் கர்மத்துக்கு இந்த ஐந்தும் காரணங்கள் ஆகின்றன –
அவை யாவன – சரீரம் -அடுத்தபடியாக ஜீவாத்மா -அது போலவே பலவிதமான செயல்களை யுடைய
மனத்தோடு கூடிய ஐந்து கர்ம இந்திரியங்கள் -அவ்வண்ணமே ஐந்து வகைப்பட்ட செயல்களை யுடைய ப்ராணன்கள் –
இக்கர்மங்களுக்கு காரணமானவற்றில் ஐந்தாவதாயும் முக்கியமான காரணமாயும் இருக்கும் பரமாத்மாவுமேயாகும்
சரீரம் ஜீவாத்மா பற்றுக் கொம்பாக – ஜீவாத்மா – கருவிகள் இந்திரியங்கள் –ஐந்து வகை உண்டே -சேஷ்டை செய்யும் ஐவர்
பஞ்ச பிராணங்கள்-வேறே வேறே வேலை இவற்றுக்கு பிராணன் அபானன் சாமான வாயு இவற்றுக்கு வேலை வேறே வேறே
தெய்வம் பரமாத்மா -ஐந்து பெரும் சேர்ந்தே கார்யம்
தெய்வம் முக்கியம் மற்றை நாலையும் தூண்டுவித்து கார்யம் -கட்டை விரலை போலே –

சாஸ்திரம் சம்மதித்த கர்மம் -தொடங்கும் பொழுது -சரீர வாக் மனஸ் மூவகை பட்ட கர்மாக்கள் –
சம்மதிக்காதவையும் உண்டே – இந்த ஐந்தும் இருந்தால் தான் –
முக்கிய அர்த்தம் -கர்த்தா சாஸ்த்ரார்த்தவாத் –ஜீவாத்மா தான் கர்த்தா -விதிக்கிற படியால் -பரமாத்மாவை விதிக்காதே
சாஸ்திரம் அர்த்தம் ஆக வேண்டுமே
ஸ்வ தந்த்ர கர்த்தா இல்லை –
அடுத்து -பரார்த்த் து -ஈஸ்வராதீனம் —
ஈஸ்வர ஆணைக்கு உட்பட செய்தால் கர்ம பலன் ஜீவாத்மாவுக்கு சேரலாமோ -சங்கை வருமே
க்ருத ப்ரத்யநா அபேஷாத் -பிரயத்தனம் எதிர்பார்த்து –
உதாசீனம் அனுமந்தா -தூண்டி விடும் மூன்று நிலைகள்
முதல் நிலை உதாசீனம் -சாஸ்திரம் கொடுத்து ஞானம் கொடுத்து -முதல் முடிவு ஜீவாத்மா –
அனுமதி அளிக்கும் இரண்டாம் நிலை -நல்ல செயலோ தீய நிலையோ -அதிலேயே தூண்டி விடுகிறான் -குற்றம் வருமோ என்னில் –
தாய் குழந்தை விழும் பொழுது தடுக்காமல் -குற்றம் வருமோ -என்னில் –
ஸ்வாதந்திரம் கொடுத்ததால் -இவன் ஆட்டு வாணியன் இல்லையே -ஞானமும் கொடுத்தானே-
ஆழ்வார் நீ தான் சம்சாரத்தில் -தூராக் குழி தூர்த்து வைத்தாய் -என்றது -பரதந்த்ர நிலையில் இருந்தே -சொன்னார்கள் –
எல்லா பொறுப்பும் அவன் இடமே
சர்வாத்மனா ஸ்வாதந்தர்யம் விட வேண்டுமே -அந்த நிஷ்டை வந்தால் நாமும் இப்படி சொல்லலாம் –

உமிழ்தல் கண் சிமிட்டல் கொட்டாவி விடுதல் -பஞ்ச வ்ருத்தி பிராணன் செயல்கள்
காமம் சங்கம் நினைத்தல் உறுதி சங்கல்பம் சிந்தனை -மனசின் செயல்கள்

தைவம் -பகவான் -என்று கொள்ளாமல் -கர்மங்கள் கொள்ளலாமோ என்னில் அறிவற்ற இவை அறிவுள்ள ஜீவனைக் கட்டுப்படுத்தாதே -நாராயணனே தெய்வம் -கேசவன் கச்சதி-

ஆத்ய ப்ரவ்ருத்தி முதல் செயலில் உதாசீனம் -ஜீவன் செய்வதில் அனுமதி–தனது நியமனம் இதுக்கு வேண்டாம் என்று தானே தவிர்ந்து –
நீயே வியாபாரிக்கலாம் என்று ஏற்படுத்தி -கர்த்ருத்வம் வந்தால் தானே சாஸ்திரம் விதிகள் வீணாகாது -பரமாத்மாவின் ஆயத்தமே இதுக்கும் காரணம்
பின்பு அனுமந்தா -பின்பு தூண்டி -இப்படி மூன்று நிலைகள் -அவன் சாமான்ய காரணம் நாம்-நமது கர்மாக்கள் – விசேஷ காரணம் -வயலில் விதைக்குத் தக்க பயிர் போல்-இவற்றுக்கு மூன்று ஸூ த்ரங்கள்-உதங்க ப்ரஸ்னத்துக்கு உத்தரம் இல்லையே-

ஆறாம் அதிகரணம் –பரா யத்த அதிகரணம்-ஸூத்ரம் –252–பராத்து தத் ஸ்ருதே –2-3-40–

து ஸப்தம் சங்கையை விலக்குகிறது
பராத் -பரம புருஷ ஸங்கல்பத்தாலே
தத் -கர்த்ருத்வம் ஏற்படுகிறது
ஸ்ருதே-அந்தப் பிரவிஷ்டச் ஸாஸ்தா ஜனானாம் ஸர்வாத்மா ய ஆத்மாநம் அந்தரோ யமயதி -என்று
பரமாத்மாவுக்கு அதீனமான கர்த்ருத்வம் ஸ்ருதியில் கூறப்படுவதால்
இப்படி ஜீவன் பராதீன கர்த்தா என்றால் -ஈஸ்வரனே எல்லாரையும் தூண்டுவதால்
ப்ரயோஜக கர்த்தா ஆதலின் கர்மாவின் பலம் கர்த்தாவையே சாரும் என்பதால்
அவனுக்கே விதி நிஷேத வாக்யங்களுக்கு வச்யத்வம் ஏற்படும் என்ற சங்கையை நிரசிக்கிறார் –

ஸூத்ரம் –253–க்ருத ப்ரயத்ன அபேக்ஷஸ் து விஹித பிரதி ஷித்த அவையர்த் யாதிப்ய –2-3-41-

து -ஸப்தம் சங்கையை விலக்குகிறது
முதல் ப்ரவ்ருத்தியிலே ஜீவன் செய்யும் ப்ரயத்னத்தை அபேக்ஷித்துப் பரம புருஷன் ஜீவனை ப்ரவர்த்திப்பிக்கிறான்
ஏன் எனில்
விஹித பிரதி ஷித்த அவையர்த் யாதிப்ய–ஜீவனுக்கு முதல் பிரவிருத்தியில் ஸ்வ தந்தர்ய தன்மையை அங்கீ கரிக்கா விட்டால்
இதைச் செய் செய்யாதே என்னும் விதி நிஷேத ஸாஸ்த்ரங்களுக்கு வியர்த்தத் தன்மை வரும் –
ஜீவன் தண்டனைக்கோ அனுக்ரஹத்துக்கோ ஆளாகாமல் போவான்
அக் குறைகள் வாராமைக்காக ஜீவனின் முதல் முயற்சியை எதிர்பார்த்தே பகவான் இவனைப் பிரவர்த்திப்பிக்கிறான் –
அந்த முதல் முயற்சியிலும் ஸ்வா தந்தர்யம் ஈஸ்வரனால் கொடுக்கப் பட்டது-அதுவும் முன் பின் கர்மாக்களின் பலம் அளிப்பதாகக் கருதப்படுகிறது –

1-ஈஸ்வரன் ஸ்வதந்த்ரனான படியால் கர்த்ருத்வம்
2-ப்ரயோஜ்ய கர்த்தாவான ஜீவன் மூலம் செய்விப்பதால் ப்ரேரகத்வம்
3-ப்ரவர்த்தனான சேதனனை மீண்டும் மீண்டும் செய்யத் தூண்டுவதால் அனுமந்த்ருத்வம்
4-முளைகளுக்கு ஜலம் போலே சர்வத்திற்கும் பொதுக் காரணம் ஆதலின் உதா சீனத்தவம்
5- எப்போதும் எல்லாவற்றையும் காண்கையாலே ஸாஷித்வம்
6-அவனவன் கர்மத்துக்கு ஏற்றவாறு செய்விப்பதால் சஹகாரித்வம்
7- சர்வ ஸ்வாமியாய் ஆஸ்ரித ரக்ஷண பலத்தைத் தானே ஏற்பதால் பலித்தவம்
8-பலமதே உப பத்தே என்பதால் ஸர்வ கர்ம பல பிரதத்வம்
என்ற இவை அனைத்தும் ஓர் ஓர் காலத்தில் இன்றியிலே சர்வ காலத்திலும் இருப்பதால் ஒன்றுக்கு ஓன்று விரோதம் இல்லை

ஆகையால் ஜீவனுடைய கர்மத்தை அபேக்ஷித்து ஸ்ருஷ்டியாதிகளைச் செய்வதால்
ஈஸ்வரனுக்கு வைஷம்யமும் நைர் க்ருண்யமும் கிடையாது என்பது கருத்து –

———–

தத் இதம் ஆஹ —

৷৷18.14৷৷ந்யாய்யே ஷாஸ்த்ர ஸித்தே விபரீதே ப்ரதிஷித்தே வா ஸர்வஸ்மிந் கர்மணி- ஷாரீரே வாசிகே மாநஸே ச பஞ்ச ஏதே ஹேதவஃ. -அதிஷ்டாநஂ ஷரீரம்? அதிஷ்டீயதே ஜீவாத்மநா இதி மஹா பூத ஸஂகாத ரூபஂ ஷரீரம் அதிஷ்டாநம். ததா கர்தா ஜீவாத்மா; அஸ்ய ஜீவாத்மநஃ ஜ்ஞாதரித்வஂ கர்தரித்வஂ ச — ‘ஜ்ஞோத ஏவ’ (ப்ர0 ஸூ0 2.3.18)’கர்தா ஷாஸ்த்ர அர்தவத்த்வாத்’ (ப்ர0 ஸூ0 2.3.33) இதி ச ஸூத்ர உபபாதிதம். கரணஂ ச பரிதக் விதம் வாக் பாணி பாதாதி பஞ்சகஂ ஸ மநஸ்கஂ கர்மேந்த்ரியம்? பரிதக் விதஂ கர்ம நிஷ்பத்தௌ பரிதக் வ்யாபாரம். விவிதாஃ ச பரிதக் சேஷ்டாஃ — சேஷ்டா ஷப்தேந பஞ்சாத்மா வாயுஃ அபிதீயதே? தத் வரித்தி வாசிநா? ஷரீர இந்த்ரிய தாரகஸ்ய ப்ராணா பாநாதி பேத பிந்நஸ்ய வாயோஃ பஞ்சாத்மநோ விவிதா ச சேஷ்டா விவிதா வரித்திஃ. தைவஂ ச ஏவ அத்ர பஞ்சமம்? அத்ர கர்ம ஹேது கலாபே தைவஂ பஞ்சமம் -பரமாத்மா அந்தர்யாமீ கர்ம நிஷ்பத்தௌ ப்ரதாந ஹேதுஃ இதி அர்தஃ- உக்தஂ ஹி’ஸர்வஸ்ய சாஹஂ ஹரிதி ஸந்நிவிஷ்டோ மத்தஃ ஸ்மரிதிர் விஜ்ஞாநம் அபோஹநஂ ச.’ (கீதா 15.15) இதி. வக்ஷ்யதி ச — ‘ஈஷ்வரஃ ஸர்வ பூதாநாஂ ஹரித்தேஷேர்ஜுந திஷ்டதி. ப்ராமயந் ஸர்வ பூதாநி யந்த்ரா ரூடாநி மாயயா৷৷’ (கீதா 18.61) இதி.(தைவம் -பகவான் -என்று கொள்ளாமல் -கர்மங்கள் கொள்ளலாமோ என்னில் அறிவற்ற இவை அறிவுள்ள ஜீவனைக் கட்டுப்படுத்தாதே -நாராயணனே தெய்வம் -கேசவன் கச்சதி )

பரமாத்ம ஆயத்தஂ ச ஜீவாத்மநஃ கர்தரித்வம் — ‘பராத்து தச் ச்ருதேஃ’ (ப்ர0 ஸூ0 2.3.41) இதி உபபாதிதம்.நநு ஏவஂ பரமாத்ம ஆயத்தே ஜீவாத்மநஃ கர்தரித்வே ஜீவாத்மா கர்மணி அநியோஜ்யோ பவதி இதி விதி நிஷேத ஷாஸ்த்ராணி அநர்தகாநி ஸ்யுஃ.

இதம் அபி சோத்யஂ ஸூத்ர காரேண ஏவ பரிஹரிதம்.’கரித ப்ரயத்ந அபேக்ஷஸ்து விஹித ப்ரதிஷித்த அவையர்த்யாதிப்யஃ’ (ப்ர0 ஸூ0 2.3.42)

இதி.ஏதத் உக்தஂ பவதி — இத்தால் சொல்லிற்று ஆயிற்று -பரமாத்மநா தத்தைஃ ததாதாரைஃ ச கரண கலேவராதிபிஃ ததாஹித ஷக்திபிஃ ஸ்வயஂ ச ஜீவாத்மா ததாதாரஃ ததா ஹித ஷக்திஃ ஸந் கர்ம நிஷ்பத்தயே ஸ்வேச்சயா கரணாத் யதிஷ்டாநாகாரஂ ப்ரயத்நஂ ச ஆரபதே; ததந்தஃ அவஸ்திதஃ பரமாத்மா ஸ்வாநுமதி தாநேந தஂ ப்ரவர்தயதி இதி ஜீவஸ்ய அபி ஸ்வபுத்த்யா ஏவ ப்ரவரித்தி ஹேதுத்வம் அஸ்தி. யதா குருதர ஷிலா மஹீருஹாதி சலநாதி-(பெரிய பாறை தள்ள பலரும் செய்வது போல்) பல ப்ரவரித்திஷு பஹுபுருஷஸாத்யாஸு பஹூநாஂ ஹேதுத்வஂ விதி நிஷேத பாக்த்வஂ ச இதி.

৷৷18.14৷৷உக்தவிவரணதயா ஷ்லோகத்வயஸ்யாபுநருக்திஂ பரமதே விரோதஂ சாபிப்ரேத்யாஹ — ‘ததிதமாஹேதி’. தத் ஷ்ருதிஸித்தம்? இதஂ விவக்ஷிதமித்யர்தஃ. ந்யாய்யஂ ந்யாயாதாநபேதஂ’தர்மபத்யர்தந்யாயாதநபேதே’ [அஷ்டா.4.4.92] இத்யநுஷாஸநாத். ந்யாயஷப்தஷ்சாத்ர அர்தாந்தராநௌசித்யாத்வ்யுத்பத்த்யநுரோதாச்ச ஷாஸ்த்ரமேவாநுஸந்தத்த,இத்யபிப்ராயேணாஹ — ‘ஷாஸ்த்ரஸித்த’ இதி. ஷாஸ்த்ரஸித்தேந ஸஹ லௌகிகவிவக்ஷாயாஂ ததந்யத்வேதி வக்தவ்யம். விஹிதே நிர்திஷ்டே விபரீதஷப்தஷ்ச நிஷித்தே ஸ்வரஸஃ; கைமுத்யேந ச லௌகிகஂ லப்யமித்யபிப்ராயேணாஹ — ‘ப்ரதிஷித்தே வேதி’.’ஸர்வஸ்மிந் கர்மணீதி’ பலிதோக்திஃ. யதா ஷாரீரமாநஸவாசிகேஷு கர்மஸு ஷரீராதீநாஂ ப்ராதாந்யேந ப்ரதிநியததா; ந ததாமீ பஞ்ச ஹேதவஃ; அபிது ப்ரதிகர்ம பஞ்சாப்யபேக்ஷிதா இத்யபிப்ராயேண ஷாரீரத்வாத்யுக்திஃ. பஞ்சஹேதுகேஷு ஸர்வேஷு கர்மஸு ப்ராதாந்யாதேவ ஹி ஷாரீரத்வாதிவிபாகஃ. யத்யபி ஜகத்ஸரிஷ்ட்யாதிஷு பரமாத்மைவ காரணஂ? ததாபி க்ஷேத்ரஜ்ஞகர்தரிகேஷு பரமாத்மநா ஸ்வேச்சயைவமுபகரணீகரிதாந்யேதாநீத்யபிப்ராயேண ஹேத்வந்தரோக்திஃ.

‘அதிஷ்டாநஂ க்ஷேத்ரமாஹுஃ’ [ம.பா.12.307.14] இதி கராலாயாஹ வஸிஷ்டஃ; ததநுஸாரேணாஹ — ‘அதிஷ்டாநஂ ஷரீரமிதி’. ஷ்ருதிஷ்ச — “மகவந்மர்த்யஂ வா இதஂ ஷரீரமாத்தஂ மரித்யுநா ததேத-(ததஸ்யா)-தமரிதஸ்யாஷரீரஸ்யாத்மநோதிஷ்டாநம்” [சாஂ.உ.8.12.1] இதி ஷரீரேதிஷ்டாநஷப்தஂ ப்ரயுங்க்தே.’கரித்யல்யுடோ பஹுலம்’ [அஷ்டா.3.3.113] இதி கர்மார்ததயா ஷரீரேதிஷ்டாநஷப்தஂ வ்யுத்பாதயதி — ‘அதிஷ்டீயத’ இதி. அதிஷ்டாதுர்ஜீவஸ்யாபி பரமாத்மாதிஷ்டேயத்வாத்தத்வ்யவச்சேதாய’ஜீவாத்மநேதி’ விஷேஷிதம். ஜீவாதிஷ்டேயஸ்யாபி கரணாதேஃ பரிதங்நிர்தேஷாத்தத்ஸங்கோசாயாஹ’மஹாபூதஸங்காதரூபமிதி’.

விஷ்வகர்துரிஹ தைவஷப்தேந பரிதக்க்ரஹணாத் கர்தரிஷப்தஸ்ய சாத்ர’ஷாஸ்த்ரபலஂ ப்ரயோக்தரி’ [பூ.மீ.3.7.18] இதி ந்யாயஸூசநார்தத்வாச்ச’கர்தா ஜீவாத்மேத்யுக்தம்’. நநு கர்தரித்வஂ ஹி ஜ்ஞாநசிகீர்ஷாபூர்வகப்ரயத்நயோகித்வஂ; ஜ்ஞாநமாத்ரஸ்யாத்மநோ ஜ்ஞாதரித்வாஸம்பவாத்தந்மூலஂ கர்தரித்வமபி ந ஸ்யாதேவேத்யத ஆஹ — ‘அஸ்ய ஜீவாத்மநோ ஜ்ஞாதரித்வஂ கர்தரித்வஂ சேதி’.’ஜ்ஞோத ஏவ’ [ப்ர.ஸூ.2.3.18] இத்யாதிஸூத்ரக்ரஹணஂ? ஷ்ருத்யாதேரபி தத ஏவாகர்ஷணாத்.

கர்மோத்பத்திஹேதூபந்யாஸாத்கரணஷப்தோத்ர கர்மேந்த்ரியமாத்ரபர இத்யபிப்ராயேணாஹ’வாகிதி’. யத்யபி ஜ்ஞாநேந்த்ரியாணாஂ தத்தத்விஷயஜ்ஞாநோத்பாதநத்வாரா பரம்பரயா கர்மணி ஹேதுத்வமஸ்தி? ததாபி வஸ்துமாத்ரேஷ்வாலோசிதேஷு மநஸா ஸங்கல்ப்யைவ கர்மகரணாந்மநஸஷ்சாந்யவ்யாபாரவ்யவதாநாபாவாத் — ‘ஸமநஸ்கமித்யுக்தம்’. ஜ்ஞாநேந்த்ரியஸ்யாபி மநஸஃ கர்மேந்த்ரியப்ரவரித்திஷ்வபி ஸாதாரண்யாத்கர்மேந்த்ரியத்வோக்திஃ.’ஷரீரவாங்மநோபிஃ’ இத்யத்ரைவோக்தேஃ மநஸஃ ஸங்கல்பாதிகர்மாபேக்ஷயா வா கர்மேந்த்ரியத்வவாதஃ. ஸாங்க்யைரப்யேவமேவோக்தஂ — ‘புத்தீந்த்ரியாணி சக்ஷுஷ்ஷ்ரோத்ரக்ராணரஸநத்வகாக்யாநி (ஸ்பர்ஷநகாநி). வாக்பாணிபாதபாயூபஸ்தாந்கர்மேந்த்ரியாண்யாஹுஃ. உபயாத்மகமத்ர மநஃ ஸங்கல்பகமிந்த்ரியஂ ச ஸாதர்ம்யாத்’ [ஸாஂ.கா.26;27] இதி.கர்மஹேதுஷூபாதீயமாநேஷு’பரிதக்விதம்’ இதி விஷேஷணஂ ததுபயுக்தவ்யாபாராக்யவிதாபரமித்யாஹ’கர்மநிஷ்பத்தௌ பரிதக்வ்யாபாரமிதி’. வாகாதிஷ்வேகைகஸ்ய வசநாதாநவிஹரணோத்ஸர்காநந்தஸங்கல்பாதிக்ரியாவ்யாபாரோ ஹி மிதோ விலக்ஷணஃ. ப்ரயத்நமூலா ஷரீராதிக்ரியைவ ஹி சேஷ்டேத்யுச்யதே; அதோத்ர கர்மணஸ்ததேவ காரணமித்யாத்மாஷ்ரயஃ ஸ்யாத்; தத்ராஹ — ‘சேஷ்டாஷப்தேந பஞ்சாத்மா வாயுரிதி’.’அபிதீயத’ இதி ஷப்தேந ப்ரதிபாதநமாத்ரஂ விவக்ஷிதம். அத்ர தத்தேதாவந்யஸ்மிந் லக்ஷயிதவ்யே வாகாதீநாஂ கரணாதிஷப்தைருபாத்தத்வாத்ப்ராணஸஂவாதாதிஷு கரணாநாஂ ஷரீரஸ்ய ச ஸ்திதிப்ரவரித்தேஃ ப்ராணாயத்தத்வஷ்ருதேஃ ப்ராணப்ரவரித்திநிமித்தசேஷ்டாவாசிநா ஷப்தேந ப்ராணலக்ஷணாத்ர யுக்தேத்யபிப்ராயேணாஹ — ‘தத்வரித்திவாசிநேதி’. சேஷ்டாஷப்தேநேதி பூர்வேணாந்வயஃ.

ப்ராணஸஂவாதாதிஸ்மாரணேந ப்ராணலக்ஷணாயா ஔசித்யஂ வரித்தேர்வைவித்யஂ ச விவரிணோதி — ‘ஷரீரேந்த்ரியேதி’. பரிதக்சப்தவிவிதஷப்தயோஃ பௌநருக்த்யபரிஹாராயாஹ’ஷரீரேந்த்ரியதாரகஸ்ய ப்ராணாபாநாதிபேதபிந்நஸ்யேதி’. அதிஷ்டாநகர்தரிகரணவ்யாபாராபேக்ஷயா ஷரீரேந்த்ரியவர்கரூபவிஷயபேதேந ச பரிதக்த்வஂ ப்ராணாதிவரித்திபேதப்ரதிநியதோச்ச்வாஸநிமேஷோந்மேஷாதிவ்யாபாரைர்வைவித்யஂ சேதி பாவஃ. பஞ்சாத்மஷப்தோத்ர பஞ்சவரித்தித்வபரஃ; ததா ச ஸூத்ரஂ — ‘பஞ்சவரித்திர்மநோவத்வ்யபதிஷ்யதே’ [ப்ர.ஸூ.2.4.12] இதி. பஞ்சவரித்தித்வோக்திஷ்ச நாககூர்மகரிகரதேவதத்ததநஞ்ஜயரூபவரித்த்யந்தரபஞ்சகஸ்யாபி ப்ரதர்ஷிகா. ‘தைவஂ சைவாத்ர பஞ்சமம்’ இத்யத்ர தைவாக்யப்ரதாநநிர்தாரணார்தமத்ரேத்யநுவாத இத்யாஹ — ‘அத்ர கர்மஹேதுகலாப’ இதி. பரமாத்மநஃ பஞ்சமதயா பரிகணநே ஷ்ருத்யர்தபாடாதிக்ரமாஸம்பவாத்வாசஃ க்ரமவர்தித்வேந யதாஸம்பவஂ பரிகணநேபி’பஞ்சமம்’ இதி பூரணே நிர்தேஷே ப்ரயோஜநாபாவாத் யதா கடவல்ல்யாம் — “இந்த்ரியேப்யஃ பரா ஹ்யர்தாஃ” இத்யுபக்ரம்ய “மஹதஃ பரமவ்யக்தமவ்யக்தாத்புருஷஃ பரஃ. புருஷாந்ந பரஂ கிஞ்சித்ஸா காஷ்டா ஸா பரா கதிஃ’ [1.3.10;11] இதீந்த்ரியாதிஸமஸ்தப்ரவரித்தௌ ப்ரதாநஹேதுஃ பரமபுருஷோ வஷீகரணீயகாஷ்டாத்வேந நிர்திஷ்டஃ? தத்வதிஹாபீத்யபிப்ராயேணாஹ — ‘பரமாத்மாந்தர்யாமீதி’. நநு’தைவஂ புராகரிதஂ கர்ம”தைவஂ திஷ்டஂ பாகதேயம்’ [அமரஃ1.4.28] இத்யாதிஷு ப்ராசீநகர்மரூபபோக்யபர்யாயதயா தைவஷப்தஂ படந்தி; தஸ்ய ச ஹேதுத்வமுபபந்நம்; அதஃ கதமத்ர பரமாத்மேத்யுச்யதே இத்தஂ ந ஹி ப்ராகேவ விநஷ்டாநாஂ கர்மணாஂ ஸ்வரூபேண ஹேதுத்வஂ ஸம்பவதி; அதஃ கர்மஜந்யாதரிஷ்டரூபபரமபுருஷஸங்கல்பஸ்யைவ ஹேதுத்வஂ வக்தவ்யஂ; ததோ வரஂ தஸ்யைவ தைவஷப்தேந ப்ரதிபாதநம்; அஸ்தி ச தைவஷப்தஸ்ய தைவதபர்யாயதயாபி லோகவேதயோஃ ப்ரஸித்திஃ; யதா — ‘ஸத்யஂ ஸத்யஂ புநஃ ஸத்யமுத்தரித்ய புஜமுச்யதே. வேதஷாஸ்த்ராத்பரஂ நாஸ்தி ந தைவஂ கேஷவாத்பரம்’ [நரி.பு.18.33] இதி. நஹ்யத்ரார்தாந்தரஂ ஸம்பவதி. ஏவஂ ஷ்ரீமத்ராமாயணேபி — ‘ஸ்வாதீநஂ ஸமதிக்ரம்ய மாதரஂ பிதரஂ குரும். அஸ்வாதீநஂ கதஂ தைவஂ ப்ரகாரைரபிராத்யதே’ [வா.ரா.2] இதி. ததா ஸபாபர்வணி — ‘ஷ்ரூயதாஂ பரமஂ தைவஂ துர்விஜ்ஞேயஂ மயாபி ச. நாராயணஸ்து புருஷோ விஷ்வரூபோ மஹாத்யுதிஃ’ இதி. ததா யாஜ்ஞவல்க்யப்ரணீதே யோகஷாஸ்த்ரே — ‘ஆர்ஷஂ சந்தஷ்ச மந்த்ராணாஂ தைவதஂ ப்ராஹ்மணஂ ததா’ இதி. உக்த ஏவார்தஃ புநஃ’ஆர்ஷஂ சந்தஷ்ச தைவஂ ச’ இத்யாதிநாபி நிர்திஷ்யதே. தத்ரைவ தைத்யமோஹநார்தே ப்ரஜாபத்யுபதேஷாநுவாதே’ஆத்மாநஂ பூஜயேந்நித்யஂ பூஷணாச்சாதநாதிபிஃ. ஸ்வதேஹ ஏவ தைவஂ ஸ்யாதந்யத்தைவஂ ந வித்யதே’ [யோ.யா.] இதி. ததா — ‘தைவாதீநஂ ஜகத்ஸர்வஂ மந்த்ராதீநஂ ச தைவதம். தந்மந்த்ரஂ ப்ராஹ்மணாதீநஂ தஸ்மாத்விப்ரா ஹி தைவதம்’. [வி.ஸஂ.22] இதி. அஸ்மிந்நபி ஷாஸ்த்ரே’ஸாதிபூதாதிதேவஂ மாம்’ [7.30] இதி ப்ரஸ்தாவ்ய’அதிதைவஂ கிமுச்யதே’ [8.1] இதி பரிஷ்டமர்தஂ’புருஷஷ்சாதிதைவதம்’ [8.4] இதி ப்ரதிவக்தி. சாந்தோக்யே () ச ஆதித்யாக்யதைவதவர்திநஃ புருஷஸ்யாதிதைவதமிதி நாமோச்யதே — “தஸ்யோபநிஷதஹஃ” [பரி.உ.5.5.3] இத்யதிதைவதஂ “தஸ்யோபநிஷதஹஂ” [பரி.உ.5.5.4] இத்யத்யாத்மம். இதி. ஏவமந்யத்ராபி த்ரஷ்டவ்யம். அந்யைரபி சாத்ர தைவஷப்தஷ்சக்ஷுராத்யநுக்ராஹகாதித்யாதிவிஷயதயா வ்யாக்யாதஃ. வயஂ த்வாதித்யாதீநாமப்யநுக்ராஹகஂ பரமாத்மாநமிஹ தைவஂ ப்ரூம இதி விஷேஷஃ. ப்ரயுக்தஂ ச ஸ்தோத்ரே’ப்ரக்யாததைவபரமார்தவிதாஂ மதைஷ்ச’ [ஸ்தோ.ர.15] இதி. லக்ஷ்மீகல்யாணே ச — ‘தர்மே ப்ரமாணஂ ஸமயஸ்ததீயோ வேதாஷ்ச தத்த்வஂ ச ததிஷ்டதைவம்’ இதி. தஸ்மாத்தேவஷப்தோத்ர தேவதாபர்யாயஃ. ஸ சாத்ர ஸர்வப்ரவர்தகஹேதுபரத்வாத்விஷேஷகாபாவாச்ச பரதேவதாவிஷய உசித இதி’பரமாத்மாந்தர்யாமீ கர்மநிஷ்பத்தௌ ப்ரதாநஹேதுரித்யுக்தம்’. யதாஸௌ ஸர்வேஷாமாத்மா? ந ததாஸ்ய கஷ்சிதித்யதஃ பரமாத்மா. ததா ஷரீராதேஃ ப்ரவரித்தௌ ஜீவஃ ப்ரதாநஹேதுஃ? ததா தஸ்யாப்யஸாவித்யபிப்ராயேணாந்தர்யாமித்வோக்திஃ. தத்விவக்ஷாமத்ர பூர்வாபராப்யாஂ ஸ்தாபயதி — ‘உக்தஂ ஹீத்யாதிநா’. நநு’ஸ்வதந்த்ரஃ கர்தா’ [அஷ்டா.1.3.5] இதி கர்தரிலக்ஷணமநுஷிஷ்டம்; இஹ ச கர்தேதி க்ஷேத்ரஜ்ஞ ஏவ நிர்திஷ்டஃ; அதஃ காரகாந்தரப்ரயோக்தரித்வஂ காரகாந்தராப்ரயோஜ்யத்வஂ ச தஸ்யாங்கீகர்தவ்யம். தஸ்மாத்தைவமப்யத்ராதிஷ்டாநாதிவத்ததபேக்ஷயா குணீபூதஂ வக்தவ்யமித்யத்ராஹ — ‘பரமாத்மாயத்தஂ சேதி’. உத்பந்நஜ்ஞாநசிகீர்ஷாப்ரயத்நஸ்ய ஹி புருஷஸ்ய காரகாந்தரப்ரயோக்தரித்வாதிகம்; ஜ்ஞாநாத்யுத்பத்திரேவ து பரமாத்மாயத்தேதி ஷ்ருதிஸித்தத்வாத்? ஜீவஸ்ய பராயத்தகர்தரித்வஂ ஸ்வாதந்த்ர்யஂ சாவிருத்தமிதி ஷாரீரகே ஸ்தாபிதமிதி பாவஃ.இமமபிப்ராயமஜாநந்வாயூதகாதிவத்பரமாத்மநஃ ப்ரேரகத்வாச்சோதயதி — ‘நந்வேவமிதி’. ஜ்யோதிஷ்டோமாதிஷு யதி பரமாத்மா ப்ரேரயதி? ததா ந ஜீவஸ்ய கிஞ்சித்விதேயஂ; ந ஹி ப்ரபலேந ஹ்ரியமாணஸ்ய கமநவிதிஃ; அத நிருந்தே? ததாபி ந விதேயஂ; ந ஹி துர்பலஸ்ய ப்ரபலேந நிருத்தஸ்ய கமநவிதிஃ; ஏவஂ யத்ர பரமாத்மா ப்ரவர்தயதி? தத்ர நிவரித்தேரஷக்யத்வாந்நிஷேதோ நிஷ்பலஃ; யத்ர து ந ப்ரவர்தயேத்? தத்ர து ப்ரவரித்தேரேவாஷக்யத்வாந்ந நிஷேதாபேக்ஷேதி பாவஃ. இயமத்ர சார்வாகேதரஸமஸ்தஸித்தாந்தாவலம்பிநீ சோத்யகாஷ்டா — ‘நிக்ரஹாநுக்ரஹாம்நாதபூர்வாதரிஷ்டப்ரசோதிதஃ. நிக்ரஹாநுக்ரஹாத்யர்ஹ இதீதஂ கடதே கதம்’ இதி. ஜீவஸ்ய ஜ்ஞாதரித்வகர்தரித்வபாரதந்த்ர்யாபாவசோத்யவத் பாரதந்த்ர்யேபி விதிநிஷேதவையர்த்யப்ரஸங்கசோத்யமபி பஞ்சமவேதததுபந்ஷிதோர்த்ரஷ்டா பகவாந்பாதராயணஃ ஸ்வயமேவ பரிஜஹாரேத்யாஹ — ‘இதமபீதி’. விஹிதப்ரதிஷித்தாவையர்த்யாதிஹேதுப்ய ஏவ சேதநேந கரிதஂ ப்ரயத்நமபேக்ஷ்ய பரமாத்மா உத்தரோத்தரேஷு ப்ரவர்தயதீதி ஸூத்ரார்தஃ. தத்ர ஸர்வப்ரவரித்திஷு பரமாத்மாதீநாஸு கதஂ கரிதப்ரயத்நாபேக்ஷத்வமுச்யதே வையர்த்யசோத்யஸ்ய சாவையர்த்யாஸித்த்யர்ததயா பரிஹாரே ஸாத்யாவிஷேஷஷ்ச ஸ்யாதிதி ஷங்காயாஂ ஸூத்ரஸ்யாபிப்ராயிகமர்தமாஹ — ‘ஏததுக்தமிதி’.’அயமபிப்ராயஃ’ — யத்தாவதீஷ்வரஸ்ய யந்த்ராதிவத்த்வஸங்கல்பகல்பிதப்ரவரிக்திஷக்தீநாஂ கரணகலேவராணாஂ ஸமர்பணஂ? யச்ச பூதலாதிவத்ஸர்வப்ரவரித்திநிவரித்த்யாநுகுண்யேந ஸ்வரூபதஃ ஸங்கல்பதஷ்ச ஸர்வாதாரதயாவஸ்தாநஂ? யதபி கரணகலேவராத்யதிஷ்டாநஷக்திப்ரதாநஂ? யச்ச ப்ரவரித்த்யாலம்பநபாஹ்யவிஷயபுரஸ்கரணஂ? தத்ஸர்வஂ ஜீவஸ்ய கர்தரித்வாநுகுணஂ ஸர்வப்ரவரித்திநிவரித்திஸாதாரணஂ சேதி ந தத்ர சோத்யாவகாஷஃ. ஏதாவதைவ ஸர்வப்ரவரித்திநிவரித்திஸாதாரணமுதாஸீநத்வஂ பகவத உச்யதே. ஏவஂ லப்தஷக்தேஃ புருஷஸ்ய ப்ரவரித்திகாலே யத்கார்யநிஷ்பத்த்யர்தமீஷ்வரஸ்யாநுமந்தரித்வஂ? ததபி ந ஜீவஸ்ய கர்தரிதாஂ வாரயதி; அபிதூத்தம்நாதீதி ந ததோபி விதிநிஷேதவையர்த்யம். நசைகஸ்மிந்நேவ கர்மணி பரமாத்மாக்யகர்த்ரந்தரஸாஹசர்யஂ ஜீவஸ்யாநியோஜ்யதாகாரணஂ? ப்ரத்யேகமஷக்யேஷு ஸம்பூய பஹுபிரநுஷ்டீயமாநேஷ்வபி லோகே விதிநிஷேததத்பலாதிதர்ஷநாத்ப்ரவரித்திஷக்தஸ்யேச்சாயாமந்யைரநிவார்யத்வேந ஸ்வாதந்த்ர்யாதிஸித்தேஃ. ஏவஂ’கார்யதே ஹ்யவஷஃ கர்ம ஸர்வஃ ப்ரகரிதிஜைர்குணைஃ’ [3.5] இத்யாதிஷ்வபி ஜ்ஞாநேச்சாபுரஸ்காரேண ப்ரவர்தநாதிச்சாவிஷேஷாதேஷ்ச ஸ்வவாஸநாதிவிஷேஷமூலத்வாஜ்ஜீவஸ்ய கர்தரித்வஂ ஸுஸ்திதம். அத ஏவ ஹ்யத்ர ஹேதுபஞ்சகே கர்தேதி ஸமாக்யாஸமாதிநா கர்தரித்வேநைவ ஜீவோ நிரூப்யதே; யத்து கரணகலேவரஷக்திஜ்ஞாநவாஞ்சாதிஷு விஷமப்ரதாநமஹிதப்ரவரித்தாவநிவாரணமநுமநநஂ ப்ரத்யவாயஜநநஂ ச? ததப்யநாதிபூர்வகர்மவைஷம்யோபாதிகதயா நேஷ்வரஸ்ய வைஷம்யநைர்கரிண்யாபாதகம். ப்ரவரித்திவைஷம்யஸ்யாதரிஷ்டவைஷம்யமூலத்வேபி ததேவாதரிஷ்டஂ ஷாஸ்த்ரபுரஸ்காரேணாஸ்ய தரிஷ்டாதிகமாரபதே. ததப்யேவமிதி விதிநிஷேதாவகாஷலாபஃ. ந ஹி பூர்வஂ யஜ்ஞாதிகாரணமதரிஷ்டஂ கரிதமிதி தேநைவேதாநீஂ யஜ்ஞாதிகஂ நிஷ்பத்யதே? ஷாஸ்த்ரஜந்யபுத்த்யாதிஸாபேக்ஷத்வாத்தஸ்ய. ஏவஂ பாபஹேதுபூதமப்யதரிஷ்டஂ ஸ்வபுத்த்யைவ நிவரித்தியோக்யதயா ஷாஸநாநர்ஹதஷாமாபாத்ய பாபே ப்ரவர்தயதி; ததபி ததேதி? அந்யதாதரிஷ்டமூலத்வாத்திதாஹிதப்ரவரித்த்யோர்ந ஷாஸ்த்ராபேக்ஷேதி வாதிநஃ பூர்வாதரிஷ்டேபி ததா ப்ரஸங்காத்ஸ்வவசநவிரோதஃ. அதாதரிஷ்டமூலத்வே ஷாஸ்த்ரவையர்த்யப்ரஸங்கஃ; ஸார்தகஂ ச ஷாஸ்த்ரஂ பரைரப்யுபகம்யத இத்யதரிஷ்டமூலத்வமேவ நோபபத்யேதேதி மந்யஸே; ததபி ந? லௌகிகவிதிநிஷேதயோரபி ததா ப்ரஸங்காத். தத்ராபி ஹி ஸாமக்ரீவைசித்ர்யமூலத்வே ப்ரவரித்திநிவரித்த்யாதிவைசித்ர்யஸ்ய கிஂ’காமாநய’ இத்யாதிநியோகேந அத ஸோபி நியோகஃ ஸ்வஸாமக்ர்யோபநீதஃ ப்ரவரித்திநிவரித்திஸாமக்ரீமத்யமத்யாஸ்த இதி பஷ்யஸி? ஏவஂ வைதிகநியோகோபீதி ஸம்பஷ்யேதாஃ. தர்ஹி லௌகிகமபி நியோகஂ பரித்யஜாம இதி சேத் — ஹந்த பரஸ்பரஸஂவ்யவஹாரவ்யுத்த்பத்த்யாத்யஸம்பவாத்விலீநஂ லோகாயதேநாபீதி மூகீபவ. ஏவஂ ஸாமாந்யதஃ ஸர்வேஷு அதரிஷ்டவைஷம்யமூலேஷ்வபி கர்மஸு ஷாஸ்த்ரே ஸாவகாஷே ததேவ ஷாஸ்த்ரமீஷ்வரபுத்திவிஷேஷஂ சேததரிஷ்டமுபதிஷதி? ததாவிதோயமீஷ்வரஃ ப்ரமாணபலாதகவத இதி ந தத்ர பரிசோதநாவகாஷஃ. ந சைஷ தோஷஃ — ‘யதோக்தமாசார்யைர்வாதிஹஂஸாம்புவாஹைஃ’ — ‘வைஷம்யே ஸதி கர்மணாமவிஷமஃ கிஂ நாம குர்யாத்கரிதீ கிஂவோதாரதயா ததீத வரதோ வாஞ்சந்தி சேத்துர்கதிம்’ இதி.ததயஂ சார்வாகேதரஸமஸ்தஸித்தாந்தநிஷ்டாநாஂ ஸாதாரணபரிஹாரஸாரஃ — ‘தத்ததிஷ்டாதரிஷ்டமூலஷாஸ்த்ரவஷ்யதஷாந்வயாத். புநஸ்ததாததா தரிஷ்டஸம்பத்திருபபத்யதே৷৷புமர்தஸாதநத்வேந ப்ரதீதேஃ ஸ்வேச்சயா புமாந். ப்ரவர்தேதேதி தாதர்த்யாத்ஸாவகாஷாத்ர சோதநா৷৷’ இதி. அத்ர கரணகலேவரப்ரதாநாதிஸாதாரணோபகாரஸாபேக்ஷதயா ஜீவகர்தரித்வஸ்ய பராபேக்ஷத்வஂ’ஸந்நித்யந்தேநோக்தம்’.’கர்மநிஷ்பத்தயே’ இத்யாதிநா து ப்ரவரித்திவிஷேஷே ஜீவஸ்ய ஸ்வாதந்த்ர்யஂ தர்ஷிதம். தத்ராபி பரஸ்ய கிஞ்சித்காரஃ’ததந்தரவஸ்தித’ இத்யாதிநோக்தஃ.’தஂ’ — கரிதப்ரயத்நமித்யர்தஃ.

———————-

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

ஸ்ரீ பாஷ்யம்–ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்-ஆரம்பணாதி அதிகரணம் : 2-1-6 –ஸூத்ரங்கள் -(2-1-15–2-1-20)

June 8, 2026

ப்ரஹ்மமும் சித்துக்கள் அசித்துக்கள் சேர்ந்த பிரபஞ்சம் –
காரண கார்ய பாவத்தால் ஒன்றே என்று முன்பு –2-1-7- பார்த்தோம்
இதில் உள்ள பிரதிபக்ஷ வாதங்களைக் காட்டி சித்தாந்தம் இதில் காட்டுகிறார் –

பேத -அபேத =பேதமும் அபேதமும் இல்லாமல் ச விசேஷ ப்ரஹ்மம் நம் சம்ப்ரதாயம்

ஸ்ரீ பாஷ்யம் —ஆரம்பணா அதிகரண பிரவேசம்

சங்கதி – விலக்ஷணத்வாதிகரணத்தோடே. –
அஸ்ய (ஜகத்) விலக்ஷணத்வாத் (பிரஹ்ம காரிய பாவம்)
ந -அங்கு சொல்லப் பட்டது பிரஹ்மமும் ஜகத்தும் விலக்ஷணத்தையோடே கூடினது.
ஆகிலும் பிரஹ்மம் தான் ஜகத் காரணம் என்பது வேதாந்த பக்ஷம்.

சூத்ரம் 2-1-15 : ததனனயத்வம் ஆரம்பண ஸப்தாதிப்ய :

ததனன யத்வம்–பரமார்த்த தயா வஸ்து ந அஸ்தி

கடத்துக்கும் படத்துக்கும் வேறுபாடு -மண்ணுக்கும் குடத்துக்கும் வேறுபாடு இருந்தாலும் –
அனைத்துக்கும் விலக்ஷணமான ப்ரஹ்மமே காரணம் –
கேவல பேத வாதம்–நிர்விசேஷ பேத வாதம்-பேத அபேத வாதம் -இவற்றை நிரஸித்து
விசிஷ்டாத்வைத சரீர சரீரீ பாவம் -வேதார்த்த ஸங்க்ரஹம் -காட்டி அருளினார்
ச விசேஷமமே விசிஷ்டம்
சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மமே ஏகம் -அத்விதீயம்
ச விசேஷ ஐக்ய வாதம்
அந்நிய சப்தம் வேறே பின்ன சப்தம் வேறே அன்றோ

முயல் உண்டு- கொம்பு உண்டு- முயல் கொம்பு இல்லை என்றால் -சம்பந்தம் இல்லை என்றே அர்த்தம்
வைசேஷிக வாதம் –
1-நாம பேதாத் -மண் -குடம்
2-கார்ய பேதாத் -வேறே வேறே பயனுக்காக
3-வேறே வேறே காலத்தில் இருப்பதால்
4-ஆகார பேதம் -ரூப பேதம்
5-ஒரே உருண்டை -பல குடங்கள் -சங்க்யா
6-ஒன்றாக இருந்தால் உருவாக்குபவர் எதற்க்காக
நான்யத்வம் நாம சங்க்யா ஆகார இத்யாதி -தத்வ முக்த கலாபம் அடக்கி தேசிகன்
அத்யந்த பேதம்

சாங்க்யர் -பூர்வ பக்ஷம்
அஸத் கார்ய வாதம்
உபாதான காரணத்தில் கார்யம் ஸூஷ்ம ரூபத்தில் பூர்வமேவ இருக்கும்
எள்ளில் தானே எண்ணெய் -மணலில் இல்லையே
வியக்தமாக வெளிப்படையாக தெரிய வைப்பதே கர்த்தாவின் கர்தவ்யம்

அத்வைதிகள் -சாங்க்யர் சொல்வதும் தப்பு -வைசேஷிகர் சொல்வதும் தப்பு -ஒன்றே உள்ளது –
மாயை பிரமம் -கார்யம் மித்யை -காரணம் ஒன்றே பரமார்த்தம் உண்மை
காரண வியதிரிக்த வஸ்துவே இல்லையே -என்பர்
அனுவார்த்தமானம் நித்யம்
எப்போது தோன்றி மறையுமது மாயை
கயிறு பாம்பு -பாம்பு ஞானம் தொடராதே
உண்டாவது எல்லாம் அழிந்து காரண வஸ்துவாகுமே

உண்டாகும் சேதனர்களும் அசேதனர்களும் அழிந்து ப்ரஹ்மைவ-ஒன்றாக பவதி-என்பர்
நாமோ ப்ரஹ்ம இவ -போல் ஆவோம் –
ஆதிப்பரனோடு ஒன்றாம் என்ற வாதம் ஒழித்தார் பாஷ்யகாரர்
சாஸ்திரம் வேறே சம்ப்ரதாயம் வேறே
புநரா வ்ருத்தி மோக்ஷம் என்பதே சாஸ்திரம்
பகவத் அனுபவ ஜெனித ப்ரீதி கார்ய கைங்கர்யமே புருஷார்த்தம் சம்ப்ரதாயம்

அநிர் வசநீயம் -கயிற்றைப் பார்த்து பாம்பு என்று தான் பிரமை
யானை என்று பிரமிக்க வில்லையே
ஸர்வதா அசத்தாக இருந்தால் தோன்றாதே
பாம்பு இருக்குமோ என்றும் இல்லையே என்றும் சொல்வதால் -அநிர் வசநீயம்-
உபமானம் உபமேயம் -இரண்டு இல்லையே அவர்களுக்கு
ப்ரஹ்மமே சத்தியமும் ஞானமும் -சஜாதீய விஜாதீய ஸ்வதீய விபாக ரஹிதம்
ப்ரஹ்மம் நித்யம் ஜகத் மித்யா -விருத்தமானவை சேராதே -ஆகவே அநிர்வசனீயம்
ப்ரஹ்மம் அநந்யம் பேதம் அற்றது -என்று
அபேத ஸ்ருதிகளை பிரமாணமாக அத்வைதிகள் காட்டுகிறார்கள்
நேராக அத்வைத நிரஸனம் பண்ணாமல் வைசேஷிகர் வாதத்தால் இவற்றை நிரஸித்து
மேல் சித்தாந்தம் இந்த அதிகரணத்தில் அருளிச் செய்கிறார்

ப்ரஹ்மமே ஜீவன் -என்றால் பல ஜீவர்கள் -ஒருவர் துக்கம் பட ஒருவர் சுகம் பட
உடம்பில் காலில் வலி கண்ணுக்கு நல்ல காட்சி போல் இதுவும் கூடுமே என்பர் அத்வைதி
அநேக ஜீவன அநு பிரவேசாத்
ஏகோ தேவ போன்ற சுருதிகள் உண்டே

ப்ரத்யக்ஷம் -கயிற்றை பாம்பு போல் பார்த்து
ஒருவர் அது பாம்பு இல்லை -சப்த பிரமாணம் கொண்டு உணராமல்
நேராக சென்று தானே பிடித்துப் பார்த்து -பிரயத்தனம் பண்ணி -உணர்ந்து
பிரபஞ்சம் மித்யா என்றால் பிரத்யக்ஷ விருத்தம்
என்னைத் தவிர வேறே ஜீவர்கள் உண்டு அநுமேயம் -infer -பண்ணி
ஸாஸ்த்ர பிரமாணம் பிரசித்தம்

இங்கு வாசாரம்பண சப்தாதிப்ய -என்று கூறாமல் ஆரம் சப்தாதிப்ய-என்று ஸூத்ரம் செய்யப்பட்டமையால்
வாசாரம்பண-என்பதை ஒரே பதமாகக் கூறிய ஸ்ரீ சங்கர மதம் தவறு என்பது காட்டப்பட்டது

அநந்யத்வம் -மண் பானை போல்-ப்ரஹ்மமும் ஜகத்தும் வேறே ஓன்று அல்ல
அத்யந்த பேதம் வைசேஷிகர் -நிரசித்து அநந்யத்வம் சாதித்து –
மாத்வ மதத்தில் விஷ்ணு பாரதம்யம் ஒத்துக் கொண்டாலும் பரமாத்மா நிமித்த காரணம் மட்டும் -ப்ரக்ருதி உபாதான காரணம்
ப்ரஹ்ம ஜகத் இரண்டுக்கும் அத்யந்த பேதம் -என்பர்
கார்யங்கள் எல்லாமே மித்யையே என்றால் முயற்சியே செய்ய மாட்டோமே
ஸத் -இருக்கும் வஸ்து என்றால் நித்தியமாக இருக்க வேண்டும்
அஸத் -நேற்றும் இன்றும் நாளையும் இல்லாதது முயல் கொம்பு போல்
குடம் என்றோ ஒரு நாள் உடையும் ஸத் என்றும் அஸத் என்றும் சொல்ல முடியாது
ஆகையால் -அநிர்வசனீயம் -ஆகவே மித்யை
நாமோ இது அநித்தியம் பொய்யான வாஸ்து இல்லை என்கிறோம் -வஸ்துவே பொய் இல்லையே

ச குண ப்ரஹ்மம் நிர்குண ப்ரஹ்மம் இரண்டு சொல்லி
பார்ப்பது அனுக்ரஹம் போன்றவை ச குண ப்ரஹ்ம கார்யம் என்றும்
அதுக்கும் மேல் நிர்குண ப்ரஹ்மம் –
நிர்விசேஷ பர ப்ரஹ்மம் சாஷாத்காரிக்க முடியாதவர் மந்தர்கள் -தே அனுகம்பா ச விசேஷ ப்ரஹ்மம்

இரண்டே இல்லை என்றால் உங்கள் மதமும் எங்கள் மதமும் ஒன்றே ஆகுமே -வைசேஷிகர் வாதம்

தேசாந்தர காலாந்தர வஸ்தாந்தர பேதங்கள் இருந்தே ஆகவேண்டும்
காரண கார்ய பேதங்கள் இருந்தே ஆக வேண்டும்
நான் நாளை அங்கு வரப் போகிறேன் -இறந்த காலம் வேறே இடம் போன்ற பேதங்கள் உண்டே

காரணமும் காரியமும் ஸத்யமே
போஜநம் காரணம் – பசி அடங்குவது கார்யம்
சித்தாந்தம்
தத் அநந்யத்வம்-ஜகத்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் –
ஸதேவ சோம்ய ஏகம் -போன்ற ஸ்ருதி வாக்கியங்கள் அந்யத்வம் சொல்ல வந்தவையே

பிரஸ்தான த்ரயம் நம் சம்ரதாயத்தில் இல்லை -உபநிஷத் ப்ரஹ்ம ஸூத்ரம் கீதை -மூன்றும் ஏக கண்டம்

ஞான ஜனக சப்த பிரயோகம் தானே விவகாரம் –
தேவதத்தன் பால்ய யுவா முக்த அவஸ்தைகள் மாறினாலும் தேவதத்தன் வ்யக்தி மாறாதே –
ப்ரஹ்மத்திடம் இருந்து சேதன அசேதனங்கள் தோன்றி ப்ரஹ்மத்திடம் லயம்
நாநா ரூபம்-நாம ரூப விபாகம் – ஜகத்
ஸத் என்றே பெயர் ஸூஷ்ம அவஸ்தையில் ப்ரஹ்மம் என்ற பெயரும் இல்லையே
தத் ஈஷதே
பஹுஸ்யாம் ப்ரஜாயேய
சர்வ ஸப்த வாச்யன் ப்ரஹ்மமே -பர்யவசானம் ஆகுமே -அனைத்துமே ப்ரஹ்மாத்மகமே –

ஸர்வதா இல்லை என்பதே இல்லையே
ஸத் மட்டுமே இருந்தது என்றால் சேதன அசேதன ஸூஷ்ம விசிஷ்டா ப்ரஹ்மம் இருந்தது என்றே கொள்ள வேண்டும்
அதுவே பின்பு சேதன அசேதன ப்ரஹ்மம்-போக்யம் போக்தா ப்ரேரிதா -மூன்றாக பரிணாமம்

ஸூத்ரம் –149–தத் அந்நயத்வம் ஆரம்பண சப்தாதிப்ய –2-1-15-

ப்ரஹ்மத்தின் கார்யமான ஜகத் ப்ரஹ்மத்தை விட வேறானதா -ஓன்று பட்ட்டதா -என்று சம்சயம்
வேறானதே என்று பூர்வ பக்ஷம்
ஏன் என்றால்
மண் முதலியவற்றுக்கும் குடம் முதலியவற்றுக்கும்
அறியப்படும் தன்மை
கூறப்படும் தன்மை
முதலியவற்றால் பிற இடங்களில் கார்ய காரணங்களுக்குப் பிற இடங்களில் பேதம் கங்கையாலும்
மண் குடம் முதலியவற்றைப் போல் ப்ரஹ்மத்துக்கும் ஜகத்துக்கும் பேதம் ஒப்ப வேண்டும்
ஆகையால் அபேத ஸ்ருதிகள் லக்ஷண தயா வேறே தாத்பர்யம் கொண்டவை என்னும்
பக்ஷத்தை நிரஸனம் செய்கிறார் –

தத் அந்நயத்வம் ஆரம்பண சப்தாதிப்ய

தத் அந்நயத்வம் -அந்த ப்ரஹ்மத்தின் இடம் வேறுபாடு இன்மை -ஜகத்துக்குச் ஸித்திக்கிறது என்று பொருள்
ஆரம்பண சப்த ஆதி –ஏஷாம் தாநி -ஆரம்பண சப்தாதீநி தேப்ய –
வாசாரம்பணம் -விகாரோ -நாமதேயம் –
ம்ருத்தி கேத்யேவ ஸத்யம்
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் -முதலிய
ஜகத்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் அபேதம் கூறும்
வாக்யங்களாலே
ஜகத்துக்கு ப்ரஹ்மத்தை விட வேறுபாடு இன்மை ஸித்தித்தது
அதாவது
விகாரம் -குடம் முதலிய அவஸ்தைகளும்
நாம தேயம் -குடம் முதலிய பேர்களும்
வாசாரம்பணம் -குடத்தால் தண்ணீர் கொண்டு வா என்ற சொற்களை உச்சரித்து
ஒன்றை ஏற்பது
மற்ற ஒன்றை விடுவது
முதலிய ப்ரவ்ருத்தி நடைபெற ஏற்பட்டவை
ஆரம்பணம் -கொள்ளுதல் மண் என்ற பொருளாலே விகாரமும் நாமதேயமும் கொள்ளப்படுகின்றன
குடம் என்ற நிலையும் பெயரும் ஏற்கப்படுகின்றன

ஸூத்ரம் –150–பாவே சோப லப்தே –2-1-16-

குடம் முதலிய கார்ய அவஸ்தையிலும் அந்த மண் காணப்படுவதால்
அந்த மண்ணே இந்தக்கூடமாய் மாறி இருக்கிறது என்று
காரணம் காரியம் பாவம் தோன்றுவதால் கார்யம் வேறானது அன்று
பால்யம் யுவா கிழவன் போன்ற அவஸ்தைகள் மாறினாலும்
தேவ தத்தன் ஒருவனே அன்றி வேறே ஒருவன் அல்ல
அதே போல் ஜகத்தும் ப்ரஹ்மமும் ஒன்றே அன்றி வேறு அல்ல –

——–

ஸூத்ரம் –151-ஸத்வாச் ச அபரஸ்ய –2-1-17-

அபரஸ்ய–காரியத்துக்கு
ஸத்வாச் ச –காரணத்தில் இருப்பு தோன்றுவதால்
காரணத்தை விட கார்யம் வேறு அன்று
இந்தக் குடம் இத்யாதி எல்லாம் நேற்று மண்ணாகவே இருந்தன என்று காரண கார்ய பாவம் தோன்றுகிறது
இப்போது குடம் முதலிய உருவங்களில் தோன்றும் மண்
முன் பிண்ட வடிவமாய் இருந்தது என்பது உறுதியான கருத்து

——–

ஸூத்ரம் –152-அஸத் வ்யபதேசான் நேதி சேந்ந தர்மாந்தரேண வாக்ய சேஷாத் யுக்தேச் சப்தாந் தராச்ச–2-1-18-

ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் என்று
காரண அவஸ்தையில் கார்யம் -அஸத்- இல்லை என்று பேசுவதால்
காரணத்தில் கார்யம் இல்லை என்றால் அது சரி அன்று
தர்மாந்தரேண–அஸத் என்ற வழக்கிற்குக் காரணமான ஸூஷ்ம அவஸ்தை வேறு தர்மத்தாலே
அஸத் ஏவ இதம் -என்ற வழக்கு ஏற்படுகிறது
அதற்கு ஹேது எது என்றால்
வாக்ய சேஷாத் யுக்தேச் சப்தாந் தராச்ச–தத் அஸத் ஏவ சந் மநோ குரு தஸ்யாம் இதி
அஸத் என்று சொல்லப்பட்ட வஸ்து தானே ஸத்ஸ்யாம் என்று ஸங்கல்பம் பண்ணியது என்று
வாக்ய சேஷத்தில் சொல்லுகையாலே
அஸத் என்று வழங்குவது ஸூஷ்ம அவஸ்தை என்று வேறு தர்மத்தின் சம்பந்தத்தால் ஏற்பட்டது –
ஒன்றும் இல்லாதது -துச்சம் -என்ற பொருளில் இல்லை
யுக்தேச் ச -குடம் இருக்கிறது குடம் இல்லை என்ற இருவகை வழக்குகளும் ஒன்றுக்கு ஓன்று முரணான
குடத்தன்மை கபாலத்தன்மை என்னும் இவை தவிர தோன்றாதான
துச்சத்வத்தை-அஸத் -வ்யபதேசத்துக்கு ஹேதுவாகக் கற்பித்தல் அடியோடு தவறானது
சப்தாந்தராச்ச
இதம் வா அக்ரே நைவ கிஞ்சனாஸீத் -முதலிய
காரண வாக்யங்களுக்குச் சமமான
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத்-என்பது முதலான காரண வாக்கியத்தில்
ஸச் ஸப்தத்தாலே காரணத்தைச் சொல்வதால்
அந்த அஸத் ஸப்தத்துக்கும் ஸூஷ்ம அவஸ்தா விசிஷ்டமான ப்ரஹ்மமே அர்த்தம் என்று தோன்றுகிறது
ஸத் -என்றால் பிராமண சித்தம் என்று பொருள் –

—————

இரண்டு த்ருஷ்டாந்தங்கள் காட்டுகிறார் இரண்டு சூத்ரங்களால்

ஸூத்ரம் –153–ஸூ பட வச்ச –2-1-19-

நூல்கள் விசேஷ சம்பந்தத்தைப் பெற்று வஸ்திரம் என்று
பெயர் -தோற்றம் -கார்யாந்தரங்கள் -முதலியவற்றை அடைகின்றனவே
அதே போல்
ப்ரஹ்மமும் நாம ரூப விபாகங்களைப் பெற்றமையால் கார்யம் என்னும் தன்மையை அடைகிறது

——————

ஸூத்ரம் –154–யதா ச ப்ராணாதி –2-1-20-

ஒரே வாயு எவ்வாறு உடலிலே வெவ்வேறு வியாபாரத்தைப் பெற்று
பிராணன் அபானம் முதலிய பெயர்களைப் பெறுகிறதோ
அது போலவே
ப்ரஹ்மமும் நாம ரூப விபாகத்தால் கார்ய பாவத்தை அடைகிறது என்பதாம்

—————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்–முதல் அத்யாயம்–நான்காம் பாதம் –ஐந்தாம் அதிகரணம்— காரணத்வாதிகரணம் -1-4-5-

June 8, 2026

விஷயம்
கௌஷீதகீ உபநிஷத்தில் அறியத்தக்கவனாக உபதேசிக்கப்படுபவன் பரமாத்மாவே ஆவான் -என்கிறது

1-4-16-ஜகத் வாசித்வாத்

உலகத்தைக் கூறுவதால் இங்கு கூறப்படுவது பரமாத்மாவே

பூர்வ பக்ஷம்
சாங்க்யர்கள் மீண்டும் ஒரு ஆஷேபம்
வேதாந்தங்களில் சேதனனே ஜகத் காரணம் என்று கூறப்பட்டாலும் கபில தந்திரத்தின் மூலம் வெளிப்படுவதாக
பிரதானம் மற்றும் புருஷன் இவற்றை விட வேறே வஸ்து ஜகத்காரணமாக உள்ளது என்றால்
அதை நம்மால் அறிய முடியவில்லை
கௌஷீதகீ உபநிஷத்தில் -பாலாகி -அஜாத சத்ரு -சம்வாதம் -அனுபவிக்கும் புருஷனே -ஜீவாத்மாவே -ஜகத் காரணம் என்று அறியப்பட வேண்டும் என்கிறது –
அதில் தொடக்கத்தில் பாலாகியால்-அறியப்பட வேண்டிய ப்ரஹ்மம் குறித்து கேட்ட போது அதற்கு விடையாக-ப்ரஹ்மதே பிரவாணி -4-1-ப்ரஹ்மத்தைக் குறித்து உபதேசிக்கிறேன் என்று தொடங்கி- 4-18-யோவை பாலாகே ஏதேஷாம் புருஷணாம் கர்த்தா யஸ்ய ச ஏதத் கர்ம ச வை வேதி தவ்ய-என்று யார் இந்த புருஷர்களுக்கு கர்த்தாவாக உள்ளானோ -யாருக்கு இந்த புண்ய பாப ரூபமான கர்மா உள்ளதோ-அவனே அறியாத தக்கவன் என்று நிகமிக்கப்படுகிறது

பாலாகி என்ற அந்தணன் அஜாத சத்ரு அரசன் இடம் தன்னுடைய ப்ரஹ்ம ஞானம் வெளிப்படுத்த ஸூர்ய மண்டலம் சந்த்ர மண்டலம் மின்னல் ஆகாசம் என்று ஒவ் ஒன்றாக உரைத்து அங்கே உள்ள ஆத்மாவை – ஜீவாத்மாவே ப்ரஹ்மம் -என்று உரைக்க –
அரசன் ஏற்க மறுக்க –
பாலாகி பணிந்து அரசன் இடம் ப்ரஹ்மத்தை பற்றி உபதேசிக்க பிரார்த்திக்க –
இதுவே இந்த பகுதியின் அறிமுகம்

பாலாகியால் தொடக்கத்தில் எந்த ஒரு ப்ரஹ்மம் அறியப்பட வேண்டியதாகக் கூறப்பட்டதோ-அந்த ப்ரஹ்மமே – அஜாத சத்ருவால் –ச வேதி தவ்ய -அவனே அறியப்பட வேண்டியவன் -என்று உபதேசிக்கப்பட்டதில் உள்ள ப்ரஹ்மம் ஆகும்
அந்த வரியில் உள்ள –யஸ்ய ச ஏதத் கர்ம -இது யாருடைய கர்மமோ -என்ற பகுதி அறியப்பட வேண்டிய வஸ்துவை கர்மத்துடன் சம்பந்தப்படுத்துவதாக உள்ளது-ஆகவே இங்கே கூறப்படும் ப்ரஹ்மம் என்பது ப்ரக்ருதியை நியமிக்க வல்லவனும் அனுபவிப்பவனும் ஆகிய புருஷன் – ஜீவாத்மா -என்று நிச்சயிக்கப் படுகிறது அல்லாமல் வேறே ஏதும் இல்லை -ஏன் என்றால் வேறு ஏதும் கர்மத்துடன் சம்பந்தம் கொள்வது இல்லை – கர்மங்கள் ஷேத்திரஞ்ஞனுக்கே-ஜீவாத்மாவுக்கே -சம்பவிக்கும்

இதுக்கு சித்தாந்தி –
எது செய்யப்படுகிறதோ அதுவே கர்மம் என்ற சொல்லுக்கான பொருளாகும்
இங்குள்ள ஏதத் கர்ம -என்பதன் மூலம் ப்ரத்யக்ஷம் முதலான ப்ரமாணங்களால் ஸ்தாபிக்கப்பட்ட ஜகத்தே கூறப்படுகிறது-ஆகவே ஷேத்ரஞ்ஞனைக் காட்டிலும் வேறாக உள்ளவனும் யாருடைய கர்மம் -செயல் -என்பதே இந்த ஜகத்தாக உள்ளதோ –
என்று கூறப்படும் ஒருவனே அறியப்பட வேண்டியவன் -என்று கூறக் கூடும்

இத்தை பூர்வ பக்ஷி மறுப்பான்
நீங்கள் கூறுவது போன்று வைத்துக் கொண்டால்
யோ வை பாலாகே ஏதேஷாம் புருஷாணாம் கர்த்தா யஸ்ய வைதத் கர்ம ச வை வேதிதவ்ய -கௌஷீகீ -4-18-என்று தனித்தனியாக இரண்டையும் உரைப்பது அவசியம் இல்லையே
கர்மம் பொதுவாக லோகத்திலும் வேதத்திலும் புண்ய பாப ரூபமாகவே உள்ள செயல்களைக் குறிக்கும்
ஆக புருஷணாம் கர்த்தா -என்பது கர்மங்களை அனுபவிப்பவர்களுக்கே பொருந்தும்
மேலும் கௌஷீதகீ –4-18–தவ் ஹ ஸூப்தம் புருஷமீயது ஜூ தம் யஷ்டயா சிஷேபா -என்று
உறங்கும் அவன் இடம் செல்லுதல் -அவனைத் தடியால் அடித்தல் -அவனை எழுப்புதல் -இவை புருஷனை வெளிப்படுத்தும் அடையாளங்களே

இதைத் தொடர்ந்து –கௌஷீதகீ -4-20-தத் யதா ஸ்ரேஷ்டீ ஸ்வைர் புங்க்தே யதா ஸ்வா ஸ்ரேஷ்ட்டிநம் புஞ்ஜந்தி ஏவம் ஏவ ஏஷ பிரஞ்ஜாத்மா ஏதைராத்மபிர் புங்க்தே ஏவம் ஏத ஏவ ஆத்மாந ஏநம் புஞ்ஜந்தி –என்று எவ்விதம் இந்த செல்வந்த வைசியன் தனது வேலையாட்களுடன் இன்பமாக உள்ளானோ -எவ்விதம் அந்த வேலையாட்கள் இவனுடன் சேர்ந்து இன்பமாக உள்ளார்களா-அதே போன்று புருஷன் -மற்ற புருஷர்களை -இந்த பிராணன் -முதலானவற்றை அனுபவிக்கிறான் –அவர்களும் இந்த புருஷனை அனுபவிக்கிறார்கள் என்பதுவும் அனுபவிப்பவனையே -ஜீவாத்மாவையே கூறுவதாக உள்ளது –

யோ வை பாலாகே ஏதேஷாம் புருஷாணாம் கர்த்தா யஸ்ய வைதத் கர்ம ச வை வேதிதவ்ய –
பாலாகி என்னும் ஒருவன் அஜாத சத்ரு என்ற அரசன் இடம் வந்து ப்ரஹ்மத்தை குறித்து கூறுவதாக சொல்லி
ப்ரஹ்ம தே ப்ருவாணி யோ வை பாலாகே ஏதேஷாம் புருஷாணாம் கர்த்தா யஸ்ய வைதத் கர்ம ச வை வேதிதவ்ய – யஸ்யா வா ஏதத் கர்ம -யாருக்கு இது கர்மமோ -இது என்றது உலகம் -கர்மம் -உலகை உருவாக்கும் செயலையும் சொல்லி
பர ப்ரஹ்மமே அனைத்துக்கும் காரணம் என்றதாயிற்று

இது போன்றே கௌஷீ –4-18-க்வா ஏஷ பாலாகே புருஷோ சயிஷ்ட -க்வா ஏதத் அபூத் -குத ஏதத் ஆகாத்–என்ற கேள்விகளை அஜாத சத்ரு கேட்க பாலாகி மௌனமாக இருக்க தானே பதில் கூறத் தொடங்கினான்
கௌஷீ -4-19-ஹிதா நாம ஹ்ருதயஸ்ய நாட்ய தாஸூ ததா பவதி யதா ஸூப்த–ஸ்வப்னம் ந கதஞ்சன பச்யதி
அதாஸ்மின் பிராண ஏவைகதா பவதி ததைநம் வாக் சர்வைர்நாமபி சஹாப்யேதி மந சர்வைர்த்யாநை சஹாப்யேதி
ச யதா பிரதிபத்யதே யதா அக்நோஜ் வலந்த சர்வாதிசோ விஸ்பு லிங்கா வி பிரதிஷ்டேரந் ஏவம் ஏவ ஏதஸ்மாத் ஆத்மந
பிராணா யதாயதநம் வி ப்ரதிஷ்டந்தே ப்ராணேப்யோ தேவா தேவேப்யோ லோகா -என்று
இதயத்தில் ஹிதா என்னும் நாடியில் இருந்தான் -ஆழ்ந்த உறக்கத்தில் கனவு காண்பதில்லை –
மனம் இந்திரியங்கள் ப்ராணனுடன் கலந்து ஒன்றாக உள்ளன -விழித்துக் கொள்ளும் போது
அக்னியில் இருந்து தீ பொறிகள் சிதறுவது போலே ஆத்மாவில் இருந்து இந்திரியங்கள் புறப்பட்டு
தங்கள் இருப்பிடங்களை அடைந்து இந்திரியங்கள் இந்திரிய விஷயங்களை அடைகின்றன
உபநிஷத்தில் தேவ பதம் இந்திரியங்களும் லோக பதம் இந்திரிய விஷயங்களையும் குறிக்கும் –

அஸ்மின் -ஜீவாத்மாவை சொல்லி -அதாஸ்மின் பிராண ஏவைகதா பவதி -பிராண என்று பிராணனைத் தாங்கும் ஜீவாத்மா –
இப்படியாக இந்த பகுதியின் தொடக்கத்தில் கூறப்பட்ட ப்ரஹ்மம் ஜீவாத்மாவே –
ஈஷம் -பார்த்தல் போன்றவை ஜீவாத்மாவுக்கே பொருந்தும்
எனவே ஜீவாத்மாவால் நியமிக்கப்படும் பிரதானமே ஜகத் காரணம் ஆகும் என்பர் பூர்வ பக்ஷி

சித்தாந்தம்
புருஷோத்தமனே கூறப்படுகிறான் -யஸ்ய ச ஏதத் கர்ம -என்பதில் ஏதத் -இந்த என்பதுடன் சம்பந்தம் கொண்டுள்ள
கர்ம -பரம புருஷனின் கார்யமான ஜகத்தைக் கூறுவதாகும் –
ப்ரத்யக்ஷம் முதலான ப்ரமாணங்களால் அறியப்படுவதும் சித் அசித் வஸ்துக்கள் கலந்த ஜகத் என்பதே கூறப்படுகிறது –
அல்லது புண்ய பாப செயல்களைக் கூற வில்லை
கௌஷீ -4-1-ப்ரஹ்ம தே பிரவாணி –என்று சொல்லத் னத்தொடங்கிய பாலாகி ஆதித்ய மண்டலத்தில் வசிக்கும்
புருஷர்கள் போன்ற ப்ரஹ்மம் அல்லாதவர்கள் குறித்து பேசிய பாலாகி இடம்
கௌஷீ -4-18- ம்ருஷா வை கலு மா ஸம்வ திஷ்டா —என்று தவறாக வாதாடாதே என்று அஜாதசத்ரு உரைத்தான் —
யோ வை பாலாகி –என்று கூறத் தொடங்கினான்

இங்கே கர்ம -என்னும் சொல் அவன் அறியாத ப்ரஹ்மத்தை உணர்த்த குறிக்க வந்ததால் இங்கு ஜகத்தையே குறிக்கும்
யஸ்ய கர்ம ச வேதி தவ்ய–யாருக்கு கர்மம் உள்ளதோ அவனே அறியப்பட வேண்டியவன் என்று இல்லாமல்
யஸ்ய வா ஏதத் கர்ம -இது யாருடைய கர்மமோ என்று இருப்பதால் -ஏதத் இது என்ற சொல்லுக்கு பயன் வேண்டுமே
அந்த உபநிஷத் வரியில் -யா ஏத்த ஏஷாம் கர்த்தா -யார் இவர்களுக்கு கர்த்தாவோ —
மற்றும் யஸ்ய வா ஏதத் கர்ம -இது யாருடைய கர்மமோ என்று தனித்தனியாக உபதேசிக்கப்பட்டதின்
அபிப்ராயம் ஏது என்றால் -நீ எந்த புருஷர்களை ப்ரஹ்மம் என்று உபதேசித்தாயோ
உண்மையில் அந்த ப்ரஹ்மமே அவர்களுடைய கர்த்தாவாகும்-அவர்கள் அந்த ப்ரஹ்மத்தின் கார்ய பூதங்கள்
ஆகவே புருஷர்களை -ஆதித்யன் போன்றவர்களைப் படைக்கும் சக்தி ஜீவாத்மாவுக்குப் பொருந்தாது –
எனவே இங்குள்ள உபநிஷத் வரியில் -அனைத்து வேதாந்தங்களிலும் அனைத்துக்கும் காரணம் என்று
வெளிப்படுத்தப்படுகின்ற பர ப்ரஹ்மமே அறியப்பட வேண்டியதாகும் என்பதே உபதேசிக்கப் படுகிறது –

——————

1-4-17-ஜீவ முக்ய பிராண லிங்காத் ந இதி சேத தத் வ்யாக்யாதம் –

இங்கு ஜீவன் மற்றும் முக்கிய பிராணன் ஆகிய அடையாளங்கள் காணப்படுவதால் பரமாத்மா அல்லன்-என்றால்
முன்பு சொன்னபடியே அது பொருந்தாது

பிரதர்சன வித்யை -1-1-31–முன்பே இதன் விளக்கம் பார்த்தோம்
அதாஸ்மின் பிராண ஏவ ஏகதாபவதி-என்றும்
தத்யதா ச்ரெஷ்டீ ஸ்வைர்ப்புங்க்தே யதா ஸ்வா ஸ்ரேஷ்டி நம் புஞ்ஜந்தி
ஏவமேவைஷா பிரஜ்ஞாத்மா ஏதைராத்மயிர் புங்க்தே
ஏவமேவைத ஆத்மான எனம் புஞ்ஜந்தி -என்றும்
ப்ரஹ்மேதே பிரவாணி -என்றும்
உனக்கு நான் ப்ரஹ்மத்தைக் குறித்து உபதேசிக்கிறேன் -என்று ப்ரஹ்மத்தைக் குறித்தே உள்ளது

நடுவில் உள்ள பகுதியில் -யஸ்ய வா ஏதத் கர்ம –இது யாருடைய கர்மமோ என்பதிலும் ஜீவாத்மா கூறப்படவில்லை
அனைத்து ஜகத்துக்கும் ஒரே காரணமான ப்ரஹ்மமே கூறப்பட்டது என்றும் பார்த்தோம்

இறுதியிலும்
சர்வான் பாப்மநோப ஹத்ய சர்வேஷாம் பூதானாம் ஸ்ரைஷ்ட்யம் ஸ்வா ராஜ்ய மாதிபத்யம் பர்யேதி யா ஏவம் வேத -என்று
இதனை அறிபவன் தனது அனைத்து பாபங்களையும் நீக்கிக் கொண்டவனாக -அனைத்து ஜீவ ராசிகளில் உயர்ந்தவனாக –
அவற்றின் தலைவனாக -கர்ம வசப்படாதவனாக உள்ளான் என்பதன் மூலம்
பிராணனை உடலாக உடைய ப்ரஹ்மத்தை உபாசனை செய்ய வேண்டும் என்றதாயிற்று –
ப்ரஹ்ம உபாசனம் பலன் உடன் கூடியதாக உள்ள அனைத்துப் பாபங்களில் நின்றும் நீங்கப் பெற்ற மோக்ஷ சாம்ராஜ்யம்
பெறுவதை சொல்வதால் ப்ரஹ்ம விஷயமாகவே அனைத்தும் உள்ளன

பிரதர்சன வித்யையில் கூறப்படும் மூன்று வகை ப்ரஹ்ம உபாசனையில் உள்ள
ஜீவாத்மா முக்கிய பிராணன் போன்ற அடையாளங்கள் ப்ரஹ்மத்தைக் குறித்தே உள்ளன
அஸ்மிந் பிராணன் -என்றும்
அதாஸ்மிந் பிராண ஏவ ஏகதா பவதி –கௌஷீகீ -4-19-உறங்கும் போது பிராணன் உடன் சேர்ந்து ஒன்றாகிறான் –
என்பதில் உள்ள அஸ்மிந் பிராண சொற்கள் சாமா நாதி கரண்யத்தில்
பிராணனை சரீரமாகக் கொண்ட ப்ரஹ்ம உபாசனம் என்று சொல்லவே பிராண சப்தம்
ஜீவாத்மாவைக் குறித்து சொல்லும் அடையாளங்கள் எவ்வாறு ப்ரஹ்மத்தைக் குறிக்கும் என்பது அடுத்த ஸூத்ரம்

——————–307

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஜ்யோதிஷம்-

June 8, 2026

ASTRANAMY -planet movement -ASTRALOGY -effect on us -கால விசேஷ பிரதர்சனம்

வேதத்துக்கு அங்கங்கள்
நிருக்தம் காதாகவும்- வியாகரணம் வாயாகவும் -கல்பம் -கையாகவும் -ஸந்தஸ்ஸு காலாகவும் -சிஷா மூச்சுக் காற்று –ஜ்யோதிஷம் கண்ணாகவும் இருக்கும்-ஸூர்யன் சந்தர்களையும் பார்க்கும் கண் -மற்ற புலன்களைப் போல் அல்லவே-vision unlimited -முக்காலத்திலும் உள்ளவற்றை அறியவே ஜ்யோதிஷம்-EYE OF WISDOM-vision of planet on us -நாள் பார்க்க ஜ்யோதிஷம் கண்ணைக் கண்டு பார்க்க வேண்டும்

தேவர்கள் ஸூர்யன் சித்தாந்தம்- மயனுக்கு உபதேசம்
ரிஷிகள்- கர்க்கர் நாரத பராசர சம்ஹிதைகள் உண்டு
மனுஷ்யர் -வராஹ மிஸ்ரர் -ஆர்யபட்டார் -பாஸ்கராச்சார்யர்

சித்தாந்த ஸ்கந்தம் -கணக்கை அடிப்படை
ஹோரா ஸ்கந்தம் -ஜாதகம் induvidual
சம்ஹிதா ஸ்கந்தம் -pothuvaanavai

வ்யக்த கணிதம் arithmatic-அவ்யக்த கணிதம் algebra-க்ஷேத்ர கணிதம் gaametry-சமீகரணம் equalitry-திரிகோண மிதி tridnametry –பாஸ்கராச்சார்யர் பெண்-லீலாவதி maths-கடிகை=water clock

ஐந்தில் ஒரு பகுதி ரோஸ் மூன்றில்-x/5+x/3+3(x/3-x/5)+1=x

maltiply both sides by lcm-15—3x+5x+3(5x-3x)+15-15x–so x=15

ஆர்யபட்டார் 0 கண்டுபிடித்தார் பாஸ்கராச்சார்யர் infinity கண்டுபிடித்தார்

மனஸ் சந்திரன் -ஸூர்யன் கண் -அண்டத்தில் உள்ளது எல்லாமே பிண்டத்தில் உள்ளனவே -26 தத்துவங்களும் நம்முள்ளும் உள்ளன

கணிதப் புதிர்களைக் கவிதைபோல படைத்தவர் பாஸ்கராச்சாரியா. இன்றைய மகாராஷ்டிராவில் உள்ள விஜலவிடாவில் 1114-ல் பிறந்தார் பாஸ்கராச்சாரியா. இரண்டாம் பாஸ்கரா என்று அழைக்கப்பட்ட இவர் ‘சித்தாந்த சிரோன்மணி’ என்னும் அற்புதமான கணிதப் புத்தகத்தை தனது 36-வது வயதில் எழுதினார். படைப்புகளின் மகுடம் என்கிற அர்த்தம் கொண்ட இந்நூலில் 1443 செய்யுள்கள் காணப்படுகின்றன. ‘லீலாவதி’, ‘பிஜ கணிதம்’, ‘கிரஹ கணிதம்’, ‘கோளத்யாயம்’ என நான்கு பாகங்களாக இந்நூல் பிரித்து அமைக்கப்பட்டுள்ளது.-லீலாவதி எண் கணிதத்தைப் பற்றிய குறிப்புகளைக் கொண்ட புத்தகம். இதில் 278 செய்யுள்கள் கணிதப் புதிர் வடிவில் சுவாரஸ்யமாக எழுதப்பட்டுள்ளன. இந்தியாவில் கணிதப் புதிர் புத்தகங்களில் முன்னோடி இதுவே.

லீலாவதி புத்தகத்தைப் போலவே அது உருவான கதையும் சுவாரஸ்யமானது. பாஸ்கராசாரியாவுக்கு லீலாவதி என்ற மகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அவருக்கு ஜோதிடம் பார்த்தபோது திருமணம் நடைபெற வாய்ப்பில்லை எனப் பாஸ்கரா கணித்தார். அதனை மற்ற ஜோதிட நிபுணர்கள் மூலம் உறதி செய்த பிறகு, எப்படியாவது மகளுக்குத் திருமணம் செய்ய ஆசைப்பட்டு அவசரமாகத் திருமண ஏற்பாடுகளைச் செய்தார். ஆனால் திருமணத்துக்குக் குறித்த முகூர்த்த நேரம் கடந்துவிட்டதால் லீலாவதிக்கு திருமணம் நிகழ்த்த முடியவில்லை.இதனால் துயரம் அடைந்த லீலாவதியை உற்சாகப்படுத்தவே பாஸ்கரா தனது கணிதப் புதிர்கள் அடங்கிய நூலை மகள் பெயரிலேயே எழுதியதாக நம்பப்படுகிறது. இச்சம்பவம் உண்மையிலேயே நடந்ததா அல்லது கற்பனையா? எனச் சரிவரக் கூற முடியவில்லை. ஆனால் ஆங்காங்கே லீலாவதி பெயரைப் பயன்படுத்தி அப்புதிருக்கான விடையைக் காணும் படி லீலாவதி புத்தகத்தை நயம்பட பாஸ்கரா எழுதியிருக்கிறார்.

மான்விழி கொண்ட லீலாவதியே இப்புதிருக்கான விடையைக் கூறுவாயாக’, ‘புத்திக் கூர்மையுள்ள லீலாவதியே இந்தப் புதிருக்கான விடையை வழங்கு பார்ப்போம்’ போன்ற வரிகள் லீலாவதி புத்தகத்தில் காணப்படுகின்றன. கவிதை புனைதலிலும், கணித ஞானத்திலும் பாஸ்கரா திறம்பெற்று விளங்கினார் என்பது இதுபோன்ற வரிகள் மூலமாகத் தெரியவருகிறது.மேலும் கணிதப் புதிர்களை இயற்கை காட்சிகளுடனும், பறவைகள், விலங்குகளின் எண்ணிக்கையுடனும் தொடர்புபடுத்தி அவர் எழுதியுள்ளார். கணிதத்துக்கும் அன்றாட வாழ்வியல் செய்திகளுக்கும் உள்ள தொடர்பைக் கிட்டத்தட்ட 850 ஆண்டுகளுக்கு முன்பே காட்டிய லீலாவதி புத்தகம் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர் இந்தியாவில் பல்கலைக்கழகங்களை நிறுவி ஐரோப்பிய சிந்தனையைப் புகுத்தும் வரை பாஸ்கராவின் இப்புத்தகமே கணிதம், வானியல் சார்ந்த படிப்புகளுக்கு இந்தியாவில் ஆதார நூலாக விளங்கியது. கிட்டத்தட்ட 700 ஆண்டுகள் இந்தியாவில் வேறு எந்த நூலுக்கும் இவ்வளவு முக்கியத்துவம் இருந்ததில்லை. இன்றும் லீலாவதி புத்தகத்தைப் பலர் பல மொழிகளில் மொழி பெயர்த்துப் பயன் பெறுகிறார்கள். ‘சித்தாந்த சிரோன்மணி’ என்னும் அறிவு பெட்டகத்தை வழங்கியதால் இவரை இந்தியாவின் தலைசிறந்த கணித அறிஞர்களில் ஒருவராக உலகம் போற்றுகிறது.செய்யுள் வடிவில் 34 அத்தியாயங்களில் 278 கணிதக் குறிப்புகளையும், புதிர்களையும் லீலாவதியில் வழங்கியிருக்கிறார் பாஸ்கராசாரியா. ஸ்ரீதராசர்யா எழுதிய ‘த்ரிசதிகா’, மகாவீராச்சர்யா எழுதிய ‘கணித சார சங்க்ரஹா’ஆகிய நூல்களில் இருந்து முக்கியக் கருத்துகளையும், தானே கண்டறிந்த உண்மைகளும் இதில் அவர் விளக்கியுள்ளார்.

சிரோன் மணியின் நான்காம் பாகமான கோள்களை விளக்கும் புத்தகத்துக்குத் தேவையான வானியல் செய்திகளும் இதில் காணப்படுகின்றன. ‘சித்தாந்த சிரோன்மணி’யின் நான்கு பாகங்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது இந்தப் புத்தகம்தான் எனப் பாஸ்கராசாரியாவேத் தெரிவித்திருக்கிறார். இவ்வளவு வியப்புக்குரிய லீலாவதி புத்தகத்திலிருந்து ஒரு கணிதப் புதிரைக் காண்போம்.“வர்க்க எண்ணிக்கையில் அமைந்த அன்னப் பறவைகள் கூட்டமாக நீந்திக் கொண்டிருந்தன. அவ்விடத்தில் மேகங்கள் சூழவே, மொத்த எண்ணிக்கையின் மூல வர்க்க மதிப்பின் பத்து மடங்கு அன்னப்பறவைகள் மானசா ஏரிக்குச் சென்றன. மொத்த எண்ணிக்கையில் எட்டில் ஒர் மடங்குள்ள அன்னப்பறவைகள் அருகில் அமைந்த ரோஜாத் தோட்டத்திற்குச் சென்றன. மீதமுள்ள மூன்று ஜோடி அன்னப் பறவைகள் நீரில் துள்ளி, கொஞ்சி விளையாடின. அழகு பொருந்திய இளம் பெண்ணே, தாமரை மலர்கள் நிரம்பிய அந்த நீர்த்தடத்தில் மொத்தம் எத்தனை அன்னப்பறவைகள் இருந்தன எனக் கூறுவாயாக?”

மொத்த அன்னப்பறவைகளின் எண்ணிக்கையை xsq

எனவே மொத்த அன்னப் பறவைகளின் எண்ணிக்கை 144 ஆகும்.

வரையறை மற்றும் அட்டவணை, அளவீட்டு முறைகள், கூட்டல், கழித்தல் முறைகள், வெவ்வேறு பெருக்கல் முறைகள், வகுத்தல் முறைகள், எண்களில் இலக்கங்களின் இடமதிப்பு தன்மை, வர்க்கம், முப்படி, மூலவர்க்கம், முப்படி மூலம், பின்னங்களின் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் முறைகளின் விளக்கம், பூஜ்ஜியத்துக்கான எட்டு விதிகள், இருபடி சமன்பாடுகள், தகவுகளின் தன்மைகள், வட்டி கணக்கீடு, அடுக்கு குறி தொடர், பெருக்கு குறி தொடர், அளவீட்டு கருத்துகள், ஜியோமிதி, திரிகோண மிதி போன்ற மிக முக்கிய கணித அடிப்படைகள் சார்ந்த செய்திகள் லீலாவதியில் உள்ளன.

கர்மா-புண்ய பாபங்கள் பற்றி -ஜாதகம் -காட்டும் –signal -மட்டுமே -புடலங்காய் வியாபாரி கதை-துரியோதனன் -ஸஹதேவனிடம் அம்மாவாசை -கேட்டு -போர் தொடங்கிய வ்ருத்தாந்தம்-

sun-star -moon satalate-நவக்ரஹங்கள் -ஸூர்ய சந்திரர்கள் சேர்க்கலாமா=kraahyam is not planet -gravity உள்ள க்ரஹம்-நவ கோள் பூ கோளம்-x shaped–ஆகர்ஷண சக்தி -வைசேஷிக -கணாதர் –சையோகாபாவாத்-gravity-எடைக்குத் தக்க வேகத்துடன் விழும் என்றும் சொல்லியுள்ளார்-நக்ஷத்ரம் -ஸ்வயம் பிரகாசம் -ஒளி வாங்கி பிரதிபலிப்பது கிரஹம்-satalite-movement -twinkle twinkle little star-பூமிக்கும் புவியீர்ப்பு சக்தி -ஸவித்ர மத்ய வர்த்தி -ஸூர்ய நாராயணன் சுற்றி நவ கிரஹங்கள் – -லாகவ கௌரவ நியாயம் -குரு -ஆச்சார்யரை சுற்றி வர வேண்டும் –ஏழு குதிரைகள் -அஸ்வம் -ஒளிக்கற்றைகள் என்றும் குதிரைகள் என்றும் பெயர்-ஏக -ஏழாக பிரிந்து-vibgyor–ஜகத் -தன்னைத் தானே சுற்றி வருவதையும் வேதம் சொல்லும் -25000 மைல் சுற்றளவு -ஒரு நிமிஷ பின்பு காக்காய் பறந்து கீழே வற 17 மைல் போகுமே -சுற்றுச்சூழலும் சேர்ந்து சுற்றி வரும் sumeru-மேரு ஸூமேரியா-

சூர்யன் -19885000 times 10 power 23 kgs—149600000 kms–total force-592923

moom -0.7432 times 10 power 23 kgs—384400 kms–total force-1292600

mercury-3-3010 times 10 power 23 kgs—149600000 kms–total force -0.0925

venus –48676 times 10 power 23 kgs—261000000 kms-total force-1-438

mars -64171 times 10 power 23 kgs-228500000 kms-total force–0-.0537

jupitar -18983 times 10 power 23 kgs—778300000 kms–total force-4.0264

saturn-5683 times 10 power 23 kgs—1427000000 kms-total force–0.1955

uranus–868.16 times 10 power 23 kgs-2869600000 kms–total force–0.0036

neptune-1024.2 times 10 power 23 kgs—44966 00000 kms-total force–0.0011

plito –0.13 times 10 power 23 kgs—5906350 00000 kms -total force 0,000000064

tidal force -maas divided by distance cube-சந்த்ரனுக்குத்தான் அதிகம் இது-

அஹோராத்ரா =ஹோரா -ஏழு கிரகங்களுக்கு -ஸூர்ய உதயத்தில் angular velocity dominat-அது பொறுத்து கிழமைகளில் பெயர்-

sunday -sooryan -0deg-59–08/Monday -moon -13-10-34/Tuesday mars-0-31-26-/wednesday-mercury-4-5-32./thursday-kuru=0-4-59/friday-venus -1-36-7/saturday-saturn-0-2-0

சந்திரன் சுற்றி வர 30 நாள்கள் திங்கள் -மாசம் -எந்த நக்ஷத்ரம் பெவ்ரணமி அந்தப் பெயரே மாதத்துக்கு –

lunaar nodes-raaku kethu–6 kattam thalli –180 -krahanam -imaginaty points

மங்கள்நாத் மந்திர் – உஜிஜேனில் செவ்வாய் பிறந்ததாம் -பூமியில் இருந்து -பவ்ம -maars -ஒரே வேகத்தில் சுழன்று -ஒரே மாதிரி சாய்ந்து இருக்கும் –மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனியில் ஷிப்ரா நதிக்கரையில் அமைந்துள்ள மங்கள்நாத் மந்திர் –மத்ஸ்ய புராணத்தின்படி, இது பூமியின் மையமாகக் கருதப்படுகிறது.–மத்ஸ்ய புராணத்தின்படி செவ்வாய் கிரகத்தின் (மங்கள்) பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. இது சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் மற்றும் பூமிக்கடியில் இருந்து செவ்வாய் பிறந்த இடமாகக் கருதப்படுகிறது. இந்த இடம் செவ்வாய் தோஷ நிவர்த்தி மற்றும் பாத் பூஜை போன்ற சிறப்பு வழிபாடுகளுக்கு மிகவும் பிரபலமானது

செவ்வாய் தன்னைத் தானே 24 மணி 37 நிமிடம் 23 விநாடிகளில் சுற்றி வரும்

ஓம் வீரத்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத் ஓம் அங்காரகாய வித்மஹே சக்திஹஸ்தாய தீமஹி தன்னோ பௌம்ஹ் ப்ரசோதயாத் ஓம் அங்காரகாய வித்மஹே சக்திஹஸ்தாய தீமஹி தன்னோ குஜஹ் ப்ரசோதயாத் ஓம் லோஹிதாங்காய வித்மஹே பூமிபுத்ராய தீமஹி தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்

ஓம் அங்காரகாய வித்மஹே பூமிபாலாய தீமஹி தந்நோ குஜப் பிரசோதயாத்’ – செவ்வாய் காயத்ரி மந்திரம்

தாசாரதி வாசுதேவ ஆஞ்சநேய போல் பாவமாம் பூமியில் இருந்து பிறந்த
mercury-ஸவ்ம்யம்-ராமன் பாதுகா கீழே நவ கிரஹங்கள் ப்ரதிஷ்டை பாதுகா சஹஸ்ரம் ஸ்லோகம் —

ஹோரா-என்பது ஜோதிடத்தில் ஒரு நாளை 24 மணிநேரங்களாகப் பிரித்து, ஒவ்வொரு மணிநேரத்திற்கும் ஒரு கிரகத்தின் ஆளுமையை (நேரத்தை) குறிக்கும் முறையாகும். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் மற்றும் சனி ஆகிய ஏழு கிரகங்களும் இந்த ஹோரைச் சுழற்சியில் பங்கு வகிக்கின்றன, இதில் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும்–ஒரு ஹோரை என்பது சரியாக ஒரு மணி நேரம் ஆகும்.-தினமும் சூரிய உதயத்திற்குப் பிறகு முதல் ஹோரை, அந்தந்த கிழமைக்கு உரிய கிரகத்தினுடையதாக இருக்கும் (உதாரணமாக: ஞாயிறு காலை சூரிய ஹோரை).-சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி என்ற வரிசையில் இந்த ஹோரைகள் சுழன்று கொண்டே இருக்கும்.–சுப காரியங்களைத் தொடங்கவும், சுப ஹோரை (சந்திரன், புதன், குரு, சுக்கிரன்) மற்றும் அசுப ஹோரை (சூரியன், செவ்வாய், சனி) அறிந்து செயல்படவும் இது பயன்படுகிறது.–ஒரு குறிப்பிட்ட நேரத்தின் தன்மையை உணர்ந்து, அதற்கேற்ப வேலைகளைத் திட்டமிடுவதன் மூலம் வெற்றியை அதிகரிக்க முடியும். –சந்திர ஹோரை: திருமணம், பயணம், புதிய முயற்சிகள் செய்ய உகந்தது.-புதன்/குரு/சுக்கிரன் ஹோரை: கல்வி, வியாபாரம், ஒப்பந்தங்கள் மற்றும் சுப காரியங்களுக்கு மிகவும் சிறந்தது.-சூரியன்/செவ்வாய்/சனி ஹோரை: அரசாங்க வேலை, வழக்கு, அறுவை சிகிச்சை போன்ற ஆக்ரோஷமான பணிகளுக்கு ஏற்றது

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

எங்கும் எதிலும் எதாகவும் எப்போதும் நிறைந்த ஓர் தனிப் பேர் வித்து–

June 8, 2026

கடவுள் – வித்து

ஊழிதோ றூழி… … …யாவகை உலகமும் யாவரும் இல்லா
மேல்வரும் பெரும்பாழ்க் காலத்து இரும்பொருட்
கெல்லாம் அரும்பெறல் தனிவித்து ஒருதானாகி……– திருவாசிரியம் – 4

தானே தனித்தோன்றல் தன்னொப்பொன் றில்லதான்
தானே பிறர்கட்கும் தனித்தோன்றல் – தானே..

வைப்பாம் … …
எப்பால் யவர்க்கும் நலத்தால் உயர்ந்துயர்ந்து
அப்பாலவன்

இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவரும்
யவையும் யவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனிமுதல் எம்மான்…

ஒக்கலை வைத்து … …
ஒக்கவும் தோற்றிய ஈசன் மாயன்

ஓவாத் துயர்ப்பிறவி … …
மூவாத் தனிமுதலாய் 

சீர்மைகொள் வீடு சுவர்க்க நரகீறா
ஈர்மைகொள் தேவர் நடுவாமற் றெப்பொருட்கும்
வேர்முதலாய் வித்தாய்ப் பரந்து தனிநின்ற
கார்முகில்போல் வண்ணன் …

எங்கும் எதிலும் எதாகவும் எப்போதும்

யவரும் யாவையும் எல்லாப் பொருளும்–கவர்வின்றித் தன்னுள் ஒடுங்க நின்ற
பவர்கொள் ஞானவெள்ளச் சுடர் மூர்த்தி…

அமைவுடை அறநெறி … … … …
அமைவுடை அமரரும் யாவையும் யாவரும் தானாம்
அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே.–

என்னுள் கலந்தவன் … … … …
மன்னு முழுவே ழுலகும் வயிற்றினுள்
தன்னுள் கலவாத தெப்பொருளுந் தானிலையே–

எப்பொருளுந் தானாய்… வானத்தும் வானத்துள் ளும்பரும்
மண்ணுள்ளும் மண்ணின்கீழ்த்தானத்தும் எண்டிசையும் தவிராது
நின்றான் தன்னை…

எங்குவந் துறுகோ என்னையாள் வானே ஏழுல கங்களும் நீயே
அங்கவர்க்கமைத்த தெய்வமும் நீயே அவற்றவை கருமமும் நீயே
பொங்கிய புறம்பால் பொருளுள வேனும் அவையுமோ நீயின்னே யானால்
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே –

பூவைகள் போல்……………..
யாவையும் யாவருமாய் நின்ற மாயன் …வான்புலன் இறந்ததும் நீயே.

துன்பமும் இன்பமும் ஆகிய செய்வினையாய் உல கங்களுமாய்
இன்பமில் வெந்நர காகி இனியநல் வான் சுவர்க் கங்களுமாய்
மன்பல் உயிர்களு மாகிப் பலபல மாய மயக்குக்களால்
இன்புறும் இவ்விளையாட்டையானைப் பெற்றேதும் அல்லலிலனே.

யானுநீ தானே யாவதோ மெய்யே அருநர கவையும் நீ ஆனால்
வானுயர் இன்பம் எய்திலென் மற்றை நரகமே எய்திலென் எனிலும்
யானுநீ தானாய்த் தெளிதொறும் நன்று மஞ்சுவன் நரகம் நானடைதல்
வானுயர் இன்பம் மன்னி வீற்றிருந்தாய் அருளுநின் தாள்களை எனக்கே-

எங்குமுளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கில்லை யாலென் றிரணியன் தூண்புடைப்ப
அங்கப் பொழுதே அவன்வீயத் தோன்றிய என்
சிங்கப் பிரான்பெருமை ஆராயும் சீர்மைத்தே.

யானே என்னை … … .யானே நீஎன் னுடைமையும் நீயே…

என்னை முற்றும் உயிருண்டு என்மாய ஆக்கை இதனுள் புகுந்து
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் …

இன்றென்னைப் பொருளாக்கித் தன்னை என் னுள் வைத்தான்.. 

மாயம் செய்யேல் … … நேசம் செய்து உன்னோடு என்னை
உயிர் வேறின்றி ஒன்றாகவே

ஊனில் வாழ் உயிரே… …தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே
கலந்தொழிந்தோம்கூசம் செய்யாது கொண்டாய் 

எனதாவி யுள்கலந்த பெருநல்லுதவிக் கைம்மாறு
எனதாவி தந்தொழிந்தேன் இனிமீள்வ தென்பதுண்டே
எனதாவி ஆவியும்நீ பொழிலேழும் உண்ட எந்தாய்
எனதாவி யார்யானார் தந்தநீகொண் டாக்கினையே.

பற்ப நாபன்… … …
எற்பரன் என்னை யாக்கிக் கொண்டெனக்கே தன்னைத்தந்த
கற்பகம்..

உணர்வி லும்பர் … … … யானும் தானா யொழிந்தேனே.

என்னுடைக் கோவலனே…
உன்னுடைச் சோதிவெள்ளத் தகம்பால் உன்னைக்கண்டு…
என்றைக்கு மென்னை உய்யக்கொண்டு போகிய
அன்றைக்கன் றென்னைத்தன் னாக்கிஎன் னால்தன்னை
இன்தமிழ் பாடிய ஈசனை-

தாள்களை எனக்கே…
தோள்களை யாரத் தழுவிஎன்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ.

ஆறெனக்கு… … … எனதாவியும் உனதே…ஏகமூர்த்தி… … … உன்
ஆகமுற்றும் அகத்தடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே.

மாயனென்… … …காயமும் சீவனுந் தானே…

உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம்
கண்ணன் எம்பெருமான் என்றென்றே கண்கள்நீர் மல்கி

அன்றேநங் கண்காணும் ஆழியான் காருருவம்
இன்றேநாம் காணா திருப்பதுவும் – என்றேனும்
கட்கண்ணால் காணாத அவ்வுருவை நெஞ்சென்னும்
உட்கண்ணேல் காணும் உணர்ந்து.

மனனக மலமற மலர்மிசை எழுதரும்
மனனுணர் வளவிலன் பொறியுணர் வவையிலன்
இனனுணர் முழுநலம் எதிர்நிகழ் கழிவினும்
இனனில னெனனுயிர் மிகுநரை இலனே.

நோக்கி நோக்கி உன்னைக் காண்பான் யான் எனதாவியுள்ளே
நாக்கு நீள்வன் ஞானமில்லை நாடோறும் என்னுடைய
ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும் அல்ல புறத்தினுள்ளும்
நீக்க மின்றி எங்கும் நின்றாய் நின்னை அறிந்தறிந்தே.

கோலங்கொள் சுவர்க்கமும் யானே என்னும்
கோலமில் நரகமும் யானே என்னும்
கோலந்திகழ் மோக்கமும் யானே என்னும்
கோலங்கொள் உயிர்களும் யானே என்னும்
கோலங்கொள் தனிமுதல் யானே என்னும்

நாழாலமர் … …
பாருநீ வானுநீ காலுநீ தீயுநீ
நீரும்நீ யாய்நின்ற நீ.

கண்ணுள்ளே… …
மண்ணும் நீரும் எரியும்நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம்பிரானையே.

தளர்வின்றி…
வளரொளி ஈசனை மூர்த்தியைப்
பூதங்கள் ஐந்தை இருசுடரை…

நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்…என்று கொல் சேர்வது… …
… … நிலநீர் எரிகால் விணு உயிர்
என்றிவை தாம்முதலா முற்றுமாய் நின்ற எந்தாயோ…

பிறந்த மாயா … …
சிறந்த கால்தீ நீர்வான்மண் பிறவு மாய பெருமானே..

ஏகமூர்த்தி இருமூர்த்தி … ….. ஐந்து பூதமாய் இரண்டு சுடராய்…

காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்
காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும்
காண்கின்ற வெந்தீயெல்லாம் யானே என்னும்
காண்கின்ற இக்காற்றெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடலெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடல்வண்ணனேறக் கொலோ
காண்கின்ற உலகத்தீர்க் கென்சொல்லுகேன்
காண்கின்ற வென்கா ரிகைசெய் கின்றவே.

புகழுநல் லொருவனென்கோ பொருவில்சீர்ப் பூமி யென்கோ
திகழும்தண் பரவை யென்கோ தீயென்கோ வாயு வென்கோ
நிகழுமா காச மென்கோ நீள்சுட ரிரண்டு மென்கோ
இகழ்விலிவ் வனைத்து மென்கோ கண்ணனைக் கூவு மாறே.

மூவுலகங் களுமாய் அல்லனாய் உகப்பாய்…

ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்
காணலும் ஆகான் உளனல்லன் இல்லை அல்லன்
பேணுங்கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்
கோணை பெரிதுடைத்தெம் பெம்மானைக் கூறுதலே

நிழல்வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்ச்
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவையல் லனுமாய்.

விண்மீ திருப்பாய் மலைமேல் நிற்பாய் கடல்சேர்ப்பாய்
மண்மீ துழல்வாய் இவற்றுள் எங்கும் மறைந்துறைவாய்…

அறிகிலேன் தன்னுள் அனைத்துலகும் நிற்க
நெறிமையால் தானும் அவற்றுள்நிற் கும்பிரான்…

பரந்ததண் பரவையுள் நீர்தொறும் பரந்துளன்
பரந்தவண் டமிதென நிலவிசும் பொழிவற
கரந்தசில் இடந்தொறும் இடந்திகழ் பொருள்தொறும்
கரந்தெங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே.

பிறந்த மாயா பாரதம் பொருத மாயா நீயின்னே
சிறந்த கால்தீ நீர்வான்மண் பிறவுமாய பெருமானே
கறந்த பாலுள் நெய்யேபோ லிவற்றுள் எங்கும் கண்டுகொள்
இறந்து நின்ற பெருமாயா உன்னை எங்கே காண்கேனே

போர விட்டிட் டென்னை நீபுறம் போக்கலுற்றால் பின்னையான்
ஆரைக் கொண்டெத்தை அந்தோ எனதென்பதென் யானென்பதென்
தீர இரும்புண்ட நீரது போல என்னா ருயிரை
ஆரப் பருக எனக் காரா வமுதா னாயே.

திடவிசும் பெரிவளி நீர்நிலம் இவைமிசை
படர்பொருள் முழுவது மாயவை யவைதொறும்
உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவையுண்ட சுரனே.

இலனது வுடையனி தெனநினைவ் வரியவன்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்.

புலனொடு புலனலன் ஒழிவிலன் பரந்த அந்
நலனுடை ஒருவனை நணுகினம் நாமே.

யாருமோர் நிலைமையனென வறி வரிய எம்பெருமான்…

உணர்ந்துணர்ந் திழிந்தகன் றுயர்ந்துரு வியந்த இந்நிலைமை
உணர்ந்துணர்ந் துணரிலும் இறைநிலை உணர்வரிது…

பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவி மலரென்றும் காண்டோறும் – பாவியேன்
மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரானுருவே என்று.

பெய்வளைக் கைகளைக் கூப்பிப் பிரான்கிடக் குங்கட லென்னும்
செய்யதோர் நாயிற்றைக் காட்டிச் சிரீதரன் மூர்த்தியீ தென்னும்
நையுங்கண் ணீர்மல்க நின்று நாரண னென்னுமன் னேஎன்
தெய்வ வுருவில் சிறுமான் செய்கின்ற தொன்றறியேனே

அறியும்செந் தீயைத் தழுவி அச்சுத னென்னும் மெய்வேவாள்
எறியும்தண் காற்றைத் தழுவி என்னுடைக் கோவிந்தனென்னும்
வெறிகொள் துழாய்மலர் நாறும் வினையுடை யாட்டியேன் பெற்ற
செறிவளை முன்கைச் சிறுமான் செய்கின்ற தென்கண்ணுக் கொன்றே

ஒன்றிய திங்களைக் காட்டி ஒளிமணி வண்ணனே என்னும்
நின்றகுன் றத்தினை நோக்கி நெடுமாலே வாவென்று கூவும்
நன்றுபெய் யும்மழை காணில் நாரணன் வந்தானென் றாலும்
என்றின மையல்கள் செய்தார் என்னுடைக் கோமளத் தையே.

கோமள ஆன்கன்றைப் புல்கிக் கோவிந்தன் மேய்த்தன என்னும்
போமிள நாகத்தின் பின்போய் அவன்கிடக் கையீ தென்னும்
ஆமள வொன்று மறியேன் அருவினை யாட்டியேன் பெற்ற
கோமள வல்லியை மாயோன் மால்செய்து செய்கின்ற கூத்தே.

திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே யென்னும்
உருவுடை வண்ணங்கள் காணில் உலகளந் தானென்று துள்ளும்
கருவுடைத் தேவில்க ளெல்லாம் கடல்வண்ணன் கோயிலே யென்னும்
வெருவிலும் வீழ்விலு மேவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே.

விரும்பிப் பகைவரைக் காணில் வியலிட முண்டானே என்னும்
கரும்பெரு மேகங்கள் காணில் கண்ணனென் றேறப் பறக்கும்
பெரும்புல ஆநிரை காணில் பிரானுள னென்றுபின் செல்லும்
அரும்பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக்கின் றானே.

மேகங்க ளோவுரை யீர்திரு மால்திரு மேனியொக்கும்
யோகங்க ளுக்களுக் கெவ்வாறு பெற்றீர் உயிரளிப்பான்
மாகங்க ளெல்லாம் திரிந்துநன் னீர்கள் சுமந்து நுந்தம்
ஆகங்கள் நோவ வருத்தும் தவமா மருள்பெற்றதே.

வண்டுக ளோவம்மின் நீர்ப்பூ நிலப்பூ மரத்தி லொண்பூ
உண்டுக ளித்துழல் வீர்க்கொன் றுரை க்கியம் ஏனமொன்றாய்
மண்துக ளாடி வைகுந்தமன்னாள்குழல் வாய்விரைபோல்
விண்டுகள் வாரும் மலருள வோநும் வியலிடத்தே.

ஆழ்வார் திருப்பதிகட்குச் செல்லும்போது முதலில் இயற்கை வளம் காட்சியளிக்கும். அதனை அவர் இறையின் மேனியாக் கருதி வருணிப்பர்; பின்னே உயிராகிய மூர்த்தியைப் போற்றுவர்.

சொன்னால் விரோதம் … … …
தென்னா தெனாவென்று வண்டு முரல் திருவேங்கடத்து
என்னானை… 

ஆரா அமுதே … … …
சீரார் செந்நெல் கவரிவீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் ..

மானேய் நோக்கு நல்லீர் … … …
வானோர் வண்கமு கும்மது மல்லிகை கமழும்
தேனார் சோலைகள் சூழ்திரு வல்லவா ழுறையும்
கோனாரை .

என்றுகொல் தோழிமீர் … … …
பொன் திகழ் புன்னைமகிழ் புதுமா தவிமீ தணவி
தென்றல் மணங்கம ழுந்திரு வல்லவாழ் நகருள்
நின்ற பிரான்

நிச்சலும் …
பச்சிலை நீள்கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும்
மச்சணி மாடங்கள் மீதண வும்தண் திருவல்லவாழ்
நச்சர வின் அணை மேல்நம் பிரானது நன்னலமே.

காண்பதெஞ் ஞான்று… …
பாண்குரல் வண்டினொடு பசுந்தென்றலு மாகியெங்கும்
சேண்சினை யோங்குமரச் செழுங்கானல் திருவல்லவாழ்
மாண்குறள் கோலப்பிரான்

பாதங்கள் … … …
ஓத நெடுந் தடத்துள் உயர்தா மரைசெங் கழுநீர்
மாதர்கள் வாண்முகமும் கண்ணுமேந்தும் திருவல்லவாழ்
நாதனிஞ் ஞாலமுண்ட நம்பிரான் தன்னை

நாடொறும் … …
ஆடுறு தீங்கரும்பும் விளைசெந் நெலுமாகி எங்கும்
மாடுறு பூந்தடஞ்சேர் வயல்சூழ் தண்திருவல்லவாழ்
நீடுறை கின்ற பிரான்

கழல்வளை … …
குழலென்ன யாழுமென்னக் குளிர்சோலையுள் தேனருந்தி
மழலை வரிவண்டுகள் இசைபாடும் திருவல்லவாழ்
சுழலில் மலிசக்கரப் பெருமான்.

உணர்த்த லூடல்… …
திணர்த்த வண்டல்கள் மேல் சங்கு சேரும் திருவண்வண்டூர்
புணர்த்த பூந்தண்டுழாய் முடி நம்பெருமானை.

நோக்கும் பக்கமெல் லாம்கரும்பொடு செந்நெ லோங்கு செந்தாமரை
வாய்க்கும் தண்பொரு நல்வ டகரை வண்துலை வில்லி மங்கலம்..

காலம் பெற … …
கோலச்செந் நெற்கள் கவரிவீசுங் கூடுபுனல் திருப்பேரையிற்கே.

பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ …

மாயோனிகளாய் … ….. … எல்லாம் எவ்வுயிர்க்கும் தாயோன் ..

நீயும் நானும் … …தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில்
வாயும் ஈசன் மணிவண்ணன் எந்தையே.

ஒத்தார் … அத்தாயாய்த் தந்தையாய் அறியாதன அறிவித்த அத்தா ..

போகின்ற … … தாய் தந்தை உயிர் ஆகின்றாய்…

மேலாத்… …மேலாத் தாய் தந்தையும் அவரே…

முந்தைத் தாய் தந்தையே முழுவேழுலமுண்டாய்…
சிந்தையாலும் … தேவபிரானையே
தந்தை தாயென்றடைந்த வண்குருகூரவர் சடகோபன்…

தாம்பாலாப்… …
பல்லுருவை எல்லாம் படர்வித்த வித்தாஉன்
தொல்லுருவை யாரறிவார் சொல்லு.

கண்ணுஞ்செந் தாமரை கையும் அவைஅடி யோஅவையே
வண்ணம் கரியதோர் மால்வரை போன்று மதவிகற்பால்
விண்ணும் கடந்தும்ப ரப்பால்மிக்குமற்றெப் பால்யவர்க்கும்
எண்ணு மிடத்ததுவோ எம்பிரான தெழில்நிறமே.

நிறமுயர் கோலமும் பேருமுருவும் இவையிவையென்று
அறமுயல் ஞானச் சமயிகள் பேசிலும் அங்கங் கெல்லாம்
உறவுயர் ஞானச் சுடர்விளக்காய்நின்ற தன்றி ஒன்றும்
பெறமுயன் றாரில்லை யால் எம்பிரான் பெருமையையே.

உண்ணா துறங்கா துணர்வுறும் எத்தனை யோகியர்க்கும்
எண்ணாய் மிளிரும் இயல்பின வாம் எரி நீர்வளிவான்
மண்ணா கியவெம் பெருமான் றனதுவை குந்தமன்னாள்
கண்ணாய் அருவினை யேன் உயிராயின காவிகளே.

செக்கர்மா முகிலுடுத்து மிக்க செஞ்சுடர்ப்
பரிதி சூடிஅஞ் சுடர்மதி யம்பூண்டு
பலசுடர் புனைந்த பவளச் செவ்வாய்
திகழ்பசுஞ் சோதி மரகதக் குன்றம்…

கடலோன் கைம்மிசைக் கண்வளர் வதுபோல்
பீதக ஆடை முடிபூண் முதலா
மேதகு பல்கலன் அணிந்து சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப மீதிட்டுப்
பச்சை மேனி மிகப்ப கைப்ப
நச்சுவினைக் கவர்தலை அரவின் அமளிஏறி
எறிகடல் நடுவுள் அறிதுயில் அமர்ந்து
சிவன் அயன் இந்திரன் இவர்முதல் அனைத்தோர்
தெய்வக் குழாங்கள் கைதொழக் கிடந்த
தாமரை யுந்தித் தனிப்பெரு நாயக
மூவுல களந்த சேவடி யோயே.- திருவாசிரியம் – 1

நளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும்
தளிரொளி இமையவர் தலைவனும் முதலா
யாவகை உலகமும் யாவரும் அகப்பட
நிலநீர் தீகால் சுடரிரு விசும்பும்
மலர்சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க
ஒருபொருள் புறப்பா டின்றி முழுவதும்
அகப்படக் கரந்து ஓ ராலிலைச் சேர்ந்தஎம்
பெருமா மாயனை
 அல்லது
ஒருமா தெய்வம்மற் றுடையமோ யாமே.-திருவாசிரியம் – 7–

முதலாம் திருவுருவம் மூன்றென்பர் ஒன்றே
முதலாகும் மூன்றுக்கு மென்பர்…

தானோ ருருவே தனிவித்தாய் தன்னில் மூவர்…

மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை…

தஞ்சமாகிய… …
… … மூவர் தம்முள்ளும் ஆதியை…

தேவர் முனிவர்க் கென்றும் காண்டற் கரியன்
மூவர் முதல்வன் ஒருமூவுல காளி…

யாருமோர் நிலைமையன் எனவறி வரியஎம் பெருமான்
யாருமோர் நிலைமையன் எனவறி வெளியஎம் பெருமான்
பேருமோர் ஆயிரம் பிறபல வுடையஎம் பெருமான்
பேருமோர் உருவமும் உளதில்லை இலதில்லை பிணக்கே’

வரிவளையால்… …
தெரிவரிய சிவன்பிரமன் அமரர்கோன் பணிந்தேத்தும்
விரிபுகழான்… .

பேசநின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகனவனே…

தளர்ந்தும்… …
கிளர்ந்து பிரமன் சிவனிந்திரன்விண் ணவர்சூழ
விளங்க ஒருநாள் காண வாராய் விண்மீதே

நோலா தாற்றேன்… …. …
நீலார் கண்டத் தம்மானும்
நிறைநான் முகனும் இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர்சூழ
விரும்பும் திருவேங் கடத்தானே

பராபரன்
புரமொருமூன் றெரித் தமரர்க்கும் அறிவீய்ந்து
அரனயனெனவுல கழித்தமைத் துளனே

என்னப்பன் எனக்கா யிகுளாய்
என்னைப் பெற்றவளாய்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன்
என்னப் பனுமாய்…

திண்ணன் வீடு முதல்மு ழுதுமாய்
எண்ணின் மீதியனெம்பெருமான்
மண்ணும் விண்ணுமெல் லாமுட ணுண்ட நங்
கண்ணன ல்லதில்லையோர் கண்ணே.

வாய்கொண்டு மானிடம் பாடவந்த கவியேனல்லேன்
ஆய்கொண்ட சீர்வள்ளல் ஆழிப்பிரானெனக்கேயுளன்
சாய்கொண்ட இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும்
நீ கண்டு கொள்ளென்று வீடும்தரும் நின்று நின்றே.

வண்ணம் சிவந்துள வானாடமரும் குளிர்விழிய
தண்மென் கமலத் தடம்போல் பொலிந்தன தாமிவையோ
கண்ணன் திருமால் திருமுகம் தன்னொடும் காதல்செய்தேற்
கெண்ணம் புகுந்து அடியனோ டிக்கால மிருக்கின்றதே.

அந்தாமத் தன்புசெய்தென் ஆவிசேர் அம்மானுக்கு
அந்தாம வாழ்முடிசங் காழிநூ லாரமுள
செந்தா மரைத்தடங்கண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தா மரையடிகள் செம்பொன் திருவுடம்பே

புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப் பறுக்கு மப்பால்
திண்ணநாம் அறியச் சொன்னோம் செறிபொழில் அனந்தபுரத்து
அண்ணலார் கமல பாதம் அணுகுவார் அமர ராவார்.

அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து
அறியா மாமாயத் தடியேனை வைத்தாயால்
அறியா மைக்குறளாய் நிலம்மாவலி மூவடிஎன்று
அறியாமை வஞ்சித்தாய் எனதாவி உள்கலந்தே.

எழுமைக் குமென தாவிக் கின்னமு தத்தினை எனதாருயிர்
கெழுமிய கதிர்ச் சோதியை மணி வண்ணனைக் குடக்கூத்தனை
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னல் கனியினைத்
தொழுமின் தூய மனத்தரா யிறையும் நில்லா துயரங்களே.

கோலமே தாமரைக் கண்ணதோ ரஞ்சன
நீலமே நின்றென தாவியை ஈர்கின்ற
சீலமே சென்றுசெல் லாதன முன்னிலாம்
காலமே உன்னைஎந் நாள்கண்டு கொள்வனே.

உரைக்க வல்லேனல்லேனுன் உலப்பில் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக்க ணென்று செல்வன்நான் காதல் மையலேறினேன்
புரைப்பிலாத பரம்பரனே பொய்யிலாத பரஞ்சுடரே
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த யானும் ஏத்தினேன்.

மாயப் பிரானென வல்வினை மாய்ந்தற
நேசத்தினால் நெஞ்சம் நாடு குடிகொண்டான்…

வணங்கும் துறைகள் பலபல ஆக்கி மதிவிகற்பால்
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி அவையவைதோ
றணங்கும் பலபல ஆக்கி நின் மூர்த்தி பரப்பிவைத்தாய்
இணங்கும்நின்னோரையில்லாய் நின்கள் வேட்கை எழுவிப்பனே.

அவரவர் தமதம தறிவறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடையநின் றனரே.

பிணக்கற அறிவகைச் சமயமும் நெறிஉள்ளி உரைத்த
கணக்கறு நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவநெறி வழிநின்று புறநெறி களைகட்டு
உணக்குமின் பசையற அவனுடை உணர்வு கொண் டுணர்ந்தே.

யாவையும் யவரும் தானாய் அவரவர் சமயந்தோறும் தோய்விலன்…

மாட்டாதே யாகிலும் இம் மலர்தலைமா ஞாலம்நின்
மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம்வைக்க
மாட்டாத பலசமய மதிகொடுத்தாய் மலர்த்துழாய்
மாட்டேநீ மனம்வைத்தால் மாஞாலம் வருந்தாதே.

அறிவினால் குறைவில்லா அகல்ஞானத் தவரறிய
நெறிஎல்லாம் எடுத்துரைத்த நிறைஞானத் தொருமூர்த்தி…

எங்குவந் துறுகோ என்னையாள் வானே ஏழுல கங்களும் நீயே
அங்கவர்க் கமைத்த தெய்வமும் நீயே அவற்றவை கருமமும் நீயே
பொங்கிய புறம்பால் பொருளுள வேலும் அவையுமோ நீ இன்னேயானால்
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே வான்புலன் இறந்ததும் நீயே.

உருவாகிய ஆறு சமயங்கட் கெல்லாம்
பொருவாகி நின்றானவன்

இறுக்கும் இறையிறுத் துண்ண எவ்வுல குக்கும் தன்மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்களாக அத்தெய்வ நாயகன் தானே
மறுத்திரு மார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுதுய்ம்மினீரே.

உணர்ந்துணர்ந் திழிந்தகன் றுயர்ந்துரு வியந்தவிந் நிலைமை
உணர்ந்துணர்ந் துணரிலும் இறைநிலை உணர்வரி துயிர்காள்
உணர்ந்துணர்ந் துரைத்துரைத்து அரிஅயன் அரன் என்னு மிவரை
உணர்ந்துணர்ந் துரைத்துரைத்து இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே.

மும்மூர்த்திகளைப் பிர்மா – விஷ்ணு – ருத்ரன் – என்று நாம் சொல்கிறோம்; சிலர், பிதா – குமாரன் – பரிசுத்த ஆவி – என்கிறார். அவர்கட்கு இன்னும் வெவ்வேறு பெயர்களும் உலகில் உரைக்கப்படுகின்றன. அவைகளிற் சில வருமாறு: ஒஸிரிஸ் – ஐஸிஸ் – ஹோரஸ் (எகிப்தியர்); ஓடின் – பிரீயா – தார் (ஸ்காண்டிநேவியர்); ஆனு – இயா – பேல் (அஸ்ரியர்); தௌலாக் – பான் – மொல்லாக் (துருயுதர்); அமிர்தாப்பர் – அவலோகீதீசுரர் – மஞ்ஜுசுரி (வட புலப்புத்தர்); கேதர் – பினா – சொக்மா (யூதர்); அஹுரமஜதர் – மித்திரர் – அஃரிமான் (பாரஸீகர்). உண்மை ஒன்று. அது பலவிதமாக வழங்கப்படுகிறது

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

சங்கத் தமிழும் சநாதன தர்மமும்-

June 7, 2026

உலகம் உண்ட பெருவாயன்; [திருவாய் 6 – 10 – 1] பாலனாய் ஏழ் உலகு உண்டு பரிவு இன்றி ஆல் இலையில் அன்னவசம் செய்யும் அண்ணல் அவன் [திருவாய் 4 – 2 – 1]–“பிறப்பில் பல்பிறவிப் பெருமான்” [திருவாய் 2 – 9 – 5]–பேசநின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே; கபாலநல் மோக்கத்துக் கண்டுகொண்மின்” [திருவாய் 4 – 10 – 4]

உலகம் யாவையும்” என்னும் முதல்பாடலில் “யதோ வா இமாநி பூ4தாநி ஜாயந்தே, யேந ஜாதாநி ஜீவந்தி, யத்ப்ரயந்த்யபி, ஸம்விசந்தி தத்3 விஜிஜ்ஞாஸஸ்வ தத்3 ப்3ரஹ்மேதி” [எதனிடமிருந்து இந்த ஜீவராசிகள் (ஸ்ருஷ்டிகாலத்தில்) தோன்றுகின்றனவோ, எதனால் தோன்றியவை உயிர் வாழ்கின்றனவோ, (ப்ரளய காலத்தில்) எதனிடம் சென்றடைகின்றனவோ அதை ப்ரஹ்மமென்றறிவாயாக] என்னும் உபநிஷத்தைப் பின்பற்றி ஜகத் காரணப்பொருளை சரணம் பற்றினான். இந்த ஜகத்காரணப்பொருள் எது என்பதைத் தெளிவுபடுத்துவதற்காக,
“சிற்குணத்தர் தெரிவரு நன்னிலை
எற்(கு) உணர்த்தரிது எண்ணிய மூன்றனுள்
முற்குணத்தவரே முதலோர்; அவர்
நற்குணக் கடலாடுதல் நன்றரோ”
[புல்லறிவாளர்களால் அறியமுடியாத பரம்பொருள் நிலையை என்னால் உரைக்க இயலாது; ஸத்வம், ரஜஸ், தமம் என்று மூன்றாக எண்ணப்படும் குணங்களுள் முதலாவதான ஸத்வகுணத்தை உடைய திருமாலே (முறையே) ரஜோகுணத்தையும், தமோகுணத்தையும் உடைய பிரமனையும், சிவனையுங்காட்டிலும் முதல்வர். அவரது கல்யாணகுணக்கடலில் குடைந்தாடுவதே நன்று ] என்னும் பாடலை அமைத்திருக்கிறான் கல்வியிற்பெரிய கம்பன். ஸத்வகுணத்தையுடையவர் திருமாலே என்பதும், பிரமன் ரஜோகுணத்தையுடையவன் என்பதும், சிவன் தமோகுணத்தையுடையவன் என்பதும் ஸகல சாஸ்திரங்களிலும் பிரசித்தம். 

ஒருபகல் உலகெலாம் உதரத் துட்பொதிந்(து)
அருமறைக்கு உணர்வரும் அவனை அஞ்சனக்
கருமுகில் கொழுந்து எழில் காட்டும் சோதியைத்
திருவுறப் பயந்தனள் திறங்கொள் கோசலை” (கம்ப-பால-திருவ 2 – 10 – 3)

எழுதரிய திருமேனிக் கருங்கடலைச்
செங்கனிவாய்க் கவுசலையென் பாள்பயந்தாள்” [பால – குலமுறை 20]

கராம்மலை யத்தளர் கைக்கரி எய்த்தே
அராவணை யில்துயில் வோயென அந்நாள்
விராவி அளித்தருள் மெய்ப்பொரு ளுக்கே
‘இராமன்’ எனப்பெயர் ஈந்தனன் அன்றே” [பால – திருவ 119]-[கராம் – முதலை; கைக்கரி – யானை; அராவணை – பாம்புப் படுக்கை]

“கடுத்துநிமிர் கராம்கவ்வக் கையெடுத்து மெய்கலங்கி
உடுத்ததிசை அனைத்தினும்சென்(று) ஒளிகொள்ள உறுதுயரால்
அடுத்தபெருந் தனிமூலத்து அரும்பரமே பரமேஎன்று
எடுத்தொருவா ரணம் அழைப்ப நீயோவந் தேன் என்றாய்” [ஆரணி, விராதன் வதை 49]-[கராம் – முதலை]-

“கொல்லாழி நீத்தங்கோர் குனிவயிரச்
சிலைதடக்கைக் கொண்ட கொண்டல்” [பால – மிதிலை 154][ஆழி – சக்கரப்படை]

பஞ்சணை பாம்பணை யாகப் பள்ளிசேர்
அஞ்சன வண்ணனே இராமன்” [ஆரணி சடாயுவுயிர் நீத்த 142]

சங்கு சக்கரக் குறியுள தடக்கையில் தாளில்
எங்கும் இத்தனை இலக்கணம் யாவர்க்கும் இல்லை
செங்கண் வில்கரத்து இராமன அத் திருநெடுமாலே” [கிட்கிந் – நட்புகொள் 79]

“தோற்றம் என்பதொன்று உனக்கில்லை” [யுத்த – மீட்சி 107]

“மெய்யே பிறந்தேயும் பிறந்தி லாதான்” [யுத்த – நாகபாசப் 222]

மறைகளின் தலைகள் மன்பெ ரும்பர மார்த்தமென்(று)
உரைக்கின்ற மாற்றம் அன்ப நின்னையல் லாம்மற்றிங்(கு)
யாரையும் அறையா” [யுத்தமீட்சி 101]-[மறைகளின் தலைகள் – உபநிடதங்கள்]-

முன்னை ஆதியாம் மூர்த்திநீ மூவகை உலகின்
அன்னை சீதையாம் மாதுநின் மார்பின்வந் தமைந்தா:” [யுத்தமீட்சி 113]

“நாராயண நரர் என்று இவர் உளராய் நமக்கெல்லாம்
வேராய்முழு முதற்காரணப் பொருளாய்” [யுத்த – நிகும்பலை 141]

உற்றொடு தனியே தானே தன்கணே
உலகம் எல்லாம் பெற்றவன் முனியப் புக்கான்” [யுத்த வருணனை வழி 63]

“நவையறும் உலகிற் கெல்லாம் நாயக நீயே” [யுத்த வருணனை வழி 67]

எள்ளலா காதமூலத்(து) யாதுக்கும் முதலாய் உள்ள வள்ளலே” [யுத்த வருணனை வழி 71]

மேலொரு பொருளும் இல்லா மெய்ப்பொருள் வில்லும் தாங்கிக்
கால்தரை தோய நின்று கட்புலக் குற்றதம்மா” [கிட்கிந் – வாலிவதை 148]

மும்மையாம் உலகம் தந்த முதல்வற்கும் முதல்வன்
தூதாய்ச் செம்மையால் உயிர்தந் தாய்க்கு” [சுந்தர – உருக்காட்டு 71]

மூலமும் நடுவும் ஈறும் இல்லதோர் மும்மைத் தாய
காலமும் கணக்கும் நீத்த காரணன்” [சுந்தர – பிணிவீட்டு 80]

மூவர்க்கும் தலைவ ரான மூர்த்தியார் அறத்தை முற்றும்
காவற்குப் புகுந்து நின்றார் காகுத்த வேடங் காட்டி” [யுத்த – கும்பகருணன் வதை 150]

மூலமே இல்லா முதல்வனே நீஎடுத்த
கோலமே யார்க்கும் தெரிவரிய கொள்கைத்தால்
ஆலமோ? ஆலின் அடையோ? அடைக்கிடந்த
பாலனோ? ஆதிப் பரமனோ? பகராயே” [ஆரணி – கவந்த 44]

“மெய்யைத்தான் சிறிதுணர்ந்து நீவிதித்த மன்னுயிர்கள்
உய்யத்தான் ஆகாதோ? உனக்கென்ன குறையுண்டோ?
வையத்தார் வானத்தார் மழுவாளிக்கு அன்றளித்த
ஐயத்தால் சிறிதுஐயம் தவிர்ந்தாரும் உளர் ஐயா” [ஆரணி – விராதன் வதை 59]மெய் – நீயே பரதத்துவம் என்னும் உண்மை; மழுவாளி – பரமசிவன்; ஐயம் – பிச்சை, சந்தேகம்.]

அன்னமாய் அருமறைகள் அறைந்தாய்நீ அவையுன்னை
முன்னம் ஆர் ஓதுவித்தார் எல்லாரும் முடிந்தாரோ?” [ஆரணி-விராதன் வதை 60]

மூவகை உலகம் ஏத்தும் முதல்வன்;
எவர்க்கும் மூத்த தேவர்தம் தேவன்” [யுத்த நிகும்பலை யாகப் 175]

“மூவ ராய்முத லாகி மூலம தாகி ஞாலமும் ஆகியத்
தேவ தேவர் பிடித்த போர்வில் ஒடிந்த சேவகர்” [அயோத். கைகேசி சூழ்வினை 62][தேவ தேவர் – சிவன்; சேவகர் – இராமன்]

முப்பரம் பொருளிற்குள் முதலை மூலத்தை” [பால. கடிமணப் 69]

“காலம் ஆகணிக்கும் நுண்மைக் கணக்கையும் கடந்து நின்ற
மூலமாய் முடிவிலாத மூர்த்தி இம்முனிவன் என்பார்” [அயோத். கைகேயி சூழ்வினை 91]

“வான்நின்றிழிந்து வரமிகந்த மாபூதத்தின் வைப்பெங்கும்
ஊனும் உயிரும் உணர்வும் போல் உள்ளும் புறத்தும் உளனென்ப;
கூனும் சிறிய கோத்தாயும் கொடுமை யிழைப்பக் கோல்துறந்து
கானும் கடலும் கடந்திமையோர் இடுக்கண்காத்த கழல்வேந்தே”
அயோத்தியாகாண்டம் முதலில் கடவுள் வாழ்த்துப் பாடல்

சந்நியாசிகளின் இலக்கணத்தைக் கூறவந்த தொல்காப்பியர்,-“நூலே கரகம் முக்கோல் மனையே
ஆயுங்காலை அந்தணர்க்குரிய
“[தொல்காப்பியம் பொருளதிகாரம் 9.71]-மற்ற சங்க இலக்கியங்களிலும் ‘முக்கோற் பகவர்’ என்று இவர்களை பாகவத சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்களாக எடுக்கையால் இவர்கள் பாஞ்சராத்ரத்தைப் பின்பற்றுபவர்கள் எனத் தேறுகிறது.

சங்கநூலான பரிபாடலோ “முதல்முறை, இடைமுறை, கடைமுறை தொழிலில் பிறவாப் பிறப்பிலை பிறப்பித்தோர் இலையே” [பரிபாடல் 3 – 71,72] என்று திருமால் எடுக்கும் பலவகைப்பட்ட அவதாரங்கள் அனைத்தும் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களைச் செய்வதற்கே என்றும், அவன் தானே தன்விருப்பத்தால் பிறக்கிறானேயொழிய அவனைப் பிறப்பித்தவர்கள் எவரும் இலர் என்றும் முழங்கிற்று.

மறுபிறப்பு அறுக்கும் மாசில் சேவடி மணிதிகழ் உருபின் மாஅயோயே” [பரிபாடல் 3 – 2,3][மறுபிறப்பை அறுத்துவிடும் குற்றமற்ற திருவடிகளையுடைய நீலமணியைப்போன்ற திருமேனியைக்கொண்ட மாயோனே] என்றும், “நாறு இணர்த்துழாயோன் நல்கின் அல்லதை ஏறுதல் எளிதோ வீறுபெறு துறக்கம்” [பரிபாடல் 15 – 15,16] [மணம்மிக்க துழாய் மாலையை அணிந்த திருமால் அளித்தாலல்லது எவராலும் வீட்டுலகத்திற்கு ஏறமுடியாது] என்றும் திருமாலே மோட்சமளிக்கவல்லவன் என முழங்கப்பெற்றது.–மூ ஏழ் உலகமும் உலகினுள் மன்பதும் மாயோய்! நின் வயின் பரந்தலைய உரைத்தேம். மாயா வாய்மொழி உரை தர” [பரிபாடல் 3 – 9,10,11] [மாயோனே! எல்லா உலகங்களும், உலகினில் உள்ள ஜீவர்கள் அனைவரும் உன்னிடமிருந்தே உண்டானவர்கள் என்பதை அழியாத வேதம் சொல்ல நாங்கள் உரைத்தோம்.] “நின் சேவடி தொழாரும் உளரோ” [பரிபாடல் 3 – 19] என்று சங்ககாலச் சான்றோர்கள் பாடியிருக்கும்போது திருமாலை முல்லைநிலத்திற்கு மாத்திரம் உரியவன் என்றோ, அந்நிலத்தினரால் மாத்திரம் தொழப்படுபவன் என்றோ எவர் கூறமுடியும்? ஆகையால் பரிபாடல் முதலானவற்றில் திருமால் ஒருவனே வேதத்தால் பரம்பொருளாக முழங்கப்படுபவன் என்று கூறியதை இத்தொல்காப்பியப்பாடல் வலியுறுத்துகின்றதேயொழிய, அதற்கு முரணாகப் பேசவில்லை எனத் தெளிவாகத் தெரிகிறது.

“மாயோன் மேய காடு உறை உலகமும்,
சேயோன் மேய மை வரை உலகமும்,
வேந்தன் மேய தீம் புனல் உலகமும்,
வருணன் மேய பெரு மணல் உலகமும்,
முல்லை, குறிஞ்சி, மருதல், நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே”–தொல்காப்பியத்தில் முதலாவதான அகத்திணை இயலில் ஐந்தாவது பாடலாக உள்ளது-சங்ககாலத்திலேயே) முல்லைநிலத்தில் மாத்திரமல்லாமல் மற்ற நிலங்களிலும் திருமால் கோவில்கள் இருந்தன என்பதைக் காண்கிறோம்.-

அத்தம் நண்ணிய அம்குடிச் சீறூர்
கொடு நுண் ஓதி மகளிர் ஓக்கிய
தொடி மாண் உலக்கைத் தூண்டு உரல்பாணி
நெடு மால் வரைய குடிஞையோடு இரட்டும்
குன்று பின் ஒழியப் போகி”–அகநானூற்றின் ஒன்பதாவது பாடலில்,-நெடுமால் வரைய – குன்று ஒழியப் போகி’ என்னும் தொடரால் நெடுமாலாகிற திருமால் எழுந்தருளியிருக்கும் வேங்கடக் குன்றையும் கடந்து தான் சென்றதாகக் குறிப்பிட்டான். தலைவன் வேங்கடமலைக்கும் அதைக்கடந்து அப்பாலும் சென்று பொருளீட்டி வருவது என்னும் மரபு அகநானூற்றின் பல பாடல்களில் காணப்படுவதால் இங்கு வேங்கடமலையைக் குறிப்பதாகக் கொள்வதே பொருத்தம். அகநானூற்றில் அறுபத்தோராம் பாடலில் ‘விழவுமலி வேங்கடம்’ என்று வருவதும் இதை வலியுறுத்துகிறது. எப்படியும் ‘நெடுமால் வரைய – குன்று ஒழியப்போகி’ என்னும் தொடர் சங்க காலத்திலேயே திருமால் மலையாகிற குறிஞ்சி நிலத்தில் எழுந்தருளியிருந்ததைக் காட்டுகிறது.

வென்று எறிமுரசின் விறல் போர்ச் சோழர்
இன் கடும் கள்ளின் உறந்தை ஆங்கண்
வரு புனல் நெரிதரும் இரு கரைப் பேரியாற்று
உருவ வெண் மணல் முருகு நாறு தண்பொழில்
பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்
வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில்
தீ இல் அடுப்பின் அரங்கம் போல
பெரும் பாழ் கொண்டன்று நுதலே”–அகநானூறு நூற்றிமுப்பத்தேழாம் பாடலில் உறையூர் முதுகூத்தனார் என்னும் புலவர்-தலைமகன் பிரியப்போகிறான்’ என நினைத்து வேறுபட்ட தலைமகளின் நிலையைக் கூறும்போது, “திருவரங்கத்தில் பங்குனி உத்தரத் திருநாளின் போது, மக்கள் மிகுதியாகத் திரண்டு காவிரியின் இருகரைகளிலும் உள்ள சோலைகளில் தங்கியிருந்தபோது பொலிவுடையதாகத் தோன்றிய அச்சோலைகள், அவ்விழாவின் முடிவில் அனைவரும் அரங்கத்தைவிட்டுப் போனபின் பொலிவிழந்து தோன்றுவதுபோல், தலைமகன் பிரிவை எண்ணிய தலைமகளின் நெற்றியும் பொலிவிழந்து தோன்றுகிறது” என்கிறார். இன்றும் திருவரங்கத்தில் பங்குனி பிரம்மோத்ஸவம் நடைபெறுவது அனைவரும் அறிந்தது. அந்த உத்ஸவம் சங்க காலத்திலேயே நடந்துவந்தது என்று இப்பாடலிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. திருமாலைப் பற்றிய நான்காவது பரிபாடலில், “நல்யாற்று நடுவும் கால்வழக்கு அறுநிலை குன்றமும் பிறவும் அவ்வவை மேய வேறுவேறு பெயரோய்’ (67 – 69) என்னும் பகுதி நல்யாற்று நடுவாகிற திருவரங்கமும், காலவழக்கை அறுத்து முக்தி அளிக்கும் குன்றமாகிற வேங்கடமும் திருமால் வெவ்வேறு பெயர்களுடன் எழுந்தருளியிருக்கும் இடங்கள் என்று பாடியிருப்பதிலிருந்து முற்கூறிய அகநானூற்றுப் பாடல்களில் வேங்கடத்திலும், திருவரங்கத்திலுமிருந்தது திருமால் கோவில்களே என்று தெளிவாகிறது. இதிலிருந்து சங்ககாலத்திலேயே மருதநிலத்திலும் திருமால் கோவில் கொண்டிருந்தான் என விளங்குகிறது. சிலப்பதிகாரத்திலும் இளங்கோவடிகளால் இவ்விஷயம் விரித்துரைக்கப்பட்டது. பதினைந்தாவது பரிபாடலில் திருமாலிருங்குன்றமாகிய குறிஞ்சிநிலத்திலும் திருமால் எழுந்தருளியிருந்தது விரிவாக வருணிக்கப்படுகிறது. பரிபாடல் திரட்டின் முதல்பாடலில் கூடல்மாநகரில் இருந்தையூர் என்னும் பகுதியில் திருமால் கோயில்கொண்டிருந்தது சிறப்பாக வருணிக்கப்படுகிறது. இதிலிருந்து மருதநிலத்திலும் சங்ககாலத்தில் திருமால்கோயில் உண்டென்று தெரிகிறது.

“வண்டு ஊது பொலிதார், திரு ஞெமர் அகலத்து
கண் பொரு திகிரி, கமழ் குரற் துழாஅய்
அலங்கல், செல்வன் சேவடி பரவி,
நெஞ்சு மலி உவகையர் துஞ்சு பதிப் பெயர
மணி நிற மை இருள் அகல, நிலா விரிபு,
கோடு கூடு மதியம் இயலுற்றாங்கு”–பதிற்றுப்பத்து என்னும் சேரவேந்தர்களைப் பற்றிய சங்க நூலில் நான்காம்பத்தின் தொடக்கத்தில்,-திருஞெமர் அகலம் – ஸ்ரீதேவி வாழும் மார்பு. திகிரி – சக்கரம். துழாஅய் அலங்கல் செல்வன் – துழாய் மாலையணிந்த உயபவிபூதி செல்வத்தையுடைய திருமால். கோடு – திருவிதாங்கோடு என்று வழங்கப்படும் திருவனந்தபுரம். ]என்னும் பாடற்பகுதியில் குறிஞ்சிநிலமான திருவனந்தபுரத்துத் திருமால் கோயிலைப் பாடியிருப்பதிலிருந்து சங்ககாலத்தில் குறிஞ்சி நிலத்திலும் திருமால் கோயில்கொண்டிருந்தார் எனத் தெரிகிறது.

நீடுகுலைக் காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்தாங்கு
பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன் ஆங்கண்,
வெயில் நுழைபு அறியா, குயில் நுழை பொதும்பர்,
குறுங்கால் காஞ்சி சுற்றிய நெடுங் கொடி … …
அருந்திறற் கடவுள் வாழ்த்தி”–பத்துப்பாட்டில் ஒன்றான பெரும்பாணாற்றுப்படையில்,-மலையில் யானை படுத்திருப்பது போலே காஞ்சியில் (திருவெஃகாவில்) பாம்பணைப்பள்ளியில் திருமால் கிடக்குமழகு பாடப்படுகிறது. இதிலிருந்தும் சங்ககாலத்தில் மருதநிலத்தில் திருமால் கோயில்கொண்டு எழுந்தருளியிருந்தது காட்டப்படுகிறது.

உலகைப் படைத்தளித்து அழிக்கும் பெருமை. (2) எல்லாம் அறியும் பெருமை. (3) எல்லாம் வல்லவனாய் இருக்கை. (4) எங்கும் வியாபித்திருக்கை. (5) தன்னை அண்டியவர்களுக்கு மறுபிறப்பு இல்லாமற்செய்து வீட்டுலகத்தை அளிக்கவல்லவனாயிருக்கை. (6) நற்குணங்கள் அனைத்திற்கும் கொள்கலமாகவும், தாழ்ந்த தன்மைகள் எதுவுமே இல்லாதவனாகவும் இருக்கை. (7) எவராலும் அளவிட்டு அறியமுடியாதவனாயிருக்கை. (8) மனிதர்களைக் காட்டிலும் உயர்ந்த தேவர்களுக்கெல்லாம் ஆதிதேவனாய், ஒத்தாரும் மிக்காரும் இல்லாதவனாயிருக்கை. (9) உயிர்களுக்கெல்லாம் இயற்கை உறவினனாயிருக்கை. (10) முற்கூறிய ஒன்பது பெருமைகளும் இவனுக்கே உள்ளதாக வேதத்தால் சொல்லப்படுகிறவனாயிருக்கை – என்னும் பரம்பொருளுக்கேயுள்ள பத்து தனித் தன்மைகள் திருமால் ஒருவனுக்கே பரிபாடல் முதலான சங்கநூல்களில் சங்ககாலச் சான்றோர்களால் முழங்கப்பட்டுள்ளன-அக்காலத்தில் சான்றோர்கள் அனைவரும் திருமால் ஒருவனையே முற்கூறிய பத்து பெருமைகளையுமுடைய பரம்பொருளாகக் கொண்டிருந்தார்கள்; வேறு எந்த தெய்வத்தையும் அப்படிக் கொள்ளவில்லை” என்பதை நிலைநாட்டித்தரும் ‘கொள்கை விளக்கப் பாடல்கள்–

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டதாகச் சொல்லப்படும் தமிழ் இலக்கணமான தொல்காப்பியத்திலேயே திருமாலானவர் முல்லை நிலத்து மக்களின் வழிபடு தெய்வமாகச் சொல்லப்படுகிறார். ‘மாயோன் மேய காடுறை உலகம்’ என்பது தொல்காப்பியச்சூத்திரம். தொல்காப்பியத்திற்கு முன்னும் பின்னும் தோன்றிய இலக்கியங்களிலேயும் திருமாலானவர் ‘காடும் காடு சேர்ந்த நிலமும்’ என்று தொல்காப்பியத்தால் வரையறுத்துச் சொல்லப்படும் முல்லை நிலத்து மக்களின் தெய்வமாக வருணிக்கப்படுகிறார். சங்க காலத்தை அடுத்துத் தோன்றிய சிலப்பதிகாரத்திலேயும் காடும் காடு சேர்ந்த நிலமுமாகிய முல்லை நிலத்திலே வாழும் மக்கள் திருமாலை வழிபடுவதை இளங்கோவடிகள் ‘ஆய்ச்சியர் குரவையிலே’ காட்சிபடுத்துகின்றார்

அகிலபுவனங்களையும் தன் மூவடிகளின் கீழ் ஒடுக்கியவன் எவனோ அப்பெருமான் கிரியில் நிலைபெற்றருள்கின்றான் என்ற கருத்தில் ‘ம்ருகோ3 ந பீ4ம; குசரோ கி3ரிஷ்டா2: – யஸ்யோருக்ஷு த்ரிக்ஷு விக்ரமனேஷு அதி4க்ஷயந்தி பு4வநாநி விச்வா’ என்று வேதமும் திரிவிக்ரமனாகிய திருவேங்கடமுடையான் திருமலையில் நித்யவாசம் செய்தருளுகிற சிறப்பை எடுத்துக்கூறுமென்பர். இவ்வேதப்பொருளையே ‘இழைத்தார் ஒருவரை இல்லா மறைகளை இன் தமிழால் – குழைத்தார் ஆகிய குருகைப்பிரானும்’ ‘குன்றமேந்திக் குளிர்மழை காத்தவன் – அன்று ஞாலம் அளந்த பிரான் பரன் – சென்று சேர் திருவேங்கடமாமலை’ என்றருளிச்செய்தார். ‘வேதவெற்பு’ என்று திருமலையை ஸ்ரீமத் வேதாந்ததேசிகன் சிறப்பித்தருளியதும் இக்கருத்தை உட்கொண்டே–

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –