ஸ்ரீ ஶைலேஶ தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்திர ப்ரவணம் வந்தே ரம்யாஜமாதரம் முநிம்
துறவிகளின் அரசரான பகவத் ராமாநுஜரிடம் அளவற்ற அன்பு கொண்டவரும் ஞானம், பக்தி போன்ற குணங்களின் கடலான ஸ்ரீ ஶைலேஶரின் கருணைக்கு பாத்திரமான ரம்யஜாமாத்ரு முநியை (மணவாள மாமுனிகள்) நான் வணங்குகிறேன்).
ஸ்ரீஶடாரி குரோர்திவ்ய ஸ்ரீபாதாப்ஜ மதுவ்ரதம்
ஸ்ரீமத் யதீந்த்ர ப்ரவணம் ஸ்ரீலோகார்ய முநிம் பஜே
ஸ்ரீ ஶடகோபாசார்யரின் திருவடியும் ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவ ப்ரபந்தத்தை அருளியவருமான தாமரை மலரினின்று வழியும் தேன் போன்ற பிள்ளை லோகம் ஜீயரின் திருவடிகளை வணங்குகிறேன்).
குருநாதனெங்கண் மணவாளயோகி குணக்கடலைப்
பலநாளும் அண்டிப்பருகிக் களித்திந்தப் பாரினுள்ளே
உலகாரியன் முநிமேகம் இந்நாளென்னுள்ளம் குளிர
நலமான சீர்மை மழை நாளும் பொழிந்தது இந்நிலத்தே
மணவாள மாமுனிகளின் குணங்கள் என்னும் கடலிலிருந்து பருகி அனுபவித்தவர் நம் ஆசார்யர் (பிள்ளை லோகம் ஜீயர்). இவ்வுலகில் மேகம் போல இருக்கும் அத்தகைய பிள்ளை லோகம் ஜீயர், தம் மேன்மையான குணங்கள் எனும் மழையை இந்த பூமிக்கு அனுதினமும் என் மனம் குளிரக் கடாக்ஷித்தார்)
மற்றுமொரு நாள் கந்தாடை யணணனை அழைத்தருளி, பெரிய கந்தாடை யப்பன், திருக் கோபுரத்து நாயனார் பட்டர், சுத்த ஸத்வமண்ணன், ஆண்ட பெருமாள் நாயனார், அய்யனப்பா இவர்களுக்கு
பகவத் விஷயம் ப்ரஸாதிக்கும்படிக்கு நியமித்தருளி ”பகவத்ஸம்பத்தாசாரியர்” என்று திருநாமம் ஸாதித்தருளி ஆசார்ய ஸிம்ஹாஸநத்திலே அபிஷேகம் செய்தருளினார்.
சுத்த ஸத்வமண்ணனுடைய வ்யாக்யாந சாதுர்யத்தைக் கண்டு போரவுகந்தருளி அவருக்குத் ‘திருவாய்மொழியாசாரியர்” என்று திருநாமஞ் சாத்தி பகவத் விஷய ஸிம்ஹாஸனத்திலே அபிஷேகஞ் செய்தருளினார்.
ஒரு நாள் ராத்திரி கந்தாடை நாயனும் ஜீயர் நாயனாரும் பகவத் விஷயத்திலே கூடமான வாக்யங்களுக்கு அர்த்த விசாரம் செய்ய,நாயன் ஸம்ஸ்க்ருதமாக அர்த்தோபந்யாஸம் செய்யக் கண்டு
பகவத் விஷயத்திற்கு ஸம்ஸ்க்ருதத்தில் அரும் பத விளக்கம் பண்ண நியமித்தளி உபலாளித்தருளினார்.
முதலிகளை ஆசார்ய ஸிம்ஹாஸனங்களில் அபிஷேகம் செய்தல்
ஒருநாள் ப்ரதிவாதி பயங்கர மண்ணாவை அழைத்தருளி, கந்தாடை யண்ணன், போரேற்று நாயனார், அநந்தய்யனப்பை. எம்பெருமானார் ஜீயர் நாயனார், கந்தாடை நாயன் இவர்களெல்லாருக்கும் ஸ்ரீபாஷ்யம் ஸாதித்தருளும்படிக்கு நியமித்து அவருக்கு ஸ்ரீபாஷ்யாசாரியர்” என்று திருநாமம் ப்ரஸாதித்தருளிஸ்ரீபாஷ்ய ஜிம்ஹாஸனத்திலே அபிஷேகம் செய்தருளினார்,
எறும்பி அப்பாவை கோயிலுக்கு அழைத்தல்
முன்பு ஜீயர் ஸந்நிதியினின்று அனுப்புவித்துக் கொண்டு எழுந்தருளின எறும்பி அப்பா தத் விஸ்லேஷம் ஸஹிக்க மாட்டாமல் ஜீயருடைய தினசர்யா ப்ரகாரங்களை அநுஸந்தித்துக் கொண்டு ௮நுபவ பரீவாஹ ரூபமாக திநசர்யை” என்கிற ப்ரபந்தத்தைச் செய்தருளி, ஜீயர் ஸந்நிதிக்கு ஒரு ஸ்ரீவைஷ்ணவர் கையிலே கொடுத்து வரக் காட்ட, அத்தைக் கண்டு ஜீயர் மிகவும் உகந்தருளி, ”அபிமத
நிஷ்டராகில் இப்படி யிருக்க வேண்டாவோ?” என்று மிகவும் க்ருபை பண்ணி, அவரிடத்திலே திருவுள்ளம் சென்று, அப்போதே அப்பா எழுந்தருளும் படிக்கு ‘ப்ரீத: ப்ரேஷிதவாந் முநிர் வர வரோ
யஸ்மை முஹுஸ்ரீமுகம்!* என்கிறபடியே எறும்பி யேறத் திருமுகம் போக விட்டருள. அப்பாவும் ஜீயரை அப்போதே காண வேணும் என்று பேராசையோடிருக்க,
பாராவாரப் லவந சதுர: குஞ்ஜரோ வாநராணாம் பத்மாபர்த்து: ப்ரிய ஸஹ சர : பத்ரிணாமீஸ்வரோ வா
வாயுர்பூத்வாஸ பதியதிவா மார்க்க முல்லங்க்ய துர்க்கம் காலே காலே வரவரமுநே காமயே வீக்ஷிதும் த்வாம் ॥
[மணவாளமாமுனியே ! பெருங் கடலைத் தாண்டுவதில் சமர்த்தரான வானரங்களுள் ஸ்ரேஷ்டரான சிறிய திருவடியாகவாவது பூமகள் கேள்வனான எம்பெருமானுக்கு ப்ரியனாய் ஸதா அருகே நித்ய கைங்கர்யம் செய்து கொண்டிருக்கும் பக்ஷி ராஜனான பெரிய திருவடியாகவாவது அடியேன் ஆகி இப்பொழுதே கடக்த முடியாத வழியையும் கடந்து தேவரீரைக் காலந் தோறும் கண்ணாரக் கண்டு களிக்க ஆசைப்படுகிறேன் ] என்றும் மநோ ரதித்துக் கொண்டிருக்கிற தசையிலே திருமுகம் வரக் கண்டு அத்யாதரத்துடனே ப்ரத் யுக்தராய்ச் சென்று ஸேவித்து திருமுகத்தை சிரஸா வஹித்து.
தேவ:ஸ்வாம் ஸ்வயமிஹ பவந் வெளம்ய ஜாமாத்ரு யோகீ |
போகீஸ த்வத் விமுக மபிமாம் பூய ஸாபஸ்ய ஸித்வம்’?
அர்த்தெள தார்யாதசே வசஸா மஞ்ஜாஸா ஸந்நிவே ஸாதா
விர் பாஷ் பைர மலமபிதிர் நித்ய மாராதநீயம்
ஆஸா ஸாநைர் வரவரமுநே நித்ய முக்தைரலப்யம் மர்த்யோ லப்தும்
ப்ரபவதிகதம் மத்வித: ஸ்ரீமுகம்தே
ஸாரா ஸார ப்ரமிதி ரஹிதஸ் ஸர்வதா ஸாஸ நம்தே ஸத்ய ஸ்ரீ மாந்
கபிகர க்ருதர மாலிகா மேவ குர்யாம்’
[திரு வநந்தாழ்வானே! தேவரீர் தாமாக இவ் வுலகில் அஸ்மதாதிகளுக்கு ஸ்வாமியான மணவாளமாமுனிகளாகத் திருவவதரித்து,தேவரீரிடத்தில் விமுகனாயிருப்பினும் அடியேனை விசேஷமாக கடாஷித்தருளிற்று. மணவாளமாமூனியே! தேவரீருடைய ஸ்ரீஸூக்திகளின் அமைப்பினாலும் அர்த்த கெளரவத்தாலும் தூய மதியுடையவரால் ஆநந்தக் கண்ணீருடன் எப்போதும்
ஆராதிக்கத் தக்கனவாய், எப்போதும் பல்லாண்டு பாடிக் கொண்டுள்ள நித்ய முக்தர்களாலும் அடைய வரிதான தேவரீருடைய ஸ்ரீ முகத்தை அடியேன் போல்வார் அடைய எப்படித் தக்கவராவர்.’
நன்மை தீமைகளைப் பகுத்தறியும் அறிவற்ற அடியேன் எல்லா விதத்திலும் தேவரீருடைய ஸ்ரீமுகத்தை குரங்கின் கைப் பூ மாலை யாகவே ஆக்குவேன்] என்று அதிலே ஈடுபட்டு, அப்போதே கோயிலைக் குறித்து அத்யபி நிவேசத்துடேன எழுந்தருளி மடத்திலே புகுந்து வழியிலுண்டான விடாயும் நெடு நாளாக ஸேவியாத விடாயும் தீர “ஸுதா நிதிமிவ ஸ்வைர ஸ்வீக்ருதோ தகர விக்ரஹம்”? [அமுதக் கடல் போல தமதிச்சையாலே ஸ்வீகரிக்கப் பட்ட உயர்ந்த திருமேனி] என்னும்படியான விக்ரஹத்தைக் கண்டு
களித்து, வரவர முநி யோகி வர்யருடைய ஸ்ரீபாதபத்மங்களைத் தம் நெஞ்சிலும் கண்ணிலும் ஒற்றிக் கொண்டு ஸேவித்து,
பொன்னிதனிற் குளித்தாங்கந் தனிற் புகுதப் பெற்றோம்
பொருவருஞ் சீர் நம்பெருமாள் பதம் புகழப் பெற்றோம்
மன்னிய சீர் மணவாள மாமுநி வனென்னையன் வாழ்ந்திருக்கும் மடம் தனில் வந்திருக்கப் பெற்றோம்
சென்னி தனிலவனடியார் பதஞ்சூடப் பெற்றோம்
திருமலையாழ்வாரிலென்றும் சிறந்திருக்கப் பெற்றோம்
பின்னை யவர்க்கந்தரங்கப் பொருளும் பெற்றோம்
பெருந் திவத்தி லின்பமிங்கே பெருகவும் பெற்றோமே –என்றும்
மண்ணாடு வாழ வந்தோன் மணவாளமா முனிவன் வண்மை
கண்ணாருளுக் கிலக்காக நல் வாழ்வுங் கண்டவன் தன்
திண்ணாரடிகளில் குற்றேவல் செய்து திரியவும் நான்
எண்ணாதிருக்க நடுவே நமக்கு வந்தெய்தியதே –என்றுஞ் சொல்லுறபடியே தாம் பெற்ற பேற்றினுடைய கெளரவத்தை நாடோறும் அநுஸந்தித்துக் கொண்டு,
அந்த: ஸ்வாந்தம் கமபி மதுரம் மந்த்ர மாவர்த்த யந்தீம் உத்யத் பாஷ்ப ஸ்திமித நயநா ழுஜ்ஜிதா ஸேஷ வ்ருத்திம் | வ்யாக்யா கர்ப்பம் வரவர முநே த்வந் முகம் யீக்ஷமாணாம் கோணேலீந : க்வசித ணுரசவ் ஸம் ஸதம் தாமுபாஸ்தாம்
(மணவாள மாமுனிகளே, மனத்தினுள்ளே மதுரமான தோர் மந்த்ரத்தை அடிக்கடி உச்சரிப்பதும், உண்டான ஆனத்தக் கண்ணீரினால் அசையாத திருக் கண்களை யுடையதும், வேறு காரியங்களை விட்டிருப்பதும், உபய வேதாந்த ரஹஸ்யார்த்த விவரணத்தை உள்ளடக்கிக் கொண்டிருக்கிற தேவரீர் திருமுக மண்டலத்தை ஸேவித்துக் கொண்டிருப்பதுமான(பெரியோர்களுடைய) அந்த கோஷ்டியை, அற்பனான அடியேன் ஒரு மூலையில் மறைந்திருத்து அருகிலேயே ஸேவித்திருக்கக் கடவேன்.] என்னும்படியான திவ்ய கோஷ்டியை ஸேவித்துக் கொண்டு வரவர முநி ப்ருத்யர் களுடனே வாழ்ந்து கொண்டு எழுந்தருளி யிருந்தார். அவர்களிலே வரந் தரும் பெருமாள் பிள்ளை ஜீயருடைய திருக் கைச் செம்பும் திரு வொற்று வாடையுங் கொண்டு ஸேவிப்பாரா யிருக்கிற நாளிலே அவர்க்குத் திருக் குழற் கற்றை வளர்ந்திருக்க, இதேதென்று ஜீயர் கேட்டருள தத் தேதுவை அவர் விண்ணப்பஞ் செய்ய, ‘இன்று திரு முடி விளக்கும்” என்று நியமித்தருள, அவரும் அப்படியே திருமுடி விளக்குவித்துக் கொண்டு எழுந்தருள, அவர்க்கு குமாரர் திருவவதரித்தா ரென்றும் பத்து நாளாயிற் றென்றும் அன்று ஆள் வர?இத்தைக் கேட்டு இதென்ன ஸர்வஜ்ஞதை! என்று எல்லோரும் விஸ்மயப் பட்டார்கள் அவரும் பின்பு தம்முடைய குமாரருக்கு நாயனாரென்று ஜீயர் திரு நாமஞ் சாத்தி யருளினார்; இப்படி பலரும் திரு நாமஞ் சாத்தினார்கள்; ஆகையாலே வந்து பரந்த தெங்கு மித் திருநாமமிங்கு என்கிறபடியே இதுவும் அழகிய மணவாளன் கோத்ர மென்னும்படி எங்கும் விஸ்த்ருதமாயிற்று,
அக் காலத்திலே கந்தாடை யண்ணன் ஜீயர் விரும்பி யமுது செய்தருளும் கீரைக் கறியமுது நடத்திக் கொண்டு போந்து ஸர்வ காலத்திலும் தத்பதாஸ்ரயராய் ஸேவித்துக் கொண்டு போருகிறவர் ,
தம்முடைய எம்பெருமான் தளிகைக்கு உபாதான த்ரவ்யத்தாலே நடத்திக் கொண்டு செல்ல, அவருக்குண்டான த்ருஷ்ட ஸங்கோசதைத் திருவுள்ளம் பற்றி, தமக்குவந்த திரு முன் காணிக்கைகளையும் அவர்க்கு ப்ரஸாதித்தருளி, இப்படி.த்ருஷ்டாத்ருஷ்டங்
களிரண்டும் ஸ்வாதீனமாக நடத்திக் கொண்டு போருகற நல்லடிக் காலத்திலே,
அப்பிள்ளை கந்தாடையண்ணன் முதலானோர்
செப்பமுடன் சேர்ந்த திரள் தன்னை-யெப்பொழுதும்
பார்த்தாலும் எமக்கிழவாம் பட்டர் பிரான் தாதர் தனைச்
சூர் தீரக் காணாமையால்
என்று! அவர் விச்லேஷம் ஸஹியாமலருளிச் செய்துவிட,
அப்பிள்ளானுங் கந்தாடை யண்ணனு மருள் புரிந்த சடகோபதாதரும்
ஒப்பிலாத சிற்றானுங் கூடியே யோங்கு வண்மை மணவாள யோகி தாள்
செப்பி வாழ்ந்து களித்துத் தென் கோயிலிற் சிறந்த வண்மையைச் சேவித்திராமலே
தப்பி யோடித் தவித்துத் திரிவது தலை மெழுத்துத் தப்பாது காணுமே–
என்று தம்முடைய இழவை அநுஸந்தித்து அப்போதே புறப்பட்டு வந்து திருவடிகளிலே ஸேவித்துக் கொண்டிருந்தார். பின்பு.
வாது செயவென்று சில வாதினர்கள் வந்து மனமுறிய நிற்பராருமால்
வாழி யெனவே பெரிய சாப மறவென்று சிலர் வந்தனைகள் செய்வ ரொருபால்
போதுமினி வாதமுன பாதம்ருளென்று புகழ்ந்து சிலர் நிற்ப ரொருபால்
பொங்கி வருமெங்கள் வினை மங்க வருளென்று சிலர் போற்றி செய்து நிற்ப ரொருபால்
ஈதிவைகிடக்க மறை நூற் றமிழ் தெரிந்து சிலரேதமற வாழ்வரொரு பால்
ஏதமற வாதுலர்கள் பேதையர்கள் தாமயங்கி நிறை திறைஞ்சி நிற்பரொருபால்
மா தகவினாலுலக மேழையு மளிக்க வென வந்த வெதிராசனடி சேர்
மாமுனிவர் தீபமருளாளர் மணவாள முனி மன்னு மடம் வாழும் வளமே
என்று இப்படி பாகவத ஸம்ருத்தி யுடனே வாழுகிற நாளிலே
நம்பெருமாள் ஜீயரை பகவத் விஷய கால க்ஷேபம் ஸாதிக்க நியமித்தது
தத : கதாசிதா ஹூ௰ தமேகம் முநி புங்கவம்!
ஸத் க்ருதம் ஸாது ஸத் க்ருத்ய சரணாப்ஐ ஸமர்ப்பணாத்’ ॥
ஸந்நிதெள மேநிஷீதேதி ॥ஸஸாஸ முரஸாஸந : |
மஹாந் ப்ரஸாத இத் யஸ்ய ஸாஸநம் ஸிரஸா வஹந்
ததைவ தத்ர வ்யாக்பாதும் தத் ஷணாதுப சக்ரமே |
ஸ்ரீமதி ஸ்ரீ பதிஸ் ஸ்வாமி மண்டபே மஹதி ஸ்வயம் |
தத் வந்தஸ்ய ப்ரபந்தஸ்ய வயக்தந் தேநைவ தர்ஸிதம்
ஸடவைரிமுகை: ஸ்ருண்வந் தேஸிகைர் திவ்ய தர்ஸநை: |
அத திவ்ய முநேஸ் தஸ்ய மஹிமாந மமாநுஷம் ॥
அநுபூயே மமாபால கோபால மகிலோ ஜந: |
அமந்யத பரம் தந்ய மாத்மாநம் தத்ர நிக்ஷிபந் ॥
[பின்பொரு கால் நித்ய ஸூரி நிர்வாஹகரான பெருமாள் முனிவர் பெருமானாகிய இம் மணவாள மா முநிகளை வரவழைத்து கிருபையினால் தமது ஸ்ரீசடகோபனை ஸாதிப்பதன் மூலமாக மிகவும் கெளரவித்து, “தேவரீர் நமது ஸந்நிதியல் திருவாய் மொழி ஸ்ரீஸக்திகளின் அறிவரிய விசேஷார்த்தங்களை ௨பந்யஸித்து கொண்டு வாரீர்” என்று நியமித்தருளினார். மாமுனிகள்
அவருடைய உத்தரவை, பெரிய அநுக்ரஹ மென்று சிரஸாவஹித்து அப்படியே அங்கு அந்த ஷணத்திலேயே உபந்யஸிக்கத் தொடங்கினார். ஸ்ரீய பதியான ஸ்ரீ ரங்க நாதர் பெரிதாய் அழகிய பெரிய திருமண்டபத்தில் தாம் நம்மாழ்வார் முதலான திவ்ய ஞாநம் படைத்த ஆசார்யர்களுடன் எழுந்தருளி யிருந்து அந்தத் திருவாய்மொழிக்கு அம் மணவாள மா முனிகளாலேயே தெளிவாக அருளிச் செய்யப்பட்ட உண்மைப் பொருள்களைக் கேட்டருளி மகிழ்ந்தார். பின்பு குழந்தைகள் இடையர் தொடக்கமான சாதாரண ஜனங்கள் முதலாக எல்லோரும் அந்த உயர்ந்த முனிவரான மணவாள மா முனிகளின் அமானுஷமான வைபவத்தை அனுபவித்துத் தம்மை அவரிடத்திலேயே ஸமர்ப்பித்துத் தம்மை மிகவும் பாக்ய சாலிகளாக நினைத்தார்கள், என்கிறபடியே பரீதாபி வருஷத்தில் திருப் பவித்ரத் திருநாளிலே
க்ருபயா பர யா ஸ ரங்கராட் மஹிமாநம் மஹதாம் ப்ரகாஸயந்
குரு’சேஸ்வய மேவசேதஸா வர யோகி ப்ரவரஸஸ்ய ஸிஞ்யதாம்
[அந்த ஸ்ரீரங்கராஜர் தமது உயர்ந்த தயையினாலே முநிஸ்ரேஷ்டரான மணவாள மாமுனிகளின் பெருமையைப் பெரியோர்களுக்கு வெளிப்படுத்துவதற்காக, அம் முனிவர்க்குத் தாம் சிஷ்யராக வேணுமென்று தாமே தமது மனத்தினால் விருமபினார் ] என்று ஸ்ரீரங்கநாயகரான பெருமாள் தம்முடைய ப்ரம க்ருபை யாலே ஜீயருடைய மஹிமையை பெரியோர்களுக்கெல்லாம் ப்ரகாசிப்பிப்பதாக ஸ்ரேஷ்டரான ஜீயருக்கு சிஷ்யராகுகையை -பிதரம் ரோசயாமாஸ ததா தஸரதம் ந்ருபம்- என்று பெருமாள் சக்ரவர்த்தியை பிதாவாக ருசித்தாப்போலே இங்கும் தாமே திருவுள்ளத்திலே ருசித்தருளினார், அநந்தரம்,
ஸ்ரோதும் த்ராவிட வேதபூரி விவ்ருதிம் ளெளம்யோம் யந்துர் முநே ருத்கடண்டாஸ்தி மமைந மாந்ய ததஸ் தார்க்ஷ்யாஸ்ரயம் மண்டபம் ஆவிஸ் யார்ச்சக மூரிவாநிதிமுதா, நிஸ்போஷ லோகாந்விதோ
ரங்கீ வத்ஸர மேகமேவம ஸ்ருணோத் வ்யக்தம் யதோக்தம் க்ரமாத் ॥
[ஸ்ரீ ரங்கநாதன் திராவிட வேதமான திருவாய்மொழியின் உரையாகிய ஈட்டை மணவாளமா முனிவரிடமிருந்து கேட்க வேணுமென்ற ஆசை எனக்குள்ளது ஆகையால் அவரை கருட மண்டபத்துக்கு அழைத்து வாரும்” என்று அர்ச்சகரை ஆவேசித்து அருளிச் செய்தான், பின்பு அப்பெருமான் எல்லாரோடும் கூடி யிருந்து ஸந்தோஷமாக முறையே ஒரு வருஷ காலம் அம் முனிவர் ஸ்பஷ்டமாக ஸாதிக்கக் கேட்டருளினான்] என்று ஸ்ரீராங்கநாதர் நமக்கு அழகிய மணவாளமாமுனி யி டத்திலே திராவிட வேதமான நாலாயிரம் திவ்ய ப்ரபந்த வ்யாக்யானங்களைக் கேட்டருள அபிநிவேசமா யிருக்கிறது; ஆகையாலே இந்த மணவாளமாமுனியை கருட மண்டபத்திலே அழைப்பியும்!’ என்று அர்சசகரிடத்திலே ஆவிஷ்டராய் ஸந்தோஷத்துடனே அருளிச் செய்து, தாமுமங்கே யெழுந்தருளி, ஸமஸ்த ஜனங்களோடுங் கூடி யிருந்து ஒரு ஸம்வத்ஸரம் இப்படியே வ்யக்தமாக ஜீயரருளிச் செய்த கிர்மத்திலே கேட்டருளினார், அதெங்ஙனே எனில்;
மங்களா யதநே ரங்கே ரம்ய ஜாமாத்ரு யோகிராட் |
யுகபத த்ராவிடாம்நாய ஸர்வ வ்யாக்யாந கெளதுகீ ॥-என்கிறபடியே மிகவும் ஹ்ருஷ்டராய்
தேஸ்ந்தர கதோ வாபி த்வீபாந்தர கதோபிவா |
ஸ்ரீரங்காபிமுகோ பூத்வா ப்ரணி பத்ப நஸீததி ॥
[மங்களங்களுக்கு இருப்பிடமான ஸ்ரீரங்கத்தில் மணவாள மாமுனிகள் ஒரே சமயத்தில் திருவாய்மொழியின் எல்லா வ்யாக்யானத்தையும் உபந்யஸிப்பதில் ஆசை யுடையரா யிருந்தார் ]
[தேசாந்தரத்திலிருந்தாலும் த்வீபாந்தரத்திலே யிருந்தாலும் ஸ்ரீரங்கத்திற் கெதிர்முகமாக நின்று ஒருவன் தண்டம் ஸமர்ப்பித்தானாகில் அவன் எவ்வித வருத்தமும் அடைய மாட்டான்] என்றும் தேசாந்தரங்களி$ல இருந்தானே யாகிலும் திருவரங்கன் திருப்பதியை திக்கு நோக்கி தண்டன் ஸமர்ப்பித்த மாத்ரத்திலே ஸகல துரித நிவர்த்தகமாய் ஸகல மங்கள ப்ரதமான கோயிலிலே எழுந்தருளியிருந்து -ஸ்ரீரங்கமங்கள மணியான பெருமாள் ஸந்நிதியிலே ஸ்வாமி அழகிய மணவாளமாமுனி, த்ராவிட வேதமான திருவாய் மொழிக்கு ஆறாயிரப்படி , ஒன்பதினாயிரப்படி,
பன்னீராயிரப்படி, இருபத்நாலாயிரப்படி, முப்பத்தாறாயிரப் படிகளையும், திருவாய்மொழிக்கு அங்கோபாங்கங்களான அருளிச் செயல் வ்யாக்னங்களையும் ஒருக்கால் காலக்ஷேபம் நடத்தத் திருவுள்ளமாயெழுந்தருளி யிருந்தார். பெருமாளும் திருப் பவித்ரோத்ஸவ வ்யாஜமாகப் புறப்பட்டருளி யிருந்தார், பெருமாளும் திருப் பவித்ர மண்டபத்திலே யேறியருளி பேரோலக்கமா யெழுந் தருளி “அணியரங்கன் திருமுற்றத்தடியார், ஆசார்ய புருஷர்கள், ஜீயர்கள் ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைத்துக் கொத்துக்கும் அருள்ப் பாடு ஸாதித்தருளி, ஜீயரும் முதலிகளுடனே பெருமாளை மங்களாசாஸனம் பண்ணிக் கொண்டெழுந்தருளி யிருக்க, பலரடியார் முன்பருளிய என்ற படியே ஜீயரைத் தனித்து அருள்பாடிட்டருளி, ஸ்ரீசடகோபனையும் ப்ரஸாதித்தருளி, ‘* நாளை முதலாக தம்முடைய
பெரிய திருமண்டபத்திலே பெரிய வண்குருகூர் நம்பியான ஆழ்வாருடைய திருவாய்மொழிப்பொருளை ஈடு முப்பத்தாறாயிரத்துடனே நடத்தும்’” என்ன; “இப்படி அருளுவதே!” என்று மிகவும் ஹ்ருஷ்டராய்
நாமார்? பெரிய திருமண்டபமார்? நம் பெருமாள்
தாமாக நம்மைத் தனித்தழைத்து–நீ மாறன்
செந்தமிழ் வேதத்தின் செழும் பொருளை நாளுமிங்கே
வந்துரை யென் றேவுவதே வாய்ந்து.-என்று அருளிச் செய்தார் –
பிற்றை நாள் தொடங்குவதாக எழுத்தருஸி இன்பம் பயக்க விருக்க நிலத் தேவர் குழுவிலே பாட்டுக் கேட்பிப்பதாக காந கோஷ்டியைப் பாரித்தாப் போலவும் இராமாயணத்தைக் கேட்பதாக பார்த்தி வாம்ஸ் ச நர வ்யாக்ர: பண்டிதாத் நைகமாம்ஸ்த தா”! [(புருஷஸ்ரேஷ்டனான) இராமபிரான் அரசர்களையும் புலவர் களையும் வேதம் வல்லவர் களையும் வரவழைத்தான்] என்று தொடங்கி பரிகணிதரான அனைவரையும் திரட்டினாப் போலவும் பெருமாள் நாய்ச்சிமாருடனே கூட திவ்ய ஸிம்ஹாஸநத்திலே யேறி யருனி திவ்ய கோஷ்டியைப் பாரித்து அந்த கோஷ்ட் யந்தர் பூதராய் சேர்த்தியை அநுபவிக்க -அயர்வறுமமர்களான திருவநந்தாழ் வான், பெரிய திருவடி, ஸேநாபதியாழ்வான் என்கிற ஸுரிமார் களோடும், -வைகுத்தத்து முனிவராயிருந்துள்ள தம்மாழ்வார் தொடக்கமான ஆழ்வார்கள் பதின்மரோடும், நாதமுநி யதிவர ப்ரப்ருதிகளான ஆசார்யர்களனைவரோடும், ஸ்ரீரங்கநாராயண ஜீயர், திருமாலை தந்த பட்டர் தொடக்கமானாரோடும், அணிய ரங்கன் திருமுற்றத்தடியார் தங்கள் இன்பமிகு பெருங் குழுவோடுங்கூட பேரோலக்கமாக வெழுந்தருளி யிருத்து ஈடு தொடக்கமான ஐத்து வ்யாக்யானத்துடனே திருவாய்மொழி தொடங்க, அவ் வவ்விடங் களிலே இது ஸ்ருதி ப்ரக்ரியை, இது ஸ்ரீபாஷ்ய ப்ரக்ரியை, இது ஸ்ருத ப்ரகாசிகா ப்ரக்ரியை, இது கீதாபாஷ்ய ப்ரக்ரியை, இது ஸ்ரீபாஞ்சராத்ர ப்ரகீரியை, இது ஸ்ரீராமாயண ப்ரக்ரியை, இத மஹாபாரத ப்ரக்ரியை, இது ஸ்ரீவிஷ்ணுபுராண ப்ரக்ரியை, இது மஹாபாகவத ப்ரக்ரியை, இது பதார்த்தம், இது வாக்யார்த்தம், இது மஹாவாக்யார்த்தம், இது ஸமபிவ்யாஹாரார்த்தம், இது ஸ்வத்யர்த்தம், இது அர்த்தரஸம், இது பாவரஸம், இது ஒண் பொருள் , இது உட்பொருள் என்று இவர் இப்படி அருளிச் செய்யும்படியையும், கீ ரங்க வத்ஸர மேகமேவம ஸ்ருணோத் வ்யக்தம் யதோக்தம் க்ரமாத்” [ஸ்ரீரங்கநாதன் மாமுனிகளால் முறையே ஸ்பஷ்டமாக சொல்லப்பட்ட விஷயத்தை இங்ஙனமே ஒரு வருஷ காலம் கேட்டருளினான்] என்றபடியே இவர் தொடங்கி நடத்தி யரளும் படியையும் திருச்செவி சாத்தி யருளி அங்கே இப்படியே ஒரு ஸம்வத்ஸரம் நடந்து பின்பு சாத்தி யருளும் போது।
பகவத் விஷய சாத்துமறை
முன்பு போலே, பராங்குஸ பரகால பட்டநாத யதிவராதிகளுடனே கூட ஏறி யருளித் திருச்செவிசாத்தி யருளி ஜீயரை மிகவும் உபலாளித்தருளி திவ்ய ப்ரபந்த தத்வ வ்யாக்யாந வைபவங்களையும், ஜீயருடைய வைபவங்களையும் ப்ரகாசஞ் செய்தருள வேணுமென்றும், தாம் அநுஷ்டித்துக் காட்ட வேணுமென்றும் திரு வுள்ளமாய்
ஸமாப்தெள க்ரந்தஸ்ய ப்ரதிதஸீ விநிதோ பர்யாயசசயே பரம்
ஸஜ்ஜீபூதே வரவர முநேரங்க்ரி ஸவிதே |
ஹடாத்பால: கஸ்சீத்குத இதி நிரஸ்தோப் படிபகத: ஐகெள
ரங்கே ஸாக்ய: பரிணத் சதுர்ஹாயாந இதம் ॥
[பகவத்விஷய க்ரந்தத்தின் சாத்துமுறை ஸமயத்தில், வெற்றிலை பாக்கு பழம் என்றிங்ஙனே ப்ரஸித்தமான பலவகைப்பட்ட உபஹாரங்கள் ஸித்தப்படுத்தப் பட்டவளவில், நான்கு பிராயம் நிறைந்து ‘ரங்கநாயகன் என்னும் பெயர் பூண்ட சிறுவனொருவன் திடீரென்று அங்கு வரப் புக, “நீ எதற்கு வருகிறாய் அப்பால் செல்’ என்று |தடுக்கப்பட்ட போதிலும் அருகே வந்து நின்று இத் தனியனைச் சொன்னான் ) என்கிறபடியே ஜீயருக்கு ஆசார்ய ஸம்பாவனையாக சில த்ரவ்யங்களும் ஏலா லவங்க கர்ப்பூராதிகளும் திருப்பரிவட்டங்களும், அடைக்காயும், பலங்களும், அமர்த்தி நிற்க
ஸ்ரீ சைலேச தயா பாத்ர தனியனவதாரம்
அழகிய மணவாள பட்டரான அர்ச்சக குமாரராய் ஐந்தாம் வயதாய் ரங்கநாயக மென்கிற திருநாமத்தை யுடையரான ஒருபிள்ளை, ஸம்பாவனைத் தட்டுக்களுக்கும் பெருமாளுக்கும் நடுவே வத்து நிற்க, அப்பாலே விடவிடத் திரும்பி வந்து நிற்கும் , இது வெறுமனன்று, ஒரு ஆஸ்சர்ய முண்டாக வேணும்” என்று எல்லாரும் பார்த்திருந்து சிறு பிள்ளையை நீர் நிற்கிற காரியமேதென்ன, அவர் கையைக் கூப்பிக் கொண்டு பயப்படாமல் ஸ்ரீ ஸைலேஸ தயா பாத்ரம் என்ன, பின்னுமேதென்ன, தீ பக்தயாதி குணார்ணவம் என்ன, இன்னஞ் சொல்லுமென்ன, யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்யஜா மாதரம் முநிம் என்று சொல்லி ஓடிப் போக, பெரியோர்களெல்லாம் ஆஸ்சர்யப்பட்டு இந்த ஸ்லோகத்தைப் பட்டோலை கொண்டு மஞ்சட்காப்புச் சாத்தித் திருவடிகளிலே ஸமர்ப்பித்து, பின்பு அத்தைத் தட்டிலே வைத்து ரங்கநாயகத்தை உபலாளித் தழைத்து இன்ன மேதென்ன, நானொன்றுமறியேன் என்ன முன்பு சொன்னத்தை இன்னமொறு முறை சொல்லுமென்ன, நானொன்றுமறியேனென்று ஓடி விட;
வாழி திரு நாமத்துக்கு நியமனம்
பின்பு அந்தப் பிள்ளைக்கு அருள்பாடு ஸாதித்து,நீர் வாழித் திரு நாமமோதுமென்ன, அவர் தமிழிலே அதி சதுரராகையாலே,
வாழி திருவாய்மொழிப் பிள்ளை மாதகவால்
வாழும் மணவாள மா முனிவன்–வாழியவன்
மாறன் திருவாய்மொழிப் பொருளை மா நிலத்தோர்
தேறும்படி யுரைக்கும் சீர்-– என்றும்(இப் பாசுரம் மடத்துப் பிள்ளை அருளிச் செய்தது என்பர்-அப்பிள்ளை அருளிச் செய்தார் என்பாரும் உண்டு )
செய்ய தாமரைத் தாளிணை வாழியே
சேலை வாழி திரு நாபி வாழியே
துய்ய மார்பும் புரி நூலும் வாழியே
சுந்தரத் திருத் தோளிணை வாழியே
கையுமேக்திய முக்கோலும் வாழியே
சுருணைபொங்கிய கண்ணிணை வாழியே
பொய்யிலாத மணவாளமாமுனி புந்திவாழி புகழ்வாழி வாழியே என்றும்–(ப்ரதிவாதி
பயங்கரம் அண்ணன் அப் பிள்ளை அருளிச் செய்ததாகச் சொல்வர் )
அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ
சடகோபன் தண்டமிழ் நூல் வாழ–கடல் சூழ்ந்த
மன்னுலகம் வாழ மணவாள மா முனியே!
இன்னுமொரு நூற்றுண்டிரும் -என்றும் -(ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் அப் பிள்ளை அருளிச் செய்ததாகச் சொல்வர் )
ஒத, பெருமாளுகந்தருளி அவரை க்ருபை பண்ணி யருளி வரிசைகளும் ப்ரஸாதித்து:
திவ்ய தேசங்களுக்கு நம்பெருமாள் நியமனம்-
உடனே திருமலை, பெருமாள் கோயில் தொடக்கமான திருப்பதிகளுக்கெல்லாம் ஸ்ரீசேனை முதலியாருடைய ஸ்ரீமுகமாக அநுஸந்தான காலங்கள் தோறும் ஜீயர் விஷயமாக நம்பெருமாளருளிச் செய்த தனியன் ,
ஸ்ரீ ஸைலேஸ தயா யாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம் |
யதீந்த்ர ப்ரவ்ணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம் ॥-என்றநுஸந்திந்துத் தொடங்கவும், ப்ரபந்தம் சாத்தி -வாழி திருவாய்மொழிப் பிளளை என்று தொடங்கி , மணவாளமாமுனியே இன்னுமொரு நூற்றாண்டிரும் என்று அநுஸநத்தித்துத் தலைக் கட்டவும் என்று அனுப்பி விட்டருளி ஜீயருக்கு ஸம்பாவனையும் செய்தருளி வரிசையுடன் மடத்திற்கு அனுப்பியருளி நிற்க, பின்னும் ஒரு
அதிசயம் ப்ரவர்த்தமாயிற்று,
ஸ்ரீசைலேச தயாபாத்ரம்: என்பது ப்ரணவார்த்தம். ஸ்ரீசைலேச-(திருமலையப்பன்) ௮காரார்த்தம். தயா-பாத்ரம்-௮வன் க்ருபைக்கு பாத்ரமான ஜீவாத்மா மகார வாச்யன்.-எம்பெருமானுகக்குரியன் என்ற ஸம்பந்தார்த்தமும் தயா பாத்ரம் என்பதனால் காட்டப்பட்டது,
அண்ணன் திருமாளிகையில் அதிசய நிகழ்ச்சி
ஈடு சாத்து முறை யுத்ஸவம் ஸேவிக்க அனைவரும் கோயிலிலே சேர்ந்த வளவிலே அண்ணன் திருமாளிகையிலே ஜ்ஞாநாதிகைகளான அம்மைமார்களும் அண்ணன் தேவிகளும் சேர விருந்து
கொண்டு ஜீயருடைய வைபவத்தை அநுஸந்தித்திருக்கிற வளவிலே ஒரு ப்ரஹ்மசாரி வந்து ஒரு சீட்டை அண்ணன்தேவிகள் கையிலே கொடுத்து, இத்தை அண்ணன் திருக் கையிலே ஸமர்ப்பியும்-என்ன; அவர் அத்தை வாங்கி வாஸிப்பித்து “இது ஒரு ஸ்லோகமிருத்தபடியே!*? என்று உகந்து ப்ரஹ்மசாரியைக் கேட்டு ஆதரிக் கப்பார்க்க, அங்கே அவரைக் காணா தொழிய பின்பு எல்லாரும்
எழுந்திருந்து எங்குந் தேடியுங் காணப் பெறாமையாலை அங்குள்ளவர்கள் பகவல் லீலை யென்று அறுதியிட , அவர்களிலே சிலர் பெரிய திருமண்டபத்திலே சென்று முறியை ஸமர்ப்பித்துச் செய்தியை
விண்ணப்பஞ் செய்யக் கேட்டு
ஹடாத் தஸ்மிந் ஷணே கஸ்சித் வர்ணீ ஸம் ப்ராப்ய பத்ரிகாம் |
வாதூல வரதாசார்ய தர்ம பத்ந்யா: கரே ததெள ॥
திடீரென்று அக் கணத்திலே ஒரு ப்ரஹ்மசாரி வந்து கோயிற் கந்தாடை யண்ணனுடைய தேவிகளின் கையில் ஒரு ஓலையைக் கொடுத்தான்] என்று அநுஸந்தித்து அனைவரும் ஆச்சர்யப்பட்டு முறியில் திருவெழுத்துப்பட்ட ஸ்ரீஸைலேஸ தயாபாத்ர ஸ்லோகத்தைக் கண்டு வித்தராய், தனியனின் அர்த்தத்தை திருமந்த்ரமாக யோஜித்து -அநுஸந்தித்து, வானமா மலை ராமாநுஜ ஜீயர்; கந்தாடை
அண்ணன், அப்பா, அண்ணா முதலான பெரியோர்கள் தாங்கள் தங்களுடைய பக்த் யதிசயத்தாலே தனியனாக வேணுமென்று அருளிச் செய்த ஸ்லோகங்களையும் இதிலே அந்தர் பவிப்பித் தருளி -இது எல்லார்க்கும் உத்தாரகம்’- என்று உகந்திருக்க, பெருமாள் ஆழ்வார்களுக்கு அருள்பாடிட்டு அனுப்பியருளி, -உள்ளே பெரிய பெருமாள் சேர்த்தியிலே எழுந்தருளினவாறே கோயில் பரிகர
மனைத்துக் கொத்தும் ஸகல வரிசைகளுடனே ஜீயரை யெழுந்தருளப் பண்ணி வைத்துக் கொண்டு திருவீதி ப்ரதக்ஷிணமாக மடத்திலே யெழுந்தருளப் பண்ணி வைத்தார்கள். பின்பு கோயில் பரிகரமனைத்துக் கொத்தும் ஸந்நிதியிலே சென்றவாறே அவர்களைப் பெருமாள் உகந்தருளி, ஜீயர் முப்பத்தாறாமிரப் பெருக்கர் என்னுமது கண்டோம் என்று மிகவும் க்ருபை பண்ணி யருளினார். இதற்கு முதலிகளும்-வாழி திருவாய்மொழிப் பிள்ளை என்று தொடங்கி மங்களா சாஸநம் பண்ணியும்
அடிசூடி யென் தலைமேலரு மறை யாய்ந்து தொண்டர்
முடி சூடிய பெருமான் வரயோகி முனங்குரவோர்
படி சூடு முப்பத்தாறாயிரமும் பணித் தரங்க
ரடி சூடி விட்டதற்கோ எந்தாயென்ப துன்னையுமே–என்று ஆபால கோபாலரெல்லாரும் தத் வைபவத்துலே யீடு பட்டு ததேக பரராய் தந் நாம குணங்களை அநுஸந்தித்துக் கொண்டுஹ்ருஷ்டரா யிருந்தார்கள்.
திருவேங்கடமுடையான் இத் தனியனை ப்ரவர்த்திப்பித்தது
இத் தனியனுக்கு இன்னம் அதிசயமுண்டு. அதெங்ஙகனே யென்னில்; –தென்னனுயர் பொருப்பிலழகரும் தெய்வ வடமலையப்பனும் இதற்கு ப்ரவர்த்தகரா யிருப்பர்கள். முன்பு முமுஷு வாய்
தேசாந்தரங்களிலே திரிவாரொருவருடைய உஜ்ஜீவதார்த்தமாக ஸர்வேஸ்வரன் ஸ்வப்நத்திலே இந்த ஸ்லோகத்தை யவருக்கு உபதேசிக்க, அவரும் அத்தைத் தஞ்சமாக நினைத்திருந்து பின்பொருக்கால் இந்த ஸ்லோகம் நடையாடுகிற தேசமான திருமலையிலே திருப் புரட்டாசாதி திருநாள் ஸேவிக்கும் போது திருவேங்கடமுடையான் அவரை க்ருபை பண்ணி அர்ச்சசக முகேந கையைப்
பிடித்திட்டு வந்து திருவோலக்கத்திலே வைஷ்ணவர்கள் நடுவேயிட்டு, -அவர்கள் அருளிச் செய்வதைக் கேள்” என்றும் அவர்களை“இவன் பணிப்பதைக் கேளுங்கோள்” என்றும் நியமிக்க, சேனை
முதலியார் திருமுகப்படியே நடத்துகிற தனியனை பெரிய கேள்வி ஜீயர் தொடங்க, அத்தைக் கேட்டு விலஷணராகையாலே தெண்டனிட்டு,! “ஒரு விண்ணப்பம்; கேட்டருளவேணும்” என்றது விண்ணபஞ் செய்து “அடியேனுக்கு ஸ்வப்ந லப்தமாய் அது.தன்னை அடியேன் தஞ்சமாக நினைத்திருக்க ஸ்லோகத்தையே தேவரிர்களும் அநுஸந்தித்தது இதென்ன ஆஸ்சர்யம்- என்ன, ஆகில் நீர் அந்த ஸ்லோகத்தைச் சொல்லிக் காணீர்” என்ன, அவர்
ஸ்ரீசைலேச தயாபாத்ரத்தைச் சொல்ல அத்தைக் கேட்டு எல்லாரும்
மிகவுமுகந்தருளித் தங்களுக்கு வந்தவற்றை யெல்லாம் ஸ ப்ரகாரமாக அருளிச் செய்யக் கேட்டு அதி ப்ரவணராய்ப் புறப்பட்டுக் கோயிலிலே சென்று ஜீயர் திருவடிகளிலே வேரற்ற மரம் போலே விழுந்து கிடக்க; பரம தயாளுவான ஜீயரும் அவரைத் திருக்கையாலே ஸப்ர்சித்து ”நீயார்? வந்த காரியமேது?” என்று கேட்டருள“அடியேன் முமுக்ஷுவாய் தீர்த்த யாத்ராப்ரனாய் திரிவானொருத்தன்”என்று தொடங்கிச் சிலவற்றையும், ஸ்வப்ந வ்ருத்தாத்தத்தையும் தனியனையும் விண்ணப்பஞ் செய்து ஜீயர் திருவடிகளைத் தன் தலையிலே நற்றரிக்க வைத்துக் கொண்டு, திருவேங்கடமுடையான் அடியேனை விசேஷ கடாஷம் செய்தருளி, இத் தனியனைத் திருவோலக்கத்திலே ஸாதித்து தேவரீர் திருவடிகளை
ஸேவிக்க விட்டார்” என்று விண்ணப்பஞ் செய்து நிற்க; , இப்படி, பகவத் கடாஷ பாத்ர பூதனோ நீ!” என்று மிகவும் உகந்தருளி-இனி உனக்கு வேண்டுவதென்?” என்ன.-மோஷ உபாயமான மந்த்ர ரூபமான தனியனையும் மந்த்ரதாசார்ய ரூபியான அப்பனையும், மந்த்ர ப்ரப்திபாத்ய தேவதையான தேவரீர் திருவடிகளையும் த்ருடமாகப் பற்றி முத்தனானேன்; இனி வேண்டுவதுண்டோ?’-என்று கையைத் தட்டிச் சிரித்துக் கூத்தாடி நிற்க, ஜீயரும்,
மந்த்ரே தந் தேவதாயாஞ்ச। ததா மந்த்ர ப்ரேத குரெள |
த்ரிஷு பக்திஸ் ஸதா கார்யா ஸாஹி ப்ரதம ஸாதநம் ॥
[மந்த்ரத்தினிடத்தும், அதன் உள்ளீடான தேவதை யிடமும் அப்படியே அம் மந்த்ரத்தை யுபதேசித்த ஆசாரியனிடமுமாக இம் மூன்று விஷயங்களிலும் எப்போதும் பக்தி செய்யப்படவேண்டும்;இந்தபக்தியே பகவத் ப்ராப்திக்கு முக்ய ஸாதநம்] என்னுமது
இவருக்குண்டாயிருக்கிறதே! அதிகார பூர்த்திக்கு வேண்டுவதும் இதுவே யன்றோ?’? என்று உகந்தருளி, அவருக்கு தாபாதி பஞ்ச ஸம்ங்காரங்களையும் ஸாதித்து ‘*திருவேங்கடராமாநுஜ தாஸர்”
என்று தாஸ்ய நாமத்தையும் ஸாதித்து க்ருபை பண்ணி யருளினார்.
பெருமாளும், * வாரீர் திருவேங்கட ராமாநுஜ தாஸரே! உமக்கு மேல் வீடு தந்தோம்”? என்று ஸ்ரீ சடகோபனை ஸாதிக்க உடனே அவர் திரு நாட்டுக் கெழுந்தருளினார்- எல்லாரும் அவருக்குப்
பெரியோர்களுக்குச் செய்யும் க்ரியைகளெல்லாஞ் செய்து நிறை வேற்றி ஜீயருடைய வைபவத்தை எல்லாருமாகக் கொண்டாடிக் கொண்டு எழுந்தருளி யிருந்தார்கள் ‘
திருமாலிருஞ்சோலை அழகர் இத் தனியளை ப்ரவர்த்திப்பித்தது
அழகர் திருமலையிலே ஸமஸ்த கைங்கர்ய நிரதராய் ஜீயர் திருவடி ஸம்பந்த முடையாரயிருக்கிற ஜீயர் தம்முடைய ஆசார்யருடைய ஆத்ம குணங்களையும் விக்ரஹ குணங்களையும் சிந்தித்து
அனுஸந்தித்துக் கொண்டு ப்ரதஷிணமாக வெழுந்தருளி, தமக்கு நித்யா நுஸந்தேயமாக ஜீயர் விஷயமான தனியன் பெரியோர்களிடத்தினின்று உண்டாக வேணுமென்று எண்ணிக் கெண்டு சேனை முதலியார் ஸந்நிதியிலே தண்டன் ஸமர்ப்பித்து நிற்க: அந்த அவ ஸரத்திலே அர்ச்சகரும் ஸேனை முதலியாருக்குத் திருவாராதநங் கண்டருளப் பண்ணி திருவந்திக் காப்புங் கண்டருளப் பண்ணி திருமுக மண்டலத்தை ஸேவித்து
ஸ்ரீசைல ஸூந்தரே ஸஸ்ய கைங்கர்ய நிரதோயதி: |
அமந்யத குரோஸ் ஸ்வஸ்ய பத்ய ஸம்பவ மார்யத; ॥
[தெற்குத் திருமலை யழகருடைய கைங்கர்யத்திலே ஊற்றமுடைய ஒரு ஜீயர் தமது ஆசார்யராகிய மணவாளமாமுனிகளுக்கு ஒரு தனியன் பெரியோர் திருவாக்கிலிருந்து அவதரிக்க
வேணுமென்று எண்ணினார் என்று விண்ணப்பஞ் செய்து கொண்டு பெருமாள் ஸன்னிதியிலே அமுது செய்தருளப் பண்ணச் செல்ல, அவ் வளலிலே அழகிய மணவாளமாமுனியினுடைய
திருவடி ஸம்பந்தமுடைய சேனை முதலியார் என்பவர் தெற்குத் திருப்பதிகளெல்லாம் மங்களாசாஸனம் பண்ணி அழகரைத் திருவடி தொழ வெழுந்தருள, ஸ்ரீகார்யம் பார்க்கிற ஜீயரும். அவரைக் கண்டு மிகவும் ஆதரித்துப் பெருமாளை மங்களாசாசனம் பண்ண வெழுந்தருளப் பண்ணி வைத்துக் கொண்டு திருமுன்பே செல்ல, அழகரும் அவரை மிகவும் க்ருபை பண்ணி யருளி தீர்த்தம் முதலான வரிசைகள் ப்ரஸாதித்து ஸ்ரீ சடகோபனையும் அவர் திரு முடியிலே நற்றரிக்க வைத்தருனி உமது நாவின் நுனியில் நான் இருந்து
ஜிஹ்வாக்ரே தவ வக்ஷ்யாமி ஸ்த்தித்வாவதஸூ பாவநம் |
பத்மம் த்வதார்ய விஷயம் முநீகரஸ்ய மமாஜ்ஞாயா: ॥
கொண்டு சொல்லப் போகிறேன், என்னுடைய நியமனமாக ௨ம்முடைய ஆசார்யரான மணவாள மா முனிகளுடையதாய்ப் பரம பவித்ரமான (இந்த) ஸ்லோகத்தை இந்த ஜீயருக்குச் சொல்லும்,என்று அர்ச்சக முகேந நியமிக்க சேனை முதலியாரும்,
தந்யோஸ் மீதிஸ் ஸேகேஸ தேஸி கோ வதந ஸ்லயம்’]
வஹக் ஸிரஸி தேவஸ்ய பாதெள பரம பாவநவ் ॥
(சேனை முதலியாரென்பவர் அழகருடைய பரம பாவநமன திருவடி நிலைகளை ‘தமது திருமுடியில் வைத்துக் கொண்டு அடியேன் தந்யனானேன் என்று கூறி, தாமே அத் தனியனைச் சொன்னார்] என்கிறபடியே ஸ்ரீசடகோபனையும் முடியில் தரித்துக் கொண்டு ஸ்ரீ சைலேச தயா பாத்ரம்”” என்னுமித் தனியனை யருளிச்’ செய்த உடனே அர்ச்சகரும் தெரியப்பட்டு ஜீயருக்கு ஸாதித்தருளின்ர்-பின்பு சேனை முதலியாருக்கும் அர்ச்சகருக்கும் இந்த ஸ்லோகம் தெரியாதொழிய, ஜீயர் மடமே சென்று ஸ்லோகம்ருளிச் செய்ய வேணு மென்று கேட்க, அருளிச் செய்த தேவரீரே கேட்க வேணுோமோ “என்ன, ”எனக்கொன்றுமே தெரிய லில்லை, இது ஸுந்தர ராஜர்’ தானே ஸூந்தர ஜாமாத்ரு முநி விஷயமாக அருளிச்: செய்த என்று மூன்று திருநாமமும் கூடி தெரிவிப்பை கடாஷித்துத் கொண்டு வித்தராய்த் தங்களுக்குத் தஜ்சமாகக் கொண்டருள்,சேனை முதலியாரும் அதி ப்ரீதியடனே இச் செய்தியைக் கோயிலிலே பெரியோர்களுக்செல்லாம் தெரிவிக்க வேணுமென்று அதி த்வரையாக எமுந்தருளி கோஷ்டியிலே ஜீயரைத் தண்டன் ஸமர்ப்பித்து இவ் வைபவங்களை யெல்லாம் “விண்ணப்பஞ் செய்ய, எல்லாரு மிகவும் உகந்தருளி இப்படி திருவேங்கடமுடையானும் அழகரும் உகந்தருளின இத் தனியனை ப்ரகாசப்பித் தருளுகிறதே ! இதென்ன வைபவம் தான்!” என்று போர வித்தரா யருளினார்கள். –
வானமாமலை ஜீயர் முதலானார் ஜீயரைப் புகழ்தல்
வான மாமலை ராமாநுஜ ஜீயர் மிகவும்: ஹர்ஷ பரவசராய்”’ ஸ்தப்தராயிருக்க, ஜீயரும் திருக் கைகளாலே அவரைத் தட்டி உம்முடைய ஹர்ஷத்துக்குப் போக்குவீடாக வார்த்தை யருளிச் செய்யலாகாதோ?” என்ன, அவரும் “இரண்டு முலைக் காம்பினும் மாறாதே பெருகுகிற பாலை ஆராவமுதமாகப் பருகுவார் தாமே யன்றோ?’” என்று கத்தாடை யண்ணனைப் பார்த்தருளிச் செய்ய -அண்ணணும் -அந்தப் பாலிலும் இந்த உக்தி ரஸம் அதிசயமாயிருக்கிறதே!” என்ன, ப்ரதிவாதி பயங்கரரும் உத்தரோத்தரம் அதிசயமாயிருக்கிற தென்று அண்ணனைக் கொண்டாட, அப்பிள்ளை இருத்து, மந்த்ரோத்தரமான பூர்வ வாக்கியத்திலும் உத்தர வாக்கியம் அதிசயித்து இருக்குமென்ன, பட்டர் பிரான் ஜீயர் த்வயத்திலும் சட கோப த்வயம் அதிசயிதமாய், அது தன்னிலும் ராமாநுஜ த்வயம் உத்தரம் அதிசயமாய், (அதுதன்னிலும்) தந் நிஷ்ட ரான நம் ஜீயரைத் தொழுவதாயிருக்கிற இந்தத் தனியனே ஸ்ரேஷ்ட்டமென்று ஒருவருக்கொருவர் இட்டீடுகொண்டு சாடுரஸோக்திகள் அருளிச்
செய்து கொண்டு எழுந்தருளி யிருந்தார்கள்-
ஜீயர் வடதேசத்தெம்பெருமான்களை த்யாநித்தது
அநந்தரம் ஒருநாள் ஜீயர் ப்ராத: காலத்திலே திருமலை யாழ்வாரிலே எழுந்தருளி யிருந்து திவ்ய தேசங்களை த்யாநித்து அங்கே ஆஸக்தமான திருவுள்ளத்தை உடையராய் பாரவஸ்யத்தை யுமடைந்து அந்த திவ்யதேசங்களையே வாய் புலத்தித் கொண்டு இரண்டு யாம பர்யந்த மெழுந்தருளி யிருத்து “காலம் போகிறதே” என்று, சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்; -வெருவாதாள் வாய் வெருவி,
அருவி சோர் வேங்கடம நீர்மலையென்று-வாய் வெருவி; இவறிராப் பகல் வாய்வெரீஇ என்கிறபடியே வாய் புலத்திக் கொண்டு தளர்ந்து சாய்ந்தருள, காலஷேபத்திற்கு சில ஆசார்யர்களெழுந் தருளி பின்னுஞ் சில ஆசார்யர்கள் எழுந்தருள வேண்டியிருக்கிற அவஸரத்திலே.
அவ்யாஜ பந்தோர் கருட த்வஜஸ்ய திவ்யாஞ்சிதாந்யாய தநா நிபூய: |
த்யாயம் ஸ்தமோ நாஸகராணி மோஹவஸாத்த தேவ ப்ரஹரத் வயம்ல:
த்யாத்வாதி வ்யாஞ்சிதார்ச்ந விலஸித நிலயாந் யெளத்தராண்யாஸூ
விஷ்ணேஸ் தத் ஸேவாயத்த சித்தே ப்ரணிகததி முஹுர்நாமதஸ் தாநிதாநி |
தூஷ்ணீம் பூதேஸ பாஷ்பம் ஸபுளகநிசயம் ரம்ய ஜாமாத்ரு யோகி ந்யப்
யேத்யா நம்ய ஸர்வே கிமிதமிதி பராமார்தி மார்திமாபூர்ம ஹாந்த: |
[இயல்பாகவே உறவினனாய் கருட த்வஜனான எம்பெருமானுடைய அஜ்ஞான நாசகங்களான திவ்யங்களென்று கௌரவித்துச் சொல்லப்படுகிற திருப்பதிகளை (திவ்யதேசங்களை! தியானித்துக்
கொண்டே மோஹித்து இரண்டு நாழிகைக் காலம் அப்படியே மாமுனிகள் இருந்தார். பின்பு எம்பெருமான் அர்ச்சாவதாரமாக ஸேவை ஸாதிக்கிற-வடதேசத்திலுள்ள திவ்ய தேசங்களை த்யானித்து . அவற்றை ஸேவிக்க வேணுமென்ற ஆசை யுடையவராய் அத் திருப்பதிகளின் திருநாமங்களையே அடிக்கடி உச்சரிப்பவராய் மயிர்க்கூச்செறியக் கண்ணீர் மல்கி வெறுமனே அவர் இருந்தவ ளலிலே சிஷ்யர்களான பெரியோர்கள் அருகில் வந்து வணங்கி இது என்?என்று மிசுவும் வருத்த மடைந்தார்கள் ] என்கிறபடியே ஜீயர் கிளர் ஒளி 2-10-1) என்றநு ஸந்தித்திருந்து, வட தேசத்திலே திருவயோத்யை
முதலான திவ்யதேசங்களை ‘[த்யானித்து ‘ஸேவிக்கப் பெற்றிலேமே!! என்று நிருபாதிக பந்துவாய் ஆஸ்ரித ரஷணத்திற்குக்கொடி கட்டி யிருக்கிற திவ்ய தேசங்களை த்யாநித்து மோஹித்திருக்க அஷ்டதிக்கஜங்கள் முதலான ஆசாரியர்கள் இதென்னென்பதென்று கலங்கி அநேக விதமாக ஸமாதானம் விண்ணப்பஞ் செய்யச் செய்தேயும் திருக் கண்களைத் திறவாமல் அஸ்ருக்களோடே புளகிதகாத்ரராய் ஜீயரெழுந்தருளி யிருக்கக் கண்டு கிட்டவந்து, உற்று ஸேவித்து இதென்னவென்று பெரியவர்களெல்லாம் பரவஸராய் ஆர்த்தியை யடைந்து விட்டார்கள்;அவ் வளவிலே சரம பர்வநிஷ்டராய் திருவடிகளுக்கந்தரங்கராய்-கண்டியூரரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்கிறபடியே திவ்ய தேசங்களில் மிகுந்த கைங்கர்யத்தைப் பண்ணுகிற ராமாதுஜ தாஸர்,
ஸூமத்யே ராமாநுஜ தாஸ நாமாவ்ய ஜிஜ்ஞ பத்தம் வரயோகிவர்யம்–
நிஷேவ்ய ஸர்வாணி பதாநி விஷ்ணோ: ஸமர்ப்ப யிஷ்யாமித தைவதத்வ:
[ராமாநுஜ தாஸரென்னும் பெயர் பெற்ற ஒருவர் வந்து, “விஷ்ணுவின் ஸ்தலங்களனைத்தையும் சென்று ஸேவித்துத் திரும்பி வந்து அந்த ஸேவையை அப்படியே தேவரீருககுக் காணிக்கையாகச் செலுத்துகிறேன்” என்று அம்மா முனிகளிடம் விண்ணப்பம் செய்தார்] என்கிறபடியே அவர் ஜீயர் ஸந்நிதியிலே சென்று”அடியேன் ராமாநுஜ தாஸன் தேவரீர் திருவடிகளை முன்னிட்டு வட தேச திருப்பதிகளெல்லாம் தேவரீர் மங்களாசாஸநமாகத் தொழுது வந்து அந்தப் படியே ஸமர்ப்பிக்கிறேன்’* என்றும்
ஆஸேதோராப தர்யாஸ் ரமவர நிலயா தாச பூர்வா பராப்தே
க்ஷேத்ராணி ஸ்ரீதரஸ்ய த்ருஹிண ஸடஜி தாத்யஞ்சிதாநி ப்ரணம்ய |
ப்ராப்ஸ்யே ராமாநுஜோலம் பவ தய தநுசதஸ் சிந்த யம்ஸ்த்வத்
பதா வித்யஸ்மிந் விஜ்ஞாபயித்வா ப்ரணமதி புபுதே ஸெளம்ய ஜாமாத்ரு யோகீ ॥
“தென் திசையில் உள்ள ஸேது முதலாக வடதிசையிலுள்ள பத்ரிகாஸ்ரமென்னும் உயர்ந்த ஸ்தானம் வரையில் கிழக்குக் கடல் தொடநக்கி மேற்குக் கடலீறான இடங்களிலு முள்ளவையாய், பிரமன் முதலிய தேவர்களாலும் நம்மாழ்வார் தொடக்கமான ஆழ்வார்களாலும் பூஜிக்கப் பட்ட விஷ்ணுவின் ,திவ்ய தேசங்களை எல்லாம் சேவியாததனால் . தேவரீர்க்குள்ள மன வருத்தம் காரணமாக
சென்று தேவரீர் திருவடிகளைத் தியானித்துக் கொண்டு ராமானு தாஸனாகிய அடியேன் ஸமர்த்தனாய் ஸேவித்து வருகிறேன்! என்று விண்ணப்பித்து அவர் வணங்க, மாமுனிகள் மோஹம் தெளியப் பெற்றார்] என்று ராமாநுஜ தாஸர் விண்ணப்பஞ் செய்து தண்டன் ஸமர்ப்பித்த வுடனே ஜீயர் தெளிந்து திருக் கண்களை மலரத் திறந்து “வாரீர் ராமாநுஜ தாஸரே!” என்றருளிச் செய்ய திக் கஜங்கள் , முதலானா ரெல்லாரும் தேறி அவரை மிகவும் கொண்டாடி இருக்க, ஜீயரும் எழுந்திருந்து நெடும் போதாயிற்றே காலஷேப மின்றிக்கே யொழிந்ததே!’” என்று அருளிச்செய்ய, தேவரீர் திவ்ய தேசங்சளில் அநுபவ பரவசரா யெழுந்தருளி யிருக்க ஸேவித்து அநுபவித்துக் கொண்டிருக்க மாட்டாமல் சுலங்கி பயப்பட்டு விட்டோம்” என்று விண்ணப்பஞ்செய்து நிற்க, “ராமாநுஜ தாஸரே!”நீர் சொன்னது கூடவற்றோ?’” என்றருளிச் செய்ய, அவரும், அப்பொழுதே பயணமாகப் புறப்பட்டு நிற்க, திருவடி நிலைகளில் ஸம்பந்த முடையாரயிருக்கிற, குமாண்டூர் இளையாழ்வார் பிள்ளையை
யழைத்தருளி, “ரஈமாநுஜ தாஸரைக் கூட்டிக் கொண்டு திருப்பதிகளை ஸேவித்து வருகிறீரோ?”” என்று கேட்டருள அவரும் பாக்யமாயிற் றென்று விண்ணப்பஞ் செய்து நிற்க
ததோஸ் ப்வுங்க்த ஸ்வக முத்தரீயம் விதீர்ய ராமாநுஜ தாஸ மாஸூ |
ஸஹஸ்வ பாதாவநி நித்ய யோக மஹோ ஜுஷாசாசுக லக்ஷ்மணேந ॥
பின்பு ஜீயர் உடினே ராமாநுஜ தாஸருக்குத் தமது உத்தரீயத்தைத் ப்ரஸாதித்தருளி அவரை–தம் திருவடி நிலைகளோடு நித்ய ஸம்பந்தமாகிற தேஜஸ்ஸைப் பெற்றவராய் வேகமாகச் செல்லும் இளையாழ்வார்
பிள்ளையோடு செல்லுமாறு நியமித்தார்.] என்கிறபடி ஜீயர் திருவடிக்குத் திருவடி நிலைகள் கொண்டு ஸதா ஸேவிக்கிற மஹாதிசயத்தை யுடைய இளையாழ்வார் பிள்ளையோடே ராமாநுஜ தாஸரைத் தம்முடைய திருவடி நிலைகளை ஸூக்தமாக ப்ரசாதித்துப் பயணமாக நியமித்தருளினர்-
இளையாழ்வார் பிள்ளையும் ராமாநுஜ தாஸரும் யாத்திரை செய்தல்,
சக்ரவர்த்தி திருமகனார் ஸ்ரீபரதாழ்வானுக்குத் திருவடி சாதிக்க அப்போது இளைய பெருமாளுக் கல்லாது ஒழிந்ததே– பரதாழ்வானைப் போலே. இளைய பெருமாள் திரு நாமத்தை யுடைய இவரும் ஜீயருடைய திருவடி நிலைகளை லபித்து, வோசத்தில் ஜனங்களுக்கு ஸந்தோஷ உத்ஸவத்தைச் செய்தருளினார்-இப்படி அவருக்குத் திரு உத்தீரீயம் ஸாதித்தருளினாப் போலே இவருக்குத் திருவடி நிலைகள்- இப்படி தமக்கு ப்ரதி நிதியாக திருவடி நிலைகளை ஸாதித்தருளி யிருக்க, இளையாழ்வாரும், -தநம் மதீயம் தவ பாத பங்கஜம்” என்கிறபடியே மஹா தநத்தை லபித்தருளி
-மதீய மூர்த்தாந மலங்கரிஷ்யதி” என்று திருமுடி மேலே நற்றரிக்க வைத்துக் கொண்டு நிர் மர்யாத ஹர்ஷ யுக்தரா யருளினார்-ராமாநுஜ தாஸரும் பெருமானரையில் பீதக வண்ண வாடை
கொண்டு என்னை வாட்டம் தணிய வீசினீர்-என்று மிகவுமுகந்தார்-இப்படி அவரும் ஜீயர் திருவடி நிலைகளையே திருவாராதனமாக வெழுந்தருளப் பண்ணி வைத்துக் கொண்டு “அதி த்வரையாக கங்கா தீரத்திலே எழுந்தருளி திருவடி நிலைகளுக்கு நன்றாக சாஸ்த்ர ப்ரகாரம் நெடும் போது கங்கையில் திருமஞசனம் ‘பண்ணி ஜீயர் நீராடுவதாக அத்யவஸித்து அத் தீர்த்தத்திலே தாங்களும் நீராடி பின்பு அங்குண்டான இடங்களெல்லாம் ஸேவித்து
க்ரமேண தீர்த்தாநி ஸரீர பாஜாம் பாபா பஹாந் யூர்ஜித ஸெயக்யதாநி ]
பரிக்ர மந்தாவதிதிம் த்ருஸேர்ஸ்தெள விநிந்யது: ஸ்ரீ பதரீ நிவாஸம் ॥
விசித்ரர் தேஹ ஸம்பத்திரீரஸ்வராய நிவேதிதும்
அவ்விருவரும்-மனிதர்களின் பாபங்களைப் போக்க வல்வையாய் உயர்ந்த ஸெளக்யத்தை யளிக்க வல்ல தீர்த்தங்களை யெல்லாம் முறையே நீராடிச் சென்று பின்பு தம் கண்களுக்கு ஸ்ரீபதரிகாஸ்ரமப் பெருமாளை அதிதியாக (விருந்தாக) ஆக்கினர் ] [பல வகையான சத்திகளைப் பெற்ற சரீராவயவய ஸம்ருத்தியானது பசவானுக்குக் கைங்கர்யம் செய்வதற்காக ஏற்படுத்தப் பட்டுள்ளது ] என்கிறபடியே பகவதாத்தமாக தேஹ பரிக்ரஹம் பணணினவர் களுக்கு ஸ்வ ஸம்பந் தத்தாலே ஸமஸ்த ப்ரதிபந்தகங்களையம் போக்கி ஊர்ஜிதமான மஹா புருஷார்த்தத்தை ஸாதிக்கற திவ்யதேசங்களை
-இரண்டு திருநாமங்களும் க்ரமேண ஸஞ்சரித்து ஸேவித்து பத்ரிகாஸ்ரம நாராயணனைத் தங்களுடைய திருக்கண் மலர்களுக்கு ஸர்வ ப்ரிய தர்ஸந மாக அடைவித்தார்கள். இப்படி நர நாராயணப் பெருமாளை மங்களாசாஸநம் பண்ணிப் புக்க வளவிலே
அயோத்ய ராமாநுஜ தாஸ நாமக ஸதா முதா பூஜயதி ப்ரஸந்ந |
வஸீ நிஜ ஸ்ரீ குல சேகரஸ் ஸந் ஹரிம் பதர்யாஸ்ரம வாஸிநம்தம் ॥
(அயோத்யா ராமானுஜ தாஸரென்பவர், அனைவரையும் தாமிட்ட வழக்காக்கியவராய்த் தமது ஸ்ரீ வைஷ்ணவ குலத்துக்குச் சிரோ பூஷணமானவராய், மிகத் தெளிந்த மனமுள்ளவராய்க் கொண்டு
மகிழ்ச்சியுடன் எப்போதும் ப்ரஸித்தரான பதரிகாச்ரமப் பெருமானை ஆராதித்து வருகிறார்] என்று அயோத்யை ராமாநுஜ தாஸ ரென்கிற திருநாமத்தை யுடையவர், குலசேகரராய்க் கொண்டு ஸமஸ்த துரிதஸ்ஹரான வயதாஸ்ரிமப் பெருமாளை எக் காலத்திலும் ஸந்தோஷத்துடனே ஆராதித்துக் கொண்டிருந்தார்,
ஸயிஷ்மணம் வீஷ்ய பவித்ர ரூபம் ஸமேத்ய ராமநுஜ தாஸ மேநம் |
ஸமர்ச்ச யித்வா விவிதோபசாரைஸ் ஸ தர்ஸ யாமாஸ ரமாஸஹாயம் ॥
[அந்த அயோத்யா ராமானுஜ தாஸர்-இளையாழ்வார் பிள்ளையோடு வந்த இந்த சுத்த ஸ்வரூப ரான ராமாநுஜ தாஸரை கிட்டி வந்து பல வகைப்பட்ட உபசாரங்களைச் செய்து ஆராதித்துப் பின்பு பதரிசாச்ரம பெருமாளான ஸ்ரீயபதியை இவர்களுக்கு ஸேவை ஸாதிக்கப் பண்ணினார்] என்று ராமாநுஜய்யங்கார் பரம பாவநரா யிருக்கிற இவரைக் கண்டு ஸேவித்து நர நாராயணப் பெருமாளுக்கு விசேஷித்து தளிகைக்கு வரிசையாக ஸமர்ப்பித்துத் தளிகை அமுது செய்தருளப் பண்ணுவித்து உடனே அநுஸந்தாநம் நடக்க வேணு மென்ன;
வரயோகி வராகதெள ஸகைதெள நர நாராயண ஸந்நிதெள புரஸ்தாத் |
த்ரமிடோப நிஷந் மஹா பிரபந்த பிரதமோ உதாஹரணே ந்ய யுங்த வித்வாந் ॥
[வித்வானாகிற அயோத்யா ராமானுஜ ஐய்யங்கார்- மணவாள மா முனிகள் ஸந்நிதி யிலிருந்து வந்த இவ் விருவரையும்-நர நாராயணப் பெருமாள் ஸந்நிதியில் பெருமாளுக்கு முன்னிலையில் திவ்ய ப்ரந்தம் தொடங்கும்படி நியமித்தார்-. என்கிறபடியே அழகிய மணவாளமாமுனினுடைய ஸந்நிதி யினின்றும் அவருடைய மரியாதையாக எழுந்தருளின இவர்களை நர நாராயணப் பெருமாள் திரு வோலக்கத்தலே அருளிச் செயலாகிய மஹா ப்ரபந்தாநுஸந்தானத் தொடக்கத்திலே நியமிக்க, இளையாழ்வார் பிள்ளையும்
ததா விதிஜ்ஜோ வித் ப்ரஸாதாத்வ ரோப்யந்துர் துரி ரங்க தாம்நா |
நிவேநிதம் பத்ய வரம் த்வி கண்டம் படந்ஜகெள த்ராவிட வேதமேஷ। ॥
[முறை யறித்த இவ்விளையாழ்வார் பின்ளை அவர் நியமனத்தின் படியே, மணவாள மாமுனிகள் முன்பே ஸ்ரீரங்க நாதரால் மனத் தெளிவோடு அருளிச் செய்யப்பட்டதாய் இரண்டு பாகங்கள் கொண்ட (ஸ்ரீசைலேச’ என்ற ஸ்லோக ரத்நத்தை முதலில் சொல்லிப் பின்பு திவ்ய ப்ரபந்தத்தை ஓதினார்.] என்கிறபடியே ராமாநுஜருடைய நியமனத்தின் படியே தொடங்குகிறவராய்க் கொண்டு “ஸ்ரீஸைலேஸ தயா பாத்ரம்” என்னும் தனியனை முந்துற அனுஸந்தித்து மற்றத் தனியன்களையும் க்ரம ப்ரகாரம் அநுஸந்தித்து ப்ரபந்தாநுஸந்தாநஞ் செய்தருளினார்.
அது கண்டு ராமாநுஜய்யங்கார் முதலானவர்கள் விஸ்மிதராயிருக்க,
ஜஜ்ஜே அமுநா ஸ்வப்ந நிவேதிதம் ஹியத் கதம் பதர்யாஸ்ரம நித்ய வாஸிநா |
ப்ராகாஸி மந்த்ரர்ர்த்தமிதம் முரத் விஷேத் யாயோத்ய ராமாநுஜ ஆவிஸிஷ்மயே 1
[பத்ரிகாச்ரமற்தில் நித்ய வாஸம் செய்யும் இந்த முராரியான பகவானாலே தம் ஸ்வப்நததில் அருளிச் செய்யப்பட்டு எந்தத் தனியன் உண்டாயிற்றோ-மந்த்ரார்த்தங்களைத் தன்னகத்தே
கொண்ட இந்தத்தனியன் இவர்களால் எப்படி வெளிப்படுத்தப் பட்டது” என்று அயோத்யா ராமானுஜய்யங்கார் மிக்க ஆச்சரிய மடைந்தார்]. என்று ‘ஸ்ரீபதரிகாச்ரமப் பெருமாளாலே தமக்கு
ஸ்வப்நத்திலே அருளிச் செய்யப் பட்டதன்றோ இது ‘” என்று இவர்களாலே ப்ரகாசமாய் மந்த்ரார்த்த மானத்தை யறிந்து இது க்ருஷ்ண லீலை யென்று ராமாநுஜய்யங்கார் மிகவும் ஆஸ்சர்யப் பட்டு, பின்பு இந்த ஸ்லோகம் தேவரீருக்கு வந்தபடி யென்னென்ன)-கோயிலிலும் பெருமாள்-ஆசிநோதிஹி ஸாஸ்த்ரார்த்தாத்[சாஸ்த்ரப் பொருள்களை வெளியிடுமவன் ஆசாரியன்] என்கிற படியே இந்த ஸ்தலததிலே நர நாராயண ரூபேண பெரிய திருமந்தரத்யை வெளியிட்டருளினாப் பாலே அந்த மந்த்ரார்த்தமான திவ்ய ப்ரபந்த தத் வ்யாக்யாநங்களை லோகோபகாரமாக ப்ரவர்த்திப் பிக்கத் திருவுள்ளமாய் ”யதோசிதம் சேஷ இதீரிதே”* [ஸமயத்துக்குத் தக்கபடி அடிமைக்கு உறுப்பான பல சரீரங்களைக் கொள்ளுகையால் சேஷன் என்று சொல்லப்பட்டவன்] என்கிறபடியே அசேஷ சேஷ வருத்தியிலும் அந்வயித்திருக்கிற திருவநந் தாழ்வானை ஜீயராக வவதரிக்கச் சொல்லி நியோகிக்க, அவரும் தத் கைங்கர்யமாய் அவதரித்து திவ்ய ப்ரபந்ததத் வ்யாக்யாதங்களை அதி சதுரராய் நடத்திக் கொண்டு போர, அவருடைய வைபவங்களை ப்ரகாசஞ் செய்தருளத் திருவுள்ளமாய் ஜீயரிடத்திலே தாம் ஈடு கேட்டருள நியமிக்க, ஜீயரும்: இதுவுமொரு கைங்கர்யமென்று தொடங்கி. நடத்திச் சாத்துகிற ஸமயத்திலே
ஆசார்ய சம்பாவனை காலத்திலே, அர்ச்சக புத்ரராம் ரங்கநாயகன் என்கிற பெயருடையரான அஞ்சு வயஸ்ஸூ உள்ளவர் மேலே பெருமாள் ஆவேஸித்து அருளிச்செய்த படியையும், ‘ அந்தப்.
பிள்ளையைக் கொண்டு வாழி திரு நாம மவதரிப்பித்தபடியையும் ப்ரபந்தாநுஸத்தான காலத்திலே ஆதியிலே இந்தத் தனியனையும் ப்ரபந்தம் சாத்தினால் இந்த வாழித் திருநாமத்தையும் அநுஷத்திக்கும்படி திருமலை பெருமாள் கோயில் தொடக்கமான திவ்ய தேசங்களிலும் மற்றெங்கும் நடக்கும் படிக்கு
ஸ்ரீபந்நகாதீஸ முநே பத்யம் ரங்கேஸ பாஷிதம் | அஷ்டோத்தர தசஸ் தாலேஷ் வநுஸந்தாநமாசரேத் ॥
இத்யாஜ்ஞா பத்ரிகா விஷ்வக்ஸேநேந ப்ரதி பாதிதா | ததாரப்ய மஹத் பிஸ்ச பட்யதே ஸந்நிதே:புரா ॥
[ஸ்ரீரங்க நாதனால் மணவாள மாமுனிகள் விஷயமாக அருளிச் செய்யப் பட்டது இந்த ஸ்லோகம். இது தன்னை நூற்றெட்டுத் திருப்பதி களிலும் எல்லோரும் அனுஸந்தானம் செய்யக் கடவர்கள் -என்று நியமன பத்ரிகை ஸ்ரீஸேனை முதலியாரால் அனுப்பப்பட்டது. அது முதலாகப் பெரியோர்களாலும் இஸ் ஸ்லோகம் பெருமாள் ஸந்நிதானத்தில் முதலில் அநுஸந்திக்கப் பட்டு வருகிறது. என்கிறபடியே ஸ்ரீசேனை முதலியார் திருமுகம் வரவிட நடக்கிற படியையும், திருவேங்கடமுடையான் தீர்த்த
யாத்ரா ப்ராஹ்மணனுக்கு
உபதிஷ்டம் மயாஸ்வப்நே திவ்யம் பத்யமிதம் ஸூபம் |
வரயோகி ஸமாஸ் ரித்ய பவத:ஸ்யாத் பரம் பதம் ॥
மிக வுயர்ந்ததும் மங்களகரமுமான இந்த ஸ்லோகம் கனவில் உனக்கு உபதேசிக்கப்பட்டது. மணவாள மாமுனிகளை ஆஸ்ரயித்தால் உனக்குப் பரமபத ப்ராப்தி உண்டாகும்.] என்று.. ஸ்வப்நத்திலே இந்தத் தனியனையும் ப்ரஸாதித்து சில நாட்களுக்குப் பின் அந்த ப்ராஹ்மணனை ஜீயர் திருவடிகளிலே ஆஸரயிக்கும் படிக்கு
இத் யுக்த்வாதம் வ்ருஷாத்ரீஸோ ஸ்ரீபதாத ரேணு மேவச | தத்வா ஸூப்ரேஷ யாமாஸ கச்ச யோகி வரம் ஸூசிம்.॥-[திருவேங்கடமுடையான்’ இங்ஙனம் கூறிவிட்டு, ஸ்ரீ பாத ரேணுவையும் அவனுக்குக் கொடுத்து, பரிசுத்தரான ‘ மாமுனிகளிடம் செல்வாயாக என்று சொல்லி விரைவாக அனுப்பினார்.] என்கிறபடியே அவருக்கு ஸ்ரீசடகோபனையும் ஸ்ரீபாத ரேணுவையம ப்ரஸாதித்தருளின படியையும், அவரும் ஆஸ்ரயித்துத் திருவடிகளைச் சார்ந்த படியையும், திருமாலிருஞ்சோலையழகர் ஜீயர் திருவடிகள் ஸம்பந்த முடைய ஸேனை முதலியார் முகமாக இந்தத் தனியனை அருளிச் செய்தபடியையும், பகவதுக்ததி யாயிருக்க ஈஷத் பேத முண்டாயிருந்ததே யானாலும் அர்த்தைக்ய ப்ராதாந்யேந ஸேனை முதலியார் ஆசார்ய கோடி ப்ரவிஷ்டராகையாலே “அவர் திரு முகத்தின்படியே எங்கும் அநுஸந்தித்துப் போருகிறபடியையும் ப்ரஹ்மசாரி சிறுமுறி கொடுத்ததையும் ஸர்வ வ்ருத்தாந்தாந்தங் களையும் அருளிச் செய்யக் கேட்டு வித்தராய் தமக்கு இந்தத் தனியன் வந்தபடியை அருளிச் செய்யத் தொடங்கினார்-
தனியனவதரித்த வருஷம் மாதம் முதலியன கூறல்
அதில் முந்துற இத் தனியனும் வாழித் திருதாமமும் அவதரித்த வருஷம் மாஸம் தேதிகளைக் கேட்டருள, இளையாழ்வார் பிள்ளையும்
நல்லதோர் பரீதாபி வருடந் தன்னில் நலமான வவ் ஆவணியின் முப்பத் தொன்றில்
சொல்லரிய சோதியுடன் விளங்கு வெள்ளித் தொல் கிழமை வளர் பக்க நாலா நாளில்
செல்வ மிகு பெரிய திருமண்டபத்தில் செழுந் திருவாய்மொழிப் பொருளைச் செப்புமென்று
வல்லி யுறை மணவாளரரங்கர் நங்கண் மணவாள மாமுனி வழங்கினாரே —என்றும்,
ஆனந்த வருடத்தில் கீழ்மை யாண்டில் அழகான ஆனி தனின் மூல நாளில்
பாநுவாரங் கொண்ட பகலில் செய்ய ‘பெளரணையினாளி யிட்டுப் பொருந்தி வைத்தே
ஆனந்த மயமான மண்டபத்தில் அழகாக மணவாளரீடு சாத்த
வானவரும் நீரிட்டவழக்கே என்ன மணவாள மாமுனிகள் களித்திட்டாரே –என்றும்
“தத: கதாசிதாஹூய தமேநம் முநி புங்கவம் |
கிருபயா ஸாது ஸக்ருத்ய சரணாம் புஜ ஸமர்ப்பணாத் ॥
தர்ஸயந் துர்க்ரஹாரர்த்தாந் த்ரமிடோபநிஷத் கிராம் |
ஸந்நிதெள வ்யாகுருஷ்வேதி ஸஸாஸ அமர ஸாஸந : ॥
என்கிறபடியே பெருமாளும் ஒரு திருப் பவித்ரோத்ஸவத் திரு நாளிலே அங்குண்டான அனைவரும் பேரோலக்கமாக ஸேவித்துக் கொண்டிருக்கச் செய்தே, ஜீயரும் முதலிகளும் பெருமாளை
மங்சகளாசானைம் பண்ண எழுந்தருளின வளவிலே, பலரடியார் முன்பருளிய பாம்பணை யப்பன் என்கிறபடியே, தம்முடைய பரம கிருபையாலே உடையவருடைய வைபவத்தை நம்பி தாமே வெளியிட்டாப் போலே ஜீயருடைய மஹிமையை ப்ரகாசிப்பித் தருளுவதாகத் திருவுள்ளம் புற்றி தாமும் ஜீயருக்கு சிஷ்யராகுகையைக் குறித்து ஜீயரைத் தனித்தருளப் பாடிட்டருளி, “நாளை முதல்
நம்முடைய பெரிய திருமண்டப.த்திலே பெரிய வண் குருகூர் நகர் நம்பியான ஆழ்வாருடைய திருவாய்மொழியை ஈடு முப்பத்தாறாயிரம் தொடக்கமான ஐந்து வ்யாக்யானங்களுடனே நடத்தும்”:
என்று நியமித்தருள,
மங்கள ஆயதநே ரங்கே. ரம்ய ஜாமத்ரு யோ விராட் |
யுகபத் த்ராவிடாம்நாய வ்யாக்யநத்யாந கெளதுகி––என்கிறபடியே, ‘“இப்படி ஏவி யருளுகிறதே!” என்று ஹ்ருஷடராய்
மஹாந் ப்ரஸாத இத்யஸ்ய ஸாஸநம் ஸிரஸா வஹந்
ததைவ தத்ர வ்யாக்யாதும் தத் க்ஷணாதுபசக்ரமே ॥
ஸ்ரீபதி ஸ்ரீபதிஸ் ஸ்வாமி மண்டபே மஹதி ஸ்வயம் |
தத்வம் தஸ்ய ப்ரபந்தஸ்ப வ்யக்தம் தேநைவ தந் ஸிதும் ॥
ஸடவைரி முகைஸ் ருண்ஸந் தேசிகைர் திவ்ய தர்ஸநை |.
அத திவ்ய முநேஸ் தஸ்ய மஹிமாந மமாநுஷம்
அநு பூயே மஹா பூகணே கோபால மகிலோ ஜநா |
அமந் யத பரம் தந்ய மாத்மாநம் தத்ர நிக்ஷிபந் ॥
என்கிறபடியே ஈடு தொடக்கமாக ஐந்து வ்யாக்யானங்களுடன் மாறன் பணித்த தமிழ் மறைக்கு அர்த்தம் நடத்துகிறபடியை அருளிச் செய்ய; (இன்பம் பயக்க விருக்க நிலத்தேவர் குழுவிலே பாட்டு கேட்பிப்பதாக கான கோஷ்டியைப் பாரித்தாப் போலே பெருமாளும் நாச்சி மாருடனே திவ்ய ஸிம்ஹாஸநத்திலே ஏறி யருளி அச் சேர்த்தியை யநுபவிக்கிற அயர்வறுமமரர்களான திருவநத்தாழ்வான் பெரிய திருவடியாழ்வான், ஸ்ரீசேநாபதி யாழ்வானாகிற நித்ய ஸூரிகளோடும், வைகுந்தத்து முனிவரான நம்மாழ்வார் தொடக்கமான ஆழ்வார்கள் பதின்மரோடும் ஸ்ரீரங்க மா மறையோரான அனைத்துப் பரிகரத்தோடும் அணி யரங்கத் திருமுற்றத்தடியார்களோடுங் கூடப் பேரோலக்கமாக எழுந்தருளி யிருத்து “ரங்கி வத்ஸர மேக மேவம் ஸ்ருணோத் வ்யக்தம் யதோக்தம் க்ரமாத்- என்கிறபடியே திருச்செவி சாத்தியருள)அன்று ராத்ரி ஸ்வப்நத்தில பதர்யாஸ்ரம நாராயணன் தமக்குப் பாடமாமளவும் ஸாதித்து ஸாயம் ப்ராத: அநு ஸந்தான காலத்திலே அநுஸந்தித்து ப்ரபந்தாநுஸந்தானஞ் செய்யென்று நியமித்த படியைச் சொல்லிக் கொண்டு விஸ்மிதராய் ஆநந்த பரவசரா யிருகக, இளையாழ்வார் பிள்ளை முதலானாரும்
‘பகவத் ப்ரஸாத லப்தமன்றோ இத் தனியன்?’‘ என்று பரஸ்பரம் கொண்டாடிக் கொண்டு மிகவும் ஈடுபட்டிருக்க, ராமாநுஜ ஐயங்கார் க்ரமத்திலே தேறி அழகிய மணவாள மா முனியினுடைய வைபவங்களை யெல்லாம் அடியேனுக்கு இரங்கி ப்ரஸாதித்தருள வேணுமென்று திருவடிகளைப் பிடித்து ப்ரார்த்திக்க, இளையாழ்வார் பிள்ளையும் ஒமறைந்து மடத்திலே யாகிறதென்ன; திருப்பாவை
அநுஸந்தாநத்தையும் நிறைவேற்றிச் சாத்தி தீர்த்த ப்ரஸாதங்கஞம் விநியோகமாய் இளையாழ்வார் பிள்ளைக்கு வரிசைகளும் ப்ரஸாதித்தனுப்பி யருள, அவரும் ராமாநுஜய்யங்கார் மடத்திலே
யெழுந்தருளி அவருக்கு அழகிய மணவாள மாமுனியினுடைய வைபவங்களை யெல்லாம் ஸாதித்து உகப்பித்தருளினார், ராமாநுஜய்யங்காரும் லைபவங்களை யெல்லாங் கேட்டு வித்தராய் ஜீயரைக்
கண்டு ஸேவிக்க வேணுமென்று அத்யபிநிஷ்டராயிருக்க’ அவருடைய மநஸ்ஸை யறிந்து ராமாநுஜதாஸர் -பத்ரிகாச்ரமம் முதலான திவ்ய தேசங்களில் கைங்கர்யங்களுக்கு தேவரீர் நியமித்த படிக்கு சில நாளைக்கு ஸேலித்துக் கொண்டிருந்து ஜீயர் திருவடிகளை ஸேவிக்க விடை கொள்ளுகிறேன்” என்று சொல்லி,தேவரீர் இளையாழ்வார் பிள்ளையுடன் கோயிலுக்கு எழுந்தருள
வென்று அருளிச் செய்ய, ராமாநுஜய்யங்காரும் மிகவும் ப்ரியப்பட்டு அவரை பஹுவாக உபலாளித்தருளி ஜீயர் திருவடி நிலைகளை வரிசையுடன் எழுந்தருளப் பண்ணி வைத்துக் கொண்டுஇளையாழ்வார் பிள்ளையும் ராமா னுஜய்யங்காரும் திருமலையிலே சென்று திருவேங்கடமுடையானை ஸேவிக்க நிற்க, அப்பனும் இவர்களை மிகவும் க்ருபை பண்ணி யருளி அயோத்யை ராமானுஜய்யங்காருக்குச் சில கைங்கர்யங்களை நியமிக்க, அவரும் அதற்கு அங்கே நிற்க வேண்டுகையாலும் ஜீயரைத் தம்முடைய மநோரதத்தின்படி ஸேவிக்கப் பெறாமையாலும் ப்ரீத்யப்ரீதி ஸமராயிருத்தார் ;மஹாந் ப்ரஸாத இத்யஸ்ய ஸாஸநம் ஸிரஸா வஹந்
ததைவ தத்ர வ்யாக்யாதும் தத் க்ஷணாதுபசக்ரமே ॥
ஸ்ரீபதி ஸ்ரீபதிஸ் ஸ்வாமி மண்டபே மஹதி ஸ்வயம் |
தத்வம் தஸ்ய ப்ரபந்தஸ்ப வ்யக்தம் தேநைவ தந் ஸிதும் ॥
ஸடவைரி முகைஸ் ருண்ஸந் தேசிகைர் திவ்ய தர்ஸநை |.
அத திவ்ய முநேஸ் தஸ்ய மஹிமாந மமாநுஷம்
அநு பூயே மஹா பூகணே கோபால மகிலோ ஜநா |
அமந் யத பரம் தந்ய மாத்மாநம் தத்ர நிக்ஷிபந் ॥
என்கிறபடியே ஈடு தொடக்கமாக ஐந்து வ்யாக்யானங்களுடன் மாறன் பணித்த தமிழ் மறைக்கு அர்த்தம் நடத்துகிறபடியை அருளிச் செய்ய; (இன்பம் பயக்க விருக்க நிலத்தேவர் குழுவிலே பாட்டு கேட்பிப்பதாக கான கோஷ்டியைப் பாரித்தாப் போலே பெருமாளும் நாச்சி மாருடனே திவ்ய ஸிம்ஹாஸநத்திலே ஏறி யருளி அச் சேர்த்தியை யநுபவிக்கிற அயர்வறுமமரர்களான திருவநத்தாழ்வான் பெரிய திருவடியாழ்வான், ஸ்ரீசேநாபதி யாழ்வானாகிற நித்ய ஸூரிகளோடும், வைகுந்தத்து முனிவரான நம்மாழ்வார் தொடக்கமான ஆழ்வார்கள் பதின்மரோடும் ஸ்ரீரங்க மா மறையோரான அனைத்துப் பரிகரத்தோடும் அணி யரங்கத் திருமுற்றத்தடியார்களோடுங் கூடப் பேரோலக்கமாக எழுந்தருளி யிருத்து “ரங்கி வத்ஸர மேக மேவம் ஸ்ருணோத் வ்யக்தம் யதோக்தம் க்ரமாத்- என்கிறபடியே திருச்செவி சாத்தியருள)அன்று ராத்ரி ஸ்வப்நத்தில பதர்யாஸ்ரம நாராயணன் தமக்குப் பாடமாமளவும் ஸாதித்து ஸாயம் ப்ராத: அநு ஸந்தான காலத்திலே அநுஸந்தித்து ப்ரபந்தாநுஸந்தானஞ் செய்யென்று நியமித்த படியைச் சொல்லிக் கொண்டு விஸ்மிதராய் ஆநந்த பரவசரா யிருகக, இளையாழ்வார் பிள்ளை முதலானாரும்
‘பகவத் ப்ரஸாத லப்தமன்றோ இத் தனியன்?’‘ என்று பரஸ்பரம் கொண்டாடிக் கொண்டு மிகவும் ஈடுபட்டிருக்க, ராமாநுஜ ஐயங்கார் க்ரமத்திலே தேறி அழகிய மணவாள மா முனியினுடைய வைபவங்களை யெல்லாம் அடியேனுக்கு இரங்கி ப்ரஸாதித்தருள வேணுமென்று திருவடிகளைப் பிடித்து ப்ரார்த்திக்க, இளையாழ்வார் பிள்ளையும் ஒமறைந்து மடத்திலே யாகிறதென்ன; திருப்பாவை
அநுஸந்தாநத்தையும் நிறைவேற்றிச் சாத்தி தீர்த்த ப்ரஸாதங்கஞம் விநியோகமாய் இளையாழ்வார் பிள்ளைக்கு வரிசைகளும் ப்ரஸாதித்தனுப்பி யருள, அவரும் ராமாநுஜய்யங்கார் மடத்திலே
யெழுந்தருளி அவருக்கு அழகிய மணவாள மாமுனியினுடைய வைபவங்களை யெல்லாம் ஸாதித்து உகப்பித்தருளினார், ராமாநுஜய்யங்காரும் லைபவங்களை யெல்லாங் கேட்டு வித்தராய் ஜீயரைக்
கண்டு ஸேவிக்க வேணுமென்று அத்யபிநிஷ்டராயிருக்க’ அவருடைய மநஸ்ஸை யறிந்து ராமாநுஜதாஸர் -பத்ரிகாச்ரமம் முதலான திவ்ய தேசங்களில் கைங்கர்யங்களுக்கு தேவரீர் நியமித்த படிக்கு சில நாளைக்கு ஸேலித்துக் கொண்டிருந்து ஜீயர் திருவடிகளை ஸேவிக்க விடை கொள்ளுகிறேன்” என்று சொல்லி,தேவரீர் இளையாழ்வார் பிள்ளையுடன் கோயிலுக்கு எழுந்தருள
வென்று அருளிச் செய்ய, ராமாநுஜய்யங்காரும் மிகவும் ப்ரியப்பட்டு அவரை பஹுவாக உபலாளித்தருளி ஜீயர் திருவடி நிலைகளை வரிசையுடன் எழுந்தருளப் பண்ணி வைத்துக் கொண்டுஇளையாழ்வார் பிள்ளையும் ராமா னுஜய்யங்காரும் திருமலையிலே சென்று திருவேங்கடமுடையானை ஸேவிக்க நிற்க, அப்பனும் இவர்களை மிகவும் க்ருபை பண்ணி யருளி அயோத்யை ராமானுஜய்யங்காருக்குச் சில கைங்கர்யங்களை நியமிக்க, அவரும் அதற்கு அங்கே நிற்க வேண்டுகையாலும் ஜீயரைத் தம்முடைய மநோரதத்தின்படி ஸேவிக்கப் பெறாமையாலும் ப்ரீத்யப்ரீதி ஸமராயிருத்தார் ;
மேலும் கோயிலில் நடந்தவை ‘
இனிக் கோயில் வ்ருத்தாந்தம்- திருவேங்கடமுடையான் ராமாநுஜ அய்யங்காருக்கு கைங்கர்யம் நியமித்தருளின தினத்திலே திருமலை யாழ்வாரிலே பகவத் விஷய காலஷேபம் நடத்தி யருள, அற்றைக்கு ஒழிவில் காலத்தறுவாய் நடந்து செல்ல,-ஒழிவில்காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா வடிமை செய்ய வேண்டும்-என்று ௨க்தி மாத்ரமாயொழிவதே! என்று மிகவுத் தளர்ந்து பரவசராய்ப்படுப்பதும் இருப்பதும் நிற்பதும் புலம்புவதுமாயிருக்க, அற்றைக்கு முதல் நாள் ராத்ரி ப்ரதிவாதிபயங்கரமண்ணா ஸ்வப்நத்திலே திருவேங்கடஜீயர் என்னும் திரு நாமத்தை யுடை த்தாயிருக்கிற ஒரு ஏகாங்கி சென்று, “வாரீர்! ஸ்ரீவைஷ்ணவ தாஸரே நாளை ஒழிவில் கால வ்யாக்யாநாவஸரத்திலே ஜீயர் கைங்கர்ய ருசி விவசராயிருப்பர், அவருக்கு சேஷசைலத்திலே சேஷாவதராமான ஜீயர் மனோரதப்படியே கைங்கர்யம் கொண்டருளுகிறோம் என்று நீர் விண்ணப்ஞ் செய்யும்’; என்று இப்படிக் கண்டு எழுந்திருந்து வித்தராய் ‘ ஈதொரு ஸ்வப்ந வைபவமிருந்தபடியே!” என்று எண்ணிக் கொண்டு நித்ய கர்மாநுஷ்டானங்களை நிறைவேற்றி மடத்திலே யெழுந்தருளித் திருமலை யாழ்வாரிலே ஜீயரை தண்டன் ஸமர்ப்பித்து, எழுந்தாருளியிருக்கிற ப்ரகாரத்தைக் கண்டு தம்முடைய ஸ்வப்ந மிருந்த ஸ்த்திதியும் சேர்ந்திருக்கிற படியையுங்கண்டு, ஹ்ருஷ்டராய் இந்த ஸ்வப்ந வ்ருத்தாந்தத்தை ஜீயர் திருவுள்ளத்தில் படுத்த, ஜீயரும் -இதுவுமொரு க்ருபையே!’” என்று ஹருஷ்டராய் அண்ணாவை உபலாளித்தருளி, புநடபுந: கேட்டருளி, திக் கஜங்களை ‘இது எப்படி இருக்கிறது?? என்று கேட்டருள, அவர்களும் “இந்த வேளை திருமலையிலே ஒரு அத்புத முண்டாயிருக்க வேணும்; அத்தை யறியும் படிக்கு ஒருவரை நியமித்தருள வேணும்” என்று விண்ணப்பம் செய்ய; அவ்வளவிலே ௮ழகரண்ணன் -எழுத்திந்து தண்டன் ஸமர்ப்பித்து, “அடியேன் தேவரீர் திருவடிகளை – முன்னிட்டுக் கொண்டு திருமலைக்கு விடை கொண்டு அப்பனையும் – ஸேலித்து செய்தியையும் அறித்து கொண்டு விடை கொள்ளுகிறேன்’ என்று விண்ணப்பஞ் செய்ய, ஜீயரும் போர உகந்தருளி அனுப்பி யருள,அவரும் அதி த்வரையாகக் திருமலையிலே சென்று பெருமாளை ஸேவிக்க, உடனே இளையாழ்வார் பிள்ளையைக் கண்டு அந்யோந்ப
வந்தந பரராய்க் கொண்டு குசல ப்ரச்நம் பண்ணிக் கொண்டு அயோத்யை ராமாதுஜய்யங்கார் பாடே செல்ல, அழகரண்ணனுக்கு பஹுமாநம் பண்ணி ப்ரதிபத்தி பண்ண, ஜீயருடைய
வைபவங்களை புந:புந: கேட்டுத் திருவேங்கடமுடையான் தமக்குக்
கைங்கர்யங்கள் நியமித்தருளின படியையும் தாம் ஜீயர் திருவடிகளிலே ஆஸ்ரயிக்க வேணுமென்கிற த்வரையையும் அருளிச் செய்ய அழகரண்ணனும், ஜீயருக்கு உகப்பு கைங்கர்யம் செய்து போருகையாய் இருக்குமென்று, ப்ரதிவாதி பயங்கரருடைய ஸ்வப்ந வ்ருத்தாந்தத்தையு மருளிச்செய்ய; ராமாநுஜ அய்யங்காரும், “ஆனால் தன்யனானேன், ஜீயர் நியமனப் படிக்கு அவருடைய திருக்கைகளாலே யதா-சக்தி செய்து போருகிறேன்” என்று சொல்லி இளையாழ்வார பிள்ளையையும் அழகரண்ணனையும் கோயிலுக்கு அனுப்பிவிட அவர்களும் உடனே புறப்பட்டெழுந்தருளி ஜீயரை தண்டன் ஸமர்ப்பித்து வடக்கில் எம்பெருமான்களுடைய அபய ஹஸ்த ப்ரஸாதங்களையும் ஸமர்ப்பித்துத் திருவடி நிலைகளையும் திருவடிகளிலே சேர்க்க, ஜீயரும் இளையாழ்வார் பிள்ளையை பஹு நாளைக்காகக் கண்டோமே! என்று மிகவும் க்ருபை பண்ணி யருளி, அழகரண்ணனையும் போர க்ருபை செய்தருளி, ப்ரதிவாதி பயங்கர மண்ணாவை -உம்முடைய ஸ்வப்நம் பல வ்யாப்தமாயிற்று; உமக்காக வன்றோ திருவேங்கட முடையான் க்ருபை பண்ணி யாருளினார்!-என்று உகப்பு தோன்ற அடிக்கடி அருளிச் செய்து கொண்டு இளையாழ்வார் பிள்ளையை அடிக்கடி திருக்கையாலே தழுலி
உபலாளித்து, ”நெடுந் தூரம் சென்று வந்தீரே!” என்று அருளிச் செய்து கொண்டு ராமாநுஜ அய்யங்கார் ஸ்வரூப ஸ்வபாவங்களை உகந்தருளிக் கேட்டுக் கொண்டு, நம்பெருமாள், ஸ்ரீபதிகாச்ரமப்
பெருமாள், திருநாராயணப் பெருமாள், திருவேங்கடமுடையான்,அழகர், இவர்களுடைய ஐக கண்ட்யத்தையும் அருளிச் செய்து கொண்டு எழுந்தருளி யிருந்தார். இந்த அர்த்தங்களை யெல்லாம்
வரவரமுநி வைபவ விஜயம் என்கிற ப்ரபந்தத்திலே கந்தாடை யப்பன் விஸ்த்ருதமாக அருளிச் செய்ய ஜீயர் திருச்செவி சாத்தி யருளினார்.
பின்பொருநாள் திருக் காவேரியினின்றும் எழுந்தருளச் செய்தே ஜீயருக்கு இளையாழ்வார் பிள்ளை திருக்கை ஸர்ப்பித்துக் கொண்டு வரும் போது ப்ரஸங்காத் அயோத்யை ராமாநுஜ
அய்யங்காருடைய மநோ ரதத்தை விண்ணப்பஞ் செய்யக்கேட்டருளி, ‘திருவேங்கடமுடையானை இன்னுமொருக் கால் ஸேவிக்கையுமுண்டாம், அப்போது அவர் மநோரதப் படியே ஆகிறது;
இப்போது அவர் கைங்கர்யஸ்ரீ யுடனே யிருக்கக் கடவர் ‘ என்றருளிச்செய்ய, பின்னும் ராமாநுஜ அய்யங்கார் இந்தத் திருவடி நிலைகளைத் தமக்குத் திருவாராதனமாசு ப்ரார்த்தித்துக் கொண்
டிருக்கிறாரென்று விண்ணப்பஞ்செய்ய , அப்படியே ஆகிறதென்று மடத்திலே யெழுந்தருளி னவுடனே தைவாதீனமாகத் திருவடி ஸம்பந்தமுடையரான சில வைஷ்ணவர்கள் திருமலைக்கு விடை
கொண்டு திருப் புரட்டாசித் திருநாள் ஸேவித்து விடை கொள்ளுகிறோம் என்று தண்டன் சமர்ப்பித்து நிற்க, போர உகந்தருளி,புணர்த்த கையினராயடியேனுக்கும் போற்றுமினே என்று திருமலையை நோக்கித் தொழுது ராமாநுஜ அய்யங்காருக்குத் திருவடி நிலைகளை ஸாதித்து விடை கொடுத்தருள; அவர்களும் புறப்பட்டுத் திருமலைக்கு எழுந்தருளினார்கள்.
கந்தாடை அண்ணன் திருமலைக்கு எழுந்தருளல்
பின்பொரு நாள் கந்தாடையண்ணனை கடாஷித்தருளி திரு வேங்கட முடையானை மங்களாசாஸநம் பண்ண வேண்டாவோ?என்ன, அப்பிள்ளை, “காவேரி கடவாத கந்தாடையண்ணரன்றோ?” என்ன, அரங்கத்தரவினணையான் வானவர்கள் சந்தி செய்ய நின்றது அங்கேயே யன்றோ? என்று ஜீயரருளிச் செய்ய,அண்ணனும் அப்படியே நியமித்தருள வேணும்” என்ன, அவரையுங் கூட்டிக் கொண்டு பெருமாள் ஸந்நிதியிலே எழுந்தருளி விடை கொடுப்பித்தருளி உத்தம நம்பியையும் கூடவே ஸேவித்துக் கொணடு போரும்படி நியமித்தருளி, அனேகம் ஸ்ரீவைஷ்ணவர்களையும் ஜீயர்களையும் ஏகாங்கிகளையும் சாத்தாத ஸ்ரீவைஷ்ணவர்களையும் கூடப் பயணஞ் செய்தருளி யிருக்கிற வவஸரத்திலே; உத்தம நம்பியும் (அண்ணனுக்குத் திருப்பல்லக்கு முதலான வரிசைகளைச்
சேர்த்துப் புறப்பட்டிருக்கும்படிக்கு விண்ணப்பஞ் செய்து கொண்டு நிற்க, அண்ணனும் அவைகளை யெல்லாம் நிரோதித்து ஸ்ரீ வைஷ்ணவ கோஷ்டியை ஸேவித்துக் கொண்டு திருமலைக்குப் பெருகம் கூட்டத்துடனே செல்லுகிற நமக்கு உசிதமன்றென்று மறு விண்ணப்பஞ் செய்ய வொண்ணாதபடிக்கு நிஷேஷித்துவிட்டு ” திரு நாளிலே இரண்டு மூன்று நாளாகிலும் மங்களாசாளனமாக
வேண்டும்” என்று அதி த்வரையாகப் பயண கதிகளிலே யெழுந்தருளி திருமலை யடிவாரத்திலே அடிப்புளி யழகிய சிங்கரைத் தொழுது திருமலை யேறி யருள; அச்செய்தியைத் திருமலை யநந்தாழ்வான் கேட்டருளி,(இவர் ஒன்றான திருமலை யநத்தாழ்வான் திருவம்ச்யராய் அவர் ஸ்தாநத்தில் கைங்கர்யம் பண்ணி யிருந்தவர் ) பெரிய கேள்வி ஜீயர் முதலானார், மற்ற ஆசார்ய புருஷர்கள், ஸ்தலத்தார் எல்லாருக்குமறிவிக்க, அவர்களெல்லாரும் போர உகந்தருளி வெள்ளிக்கிழமை புழுகுக் காப்பு. உத்ஸவத்தை அண்ணன் மங்களாசாஸனம் செய்தருள வேணுமென்று ப்ராத; கால வேளைக்கு நிறுத்தி, பெருமாள் திருத்தேரிலே ஏறி யருளினவுடனே அனைவரும் வரிசையுடனே ௮ண்ணனை எதிர் கொண்டு எழுந்தருளப் பண்ணுவித்துக் கொண்டு வந்து திருத்தேரிலே பெருமாளை மங்களாசாஸனம் பண்ணுவித்து, பின்பு திருத்தேர் திருவீதி யெழுந்தருள இயல் தொடங்குகிற விடத்திலே அயோத்யை ராமாநுஜ அய்யங்கார் கண்டு பக்தி பரவசராய் ஸேவித்து நிற்க, அவரையும் க்ருபை பண்ணி யருளி எழுந்தருளா நிற்கிற வளவிலே:
ஸ்ரீபத்ரிகாச்ரமத்தினின்றும் ராமாநுஜ தாஸர் வந்து அசிந்தமாக அண்ணன் எழுந்தருளி யிருக்கக் கண்டு மிகவும் வித்தராய் உகந்து திருவடிகளிலே தண்டன் ஸமர்ப்பிக்க,, அண்ணனும் போர வுகந்தருளி எடுத்தணைத்தக் கொண்டு அத்யந்தம் ஹர்ஷ பரவசராய் “வாரீர் ராமாநுஜ தாஸரே! உம்மைக் காணப் பேருமே பெற்றோமே! தேசாந்தர கதனான புத்ரனிட த்தில் பித்ரு ஹ்ருகயம் போலே
ஜீயர் திருவுள்ளம் உம்மிடத்தலே ஒருமைப் பட்டிருக்கிறது’என்று அங்குள்ள பெரியோர்களுக்கெல்லாம் இவருடைய ஆசார்ய நிஷ்டையை யருளிச்செய்து, திருத்தேர் நிலையில் எழுந்தருள, பெருமாளும் உள்ளே எழுந்தருளின வுடனே ஸேவாக்ரமத்திலேஅப்பனை பாதாதி கேசாந்தமாகவும் கேசாதி பாதாந்தமாசுவும் ஸேவித்து பூர்ண மநோரதராய், புழுகுக் காப்பு ஸேவையுமாய்,தீர்த்தம் ஸ்ரீசடகோபன், ஸ்ரீபாத ரேணு ப்ரஸாதித்தருள ஸ்லீகரித்தருளி, பின்பு அநந்தாழ்வான் திருமாளிசைக்கு எழுந்தருளப் பண்ணுவித்துக் கொண்டு எழுந்தருள, ‘அங்கே யெழுந்தருளின வுடனே அநந்தாழ்வானும் ஸர்வோபசாரங்களையுஞ் செய்தருள அங்கே எமுந்தருளி இருந்தார்.
அயோத்யை ராமாநுஜ அய்யங்கார் அண்ணனை ஆச்ரயித்தது.
ராமர்நுஜ தாஸரும் ராமாநுஜ அய்யங்காரைக் கண்டு,“தேவரீர் திருமுக ப்ரசாரம் அவ் விடத்தில் கைங்கர்யங்களெல்லாம் அமர்த்தி, சிறிய ராமானுஜ அய்யங்காரைக் கற்பித்து அவரைக் கொண்டு ஸகல வித கைங்கர்யங்களும் நடக்கும்படி பண்ணி வந்தேன்; தேவரைக் காணப் பெற்றேன்; அண்ணன் திருவடி நிலையும் ஸேவிக்கப் பெற்றேன்? என்று விண்ணப்பஞ்செய்ய;
ராமாநுஜ அய்யங்காரும் போர உகந்தருளித் தமக்கு ஹிதங் கேட்கத் தொடங்கி அப்பன் திருவடி தொழுதவன்று தொடங்கி இற்றை வரைக்கும் தம்முடைய வ்ருத்தாந்தங்களை யெல்லாம்
விண்ணப்பஞ் செய்யக் கேட்டு அவருக்கு ஹிதமருளிச் செய்தபடி,-“ஜீயர் திருவடிகளில் ஆஸ்ரயிக்க வில்லை யென்கிற குறையை விடும்;அதிலும் அதிசயமாய் ஜீயருக்கு இரட்டிப்பு உகப்பாயிருக்கும்:நாளை தீர்த்தம் திருவோணத்தில் அண்ணன் திருவடிகளிலே ஆஸ்ரயணமாக:’ என்று நியமிக்க: ராமாநுஜ அய்யங்காரும் அதிஸந்தோஷத்துடனே அவரையுங் கூட்டிக் கொண்டு அண்ணனைத் தெண்டன் மைர்ப்பித்து நின்று இச் செய்தியை விண்ணப்பம் செய்ய, அண்ணனும் ”ஜீயருடைய நியமனமும் அப்படியே இருக்கும்’* என்றருளிச் செய்து, -ராமாநுஜ தாஸர் ஹ்ருதமமும்
ஜீயர் திருவுள்ளமும் ஏகமாய் இருந்தபடியென்!” என்று போர வித்தராயிருக்க, அண்ணனும் “ஜீயர், தமக்கு ப்ரதி பிம்பமாக அபிமானித்தருளி திவ்ய தேச மங்களாசாஸநம் செய்தபடி அறிவீரே’” என்று அருளிச் செய்து வைஷ்ண கோஷ்டி புரஸ்ஸரமாக ராமாநுஜ அய்யங்காருக்கு ஸமாஸ்ரயணம் செய்தருளனார். ராமாநுஜ தாஸரும் பண்டைக் குலத்தைத் தவிர்த்து தாமும் வேதகப் பொன்னானார் பின்பு அண்ணன் இருவரையும் கூட்டிக் கொண்டு கோவிலிலே எழுந்தருளி அப்பனை மங்களாசாஸதம் செய்தருளா நிற்க , பெருமாளும் அண்ணனை மிகவும் க்ருபை. பண்ணி யருளி ராமாநுஜ அய்யங்காருக்கு அண்ணன் திருவடி ஸம்பந்தம் தோற்ற
“கந்தாடை ராமாநுஜ அய்யங்கார்” என்று அருள் பாட்டுடன் பட்டு வஸ்த்ரம் ப்ரஸாதித்து இதுவே இவருக்குத் திருநாமமென்று விதித்தருளிச் செய்து உபலாளித்தருளினார் பின்பு பெரிய கேள்வி சிறிய கேள்வி ஜீயர்கள, ஏகாங்கிகள், ஆசார்ய புகுஷர்கள் முதலான ஸ்தலஸ்தாரனைவரும் அண்ணன் சந்நிதிக்கெழுந்தருளி, சிறப்பு வரிசைகளும் ஸமர்ப்பித்து, ஆஸ்ரயிக்க வேண்டியவர்கள் ஆஸ்ரயித்து ஸ்ரீபாத தீர்ததம் ஸ்வீகரித்து, அமுது செய்யத் தக்கவர்கள் அமுது செய்தருளி, தளிகை ப்ரஸாத ப்ராப்தாக்கள் தளிகை ப்ரஸாதம் ஸ்வீகரித்து ௨பலாளித்து க்ருதார்த்த ரானார்கள்-
அண்ணன் திருமலையினின் றும்-கோயிலுக்கெழுந்தருளல்
மற்றை நாள் அண்ணனை அனைவரும் கோவிலுக்கு வரிசையுடனே எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வந்து மங்களாசாஸநம் பண்ணின வுடனே பெருமாளரையில் பீதக வண்ண வாடையான பெரிய பீதாம்பரம் முதலான வரிசைகளெல்லாம் ஸாதித்தருளி கந்தாடை ராமாநுஜ ௮ய்யங்காருடைய திருப் பல்லக்கு, சத்ர சாமராதிகள், மற்றை ஸமர்ப்பணைகளை யெல்லாம் பரிக்ரஹிக்கும் படிக்கு அர்ச்சக முகேந நியமித்தருளி விடைகொடுத்தருள உடனே புறப்பட்டருளிக் கீழ்த் திருப்பதியிலே யெழுந்தருளி ஸ்ரீகோவித்த ராஜப் பெருமாளையும் மற்றவர்களையும் மங்களாசாஸநஞ் செய்தருளி வரிசை பெற்றுப் புறப்பட்டு எறும்பியிலே எழுந்தருள, அப்பா திருத் தகப்பனார் ஐயைகளும் அழகிய மணவாள
தாஸராகிய ஸ்ரீவைஷ்ணவர்களுடனே எதிர் கொண்டு ஸேவித்துத் தம்முடைய திருமாளிகையிலே எருந்தருளப் பண்ணி வைத்துக் கொண்டு சென்று உபசரித்தருளின வளவிலே; அண்ணன்,
இளையாழ்வார் பிள்ளை, திருவாய்மொழியாழ்வார் பிள்ளை முதலான ஆசார்யர்களும், எம்பெருமானார் ஜீயர், திருவேங்கடஜீயர் முதலான ஜீயர்களும், முந்தி எழுந்தருளுகிறார்கள்’- என்கை -“அடியேன் சேரிக்கு எழுந்தருளி க்ருபை பண்ணி யருளாமல் அப்படிச் செய்தருளலாமோ?” என்று ஐயைகள் வெறுத்துக் கொண்டு சுத்த ஸத்வமண்ணனைக் கேட்டருள, அண்ணனும்,“ஸ்வாமி ஆசார்யரண்ணன், தாம் திருப் பல்லிக்கலே யெழுந்தருளச் செய்தே அவர்களும் கூட எழுந்தருளப் போகாதென்று முன்னே அனுப்பி யருளினார். அவர்களும், பத்மபுரமென்சிற திருமலையடி வாரத்திற் கெழுந்தருளுகிறார்கள்’” என்ன, ஆகில் தாம் எழுதந்தருளி அவர்களை யெல்லாரையும் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வர வேணுமென்று சுத்த ஸத்வ மண்ணன் திருக் கைகளைப் பிடித்துக்
கொண்டு பத்ம புரம் யெழுந்தருள, அவர்களுங் கண்டு அந் யோந்யலம் வந்தந பராய் குசல ப்ரச்நம் பண்ணிக் கொண்டு எல்லாரும் எறும்பியிலே ஐயைகள் திருமாளிகையிலே எழுந்தருளி சக்ரவர்த்தி திருமகன் அதி விஜ்ரும்பணமாக பூர்ணமாக அமுது செய்தருளி ததீயாராதநமும் நடக்க, மற்றை நாள் திருக் கடிகையில் ௮க்காரக் கனியை யடைந்து மங்களாசாஸநஞ் செய்தருளிப் புறப்பட்டுப் புட்குழி யம் போரேற்றைத் தொழுது பெருமாள் கோயிலுக் கெழுந்தருள, அங்குள்ள ஆசார்யர்களும் கோவிலனைத்துக் கொத்தும் எதிர் கொண்டு எழுந்தருளிவித்துக் கொண்டு போய் பேரருளாளர் பெருந்தேவியாரை ஸேவா க்ரமத்திலே மங்களாசாஸதம் பணணுவித்துத் திருமாளிகையிலே எழுந்தருளப் பண்ணிச் சிறப்பும் நிரவதிகமாக ஸமர்ப்பித்து உபசரித்தருளினார்கள்-அப்பாச்சியாரண்ணாவும் முதலியாண்டான் தொடங்கி யுண்டான தம்முடைய பெரியோர்களை யெல்லாம் ஸேவித்தாற் போலிருக்கிறதென்று மிகவும் உகந்தருளி ப்ரதிபத்தியுடனே ஸ்வாமி யண்ணனையும், கூட எழுந்தருளின ஸ்வாமிகளையும் மற்றுமுண்டான பரிஜனங்களையும் தம் திருமாளிகையிலே தானே எழுந்தருளப் பண்ணி வைத்துக் கொண்டு பஹுவாக உபசரித்து உபலாளித்துக் கொண்டெழுந்தருருளி யிருந்தார். பேரருளாளரும் உகந்தருளி அண்ணனுக்குத் திருநாமம் :ஸ்வாமி’” என்று அனைவரும் அநுஸந்திக்கும் படிக்கு ஆஜ்ஞாபித்தருளி அருள் பாடும் ப்ரஸாதித்தருளினார்.
ஸ்வாமி யண்ணன் பேரருளாளனுக்கு சாலைக் கிணற்றில் திருமஞ்சந கைங்கர்யம் செய்தல்-
ஸ்வாமி யண்ணனும் பேரருளாளனுக்கு மிகவும் ௨கப்பாக எம்பெருமானார் உகந்து செய்தருளின கைங்கர்யமாய், பின்பு முதலியாண்டானும் அப்படியே செய்தருளி, துன்னு புகழ்க் கந்தாடைத் தோழப்பரும் விரும்பிச் செய்தருளின சாலைக் கிணற்றில் திருமஞ்சந கைங்கர்ய மின்றிக்கே யொழிய வொண்ணா தென்று அப்பாச்சியாரண்ணா வுக்கருளிச் செய்து, தாமும் புறப்பட்டருளி அருணோதய காலத்திலே அநுஷ்டாந குளத்திலே நீராடி நித்ய கர்மாநுஷ்டாநங்களையும் நிறை வேற்றி, கைங்கர்ய ருசியை யுடையருமாய் சக்தருமா யெழுந்தருள ஸ்ரீவைஷ்ணவர்களுடனே சாலைக் கிணற்றருகே எழுந்தருளி குடங்களை சோதித்துத் திருமஞ்சநம் பூரித்துத் திரு முடியிலே வைத்துக் கொண்டு ஆளவந்தார் ஸ்தோத்ர அநுஸந்தாநத்துடனே தண்ணீரமுது வழி திருத்துகிற உத்ஸவம் (எம்பெருமானார் திரு மலையிலே நியமித்து ஏற்படுத்தி யருளிய ஒரு உத்ஸவம், திரு மலையப்பன் ஒரு வேடனுருலில் பெரிய திருமலை நம்பி நித்யமாக ஆகாச கங்கை யினின்றும் கோயிலுக்கு எழுந்தருளப் பண்ணும் திருமஞ்நத்தை ஒருநாள் குடத்தை அம்பெய்து ஒட்டை பண்ணி பெருகிய தீர்க்தத்தைப் பருகி யருளியதை அனைவரும் அறியும்படி, பல ஸ்ரீவைஷ்ணவர்கள் குழாமாக ஆகாச கங்கையிலிருந்து அத்யயந உத்ஸவம் முடிந்த மறு தினம் திருமஞ்சனம் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு திருவீதி வலம் வந்து கோயிலில் ஸமர்ப்பித்தல் )போலே தாம் எழுந்தருளி யிருக்கிற நாளெல்லாம்பேரருளாளருக்குத் திருமஞ்சந கைங்கர்யம் செய்தருளி, பின்பு அப்பாச்சியர் அண்ணாவை -இந்த கைங்கர்யம் தப்பாமல் நடத்தி வாரும்’” என்று நியமித் தருளினார்.–
கந்தாடை ராமாநுஜ அய்யங்கார் செய்த கைங்கர்பங்கள்
ஒரு நாள் கந்தாடை ராமாநுஜ அய்யங்காரைத் திருமவை திருப்பதியில் கைங்கர்யங்களை நிறைவேற்றி மீண்டு வந்து, திருவநந்த ஸரஸ்ஸுக்கு நீராழி மண்டபமும், சுற்றிவர ஸோபாதங்களும் தென் கரையில் உந்நதமான குளக் குறடும், ஸிம்ஹாஸநமும்,மண்டபமும், திருமழிசைப் பிரான் கோயில் கைங்கர்யமும், திரு வபிஷேக மணடபத்திற்கு முன்னே பெரிய மண்டபமும் திருமலைக்கு ஒலிமுக மண்டபம் முதலான இன்னும் சில மண்டபங்களும், திருமடைப் பள்ளி, வடக்குத் திருக்குளப் படிக்கட்டும், யதா ஸம்பவம் திருவாபரணங்களும், திருமஞ்சந காலத்திற்கு மஞ்சள் காப்பு கைங்கர்யம் முதலான அநேக கைங்கர்யங்களும்,திருப் பவளத்திற்கு உகப்பாக அமுது செய்தருளும் படிக்கு சில
கட்டளைகளும் நியமித்து,-இவைகளெல்லாம் அழகிய மணவாள மாமுனிகள் கைங்கர்யம், அவச்யம் நடத்தி வாரும்” என்றும்-அப்பாச்சியாரண்ணாவை நாமாகலே ப்ரதிபத்தி பண்ணி வாரும்’* என்றும் புத்திகளை ஸாதித்து திருமலைக்கு அனுப்பி யருளினார்.
“அண்ணன் ஜீயர்- ஜீயரண்ணன்”
பின்பு தாமும் ஸ்ரீபெரும்பூதூர் முதலான திவ்ய தேசங்களை மங்களாசாஸநம் பண்ணத் திருவுள்ளமாய், பேரருளாளர் ஸந்நிதியிலே அனுப்புவித்துக் கொள்ள எழுந்தருள, திருவாராதநம் கண்டருளி தத் யோதந அவஸரம் அமுது செய்தருளின வுடனே அண்ணனை அருள்பாடிட்டழைத்து உடுத்துக் களைந்த பீதக வாடை, அபய ஹஸ்தங்கள், திருவடிசோடு, களபம், சூடிக் களைத்த தொடுத்த துழாய் மலர், ப்ரஸாதங்தள் இவையெல்லாங் கட்டி “இவை ஜீயருக்கு’” என்று அண்ணன் திருக்கைகளிலே ஸாதித்தருளி அண்ணனுக்கு உகப்புடனே வரிசைகளும் ஸாதித்தருளி விடை கொடுத்தருள, ஸ்வாமி யண்ணனும் திருவைய மாளிகையிலே திரு மண்டபத்திற்கு எதிராக எழுந்தருளி இருந்து ஜீயருடைய வைபவங்களை அநுஸந்திக்க அதற்கு அநு குணமாக பேரருளாளர் உபலாளித்தருளி உகந்து கொண்டிருக்க , அவ்வளவிலே சில பெரியோர்கள் “தம்முடைய ஸ்வாமி ஜீயருக்கு”: “அண்ணன் ஜீயர்” என்று பேரருளாளர் திருநாமம் சாத்துவது!” என்று உகந்தருள! வேறு சில பெரியோர்கள், அண்ணனுக்கு பெரிய பெருமாள்!”ஜீயரண்ணன்’ என்று திருநாமம் சாத்தினதுண்டே!யென்று, “ராமாநுஜம் லக்ஷ்மண பூர்வஜம் ச ‘- என்கிறபடியே ஜீயருக்கும் அண்ணனுக்கு முண்டான அந்யோந்ய ப்ரீத்யதிசயத்தையும் அப்ரதிம னவபவங்களையு மிட்டுப் பேரருளாளரும் பெரியோர்களும் உகந்தருளி இப்படித் திருநாமங்கள் சாத்தினார்களென்று எல்லாருங் கொண்டாடிக் கொண்டு திரு மாளிகை யிலே எழுந்தருள; ‘பஹுநாளாயிற்று அதி சீக்ரமாக வரவும்” என்று அண்ணனுக்கு ஜீயருடைய திருமுகம் வர, அண்ணனும் அந்தத் திரு முகத்தை சிரஸா வஹித்தருளி உட்பட்டுக் கொண்டு ஸ்ரீ பெரும்பூதூர் முதலான திவ்ய தேசங்களை திக்கு நோக்கி தண்டன் ஸமர்ப்பித்துக் கோயிலுக்குப் புறப்பட்டு -பொன்னடி காண்பதோராசையினால் அதி த்வரையாக பயண கதியிலைழுந்தருளித் திருக் காவேரிக் கரையிலே யெழுந்தருள, கோயிலுள்ள பெரியோர்களெல்லாருங் கேட்டருளி மிகவுமுகந்திருக்க, பட்டர் கோயில் பரிகரமனைத்துடனே எதிர் கொண்டு திருமாளிகையிலே எழுந்தருளிப் பண்ணி வைத்தார். ஜீயரும் அண்ணன் திரு மாளிகையிலே எழுந்தருளி யிருந்து அண்ணனை க்ருபை பண்ணி யருளி, திரு வேங்கடமுடையான், பேரருளாளர் ப்ரஸாதங்களையும் அங்கீ கரித்தருளி அவ்வவ்விடங்களிலுள்ள வைபவங்களைக் கேட்டருளி உகப்புடனே எழுந்தருளி யிருக்கிற வளவிலே, ஸ்ரீவைஷ்ணவர்கள், பேரருளாளர் ஜீயருக்கு அண்ணன் ஜீயர்” என்று திரு நாமம் ஸாதித்தபடியை விண்ணப்பஞ் செய்யக் கேட்டருளி மிகவுமுகந்து, -நம்முடைய மனஸ்ஸூக்குத் தக்கபடி பேரருளாளரும் தேவரீர் ஸம்பந்தத்ம் தோற்ற அருளிச் செய்வதே!” என்று அண்ணனைப் பார்த்தருளிச் செய்ய, ஸ்வதந்த்ரனுடைய அதி க்ரமணத்துக்குத் தடை யுண்டோ? என்று சிலர் அருளிச் செய்யப் புக ப்ரதிவாதி பயங்கர மண்ணாவும் “ஸ்ரீ யபதி’* என்னுமா போலே ஜீயருக்கு இதுவுமொரு திருநாமமென்ன , அவரை எல்லாரும் கொண்டாடினார்கள்,
பின்பு ராமாநுஜதாஸர் திருவடி களிலே தண்டன் ஸமர்ப்பித்து நிற்க, அவர் திருமுடியில் திருவடிகளை நற்றரிக்க வைத்தருளி மிகவும் விஸேஷ கடாக்ஷம் பண்ணி யருளினர். அவரும் வட தேசத்
தெம்பெருமான் களுடைய ப்ரஸாதங்களை நாலு ஸ்ரீவைஷ்ணவர்களைக் கொண்டு எழுந்தருளப் பண்ணி அவற்றை யெல்லாம் ஸமர்ப்பிக்சக , அங்கீ கரித்தருளி விநியோகம் செய்தருளி தாமும் ஸ்வீகரித்தருளி பூர்ண மநோ ரதராய், வடக்கில் திருப்பதிகளெல்லாம் ஸேவித்தாராயிற் றென்று ராமனுஜ தாஸரை நெருங்கத் தழுவி யருளினார்,
அநந்தரம் அப்பாவை ஊரேற வரும்படிக்கு அவர் திருத் தமப்பனார் ராமாநுஜ தாஸர் திருக்கையிலே திருமுகம் வரக் காட்ட அவரும் ஸேவா விஸ்லேஷ பீருவாயிருக்க, அவருக்குத் தஞ்சமாகத் தம்முடைய விக்ரஹமாக ஒரு விக்ரஹத்தையும் திருவடி நிலைகளையும் திரு உத்தரீயத்தையும ப்ரஸாதித்தருளினார்
ப்ரீத। ப்ரேஷி தவாந் முநிர் வர வரோ யஸ்மை முஹு: ஸ்ரீமுகம்
ப்ராதாத் ஸ்வாங்க்ரி ஸரோஜ ஸங்க ஸுபகம் ஸ்வீயா முபாநத்யுகீம் |
ஸ்வீயம் ஸுந்தர முத்தரீயமமலம் ஸ்வாம் மூர்த்தி மர்ச்சா மயீம்
தம் தேவேஸ குரும் பஜேம ஸரணம் ஸம்ஸார ஸந்தாரகம் ॥
[மணவாளமாமுனிகள் யாருக்கு அடிக்கடி உகந்து நீ முகம் ஸாதித்தாரோ, யாருக்கு தம் திருவடித் தாமரைகளின் ஸம்பந்தத்தினால் பாக்யம் பெற்ற தமது பாதுகைகளிரண்டையும், தமது அழகியதாய்த் தூயதான உத்தரீயத்தையும் தமது அர்ச்சா விக்ரஹத்தையும் தந்தருளினாரோ, ஸம்ஸார தாரகரான அந்த தேவராஜ குரு வென்னும் எறும்பி யப்பாவைச் சரணமாகப் பற்றக் கடவோம்]
என்று பின்புள்ளாரும் இவ் வ்ருத்தாந்தத்தை யநுஸந்திக்கும்படி அபிமானித்தருள, பின்பு எறும்பியப்பாவின் திருப் பேரனாரான பிள்ளை யப்பாவும் இந்த வ்ருத் தாந்தத்தை அநுஸந்தித் தருளினாரிறே. அப்பாவும் ஜீயரநுமதி கொண்டு கோயிலினின்றும் புறப்பட்டு
எறும்பி யேற எழுந்தருளி தம் திருத் தமப்பனாரைத் திருவடி தொழுது அவருக்கு சுஷ்ரூஷித்திக் கொண்டிருந்து, –எண்டிசையுமறிய இயம்புகேன் ஒண்டமிழ்ச் சடகோப னருளையே-என்கிறபடியே, ஜீயருடைய சேஷா க்ருதித்வ லஷ்மணா க்ருதித்வ ப்ரப்ருதிகமான அப்ரதிம ப்ரபாவத்தை வரவர முநி ஸதகம், வரவர முநி ப்ரபந்தம்,வர வரமுநி பஞ்சாஸத், வரவர முநி ஸ்தவம், வரவர முநி மங்களாசாஸநம் வரவர முநி கத்யம் முதலான ஹ்ருதயமான அநேக ப்ரபந்தந்களாலே வெளியிட்டு உபகரித்தருளினார்–
ஸ்ரீ வான மாமலை ஜீயர் அரங்க நகரப்பனை திருவாரதனமாகப் பெறுதல்
அவ்வளவிலே வானமாமலை ஜீயரை வானமாமலை ஸ்ரீகார்யார்த்தமாக அனுப்பி யருளவேணுமென்று ஸேனை முதலியார் ஸ்ரீமூகம்வர, எதிர்கொண்டு சிரஸா வஹித்து உட்பட்டுக் கொண்டு அப்படியே ஸம்மதியாம் படி ஜீயர் நியமித்தருளி, அவரையும் கூட்டிக் கொண்டு பெருமாள் திருமுன்பே சென்று இச் செய்தியை விண்ணப்பஞ் செய்து தாமும் திவ்யப் ப்ரபந்தம் நாலாயிரத்திலும் நூறு பாட்டு க்ரமத்திலே நித்யாநுஸந்தானமாக அநுஸந்திக்கி றது அவற்றைக்குத் திருமொழி சாற்றுமுறையாய், அணியர்ர் பொழில் சூழ் அரங்கநகரப்பா என்று -அநுஸந்திக்கிற வேளையில பெருமாளும் அப்படியே ஸம்மதித்து, தம்முடைய ஸந்நிதியிலே பூபால ராயனில் தட்டிலே யெழுந்தருளி யிருக்கிற அரங்க நகரப்பனாகிய லஷ்மீ நாராயணனான நாம் வானமாமலை ஜீயருக்கும் உமக்குமாக வருகிறோமென்று வானமாமலை ஜீயர் இருக்கையிலே எழுந்தருளப் பண்ணிக் கொடுக்க, அவரும் ஜீயர் திரு முக மண்டலத்தைப் பார்த்து பெரியார்க் காட்பட்டக்கால் பெறாத பயன் பெறுமாறு என்று விண்ணப்பஞ்செய்ய., பெருமாளும் தீர்த்தம் திருப்பரியட்டம், திருமாலை அபய ஹஸ்தம் முதலான வரிசைகளும் ஸ்ரீசடகோபனும் ப்ரஸாதமும் ஸாதித்து விடை கொடுத்தருள, ஜீயரும் மங்கள வாத்யங்களுடளே அரங்க நகரப்பனை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு மடத்திலே யெழுந்தருளி அமுது செய்தருளினவுடனே ஜீயரை வாழ்த்தி அரங்கநகரப்பனை ப்ரஸாதித்து வானமா மலைக்கு அனுப்பி யருளினார்.
ஸ்ரீ கோவிந்த தாஸரப்பனின் மதுரகவி நிஷ்டை
அநந்தரம் ஜீயரும் ஒரு நாள் எல்லாரும் பேரோலக்கமாக ஸேவித்துக் கொண்டிருக்கச் செய்தே முதலிகளைக் குறித்து, எல்லாரு மறிந்தார்களே யாகினும் தேவு மற்று அறியேன் என்றிருக்கிற
இருப்பு ஸ்ரீ கோவிந்த தாஸரப்பனுக்கே யுள்ளதொன்றிறே என்று விசேஷாபிமாநம் செய்தருளி,
சாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்ய மயீம் தநும் |
மக்நாநுத்தரதே லோதாந் காருண்யாச் சாஸ்த்ர பாணிநா | என்றும்
ஐகதோ ஹித சிந்தாயை ஜாக்ரத பணி ஸாயிந : |
அவதாரேஷ் யந்ய தமம் வித்தி ஸெளம்யவரம் முநிம் ॥
[ஸர்வேஸ்வரனான நாராயணன் தானே இவ்வுலகில் மனிதவுருவில் (ஆசார்யனாய்) வந்தவதரித்து ஸம்ஸாரமாகிற கடலில் முழுகிக்கிடக்குபம் ஜனங்களைத் தமது கருணையினால் சாஸ்த்ரங்களைக் கைக் கொண்டு மேலெழச் செய்கிறான்-என்றும், உலகங்களுக்கு நன்மை செய்யும் எண்ணத்தினால் அதன் பொருட்டு விழிப்புடனுள்ள சேஷசாயியான எம்பெருமான் பண்ணி யருளும் அவதாரங்களில் மணவாளமாமுனிகளையும் ஒரு அவதாரமாக அறிவீர்] என்றும் சொல்லுகிறபடியே தாம் பகவதவதாரமென்னுமிடம் தோன்ற நாமே கிடீர்’ என்றருளிச் செய்து தம் மழகிய மணவாளப் பெருமாளையும் அவருக்குத் திருவாராதனமாக ப்ரஸாதித்து பப்ராப்யைக நிஷ்டராக்கி யருளினார். அவரும், மோர் முன்ளாக முப்பது ஸம்வத்ஸரம் தளிகை ப்ரஸாதம் ஸ்வீகரிக்கப் பெற்று (ஆசார்யன் அமுதுசெய்த பாத்ரத்தில் (இலையில்) அவர் கடைசியாக அமுது செய்த மோர் ப்ரஸாதம் ரஸம் மாறாமல்
அதையே சிஷ்யனான தாம் முதலில் உணடு பிறகு மற்ற வ்யஞ்சளங்களுடன் அதே இலையில் உண்பது. ஆசாரியன் போனகம் செய்த சேடம் உண்கை சிஷ்யனுக்கு ப்ராப்யம். இப்படி மோர் முன்னாரையன் என்னும்படி 30 ஆண்டுகள் தினமும் ஆசாரியனின் உச்சிஷ்ட
முண்டு சிரோபாஸித ஸத் வ்ருத்தர் என்று கொண்டாடப் பெற்றவர் பின்புள்ளாரிலு முண்டு )க்ருதார்த்தராய் ஸகல ரஹாஸ்யார்த்தங்களையுங் கேட்டு ஜீயர் திருவடிகளை ஒருக் காலும்
பிரியாதே, பிரிந்தாலும் இராத் தங்குமூருக்கும் போகாதே, நித்ய ஸேவை பண்ணிக் கொண்டிருந்தார். பின்பொரு திருவாடிப் பூரத்திலே சூடிக் கொடுத்த நாச்சியார் தீர்த்த ப்ரஸாதங்களை போர ஆதரித்துக் கொண்டு வந்து ஸமர்ப்பிக்க, ஜீயரும் அங்கீகரித்தருளி பெரிய ப்ரீதியோடே ஆண்டாளுக்குகப்பாக பட்டர் பிரான் தாஸர்” என்று திருநாமம் ஸாதித்தருளினார். பின்பு கோவிந்த தாஸரப்பன் மஹா விரக்தராய் ஆஸ்ரம ஸ்வீகாரம் செய்ய,பட்டர் பிரான் ஜீயர்!’ என்று, திருநாமமாயிற்று. எம்பெருமானார் திருவடிகளுக்கு வடுக நம்பியைப் போல யாய்த்து இவரும் ஆசார்ய நிஷ்ட அக்ரேஸரரா யிருக்கும்படி-இப்படி யான விவர் சரம பர்வ நிஷ்டை மணவாள யோகி வாழ்ந்தருளிகிற காலத்திலே தணவாத வடிமை ஸகல காலத்திலும் செய்தருள, ‘பட்டர் பிரான் ஜீயர்’” என்றும், தேவு மற்றறியேன் என்றும், ‘பட்டநாத முநி வரா பீஷ்ட தைவதம்” [மணவாளமாமுனிகள் பட்டர்பிரான் ஜீயருக்கு இஷ்ட தேவதை] எனறும் “ஸ்ரீமதுரகவி சரிதகாரி மஹித சாரித்ர ஸ்ரீமாந் பட்டநாத யதீஸ்வர – [ஸ்ரீமதுரகவி நிஷ்டையை மணவாள மாமுனிகளிடம் உடையவர் நன்னடத்தை யுள்ள ஸ்ரீபட்டர் பிரான் ஜீயர்] என்றும் அங்குத்தைக்கு அந்தரங்கரானவர்கள் அருளிச் செய்தார்கள்-இப்படி அந்திமோபாய நிஷ்ட்ட அக்ரேஸராகவே ஸேவ்யமாநராய் எழுந்தருளி யிருக்கிற ஸெளம்ய ஜாமாத்ரு முநிவர்யரான ஜீயரும் அன்னையாய் அத்தனாய் என்கிறபடியே தமக்கு ஸர்வ விதோத்தாரக பந்து பூதரான நம்மாழ்வாரை ஸேவித்து நெடுநாளாயிற்று ஆகையால் தத் விஷய ப்ரேமம் அதிசயித்து தாய் நாடு கன்றே போல த்வரித்துக் கொண்டு பெருமாளுக்கு விண்ன்ணப்பஞ் செய்து அப்போதே திருதகரியேற வெழுந்தருளுவதாகப் புறப்பட்டு, ““கூடல்” என்றது மதுரையிலே சென்று திருப் பல்லாண்டு அவதரித்த ஸ்தலமென்று உகந்தருளி மல்லாண்ட திண்டோனள் மணி வண்ணரையும் திருவடி தொழுது,
பல்லாண்டு பல்லாண்டு என்று மங்களாசாஸநம் செய்தருளி அங்கே யெழுந்தருளி யிருக்குமளவிலே।
மஹாபலி வாண நாத ராயன் ஜீயரை ஆஸ்ரயித்தல்
அத் தேசத்துக்கு அதிபதியான மஹாபலி வாண நாத ராயன் வந்து திருவடிகளிலே ஆஸ்ரயிக்க, அவனையும் விசேஷ கடாக்ஷம் பண்ணி ஜாய புண்ட்ராதி பஞ்ச ஸம்ஸ்கார யுக்தனாக்கித் திருவடிகளுக் காட்படுத்திக் கொண்டு அற்றைக்கு அங்கே யெழுந்தருளி யிருந்து பிற்றை நாள் அர்த்த ராத்ரியிலே
மணி காஞ்சந லஞ்சந்நாம் சிபிகாம் தததிஷ்ட்டிதாம் |
ஸபந் நயந்த ஸ்வஸ்கந்தே க்ருத்வா கேகித் ப்ர தஸ்த்திரே ॥
(சில ஸ்ரீவைஷ்ணவர்கள் பொன்னாலும் ரத்னங்களாலும் ஆனதும், நன்கலங்கரிக்கப் பட்டதும், மாமுனிகள் எழுந்தருளி யுள்ளதுமான அத் திருப் பல்லக்கை சலிப்பில்லாமல் தமது
தோள்களிலே தாங்கிக் கொண்டு புறப்பட்டார்கள் ] என்கிறபடியே அந்த ராஜா ஸமர்ப்பித்த அநர்க்கமான நவ ரத்நக சிதரமணீயாந் தோளிகையிலே ஏறி யருளிப் புறப்பட்டு மூடு பனி யாகையாலே
திருப் பல்லக்கை குக்கூடலிட்டு ஸ்ரீவைஷ்ணனர்கள் ஸ்ரீபாதந் தாங்கிக் கொண்டு எழுந்தருளா நிற்க,
சத்ரம்சித்ரம் தது : கேசித் சாமரே ததிரேபரே |
ப்ருங்காரமவரே அபிப்ரந் களாசீமமி கேசந ॥
தத்பதாப்ஜா ஜஸ்பர்ஸ பாவநீ மாத்ம பாவிநீம் |
ஸந்த்ஸ் ஸந்தாரயந்திஸ்ம மெளளி நாமணி பாதுகாம் |
அகாயந் நக்ரத;கேசிதத ந்ருத்யந்தி கேசக ॥
[சிலர் திரு வெண் கொற்றக் குடையைத் தாங்கிச் சென்றனர் ;சிலர் திரு வெண் சாமங்களை வீசினர்; சிலர் படிக்கும் காளஞ்சிகளைத் தாங்கிச் சென்றனர் சில பாகவதர்கள் ஜீயருடைய ஸ்ரீபாத ரேணு
படுதலால் பரிசுத்தராய் ஸ்வரூபாநுகுணமாக ஸ்வாமியினுடைய மணி பாதுகங்களைத் திருமுடிமேல் தாங்கிச் சென்றனா பிலர் முன்னே பாடிச் சென்றனர்; சிலர் ஆடிச் சென்றனர்] என்கிறபடியே-சத்ர சாமராதிகள் தொடக்கமான கைங்கர்யோப கரணங்களைத் தரித்துக் கொண்டு பாடுவாராடுவார் உகந்தாலித்துக் கேட்பாராய் ஸஸம்ப்ரம ந்ருத்த கீதத்தடனே அனைவரும் ஸேவித்துக் கொண்டு
போருகிற படியைக் கண்டு இரவெல்லாம் அவஸர ப்ரதீஷராய் ஜீயரறியாதபடி ஸ்ரீ பாதம் தாங்கிக் கொண்டு இருகாத வழி ஸேவித்து வர, விடிந்த பின்பு வைகை யாற்றின் கரையிலே அநுஷ்ட்டா நார்த்தமாக இறங்கி யருளின வளவிலே ராஜாவும் கச்சை கட்டி யுடுத்து ஸந்நத்தனாப் ஸ்ரீபாதம் தாங்கின வேஷத்தோடே வந்து திருவடிகளிலே ஸேவிக்க, ஜீயரும் அது கண்டு இப்படி செய்வதே என்று ஆச்சர்யப் பட்டருள அப்போது அநுஷ்ட்டானம் பண்ணுவதாக வெழுந்தருளி யிருந்த “முத்தரசன்” என்கிற கிராமத்தை அங்கீ கரித்தருள வேணு மென்று அபேக்ஷிக்க, ஜீயருமவனுடைய நிர்ப்பந்தத்துக்காக அந்த க்ராமத்தை அங்கீகரித்தருளி அன்று தொடங்கி அந்த க்ராமத்திற்கு ”அழகிய மணவாள நல்லூர்”என்று திருநாமம் ப்ரஸாதித்து மஹாபலி வாண நாத ராஜாவையும் மிகவு முகப்போடே அனுப்பி யருளி, திருப்புல்லாணி வழியாக எழுந்தருளு மளவிலே முதலிகளும் தாமாக அத்வஸ்ர மாந்தராய் நிழல் தேடி வாரா நிற்க, அங்கே ஸ்த்தாவர விசேஷமா யிருப்பதொரு
இந்த்ரிணீ வ்ருஷம் நீரந்தீரச் சாயா யுக்தமாய் நிற்கக் கண்டு அங்கே வெழுந் தருளி அப் புளிய மர நிழலிலே விஸ்ரமித்து அத்வ ஸ்ரமம் தீர்த்துக் கொண்டு எழுந்தருளி யிருக்க
ஜீயர் புளிய மரத்துக்கு மோக்ஷமருளுதல்
முதலிகளெல்லாரும் இப்படி மஹோபகாரம் பண்ணின விதற்கு ஒரு கிருபை பண்ணி யருள வேணு மன்று ஜீயரைப் ப்ரார்த்திக்க, அவரும் ஸ்வ க்ருபாதிசயத்தாலே அந்தப் புளிய மரத்தைத் திருக்கையாலே ஸ்பர்சித்து, தாம் பெற்ற பேற்றை நீயும் பெறக் கடவாய்’-என்று அநுக்ரஹித்து எழுந்தருளினார். பின்பு அசிரேண அம் மரம் உலர்ந்திருக்கக் கண்டு முதலிகள்
யம்யம் ஸ்ப்ருஸதி பாணிப்யாம் யம்யம் பஸ்யதி சஷுஷா |
ஸ்தாவராண்யபி முச்யந்தே கிம் புநர் பாந்த வாஜநா ; ॥
[ஸத்துக்கள் யார் யாரைத் திருக் கைகளால் ஸ்பர்சிப்பார்களோ ,யார் யாரைத் திருக் கண்களால் கடாக்ஷிப்பர்களோ அவரில் தாவரங்களும் மோஷமடைகின்றன; பந்து ஜனங்களை ப்பற்றிச் சொல்லவும் வேணுமோ? என்கிற அர்த்தம் இவரிடத்திலே அந்வர்த்த ஸித்தமிறே ! என்று உகந்தருளினார்கள்-
அநந்தரம் ஜீயரும் திருப்புல்லாணி யேற எழுந்தருளி புல்லாணி யெம் பெருமானைத் திருவடி தொழுது அங்கு நின்றும் புறப்பட்டுப் பயண கதியிலே திருநகரி யேற வெழுந்தருளி ஸேவா கிரமம்
தப்பாமல் அடைவே ஆழ்வாரையும் பொலிந்து நின்ற பிரானையும் ஸேவித்து மங்களாசாஸநம் பண்ணிக் கொண்டு அங்கே அங்கே ஆத்மாக்களை திருத்தித் திருமகள் கேள்வனுக்காக்கி , திருவாய்மொழி முதலான திவ்ய ப்ரபந்தங்களையும் ப்ரஸாதித்து நின்று, ப்ரதி தினம் ஆழ்வார் திரு மஞ்சன காலத்தையும் மற்ற திவ்யோத் ஸவங்களையும் ஸேவித்துக் கொண்டெழுந் தருளி யிருக்க।
கோயிலில் அநுபவங்களில்லாமைக்கு வருந்துதல்
இப்படிக் காலங் கழித்து செல்லா நிற்கச் செய்தே மார்கழி மாஸம் வர,
எந்தை யெதிராசர் சிறப்பை யெழிலரங்கர்
சிந்தை மகிழ்ந்தமுது செய்ய–அந்த நிலம்
சென்று நின்று சேவிக்கும் செல்வமின்று பெற்றிலமே
என்று சேவிக்குமினியாம்?
என்று எம்பெருமானார் திருப்பாவைச் சிறப்பை ஸேவிக்கப் பெற்றிலோமில்லையீ என்று வெறுத்தருளியும், பின்பு ஸங்க்ரமணம் வர
சீராரங்கர் தந் தேவியரோடு சிறப்புடனே
யேராரு மாறன் கலியனெதிராசனோடமரப்
பாரோர் மகிழ்ந்தேத்தும் தட்டுக்கள் தன்னுடன் போற்று மந்தப்
பேரார வாரத்தை யின்று கண்டின் புறப் பெற்றிலமே
என்று அதற்கும் நொந்தருளி, பின்பு தைத் திருநாளை நினைத்தருளி
தேவியருந் தாமும் திருத்தேரின் மேலரங்கர்
மேவி விக்கிரமன் வீதி தனிற்–சேவைசெயு
மந்தச் சுவர்க்கத்தை யநுபவிக்கப் பெற்றிலமே
யிந்தத் திருநாளிலே யாம்
என்றநுஸந்தித்துப் பேரிழவோடே யெழுந்தருளி யிருந்து தொந்து
அணி யரங்க மாடுதுமோ என்றும், திரு வரங்கப் பெரு நகருள் தெண்ணீர்ப் பொன்னி திரைக் கையாலடி வருடப் பள்ளி கொள்ளும் கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டென் கண்ணினைகள் . என்று கொலோ களிக்கும் நாள் (பெருமாள் திரு.1-1) என்றும்.
“ஊரரங்கமே யென்பதிவன் தனக்காசை” என்றுஞ் (“காரிளம் புரைமேனி நம்கதிர் முத்தவெண்ணகைச் செய்யவாய் ஆரமர்வ னரங்கமென்னும் அரும்பெருஞ்சுடரொன் றிை , (பெரு திரு. 2-7) சேரும் நெஞ்சுடையராய் அப்போதே ஆத்வார் திருமுன்பே சென்று-)சொல்லுகிற படியே அபிநிவேசத்தைப் பண்ணிக் கொண்டு அதி த்வரையுடனே ஆழ்வார் திரு முன்பே சென்று
திருக்குருகைப்பெருமாள் தன் திருத்தாள்கள் வாழியே
திருவாளதிருமுகத்துச் செவியென் றும் வாழியே
இருக்கு மொழி யென்னெஞ்சில் தேக்கினான் வாழியே
யெந்தை யெதிராசர்க்கிறைவனார் வாழியே
கருக் குழியில் புகா வண்ணம் காத்தருள்வோன் வாழியே
காசினியிலாரியனாய்க் காட்டினான் வாழியே
வருத்தமற வந்தென்னை வாழ்வித்தான் வாழியே
மதுரகவி தம்பிரான் வாழி வாழி வாழியே
என்று மங்களாசாஸனம் பண்ணி ஸேவித்து, ஆழ்வாரனுமதி கொண்டு அங்கு நின்றும் புறப்பட்டருளி அதி த்வரையுடனே ஸ்ரீ வில்லிபுத்தூர் சென்று ப்ரவசித்து பொங்கும் பரிவுடைய பட்டர் பிரானையும் வடபெருங்கோயிலுடையானையும் ஸேவித்து, நாச்சியார் திருமாளிகையிலே சென்று புகுந்து ஆழ்வார் திருமகளாராண்டாளையும் அன்புடனே அடி பணித்து நிற்க, கோதையும் கோயிலண்ணருடைய திருவவதாரமன்றோ நீர்!” என்று மிகவும் க்ருபை செய்தருள, ஆண்டாளருள் கொண்டு புறப்பட்டு அழகனலங்காரன் மலையான திருமாலிருஞ்சோலை மலை நின்ற சுந்தரத் தோளுடையானான பரம ஸ்வாமி யையும் ஸேவித்து, அழகர் திருக்குறுங்குடிக்குக் குடி வாங்கிப் புறப் டெழுந்தருளி யிருக்கையாலே அவ்விடம் “நல்லதோர் தாமரைப் பொய்கை நாண் மலர் மேல் பனிசோர அல்லியுந் தாதுமுதிர்ந்திட் டழகழிந்தாவொத்ததாலோ, இல்லம் வெறியோடிற்றுலோ என் மகளை யெங்குங்காணேன் (பெரியாழ்வார் திரு. 3-8-1) என்று-அழகழிந்திருக்கிற கோயிலைக் கண்டு ‘புத்ர த்வய விஹீநம் தத்:(ராம லஷ்மணர்களாகிற புத்திரரிருவரும் இல்லாத அந்த வீடு-இத்யாதிப் படியே மிகவும் அவஸந்நராய் க்லேசித்தருளி இவரும் உடையவரைப் போல் வேண்டும் பொருள்களை யெல்லாம் அழைப்பித்தருளி அங்கே பாங்காக தளிகை பண்ணி நாறு நறும் பொழில்
மாலிருஞ் சோலை நம்பிக்கு (நாச் திரு. 9 6) என்கிறபடியே அமுது செய்தருளப் பண்ணி, அத்தைக் கண்டருளினதற்குக் கைக் கூலியாக-பின்னுமாளுஞ்செய்வன்-உன் பொன்னடி வாழ்க (பெரியா திரு,
5.3.3) என்று மங்களாசாஸநம் பண்ணி யருளி பரம ஸ்வாமியின் திரு முக மண்டலத்தை ஸேவித்து -நங்கள் குன்றம் கை விடான்(திருவாய் 10-8-4) என்று ஆழ்வாரருளிச் செய்த பொய்யில் பாடலை
அந்வர்த்த ஸித்தமாக்கி யருள வேணுமென்று ப்ரார்த்தித் தருளி;
ஜீயர் மீண்டும் கோயிலுக் கெழுந்தருளியது
அங்கு நின்றும் புறப்பட்டு மாலிருஞ் சோலை மணாளனார் பள்ளி கொள்ளுமிடமான திருவரங்கன் திருப்பதியைக் குறித்து எழுந் தருளி -கொடி யணி நெடு மதிள் கோபுரம் குறுகினர் (திருவாய்-10-9-8)என்னும்படி கிட்டியவாறே அங்குண்டான வர்களெல்லாம் எதிர் கொண்டு வந்து திருவடி களிலே ஸேவித்து
வகுள தர ஸவித்ரீம் யாதி யஸ்மிந் தரித்ரீம் மது மதந நிவாஸோ ரங்க மாஸீ தஸாரம் |
புநரிபி ஸூஸம்ருதம் பூயஸா ஸம் ப்ரவிஷ்டே’ வர வர முநிவர்யோ மாநுஷ:ஸ்யாத் கிமேஷ ॥
எந்த மணவாள மா முனிகள் மகிழ் மாலை மார்பரான நம்மாழ்வாருடைய பிறப்பிடமான திரு நகரியை அடைந்திருந்த போது மதுமதநனான பெருமாளுக்கு வாஸஸ்தானமான திருவரங்கமானது பொலிவற்றதாய்ப் போயிற்றோ அவர் அங்கு மீண்டும் எழுந்தருளின வளவில் அந்த ஸ்ரீரங்கம் மிகவும் நன்றாக பொலி வுற்றது; இந்த மணவாளமாமுனிகள் மனிதராக எண்ணத் தக்கவராவாரோ?] என்றநுஸந்தித்து ப்ரீதராய் ப்ரதிபத்தி பண்ண,அவர்களையும் க்ருபை பண்ணி யருளி அவர்களுடனே கூட-ப்ரதமம் எம்பெருமானாரைத் திருவடி தொழுது அவர் புருஷகாரமாக ஸ்ரீரங்கநாச்சியாரையும் பெரிய பெருமாளையும் திருவடி தொழுது அவர்கள் ப்ரஸாத விசேஷங்களையும் பெற்று மடம் யெழுந் தருளி -ரங்கே தாம்நி ஸுகாஸீதம்” என்கிறபடியே திருமலை யாழ்வாரிலே இனிதாக வீற்றிருத்து வ்யாக்யாநித்து அகிலரையும் ஆநந்திப் பித்துக் கொண்டு வாழ்த்தருளா நிற்க, முதலிகளும் அவ் விருப்புக்கு
ஜய துயஸ ஸாதுங்கம் ரங்கம் ஜகத் த்ரய மங்களம்
ஜயதுஸுசிரம் தஸ்மிந் பூமா ரமாமணி பூஷணம்
வரத குருணா ஸார்த்தம் தஸ்மை ஸுபாந்ய பிவர்த்தயந்
வரவரமுநி:ஸ்ரீமாந் ராமாநுஜோ ஐயது க்ஷிதெள ॥
[பெருமையினால் உயர்ந்து முவ் வுலகுக்கும் மங்களாவஹமான திரு வரங்கமானது பெருமை யுற்று விளங்க வேணும்; அத் திருப்பதியிலே பெரிய பிராட்டியாரையும் ஸ்ரீகெளஸ்துபத்தையும் திவ்ய ஆபரணமாக வுடையனான எம்பெருமான் பல்லாண்டாக விளங்க வேணும்; அவ் வெம் பெருமானின் பொருட்டு வரத குருவான அண்ணனுடன் மங்களங்களை மேலும் மேலும் உண்டாக்குபவரான
ராமாநுஜாபரா வதாரரான மணவாள மா முனிகள் இப் புவியில் விளங்க வேணும்-என்று மங்களாசாஸனம் பண்ணிக் கொண்டு வாழ்ந்தருளுகிற காலத்திலே
அழகர் கோவிலுக்கு நிர்வாஹகராக ஒரு ஜீயரை அனுப்பியது -இவர் அழகருக்குப் பண்ணிய மங்களாசாஸனம் பலித்து அழகர் மீண்டும் தம் கோயிலிலே குடி புகுந்தருளி ஜீயருக்குத் தம்
திருமுகமெழுதி,நாம் உம்முடைய நினைவின்படியே வந்து-“நங்கள் குன்றங்கைக் கொண்டு குடிபுகுந்தோம்; நம் வீட்டில் கார்யமாராய்ந்து நன்றாக நடத்தி யருளும் ஒருவரை வரவிட
வேணும்’ என்று வரக் காட்டி யருள, ஜீயரும் போர உகந்தருளி எதிராஜ ஜீயர் என்னு திருநாம முடையராய் மஹா விரக்தராய் மங்களாசாஸன பரராயிருக்குமரை அழகர் ஸ்ரீ கார்யார்த்தமாக அனுப்பி யருள, அவரும் அங்கே சென்று அழகரை ஸேவிதது ஆசார்ய ப்ரீத் யர்த்தமாக அனைத்தழகும் கண்டருளப் பண்ணினாரிறே.
முதலிகளைக் கொண்டு திவ்ய தேச கைங்கர்யங்கள் செய்வித்தல்
அநந்தரம், ஜீயரை யாஸ்ரயித்த மஹாபலி வாண நாதரும் திருமாலை தந்தான் தோழப்பரை (திருமலை தோழப்பரை) முன்னிட்டுக் கொண்டு மாலிருஞ் சோலை மாலுக்கு ஸர்வ வித கைங்கர்யங்களும்
செய்து போந்தார். இவர்களாலே அழகர் கைங்கர்யம் ஸம்ருத்த மாயிற்று. இப்படி கோயில் திருமலை முதலான திருப்பதிகளின் கைங்கர்ய மெல்லாம் குறைவறக் கொண்டருளு கையாலே மிகவு முகப்புடனே எழுந்தருளிருக்கும் காலத்திலே துளவருடைய வம்சத்திலே பிறந்து தேசாந்தரத்திலே திரிந்து போருவானொரு பிள்ளை திருவடிகளிலே வந்து ஆஸ்ரயிக்க, அவரை விசேஷித்து க்ருபை பண்ணி யருளி,-ஸ்ரீராமானுஜ தாஸர்’-என்று தாஸ்ய நாமம் ப்ரஸாதித்து அவரைக் கொண்டு அநேகம் திருப் பதிகளில் கைங்கர்யமெல்லாங் கொண்டருளப் பண்ணும்படிக்கு விசேஷாபிமானஞ் செய்தருள, அவ்விசேஷ கடாக்ஷ மடியாக பெருமாள் கோயில் தொடக்கமான திருப்பதிகளில் அவரைக் கொண்டு கைங்கர்யங்களெல்லாம் கொண்டருளப் பெற்றது. அநந்தரம் ஜீயரும்.
திவ்யோத்வ ப்ரஸங்கேஷு தேவ தேவ மதந்த்ரித: |
ஆஸாஸாநஸ் ஸமா ஸீதந் நத்ராக்ஷீத் ரங்க பூஷணம் ॥
[விசேஷமான உத்ஸவ காலங்களில் சோர்வில்லாமல் ஸர்வேசஸ்வரனான ஸ்ரீரங்கநாதனை அணுக்கராய் ஸேவித்து மங்களாசாஸனம் பண்ணினார் ] என்கிறபடியே திவ்யோத்ஸவங்களிலும் நம்பெருமாளை மங்களாசாஸநம் பண்ணிக் கொண்டு
கஸ்தூரி ஹிம கற்பூர ஸ்ரக் தாம்பூலா அநுலேபரை: |
திவ்யைரப்ய பஜத் போஜ்யை: ரங்கநாத திநே திநே –
அநுதினமும் ஸ்ரீரங்கநாதனை கஸதூரி, பச்சை கற்பூரம்,பூமாலை, அடைக் காயமுது, பரமள த்ரவ்பங்கள். இவற்றினால் உபசரித்தராதித்தார். என்கிறபடியே ப்ரதி தினமும் பாங்காக கிஞ்சித்கார பூர்வகமாக கைங்கர்யங்களையும் நடத்திக் கொண்டு, மார்கழி மாஸத்திலு மப்படியே
காலே கோதண்ட மார்த்தாண்டே காங்ஷந்நே வாருணோதயம் |
ந்யஷேவத விஸேஷேண ஸேஷிணம் ஸேஷ ஸாயிநம் ॥ –
மங்களாநி ப்ரயுஞ்ஜாநோ மாதம் ப்ரத்ய போதயத்
ஸம்யகேநம் ஸமப்யர்ச்ய ஸர்வதாநுகதை : க்ரமை: ॥
ஸ்வ ஸ்வ காலோசிதைர் திந்யை : ஸ்வாங்கல்போப லம்பிதை: |
அபோஜயதயம் போஜ்யை ஸாக மூல பலாதிபி; ॥
ஸுூபா அபூப க்ருதக்ஷீர சர்க்கரா ஸஹிதம் ஹவி: |
தநுர் மாதத்தில் அருணோயத்திற்கு முன்னே அரவணை மேல் பள்ளியானான எம்பெருமானை விசேஷமாக பூஜித்தார். மங்களமான பாசுரங்களை அநுஸந்தித்து திருமகள் மணாளனை திருப் பள்ளி யுணர்த்தினார் – எல்லாப் படியாலும் சாஸ்த்ர முறையான திருவாராதன க்ரமங்களால் எம்பெருமாளை நன்றாக ஆராதித்து, பின்னர் மணவாள மாமுனிகள் தமது நியமனப்படி வரவழைக்கப்பட்ட தத்தத் காலோசிதங்களாய் உயர்ந்தவையான காய், கிழங்கு, பழம், முதலான இனிய பதார் த்தங்களுடன் வடை,பருப்பு, நெய், பால் சர்க்கரை இவைகளுடன் கூட ப்ரஸாதத்தை
அமுது செய்தருளப் பண்ணினார் ]
செந்நெலரிசி பருப்புச் செய்த வக்காரம் நறு நெய் பாலால் என்று சொல்லப் படுகிற அக்கார வடிசில் தொடக்கமான அனேக வகைத் தளிகைகளும் அமுது செய்தருளப் பண்ணிப் போருகிறதுக்கு மேலே ஒன்றும் தேவும் சிறப்பும், கண்ணி நுண் சிறுத்தாம்புச் சிறப்பும், நூற்றந் தாதிச் சிறப்பும் ப்ரதி ஸம்வத்ஸரம் பெருமாளும் நாச்சியாரும் உகந்து அமுது செய்தருளும்படி நன்றாக நடத்திக் கொண்டு ஆழ்வார்களின் அருளிச் செயல்களை ல்யாக்யாளங்களுடன் அநுதினம் அநுஸந்தித்துக் கொண்டு எழுந்தருளி யிருக்கும் நாளிலே
பெரியாழ்வார் திருமொழிக்கு வ்யாக்யானம் அருளிச் செய்தல்
பெரியாழ்வார் திருமொழிக்குப் பெரியவாச்சான் பிள்ளை யருளிச் செய்த வ்யாக்யானம் காணாமையாலே அதற்கு வ்யாக்யானம் செய்தருளத் திருவுள்ளமாய் (திருபபாணாழ்வார் தாதர் நாயனாருக்கு)
செந் தமிழிலாழ்வார்கள் செய்த வருளிச் செயலை
சிந்தை செயல் தன்னுடனே செப்பலுமாம்-அந்தோ
திருப்பாணாழ்வார் தாதர் நாயனார் சேர
விருப்பாராகில் நமக்கீடாவர் யார்
சிந்தையினால் தேறலுமாம் வாய் கொண்டு செப்பலுமாம்’என்று திருமுகம் போக விட்டருள, அவரும் திருநகரியிலே தம் திருநந்தவனத் திலிருக்கிறவர் அந்த ஸ்ரீஸக்தியைக் கண்டு உகந்து சிரஸா வஹித்து, திருநந்த வனத்தினின்றும் அப்போதே புறப்பட்டு அதி சிக்ரமாக வெழுந்தருளி வந்து ஸேவித்து நிற்க, அவருடைய அத்வ ஸ்ரமத்தையும் ஸ்வ விஸ்லேஷத்தா லுண்டான பெரு விடாயையும் தத் விக்ரஹத்திலே கண்டு “மிகவு மிளைத்தீரே”’ என்று குசல ப்ரஸ்நம் பண்ணிக் குளிர கடாஷித்தருளி, பிற்றை நாள் அவரையுங் கூட்டிக் கொண்டு திருமொழி நாலு பத்தளவாக நன்றாக வ்யாக்யாநஞ் செய்தருளி மற்றை நாற்பது பாட்டுக்களுக்கு சேஷித்திருந்த பூர்வர்கள் வ்யாக்யானத்தை அழைப்பித்து அத்தோடு சேர்ப்பதாக வைத்திருக்க,
கந்தாடை நாயன் ஜீயரருளிய வ்யாக்யானத்தை ஸேவித்தது
அப்போது அதி பாலரா யிருக்கிற கந்தாடை நாயன் அங்கே எழுந்தருளி ஜீயருடைய ஸ்ரீ ஸூக்திகளையும் அபயப்ரதராஜ ஸூரி ஸ்ரீஸூக்திகளையும் ஆலேகித்து அவற்றில் அபய ப்ரதராஜ ஸுரி திவ்ய ஸூக்தியைக் கீழே ஒரு பீடத்திலிட்டு வைத்து அபிராமவர யோகி திவ்ய ஸுூக்தியை ஆதரேண ஆலோகியா நிற்கிறவர் “இந்த நாற்பது பாட்டுக்கும் சேஷிடாதே முற்றப் போகா தொழிவதே!’என்ன; இத்தை மணவாளமாமுனிகள கேட்டருளி, ‘அதிபால்யத்திலே இவருக்கு இத்தனை ஞான பூர்த்தி யுண்டாவதே!’” என்று உகந்து, நாயனைக் “கருணை பொங்கிய கண்ணிணைகளாலே கடாக்ஷித்து அழைத்தருளி “ஒன்றைப் பொகட்டு ஒன்றைஆதரிப்பானென்); இங்ஙன மிருப்ப தொன்றுண்டோ?”?. என்று கேட்டருள, நாயனும், மாம்பொழிற்றளிர் கோதிய மடக்குயில் வாயது துவர்ப்பெய்த தீம்பலங் கனித்தேனது நிகர்”என்று சொல்லுகிறபடியே அஸாரத்தை விட்டு ஸாரத்தைப் பற்றுகை யன்றோ ஸாரஜ்ஞ க்ருத்யம்; ஆகையாலே அதிலுமிது மஹா ரஸ வாக்ய ஜாலவத்தா யிருக்கிறதென்று ஆதரித்தது என்ன, ஜீயரும் அது கேட்டாநந்தித்து இவரும் ஒரு அவதார விசேஷமென்று ஆலிங்கித்துக் கொண்டருளினார். *இவள் வாயனகள் திருந்தவே என்கிறபடியே நாலூர் பிள்ளை (திருவாய் மொழிப் பிள்ளை )யிட்டருளின வ்யாக்யானங்களெல்லாவற்றிலும் அதிசயித்திறே இவருடைய ஸூக்தி வைபவமிருப்பது-இப்படிப் பெரியாழ்வார் திருமொழிக்கு ஸாவஜந ஹ்ருதய மாம்படி வ்யாக்யானஞ் செயதருளி, திருப் பாணாழ்வார் தாதர் நாயனார்க்கு
பிள்ளை லோகாசாரியர் திருக்கை ஸ்பர்சமுடையராய் ஸ்ரீரங்க ராஜ: பதிமே ஸஹாய:’ என்கிறபடியே தமக்குத் துணையாய் எழுந்தருளி யிருக்கிற ஸ்ரீ ரங்கராஜரையும் திருவாராதனமாக ப்ரஸாததித்து விடை கொடுத்தருளினார்.
ஜீயர் ஆசார்ய ஹ்ருதயத்திற்கு வ்யாக்யான மருளியது
அநந்தரம் ஆசார்ய ஹ்ருதயத்திற்கு வ்யாக்யாநஞ் செய்தருளத் திருவுள்ளமாய்த் திரு மேனியில் தெளர்ப்பல்யத்தையும் பாராமல் திருவணையிலே சாய்ந்தருளினபடியே திருக்கழுத்து நோவத் திரு வெழுத்துச் சாத்தி யருளும்படியைக் கந்தாடை யண்ணன் கண்டு தேவரீர் இப்படி எதுக்காக ப்ரயாஸப்படுவது?’” என்ன, ஜீயரும்“உம்முடைய புத்ர பெளத்ராதிகளுக்காகப் படுகிறேன்” என்றருளிச் செய்து வ்யாக்யானத்தை யருளிச் செய்து தலைக் கட்டினார்.
ஏட்டூர் சிங்கராசாரியர் ஜீயரை ஆஸ்ரயித்தல் -அஷ்ட கோத்ர நிபந்தனை–
அக் காலத்தில் பெரிய திருமலை நம்பி திருவம்சஸ்தரான ஏட்டூர் சிங்கராசாரியர் ஜீயருடைய அப்ரதிம ப்ரபாவத்தைக் கேட்டு-பெருமையும் நாணும் தவிர்ந்து ஆகிஞ்சந்ய அநந்ய கதித்வங்களை
முன்னிட்டு அநந்ய சரணராய் ஜீயர் திருவடிகளை ஆஸ்ரயிக்க, அவரை க்ருபை செய்தருளி, தன் மூலமாக வந்த திரவியத்தை ஆழ்வார் திருக் கோபுர கைங்கர்யத்துக்கு திரு நகரிக்குப் போக
விட்டருளினார். அக் கைங்கர்யம் சிறிது குறையாக விருக்க பின்பு ஜீயர் நாயனார் அக் குறையைத் தீர்த்தருளி சிகர பர் யந்தமாக நிறைவேற்றி யருளினார்- பின்பு போளிப் பாக்கம் நாயனாரை
அழைப்பித்தருளி அவர் முகமாக ஸப்த கோத்ர நிபந்தனை செய்தருளி அதில் இந்த ஏட்டூர் சிங்கராசாரியரையுங் கூட்டிக் கொண்டு அஷ்டகோத்ர ஸங்கயை யாயிரும் என்று நியமித்தருளினார்.
இப்படி வாசா மசோசரமான வைபவத்தை யுடைய ஜீயர் திருவடிகளிலே ஆஸ்ரயித்து
ஜகத் ரஷா பரோ அநந்தோ ஜநிஷ் யத்ய பரோ முநி |
ததாஸ்ரயாஸ் ஸதாசாராஸ் ஸாத்விகாஸ் தத்வ தர்ஸிந : ॥
[ஐகத் ரக்ஷணத்தில் ஊன்றி யுள்ள திருவநந்தாழ்வான்’ வேறு முனிவராக-மணவாளமாமுனியாக- அவதரிக்கப் போகிறார். அவரை ஆஸ்ரயிப்போர் நல்ல ஆசார சீலர்களாகவும், ஸாத்விகர்களாகவும் தத்வார்த்தங்களை உணர்ந்தவர்களாகவும் ஆவார்கள் என்கிறபடியே ஸத்வோத்தரராய் ஸதாசார நிரதராய் தத்வ தர்சிகளாய் அதிகத பரமார்த்தராய் அநவரதம் ஜீயரை ஸேவித்துக் கொண்டிருக்கும் முதலிகள்; (இந்த ஸ்லோகம் துன்னு புகழ்க் கந்தாடைத் தோழப்பருக்கு ஸ்வப்நத்தில் கச்சிப் பேரருளாளன் அருளியதாக இந்த நூலின் தொடக்கத்தில் வந்துள்ளது காண்க, )
அஷ்டதிக்கஜங்கள்
பாராரு மங்கை திருவேங்கட முனி பட்டர் பிரான்
ஆராமம் சூழ் கோயில் கந்தாடை யண்ணன் எறும்பி யப்பா
ஏராரு மப்பிள்ளை அப்பிள்ளார் வாதி பயங்கரரென்
பேரார்ந்த திக் கயஞ் சூழ் வர யோகியைச் சிந்தியுமே
என்று சொல்லப்பட்ட வானமாமலை ஜீயர், திருவேங்கடஜீயர்-பட்டர் பிரான் ஜியர், கந்தாடை யண்ணன், எறும்பி யப்பா, அப்பிள்ளை, அப்பிள்ளார், ப்ரதிவாதி பயங்கர மண்ணா என்கிற அஷ்ட திக்கஜங்களுக்கும், திருப்பாணாழ்வார் தாஸர், ஏட்டூர் சிங்கராசாரியர், வரந் தரும் பெருமான் பிள்ளை, மேனாட்டுத் தோழப்பர்,அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், ஜீயர் நாயனார், அண்ணராய சக்ரவர்த்திகள் தொடக்கமானாரும் ஜகத் ரஷா பரோ அநந்தோ…தத்வ தர்ஸிந:” என்கிறபடியே இவர்களெல்லாரும் ஸத்வோத்தரராய் ஸதாசார நிரதராய் தத்வ தர்சிகளாய் ஜகதுஜ்ஜீவநைக பரராய் இருப்பார்கள்.
முதலிகளுக்கு வகுத்த கைங்கர்யங்கள்
இப்படிப்பட்ட திக்கஜங்களாலும் மற்றுமுள்ள முதலிகளாலும் ஸேவ்யமாநரா யிருக்கிற ஜீயர் திருவடிகளிலே நித்யகைங்கர்யம் செய்யும் முதலிகளாரென்னில்:
1-வானமாமலை ஜீயர்-பால்யாத் ப்ரப்ருதி ஸுஸ்நிக்தராய் ஆஸ்ரயித்தவன்று தொடங்கி பிரியாதாட் செய்திருப்பர்,
2-கந்தாடை அண்ணன் ‘“ராமாநுஜ முநீந்த்ரஸ்ய ஸ்ரீமாந் தாஸரதிர் யதா” என்று உடையவருக்கு முதலி யாண்டானைப் போலே அத்யந்தம் பீரீதி விஷய பூதராய் பாதுகா ஸ்தாநீய் இருப்பர்
3-எறும்பி யப்பா வடுக நம்பியைப் போலே தேவுமற்றறியாதே ஜீயருக்கு அத்யந்த மபிமதராயிருப்பர்.
4- ப்ரதிவாத பயங்கர மண்ணா உடையவர் திருவடிகளுக்குக் கூரத் தாழ்வான் போலே ப்ரதி பக்ஷ நிரஸந பூர் வகமாக ஸ்ரீபாஷ்யத்திற்கு உசாத் துணையா யிருப்பர்.
5-ஸேனை முதலியாரண்ணன், சடகோப தாஸர், அப்பிள்ளை, திருப்பாணாழ்வார்
தாஸர் இவர்கள் திருவாய்மொழி முதலான அருளிச் செயல்களுக்கு உசாத்துணையாய் இருப்பர்கள் -விசேஷித்து அப்பிள்ளை ஜீயர் நியமனத்தாலே ஐந்து திருவந்தாதிகளுக்கும் உரை யருளிச் செய்து யதிராஜ விம்ஸதிக்கும் வ்யாக்யாத்ம் செய்தருளினார்.
6-அப்பிள்ளார் மட த்தில் ஸர்வ பரங்களையும் பரித்துக் கொண்டு தளிகைக்குப் பாங்காக அமுதுபடி, பருப்பமுது, கறியமுது, பாலமுது, நெய்யமுது,தயிரமுது தொடக்கமானவை நடத்திக் கொண்டு போருவர்
7-பட்டர் பிரான் ஜீயர் எம்பாரைப்போலே ஸ்ரீபாதச்சாயா பந்தராய் பிரியில் தரியாமையை முன்னிட்டு அடிமை செய்து ததேக நிஷ்டராய் ஸர்வவித கைங்கர்யங்களிலும் அந்வயிததுத் திருவடிகளை யல்லது ஒரு தெய்வ மறியா திருப்பர்,
8-ஜீயர் நாயனார் இளவரசராய் எல்லார்க்கும் உத்தேச்யராய் திருக் குருகைப் பிரான் பிள்ளாளைப்போலே அத்யாதரணீயராயிருப்பர்
இப்படி இவர்களாலே ஸேவ்யமானரா யிருக்கிற வரவரமுநிவர்யரான பெரிய ஜீயர், திருமகள் தன் கொழுநன் திருக்ழல் சேர் மா்றனடி பரவும் எதிராசர் செம் பொற் பாத மிரவு பகல் மறவாமலிறைஞ்சி யேத்து மெழில் திருவாய்மொழிப் பிள்ளை யிணைத்தான் பேணுமவரான மணவாள மா முனிவனெந்தை மண்ணுலகலவதரித்து வாழ்ந்த பின் முன்னறிவெனவு மறியாத மானிடவரெல்லாமுதிதான வர்த்த பஞ்சக நிஷ்டரார் என்றும்,
இத்தம் ப்ருத்யா நர்த்திரஸ் தோஷ யித்வா தேஸே தஸ்மிந் தர்ஸயந் வைபவம் ஸ்வம்
ப்ரத்யா வ்ருத்தஸ் த்வந்திமோபாய தத்வம் தத்ரத்யேஷு ஸ்தாபயித்வா ஜநேஷு ॥ -இப்படி விஷயங்களை யறிய வேணுமென்று வந்த சிஷ்யர்களை மகிழ்வித்துக் கொண்டு அந்த திவ்ய தேசத்தில் தமது வைபவங்களை ப்ரகாசிப்பித்துக் கொண்டு அங்குள்ள வைஷ்ணவரிடையே அந்திமோபாய நிஷ்டையில் உண்மையை நிலை நிறுத்தித் திரும்பி யெழுந்தருளினார் என்றுசொல்லுகிறபடியே-)ஜகத்திதுண்டான சேதனரெல்லாரையும் அர்த்த பஞ்சக நிஷ்டராயும் அந்திமோபாய நிஷ்டராயும் உஜ்ஜீவிக்கும்படிக்குத் திருத்தி வாழ்வித்ருளி நாயனாருக்குத் திரு வாய் மொழி ஈடும் ஸ்ரீபாஷ்யமும் விசதமாக ப்ரஸாதிக்கும்படி,அண்ணனையும் அண்ணாவையும் நியமித்தருளி க்ருதார்த்த்ராய்,
தென்னரங்கா் சீரருஞக்கிலக்காகப் பெற்றோம்
திருவரங்கந் திருப்பதியே இருப்பாகப் பெற்றோம்
மன்னிய சீர் மாறன் கலை யுணவாகப் பெற்றோம்
மதுரகவி சொற் படியே நிலையாகப் பெற்றோம்
முன்னவராநங் குரவர் மொழிகளுள்ளப் பெற்றோம்
முழுது நமக்கிவை பொழுது போக்காகப் பெற்றோம்
பின்னை யொன்று தனில் நெஞ்சம் போராமற் பெற்றோம்
பிறர் மினுக்கம் பொறாமை யில்லாப் பெருமையும் பெற்றோமே
என்று இப்படி ஸ்வ நிஷ்டா விசேஷத்தை மதித்துக் கொண்டு அகாரண க்ருபா பரிதஸ்வ விஸேஷ கடாஷ பாதேந புளி முதலான வ்ருஷாதிகளையும் உஜ்ஜீவிப்பித்துக் கொண்டெழுந் தருளியிருந்தார். யம் யம் ஸ்ப்ருஸதி பாணிப்யாம்” என்கற ஸ்லோகார்த்தம் இவரிடத்திலே அந்வர்த்த ஸித்தமாய் பலித்தபடி கண்ட பின்பு மனுஷ்யரான ஜ்ஞாநிகளுக்குஜ்ஜீவநம் கிம் புநர் ந்யாய ஸித்தமிறே-
தத் பாத பத்ம ஸம் ஸ்பர்ஸ பாவநம் ஸலிலம் ஐநா |
ஸ்வீகுர் வந்தஸ் ஸூகேநைவ ஸ்வரூபம் ப்ரதி பேதிரே ॥
ஆலோகைர நுகம்பாத்யை ராலாபைரம்ரு தச்யுதை: !
அந்வஹம் பாணி சாதன்ய ஸ்பர்ஸந் யாஸைஸ் சபாவநை : ॥
மந்த்ர ரத்ந ப்ரதாநேந ததர்த்த ப்ரதி பாதநாத் |
ஆத்மார்ப்பணேந கதிசிதஜ் ஞாதஜ் ஞாபநே ந௪ ॥
கேசித் ஷேமம் யயுஸ் தஸ்ய பாதபத்மஸ்ய ஸம்ஸ்ரயாத் |
அந்யே தத் ரூப நித்யா நாதந்யே தந் நாம கீர்தீதநாத் ॥
ஸம்ருத்வா தஸ்ய குணான் திவ்யாந் ஸ்துத்வாதாநேவ கேசந |
நத்வாதாம் திஸ முத்திஸ்ய ஸ்ம்ருத்வா தத் வைபவம் பரே ॥
அபதிஸ்ய கமப்பயே நமந்யே ப்ரதித வைபவம் |
அந்யேதத் பருத்ம ப்ருத்யா நாம லோக ஸ்பர்ஸ நாதபி:॥
அந்யே தத்பாத ஸம் ஸ்பர்ஸ தந்யே ஸம்பூய பூதலே |
அபவந் பூயஸா தஸ்ய முநே : பாத்ரம் க்ருபாத்ருஸநம் ॥
ஏவம் ஸர்வே முநீந்தரேண பபூவுஸ் ஸ்ரஸ்த பந்தநா; |
[அம் மணவாள மாமுனிவருடைய திருவடித் தாமரைகளின் ஸம்பந்தத்தினால் பரிசுத்தமான ஸ்ரீபாத தீர்த்தத்தைப் பருக அடியார்கள் எளிதில் தமது ஸ்வரூபத்தை (சேஷத்வத்தை)உணர்ந்தனர். அவருடைய திவ்ய கடாக்ஷத்தாலும் அம்ருதம் போல் பாயா நின்ற க்ருபாதிசயத்தாலும், திருவடிகளின் ஸ்பர்சத்தாலும் அவற்றில் பர ஸமர்ப்பணத்தினாலும், மந்த்ர ரத்நமான த்வயத்தை ௨பதேசமாகப் பெற்றும் அதன் பொருளை அருளிச் செய்யக் கேட்டும் சிலர் ஆத்ம ஸமர்ப்பணத்தினாலும் (ப்ரபத்தியாலும்)), தமது அறியாமையை விண்ணப்பம் செய்வதாலும், (சிலர்) அம்மா முனிவருடைய திருவடித் தாமரைகளில் ஆஸ்ரயிப்பதாலும், ஆத்மோஜ் ஜீவனத்தை (க்ஷேமத்தை) அடைந்தார்கள். சிலர் அம்மாமுனிவருடைய திருமேனியை எப் போதுமாக தியாந விஷயமாக்குதலாலும், அவர் திரு நாமங்களைப் பாடுதலாலும்,சிலர் அவருடைய கல்யாண குணங்களைக் கேட்டு அவற்றைக் கொண்டு அவரைத் துதித்தும், அவர் எழுந்தருளி யுள்ள திக்கு நோக்கித் தண்டனிட்டும்,அவருடைய பெருமைகளைச் சிந்தித்து மூழ்ந்தும், இப்படிப்பட்ட வைபவமுடைய ‘ஸ்வாமியை ஈடற்றவராக நிச்சயித்தும், சிலர் அவருடைய தாஸ தாஸர்களின் கடாக்ஷித்தினாலும் ஸ்பர்ஸத்தினாலும், அவர்களின் பாத ஸ்பர்ஸத்தினாலும் தன்யமான இப்பூவுலகில் (பாக்ய சாலிகளாக) பிறந்து, அம் முனிவருடைய க்ருபா கடாஷத்திற்கு மேலான பாத்ர பூதர்களாக ஆனார்கள். இப்படி
யாவரும் முநீந்தரரான மணவாள மாமுனிகளருளாலே பந்தங்கள் நீங்கியவர்களாக ஆனார்கள்] என்கிற படியே தம்முடைய ஸ்ரீபாத தீர்த்த ஸ்வீகாராதிகள் தொடக்கமாக ஈஷண த்யாந ஸம்ஸ்பர்ஸாபிமாநாதி விசேஷங்களாலே ஸமீபஸ்தரோடு தூரஸ்தரோடு பவிஷ்யோத்தர முண்டாமவர்களோடு வாசியற ஸர்வரையும் ஸம்ஸாராதுத் தீர்ணராம்படி பண்ணி ஸம்ஸார பரமபத விபாகமற பூதலமெங்கும் பொன்னுலகமாக்கி, இனி தேடித் திருந்தும் படியாக வொழிந்த தசையாய்
ஸர்வாவஸ்தா ஸத்ருஸ விபவா ஸேஷக்ருத்த்வம் ரமயா பர்த்து;
த்யக்வா ததபி பரமம் தாம தத் ப்ரீதி ஹேதோ: |
மக்நா நக்நெள வரவரமுநே மாத்ரு ஸாநுக்கி நீஷந்
மர்த்யா வாஸே பவஸி பகவந் மங்களம் ரங்க தாம்ந : ॥
(கல்யாண குண பூர்ணரான மணவாள மா முனிவரே! ஸ்ரீய:பதியான எம்பெருமானுக்கு எல்லா நிலைகளிலும் தகுந்தபடி வைபவம் மிக்க குற்றேவல்கள் அனைத்தும் செய்து கொண்டுள்ள தேவரீர் அந்தப் பரம பதத்தையும் விட்டு அவ் வெம்பெருமானுடைய பிரீதியின் பொருட்டு ஸம்ஸாராக்நியில் அழுந்திக் கிடக்கிற அடியேன் போல்வாரை உத்தரிப்பிக்கத் திருவள்ளமாய் இம் மாநிட வுலகில் திருவரங்கமான திருப்பதிக்கு அணி விளக்ஈய் உள்ளீர்] என்றபடியே தம்முடைய அவதார காரியம் தலைக் கட்டி யருளி:
இராமானுசன் திருவடிகளே சரணம்,-இராமானுசாய நம : என்றது நடுவாக இந்த வரங்கர் என்று தலைக் கட்டி அருளிச் செய்ய- அதுவே-ஆர்த்தி என்று அறுபது பாட்டாய் ஒரு ப்ரபந்தமாய்த் தலைக்
கட்டிற்று, அந்த அபிநிவேசம் அவ்வளவிலே நில்லாதே பரவி
எம்பெருமானார் தம்பிரானென்னுமவரை
நம்பெருமாள் தாமுகந்து நாள் தோறும்–தம் பரமா
ஏறிட்டுக் கொண்டளிப்ப ரென்றுமவர் தம்மை
வேறிட்டுத் தாங் கைவிடார் —என்று தேறுவதென்றும்,
பொல்லானிவனென்று போதிடென்று நங்குரவ
ரெல்லாரு மென்னை யிகழ்ந்தாரோ-நல்லார்கள்
வாழ்வான வைகுந்த வான் சபையில் வண் கூரத்
தாழ்வானி ருந்திலனோ வங்கு? என்று கலங்குவதுமாய் அநுகம்பாஞ்சலி யானவர்களை ஆராய்வதும்,
ஆரியர்காள்! ஆழ்வீர்காள்! அங்குள்ள முக்தர்காள் !
சூரியர்காள்! தேவியர்காள்! சொல்லீரோ–நாரணற்கு
எங்களடியானிவன் மீடேற வேணுமென்
நுங்களடியரருமுள என்று கடகர் பலரையும் பல கால் கால் கட்டி அர்த்திப்பதும்,
தென்னரங்கர் தேவியே! சீரங்க நாயகியே!
மன்னுயிர்கட்கெல்லாம் மாதாவே!–என்னை யினி
இவ் வுலகந் தன்னிலிருந்து நலங்காமல்
அவ் வுலகில் வாங்கி யருள் என்றும்
சீ ரங்க நாயகியே! தென்னரங்கள் தேவியே! ்
நாரங்கட்கெல்லாம் நற்றாயே ! — மாருதிக்கு
வந்த விடாய் தன்னை யொரு வாசகத்தால் போக்கின நீ
எந்தனிடர் தீராத தென்? என்றும் மறுக்க வொண்ணாத மாத்ருத்வ ஸம்பந்தத்தைச் சொல்லி மடி பிடிப்பதும்
இந்த வுடம் போடினி யிருக்கப் போகாதுன்
செங்கமலத் தாள் தன்னைத் தந்தருள்நீ–அந்தோ
மையார் கருங் கண்ணி மணவாளா! தென்னரங்கா!
வையாம லிருப்பாயே யிங்கு-என்று ஆர்த்ர ஹருதயத்வ விஸிஷ்டராய்–ஆர்த்தி ஹரத்வ விசிஷ்டரான – அவர் முன்பே தம்முடைய ஆர்த்தியைச் சொல்லுவதும்,
சென்று திருமாலடியார் தெய்வக் குழாங்கூடு
மென்று மொரு நாளாமோ? ஆழ்வாரே!-துன்னு புகழக்
கமலம்பாடினீரையோ அடியேனுமிக்
கமலஞ் சேர் காயம் விட்டு—(கமலம்பாடி நிறையா அடியேனுமிக்–பாட பேதம்)என்று “அடியார்கள் குழாங்களை உடன் கூடுவதென்று கொலோ? என்று அர்த்தித்த ஆழ்வாரிடத்தில் ஸ்வரூபா நுரூபமான ப்ராப்யத்தை அபேக்ஷிப்பதும்
இந்த வுடம்போ டிருவினையாலிவ்வளவும்
உந்தனடி சேராதுழன்றேனே–அந்தோ
அரங்கா! இரங்கா யெதிராசர்க்காக
இரங்காய் பிரானே இனி–என்றும் திருவாங்கா! அருளாய் இனி யுன் திருவருளாலன்றிக் காப்பரிதால்” என்கிறபடியே மீளவும் மரங்களுமிரங்கும்படி அவர்க்கந்தரங்கரை முன்னிட்டுக் கொண்டு அவரிரக்கத்தை இரப்பதுமாய், இப்படி ஒரு தேச விஸேஷத்திலே சென்றாலொழிய தரியாத தசையை யடைந்து எழுந்தருளி யிருக்க;
அந்த தசையிலே தேசாந்தரஸ்தரான மேல்நா ட்டுத் தோழப்பரும் அவர் திருத்தமயனாரான அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும் பெருமாளை ஸேவிப்பதாகக் கோயிலுக்கெழுந்தருள।
அவர்களைத் தென் மாடத்திருவீதியிலே பட்டர்பிரான் ஜீயர் கண்டருளி, “நீங்கள் எங்கு நின்றும் எழுந்தருளினீர்கள்? எங்கேறப் போகிறீர்கள்?” என்று கேட்க, அவர்களும் ஸ ஸாத்வ ஸ விநயராய் ஸாஷ்டாங்க ப்ரணாமம் பண்ணி உகப்போடே யதா மநோ ரதம் வ்ருத்தாந்தத்தை விண்ணப்பஞ் செய்ய, ‘ இப்படி ஜ்ஞாநாக்த்யாதிகள் வடிவிலே தொடை கொள்ளலாம்படி அநுகூலராயிருக்கிற நீங்கள் யதிபுநரவதாரமான நம்முடைய பெரிய ஜீயரை ஸேவிக்க வேண்டாவோ?” , என்றருளிச்செய்ய-அவர்களும்
அதற்கு இசைந்து மடமேற கூடவெழுந்தருள, மணவாள யோகி தஞ்சமாம் மலர்த் தாளிணைகாட்டி-என்கிறபடியே-ஜீயர் திருவடிகளை ஸேவிக்கப் பண்ண, அவ்வளவிலே நாயனாரும்-புரை கொண்ட கோயில் மணவாளமாமுனிக்கண்ணருளே” என்றும் போதச் சிவந்து பரிமளம் விஞ்சும் புதுக் கணித்த
சீதக் கமலத்தை நீரேற வோட்டிச் சிறந்தடியேன் ஏதத்தை மாற்றும் மணவாள யோகி யினிமைதரும்
பாதக் கமலங்கள் கண்டேனெனக்குப் பயமில்லையே என்றும் வாசிக கைங்கர்யமாக இந்தத் திருநாமத்தை விண்ணப்பஞ் செய்து கொண்டு திருவடிகளிலே ஸாஷ்டாங்கமாக
தெண்டன் ஸமர்ப்பித்து நிற்க, ஜீயரும் அவர் அபேஷித்தபடியே அமலங்களாகக் கடாக்ஷித்தருளி அப்போது எம்பெருமானார் திறத்திற் சென்ற சிந்தையரான தாம் இவர்கள்’ என்றவாறே
எம்பெருமானாருடைய விசேஷாபிமானமுள்ள திருநாராயண புரத்தை நினைத்து, அவர் அந்திம தசையிலருளிச் செய்தருளின
கச்சந் பதம் பரமுவாச வசாம்ஸி யாரி
ராமநுஜார்ய இஹதேஷு சதுர்த்த ஸித்தாம் |
ஸ்ரீ யாதவாத்ரி வஸதிம் ஸததம் பஜந்தஸ்
ஸக்தோ பவந்தி மம ஸந்ததி மூலநாத: 1
[எமது குலகூடஸ்தரான எம்பெருமானாருக்கு தன்னுடைச் சோதிக்கு எழுந்தருளுமளவில் அருளிச் செய்த (ஆறு) வார்த்தைகளில் நாலாவதான (வார்த்தைப்படி) திருநாராயணபுரத்தில் இடை விடாமல்
வாஸம் செய்பவர்கள் மஹான்களாவர்] என்கிறபடியே திரு நாராயண புரத்திலே நித்ய வாஸம் பண்ணுவார் நம்முடைய முதலிகளிலே ஒருவருமில்லையோ?” என்று ஜீயரரருளிச் செய்ய,
அட்போது தோழப்பர் திருப் பரியட்டத்தைத் தலையிலே முடிந்து கொண்டு -‘இந்தக் கைங்கர்யம் அடியேனுக்காக வேணும்”’ என்று ப்ரார்த்திக்க, ஜீயரும் மிகவுமுகந்தருளி, “எம்பெருமானாருக்கும்
நமக்கும் ப்ரியமாம்படி கிஞ்சித்கார பூர்வமாக எதிராஜ குமாரரை ஸேவித்து மங்களாசாஸந பரராய் நித்ய வாஸம் பண்ணியிரும்” என்று நியமித் தருளினார்-
அண்ண ராயரை பட்டர்பிரான் ஜீயர் திருவடிகளுக்கு ஆளாக்கினது
அந்த சமயத்திலே ராமாநுஜ பரிக்ருஹீதராய் திருமலை நல்லான் திருவம்சஸ்தராய் .”இடங்கொள் சமயத்தை யெல்லாம் எடுத்துக் களைந்து ஸ்வமத ஸ்தாபகராயிருக்கிற அண்ணராய சக்ரவர்த்திகள் ஸ குடும்பராக பெருமாளை ளேவிக்க எழுந்தருளிக் கோயிலிலே பெருமாளை ஸேவித்துக் கொண்டெழுந் தருளியிருக்க, அப்போது ஜீயருடைய சரம தசையை தேசாந்தரஸ்த்தரோடும் தத் தேஸிரீயரோடும் வாசியற ஸர்வரும் குழாங் குழாமாகச் சென்று ஸேவித்து மீளுகிறபடியை அண்ணராய சக்ரவர்த்தி திருத்தாயார் ஆச்சி கண்டு, அவ் விசேஷங்சேட்டு, ”அண்ணராயனே! நமக்கு ஜீயரை ஸேவிக்க வேண்டாவோ?! என்ன, சக்ரவர்த்தியும் இசைந்து எல்லாரையுங் கூட்டிக் கொண்டு ஜீயர் மடத்திலே சென்று பட்டர்பிரான் ஜீயர் புருஷகாரமாக வந்து ஸேவித்து திருவடிகளிலே வேரற்ற மரம் போலே விழுந்து கிடக்க, ஜீயர் நெடுநாளாக அங்கீ கரிக்கைச்கு விஷயங் காணாமையாலே முடங்கிக் கிடந்த திருவடிகள் இப்போது இவரைக் கண்டு (தத ஸ்திமித முத்க்ஷிப்ப சரணம் சக்ரலாஞ்சிதம் |
க்ருபயாமூர்த்கி விந்யஸ்ப ஸநிநாய குருஸ்ரமம் ॥ [பிறகு அம் மணவாளமாமுனிகள் சக்கர அடையாளம் பெற்ற நிச்சலமான தம் திருவடிகளை உயர வெடுத்து க்ருபையுடன் அவர் திருமுடியில் வைத்தருளி அவரது பெரு விடாயைப் போக்கினார் -என்கிறபடியே; )நிமிரப் பெற்றுத் தந் திருவடித் தாமரைகளை இவர் திரு முடியிலே வைத்தருள, இத்தைக் கண்டு முதலிகளெல்லாரும் இவருடைய பேறிருந்தபடியென்! என்று உகந்தருளினார்கள். ஜீயரும் சக்ரவர்த்திகளைக் குறித்து எம்பெருமானார் ஜீயரை திருவேங்கட த்ரோஹிகள் நலியா வண்ணம் காத்து ரக்ஷித்து நம் தர்சந விஷயமாக அநேக கார்யங்கள் பண்ணிப் போந்தவரன்றோ நீர்!” என்று மிகவுமுகந்தருளி, உமக்குத் தகுதியான பேறில்லையே, சற்று முந்துறச் சேரப் பெற்றீரில்லையே!’ என்று அருளிச் செய்து, பட்டர்பிரான் ஜீயரைப் பார்த்து, வாரீர் கோவிந்தப்ப தாஸரே! என்றழைத்தருளி, :ராமஸ்ய தஷிணோ பாஹு:”‘ [ராமபிரானுக்கு வலது கை லக்ஷ்மணன் ] என்று நமக்கு தஷிண பாஹாு ஸ்த்தாநீயரன்றோ நீர்? ஆகையாலே நாம் செய்கிறதாக நினைத்து நம் ஸம்பந்தத்தை அபேக்ஷித்திருக்கிற இவர்களுக்கு பஞ்ச ஸம்ஸ்காரங்களையும் செய்யுமென்று அண்ணராய சக்ரவர்த்திகளையும் தோழப்பரையும் நாயனாரையும் அவர் கையில காட்டிக் கொடுத்து “தர்சந ப்ரவர்த்தகராம்படி திருத்தம்’” என்று
நியமித்தருள, அவரும் அப்படியே அவர்களை விசேஷ கடாக்ஷம் செய்தருளினார். பின்பு அப்பிள்ளானும் ஜீயர் நாயனாரும் ஜீயர் திருவடிகளிலே ஸேவித்து, ‘அடியோங்களுக்குத் தஞ்சமாசு தேவரீருடைய அர்ச்சா ரூபமான விக்ரஹம் வேணும்” என்றபேஷிக்க,அப்படியே அநுமதி பண்ணித்’ தம்முடைய திருக்கைச் செம்பை உபாதாநமாக்கி யருள, அப்படியே அவர்களும் இரண்டு விக்ரஹம் ஏறி யருளப் பண்ணிக் கொண்டு உகந்தருளினார்கள்.
பெரிய ஜீயர் சரம தசையில் நாலாயிரமும் கேட்டருளியது
பின்பு தனித் தனியே முதலிகளெல்லாருக்கும் வேண்டிய ஹிதங்களை யெல்லாம் ப்ரஸாதித்தருளி மேலிலங்குவானான கலங்காப் பெரு நகரில் சென்று இமையாத கண்ணீனராய் வழுவிலா வடிமை
செய்யப் புறப்பட்டெழுந்தருள நாலு நாள் என்னவே, :’“நாலாயிரமும் தொடங்கி நடத்துங்கோள்” என்று நாயனார் தொடக்கமான முதலிகளுக்கு நியமித்தருள, அவர்களுமப்படியே தொடங்கி அநுஸந்திக்க, இவைகளை யெல்லாம் திருச் செவி சாத்தி யருளி-ஜீயரும் உகப்புடனே -வளர்த்ததனால் பயன் பெற்றேன் என்றருளிச் செய்து, மஸ்தகாஞ்சலியாய் ததர்த்தாநுபவ பாரவஸ்யததாலே நிமீலிதாக்ஷ யுகளராயிருக்க, “இப்போது திருவுள்ளத்திலோடுகிறதென்?” என்று கந்தாடை யண்ணன் கேட்டருள, “ஈட்டில் அர்த்த ரஸம் தலை மண்டி யிட்டுச் செல்கிறது” என்று அருளிச் செய்து, அப்படியே நடக்கும் போது *மருளொழி நீ மட நெஞ்சே என்னும் தசையை ப்ராப்தராய் இங்ஙன் ஏகாதசி சென்று மற்ற நாள் திருத் த்வாதசியிலே உத்தம நம்பி தொடக்கமான அனைத்துப் பரிகரத்தையும் அழைப்பித்து ‘ஸர்வாபராதங்களையும் பொறுத்தருள வேணும்”’ என்று ஷாமணம் பண்ணிக் கொள்ள, அவர்களும் தேவரீருக்குமோரபசாரமுண்டோ?’? என்று அருளிச் செய்ய, மீளவும் அவர்களைக் குறித்து ‘பெரிய பெருமாளுடைய ஸ்ரீகார்யத்தைக் குறைவற நடத்திக் கொண்டும், ஸ்ரீவைஷ்ணவர்களை
வரவளைத்துக் கொண்டும் போருங்கோள்”” என்றருளிச் செய்துப் போக விட்டு, திருவாராதநம் [திருவாராதந எம்பெருமான் ஆசாரியர் திருமேனிகள்], ஸ்ரீகோசங்கள், மற்றுமுண்டான உபகரணங்கள், மடம் முதலான எல்லாவற்றையும் :யஸ்யை தே தஸ்ய தத் தநம்’‘என்னும்படி நம் பெருமாளுக்கு சேஷமாக்கி ஸமர்ப்பித்து, ஸ்ரீ வைஷ்ணவர்களை அமுது செய்வித்து அவர்கள் தீர்த்தமும் ஸ்வீகரித்து அபராத ஷாமணம் பண்ணிக் கொண்டு எழுந்தருளி யிருக்க, முதலிகளும் பலிதமான வ்ருக்ஷத்தை பக்ஷி ஜாதங்கள் காத்துக் கொண்டிருக்குமா போலே பரிந்து ஸேவித்துக் கொண்டு அஞ்ஜலி பத்மதங்களை யுடையராய் அநுபவித்துக் கொண்டிருக்க, ஆதித்ய அஸ்தமான வாறே தத் காலீந கர்மத்தையுஞ் செய்தருளி பிள்ளை திருவடிகளே சரணம்-வாழி உலகாசிரியன்” என்றநுஸந்தித்துப் பிள்ளையை த்யாநித்துக் கொண்டு அவசராக அணையிலே சாய்ந்தருள, ஸ்ரீபாதத்து முதலிகளெல்லாரும் கை கூப்பிக்கொண்டு ப்ரஹ்ம வம்லி ப்ருகு வல்லி, சூழ்விசும்பணிமுகில், அர்ச்சிராதி, நூற்றந்தாதி இவைகளை அநுஸந்திப்பாராய் பெரிய ஆரவாரத்துடளே செல்லுகிறவளவி3ல அங்கயல் பாய் வயல் தென்னரங்கன் [இரா. நற். 108] என்ற பாசுரத்தை ஸ்ரீவைஷ்ணவர்கள் அநுஸந்திக்கக் கேட்டு தாமும் க்ருதாஞ்ஜலிபுடராய் ”எம்பெருமானார் திருவடிகளே சரணம்”’ என்றநுஸந்தித்து தத் கத சித்தராய்த் திருக் கண்களைச் செம்பளித்துக் கொண்டிருக்க:
ஜீயர் திருநாட்டுக்கெழுந்தருளியது
*கநசகிரி மேலே கரிய முகல்போல விநதை சிறுவன் மேற் கொண்டு என்றும், எந்தை திருவரங்கரேரார் கருடன் மேல் வந்து முகங் காட்டி வழி நடத்த என்றும் இவர் அபேக்ஷித்தபடியே பெரிய
பெருமாளும் -செழும்பறவை தானேறித் திரிவாராய்த் தம் தாளிணையை இவர் திருமுடி மேலே வைத்து –மஞ்சுயர் பொன் மலை மேலெழுந்த மாமுகில் போன்ற தன் வடிவை ஸாக்ஷாத்கரிப்பித்து
அநுபவிப்பிக்க அநுபவித்து – உன் சரணந் தந்தென் சன்மங் களையாயே என்றும் ”ஸுகேநேமாம் ப்ரக்ருதிம் ஸ்தூல ஸூஷ்ம ரூபாம் விஸ்ருஜ்ய’ ‘ என்றும்,-நோய்களாலென்னை நலங்காமல் சதிராக
உன் திருத்தாள் தா என்றும் -நிரதிசய போக்யமான திருமேனியை விடுவித்து அங்கீ கரிக்கப்பெற்று, மாதவன் தன் துணையா நடந்தாள் என்றும் அரங்கத்துறையுமின் துணைவனொடும் போய் என்றுஞ் சொல்லுகிறபடியே ஸ்ரீயபதியான பெரிய பெருமாள் பெரிய திருவடி மேற்கொண்டு ஹார்த்தன் வழி நடத்த, ஸுஷும்நை யாகிற வாசலிலே புறப்பட்டு சிர:கபாலத்தை பேதித்து ப்ரஹ்மரந்த்ரத்தாலே ஜீயர் திருநாட்டுக் கெழுந்தருளினார்–
அநந்தரம் பெரிய பெருமாளும் ‘விஸ்ருஜ்ய லஷ்மணம் ராமோ துக்க ஸோக ஸமந்வித :- [இளையபெருமாளைப் பிரிந்த ராம பிரான் சோக துக்கங்களின் வசமானான்] என்கிறபடியே ‘ஸெளமித்ரிர்மே ஸகலு பகவாந் ஸெளம்ய ஜாமாத்ரு யோகீ – (ஸெளம்ய ஜாமாத்ரு யோகி-மணவளவாளமாமுனிகள் இளைய பெருமாளே] என்கிற இளைய பெருமாளவதாரமான ஜீயரையும் வழி விட்டு வந்து, இளைய பெருமாளைப் பிரிந்து ஒரு பசலாயிரமூழியாய் அமுது செய்யாதே முசித்துக் கொண்டு பெருமாளிருந்தாப்போலே இவரும் அமுது செய்யாதே முசித்து மூடிக்கிடந்தார். ஸ்ரீ பாதத்து முதலிகளெல்லாரும் –ஐயோ கண்ணபிரான்! அறையோ! முறையோ? அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வணணனே| என்று பெரு மிடறு செய்து கையெடுத்துக் கூப்பிட்டுக்கொண்டு துடிக்க,அருகிலிருந்த முதலிகள் தேற்றத் தேறி தின்று இப்படி யெழுந் தருளின அவருடைய அந்திம தசையை எல்லாருமறிந்து உஜ்ஜீவிக்கும்படி
கும்பம்பாஸ்வதி யாதி தத் ஸுததிநே பஷே வள க்ஷேதரே
தவாதஸ்யாம் ஸ்ரவணர் க்ஷ்பாஜி ருதிரோத் கார்யாக்ய ஸம்வத்ஸரே |
தீ பக்த்யாதி குணார்ணவோ யதி வராதீநாகிலாத்ம ஸ்த்திதி:
ஸ்ரீ வைகுண்டமகுண்ட வைபவமகாத் காந்தோ பயந்தா முநி : ॥
ஜ்ஞாந பக்தி வைராக்யம் முதலான குணங்களுக்கு மஹா ஸமுத்ரம் போன்றவரும், எம்பெருமானாருக்கு ஸ்வாதீநமான தமது ஸமஸ்தமான நிலைகளையு முடையவருமான மணவாளமாமுனிகள் ருதிரோத்காரி ஸம்வத்ஸரத்தில் சூரியன் கும்ப ராசியை யடைந்த அளவில் (மாசி மாதத்தில்) சனிக் கிழமையில் க்ருஷ்ண பக்ஷத்த்தில் திருவோண நக்ஷத்ரம் கூடிய த்வாதசி தினத்தன்று எல்லை யற்ற பெருமை யுள்ள ஸ்ரீவைகுண்டத்தை அடைந்தருளினார்-
என்று அங்குத்தைக்கு அந்தரங்கர்கள் அருளிச் செய்தார்கள்-
அவ்வளவு மன்றிக்கே,
ஆசிலாத மணவாள மா முனி யண்ணல் பூமியுறுவைப் பசியிற் றிருமூலம்
தேச நாளது வந்தருள் செய்த நந் திருவாய் மொழிப்பிள்ளை தா
ளீசனாகி யெழுபத்து மூவாண் டெவ் வுமிர்களையு முய்வித்து வாழ்ந்தனன்
மாசி மால் பக்கத் துவாதசி மா மணிமண்டபத் தெய்தினன் வாழியே
என்று இப்படி அவர் தோன்றியது முதலாகத் தன்னுலகம் புக்கதீறாகப் பேசித் தலைக் கட்டினார்களிறே-
ஜீயருக்கு சரம கைங்கர்யங்கள்
அநந்தரம் ஜீயருக்கு சரம கைங்கர்யங்களைச் செய்வதாக முதலிகளெல்லாரையுங் கூட்டிக்கொண்டு ஜீயர் நாயனார் திருக் காவேரிக் கெழுந்தருளி நீராடி அலங்காரத் திருமஞ்சனங் கொண்டு வந்தருளி
ஜீயரைத் திருமஞ்சநம் கொண்டருளப் பண்ணுவதாக ஒரு திருமஞ்சந வேதிகையிலே விமல சரம விக்ரஹத்தை யேறி யருளப் பண்ணி புருஷ ஸுக்தா நுஸத்தத்தாலும் த்வயாநுஸந்தாத்தாலும் மற்று முண்டான அநு ஸந்தாநத்தாலும் திருமஞ்சநங் கொண்டருளப் பண்ணி திருவொற்று வாடை சாத்தி, திருப் பரியட்டஞ் சாத்தி அலங்கரித்து, ‘விஸ்தீர்ண பால தல விஸ்புர தூர்த்வ புண்ட்ரம்”[விசாலமான திரு நெற்றியில் மிக விளங்கும் திருமண் காப்புடையவர் ] என்றபடி த்வாதசோர்ந்த்வபுண்ட்ரங்களையும் தரிப்பித்து தச் சேஷிமான திருமண் ஸ்ரீசூர்ணங்களை யெல்லாம் தங்களுக்கு ஆபத் தநமாகச் சேர்த்து வைத்துக் கொண்டு, ஜீயரை திவ்ய ஸிம்ஹாஸநத்திலே ஏறி யருளப் பண்ணி அவர் திருவடிகளைக் கண்ணிலும் நெஞ்சிலும் ஒற்றிக் கொண்டு ஸ்வ சிரோ பூஷணமாக தரித்துக் கொண்டு, அத்தன் மணவாளயோகி அடியிணையைச் சித்தப்
பெருங்கோயில் கொண்டருளி என்று ஸூபாஸ்ரயமான திவ்ய மங்கள விக்ரஹத்தைத் தம் தாம் திருவுள்ளங்களில தேக்கிக் கொண்டு வைத்த கண் வாங்காதே விமல சரம விக்ரஹாநுபவம் பண்ணிக்
கொண்டிருக்க :
அவ்வளவிலே-௮ரங்கத் தம்மானரைச் சிவந்த வாடையையும்,-அவன் மார்வணிந்த வன மாலையையும் பொற்றட்டிலே வைத்துக் கொண்டு ஸகல வாத்ய கோஷங்களுடனே உத்தம நம்பி ஸிரஸா வஹித்துக் கொண்டு அனைத்துக் கொத்துப் பரிகரத்துடனே மடத்து வாசலிலே செல்ல, முதலிகளும் அவற்றை எதிர் கொண்டு தண்டன் ஸமர்ப்பித்து அங்கீரித்து, உடுத்துக் களைந்த பீதக
வாடை யுடுத்துக் கலத்ததுண்டு தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடுமித் தொண்டரான ஜீயருக்கு அவற்றைச் சூட்டி அலங்கரித்து, கோயில் அனைத்துப் பரிகரம், ஆசார்ய புருஷர்கள் ஜீயர்கள், ஏகாங்கிகள், ஸ்ரீவைஷ்ணவர்கள், சாத்தாத முதலிகள் மற்று முண்டானவர்க ளெல்லாருங் கூடி ஜீயரை ஸேவித்து, -செய்ய தாமரைத் தாளிணை வாழியே என்று தொடங்கி அநுஸந்தித்து மங்களா சாஸநம் பண்ணி ”எம்பெருமானாரை ஸேவியாத இழவெல்லாம் தீர்ந்தோம் இவரை ஸேவித்து; இப்போது இவ் வவதாரமும் தீர்த்தம் ப்ரஸாதித்துப் போவதே! என்று மிகவும் துக்காபிதப்தராய் (சோகித்து, பின்பு அங்கிருந்த முதலிகள் தேற்றத் தேறி நின்று ஸந்நிதியில் முதலிகளெல்லாரையுங் கூட்டிக்
கொண்டு யதா க்ரமத்திலே ஸ்ரீசூர்ண பரிபாலநத்தையும் நடத்தி தச் சேஷமான ஸ்ரீசூர்ண ப்ரஸாதங்களைத் தாங்களும் தரித்துக் கொண்டு, பின்பு எண்ணெய் சுண்ணங் கொண்டாடி திவ்யா
லங்க்ருதமான புஷ்பக விமாநத்திலே ஜீயரை ஏறி யருளப் பண்ணி வைத்து எல்லோரும் ஸ்ரீபாதந் தாங்கிக் கொண்டு சத்ர சாமர தால வ்ருத்தாதகள் பணிமாற, மஹாஸம்ப்ரமத்துடனே மத்தளங்கள் சங்க காஹள பேரிகள் தொடக்கமான ஸகல வாத்யங்கள் கடல் போலே முழங்க,
பதாகாத் விஜிநீம் ரம்யாம் தூர்யோ த்ருஷ்ட நிகாதநீம் |
ஸிக்தராஜ பதாம் ராம்யாம் க்ருத்ஸ்நம் ப்ரகீர்ணகுஸு மோத்கராம் ॥
[நகரத்தையும் மார்க்கத்தையும் அலங்கரித்தக் க்ரமம்-அங்கங்கே நாட்டிய கொடிகளால் அழகியதாய், ஸகல வாத்ய கோஷங்களால் சப்த மயமானதாய், நீர் தெளித்து அலங்கரிக்கப் பட்டதாய், புஷ்பங்களை ராஜ மார்க்க மெங்கும் தெளித்து வைத்ததாய் ஆக்கினார்கள்] என்கிறபடியே காவொத்த கமுகு, பல, கதாலிச் சோலைகளாய் அரங்கன் திருவீதி யெட்டிலும் நாட்டி -மகர தோரணம் மேற்கொடிகளாட -என்று சொல்லுகிறபடியே ஸர்வாலங்கார ஸம்ப்ருதையான எட்டுத் திரு வீதிகளிலும் கரும்பேந்தி நூற்றந்தாதி முதலாக அநுஸந்திக்க, திரு நீர் பரிமாற பொரியும் புஷ்பமும் சிதற “தர்சநத்திலே மணவாளமாமுனிகள் திருநாட்டுக் கெழுந்தருளினார்’-என்று ஒற்றைத் திருச்சின்னம் பணிமாற ஸூமங்கலிகள் தீப மெடுக்க, திருவீதிகளிலே அங்குண்டானவர்களெல்லாம் ஸேவிக்க எழுந்தருளப் பண்ணு வைத்துக் கொண்டு போய்;
திருப் பள்ளிப் படுத்தல்
மகிழாதி கேசவன் தன்னடிக்கீழாக”? என்கிறபடியே ஆதிகேசவப் பெருமாள் திருவடிக்கீழாக ௮வர் திருவடி பிரியா வண்ணம் தவராசன் படுகையிலே பொன்னித் தென் பாலிலே (இங்கு சொல்லப்படும் ஆதி கேசவப் மெருமாள் ஸந்நிதியையும் மணவாளமாமுனிகள் திருவரசையும் தென் திருக் காவேரிப்
படுகையில் இன்றும் ஸேவிக்கலாம்; )எழுந்தருளப் பண்ண ஒருப்பட அவ் வளவிலே பூதேவி யானவள் முன்பு ஜனக ராஜன் திரு மகளை மடியில வைத்து அணைத்துக் கொண்டு ஆதரித்தாற் போலே அந்த மண்மகளான பிராட்டியும் மணவாளமாமுனியான இவரையும் மடியிலே எழுந்தருளப் பண்ணி வைத்துக் கொண்டு மகிழ, ஆளவந்தார் எம்பெருமானாரைப்போலே யதி ஸம்ஸ்கார விதி யடங்கச் செய்து கனித்து வாழும்படி திருப் பள்ளிப் படுத்தினார்கள்.
முதலிகள் ஜீயர் பிரிவாற்றாமல் சோகித்தல்
அநந்தரம் ”கதிரவன் போய் குணபால் சேர்ந்த மகிமை போல்”-என்கிறபடியே கீழ்திக்கில் ஒரூ ஆதித்யன் அஸ்தமித்தாற் போல இருக்கையாய் தத் ப்ரபாவஜ்ஞரான ஜீயர் நாயனார் கந்தாடை யண்ணனுள்ளிட்ட முதலிகளெல்லாரும்
ஜீயரெழுந்தருளி விட்டார் செக ழுழுதும்
போயிருள் மீளப் புகுந்ததே தீய
வினை நைய வெம் புலனா லீடழிந்து மாய்வோ
ரனை வார்க்குமேதோ வரண்?
என்று மிகவும் சிந்தாக்ராந்தராய் துக்கித்து பின்பு சிஷ்யர்களான தாங்கள் தங்களுடைய சேஷத்வாநுகுணமாக திருமுடி விளக்குவித்துக் கொண்டு பெருமாள் அவப்ருதம் கொண்டாடுமா போலே அவப்ருதம் கொண்டாடி மீண்டும் மடத்திலே எழுந்தருளி வெறித்தான மடத்தைக் கண்டு –இல்லம் வெறி யோடிற்றாலோ என்று ஆசார்ய விஸ்லேஷாஸஹிஷ்ணுக்களாய் மிகவும்
க்லேசித்து தங்களிலே தேறி நின்று
சீயர் திருத்தம பிரானாரே தென்னரங்க
மேய பெருமானே விண்ணப்பம்-காய விலங்
கெந்நாள் விடுவீரெடுத்த பணி யுமக்குப்.
பன்னாளும் செய்யும்படி –-என்றும்
சீயரபிமானமே தேர்ந்தருளித் தீ வினையோம்
காய விலங்கைக் கழித்தருளீர்–தூய புகழ்
நம்பெருமாளே! இமையோர் நாயகரே!- நான்மறை தேர்
எம்பெருமானார் பெருமாளே!–என்றும்
தாயகலக் கண்டு சிலுகிட்டடியேனை
மாயையிலே மூட்டி மருட்டாதே-சீயரே
காய விலங்கைக் கடுகெனவே தீர்த்தருளீர்
தூய திருத் தாளே தொழ--என்றும்
எழும் பாவி யைம் புலன்கள் சொன்ன வண்ணம் செய்து
தழும்பேறி வாழுந் தமியேன்-செழும் பொன்
மணவாளமாமுனியே மா சுடலைத் தீர்க்குமின
முணவாக வாழ்ந்திடுகையோர் –என்றும்
நானெனதென்னும் நரகத்திடை யழுந்திப்
போன விந்தக் காலமெல்லாம் போதாதோ?-கான மலர்
மாலை யணி திண்டோண் மணவாள மாமுனியே
சால நைந்தேனுன் பாதம் தா--என்றும்
புண்ணாராக்கை தன்னுள் புக்குழலும் தீ வினையேன்
தண்ணாருமென் கமலத் தாளணைவ தென்று கொலோ
பண்ணாரு நால் வேதம் பயின்றுய்யும் பண்டிதனே
மண்ணாள வந்த மணவாளமாமுனியே
என்று இத்யாதியான ஆர்த்தியை அவர் விஷயத்தில் விண்ணப்பஞ்செய்து திருமிடறு தழுதழுப்பத் திரு முத்துதிர்த்துத் தங்களிலே தேறி நின்று வித்த்யுக்த ப்ரகாரேண செய்ய வேண்டுங் க்ருத்யங்களை யெல்லாஞ் செய்து ஜீயர் வைபவத்திற்கு அநுகுணமாகப் பெருக்கத் திருவத்யயநம் நடத்தி யருளி தீர்த்த ப்ரஸாதங்களும் ஸ்வீகரித்து, பின்பு தந்தாமுக்கு நியமித் தருளின கைங்சர்யங்களைச் செய்து கொண்டு போந்தார்கள்–
அநந்தரம் –இஷ்வாஹூணாம் குலதநம்’”’ என்னும்படியான-பெரிய பெருமாளும் ஜீயர் நாயனாருக்குக் குலதநமான ஸ்ரீரங்கராஜரையும் மடத்தையும் நேக்கிக் கொண்டு போருமென்று திரு வுள்ளமாய், தீர்த்தம், திருமாலை, திருப்பரியட்டம், ஸ்ரீசடகோபன் எல்லாம் ஸாதித்து வாழ்வித்தருளினார். இத்தைக் கண்டு ஜீயருடைய அபிமாநாந்தர்ப் பூதரெல்லாரும் ஹர்ஷ ப்ரகர்ஷ யுக்தராய் ஜீயர் நாயனாரை பெரிய ஜீயரைக் கண்டாப் போலே கண்டு அநுவர்த்தித்து ஸேவித்துக் கொண்டிருந்தார்கள்.
ஜீயர் நாயனார் ஸ்ரீபாஷ்யம்,திருவாய்மொழி ஈடு பெறுதல்.
கந்தாடை யண்ணனும் ஆசார்ய நியமனத்தின் படியே ஆசார்ய பெளந்ரரான ஜீயர் நாயனாருக்குத் திருவாய் மொழியினீட்டை ப்ரஸாதித்தருளினார். அநந்தரம் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணாவும் ஸ்வாசார்ய நியமனததின் படியே நாயனாருக்கும் கத்தாடை நாயனுக்கும் ஸ்ரீபாஷ்யம் ஸாதித்தருளி,
ஸ்ரீமாந் ஸுந்தர ஜாமாத்ரு முநி: பர்யாய பாஷ்ய க்ருத் |
பாஷ்யம் வ்யாகுருதே தஸ்ய ஸ்ரோத்ரு கோடெள மமாந்வய; ॥
[பாஷ்யகாரருடைய புநவரவதாரமான, கைங்கர்ய ஸ்ரீமானான மணவாள மாமுனிகளே ஸ்ரீபாஷ்யத்தை விளக்கிக் கொண்டிருக்கிறார். அந்த ஸ்ரீபாஷ்யத்தை அதிகரிப்பாருடைய கோஷ்டியிலே அடியேனுக்கு ஸம்பந்தமுள்ளது] என்று அதில் தமக்குண்டான கர்த்ருத்வத்தையும் கழித்துக் கொண்டருளினார்,-பின்பு திருப்பதியே யிருப்பாக எழுந்தருளியிருந்த போளிப்பாக்கம் போரேற்று நாயனார் தொடக்கமானவர்களுக்கும் ஸ்ரீபாஷ்யத்தை ப்ரஸாதித்தருளியும், பட்டர் பிரான் முனி பாதசேகரஈய் தத் வம்ஸ்யரான பர வஸ்து ஸ்ரீநிவாஸாசாரியருக்கும் அவருக்கு ஸ ப்ரஹ்மசாரிகளான பரவஸ்து அழகிய மணவாள ஜீயருக்கும், திருவாய்மொழி நாயனார் என்று நிரூபகமாம்படி திருவாய் மொழியினீட்டை ப்ரஸாதித்தருளியும் , ப்ரதிவாதி பயங் கர ரென்னும் ப்ரஸித்தி தோற்ற ஸ்ரீராமாநுஜ ஸித்தாந்தத்தை
ரக்ஷித்துப் போந்தார்,
வானமாமலை ஜீயர் எழுந்தருளல்
அநந்தரம் அழகிய வரதரான வானமாமலை ஜீயர் வடதேசத்தினின்றும் எழுந்தருளி ஜீயர் திருநாட்டுக் கெழுந்தருளின வருத்தாந்தத்தை பெரிய திருமலை யருகே கேட்டு மிகவும் ப்ரலாபித்தருளி
திருமலை யேற வெழுந்தருளி அங்கே சிறிது காலம் பாடாற்றிக் கொண்டு எழுந்தருளி யிருந்து கைங்கர்யார்த்தமாகக் கூட்டின த்ரவ்யங்களை யெல்லாம் கொண்டு கோயிலேற வெழுந்தருளி மடத்திலே சென்று போர க்லேசித்து ஜீயர் நாயனாரையும் ஸேவித்து-உடனே வானமாமலை யேற வெழுந்தருளி, கைங்கர்யங்களை எல்லாம் தலைக்கட்டி யருளி மீண்டு திருமலை யேற வெழுந்தருளி நடுவே எறும்பியிலே சிலநாளெழுந்தருளி யிருந்து சுத்த ஸத்வ மணணாவுக்கும் போளிப்பாக்கம் நாயனாருக்கும் திருவாய்மொழயின் ஈடு முதலாக பகவத் விஷயத்தை ப்ரஸாதிந்தருளி மீண்டு வான
மாமலை யேற வெழுந்தருளி தெய்வ நாயகன் கைங்கர்ய ஸாம்ராஜ்யத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தார்.
பட்டர்பிரான் ஜீயர் அந்திமோபாய நிஷ்டை அருளியது
பட்டர்பிரான் ஜீயரும் ‘வடமாமலைக்கதிபர் பட்ட நாதமுனி’ என்கிறபடியே திருமலையிலே எழுந்தருளி யிருந்து அண்ணராய சக்ரவர்த்தி, நாயனார், தோழப்பர் தொடக்கமான அனேகாத் மாக்களைத் திருத்தி இந்தத் தரிசன ப்ரவர்த்கர்களாக்கி யருளி பர வஸ்து அண்ணரையும, பரவஸ்து அழகிய மணவாள ஜீயரையும் ஸத் புத்ர ஸச் சிஷ்யர்களாச அபிமானித்து ஸத் ஸம்ப்ரதாய ப்ரவர்த்தகராம்படி திருத்தி யருளி அகிலாத்மாக்களும் உஜ்ஜீவிக்கும்படி அந்திமோபாய நிஷ்டா க்ரேஸரர் என்னுமது தோற்ற “அந்தி மோபாய நிஷ்டை” என்கிற சரம ரஹஸ்ப ப்ரபந்தத்தை யருளிச் செய்து வாழ்வித்தருளியும்.
அந்திமோபாயநிஷ்டாயா வக்தா ஸெளம்ய வரோமுநி; ॥
லேககஸ்யாந்வயோ மேஅத்ர லேகநீ தாள பத்ரவத் ॥
[அந்திமோபாய நிஷ்டா எனுமிந்த க்ரந்தத்தை அருளிச் செய்தவர் மணவாளமாமுனிகள் ஒலை போலவும் எழுத்தாணி போலவும் பட்டோலையில் இதை எழுதுப் தொடர்பே அடியேனுக் குள்ளது] என்றும்
எந்தை மணவாள யோகி யெனக்களித்த
அந்திமோபாய நிட்டையாமிதனைச்-சிந்தை செய்திங்
கெல்லாரும் வாழ வெழுதி வைத்தேனிப் புவியில்
நல்லறி வொன் றில்லாத நான்
என்று அதில் தமக்கு கர்த்ருத்வ ராஹித்யத்தையும் அருளிச் செய்து உபகரித் தருளினார்.
திருநாராயண புரத்தில் திரு நந்தவன கைங்கர்யம்
ஆசார்ய பரதந்த்ரரான பட்டர் பிரான் ஜீயர் திருவடிகளிலே ஆச்ரயித்த தோழப்பரும் அவர் திருத் தமையனாரான அழகிய மணவாள தாஸ நானாரும் ஜீயர் நியமனத்தின் படியே அரங்கத்துறைவா ரநுமதியடனே திரு நாராயண புரத்திலெழுந்தருளி, எம்பெருமானாருக்கும் செல்வப் பின்ளைக்கும் திரு நாராயணப் பெருமாளுக்கும் திரு நந்தவனம் தொடக்கமான எல்லா வடிமைகளும் செய்து கொண்டு அங்கே அனேகரையும் ஜீயரபிமானாந்தர் பூதராம்படி திருத்தி ஸ்ரீசைலத்துற்கு மேற்கும் ஸ்ரீசைலே தயா பாத்ரரின் வைபவத்தை வர்த்திப்பித்துக் கொண்டு எதிராஜர் மடத்துக்குப் பின்னடியிலே வாழ்ந்து கொண்டிருந்தார். பின்பு அவர்கள் ஸந்தான பரம்பரையிலுணடான ஐயன் முதலானாரும் அந்தக் கைங்கர்யங்களை அபிவ்ர்த்தமாக நடத்திக் கொண்டு போந்தார்களிறே.
எறும்பி யப்பாவின் ஆர்த்தி
பின்பு அழகிய மணவாள தாஸரான எறும்பி யப்பாவும் ஜீயர் திருநாட்டுக்கெழுந்தருளிள செய்தியைக் கேட்டு
வரவர முநி பதிர் மே தத் பதயுகமேவ ஸரண மநுரூபம் |
தஸ்யைவ சரண யுகளே பரி சரணம் ப்ராப்யமிதி நநு ப்ராப்தம் |
[மணவாளமாமுனிகளே அடியேனுக்கு ஸ்வாமி; அவருடைய திருவடித் தாமரைகளே பேற்றுக் கநுரூபாமன உபாயம்; அவருடைய திருவடித் தாமரைகளில் கைங்கர்யமே உபேயம் என்றே அடியேனால் அடையப்பட்டது; இதுவே எனது அத்யவஸாயம் என்கிற நிஷ்டை யுடையவராகையாலே ஆசார்ய விச்லேஷாஹிஷ்ணுவாய் அவர் விஷயத்திலே ஆர்த்தி மிகுந்து
வபுரபி, ஸபதிமதீயம் வரவர முநிவர்ய; மோசநீயமிதம் |
பரிசரதி நஹி பவந்தம் பகவநிநஹி பகவதபிமதா நபிவா ॥–கல்யாண குண பூர்ணரான மணவாள மாமுநிவரே’ அடியேனுடைய இவ்வுடலும தேவரீரால் இப்போதே விடுவிக்கத் தக்கது -இதனால் தேவரீருககு கைங்கர்யம் செய்யப் பெற்றதில்லை-எம் பெருமானடியார்களான பாகவதர்கள் விஷயததிலுமில்லை. –என்றும்
இதி புநரேஷு விதந்ந பிதுரி தரதிர்தூர நிம்ந பதரூட: |
வரவர முநி வர கருணாம் நிக்நந் பதந்ரு பசுரஸ்நுதே நியமாந் ॥-இவன் மனிதவுடல் படைத்த விலங்கினம்!” என்னுமபடி, அறிவிருந்தும் பாப கார்யங்களில் ஆசை யுடையவனாய் மிகத் தாழ்ந்ததான நிலையிலிழிந்து மணவாளமாமுனிகளுடைய க்ருபையை யழித்துக் கெண்டு கர்ம பலன்களை அநுபவிக்கிறான்–என்றும்
ஆயுரபஹரதி ஜகதாமய முதயம் விலயமபி பஜந் பாநு. |
மயி புநரி தம ந்ரு ஸம்ஸோ வரவர முநிவர்ய வர்த்தயத்யேவ ॥-மணவாள மாமுனிகளே! இந்த ஸூரியன் உதயத்தையும் அஸ்தமனத்தையும் செய்து உலகங்களின் ஆயுளை அபகரிக்கிறான்.-அடியேன் விஷயததில் மட்டும் கொடியவனாய் இந்த ஆயுளை வளரச் செய்கிறான்–என்றும்
ததித பரமநுரூபம் ந விளம்பிதுமிதி சிந்தயந்தயயா |
மலபாஜநாதி தோமாம் வரவரமுநி வர்ய மோசயத்வரிதம் –ஆதலால், மணவாள மாமுனிவரே-அடியேன் விஷயத்தில் இனி கால விளம்பம் செய்யத் தக்கதன்று.-தயை யுடைய மனத்தினராய் இவ்வழுக்குட ம்பினின்றும் அடியேனை விடுவித் தருள வேணும்- என்கிறபடியே தம்முடைய ஆர்த்தியை ஆவிஷ்கரித்து குணாநுபவைக தத் பரராய் தத் ஸேவாபிநிவே சத்தை யுடையராய் ஜீயரைப் பிரிந்து ஸம்ஸாரத்திலிருக்கு மிருப்பு பிராட்டி பெருமாளைப் பிரிந்து ராவண பவநத்திலே தனிச் சிறை யிருந்தாப் போலே அதிதுஸ்ஸஹமாய் பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா வொழுக்கு மழுக்குடம்பும் இந் நின்ற நீர்மை யினியா முறாமை என்றும், கூவிக் கொள்ளுங்கால மின்னங் குறுகாதோ?-என்றும், ஆவிக்கோர் பற்றுக் கொம்பு நின்னலா லறிகின்றிலேன் யான் என்றுஞ் சொல்லுகிறபடியே பெற்றல்லது தரிக்க கில்லாத பேரார்த்தியை யுடையராய் ஒருபகலாயிர மூழியாய் அவர் திரு
நாமந் தன்னையே பலகாலும் வாய் வெருவிக் கொண்டு முன்னடி தோற்றாதே திகைத்து மதி மயங்கி உன்மத்தர் போல் பித்தேறி என்னும்படி எழுந்தருளி யிருந்தார்,
ஸ்ரீ பாதத்து முதலிகள் தந் நிஷ்டராய் வாழ்ந்தது
இப்படி ஜீயர் திருவடிகளிலாஸ்ரயித்த முதலிகளெல்லாரும்ஆசார்யாபிமான நிஷ்டராய் -யதீந்த்ர ப்ரவணரான ஜீயர் திருவடிகளே தஞ்சமென்றிருங்கோள்”’ என்று தந் தாம் சிஷ்யர்களுக்கு
அருளிச் செய்து எல்லாரையும் வரவரமுநி ப்ருத்யராக்க அவர்களும்
அபகதமத மாநை: அந்திமோபாயநிஷ்டைஃ
அதிகத பரமார்த்தை ரர்த்த காமாநபேக்ஷை: |
நிகில ஜுஸுஹ்ருத்பிர் நிர் ஜிதக்ரோத லோபை :
வர வர முநி ப்ருத்யைரஸ்துமே நித்ய யோக: ॥
[செருக்கும் நான் சுதந்திரனென்னும் அபிமான முமில்லாதவர்களும், கருமம் ஞானம் பக்தி ப்ரபத்தி ஆசார்யாபிமானம் என்பவற்றில் ஐந்தாமுபாயமான ஆசார்யாபிமானத்தில் ஊன்றியவர்களும், புருஷார்த்தத்தின் எல்லையான ஆசார்ய கைங்கர்யத்தை யடைந்தவர்களும், செல்வத்திலும் அதைக் கொண்டு அனுபவிக்கும் சிற்றின்பத்திலும் ஆசை யற்றவர்களும் பகைவரிடமும் நல்ல மனமுடையவர்களும் கோபத்தையும் உலோபித் தனத்தையும் வென்றவர்களுமாகிய மணவாளமா முனி சிஷ்யர்களுடன் சேர்க்கை அடியேனுக்கு உண்டாக வேணும்] என்கிற படியே ஜீதாரிஷட் வர்க்கமாய் த்ரணீ க்ருத விரிஞ்சாதி நிரங்குச விபூதிகளை யடையராய் அதிகத பரமார்த்தராய் அந்திமோபாய நிஷ்டராய் ஆஸ்திகாக்ரேஸரராய், இடைச் சுவர் தள்ளி இரண்டு விபூதியையு மொன்றாக்கிக் கொண்டு எல்லாரும் தத் நிஷஷ்டராய் தத் ஸேவோத் ஸுகராய் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
ஸ்ரீ ஸடாரி குரோர் திவ்ய ஸ்ரீபாதாப்ஜ மதுவ்ரதம் |
ஸ்ரீமத் யதீந்த்ர ப்ரவணம் ஸ்ரீலோகார்ய முநிம் பஜே ॥
இப்புவியில ரங்கேசர்க் கீடளித்தான் வாழியே
எழில் திருவாய்மொழிப் பிள்ளை இணை யடியோன் வாழியே
ஐப்பசியில் திருமூலத் தவதரித்தான் வாழியே
அரவரசப் பெருஞ்சோதி அநந்தனென்றும் வாழியே
எப்புவியும் ஸ்ரீ சைலமேத்த வந்தோன் வாழியே
ஏராருமெதிராசரென வுதித்தான் வாழியே
முப்புரிநூல் மணி வடமும் முக்கோல் தரித்தான் வாழியே
மூதரிய மணவாளமாமுனிவன் வாழியே
செந்தமிழ் வேதியர் சிந்தை தெளிந்து சிறந்து மகிழ்ந்திடு நாள்
சீருலகாரியர் செய்தருள் நற்கலை தேசு பொலிந்திடுகாள்
மந்த மதிப்புவி மானிடர் தங்களை வானிலுயர்த்திடு நாள்
மாசறு ஞானியர்சேரெதிராசர் தம் வாழ்வு முளைத்திடு நாள்
கந்தமலர் பொழில் சூழ் குருகாதிபன் கலைகள் விஎங்கிடு நாள்
காரமர் மேனி அரங்க நகர்க்கிறை கண்கள் களித்திடு நாள்
அந்தமில் சீர் மணவாளமுனிப் பரன் அவதாரம் செய்திடு நாள்
அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திரு மூலமதெனும் நாளே.
ஸ்ரீமதே ரம்ய ஜாமாத்ரு முநீந்த்ராய மஹாத்மநே |
ஸ்ரீரங்க வாஸிநே பூயாத் நித்யஸ்ரீர் நித்ய மங்களம் ॥
—
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-