ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌ – 5 –ஸூரி வைபவ பாதம்-5– க்‌ரந்த,-தத் கர்த்ரு வைப, வாதி, கரணம்‌ -முதல் பகுதி -ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

July 2, 2026

5 –ஸூரி வைபவ பாத, – 3 அதிகரணங்கள் இதில்-
5– க்‌ரந்த,-தத் கர்த்ரு வைப, வாதி, கரணம்‌ —39 – 74 –மொத்தம் 36 ஸூரணைகள்
6—ஸூரி ப்ராமாண்ய விஸேஷாதி கரணம்‌(ப்ரமாத்ரு வைபவம் ) 75 – 93 –மொத்தம் 19-ஸூரணைகள்
7-ப,க,வத் கடாக்ஷ விஸேஷாதி கரணம்‌ 94–96—மொத்தம் -3- ஸூரணைகள்

5– க்‌ரந்த,-தத் கர்த்ரு வைப, வாதி, கரணம்‌ —39 – 74 –மொத்தம் 36 ஸூரணைகள்–முதல் பகுதி-39 – 49–மொத்தம் 11-ஸூரணைகள்

இனிமேல் –சந்தங்கள் ஆயிரம்-திருவாய்-10-9-11- –என்று திருவாய் மொழிக்கு சொன்ன வேதத்வத்தை சாதிக்கக் கோலி பிரதமம் ஏவம் விதமாய் இருப்பதொரு வேதம் உண்டோ என்கிற சங்கைக்கு பரிஹாரம் பண்ணுகிறார் மேல்-வேத அத்‌,யயந விதி, போலே இப் ப்ரப,ந்த,அத்‌,யயநமும்‌ விதி, என்பது, இதினுடைய அர்த்த, பரிஜ்ஞாநா பாவத்தில்‌ உத்பத்தி நிரூபிக்க வேணு மென்பதாய்க் கொண்டு வேதத்தோ டொக்கச்‌ சொல்லா நின்றீர்‌. இதுவும்‌ பிற்றை வேதமோ என்னில்‌ ; இதுவும் வேதம்‌; இது என்ன வேதம்‌ என்ன

எவ்வுலகத்து எவ்வெவையும் என்கையாலே வேதம் பஹு விதம்–சூரணை-39-

அதாவது
ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வவையும் -திருவாய்-3-1-6–என்கையாலே வேதம் ஆனது
அத்யேதாக்கள் உடைய பேதத்தாலும் ,லோக பேதத்தாலும் பஹுவிதமாய் இருக்கும்
என்கை .. ஆகையால் அதிலே இதுவும் ஒரு விதம் என்ற கருத்து-

‘வேதா வா ஏதே । அநந்தா வை வேதா ச’” (யஜு. கா.) என்றும்‌, ‘“ஓதுவாரோத்தெல்லாம்‌ எவ்வுலகத் தெவ்வெவையும்‌”* (திருவா. 3 – 1- 6) என்றும்‌ சொல்லுகிறபடியே அத்‌யேதாக்களுடைய பேதத்தாலும்‌, லோக பேதத்‌தாலும்‌ வேதம்‌ ப,ஹு வித,ம்‌ என்கிறார் –

ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும்
சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிறிதில்லை
போது வாழ் புனந்துழாய் முடியினாய் பூவின் மேல்
மாது வாழ் மார்பினாய் என் சொல்லி நான் வாழ்த்துவனே -3-1-6–ஓதுவார் என்கையாலே -அதிகாரி வைவித்யத்தைச் சொல்லுகிறது –-ருகாதி சதுர் வேதங்களும் அத்யேத்ரு பேதத்தாலே பிறந்த சாகா பேதங்களும் –ஊர்த்த லோகங்களில் உள்ளார் ஞானாதிகருமாய் -ஆயுஸ் சாலே அதிகருமாய் இருக்கையாலே அவர்களுக்கு அனுரூபமாக அவ்வோ லோகங்களிலும் இந்த பேதங்களும் உண்டு

ஆனால் ஏக பாஷையாய் இருக்க வேண்டாவோ ? சம்ஸ்க்ருதமும் த்ராவிடமுமாய் அன்யோன்யம் பேதித்து இரா நின்றதீ என்ன சொல்லுகிறது மேல்-ஆனால்‌ அது ஸம்ஸ்க்ருதமாய்‌, இது த்‌ராவிடமாய்ப்‌ பிரிந்திராறின்றதீ என்ன, சொல்லுகிறது மேல்‌.

இதில் சமஸ்க்ருதம் திராவிடம் என்கிற பிரிவு ருகாதி பேதம் போலே-சூரணை -40-

அதாவது
இப்படி பஹு விதமான இவ் வேதத்திலே சமஸ்க்ருத வேதம் திராவிட வேதம் என்கிற பிரிவு-சமஸ்க்ருதாம் சந்தன்னில் ருக் வேதம் ,யஜுர் வேதம் சாம வேதம், அதர்வண வேதம் ,என்கிற பிரிவு போலே என்கை ….-இத்தால் வேத ராசி ஒன்றாய் இருக்க செய்தே ,சமஸ்க்ருத பாஷா ரூபம் ஆனவது தன்னிலே ருகாதி ரூபேண பல படியாய் பிரிந்தால் போலே பாஷா பேதேநவும் இப்படி பிரிந்து இருக்கும் என்ற படி-(ஆதித்யருக்குள் அஹம் விஷ்ணு -ஏகாதச ருத்ரனுக்குள் சங்கரன் -அந்த கோஷ்ட்டிக்குள் –
நக்ஷத்திரங்களில் அஹம் – சந்திரன் -இல்லாத போதும் என்பதுக்கு த்ருஷ்டாந்தம் )

(இதில்‌) இந்த வேதத்தில்‌. (ஸம்ஸ்க்ருதம்‌ த்‌ராவிட,ம்‌ என்கிற பிரிவு ருகாதி பேதம் போலே என்று) வேதங்கள் தான்‌ ஒன்று போலேயோ மற்றது? ஸம்ஸ்க்ருத வேதந்தான்‌ ரூக்‌,யஜுஸ் ஸாம அத,ர்வணங்களாய்ப்‌ பிரிந்தாப் போலே வேதந்தான்‌ ஸம்ஸ்க்ருத ரூபமாயும்‌, த்‌ராவிட ரூபமாயும்‌ பிரிந்ததென்கிறார் –

அப்படி சொல்லலாமோ ? சமஸ்க்ருத பாஷை போலே திராவிட பாஷை அநாதி அன்றே –ஆகஸ்த்யம் அன்றோ இது ?என்ன சொல்லுகிறது மேல்-ஆனாலும்‌ அந்த ஸம்ஸ்க்ருத பாஷைதான்‌ அநாதியாயிரா நின்றதே என்ன-

செந்திறத்த தமிழ் என்கையாலே ஆகஸ்யமும் அநாதி-சூரணை -41-

அதாவது
செம் திறத்த தமிழ் ஓசை வட சொல் ஆகி-திரு நெடும் தாண்டகம் -4- – -என்று (ஓசை -சொல் என்ற அர்த்தத்தில் இங்கு -ஸ்தான பிரமாணத்தாலே) சமஸ்க்ருததோடே சஹபடிதமும் , ப்ரதமோக்தமும் ஆகையாலே அகஸ்த்ய பிரகாசிதமான மாத்ரம் கொண்டு ஆகஸ்த்யம் என்று சொல்லப் படுகிற
திராவிடமும் அநாதியாய் உள்ளது என்கை .-இத்தால் அநாதித்வம் சமஸ்க்ருத திராவிட சாதாரணம் என்றது ஆய்த்து-

செந்திறத்த தமிழோசை வடசொல்லாகி’ (திருநெடு. 4) என்று ஸம்ஸ்க்ருதத்தோடே ஸஹபடிக்குமிடத்தில்‌ ‘“செந்திறத்த தமிழோசை” என்றதுக்குப்‌ பின்பிறே “வட சொல்லாகி’” என்றது. ஆகையாலே இரண்டும்‌ அநாதி யிறே-

இந்த்ரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை யிரு நிலம் தீ நீர் விண் பூதம் ஐந்தாய்ச்
செந்திறத்த தமிழோசை வடசொல்லாகித் திசை நான்குமாய் திங்கள் நாயிறாகி
அந்தரத்தில் தேவர்க்கும் அறியலாகா அந்தணனை அந்தி மாட்டு அந்தி வைத்த
மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழ்தியேல் வாழலாம் மட நெஞ்சமே–4—சாஸ்திர வஸ்யர் உடைய (திசை நான்குமாய்த் திங்கள் ஞாயிறாகி,)ஸ்ருஷ்டியைச் சொல்லுகைக்காக சாஸ்திர ஸ்ருஷ்டியைச் சொல்லுகிறார் – திராவிட சம்ஸ்க்ருதங்களை ஸ்ருஷ்டித்து-ஆரியத்தைச் சொல்லி அதனுடைய சிதைவாகையாலே பின்னை தமிழைச் சொல்ல பிராப்தமாய் இருக்க – இத்தை பிரதமத்திலே உபாதானம் பண்ணிற்று —1-இது சர்வாதிகாரம் ஆகையாலும்-2-ஸ்வார்த்தத்தைச் செவ்வே பிரகாசிப்பிக்க கடவதாகையாலும்-3-தம் பாழி ( தம் துறை )யாகையாலும்-4-இன்னமும் அத்தோபாதி இதுவும் பிரமாணம் என்கைக்காக முற்பட அருளிச் செய்கிறார்-வேதங்கள் போலேயும் இதிஹாச புராணங்கள் போலேயும் அன்று இறே ஆழ்வார்கள் வார்த்தை – அனுஷ்டாவின் வார்த்தை இறே இது – (த்ரை குண்யா விஷயா வேதா )ஐஸ்வர்ய கைவல்யங்கள் த்யாஜ்ய தயா புகுரும் இத்தனை இறே இவர்கள் பக்கலில் –செந் திறத்த தமிழ் ஓசைதிறம் –கூறுபாடும்-பிரகாரமும் –-ஸ்வாரதத்தை செவ்வியதாக பிரகாசிப்பிக்கையே கூறான -த்ரமிட சப்தம்-உப ப்ரஹ்மண அபேஷை அற்று இருக்கை-
வேதங்களுக்கு உப ப்ரஹ்மண அபேஷை உண்டு இறே–‘ஈரத் தமிழ்‘ –-செவிக்கினிய செஞ்சொல்– ”செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய வோதித் தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே” –வேதாந்த தேசிகன்–ஓசை -என்று பாட்டுக்கும் த்வனிக்கும் பெயர்-லஷணையால் சப்தத்தை சொல்கிறது -மேல் வடசொல் -என்கையாலே-வடசொல் -என்று சமஸ்க்ரதத்தை சொல்கிறது –சாஸ்த்ரத்தை ஈஸ்வரன் ஸ்ருஷ்டிக்கை யாவது -பிரகாசிப்பிக்கை -(வெளியிட்டு அருளினான் ஆழ்வார்கள் மூலம் )

ஆனால் அந்த பாஷை அநாதி ஆகிறது ..-திருவாய் மொழிக்கு வேதத்வ பிரகாசமான வசனம் உண்டோ என்ன சொல்லுகிறது மேலே-ஆனால்‌ அந்த பாஷை அநாதி யாகிறது; திருவாய்மொழிக்கு வேதத்வ முண்டாக வேணுமென்கிற நிர்பந்த, முண்டோ என்னில்‌;

வட மொழி மறை என்றது தென் மொழி மறையை நினைத்து இறே-சூரணை -42-
(பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை என்றதால் நல்ல அரக்கன் ஸ்ரீ விபீஷண ஆழ்வான் இருப்பதால் தானே இன சுட்டு அடை மொழி )

அதாவது
மறை-என்று கேவல வேத வாசி சப்தத்தாலே சொல்ல அமைந்து இருக்க –வட மொழி மறை -திருவாய் -8-9-8–என்று சமஸ்க்ருத வேதம் என்றது -திராவிட வேதம் உண்டு என்று நினைத்திறே என்கை
பிரதி கோடி இல்லாத போது இப்படி விசேஷிக்க வேண்டியது இல்லை இறே என்று கருத்து-

வேதம்‌ என்னாதே ஸம்ஸ்க்ருத வேதம்‌ என்கையாலே த்ராவிட, வேதமுமுண்டாக வேணுமென்கிறார்-

மடவரல் அன்னை மீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் மல்லைச் செல்வ
வடமொழி மறை வாணர் வேள்வியுள் நெய் யழல்வான்புகை போய்
திட விசும்பில் அமரர் நாட்டை மறைக்கும் தண் திருப் புலியூர்
படவர வணையான் தன் நாமம் அல்லால் பரவாள் இவளே–8-9-8—சம்ஸ்க்ருத பாஷையும் வேதங்களும் தாங்கள் இட்ட வழக்காய் வ்யாஸ பாதம் செலுத்த வல்ல ப்ராஹ்மணர் ஸமாராதன ரூபமான யாகங்களில் ஹோமம் பண்ணின நெய்யால் ஜ்வலித்த அக்னிகளினின்றும் புறப்பட்ட மிக்க புகையானது –

ஆனால் அந்த வேதத்துக்கு அங்க உபாங்கங்கள் உண்டானவோ பாதி இதுக்கும் அவை உண்டோ என்ன சொல்லுகிறது மேல்-அங்கோபாங்க ஸஹிதத்வம்‌ இதுக்குமுண்டோ என்ன, உண்டென்கிறார்‌ மேல்‌-

வேத சதுஷ்ட (த்தயத்துக்கு-இங்கும் லுப்தம் ) அங்க உபாங்கங்கள் போலே இந் நாலுக்கும்
இரும் தமிழ் நூல் புலவர் பனுவல் ஆறும் மற்றை எண்மர் நன் மாலைகளும்- (இருமை -பெருமை -)-சூரணை-43-

அதாவது
ருகாதி வேத சதுஷ்டயத்துக்கும்-சீஷா வியாகரண நிருக்த சந்த கல்ப ஜோதிஷங்கள் ஆகிற ஆறு அங்கங்களும் மீமாம்ச நியாய புராண தர்ம சாஸ்த்ராத் உப அங்கங்கள் எட்டுமாய் இருந்துள்ள பதினாலும் போலே-(ஆதி -ஆயுர்வேதம் காந்தர்வ வேதம் அர்த்த வேதம் தனுர் வேதம் )-இந்த திராவிட வேத சதுஷ்டயதுக்கும்-இரும் தமிழ் நூல் புலவன் நங்கை யாளன்–பெரிய திருமொழி -1-7-10- -என்று
ஒருவரால் கரை காண ஒண்ணாத படி இருக்கிற திராவிட வேத சாஸ்த்ரத்தை கரை கண்ட ஞான ஆதிக்கத்தை உடையரான திரு மங்கை ஆழ்வார் உடைய-கலியன் வாயொலி செய்த பனுவல் -பெரிய திருமொழி -1-4-10–என்று சாஸ்திர ரூபங்களான பிரபந்தங்கள் ஆறும்–மற்றை ஆழ்வார்கள் எண்மர் உடையவும் விலஷணமான பிர பந்தங்களும் என்கை ..-நன் மாலைகள் என்றது –நய நின்ற நன் மாலை -முதல் திருவந்தாதி -57–என்று முதல் ஆழ்வார் பிரபந்தத்தில் அருளிச் செய்தது எல்லா பிரபந்ததுக்கும் ஒக்கும் என்று நினைத்து .

1-பொய் நின்ற ஞானமும் -திருவிருத்தம் -1––இத்யாதியாலே ஸ்வரூப விரோதியாய் வந்தேறி யான தோஷங்களை முதல் அடியிலே பேசினால் போலே பிரதமத்திலே -வாடினேன் வாடி-பெரிய திருமொழி -1-1-1- -இத்யாதியாலே ஸ்வ ரூபத்துக்கு வந்தேறியான தோஷங்களை கண்டு நொந்து பேசுகையும்
2-பகவத் ப்ராவண்ய ப்ராசுர்யமும்-பத்துடை அடியவர்க்கு எளியவன் –எத்திறம் –ப்ராவண்ய ப்ராஸூர்யம் – உருகுமால் நெஞ்சம் கார் ஒக்கும் காட்கரை அப்பன் /முலையோ முழு முற்றும் போந்தில –பால்யாத் ப்ராவண்யம் -கணபுரம் கை தொழும் பிள்ளையை -பிறர் சொல்ல கேட்டு கை தொழும் இவள் -அருவி சோர் வேங்கடம் நீர் மலை உருகினாள் உள் மெலிந்தாள்
3-அதில் அர்ச்சாவதாரத்தில் ஊற்றமும்-செய்ய பரத்துவுமாய் –எய்துபவர்க்கு அர்ச்சாவதார எளிது -அவனாகும் நீள் கடல் வண்ணனே –-அன்று தேர் கடாவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொலோ-ஸ்ரீ கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் – விபவம் பாடப் பிறந்தவர் அர்ச்சையை பாடுவது ஏற்றம் –
காரார் திருவேங்கடம் காணும் அளவும் போய்–ஆராமம் சூழ் /-மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யலாமே–ஏரார் முயல் வீட்டுக் காக்கை பின் போவதே
4-கலவியும் பிரிவும் மாறி மாறி வருகையும்-அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மான் -ஆடி ஆடி அகம் கரைந்து –வாடி வாடி இவ்வாணுதலே /-கோவை வாயாள் பொருட்டு–பூசும் சாந்து என் நெஞ்சமே -ஹர்ஷம் மிக்கு -மண்ணை இருந்து துழாவி —-ஏறிய பித்தினோடு -மாயன் திறத்தனள் இத்திரு தேறியும் தேறாமல் /-யானும் ஏத்தி –ஏத்த ஏத்த எங்கு எய்தும் /ஒரு நாள் காண வாராயே–வருத்தம் -8-5-எல்லியும் காலையும் திருக்கடித்தானாம் தாயப்பத்தி விட்டு -ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்காமல் சன்னிஹிதன் -மைந்தனும் வந்திலன் என் செய்கேன் -திருக்கண்ணபுர பாசுரம் -வருத்தம் சொல்லி ஆழ்வார் /8-5-வருந்தாது இரு மட நெஞ்சே ஆறாம் பத்தில் நம் மேல் வினைகள் வாரா -சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸூ ச – நேரான மொழி பெயர்ப்பு-சோகப்படாதே முதலில் சொல்லி –
5–அந்ய உபதேச பேச்சும்–ஆறு கிண்ணகம்-தாய் மகள் தோழி
6-அது தன்னில் ராத்ரி வ்யசனமும்-மடல் எடுக்க ஒட்டாமல் -ஊரெல்லாம் துஞ்சி பெண் பிறந்தார் பெரும் துயர் காண மாட்டாமல் -கண்ணனும் வாரானால் -காகுத்தனும் வாரானால் -காப்பார் யார் -நங்கள் அடிகள்-தோழியும் நானும் ஒழிய -வியக்தமாக தோழி பாசுரம் இல்லை ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் அருளிச் செயலில் -கோழியும் கூவுகின்றதில்லையே -கூர் இருள் ஆயிற்றே
7-தூத ப்ரேஷணமும்-நான்கு தூது பதிகம் -அவ்வளவு தெம்பு இல்லையே ஸ்ரீ திருமங்கை ஆழ்வாருக்கு -நான்கு பாசுரங்களுக்கு பின்பே நேராக-ஓ மண் அளந்த தாடாளா -வரை எடுத்த தோளாளா –தண் குடந்தை நகராளா–மலையாள ஊட்டு இல்லையே
8-அநுகாரம்-கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் -பதிகம் -ஜெகதாகாரம் –வடவரை நின்றும் வந்து இன்று கணபுரம் இட வகை கொள்வது யான் என்று பேசினாள்
9–மடல் எடுக்கை-மாசறு சோதி பதிகம் –/ஸ்ரீ சிறிய திருமடல் ஸ்ரீ பெரிய திரு மடல் -ஸ்ரீ திரு நறையூர் நம்பி மேல் –
10/11/12-தோழி தாய் மகள் என்னும் அவஸ்தை த்ர்யாபத்திகளும்-சாழல் பதிகம் அவ்யக்தம் தோழி பதிகம்-இவள் திறத்து இருவரும் –2-7-/-7-2-திருத்தாயார் பதிகங்கள் -திண்ணம் என் இள மான் புகுமூர் திருக்கோளூரே-உண்ணும் சோறு / கள்வன் கொல்-அவனூர் வினவி சென்றாள்-கரியான் ஒரு காளை வந்து–அணி யாலி புகுவார் கொலோ -கள்வன் கொல் பிராட்டி திருக்கோலம் இன்றும் சேவை உண்டே -பொன்னிவர் மேனி -நாள் வேதம் ஓதும் -அவர் நாகரீகர் செல்வர் பெரியர்-என்னையும் நோக்கி
அன்னையும் நோக்கும் என்று அஞ்சுகிறேன் –அச்சோ ஒருவர் அழகியவா -ஸுந்தர்யம் இங்கு -எங்கனே நீ லாவண்யம் அங்கு-இரண்டும் மகள் பாசுரங்கள்
13-இந்திரிய பய குரோசம் -ஐவர் திசை திசை எற்றி-
14-ஈஸ்வர ஸ்வாதந்த்ர்ய பயம் ,-அரவணை மேல் பள்ளி கொள்ளும் முகில் வண்ணனே அறையோ முறையோ ஸ்ரீ திருவிருத்தம் —தடுப்பார் இல்லாத நிரங்குச ஸ்வாதந்தர்யம் /-தெள்ளியீர்-கை வளை கொள்வது தக்கதோ -ஸ்ரீ நீல மேக பெருமாள் -நீணிலா முற்றத்து நின்று இவள் நோக்கினாள்
15-அசக்ருத் பிரபத்தி கரணம்-ஐந்து தடவை-நோற்ற நாலும்–உலகுண்ட பெரு வாயா ஸ்ரீ நம்மாழ்வார் –பத்து தடவை இவர்–ஸ்ரீ நைமிசாரண்யம் -ஸ்ரீ திருவேங்கடமுடையான் -ஸ்ரீ அண்ணன் கோயில் -ஸ்ரீ திருவரங்கம் -ஸ்ரீ திரு விண்ணகர்–திரு நறையூர் இடர் கெடுத்த திருவாளர் –6-9-பாட்டு தோறும் திருப்பாத பிரஸ்தாபம் இங்கும் உலகுண்ட பெரு வாயா போலே–தேரெழுந்தூர் -திருக்குறுங்குடி மகள் பாவனையில் -9-5-/ 5-9 மானே நோக்கு அங்கு நாயகா பாவம் /
16-ஆர்த்தியின் உடைய கரை புரட்சிகளும்–மாலுக்கு ஏரார் விசும்பில் இருப்பு அரிதாம் படி அங்கு -ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சி இவர் –
17-பர துக்க அசஹிஷ்ணுதையாலே பல காலும் ஹிதம் சொல்லுகையும்–தொடக்கமான கட்டளையாலே மற்றை ஸ்ரீ ஆழ்வார் பிர பந்தங்களைக் காட்டிலும் ,இப் பிரபந்த சதுஷ்டியார்த்த ஜ்ஞாபகமாய் இருக்கையாலே ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் பிரபந்தங்களையே இதுக்கு அங்கங்கள் என்கிறது ..-மற்றை ஸ்ரீ ஆழ்வார் பிரபந்தங்கங்களும் எதார்த்த அனுசாரிகளாய் , இதில் அர்த்த நிர்ணயத்துக்கு உறுப்பு ஆகையாலே .இதுக்கு உப அங்கங்கள் என்கிறது ..ஆக –சீஷாயாம் வர்ண சிஷா பத சமதிகமோ வ்யாக்ரியா நிர்வசோப்யாம் சந்தஸ்
சந்தச் சிதவ் ஸ்யாத் கமயதி சமயம் ஜ்யோதிஷம் ரெங்கநாத ,கல்ப அனுஷ்டான
முக்தம் ஹ்யுசித கமிதயோர் நியாய மீமாம்ச யோஸ் ஸ்யாத் அர்த்த வ்யக்தி
புராண ஸ்ம்ருதிஷூ ததனுகாஸ் த்வாம் விசின் வந்தி வேதா -ஸ்ரீ ரெங்கராஜ உத்தர ஸ்தவம்-18- –என்கிற படியே அவை அந்த வேத சதுஷ்டயத்துக்கும் உபகார அங்கங்களாய் இருக்குமா போலே இவையும் கீழ் சொன்ன படியே இத வேத சதுஷ்டயத்துக்கும் உப அங்கங்களாய் இருக்கும் என்றது ஆய்த்து —

““அங்காநி வேதாஸ் சத்வாரோ மீமாம்ஸா ந்யாய விஸ்தர? ! புராணம்‌ த,ர்ம ஸாஸ்த்ரஞ்ச வித்‌,யா ஹ்யேதாஸ் சதுர்தஸ -என்கிறபடியே சதுர்தஸ வித்‌யாஸ்தாந வேதம் போல்‌ இங்கும்‌ இவருடைய ப்ரபந்தங்கள்‌ நாலும்‌ நாலு வேதத்தினுடைய ஸ்தாநேயாய்‌, “இருந் தமிழ் நூற் புலவன் மங்கை யாளன்‌?” (திருமொழி 1 – 7 – 10) என்றும்‌, ““கலியன் வாயொலி செய்த பனுவல்‌ ” (திருமொழி 1 – 4 – 10) என்றும்‌ சொல்லுகிற திருமங்கை யாழ்வாருடைய ப்ரபந்தங்களாறும்‌, அங்கங்களினுடைய ஸ்தாநத்திலேயாய்‌, மற்றை எட்டு ஆழ்வார்களுடைய ப்ரபந்தங்களும்‌ உபாங்கங்களா யிருக்கும் –

செங்கணாளி யிட்டிறைஞ்சும் சிங்க வேள் குன்றுடைய
எங்கள் ஈசன் எம்பிரானை இரும் தமிழ் நூல் புலவன்
மங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார்க் கலியன்
செங்கை யாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே-1-7-10–ஒருவரால் கரை காண ஒண்ணாத படி இருக்கிற தமிழ் சாஸ்திர உக்தமான படியைக் கரை கண்ட ஜ்ஞான ஆதிக்யத்தை உடையவர் –

வரும் திரை மணி நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானை
கரும் கடல் முந்நீர் வண்ணனை எண்ணிக் கலியன் வாயொலி செய்த பனுவல்
வரம் செய்த வைந்தும் ஐந்தும் வல்லார்கள் வானவர் உலகுடன் மருவி
இரும் கடல் உலகம் ஆண்டு வெண் குடைக் கீழ் இமையவராகுவர் தாமே —1-4-10-

அயல் நின்ற வல் வினையை அஞ்சினேன் அஞ்சி
உய நின் திருவடியே சேர்வான் நய நின்ற
நன் மாலை கொண்டு நமோ நாரணா வென்னும்
சொன் மாலை கற்றேன் தொழுது —
—57-நிர் வசன ரூபமாக நின்ற நல்ல மாலை கொண்டு-நயம் நின்ற நன் மாலை -நயம் -அன்பும் மகிழ்ச்சியும் -திருமந்த்ரார்த்தை நயப்பிக்கையில் ஈடுபட்ட திவ்ய பிரபந்தம் என்றுமாம்-ஸாஸ்த்ர ரூபமாய் இருக்கும் விலக்ஷணமான மாலையைக் கொண்டு என்றுமாம்-நயப்புடைத்தாய் –அதி விலக்ஷணமான சப்தங்களாலே தொடுக்கப் பட்ட இப் பிரபந்த ரூபமான மாலையைக் கொண்டு உன்னை ஆஸ்ரயித்து உனக்கு வாசகமாய் திரு மந்திரம் என்று பிரசித்தமான சொல் தொடை

வித்யாந்தரங்களில் வேதத்துக்கு உண்டான ஆதிக்யம் இதுக்கும் உண்டோ என்ன சொல்லுகிறது மேல் -ஸகல வித்‌யைகளிலும்‌ வைத்துக் கொண்டு அங்கியான வேதம்‌ அதிகமாயன்றோ இருப்பது என்னில்‌,

சகல வித்யாதிக வேதம் போலே இதுவும் திவ்ய பிரபந்த பிரதானம்-..சூரணை -44 –

அதாவது
அங்கானி வேதாஸ் சத்வாரோ மீமாம்ச நியாய விஸ்தர புராணம் தர்ம சாஸ்த்ரஞ்ச வித்யா ஹ்யேதாச் சதுர்தச —என்று சக படிதமாய் இருக்க செய்தே ,ஸ்வ அங்கோ உபாங்களான சகல வித்யைகளிலும் ,ஸ்வ வைபவத்தால் மேலாய் இருக்கும் வேதம் போலே ஸ்ரீ திவ்ய பிரபந்தங்களிலும் சகபடிதமாய் இருக்க செய்தே ஸ்வ அங்க உபாங்களான சகல ஸ்ரீ திவ்ய பிரபந்தகளிலும் ஸ்வ வைபவத்தாலே இதுவும் மேலாய் இருக்கும் என்கை-

அந்த ஸகல வித்‌யைகளிலும்‌ அதிகமான வேதம்‌ ப்ரதாநமானாப் போலே இதுவும்‌ திவ்ய ப்ரபந்தங்களில்‌ ப்ரதாநமாயிருக்கும்‌.

ஆனால் அந்த வைபவத்துக்கு உடலான சாஸ்த்ரத்வ பாகவத ஜ்ஞாரூபவத்வ நிர்தோஷத்வ ஸ்ருதித்வ சத்யத்வ அநாதி நித்யத்வங்கள் இதுக்கும் உண்டோ என்ன சொல்லுகிறது மேல்-ஆனால்‌ வேதத்துக்குச்‌ சொல்லுகிற ”வேத ஸாஸ்த்ராத் பரம்‌ நாஸ்தி” (ஹரிவம்ஸே ) என்கிற ஸாஸ்த்ரத்வமும்‌, ““ஸ்ருதி ஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா” என்கிற பகவதாஜ்ஞா ரூபத்வமும்‌, ப்‌ரம விப்ரலம்பாதி, தோஷ ரஹிதத்வமும்‌, பூர்வ பூர்வோச்சாரண க்ரமத்தாலே உத்த ரோத்தரோச்சார்யமாணத்வம்‌, நித்யத்வம்‌, ஸத்யத்வம்‌ தொடக்கமான லக்ஷணங்கள்‌ இத்திருவாய்மொழிக்குமுண்டோ என்னில்‌, உண்டென்கிறார்‌-

வேத நூல் இரும் தமிழ் நூல்–ஆக்ஜை ஆணை வசையில் ஏதமில் சுருதி செவிக்கு இனிய ஓதுகின்றது உண்மை பொய்யில் பாடல் பண்டை நிற்கும் முந்தை அழிவில்லா என்னும் லஷணங்கள் ஒக்கும்-சூரணை -45-

அதாவது
வேத நூல் பிராயம் நூறு – திருமாலை -3- என்ற அத்தை வேத சாஸ்திரம் என்றால் போலே இத்தையும் –இரும் தமிழ் நூல் புலவன்-பெரிய திருமொழி -1-7-10–என்று பெரிய திராவிட சாஸ்திரம் என்கையாலும்
அத்தை — ஸ்ருதிஸ் ஸ்ம்ருதிர் மமை ஆக்ஜை -பாஞ்சராத்ரம் –என்று பகவத் ஆக்ஜை ரூபமாக சொன்னால் போலே-இத்தை –ஆணை ஆயிரம் -திருவாய்-6-3-11–என்று தத் ஆக்ஜா ரூபமாக சொல்லுகையாலும் ,-அத்தை -வசையில் நான் மறை –பெரிய திருமொழி-5-3-2- என்று விப்ரலம்பாதி தோஷ ரகிதம் என்றால் போலே ,-இத்தையும் –ஏதமில் ஆயிரம்-திருவாய்-1-6-11- -என்று நிர்தோஷமாக சொல்லுகையாலும் ,-அத்தை-சுடர் மிகு சுருதி-திருவாய்-1-1-7- -என்று ஸ்ரூயதே இதி ஸ்ருதி -என்கிறபடியே பூர்வ பூர்வோச்சாரண கிரமத்திலே சரவண இந்திரியத்தாலே கிரகிக்க படுமதாய் சொன்னால் போலே , இத்தையும் –கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே -திருவாய்-10-6-11 -என்று ஸ்ராவ்யமாய் சொல்லுகையாலும் ,-அத்தை –வேத நூல் ஓதுகின்றது உண்மை-திருச்சந்த -72- -என்று சொல்லும் அதில் ஒரு பொய் இல்லை என்றால் போலே ,-இத்தையும் –பொய்யில் பாடல்-திருவாய்-4-3-11–என்று அசத்திய கந்த ரகிதம் இல்லை என்கையாலும்,-அத்தை பண்டை நான்மறை -பெரிய திருமொழி-5-7-1–என்று அநாதியாகவும்-நிற்கும் நான்மறை-திருவாய்-6-5-4- -என்று -அநதினத்தவம்-அழிவில்லாததாகவும் சொன்னால் போலே இத்தையும் முந்தை ஆயிரம் -திருவாய்-6-5-11-அழிவில்லா ஆயிரம் -திருவாய்-9-7-11-என்று அநாதியாய் அழிவற்று இருக்குமதாய் சொல்லுகையாலும் இந்த லஷணங்கள் எல்லாம் இரண்டுக்கும் ஒக்கும் என்கை-

வேதநூல்‌?” (திருச்ச.72) என்றாப் போலே ““இருந்தமிழ்நூல்‌ ‘” (திருமொழி 1 – 7 – 10) என்று ஸாஸ்த்ரத்வமும்‌, ”ஸ்ருதி ஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா’” என்றாப்போலே ஆணை யாயிரத்து”” (திருவா. 6 – 3 – 11) என்று பகவதநுஸாஸந ரூபமாய்‌, “வசையில்‌ வேதம்‌”” (திருமொழி 5 – 3 – 2) என்றாப் போலே ““ஏதமிலாயிரம்‌” (திருவா. 1 – 0 – 11) என்று ப்‌ரம விப்ரலம்பாதி, தோஷ ரஹிதமாய்‌, “*சுடர் மிகு சுருதி”’ (திருவா. 1 – 1 – 7) என்றும்‌, *’செவிக்கினிய செஞ்சொல்‌?” (திருவா. 10 – 6 – 11) என்றும்‌ ஸ்ராவ்யமாய்‌, ““வேத நூலோதுகின்றதுண்மை?” (திருச்ச.72) என்றாப் போலே ‘“பொய்யில் பாடலாயிரம்‌”? (திருவா. 4 – 3 – 11) என்று இதில்‌ சொல்லுகிற அர்த்தங்களில்‌ ஒரு பொய்‌ இன்றியிலே இருப்பதாய்‌, ‘“பண்டைநான்மறை” (திருமொழி 5 – 7 – 3), “நிற்கும்‌ நான்மறை”! (திருவா. 6 – 5 – 4) என்றாப் போலே ‘‘முந்தை யாயிரம்‌’‘ (திருவா. 6 – 5 – 11) என்றும்‌, “அழிவில்லா ஆயிரம்‌”’ (திருவா. 9 – 7 – 11) என்றும்‌ ஆத்‌யந்த ரஹிதமாய்‌, அதிற் சொல்‌லுகிற லக்ஷணங்கள்‌ இதுக்குமுண்டென்கிறார் –

வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும்
பாதியும் உறங்கிப் போகும் நின்ற விப்பதினை யாண்டு (நின்றதில் பதினை யாண்டு -என்றும் பாடம் )
பேதை பாலகனதாகும் பிணி பசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்க மா நகர் உளானே–3—வேத சாஸ்த்ரா விரோதிநா -என்கிறபடியே
வேதமாகிற நூல் -வேதாக்ய சாஸ்திரம் -என்னக் கடவது இறே-நூல் -சாஸ்திரம்-அதவா வேதங்களும் நூல்களும் -என்னவுமாம் -வேதங்களும் வேதார்த்த ஞானம் உடைய புருஷர்கள் உடைய வசனங்களும் –

போதில் மங்கை பூதலம் கிழத்தி தேவி யன்றியும்
போது தங்கு நான்முகன் மகன் அவன்மகன் சொலில்
மாது தங்கு கூறனேற தூர்தி என்று வேத நூல்
ஓதுகின்றது உண்மை யல்லது இல்லை மற்றுரைக்கிலே –72–ஸ்ரீ பூமி சஹிதன் பிரம்மாவுக்கு உத்பாதகன் ப்ரஹ்ம உத்பன்னன் ருத்ரன் என்று வேதாக்ய சாஸ்திரம் ஓதுகிற அர்த்தமே சத்யம்-அதுக்கு புறம்பாக ஓர் அர்த்தம் சொல்லில் அது அசத்யம் – ஸூபர்ண வைகுண்ட சம்வாதே – யத்தத் பத்ம மபூத் பூர்வம் யத்ர ப்ரஹ்மா வ்யஜாயதே ப்ரஹ்மணச்சாபி சம்பூதச்சிவ இத்யவதார்யதாம் சிவாத் ஸ்கந்தஸ் சம்பபூவ ஏதத் ஸ்ர்ஷ்டி சதுஷ்டயம் –இத்யாதி –

செங்கணாளி யிட்டிறைஞ்சும் சிங்க வேள் குன்றுடைய
எங்கள் ஈசன் எம்பிரானை இரும் தமிழ் நூல் புலவன்
மங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார்க் கலியன்
செங்கை யாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே-1-7-10–ஒருவரால் கரை காண ஒண்ணாத படி இருக்கிற தமிழ் சாஸ்திர உக்தமான படியைக் கரை கண்ட ஜ்ஞான ஆதிக்யத்தை உடையவர் –

காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த
தாளிணையன்தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்து
த் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணைஇன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே.–6-3-11-பீஷாஸ் மாத் வாதே பவதே -என்கிறபடியே ஆயிரத்திலும்-ஜெகன் நியமனத்தைச் சொன்ன –

வசையில் நான்மறை கெடுத்த அம் மலர் அயற்கு அருளி முன் பரி முகமாய்
இசை கொள் வேத நூல் என்று இவை பயந்தவனே எனக்கு அருள் புரியே
உயர் கொள் மாதவிப் போதொடு உலாவிய மாருதம் வீதியின் வாய்த்
திசை எல்லாம் கமழும் பொழில் சூழ் திரு வெள்ளறை நின்றானே –5-3-2—விப்ரலம்பாதி தோஷ சம்பாவனை இல்லாத நாலு வேதத்தைக் கொடுத்துதாதா யதபூர்வ மகல்பயத்-என்று
முன்பு போலே இவற்றை உண்டாக்கு -என்று விட அவனும் வேதத்தை அசுரர்கள் கையில் பறிகொடுத்து
வேதா மே பரமஞ் சஷூர் வேதா மே பரமம் தனம் -என்று கண்ணும் கண்ண நீருமாய் நின்று கூப்பிட
அவன் பக்கலிலே கிருபையைப் பண்ணி  –

மாதவன் பால் சட கோபன் தீ தவம் இன்றி உரைத்த
ஏதமில் ஆயிரத்து இப் பத்து ஓத வல்லார் பிறவாரே–1-6-11-தீதாவது -தன் மேன்மையைப் பார்த்து எழ நிற்கை-அவமாவது -ஆஸ்ரயிக்கிறவனுடைய சிறுமை பார்த்து கையிடுகை –-இன்றியுரைத்த -இரண்டு குற்றமும் இல்லாமையைச் சொன்ன – ஏதமில் ஆயிரம் -லஷண ஹாநியால் வரும் குற்றம் இன்றிக்கே இருக்கை-

திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7–முதல் பாட்டுத் தொடங்கிச் சொன்ன அர்த்தங்கள் எல்லாவற்றுக்கும் பிரமாணம் நிர்த்தோஷ ஸ்ருதி என்கிறது சுடர் மிகுகை யாவது -பௌருஷ்யத்வ நிபந்தனமான விப்ரலம்பாதி தோஷ ரஹிதமுமாய் பிரமாணாந்தரங்களைக் கொண்டு பாஹ்ய குத்ருஷ்டிகளால் அவிசால்யமாகையாலே மிக்க தேஜச்சை யுடைத்தாகை-ஒருவரால் பண்ணப் பட்டது அன்றிக்கே என்றும் கேட்டே வருமதாகையாலே ஸ்ருதி என்கிறது –

காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே–10-6-11–பாட்யே கே யே ச மதுரம் -என்கிறபடியே இசையோடு புணர்ப்புண்ட தமிழ்த்தொடை –நித்ய ஸூரிகள் இத்தைக் கேட்டால் பர்யாப்தர் ஆகார் -இப்பாடுகிறது உள்ளீடானவன் சீலத்தாலேயே என்னில் –பாசுரத்துக்காக என்கிறது –ஸம்ஸ்ரவே மதுரம் -என்கிறபடியே செவியே தொடங்கி ரசிக்கும்-செஞ்சொல்லே–-நினைவும் சொல்லும் செயலும் ஒருபடிப் பட்ட சொல்லு –சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினால் -என்னா செந்தமிழ் பத்தும் என்றார் இறே –

போதில் மங்கை பூதலம் கிழத்தி தேவி யன்றியும்
போது தங்கு நான்முகன் மகன் அவன்மகன் சொலில்
மாது தங்கு கூறனேற தூர்தி என்று வேத நூல்
ஓதுகின்றது உண்மை யல்லது இல்லை மற்றுரைக்கிலே –
72-ஸ்ரீ பூமி சஹிதன் பிரம்மாவுக்கு உத்பாதகன் ப்ரஹ்ம உத்பன்னன் ருத்ரன் என்று வேதாக்ய சாஸ்திரம் ஓதுகிற அர்த்தமே சத்யம்-யல்லது இல்லை மற்றுரைக்கிலே — அதுக்கு புறம்பாக ஓர் அர்த்தம் சொல்லில் அது அசத்யம் –-ஸூபர்ண வைகுண்ட சம்வாதே – யத்தத் பத்ம மபூத் பூர்வம் யத்ர ப்ரஹ்மா வ்யஜாயதே ப்ரஹ்மணச்சாபி  சம்பூதச்சிவ இத்யவதார்யதாம் சிவாத் ஸ்கந்தஸ் சம்பபூவ ஏதத் ஸ்ர்ஷ்டி சதுஷ்டயம் -இத்யாதி –

உய்வு உபாயம் மற்று இன்மை தேறி, கண்ணன் ஒண் கழல் மேல்
செய்ய தாமரைப் பழனம் தென்னன் குருகூர்ச் சடகோபன்
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே.–4-3-11-ஆழ்வார் பிரணயித்வ குண அனுசந்தானத்தாலே தரித்தவாறே ஊரும் தளிரும் முறியுமாயிற்று -அகாலப்பலிநோ வ்ருஷா
சிவந்த தாமரையை உடைய பழனங்களை உடைத்தாய் தெற்குத் திக்குக்கு ஸ்லாக்யமான திரு நகரியை உடைய ஆழ்வார்-ந தே வாக ந்ருதா காவ்யே காசிதத்ர பவிஷ்யதி -என்கிறபடியே திருவாய் மொழி எல்லாவற்றுக்கும் ஆதல்-அவாப்த ஸமஸ்த காமன் ஒரு சம்சாரியினுடைய சத்தாதிகளே தனக்கு போக உபகரணமாக இருந்தான் -என்கிற பிரணயித்வத்தில் ஒரு பொய் இன்றிக்கே இருக்கிற பத்து என்னுதல் –

பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும்
பிண்டமாய் விரிந்த பிறங்கு ஒளி அனலும் பெருகிய புனலொடு நிலனும்
கொண்டல் மாருதமும்  குரை கடல் ஏழும் ஏழு மா மலைகளும் விசும்பும்
அண்டமும் தானாய் நின்ற  எம்பெருமான் அரங்க மா நகர் அமர்ந்தானே –5-7-1-பூர்வே பூர்வேப்யோ வச ஏத தூசு -என்கிறபடியே பூர்வ பூர்வ உச்சாரண க்ரமத்தைப் பற்ற உத்தர உத்தர உச்சாரணம்   ஆகையாலே புருஷ புத்தி அதீனம் ஆனால் வரக் கடவ தோஷங்கள் ஒன்றும் இல்லாத வேதங்களும் –

நிற்கும் நான்மறை வாணர் வாழ்தொலை வில்லி மங்கலம் கண்டபின்
அற்க மொன்றும் அறவு றாள்மலிந் தாள்கண் டீர்இவள் அன்னைமீர்!
கற்கும் கல்வி யெல்லாம் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான்என்றே
ஒற்கம் ஒன்றும் இலள் உகந்துகந்து உண்மகிழ்ந்து குழையுமே.–6-5-4-அபவ்ருஷேயமாய் நித்தியமான வேதங்கள் –

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண்குரு கூரவர் சடகோபன்
முந்தை ஆயிரத்துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச்சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே.–6-5-11–பழையதான வேதார்த்தத்தை அருளிச் செய்கையாலே சர்வேஸ்வரன் இதர சஜாதீயன் ஆனால் போலே -வேதமும் தமிழாய் வந்து இவர் பக்கலிலே அவதரித்த படி-செவ்விய தமிழ் -பசும் தமிழ் -அர்த்தத்தை விசதமாகக் காட்டுவது -இப் பத்தை அப்யஸிக்க வல்லார் ஸ்ரீ யபதிக்கு அடிமை செய்வார்-

ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை
ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்
வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அழிவு இல்லா ஆயிரத்து இப்பத்தும் நோய் அறுக்குமே–9-7-11–கேட்டார்கள் நெஞ்சை ஒரு நாளும் விடாதே வர்த்திக்கிற இப்பத்து –இப்பாசுரத்தை கேட்டார்க்கு சம காலத்தில் போலே சர்வ காலமும் ரசம் பிறக்கும் படி யாய்த்து இருப்பது-

அந்த வேதம் போலே இதுவும் அஸ்ம்ருத கர்த்ருகமாய் இருக்க வேண்டாவோ ? ஸ்ரீ ஆழ்வார் இதுக்கு கர்த்தா என்கையாலே ,நித்யத்வ அபௌருஷேயத்வங்கள் கூடாதீ என்ன சொல்லுகிறது மேல்-ஆனால்‌ “சொல்லப்பட்ட ஆயிரத்துள்‌” (திருவா. 8 – 10 – 11) என்று இவர் தம்மாலே சொல்லப்பட்டது என்கிற இதில்‌ கர்த்ருத்வத்தால்‌ நித்யத்வ-அபெளருஷேயத்வ-ஹாநி வாராதோ என்னில்‌, வாராதென்கிறார்‌. அது என் போல வென்னில்‌-

சொல்லப் பட்ட என்ற இதில் கர்த்ருத்வம் ஸ்ம்ருதி அத்தை ஸ்வயம்பூ படைத்தான் என்றது போலே-சூரணை -46-

அதாவது
சடகோபன் சொல்லப் பட்ட ஆயிரம்–திருவாய்-8-10-11–என்று இதில் ஸ்ரீ ஆழ்வாருக்கு சொன்ன கர்த்ருத்வம்-அநாதி நிதனா ஹ்யேஷா வாகுத் ஸ்ருஷ்டா ஸ்வயம்புவா -என்று-(அநாதி அநிதன -பண்டை நின்ற வேதத்தை ) ஸ்ம்ருதி அந்த வேதத்தை-( ஜகத்தை-) பிரம்மா சிருஷ்டித்தான் என்று சொன்னாவோ பாதி என்கை- ஸ்வயம்பு சிருஷ்டித்தான் என்னாதே–படைத்தான்-என்றது முன்னம் திசை முகனை தான் படைக்க மற்றவனும் முன்னம் படைத்தனன் நான் மறைகள்-பெரிய திருமடல்-10 -என்று ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தியையும் தர்சிப்பைக்காக .. அநாதி நிதானமான சந்தர்ப்பம் பிரம்மாவின் வாக்கில் நின்றும் ஆவிர்பவித்த மாத்ரம் கொண்டு ,பிரம்மாவுக்கு அதில் சொன்ன கர்த்ருத்வ உபாதி இதிலும் ஸ்ரீ ஆழ்வாருக்கு சொன்ன கர்த்ருத்வம் ஆகையால் இத்தால் ,இதன் நித்யத்வ அபௌருஷேயத்வ ஹானி வாராது என்று கருத்து-

முன்னம்‌ திசை முகனைத் தான்‌ படைக்க, மற்றவனும்‌ முன்னம்‌ படைத்தனன்‌ நான்மறைகள்‌”! (பெ.திருமடல்‌) என்றும்‌, ““அநாதி நிதாநா ஹ்யேஷா வாகுத்ஸ்ருஷ்டா ஸ்வயம்பு வா?‘ (பார-சபா ) என்றும்‌ சொல்லுகிறபடியே, ஸ்ம்ருதி, “ப்ரஹ்மா வேதங்களைப்‌ படைத்தான்‌ ‘ என்ற இடத்தில்‌, அந்த ப்‌,ரஹ்மாவால்‌ வந்த கர்த்ருத்வத்தால்‌ அவறறினுடைய நித்யத்வ-அபெளருஷேயத்வங்களுக்கு ஹாநி வாராதாப் போலே இதுக்கும்‌ நித்யத்வ அபெளருஷேயத்வ ஹாநி வாராது –

நல்ல கோட்பாட்டுலகங்கள் மூன்றின் உள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை அந்தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப்பட்ட வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே–8-10-11-வேதம் போலே தான் தோன்றி அன்றிக்கே இருக்கை-பரத்வம் போலே வேதம்-அவதாரம் போலே திருவாய்மொழி –பிரமேய சரமம் -பிராமண சரமம் -பரத்வ பர முது வேதம் -அர்ச்சாவதாரங்களை திருவாய் மொழி சொல்லுமே —

மன்னிய தாமரை மா மலர்ப் பூ பூத்தம் மலர் மேல் —–9
முன்னம் திசை முகனைத் தான் படைக்க -மற்றவனும்
முன்னம் படைத்தனன் நான்மறைகள் அம்மறை தான் –10—-அந்தச் சதுர முகனும் முன்பு உண்டாக்கின நான்மறைகள் என்றால் போலே இருக்கிறது-சர்வேஸ்வரன் இவ் வேத அஷர ராசியை-ஸூப்த பிரபுத்த ந்யாயத்தாலே முன்புத்தை ஆநு பூர்வியை ஸ்மரித்துச் சொல்லும் என்று வேதத்தின் உடைய அபௌ ருஷேயத்வம் சொல்லா நிற்க-இவன் சிருஷ்டித்தான் -என்னில் பிரமாண விருத்தமாம் இறே-
இனித் தானே-யோ ப்ரஹ்மாணம் விததாதி   பூர்வம் யோ வை வேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை -என்று சொல்லுகிற்றவற்றோடும் விரோதிக்கும் இறே-ஆனால் பின்னை என் சொல்லிற்று ஆகிற்றது  என்னில்
இன்னான் தன் பிதாவின் பக்கல் படைத்த த்ரவ்யம் இன்னதனை -என்னுமா போலே அந்த ப்ரஹ்மாவும் சர்வேஸ்வரன் பக்கல் அதிகரித்த நாலு வேதங்களும் -என்றபடி- பிறந்து படைத்தான் -என்னக் கடவது இறே பெற்றத்தை –

பூர்வ சந்தர்ப்ப பிரக்ரியை இவர் தர்சிப்பித்து பேசினதே உள்ளது என்னும் இடத்தை அறிவிக்கிறார் மேல்-

நால் வேதம் கண்ட புராண ரிஷி மந்த்ர தர்சிகளை போலே இவரையும் ரிஷி முனி கவி என்னும்-சூரணை -47-

அதாவது
நால் வேதம் கண்ட புராண ரிஷி–நால் வேதம் கண்டானே -பெரிய திருமொழி-8-10-1–என்னும் படி
ஈஸ்வரன் தான் அடியிலே செய்தால் போல் நாலு வேதங்களையும் சாஷாத் கரித்து அஷ்டா தச புராணம் கர்த்தா சத்யவதீ ஸுத-என்கிற படி அஷ்டாதச புராணங்கள் உடைய ஆநு பூர்வியையும் தர்சித்துச் சொன்ன வேத வியாச பகவானை சொல்லுகிறது-நால் வேதம் கண்டான் -என்கிற இடத்தில் ஸ்வேன ரூபேண நின்று தர்சித்தமை அன்றிக்கே வியாச ரூபேண நின்று தர்சித்தமை தன்னைச் சொல்லுகின்றது இவருக்கு கருத்தாகவுமாம் சங்கீர்ண புத்தயோ தேவா பிரம ருத்ர புரஸ்ஸர சரண்யம் சரணம் ஜக்மு நாராயண மநாமயம்..தைர் விக்ஜ்ஞாபித்த கார்யஸ்து பகவான் புருஷோத்தம அவதீர்னோ மகா யோகி சத்யவத்யாம் பராசராத் என்றும்-கிருஷ்ண த்வைபாயனம் வியாசம் வித்தி நாராயண பிரபும் -என்றும் பகவத் ஏவச அவதாரயா பகவான் தானாக சொல்லக் கடவதிறே..–இப்படி இருந்துள்ள ஸ்ரீ வேத வியாச பகவானை வேதங்களின் பூர்வ சித்த அனுபூர்வியை தர்சித்து சொன்ன படியாலே தர்சநாத் ருஷி மனந சீலோ முனி கவி கிராந்த தர்சீ-என்கிற வர்தங்களை நினைத்துக் கொண்டு-ஸ்ரூயதாம் சிம்ஹனா தோயம் ருஷேச்தச்ய மகாத்மனா தர்மேச அர்த்தேச கர்மே ச மோஷே ச பரதர்ஷப -என்றும்-ஏவம் விதம் பாரதம் து ப்ரோக்தம் ஏன மகாத்மனா சோயம் நாராயணஸ் சாஷாத் வியாச ரூபீ மகா முனி –என்றும் சஷால் லோகான் பாவ்யமான கவி முக்ய பராசர்ய-என்றும்
ருஷி முனி கவி என்றும் சொல்லிற்று இறே–மந்த்ர தர்சிகள் ஆனவர்களை பூர்வ ஸித்த சந்தர்ப்பத்தை
சாஷாத் கரித்து சொன்னவர்கள் என்னும் இடம் தோற்ற நம ருஷிப்யோ மந்த்ர க்ருத்ப்ய -என்றும்
பகவான் சௌனக முனி -என்றும் இத்யாதிகளாலே ருஷி முனி என்று சொல்லிற்று இறே .-இவர்கள் விஷயத்திலும் கவி சப்த பிரயோகம் உண்டாகில் வந்த ஸ்தலங்களிலே கண்டு கொள்வது -ஆக இப்படி இவர்களை சொன்னால் போலே த்ராவிடமான இதின் பூர்வ ஸித்த அனுபூர்வியை சாஷாத் கரித்து பேசின இவ் ஆழ்வாரையும் –-ருஷிம் சுஷாமஹே கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் இவோதிதம்
சகஸ்ர சாகாம் யோத்ரா ஷீத் த்ராவிடீம் ப்ரஹ்ம சம்ஹிதாம்
–என்றும்-சடகோபம் முனிம் வந்தே சடானாம் புத்தி தூஷகம் , அஞ்ஞானம் ஜ்ஞான ஜனகம் திந்திரிணீ மூல சம்ஸ்ரயம் -என்றும்-உலகம் படைத்தான் கவி யாயினேற்கு -திருவாய்-3-9-10–என்றும் முன்பு உண்டான சந்தர்ப்பத்தை தர்சிப்பித்து பேசினவர் என்னும் இடம் தோற்ற ருஷி என்றும் ,முனி என்றும் ,கவி என்றும் சொல்லும் என்கை 

”நால் வேதங் கண்டானே”’ (திருமொழி 8 – 10 – 1) என்கிறபடியே நாலு வேதங்களைக்‌ கரை கண்ட வர்களையும்‌ அஷ்டாதஸ புராண கர்த்தாக்‌களையும்‌ “*சதுர் வேத தர்ஸநாத்‌ ருஷி:‘” என்கிறபடியே ருஷிகளென்றும்‌, ”ஜிதந்தே”” இத்யாதி, ஜிதந்தா- மந்த்ர தர்ஸிகளான சவ்நகாதிகளை முனிகளென்றும்‌, இதிஹாஸ கர்த்தாக்களான ஸ்ரீ வால்மீகி பகவான் போல்வாரை கவிகளென்றும்‌ சொல்லுமாப் போலே இவரையும்‌ ““ருஷிம்‌ ஜுஷாமஹே க்ருஷ்ண த்ருஷ்ணா தத்த்வமிவோதிதம்‌ | ஸஹஸ்ர ஸாகாம்‌ யோ த்‌ராஷீத்‌, த்‌ராவிடீம்‌ ப்‌ரஹ்ம ஸம்ஹிதாம்‌” (பரா.௮.) என்றும்‌, ““ஸட,கோபமுநிம்‌ வந்தே, ஸடாநாம்‌ புத்‌தி தூஷகம்‌ | அஜ்ஞாநாம்‌ ஜ்ஞாந ஜநகம்‌ திந்த்ரிணீ மூல ஸம்ஸ்ரயம்‌””’ (பரா. அ) என்றும்‌, “உலகம்‌ படைத்தான்‌ கவி” (திருவா. 3 – 9 – 10) என்றும்‌ சொல்லுகையாலே இவரையும்‌ ருஷி முனி கவி என்னும்‌ என்கிறார் –

வண்டார் பூ மா மலர் மங்கை மண நோக்கம்
உண்டானே உன்னை உகந்து உகந்து உன் தனக்கே
தொண்டானேற்கு என் செய்கின்றாய் சொல்லு நால் வேதம்
கண்டானே கண்ண புரத் துறை யம்மானே—8-10-1-
பிரளய காலத்திலே இவற்றின் உடைய ஆநு பூர்வியை ஸ்மரித்து இருந்து வெளி இடுகை -இறே இவற்றைக் காண்கை யாவது-நித்தியமான வேதத்தில் சாஷாத் காரத்துக்கு மேற்பட இல்லை இறே (ஆகவே படைத்தானே என்னாமல் -கண்டானே -சப்தங்கள் போனாலும் ஆனு பூர்வி அழியாதே )அன்றிக்கே பட்டர் அருளிச் செய்ததாக சிறியாத்தான் பணிக்கும் படி – இது கர்த்தரி அன்று -கர்மணி கிடாய் -என்று பிராப்ய பிராபகங்கள் இரண்டும் அவனே என்னும் இடத்தை யாயிற்று வேதங்கள் வெளி இட்டது –

ருஷிம் ஜுஷாமஹே க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வமிவோதிதம் |
ஸஹஸ்ர சாகாம் யோத்ராக்ஷீத் த்ராவிடீம் ப்ரஹ்ம ஸம்ஹிதாம் ||
–3-எந்த ஒரு முனிவர் – ஆயிரம் சாகைகள் உள்ள சாம வேதம் போலே ஆயிரம் பாசுரங்களை யுடையதான திராவிட ப்ரஹ்ம சம்ஹிதையை சாஷாத் கரித்தாரோ, ஸ்ரீ கிருஷ்ண பக்தியே வடிவு எடுத்து அவதரித்தது என்று சொல்லும்படியான அந்த ஸ்ரீ சடகோப முனிவரை ஸேவிக்கிறோம்!

சடகோப முநிம் வந்தே சடாநாம் புத்தி தூஷணம் |
அஜ்ஞாநாம் ஜ்ஞான ஜனகம் திந்த்ரிணீ மூல ஸம்ஸ்ரயம் ||–6
-குடில புத்திகளுடைய துர்ப்புத்தியைத் தொலைப்பவரும் – தீய மனத்தவர்களுடைய தீய மனத்தை கெடுத்து – அறிவில்லாதவர்களுக்கு நல்லறிவை நல்குமவரும் – அறிவிலிகளுக்கு மருவித் தொழும் மனமே தந்து – ஸ்ரீ திருப்புளி யாழ்வார் அடியிலே வீற்று இருப்பவருமான – இங்குத்தை வாழ்வே தமக்கு நிரூபகமாகக் கொண்ட ஸ்ரீ நம்மாழ்வாரை வணங்குகிறேன்!

நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய்ச்
சென்று சென்றாகிலும் கண்டு,சன்மம் கழிப்பான் எண்ணி,
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?–
3-9-10-ஸ்ருஷ்டிகள் பலித்ததில்லை என்று கை வாங்காதே மிகவும் ஒருப்பட்டு லோகங்களை உண்டாக்கினான் கவி ஆயினேற்கு-கவியாயினுக்கு
அவன் ஸ்ருஷ்ட்டி பலித்து அநந்யார்ஹனான எனக்கு என்றும் -கால தத்வம் உள்ளதனையும் வேறு சிலருடைய கவியில் எனக்கு அந்வயம் உண்டாகி தகுமோ-வேறு சிலர்க்கு கவியாக நான் தகு வேனோ என்றுமாம்-இப்போது பகவத் குணங்களை பாடி மேலும் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத – ஏதத் சாம காயன் நாஸ்தே-என்று பாடப் புகுகிற நான் வேறு சிலர்க்கு தகு வேனோ

இன்னமும் இதன் உடைய அநாதித்வ ஸூசுகமானது ஒன்றை தர்சிப்பிக்கிறார் மேலே-

படைத்தான் கவி என்ற போதே இதுவும் யதா பூர்வ கல்பனம் ஆமே-சூரணை -48-

அதாவது உலகம் படைத்தான் கவி –என்கையாலே ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் -என்கிற படியே
ஒருப் பட்டு மேன்மேலும் லோக சிருஷ்டியை பண்ணும் இடத்தில் ஸுூர்யா சந்திர மசவ் ததா எத பூர்வ மகல்பயத்––தைத்ரியம்-என்கிற படியே ஸ்ருஷ்ட்டி தோறும் சந்திர சூர்யாதி சகல பதார்த்தங்களையும்
யதா பூர்வ கல்பனமாய் வருமா போலே திராவிட வேதமான இப் பிரபந்தமும் ஸ்ருஷ்ட்டி தோறும் யதா பூர்வ கல்பனமாய் வரும் என்று தோன்றும் இறே
என்கை ..

‘ஒன்றி யொன்றி உலகம்‌ படைத்தான்‌ கவியாயினேற்கு’” (திருவா-3-9-10) என்று அடுத்தடுத்து ஜகத் ஸ்ருஷ்டியைப்‌ பண்ணினவனுக்குக்‌ கவி யானேன்‌ என்கையாலே “ஸுூர்யா சந்தரமஸெள ததா யத பூர்வ மகல்பயத்‌?” (தை. உ.) என்று ஸ்ருஷ்டி தோறும்‌ ஸூர்யா சந்த்‌ரமாக்கள்‌ உண்டானாப் போலே  ஸ்ருஷ்டி தோறும்‌ இந்த ப்ரபந்தமும்‌ உண்டென்னுமிடம்‌ தோற்றுகிறது. இத்தாலும்‌ இதினுடைய அநாதித்வம்‌ சொல்லுகிறது.

ஏவம் பூதமான இது பகவத் பிரசாதத்தாலே ஆழ்வாருக்கு சித்தித்து ,-ஆழ்வார் பிரசாத்தாலே இவ் அருகு உள்ளாருக்கு உப ஜீவ்யமாய் ,இவரை இட்டு நிரூபிக்கும் படியானமையை ச த்ருஷ்டாந்தமாக அருளி செய்கிறார் மேல்-ஆனால்‌ அதிகாரிகள்‌ ஸம்ஹ்ருதராக வேதம்‌ நித்யமானபடி என்‌ என்னில்‌, ஸர்வஜ்ஞனான ஸர்வேஸ்வரன்‌ நித்யனாகையாலே அவன் திருவுள்ளத்திலே வாஸனை கிடந்து ஸூப்த ப்ரபுத்‌த, ந்யாயத்தாலே ஸம்ஹாராநந்தரம்‌ “யோ ப்‌,ரஹ்மாணம்‌ விததாதி பூர்வம்‌ யோ வை வேதாம்ஸ் ச பரஹிணோதி தஸ்மை” (ஸ்வே.6 – 18) என்கிறபடியே ப்‌,ரஹ்மாவை உண்டாக்கி, அநந்தரம்‌ அவனுக்கு வேத ப்ரதாநத்தைப் பண்ண, ஸர்வேஸ்வரனோடே அத்‌யயநம்‌ பண்ணின அந்த ப்‌ரஹ்மாவானவன்‌ ஜ்யேஷ்ட புத்ரனான ருத்‌ரன்‌ தொடக்கமானாரை ஒதுவித்தாப் போலே ஸர்வேஸ்வரன்‌ இந்த த்‌ராவிட வேத ஸம்ஸ்காரத்தைத்‌ திருவுள்ளத்திலே வைத்து இவரை ஓதுவிக்க, இவரும்‌ தம் பக்கலில்‌ க்ருதஜ்ஞரான ஸ்ரீ மதுர கவிகள் போல்வாரை அத்‌யயநம்‌ பண்ணுவிக்க, இதுவும்‌ இவரை யிட்டு நிரூபிக்கும்படி யாய்த்து என்கிறார்‌-

உறக்கம் தலை கொண்ட பின்னை மறை நான்கும் உணர்ந்த தங்கள் அப்பனோடே ஓதின சந்த சதுமுகன் சலம் கலந்த வெண்புரி நூல் மானுரி திரி தந்து உண்ணும் காமன் உடல் இருக்கு இலங்கு
ஜ்யேஷ்ட புத்ராதிகளுக்கு மறை பயந்தாப் போலே-ஆதுமில் காலத்து எந்தையான வாய் முதல் அப்பன் பிரம குருவாய் இராப் பகல் முன் சொல்ல-கற்றனமே என்ற இவரும் நாவினால் நன்மையால் என்னும் ஓத வல்ல பிராக்களை கன்மின்கள் என்று சொல் பயிற்ற வேதம் ஓதுவார் ஒத்து ஆகையாலே ஆதர்வணாதிகள் போலே இதுவும் பேர் பெற்றது-சூரணை -49-

அதாவது
உன்னிய யோகத்து உறக்கம் தலை கொண்ட பின்னை-பெரிய திருமடல் -8- -என்கிற படியே சம்ஹ்ருதி சமயத்தில் நாம ரூப விவாகநர்ஹமாய் சதவஸ்தமாய் கிடந்த இத்தை ஸ்ருஷ்ட்டி காலம் வந்தவாறே
விபக்தம் ஆக்கி மகதாதி சகல தத்வங்களையும் அண்டத்தையும் சிருஷ்டித்து சதுர் முக சிருஷ்டிக்கு முன்னாக ஏகார்ணவத்திலே –இவை நல் வழியாய் கரை சேரும் விரகு ஏதோ -என்று அனுசந்திக்கை யாகிற யோக நித்தரை செய்த அனந்தரம்

உன்னிய யோகத் துறக்கம்‌ தலைக் கொண்ட பின்னை”’ (பெ. திருமடல்‌) என்கிறபடியே “ந ப்ரஹ்மா நேஸாநோ நேமே த்‌யாவாப்ரூதிவீ ந நக்ஷத்ராணி”’ (மஹோபநிஷத்‌) என்றும்‌, ““ப்ருதி வ்யப்ஸு ப்ரலீயதே” என்று தொடங்கி, “மஹாநவ்யக்தே லீயதே அவ்யக்தம் அஷரே லியதே அக்ஷரம்‌ தமஸி லீயதே தம? பரே தேவ ஏகீ பவதி” ‘(ஸு.உ.), “ஏகோ ஹ வை நாராயண ஆஸீத்‌” (ம.உ.) என்றும்‌, ““ஒன்றுந் தேவுமுலகுமுயிரும்‌ மற்றும்‌ யாதுமில்லாவன்று”” (திருவா. 4 – 10 – 1) என்றும்‌ சொல்லுகிறபடியே ஸகல தத்த்வங்களும்‌ அவர் பக்கலிலே ஏகீபவித்து ‘அப்ரஜ்ஞாதமலக்ஷணம்‌”‘ (மநு. 1 – 5) என்கிறபடியே நாம ரூப விபாகா நர்ஹமாய்‌ அவனை யிட்டு நிரூபிக்க வேண்டும்படி அவனெருவனுமேயாய்‌ மேல்‌ ஸ்ருஷ்ட்யாதி முகத்தாலே சேதநருடைய ரக்ஷண ப்ரகாரங்களைத்‌ திரு வுள்ளத்தோடே கூட்டுகிற தஸை யிறே ஸம்ஹாரமாவது.

தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும்———6
என்னும் இவையே முலையா வடிவமைந்த
அன்ன நடைய வணங்கேய் அடி இணையைத்—————7
தன்னுடைய அம் கைகளால் தான் தடவத் தான் கிடந்ததோர்
உன்னிய யோகத் துறக்கம் தலைக் கொண்ட—————8தான் கிடந்து –-ஸ்வதஸ்   சர்வஞ்ஞானாய் -ஒன்றால் ஒரு காலுஷ்யம் இன்றிக்கே இருக்கக் கடவ அவன்-இவள் உடைய ஸ்பரசத்தாலே  வந்த ஸூகத்தாலே இரண்டும் அறியாதே கிடந்தது உறங்கா நிற்கும் –தோர் உன்னிய யோகத் துறக்கம் தலைக் கொண்ட பின்னை   – அல்லாதார்க்கு முன்பே தானே நெஞ்சு இருண்டு இருக்கும் இ றே
அதுக்கு மேலே கண்ணைச் செம்பளித்தவாறே புறம்பு பிரகாசிக்கிற இதுவும் போய் இருளும் இறே –
இவனுக்கு அங்கன் ஒன்றும் இன்றியே திருக் கண்களை செம்பளித்தால் அகவாயில்
பிரகாசிக்குமதுக்கு வர்த்தமானாய் இருக்கும் –உன்னுகை –அனுசந்திக்கை –யோகத் துறக்கம் –
ரஜஸ் தமஸ் ஸூ க்களால் அபி பூதனாய்உறங்குகிறான் -அன்று-உறங்குவான் போல் யோகு செய்த பெருமான்
-திரு வாய் மொழி -5-4-11-யோக நித்தரை இறே அவை நல் வழியாக கரை சேரும் வகையதோ -என்று ஜகத் ரஷண சிந்தை பண்ணிக் கொண்டாயிற்று கண் வளர்ந்து அருளுகிறது –

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர்படைத்தான்

குன்றம் போல் மணிமாடம் நீடு திருக் குருகூரதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–4-10-1–தேவ ஜாதியும் அவர்களுக்கு இருப்பிடமான லோகங்களும் மனுஷ்யாதிகளான ஆத்மாக்களும் அண்டத்துக்கு அடியான மஹதாதிகளும் ஒன்றும் இல்லாத அன்று-ஒன்றும் தேவும் என்று தேவாதி காரியங்களுக்கு காரணத்திலே லயத்தை சொல்லுகிறது என்று ஒரு தமிழன் சொன்னான் அன்று,-கரண களேபரங்களை இழந்து அசித் விசிஷ்டமாய்க் கிடந்த அன்று நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்-சதுர்முகனோடு கூட தேவ ஜாதியையும் லோகங்களையும் மனுஷ்யாதி யாத்மாக்களையும் உண்டாக்கினான் – இவை அழிந்தது என்கிற இடத்தில் மஹதாதிகளையும் சொன்னார் –ஸ்ருஷ்டியில் ப்ரஹ்மா தொடக்கமாக சொன்னார் இதுக்கு கருத்து என் என்னில்-மஹதாதிகளிலே பரத்வ சங்கை பண்ணுவார் இல்லாமையால் பரத்வ சங்கை பண்ணுகிற இடமே பிடித்துச் சொல்லுகிறார் -அவர்கள் பக்கல் பரத்வத்தை கழிக்கைக்காக- சதுர்தச புவன சிரேஷ்டாவோடு -அவனாலே ஸ்ருஷ்டராய் நித்ய ஸ்ருஷ்டிக்கு கடவரான தச பிரஜாபதிகளோடு அவர்களுக்கு போக ஸ்தானமான லோகங்களோடு -அவர்களுக்கு குடி மக்களான மனுஷ்யாதிகளோடு வாசி அற படைத்தான்-போக மோக்ஷங்களை விளைத்து கொள்ளுகைக்காக கரணங்களைக் கொடுத்தான்

உறங்குவான் போல் யோகு செய்த பெருமானைச்
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
நிறங் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப்பத்தால்
இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ?–5-4-11—நம்மால் கார்யம் இல்லாத இவர்களால் கார்யம் என் -என்று லோகத்தாரை விட்டு -இத்தசையை விளைத்தவன் இவ்வளவில் செய்வது என் -என்று அவளை அனுசந்தித்தார் –ஜகத் ரக்ஷணார்த்தமாக திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளின படியை அனுசந்தித்து –இப்போது வாராமையாலே வெறுத்தோம் அத்தனை -நம்முடைய ரக்ஷண சிந்தை பண்ணிக் கிடக்கிறன் நம்மைக் கை விடான் -என்று இம் மஹா குணத்தை அனுசந்தித்து தரிக்கிறார்-கண் வளருகை என்று ஒரு பேராய்-ஜகத் ரக்ஷண உபாய சிந்தை பண்ணுகிற சர்வேஸ்வரனை

உணர்ந்தாய் மறை நான்கும் -இரண்டாம் திருவந்தாதி -48–என்கிற படியே-ஸூப்த பிரபுத்த ந்யாயத்தாலே ,சம்ஸ்கார கதமாய் கிடந்த நாலு வேதங்களையும் ஆநு பூர்வி தப்பாத படி ஸ்மரித்த –திசை முகனார் தங்கள் அப்பன் -என்கிற படியே தனக்கு ஜநகனான சர்வேஸ்வரனோடே-
யோ வை வேதாம்ச ப்ரஹனோதி தஸ்மை –ஸ்வேதாஸ்வர உபநிஷத்–என்னும் படி ஓதின –
சந்த சது முகன் –பெரியாழ்வார் திருமொழி-2-5-8–என்கிற படி சந்தசை நிரூபகமாக உடைய சதுர் முகன் –சலம் கலந்த செஞ்சடை –திருச்சந்த –113-வெண் புரி நூல் மார்வன் -முதல் திருவந்தாதி -46- –மானுரிய தளம் உடையவர் –பெரிய திருமொழி-10-9-4-பிறர் மனை திரிந்து உண்ணும் -திருக் குறும் தாண்டகம் -19-
காமன் உடல் கொண்ட தவத்தார் -நான்முகன்-78- இருக்கிலங்கு திருமொழிவா எண் தோள் ஈசர் -பெரிய திருமொழி-6-6-8- என்று நித்ய ஸ்நான உபவீத கிருஷ்ணாஜினதரான-பிஷான போஜன -இந்திரிய ஜெய -சதா அத்யயன – பரத்வங்களான பிராமச்சர்ய லஷண யுக்தனாய் -ப்ரஹ்மண புத்ராயா சேஷ்டாய – என்கிற படியே தனக்கு ஜேஷ்ட புத்ரனான ருத்ரன் முதலானார்க்கும் – சரணாம் மறை பயந்த -முதல் திருவந்தாதி-60–என்கிற படியே புருஷார்த்த தத் உபாய ஞான சாதனமான வேதத்தை ஒதுவித்தாப் போலே —

பின்னை ஸம்ஹாராநந்தரம்‌ யோக, நித்‌ராஸமா ரூடனாய் ஸ்ருஷ்ட் யுந்முகனான காலத்தில்‌  ““உணர்ந்தாய்‌ மறை நான்கும்‌’” (இ.திருவ.48) என்கிறபடியே நாலு வேதங்களையும்‌ ஸ்மரித்த “திசை முகனார்‌ தங்களப்பன்‌” (திருமொழி 2 – 2- 7) என்கிறபடியே தனக்குப்‌ பிதாவான ஸர்வேஸ்வரனோடே அத்‌யயநம்‌ பண்ணின.–முன்புள்ளவையை யிறே அத்‌யயநம்‌ பண்ணலாவதும்‌-ஸ்மரிக்கலாவதும்‌- ”சந்தச் சதுமுகன்‌” (பெரியா. 2 – 5 8) என்கிறபடியே ப்‌,ரஹ்மாவானவன்‌ ”சலங் கலந்த செஞ்சடை”, (திருச்ச. 113) “வெண் புரிநூல் மார்வன்‌”’(மு.திரூவ. 46) , ““மானுரியதளுமுடையவர்‌‘ (திருமொழி 10 9 – 5) , ““பிறர் மனை திரி தந்துண்ணும்‌”’ (திருக்குறு. 19) , ““காமனுடல் கொண்ட தவத்தான்‌”’ (நா.திருவ.. 79) , ““இருக்கிலங்கு திருமொழி வாய்‌ எண்டோளீசர்‌”’ (திருமொழி 6 – 6 – 9) என்றும்‌, நித்ய ஸ்நாந யஜ்ஞோபவித க்ருஷ்ணாஜிந தாரணமும்‌, பிக்ஷாசரணமும்‌, ஜிதேந்த்‌ரியத்வமும்‌, ஸதா அத்‌யயந பரத்வமுமாகிற ப்‌ரஹ்மசர்ய லக்ஷணத்தை உடையனாய்‌, “ப்‌ரஹ்மண? புத்ராய ஜ்யேஷ்டாய ஸ்ரேஷ்டாய”’ என்கிறபடியே ஜ்யேஷ்ட புத்ரனான ருத்ரன் முதலானார்க்கு சரணா மறை பயந்த தாமரையான்‌’‘ (மூ.திருவ. 60) என்று புருஷார்த்த, தத் ஸாதந ஜ்ஞாந ஸாதநமான வேதத்தை ஓதுவித்தாப் போலே

உணர்ந்தாய் மறை நான்கும் ஓதினாய் நீதி
மணந்தாய் மலர்மகள் தோள் மாலே -மணந்தாய் போய்
வேயிரும் சாரல் வியலிரு ஞாலம் சூழ்
மா யிரும் சோலை மலை——48–நாலு வகைப்பட்ட வேதங்களையும் ஸ்மரித்தாய்–பிரளய காலத்திலே இவை இழந்து கிடக்கிறபடி திரு உள்ளத்திலே பட்டு இவற்றை அடித் தொட்டும் யுண்டாக்க வேணும் என்று கோலி யருளி ஸூப்த பிரபுத்த ந்யாயத்தாலே மறந்தவன் நினைத்தால் போலே -உறங்கினவன் உணர்ந்தாப் போலே -மறைந்து கிடந்த வேதங்களையும் யுண்டாக்கினாய்–அந்த ஆனுபூர்வி தப்பாதபடி ஸ்மரிக்கையாலே- அபௌ ருஷேயத்வமும் நித்யத்வமும் எல்லாம் சித்தித்தது ஆய்த்து வேதத்துக்கு –வாக்யத்துக்கு பத நியதியோபாதியும் போருமாய்த்து -பதங்களில் வர்ண நியதியும் – வேதங்களும் தன்னோடு ஒக்க நித்யமாய்ப் பழையதாய் இருக்கையாலே பண்ணினான் என்னாதே உணர்ந்தான் என்கிறது-பூர்வே பூர்வேப்யோ வாச எத தூசு -காட்டகம் -3-9-50–உளன் சுடர் மிகு சுருதியுள் -என்றும் முது வேத முதல்வன் -திருவாய் 1-6-2- செப்பெட்டைக் கையிலே கொடுத்து நிதியைக் காட்டுமாப் போலே –

திங்களப்பு வானெரி காலாகித் திசை முகனார்
தங்களப்பன்
சாமியப்பன் பாகத்திருந்த வண்டுண்
தொங்கலப்பு நீண் முடியான் சூழ் கழல் சூட நின்ற
எங்களப்பன் எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-7–கார்ய வர்க்கத்துக்கு உப லஷணமாக சந்திரனையும் காரணமான பூத பஞ்சகத்துக்கு உப லஷணமாக நாலையும் சொல்லி இவற்றுக்கு அந்தராத்மாவாய் நிற்கிறான் என்றபடி -சதுர் முகனுக்கும் ஜநகன் ஆனவன் –

உந்தி எழுந்த வுருவ மலர் தன்னில்
சந்தச் சதுமுகன் தன்னைப் படைத்தவன்

கொந்தக் குழலை குறந்து புளி யட்டித்
தந்தத்தின் சீப்பால் குழல் வாராய் அக்காக்காய்
தாமோதரன் தன்  குழல் வாராய் அக்காக்காய் -2 5-8 – திரு நாபியிலே கிளர்ந்த அழகிய தாமரைப் பூவிலே உருவம்-அழகு –ஜகத் சிருஷ்டியில் வந்தால் தன்னோடு ஒக்க விகல்ப்பிக்கலாம்படி ஞான சக்திகளால் வந்த வைலஷண்யத்தை உடைய சதுர்முகனை சிருஷ்டித்தவன்-சந்தம் -அழகு–அன்றிக்கே
சந்தம் என்று சந்தஸை வேதத்தை தனக்கு நிரூபகமாக உடையவன் -என்னவுமாம்-

சலம் கலந்த செஞ்சடைக் கறுத்த கண்டன் வெண்டலைப்
புலன் கலங்க வுண்ட பாதகத்தன் வன் துயர் கெட
அலங்கல் மார்பில் வாச நீர் கொடுத்தவன் அடுத்த சீர்
நலம் கொள் மாலை நண்ணும் வண்ணம் எண்ணு வாழி நெஞ்சமே –113-கங்கா ஜலத்தை சாகல்யேந  தன்னுள்ளே அடக்கினதாய் -சிவந்த சடையையும் -ஷீராப்தி சமுத்திதமான விஷத்தாலே கறுத்த கண்டத்தையும் உடைய ருத்ரன் –கங்கா தரத்வமும் -நீல கண்டத்வமும் -இவனுடைய சக்திக்கு ஸூசகமாய் இருக்கிறது –சிவந்த ஜடை என்கையாலே -இந்த சக்தி சாதித்துப் பெற்றது என்கைக்கு ஸூசகம் –இப்போது இவனுடைய சக்தி சொல்லுகிறது என் -என்னில் – குரு பாதக ஹேதுவாய் இருந்துள்ள இந்த துர்மாநத்துக்கு அடி இந்த சக்தி என்கைக்காக –சத் பிரக்ருதிகளுக்கு உண்டான சக்தி சாத்விகருக்கு நிழல் ஆமாப் போலே துர்மாநிகளுக்கு உண்டானது பிறர்க்கும் பாதகமாய் இறே இருப்பது –

பண்புரிந்த நான்மறையோன் சென்னிப் பலியேற்ற
வெண் புரி நூல் மார்பன் வினை தீர புண் புரிந்த
ஆகத்தான் தாள் பணிவார் கண்டீர் அமரர் தம்
போகத்தால் பூமி யாள்வார் –46-அழகிய ஸ்வரத்தை யுடைத்தான வேதத்தைத் தரித்துள்ள ப்ரஹ்மாவினுடைய தலையை ருத்ரன் அறுத்தான் ஆய்த்து-லோக குருவுமாய் தனக்குப் பிதாவுமான அவனுடைய சிரஸை இறே சேதித்தது   –வாமாங்குஷ்ட நகாக்ரேண சிந்னம் தஸ்ய சிரோ மயா -என்கிறபடியே – அவனும் கபாலீத்வம் பவிஷ்யசி -என்று சபிக்கப்ரஹ்ம ஹத்யையாலே அத்தலை யோட்டிலே சிரகாலம் பிஷை புக்குக் கொடு திரிந்தான் ஆய்த்து –வெண் புரி நூல் மார்பன் வினை தீர –
பிராயச்சித்த வேஷத்தோடு கூட சர்வேஸ்வரன் உடைய முன்னே வந்து தோற்றினான் ஆய்த்து –விநீத வேஷத்தோடு ப்ராயசித்தியான படி – மூலை யடியே திரிந்தார் பாதகிகள் ஆனவாறே முழுகித் திரியுமா போலே இவனும் தேவியும் சண்டேஸ்வரனும் அப்படியே-வினை தீர –என்கிற இத்தால் இவனுடைய கர்ம வஸ்யத்வமும் தான் பண்ணின கார்யம் தனக்குப் பரிஹரிக்கப் போகாமையும் சொல்லுகிறது
இத்தால் ஈஸ்வரத்வ சங்கை இல்லை -என்கிறது –

மல்கிய தோளும் மானுரியதளும் உடையவர் தமக்குமோர் பாகம்
நல்கிய நலமோ நரகனைத் தொலைத்த  கர தலத்தது அமைதியின் கருத்தோ
அல்லியங் கோதை யணி நிறம் கொண்டு வந்து முன்னே நின்று போகாய்
சொல்லி யென் நம்பி இவளை நீ யுங்கள் தொண்டர் கைத் தண்டு என்றவாறே –10-9-4—பல தோள்களை உடையனாய் – மானுடைய தோல் என்னுதல் –அன்றிக்கே-மகானான ஆனையினுடைய தோலை உடையனாய் (மானுரியதளும்-மான் -மகான் -மான் யானை -இரண்டின் -உரி அதளும் )-தன் தபோ பலத்தாலே நான் கார்யம் கொள்ள வல்லேன் -என்று கொண்டு துர்மானத்தை உடையனாய் இருக்கிற ருத்ரனுக்கும் திரு மேனியிலே இடம் கொடுத்த சீலாதிசயத்தை நினைத்து இருக்கிறாயோ –

பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர் மனை  திரி தந்து உண்ணும்
முண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர்
உலகம் ஏத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால் மற்றை யார்க்கு உய்யலாமே -19–உளுத்து அளம் பற்றின சுவர் போலே
பொடி உதிருகிற தலையோட்டையைக் கையிலே ஏந்தி –முடை யடர்த்த சிரம் ஏந்தி -மூ வுலகும் பலி திரிவோன் -என்கிறபடியே நெடும் காலம் கையோட்டைக் கொண்டு திரிந்து இரந்து உண்டான் –வெந்தார் என்பும் சுடு நீரும் மெய்யில் பூசிக் கையகத்து ஓர்
சந்தார் தலை கொண்டு உலகு ஏழும் திரியும் பெரியோன் தான் சென்று என்
எந்தாய் சாபம் தீர் என்ன இலங்கமுது நீர் திரு மார்வில்
தந்தான் சந்தார் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே
—1-5-8-)

கண்டு வணங்கினார்க்கு என்னாம் கொல் காமன் உடல்
கொண்ட தவத்தான் குமை உணர்த்த
-வண்டலம்பும்
தார் அலங்கல் நீண் முடியான் தன் பேரே கேட்டு இருந்து அங்கு
ஆர் அலங்கல் ஆனமையால் ஆய்ந்து-78—மன்மதனுடைய உடலை நீறாக்கின தபஸ்ஸை யுடைய ருத்ரனுக்கு-மஹிஷியான உமையானவள் முறை மாறாடி அஞ்ஞான ஞாபனம் பண்ண-

முருக் கிலங்கு கனித் துவர் வாய் பின்னை கேள்வன் மன்னெல்லாம் முன்னவியச்  சென்று வென்றிச்
செருக் களத்து திறல் அழியச் செற்ற வேந்தன் சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர்
இருக் கிலங்கு திரு மொழி வாய் எண் தோள் ஈசற்கு  எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட
திருக் குலத்து வளச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –6-6-8–வேதத்தில் ஸ்ரீ புருஷ ஸூக்தாதிகளை உச்சரியா நின்றுள்ள வாயை உடையராய் எட்டுத் தோள்களையும் உடையராய் இருக்கிற தேவர்க்கு -(ருத்ரன் )-

சரணா மறை பயந்த தாமரை யானோடு
மரணாய மன்னுயிர் கட்கெல்லாம் அரணாய
பேராழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது
ஓராழி சூழ்ந்த வுலகு ———–60–எல்லாருக்கும் ஹிதத்தை சொல்லக் கடவதான வேதத்தை ஓதுவிக்கப் பட்ட ப்ரஹ்மாவோடு –-சரணா மறை பயந்த–என்றத்தை -அரணாய-என்றத்தோடே கூட்டி ஈஸ்வரனுக்கு விசேஷணம் ஆக்கவுமாம் –சரணா மறை பயந்த–அபிமத சித்திகளுக்கு அடைத்த உபாய பேதங்களை யுடைய வேதங்களை ஜகத்துக்கு ஓதுவிக்கும்-ப்ரஹ்ம விதாவான ப்ரஹ்மா மந்த்ர க்ருத் என்பது(ப்ரஹ்ம விதம் வர -ப்ரஹ்மத்தை அறிந்தவர்களின் ஸ்ரேஷ்டரான நான்முகன் )

ஆதுமில் காலத்து எந்தை-திருவாய் -3-3-4- –என்றும் –ஒன்றும் தேவும்-திருவாய் -4-10-1- -இத்யாதிப் படியே
ஒன்றும் இல்லாத சம்ஹார காலத்திலே-நாம ரூபங்களை இழந்தவோ பாதி-சத்தையும் இழந்து போகாமே எந்தையான முறையாலே தன் மேல் ஏறிட்டுக் கொண்டு நோக்கி-மீளவும் கரணாதிகளை தந்து , ஞான விகாசத்தை பண்ணின –வாய் முதல் அப்பன்-திருவாய் -7-9-3- -என்கிற வாய்த்த காரண பூதனான உபகாரகன்-பீதக வாடை பிரானார் பிரம குருவாக வந்து -பெரியாழ்வார் -5-2-8–என்கிற படியே தானே ஆசார்யனாய் –-இராப் பகல் ஓதுவித்து பெரியாழ்வார் -5-2-3–என்கிற படியே -திவாராத்ர விபாகம் அற-என் முன் சொல்லும் -திருவாய் -7-9-2–என்கிற படியே – முன் உருச் சொல்ல – திரு நாமச் சொல் கற்றனமே -திருவிருத்தம் -66–என்று அநூச்சாரணம் பண்ணினேன் என்று இப்படியே அவனோடு ஓதின இவரும்-

ஆதுமில்‌ காலத்தெந்தை”’ (திருவா. 3 – 4 – 4) என்கிறபடியே-சேதநாசேதநாத்மகமான ஸகல பதார்த்தங்களும்‌ வஸ்துத்வ-நாம பாக்த்வங்களை இழந்த காலத்தில்‌ இவற்றைத்‌ தன் பக்கலிலே ஏறிட்டுக் கொண்டு நோக்கி, “எந்தை” என்கிற படியே ஸ்வாமியா யிருக்கிறவன்‌. “என்‌ வாய் முதலப்பன்‌’‘ (திருவா. 7 – 9 – 3) எனக்கு வாய்த்த ப்ரதமோபகாரகன்‌ என்கிற. ““பீதகவாடைப் பிரானார்‌ பிரம குருவாகி’” (பெரியா. 5 – 2 – 8) என்கிறபடியே ஸர்வேஸ்வரன் தானே இவர் தமக்கு ஆசார்யனாய் வந்து ““எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப் பகலோதுவித்து”’ (பெரியா. 5 – 2 – 3) என்கிறபடியே திவா ராத்ரமோதுவித்து. இப்படி ஓதுவிக்குமிடத்தில்‌ “என்‌ முன்‌ சொல்லும்‌ மூவுருவாம்‌ முதல்வனே”’(திருவா. 7 – 9 – 2) என்கிறபடியே ஈஸ்வரன்‌ முன்னுருச் சொல்ல, “’திருநாமச் சொல்‌ கற்றனமே” (திருவிரு. 64) என்று அநூச்சாரணம்‌ பண்ணினேன்‌ என்று அவனோடே ஓதின இவரும்‌.

சாதி மாணிக்கம் என்கோ! சவி கொள் பொன் முத்தம் என்கோ!
சாதி நல் வயிரம் என்கோ! தவிவு இல் சீர் விளக்கம் என்கோ!
ஆதி அம் சோதி என்கோ! ஆதி அம் புருடன் என்கோ!
ஆதும் இல் காலத்து எந்தை அச்சுதன் அமலனையே.–3-4-4–எனக்கு ஒரு துணை அல்லாத சம்சார அவஸ்தையில் தன்னோடே உண்டான சம்பந்தத்தை அறிவித்தவன்-எனக்குத் தன்னைப் பெறுகைக்கு முதல் ஒன்றுமில்லாத காலத்திலே, தான் எந்தையான முறையை எனக்கு அறிவித்து, பின்பு ஒரு காலமும் நழுவ விடாதே பாதுகாத்து, இதுதான் என்பக்கல் ஒரு பிரயோஜனம் கொண்டன்றியே நிர்ஹேதுகமாகத் தன் பேறாகப் பாதுகாத்தவனை.

ஆ முதல்வன் இவன் என்று தன் தேற்றி என்
நா முதல் வத்து புகுந்து நல் இன்கவி
தூமுதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்
வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ!
–7-9-3–என்னை உபகரணமாகக் கொண்டு -கர்த்தாவும் தானேயாய் -கர்மீபவிப்பானும் தானே யானான்-எனக்கு வாய்த்த -காரண பூதனான -உபகாரகனை-இனி ஒரு நாளும் மறக்க உபாயம் இல்லை-

ஏதங்கள் ஆயின எல்லாம் இறங்க விடுவித்து என்னுள்ளே
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து
போதில் கமல வல் நெஞ்சம் புகுந்தும் என் சென்னித் திடரில்
பாத இலச்சினை வைத்தார் பண்டு அன்று பட்டினம் காப்பே -5- 2-8 –-ஸ்ரீ சர்வேஸ்வரத்வ சிஹ்னமுமாய் –
ஸ்ரீ புருஷோத்வ லஷணமுமாய் இருக்கும் திருப் பீதாம்பரத்தை உடைய சர்வேஸ்வரன்-ப்ரஹ்மத்தை உபதேசிக்கிறவன்-உத்பாதக ப்ரஹ்ம பித்ரோர் கரீயான் பிரமத பிதா –என்னக் கடவது இறே-ப்ரஹ்ம சப்தம் ஞான வாசி-ஈஸ்வரத் பிடார் கொண்டு திருத்த ஒண்ணாமல் ஆசார்யனாய் இறே திருத்துவது (மண் மிசை மாதவன் —-நண்ணறு ஞானம் தலைக்கொண்டது அண்ணல் ராமானுஜன் வந்து தோன்றிய அப்பொழுதே )

வயிற்றில் தொழுவைப் பிரித்து வன் புல சேவை அதக்கி
கயிற்றும் அக்கும் ஆணி கழித்து காலிடை பாசம் கழற்றி
எயிற்றிடை மண் கொண்ட எந்தை யிராப் பகலா ஓதுவித்து என்னை
பயிற்றிப் பணி செய்யக் கொண்டான் பண்டன்று பட்டினம் காப்பே -5- 2-3 –பிரளய ஆவர்ணத்திலே அகப்பட்டு கிடக்கிற பூமியை எடுத்தால் போலே – சரீர வச்யனான என்னை எடுத்த ஸ்வாமி –திவா ராத்ர விபாகம் அற-சர்வ காலமும் -என்றபடி –என்னை சிஷிப்பித்து –அதாவது –கர்ப்ப வாசமும் —இந்திரிய வச்யத்வமும் –கர்ம வச்யத்வமும் –யம வச்யத்வமும் – த்யாஜ்யம் என்னும் அத்தை அறிவித்து-தன்னுடைய சர்வ சேஷித்வத்தையும் – நிரதிசய போக்யதையும் – தமக்கு சேஷத்வம் ஸ்வரூபம் என்னும் இடத்தையும் ஆய்த்து -ஒதுவித்து–இத்தை அனுஷ்டான பர்யந்தமாக்கி – செய்யேல் தீ வினை ( திருவாய் -2-9-3 ) -என்று-ஓதுவித்த பிரயோஜனம் பெற்ற படி – நித்ய கைங்கர்யம் கொள்ளக் கடவோம் -என்று திரு உள்ளத்தாலே அறுதி இட்டு -கொண்டபடி –

என் சொல்லி நிற்பன்?என் இன்னுயிர் இன்று ஒன்றாய்
என் சொல்லால் யான் சொன்ன இன்கவி என்பித்துத்
தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன் என்
முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே.–7-9-2-
–அவன் முன்னே சந்தை இட பின்னே சொன்னேன் –தானே சொன்னான் ஆகில் ஸ்ரீ கீதை போலே வறமுறுகலாம் இறே –அது தானே ஏது போலே என்னில் த்ரி மூர்த்திகள் என்று தன்னையும் கூட எண்ணும் படி ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு அடியானால் போலேயும் -ப்ரஹ்மாவை ஓதுவித்து தேவர்களுக்கு வெளிச்சிறப்பு பண்ணி அத்தை அவன் தலையிலே ஏறிட்டால் போலேயும் -ருத்ரனுக்கு அந்தராத்மாவாய் நின்று திரிபுர தஹனம் பண்ணி அவன் தலையிலே ஏறிட்டால் போலேயும் தானே காரியம் செய்து பிறர் கையிலே ப்ரஸித்தியை ஏறிடுகை பண்டே ஸ்வபாவம் என்கை –

இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகளந்த
திருத் தாளிணை நிலத் தேவர் வணங்குவர் யாமுமவா
ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து கனியின்மையின்
கருக்காய் கடிப்பவர் போல் திருநாமம் சொல் கற்றனமே – -64–பூர்ண அனுபவம் பெறாமையாலே சத்தை கிடைக்கைக்காக அவன் திரு நாமத்தைச் சொல்லுகையை அப்யஸித்தோம் (இத்தனை ) என்றபடி-இல்லாமையால் கருக்காய் கடிப்பார் போல் ஆயிற்று- இவருடைய அபிநிவேசத்துக்கு திரு நாமம் –அவனைக் கண்ணாலே கண்டு கையாலே அணைக்க-ஆசைப்பட்டாருக்கு அவன் பேரைக் கொண்டு என் செய்வார்-அதிகாரம் இல்லை யாகிலும் திரு நாமம் மாத்ரம் சொன்னேன் – இத்தை வ்யாஜ்யமாக்கி நிர்ஹேதுகமாக கடாஷித்தான் என்றபடி –அவர்களைப் போல் பக்தி பரவசனாய் அனுபவிக்க பெறாமை இழந்தேன் என்றும் –அவர்கள் அனுபவிக்கும் விஷயத்தை கிட்டி அவத்யத்தை விளைத்தேன் என்றும் விஷாதத்திலே தாத்பர்யம்-

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் -என்று தொடங்கி– குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரிவன் -என்று ஸ்வாச்சார்ய பிரேமத்தையும்-நன்மையால் மிக்க நான் மறை யாளர்கள் புன்மையாய் கருதும் படியான என்னை அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையான் சடகோபன் -என்று க்ருதக்ஜைதையை முன்னிட்டு கொண்டு – ஓத வல்ல பிராக்கள்-திருவாய்-9-1-11- -என்று இத்தை அப்யசிக்க வல்ல உபகாரகர் என்னும் படி .. ஸ்ரத்தா பூர்வகமாக ஓதும் ஸ்ரீ மதுர கவிகள் போல்வாரை-கன்மின்கள் என்று உம்மை யான் -என்கிற படியே -இத்தை அப்யசி யுங்கோள்–என்று சொல்லி ,-சொல் பயிற்றிய -திருவாய்-9-5-8–என்கிற படியே -இச் சப்தத்தை அப்யசிக்க-வேதமானது -ஓதுவார் ஒத்து -என்று அத்யேதாக்களை இட்டு நிரூபிக்கபடுமது ஆகையாலே ,ஆதர்வணம் ,தைத்ரியம் காண்வம் என்று பேர் பெற்றால் போலே , இவர் இதுக்கு பிரதமாத்யேதாவனது கொண்டு -இதுவும் சடகோபன் சொல் -திருவாய்–1-2-11–என்று பேர் பெற்றது என்கை

‘நாவினால்‌ நவிற்றின்பமெய்‌தினேன்‌”’ (க.நு.சி. 2) என்று தொடங்கி ““குருகூர் நம்பிப் பாவினின்னிசை பாடித் திரிவன்‌”” என்றும்‌, “நன்மையால்‌ மிக்க நான்மறையாளர்கள்‌ புன்மையாகக்‌ கருதுவரா”ம் படியான “என்னை ஆண்டிடும்‌ தன்மையான்‌ சடகோபன்‌’‘ (க.நு.சி,4) என்கிற ப்ரதிபத்தியை யுடைய *ஓத வல்ல பிராக்களான ஸ்ரீமதுரகவிகள் போல்வாரை ““கன்மின்களென்றும்மை யான்‌ கற்பியா வைத்த மாற்றம்‌” (திருவா, 6 – 8 – 6) என்கிறபடியே இப் ப்ரபந்தத்தை அப்‌யஸியுங்கோள்‌ என்று ““சொல் பயிற்றிய நல் வளமூட்டினீர்‌”” (திருவா. 9 – 5 – 8) என்கிறபடியே சொல்லிச்‌ சொல்லுவிக்க, வேதமானது “’ஓதுவாரோத்தெல்லாம்‌ ‘? (திருவா, 3 – 1 – 6) என்கிறபடியே அத்‌யேதாக்களை யிட்டு, அதர்வணமென்றும்‌, தைத்திரீயம்‌ என்றும்‌ பேர் பெற்றாப் போலே இதுவும்‌ “சட கோபன் சொல்‌”” என்கையாலே ‘திருவாய்மொழி’ என்று பேர் பெற்றது 

ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே துணிந்து
தாது சேர் தோள் கண்ணனை குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீதிலாத ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும்
ஓத வல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே-9-1-11-–சம்சாரத்தின் தண்மையும்-ஈஸ்வரனே ப்ராப்ய ப்ராபகங்கள் என்றும் இறே இதில் சொல்லிற்று -இத்தை அப்யஸித்து நல்வழியே போமிது இறே உபகாரகராகை யாவது–அத்தை அப்யசிக்கைக்கு ஹேதுவான சரீர பரிக்ரஹம் பண்ணின காலமே பிடித்து நாதர் என்கிறார் –

என்மின்னு நூல்மார்வன் என்கரும்பெருமான் என்கண்ணன்
தன்மன்னு நீள்கழல்மேல் தண்துழாய் நமக்கன்றி நல்கான்
கன்மின்கள் என்று உம்மை யான் கற்பியா வைத்த மாற்றம் சொல்லிச்
சென்மின்கள் தீவினையேன் வளர்த்த சிறு பூவைகளே!–6-8-6—நீங்கள் அபேக்ஷியாது இருக்க -நான் சொல்லுங்கோள் என்று -ரஷ்யங்களான உங்களை -ரஷகை யான நான் -கற்பித்து வைத்த மாற்றம் -தண்துழாய் நமக்கன்றி நல்கான்-என்கின்ற மாற்றத்தை என்னுதல் –இதுவோ தக்கவாறு என்று கற்பித்த மாற்றத்தை என்னுதல்–அவனுக்கு மறுமாற்றத்துக்கு அவகாசம் இல்லாத படி -கிட்டினால் -என்று இராதே -வழியே பிடித்து சொல்லிக் கொண்டு செல்லுங்கோள்-

உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர்
குயிற் பைதல் காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்
தயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து சொல்
பயிற்றிய நல் வளம் ஊட்டினீர் பண்பு உடையீரே
–9-5-8—தயிரும் பழம் சோறும் -பாலும் வெஞ்சோறும் அவ்வவ காலங்களுக்கு உசிதமாகத் தந்து திரு நாமங்களை கற்பித்ததற்கு பிரதியுபகாரம் பண்ணினி கோள்-நல்ல சம்பத்தை புஜிப்பித்தி கோள் -நான் காலம் தோறும் உங்களுடைய ரக்ஷணம் பண்ணிப் போந்தேன் -நீங்களும் இவ்விடங்களில் நலிந்து போந்தி கோளே-

ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும்
சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிறிதில்லை
போது வாழ் புனந்துழாய் முடியினாய் பூவின் மேல்
மாது வாழ் மார்பினாய் என் சொல்லி நான் வாழ்த்துவனே -3-1-6-ஓதுவார் என்கையாலே -அதிகாரி வைவித்யத்தைச் சொல்லுகிறது – ருகாதி சதுர் வேதங்களும் அத்யேத்ரு பேதத்தாலே பிறந்த சாகா பேதங்களும் –ஆக அத்யேத்ரு பேதத்தால் சாகா பேதங்களாய்க் கொண்டு பிரி யுண்ட வேதங்கள் எல்லாம்

சேரத் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
சீர்த் தொடை யாயிரத்து ஒர்த்த விப்பத்தே –1-2-11-ஹிதம் -நன்மை சொல்ல என்று இழிந்து அஹிதத்தை -தீமையைச் சொல்லுவான் ஒருவன் வார்த்தை அன்று; ஆப்த தமரானவர் வார்த்தை என்கை.

ஆக –அத்யயன -சூரணை-37-இத்யாதி வாக்யத்தில் சந்தங்கள் ஆயிரம் என்று பிரஸ்துதமான திரு வாய் மொழியின் வேதத்வத்தை –எவ்வுலகத்து -சூரணை -39 -இத்யாதி வாக்கியம் தொடங்கி இவ்வளவாக சாதித்தார் ஆய்த்து-

–——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌ – 4-ஆசார பாதம்-4-ஸாஸ்த்ர தாத்பர்ய நிஷ்டாசாராதிகரணம்‌ -19-38-ஸூரணைகள் -ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

July 1, 2026

இனி மேல் இந்த சாஸ்திர நிஷ்டராயும்-தாத்பர்ய நிஷ்டராயும் இருக்கும் முமுஷுக்கள் படிகளைச் சொல்லுகிறது-இனி மேல்‌ ஸாஸ்த்ரோப லக்ஷிதமான பக்தி நிஷ்டனுடையவும்‌, தாத்பர்யோப லக்ஷிதமான பிரபத்தி நிஷ்டனுடையவும்‌ ப்ரதிபத்திகளைச்‌ சொல்லுகிறது 

சாஸ்திரிகள் தெப்பக் கரையரை போலே இரண்டையும் இடுக்கி பிறவிக் கடலை நீந்த -சாரஜ்ஞர் விட்டத்தில் இருப்பாரைப் போலே இரு கையும் விட்டு கரை குறுகும் காலம் எண்ணுவார்கள்-சூரணை-19-

அதாவது-ஆத்மா வா அரே த்ரஷ்டவ்யாஸ் ஸ்ரோதவ்ய மந்தவ்ய நிதித்யாசி தவ்ய–ப்ருஹதாரண்யம் –
ஆத்மேத் யேவோபாசீத–ப்ருஹதாரண்யம் – ஒமித் யாத்மானாம் த்யாயத-முண்டகம் – என்று சம்சார நிவ்ருத்தி பூர்வக பகவத் பிராப்தி சாதனமாக பகவத் உபாசனத்தை விதித்து அம்ருதஸ் யைஷ சேது-முண்டகம் – பலமதே உபபத்தே-ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -3-2-8– என்று பகவானே அதற்க்கு பல பிரதானனாகவும் சொல்லும் சாஸ்த்ரத்தில் நிஷ்டர் ஆனவர்கள்
ஆறு நீஞ்சுவார் தெப்பத்தை ஒரு கையிலே இடுக்கி தாங்களும் ஒரு கை துழாவுமா போலே
ஸ்வ யத்னமும் தத் சாத்திய பகவத் கிருபையும் ஆகிய உபயத்தையும் அவலம்பித்து கொண்டு -பிறவி கடல் நீந்துவார்க்கே -திருவாய் -2-8-1–என்கிற படியே சம்சார சாகரத்தை கடக்க தேட–ஸ்வ யத்ன நிஷேத பூர்வகமாக ஆத்மாவின் பகவத் ஏக உபாயத்தை பிரதி பாதிக்கிற சாஸ்திர சாரமான திரு மந்த்ரஜ்ஞர் ஆனவர்கள் ஓடம் ஏறினவர்கள் தீரகமனார்தமான ஸ்வ யத்னத்தையும் தெப்பத்தையும் கை விட்டு –கரை குறுவது எப்போது -என்று பார்த்து கொண்டு அதன் விட்டத்திலே இருக்குமா போலே சம்சார ஆர்ணவ மக்நாநாம் விஷயாக்ராந்த சேதஸாம் விஷ்ணு போதம் விநாநாந்யத் கிஞ்சித் அஸ்தி பாராயணம் –ஸ்ரீ விஷ்ணு தர்மம்-என்கிற படியே அக்கரையும் இக்கரையும் ஊடுருவ நின்று சம்சார சமுத்ரத்தை கடத்தும்
வைகுந்தன் என்பதோர் தோணியை-நாச்சியார் -5–4– சம்சார நிஸ்தாரமாகப் பற்றி-தத் ஞான சக்தியாதி அனுசந்தானத்தாலும் ஸ்வ பாரதந்த்ர்யாதி அனுசந்தானத்தாலும் நிர் பரர் ஆகையாலே இரண்டு கையும் விடுமா போலே ஸ்வ யத்ன ரூப உபாசனாதியையும் தத் சாத்திய பகவத் கிருபையையும்
அவலம்பிக்கையை விட்டு கேவல பகவத் கிருபையே உத்தாரகம் என்று அத்யவசித்து
கூவிக் கொள்ளும் காலம் இன்னும் குறுகாதோ
-திருவாய் -6–9–9 -என்றும்
ஆக்கை விடும் பொழுது எண்ணே–திருவாய் -1–2–9-என்று சொல்லுகிற படியே
பகவத் பிராப்தி ஆகிய கரையை குறுகைக்கு ஈடான கால சிந்தனை பண்ணா நிற்பார்கள் என்கை-இத்தால் சாஸ்த்ரஜ்ஞர் உடையவும் சாரஜ்ஞர் உடையவும் பிரபத்தி க்ரமம் சொல்லிற்று ஆயிற்று-

ஆறு நீஞ்ச வந்தவன்‌ தெப்பத்தை ஒரு கையிலே இடுக்கியும்‌, தானும்‌ ஓரு கையாலே நீஞ்சுமாப் போலே, பக்தி நிஷ்டனும்‌, ஸ்வ யத்நமும்‌ ஸ்வ யத்ந ஸாத்‌யமான பகவத் க்ருபையையுங் கொண்டு ”புணைவன்‌ பிறவிக் கடல்‌ நீந்துவார்க்கே”‘ (திருவாய்‌, 2 – 8 – 1) என்கிறபடியே ஸம்ஸார ஸாக,ரத்தைக்‌ கடக்கத்‌ தேடும்‌. (ஸாரஜ்ஞர்‌) தாத்பர்ய நிஷ்டரான ப்ரபந்நரானவர்கள்‌. (விட்டத்திலிருப்பாரைப்‌ போலே) ஆற்றின்‌ கரையேறிப்‌ போகிறவன்‌ அதில்‌ யத்நத்தில்‌ அந்வயமற்று விட்டத்திலிருக்குமாப் போலே ; ”விஷ்ணு போதம்‌ விநா நாந்யத் கிஞ்சிதஸ்தி பராயணம்‌?’ ( ) என்கிறபடியே அக்கரையோடு உருவ நின்று நடத்துகிற ‘*வைகுந்தனென்பதோர்‌ தோணி?” (நா. திரு. 5 – 4) என்கிற விஷ்ணு போதத்திலே இருந்து அவனுடைய ஜ்ஞாந ஸக்த்யாதி, கு,ணாநுபவத்தாலும்‌ ஸ்வ பாரதந்தர் யாநுஸந்தாநத்தாலும்‌ நிர்பரராய்‌ மேல்‌ உபாயதயா கர்த்தவ்ய மில்லாமையாலே, இரு கையும்‌ விட்டு – அசேதந க்ரியா கலாபத்தையும்‌ தத் ஸாத்‌யமான பகவத் க்ருபையையும்‌ விட்டு – கேவல பகவத் க்ருபையே தங்களுக்கு உத்தாரகம்‌ என்று அத்‌யவஸித்துக்‌ கரை குறுகும்‌ காலமெண்ணுவர்கள்‌.கூவிக் கொள்ளுங்கால மின்னம்‌ குறுகாதோ” (திருவாய்‌. 6 – 9-9) என்றும்‌, “ஆக்கை விடும் பொழுதெண்ணே’” (திருவாய்‌, 1 – 2 – 9) என்றும்‌ சொல்லுகிறபடியே ப்ராப்தியைச்‌ சிந்தித்திருப்பார்கள்‌,

அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்
புணர்வது இருவரவர் முதலும் தானே
இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே –2-8-1-–சம்சாரம் ஆகிறது ஒரு கடல் -அது நம்மால் கடக்க அரிது -ஒரு சர்வ சக்தியைப் பற்றி கடக்க வேணும் -என்று நினைப்பார்க்கு ப்ரதி பூவாய்த் தலைக்கு கட்டிக் கொடுக்கும் சர்வ பர நிர்வாஹகன் இறே– ப்ரதி பூ விஷ்ணு போதம் என்கையாலே தெப்பம் என்னவுமாம்

என்புருகி இனவேல் நெடும் கண்கள் இமை பொருந்தா பல நாளும்
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன்
அன்புடையாரைப் பிரிவுறு நோயது நீயுமறிதி குயிலே
பொன்புரை மேனிக் கருளக் கொடி யுடைப் புண்ணியனை வரக் கூவாய்–5-4—உகந்து அருளின நிலங்களிலே புக்கு அனுபவிக்கக் கோலி அங்கு அணைத்தல் வார்த்தை சொல்லுதல் செய்யக் காணாமையாலே அப்படிப் பரிமாறின அவதாரங்களிலே போய் அவை தீர்த்தம் பிரசாதித்து போகையாலே-பரத்வத்து அளவும் சென்று அவ்விருப்புத் தானும் பெரும் கடலுக்கு ஒரு மரத் தோணி போலே யாம்படியாக அபி நிவேசம் கரை புரண்டு அதனுடைய அலாபத்தாலே படுகிற அலமாப்பு இருக்கிறபடி –

ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?
தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ.–6-9-9-
–வரையாதே எல்லார்க்கும் கொடுக்கும் நிரதிசய போக்யமான திருவடிகளில் -அழைத்துக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ –விஷயாந்தர தர்சன மாத்திரத்திலே முடியும் படி யானாலும் அணித்தாகாதோ -தாவி வையம் கொண்ட -என்கிறது உபாய அம்சம் –தடந்தா மரைகள் -என்கிறது உபேய அம்சம் –கூவிக் கொள்ளும் காலம்-என்று தாம் சென்று காண்கை அன்றிக்கே தானே அழைத்துக் காட்டுகை முறையாகையாலே கிட்டும் பிரகாரம் சொல்லுகிறது-

ஒடுங்க அவன் கண் ஓடுங்கலும் எல்லாம்
விடும் பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே
–1-2-9—ஈச்வரோஹம் என்று இருக்கை தவிர்ந்து -அவனுக்குப் பிரகாரமாக அவன் அபிமானத்துக்கு உள்ளே அந்தர்பவிக்கவே-எல்லாம் விடும்
ஒடுங்கல் -ஒடுக்கத்தை பண்ணுமவை – ஆத்மாவுக்கு சங்கோசகங்களான அவித்யாதிகள் எல்லாம் போம் –ஒடுங்கல் -வந்தேறி யாய் -ஒடுங்கிக் கிடந்தவை என்னுமாம்-ஸ்வரூபாதி ரேகியாய் ஒடுங்கிக் கிடந்த அவித்யாதிகள் எல்லாம் போம்-எல்லாம் என்கையாலே -பஜன விரோதியோடு -பிராப்தி விரோதியோடு -வாசி அற சர்வமும் நசிக்கும் என்கிறது-பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே-
பின்பு சரீர அவசானமே விளம்பம் காமிநி தன் உடம்பில் அழுக்கைக் கழற்றி போகத்திலே அந்வயிக்க அவசர ப்ரதீஷியையாய் இருக்குமா போலே சரீர அவசானத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கை

இவர்களுக்கு இவ் ஆகாரங்கள் உண்டாகுகைக்கு அடி இன்னது என்கிறது-இவர்களுக்கு அவ்வதி,காரமுண்டாகைக்கு ஹேதுவான ஸ்வரூப ஜ்ஞாந தாரதம்யத்தைச்‌ சொல்லுகிறது

இவை ஸ்வரூபத்தை உணர்ந்து உணர்ந்து உணரவும் உணர்வைப் பெற ஊர மிக உணரவும் உண்டாம்-சூரணை -20-

அதாவது சாஸ்த்ரிகள் ஆனவர்களுக்கு-உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து
உருவியந்த இந் நிலைமை உணர்ந்து உணர்ந்து உணரிலும்
–திருவாய் -1-3-6- என்கிற படியே
ஆத்ம ஸ்வரூபத்தை ஜ்ஞப்த்தி மாத்ரம் அன்றிக்கே-நித்ய ஞான குணகமாய்-அந்த ஞானத்தாலே எங்கும் ஒக்க வியாபித்து-தேஹத்தில் காட்டில் வேறு பட்டு இருக்குமதாய்-அந்த ஜ்ஞாத்ருத்வ பலாயாத கர்த்ருத்வ போக்த்ருத்வ சஹிதமாய் பகவத் சேஷமாய் இருக்கும் என்று ஸ்ரவண மனனங்களாலே சாஷாத் கரிக்கவே ஸுவ யத்னத்தாலே சம்ஸார நிஸ்தரணம் பண்ண தேடுகை யாகிற இது உண்டாம்-சாரஞ்ஸ்தஞரானவர்களுக்கு ஆத்ம ஸ்வரூப வைலஷண்யத்தை தர்சிப்பைக்கு உடலாக
உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பினவும் பழுதே யாம் உணர்வை பெற ஊர்ந்து -திருவாய் -8–8–3-–என்கிற படியே வைஷயிக ஞானமும் பிராணனும் சரீரமும் மற்றும் பரிசேத்யமான பிராகிருதி விகாரங்களும் , பிரக்ருதியும் ஹேயம் என்னும் அறிவை பெரும் படி நிர்ஹேதுகமாக ஈஸ்வரன் நடத்த
மெய்ம்மையை மிக உணர்ந்து-திருமாலை -38 -என்கிறபடியே-ஆத்ம ஸ்வரூபத்தை-தேஹாதி விலக்ஷணமாய் ஞான ஆனந்த ஸ்வரூபமாய் ஞாத்ருவாதி குணகமாய் ததீய சேஷத்வ பர்யந்த தத் சேஷத்வ யுக்தமாய் தத் காஷ்டையான பார தந்த்ர்ய யோக்யதை ஏக வேஷமாய் இருக்கும் என்றே உணரவே ஸ்வ பரத்தை அவன் மேல் புகட்டு ஸ்வ யத்ன ரஹிதையராய் இருக்கிற இது உண்டாம் என்கை–இத்தால் இவர்கள் உடைய ஸ்வரூப ஜ்ஞான ஆகார தார தம்யமே கீழ் சொன்ன ஆகாரங்கள் இவர்களுக்கு உண்டாகுகைக்கு ஹேது என்றது ஆயிற்று-

(உணர்ந்துணர்ந்துணரவும்‌) ‘உணர்ந்துணர்ந்திழிந்தகன்று உயர்ந்து உருவியந்த இந் நிலைமை உணர்ந்துணர்ந்துணரிலும்‌’” (திருவாய்‌. 1 – 3 – 6) என்கிறபடியே ஆத்ம ஸ்வரூபத்தை ஜ்ஞப்தி மாத்ர மன்றிக்கே நித்ய ஜ்ஞாந குணகமாய்‌ தேஹேந்தரியாதி, விலக்ஷணனாகவும்‌, ஜ்ஞாதாவாகவும்‌, கர்த்தாவாகவும்‌ பகவச் சேஷமாகவும்‌ ஸ்ரவண மநநாதிகளாலே ஸாக்ஷாத்கரித்த ஸாஸ்த்ரிகளுக்கு அந்த வ்ருத்தி உண்டாம்‌. (உணர்வைப்‌ பெறவூர மிகவுணர்வுமுண்டாம்‌)‘உணர்வுமுயிருமுடம்பும்‌ மற்றுலப்பிலனவும்‌ பழுதேயாம்‌ உணர்வைப் பெறவூர்ந்து ” (திருவாய்‌. 8. 8.3) என்கிறபடியே தேஹேந்த்‌ரியாதிகளில்‌ வ்யாவ்ருத்தமான ஆத்ம ஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரிக்கும்படி நிர்ஹேதுகமாக ஈஸ்வரன்‌ நடத்த “மெய்ம்மையை மிக வுணர்ந்து’‘ (திருமாலை 38) என்கிறபடியே ததீய ஸேஷத்வ பர்யந்தமாக உணர ப்ரபந்நனுக்கு இந்த ப்ரதிபத்தி உண்டாம் –

உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உருவியந்த இந்நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும்
இறை நிலை உணர்வு வரிது உயிர்காள்
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே –1-3-6–உணர்ந்து உணர்ந்து -ஞாத்ருத்வ ஸ்வபாவனாகையாலே என்றும் ஓக்க உணருகையே ஸ்வபாவமாக உடையனாய்
இழிந்து அகன்று உயர்ந்து -அந்த ஞானம் நிஷ்க்ருஷ்ட வேஷத்தில் அபரிச்சின்னமாகையாலே தத் த்வாரா பத்து திக்கிலும் வியாபித்து-உருவியந்த -உரு வியந்த -ரூப யோக்கியமான அசித்தில் காட்டில் வேறு பட்டு இருந்த -இயத்தால்-வேறுபாட்டால் விலக்ஷணமாய் இருத்தல்-இந் நிலைமை-இந்த ஆத்மாவின் நிலைமையை -இந்நிலைமை என்று யுக்த பிரகார வைலக்ஷண்யம் ஆத்மாவுக்கு ஒழிய இல்லை என்கிற ஸம்ப்ரதிபத்தியைச் சொல்லுகிறது –-உணர்ந்து உணர்ந்து உணரிலும் – ஸ்ரவணத்தாலே உணர்ந்து -அதுக்கு மேலே மனனத்தாலே உணர்ந்து -யோகத்தால் சாஷாத் கரித்து உணர்ந்தாலும்-இறை நிலை உணர்வு வரிது -சர்வேஸ்வரன் ப்ரஹ்ம ருத்ரர்கள் நடுவே தன்னை மறைத்து நிற்கிற நிலை விவேகித்து அறிய அரிது–உயிர்காள்-சேதனர் ஆனபடியால் விவேகித்து அறியும் ஸ்வ பாவரானவர்களே-அரி அயன் அரன் என்னும் இவரை-அரி அயன் அரன் என்று பிரசித்த ரானவர்களை-உணர்ந்து உணர்ந்து –அவர்கள் குண விபூதியாதிகளை இட்டுப் பலகாலும் ஆராய்ந்து
உரைத்து உரைத்து –தத் ப்ரதிபாதகமான ப்ரமாணங்களையும் பலகாலும் வ்யவஹரித்துப் பார்த்துப் பார்த்து-மனப்பட்ட தொன்றே-நெஞ்சிலே ஈஸ்வரனாகப் பட்ட ஒரு வஸ்துவை – வ்யாஹரன் மாம் அநு ஸ்மரந்–என்கிறபடியே-உணர்ந்து உணர்ந்து -தத் குண விக்ரஹாதிகளைப் பலகாலும் அநு சந்தித்து
உரைத்து உரைத்து இறைஞ்சுமின் –தத் வாசகமான மந்த்ர நாமாதிகளைப் பலகாலும் வ்யவஹரித்து உபாசியுங்கோள் –

உணர்விலும் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறல் பொருட்டு என்
உணர்வினுள்ளே யிருத்தினேன் அதுவுமவன தின்னருளே
உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பினவும் பழுதேயாம்
உணர்வைப் பெற ஊர்ந்திறவேறி யானும் தானாய் ஒழிந்தானே–8
-8-3—உணர்வும்-வைஷயிக ஞானமும்
உயிரும்-பஞ்ச வ்ருத்தி பிராணனும் உடம்பும்-சரீரமும்-மற்று உலப்பினவும் -மற்றும் அபரிச்சேத்யமான மஹதாதி ப்ரக்ருதி விகாரங்களும் -ப்ரக்ருதியும்-பழுதேயாம்-உணர்வைப் பெற ஊர்ந்து–இவை ஹேயம் என்னும் அறிவை நான் பெறும்படி நடத்தி -தேரூர்ந்து என்னுமா போலே -இவை அபுருஷார்த்தம் என்னும் உணர்வு யுண்டு -மயர்வற்ற மதி -அத்தை நான் உடையேனாம் படி பண்ணி-இறவேறி-ப்ரக்ருதி ப்ராக்ருதங்கள் அபுருஷார்த்தம் என்னும் அளவே அன்றிக்கே முடிய போய் -ஞானானந்த ஸ்வரூபனாய் -நித்யனாய் -ஸ்வதஸ் ஸூ கியாய் இருக்கிற அளவும் செல்ல அறிவித்து-யானும் தானாய் ஒழிந்தானே––அவ்வளவிலும் பர்யவசியாதே –என்னைச் சொல்லும் சொல்லாலே தன்னைச் சொல்லலாம் படி தனக்கு பிரகார தயா சேஷம் என்னும் இடத்தைக் காட்டித் தந்தான் –அஹம் புத்தியும் அஹம் சப்தமும் தன்னளவும் செல்லும் படி பிரகார தைக வேஷமாய் இருக்கிறபடியைக் காட்டித் தந்தான் –தச்சப்தம் குண விசிஷ்ட வாசியானாவோ பாதி -த்வம் -சப்தமும் -அசித் விசிஷ்ட ஜீவ அந்தர்யாமி யாம் அளவும் காட்டக் கடவது இறே –

மேம் பொருள் போக விட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து
ஆம் பரிசறிந்து கொண்டு ஐம் புலன் அகத்தடக்கிக்
காம்பறத் தலை சிரைத்து உன் கடைத் தலை இருந்து வாழும்
சோம்பரை உகத்தி போலும் சூழ் புனல் அரங்கத்தானே–38–மெய்ம்மையை மிக உணர்ந்து –மெய் -என்கிறது ஆத்மாவை –மெய் -எனபது ஆத்மாவைக் காட்டுமோ -என்னில் —சத்யஞ்சா ந்ர்தஞ்ச சத்ய மவபவத் -என்கிற ஸ்ருதி சாயையால் அருளிச் செய்கிறார் –-சத்ய சப்தம் அசத்திய வ்யாவர்த்தியை சொல்லுகிறது அன்று ஆத்ம ஸ்வரூபத்தின் நித்யதையைச் சொல்லுகிறது –மெய்ம்மை -என்று முழுச் சொல்லாய் – பிரத்யக் விஷயத்தைச் சொல்லுகிறது – கைம்மை பொய்ம்மை -என்னுமா போலே-ஆக மெய்ம்மை -என்று – மெய்யான தன்மை -என்றபடி –மிக உணர்ந்து –தேகமே ஆத்மா என்று இருக்கும் லோகாயதிகன் அளவன்றிக்கே –தேகாதிரிக்தமாய்-ஸூயமாய் இருக்கும் ஆத்மா என்னும் மீமாம்சகன் அளவன்றிக்கே-ஜ்ஞானம் ஆகந்துகம் -என்னும் வைசேஷிகன் அளவன்றிக்கே –1-ஸுவயம் பிரகாசனாய்-2-நித்யனாய்-3-ஜ்ஞான குணகனாய்-4-அணு வாய்-5-ஈஸ்வரனுக்கு அனன்யார்ஹ சேஷமாய்-6-அது தான் ததீய சேஷத்வ பர்யந்தமாக உணருகை –
அதாவது ஆத்மாவை உள்ளபடி உணருகை –ஆம் பரிசறிந்து கொண்டு--பிரக்ருத ப்ராக்ருதங்கள் த்யாஜ்யம் -என்று அறிந்து மேலும் ஆத்மாவை உள்ளபடி உணர்ந்தால் – பின்னையும்-ஆம் பரிசு ஆவது –
கைங்கர்யமே யாய்த்து –-ஆம் பரிசு வர்த்திக்கும் படியை அறிந்து – ஆத்மா அபிமான ரூபமாக வாய்த்து வ்ருத்தி ஹேதுக்கள் தான் இருப்பது –தாசோஹம் -என்ற போது -கைங்கர்யமே வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –பிரகிருதி பிராக்ருதங்களில் சங்கோசம் போய் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்தால் சஹஜ கைங்கர்யமே இறே வ்ருத்தி ஹேதுவாவது –பிரகிருதி பிராக்ருதங்கள் த்யாஜ்யம் என்கிற ஜ்ஞானமும் –
ஆத்மா பகவத் பரதந்த்ரன் என்கிற ஜ்ஞானமும் பிராப்யம் கைங்கர்யம் என்கிற ஜ்ஞானமும் இறே சேதனனுக்கு வேண்டுவது –விடுவிக்கையும் பற்றுவிக்கையும் உபாய பூதனான ஈஸ்வரன் கார்யம் இறே –

ஆக-முனிவரை இடுக்கியும் -சூரணை -17 -என்று தொடங்கி இவ் வளைவாக சாஸ்திர தாத் பர்யங்களின்
விஷய பேதமும் அதிகாரி பேதமும் அவ் அதிகாரிகளின் பிரதி பத்தி பேதமும் அதுக்கு அடியான ஜ்ஞான ஆகார தார தம்யமும் சொல்லப் பட்டது-

ஸ்வரூப ஞானம் என்றும் ஸ்வரூப யாதாத்மா ஞானம் என்றும் ஆத்ம ஸ்வரூப விஷய ஞானத்திலே தார தம்யம் உண்டு இறே -அதில் பதிம் விச்வசஸ்ய-ஸ்ரீ புருஷ ஸூக்தம்- என்றும்-யஸ்யாஸ்மி என்றும்
நஹி விஜ்ஞாதர் விஜ்ஞாதேர் விபரிலோபோ வித்யதே ஞாநாத் யேவாயம்புருஷ -ப்ருஹதாரண்யம்-6-3-10–என்றும்-ஆத்மாவுக்கு பகவத் சேஷத்வத்தையும் ஜ்ஞாத்ருத்வத்தையும் சொல்லி-அந்த ஜ்ஞாத்ருத்வ கார்யமான போக்த்ருத்வ பிரயோஜனமாக-சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மண விபச்சிதா -தைத்ரியம் -என்று பகவத் அனுபவத்தையும் சொல்லுகிற சாஸ்திர முகத்தாலே ஸ்வரூபத்தை அறியும் அளவில் பகவத் சேஷத்வமும் பகவத் அனுபவ போக்த்ருத்வமும் இறே பிரகாசிப்பது-அந்த சாஸ்திர தாத் பர்யமான திரு மந்த்ரத்தில் உள் புக்கால் இறே பாரதந்திர போக்யதா ரூபமான ஸ்வரூப யாதாத்ம்யம் பிரகாசிப்பது-இதுவே ஸ்வரூப யாதாத்ம்யம் என்னும் இடத்தை அறிவிக்கிறார் மேல்-
(சேஷத்வம் -அகாரம்-லுப்த சதுர்த்தி -பரமாத்மாவுக்கே ஜீவாத்மா சேஷன் -சேஷத்வம் ஸ்வரூபம்-தாதரத்தே சதுர்த்தி- லுப்த சதுர்த்தி -போக்த்ருத்வம் மகாரம்-ஞாத்ருத்வம் -மன ஞானே–மன அவபோதனே-பாரதந்தர்யம் நம -போக்யதை-நாராயணாய நம -பிரார்த்தனா சதுர்த்தி இங்கு -அஹம் அன்னம் –அவன் -அந்நாதா –தட்டு மாறும் சீலம் காட்கரையிலே கொழிக்கும் சந்தன குசுமாதிகள் போலே நாராயணாய நம -என்றபடி )-இந்த ஸ்வரூப ஜ்ஞாநமும்‌ ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநமுமாகிற இவை யிரண்டும்‌ தன்னிலொக்குமோ என்னில்‌ ; ஒவ்வாது என்கிறார்‌

சேஷத்வ போக்த்ருத்வங்கள்-போல் அன்றே-பாரதந்திர போக்யதைகள்--சூரணை -21 –

அதாவது –சேஷத்வம் ஆவது இஷ்ட விநியோக அர்ஹதா மாத்ரம்-பாரதந்த்ர்யம் ஆவது சேஷிக்கு இஷ்டமான படியே விநியோகப் படுகை-கட்டிப் பொன் போலே சேஷத்வம்-பணிப் பொன் போலே பாரதந்த்ர்யம்-என்னக் கடவதிறே ஆகையால் சேஷ வஸ்துவை சேஷிக்கு இஷ்டமான படியே
விநியோகப் படுத்தும் அது பாரதந்த்ர்யம்
போக்த்ருத்வம் ஆவது ஜ்ஞாத்ருத்வ பலத்தாலே போக தசையிலே விளைகிற ரசங்களுக்கு தான் போக்தாவாகை-போக்யதை யாவது பதார்த்த கதமான ரச வர்ணாதிகள் போக்தாவுக்கு போக்யமாய் இருக்கும் போலே ஆத்ம கதமான ஜ்ஞானாதிகளும் ஈஸ்வரனுக்கே போக்யமாய் இருக்கை-ஆகையால் இஷ்ட விநியோக அர்ஹ மாத்ரமாய் சேஷத்வம் போல் அன்றே-இவ் வஸ்துவை சேஷிக்கு இஷ்டமான படி விநியோகப் படுத்தி கொடுக்கிற
பாரதந்த்ர்யம் போகத்தில் ஸ்வார்ததா புத்தி ஹேதுவான போக்த்ருத்வம் போல் அன்றே அந்த
போக்த்ருத்வத்தை சேஷி உடைய பிரிய உபயோகி ஆக்கிக் கொடுக்கிற போக்யதை
என்ற படி-

ஸேஷத்வமாவது – இஷ்ட விநியோக அர்ஹதா மாத்ரம்‌. பாரதந்தர்யமாவது – அந்த ஸேஷ வஸ்துவை ஸேஷிக்கு இஷ்ட மானபடி விநியோகப் படுத்திக்‌ கொடுக்குமது. போக்த்ருத்வமாவது – ரஸாரஸங்‌களுக்குத்‌ தானே போக்தாவாகை. போக்‌யதையாவது – பதார்த்த, கதமான ரஸ வர்ணாதிகள்‌ போக்தாவுக்கே போக்‌யமா யிருக்குமாப் போலே ஆத்ம கதமான ஜ்ஞாநாதிகளும்‌ ஈஸ்வரனுக்கே போக்‌யமாயிருக்கை, ஆகையால்‌ இஷ்ட விநியோக அர்ஹதா மாத்ரமான சேஷத்வம் போலே யன்றே, அத்தை இஷ்டமானபடி விநியோகப் படுத்திக்‌ கொடுக்கிற பாரதந்த்ர்யம்‌. ஸ்வ போகத்துக்கும்‌ ஹேதுவாயிருக்கிற போக்த்ருத்வம்‌ போலே யன்றே அந்த போக்த்ருத்வத்தை ஸேஷியினுடைய ப்ரியோப யோகி,யாக்கிக்‌ கொடுக்கிற போக்‌யதை.

இவ் அர்த்தத்தை ஸ்வரூப யாதாத்ம்ய பிரகாசமான திரு மந்த்ரத்திலே தர்சிப்பிக்கிறார்-

ஜ்ஞான சதுர்த்திகளின் மேலே இறே ஆநந்த ஷஷ்டிகளுக்கு உதயம்--சூரணை -22 –
(ஞான -மகாரம் -லுப்த சதுர்த்தி முன்னால்–போக்யதை -ஆனந்தம் -நாராயணாய அர்த்தம் -ஷ்ஷடி -நமஸ் -பாரதந்தர்யம் -சதுர்த்தி ஞானங்களுக்கு மேலே இறே ஷ்ஷடி ஆனந்தங்களுக்கு உதயம் என்று சொல்லாமல் —உத்கீத பிரணவத்தை பிரதமத்தில் மாறாடி-என்பதால் – அச்சு எழுத்து குறைவாக -அல்ப அக்ஷரம் பூர்வம் -என்பதாலும் -)

அதாவது ஆத்ம வாசியான ம காரத்திலே –மன – ஜ்ஞானே -என்கிற தாதுவிலே உதிதமாய்
போக்த்ருத்வ பிரகாசமாய் இருக்கிற ஜ்ஞானத்தின் மேலே இறே-அந்த மகார விவரண ரூபமாய் போக்யதா பிரகாசகமான சதுர்த்தியில்-ஆனந்தத்துக்கு உதயம்-பிரதம அஷரத்தில் சேஷத்வ வாசியான லுப்த சதுர்த்தியின் மேலே இறே பாரதந்த்ர்ய பிரகாசமான நமஸுக்கு உதயம் என்கை–இத்தால் ஆத்ம ஸ்வரூபத்தின் உடைய சேஷத்வ போக்த்ருத்வங்கள் உதித்து இருக்க செய்தே அதன் மேலே ஸ்வரூப யாதாத்ம்ய வேஷமாக உதித்தவை ஆகையாலே சேஷத்வ போக்த்ருத்வங்களில் -பாரதந்த்ர்ய போக்யதைகளுக்கு நெடு வாசி உண்டு என்றது ஆயிற்று–இந்த யோஜனைக்கு அல்பம் அனுபபத்தி உண்டு-ஷஷ்டி என்கிற இது -முக்ய விருத்தி யாலே ஆதல்-கௌன விருத்தியாலே ஆதல் நமஸை காட்டாமையாலே-ஷஷ்ட்யந்த பதம் என்கிறதை ஷஷ்டி என்று சொல்லிற்று ஆகாதோ என்னில்
அது சேராது –நமஸு இரண்டு பதம் ஆகையாலும் அதில் உத்தர பதமே ஷஷ்ட்யந்தம் ஆகையாலும் ..
ஆனால் செய்ய அடுப்பது என் என்னில் இன்னும் ஒரு யோஜனை சொல்லப் படுகிறது-
(ஞாத்ருத்வமும் போக்த்ருத்வமும் -தங்கள் விரோதிகளை -ஸ்வாதந்த்ரத்தையும் ஸ்வார்த்தத்தயா போக்த்ருத்வத்தையும் – உதிப்பத்தை சகிக்கும் -ஆனால் பின்பு தள்ளும் -ந -நிஷேதையாலே-
ஆகவே நமஸ் நாராயணாய நம என்று கூட்டி பொருள் என்றவாறே – சேஷத்வத்துக்கு மேலே ஸ்வாதந்தர்யம் உதிப்பதால் அது தாழ்வு –பாரதந்தர்யம் உயர்ந்தது என்றவாறு இத்தை விசாரிக்கவே ஸ்ரீ மா முனிகள் ஸ்ரீ மேல்கோட்டைக்கு எழுந்து அருளி ஸ்ரீ ஆய் ஸ்வாமிகளைக் கண்டு இருவரும் ஸ்ரீ திருக்குருகூருக்கு மீண்டார்கள் )அதாவது த்ருதிய அஷரத்திலே –மன -ஜ்ஞானே -என்கிற தாதுவிலே உதிதமாய் போக்த்ருத்வ பிரகாசமான ஜ்ஞானத்தின் மேலே இறே மகார விவரணமான சதுர்த்தியில்
சொல்லப் படுகிற போகத்தில் காகாஷி ந்யாயத்தாலே நமஸ் சப்தத்தாலே கழிக்க படுகிற ஸ்வ பிரயோஜனத்வ பிரயுக்தமான ஆனந்தத்துக்கு உதயம் பிரதம அஷரத்திலே சேஷத்வ வாசியான சதுர்த்தியின் மேலே இறே--நஜ்ஞாலே நிஷேதிக்க படுகிற ஸ்வ ரஷணே ஸ்வ பிரவ்ருத்தி ஹேது பூத
ஸ்வதந்த்ர்யா பிரகாசி யான ஷஷ்டிக்கு உதயம்
என்கை
இத்தால் சேஷத்வ பிரகாசமான சதுர்த்தியின் மேலே ஸ்வ ரக்ஷண ஹேது பூத ஸ்வதந்த்ர்ய வாசியான ஷஷ்டி உதிக்கையாலும் போக்த்ருத்வ பிரகாசமான ஜ்ஞானத்தின் மேலே போக ஸ்வார்ததா புத்தி மூலமான ஆனந்தம் உதிக்கை யாலும் சேஷத்வ போக்த்ருத்வங்கள் ஸ்வரூப விரோதி உதய சஹங்களாய் இருக்கும்-நமஸிலே பாரதந்த்ர்யம் உதித்த பின்பு ஸ்வ ரஷணே ஸ்வ யத்னம் நிவ்ருத்தம் ஆகையாலும் நமஸ் சப்த அனுக்ருஹீதையான-(நாராயணாயா நம )சரம சதுர்த்தியிலே ஈஸ்வரனுக்கு போக்யமாய் இருக்கையே ஆத்மாவுக்கு வேஷம் என்று தோற்றின பின்பு ஸ்வ பிரயோஜனம் நிவ்ருத்தம் ஆகையாலும் பாரதந்த்ர்ய போக்யதைகள் ஸ்வரூப விரோதி உதய சஹங்கள் அன்று .-ஆகையால் ஸ்வரூப விரோதி உதய சஹங்களான சேஷத்வ போக்த்ருத்வங்கள் போல அன்றே அத்தை சகியாத படி இருக்கும் பாரதந்த்ர்ய போக்யதைகள் என்றது ஆயிற்று-

ஆகையிறே போக்த்ருத்வ ப்ரகாஸகமாய்‌ “மந – ஜ்ஞாநே‘ என்கிற தாதுவிலே உதிதமான ஜ்ஞாநத்துக்கு மேலே அந்த மகார விவரண ரூபமாய்‌ போக்‌யதா ப்ரகாஸகமான சரம சதுர்த்தி யிலே ஆநந்தம்‌ உதித்ததும்‌, ஸேஷத்வ ப்ரகாஸகமான சதுர்த்தியின் மேலே பாரதந்த்ர்ய ப்ரகாஸகமான ஷஷ்டி, உதித்ததும்-

இப்படி ஸ்வரூப யாதாம்ய ஞான தசையில் தோற்றுகிற பாரதந்த்ர்யாதிகள் ஸ்வரூப ஞான தசையில் தோற்றுகிற சேஷத்வாதிகளை திரஸ் க்ருதமாக்கும் படி சொல்லுகிறது–இனிமேல்‌ இந்த ஸ்வரூப ஜ்ஞாநத்தினுடையவும்‌ ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநத்தினுடையவும்‌ அத்யந்த வைஷம்யம்‌ சொல்லுகிறது

முளைத்து எழுந்த சூர்ய துல்ய யாதாத்ம்ய சரமம் விதியில் காணும் பிரதம மத்யம தசைகளை
பகல் விளக்கும் மின்மினியும் ஆக்கும்-
–சூரணை -23 –- (பகல் விளக்கு வீண் –மின்மினி அல்பம் என்றவாறு )

அதாவது–முளைத்து எழுந்த திங்கள் தானாய்-திரு நெடும் தாண்டகம் -1—என்றும்-யதா சூர்யஸ் ததா ஞானம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -6–5–62- என்றும் சொல்லப் பட்ட ஸ்வரூப சாஷத்கார ஞானத்தின் உடைய யாதம்ய அவஸ்தையான சரமம் என்று ஸ்வரூப யாதாம்ய வேஷமாக பின்பு சொன்ன பாரதந்த்ர்ய போக்யதைகளைச் சொல்லுகிறது-ஸ்வரூப சாஷாத் கார ஞானத்திற்கு சந்த்ரனை திருஷ்டாந்தமாக ஆழ்வார் அருளிச் செய்தது தமக்கு பகவத் பிரசாத லப்தம் ஆகையாலே அயத்ன சித்தம் ஆகையாலும் அந்த ஞானம் தான் ஆஹ்லாத கரமாய் இருக்கையிலுமாம் இறே-இங்கும் உணர்வை பெற மிக ஊர உணர்வும் உண்டாம் -சூரணை -20 என்று இந்த ஸ்வரூப யாதாத்ம்ய ஞானம் பகவத் பிரசாத லப்தமாக இறே சொல்லிற்று-யதா சூர்யா -என்கிற இதில் ஸ்வ யத்னத்தாலே வந்த க்லிஷ்டதை தோற்றிற்று ஆகிலும இவ் இடத்தில் அது அவிவஷிதம் ஞானத்தின் உடைய பிரகா அதிசயம் சொல்லுகிற மாத்திரமே அபேஷிதம்–ஏவம்பூதமாய் இருந்துள்ள சாஷாத் காரத்தின் உடைய ஞானத்தின் உடைய
யாதாத்ம அவஸ்தையிலே பிரகாசிக்கிற பாரதந்த்ர்ய போக்யதைகள் ஆகிற சரமங்கள் –
ஸ்வரூபத்தை உணர்ந்து உணர்ந்து உணரவும்
-சூரணை -20 -கீழ் சொன்ன ந்யாயத்தாலே – விதியிலே காண்பார்– திருக் குறும் தாண்டகம் -18–என்கிற படியே சாஸ்திர விதி பிரகாரேன ஸ்ரவண மனநாதிகளாலே தர்சிக்க படுகிற பிரதம தசையான சேஷத்வத்தையும் மத்யம தசையான போக்த்க்ருத்வத்தையும் – பகல் விளக்கும் மின் மினியும் போலே அப்ரயோஜனமாகவும் அல்ப பிரகாசமாகவும் பண்ணும் என்கை –பிரண வோதிதமான ஸ்வரூபத்தின் உடைய யாதாத்ம்ய யத்வேன மத்யம சரம பதங்களிலே பின்பு உதிக்கும் அவை ஆகையாலே ,பாரதந்த்ர்ய போக்யதைகளை சரமங்கள் என்கிறது பிரதம அஷரத்தில் சதுர்த்தியிலே பிரதம ஏவ சேஷத்வம் உதிக்கை யாலும்
அநந்தரம் தத் ஆஸ்ரய வாசியான சரம அஷரத்தில் உத்தர பத த்வயத்தில் பாரதந்த்ர்ய போக்யதை உதயத்துக்கு முன்னே நடுவே ஜ்ஞாத்ருத்வ பலாயாத போக்த்ருத்வம் உதிக்கை யாலும் சேஷத்வ போக்த்ருதவங்களை பிரதம மத்திய தசைகள் என்கிறது--ஆக இவ் வாக்யத்தால் ஸ்வ யதன ஸ்வ பிரயோஜன கந்த அசகங்களாய் ஸ்வ சேஷி போகாத்யந்த அனுகூலங்களாய்க் கொண்டு ஸ்வரூபத்தை நிறம் பெறுத்தும் இப் பாரதந்த்ர்ய போக்யதைகள் இவ் ஆகாரங்கள் இல்லாத சேஷத்வ போக்த்ருதவங்களை திரஸ் க்ருதமாக்கி தானே மேலாய் இருக்கும் என்ற தாயிற்று-

முளைத்தெழுந்த திங்கள் தானாய்‌’” (திருநெடு. 1) என்றும்‌, *‘யதா ஸுூர்யஸ் ததா ஜ்ஞாநம்‌”‘ (வி. பு. 6 – 5 – 62) என்றும்‌, ஆஹ்லாத கரனாயும்‌, அதி ப்ரகாஸ கனாயுமிருக்கிற சந்த்‌ராதித்யர்களை யாதாத்ம்ய சரமமான பாரதந்த்ர்ய போக்‌யதா ஜ்ஞாதங்களுக்கு த்ருஷ்டாந்தமாக்குகையாலே பகவத் ப்ரஸாத லப்‌தமாகையாலே அயத்ந ஸித்‌த,மாய்‌, அதி ப்ரகாஸகமுமான அத்யந்த பாரதந்த்ர்ய போக்‌யதா ஜ்ஞாநங்களில்‌ பாரதந்தர்யம்‌ ஸேஷத்வ லக்ஷணமான இஷ்ட விநியோக அர்ஹதையை ஸ்வயமேவ நிரவஹித்துத்‌ தலைக் கட்டுகையாலும்‌, போக்‌யதையானது அசித்‌ வ்யாவ்ருத்தி லக்ஷ்ண மாத்ரமான போக்தருத்வத்தை சேஷியினுடைய ப்ரியோபயோகி,யாக்கிக்‌ கொடுக்கையாலும்‌ விதியில்‌ காணும்‌ ப்ரதம மத்‌யம தஸைகளை ”விளக்கினை விதியில்‌ காண்பார்‌” (திருக்குறு. 18) என்கிறபடியே ஸாஸ்த்ர முக,த்தாலே வந்த ஸ்ரவண மநதநாதிகளால்‌ காணப்படுகிற ப்ரதம தஸையான ஸேஷத்வத்தையும்‌, மத்யம தஸையான போக்த்ருத்வத்தையும்‌, அந்த பாரதந்தர்ய போக்யதைகள்‌ பகல் விளக்கையும்‌ மின்மினியையும் போலே்‌ அப்ரயோஜகமாகவும்‌ அல்ப ப்ரகாஸகமாகவும்‌ பண்ணும்‌ என்கிறார் –

மின்னுருவாய் முன்னுருவில் வேத நான்காய்
விளக்கொளியாய் முளைத்து எழுந்த திங்கள் தானாய்
பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப்பில்லாப்
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும்
பொன்னுருவாய் மணிவுருவில் பூதமைந்தாய்
புனலுருவாய் அனல் வுருவில் திகழும் சோதி
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தாய்
தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே—-1—விளக்கொளியாய் முளைத்து எழுந்த திங்கள் தானாய் –என்று –மந்தவ்ய நிதித்த்யாசிதவ்ய த்ரஷடவ்ய -என்கிற மனந நிதித்யாசன தர்சனங்களைச் சொல்லுகிறது –ஸ்ரோதவ்ய -மந்தவ்ய – நிதித்யாஸி தவ்ய -த்ரஷ்டவ்ய-ப்ருஹதாரண்யம்–விளக்கொளியாய் -முளைத்து எழுந்த திங்கள் தானாய் )முளைத்து – பர்வதாக்ரத்திலே தோன்றின சந்தரனைப் போலே தீப த்ர்ஷ்டாந்தத்தால் சொன்ன ஸ்ரவண ஜ்ஞானத்தில் காட்டிலும் பிரகாச ரூபமான மனந தசையைச் சொன்னபடி –எழுந்து – பர்வதாக்ரத்தை விட்டு ஆகாசத்தில் எழுந்த சந்தரனைப் போலே மனந அவஸ்தையில் காட்டிலும் அதி பிரகாசமான அநவரத பாவனையைச் சொல்லிற்றாயிற்று-திங்கள் தானாய் – சாஷாத் காரத்தைச் சொல்லுகிறது –
எங்கனே என்னில் – தானான திங்கள் -என்று – ஆகந்துகமான களங்கம்- இன்றியே இருக்கிற சந்த்ரனைச் சொல்லுகையாலே ஆகந்துகமான களங்கம் -பூமியினுடைய சாயை பிரதிபலிக்கையாலே –
சந்த்ர பிரபா ஸ்தானத்திலே ஆத்மாவுக்கு பிரபா ரூபமான தர்ம பூத ஜ்ஞானம் – பிரகிருதி சம்சர்க்கம் நேராக அற்று நிஷ்க்ர்ஷ்டமான ஆத்ம வஸ்துவைச் சொன்னபடி –நிஷ்க்ர்ஷ்ட ஸ்வரூபத்தைக் கண்டால் இறே- சாஷாத்காரம் சித்தித்ததாவது – சாஷாத்கார விசிசிஷ்ட ஆத்மா -சாஷாத்காரம் தந்தவன் -என்று -பரமாத்மா சாஷாத்காரம் – சந்திர த்ர்ஷ்டாந்தத்தாலே – சதி ஆஹ்லாதே -என்கிறபடியே ஆஹ்லாத ரூபம் தோற்றுகைக்காகவும் பகவத் பிரசாத லப்தம் ஆகையாலே அனாயாச சித்தியால் வந்த அம்லானதை தோற்றுகைக்காவும்-சந்திரனை த்ருஷ்டாந்திக்கிறார் –யதா ஸூர்யஸ் ததா ஞானம் -என்று
ஸூர்யனை த்ருஷ்டாந்தித்தது சந்திரனுக்கு ஸ்வ யத்னத்தால் வந்த க்லிஷ்டதை தோற்றுக்கைக்காக 

இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற் பாரே–18–தைல தாரை போலே அவிச்சிந்ந ஸ்ம்ருதி ஸந்தான ரூபமான பக்தியை பகவத் விஷயமாகப் பண்ணி-சுடர் விட்டு தோன்றலும் – இப்படி சுடர் விட்டு தோன்றும் ஜ்ஞானத்தாலே –வேதங்களாலே ஜோதி ரூபனாக பிரதிபாதிக்கப் பட்ட விளக்கை-சாஸ்த்ரங்களில் விதித்தபடியே உபாசித்து அவனைக் காண்பார் –என்றும் உளனாய் இருக்கிற சர்வேஸ்வரனை காண வல்லரே -காண -மாட்டார் -என்றபடி –அதவா – இப்படி யோக சாஸ்த்ரத்தில் சொல்லுகிறபடியே உபாசித்துக் காண்பாருக்கு காணலாம் -என்றுமாம் –அங்க பிரபத்தி இல்லாமல் காண மாட்டார் என்றபடி

இப்படி இருந்துள்ள ஸ்வரூப ஞானத்தையும் ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞானத்தை உடையவராய் சாஸ்த்ரிகள் -சூரணை -19 –இத்யாதி வாக்யத்தில் பிரவ்ருத்தி பரராயும் நிவ்ருத்தி பரராயும் சொல்லப் பட்ட அதிகாரிகளுக்கு பிரவர்த்த நிவர்தககங்கள் இன்னது என்கிறது மேல்-இந்நாலிலும்‌ வைத்துக் கொண்டு உபாஸகனுக்கு போக்த்ருத்வம்‌ உபாய ருப ப்ரவ்ருத்தி ஹேதுவாயிருக்கும்‌ ; ப்ரபந்தனுக்கு போக்‌யதை நிவருத்தி ஹேதுவாயிருக்கும்‌ என்கிறார்‌ மேல்‌

நாலில் ஓன்று பிரவர்தகம் ஓன்று நிவர்தகம்-சூரணை -24 –

அதாவது சேஷத்வ போக்த்க்ருத்வங்களும் பாரதந்திர போக்யதைகளும் ஆகிற நாலிலும் வைத்து கொண்டு சேஷத்வ போக்த்ருத்வங்களே ஆத்மாவுக்கு ஸ்வரூபம் என்று தர்சித்த சாஸ்த்ரஜ்ஞர்களை-
போக்த்ருத்வம் ஆனது போக்தாவனவன் போக்ய சித்திக்கு யத்னம் பண்ண வேண்டாவோ என்னும் நினைவாலே போக்ய பூத பகவத் விஷய லாப அர்த்தமான உபாய பிரவர்தியிலே மூள்விக்கும்--பாரதந்த்ர்ய போக்தைகளையே ஸ்வரூப யாதாம்ய வேஷம் என்று தர்சித்த சாரஜ்ஞரை
போக்யதை ஆனது -போக்தாவான ஈஸ்வரன் அன்றோ -ஸ்வ போக்யமான இவ் வஸ்துவை பெருகைக்கு யத்னம் பண்ணுவான் –தத் போக்ய பூதமான இவ் வஸ்துவுக்கு தல் லாபத்துக்கு யத்தனிக்க பிராப்தி இல்லை என்னும் நினைவாலே உபாய பிரவர்த்தியில் நின்று மீள்விக்கும் என்கை-

உபாயத்வ அனுசந்தானம் நிவர்த்தகம் – உபேயத்வ அனுசந்தானம் பிரவர்த்தகம் –ஸ்ரீ வசன பூஷணம் –சூர்ணிகை -87—உபாயம் -நினைக்க யத்னம் நீங்கும் –செய்யும் செயல்களில் உபாய பாவனை இல்லாமல் என்றும் -ஸாத்ய உபாயம் எண்ணியும் –உபேயம் புருஷார்த்தம் என்ற நினைவால் கைங்கர்யம் -அனைத்தையும் செய்ய வைக்கும் -ஸூ சரீர தியாக -ஸூ யத்னம் தானே –பாரதந்தர்ய தூஷணம் ஆகாதோ என்ன -உபாய அதிகாரிக்குத் தான் தூஷணம் -உபேய அதிகாரிக்கு இல்லை-பற்றுவது –கத்யார்த்தா புத்யர்த்தா மானஸ கார்யம் -பிரார்த்தனா மதி சரணாகதி – உபேய அதிகாரி வழு விலா அடிமை செய்ய வேண்டுமே -சென்றால் குடையாம் இத்யாதி-தோழி -தாயார் மகள் -சம்பந்தம் -தாயார் -உபேயத்தில் துணிவு தலை மகள் பாசுரம் –தூது விட்டது உபாயமாக என்று அஞ்சுவது தாயார் –ப்ராப்ய தவரையால் பண்ணலாமே –மோக்ஷ உபாயம் தப்பு கால விளம்பம் கூடாது என்பதற்காக பண்ணலாமே உபாயத்வ அநு சந்தானம் நிவர்த்தகம் -என்றது – வைதமாய் வரும் தசையில் -தேக த்யாக ரூப பிரவ்ருத்தியில் உபாயத்வ அநு சந்தானம் நடக்கையாலே -அவ் அனுசந்தானம் இவனை சாதனதயா சம் பிரதிபன்னமான இத் தேக த்யாக ரூப பிரவிருத்தியில் நின்று மீளுவிக்கும் -என்றபடி –
உபேயத்வ அநு சந்தானம் பிரவர்தகம் -என்றதுராக பிராப்தமாய் வரும் தசையில் -இவ் விஷயத்துக்கு ஹானி வரக் கண்டு இருப்பதில் -முடிகையே நல்லது என்று –தேகத் த்யாகம் தன்னை புருஷார்த்தமாக அநு சந்திக்கையாலே -அவ் அனுசந்தானம் இவனை அதிலே மூளுவிக்கும் என்றபடி —
அன்றிக்கே – வைதமாய் வரும் போது -பகவத் விஷயத்தில் உபாயத்வ அநு சந்தானம் இதுக்கு(தேகத் த்யாகத்துக்கு ) நிவர்தகமாம் – ராக பிராப்தமாய் வரும் போது-அவ் விஷயத்தில் உபேயயத்வ அனுசந்தானம் இதுக்கு பிரவர்தகமாம் என்னவுமாம் –

ஆனால் சேஷத்வ போக்த்க்ருத்வங்கள் இவர்களுக்கும் உண்டே-அவை செய்வது என்ன என்ன சொல்லுகிறது மேல்-ஆனால்‌ இந்த ஸேஷத்வ போக்த்ருத்வங்க ளிரண்டும்‌ இவனுக்குச்‌ செய்யும்படி என்‌ என்னில்‌ ; இவனுடைய வ்ருத்திக்கு அநு ரூபமாயிருக்கும்‌ . என்னுமிடத்தைச்‌ சொல்லுகிறது மேல்‌

முற்பாடர்க்கு க்ரிய அங்கம் ஆனவை இரண்டும் செயல் தீர்ந்தார் வ்ருத்தியிலே ஸ்வ நிர்பந்தம் அறுக்கும்-சூரணை-25 –

(கர்ம யோகத்துக்கு அங்கங்களே சேஷத்வமும் போக்த்ருத்வமும்-செய்த வேள்வியர் -செயல் தீர்ந்தார்
வ்ருத்தி -கைங்கர்யம்
போகத்தில் தட்டு மாறும் சீலம் காட்கரையில் கொழிக்கும்-அடுத்த திருவடியை நீட்டினாரே ஆழ்வார்-பேரக்குழந்தை காலை தாத்தா கன்னத்தில் அடித்துக் கொள்ளுமாறு –-ஸ்ரீ பெரிய நம்பி ஸ்ரீ ராமானுஜர் ஐதிக்யமும் உண்டே-படியாய்க்கிடந்து பவளவாய் காண வேண்டுமே -எதிர் விழி கொடுக்கும் பாரதந்தர்யம் –-போக்த்ருவத்துக்கும் விநியோகம் உண்டே-அவன் அனுபவத்துக்கு உறுப்பாகும் -)அதாவது சாஸ்த்ரஜ்ஞர்கள் -என்று சொல்லப் பட்ட உபாசகருக்கு போக்த்க்ருத்வம் ஆனது போக்ய சித்திக்கு உடலான யத்னத்திலே மூட்டுகையாலும்-அது தான் ஆத்ம ஞான பூர்வகமாக யத்தனிக்க வேண்டுகையாலே சேஷத்வமும் அதுக்கு உறுப்பாகையாலும்-உபாசன பிரதம பாவியான -கர்மத்துக்கு உத்பத்தியிலே சக கரித்துக் கொண்டு தத் அங்கங்களாய் இருக்கிற அவை இரண்டும்
செயல் தீர சிந்தித்து வாழ்வார்-நான்முகன் -88- (போக்யம் என்று அறிந்து -சிந்தித்து செயல் தீர்ந்தார் -)-என்கிற படியே இவ் ஆத்மா செய்யக் கடவது ஒன்றும் இல்லை-எம்பெருமானே நிர்வாககன் -என்று அனுசந்தித்து உபாய ரூப ப்ரவர்தியிலே நிவ்ருத்தரான பிர பன்னருடைய கைங்கர்ய ரூப பிரவர்த்தியில் அவன் உகப்பை பின் செல்லும் அது ஒழிய தங்கள் நிர்பந்தத்தை தவிர்க்கும் என்கை-பரகத அதிசய ஆதான இச்சையா உபாதேயத்வ மேவ யஸ்ய ஸ்வரூபம் ச சேஷ (-சேஷத்வ லக்ஷணம் ஸ்ரீ பாஷ்யகாரர் ஸ்ரீ ஸூக்திகள் )- என்கிற படியே –பரகத அதிசய கரத்தவ ரூபமான சேஷத்வம்
ஸ்வ ஆஸ்ரயா இச்சையா வரும் ஸ்வ நிர்பந்தத்தை தவிர்க்கும்
இறே–இனி போக்த்க்ருத்வம் ஸ்வ நிர்பந்தத்தை தவிர்க்கை யாவது பாரதந்த்ர்ய போக்யதா ஞானம் பிறந்தவன் உடைய போக்த்க்ருத்வம்
ஆகையாலே ,ஸ்வ ரசத்துக்கு உடல் அன்றிக்கே ,சேஷி ரசத்துக்கு உடலாய் இருக்கை.
.-ஆனந்தம் அவன் ப்ரீதியை துளிர் எழுப்ப – என்கிற படியே இவனுடைய போக்த்க்ருத்வம் சேஷியானவன் ப்ரீதிக்கு வர்தகமாய் இறே இருப்பது-ஆகை இறே –அஹம் அன்னம் அஹம் அன்னம் -தைத்ரியம்-என்று ஸ்வ போக்யதையை முன்னிட்டு சேஷியை உகப்பிக்க இழிந்தவன் அஹம் அந்நாத-தைத்ரியம் -என்று ஸ்வ போக்த்க்ருத்வத்தையும் புரஸ் கரிக்கிறது-இப்படி அல்லாத போது ஒரு சேதனனோடு அனுபவித்ததாய் இராது இறே-இவற்றை எல்லாத்தையும் உள் கொண்டு ஆய்த்து — வ்ருத்தியிலே ஸ்வ நிர்பந்தம் அறுக்கும் –என்று அருளி செய்தது-

‘முற்பாடர்‌’ என்று சொல்லப்‌பட்ட உபாஸகர்க்கு (க்ரியாங்க, மானவை, இரண்டும்‌) கர்மத்துக்கு, அங்கமான ஸேஷத்வ போக்த்ருத்வங்க ளிரண்டும்‌ ; கர்மத்துக்கு யோக்‌யதாபாதகங்களான ஸேஷத்வ போக்த்ருத்வங்கள்‌ ; இப்படி இருக்கிற இவற்றைச்‌ சொல்லுவான்‌ என்‌ என்னில்‌ ; போக்த்ருத்வமாவது – போக்‌ய ஸித்‌திக்கு அடியான யத்நத்திலே மூட்டுகையாலும்‌, ஸேஷத்வம்‌ அதில்‌ ஆத்ம ஜ்ஞாநம்‌ முன்னாக ப்ரவர்த்திக்க வேண்டுகையாலும்‌, அந்த சேஷத்வ போக்த்ருத்வங்கள்‌ ஸாதந ப்ரதம பாவியான கர்மத்தினுடைய உத்பத்தியிலே ஸஹ கரிக்கையாலும்‌ அவற்றை க்ரியாங்கம்‌ என்கிறது –
இப்படிப்பட்ட ஸேஷத்வ போக்த்ருத்வங்கள்‌ (செயல் தீரந்தார்‌ வ்ருத்தியில்‌) “செயல்‌ தீரச் சிந்தித்து வாழ்வாரே வாழ்வார்‌”? (நா. திருவ. 88) என்கிறபடியே உபாய ரூப ப்ரவ்ருத்தியில்‌ ஸ்வரூப பாரதந்த்ர்யத்தாலே நிவ்ருத்தரான ப்ரபந்தருடைய, வ்ருத்தியில்‌ – கைங்கர்ய வ்ருத்தியிலே என்றபடி. (ஸ்வ நிர்பந்த, மறுக்கும்‌)-ஸ்வ போக்த்ருத்வ ப்ரதிபத்தியையும்‌, மதீயத்வ ப்ரதிபத்தியையும்‌ தவிர்க்கும்‌. எங்ஙனே என்னில்‌ ; இவனுடைய போக்த்ருத்வம்‌ அவனுடைய போகத்துக்கு வர்த்தகமாயிருக்கும்‌, * அஹமந்நம்‌ என்ற பின்பு ‘‘அஹமந்தாத.:” என்றது – போக்த்ருத்வமிறே, இப்படிச் சொல்லாத போது ஒரு சேதநனோடே அநுபவித்ததா யிராதிறே ; இவனுடைய ஸேஷத்வமும்‌ அத் தலைக்கு அதிஸய கரமாயிருக்கும்‌, “*பரகத-அதிஸய-ஆதநேச்சயா உபாதேயத்வமேவ யஸ்ய ஸ்வரூபம்‌ ஸ ஸேஷ:”, ‘“யதேஷ்ட விநியோகர்ஹம்‌ ஸேஷ ஸப்தேந கத்‌யதே”, “ஈஸ்வரேண ஜகத் ஸர்வம்‌ யதேஷ்டம்‌ விநியுஜ்யதே” என்னக் கடவதிறே

போகத்தில் தட்டு மாறும் சீலம் காட்கரையிலே கரை அழிக்கும்–சூரணை -178-அதாவது
இப்படி போக்ய பூதரான ஆழ்வாருடன் கலந்து பரிமாறும் இடத்தில் – ஆள் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயன் –திருவாய்-9-6-7–என்றும் – ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது -திருவாய்-9-6-9–என்றும் பேசும்படி அத் தலை இத் தலையாய் சேஷி சேஷ பாவம் மாறாடும் சீல குணம் –காட்கரையிலே கரை அழிக்கும்-அதாவது–திரு காட்கரை மருவிய மாயன் தன் மாயம் நினை தொரு-திருவாய்-9-6-1- -என்று
வித்தராய்ப் பேசின திருகாட்கரையிலே கரை அழியப் பெருகும் என்கை — கரை அழிக்கும் என்கிறது -காட்கரை -என்கிற சமாதியாலே .–நம் கண்ணன் கள்வங்கள்-என்னில் முன்னம் பாரித்து என்னை முற்றம் பருகினான் –-கீழே என் உயிர் தான் உண்டான் -இங்கு பருகினான் -பெருமானுடைய உண்ணும் சோறு பருகும் நீர் இருக்கும் படி -தட்டு மாறும் சீலம் – ஆராவமுத ஆழ்வார் திருமழிசைப் பிரான் -அங்கும் தட்டு மாறிற்றே -)

செடியாய வல் வினைகள் தீர்க்கும் திரு மாலே!
நெடியானே! வேம்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தது இயங்கும்
படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே –4
-9-அநந்ய பிரயோஜனரும் – பிரயோஜனாந்தர பரரும்- அந்ய பரரும் கிடந்தது சஞ்சரியா நின்றால் ஒரு நினைவுற்று அசேதனவத் கிடக்க வேணும்-பார தந்த்ர்யத்துக்கு அசேதன சமாதியாகவும் வேணும் – அது புருஷார்த்தமாகைக்கு காணவும் வேணும்

உயிர் கொண்டு உடல் ஒழிய ஓடும் போது ஓடி
அயர்வு என்று தீர்ப்பான் பெயர் பாடி -செயல் தீரச்
சிந்தித்து வாழ்வாரே வாழ்வார் சிறு சமயப்
பந்தனையார் வாழ்வேல் பழுது-88-ஆத்மா சரீரங்களை விட்டு பிராணன்களைக் கொண்டு யமபடராலே ப்ரேரிதனாய் போம் போது- ஆளிட்டு அந்தி தொழ ஒண்ணா தாப் போலே ஆஸ்ரிதரை ஆளிட்டு அழைத்துக் கொள்ளாதே- தானே ஓடி வந்து இவர்கள் தர்சனத்தாலே வந்த அறிவு கேடு முதலான துரிதங்களை எல்லாம் போக்குமவன் திரு நாமத்தை ப்ரீதியோடு சொல்லித் தனக்கு ஒரு சாத்யம் இல்லாத படி  அனுசந்தித்து வாழ்வாரே வாழ்வார்-செயல் என்று கர்மா ஆகவுமாம்
இவ்வாத்மா தான் செய்யக் கடவ ஷூத்ர சமயம் ஆகிற பந்தத்தை யுடையார் வாழ்வு வ்யர்த்தம்
துக்க ஹேதுவான அஹங்கார மமகார கர்ப்பமாகையாலே பந்தகமாய் ஷூத்ர மான கர்மாத் யுபாய பேதங்களைப் பற்றினார்க்கு ஒரு பிரயோஜனமும் இல்லை – அந்வய வ்யதி ரேகங்களாலே இவற்றுக்கு உபாயத்வம் முதலிலே இல்லை என்று உள்ளபடி யுணர்ந்து இருக்கும்-ஞானி நாமக் ரேசரர் ஆகையாலே
பந்தனையார் வாழ்வேல் பழுதென்று அவற்றில் ஒரு சரக்கற அருளிச் செய்கிறார் –
துக்க ஹேதுவான-அஹங்கார கர்ப்பம் ஆகையாலே பந்தகமாய்- ஷூத்ரமான கர்மாத் யுபாய பேதங்களைப் பற்றினார்க்கு
ஒரு பிரயோஜனமும் இல்லை –பகவத் ப்ரீதியே பலத்துக்கு உபாயம்-கண்டாகர்ணன் க்ஷத்ர பந்து பக்கலிலே பார்த்தோமே 

இந்த க்ரியா வ்ருத்தி சப்தங்களால் சொன்ன கர்ம கைங்கர்யங்கள் இவர்களுக்கு எதுக்கு அநுகுணமாய் இருக்கும் -இந்த க்ரியா வாசியான கர்மமும்‌ வ்ருத்தி வாசியான கைங்கர்யமும்‌ எதுக்கு அநுரு,ணமா யிருக்கு மென்னில்‌ மேல் சொல்லுகிறது-

கர்ம கைங்கர்யங்கள் சத்ய அசத்ய நித்ய அநித்திய வர்ண தாஸ்ய அனுகுணங்கள்-சூரணை -26 –(அதாவது கர்மம் அசத்யமாய்–அநித்யுமுமான வர்ணத்துக்கு அநுகுணமாய் இருக்கும்
கைங்கர்யம் சத்தியமாய் நித்யமுமான தாஸ்யத்துக்கு அநுகுணமாய் இருக்கும்
என்கை-)

வர்ணத்தை அசத்தியம் அநித்தியம் என்கிறது ஆத்மாவுக்கு உள்ள வேஷம் அல்லாமையாலே
சததைக ரூபம் அன்றிக்கே -ஔ பாதிகமுமாய் அநித்யமுமாய் நச்வரமான தேக அவதியாய் போருகையாலே
–தாஸ்யத்தை சத்யம் நித்யம் என்கிறது-திருமாலே நானும் உனக்கு பழ வடியேன் திருப்பல்லாண்டு -11– என்கிறபடியே ஆத்மாக்கு உள்ள வேஷம் ஆகையாலே சததைக ரூபமாய் யாவதாத்மா அனுவர்த்தி யாகையலே-வர்ண அனுகுணம் என்றது -வர்ணத்துக்கு சேர்ந்தது என்ற படி-
தாஸ்ய அனுகுணம் என்றதும் அப்படியே-தாஸ்யத்துக்கு சேர்ந்தது என்ற படி-(விசிஷ்ட வேஷத்தை பொறுத்தே இருக்கும் கர்மம் -அசத்திய அநித்ய வர்ணம்-கைங்கர்யம் நிஷ்க்ருஷ்ட வேஷம் பொறுத்தே இருக்கும் -சத்யமாயும் -நித்யமாயும் தாஸ்யம் திருமாலே நானும் உனக்குப் பழ வடியேன் -தாஸ்யம் பழைமை நித்யம் -அங்கும் உண்டே நிருபாதிகம் -சத்யம் )

இவை இரண்டிலும்‌ வைத்துக் கொண்டு எத்தை எதுக்கு அநுகுணம்‌ என்கிறதென்னில்‌ ; கர்மம்‌ அஸத்யமுமாய்‌, அநித்யமுமான வர்ணத்துக்கு அநு கு,ணமாயிருக்குமென்றும்‌, கைங்கர்யம்‌ ஸத்யமுமாய்‌ நித்யமுமான ஸ்வரூபத்திலே ஆகையாலே ஸத்யமுமாய்‌ நித்யமுமாயிருக்கும்

அல் வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியூர் கோன் அபிமான துங்கன்
செல்வனைப் போலே திருமாலே நானும் உனக்கு பழ வடியேன்
நல் வகையால் நமோ நாராயணா என்று நாமம் பல பரவிப்
பல் வகையாலும் பவித்ரனே உனக்குப் பல்லாண்டு கூறுவனே –11-திருமாலே – இவ்வாத்ம வஸ்து ஒரு மிதுன சேஷம் -என்று சேஷத்வ பிரதி சம்பந்தியை சொல்லுகிறார்கள்-இத்தால் மாதா பித்ர் சேஷத்வமும் -தேவதாந்தர சேஷத்வமும் கர்ம உபாதிகம் என்கை
அதவா-தேவரீருக்கு பிராட்டி நிரூபக பூதையாய் இருக்கிறாப் போலே எங்களுக்கும் தாஸ்யம்
நிரூபகம் என்கிறார்கள் -என்றுமாம் நானும் – பிரயோஜனாந்தர பரதையாலே அநாதி காலம் அன்யார்ஹனாய் போந்த நானும் – சேஷி பக்கல் பிரயோஜனாந்தரத்தை அபேஷிக்கை யாவது -பதிவ்ரதை பர்த்தாவின் பக்கலிலே வ்யபிசாரத்தை அபேஷித்தவோபாதி இறே –உனக்குப் பழ வடியேன் – உனக்கு சேஷித்வம் அநாதி யானவோபாதி எனக்கும் சேஷத்வம் அநாதி என்கை
உனக்கு – பிரயோஜனாந்தரத்தை அபேஷித்து திருவடிகளில் கிட்டினதுவே ஹேதுவாக அநந்ய
பிரயோஜநன் ஆக்க வல்ல உனக்கு-இந்த ஸ்வரூப ஞானம் எவ் வழியாலே பிறந்தது என்னில்
சகல வேதாந்த தாத்பர்யமான மந்திர ரஹச்யத்தாலே பிறந்தது என்கிறார் மேல்-

இவை இரண்டுக்கும் பிரேரகங்கள் எவை -இவை இரண்டுக்கும்‌ ப்ரேரகர்‌ ஆர்‌ என்னில்‌ -என்ன சொல்லுகிறது-

இவற்றுக்கு விதி ராகங்கள் பிரேரகங்கள்-சூரணை -27 –

அதாவது – யஜேத -யஜுர் வேதம்-ஜூஹுயாத்–கர்ம மீமாம்சை-இத்யாதி யான சாஸ்திர விதி கர்மத்துக்கு பிரேரகம் -அசேஷ சேஷ தைகரதி யாகிற ராகம் கைங்கர்யத்துக்கு பிரேரகம் என்கை .
(பிரேரகம் தூண்டுபவை-காதல் -நின் கண் வேட்கை எழுவிப்பேனே -இசைவித்து – ஒழிவிலா காலம் எல்லாம் வழு விலா அடிமை -அசேஷ -சேஷதைக ரதி ரூபம் நித்ய கிங்கரோ பவாமி -அனுபவம் -ப்ரீதியைத் தூண்ட -அது கைங்கர்யத்தில் தூண்டும்-அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம்-இட்ட கால் இட்ட கைகளாய் இருக்கும் -மூவாறு மோசம் மோகிக்கப் பண்ணுமே ) பகவத் அனுபவ ஜனித ப்ரீதி காரிதம் இறே கைங்கர்யம் .-உற்றேன் உகந்து பணி செய்து உன பாதம் பெற்றேன் -திருவாய் -10-8-10–என்னக் கடவது இறே- (கிரமம் படி இல்லாமல் -பணி செய்து முதலில் பாதம் பெற்றது அப்புறம் -உபாசகருக்குத் தானே கிரமம் )

“இத,ம் குரு ‘, “அநேந யஜேத” என்றும்‌ சேதநனைக்‌ குறித்துச் சொல்லுகிற ஸாஸ்த்ர விதிகள்‌ கர்மத்துக்கு ப்ரேரகம்‌. பகவதநுபவ ஜநித ப்ரீதி கைங்கர்யத்துக்கு ப்ரேரகம்‌. ““உற்றேனுகந்து பணி செய்து” (திருவாய்‌. 10- 8 – 10)என்னக் கடவதிறே.

உற்றேன் உகந்து பணி செய்ய உன பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்

கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–10-8-10-கெடு மரக்கலம் கரை சேர்ந்தால் போலே கிட்டிக் கொடு நின்றேன் –ப்ரீதி ப்ரேரிதனாயக் கொண்டு -திருவாய் மொழி பாடி -உன் திருவடிகளை அனுபவிக்கப் பெற்றேன் – –சாதகமாய் மேல் -சாத்தியமாகச் சொல்லுகிறது அன்று -இரண்டும் ஏக காலத்திலே உள்ளதாகையாலே –ஈதே இன்னம் வேண்டுவது-இது தானே மாறி மாறி யாவதாத்ம பாவியாகச் செல்லுகை இறே –பு நரா வ்ருத்தி இன்றிக்கே ஒழிகை யாவது -மீளாது ஒழிகை -விதி போலே இருக்கிறதன்றே – எந்தாய்--இவ்வனுபவம் ஸ்வரூப அனுரூபம் என்கிறது –இத்தலைக்கு சேஷத்வமும் தேவர்க்கு சேஷித்வமும் இறே ஸ்வரூபம் -இவர் அபேக்ஷித்த படியே செய்கிறோம் என்ன -ப்ரீதராய் அருளிச் செய்கிறார் –

இவற்றுக்கு ஆஸ்ரயம் யார் என்ன சொல்லுகிறது-இவற்றுக்கு ஆஸ்ரயம்‌ ஆர்‌ என்னில்‌

மண்டினாரும் மற்றையாரும் ஆஸ்ரயம்-சூரணை -28 –

அதாவது-கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று மண்டினார்-திருக் குறும் தாண்டகம் -19– என்று உகந்து அருளின நிலங்களிலே அத்ய அபிநிவிஷ்டராய் இருக்கிற பிர பின்னர்
கைங்கர்யத்துக்கு ஆஸ்ரயம்-விளக்கினை விதியின் காண்பார் மெய்மையைக் காண்கிற்பாரே -திருக் குறும் தாண்டகம்-18–என்று கீழில் பாட்டில் சொன்ன மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யலாமே -திருக் குறும் தாண்டகம் -19—மற்றையரான உபாசகர் கர்மத்துக்கு ஆஸ்ரயம் என்கை-(சாஸ்திரம் – –உபாசனம்-விளக்கினை விதியில் காணும் மற்றையரான உபாசகர் -கர்மத்துக்கு ஆஸ்ரயம்-சாஸ்த்ர தாத்பர்யம் -திருமந்திரம் —பிரபன்னர் -அர்ச்சாவதார திவ்ய மங்கள விக்ரஹ கைங்கர்யம் –என்றவாறு )இத்தால் கர்ம கர்த்தாக்களையும் கைங்கர்ய கர்த்தாக்களையும் சொல்லிற்று ஆய்த்து-

(மண்டினாரும்‌ மற்றையாரும்‌ ஆஸ்ரயம்‌)-“கண்டியூர்‌” (திருக்குறு. 19) இத்யாதி,. மண்டினார்‌ என்கிறது – உகந்தருளின நிலங்களிலே அத்யபிநிவிஷ்டராயிருக்கிற ப்ரபந்நரை ; மற்றையார்‌ என்கிறது – “விளக்கினை விதியில்‌ காண்பார்‌” (திருக்குறு. 18) என்கிற உபாஸகர்‌ என்று ப்ரஸித்‌தமிறே. இத்தால்‌ கர்மத்துக்கு ஆஸ்ரயம்‌ உபாஸகர்‌, கைங்கர்யத்துக்கு ஆஸ்ரயம்‌ ப்ரபந்நர்‌ என்றபடி-

பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர் மனை  திரி தந்து உண்ணும்
முண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர் உலகம் ஏத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால் மற்றை யார்க்கு உய்யலாமே -19-–அவன் உகந்து அருளின இத் திருப் பதிகளிலே நெஞ்சு மண்டினவர்கள் உய்யல் அல்லது அல்லாதார்க்கு உஜ்ஜீவிக்க விரகு உண்டோ –

இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற் பாரே–18--சாஸ்த்ரங்களில் விதித்தபடியே
உபாசித்து அவனைக் காண்பார் –என்றும் உளனாய் இருக்கிற சர்வேஸ்வரனை காண வல்லரே -காண -மாட்டார் -என்றபடி –அங்க பிரபத்தி இல்லாமல் காண மாட்டார் என்றபடி-

இவற்றுக்கு விஷயம் ஏது என்ன சொல்லுகிறது-இவற்றுக்கு விஷயம்‌ ஏதென்னில்‌ ;

அருள் முடிய நிறுத்தி அடைய நின்றதும் நல்லதோர் அருள் தன்னாலே நன்றும் எளியன் ஆகிறதும் விஷயம்-சூரணை -29 –

அதாவது-எத் தவம் செய்தாருக்கும் அருள் முடிவது ஆழியான் பால் -நான்முகன் 2–என்கிற படியே ஆஸ்ரயண பல சித்தி தன்னுடைய பிரசாதத்தாலே யாம்படி –-தன் மூர்த்தி நிறுத்தினான் தெய்வங்களாக -திருவாய் -5-2-8–என்ற படியே தனக்கு தனுபூதரான தேவதைகளை நிறுத்தி –
அவரவர் விதி வழி அடைய நின்றனர் -திருவாய்-1-1-5–என்கிற படியே ஆஸ்ரயிக்கிற சேதனர் வித்யுக்த பிரகாரேன ஆஸ்ரயித்து பலம் பெரும் படி தேவதாந்தர்யாமியாய் நின்ற இடம் கர்மத்துக்கு விஷயம்நல்லதோர் அருள் தன்னாலே காட்டினான் திரு அரங்கம் -திருமாலை -10–என்றும்-கருத்துக்கு நன்றும் எளியனாய்-திருவாய்-3-6-11- -என்று சொல்லுகிறபடியே கேவல ஸுய க்ருபையாலே அத்யந்த சுலபனாய் கொண்டு அர்ச்சாவதாரமாய் நிற்கிற இடமே கைங்கர்யத்துக்கு விஷயம் என்கை-

”எத் தவம்‌ செய்தார்க்கும்‌ அருள் முடிவதாழியான்‌ பால்‌”: (நான்‌. திருவ. 2) என்றும்‌, “’நிறுத்தி நும்‌ உள்ளத்துக் கொள்ளும்‌ தெய்வங்களும்மை உய்யக் கொள்‌ மறுத்துமவனோடே கண்டீர்‌” (திருவாய்‌. 5 – 2- 7) என்றும்‌, ”அவரவர்‌ விதி வழி அடைய நின்றனரே” (திருவாய்‌. 1 – 1 – 5] என்றும்‌ சொல்லுகிறபடியே தேவதைகளுக்கு அந்தர்யாமியாய்க் கொண்டு நின்ற விடமும்‌, ”நல்லதோரருள் தன்னாலே காட்டினான்‌ திருவரங்கம்‌”? (திருமாலை 10) என்றும்‌, “கருத்துக்கு நன்றுமெளியன்‌”’ (திரு வாய்‌. 3 – 6 – 11) என்றும்‌ சொல்லுகிறபடியே அர்ச்சாவதாரமாய்க் கொண்டு நின்ற இடமும்‌. –

தேருங்கால் தேவன் ஒருவனே என்று உரைப்பர்
ஆரும் அறியார் அவன் பெருமை -ஒரும்
பொருள் முடிவும் இத்தனையே எத் தவம் செய்தார்க்கும்
அருள் முடிவது ஆழியான் பால் –2–எல்லா சாதன அனுஷ்டானம் பண்ணினவர்களுக்கும்
அவற்றுக்கும் பலம் சர்வேஸ்வரன் பக்கலில் நின்றும் என்கை-ஏழு ஏழு  படி இங்கனே தபஸ் ஸூ பண்ணினாருக்கும் எம்பெருமான் பிரசாதத்தால் அல்லது பல பர்யந்தமாய் முடியாது-

நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்
மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே

கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்பதெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே.–5-2-7—உங்கள் நெஞ்சிலே நீங்கள் நிறுத்திக் கொள்ளுகிற தேவதைகள் –த்யேய வஸ்துக்களை நிறுத்துகையும் த்யாதாவுக்கே பரம் என்கை அங்குஷ்ட மாத்ர புருஷோமத்ய ஆத்மனி திஷ்ட்ட்தி-என்கிறவன் அவசர ப்ரதீஷனாய் நிற்கிறது அன்றே -யுக்த்யா ஆபாசங்களாலும் வசன ஆபாசங்களாலும் பொரி புறம் தடவி நிறுத்துகை –உங்களை உய்யக் கொள்ளும் இடத்தில் -ரஷிக்கும் போது தாங்கள் அக்ஷமர் ஆகையால் –பேணிலும் வரம் தர மிடிக்கில்லாத தேவரை -திருவில்லாத் தேவரை –மறுத்தும் அவனொடே கண்டீர் – மீண்டும் அவனோடே சேர்த்து -அவன் பிரசாதத்தாலே கிடீர் –நீங்கள் அவர்களை ஆஸ்ரயித்ததாலும் பலம் தருவான் அவனே –
பலமத-நஹி பாலன சாமர்த்த்யம் ருதே ஸர்வேச்வரீம் ஹரீம்
– இவர்களை ஆஸ்ரயிக்க வேறே ஒருவன் பலம் தருமது எங்கே கண்டோம் என்னில் –மார்க்கண்டேயனும் கரியே- ஸ்ரீ மார்க்கண்டேய பகவான் சாக்ஷி-

இறுக்கும் இறை இறுத்து உண்ண எவ்வுலகுக்குந் தன்மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே

மறுத் திரு மார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுது உய்ம்மினீரே.–5-2-8—ஸ்வ வர்ண ஸ்வ ஆஸ்ரம உசித கர்மங்களாலே சமாராதித்து ஸ்வ அபிலஷிதங்களை பெற்று உஜ்ஜீவிக்க-எவ் வுலகுக்குந் தன்மூர்த்தி நிறுத்தினான் தெய்வங்களாக –-பின்ன ருசிகளான -அதிகாரிகளை யுடைத்தான சர்வ லோகங்களுக்கும் –தன் சரீர பூதரான தேவதைகளை சமாராத்யராக நிறுத்தினான் –ஈஸ்வரோஹம் என்று இருப்பார் தலை வணங்குகைக்காக நிறுத்தினான் –-அத் தெய்வ நாயகன் தானே-
ஆஸ்ரயிப்பார்களோடு ஆஸ்ரயணீயரோடு வாசி அற எல்லார்க்கும் நிர்வாஹகன் அவன் தானே -சேதனருடைய குண அனுரூபமாக ஆராத்யராகவும் அபிமத பலப்ரதராம் படியும் பண்ணினான்

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே 
–1-1-5—அவரவர் இறையவர் அவ்வோ தேவதைகள்-குறைவிலர்
ஆஸ்ரயிக்கிற வர்களுடைய பலம் கொடுக்கைக்கு குறை யுடையவர் அல்லர்-இறையவர்-நிருபாதிக சர்வேஸ்வரன்-அவரவர் விதி வழி யடைய-ஆஸ்ரயிக்கிறவர்கள் வித்யுக்த பிரகாரத்தாலே ஆஸ்ரயிக்கவும்-ஆஸ்ரயணீயர் அவர்களுக்கு பல பிரதானத்துக்கு சக்தராகவும்-நின்றனரே அந்தராத்மதயா நின்றார்-

நாட்டினான் தெய்வம் எங்கும் நல்லதோர் அருள் தன்னாலே
காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம்
கேட்டீரே நம்பிமீர்காள் கெருட வாகனும் நிற்கச்
சேட்டை தன் மடி யகத்துச் செல்வம் பார்த்து இருக்கின்றீரே–10—சத்வ பிரசுரராய் தன்னைப் பற்றும் அளவு உடையவர் அன்றிக்கே இருக்கும் ரஜஸ் தமஸ் பிரசுரர்க்கும் தேவதைகளை நாட்டினான் –
அதுக்கடி தன்னரசு போலே ஸ்வ தந்த்ரராய் மூலையடியே திரியப் புக்கவாறே ஸ்வ ஸ்வ குண அனுகூலமாக தேவதைகளை ஆஸ்ரயித்து பின்னை சேதனர் இறே – நம் வாசி அறிந்து -நம்மைப் பற்றுகிறார்கள் என்னும் நினைவாலே யாய்த்து தேவதைகளை நாட்டிற்று –உபக்நத்தை பெறாத கொடி போலே யாய்த்து ஈஸ்வரனுடைய ஆத்ம பாவத்தை ஒழியில் தேவதைகள் உடைய சத்தாதிகள் இருப்பது –சுள்ளிக் கால் நாட்டினால் போலே இருக்கிறது ஆய்த்து-நிறுத்தினான் தெய்வங்களாக -என்னக் கடவது இறே –நல்லதோர் அருள் தன்னாலே – தான் நினைத்த வழியே தன்னுடைய ஹிதம் அறிந்து போராதே
நோவு பட்டு இருந்தன ஆகாதே என்று கிருபை பண்ணினான் ஆய்த்து –நல்லதோர் அருள் –இவற்றின் உடைய கர்ம அனுகுணம் ஆதல் – ஆஸ்ரய அனுகுணம் ஆதல்-பண்ணும் அருள்போல் அன்றியே –க்ர்ப்பயா கேவலம் –என்கிறபடியே-இவற்றின் உடைய துர்கதியைக் கண்டு பண்ணும் அருள் –இவர்கள் தம் தாம் தசையை நினைந்து அனுசந்தித்து அதுக்கு அனுதபிக்கவும் அறியாதே இருக்கச் செய்தே பண்ணும் அருள் இறே-நல்லதோர் அருள் -என்கையாலே-கீழ் தேவதைகளை உண்டாக்கி வைத்ததும் அருளின் கார்யம் என்கிறது –நல்லதோர் அருள் தன்னாலே -காட்டினான் திருவரங்கம்--சிலர் எங்களுக்கு காட்ட வேண்டும் என்ன -காட்டுகை அன்றிக்கே முலைக் கடுப்பு தீர தரையிலே பீச்சுவாரைப் போலே தன் செல்லாமையினால் காட்டினான் ஆய்த்து –

கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
மண்கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள்செய்யும் வானவர் ஈசனைப்
பண்கொள் சோலை வழுதி வளநாடன் குருகைக்கோன் சடகோபன் சொல்
பண்கொள் ஆயிரத்து இப் பத்தால் பத்தராகக் கூடும் பயிலுமினே.–3-6-11–கண்ணுக்கு விஷயம் அன்றிக்கே அகவாயிலே மிகவும் பிரகாசிக்கிற படி – இவருக்கு எங்கும் இதுவே சம்ச்லேஷ விஸ்லேஷன்களுக்கு பிரயோஜம்-சம்ச்லேஷம் ஆகிறது -மானஸ அனுபவம் -விஸ்லேஷம் ஆகிறது -பாஹ்ய சம்ச்லேஷ அபேக்ஷையாலே மானஸ அனுபவத்துக்கு வரும் குலைதல்-மண் கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள்செய்யும் வானவர் ஈசனைப்-நித்ய ஸூரிகளுக்கு ஸூலபன் ஆனால் போலே-சம்சாரிகள் என்று வாசி வையாதே அர்ச்சாவதார முகத்தால் வந்து ஸூலபனானவனை-

இவ்வோ நிலைகளை விஷயமாக உடைத்தாய் ஆகையாலே கர்ம கைங்கர்யங்கள் இப்படி சொல்லப் பட்டன என்கிறார்-

இவற்றாலே சாதாரணம் அசாதாரணம் என்னும்–சூரணை -30 –

அதாவது-இப்படி தேவதா அந்தர்யாமியையும் அர்ச்சாவதார தையும் விஷயமாக உடைய இவ் ஆகாரங்களாலே சாதாரண விக்ரக விசிஷ்டனை விஷயமாக உடைய கர்மத்தை சாதாரணம் என்றும்
அசாதாரண விக்ரக விசிஷ்டனை விஷயமாக உடைய கைங்கர்யத்தை அசாதாரணம் என்றும் சொல்லும்
என்கை-

(இவற்றாலே) இந்த ப்ரமாண ப்ரகாரங்களாலே (ஸாதாரணம்‌ அஸாதாரணம்‌ என்னும்‌) ஸாதாரணமான்‌ விக்‌ரஹ விஸிஷ்டன்‌ கர்மத்துக்கு விஷயம்‌, அஸாதாரணமான விக்‌ரஹ விஸிஷ்டன்‌ கைங்கர்யத்துக்கு விஷயம்‌ என்று விஷய பேதத்தை அருளிச் செய்து, அதில்‌ அஸாதாரண விக்‌ரஹ விஷய கைங்கர்ய நிஷ்டன்‌ ஸாதாரண விக்ரஹ விஷயத்திலே ஸர்வ ஸாமாந்ய தயா கர்த்தவ்யமானவற்றில்‌ அந்வயியான்‌ என்கிறார் –

இவ் அசாதாரண சேவையிலே அதிகரித்தாருக்கு சாதாரணமான வதில் அந்யவம் தன்னடையே கழியும்படியை ச த்ருஷ்டாந்தமாக அருளி செய்கிறார்-ஆனால்‌ பழையதாக அநுவர்த்தித்துப்‌ போந்ததுமாய்‌ வர்ணாத்‌,ய ஸாதாரணமுமான ஸத்‌வாரக விஷய ப்ரவ்ருத்தியை இப்போது இவனாலே விடப் போமோ என்னில்‌

ஜாதி ஆஸ்ரம தீஷைகளில் பேதிக்கும் தர்மங்கள் போலே அத்தாணி சேவகத்தில் பொதுவானது நழுவும்-சூரணை-31

(அசாதரண கைங்கர்யத்தில் இழியவே சாதாரணமான கர்மம் தன்னடையே கழியும் –-ஸ்ரீ லஷ்மணன் ஸ்ரீ ராம கைங்கர்யத்தில் இழியவே ஊர்மிளை உடன் கூடின தர்ம அனுஷ்டானம்
தன்னடையே கழிந்ததே –நற்செல்வன் தங்காய்-ஸ்ரீ ஆச்சார்ய கைங்கர்யத்தில் இழியவே பகவத் கைங்கர்யம் நழுவும் – ஸ்ரீ வடுக நம்பி பால் காய்ச்சி ஸ்ரீ நம் பெருமாள் சேவை விட்டாரே )-அதாவது
ஸ்வ கர்ம ப்ராஹ்மணஸ்ய -அத்யயனம் ,அத்யாபனம் ,யஜனம் யாஜனம் ,தானம் ப்ரதிக்ரஹணம்,
தாயாத்யம், சிலோஞ்ச்ச ,அந்யச்ச, அபரிக்ருஹீதம் , ஏதான் ஏவ ஷத்ரியஸ்ய அத்யாபன யாஜன பிரதிக்ரஹணாதி ,பரிஹார்யாணி ,தண்ட யுத்த தாதிகார , ஷத்ரியவத் வைச்யஸ்ய தண்ட யுத்த வர்ஜம் க்ருஷி கோரஷண வாணிஜ் யாதிகம் க்ராஹ்யம்–ஆபஸ்தம்ப ஸூத்ரம்
-என்கையாலே
அத்யயன அத்யாபன யஜன யாஜன தான பிரதிஹ்ருக -ரூப ஷட் கர்மமும் பிராமணனுக்கு கர்தவ்யமாய் ஷத்ரிய வைஸ்யர்களுக்கும் அத்யாபனாதி த்ரயம் ஒழிய அத்யயனாதி த்ரயமே கர்தவ்யமாய் , அவர்கள் தங்கள் உள்ளும் தண்ட யுத்தங்கள் ஷத்ரியனுக்கே அசாதாரணமாய் ,
க்ருஷி கோ ரக்ஷண வாணிஜ்யங்கள் வைஸ்யனுக்கு அசாதாரணமாய் , சுஸ்ருஷா சூத்ரச்ய இதரேஷாம் வர்ணானாம்-என்கையாலே சூத்ரனுக்கு திரை வர்ணிக ஸூஸ்ருஷையே தர்மமாய் ,
இப்படி தத் ஜாத்ய அனுகுணமாக ஒருவனுக்கு உபாதேயம் ஆனது ஒருவனுக்கு த்யாஜ்யமாக கொண்டு தர்மங்கள் பேதித்து இருக்கும் இறே-
–பிரமச்சாரியான தசையில் உபாதேயமான பிஷா சரண சமிதா தரணாதிகள் க்ருகஸ்தனான தசையில் த்யாஜ்யங்களாய் அக்னி கோத்ர அதிதி சத்காராதிகள் உபாதேயம் ஆகையாலும் வனஸ்தனான தசையில் – -சந்த்யஜ்ய க்ராம்யமாகாரம் சர்வஞ்சைவ பாரிசாதம்-என்கையாலே பூர்வ ஆஸ்ரமத்தில் உபாதேயமான க்ராம்யாகார பரிச்சதாதிகள் த்யாஜமாய் –
வசீத சர்வ சீரம் வா -என்று தொடங்கி சொல்லப் பட்ட சரம சீர வசனத்வ ஜடிலத்வ மச்முருச்லோம நகதாரண வன்ய ஆகாரங்கள் உபாதேயம் ஆகையாலும் சந்யாசியான தசையில் பூர்வ ஆஸ்ரம உபாதேயமான அக்நிஹோத்ர அதிதி சத்காராதிகளும் ஜடிலத்வாதிகளும் த்யாஜ்யமாய்
அநக்நிஸ் அநிகேதஸ் ஸ்யாத் -மனு ஸ்ம்ருதி -இத்யாதிப் படியே அனக்நித்வ அநிகேதத்வ
அசஹாயத்வாதிகளும் உபாதேயம் ஆகையாலும் ஆஸ்ரய தர்மம் பேதியா நின்றது இறே .-ஜியோஷிடோமாதிகளில் தீஷித்தவனுக்கு வர்ணத்ரைய ஆஸ்ரம சச்துஷ்டைய சாதாரணமாய்
அகரேண பிரத்யவா எதாய அவஸ்ய கர்தவ்யமாய் போரும் நித்ய கர்மம் அநனுஷ்டேயமாய்
ஜியோதிஷ்டோமாதி தர்மமே அனுஷ்டேயம் ஆகையாலே தீஷையிலே தர்மம் பேதித்து இருக்கும் இறே-ஆக இப்படி பிராமணாதி ஜாதிகளிலும் பிராமசார்யாதி ஆஸ்ரமங்களிலும் ஜியோதிஷ்டோமாதி தர்மாந்தர தீஷைகளிலும் பேதிக்கும் தர்மங்கள் போலே அசாதாரண விக்ரக சஹிதேஸ்வர விஷயம் ஆகையாலே அசாதாரணமாய் ,அத ஏவ –அத்தாணி சேவகம் –திருப்பல்லாண்டு -8- -என்று
அந்தரங்க சேவை யாகிற கைங்கர்யத்திலே அதிகரித்தவர்களுக்கு தேவதாந்த்ரி விஷயமாய் தத் சரீர பூத தேவதாத்வார தத் ஆராதனம் ஆகையாலே சாதாரணமாய் இருந்து உள்ள கர்மம் உறங்குவான் கை பிண்டம் போலே தன்னடைவே நழுவும் என்கை –இத்தால் வர்ணாஸ்ரம நிஷ்டர்க்கு தத் அதிகார அநுரூப தர்மம் ஒழிய அநுகுணமானது த்யாஜ்யதையா கழிக்கப் படுமா போலே ஸ்வரூப யாதாம்ய தர்சிகள் ஆனவர்களுக்கு தத் அநுரூப தர்மம் ஒழிய அனனுரூபமானது த்யாஜ்யமாய் தன்னடையே விட்டுக் கழியும் என்றது ஆயிற்று--இப்படி இருக்கச் செய்தே ,சிஷ்டர்கள் அனுஷ்டித்து போருகிறது –
ஸ்வ அனுஷ்டத்தை-அநநுஷ்டானத்தை – பின் சென்று லோகம் நசிக்க ஒண்ணாது என்று
ஆந்ரு சம்சயத்தாலே இறே-யதி ஹ்யஹம் ந வர்த்தேயம் ஜாது கரமண்ய தந்த்ரித மம வர்த்மாநுவர்த்தந்தே மனுஷ்யா பார்த்த ஸர்வஸ –ஸ்ரீ கீதை -23–உத் சீதே யுரிமே லோகா ந குர்யாம் கர்ம சேதஹம் சங்கரஸ்ய ச கர்த்தா ஸ்யாம் உபஹந்யாம் இமா பிரஜா –ஸ்ரீ கீதை -24- என்கிற படி பரார்தமாகவே இறே இவர்கள் அனுஷ்டிப்பது –(குல வர்ண ஆஸ்ரம தர்ம ஸங்க்ரஹம் ஆகாமைக்காக
-பரார்த்தம் பரனது ஆனந்தத்துக்கு என்றுமாம் )

ஜாதி த,ர்மமானது ஜாத்யந்தரத்திலே பேதிக்கக் கண்டோம்‌, கண்ட படி என்‌ என்னில்‌, யஜந-யாஜந-அத் யயந-அத்யாபந தாந ப்ரதி க்‌ரஹங்களாகிற ஷட் கர்மங்கள்‌ க்ஷத்ரியாதி,களில்‌ பேதியா நின்றன விறே –ஆஸ்ரம தர்மம்‌ ஆஸ்ரமாந்தரத்தில்‌ பேதியா நின்றது. இவை இத்தனையும்‌ பேதித்தாலும்‌ பேதியாத நித்ய தர்ம-நைமித்திக த,ர்மங்கள்‌ ஜ்யோதிஷ்டோமாதி, தீக்ஷைகளில்‌ பேதிக்குமாப் போலே ‘அத்தாணிச் சேவகமும்‌”’ (திருப்பல்‌. 8) என்கிற அந்தரங்க கைங்கர்யத்தில்‌ வர்ணாஸ்ரம ஸாதரண தர்மம்‌ தானே நழுவுமிறே-உறங்குகிறவன கையில்‌ எலுமிச்சம் பழம் போலே இது தனக்கு அவகாஸ மில்லை. இந்த த்‌ருஷ்டாந்த பலத்தாலே இவ் வதிகாரிக்கு அகரணே ப்ரத்யவாயமில்லை என்கிறது. கீழ்ச் சொன்னவை தன்னைப் போலே ; இப்படி இருக்கச் செய்தேயும்‌ ஸிஷ்டர்கள்‌ அநுஷ்டித்துப்‌ போருகிது ஆந்ரு ஸம்ஸ்யத்தாலே யிறே 

நெய்யிடை நல்லதோர் சோறு நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக்காயும் கழுத்துக்கு பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல
பையுடை நாகப் பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே –8-–அத்தாணி -என்று பிரியாமை –சேவகம் -என்று சேவை-ஐஸ்வர்யார்த்திக்கும் அநவரத பாவநையும் -அந்திம ச்ம்ர்த்தியும் அநந்ய பிரயோஜநோபாதி கர்த்தவ்யம் இறே–ஆனால் ஐஸ்வர்ய சாதனத்தையும் –தந்து -என்று பிரயோஜத்தோடு ஒக்க சொல்வான் என் என்னில் வெள்ளுயிர் ஆன பின்பு சொல்லுகிறார்கள் ஆகையாலே அந்த சாதனமும் ஸ்வயம் பிரயோஜனமாய் இறே இருப்பது -அநந்ய பிரயோஜனனுக்கு ஸ்வயம் பிரயோஜனமான சேவை சாதனமாக்கி கிடீர் ஷூத்தரமான ஐஸ்வர்யத்தை தந்தது என்கை

இந்த கைங்கர்ய நிஷ்டருக்கு கர்ம நிஷ்டரோடு சேர்த்தி இல்லாமையை சொல்லுகிறது மேல்-இனி கர்ம நிஷ்டனிற் காட்டில்‌ கைஙகர்ய நிஷ்ட,னுக்குள்ள வைஷம்யம்‌ சொல்லுகிறது-

சாதன சாத்தியங்களில் முதலும் முடிவும் வர்ண தர்மிகள் தாச வ்ருத்திகள் என்று துறை வேறு இடுவித்தது-சூரணை -32 –

(சாதனத்தில் முதல் வர்ண தர்மிகள் என்று துறை வேறு விடுவித்து -என்றும்-சாத்யத்தில் முடிவு தாச விருத்திகள் என்று துறை வேறு விடுவித்து -என்றும் பிரித்து பொருள்-சாதனம் -உபாசனம் முதல் படி- கர்ம யோகம் – வர்ண தர்மம் – பகவத் அனுபவம்- சாத்தியம் முடிவு தானே வ்ருத்தி கைங்கர்யம் முடிவு- தாஸ்யம் தானே சத்யம்- நித்யம்- அந்தரங்க அத்தாணிச் சேவகம்-இந்த உயர்ந்த நிலையைக் காட்டவே அது தன்னடையே கழியும் ) அதாவது சாதனத்தில் முதல் அடியான கர்மமும் முடிந்த நிலமான கைங்கர்யமும் -இந்த நெடு வாசி அறிந்தவர்களை நீங்கள் வர்ண தர்மிகள் ,நாங்கள் தாஸ வ்ருத்திகள் -என்று உறவு அறுத்து துறை வேறு இட்டு போகப் பண்ணிற்று என்கை
அதாவது – ஸ்ரீ திரு வயிந்திர புரத்திலே -ஸ்ரீ வில்லி புத்தூர் பகவர் -என்பார் ஒருவர்
எல்லாரும் ஒரு துறையில் அனுஷ்டானம் பண்ண ,தனியே ஒரு துறையில் அனுஷ்டானம்
பண்ணுவராய் -ஒரு நாள் அனுஷ்டானம் பண்ணி ,மீளா நிற்க செய்தே இருந்த பிராமணர் -ஜீயரே -எங்கள் துறையில் அனுஷ்டானம் பண்ண வாராது ஒழிகிறது என்-என்ன-விஷ்ணு தாஸா வயம் யூயம் ப்ராஹ்மணா வர்ண தர்மின–அஸ்மாகம் தாஸ வ்ருத்தினாம் யுஷ்மாகம் நாஸ்தி சங்கதி -என்று துறை வேற இட்டு போனார் ஆய்த்து-(அன்னைமீர் விடுமினோ போலே-ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ கோயிலில் உள்ள சம்சாரிகள் சென்ற பின்பே ஸ்ரீ கோயிலிலுக்குள் நுழைந்த ஐதிக்யம் ஸ்வார்த்தமான கைங்கர்யம் அங்கும் உபாசகனுக்கு -துளி ஸ்வாதந்தர்யம் ஒட்டிக் கொண்டு இருக்குமே- அவன் திரு உள்ளத்திலும் இவன் வந்த வழி பட்டு இருக்குமே )-

ஸாதநங்களில்‌ முதற் சொல்லுகிறது கர்மம்‌, கர்ம ஜ்ஞாந பக்திகளிறே ஸாதநங்கள்‌. ஸாத்‌யங்களில்‌ முடிவு கைங்கர்யம்‌பகவதநுபவம்‌, அநுபவ ஜநித ப்ரீதி, அநந்தரமிறே பீரீதி காரித கைங்கர்யம்‌, திருவயிந்திரபுரத்தில்‌ வில்லி புத்தூர்ப் பகவர்‌ என்பாரொருவர்‌ எல்லாரும்‌ ஒரு துறையிலே அநுஷ்டாநம்‌ பண்ண, தாம்‌ ஒரு துறையிலே அநுஷ்டாநம்‌ பண்ணுவாராய்‌, ஒருநாள்‌ அநுஷ்டாநம்‌ பண்ணி மீண்டெழுந்தருளா நிற்கச் செய்தே, இருந்த ப்‌ராஹ்மணர்‌ ‘ஏன்‌ ஜீயரே! எங்கள்‌ துறையில்‌ அநுஷ்டாநம்‌ பண்ண வாராதொழிவானென்‌’ என்ன, *’விஷணு தாஸா வயம்‌ யூயம்‌ ப்‌ராஹ்மணா வர்ண தர்மிண? ! அஸ்மாகம்‌ தாஸ விருத்தீநாம்‌ யுஷ்மாகம்‌ நாஸ்தி ஸங்கதி:’‘ என்று – ‘நீங்கள்‌ ப்‌ராஹ்மணார்‌, வர்ண தர்மிகள்‌; நாங்கள்‌ தாஸ வ்ருத்திகள்‌, கைங்கர்ய பரர்‌. ஆகையாலே உங்களோடே எங்களுக்கு அந்வயமில்லை” என்று துறை வேறிட்டுப் போனாரிறே

கீழ் –ஜாதியாதிகளில் பேதிக்கும் தர்மங்கள் போலே -சூரணை-31 என்ற இத்தாலே ஸூசிதமான அதிகார பேதத்துக்கும் துறை வேறு இட்டு போகும் படியான நெடு வாசிக்கும் பிரகாசகமான கர்ம கைங்கர்ய நிஷ்டர் இருவருக்கும் உண்டான ஜென்மாதி விசேஷத்தை தர்சிப்பதாக கோலி ,பிரதமம் ஜன்ம விசேஷத்தை சொல்லுகிறது மேல்-இனி மேல்‌ இவர்களிருவர்க்கும்‌ ஜந்ம நிருபக கூடஸ்தரிருக்கும்படி என்‌ என்ன; இவை இப்படிப் பட்டிருக்கும்‌ என்கிறார்‌-

வேத வித்துக்களும் மிக்க வேதியரும் சந்தஸாம் மாதாவாலும் அதுக்கும் தாயாய்த் தாயினும் ஆயின
செய்யும் அத்தாலும் பிறப்பிக்கும் அது இருவருக்கும் ஸ்ரேஷ்ட ஜன்மம் –சூரணை -33 –

அதாவது-யேச வேத விதோ விப்ர—பாரதம்-என்கிற வேத வித்துகிகளான பூர்வ பாக நிஷ்டர்
காயத்ரீம் சந்தசா மாதா – தைத்ரீயம் என்கிறபடி சந்தசுகளுக்கு மாதாவாய் இருக்கிற காயத்ரி உபதேசத்தாலே பிறப்பிக்கும் அது -கர்ம நிஷ்டருக்கு ஸ்ரேஷ்ட ஜன்மம் யேசாத் யாத்மவிதோ ஜனா -( ஏச அத்யாத்ம வித் )-பாரதம்-என்கிற மிக்க வேதியரான வேத தாத் பர்ய வித்துக்கள்-ரூசோ யஜூம்ஷி சாமானி ததைவா தர்வணா நிச சர்வம் அஷ்டாஷராந்தச்தம் யச்சன்யா தபி வாங்மயம் –என்று சகல வேத ஸங்க்ரஹம் ஆகையாலே அந்த காயத்ரிக்கும் மாத்ரு பூமியாய் – பெற்ற தாயினும் ஆயின செய்யும் –பெரிய திருமொழி -1-1-9-என்கிற படியே சரீர உத்பாதிகையான மாதா மாத்ரம் அன்றிக்கே
உஜ்ஜீவனத்துக்கு உறுப்பான ஞானத்தை உண்டாக்கும் திரு மந்த்ரத்தாலே பிறப்பிக்கும் அது கைங்கர்ய நிஷ்டருக்கு ஸ்ரேஷ்ட ஜன்மம் என்கை–சஹி வித்யாஸ் தம் ஜனயிதி தஸ் ஸ்ரேஷ்டம் ஜன்ம-ஆபஸ்தம்ப சூத்ரம் -என்கையாலே-கேவல ஜன்மம் என்னாதே ஸ்ரேஷ்ட ஜன்மம் என்கிறது ..-அது வர்ண அனுகுணமான விதி நிஷேதங்களுக்கும் தத் அநுரூப அனுஷ்டானந்தக்கும்-தத் அனுகுண பல பிராப்த்திக்கும் உறுப்பாகையாலே அவர்களுக்கு ஸ்ரேஷ்ட ஜன்மம் —இது ஸ்வரூப அனுரூபமான-( ஆத்ம ஸ்வரூபத்துக்கு இங்கு )- விதி நிஷேதங்களுக்கும் தத் அநுரூப அனுஷ்டானந்தக்கும்
தத் அநுரூப பல பிராப்த்திக்கும் உறுப்பாகையாலே இவர்களுக்கு ஸ்ரேஷ்ட ஜன்மம்-
(தாஸ்ய சத்யன் -சகல ஆகமங்களும் உன்னையே காட்டும்-அந்தராத்மதயா உபாசகன் – அவரவர் இறையவர் –விதி வழி அடைய நின்றனர் –-சகல பலாநாம் ப்ரசூதி தேசிகன் -சாஸ்த்ர தாத்பர்யத்தை பிடித்து தாஸ்யம் -அச்யுத சதகம் 17-20-ஸ்லோகத்தில்-இந்தக் கருத்தை அருளிச் செய்கிறார் )

 யே ச வேத விதோ விப்ரா” (பார. ஆர.) என்கிற. வேத வித்துக்கள்‌, ““காயத்ரீம்‌ சந்தஸாம்‌ மாதா’‘ என்கிற க,௱யத்ர் யுபதேஸத்தாலே பிறப்பிக்குமது கர்ம நிஷ்ட,னுக்கு ஸ்ரேஷ்ட ஜந்மம்‌; ‘“யே சாத்‌,யாத்ம விதோ ஜநா?” என்கிறபடியே மிக்க வேதியரான வேத தாத்பர்யம்‌ கைப்பட்டவர்கள்‌ ““ஸர்வ மஷ்டாக்ஷராந் தஸ்தம்‌”” (வ்ரு.ஹா. )என்கிறபடியே, அந்த காயத்ரி தனக்கும்‌ மாத்ரு ஸ்தாநமாய்‌, “பெற்ற தாயினுமாயின செய்யும்‌”‘ (திருமொழி–1– 1 – 9) என்கிறபடியே ஸரீரோத்பத்தி மாத்ர மன்றியிலே ஜ்ஞாந விகாஸத்‌தைப்‌ பண்ணிக் கொடுப்பதான திருமந்த்ரத்தாலே பிறப்பிக்குமது கைங்கர்ய நிஷ்டர்க்கு ஸ்ரேஷ்ட ஜந்மம்‌. “ஜந்மநா ஜாயதே ஸூத்‌ர? கர்மணா ஜாயதே த்‌விஜ? । வேதாப்‌,யாஸேந விப்ரத்வம்‌ ப்‌,ரஹ்ம வித்‌ ப்‌ராஹ்மணோ விது,” என்றும்‌, “ஸ ஹி வித்‌யாதஸ்‌“ தம்‌ ஜநயதி தச் ச்‌ரேஷ்ட,ம்‌ ஜந்ம” (ஆப.த.1 – 1 – 16) என்னக் கடவதிறே

குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயர் ஆயின எல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —9—மாதாவானவள் சரீரத்துக்கு உத்பாத யாம் அளவு இறே-ஆத்மாவுக்கு ஸ்வரூபமான ஜ்ஞான விகாசத்தை பிறப்பிப்பான் அவனே இறே-சரீரமே மாதாபிதரௌ ஜநயதே -என்று விரோதியான சரீரத்தை உத்பாதித்து விடும் அளவு இறே அவர்கள் செய்தது-சஹி வித்யா தஸ்தம் ஜநயதி தச் ஸ்ரேஷ்டம் -ஜ்ஞானப் ப்ரதன் அவன் இறே-

இப்படி ஸ்ரேஷ்ட ஜன்மாக்களான இருவருக்கும் நிரூபகங்கள்–இப்படி ஸ்ரேஷ்ட ஜந்மரான இருவர்க்கும்‌ நிரூபகம்‌ ஏதென்னில்‌- இன்னது என்கிறது-

அந்தணர் மறையோர் என்றும்–அடியார் தொண்டர் என்றும்–இவர்களுக்கு நிரூபகம்-சூரணை -34 –-

(அந்தணர் -ப்ராஹ்மண்யமும் மறையோர் -வைதிகத்வமும்-அடியார் -சேஷத்வம் அடிமைத்தனம் அறிந்தவர் -தொண்டர் -கிஞ்சித் கைங்கர்யம் செய்தவர் என்றவாறு – எது எது ஏன் பணி என்னாது அதுவே ஆட் செய்யும் ஈடு )-அதாவது-சாதி அந்தணர் -திருமாலை -43–துணை நூல் மார்வில் அந்தணர் -பெரிய திருமொழி -1-5-9–தீ யோம்பு கை மறையோர்-பெரிய திருமொழி -7-9-7–நந்தா வண் கை மறையோர்– -பெரிய திருமொழி -6-7-8- என்று விசேஷண பூத சரீரத்வாரா வந்த வர்ணமும் தத் பிரயுக்தமான வைதிகவத்மமும் அவர்களுக்கு நிரூபகம்-திருமால் அடியார்-திருவாய் -5-6-11-
அணி அரங்கன் திரு முற்றத்து அடியார்-பெருமாள் -1-10-திரு மாலுக்கு உரிய தொண்டர்-திருவாய் -6-9-11
திரு நாரணன் தொண்டர்-திருவாய் -3-7-4- என்று ஆத்மா வஸ்துவுக்கு ஞான ஆனந்தங்களில் காட்டிலும்
அந்தரங்க நிரூபகமான சேஷத்வம் தத் பிரயுக்த கிஞ்சித் கரத்வமும் இவர்களுக்கு நிரூபகம் என்கை-

“’துணை நூல்‌ மார்விலத்தணர்‌”” (திருமொழி 1 – 5 – 9) என்றும்‌, ”தீயோம்புகைமறையோர்‌’” (திருமொழி 7 – 9 – 7) என்றும்‌ சொல்லுகிற இவை கர்ம நிஷ்டரர்க்கு நிரூபகம்‌. “வேதார்த்த அநுஷ்டாந யோக்‌யர்‌ அந்தணர்‌” என்றும்‌, ‘வேதார்த்த அநுஷ்டாந பரர்‌ மறையோர்‌’ என்றும்‌ சொல்லக் கடவது. இனி, “அணியரங்கன்‌ திருமுற்றத்தடியார்‌”” (பெரு. திரு 1 – 10) என்றும்‌, “’அக மகிமும்‌ தொண்டர்‌”” (பெரு.திரு 1 – 10) என்றும்‌ சொல்லுகிறபடியே கைங்கர்ய நிஷ்டனுக்கு நிரூபகம்‌ – அடியார்‌-கிஞ்சித்கார அர்ஹர்‌. தொண்டர்‌-கிஞ்சித்கார ஸ்வபாவர்

அமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதித்
தமர்களில் தலைவராய சாதி அந்தணர்கள் ஏலும்
நுமர்களைப் பழிப்பர் ஆகில் நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே
அவர்கள் தாம் புலையர் போலும் அரங்க மா நகர் உளானே43—சாதி அந்தணர்கள் –கீழ்ச் சொன்னவை ஷத்ரிய வைஸ்யர்களுக்கும் பொது விறே – அவ்வளவு அன்றியே ஜாத்யா பிராமணராய் இருக்கை –ஏலும் –கீழ்ச் சொன்னவை ஒருவருக்கும் சித்திக்கும் அது அல்ல –சித்திக்குமே யாகிலும் – வைஷ்ணவ நிந்தையில் வந்தால் இவை எல்லாம் அசத் சமம் என்கை – துர்மானோ பஹதர்க்கு அபசார ஹேதுவுமாய் – இவை இல்லாதார் தலை மேலே கால் இட்டு திரிகைக்கு உடலாம் இத்தனை –

தொண்டாம் இனமும் இமையோரும் துணை நூல் மார்பில் அந்தணரும்
அண்டா வெமக்கே யருளாய் என்று அணையும் கோயிலருகெல்லாம்
வந்தார் பொழிலின் பழனத்து வயலினயலே கயல் பாய
தன்டாமரைகள் முக மலர்த்தும் சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-9–-கேவல ப்ராஹ்மணரும் –
வித்யா விநய சம்பந்நே ப்ராஹ்மனே -என்று பிரித்தார் இறே ஸ்ரீ பாஷ்ய காரர் 

சேயோங்கு தண் திருமாலிரும் சோலை யுறையும்
மாயா வெனக்கு உரையாய் இது மறை நான்கினுளாயோ
தீ யோம்புகை  மறையோர் சிறுபுலியூர்ச் சலசயனத்
தாயோ வுன தடியார் மனத்தாயோ வறியேனே—7-9-7–எப்போதும்  ஒக்க அக்நி கார்யத்தில் அவஹிதராய்ப் போருகிற பிராமணர் உடைய

பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்துக்
கந்தார் களிற்றுக் கழல் மன்னர்  கலங்கச் சங்கம் வாய் வைத்தான்
செந்தாமரை மேல் அயனோடு சிவனும்  அனைய பெருமையோர்
நந்தா  வண்கை மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியே –6-7-8—தனித் தனியே சிருஷ்டி சம்ஹாரத்துக்கு ஷமராய் ப்ரஹ்ம ருத்ரர்களில் காட்டில் ஏற்றமான ஔதார்யத்தை உடைய
பிராமணர்
நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் –

கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி வளநாடன் மன்னு குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ்மாலை ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெருஞ் செல்வத்தராய்த் திருமால் அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே.–5-6-11—இந்த லோகத்தில் எல்லாரும் கொண்டாடும் படியான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை யுடையராய் ஸ்ரீ லஷ்மீ பாதிக்கு அடியாரானவர்களை ஆராதிக்கப் பெறுவார்கள் -அவர்களுக்கு ஆராதனம் ஆகிறது இவர் அநு கரித்த இப் பாசுரத்தை சொல்லுகை-தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல்மாலைகள் சொன்னேன் என்ன கடவது இ றே-இவர் இவ் வநுகாரத்தாலே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ப்ரியகரர் ஆனால் போலே இது கற்றாரும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பிரியமான வ்ருத்தியைப் பண்ணக் கடவர் என்கை-

வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய
துன்பம் மிகு துயர் அகல அயர் ஒன்றில்லா சுகம் வளர அக மகிழும் தொண்டர் வாழ
அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும் அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள்
இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும் இசைந்த உடனே என்று கொலோ விருக்கும் நாளே ?—1-10–பகவத் அனுபவத்தாலே நிரதிசய ஆனந்த உக்தரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் வாழ-

தெரிதல் நினைதல் எண்ண லாகாத் திருமாலுக்கு
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்

தெரியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே.–6-9-11–ஸ்ரீ யபதிக்கு அசாதாரணமான தாஸ்யத்துக்கு பர்யவசான பூமியான ஆழ்வார் -இவருடைய அஹம் புத்தி இருக்கிற படி -பயிலும் சுடர் ஒளிக்கு பின்பு ததீய சேஷத்வ பர்யந்தமாயிற்று -இவருடைய அஹம் அர்த்தம் இருப்பது -இவ்வளவு வருகை இறே அநந்யார்ஹ சேஷம் ஆவது

உடை ஆர்ந்த ஆடையன் கண்டிகையன் உடை நாணினன்
புடையார் பொன் நூலினன் பொன்முடியன் மற்றும் பல்கலன்
நடையா உடைத் திரு நாரணன் தொண்டர் தொண்டர் கண்டீர்
இடையார் பிறப்பிடை தோறு எமக்கு எம் பெரு மக்களே
.–3-7-4–ஸ்ரீ மன் நாராயணன் –ஆபரணங்களில் அந்நிய தமமாய் இருக்கிறபடி லஷ்மீ சம்பந்தமும் ஆபரண சோபையினுடைய போக்யத்தையாலே சொல்லாது ஒழிய மாட்டார் அசங்க்யாதம் ஆகையால் பேச மாட்டார் –அந்த ஆபரண சேர்த்திக்கும் மிதுனத்துக்கும் தோற்று அடிமை புக்கவர்கள் அன்று அவர்கள் தோற்ற தோல்விக்கு அடிமை புக்கவர்கள் எனக்கு நிரந்தரமான ஜென்மத்தில் அவகாசம் தோறும் சேஷிகள் –

கேவலம் இவையோ நிரூபகம்-க்ராம குலாதி வியாபதேசங்களும் இல்லையோ —கர்ம கைங்கர்யங்களில்‌ நிஷ்டராயிருக்கும்‌ இருவர்க்கும்‌ வ்யபதேஸம்‌ ஏதென்னில்‌ — சொல்லுகிறது மேல்-

ஒரு தலையில் க்ராம குலாதி வியாபதேசம்-குலம் தரும் என்னும் மாசிற் குடி பழி என்று பதியாக கோயிலில் வாழும் என்பர்கள்-சூரணை -35 –

அதாவது
கர்ம நிஷ்டர் என்று சொல்லப் பட்ட ஒரு தலையில் சரீர அனுபந்திகளான க்ராம குலாதிகளை இட்டு
வியபதேசிக்கும் அந்த வியபதேசத்தை கைங்கர்ய நிஷ்டரான மற்றை தலையில் உள்ளவர்கள்
குலம் தரும் -பெரிய திருமொழி-1-1-9–என்கிற படியே திரு மந்திர சித்த பகவத் சம்பந்த ஜ்ஞான பிரயுக்தமாய் மாசில் குடி -மூன்றாம் திருவந்தாதி –10—என்று சேஷத்வ விரோதியான அஹங்காராதிகள் இல்லாமையாலே நிர் தோஷமாய் இருக்கிற இக் குலத்துக்கு -(கீழ் சொன்ன வியபதேசத்தை )அவத்ய கரம் என்று கருதி-வேம்கடத்தை பதியாக வாழ்வீர்காள்–நாச்சியார் -8-9–
கோயிலில் வாழும் வைட்டணவன்—பெரியாழ்வார் 5-1-3–என்று பகவத் அன்வயம் உள்ள தேச சம்பந்தத்தை விட்டு வ்யவகரிப்பர்கள் என்கை .. இது பகவத் சம்பந்தத்தை இட்டு வ்யபதேசிக்கும் அதுக்கும் உப லஷணம்.(ஊரிலேன் காணி இல்லை உறவு மற்று ஒருவர் இல்லை பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் –கதறுகின்றேன்) ஏகாந்தீ வ்யபேதேஷ்டவ்யோ நைவ க்ராம குலாதிபி விஷ்ணுனா
வ்யபேதேஷ்டவ்யஸ் தஸ்ய சர்வம் ச ஏவ ஹி—பரமைகாந்தி தர்மம்
-என்னக் கடவதிறே-

 கரம நிஷ்டரை க்ராம குலாதிகளாலே வ்யபதேஸிக்கக் கடவது; கைங்கர்ய நிஷ்டனுக்கு அந்த க்‌ராம குலாதிகளால்‌ வருகிற வ்யபதேஸம்‌ ”குலந் தரும்‌’” (திருமொழி 1 – 1 – 9) என்றும்‌, “மாசில்‌ குடிப்‌ பிறப்பு” (மூ.திருவ. 10)என்றும்‌ பகவத் ஸம்பந்த ஜ்ஞாநத்தாலே இதர வ்யாவ்ருத்தமான வைஷ்ணவ ஜாதீயனான இவனுக்கு அவத்‌யமாகையாலே நிரவத்‌யமான பகவத்‌ ஸம்பந்த ப்ராதாந்யமே தோற்றும்படியாக, ““வேங்கடத்தைப்‌ பதியாக வாழ்வீர்காள்‌” (நா.திரு.8 – 9) என்றும்‌, “கோயிலில்‌ வாழும்‌ வைட்டணவர்‌” (பெரியா.திரு. 5 – 1 .. 3) என்றும்‌ சொல்லுகிறபடியே பகவத் ஸம்பந்தமுள்ள தேஸத்தையிட்டும்‌, பகவத்‌ ஸம்பந்த தந் தன்னை யிட்டும்‌ வ்யபதேஸிக்கக் கடவது; “ஏகாந்த வ்யபதேஷ்டவ்யோ நைவ க்‌ராம குலாதி,பி। விஷ்ணுநா வ்யபதேஷ்டவ்யஸ் தஸ்ய ஸர்வம் ஸ ஏவ ஹி நத்யாஸ் தஸ்யைவ நாமாதி, ப்ரவிஷ்டாயா யதார்ணவம்‌ ! ஸர்வாத்மநா ப்ரபந்தஸ்ய விஷ்ணு மேகாந்திநஸ் ததா”” என்னா நின்றதிறே –

குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயர் ஆயின எல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —9—ஜன்ம வருத்தங்களால் குறைய நின்றான் ஒருத்தனுக்கு பகவத் சம்பந்தம் உண்டானால் இவற்றால் உயர்ந்தான் ஒருத்தன் இவை இரண்டிலும் இவனுக்கு தாழ்வு உண்டாகவும் தான் உயர்ந்தான் ஆகவும் -நினைத்து இருக்கவும் கூட கூச வேண்டும்படி யாயிற்று பகவத் பிரபாவம் இருப்பது –
ஆனாலும் பெண் கொடுத்தல் கொள்ளுதல் செய்கிறார் இல்லை – அதுக்கடி ஜாதி நிபந்தனம் ஆகை
ஸ்லாகைக்கு நிபந்தனம் ஸ ஸ்லாக்யஸ் ஸ குணீ தந்யஸ் ஸகுலீந -என்னக் கடவது இறே –கண்ட தெல்லாம் தர்ம சந்தேஹம் பண்ணக் கடவ தர்ம புத்திரன் பகவத் ப்ரத்யாசத்தியாலும் அசரீரி வாக்யத்தாலும் விதுரரை ப்ரஹ்ம ரதத்தாலே சம்ஸ்காரம் பண்ணினான் இறே – ருஷிகள் தர்ம வ்யாதன் மாம்ஸ விக்ரயம் பண்ணி கை ஒழியும் தனையும் பார்த்து நின்று தர்ம சங்கங்கள் கேட்டுப் போனார்கள் இறே –இங்கன் அன்றாகில் பஞ்சம வேதமான மஹா பாரதத்திலே எழுதக் கூடாது இறே – கைசிக கதையிலே வந்தவாறே விலஷணனாய் இருப்பான் ஒரு ப்ரஹ்ம ராஜஸ் ஆசார வைகல்யத்துக்கு -பகவத் ஜ்ஞானம் உடையான் ஒரு பாடுவானாலே பரிஹாரம் இருந்தது இறே –ஸ்ரீ விபீஷண ஆழ்வான் ராவணனைப் பார்த்து -பெருமாளை சரணம் புகு-என்று சொல்ல – த்வாந்துதிக்  குல பாம்ஸநம் -என்று -நீ இக்குடிக்கு உடல் அல்ல என்றான் இறே – ராவணனுக்கு வார்த்தை சொல்லும் இடத்தில் –நிசாசர -என்று அவனை ராஷசனாகவும் தான் அல்லனாகவும் சொன்னான் – இங்கனே அன்றிக்கே -ராஷசாநாம் பல அபலம் என்று பெருமாள் தாமும் அருளிச் செய்தார் –ஆகையாலே பகவத் சம்பந்தம் ஸ்பர்ச வேதியாய் இருந்தது –

தேசும் திறலும் திருவும் உருவமும்
மாசில் குடிப் பிறப்பும்   மற்றவையும்
வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான் பேரோத
நலம் புரிந்து சென்றடையும் நன்கு —-10–மதிப்பும் –பராபிபாவன சாமர்த்தியமும் -ஐஸ்வர்யமும் -வடிவு அழகும் –குற்றம் அற்ற பிறப்பும் –குற்றம் அற்ற பகவத் ப்ரத்யாசத்தியால் வரும் ஆபி ஜாத்யமும்–-அநுக்தமான அவையும் -இவை எல்லாமான நன்மைகளும்-

மத யானை போல் எழுந்த மா முகில்காள் வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள்
பாம்பணையான் வார்த்தை என்னே
கதி என்றும் தானாவான் கருதாது ஓர் பெண் கொடியை
வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே–8-9–ஏஷ ஹ்யேவா நந்தயாதி -தைத் ஆனந்த -7-என்கிறபடியே அவன் ஆனந்திப்பிக்க ஆனந்தித்து திரிகிறி கோள் அன்றோ நீங்கள்-ஒரு விபூதியாக  அஹம் அன்னம் அஹம் அன்னம் என்று களிக்குமா போலே நீங்களும் திரள் திரளாக வர்த்திக்கிறிகோள் அன்றோ-வந்தேறிகளாய் திருநாள் சேவித்து போவாரைப் போலே போராதே-
அங்கே நித்ய வாசம் பண்ணப் பெறுவதே நீங்கள்
 -சேறு தோய்ந்து கழுவினவர்கள் அன்றிக்கே –
முக்தரைப் போலே அன்றிக்கே – நித்ய சித்தரைப் போலே யாய்த்து –
அங்குத்தை வர்த்தநத்தை இறே வாழ்வாகச் சொல்லுகிறது-இரண்டு ஆற்றுக்கும் நடுவில் வாசம் போலே – நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம் -11-5- என்னக் கடவது இறே பல நீ காட்டிப் படுப்பாயோ –திருவாய் -6-9-9- என்றும் –
புறத்து இட்டு இன்னம் கெடுப்பாயோ
 -6-9-8-என்றும் இதர விஷய ப்ராவண்யம் விநாச ஹேதுவாய் இருக்கும் – பகவத் ப்ராவண்யம் வாழ்வாய் இருக்கும்

நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால்
புன்மையால் உன்னை புள்ளுவம் பேசி புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே
உன்னும் ஆறு உன்னை ஒன்றும் அறியேன் ஓவாதே நமோ நாரணா என்பன்
வன்மை யாவது உன் கோயிலில் வாழும் வைட்டணவன் என்னும் வன்மை கண்டாய் -5- 1-3 –வன்மை -மிடுக்கு-ஸ்ரீ கோயிலில் வாழும் என்று புறம்புள்ள அபிமானம் குலைகையாலும் தாம் அநந்ய பிரயோஜனர் ஆகையாலும் இவருடைய ராஜ குலம் இருக்கும் படிபவத் விஷய வாஸிந -(ஸ்ரீ ராமாயணம் ) இவற்றின் புறத்தான் என்று எண்ணானோ-(திரு விருத்தம் )என்று ஸ்ரீ பகவத் அபிமானம் உள்ள தேசத்தே கிடக்கை இறே தங்களுக்கு பேறாக நினைத்து இருப்பது-

ஊரிலேன் காணி இல்லை உறவு மற்று ஒருவர் இல்லை
பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
கார் ஒளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர் களைகண் அம்மா அரங்க மா நகர் உளானே –29—வேறு எவ்வித யோக்யதையுமில்லாமற் போனாலும் ஸாளக்ராமம், கோயில் திருமலை, பெருமாள் கோயில் முதலிய திவ்யதேசங்களில் ஜந்மமாவது கிடைத்தால் அதைக் கொண்டு உய்வு பெறலாம்.-அப்படிப்பட்ட ஒரு தேசத்திலும் எனக்குப் பிறவி நேரவில்லையே!-திவ்யதேசத்தில் ஐந்மமில்லாவிடினும் உதரபோஷணார்த்தமாக ஏதாவது கொஞ்சம் க்ராம பூமிகள் ஏற்பட்டிருந்தால் அங்குப் போக வேண்டிய காலங்களில் யாத்ருச்சிகமாக இடையிலே ஒரு திவ்யதேவஸேவை கிடைக்கக்கூடும் அப்படிப்பட்ட ப்ரஸக்தி நேருவதற்கு ஒரு குழியளவு காணியுமில்லை யென்கிறார்.-இவையொன்றுமில்லையாகிலும் திவ்யதேசவாஸிகளோடு உறவு இருக்குமாகில் பந்து க்ருத்ய பரிபாலனத்துக்காகச் சிலகாலம் அங்குப்போகவும் அதடியாக பகவத்ஸேவை கிடைக்கவும் ப்ரஸக்தியுண்டு; அப்படிப்பட்ட உறவினர்களும் எனக்கில்லை.

இனி உபயர் உடையவும் கூடஸ்தரை சொல்லுகிறது-இனிமேல்‌ இருவருடையவும்‌ கூடஸ்தரைச்‌ சொல்லுகிறது-

விப்ரருக்கு கோத்ர சரண சூத்ர கூடஸ்த்தர் பராசர பாராசர்ய போதாய நாதிகள்-பிரபன்ன ஜன கூடஸ்த்தர் பராங்குச பரகால யதி வராதிகள் .-சூரணை -36-

அதாவது
அந்தணர் மறையோர் என்கிற பிராமணருக்கு கோத்ர கூடஸ்தர் பரசராதிகள்
கோத்ரமாவது-அபத்ய சந்ததி ( பிள்ளைப்பிறப்பின் சந்ததி ) – சந்ததிர் கோத்ர ஜனன குலம் அபிஜனம் அன்வயம் -பர்யாய சொற்கள் -அமரகோசம் -என்னக் கடவதிறே-அந்த கோத்ரம் தான் அநேகமாய் தத் தத் கூடஸ்தரான வசிஷ்ட காஸ்யப பரத்வாஜ வத்ஸ ப்ரப்ருதிகள் பலர் உண்டாகையாலே பராசராதிகள் என்கிறது .-சரண கூடஸ்தர் பாராசர்யாதிகள் —சரணங்கள் ஆனவை -வேத சாகைகள் தத் அத்யாதிகளையும் கௌணமாக சரண சப்தத்தாலே சொல்லக் கடவது .-சரண சப்த காடக காலாபாதி சாகா விசேஷஷு முக்ய தத்தத் யாயிஷு புருஷே ஷு கௌண-என்கையாலே இவ் இடத்தில் சாகைகளைச் சொல்லுகிறது ..சர்வ சாகைகளுக்கும் பிரதான பிரவர்தகன் பாராசர்யனாக இருக்க செய்தேயும் பின்பு தத் தத் சாகைகளுக்கு தனி தனி பிரவர்தகரான கடக லாப கண்வராதிகளும் உண்டாகையாலே பாராசர்யாதிகள் என்கிறது-சூத்ரம் ஆவது -கர்ம அனுஷ்டான பிரதி பாதகமான கல்பம் . சீஷாயாம் வர்ண சிஷா—ஸ்ரீ ரெங்கராஜ உத்தர சதகம் -18- -என்று தொடங்கி சொல்லி வருகிற அளவிலே கல்பேனுஷ்டானம் முக்தம் -என்றது இறே ..அது தானும் பலவாய் ,தத் தத் கர்த்தாக்கள் ஆன ஆபஸ்தம்ப ஆஸ்வலாயநாதிகளும் உண்டாகையாலே போதாயானாதிகள் என்கிறது . ஆக இவர்கள் விப்ரருக்கு கூடஸ்த புருஷர்கள் அடியார் தொண்டர் -என்கிற பிரபன்ன ஜனங்களுக்கு கூடஸ்தர்
பத்யு ஸ்ரிய பிரசாதேன ப்ராப்த சார்வஜ்ஞய சம்பதம்
(மயர்வற மதிநலம் அருளப்பெற்றவருக்கு மொழி பெயர்ப்பு ) பிர பன்ன ஜன கூடஸ்தம் பிரபத்யே ஸ்ரீ பராங்குசம் -ஸ்ரீ பராங்குச அஷ்டகம் -4–. என்கிற நம் ஆழ்வார் திரு மங்கை ஆழ்வார் தொடக்கமான எல்லா ஆழ்வார்களும் ,எம்பெருமானார் முதலிய ஆச்சார்யர்களும் என்கை .-கூடஸ்தர் ஆகிறார் –மூல பூதர் இறே-உபதேச அனுஷ்டானங்களாலே பிரபத்தி மார்க்கத்தை தலை பெருத்தி வளர்த்தவர்கள் ஆகையால் இவர்களை பிர பன்ன ஜன கூடஸ்தர்கள் என்கிறது –(ப்ரஹ்ம ஞானம் அளித்தவர் ஸ்ரீ நம்மாழ்வார் – கைங்கர்யம் செய்ய உணர்த்தியவர் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் –ஆச்சார்ய அபிமானம் அனுஷ்டானம் ஸ்ரீ ராமானுஜர் )

முற்பட்ட ப்‌ராஹ்மணர்க்கு பராஸர(வ்யாஸ)வஸிஷ்டாதிகள்‌ கோத்ர குருக்களுமாய்‌- போதாயநாதிகள்‌ ஸூத்ர குருக்களுமாய்‌, (தத் தச் சரண- உபயங்‌களில்‌) பூர்வ பூர்வ புருஷர்கள்‌ கூடஸ்தருமாய்‌ இருப்பர்கள்‌. ப்ரபந்ந ஜந கூடஸ்த ர்‌ ““பத்யுஸ் ஸ்ரிய? ப்ரஸாதேந ப்ராப்த ஸார்வஜ்ஞ்ய ஸம்பதம்‌ ! ப்ரபந்ந ஜந கூடஸ்தம்‌ ப்ரபத்‌யே ஸ்ரீபராங்குஸம்‌?” (பரா.௮..] என்றும்‌, ‘‘ராமாநுஜாங்க்‌ரி ஸரணோஸ்மி குல ப்ரதீபஸ் த்வாஸீத்‌ ஸ யாமுந முநேஸ் ஸ ச நாத வம்ஸ்யச । வம்ஸ்ய? பராங்குஸ முநேஸ்ஸ ச ஸோபி தேவ்யா ததாஸஸ் தவேதி வரதாஸ்மி தவேக்ஷணீய?” (வரத.ஸ்தவே 102) என்றும்‌ சொல்லுகிறபடியே  நம்மாழ்வார்‌, திருமங்கையாழ்வார்‌ தொடக்கமான ஆழ்வார்‌களும்‌, உடையவர்க்கு முன்பும்‌ பின்புமுள்ள ஆசார்யர்களும்‌ என்கிறார்

சீஷாயாம் வர்ண சிஷா பதசமதிகம வியாக்ரியா நிர்வசோப்யாம்
சந்தஸ் சந்தஸ்திதவ் ஸ்யாத் கமயதி சமயம் ஜ்யவ்திஷம் ரங்க நாத
கல்பே அனுஷ்டானம் யுக்தம் ஹி உசிதகமிதயோ நியாய மீமாம்சயோ ஸ்யாத்
அர்த்த வ்யக்தி புராண ஸ்ம்ருதிஷு தத் அனுகா த்வாம் விசின் வந்தி வேதா –18-கல்ப ஸூத்ரத்திலே வைதிக கர்மங்களை அனுஷ்ட்டிக்க வேண்டிய முறைமை சொல்லப் பட்டது

பத்யு: ச்ரிய பிரசாதேன ப்ராப்த சார்வஜ்ஞ்ய சம்பதம் |
ப்ரபன்ன ஜன கூடஸ்தம் ப்ரபத்யே ஸ்ரீ பராங்குசம் ||-
-5-ஸ்ரீ திருமால் திருவருளால் – மயர்வற மதிநலம் அருளினன் யவனவன் – சர்வஜ்ஞத்வம் ஆகிற சம்பத்தைப் பெற்றவரும் பிரபன்ன ஜனங்களுக்கு தலைவருமான – ஸ்ரீ நம்மாழ்வாரைத் தஞ்சமாகப் பற்றுகிறேன்

ராமானுஜ அங்க்ரி சரணோஸ்மி குல ப்ரதீபத்வ ஆஸீத் ச யமுந முநேஸ் ச ச நாத வம்ஸ்யஸ்
பராங்குச முநேஸ் ச ச ஸோபி தேவ்யாஸ் தாஸஸ் தவேதி வரதாஸ்மி தவே ஷணீயஸ் –102–அடியேன் எம்பெருமானாருடைய திருவடிகளைச் சரணமாக அடைந்தவன்-விப்ரர்க்கு கோத்ர சரண ஸூத்ர கூடஸ்தர் பராசர பாராசர்ய போதாய நாதிகள் – ப்ரபந்ந ஜன கூடஸ்தர் பராங்குச பரகால யதிவராதிகள்-அந்த எம்பெருமானாரோ ஆளவந்தாருடைய வித்யா வம்சத்துக்கு அணி விளக்காக ஆனார்
ராமானுஜரும் –தூய் நெறி சேர் எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம் கதி பெற்று உடையன் அன்றோ –அந்த ஆளவந்தார் தாமும் வித்யா அந் வயத்தாலும் குடல் துடைக்காலும் ஸ்ரீ மந் நாதமுனிகளுடைய வம்சத்தவர்-பிதா மஹம் நாத முனிம் விலோக்ய ப்ரஸீத மத் வ்ருத்தம் அசிந்தயித்வா -என்ற குடல் துவக்கும் உண்டே–அந்த நாதமுனிகளும் நம்மாழ்வாருடைய வம்சத்தவர்
குருகையில் வந்த குல முனிவனுடைய குலக் கொழுந்து-ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் அமுதத் திரு வாய் ஈரத் தமிழின் இசை உணர்ந்தோர்கட்க்கு இனியவர் தம் சீரைப் பயின்று உய்யும் சீலம் கொள் நாத முனி அன்றோ-அந்த ஆழ்வாரும் உனது பிராட்டிக்கு அடியவர்-ஆழ்வாரும் உனக்குப் படுக்கைப் பற்று அன்றோ – பங்கயத்தாள் திரு அருளும் கொண்டவர் அன்றோ–இந்த பாரம்பர்யத்தாலே தேவரீருக்கு அடியேன் கடாக்ஷிக்கத் தகுந்தவன் ஆகின்றேன் அன்றோ–நிகமத்தில் தம்மைக் கடாக்ஷித்து அருள வேண்டுவது பேர் அருளாளனும் அவர்ஜநீயம் என்னும் இடத்தை மூதலிக்கிறார்

இனி இரண்டு தலைக்கும் பிராமணிய வைஷ்ணவத்ய சித்தி ஹேது நியமங்களை தர்சிப்பிகிறார் மேல்-இனிமேல்‌ விப்ரரூம்‌ ப்ரபந்நருமான இவர்களிருவர்க்கும்‌ ப்‌ராஹ்மண்ய ஸித்‌தி, ஹேது எது? வைஷ்ணவத்வ ஸித்‌தி, ஹேது ஏது? என்னச்‌ சொல்லுகிறார்‌ –

அத்யயன ஞான அனுஷ்டானங்களாலே பிராமண்யம் ஆகிறார் போலே சந்தங்கள் ஆயிரம் அறிய
கற்று வல்லார் ஆனால் வைஷ்ணவத்த ஸித்தி- சூரணை-37-
-(அத்யயனம் ஞானம் அனுஷ்டானம் மூன்றுக்கும் அறிய கற்று வல்லார் மூன்று சப்தங்கள் )

அதாவது
ஸ்வ அத்யாயோத்ய தவ்ய–என்கிற படியே – ப்ரதமம் வேதத்தை ஆச்சார்ய உச்சரண அனுச்சாரண முகேன அஷர ராசி க்ரஹணம் பண்ணுகை யாகிற அத்யயனத்தை பண்ணி மீமாம்ச ஸ்ரவணாதிகளாலே தத் அர்த்த ஞானம் பிறந்து தத் அனுரூபமான அனுஷ்டானமும் உண்டானால் பிராமண்யம் சித்திக்குமா போலே ,சந்தங்கள் ஆயிரம்–திருவாய்-10-9-11- என்ற படியே சந்தோ ரூபமாய் சகஸ்ர சாகையாய் இருக்கிற திருவாய் மொழியை-அறியக் கற்று வல்லார் வைட்டணவர்––திருவாய்-5-5-11-என்கிற படியே அத்யே தவ்யம் திவிஜ ஸ்ரேஷ்டை வேத ரூபம் இதம் க்ருதம்- என்கிற பிரகாரத்திலே ஆச்சர்ய உச்சாரண அனுசாரண முகேன அப்யசிக்கை யாகிற அத்யயனத்தை பண்ணி உபதேச முகத்தாலே தத் அர்த்த ஞானம் பிறந்து தத் அனுரூபமாக அனுஷ்ட்டிக்கவும் வல்லார் ஆனால் ஆய்த்து வைஷ்ணத்வம் சித்திப்பது என்கை –

அத்‌யயநமாவது – ஓதுகை. ஜ்ஞாநமாவது அதில்‌ அர்த்த பரிஜ்ஞாநம்‌. அநுஷ்டாநமாவது – அறிந்தபடியே அநுஷ்டிக்கை என்று இவற்றாலே ப்‌,ராஹ்மண்ய மாகிறாப் போலே, (சந்தங்களாயிரமும்‌) ““சந்தங்களாயிரத்திவை வல்லார்‌” (திருவா. 10 – 9 – 11) என்று சந்தோ ரூபமான ஆயிரத்தையும்‌, “அறியக்‌ கற்று வல்லார்‌ வைட்டணவர்‌”’ (திருவா. 5 – 5 – 11) என்கிறபடியே திருவாய்மொழி ஆயிரமும்‌ அத்‌யயநம் பண்ணி, ஆசார்ய முகத்தாலே அர்த்த ஸ்ரவணம் பண்ணி, அறிந்த படியே அநுஷ்டிக்கவும்‌ வல்லாரானாலாய்த்து வைஷ்ணவத்வம்‌ ஸித்‌தித்ததாவது. ‘ஸ்வாத்‌யாயோத்‌ யேதவ்ய?”‘ (தை. ஆ.2) என்கிற விதி போலே “அத்‌யேதவ்யம்‌ த்விஜ ஸ்ரேஷ்டை வேத ரூபமித,ம்‌ க்ருதம்‌?” என்று அந்த வேதாந்த தாத்பர்யமாய்‌, இந்த திராவிட வேதத்துக்கு உள்ளீடான பாகவத ஸேஷத்வ பர்யந்தமான பகவச்‌ சேஷத்வ பரிஜ்ஞாநா பாவத்தால்‌ ப்‌ராஹ்மண்ய ஸித்‌தியுமில்லை –

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-சந்தங்களை யுடைத்தான ஆயிரம் என்னுதல் -சந்தோ ரூபமான ஆயிரம் என்னுதல் -இப்பத்தையும் அப்யஸிக்க வல்லார் அத்தேசத்திலே பகவத் குண அனுபவம் பண்ணி -அதிலே வித்தராய் அதுக்கு அவ்வருகு கால் வாங்க மாட்டாதே இருக்குமவர்களைப் போலே யாவர் –

அறிவரிய பிரானை ஆழி அம் கையனையே அலற்றி
நறிய நன்மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துளிவை பத்தும் திருக்குறுங்குடி யதன்மேல்
அறியக் கற்று வல்லார் வைட்ணவர் ஆழ்கடல் ஞாலத்துள்ளே.–5-5-11-பரம பதத்திலும் அவதாரங்களிலும் திருக்குறுங்குடி நிலையிலே அழகாலும் சீலத்தாலும் உண்டான ஏற்றம் அறிந்து கற்க வல்லவர்கள் -குணாதிக்யம் இறே வஸ்துவுக்கு ஏற்றம் -வியக்தமாக கற்க வல்லார்கள் என்றுமாம்-மரு பூமியான சம்சாரத்திலே -உகந்து அருளினை ஏற்றம் அறியுமவர்கள் நித்ய ஸூ ரிகளோடு ஒப்பார்கள்-

அந்த வேத அத்யயனாதிகள் உடையவர்களுக்கு இந்த வேத அத்யயனாதிகள் இல்லாத அளவில் வைஷ்ணத்வ அஸித்தி ஒழிய பிராமணிய ஹானி இல்லையே என்ன சொல்லுகிறது மேல் ..அவர்களுடைய உத்பத்தியும்‌ நிரூபிக்க வேணுமென்கிறார்‌–

இந்த உள் பொருள் கற்று உணர்ந்து மேலைத் தலை மறையோர் ஆகாதாரை அயல் சதுப் பேதிமார் என்று உத்பத்தி நிரூபிக்கும்-சூரணை -38-

அதாவது
மிக்க வேதியர் வேதத்தின் உள் பொருள் -கண்ணி நுண் – 9—என்று உபநிஷத் குஹ்யமான
இந்த திராவிட வேதார்த்தத்தை –கற்று உணர்ந்த மேலை தலை மறையோர்-முதல் திருவந்தாதி -66–என்கிற படியே-ஆச்சார்ய உபதேச முகேன கற்று அறிந்து உத்க்ருஷ்டரான-வேதாந்திகள் ஆகாதவரை –அயல் சதுப் பேதிமார் -திருமாலை -39-என்று — வேத அத்யயன பிரயோஜனம் ஈஸ்வரனை உள்ளபடி அறிந்து , ஸ்வரூப அனுரூபம் புருஷார்த்தம் கைங்கர்யம் என்று இருக்கையாய் இருக்கிற இந்த ஞான பாவத்தாலே ,நாலு வேதங்களையும் அதிகரிக்கச் செய்தே அந்த வேதத்தோடு தங்களுக்கு ஒட்டு இன்றி அதுக்கு அசலானவர்கள் என்று அறுதி இட்டு –-விஷ்ணு பக்தி விஹீநோய சர்வ சாஸ்த்ரார்த்த வேத்யபி
ப்ராஹ்மண்யம் தஸ்ய ந பவேத் தாஸ் யோத்பத்திர் நிரூப்யதாம்
-பாத்ம புராணம் –என்கிற படியே
இவர்கள் பிராமணர் அல்லர் என்று உத்பத்தி ஆராயப் படும் என்கை ..-யா புத்ர பிதரம் த்வேஷ்டிதம் வித்யா தந்த்யரேசதம் -யோ விஷ்ணும் சததம் த்வேஷ்டி தம் வித்யா தந்த்யரேசதம் –என்னக் கடவதிறே..

““மிக்க வேதியர்‌ வேதத்தினுட்பொருள்‌‘” (க.நு.சி. 9) என்று உபநிஷத்‌ குஹ்யமுமான இந்த த்‌ராவிட வேதத்தினுடைய ரஹஸ்யார்த்தத்தை, (கற்றுணர்ந்து மேலைத் தலைமறை யோராகாதாரை) ““வேட்பனவும்‌” (மு.திருவ.66) என்கிறபடியே கற்றுணர்ந்தும்‌ அநுஷ்டாந பரருமாகாதாரை ““அயல் சதுப்பேதிமார்கள்‌”” (திருமாலை 39) என்று அசலிட்டு உத்பத்தி நிரூபிக்கக் கடவதிறே. ‘‘ஓளபாஸநி ஸஹஸ்‌ரேப்‌யோ ஹ்யாஹிதாக்‌நிர் விஸிஷ்யதே | ஆஹிதாக்‌நி ஸஹஸ்ரேப்‌,யஸ் ஸோமயாஜி விஸிஷ்யதே | ஸோமயாஜி ஸஹஸ்ரேப்‌,யஸ் ஸத்ரயாஜி விஸிஷ்யதே ! ஸத்ரயாஜிஸ் ஸஹஸ்ரேப்‌,யஸ் ஸர்வவேதாந்த பாரக,ீ ! ஸர்வ வேதாந்த வித்கோட்யா விஷ்ணு ப,க்தோ விஸிஷ்யதே । விஷ்ணு ப,க்தி விஹீநோ யஸ் ஸர்வ ஸாஸ்த்ரார்த்த, வேத்‌,யபி ! ப்‌,ராஹ்மண்யம்‌ தஸ்ய ந பவேத்‌ தஸ்யோத் பத்திர் நிரூப்யதாம்‌ ‘ –(பாத்ம புராணம் –)என்னக் கடவதிறே –

மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள்
நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர் சடகோபன் என்னம்பிக்கு ஆட்
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே -9–ப்ரமாண ஸ்ரேஷ்டமான வேதத்தை நிரூபகமாக உடையவர்கள் –உளன் சுடர் மிகு சுருதியுள் -என்று ஆழ்வார் அருளிச் செய்ய கேட்டிருக்கையாலே – அநேக சாக அத்யயனம் -பண்ணினவர்கள் என்றுமாம் –சகல வேதங்களின் உடைய ரஹஸ்யார்த்தத்தை – வேதாந்த ரஹஸ்யம் –ததீய சேஷத்வ பர்யந்தமான பகவத் சேஷத்வம் என்று இறே-வைதிக சாஸ்திரம் நிர்ணயித்தது-துர்க்ரஹமான இந்த ரஹஸ்யார்த்தத்தை கேட்பார்க்கு பிரதிபத்தி விஷயமாம் படி –பாடி –
பரமனைப் பயிலும் திரு வுடையார் எவரேலும் -என்றும் –எம்மை யாளும் பரமர் -என்றும்-அருளிச் செய்தார் இறே-பகவத் சேஷத்வத்துக்கும் கூட மேட்டு மடையான என் நெஞ்சிலே இத்தை
ஸ்திரமாக்கினார் –-கல்லைத் துளைத்து அதிலே நீரை நிறுத்துவாரைப் போலே நிர் விவரமான என்  நெஞ்சுக்கும் இதுவே விஷயமாம் படி பண்ணினார்–இது இறே –என் தண்மையைப் பாராதே என் திறத்தே பண்ணின உபகாரம்

காலை எழுந்து உலகம் கற்பனவும் கற்று உணர்ந்த
மேலைத் தலை மறையோர் வேட்பனவும் வேலைக் கண்
ஓராழி யானடியே யோதுவது மோர்ப்பனவும்
பேராழி கொண்டான் பெயர் ——66–அறிவு தலைக் கட்டினவர்கள்-பாவன பிரகர்ஷத்தாலே சாஷாத் கரிப்பனவும்-அறிவு தலை நின்றேறி அறிந்தவர்கள் பாவனா பிரகர்ஷத்தாலே சாஷாத் கரிக்க ஆசைப் படுமதுவும் –

அடிமையில் குடிமை யில்லா அயல் சதுப் பேதிமாரில்
குடிமையில் கடமை பட்ட குக்கரில் பிறப்பரேலும்
முடியினில் துளபம் வைத்தாய் மொய் கழற்கு அன்பு செய்யும்
அடியரை உகத்தி போலும் அரங்க மா நகர் உளானே–39–கைங்கர்யம் நமக்கு கர்த்தவ்யம் என்று இருக்கும் அவர்கள் அன்றிக்கே இருக்கை –கைங்கர்யம் ஆகிறது -சஹஜம் – அது ஒழியச் செல்லாது இருக்கை யாவது -பிராப்தம் – அது இன்றிக்கே இருக்குமவர்கள் –அடிமைக்கு அசலான சதுர் வேதிகளாய் இருப்பாரில் காட்டில் –வேதத்யயனம் -பண்ணுகிறதுக்கு பிரயோஜனம்-ஈஸ்வரனை உள்ளபடி அறிகையும்-தன்னை உள்ளபடி அறிகையும் – கைங்கர்யம் ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தம் என்று அறிகையும் -ஆய்த்து –அசல் ஆகையாவது – இந்த ஜ்ஞானத்துக்கு உடலாக வேத அத்யயனம் பண்ணுகிறோம் என்று அறியாது இருக்கை –-அத்யயன பலம் அர்த்த ஜ்ஞானம் என்று அறியாதவர்கள்-சதுர் வேதிகள் ஆனாலும் நிஷ் பிரயோஜனம் -என்கை –விஷ்ணு பக்தி விஹீ நோயஸ் சர்வ சாஸ்த்ரார்த்த வேத்யபி ப்ராஹ்மண்யம் தன் நபவேத் தச்யோத்பத்திர் நிரூப்யதாம் – என்னக் கடவது இறே –

ஆக கர்ம கைங்கர்யங்கள் -26-என்று தொடங்கி– இவ்வளவாக இரண்டும் இன்னத்துக்கு அனுகுணம் என்றும்-இவற்றுக்கு பிரேரக ஆஸ்ரய விஷய பேதங்களும் இவற்றின் சாதாரண அசாதாரணத்வமும்
அசாதாரண அன்வயத்தில் சாதாரண நிவ்ருத்தியும் , கைங்கர்ய நிஷ்டருக்கு கர்ம நிஷ்டரோடு பொருந்தாமையும்அதுக்கு அடியாக இருவருடைய ஜன்ம நிரூபக கூடஸ்த பேதங்களும் ,
இருவருக்கும் பிராமணிய வைஷணத்வ ஸித்தி ஹேதுக்களும் , திராவிட வேதார்த்த ஞான அபாவத்தில் ஸ்வாதீத வேதாநன்வயராய் நிஹீனத்வ புத்தயர்ஹராம் படியும் சொல்லிற்று-

சாஸ்த்ர சாஸ்த்ர தாரதம்ய பிரகரணம் முற்றிற்று

–——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌ – 3-விஷய பாதம்-3-ஸாஸ்த்ர தாத்பர்ய விஷய விஸேஷாதிகரணம்‌ -ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

June 29, 2026

(1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 284 முடிய (48)

(1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-284 (27)

1-ஸாஸ்த்ராரம்ப, பாதம்—–1-15-
2-தாத்பர்ய மூல பாதம்-16-
3-விஷய பாதம் -17-18- 
4-ஆசார பாதம்-19-38-

1-ஸாஸ்த்ர ப்‌ரதாநாதி,கரணம்‌–
2 ஸாஸ்த்ர தாத்பர்ய ப்ரதாநாதி, கரணம்‌- 
3 –ஸாஸ்த்ர தாத்பர்ய விஷய விஸேஷாதி, கரணம்‌–
4 ஸாஸ்த்ர தாத்பர்ய நிஷ்டாசாராதி கரணம்‌ 

5 –ஸூரி வைபவ பாத, – 3 அதிகரணங்கள் இதில்-
5– க்‌ரந்த,-தத் கர்த்ரு வைப, வாதி, கரணம்‌ —39 – 74 –மொத்தம் 36 ஸூரணைகள்
6—ஸூரி ப்ராமாண்ய விஸேஷாதி கரணம்‌(ப்ரமாத்ரு வைபவம் ) 75 – 93 –மொத்தம் 19-ஸூரணைகள்
7-ப,க,வத் கடாக்ஷ விஸேஷாதி கரணம்‌ 94–96—மொத்தம் -3- ஸூரணைகள்

6 — ப,க்திபாதம் -—97–121—-25-இதிலே 2 அதிகரணங்கள்
8–ஜ்ஞாந ப,க்த்யதி கரணம்‌ 97 –117—மொத்தம் -21 —ஸூரனைகள்
9-ஜ்ஞாந ப,க்த் யவஸ்தா ஸூக்தி அதிகரணம் –118-121—மொத்தம் –3 —ஸூரனைகள் –

7-ஒளபம்ய பாத,3 – 122–155—மொத்தம் 34 ஸூரணைகள் -இதில் இரண்டு அதிகரணங்கள் —
10-ப,க,வந்நாயி கெளபம்யாத்‌,யதி, கரணம்‌–122–132–மொத்தம் – 11 ஸூரணைகள்
11-அந்யாபதேஸ -ஸ்வாபதேஸ அதி கரணம்‌ —-133–155– மொத்தம் —23-ஸூரணைகள்

8–கு,ண பாதம் —156–186 மொத்தம் -31-ஸூரனைகள்
12 சதுர்தவ்த்யாதி, கரணம்‌ 156 –158—மொத்தம்-3–ஸூரனைகள்
13 திவ்ய தேஸ பா-அர்ச்சாவதார விஸேஷ கு,ணாதி கரணம்‌– 159 —186—மொத்தம்–28–ஸூரனைகள்

9 –ஸ்ரீ ஸூக்தி வைப ,வ பாதம் -ஒரே அதிகரணம் 187–188—மொத்தம் –2-ஸூரணைகள்
14 –பகவத் அநுபவ ப்ரீதி காரித ஸ்ரீ முக, ஸூக்தயதி கரணம்‌– 187 -188-மொத்தம் –2-ஸூரணைகள்-

10 –ஸாம்ய பாதம் -ஒரே அதிகரணம்
13–பகவத்‌ கீதாஸ்ரீ முக ஸூக்தி ஸாம்யாதி கரணம்‌–189—ஒரே ஸூரணை

11-விஸேஷ பாத : –190–194—ஒரே அதிகரணம் -மொத்தம் –5–ஸூரணைகள்
16–பகவத்‌ கீதா ஸ்ரீமூக, ஸுத்தி விஸேஷாதி கரணம்‌ 190–195-மொத்தம் –5–ஸூரணைகள்-

12 –ப்ரயோஜந பாதம் –195–207–மொத்தம் 13–ஸூரணைகள்-
17–ஸ்ரீமுக, ஸூக்த் யுபதேஸ -பாத்‌ர-ரீதி-நீத்யர்த்த, விஸேஷா -லக்ஷண –காரண -ஸ பலத்வாதிகரணம் –195–207–மொத்தம் 13–ஸூரணைகள்-

13 –உபதேஸ பாதம் -208 –213—மொத்தம் –6– ஸூரணைகள் –மூன்று அதிகரணங்கள் —
18– ரஹஸ்ய த்ரயார்த்த உபதேஸாதி, கரணம்‌ —208–210—மொத்தம்–3-ஸூரணைகள்
19 –அர்த்த, பஞ்சக ஸங்க்‌,ரஹ-விவரணாதி,கரணம்‌ -211 -212-மொத்தம்—2-ஸூரணைகள்
20-மங்க லாசரண-ஸத்வத் தத்த்வாதி கரணம்‌-213–ஒரே ஸூரணை

14 –விபாக, பாதம் -214 – 217—மொத்தம் – 4– –ஸூரணைகள்- இரண்டு அதிகரணங்கள்–
21 ஸ்ரீ மூக,ஸுூக்தி தஸாவதார விபாகாதி, கரணம்‌ –214 —ஒரே -1–ஸூரணை
22 ஸ்ரீமுக, ஸூக்தி ஸத தஸக பத்‌ய ப்ராதாந்ய-அபிப்ராய விசேஷ அதிகரணம்–215–217—மொத்தம்—3–ஸூரணைகள்

15 –குணாநுபவ பாதம் –218 – 228 —மொத்தம் —11– ஸூரணைகள் –இரண்டு அதிகரணங்கள்–
23 –தஸ ஸதக கத பகவத் குண தஸக அநு குண அநுபவ உபதேச அதிகரணம் —-218—ஒரே ஸூரணை
24-தஸ ஸதக பகவத் குண அநுபவ விவரண அதிகரணம் –219–228—மொத்தம் –10–ஸூரணைகள்

16 –முக்திபாதம்—229 – 234 – மொத்தம் –6 – ஸூரணைகள்–இதில் மூன்று அதிகரணங்கள்
25–ஆர்த்த ப்ரபந்ந ஸூரி ஸரீர வியோகா பாவ காரணாதி கரணம்‌ –229—ஒரே ஸூரணை
26– பர ப,க்த்யாதி, நிரூபண ஸ்தாநாதிகரணம்‌ 230 – –233—மொத்தம் –4–ஸூரணைகள்
27 –திவ்ய ப்ரபந்த, தாத்பர்ய ப,க,வத்‌-ப்ரஸாதாதி கரணம்‌ –234 –ஒரே ஸூரணை-

ஆக சர்வேஸ்வரன் தன் கிருபையால் சம்சாரி சேதனரை உஜ்ஜீவிப்பதற்க்காக
சாஸ்திரத்தையும் சாஸ்திர தாத் பர்யமான திரு மந்தரத்தையும் வெளி இட்டான் என்றது கீழ் -இவை இரண்டையும் வெளி இட்ட பிரகாரம் என் ? அவற்றுக்கு விஷயம் எது ? என்னும் ஆகாங்ஷையிலே தத் பிரகாரங்களையும் தோற்றுவித்துக் கொண்டு விஷயங்களையும் சொல்லுகிறது மேல்-(ஸாஸ்த்ரத்தையும்‌ ஸாஸ்த்ர தாத்பர்யமான திருமந்த்ரத்தையும்‌ வெளியிட்டருளினான்‌ என்று நின்றது கீழ்‌ ; அவற்றை வெளியிட்ட ப்ரகாரமென்‌ ; அவற்றுக்கு விஷயமேது” என்கிற சங்கையில்‌ சொல்லுகிறது)

முனிவரை இடுக்கியும்–முந்நீர் வண்ணனாயும்-வெளி இட்ட சாஸ்திர தாத் பர்யங்களுக்கு
விசிஷ்ட நிஷ்க்ருஷ்ட வேஷங்கள் விஷயம்
-சூரணை 17–

அதாவது –இருள்கள் கடியும் முனிவர்-திருவாய் -10-7-7– -என்கிற ஸ்ம்ருதி கர்த்தாக்களான
(இருள்கள் கடியும் முனிவர் -ஸ்ருதி–ஸ்மர்த்தா -ஸ்மர்த்தர்-மனன சீலர் -ராம ஷேம மனன சீலத்வம் பரத்வாஜருக்கு -ஜகத் ரக்ஷண சிந்தை முனியே -அவனையே சொல்லுவார் ) வியாஸாதி ரிஷிகளை கிருஷ்ணத் த்வைபாயனம் வியாசம் வித்தி நாராயணம் பிரபும் கோஹ்யன்ய புண்டரீகாஷாத் மகா பாரத க்ருத் பவேத் –என்கிற படியே-தானாகச் சொல்லலாம் படி அந்தர்யாமியாய் எடுத்து நின்று தன் முகேன வெளி இட்ட சாஸ்தரத்துக்கு சேதனருடைய தேக விசிஷ்ட வேஷம் விஷயம்-வதரி யாஸ்ரமத்துள்ளானை கரும் கடல் முந்நீர் வண்ணனை -என்கிற படியே-ஸ்ரீ பதரி ஹாஸ்ரமத்திலே ஸ்வேன ரூபேண நின்று வெளி இட்ட-சாஸ்திர தாத் பர்யமான திரு மந்த்ரத்துக்கு சேதனருடைய நிஷ்க்ருஷ்ட வேஷம் விஷயம் என்கை–இத்தால் சாஸ்த்ரத்தில் தேஹத்திலே நோக்கு-தாத் பர்யத்திலே ஸ்வரூபத்திலே நோக்கு -என்றது ஆய்த்து-

இருள்‌கள்‌ கடியும்‌ முனிவரும்‌” (திருவாய்‌. 10 – 7 – 7) என்கிற ஸ்மர்த்தாக்களான வ்யாஸாதி,களுக்கு க்ருஷ்ண த்‌வைபாயநம்‌ வ்யாஸம்‌ வித்‌தி, நாராயணம்‌ ப்ரபு,ம்‌ | கோஹ் யந்ய: புண்ட,ரீகாஷாந் மஹா பாரத க்ருத்‌,பவேத்‌”’ (வி.பு. 3 – 4 – 5) என்கிறபடியே அந்தர்யாமியாய் நின்று தந் முகேந ப்ரவர்த்திப்பித்த ஸாஸ்த்ரங்களுக்கு விஷயம்‌ இவர்களுடைய தேஹ விஸிஷ்ட ஸ்வரூபம்‌ என்றும்‌, *“கருங்கடல்‌ முந்நீர்வண்ணன்‌”’ (திருமொழி 1 – 4 10) என்கிறபடியே ஸ்ரீபதரிகாஸ்ரமத்திலே ஸ்வேந ரூபேண நின்று வெளியிட்ட தாத்பர்யமான திருமந்த்ரத்துக்கு விஷயம்‌ சேதநருடைய நிஷ்க்ருஷ்ட ஸ்வரூபம்‌ என்றும் சொல்லப்பட்டது ; ஸாஸ்த்ரத்துக்கு தேஹத்திலே நோக்கு; தாத்பர்யத்துக்கு ஸ்வரூபத்திலே நோக்கு என்றதாய்த்து –

அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும்
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும்
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை
மருள்கள் கடியும் மணி மலை திருமால் இரும் சோலை மலையே–10-7-7-அஞ்ஞான அந்தகாரத்தை வாசனையோடு போக்கும் ஸ்மர்த்தாக்களும் –இவர்கள் எல்லாரும் கூட ஏத்தும் சர்வேஸ்வரனுடைய திருமலை –

வரும் திரை மணி நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானை
கரும் கடல் முந்நீர் வண்ணனை எண்ணிக் கலியன் வாயொலி செய்த பனுவல்
வரம் செய்த வைந்தும் ஐந்தும் வல்லார்கள் வானவர் உலகுடன் மருவி
இரும் கடல் உலகம் ஆண்டு வெண் குடைக் கீழ் இமையவராகுவர் தாமே —1-4-10-முந்நீரான கரும் கடல் –
ஆற்று நீர் -ஊற்று நீர் -வேற்று நீர் -வர்ஜ ஜலமான –மூன்று வகை நீரை உடைத்தாய் கறுத்த நிறத்தை உடைய கடல் போலே இருக்கிற நிறத்தை உடையவனை அனுசந்தித்து ஆழ்வார் அருளிச் செய்த பாட்டுக்கள்-

ஏவம் பூதமான இவை இரண்டும் சர்வ அதிகாரமோ அதிகிருதா அதிகாரமோ என்ன சொல்லுகிறது மேல்-(இவை யிரண்டும்‌ ஸர்வாதிகாரமா யிருக்குமோ? அதி க்ருதாதிகாரமா யிருக்குமோ? என்கிற சங்கையிலே சொல்லுகிறது)

தோல் புரையே போம் அதுக்கு பழுதிலா யோக்யதை வேணும் மனம் உடையீர் என்கிற ஸ்ரத்தையே அமைந்த மர்ம ஸ்பர்சிக்கு நானும் நமரும் என்னும் படி சர்வரும் அதிகாரிகள்-சூரணை -18-

அதாவது விசிஷ்ட வேஷம் விஷயம் ஆகையாலே ஆந்தரமான ஸ்வரூபத்தில் ஊற்றம் இன்றியே
மேல் எழ தேஹத்திலே நோக்காய் -(மேம் பொருள் போக விட்டு உண்டே )நடக்கிற சாஸ்தரத்துக்கு
பழுதிலா ஒழுகலாறு –
என்ற படி நெடுக போகிற வம்ச பிரவாகத்திலே உத்பத்தியிலே ஆதல் ஆசாரத்திலே ஆதல் ஒரு பழுது அற்று இருக்கிற யோக்யதை வேணும்-கண்ணன் கழலினை நண்ணும் மனம் உடையீர்-திருவாய் -10-5-1- என்றும்-ஸ்ரத்தைவ காரணம் பும்ஸாம் அஷ்டாஷா பரிக்ரஹே என்றும் சொல்லுகிற படியே (ஆசை உடையார்க்கு எல்லாம் இத்தையே தமிழ் படுத்தி கிருபா மாத்ர பிரசன்னாச்சார்யார் -நம் ஸ்வாமி ) ஸ்ரத்தா மாத்திரமே அமைந்த ஸ்வரூப ஸ்பர்சி யான தாத் பர்யத்துக்கு நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாரயணமே –என்று சொல்லும் படி யோக்ய அயோக்ய விபாகமற சர்வரும் அதிகாரிகள் என்கை—இத்தால் சாஸ்திர தாத் பர்யங்களின் அதிக்ருதாதிகாரத்வ சர்வாதிகாரத்வங்களை தத் ஹேது சஹிதமாகச் சொல்லிற்று ஆயிற்று-

தேஹ விஸிஷ்ட ஸ்வரூபத்தை விஷயமாக உடைத்தாகையாலே தேஹாவஸாநமே தனக்கு அவஸாநமான ஸாஸ்த்ரத்துக்கு ”பழுதிலா ஒழுகலாற்றுப் பல சதுப் பேதிமார்‌கள்‌” ்‌ (திருமாலை 42) என்கிறபடியே அதிகாரி ஸம்பத்தி ஸாபேக்ஷமாயிருக்கும்‌. “மன முடையீர்‌” என்கையாலே * “கண்ணன்‌ கழலிணை நண்ணும்‌ மனமுடையீர்‌”” (திருவாய்‌. 10 – 8 – 1) என்றும்‌, “ந தீர்த்தம்‌ ந ச நக்ஷத்ரம்‌ ந க்‌ரஹா ந ச சந்த்‌ரமா: ஸ்ரத்‌தைவ காரணம்‌ ந்ரூணாம்‌ அஷ்டாக்ஷர பரிக்‌ரஹே”” (பாஞ்சராத்ரே) என்றும் சொல்லுகிறபடியே ஸ்ரத்‌தா மாத்ரமே அமைந்த ஸ்வரூப ஸ்பர்ஸியான தாத்பர்யத்துக்கு “நானும்‌ சொன்னேன்‌ நமருமுரைமின்‌ நமோ நாராயணமே ‘ (திருமொழி 6 – 10 – 6) என்கையாலே அதிகாரி நியமமில்லை. இத்தால்‌ ஸாஸ்த்ரம்‌ அதி க்ருதாதிகாரமா யிருக்கும்‌ ; ஸாஸ்த்ர தாத்பர்யமான திருமந்த்ரம்‌ ஸர்வாதிகாரமென்றதாய்த்து –

–——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌ -(த்‌,விதீய பாதம் -தாத்பர்ய மூல பாதம் – -ஸாஸ்த்ர தாத்பர்ய ப்ரதாநாதி, கரணம்‌-ஒரே ஸூத்ரம் – 16 ) –ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

June 29, 2026

த்‌,விதீய பாதம் -தாத்பர்ய மூல பாதம் – –ஸாஸ்த்ர தாத்பர்ய ப்ரதாநாதி, கரணம்‌-ஒரே ஸூத்ரம் – 16

இனி மேல் சாஸ்திர பிரதி பாத்யார்த்த விசேஷங்களை சங்க்ரஹேண பிரதி பாதித்து கொண்டு
ஏவம் பூத சாஸ்திர அப்யாசம் அநேக யோக்யதா சாபேஷதையா துஷ்கரம் என்று தானே திரு உள்ளம் பற்றி-ஈத்ருசா நேக யோக்யதா நிர் அபேஷத்வேன ஸூகரமாய் சாஸ்திர தாத்பர்யமுமான திருமந்த்ரத்தை ஈஸ்வரன் வெளி இட்டு அருளிய படியை அருளி செய்கிறார் மேல்-

இனி மேல்‌ ஸாஸ்த்ர ப்ரதிபாத்‌யமான அர்த்த விஸேஷங்களை ஸங்க,ரஹேண ப்ரதிபாதியா நின்று கொண்டு ஏவம் வித,மான ஸாஸ்த்ரத்தினுடைய ௮ப்‌யாஸத்துக்கு ஐம்பூ, த்‌வீபாதி, தேஸ தேஹாதி,ஸாபேக்ஷதயா ஜ்ஞாதும்‌ அஸக்யமாயிருக்குமென்று இப்படி ஸாபேக்ஷமன்றிக்கே, நித்ய நிரபேக்ஷமாய்‌, அத ஏவ ஸூகரமுமாய்‌, ஸாஸ்த்ர தாத்பர்யமுமான திருமந்தரத்தை ஸ்ரீபதரிகாஸ்ரமத்திலே வெளியிட்டருளினான்‌ என்கிறார்‌

(கலைகளை நீர்மையினால் அருள் செய்தான் -என்று அருளிச் செய்தார்-அந்த கலைகளில் சொல்லப்படும் பொருள்கள் இன்னவை இன்னவை என்று இதில் விவரித்து-அதுக்கு மேலே அக்கலைகளை கற்பதற்கு வேண்டிய தகுதிகளை விவரித்து-அதுக்கு மேலே அத்தகுதிகள் இருந்து கற்க முயன்றாலும் -அல்ப வாழ் நாள்-பல் பிணி -சிற்று அறிவினர் ஆகையால் அக்கலைகளைக் கற்று அறிந்து தெளிதல் அரிது என்று காட்டி அருளி-ஆகையினாலே பக்தி யுடையார் எல்லாரும் அதிகாரிகளாம் படி எளிதான திரு மந்த்ரத்தை வெளியிட்டு அருளினமையையும் அந்த திருமந்திரத்தின் பெருமையையும் அது தேனும் பாலும் அமுதமுமாய் திருமால் திரு நாமம் ஆகையால் அத்தை வேதத்தின் நின்றும் எடுத்த வகையையும் அருளிச் செய்கிறார் இதில் –)

சதுர் விதமான தேக வர்ண ஆஸ்ரம அதிகாரி–பல மோஷ சாதன கதி யுக தர்ம வியூக ரூப
கிரியாதிகளை அறிவிக்கிற பாட்டுப் பரப்புக்கு பெரிய தீவினில் ஒன்பதாம் கூறும் மானிட பிறவியும் ஆக்கை நிலையும் ஈரிண்டில் ஒன்றும் இளைமையும் இசைவும் உண்டாய் புகுவரேலும் என்கிறதுக்குள்ளே விக்னமற நின்றவா நில்லா பிரமாதியை கொண்டு அறக் கற்கை அரிது என்று இறே வேத சார உபநிஷத் சார தர அநுவாக சார தம காயத்ரியில் முதல் ஓதுகிற பொருள் முடிவான சுருக்கை தெய்வ வண்டாய் அன்னமாய் அமுதம் கொண்டவன் சாகைகளிலும் ஓதம் போல் கிளர் நால் வேதக் கடலிலும் தேனும் பாலும் அமுதமாக வெடுத்து பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தது
-சூரணை-16-(சதுர் விதம் என்கிறது மேல் சொல்லுகிற எல்லா வற்றிலும் அனுவர்த்திக்கிறது)

அதாவது
1-தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவர –ஆகாரேன நாலு வகை பட்ட தேகம்-
2-ப்ராஹ்மண ஷத்ரிய வைஸ்ய சூத்திர ரூபேண நாலு வகை பட்ட வர்ணம்
3-பிராமச்சரயா கார்கஸ்த்ய வானப்ரஸ்த சந்த்யா சாத்மக தயா நாலு வகைப் பட்ட ஆஸ்ரமம்
4-ஆர்த்தோ ஜிஜ்ஞாசு அர்த்தா அர்தாதீ ஜ்ஞானி-ஸ்ரீ கீதை -7–16– -என்கிற நாலு வகை பட்ட அதிகாரம்
5-தர்ம அர்த்த காம மோஷங்கள் என்கிற நாலு வகை பட்ட பலம்
6-சாலோக்ய சாமீப்ய சாருப்ய சாயுஜ்யங்கள் என்கிற நாலு வகை பட்ட மோஷம்
7-கர்ம ஞான பக்தி பிர பத்தி கள் என்கிற நாலு வகை பட்ட ஸாதனம்
8-பஞ்சாக்னி வித்யோக்த பிரகாரேண வரும் கர்ப்ப கதி யாம்ய கதி தூமாதி கதி அர்ச்சிராதி கதி என்கிற நாலு வகைப் பட்ட கதி
9-கிருத த்ரேதா த்வாபர கலிகள் என்கிற நாலு வகை பட்ட யுகம்
10-த்யாயன் க்ருதே யஜந் யஜ்ஜை த்ரேதாயாம் த்வாபரே அர்ச்சயன் யதாப்நோதி தாதாப்நோதி
கலவ் சங்கீர்த்திய கேஸவம்
-ஸ்ரீ விஷ்ணு புராணம் -6–12–16–என்று சொன்ன த்யான யஜன அர்ச்சன சங்கீர்த்தனங்கள் ஆகிய நாலு வகை பட்ட யுக தர்மம்
11-வாசுதேவ சங்கர்ஷண பிரத்யும்ன அநிருத்தர் ஆகிய நாலு வகை பட்ட வியூகம்
12-கிருதாதி யுகங்களில் – பாலின் நீர்மை செம் பொன் நீர்மை பாசியின் பசும் புறம் போலும் நீர்மை பொற்புடைத் தடத்து வண்டு விண்டுலாம் நீல நீர்மை –திருச்சந்த -44- படியே சொல்லுகிற ஸீத பீத ஸ்யாம நீல தயா –நாலு வகைப் பட்ட ரூபம்
13-ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்கார மோஷ பிரதத்வங்கள் என்கிற நாலு வகை பட்ட கிரியை
ஆதி சப்தத்தாலே மற்றும்-சதுர் வித மான பிரமேய விஷயங்களை சொல்லுகிறது
14-வாசுதேவாத் உத்பன்னரான கேசவ நாராயண மாதவர்கள்
-சங்கர்ஷணாத் உத்பன்னரான கோவிந்த விஷ்ணு மது சூதனர்கள்
பிரத்யும்நாத் உத்பன்னரான த்ரி விக்கிரம வாமன ஸ்ரீதரர்கள்
அனுருத்நாத் உத்பன்னரான ஹ்ருஷீகேச பத்ம நாப தாமோதரர்கள்-என்ற நாலு வகை பட்ட வியூகாந்தரம்
15-ஆமோத பிரமோத சம்மோத வைகுண்ட ரூபேண நாலு வகைப் பட்ட வியூகஸ்தானம் முதலானவை பலவும் உண்டு இறே- ஆக இப்படி பல சதுர் விதமான அர்த்த விசேஷங்களை பிரகாசிப்பிக்கிற- பாட்டும் முறையும் -என்கிற பாட்டில் சொல்லுகிற சாஸ்திர விஸ்தரத்துக்கு-

(சதுர்விதமான தேஹம்‌) தே,வ-திர்யங்‌ மநுஷ்ய-ஸ்தாவர ரூபமான ஸரீர விஸேஷங்கள்‌. (வர்ணம்‌) ப்‌,ராஹ்மண-க்ஷத்ரிய வைஸ்ய-ஷூத்‌ர ரூபமான வர்ண சதுஷ்டயம்‌. (ஆஸ்ரமம்‌) ப்‌,ரஹ்ம சர்ய- கார்ஹஸ்த்ய -வாநப்ரஸ்த,-ஸந்த்யாஸங்களாகிறவை. (அதிகாரம்‌) “ஆர்த்தோ ஜிஜ்ஞாஸு அர்த்தார்த்தி, ஜ்ஞாநீ” (கீதை 7 – 16) என்று சொல்லுகிறவை-இதில்‌ ஆர்த்தனாவான்‌ – நஷ்ட ஐஸ்வர்ய காமன்‌.  ஜிஜ்ஞாஸுவாவான்‌ – கேவலன்‌. அர்த்தார்த்தீ,யாவான்‌ -அபூர்வ ஐஸ்வர்ய காமன்‌. ஜ்ஞாநி என்கிறது பகவதநுபவ ஏக பரனை. ஆர்த்தனுக்கும்‌ அர்த்தார்த்திக்கும்‌ நடுவே கேவலனைச் சொல்லிற்று – அவனும்‌ ப்ரயோஜநாந்தர பரன்‌ என்னுமிடம்‌ தோற்றுகைக்காக. (பலம்‌)“‘தர்ம- அர்த்த,- காம மோக்ஷாக்‌,யா:” ( ) என்று சொல்லுகிறவை. (மோக்ஷமாவது) – ஸாலோக்ய-ஸாமீப்ய ஸாரூப்ய-ஸாயுஜ்யங்கள்‌, (ஸாதநம்‌) – கர்ம-ஜ்ஞாத-ப,க்தி-ப்ரபத்திகள்‌. (கதியாவது )த்‌,யு:பர்ஜந்ய ப்ருதிவீ புருஷ யோஷித்துக்களான பஞ்சாக்‌நி வித்‌யையில்‌ சொல்லுகிற படியே வருகிற கர்ப்ப,கதியும்‌, யாம்ய கதியும்‌, தூம்ய கதியும்‌, அர்ச்சிராதி,கதியும்‌. (யுக,மாவது) – க்ருத-த்ரேதா-த்‌,வாபர-கலியுக,ங்கள்‌. (த,ர்மமாவது) – “த்யாயத்‌ க்ருதே யஜந்‌ யஜ்ஞை: த்ரேதாயாம்‌ த்‌,வாபரேர்ச்சயத்‌ | யதாப்நோதி ததாப்நோதி கலெள ஸங்கீர்த்ய கேஸவம்‌”’ (வி. பு. 6 – 2 – 17) என்று சொல்லுகிற த்‌யாந -யாக,-அர்ச்சந -சங்கீர்த்தநங்கள்-வ்யூஹமாவது – வாஸு தே,வ-ஸங்கர்ஷண-ப்ரத்‌யும்ந- அநிருத்‌தர்கள்‌. ரூபமாவதுரக்தம்‌ ஸிதே தரே பீதம்‌ சதுர்த்தா யத் க்ருதே யுகே, ! ரக்தாத்‌யம்‌ ஸித நிஷ்டஞ்ச த்ரேதோயாம்‌ ஹி மஹாமதே பீதம்‌ க்ருஷ்ணம்‌ ஸிதம்‌ ரக்தம்‌ ஸம்ப்ராப்தே த்வாபரே யுகே, ! கலெள க்ருஷ்ண ஸிதம்‌ ரக்தம்‌ பீதஞ்சாநுக்ரமேண து””( ) (யதாமதி ஸோத நீயம்‌] என்கிற படியே க்ருதாதி,களில்‌ ஸித-ரக்த- பீத-க்ருஷ்ணாதி,களான ஸங்கர்‌ஷணாதிகளுடைய வர்ண சதுஷ்டயங்கள்‌. பாலினீர்மை”! (திரு.ச . வி. 44) இத்யாதி, க்ரிசை யாவது -ஸ்ருஷ்டி -ஸ்திதி-ஸம்ஹார-மோக்ஷ ப்ரதத்வாதி,கள்‌. ஆதி சப்‌தத்தாலே மற்றும்‌ அர்ச்சநீயரான தேவதா விஸேஷங்களைச்‌ சொல்லுகிறது

பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும்புறம்
போலு நீர்மை பொற்புடைத் தடத்து வண்டு விண்டுலா
நீல நீர்மை யென்றிவை நிறைந்த கால நான்குமாய்
மாலின் நீர்மை வையகம் மறைந்ததென்ன நீர்மையே –44—பாலின் நீர்மை – க்ர்த யுகத்தில் உள்ளார் சத்வ ப்ரசுரராய் வெளுப்பு உகக்குமவர்கள் ஆகையாலே அவர்களுக்கு பால் போன்ற நிறைத்தைக் கொள்ளும் ஸ்வபாவம் –அதாகிறது நிறம் – வளை வுருவாய்த் திகழ்ந்தான் -என்றும் –சங்க வண்ண மன்ன மேனி -என்றும் – சொல்லுகிற ஸ்தானத்தில் பாலின் நீர்மை -என்றது –இவ் வெளுப்புக்கு ஆஸ்ரயம் சர்வ ரச -என்கிற விஷயம் என்று தோற்றுகைக்காக –செம்பொன் நீர்மை – த்ரேதா யுகத்திலே வந்தால் –ருக்மாபம் -என்றும் – கட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது -என்றும் சொல்லுகிறபடியே சிவந்த நிறத்தை கொள்ளும் –சேயன் என்றும் த்ரேதைக் கண் -என்கிற ஸ்தானத்திலே – செம்பொன் நீர்மை -என்றது அந் நிறத்துக்கு ஆஸ்ரயமான விக்ரஹம் மஹார்க்கம்
என்று தோற்றுகைக்காக –பாசியின் பசும்புறம் போலும்  நீர்மை –த்வாபர யுகத்திலே வந்தால் பாசியினுடைய புறத்தில் பசுமை போல ஸ்ரமஹரமான திரு நிறத்தை உடையவனாய் – பொற்புடைத் தடத்து வண்டு விண்டுலா நீல நீர்மை –-பொற்புஅழகு-விண்டல்-அலர்தல்-கலி யுகத்தில் வந்தால் எல்லா வடிவும் கொண்டாலும் அபிமுகீ கரிப்பர் இல்லாமையாலே ஸ்வாபாவிகமான நீல நிறமாய் இருக்கும் –நிலை நின்ற பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் -என்னக் கடவது இறே –கலௌ ஜகத் பதிம் -அழகிய தடாகத்திலே வண்டுகள் நெருங்கப் படிந்து மது பாநத்தை பண்ணி -அத்தால் வந்த ஹர்ஷத்தாலே சிறகு விரித்து வுலவா நின்றுள்ள நீலப் பூவின் நிறம் போலே இருக்கிற நிறத்தை உடையவனாய் -இத்தால் ஸ்ரமஹரமாய் செவ்வியை உடைத்தான நீலப் பூ என்கை –யென்றிவை நிறைந்த கால நான்குமாய் – ஆஸ்ரித அர்த்தமாகக் கொள்ளும் அந் நிறங்கள் குறைவற்று இருந்துள்ள சதுர் யுகமாய் – இந் நிறங்கள் நாலு யுகங்களிலும் குறைவற்று இருக்கை

பெரிய தீவினில் இத்யாதி — நாவலம்பெரிய தீவு -என்கிற போக மோஷ சாதன அனுஷ்டான பூமி ஆகையாலே த்வீபாந்தரங்களில் உத்க்ருஷ்டமான ஜம்பூத்வீபத்தில் –-நவ கண்டத்திலும் வைத்து கொண்டு-வர்ஷாந்தரங்களை போலே ப்வ்மமான ஸ்வர்க்கம் என்னலாம் படி போக பூமி இராதே ஸ்வர்க்க மோஷ ரூபமான பலங்களுக்கு சாதன அனுஷ்டானம் பண்ணுகைக்கு ஈடான ஸ்தலமாய்-யந்தி தேவா கில கீத கானி தன்யாஸ்து எ பாரத பூமி பாகே ஸ்வர்க்கா பவர்க்கா ச்பதமார்க்க பூதே பவந்தி பூய புருஷாஸ் சுரத்வாத்-என்று தேவர்களும் ஸ்லாகிக்கும் படி யான நவம கண்டமான பாரத வர்ஷமும்

இப்படி சதுர் வித,மான தேஹாத் யர்த்த,விஸேஷங்களுக்கு ப்ரகாஸகமான பாட்டுப்‌ பரப்புக்கு “பாட்டும்‌ முறையும்‌?” (நா. திருவ. 76) என்கிற பாட்டில்‌ சொல்லுகிற ஸாஸ்த்ர விஸ்தரத்துக்கு. (பெரியதீவினில்‌ இத்யாதி,) ““நாவலம் பெரிய தீவு”’ (பெரியா. தி. 3 – 6: – 1) என்கிற ஜம்பூ த்‌வீபத்தில்‌ நவ கண்டையான ப்ருதிவியில்‌ பரத கண்ட,மும்‌

பாட்டும் முறையும் படுகதையும் பல் பொருளும்
ஈட்டிய தீயும் இரு விசும்பும் -கேட்ட
மனுவும் சுருதி மறை நான்கும் மாயன்
தனமாயையில் பட்டதற்பு-76-லோகத்தில் வாச்ய வாசக கோடிகள் அடைய அவனுடைய சங்கல்பத்தாலே யுண்டாய்த்து என்று- அவனையே தாம் கவி பாடுகைக்கு அடியான  அவனுடைய வேண்டற்பாடு சொல்லுகிறார் –

நாவலம் பெரிய தீவினில் வாழு நங்கைமீர்கள் இதோர் அற்புதம் கேளீர்
தூவலம் புரி உடைய திருமால்  தூய வாயில் குழலோசை வழியே
கோவலர் சிறுமியர் இளம் கொங்கை குதுகுலிப்ப வுடல் உள் அவிழ்ந்து எங்கும்
காவலும் கடந்து கயிறு மாலையாகி வந்து கவிழ்ந்து நின்றனரே -3 6-1 –நாவலை உடைத்தான பெரிய தீவினிலே – த்வீயாந்தரங்களைப் பற்ற பெருமையை உடைய ஜம்பூ த்வீபத்திலே -என்றபடி இந்த த்வீபத்தினுடைய வைபவம் வேறொரு த்வீபத்துக்கு இல்லை   இறே-அதாவது –
த்வீபாந்தரங்கள் எல்லாம் -போக பூமியாய் இருக்கும் இத்தனை இறே உள்ளது-ஆர்ஜன பூமி உள்ளது இதிலே இறேஇது தன்னிலும் நவம கண்டமான பாரத வர்ஷம் இறே -ஆர்ஜன பூமியாய் இருப்பது
வர்ஷாந்தரங்களும் போக பூமிகள் இத்தனை -இறே அப்படி இருந்தது ஆகிலும் பாரத வர்ஷ ப்ராதான்யத்தை பற்ற -த்வீபாந்தரங்களில் காட்டில் இந்த த்வீபத்துக்கு ஏற்றம் சொல்லக் குறை இல்லை –த்வீபாந்தரங்களில் -போகங்களுக்கும் -உபரிதன -பாதாள -லோகங்களில் போகங்களுக்கும் மோஷத்துக்கும் சாதன அனுஷ்டானம் பண்ணலாவது இங்கே ஆகையாலும் – ஸ்ரீ திவ்ய தேசங்களும் முமுஷுக்களும் ப்ராசர்யேன உளது   இங்கே ஆகையாலும் – இந்த பாரத வர்ஷததோடே கூடி  இருக்கையாலே   ஜம்பூ த்வீபத்தை -பெரிய தீவு -என்று அருளிச் செய்கிறார் —

துர்லபோ மானுஷோ தேஹோ தேஹிநாம் க்ஷண பங்குர–ஸ்ரீ பாகவதம்-11-2-21- என்றும்
அத்ர ஜன்ம சகஸ்ராணாம் சகஸ்ரைரபி சத்தம,கதாசித் லபதே ஜந்து மனுஷ்யம் புண்ய சஞ்சயாத்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -2–3–24-என்றும் சொல்லுகிற படியே-மானிட பிறவி அந்தோ-திருக் குறும் தாண்டகம் -8- என்று துர்லபமாக சொன்ன மனுஷ்ய ஜன்மமும்-துர்லபோ மானுஷோ தேஹோ தேஹிநாம் க்ஷண பங்குர–ஸ்ரீ பாகவதம்-11-2-21 -என்கிற படியே-மின்னின் நிலையில மன் உயிர் ஆக்கைகள் –திருவாய் -1-2-2-என்று அஸ்திரமாக சொன்ன சரீரத்தின் உடைய ஸ்தர்யமும்-சாஸ்திர ஞான யோக்ய வர்ணங்களில் பிரதம கண்யமாய்-குலங்களாய ஈர் இரண்டில் ஓன்று என்கிற ப்ராஹ்மண ஜன்மமும்- தஸ்மாத் பால்யே விவேகாத்மா யததே ஸ்ரேயசே சதா -என்கிற படியே புத்தி கொழுந்து விட்டு அப்யசிக்கைக்கு உறுப்பான கிளர் ஒளி இளமை -என்கிற பால்யமும்

துர்லபோ மாநுஷோ தேஹு:”” (ப,ாக,வ. 11 – 2 – 21) என்றும்‌, “மானிடப் பிறவி அந்தோ?” (திருக் குரும் -. 6) என்றும்‌ சொல்லுகிற மநுஷ்ய தேஹமும்‌, ‘“தே,ஹிநாம்‌ க்ஷண பங்கு, ர:”” என்றும்‌, “மின்னின்னிலையில மன்னுயிராக்கைகள்‌”’ (திருவாய்‌. 1 – 2. 2) என்றும்‌ சொல்லுகிற தாத்‌ருஸ தேஹங்களினுடைய ஸ்தைர்யமும்‌. ஸாஸ்த்ர ஜ்ஞாநத்துக்கு யோக்‌யமான வர்ணங்களில்‌ ப்ரதம க,ண்யமாய்‌, ““குலங்களாய ஈரிரண்‌டிலொன்றிலும்‌”’ (திருச்ச. 90) என்கிற ப்‌ராஹ்‌மண ஜந்மமும்‌, “கிளரொளி இளமை”” (திருவாய்‌. 2 – 10 – 1) என்று இதினுடைய பால்யமும்‌–தஸ்மாத் பால்யே விவேகாத்மா’ (வி.பு. 1 – 17 – 75) என்றும்‌ சொல்லக் கடவது இறே

வானிடைப் புயலை மாலை வரையிடைப் பிரசமீன்ற
தேனிடைக் கரும்பின் சாற்றைத் திருவினை மருவி வாழார்
மானிடைப் பிறவி யந்தோ மதிக்கிலர் கொள்க தந்தம்
ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக்கு உறுதியே வேண்டினாரே–8–துர்லபோ மானுஷோ தேக –அரிது அரிது-இப்படி இருந்தும் உண்டியே உடையே உகந்து அந்த கரும்பு சாற்றை இழக்கிறார்களே–அன்றிக்கே-தீண்டா வழும்பும் செந்நீரும் சீய நரம்பும் செறி தசையும் வேண்டா நாற்றமும் மிகு உடலாய
மனுஷ்ய சரீரத்தை பெற்று வைத்தும் மார்பு தெறித்து இருக்கின்றார்களே-குரம்பை -குடிசை தேகம் ஆத்மா வசிக்கும் குடிசை-ஆத்ம வஸ்து உஜ்ஜீவிக்கும் வழியை சிந்தியாமல் வீணாக போகிறார்களே

மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை யுன்னுமின் நீரே –
1-2-2–மின்னுக்கு உள்ள நிலையும் இல்லை
சம்பதஸ் ஸ்வப்ன சங்காசா யௌவனம் குஸூமோபமம் தடிச்சஞ்சலமாயுச்ச கஸ்ய ச்யாஜ்ஜா நதோ த்ருதி –அது தோற்றி நசிக்கும்-இது கர்ப்பத்தில் நசிக்கும்-தோற்றின போதே மாயக் கடவதாய் இருப்பதொரு வ்யவஸ்தை உண்டு அதுக்கு-இது சில நாள் இருக்கிலும் இருக்கும் -அஸ்திரம் என்று ஹிதத்தில் ப்ரவர்த்திக்க ஒட்டாது -ஸ்திரம் என்று விச்வசிக்கப் பண்ணி நசிக்கும் –

கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை
தளர்விலராகில் சார்வது சதிரே –2-10-1—கிளாரா நின்றுள்ள ஒளியை உடைத்த யவ்வனம் கழிவதற்கு முன்பே கரண படவம் உள்ள போதே –பால்யம் போய் யவ்வனம் தலை வைக்கிற அளவிலே யவ்வனம் விஷயத்திலே மூட்டி நசிப்பதற்கு முன்பே என்றுமாம் –தஸ்மாத் பால்யே விவேகாத்மா யதேத ச்ரேயஸே சதா என்னக் கடவது இறே-கோ ஜா நீதே கதா கஸ்ய ம்ருத்யு காலோ பவிஷ்யதி யுவைவதர்ம புத்திஸ் ஸ் யா தே கோ அநித்தியம் ஹி ஜீவிதம்-திருமலையை ஆஸ்ரயிப்போம் -என்ற பிறந்த ஸ்ரத்தை மாளுவதற்கு முன்னே என்றுமாம் –

யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம்-பெரிய திருவந்தாதி -26- -என்கிறபடியே-எல்லாத்துக்கும் இசைவு வேண்டுகையாலே இதில் மூழுகைக்கு உறுப்பான இச்சையும் உண்டாய்-வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவர் ஏலும் என்று-சதாயூர் வை புருஷ என்று வேத சாஸ்த்ரோக்தமான ஆயுஸு நூறும்-மனுஷ்யர்கள் தாங்கள் புகுந்தாகள் ஆகிலும் என்று சொல்லுகிற இந்த ஆயுசுக்குள்ளே-அனந்த ஸாரம் பஹுவேதி தவ்யம் அல்பஸ் ச காலோ பஹவஸ்ச விக்நா–உத்தர கீதை -7-10–என்றும்
ஸ்ரேயாம்சி பஹிவிக்னானி பவந்தி மஹதாமபி-என்றும் சொல்லுகிறபடியே-சாஸ்திர அப்யாசம் பண்ண வரும் விக்னங்களும் அற்று–நின்றவா நில்லா நெஞ்சு-பெரிய திருமொழி -1-1-4- – என்றும்-சஞ்சலம் ஹி கிருஷ்ண பிரமாதி பலவத் த்ருடம்-ஸ்ரீ கீதை -6-34-என்றும் சொல்லுகிற படி-ஒரு விஷயத்தில் அரை ஷணமும் நில்லாதே இவனை அடர்த்து தன் வழியே இழுக்கும்-மனசை கொண்டு –கலை அறக் கற்ற மாந்தர் -திருமாலை 7–என்கிறபடி சுருதி ஸ்ம்ருதாதி சாஸ்த்ரங்களை தாத்பர்யம் கை படும் படு அதிகரிக்கை-ஆமாறு அறிவுடையார் ஆர் அவர் அரிது அன்றே-பெரிய திருவந்தாதி -37- -என்று-தாத் பர்யத்தில் உற்று நிற்கை யுக்தமாம் படி அறிவுடையார் ஆகை அரிதன்றோ என்கிற படியே அரிது என்று திரு உள்ளம் பற்றி இறே-

அதிலும்‌, ““யானுமென்னெஞ்சும்‌ இசைந்தொழிந்தோம்‌”’ (பெரியதிருவ, 36) என்கிறபடியே இச்சையுமுண்டாய்‌, “*வேத நூல்‌ பிராயம்‌ நூறு மனிசர் தாம்‌ புகுவரேலும்‌”’ (திரு மாலை 3) என்றும்‌, ““ஸதாயுர்வை புருஷ:”” (யஜு. கா. 1 – 8 – 2) என்றும்‌ சொல்லுகிற படியே மநுஷ்யர்‌ வேதோக்தமான ஆயுஸ்ஸை உடையவரே யாகிலும்‌ அவ்வாயுஸ்‌ஸுக்குள்ளே “அநந்த ஸாரம்‌ ப,ஹு வேதி தவ்யம்‌ அல்பஸ் ச காலோ பஹவமஸ்ச விக்‌,நாநி :’” ( ) என்றும்‌, ““ஸ்ரேயாம்ஸி ப,ஹுவிக்‌,நாநி ப,வந்தி மஹதாம்பி”” ( ) என்றும்‌ சொல்லுகிறபடியே ஸாஸ்த்ர ஜ்ஞாந விரோதி,யான ப்ரபல ப்ரதிபந்தகங்களும்‌ அற்று, “நின்றவா நில்லா நெஞ்சினை யுடையேன்‌ ” (திருமொழி 1 – 1 & 4) என்றும்‌, “சஞ்சலம்‌ ஹி மநஸ் : க்ருஷ்ண ப்ரமாதி, பலவத்‌,த்‌ரூடம்‌ ! தஸ்யாஹம்‌ நிக்‌ரஹம்‌ மந்யே வாயோரிவ ஸதுஷ்கரம்‌”’ (கீதை 6 – 34) என்றும்‌ சொல்லப்படுகிற மநஸ்ஸைக் கொண்டு ‘கலையறக் கற்ற மாந்தர்‌”” (திருமாலை 7) என்கிறபடியே ஸாஸ்த்ரங்களைக்‌ கரை கண்டு ”ஆமாறறிவுடையார்‌ ஆவதரிதன்றே”’ (பெரியதிருவ. 37) என்கிறபடியே தாத்பர்ய ஜ்ஞனாகை அரிது என்றிறே-

யானும் என் நெஞ்சமும் இசைந்து ஒழிந்தோம் வல் வினையைக்
கானும் மலையும் புகக் கடிவான் தானோர்
இருளன்ன மா மேனி எம் மிறையார் தந்த
அருள் என்னும் தண்டால் அடித்து —26—இத் தலையில் குறைவற்றது-பொருந்தாத தலையும் பொருந்திற்று-பொருந்துமவன் பொருந்தச் சொல்ல வேண்டா இறே–இசைந்து ஒழிந்தோம் -என்கிற இத்தாலே – தம் தலையிலே குறை யற்றது-அருள் என்னும் தண்டால் -என்கையாலே பெறுவதும் அவன் பிரஸாதத்தாலே என்னும் இடம் சொல்லிற்று இனி அவர்க்கு அநுபவத்திலே இறே அந்வயம் ஆகையாலே அநுபவிக்கிறார்

வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும்
பாதியும் உறங்கிப் போகும் நின்ற விப்பதினை யாண்டு (நின்றதில் பதினை யாண்டு -என்றும் பாடம் )
பேதை பாலகனதாகும் பிணி பசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்க மா நகர் உளானே–3–வேத சாஸ்த்ரா விரோதிநா -என்கிறபடியே
வேதமாகிற நூல் -வேதாக்ய சாஸ்திரம் -என்னக் கடவது இறே-நூல் -சாஸ்திரம்-அதவா வேதங்களும் நூல்களும் -என்னவுமாம் –வேதங்களும் வேதார்த்த ஞானம் உடைய புருஷர்கள் உடைய வசனங்களும் –பிராயம் நூறு– சதாயுர்வை புருஷ -என்று இறே சொல்வது-இது இறே பரமாவதி இது தான் ஓலைப் புறத்திலே கேட்டுப் போம் இத்தனை – புகுகைக்கு சம்பாவனை இல்லை-அந்த நூல் தான் அளவுகோல் வாசியால் வந்த ஏற்றத்தாலே-சிலர் பக்கலிலே நெடு வாசிப் பட்டு இருக்கும் –-அத்தை வ்யாவ்ருத்திக்கிறது ––மனிசர் -என்று-ந ஜாயதே ம்ரிய தேவா கதாசிந்நாயம் பூத்வாபவிதாவா ந பூய-என்கிறபடியே-கல்பாதியிலே தோற்றி கல்பாந்தத்திலே முடிவாய் இருக்கும் இறே-சிலருக்கு அங்கன் இன்றிக்கே இருக்கை –தாம் –கர்ப்பம் தொடங்கி மரணத்துக்கு யோக்யமாய் இருக்க-தமக்கு ஒரு ஜீவனமும் பரிக்ரஹமும் காண் என்று ஷேபிக்கிறார் –புகுவரேலும் –முதலிலே புகுவார் இல்லை –கர்ப்பத்திலே முடிதல்-ஜனியா நிற்க முடிதல்-பிறந்து முடிதல்-நாலு நாள் இருந்து முடிதல்-பால்யத்திலே முடிதல்-செருக்கித் திரியும் யௌவனத்திலெ முடிதல் ஜரையிலே முடிதல் -மரணத்தை நிர்ணயிக்க அரிதாம் படி இறே இருப்பது –கர்ப்பே விலீயதி பூயோ ஜாயமானோ ஸ்தமேதிச ஜாத மாத்ரேச ம்ரியதேபால பாவேத யொளவநே மத்யமம் வாவய ப்ராப்த்தே வார்த்தே கேவா த்ருவாம்ர்தி – என்னக் கடவது இறே-பிராணிகள் தங்கள் ஆயுஸ் போகிறபடி ஒன்றையும் அறியாதே-உதய அஸ்தமயங்களைக் குறித்து உகவா நிற்பார்கள் –நந்தந்த யுதித ஆதித்யே நந்தந்த யஸ்தமிதோ வௌ ஆத்மனோ நாவ புத்யந்தே மனுஷ்யா ஜீவித ஷயம் -என்றும் ஜாயஸ்வ ம்ரியஸ்வ -என்றும்-மின்னின் நிலையில -என்றும்
வாள்களாகி நாள்கள் செல்ல -என்றும் சொல்லக் கடவது இறே

வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி வேற் கணார் கல்வியே கருதி
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன் என் செய்கேன் நெடு விசும்பு அணவும்
பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே
நன்று நான் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —4–ஊர்வசீ ஸ லோக்யத்துக்கு லோகம் அடங்க சாதன அநுஷ்டானம் பண்ணா நிற்க நேர் கொடு நேர் அவள் தான் நடந்து உபஸ்தானம் பண்ணி முன்னே நிற்க-அர்ஜுனன் நமஸ்கரித்து நின்றான் நின்றான் இறே விரக்தியாலே – இப்படிப் பட்டவன் தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோரி வஸூ துஷ்கரம் -என்று பிரதிகூல வாயுவை பிடித்துக் கூடு கட்டிலும் என் நெஞ்சைப் பிடிக்க போகாது காண்–என்றான் இறே-
(சஞ்சலம் ஹி மனஸ் கிருஷ்ண என்றானே) ஒரு விஷயங்களிலே அரை ஷணம் கால் தாளாத (தங்கி நிற்காத) நெஞ்சை உடையேனான நான் இந் நெஞ்சை பரிகரமாகக் கொண்டு உன்னை பெறுகைக்கு ஈடான உபாய அனுஷ்டானம் பண்ண என்பது ஓன்று உண்டோ – உன்னை இழக்கைக்கு உறுப்பாம் இத்தனை

புலை யறமாகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம்
கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பாரோ தான்
தலை அறுப்புண்டும் சாவேன் சத்தியம் காண்மின் ஐயா
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்–7–கலையறக் கற்ற மாந்தர் –
ஸ்ருதி ஸ்ம்ருதி இதிகாசங்களில் நிலை நின்றவர்களாய்-வேத தாத்பர்யம் கைப் பட்டவர்கள் –
அவர்கள் ஆகிறார் -கூரத் ஆழ்வார் போல்வார்கள் இறே 

ஆமாறு அறிவுடையார் ஆவது அரிதன்றே
நாமே யது வுடையோம் நன்னெஞ்சே –பூ மேய
மது கரமே தண் துழாய் மாலாரை வாழ்த்தாம்
அது கரமே அன்பால் அமை —37-வழியான அறிவுடையார் யாவது அரிது அன்றே -யுக்தமான அறிவுடையாராகை கிடையாது –ஆமாறு -ஆறு -வழி

வேத சார உபநிஷத் இத்யாதி —
அசாரம் அல்ப சாரஞ்ச சாரம் சார தரம் த்யஜேத் ,பஜேத் சார தமம் ,
சாஸ்த்ரே ரத்னாகரே இவாம்ருதம் -ஸ்ரீ வைகுண்ட தீக்ஷிதீயம்
—என்று சார தமமான சாஸ்த்ரத்தை
பஜிப்பான் என்கையாலே வஹ்ய மாணத்தின் சார தமத்தை தர்சிப்பிக்கிறார் மேல்-(ஆற்ற நல் வகை காட்டும் அம்மான் -வீற்று இருந்து ஏழு உலகம் அடுத்து இனி யாம் உறாமை -சொல்லாமல் விட்டது ஆழ்வார் உளராகைக்காக -ஸ்ரீ ஈடு -நாளை வதுவை போலே சாத்மிக்க சாத்மிக்க அருள வேண்டுமே –-வேத சாரம் உபநிஷத் இத்யாதி இதில்-அசாரம் பாஹ்யம் -அல்ப சாரம் வேதம் -சாரம் உபநிஷத் –சார தரம் நாராயண அநுவாகம்–சார தமம் -ஸ்ரீ விஷ்ணு காயத்ரி -திருமந்திரத்தின் சாரதமம் தர்சிப்பிக்கிறார் )வேத சார உபநிஷத் என்றது-பூர்வ பாகத்தில் சாரமான வேதாந்தம் என்ற படி-அயதார்த்த பிரதி பாகம் ஆகையாலே அசாரமான பாஹ்ய சாஸ்திரங்கள் போல் அன்றிக்கே யதா பூத வாதியாய் இருந்ததே ஆகிலும் சேன விதி முதலாக ஜியோதிஷ்டோஹமாதிகள் ஈறாக ஐகிக பாரலௌகிக புருஷார்த்த சாதனங்களை பிரதி பாதிக்கிற பூர்வ பாகம்-சூத்திர புருஷார்த்த தத் சாதனம் பிரதி பாதம் ஆகையாலும் சாஸ்திர ஆஸ்திக்யம்–பிரகிருதி ஆத்மா விவேகம் ..இவற்றை பிறப்பிக்கும் மாத்ரம் ஆகையாலும் அல்ப சாரமாய் இருக்கும்-அங்கன் இன்றிக்கே அனந்த ஸ்திர பல ப்ரஹ்ம ஸ்வரூபாதி களையும் — தத் பிராப்தி சாதனத்தையும் –பிரதி பாதிக்கையாலே உபநிஷத் பாகம் சாரமாய் இருக்கும்--அது தன்னிலும் அவ் உபநிஷத்துகளில் சொல்லுகிற-பர ப்ரஹ்ம பர தத்வ பரம் ஜோதி பரமாத்மாதி சாமான்ய வாசி சப்தங்களாலும் விசேஷ வாசியான சம்பு சிவாதி சப்தங்களாலும் பிரதி பாடுகிறவன் நாராயணனே என்று பகவத் பரத்வத்தை ஸூஸ் ஸ்பஷ்டமாக பிரதி பாதிக்கிற அநந்ய பரமான நாராயண அனுவாகம் சார தரமாய் இருக்கும்--அது தன்னிலும் காட்டிலும் சர்வ ஸ்மாத் பரதத்வத்துக்கு பிரதான லிங்கமான அவனுடைய சர்வாந்தர ஆத்மவத்தை பிரகாசிப்பதாய் அவ் வியாபகமான சகல பகவன் மந்த்ரங்களிலும் ஸ்ரேஷ்டராயிருக்கிற வியாபக மந்திர த்ரயத்தையும் பிரதி பாதிக்கிற விஷ்ணு காயத்ரி சார தமமாய் இருக்கும்- -இப்படி உள்ள காயத்ரியிலே வியப்யாத்யஹாராதி சாபேஷமான வியாபகாந்தரங்களில் வ்யாவிருத்தம் ஆகையாலே – (எவற்றை வியாபிக்கிறார் -எத்தாலே வியாபிக்கிறார் என்று ஸ்பஷ்டமாக இல்லாத விஷ்ணு போல் இல்லாமல் – வாசுதேவாயா என்பதை போலே அத்யாஹாரம் பண்ண வேண்டாதே) நாராயணாய வித்மஹே-என்று ஆதரம் தோற்ற பிரதமத்திலே ஓதப் படுகிற – ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே – மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு -என்கிற படியே வேதாந்த தாத்பர்யமாய் – ரூசோ யஷும்ஷி சாமானி ததைவா தர்வணா நிச , சர்வம் அஷ்டாஷர ஆந்தச்தம்-என்கிற படியே சகல வேத ஸங்க்ரஹமுமான -திரு மந்த்ரத்தை-

வேதஸாரோபநிக்ஷத்‌ – (”அஸாரமல்பஸாரஞ்ச ஸாரம்‌ ஸாரதரம்‌ த்யஜேத்‌ | பஜேத்‌ ஸாரதமம்‌ ஸாஸ்த்ரம்‌ ரத்நாகர இவாம்ருதம்‌” ( )) அயதர்த்த,ப்ரதிபாத,கங்களான பாஹ்ய ஸாஸ்த்ரங்கள்‌ அஸாரமாய்‌, புத்ர பஸ் வந்நாத்‌,ய ஐஸ்வர்யஸாத,நத்தையும்‌, ஸ்வர்க்க,ஸாத,ந ஜ்யோதிஷ்டோமாதி, களையும்‌ விதிக்கிற முகத்தாலே ஸாஸ்தராஸ்திக்யம்‌ ப்ரக்ருத் யாத்ம விவேகம்‌ இவற்றைப்‌ பிறப்பிக்கையாலே வேதத்தில்‌ பூர்வபாகம்‌ அல்ப ஸாரமாயிருக்கும்‌. இங்ஙனன்றிக்கே அநந்த ஸ்திர பல ப்‌ரஹ்மோபபாதநமான உபதிஷத பாகம்‌ ஸாரமாயிருக்கும்‌-அந்த உபநிஷத்துக்களிலும்‌ சொல்லுகிற “பரம்‌ ப்‌,ரஹ்ம பரம்‌ ஜ்யோதி: ‘” இத்யாதி, ஸாமாந்ய வாசக ஸப்‌,த,ங்களாலும்‌, விஸேஷ வாசியான சம்பு,சிவாதி ஸப்‌,த,ங்களாலும்‌,ப்ரதிபாதி,க்கப்படுகிறன்‌ நாராயணனே என்று சொல்லுகிற நாராயணாநுவாகம்‌ ஸார தரமாய்‌, அதில்‌ வ்யாபக த்ரயத்தையும்‌ ப்ராதாந்யேந ப்ரதிபாதிக்கிற விஷ்ணு காயத்ரியில்‌ ப்ரதமோபாத்தமான நாராயண ஸப்‌,த,ம்‌ ஸார தமமாகையாலே ““ஓத்தின்‌ பொருள்‌ முடிவுமித்தனையே – மாதவன்‌ பேர்‌ சொல்லுவதே ஒத்தின்‌ சுருக்கு! (இர, திருவ. 39) என்கிறபடியே வேதாந்த தாத்பர்யமாய்‌, “ருசோ யஜூம்ஷி ஸாமாநி ததைவா தர்வணாநி ச ” (வரு. ஹா.) என்று இத்யாதி,களில்‌ சொல்லுகிறபடியே ஸகல வேத ஸங்க்ரஹமுமாய்‌, ஸகலார்த்த,ப்ரகாஸகமுமாய்‌ ஸர்வேஸ்வரன் தனக்குத்‌ திருநாமமான திருமந்தரத்தை

ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை அமரர் தம்
ஏற்றை எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை
மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன்;
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே.–4-5-5-அமைய -பொறுக்க பொறுக்க-தன் குண சேஷ்டிதங்களை அனுபவிப்பித்தவன் –தன் படிகளை ஒரு காலே காட்டில் குளப் படியில் கடலை மறுத்தால் போலே இவருடைய ஆஸ்ரயம் சிதிலமாம்-இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை என்ற போதே வீற்று இருந்து ஏழு உலகை அனுபவிப்பித்தால் இவரை கிடையாது என்று இறே இவ்வளவும் கொண்டு போந்தது –

ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன் பேர்
ஏத்தும் திறம் அறிமின் ஏழைகாள் -ஒத்ததனை
வல்லீரேல் நன்றதனை மாட்டீரேல் மாதவன் பேர்
சொல்லுவதே ஒத்தின் சுருக்கு —39-வேதத்தின் யுடைய அர்த்தம் எல்லாத்தாலும் கூட தாத்பர்யமாக நினைத்துத் தலைக் கட்டின அம்சம் – நான் சொல்லப் புகுகிற இவ்வளவே – வேதைஸ்ஸ சர்வை அஹமேவ வேத்ய -ஸ்ரீ கீதை -15-15–உத்தமன் பேர்–திரு மந்த்ரம் –-அவன் பக்கலிலே சர்வார்த்தமும் யுண்டானாப் போலே அதன் பக்கலிலே சர்வ சப்தமும் யுண்டு-சர்வம் அஷ்டாஷராந்தச்தம் -ஹாரீத ஸ்ம்ருதி -3-45- ஒமிதீதம் சர்வம் -அகாரோவை சர்வா வாக் –அந்த அப்பரப்பு எல்லாவற்றாலும் கூட சங்ஷேபித்ததாய் யற்ற பொருள் ஸ்ரீ யபதியுடைய திரு நாமத்தைச் சொல்லுகையே –மாதவன் –
நிரூபக தர்மம் -அவன் பிரசாதம் அடியாகப் பிறந்த ஜ்ஞானம் யுடையார் சொன்னத்தை அர்த்தம் என்று இருங்கோள் – பகவத்  பிரசாதத்தாலே அவனைக் கண்ட என்னை விஸ்வசியுங்கள்-இத்தைச் சுருக்கு என்கையாலே நன்றதனை மாட்டீரேல் -என்ற இடத்திலும் பரப்பு எல்லாவற்றையும் நினைத்துச் சொல்லுகிறது –

தெய்வ வண்டு இத்யாதி
வேத சாரமாய்-தேனும் பாலும் அமுதும் ஆய திருமால் திரு நாமம்- என்னும் படி இருக்கிற இத்தை வேதத்தில் நின்றும் அவன் கிரஹிக்கிற போது கிரஹித்த பிரகாரத்தை த்ரி பிரகாரமாக வர்ணித்து அருளிச் செய்கிறார்–அதாவது-தூவி அம் புள் உடை தெய்வ வண்டு—திருவாய் -9-9-4- ஆகையாலே -ஷட் பதமானது சாகா சஞ்சாரம் பண்ணி மதுவை எடுக்குமா போலே ,(விபீஷணன் இடம் நம்பிக்கை ஆகிற தேன்-விதுரர் இடம் -பரதன் இடம் பாரதந்த்யம் –இத்யாதிகளை கிரஹித்து திருமந்த்ரார்த்தம் தானே திருவாய்மொழி ) சார பூத சமஸ்தார்த்த போதக தயா சர்வ ரசமான தேன் போலே இருக்கிற
இத்தை வேத சாகைகளிலே தேனை கிரஹிக்குமா போலே கிரஹித்த படியும்-
அன்னமாய் அன்று அங்கு அருமறை பயந்தான் -பெரிய திருமொழி-5-7-3–என்கிற படி ஹம்ச ரூபியானவன் ஆகையாலே அன்னமானது நீரிலே கலந்து கிடக்கிற பாலை விவேகித்து எடுக்குமா போலே-நானும் சொன்னேன் நமரும் உரைமின்-பெரிய திருமொழி -6-10-6- -என்னும் படி இருக்கையாலே (ரிஷிகளும் சொன்னார்கள்-மற்றைய ஆழ்வார்களும் சொன்னார்கள் -நானும் உம்மைத் தொகை ) சர்வாதிகாரமான பால் போலே இருக்கிற இத்தை-ஓதம் போல் கிளர் வேத நீரனே-திருவாய் -1-8-10- பாலை கிரஹிக்குமா போலே கிரஹித்த படியும்- –அமுதம் கொண்ட பிரான்–பெரிய திருமொழி -6-10-3–என்கிற படியே அசுர பய பீதராய் அமரத்வ சாபேஷரான தேவர்கள் உடைய ரஷணார்த்தமாக விலஷண போக்யமாய் , விநாச ஹரமும் ஆகையாலே ,அமிர்தம் போல் இருக்கிற இத்தை-நால் வேத கடலிலே அமிர்தத்தை –பெரியாழ்வார் திருமொழி -நாலாம் பத்து கிரஹிக்குமா போலே கிரஹித்த படியும் சொல்லுகிறது –

ஷட்பத,மானது ஸாகா ஸஞ்சாரம் பண்ணி மதுவை எடுக்குமாப் போலே தூவியம்புள்‌ளுடைத்‌ தெய்வ வண்டானவன்‌ ஸாகைகளில்‌ ஸாரரூபமான திருமத்த்ரத்தை எடுத்தும்‌, –அன்னமாய்‌ அன்றங்கருமறை பயந்தான்‌” (திருமொழி 5 – 7 – 3) என்கிறபடியே அன்னமானது நீரிலே பாலை எடுக்குமாப் போலே கிளர்வேதநீரிலே ஸாரமான திருமந்த்ரத்தை எடுத்தும்–அநந்தரம்‌, ““பேணான்‌ வாங்கி அமுதங் கொண்ட ” (திருமொழி 6 – 10 – 3) என்கிறபடியே ஸ்வேந ரூபேண, அஸூர பய பீதரான தேவர்களுடைய ரக்ஷணார்த்தமாக க்ஷீராப்‌தியை மதித்து அம்ருதத்தை எடுத்தாப் போலே ஸம்ஸார பய பீ,தரான சேதநருடைய ரக்ஷ்ணார்த்த,ம்‌ ”நால்வேதக்கடலமுது?’ (பெரியா. தி. 4 – 3 – 11) என்கிறபடியே நாலு வகைப்பட்ட வேதத்திலும்‌ ஸார பூ,தமான திருமந்த்ரத்தை எடுத்தும்‌

கான  வெண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர்
மானம் அழித்து நின்ற வென்றி யம்மான் எனக்கு என்றும்
தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம்
நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே
—6-10-6-எனக்கு சர்வ வித போக்யமுமான-ஸ்ரீ யபதி உடைய திரு நாமத்தை – மிதுனமான வேஷமே காணும் இவர்க்கு  ரசிப்பது –-ரமா மாணா வநே த்ரய -என்னுமா போலே –இதர விஷயங்களின் உடைய பேரைச் சொல்லிப் போந்த நானும் அன்றோ சொன்னேன்  – இனி இது கண்டால் எல்லார்க்கும் சொல்லத் தட்டில்லை இறே-என்னோடு சம்பந்தம் உடையார் எல்லாரும் இத்தையே சொல்லிப்  போருங்கோள் –நமக்கு வகுத்ததையே சொல்லிப் போருங்கோள்-

பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ வாடை தண் வாடை வெவ்வாடை யாலோ
மேவு தண் மதியம் வெம் மதியமாலோ மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி யாலோ
தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டுதைத்த எம் பெண்மை யம் பூவி தாலோ
ஆவியின் பரமல்ல வகைகளாலோ யாமுடை நெஞ்சமும் துணை யன்றாலோ–9-9-4—பெரிய திருவடியை யுடைய-தெய்வ மாகிற வண்டாலே ஆத்தசாரமான என்னுடைய பெண்மையாகிற பூ -ஏவம் விதமாய் ஏவம்விதமாய் நலிவு படா நின்றது –படுக்கை பாதகம் ஆனவாறே புறம்பே புறப்பட்டாள் -ஸ்வரூப அனுபந்தியான ஸ்த்ரீத்வம் சிதிலமாகத் தொடங்கிற்று —தூவி -சிறகு –அழகிய சிறகை யுடையனாய் தர்ச நீய வேஷமான பெரிய திருவடியுடைய முதுகிலே வந்தாயத்து ஸ்த்ரீத்வத்தை அழித்தது -கருட வாஹனன் இறே பரதேவதை யாவான் –இது என்கிறது -ஸ்த்ரீத்வம் அழிந்த படி பேச்சுக்கு நிலம் அல்ல என்கிறது

மன்னு மா நிலனும் மலைகளும் கடலும் வானமும் தானவருலகும்
துன்னு மா இருளாய்த் துலங்கு ஒளி சுருங்கித் தொல்லை நான்மறைகளும் மறைய
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கிப் பிறங்கிருள்  நிறம் கெட ஒரு நாள்
அன்னமாய் அன்று அருமறை பயந்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே —5-7-3—தன்னைப் பேணாதே
கேட்கிறவனுக்கு ஆச்சார்ய அநுவர்த்தனம் பண்ண வேண்டுகிறதோ -என்று கூச வேண்டாத வடிவைக் கொண்டு-தன்னைப் பெறிலும் பெற ஒண்ணாத வேதங்களை வெளியிட்டவன் –அரங்க மா நகர் அமர்ந்தானே –அன்று பிரமாணத்தை வெளி இட்டுத் தந்தவன் இன்று பிரமேய பூதனான தன்னை
வெளி இட்டுக் கொண்டு வந்து கண் வளர்ந்து அருளினான் –

நாதன் ஞாலம் கொள் பாதன் என்னம்மான்
ஓதம் போல் கிளர் வேத நீரனே —1-8-10-இவனுடைய இப்படிகளைச் சொல்லப் புக்கால் கடல் கிளர்ந்தால் போலே கிளரா நின்றுள்ள வேதத்தாலே ப்ரதிபாதிக்கப்பட்ட நீர்மையை உடையவன் -நீர்மை யாகிறது ஆர்ஜவ குணம் –

பூணாது அனலும் தறு கண் வேழம்  மறுக வளை மறுப்பைப்
பேணான் வாங்கி யமுதம் கொண்ட பெருமான் திரு மார்வன்
பாணா  வண்டு முரலும் கூந்தல் ஆய்ச்சி தயிர் வெண்ணெய்
நாணாது உண்டான் நாமம் சொல்லில் நமோ நாராயணமே-6-10-3-கடலைக் கடைந்து
அம்ருதத்தை வாங்கி அதைப் புஜிப்பாருக்கு வரக் கடவ ப்ரீதி தனக்கு உண்டாகும் படி இருந்தான்
அதுக்கடி என் என்னில் சர்வேஸ்வரன் ஆகையாலே  –திரு மார்வன்- பஸ்யதாம் சர்வ தேவா நாம் -என்கிறபடியே பிராட்டியை திரு மார்விலே உடையவனாய் இருக்கிறவன் – (பெண்ணுக்கு பெண் கோஷ்ட்டியில் வெட்கப்பட வேண்டாமே அமுதினில் வரும் பெண் அமுது கொண்டானே )

ஆக-இப்படி வேத சாராமான இத்தை ஸ்வயமேவ எடுத்து அமரர் பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் -வதரி யாஸ்ரமத்து உள்ளானே–பெரிய திருமொழி -1-4-4 -என்கிற படியே நித்ய ஸூரிகளுக்கு போக்யமாய்-பரம ஆகாச சப்த வாச்யமான பரம பதத்தை கொடுப்பதான
நிர்ஹேதுக கிருபையால்-நர நாராயணனாய் உலகத்து அறநூல் சிங்காமை விரித்தவன்-பெரிய திருமொழி -10-6-1- என்கிற படியே ஸ்ரீ பதரிகாஸ்ரமத்திலே நர நாராயண ரூபேண அவதரித்து
தானே சிஷ்யனுமாய் ஆச்சர்யனுமாய் நின்று
ஸ்வரூப சாஸ்திரம் சங்குசிதம் ஆகாமல் –சிங்காமை -சுருங்கி விடாமல் –உபதேச அனுஷ்டாங்களாலே வித்ருதமாம் படி பண்ணிற்று-அறக் கற்கை அரிது என்று இறே -என்றதோடு அன்வயிக்கிறது

ஆக, ஸர்வ ரஸமுமாய்‌ ஸர்வாதிகஸத்யத்தையும் தருமதான “தேனும்‌ பாலும்‌ அமுதுமாய திருமால் திருநாமம் -(திருமொழி -6-10-6) என்கிற திருமந்திரத்தை —அமரர் பெரும் விசும்பருளும் பேரருளாளன்‌ ”’ திருமொழி 1 – 4.4) என்கிற பெரும் விசும்பான பரமபதத்தைக் கொடுப்பதான நிர்ஹேதுக க்ருபையாலே ““‘நரநரரணனாய்‌ உலகத் தற நூல்‌ சிங்காமை விரித்தவன்‌’‘ (திருமொழி 10 – 6 – 1) என்கிறபடியே ஸ்ரீபதரி காஸ்ரமத்திலே நர நாராயண ரூபேண வந்து அவதரித்து ஸ்வரூப ஸாஸ்த்ரம்‌ மடங்காதபடி விஸ்தரித்தருளினது அறக்கற்கை அரிதென்றிறே – இத்தைக் கொண்டு அந்வயிப்பது-

துணி வினி யுனக்குச் சொல்லுவன் மனமே தொழுது எழு தொண்டர்கள் தமக்கு
பிணி யொழித்தமரர் பெரு விசும்பு அருளும் பேரருளாளன்
எம்பெருமான்
அணி மலர்க் குழலாரரம்பையர் துகிலும் ஆரமும் வாரி வந்து அணி நீர்
மணி கொழித்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே —1-4-4-நம் விரோதியையும் போக்கி பரம பதத்தையும் நமக்குத் தரும்-ஒரு கால் ஆஸ்ரயித்த மாத்ரத்திலே
நம் விரோதியைப் போக்கி நித்ய சூரிகள் இருப்பை நமக்கு பண்ணித் தரும் பரம க்ருபாளானவன் சர்வேஸ்வரன்-(எளிமையும் பரத்வமும்)

எங்கானும் ஈது ஒப்பதோர் மாயமுண்டே நர நாரணனாய் யுலகத் தற நூல்
சிங்காமை விரித்தவன் எம்பெருமான்
அதுவன்றியும் செஞ்சுடரும் நிலனும்
பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புகப் பொன் மிடறத்தனை போது
அங்காந்தவன்  காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே  –10-6-1-நர நாராயண ரூபியாய்க் கொண்டு லோகத்திலே அற நூல் உண்டு – ஹிதானுசாசனம்  பண்ணப் போந்த வேதம் – அது சிங்காதபடியாக-அது சங்குசிதம்   ஆகாமே விஸ்த்ருதமாம் படி பண்ணிணவனே – உபதேசத்தாலும் அனுஷ்டானத்தாலுமாக விஸ்த்ருதமாம் படி பண்ணினான் –ஹித அனுசானாம் வேத சாரம் திரு மந்த்ரம் நாராயணனாய் விரித்தால் போதாதோ என்ன
நரனாயும் -என்றது –உபதேசம் அனுஷ்டானம் இரண்டுக்காகவும் – சிஷ்யர் இருப்பு நாட்டார் அறியாமையால் -அனுஷ்டித்துக் காட்டி அருளினான் என்றவாறு

–——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌ -(1 -ஸாஸ்த்ராரம்ப பாதம்‌-1 -ஸாஸ்த்ர ப்‌ரதாநாதி,கரணம்‌) –ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

June 25, 2026

இதி ஸ்ரீராம நாம்நேஹ யாதவாத்‌ரி நிவாஸிநா
த்ராவிட ப்‌ரஹ்ம ஸூத்ராணாம்‌ விபாகஸ் ஸம் ப்ரதர்ஸித
ஸ்வபாநுப பாத்‌ர ஸூத்‌தாஷ்ட மீஜ்யேஷ்டாபு,த, வாஸரே
யதாத்‌ யயநமக்‌,ரே ப்ரகரணைஸ் ஸ்யாத்‌ ப்ரபஞ்சநம்

1 -ஸாஸ்த்ராரம்பபாதம்‌1 -ஸாஸ்த்ர ப்‌ரதாநாதி,கரணம்‌ -1-முதல் -15முடிய -மொத்தம் –15 சூர்ணைகள்

ஆசார்ய ஸ்வாந்த வக்தாரம்‌ அபி ராமவராபிதம்‌!
ஸ்ரீக்ருஷ்ண தநயம்‌ வந்தே, ஐகத்‌ குருவராநுஜம்‌ ॥
–ஆச்சார்யருடைய திரு உள்ளக்கருத்தை அருளிச் செய்தவர்-ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்- -ஸ்ரீ வடக்குத் திருவீதிப் பிள்ளை திருக் குமாரர் –ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருத் தமையானார்

பணவாளரவணைப்‌ பள்ளி பயில் பவர்க்கெவ்வுயிரும்‌
குண போகமென்று குருகைக் கதிபனுரைத்ததுய்ய
உணர்பாவினுட்பொருள்‌ ஒன்றுமறியா உலகறிய
மணவாளன் மாறன்‌ மனமூரைத்தான்‌ வண்முடும்பை வந்தே.
–மாறன் மனமே ஆச்சார்ய ஹ்ருதயம்
உலகு இயல்வில் இருந்து மாறியவர் அன்றோ -பாகவத பிரபாவம் அருளிச் செய்தவர் அன்றோ
குண போகங்கள் -ஜீவர்கள் -அவனே போக்தா 

மாதவத்தோன் மாறன்‌ மனங்கூறும்‌ மணவாளன்‌
தோதவத்தித்‌ தூய் மறையோரான பெற்றார்‌ – நீதியினா
லாங்கவர்‌ தாள்‌ சேர்‌ பெற்றார்‌ ஆயி மணவாளமுனி
பூங்கமலத் தாள்கள்‌ நெஞ்சே போற்று
–தோதவத்தி –ஆச்சார்ய அனுஷ்டானம் உள்ளோர் -நடுவில் உள்ளோர் மூலம் பெற்ற-நீதி -வருகிற முறை வழுவாமல் பிரபன்ன ஜன கூடஸ்தர் -நம்மாழ்வார் -மாறன்
பெற்றார் -ஸ்ரீ நாயனார் ஸச் சிஷ்யர் என்பர் ஸ்ரீ ஆய் ஸ்ரீ மா முனிகள் இருவரும் ஸ்ரீ பெற்றாருடைய திருவடிகளை பெற்றார்கள்–ஸ்ரீ நாயனார் -மூலம் ஸ்ரீ பெற்றி பெற்றார் –அவர் மூலம் திரு நாராயண புரத்து ஆய் ஸ்வாமிகளும் – ஸ்ரீ மணவாள மா முனி ஸ்வாமிகளும் பெற்று வியாக்கியானங்கள் அருளிச் செய்தார்கள் –

ஆசார்ய ஹ்ருத,யஸ்யார்த்தாஸ் ஸகலா யேந தர்ஸிதா: !
ஸ்ரீஸாநு தாஸ மமலம்‌ தே,வராஜம்‌ தமாஸ்ரயே ॥
–திருத்த தாழ்வாரை தாசர் அமல தேவ ராஜம் –ஸ்ரீ மா முனிகள் ஸ்ரீ ஆய் ஸ்வாமிக்கு சமர்ப்பிக்க —ஸ்ரீ யதி கிரியில் ஐப்பசி பூராடம் திரு அவதாரம் –
–பூதூரில் வந்து உதித்த புண்ணியனோ -ஸ்ரீ ஆய் ஸ்வாமி சமர்ப்பித்த பாசுரம்

த்‌,ராவிட ஆம்நாய ஹ்ருத.யம்‌ கு,ருபர்வ க்ரமாக,தம்‌ ।
ரம்ய ஜாமாத்ரு தே,வேந தர்ஸிதம்‌ க்ருஷ்ண ஸூநுதா
–குரு பரம்பரை மூலம் பெற்றார்

மா முடும்பை மன்னு மணவாள வண்ணலொடு சேமமுடன் வைகுந்தம் சென்றக்கால் –
மாம் என்று தொட்டு உரைத்த சொல்லும் துயம் தன்னின் ஆழ் பொருளும் எட்டு எழுத்தும் இங்கு உரைப்பார் யார் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் இரங்கி அருளிச் செய்தார்

பூதூரில் வந்து உதித்த புண்ணியனோ பூ கமழும் தாதார் மகிழ் மார்பன் தான் இவனோ
தூதூர வந்த நெடுமாலோ மணவாள மா முனிவன் எந்தை இவர் மூவரிலும் யார்
–ஸ்ரீ ஆய் ஸ்வாமி அருளிச் செய்தது

வாழி உலகாரியன் வாழி யவன் மன்னு குலம் வாழி முடும்பை என்னும் மா நகரம்
வாழி மனம் சூழ்ந்த பேர் இன்பம் மல்கு நல்லார் இனம் சூழ்ந்து இருக்கும் இருப்பு —

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திரு மாளிகைக்கு எழுந்து அருளி -ரஹஸ்யம் விளைந்த மண் என்று ஸ்ரீ மணவாள மா முனிகள் ஈடுபட்டு அருளிச் செய்தார்

அவதாரிகை–

ஸ்ரீய பதியாய் -சர்வ ஸ்வாமியான சர்வேஸ்வரன்– நிரதிசய ஆனந்த மயமான ஸ்ரீ வைகுண்டத்திலே-
நித்ய நிர்மல ஞானாதி குணகராய் ஸ்வ சந்தான அனு வ்ருத்தி-இறைவன் நினைவைப் பின் பற்றிச் செல்லுகின்ற -(நீதி வானவர் -அவன் சந்தா அனுவர்த்தகர்) ஸ்வரூப-ஸ்வம் ரூபம் ஸ்வரூபம் -என்றபடி- ஸ்திதி பிரவ்ருத்தி பேதரான நித்ய ஸூரிகளாலே- அநவரத பரிசர்யமான சரண நளினனாய் கொண்டு எழுந்து அருளி இரா நிற்க,
லீலா விபூதி விபூதியில்-உள்ளோர் அவர்களோபாதி தன்னை அனுபவிக்க பிராப்தி உண்டாய் இருக்க ,-
இழந்து கிடக்கிற படியைக் கண்டு ,அதி வியாகுலனாய் ,இவர்களை உஜ்ஜீப்பிக்க உண்டான நசையாலே –அசித விசேஷிதான் பிரளய அசீமகி சம்ஸ்ரத கரண களேபர கடயிதம் தயமாநின-ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம்-உத்தர சதகம் -41– என்கிற படியே–கரண களேபர விதுரராய் அசித விசேஷிதராய்
அத ஏவ போக மோஷ சூன்யராய் கிடக்கிற தசையிலே-, தயமான மனாவாய்க் கொண்டு-ஸ்வ சரண கமல ஸமாஸ்ரயேண உப கரணமான-(உபகார பரம்பரைகள் )1-கரண களேபரங்களை கொடுத்து-இந்த்ரியங்களுடன் கூடிய சரீரத்தைக் கொடுத்து-2–ஞான விகாசத்தையும் –பிரவ்ருத்தி நிவ்ருத்தி சக்தியையும் உண்டாக்கிஞான கார்யமான- த்யாஜ்ய உபாதேய விவேக பரிகரமாக–
மானம் பிரதீபமிவ காருணிகோ ததாதி
–ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம்-உத்தர சதகம்-1- -என்கிற படி
வேத பிரதானத்தை பண்ணி அநந்தரம் . 3-மன்வாதிகளுக்கு அந்தர்யாமியாய் நின்று சேதனருடைய விசிஷ்ட வேஷ விஷயமான-சாஸ்த்ரத்தை வெளி இட்டு அருளி ,-4-அந்த சாஸ்திர அப்யாசம் அநேக யோக்யதா சபேஷமாய்(யோக்யதை இருக்க வேண்டுமே )- சிரகால சாத்யமுமாய் இருக்கையாலே , துஷ்கரமாய் இருக்கிற படியை திரு உள்ளம் பற்றி-, தாத்ருச யோக்யதா நிரபேஷத்வாதிகளாலே , ஸூகரமாய் ,சேதன நிஷ்க்ருஷ்ட வேஷ விஷயமான- திரு அஷ்டாஷர ப்ரஹ்ம வித்யயை ஸ்வயமேவ வெளிப் படுத்தின அளவிலும்-கார்ய கரம் ஆகாமையாலே–4-ஓலைப் புறத்தில் செல்லாத ராஜ்யத்தை எடுத்து விட்டு-செலுத்திக் கொள்ளும் ராஜாக்களைப் போலே தாமே சென்று திருத்தக் கடவோம் என்று- ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாத்வ அவதார முகேன , இவர்கள் இருக்கிற இடத்தில்-தான் வந்து திருத்தப் பார்த்த இடத்திலும் ,ஒருவரும் திருந்தக் காணாமையாலே–5-விஜாதீயரான நம்மால் ஒரு படியாலும் இவர்களைத் திருத்தப் போகாதாய் இருந்தது .-.

இனி இணைக்குப்பார்வை பார்க்க -இணைக்கு பார்யை இட்டு மிருகம் பிடிப்பாரைப் போலே-
சஜாதீயரை கொண்டே கார்யம் கொள்வோம் என்று அறுதி இட்டு-அதற்க்கு-ஆம் முதல்வரை உண்டாக்குகைக்காகா சர்வ பூத ஸூஹ்ருத்தான தன்னுடைய நிர்கேதுஹ பிரசாதத்தாலே-,
எங்கும் பார்த்து இலக்கு காணாமல் வாரா நிற்க அந்த பார்வை தனக்கு பள்ள மடையான தென் திசை யான அளவிலே- மாறி மாறி பல பிறப்பும் பிறந்து – திருவாய் -2-6-8- என்கிற படியே ஜன்ம பரம்பரைகளிலே தோள் மாறி-நித்ய சம்சாரயாய் போகிற இவர் மேல் பட, அந்த நிர்ஹேதுக கடாஷ விசேஷ லப்த திவ்ய ஞான பக்திகரான ஆழ்வார்-6-தத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை விசத விசததர விசத தமமாக அனுபவித்து-அவ் அனுபவ பரிவாக ரூபேண பேசுகிற பாசுரமானது
சோக வேக ஜனிதமான -மாநிஷோத் -யாதி ஸ்லோகம்–(மா நிஷாத ப்ரதிஷ்டாம் த்வம் அகம ஸாஸ்வதீஸ்ஸமா –யத் க்ரௌஞ்ச மிதுநா தேகம் அவதீ காம மோஹிதம்–பாலா -2-15-)
பிரம்மா வின் பிரசாதத்தாலே –சர்வ லக்ஷண உபேதமான-எல்லா இலக்கணங்களும் அமைந்த – பிர பந்தமாய் தலைக் கட்டிற்று-இதி தானும் திராவிட வேததயா விஸ்தீர்ணமாய் ,அநேகார்த்த பிரதி பாதகமாய் இருக்கையாலே- இதில் தாத்பர்யார்தம் சர்வர்க்கும் பிரதி பத்தி விஷயமாகை அரிது என்று பார்த்து-,
இதில் அர்த்த விசேஷங்களையும் ,
இவற்றில் ஆழ்வார் திரு உள்ளக் கருத்தின் பிரகாரத்தையும்-,
இவ் ஆச்சார்ய ருசி பரிகிருஹீதமான அர்த்தமே எல்லாருக்கும் தஞ்சம் என்னும் அத்தையும்-,
(உரு பெரும் செல்வமும் –இத்யாதி மாறன் விளங்கிய சீர் ஆரணமே )
இவர் தம்முடைய பரம கிருபையினாலே ,பிரகாசிப்பியா நின்று கொண்டு-, ஆசார்ய பரம்பரா ப்ராப்தமான இவ் அர்த்தங்கள் எல்லோருக்கும் பிரதிபத்தி யோக்யமாம் படி- அதி ஸங்க்ரஹ அதி விஸ்தரமாக இவ் ஆச்சர்ய ஹிருதய பிரபந்த முகேன அருளிச் செய்கிறார்
ஆத் யஸ்ய ந குலபதே -ஸ்தோத்ர ரத்னம் -5- என்கிற படியே வைதிக சந்தானத்துக்கு பிரதம ஆச்சார்யான ஆழ்வார்- அருளிச் செய்த திவ்ய பிரபந்தங்களில் அவருடைய திரு உள்ளக் கருத்துகளைச் சொல்லுகையாலே-இறே
இப் பிர பந்தத்துக்கு ஆச்சார்ய ஹிருதயம் என்று நிரூபகம் ஆய்த்து.
-இப் பிரபந்தத்தில் இவர் அருளிச் செய்கிற வாக்யங்கள் எல்லாம் அருளிச் செயல் சந்தைகள் சேர்த்து-அருளிச் செய்கிறது
மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர்கள் பேசின திவ்ய ஸூக்திகள் ஆகையாலே-
ஆப்த தமமுமாய்-அத்யந்த போக்யமுமாய் இருக்கிற இதுவே தமக்கு அநவரத அபிமதம் ஆகையாலும் ,-
முகம் அறிந்தவன் கோத்த முத்து பெரு விலையனாம் போலே சந்தைகளே தாம் சேர்த்த சாதுரியாலே-
அருளிச் செயலில் ரசஞ்ஞருக்கு இதில் அர்த்தத்திலும் காட்டிலும்-சப்தம் தானே மிகவும் இனிதாய் இருக்கும்-என்னும் அபிப்ப்ராயத்தாலும் – ஆகையால் இப் பிரபந்தம் சப்த அர்த்தங்கள் இரண்டின் ரசத்தாலும் விசேஷ ஜனன மநோ கரமாய் இருக்கும்-

ஆய் ஸ்வாமிகள்—-ஸ்ரீய: பதியான ஸர்வேஸ்வரன்‌ ““அசித,விஸேஷிதாந்‌ ப்ரளய ஸீமநி” (ஸ்ரீர. ஸ்தவ- 2 -41) என்று சொல்லுகிறபடியே கரண களேபரங்களை இழந்து அசித் அவிஸேஷிதமாய்‌, அத ஏவ போக, மோக்ஷ ஸூந்யமாய்க்‌ கிடக்கிற சேதந வர்க்கத்தை, இவற்றின் பக்கல்‌ தனக்குண்டான ஸ்வாபாவிக ஸம்பந்தமே ஹேதுவாக “ததைக்ஷத’” (தை. ஆ. 6) என்கிறபடியே பார்த்தருளி, ‘ஸூரிகளுடைய அநுபவத்துக்கு இட்டுப் பிறந்த இச் சேதநர்‌ இவ் வநுபவத்தை இழந்து இங்ஙனே க்லேஸிக்க வொண்ணாது” என்று ‘“கரண களேபரைர் கடயிதும்‌ தயமாந மநா: ‘ (ஸ்ரீர. ஸ்தவ- 2 – 41) என்கிறபடியே தயமாந மநவாய்க் கொண்டு கரண களேபர ப்ரதாநம்‌ பண்ணுவதாக “‘பஹு ஸ்யாம்‌”’ (தை, ஆ. 6) என்று ஸங்கல்பித்து “*தத் ஸ்ருஷ்ட்வா’” (தை. ஆ. 6) என்சிறபடியே யதா ஸங்கல்பம்‌ இவர்களுக்குக்‌ கரண களேபரங்களைக்‌ கொடுத்து, அநந்தரம்‌, “‘ததநுப்ரவிய்ய ” என்கிறபடியே அநு ப்ரவேயித்து வஸ்துத்வ நாம பாக்த்வங்களை உண்டாக்கி, “அந்த: ப்ரவிஷ்டஸ் ஸாஸ்தா ஜநாநாம்‌ ஸர்வாத்மா” என்கிறபடியே ஜ்ஞாந விகாஸத்தையும்‌, ப்ரவருத்தி நிவ்ருத்தி யோக்‌,யதையையும்‌ பண்ணிக் கொடுத்து இந்த ஜ்ஞாந கார்யமான தயாஜ்யோபாதே,ய விவேகத்துக்குப்‌ பரிகரமாக ““மாநம்‌ ப்ரதீபமிவ காருணிகோ ததாதி” (ஸ்ரீர, ஸ்தவே 2 – 1) என்கிறபடியே வேத ப்ரதாநத்தைப் பண்ணி, அநந்தரம்‌ மந்வாதிகளுக்கு அந்தர்யாமியாய்‌ தின்று சேதநருடைய விஸிஷ்ட வேஷ விஷயமான ஸாஸ்த்ரத்தை வெளியிட்டருளியும்‌, அந்த ஸாஸ்த்ர ஜந்ய ஜ்ஞாநம்‌ சிரகால ஸாத்‌,யமுமாய்‌, அதிக்ருதாதி,காரமுமாய்‌, அநேக யோக்‌யதா ஸாபேக்ஷமுமா யிருக்கையாலே துஷ்கரமுமாயிருக்கும்‌ என்று, ஏவமாதி,தோஷ ரஹிதமுமாய்‌, நிஷ்க்ருஷ்ட வேஷ விஷயமான திருவஷ்டாக்ஷர ப்‌,ரஹ்மவித்‌யைத் தானே உபதேஸித்த விடத்திலும்‌ இதில்‌ இழிவாரற்ற படியாலே ஓலைப் புறத்திலே செல்லாத ராஜ்யத்தை எடுத்து விட்டுச்‌ செலுத்திக் கொள்ளும்‌ ராஜாக்களைப் போலே ““அஜாயமாந:”’ (யஜு. ஆர. பீ – 17) என்று சொல்லப்படுகிற தானே ஸாது, பரித்ராணார்த்தமாக வந்து அவதரித்துப் போருகிற அளவிலும்‌, இவை ஒன்றிலும்‌ அர்த்த,க்ரியாகார்யமாகா திருக்கிற படியாலே, ‘விஸஜாதீயரான நம்மால்‌ ஒன்றாலும்‌ இவர்களைத்‌ திருத்த வொண்ணாது. இனிப்‌ பார்வை காட்டி ம்ரூகம்‌ பிடிப்பாரைப்‌ போலே ஸஜாதீயரைக் கொண்டே கார்யம்‌ கொள்ளக் கடவோம்‌” என்று அறுதியிட்டு ““ஸுஹ்ருத.ம்‌ ஸர்வ பூ,தாநாம்‌’” (கீதை 5 – 29) என்கிறபடியே ஸர்வ பூ,த ஸூஹ்ருத்‌தாகையாலே தன்னுடைய நிர்ஹேதுகமான ப்ரஸாதத்தாலே எங்கும்‌ பார்த்து இலக்குக்‌ காணாதிருக்கிற அளவிலே, அந்தப் பார்வை தானே தாஷிண்யமானவளவிலே, ““மாறி மாறிப் பல பிறப்பும்‌ பிறந்து”‘ (திருவாய்‌. 2 – 6 – 8) என்கிறபடியே ஸம்ஸரிக்கிற ஆழ்வார்‌ மேலே நிர்ஹேதுகமாகப்பட அது தானே “மா நிஷாத, ப்ரதிஷ்டாம்‌ த்வமக,மஸ்‌ ஸாஸ்வதீஸ் ஸமா : । யத் க்ரெளஞ்ச மிதுநாதே கமவதீ,! காம மோஹிதம்‌”’ (ரா. பா – 2 – 15) என்கிறபடியே ஸோகம்‌ ஸ்லோகமாய்‌ அவதரித்தாப் போலே ஸர்வ லக்ஷணோபேதமான ப்ரப,ந்த,மாய்த்‌ தலைக் கட்டிற்று–-அது தானும் த்ராவிட வேதமான படியாலே பலவான அர்த்தங்களை உடைத்தாய்‌, பரந்திருக்கையாலே இதில்‌ தாத்பர்யம்‌ எல்லார்க்கும்‌ ப்ரதிபத்தி பண்ணப் போகாதென்று பார்த்து, இதில்‌ அர்த்த, விஸேஷங்களையும்‌, இவற்றில்‌ இவ்வாழ்வார்க்குத் திருவுள்ளக்‌ கருத்து இன்னபடிப் பட்டிருக்குமென்று, இவ்வாசார்ய ருசி பரிக்‌ருஹீதமான அர்த்தமே எல்லார்க்கும்‌ தஞ்சம்‌ என்னுமிடத்தையும்‌, இவர்‌ தம்முடைய பரம க்ருபையாலே-ஆசார்ய பரம்பரா ப்ராப்தமான அர்த்த விஸேஷங்களை எல்லார்க்கும்‌ ப்ரதிபத்தி யோக்‌யமாம்படி ஸங்க்‌ரஹேண இவ்வாசார்ய ஹ்ருதய ப்ரபந்த முகத்தாலே அருளிச் செய்‌கிறார்

தமஸ் அந்தகாரம் போக்கி -பகுத்து அறிய -சத்தையும் அசத்தையும் -பிரமாணங்களை -விளக்கு போலே-ஹர்த்தும் தமஸ் சதசதீ ச விவேக்துமிசோ மானம் பிரதீப மிவ காருணிகோ ததாதி-ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -உத்தர -1–என்கிற படியே , ஆகஸ்மிகக் ரூபவானான சர்வேஸ்வரன் அஞ்ஞரான சம்சாரி-சேதனருக்கு சத் அசத் விவேக பரிகரமாக சாஸ்திர பிரதானதத்தை பண்ணி-அருளின படியை அருளி செய்கிறார்-

இதில்‌ முதல்‌ சூர்ணையாலே பரம காருணிகனான ஸர்வேஸ்வரன்‌ “*தத் ஸ்ருஷ்ட்வா” என்கிறபடியே ஜகத் ஸ்ருஷ்டியைப்‌ பண்ணி –ஸ்ருஷ்ட்யநந்தரம்‌ அஜ்ஞாந அந்தகாரா வ்ருதரான சேதநர்‌ ஜ்ஞாந ப்ரகாஸத்தை உடையராய்‌ அஜ்ஞாநம்‌ நீங்கி, –வேதாந்த வேத்‌யனாய்‌, நித்யனாய்‌, ஸ்வயம் ப்ரகாஸனாய்‌ இருந்துள்ள தன்னைக்‌ கண்டு ஸாராஸார விவேகம்‌ பண்ணுகைக்கு ஸகல ஸாஸ்த்ர ஸங்க்‌,ரஹமாய்‌, ஸகல ஸப்‌தங்களும்‌ தன்னுடைய கார்யமாகையாலே தான்‌ காரணமாய்‌, ஸகலார்த்த, ப்ரகாஸகமான அகாரத்தில் நின்றும்‌ விஸ்த்ருதமான ஸாஸ்த்ரங்களைத் தன்‌ க்ருபையாலே வெளியிட்டருளினான்‌ என்கிறார்-

காருணிகனான சர்வேஸ்வரன் – அறிவிலா மனிசர் உணர்வு என்னும் சுடர் விளக்கு ஏற்றி- பிறங்கு இருள் நீங்கி மேல் இருந்த நந்தா வேத விளக்கை கண்டு-நல்லதும் தீயதும்-விவேகிக்கைக்கு மறையாய் விரிந்த துளக்கமில் விளக்கில் கொளுத்தின ப்ரதீபமான-கலைகளை நீர்மையினால் அருள் செய்தான்–சூர்ணிகை 1..

காருணிகனான சர்வேஸ்வரன் –-கிருபா யோகச்ச ஸாஸ்வதாத்– ஸ்ரீ லஷ்மீ தந்திரம் -கிருபா விசிஷ்ட ஸ்வதந்த்ரன் என்ற படி–(ஸ்வதந்த்ரன் -ப்ராப்தன் -சம்பந்தத்துக்கே முதன்மை –இவை நம் உடைமை அன்றோ -என்கிற மனப்பற்றோடு-பர துக்க அஸஹிஷ்ணுத்வம்- பிறருடைய துக்கத்தைப் பொறுக்காத தான் –அருளும் கூடி இருத்ததாலே-மேலும் மேலும் மக்கள் உய்வு பெறுவதற்குத் தக்க செயல்களைச் செய்து போருமவன்-என்றபடி –)கிருபாவான் ஆனாலும் ஸ்வதந்த்ரன் அன்று ஆகில் தான் நினைத்த படி கார்யம் செய்ய போகாது–கேவல ஸ்வதந்த்ரன் ஆனாலும் (சம்சார மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவான ஸ்வாதந்த்ர்யம்- )சேதன உஜ்ஜீவன அர்த்தமான க்ருஷிக்கு உறுப்பு ஆக மாட்டாது-
(ஆன பின்பு க்ருபா விசிஷ்டமான ஸ்வாதந்த்ர்யம்- இறே-சம்சார சேதன உஜ்ஜ்ஜீவன விஷயமாக-அவன் பண்ணும் க்ருஷிக்கு ஹேது வாவது-)

காருணிகனான சர்வேஸ்வரன் –க்ருபா விஸிஷ்ட ஸ்வதந்த்ரன்‌ என்றபடி
சர்வேஸ்வரன்–என்று ஈஸ ஈஸி தவ்ய ஸம்ப,ந்த,ம்‌ சொல்லுகிறது.-இத்தால்‌ ஸம்பந்தமே ப்ரதாநம்‌ என்றபடி. ஸம்பந்த முள்ள விஷயத்திலே கிருபையுமாகப்‌ பெற்றது என்கிறார்‌. ஸ்வாதந்தர்ய விஸிஷ்டமான கிருபை என்று கிருபைக்கு ஸ்வாதந்தர்யம்‌ உபயுக்தம்‌ என்பாருமுண்டு. அத்தை வ்யாவர்த்திக்கிறது

அறிவிலா மனிசர் – அறிவிலா மனிசர் எல்லாம் -திருமாலை -13—என்கிற படி
அஞ்ஞான தமோ யுக்தரான சேதனர் -அந்தம் தம இவ அஞ்ஞானம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-62–என்னக் கடவது இறே –ஹர்த்தும் தம -ஸ்ரீ லஷ்மி தந்திரம்-1–என்று அஞ்ஞானத்தை தமஸ் சப்தத்தாலே அருளி செய்தார் இறே-இத்தால் அநாதய அஞ்ஞான அந்த காரத்தாலே அபி பூதராய் அத்தாலே
பிரகிருதி-ஆத்மா விவேகம் முதலான ஒரு விவேகம் இன்றிக்கே இருக்கிற சம்சார சேதனர் என்கை

அறிவிலா மனிசர் -அறிவிலா மனிசர்’ (திருமாலை – 13) என்கிறபடியே அஜ்ஞாந அந்த காரத்தாலே ஆவ்ருதரான சேதநர் –

எறியு நீர் வெறி கொள் வேலை மா நிலத்து உயிர்கள் எல்லாம்
வெறி கொள் பூம் துளவ மாலை விண்ணவர் கோனை ஏத்த
அறிவிலா மனிசர் எல்லாம் அரங்கம் என்று அழைப்பர் ஆகில்
பொறியில் வாழும் நரகம் எல்லாம் புல் எழுந்து ஒழியும் அன்றே –13-தத்வ ஜ்ஞானம் நிரம்பாத அந்த மனிதர் யாவரும்-மனுஷ்ய ஜன்மத்திலே பிறந்து வைத்து-அறிவின்றிக்கே இருந்தார்களே யாகிலும்
திருவரங்க பிராவண்யம் வேண்டா-உக்தி மாத்ரமே அமையும்
ஆகில் –என்றது – பாப பிரசுரர்க்கு இது தானும் சித்தியாது -என்கை-

உணர்வு என்னும் சுடர் விளக்கு ஏற்றி –
உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கு ஏற்றி என்றும்-ஞான சுடர் விளக்கு ஏற்றினேன் என்றும் சொல்லுகிற படியே-தைல வர்திகளால் உண்டான வழுக்கு அன்றிக்கே திணுங்கின-தேஜஸ் ஆய் இருக்கிற ஞானம் ஆகிற உஜ்ஜவல தீப பிரகாசத்தை உடைத்தாய்-ஞானத்தை விளக்கு என்கிறது ஸ்வ பர பிரகாசத்வம் ஆகிற ஸ்வாபவ சாம்யத்தாலே–(விளக்குக்கு -ஞானம் நம்மையும் பிறரையும் காட்டும் -ஸ்வ பாவ சாம்யம்)

உய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கேற்றி
வைத்தவனை நாடி வலைப் படுத்தேன் -மெத்தனவே
நின்றான் இருந்தான் கிடந்தான் யென்னெஞ்சத்துப்
பொன்றாமல் மாயன் புகுந்து –மூன்றாம் திரு அந்தாதி-94––உணர்வு ஆகிற –தைலவர்த்திகளால் (எண்ணெய் தீ இத்யாதிகளால் )யுண்டான அழுக்கு இன்றிக்கே- திணுங்கின தேஜஸ்ஸை -ஒளி விளக்கு ஏற்றி –

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா -நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்-1-பர பக்தி -பரஜ்ஞானமாகிற பிரகாசமான தீபத்தை ஏற்றினேன்.

உணர்வு என்னும் சுடர் விளக்கு ஏற்றி) ”உய்த்துணர் வென்னும்‌ ஒளி கொள்‌ விளக்கேற்றி”’ (மூ. திரு. 94) என்றும்‌, ““ஞானச் சுடர் விளக்கேற்றினேன்‌” (இர, திரு, 1) என்றும்‌ சொல்லுகிறபடியே உஜ்ஜிவந கரமுமாய்‌, ஸ விபூ,திகனான ஸர்வேஸ்வரனை விஷயமாக உடைத்தாய்‌, (பரஸ்மை) ஸ்வயம் ப்ரகாஸமுமாய்‌, ஸ்கலார்த்த,ப்ரகாஸாகமுமான ஜ்ஞாந தீ,பத்தை உடையராய்

பிறங்கு இருள் நீங்கி –
பிறங்கு இருள் நிறம் கெட
என்றும்
பின் இவ் உலகினில் பேர் இருள் நீங்க என்றும்
சொல்லுகிற படியே மிகுந்த அஞ்ஞான அந்த காரம் போய்

மன்னு மா நிலனும் மலைகளும் கடலும் வானமும் தானவருலகும்
துன்னு மா இருளாய்த் துலங்கு ஒளி சுருங்கித் தொல்லை நான்மறைகளும் மறைய
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கிப் பிறங்கிருள்  நிறம் கெட ஒரு நாள்
அன்னமாய் அன்று அருமறை பயந்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே —5-7-3-தேவர்கள் பக்கலிலும் பிராமணர்கள் பக்கலிலும் ஸ்நேஹத்தைப் பண்ணி மிக்க இருளானது கழியும் படியாக –

துன்னிய பேரிருள் சூழ்ந்து உலகை மூட
மன்னிய நான்மறை முற்றும் மறைந்திடப்
பின் இவ்வுலகினில் பேரிருள் நீங்க அன்று
அன்னமது ஆனானே
அச்சோ அச்சோ அருமறை தந்தானே அச்சோ அச்சோ -1 8-10 – இந்த லோகத்தில் உண்டான மகாந்தகாரமானது நீங்கும்படியாக -அக் காலத்தில் வேதத்தை வெளிப்படுதுக்கைகாக
சார அசார விவேக சக்திகமான ஹம்சமாய் வந்து தோன்றினவனே-
உன்னைப் பெறிலும் பெறுதற்கு அரிதான வேதத்தை உபகரித்தவனே-

“பிறங்கிருள்‌ நிறங்கெட”” (திரு மொழி 5-7 – 3) என்றும்‌, ““பின்னிவ்வுலகினில்‌ பேரிருள்‌ நீங்க”” (பெரியாழ் . திரு. 1 – 9 -10) என்றும்‌ சொல்லுகிறபடியே மிகுந்த அஜ்ஞாநம்‌ போய்‌

மேல் இருந்த நந்தா விளக்கை கண்டு
வேதார்த்த விழுப் பொருளின் மேல் இருந்த விளக்கு என்றும்
நந்தா விளக்கு என்றும்
வேத விளக்கினை என்றும்
சொல்லுகிற படியே வேதாந்தங்களில் சர்வ ஸ்மாத் பரனாக பிரகாசியா நிற்ப்பானுமாய்
நித்தியமாய்-ஸ்வயம் பிரகாசமான ஞானத்தை ஸ்வரூபமாக உடையவனுமாய்
வேதை க சமதி கம்யனுமான
தன்னை
என் தக்க ஞானக் கண்களால் கண்டு என்கிறபடியே—ஞான சஷுசாலே தர்சித்து

மால் இரும் சோலை என்னும் மலையை உடைய மலையை
நாலிரு மூர்த்தி தன்னை நால் வேத கடல் அமுதை
மேலிரும் கற்பகத்தை வேதாந்த விழுப் பொருளின்
மேலிருந்த விளக்கை
விட்டு சித்தன் விரித்தனவே -4 -3-11 –வேதாந்த பிரதிபாத்யங்களான-சீரிய அர்த்தங்களுக்கு எல்லாம் மேலாய் இருந்துள்ள ஸ்வயம் பிரகாச வஸ்து வானவனை –வேதாந்த பிரதிபாத்யங்களான-சீரிய அர்த்தங்கள் ஆவன –போக்தா போக்யம் ப்ரேரிதாரஞ்ச மத்வா -ஸ்வேதாஸ்வரம்-ஷரம் ப்ரதானம் அம்ர்த  அஷரம்    ஹர ஷராத்மாநா வீசதே தேவ ஏக –
பிரதான ஷேத்ரஜ்ஞ பதிர் குணேச
– இத்யாதிகளாலே சொல்லப் படுகிற தத்வ த்ரயமும்–மேல் இருந்த என்றது –இந்த தத்வ த்ரயத்திலும் வைத்துக் கொண்டு- மேலாய் இருந்துள்ள என்றபடி–அதாவது
சேதன அசேதனங்கள் இரண்டும் பிரகாரமாக -தான் பிரகாரியாய் –-நதத் சமஸ் அப்யதிகச்ச தர்ச்யதே    -என்னும்படி -சர்வ ஸ்மாத் பரனாய் -இருக்கை

நந்தா விளக்கே ! அளத்தற்கு அரியாய் ! நர நாரணனே ! கரு மா முகில் போல்
எந்தாய் ! எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம் எத்திசையும்
கந்தாரம் அந்தேன் இசைபாட மாடே களி வண்டு மிழற்ற நிழல் துதைந்து
மந்தாரம் நின்று மண மல்கு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே !–3-8-1-சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -நந்தா விளக்கே ! அளத்தற்கு அரியாய் -மெய் மதிக் கடலே -ஸ்வரூப நிரூபகம் –நந்தா விளக்கே ! – விச்சேதியாத விளக்கு-பிரபா பிரபாவான்களாய் இருக்கையாய் இறே
விளக்காகிறது -நித்யமாய் ஸுயம் பிரகாசமாய் – ஜ்ஞானத்தை ஸ்வரூபமாக உடையவன் -என்ற படி –(ஞானத்தை–குணமாகவும் ஸ்வரூபமாகவும் கூட்டுவது – -ஞான ஸ்வரூபன் ஞான குணகன் –அவனே ஞானமாகவும் உள்ளான் ஞானம் உடையவனாயும் இருப்பான் -தர்மி ஞானம் தர்ம பூத ஞானம் இரண்டும் உண்டே-ஆத்மாவும் இதே போலவே -ஆனால் கர்மத்தால் மழுங்கும் தர்ம பூத ஞானம் )

சக்கரத்து அண்ணலே! என்று தாழ்ந்து, கண்ணீர் ததும்ப,
பக்கம் நோக்கி நின்று, அலந்தேன்; பாவியேன் காண்கின்றிலேன்;
மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கினை என்
தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே
.–4-7-10-பரிபூரணமான ஞானத்தையே ஸ்வரூபமாக யுடைய –வேதமாகிற விளக்கிலே காணப் படுமவனை–எனக்கு தக்காப் போலே ஒரு ஞான த்ருஷ்ட்டி யுண்டாய் அத்தாலே கண்டு அனுபவிப்பன்-காணப் பெறாமையாலே ப்ரேமம் கிலேச ஹேது வாகிறாப் போலே -நெஞ்சில் பிரகாசமும் கிலேச ஹேது வாகா நின்றது-மதி நலம் அருளினன் என்கிற ஞான பக்திகள்-இரண்டும் கழுத்துக்கு கட்டியாய் விட்டது

மேல் இருந்த நந்தா வேத விளக்கை கண்டு) ““வேதாந்த விழுப்பொருளின்‌ மேலிருந்த விளக்கு!” (பெரியா. திரு-4-3 – 11) என்றும்‌, “நந்தா விளக்கு” (திருமொழி 3 – 8-1) ”மிக்க ஞான மூர்த்தியாய வேத வீளக்கினை” (திருவாய்‌. 4 – 7 – 10) என்றும்‌ வேதாந்தங்களியே ஸர்வ ஸ்‌மாத் பரனாக ப்ரகாஸியா நிற்பானுமாய்‌, நித்யனுமாய்‌, வேதத்தாலே ப்ரகாஸ ஸ்வரூபனாக ப்ரதிபாத்யனுமா யிருந்துள்ள தன்னை, “என் தக்க ஞானக் கண்களாலே கண்டு”” (திருவாய்‌-4 -7. 10) என்கிறபடியே ஜஞாந த்‌,வாரா ஸாக்ஷாத்கரித்து,

நல்லதும் தீயதும் விவேகிக்கைக்கு
இவை அன்றே நல்ல இவை அன்றே தீய
என்கிற படியே-சத் அசத் விவேகம் பண்ணுகைக்கு
சத் அசதீச விவேக்தும் –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -உத்தர -1- -என்றார் இறே
நல்லதும் தீயதும் விவேக்கிகைக்கு -என்கிற இது ஸாமான்யேன விலஷண அவிலஷண விவேகத்தை காட்டுமே ஆகிலும் இவ் இடத்தில் பகவத் விஷயம் நன்று சம்சாரம் தீது என்று விவேகிக்கையைக் காட்டக் கடவது
நந்தா வேத விளக்கை கண்டு நல்லதும் தீயதும் விவேக்கிகைக்கு -என்கையாலும்
விவேக பலமான த்யாக ஸ்வீகார விஷயங்கள் சம்சார மோஷங்கள் ஆகவே மேல் சொல்லுகையாலும் ..
(விவேக பலம் வீடு பற்று மேலே வரும் ) பகவத் விஷயத்தை கண்ட பின்பு சத் அசத் விவேகம் பண்ணுகை யாவது என் என்னில் ? பிரதி கோடி கண்டால் ஒழிய அதின் தோஷம் -யதாவாக-ஹேயதாக தோன்றாமை யாலும் இத்தை பற்ற இது நன்று இது தீது என்னும் போது உபய கோடியும் கண்டு கொள்ள வேண்டுகையாலும் சொல்லிற்று

இவை அன்றே நல்ல இவை அன்றே தீய
இவை என்று இவை அறிவனேலும் -இவை எல்லாம்
என்னால் அடைப்பு நீக்க ஒண்ணாது இறையவனே
என்னால் செயற்பாலது என் —3-புகழோம் மதியோம் – மதியோம் இகழோம் –என்கிற இவை நல்ல-புகழ்வோம் பழிப்போம் என்கிற இவை பொல்லாது–இவை இப்படி என்று பரிச்சேதித்து அறிந்தேன் ஆகிலும்

ஹர்த்தும் தமஸ் சத் அஸதீ விவேக்தும் ஈச மாநம் ப்ரதீபம் இவ காருணிகா ததாதி
தேந அவ லோக்ய க்ருதிநஸ் பரி புஞ்ஜதே தம் தத்ர ஏவ கேபி சபலா ஸலபீ பவந்தி–
1—காருணிகனான பெரிய பெருமாள் அஞ்ஞானம் இருளை போக்கவும் த்யாஜ்ய உபாதேயங்களை விவேகிக்கவும்
சாஸ்திரமான விளைக்கை அளித்தான் -புண்யம் செய்தவர்கள் அந்த விளக்கை கொண்டு அவனை அறிந்து கொள்ள விவேகம் அற்றவர்கள் வீட்டில் பூச்சி போலே அந்த விளக்கில் மடிகின்றனர் —
முரணாக அர்த்தம் செய்து வீண் வாதம் செய்கிறார்-

நல்லதும் தீயதும்-விவேகிக்கைக்கு–) ‘“இவை யன்றே நல்ல இவை யன்றே தீய இவையன்றிவை அறிவனேலும்‌”’ (பெரிய திருவ. 3) என்கிறபடியே ஸாராஸார விவேகம்‌ பண்ணுகைக்கு. அதாவது – ப,க,வத்‌ விஷயம்‌ நன்று, ஸம்ஸாரம்‌ தீது – என்று அறிகைக்காக; ப,க.வத்‌, விஷயத்தைக் கண்ட பின்பு ஸாராஸார விவேகம்‌ பண்ணுகையாவது என்‌ என்னில்‌ – ப,க,வத்‌, விஷயத்தில்‌ வைலக்ஷண்யம்‌ கண்ட பின்பிறே ஸம்ஸாரம்‌ அவிலக்ஷணம்‌ என்று அறியலாவது

மறையாய் விரிந்த துளக்கமில் விளக்கில் கொளுத்தின ப்ரதீபமான-கலைகளை–மிக்கானை மறையாய்‌ விரிந்த விளக்கை ” (திருமொழி -8-9-4-), துளக்கமில்‌ விளக்கு (திருச்சந்த-4) என்றும் சொல்லுகிற படியே-அகாரோ வை சர்வா வாக்-என்கையாலே ஸகல வேத ஸங்க்‌ரஹ்மாய்‌, நித்யமாய்‌, ஸகலார்த்த, ப்ரகாஸ கமான அகாரத்தில் நின்றும்‌ விஸ்த்ருதமான, ‘“மாநம்‌ பரதீபமிவ காருணிகோ ததாதி” (ஸ்ரீ, ர ஸ்தவ 2 – 1) என்றும்‌, ‘“பன்னு கலை நால் வேதப் பொருளை’ (திருமொழி 7 – 8 – 2) என்றும்‌, ”கலைகளும்‌ வேதமும்‌ நீதி நூலும்‌”’ (திருமொழி 2 – 8 – 5) என்றும் சொல்லப்படுவதாய்‌, த்யாஜ்யோபாதே,யார்த்த,ப்ரகாஸகமான -ஸ்ருதியும் தத் உப ப்ரும்ஹணங்களுமான .ஸாஸ்த்ரங்களை

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானைப் புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையை
தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே  –8-9-4-மிக்கான் -சர்வ ஸ்மாத் பரன்-மறையாய் விரிந்த விளக்கை- வேறு ஒன்றால் காண வேண்டாதே தனக்குத் தானே பிரகாசகமாய் இருப்பது –
பிரமாணங்களால் அறியப் பார்க்கும் அன்று அவற்றாலே பிரகாசிக்கிற மேன்மைக்கு எல்லை அன்றிக்கே இருப்பது –மறையால் விரிந்த விளக்கு -என்று அகாரத்தைச் சொல்லுகிறது -அகாரம் தானே மறைகளாய் பரம்பிற்று-வாச்ய வாசக பாவ சம்பந்தத்தால் அவனையே குறிக்கும் –

மூன்று முப்பத்தாறினோடு ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
மூன்று மூர்த்தி யாகி மூன்று மூன்று மூன்று மூன்றுமாய்
தோன்று சோதி மூன்றுமாய் துளக்கமில் விளக்கமாய்
என் தன் ஆவியுள் புகுந்தது என் கொலோ வெம் மீசனே –4-மூன்று அஷரம் –பிரணவம் -அதில்
தோன்றும் ஜோதி-அழிவு அற்ற விளக்காகிய -அ காரம் -ஓம்காரத்தில் திகழ்கின்ற ஜோதி மயன்-ஒம்காரோ பகவான் விஷ்ணு -சகலதுக்கும் காரண பூதன் -தனக்கு வேறு ஒரு காரணம் அற்றவன் -அதனால்  துளக்கமில் விளக்கம் என்கிறார்

மறையார் விரிந்த விளக்கை என்றும்-துளக்கமில் விளக்கமாய் என்றும்-அகாரத்தை ஈச்வரனோடு சாமாநாதிகரித்து-அ இதி ப்ரஹ்ம -என்கிற படியே வாச்ய வாசக சம்பந்த்தாலே-(அக்ஷராணாம் அஹம் அஸ்மி -ஸ்ரீ கீதை )

ஹர்த்தும் தமஸ் சத் அஸதீ விவேக்தும் ஈச மாநம் ப்ரதீபம் இவ காருணிகா ததாதி
தேந அவ லோக்ய க்ருதிநஸ் பரி புஞ்ஜதே தம் தத்ர ஏவ கேபி சபலா ஸலபீ பவந்தி–
1—காருணிகனான பெரிய பெருமாள் அஞ்ஞானம் இருளை போக்கவும் த்யாஜ்ய உபாதேயங்களை விவேகிக்கவும்
சாஸ்திரமான விளைக்கை அளித்தான்மறையார் விரிந்த விளக்கை என்றும்-துளக்கமில் விளக்கமாய் என்றும்-அகாரத்தை ஈச்வரனோடு சாமாநாதிகரித்து-அ இதி ப்ரஹ்ம -என்கிற படியே வாச்ய வாசக சம்பந்த்தாலே-(அக்ஷராணாம் அஹம் அஸ்மி -ஸ்ரீ கீதை )

அக்ஷராணாமகாரோஸ்மி த்வந்த்வஸ் ஸாமாஸி கஸ்ய ச.—-
அஹமேவாக்ஷயஸ் காலோ தாதாஹம் விஸ்வதோமுக-–৷৷10.33৷৷-எழுத்துக்களுக்குள் நான் அகாரம் ஆகிறேன்-

முன்னிவ் வுலகேழும் இருள் மண்டி யுண்ண முனிவரோடு தாநவர்கள் திசைப்ப வந்து
பன்னு கலை நாலு வேதப் பொருளை எல்லாம்  பரி முகமாய் அருளிய வெம் பரமன் காண்மின்
செந்நெல் மலி கதிர்க் கவரி வீசச் சங்க மவை முரலச் செங்கமல மலரை ஏறி
அன்னமலி  பெடையோடு மமரும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த யமரர் கோவே –7-8-2-பரம்பின கலைகளை உடைத்தான நாலு வகைப் பட்ட வேதங்களின் உடைய-அர்த்தத்தை எல்லாம்-ஹயக்ரீவ முகத்தாலே-அருளிச் செய்த சர்வ ஸ்மாத் பரன் கிடீர் –

கலைகளும் வேதமும் நீதி நூலும் கற்பமும் சொற்பொருள் தானும் மற்றை
நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையினால் அருள் செய்து
நீண்ட
மலைகளும் மா மணியும் மலர் மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற
அலைகடல் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-5-கலைகளும் –
வேதத்தில் உபரிதன பாகத்தையும் வேதாந்த ஸூத்ரங்களையும்-வேதமும்-பூர்வ பாகமும்-நீதி நூலும்
அவற்றை உப ப்ரும்ஹிக்க கடவ இதிகாசங்களும்-கற்பமும்-கல்ப ஸூத்தரமும்–சொல் பதங்களை நிர்வஹித்துக் கொடுக்கக் கடவ வ்யாகரணமும்-பொருளும்-அர்த்த விசாரம் பண்ணக் கடவ மீமாம்சையும்-நிலைகளும்-இவற்றில் சொல்லுகிற சாதனங்களை அனுஷ்டித்தாருக்கு ப்ராப்யமாக சொல்லுகிற பூமிகளும்-ப்ரஹ்மாதிகளுக்கும் மனுஷ்யருக்கும்-நீர்மையினால் அருள் செய்து
சேஷித்வ ஸ்வபாவத்தாலே கொடுத்து

நீர்மையினால் அருள் செய்தான்
நீர்மை
– ஸ்வ பாவம் –தன் ஸ்வாபத்தினால் கொடுத்தான் என்கை-(ஸ்வரூபம் -தனிமை -ஸ்வம் ஆஸ்ரய ரூபாயதி -ஸ்வ பாவம் -பொது -)-அதாவது தன் சேஷித்வ ஸ்வாபத்தாலே என்னுதல் -சமுச்சயமாதல்-
சேஷித்வம் காருணிகத்தவம் இரண்டும் மூன்று யோஜனைகள்

1–பூர்வ யோஜனை-நீர்மையினால் என்கிறதற்கு பூர்வர்கள் இட்ட -பெரிய திரு மொழி-2-8-5—வியாக்யனத்திற்க்கும்-இந்த உதிர தெறிப்பு திரை குணிய விஷயம் ஆனவற்றுக்கு பிரகாசம்-சூத்ரம் -13-என்று இவர் தாமே மேல் அருளி செய்வதற்கும் சேரும்
2-நடுவில் யோஜனை -காருணிகனான -என்று இவர் பிரதமத்திலே எடுத்ததுக்கும்
ஸ்ரீ பட்டர்–கருணிகோ ததாதி-என்று அருளி செய்ததற்கும் -சேரும்
3-மூன்றாம் யோஜனை–காருணிகனான சர்வேஸ்வரன் -என்கிற இடத்தில் சொன்ன இரண்டாம் யோஜனைக்கு சேரும்-

ஆக இத்தால்‌ “ஹர்த்தும்‌ தமஸ் ஸத.,ஸதீ ச விவேக்துமீஸோ மாநம்‌ ப்ரதீ,பமிவ காருணிகோ ததாதி” (ர.ஸ்தவே -2-1) என்கிறபடியே ஸம்ஸாரிகள்‌ அஜ்ஞாந நிவருத்தி பூர்வகமாக ஜ்ஞாந ப்ரகாநத்தை உடையராய்‌ ஸாராஸார விவேகம்பண்ணி உஜ்ஜீவிக்கைக்காக ஸாஸ்த்ர ப்ரதாநம்‌ பண்ணினதுக்கடி நிர்ஹேதுக க்ருபை என்றதாய்த்து-

ஆக இச் சூர்ணையால் அஜ்ஞரான சம்சாரி சேதனர் ஞான பிரகாசத்தை உடையவராய்-அந்த அஞ்ஞானம் நீங்கி தன்னைக் கண்டு சத் அசத் விவேகம் பண்ணுகைக்கு உறுப்பாக-ஸ்ரீ ஈஸ்வரன் சாஸ்திர பிரதானம் பண்ணின படியை தன் நிதாதானத்தோடே-அதற்கு உரிய காரணத்தோடு – அருளிச் செய்தார் ஆய்த்து-இந்த சூர்ணையில்
1-ஞானம் ஒரு விளக்கு
2-எம்பெருமானை ஒரு விளக்கு
3-அகாரம் ஒரு விளக்கு
4-சாஸ்திரம் ஒரு விளக்கு-மறையாய் விரிந்த விளக்கு-எம்பெருமானை ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் -இவர் சகல வாக்குக்கும் வித்தான அகாரத்தை சொல்லி சாமாநாதி கரண்யா நிதானத்தினால் எம்பெருமான் பொருள் படுகிறான்-

விவேக பலம் வீடு பற்று- -சூரணை -2
இந்த விவேகத்துக்கு பலம் என்பதை சொல்கிறது மேல்-அதாவது இப்படி அவன் கொடுத்த சாஸ்திர ஜன்ய ஞானத்தாலே-நல்லதும் தீயதும் விவேகிக்கைக்கு பலம்-த்யாஜ்யத்தை விடுகையும்
உபாதேயத்தை பற்றுகையும்
என்கை-

த்யாக ஸ்வீகாரம் என்னாதே வீடு பற்றுகை என்கையாலே
வீடு முன் முற்றவும்–1-2-1-
அற்று இறை பற்று
–1-2-5- என்று ஸ்ரீ ஆழ்வார் பாசுரத்தை உள் கொண்டு அருளிச் செய்தமை தோற்றுகிறது- (பரித்யஜ்யா மயா லங்கா )

(விவேக பலம்‌) இப்படி இவன் கொடுத்த ஸாஸ்த்ர ஜந்ய ஜ்ஞாதத்தாலே ஸாராஸார விவேகம்‌ பண்ணினதுக்கு பலம்‌ என்னென்னில்‌ ;
(வீடு பேறு) விடுகையும்‌ பற்றுகையும்‌; இவை இரண்டையும்‌. “*வீடுமின்‌ முற்றவும்‌”” (திருவாய்‌. 1 – 2 – 1) என்றும்‌, “அற்றிறை பற்றே”’ (திருவாய்‌. 1 – 2-5) என்றும்‌ சொல்லக் கடவதிறே.

வீடுமின் முற்றவும் வீடு செய்து உம்முயிர்
வீடுடை யானிடை வீடு செய்ம்மினே
 –1-2-1-விடுமின் -என்றபடி-இன்னத்தை விடுங்கோள் என்னாது ஒழிவான் என் என்னில் -சிறு பிரஜை சர்ப்பத்தைப் பிடித்துக் கொண்டு இருந்தால் விட்டுக் கொள் என்று பின்னை இ றே சர்ப்பம் என்பது –-அது போல் விடுகிறவனுடைய த்யாஜ்யாதிசயம் தோற்றுகைக்காக முதலிலே விடுங்கோள் என்கிறார்-உபதேசம் அஷட்கர்ணமாய் இருக்க பஹூர் வசனத்தாலே சொல்லிற்று -சிலர் தாந்தராய் அர்த்திக்கச் சொல்லுகிறார் அல்லாமையாலும்-அனர்த்தம் சர்வ சாதாரணம் ஆகையாலும் எல்லாரையும் குறித்துச் சொல்லுகிறார்-எத்தை விடுவது என்னும் அபேஷையிலே-முற்றவும் –-என்கிறார் –அஹம் மமேதி சண்டால-சண்டாலர் குடியிருப்பை பிராமணனுக்கு ஆக்கும் போது சண்டால ஸ்பர்சம் உள்ள பதார்த்தம் அடைய த்யாஜ்யம் ஆனால் போலே –அஹங்கார கர்ப்பமாக ஸ்வீகரித்த வற்றில் த்யாஜ்யம் அல்லாதன இல்லை -என்கை

அற்றது பற்று எனில் உற்றது வீடுயிர்
செற்றது மன்னுறில் அற்றிறை பற்றே
 –1-2-5-பற்று அற்றது என்னில்-இதர விஷயங்களில் பற்று அற்ற மாத்ரத்திலே ஆத்மா மோஷத்தை-உற்றது-கையுற்றது-வீடுயிர்-அநித்யமாய்-ஜடமான அசித் சம்சர்க்கம் அற்றவாறே -நித்யமாய்-ஜ்ஞானானந்த லஷணமாய் ஆத்மா தன் பக்கலிலே கால் தாழப் பண்ணும் –நிச்சதம்-செற்றது-அத்தை ஜெயித்து -அத்தை முகம் சிதறப் புடைத்து-மன்னுறில் நிரதிசயமான பகவத் கைங்கர்யத்தைப் பெற்று நிலை நிற்க வேண்டி இருந்தாய் ஆகில்
அற்றிறை பற்றே — இதர விஷயங்களிலே தொற்று அற்று -சர்வேஸ்வரனைப் பற்று என்னுதல்
ஆஸ்ரயிக்கும் போதே உன்னை பகவச் சேஷமாக அத்யவசித்து ஸ்வாமி யானவனை ஆஸ்ரயி என்னவுமாம் – அன்றிக்கே-விபக்தியை மாறாடி இறையைப் பற்றி அத்தை அறுங்கோள் என்னவுமாம் –

த்யாஜ்ய உபாதேயம் தான் எவை என்ன சொல்லுகிறது மேல்-

த்யஜ்ய உபாதேயங்கள் ஸுக துக்கங்கள்-சூரணை -3

(வீடு பற்றுதல் -என்றதைச் சொல்லாமல் த்யாஜ்ய உபாதேயங்கள் -பர்யாய சப்தங்கள் )-அதாவது –ஸுகீ பவேயம் துக்கி மா பூவம்-என்று சர்வருக்கும் துக்கம் அநிஷ்டமாய் ஸுகம் இஷ்டம் ஆகையாலே துக்கம் த்யாஜ்யம் ஸுகம் உபாதேயம் என்கை–த்யாஜ்யோபாதே.யங்கள்‌ எவை என்னில்‌ ;(த்யாஜ்யோபாதே,யங்கள்‌ ஸுக, துக்க,ங்கள்‌) என்கிறார்‌. “ஸுகீ, பவேயம்‌, துக்கீ, மா பூ,வம்‌” என்று ஸர்வர்க்கும்‌ துக்கம்‌-த்யாஜ்யமாய்‌, ஸுக,ம்‌ உபாதே,யமாயிறே இருப்பது.-


இவை தான் கர்ம அனுகுணமாக நின்ற நின்ற நிலைகளிலே உண்டாகையாலே
இவற்றின் பரம அவதியை சொல்லுகிறது மேல்-

இவற்றுக்கு எல்லை இன்பு துன்பளி பன்மா மாயத்து அழுந்துகையும்
களிப்பும் கவர்வும் அற்று பேர் இன்பத்து இன்புருகையும்-
சூரணை -4

அதாவது துக்கத்துக்கு பரம அவதி -இன்பு துன்பளி-திருவாசிரியம் -6– -என்று தொடங்கி
(இன்பு துன்பளி தொல் மா மாய பிறவியில் நீங்கா பல் மா மாயத்து அழுந்தும் –திருவாசிரியம் -6)
ஸுக துக்க அவாஹங்களாய் அநாதியாய் துஸ்தரமாய் இருந்துள்ள பிரகிருதி சம்பந்த நிபந்தனமான ஜன்மங்களில் நின்றும் ஒருகாலும் நீங்காமைக்கு உருப்பானவையாய் பல வகை பட்டு இருப்பனவாய்
அகப்பட்டார் தப்ப அரிதா மவையாய்-இன்னமுது-திருவாய் மொழி -7-1-8– என்று தோன்றி
(இன்னமுது எனது தோன்றி ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த முன்ன மாயம் எல்லாம் –திருவாய் மொழி -7-1-8-) எத்தனையேனும் அறிவுடையாரையும் கலங்கப் பண்ணுகையாலே ஆச்சர்யங்களாய் இருந்துள்ள சப்தாதி விஷயங்களில் அகப்பட்டு அழுந்துமா -என்கிற படி அனந்த க்லேச பாஜனமான-ஜிதந்தா- சம்சாரத்தில் அழுந்துகை-

சுகத்துக்கு பரம அவதி
களிப்பும் கவர்வும் அற்று -என்று தொடங்கிச் சொல்லுகிற
(களிப்பும் கவர்வும் அற்று பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று ஒளிக் கொண்ட சோதி மயமாய் –திருவாய் -2-3-10 –) அல்ப அஸ்திரத் வாதி தோஷ துஷ்டமான விஷய லாபத்தாலே வரும் கர்வமும்
தத் அலாபத்தாலே வரும் க்லேசமும்-கழிந்து ஷட் பாவ விகாரங்களும் -அஸ்தி ஜாயதே இத்யாதி -நீங்கி
சுத்த சத்வ தயா பிரகாசமாய் இருக்கிற அப்ராக்ருத விக்ரகத்தை பெற்று-அந்தமில் பேர் இன்பம்-திருவாய் –10-9-11-என்கிற படி (வந்து அவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு இருந்தமை -திருவாய் –10-9-11-) அபரிமித ஆனந்த மயமான பரமபதத்திலே அடியார்கள் குழாங்களை உடன் கூடி-சுழி பட்டோடும் சுடர் சோதி வெள்ளத்து இன்புற்று-திருவாய் -8–10–5-
(வழி பாட்டோட அருள் பெற்று மாயன் கோல மலரடிக் கீழ் சுழி பாட்டோடும் சுடர்ச் சோதி வெள்ளத்து இன்புற்று –திருவாய் -8–10–5-)-என்கிற படி அநவரத பகவத் அனுபவத்தாலே ஆனந்த நிர்பரனாய் இருக்கை-கவர்வுடன் கூடிய களிப்பு இங்கு -அங்கு ஸ்வரூப ஆவிர்பாவம் -கர்மம் அற்று –
இயற்கையான ஆனந்தம் -சுத்த சத்வ மயம் -அப்ராக்ருதம் -அம்ருத சாகரத்தில் நிமக்நராய் அங்கு அன்றோ

இதுக்கு மேலே ஏழு படிக்கட்டுக்கள் காட்டி அருளுகிறார் –
அர்த்த பஞ்சக ஞானம் -ஞாதவ்ய பஞ்சக ஞானம் -அறிந்து கொள்ள வேண்டிய ஐந்தும் -நிரதிசய ஆனந்த ஹேது–ஞாதவ்ய பஞ்சக அஞ்ஞானம் -சம்சாரத்துக்கு ஹேது
–சத்வம் -அசத்வம்-அடுத்த படி –
இவற்றுக்கு ஹேது ஜென்ம ஜாயமான கால கடாக்ஷம் இருப்பதும் இல்லாமலும்
கடாக்ஷத்துக்கு அடி கிருபா-கர்மமும்–அநாதிகால அவித்யா / ஸுஹார்த்தம் இவற்றுக்கு காரணம் –
இங்கு சாஸ்த்ர ஞானம் -மேலே சொன்னது அர்த்தபஞ்சக ஞானம் இருப்பதும் இல்லாமையும் —
சர்வ பூத ஸுஹார்த்தம் -கிருபா -கடாக்ஷம் -சத்வ குணம் -ஞானம் -மோக்ஷம்
அவித்யா -கர்மம் -ஜென்மம் -சத்வம் -அஞ்ஞானம் -அனந்த கிலேச பாஜநம்-இப்படி படிக்கட்டுக்கள்
இவற்றுக்கு அடி -அசித் அயன சம்பந்தம் இவற்றுக்கு மூலம் –
இப்படி ஏழையும் அருளிச் செய்கிறார் –

அசித் சம்பந்தமும் அயன சம்பந்தமும் நித்யம் அநாதி –-அசித் சம்பந்தம் அந்தத்துடன் கூடியது
ஒழிக்க ஒழியாத நவவித சம்பந்தம் அவனுடன் தானே –

இந்த ஸுக துக்கங்களுக்கு எல்லை எவை என்னில்‌ (இன்பு துன்பளி பன் மா மாயத்தழுந்துகையும்‌, களிப்பும்‌ கவர்வு மற்றுப்‌ பேரின்பத் தின்புறுகையும்‌)
(இன்பு துன்பளி)
 துன்பத்தோடே கூடின இன்பத்தைத் தருமதாய்‌ இருக்கை.
இதுக்கு ப்ரமாணம்‌ “அத்யந்தஸ்திமி தாங்காநாம்‌ வ்யாயாமேந ஸுகைஷீணாம்‌ ப்‌,ராந்தி ஜ்ஞாநவதாம்‌ பும்ஸாம்‌ ப்ரஹாரோபி ஸுகாயதே’” என்று திமிர்வாதம் பற்றின ஸரீரத்தை யுடையவர்களாய்‌, வ்யாயாமத்தினாலே ஸுகத்திலே ஆசை யுடையவர்களுக்கு ஸரீரத்திலே குத்த, ப்‌ ராந்தி ஜ்ஞாநத்தாலே அது ஸுகமாகிறாப் போலேயிறே.
இன்புதுன்பளி பன்மா மாயத் தமுந்துகையாவது– ‘“ஓ ஓ உலகினதியல்வே ” (திருவாசிரியம்‌ 6) என்கிற பாட்டில்‌ சொல்லுகிறபடியே பர ஹிம்ஸாதி, ஸாத,ந முக,த்தாலே க்ஷத்‌ர தேவதா ஸமாஸ்ரயணம்‌ பண்ணி, தத் ப,லமாய்‌ துக்க,மிஸ்ரமான க்ஷுத்‌ர ஸுகங்களை அநுபவிக்கைக் கீடான தேவாதி ஸரீரங்களிலே அஹமபி,மாநம்‌ பண்ணி ஸம்ஸரிக்கை.
களிப்பும்‌ கவர்வுமற்றுப்‌ பேரின்பத் தின்புறுகையாவது-– “களிப்பும்‌ கவர்வுமற்று” (திருவாய்‌. 2 – 3 – 10) என்கிற பாட்டில்‌ சொல்லுகிறபடியே ப்ராக்ருத பதார்த்த,ங்களினுடைய லாபா லாபங்களாலே வருகிற ஸோக ஹர்ஷங்கள்‌ போய்‌, ஷட்‌,பாவ விகாராஸ்பதமான ஸ்தூ,ல ஸூஷ்ம ரூபமான ப்ரக்ருதி ஸம்பந்த முமற்று, ”பேரின்ப வெள்ளத்தே”’ (திருவாய்‌. 7 – 2- 11) என்று சொல்லுகிற நிரதிஸய ஆநந்த, மயமான தேஸ விஸேஷத்திலே போய்‌, அப்ராக்ருத விக்‌, ரஹ பரிக்‌,ரஹம் பண்ணி, தி,வ்யாஸ்தாந மண்டபத்திலே நிரதிஸய ஆநந்த., மக்‌நரான நித்ய ஸூரிகளோடே “ ௬ழி பட்டோடும்‌ சுடர்ச்சோதி வெள்ளத் தின்புற்று (திருவாய்‌. 8 10 – 5) என்கிறபடியே ப.கவதநுபவம் பண்ணி, ஆநந்த நிர்பரராய்‌ இருக்கையும்‌, அந்த ஸாஸ்தர ஜந்ய ஜ்ஞாநத்தாலே பிறந்த விவேகத்துக்கு ப்ரயோஜநம்‌ த்யாக, ஸ்வீகாரங்களென்றும்‌, த்யஜிக்கைக்கும்‌ ஸ்வீகரிக்கைக்கும்‌ ஹேது ஸுக துக்கங்களாகையாலே என்றும்‌, இவை இரண்டுக்கும்‌ எல்லை ஸம்ஸார ஸம்பந்தமும்‌, பரமபதத்திலே போய்‌ ஆநந்த நிர்பரரா யிருக்கையும்‌ என்றதாய்த்து

ஒ! ஒ! உலகினது இயல்வே ஈன்றோள் இருக்க
மணை நீர் ஆட்டி படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து
அளந்து தேர்ந்து உலகு அளிக்கும் முதல் பெரும்
கடவுள் நிற்ப புடை பல தானறி
தெய்வம் பேணுதல் தனாது
புல் அறிவாண்மை பொருந்தக் காட்டி
கொல்வன முதலா அல்லன முயலும்
இனைய செய்கை இன்பு துன்பு அளி
தொல் மா மாயப் பிறவி யுள் நீங்கா
பல் மா மாயத்து அழுந்து மா நளிர்ந்தே –திருவாசிரியம்‌–6–இருந்தார் இருந்த இடங்களிலே செவிப்படும்படி கூப்பிடுகிறார்–ஒரு விபூதியாக தன்னை அனுபவிக்கிற அனுபவத்துக்கு விச்சேதம் இன்றிக்கே செல்லுகிறாப் போலே-இது ஒரு விபூதி தன் பக்கல் வைமுக்யம் பண்ணும்படி வைப்பதே – இது ஒரு லோகத்தினுடைய ஸ்வ பாவமே –உத்பத்திக்கு முன்னே உண்டாக்குகைக்கு சாதன அனுஷ்டானம் பண்ணி – பின்னை கர்ப்பத்தில் தரித்து – பிரசவ வேதனையை அனுபவித்து – அநந்தரம் தண்ணிய இட்டுக் கொடு துவண்டு நோக்கினால்-அறிவு பிறந்து பண்ணின உபகாரத்தை ஸ்மரிக்கும் அளவானவாறே–அவளை விட்டு ஒரு உபகாரமும் பண்ணவும் அறியாதே இவன் பண்ணின உபகாரத்தையும் ஸ்மரிக்கவும் அறியாதே இருபத்தொரு அசித் பதார்த்தத்தை கொண்டாடுவாரைப் போலே வகுத்த விஷயத்தை விட்டு அப்ராப்த விஷயத்தை ஆதரியா நின்றார்கள்இன்பு துன்பு அளி
ஸூக துக்க மிஸ்ரமான பலத்தை யாயிற்று தருவது – நிஷ்க்ருஷ்ட ஸூகமான மோக்ஷம் அவற்றுக்கு இல்லையே
வகுத்த விஷயத்தைப் பற்றி நிஷ்க்ருஷ்ட ஸூகத்தைப் பெறப் பாராதே சேதனர் அப்ராப்த விஷயத்தை ஆஸ்ரயித்து அனர்த்தத்தைப் பெறப் பார்ப்பதே – இது என்ன படு கொலை என்கிறார்

இன்னமு தெனத் தோன்றி ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த
முன்னம் மாயமெல்லாம் முழு வேர் அரிந்து என்னை யுன்
சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்தேத்திக் கை தொழவே அருள் எனக்கு
என்னம்மா! என்கண்ணா!இமையோர்தம் குலமுதலே!–7-1-8-முகப்பிலே நிரதிசய போக்யம் போலே தோன்றி –அக்ரே அமிருதம் இவ -என்னும்படியே -விபாகத்தில் இருக்கும் இருப்பு உபக்ரமத்தில் தோன்றிற்று ஆகில் மேல் விழாது ஒழியல் யாயிற்று -வாயில் இட்டால் ரசித்து அநந்தரம் முடிப்பன சில விஷங்கள் உண்டு அது போலே ஆயிற்று-தனித் தனியே பிரபலமாய் அத்விதீயமான சப் தாதிகள் ஐந்தும் யாவரையும் மயக்க-எத்தனையேனும் அதிசயித ஞானரையும் கலங்கப் பண்ணும் படியாக-சர்வ சக்தியான நீ வைத்த-அநாதியான ப்ரக்ருதி சம்பந்தத்தை காரியத்தோடு கூட-

களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக் கொண்ட சோதியமாய்
உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான்நிலம் சுடர் ஆழி சங்கேந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே -2-3-10-அல்ப அஸ்திரத்தவாதி தோஷ துஷ்டமான விஷய லாபத்தாலே வந்த களிப்பும் –அவை கிட்டாது ஒழிந்தால் இவை கிட்டாது ஒழிய பெற்றோமே என்று இராதே பண்ணும் சாபலமும் -இரண்டுக்கும் அடியானை ஜென்மம் ஜென்ம ப்ரயுக்தமான வியாதி -ஒன்றால் பரிஹரிக்க ஒண்ணாத அவ்ரஜ நீயமாய் வரும் மூப்பு இவற்றோடு யாகிலும் ஜீவிக்க நினைத்தால் வரும் நிரன்வய விநாசம் -ஆக ஷட்பாவ விகாராதிகள் அற்று

முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் மொய்புனல் பொருநல்
துகில் வண்ணத் தூ நீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ் வண் குரு கூர்ச் சட கோபன்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே.–7-2-11-முகில் வண்ணன் உடைய வானம் என்னுதல் -அவனுடைய நிழல் ஈடான வானம் என்னுதல் -தாம் மோஹித்து திருத் தாயார் தனியே கூப்பிட இருந்த இவருடைய கிலேசமும் இன்றிக்கே -நித்ய ஸூரிகள் நடுவே ஆனந்த நிர்ப்பரராய் இருக்கப் பெறுவர்கள்

வழி பட்டு ஓட அருள் பெற்று மாயன் கோல மலர் அடிக்கீழ்
சுழி பட்டு ஓடும் சுடர்ச் சோதி வெள்ளத்து இன்புற்று இருந்தாலும்
இழி பட்டு ஓடும் உடலினில் பிறந்து தன் சீர் யான் கற்று
மொழி பட்டு ஓடும் கவி அமுதம் நுகர்ச்சி உறுமோ முழுதுமே–8-10-5-ஆறு பெருகுமா போலே சுழித்துச் செல்லுகிற ஒளி அலைகளை உடைத்தான  தேஜஸ் சமுத்ரமான பரம பதத்தில் –அத்யர்க்கா நல தீப்தம் தத் ஸ்தானம் விஷ்ணோ மகாதமன-ஸ்வ யைவ ப்ரபயா ராஜன் துஷ்ப்ரேஷம் தேவதா நவை -பாரதம் -ஆரண்ய பர்வம் – ஏஷக்யேவ ஆனந்தயாதி -தைத்ரியம்–சூர்யன் அக்னி ஆகியவற்றின் ஒளிகளைக் கடந்துள்ள-ஒளியுடன் விளங்குகிற மாகாத்மாவின் ஸ்ரீ மன நாராயணன் உடைய ஸ்ரீ வைகுண்டம்-என்று அவன் ஆனந்திப்பிக்க -ஆனந்த நிர்ப்பரனாய் இருந்தாலும்

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-யவாதாத்ம பாவியாய் நிரதிசயமான ஆனந்தத்தை யுடையராய்க் கொண்டு -ஆனந்த நிர்ப்பரராய்க் கொண்டு –சம்சாரத்தில் துக்கத்துக்கு எல்லை யுண்டாகில் யாய்த்து -அஸ் ஸூகத்துக்கு அவதி சொல்லலாவது –அடியார்கள் குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ -என்று ஆசைப் பட்ட படியே இருந்தமையை -அவர்களும் தங்களுக்கு போதயந்த பரஸ்பரம் பண்ணுகைக்கு துணை தேடி இறே இருப்பது

சூரணை-5
ஏவம் பூத துக்கமும் சுகமும் இவனுக்கு உண்டாக ஹேது என்ன சொல்லுகிறது மேல்-

அநந்த க்லேச நிரதிசய ஆனந்த ஹேது--,) ”ஸம்ஸார ஸாக,ரம்‌ கோரம்‌ அநத்த கலேஸ பாஜநம்‌” (ஜித. 1) என்கிறபடியே அநந்த துக்காவஹமான ஸம்ஸாரத்துக்கும்‌, நிரஸ்தாதிஸயாஹ்லாத, ஸூக, பாவைக லக்ஷணா பேஷஜம்‌ பகவத ப்ராப்தி ரேகோந்‌ தாத்யந்திகீ மதா” (வி.பு. 6 – 5 -59) என்கிறபடியே நிரதிஸய ஆநந்தா வஹமான மோஷத்துக்கும்‌ ஹேது என்‌ என்னில்‌ மறந்தேன் -என்று தொடங்கி ”ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம்‌ ப்ராப்துஸ் ச ப்ரத்யகாத்மந:। ப்ராப்த் யுபாயம்‌ ப,லம்‌ ப்ராப்தே! ததா ப்ராப்தி விரோதி, ச ” (வ்ருத்‌த,ஹாரீத, 8) என்று இத்யாதிகளில்‌ சொல்லுகிற அர்த்த, பஞ்சக ஜ்ஞாநமும்‌, தத்‌ விஷயமான அஜ்ஞாநமும்‌ என்கிறார்‌ மேல்‌.

அநந்த க்லேச நிரதிசய ஆனந்த ஹேது–மறந்தேன் அறியகிலாத உணர்விலேன் ஏணிலேன் அயர்த்து என்றும்–உய்யும் வகை நின்ற ஒன்றை நன்கு அறிந்தனன்–உணர்வினுள்ளே ஆம் பரிசு என்றும் சொல்லுகிற ஞாதவ்ய பஞ்சக ஞான -அஞ்ஞானங்கள் –சூரணை-5

அதாவது சம்சார சாகரம் கோரம் அநந்த க்லேச பாஜனம் -ஜிதந்தா -1–என்கிற சம்சார ஆரப்ய ப்ரயுக்த அனந்த துக்க ஹேது
மறந்தேன் உன்னை முன்னும் -என்கிற பர விஷய அஞ்ஞானமும்
(மறந்தேன் உன்னை முன்னும் மறந்த மதியால் மனத்தால் இருந்தேன் எத்தனையும் அதனால்
இடும்பைக் குழியில் பிறந்தே ஏய்த்து ஒழிந்தேன்
-பெரிய திருமொழி -6-2-2–)
என்னை அறியகில்லாதே -என்கிற ஆத்ம விஷய அஞ்ஞானமும்
(யானே என்னை அறியகிலாதே யானே என் தனதே என்று இருந்தேன் -திருவாய் 2-9 -9)
ஓடியும் உழன்றும் உயிர்களே கொன்றேன் உணர்விலேன் -என்கிற விரோதி விஷய அஞ்ஞானமும்
(கோடிய மனத்தால் சினத்தொழில் புரிந்து திரிந்து நாயினத்தொடும் திளைத்திட்டு
ஓடியும் உழன்றும் உயிர்களே கொன்றேன் உணர்விலேன் ஆதலால்
-பெரிய திருமொழி -1-6-6-)
பிறவி நோய் அறுப்பான் ஏணிலேன் இருந்தேன் -என்கிற உபாய அஞ்ஞானமும்
(பிறவி நோய் அறுப்பான் ஏணிலேன் இருந்தேன்– பெரிய திருமொழி -1-6-1-)
ஆழி அம் கையானை ஏத்தாது அயர்த்து -என்கிற புருஷார்த்த விஷய அஞ்ஞானமும்-
(கரந்துருவின் அம்மானை அந்நான்று தொடர்ந்த ஆழி அம் கையானை ஏத்தாது
அயர்த்து
-பெரிய திருவந்தாதி -82 )
ஜ்ஞாதவ்யார்த்த பஞ்சக ஞான அபாவம்-

ஸம்சார ஸாகரம் கோரம் அநந்த க்லேஸ பாஜநம்
த்வாம் ஏவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண —4–ஸம்சார ஸாகரம் – ஸம்சாரம் ஆகிறது -அவித்யா கர்ம வாசனா ருசி பிரகிருதி சம்பந்தங்களும்-ஷட் பாவ விகாரங்களும்-புத்ர மித்ர களத்ராதிகளும்-தத் கார்யம் ஆகையாலே –-ஸம்சார சப்த வாச்யங்கள் ஆகிற இத்தனை – ஜன்ம சம்சார பந்தநாத் –முச்யதே -என்று ஜன்மாதிகளைக் கார்ய வர்க்கங்களாகவும் அவித்யாதிகளைக் காரண வர்க்கமாகவும் சொல்லிற்று இறே –-பரிச்சேதிக்க ஒண்ணாமை யாலும் தன் பக்கல் இழிந்தாரைக் கொண்டு இழியுமதாகையாலும்-புகலாம் இத்தனை போக்கி புக்கால் தம்தாமால் கரையேற ஒண்ணாமையாலும்
இத்தை -சாகரமாக நிரூபிக்கிறது –கோரம்
– கொடிதாய் இருக்கை -அதாவதுசர்வர்க்கும் துக்கம் என்று மீளலாம் நரகாதிகளைப் போல் அன்றிக்கே-ஆத்மாவுக்கு விநாச ஹேதுவாய் இருக்கச் செய்தேயும்
இன்னமுது எனத் தோன்றி -திருவாய் -7-1-8-என்று முகப்பிலே ஆகர்ஷகமாய் இருக்கும் தன்மையை உடைத்தாய் இருக்கை –-அஹங்கார சித்திக்கும் விஷயாந்தர போகத்துக்கும் சம்சாரிகள் உபாய அனுஷ்டானம் பண்ணுகிறார்கள் -இறே-அநந்த க்லேஸ பாஜநம் – தாப த்ரய துக்கத்தால் தொகை அற்ற க்லேசத்துக்கு எல்லாம் உத்பத்தி ஸ்தானமாய் இருக்கை-நலமந்த மில்லதோர் நாடு -திருவாய் -2-8-4- என்று ஒரு தேச விசேஷத்தில் ஸூகத்திற்கு முடிவு இல்லாதாப் போலே இதில் துக்கத்துக்கு முடிவு இல்லை -என்கை –

மறந்தேன் உன்னை முன்னம் மறந்த மதியில்  மனத்தால்
இறந்தேன் எத்தனையும் அதனால் இடும்பை குழியில்
பிறந்தே எய்த்து ஒழிந்தேன்
பெருமான் திரு மார்பா
சிறந்தேன்  நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே —6-2-2-மறந்தேன் உன்னை முன்னம் –
அந்த பொருள் இன்பங்களோ பாதி உன்னையும் ஒரு மூலையிலே ஆதரித்துக் கொடு போரப் பெற்றிலேன் – அது செய்து போந்தார் ஆகில் அப்போதைக்கு இப்போது அவற்றுக்கு இப்போது பரிஹாரம் பண்ணினார் ஆவரே –மறந்தேன் – யாதொரு விஷயம் விடாதே நினைக்க வடுக்கும்
அது ஒன்றையும்  மறந்து போனேன்-நம்பிள்ளை மதுரையிலே நிர்வஹியா நிற்கச் செய்தே
ஒப்பிலாத பெருமாள் -த்யேயோ நாராயணஸ் சதா – என்கிற விஷயத்தை யாகாதே மறந்து போந்தது
-என்றார் –(கங்கை கொண்ட சோழ புரம் -குருகைக் காவல் அப்பன் நினைக்க வழி கேட்டவர்களுக்கு –
நீங்கள் –மறக்க வழி சொல்லில் அன்றோ நான் சொல்ல முடியும்-எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பவன் அன்றோ) அல்லாதவை செய்தபடி செய்ய உன்னை முந்துற முன்னம் மறந்து மறந்து கொடு நின்றேன் -என்னுதல்–அன்றிக்கே-அநாதி காலம் மறந்து போனேன் -என்னுதல்-இம்மறப்பு போருகிறது நெடு நாள் உண்டாகில் உன்னை முன்னம் மறந்திலேன் என்று அன்றோ சொல்ல அடுப்பது என்னில்
அது வேண்டா யாய்த்து (பல நாள்களாக மறந்தேன் என்றால் அதுக்கு முன்னம் மறந்திலேன் சொல்ல வழி இல்லாமல் – முன்னம் என்று அநாதியாகவே என்றத்தைச் சொன்னவாறு _-உன்னை-என்கிற இடத்தில் சம்பந்தத்தை ஸ்மரித்தவர் ஆகையாலே-சம்பந்தம் ஸ்வா பாவிகமே யாகையாலே
முன்பு நெடு நாள் மறந்து போரச் செய்தேயும்-சில நாள் ஸ்மரித்து மறந்தால் போலே இருக்கத் தோற்றிற்று –(உறவில் உறைப்பு தோன்ற உன்னை என்கிறார் என்னைப் பார்த்தால் அநாதி –
உன்னைப் பார்த்தால் நினைத்து இருந்த காலமும் உண்டு என்று தோன்றுமே )
கலங்கா   பெரு நகரம் தன்னிலே இருந்து மறுக்கிறது அன்று இறே சம்சாரத்த்லே இருந்து மறக்கை குற்றமோ என்ன   -அவ்வளவே என்று நான் சேதனாகப் பெற்றிலேன் -என்கிறார்-சேதனன் ஆகில் மறந்தோம் என்னும் அனுதாபம் பிறக்க வேணும் இறே மறந்தால் – மறந்தோம் என்கைக்கு யோக்யதை இல்லை இறே அசித்துக்கு- சித்துக்கு ஞாத்ருத்வம் ஆகிறது -ஜ்ஞான குணங்களுக்கு ஆஸ்ரயம் ஆகை இறே-
அக் குணங்கள் தன பக்கல் காணாமையாலே அவற்றுக்கு ஆஸ்ரயம் உண்டாகப் பெற்றது இல்லை
(அசித் சமமாக அன்றோ இருந்தேன் )-மறந்தோம் என்கிற மதி இல்லாத நெஞ்சை உடையேன் என்கையாலே அனுதாப ரூப ஜ்ஞானமும் த்வாரம் மனஸ் இறே-அது இல்லாமையால் -உண்டாய் இருக்கச் செய்தேயும் இல்லை என்று வ்யவரிக்கலாம் படி நசித்தேன்–மறந்த மதி இல் மனத்தால் இறந்தேன் இத்தனையும் –-அசித்துக்கு அவ்வருகே ஆனேன்-முதலிலே நினைக்கைக்கும் யோக்யதை இல்லை இறே அசித்துக்கு-சித்துக்கு யோக்யதை உண்டாயிருக்கச் செய்தேயும்-நினையாமையாலே
அசித்துக்கும் அவ்வருகே கை கழியப் போனேன்-அசந்நேவ என்று பிரமாணங்களும் சொல்லும்படி யானேன்
(ப்ரஹ்மம் இல்லது என்றால் இல்லாமல் -உண்டு என்றால் உளனாகி இருப்பானே –
ஆத்மா இருந்தால் ஞானம் இருக்க வேண்டும்-மறந்தேன் -மறந்த மதி இல்லாமல் அனுதாபமும் படாமல் இருக்கவே இறந்ததுக்கே சமம் )மறந்த மதியில் – நினையாது ஒழிந்தேன் என்கிற ஜ்ஞான அனுதாபமும் இல்லாதாகையால்-மனத்தால் -மனசை உடையேனாக எத்தனையும் -மிகவும் அசித்தைக் காட்டிலும் இறந்தேன் -கை கழியப்  போந்தேன்-அதனால் –அவித்யா தருசம்பூதி பீஜமே தத்த்விதா ஸ்த்திதம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -என்கிறபடியே-அநாத்ம ந்யாத்ம புத்தியும் அஸ்வே ஸ்வ புத்தியும்
சம்சாரத்துக்கு பீஜம் என்று இருப்பார்கள் இவர் அனுதாபம் இல்லாமை சம்சார பீஜம் என்று இருக்கிறார்
– (அஹங்காரம் மமகாராம் வேர் முதல் ஆழ்வார் -பீஜம் இங்கு இருந்தேன் -அனுதாபம் கூட இல்லாமல் இருந்தேன் –அதனால் இடும்பை குழியில் பிறந்தேன் என்கிறார் அன்றோ -ஆகவே இதுவே பீஜம் )(ஜனன மரணம் -ஸ்ருஷ்ட்டி சம்ஹாரம்-சொல்வைதை விட சாவது பிறப்பது இங்கே-லவ குசர் குசலவர் மாற்றி அன்றோ சொல்லுகிறோம் ) பிறந்தே- இப்படி சாவது பிறப்பதாய் போரா நின்றால்-நடுவில் காதாசித்கமாக பகவத் சமாஸ்ரயணம் பண்ணினால் இறே-அது ஒரு ஜென்மத்துக்கு பிரதி பந்தமாக  வற்றாவது – அப்படி புருஷகாரம் காட்டி மீண்டது இல்லை –எய்த்து ஒழிந்தேன்- இன்னும் பிறக்கைக்கு அடியான கர்ம வாசனை உண்டே யாகிலும் பிறக்கைக்கு த்ரவ்யம் இல்லாத படி ஆனேன் கர்ம வாசனை கிடந்தது பிறக்க வேண்டினாலும் பிறக்கைக்கு ஷமன் அல்லேன்

யானே என்னை யறியகிலாதே
யானே என்தனதே என்று இருந்தேன்

யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –2-9-9-அவனுக்கு கலக்கம் இல்லாமையால் -தன்னைத் தருகைக்கு எதிர் சூழல் புக்கு திரிய -நான் என்னை முடிய சூழ்த்துக் கொண்டேன்–தேஹாத்ம அபிமானத்தாலே என்னை அவனுக்கு பிரகாரம் என்று அறிந்திலேன்-ஈஸ்வரோஹம் என்று இருந்தேன்-இவன் நான் என்றால் ஈஸ்வரனுக்கு கிட்ட அரிதாய் இறே இருப்பது-நானும் எனக்கு உரியேன் இன்றிக்கே இருக்க எனக்கு ஒரு உடைமையும் உண்டாக நினைத்து இருந்தேன்-தேகத்தை ஆத்மாவாகவும் -ஈஸ்வர விபூதியை என் உடைமை யாகவும் இந்த விபரீத அஞ்ஞானமே யாய் இருந்தேன்-இருந்தேன் – இப்படி ஸ்வரூபம் நசித்துக் கிடைக்க அனுதாபம் இன்றிக்கே க்ருதக்ருத்யனாய் இருந்தேன்-அஹம் சர்வம் கரிஷ்யாமி –என்று இருக்கை பிராப்தமாய் இருக்க ஒரு கார்யம் இல்லாதாரைப் போலே இருந்தேன்

கோடிய மனத்தால் சினத் தொழில் புரிந்து திரிந்து நாயினத்தொடும் திளைத்திட்டு
ஓடியும் உழன்றும் உயிர்களே கொன்றேன் உணர்விலேன்
ஆதலால் நமனார்
பாடியைப் பெரிதும் பரிசழித்திட்டேன் பரமனே பாற் கடல் கிடந்தாய்
நாடி நான் வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்–1-6-6-நல் விஷயத்தில் இருந்தும் விலகி –அனுகூல விஷயத்திலும் நெஞ்சு விலகியாயிற்று இருப்பது –மறச் செயல் செய்து –ஹிம்ஸ்ர பதார்த்தங்களோடே -வேட்டையாடித் திரிந்தபடியைச் சொல்லுதல் – தண்ணியவர்களோடே கூடி விளையாடிக் களித்து திரிந்தபடி யாதல் –ஒருவனை ஹிம்சிக்கலாம் பதின் காத மாறு போகலாமோ -என்றால் ஹிம்சித்ததாம் போது -சால வருந்த வேணும் என்றால் அப்படி வருந்தி வ்யாபரித்தும் –தட்டுப் பாராதே அவ்வளவும் ஓடியும் –ப்ராண விஸ்லேஷ பர்யந்தமாக்கிப் போந்தேன்
புடைவை யுரிந்து விட்டிலேன் –உணர்விலேன் – சர்வேஸ்வரன் ஒருவன் உளன் என்றும் இச்சாண் சந்தையும்-(சொல்ப வாக்கியமும்) நெஞ்சிலே படாத போது செய்யாதது உண்டோ-

வாணிலா முறுவல் சிறு நுதல் பெரும் தோள் மாதரார் வன முலைப் பயனே
பேணினேன் அதனைப் பிழை யெனக் கருதிப் பேதையேன் பிறவி நோய் அறுப்பான்
ஏணிலேன் இருந்தேன்
எண்ணினேன் எண்ணி இளையவர் கலவியின் திறத்தை
நாணினேன் வந்து உன் திருவடி யடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் –1-6-1-இப்படி அறிவு கேடன் ஆகையாலே – சம்ஸாரம் ஆகிறது அல்பம் -அஸ்தரம் -துக்காவஹம் -ஆனபின்பு இத்தைத் தவிர்த்துக் கொள்ள வேணும் -என்னும் மநோ ரதத்தை உடையேன் அன்றிக்கே இருந்தேன் –இத்தை தவிர்த்துக் கொள்ளுகைக்கு ஈடான உயர்த்தியை உடையேன் அல்லேன் -என்னுதல் –

தெரிந்த உணர்வு ஓன்று இன்மையால் தீ வினையேன் வாளா
இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் கரந்த உருவின்
அம் மானை அந் நான்று பின் தொடர்ந்த ஆழி யங்கை
அம்மானை ஏத்தாது அயர்த்து
–82-கைகேயி வாரத்தில் அகப்படா விட்டது திருக் கையில் அருகாழி ஒன்றுமே யாகாதே-வடிவைக் கரந்து வர்த்திக்கிற அம் மாய மானை அன்று தொடர்ந்த அருகாழியைக் கையிலே யுடைய ஸர்வேஸ்வரனை இளைய பெருமாளும் உதவாத தசையில் ஏத்தப் பெறுவது அறிவு கெட்டுக் கிடந்த நான் பழுதே போக்கினேன்–ஏத்துகை –அடிமையாய் இப்படி அடிமை செய்யப் பெற்றிலேன்

மறந்தேனுன்னை முன்னம்‌” (திருமொழி -6- 2 – 2) என்கையாலே பர விஷயமான அஜ்ஞாநமும்
அறியகிலாத — “யானே என்னை அறியகிலாதே
”’ (திருவாய்‌ 2 – 9 – 9) என்கையாலே ஆத்ம விஷயமான அஞ்ஞாநமும்
உணர்விலேன் -”ஓடியும் உழன்றும்‌ உயிர்களே கொன்றேன்‌ உணர்விலேன்‌
” (திருமொழி 1 – 6 – 6) என்கையாலே விரோதி விஷயமான அஜ்ஞாநமும்‌
ஏணிலேன் -) ”பிறவி நோயறுப்பான்‌ ஏணிலேனிருந்தேன்‌” 
(திருமொழி 1 – 6- 1) என்கையாலே உபாய விஷயமான அஜ்ஞாநமும்
அயர்த்து என்றும்-”ஆழியங்கை யம்மானை ஏத்தாதயர்த்து
” (பெரியதிரு – 82) என்கையாலே புருஷார்த்த விஷயமான அஜ்ஞாநமும்‌-
ஏத்துகையிறே புருஷார்த்தம்‌. அத்தை மறக்கையாலே புருஷார்த்த, விஷயமான அஜ்ஞாநமும்‌ என்கிறார்‌. “*சூழ்ந்திருந்தேத்துவர்‌’” (திருப்பல்‌. 12) என்றும்‌, ““ஏதத் ஸாம் காயந் நாஸ்தே” (தை. ப்ருகு,.) என்றும்‌ சொல்லக் கடவதிறே-

பல்லாண்டு என்று பவித்ரனைப் பரமேட்டியைச் சார்ங்கம் என்னும்
வில்லாண்டான் தன்னை வில்லி புத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல்
நல்லாண்டு என்று நவின்று உரைப்பார் நமோ நாராயணா என்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே –12நம புரஸ்தாத தப்ருஷ்ட தஸ்தேத மோஸ் தூதே -என்கிற படியே முன்பே நில்லா-முறுவலை அனுபவித்து அதிலே ஈடுபடும் -பின்பே நில்லா பின்பும்-பிறகு வாளி யாவது -தண்டிகை கொம்பு போலே வளைந்து திரு பிடரியிலே
தொங்குகிற அசாதாராண ஆபரண விசேஷம் -பிறகு வாளி யுமான அழகை அனுபவித்து அதிலே ஈடுபடும் –இப்படி சுழி யாறு படா நிற்கச் செய்தே கால் வாங்க ஒண்ணாத வடிவு அழகு -அதி சங்கையை விளைத்து மங்களா சாசனத்தில் மூட்டும் என்கை-

நிரஸ்த அதிசய ஆஹ்லாத ஸுக பாவைக லக்ஷணா–ஸ்ரீ விஷ்ணு புராணம் –6 -5–59 -என்கிற பகவத் பிராப்தி ரூப மோஷ ப்ரயுக்த நிரதிசய ஸுக ஹேது
(ஸூக பாவைக லக்ஷணம் -பகவத் பிராப்தி ரூபம் -நிரதிசய ஆனந்தம் -ஸ்ரீ வைகுண்டம் ஸ்தானம் –
பகவத் பிராப்தி ரூப மோக்ஷ பிரயுக்த-நிரஸ்த அதிசய ஆஹ்லாத ஸூக பாவைக லக்ஷணம்
-துக்கம் கலசாத -ஆனந்தம் )
நின்னை நெஞ்சில் உய்யும் வகை உணர்ந்தேன் -என்கிற பர விஷய ஞானமும்
(இவையாய நின்னை நெஞ்சில் உய்யும் வகை உணர்ந்தேன் -பெரிய திருமொழி -6-3-6-)நின்ற ஒன்றை உணர்ந்தேன் -என்ற ஆத்ம விஷய ஞானமும்-
(அகற்ற நீ வைத்த மாய வல் ஐம் புலன்கள் ஆம் அவை நன்கு அறிந்தனன்—திருவாய் -5-7-8-)
அகற்ற நீ வைத்த மாய வல் ஐம் புலன்கள் ஆம் அவை நன்கு அறிந்தனன்-என்ற விரோதி விஷய ஞானமும்
அவனது அருளால் உறல் பொருட்டு என் உணர்வின் உள்ளே நிறுத்தினேன் -திருவாய்-8-8-3–என்கிற உபாய விஷய ஞானமும்
ஆம் பரிசு அறிந்து கொண்டு -என்கிற புருஷார்த்த விஷயம் ஆகிற ஞானமும்
(மேம்பொருள் போக விட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து ஆம் பரிசு அறிந்து கொண்டு –திருமாலை -38-) ஆகிய இவை ஜ்ஞாதவ்யார்த்த பஞ்சக ஞானம் என்கை-

உய்யும் வகை – “உணர்ந்தேன்‌ உண்மையாலினி யாதும்‌ மற்றோர்‌ தெய்வம்‌ பிறிதறியேன்‌”’ (திருமொழி 6 – 3 – 6) என்கையாலே பர விஷயமான்‌ ஜ்ஞாநமும்
நின்ற ஒன்றை -நின்ற வொன்றை உணர்ந்தேன்‌” (திருவாய்‌, 8 – 8 – 5) என்கையாலே ஸ்வருப விஷயமான ஜ்ஞாநமும்
நன்கு அறிந்தனன்- ‘ அகற்ற நீ வைத்த மாய வல்லைம் புலன்களாமவை நன்கறிந்தனன்‌’” (திருவாய்‌. 5 – 7 – 8) என்கையாலே விரோதி, விஷயமான ஜ்ஞாநமும்
உணர்வினுள்ளே -) *’உணர்வினுள்ளே இருத்தினேன்‌ அதுவுமவனதின்னருளே”” (திருவாய்‌. 8 – 8 – 3) என்கையாலே உ.பாய விஷயமான ஜ்ஞாநமும்
ஆம் பரிசு என்றும்– ”ஆம்பரிசறிந்து கொண்டு” (திருமாலை 38) என்கையாலே புருஷார்த்த, விஷய ஜ்ஞாநமும்‌ சொல்லிற்று.

மை ஒள் கருங்கடலும் நிலனும் அணி வரையும்
செய்ய சுடர் இரண்டும் இவையாய நின்னை நெஞ்சில்
உய்யும் வகை உணர்ந்தேன் உண்மையால் இனி யாதும் மற்றோர்
தெய்வம் பிறிது அறியேன் 
திருவிண்ணகரானே—6-3-6-இப்படி ஜகதா காரனாய் இருக்கிற உன்னை –நெஞ்சாலே அசந்நேவ-என்கிறபடியே அசத் கல்பனாய் உரு மாய்ந்து போன நான் இப்போது உஜ்ஜீவிக்கும் படி தேவரை அனுவர்த்தித்தேன்   –இவ் வாத்மாவுக்கு நீயே சேஷி-உன்னைக் குறித்து இவ் வாத்ம வஸ்து அத்யந்த சேஷம் -என்கிற முறையாலே –தத்வம் இருந்தபடி அல்லது பிரதிபத்தி பண்ணக் கடவது அல்லாத படியான பின்பு வேறு சிலரை ஆஸ்ரயணீயனாக நினைத்து இரேன் –

நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு அதன் நுண் நேர்மை அது இது என்று
ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது உணர்ந்தும் மேலும் காண்பு அரிது

சென்று சென்று பரம்பரம் ஆய் யாதும் இன்றித் தேய்ந்து அற்று
நன்று தீது என்று அறிவு அரிதாய்நன்றாய் ஞானம் கடந்ததே–8-8-5—தேஹ இந்திரிய மன பிராணாதி களில் காட்டில் -அந்நியமாய் -இவை அழியும் அன்றும் அழியாதே ஏக ரூபமாய் -இவற்றுக்கு நியாந்தாவுமாய் விலக்ஷணமுமான ஆத்மாவை–உயர்வற உயர் நலமுடையவன் -என்று அவன் கல்யாண குணங்களிலே இழிந்தவர் ஆகையால் -இதுக்கு முன்பு மின்மினி போலே இருக்கிற ஆத்ம ஸ்வரூபத்தில் கை வைத்திலர்-பரிகரமும் பக்தி ரூபா பன்ன ஞானம் ஆகையால் இத்தை அனுசந்திக்க போது பெற்றிலர் –முக்தன் நோ பஜனம் ஸ்மரன் -பண்ணுமா போலே இ றே பகவத் ப்ரவணனுக்கும் ஆத்ம ஞானம் அவிஷயமாய்-இருந்த படி -இத்தை யாராய்ந்தவாறே இருந்த படி என்—அதினுடைய வை லக்ஷண்யம் -அது இது என்று-அநு பூதங்களின் படி என்றாதல் -அநு பவிக்கிற வற்றின் படி என்றாதல் -அறியப் போகாது-எத்தனையேனும் அதிசயித ஞானர்க்கும் ஏக தேசமும் அறியப் போகாது –கிலேச அதிகதரஸ் தேஷாம் அவ்யக்த அசக்த சேதஸாம் –வருந்தி அறிந்தாலும் சாஷாத் கரிக்க ஒண்ணாது –
சென்று சென்று பரம்பரம் ஆய்-போய் போய் ஒன்றுக்கு ஓன்று மேலாய் இருக்கிற அன்ன மயாதிகளுக்கும் பரமாய்–அவற்றின் ஸ்வ பாவம் ஒன்றும் தட்டாத படி அவற்றோடு அற தொற்று அற்று-தேஹத்தைக் காட்டிலும் இந்திரியம் -அத்தைக் காட்டிலும் மனஸ் ஸூ -அதில் காட்டிலும் பிராணன் -அதில் காட்டிலும் புத்தி -என்கிறதில் வை லக்ஷண்யம் உண்டாகிறாப் போலே -ப்ராக்ருதங்களில் உண்டான நன்மை தீமைகள் சொல்ல ஒண்ணாது இருக்கை-இவற்றில் காட்டில் அதி வி லக்ஷணமாய்-இந்திரிய ஞானத்துக்கு எட்டாது இருக்கும் –கீழில் அவை ஒன்றுக்கு ஓன்று நெடு வாசி உண்டாய் இருக்கச் செய் தேயும் ஏக பிராமண கம்யத்வ சாம்யம் உண்டு -அதுவும் இல்லை என்கிறது இப்பாட்டில் –
-இப்பாட்டில் –சாங்க்யத்தில்-தத்வ சங்க்யானக்ரமத்தால்-ஆத்ம ஸ்வரூபத்தை சொல்லும்படியைச் சொல்லிற்று-

அகற்ற நீ வைத்த மாய வல் லைம் புலன்களா மவை நன்கறிந்தனன்
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்தி கண்டாய்
பகர்க் கதிர் மணிமாட நீடு சிரீவர மங்கை வாணனே! என்றும்
புகற்கரிய எந்தாய்! புள்ளின் வாய் பிளந்தானே!–5-7-8—அத்யாச்சர்யமான செயல்களை யுடைத்தாய் ஒருவரால் தப்ப ஒண்ணாதே இருக்கிற ஐந்து இந்திரியங்களும் -நீ வேண்டாதாரை யகற்ற வைத்தாய் என்னும் இடம் வ்யக்தமாக அறிந்தேன் –மயர்வற மதி நலம் அருள பெற்றவன் ஆகையால் அழகிதாக அறிந்தேன் -யுகாவாதாரை யன்றோ யகற்றுவது–அவை அபுருஷார்த்தம் என்று அறிந்த என்னையும் –புக்கால் கால் வாங்க ஒண்ணாத சப்தாதி விஷயங்களில் தள்ளுகிறாய் என்று அஞ்சா நின்றேன் -உன்பக்கல் ந்யஸ்த பரனான என்னையும்-என்றுமாம் -நீர் அஞ்சக் கடவீரோ என்ன -விளம்ப ஹே து இன்றிக்கே இருக்க விரோதி கிடைக்கையாலே அஞ்சா நின்றேன்

உணர்விலும் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறல் பொருட்டு என்
உணர்வினுள்ளே யிருத்தினேன் அதுவுமவன தின்னருளே
உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பினவும் பழுதேயாம்
உணர்வைப் பெற ஊர்ந்திறவேறி யானும் தானாய் ஒழிந்தானே–8-8-3—அவனுடைய பிரசாதத்தாலே பெறுகைக்காக –ப்ராப்யம் அவன் என்கிற நிர்பந்தத்தோபாதி ப்ராபகமும் அவன் பிரசாதம் என்று இறே இவர் இருப்பது -ப்ராப்யமும் ப்ராபகமும் அவனே யாகில் நீர் வர நின்ற அம்சம் ஏது என்னில்
என்- உணர்வினுள்ளே யிருத்தினேன்-வைத்தேன் –மதியால் –என்றது தான் இறே –அவனை என்னுடைய ஞானத்துக்கு விஷயம் ஆக்கினேன் -இச்சித்தேன் என்கை -இச்சை தான் ஸ்வ ஆதீனமோ என்னில்-அதுவுமவன தின்னருளே-அந்த இச்சை தானும் பிறந்தது அவன் பிரசாதத்தாலே -நின்ற நின்ற வளைவுகள் தோறும் -இவ்வளவு அவனாலே பிறந்தது -என்னும்படியாய் யாயிற்று இருப்பது -அவனுடைய நிருபாதிக ஸுஹார்த்தம் -தன் பொன்னடிக்கு கீழ் இருத்தும் வியந்து -என்று ப்ராப்ய ப்ராபகன் அவனே என்று அருத்தித்து -என்றது இறே -அத்தை இறே இங்குச் சொல்கிறது 

மேம் பொருள் போக விட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து
ஆம் பரிசறிந்து கொண்டு ஐம் புலன் அகத்தடக்கிக்
காம்பறத் தலை சிரைத்து உன் கடைத் தலை இருந்து வாழும்
சோம்பரை உகத்தி போலும் சூழ் புனல் அரங்கத்தானே–38–ஆம் பரிசு ஆவது –கைங்கர்யமே யாய்த்து –
ஆம் பரிசு வர்த்திக்கும் படியை அறிந்து –ஆத்மா அபிமான ரூபமாக வாய்த்து வ்ருத்தி ஹேதுக்கள் தான் இருப்பது –1-தன்னை திர்யக்காக அபிமானித்த போது -தர்ண சமூஹம் ஆய்த்து வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –2-மனுஷ்யோஹம் -என்று அபிமானித்த போது-அன்னம் -வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –-3-தேவோஹம் -என்று அபிமானித்த போது -அம்ருதம் -வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –-4-தாசோஹம் -என்ற போது –கைங்கர்யமே வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –பிரகிருதி பிராக்ருதங்களில் சங்கோசம் போய் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்தால் சஹஜ கைங்கர்யமே இறே வ்ருத்தி ஹேதுவாவது –

இத்தால் ஞாநான் மோஷ அஞ்ஞானாத் சம்சார -ஆகையாலே-
பிராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம்-பிராப்துஸ்ச பிரத்யக் ஆத்மன பிராப்து உபாயம் பலம் பிராப்தே
ததா பிராப்தி விரோதி ச வதந்தி சகலா வேதாஸ் ச இதிகாச புராண கா முனய ச மகாத்மானோ வேத வேதார்த்த வேதின
–ஸ்ரீ ஹாரீத சம்ஹிதை – என்கிற படியே சகல சாஸ்திர தாத் பர்யமாய் ஆத்ம உஜ்ஜீவனத்துக்கு அவஸ்ய ஞாதவ்யமான அர்த்த பஞ்சகத்தையும் அறியாமையும் அறிகையுமே சம்சார மோஷங்களுக்கு ஹேது என்ற தாயிற்று-

ஆக, கீழ்ச் சொன்ன ஸம்ஸார ஸம்பந்தத்துக்கும்‌ மோக்ஷ ப்ராப்திக்கும்‌ ஹேது ‘ஜ்ஞாநாந்‌ மோக்ஷம்‌, அஜ்ஞாநாத் ஸம்ஸாரம்‌’ என்று அறியப்படுமதான அர்த்த, பஞ்சக ஜ்ஞாநமும்‌, தத் அஜ்ஞாநமும்‌ என்றதாய்த்து.

சூர்ணிகை -6
இவ் வஞ்ஞானாதிகளுக்கு அடி எது என்ன சொல்லுகிறது மேல்-

இவற்றுக்கு காரணம் இரண்டில் ஒன்றினில் ஒன்றுகைகள்-சூர்ணிகை -6

அதாவது இவ் அர்த்த பஞ்சக அஞ்ஞானத்துக்கு காரணம்-முத்திறத்து வாணியத்து இரண்டில் ஒன்றுகை ஆகிய ரஜஸ் தமஸ் பிரசுரதை- (முத்திறத்து வாணியத்து இரண்டில் ஒன்றும் நீசர்கள் மத்தராய் மயங்குகின்றது -திருச்சந்த -68)

இவ் அர்த்த பஞ்சக ஞானத்துக்கு காரணம்-முக் குணத்து இரண்டு அவை அகற்றி ஒன்றினில் ஒன்றுகை ஆகிய சத்வ பிரசுதை என்கை-
(ஐம்புலன் அகத்தினுள் செறுத்து நான்குடன் அடக்கி முக் குணத்து இரண்டு அவை அகற்றி ஒன்றினில் ஒன்று நின்று அங்கு இரு பிறப்பு அறுப்பதோர் அறிவரும் தன்மை –திரு வெழு கூற்று இருக்கை )

ரஜஸ் தமச்கள் அன்யதா ஞான விபரீத ஞான ஹேதுவாய்-சத்வம் யதா ஞான ஹேதுவாய் இறே இருப்பது- அங்கு தான் சுத்த சத்வம் மிஸ்ர சத்வம்-ரஜஸ் தமஸ் கலந்த இங்கு -அதுவும் த்யாஜ்யம்

இந்த அர்த்த,பஞ்சக ஜ்ஞாநமும்‌, அஜ்ஞாநமுமாகிற இவற்றுக்குக்‌ காரணம்‌ – இரண்டில்‌ ஒன்றினில்‌ ஒன்றுகைகள்‌. அதாவது இரண்டில்‌ ஒன்றுகையும்‌, ஒன்றினில்‌ ஒன்றுகையும்‌.
இரண்டில்‌ ஒன்றுகையாவது – ““முத்திறத்து வாணியத் திரண்டிலொன்றும்‌ நீசர்கள்‌” (திரு. ச வி. -68) என்கிறபடியே ரஜஸ் தமஸ் : ப்ரசுரனாகை.
ஒன்றினில்‌ ஒன்றுகையாவது “முக் குணத்திரண்டவை யகற்றி ஒன்றினில்‌ ஒன்றி நின்று ” (திருவெழு.) என்கிறபடியே ஸத்த்வ ப்ரசுரனாகை.
இத்தால்‌ அர்த்த, பஞ்சக ஜ்ஞாநாஜ்ஞாந காரணம்‌ ஸத்த்வாஸத்த்வ ப்ராசர்யங்கள்‌ என்றபடி,

முத்திறத்து வாணியத்தில் இரண்டில் ஓன்றும்  நீசர்கள்
மத்தராய் மயக்குகின்றது இட்டு அதில் இறந்து போந்து
எத்திறத்தும் உய்வதோர் உபாயம் இல்லை யுய்குறில்
தொத்து இறுத்த தண் துழாய் நன் மாலை வாழ்த்தி வாழுமினோ –68-சாத்விக ராஜஸ தாமஸ தேவதைகளை தம் தாமுடைய குண அநுகூலமாக பற்றி ஆராதிக்கப் பெறும் மூன்று வகைப்பட்ட பலங்களிலும்-திறம் -ப்ரகாரம்–பலங்களை –வாணியம் என்கிறது-வ்யாபாரம் அல்பமாய் -பலம் விஞ்சிதாய் இருக்கை–அக்நௌ ப்ராஸ்தா ஹூதிஸ் சம்யக் -என்றும் –-பத்ரம் புஷ்பம் பலம் தோயம் -என்றும் –த்ரை குண்ய விஷயா வேதா -என்கிறபடியே வேதங்களும் குணத்ரய வச்யரான சேதனருக்கு குண அநுகூலமாக ஆராத்ய தேவதைகளையும் தத் ஆராதன பிரகாரங்களையும் -ஆராதன பலன்களையும் சொல்லி -வைத்ததுஇரண்டில் ஒன்றும் நீசர்கள் –ஸ்வ குணங்களுக்கு அநுகூலமாய் இருக்கையாலும் -சாஸ்திர அனுமதியாலும் நித்ய சத்வத்தையும் -தத் ஆராத்யனான ஈஸ்வரனையும் -தத் ஆராதன பலமான மோஷத்தையும் ஒழிந்து -ராஜஸ தாமஸ பலங்களில் ருசியைப் பண்ணும் நீசர் –நீசர் ஆகிறார் -சம்சாரத்தை வர்த்திப்பித்து கொள்ளும் ஹேயர்–கர்ம அவசாநத்திலே அந்த பலத்தை இட்டு-அவ் வவ தேசங்களில் போக சரீரங்களை முடித்து–அந்த போக பூமியில் நின்றும் ஆகாச மேக அவச்யாதிகளிலே கிடந்தது கர்ப்ப வாஸ அர்த்தமாக போந்து- ஷீணே புண்யே மர்த்ய லோகம் விசந்தி -என்கிறபடியே பூமியிலே பிறந்து –மத்தராய் – தேக ஆத்ம அபிமானத்தாலே ப்ராக்ர்த பதார்த்த லாபத்தாலே களித்து மயங்குகின்றது –ஆத்மாவை ஆதல் – ஈஸ்வரனை ஆதல் – உள்ளபடி அறியாமையாலே மோஹாங்கதரைப் போலே இருக்கிறது இறே–ஸ்வர்க்காதி பல அனுபவங்களை புண்யம் ஷயித்த அளவிலே மத்யே விட்டு அந்த போக சரீரங்களையும் முடித்து -கர்ப்ப வாஸ அர்த்தமாக அதி கிலேசத்தோடே போந்தபடியை அனுசந்தியாமையால் இறே சேதனர் ப்ரக்ர்த போகங்களில் களித்து வர்த்திக்கிறது என்கை-

முக் குணத்து இரண்டவை அகற்றி  ஒன்றினில்-ஒன்றி நின்று ஆங்கு இரு பிறப்பு அறுப்போர் அறியும் தன்மையை–சத்வ ரஜஸ் தமஸ் ஸூக்களில் வைத்துக் கொண்டு ரஜஸ் தமஸ் ஸூக்களை கழித்து-நிஷ்க்ருஷ்ட சத்வத்தை யுடையராய்க் கொண்டு நின்று–அந்த யோகத்தாலே –புண்ய பாப ரூப கர்மங்கள் அடியான சம்சாரிக துக்கத்தை-அறுத்துக் கொள்ள வேணும் என்று இருப்பார்
அறியும் ஸ்வ பாவத்தை யுடையனாய் இருக்கும்
–உபாசகராலே அறியப்படும் ஸ்வ பாவத்தை யுடையையாய்-இப்படி இருந்த யோகத்தாலே அனுபவிக்கை யாவது – ஸ்ரீ கஜேந்த்ர ஆழ்வானுடைய மிடுக்குள்ள தசையோடு ஒக்கும் அத்தனை ஆன பின்பு அவனையே உபாயமாகப் பற்றிப் பிழைக்க வேணும் –

சூர்ணிகை-7
இவற்றுக்கு நிதானம் எது என்ன சொல்லுகிறது மேல்-

சத்வ அசத்வ நிதானம் இருள் தரும் அமலங்களாக வென்னும் ஜன்ம ஜாயமான கால கடாஷங்கள்-சூர்ணிகை-7-(சத்வ நிதானம் இருள் தரும் வென்னும் ஜன்மம் ஜாயமான கால கடாஷங்கள்-
அசத்வ நிதானம் அமலங்களாக வென்னும் ஜாயமான கால கடாஷங்கள்-)

அதாவது-சத்வ இதரங்களான ரஜஸ் தமஸ்களுக்கு நிதானம்-இருள் தரும் மா ஞாலத்தில் இனி பிறவி நான் வேண்டேன் –வாட்டாற்றான் அடி வணங்கே-என்கிற அஜ்ஞான அவஹமான சம்சாரத்தில் ஜன்மம் –அவிவேக தின்முகம் -துக்க வர்ஷினி –சம்சாரம் –ஸ்ரீ ஆளவந்தார்

சத்வத்துக்கு நிதானம் –ஜாயமானம் ஹி புருஷம் யாம் பச்யேத் மது ஸூதன சாத்விகஸ் சது விஞாயேஸ் ச வை மோஷார்த்த சிந்தக-மோக்ஷ தர்மம்- என்கிற படியே ஜாயமான காலத்திலேயே –அவன் கண்களால் கமலக்கண்ணன் –அமங்கலங்களாக விளிக்கும் -திருவாய்-1-9-9–என்கிற
நிரமலத்வகரமான பகவத் கடாஷம் என்கை-
இந்த ஸ்லோகத்தில் நான்கு படிகளும் உண்டே –கடாக்ஷம் தொடங்கி மோக்ஷ அர்த்த சிந்தக – அங்கண் மா ஞாலம் பாசுரம் அர்த்தம் -த்யான ஸ்லோகம் இதுவே பூதாத்தி ரகு நந்தன -பூதராக்கின நெடு நோக்கு -அசுத்தி போக்கினை கடாக்ஷங்கள்-

இப்படிப்பட்ட ஸத்த்வத்துக்கும்‌ அஸத்த்வத்துக்கும்‌ நிதாநம்‌ என்‌ என்னில்‌ – (இருள்தரும்‌ அமலங்களாக என்னும்‌ ஜந்ம ஜாயமாந கால கடாக்ஷங்கள்‌). அவையாவன – “’இருள் தரு மா ஞாலத்துள்‌ இனிப் பிறவி யான்‌ வேண்டேன்‌”’ (திருவாய்‌. 10 – 6 – 1) என்கிறபடியே அஜ்ஞாநாவஹமான ஸம்ஸாரத்திலே பிறப்பு. ““ஜாயமாநம்‌ ஹி புருஷம்‌ யம்‌ பஸ்யேந்‌ மது ஸூதந: । ஸாத்த்விகஸ் ஸ து விஜ்ஜேய: ஸ வை மோக்ஷார்த்த சிந்தக:”” (பாரதே சபா . ப. 348 -73) என்கிற ஜாயமாந காலத்தில்‌ “அவன்‌ கண்களாலே அமலங்களாக விழிக்கும்‌” (திருவாய்‌. 1 – 9 – 9) என்கிற பகவத் கடாக்ஷமும் –

அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-
–நான் அவன் வழியே போகப் பார்த்தேன் -இங்கு உகந்து அருளின நிலங்களும் பாகவத ஸஹவாசமும் உண்டாய் இருக்க அவன் வழியே போக வேண்டுகிறது என் -என்ன –அஞ்ஞான அவஹமான ஸம்ஸாரமாகையாலே-ஞானாதிகனான ப்ரஹ்லாதனையும் எதிரிடப் பண்ணிற்று இறே –இச் சரீரத்துக்கு வசப்பட்டவன் ஆக்கி ஐம்புல இன்பங்களிலே கொடு போய் மூட்டும் -என் புத்தியால் விட்டேன் – அவன் இருத்தில் செய்யலாவது இல்லை–இவ் உலகத்தின் தன்மையை நினைந்த பின்பு பின்பு விடுவதாகவே துணிந்தேன் –அவன் கருத்தை அறிந்த பின்பு –வானுயிர் இன்பம் எய்திலென் மற்றை நரகமே எய்திலென் -என்கிற அது நான் வேண்டேன் -இனி ஈஸ்வர அபிப்ராயத்தாலே இருக்கில் இருக்கும் அத்தனை —

கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே
அமலங்களாக விழிக்கும்
ஐம்புலனும் அவன் மூர்த்தி
கமலத்தயன் நம்பி தன்னைக் கண்ணுத லானொடும் தோற்றி
அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி என் நெற்றி உளானே –1-9-9—அவன் திருக் கண்களால் நிர் தோஷனாம் படியும் –காண வல்லேனாம் படியும் விசேஷ கடாக்ஷத்தைப் பண்ணினான்-விஷய பிரவணமான இந்திரியங்கள் செய்வது என் என்னில்-ஐம்புலனும் அவன் மூர்த்தி – அவையும் அவன் அழகைக் கண்டு அவனுக்கு சரீரவத் விதேயம் ஆயிற்றின-அவனைக் காண்பதற்கு முன்பு அவிதேயமானவை அவனைக் கண்டவாறே விதேயம் ஆயிற்றன

இவை தனக்கு மூலம் எது என்ன சொல்கிறது மேல்-

இவற்றுக்கு மூலம் இரு வல் அருள் நல் வினைகள்-சூர்ணிகை-8

இரு வல் வினை -பாப புண்ய ரூப வலிய கர்மாக்கள்
அருள் நல் வினை -கிருபா மூலம் வரும் ஸூஹ்ருதம் –இவனும் அறியாதே சாஸ்திரமும் அறியாதே —
வரவாறு ஒன்றும் இல்லாமல் வெறிதே அருள் செய்வான்–இரு வல் லருள் நல் வினைகள் என்றது-இரு வல் வினையும் அருள் நல் வினையும் என்ற படி-

அதாவது
இஜ் ஜென்மத்துக்கு மூலம் சார்ந்த இரு வல் வினை-
சார்ந்த இரு வல் வினைகளும் சரிந்து மாய பற்று அறுத்து தீர்ந்து தன் பால் மனம் வைக்கத் திருத்தி
வீடு திருத்துவான்
– திருவாய்-1-5-10–என்று ஆத்மா உடன் பிரிக்க ஒண்ணாத படி பொருந்தி கிடக்கிற
பிரபலங்களான புண்ய பாபங்கள்-

இக் கடாஷத்துக்கு மூலம்-தொல் அருள் நல் வினை–
தொல் அருள் நல் வினையால் சொலக் கூடுங்கோல் தோழிமீர்காள் தொல் அருள்
மண்ணும் விண்ணும் தொழ நின்ற திரு நாமம்
-திருவாய்-5-9-10–என்கிற அவனுடைய ஸ்வாபாகிக கிருபை ஆகிய ஸூஹ்ருதம் என்கை–தொல் அருள் பூர்வ ஸூஹ்ருதம் -கிருபையால் நம் தலையில் போடுகிறார் அன்றோ-

(இவற்றுக்கு மூலம்‌) இந்த ஜந்ம கடாக்ஷங்களாகிற இவற்றுக்குக்‌ காரணம்‌ என்‌ என்னில்‌ –
(இரு வல்லருள் நல்‌ வினைகள்‌). ““சார்ந்த இரு வல் வினை ”யும்‌, ”தொல்லருள் நல்வினை”’ யும்‌.-அவையாவன – ஆத்மாவுக்கு ஸஹஜம்‌ என்னலாம்படி பொருந்தி இருந்துள்ள புண்ய பாபங்களும்‌, ஈஸ்வரனுடைய ஸ்வாபாவிக க்ருபையும் 

சார்ந்த விரு வல்வினைகளும் சரிந்து மாயப் பற்று அறுத்து
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞானச் சுடராகி யகலம் கீழ் மேல் அளவிறந்து
நேர்ந்த யுருவாய் யருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே –1-5-10—சார்ந்த-இவ்வாத்மாவுக்கு ஸ்வரூப அனுபந்தியோ என்னலாம் படி பொருந்தி இருக்கை–விரு வல்வினைகளும் சரிந்து--இருவகைப்பட்ட புண்ய பாப ரூபமான கர்மங்களை விரகர் நெடும் சுவர் தள்ளுமா போலே அநாயாசேன போக்கி–சர்வ சக்தியானவனும் அனுசந்தித்தால் நெஞ்சு உளுக்க வேண்டும்படி இருக்கை-சார்ந்த-எள்ளும் எண்ணெயும் போலே சேர்ந்து இருக்கை-மாயப் பற்று அறுத்து-விஷயங்களில் ருசி வாசனைகளைப் போக்கி-மாயை –அஜ்ஞ்ஞானம் –அத்தாலே ருசியை நினைக்கிறது –பற்று -வாசனை
தீர்ந்து-க்ருதக்ருத்யனாய் என்னுதல் அநந்ய பிரயோஜனனாய் என்னுதல் 

தொல்லருள் நல் வினையால் சொலக் கூடுங்கொல்? தோழிமீர்காள்?
தொல்லருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திரு நகரம்

நல்லருள் ஆயிரவர் நலனேந்தும் திருவல்லவாழ்
நல்லருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே.–5-9-10—தொல்லருள் நல் வினையால் சொலக் கூடுங்கொல்? தோழிமீர்காள்?-ஸ்வாபாவிக கிருபையால் யுண்டான ஸூ க்ருதத்தாலே அவனைக் கண்டு திரு நாமங்களை சொல்லக் கூட வற்றோ என்னுதல் –ஸ்வாபாவிக கிருபையால் அவனைக் காணப் பெற்று ப்ரீதியாலே யுகந்து கொண்டு திரு நாமத்தை சொல்லக் கூட வற்றோ என்னுதல் -நல்வினை -உகப்பு –அன்றிக்கே, ஸ்வாபாவிகமான கிருபையால் உண்டான புண்ணியத்தாலே அவனைக் கண்டு திருநாமங்களைச் சொல்லக் கூடவற்றோ என்னுதல்.-நல்வினை-புண்ணியத்தாலே -ஸூஹ்ருதத்தாலே–“நா, நீர் அற்று இருக்கை பாபத்தின் பலம் அன்றோ.-புண்ணியத்தாலே- ஸூஹ்ருதத்தாலே-நாக்கிலே நீர் உண்டாய்த் திரு நாமம் சொல்ல வல்லோமே என்கிறாள்’
என்று அம்மங்கி அம்மாள் வாக்கியார்த்தமாக அருளிச் செய்வர் என்று அருளிச் செய்வர்.-


இவை தன்னுக்கு அடி என்ன சொல்லுகிறது மேல்-

கர்ம க்ருபா பீஜம் பொய் நின்ற அருள் புரிந்த என்கிற அவித்யா சௌஹார்த்தங்கள்-சூர்ணிகை-9

நிதானம் மூலம் பீஜம் நிமித்தம் அடி -பர்யாய சப்தங்ககள்-அதாவது கர்மத்துக்கு பீஜம்-பொய் நின்ற ஞானம்-திருவிருத்தம் 1– என்ற அவித்யை-

கிருபைக்கு பீஜம்-அருள் புரிந்த சிந்தை -அடியார் மேல் வைத்து –இரண்டாம் திரு-59
நாம் பெற்ற நன்மையையும் நா மங்கை நன்னெஞ்சத்து ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து
வேம்பின் பொருளை நீர்மையாயினும் பொன்னாழி பாடென்று அருள் நீர்மை தந்த அருள்
-இரண்டாம் -58- -என்கிற சௌஹார்தம் என்கை-

ஈஸ்வரஸ்ய ச சௌஹார்தம் -என்று இவ் ஆத்ம உஜ்ஜீவனத்துக்கு அவன் கிருஷி பண்ணுகையில் இழிகைக்கு மூல காரணமாக சௌஹார்தத்தை சொல்லிற்று இறே–ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் -யாத்ருச்சிக ஸூஹ்ருதம் -விஷ்ணோர் கடாக்ஷம் -அத்வேஷம் -ஆபிமுக்யம் – சாத்விக சமாகமம்—ஆச்சார்ய அபிமானம் மூலம் விஷ்ணு பிராப்தி-கீழ் மேல் ஆறு படிகள் இவற்றைக் குறிக்கும்
இஸ் சௌஹார்தம் அடியாக ஆயிற்று இவ் ஆத்மா விஷயமாக அவன் திரு உள்ளத்தில் இரக்கம் பிறப்பது-

கர்ம க்ருபா பீஜம் ) ஏவம் விதமான கர்மத்துக்கும்‌ க்ருபைக்கும்‌ பீஜம் – (பொய்ந் நின்ற அருள் புரிந்த என்கிற அவித்‌,யா ஸெளஹார்த்த.ங்கள்‌.- அவையாவன – ‘*’பொய்ந் நின்ற ஞானம்‌”! (திருவிரு. 1) என்கிற அவித்‌யையும்‌, “அருள்புரிந்த சிந்தை” (இரண்டாம் திரு. 59) என்றும்‌, ““ஈஸ்வரஸ்ய ச ஸெளஹார்த்தம்‌”’ ( ) என்றும்‌ சொல்லுகிற ஈஸ்வரனுடைய ஸெளஹார்த்தமும்-

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந் நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே –1–அநாத்மநி ஆத்ம புத்தி -அஹங்காரம்–அந்யதா ஞானம்–பிரகிருதி ப்ராக்ருதங்களைப் பற்றிய ஞானம் தேகத்துடன் -அனுபந்தி -சம்பந்தி -புத்ராதிகள் பற்றிய ஞானம்-ஸ்வர்க்காதிகள் -ஆத்ம அனுபவம் என்று தப்பாக புரிதலும்-அஸ் வேஸ்ய புத்தியையும் –பொய்யான விஷயங்களைப் பற்றி நிற்கையாலே நஸ்வரம் விஷயமாகக் கொண்ட அறிவு -எப்பொழுதும் மாறும் அசேதனத்தைப் பற்றிய ஞானம் த்யாஜ்யம் என்று அறிய வேண்டும்–அநித்யமானதை நித்யம் என்றும்-அபோக்ய மானதை போக்யம் என்றும் -அஸ்திரமானதை ஸ்திரம் என்றும் -அல்பமானதை நிறைவாக என்றும்–நாஸ்தி -என்றால் அஸ்தி யாக இருந்து நாஸ்தி ஆவது-தத்வ தர்சிகள் நிர்ணயம் அசத்துக்கு பாவம் வராது -சத்துக்கு அபாவம் வராது இப்படி யதார்த்த -ஒருபடிப்பட உள்ளதால் –உத்பத்தி விநாசாதி யோகத்தாலே அஸத்ய ஸப்த வாஸ்யமான அசேதன விஷயத்தில் ஆத்ம ஞானமும்-ஸ்வரூப அந்யதா ஞானம் -விபரீத ஞானம் -தேஹாத்ம அபிமானம்-ஸ்வ பாவ அந்யதா ஞானம் -அந்யதா ஞானம் -பரதந்த்ரனான தன்னை ஸ்வ தந்த்ரனாக நினைக்கை-உத்தேசியத்தை ஒழிந்த அர்த்த ஞானங்கள் அனைத்தும் அஞ்ஞானம்-காண்கின்ற ப்ரக்ருதி பொய் என்னலாமோ என்னில் சூன்யவாதியைப் போலேயாய் என்கிறது அன்று-மாயாவாதி போலே துச்சம் என்கிறது அன்று-ஆத்மாவைப் போலே ஒருபடிப் பட்டு இராமையாலே-ஆத்மா ஏக  ரூபமாய் இருக்கும் இறே-அநாத்மன்யாத்மா புத்தியையும் -சொல்லுகிறது – ஜடமாய் இருக்கும் தனக்கு ஞானமும் பாரீர்-பரிணாமம் இல்லாத ஆத்மா பரமாத்மா பற்றிய ஞானமே ஸத்யம் -அதுவே அஸ்தி -ஷட் பாவ விகாரம்-அஸ்தி பிறக்கிறது மாறுதல் வளர்ந்து தேய்ந்து முடிதல்–சம்சார பிரக்ருதியைப் பொய் என்கிறது –நின்ற
இது தான் என்றும் ஒக்க நிலை நின்ற படி -அழுந்தின படி –ஞானமும்-ஜடமாய் இருப்பதுக்கு தனக்கு – ஞானம் என்பது பாரீர் -இதுக்கு ஞானம் என்ற பெயரா-தேஹாத்ம அபிமானம் அஞ்ஞானம் தானே

அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து
பொருள் தெரிந்து காண்குற்ற வப்போது –இருள் திரிந்து
நோக்கினேன் நோக்கி நினைந்தேன் தொண் கமலம்
ஓக்கினேன் என்னையும் அங்கு ஓர்ந்து–59–சேஷத்வ ஞானம் உள்ள )அடியோமான எங்கள் மேல்
அருள் புரிந்த சிந்தையை வைத்து-(அருள் புரிந்த சிந்தை அனைவர் இடமும் இருந்தாலும் அது கார்யகரமாவது நாம் சேஷபூதன் என்று இசைந்தாலே தானே)அத்தாலே-நாங்கள் பதார்த்தங்களை அறிந்து காண உற்ற போது நீ சேஷி நான் சேஷ பூதன் என்கிற ஞானத்துக்கு விரோதியான
அஞ்ஞானத்தைப் போக்கி-உணர்ந்து உன்னுடைய கமலம் போன்ற திருவடிகளை நினைத்தேன்
ஆராய்ந்து பார்த்து பரதந்த்ரமாய் இருக்கையாலே என்னை உன் திருவடிகளிலே சமர்ப்பித்தேன்-அருள் புரிந்த உன் திரு உள்ளத்தை எங்கள் மேல் வைத்து எங்களை ஒரு பதார்த்தமாக புத்தி பண்ணின போது -என்றுமாம்-இத்தால் கருணையாலேயே தூண்டப்பட்ட திரு உள்ளத்தை யுடைய அவன் ஒரு கைம்முதலும் எதிர்பாராமல் இவரைக் கடாஷித்த படியையும் அக் கடாக்ஷத்தாலேயே -அவன் ஸ்வரூபம் -ப்ராப்யம் -ப்ராபகம் -ஆகியவற்றை உணர்ந்த படியையும் – அவனை அடையைப் பதற்றமும் அவனே உபாயம் என்ற துணிவும் உண்டான படியை அருளிச் செய்தார் ஆயிற்று


இவ் அவித்யா சௌஹார்தங்களுக்கு அடி என்ன சொல்லுகிறது மேல்-

ஏதம் நிமித்தம் முன்னமே முதல் முன்னமே யான-அசித் அயன அநாதி சம்பந்தங்கள்-சூர்ணிகை -10

ஏதத் சப்தத்தாலே இரண்டையும் பராமர்சிக்கிறது-அதாவது-அவித்யைக்கு நிமித்தம்-மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே (யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும் மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே -திருவிருத்தம் -95-) என்கிற அநாதியான அசித் சம்பந்தம்-

சௌஹார்தத்துக்கு நிமித்தம்-அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே-
(சார்ந்தே போகல் கொடாச் சுடரை அரக்கியை மூக்கு ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே –திருவாய் -2-3-5-) என்று அநாதியான அயன சம்பந்தம் என்கை-அயன சப்தத்தாலே ஈஸ்வரனை சொல்கிறது நாராயணன் இறே —

யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்
மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே  –
அதனால்
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்
மாதாவினைப் பிதுவை திரு மாலை வணங்குவனே – -95 –ஏதேனும் ஒரு சரீரத்தில் பிரவேசித்து –அது தண்ணிய ஸூ கர-ஜன்மாவில் (ஸூ கர -பன்றியாய் )ஜனித்தாலும் –மம அயம் தேக -என்று அதிலேயே அபிமானித்து – அங்கே-உண்டானவத்றோடு சில சம்பந்த விசேஷங்களும் –அவை தன்னை விட மாட்டாமையாலேயாய்-போரா நிற்கும் ஆயிற்று –ஆக்கை -என்கையாலே-உபசயாத்மகம் என்று தோற்றுகிறது-(தேகம் வளர்ந்து -சரீரம் தேய்ந்து )புக்கு –சேதனனுக்கு அசித் சம்சர்க்கம்  ஸ்வதா உள்ளது ஓன்று அன்று –-கர்ம நிபந்தனம் என்கை –அங்கு ஆப்புண்டும் –-கர்ம வாசனையாய்- ருசி வாசனையாய் -அதிலே பத்தனாய் இருக்கும் –இது தண்ணிது என்று ஆசார்ய உபதேசாதிகளாலும் –சாஸ்திர வாசனையாலும் – பிரத்யஷத்தாலும்-அறியா நிற்கச் செய்தே –இத்தை விடில் செய்வது என் என்று துணுக் துணுக் என்னா நிற்கும் –ஆப்புண்டும் –சிநேகத்தைப் பண்ணியும் –ஆப்பு அவிழ்ந்தும் –கர்மம் அடியாக வந்தது என்று அறியாதே –அவன் தான் இதிலே இலை அகலப் படுத்தா-நிற்கும் –கர்ம ஷயம்   வந்தவாறே=அது தான் குலைந்து கொடு நிற்கும் இறே –மூதாவியில் –இத்தால் பழைமையை நினைக்கிறது-ஆவி -என்று பிராணனாய் –அசித் விசேஷமாய் பிராணனாய் இருக்கையாலே-இப்போது ஸூஷ்ம சரீரத்தை ஆவி என்கிறது –இது தன்னை பிரகிருதி கார்யம் என்பாரும் உண்டு –பிரகிருதி அம்சம் என்பாரும் உண்டு –இது தான் மோஷ தசை அளவும் அனுவர்த்திக்குமது —சேதனனுடைய கமந ஆகமநாதிகளுக்கும் உடலாய் இருக்கும் –தடுமாறும் –பஞ்சாக்னி வித்தையில் சொல்லுகிறபடியே மேகங்களில் புக்கு – வர்ஷ முகத்தாலே-பூமியிலே பதித்து –அந்த முகத்தாலே புருஷன் பக்கலிலே அந்வயித்து –சுக்ல சோணித ரூபத்தாலே -ஸ்த்ரி பக்கலிலே-சங்க்ரமித்து – இப்படி தடுமாற்றமாய் இருப்பது –இச் சேதனனுக்கு புக்க புக்க இடம் எங்கும் தடு மாற்றமே உள்ளது –அத்தை தான் அறிந்த இடமும் அறியாத இடமுமாய் இருக்கும் –உயிர் –ஜ்ஞான ஆனந்த லஷணமாய்- நித்தியமான வஸ்து கிடீர் இப்படி படுகிறது –இப்படி தடுமாறி சம்ஸரிக்கிறது என்று தொடங்கி என்றால் –முன்னமே –அநாதியாய் போருகிறது ஆயிற்று –அதனால் –அந்த வாசனையே உபாத்யாயராக –முன்னமே யாகையாலே –யாதானும் பற்றி –பகவத் வ்யதிரிக்த விஷயம் ஆகையே வேண்டுவது –பற்றுவது ஏதேனும் ஒன்றாக-அமையும் –அவற்றில் குண தோஷங்கள் நிரூபிக்க வேண்டா –நீங்கும்-பகவத் விஷயம் இத்தனையே வேண்டுவது விடுகைக்கு விரதத்தை –நீ பற்றுகிற விஷயங்கள் அடைய ஸ தோஷமாய் இருக்கும் –-பகவத் விஷயமே கிடாய் நல்லது -என்று சிலர் உபதேசித்தாலும் –அது நன்றே ஆகிலும் –நான் அத்தை விடுகையிலே-சங்கல்பித்தேன் என்னும் –சர்வேஸ்வரன்-ஏதத் வ்ரதம் மம -என்று ரஷிக்கைக்கு வ்ரதம் கொண்டு இருக்குமா போலே யாயிற்று-இவன் அவனை விடுகைக்கு வ்ரதம் கொண்டு இருக்கும் படி –த்விதா பஜ்யேய மப்யேவம் ந ந மேயம் -என்கிறபடியே இரண்டாகப் பிளக்கிலும் தலை சாயேன்-என்று ஆயிற்று இருப்பது 

சேர்ந்தார் தீ வினைகட்கு அரு நஞ்சைத் திண் மதியைத்
தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாதவருயிரை
சோர்ந்தே போகல் கொடாச் சுடரை அரக்கியை மூக்கு
ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதன் முன்னமே
–2-3-6–அடியேன் அடைந்தேன் முதன் முன்னமே –
அநாதி காலம் இழந்த இழவை மறக்கும் படி வந்து கலக்கையாலே–இன்றோ பெற்றது – இவ்வாத்மா உள்ள வன்றே பெற்றேன் அல்லேனோ -சேஷத்வம் ஸ்வதஸ் ஸித்தம்-அசித் சம்சர்க்கமாய் அது புழுதி ஏறின வோ பாதி –அத்தை மறக்கும் படி கலந்தான் ஆகையால் சொல்லலாம் இறே-சம்சாரிகளில் வ்யாவ்ருத்தனாக்கி முறையை அறிவித்த அன்றே பெற்றேன் அல்லேனோ என்றுமாம்
வாயும் திரையுகளில் -முன்பு சம்ச்லேஷித்ததேற்றமும் கலங்கி விஸ்லேஷமாய் சென்றால் போலே கலவியின் மிகுதியால் அத்தை மறந்து முன்பே பெற்றேன் அல்லேனோ -என்றுமாம் முதன் முன்னமே -முன்பே -பழையதாக -என்றபடி

ஆக
அநாதி அசித் சம்பந்தம் அடியாக அவித்யையாய்
அதன் அடியாக புண்ய பாப ரூப கர்மமாய்
அது அடியாக அஜ்ஞான ஹேதுவான ஜென்மமாய்
அது அடியாக ரஜோ தமஸ் அவிருத்தயாய்
அது அடியாக அர்த்த பஞ்சக ஞான அபாவமாய்
அது அடியாக அஜ்ஞாநாத் சம்சார என்கிற படியே சம்சார துக்கம் வரும்-

அநாதி அயன சம்பந்தம் அடியாக பகவத் சௌஹார்த்தம் உண்டாய்
அது அடியாக கிருபை உண்டாய்
அது அடியாக விசேஷ கடாஷம் உண்டாய்
அது அடியாக சத்வ விருத்தி உண்டாய்
அது அடியாக அர்த்த பஞ்சக ஞானம் உண்டாய்
அது அடியாக ஞானான் மோஷம் -என்கிற படியே மோஷ ஸுகம் உண்டாம் என்று ஆய்த்து-

(ஏதந் நிமித்தம்‌) இந்த அவித்‌,யைக்கும்‌ ஸெளஹார்த்த,த்துக்கும்‌ ஹேது ஏதென்னில்‌
[முன்னமே முதல்‌ முன்னமேயான அசித,யநாநாதி,ஸம்பந்தங்கள்‌). அவை யாவன “மூதாவியில்‌ தடுமாறும்‌ உயிர் முன்னமே”” (திரு விரு. –95) என்கிற அநாதியான அசித்‌ ஸம்பந்த,மும்‌, *’அடியேனடைந்தேன்‌ முதல் முன்னமே’ (திருவாய்‌, 2 – 3 – 6) என்கிற அநாதி யான அயந ஸம்பந்தமும்‌.

இவ் உபய சம்பந்தமும் ஆத்ம வஸ்துவுக்கு செய்யும் அவற்றை சொல்லுகிறது மேல்-

இவை கிட்டமும் வேட்டு வேளானும் போலே ஒண் பொருள் பொருள் அல்லாதவை என்னாதே நானிலாத யானும் உளன் ஆவான் என்கிற ஸாம்யம் பெற தின்றூதி அந்தமும் வாழ்வும் ஆகிற ஹானி சத்தைகளை உண்டாக்கும்-சூர்ணிகை– 11

இவை கிட்டம் போலே -ஒண் பொருள் என்னாதே நானிலாத என்கிற ஸாம்யம் பெற-தின்று அந்தம் ஆகிற ஹானியை உண்டாக்கும்–இவை வேட்டு வேளானும் போல பொருள் அல்லாதவை என்னாதே யானும் உளன் ஆவான் என்கிற ஸாம்யம் பெற ஊதி வாழ்வும் ஆகிற சத்தையை உண்டாக்கும்-

அதாவது-அசித் சம்பந்தம் தன்னோடு சேர்ந்த மாணிக்கத்தை ஒளி அற தின்று உரு அழித்து தன்னை போலே ஆக்கும் கிட்டம் போலே – (எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள்-திருவாய் –1-2-10-) அந் நலத்து ஒண் பொருள் -என்கிற விலக்ஷண ஜ்ஞான குணகமாய் ஸூயம் பிரகாசமான வஸ்து என்று இதன் சீர்மை பாராதே- (இல்லதும் உள்ளதும் அல்லது அவன் உரு -1-2-4-)-இல்லது-என்றும்-
யன்நாஸ்தி – ஸ்ரீ விஷ்ணு புராணம் -2–12–37- என்றும் சொல்லுகிற தன்னோடே-நானிலத முன் எலாம்-திருச்சந்த –65 -என்கிற ஸாம்யம் பெரும் படியாக ஞானம் லேசம் அற தின்று அந்தமும் வாழ்வும் என்கிற வற்றில் அந்தம் ஆகிற ஹானியை உண்டாக்கும்-அசந்நேவ ச பவதி-தைத்ரியம்-என்கிற படியே சத்தா ஹானியை பண்ணும் என்கை-

அசித் ஸம்பந்தம்‌ கிட்டம்‌ போலே. ”எண் பெருக்கந் நலத்தொண் பொருள்‌”’ (திருவாய்‌. 1 – 2 -10) என்கிற விலக்ஷணமான ஆத்ம வஸ்து வென்று பாராதே ”நானிலாத முன்னெலாம்‌”’ (திரு ச வி.- 57 என்னும்படி ஸாம்யம் பெற. *அறுத்துத் தின்று”” (திருமொழி 7 – 7. 7) என்கிறபடியே தின்று. ‘அந்தமும்‌ வாழ்வும்‌” (திருமொழி 5 – 7 – 2) என்கிறதில்‌ அந்தமாகிற ஹாநியை உண்டாக்கும்‌. ““அஸந்நேவ ஸ பவதி”” (தை. ஆந.) என்னக் கடவதிறே.

எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே
 –1-2-10-எண் பெருக்கு இத்தால் -ஜீவ அனந்யத்வத்தைச் சொல்கிறது-அந் நலத்து – கல்யாணமான ஜ்ஞானாதி குணங்களை யுடைத்தாகை-ஒண் பொருள்
ஸ்வயம் பிரகாசமாய் இருக்கை-ஈறில நித்தியமாய் இருக்கை –இப்படிப் பட்ட ஆத்மா வர்க்கத்தையும்

இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு
எல்லையில் அந்நலம் புல்கு பற்று அற்றே
 –1-2-4-நச்வரமான அசேதனத்தின் ஸ்வ பாவமும் – ஏக ரூபனான சேதனன் படியும் இன்றிக்கே இருக்கும் அவன் ஸ்வ ரூபம்-இல்லது என்று துச்சத்வம் இத்யாத்வங்களை சொல்லுகிறது அன்று -நச்வரதையைச் சொல்லுகிறது-உள்ளது என்று அஸ்தித்வ மாத்ரத்தை சொல்லுகிறது அன்று -நித்யதையைச் சொல்லுகிறது

நிற்பதும் ஓர் வெற்பகத்து இருப்பும் விண் கிடப்பதும்
நற் பெரும் திரைக் கடலுள் நான் இலாத முன்னெலாம்
அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே –65–நான் இலாத முன்னெலாம்–தன்னோடு உண்டான முறையை அறியாதே நான் அசத் சமனாய் இருந்த காலம் எல்லாம்-

கறுத்துக் கஞ்சனை அஞ்ச முனிந்தாய் கார் வண்ணா கடல் போல் ஒளி வண்ணா
இறுத்திட்டான் விடை ஏழும்  முன் வென்றாய் எந்தாய் அந்தரம் ஏழுமும்  ஆனாய்
பொறுத்துக் கொண்டு இருந்தால் பொறுக்க ஒணாப் போகாமே நுகர்வான் புகுந்து ஐவர்
அறுத்துத் தின்றிட வஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் தின்ற வம்மானே–7-7-7–இவற்றால் வந்த நலிவை ஆற்றி இருப்போம் என்றால் ஆற்ற ஒண்ணாதபடி போகங்களைப் புஜிக்க வேணும் என்று ஐவர் நெருக்கி புஜிப்பிக்க அவர்களுக்கு அஞ்சி உன் திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –

இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள் எண்ணில் பல் குணங்களே யியற்ற
தந்தையும் தாயும் மக்களும் மிக்க சுற்றமும் சுற்றி நின்று அகலாப்
பந்தமும் பந்தம் அறுப்பதோர் மருந்தும் பான்மையும் பல் உயிர்க்கு எல்லாம்
அந்தமும் வாழ்வுமாய எம்பெருமான் அரங்க நகர் அமர்ந்தானே
—5-7-2–அந்தம் –லய ஸ்தானம் –வாழ்வு ஸூகம் –சகல சேதனருக்கும் லயத்தில் இருப்பிடமாய் இருக்குமவனும் பாலநத்தால் வரக் கடவதான  சுகமும் இவ்விரண்டாலும் சிருஷ்டியை நினைக்கிறது-

அயன சம்பந்தம்-கீட பேசக்ருதா ருத்த குட்யாந்தர அனுசிந்தயன் சம்ப்ரம்பபய யோகேன விந்ததே தத் ஸ்ரூபதாம்-என்கிற படியே-ஏதேனும் ஒரு கீடத்தை கொண்டு வந்து வைத்தூதி-ஸ்வ சாம்யாபந்னம் ஆக்கும் வேட்டு வேளானைப் போலே-பொருள் அல்லாத என்னை-திருவாய்-5-7-3–என்கிற படியே
ஞான அபாவத்தாலே அவஸ்து சப்த வாச்யமாய் கிடக்கிற இதின் சிறுமை பாராதே ஸ்வரூபேண விபுவான தன்னோடு பரமம் ஸாம்யம் உபைதி-முண்டகம் –3-1-3–என்கிறபடியே உள்ள உலகு அளவும் யானும் உளன் ஆவான் –(வினைப்படலாம் விள்ள விழித்து உன்னை மெய்யுற்றால் உள்ள உலகு அளவும் யானும் உளன் ஆவன் என் கொலோ உலகு அளந்த மூர்த்தி உரை –பெரிய திருவந்தாதி –76- )என்று ஜ்ஞனத்வாரா வரும் விபுத்வ ஸாம்யம் பெறும்படி தன் நிறமாக ஊதி வாழ்வு ஆகிய சத்தையை உண்டாக்கும் என்கை-
தன்நிறம் -உண்டாக்கும் என்றது அஷ்ட குணங்களில் சாம்யம் என்றபடி
பந்தம் அறுப்பதோர் மருந்தும் பான்மையும் பல்லுயிர்க்கு எல்லாம் அந்தமும் வாழ்வுமாய எம்பெருமான்
அரங்க மா நகர் அமர்ந்தானே
–பெரிய திருமொழி -5-7-2-என்கிறபடி வாழ்வாகிற இருப்பை உண்டாக்கும் – சந்த மேனம் ததோ விது-தைத்ரியம்- என்று பகவத் ஞான அனந்தரம் ஆத்ம சத்தா சித்தியாக சொல்லிற்று இறே-

அயந ஸம்பந்தம்‌ வேட்டு வேளான் போலே *“‘பொருளல்லாத என்னைப்‌ பொருளாக்கி (திருவாய்‌, 5 – 7 – 3) என்கிறபடியே அவஸ்து ஸப்‌த,வாச்யமான இத்தை வஸ்து சப்‌த வாச்யமாக்கி, “உள்ள உலகளவும்‌ யானுமுளனவனென் கொலோ ” (பெரியதிருவ. 76) என்கிறபடியே இவனும்‌ தர்ம பூத ஜ்ஞாந த்‌வாரா விபு வாகையாலே ஈஸ்வரன்‌ உள்ளவளவும்‌ இவ்வாத்மா உண்டாம்படி ““பரமம்‌ ஸாம்யமுபைதி” (மு. 3-1- 3) என்கிற ஸாம்யம்‌ பெற ஊதி, வாழ்வாகிற ஸத்தையை உண்டாக்கும்‌. ““ஸந்தமேதம்‌ ததோ விது,” (தை. ஆந.) என்றும்‌, ”கீட: பேஸாக்ருதா ருத்‌த,: குட்‌,யாத்ந்ரநுசிந்தயந் । ஸம்ரம்ப பய யோகே,ந விந்ததே தத் ஸரூபதாம்‌ | ஏவம்‌ க்ருஷ்ணே பகவதி மாயாமநுஜ ஈஸ்வரே ! கோவிந்தே, மதிமாவேஸ்ய நரஸ்ஸத்‌யோ விமுச்யதே’” ( ) என்றும்‌ ‘அந்தமும்‌ வாழ்வுமாய எம்பெருமான்‌”’ (திருமொழி 5 – 7 – 2) என்றும்‌ சொல்லக்‌ கடவதிறே

கருளப் புட்கொடி சக்கரப் படை வானநாட என் கார் முகில் வண்ணா
பொருள் அல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்
தெருள் கொள் நான் மறை வல்லவர் பலர் வாழ் சிரீவர மங்கல நகர்க்கு
அருள் செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே –5-7-3—ஓர் அறிவு இன்றிக்கே இருக்கிற என்னை -உன் வாசியை அறிவித்து ஒரு வஸ்துவாக்கி –அசன்னேவ -என்கிற என்னை சந்தமென்னும் என்று உஜ்ஜீவிக்கும் படி பண்ணினாய்-பெரு மக்கள் உள்ளவர் -என்கிற நித்ய சித்தர் செய்யக் கடவ கைங்கர்யத்தை என்னைக் கொண்டாய் -உண்டாக்கின அளவே அன்றிக்கே-ஜீவனமும் இட்டிலையோ -மயர்வற மதி நலம் அருள பெற்றவர் இப்படி சொல்லுகையாலே ஸ்வ நிகர்ஷம் சொல்லுகை ஞான கார்யம் –ஈஸ்வரோஹம் என்று இருக்கை அஞ்ஞான கார்யம்

உள்ளிலும் உள்ளம் தடிக்கும் வினைப் படலம்
விள்ள விழித்து உன்னை மெய்யுற்றால் உள்ள
உலகளவும் யானும் உளனாவன் என் கொலோ
உலகளந்த மூர்த்தி உரை
–76—உன்னை அனுசந்திக்கில் ஸ்த்தூலமான தேகம் போலே
அமூர்த்தமான ஹ்ருதயம் தடியா நின்றது–பாப ஸமூஹம் விண்டு போம்படி நீ பார்த்து உன்னை சாஷாத்கரித்து-என்றுமாம்-மெய்யுற்றால் -சாஷாத்கரித்தால்-இங்கே மானஸ சாஷாத்காரம் ஆதல்-அங்கே பாஹ்ய சாஷாத்காரம் ஆதல்–வியாபக தத்வம் இரண்டு ஆகிறது போலே
(வியாபகத்வம் இரண்டு ஸ்வரூபமம் ஞானமும் -அவனைப் போலவே ஆனதே )ஞான வியாப்தி இவரது-சிறிய வடிவைக் கொண்டு லோகத்தை எல்லாம் வ்யாபித்து இருக்கிற நீயே சொல்லு-இந்த ஆச்சர்யத்தை நீ சொல் என்றபடி

இப்படி அநாதியாக சொன்ன உபய சம்பந்தமும் ஆத்மாவுக்கு நித்தியமாய் இருக்குமோ -அந்தம் உண்டோ -என்கிற சங்கையில் சொல்லுகிறது மேல்-(மோக சாந்த்யர்த்தமாக -நித்ய ஆத்மா -கர்மா பற்று இன்றி செய்ய வேண்டியதை ஸ்ரீ கீதையில் இரண்டாவது அத்யாயம்–கர்மத்தால் சரீரம் -காரணம் போனால் கார்யம் போகுமே -கர்மாதீனமே தேகம் கவலைப்படாதே என்று அருளிச் செய்கிறார் -)இந்த உபய ஸம்பந்தமும்‌ அநாதியாய்‌ நித்யமா யிருக்குமோ வென்னில்‌ ; அசித்‌ ஸம்பந்தம்‌ வந்தேறியுமாய்‌, கர்மோபாதி கமாகையாலே அநித்யமுமா யிருக்கும்‌. அயந ஸம்பந்தம்‌ அநாதியுமாய்‌, நிருபாதிக மாகையாலே நித்யமுமாயிருக்கும்‌ என்கிறார்‌ மேல்‌ 

ஓன்று கூடினதாய் பற்று அறுக்க மீண்டு ஒழிகையாலே பழ அடியேன் -என்னும் அது ஒன்றுமே ஒழிக்க ஒழியாதது-சூரணை 12

அதாவது–அசித் சம்பந்தம் –பெரும் துயர் இடும்பையில் பிறந்து கூடினேன் – என்கையாலே ஆத்மாவுக்கு ஸ்வரூபம் அன்றிகே வந்தேறியாய்-வினை பற்று அறுக்கும் -என்ற ஒரு சர்வ சக்தி ஸ வாசனமாக போக்க-அடைந்த வரு வினையோடு அல்லல் நோய் பாவம் மிடைந்து அவை மீண்டு ஒழிய – என்கிற படி நிவ்ருத்தமாய் விடுகையாலே-திரு மாலே நானும் உனக்கு பழ அடியேன் -என்னும் படி அநாதியாய் இருக்கிற சேஷ சேஷி பாவ ரூப பகவத் சம்பந்தம் ஒன்றுமே –உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது -என்கிற படி ஈஸ்வரனாலும் சேதனனாலும் கழிக்கப் பார்த்தாலும் கழிக்கப் போகாது என்கை- வந்தேறி இல்லையே

பெருந்‌ துயரிடும்பையில்‌ பிறந்து கூடினேன்‌”” (திருமொழி 1 – 1 – 1) என்கையாலே அசித்‌ ஸம்பந்தம்‌ ஆகந்துகம்‌. ஆனால்‌ அசித் ஸம்பந்தம்‌ அநாதி, என்று சொல்லுவான்‌ என்‌ என்னில்‌ ; வந்தேறின காலம்‌ பழையதாகையாலும்‌, ப்ரமாணங்கள்‌ தான்‌ அநாதி, என்கையாலும்‌. இனி ““வினை பற்றறுக்கும்‌ விதியே” (திருமொழி 11 – 4– 9), “அடைந்த அருவினையோ டல்லல் நோய் பாவம்‌ மிடைந்தவை மீண்டொழிய வேண்டில்‌”: (முதல் திரு -59) என்றும்‌ சொல்லுகிறபடியே ஒருநாள்‌ வரையிலே பகவத் ப்ரஸாதத்தாலே கழியக்‌ காண்கையாலே ஆகந்துகம்‌ என்கிறது. ஆகையாலே ”நானுமுனக்குப்‌ பழவடியேன்‌”’ (திருப்பல்‌. 11) என்கிறபடியே ஜீவ பரர்களுக்குண்டான ஸேஷ ஸேஷி பாவ ஸம்பந்த மொன்றுமே ““உறவேல்‌ நமக்கிங்கொழிக்க ஒழியாது ” (திருப்பாவை 28) என்கிறபடியே கழியாதது

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெரும் இடும்பையில் பிறந்து
கூடினேன்
 கூடி இளையவர் தம்மோடு அவர் தரும் கல்வியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால் உணர்வு எனும் பெரும் பதம் தெரிந்து
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் -1-1-1—பெரும் இடும்பையில் பிறந்து-மிகுந்த துன்பத்துக்கு கொள்கலமாய் -துன்பங்கள் வரக் காரணம் –பிறப்பு சரீரம் கொள்வது
கூடினேன் கூடி -சரீரம் என்றும் ஆத்மா என்றும் பகுத்து அறியாத படி உடலே ஆத்மா என்று மயங்கி கூடினேன்-இப்படி நெடும் காலம் இருந்து

துணை நிலை மற்று எமக்கோர் உளது என்று இராது தொழுமின்கள் தொண்டர் தொலைய
உண முலை முன் கொடுத்த வுரவோளதாவி உகவுண்டு வெண்ணெய் மருவி
பணை முலை யாயர் மாதர்  உரலோடு கட்ட அதனோடும் ஓடி அடல் சேர்
இணை மருது இற்று வீழ நடை கற்ற தெற்றல் வினை பற்று அறுக்கும் விதியே —11-4-9—ஓன்று என்னலாம் படி நின்ற மருதுகள் முறிந்து விழும்படியாக நடை கற்ற தெள்ளியவன் நம்முடைய பாபத்தை ச வாசனமாக போக்கும்-இது நிச்சிதம் –(பூதநா நிரசனமும் சகடாசூர பங்கமும் இதுக்கு நிதர்சனம்
கர்ம பலன்களை -ருசி வாசனைகள் உடன் போக்குவான் என்றபடி )

அடைந்த வருவினையோ டல்லல் நோய் பாவம்
மிடந்தவை
மீண்டு ஒழிய வேண்டில் நுடங்கிடையை
முன்னிலங்கை வைத்தான் முரண் அழிய முன்னொரு நாள்
தன் விலங்கை வைத்தான் சரண் —முதல் திரு—-59—(ஞான ஆனந்த சேஷத்வ பாரதந்த்ரங்களே ஸ்வரூபமான )ஆத்ம ஸ்வரூபத்தில் இன்றியே அசித் பிரத்யாசத்தியால் ( தேஹத்தின் அருகாமையாலே )வந்தேறியான அஞ்ஞானாதிகள்-அல்லல் –மானஸ வியாதி-நோய் –சரீர வியாதி -ஆதி -வியாதிகள் என்றபடி – பாவம்-பரிக்ரஹித்த சரீரத்தாலே பண்ணின நிஷித்த அனுஷ்டானம்(புண்யாபுண்ய ஈஸ்வர ப்ரீதி கோப )மிடந்தவை-சரீர ஆரம்ப ஹேதுவான பாபங்களுமாக நெருங்கினவை-அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்னும் படி ஒரு (யாதவ ராஜ- ராகவ ராஜ )ராஜ குல சம்பந்தத்தாலே மீளாத படி போக வேண்டில்-பண்டு இலங்கையில் வைத்தவனுடைய மிடுக்கை ஒழிய –தன்னுடைய திரு வில்லை அழகிய திருக் கையிலே வைத்தவன் உபாயம் –சர்வ சக்தியைக் கொண்டு கார்யம் கொள்ள வேண்டாவோ—இப் பாசுரம் ரத்ன காரத்துக்கு நடு நாயகக் கல் போல்-ஸம்ஸாரம் -சீதாபிராட்டி சிறையில் இருந்தது போல்-தத் தஸ்ய ஸத்ருசம் பவேத்-மற்ற உபாயந்தரங்களை விட்டு அவனையே பற்ற வேண்டுமே-சிந்தித்து இரு -41–வாரி சுருக்கி –உணர்வார் காண்பரே -47-மருவாழி –நெஞ்சே -48-
முயல்கிற்ப்பார்க்கு அல்லால் –ஆதி காண்பார்க்கும் அரிது -49- அரிய புலன் ஐந்து அடக்கி –புல்கில் –எளிது -50- திரு நாமம் எண் –51- தொழுது எழுதும் எழு –58-என்று சொன்னது எல்லாம் உபாயாந்தர புத்தியால் அல்ல -தேஹ யாத்ரை நடக்க உடலாகவே மற்ற உபாயாந்தரங்களை உபதேசித்து அதனால் ஸ்வரூபம் தெளிவடைந்து – திரு உள்ளம் சோகம் அடைந்த பின்பே சரம ஸ்லோக உபதேசம் போல் இப்பாசுரமும் –இச்சேதனன் ஸ்வரூபத்தை உணர்ந்த அன்று அவன் அல்லது உபாயம் இல்லை என்பதே இப்பாசுர சாரார்த்தம் இப்பிரபந்த சாரார்த்தமும் இதுவே –
)

அல் வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியூர் கோன் அபிமான துங்கன்
செல்வனைப் போலே திருமாலே நானும் உனக்கு பழ வடியேன்
நல் வகையால் நமோ நாராயணா என்று நாமம் பல பரவிப்
பல் வகையாலும் பவித்ரனே உனக்குப் பல்லாண்டு கூறுவனே –11-திருமாலே – இவ்வாத்ம வஸ்து ஒரு மிதுன சேஷம் -என்று சேஷத்வ பிரதி சம்பந்தியை சொல்லுகிறார்கள்-இத்தால்-மாதா பித்ர் சேஷத்வமும் -தேவதாந்தர சேஷத்வமும் கர்ம உபாதிகம் என்கை-அதவா-தேவரீருக்கு பிராட்டி நிரூபக பூதையாய் இருக்கிறாப் போலே எங்களுக்கும் தாஸ்யம் நிரூபகம் என்கிறார்கள் -என்றுமாம்
நானும் – பிரயோஜனாந்தர பரதையாலே அநாதி காலம் அன்யார்ஹனாய் போந்த நானும் –
சேஷி பக்கல் பிரயோஜனாந்தரத்தை அபேஷிக்கை யாவது -பதிவ்ரதை பர்த்தாவின் பக்கலிலே
வ்யபிசாரத்தை அபேஷித்தவோபாதி இறே-உனக்குப் பழ வடியேன் –உனக்கு சேஷித்வம் அநாதி யானவோபாதி எனக்கும் சேஷத்வம் அநாதி என்கை-உனக்கு – பிரயோஜனாந்தரத்தை அபேஷித்து திருவடிகளில் கிட்டினதுவே ஹேதுவாக அநந்ய பிரயோஜநன் ஆக்க வல்ல உனக்கு

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன் தன்னைப்
பிறவி பெறும்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்
சிறு பேர் அழைத்தனவோம் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்–28-உன்னோடு உண்டான சம்பந்தம் -உன்னாலும் விட ஒண்ணாது –எங்களாலும் விட ஒண்ணாது –இருவரும் கூட க்ருத சங்கேதர் ஆனாலும் விட ஒண்ணாது –நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே -நீ என்னை அன்றி இலை -என்ற
பிரமாணத்தைக் கொண்டு -என்ன -நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று அடியிலே சொன்னோம் -என்றபடி –-நீ சர்வ பிரகார பரி பூரணன் ஆகையாலே நாங்கள் நித்ய சாநித்யசாபேஷராய் இருக்கிற உறவு –என்றுமாம்- தயா பூர்ணனான உன்னோடு தயநீயதயா பூரணை களான -எங்களுக்கு உண்டான உறவு -என்றுமாம் –கோவிந்தா உன் தன்னோடு உறவேல் -இங்கு ஒழிக்க ஒழியாது
உன்னுடைய நாராயணத்தில் உறவு பழம் கிணற்றில் கண் வார வேணுமோ
– எங்களுக்கு இவ் வுறவு போராதோ –ஒழிக்க ஒழியாது-உன்னால் விட ஒண்ணாது –-எங்களால் விட ஒண்ணாது –-உன்னுடைய பந்துக்களால் விடுவிக்க ஒண்ணாது –-எங்களுடைய பந்துக்களால் விடுவிடுவிக்க ஒண்ணாது –
ஊராக சங்கித்தாலும் விடுவிக்க ஒண்ணாது –

இத்தால்-அசித் சம்பந்தம் ஆகந்துகமாய் கர்மோபாதிகம் ஆகையாலே அநித்யமாய் இருக்கும்
அயன சம்பந்தம் அநாதியாய் நிருபாதிகம் ஆகையாலே நித்தியமாய் இருக்கும்
என்றது ஆயிற்று–ஆனால் ஆகந்துகமான இத்தை அநாதி என்பான் என் என்னில்-வந்தேறின காலத்துக்கு அடி தெரியாமையாலே அநாதி என்று பிரமாணங்கள் சொல்லுகையாலே ஒரு நாள் வரையிலே பகவத் பிரசாதத்தாலே அது கழிய காண்கையாலே வந்தேறி என்னும் இடம் நிச்சிதம் இறே-

இவ் அயன சம்பந்தமே கீழ் சொன்ன சாஸ்திர பிரதானத்துக்கு
ஹேது என்கிறார் மேல்-

இந்த உதர தரிப்பு திரை குணிய விஷயம் ஆனவற்றுக்கு பிரகாசம்-சூரணை -13

அதாவது-இந்த நாராயணத்வ பிரயுக்தமான குடல் துவக்கு-திரை குணிய விஷயா வேதா -என்கிற படி சத்வ ரஜஸ் தமோ குண த்ரய வச்யரான சேதனரை விஷயமாக உடைய வேதங்களை பிரகாசிப்பைக்கு ஹேது என்ற படி-தம பிரசுரராயும் ரஜோ பிரசுரராயும் சத்வ பிரசுரராயும் இருக்கும் சேதனர் உடைய ருசி அனுகுணமான புருஷார்த்த தத் சாதனங்களை இறே பூர்வ பாகத்தில் பரக்க சொல்கிறது-ஆகையால் திரை குணிய விஷயம் ஆனவை என்கிறது–இத்தால் –நீர்மையினால் அருள் செய்தான் -என்று கீழ் சொன்ன சாஸ்திர பிரதானத்துக்கு பிரதான ஹேது – சம்பந்தம்- என்றது ஆயிற்று-

இந்த நாராயணத்வ ப்ரயுக்தமான குடல்‌ துடக்கு, “’த்ரை குண்ய விஷயா வேத?” (கீதை 2 – 45) என்கிறபடியே த்ரிகுணவஸ்யரான சேதநரை விஷயமாக உடைய வேதங்களை ப்ரகாஸிப்பிக்கைக்கு ஹேது என்றபடி. -தமஸ் ப்ரசுரராயும்‌, ரஜஸ் ப்ரசுரராயும்‌, ஸத்த்வ ப்ரசுரராயுமிறே சேதநர்‌ இருப்பது. ஆக, இந்த உதரத் தரிப்பு த்ரைகுண்ய விஷய மானவற்றுக்கு ப்ரகாஸகம்‌ என்கிற இத்தால்‌ ருச்யநுரூப புருஷார்த்தங்களையும்‌ தத்‌ ஸாதநங்களையும்‌ விதிக்கிற ஸாஸ்த்ர ப்ரதாநத்துக்கு அடி இந்த ஸம்பந்தம்‌ என்றதாய்த்து.-கீழ் ‘ நீர்மையினாலருள்செய்தான்‌”’ (திருமொழி 1 -8 – 5) என்று சொன்ன ஸாஸ்த்ர ப்ரதாநத்துக்கு ஹேது சொல்லிற்று ஆய்த்து

த்ரைகுண்யவிஷயா வேதா நிஸ்த்ரைகுண்யோ பவார்ஜுந
நிர்த்வந்த்வோ நித்யஸத்த்வஸ்தோ நிர்யோக÷க்ஷம ஆத்மவாந்-2-45
-மூன்று குணங்களுக்குட்பட்டனவற்றைக் குறித்து வேதங்கள் பேசுகின்றன. அர்ஜுனா, நீ மூன்று குணங்களையும் கடந்தோனாகுக. இருமைகளற்று, எப்போதும் உண்மையில் நின்று, யோக ÷க்ஷமங்களைக் கருதாமல், ஆத்மாவை வசப்படுத்தியவனாகுக.


இப்படி சம்பந்தம் அடியாக செய்தான் ஆகில் மோஷ ஹேதுவான சாஸ்திரங்களையே காட்டாதே
ஐகிக பார லௌகிக போக சாதனவிதயா கதயா பந்த ஹேதுவான சாஸ்திரங்களையும் காட்டுவான் என் என்ன சொல்லிகிறது மேல்-

வச்தலையான மாதா பிள்ளை பேகணியாமல் மண் தின்ன விட்டு பிரத் ஔஷதம் இடுமா போலே எவ் உயிர் க்கும் தாயாய் இருக்கும் வண்ணமான இவனும் ருசிக்கு ஈடாக பந்தமும் பந்தம் அறுப்பதோர் மருந்தும் காட்டும் இறே–((பந்தமும் காட்டும் – பந்தம் அறுப்பதோர் மருந்தும் காட்டும் ))சூரணை-14

அதாவது-வாச்தல்யை யுக்தையான பெற்ற தாய் ஆனவள்-மண்ணை ஆசை பட்ட பிள்ளை பேகணியாமல் முந்துற மண்ணைத் தின்ன விட்டு பின்னை அதுக்கு மாற்று மருந்து இடுமா போலே
எவ் உயிர்க்கும் தாயோன் -என்றும் தாய் இருக்கும் வண்ணமே -என்றும் (திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் எல்லா எவ் உயிர்க்கும் தாயோன் தான் ஒருவனே -திருவாய் -1-5-3- -என்றும்
தாய் இருக்கும் வண்ணமே உம்மைத் தன் வயிற்று இருத்தி உய்யக் கொண்டான் -பெரிய திருமொழி -11-6-6- -என்றும்) சொல்லுகிற படி சகல ஆத்மாக்கள் அளவிலும் மாத்ருவத் வச்தலனான இவனும்
சேதனர் உடைய ருசிக்கு ஈடாக பந்தங்களையும் தர்சிப்பித்து ,பின்னை பந்த நிவ்ருத்தக பேஷஷம் ஆனவற்றையும் தர்சிப்பிக்கும் இறே என்கை-இத்தால் இப்படி செய்தது சம்பந்த பிரயுக்த வாச்தல்ய கார்யம் ஆகையாலே சம்பந்த கொத்தை வாராது என்றது ஆயிற்று-

இப்படி ஸாஸ்தர ப்ரதாநம்‌ பண்ணுகிறது ஸம்பந்த, மடியாக வாகில்‌ விமோசக. ஸாஸ்த்ரத்தையே வெளியிடாதே பந்தக ஸாஸ்த்ரங்களையும்‌ வெளியிடுவான்‌ என்‌ என்னில்‌; வத்ஸலனாகையாலே சேதநருடைய ருச்யநு குணமாக வெளியிட்டான்‌ என்கிறது மேல்‌ (வத்ஸலையான மாதா) என்று தொடங்கி- ப்ரிய ப்ரவர்த்தகத்வத்தைப் பற்றவும்‌ அதுக்கடியான வாத்ஸல்யத்தைப் பற்றவும்‌ இப்போது மாதாவை த்‌ருஷ்டாந்தமாக்குகிறது. ““எல்லா வெவ்வுயிர்க்கும்‌ தாயோன்‌” (திருவாய்‌. 1 – 5 – 3) என்றும்‌, “’தாயிருக்கும்‌ வண்ணமே” (திருமொழி 11 – 6 – 6) என்றும்‌ சொல்லுகிறபடியே இவனும்‌ அப்படியே ஸர்வாத்மாக்கள் பக்கலிலும்‌ மாத்ருத்வ ப்ரயுக்கமான வாத்ஸல்யத்தை உடையனாகையாலே சேதநருடைய ருசிக்கீடான “பந்தமும்‌” என்கிற பந்தக ஸாஸ்த்ரங்களையும்‌, ““பந்த மறுப்பதோர்‌ மருந்தும்‌” என்கிற விமோசக ஸாஸ்த்ரத்தையும்‌ விதிக்கும்‌ என்கிறார்-

மாயோனிகளாய் நடை கற்ற வானோர் பலரும் முனிவரும்
நீ யோனிகளைப் படை என்று நிறை நான்முகனைப் படைத்தவன்
சேயோன் எல்லா வறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால்
தாயோன் எல்லா எவ்வுயிர்க்கு தாயோன் தான் ஓர் உருவனே
–1-5-3-லோகங்களை எல்லாம் திருவடிகளாலே அளந்து கொண்டவன் நாய்ச்சிமாரும் தொடும் போது கூச வேண்டும்படியான திருவடிகளைக் கொண்டு கிடீர் காடும் ஓடையும் அளந்தது இங்கனம் செய்வான் என் என்னில்-எல்லாரோடும் சம்பந்தம் ஒத்து இருக்கை-எல்லாம் என்று சாகல்ய பரம் – எவ்வுயிர் என்று விலஷணம் அவிலஷணம் -என்று பாராது ஒழிந்தபடி-தாய் போலே பரிவன் ஆனவன்-இது ஒரு பிரகாரமே
மேன்மைக்கு ஒப்பு இல்லாதா போலே நீர்மைக்கும் அவதி இன்றிக்கே இருக்கிறபடி என் -என்று விஸ்மிதர் ஆகிறார் –

பேயிருக்கு நெடு வெள்ளம் பெரு விசும்பின் மீதோடிப் பெருகு காலம்
தாயிருக்கும் வண்ணமே யும்மைத் தன் வயிற்றிருத்தி  உய்யக் கொண்டான்
போயிருக்க மற்று இங்கோர் புதுத் தெய்வம் கொண்டாடும் தொண்டீர் பெற்ற
தாயிருக்க மணை வெந்நீர் ஆட்டுதிரோ மாட்டாத தகவற்றீரே —
11-6-6—பிரஜையைப் பெறுகைக்கு
நோன்பு  நோற்று அப் பிரஜையை வயிற்றிலே வைத்து கொடு இருக்கும் தாயைப் போலே உம்மை வயிற்றிலே வைத்து உய்யக் கொண்டவன் –நாம் கொடுத்த கரணங்களைக் கொண்டு நம்மைப் பற்றப் பாராதே புறம்பே போயிற்றன-என்று வெறுத்து போய் இருக்க – அங்கே புதுசாக இருக்கிற தேவதைகளை கொண்டாடுகிற தொண்டீர்   – (தன்னை வணங்க வைத்த கரணம் இவை -இராமானுஜர் காட்டிக் கொடுக்க )அசேதனமாய் இருப்பது ஒன்றை வெந்நீர் ஆட்டுதிரோ – செய்ய மாட்டாத கிருபை அற்றீரே –


இப்படி வச்தல்யத்தால் செய்தான் ஆகையிலும் குண த்ரய வச்யரான சேதனருக்கு ருசி அனுகுணமான பல சாதனங்களை விதிக்கிற பந்ந்தக சாஸ்திரங்களையும் தர்சிப்பித்தால் அவர்கள் சம்சரித்தே போகைக்கு உடல் ஆகாதோ என்ன அதுவும் க்ரமேண அவர்கள் ஈடேற இட்ட வழி என்கிறார் மேல்-
(மஹா கிரம -676-திரு நாமம்-க்ரமேண படிக்கட்டுகளை கட்டி வைத்து இருப்பவர்
)இப்படி பந்தகமாக ஸாஸ்த்ரத்தையும்‌ கலசி விதித்தால்‌ அது கொண்டு சேதநர்‌ ஸம்ஸரித்தே போமித்தனையோ என்னில்‌ ; அது தானும்‌ விமோசக ஸாஸ்த்ரத்திலே வருகைக்கிட்ட வழி என்கிறார்‌ மேல்‌

அது தானும் ஆஸ்திக்ய விவேக அந்ய சேஷத்வ ஸ்வ ஸ்வாதந்த்ர்ய நிவ்ருத்தி பார தந்த்ர்யங்களை உண்டாக்கின வழி-சூரணை -15(ஆஸ்திக்யம் உண்டாக்கி -மறு பிறவி உண்டு கர்மாக்கள் உண்டு பர ப்ரஹ்மம் உண்டு என்கிற ஆஸ்திக எண்ணம் -உண்டாக்கி -விவேகம் உண்டாக்கி -பகுத்தறிவு உண்டாக்கி-அந்நிய சேஷத்வ நிவ்ருத்தி உண்டாக்கி -ஸ்வ ஸ்வாதந்தர்ய நிவ்ருத்தி உண்டாக்கி )

அதாவது-மோஷைக சாஸ்திரம் மாத்ரம் தர்சிப்பியாதே சேன விதி முதலான பந்தக சாஸ்திரங்களையும் தர்சிப்பித்து தானும் தம பிரசுரராய் அர்த்தார்த்த ஜனத்துக்காக பரஹிம்சா சீலராய் திரிகிற நாஸ்திகரை குறித்து மோஷத்தை விதித்தால் ,அவர்களுக்கு அது ருசியாமையாலே அந்த பரஹிம்சா ரூபமான அபிசார கர்மத்தை சியேனந அபிசரன் யஜதே—ஆபத்ஸ்தம்ப சூத்ரம் -என்று விதித்து தத் பல சித்தியாலே அவனுக்கு சாஸ்திரம் உண்டு என்கிற ஆஸ்திக்யத்தை உண்டாக்கி--ஆஸ்திகன் ஆன பின்பு ஜியோதிஷ்டோமேன ஸ்வர்க காமோ யஜதே–இத்யாதிகளாலே ஸ்வர்க்காதி புருஷார்த்த தத் சாதனங்களை விதித்து-அவ் வழியாலே பிரகிருதி ஆத்ம விவேகத்தை உண்டாக்கியும்-இப்படி பிரகிருதி ஆத்ம விவேகம் பிறந்த பின்பு ஆத்ம போகத்துக்கு வழி காட்டி- அவ் வழியாலே அந்ய சேஷ நிவ்ருத்தியை உண்டாக்கி- அநந்தரம்-பரமாத்மா போக வைலஷண்யத்தையும் தத் பிராப்தி சாதன பக்தியையும் காட்டி அவ் வழியாலே ஸ்வ ஸ்வாதந்த்ர்யா நிவ்ருத்தியையும் உண்டாக்கியும்-அநந்தரம்-உபாயாந்தர துஷ் கரத் வாதிகளாலே தளரும் அளவில் ஸ்வ யத்ன நிவ்ருத்தி ரூப பிரவ்ருதியில் மூட்டி ஸ்வ ரூப யாதாத்மா வேஷமான பார தந்த்ர்யத்தை உண்டாக்கியும்- இப்படி கிரமத்திலே ஈடேறுகைக்கு இட்ட வழி என்ற படி-

அதுதானும்‌ -பந்தக ஸாஸ்த்ரத்தைக்‌ கலசி விதித்தது தானும்‌. பர ஹிம்ஸா ஸீலனாய்‌ ஸாஸ்த்ர ஸாமர்த்‌யம்‌ {ஸாஸ்த்ரத்தில்‌ ஆஸ்திக்யம்‌) முதலிலே இல்லாதவனைக் குறித்து மோக்ஷத்தை விதித்தால்‌ அது அவனுக்கு ருசியாதாகையாலே அநபரஹிம்ஸா ரூபமான அபிசார ஸாஸ்த்ரத்தை விதித்து அது அவனுக்கு பலித்தவாறே அவ் வழியாலே ஸாஸ்தரம்‌ உண்டென்கிற்‌ ஆஸ்திக்யத்தை ௨ண்டாக்கியும்‌, ஆஸ்திகனானவாறே ்‌ ஜ்யோதிஷ்டோமேந ஸ்வர்க்க காமோ யஜேத” ( ) என்று இத்யாதி,களில்‌ சொல்லுகிறபடியே ஸ்வர்க்காதி, புருஷார்த்தங்களையும்‌, தத் ஸாதநங்களையும்‌ சொல்லுகிற ஸாஸ்த்ரங்களையும்‌ விதித்து, அவ் வழியாலே ப்ரகருத் யாத்ம விவேகத்தைப்‌ பிறப்பித்தும்‌, இப்படி ப்ரக்ருத் யாத்ம விவேகம்‌ பிறந்தவாறே ஆத்ம லாப, ரூப புருஷார்தத்தைக்‌ காட்டி அந்ய ஸேஷத்வத்தை நிவர்த்திப்பித்தும்‌, அநந்தரம்‌ பகவத் கைங்கர்ய ருப புருஷார்த்‌தத்தைக் காட்டி ஸ்வ ஸ்வாதந்தர்யத்தை நிவர்த்திப்பித்தும்‌, ஆத்மா வினுடைய அத்யந்த பாரதந்தர்யத்தை உண்டாக்குகைக் கிட்ட வழி என்கிறார் –

இவை கிட்டமும் வேட்டு வேளானும் போலே -சூர்ணிகை 11- தொடங்கி இவ் வளவாக சம்சார மோஷ காரண பரம்பரைகளிலே சரம அவதிகளான அசித் அயன சம்பந்தங்கள் ஆத்ம வஸ்துவுக்கு செய்யுமவைகளும்-அதில் அசித் சம்பந்தம் அநித்தியம்-அயன சம்பந்தம் நித்யம் என்றும்
அந்த அயன சம்பந்தம் கீழ் சொன்ன சாஸ்திர பிரதானத்துக்கு ஹேது என்றும்
அதில் மோஷைக சாஸ்திரம் அன்றிக்கே பந்தக சாஸ்திரத்தையும் தர்சிப்பித்து
வச்தலன் ஆகையாலே சேதன ருசி அனுகுணம் ஆக வேண்டும் என்றும்
அது தானும் கிரமத்திலே அவர்களை உஜ்ஜீவிப்பிக்கைக்கு இட்ட வழி என்றும் சொல்லிற்று ஆயிற்று

–——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருவாய் மொழி தனியன்-6-மிக்க இறை நிலையும்-ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் –

June 22, 2026

மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர் நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கி இயலும்
ஊழ் வினையும் வாழ் வினையும் ஓதும் குருகையர் கோன்
யாழின் இசை வேதத்து இயல் 
–இதுவும் ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த தனியன்

ஸ்ரீ பதிஸ் சேதனஸ் யாஸ்ய ஹேதுத்வேந ஸமாஸ்ரித
அநிஷ்ட ஹானிம் இஷ்டஸ்ய ப்ராப்திஞ்ச குருதே ஸ்வயம்
–என்று
சகல வேத ஸங்க்ரஹமான திரு பத த்ரயத்தாலும் ப்ரதிபாதிக்கப் படுகிற அர்த்த பஞ்சகத்தை
திருமாலால் அருளப்பட்ட சடகோபன் –8-8-11-என்னும்படி
ஸ்ரீ யபதியான ஸர்வேஸ்வரனாலே மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார் அருளிச் செய்த திருமாலவன் கவியான –திரு விருத்தம் –48-
திருவாய் மொழி பிரபந்தம் ப்ரதிபாதித்த பிரகாரத்தை இத் தனியனிலே சொல்லித் தலைக் கட்டுகிறது –

திருவாய் மொழியாகிற திவ்ய பிரபந்தம் ஸ்ரீ பதிஸ் சேதனஸ் யாஸ்ய ஹேதுத்வேந ஸமாஸ்ரித அநிஷ்ட ஹானிம் இஷ்டஸ்ய பிராப்திஞ்ச குருதே ஸ்வயம் -என்று ஸ்ரீ யபதியானவன் சேதனனுக்கு உபாயத்வேந ஆஸ்ரிதனாய்க் கொண்டு அநிஷ்ட நிவ்ருத்தியையும் இஷ்டமான ஸ்வ ப்ராப்தியையும் தானே பண்ணிக் கொடுக்கும் என்று அநு யாயியான மஹா வாக்யார்த்தத்தை ப்ரதிபாதிக்கிறது –இப் பிரபந்தம் சர்வ சாஸ்த்ர சார உப ப்ரும்ஹணம் பண்ணுகிறது ஆகையால் -சகல வேத சாஸ்த்ர தாத்பர்யமான அர்த்த பஞ்சகமும் இப் பிரபந்தத்தினுடைய மஹா வாக்யார்த்தத்திலே அந்தர்பூதம்-
ஸ்ரீ பதி -என்று ப்ராப்யமான ப்ரஹ்மத்தினுடைய ஸ்வரூபமும்–சேதனஸ்ய என்று பிரத்யாகாத்ம ஸ்வரூபமும்-‘ஹேதுத்வேந -என்று உபாய ஸ்வரூபமும்-அநிஷ்ட ஹானிம் -என்று பிராப்தி விரோதி நிவ்ருத்தியும்-இஷ்டஸ்ய ப்ராப்திம் -என்று பிராப்தி பல வாப்தியுமான அர்த்த பஞ்சகமும் ஸூசிதம் ஆகிறது –இப் பிரபந்தத்தில் முதலிட்டு நாலு பத்தாலே சித்த ரூபமான பராவராத்ம யாதாம்யத்தை ப்ரதிபாதிக்கிறது – முடிவிட்டு நாலு பத்தாலே ஸாத்ய ரூபமான அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட பிராப்தியை ப்ரதிபாதிக்கிறது – நடுவிட்டு இரண்டு பத்தாலே சித்த ஸாத்ய ரூபமான நிர்பய உபாய வரணத்தை ப்ரதிபாதிக்கிறது -ஸித்தமான உபாயத்தினுடைய வரணம் ஸாத்யம் என்று கருத்து –அதில் சித்த ரூபமான பராவராத்ம யாதாம்யா ப்ரதிபாதிதமான முதல் நாலு பத்தில் –முதல் பத்தும் இரண்டாம் பத்தும் ப்ராப்யமான பர ஸ்வரூபத்தை பிரதிபாதிக்கிறது – மூன்றாம் பத்தும் நாலாம் பத்தும் ப்ராப்தாவான பிரத்யாகாத்ம ஸ்வரூபத்தை ப்ரதிபாதிக்கிறது – அஞ்சாம் பத்தும் ஆறாம் பத்தும் பிராப்தி உபாய ஸ்வரூபத்தை பிரதிபாதிக்கிறது – ஏழாம் பத்தும் எட்டாம் பத்தும் பிராப்தி விரோதி நிவ்ருத்தியை பிரதிபாதிக்கிறது – ஒன்பதாம் பத்தும் பத்தாம் பத்தும் பிராப்தி பல சித்தியை பிரதிபாதிக்கிறது —அதில் முதல் பத்து பரனான சேஷியினுடைய ரக்ஷகத்வத்தையும் –
இரண்டாம் பத்து போக்யத்தையும் சொல்லுகிறது –
மூன்றாம் பத்து பகவத் ஏக சேஷ பூதனான ஆத்மாவினுடைய தத் ஏக அநுபவத்தையும்
நாலாம் பத்து தத் ஏக பிரியத்வத்தையும் சொல்லுகிறது –
அஞ்சாம் பத்து நிர்பாயமான உபாய விஷத்தையும்
ஆறாம் பத்து தத் வரண பிரகாரத்தையும் சொல்லுகிறது –
ஏழாம் பத்து அநிஷ்டமான விரோதி பிரகாரத்தையும்
எட்டாம் பத்து தன் நிவ்ருத்தி பிரகாரத்தையும் சொல்லுகிறது –
ஒன்பதாம் பத்து பல பிரகாரத்தையும் பத்தாம் பத்து ததவாப்தி பிரகாரத்தையும் சொல்லுகிறது –
ஆக இவ் வர்த்த பஞ்சகத்தினுடைய அவாந்தர அர்த்த பேதத்தாலே இப் பிரபந்தத்திலே பத்துப் பத்துக்கும் வாக்யார்த்தம் சொல்லிற்று ஆயிற்று –அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி -பிரவேசம் –

தெருளும் மருளும் மாய்த்துத் தன் திருந்து செம் பொற் கழல் அடிக் கீழ்
அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால்
அருளப் பட்ட சடகோபன்
ஓராயிரத்துள் இப்பத்தால்
அருளி யடிக் கீழ் இருத்தும் நம் அண்ணல் கரு மாணிக்கமே–8-8-11-ப்ரஹ்ம ருத்ர பிரமுகரான சர்வாத்மாக்களுக்கும் நிர்வாஹகனாய் -சர்வேஸ்வரனான ஸ்ரீ யபதியாலே – அருளப் பட்ட சடகோபன்-மயர்வற மதி நலம் அருளினன்-என்கிறபடியே கிருபைக்கு விஷய பூதரான ஆழ்வார் -இவ்வருளுக்கு வாய்த்தலை பிராட்டி -என்கை-

மெல்லியல் ஆக்கைக் கிருமி குருவில் மிளிர் தந்தாங்கே
செல்லியசெல் கைத்துலகை என் காணும் என்னாலும் தன்னைச்
சொல்லிய சூழல் திருமாலவன் கவியாது கற்றேன்
பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ வுண்டு பண்டு பண்டே
-48 —திருமாலவன் கவி –-அவனும் பிராட்டியுமான சேர்த்தி போலே அவனும் கவியும் பொருந்தி -அவன் முன்னுருச் சொல்லி கொண்டு போக நான் பின்னுருச் சொல்லிக் கொண்டு வந்த அவ்வளவே – நான் என் உணர்வால் கவி பாடினேன் அல்லேன் -என்பதை யாது கற்றேன் -என்கிறார்-நான் என் வசம் இழந்து பக்தி பரவசப் பட்டு வாய்க்கு வந்த படி பாடினேன் அவ்வளவே –

மிக்க இறை நிலை–யாவது
இறை நிலை உணர்வு அரிது -1-3-6-என்னும் படியான சர்வ ஸ்மாத் பரத்வம்
தம் ஈஸ்வராணாம் பரமம் மஹேஸ்வரம் தம் தேவதா நாம் பரமஞ்ச தைவதம்
நாராயண பரஞ்சோதி
தத்வம் நாராயண பர
மனிசர்க்குத் தேவர் போலே தேவர்க்கும் தேவாவோ –8-1-5-
தேவ தேவனே -3-6-2-
பரஞ்சோதி நீ பரமாய் –3-1-3-
மிகுஞ்சோதி -2-2-5-
முழுதுண்ட பரபரன் –1-1-8-
வானோர் இறை –1-5-1-
கழி பெரும் தெய்வம் –திரு விருத்தம் –20-
பெரும் தெய்வம் -4-6-2-
பெரிய அப்பனை பிரமன் அப்பனை உருத்திரன் அப்பனை –8-1-11-
திருவுடை அடிகள் -1-3-8-
திரு மகளார் தனிக் கேள்வன் பெருமையுடைய பிரானார் –1-6-9-
திரு மா மகள் கேள்வா தேவா –6-10-4-
என்றும் சொல்லப்படுகிற சர்வ ஸ்மாத் பரனை ஆயிற்று -மிக்க இறை என்கிறது –

உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உருவியந்த இந்நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறை நிலை உணர்வு வரிது உயிர்காள்
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே
 –1-3-6–ஈஸ்வரன் ப்ரஹ்ம ருத்ரர்களோடு ஒக்க தன்னை சங்கோ சித்து நிற்கையாலே ஈஸ்வரன் இன்னான் என்று அறிகை அரிது-சர்வேஸ்வரன் பிரமனுக்கும் சிவனுக்கும் அந்தராத்துமாவாய் அவர்களைச் சரீரமாகக் கொண்டு தான் சரீரியாய் நிற்கிற நிலை அறியப் போகாது.

ஆருயிரேயோ ! அகலிடமுழுதும் படைத்திடந்துண்டு மிழ்ந்த ளந்த
பேருயிரேயோ ! பெரிய நீர் படைத்து அங்குறைந்தது கடைந்தடைத்துடைத்த
சீருயிரேயோ !மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ !
ஒருயிரேயோ ! உலகங்கட் கெல்லாம் உன்னை நான் எங்கு வந்துறுகோ ?–8-1-5-ஐஸ்வர் யத்தாலும் கௌரவத்தாலும் மநுஷ்யர்களில் காட்டில் தேவர்கள் உத்க்ருஷ்டராய் இருக்குமா போலே அவற்றால் தேவர்கள் மனுஷ்யஸ்தாநீயராம் படி சர்வாதிகன் ஆனவனே -சர்வாதிகனான நீ வேண்டாவோ ஹித சிந்தனை பண்ணும் போது

மூவர் ஆகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னைச்
சாவம் உள்ளன நீக்குவானைத் தடங் கடற் கிடந்தான் தன்னைத்
தேவ தேவனைத் தென்னிலங்கை எரி எழச்செற்ற வில்லியைப்
பாவ நாசனைப் பங்கயத் தடங் கண்ணனைப் பரவுமினோ.–3-6-2–அங்கே கிடக்கிறது ப்ரஹ்மாதிகளுக்கு ஆஸ்ரயணீயன் ஆகைக்காக -அவர்கள் அபேக்ஷிக்க வந்து அவதரித்த படி –அங்கே கண் வளர்ந்து அருளுகிறது தேவர்களுக்கு ஸமாச்ரயணீயனாய் மனுஷ்ய சஜாதீயனாய் வந்து திருவவதாரம் பண்ணி அருளினாலும்-மனுஷ்யரைக் காட்டில் தேவர்கள் விலக்ஷணராய் இருக்கிறாப் போலே தேவர்களைக் காட்டிலும் வி லஷணன் ஆனவனை-அன்றியே, ‘நித்தியசூரிகளால் ஏத்தப்படுகின்றவனை’ என்னலுமாம்.

பரஞ்சோதி நீ பரமாய் நின்னிகழ்ந்து பின் மற்றோர்
பரஞ்சோதி யின்மையில் படியோவி நிழல்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த எம்
பரஞ்சோதி கோவிந்தா பண்புரைக்க மாட்டேனே –3-1-3–தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி-அழகாலே எல்லாரிலும் மேம்பட்டு மிக்கு இருக்கையாலே உன்னைத் தவிர மற்று ஒரு பரஞ்சோதி இல்லாமையால் ஒப்புக்கு இன்றிக்கே வர்த்தியா நிற்கையாலும் இப்பிரபஞ்சத்தை எல்லாம் உன் சங்கல்ப மாத்திரத்தாலே ஸ்ருஷ்டிக்கையாலே ஜகத் காரணத்வ ப்ரயுக்தமான உத்க்ருஷ்ட தேஜஸையும் உடையையாய் ஆஸ்ரித ஸூலபன் ஆனவனே –நீர்மையைப் பார்த்தால் பசுக்களோடும் பொருந்தும்படியாய் இருக்கை–ஸூலபதையால் வந்த தேஜஸ்ஸூம் உன்னது-அழகுக்கு மேற்பட்டார் இல்லாமையால் அழகால் வந்த தேஜஸ்ஸூம் உன்னது-லோகத்தில் உபமான ரஹிதர் நீயே யாகையாலே உபமான ராஹித்யத்தால் வந்த தேஜஸ்ஸூம் உன்னது-ஜகத் காரணத்வ ப்ரயுக்தமான தேஜஸ்ஸூம் உன்னது

தகும் சீர்த் தனி முதலினுள்ளே
மிகும் தேவும் எப்பொருளும் படைக்க
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்
மிகும் சோதி மேலறிவார் யவரே –2-2-5-ஸ்ருஷ்ட்ருத்வ சக்தி யுக்தமான தன்னுடைய சங்கல்பத்தின் உள்ளே-தனி முதல் -பிரகிருதி என்றும் சொல்லுவர்–ஐஸ்வர்யங்களால் மிக்கு இருந்த தேவர்களையும் மற்றும் உள்ள பதார்த்தங்களை எல்லாம் படைக்க தகும் என்னும் இடத்தை தெரிவியா நின்றுள்ள திருக் கண்களை உடையனாய் –அவ் வழகாலே என்னை அடிமை கொண்டு அருளினை எம்பெருமானே பர தத்வம் இவன் ஒழிய வேறு சில ஈஸ்வரர்கள் உண்டு என்னும் இடத்துக்கு பிரமாணம் இல்லைவைதிக –க — தஸ் யோத்பத்திர் நிரூப்யதாம்–பரம்பொருளான விஷ்ணுவினிடத்தில் பத்தி இல்லாதான் ஒருவன் எல்லாச் சாஸ்த்திரங்களின் பொருள்களையும் அறிந்தவனாய் இருப்பினும், அவனிடத்தில் பிராமணத் தன்மை இல்லை; அவன் பிறவியினை ஆராய்தல் வேண்டும்,’ என்பது பத்ம புராணம்.-பரஞ்சோதி ரூபசம்பத்த்ய–நாராயண பரஞ்சோதி -என்று நாராயண அனுவாக ஸித்தமான பரதத்வம்-ஸ்வாபாவிகாநவதிகாதிஶயேஶித்ருத்வம் நாராயண த்வயி ந ம்ருஷ்யதி வைதிக: க: | ப்ரஹ்மா ஶிவஶ் ஶதமக: பரம: ஸ்வராடிதி ஏதே’பி யஸ்ய மஹிமார்ணவ விப்ருஷஸ்தே ||--ஶ்லோகம் 11 – நாராயணனே! உன்னுடைய பெருமைக் கடலில் ஒரு திவலையைப் போன்றவர்களே (கர்மத்துக்கு வசப்பட்ட) ப்ரஹ்மா, சிவன், இந்திரன் ஆகியோரும், இந்த தேவதைகளை விடச் சிறந்தவர்களான, கர்மத்துக்கு வசப்படாத முக்தாத்மாக்களும்; உன்னுடைய இயற்கையான மற்றும் எல்லை யில்லாத பெருமையை உடைய ஐஸ்வர்யத்தை (ஆளுமையை) எந்த வைதிகன் பொறுக்க மாட்டான்?)

சுரர் அறிவரு நிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என வுலகு அழித்து அமைத்து உளனே 1-1-8–ஈஸ்வரனாலும்-அவன் காட்டிய வழியை யுடைய ப்ரஹ்மாவாலும் ஸ்ருஷ்டமான பதார்த்தங்களில் ருத்ரனால் சம்ஹார்யம் ஆவது ஏக தேசம் –
சம்ஹர்த்தாவான ருத்ரன் தன்னையும் -அவனுக்கு நிலம் அன்றிக்கே இருந்துள்ள மஹதாதிகளையும் அகப்பட சம்ஹரித்தவன் –அவன் காட்டின வழியாலே ஏகதேச சிருஷ்டியையும் ஏக தேச சம்ஹாரத்தையும் பண்ணுகையாலே அஸ்மத் தாதிகளைக் காட்டில் பரராய் இருக்கிற ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு நிலம் அல்லாத சிருஷ்டி சம்ஹாரங்களைப் பண்ணுகையாலே அவர்களுக்கும் பரன் என்றவாறு -ப்ரஹ்மாதிகள் அதிகாரி புருஷர்களாக இருக்கையாலே நம்மைக் குறிக்க அவர்கள் பரராய் இருப்பது ஒன்று உண்டு இறே–பர பரானாம் (‘உயர்ந்தவர்கட்கு எல்லாம் உயர்ந்தவன் இறைவன்,’ )என்கிறபடியே, அவர்கள் தங்களுக்கும் பரனாய் இருக்குமவன். ‘மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவா, ‘என்னைக் கடவது இறே

வள வேழுலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன் பின்னையும்
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய்
இளவேறேழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே –1-5-1-ஏழ் உலகுக்கும் முதலாய் உள்ள அவரவரும் அமரர்களுக்கு நாயகனை-நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனாய் இருந்துள்ளவனை-

சின்மொழி நோயோ கழி பெருந்தெய்வம் இன்ன-இந்நோய் இது என்று
இன்மொழி கேட்கும் இளந்தெய்வம் அன்று இது வேல! நில் நீ
என் மொழி கேண்மின் என்னம்மனை மீர் ! உலகு ஏழும் உண்டான்
சொல் மொழி மாலை யம் தண் யம் துழாய் கொண்டு சூட்டுமினே –20–-கழிய மிக்க பெரும் தெய்வம் –அவ் வருகு இல்லாத தெய்வம் –பதிம் விஸ்வஸ்ய-என்றும்-பதிம் பதீனம் -என்றும் தமீஸ்வரணாம் பரமம் மஹேஸ்வரம்-என்றும் – அவ்விஞ்ஞாதம் விஜா நதாம்-என்றும்-யதோ வாசோ நிவர்த்தந்தே -என்றும் – உபபாதிக்கிற பிரமாணங்களுக்கும் அவ்வருகாய் இருக்கை-

திசைக்கின்றதே இவள் நோய் இது மிக்க பெரும் தெய்வம்
இசைப்பின்றி நீர் அணங்கு ஆடும் இளம் தெய்வம் அன்று இது
திசைப்பின்றியே சங்கு சக்கரம் என்று இவள் கேட்க நீர்
இசைக்கிற்றீர் ஆகில் நன்றேயில் பெறுமிது காண்மினே –4-6-2–வானோர் தலை மகனாம் சீராயின தெய்வ நன்நோய் இது – கம்பீர பரமோ தேவ –என்கிறபடி அபரிச்சின்னமாய் சர்வாதிகமான தெய்வம் அடியாக வந்தது இது பர தேவதை அடியாக வந்தது

பெரிய வப்பனைப் பிரமனப்பனை உருத்திரனப்பனை முனிவர்க்
குரியவப்பனை யமரரப்பனை உலகுக்குகோர் தனியப்பனை தன்னை

பெரிய வண் குருகூர்ச் சடகோபன் பேணின ஆயிரத்துள்ளும்
உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால் உய்யலாம் தொண்டீர் ! நம் கட்கே–8-1-11-பெரிய வப்பனைப் -உபய விபூதிக்கும் நிர்வாஹகன் ஆனவனை-
பிரமனப்பனை-சதுர்தச புவ நேஸ்வரனுக்கு ஜனகனானவனை
உருத்தி ரனப்பனை-அவனுக்கு புத்ரனாய் -அவன் தன்னளவிலும் மிகைத்து திரிகிற ருத்ரனுக்கு உத்பாதகனானவனை -க இதி ப்ராஹ்மணோ நாம
முனிவர்க்குரிய வப்பனை-முனிவர் என்கிறது ஸநகாதிகளை-அவர்களுக்கு கேவலம் ப்ரஹ்ம பாவநையாய் இருக்கையாலே உரிய வென்று -அணுமை சொல்கிறது
யமரரப்பனை -தேவர்களுக்கு உத்பாதகனானவனை
உலகுக்குகோர் தனியப்பனை தன்னை-இப்படி பிரித்து சொல்லுகிறது என் -சகல லோகங்களுக்கும் ஏக நிர்வாஹகன் ஆனவனை -இப்போது இவை சொல்லுகிறது என் என்னில் நிதி எடுத்தவன் இன்னது கண்டேன் இன்னது கண்டேன் -என்னுமா போலே ஸ்வரூபத்திலும் குணத்திலும் அதி சங்கை பண்ணின போது இழந்தாராய் இருந்தவற்றை லபிக்கையாலே இவற்றைப் பிரித்து பேசுகிறார் –முனிவர்க்கு உரிய அப்பனை என்கிறது ஆஸ்ரித பவ்யத்தையை சொல்கிறது-

நாளும் நின்று அடும் நம் பழமை அம் கொடு வினையுடனே
மாளும் ஒரு குறைவில்லை மனனக மலமறக் கழுவி
நாளும் நம் திருவுடையடிகள் தம் நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே –1-3-8—நாள் தோறும் வேணும் என்று ஒரு விதி அன்று –அபர்வணி கடல் தீண்டல் ஆகாது என்னுமா போலே இதுக்கு நிஷித்தமாய் இருப்பதொரு காலம் இல்லை என்கை -அபிமதமான நாள் தோறும்-நமக்கே கூறப்பட்ட ஸ்ரீ மானான ஸ்வாமியினுடைய சர்வ ஸமாச்ரயணீயமாய் போக்யமுமான திருவடிகளை ஆஸ்ரயிக்கில்–ஸ்ரீ மானான ஸ்வாமியானவனுடைய
நம் -என்று அஜாயமானோ பஹூ தா விஜாயதே -என்று அவதாரத்தை பிரஸ்தாபித்து – ஹ்ரீச்சதே லஷ்மீச்ச பத்ன்யௌ-என்று பிரமாண பிரசித்தமான ஸ்ரீ யபதியை தமக்கு பிரகாசிப்பித்த படியை அருளிச் செய்கிறார் –-‘சர்வேஸ்வரனை அடைந்தானாகில், அவன் பலனைக் கொடுக்கிறான்; பிராட்டியைத் துணையாகப் பற்ற வேண்டுகிறது என்?’ என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க, ‘அவனை அடையும் இடத்தில், இவன் குற்றம் பாராதே தன் நிழலிலே இவனை வைத்து, அவன் பக்கல் முகம் பெற்றவாறே குற்றத்தைப் பொறுப்பிக்கும் அவள் முன்னாகப் பற்றல் வேண்டும்’ என்று கூறி, ‘நாளும் நம் திருவுடை அடிகள் தம் நலம் கழல் வணங்கி’ என்னா நின்றது கண்டீரே’ என்று அருளிச்செய்தார் பட்டர்.

தரும வரும பயனாய –திருமகளார் தனிக் கேள்வன்
பெருமையுடை பிரானார்
-இருமை வினை கடிவாரே–1-6-9–உபநிஷத் பிரசித்தமான பரம புருஷார்த்தங்களைத் தரும் பெரிய பிராட்டியாருடைய குணாதிகனாய் யுள்ள நாயகன் – ஸ்ரீ யபதித்வ நிபந்தனமான பெருமையை யுடையராய் -ஆஸ்ரித அனுக்ரஹ ஸ்வபாவராய் -அவர்களுடைய புண்ய பாப ஸ்வரூபமான கர்மங்களைப் போக்கும் ஸ்வபாவரானவர்-தர்மத்தின் யுடைய பரம பிரயோஜன ரூபமான திரு மகளார் என்றுமாம் –அத்விதீயனான வல்லபன்-ஸ்ரீ யபதித்வ நிபந்தனமான பெருமையை யுடையவர்-ஆஸ்ரித அனுக்ரஹமே ஸ்வரூபமாய் உள்ளவர் – புண்ய பாப ரூபமான கர்மங்களைப் போக்குவர் –

ஆவா என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள்மேல்
தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா! திருமா மகள் கேள்வா!
தேவா! சுரர்கள் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!
பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்துமாறு புணராயே.–6-10-4–விரோதி நிராசனம் பண்ணிற்று -பிராட்டிக்கு இனிதாகைக்காக என்று கருத்து—பர்த்தாரம் பரிஷஷ்வஜே -என்று அவளுக்காக வாயிற்று செய்தது –ந கச்சின் ந அபராத்யதி என்னும் அவளும் கூடக் கூட்டுப் படும்–அஸூர நிரசனம் பண்ணுகையால் வந்த வீர ஸ்ரீ யாலே விளங்கா நின்றுள்ளவனே-அப்போதை வீர ஸ்ரீ யாலே வந்த ஒளியை யுடையவனே –விரோதியைப் போக்கி பிராட்டி அங்கீ காரம் பெற்ற புகர் என்றுமாம் –“தம் த்ருஷ்ட்வா ஸத்ருஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸுகாவஹம் பபூவ ஹ்ருஷ்டா வைதேஹீ பர்தாரம் பரிஷஸ்வஜே”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 30 : 39.–தம் ஸதருஹந்தாரம் த்ருஷ்டவா – வெறும் புறத்தில் ஆலத்தி வழிக்க வேண்டும்படியான அழகினை யுடையவரை,-எதிரிகளை வென்ற வீரக் கோலத்தோடே கண்டாள்.-ஸத்ருஹந்தாரம்-தம் திருமேனியிலே ஒரு வாட்டம் வாராமே, அவர்களைக் குற்றுயிராக்கி விடுவதும் செய்யாதே, துண்டித்து அடுக்கினவரை.–முன்பு திருவயோத்யையில் இருந்த நாள், ‘இவர் வேட்டைக்குச் சென்ற விடத்தே இன்னபடியும் இன்னபடியும் பொருதார், இன்ன புலியைக் குத்தினார், இன்ன சிங்கத்தைக் குத்தினார்’ என்றாற்போலே உறவினர்கள் சொல்லக் கேட்கு மத்தனை அன்றோ;
இங்குப் பூசலுக்குப் புகுகிறபோதே பிடித்து மேலுள்ள செயல்கள் அடங்கலும் கண்டாள்.
மஹர்ஷீணாம் ஸு காவஹம் – இருடிகளுடைய விரோதிகளைப் போக்கி அவர்களுக்குக் குடியிருப்புப் பண்ணிக் கொடுத்தவரை.தங்கள் தவத்தின் வலிமையால் வெல்லலாயிருக்க, தங்கள் பாரத்தைப் பெருமாள் தலையிலே பொகட்டு முறை உணர்ந்து கொண்டிருக்கு மவர்களுக்கு.
கர்ப்ப பூதா: தபோதநா:--தந்தாம் கைம்முதல் அழியமாறாதே இருக்குமவர்கள்-தபோதனராய் இருக்கச்செய்தே கர்ப்ப பூதராயிருப்பர்கள். என்றது,-தந்தாமுக்கென்ன இயற்றி-யத்னம் – உண்டாயிருக்கச் செய்தே, கர்ப்பாவஸ்தையில் தாய் அறிந்து ரக்ஷிக்குமத்தனை அன்றோ; அப்படியே அவனே அறிந்து ரக்ஷிக்க இருக்குமவர்கள் என்றபடி-அநுகூலர்களை ரக்ஷித்தலும் பிரதிகூலர்களை அழித்தலும் இவளுக்குப் பிரியமாகச் செய்யுமவை அன்றோ.
பபூவ – பதினாலாயிரம் முருட்டு இராக்கதர்களோடே தனியே நின்று பொருகிற இதனைக் கண்டு
அஞ்சி ‘இது என்னாய் விளையுமோ?’ என்று சத்தை அழிந்து கிடந்தாள்; இப்போது உளள் ஆனாள்.
பூ – ஸத்தாயாம். ஹ்ருஷ்டா –-சத்தை உண்டானால் உண்டாமதுவும் உண்டாயிற்று.
வைதேஹீ –-உபாத்தியாயர்கள் பெண் பிள்ளைகளுக்குச் செவி ஏற்றாலே ஓத்து போயிருக்குமாறு போலே, வீரவாசி அறியும் குடியிலே பிறந்தவள் அன்றோ.
அன்றிக்கே, ஒரு வில்லு முறித்த இதற்கு உகந்து என்னைக் கொடுத்த எங்கள் ஐயர்,
பதினாலாயிரம் பேரைத் தனியே நின்று பொருது முடித்த இதனைக் கண்டால் என்படுகிறார் தான் என்னுதல்!
பர்த்தாரம் – முன்பு, இவர் சுகுமாரர் ஆகையாலே ‘குழைசரசகு’ என்றும்,
‘ஐயர் நம்மை இவர்க்கு நீர்வார்த்துக் கொடுக்கையாலே நாம் இவர்க்குச் சேஷம்’ என்றும் அணைத்தாளத்தனை; ‘ஆண்பிள்ளை’ என்று அணைத்தது இப்போது.
பரிஷஸ்வஜே – இராவணனுக்கு ஒத்தவர்களாய், அவன் மதித்த வீரத்தையுடையவர்களாயிருப்பார் பதினாலாயிரம் பேரும் விட்ட அம்புகள் முழுதும் இவர் மேலே பட்டு, கண்ட இடமெல்லாம் யுத்த வடுவாய் அன்றோ திருமேனி கிடக்கிறது;-அவ்வவ் விடங்கள் தோறும் திருமுலைத்தடத்தாலே வேது கொண்டாள்.

திரு மங்கை நின்று அருளும் தெய்வம் -இரண்டாம் திரு -57-
திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன்–முதல் -64 –
திருவில்லாத் தேவரை தேறேன்மின் தேவு -நான்முகன் -53–என்னக் கடவது இறே
இது வாயிற்று பர ஸ்வரூபம் –

திருமங்கை நின்றருளும் தெய்வம் நா வாழ்த்தும்
கருமம் கடைப்படிமின் கண்டீர் -உரிமையால்
ஏத்தினோம் பாதம் இரும் தடக்கை எந்தை பேர்
நாற்றிசையும் கேட்டீரே நாம்–57—பெரிய பிராட்டியார் –இறையும் அகலகில்லேன் -என்று கொண்டு
நித்ய கடாஷத்தைப் பண்ணி நித்ய வாசம் பண்ணுகிற சர்வேஸ்வரனை
–அவ்யபிசாரியான லஷணம்-லஷ்மீ பத லாஷைக லஷணம் –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -1-9- திருவடிகளிலே செம்பஞ்சு மார்விலே காணில் அவனே பரதேவதை -ஜகத் காரணத்வாதி அப்ரயோஜகம்-திருவில்லாத் தேவர் -நான்முகன் -53-
ஸ்ரீ யபதி நிகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதா ந-என்று  கீதா பாஷ்யம் – கல்யாண குணங்களுக்கு முன்னே எடுக்கையாலே நிரூபக தர்மம் –

நயவேன் பிறர் பொருளை நள்ளேன் கீழரோடு
உயவேன் உயர்ந்தவரோடு  அல்லால் வியவேன்
திரு மாலை யல்லது தெய்வம் என்று ஏத்தேன்
வருமாறு என் என் மேல் வினை  —–64–ஸ்ரீ யபதி யைக் கண்டு அல்லது விஸ்மயப் படேன் -(வியத்தல் விஸ்மயத்தல் ) -ஸ்ரீ யபதியினுடைய ஐஸ்வர்யம் ஒழிய வேறு சிலரது கண்டால் விஸ்மயப் படேன்—அவனை அல்லது வேறு சிலரை தெய்வம் என்று ஆஸ்ரயணீயர் என்று கொண்டு ஸ்துதியேன் – வியவேன்-திரு மாலை-ஸ்ரீ யபதியினுடைய ஐஸ்வர்யத்தை அர்த்த வாதம் என்று இரேன்(பரன் திறம் அன்றி மற்று வேறே தெய்வம் இல்லையே -பிரகாரமாக நாட்டினான் தெய்வம் எங்கும் )

கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்த
னல்லால் ஒரு தெய்வம் நான் இலேன் –பொல்லாத
தேவரைத் தேவர் அல்லாரைத் திரு இல்லாத்
தேவரைத் தேறேல்மின் தேவு-53–தயா சத்யம் சௌசம் ச ராஷசானாம் ந வித்யதே -என்று அறிவு கேடர் எல்லாரும் திரண்ட இலங்கையைக் கட்டழித்த காகுத்தனை ஒழிய வேறு ஒரு தேவதையைத் தஞ்சமாக யுடையேன் அல்லேன்-காணிலும் உருப்பொலார்-திருச்சந்த விருத்தம் -69-என்கிறபடியே விரூப தேவதைகளை –அல்லாத தேவதைகளை -தேவதைகள் என்ன ஒண்ணாதவர் என்றுமாம் –அஸ்ரீகரான தேவதைகளை தேவதைகளாகத் தேறாதே கொள்ளுங்கோள்-

மிக்க இறை நிலையாவது
ஸுலப்யத்துக்கு அவ்வருகு இல்லாதபடி முடிந்த நிலமான ஆஸ்ரய பரதந்த்ரத்தோடே நிற்கிற
அர்ச்சாவதாரம் என்கை –-அத்தை ஆயிற்று
எளிவரும் இயல்வினன் –1-3-2- இத்யாதியில் சொன்னது – இது இறே ஈஸ்வர ஸ்வரூப யாதாத்ம்யம் –

எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில பல பிறப்பாய்
ஒளி வரு முழு நலம் முதலில கேடில வீடாம்
தெளிதரு நிலைமையது ஒழிவிலன் முழுவதும் இறையோன்
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே 
–1-3-2–பத்துடை அடியவர்க்கு -என்று -சோபாதிகம் அன்று இவன் எளிமை -ஜலத்துக்கு சைத்யம் போலே ஸ்வ பாவ சித்தம் எளிமையை இயல்வாக யுடையவன்-தன்னிடத்து அன்புடையார் மாட்டுத் தானும் அன்புள்ளவனாய் இருத்தல் ஒரு குணம் அன்று ஆதலின், அதனை மறுத்து, ஈண்டு ‘எளிவரும் இயல்வினன்’ என்கிறார். எல்லார்க்கும் ஒவ்வொரு காலத்தில் எளிமை கூடும்; இவனுக்கு எளிமை ஸ்வரூபம் என்பதனைத் தெரிவிப்பதற்கு ‘எளிவரும் இயல்வினன்’ என்கிறார் என்றபடி.

மெய்யாம் உயிர் நிலை–யாவது
உருவியந்த இந்நிலைமை –1-3-6-
எண் பெருக்கு அந்நலத்து ஒண் பொருள் –1-2-10-
உணர்வைப் பெற ஊர்ந்து–8-8-3-
நின்ற ஒன்றை –8-8-4-
உயிர் வீடு உடையான் –1-2-1- என்றும்
ப்ரக்ருதே பரனாய்
ஞான ஆனந்த ஸ்வரூபனாய்
ஞான குணகனாய்
நித்யனாய்
ஈஸ்வரனுக்கு சரீரவத் பரதந்த்ரனான படியைச் சொல்லுகிறது

உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உருவியந்த இந்நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறை நிலை உணர்வு வரிது உயிர்காள்
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே –1-3-6-தான் அணு பரிமாணனாய் இருக்க -ஸ்வ ஜ்ஞானத்தாலே பத்துத் திக்கையும் வியாபித்து இருக்கும்
வாலாக்ர சதபா கஸ்ய -இத்யாதி –-ஆகையாலே ஜடமான அசித்தில் காட்டில் வியந்து -வேறுபட்டு இருக்கும்-உருவு -என்று பத பேதமான போது -இயத்தல் -கடத்தலாய்-கடந்து இருக்கும் என்னவுமாம்
வேறுபாடு தான் பிரகாரித்வ பிரமாத்ருத்வ நியந்த்ருத்வங்களாலே-வின்நிலைமை -சந்நிஹிதனான ஆத்மாவினுடைய ஸ்த்திதி–உருவிற்காட்டில் வேறு பட்டிருக்கிற இந்நிலைமை. உண்டு – இந்த ஆத்துமாவினுடைய ஸ்வரூபம்.-இனி,உருவு இயந்த என்று பிரிக்கப்படும்போது, இயத்தல் – கடத்தலாய், உருவிற்காட்டில் கடந்திருக்கும் – வேறுபட்டிருக்கும் என்னுதல்.-ஆக, இரண்டாலும் அறிவு இல்லாத சரீரத்தைக் காட்டிலும் வேறுபட்டிருக்கிற ஆத்துமாவினுடைய ஸ்வரூபம் என்பது பொருளாம்.

எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே
 –1-2-10-எண் பெருக்கு-இத்தால் -ஜீவ அனந்யத்வத்தைச் சொல்கிறது
அந் நலத்து –
கல்யாணமான ஜ்ஞானாதி குணங்களை யுடைத்தாகை-நலத்து’ என்கிற இதனால், இவ்வஸ்துக்கள் தாம் ஞான குண ஆஸ்ரயமாக-இருக்கக் கடவது இறே பிரணவத்தில்-த்ருதீய பதமான மகாரத்தாலே ஞான குண ஆஸ்ரயமுமாய் ஞாதாவாயுமாய் இருக்கும் என்று சொல்லிற்று இறே
ஒண் பொருள்
ஸ்வயம் பிரகாசமாய் இருக்கை–அசைதன்யம் அசித்திக்கு ஸ்வ பாவமாய் நிற்கச் செய்தே வஸ்து தான் ஜடமுமாயும் அசம்ஞாவத்துமுமாயும் இருக்கும் இறே-அங்கண் அன்றிக்கே வஸ்து தான் ஸ்வஸ்மை ஸ்வயம் ப்ரகாசகமுமாய் தர்ம பூத ஞானமானதுவும் விஷயங்களைக் கிரஹித்து தன்னையும் அறிவிக்கக் கடவதாய் இருக்கும் அத்தைப் பற்றிச் சொல்கிறது –-இதனாலே இரண்டு அடை மொழிகளைக் கொடுத்து -நலம் -என்றும் ஒண் என்றும் அருளிச் செய்கிறார்
ஈறில
நித்தியமாய் இருக்கை –இப்படிப் பட்ட ஆத்மா வர்க்கத்தையும்–‘ஈறு இல’ என்பதனை ‘ஈறு இலவான ஒண்பொருள்’ என்றும், ‘ஈறு இலவான வண்புகழ்’ என்றும் அன்வயித்துக் கிடக்கும்-ஈறு இலவான ஒண் பொருளையும், ஈறு இலவான வண் புகழையும் உடையன் ஆகையாயிற்று ‘நாராயணன்’ யாகையாகிறது –பாவத்க மங்கல குணா ஹாய் நிதர்சனம் ந -( ‘தேவரீருடைய குணங்கள் அன்றோ எங்களுக்குஎடுத்துக்காட்டாய் இருக்கின்றன?’ )என்கிறபடியே, தன்னுடைய கல்யாண – நற்குணங்களைப் போன்று, இவ்வுயிர்களும் நித்தியமுமாய்ப் பிரகாரமுமாய் இருக்கும் என்பதனைத் தெரிவித்தபடி.-குணங்களை நிதர்சனமாகச் சொல்லிற்று –-ஆக, நித்தியரான த்ரிவித -மூவகைப்பட்ட சேதனரையும், நித்தியமான கல்யாண குணங்களையும் உடையவன் நாராயணன் என்பதாயிற்று. 
வண் புகழ் –கல்யாண குணங்களையும் யுடையனாய் இருக்கை
ஈறில -என்று குணங்களுக்கு விசேஷணம் ஆகவுமாம்
நாரணன் – நித்ய சித்த கல்யாண குணங்களோ பாதி ஜீவ சமூஹத்தையும் ஸ்வ அதீனமாக யுடையவன் ஆகையாலே -நாராயணன்
திண் கழல் சேரே —இப்படிப்பட்ட சம்பந்த ஜ்ஞானம் முன்னாகப் பற்றினாரை ஒருகாலும் விடாத திருவடிகளை ஆஸ்ரயி –இத் திருப் பாசுரத்தால் ஸ்ரீ திரு மந்திரத்தை அர்த்தத்தோடு அருளிச் செய்கிறார்.
ஸ்ரீ ஆழ்வான் இப்பாட்டளவும் வரப் பணித்து இப் பாட்டு இது, இத் திருப்பாசுரம் திருமந்திரத்தின் பொருள் என்பதற்கும்
மந்திரத்தின் பொருள் ஆசாரியன் பால் கேட்டல் வேண்டும் என்பதற்கும் ஐதிஹ்யம் ஆம்.
ஸ்ரீ ஆழ்வாருடைய முந்தின வார்த்தை,கௌரவத்திலே நோக்கு; பிந்தின வார்த்தை, இனிமையிலே நோக்கு.
வந்தவாறே ‘இத்தையும் உங்கள் ஆசிரியர் பக்கலிலே கேட்டுக் கொள்ளுங்கோள்,’ என்ன,
ஸ்ரீ பட்டரும் ஸ்ரீ சீராமப் பிள்ளையும் எழுந்து போகப் புக்கவாறே, அவர்களை அழைத்து,
‘இன்ன போது இன்னார் இருப்பார்; இன்னார் போவார் என்று தெரியாது; இருந்து கேளுங்கோள்,’ என்று
ஸ்ரீ திரு மந்திரத்தை உபதேசித்து, இப்பாட்டை நிர்வகித்து
‘இப்பாட்டை இதற்கு அர்த்தமாக நினைத்திருங்கோள்,’ என்று பணித்தார்.

உணர்விலும் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறல் பொருட்டு என்
உணர்வினுள்ளே யிருத்தினேன் அதுவுமவன தின்னருளே
உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பினவும் பழுதேயாம்
உணர்வைப் பெற ஊர்ந்திறவேறி யானும் தானாய் ஒழிந்தானே–8-8-3-–இவை ஹேயம் என்னும் அறிவை நான் பெறும்படி நடத்தி -தேரூர்ந்து என்னுமா போலே -இவை அபுருஷார்த்தம் என்னும் உணர்வு யுண்டு -மயர்வற்ற மதி -அத்தை நான் உடையேனாம் படி பண்ணி–சமர்த்தனான ராஜா பிச்சை எடுக்க -தானே தேரை ஒட்டிக் கொண்டு போவது போலே -அன்றிக்கே விஜயாவாகமான அர்ஜுனன் ரதம் -பார்த்த சாரதி ஒட்டிக் கொண்டு -சாரதி பரமாத்மா -ரதி நாம் -அவன் தானே ஒட்டி பீஷ்மாதிகள் சாமர்த்தியம் எல்லாம் பழுதாம் படி -அவை சாரம் அல்ப சாரம் என்று தள்ளினால் போலே –சரீரம் -ரதம் -ஏக தேசம் ஹிருதயம் -இருந்து ஞானத்தை நடத்தினான் –-இறவேறி–இற ஏறி -முடிய ஏற்றி என்னுதல் –-ப்ரக்ருதி ப்ராக்ருதங்கள் அபுருஷார்த்தம் என்னும் அளவே அன்றிக்கே முடிய போய் –ஞானானந்த ஸ்வரூபனாய் -நித்யனாய் -ஸ்வதஸ் ஸூ கியாய் இருக்கிற அளவும் செல்ல அறிவித்து-அவ்வளவிலும் பர்யவசியாதே -என்னைச் சொல்லும் சொல்லாலே தன்னைச் சொல்லலாம் படி தனக்கு பிரகார தயா சேஷம் என்னும் இடத்தைக் காட்டித் தந்தான் -அஹம் புத்தியும் அஹம் சப்தமும் தன்னளவும் செல்லும் படி பிரகார தைக வேஷமாய் இருக்கிறபடியைக் காட்டித் தந்தான் –தச் சப்தம் குண விசிஷ்ட வாசி யானாவோ பாதி -த்வம் -சப்தமும் -அசித் விசிஷ்ட ஜீவ அந்தர்யாமி யாம் அளவும் காட்டக் கடவது இறே –தத் -சப்தம் -குணங்களோடு கூடின இறைவனை காட்டுவது போன்று- த்வம் -சப்தமும் சரீரத்தோடு கூடின ஆத்மாவுக்குள்-அந்தர்யாமியாய் இருக்கிற சர்வேஸ்வரன் அளவும் செல்லக் கடவது அன்றோ –
தத் -அவன் — த்வம் -நீ — அஸி -ஆகிறாய்–போலே என்கிறார்–இரண்டும் ப்ரஹ்மம் -விசேஷணங்கள் தானே மாறி இருக்கும்-விசேஷ்யம் ஒன்றே -இது தானே சாமாநாதி கரண்யம் -விசிஷ்டாத்வைதம்

யானும் தானாய் ஒழிந்தானை யாதும் யவர்க்கும் முன்னோனை
தானும் சிவனும் பிரமனுமாகிப் பணைத்த தனி முதலை
தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்தித்து என்
ஊனில் உயிரில் உணர்வினில் நின்ற வொன்றை யுணர்ந்தேனே–8-8-4--என் சரீரத்திலும் பிராணனிலும் ஞானத்திலும் வ்யாப்தமான விலக்ஷணமான ஆத்மாவை தனக்கு சரீரமாக யுடையவனை அறியப் பெற்றேன் –நின்ற ஓன்று -என்கிற ஆத்ம ஸ்வரூப வாசியான சப்தம் ––இந்த ஜீவாத்மா ஸ்வரூபத்துக்கு பற்றுக் கோடாய் இதனை சரீரமாக உடைய-பரமாத்மா அளவும் சென்று அவனைக் காட்டுகிறது-
ஜீவாத்மா ஸ்வரூபத்தை காட்டும் அச் சொல் தன்னளவில் நிற்பது அல்லாமையால்-பகவானைக் காட்டும் அளவாய் அன்றோ இருப்பது–ஆஸ்ரயமான பிரகாரி பர்யந்த அபிதானம் பண்ணுகிறது -ஸ்வ நிஷ்டம் அல்லாமையாலே பகவத் பர்யந்தமாய் இறே இருப்பது -ஆத்மாவினுடைய போக்யத்தை யாகில் சொல்லுகிறது -காரணத்வம் சொல்லுகிறது என் என்னில் –விமுகரான அவர்களை கர்ம அனுகுணமாக ஸ்ருஷ்டித்து விட்டான் – ஐஸ்வர்ய காமரான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு ஐஸ்வர்யங்களைக் கொடுத்து அதிகாரங்களை நடத்திக் கொடுத்தான் –என்னளவில் இவ்வாத்மா தனக்கு அநந்யார்ஹமாய் போக்யமாய் இருக்கிறபடியை காட்டித் தந்தான் என்கிறார் -நின்றனர் இருந்தனர் பாசுரம் போலே இஸ் சாமானாதி கரண்யத்துக்கு விசேஷண அம்சமான போக்யதையில் தாத்பர்யம் -வையதி கரண்யத்துக்கும் நாட்டார் சொல்லுகிற சுத்த பேதம் அன்று பொருள் -சாமானாதி கரண்யத்துக்கும் ஸ்வரூப ஐக்கியம் அன்று பொருள் யாதும் யவர்க்கும் முன்னோனை–என்று தொடங்கி –என்-ஊனில் உயிரில் உணர்வினில்-நின்ற ஒன்றான – -யானும் தானாய் ஒழிந்தானை-யுணர்ந்தேனே-என்று அந்வயம் –

வீடுமின் முற்றவும் வீடு செய்து உம்முயிர்
வீடுடை யானிடை வீடு செய்ம்மினே
 –1-2-1-உம் உயிரை விடும் இடத்தில் உறவில்லா நிலத்தில் அன்றிக்கே உடையவன் பக்கலிலே இட இசையுங்கோள் –உம்முயிர் வீடுடை யானிடை -என்று அமைந்து இருக்க-வீடு செய்து-என்று அனுபாஷிக்கிறது=விடுகை தானே பிரயோஜனம் போந்து இருக்கை
ராஜ புத்திரன் சிறையில் கிடந்தால் முடி சூடுவதிலும் சிறை விடுகை தானே பிரயோஜனமாய் இருக்கும் இறே-உம்முயிர் வீடுடை யானிடை
1-உங்கள் ஆத்மாவையும் சரீரத்தையும் உடையவன் பக்கலிலே உங்கள் ஆத்மாவை தனக்கு சரீரமாக உடையவன் பக்கலிலே என்னுதல்
2-உங்கள் ஆத்மாவை விடும் இடத்தில் உடையவன் பக்கலிலே என்னுதல்
3-மோஷ ப்ரதன் பக்கலிலே என்னுதல்
வீடு-விடுகையை -சமர்ப்பிக்கையை
செய்ம்மினே-இசையுங்கோள் -அவன் நினைவு நித்தியமாய் இருக்க நீங்கள் இசையாமல் இறே இழந்து போந்தது –யமோ வைவஸ்வதோ ராஜா யச்தவைஷ ஹ்ருதி ச்த்தித-தே நசேதவிவா தஸ்தே மா கங்காம் மா குரூன்கம 

மெய்யாம் உயிர் என்கையாலே
ஸத்யஞ்ச–என்றும்
உள்ளதும் -1-2-4- -என்றும் –
மெய்ம்மையை —திருமாலை –38-என்றும் –
சொல்லுகையாலே ப்ரக்ருதி ஸ்வபா வத்திலும் காட்டில் ஆத்ய ஸ்வரூப நித்யத்வம் சொல்லிற்று –

அன்றிக்கே
மெய்யாம் உயிர் நிலை -என்கையாலே
யஸ்ய ஆத்மா சரீரம் -என்கிறபடி
உள்ளவதன் உரு –சரீர சரீரி பாவம் சொல்லிற்று ஆகவுமாம்

உயிர் நிலை யாவது
மெய்ம்மையை மிக உணர்ந்து —திருமாலை –38- என்கிறபடியே
தம் அடியார் அடியோங்கள் –3-7-10-என்றும்
தொண்டன் சடகோபன் –7-1-11-என்றும்
சிறு மா மானிசராய் என்னை ஆண்டார் -8-10-3- என்றும் –
ததீய பர்யந்தமான நிலை — இது இறே ஸ்வ ஸ்வரூப யாதாத்ம்யம் –

இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு
எல்லையில் அந்நலம் புல்கு பற்று அற்றே
 –1-2-4-நச்வரமான அசேதனத்தின் ஸ்வ பாவமும் –
ஏக ரூபனான சேதனன் படியும் இன்றிக்கே இருக்கும் அவன் ஸ்வ ரூபம்-இல்லது என்று துச்சத்வம் இத்யாத்வங்களை சொல்லுகிறது அன்று -நச்வரதையைச் சொல்லுகிறது-உள்ளது என்று அஸ்தித்வ மாத்ரத்தை சொல்லுகிறது அன்று -நித்யதையைச் சொல்லுகிறது-அவன் ஸ்வரூபம் தான் இருக்கும் படி என் என்னில் அசங்க்யேய கல்யாண குணங்களை யுடைத்தாய் இருக்கும் –-எல்லையில்லா அந்நலத்தை யுடைத்து -என்னுதல் எல்லையில்லா அந்நலம் -என்னுதல்

மேம் பொருள் போக விட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து
ஆம் பரிசறிந்து கொண்டு ஐம் புலன் அகத்தடக்கிக்
காம்பறத் தலை சிரைத்து உன் கடைத் தலை இருந்து வாழும்
சோம்பரை உகத்தி போலும் சூழ் புனல் அரங்கத்தானே–38-மெய் -என்கிறது ஆத்மாவை –மெய் -எனபது ஆத்மாவைக் காட்டுமோ -என்னில் —சத்யஞ்சா ந்ர்தஞ்ச சத்ய மவபவத் -என்கிற ஸ்ருதி சாயையால் அருளிச் செய்கிறார் – சத்ய சப்தம் அசத்திய வ்யாவர்த்தியை சொல்லுகிறது அன்று ஆத்ம ஸ்வரூபத்தின் நித்யதையைச் சொல்லுகிறதுமெய்ம்மை -என்று முழுச் சொல்லாய் – பிரத்யக் விஷயத்தைச் சொல்லுகிறது – கைம்மை பொய்ம்மை -என்னுமா போலே–ஆக-மெய்ம்மை -என்று –
மெய்யான தன்மை -என்றபடி –மிக உணர்ந்து –தேகமே ஆத்மா என்று இருக்கும் லோகாயதிகன் அளவன்றிக்கே –தேகாதிரிக்தமாய்-ஸூயமாய் இருக்கும் ஆத்மா என்னும் மீமாம்சகன் அளவன்றிக்கே
ஜ்ஞானம் ஆகந்துகம் -என்னும் வைசேஷிகன் அளவன்றிக்கே –1-ஸுவயம் பிரகாசனாய்-2-நித்யனாய்-3-ஜ்ஞான குணகனாய்-4-அணு வாய்-5-ஈஸ்வரனுக்கு அனன்யார்ஹ சேஷமாய்-6-அது தான் ததீய சேஷத்வ பர்யந்தமாக உணருகை – அதாவது ஆத்மாவை உள்ளபடி உணருகை –

அடி ஆர்ந்த வையம் உண்டு ஆலிலை அன்ன வசஞ்செயும்
படியாதும் இல் குழவிப்படி எந்தை பிரான் தனக்கு
அடியார் அடியார் தம்மடியார் அடியார் தமக்கு
அடியார் அடியார் தம்மடியார் அடியோங்களே.–3-7-10-
தமீஸ்வரனாம் பரமம் மஹேஸ்வரம் –‘அந்தப் பரம்பொருள் ஈசுவரர்களான சிவன் முதலியோர்களுக்கும் மேலான ஈசுவரன்’ என்கிறபடியே, சேஷித்வத்துக்கு அவனுக்கு அவ்வருகு இல்லாதா போலே-சேஷத்வத்துக்கு தமக்கு அவ்வருகு இல்லாத படி அதன் எல்லையில் நிற்கிறார்-தம்முடைய ருசிக்கு அவதி உண்டாய் மீண்டார் அல்லர்
சந்தஸ் ஸூ முடிய வேண்டுகையாலே மீண்டாராம் அத்தனை –ஐஸ்வரியத்தை ஆசைப்பட்டவர்கள் தம்மோடு ஒத்த இனத்தாரில் ஏற்றத்தை ஆசைப்பட்டு, க்ஷத்திரியர்க்கு மேலே ஆசைப்பட்டு, இந்திர பதத்தை ஆசைப்பட்டு, பிரஹ்மாவின் அளவில் ஆசைப்படுமாறு போன்று, இவரும் இவ்வருகில் எல்லையை ஆசைப்படுகிறார்.–இவ்வாறு ‘சண்டாள சண்டாளர்களாகிலும் – எம் அடிகளே’ என்று கூறுதல் உலக நடைக்கு மாறுகோடல் அன்றோ?’ எனின் ‘இப்படி வைஷ்ணவர்களை விரும்பினால் இது உலக மரியாதைக்குச் சேராதிருந்ததாகில், ஆழ்வார் விரும்பியதை நம்பினவர்களாகிறோம்,’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர். லௌகிக விருத்தம் ஆனாலும் ஆழ்வார் திரு உள்ளப்படி நடந்தோம் ஆவோம் என்றபடி –

கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க் குணங்கள் படைத்து அளித்துக் கெடுக்குமப்
புண்டரிகக் கொப்பூழ்ப் புனற்பள்ளி அப்பனுக்கே
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்லா யிரத்துள் இப்பத்தும்
கண்டு பாட வல்லார் வினை போம் கங்குலும் பகலே.–7-1-11—நான் எனக்கு என்னப் பண்ணும் இந்திரிய வஸ்யத்தைக்கு அஞ்சி சேஷத்வத்தின் எல்லையில் தாழ நிற்கிறார்–விஷயங்களையும் இந்திரியங்களையும் நினைத்த நெஞ்சாரல் தீர, சேஷத்துவத்தினுடைய எல்லை நிலத்திலே போய் நிற்கிறார்; தாபத்தாலே வருந்தினவன் மடுவிலே தாழ இழியுமாறு போலே.

உறுமோ பாவியேனுக்கு இவ்வுலக மூன்றுமுடன் நிறைய
சிறுமா மேனி நிமிர்ந்த எம் செந்தாமரைக் கண் திருக் குறளன்
நறு மா விரை நாள் மலரடிக் கீழ் புகுதல் அன்றி அவன் அடியார்
சிறுமா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே-8-10-3-
–ஸ்ரீ வாமனனுடைய ஸுந்தர்ய சேஷ்டிதாதிகளிலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்-ப்ரபாவங்களைப் பார்த்தால் -பரிச்சேதிக்கப் போகாதே -வடிவைப் பார்த்தால் நம்மோடு ஒக்கச் சொல்லலாம் படி இருக்கை –சர்வேஸ்வரன் மனுஷ்ய சஜாதீயனாய் முகம் கொடுத்து கொண்டு இருக்குமா போலே யாயிற்று இவர்களும் -சிறுமை பெருமை யாகிற விருத்த தர்ம த்வய சமாவேசம் ஏக வ்யக்தியில் கூடுமோ -என்று பட்டர் ஆழ்வானைக் கேட்க -நம்மோடு ஓக்க அன்ன பானாதிகள் தாரகம் என்னலாய்-பகவத் விஷயத்தில் அவகாஹனம் பார்த்தால் -நித்ய ஸூ ரிகளோடு ஒப்பார்கள் என்னலாம் படி இருக்கிற -ஆண்டான் -அருளாளப் பெருமாள் எம்பெருமானார் ஸ்ரீ கோவிந்த பெருமாளார்-இவர்கள் காண் சிறு மா மனுசர் ஆகிறார் -என்று பணித்தான் -என்னை அடிமை கொண்டவர்கள் –கண் வட்டத்தில் சஞ்சரியா நிற்க -அவர்களைத் தவிர்ந்து —நறு மா விரை நாள் மலரடிக் கீழ்—உறுமோ பாவியேனுக்கு–இவருடைய கண்ணி நுண் சிறுத் தாம்பு இருக்கிற படி -ஸ்ரீ மதுரகவிகளுக்கும் அடி இது இறே -பொய் நின்ற ஞானம் தொடங்கி முனியே நான்முகன் அளவும் அனுவர்த்தித்த விடத்து ஆழ்வார் தமக்கு பிரயோஜன ரூபமாக சொன்ன பயிலும் சுடர் ஒளி-நெடுமாற்கு அடிமையே தமக்கு தஞ்சமாக பற்றினார் -யான்யஸ்மாகம் ஸூ சரிதாநி -என்ன கடவது இறே –

தக்க நெறி–யாவது–அத்யந்த பரதந்த்ர ஸ்வரூபத்துக்கு அனுரூபமான உபாயம்
அல்லாதது
தகாத நெறியாய் இறே இருப்பது –-நெறி காட்டி நீக்குதியோ –பெரிய திரு –6-என்னக் கடவது இறே –
நீ யம்மா காட்டும் நெறி –பெரிய திரு –5-
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் –9-1-10-

நெறி காட்டி நீக்குதியோ நின் பால் கருமா
முறி மேனி காட்டுதியோ மேனாள் அறியோமை
என் செய்வான் எண்ணினாய் கண்ணனே ஈதுரையாய்
என் செய்தால் என் படோம் யாம் —6—நின் பால் நெறி காட்டுகை என்றும் நீக்குகை என்றும் பர்யாயம்
(தொழுதால் எழலாம் -தொழுகையும் எழுகையும் பர்யாயம் )நீ உன் கார்யத்தைச் செய் என்பது விட நினைத்தாரை இறே-ஏஷ பந்தா விதர்ப்பாணா மேஷ யாதி ஹி கோஸலவான் (பாரதம் )-என்று
தன்னுடனே கிடந்த தமயந்தியை உடுத்த புடவையில் ஒரு தலையை அறுத்து வழி இது –இங்கனே போ -என்று விட்டால் போலே இறே தன் பக்கலிலே ந்யஸ்த பரனானவனை உன் ஹிதத்துக்கு நீயே கடவை -என்கை–

பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ
மற்றையர் ஆவாரும் நீ -பேசில் -எற்றேயோ
மாய மா மாயவளை மாய முலை வாய் வைத்த
நீ யம்மா காட்டும் நெறி —-5––அயோக்கியன் என்று அகன்ற என்னுடைய விரோதத்தைத் தவிர்த்த படி
பூதனையால் வந்த இடரை நீக்கினால் போலே இறே –

கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து
மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்
திண்ண மா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்ம்மினோ
எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லையே–9-1-10—கிருஷ்ணனை ஒழிய வேறு சரணம் ஆவார் இல்லை என்னும் இவ்வர்த்தத்தை ஸ்தாபிக்கைக்காகவும் -அதுக்கு உறுப்பாக பூ பாரத்தை போக்கி அருளுகைக்கும் ஸ்ரீ மதுரையிலே வந்து திருவவதாரம் பண்ணினான் -உங்களுடைய ஆத்மாத்மீயங்கள் எல்லாம் சேஷியாயும் ஸூலபனானாயும் உள்ள அவன் திருவடிகளிலே சேஷத்வேன த்ருடமாக சமர்ப்பியுங்கோள் – உண்டேல்-என்கிறது ஸ்வ பஷத்தால் இல்லை -அவர்களுடைய அந்யதா பிரதிபத்தியாலே வந்தன உண்டாகில் என்கை –-எண்ண வேண்டா-அவனது நம்மதோ என்று விசாரிக்க வேண்டா -உங்களோடு உங்கள் உடைமையோடு வாசி யற அவனுக்கே சேஷம்
அதாவா-உங்களுக்கு சாத்யமானவை எல்லாம் சாதித்து தருவான் அவன் ஒழிய வேறு இல்லை -சமிதை பாதி சாவித்ரி பாதி யாய் உங்கள் தலையிலும் சிறிது கிடக்கிறது அன்று -அவனே நிரபேஷ உபாயம் -என்றுமாம் –தானே உபாயம் உபேயம் நிலை நிறுத்த ஸ்தாபிக்க அவதரித்து -பூ பாரம் நீக்கி -இது வந்த இடத்தில் செய்த -தர்ம சமஸ்தானம் அர்த்தமாக – நீங்கள் நினைத்து இருப்பதை திருத்தமாக அவன் இடம் சமர்ப்பியுங்கோள் –பலம் எதிர்பார்க்காமல் –கர்மம் செய்து -சர்வம் ஸ்ரீ கிருஷ்ணாப்பரணம் அஸ்து-
உபாய உபேய பாவம் நிலை நிறுத்தப் பட்டு நிற்க-தானே புகலிடம் -என்னும் உண்மையை-நிலை நிறுத்துவதற்காக அவதரித்த ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளைப் பற்றுமினோ
–என்கிறார்–உங்களுடைய பாரத்தில் நீங்கள் செய்ய வேண்டுமவை அனைத்தும்- உங்கள் தலையில் கிடக்கின்றன அல்ல –எல்லாம் அவன் பக்கலிலே கிடக்கின்றன–

சரீர ரக்ஷணம் சரீரிக்கே பரம் இறே
மாஸூச
என்னுடம்பில் அழுக்கை நானே போக்கிக் கொள்ளேனோ -என்று இறே அவன் வார்த்தை

எம்மை ஆளும் பரமரே –3-7-1- என்று ததீய சேஷத்வம் ஸ்வரூபம் ஆனால்
நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக் கொள்கின்ற நம்பர் –3-7-7-என்றவர்களே உபாயமாகவும் வேணும் இறே –
தக்க நெறி-ததீய உபாயமாகவுமாம் –-உபாய யாதாத்ம்யம் இதுவே இறே –

பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனைப்
பயில இனிய நம் பாற்கடற் சேர்ந்த பரமனைப்
பயிலும் திருவுடையார் எவரேலும் அவர் கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறு எம்மை ஆளும் பரமரே.–3-7-1--ஒன்றன் மேல் ஒன்றாக நிரந்தரமாய் வருகிற ஜென்மங்களில் அவகாசம் தோறும் என்னை அடிமை கொள்ளும் ஸ்வாமிகள்-நின் பன் மா மாய பல் பிறவி -என்று நிந்தித்த ஜன்மத்தையும் அனுமதி பண்ணுகிறார் ததீய சேஷத்வ ரசத்தாலே
பரமரே.– முன்பு அவனை பரமர் என்றீர் – இங்கே இவர்களை பரமர் என்னா நின் றீரே -என்ன
அனுபாவ்ய குண ஆதிக்யத்தாலே சொல்லிற்று அங்கு இங்கு அக் குணத்துக்கு தோற்றவர்களை சொல்லுகிறது தத் சம்பந்தம் ஒழிய சொல்லில் பகவத் சம்பந்தம் அற்றதாம் –எவரேலும்’ எனின், அமையாதோ? ‘பயிலுந் திருவுடையார்’ எனல் வேண்டுமோ?’ எனின், அந்தச் சம்பந்தம் ஒழியச் சொல்லில் பகவானுடைய சம்பந்தம் அற்றதாம்.-குண க்ருத தாஸ்யம் -அவன் இடம் பாகவதர்கள் பண்ண –நான் ஸ்வரூப பிரயுக்த தாஸ்யம் இவர்கள் பக்கல் என்கிறார்

சன்ம சன்மாந்தரம் காத்து அடியார்களைக் கொண்டு போய்த்
தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ்க் கொள்ளும் அப்பனைத்
தொன்மை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக் கொள்கின்ற நம்பரே.–3-7-7-ததீய சேஷத்வ பர்யந்தமான பகவத் சேஷத்வத்தை தந்து —பாகவதர்களுக்கு அடிமைப்பட்டிருத்தலை எல்லையாகவுடைய பகவானுக்கு அடிமைப்பட்டிருத்தல் ஆகிற செல்வத்தை உண்டாக்கி-–அத்தை யாவதாத்மபாவி நடத்தக் கடவ விச்வஸ நீயர் –நமக்கு அவன் திருவடிகளில் கைங்கரியத்தை உயிர் உள்ள வரையிலும் நடத்தக்கூடிய நம்பத்தக்கவர்கள்;--முதலிகள் என்றுமாம் –

தடையாகித் தொக்கி இயலும் ஊழ் வினை–யாவது-ஊழ்மை –பழமை
வினை -கர்மம்-விரோதியாய்த் திரண்டு வர்த்திக்கிற ப்ராரப்த கர்மம் -என்கை –
முன் செய்த முழு வினை –1-4-2-
பாரமாய பழ வினை –அமல –4-என்னக் கடவது இறே

பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் –திரு விருத்தம் –1-
அவித்யா கர்மா வாஸனா ருசி ப்ரக்ருதி சம்பந்தம்
பகவத் ஸ்வரூப திரோதாநகரி இறே தேகம்

என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள் நீரலிரே
முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே 1-4-2—அநாதி கால சஞ்சிதமான பாபத்தாலே -பாபம் சாவதியாதல் -பாபம் பண்ணின காலம் சாவதி யாதனால் அன்றோ என் கையில் என்னைக் காட்டித் தருவது-–அவற்றுள் ஏதேனும் அகஞ்சுரிப்பட்டது உண்டோ? ‘இன்று’ என்றபடி,
அதாவது, ‘காலம் ஒரு வரையறைக்குட் பட்டிருந்து, அக்காலங்களில் நான் செய்து போந்த பாவங்களும்
ஒரு வரையறைக்குட் பட்டிருப்பின் அன்றோ என்னால் போக்கிக் கொள்ள முடியும்?’ என்பதாம்.
‘ஆயின், அத்தகைய தீவினைகளை யுடைய நீர் இறைவனைச் சார்தல் எவ்வாறு முடியும்?’ எனின்,
இறைவனால் அத் தீவினைகளைப் போக்க ஒண்ணாது ஒழியின் அன்றோ நான் இழக்க வேண்டுவது?
இங்கே ‘ஒரு முழுக்காலும் இரண்டு முழுக்காலும் போகாது காண்
–இதிகாசம் -பட்டர் திருக் கோட்டியூரிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே -தெற்கு ஆழ்வானும்-கோளரி ஆழ்வானும் என்று இருண்டு திருப்பதியார் உண்டு-கோளரி ஆழ்வான் சதாசார பரனாய் இருக்கும் -தெற்கு ஆழ்வான் மேல் எழத் திரியும்-ஒரு விசேஷ திவசத்திலே இருவரும் சேர்ந்த அளவிலே கோளரி ஆழ்வான் தெற்கு ஆழ்வானை இன்று ஆகிலும் ஒரு முழுக்கு இட மாட்டாயோ -என்ன –என்னுடைய பாபம் தெற்கு ஆழ்வார் கையில் திரு ஆழி யாலே போக்கப் போமது ஒழிய ஓர் இரண்டு முழுக்கால் போம் அதன்று காண் என்ன அத்தைக் கேட்டு இவனை மேல் எழ விசாரித்தோமே-என்று வித்தராய் அருளினார் பட்டர் –

பாரமாய பழ வினை பற்றறுத்து என்னைத் தன்
வாரமாக்கி வைத்தான் வைத்த தன்றி யென்னுள் புகுந்தான்
கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத் தம்மான் திரு
ஆர மார்பதன்றோ அடியேனை யாட் கொண்டதே —–5-சர்வ சக்தியான சர்வேஸ்வரனே தள்ளும் இடத்திலும் ஒரு நிலை நின்று தள்ள வேண்டும்படி யிருக்கை –-சம்ஹரிப்பதும் நரகத்திலேயாய் -ஸ்ருஷ்டிப்பதும் நரகத்திலேயாய் இருக்கை-காலம் அநாதி –-ஆத்மாவோ நித்யன்-அசித் சம்சர்க்கமும் உண்டு இறே –-இக் காலம் எல்லாம் கூடக் கூடு பூரித்தாதாய் இருக்கும் இறே – சர்வ பாபேப்யோ மோஷ யிஷ்யாமி -என்று அவன் தானே தள்ள வேண்டும்படி இருக்கை-வானக் கோனை கவி சொல்ல -வல்லேன் என்கிறபடியே – மலக்கு நா வுடைய நம்மாழ்வாரும் வகை சொல்ல மாட்டாதே –தொன் மா வல் வினைத் தொடர் -என்று திரளச் சொன்னாப் போலே -இவரும் பாரமாய -என்கிறார் –கால தத்வம் உள்ளதனையும் ப்ராயாச்சித்தம் பண்ணினாலும் கழிக்க ஒண்ணாத படி உபசிதமாய்க் கொண்டு அநாதி காலம் நடக்கிற சம்சாரிக கர்ம கலாபத்தை கர்மத்தின் உடைய கனத்தினாலே அல்ப சக்தனான தான் சமபாதித்ததாய் இருக்கச் செய்தேயும் –-வகை சொல்லப் போகாதபடி இறே இருப்பது –சர்வ சக்தியான அவன் போக்கும் போதும் வகையில் போக்கப் போகாது -தொகையில் போக்கும் -இத்தனை வகையான தான் சதுர்வித தேக ப்ரேவேசத்துக்கு ஹேதுவாய் இருப்பனவும் – பரிக்ரஹ தேகத்தில் பிறக்கிற ருசிக்கு அடியாய் இருப்பனவும் – விஷய ப்ராவண்யத்துக்கு அடியாய் இருப்பனவும் – தேவதாந்தரங்களுக்கு உத்தேச்யம் என்று இருக்கும் புத்திக்கு அடியாய் இருப்பனவும் – ஈஸ்வரனைப் பற்றி நிற்க பிரயோஜனாந்தரன்களைப் கொண்டு அகலுகைக்கு ஹேதுவாய் இருப்பனவுமாக ஒரு சுமையாய் இறே இருப்பது-அதுக்கு மேலே விஹித அனுஷ்டானத்தாலும் நிஷித்த அசரணத்தாலும் பாப கர்மாக்களோட்டை சஹவாசத்தாலுமாக த்ரி விதமாய் இறே இருப்பது – அவை தான் மானஸ வாசிக காயிக ரூபேண த்ரி விதமாய் இறே இருப்பது –யத் ப்ரஹ்ம கல்ப நியுதா நுபவேப்ய நாச்யம் தத் கில்பிஷம் ஸ்ருஜதி ஜந்துரிஹ ஷணார்த்தே-என்கிறபடியே பல அநந்தயத்தை -பாரமாய -என்கிறதாகவுமாம் –

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந் நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே –1–-அநாத்மநி ஆத்ம புத்தி -அஹங்காரம்–அந்யதா ஞானம்–பிரகிருதி ப்ராக்ருதங்களைப் பற்றிய ஞானம்-தேகத்துடன் -அனுபந்தி -சம்பந்தி -புத்ராதிகள் பற்றிய ஞானம்-ஸ்வர்க்காதிகள் -ஆத்ம அனுபவம் என்று தப்பாக புரிதலும்-அஸ் வேஸ்ய புத்தியையும் –பொய்யான விஷயங்களைப் பற்றி நிற்கையாலே-நஸ்வரம் விஷயமாகக் கொண்ட அறிவு -எப்பொழுதும் மாறும் அசேதனத்தைப் பற்றிய ஞானம்-த்யாஜ்யம் என்று அறிய வேண்டும்–அநித்யமானதை நித்யம் என்றும்-அபோக்ய மானதை போக்யம் என்றும் -அஸ்திரமானதை ஸ்திரம் என்றும் -அல்பமானதை நிறைவாக என்றும்–நாஸ்தி -என்றால் அஸ்தி யாக இருந்து நாஸ்தி ஆவது-தத்வ தர்சிகள் நிர்ணயம் அசத்துக்கு பாவம் வராது -சத்துக்கு அபாவம் வராது –இப்படி யதார்த்த -ஒருபடிப்பட உள்ளதால் –உத்பத்தி விநாசாதி யோகத்தாலே அஸத்ய ஸப்த வாஸ்யமான அசேதன விஷயத்தில் ஆத்ம ஞானமும்–ஸ்வரூப அந்யதா ஞானம் -விபரீத ஞானம் -தேஹாத்ம அபிமானம்-ஸ்வ பாவ அந்யதா ஞானம் -அந்யதா ஞானம் -பரதந்த்ரனான தன்னை ஸ்வ தந்த்ரனாக நினைக்கை-உத்தேசியத்தை ஒழிந்த அர்த்த ஞானங்கள் அனைத்தும் அஞ்ஞானம்-காண்கின்ற ப்ரக்ருதி பொய் என்னலாமோ என்னில்-சூன்யவாதியைப் போலேயாய் என்கிறது அன்று-மாயாவாதி போலே துச்சம் என்கிறது அன்று-ஆத்மாவைப் போலே ஒருபடிப் பட்டு இராமையாலே-ஆத்மா ஏக  ரூபமாய் இருக்கும் இறே-அநாத்மன்யாத்மா புத்தியையும் -சொல்லுகிறது – ஜடமாய் இருக்கும் தனக்கு ஞானமும் பாரீர்-பரிணாமம் இல்லாத ஆத்மா பரமாத்மா பற்றிய ஞானமே ஸத்யம் -அதுவே அஸ்தி -ஷட் பாவ விகாரம்-அஸ்தி பிறக்கிறது மாறுதல் வளர்ந்து தேய்ந்து முடிதல்–சம்சார பிரக்ருதியைப் பொய் என்கிறது –நின்ற
இது தான் என்றும் ஒக்க நிலை நின்ற படி -அழுந்தின படி –ஞானமும்-ஜடமாய் இருப்பதுக்கு தனக்கு – ஞானம் என்பது பாரீர் -இதுக்கு ஞானம் என்ற பெயரா-தேஹாத்ம அபிமானம் அஞ்ஞானம் தானேபொல்லா ஒழுக்கும்-ஞான கார்யமான விருத்தம் அனுஷ்டானம் உண்டாகில்–ஞானம் இல்லையாகில் நல்ல அனுஷ்டானமும் இருக்காதே–அஹம் சர்வம் கரிஷ்யாமி–குருஷ்வமாம் அநு சரம் என்று இருக்கும் ஸ்வரூப அநு ரூபமான வ்ருத்தம் இன்றியே கண்டது அடைய அஹம் என்று இருக்கை-பொய் நின்ற ஞான அனுகுணமான பர த்ரவ்ய அபஹாராதி சாரித்ரமும்  -(துராசாரங்கள் என்றபடி )அழுக்கு உடம்பும் –
இதுக்கு எல்லாம் அடியான ஹேயமான சரீரமும்–மகா பாரதம் எல்லாம் கூளமும் பலாப்பிசினும் போலே
பிரகிருதி புருஷ விவேகம் பண்ண மாட்டிற்று இல்லை-இவர் மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் ஆகையாலே மூன்று பதத்தாலே பிரகிருதி புருஷ விவேகம் பண்ணி அருளினார்இந் நின்ற நீர்மை –
இப்படி நிலை நின்ற ஸ்வபாவம் –உதிரக்  கூறை காட்டுகிறார் -என்று அம்மாள்–ஏஹீ பஸ்ய சரீராணி -ஸ்ரீ தண்ட காரண்யத்தில் ருஷிகள் பெருமாளுக்கு ராஷசர் தின்ற உடம்பை காட்டினால் போலே-
பிரகிருதி தின்ற ஆத்மாவைக் காட்டுகிறார் -ஆளவந்தார்
ஆழ்வார்  பிறர் படியை காட்டுகிறார்-அம்மாள் நிர்வாஹம்-தம் படியைக் காட்டுகிறார்  -ஆளவந்தார் நிர்வாஹம்இது ஒரு வெட்டு -பொய் நின்ற ஞானம்-இது ஒரு வெட்டு – பொல்லா  ஒழுக்கம் இது ஒரு வெட்டு -அழுக்கு உடம்பு–ஆச்சார்யன் உபதேசத்துக்கும் கேளாதே பிரமாணங்களாலும் பேதிக்க ஒண்ணாதே இதுவே ஸ்வரூபம் என்னலாம் படி இருக்கை–தேவரீர் திருவடிகளுக்கு இட்டுப் பிறந்த இஜ் ஜன்மம் தப்பாமே பட்டேன் இது என்று கருத்து –இவற்றிலே நிலை நின்று போந்த வாஸனா ருசிகள் ஆகிற ஸ்வ பாவ விசேஷத்தை
(நின்ற நீர்மை விட்டுப் பிரியாத ஸ்வ பாவங்கள் )-அநாதி காலம் பரம புருஷார்த்தத்தை இழந்து சம்சாரத்தில் அகப்பட்டுக் கிடந்த இதில் அநு தாபம் தோற்றும் படி(நீர்மை )

விரோதி ஸ்வரூப யாதாத்ம்யம்
அஹங்கார –மமகாரங்கள்
யானே என்னை அறிய கிலாத யானே என் தனதே என்று இருந்தேன் –2-9-9-
நீர் நுமது என்ற இவை வேர் முதல் மாய்த்து –1-2-3-
பீஜம் ஏதத் த்விதா ஸ்திதம்
முன்னமே –திரு விருத்தம் –95-
என்னும்படி அநாதியாய்ப் போருவது –

யானே என்னை யறியகிலாதே
யானே என்தனதே என்று இருந்தேன்

யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –2-9-9—என் இழவு பகவத் க்ருதமல்ல –-மத் பாபமே -பரதன் -மந்தரை கைகேயி தயரதன் கௌசல்யை பெருமாள் இல்லை தானே என்றால் போலே-க்யாத-பிராஜ்ஞ-சத் வ்ருத்த -சங்கே -மத் பாப சம்ஷபயாத் -இழந்தேன் சீதை -என்றால் போலே-அவனுக்கு கலக்கம் இல்லாமையால் -தன்னைத் தருகைக்கு எதிர் சூழல் புக்கு திரிய -நான் என்னை முடிய சூழ்த்துக் கொண்டேன்–ராஜ புத்ரன் வேடன் கையிலே அகப்பட்டு தன்னை வேடனாக பிரதிபத்தி பண்ணுமா போலே -சர்வேஸ்வரனுக்கு பிரகார பூதனான என்னை அறியாதே–தேஹாத்ம அபிமானத்தாலே என்னை அவனுக்கு பிரகாரம் என்று அறிந்திலேன்–ஈஸ்வரோஹம் என்று இருந்தேன்-இவன் நான் என்றால் ஈஸ்வரனுக்கு கிட்ட அரிதாய் இறே இருப்பது–நானும் எனக்கு உரியேன் இன்றிக்கே இருக்க எனக்கு ஒரு உடைமையும் உண்டாக நினைத்து இருந்தேன்-தேகத்தை ஆத்மாவாகவும் -ஈஸ்வர விபூதியை என் உடைமை யாகவும் இந்த விபரீத அஞ்ஞானமே யாய் இருந்தேன்-இப்படி ஸ்வரூபம் நசித்துக் கிடைக்க அனுதாபம் இன்றிக்கே க்ருதக்ருத்யனாய் இருந்தேன்-அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று இருக்கை பிராப்தமாய் இருக்க ஒரு கார்யம் இல்லாதாரைப் போலே இருந்தேன்-இப்படி நெடுநாள் போருகிற இடத்திலே ஒரு நாள் அனுதாபம் பிறக்கவுமாம் இறே – அது அன்றிக்கே க்ருதக்ருத்யனாய் நிர்ப்பரனாய் –இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே -இருந்தேன்தீ வினையேன் வாளா விருந்தேன்-ஒரு கார்யம் இல்லாதாரைப் போலே கை ஒழிந்து இருந்தேன் –-முடிந்தேன் -என்றால் போலே இருக்கிறது இறே-ஒரு நாள் இழவே போந்திருக்க அநாதி காலம் இழந்து போந்தேன் 

நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து இறை
சேர் மின் உயிர்க்கு அதன் நேர் நிறையில்லே–1-2-3—அனர்த்த கரமான அஹங்கார மமகாரங்களை
நான் என்னது -என்னும் அர்த்தத்தை பிறர்க்கு உபதேசிக்கப் புக்கால் -நீங்கள் என்றும் உங்களது என்றும் இறே சொல்லுவது-அதாகிறது -அனாத்மயாத்மா புத்தியும் அஸ்வே ஸ்வ த்வய புத்தியும்
நான் என்னது — என்னில் நா வேம் இறேஈண்டு அதிகாரம் பிறர்க்கு உபதேசிக்கும் முன்னிலை இடமாதலின், ‘யான், எனது’ என்னும் தன்மைப் பெயர்களை ‘நீர் நுமது’ என முன்னிலையாக அருளிச் செய்கிறார்.-அன்றிக்கே – செருக்கினைப் புலப்படுத்தும் அச் சொற்களைத் தாம் தம் திருவாயால் கூறுதற்கு, அஞ்சி‘நீர், நுமது’ என்கிறார் எனலுமாம்; ‘கூறின், நாக்கு வேம்,’ என்பது கருத்து.–நன்று ‘என் உடைமை’ என்னுமது வேணுமாகில் தவிருகிறேன்; ‘நான்’ என்னுமது தவிரும்படி என்?’ என்னில்,
இவன் ‘அஹம்’ என்றால், இராவணன் முதலியோர் ‘நான்’ என்றாற்போன்று பிறருடைய நானைத் தவிர்த்துக் கொண்டு அன்றே இருப்பது? சரீரத்தில் அஹம் புத்தி பண்ணிப் போருமது தவிர வேணுமே!-னாத்மன்யாத்ம புத்திர்யா அச்வேஸ் வமிதி யாமினி அவித்யாதரு சம்பூதி பீஜமேதத் த்விதாஸ்திதம்-என்று (‘உயிர் அல்லாத சரீரத்தில் உயிர் என்ற புத்தியும், தன்னைச் சார்ந்தன அல்லாதவைகளில் தன்னுடையவை என்னும் புத்தியும், அறிவின்மையாகிற மரம் தோன்றுவதற்கு இரண்டு விதைகளாய் இருக்கின்றன’, ) என்று சம்சார பீஜமும் —அச்யுதாஹன் த்வாச்மீதி சைவ சம்சார பேஜஷம் –‘அடியார்களை நழுவ விடாத அச்சுதனே! நான் உனக்கு அடியவனாய் இருக்கிறேன் என்று நினைக்கும் அறிவானது, பிறப்பினை மாற்றுதற்கு மருந்தாக இருக்கின்றது’,_)என்று பரிஹாரமும் –-சொல்லிற்று இறே –இவற்றை சவாசனமாகப் போக்கி-இது அக்னி நா சிஞ்சேத்-போலே துஷ்கரம்-இவை நேராக விடும் போது பகவத் விஷயத்தைப் பற்றி விட வேணும்-அவனைப் பற்றும் போது இவற்றை விட்டு அல்லது பற்ற ஒண்ணாது-ஆகையாலே இதரே தராஸ் ராயக்ரச்தம்-ஆனால் இதற்குப் பொருள் என் -என்னில் -ஆச்சார்ய சேவையாலும் சாஸ்திர அப்யாசத்தாலும் இவை அபுருஷார்த்தம் என்று அத்யவசிக்கை-இரண்டு வ்ருஷம் சேர நின்றால்-ஒன்றிலே குட்டமிட்டுப் பெருங்காயத்தை வைத்தால் மற்றையது நிற்க இது க்ரமத்தால்-உலர்ந்து போமா போலே -இந்த ஜ்ஞானம் பிறந்தால் இவை ஸ்வ கார்யம் செய்ய மாட்டாது –பீஜான் யக் ந்யுபதக்தானி -இத்யாதி-ரஷகன் அவசர ப்ரதீஷனாய் இருக்க இவன் பக்கலிலே விலக்காமை யுண்டானால் விரோதி போகைக்கு தட்டில்லை என்கை –ஆதலால்,ரக்ஷகனானவன் – அளிக்குமவன்-அவசர பிரதீஷகனாக – ‘எப்போது பாதுகாப்போம்’ என்று சமயத்தை எதிர் பார்த்துக் கொண்டிருக்க, இவன் பக்கல் விலக்காமை உண்டானால் விரோதி போகத் தட்டு இல்லை என்கை.

யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்
மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே  
-அதனால்
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்
மாதாவினைப் பிதுவை திரு மாலை வணங்குவனே – -95–யாதேனும் ஓர் ஆக்கையில் புக்கு –ஏதேனும் ஒரு சரீரத்தில் பிரவேசித்து –அது தண்ணிய ஸூ கர-ஜன்மாவில் (ஸூ கர -பன்றியாய் )ஜனித்தாலும் –மம அயம் தேக -என்று அதிலேயே அபிமானித்து – அங்கே-உண்டானவத்றோடு சில சம்பந்த விசேஷங்களும் –அவை தன்னை விட மாட்டாமையாலேயாய்-போரா நிற்கும் ஆயிற்று –ஆக்கை -என்கையாலே-உபசயாத்மகம் என்று தோற்றுகிறது-(தேகம் வளர்ந்து -சரீரம் தேய்ந்து )புக்கு –சேதனனுக்கு அசித் சம்சர்க்கம்  ஸ்வதா உள்ளது ஓன்று அன்று –-கர்ம நிபந்தனம் என்கை –அங்கு ஆப்புண்டும் –-கர்ம வாசனையாய்- ருசி வாசனையாய் -அதிலே பத்தனாய் இருக்கும் –இது தண்ணிது என்று ஆசார்ய உபதேசாதிகளாலும் –சாஸ்திர வாசனையாலும் – பிரத்யஷத்தாலும்-அறியா நிற்கச் செய்தே –இத்தை விடில் செய்வது என் என்று துணுக் துணுக் என்னா நிற்கும் –ஆப்புண்டும் –சிநேகத்தைப் பண்ணியும் –ஆப்பு அவிழ்ந்தும் –கர்மம் அடியாக வந்தது என்று அறியாதே –அவன் தான் இதிலே இலை அகலப் படுத்தா-நிற்கும் –கர்ம ஷயம்   வந்தவாறே=அது தான் குலைந்து கொடு நிற்கும் இறே –மூதாவியில் –இத்தால் பழைமையை நினைக்கிறது-ஆவி -என்று பிராணனாய் –அசித் விசேஷமாய் பிராணனாய் இருக்கையாலே-இப்போது ஸூஷ்ம சரீரத்தை ஆவி என்கிறது –இது தன்னை பிரகிருதி கார்யம் என்பாரும் உண்டு –பிரகிருதி அம்சம் என்பாரும் உண்டு –இது தான் மோஷ தசை அளவும் அனுவர்த்திக்குமது —சேதனனுடைய கமந ஆகமநாதிகளுக்கும் உடலாய் இருக்கும் –தடுமாறும் –பஞ்சாக்னி வித்தையில் சொல்லுகிறபடியே மேகங்களில் புக்கு –-வர்ஷ முகத்தாலே-பூமியிலே பதித்து –அந்த முகத்தாலே புருஷன் பக்கலிலே அந்வயித்து –சுக்ல சோணித ரூபத்தாலே -ஸ்த்ரி பக்கலிலே-சங்க்ரமித்து – இப்படி தடுமாற்றமாய் இருப்பது –இச் சேதனனுக்கு புக்க புக்க இடம் எங்கும் தடு மாற்றமே உள்ளது –அத்தை தான் அறிந்த இடமும் அறியாத இடமுமாய் இருக்கும் –உயிர் –ஜ்ஞான ஆனந்த லஷணமாய்- நித்தியமான வஸ்து கிடீர் இப்படி படுகிறது –இப்படி தடுமாறி சம்ஸரிக்கிறது என்று தொடங்கி என்றால் –முன்னமே –அநாதியாய் போருகிறது ஆயிற்று –அதனால் –அந்த வாசனையே உபாத்யாயராக –முன்னமே யாகையாலே –ஆழ்வார்தாமே திருவாய்மொழியில்
சோர்ந்தே புகல்கொடாச் சுடரை யரக்கியை மூக்கீர்ந்தாயை, அடியேனடைந்தேன் முதல் முன்னமே’ என்றருளிச் செய்கிறார்; அசித் ஸம்பந்தத்தின் அநாதித்வத்தைத் தெரிவிக்கிற அப்பாசுரத்தில் ‘முதல் முன்னமே’ என்றதையும் குறிக்கொள்க.‘எதந்நிமித்தம் முன்னமே முதலமுன்னமேயான அசிதயநாநாதி ஸம்பந்தங்கள்” என்ற ஆசார்ய ஹ்ருதய ஸூக்தியும் ஸ்மரிப்பது.

இது தான் அனுகூலர் பக்கல் அநாதாரத்தைப் பிறப்பிக்குமதாய் இருக்கும் – அது தான் தேஹ ஆத்ம பிரம மூலமாகையாலே ஸ்ரீ வைஷ்ணவர்கள் திறத்தில் ஜென்ம நிரூபணத்தில் மூட்டி -அநர்த்தத்திலே பர்யவசிக்கும் – அதிலே ஓன்று அவர்கள் பக்கல் ஜென்ம நிரூபணம் –ஸ்ரீ வசன பூஷணம் –195-என்றார் இறே –
மன் பக்கல் சேவிப்பார்க்கு அன்பு செய்வார் சென்ம நிரூபணமும் ஆவிக்கு நேரே அழுக்கு -ஸப்த காதை –5- என்று ஆயிற்று அதன் குரூரம் இருப்பது –
அமரவோரங்கம் இத்யாதி –திருமாலை

அவற்றில் ஓன்று தான் அவர்கள் பக்கல் ஜன்ம நிரூபணம் –195-ஜன்ம நிரூபணம் ஆவது நிக்ருஷ்ட குலங்களிலே யவதீர்ணரான பாகவதர்களை பகவதீயத்வ பிரயுக்தமான மஹாத்ம்யத்தைப் பாராதே நிகர்ஷ புத்யா தத்தம் ஜன்மங்களை நிரூபிக்கை-மீனாகவும் ஆமையாகவும் வராஹமாகவும் -அவதாரம் போலே இந்த பாகவதரும் –எக் குற்றவாளர் -ஏது பிறப்பு ஏது இயல்வு —எக் குலத்தார் — அக் குற்றம் அப் பிறப்பே அவ் வியல்வே -நம்மை ஆள் கொள்ளுமே –ராமானுஜர் திருவடிகளைப் பற்றி பின்பு இவை இருக்காதே –

என் பக்கல் ஓதினார் இன்னார் எனும் இயலவும்
என் பக்கல் நன்மை எனும் இயல்வும் –மன் பக்கல்
சேவிப்பார்க்கு அன்புடையோர் சன்ம நிரூபணமும்
ஆவிக்கு நேரே அழுக்கு
—-5-பதிம் விச்வச்ய-என்றும் ஜகத் பதீம் -என்றும் நாரணன் முழு ஏழு உலகுக்கும் நாதன் -என்றும் இறைவா -என்றும் சொல்லுகிறபடியே சர்வ ஸ்வாமியான எம்பெருமான் பக்கலிலே
சிநேக பூர்வ அநு த்யானம் பக்திரித்யபி தீயதே பஜ இத்யேஷ தாதுர் வை சேவாயாம் பரி கீர்த்தித –
என்னும்படியாக சிநேக பூர்வகமாக நித்ய சேவை பண்ணுமவர்களுக்கு நடையா வுடைத் திரு நாரணன் தொண்டர் தொண்டர் -என்கிறபடியே பரம ஸ்நேஹிகளாய்க் கொண்டு அசேஷ சேஷ வ்ருத்திகளிலும் அந்விதராய் சஹஜ தாஸ்யத்தை யுடைய ராய் இருந்துள்ள ஸ்ரீ வைஷ்ணவர்கள் இடத்திலே வைஷ்ணவோத்பததி சிந்தனம் மாத்ரு யோநி பரீஷா யாஸ்துல்ய மா ஹூர்மநீஷிண-என்று
மாத்ரு யோநி பரிஷை யோடு ஒக்க சாஸ்த்ரங்களில் சொல்லப் படுகிற ஜன்ம நிரூபணமும்-ஜன்ம நிரூபணம் ஆவது –ஜாதி நிரூபணம்-இது குற்றத்துக்கும் இழவுக்கும் உப லஷணம்–பகவத் பக்தி தீபாக் நிதக்த துர்ஜாதி கில்பிஷா -இத்யாதி களாலே தத் ப்ரபாவத்தாலே விச்வாமித்ரனுக்கு ஷத்ரியத்வம் நிவ்ருத்தமானாப் போலே பகவத் பிரசாதத்தாலே துர்ஜாதி நிவ்ருத்தமாம் என்று சொல்லுகையாலே
அவர்கள் பக்கல் ஜன்ம நிரூபணம் -அதஸ்மிம்ச்தத் புத்தியாய் இறே இருப்பது –அன்புடையோர்
நிதி யுடையோர் -என்னுமா போலே இதுக்கு மேற் பட்டு இருப்பதோர் சம்பத்து இல்லையே அன்புடையோர் சன்ம நிரூபணம் ஆவிக்கு நேரே அழுக்கு- மற்றையார் இடத்தில் ஜன்ம நிரூபணம்
யதா வஸ்த்தித்த வஸ்து விஷயம் ஆகையாலே அழுக்கு அன்று போலே காணும் –அஞ்சு பொருளும் அளித்தவன் பால் அன்பிலாமை நித்தியமான ஆத்மவஸ்துவுக்கு நேர் கொடு நேர் நாசகம் ஆனால் போலே என் பக்கல் ஓதினார் இன்னார் எனும் இயல்வு -முதலான இம் மூன்றும் ஆத்மாவுக்கு நேர் கொடு நேர் நாசகம்-

அமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதித்
தமர்களில் தலைவராய சாதி அந்தணர்கள் ஏலும்
நுமர்களைப் பழிப்பர் ஆகில் நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே
அவர்கள் தாம் புலையர் போலும் அரங்க மா நகர் உளானே
–43–நுமர்களைப் – தேவரீர் அபிமானத்துக்கு உள்ளே அடங்கி பிராப்ய பிராபகங்கள் தேவரீரே என்று அத்யவசித்து – உடையவனே உடைமைக்கு நிர்வாஹகன் – உடைமையை விநியோகம் கொள்ளுவானும் அவனே என்று இருக்குமவர்களை –பழிப்பர் ஆகில்-பகவத் பிரபாவத்தை அஹங்காரத்தாலே விஸ்மரித்து – அவர்கள் உடைய ஜன்ம மாத்ரத்தையே புத்தி பண்ணி – தங்களைக் காட்டில் குறைய நினைப்பார்கள் ஆகில் –பழிப்பாகிறது -குற்றம் –-அதாகிறது-பகவத் அபசாரங்களில் தலையான அபசாரம் – உகந்து அருளின நிலங்களிலே த்ரவ்ய மாத்ரத்தையே புத்தி பண்ணி குறைய நினைக்குமா போலே வைஷ்ணவர்கள் ஜன்ம மாத்ரத்தையே புத்தி பண்ணி குறைய நினைக்கை-பழிப்பர் ஆகில்– கொண்டாடுகையே யாய்த்து பிராப்தம் – அஹங்காரம் ஆகிற ஒரு முசலவன் -பேய்-ஏறி பிரமித்த போது இறே-அவர்களைக் குறைய நினைப்பது –இப்படி கூடிற்று ஆகில் –நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே –காலாந்தரே தேசாந்தரே தேகாந்தரே -அன்று அந்த ஷணத்திலே அவ்விடத்திலே–புனிதம் அன்றே -என்ற நன்மையாலே
தீமை வரும் இடத்தில் விளம்பம் இல்லை –அவர்கள் தாம் புலையர் போலும் – அத் தேகத்தோடு சண்டாளர்கள் ஆவார்கள் – த்ரிசங்குக்கு ப்ராஹ்மன சாபத்தாலே கழுத்திலே வீர சங்கிலி தானே வாரானாப் போலே இவனுக்கும் மார்வில் இட்ட பூணூல் தானே வாராய் விடும் –தாம் புலையர் –
கீழ் சொன்ன ஜன்மாதிகளில் உத்கர்ஷங்கள் அபிமான ஹேது வாகையாலே அவை தானே இவர்களுக்கு அநர்த்த ஹேது வாய் விட்டது –ஜாதி சண்டாளனுக்கு ஒரு காலத்திலே வைஷ்ணவன் ஆகைக்கு அதிகாரம் உண்டு – இவன் உயர வேறித் தானே விழுந்தவன் ஆகையாலும் பாகவத அபசாரம் ஆகிற மகா பாபத்தை பண்ணினவன் ஆகையாலும் அவனிலும் தண்ணியன் கர்ம சண்டாளன் இறே –பிள்ளை பிள்ளை ஆழ்வானுக்கு ஆத்ம ஹிதம் சொன்ன சமனந்தரத்திலே
ஆழ்வான் பணித்த வார்த்தையை ஸ்மரிப்பது
அரங்க மா நகர் உளானே –ந ஷமாமி கதாசன -என்ற
தேவரீர்க்கு இறே -பாகவத அபசாரத்தின் தண்மை தெரிவது –கர்ம யோக உபாய நிஷ்டர்க்கு ஸ்வ கதமான உபாயாந்தரங்களில் ந்யூநாதி ரேகங்களைப் பற்றி இருக்கலாம் –பகவத் சம்பந்தம் கொண்டு பெற இருக்கிற பிரபன்னனுக்கு பாகவத அபசாரம் ஆகிறது பகவத் சம்பந்தத்தை அறுக்கும் ஆகையாலே பெறவில்லை –பெறுகைக்கு அவர்கள் சம்பந்தமே அமைகிறாப் போலே
இழக்கைக்கும் அபசாரமே அமையும்
ஆகையால் பிரபன்னனுக்கு பயப்பட்டு நோக்க வேண்டுவது
தேவதாந்தர சம்பந்தமும் பாகவத அபசாரமும் –ஆகும் பகவத் விஷயத்தில் ஒரு ஆனுகூல்யம் பண்ண வேண்டுவது இல்லை –இவை இன்றிலே ஒழிந்தவனுக்கு ஈஸ்வரன் ஸூ லபனாம் –

வாழ் வினை-யாவது
வாழ்வை -என்றபடி –
வாழ் வினை -என்று முழுச் சொல்
வாழ்வாவது
நின் தாளிணைக் கீழ் வாழ்ச்சியைப் பெற்று –3-2-4-
வாழ்வு எய்தி ஞாலம் புகழ வாழ்வர் –3-3-11-என்றபடி –

சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளியாகி என்றும்
ஏழ்ச்சிக் கேடு இன்றி எங்கணும் நிறைந்த வெந்தாய்
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ்
வாழ்ச்சி யான் சேரும் வகையருளாய் வந்தே
–3-2-4-சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளியாகி என்றும்-எல்லாவற்றையும் சூழ்ந்து இருக்கிற ஞான பிரபையை யுடைத்தான ஸ்வயம் பிரகாச ஸ்வரூபனாய் -சர்வ காலத்திலும் விகாசமும் சங்கோசமும் இன்றிக்கே சர்வ பிரதேசத்திலும் பரிபூர்ணமாக வியாபித்து
ஊரை வளைத்து ஒருவனைப் பிடிக்குமா போலே என்னை அங்கீ கரித்த ஸ்வாமியே உன்னை ஒழிந்த ஸமஸ்த விஷயங்களிலும் கால் தாழ்கை தவிர்ந்து ப்ராப்தனான உன்னுடைய போக்யமான திருவடிகள் இரண்டின் கீழே பரதந்த்ரனாய் வாழும் வாழ்க்கையை இதுக்கு முன் அன்வயித்து அறியாத நான் பிராபிக்கும் பிரகாரத்தை அவதார முகத்தாலே என் முன்னே வந்து நின்று அருளிச் செய்ய வேணும்-வ்யாப்தமான ஸ்வரூபத்தால் போராது என்று கருத்து –சாயா வா சத்துவம் அநு கச்சேத்–வா ஸூ தேவா தருச்சியா –என்னக் கடவது இறே–அந்தர்யாமித்வத்தால் ஒண்ணாது – வந்து அவதரித்து உன் குண சேஷ்டிதங்களாலே புறம்பு போகாத படி பண்ணிச் சேர்த்து அருள வேணும் –வந்தே –அது தானும் முகம் தோற்றாத படி நின்று அருள வொண்ணாது;-என் கண்களுக்கு இலக்காம்படி இராமன் கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைப் போன்று, எனக்காக ஓர் அவதாரத்தை பண்ணியே யாகிலும் வந்தருள வேண்டும்.

தாள் பரப்பி மண் தாவிய ஈசனை
நீள் பொழிற் குருகூர்ச் சடகோபன் சொல்
கேழ்இல் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே.–3-3-11-–ஸ்ரீ வாமனான தன்னுடைய குண சேஷ்டி தாதிகளாலே லோகத்தை அடைய அடிமை கொண்ட திருவேங்கடமுடையானை பரம்பி இருந்த திருச் சோலையாலே அலங்க்ருதமான திரு நகரியை உடைய ஆழ்வார் அருளிச் செயலான ஒப்பு இல்லாத ஆயிரத்து இப்பத்தும் வல்லவர் இஜ் ஜகத்தில் உள்ளார் இவனைப் புகழ பெற்று க்ருதார்த்தர் ஆனோம் என்று புகழும் படி இத் திருவாய்மொழியில் தாம் மநோ ரதித்தால் போலே அடிமை செய்யப் பெறுவர்-உலகம் அளந்த பொன்னடி -என்று திருவேங்கடமுடையானை ஸ்ரீ வாமனனாக சொல்லக் கடவது-வரையாது ஒழி கையாலும்-ஜகத்தை அடைய திருவடிகளின் கீழே சேர்த்துக் கொள்ள நிற்கிற நிலையாலும் –இவருக்கு அடிமையில் மநோ ரதத்தில் பரப்போ பாதி போருமாயிற்று-திருச் சோலையில் பரப்பு –இப்பத்து ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யத்தை சொல்லுகையாலே ஒப்பு இல்லாத பத்து-இவர் பிரார்த்தித்த கைங்கர்யத்தை பெற்று சிறியார் பெரியார் என்று இன்றிக்கே தம் தாம் பேறாக புகழும் படி அடிமை செய்யப் பெறுவர்கள் –இருந்ததே குடியாக எல்லாரும் பிரீதியோடே புகழ்வார்கள்,’ என்பார், ‘ஞாலம் புகழ வாழ்வர்’ என்கிறார்–

தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே –2-9-4-
உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும் -10-3-9-
என்று அவன் உகந்த படியே செய்து ஆனந்திக்கை –

எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –2-9-4-இருந்து கொள்ளும் கார்யம் சொல்லுகிறது –
சேஷ சேஷிகள் கலந்தால் சேஷ பூதனுக்கும் வருவதொரு ரசம் உண்டு இறே-அப்படியே அன்றியே நீ உகந்த அடிமை கொண்டு அருள வேணும்-ஸ்ரக் சந்த நாதிகளைப் போலே-தனக்கே சேஷமாக என்னைக் கொள்ளும் இது-கீழ் முன்னிலையாய் போரச் செய்தே தனக்கே என்கிறது – முகத்தைப் பார்க்கில் நோக்கிலும் ஸ்மிதத்திலும் துவக்குண்டு அத்தாலே நிஷ்கர்ஷம் குலையும் என்று கவிழ்ந்து இருந்து கையோலை செய்து கொடுக்கிறார் – எனக்கே ஆடச்செய் -என்கிற இடம் -அந்நிய சேஷத்வத்தை தவிர்க்கிறது-தனக்கே யாக என்கிற இடம் -தன்னோடு தனக்கு உள்ள அன்வயத்தைத் தவிர்க்கிறதுகோல -நெஞ்சம் நிறையும் -நிறைந்த சோதி நெடு வெள்ளம் ஆழ்ந்து போவேனே -நோக்கும் ஸ்மிதமும் சுழி யாறு பட்டு ஆழ்த்துமே- அப்பாஞ்ச ஜன்யமும் பல்லாண்டு போலே இங்கும்
வங்கி புரத்து நம்பி திருமாளிகையில் மேல் கோட்டையில் ராமானுஜர் கையோலை இன்றும் வைத்து மகிழ்கிறார்கள் –

உகக்கும் நல்லவரோடும் உழி தந்து உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள்
வியக்க இன்புறுதும்
எம் பெண்மை ஆற்றோம் எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்
மிகப் பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு நின்று உழி தருவர் கஞ்சன் ஏவ
அகப்படில் அவரோடும் நின்னொடு ஆங்கே அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ–10-3-9–உனக்கு அபிமதைகளாய் விலக்ஷணைகளாய் யுள்ள அவர்களோடே திரிந்து -நாங்கள் எங்களோடு சம்ச்லேஷித்ததில் காட்டிலும் மிகவும் இனியோம் ஆவுதோம்—எங்களை போல் அன்றிக்கே -நீ உகக்கும்படியான விலக்ஷணைகளோடு சஞ்சரித்து -அவர்களோடே பரிமாறப் பெற்றிலோம் என்று திரு உள்ளத்தில் யுண்டான விடாயால் வந்த துக்கம் கெடும் தோறும் –நீ வேறே சிலரோடு சம்ச்லேஷிக்க தரியாது இருக்கும் பெண்மை வேண்டோம் –புறம்புள்ளாரைப் போல் அன்றியே -உன் உகப்பே பிரயோஜனமாக நாங்கள் -மிகவும் உகப்புதோம்-மிகுதி எதில் காட்டில் என்னில்-எங்களோடு கலக்குமதில் காட்டில் -என்னுதல்–உன்னில் காட்டில் நீ உகந்தவர்களை உகப்புதோம் -என்னுதல் –உன்னைத் தனித்து உகப்பாள் மூக்கறைச்சி அன்றோ -சூர்பணகை அன்றோ –-ததீயர் சேஷத்வம் ஞானம் உடையவர்கள் அன்றோ -அவனும் ததீயாரும் சேர்ந்ததே புருஷார்த்தம் –

அன்றிக்கே
அவன் அடியார் நனிமாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே -என்கிறபடியே
அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருந்தமை —10-9-11-
என்றும் சொல்லுகிற பரம ப்ராப்யம் ஆகவுமாம் –
இதுவே இறே ப்ராப்யத்தின் எல்லை நிலம் –

தனி மாப் புகழே எஞ்ஞான்றும் நிற்கும் படியாத் தான் தோன்றி
முனி மாப் பிரம முதல் வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த
தனி மாத் தெய்வத் தளிர் அடிக் கீழ்ப் புகுதல் அன்றி அவன் அடியார்
நனி மாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே–
8-10-7–ஒப்பில்லாத அழகிய புகழே காலம் உள்ளதனையும் நிற்கும் படியாக ஸ்ருஷ்ட்டி உன்முகனாய் -பஹுஸ்யாம் -என்று சங்கல்ப் பிக்கிற பர ப்ரஹ்மம் ஆகிற பரம காரணமாய் லோகங்களை எல்லாம் உண்டாக்கின ஒப்பில்லாத பெரிய தைவத்தினுடைய தளிர் போலே இருக்கிற திருவடிக் கீழ் புகுகையை தவிர்ந்து – ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய மிக்க வேண்டற்பாடு யுடைத்தான சம்ச்லேஷ ஸூ கமே நாள் தோறும் நமக்கு வாய்க்க வேணும் –நாளும் வாய்க்க -நாள் தோறும் வாய்க்க வேணும் என்னுதல் -பகவத் பிராப்தி யுண்டானாலும் இதுவே வாய்க்க வேணும் -என்னுதல் – நங்கட்கே–புருஷார்த்தத்தில் சரமாவதியை அர்த்தித்த நமக்கு -அவனை அணைக்க வேண்டா -அவன் காலைத் தலையிலே வைக்க அமையும் -என்னுமா போலே –

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11–பிராட்டியோடே கூட எம்பெருமான் தானும் வந்து எதிர் கொள்ள –அயர்வறும் அமரர்கள் -என்றுமாம் -திருமா மணி மண்டபத்திலே பரம ப்ராப்யரான அயர்வறும் அமரர்கள் நடுவே ஆனந்த நிர்ப்பரராய்க் கொண்டு இருந்தமையை-அந்தமில் பேர் இன்பத்து –யவாதாத்ம பாவியாய் நிரதிசயமான ஆனந்தத்தை யுடையராய்க் கொண்டு -ஆனந்த நிர்ப்பரராய்க் கொண்டு –சம்சாரத்தில் துக்கத்துக்கு எல்லை யுண்டாகில் யாய்த்து -அஸ் ஸூகத்துக்கு அவதி சொல்லலாவது –-அடியரொடு இருந்தமை–அடியார்கள் குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ -2-8-10-என்று ஆசைப் பட்ட படியே இருந்தமையை -அவர்களும் தங்களுக்கு போதயந்த பரஸ்பரம் பண்ணுகைக்கு துணை தேடி இறே இருப்பது 

ஓதும் குருகையர் கோன் யாழின் இசை வேதத்து இயல் —
இந்த அர்த்த பஞ்சகத்தையும் ஓதுகையாவது –
ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் –இத்யாதியில்
முந யஸ்ய மஹாத்மநோ வேத வேதார்த்த வேதிந வதந்தி –என்கிறபடியே —
சடகோப முனியான இவர் ஸ்ரீ ஸூக்தியும்

இமையோர் அதிபதி அடியேன் மனனே பொய் மயர்வு பிறந்து அருளினன் விண்ணப்பம்
தொழுது எழு என்று பஞ்சகத்தையும் இறே அடியிலே யாயிற்று சொல்லிற்று –ஆச்சார்ய ஹ்ருதயம் –212–

ரஹஸ்யத்துக்கு ஓர் எழுத்தும் அதுக்கு ஓர் உருவம் போல் ஆனவற்றிலே
இமையோர் அதிபதி அடியேன் மனனே பொய் மயர்வு பிறந்து அருளினன் விண்ணப்பம் தொழுது எழு
என்ற பஞ்சகத்தோடே
அவித்யாதி ஸ்வரூப ஸ்வபாவ ஆத்மேஸ்வர பந்த ரஷண க்ரம குண விக்ரஹ விபூதி யோக ததீய அபிமான உபதேச விஷய அந்ய உபதேச ஹேத்வாதிகளும் சங்க்ருஹீதம் —சூரணை -212-திரு விருத்தம் -திரு வாய் மொழி ஆகிய பிரபந்தங்களுக்கு ஸங்க்ரஹங்களான முதல் பாட்டுகளில் –1-இமையோர் அதிபதி-அதாவது- இமையோர் தலைவா-என்றும் , அயர்வறும் அமரர்கள் அதி பதி -என்றும் ,ஸூரி சேவ்யமாய் -சர்வாதிகமாய் இருக்கும் –பர ஸ்வரூபத்தையும் –2-அடியேன் மனனே--அதாவது– அடியேன் -என்றும் , என் மனனே -என்றும் சேஷ பூதமாய் -பரி சுத்த அந்த கரணமாய் இருக்கும் –ஸ்வ ஸ்வரூபத்தையும் –3-பொய் மயர்வு--அதாவது–-பொய் நின்ற ஞானமும் ,பொல்லா ஒழுக்கும் , அழுக்கு உடம்பும் -என்றும் , மயர்வு -என்றும் ,அவித்யாதிகளான விரோதி ஸ்வரூபத்தையும் –4-பிறந்து அருளினன்-அதாவது-உயிர் அளிப்பான் என் நின்ற யோனியுமாய் பிறந்தாய் -என்றும் ,
மதி நலம் அருளினன் -என்றும் , லோக ரஷண அர்த்தமாக அநேக அவதாரங்களைப் பண்ணின சர்வேஸ்வரனுடைய கிருபையே உபாயம் என்று –உபாய ஸ்வரூபத்தையும் –5-விண்ணப்பம் தொழுது எழு -என்ற பஞ்சகத்தோடே-அதாவது- செய்யும் விண்ணப்பம் -என்றும் , தொழுது எழு -என்றும் சேஷி விஷயத்தில் கரண த்ரயத்தாலும் பண்ணும் கைங்கர்யமே பரம புருஷார்த்தம் என்று பல ஸ்வரூபத்தையும் —ஆக இவ் வர்த்த பஞ்சகத்தையும்‌ ஸங்க்‌ரஹேண சொல்லி அவ்வர்த்த பஞ்சகத்தோடே கூட இந்த இரண்டு பாட்டிலும்‌ அவித்‌யாதி ஸ்வரூப ஸ்வபாவங்கள்‌ முதலான வர்த்த விஸேஷங்களும்‌ ஸங்க்‌ருஹீதமென்கிறார்‌ மேல்‌-

உயர் திண் அணை ஓன்று
பயில் ஏறு கண் கரு
வீடு சொன்னால் ஒரு கொண்ட
நோற்ற நாலும்
எம்மா ஒழிவில் நெடு வேய் –என்கிற
இருபதிலே விசதமாக்கி எண்பதிலே பரப்புகையாலே அஞ்சையும் என்று இறே
ஆச்சார்ய ஹ்ருதய ஸ்ரீ ஸூ க்திகள் –

மூன்றில் சுருக்கிய ஐந்தையும்-உயர் திண் அணை ஓன்று-பயில் ஏறு கண் கரு
வீடு சொன்னால் ஒருக் கொண்ட-நோற்ற நாலும்-எம்மா ஒழிவில் நெடு வேய்
என்கிற இருபதிலே விசதமாக்கி எண்பதிலே பரப்புகையாலே ஐந்தையும்
— அருளினன் வீடு பெற்ற என்கையாலே ஐந்திலும் இரண்டையும் தொழுது களித்தேன் சொல்லுப் பெற்றேன் பணி செய்
என்கிற முக்த லஷண வ்ருத்தியாலே இரண்டில் ஒன்றையும் இதுக்கு பிரமேயம் என்னும் —211-((மூன்று -திருவிருத்தம் -திருவாசிரியம் பெரிய திருவந்தாதி -/இவற்றில் சுருக்கிய ப்ரமேயம் -ஐந்து -அர்த்த பஞ்சுகம் – இத்தை இருபதில் விசதமாக்கி-என்பதில் பரப்பி)அதாவது-மந்த்ர ஸ்லோககங்களில் -சங்கரஹேன உக்தங்களான அர்த்த விசேஷங்களை-த்வயத்திலே விவரிக்குமா போலே – பூர்வ பிரபந்த த்ரயத்திலும் சங்கரஹேன சொல்லப் பட்ட அர்த்த பஞ்சகத்தையும் –ஸ்ருதி சாயையாலே அந்வய ரூபேண -ஸ்வ அனுபவ முகத்தாலே — பரத்வத்தில் பரத்வத்தை பிரதி பாதித்த -உயர்வற உயர் நலமும் —1-1- இதிகாச புராண பிரக்ரியையாலே –அந்வய வ்யதிரேகங்கள் -இரண்டாலும் பர உபதேச முகத்தாலே அவதாரத்திலே பரத்வத்தை பிரதி பாதித்த -திண்ணன் வீடும் –2-2- மோஷ பிரதத்வ கதனத்தாலே பரத்வத்தை பிரதி பாதித்த -அணைவது அரவு அணையும் –2-8- அர்ச்சாவதாரத்திலே பரத்வத்தை பிரதி பாதித்த -ஒன்றும் தேவும்-4-10- -ஆகிற நான்கு திரு வாய் மொழியாலும் பர ஸ்வரூபம் –பகவத் சேஷத்வதிலும் தத் காஷ்டையான பாகவத சேஷத்வமே ஆத்மாவுக்கு உத்தேச்யம் என்று
பிரதி பாதித்த –பயிலும் சுடர் ஒளியும் —3-7- சேஷத்வ பஹிர் பூதங்களான ஆத்மாத்மீயங்கள் த்யாஜ்யம் என்கிற வ்யதிரேகத்தாலே சேஷத்வமே ஆத்மாவுக்கு ஸ்வரூபம் என்று பிரதி பாதித்த -ஏறாளும் இறையோனும்-4-8- பகவானுக்கு இவ் ஆத்ம வஸ்து பிரகார தயா சேஷமாய் -ப்ரக்ருதே பரமாய் -ஞான ஆனந்த லஷணமாய் இருக்கும் என்பதை பிரதிபாதித்த -கண்கள் சிவந்தும் –8-8- அந்ய சேஷ பிரசங்கமும் – அசஹ்யமாம் படி அதின் அனந்யார்ஹத்வத்தை பிரதி பாதித்த -கரு மாணிக்க மலையும் -8-9–ஆகிற நான்கு திரு வாய் மொழியாலும் ஸ்வ ஸ்வரூபமும்-—பகவத் வ்யதிரிக்த விஷயங்களை பற்றுகைக்கு உடலான அஹங்கார மம காரங்கள் த்யாஜ்யம் என்ற –வீடு முன் முற்றவும் –1-2-
அசேவ்ய சேவை த்யாஜ்யம் என்ற -சொன்னால் விரோதமும் –3-9- ஐஸ்வர்ய கைவல்யங்கள் த்யாஜ்யம் என்ற -ஒரு நாயகமும் –4-1- சரீர சம்பந்த நிபந்தனமாக வரும் பரிக்ரஹங்கள் த்யாஜ்யம் என்கிற -கொண்ட பெண்டிரும் –9-1- ஆகிய நாலு திரு வாய் மொழிகளும் விரோதி ஸ்வரூபம்
நோற்ற நோன்பு இலேன் –என்று ஆகிஞ்சன்ய பூர்வமாக -ஆறு எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய்–என்ற நோற்ற நோன்பும்–5-7–களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன்–என்று அநந்ய கதித்வ பூர்வகமாக -கழல்கள் அவையே சரணாக கொண்ட -என்ற -ஆரா அமுதும் –5-8- வைகலும் வினையேன் மெலிய -என்று பக்தி பாரவச்யம் முன்னாக – நம் பெருமான் அடி மேல் சேமம் கொள் தென் குருகூர் சடகோபன் -என்ற -மானேய் நோக்கும் –5-9- எனது ஆவியை நின்று நின்று உருக்கி உண்கின்ற -என்று தரித்து நின்று அவன் குணங்களை அனுசந்திக்க மாட்டாத சைதில்யம் செல்லா நிற்க –நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாள் தோறும் ஏக சிந்தையனாய் -என்ற -பிறந்தவாறும்–5-10- -ஆகிற நாலு திரு வாய் மொழியாலும் உபாய ஸ்வரூபமும் —தனக்கேயாக -என்று கைங்கர்யத்திலே ஸ்வார்த்தா நிவ்ருத்தியை அபேஷித்த –எம்மா வீடும் —2-9- சர்வ கால விசிஷ்டமான சகல சேஷ வ்ருத்திகளையும் பண்ண வேணும் என்று பாரித்த-ஒழிவில் காலமும் —3-3- அதுதான் பாகவத கைங்கர்ய பர்யந்தமாக வேணும் என்று மநோ ரதித்த –நெடுமாற்கு அடிமையும் –8-10- அது தன்னில் பர சம்ருத்யேக பிரயோஜனத்தை சொன்ன -வேய் மரு தோளிணையுமாகிற–10-3- நாலு திரு வாய் மொழியாலும்-பல ஸ்வரூபமாய் –அது தன்னையே விஸ்தரிக்கையாலே – அர்த்த பஞ்சகமே -இப் பிர பந்தத்துக்கு பிரமேயம் என்றும் –

குருகையர் கோன் யாழின் இசை வேதம் ஆவது –
ஸம்ஸ்க்ருத வேதம் போலே தான் தோன்றி இன்றிக்கே
எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் செய்தற்கு உலகில் வரும் சடகோபன் -என்னும்படி
ஆழ்வாராலே அருளிச் செய்யப்பட அதிசயத்தை உடையதாய் —
யாழின் இசையே –5-3-6- என்று கான ஸ்வரூபியான ஸர்வேஸ்வரனை ப்ரதிபாதிக்கையாலே
பண்ணார் பாடல் –10-7-5- பண்புரை இசை கொள் வேதம் –ஆச்சார்ய ஹ்ருதயம் –50- என்னலாம் படி
பண் கொள் ஆயிரம் –3-6-11- என்று சாம வேதம் போலே சரசமாய் இருக்கை –

எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபனை
ச் சிந்தை யுள்ளே
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம்
உய்தற்கு உதவும் இராமானுசன் எம் உறு துணையே – 18- -துஷ் ப்ராபங்களான வேதங்களை – தர்ம சாஸ்திரம் இதிஹாச புராணங்கள்-மீமாம்ஸா நியாயங்கள் என்னும் இவற்றின் உதவி இன்றி எளிதில் பொருள் காண ஒண்ணாமை பற்றி –எய்தற்கு அரிய மறைகளை-பிரவணம் போலே சுருங்கி இருத்தல்-வேதம் போலே பரந்து இருத்தல் -செய்கை அன்றிக்கே -ஆயிரம் பாட்டாகவும்-அது தான் சாரமாகவும்-ஸ்திரீ பாலர்களுக்கும் கற்கலாம் படியான பாஷையிலே செய்து அருளுகைக்கு லோகத்திலே வந்து அவதரித்து அருளினவராய் -பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆகிய சடர்க்கு பிரதிபடராய் இருக்கையாலே – ஸ்ரீ சடகோபர் -என்னும் திரு நாமத்தை உடையவரான ஆழ்வாரை–ஆயிரம் என்ற ஒரு சங்கையுடன் கூடி இருப்பதாய் -உயர்வற உயர்நலம் -என்று தொடங்கி -உயர்ந்தே -என்னும் அளவும் – ஆதி மத்திய அவசானங்களிலே – ஸ்ரீ பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளையும் – சேதன அசேதன ரூப ஸ்வபாவங்களையும் – சேதனருடைய சம்சார பந்த ஹேதுக்களையும் – தந் நிவர்தன உபாயமான தத் விஷய ப்ரீதி ரூபாபன்ன ஞானத்தையும் – ஜகத் காரண வஸ்து நாராயணனே என்று -தேவதாவஸ்து விசேஷ நிர்த்தாரணத்தையும் – அவனுடைய சமஸ்த கல்யாண குணாத் மகத்வத்தையும்
அநந்த கருட விஷ்வக்சேநாதி திவ்ய சூரி பரிசர்யமான நளினனாய்க் கொண்டு நின்ற படியையும் –
தாம் அனுபவித்த படியே எல்லாரையும் அனுபவிப்பைக்காக -தம்முடைய நிர்ஹேதுக பரம கிருபையாலே – லவ்கிகரைக் குறித்து உபதேசித்த படியையும் – தம்முடைய அபிநிவேசம் எல்லாம் தீரும்படி அவனை ப்ராபித்த படியையும் -விசதமாக பிரதிபாதிப்பதாய் – ஸ்வா ர்த்தத்தை எல்லாம் ஸூஸ்பஷ்டமாகவும் ஸூக்ரஹமாகவும் தெறிவிக்குமதாய் – அத ஏவ அத்யந்த சுலபமாய் -பக்தாம்ர்தம் -தொண்டர்க்கு அமுதுண்ண சொல் மாலைகள் –என்னும்படி அநு போக்தாக்களுக்கு அத்யந்தம் போக்யமாய் -நடை விளங்கு தமிழான -த்ரமிட பாஷையாலே – ஸ்ரீ திருவாய் மொழி என்கிற பிரபந்த ரூபேண -வேதம் அளவற்றது -இன் தமிழ் ஆயிரம் என்னும் அளவு பட்டது –
வேதத்தின் பொருளைத் தன்னுள் கொண்ட பிரணவம் மூன்றே எழுத்துக்களைக் கொண்டது ஆதலின் மிக சிறியது – இது அங்கனம் அன்றிக்கே -ஆயிரம் கவியாய் -விரிந்து -தெள்ளத் தெளிய வேதப் பொருளை உணர்த்துவது – வேதத்தின் பொருளைக் காண்பதற்கு இதிஹாச புராணங்கள் -மீமாம்ச நியாயங்களின் உதவியை நாட வேண்டி இருக்கிற படியால் இடர்ப் பட நேரிடுகிறது – இது தமிழ் ஆகையாலும் அளவு பட்டமையாலும் இனிது பொருள் படும்படியாய் இருக்கிறது – தெரிய சொன்ன ஆயிரம் –என்றது காண்க –இப்பாசுரம் ஸ்ரீ மதுர கவி ஆழ்வாரை பற்றியதாலின் அவர் அருளிச் செய்த
அரு மறையின் பொருள் ஆயிரம் இன் தமிழ்ப் பாடினான் -என்பதை அடி ஓற்றின படி –
இவ் உலகத்திலே உயிர் இனங்கள் மீண்டும் மீண்டும் பிறந்து உழலா வண்ணம் காக்க வேண்டும் என்னும் நோக்கம் கொண்டு ஈண்டு வாரா வழிக் கண் தலைப் படுமாறு அருமறை கூறும் மெய்ப் பொருளை ஆயிரம் இன் தமிழால் காட்டுவதற்காகவே அவதரித்து அருளினார் -என்கிறார் – ஸ்ரீ சடகோபனுடைய அவதாரம் -ஸ்ரீ திருவாய் மொழி பாடுவதற்காகவே -எனபது கருத்து–

கீழ் உலகில் அசுரர்களை கிழங்கு இருந்து கிளராமே 
ஆழி விடுத்தவருடைய கருவழித்த வழிப்பனூர்  
தாழை மடலூடு உரிஞ்சித் தவள வண்ண பொடி அணிந்து   
யாழினிசை வண்டினங்கள் ஆளம் வைக்கும் அரங்கமே – 4-8- 6-யாழினிசை வண்டினங்கள் ஆளம் வைக்கும் – அந்த ஹர்ஷ பிரகர்ஷத்தாலே – யாழ் ஓசை போல் இருக்கிற இனிய இசையை உடைய 
வண்டின் உடைய திரள் ஆனவை பாடுகைக்கு அடிக் கொண்டு  தென தென என்று ஆளத்தி வையா நிற்கும்   அரங்கமே

நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–10-7-5-பண் சேர்ந்து இருந்துள்ள பாடலையுடைய இனிய கவிகளை-பண் மிக்கு இருந்துள்ள பாடல் -புஷ்ப்பம் பரிமளத்தோடே அலருமா போலே -திருவாய் மொழி அவதரித்த போதே பண் மினுங்கி யாய்த்து இருப்பது–பண்ணோடு சேர்ந்த பாடல்-ஆர்தல் -சேர்தல் -மிகுதல்-அன்றிக்கே-மலரானது மணத்தோடு மலருமாறு போன்று-பண்ணும் இசையும் மிகுந்து இருந்த பாடல் -பண் -ஸ்வரம் –இன் கவி–பண்ணுக்கு ஆஸ்ரயமான கவி தானே இனிதாய் இருக்கை –இசையும் பண்ணும் ஒழியவே-சக்கை -தொக்குக் கழிந்த சுளை போலே கவி தானே இனியதாய் இருக்குமாயிற்று –

கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
மண்கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள்செய்யும் வானவர் ஈசனைப்
பண்கொள் சோலை வழுதி வளநாடன் குருகைக்கோன் சடகோபன் சொல்
பண்கொள் ஆயிரத்து இப் பத்தால் பத்தராகக் கூடும் பயிலுமினே.–3-6-11-வண்டுகளின் நினைவை ஒழிய அவற்றின் மிடற்று ஓசை பண்ணாய் விழுந்தால் போலே பகவத் குண அனுபவம் வழிந்த
பேச்சுக்கள் விழுக் காட்டாலே பண்ணோடு கூடி இருந்த படி-பண்கொள் சோலை – வண்டுகளின் மிடற்று ஓசையாலே பண் மிக்கிருந்துள்ள சோலை; –முக்கோட்டை போலே காணும் சோலை இருப்பது.
முக்கோட்டைகான ஸ்தானம் -கவி பாடுகைக்கு ஹேது -விநாயகர் ஆலயம் போலே வண்டுகள் உள்ள சோலை என்றவாறு-திருத் தொலை வில்லி மங்கலம் ஆழ்வாரை பாட வைத்த முக்கொட்டை
திருக்கண்ண புரம் திருமங்கை ஆழ்வாரை பாட வைத்த முக்கொட்டை

இதனுடைய வேத சாம்யம் எல்லாம் ஆச்சார்ய ஹ்ருதயத்தில் விசதமாக அருளிச் செய்துள்ளார் —
அதிலே கண்டு கொள்வது –

எவ்வுலகத்து எவ்வெவையும் என்கையாலே வேதம் பஹு விதம்-39-அதாவது ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வவையும் -திருவாய்-3-1-6–என்கையாலே வேதம் ஆனது அத்யேதாக்கள் உடைய பேதத்தாலும் ,லோக பேதத்தாலும் பஹுவிதமாய் இருக்கும் என்கை .. ஆகையால் அதிலே இதுவும் ஒரு விதம் என்ற கருத்து-இதில் சமஸ்க்ருதம் திராவிடம் என்கிற பிரிவு ருகாதி பேதம் போலே-40-அதாவது
இப்படி பஹு விதமான இவ் வேதத்திலே சமஸ்க்ருத வேதம் திராவிட வேதம் என்கிற பிரிவு சமஸ்க்ருதாம் சந்தன்னில் ருக் வேதம் ,யஜுர் வேதம் சாம வேதம், அதர்வண வேதம் ,என்கிற பிரிவு போலே என்கை ….-இத்தால் வேத ராசி ஒன்றாய் இருக்க செய்தே ,சமஸ்க்ருத பாஷா ரூபம் ஆனவது தன்னிலே ருகாதி ரூபேண பல படியாய் பிரிந்தால் போலே பாஷா பேதேநவும் இப்படி பிரிந்து இருக்கும் என்ற படி-செந்திறத்த தமிழ் என்கையாலே ஆகஸ்யமும் அநாதி-41-அதாவது செம் திறத்த தமிழ் ஓசை வட சொல் ஆகி-திரு நெடும் தாண்டகம் -4- – -என்று (ஓசை -சொல் என்ற அர்த்தத்தில் இங்கு -ஸ்தான பிரமாணத்தாலே) சமஸ்க்ருததோடே சஹபடிதமும் , ப்ரதமோக்தமும் ஆகையாலே அகஸ்த்ய பிரகாசிதமான மாத்ரம் கொண்டு ஆகஸ்த்யம் என்று சொல்லப் படுகிற திராவிடமும் அநாதியாய் உள்ளது என்கை .-இத்தால் அநாதித்வம் சமஸ்க்ருத திராவிட சாதாரணம் என்றது ஆய்த்து-வட மொழி மறை என்றது தென் மொழி மறையை நினைத்து இறே-42-அதாவது மறை-என்று கேவல வேத வாசி சப்தத்தாலே சொல்ல அமைந்து இருக்க -வட மொழி மறை -திருவாய் -8-9-8–என்று சமஸ்க்ருத வேதம் என்றது -திராவிட வேதம் உண்டு என்று நினைத்திறே என்கை -பிரதி கோடி இல்லாத போது இப்படி விசேஷிக்க வேண்டியது இல்லை இறே என்று கருத்து–வேத சதுஷ்ட (த்தயத்துக்கு-இங்கும் லுப்தம் )
அங்க உபாங்கங்கள் போலே இந் நாலுக்கும் இரும் தமிழ் நூல் புலவர் பனுவல் ஆறும் மற்றை எண்மர் நன் மாலைகளும்– (இருமை -பெருமை -)அதாவது ருகாதி வேத சதுஷ்டயத்துக்கும் சீஷா வியாகரண நிருக்த சந்த கல்ப ஜோதிஷங்கள் ஆகிற ஆறு அங்கங்களும் மீமாம்ச நியாய புராண தர்ம சாஸ்த்ராத் உப அங்கங்கள் எட்டுமாய் இருந்துள்ள பதினாலும் போலே- (ஆதி -ஆயுர்வேதம் காந்தர்வ வேதம் அர்த்த வேதம் தனுர் வேதம் )இந்த திராவிட வேத சதுஷ்டயதுக்கும் இரும் தமிழ் நூல் புலவன் நங்கை யாளன்–பெரிய திருமொழி -1-7-10- -என்று ஒருவரால் கரை காண ஒண்ணாத படி இருக்கிற திராவிட வேத சாஸ்த்ரத்தை கரை கண்ட ஞான ஆதிக்கத்தை உடையரான திரு மங்கை ஆழ்வார் உடைய கலியன் வாயொலி செய்த பனுவல் -பெரிய திருமொழி -1-4-10–என்று சாஸ்திர ரூபங்களான பிரபந்தங்கள் ஆறும்- மற்றை ஆழ்வார்கள் எண்மர் உடையவும் விலஷணமான பிர பந்தங்களும் என்கை ..-ஆக –சீஷாயாம் வர்ண சிஷா பத சமதிகமோ வ்யாக்ரியா நிர்வசோப்யாம் சந்தஸ்
சந்தச் சிதவ் ஸ்யாத் கமயதி சமயம் ஜ்யோதிஷம் ரெங்கநாத ,கல்ப அனுஷ்டான
முக்தம் ஹ்யுசித கமிதயோர் நியாய மீமாம்ச யோஸ் ஸ்யாத் அர்த்த வ்யக்தி
புராண ஸ்ம்ருதிஷூ ததனுகாஸ் த்வாம் விசின் வந்தி வேதா
-ஸ்ரீ ரெங்கராஜ உத்தர ஸ்தவம்-18- –என்கிற படியே அவை அந்த வேத சதுஷ்டயத்துக்கும் உபகார அங்கங்களாய் இருக்குமா போலே
இவையும் கீழ் சொன்ன படியே இத வேத சதுஷ்டயத்துக்கும் உப அங்கங்களாய் இருக்கும் என்றது ஆய்த்து —

சகல வித்யாதிக வேதம் போலே இதுவும் திவ்ய பிரபந்த பிரதானம்-44-அதாவது அங்கானி வேதாஸ் சத்வாரோ மீமாம்ச நியாய விஸ்தர புராணம் தர்ம சாஸ்த்ரஞ்ச வித்யா ஹ்யேதாச் சதுர்தச —என்று
சக படிதமாய் இருக்க செய்தே ,ஸ்வ அங்கோ உபாங்களான சகல வித்யைகளிலும் ,ஸ்வ வைபவத்தால் மேலாய் இருக்கும் வேதம் போலே ஸ்ரீ திவ்ய பிரபந்தங்களிலும் சகபடிதமாய் இருக்க செய்தே
ஸ்வ அங்க உபாங்களான சகல ஸ்ரீ திவ்ய பிரபந்தகளிலும் ஸ்வ வைபவத்தாலே இதுவும் மேலாய் இருக்கும்
என்கை—வேத நூல் இரும் தமிழ் நூல்-ஆக்ஜை ஆணை-வசையில் ஏதமில் சுருதி செவிக்கு இனிய ஓதுகின்றது உண்மை பொய்யில் பாடல் பண்டை நிற்கும் முந்தை அழிவில்லா என்னும் லஷணங்கள் ஒக்கும்-45—அதாவது வேத நூல் பிராயம் நூறு – திருமாலை -3- என்ற அத்தை வேத சாஸ்திரம் என்றால் போலே இத்தையும் -இரும் தமிழ் நூல் புலவன்-பெரிய திருமொழி -1-7-10–என்று பெரிய திராவிட சாஸ்திரம் என்கையாலும்
அத்தை — ஸ்ருதிஸ் ஸ்ம்ருதிர் மமை ஆக்ஜை -பாஞ்சராத்ரம் –என்று பகவத் ஆக்ஜை ரூபமாக சொன்னால் போலே இத்தை -ஆணை ஆயிரம் -திருவாய்-6-3-11–என்று தத் ஆக்ஜா ரூபமாக சொல்லுகையாலும் ,
அத்தை -வசையில் நான் மறை –பெரிய திருமொழி-5-3-2- என்று விப்ரலம்பாதி தோஷ ரகிதம் என்றால் போலே , இத்தையும் -ஏதமில் ஆயிரம்-திருவாய்-1-6-11- -என்று நிர்தோஷமாக சொல்லுகையாலும் ,
அத்தை-சுடர் மிகு சுருதி-திருவாய்-1-1-7- -என்று ஸ்ரூயதே இதி ஸ்ருதி -என்கிறபடியே பூர்வ பூர்வோச்சாரண கிரமத்திலே சரவண இந்திரியத்தாலே கிரகிக்க படுமதாய் சொன்னால் போலே ,
இத்தையும் -கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே -திருவாய்-10-6-11 -என்று ஸ்ராவ்யமாய் சொல்லுகையாலும் ,
அத்தை -வேத நூல் ஓதுகின்றது உண்மை-திருச்சந்த -72- -என்று சொல்லும் அதில் ஒரு பொய் இல்லை என்றால் போலே , இத்தையும் -பொய்யில் பாடல்-திருவாய்-4-3-11–என்று அசத்திய கந்த ரகிதம் இல்லை என்கையாலும்,
அத்தை பண்டை நான்மறை -பெரிய திருமொழி-5-7-1–என்று அநாதியாகவும் நிற்கும் நான்மறை-திருவாய்-6-5-4- -என்று -அநதினத்தவம்-அழிவில்லாததாகவும் சொன்னால் போலே இத்தையும் முந்தை ஆயிரம் -திருவாய்-6-5-11- அழிவில்லா ஆயிரம் -திருவாய்-9-7-11-என்று அநாதியாய் அழிவற்று இருக்குமதாய் சொல்லுகையாலும் இந்த லஷணங்கள் எல்லாம் இரண்டுக்கும் ஒக்கும் என்கை-சொல்லப் பட்ட என்ற இதில் கர்த்ருத்வம் ஸ்ம்ருதி அத்தை ஸ்வயம்பூ படைத்தான் என்றது போலே–46-அதாவது சடகோபன் சொல்லப் பட்ட ஆயிரம்–திருவாய்-8-10-11–என்று இதில் ஸ்ரீ ஆழ்வாருக்கு சொன்ன கர்த்ருத்வம்-அநாதி நிதனா ஹ்யேஷா வாகுத் ஸ்ருஷ்டா ஸ்வயம்புவா -என்று-(அநாதி அநிதன -பண்டை நின்ற வேதத்தை ) ஸ்ம்ருதி அந்த வேதத்தை-( ஜகத்தை-) பிரம்மா சிருஷ்டித்தான் என்று சொன்னாவோ பாதி என்கை-
ஸ்வயம்பு சிருஷ்டித்தான் என்னாதே–படைத்தான்-என்றது முன்னம் திசை முகனை தான் படைக்க மற்றவனும் முன்னம் படைத்தனன் நான் மறைகள்-பெரிய திருமடல்-10 -என்று ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தியையும் தர்சிப்பைக்காக ..
அநாதி நிதானமான சந்தர்ப்பம் பிரம்மாவின் வாக்கில் நின்றும் ஆவிர்பவித்த மாத்ரம் கொண்டு ,பிரம்மாவுக்கு அதில் சொன்ன கர்த்ருத்வ உபாதி இதிலும் ஸ்ரீ ஆழ்வாருக்கு சொன்ன கர்த்ருத்வம் ஆகையால் இத்தால் ,இதன் நித்யத்வ அபௌருஷேயத்வ ஹானி வாராது என்று கருத்து-

நால் வேதம் கண்ட புராண ரிஷி மந்த்ர தர்சிகளை போலே இவரையும் ரிஷி முனி கவி என்னும்-47-அதாவது நால் வேதம் கண்ட புராண ரிஷி–நால் வேதம் கண்டானே -பெரிய திருமொழி-8-10-1–என்னும் படி ஈஸ்வரன் தான் அடியிலே செய்தால் போல் நாலு வேதங்களையும் சாஷாத் கரித்து அஷ்டா தச புராணம் கர்த்தா சத்யவதீ ஸுத-என்கிற படி அஷ்டாதச புராணங்கள் உடைய ஆநு பூர்வியையும்
தர்சித்துச் சொன்ன வேத வியாச பகவானை சொல்லுகிறது நால் வேதம் கண்டான் -என்கிற இடத்தில் ஸ்வேன ரூபேண நின்று தர்சித்தமை அன்றிக்கே வியாச ரூபேண நின்று தர்சித்தமை தன்னை சொல்லுகின்றது இவருக்கு கருத்தாகவுமாம் ..சங்கீர்ண புத்தயோ தேவா பிரம ருத்ர புரஸ்ஸர சரண்யம் சரணம் ஜக்மு நாராயண மநாமயம்..தைர் விக்ஜ்ஞாபித்த கார்யஸ்து பகவான் புருஷோத்தம அவதீர்னோ மகா யோகி சத்யவத்யாம் பராசராத் என்றும் கிருஷ்ண த்வைபாயனம் வியாசம் வித்தி நாராயண பிரபும் -என்றும் பகவத் ஏவச அவதாரயா பகவான் தானாக சொல்லக் கடவதிறே..-இப்படி இருந்துள்ள ஸ்ரீ வேத வியாச பகவானை வேதங்களின் பூர்வ சித்த அனுபூர்வியை தர்சித்து சொன்ன படியாலே தர்சநாத் ருஷி மனந சீலோ முனி கவி கிராந்த தர்சீ-என்கிற வர்தங்களை நினைத்துக் கொண்டு ஸ்ரூயதாம் சிம்ஹனா தோயம் ருஷேச்தச்ய மகாத்மனா தர்மேச அர்த்தேச கர்மே ச மோஷே ச பரதர்ஷப -என்றும் ஏவம் விதம் பாரதம் து ப்ரோக்தம் ஏன மகாத்மனா சோயம் நாராயணஸ் சாஷாத் வியாச ரூபீ மகா முனி –என்றும் சஷால் லோகான் பாவ்யமான கவி முக்ய பராசர்ய-என்றும்
ருஷி முனி கவி என்றும் சொல்லிற்று இறே-மந்த்ர தர்சிகள் ஆனவர்களை பூர்வ ஸித்த சந்தர்ப்பத்தை
சாஷாத் கரித்து சொன்னவர்கள் என்னும் இடம் தோற்ற நம ருஷிப்யோ மந்த்ர க்ருத்ப்ய -என்றும்
பகவான் சௌனக முனி -என்றும் இத்யாதிகளாலே ருஷி முனி என்று சொல்லிற்று இறே .
இவர்கள் விஷயத்திலும் கவி சப்த பிரயோகம் உண்டாகில் வந்த ஸ்தலங்களிலே கண்டு கொள்வது ..ஆக இப்படி இவர்களை சொன்னால் போலே த்ராவிடமான இதின் பூர்வ ஸித்த அனுபூர்வியை சாஷாத் கரித்து பேசின இவ் ஆழ்வாரையும் – ருஷிம் சுஷாமஹே கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் இவோதிதம்
சகஸ்ர சாகாம் யோத்ரா ஷீத் த்ராவிடீம் ப்ரஹ்ம சம்ஹிதாம் –என்றும் சடகோபம் முனிம் வந்தே சடானாம் புத்தி தூஷகம் , அஞ்ஞானம் ஜ்ஞான ஜனகம் திந்திரிணீ மூல சம்ஸ்ரயம் -என்றும் உலகம் படைத்தான் கவி யாயினேற்கு -திருவாய்-3-9-10–என்றும் முன்பு உண்டான சந்தர்ப்பத்தை தர்சிப்பித்து பேசினவர் என்னும் இடம் தோற்ற ருஷி என்றும் ,முனி என்றும் ,கவி என்றும் சொல்லும்
என்கை –.படைத்தான் கவி
என்ற போதே இதுவும் யதா பூர்வ கல்பனம் ஆமே
-48-அதாவது உலகம் படைத்தான் கவி -என்கையாலே
ஒன்றில் ஒன்றி உலகம் படைத்தான் -என்கிற படியே ஒருப் பட்டு மேன்மேலும் லோக சிருஷ்டியை பண்ணும் இடத்தில் சூர்யா சந்திர மசவ் ததா எத பூர்வ மகல்பயத்––தைத்ரியம்-என்கிற படியே
ஸ்ருஷ்ட்டி தோறும் சந்திர சூர்யாதி சகல பதார்த்தங்களையும் யதா பூர்வ கல்பனமாய் வருமா போலே திராவிட வேதமான இப் பிரபந்தமும் ஸ்ருஷ்ட்டி தோறும் யதா பூர்வ கல்பனமாய் வரும் என்று தோன்றும் இறே என்கை ..

விண் மீது இருப்பாய் –6-9-5–என்கிற பாட்டிலே பர ஸ்வரூபம் காணலாம் –

ஆத்ம ஸ்வரூபம் -அடியார்ந்த வையத்திலே –3-7-10-காணலாம்

உபாய ஸ்வரூபம்–உழலையிலே -5-8-11- காணலாம் —

விரோதி ஸ்வரூபம் –அகற்ற நீ வைத்த –5-7-8- என்கிறதிலே காணலாம்

பலம் -உற்றேனிலே —-10-8-10-உணரலாம்

அர்த்த பஞ்சக ஞானத்தாலே இறே
அந்தமில் பேர் இன்பத்து இன்புறுகையும் -என்று அறுதி இட்டு அருளிற்று –

விண்மீ திருப்பாய்! மலைமேல் நிற்பாய்! கடற்சேர்ப்பாய்!
மண்மீ துழல்வாய்! இவற்றுள் எங்கும் மறைந்துறைவாய்!
எண்மீ தியன்ற புறஅண் டத்தாய்! எனதாவி
உண்மீ தாடி உருக்காட் டாதே ஒளிப்பாயோ
!–6-9-5—பகல் ஓலக்கம் இருந்து கறுப்பு உடுத்துச் சோதித்து காரியம் மந்தரித்து வேட்டையாடி-ஆராமங்களிலே விளையாடும் ராஜ நீதி ஆதும் சோராமல் செங்கோல் நடாவுகிற பாரளந்த வென்னும் முடிக்கு உரிய இளவரசுக்கு விண் மீது என்கிற ஐந்திலும் காணலாம் -சூர்ணிகை –157–விண் மீது இருப்பாய் –திருவாய் -6-9-5–என்று-வைகுண்டே து பரே லோகே ஸ்ரியா ஸார்த்தம் ஜகத் பத்தி ஆஸ்தே விஷ்ணு ரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் சஹ-என்கிற படியே
பகல் கண்டேன்–இரண்டாம் திருவந்தாதி-81–என்கிற ஒரு பகலான பரம பதத்திலே – ஒண்டொடியாள் திரு மகளும் தானுமாய்–திருவாய்-4-9-10- நித்ய முக்தர் சேவிக்க ஓலக்கம் இருக்கையும்இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் -என்று–யமாத்மா ந வேத -என்கிறபடியே –வ்யாப்த பதார்த்தங்களுக்கு தெரியாத படி அந்தர்யாமியாய் –உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் அறிகையும்-திருமாலை-34 —கடல் சேர்ப்பாய் -என்று-பாற் கடல் யோக நித்தரை செய்து சேதன ரஷோ உபாயங்களை சிந்திக்கையும் –
(மந்த்ர ஆலோசனையைச் சொன்னபடி ),அனந்தரம்-மண் மீது உழல்வாய் -என்று ரக்ஷண அர்த்தமாக வந்து அவதரித்து-களிறும் புள்ளும் உடன் மடிய வேட்டையாடி வருவான்–நாச்சியார்–14-9–என்கிறபடியே
ஆஸ்ரித விரோதி துஷ்ட சத்வ நிரசனமாகிற வேட்டை யாடுகையும் -(விபவத்தைச் சொன்னபடி)-மலை மேல் நிற்பாய் -என்று –விரோதி நிரசன ஸ்ரமம் ஆர நிரதிசய போக்யங்களான –-ஆராமம் சூழ்ந்த கோவில்-சிறிய திருமடல் -71- என்றபடி –திரு மலை முதலான தேசங்களிலே ரசோத்தரமாக வசிக்கையும்
ஆகிய இவை ஐந்திலும் காணலாம் என்கை–

அடி ஆர்ந்த வையம் உண்டு ஆலிலை அன்ன வசஞ்செயும்
படியாதும் இல் குழவிப்படி எந்தை பிரான் தனக்கு
அடியார் அடியார் தம்மடியார் அடியார் தமக்கு
அடியார் அடியார் தம்மடியார் அடியோங்களே.–3-7-10-தமீஸ்வரனாம் பரமம் மஹேஸ்வரம் -என்று சேஷித்வத்துக்கு அவனுக்கு அவ்வருகு இல்லாதா போலே சேஷத்வத்துக்கு தமக்கு அவ்வருகு இல்லாத படி அதன் எல்லையில் நிற்கிறார்-தம்முடைய ருசிக்கு அவதி உண்டாய் மீண்டார் அல்லர்-சந்தஸ் ஸூ முடிய வேண்டுகையாலே மீண்டாராம் அத்தனை –இவ்வாறு ‘சண்டாள சண்டாளர்களாகிலும் – எம் அடிகளே’ என்று கூறுதல் உலக நடைக்கு மாறுகோடல் அன்றோ?’ எனின் ‘இப்படி வைஷ்ணவர்களை விரும்பினால் இது உலக மரியாதைக்குச் சேராதிருந்ததாகில், ஆழ்வார் விரும்பியதை நம்பினவர்களாகிறோம்,’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர். லௌகிக விருத்தம் ஆனாலும் ஆழ்வார் திரு உள்ளப்படி நடந்தோம் ஆவோம் என்றபடி –

உழலை என்பில் பேய்ச்சி முலை யூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்

குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே.–5-8-11-ஊழலை கோத்தால் போலே இருக்கிற எலும்புகளையுடைய பேய்ச்சி முலையிலே உகப்பாலே அவளை ப்ராணாபஹாரம் பண்ணின விரோதி நிரசன ஸ்வ பாவனான ஸ்ரீ கிருஷ்ணனுடையவையாய்-தமக்கு உபாயமாக முன்பு பிரகாசிப்பித்த திருவடிகளையே அபிமத சித்திக்கு உபாயமாக புத்தி பண்ணிக் கொண்ட திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வாரானவர்

அகற்ற நீ வைத்த மாய வல் லைம் புலன்களா மவை நன்கறிந்தனன்
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்தி கண்டாய்
பகர்க் கதிர் மணிமாட நீடு சிரீவர மங்கை வாணனே! என்றும்
புகற்கரிய எந்தாய்! புள்ளின் வாய் பிளந்தானே!–5-7-8-அகற்ற நீ வைத்த மாய வல் லைம் புலன்களா மவை நன்கறிந்தனன்–சர்வசக்தியான நீ, உன்னை உகவாதார் அகன்று போம்படிக்குத் தகுதியாக,
“தைவீஹி ஏஷா குணமயீ மம மாயா துரத்யயா மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாம் ஏதாம் தரந்தி தே” – ஸ்ரீகீதை, 7:14.“என்னுடைய மாயை தாண்ட முடியாதது” என்று கொண்டு வைத்த. ஸ்லோகம் -பிரகிருதி -இந்திரியங்கள் பிரகிருதி கார்யம் தானே -அதனால் சொல்லிற்றுஅத்யாச்சர்யமான செயல்களை யுடைத்தாய் ஒருவரால் தப்ப ஒண்ணாதே இருக்கிற ஐந்து இந்திரியங்களும் -நீ வேண்டாதாரை யகற்ற வைத்தாய் என்னும் இடம் வ்யக்தமாக அறிந்தேன் -மயர்வற மதி நலம் அருள பெற்றவன் ஆகையால் அழகிதாக அறிந்தேன் -யுகாவாதாரை யன்றோ யகற்றுவது -உமக்கு என் என்ன – அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்தி கண்டாய்-அவை அபுருஷார்த்தம் என்று அறிந்த என்னையும் -புக்கால் கால் வாங்க ஒண்ணாத சப் தாதி விஷயங்களில் தள்ளுகிறாய் என்று அஞ்சா நின்றேன் -உன்பக்கல் ந்யஸ்த பரனான என்னையும்-என்றுமாம் -நீர் அஞ்சக் கடவீரோ என்ன -விளம்ப ஹேது இன்றிக்கே இருக்க விரோதி கிடைக்கையாலே அஞ்சா நின்றேன்-

உற்றேன் உகந்து பணி செய்ய உன பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்

கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–10-8-10—கெடு மரக்கலம் கரை சேர்ந்தால் போலே கிட்டிக் கொடு நின்றேன் –ப்ரீதி ப்ரேரிதனாயக் கொண்டு -திருவாய் மொழி பாடி -உன் திருவடிகளை அனுபவிக்கப் பெற்றேன் – –சாதகமாய் மேல் -சாத்தியமாகச் சொல்லுகிறது அன்று -இரண்டும் ஏக காலத்திலே உள்ளதாகையாலே –இது தானே மாறி மாறி யாவதாத்ம பாவியாகச் செல்லுகை இறே –பு நரா வ்ருத்தி இன்றிக்கே ஒழிகை யாவது -மீளாது ஒழிகை -விதி போலே இருக்கிறதன்றே –இவ்வனுபவம் ஸ்வரூப அனுரூபம் என்கிறது -இத்தலைக்கு சேஷத்வமும் தேவர்க்கு சேஷித்வமும் இறே ஸ்வரூபம் -இவர் அபேக்ஷித்த படியே செய்கிறோம் என்ன -ப்ரீதராய் அருளிச் செய்கிறார் –

எண் பெருக்கு அந்நலத்திலும் –1-2-10-
எனக்கே ஆட் செய் –2-9-4-
ஒழிவில் காலம் –3-3-1-
வேங்கடங்கள் –3-3-6-
சீலமில்லா –4-7-1-
களைவாய் –5-8-8-
ஞாலத்தூடே –6-9-3-
என்கிற பாட்டுக்களிலும் —

எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே
 –1-2-10–எண் பெருக்கு-இத்தால் -ஜீவ அனந்யத்வத்தைச் சொல்கிறது-அந் நலத்து –-கல்யாணமான ஜ்ஞானாதி குணங்களை யுடைத்தாகை-ஒண் பொருள்
ஸ்வயம் பிரகாசமாய் இருக்கை-ஈறில நித்தியமாய் இருக்கை –இப்படிப் பட்ட ஆத்மா வர்க்கத்தையும்
வண் புகழ் –-கல்யாண குணங்களையும் யுடையனாய் இருக்கை-ஈறில -என்று குணங்களுக்கு விசேஷணம் ஆகவுமாம்-நாரணன் – நித்ய சித்த கல்யாண குணங்களோ பாதி ஜீவ சமூஹத்தையும் ஸ்வ அதீனமாக யுடையவன் ஆகையாலே -நாராயணன் –திண் கழல் சேரே — இப்படிப்பட்ட சம்பந்த ஜ்ஞானம் முன்னாகப் பற்றினாரை ஒருகாலும் விடாத திருவடிகளை ஆஸ்ரயி –நம் ஆசாரியர்கள்,-ஸ்வரூப அனுசந்தானத்துக்கு ஈடாய் இருக்கிற இதனுடைய அர்த்த அனுசந்தானம் மோக்ஷ சாதனம் – என்று தாங்களும் நினைந்து, தங்களைக் கிட்டினார்க்கும் உபதேசித்துக்கொண்டு போந்தார்கள்.

ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே
.–3-3-1-இப்பாசுரத்தால், ப்ராப்ய பிரதானமான -கைங்கரியப் பிரதானமான திருமந்திரத்தின் பொருளை அருளிச்செய்கிறார்:
‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும்’ என்னுமிதனால்,
சதுர்த்தியில் -நான்காம் வேற்றுமையின் பிரார்த்தனையைச் சொல்லுகிறது;

‘நாம்’ என்னுமிதனால், -பிரணவ ப்ரதிபாத்யமான -பிரணவத்தாற்சொல்லப்படுகின்ற இவ்வாத்துமாவினுடைய சொரூபத்தைச் சொல்லுகிறது;
‘இது,சப்த – சொல்லின் சுபாவத்தைக் கொண்டு சொன்னோம்’ என்று அருளிச் செய்தருளின வார்த்தை.
தெழிகுரல் அருவித் திருவேங்கடத்து எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கு’ என்றதனால், நாராயண பதத்தின் பொருளை அருளிச்செய்கிறார்;
சௌலப்யமும் வடிவழகும் ஸ்வாமித்துவமும் எல்லாம் – நாராயண பதத்திற்குப் பொருள்.
பிராப்த விஷயத்தில் செய்யும் கைங்கரியமே பிராப்யமாகும்.(‘பிராப்த விஷயத்தில் கைங்கரியமிறே ரசிப்பது’ (முமுக்ஷூப்படி, 173.)பிராப்தவிஷயம் – வகுத்த விஷயம். பிராப்யம் – பலம்.
ஆக, ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற திருமந்திரத்தில் ‘ஓம் நாராயணாய’ என்ற பதங்களின் பொருள் இப்பாசுரத்தில் சொல்லப்பட்டன; இங்குச் சொல்லப்படாத ‘நம’ பதத்தின் பொருளை ‘வேங்கடங்கள்’ என்ற பாசுரத்தில் அருளிச்செய்வர்.)

வேங் கடங்கள் மெய் மேல்வினை முற்றவும்,
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்,
வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல்
ஆம் கடமை அது சுமந் தார்கட்கே.
–3-3-6—வேங் கடங்கள்-கடம் என்று கடனாய் ருண த்ரயத்தை சொல்லுகிறது-மெய் மேல்வினை முற்றவும்,–தேஹ உபாதிகமான கர்மங்களும் அடங்க நசிக்கும் –என்று ஆளவந்தார் –-உத்தர பூர்வாகங்கள் நசிக்கும் இது மெய் -என்று எம்பெருமானார்
உத்தராகத்துக்கு விநாசம் சொல்லுகிறது நாச பர்யாயமான நைஷப்பல்யத்தை பற்றி இரண்டும் இவனை ஸ்பர்சியாது என்கை –-மெய் என்கிறது துஷ்ட காரண பிரசங்கம் உள்ள ப்ரத்யக்ஷம் போல் அன்றிக்கே நிர்த்தோஷ சாஸ்த்ர சித்தம் என்கை -ஆனால் கர்த்தவ்யம் என் என்னில்-தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்,- தாங்கள் தங்களுக்கு நன்று என்று இருந்த அடிமைகளை செய்ய அமையும்
நன்று என்று இருக்கிறது என் என்னில்-வேங்கடத்து உறைவார்க்கு –-சதுர்த்தியில் பிரார்த்தனையைச் சொல்கிறது-நம – தனக்காய் இருக்கும் இருப்பை கழிக்கிறது-என்னல்–யுக்தி மாத்திரமே அமையும்
வருணனுக்கு தொடுத்த அம்பை மருகாந்தரத்திலே விட்டால் போலே –-இவ்விடத்தில் பட்டர் மொட்டைத் தலையன் விஷயமான இதிகாசம் –-ஆம்-ஸூசகம்-கடமை-பிராப்தம்-அது சுமந் தார்கட்கே.– இக் கோட்டை எல்லாம் சுமந்தார்கட்க்கு என்று என்று ஆழ்வார் கருத்தால் யாதல்-இது தானே குவாலாய் இருக்கும் பகவத் அபிப்ராயத்தாலே யாதல் பூயிஷ்ட்டாம் தே நம உக்திம் விதேம-

சீலம் இல்லாச் சிறியே னேலும், செய்வினையோ பெரிதால்;
ஞாலம் உண்டாய்! ஞான மூர்த்தி! நாராயணா! என்று என்று
காலந் தோறும் யான் இருந்து, கைதலை பூசலிட்டால்,
கோல மேனி காண வாராய்; கூவியும் கொள்ளாயே.
–4-7-1-‘நாராயணன்’ என்கையாலே, இறை நிலை சொல்லிற்று; ‘சிறியன்’ என்கையாலே, உயிர்நிலை சொல்லிற்று; ‘வாராய்’ என்கையாலே, உபாயம் சொல்லிற்று; ‘காண’ என்கையாலே, பலம் சொல்லிற்று; ‘செய்வினையோ பெரிதால்’ என்கையாலே, விரோதி சொல்லிற்று; ஆக, ஐந்து பொருள்களும் இத்திருப்பாசுரத்திலே சொல்லப்பட்டன.–ப்ராசாங்கிகம் -த்வயார்த்தம் விவஷிதம்-ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி -ஞான சக்தியாதிகள் –உத்தர வாக்யார்த்தம்--நாராயணா -ஆஸ்ரயண சௌகர்யர்ய ஆபாதக -வாஸ்தல்யாதிகள்-பூர்வ வாக்யார்த்தம்
ஞாலம் உண்டான் -ரஷகம் -சப்த சாமர்த்தியத்தால் ஸ்ரீ மத் பதார்த்தமும்-கோல மேனி -சரண –திருவடி -சப்தார்த்தம்-வாராய் -சரண உபாயம் சப்தார்த்தம்-கை தலை பூசல் இட்டால் — கிரியா பிரபத்யே பிரபதனம்-பதில் கதௌ தாது -காலம் தோறும் -மகா விஸ்வாசம்-பிரகர்ஷனே பர்த்யே- பிரபர்த்யே
யான் -உத்தம அதிகாரி -அஹம் – என்று என்று -பூர்வ உத்தர வாக்யமும்– கிரியா பதம்–வர்த்தமானம் –
காண –சதுர்த்யந்தமான பிராப்யம் -ஆய – செய்வினையோ பெரிது –நமஸ் -அவித்யாதி கழி உண்ணும்

களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது
இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே
.–5-8-8—களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்-உன்னைப் பிரிந்து படுகிற துக்கத்தை போக்கிலும் போக்கு -தவிரிலும் தவிரு -வேறு ரக்ஷகரை யுடையேன் அல்லேன் -நீ உன் கார்யம் செய்யிலும் செய் -தவிரிலும் தவிரு என் தலையில் குறை இல்லை -த்வம் ஏவ உபாய பூதோ மே பவ-என்கிற அம்சத்தில் குறை இல்லை –சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி என்கிற உன் கூறு செய்யிலும் செய் -தவிரிலும் தவிரு -துக்க நிவ்ருத்தி உம்ம தான பின்பு கிருஷியும் உம்மை தாக வேண்டாவோ என்ன-துக்கி யாகைக்கு கிருஷி பண்ணின நான் நிவர்த்தகன் ஆகவோ -ஒரு சக்தி கிருத்யத்தை நான் செய்யவோ
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!-பார்த்த இடம் எல்லாம் வாயான திரு ஆழியை ஆயுதமாக யுடையவனே -கை கழலா நேமியானாக இருக்கிறது என்னுடைய துக்க நிவ்ருத்திக்கு அன்றோ -அதுக்கும் மேலே திருக் குடந்தையில் வந்து ஆச்சர்யமான அழகோடு கண் வளர்ந்து அருளுகிறது எனக்கு அணித்தாக வாக வன்றோ சக்தி வைகல்யம் சொல்ல ஒண்ணாது -ஸூ லபன் அன்று என்ன ஒண்ணாது –நீ “மாம்” என்றதன் பின் இவ்வருகுள்ள ஏற்றமெல்லாம் பாராய். இதனால், அவதார தசையிலும் அர்ச்சாவதாரம் சுலபம் என்றபடி.-ருசியுதபாதகன் அன்று என்ன ஒண்ணாது
தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது-சரீரமானது கட்டுக் குலையா என் பிராணனும் சரீரத்தை விட்டுப் பேரக் கடவ போதாயிற்று இப்போது -அங்கணம் அன்றியே அந்திம ஸ்ம்ருதியை அபேக்ஷிக்கிறார் ஆனாலோ என்னில் -அந்திம ஸ்ம்ருதி ஒழிய சித்தி இல்லாத அதிகாரி அல்லாமையாலே அத்தை சொல்லுகிறது அன்று -இவன் பக்கல் இது இல்லாத போது அவன் அஹம் ஸ்மராமி என்கையாலே விஸ்லேஷ வியசனத்தால் சரீரமும் தளர்ந்து பிராணனும் சரீரத்தை விட்டுப் போம் தசையாயிற்று இப்போது என்கை
இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே.– அபேக்ஷிதம் பெற்றிலனே யாகிலும் என் அபேக்ஷித்துக்கு உன் திருவடிகளை பற்றின பற்று நெகிழாமல் பண்ணி அருள வேணும் -அனுபவம் பெறாமையாலே அதுக்கு அடியானை உபாய அத்யாவசாயம் குலைகிறதோ என்று அஞ்சி இது குலையாத படி பார்த்து அருள வேணும் என்கிறார் –ஒருங்க -ஒருபடிப்பட –

ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப் பலநாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே!
கோலத் திருமா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பலநாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?
–6-9-3–இன்னும் தளர்வேனோ –-“ஒரு மிதுநம் எனக்குப் பேறு” என்று அறிந்த பின்பும் தளருமத்தனையோ? ‘நீ ரக்ஷகன்’ என்று அறியாதொழிதல், ‘வேறு எனக்கு ரக்ஷகமுண்டு’ என்றிருத்தல்,‘லக்ஷ்மிக்கு நாயகனாயுள்ள வஸ்து பிராப்யம்’ என்று அறியாதொழிதல்,-அனுபவமும் எனக்கு -‘எனக்கு நான் உரியேன்’ என்று இருத்தல் செய்தேனோ இழக்கைக்கு; ருசி பிறந்த பின்பு இழக்கவோ?–“அவ-ரக்ஷணே” -(காப்பான் )அன்றோ தாது. ரக்ஷிக்குமிடத்தில், எல்லா வகையாலும் ரக்ஷிக்க வேண்டும்; அது தான் எல்லாக் காலமும் ரக்ஷிக்க வேண்டும்; அப்படி ரக்ஷிக்குமிடத்தில் எல்லாரையும் ரக்ஷிக்கிறவனாக வேண்டும்;இப்படி வரையாதே ரக்ஷிக்குமிடத்தில், “குற்றம் செய்யாதார் ஒருவரும் இலர்” என்னுமவளும், “என்னடியார் அது செய்யார்” என்னுமவனும்கூட ஆயிற்று; ஆகையாலே, அகாரம், மிதுநத்துக்கு வாசகமாயிற்று–ஏவம் அஷர ரூபம் காரணத்வம் -ரக்ஷணம் தாது சேஷித்வம் பத ரூபம் – ஸ்ரீ வாஸ்ய சக்தி -மூலம் -உஜ்யதே பரமாத்மா.-“ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும் காப்பானே” என்கையாலே, எல்லா வகையாலும் ரக்ஷகத்வம் சொல்லிற்று; “சாலப் பலநாள் யுகந்தோறும்” என்கையாலே, எல்லாக் காலத்திலும் ரக்ஷகத்வம் சொல்லிற்று; “உயிர்கள்” என்கையாலே, சர்வ ரக்ஷகத்வம் சொல்லிற்று;‘கோலத் திருமாமகளோடு உன்னைக் கூட’ என்கையாலே, திருமகள் கேள்வனே பிராப்யம் என்றது.-அகாரத்தின் விவரணமான திருமந்திரத்தின் பொருளும்-அர்த்த பஞ்சகமும் – சொல்லுகிறது;
“கோலத் திரு மா மகளோடு உன்னை” என்கையாலே பிரஹ்ம ஸ்வரூபம் சொல்லிற்று;
“அடியேன்” என்கையாலே, ஜீவாத்ம ஸ்வரூபம் சொல்லிற்று;
‘உயிர்கள் காப்பான்’ என்கையாலே, உபாயம் சொல்லிற்று;
‘உன்னைக் கூட’ என்கையாலே, பலம் சொல்லிற்று,
‘உன்னைக் கூடாதே – தளர்வேனோ’ என்கையாலே விரோதி ஸ்வரூபம் சொல்லிற்று.

திரு மந்த்ரத்திலும் காணலாய் இருக்கும் —
அகாரத்தாலும்
மகாரத்தாலும்
ரக்ஷகனையும் ரஷ்யத்தையும் சொல்லி

சதுர்த்தியாலும்
உகாரத்தாலும்
ரக்ஷண ஹேதுவான பிராப்தியும் பலத்தையும் சொல்லுகிறது

ச விபக்தி கதமான நாராயண பதத்திலே
சர்வ ஸ்மாத் பரன் திருவடிகளிலே கைங்கர்யத்தைச் சொல்லுகையாலே
திருமந்திரம் –அர்த்த பஞ்சக ப்ரதிபாதகம் என்னும் இடம் ஸ்பஷ்டம் இறே

ஆகையாலே திருவாய் மொழியிலே பிரதிபாதிக்கிற அர்த்தம் எல்லாம் அர்த்த பஞ்சக ப்ரதிபாதகமான
திருமந்த்ரார்த்தம் என்னத் தட்டு இல்லை

ஸ்ரீ பதி ஸ சேதனஸ் யாஸ்ய –பன்னீராயிரப்படி பிரவேசம்
என்கிற ஸ்லோகத்தில் அருளிச் செய்த அர்த்த பஞ்சகமும்
இதில் இரண்டு பத்தாலே ஒரோர் அர்த்தம் ப்ரதிபாதிக்கப் படுகிறது -என்று
திருவாய் மொழியின் பிரவேசத்தில் ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் அருளிச் செய்தார் இறே

திலதம் உலகுக்கான திரு வேங்கடத்தானை
அலகில் புகழ் அந்தாதி ஆயிரமும் -உலகில்
உரைத்தான் சடகோபன் உத்தமர்கள் நெஞ்சில்
விரித்தான் பெரும் பூதூர் வேந்து-

——-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அனந்தாழ்வான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சொட்டை நம்பிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஈஸ்வர முனிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நாதமுனிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி தனியன்-5-வான் திகழும் சோலை-ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் –

June 19, 2026

வான் திகழும் சோலை மதிள் அரங்கர் வண் புகழ் மேல்
ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும்
ஈன்ற முதல் தாய் சடகோபன் மொய்ம்பால்
வளர்த்த இதத்தாய் இராமானுசன்
-ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த தனியன்

இனி இதில் திருவாய் மொழியினுடைய உத்பாதகரையும் வர்த்தமானரையும் -சொல்லுகிறது

வான் திகழும் சோலை -ஆவது-ஆகாசத்திலே திகழ்கிற பிரகாசிக்கிற சோலை என்றபடி –
வ்ருஷ ஷண்ட மிதோ பாதி –
வான் ஏந்து சோலை
சோலை அணி –திருவரங்கம் இறே –

வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீது அணவும் சோலை குயிலினம் கூவும் சோலை
அண்டர் கோன் அமரும் சோலை அணி திருவரங்கம் என்னா
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமின் நீரே–14–சோலை அணி திருவரங்கம் –சோலையை ஆபரணமாக உடைத்தான கோயில் -என்னுதல் –சம்சாரத்துக்கு ஆபரணமான கோயில் -என்னுதல்

மதிள் அரங்கர்
திண் கொடி மதிள் சூழ்

மதிள் திருவரங்கம் –7-2-3-
அதுவும்-வானை யுந்து மதிளாய் இருக்கை – -9-10-4-

வட்கிலள் இறையும் ‘மணிவண்ணா!’ என்னும்; வானமே நோக்குமை யாக்கும்
‘உட்குடை அசுரர் உயிரெலாம் உண்ட ஒருவனே!’ என்னும் உள் ளுருகும்;
‘கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய் காகுத்தா! கண்ணனே!’ என்னும்;
திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்’ இவள் திறத் தென் செய்திட்டாயே–7-2-3–ராம கிருஷ்ணாதி அவதாரங்களில் பெறாதார்க்கும் உன்னைக் கொடுத்து அருள கடவதானமை தெரியும் படி கொடி கட்டிக் கொண்டு அன்றோ கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிறது–திண்ணிய மதிள் என்னுதல் -திண்ணிய கொடி என்னுதல் -அவிழ்த்துக் காட்டாத கொடி என்கை -வருவோர் எல்லாரும் வாருங்கோள் -என்று உறுதியாக கொடி கட்டிக் கொண்டு அன்றோ கிடக்கிறது

வான் திகழும் சோலை
உயர்ந்த சோலையையும் மதிளையும் யுடைய கோயிலிலே நிரூபகமான பெரிய பெருமாளுடைய –
ஸ்லாக்யமான கல்யாண குண விஷயமாய் விஸ்திருதமாயிற்று ஆயிரம் திருவாய் மொழியும்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரம்
–7-2-11-என்னக் கடவது இறே

முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் மொய்புனல் பொருநல்
துகில் வண்ணத் தூ நீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ் வண் குரு கூர்ச் சட கோபன்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே.–7-2-11-காளமேகம் போன்று மிக்க பேரெழிலை யுடையரான பெரிய பெருமாள் விஷயமாக -பெரிய பெருமாள் திருவடிகளிலே யாயிற்று ஆயிரமும் சொல்லிற்று -திரு மோகூர்க்கு ஈத்த பத்து -திரு வேங்கடத்துக்கு இவை பத்து -என்றும் பிரித்துக் கொடுத்த அத்தனை -திருப் பலகையில் அமுது படியில் திருப் பதிகளில் நாயன்மார்க்கு அளந்து கொடுக்குமா போலே -என்று பிள்ளை அருளிச் செய்வர் –

அது தான்
சீர்த் தொடை ஆயிரம்
–1-2-11- என்று சீர் கலந்த சொல்லாய் இறே இருப்பது –
நலமுடையவன் –1-1-1-
ஈறில வண் புகழ் நாரணன் -1-2-10-என்று உபக்ரமித்து
வாழ் புகழ் நாரணன் –10-9-1-என்று இறே தலைக்கட்டி அருளினார் –

சேரத் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
சீர்த் தொடை யாயிரத்து ஒர்த்த விப்பத்தே
 –1-2-11-சீர் என்று கவிக்கு உறுப்பான அலங்காரங்களைச் சொல்லுதல்-பகவத் குணங்களைச் சொல்லுதல்-எழுத்து அசை சீர் பந்தம் அடி தொடை’ பா இனம் – என்று கவிக்கு உறுப்பாக இருப்பன சில உள; அவற்றைச் சொல்லுதல்;-அன்றிக்கே , உபாசகன் அனுக்ரஹத்தாலே – உபாஸ்யனுடைய கல்யாண குணங்களைத் தொடுத்த ஆயிரம் என்னுதல்.

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே 
–1-1-1-உயர் – -உயரா நிற்கை-கால தத்வம் உள்ளதனையும் அனுபவியா நின்றாலும் அவ்வருகாய்க் கொண்டு வாக் மனஸ் அங்கங்களால் பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கை-அனுபூத அம்சம் அல்பமாய் அனுபாவ்ய அம்சமே விஞ்சி இருக்கை-நலம்-குண விபூத்யாதிகளை அனுபவிக்கையால் வந்த ஆனந்த குணம் – ஏக வசனம் ஜாத்யபிப்ராயமாய் -குண ஜாதி பரமாகவுமாம்- ஆனந்த அவஹமான குண விபூத்யாதி பரமாகவுமாம்-நலம் என்கையாலே -கட்டடங்க நன்மையேயாய் இருக்கைஉடையவன் ஆதந்துகம் அன்றிக்கே ஸ்வரூப அனுபந்தியாய் இருக்கை-இதுக்கு ஆளவந்தார் -ஸ்வா பாவிக அநவதிக அதிசய கல்யாண குண கண -என்று அருளிச் செய்வர்-குத்ருஷ்டிகளை மிடற்றை பிடித்தால் போலே நலமுடையவன் என்று ஆழ்வார் அருளிச் செய்த படி கண்டாயே -என்று பிள்ளை பிள்ளை ஆழ்வானுக்கு ஆழ்வான் பணித்தான் –

எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே
 –1-2-10-அசங்க் யேயமாய் அபரிச்சின்னமான கல்யாண குணங்கள் என்ன -இவற்றை யுடையன் ஆகையால் –நாராயண சப்த வாச்யனான ஸ்வாமியினுடைய-ஈறு இல’ என்பதனை ‘ஈறு இலவான ஒண் பொருள்’ என்றும்,-‘ஈறு இலவான வண் புகழ்’ என்றும் அன்வயித்துக் கிடக்கும்-ஈறு இலவான ஒண் பொருளையும், ஈறு இலவான வண் புகழையும் உடையன் ஆகையாயிற்று-‘நாராயணன்’ யாகையாகிறது –பாவத்க மங்கல குணா ஹாய் நிதர்சனம் ந -( ‘தேவரீருடைய குணங்கள் அன்றோ எங்களுக்கு எடுத்துக்காட்டாய் இருக்கின்றன?’ )என்கிறபடியே,
தன்னுடைய கல்யாண – நற்குணங்களைப் போன்று, இவ் வுயிர்களும் நித்தியமுமாய்ப் பிரகாரமுமாய் இருக்கும் என்பதனைத் தெரிவித்தபடி. குணங்களை நிதர்சனமாகச் சொல்லிற்று –
ஆக, நித்தியரான த்ரிவித -மூவகைப்பட்ட சேதனரையும், நித்தியமான கல்யாண குணங்களையும் உடையவன் நாராயணன் என்பதாயிற்று. 

சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே –10-9-1-ஆஸ்ரிதரை வாழும் படி பண்ண வற்றான கல்யாண குணங்களை யுடைய சர்வேஸ்வரன்

பெரிய பெருமாள் தான் நலம் திகழ் நாரணன் –பெருமாள் –10-11- இறே –
நாராயண பரம் ப்ரஹ்ம
நாராயணா பரா வேதா
–என்னக் கடவது இறே —
அத்தாலே –மதிள் அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும்-என்கிறது –

தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள் திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று அது முதலா தன் உலகம் புக்கது
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள் கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்ணுவாரே–10-11–-அழகிய இயலை உடைய தமிழ் மாலை பத்தும் வல்லார் –-ஸ்ரீ பரமபதத்திலே விளங்கா நின்றுள்ள ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளைக் கிட்டப் பெறுவார் –

நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண: பர: நாராயண பரோ ஜ்யோதி ராத்மா நாராயண: பரநாராயண பரோ த்யாதா த்யானம் நாராயண பர:–நாராயண ஸூக்தத்தில் (யஜுர் வேதம்)-நாராயண பரம் ப்ரஹ்ம: நாராயணனே முழுமுதற் கடவுள் (பரம்பொருள்).-எல்லாவற்றிற்கும் மேலான உயர்ந்த உண்மை அல்லது தத்துவம் நாராயணனே.-நாராயண பரோ ஜ்யோதி: நாராயணனே எல்லாவற்றிற்கும் மேலான ஒளி.-ஆத்மா நாராயண: பர: அனைத்து உயிர்களுக்கும் உள்ளே இருக்கும் ஆன்மாவும் நாராயணனே-நாராயணனே தியானம் செய்பவர்களுள் சிறந்தவர். நாராயணனே சிறந்த தியானம்.-யச்ச கிஞ்சிஞ்-ஜகத் சர்வம் த்ருஷ்யதே ஷ்ரூயதே அபி வா | அந்தர் பஹிஷ்-ச தத்ஸர்வம் வ்யாப்ய நாராயணா: ஸ்தித: ||-யாக்க கிஞ்சித் (அதெல்லாம்) ஜகத் சர்வம் (உலகம் முழுவதும்) த்ருஷ்யதே (அது
பார்த்தது) அபி வா (அல்லது உள்ளது) ஷ்ரூயதே (கேட்டது), நாராயணா: (ஸ்ரீமன் நாராயணா)
ஸ்திதா: (நின்று) வ்யாப்ய (வெளிப்படுத்துதல்) தத் சர்வம் (அனைத்தும்) அந்த:
(உள்ளே) பஹிஷ்-சா (மற்றும் வெளியே).-இந்த ஸ்லோகம் மீண்டும் ஸ்ரீமன் நாராயணனின் ‘விஸ்வத்வத்தை’ வலியுறுத்துகிறதுஅனந்தம் அவ்யாயம் கவீம் சமுத்ரே-அந்தம் விஷ்வஷம்புவம் |
பத்மகோஷ-ப்ரதீகாஷம் ஹৃதயம் சாப்யதோமுகம் |
|-அனந்தம் (முடிவற்றவர்) அவ்யயம் (மற்றும் அழிவற்றவர்) கவிம் (மற்றும் ஒரு கவிஞர், எல்லாம் அறிந்தவர்) சமுத்ரே (கடலில் இருப்பவர்) அந்தம் (மற்றும் உள்ளே இருப்பவர்) விஷ்வ – ஷம் – புவம் (யார் உலகமனைத்துக்கும் நல்வாழ்வை (ஷம்) அளிக்கிறாரோ – நான்) அந்த நாராயணனை தியானியுங்கள்). ஹ்ருதயம் கா அபி (இதயம் இது) அதோ-முகம் (முகம் குனிந்து) பத்மகோஷ-பிரதீகாஷம் (தாமரை மொட்டு போல் தன்னை வெளிப்படுத்துகிறது).

இனித்தான்
திருவாய் மொழி பத்துப் பத்தாலும் ப்ரதிபாதிக்கிற
1-பரபரன் –1-1-8- என்கிற பரத்வமும்

2-சோராத எப்பொருட்க்கும் ஆதி -2-1-11-என்கிற காரணத்வமும்

3-முழுதுமாய் முழுதியன்றாய் –3-1-8-என்கிற வியாபகத்வமும்

4-மறுகல் ஈசன் –4-1-10- என்கிற நியந்த்ருத்வமும்

5-ஆவா என்று அருள் செய்து -5-1-6- என்கிற காருணிகத்வமும்

6-ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் –6-1-10-என்றும்
வரம் கொள் பாதம் அல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரண் –6-3-7-என்றும் – சொல்லுகிற சரண்யத்வமும்

7-எண்ணிலாப் பெரு மாயன் –7-1-1- என்கிற சக்தி மதத்வமும்

8-தேவிமார் ஆராவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார் –8-1-1- என்கிற ஸத்ய காமத்வமும்

9-எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான் –9-1-1-என்கிற ஆபத் ஸகத்வமும்

10-சுரி குழல் கமலக் கட் கனிவாய்க் காள மேகம் –10-1-1-என்ற ஆர்த்தி ஹரத்வமும்

சுரர் அறிவரு நிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என வுலகு அழித்து அமைத்து உளனே 
–1-1-8-அவன் காட்டின வழியாலே ஏகதேச சிருஷ்டியையும் ஏக தேச சம்ஹாரத்தையும் பண்ணுகையாலே அஸ்மத் தாதிகளைக் காட்டில் பரராய் இருக்கிற ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு நிலம் அல்லாத சிருஷ்டி சம்ஹாரங்களைப் பண்ணுகையாலே அவர்களுக்கும் பரன் 

சேராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே –2-1-11-இப்படி இவரோடு கலந்து இவரை உளர் ஆக்குகையாலே ஓன்று ஒழியாதபடி சகல பதார்த்தங்களும் ஈஸ்வரனுமாய்
சோதிக்கே--முக மலர்த்தியும் தன்னைத்தான் படி இருந்தான்-இவர் ஒருவரையும் சோர விட்டான் ஆகில் சர்வ சேஷி யாக மாட்டானே-நிரவதிக தேஜோ ரூபமான விகிரஹத்தை உடையானான் என்றுமாம் –
சர்வ ரக்ஷகத்வம் நிலை நின்றது-வடிவு அழகும் புதுக் கணித்தது

மாசூணாச் சுடருடம்பாய் மலராது குவியாது
மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய்
மாசூணா வான் கோலத்தமரர் கோன் வழிப்பட்டால்
மாசூணா வுனபாதம் மலர்ச்சோதி மழுங்காதே–3-1-8–அனுக்தமான குண விபூதி யாதிகளை உடையையாய் எல்லா வற்றையும் நிர்வஹிக்கிறவனே –ஜகச் சரீரனாய் நிற்கும் நிலை
வரம்பின்றி முழுதியன்றாய் -என்றதன் அனுவாதமாய் எல்லாவற்றையும் நிர்வஹித்தாய்
என்றபடி –

குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம் விட்ட
இறுகல் இறப்பெனும் ஞானிக்கும் அப்பயன் இல்லையேல்,
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்; பின்னும் வீடு இல்லை,
மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில், வீடு அஃதே.–4-1-10-ஹேய ப்ரத்ய நீகனாகவும் ஞான ஏக ஆகாரகனாகவும் அனுசந்தித்து அவனோடு சஜாதீயனாகவும் ஆத்மாவை அனுசந்தித்து
மறுகல் இல்-மறுகுகிற சமயத்தில் -சரீர விஸ்லேஷ சமயத்தில் என்னவுமாம் -இப்படி துஸ் சாதகம் ஆகையால் -ஈஸ்வர சாபேஷம் யாகையாலும் -பகவத் அனுபவத்தை குறித்து தண்ணிது யாகையாலும்
தண்ணிது ஆனது தானே ஸ்த்திரம் ஆகையால் மிகவும் அபுருஷார்த்தம் ஆகையால் -அபிராப்த புருஷார்த்தம் ஆகையால் அண்ணல் கழல்கள் குறுகுமினோ -என்று கீழ்ச் சொன்ன கைங்கர்யமே புருஷார்த்தம் –மறுகல் இல் ஈசனைப் பற்றி -அந்திம ஸ்மிருதி பண்ணி சரீரத்தை-விடாவிடில் பின்னும் வீடு இல்லை – இந்திரிய நியமனம் முதலானவைகள் உண்டாய், பின்பு பகவானை வழிபட்டுக்
கர்மங்களை எல்லாம் அழித்து, ஆத்துமாவைக் காண வேண்டும் என்று இருக்கின்ற அன்றும், சர்வேசுவரன் பக்கல் அந்திம ஸ்மிருதி பண்ணி இச்சரீரத்தை விடுவதற்குப் பாரானாகில்,
அந்த மோக்ஷந்தான் இல்லை.-எதோ உபாசனம் ததோ பலம் -விருப்பம் இல்லாதவனுக்கு கொடுக்கக் கூடாதே –-அண்டாதிபதே -சொல்லி ஐஸ்வர்யம் பெற்று போவான் –-அசுத்த சரீரம் -கர்மா தீனம் இல்லாமல் -சுத்தன் என்றே உபாசித்து -கைவல்யம் பெற்று போவான் –-அவன் அழகை அனுசந்தித்து -பகவத் ப்ரீதி காரித கைங்கர்யம் பெற்று போவோம் – உபாசனம் ஆபிராணாத்- இதற்கு சாஸ்திரம் அந்திம ஸ்ம்ருதி -விதிக்கிறதே –-மறுகல் இல் ஈசனை – குற்றங்கட்கு எதிர்த்தட்டான சர்வேசுவரனை,
அன்றிக்கே,-‘மறுகலில் –-சப்தமி -ஏழாம் வேற்றுமை – மறுகுகிற சமயத்தில்; உயிர் நீங்குங் காலத்தில் வருகின்ற கலக்கத்தில்’ என்னுதல்.-ஈசனைப் பற்றி விடாவிடில் – பற்றாமல் இருந்தாயாகில் என்றபடி –
அந்திம ஸ்மிருதி இல்லையாகில் ஆதி பரதனைப்போலே மான் ஆதல், மரை ஆதல் ஆமித்தனை.
அஃதே வீடு – ‘திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ’ என்று நான் சொல்லுகிற அதுவே புருஷார்த்தம். பன்னீராயிரப்படி மட்டும் -அவனைப் பற்றி பிரயோஜ நாந்தரம் பெற்று விடா விடில் -அஃதே வீடு –

ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே.–5-1-9–பிரகிருதி சம்பந்தம் இல்லாத திவ்விய உறுப்புகளோடும் அவ் வுறுப்புக்களில் சேர்ந்த திவ்விய ஆயுதங்களோடுங் கூட வந்து, ஐயோ ஐயோ என்று தன்னுடைய நிரவதிக கிருபையை பண்ணி –கேசவன் தமர் தொடங்கி-கிருபையை விதி சப்தத்தால் சொல்லிப் போந்தவர் -இப்பாட்டில் அருள் என்று வெளியிடுகிறார் –ஸ்வரூப அநு ரூபமாக சேஷியாய் வந்து கலந்தான் –

வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்!
தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திருவண்வண்டூர்
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே.–6-1-10-எங்கும் மேற்பட்ட ஆண் பிள்ளை தனத்தை யுடையவர்க்கு -ரஞ்ச நீ யஸ்ய விக்ரமை -என்று எதிரிகள் மேலிட்ட வீரம் –ரதசர்யா ஸூ சம்மத -என்று வீரர்கள் கொண்டாடின வீரம் –-உம்முடைய ரஷ்ய வர்க்கத்தில் இன்னும் ஒருத்தி நோவுபடா நின்றாள் என்னுங்கோள் –

பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
வரங்கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன்சரணே
.–6-3-7-வரையாதே எல்லார்க்கும் ஆஸ்ரயிக்கலாம் படியான ஸ்ரேஷ்டமான திருவடிகள்-சிறியோர் பெரியோர் என்று அன்றிக்கே எல்லார்க்கும் தஞ்சமான புகல் வேறு இல்லை –அல்லாதவை ஓட்டை ஓடத்தோடு ஒழுகல் ஓடமாய் கழுத்துக் கட்டியாய் இறே இருப்பது –

உண்ணி  லாவிய ஐவராற் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம்
நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய்
எண்ணிலாப் பெரு மாயனே!இமையோர்கள் ஏத்தும் உலக மூன்றுடை
அண்ணலே! அமுதே! அப்பனே!என்னை ஆள்வானே!–7-1-1-
எண்ணிலாப் பெரு மாயனே!-எண்ணிறந்த காரியங்களை விளைக்க வற்றாய் துஸ்தரமான பிரக்ருதியை யுடையவனே -நீ வேண்டாதாரை நலிகைக்கு ப்ரக்ருதியை உபகரணமாக யுடையவன் என்கை -மமமாயா துரத்யயா -ஸமஸ்த கல்யாண குணாத்மகன் என்று பிள்ளான் பணிக்கும் -என்னுடைய நோய்க்கும் உன்னுடைய குணங்களுக்கும் என்ன சேர்த்தி யுண்டு

தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்
மேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்
பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணது ஓர் பவளவாய் மணியே
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாயே8-1-1-தேவிமார் ஆவார் திருமகள் பூமி -அவர்கள்புருவம் நெளிந்த இடத்தே உனக்கு கார்யம் செய்ய வேண்டும் படி வல்லபைகளாய் இருக்கிறார் பிராட்டியாரும் ஆண்டாளும் -நகச்சின் நபாராத்யதி -என்று பொறைக்கு உவாத்தாய் இருக்கும் ஒருத்தி -பொறுப்பது எத்தை குற்றம் தான் உண்டோ -என்று அப் பொறை தான் ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கும் ஒருத்தி -ஒருத்தி சம்பத்தாய் இருக்கும் -ஒருத்தி சம்பத்துக்கு விளை பூமியாய் இருக்கும் -அவர்கள் இருவரும் அருகே இருக்க நான் இழக்க வேண்டுகிறது என் என்ன
ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்-அவனும் அவளுமான சேர்த்தியிலே எடுத்துக் கை நீட்டுவார் நித்ய ஸூரிகள்-ஏவ -கைங்கர்யம் உத்தேச்யமானவோ பாதி ஏவிக் கொள்ளுகையும் உத்தேச்யம் என்கை –க்ரியதாம் இதி மாம் வத –-மற்று -என்று துல்ய விகல்பத்தை யாயிற்று -திரு முலைத் தடத்தில் அணைந்தால் பிராட்டிமார்க்கு உள்ள இனிமை -அச் சேர்த்தியில் கைங்கர்யம் பண்ணப் பெறுகையாலே இவர்களுக்கு உண்டாம் -ரமமாணா வநேத்ர்ய -ஸ்வரூப அனுரூபமாய் இறே-ஸூ கங்கள் இருப்பது –அருளே -ப்ராப்ய ப்ராபகம் இரண்டும் ஒன்றே என்று இருப்பார்க்கு கார்யம் செய்யலாகாது என்கை –

தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர்
நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்
காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே-
10-1-1-சுரி குழல்–இவன் பின்னே வழியே போமிடத்து திருக் குழலை ஒரு கால் பேண நெடு நாள் சம்சாரத்தில் பட்ட கிலேசம் எல்லாம் தீரும் படி யாய்த்து இருப்பது –கேசவ கிலேச நாசன –-கமலக் கண் கனி வாய்-பந்தம் எல்லாம் தோற்றும் படியான நோக்கும் ஸ்மிதமும் இருக்கிற படி –சம்சாரத்திலே பொய்யருடைய நோக்கிலும் ஸ்மிதத்திலும் பட்ட நோவு எல்லாம் ஆறும் படி இறே இருப்பது –கச்சதாம் தூர  மத்வானம் த்ருஷ்ணா மூர்ச்சித சேதஸாம் -பாதேயம் புண்டரீகாக்ஷ நாம சங்கீர்த்தன அம்ருதம் –-காளமேகத்தை – -வழி போம் போது முன்னே ஒரு காளமேகம் வர்ஷித்திக் கொண்டு போக பின்னே போமா போலே ஸ்ரமஹரமாய் இறே இருப்பது -சர்வ கந்த -என்கிற விஷயம் ஆகையால் -அவ்வாஸ நாற்றத்தை அனுபவித்திக் கொண்டு போம் அத்தனை -யன்றி மற்று ஓன்று இலம் கதியே--அவனை ஒழிய வேறு கதி உடையோம் அல்லோம் -வேறு ஒருவரை ரக்ஷகமாக உடையோம் அல்லோம் –

ஆகிற அதில் பத்து அர்த்தமும் பெரிய பெருமாளைப் பிரதிபாதிக்கிற-கங்குலும் பகலிலும் –7-2- காணலாய் இருக்கும் –

பத்து பத்துக்களின் அர்த்தம் இதில் உண்டே –பரத்வாதி தசகம்
பரத்வம் -வடிவுடை வானோர் தலைவனே என்னும்
காரணத்வம்-முன் செய்து இவ்வுலகம் படைத்து
வியாபகத்வம் -கட்கிலி
நியந்த்ருத்வம் -கால சக்கரத்தாய்
காருணிகத்வம் -இவள் திறத்து அருளாய்
சரண்யத்வம் -பற்றிலார் பற்ற நின்றானே
சக்தித்வம் -அலை கடல் கடைந்த ஆராவமுதே
சத்ய காமத்வம் -என் திருமகள் மார்பனே என்னும் என்னுடை ஆவியே என்னும்
ஆபத் ஸகத்வம்– உண்டு உமிழ்ந்து அளந்து
ஆர்த்தி ஹரத்வம் -அடி அடைந்து அருள் சூடி உய்ந்தவர்

1- வடிவுடை வானோர் தலைவனே -7-2-10-என்று பரத்வமும்

2-முன் செய்து இவ்வுலகம் -7-2-2- என்றும்
விண்ணோர் முதல் -7-2-6- என்றும்
காரணத்வமும்

3-கட்கிலி–7-2-3- என்றும்
என்னுடை ஆவி -7-2-9-என்றும் வியாபகத்வமும்

4- பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய் –7-2-7–என்றும்
கால சக்கரத்தாய்–7-2-5- –என்றும்
மூ உலகாளி –7-2-10- என்றும்
நியந்த்ருத்வமும்

5- இவள் திறத்து அருளாய் –7-2-6–என்று காருணிகத்வமும்

6-பற்றிலார் பற்ற நின்றானே -7-2-7- என்று சரண்யத்வமும்

7- அலை கடல் கடைந்த ஆரமுதே –7-2-5- என்று சக்தி மத்வமும்

8-என் திருமகள் சேர் மார்பனே –என்றும்
நில மகள் கேள்வனே –என்றும்
ஆய் மகள் அன்பனே –7-2-9- என்றும்
சக்தியால் நித்யமாகக் கற்பித்த பத்நீ பரிஜா நாதிகளை யுடைய ஸத்ய காமத்வமும்

9- இவ்வுலகம் உண்டு உமிழ்ந்து அளந்தாய் -7-2-2- என்று ஆபத் ஸஹத்வமும்

10- முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் –7-2-11- என்று ஆர்த்தி ஹரத்வமும் அருளிச் செய்தார் இறே

முடிவிவள் தனக்கு ஒன்று அறிகிலேன்’ என்னும்; ‘மூவுல காளியே!’ என்னும்;
‘கடி கமழ் கொன்றைச் சடையனே!’ என்னும்; ‘நான்முகக் கடவுளே!’ என்னும்;
வடிவுடை வானோர் தலைவனே!’ என்னும்; ‘வண் திரு வரங்கனே!’ என்னும்;
அடி யடையா தாள் போல் இவள் அணுகி அடைந்தனள் முகில்வண்ணன் அடியே.–7-2-10–த்ரை லோக்ய நிர்வாஹனான இந்திரனுக்கு அந்தராத்மாதயா வாக நின்று அவனுடைய அதிகாரத்தை நடத்துவபனே என்னும் -ஐஸ்வர்ய ஸூ சகமான தாரையையும் -சாதகத்வ ஸூ சகமான ஜடையையும் உடைய ருத்ரன் அதிகாரத்தை அவனுக்கு அந்தராத்மாவாக நின்று நிர்வஹித்தவனே என்னும் -கடி கமழ்-பரிமளம் மிக்கு இருக்கை –சதுர்முகனான தேவதைக்கு ஆத்மாவானவனே என்னும் -உன்னோடே ஒத்த வடிவை யுடைய நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகன் ஆனவனே

என் செய்கின் றாய்? என் தாமரைக் கண்ணா! என்னும் கண்ணீர் மல்க இருக்கும்
என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய்! என்னும் வெவ் வுயிர்த் துயிர்த் துருகும்
முன் செய்த வினையே முகப்படாய் என்னும் முகில்வண்ணா! தகுவதோ என்னும்
முன் செய்திவ் வுலகம் உண்டு மிழ்ந் தளந்தாய்! என் கொலோ முடிகின்றது இவட்கே?–7-2-2-ஜல ஸ்தல விபாகமற உபகரிக்கும் மேக ஸ்வ பாவனானவனே -நீ முகம் காட்டாது இருக்குமது அந்த யுபகாரத்துக்குத் தகுவதோ என்னும்–அந்த யுபகாரகத்வம் பலமாம்படி இந்த லோகத்தை பிரதமத்திலே ஸ்ருஷ்டித்து – பிரளயத்தில் உண்டு -உமிழ்ந்து -அந்நிய அபிமானம் போம்படி அளந்து கொண்டவனே–நிர் ஹேதுகமாக முன்பு ஜகத் ஸ்ருஷ்ட்டி யாதிகளைப் பண்ணினவன் அல்லையோ –ஸ்ருஷ்ட்டி யாதிகளில் யவ் கபத்யத்தை கர்ம அனுகுணம் என்ன ஒண்ணுமோ -அபு நா வ்ருத்தி லக்ஷண மோக்ஷத்தை பெறுகைக்கு அடியாய் இருபத்தொரு கனவியதொன்று சேதனன் தலையிலே கிடக்க வற்றோ –காரணம் ஒன்றும் இல்லாமலே முன்பு உலகத்தைப் படைத்தல் முதலானவைகளைச் செய்து ‘தகவிதோ’ என்கைக்கு ‘உபகரணம் இல்லாத அன்று இதனை உண்டாக்கி நோக்கினாய் நீ அன்றோ?’ என்றது, ‘கரண களேபரங்கள் இல்லாமல் கிடந்த இதனை வெறும் உன் கிருபையாலே உண்டாக்கினாய் இத்தனை அன்றோ?-உண்டாக்கிவிட்ட அளவையோ? பிரளய ஆபத்து வயிற்றிலே வைத்துப் பாதுகாத்து, உள்ளே கிடந்து நோவு படாதபடி புறப்பட விட்டு, எல்லை நடந்து மீட்டுக் கொண்டு, எல்லாவிதமான பாதுகாத்தலையும் செய்தாய் அல்லையோ!’ என்றபடி.

மையல் செய்து என்னை மனங் கவர்ந்தானே ! என்னம்’மா மாயனே!’ என்னும்;
‘செய்யவாய் மணியே!’ என்னும்’தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;
வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல்!’ என்னும்;
பைகொள்பாம் பணையாய்!இவள் திறத் தருளாய் பாவியேன் செயற் பாலதுவே.–7-2-6-அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் வைத்து ஆர்த்த ரக்ஷண அர்த்தமாக அன்றோ திவ்யாயுதங்களை தரித்தது -காணவே எதிரிகள் மண் உண்ணும்படியான திவ்யாயுதங்களை தரித்து இருக்கிற நீ என் விரோதிகளை போக்கி முகம் காட்டாது ஒழிவதே-திவ்ய ஆயுதங்கள் பகைவர்களை அழிப்பதற்கு உடலாக இருக்குமாறு போலே காதலிகளை அழிக்கைக்கும் உடலாக இருக்குமன்றோ உகப்பாரையும் உகவாதாரையும் ஒக்கத் தோற்பிக்குமவை? முன்னே கை கண்டு வைக்கிறவை அன்றோ?
காணவே பகைவர்கள் மண்ணுண்ணும்படியான திவ்ய ஆயுதங்களைத் தரித்திருக்கிற நீ
என் விரோதிகளைப் போக்கி முகங்காட்டாது ஒழிவதே!விண்ணோர் முதல் என்னும்- திவ்விய ஆயுதங்களினுடைய சேர்த்தியால் வந்த அழகினைக் காட்டி நடத்த, அதுவே ஜீவனம் ஆயிற்று அந்நாடு கிடப்பது. இல்லையாகில், அங்கே வினை உண்டாகத் தரித்திருக்கிறான் அன்றோ?

வட்கிலள் இறையும் ‘மணிவண்ணா!’ என்னும்; வானமே நோக்குமை யாக்கும்
‘உட்குடை அசுரர் உயிரெலாம் உண்ட ஒருவனே!’ என்னும் உள் ளுருகும்;
‘கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய் காகுத்தா! கண்ணனே!’ என்னும்;
திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்’ இவள் திறத் தென் செய்திட்டாயே–7-2-3-பாஹ்ய சஷூஸூக்கு அவிஷயமான நீ நான் உன்னைக் காணும் படி கிருபை பண்ணி அருள வேணும்-நசஷூஷா பஸ்யதி -என்கிறது தாம் தாமே காண இழிவாருக்கு –தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம் –என்று அவன் தானே காட்டும் அன்று அவ்வருமை இல்லை -சிலருக்கு சதா தர்சனம் பண்ணைக் கொடுத்திலையோ – ‘கட்கிலீ! -கண்ணுக்கு இலீ என்றபடி -இப்படி அரிதான பொருளை நாம் சிலர்க்கு அருளிற்று உண்டோ என்ன-காகுத்தா! –ரூப ஓவ்த்தார்ய குணை பும்ஸாம் என்றும் ரூப சம்ஹ நனம் லஷ்மீம் என்றும் நாகரீகருக்கும் வான வாசிகளுக்கும் காட்டிக் கொடு திரிந்திலையோ-ஒரு கால் செய்தது கொண்டோ என்ன –-கண்ணனே!’ என்னும்;ஆயாந்தம் புண்டரீகாக்ஷம் வீக்ஷ மாணா குருஸ் த்த்ரிய-என்றும் தாஸாம் ஆவிர்பூத் என்றும் இடைச்சிகளுக்கும் அகப்பட காட்டிக் கொடு திரிந்திலையோ

என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்; ‘என்னுடைய ஆவியே!’ என்னும்;
‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நிலமகள் கேள்வனே!’ என்னும்;
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய்மகள் அன்பனே!’ என்னும்;
தென் திரு அரங்கம் கோயில் கொண் டானே! தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–7-2-9–இவளுடைய பிராணன் பஞ்ச வ்ருத்தியாய் அன்று இருப்பது -ஒரு மிதுனமாயிற்று இவளுக்கு பிராணன் –திருமகள் சேர்மார்பனாய்க் கொண்டு எனக்கு தாரகன் ஆனவனே என்னும் -இத்திருவாய்மொழி இயலைக் கேட்டருளாநிற்க, இப்பாட்டளவில் வந்தவாறே ‘என் திருமகள் சேர் மார்பனே! என்னும்; என்னுடைய ஆவியே என்னும்’ என்று இயலைச் சேர்த்து அருளிச் செய்ய, அதனைக் கேட்டுக் கையை உதறி, ‘ஸ்ரீரங்கநாத’ என்று அணையிலே சாய்ந்தருளினார் பட்டர்’ என்று அருளிச் செய்வர். ‘அப்போது திருமேனியிலே பிறந்த வேறுபாட்டினைக் கண்டு, ‘இவர்க்குப் பகவானை அடைவது அணித்தாகிறதோ?’ என்று அஞ்சியிருந்தேன்,’ என்று சீயர் அருளிச் செய்வார்.-இவர்க்குப் பிரமாணம் ஒரு காற்று விசேடம் அன்று: ஒரு மிதுநமாயிற்று. ‘திருமகள் சேர் மார்பனாய்க் கொண்டு எனக்குத் தாரகனானவனே!’ என்னும்.

பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்! பற்றிலார் பற்ற நின்றானே!
கால சக் கரத்தாய்! கடலிடங் கொண்ட கடல்வண்ணா! கண்ணனே!’ என்னும்;
‘சேல்கொள் தண் புனல்சூழ் திருவரங்கத்தாய்!’ என்னும்’என் தீர்த்தனே!’ என்னும்;
கோல மா மழைக்கண் பனி மல்க இருக்கும் என்னுடையக் கோமளக் கொழுந்தே.–7-2-7-இடம் அறிந்து ஸூக துக்கங்களை படைத்தவனே -பாலாவாக -ஸ்த்தாநே ஸ்த்தாநே யாக -பிரிந்தார் எல்லாரும் அனுபவிக்கும் இத்தை இவள் ஒருத்தியும் அனுபவிக்கப் பார்த்தால் இவளால் பொறுக்கப் போமோ -அங்கனம் இன்றிக்கே ஆஸ்ரிதர் வாழ்வும் அநாஸ்ரிதர் கெடும்படியாகவும் அன்றோ பண்ணி வைத்தது -தீமை உன்னடியார்க்குத் தீர்த்து அசுரர்க்கு தீமைகள் செய்யுமவன் அன்றோ –பண்டு கட்டின மரியாதையும் இல்லையோ இவளுக்கு — பற்றிலார் பற்ற நின்றானே!–அபராதம் யாய் ஸூக்ருத லேசமும் இல்லாத ஜெயந்தன் போல்வார்க்கும் ஆஸ்ரயிக்கலாம் படி யன்றோ உம்முடைய நீர்மை –ச பித்ராச பரித்யக்த=–‘ஒரு கைம்முதல் இல்லாதார்க்காக அன்றோ இங்கு வந்து சாய்ந்தருளிற்று?
இந்தக் கிடை நித்திய ஸூரிகளுக்காகவோ? உம்முடைய பக்கல் பற்று அறுத்துக் கொண்ட
ஜயந்தன் போல்வார்க்கும் பற்றாய் இருக்குமவர் அன்றோ நீர்!’ ‘அந்தப் பெருமாளையே சரணமாக அடைந்தான்’ என்றே அன்றோ கூறுகிறது- ஸ்ரீராமாயணம்? ‘தமேவ ஸரணம் கத;’ என்பது, ஸ்ரீராமா, சுந். 38:34-கால சக் கரத்தாய்! -காலத்தை நடத்தும் திரு வாழி யை யுடையவனே -விஷயீ கரிக்க காலமாக வேணுமே என்னில் காலதத்வமும் நீ இட்ட வழக்கு அன்றோ என்றுமாம்–விஷயீ கரிக்க காலமாக வேணுமே என்ன –கால தத்வம் நீ இட்ட வழக்கு அன்றோ -ஆஸ்ரிதர்க்காக பகலை இரவாக்கினவன் அன்றோ -அங்கனம் அன்றிக்கே பிரதிபந்தகமும் உண்டு காணும் என்ன -ப்ரதி பஷத்துக்கு ம்ருத்யுவான திரு வாழி கையிலே இருக்க பிரதிபந்தகம் உண்டோ –தடைகளுக்குக் கூற்றுவனான திருவாழி அன்றோ நீ தரித்திருக்கிறது?’ என்னுதல்.-காலம் -கூற்று-(கால -காலம் என்றும் மிருத்யு என்றும் )

முடிவிவள் தனக்கு ஒன்று அறிகிலேன்’ என்னும்; ‘மூவுல காளியே!’ என்னும்;
‘கடி கமழ் கொன்றைச் சடையனே!’ என்னும்; ‘நான்முகக் கடவுளே!’ என்னும்;
‘வடிவுடை வானோர் தலைவனே!’ என்னும்; ‘வண் திரு வரங்கனே!’ என்னும்;
அடி யடையா தாள் போல் இவள் அணுகி அடைந்தனள் முகில்வண்ணன் அடியே.–7-2-10-த்ரை லோக்ய நிர்வாஹனான இந்திரனுக்கு அந்தராத்மாதயா வாக நின்று அவனுடைய அதிகாரத்தை நடத்துவபனே என்னும்-இதனை-‘மூவுலகாளியே! கடிகமழ் கொன்றைச் சடையனே! நான்முகக் கடவுளே’ என்று சொல்லப்படுகிற, வடிவுடை வானோர்க்குத் தலைவனே!’ என்னும் என்று, திருமலை யாண்டான் வையதி கரண்யமாக்கிப் பொருள் நிர்வஹிப்பர்.- வானோர் வார்த்தை என்று-நிர்வஹிப்பர்‘–என்னும்’ என்பதற்கு ‘என்னுமவனாய்’ என்பது பொருள். (வானவர்கள் -தேவர்கள் மூவரையும் கொண்டாடும் படி -இங்கு லீலா விபூதி மட்டுமே )–இதனை எம்பெருமானார் கேட்டருளி,
ஸாமாநாதி கரண்யாத்தாலே அருளிச் செய்தருளினார்:-மூன்று உலகத்திற்கும் உரியனான இந்திரனுக்கு அந்தர்யாமியாய் நின்று அவனுடைய அதிகாரத்தை நிர்வஹிக்கிறவனே!’ என்னும்:
‘வாசனையை யுடைத்தான கொன்றையைச் சடையிலே யுடைய சிவபிரானுக்கு அந்தர்யாமியாய் நின்று அவனுடைய பதத்தை நிர்வஹிக்கிறவனே!’ என்னும்; ‘அவர்களோடு இவ்வருகுள்ளரோடு வாசி அற எல்லார்க்கும் நிர்வாஹகனாயிருக்கிற நான்முகனாகிய தெய்வத்துக்கு அந்தர்யாமியானவனே!’ என்னும் என்று. வடிவுடை வானோர் தலைவனே என்னும்- பகவானுடைய அனுபவத்தால் வந்த உவகை வடிவிலே தோற்றும்படி இருக்கிற நித்திய ஸூரிகளுக்கு நாதனானவனே’ என்னும்.–வடிவுடை வானோர் தலைவனே!’ என்றதனோடு, ‘மூவுலகாளியே!’ என்றதனோடு, ‘கடி கமழ் கொன்றைச் சடையனே!’ என்றதனோடு, ‘நான்முகன் கடவுளே!’ என்றதனோடு வாசியற்று இருக்கிறதாயிற்று இவர்க்கு:- புண்டரீகாக்ஷனே நால் தோள் அமுதே -போலே வேதாந்த வாசனை மாறாமல்
மயர்வற மதிநலம் பெறுகையாலே; விசேஷணாம்சத்தில் நிற்கின்ற வரல்லரே; சர்வ நிர்வாஹகன் என்று உணர்ந்திருக்குமவராயிற்று இவர்.
–மூ உலகு ஆளியே -பாட்டுத் தோறும் சம்போதானம் -வர வேண்டுமே – இந்திரன் என்று வானோர் சொல்வதாகக் கொண்டால் ரீதி பங்கம் வருமே – என்னும் -தாயார் அனுபாஷணம் பண்ண வேண்டுமே – திருமாலை ஆண்டான் நிர்வாகத்தில் லீலா விபூதி நாதத்வம் மட்டுமே வரும் -அதனால் எம்பருமானார் நிர்வாகம் ஸ்ரேஷ்டம்

மையல் செய்து என்னை மனங் கவர்ந்தானே ! என்னம்’மா மாயனே!’ என்னும்;
‘செய்யவாய் மணியே!’ என்னும்’தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;
‘வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல்!’ என்னும்;
பைகொள்பாம் பணையாய்!இவள் திறத் தருளாய் பாவியேன் செயற் பாலதுவே.–7-2-6-பாடோடிக் கிடக்கிற இவள் திறத்து-அருள் கொள்வார் தேட்டமான நீ அருள் பெற்றால் ஜீவிக்கும் இவளை இப்படி தறைக்கிடை கிடக்க இட்டு வைப்பதே-பாவியேன் செயல் இடத்தது-இவள் பக்கலிலும் குறை இல்லை -உம்முடைய பக்கலிலும் குறை இல்லை -இருவருமான சேர்த்திபெற இருக்கிற என் பாபம் இறே இதுக்கு ஹேது –மத்பாப மேவாத்ர நிமித்த மாஸீத்

சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும் ‘திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;
வந்திக்கும் ஆங்கே மழைக் கணீர் மல்க ‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
‘அந்திப்போ தவுணன் உடலி டந்தானே! அலைகடல் கடைந்த ஆர் அமுதே!
சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல் செய் தானே!–7-2-5-அலை கடல் கடைந்த ஆர் அமுதே!-பிரயோஜனாந்தர பரருமாய் -ஈஸ்வர அபிமானிகளும் ஆனார்க்கு நிரதிசய போக்யமான வடிவைக் கொண்டு ஷூபிதமான கடலைக் கடந்தவனே-இவளுக்கு கடல் கடைய வேணுமோ -கடல் கடைந்த வடிவைக் காட்ட அமையாதோ-ஒரு பிரணயிநியை லபிக்கைக்கு பண்டு கடல் கடைந்தவன் அல்லையோ–உன்னைக் கொண்டு ஒரு பிரயோஜனம் கொள்வார்க்கோ உதவலாவது?-உன்னையே ‘பிரயோஜனம்’ என்றிருப்பார்க்கு உதவலாகாதோ?-ஆர் அமுதே ‑-இவருடைய அமுதத்தைக் கொண்டாயிற்று அவர்கள் கடல் கடைந்து.

என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்; ‘என்னுடைய ஆவியே!’ என்னும்;
‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நிலமகள் கேள்வனே!’ என்னும்;
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய்மகள் அன்பனே!’ என்னும்;

தென் திரு அரங்கம் கோயில் கொண் டானே! தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–7-2-9-என் என்கிற இடம்  திரு மகளில் அந்வயிக்கிறது -மார்பனே என்கிற இடத்தில் அந்வயிக்கிறது அன்று -எனக்கு ஸ்வாமி நியான பிராட்டியை திரு மார்பிலே யுடையவனே என்னா நின்றாள் -இவ்வதி பிராவண்யம் பிராட்டி அடியாக வந்தது என்கை–என்னுடைய ஆவியே!’ என்னும்;-இவளுடைய பிராணன் பஞ்ச வ்ருத்தியாய் அன்று இருப்பது -ஒரு மிதுனமாயிற்று இவளுக்கு பிராணன் –திருமகள் சேர்மார்பனாய்க் கொண்டு எனக்கு தாரகன் ஆனவனே என்னும் – ‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட-நிலமகள் கேள்வனே!’ என்னும்;-அழகுக்கு நின் திரு எயிறு என்னும் அத்தனை -நீ இடந்து கொண்ட –அந்த புரகார்யத்துக்கு ஆளிட ஒண்ணாதே -ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு வல்லபன் ஆனவனே என்னும் –
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட-ஆய்மகள் அன்பனே!’ என்னும்;-உன்னோடே சம்ச்லேஷிக்க வல்லனே என்று துளும்புகிற அன்று -ம்ருத்யு சத்ருசமான ருஷபங்கள் ஏழையும் தழுவி -உருவென்று -உருமு-இடி போலே பயங்கரமான ஏறு -அந்தரம் ஏழும் அதிரும் இடி குரல் -என்ன கடவது இறே -அவளை லபிக்கைக்கு நிமித்தம் ஆகையால் அவள் முலையிலே அணைந்தால் போலே இருக்கை -நப்பின்னை பிராட்டிக்கு ஸ்நிக்தனானவனே என்னும் –நீ கொண்ட -நீ கைக் கொண்ட – இத்தால் என் ஸ்வாமிநி களுக்கு உதவின நீ -அவர்கள் அடியேனான எனக்கு உதவாது ஒழிவதே என்னுதல் -பிரணயி யான என்னை நீ அங்கீ கரியாது ஒழிவான் என் என்னுதல்

என் செய்கின் றாய்? என் தாமரைக் கண்ணா! என்னும் கண்ணீர் மல்க இருக்கும்
என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய்! என்னும் வெவ் வுயிர்த் துயிர்த் துருகும்
முன் செய்த வினையே முகப்படாய் என்னும் முகில்வண்ணா! தகுவதோ என்னும்
முன் செய்திவ் வுலகம் உண்டு மிழ்ந் தளந்தாய்! என் கொலோ முடிகின்றது இவட்கே?–7-2-2–நிர் ஹேதுகமாக முன்பு ஜகத் ஸ்ருஷ்ட்டி யாதிகளைப் பண்ணினவன் அல்லையோ –ஸ்ருஷ்ட்டி யாதிகளில் யவ் கபத்யத்தை கர்ம அனுகுணம் என்ன ஒண்ணுமோ -அபு நா வ்ருத்தி லக்ஷண மோக்ஷத்தை பெறுகைக்கு அடியாய் இருபத்தொரு கனவியதொன்று சேதனன் தலையிலே கிடக்க வற்றோ –காரணம் ஒன்றும் இல்லாமலே முன்பு உலகத்தைப் படைத்தல் முதலானவைகளைச் செய்து ‘தகவிதோ’ என்கைக்கு ‘உபகரணம் இல்லாத அன்று இதனை உண்டாக்கி நோக்கினாய் நீ அன்றோ?’ என்றது,
‘கரண களேபரங்கள் இல்லாமல் கிடந்த இதனை வெறும் உன் கிருபையாலே உண்டாக்கினாய் இத்தனை அன்றோ?-உண்டாக்கிவிட்ட அளவையோ? பிரளய ஆபத்து வயிற்றிலே வைத்துப் பாதுகாத்து, உள்ளே கிடந்து நோவு படாதபடி புறப்பட விட்டு, எல்லை நடந்து மீட்டுக் கொண்டு, எல்லாவிதமான பாதுகாத்தலையும் செய்தாய் அல்லையோ!’ என்றபடி.-

முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் மொய்புனல் பொருநல்
துகில் வண்ணத் தூ நீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ் வண் குரு கூர்ச் சட கோபன்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே.–7-2-11–பெரிய பெருமாள் திருவடிகளைக் கிட்டி அங்குத்தை பிரசாதத்தை பெற்று தரித்தவன் -பூர்வ அவஸ்தையில் சத்தையும் மேல் உள்ளவையும் அவன் அருளாலே யாய் இருக்கையாலே உய்ந்தவன் என்கிறது

பரத்வாதி பஞ்சகம்
பரத்வம் -வடிவுடை வானோர் தலைவனே
வ்யூஹம் -கடல் இடம்
விபவம் -காகுத்தா –கண்ணனே
அந்தர்யாமி -கட்கிலி
அர்ச்சை -வண் திருவரங்கா

ஆக -எல்லாவற்றாலும் –
மதிள் அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் -என்னத் தட்டு இல்லை இறே

ஆழ்வார்களில் நம்மாழ்வார் அதிகரானால் போலே
எம்பெருமான்களில் நம் பெருமாள் அதிகாரய் இறே இருப்பது
அத்தைப் பற்றவும் சொல்லிற்று –

இப்படிப் பெரிய பெருமாள் விஷயமாகவே ப்ரதிபாதித்த திருவாய் மொழியை
ஈன்ற முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன்
நெடும் காலம் நோற்றுப் பெற்ற முந்தின மாதா ஆழ்வார்
வண் தமிழ் நூற்க நோற்றேன் —4-5-10–என்றார் இறே

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.–4-5-10—அடியார்க்கு திருவாய்மொழி பாடுகைக்கு பாக்யம் பண்ணினேன் –-வண்தமிழ்-ஆவது பழையதாகச் செய்தவை இவர் பேச்சாலே இன்று செய்த செயல் போலே ஸ்பஷ்டமாய் இருக்கை-சிர நிர்வ்ருத்தம் அப் யேதத் ப்ரத்யக்ஷம் இவ தர்சிதம்–திருவாய்மொழி பாடுகைக்குப் பாக்கியம் செய்தேன். தன்னைச் சொன்ன மாத்திரத்தில் எல்லாப் பலன்களையும் கொடுக்கக் கூடியதான உதார குணத்ததாய் இருத்தலின், ‘வண்தமிழ்’ என்கிறது.-அன்றிக்கே.-இது முன்னே நடந்ததாயிருந்தாலும் இப்பொழுது நேரிற்கண்டது போல இருக்கின்றது,’ என்பது போன்று, லவ குசர்கள் பாட பாட நடந்த ராம சரித்ரம் மக்களுக்கு விளங்கினது போலே – பழையதாகச் செய்தவை இவர் பேச்சாலே இன்று செய்த செயல் போலே விளக்கமாய் இருத்தலின், ‘வண்தமிழ்’ என்கிறது என்னுதல். ‘கண்டவாற்றால்’ என்று நேரில் பார்ப்பதாய் இருக்கிறதே அன்றோ?

வருந்திப் பெற்ற பிள்ளையை வளர்த்து எடுக்கும் மாதாவைப் போலே திருவாய் மொழியை வளர்த்த இதத்தாய் –
வர்த்திப்பித்த மாதா -எம்பெருமானார் ஆயிற்று
ஞானக் கலையான -1-9-8- திரு வாய் மொழிக்கு ஜென்ம பூமி ஆழ்வார் -தத் வர்த்தகர் எம்பெருமானார் –
இப்படி யாயிற்று ஞான சந்தானம் வளர்த்தியோடே நடந்து செல்வது –

பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு உற்றானாய் வளர்த்து –பெரிய –8-9-7-என்னுமா போலே

நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே
பூவியில் நால் தடம் தோளன் பொரு படை யாழி சங்கேந்தும்
காவி நன் மேனிக் கமலக் கண்ணன் என் கண்ணினுள் உளானே –1-9-8—ஜிஹ்வாக்ரத்திலே விகசியா நின்றுள்ள வித்யாஸ் தலங்களுக்கு எல்லாம்–ஞான சாதனமான -ஞானத்திற்குக் கருவியான-வித்யா – கலை – விசேஷங்களுக்கு எல்லாம்.-

பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு
உற்றானாய் வளர்த்து என் உயிராகி நின்றானை

முற்றா மா மதி கோள் விடுத்தானை யெம்மானை
எத்தால் யான் மறக்கேன் இனி இது சொல் என் ஏழை நெஞ்சே—8-9-7–பித்ராதிகள் ராகாந்தராய்
பிரஜைகளை உத்பாதித்து யௌவன விரோதி என்று பொகட்டுப் போக நிற்பர்கள் ஆயிற்று –
பின்னையும் இவனுக்கு ஒரு உறவு முறை ஒழிய செல்லாது இறே – பண்ணிப் போந்த வாசனையாலே
அவ்வளவில் அவர்கள் வழியாலே நின்று முகம் கொடுக்குமாயிற்று –தன் கை பார்த்து இருக்க வேண்டும் படியான பருவத்தை உடைய எனக்கு எல்லா உறவு முறையும் தானேயாய் நின்று நோக்கி –தாய்  தகப்பன் பொகட்ட அன்றும் நான்  ஜீவிக்க வேணும் என்று இருக்கும் இறே-இச் சேதனன் தான் –
அப்படி தனக்கு பரிவனான தானாயும் நோக்கினான் ஆயிற்று –

மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் ஆவது –
ஈன்ற தாய் பெற்றுப் பொகட்டுப் போனால் வளர்க்கும் தாய் தன் மிடுக்காலே காத்து நோக்குமா போலே ஆயிற்று –
இவரும் அத்தைக் காத்து வளர்த்த படியும் –
தேவகி பெற்ற யுருவு கரிய ஒளி மணி வண்ணனை –பெரிய –1-2-17–
வளர்க்கும் தாயான யசோதை தன் மிடுக்காலே எடுத்து –
ஏதேனும் சொல்லி அசல் அகத்தார் ஏதேனும் பேச நான் கேட்க மாட்டேன் –பெரியாழ்வார் –2-9-6-என்றும்
தூசனம் சொல்லும் தொழுத்தை மாரும் தொண்டரும் நின்ற இடத்தே நின்று –2-9-8-
போதர் கண்டாய் –2-9-6-
தாய் சொல் கொள்வது தன்மம் கண்டாய் –2-9-8-என்று
குற்றம் சொல்லுமவர்களையும் தன் சொல்லாலே வாய்ப் புடை புடைத்து தன் வசமாக்கி
தீய புஞ்சிக் கஞ்சன் –2-2-5-என்று கருத்தைக் குலைத்து
காப்பாரும் இல்லை -2-3-1—என்று இரந்து
அசோதை வளர்க்கின்ற செய்த்தலை நீல நிறத்துச் சிறு பிள்ளை –1-3-12-என்னும்படி
நிறம் பெற வளர்த்து ப்ரமேய சாரத்தை வர்த்திப்பால் போலே
பிரமாண ஸாரத்தை வர்த்திப்பித்த பிரகாரமும் –

பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய
திருவின் வடிவு ஒக்கும் தேவகி பெற்ற
உருவு கரிய ஒளி மணி  வண்ணன்

புருவம் இருந்தவா காணீரே பூண் முலையீர் வந்து காணீரே -1-2-17-லஷ்மி துல்ய ஸ்வாபையான தேவகி பிராட்டி இப்படிக்கு ஈடாக நோற்றுப் பெற்ற –-திருவின் வடிவு ஒக்கும் என்கையாலே –-கீழ் சீதக் கடலுள் அமுதன்ன தேவகி –என்றது -இங்கே ஸ்பஷ்டமாய் இறே இருப்பது –

போதர் கண்டாய் இங்கே  போதர் கண்டாய் போதரேன் என்னாதே போதர் கண்டாய்
ஏதேனும் சொல்லி அசல் அகத்தார் ஏதேனும் பேச நான் கேட்க மாட்டேன்
கோதுகுலமுடை குட்டனேயோ குன்று எடுத்தாய் குடமாடு கூத்தா
வேதப் பொருளே என் வேம்கடவா வித்தகனே இங்கே போதராயே – 2-9 -6- –அசலகத்தானவர்கள்  உன் விஷயமாக வாசாமகோசரமான தோஷங்களை தங்களிலே சொல்லி –-அவ்வளவும் அன்றிக்கே –-என் பக்கலிலே வந்து என் செவியால் கேட்கவும் வாக்கால் சொல்லவும் ஒண்ணாதவற்றை சொல்ல நான் கேட்டு இருக்க மாட்டேன்-

கேசவனே இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே
நேசம் இல்லாதார் அகத்து இருந்து நீ விளையாடாதே போதராயே
தூசனம் சொல்லும் தொழுத்தை மாரும் தொண்டரும் நின்ற இடத்தில் நின்றும்
தாய் சொல்லுக்  கொள்வது தன்மம் கண்டாய் தாமோதரா இங்கே போதராயே 2-9 8- இடைச்சிகளுக்கு அடிச்சிகளாய் போருகிறவர்களும் இடையருக்கு அடியாராய் போருகிறவர்களும் உனக்கு சொல்லுகிற தூஷணங்களுக்கு ஓர் அவதி இல்லை காண் – அவர்கள் நின்ற இடத்தில் நில்லாதே போராய் –

போதர் கண்டாய் இங்கே  போதர் கண்டாய் போதரேன் என்னாதே போதர் கண்டாய்
ஏதேனும் சொல்லி அசல் அகத்தார் ஏதேனும் பேச நான் கேட்க மாட்டேன்
கோதுகுலமுடை குட்டனேயோ குன்று எடுத்தாய் குடமாடு கூத்தா
வேதப் பொருளே என் வேம்கடவா வித்தகனே இங்கே போதராயே – 2-9 -6- -போதரு -என்கிற இது போதர் என்று கிடக்கிறது-அங்கே நின்று தீம்பு செய்யாதே இங்கே போரு கிடாய் –-போதர் என்ற இது போதரு என்றபடி–இவள் கடுக வருகைக்காக மீளவும் ஒருகால் சொல்லுகிறாள் – இப்படி இவள் அழைக்கச் செய்தே -அவன் வர மாட்டேன் என்ன –-வாரேன் என்னாதே வா கிடாய் என்கிறாள்-

கேசவனே இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே
நேசம் இல்லாதார் அகத்து இருந்து நீ விளையாடாதே போதராயே
தூசனம் சொல்லும் தொழுத்தை மாரும் தொண்டரும் நின்ற இடத்தில் நின்றும்
தாய் சொல்லுக்  கொள்வது தன்மம் கண்டாய் தாமோதரா இங்கே போதராயே 2-9 8- –பெற்ற தாய் வசனம் கொள்ளுகை பிள்ளைகளுக்கு தர்மம் காண்-நீ தான் பிறந்த போதே -மாதா வசன பரிபாலனம் பண்ணினவன் அன்றோ – சதுர்புஜ ரூபோப சமஹரனத்தை-திரு உள்ளம் பற்றி அருளி  செய்கிறார் –

தீய புந்திக் கஞ்சன் உன் மேல் சினம் உடையன் சோர்வு பார்த்து
மாயம் தன்னால் வலைப் படுக்கில் வாழ கில்லேன் வாசு தேவா
தாயர் வாய் சொல் கருமம் கண்டாய் சாற்றிச் சொன்னேன் போக வேண்டா
ஆயர் பாடிக்கு அணி விளக்கே அமர்ந்து வந்து என் முலை உணாயே -2-2-5 –துர் புத்தியான கம்சன் –
பிள்ளைக் கொல்லி இறே–மக்கள் அறுவரைக் கல்லிடை மோதின பாபிஷ்டன் இறே –

போய்ப்பாடுடைய நின் தந்தையும் தாழ்த்தான் பொரு திறல் கஞ்சன் கடியன்
காப்பாரும்  இல்லை கடல் வண்ணா உன்னைத் தனியே போய் எங்கும் திரிதி
பேய்ப்பால் முலை உண்ட பித்தனே கேசவ நம்பீ உன்னைக் காது குத்த
ஆய்ப்பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார் அடைக்காய் திருத்தி நான் வைத்தேன் – 2-3 1- அதுக்கு மேலே விரகு அறிந்து -ரஷிக்க வல்லாரும் இங்கு இல்லை –ரஷகரான அவர் வந்திலர் – நானோ அபலை -வேறோர் பரிவர் காண வில்லை -யார்தான் ரஷிப்பார்-

மைத்தடம் கண்ணி யசோதை வளர்க்கின்ற
செய்த்தலை நீல நிறத்துச் சிறுப் பிள்ளை

நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய
கைத் தலங்கள் வந்து காணீரே கனம் குழையீர் வந்து காணீரே -1-2-12–கருத்து பெருத்து இருந்துள்ள கண்ணை உடையவள் என்னுதல் – அஞ்சன அலங்க்ர்தமாய் விஸ்தாரமாய் இருந்துள்ள கண்ணை உடையவள் -என்னுதல் – இப்படி இருந்துள்ள கண் அழகை உடைய யசோதை பிராட்டி -வைத்த கண் வாங்காமல்  நோக்கி வளர்க்கிற வளர்ப்பார் பலர் உண்டாய் இருக்கச் செய்தேயும் – அவர்கள் கையில் காட்டிக் கொடாதே -தானே இறே வளர்ப்பார்கள் –பூ சாரம் உள்ள ஷேத்ரத்தில் -அப்போது அலர்ந்த குவளை பூவின் நிறம் போல் இருக்கிற நிறத்தை உடையவனான சிறு பிள்ளை யினுடைய- அவள் சீராட்டி வளர்த்த முசு முசுப்பு-( ஸ்ரத்தை ) எல்லாம் திரு நிறத்திலே தோன்றும்படி இருக்கும் ஆயிற்று 

அது எங்கனே என்னில் —
இங்கும் ஆழ்வார் அவதரித்து
அவா அற்று வீடு பெற்று எழுந்து அருளின –10-10-11- பின்பு
பாஹ்ய குத்ருஷ்டிகளால்
பாஷா கானமான திருவாய் மொழி அபி பூதமாய் வருகிற படியைக் கண்டு
ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூ க்திகளாலே அத்தை நிரோதித்து-அத்தை இதுக்குக் காவலான வேலியாகக் கற்பித்துத்
திருவாய் மொழியைத் தன் கை வசம் ஆக்கி
திருக் குருகைப் பிரான் பிள்ளானைக் கொண்டு இதன் அர்த்தத்தை வெளியிடுவித்து வர்த்திப்பித்துக் கொண்டு போந்தார் இறே –
மாறன் அடி பணிந்து உய்ந்தவன் -என்னும்படியான அடியார் ஆகையால் –
ஆண்டவன் இட்ட பயிரை வர்த்திப்பிக்க வேணும் இறே அடியானுக்கு —

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11—அவனைப் பெற்று நிரஸ்தித ஸமஸ்த பிரதிபன்னராகையாலே நிர் துக்கரான ஆழ்வார் அருளிச் செய்த –கூப்பிட்டு அவனைப் பெற்று எல்லா தடைகளும் நீங்கியவர்-ஆகையாலே துக்கம் இல்லாத ஆழ்வார் அருளிச் செய்த-

பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பா மன்னு மாறனடி பணிந்து உய்ந்தவன் பல்கலையோர்
தாம் மன்ன வந்த விராமானுசன் சரணார விந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே -1 –மாறன் அடி பணிந்து உய்ந்தவன் -என்பதை மணவாள மா முனிகள்-பராங்குச பாத பக்தம் –என்று வட மொழியில் மொழி பெயர்த்தார்-சரம பர்வ ப்ரபந்தம் என்பது தோன்ற எம்பெருமானை அடி பணிவதாக கூறாது-எம்பெருமான் பாவில் மன்னும் மாறன் அடி பணிந்ததாக அமுதனார் அருளிய-நயம் வியந்து இன்புறத் தக்கது
மந்த்ரத்தின் தாத்பர்யம் தோன்ற-மாறன் அடி பணிந்து –என்றார் அமுதனார் -என்க –பூ மன்னு மாது -அம்ருத மயமான பாசுரம்அண்ணல் செய்து -விண்ணவர் அமுது உண -சக்கை -அமுதில் வரும் –பெண்ணமுதம் தான் கொண்டான்-மாது பொருந்திய மார்பன் -அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதன்-மார்பன் புகழ் மலிந்த பா -திருவாய் மொழி –பக்தாம்ருதம் -தொண்டர்க்கு அமுது உண்ண சொல்மாலைகள் சொன்னேன்-பா மன்னு மாறன் -இன்ப மாரி-அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே –மாறன் அடி பணிந்து உய்ந்த ராமானுஜன் -ராமானுஜன் எனக்கு ஆரமுதே – பிராட்டி -பகவான் -பா -ஆழ்வார் -எம்பெருமானார் -பஞ்சாம்ருதம் கொடுத்த அமுதக்கவி -ஆறு சுவைகளும் அமுதம்

——-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அனந்தாழ்வான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சொட்டை நம்பிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஈஸ்வர முனிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நாதமுனிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி தனியன்-4-ஏய்ந்த பெரும் கீர்த்தி ராமாநுச முனி-ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் –

June 18, 2026

ஏய்ந்த பெரும் கீர்த்தி ராமாநுச முனி தன் வாய்ந்த மலர்ப் பாதம் வணங்குகின்றேன்
ஆய்ந்த பெரும் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் பேராத வுள்ளம் பெற
–ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச் செய்தது —

இனி சடகோபன் பாதங்கள் -என்றத்தை விவரியா நின்று கொண்டு திருவாய் மொழி ஹ்ருத் கதமாம் படி ஆழ்வாருக்கு பரதந்த்ரரான உடையவர் திருவடிகளைத் தொழா நின்றேன் -என்கிறது

ஏய்ந்த பெரும் கீர்த்தி ராமாநுச முனி தன்
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் -3-9-11-என்னுமா போலே
அங்குத்தைக்கு அனுரூபமாய்ப் பொருந்தி இருக்கிற பெரிய புகழை யுடைய
எம்பெருமானார் தம்முடைய

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் றனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர்பத்து
ஏற்கும் பெரும்புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே
.–3-9-11-தகுதியான மிக்க புகழை உடையனாய் நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனாய் -அம்மேன்மையோடே வந்து அவதரித்து மனுஷ்யத்தவே பரத்வத்தை உடையவனும்-உபய விபூதி உக்தன் என்றால் -அவனுக்கு தக்கு இருக்குமா போலே சர்வேஸ்வரன் கவி என்றால் அதுக்கு போரும்படி இருக்கிற ஆழ்வார் –யதோ வாசோ நிவர்த்தந்தே -என்கிற விஷயத்தை விளாக்குலை கொண்ட பிரபந்தம் என்றால் அதுக்கு போரும்படி ஆயிரத்திலும் இப்பத்துக்கு தகுதியான புகழை உடைத்து ஸ்வரூப அநு குணமாக அப்ராப்த விஷயத்தை தவிர்ந்து-ப்ராப்த விஷயத்திலே கவி பாட சொல்லிற்று ஆகையால் ஏறிட்ட நன்மை எல்லாம் பொறுக்கை–பிறரை கவி பாட வேண்டா -என்று உபதேசிக்க வேண்டுகிறது இஸ் சம்சாரத்தில் பிறப்பு இறே -அந்த ஜென்ம சம்பந்தம் அறும் என்கிறா

வாய்ந்த மலர்ப் பாதம் வணங்குகின்றேன்
ஒன்றுக்கு ஓன்று பொருந்தி இருப்பதாய் மலர் போன்ற திருவடிகளை பிரணதி பண்ணா நின்றேன் –
ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே என்கிறபடியே
ப்ராப்ய புத்த்யா வர்த்தமானமாய்ச் செல்லுகிறது –

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் தத் இதராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே
–1-யாவர் ஒரு எம்பெருமானார் -எப்போதும் ஸ்ரீ எம்பெருமானுடைய திருவடித் தாமரை இணையாகிற ஸூவர்ணத்தில்
உள்ள வ்யாமோஹத்தால் அந்த பாதாரவிந்தங்கள் தவிர மற்ற விஷயங்களை த்ருணமாக எண்ணி தம் திரு உள்ளத்தால் திரஸ்கரித்தாரோ – இப்படிப்பட்டவரும் கிருபைக்கு முக்கியமான கடலாக உள்ளவரும் -கல்யாண குண சாலியும்- அஸ்மத் ஆச்சார்யருமான எம்பெருமானார் திருவடிகளை சரணம் புகுகிறேன் –ஸ்நந்த்ய பிரஜை முலையிலே வாய் வைக்குமா போலே ஸ்வாமி திருவடிகளில் சாய்ப்பதே நமக்கு பிராப்யம்

இப்படி வணங்குகிறது எதுக்காக என்னில்
ஆய்ந்த பெரும் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் பேராத வுள்ளம் பெற –

ஆய்ந்த பெரும் சீரார் சடகோபன்
ஆய் கொண்ட சீர் -3-9-9- என்றும்
ஆய பெரும் புகழ் –3-9-8- என்றும் சொல்லுகிறபடி
ஆயப்படும் -வி லக்ஷணமாய் நிரவதிகமான கல்யாண குணங்களால் -பூர்ணரான ஆழ்வாருடையதாய்
அதி ஸூ லபமான திராவிட வேதத்தைத் தரிக்கும் படி நிஸ் ஸலமான மனஸ்ஸைப் பெற

வாய் கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் அல்லேன்;
ஆய் கொண்ட சீர் வள்ளல் ஆழிப் பிரான் எனக்கே உளன்;
சாய் கொண்ட இம்மையும் சாதித்து, வானவர் நாட்டையும்
நீ கண்டு கொள் என்று வீடும் தரும் நின்று நின்றே.–3-9-9-ஆயப்பட்ட சீர் -ஹேய ப்ரத்ய நீக கல்யாண குணகணன்-ஆராயப்பட்ட சீர். என்றது, குற்றங்களுக்கு எல்லாம் எதிர்த்தட்டாக இருக்கிற கல்யாண குணங்கள்.

வேயின் மலிபுரை தோளி பின்னைக்கு மணாளனை
ஆய பெரும்புகழ் எல்லை இலாதன பாடிப்போய்க்
காயம் கழித்து,அவன் தாளிணைக் கீழ்ப்புகும் காதலன்,
மாய மனிசரை என்சொல வல்லேன் என்வாய் கொண்டே?–3-9-8–ஆயப் பட்டு இருக்கை -ஹேய பிரதிபடமாய் இருக்கை-ஆய -என்று ஆன-என்று ஆய் -ஸ்வரூப அநு பந்தி என்றுமாம்-ரூப குணத்தோடு ஆத்ம குணத்தோடு வாசி அற ஒரோ ஒன்றோ நிரவதிகமாய் இருக்கை-

அன்றிக்கே
ஆய்ந்த பெரும் சீர் என்று –
செந்தமிழ் வேதத்துக்கு விசேஷணம் ஆகவுமாம் –
சீர்த் தொடை ஆயிரம் –1-2-11- இறே
இந்தப் பிரபந்த தாரண அர்த்தமாக
வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன்

சேரத் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
சீர்த் தொடை யாயிரத்து ஒர்த்த விப்பத்தே
 –1-2-11-சப்த லக்ஷண கதமான சீர்களினுடைய தொடையை யுடைய ஆயிரத்தில்-சீர் என்று கவிக்கு உறுப்பான அலங்காரங்களைச் சொல்லுதல்-பகவத் குணங்களைச் சொல்லுதல்–எழுத்து அசை சீர் பந்தம் அடி தொடை’ பா இனம் – என்று கவிக்கு உறுப்பாக இருப்பன சில உள; அவற்றைச் சொல்லுதல்;-அன்றிக்கே , உபாசகன் அனுக்ரஹத்தாலே – உபாஸ்யனுடைய கல்யாண குணங்களைத் தொடுத்த ஆயிரம் என்னுதல்.

தீ மனம் கெடுத்து —2-7-8-
மருவித் தொழும் மனத்தை –2-7-7- ஆச்சார்யன் தர வேணும் இறே —
ஆகையால்
தங்கு மனம் நீ எனக்குத் தா –பெரிய திருமொழி தனியன் -என்னும்படி
பேராத வுள்ளம் பெற -என்று எம்பெருமானாரைப் பிரார்த்திக்கிறது –

வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே
–2-7-8-பந்த ஹேது அன்றிக்கே குண அனுபவமே யாத்ரையாம் படியான நிர்தோஷ அந்தகரணாய்-ஜென்மம் ஆகிற துழதி உண்டு -தூர்த்துக்கம் -அது போம்படியாக-விஷயாந்தர ஸ்பர்சியான நெஞ்சைப் போக்குவதும் செய்தாய்-அம்ருதத்தையும் விஷத்தையும் ஒக்க விரும்புவாரைப் போலே உன்னையும் உகந்து ஷூத்ர விஷயங்களையும் உகக்கும் பொல்லாத நெஞ்சைத் தவிர்த்தாய் நல்ல நெஞ்சைத் தந்த அளவன்றிக்கே -பொல்லாத நெஞ்சைக் கெடுப்பதும் செய்தாய் –ஸ்ரீயபதியாகையாலே பூர்ணனான எனக்கு உன்னால் ப்ரத்யுபகாரமாக செய்யலாவது ஒன்றும் காண்கிறிலேன்- பிரதிபகாரம் பண்ணி அல்லது நிற்க மாட்டுகிறிலேன் –

திரிவிக்ரமன் செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய்
உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளி
பரவிப் பணிந்து பல்லூழி யூழி நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே –2-7-7-இப்படி பலகாலும் நினைத்தும் அடைவு கெடப் பேசியும் குண பரவசனாய் வணங்கி இப்படி கால தத்வம் உள்ளதனையும் போக்யமும் பிராப்தமுமாய் உன் திருவடிகளையே அநந்ய ப்ரயோஜனமாய்க் கொண்டு அடிமை செய்யும் மனசையே தந்தாய்-விஷயாந்தரங்கள் அஸ்திரமுமாய் அபோக்யமும் ஆகையால் சஞ்சலம் ஹி மன-என்னும் படி இ றே இருப்பது –

எங்கள் கதியே ராமானுச முனியே
சங்கை கெடுத்தாண்ட தவராசா பொங்கு புகழ்
மங்கையர் கோன் ஈந்த மறை யாயிரம் அனைத்தும்
தங்கு மனம் நீ எனக்குத் தா
–எம்பார் அருளிச் செய்த தனியன்–இவ் வாழ்வாரைப் போலே பாஹ்ய குத்ருஷ்டிகளை நிரசித்து வைதிக மார்க்கத்தை நடத்தியும் உகந்து அருளின நிலங்களை உத்தரித்தும்
தத் பிரதிபாதகமான இவர் ஸ்ரீ ஸூக்தியை வர்த்திப்பித்தும் – போருமவர் இறே உடையவர் –அத்தைப் பற்ற இவ் வாழ்வார் ஸ்ரீ ஸூக்தியான திருமொழி ஆயிரமும் என் ஹிருதயத்திலே நிலைத்து நிற்கும்படி
உபகரித்து அருள வேணும் என்று எம்பெருமானாரை -அர்த்திக்கிறது -இதில் –கண்ண நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் -என்கிற திவ்ய ஸூக்தியை தரிக்கும் படியான மனஸ்சைத் தந்து அருள வேணும் – குறையல் பிரான் அடிக்கீழ் விள்ளாத அன்பன் இராமானுசன் -என்றும் -நீலன் தனக்கு உலகில் இனியான் -என்றும் -கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமான் ஒலி மிக்க பாடலை உண்டு தன் உள்ளம் தடித்து -என்றும்-எம்பெருமானாரைச் சொல்லக் கடவது இறே-அத்தாலே அவரை அபேஷிக்கிறது –

அதாவது
இவர் தான் – மாறன் அடி பணிந்து உய்ந்தவராய்
மாறன் பணித்த மறை யுணர்ந்தோனை –இராமா -46- என்றும்
தென் குருகைப்பிரான் பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னைத் தன் பத்தி என்னும் வீட்டின் கண் வைத்த ராமானுஜன் -இராமா –29-என்றும்
பண்டரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாக யுடையராய் –இராமா –64-
திருவாய் மொழியின் மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தொறும் இருக்குமவராய் –இரா –60-
உறு பெரும் செல்வமும் மாறன் விளங்கிய சீர் நெறி தரும் செந்தமிழ் என்று அறிதர நிற்குமவர் ஆகையாலும் –இராமா -19-
அவர் திருவடிகள் ராமானுஜர் ஆகையால் –இவரை அர்த்திக்கிறது –

கூறும் சமயங்கள் ஆறும் குலையக் குவலயத்தே
மாறன் பணித்த மறை யுணர்ந்தோனை மதியிலியேன்
தேறும்படி என் மனம் புகுந்தானைத் திசை யனைத்தும்
ஏறும் குணனை இராமானுசனை இறைஞ்சினமே -46- –ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த திராவிட வேதமான ஸ்ரீ திரு வாய் மொழியை-சாஷாத் கரித்து அருளினவராய் –உயர்வற உயர்நலம் உடையவன் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி -உளன் சுடர் மிகு சுருதியுள் -நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் – நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான் – அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல்-மங்கை உறை மார்பா – அவாவில் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே
-என்று இப்படி ஸ்ரீ நம் ஆழ்வாராலே அருளிச் செய்யப்பட்ட –மிக்க இறை நிலையும் மெய்யா உயிர் நிலையும் தக்க நெறியும்-தடையாகி தொக்கியிலும் ஊழ் வினையும் வாழ் வினையும் வோதும் குருகையர் கோன் யாழின் இசை வேதத்தியல் -என்கிறபடியே ஸ்ரீ ஆழ்வாராலே அருளிச் செய்யப்பட்டதாய்-அர்த்த பஞ்சகத்தையும் அடைவே பிரதிபாதிக்கிற ஸ்ரீ திருவாய் மொழி யாகிற
திராவிட வேதத்தை சார்த்தமாக தெளிந்து கொண்டு இருக்கை யாகிற-பரி பூர்ண ஞானத்தை உடையராய் –வட மொழி மறை போலே தான் தோன்றியாய் இராமல்-ஆபிஜாத்யத்தாலே உண்டான-மேம்பாடு தோற்ற – மாறன் பணித்த மறை-என்றார் .-மறை- மாறன் பணித்ததாயினும் தன்னிடம் அன்பு இல்லாதார்க்கு தன் பொருளை மறைத்திடுதல்-பற்றி –மறை -என்கிறார் – ரகுவர சரிதம் முநி ப்ரநீதம்-என்பது போலே மறை மாறன் பணித்தது –என்றார்–ஸ்ரீ திரு குருகூர் அதனை உளம் கொள் -உம்மை உய்ய கொண்டு போக-.திவ்ய தேச ப்ராவண்யமே உய்ய ஒரே வழி என்றவாறு

கூட்டும் விதி என்று கூடும் கொலோ தென் குருகைப்பிரான்
பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னை தன் பத்தி என்னும்
வீட்டின் கண் வைத்த இராமானுசன்
புகழ் மெய் உணர்ந்தோர்
ஈட்டங்கள் தன்னை என்னாட்டங்கள் கண்டு இன்பம் எய்திடவே -29 –தர்சநீயமான ஸ்ரீ திரு நகரிக்கு நாதரான ஸ்ரீ ஆழ்வார் உடைய பாட்டு என்று கொண்டு -பிரசித்தமாய் – வேத ரூபமாய் -செம் தமிழால்-இருக்கிற ஸ்ரீ திருவாய் மொழியைத் தம்முடைய பக்தி யாகிற-வாசஸ் ஸ்தானத்திலே வைத்த
ஸ்ரீ எம்பெருமானார்
 —தென் -தர்சநீயுமான என்னுதல் -தெற்கு திக்கிலே இருக்கிறது என்னுதல் –
தென்-தர்சநீயமான-அழகு-தர்சனத்துக்கு தர்சநீயமான-ஆழ்வாரை காட்டி கொடுத்த மகாத்மயம் .தென் திசை நோக்கி கை கூப்புகிறோம்.-திரு வாய் மொழி தோறும்-குருகை -பரம பதத்தை சேர்க்கும் ஊர் என்னுதல் – பரம பதத்தோடு சமமான வைபவத்தை உடைய ஊர் என்னுதல் –
பிரான் -இப்படிப் பட்ட திரு நகரியிலே அவதரித்து லோகத்தார் எல்லாரும் உஜ்ஜீவிக்கும்படி –
தத்வ ஹித-புருஷார்த்த தத் யாதாத்ம்யங்களை-திவ்ய பிரபந்த முகேன – உபகரித்த நம் ஆழ்வார் உடைய –அன்றிக்கே –-அவ்வூரிலே அவதரிக்கையாலே எல்லாருக்கும் அவர் உத்தேச்யமாய் இருக்கிற-வழியாலே அவ்வூருக்கு உபகாரகர் -என்னவுமாம்–பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னை –
அவா வற்று வீடு பெற்ற குருகூர் சடகோபன் சொன்ன
-என்றும் –-தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற-முதல் தாய் சடகோபன் -என்றும் சொல்லுகிறபடியே- பத்தர் பரவும் ஆயிரம் -1-5-11–ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரம்-3-9-11- பொய்யில் பாடல் ஆயிரம்–4-3-11- தென்னன் குருகூர்க் காரி மாறன் சடகோபன் ஒலி புகழ் ஆயிரம்–5-2-11- சேமங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த நாமங்களாயிரம்–5-9-11- குருகூர்ச் சடகோபன் சொன்ன ஆணை ஆயிரம்–6-3-11- தெளிவுற்ற கண்ணனைத் தென் குரு கூர்ச் சடகோபன் சொல் தெளிவுற்ற ஆயிரம்–7-5-11- தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குருகூர்ச் சடகோபன் சொன்ன தீர்த்தங்கள்–7-10-11-தென் குருகை –பசும் தமிழ் தன்னை-
பாட்டாய பல பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து –
திருவாய் மொழி – 10-6 2- – -என்றும்
குருகூர் சடகோபன் பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும் -திருவாய் மொழி – -10 6-11 – – -என்றும்-ஸ்ரீ குருகைப் பிரான் பாட்டு பிரசித்தம் –தன் பத்தி என்னும் – அத்தை விஸ்மரித்தால் -ஒரு ஷணம் ஒரு கல்பம் போலே இருக்கும்படி-பண்ணக் கடவதான -பரம பக்தி யாகிற அதுவும் –
தன் பக்தி –-எல்லாருடைய பக்தி போல் அன்றிக்கே –பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை உள்ளபடி அறிந்த எம்பெருமானாருடைய ப்ரேமம் அவருடைய ஞான-வைசத்யத்துக்கு தகுதியாய் இருக்கும் இறே -இப்படிப் பட்ட பக்தி யாகிற-வீட்டின் கண் வைத்த –-கண் -சப்தமி -வீடு -ஆவாசஸ்தானம் -அநர்கமான ரத்னத்தை செப்பிலே வைத்து கொண்டு இருப்பாரைப் போலே தம்முடைய பக்தி யாகிற மகா ஸௌதத்திலே வைத்துக் கொண்டு இருக்கிற–வீட்டின் கண்…ரத்னத்தை செப்பிலே வைப்பது போல
பக்தி தான் பொன் -திரு வாய் மொழி ரத்னம்–செப்பு பெட்டகத்தில் வைத்தால் போல.–தன் பத்தி என்னும் வீட்டின் கண் வைத்த திருவாய் மொழி விஷயமாக எம்பெருமானாருக்கு ஏற்பட்ட பக்தி -திரு வாய் மொழிக்கு குடி இருக்கும் இல்லமாக அமைந்தது – திருவாய் மொழி அன்றி -இருப்புக் கொள்ளாத நிலையே-எம்பெருமானார் உடைய பக்தி -என்க – அதனை இல்லமாக கொண்டது திருவாய் மொழி என்பது எப்பொழுதும்-பேர் அன்புடன் அனுசந்திகப் படுவது என்னும் கருத்து கொண்டது-இவ் இல்லத்துக்கு தனி சிறப்புண்டு – அது தோன்ற-தன் பத்தி என்னும் வீடு -என்றார் 

பண்டரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய்
விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம்
மெய்ம்மை
கொண்ட நல் வேதக் கொழும் தண்டம் ஏந்திக் குவலயத்தே
மண்டி வந்தேன்றது வாதியர்காள் உங்கள் வாழ்வற்றதே – – 64- –எங்களுக்கு விதேயமாய் இருக்கும் ஸ்ரீ இராமானுச முனி யாகிற யானை –-பண்ணார் பாடல் -திருவாய் மொழி – 10-7-5- -என்னும்படி ஸ்ரீ ஆழ்வார் பண்ணிலே உபகரித்து அருளின செவ்வித் தமிழான ஸ்ரீ திருவாய் மொழியால் விளைந்த ஆனந்தமானது –ஒழுகா நின்றுள்ள – மதமாய்க் கொண்டு -விஸ்த்ருதமாக –வேத நூலோதுகின்றதுண்மை – என்னும்படி யதாபூத வாதித்வத்தால் வந்த மெய்ப்பாட்டை உடைய விலஷண வேதமாகிற எழில் தண்டையும் ஏந்திக் கொண்டு – நீங்கள் தன்னரசாக நடத்துகிற பூமியிலே ஒருவருக்கும் நேர் நிற்க ஒண்ணாதபடி -தள்ளிக் கொண்டு வந்து உங்கள் மேலே எதிர்ந்தது –
வாதிகளாய் உள்ளீர் -சிஷ்யர்களும் பிரசிஷ்யர்க்களுமாய் பல்கிப் பணைத்து இருந்த உங்களுடைய சம்பத்து முடிந்ததே – லோகம் பிழைத்ததே -என்று கருத்து –பண்டரு மாறன் பசும் தமிழ் –என்றதுக்கு பண்டே உள்ளதாய் -பெறுதற்கு அரிதாய் –இருந்துள்ள மாறன் பசும் தமிழ் -என்று பொருள் ஆனாலோ என்னில் -அது ஒண்ணாது .-பண்டு என்கிற சொல்லு பூர்வ கால வாசி இத்தனை அல்லது பூர்வ காலீன வஸ்து வாசி யல்லாததினாலே.பண்டு அரு என்ற–பதச் சேதமாகில்-பண்டு என்கிற பதம் கால பரமே யானாலும் – கங்கா யாகோஷம் – என்கிற இடத்தில் கங்கா சப்தம் தீர வாசகம் ஆனால் போலே –
லஷணையாய் இச் சப்தம் காலீன வஸ்து வாசகம் என்று சொல்லலாம் இறே –அந்த பஷத்தில் –பிரதித்வாபராந்தரத்திலும் ஸ்ரீ வியாச அவதாரம் பண்ணி -சம்ஸ்ர்க வேதங்களை ஸ்ரீ சர்வேஸ்வரன் தானே வ்யவசிக்குமா போலே பிரதி கலி யுகத்திலும் ஜ்ஞான யோகியாய் அவதரித்து ஸ்ரீ த்ரமிட வேதங்களை ஸ்ரீ சர்வேஸ்வரன் வெளி இட்டு போகிறான் என்று -பிரம்ம பார்க்கவாவ்ர்த்த பாத்மாதி புராணங்களிலே ஸூபிரசித்தமாக சொல்லுகையாலே – நித்தியமாய் -அபௌருஷேயமாய் இருந்துள்ள ஸ்ரீ திருவாய் மொழி -பாகவதர்கு ஒழிய -அந்யருக்கு வாக் மனச்சுக்களாலே ஸ்பரசிக்கவும் கூட அரிதான -என்றபடி —பண்டரு மாறன் தமிழ்–மாறன் பண்ணிலே தருகிற பசும் தமிழ் என்று இயைக்க –
மாறன்-ஸ்ரீ நம் ஆழ்வார்–பண்-ஸ்வரம்-அதனிலே தருதலாவது -அப்பண்ணிலே அமைவுறும்படிதருகை
பண்ணார் பாடல் இன் கவிகள்-ஸ்ரீ திருவாய் மொழி -10 7-5 – – என்று தாமே அருளிச் செய்தது காண்க .–இனி தருதல்- உண்டு பண்ணுதலாய் -மணம் தரு மலர் -என்பது போல –பண் தரு பசும் தமிழ் -என்று இயைதலுமாம் – புஷ்பம் பரிமளத்தொடே அலருமா போலே ஸ்ரீ திருவாய் மொழி அவதரித்த போதே பண் மினுங்கி யாயிற்று இருப்பது –என்று பண்ணார் பாடல் வ்யாக்யானத்தில் ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்தது-இங்கு நினைக்கத் தகும் .–மாறன் பண்டரு பசும் தமிழ் என்னும் இடத்தில்
கபிலர் பாட்டு என்னும் இடத்தில் போலே –செய்யுட் கிழமைக் கண் ஆறாம் வேற்றுமை தொக்க தென்று கொள்க .-பசும் தமிழ்-பசுமையான தமிழ் -பண்புத் தொகை –-பசுமையாவது -செம்மை-செவ்விய தமிழ் என்றபடி .-பொருள் விளங்கு நடையில் உள்ள தமிழ் செவ்விய தமிழ் -என்க –இனி —
பசுமை என்றும் மாறாத இளமையாய்க் கன்னித் தமிழ் என்னலுமாம் .–இனி —பசும் தமிழாவது -பிற மொழி கலப்பற்ற தூய தமிழ் என்று உரைத்தலுமாம் .-ஸ்ரீ திரு வாய் மொழி என்னாது –ஸ்ரீ மாறன் பசும் தமிழ் -என்றார்-அவருடைய நான்கு திவ்ய பிரபந்தங்களையும் நெஞ்சில் கொண்டு-என் நெஞ்சத்து உள்ளிருந்து இங்கு இரும் தமிழ் நூல் இவை மொழிந்து -ஸ்ரீ திருவாய் மொழி -10 6-4 – -என்று
ஸ்ரீ நம் ஆழ்வாரே தம் நூல்களை இரும் தமிழ் நூல் –என்பது காண்க–இனி தமிழில் முதல் நூல் எனத்தக்கது இது ஒன்றே என்பது கருதி தமிழ் நூல்களுக்கு தாயான–திருவாய் மொழியை பசும் தமிழ் -என்றார் ஆகவுமாம்–குறு முனிவன் முத்தமிழும் என் குறளும் நங்கை சிறு முனிவன் வாய் மொழியின் சேய் – என்றது காண்க –லஷ்மி நாதாக்ய சிந்தவ்-சடரிபுஜலத ப்ராப்ய காருண்ய நீரம் நா தாத்ரா வப்யஷி சத்த நுர குபதாம்போஜா சஷூர் ஜ்ஜ்ராப்யாம் – கத்வாதாம்ய மு நாக்யாம் சரிதம நுய தீந்த்ராக்ய பத்மாகரேந்த்ரம் சம்பூர்ய ப்ரானிசச்யே ப்ரவஹதி நிதராம்-தேசிகேந்திர பிரமௌநை – என்கிறபடியே –ஸ்ரீயபதி யாகிற கடலில் நின்றும் –ஆழ்வார் ஆகிற முகில் – பெரும் கருணை யாகிற நீரை முகந்து – ஸ்ரீ பெரிய முதலியார் ஆகிற குன்று தன்னிலே வர்ஷிக்க – அக் கருணை யானது ஸ்ரீ மணக்கால் நம்பி ஸ்ரீ உய்யக்கொண்டார் -ஆகிய திரு வருவியாய் – பரம ஆசார்யரான ஸ்ரீ ஆள வந்தார் -ஆகிற ஆற்றிலே சென்று – ஸ்ரீ எம்பெருமானார் ஆகிய பொய்கையை பூரித்து – ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் ஆகிற மடையாலே தடையறப் பெருகி –சம்சாரி சேதனராகிற பயிரை நோக்கி – ரஷித்தது என்று சொல்லுகையாலே –கவியமுதம் –என்றும் –-தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலை -என்றும்
ஸ்லாக்கிக்கும்படி-சர்வருக்கும் அமுதமயம் ஆகையாலே -ஆனந்தாவஹமான ஸ்ரீ திருவாய் மொழியாலே விளைந்த ஆனந்த மானது – இவ்வளவாக பெருகி வாரா நின்றுள்ள -அம்ர்தமாய்க் கொண்டு –பண்ணார் பாடலினால் ஸ்ரீ திரு மால் இரும் சோலையான் ஆனந்தம் அதிகமாகி அவ் ஆனந்தத்துக்கு போக்கு வீடாக -தென்னா தென்னா -என்று ஆலாபனம் செய்து பாடா நிற்பானாயின்
ஸ்ரீ எம்பெருமானார்க்கு இத்தகைய பண்ணார் பாடலினால் ஆனந்தம் விளைய கேட்க வேண்டுமா –
தமிழ் – அதற்கு மேலே பசும் தமிழ் – அதற்கு மேலே பண் தரு பசும் தமிழ் – எல்லா வற்றிற்கும் மேலே மாறன் பண் தரு பசும் தமிழ் – ஸ்ரீ எம்பெருமானாரை மதம் பிடித்த பெரு வேழம் ஆக ஆக்குவதற்கு இதற்கு மேல் என்ன வேண்டும் – ஸ்ரீ திருவாய் மொழி அனுபவம் உள் அடங்காது வெளியே கண்களிலே ஆனந்த பாஷ்பமாய்ப் பெருக்கெடுத்த படி

உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகம் தொறும் திரு வாய் மொழியின்
மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தொறும்
மா மலராள்
புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும்
குணம் திகழ் கொண்டல் இராமானுசன் என்னும் குலக் கொழுந்தே – -60 –ஆத்ம குண ஔஜ்ஜ்வல்ய யுக்தராய் -ஆத்ம குணங்கள் தன்னை சர்வ விஷயமாக உபகரித்து அருளும் பரம ஔ தாரராய் –
எங்கள் குலத்துக்கு தலைவரான ஸ்ரீ எம்பெருமானார்-ஞாதவ்யார்தங்களை அடங்க அறிந்து இருந்தும் –
யதா ஞான யுக்தரானவர்கள் கூட்டுரவு தோறும் – ஸ்ரீ திரு வாய் மொழியினுடைய பரிமளிதமாய் விலஷணமான இசை நிரந்தரமாக நடக்கும் ஸ்த்தலங்கள் தோறும் – ஸ்ரீ பெரிய பிராட்டியாராலே நித்ய வாசம் பண்ணப்பட்ட அழகிய திரு மார்வில் உடையவன் உகந்தருளி வர்த்திக்கும் ஸ்ரீ திருப்பதிகள் தோறும் – அவ்வவற்றை அனுபவிக்கையில் உண்டான ஆசையாலே புக்கு அவற்றிலே ஆழம் கால் பட்டு நில்லா நிற்பர்- இது அவருடைய பக்தி வைபவம் இருக்கும் படி என்று கருத்து–உண்மையான மெய் ஞானி என்று ஸ்ரீ ஆழ்வார்களைச் சொல்ல குறை இல்லை- ஸ்ரீ குறையல் பிரான் அடி கீழ் ஸ்வாமி எழுந்து அருளி இருக்கிறார் இன்றும் நாம் சேவிக்கும் படி–ஸ்ரீ ஆழ்வார் உடன் சேர்த்தி திரு மஞ்சனம் இன்றும் சேவிக்கலாமே ஸ்ரீ திரு குருகூரில்–ஸ்ரீ ஆழ்வார்கள் பதின்மரிலும் வைத்துக் கொண்டு பிரதாநரான ஸ்ரீ நம் ஆழ்வாருடைய திருப் பவளத்தாலே அருளிச் செய்யப்பட சப்த ராசியான ஸ்ரீ திவ்ய பிரபந்தத்தினுடைய சர்வ கந்த -என்கிற விசேஷத்தை பிரதிபாதிக்கையாலே -தானும் பரிமளிதமாய் அநு சந்தாதாக்களுக்கு அவ் விஷயத்தைக் கொடுக்கக் கடவதாய் – யாழினிசை வேதத்தியல் -என்றும் –
தொண்டர்க்கு அமுதம் -என்றும் சொல்லுகிறபடியே போக்ய தமமாய் இருக்கிற அனுசந்தான கான ரூபமான இசையானது – எந்த எந்த ஸ்தலத்திலே நடையாடி ஸூ ப்ரதிஷ்டமாய் இருந்ததோ அவ்வவ ஸ்தலங்கள் தோறும்-
-ஸ்ரீ குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரியும் ஸ்ரீ மதுர கவிகள் போல்வார் ஸ்ரீ திரு வாய் மொழியை- இனிமையாக இசைக்கும் இடங்களில் எல்லாம் -ஸ்ரீ எம்பெருமானார் -புக்கு நிற்கிறார் -என்க —பண்ணார் பாடல் -என்று ஸ்ரீ நம் ஆழ்வாரே அருளிச் செய்தமைக்கு ஏற்ப –
திருவாய் மொழியின் இன்னிசை
-என்கிறார்–ஸ்ரீ நம் ஆழ்வார் உடைய ஏனைய திவ்ய பிரபந்தங்களும் இயற்பா ஆதலின் இசைப்பாவான ஸ்ரீ திருவாய் மொழியின் இன்னிசை என்கிறார்–எங்கு எங்கு எல்லாம் ஸ்ரீ ரகுநாதனுடைய கீர்த்தனம் நிகழ்கின்றதோ அங்கு அங்கு எல்லாம்-மத்தகதிடை கைகளைக் கூப்பி கண்ணும் கண்ணீருமாய் ஆஞ்சநேயன் ஈடுபட்டு நிற்பது போல்-ஸ்ரீ திருவாய் மொழியின் இன்னிசை மன்னும் இடம் எல்லாம் ஸ்ரீ எம்பெருமானார் புக்கு நிற்கிறார் என்க-இன்பம் பயக்க எழில் மாதர் தன்னோடும் அவனே இனிது கேட்பானே– ஸ்ரீ ஸ்வாமி கேட்க கேட்க வேண்டுமா -மிதுனமே அங்கே இருக்க – ஸ்ரீமத் பாகவதம் பாடும் இடம் எல்லாம் கன்று குட்டி -தாய் பசு போல கண்ணன் போவது போல–நுகர்ச்சி உறுமோ மூ உலகின் வீடு பேறு-திருவாய் மொழி -8 10 9- – என்று தொடங்கும் பாசுரத்தில் பேசியதற்கு ஏற்ப –ரசித்து ஸ்ரீ திருவாய் மொழி பாடும் இடங்கள் எல்லாம் பரம ரசிகரான ஸ்ரீ எம்பெருமானாரும் புக்கு நிற்கிறார் என்றது ஆயிற்று

உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்

நெறி தரும் செம் தமிழ் ஆரணமே என்று இந் நீள் நிலத்தோர்
அறிதர நின்ற இராமானுசன் எனக்கு ஆரமுதே – – 19-ஸ்வ சம்பந்தத்தை வுடையவர்களுக்கு இன்னார் என்னும் மதிப்பை கொடுக்குமதாய்-ஹித பரமுமாய் -ப்ரியகரமுமாய் -அஞ்ஞாத ஜ்ஞாபகமுமாய் -பிராப்ய ப்ராபகங்களுமாய்- இருக்கையாலே – சீரியதாய் -நிரவதிகமான சம்பத்தும் -பிதாவும் -மாதாவும் -சதாசார்யனும் – பரிமளிதமான புஷ்பத்தை பிறப்பிடமாக உடைய ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபனான ஸ்ரீ சர்வேஸ்வரனும் – ஸ்ரீ ஆழ்வார் பகவத் ப்ரசாதத்தாலே தமக்கு பிரகாசித்த -பரபக்தி -யாதி – ச்வபாவங்களின் உடைய அடைவிலே – உபகரித்து அருளின -திராவிட வேதமான ஸ்ரீ திருவாய் மொழியே-என்று இம் மகா ப்ருதிவியில் உள்ளார் அறியும்படி நின்ற ஸ்ரீ எம்பெருமானார் எனக்கு நிரதிசய போக்யர் –
அதவா-விளங்கிய சீர் நெறி தரும் என்றது -சீர்த் தொடை யாயிரம் -திருவாய் மொழி -1 2-11 – – என்னும்படி தமக்கு பிரகாசித்த பகவத் குணங்களை அடைவே உபகரித்து அருளின -என்னவுமாம் –உறு பெரும் செல்வமும்அவிந்தந தனஞ்சய பிரசமதம் தனம் தந்தனம் -என்கிறபடியே அப்ராப்தமான சம்பத் அன்றிக்கே – தனஞ்சய விவர்த்தனம் தனமுதூட கோவர்த்தனம் சூசாத நம பாதநம்-சூ மனசா சமாராதனம் -என்றும் –-ஸாஹி ஸ்ரீர்ம்ர்தாசதாம் -என்றும் -முக்த ஐச்வர்யத்துக்கு உடல் ஆகையாலே –ப்ராப்தமாய் –-பெரும் –-ஷீணே புன்யே மர்த்த்ய லோகாம் விசந்தி -என்றும் –-ஒரு நாயகம் ஓட வுலகு உடன் ஆண்டவர்-கரு நாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர் பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர் –என்றும்-சொல்லுகிறபடியே அதி ஸ்வல்பமாய் -அநித்யமாய்-இருக்கை அன்றிக்கே –
கொள்ளக் குறைவற்று இலங்கி – கொழுந்து விட்டோங்கிய -என்கிறபடியே – கொள்ளக் கொள்ள பெருகி வரக் கடவதாய் இருக்கிற – செல்வமும் – சம்பத்தும் -அளவியன்ற யந்தாதி யாயிரம் இறே -இது –சகல ஜன உஜ்ஜீவன ஏக ப்ரவர்த்தம் ஆகையாலும் –பக்தாம்ர்தம் விஸ்வ ஜன அநு மோதனம் -என்றும்
தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொன்னேன் -என்றும் சொல்லுகிறபடியே
பிரியத்தையே நடத்தக் கடவதாகையாலும் -திரு வாய் மொழியிலே – வீடு முன் முற்றவும் -என்று தொடங்கி -கண்ணன் கழலினை –என்னும் அளவும் ஆதி அந்தத்திலே ஹிதத்தையே போதிக்கையாலே ஹிதத்தை நடத்தக் கடவதாகையாலும் தாயும் தந்தையுமாய் இருக்கும்அத்ர பரத்ர சாபி – என்கிறபடியே உபய விபூதியிலும் இச் சேதனனுக்கு உபாதேய தமனாய் –பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி -அஞ்ஞாத ஜ்ஞாபனம் பண்ணின சதாசார்யனும் – இவ் உபகார ஆதிக்யத்தாலே காணும் இவன் பரித்யாஜ்யனாகாதே ஒழிந்தது – உயர்த்தியை உடையனானதும் – சேதனருடைய அஞ்ஞான அந்தகாரத்தை நிவர்த்திப்பவன் ஆகையாலே குரு –தனக்கு ஒரு பயன் கருதாது -அவ் இறைவனுக்கு மகிச்சியை ஊட்டுதல் வேண்டும் –-இதுவே அடிமை எனப்படுவது -இத்தகைய அடிமையே ஆத்மா ஸ்வரூபத்தின் உண்மை நிலையம் -என்று முன்னம் முன்னம் மறந்த ஆத்மாவினுடைய-அனந்யார்ஹ சேஷத்வத்தை உணர்த்துதலின் திருவாய் மொழி -உயர் குருவாய் ஆயிற்று என்க –திருவாய் மொழியும் -இவை பத்தும் வீடே – 1-1 11- – என்றபடி வீடு அளிப்பதாலின் உபாயமாகவும் கேட்டாரார் வானவர்கள் செவிக்கு இனிய செம் சொல்லே –10 6-11 – -என்றபடி வீட்டில் உள்ளாறும் கேட்டு இன்புறும்படி இருத்தலின் ப்ராப்யமாகவும் ஆதலின் -பூ மகள் நாதன் -ஆயிற்று –சீர்-பரபக்தி -பர ஞான -பரம பக்திகள் -என்னும் நல் இயல்புகள் மறைந்து கிடந்த அவை இறைவன் அருளால் நம் ஆழ்வாருக்கு வெளிப்பட்டன –அவை தமக்கு அங்கன் வெளிப்படும் அடைவிலே அவர் செம் தமிழ் ஆரணத்தை தந்து அருளினார் –
பரபக்தி யாவது பிரிவில் வருந்தும்படியான நிலையையும் கூடல் மகிழும்படியான நிலையையும் விளைவிப்பதான தனிப்பட்ட அன்பு –பர ஞானம் ஆவது -அத்தகைய அன்பு முதிர்ந்த நிலையில் ஏற்படும் நேரிடையான தோற்றம் – பரம பக்தி யாவது ஷண காலமும் பிரிவை சஹிக்க மாட்டாது அனுபவித்தே யாக வேண்டிய பேரன்பு – ஸ்ரீ நம் ஆழ்வாருக்கு சூழ் விசும்பு -திருவாய் மொழி வரையிலும் பர பக்தியும் – சூழ் விசும்பு அணி முகில் -லில் பர ஞானமும்-முனியே நான் முகனில் பரம பக்தியும் ஸ்ரீ இறைவன் அருளால் விளங்கியதாக பெரியோர் விளம்புகின்ற்றனர் –
இனி சீர்த் தொடை யாயிரம்
-என்றபடி-இறைவன் குணங்கள் அவன் அருளால் விளங்க அவ்வடைவில் நம் ஆழ்வார் செம் தமிழ் ஆரணத்தை தந்து அருளினார் என்னலுமாம் –

மற்றை ஆழ்வார் திவ்ய பிரபந்தங்களை அங்க உப அங்கமாக உடைய இவருடைய திராவிட வேதமான திவ்ய பிரபந்தம் ஒழிய தத் இதர கிரந்தங்களில் சபலமான மனஸ்ஸூ சலியாமல் இது ஒன்றிலுமே உற்று நிலை நிற்க வேணும் என்று அவரை அர்த்திக்கிறது -என்கை —

——-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அனந்தாழ்வான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சொட்டை நம்பிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஈஸ்வர முனிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நாதமுனிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி தனியன்-3-மனத்தாலும் வாயாலும் வண் குருகூர் பேணும்-ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் –

June 17, 2026

மனத்தாலும் வாயாலும் வண் குருகூர் பேணும் இனத்தாரை அல்லாது இறைஞ்சேன்
தனத்தாலும் ஏதும் குறைவிலேன் எந்தை சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று
–ஸ்ரீ சொட்டை நம்பிகள் அருளிச் செய்த தனியன் –

இதில் ஆழ்வார் திருவடிகளே-ப்ராபகமும் ப்ராப்யமுமாகிற படியை-அந்வய-வ்யதிரேகங்கள்
இரண்டாலும் தர்சிப்பிக்கிறது

மனத்தாலும் வாயாலும் வண் குருகூர் பேணும் இனத்தாரை அல்லாது இறைஞ்சேன்
மனத்தாலும் வாயாலும் வண் குருகூர் பேணுகை யாவது
திருக்குருகூர் அதனை உளம் கொள் ஞானத்து வைம்மின் –4-10-9-
திருக்குருகூர் அதனைப் பாடி யாடிப் பரவிச் சென்மின்கள் –4-10-2-என்று
ஆழ்வார் உபதேசம் கேட்ட படியே
மனஸ்ஸாலே நினைத்தும்
வாயாலே சொல்லியும் போருகை —
பேணுகை -விரும்புகை –

விளம்பும் ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும்
வளங் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை
உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக்கொண்டு போகுறிலே
.–4-10-9–வி லக்ஷணமாய் சிரமஹரமான நீர் நிலங்களாலே சூழப் பட்டு தர்ச நீயமான திரு நகரியை உளம் கொள் ஞானம் -மானஸ ஞானம் -ஞானம் உதித்து பாஹ்ய இந்த்ரியங்களாலே பாஹ்ய விஷயங்களை க்ரஹிப்பதற்கு முன்பே மானஸ ஞானத்துக்கு இவ் ஊரை விஷயம் ஆக்குங்கோள்—ஞானம் உதித்து, புறத்தே யுள்ள இந்திரியங்களாலே புறப் பொருள்களில் செல்வதற்கு முன்னே, மனக் கண்ணுக்குத் திரு நகரியை விஷயம் ஆக்குங்கோள்.-உளம் கொள் ஞானம் – மானச ஞானம். என்றது, ‘புறத்திலே செல்லாதபடி ஞானத்தை உள் விஷயத்தில் (திருநகரியில்) ஈடுபடும் படியாகச் செய்யப் பாருங்கோள்,’ என்றபடி.பிரயோஜனம் என் என்னில்-உம்மை உயக்கொண்டு போகுறிலே.-அசன்னேவ என்னும் படி -இருக்கிற உங்களை சந்த மேனம் ததோ விது-என்ன பண்ண வேண்டி இருந்து கோள் ஆகில் –நேய மஸ்தி என்கிறபடி தக்தப்படம் போலே இவற்றின் சத்தை சென்று அற்றது என்று இருக்கிறார் –இவனை இருக்கின்றவனாக அறிகிறார்கள்’ என்கிறபடியே, உம்முடைய இருப்பைப் பெற்றுப் போக வேண்டியிருக்கில்.-இல்லாதவனாக ஆகிறான்’ என்கிறபடியே, ‘சென்றற்றது’ என்றே இருக்கிறார் ஆயிற்று இவர்.-மஹாத்மநா – தன்னில் தான் வாசி சொல்லுமத்தனை போக்கிப் புறம்பு ஒரு ஒப்புச் சொல்ல ஒண்ணாத படியான பெருமாளோடே விரோதம் உண்டு; ஆகையாலே, இலங்கையும் இல்லை; இராவணனும் இல்லை; நீங்களும் இல்லை,’ என்று திருவடி கூறினாற்போலே.

நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்,
மாட மாளிகை சூழ்ந்தழகாய திருக் குருகூரதனைப்
பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே
.–4-10-2—மாடங்களாலும் மாளிகைகளாலும் சூழ்ந்து தர்ச நீயமான திரு நகரி -ப்ராப்ய பூமி என்று தோன்றும் படியாயிற்று இருப்பது–உங்களுக்கு தான் நல்ல தேசம் தேட்டமே; ‘முத்தனாகிற பேற்றினைக் கொடுக்கும் தேசம், என்று தோற்றுகிறதில்லையோ?’ என்றபடி.–அதனைப் பாடி ஆடி – பிரீதியினாலே தூண்டப் பட்டவராய்க் கொண்டு பாடி, உடம்பு இருந்த இடத்தில் இராமல் ஆடி, கிரம மின்றியே கூப்பிட்டுக் கொண்டு. இதனால், –நின்ற ஆதிப்பிரான் என்றது மிகையாய் இருக்கை-விஷ்ணோ ராயத நேவ சேத்-தேசோயம் சர்வ காம துக் -ப்ரீதி பிரேரித்தராய்ப் பாடி -அவ்வளவில் பர்யாப்தி பிறவாமையாலே அக்ரமாகப் புகழ்ந்து -இதுவே யாத்திரையாக வர்த்தியுங்கோள்-இத் தேசம் என்றால் எல்லார்க்கும் தன் திரு உள்ளம் போலே என்று இருக்கிறார்–பகவான் எழுந்தருளி யிருக்கும் ஊரில் வசிக்கக் கடவன்,’ ‘இந்தத் தேசமானது, புண்ணியத்தைக் கொடுக்கக் கூடியது;-விரும்பியன வற்றை எல்லாம் கொடுக்கக் கூடியது.-தேசோயம் சர்வ காம துதூத் – என்கிறபடியே, இது தானே பேறு,’ என்றபடி.-அந்தத் தேசம் என்றால் தம் திரு வுள்ளம் இருக்குமாறு போலே இருக்கும் என்று இருக்கிறார் காணும் எல்லார்க்கும்.பல்லுலகீர்!–தாந்தனாய் சமித்பாணியாய் வந்தவனுக்கு ஹிதம் சொல்லுகிறார் அன்றே-இவை என்ன உலகு இயற்கை -என்று லோகம் அடங்க நோவு படுகிற படியைக் கண்டு சொல்லுகிறார் ஆகையால் எல்லாரையும் காலைப் பிடிக்கிறார்-பரந்தே.–- பெரிய திரு நாளுக்கு வந்து ஏறுமா போலே சர்வதோதிக்கமாக சென்று ஆஸ்ரயிங்கோள்-பல் உலகீர் பரந்து பாடியாடிப் பரவிச் சென்மின்கள் -என்று அன்வயம்

வளந்தழைக்க உண்டால் என்? வாசம் மணந்தால் என்? தெளிந்த கலை கற்றால் என்? சீசீ! – குளிர்ந்த பொழில் தண் குருகூர் வாவிச் சடகோபன் ஊர் எங்கள் வண் குருகூர் என்னாத வாய்.’

யத்தி மனஸா த்யாயதி தத் வாஸா வததி -என்னக் கடவது இறே –
இப்படி ஆழ்வார் சம்பந்தம் உடைய தேசத்திலே விருப்பம் உடையவர்களை அடைய பஜித்தேன் –
ஆழ்வார் சம்பந்த சம்பந்திகளை ஒழிய அந்நியரை ஆதரித்துப் பஜியேன்

வண் குருகூர் பேணும் இனத்தாரை
நல்லார் நவில் குருகூர் –திரு விருத்தம் –100- இறே

நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர்
வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல்லார் தொடையில் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம்
பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே
 – – 100-நல்லார் நவில் –லோகத்தில் சத்துக்கள் அடைய -ஆழ்வார் ஆழ்வார் -என்னா நிற்கும் இத்தனை –ராமோ ராமோ ராம -இதிவத் -(ராமோத்வைதம் போல் ஆழ்வார் ஒருவரே இங்கு பேசப்படுகிறார் ) சர்வதாபி கதஸ் சத்பி –பெருமாள் சிரமம் செய்து விட்டு ஒரு-நிழலிலே இருந்த அளவிலே – பர சம்ருத்யை  ஏக பிரயோஜனாந்தர வர்கள் அதுக்கு உறுப்பான-கற்கைக்காக படு காடு கிடப்பர்கள் –-சமுத்திர இவ சிந்துபி -இப்படி கிடக்கிறது -இவர் குறை-நிரம்புக்கைக்கோ என்னில் –-பண்டே நிரம்பி நிற்கிற கடலை நிரப்புக்கைக்கு அன்றிக்கே ஆறுகள் வந்து புகுருகிறது –-நடுவு தரிப்பு இல்லாமை இத்தனை இறே –

இனத்தார்
ஸமூஹமாய் உள்ளவர்கள்
அன்றிக்கே
ஸஜாதீயர் -என்னவுமாம்
இத்தால்
குருகூர் சடகோபன் பாட்டான திருவாய் மொழியிலே அந்வயம் உடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸமூஹத்தை -என்றபடி –
குழாம் கொள் திருக்குருகூர் இறே –2-3-11-

இத்தால்
திருவாய் மொழியில் அதி பிரவணர் ஆனவர்களை ஒழிய அந்நியரை ஆதரியேன் என்றதாயிற்று –

குழாங்கொள் பேரரக்கன் குலம்வீய முனிந்தவனைக்
குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
குழாங்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடி
குழாங்களாய் யடியீருடன் கூடி நின்றாடுமினே –2-3-11-வாயும் திரையுகளில் அவசாதத்தே பிழைத்தவர் -என்று இவரை அனுபவிப்பிக்கைக்கு ப்ருந்தபிருந்தைர யோத்த்யாயாம் -என்கிறபடியே வைஷ்ணவ சமூகங்களை உடையதாயிற்று திரு நகரி-அடியார்கள் கூட்டத்தைக் கொண்ட அழகிய திருக் குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபர். ஜன ஸ்தானம் அடியறுப்பு உண்ட பின்பு தண்ட காரண்யத்தில் முனிவர்கள் குடி ஏறியது போன்று, ‘வாயும் திரையுகளும்’ என்ற திருவாய்மொழியில் உண்டான நிலையினின்றும் தப்பிய ஆழ்வாரைக் காண வேண்டும் என்னும் பேரவாவோடு ஸ்ரீ வைஷ்ணவர்கள் அடையத் திரண்டு வந்து சேர்ந்தார்களாதலின், ‘குழாங்கொள் தென்குருகூர்’ என்கிறார்.

இப்படி அந்நியரை அநாதரிக்கைக்கு அடியுடைமை சொல்லுகிறது –
தனத்தாலும் ஏதும் குறைவிலேன் -என்று –
தனம் மதீயம் தவ பாத பங்கஜம் -என்கிறபடியே
ஆழ்வார் திருவடிகளைப் பற்றின நமக்கு –
விபூதிஸ் ஸர்வம் -என்னும் படி
தனத்தாலும் ஏதும் குறைவிலேன்-ஒன்றும் குறை உடையேன் அல்லேன் –

விலாஸ விக்ராந்த பர அவர ஆலயம்
நமஸ் யதார்த்தி ஷபணே க்ருத ஷணம்
தனம் மதீயம் தவ பாத பங்கஜம்
கதா நு சாஷாத் கரவாணி சஷூஷா
—30-வைத்த மா நிதி -திருவாய் மொழி -6-7-11-என்கிறபடியே
எனக்கு ப்ராப்யமுமாய் பிராபகமுமாய் உள்ளத்தை-சர்வ ஸூ லபமுமாய் ஆஸ்ரித வத்ஸ்லமுமாய்
நிரதிசய போக்யமுமான திருவடிகளை –-த்ரிவிக்ரமா பதாந தூளி தானத்திலும் காணப் பெறாத நான்
என்று காண இருக்கிறேன்-விஷயங்களிலே மண்டிக் கிடக்கிற சம்சாரிகள் நடுவே இருக்கிற உமக்கு
நம்மை ஒழியச் செல்லாதபடி புகுர நிருத்தினோமாகில்-ஒன்றும் செய்யாதாரைப் போலே கூப்பிடுகிறது என் -என்ன-கண்ணாலே கண்டு விடாய் தீர இருக்கிற எனக்கு சம்சாரிகளில் காட்டில் ஒரு வ்யாவ்ருத்தி பண்ணித் தர அமையுமோ–ஒரு தேச விசேஷத்திலே சதா தர்சனம் பண்ணப் பெறாதே காண விடாய்த்த எனக்கு கண்ணாலே காண வேணும் –பரம புருஷார்த்தமான திருவடிகளை கண்டு களிப்பது என்றோ என்று அலமருகிறார்-தாவி வையம் கொண்ட தடம் தாமரை கட்கே கோவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ-என்றும்-அன்று தேர் கடாவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொலோ கண்களே –என்றும் சாஷாத்காரம் பெற பதறி அருளிச் செய்கிறார் –-சஷூஷா—திவ்ய சஷூஸ் ஸூக்களை கொடுத்து அருளினாய் அதே போலே பாவியேனுக்கும் அருள வேணும் – நெஞ்சு என்னும் உட் கண்ணால் காண விரும்புகிறார் –பரமபத பிராப்தியை அபேக்ஷிக்கிறார் என்றுமாம் –

எந்தை சடகோபன்
அன்னையாய் அத்தனாய் -கண்ணி -4-
மாதா பிதா –என்னும்படி-எனக்கு ஜனகரான ஆழ்வார் –

நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மையாகக் கருதுவர் ஆதாலில்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே-4தாயாய் தந்தையாய் அறியாதன அறிவித்த அத்தா -என்று பகவத் விஷயத்தில் ஆழ்வார் சொல்லுவது எல்லாம் ஆழ்வார் விஷயத்தில் சொல்லுகிறார் இவர் –

மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதி
சர்வம்
யதேவ நியமேன மதநவ்யாநாம்
ஆத்யஸ்ய ந குலபதேர் வகுளாபி ராமம்
ஸ்ரீ மத ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா –5—மாதா–உத்பத்திக்கு முன்னே வரம் கிடந்தது பெருகைக்கு வருந்தி பத்து மாசம் கர்ப்ப தாரணம் பண்ணி-பிரசவ வேதனையை அனுபவித்து-அஸூத்திகளையும் மதியாதே பால்ய தசையிலே ஆதரித்து பகவான் ஆனாலும் இவன் புருஷ பாஷணம் பண்ணப் பொறுத்து-அகல இசையாதே அவன் பிரியத்தையே வேண்டும் – மாதாவைப் போலே உபகாரகனாய் இருக்கை –பிதா–அவள் பாத்ர மாத்ரமாம் என்னும்படி உத்பாதகனாய் என்றும் ஒக்க ஹித பரனான பிதாவும்-யுவதயஸ் – இருவரையும் மறந்து விரும்பும் யுவதிகளைப் போலே நெஞ்சுக்கு இனியராய் இருக்கை–தனயா – அவளுடைய யௌவனத்தை அழிய மாறிப் பெற்றவனாய்
பால்யத்தில் ஸூககரனாய் பக்வ தசையில் ரஷகனாய் ஆமுஷ்மிகத்தில் நிரய நிஸ்தாரகனான-புத் -என்னும் நரகத்தை -தாண்டுவிப்பவன் – புத்ரனைப் போல் இருக்கை –விபூதி – விபவம் இல்லாத போது இவை எல்லாம் அசத் சமமாய் இருக்கையாலே-இவற்றை நன்றாக்கும் ஐஸ்வர்யம் போலே உத்தேச்யமாய் இருக்கை –சர்வம் – அனுக்தமான சர்வ போகங்களுமாய் இருக்கை –யதேவ
அவதாரண்த்தாலே –சேலேய் கண்ணியர்-திருவாய் மொழி -5-1-8- என்று இருக்கும் ஆழ்வார் நினைவு இன்றி இருக்கை –

பாதங்கள்
ப்ராப்த சேஷியானவர் திருவடிகள் –

யாமுடைய பற்று –
தச் சேஷ பூதரான நம்முடைய பற்று –
தகையார் சரணம் தமர்கட்க்கு ஓர் பற்று –10-4-10—
யாமுடைய பற்று இதுவாயிற்று

வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும்
புகையால் விளக்கால் புது மலரால் நீரால்
திகை தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற
தகையான் சரணம் தமர்கட்கு ஓர் பற்றே–10-4-10-அநந்ய பிரயோஜனர்க்கு அத்விதீயமான அபாஸ்ரயம் -பக்திமான்களுக்கு பல ப்ரதமமாய் உபாயமாய் இருக்கும் -தன்னையே பற்றினார்க்கு அவ்யவஹித உபாயமாம் –தன் திருவடிகளைப் பற்றினார்கட்கு பின்னையும் புறம்பு போய்-ஒரு பற்று தேட வேண்டாதபடியான பற்று–அநந்ய பிரயோஜன பக்திமான்களுக்கும் பலத்தை கொடுப்பவனாய் உபாயமாய் இருக்கும்–தன்னையே பற்றினார்க்கும் நேரே உபாயமாய் இருக்கும் –-தன் திருவடிகளைப் பற்றினார்கட்கு பின்னையும் புறம்பு போய்-ஒரு பற்று தேட வேண்டாதபடியான பற்று-–-தமர்கள் -பக்திமான்களையும் பிரபத்திமான்களையும் குறிக்கும்-

——-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அனந்தாழ்வான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சொட்டை நம்பிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஈஸ்வர முனிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நாதமுனிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி தனியன்-2-திரு வழுதி நாடு என்றும்-ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் –

June 16, 2026

திரு வழுதி நாடு என்றும் தென் குருகூர் என்றும் மருவினிய வண் பொருநல் என்றும்
அரு மறைகள் அந்தாதி செய்தான் அடி இணையே எப்பொழுதும் சிந்தியாய் நெஞ்சே தெளிந்து —
ஸ்ரீ ஈஸ்வர முனிகள் அருளிச் செய்த தனியன்-

ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை-அவர் சம்பந்தம் உடைய நாட்டோடும் ஊரோடும் ஆற்றோடும் வாசி அற எல்லாவற்றையும் சேர்த்து ப்ரஸன்னமான மனஸே -அனுசந்தித்துப் போரு -என்கிறது –

வைகுந்தச் செல்வனார் –நான்முகன் –75-சேவடி யோபாதி
வைகுண்ட வானாடும் -பெரிய திரு –68-
இறந்தால் தங்குமூரான –பெரிய –10-2-10-
கண்ணன் விண்ணூரும் –திரு விருத்தம் -47-
அமுத விரசை ஆறும் -ஆர்த்தி –20–உத்தேச்யமாம் போலே இங்கும் இவை உத்தேச்யம் ஆகிற படி –

நாக் கொண்டு மானிடம் பாடேன் நலமாகத்
தீக் கொண்ட செஞ்சடையான் பின் சென்று -என்றும் பூக் கொண்டு
வல்லவாறு ஏத்த மகிழாத வைகுந்தச்
செல்வனார் சேவடி மேல் பாட்டு
-75-பரம பதத்தில் ஐஸ்வர்யத்தை யுடையனாகையாலே ஷூத்ரரான இவர்கள் ஏத்த அவிக்ருத்தனாய் இருக்கிறவனுடைய திருவடிகளில் பாட்டைக் கொண்டு மனுஷ்யரைப் பாடேன் -திரு உள்ளத்தில் ஒரு உகப்பு இன்றிக்கே -மதியாதே கலங்காப் பெரு நகரில் அயர்வறும் அமரர்கள் அதிபதி(பரத்வத்திலே நோக்கு இவருக்கு -விகாரம் இல்லாத தேசமாயும் நித்ய முக்தரும்
எளியவன் என்றால் அவஜாநந்தி மாம் மூடர் ) பிரேம பரவசராய் புகழ –(விகாரம் இல்லா திவ்ய தேசம் -அயர்வில்லா நித்யர் முக்தர்களின் அதிபதி )அத்தை உகந்து கேட்டு வாழ்ந்து கொண்டு இருக்கும் ஐஸ்வர்யம் யுடையவருடைய -(செல்வனார் ) சிவந்த திருவடிகளை பாடக் கடவ நாக் கொண்டு
ஷூத்ர மனுஷர்களைப் பாடேன் –

கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும்
புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத் தகம்–68-திரு மலையும் திருப்பாற் கடலும் பரமபதமும் என்கிற தேசங்கள்
உள வாகவுமாம்-அளவாகவுமாம்-இப்படி சில விசாலமாக பிரதேசங்கள் இருக்கவுமாம் -என்றும் அர்த்தம்- அவற்றிலே தனக்கு ருசி யுண்டாகவுமாம் தோற்றும் இருக்கிறிலன் – என்னோடே கலந்த பின்பு ஸுபரி ஐம்பது பெண்களோடே (மாந்தாதாவுடைய பெண்கள் )கலந்து போருகிற இடத்தில் தன் மக்களைத் தனித்தனியே -பிதா உனக்கு குறை இல்லையே என்று கேட்க என்னுடன் பிறந்தாரை ஒருத்தரையும் அறியாதே எப்போதும் என்னோடே இருக்கும் இதுவே வெறுப்பு வேறே ஒரு குறையில்லை என்று சொன்னால் போலே இவரும் தம்முடைய எல்லா ஸ்தானங்களையும் மறந்து
என்னை அல்லது அறிகிறிலர் என்கிறார்

அங்கு வானவர்க்கு ஆகுலம் தீர அணி இலங்கை யழித்தவன் தன்னைப்
பொங்கு மா வலவன் கலிகன்றி புகன்ற பொங்கத்தம் கொண்டு இவ்வுலகினில்
எங்கும் பாடி நின்று ஆடுமின் தொண்டீர் இம்மையே இடரில்லை இறந்தால்
தங்குமூர்
அண்டமே கண்டு கொண்மின் சாற்றினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-10-இம்மையிலே இடர் இன்று வாழப் பெறுவீர்-இறந்த பின்பு மீட்சி இன்றி வைகுண்ட மா நகர் மற்றது கையதுவே

திரிகின்றது வடமாருதம் திங்கள் வெந்தீ முகத்து
சொரிகின்றது அதுவுமது ,கண்ணன் விண்ணூர் தொழவே
சரிகின்றது சங்கம் தண்ணம் துழாய்க்கு  வண்ணம் பயலை
விரிகின்றது முழு மெய்யும் என்னாம் கொல் என் மெல்லியற்கே
 –47–என்றும் ஒக்க ஓர்  இருப்பேயாய் காட்சி கொடுக்கிற(கண்ணன் காதா சித்கதம் -விண்ணூர் என்றும் ஒக்க ஓர்  இருப்பேயாய் காட்சி கொடுக்கிற) கண்ணன் விண்ணூர் –ராகவஸ்ய நிவேசனே -ஸூந்தர காண்டம் – 33-7 – ஸ்ரீ ராமனுடைய அரண்மனையில் -என்னுமா போலே –(மானுஷன் லோகான் -ராகவஸ்ய வீட்டில் போல் இங்கும் கண்ணன் விண்ணூர் -சர்வ ஸூலபன் எம்பெருமான் பரம பதத்தில் விருப்பம்-உண்டானதால் பார தந்தர்யம் இழக்க வேண்டி வருமே

இத்தால் ஆழ்வார் திருவடிகளைச் சிந்தித்த படி சொல்கிறது –
கவள யானைக் கொம்பு ஓசித்த கண்ணன் என்றும் -என்று தொடங்கி — பார்த்தன் பள்ளி பாடுவாளே –பெரிய –4-8-1-என்னுமா போலே-

கவள யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் காமரு சீர்க்
குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும்
தவள மாட நீடு நாங்கைத் தாமரையாள்  கேள்வன் என்றும்
பவள வாயாள் என் மடந்தை   பார்த்தன்பள்ளி பாடுவாளே
-4-8-1-பிராட்டி தன்மையில் -திருத் தாய் பாசுரத்தாலே -அருளிச் செய்தது –-ஆழ்வார் யுடைய அளவற்ற அபி நிவேசம் இத் திரு மொழியாக பரிணமித்தது-எம்பெருமான் யுடைய குண சேஷ்டிதங்களையே வாய் வெருவிக் கொண்டு இந்த திருப்பதியின் திரு நாமத்தையே பாடா நிற்கிறாள் -என்கிறாள்

திரு வழுதி நாடு என்றும்
வாய்த்த வழுதி வள நாடன்
-5-6-11- என்று நிரூபகமாக இறே அது தான் இருப்பது –
அவர் ஸம்பந்தத்தால் அவரோ பாதி அதுவும் அனுசந்தேயமாய் இருக்கும் ஆகையால் திருவடிகள் நாட்டோடே நடக்கிறது –

கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி வளநாடன் மன்னு குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ்மாலை ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெருஞ் செல்வத்தராய்த் திருமால் அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே.–5-6-11-வாய்க்கை யாவது கிட்டுகை -அதாவது பாவனா ப்ரகர்ஷத்தாலே சாஷாத் கரிக்கை-அநுகாரத்தாலே கிட்டின படியை நினைக்கிறது.-பாவநா ப்ரகரஷத்தாலே தத் பாவத்தை கிட்டி இருப்பாராய் வழுதி வள நாட்டுக்கு நிர்வாஹகராய் ஸூஸ்த்திரையான திரு நகருக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அந்தரங்க விருத்தியாக அனுஷ்ட்டித்து-

தென் குருகூர் என்றும்
குருகூர் நகரான் -திரு விரு -100–என்று அவர் இருக்கும் ஊர் ஆகையாலே அதுவும் அப்படியேயாய் இருக்கை –

நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர்
வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல்லார் தொடையில் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம்
பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே
 – – 100-குருகூர்க்கு ‘நல்லார்நவில்’ என்ற விக்ஷேணமிடட்தனால், அப்படிப்பட்ட திவ்ய தேசத்தில் பிறந்ததனால் தான் தமக்கு இப்படிப்பட்ட பக்திப் பெரு காதல் உண்டாயிற்று என்பதாகத் தொனிக்கும். இப்படி லோக விலக்ஷணராண ஆழ்வார்
திருவலதரிக்கப் பெற்ற திருநகரியை நல்லவரர் நவிலச் சொல்ல வேணுமோ?-திருவாய் மொழியில் * பயிலுஞ்சுடரொளி! நெடுமற்கடிமை முதலிய திருப்பதிககளில் ஆழ்வாருடைய பாகவத பக்தி நிஷ்டை
மிக விளங்குதலால் ‘திருமால் திருப்பேர் வல்லாறடிக் கண்ணி சூடிய’ என்று தமக்கு இட்டுக்கொண்ட விக்ஷேணம் மிகப் பொருத்தம்.

மருவினிய வண் பொருநல் என்றும்-மருவ இனிதான வண் பொருநல் -என்றபடி –
பொருநல் சங்கணித் துறைவன் –10-3-11- இறே-இதுவும் இவர் இறங்கும் துறை
அவர் திருவடிகளும் இறங்கும் துறை நல் ஞானத் துறை -திரு விரு –93-
வண் சடகோபனைப் போலே இதுவும் வண்மை யுடைத்தாய் இருக்கும் –

செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு அத் திருவடி திருவடி மேல் பொருநல்
சங்கணி துறைவன்
வண்தென் குருகூர் வண் சடகோபன் சொல்லாயிரத்துள்
மங்கையர் ஆய்ச்சியர் ஆராய்ந்த மாலை அவனோடும் பிரிவதற்கு இரங்கி தையல்
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன இவையும் பத்து அவற்றின் சார்வே–10-3-11-இவர் இருந்த இடத்தே சத்துக்கள் சேருமா போலே –சங்குகளாலே அணியப் பட்ட -திருப் பொருநலை யுடையராய் –சம்ருதமான திரு நகரியை யுடையராய் –பரம உதாரரான ஆழ்வார் அருளிச் செய்த ஆயிரத்திலும்

காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்
மாலை வெய்யோன் பட வையகம் பரவுவர் அன்ன கண்டும்
காலை நன் ஞானத் துறை படிந்தாடிக் கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் அவன் மைப்படியே –
 – -93 –ஞானம் ஆகில்-பகவத் விஷயத்தை பற்றி அன்றி இராது இறே –ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -(முதல் திருவந்தாதி )என்னக் கடவது இறே –தத் ஜ்ஞானம் அஞ்ஞானம் அதோன்யதுக்தம் (பராசர மகரிஷி )- என்றும் –வித்யான் யாசில் பகை புணம் – புறம்பே ஒன்றை அறிந்ததோடு துன்னம் பெய்ய அறிந்ததோடு வாசி இல்லை இறே –துறை படிந்தாடி –ஜ்ஞானம் ஆகிற இத் தீர்த்தத்திலே புக்கு அவஹாகித்து நல்ல ஞானமாகிய துறையிலே இறங்கி மூழ்கி (ஆச்சார்யர் கீழ் படிந்து -பகவத் பக்தியாகிய வெள்ளத்தில் ஆழ்ந்து ஈடுபட்டு)

ஸவித்ரீ முக்தாநாம்
இப்படி விலக்ஷணமான
நாடும்
நகரும்
துறையும்
என்று அனுசந்தித்து

அரு மறைகள் அந்தாதி செய்தான் அடி இணையே எப்பொழுதும் சிந்தியாய் நெஞ்சே தெளிந்து
அதாவது
எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் செய்தற்கு உலகில் வரும் சடகோபனைச்
சிந்தையுள்ளே சிந்தித்துப் போரு
-என்கை-

எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபனைச் சிந்தை யுள்ளே

பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம்
உய்தற்கு உதவும் இராமானுசன் எம் உறு துணையே – 18- –அநந்தாவை வேதா – என்கிறபடி ஒரு சங்கையை இட்டு –சொல்லப் போகாத படி ஒரு அபரிமிதங்களாய் -சர்வோப ஜீவியங்கள் ஆகாதே
அதி க்ருத்தாதி காரங்களாய்-அந்யோப மரத்தக வாக்யங்களாலே -ஸ்வார்த்தத்தை தெளியும் போது -எத்தனையேனும் அதிசய ஞானர் ஆனவர்களுக்கும் அருமைபடுத்தக் கடவதான சம்ஸ்க்ருத வேதங்களை –ஆயிரம் இன் தமிழால் –வரணாதி நியதி இன்றிக்கே -ருசி பிறந்தவர்கள் எல்லாரும் அதிகரிக்கும் படியாய் –ஆயிரம் என்ற ஒரு சங்கையுடன் கூடி இருப்பதாய் -உயர்வற உயர்நலம் -என்று தொடங்கி -உயர்ந்தே -என்னும் அளவும் – ஆதி மத்திய அவசானங்களிலே – ஸ்ரீ பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளையும் – சேதன அசேதன ரூப ச்வபாவங்களையும் – சேதனருடைய சம்சார பந்த ஹேதுக்களையும் – தந் நிவர்தன உபாயமான தத் விஷய ப்ரீதி ரூபாபன்ன ஞானத்தையும் –
ஜகத் காரண வஸ்து நாராயணனே என்று -தேவதாவஸ்து விசேஷ நிர்த்தாரணத்தையும் –
அவனுடைய சமஸ்த கல்யாண குணாத் மகத்வத்தையும்-அநந்த கருட விஷ்வக்சேநாதி திவ்ய சூரி பரிசர்யமான நளினனாய்க் கொண்டு நின்ற படியையும் – தாம் அனுபவித்த படியே எல்லாரையும் அனுபவிப்பைக்காக -தம்முடைய நிர்ஹேதுக பரம கிருபையாலே – லவ்கிகரைக் குறித்து உபதேசித்த படியையும் – தம்முடைய அபிநிவேசம் எல்லாம் தீரும்படி அவனை ப்ராபித்த படியையும் -விசதமாக பிரதிபாதிப்பதாய் –ஸ்வா ர்த்தத்தை எல்லாம் ஸூஸ்பஷ்டமாகவும் ஸூக்ரஹமாகவும் தெறிவிக்குமதாய் – அத ஏவ அத்யந்த சுலபமாய் -பக்தாம்ர்தம் -தொண்டர்க்கு அமுதுண்ண சொல் மாலைகள் –என்னும்படி அநு போக்தாக்களுக்கு அத்யந்தம் போக்யமாய் -நடை விளங்கு தமிழான -த்ரமிட பாஷையாலே – ஸ்ரீ திருவாய் மொழி என்கிற பிரபந்த ரூபேண –

குரு பாதாம் புஜத் த்யாயேத் -என்கிறபடியே
திருவடிகளையே சிந்தித்துப் போரு –
மற்று ஒன்றிலே மருளாதே தெளிந்து அவ்வடியை அனுசந்திக்கப் பார் –

அன்றிக்கே
வேதத்திலே -வைகுண்ட புவன லோகம் -என்று நாட்டையும்
யோ வைதாம் ப்ரஹ்மணோ வேத அம்ருதே நாவ்ருதாம் புரீம் -என்று
அம்ருத வாஹினியான விரஜை ஆற்றிலே ஆவ்ருதமான வைகுண்ட நகரத்தையும்

விஷ்ணோ பத பரமே மத்வ உத்ஸ-என்றும்
தத் விஷ்ணோ பரமம் பதம் -என்றும்
அவன் திருவடிகளையும் உபநிஷத்துக்கள் ஓதினால் போலே

அந்த அருமறையின் தாத்பர்யமான அர்ச்சாவதாரமான ஆதிப்பிரானதான திரு வழுதித் திரு நாட்டையும்

திருக்குருகூர் அதனுள் நின்ற ஆதிப்பிரான் –4-10-1-என்னும்படி அவன் வர்த்திக்கிற ஊரையும்

ஊருக்கு வடக்கான வண் பொருநல் ஆற்றையும்

அங்கே நிற்கும் ஆதிப்பிரானுடைய நீள் கழலையும் –1-9-11-இறே -திருவாய் மொழியில் சொல்லிற்று

இது மற்றை உகந்து அருளின நிலங்களில்
ஆற்றுத் துறைக்கும்
ஊருக்கும்
நாட்டுக்கும் உப லக்ஷணம் —

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர்படைத்தான்
குன்றம் போல் மணிமாடம் நீடு திருக் குருகூரதனுள்
நின்ற ஆதிப் பிரான்
நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–4-10-1–ஸ்ருஷ்டரான சேதனர்க்கு ஆச்ரயண ருசி பிறந்த அன்று நாம் தூரஸ்தராக ஒண்ணாது என்று திரு நகரியிலே நின்று அருளின ஸுலப்யத்தை சொல்லுகிறது – குன்றம் போல் -மலைகளை கொடு வந்து சேர வைத்தால் போலே-மணி மாடம் -மணி மயமான மாடம் நீடு -மாடங்களினுடைய ஒக்கம் இருக்கிற படி –ஆசிரயணீயன் தன்னோபாதி ஆகர்ஷகமான தேசம் என்கை–இப்படிப் படைத்தவன் தான் தூரத்தில் உள்ளவனாய் நிற்கை யன்றிக்கே, மலைகளைக் கொடு வந்து சேர வைத்தாற்போலே இருப்பனவாய், மணி மயமான மாடங்களினுடைய உயர்ச்சியை யுடைத்தான திருநகரியிலே நின்ற. பெருமாள் மீண்டும் என்னைக் கூப்பிடுவரோ என்னும் ஆசையால் பல நாள் குகனோடு கூட அங்கே நின்றிருந்தேன்,’ என்னுமாறு போலே, நாம் கொடுத்த கரணங்களைக் கொண்டு ‘நான் வணங்கமாட்டேன்,’ என்னாமல், வணங்குவர்களோ?
அன்றிக்கே,
நாம் வளைந்து கூட்டிக் கொள்ளப் புக்கால், விலக்கா தொழிவர்களோ!’ என்று கொண்டு காலத்தை எதிர் நோக்கினவனாய் நிற்கின்றபடி.
அங்குச் சேஷியைப் பெறுகைக்குச் சேஷ பூதனானவன் நின்ற நிலை; இங்கு அடியவர்களைப் பெறுகைக்கு இறைவன் நின்ற நிலை. சேஷ பூதனை லபிக்க சேஷி நிற்கும் நிலை –

உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவற்கு கண்ண பிராற்கு
இச்சையுள் செல்ல யுணர்த்தி வண் குருகூர்ச் சடகோபன்
இச்சொன்ன வாயிரத்துள் இவையுமோர் பத்து எம்பிராற்கு
நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே –1-9-11-ஒரு கால் விண்ணப்பம் செய்ய -என்றும் ஓக்க திருவடிகள் தலையிலே சேரும்-நீள் கழல் -ஆசா லேஸம் உடையார் இருந்த இடம் எல்லையாக வளரும் திருவடிகள்-பொரு வென்று ஒப்பாய் -சேரும் என்றபடி-உச்சியுள்ளே நிற்கும் என்று இவர் பெற்றதுவே பேறாகக் கடவது

குட்ட நாடு -என்று இறே நாட்டையும் அருளிச் செய்து போருவது
தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திரு வண் வண்டூர்-என்றும்
தண் புனல் சூழ் திருவரங்கத்து உள்ளாய் -என்றும் –
ஊரையும் ஆற்றையும் அருளிச் செய்தது

கருமாணிக்க மலை மேல் மணித் தடந்தாமரைக் காடுகள் போல்
திரு மார்பு வாய் கண் கை உந்தி காலுடை யாடைகள் செய்ய பிரான்
திருமால் எம்மான் செழு நீர் வயல் குட்ட நாட்டுத் திருப் புலியூர்
அருமாயன் பேரன்றிப் பேச்சிலள் அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ–8-9-1—அழகிய நிறைந்த தண்ணீரை உடைத்தான-வயல் சூழ்ந்த –-குட்ட நாடு -என்று அந்நாட்டுக்கு பெயர் –-பெறுதற்கு அரிய-ஆச்சர்யத்தை உடையவன் –-நீர் வாய்ப்பை யுடைய வயலாலே அலங்க்ருதமான குட்ட நாட்டுத் திருப் புலியூரில் வர்த்திக்கிற பெறுதற்கு அரிய ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை யுடையவனுடைய -திரு அயோத்யையில் உள்ளார்க்கு சக்கரவர்த்தி திரு மகனை போலே யாயிற்று இவனும் 

வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்!
தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திருவண்வண்டூர்
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே.–6-1-10—ஊரும் ஆறும் இன்ன இடத்திலே என்னுமிடம் நெஞ்சிலே பட்டுக் கிடக்கிறது காணும் இவளுக்கு.-வட பால் – வட திசை. கடலுக்குத் தென் பால் இருக்கிற பிராட்டியைப் போலே யாயிற்று இவள் இருக்கிற இருப்பு.-என்னைப் போல் கலங்கி இருக்கும் இங்குத்தை பதார்த்தங்கள் ஒழிய தெளிந்த பதார்த்தங்களை காண் கிறி கோள் இறே -வைடூர்ய விமலோதகா-என்கிறபடியே தெளிந்து இறே அங்குத்தை பதார்த்தங்கள் இருப்பது -உபதத்தோ தகா நத்ய-என்று இறே இங்குத்தவை இருப்பது-வட பார்ஸ்வத்திலே -கடலுக்கு தென்பால் இருக்கிற பிராட்டியை போல் யாயிற்று இவள் இருக்கிற இருப்பு

மையல் செய்து என்னை மனங் கவர்ந்தானே ! என்னம்’மா மாயனே!’ என்னும்;
‘செய்யவாய் மணியே!’ என்னும்’தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;
‘வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல்!’ என்னும்;
பைகொள்பாம் பணையாய்!இவள் திறத் தருளாய் பாவியேன் செயற் பாலதுவே.–7-2-6—உன்னைக் கிட்டி என் பரிதாபம் தீருகைக்கு ஈடாகக் குளிர்ந்த நீர் சூழ்ந்த கோயிலிலே ஸந்நிஹிதனானவனே என்னும்-குளிர்த்திக்கு இவ் வடிவு அழகு தேடித் போக வேண்டாத படி தேசமே சிரமஹரமாய் இருக்கிற படி -சந்நிஹிதனாய் வைத்து எனக்கு உதவாது ஒழிவதே

இப்படி யாயிற்று
திவ்ய தேச
திவ்ய நகர
திவ்ய நதிகளின் வைபவத்தையும் -திருவாய் மொழி முகேன தர்சிப்பித்தது –

ஆக மூர்த்தியில் பண்ணின தமிழன படி –ஆச்சார்ய ஹ்ருதயம் –

அதவா வேத வேத்‌ய ந்யாயத்தாலே பரத்வபரமுது வேதம்‌ வ்யூஹ வ்யாப்த் யவதரணங்களில்‌ ஓதின நீதி கேட்ட மநு படுகதைகளாய்‌ ஆக மூர்த்தியில்‌ பண்ணிய தமிழானவாறே வேதத்தை த்‌ராவிடமாகச்‌ செய்தாரென்னும்‌.–70-

ஆக மூர்த்தியை பண்ணின தமிழனாவாறே-அதாவது-அப்படி அவதார முகேன நின்று ரஷித்து அருளுமவன் ,அவதாரத்தில் பிற்பட்டாரும் இழவாத படி –-ஆக மூர்த்தி யாய வண்ணம் என் கொல் –திருச்சந்த -17-(யாக மூர்த்தி -ஆக மூர்த்தியாக -யஜ தேவ பூஜாயாம் -அர்ச்சிக்கத்தக்க மூர்த்தி
அன்றிக்கே இப்படியாக வேண்டும் என்று சங்கல்பித்துக் கொண்டு தோன்றிய திவ்ய மங்கள விக்ரஹம் -என்றுமாம் ) என்று விசேஷஜ்ஞர் ஈடுபடும் படி ஆஸ்ரித ஹிருதய அனுகுணமாக – (நெஞ்சில் நினைப்பவன் எவன் -என்பதை நாமும் அறியும் படி மா முனிகள் )தமர் உகந்தது எவ் உருவம் –முதல் திருவந்தாதி -44–இத்யாதிப் படியே த்ரவ்ய நாம ரூப ஆசன சயனாதிகளிலும்-தேச கால அதிகாராதிகளிலும் ஸ்நான போஜனாதிகளிலும் ஒரு நியமமற பண்ணிக் கொண்டு அத்யந்த ஸூலபனாய் இருக்கும் அர்ச்சாவாதார அவஸ்தையில் -தத் வைபவ பிரதிபாதன அர்த்தமாக
சடகோபன் பண்ணிய தமிழ்-2-7–13–என்னும் படி பிரமேயம் தன்னைப் போலே தானும்-பிரமணமான தானும் சர்வ ஸூலபமாய் சர்வ அதிகாரமாய் ஆகைக்கு உறுப்பாக த்ராவிட ரூபமாக கொண்டு செய்வதாக சொல்லுவதும் ஒரு பிரகாரம் உண்டு என்கை.–எய்தற்கு அறிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் செய்தற்கு உலகில் வரும் சடகோபனை –இராமானுச நூற்றந்தாதி -18-என்னக் கடவதிறே..

இவை எல்லாத்திலும் -( வேதம் -பாஞ்சராத்ரம் மனு சாஸ்திரம் ஸ்ரீ ராமாயணம் ஸ்ரீ மஹா பாரதம் திருவாயமொழி ) எல்லாம் சொல்லுமே ஆகிலும் ஒன்றுக்கு ஒன்றிலே நோக்காய் இருக்கையாலே இறே
இவர் இப்படி அருளிச் செய்தது ..-இது தான்-முது வேதம் தான் பரத்வபரம்-( பண்ணிய தமிழ் ஆக மூர்த்தி பரம் ) -என்கையாலே ஸ்பஷ்டம் இறே .. வக்த்ரு விசேஷத்தாலே -தெளிந்ததாய் அர்த்த பிரகாசகத்வம் நிறைந்து இருக்குமே இங்கு –

ஆக இதுக்குக் கீழ்‌ வேதத்தினுடையவும்‌, தது,பப்‌ரும்ஹணத்தினுடையவும் ஸ்தாநத்திலே யாக்கி அவற்றினுடைய ஸப்‌த லக்ஷணங்களும்‌ அர்த்த லக்ஷணங்களும்‌ அருளிச் செய்தார்‌. இனி மேல்‌ ப்ரமேய பூதனான ஸர்வ ஸ்மாத் பரனுடைய அவதார டரம்‌பரையில்‌ எல்லையான அர்ச்சாவதாரம்
”ஆகமூர்த்தியாய வண்ணம்‌”” (திருச்ச, 17) என்கிறபடியே ஸர்வேஸ்வரன்‌ ஆஸ்ரித ஹ்ருதயாநுகுணமாக “’தமருகந்ததெவ்வுருவம்‌”'(மூ.திரூவ. 45) என்கிறபடியே த்ரவ்ய-நாம-ரூப-ஆஸந-ஸயந-தேஸ – கால-அதிகாயு-போஜநாதீ ஸகல வ்யாபாரங்‌களையும்‌ ஆஸ்ரித ஹ்ருதயாநுகுணமாக்கிக் கொண்டு ஸர்வ ஸுலபமான அர்ச்சாவதாரமான விடத்தில்‌ ப்ரமாணமும்‌ அப்படியே ப்ரமேயம் போலே ஸர்வ ஸுலபமாய்‌ ஸர்வாகதிகாரமாம்படி த்‌ரவிட ஸம்ஹிதையாக ப்ராப்த மாகையாலே **பண்ணிய தமிழ் மாலை”” (திருவா. 2 – 7 – 13) என்கிறபடியே வேதத்தைத்‌ திருவாய்மொழியாகச்‌ செய்தருளினார்‌ என்னவுமாம்‌ என்கிறார்‌. அந்த வேதம்‌ முதலானவை எல்லாத்திலும்‌ எல்லாம்‌ சொல்லிற்றே யாகிலும்‌ ஒன்றுக் கொன்றிலே நோக்காகக் கடவது –

திரு நாமப் பாட்டுக்கள் தோறும் தமக்கு நிரூபகமாகவும்
ஊரையும்-நாட்டையும் –ஆற்றையும் -பாடுகையாலே -அது தான்
மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருளாக அருளிச் செய்கையாலே அத்தைப் பற்ற —
திரு வழுதி நாடு என்றும் தென் குருகூர் என்றும் மருவினிய வண் பொருநல் என்றும்
அரு மறைகள் அந்தாதி செய்தான்–என்று இங்கனே சொல்லுகிறது ஆகவுமாம்

திரு வழுதி நாடு என்றும் -சிந்தியா என்னுதல் –
திரு வழுதி நாடு என்றும்-அரு மறைகள் அந்தாதி செய்தான் -என்னுதல்
ததீய வைபவம் இறே வேத தாத்பர்யம் அறுவது –

இப்படி வேதத்தைத் த்ராவிடமாகச் செய்த திராவிட உபநிஷத் ஆச்சார்யருடைய
அங்கரி யுகங்களை –
தெளிவுற்ற சிந்தையர் -7-5-11-
தெளிந்த என் சிந்தை –9-2-4-என்னுமா போலே
உபாய உபேயம் என்று தெளிந்து
மனஸே ஸந்ததம் ஸ்மரித்துப் போரு -என்று ஆழ்வார் திருவடிகளே அனுசந்தேயமாகச் சொல்லிற்று —

தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக்கதி செய்யும்
தெளிவுற்ற கண்ணனைத் தென் குரு கூர்ச்சட கோபன் சொல்
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்
தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே.–7-5-11-பாமரு மூவுல கத்துள்ளே-தெளிவுற்ற சிந்தையர்-பதார்த்தங்கள் சேர்ந்து இருந்துள்ள சகல லோகங்களுக்கு உள்ளே கலக்கம் ஸ்வபாவமாய் இருந்துள்ள சம்சாரத்துக்கு உள்ளே சுத்தமான அந்தகரணத்தை உடையராவார் –அகர்ம வஸ்யனான தான் வரிலும் சோக மோகங்களை விளைக்கும் சம்சாரம் -சம்சாரி செல்லிலும் தெளிவைப் பிறப்பிக்கும் பரமபதம் –இப்படி வ்யவஸ்திதமாய் இருக்க இதுக்கு உள்ளே முக்தருடைய பாவ சுத்தியை உடையராவார் –பாபம் நிறைந்திருக்கிற தேசத்திலே’ என்றபடி. அவ் வருகே ஒரு தேச விசேடத்தே போனால் பெறக் கடவே தெளிவை அதற்கு எதிர்த்தட்டான இங்கே இருந்தே யுடையராவர்;
சர்வேஸ்வரன் தானே இங்கு வந்து அவதரிக்கிலும் சோக மோகத்தைச் செய்ய வல்ல சம்சாரத்தே இருந்தே தெளிவுற்ற சிந்தையர்: குற்றங்களுக்கு எல்லாம் எதிர்த் தட்டான பரமாத்துமாவையும் தன் வழி ஆக்க வல்ல இவ் விபூதியிலே இருந்து வைத்தே சுத்த பாவராய் இருப்பர். பாபம் என்பது, ‘பா’ எனக் கடைக் குறைந்து நிற்கிறது.

புளிங்குடிக் கிடந்து வர குணமங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி
நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்பப்
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வாராயே–9-2-4-அயோக்கியன் என்று அகலாத படி கண்கள் சிவந்திலே என் ஹிருதயம் தெளிந்தவாறே -அத்தைக் கை விடாதே நிரந்தர வாஸம் பண்ணி –அன்றிக்கே-தெளிந்த சிந்தை -என்னும் இவ்விடத்தில்-பட்டர் -தொட்டியம் -திருநாராயண புரத்திலே வெறுப்பிலே -பிள்ளை திரு நறையூர் அரையரும் திரு நாட்டுக்கு-
எழுந்து அருளியதாலும்-எம்பெருமான் திரு மேனிக்கும் அழிவு வந்ததாலும்- தேவர் ஸ்வாதந்தர்யம் எல்லாம் காட்டினாலும் பின்னையும் பண்ணின நம்பிக்கையில்- குலைத்தல் இன்றிக்கே இருக்கும்படி-எலும்பு உரமுடைய எம்பெருமானார் போல்வார் பக்கல் செய்யுமத்தனை–எலி எலும்பனான அடியேன் பக்கலிலும் செய்வதோ -என்றது- மகா விஸ்வாச பூர்வகம் -மிக பெரிய நம்பிக்கை முன்னாக -என்கிறபடியே-ஏதேனும் ஓன்று வந்தாலும்-இங்குத்தைக்கு வருவதாய் வந்தது ஓன்று அன்று-
இதற்கு அடி நம்முடைய பாவம் -என்று-பண்ணின நம்பிக்கை குலையாதார் விஷயத்தில் செய்யும் அத்தனை – இது தானே காரணமாக நெஞ்சு நெகிழும்படி இள நெஞ்சர் பக்கலிலும் அதைச் செய்யக் கடவதோ -என்றாராம் -என்றபடி–பேற்றுக்கு அடி கிருபை -இழவுக்கு அடி கர்மம் -என்கிற மகா விச்வாஸம் இருக்கும் படி -தெளிந்த என் சிந்தை –என்றபடி-

——-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அனந்தாழ்வான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சொட்டை நம்பிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஈஸ்வர முனிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நாதமுனிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-