ஸ்ரீ பெருமாள் தூதரும்- ஸ்ரீ பாண்டவ தூதனும்–

May 1, 2026

இன்னார் தூதன் என நின்றான் -தரித்து நின்றான்

சொல்லின் செல்வன் -ராமன் சங்கல்பத்தாலேயே சுக்ரீவன் திருவடியையே தூதுவனாக அங்கதன் தலைமையில் தெற்கு நோக்கி அனுப்பினான் -வாய் போல் எங்கும் செல்லும் திறமை யுடையவன்

உத்யோக பர்வம் -70- கிருஷ்ணனே தன்னைத் தூதுவனாக –

இருவருக்கும் செய்தி சொல்லி அனுப்ப -பெருமாள் -சுக்ரீவனின் மந்திரி -அவன் சொல்லியே செல்ல வேண்டும் -அங்குளி கொடுத்து -அடையாளங்களும் -ரஹஸ்யங்கள் -இதுவா காடு -கோட்டைக்கு வெளியில் வந்ததும் -கங்கை தாண்டி சுமந்தனுக்கு செய்து சொல்லும் -கிளி அரண்மனையில் விட்டு வந்தேன் ஊர்மிளையை பார்த்துக்கக் சொல்லி
பாண்டவர்-ஐந்து ஊராவது இது உண்மைக் கார்யம் அல்ல -பாஞ்சாலி கூந்தல் முடிக்க -நறையூர் நம்பி பாசுரம் -உத்யோக பர்வம் -81-துச்சாதனன் கர்ணன் அவமானம் -சர்வாத்மா அந்தகன் வெள்ளிக்கண்ணும் உள் கண்ணும் இல்லாதவன் -சண்டைக்கு பேசிய வர சொல்லி அனுப்பினாள்

தேர்வு – செய்தி -பயணம்
கார்த்திகை மாதம் ஆரம்பம்

சம்பாதி சொல்ல -கடலைத்தாண்ட -பங்குனி மாதம் மஹேந்திர கிரியில் இருந்து புறப்படுகிறார் -காலினால் அளந்தான் -வாலினால் அளந்தான் -ஆகவே திருவடி திருநாம பெற்றார்
மூன்று தடைகள் -மைநாகம் – ஆதர சப்தமோ தசை-ஆறு சுவைக்கு மேல் -சுரசா நாகமாதா -வாயுக்குள் சென்று -ஸிம்ஹிதா நிழல் -வயிற்றுக்குள் -குடலை கிழித்து
அன்பால் வென்று -அறிவால் வென்று ஆற்றலால் வென்று -ராமநாமம் சொல்லி தடை நீக்கி-பங்குனி பவ்ர்ணமி அடைந்தார்

உத்யோக -82 பர்வம் -காலை புறப்பட்டு -அதே கார்த்திகை மாதம் கிளம்பி ரேவதி நக்ஷத்ரம் -பனி வர ஆரம்பிக்க – தாரகன் தேரோட்டி -நான்கு குதிரைகள் பூட்டி -சுக்ரீவனின் பெயரும் ஒரு குதிரை -சாத்விகி உடன் கூடி -காலால் குதிரைப்படை 1000 பின் தொடர-வேத விற்பன்னர் உபசரிக்க ஒரு நாள் தங்கி-ஹஸ்தினாபுரம் அடுத்த நாள்

சந்திப்பு -திருவடி சீதா பிராட்டி -இவனோ விதுர பக்தன் -நான் தேடி கிடைக்க வில்லன் -நான் விட்டு அடியேன் -நினைக்க அசோகவனத்தில் கண்டார் -ஞான முத்திரை -கட்டைவிரல் –
நமோஸ்து ராமாய-ருத்ரன் இத்யாதி ராமகைங்கர்ய துடிப்பால் -சம்சரே மதுரம் வாக்கியம் -31 -1-சர்க்கம் -தமிழ் இராமாயணம் -பாசுரப்படி இராமாயணம்- -அகஸ்தியர் ஆஸ்ரமம் தங்கி-இராமாயண உபன்யாசத்தில் தூங்கினால் அரக்கர்கள் ஆவோம்-

பீஷ்ம த்ரோண -விட்டு விதுரர்-துரியோதனன் சம்பந்தி -சாம்பன் இவன் மகளை திருமணம் -மம பிராண பாண்டவ-பஞ்ச பிராணனும் பஞ்ச பாண்டவர்கள்-விதுரன் வாழ் வள மனை புகுந்தான் உன் குடிசைக்கு வா -வில்லிபாதரம்-கணை யாழி கொடுத்து சீதையை உளனாக்கி -இங்கு கைங்கர்யம் ஏற்றுக்கொண்டு விதுரனை உளனாக்கி

பேச்சு -ராவணன் இடம் -அசோகவனம் துவம்சம் இங்கு அடிக்க அங்கு வலிக்கும் -கதை உபயோகிக்க வில்லை -மரங்களே ஆயுதம் -எதிராளி ஆயுதம் உபயோகிப்பர் -80000 கிங்கர்களை அழித்து –ப்ரஹ்மாஸ்திரம் கட்டுப்பட்டது போல் -நடித்து -ராம தூதன் -ராம தாஸ்ன் -சீதா அருளாலே-வாலையை ஆஸனம் நேரடிக் குறிப்பு இல்லை -அண்ணாந்து பார்த்து உத் வீஷய வால்மீகி இராமாயணம்-வரம் பொய்க்கும் ராமசரம் பொய்க்காது -தேவி ஒப்படைக்காவிடில் ஆவியை விடவேண்டி வரும்

பொய்யாசனம் -பாண்டவ தூதன்-அப்பூச்சி காட்டுகிறான் ஊர் ஓன்று வேண்டி-துஷ்டர்கள் எவ்வளவு பேசினாலும் கேட்க மாட்டார்கள்

இருவரையும் தூதன் என்றும் பார்க்காமல் அழிக்க பார்த்தால்-நரத்துக்கு வால் வாநரம் -சீதை சோக அக்னியை வைத்தே எரித்தார்-

இருவரும் விஸ்வரூபம் -திவ்யம் ததாமி அர்ஜுனனுக்கு-த்ருதராஷ்டரனுக்கும் காட்டி -இத்தைப்பார்த்த கண்ணாலே வேறே ஒன்றையும் பார்க்க மாட்டான் கண்ணை வாங்கிக்கோ பிரார்த்தனை -தூது பேரில் -இலங்கை முழுவதும் கண்டு -விபீஷணன் பற்றி நன்றாக அறிந்து -தோளில் அமர்ந்து கொண்டு போவேன் -இவர் அறிவார் அவள் ஒத்துக்கொள்ள மாட்டாள் தெரிந்தும் -ராமன் காக்கும் வரை உயிர் காத்து இருப்பவள் -ஒரு மாதம் கெடு வாங்குவதற்காகவே இந்த வார்த்தை –

சூடாமணி -காகாசுரன் -மனசிலா -செங்கல்பொடிக்கதை -திலகம் கோணலாக -கன்னத்தையே கண்ணாடி -இத்தையும் சொல் அடையாளம் -ஒரு கல்லில் பல மாங்காய் இருவரும் -விதுரன் உணவு -கோபத்தில் துரியோதனன் -வில் முறித்து உனக்காக போராட மாட்டான் -அரசியல் -குந்தி கர்ணன் இடம் அர்ஜுனனைத்தவிர மற்ற பாண்டவர்களை கொல்ல மாட்டான் -அஸ்வத்தாமா தளபதியாமல் பண்ணி -மோதிரம் போட-சண்டையில் உதவுவான் சகுனி தப்பாக புரிந்து -லீலைகள் பல செய்து

இருவரும் செய்தியுடன் வந்தார்கள் தஸ்ய சத்ருசம் பவத்-தென் திசை நோக்கி நமஸ்காரம் தொழத்தக்க நிலையில் இருப்பதைக் குறிப்பால் கண்டேன் சீதையை-கற்பினுக்கு அணியை-பரிஷ்வங்கம் -தன்னையே கொடுத்து பெருமாள் திருவடியையே விட ஸ்ரேஷ்டரானார் அங்கு தர்மபுத்ரன் நன்றி கூட சொல்லாமல் சங்கல்பித்தது -பின் வந்த தூதனை கொண்டாடட்டும் என்று செய்த செயல்-தூதரே முக்கிய போர் புரிந்தனர்

ஆச்சார்ய பிரபாவம் சொல்லும் தூது -பிறவிப்பெரும்கடல் -அசோகவனம் உடம்புடன் -இத்யாதி-தூது போனவன் ஏற்றம் உபாய வைபவம் சொல்லிற்று-ஆஸ்ரித பாரதந்தர்யம் -கண்ணன் அல்லால் கண்ணில்லை-பொருப்பு துறப்பு-

கிருஷ்ணாவதாரத்தில் பாண்டவர்கள் தங்குவதற்கு இடம் கேட்பதற்காக துரியோதனனிடம் தூது சென்றார் கிருஷ்ணர். பாண்டவர்களின் மிகப்பெரிய பலமாக கிருஷ்ணர் இருப்பதால், அவரைக் கடத்த துரியோதனன் முயற்சிக்கிறான். கிருஷ்ணரை சூழ்ச்சிசெய்து தன் இடத்துக்கு வரவழைத்து ஓர் இருக்கையில் அமரச் செய்கிறான். அந்த இருக்கையின் கீழ் ஒரு நிலவறையை அமைத்து, கிருஷ்ணர் இருக்கையில் அமர்ந்ததும் பாதாள அறைக்குள் விழுந்து விடுவார், அப்போது அவரைக் கொன்று விடலாம் என்பது துரியோதனின் திட்டம். திட்டம் போலவே அனைத்தும் நடைபெறுகிறது. பாதாள அறைக்குள் விழுந்ததும், கிருஷ்ணர் விஸ்வரூபம் எடுத்து மல்யுத்த வீரர்களை அழித்தார். இந்த மகாபாரத சம்பவம் குறித்து வைசம்பாயனர் என்ற முனிவர் மூலம் கேள்வியுற்ற ஜனமேஜய மஹாராஜன், காஞ்சியில் அச்வமேத யாகம் செய்து கிருஷ்ணரை வரவழைத்து, பாதாள அறையில் விஸ்வரூபம் எடுத்தக் காட்சியை நினைவுகூர்ந்து, தனக்கு இங்கேயே விஸ்வரூபக் காட்சியைக் காட்ட வேண்டினான். பக்தனுக்காக ஸ்ரீகிருஷ்ணர், விஸ்வரூப காட்சியைக் காட்டிய திருத்தலம்தான் திருப்பாடகம். (திருதராஷ்டிரனுக்கு கண்பார்வை அளித்து தனது பெரிய விஸ்வரூப தரிசனத்தை கிருஷ்ண பகவான் இத்தலத்தில் காட்டியருளினார்.)திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 48-வது திவ்ய தேசம் ஆகும்.கிருஷ்ணர் இத்தலத்தில் 25 அடி உயரத்தில் , மூலஸ்தானத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சியளிப்பது வேறு எங்கும் காண முடியாத சிறப்பு அம்சமாகும்.இத்தலத்தை பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர்.மகாபாரதத்தில் விஸ்வரூபக் காட்சியை பகவான் மூன்று இடங்களில்தான் காட்டியிருக்கிறார். சகாதேவனிடம் நிமித்தம் கேட்கப் போனபோது ஒருமுறை; துரியோதன் அரசவைக்கு தூதுவனாகப் போனபோது ஒரு முறை; குருக்ஷேத்திர யுத்த களத்தில் அர்ஜுனனுக்கு கீதை உபதேசித்தபோது ஒரு முறை.-பத்ர விமானத்தின்கீழ் மூலவர் பாண்டவ தூதர், வீற்றிருந்த திருக்கோலத்தில், கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். வெள்ளிக்கிழமைதோறும் திருமஞ்சனம் காணும் ருக்மிணி தாயார் குசேலனாய் தன்னிடம் வந்து அன்பு செலுத்துவோரை பகவான் கிருஷ்ணருக்கு சிபாரிசு செய்து குபேரனாக வாழ வரம் அருள்கிறார்.

யக்ஞ மூர்த்தி என்ற அத்வைத கொள்கையுடைய சான்றோர் ஒருவர் ராமானுஜருடன் வாதப்போரில் ஈடுபட்டார். பதினெட்டு நாட்களும் வாதம் தொடர்ந்தது. இறுதியில் தனது தோல்வியை ஒப்புக் கொண்ட யக்ஞ மூர்த்தி ராமானுஜரின் கீர்த்திக்கும் வாதத் திறமைக்கும் தன்னை அடிமையாக்கிக் கொண்டார். தனக்கு எதிராக வாதம் புரிந்தவர் ஆனாலும் அவருடைய பாண்டியத்துக்கும் மதிப்பளிக்கும் வகையில் அவரை ‘அருளாளப் பெருமாள் எம்பெருமானார்’ என்று அழைத்து சிறப்பித்தார், ராமானுஜர். ராமானுஜரின் சீடராகி அவரது கொள்கைகளையும் தத்துவங்களையும் பரப்பும் நோக்கத்தில் இதே தலத்தில் பல்லாண்டு வாழ்ந்திருந்த அவரை கவுரவிக்கும் வகையில் இந்த பாண்டவ தூதர் கோயிலிலேயே அவருக்கு தனி சந்நிதி உள்ளது.அருளாளப் பெருமான் எம்பெருமானாருக்காக கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தில் சாற்றுமுறை உற்சவம் நடைபெறுகிறது.

மன்னா போற்றி! மணாளா போற்றி!
அஞ்சன வண்ணத் தரியே போற்றி!
கஞ்சனை அடர்ந்த கண்ணா போற்றி!
கருங்கடற் றுயின்ற காரே போற்றி!
ஆயிரந் தோளுடை அடுபோர் வாணனை
நேமியற் றுணித்த நெடியாய் போற்றி!
பேய்முலை யுண்ட பிரானே போற்றி!
பேருல களந்த மாலே போற்றி!
மருதிடைத் தவழ்ந்த மாயா போற்றி!
மாக்கடல் கடைந்த மகேசா போற்றி!
பெருவரை எடுத்த பிரானே போற்றி!
சங்கொடு சக்கரந் தரித்தாய் போற்றி!
தண்டொடு சார்ங்கமும் தனிநாந் தகமும்
பிண்டி பாலமும் பெருவச் சிரமும்
எண்டிசை நிறைந்த எம்மான் போற்றி!
அண்டமும் விசும்பும் அகலிடம் எல்லாம்
உண்டுமிழ்ந் தவனே ஒருவா போற்றி!
திருமறு மார்பத் திருமால் போற்றி!
தீவினை கெடுக்கும் செல்வா போற்றி!
அருமறை தேடும் அடியாய் போற்றி!
அடியவர் வினைகெட அருள்வாய் போற்றி!
சென்றொரு தூணிடை நின்றாய் போற்றி!
சிறுவனை உகந்த செல்வா போற்றி!
அயனொடு தேவர்க் கரியாய் போற்றி!
மலர்மகள் புணர்ந்த மணாளா போற்றி
நிலமகள் இடந்த நெடியாய் போற்றி!
திருவருள் தருவாய் திருவடி போற்றி!>

இரத்தினச்‌ சுருக்கம்‌ என்னும்‌ நூல்‌ தூது விடுவதற்குரிய பொருள்களாகப்‌ பத்தினைக்‌ குறிப்பிடுகின்றது. அன்னம்‌, மயில்‌, இளி, மேகம்‌, நாகணவாய்ப்‌புள்‌, தோழி, குயில்‌, நெஞ்சு, தென்றல்‌, வண்டு
என்னும்‌ இவற்றள்‌ ஒன்றைப்‌ பொருளாகக்‌ கொண்டு, புலவர்கள்‌ தம்‌ புலமை நலம் தோன்றுமாறும்‌ இலக்கிய நயம்‌ பொருந்துமாறும்‌ தூதிலக்கியத்தை ஓதுகின்‌றனர்‌. |
*இயம்புகன்ற காலத்‌தெகின மயில்‌ கிள்ளை
பயம்பெறு மேகம் பூவை பாங்கி--நயந்த குயில்‌
பேதை நெஞ்சம்‌ தென்றல்‌ பிரமரம்‌ ஈரைந்துமே
தூதுரைத்து வாங்கும்‌ தொடை”
என்னும்‌ பழம் பாட்டால்‌ ௮வ் வுண்மை புலனாம்‌.

தான்‌ வகுத்துக்‌ கூறுவான்‌ தலையாய தூதன்‌ ; கூறியது கூறுவான்‌ இடையாய தூதன்‌; ஓலை கொடுத்து நிற்பான்‌ கடையாய தூதன்‌ என்பர்‌.
தானறிந்து கூறும்‌ தலைமற்‌றிடையது .
கோனறைந்த தீதென்று கூறுமால்‌--தான றியா
தோலையே காட்டும்‌ கடையென்‌(.று) ஒரு மூன்று
மேலையோர்‌ தூதுரைத்த வாறு”
என்னும்‌ பெருந் தேவனாரின்‌ பழந் தமிழ்ப்‌ பாரத
வெண்பாப்‌ பாடல்‌

கடனறிந்து காலம்‌ கருதி இடனறிந்து
எண்ணி யுரைப்பான்‌ தலை”
அறிவுரு ஆராய்ந்த கல்வி யிம்‌ மூன்றன்‌
செறிவுடையான்‌ செல்க வினைக்கு”'
இறுதி பயப்பினும்‌ எஞ்சா திறைவற்‌
குறுதி பயப்பதாம்‌ தூது”
----திரு வள்ளுவர்


அன்புடைமை ஆய்ந்த அறிவுடைமை இற்பிறப்பு
நன்குடைமை நல்ல நயனுடைமை--நன்கமைந்த
சுற்‌றமுடைமை வடிவுடைமை சொல் வன்மை
கற்றடங்கல்‌ தூதின்‌ கடன்‌.”-பெரும் தேவனார்

வில்லின்‌ செல்வனாகிய: இராமன்‌ சொல்லின்‌ செல்வனாகிய அனுமனைத்‌ தன்‌ தேவியாகிய ஸீதையைக்‌ கண்டு வரும்‌ பொருட்டுத்‌ தென்றிசை நோக்கித்‌ தூது போக்கினான்‌-ஐயமகற்றும்‌ அடையாளங்கள்‌ பலவற்றை அறிவுறுத்தினான்‌. இறுதியில்‌ ஓளி பொருந்திய கணை யாழி யொன்றையும்‌ அளித்து வாழ்த்தி வழியனுப்பினான்‌.
அனுமன்‌ இராமனை வணங்கி விடை. பெற்றுத்‌ தென்‌றிசை நோக்கிச்‌ சென்றான்‌-இராமபிரானை மனத்துள்‌ நினைத்து வணங்கியவாறே இலங்கைமாநகர்‌ வீதிகளில்‌ ஓரமாக நடந்து சென்றான்‌. மலர்களில்‌ தேனை நாடிச்‌ செல்லும்‌ வண்டைப் போல்‌ கண்ட இட மெல்லாம்‌ சீதையைத்‌ தேடிக் கொண்டே சென்றான்‌–பிராட்டியைக்‌ காணுதற்கு இதுவே ஏற்ற சமயமென எண்ணிய அனுமன்‌ தனது மந்திர வன்மையால்‌ அரக்கியர்‌ உறக்கம்‌ கொள்ளுமாறு செய்தான்‌. உற்ற தோழியாய்‌ அமைந்த திரிசடையும்‌ துயில்‌ கொள்ளலானாள்‌-இராமபிரானால்‌ அனுப்பப்‌ பெற்ற தூதன்‌
நான்‌” என்று கூறியவாறே அவளை வணங்கி முன்னே சென்றான்‌-
அரக்கனே யாக, வேறோர்‌ அமரனே யாக, அன்றிக்‌
குரக்கனத்‌ தலைவனே தான்‌ ஆகுக, கொடுமையாக :
இரக்கமேயாக வந்து இங்‌கு எம்பிரான்‌ நாமம்‌ சொல்லி
உருக்கினன்‌ உணர்வைத்‌ தந்தான்‌ உயிரிதின்‌ உதவி யுண்டோ

இராமபிரான்‌ கூறியனவாக அனுமன்‌ கூறிய அடையாள மொழிகளையும்‌ கேட்டு உள்ளம்‌ உருகினாள்‌. பின்னர்‌, இராமபிரான்‌ அளித்த கணையாழி யொன்றை எடுத்துப்‌ பிராட்டிக்குக்‌ காட்டினான்‌.அதனைக்‌ கண்ட சீதை பெரு மகிழ்ச்சி கொண்டாள்‌.அதனை அன்புடன்‌ வாங்கித்‌ தன்‌ மார்பில்‌ வைத்துத்‌ தழுவிக்‌ கொண்டாள்‌ ; தலைமேல்‌ தாங்கினாள்‌ ; கண்களில்‌ ஓத்திக்‌ கொண்டாள்‌; அதனைக்‌ கொண்டுவந்தளித்த அனுமனை வாயார வாழ்த்தினாள்‌-
பின்னர்ச்‌ சீதை, அனுமன்‌ தன்னைக்‌ கண்டு பேசியதற்கு அடையாளமாகத்‌ தன்பால்‌ இருந்த சூடாமணி யென்னும்‌ அணிகலத்தை அவனிடம்‌ நல்கினாள்‌.
அதனைத்‌ தொழுது வாங்கிய அனுமன்‌ தன்‌ ஆடையிலே முடிந்து பாதுகாப்புச்‌ செய்து கொண்டான்‌.
பிறகு, பிராட்டியிடம்‌ விடைபெற்று அவ்விடம்‌ விட்டுப்‌ பெயர்ந்தான்‌.
அனுமன்‌ இராமபிரான்‌ இருக்கும்‌ இடத்தை யடைந்தான்‌. அவன்‌ அங்கு இராமபிரானை வணங்கவில்லை. ஸீதை இருக்கும்‌ திக்கை நோக்கி வணங்கி வாழ்த்தினான்‌. குறிப்பறிவதில்‌ வல்ல இராமபிரான்‌ ௮னுமனது செயலை உற்று நோக்கினன்‌.ஸீதை நலமாக உள்ளாள்‌ ; இவ்வனுமன்‌ அவளைப்‌ பார்த்து விட்டு வந்துள்ளான்‌; அவளுடைய கற்பும்‌ கலங்காது இலங்குகின்றது என்று அறிந்து கொண்டான்‌. அவனுக்கு உற்ற துயர்‌ நீங்கியது? உவகையால்‌ தோள்கள்‌ பூரித்தன.
இங்ஙனம்‌ இராமன்‌ விடுத்த தூதனாய அனுமன்‌ அவ் விராமனைப்‌ பிரிந்த சீதைக்குக்‌ கணவன்‌ விடுத்த காதல்‌ தூதனாக மட்டும்‌ தொண்டாற்ற வில்லை. தன்‌ பெருந்தலைவனாகிய இராமன்‌ விடுத்த போர்த் தூதனாகவும்‌ இலங்கை வேந்தனைக்‌ கண்டு, அவனது உள்ளமும்‌ துளங்குமாறு செய்து மீண்டான்‌. அதனாலேயே கவியரசராகிய. கம்பர்‌, அவ்வனுமனைச்‌ சொல்லின்‌ செல்வன்‌” என்று தம்‌ காவியத்தில்‌ போற்றிப்‌ புகழ்‌கின்றார்‌.

முன்னமே துயின்‌ றருளிய முது பயோ ததியோ
பன்னகாதி பப்‌ பாயலோ ? பச்சை ஆல்‌ இலையோ
சொன்ன நால் வகைச்‌ சுருதியோ ₹ கருதி நீ எய்தற்
கென்ன மாதவம்‌ செய்தது இச்‌ சிறுகுடில்‌ என்றான்‌.”
–விதுரர் –


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கனக வல்லித்தாயார் வீர ராகவ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ இராமானுசனர் அமைத்த ஸ்ரீ சோழங்கநல்லூர் கிருஷ்ணர் கோயில்–

May 1, 2026

சோழங்கநல்லூர் – திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு சிறு கிராமம். ஶ்ரீரங்கத்த்திற்கு வடக்கே கொள்ளிடத்திற்கு எதிர் கரையில் ( திருச்சி – நாமக்கல் ரோட்டில்) சிறுகாம்பூர் என்னும் இடம் உள்ளது. அங்கிருந்து 5 km தொலைவில் இந்த கோவில் உள்ளது. இந்த கிராமத்திற்கும் ஸ்ரீராமானுஜருக்கும் ஒரு தொடர்பு உள்ளது.-இந்த கிராமத்தில் வயற்காட்டில் நடுவில் ஒரு கிருஷ்ணர் கோவில் உள்ளது. இந்த கிருஷ்ணர் தனது ஆஸ்தானத்திலிருந்து இருந்து வெளியே ஒரு அறையில் பாலாலயமாகி 50 ஆண்டுகாலமாக கோவில் திருப்பணி நடக்க காத்துக்கொண்டிருக்கிறார்.சேவிக்க யாரும் வராமல் தினமும் வரும் அர்ச்சகரை மட்டும் கடாக்க்ஷித்து நிற்கிறார். 85 வயது முதியவர் எந்த சம்பளமும் இல்லாமல் எந்த பக்தர்களும் வராமலும் கடந்த 20 ஆண்டுகளாய் ஆராதனம் செய்து வருகிறார். இந்த கோவில் அருகே தண்ணீர் இல்லாமையால் தினமும் தனது வீட்டில் இருந்து பிரசாதமும் வழியில் ஒரு இடத்தில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிலியநல்லூர் எனும் கிராமத்திலிருந்து (மொத்தம் 14 கிலோமீட்டர் இருவழி) சிரத்தையுடன் ஆராதனம் செய்கிறார். எப்போதாவது பெருமாள் சேவிக்க இவரை குலதெய்வமாக கொண்ட ஒரு குடும்பத்தாரோ ஒரு சில உள்ளூர் மக்களோ வருவர்.

ஶ்ரீரங்கம் கோவிலுக்கு ஒரு கோசாலையை #சோழங்கநல்லூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 5 கிராமங்களை சேர்த்து பிருந்தாவனம் காடுபோல் இராமானுசர் அமைத்தார் என்பது ஶ்ரீரங்கம் கோயிலொழுகு கூறும் செய்தி. இந்த இடத்தில் ஆநிரைகாத்த பெருமாள் – கண்ணன் பிரதிஷ்டை செய்தார் என்பதும் கோயிலொழுகில் கூறப்பட்டுள்ளது.இப்போதும் அந்த கிருஷ்ணர் சோழிங்கநல்லூரில் ஒரு அறையில் இந்து சமய அறநிலை துறை திருப்பணி அனுமதி உத்தரவை எதிர்பார்த்து 50 ஆண்டுக்கு மேல் சிதிலமடைந்த கோவிலுக்கு வெளியே உள்ளார்.அந்த பசுக்களை கடாக்க்ஷிக்க இராமானுசர் தானே வந்து சில நாட்கள் இங்கே தங்குவார். திருவரங்கன் விக்ரஹத்தை பிரதிக்ஷ்டை செய்து அதற்கு வைகானச நம்பிமாரையும் திருவாராதனம் செய்ய பணித்தார் என்பதும் கோவிலொழுகில் கூறப்பட்டுள்ளது.

இன்றைய நிலை:
1. புன்சிரிப்புடன் கிருஷ்ணர் (ஆநிரைகாத்த்த பெருமாள்) கையில் வெண்ணெய்யுடன் சேவை சாதிக்கிறார்.
2. அருகே நம்மாழ்வார், இராமானுசர் மற்றும் சேனைமுதல்வன் விக்ரஹங்கள் உள்ளன.
3. த்வஜஸ்தம்பம் முன்பும் பலிபீடம் பின்பும் உள்ளதால் தற்போது பாஞ்சராத்ர ஆகம முறையில் கோவில் உள்ளது
4. கோவிலொழுகில் குறிப்பிட்ட அரங்கன் இங்கே இல்லை. கோவிலைத் தெரிந்த எவருக்கும் இங்கு இருந்த அரங்கன் பற்றிய தகவல்கள் இல்லை.
5. கோவிலுக்கு பல ஏக்கர் நிலங்கள் இருந்தும் எந்த வருமானமும் இல்லை.
6. கோவிலுக்கு தண்ணீர் மற்றும் மின்சார வசதிகள் இல்லை. கிணறு தண்ணீர் இல்லாமல் பாழ்பட்டு உள்ளது

கோவில் தொடர்பிற்கு: ஆறுமுகம் Ph: +91 93455193555

தொடருபுக்கு: வெங்கடேசன் Ph: +91 9841348374

கோவில் அர்ச்சகர்: சேதுராமன் Ph: ‭+91 97875 72556‬

கோவிலுக்கு செல்லும் வழி:
திருச்சியில் நாமக்கல் ரோட்டில் முக்கொம்புக்கு அணைக்கு 2 km முன்னால் சிறுகாம்பூர் உள்ளது.

சிறுகாம்பூர் மெயின் ரோட்டில் வலது புறம் திரும்பி 5 kms உள்ளே சென்றால் சோழங்கநல்லூர் மேல்நிலைப் பள்ளி வரும். அதைத் தாண்டி வலது பக்கத்தில் வரும் சிறு ரோட்டில் திரும்பி மீண்டும் வலது புறம் திரும்பினால் கோவில் தெரியும்.ஶ்ரீரங்கங்கத்தில் இருந்து 20 km மற்றும் திருவெள்ளறை கோவிலிலிருந்து 10 km தொலைவில் உள்ளது.

————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருவடி மஹாத்ம்யம் –ஸ்ரீ திவ்ய தேச ஸ்ரீ கருட சேவைகள்-

May 1, 2026

தை மாதம் – திருநாங்கூர் 11 கருட சேவை: தை அமாவாசைக்கு மறுநாள் (ஜனவரி/பிப்ரவரி) திருநாங்கூர் பகுதியில் உள்ள 11 திவ்ய தேசப் பெருமாள்களும் ஒரே இடத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி திருமங்கையாழ்வாருக்கு காட்சியளிக்கின்றனர்.திருநாங்கூர் 11 கருட சேவை: இது நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருநாங்கூரில் நடைபெறும் மிக முக்கியமான விழா. தை அமாவாசைக்கு மறுநாள், 11 திவ்ய தேசப் பெருமாள்களும் கருட வாகனத்தில் எழுந்தருளி திருமங்கையாழ்வாருக்குக் காட்சி அளிப்பார்கள்.-இடம்: மணிமாடக் கோயில் (திருமணிமாடம்), திருநாங்கூர்.

கும்பகோணம் 12 கருட சேவை: சித்திரை மாதத்தில் வரும் அட்சய திருதியை அன்று கும்பகோணத்தில் உள்ள 12 வைணவக் கோயில்களின் பெருமாள்களும் கருட வாகனத்தில் ஒரே இடத்தில் எழுந்தருளுவார்கள்.-இடம்: பெரிய தெரு, கும்பகோணம்.

திருவல்லிக்கேணி (சென்னை): சித்திரை பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாள் பார்த்தசாரதி பெருமாள் கருட வாகனத்தில் உலா வருவார்.

வைகாசி – காஞ்சிபுரம் கருட சேவை: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோத்ஸவத்தின் போது நடைபெறும் கருட சேவை மிகவும் பிரசித்தி பெற்றது.-பெரியாழ்வார் திருநக்ஷத்ர ஆனி ஸ்வாதிக்கும் ஆடி கஜேந்திர மோக்ஷத்துக்கும் கருட சேவை இங்கு உண்டு

ஆழ்வார்திருநகரி 9 கருட சேவை: வைகாசி விசாகத் திருவிழாவின் போது, நவதிருப்பதி எனப்படும் 9 திவ்ய தேசப் பெருமாள்களும் கருட வாகனத்தில் எழுந்தருளி நம்மாழ்வாருக்குக் காட்சி கொடுப்பார்கள்.

ஆடி– ஸ்ரீவில்லிபுத்தூர்: பெரியாழ்வார் அவதரித்த இடத்தில், திரு ஆடிப் பூரத்தை முன்னிட்டு கருட சேவை நடைபெறும்.-திரு ஆடிப் பூரம் திருவிழாவின் போது பெரியாழ்வாருடன் ஐந்து திவ்ய தேசப் பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருளும் ஐந்து கருட சேவை நடைபெறும்.

பெரும்பாலான திவ்ய தேசங்களில் பிரம்மோற்சவத்தின் 3வது அல்லது 5வது நாளில் கருட சேவை நடத்தப்படுகிறது.

ப்ரஹ்மோத்ஸவம்
கோயிலின் ப்ரதானப் பெருமாளுக்கு நடப்பது ப்ரஹ்மோத்ஸவம். பொதுவாக இது கோயிலில் முதலில் நடந்த உத்ஸவம் பிரம்மனால் நடத்தப்பட்டதைக் குறிக்கும். கோயிலின் மூலவர் ப்ரதிஷ்டையையும் குறிக்கும். பொதுவாக இவ்வுத்ஸவத்தில் காலை மாலை இரு வேளைகளிலும் புறப்பாடுகள் இருக்கும்.
அங்குரார்ப்பணம் – உத்ஸவம் தொடங்குவதைக் குறிக்க , புனிதப்படுத்திய மண்ணில் விதைகளை ஊன்றி முளைக்கவிட்டு அங்குரார்ப்பணம் செய்தல். சேனை முதலியார் புறப்பாடு உத்ஸவம் தொடங்கும்முன் விஷ்வக்ஸேநர் பெருமாள் திருவீதி புறப்பாட்டுக்கு முன் சென்று தெருக்கள் சரியாக தூய்மையாக உள்ளனவா என்று பார்த்தல்.
த்வஜாரோஹணம் – கொடி ஏற்றம்: – முதல் நாள் கருடக் கொடி கொடிக்க கம்பத்தில் ஏற்றி, உத்ஸவம் முடியும்வரை பறக்க விடப்படுகிறது.
கருட வாஹனம் – மூன்றாம் அல்லது நான்காம் அல்லது ஐந்தாம் நாள் தேச ஆசாரப்படி கருடவாஹனம் புறப்பாடு நடக்கிறது. கருடன்மீது ஸ்ரீமந் நாராயணன் எழுந்தருளுவதால் , வேத ஸ்வரூபியாகிய கருட வாஹனம் முக்கியமான திருவிழா.
ரதோத்ஸவம் – திருத்தேர். இது ஏழு அல்லது எட்டு அல்லது ஒன்பதாம் நாள் தேச ஆசாரப்படி நடக்கிறது. எல்லா இலக்கியங்களிலும் தேர்த்திருவிழா மிகச் சிறப்பாகப் பேசப்படுகிறது. எம்பெருமானின் திருத்தேர் புறப்பாடு கண்டவர்கள் பிறவிப்பாவங்களிலிருந்து விடுபடுவதாக நம்பப்படுகிறது. முழுச் சமுதாயமும் தேர்த் திருவிழாவில் ஈடுபடுகிறது.

குதிரை வாஹனம் – வேடுபறி உத்ஸவம்
வேடு – வேட்டை ஆடுவது, துணி எனப் பொருள்படும். பறி – கொள்ளை/பறித்தல். பொதுவாக இது திருமங்கை ஆழ்வார் தொடர்பான விழா. அவர், பணக்கார ப்ராமணத் திருமணமகனாக வந்த பெருமாளை அடியார்க்கு உணவளிக்கும் பொருட்டு வழிப்பறி செய்தது வேடுபறி என்று கொண்டாடப் படுகிறது.
கலியன் (திருமங்கை ஆழ்வார்) ததீயாராதனம் (அடியார்க்கு உணவளிப்பதைச்) சிறப்பாகச் செய்து வந்தார். ஏற்கெனவே ஸ்ரீவைஷ்ணவ கைங்கர்யத்திலிருந்த அவர்க்குப் பொருள் இல்லாதபோது,வழிப்பறிகள் செய்தார். அவர்க்கு மெய்ஞ்ஞானமும் தரத் திருவுளம் பற்றிய எம்பெருமான் செல்வமிக்க அந்தணப் புதுமணமகனாக வந்து தன் பொருளைக் கொள்ளை அடிக்க விட்டார். இறுதியில், ஒரு சிறிய வளையம் எம்பெருமானின் காலில் இருந்து நீக்க முடியாமல் போக, கலியன் கீழே வளைந்து பற்களால் அதை வெட்டி அதை கட்டாயமாக நீக்கினார். கலியனின் துணிச்சலை வியந்த எம்பெருமான், அவரை “நம் கலியனோ” என்று அழைத்தார். (கலியன் பொதுவாக பெரிய போர்வீரன் என்று பொருள்படும், மரணத்தின் தலைவன், நேரத்தின் கட்டுப்படுத்துபவரை குறிக்கும் – அனைவரையும் பயத்தில் ஆழ்த்துபவர்- எம்பெருமான் கூட கலியனின் வீரத்தையும் தைரியத்தையும் கண்டு பயந்தான். நகை மூட்டையை எடுத்துத் தூக்க முடியாமல் தவித்த கலியன் “ப்ராமணரே மூட்டைக்கு மந்திரம் போட்டீரோ” என வினவ. எம்பெருமானும் ஆம் என்று கலியன் காதில் திருமந்த்ரம் ஓதி ஆட்கொண்டான். எம்பெருமானின் திவ்ய மங்கள விக்ரஹத்தைக் கண்ட கலியன், “வாடினேன் வாடி வருந்தினேன்” என்று திருமந்த்ர ப்ரபாவத்தைப் பாடியருளினார்.(இந்த சம்சாரத்தில் நான் நித்தியமாக துன்புற்று இருந்தேன் … திருமந்திரத்தை எம்பெருமானிடமிருந்து கேட்க்கும் வரை-பெரிய திருமொழி முதல் பாசுரம்). ப்ரமோத்ஸவத்தில் பகுதியாக இருக்கும் குதிரை வாஹனம் நாளில், இந்த முழு நிகழ்வும் பொதுவாக திவ்யதேசங்களில் நடத்தப்படுகிறது.

மட்டையடி – ப்ரணய ரோஷம். காதலர் இடையிலான அன்புச் சண்டை. பெருமாள்/தாயார் இருவரையும் வைத்துப் பல கோயில்களில் நடக்கிறது.இது ஸ்ரீரங்கத்தில் மிக உத்ஸாகத்தோடு பங்குனி உத்தரத்தில் கொண்டாடப்படுகிறது. வேட்டையாடச் சென்ற எம்பெருமான் வேட்டைப்புண்களோடு திருமேனியை மூடி வர, பிராட்டி திவ்ய மங்கள விக்ரஹத்தில் குருதி அடையாளங்கண்டு ஸந்தேஹம் கொண்டு பெருமாள் பிற நாச்சியார்களோடு இருந்ததாக ஊடி திருக்கதவை அடைத்து அவரை உள்ளே விடாமல் தடுக்க சேதன ரக்ஷணர்த்தமாக நாம் சென்று வந்தோம் என்று அவர் சொல்வது ஏற்காததால் நம்மாழ்வார் கடகராகிப் பிராட்டியம் பெருமாளும் சமாதானமாகும் நிகழ்ச்சி பூப்பந்து எறிதலோடு அழகாக முடிகிறது.
தீர்த்தவாரி – அவப்ருத ஸ்நாநம்: சக்கரத்தாழ்வாருக்குத் திருக்குளத்தில் அல்லது சில திவ்ய தேசங்களில் எம்பெருமானுக்கே, திருமஞ்சனம் ஆகிறது.
துவஜ அவரோஹணம் – கொடி இறக்கம்:உத்ஸவம் முடிந்ததற்கு அறிகுறியாக ஏற்றப்பட்ட கருடக்கொடி இறக்கப்படும் நிகழ்ச்சி.
த்வாதச ஆராதனம் – தொண்டை நாட்டு திவ்ய தேசங்களில் பல ஸந்நிதிகளில் இறுதி நாளன்று எம்பெருமானுக்குப் பன்னிரண்டு திருவாராதனங்கள் ஸமர்பிக்கப்பட்டு, திருவாய்மொழி ஆயிரமும் ஒரே தொடர்ச்சியாக ஸேவிக்கப்படுகிறது.திருவாய்மொழி தொடங்குமுன் திருமஞ்சனமும் உண்டு.
சப்தாவரணம் – அன்றுமாலை எம்பெருமான் பிராட்டிமாரோடு சிறிய தேரில் அல்லது புண்யகோடி விமானத்தில் இராமானுச நூற்றந்தாதி கோஷ்டியோடு புறப்பாடாகி ஸந்நிதி திரும்பியதும் அர்ச்சக ஸ்வாமிகள் எல்லா தேவர்கள், ரிஷிகள், ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஸ்வஸ்தி வாசகம் சொல்லி வழியனுப்புதல்.
விடாயாற்றி பத்துநாள் உத்ஸவங்கண்ட களைப்புத் தீர எம்பெருமான் சில நாள்கள் திருமஞ்சனம்/திவ்யப்ரபந்த கோஷ்டி/இன்னிசைக் கச்சேரி என எழுந்தருளியிருப்பர்.

தெப்போத்ஸவம் – கோயில் புஷ்கரிணி அல்லது அருகிலுள்ள நீர்நிலைகளில் பிராட்டிமாரொடு எம்பெருமானுக்குத் தெப்ப உத்ஸவம் நடக்கும். குளத்து நீராழி மண்டபத்தைச் சுற்றித் அலங்கரிக்கப்பட்ட தெப்பம் வருவது அழகிய காட்சி.
பல்லவ உத்ஸவம் – இளவேனில் காலத்தில் எம்பெருமான் புதிதாய்த் துளிர்க்கும் தளிர்கள் தழைகளை அணிந்து ஸ்தல புராணம் கேட்பது.
வசந்தோத்ஸவம் – எம்பெருமான் ஸந்நிதிக்கு அருகிலுள்ள தோட்டத்திற்கு சென்று உள் புறப்பாடாகி சிறிது நேரம் எழுந்தருளியிருந்து திருமஞ்சனம் திருவாராதனம் கண்டருளுதல். அருள்வார்.பிறகு திருமஞ்சனமும் திருவராதனமும் உண்டு.
கோடை உத்ஸவம் – எம்பெருமான் ஸந்நிதிக்கு அருகிலுள்ள மண்டபத்திற்கு சென்று திருமஞ்சனம் திருவாராதனம் கண்டருளுதல்.
ஸ்ரீராம நவமி – ஸ்ரீராமன் அவதார உத்ஸவம் ஒன்பதுநாள்கள் புறப்பாடு, நவமியோடு முடிவுறுவது
பவித்ரோத்ஸவம் – கோயில் வழிபாடுகள் யாவும் பாஞ்சராத்ர/வைகாநஸ ஆகம விதிகளின்படி நடக்கின்றன. இவற்றில் ஏதாகிலும் குறை/பிழை ஏற்படக்கூடும் என்பதால் அதை நிவ்ருத்தி செய்ய மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு நாள்கள் குண்டங்கள் நிர்மாணித்து எம்பெருமானையும் தாயாரையும் தினமும் யாகசாலைக்கு எழுந்தருளச் செய்து, திவ்ய ப்ரபந்தம், வேத இதிஹாஸ புராண பாராயணங்களுடன் ஈடு/ஸ்ரீபாஷ்ய பாராயணங்களும் நடத்தப்படும். எம்பெருமானுக்குத் திருமஞ்சனமும் உண்டு.
ஆனி (ஜ்யேஷ்ட மாச) கருடோத்ஸவம் – ஆனி ஸ்வாதியில் பெரியாழ்வார் திருநக்ஷத்ரத்தன்று அவர் பரத்வ நிர்ணயம் செய்தது ஒட்டி எம்பெருமான் கருட வாஹனனாகப் பெரியாழ்வார்க்கு ஸேவை சாதிப்பார்.

ஜ்யேஷ்டாபிஷேகம்: எல்லா எம்பெருமான்களும் கவசத்தோடேயே ஸேவை சாதிப்பர். இந்த நாளன்று கவசங்கள் களையப்பட்டு திருமஞ்சனம் ஆகி அழகிய திருமேனியை யாவரும் ஸேவித்தபின் திருவாராதனமாகி ஸேவை ஆகும். இதன்பின், பவித்ரோத்ஸவம் கண்டருளும்வரை எம்பெருமானுக்குப் புறப்பாட்டுடன் உத்ஸவாதிகள் இராது.
ஆடிப் பௌர்ணமி கருடோத்ஸவம் – கஜேந்திர மோக்ஷம் – பொதுவாக இது யஜுர் உபாகர்மத்தன்று வரும்.
ஸ்ரீஜயந்தி – ஆகம விதிப்படியும், ஆவணி மாதம்/அஷ்டமி திதி அல்லது ரோஹிணி நக்ஷத்ரப்படியும் இது கொண்டாடப்படும். மாலை தொடங்கி நள்ளிரவு வரை இது நீடிக்கும்.
.நவராத்ரி – 9 நாள்கள் தாயார் புறப்பாடு, ஊஞ்சல்.
விஜயதசமி – பரிவேட்டை – எம்பெருமான் வேட்டையாட வெளியே எழுந்தருள்வது
தீபாவளி – பெருமாள்/தாயார் புறப்பாடு இது பெரும்பாலும் மாமுனிகள் அவதார உத்ஸவதோடு வரும்
கார்த்திகை தீபம் + அநத்யயந காலத் தொடக்கம் – திருவிளக்குகள் பல ஸந்நிதிகளில் ஏற்றப்படும். பெருமாள் புறப்பாட்டின்போது சொக்கப்பனை கொளுத்தப்படும்.
அத்யயந உத்ஸவம் 20+ நாள்கள் நம்மாழ்வார்க்கும் திருவாய்மொழிக்கும் என்றே ஏற்பட்ட மஹோத்ஸவம்

 

ஸ்ரீ பெரிய திருவடி மஹாத்ம்யம் –

ஸ்ரீ கருடன் மேல் ஸ்ரீ சுவாமி தேசிகர் இரு ஸ்தோத்திரங்கள் இயற்றியுள்ளார். அவையாவன ஸ்ரீ கருட தாண்டகம், ஸ்ரீ கருட பஞசாசத்

———

வைநதேயன் – விந்தையின் குமாரன்.
பக்ஷிராஜன் – வேத ஸ்வரூபன்.
கருத்மான் – அழகிய இறகுகளை உடையவன்.
தார்விகாரி – நாகப்பகையோன்
பத்ரிநாடா – பறவைகளின் யஜமானன்.
ஆசிவிகாரி – நாகங்களின்(விஷ) பகைவன். காகேந்திரன் – பறவைகளின் அரசன்.
அருண அனந்தரன்- அருணனின் இளையோன்.
பக்ஷிஇந்திரன் – பறவைகளின் அரசன்.
தெய்வப்புள்ளான கருட பகவான் ஒப்பற்ற மேன்மை யுடையவர்.
மஹாவிஷ்ணுவுடைய இரண்டாவது வியுகமான ஸ்ரீ சங்கர்ஷண மூர்த்தியின் அம்சமாக விளங்குபவர்.
மனித உடலிலுள்ள ஐந்து வாயுக்களான ப்ராணன், அபாநன், வ்யானன்,உதானன், ஸமானன் என்பவற்றுக்கு
ஸத்யர், ஸுபர்ணர், கருடர், தார்க்ஷ்யர். விஹகேஸ்வரர் என்னும் ஐந்து மூர்த்திகளாய் விளங்குகின்றார்.
இவர் ஞானம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ் என்னும் ஆறு குணங்கள் நிரம்பப்பெற்றவர்.
ஏழு சுரங்களையுடைய சாம வேதத்தின் வடிவமானவர்.
அணிமா, மஹிமா, லகிமா,கரிமா,வசித்வம்,ஐச்வர்யம், ப்ராப்தி, ப்ராகாம்யம் என்னும் அட்டமஹா சித்திகள் பெற்றவர்.
 
கருடனுக்கு ருத்ரை, ஸுகீர்த்தி என்று இரு மனைவியர்கள்.
இவரது நட்சத்திரம் சுவாதி.
சில தலங்களில் கருட சேவையின் போது ஒரு வெள்ளைத் துணியை கருட வாகனத்தின் அலகால் கிழித்து நான்கு
திசைகளிலும் திசைக்கு ஒன்றாக தூக்கி எறிவார்கள்.
இது மனிதனின் மும்மலங்கள் அவனிடமிருந்து கிழிக்கப்பட்டு திசைக்கு ஒன்றாக வீசப்பட்டு
அவன் தூயமையாவதைக் குறிக்கின்றது.
எனவே கருட சேவையை காணும் போது நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்கள் நீங்கும்(
நீக்க நாம் முயற்சி செய்தால்) இவ்வாறு மலங்கள் நீங்கும் போது மனிதன் நிர்மலன் ஆகின்றான்.
இவ்வாறு ஆணவத்தை தொலைத்தால் சீவனில் உள்ள ஆணவமாகிய சுழி இறங்கும் போது
சீவன் சிவன் ஆகிறான். அவன் தன்னை உணர்கிறான்.
இறை தரிசனம் கிட்டும்.முக்திக்கு வழி பிறக்கும்
எனவே தான் பெருமாளின் கருட சேவையைக் காண்பதால் மோக்ஷம் கிட்டும் என்பது ஐதீகம்.
 
————-
கருடன் வேதமயமானவன், அதாவது “வேத சொரூபன்”.
 
ஸூபர்ணோஸி கருத்மாந் த்ரிவ் ருத்தே சிரோ
காயத்ரம் சஷீஸ்ஸ்தோம ஆத்மா ஸாம தே
தநுர் ப்ரஹத்ரதந்தரே யஜ்ஞாயஜ்ஞியம்
புச்சம் – என்பது யஜுர் வேத வ்யாக்யானம்.
 
விநதையின் புதல்வனான கருடனின் ஒவ்வொரு அவயமமும் வேதத்தின் பகுதி.
“ஸ்தோமம்” என்னும் ஸாம வேத பாகமே அவரது ஆத்ம ஸ்வரூபம்.
“காயத்ரம்” என்கிற ஸாமம் அவருக்கு கண்கள்.
“த்ரிவ்ருத்” என்ற ஸாமம் அவருக்கு சிரசு.
யஜுர் வேதங்கள் அவருடைய திருநாமங்கள்.
சந்தஸ்ஸுக்கள் அவரது திருக் கரங்கள்.
“திஷ்ண்யம்” எனப்படும் வேள்வி மேடைகள் அவரது திருப்பாதங்கள்.
“வாமதேவ்யம்” என்கிற ஸாமம் அவரது திருமேனி,
“ப்ருஹத்” , “ரதந்தரம்” என்னும் ஸாமங்கள் அவருடைய இரு சிறகுகள்.
“யஜ்ஞாயஜ்ஞியம்” என்கிற ஸாமம் அவருக்கு வால்.
இவ்வாறு வேத பாகங்களெல்லாம் கருடனுடைய திருமேனிகளாய் விளங்குவதால்
கருடனை “வேத ஸ்வரூபன்” என்கிறார்கள் பெரியோர்.
 
பெருமாள் அவ்தாரம் செய்த உக்ர ஸ்தம்பத்திலிருந்து கருடாத்ரியைப் பார்த்தால் அப்படியே
கருடன் தன் இரு சிறகுகளையும் விரித்து மத்தியில் உயர்ந்த அலகுடனும் மூன்று பகுதிகளாகவும்
அஞ்சலி ஹஸ்தத்துடன் ( கை கூப்பிய நிலையில்) நிற்பதை இன்றும் காணலாம்.
அஹோபிலத்தில் இன்று கருடாத்ரிக்கும் வேதாத்ரிக்கும் இடையே பிறவிப் பிணியை நீக்கும் பவ நாசினி ஆறு ஓடுகின்றது.
கருடாத்ரியில் தான் நவநரசிம்மரில் இன்னொரு நரசிம்மரான பாவன நரசிம்மரும்
தாயார் செஞ்சு லக்ஷ்மித் தாயாருடன் லக்ஷ்மி நரசிம்மராக சேவை சாதிக்கின்றார்.
 
அஹோபிலே கருடசைல மத்யே க்ருபா வசாத் கல்பித ஸந்நிதாநம்
லக்ஷ்ம்யா ஸமாலிங்கித வாம பாகம் லக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே
 

ஆடி கருடன் – கஜேந்திர மோக்ஷம்

ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி யன்று கருட பஞ்சமி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது

கருடன் நாகங்களை அடக்கி தனது மேனி முழுவதும் ஆபரணமாக அணிந்துள்ளான்.
பூணூல் : வாசுகி
வலது கை கங்கணம்: குளிகன்
இடது கை கங்கணம் : ஆதி சேஷன்
அரையில் அணி: தட்சகன்
மாலை: கார்கோடகன்.
வலது காது குண்டலம்: பத்மன்
இடது காது குண்டலம் : மஹா பத்மன்
திருமுடியில் : சங்க பாலன்—சங்க ஸூடன் என்றும் சொல்வர்

விடமுடைய பாம்பின் உடம்பையும் உயிரையும் உண்ணும் பறவை கருடன்.
அக்கருடனுடைய அரைக்கசையாக, கைகளில் தோள் வளைகளாக, முடி மேல், காது குண்டலங்களாக விளங்கும்
ஆபரணங்கள் எல்லாம் பாம்பு, குடையும் பாம்பு என்று பரிபாடல் கூறுகின்றது.

விடமுடை அரவின் உடலுயிர் உருங்கு உவணம் அவன்
மடிமேல் வலந்தது பாம்பு பாம்பு தொடி பாம்பு தலைமேலது பாம்பு
இறை தலையன பாம்பு படிமதம் சாய்த்தோய் பசும் பூனலை
கொடிமேலிருந்தவன் தாக்கு இரையது பாம்பு – பரிபாடல்

எல்லா கருடனிலும் அஷ்ட நாகங்கள் ஆபரணமாக விளங்கும்
ஆனால் இந்த கல் கருடனில் ஒன்பது நாகங்கள் ஆபரணமாக உள்ளன,
ஒன்பதாவது நாகம் கருடனின் வாளை அலங்கரிக்கின்றது.

நாக பாசத்தால் இந்திரஜித் இளையபெருமாளை கட்ட, அவர் மயங்கி விழுந்த போது
அந்த கட்டிலிருந்து விடுவித்தவன் கருடன். அதற்காக இராம பிரானின் தழுவுதல பெற்றவன் கருடன். “
ககநகர கனககிரி கரிமதர நிகம்மய நிஜ கருட கருதநில லவகளித விஷவதநக்ர கதந” என்று
ஸ்வாமி தேசிகன் இவ் வைபவத்தை பாடுகின்றார்.

பரிஷ்கார வர்ணக–

வாமே வைகுண்ட சய்யா பணிபதி கடகோ வாஸூகி ப்ரஹ்ம ஸூத்ர
ரஷேந் நஸ்தஷ கேண க்ரதித கடி தடஸ் சாரு கார்க்கோட ஹார
பத்மம் கர்ணேஸ் ப அசேவ்யே ப்ரதிமவதி மஹா பத்ம மந்யத்ர பிப்ரத்
சூடாயாம் சங்க பாலம் குளிகமபி புஜே தஷிணே பக்ஷிமல்ல -ஸ்ரீ கருட பஞ்சாசத் —36-

ஆதி சேஷனே கையில் கங்கணம் -வாஸூகி பூணூல் -தக்ஷகன் கழுத்துக்கு ஆபரணம்
கார்க்கோடன் -ஹாரம் -பத்ம மஹா பத்ம காதுகளுக்கு ஆபரணங்கள்
சங்க பாலன் திரு முடியில் -குளிகன் தோல் வளை
இப்படி முக்கிய அஷ்ட சர்ப்பங்கள் சேவை உண்டே –

———-

திருமலையின் ஏழு மலைகள் சேஷாசலம், வேதாசலம், கருடாசலம், அஞ்சனாசலம், ஸ்ரீ வேங்கடாசலம், ரிஷபாசலம், அனந்தாசலம் ஆகியவை ஆகும்.

ஆதி சேஷன் ரூபத்தில் இருப்பதால் – சேஷாசலம்.
வேதங்களால் நிறைந்திருப்பதால் – வேதாசலம்.
கருடனால் வைகுண்டத்திலிருந்து பூலோகத்திற்கு கொண்டு வரப்பட்டதால் – கருடாசலம்.
விருஷாபாசுரனை சம்ஹரித்து அவனுக்கு மோக்ஷம் கொடுத்ததால் – விருஷபாத்ரி.
திரேதா யுகத்தில் அஞ்சனா தேவி தவம் இருந்து அனுமனைப் பெற்றதால் -அஞ்சனாத்ரி.
துவாபர யுகத்தில் ஆதிசேஷனையும் வாயு பகவானையும் தூண்டி அனந்த பர்வதத்திஅயும் கொண்டு வந்ததினால் – அனந்தாத்ரி.
சர்வ பாவங்களும் தஹிக்கப்பட்ட புண்ணிய ஷேத்திரமானதால் – வேங்கடாத்ரி
 
இத்தலத்தில் கருடனுக்கு இன்னுமொரு சிறப்புமுண்டு.
கோவிலின் அருகில் உள்ள கோனேரியை (திருக்குளத்தை), கருடன் தான் வைகுண்டத்து விரஜா நதியில் இருந்து உருவாக்கினான்! .
 
திருமலையில் பிரம்மோற்சவத்தின் சில சிறப்புகள்
1) முதல் நாள் கொடியேற்றம் மாலையில் நடைபெறுவது,
2)இரண்டு தடவை சேஷ வாகன சேவை,
3) தங்கத்தேர்.
4) கருட சேவையன்று மூலவராக உற்சவர் சேவைசாதிப்பது.
 
பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் மாலை கருட சேவையின் ஒரு தனி சிறப்பு கருட சேவையன்று மூலவர் வேங்கடேசருக்கு அணிவிக்கப்படும் மகர கண்டியும், லக்ஷ்மி ஹாரமும் கருட சேவையன்று மட்டும் உற்சவர் மலையப்பசாமிக்கு அணிவிக்கப்படுகின்றன. சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாளின் திருமாலையை அணிந்து கொண்டு சேவை சாதிக்கின்றார் பெருமாள் . கருடசேவைக்காகவே ஒரு மாலையை அணிந்து அனுப்புகின்றாள், கூடவே தான் தாங்கியிருந்த கிளியையும் அனுப்புகிறாள் கோதை நாச்சியார்.
 
தை மாதத்தின் வளர்பிறை சப்தமி என்னும் ஏழாம் நாள் இரத சப்தமி என்றும் சூரிய ஜெயந்தி என்றும் கொண்டாடப்படுகின்றது.
இரத சப்தமியன்று அருணன் சாரதியாக இருந்து செலுத்தும் ஏழு குதிரைகள் பூட்டிய சூரிய நாராயணரின் இரதம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி திரும்புவதாக ஐதீகம்
சூரியன் தனுர் ராசியிலிருந்து மகர ராசிக்கு மாறும் நாள் என்பாரும் உண்டு.  இரத சப்தமி என்னும் இந்நாளில் சூரியனுக்கு விசேஷ ஓளி பிறப்பதாக புராணங்கள் கூறுகின்றன.
திருப்பதியில் ஏழுமலைகள் உள்ளதால், அந்த மலைகளை சூரியனின் குதிரைகளாகக் கருதி, ரதசப்தமி விழா பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. அன்றைய விழாவுக்கு, “அர்த்த பிரம்மோற்சவம்’ என்று பெயர். “அர்த்த’ என்றால், “பாதி!’ பொதுவாக பத்து நாள் விழாக்களைத் தான், “பிரம்மோற்சவம்’ என்பர். ஒரே நாளில் ஏழு வாகனங்களில் சுவாமி பவனி வருவதால், இதை, “அர்த்த பிரம்மோற்சவம்’ என்கின்றனர். திருமலையில் அதிகாலையில் மலையப்பசுவாமி சூரியப் பிரபையில் சேவை சாதிக்கின்றார், பின் சேஷ வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், கற்பக விருட்ச வாகனம், சர்வ பூபாள வாகனம், நிறைவாக சூரிய அஸ்தமன காலத்தில் சந்திரப் பிரபை வாகனத்தில் சேவை சாதித்து வைர வைடுரிய நகைகள் மின்ன சர்வ அலங்காரத்தில் சேவை சாதிக்கும் நாள்.
 
பிரம்மோற்சவம் தவிர பெருமாள் கருட சேவை தந்தருளும் நாள் தை மாத இரத சப்தமி நாள். அன்று அதிகாலை சூரியப் பிரபை வாகனத்தில் சேவை சாதிக்கும் பெருமாள் மாலை சந்திரப்பிரபை வாகனத்தில் சேவை சாதிக்கின்றார். மேலும் பெரிய திருவடியாம் கருடன், சிறிய திருவடியாம் அனுமனிலும் சேவை சாதிக்கின்றார் பெருமாள்.
————-

இத்திவ்ய தேசத்தில் நெடியானாய் நின்ற கோலத்தில், சாரதிக்கு உரிய முறுக்கு மீசையுடன் வலக்கையில் சங்கமேந்தி சக்கரம் இல்லாமல் வேங்கட கிருஷ்ணன் என்று மூலவராயும், திருமுக மண்டலத்தில் பீஷ்மரின் அம்பு காயங்களுடன் பார்த்தசாரதி என்று உற்சவராயும், வால்மிகி முனிவர் வணங்கும் இராமனாய், மைதிலி மற்றும் தம்பி இலக்குவனோடும் சக்கரவர்த்தி திருமகனும், பள்ளி கொண்ட ஸ்ரீமந்நாதராய் அரங்கனாகவும், பிரகலாதனுக்கு அருள் புரிந்து யோக நிலையில் அமர்ந்த தெள்ளிய சிங்கராகவும், நித்ய கருட சேவை வழங்கும் கஜேந்திர வரதராகவும் பெருமாள் ஐந்து கோலங்களில் சேவை சாதிக்கின்றார்.

கஜேந்திர வரதர் சன்னதி உள் பிரகாரத்தில் தென் கிழக்கு மூலையில் தனி சன்னதியாக அமைந்துள்ளது. இவருக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் வைகாசி திருவோணத்தை ஒட்டி பத்து நாள் நிகழ்ச்சியாக நடைபெறுகின்றது. வைகானச ஆகமப்படி உற்சவங்கள் நடைபெறுவதால் மூன்றாம் நாள் அதிகாலை கோபுர வாசல் தரிசனத்துடன் கருட சேவை எல்லா பெருமாள்களின் பிரம்மோற்சவத்தின் போதும் நடைபெறுகின்றது. கஜேந்திர வரதர் ஹஸ்த நட்சத்திரத்தன்று் மாலை புறப்பாடு கண்டருளுகிறார். கஜேந்திர மோக்ஷ உற்சவம் ஆடி கருடன் என்று ஆடிப் பௌர்ணமியன்று நடைபெறுகின்றது. பங்குனி உற்சவ திருக்கல்யாண உற்சவத்தின் போது மாலை ஸ்ரீரங்கநாத சுவாமி கண்ணாடி கருட சேவை தந்தருளுகின்றார்

———-

சோள சிம்ம புரம் என்னும் திருக்கடிகையில் காஞ்சி வரதர் தனது அன்பரான தொட்டாச்சாரியாருக்கு வைகாசி கருட சேவை காட்சியை தக்கான் குளக்கரையை அளித்ததை அனைவரும் அறிவோம்

இவ்வாறு கச்சி வரதன் அளித்த அற்புத கருட சேவையை எப்போதும் அனைவரும் சேவிக்கும் பொருட்டு தக்கான் குளக்கரையில் வரதர் ஆலயம் உள்ளது. அங்கும் நாம் தினமும் மோட்சமளிக்கும் கருடசேவையை தரிசிக்கலாம்.

——–

புராணங்களில் மேல் கோட்டை
1. பத்மகூடா,
2. புஷ்கரா,
3. புத்மசேகரா ,
4.அனந்தமாயா ,
5. யாதவகிரி,
6. நாராயணாத்ரி,
7. வேதாத்ரி ,
8. வித்யா (ஞான) மண்டல்,
9. தக்ஷிணபத்ரி என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது.

மூலவர் :- திருநாராயணன் / திருநாரணன் சங்க சக்ர, கதை, முதலியவைகளுடன் நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம், சரணங்களில் பீபீ நாச்சியார் (வெள்ளி கவசத்துடன்) சரணங்களில் வணங்கிய முடி.

உத்ஸவர் :- ஸம்பத்குமாரர், இதரபெயர்கள் – ராம ப்ரியர், செல்வ பிள்ளை, செல்வ நாராயணன்.

தாயார் :- யதுகிரி நாச்சியார், மேலும் பூமி தேவி, வரநந்தினி நாச்சியார்.

தீர்த்தம் :- கல்யாணி தீர்த்தம், வேத புஷ்கரிணி, தனுஷ் கோடி தீர்த்தம், முதலிய 8 தீர்த்தங்கள்.

விமானம் :- ஆனந்தமய விமானம்

ப்ரத்யக்ஷம் :- கருட பகவான்

இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் இதர மூர்த்திகள் :

வண்புகழ் நாரணன் :- ஸ்நபனபேரர், (நாராயண பகவான் பக்கத்தில்) நித்ய திருமஞ்ஜனம் கண்டருளிகிறார்.

வாழ் புகழ் நாரணன், பலி செல்வர், செல்வப் பிள்ளை ஸந்நிதியில் ஸேவை ஸாதிக்கிறார்.

———

தேவேந்திரன் ஒரு சமயம் ஒரு விமானத்தையும் வைர முடியையும் அளித்து இவற்றை எந்தெந்த பெருமாளுக்கு உகந்ததோ அங்கு சம்ர்பித்து விடு என்று பணித்தான். கருடனும் வைர முடியை கர்நாடக மாநிலத்தில் மைசூர் அருகில் உள்ள திருநாராயண புரத்தில் செல்லபிள்ளை சம்பத்குமாரரருக்கும் விமானத்தை தேரழுந்தூரில் ஆமருவியப்பனுக்கும் சமர்பித்தான். எனவே இத்தலத்தின் விமானம் கருட விமானம் ஆகும். விமானம் சாம்ர்பித்த கருடனுக்கு “ என்ன வரம் வேண்டும்? என்று வினவ , கருடனும் அர்ச்சை நிலையில் தேவரீர் இருக்க அடியேன் எதிரே நின்று எல்லா இடங்களிலும் சேவிக்கிறேன். ஆனால் அருகிலே நின்று அடியேன் தேவரீரின் பொன்னடிகளைச் சேவிக்க வேண்டும் என்று வரம் வேண்ட பெருமாளும் கருடனை அருகில் இருத்தி கொண்டதாக ஐதீகம்.

————–

மருந்து உண்ணும் போது விஷ்ணு என்றும்
உணவு உட்கொள்ளும் போது ஜனார்த்தனா என்றும்
படுக்கச் செல்லும் போது பத்மநாபா என்றும்
திருமண காலத்தில் பிரஜாபதி என்றும்
யுத்த களத்தில் சக்ரதாரி என்றும்
இறுதி காலத்தில் நாராயணா என்றும்
நண்பர்களிடம் ஸ்ரீதரா என்றும்
கெட்ட சொப்பனம் கண்ட பின் கோவிந்தா என்றும்
சங்கட காலங்களில் மதுசூதனா என்றும்
தனி வழி செல்லும் போது நரசிம்மா என்றும்
நெருப்பினால் துன்பம் உண்டாகும் போது ஜலசாயினே என்றும்
தண்ணீரில் துன்பம் உண்டாகும் போது வராஹா என்றும்
மலை ஏறும் போது ரகு நந்தனா என்றும்
வீதியில் நடக்கும் போது வாமனா என்றும்
எங்கும் எப்போதும் மாதவா என்றும்
 

ஒரே மாலையில் 18 ஸ்ரீ கருட சேவைகளின் அரிய காட்சி

சமத கும்பம் 2025 என்று அழைக்கப்படும் 3வது வருடாந்திர பிரம்மோத்சவம், 
108 திவ்ய தேசங்களால் சூழப்பட்ட பிரமாண்டமான சமத்துவ சிலையில் ( 
சுவாமி ராமானுஜாச்சாரியாரின் 216 அடி உயர சிலை )  நடைபெற்று வருகிறது . இந்த நிகழ்வு பக்தர்களுக்கு  ஒரே மாலையில் 18 கருட சேவைகளைக் காணும் அரிய வாய்ப்பை வழங்குகிறது -இது ஆன்மீக மற்றும் மன எழுச்சியின் சூழலை உருவாக்குகிறது.காலை பூஜை மற்றும் ஆராதனைக்காக பக்தர்கள் யாகசாலையில் குவிந்தனர். புனித தீர்த்த கோஷ்டி நடத்தப்பட்டு, 18 திவ்ய தேச பெருமாள்கள் திருமஞ்சனம், சம்பிரதாய ஸ்நானம் ஆகியவற்றுக்கு தயார்படுத்தப்பட்டனர்.
காலை பூஜை மற்றும் ஆராதனைக்காக பக்தர்கள் யாகசாலையில் குவிந்தனர். புனித தீர்த்த கோஷ்டி நடத்தப்பட்டு, 18 திவ்ய தேச பெருமாள்கள் திருமஞ்சனம், சம்பிரதாய ஸ்நானம் ஆகியவற்றுக்கு தயார்படுத்தப்பட்டனர்-18 பெருமாள்களுடன் திவ்ய சாகேதம் ராமச்சந்திர பகவானும் திருமஞ்சனம் பெற்றார்.இந்த சடங்கில் மூலிகை கலந்த நீர், பால், தயிர், தேன் மற்றும் பழச்சாறுகள் பயன்படுத்தப்பட்டன.தொடர்ந்து சஹஸ்ரதாரா அபிஷேகம் , ஷங்கதாரா, சக்ரதார ஸ்நானம் உள்ளிட்டவை நடந்தன. பகவத் ராமானுஜரும் புனித சேவையைப் பெற்றார்.அபிஷேக தீர்த்தம் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டு, தெய்வீக ஆசீர்வாதங்களைப் பெற்றது.
கருடன் தான் விஷ்ணுவின் வாகனன் என்று எல்லோர்க்கும் தெரியும்-விஷ்ணு கோவில்களில் துவஜஸ்தம்பம் உண்டு. அதில் கருடனின் கொடியே கட்டி இருக்கும்.-10 நாள் உற்சவத்தின் போது கொடியை ஏற்றுவது துவஜாரோஹணம்-என்பர்.-கடைசி நாள் துவஜாஅவரோகணம் நடக்கும். 3 ஆம் நாள்கருடோத்சவம் நடக்கும். இது எல்லா கோவில்களுக்கும் பொது-

-கருடனை தரிசனம் செய்யும் போது கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்ல சாலச்சிறந்தது.

-குங்குமாங்கித வர்ணாய குந்தேந்து&நஃபிஸ்தவளாய ச!விஷ்ணு வாஹந ! நமஸ்துப்யம் பஷிராஜாய தேநம:!!

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

அரிய 100 தகவல்கள்–

1-ஸ்ரீகருடன் மகாவிஷ்ணுவின் ‘சங்கர்சண’ அம்சமாகக் கருதுவதால் அவரை கண்டிப்பாக வணங்க வேண்டும்.

2. ஸ்ரீகருடனுக்கு சிவப்பு நிறமுள்ள பட்டு வேஷ்டியை அணிவித்து மல்லிகைப்பூ, மருக்கொழுந்து, கதிர்ப்பச்சை (தமனகம்), சம்பகப் பூக்களால் அர்ச்சனை செய்வது சிறந்தது.

3-‘யுவதிஜனப்பிரியா நம’ என ஸ்ரீகருடனை துதித்து பெண்களும் மாலையில் குங்கும அர்ச்சனை செய்யலாம்.

4-கருட சேவையை அதிகாலையில் தரிசிப்பது மிகவும் விசேஷம்.

5. கருட பெருமான் திருமாலின் இரண்டு திருவடிகளையும் தம் இரு கரங்களால் தாங்கி ஊர்வலமாக வரும் காட்சியே கருட சேவை எனப்படும். அப்போது பெருமான், கருடன் ஆகிய இருவரின் அருளும் ஒருங்கே கிடப்பதைப் பக்தர்கள் புனிதமாகக் கருதுகிறார்கள்.

6. ‘திருமாலும் கருடனும் ஒருவரே’ என்று மகாபாரதத்திலுள்ள அனுசாசன பர்வத்தில் காணப்படுகிறது.

7-ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீர்யம், அதீத சக்தி, தேஜஸ் என்ற ஆறு விதமான குணங்களுடன் கருடன் திகழ்கிறார்.

8. திருமாலைப் போல அணிமா, மகிமா, லகிமா, கரிமா, ஈஸித்வம், வசித்வம், பிராபதி – பிராகாம்யம் ஆகிய எட்டு விதமான சம்பத்துக்களாக இருந்து கொண்டு, பக்தர்களுக்கு அவற்றைத் தருபவராக ஸ்ரீ கருடன் விளங்குகிறார்.

9. கருடனுக்கு சார்பர்ணன் என்றொரு பெயருண்டு. கருடனுடைய மனைவியர் ருத்ரா, சுகீர்த்தி.

10. கருடனுடைய மகிமையை ஏகாதசி, திருவோணம் போன்ற புண்ணிய தினங்களில் படிப்பவர்களும், கேட்பவர்களும் கடும் நோய்களில் இருந்து விடுதலை பெறுவர்.

11. கேரள மன்னரான சுவாதி திருநாள் இசை வித்தகராக மட்டுமின்றி பல கலைகளிலும் வல்லவராக இருந்ததற்குக் கருடோபாசனையே காரணம்.

12. கொலம்பஸ் கடலில் திக்குதிசை தெரியாமல் தவித்த போது கருடன் வானத்தில் வட்டமிட்டு திசை காட்டியதாக சரித்திரம் சொல்கிறது.

13. கருடனுக்கு கருத்மான், சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், பகிராஜன், தார்ச்டயன், மோதகாமோதர், மல்லீபுஷ்யபிரியர், மங்களாலயர், சோமகாரீ, பெரிய திருவடி, விஜயன், கிருஷ்ணன், ஜயகருடன், புள்ளரசு, கலுழன், சுவணன்கிரி என்றும் ஓடும்புள் கொற்றப்புள் என்றும் பெயர்கள் உண்டு.

14-வைணவ ஆழ்வார்கள் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் பல இடங்களில் கருடனை போற்றிப் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள்.

15. சிவகங்கை மாவட்டத்தில் -காரைக்குடியை அடுத்துள்ள அரியக்குடி. இங்கு எழுந்தருளி இருப்பவர் ஸ்ரீநிவாசப் பெருமாள்.-இங்கு மூலைக் கருடன் வழிபாடு சிறப்பானது. நல்லது நடக்கவும். தீமைகள் மறையவும் இங்கு மூலைக் கருடனுக்கு சிதறுகாய் உடைப்பது வழக்கம்.

16. மௌரியர்கள் கருடனை மிகவும் அதிர்ஷ்ட தெய்வம் என்று கருதினார்கள்.

17. குப்தர் காலத்தில் குமார குப்தன், சமுத்திர குப்தன் என்ற இரண்டு அரசர்கள் தங்கள் பொன் நாணயங்களில் கருடனைப் பொறித்தார்கள். கருட முத்திரை தங்கள் நாட்டிற்கு வளம் சேர்க்கும் என்று அவர்கள் நம்பிக்கைப்படி குப்தர்கள் காலம் வரலாற்றின் பொற்காலமாகத் திகழ்ந்தது.

18-சந்திரகுப்த விக்ரமாதித்தன் முதன் முதலில் நாட்டின் நலனைக் கருதி டெல்லியில் ஒரு கருட ஸ்தம்பத்தை ஸ்தாபித்தார்.

19-உலக வல்லரசாக அமெரிக்கா திகழக் காரணமாக இருப்பது அந்த நாட்டின் சின்னமான கருடனால்தான்.

20. பதினெட்டு நாட்கள் நிகழ்ந்த மகாபாரதப் போரில் கடைசி நாள் போர் கருட வியூக யுத்தமாக நடந்தது. இதுவே பாண்டவர்களுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது.

21. நேபாள நாட்டில் கருட நாக யுத்தம் என்று ஒரு விழா நடைபெறுகிறது. அப்பொழுது கருடனுடைய திருமேனியில் வியர்வைத் துளிகள் தோன்றும். அதைத் துணியால் ஒற்றி எடுத்து அதை அரசருக்கு அனுப்புவார்கள். அந்தத் துணியின் நூலிழையை பாம்பு கடித்த மனிதனுக்கு சுற்றினால் பாம்பு கடி விஷம் உடன் இறங்கி விடும்.

22. கருடனால் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கொண்டு வரப்பட்ட வைரமுடி என்கிற அணிகலன் தற்பொழுது கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்கோட்டை என்னும் திருநாராயணபுரத்து பெருமாளுக்கு சூட்டப்பட்டுள்ளது.-இந்த நிகழ்ச்சி இன்றும் ஒவ்வொரு பங்குனி ஏகாதசியில் வைரமுடி சேவை என்று திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

23. வானத்தில் கருடனைப் பார்க்கும் போது கைகூப்பி வணங்கக் கூடாது. கன்னத்தில் போட்டுக் கொள்ளவும் கூடாது. மங்களானி பவந்து என மனதில் சொல்லிக் கொள்ள வேண்டும்.

24. பிரான்ஸ் சக்ரவர்த்தி மாவீரன் நெப்போலியனுடைய கொடி கருடக் கொடியாகும். எனவேதான் அவரால் பலவெற்றிகளை அடைய முடிந்தது.

25. ஸ்ரீவில்லிப்புத்தூரில் ரங்க மன்னர் ஆண்டாளுடனும் கருடனுடனும் ஒரே ஆசனத்தில் காட்சி தருவது வேறு எந்த தலத்திலும் இல்லாத சிறப்பு. இப்படி இங்கு கருடனுக்கு தனிமரியாதை கொடுப்பதன் காரணம் கருடன் பெரியாழ்வாராக அவதரித்ததால் மாமனார் –

26. எல்லா திவ்ய தேசங்களிலும் இரண்டு கரங்களையும் குவித்து வணங்கும் கருடாழ் வாரைத்தான் காணமுடியும். திருக்கண்ணங்குடி என்ற திவ்ய தேசத்தில் மட்டும் இரண்டு கைகளையும் காட்டிக் கொண்டு தரிசனம் தருகிறார். இந்தக் காட்சி வைகுண்டத்தில் கருடன் எழுந்தருளியுள்ள காட்சி என்று கூறுவார்கள்.

27. கும்பகோணத்திலிருந்து அருகில் உள்ள திருவெள்ளியங்குடி என்ற தலத்தில் கருடாழ்வார் நான்கு கரங்களுடன் கைகளில் சங்கு சக்கரங்களும் கொண்டதாகக் காட்சி தருவது வேறு எந்தத் தலத்திலும் கிடையாது. சங்கு சக்கரங்களைப் பெற்றதால் பெருமாளின் சக்தியே தன்னிடம் வரப்பெற்றவராய் கருடாழ்வார் இங்கு திகழ்கிறார்.

28. ஆழ்வார் திருநகரியில் நவ கருட சேவை மிக சிறப்பானது. வைகாசி விசாகம் இறுதியாக நம்மாழ்வாருக்கு பத்து நாள் திரு அவதார திருநாள் நடைபெறுகிறது. இதில் ஐந்தாவது நாள் நவதிருப்பதி எம்பெருமான்கள் ஆழ்வார் திருநகரிக்கு எழுந்தருளி அபிஷேக, ஆராதனைகள் கொண்டு இரவு ஒன்பது பெருமாளுக்கும் கருடாரூடர்களாக ஆழ்வாருக்கு சேவை சாதிக்கிறார்கள்.இங்கு கருடன் சம்ஸரூபியாக இருக்கிறார்.

29. பாண்டி நாட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருத்தங்கல்லில் (திருத்தண்கால்) கோவிலில் கருடாழ்வார் சர்ப்பத்துடனும், அம்ருத கலசத்துடனும் காட்சியளிக்கிறார்.

30. நம்பாடுவான் என்ற ஹரிஜன வைணவ பக்தனுக்காக கருடாழ்வாரும், கொடி மரமும் சற்று விலகி உள்ள தலம் திருக்குறுங்கடி

31-கருட தரிசனம் செய்வது பெருமாளே நேரில் வந்து நமக்கு வெற்றி வாழ்த்து சொல்வதற்கு சமம் ஆகும்.

32. நமது காரியம் வெற்றி பெறும் என்று இருந்தால் தான் மகா விஷ்ணுவாகிய ஸ்ரீ நாராயணன் கருடன் தரிசனம் கிடைக்கச் செய்வார் இல்லையெனில் கருட தரிசனம் கிட்டாது.

33-ஆயிரம் ஆயிரம் சுப சகுணங்கள் கிட்டினாலும் ஒரு கருட தரிசனத்திற்கு ஈடாகாது! தன்னிகரற்றது கருட தரிசனம்!

34-கெட்ட சகுணங்கள் துர்சேட்டைகள், துர் குறிகள் போன்ற அசுபங்கள் அனைத்தும் கருட தரிசனத்தால் சூரியனைக் கண்ட பனிபோல் பறந்தோடிவிடும்!

35-பறவைகளில் நான் கருடன் என்று கருடனைப்பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது பகவத் கீதையில் கூறியுள்ளார்.

36. அழகிய கருட பகவானின் தரிசனத்தைக் கண்டாலே உள்ளத்தில் உற்சாகமும், ஊக்கமும் உண்டாவதை நிதர்சனமாக உணரலாம்.

37-கருடனில் இருந்து கிடைக்கப்பெறும் தெய்வீக ஒளிக்கதிர் வீச்சானது மனிதர்களின் உடலிலும் உள்ளத்திலும் ஒருவித நேர்மறை சக்திகளை உண்டாக்குகிறது என்று அறிவியல் ஆய்வில் கண்டு பிடித்துள்ளனர்.

38-எதிரிகளை முறியடிக்கின்ற நேர்மறையான அதிர்வலைகளை கருட தரிசனம் தருகிறது.

39-கருட தரிசனம் சிறந்த சமயோகித புத்தியையும், நல்ல சிந்தனைகளையும், நல்ல எண்ணங்களையும் அளிக்கிறது.

40-நல்ல தெய்வீக சக்திகள் சூழ்ந்த சூழ்நிலைகளில் கருட வாசம் நிச்சயம் இருக்கும்.

41-எதுவும் சரியாக இல்லாத போது என்ன தான் நாம் கருட தரிசனம் காண முற்பட்டாலும், கருட தரிசனம் கிட்டாது என்பது பலரது அனுபவமாகும்.

42-நவரத்தினங்களில் ஒன்றான பச்சை நிறமுள்ள மரகதத்திற்கு கருடோத்காரம் அல்லது காருடமணி என்று பெயர்.-கருடனால் விழுங்கி துப்பப்பட்ட பலாசுரன் என்ற அசுரனின் எலும்புகளே மரகதமாக மாறின. இதை அணிவதால் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களால் துன்பம் ஏற்படாது.

43. அமிர்தக் குடத்தை எடுத்துவர தேவலோகம் சென்ற கருடன், அங்குள்ள தர்பைப் புல்லையும் பூலோகத்திற்குக் கொண்டு வந்தார். அமிர்தத்துடன் தர்ப்பையையும் கொண்டு வந்ததால் அதனை அமிர்தவீர்யம் என்ற பெயரில் அழைக்கின்றனர்.

44. ஒரு காலத்தில் சுவேதத் தீவில் இருந்த பாற்கடலின் பால் கட்டிகளை தன்னுடைய சிறகு முழுவதும் அப்பிக்கொண்டு வந்து எங்கும் உதறினார் கருட பகவான். அவற்றையே ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருமண் என்று அணிந்து கொள்கின்றனர்.

45. கருடனுக்கு கஸ்தூரி, குங்குமப்பூ, புனுகுச்சட்டம் ஆகியவற்றை வாழைச்சாற்றில் கலந்து அவரது திருமேனியில் சாற்றி வேண்டிக் கொண்டால் அனைத்து இஷ்ட சித்திகளையும் எளிதில் அடையலாம்.

46. ஸ்ரீமந் நாராயணனின் அவசர காரியத்திற்காக, கருட பகவான் அவரைத் தாங்கிக்கொண்டு விரைந்து சென்று கொண்டிருப்பார். எனவே அவர் பறக்கும்போது கையெடுத்துக் கும்பிட்டால், அவரது வேகம் குறைந்து எம்பெருமானின் செயலுக்கு ஊறு நேரிடலாம் என்பதால் அப்படி சொல்லி உள்ளனர்.

47. கருடன் மட்டுமே இறக்கைகளை அசைக்காமல் பறக்கும் சக்தி உடையவர். எனவே உயர பறக்கும் போது இறக்கைகளை அசைக்காமல் இருந்தால் அது கருடன் என்று முடிவு செய்யலாம்.

48. ஜைன மதத்தினர் கருடனை சுபர்ணா என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனர். பவுத்தர்கள் உராசனா, பன்னகாசனா, நாகத்தகா ராஜநிர்ஹனா என்னும் பெயர்களில் கருடனை வழிபட்டு வருகின்றனர்.

49. கருடனின் நிழல்பட்ட நிலத்தில் நல்ல விளைச்சல் உண்டாகும். காரணம், வேத ஒலிகளுக்கு தாவரங்களை நன்கு வளர வைக்கும் சக்தி உண்டு.

50-சப்த மாதர்களில் ஸ்ரீவைஷ்ணவி கருட வாகனத்தைப் பயன்படுத்துகிறார். ஆனால் அவர் ஸ்ரீவிஷ்ணுவின் பிரிக்க முடியாத சக்தி என்பதால் அவரையும் ஸ்ரீவிஷ்ணுவாகவே கொள்ள வேண்டும்.

51-ஸ்ரீகருட பகவானை உபாசனை செய்வதே அவர் சுட்டிக்காட்டும் ஸ்ரீமந் நாராயணனின் திருவடிகளைப்ம் பற்றிக் கொள்வதற்காகத்தான்.

52-வெளியூர் பயணங்கள், சுபச்செயல்கள் துவங்குகையில் கருட ஸ்லோகம் படித்தால் இடையூறு நேராது.

53. கார்க்கோடகன் பெயரைச் சொன்னால் ஏழரைச் சனியினால் ஏற்படும் கஷ்டம் விலகும் என்கிறது நளசரித்திரம். அந்தக் கார்க்கோடகனை ஹாரமாக அணிந்திருப்பவர் கருடன்.

54. ஹோமர் எழுதிய இலியத் என்ற ரோமானிய காவியத்தில் ஒரு பெரிய பாம்பைப்பற்றியபடி கருடன் வானத்தில் வட்டமிடுவதாகக் கூறப்பட்டுள்ளது. காம்போஜத்தில் கருடனே யோக தேவதையாக இருந்திருக்கிறார்.

55-கருடன் தகர்த்த மேருமலையின் சிகரத்துண்டே சமுத்திரத்தில் விழுந்த இலங்கைத்தீவு என்று பேசப்படுகிறது.

56-திருவனந்தபுரத்திலுள்ள ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி கோவிலுள்ள ஸ்ரீகருட பகவான் ஆறேழு அடி உயரத்தில் நின்ற நிலையில் நாகங்களைப் பூண்டு சேவை தருகிறார்.

57-கருடனது பீசாட்சாரம் கம். சக்தி பீஜம் டம். கருடனுடைய பெயரிலேயே இரண்டும் இருக்கிறது. பெருமாள் சோதனை செய்து வரம் தருவார். கருடனோடு சேர்த்துத், திருமாலை பிரார்த்தித்தால் உடனே அமோகமான பலன்கள் கிடைக்கும் என்கிறது பரிவதிலீசனைப் பதிகம்

கடிவார் தீய வினைகள் -நொடியாரும் அளவைக் கண்
கொடியாவடு புள்ளுயர்த்த-வடிவார் மாதவனாரே
 –1-6-10–

மாதவன் பால் சடகோபன் தீதவம் இன்றி யுரைத்த
ஏதமில் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாரே 
–1-6-11-

58-கோவில் கும்பாபிஷேக நேரத்தில் வானத்தில் கருடன் வட்டமிட்டால் நாடு சுபிட்சம் பெறும் என்பது ஐதீகம்.

59=ராம ராவண யுத்தத்தில் பெருமாளையும், இளைய பெருமாளையும் நாகபாசத்தில் இருந்து விடுவித்தவர் ஸ்ரீ கருடன் தான்.

60-பாற்கடலைக் கடையும்போது திருமாலின் கட்டளைப்படி மந்திர மலையைத் தன் முதுகில் சுமந்து வந்து பாற்கடலில் வைத்தவர் கருடன் தான்.

61-கண்ணபிரான் துவார கைக்கு வெளியே இருந்த போதெல்லாம் துவாரகையைக் காத்தவர் கருடன்.

62-கருடனுக்கு பிரகஸ்பதி குலதேவதை, கன்னிப் பெண்களுக்கு திருமண பாக்கியம் கைகூடி வர குருபார்வை வேண்டும். ஆகையால் கருட பகவான் அருள் கிட்டினால் பெண்களுக்கு மனம்போல் மாங்கல்யம் அமையும்.

63. கருட புராணத்தை அமாவாசை, பவுர்ணமி, மாதப் பிறப்பு, கிரகணம், சிராத்தம் போன்ற முக்கிய தினங்களில் படிப்பது காரியத் தடைகளை அகற்றி ஜெயம் அளிக்கும்.

64. பொதுவாக வானத்தில் பறக்கும் சாதாரண கருடனும், தெய்வீகத் தன்மை வாய்ந்ததுதான். காரணம் அதுவும் கருடனின் பரம்பரை வாரிசு.

65. கருடனின் நிறம், பழுப்பு, கழுத்து வெள்ளை, இந்த வகை கருடன் மணிக்கு 105 கி.மீ. வரை பறப்பதாக பறவை ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

66. வைணவர்கள் பழுப்புநிற கருடப்பறவையைத்தான் கருட தரிசனத்திற்காக எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். வீர வைணவர்கள் கருட தரிசனம் செய்யாமல் உணவருந்த மாட்டார்கள்.

67. வானத்தில் கருடனைப் பார்ப்பதும் அதன் குரலைக் கேட்பதும் நல்ல சகுனமாகும். அதிகாலையில் நமக்குக் கருட ‘ தரிசனம் கிடைத்தால் நினைத்த காரியம் கை கூடும்.

68. அமெரிக்க நாட்டுச் சின்னம் கருடன். இதனால்தான் அந்நாடு செழிப்புடன் விளங்குகிறது. அவர்கள் கருடனை கோல்டன் பறவை (தங்கப் பறவை) என்றும் அதிர்ஷ்ட பறவை என்றும் கூறுகிறார்கள்.

69. கருட மாலா மந்திரம் பாராயணம் செய்பவர்கள் எவ்வித துன்பத்திற்கும் ஆளாக மாட்டார்கள்.

70-ரத்தின பரீட்சை என்னும் நூல் மரகதப் பச்சை கல்லுக்கு ‘காருடமணி’ என்றும், ‘கருடோத்காரம்’ என்றும் பெயர்கள் உண்டு.

71-கருடனுக்கு கோபம் வந்தால் சிறகுகள் உதறிப் பறக்கும்.

72-வீட்டில் கருடன் படம், பொம்மைகள் வைப்பதால் வாஸ்து குறைகள் நீங்கும்.

73. ஆகாயத்தில் கருடனைப் பார்ப்பதும் அவருடைய குரலைக் கேட்பதும் நல்ல சகுணம். “காருட தர்சனம் புண்யம், ததோபித்வனிருச்யமாதோ” என்று சமஸ்கிருதத்தில் இதைச் சொல்வார்கள்.

74-கருடனின் குரல் சாமவேத த்வனி ஆகும். பறவை இனங்களின் ராஜாவாக இவர் கருதப்படுவதால் இவருக்கு பட்சி ராஜன் என்றும் பெயர்.

75. கருட் என்றால் சிறகு எனப்பொருள். இதிலிருந்து கருடன் என்ற பதம் வந்துள்ளது.

76-தட்சணின் மகளான வினதா என்பவருக்கும், கச்யப முனிவருக்கும் பிறந்தவரே கருடன். அதனாலேயே அவருக்கு விநதேயன் என்ற பெயரும் உண்டு.

77-ஸ்ரீவைகுண்டத்தில் திருமாலுக்கு எப்பொழுதும் தொண்டு செய்து கொண்டிருப்பவர்கள் நித்ய ஸூரிகள் எனப்படுவர்.-அதில் முக்கியமானவர் கருடன். இவர் திருமாலுக்கு வாகனமாக இருந்து தொண்டு செய்து வருகிறார்.

78. கருடன் பெரிய திருவடி என்றும், ஆஞ்சநேயர் சிறிய திருவடி எனவும் சிறப்பித்துக் கூறப்படுகிறார்கள்.

79. வைணவ ஆலயங்களில் நான்கு மதில் சுவர்களின் மூலையிலும் கருடனின் உருவம் இருக்கும்.

80-கருடனை உபாசித்து வைணவ சமய ஆச்சார்யரான சுவாமி தேசிகன் கருடனால் ஹயக்ரீவர் மந்திரம் உபதேசிக்கப் பெற்று சிறந்த பக்திமானாக விளங்கினார். இவர் கருடன் மீது கருடதண்டகம், கருட பஞ்சாசத் என்ற சுலோகங்களை இயற்றியுள்ளார்.

81. கழுத்து வெள்ளை பஞ்சமுக ஆஞ்சநேயரின் பின்புறம் (மேற்கு) கருடமுகமாக அமைந்துள்ளது.

82-பவுத்தர்கள் கருடனை உராசனா, பன்னகாசனா, நாகத்தகா, ராஜநிர்ஹனா என்ற பெயர்களிலும், ஜைனர்கள் சுபர்ணா என்ற பெயரிலும் வழிபடுகின்றனர்.

83. பெண் கருட பறவையை எளிதாக வசப்படுத்த முடியாது. ஆண் பறவை வானத்தில் வட்டமிட்டு தன்னுடைய பலத்தை நிரூபித்தால் மட்டுமே பெண் பறவை வசப்படும்.

84. கருடன் கற்பு நெறியில் நிற்கும். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இணை சேர்ந்து முட்டையிடும்.

85-அதர்வண வேதத்தில் முப்பத்திரண்டு வித்தைகளில் கருடனுக்கு முதல் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. துறவிகளின் முக்கிய தேவதை கருடனே.

86. மணவாள மாமுனிகள் வேங்கடவனைத் தரிசிப்பதற்கு முன்பாக முதலில் ராமானுஜரை சேவித்து பிறகு கருட பகவானை வணங்கி விட்டு, பின்னர் ஏழுமலையானை தரிசிப்பது வழக்கம்.

87. கருட பகவான் வைகுண்டத்திலிருந்து திருப்பதிக்கு சுவாமி புஷ்கரணி என்ற குளத்தை கொண்டு வந்ததாக புராணம் கூறுகிறது.

88. தஞ்சை நகரின் அமைப்பு கருடன் சிறகை விரித்து பறப்பது போன்ற வடிவில் உள்ளது.

89. கருடனின் பார்வை மிகக் கூர்மையானது என்று வேதம் கூறுகிறது.

90. வீட்டிற்குள் பாம்பு தென்பட்டால் கருடனை நினைத்து அபஸர்ப்ப ஸர்ப பத்ரம்தே தூரம் கச்சமஹாயசா! ஜனமே ஜயஸ்ய யக்ஞாந்தேஹ்யாஸ்தீக வசனம் ஸ்மரண்!! என்று கூறி கையைத் தட்டினால் அங்கிருந்து பாம்பு சென்று விடும்.

91. பெருமாள் கோவில்களில் கருடனிடம் அனுமதி பெற்ற பின்பே பெருமாளை தரிசிக்க வேண்டும்.

92. கருடன் பெரிய திருவடி என்று அழைக்கப்படுகிறார்

93. கருடனுக்கு வைனதேயன் என்று ஒரு பெயரும் உள்ளது.

94. திருவரங்கத்தில் கருடனுக்கு பெரிய சன்னிதி உள்ளது.

95. கருடனை பக்ஷிகளுக்கு ஒரு ராஜா என்று வேதம் கூறுகிறது.-குங்குமோங்கித வர்ணாய குந்தேந்து தவளாய ச விஷ்ணுவாஹன நமஸ்துப்யம் பக்ஷி ராஜாயதே நமஹ)

96. பெருமாள் திருக்கோவில் சுவாமி தரிசனம் செய்த பின்பு நமது தலையில் சுவாமியின் திருவடி பதித்த சடாரி வைப்பார்கள். சடாரி வைத்த பின்பு, கருடனுக்கு பின்பு உள்ள கொடிமரத்தின் கீழே விழுந்து சுவாமிக்கு நமஸ்காரம் செய்யக்கூடாது.

97. கிருஷ்ணாவதாரத்தில் காளிங்கன் என்னும் பாம்பின் மீது கிருஷ்ணன் ஆடிய நர்த்தனம்,-காளிங்க நர்த்தனம் எனப்படும் கிருஷ்ணர் காளிங்க நர்த்தனம் ஆடிய போது அவரது பாதங்கள் காளிங்கனின் தலையில் பதிந்திருந்ததால் கருடனால் எந்த ஒரு தீங்கும் ஏற்படவில்லை.

98. கும்பகோணம் அருகில் நாச்சியார் கோவிலில் உள்ள கல் கருடன் என்னும் விக்ரஹம் சிறப்பு வாய்ந்தது.

99. கருட புராணம் என்னும் புஸ்தகத்தில் மனிதர்கள் செய்யும் பாவத்திற்கு அவர்கள் இறந்த பின் அனுபவிக்கும் கஷ்டங்களை பற்றி விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

100-பறவைகளில் நான் கருடன் என்று கருடனைப்பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது பகவத் கீதையில் கூறியுள்ளார்.

பக்ஷி ராஜாயதே நமஹ-

————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செயல்களை ஒற்றியே ஸ்ரீ நாச்சியார் அருளிச் செயல்கள்–

May 1, 2026

1-ஸ்ரீ புத்தூர்‌ – திவ்ய தேசமாகுகை
ஸ்ரீ கோதை நாச்சியாரும்‌, அவரது தகப்பனாரும்‌, பிறந்து வளர்ந்த பெருமையினாலேயே திருவில்லிபுத்தூர்‌ தெய்விகத் தன்மை பெற்று விளங்குகின்றது எனலாம்‌.
மென்னடை யன்னம்‌ பரந்து விளையாடும்‌ வில்லிபுத்தூர் உறைவான் தன் -நாச்சியார்‌ திரு-5-5-என்றும்‌
மின்னனைய நுண்ணிடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு இன்னிசைக்கும் வில்லிபுத்தூர் இனிதமர்ந்தாய் —பெரியாழ்வார்‌ திருமொழி-2-2-6–என்றும்‌ அருளிச் செய்து திவ்யதேசமாக ஆக்கி அருளினார்கள் –

மின்னனைய நுண் இடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு
இன்னிசைக்கும் வில்லி புத்தூர் இனிது அமர்ந்தாய் உன்னைக் கண்டார்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு உடையாள்
என்னும் வார்த்தை எய்து வித்த இருடீகேச முலை உணாயே
-2 2-6 –மின்னோடு  ஒத்த நுண்ணிய இடையை உடையவர்கள் என்னுதல்- மின்னை ஒரு வகைக்கு ஒப்பாக உடைத்தாய் -அவ்வளவு இன்றிக்கே ஸூஷ்மமான இடையை உடையவர்கள் என்னுதல் –விச்தர்தமான குழல் மேலே மது பான அர்த்தமாக அவஹாகித்த வண்டுகள் ஆனவை –மது பானத்தாலே செருக்கி இனிய இசைகளை பாடா நிற்கும் -ஸ்ரீ வில்லி புத்தூரிலே – ஸ்ரீ பரம பதத்திலும் காட்டில் இனிதாக பொருந்தி வர்த்திகிறவனே-
தாழ்ந்தார்க்கு  முகம் கொடுக்கும் தேசம் ஆகையாலே -திரு உள்ளம் பொருந்தி வர்த்திப்பது இங்கே இறே- பரம சாம்யாபந்நருக்கு முகம் கொடுத்து கொண்டு இருக்கும் இத்தனை இறே ஸ்ரீ பரம பதத்தில் –
இங்கு இரண்டுமே சித்திக்குமே – (ரெங்க ராஜ ஸ்தவம் அஹ்ருத ஸஹஜ தாஸ்யம் பரிகொடாதவர்கள் -அஹங்காரம் இல்லாதவர் )நாட்டில் பிள்ளைகள் போல் அன்றிக்கே -ரூப குண சேஷ்டிதங்களால்
வ்யாவர்தனாய் இருக்கிற உன்னைக் கண்டவர்கள் – நாட்டிலே பாக்யாதிகைகளாய் விலஷணமான பிள்ளைகளை பெறுவாரும்  உண்டு இறே –அவ்வளவு அன்றிக்கே – லோகத்தில் கண்டு அறியாத வைலஷண்யத்தை உடைய இவனைப் பெற்ற வயிறு உடையவள் – இதுக்கு உடலாக என்ன தபஸை பண்ணினாளோ என்று ஸ்லாகித்து சொல்லும் வார்த்தையை – எனக்கு உண்டாக்கித் தந்த–கண்டவர்களுடைய சர்வேந்த்ரியங்களையும் வ்யக்த்யந்தரத்தில் போகாத படி உன் வசம்
ஆக்கிக் கொள்ளும் வைலஷண்யத்தை உடையவனே –-யாத்ர நாந் யத்ர பஸ்யதி பூமா )-முலை உணாயே-

மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் உறைவான் தன்
பொன்னடி காண்பதோர் ஆசையினால் என் பொரு கயல் கண் இணை துஞ்சா
இன்னடிசிலொடு பாலமுதூட்டி எடுத்த வென் கோலக் கிளியை
உன்னோடு தோழமைக் கொள்ளுவன் குயிலே உலகளந்தான் வரக் கூவாய்–5-5-ஊராக தன் இனமே பெருத்து இருக்குமாய்த்து – பரம பதத்திலே நித்ய ஸூரிகள் ஓலக்கம் கொடுக்க இருக்கிறவன் அத்தை விட்டு என்னோடு சஜாதீய பதார்த்தங்கள் கண்டு போது போக்கைக்காக வன்றோ இங்கே வந்து நிற்கிறது – இப்போது காணப் பெறாத வருத்தம் வெறுப்பு தோன்ற வந்து நிற்கிறது –என்கிறாள் –வைகுந்தம் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன் -என்கை பிராப்தம்-அது தூரஸ்தம் ஆகையாலே – தனக்காக வந்து நிற்கிற இடத்திலே காணப் பெறாதே நோவு பட்டு கண் உறங்காதே இருந்தாள் என்றால் இது சேரும்படி எங்கனே என்று -நான்-நம்பிள்ளை – ஜீயரைக் கேட்டேன் –உள்ளுக்குப் புக்கால் குறி யாழியாமே நம்மைப் போலே போர வல்லவல்லள் இவள் ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே மோஹிப்பாள் ஒருத்தி யாய்த்து – உள்ளே கொடு புகில் அந்த சீல குணத்தைக் கண்டவாறே இவள் மோஹித்துக் கிடக்கும் –பின்னை இவளை இழக்க ஒண்ணாது என்று கொண்டு –
புக்கார்கள் இல்லை போலே காணும் என்று அருளிச் செய்தார் -என்று அருளிச் செய்வர் –குழையும் வானமுகத்து ஏழையை தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு இழை கொள் சோதி செந்தாமரைக் கட்பிரான் இருந்தமை காட்டினீர் –திருவாய் மொழி -6-5-5-என்று பரிஹாரம் சொல்லுகிறவர்கள் தாங்களே படுகுலை யடுத்தி கோள் -என்னும் படி இறே இருப்பது-பொன் -அழகு – பிறருக்கு காட்டுகைக்காக வந்து நிற்கிறவன் திருவடிகள் காண வேணும் என்னும் ஆசையினாலே-என் பொரு கயல் கண் இணை துஞ்சா –இக் கண்ணுக்கு   இலக்கானவன் படுமத்தை தான் படா நின்றாள் யாய்த்து – பொரா நின்றுள்ள கயல் போலேயே ஒன்றுக்கு ஓன்று ஒப்பான கண்களானவை உறங்கா –இன்னடிசிலொடு பாலமுதூட்டி எடுத்த வென் கோலக் கிளியை-உன்னோடு தோழமைக் கொள்ளுவன் குயிலே – பிறரோடு தோழமை கொள்ளுகைக்கு அவகாசம் இல்லாதபடி ஸ்லாகித்து கொண்டு போருகிற என் கிளியை– இங்கே ஒரு குறை உண்டாகில் அன்றோ பிறர் தோழைமை நாடுவது
இப்படி நான் உபாலாளநம் பண்ணிக் கொண்டு போருகிற கிளையை -உன்னோடு தோழமை கொள்ளுவிப்பன் –-அதுக்கு கடவள் தானே -நியமிப்பேன் -என்றவாறு-குயில் -ஆசார்யன் –-தானே ஆசார்யனுக்கு அடிமை யாகி என் உடைமைகளையும் அவனுக்கு அடிமை ஆக்குவேன் -அரும் பொருள் த்வனிக்கும் –-கொள்ளுவன்-என்னாதே கொள்விப்பன் -என்றது – அந்த கிளியைப் போலே உன்னையும் உபலா ளிப்பன்-என்றபடி -சாதனத்வ சங்கா நிவ்ர்த்யர்த்தம்-கார்யம் -கூவுகை -அல்பம் -பேறு அதிகம் -சம்ஸ்லேஷம் நித்யமாய் நிரதிவகமாய் இருக்குமே –உலகளந்தான் வரக் கூவாய்-இத்தோடு தோழமை கொள்ளுகையாகிற ஏற்றம் உனக்கு – பேறு எனக்குக் கைப்படும் – எல்லாரோடும் வரையாதே பொருந்துமவன் வரக் கூவுகை -உனக்குக் கார்யம் — குணாகுணம் நிரூபணம் பண்ணாதே – வசிஷ்ட சண்டாள விபாகம் அற எல்லாரோடும் பொருந்துமவன் வரும்படி கூவப் பாராய் –

2-பகவதநுபவம்‌ உண்டபோது ஒரு வார்த்தையும்‌, . உண்ணாத போது ஒரு வார்த்தையும்‌ பேசுபவர்கள்‌,
காற்றினைப்‌ புனலைச்‌ சென்று நாடிக்‌ கண்ணமங்கையுள்‌ கண்டு கொண்டேனே” -7-10-5- என்று பகவதநுபவம்‌ உண்டபோது ஒரு வார்த்தையும்‌,
‘ கடியன்‌ கொடியன்‌ நெடியமால்‌ உலகம்‌ கொண்ட அடியன்‌” -5-3-5-என்றும்‌,
ஆசை வழுவாதேத்தும்‌ எமக்கிங்கிழுக்காய்த்து * அடியோர்க்குத்‌ தேசமறிய உமக்கே யாளாய்த்‌ திரிகின்றோமுக்கு *. காசினொளியில்‌ திகழும்‌ வண்ணம்‌, காட்டீர்‌ எம்பெருமான்‌ ! * வாசிவல்லீர்‌! இந்தளூரீர்‌! வாழ்ந்தே போம்‌ நீரே! -4-9-4-என்று உண்ணாத போது ஒருவார்த்தையும்‌ பேசுவதைக்‌ காணலாம்

பகவதநுபவத்தை ஆசைப்பட்ட ஆழ்வார்களுக்கும்‌, பகவத்‌ ஸம்ருத்தியை (நிறைவில்‌ ஆசைப்பட்ட பெரியாழ்வாருக்கும்‌ நெடுவாசியுண்டு. பகவத்‌ ஸம்ருத்தியை ஆசைப்பட்ட பெரியாழ்வாருக்கும்‌ பாகவத ஸம்ருத்தியை ஆசைப்பட்ட ஆண்டாளுக்கும்‌ அம்மாதிரியே நெடுவாசி யுண்டு. ஆழ்வார்கள்‌ இளைய பெருமாளைப்‌ போன்றவர்கள்‌. “ பெரியாழ்வார்‌ பரதாழ்வானுக்கு ஒப்பானவர்‌. ஆண்டாளும்‌ மதுரகவிகளும்‌ ஸ்ரீசத்ருக்கனாழ்வானைப் போன்றவர்கள்

கலியுகம் -97-நள வருஷம் திருவாடிப்பூரம் சுக்ல பக்ஷம் -செவ்வாய் கிளம்பி -சதுர்த்தி -அயோநிஜையாய் திருவவதரித்தார்
மிக்க இறைநிலை விளக்கம் -திருப்பாவையில் முதல் ஐந்து பாசுரங்கள்
மெய்யாம் உயிர் நிலை -6-15 பாசுரங்கள்
தக்க நெறி -16-22-
வாழ்வினை பகவத் கைங்கர்யம் -23-27
ஊழ்வினை-ப்ரக்ருதி சம்பந்தம் -28-30-
பகவத் ஸம்ஸ்லேஷமே நீராட்டம்
பகவத் கைங்கர்யமே பறை

இதம் விஷ்ணுர் விசக்ரமே த்ரேதா நிததே பதம் |
ஸமூடமஸ்ய பாகும்ஸுரே |
த்ரீணி பதா விசக்ரமே விஷ்ணுர் கோபா அதா” ப்ய: |
தததோ தர்மாணி தாரயந் |-விஷ்ணு ஸூக்தம்

இதம் விஷ்ணுர் வி சக்ரமே த்ரேதா நிததே பதம் -ருக்வேதம் -ஸ்ரீ விஷ்ணு உலகங்களை எல்லாமே மூன்றடியால் அளந்தான்
த்ரீணீ பதா வி சக்ரமே விஷ்ணுர் கோபா அதாப்ய -ருக்வேதம் -யாராலும் வெல்ல முடியாத ஸர்வ ரக்ஷகனான ஸ்ரீ விஷ்ணு உலகங்களை எல்லாமே மூன்றடியால் அளந்தான்
ஓங்கி உலகளந்த உத்தமன்
அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமான்
அன்றிவ்வுலகம் அளந்தான் அடி போற்றி

ஸ காரணம் கரணாதிபாதிப ந சாஸ்ய கச்சித் ஜநிதா ந சாதிப -ஸ்வேதா -இவ்வாத்மாவுக்கு அதிபதியான ஈஸ்வரனே எல்லாவற்றுக்கும் காரணமாய் நின்று படைக்கும் முதல்வன் -அவனை உண்டாக்கியவனும் அவனுக்கு அதிபதியாகவும் யாரும் இல்லை
ஊழி முதல்வன் –பாழி யம் தோளுடை பற்ம நாபன்

அஸ்மாத் மாயீ ஸ்ருஜதே விஸ்வ மேதத் -ஸ்வேதா -மாயனான பரமபுருஷன் பிரபஞ்சம் அனைத்தையுமே படைத்தருளுகிறான்
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை -5-
மா மாயன் மாதவன் வைகுந்தன் -9-
மாயன் மணிவண்ணன் -16-

ஸமுத்ரே அந்தம் விஸ்வ சம்பவம் அந்த ஸமுத்ரே கவயோ வயந்தி -தைத்ரியம் -பாற் கடலின் நடுவே பள்ளி கொண்டவன் அகிலப் பிரபஞ்சத்துக்கும் மங்கள கரன் -அவன் திருப்பாற் கடலுள் இடமுடையான் என்றும் கவிகள் அறிகிறார்கள்
பாற்கடலுள் பையத்துயின்ற பரமன் -2-
வெள்ளத்தரவில் துயில் அமர்ந்த வித்து–6-

தத்யதா இஷீ காதூலம் அஃனவ் ப்ரோதம் ப்ரதூ யேத ஏவம் ஹாஸ்ய ஸர்வே பாப்மான ப்ரதூயந்தே -சாந்தோக்யம் -நெருப்பிலிட்டு பஞ்ச போலே ஸஞ்சித பாபங்கள் அடியோடு அற்றுப் போகின்றன –
தத்யதா புஷ்கர பலாஸ ஆபோந ஸ்லிஷ்யந்தே ஏவமேவம்விதி பாபம் கர்ம ந ஸ்லிஷ்யதே —சாந்தோக்யம் -ஸ்வரூப ஞானம் பிறந்த பிறகு தாமரை இலையில் நீர் ஒட்டாதது போல் பாப கர்மங்கள் இவன் கண் ஒட்டுவதில்லை
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் -5-

அத யததஸ் பரோ திவோ ஜ்யோதிர் தீப்யதே -சாந்தோக்யம் -பரதத்வத்தின் தோற்றமாய் நின்ற ஒண் சுடர்
தோற்றமாய் நின்ற சுடரே –21-

ஞானம் ஆத்மனி மஹதி நியச்சேத் தத் யச்சேத் சாந்தா ஆத்மனி-கட உபநிஷத் –சேஷமான இவ்வாத்மாவை சேஷியான பரமாத்மாவுக்கே தக்கவனாய் சேர்க்க வேண்டியது –
பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டில் கீலே சங்கமிருப்பார் போல் வந்து தலைப்பெய்த்தோம் –22-

அந்தப்பிரதிஷ்ட ஸாஸ்தா ஜனனாம் ஸர்வாத்மா -ஸ்வேதாஸ் –எல்லாப் பொருள்களிலும் உள் நிறைந்து உயிர் அனைத்தையுமே நியமிப்பவன்-குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி -24- இந்திரனுக்கு ஸர்வாத்ம பாவமும் நியமிப்பவனாயும் இருப்பதைக் உணர்த்தி அருளினவன்

ஸனோ புத்யா சுபயா ஸம்யுநக்து -ஸ்வேதா அவ்வெம்பெருமான் நன்மை நல்லறிவுடன் கூட்டுக -கைங்கர்யம் யவாதாத்மபாவி அருள வேண்டும் –
உனக்கே நாம் ஆட் செய்வோம் –எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உற்றோமே ஆவோம்-29-

தேவஸ்யைஷ ஸ்வ பாவோயம் ஆத்ம காமஸ்ய காஸ் ப்ரூ –மாண்டூக்யம் -அவாப்த சமஸ்த காமனான சர்வேஸ்வரனுக்கு அடையப்படாததாயும் அடையப்பட வேண்டியது ஒன்றுமே இல்லை
குறை ஒன்றுமே இல்லாத கோவிந்தா -29-

அறம் செய்ய விரும்பு -ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
ஆறுவது சினம் -சில்லென்று அழையேன்மின்
ஓதுவது ஒழியேல் -முப்பதும் தப்பாமே இங்கு இப்பரிசுரைப்பார்
ஓங்கி உலகளந்த –நீங்காத செல்வம் –
தானம் தவம் இரண்டும் தங்கா வியனுலகம்
வசனம் வழங்காது எனின் –
அம்பரமே தண்ணீரே
அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது

30-3+0=3-ஆச்சார்ய பரம் -மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ ஆச்சார்ய தேவோ பவ –
ஐ ஐந்தும் ஐ ஐந்தும் –பஞ்சபூதங்கள் சம்பந்தமுள்ள இந்த உடம்பில் ஐம் புலன்களையும் ஐம் பொருள்களையும் அடக்கி யாண்டால் அர்த்த பஞ்சகம் ஞானம் ஸித்தித்து ஆழ் பொருளை உணரலாம்
நாச்சியார் திருமொழி –143-1+4+3=8-–பிரணவத்தின்-1- விவாரமான – நான்கு வேத சாரத்தை -3 ஆச்சார்யர் அனுக்ரஹத்தின் மூலமும் அறிந்தால் ப்ரணவாகார விமானத்தின் கீழ் எழுந்தருளி இருக்கும் திரு அஷ்டாக்ஷர பொருளாக நாராயணனை அடையலாம்
எல்லே இளங்கிளியே -15-பாகவத நிஷ்டை சொல்லும் இது திருப்பாவை யாகிறது -1+5=6-உய்யும் ஆறு படி நடந்தால் அறிந்து அடையலாம்

பதின்மருடைய ஞானமும் ஸ்திரீ தனமாக இவள்‌ பக்கலிறே குடி கொண்டது. பத்துப்‌ பேர்க்கு ஒரு பெண்‌ பிள்ளை இறே – பெண்‌ ஆணைக்‌ கண்டு காதல் கொள்வது பள்ளமடை ஆகும்‌. எனவே ஆழ்வார்‌ களுடைய பக்தியைக்‌ காட்டிலும்‌ பதின் மடங்கு அதிகமான அன்பை யுடையவர்‌ கோதை நாச்சியார்‌-உபயவிபூதிக்கும்‌ நாயகன்‌ இடைக் குலத்தில்‌. பிறந்து எளிமைக்‌ குணமே நிரம்பப்‌ பெற்று இச்சை யுடையோர்க்கு வீட்டின்பத்தை அளித்தான்‌. அதே போன்று கோதை நாச்சியாரும்‌, . தாம்‌ அந்தண குலத்தில்‌ வளர்ந்தாலும்‌, இறைவனை அடைவதற்கு உபாயமாக, துவாபர யுகத்தில்‌ கோபியர்கள்‌ மேற் கொண்ட நோன்பினை வழியாகப்‌ பின் பற்றுகிறார்

இடை நடையும்‌ இடை முடியும்‌, இடையர் பேச்சும்‌ கொண்ட ‘இடைப் பெண்ணாக பாவநா ப்ரகர்ஷத்தாலே (நினைவின்‌ முதிர்ச்சியாலே) வடிவெடுத்து இடைக்குலச்‌ சிறுமியரோடு இணைந்து, ஸ்ரீவில்லி புத்தூரே . திருவாய்ப்பாடியாகவும்‌, வடபெருங்கோயிலுடையான்‌ திருக்கோயிலே நந்தகோபர்‌ திருமாளிகையாகவும்‌, வடபெருங்கோயிலுடையானையே கண்ணனாகவும்‌ பாவித்து, நோன்பினைக்‌ கைக்கொள்கிறார் –
கண்ணனும்‌, கோதை, நாச்சியாரும்‌, இழிந்த குலமென்ற தாழ்ச்சி எதுவும்‌ இன்றி இச்சை யொன்றே தாம்‌ உகந்தருளும்‌ இடம்‌ என்று காட்டியதை அடி யொற்றி இராமாநுசர்‌ பிட்டிதேவன்‌ என்ற அரசனை விஷ்ணு வர்த்தனன்‌ என்ற பெயரில்‌ திருத்திப்‌ பணி கொண்டார்‌. வில்லி என்ற: வேட்டுவனை அரங்கனின்‌ கண்ணழகைக் காட்டி, உய்வித்தார்‌, ஊனமுற்ற ஊமைக்கும்‌ உய்யும்‌ வழி அருளிச்‌ செய்தார் –-முத்தியோ சிலரது சொத்தென் றிருக்கையில்‌ தமிழ்நாடு தம்‌ இருந் தவப்‌ பயனாய்‌ நம்‌ இராமாநுசனைத்‌ தந்தது அன்றோ-

3-இளமைப்‌ பருவத்தில்‌ கோதையார்‌ ஆடிய விளையாடல்‌களிலும்‌ எம்பெருமானும்‌ எம்பெருமான்‌ தொடர்பு பெற்ற பொருட்‌ களுமே இடம்‌ பெருகின்றன.
பொங்கு வெண்‌ மணல் கொண்டு சிற்றிலும்‌ முற்றத்‌ திழைக்கலுறில்‌ சங்கு சக்கம்‌ தண்டு வாள்‌ வில்லுமல்லது இழைக்கலுறாள்‌”-பெரியாழ்வார் -3-7-3-என்பதனால்‌ இதனை அறியலாம்

பொங்கு -இத்யாதி-புறம்பே போய் -தீ இணக்கி  இணங்கி ஆடாதே முற்றத்திலே இருந்து விளையாடு -என்று நான் நியமித்து வைத்தால் வண்டலிட்டதாகையலே நுண்ணியதாய் -வெளுத்து இருக்கிற மணலைக் கொண்டு முற்றத்திலே கொட்டகமிட ஒருப் பட்டாளாகில்–உறில்-என்கையாலே-இவளுக்கு மனசு இல்லாமையும் – தன்னுடைய நிர்பந்தத்துக்காக செய்கிற இத்தனை என்னுமதும் தோற்ற சொல்லுகிறாள்-சங்கு -இத்யாதி-அவனுக்கு அசாதாராண சிஹ்னமாய் – அழகுக்கும் விரோதி நிரசனத்துக்கும் உடலாய் இருக்கும் ஸ்ரீ பாஞ்ச சன்ய ஆயுதம் ஒழிய   வேறு ஒன்றும் இட நினையாள்

4-அண்ணலார்‌ தாளிணை மேல்‌ அணி தண்ணந்துழாயென்றே மாலுமால்‌ வல்வினையேன்‌ மடவல்லியே -திருவாய் -4-2-1-என்கிறார்‌. பெரியாழ்‌வார் தன் பெண்‌ கொடியாகிய கோதை நாச்சியாருக்கு ஏற்ற கொழு கொம்பு எம்பெருமானே என்பதை அறிகிறார் -கோதை கோதை நாச்சியாரும் எந்நேரமும்‌ எம்பெருமானின்‌ வரவை எதிர் நோக்கிக்‌ காத்திருப்பவர்‌. அதனால்‌ எப்போதும்‌ அணி கலன்‌ பூண்டு ஆடைகளைச்‌ செவ்வனே உடுத்தி அழகு பார்த்திருப்‌பவர்‌. இதனை-காறை பூணும்‌ கண்ணாடி காணும்‌ தன்‌ கையில்‌ வளை குலுக்கும்‌ கூறை யுடுக்கும்‌ அயர்க்கும்‌ தன்‌ கொவ்வைச்‌ செவ்வாய்‌ திருத்தும்‌”பெரியாழ்வார் -3-7-8-என்பதால்‌ உணர இயலும்‌.
பரபக்தி நிலையில்‌ அருளிச் செய்தது திருப்பாவை. பரபக்தி, பரஜ்ஞானமாக வளர்ந்த நிலையில்‌ உருவானதே நாச்சியார்‌ திருமொழி. பரம பக்தி பிறந்த நிலையில்‌ சீவான்மாவின்‌ துடிப்பை உணர்ந்த எம்பெருமான்‌ தான்‌ தன்‌ உருக் காட்டலானான் –சேதன அசேதனம்‌ இரண்டையும்‌ எம்பெருமான்‌ உடலாகக்‌ கொண்டிருக்கிறான்‌. இவற்றுள்‌ உயிராக நின்று இயக்குபவன்‌ எம்பெருமான்‌.-இதையே திருவில்லிபுத்தூர்‌ கோயிலிலே ஆண்டாள் நாச்சியாரும்‌, ரங்கமன்னாரும்‌, பெரிய திருவடியும் ஏக ஆசனத்தில்‌ அமைந்திருப்பதைக்‌ காணும் போது எளிதில் உணர முடிகின்றது –

காறை பூணும் –தன் ஆற்றாமையாலே – ஏதேனும் ஒன்றைச் செய்து நாம் அவனை பெற வேணும் -என்று நினைத்து – அவனுக்கு ஆகர்ஷமாம் படி நம்மை அலங்கரிக்கவே அவன் தானே வந்து மேலே விழும் -என்று தன்னை அலங்கரிக்கையிலே -ப்ரவர்த்தையாய் –ப்ரதமம் –அவனைக் கண்டு பிரியப்பட்டு கட்டிக் கொள்ளும் கழுத்துக்கு அலங்காரமாக காறையைப் பூணும்-இது தான் உத்தம  அங்கத்துக்கும் உடம்புக்கும் நடுவாய் நின்று – ஒளி விடுவதோர் ஆபரணம் இறேகண்ணாடி காணும்-காறை பூண்ட திருத்தம் தன் கண்ணுக்கு விஷயம் அல்லாமையாலே அவனுக்கு உகக்கும்படி வாய்த்ததோ இல்லையோ என்னும் இடம் அறிகைக்காக-காறையும் கழுத்துமான சேர்த்தி அழகை கண்ணாடி புறத்திலே பாரா நிற்கும்–இது தான் அவயாந்தரங்களில் ஆபரணங்களும் இவள் பூணும் அதுக்கு உப லஷணம்–தன் கையில் வளை குலுக்கும்-இம் மநோ ரதம் அடியாக உடம்பிலே ஒரு பூரிப்பு தோற்றுகையாலே அது அறிகைக்காக கையிலே வளையை அசைத்து பாரா நிற்கும் –விரஹ கார்ச்யத்தாலே (பிரிவால் இளைப்பாலே )கையிலே வளைகள் கழன்றாலும் பின்னையும் எடுப்பது இடுவதாய் இறே இவள் தான் இருப்பது-இவள் எடுத்து இட்டாலும் அவை கையில் தொங்காதே
இப்போது உடம்பில் தோன்றுகிற பூரிப்பாலே -அவை கையிலே தொங்கினமை அறிகைக்காக
அசைத்து பாரா நிற்கும் -என்கை–கூறை உடுக்கும் – பரியட்டமும் அறையில் தொங்கும்படி ஆய்த்து -இம் மநோரத நிபந்தனமான தேக பௌஷ்கல்யத்தாலே இறே – அல்லாத போது – கையிலே ஒரு தலைப்பும் —காலிலும் தரையிலும் ஒரு தலைப்பு மாம் இறே–வளையும் கலையும் க்ரத சந்கேதரைப் போலே  –
கழலும் போது ஒக்க கழன்று தொங்கும் போதும் ஒக்க தொங்கா நிற்கும் ஆய்த்து —காறை பூண்டதுக்கு  மேலே ஓர் அதிசயம் தேடுகைக்காக இறே கூறை உடுக்கப் புகுந்தது–அதாவது அவனுக்கு ஆகர்ஷமாம்படி பரியட்டத்தை நன்றாக உடா நிற்கும் -என்கை-இவளுடைய அழகிலே ஆய்த்து அவன் ஈடுபடுவது-ஆதலால் அவன் உகக்க தக்க உடை வாய்ப்பு வரும் அளவும் குலைப்பது உடுப்பதுமாய் செல்லா நிற்கும் ஆய்த்து-அயர்க்கும்-இப்படி அவன் வரவுக்கு உடலாக -தன்னை அலங்கரித்த அளவிலும் வரக் காணாமையாலே அறிவு அழியா நிற்கும்–தன் கோவைச் செவ்வாய் திருத்தும் –
மீளவும் அறிவு குடி புகுந்து – இன்னமும் அவனுக்கு ஆகர்ஷமாம் படி இருப்பதோர் அதிசயம் நம் பக்கல் உண்டாக்க கடவோம் என்று – ஸ்வபாவமே கோவைப் பழம் போலே சிவந்து இருக்கிற தன்னுடைய அதரத்தை ராக ஜனகமான பதார்த்த சேவைகளாலும் மிகவும் சிவக்கும் படி பண்ணா நிற்கும்
அல்லாதவை போலே அன்றிக்கே –இது அவனுக்கு வாய் புகு சோறாய் இருப்பது ஓன்று இறே
தொண்டை அம் செங்கனி வாய் நுகர்ந்தான் -என்கிறபடியே–தேறித் தேறி நின்று – தன்னுடைய அவயவ அலங்காரத்தின் வாய்ப்பாலும் – தச்மிம்ச் ச பகவோ குண-(ஸூந்தர )-என்கிறபடியே இத் தசையில் வந்து உதவுகைக்கு ஈடான அவன் குணங்களிலே விச்வாசத்தாலும்-அயர்க்கை தவிர்ந்து
மென் மேலும் தெளிவை உடையவளாய் -அத் தெளிவு கை கொடுக்க தரித்து நின்று –ஆயிரம் பேர் தேவன் திறம் பிதற்றும் –தேவோ நாம சஹஸ்ரவான் -என்கிறபடியே (தேவ -திவி கிரீடா கிரீஷா ஸ்தோத்ரம் பண்ணத்தக்கவர் ஆனந்தம் கொண்டவர் -பல அர்த்தங்கள் உண்டே )-தன் குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான ஆயிரம் திரு நாமங்களை உடையவனாய் – அவை எல்லா வற்றிலும் மநோஹரமான வடிவு அழகை உடையனாய் – அவனுடைய பிரகாரங்களை -அவற்றினுடைய ரஸ்யதையாலே கலங்கி அடைவு கெட பேசா நிற்கும்–மாறில் -இத்யாதி-ஆகையால் ஒப்பு இல்லாத நீல ரத்னம் போன்ற வடிவு அழகை உடையவன் விஷயமாக இவள் இப்படி பிச்சேறா நின்றாள்-

5-மாணிக்கக்‌ கிண்கிணி யாரவாரிப்ப மருங்கின்‌. மேல்‌” பெரியாழ்வார்‌-1-6-1- கிங்கிணி வாய்ச்‌ செய்த தாமரைப்‌ பூப்போலே-25-

மாணிக்க கிண் கிணி யார்ப்ப மருங்கின் மேல்
ஆணிப் பொன்னால் செய்த ஆய்ப் பொன்னுடை மணி
பேணிப் பவள வாய் முத்து இலங்கப் பண்டு
காணி கொண்ட கைகளால் சப்பாணி கரும் குழல் குட்டனே சப்பாணி
–1 6-1 –பழிப்பு அற்று –
அழகியதாய் இருந்துள்ள – அரை வடத்தை உடைத்தான மருங்கின் மேல் – மாணிக்க கிண் கிணியானது த்வனிக்க –ஆய் பொன்னுடை மணி -என்கிற இடத்தில் – ஆய்தல் தெரிதலாய் பழிப்பு அறுதலை சொல் நாக மாணிக்கம் ஆகையாலே என்னவுமாம் – கிண் கிணிக்கு புறம்பே மாணிக்கம் பதித்தாலும் சப்தியாது –(ஆணிப்பொன் என்பதால் -அழகு -மேல் பகுதி-மணியின் நாக்கு மட்டும் மாணிக்கம் -சப்திக்குமேநாக மாணிக்கம் என்று இத்தையே சொல்லுவார் )

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே – ஆதித்யனைக் கண்டால் அலரக் கடவ தாமரைப் பூ போலே எங்கள் ஆற்றாமைக்கு அலருமவை இறே இவை –அர்த்திகளைக் கண்டால் அலருமவை இறே
இந்தத் தாமரைப் பூ –அலரவும் மாட்டாதே மொட்டிக்கவும் மாட்டாதே திருக் கண்கள் இருந்த படிக்கு
த்ருஷ்டாந்தம் சொல்லுகிறார்கள் –ஸ்வாதந்தர்யம் செம்பிளிப்பியா நின்றது – நப்பின்னை பிராட்டையோட்டை ஸ்பர்சம் அலரப் பண்ணா நின்றது –இத் தலையில் அபராதம் மொட்டிக்கப் பண்ணும்
அவனுடைய அபராத சஹத்வம் அலரப் பண்ணும் –கர்ம பாரதந்தர்யம் மொட்டிக்க பண்ணும்
ஆஸ்ரித பாரதந்தர்யம் அலரப் பண்ணும்-காலத்தின் இளமை மொட்டிக்கப் பண்ணா நின்றது
ஆர்த்த த்வனி விகசிக்கப் பண்ணா நின்றது –ஆதித்யனைக் கண்டால் அலரக் கடவ தாமரைப் பூ போலே இவர்கள் ஆற்றாமை கண்டால் அலருமவை யாயிற்றுஇழவு பேறுகள்-அத்தலையிலேயாய் இருக்கிற படிகாலத்தின் இளமை மொட்டிக்கப் பண்ணி பெண்கள் ஆற்றாமை அலரப் பண்ணுகிற படி
பெண்காள் நம்மைக் கிட்டுகையாலே எல்லாம் சபலமாயிற்றோ என்ன – விசேஷ கடாக்ஷம் பண்ணி அருளீர்தத்ர கோவிந்த ஆஸீனம் பிரசன்ன ஆதித்ய வர்ச்சசம் -உத்யோக பர்வதம் –90(ஆற்றாமை வெப்பம் போக்க ஆஹ்லாத கரம் -சந்திரன் – சேஷத்வம் அறிந்து முமுஷுவான பின்பும் அந்தகாரம் போக்க ஆதித்யன் குளிர்ந்த வெப்பம் உடைய கிருஷ்ணனை குரு வம்சம் -அனுகூலர்களுக்கு பிரசன்னம் -பிரதிகூலர்களுக்கு வெப்பம் )


6-வித்தகன்‌ வேங்கடவாணன்‌ உன்னை விளிக்கின்ற” _-1-4-3-
வித்தகன்‌ வேங்கடவாணன்‌ என்னும்‌*-விளக்கினில்‌ புக என்னை விதிக்கிற்றியே-1-3-

சுற்றும் ஒளி வட்டம் சூழ்ந்து சோதி  பரந்து எங்கும்-
எத்தனை செய்யிலும் என் மகன் முகம் நேர் ஒவ்வாய்
வித்தகன் வேம்கடம் வாணன் உன்னை விளிக்கின்ற
கைத் தலம் நோவாமே அம்புலீ கடிது ஓடி வா -1 4-3 –அழகாலும் குண சேஷ்டிதங்களாலும் -விஸ்மயநீயனாய் – துர்மாநிகளான- உன் போல்வாரை அநாதரித்து- கானமும் வானரமும் ஆனவற்றை ஆதரித்து கொண்டு திருமலையில் வர்த்திக்கிறவன்-(ஸ்ரீ வைகுண்ட விரக்தாய ) உன்னை ஆதரித்து அழைக்கிற திருக் கைத் தலம் நோவாதபடியாக அம்புலீ -விரைந்து ஓடி வா –வாணன்– வாழ் நன்

மத்த நன்னறு மலர் முருக்க மலர் கொண்டு முப்போது முன்னடி வணங்கி
தத்துவமிலி என்று நெஞ்செரிந்து வாசகத்தழித்து உன்னை வைதிடாமே
கொத்தலர் பூங்கணை தொடுத்துக் கொண்டு கோவிந்தன் என்பதோர் பேரெழுதி
வித்தகன் வேங்கட வாணன் என்னும் விளக்கினில் புக வென்னை விதிக்கிற்றியே–1-3-பரம பதத்தில் நித்ய ஸூரிகள் ஓலக்கம் கொடுக்க இருக்க கடவ -அவன் அவ்விருப்பை விட்டு- கானமும் வானரமும் வேடரும் -நான் முகன் -47- ஓலக்கம் கொடுக்கத் திருமலையிலே வந்து நிற்கிற விஸ்மய நீயன் –
மிகு மதத்தேன் விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே கண்டு வணங்கும் களிறு -மூன்றாம் திரு -70-என்றும் –வைப்பன் மணி விளக்கா மா மதியை மாலுக்கு -நான்முகன் -46-என்று எப்பொழுதும் கை நீட்டும் யானையை -என்றும் திரு விளக்கு இடுவதும் -திரு வாராதனம் பண்ணுவனவும் இவை இறே –சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி விண்ணோர்கள் நன்னீராட்டி அந்தூபம் தரா நிற்கவே அங்கு -திருவிருத்தம் -21- அதில் காட்டில் இது போக்யமாய் இறே இங்கு வந்து அவன் நிற்கிறது-வேங்கட வாணன் -என்னும் விளக்கினில் புக வென்னை விதிக்கிற்றியே– பரம பதத்தில் ஸ்வரூபம் மைத்துப் போலே இருப்பது – திருமலையிலே வந்து நின்ற பின்பாய்த்து- ஸ்வரூப குணங்களுக்கு பிரகாசம் உண்டாய்த்து – குன்றத்தில் இட்ட விளக்காய்த்தே –வேடார் திருவேங்கடம் மேய விளக்கு -பெரிய திரு -4-7-5-இறே – திருமலையிலே பொருந்தின பின்பு உஜ்ஜ்வலனாய்த்து
அந்த விளக்கில் புகும்படி என்னை நியமிக்க வேணும் என்கிறாள் –

மைத்தடங்கண்ணி யசோதை தன்‌ மகனுக்கு? மைத்தடங்கண்ணி –1-4-10- யசோதைக்கு அடைமொழி
மைத்தடங்கண்ணினாய்‌ நீ உன்‌ மணாளனை” –19-மைத்தடங்கண்ணி – நப்பின்னைப்‌ பிராட்டிக்கு அடைமொழி-

மைத் தடம் கண்ணி யசோதை தன் மகனுக்கு இவை-
ஒத்தன சொல்லி உரைத்த மாற்றம் ஒளி புத்தூர்
வித்தகன் விட்டு சித்தன் விரித்த தமிழ் இவை
எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு இடரில்லையே -1-4 10-கருத்து பெருத்து இருந்துள்ள கண்ணை உடையளான யசோதை – அஞ்சனத்தாலே அலங்க்ருதமாய் பரந்துள்ள கண்ணை உடையவள் என்னுதல்-அஞ்சன வண்ணனான இவனை அநவரதம் பார்த்து கொண்டு இருக்கையாலே
இவனுடைய திருமேனி நிறம் ஊறி -அத்தாலே மைத்து –இவன் பக்கல் ஸ்நேகத்தாலே விகசிதமான கண்ணை உடையவள்
என்னுதல் –(மையார் கண்ணி -யமுனா நதி கறுமை -கிருஷ்ண துளஸீ கறுமை –
இவற்றுக்கும் அந்யோன்யம் இவனுக்கும் உண்டே )

குத்து விளக்கு எரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத் தடங்கண்ணினாய் நீ யுன் மணாளனை
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனை ஏலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்-19-மைத் தடங்கண்ணினாய் –சுத்த சத்வம் ஆகிற அஞ்சனத்தை உடைத்தாகையாலே-விஸ்ருங்கலமான ஸ்வரூப யாதாம்ய ஜ்ஞானம் உடையவளே –இவன் மறுமாற்றம் சொல்லப் புக –நம்மை ஒழிய தாங்களே எழுப்புவதே என்று கண்ணாலே வாய் வாய் என்று வாயை நெரித்தாள் –இவன் வாய் திறக்கப் போக -இவர்கள் நம்மை ஒழிய இவனை எழுப்புவதே என்று அவனைக் கண்ணாலே வாய் வாய் என்ன பேசாதே கிடந்தான் ஆக் யாதி ஹ்ருதயம் ஹ்ருதா(உள்ளமும் உள்ளமும் பேசிக்கொள்ளுமே )-நாம் ஆரோனையும் இன்னாதாகிறது என் – நம் பரிகரம் நமக்கு உதவுகிறது இல்லை -என்கிறார்கள் – இவள் விலக்க வேணுமோ -இக் கண் உண்டாக அமையாதோ – அழகாலும் பரப்பாலும் கண்ணிலே அகப்பட்டவன் அக்கடலை கரை கண்டால் இறே நம்மைப் பார்ப்பது-மை இட்டு எழுதோம் -என்று இருக்கிற எங்களையும் மை இடப் பண்ணினால் அன்றோ நீ கண்ணுக்கு மை இடுவது – உன்னுடைய கண்ணில் அழகும் பெருமையும் எங்கள் பேற்றுக்கு உடல் என்று இருந்தோம் – அது இழவுக்கு உடலாவதே –நீ யுன் மணாளனை-மைத்தடம் கண்ணினாய்- உன்னுடைய கண்ணில் புகரும் பெருமையும் எங்கள் பேற்றுக்கு உடல் என்று இருந்தோம் –அது இழவுக்கு உடலாவதேஇக் கடலைக் கரை கண்டால் இறே நம் அநீதியை அவன் பார்ப்பதுஅல்லி மலர் மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் -(3-10-8) மண நோக்கம் உண்டான்(பெரிய திருமொழி -8-10) ந ஜீவேயம் க்ஷணம் அபி –என்னப் பண்ணுமவை இறேமையிட்டு எழுதோம் என்றவர்களையும் உன்படி ஆக்க வேண்டாவோ
உன்னாலே அவனைப் பெறுகை தவிர்ந்து இப்போது மற்றப்படி செய்கை யாய்த்தோ

கஞ்சன்‌ புணர்பினில்‌ வந்த கடிய சகடம்‌ உதைத்து -2-4-4-
கள்ளச்‌ சகடம்‌ கலக்கழியக் காலோச்சி”்‌–6-

கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து
வஞ்சகப் பேய் மகள் துஞ்ச வாய் முலை வைத்த பிரானே
மஞ்சளும் செங்கழு நீரின் வாசிகையும் நாறு சாந்தும்
அஞ்சனமும் கொண்டு வைத்தேன் அழகனே நீராட வாராய் -2 4-4 – கம்ச ப்ரேரிதனாய் வந்த அதி க்ரூரரான சகடாசுரனை –முலை வரவு தாழ்த்தி சீறி நிமிர்த்த திருவடிகளாலே கலக்கு அழியும்படியாக உதைத்து–

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்–6-கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி – பேயாகில் ஆராய்ந்து கொள்ளலாம்- தாயே ரஷையாக வைத்த சகடம் – அசூர ஆவேசத்தால் பிறந்த அபாயம் ஆகையாலே -கள்ளச் சகடம் -என்கிறது –சகடமானது கலக்கழியும் படி திருவடிகளை ஓச்சி -முலை வரவு தாழ்ந்தது என்று- மூரி நிமிர்த்த திருவடிகள் பட்டு முறிந்தது –இப்பொழுது இவ்வபதானங்கள் சொல்லுகிறது- பிறந்த அபாயங்கள் கேட்டு துணுக என்று எழுந்து இருக்கைக்காக-கள்ளச் சகடம்
கிருத்ரிம சகடம் ஆனதுகலக்கழிய காலோச்சிகட்டு அழிந்து சிதறும்படியாக திருவடிகளை நிமிர்த்து(இங்கும் கள்ளச் சகடம் வெளியில் உள்ளார் வார்த்தை –கலக்கழிய காலோச்சி உள்ளே இருப்பவள் வார்த்தை )காவலாக வைத்த சகடம் அஸூரா வேசத்தாலே தன் மேலே ஊரப் புக அது கட்டு அழிந்து
சிதறும் படியாக திருவடிகளாலே உதைத்து( திருக் கால் ஆண்ட பெருமான் -ஊர்ந்த சகடத்தை உதைத்த பாதத்தான்-ப்ரேமத்தாலே பயப்படுகைக்கு உடலாய் அச்சம் கெடுகைக்கும் உடலாய் இருக்கும்
பாதத்தன் -இவன் முஃயத்தாலே உறங்கத் திருவடிகளாலே பெற்றோம் -(திண் கழல் இறே )
அவனுடைய ஆபத்துக்கும் சேஷ பூதனுடைய ஆபத்துக்கும் ரக்ஷகமான திருவடிகள் – திருக் காலாண்ட பெருமான் (6-9-) ராமாவதாரத்துக்கு இளைய பெருமாளைப் போலகள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி
காம குரோதங்களையும் நிவர்ப்பித்து

பேயின்‌ முலையுண்ட பிள்ளை இவன்‌ முன்னம்‌?-2-5-2-
பேய்முலை நஞ்சுண்டு -6-

பேயின் முலை உண்ட பிள்ளை இவன் முன்னம்
மாயச் சகடும்  மருதும் இறுத்தவன்
காயா மலர் வண்ணன் கண்ணன் கரும் குழல்
தூயதாக வந்து குழல் வாராய் அக்காக்காய்
தூ மணி வண்ணன் குழல் வாராய் அக்காக்காய் -2 5-2 – முன்னம் தாய் வடிவு கொண்டு வந்த பூதனை உடைய முலையை – தாய் முலை உண்ணுமா போலே இருந்து உண்ட முக்தன் இவன் – இவனுக்கு பிள்ளைத் தனத்தில் புரை( குறை ) இல்லை யாகில் -அவள் முடிந்த படி என் என்னில் – பிரதி கூலித்து கிட்டினார் முடிய கடவ வஸ்து ஸ்வாபத்தாலே முடிந்த இத்தனை –

பேய் முலை நஞ்சுண்டு – பெற்ற தாயும் உதவாத தனிமையிலே பாதிக்க வந்த பூதனையை முடித்து-
இத்தலையை முடிக்க வந்தவள் தன்னோடே போம்படி பண்ணி –போது விடிந்தது பெண்ணே எழுந்திரு என்ன இவள் துணுக் என்று புறப்படுகைக்காகபுகுந்த அபாயம் கேட்டிலையோபெரியாழ்வாரோடு குடல் துவக்குடையார்க்கு உறங்க விரகு உண்டோ -என்கிறார்கள்(பேய் முலை நஞ்சு இது வெளியில் உள்ளார் வார்த்தை – உண்டு-இது உள்ளே இருப்பவள் வார்த்தை )சர்வேஸ்வரனை துக்க நிவர்த்தகன் என்று இருப்பார் அல்லாதார் இறே -பெரியாழ்வார் சம்பந்திகள்அங்குத்தைக்கு என் புகுகிறதோ என்று வயிறு பிடிக்குமவர்கள் இறேஅவள் பய நிவ்ருத்தி அளவும் அனுசந்தித்து பயம் கெட்டுக் கிடக்கிறாள்பேய் உண்டு -பிரகிருதிமுலை உண்டு -அஹங்கார மமகாரங்கள்நஞ்சுண்டு -அவைகள் ஆகிற விஷம்
உண்டு -அனுபவித்து –அதாவதுபிரகிருதி சம்பந்த நிபந்தமாய் சேதனருக்கு வரும் அஹங்கார மமகாரங்களைப் போக்கி -என்றபடி –பேய் பால் உண்டான் என்று அனுசந்திக்க தாய் பால் குடிக்க பிறக்க வேண்டாமே-

பொறுத்திட்டு எதிர்வந்த புள்ளின்‌ வாய் கீண்டான்‌’ -2-6-3-
புள்ளின்‌ வாய்‌ கீண்டானை’ -13-

கறுத்து எதிரிட்டு நின்ற கஞ்சனை கொன்றான்
பொறுத்திட்டு எதிர் வந்த புள்ளின் வாய் கீண்டான்
நெறித்த குழல்களை நீங்க முன்னோடி
சிறுக்கன்று மேய்ப்பாற்க்கு ஓர் கோல் கொண்டு வா
தேவ பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா – 2-6-3-வருகிற போதை வேகத்தை பொறுத்து நின்று தன்னை நலிவதாக எதிரே  வந்த பகாசுரனுடைய வாயை கிழித்தவன்

புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்
பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுப்
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளந் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்பள்ளத்தில் மேயும் பறவை யுருக் கொண்ட கள்ள அசுரன் (பெரியாழ்வார் 2-5-4 )- கள்ளச் சகடம் -என்னுமா போலே – மேய்க்கிற கொக்கிலே அசுரன் ஆவேசித்து நலியப் புகுந்தான் – பொதுக்கோ -என்று கீண்ட சடக்கைச் சொல்கிறது –இது இவர்களுக்கு ராவண வதம் பண்ணின படி –இத் தலைக்கு அனுமதி இறே வேண்டுவது –விரோதியைப் போக்கி தன்னைக் கொடுக்கை இறே அவன் பணி –இவனுடைய அனுமதியும் அவனுடைய ரக்ஷகத்வமும் ஸ்வரூபத்தில் புகும் அத்தனை(காக்கும் இயல்பினன் இயல்பு -ஸ்வரூபம் தானே -பிரபாவம் அல்ல
அனுமதியும் நமக்கு ஸ்வரூபம் ) கர்ம ஞானங்களை சஹகாரியாகக் கொண்டு பக்தி உபாயம் என்று இருக்குமவர்கள் அன்று இறே இவர்கள் – தன்னுடைய அஞ்ஞான அசக்திகளையும்- அவனுடைய ஞான சக்த்யாதிகளையும் சஹகாரியாய்க் கொண்டு அவனே உபாயம் என்று இருக்குமவர்கள் அன்றோ இவர்கள் –புள்ளின் வாய் கீண்டானை –ஸ்வ ஆஸ்ரிதருக்கு ஸ்வ அனுபவ விரோதியான காமாதி தோஷ நிவர்தகனாய்

புண்ணில்‌ புளிப்பெய்தாலொக்கும்‌ தீமை” -2-9-1-
புண்ணில்‌ புளிப்பெய்தால் போலப்‌ புறம்‌ நின்று அழகு பேசாதே” –13-1-

வெண்ணெய் விழுங்கி வெரும்கலத்தை வெற்ப்பிடை இட்டதன் ஓசை கேட்கும்
கண்ண பிரான் கற்ற கல்வி தன்னை காக்கிலோம் உன் மகனைக் காவாய்
புண்ணில் புளி பெய்தால் ஒக்கும் தீமை புரை புரையா இவை செய்ய வல்ல
அண்ணற்கு அண்ணான்  மகனைப் பெற்ற வசோதை நங்காய் உன் மகனைக் கூவாய் -2 9-1 –புண்ணிலே புளியை குறந்திட்டால் கரிக்குமா போலே துஸ்ஸகமான தீமைகளை செய்யா நின்றால் எங்கனே பொறுப்பது -நீங்கள் ஓரகத்தில் உள்ளார் அன்றோ இப்படி சொல்லுகிறிகோள்-உங்கள் ஓரகத்திலும் இப்படி நின்று இவன் தீம்புகளை செய்கிறான் ஆகாதே என்ன –-எங்கள் அகம் ஒன்றிலும் அன்று –அகம் தோறும் இப்படி இருந்துள்ள தீமைகளை செய்ய வல்லவன் காண் இவன் என்கிறார்கள் –
புரையாவது -க்ரஹம்–வீப்சையால் அகம் தோறும் என்றபடி –-ஆல்-அசைஅண்ணல் கண்ணான் –
அண்ணல் என்றது ஸ்வாமி வாசகம்
-அண்ணல் கண்ணான் என்றது ஸ்வாமித்வ ஸூசுகமான கண்ணை உடையவன் என்றபடி –-இத்தால் இவ்விடத்தில் ஸ்வாமி என்றது –-க்ரித்ரிமர்க்கு தலைவன் என்றபடியாய்-இதுக்கு பிரகாசமான கண்ணை உடையவன் என்றது ஆய்த்து –அன்றிக்கே –-அண்ணற்கு என்றது  அண்ணனுக்கு என்றபடியாய்-அண்ணான் என்றது -அண்ணியன் ஆகாதவன் என்றபடியாய்-இப்படி தீம்புகளை செய்கையாலே-தன்னம்பி நம்பியும் இங்கு வளர்ந்தது அவனிவை செய்து அறியான் (10-7)-என்கிறபடியே-சாதுவாய் திரியும் நம்பி மூத்த பிரானுக்கும் தனக்கும் ஒரு சேர்த்தி இல்லாதவன் என்னவுமாம் –

கண்ணன் என்னும் கரும் தெய்வம் காட்சிப் பழகிக் கிடப்பேனை
புண்ணில் புளிப் பெய்தால் போலப் புற நின்று அழகு பேசாதே
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக
வண்ண வாடை கொண்டு என்னை வாட்டம் என்னை வாட்டம் தணிய வீசீரே–13-1-புண்ணின் விவரத்திலே துளையிலே -புளியைப் பிரவேசிப்பித்தால் போலே-புறம் நின்று – வாசலுக்கு புறம்பு ஓன்று சொல்லாதே கொள்ளுங்கோள்-என்கிறாள் அல்லள்-என்னையும் அவனையும் சேர்க்கும் கூற்றிலே –-இதுவே அகம் –-நின்று வார்த்தை சொல்லுமது ஒழிய- மீட்கும் கூற்றிலே நின்று –புறம் நின்று -வார்த்தை சொல்லாதே-என்னையும் அவனோடு சேர்க்கைக்கு ஈடான வார்த்தை சொல்லுகை அன்றிக்கே-எனக்கு அவன் பக்கல் பிராவண்யத்தை குலைக்கு ஈடான வார்த்தை சொல்லாதே-அழகு சொல்லாதே –இப்போது மீட்கப் பார்க்கிறவர்கள் அவனுடைய சௌந்தர்யத்தைச் சொல்லுகிறார்கள் அன்றே–அவனிடம் ஈடுபாட்டைத் தவிர்ந்து மேல் வரும் நன்மைகளைப் பாராய் -என்று சொல்லாதீர்கள் -என்ற படி–இப்போது இவாற்றாமையைப் பரிஹரித்தால் –-மேல் வரும் நன்மைகளைப் பாராய் என்று அவற்றைச் சொல்லா நில்லாதே –அழகு -நன்மைபேசாதே-இது சப்த மாத்ரமாய் அர்த்த ஸ்பர்சி அன்று –காதிலே தான் விழும் நெஞ்சில் படாது என்றபடி – நீங்கள் இதில் படும் நேர்த்தியை -ஸ்ரமத்தை -செயலிலே நேரப் பாருங்கோள்-பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் –
உங்கள் இரண்டு தலைக்கும் ஒத்த உகப்புக்கு நாங்கள் சில யத்னம் பண்ணும் படி இருந்ததோ -என்ன
உகப்பு ஒத்தாலும் ஆணும் பெண்ணும் என்கிற வாசி இல்லையோ – முலை எழுந்தார் படி மோவாய் எழுந்தார்க்குத் தெரியாது இறே -என்று பட்டர் –அருளிச் செய்தாராக பிரசித்தம் இறே-சாந்தீபிநி சிஷ்யனை இறே -பிறர் மிடி -அறியான் என்கிறது பிராப்ய த்வரையால்-பெருமாள் —துஷ்கரம் க்ருதவான் ஹீ நோ யத நயா பிரபு -சுந்தர -15-53-என்கிறபடியே-பிரிந்த போது கண்ணன் பெருமானாய் இருந்தான் -என்றபடி –

வங்கம்‌ விட்டுலவும்‌ கடற்பள்ளி மாயனை”?-4-5-6-
வங்கக்‌ கடல்கடைந்த மாதவனை-30-

அங்கம் விட்டு அவை ஐந்தும் அகற்றி ஆவி மூக்கினில் சோதித்த பின்னை 
சங்கம் விட்டவர் கையை மறித்து பையவே தலை சாய்ப்பதன் முன் 
வங்கம் விட்டு வுலவும்  கடல் பள்ளி மாயனை மது சூதனை மார்பில் தங்க விட்டு வைத்து 
ஆவதோர் கருமம் சாதிப்பார்க்கு என்றும் சாதிக்கலாமே -4 -5-6 –மரக்கலம் உலவா நின்றுள்ள -கடலில் கண் வளர்ந்து அருளுகிற -ஆச்சர்ய பூதனை –அன்றிக்கே –மாயனை -என்றது -ஞானமாய் –தன் இச்சையால் கண் வளர்ந்து அருளுகிறவன்-என்றபடி –குரை கடல் மேல் அரவணை மேல் குல வரை போல் பள்ளி கொண்டு -என்னக் கடவது இறே –மது சூதனை- மதுவை நிரசித்தால் போலே ஆஸ்ரித விரோதியைப் போக்குமவனே  வெள்ளை நீர் வெள்ளத்து அணைந்த அரவணை மேல்  துள்ளு நீர் மெள்ள துயின்ற பெருமானே  வள்ளலே உன் தமர்க்கு என்றும் நமன் தமர் கள்ளர் போல் ( 8-10 )-என்னக் கடவது இறே 

வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கு அப்பறை கொண்ட வாற்றை யணி புதுவை
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்–30-கடல் கடையா நிற்க மரக்கலம் அலையாதபடி-கடைந்த நொய்ப்பம் –கடைந்த போது சுழன்று வருகையாலே கடலடைய மரக்கலமாய் நின்றபடி -என்றுமாம் – பிரயோஜனாந்த பரருக்கும் உடம்பு நோவ கடல் கடைந்து அபேஷித சம்விதானம் பண்ணும் சீலவான் என்கை –கிருஷ்ணனை யாகில் கவி பாடிற்றுஷீராப்தி மதனம் பண்ணினவனை சொல்லுகை பின்னம் சேருமோ என்னில் –விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுதம் உண்ட எம்பெருமானே -என்றுதேவ கார்யம் என்று ஒரு வியாஜ்யத்தை இட்டுபெரிய பிராட்டியார் ஆகிற பெண் அமுதத்தை பெறுகைக்காக கடல் கடைந்தபடி –ஊரார் கார்யத்தை ஒரு வ்யாஜ்யமாக்கி
பெண்களைப் பெறுகைக்காக நோன்பிலே அன்வயிப்பித்த கிருஷ்ணன் உடைய ஸ்வ பாவத்தோடு சத்ருசமாய் இருக்கையாலே சொல்லுகிறார்கள் –தேவ கார்யம் என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு
பெரிய பிராட்டியார் ஆகிற பெண்ணமுதைப் பெற்று அப்போது உகப்போடே இருந்தால் போலே
ஊரார் காரியத்தை வியாஜ்யமாக்கி- பெண்களைப் பெற்ற ஹர்ஷத்தோடே கிருஷ்ணன் இருக்கிற இருப்பைக் கண்டவாறேஅன்யார்த்தமான செயலில் அபிமதம் இவனுக்கு இன்றாக வருகிறதோ என்கிறார்கள் –பாற் கடலைக் கடைந்து பிராட்டியைப் பெற்றால் போலேஇங்குத் தயிர் கடைய என்று ஒரு வியாஜ்யமாய்கன்னிகைகளைப் பெறக் கடவனாய் இறே இருப்பதுபாற் கடலில் பையத் துயின்ற (2)-என்று ஷீரார்ணவ சயனத்தைத் தொடங்கி அதனுடைய மதனத்தைச் சொல்லி நிகமிக்கிறார்கள் –
அதில் கிடந்து முன் கடைந்த -(திருச்சந்த )ஆஸ்ரயணீய தத்வம் ஸ்ரீ லஷ்மீ நாதமாய் இருக்கும் -என்கை –
தாய் முன்பு பிதாவுக்கு பிரஜை செய்த குற்றம் பொறுக்க வேண்டுமா போலே ஆத்மாவின் குற்றம் பொறுக்கைக்குப் புருஷகாரம் என்கைஅவள் சந்நிதியில் குற்றம் மிக்க காகம் பிழைத்தது
அவள் சந்நிதி இல்லாமை அத்தனை குற்றம் இன்றிக்கே இருக்கச் செய்தே ராவணன் தலை-அறுப்புண்டான்

மானிட சாதியில்‌ தோன்றிற்று ஒர்‌ மானிட சாதியை.”–மானிட சாதியின்‌ பேரிட்டால்‌ மறுமைக்கில்லை?! -4-6-4-
மானிடவர்க்கென்று பேச்சுப்‌ படில்‌ வாழகில்லேன் -1-5-

மானிட சாதியில் தோன்றிற்று ஓர் மானிட சாதியை 
மானிட சாதியின் பேரிட்டால் மறுமைக்கு இல்லை
 
வானுடை மாதவா கோவிந்தா என்று அழைத்தக்கால் 
நானுடை நாரணன் நம் அன்னை நரகம் புகாள் – 4-6- 4-மனுஷ்ய ஜாதியில் உத்பன்னமான தொரு மனுஷ்ய ஜந்துவை  -ஆத்மா கர்ம அனுகுணமாக தேவாதி யோனிகள் தோறும் பிறக்கக் கடவன் ஆகையாலே -புண்ய பாபங்கள் இரண்டையும் அனுபவிக்கைக்கும்  ஆர்ஜிக்கைக்கும் -உறுப்பாக ஆய்த்து -மனுஷ்ய யோனியில் பிறந்தது – ஆகையால் இப்படி இருக்கிற மனுஷ்ய ஜாதியிலே உத்பன்னமானதொரு ஜந்துவை  -த்ருஷ்ட பிரயோஜனத்தை நச்சி -கர்ம வச்யமான மனுஷ்ய ஜாதியில் ஒன்றின்  பேர் இட்டால் ஐஹிகத்தில் சில பிரயோஜனம் சித்திக்கிலும் மறுமைக்கு  ஒரு பிரயோஜனம் இல்லை -மறுமை யாவது அத்ருஷ்டம் 

வானிடை வாழும் அவ் வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்த வவி
கானிடைத் திரிவதோர் நரி புகுந்து கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப
ஊனிடை யாழி சங்கு உத்தமர்க்கு என்று உன்னித் தெழுந்த என் தட முலைகள்
மானிடர்வர்க்கு என்று பேச்சுப் படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே –1-5–நானும் அறியாது இருக்க –அவனும் அறியாது இருக்க –மனுஷ்யம் மாத்ரமாய் இருப்பாருக்கு என்று நாட்டிலே இங்கனே ஒரு சப்தம் பரிமாறும் ஆகில்- அது என் காதில் விழா விடிலும் – எனக்கு சத்தை இல்லை கிடாய் –என்கிறாள்
பிறருக்காய் இருக்கும் இருப்பு -சத்த்யா பாதகமாய் இருந்த படி —உனக்கே நாம் ஆட்செய்வோம் –என்ற உறுதி உள்ள இவளுக்கு –ராவணன் மாயா சிரசைக் காட்டின போது இதர ஸ்திரீகளோ பாதி தரித்து இருந்ததுக்கு கருத்து என் -என்று ஜீயரைக் கேட்க – இவளுடைய சத்தைக்கு ஹேது பெருமாள் சத்தை யாய்த்து – அதற்கு தைவம் அறிய ஒரு குறை இல்லாமையாலே தரித்து இருந்தாள்-
இவள் சத்தைக்கு ஹேது பிரதிபத்தி அபிரதிபத்திகள் இல்லை அத்தலையில் சத்தை யாய்த்து -என்று அருளி செய்வர் –

செப்போது மென்முலையார்கள்‌ சிறுசோறும்‌ இல்லும்‌ சிதைத்திட்டு -2-8-3-
நாமமாயிரமேத்த நின்ற நாராயணா! நரனே?“ 2-1-என்று கண்ணனைத்‌ தாங்கள்‌ இழைத்த சிற்றிலைச்‌ சிதைக்க வேண்டாம்‌ என்று ஒரு பதிகத்தையே(2பதிகம் )அமைத்துள்ளார்

செப்போது மென் முலையார்கள் சிறு சோறும்  இல்லும் சிதைத்திட்டு
அப்போது நான் உரப்பப் போய் அடிசிலும் உண்டிலை ஆள்வாய்
முப்போதும் வானவர் ஏத்தும் முனிவர்கள் வெள்ளறை நின்றாய்
இப்போது நான் ஒன்றும் செய்யேன் எம்பிரான் காப்பிட வாராய் 2-8 -3-செப்பு என்று சொல்லும்படியான  சந்நிவேசத்தை உடைத்தாய் -அது போலே கடினமாய் இருக்கை அன்றிகே மிருதுவாய் இருக்கும் முலையை உடையவர்களுடைய லீலார்த்தமாக மணல் கொழித்து சமைத்த சிறு சோற்றையும்
கொட்டகத்தையும் அழித்திட்டு பெண்களோடே கை பிணக்கிட்டு திரிய வேண்டா காண் -என்று
அப்போது நான் கோபித்தவாறே- நான் பிடிக்குதல் அடிக்குதல் செய்யப் போகிறேன் என்று
என் முன் நிற்க அஞ்சி போய் உனக்கு இனிதாக சமைத்து வைத்த அடிசிலும் அமுது செய்திலை–

நமக்கு அசாதாரணைகளாய் இருக்கும் இவர்கள் தேவதாந்த்ரங்களின் காலில் விழப் பார்த்து இருக்கை நமக்கு மிகவும் பொல்லாங்கு என்று திரு உள்ளம் நொந்து தளும்பி முன் மடுவின் கரையிலே யானைக்கு உதவினால் போலே கடுக வந்து ஆய்ச்சிகட்கு முகம் காட்ட-அவர்களும் இவனை காணாதவர்கள் போலே அந்ய பரரையாய் இருக்கையைக் காட்டி சிற்றில் இழைக்க அந்த செயலும் காமாஸ்ரயணம் போலே இவனுக்கு அநிஷ்டம் ஆதலால் அவர்கள் இழைக்கும் சிற்றிலை இவன் அழிப்பதாக முயற்சி செய்ய-அவர்கள் அதுவும் வேண்டா என்ன இவன் வேணும் என்ன இப்படி நடுவே ஒரு மகா பாரதம் நடந்தது–பிறகு புணர்ச்சி நேர்ந்து அது தானும் பிரிவிலே தலைக் கட்டி நின்ற வாற்றை
ஆண்டாள் அனுகரித்து அருளிச் செய்யும் திரு மொழி இது–ஒன்பதாம் பாட்டில் -எம்மைப் பற்றி மெய்ப்பிணக்கு இட்டக்கால் -என்பதால் புணர்ச்சி நேர்ந்த படி தோற்றும்-கோழி அழைப்பதன் முன்னம் -அடுத்த திருமொழியில் அமைக்கு நோக்கும் இடத்து பிரிவில் தலைக் கட்டினபடி தோற்றும்-

தீமை செய்யும் சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேலே–2-1-நான் உங்களை நெஞ்சாலும் நினைக்காமல் இருக்க என்னை எதிர் பார்த்து நீங்கள் சிற்றில் இழைக்க – உனக்காக சிற்றில் இழைக்க வில்லை- காமன் போதரு காலம் என்று பங்குனி நாள் கடை பாரித்தோம்-காம தேவன் வீதி வலம் வரக் கூடும் என்று சொல்ல-நீங்கள் சிற்றில் இளைப்பது அந்ய அர்த்தமாகில் அதனை நான் அழிப்பதும் அந்ய அர்த்தம் தான் என்று அளிக்கப் புக ஆய்சிகள் அழிக்க வேண்டா என்று விலக்குகிறார்கள்

“இன்றுமுற்று முதுகு நோவ –2-2-என்பதற்குக் கருத்து எங்கள் முதுகை நோவு தீரச்சற்றுப் பிடிக்கலாகாதோ? என்பதாம்.-இச் சிற்றிலை இழைக்கப் பட்ட பாடு பன்னி உரைக்கும் கால் பாரதமாம் –
முதுகு நோவ தீர சற்று பிடிக்கல் ஆகாதோ-

வண்டல் நுண் மணல் தெள்ளி யாம் வளைக் கைகளால் சிரமப் பட்டோம்
தெண் திரைக் கடல் பள்ளியாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே
—2-3-

செய்ய தாமரைக் கண்ணினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே–2-4-பேச்சும் செய்கையும்
தாழ்ந்த வார்த்தைகளும் தாழ்ந்த வியாபாரங்களும் பிரானே எங்கள் திறத்திலே அடியேன் குடியேன் என்றால் போலே சொல்லும் அதி விநய வார்த்தைகளும் கள்ளக் குழைச்சல்களும் எங்களை மிகவும் மயக்குகின்றனவே இதற்கு எல்லாம் அடி உன் திருமுக மண்டலம் இறே-இப்படிப் பட்ட மயக்கத்தை உண்டு பண்ணுகைக்கு உன் திருமுகம் அம்மான் பொடியோ-

நாங்கள் இளைத்த கோலம் அழித்தி யாகிலும் உன்தன் மேல்
உள்ளம் ஓடி உருகல் அல்லால் உரோடம் ஓன்று இலோம் கண்டாய்-
-2-5-நாங்கள் இளைத்த இக் கோலத்தை அழித்தாயேஆகிலும் சர்வ ஸ்மாத் பரனானவன் இப்படி எல்லாம் செய்யப் பெறுவதே
ஈது என்ன சௌசீல்யம் என்று நெஞ்சு உருகிப் போம் இத்தனை ஒழிய ரோஷம் என்று பேர் இடும்படி ஒரு விகாரம் பெற்றோம் ஆகோம்-
ஆகிலும் உன் முகத்தில் உள்ளவை மெய்யே கண்கள் ஆகில்
நீ இந்த சிற்றிலை அழிக்க ஒருப்பட மாட்டாய்-இச் சிற்றிலை அன்புடன் நோக்குகை அன்றோ
கண் படைத்ததற்குபிரயோஜனம் என்கிறார்கள்-உரோடம் -ரோஷம்-

முற்றிலாத பிள்ளைகளோம் முலைபோந்திலாதோமை நாடொறும்
சிற்றில் மேலிட்டுக் கொண்டு நீ சிறிதுண்டு திண்ணென நாமது
கற்றிலோம்-
-2-6-சிற்றில் விஷயமாக ஒரு வியாஜ்யத்தை வைத்துக் கொண்டு நீ சிறிதுண்டு –
நீ செய்யும் செய்திகள் சில உள-திண்ணென நாமது கற்றிலோம்-அவற்றை நாங்கள் அழகியதாக அப்யசித்தோம் அல்லோம்-கண்ண பிரான் இன்னது செய்தான் என்று பிறருக்கு சொல்ல முடியாத படி சில குறும்புகளைச் செய்ய அது கண்ட ஆய்ச்சிகள் அப்பா நெஞ்சில் நினைத்தபடி சில செய்யும் அளவேயோ வேண்டுவது-எங்கள் பருவத்தை சிறிது ஆராய வேண்டாவோ-கொங்கை இன்னும் குவிந்து எழுந்து இலாத எங்கள் திறத்து நீ செய்யும் குறும்புகளுக்கு நாங்கள் அறியும்படி குருகுல வாசம் பண்ணி ஒன்றும் கற்றிலோம்

ஒதமா கடல் வண்ணா உன் மணவாட்டிமாரோடு சூழறும்
சேதுபந்தம் திருத்தினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே
——2-7-கண்ண பிரான் ஆய்ச்சிமார்களை நோக்கி சில குறும்பு வார்த்தைகளைச் சொல்லி சிற்றில் அழித்து நலிய அதுகண்ட அவர்கள் -அப்பனே
வார்த்தைகளின் வாசியை அறிய வல்லவர்கள் இடத்தில் நீ இந்த குறும்பு வார்த்தைகளைச் சொல்ல
அவர்கள் ஒன்பது சொல்ல மேன் மேலே வார்த்தைகள் பெருகி பரம ரசமாகச் செல்லும் கபடம் அற்ற
வார்த்தைகளின் கருத்தையும் அறிய மாட்டாத எங்கள் திறத்திலே அந்த பேச்சுகளைப் பேசி நலிவதனால் உனக்கு என்ன பயன் உண்டு என்று சொல்லச் செய்தேயும் அவன் மேன் மேலும் சிற்றிலை சிதைக்கப் புக நின் திருமேல் ஆணை -என்று பிராட்டி மேல் ஆணை இட்டு விலக்கப் பார்க்கிறார்கள்-

வட்ட வாய்ச் சிறு தூதையோடு சிறு சுளகும் மணலும் கொண்டு
இட்ட மாவிளையோடு வோங்களைச் சிற்றில் ஈடழித்து என் பயன்
தொட்டுதைத்து நலியேல் கண்டாய்
–2-8-கண்ணபிரான், ‘ஆய்ச்சிகாள்! இச்சிற்றிலை நான் காலாலும் கையாலும் உதைத்துச் சிதைப்பதினால் எனக்கு ஒரு பயனுமில்லை யென்பது மெய்யே உங்களைத் தீண்டுவதன்றோ எனக்குப் பிரயோஜனம்’ என்று அவர்களைத் தீண்ட-அது கண்டு ஆய்ச்சிகள், ‘ஹரி, ஹரி! நீ எத்தனை தூரிரஸ்த்ரிகளோடு கலந்துவந்தாயோ தெரியாது, எங்கள் மேல் தீண்டாதே கடக்க நில்’ என்ன’-அதுகேட்ட கண்ணன் ‘நான் ஸர்வேச்வரனல்லேனோ? என்னுடைய ஸ்பர்சம் உங்களுக்கு நலிவாய் விட்டதோ? நான் ஈச்வரனென்பதில் உங்களுக்கு ஸம்வயமுண்டாகில் என் திவ்யாயுதத்தைப் பாருங்கள்” என்று திருக்கையிற் சக்கரந் தோற்ற நின்றான்-

முற்றத்தூடு புகுந்து நின் முகம் காட்டிப் புன் முறுவல் செய்து
சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக் கடவையோ கோவிந்தா
–2-9-இவன் தனித்தனியே ஒவ்வொரு ஆய்ச்சியிடத்துஞ் சென்று,-நங்காய்! எங்ஙனே இங்கு வந்தாய்? கால்கள் நோகின்றனவோ? நானும் நீயுங் கலந்துவரப் பெற்றிலோமே!’-என்றாற்போலே சிலவற்றைச் சொல்லி முகத்தை விளங்கக்காட்டினனென்க.-அங்ஙனஞ் சொல்லக்கேட்ட ஆய்ச்சிகள் ‘நமது எண்ணம் வீணாயொழிந்ததே!’ என்று தங்கள் தோல்வியை நினைத்து லஜ்ஜிக்க, இவன் புன்முறுவல் செய்தான்.-நாம் இவனுக்குத் தோற்று வெட்கமடைகின்றமையை இவன் அறியலாகாது’ அந்யபரதையைக் காட்டுவோம்’ என்று அங்கேயிருந்து சிற்றிலிழைக்கப் புக்கார்கள்.-அதுகண்ட கண்ணபிரான் ‘இங்கே நம் கண்வட்டத்திலே இவர்கள் அந்யபரராவதென்!’ என்று சிவிட்கென்று, நினைக்கைக்கு நெஞ்சுங் கூடாதே வியாபாரிக்கைக்குக் கையுங்கூடாதபடியாகச் சிலவற்றைச் செய்தான்; (சிற்றிலோடு இத்யாதி.) உனக்குப் பசுமேய்க்கையன்றோ தொழில்; பெண்களை நலிகையும் பணியோ? என்கிறார்கள். ‘கோவிந்தா!’ என்ற விளியில் நோக்கு.–ஆவது ஆயிடுக -என்று பெண்களின் பரியட்டங்களைக் கிழித்து அவர்கள் உடம்பு கொண்டு தாய்மார் முன் நிற்க ஒண்ணாதபடி பண்ணினான் – எம்மைப் பற்றி மெய்ப் பிணக்கிட்டக்கால் இந்தப் பக்கம் நின்றவர் என்
சொல்லார் -என்கிறார்கள்-என்னோடு அணைகை உங்களுக்கு அசஹ்யமாய் இருந்ததோ
யோகிகளும் என் உடம்போடு அணைக்க ஆசைப்பட -என்ன உன்னோடு சம்ச்லேஷிக்கை எங்களுக்கு மிகவும் அழகிதே-ஆனாலும் அருகில் உள்ளார்க்கு அஞ்ச வேண்டுமே -என்றார்கள்-இத்தால் சம்ச்லேஷம் பிரவ்ருத்தமான படி சொல்லுகிறதுஆழ்வார்கள் ஆண்களாய் இருந்துவைத்து
பெண்ணுடை உடுத்து மின்னிடை மடவார் முதலிய திருவாய் மொழிகளிலே என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பி-ஒரு நான்று தடி பிணக்கே -என்றால் போல் சொல்லும் பாசுரங்கள் போல் அன்றிக்கே பெண் பிள்ளை தனக்கே அதுக்கு மேலே ஒரு மென்மை பிறந்து வார்த்தை சொல்லும் வேறுபாடு என்னே -என்று ஈடுபட்டு உருகுவாராம் நம்பிள்ளை-

சீதை வாய் அமுதம் உண்டாய் எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று
வீதிவாய் விளையாடும் ஆயர் சிறுமியர் மழலைச் சொல்லை
வேத வாய்த் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டு சித்தன் தன்
கோதை வாய்த் தமிழ் வல்லவர் குறைவின்றி வைகுந்தம் சேர்வரே
–2-10-நிகமத்தில்
இப்பதிகம் ஓத வல்லார் பெரும் பேற்றை அருளிச் செய்து தலைக் கட்டுகிறார்-சீதை வாய் அமுதம் உண்டாய் -என்ற விளிச் சொல்லும்-ஆயர் சிறுமியர் மழலைச் சொல்லை -என்பதையும் நோக்குக
பருவம் நிரம்பினவள் உடன் ரசானுபவம் பண்ணுபவன் எல்லாரும் திரளும் இடத்திலே மறைக்க வேண்டியவற்றை மறைக்கக்கூட தெரியாத தோற்றினபடி விளையாடுகிற பருவம் நிரம்பாத பெண்களுடன் போராடுகை விரூபம் என்று உணர்த்தியவாறு-

ஆற்றிலிருந்து விளையாடுவோங்களை சேற்றாலெறிந்து வளை துகில்‌ கைக் கொண்டு”–2-10-1-என்று பெரியாழ்வார்‌ உரைத்தவற்றிலிருந்து கோதை நாச்சியார்‌,
கோழியழைப்பதன்‌ முன்னம்‌ குடைந்து நீராடுவான்‌ போந்தோம்‌
ஆழியஞ்செல்வன்‌ எழுந்தான்‌ அரவணை மேல்‌ பள்ளி கொண்டாய்‌ !
ஏழையமை யாற்றவும்‌ பட்டோம்‌ இனி யென்றும்‌ பொய்கைக்கு வாரோம்‌
தோழியும்‌ நானும்‌ தொழுதோம்‌ துகிலைப்‌
பணித்தருளாயே -3-1-என்று கண்ணன்‌ கவர்ந்து கொண்ட கூறைகளைக்‌ கன்னியர்‌ கேட்பதாக ஒரு பதிகம்‌(3) பாடியுள்ளார்

ஆற்றிலிருந்து விளையாடுவோங்களை
சேற்றால் எறிந்து வளை துகில்  கைக் கொண்டு
காற்றில் கடியனாய் ஓடி அகம் புக்கு
மாற்றமும் தாரானால் இன்று முற்றும்
வளைத் திறம் பேசானால் இன்று முற்றும்  
-2 -10-1 –சிலர் எங்களது -என்று அபிமாநிக்கும் நிலத்திலே இருந்தோமோ –சர்வ சாதாரணமான ஸ்தலத்திலே அன்றோ நாங்கள் இருந்தது –இத்தால் ஏகாந்தமாய் -இவனுக்கு வந்து தீம்பு செய்ய ஒண்ணாதபடி பலரும் போவார் வருவாரான ஸ்தலத்திலே அன்றோ-நாங்கள் அந்ய பரைகள் அன்றோ – தன் இடையாட்டம் பட்டமோ – நாங்கள் முன் தீமை செய்தோம் ஆகிலுமாம் இறே-தன்னைக் கடைக் கண்ணால் கணிசித்தோமோ – தன்னை இங்கு இட்டு (இங்கிட்டு இங்கே )எண்ணினார் இல்லை கிடீர் –சேற்றை இட்டு எறிந்து – பிறர் அறியாதபடி -கைகளாலே ஸ்பர்சித்தால் ஆகாதோ-இது ஏது என்று பிறர் கண்டு கேட்கும்படி சேற்றை இட்டு எறிய வேணுமோ –நாங்கள் குளிகைக்காக கழற்றி இட்டு வைத்த வளைகளையும் துகில்களையும்  வாரிக் கொண்டு
இடைப் பென்கள் ஆகையாலே ஆபரணங்களையும் பரிவட்டங்களையும் களைந்து இட்டு வைத்து இறே குளிப்பது-துடர அகப்படாதே காற்றிலும் காட்டிலும் கடியனாக ஓடி – தன் ஜீவனத்தில் ஒன்றும் குறையாடதபடி கொண்டால் – எங்கள் ஜீவனத்தையும் கொண்டு போக வேணுமோ –
அவனுக்கு ஜீவனம் -இவர்களுடைய வளையல்களும் துகில்களும் –இவர்களுக்கு ஜீவனம் –அவன் தன்னுடைய வடிவு இறே
(திருக்கோளூர் பதிகம் -இதே போல் -தனது ஜீவனம் தேடித் போனாள் – அவள் தானே திருத்தாயாருக்கு ஜீவனம் -முகத்தை வைத்து போகலாகாதோ )-பின் தொடர்ந்து சென்றாலும் காணப் போகாதபடி தன் அகத்திலே சென்று புக்கு வழி பறித்து அசாதாரண  ஸ்தலத்திலே ஆய்த்து இருப்பது-நாங்கள் தன் பேரை சொல்லி அழைத்தாலும் -அதுக்கு ஒரு மாற்றம் தானும் சொல்லுகிறான் இல்லை –
வார்த்தையும் -ஏதேனும் வளையும் துகிலுமோ (உம்மைத்தொகை -வளை துகில் தர வில்லை –வார்த்தையும் தர வில்லை-மாற்றமும் தாராரோ -திருப்பாவை -தூ மணி மாட பாசுரம் போல் )
ஒரு வாரத்தை தன்னை ஆகிலும் தந்தால் ஆகாதோ – இப்படி  ஒரு வார்த்தையும் உட்பட சொல்லாதவனாலே இன்று முடிவோம் – ஒரு வார்த்தை பேரில் ஜீவிப்பார் போலே காணும்
-தருவன் என்னுதல் -தாரேன் என்னுதல் -வளை இடையாட்டமாக ஒன்றும் சொல்லாதவனாலே இன்று முடிவோம்

வடிவார்சோதி வலத்துறையுஞ்‌ சுடராழியும்‌ பல்லாண்டு படைபோர்‌ புக்கு முழங்கும்‌ அப்பாஞ்ச சன்னியமும்‌ பல்லாண்டே-1-
பூங்கொள்‌ திருமுகத்து மடுத்தூதிய சங்கொலியும்‌ ‘ சார்ங்கவில்‌ நாணொலியும்‌ தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ-9-9-

வடிவார் சோதி வலது உறையும் ஆழியும் பல்லாண்டு
படை போர் புக்குமுழங்கும் அப் பாஞ்ச சந்யமும் பல்லாண்டு–இச் சேர்த்திக்கு ஒரு தீங்கு வராதபடி கல் மதிள் இட்டால் போலே இருக்கிற ஆழ்வார்களைப்-பாரீர் என்ன -அவர்களோட்டை சேர்த்திக்கு என்ன தீங்கு வருகிறதோ என்று மங்களா சாசனம்-பண்ணுகிறார் –-வடிவார் சோதி – காளமேக நிபச்யாமமான திருமேனி ஸ்வ தேஜஸ் ஸாலே வ்யாப்தமாம் படியாய் இருக்கை –-புருஷம் க்ருஷ்ண பிங்களம் -என்னும் படியாய் இறே இருப்பது-தேஜோ ராசியாய் இருக்கும் வடிவை உடையவன் என்னவுமாம்-வலத் துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு –-வலம் அருகே நித்யவாசம் பண்ணுமவனாய் -பிறருக்கு அநபி பவநீயனாய் இருக்கிற ஆழ்வானோட்டை சேர்த்தி நித்தியமாய் செல்ல வேணும் என்கிறார் –
ஆழியும் -என்கிற சப்தத்தாலே -ஆயுதாகாரத்தாலே ரஷகமாகக் காட்ட -ஆபரண புத்தியாலே அவனையும் குறித்து மங்களா சாசனம் பண்ணுகிறார் என்கை –
படை போர் இத்யாதி – நம் கையை விடாதே த்வநியாலே எதிரிகளை யழிக்கும் இவனைப் பாரீர் என்ன –
படை போர் முழங்கும் –சேனையை உடையயுத்தத்திலே புக்கு முழங்கும் என்னுதல்
யுத்தத்திலே ஆயுதமாக புக்கு முழங்கும் என்னுதல்-முழங்கும் சகோஷொ  தார்த்தராஷ்டாராணாம்  ஹ்ருதயா நிவ்யதாரயத் -என்றும் – யஸ்ய நாதேன தைத்யானாம் பலஹா நிரஜாயத-என்றும் பிரதிகூலர் மண் உண்ணும்படியும் அனுகூலர் வாழும்படியாய் இறே த்வனி இருப்பது -இத் த்வனி இவருக்கு பய ஸ்தானமான படி-என் என்னில் -த்வனி வழியே நின்று இடம் காட்டிக்  என்று பயப்படுகிறார்-அப் பாஞ்ச சன்னியமும் –-முன்னிலையாய்  இருக்க பரோஷ நிர்த்தேசம் பண்ணுவான் என் என்னில் – புத்ரனை அலங்கரித்த தாய் -தன் கண் படிலும் கண் எச்சிலாம் -என்று பார்க்கக் கூசுமா போலே-மங்களா சாசனம் பண்ணுகிற தம்முடைய கண்ணையும் செறித்து முகத்தை மாற வைத்து-சொல்கிறார் அன்று யுத்தத்தில் பிறந்த ப்ரமாததுக்கு இன்று மங்களா சாசனம் பண்ணுகிறார் -என்றுமாம்-

கோங்கலரும் பொழில் மாலிரும் சோலையில் கொன்றைகள் மேல்
தூங்கு பொன் மலைகளோடு உடனே நின்று தூங்குகின்றேன்
பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலியும்
சாரங்க வில் நாண் ஒலியும் தலைப் பெய்வது எஞ்ஞான்று கொலோ
–9-9-இரண்டாவது அவதாரத்தில் பிராட்டிமார்க்கு உதவினது தனக்கு ஒருத்திக்குமே வேண்டும்படி யாய்த்து இவள் தசை-சிஸூ பாலன் ஸ்வயம் வரார்த்தமாக ஒருப்பட்ட சமயத்தில் புறச் சோலையிலே-ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஆழ்வானது கோஷமானது-வந்து செவிப்பட்டு தரிப்பித்தது-ஸ்ரீ ருக்மிணி பிராட்டியை-ராவணன் மாயா சிரசைக் காட்டின போது ஸ்ரீ சார்ங்கத்தின் ஜய கோஷமானது வந்து செவிப்பட்டு –இரண்டு அவதாரத்தில் உள்ளவையும் மடுத்து ஒலிக்க வேண்டும் படி யாய்த்து இவள் விடாய்- அவர்கள் அளவல்ல வாய்த்து இவள் ஆற்றாமை –தரிப்பித்தது ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளை

நல்ல என்‌ தோழி! நாகணையிசை நம்பரர்‌ * செல்வர்‌ பெரியர்‌ சிறுமானிடவர்‌ நாம்‌ செய்வதென்‌? வில்லிபுதுவை விட்டுசித்தர்‌ தங்கள்‌ தேவரை வல்லபரிசு வருவிப்பரேல்‌ அது காண்டுமே -10-10-

நல்ல வென் தோழீ நாகணை மிசை நம்பரர்
செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வது என்
வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே–10-10-நல்ல வென் தோழீ – என்னிலும் என் இழவுக்கு நொந்து இருப்பாய் நீயே இறே-நாகணை மிசை நம்பரர் செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வது என்-அநந்த சாயியாய் -ஸ்ரீ யபதியுமாய் -உயர்ந்தார் ஒருத்தரை இருக்கிறவரை -அதி ஷூத்ரராய் இருக்கிற நம்மால்-செய்யலாவது உண்டோ –அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்று சரணம் புக ஒருப்பட்டவர் அதுக்கு உறுப்பாக –-அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா -என்றும்-நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -என்றும்-தன் பேற்றுக்கு உடலாக நினைத்து இருந்தவை தன்னையும் இழவுக்கு உடலாகச் சொல்லி கை வாங்கும் படி காணும் கண்ணாஞ்சுழலை இட்ட படி –நாகணை மிசை--அநந்த சாயியாய் இருக்கைக்கு மேற்பட இல்லை இறே ஒருவனுக்கு ஏற்றத்துக்கு–நம் பரர் –அநந்ய பரமான வாக்யங்களாலே பிரசித்தமான பரத்வத்தை உடையவர்-நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண பர -நாராயண பரம் ஜ்யோதிர் ஆத்மா நாராயண பர —இத்யாதிகளில் -படியே-செல்வர் –ஸ்ரீ யபதிகள்-அணைவது அரவணை மேல் பூம் பாவை யாகம் புணர்வது -திருவாய் -2-8-1- ஹ்ரீச்ச தே லஷ்மீச்ச பத்ன்யௌ-என்கிறபடியே ஆகையாலே–பெரியர் –
நமக்கும் அவனுக்கும் பர்வத பரம அணுக்களோட்டை வாசி போரும்-சிறு மானிடவர் – தேவ யோநியிலே பிறந்து சிறிது அணைய நிற்கையும்  அன்றிக்கே-ப்ராஜ்ஞராய் அவனோடு அணைய நிற்கவும் அன்றிக்கே அதி ஷூத்ரரான மனுஷ்யர் நாம் செய்வது என் முன்பே ஒரு வார்த்தை சொல்லி வைத்தார் என்பதையே கொண்டு நம்மாலே அவரை வளைக்கப் போமோ-ஆனால் நாம் இழந்தே போம் அத்தனையோ -என்ன -நமக்கு இழக்க வேண்டா காண் த்வயி கிஞ்சித் சமாபன்னே கிம் கார்யம் சீதயா மம-பரதேன மஹா பாஹோ லஷ்மணேன யவீயஸா -யுத்த -41-4-என்றவனுக்குச் சொல்ல வேண்டுவதும் ஒரு விஷயம் உண்டு காண்-நீ பின்னையும் பேற்றுக்கு உடலாக நினைத்து இருந்தது என் என்ன-வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே– சர்வ சாதாரணமாக இருக்கும் வஸ்து என்று பற்றக் கடவது அன்று-ஆச்சார்யனுக்கு விதயம் அவ்வஸ்து – விஷ்ணு சித்தே யஸ்ய -அனந்தன் பாலும் -5-4-8– அவன் வழியாலே நமக்குக் கிடைக்கும் என்று இருக்க அடுக்கும்–சம்பந்தம் நமக்கும் அவனுக்கும் ஒக்கும் என்று நினைக்கலாகாது -சம்பந்தம் நித்தியமாய் இருக்கச் செய்தே இறே இந்நாள் வரை கிடந்தது-தங்கள் தேவரை -என்று தன்னோடு உறவு அறுத்து-பெரியாழ்வார் உடன் சேர்த்து சொல்லுகிறாள்–பெரியாழ்வார் உகந்தது என்றாய்த்து உகந்தது
திரிபுரா தேவியார் வார்த்தையை நினைப்பது –-வல்ல பரிசு வருவிப்பரேல் ஒரு பூவை இட்டு வரப் பண்ணவுமாம்-2-7-பூ சூட்டு பதிகம்-ஒரு இசையைச் சொல்லி இசைவிக்கவுமாம் -திருப்பல்லாண்டு –
கிழியை அறுத்து வரப்பண்ணவுமாம்-
வேண்டிய வேதங்கள் ஓதி கிழி அறுத்து திருமஞ்சனத்தைச் சேர்த்து அழைக்கையுமாம்-2-4- நீராட்ட பதிகம் திருக் குழல் பணியைச் சேர்த்து வைத்து அழைக்க வுமாம்
அன்றிக்கே திருவந்திக் காப்பிட்டு அழைக்கவுமாம் -2-8- காப்பிட்டுபதிகம்வெண்ணெய் அளைந்த குணுங்கும் –ஆரை  மேய்க்க நீ போதி–இந்திரனோடு பிரமன் -இத்யாதிகள் அநேகம் இறே-அன்றிக்கே நான் தம்மை முன்னிட்டால் போலே -தமக்கு புருஷகாரமாவாரை முன்னிட்டு வரப் பண்ணவுமாம்–வல்ல பரிசு –ஆசார்ய பரம்பரையை முன்னிட்டு -என்றபடி-அது காண்டுமே -அவ் வழியாலே பெறக் கடவோம்–பிதா மஹம் நாத முனிம் விலோக்ய ப்ரசீத -ஸ்தோத்ர ரத்னம் -65-என்னுமா போலே த்வத் பாதமூலம் சரணம் ப்ரபத்யே -ஸ்தோத்ர ரத்னம் -22-என்று சரணம் புக்கு வைத்து பிரபத்தி பண்ணினோம் நாம் ஆகையாலே அதுவும் போட்கனாகக் கூடும் என்று அக்குறை தீர -நாத முனிகளை முன்னிட்டால் போலே பெரியாழ்வாரை முன்னிடுகிறாள் –

மாலே மணி வண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்து பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய் அருளேலோ ரெம்பாவாய்பல்லாண்டு இசைப்பாரே ––திருப் பல்லாண்டு பாடிக் கொண்டு போருவார் வேணும் -சத் சஹாவாசம் வேணும் –வேணும் –கொட்டிக் கொண்டு புறப்படும் போதே எதிரே நின்று காப்பிடுவார் வேணும் –உனக்கும் பாகவதருக்கும் பல்லாண்டு பாட பெரியாழ்வாரும் நம்மாழ்வாரும் போல்வார் வேணும் –

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றமுடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசல் கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றியாம் யாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்--19-போற்றுகையாவது -திருப் பல்லாண்டு பாடுகை-பெரியாழ்வாரைப் போலே வந்தோம் –போற்றி –புகழ்ந்து –வந்தோம்பெரியாழ்வாரைப் போலேயும் வந்தோம் –அல்லாதாரைப் போலேயும் வந்தோம் –புகழ்ந்துசத்ரோ ப்ரக்யாத வீரஸ்ய-என்று
மாற்றாரும் தங்களைத் தோற்பித்த வீர்யத்தை சொல்லி புகழ்வார்கள்-இவர்களும் தங்களை நலிந்த நலிவை சொல்லிப் புகழும் அத்தனை இறே –எங்களைத் தோற்பித்த குணங்களை சொல்லிப் புகழ்ந்து
அழித்தாய் யுன் திருவடியால் (6-2) -நின் தன்னால் நலிவே படுவோம் -என்று வருகை இறே யுள்ளது-

பிரானடிக் கீழ் பிரியாது -14-10
சாயை போலே அணுக்கர்களே -பெரியாழ்வார் திருமொழி -5-4-11-

வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் மனத்தே
கோயில் கொண்ட கோவலனைக் கொழும் குளிர் முகில் வண்ணனை
ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர் தம் அமுதத்தினை
சாயை போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே -5 -4-11 –
ஸ்ரீ எம்பாரை சிலர் -இப் பத்துக்கு பொருள் என் -என்று கேட்க –நான் ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாதத்தில் இது கேட்டிலேன் – ஆகிலும் நீங்கள் கேட்ட இவ் அர்த்தம் போராது என்ன ஒண்ணாது –-இப்பொழுதே கேட்டு உங்களுக்கு சொல்ல ஒண்ணாதபடி
ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்தேற எழுந்து அருளினார் –ஆகிலும் இப்பொழுதே உங்களுக்கு சொன்னேன் ஆக வேணும் -என்று ஸ்ரீ உடையவர் திருவடி நிலைகளை எடுத்து தம் திரு முடியிலே வைத்துக் கொண்டு – இப்பொழுது ஸ்ரீ உடையவர் எனக்கு அருளிச் செய்தார் கேட்கல் ஆகாதோ -என்று பாட வல்லார் -சாயை போலே -தாமும் -அணுக்கர்களே -என்று அருளிச் செய்தார் –
(ராமானுஜ பதச்சாயை தாமே இவ்வர்த்தம் அருளிச் செய்யும் படி ஆய்த்தே )தாமும் -என்கைக்கு அடி –
அவர்கள் ஏற்றதை நினைத்து-அதாவது – பிரயோஜனாந்தரங்களையும் -உபாயாந்தரங்களையும் -கணிசித்து – மங்களா சாசனம் பண்ணுகை அன்றிக்கே – தத் காலத்துக்கு மங்களா சாசனம் பண்ணுகை அன்றிக்கே – கழிந்த காலத்துக்கும் மங்களா சாசனம் பண்ணுகை இறே ஏற்றம் –
(அன்று உலகு அளந்தாய் அடி போற்றி –இன்று யாம் வந்தோம் ஆண்டாள் போல் )
இப்படிக்கொத்த தம்மை தம்முடைய வம்சத்தில் ஏழு படி கால் இல்லை என்னும் இடத்தை ஏழாட்  காலம் பழிப்பிலோம்  -என்று அருளிச் செய்தார் இறே –பாடுகை யாவது – உன் செவ்வடி செவ்வி திருக் காப்பு -என்கை-சாயை போலே என்றது – புருஷனுடைய சாயை அவன் புக்க இடத்தே புக்கு – புறப்பட்ட இடத்தே புறப்பட்டு –
ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி அவன் இட்ட வழக்கமா போலே –இத் திரு மொழி கற்றார்க்கும்
தங்களுக்கு என்ன ஒரு பிரவ்ருத்தி நிவ்ருதிகள் இன்றிக்கே ஈஸ்வரனுக்கு அந்தரங்கர் ஆகப் பெறுவார்கள் –செவ்வடி செவ்வி திருக் காப்பு -என்று பாட வல்லார் நிழலும் அடி தாறுமாகப் பெறுவார்கள்
–அடி தாறு -திருவடிகளில் ரேகைகள்-சாயை போலே பாட வல்லார் – நிழல் உண்டாக பாட வல்லார்-நிழல் ஆவது -குளிர்த்தி-குளிரப் பாட வல்லார் என்றும் சொல்லுவார்கள்

பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னைப் பாரின் மேல்
விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதை சொல்
மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ் பிரியாது என்றும் இருப்பரே–14-10-இது தான் சம்சார பேஷஜம் என்று தம்தாமுடைய ஹிருதயத்தில் வைத்துக் கொண்டு-ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபிபேதி குத்ஸ் சன –தை ஆ -9-என்கிறபடியே -இருக்குமவர்கள்-பரம பிராப்யமாய் – நிரதிசய போக்யமாய்- இருந்துள்ள திருவடிகளை – உடையவன் திருவடிகளிலே உனக்கே நாம் ஆட்  செய்வோம் என்று-பிரியாது என்றும் இருப்பரே— சிலரை கண்டீரே -என்று கேட்க வேண்டாதே என்றும் ஒக்க தங்கள் கண்ணாலே கண்டு நித்ய அனுபவம் பண்ணுமதுவே யாத்ரையாகப் பெறுவர்-தாள் -என்கையாலே
பிராப்யாதிக்யமும் போக்யதையும் சொல்லுகிறது –

————————————————————————————–

ஸ்ரீ கோயிலே கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வைஷ்ணவ திருவாராதனம் –ஸ்ரீ ப்ரமாணத் திரட்டு-

April 30, 2026

ஸ்ரீவைஷ்ணவ திருவாராதனம் ப்ரமாணத் திரட்டு என்பது திருவாராதனத்தின் போது ஓதப்படும் முக்கியமான ச்லோகங்கள் மற்றும் பாசுரங்களின் தொகுப்பாகும். இது ஆறு நிலைகளாகப் (ஆஸனங்கள்) பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு நிலைக்கும் உரிய வேத மந்திரங்கள் மற்றும் திவ்யப்

திருவாராதனத்தின் முக்கியப் பகுதிகள்:

  • மந்த்ராஸநம்: முந்தைய நாள் சாற்றப்பட்ட மலர்களைக் களைந்துவிட்டு (நிர்மால்யம்), பகவானை எழுந்தருளப் பண்ணுதல். இதற்கு “உடுத்துக் களைந்த நின் பீதக வாடை” போன்ற பாசுரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
  • ஸ்நாநாஸநம்: பகவானுக்குத் திருமஞ்சனம் (நீராடல்) செய்வித்தல். இதன்போது புருஷ ஸூக்தம், நாராயண ஸூக்தம், விஷ்ணு ஸூக்தம் போன்ற வேத மந்திரங்களும், பெரியாழ்வார் திருமொழியின் வெண்ணெயளைந்த குணுங்கு பதிகமும் அநுஸந்திக்கப்படுகின்றன.
  • அலங்காராஸநம்: பகவானுக்கு ஆடை, ஆபரணங்கள் மற்றும் சந்தனம், மலர்களைச் சமர்ப்பித்தல். “கந்தத்வாராம் துராதர்ஷாம்” போன்ற ஸ்ரீ ஸூக்த ச்லோகங்கள் இங்கு ஓதப்படும்.
  • போஜ்யாஸநம் (தளிகை): எம்பெருமானுக்கு அமுது (உணவு) சமர்ப்பித்தல். “கூடாரை வெல்லும் சீர்”, “நாறு நறும்பொழில்” போன்ற பாசுரங்களுடன் உணவு நிவேதனம் செய்யப்படுகிறது.
  • புனர்-மந்த்ராஸநம்: தளிகைக்குப் பின் தீர்த்தம், தாம்பூலம் சமர்ப்பித்து மீண்டும் மந்த்ராஸனம் செய்தல்.
  • பர்யங்காஸநம்: பகவானை ஓய்வெடுக்கச் செய்யும் முறை

எண் – உடம்பின் பாகம் – ஸ்ரீ விஷ்ணு மந்திரம் (திருமண்) – ஸ்ரீ மஹாலக்ஷ்மி மந்திரம் (ஸ்ரீசூர்ணம்)

  1. நெற்றி – ஓம் கேசவாய நம: – ஓம் ச்ரியை நம:
  2. வயிறு (நடு) – ஓம் நாராயணாய நம: – ஓம் அம்ருதோத்பவாயை நம:
  3. நெஞ்சு (நடு) – ஓம் மாதவாய நம: – ஓம் கமலாயை நம:
  4. கழுத்து (நடு) – ஓம் கோவிந்தாய நம: – ஓம் சந்த்ரஸோபிந்யை நம:
  5. வயிறு (வலது) – ஓம் விஷ்ணவே நம: – ஓம் விஷ்ணுபத்ந்யை நம:
  6. தோள் (வலது) – ஓம் மதுஸூதநாய நம: – ஓம் வைஷ்ணவ்யை நம:
  7. கழுத்து வலது) – ஓம் த்ரிவிக்ரமாய நம: – ஓம் வராரோஹாயை நம:
  8. வயிறு (இடது) – ஓம் வாமநாய நம: – ஓம் ஹரிவல்லபாயை நம:
  9. தோள் (இடது) – ஓம் ஸ்ரீதராய நம: – ஓம் ஸார்ங்கிண்யை நம:
  10. கழுத்து (இடது) – ஓம் ஹ்ருஷீகேஸாய நம: – ஓம் தேவ தேவ்யை நம:
  11. கீழ் முதுகு (பின்புறம்) – ஓம் பத்மநாபாய நம: – ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:
  12. கழுத்து (பின்புறம்) – ஓம் தாமோதராய நம: – ஓம் லோகஸுந்தர்யை நம:

வாக்ய குருபரம்பரை

அஸ்மத் குருப்யோ நம:
அஸ்மத் பரம குருப்யோ நம:
அஸ்மத் ஸர்வ குருப்யோ நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீ பராங்குச தாஸாய நம:
ஸ்ரீமத் யாமுநமுநயே நம:
ஸ்ரீ ராம மிஸ்ராய நம:
ஸ்ரீ புண்டரிகாக்ஷாய நம:
ஸ்ரீமந் நாதமுநயே நம:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே விஷ்வக்ஸேநாய நம:
ச்ரியை நம:
ஸ்ரீதராய நம:

அஸ்மத் தேசிகம் அஸ்மதீய பரமாசார்யான் அசேஷாந் குரூந்
ஸ்ரீமல்லக்ஷ்மண யோகி புங்கவ மஹாபூர்ணௌ முநிம்யாமுநம்
ராமம் பத்மவிலோசநம் முநிவரம் நாதம் சடத்வேஷிணம்
ஸேனேசம் ச்ரியம் இந்திரா ஸஹசரம் நாராயணம் ஸம்ச்ரயே

குரு பரம்பரையை அநுஸந்தித்தபின், ஸ்ரீஸ்தநாபரணம் தேஜ: ஸ்ரீரங்கேசயமாச்ரயே
சிந்தாமணிமிவோத்வாந்தம் உத்ஸங்கேநந்தபோகிந
:–பெரியபெருமாள் (ஆவணி – ரோஹிணி)

நம: ஸ்ரீரங்கநாயக்யை யத்ப்ரூவிப்ரமபேதத:
ஈசேசிதவ்யவைஷம்ய நிம்நோந்நதமிதம் ஜகத் ||
-பெரியபிராட்டியார் (பங்குனி – உத்திரம்)

ஸ்ரீரங்கசந்த்ரமஸமிந்திரயா விஹர்த்தும் விந்யஸ்ய விச்வசிதசிந்நயநாதிகாரம் |
யோ நிர்வஹத்ய நிசமங்குலிமுத்ரயைவ ஸேநாந்யமந்யவிமுகாஸ் தமசிச்ரியாம ||
-ஸேனை முதலியார் (ஐப்பசி – பூராடம்)

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ் ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம் ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||
-நம்மாழ்வார் (வைகாசி – விசாகம்)

நமோசிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே
நாதாய முநயேகாதபகவத்பக்திஸிந்தவே ||
-ஸ்ரீமந்நாதமுநிகள் (ஆனி – அனுஷம்)

நம: பங்கஜநேத்ராய நாதஸ்ரீபாதபங்கஜே |
ந்யஸ்த ஸர்வபராயாஸ்மத்குலநாதாய தீமதே ||
-உய்யக்கொண்டார் (சித்திரை – கார்த்திகை)

அயத்நதோ யாமுநமாத்மதாஸம் அலர்க்கபத்ரார்பண நிஷ்க்ரயேண |
ய:க்ரீதவாநாஸ்தித யௌவராஜ்யம் நமாமி தம் ராமமமேய ஸத்த்வம் ||
-மணக்கால்நம்பி (மாசி – மகம்)

யத்பதாம்போருஹத்யாந வித்வஸ்தாசேஷகல்மஷ:
வஸ்துதாமுபயாதோஹம் யாமுநேயம் நமாமி தம் ||
-ஆளவந்தார் (ஆடி – உத்திராடம்)

கமலாபதிகல்யாணகுணாம்ருதநிஷேவயா |
பூர்ணகாமாய ஸததம் பூர்ணாய மஹதே நம: ||
-பெரியநம்பி (மார்கழி – கேட்டை)

யோ நித்யமச்யுத பதாம்புஜ யுக்மருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே |
அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ: ராமாநுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||
எம்பெருமானார் (சித்திரை – திருவாதிரை)

ராமாநுஜபதச்சாயா கோவிந்தாஹ்வ அநபாயிநீ |
ததாயத்தஸ்வரூபா ஸா ஜீயாந் மத்விச்ரமஸ்தலீ ||
-எம்பார் (தை – புனர்பூசம்)

ஸ்ரீபராசரபட்டார்ய: ஸ்ரீரங்கேசபுரோஹித: |
ஸ்ரீவத்ஸாங்கஸூத: ஸ்ரீமாந் ச்ரேயஸே மேஸ்து பூயஸே |
|-பட்டர் (வைகாசி – அனுஷம்)

நமோ வேதாந்தவேத்யாய ஜகந்மங்களஹேதவே |
யஸ்ய வாகம்ருத ஸாரபூரிதம் புவநத்ரயம் ||
-நஞ்சீயர் (பங்குனி – உத்திரம்)

வேதாந்த வேத்யாம்ருதவாரிராசே: வேதார்த்தஸாராம்ருத பூரமக்ர்யம் |
ஆதாய வர்ஷந்தமஹம் ப்ரபத்யே காருண்ய பூர்ணம் கலிவைரிதாஸம் ||
நம்பிள்ளை (கார்த்திகை – கார்த்திகை)

ஸ்ரீக்ருஷ்ணபாதபாதாப்ஜே நமாமி சிரஸா ஸதா |
யத்ப்ரஸாத ப்ரபாவேந ஸர்வஸித்திரபூந்மம ||
-வடக்குத்திருவீதிப்பிள்ளை (ஆனி – ஸ்வாதி)

லோகாச்சார்ய குரவே க்ருஷ்ணபாதஸ்ய ஸூநவே |
ஸம்ஸாரபோகி ஸந்தஷ்ட ஜீவஜீவாதவே நம: ||
-பிள்ளைலோகாச்சார்யர் (ஐப்பசி – திருவோணம்)

நம: ஸ்ரீசைலநாதாய குந்தீநகர ஜந்மநே |
ப்ரஸாதலப்த பரமப்ராப்ய கைங்கர்யசாலிநே
||-திருவாய்மொழிப்பிள்ளை (வைகாசி – விசாகம்)

ஸ்ரீசைலேசதயாபாத்ரம் தீபக்த்யாதிகுணார்ணவம் |
யதீந்த்ரப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முநிம் |
|-மணவாளமாமுனிகள் (ஐப்பசி – திருமூலம்)

ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாதரேகா மயம் ஸதா
ததா யத்தாத்ம ஸத்தாதிம் ராமாநுஜ முநிம் பஜே
-பொன்னடிக்கால் ஜீயர் (புரட்டாசி – புனர்பூசம்) 

தன்னை சுத்தப்படுத்திக்கொள்ளச் செய்ய வேண்டிய மந்திர ஸ்நாநமும் அதன் ஸ்லோகமும்

புவி மூர்த்நி ததாகாசே மூர்த்ந்யாகாசே ததா புவி |
ஆகாசே புவி மூர்த்நிஸ்யாத் ஆபோஹிஷ்டேதி மந்த்ரத: ||

துலஸ்யம்ருத ஜந்மாஸி ஸதா த்வம் கேசவப்ரியே |
கேசவார்த்தம் லுநாமி த்வாம் வரதா பவ சோபநே |
|திருத்துழாய் சேகரிக்கும் மந்திரம்

நாம் ரஹஸ்ய த்ரயம் என்கிற மூன்று ரஹஸ்ய மந்திரங்களை அநுஸந்திக்க வேண்டும்.-திருமந்திரம் – ஓம் நமோ நாராயணாய–த்வயம்-ஸ்ரீமந் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே | ஸ்ரீமதே நாராயணாய நம: ||-ஸ்ரீ க்ருஷ்ண சரம ச்லோகம்)ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ | அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸுச: ||

ஸ்ரீ வராஹ சரம ச்லோகம்
ஸ்திதே மநஸி ஸுஸ்வஸ்தே சரீரே ஸதியோ நர:
தாதுஸாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வரூபஞ்ச மாமஜம்
ததஸ்தம் ம்ரியமாணந்து காஷ்டபாஷாண ஸந்நிபம்
அஹம் ஸ்மராமி மத் பக்தம் நயாமி பரமாம் கதிம்

ஸ்ரீராம சரம ச்லோகம்
ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே |
அபயம் ஸர்வ பூதேப்யோ ததாமி யேதத் வ்ரதம் மம ||

ஸ்ரீசைலேசதயாபாத்ரம் தீபக்த்யாதிகுணார்ணவம் |
யதீந்த்ரப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முநிம் ||

லக்ஷ்மீநாதஸமாரம்பாம் நாதயாமுநமத்யமாம் |
அஸ்மதாசார்யபர்யந்தாம் வந்தே குருபரம்பராம் |

யோ நித்யமச்யுதபதாம்புஜ யுக்மருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே |
அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ: ராமாநுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ் ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுலாபிராமம் ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

பூதம் ஸரஸ்ய மஹதாஹ்வய பட்டநாத ஸ்ரீபக்திஸார குலசேகர யோகிவாஹாந் |
பக்தாங்க்ரிரேணு பரகால யதீந்த்ர மிச்ராந் ஸ்ரீமத் பராங்குச முநிம் ப்ரணதோஸ்மி நித்யம் ||

கோயிலாழ்வார் திருக்காப்பு நீக்கும்(கதவு திறக்கும்)பொழுது அநுஸந்திக்க வேண்டிய ஸ்லோகங்கள்அபராத ஸஹஸ்ர பாஜநம் பதிதம் பீம பவர்ணவோ தரே|
அகதிம் சரணாகதம் ஹரே க்ருபயா கேவலமாத்மஸாத் குரு
|| (ஸ்தோத்ர ரத்நம் 48)ந தர்ம நிஷ்டோஸ்மி ந சாத்மாவேதீ ந பக்திமான் த்வச்சரணாரவிந்தே |
அகிஞ்சநோநந்யகதிச் சரண்ய த்வத்பாதமூலம் சரணம் ப்ரபத்யே |
| (ஸ்தோத்ர ரத்நம் 22) ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விச்வபாவன |
நமஸ்தே ஸ்து ஹ்ருஷீகேச மஹாபுருஷ பூர்வஜ ||
(ஜிதந்தே ஸ்தோத்ரம் 1)தேவானாம் தானவாநாம் ச ஸாமாந்யம் அதிதைவதம் | ஸர்வதா சரண த்வந்த்வம் வ்ரஜாமி சரணம் தவ || (ஜிதந்தே ஸ்தோத்ரம் 2)கௌஸல்யா ஸுப்ரஜா ராம! பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட்ட நரஸார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம் |உத்திஷ்ட்டோத்திஷ்ட்ட கோவிந்த உத்திஷ்ட்ட கருடத்வஜஉத்திஷ்ட்ட கமலா காந்தா த்ரைலோக்யம் மங்கலம் குரும் ||

கூர்மாதீந் திவ்யலோகாந் ததநு மணிமயம் மண்டபம் தத்ர சேஷம்
தஸ்மிந் தர்மாதிபீடம் ததுபரி கமலஞ் சாமரக்ராஹிணீச் ச |
விஷ்ணும் தேவீர் விபூஷாயுதகண முரகம் பாதுகே வைநதேயம்
ஸேநேசம் த்வாரபாலாந் குமுதமுககணாந் விஷ்ணுபக்தாந் ப்ரபத்யே ||
 (புராண ஸ்லோகம்)

ஸவ்யம் பாதம் ப்ரஸார்ய ச்ரிததுரிதஹரம் தக்ஷிணங் குஞ்சயித்வா
ஜாநுந்யாதாய ஸவ்யேதர மிதரபுஜம் நாகபோகே நிதாய |
பச்சாத் பாஹுத்வயேந ப்ரதிபடசமநே தாரயந் சங்கசக்ரே
தேவிபூஷாதி ஜுஷ்டோ விதரது பகவாந் சர்ம வைகுண்டநாத: ||
(புராண ஸ்லோகம்)

கந்தத்வாராம் துராதர்ஷாம் நித்யபுஷ்டாம் கரீஷிநீம் |
ஈஸ்வரீகும் ஸர்வபூதானாம் த்வாமிஹோபஹ்வயே ஸ்ரியம் ||
(ஸ்ரீ ஸூக்தம்)

பூசுஞ்சாந் தென்னெஞ்சமே புனையுங்கண்ணி எனதுடைய
வாசகஞ் செய்மாலையே வான்பட்டாடையுமஃதே
தேசமான வணிகலனும் என்கைகூப்புச் செய்கையே
ஈசன் ஞாலமுண்டுமிழ்ந்த எந்தையேக மூர்த்திக்கே
(திருவாய்மொழி 4.3.2)

ஓம் தூரஸி தூர்வ தூர்வந்தம் தூர்வதம் யோஸ்மான்
தூர்வதி தம் தூர்வயம் வயம் தூர்வாமஸ் த்வம் தேவாநாம் அஸி
தூபம் ஆக்ராபயாமி
(ர்க் வேதம்)

பரிவதில் ஈசனைப்பாடி விரிவது மேவலுறுவீர்
பிரிவகை இன்றி நன்னீர் தூய் புரிவதுவும் புகை பூவே
(திருவாய்மொழி 1.6.1)

உத்தீப்யஸ்வ ஜாதவேதோபக்நந் நிர்ருதிம் மம |
பஸூகும்ஸ்ச மஹ்யமாவஹ ஜீவநம்ச திசோ திச ||
(மஹா நாராயண உபநிஷத்)தீபம் சமர்ப்பிக்கும்பொழுது சேவிக்க வேண்டிய ஸ்லோகம்

மந்த்ர புஷ்பம் வேதாரம்பம்

ஹரி: ஓம். அக்நிமீளே புரோஹிதம் யஜ்ஞஸ்ய தேவம் ருத்விஜம் |
ஹோதாரம் ரத்நதாதமம் || ஹரி: ஓம்.
(ரிக் வேதம்)

ஹரி: ஓம். இஷே த்வோர்ஜே த்வா வாயவஸ் ஸ்தோபாயவஸ் ஸ்த தேவோ வஸ்ஸவிதா ப்ரார்ப்பயது ச்ரேஷ்டதமாய கர்மணோ || ஹரி: ஓம். (யஜுர் வேதம்)

ஹரி: ஓம். அக்ந ஆயாஹி வீதயே க்ருணாநோ ஹவ்யதாதயே |
நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி || ஹரி: ஓம்
. (ஸாம வேதம்)

ஹரி: ஓம். சம் நோ தேவீரபிஷ்டய ஆபோ பவந்து பீதயே
சம் யோ ரபிஸ்ரவந்து ந: || ஹரி: ஓம் ஹரி: ஓம்.
  (அதர்வண வேதம்)

ஓமித்யக்ரே வ்யாஹரேத் |
நம இதி பஸ்சாத் |
நாராயணாயேதி உபரிஷ்டாத் |
ஓமித்யேகாக்ஷரம் |
நம இதி த்வே அக்ஷரே |
நாராயணாயேதி பஞ்சாக்ஷராணி |
ஏதத் வை நாராயணஷ்யாஸ்டாக்ஷரம் பதம் |
யோ ஹ வை நாராயணஷ்யாஸ்டாக்ஷரம் பதமித்யேதி |
அநபப்ருவ: ஸர்வமாயுரேதி |
விந்ததே ப்ராஜாபத்யம் ராயஸ்போஷம் கௌபத்யம் |
ததோ அம்ருதத்வம் அச்நுதே ததோ அம்ருதத்வம் அச்நுத இதி |
ய யேவம் வேத |
இத்யுபநிஷத் | (
உபநிஷத்)

அத கர்மாந்யாகாராத்யாநி க்ருஹ்யந்தே| உதகயந பூர்வ
பக்ஷரஹ: புண்யாஹேஷு கார்யாணி|
யஞ்ஞோபவீதிநா ப்ரதக்ஷிணம் |

இச்சாமோ ஹி மஹாபாஹும் ரகுவீரம் மஹாபலம் |
கஜேந மஹதா யாநதம் ராமம் சத்ராவ்ருதாநநம் ||
(ஸ்ரீ ராமாயணம்)

தம் த்ருஷ்ட்வா சத்ருஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸுகாவஹம் |
பபூவ ஹ்ருஷ்ட்வா வைதேஹீ பர்த்தாரம் பரிஷஸ்வஜே ||
(ஸ்ரீ ராமாயணம்)

தாஸாமாவிரபூச்சௌரி: ஸ்மயமான முகாம்புஜ: |
பீதாம்பரதர: ஸ்ரக்வீ ஸாக்ஷாந் மந்மத மந்மத: |
| (ஸ்ரீ பாகவதம்)

ஏஷ நாராயண ஸ்ரீமாந் க்ஷீரார்ணவ நிகேதந: |
நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் ||
(ஸ்ரீ விஷ்ணு புராணம்)

வைகுண்டேது பரே லோகே ச்ரியா ஸார்த்தம் ஜகத்பதி |
ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ ||
(லிங்க புராணம்)

கதா புந: ஸங்க ரதாங்க கல்பக த்வஜாரவிந்தாங்குச வஜ்ர லாஞ்சனம் |
த்ரிவிக்ரம த்வத் சரணாம்புஜ த்வயம் மதீய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி |
| (ஸ்தோத்ர ரத்நம் 31)

ஸ்ரீ மாதவாங்க்ரி ஜலஜத்வய நித்ய ஸேவா ப்ரேமா விலாஸய: பராங்குச பாத பத்மம் ||
காமாதி தோஷ ஹரமாத்ம பதாஸ்ரிதாநாம் ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா ||
(யதிராஜ விம்சதி 1)

யா ப்ரீதிர் விதுரார்பிதே முராரிபோ குந்த்யர்பிதே யா த்ருஸி
யா கோவர்தன மூர்த்நி ய ச ப்ருதுகே ஸ்தந்யே யசோதர்பிதே
பாரத்வாஜ ஸமர்பிதே சபரிக தத்தே ஆதரே யோ ஸ்திதம்
யா ப்ரீதிர் முநிபத்னி பக்தி ரசிதே ப்ரீத்யர்பிதே தம் குரு
(க்ருஷ்ண கர்ணாம்ருதம்)போஜ்யாஸனம்

தத் விஷ்ணோ: பரமம் பதம் ஸதா பச்யந்தி ஸூரய:
திவீவ சக்ஷுராததம், தத்விப்ராஸோ விபந்யவோ ஜாக்ருவாகும்
ஸஸ்யமிந்ததே, விஷ்ணோர்ய: பரமம் பதம்
(ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம்)

பர்யாப்த்யா அநந்தராயாய ஸர்வஸ்தோமோதி ராத்ரமுத்தம
மஹர்பவதி ஸர்வஸ்யாப்த்யை ஸர்வஸ்ய ஜித்யை ஸர்வமேவ
தேநாப்நோதி ஸர்வம் ஜயதி

ஓம் கேசவாய நம:
ஓம் நாராயணாய நம:
ஓம் மாதவாய நம:
ஓம் கோவிந்தாய நம:
ஓம் விஷ்ணவே நம:
ஓம் மதுஸூதநாய நம:
ஓம் த்ரிவிக்ரமாய நம:
ஓம் வாமநாய நம:
ஓம் ஸ்ரீதராய நம:
ஓம் ஹ்ருஷீகேசாய நம:
ஓம் பத்மநாபாய நம:
ஓம் தாமோதராய நம:

ஓம் ச்ரியை நம:
ஓம் அம்ருதோத்பவாயை நம:
ஓம் கமலாயை நம:
ஓம் சந்த்ரஸோதர்யை நம:
ஓம் விஷ்ணு பத்ந்யை நம:
ஓம் வைஷ்ணவ்யை நம:
ஓம் வராரோஹாயை நம:
ஓம் ஹரி வல்லபாயை நம:
ஓம் ஸார்ங்கிண்யை நம:
ஓம் தேவ தேவ்யை நம:
ஓம் லோகஸுந்தர்யை நம:
ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:

போகம் கண்டருளப்பண்ணும் பொழுது இந்த ச்லோகங்கள் மற்றும் பாசுரங்களை அநுஸந்திக்கவும்.

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா ! உன்தன்னை
பாடிப் பறை கொண்டு யாம் பெறும்  சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழிவார
கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் (திருப்பாவை 27)

நாறுநறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவிவைத்தேன்
நூறுதடா நிறைந்த அக்காரவடிசில் சொன்னேன்
ஏறுதிருவுடையான் இன்றுவந்திவை கொள்ளுங் கொலோ (நாச்சியார் திருமொழி 9.6)

உலகம் உண்ட பெருவாயா உலப்பில் கீர்த்தி அம்மானே
நிலவும் சுடர்சூழ் ஒளிமூர்த்தி நெடியாய் அடியேன் ஆருயிரே
திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம் பெருமானே
குலதோல் அடியேன் உனபாதம் கூடுமாறு கூறாயே (திருவாய்மொழி 6.10.10)

யா ப்ரீதிர் விதுரார்பிதே முராரிபோ குந்த்யர்பிதே யா த்ருஸி
யா கோவர்தன மூர்த்நி ய ச ப்ருதுகே ஸ்தந்யே யசோதர்பிதே
பாரத்வாஜ ஸமர்பிதே சபரிக தத்தே ஆதரே யோ ஸ்திதம்
யா ப்ரீதிர் முநிபத்னி பக்தி ரசிதே ப்ரீத்யர்பிதே தம் குரு (க்ருஷ்ண கர்ணாம்ருதம்)

முடிவில், “அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! ஆராவமுதே அமுது செய்தருள வேண்டும்” என்று நான்கு முறை கூறி கண்டருளப்பண்ணவும்.

ஆரத்தி ஸமர்ப்பிக்கவும்:

தத் விஷ்ணோ: பரமம் பதம் ஸதா பச்யந்தி ஸூரய:
திவீவ சக்ஷுராததம், தத்விப்ராஸோ விபந்யவோ ஜாக்ருவாகும்
ஸஸ்யமிந்ததே, விஷ்ணோர்ய: பரமம் பதம் (ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம்)

பர்யாப்த்யா அநந்தராயாய ஸர்வஸ்தோமோதி ராத்ரமுத்தம
மஹர்பவதி ஸர்வஸ்யாப்த்யை ஸர்வஸ்ய ஜித்யை ஸர்வமேவ
தேநாப்நோதி ஸர்வம் ஜயதி

பர்யங்காஸனம் ச்லோகங்கள்

பந்நகாதீச பர்யங்கே ரமா ஹஸ்தோப தாநகே |
ஸுகம் சேஷ்வ கஜாத்ரீச ஸர்வா ஜாக்ரத ஜாக்ரத ||

க்ஷீரஸாகர தரங்க ஸீகரா சார தாரகித சாரு மூர்த்தயே |
போகி போகி சயநீய ஸாயிநே மாதவாய மதுவிஷ்வஸே நம: ||
(முகுந்த மாலா)

உபசாராந் அபதேஸேந க்ருதாந் அஹரஹர் மயா |
அபசாராந் இமாந் ஸர்வாந் க்ஷமஸ்வ புருஷோத்தம |
|-ஸாஷ்டாங்க ப்ரணாமத்துடன் அநுஸந்திக்கவும்:

——————————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ஆசார்ய நூற்றந்தாதி-

April 25, 2026

Click to access 2015.295141.Alarmeil-Mang-kaiyan-thaatiyum.pdf

யாதும்‌ அறியேன்‌ அதையே அறிந்தன்று
போதரா யென்றே பொருளாக்கும்‌ – நீதியான்‌
ஆசையால்‌ தாளினையே காப்பா அறிந்தின்று
பேசுகின்றேன்‌ வாஞ்சை வரப்‌ பெற்று –காப்புச் செய்யுள்

உய்வு பேற்றுக்குரிய யாதொன்றும்‌ அறியாத அறிவிலி” என்று என்னையறிந்து, அதுவே காரணமாக அடியேனைத்‌ தன்பாலழைத்து மெய்யுணர்வு இன்மையால்‌ அசித்தைப்போல (அறிவற்ற ஜடப்பொருளைப்‌ போல) கிடந்தவனை, மெய்யுணர்வை முற்றும்‌ போதித்து பொருளல்லாத . என்னைப்‌ பொருளாக்கி, சத்தை-யுண்டாம்படி செய்த ஆசாரியன்‌ செயலை இன்றாக அறிந்து மிக்க பிரேமையுற்ற அடியேன்‌, ஆசாரிய நூற்றந்தாதி என்ற வெண்பா யாப்பினால்‌ வாஞ்சையே வடிவாக ஆசாரியன்‌ திருவடிகளை முன்னிட்டுக்‌ கொண்டு இந்நூலை இயற்றுகின்றேன் –

சீரார்‌ வநசச்‌ செழுங்கடல்‌ வந்தமுதின்‌
ஏரார்‌ நிறைபொருள்மார்‌ பேய்ந்துறையும்‌ – ஆரா
வமுத்‌ யமுதமே வேறன்‌ றயிந்தை
எமையாளும்‌ பாடியன்தாள்‌ இங்கு–1-

எம்பெருமான்‌ திருக்கண்‌ வளர்தலால்‌ செழுமையுற்ற பாற்‌ கடலில்‌, (மஹாலக்ஷ்மி) தான்‌ தோன்றுவதற்கேற்ற சிறப்புற்றத்‌ தாமரை மலரில்‌ அமுதத்தோடு வந்தவதரித்து, எல்லாவற்றாலும்‌ அழகுமிக்க ஒத்தார்‌ மிக்காரையில்லாத பரம்பொருளான திருமாலின்‌ திருமார்பில்‌ இறையும்‌ அகலாது. பொருந்தியுள்ள ரூபத்தாலும்‌ குணத்தாலும்‌ பேரழகு வாய்ந்த பெரியபிராட்டியார்‌, அழுதந்தவிர்த்தப்‌ பேறு என்னலாம் படி எம்மையாளும்‌ திருவயீந்திரபுரம்‌ கச்சிக்‌ கிடாம்பி பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளின் திருவடியையே பற்றுக்கோடாகப் பற்றி உய்யும்படி அடியேனுக்குப் பேர் அருள் செய்தான் –

இங்கே திரிந்தே எழு பிறப்பும்‌ தீர்ந்தொழிந்தேன்‌
சிங்கப்‌ பிரான் சீர்மை ஆய்ந்தறிந்தேன்‌ – பொங்கும்‌
கருணைக்‌ கடலமு துண்பேன்‌ அமிந்தைத்‌
திருவன்‌ திருவடி சேர்ந்‌ தின்று –2-

இருள்தரு மாஞாலமாகிய இவ்வுலகத்தில்‌ மனம்போனபடி திரிந்த அடியேன்‌ திருவயீந்திரபுரத்தில்‌ வாசஞ்செய்யும்‌ ஸ்ரீமத்‌ பகவத்‌ கைங்கர்யமாகிய செல்வம்‌ நிரம்பப்பெற்ற ஸ்ரீமத்‌ கச்சிக்‌ கிடாம்பி பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளின்‌ திருவடிகளை, அவரருளால்‌ இன்று சேர்ந்து தேவ, மனித, விலங்கு, பறப்பன, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம்‌ ஆகிய ஏழுவகைத்‌ தோற்றங்களாகப்‌ பிறக்கும்‌ பிறவியொழிந்து, சிங்கப்பிரான்‌ புகழை ஆராய்ந்தறிந்து ஸ்ரீவைகுண்டமாகிய திருநாட்டிற்‌ சேர்ந்து அளவில்லாமல்‌ பொங்கி வழியக்கூடிய பநப்தநாதனின்‌ கருணையை அநுபவிப்பேன் –

இன்றுநாளை யென்றறியேன்‌ கங்குல்
பொன்றுமுட லென்றுநா னென்றறியேன்‌ – பொன்றுவிக்கும்‌
தீதறியேன்‌ யாதறியேன்‌ தேரத்‌ தெரிந்தென்னை
ஒதுவித்த தொண்பொருள்‌ ஒன்று-3-

இன்றென்றும்‌ நாளையென்றும்‌ உலகத்தவம்‌ சொல்லும்‌ கால வேறுபாட்டையும்‌ இவற்றைச்‌ சார்ந்து நிகழும்‌ நிகழ்ச்சிகளின்‌ வேறுபாட்டையும்‌ இவ்வாறே இரவு பகலின்‌ வேறுபாட்டையும்‌ அறியேன்‌. எடுக்கும்‌ பிறவிகள்‌ தோறும்‌ அழிந்து படும்‌ உடல்கள்‌ அவ்வாறு அழியாத நிலை பெற்ற உயிர்களின்‌ நிலைகளையும்‌ அறியேன்‌. அழிவுக்குக் காரணமான அடியேனை நன்கறிந்து இந் நிலை போய்‌ எல்லாவற்றையும்‌ தெளிய அறியும்படி ஒப்பற்ற பொருள்‌ ஒன்று ஒதுவித்தது –

ஒன்றுதான்‌ போதமுநி வேதமுநி நாதமுநி நன்று நலந்தீதுங்‌ காட்டுமுநி – நன்றும்‌ சிவந்த வாய் செம்பவளம் கண் கமலம் ஒன்மை உவந்துளத்துப்‌ பாடியனென்‌ றோர் -4-

ஒதுவித்த அழகிய பொருள்‌ யாதெனின்‌? மனனஞ்‌ செய்து மெய்யுணர்வை நிரம்பப்‌ பெற்றதும்‌, இதைப் பிறருக்கு அறிவிப்பதையே தொழிலாக வுடையதும்‌, நல்லொழுக்கத்தில்‌ ஏவுவதும்‌ மற்றுள்ள நல்லதும்‌ தீயதும்‌ காட்டக்கூடிய நன்கு சிவந்த தாமரைப் போன்ற வாயையும்‌ தாமரைப்‌ போன்ற இதழ்களை யுடையதும்‌ அழகிய கைகளை யுடையதும்‌ எல்லார்‌ திறத்தும்‌ நன்மையே வேண்டுவதுமான பாஷ்யமா சாரியரே யாகுமாம் –

ஓரடி முந்தமற்‌ றோரடி முந்தவதின்‌
ஈரடியும்‌ சேர்ந்தென்னை ஏற்பதே? – ஈரடியக்‌
சேர்ந்திணைந்‌ தன்றன்றே சேமமாம் ஆறுபயன்‌
ஒர்ந்திணைந்‌ துள்ளதெம்‌ பால்‌–5–

அடியேனை ஏற்பதற்காக ஓரடிமுற்பட்டு வர, அதைக்காட்டிலும்‌ இன்னொரு திருவடி முற்பட, இப்படி ஈரடியும்‌ சேர்ந்தென்னை ஏற்றது வியப்பன்றோ? இதன்றி இந்த இரண்டு திருவடிகளும்‌ சேர்ந்தே சாதனமும்‌ பயனுமாகும்‌ என்பதை யானறியேன் –

எம்பெரு மானார்‌ இசைத்ததாக்‌ கேட்டதுண்டு
நம்பும்‌ படி யொன்றும்‌ நானறியேன்‌ – வம்பெதற்கு?
வீடில்நாள்‌ மூன்றில்‌ முமுச்சுபடி மெய்ப்பித்த
பாடியனே பெற்றேன்‌ பயன்‌–6-

உஜ்ஜீவனத்துக்‌ கேதுவாக எம்பெருமானார்‌ ஸ்ரீபாஷயம்‌ அருளிச்‌ செய்துள்ளதாகக்‌ கேளவிப்படுகிறோம்‌, அதை நேர் கண்டறிந்ததில்லை. ஸ்ரீபாஷ்யத்தில்‌ சீக்கிரமாகப்‌ பல ப்ராப்தி உண்டு, இல்லை யென்‌கிற வம்பெதற்கு? நிரந்தரமாக மூன்று நாட்களில்‌ முமுக்ஷுப்படி என்கிற திருமந்திரார்த்தத்தை உள்ளவாறு கேட்பித்த ஸ்ரீமத்‌ பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளையே அடியேற்குப்‌ பயனாகப்‌ பெற்றேன்‌-

பயனுற்ற தொன்றன்றே பாவிரித்தான்‌ மாறன்‌ உயர்வசந பூடணம்‌ ஓதி – நயந்துரைத்தான்‌ தத்துவ மூன்றின்‌ தகவனைத்தும்‌ தானோக்கி வித்தகன்நீ! யென்றான்‌ வியந்து–7-

ஸ்ரீமத்‌ பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளைப்‌ பயனாக மட்டுமோ பெற்றோம்‌? இவரால்‌ மாறன் கலையாகிற பகவத்‌ விஷயத்தை உரைக்கப் பெற்றேன்‌;ஸ்ரீவசன பூஷணம்‌ உரைக்கப்‌ பெற்றேன்‌; இங்ஙனே தத்வ த்ரயமும்‌ அருளப்‌ பெற்றேன்‌; இவற்றைக்‌ கேட்ட தன்மையைக்‌ கண்டு வியந்து ‘நீ வித்தகன்‌” என்று அவரால்‌ அருளப் பெற்றேன் –

வியந்தான்‌ உகந்தான்‌ விரிகமலம்‌ நோக்கி
பயந்தான்‌ பரன் தான்‌ பணியை – உயர்ந்தோர்‌
இணைந்தா மரைத்தாள்‌ இசைத்தான்தன்‌ பொன்தான்‌
பிணைத்தான்‌ பீழை தகர்த்து–8-

ஸ்ரீ பாஷ்யமாசாரியன்‌, அடியேனை வியந்தான்‌, உகந்தான்‌, தாமரைக் கண்களால்‌ விரியக்‌ கடாக்ஷித்தான்‌. அடியேன்‌ பாலுள்ள குறைகளைப் போக்கி உயர்ந்தவர்களான மெய்யடியார்‌ திருவடி யிணை யடியை வணங்கும்படி இசைவித்து, தன்‌ அழகிய திருவடிகளில்‌ இருத்திக்‌ கொண்டான்‌.

தகர்த்தேன்‌ மடமை வினைப்படலம்‌ தாக்கி
உகக்கடிந்தேன் ஊணைக் கமலம் புகுந்தேன்‌
நனியாக் கலவி இன்பம் நாளும் நுகர்வேன்
இனியனெனும் பாடியன் தாள் ஏய்ந்து –9

இனியவரான ஸ்ரீ பாஷ்யமாசரியன்‌ திருவடிகளைப்‌ பொருந்தியதால்‌ அறிவின்‌மையை அறத்தொலைத்து, அதன்‌ காரியமான பாப சமூகத்தையொழித்து, அதின்‌ கார்யமான உடல்‌ தொடர்பை யொழித்து, இறைவன்‌ திருவடிகளைப் பிரியா மெய்யடியார்‌ கூட்டத்து புகுந்து அளவிலா இன்பம்‌ நாளும்‌ நுகர்பவனாயினேன் —

ஏய்ந்த குருகூரன்‌ தன்தான்‌ இணையடியே வாய்ந்த சரணா வரித்தன்றே – நீந்திப்‌
பிறவிக்‌ கடல் கடந்தீர்‌ பேதை எனையும்‌ உறவைப்பீர்‌ உந்திருத்தாள்‌ உய்த்து–10–

பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளே! திருக் குருகூரில்‌ அவதரித்து பிறந்த பொழுதே துறவியான நம்மாழ்வாரின்‌ திருவடிகளிணையே தஞ்சமாகக்‌ கொண்டு, அவரருளால்‌ பிறவிக் கடல்‌ கடந்தீர்‌. அறிவிலியான அடியேனையும்‌ தேவரீர்‌ திருவடிகளில்‌ பொருந்தச் செய்து, அவ்வாறே பிறவி தொலைத்து பேரின்பமுற்று வாழும்படி செய்வீராக –

உய்த்தும்‌ கடைக் கணித்தும்‌ ஒப்ப நினைந்திட்டும்
எய்த்த இது தன்னைப் பற்றாச-மெய்த்த வுரை
எட்டு எழுத்தும் முப்பத்திரண்டு எழுத்தும் ஐயைந்தும்
தொட்டுரைத்த ஒன்றே துணை –11-

அடியேன்‌ அறிவிலியாய்‌ உய்யும் வழி யறியாமல்‌ பிறவிக் கடலில்‌ ஆழ, அதையே காரணமாகக் கொண்டு பாஷ்யமாசாரியர்‌ என்னை நினைத்து தன் முன்‌ நிறுத்தி, கருணைப் பூத்தக்‌ கண்களால்‌ நோக்கி, மெய்யடியார்‌ திரளில்‌ சேரும்படி செய்து, மெய்ப் பொருளான எட்டெழுத்துள்ள திருமந்திரம்‌, இருபத்தைந்து எழுத்தான த்வய மந்திரம்‌, முப்பத்திரண்‌ டெழுத்தான சரம ச்லோகம்‌ இவைகளின்‌ அர்த்தங்களைச்‌ சுட்டிக் காட்டி நெஞ்சில்‌ பதிய வைத்த அவரருளே அடியேனுக்கு உஜ்ஜீவனத்துக்குத்‌ துணை யாகும் —

துணைவனே துன்பப்‌ பிறவிக்‌ கடல்நீர்‌
புணைவனே பொய்ம்மை இருள்தீர்‌ – இணையில்‌
கதிரவனே பூரியர்‌ சுற்றங்‌ கழற்றும்‌
சதிரனே தந்தருள்வாய மறறு–12-

துணைவராயும்‌, துன்பமேயான பிறவிக் கடலைக்‌ கடத்தும்‌ நாவாய்‌ போன்றவராயும்‌, பொய்யறிவாகிய இருளை நீக்கும்‌ ஸூரியனாயும்‌, தகவு இல்லாதவர்களின்‌ உறவை நீக்கும்‌ சதுரராயும்‌ உள்ள தேவரீர்‌, உய்வு பேற்றுக்குத்‌ தக்கதை அடியேனுக்கு உகந்து அருள்‌ செய்வீராக –

மற்றோர்‌ பொருளுளதே? மாயை அறத் தொலைத்து
தெற்றத்‌ தெளிவித்துச்‌ சேம நல்கி – பிற்றைப்‌
பிறப்பொழித்துப்‌ பெம்மான்‌ கழலிணைத்து நாளும்‌
உறுமின்பம் உண்பிக்கவே–13-

ஆசாரியன்‌ அருளைக் காட்டிலும்‌ பிறிதொரு சிறந்த பொருள்‌ அடியேற்குளதோ? பிறவிக்‌ கேதுவான பிரகிருதி தொடர்பை நீக்கி,அறிவின்‌ மையாகிற மயக்கத்தைப் போக்கித் தெளிவைத்‌ தந்து,இவ்வளவிலேயே ஆனந்தமுறச்‌ செய்து முகுந்தனான இறைவன்‌ திருவடிகளில்‌ சேர்த்து மேலுள்ள காலமெல்லாம்‌ பேரின்பம்‌ நுகரும்‌ வாய்ப்பினை அடையும்படி செய்தார் –

உண்பித்தான்‌ ஒண்மை உலகார்யன்‌ ஓர்ந்தருள்செய்‌
விண்புகு விஞ்சுசுவை முத்தர்தம்‌ – பண்பிதனை
தக்கவாறுண்டு தரமுயர்ந்து நிற்கின்றேன்‌
மிக்கவா நான் எவ்வெவர்க்கும் மேல் –14-

உலகோர்க்கு உய்யும்‌ வழியைத்‌ தந்தவரான வள்ளல்‌ பிள்ளை லோகசாரியர்‌, தாம் மிக வுணர்ந்து அருளிச்‌ செய்த ஆகாசத்தைப்‌ போன்று உயர்ந்த சுவை யுடைய முத்தர்க்கு இன்பத்தை வழங்கக்‌ கூடியதான ஸ்ரீவசநபூஷணம்‌ என்ற நூலை அமுதாகக் தேர்ந்து அநுபவிக்கும்படி செய்தார்‌. பாஷியமாசாரியரும்‌ அதை அடியேனுக்கு உபகரித்தார்‌. அடியேனும்‌ அதன்‌ தரமறிந்து உள்ளத்திருத்தினேன்‌. இதனால்‌, நான்‌ உலகில்‌ எவருக்கும்‌ மேன்மையனாவேன் –

மேலா மிகு புகழ்ப் பாடியன் தன் மெய் வழி சால்
தோலா அருள்தந்த தொல்வழியில்‌ – நாலாம்‌
வழியே எளிய உரிய வழியா
அழிவிலா ஈரியல்புக்காம் –15-

மேலானார்‌ புகழும்‌ புகழ்களுக்கெல்லாம்‌ மேம்பட்ட புகழாலரான பாஷ்யமாசாரியர்‌, தம்‌ மெய்யுணர்வால்‌ ஆய்ந்து, முக்தி நெறியான நான்கில்‌ எல்லா நெறிகளைக் காட்டிலும்‌ மிக எளியதும்‌ அழிவற்ற ஆத்ம பரமாத்மாக்களுடைய உண்மை நிலைமைகளுக்குப்‌ பொருந்தியதும்‌ எவரும் மேற் கொண்டொழுகுவதற்கு உரியதாகிய மிகச்‌ சிறந்தது சரணாகதி உபாயமே யாகும்‌ என்றார் –

ஆமா றறிவுடைய ராவ தரிதன்றே
தேமா மலர்மா திருவருள்சார்‌ – நாமடந்தை
நாவன்‌ திருவயிந்தைப்‌ பாடியன்‌ நல்குதல் போல்‌
யாவனே ஆரியர்சார்‌ பின்று–16-

தன்னை யடைந்தாரை உய்விக்கத்தக்க அறிவுடையராக்குவது அரிதே யன்றோ இவ் வுலகின்‌ நிலை? இப்படி யிருக்க, தேனொழுகும்‌ தாமரை மலரைப் பிறப்பிடமாக வுடைய திருமகளின்‌ அருளைப் பெற்ற கலைமகள்‌ வாழும்‌ திருநாவை வுடையவரான திருவயீந்திரபுரம்‌ பாஷ்யமாசாரியரைப்‌ போல்‌ அடைந்தாரைக் காக்கும்‌ இயல்புடையவர்‌ எவரே உளர் –

இன்றே பிறந்தேன்‌ பழுதே யிழந்த நாள்‌
குன்றோ? மலையோ? கொழுங்கடலோ? – ஒன்றறியேன்‌
பாடியன்‌ வந்திலனேல்‌ பாழன்றே?
மேல் நாளும்‌ தேடிவந்தான்‌ ஏதிலருள்‌ செய்து–17-

மாறி மாறிப் பலப்‌ பிறவிகளை யடைந்து நின்ற கீழ்‌ நாள்களெல்லாம்‌ பல கல்பங்களாக கழிந்தது மட்டுமின்றி ஒரு குன்றினளவு, பெரியமலையளவு பெருங்கடலினளவு என்றளவிட முடியாதக்‌ காலமெல்லாம்‌ எனக்குப்‌ பழுதேயாயின. பாஷிய மாசாரியர்‌ காரணமற்ற கருணையால்‌ அடியேனைத்‌ தேடி வந்து, எனக்கருள்‌ செய்த இந்நாளே பயனுள்ள பிறவி யடைந்தேன்‌ என்றவாறு-

செய்த நலன்‌ ஈதென்று சிந்திக்க ஒல்லுமே?
மெய்யுணர்வின் மேம் பொருளைச் சேர் நெறியும் பொய்மையைப்
போக்குதலும் மெய்ம்மை மிக வுணர்த்தி பொன் கழலில்
வீக்கு மெய்ம்மைப்‌ பாடியன் மெய்‌ யின்று–18-

பாஷ்யமாசாரியர்‌ செய்த ஆனந்தத்துக்‌ கேதுவான நன்மைகளை மனத்தால்‌ நினைக்கவும்‌ முடியுமா? மெய்யுணர்வின்‌ தொடர்பால்‌ அடைதலுக்குரிய பரம் பொருளை அடையும்‌ வழியையும்‌, அதற்குத்‌ தடையானப்‌ பொய்யுணர்வைப்‌ போக்குதலும்‌, தன்னுடைய அழகிய திருவடிகளில்‌ சேர்த்துக்‌ கொண்டு மெய்யறிவை நன்கு உணர்த்தி அருள்‌ செய்த இவை யனைத்தும்‌ மெய்யேயாகும் –

இன்றன்றே யானும்‌ இலன் போய்‌ உளனானேன்‌
என்றடி யேனை இருந்துகேள்நீ – என்றதுமே
எண்பெருக்‌ கந்நலத்‌ தொண்பொரு ளாயினன்‌
திண்கழற்‌ பாடியற்‌ சேர்ந்து–19-

அடைந்தாரைக்‌ கைவிடாது எம்பெருமானிடத்தில்‌ சேர்க்கும்‌ திருவடி களையுடைய பாஷ்யபாசாரியர்‌, அடியேனை அழைத்து ௭திரிலிருத்தி முமுஷுப்படியைப்‌ போதித்தலுமே, எண்ணிக்கைக்கு அப்பாற்பட்ட அளவிடமுடியாத ஆனந்தத்தை யுடைய இறைவனோடு சம தர்மத்தை அடையத் தக்க இன்றே, அசத்தாயிருந்த அடியேன்‌ சத்தானப்‌ பொருளானேன்‌ என்றவாறு –

சேர்ந்தேதி லின்னருளே பொய்ம்மையைத்‌ தீர்த்தருள
ஆர்ந்த மதிநலம்‌ அன்றடைந்து – ஓர்ந்தீங்‌
குபய விபூதி ஒழிவி லுடையான்‌
அபயமிங்‌ குற்றே னது–20-

ஸ்ரீமத்‌ பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளின்‌ வேறு காரணமற்ற இன்னருளால்‌ அடியேனைத்‌ தன் பால்‌ சேர்த்து நிறைந்த பக்தியும்‌ அறிவும்‌ உண்டாகும்படி பண்ணி, ஒரு சிறு துணுக்கும்‌ தன்னை விட்டு நீங்காது இரண்டு விதமான உலகத்திலிருக்கும்‌ அனைத்தையும்‌ தனக்குடமைப்‌ பொருளாகக்‌ கொண்டிருக்கும்‌ எம்பெருமனால்‌ அஞ்சேல்‌ என்றருளப்‌ பெற்றேன்‌. ஈதன்றே அடியேனுடைய பாக்கியம் –

அதன்றே ஒழுக்கம் இலது உண்டறிதல்
அதன்றி மெய்ஞ்ஞானம் அறிதல் இதன்றே?
முழுமையன் பாடியன் முந்துற்ற என் போல்
விழுமயரின் மிக்கார் எவர் ? –21-

அறிவொழுக்கங்களால்‌ நிறைவுபெற்ற குருவை அடைவதே உய்வு பேற்றிற்குரியதாகும்‌. இதனை நாம்‌ அறிவது இயலாதே. இது உலகின்‌ நிலை. அப்படியிருக்க அறிவற்றவனான அடியேன்‌ இவற்றை எப்படி அறிவேன்‌? அறிவொழுக்கங்களால்‌ நிறைந்த பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளே அடியேன்‌
இருக்குமிடம்‌ தேடிவந்து இன்னருளைச்‌ செய்தார்‌. இதனால்‌ அடியேனைப்போல்‌ சிறப்புடையாரின்‌ மிக்கவர்‌ எவர்-

எவரே? விடம்போல்‌ இருந்துடன்‌ நாளும்‌ பவரேகைப்‌ பண்ணும்‌ பரிசும்‌ – அவரே கழற்றுந்‌ திறனறிவார்‌ பாடியன்‌ தானே கழற்றுங்‌ கருணை மிகக்‌ கொண்டு –22-

தீய செயலைப்புரிவதற்குக்‌ காரணமான நம்முடைய உடலானது விஷம்போல்‌ நாள்‌ தோறுமிருந்து நம்மை நலிகின்றது. இப்படிப்பட்ட உடற்பிறவியை நீக்க வேண்டுமானால்‌ விரோதி ஸ்வரூபத்தை நன்றாசு அறியவேண்டும்‌. அவ்வாறு அறிந்து, அவ்விரோதியை பொக்குவதில்‌ வல்லவரான பாஷ்யமாசாரியர்‌, தன்‌ கருணையாலே அடியேனுடைய விரோதியை போக்கி என்னை ஆட்கொண்டர்‌-

கொண்டான்‌ நிரம்புங்‌ குறைக்கொள்ளி நானாவேன்‌
மண்டிய தீவினையேன்‌ மாலுடையேன்‌ – கொண்டான்‌
உலகில்‌ நிகரில்லாப்‌ பாடியன்‌ ஒன்றோ
அலகில்‌ அருளால்‌ அணைத்து–23

இவ்வுலகில் எல்லாவாற்றாலும்‌ நீசைதை நிரம்பிய குறைக்‌ கொள்ளியானக்‌ காரணத்தினால்‌ மொய்த்த தீவினையுடைய வனானேன்‌-இத்தகு தீவினையேனையும்‌ கைக்‌ கொண்டு ஒப்பற்றக்‌ கருணை யுடையவராக ஸ்ரீமத்‌ பாஷ்யமாசாரிய ஸ்வாமிகள்‌ அளவற்ற அருளால்‌ அடியேனை அணைத்துக் கொண்டார் –

அணைவான்‌ அணைத்தார்‌ பெரிய உடையார்‌
இணையில்லாச்‌ சீரார்‌ இறையை – அணைத்தான்‌
கருணைக்‌ கடல்போலுங்‌ கண்ணென்னுந்‌ தோளால்‌
பரிவுமிகும்‌ பாடியன்வந்‌ தின்று–24-

முத்தனாய்‌ வருமவனை அணைத்துக் கொள்ளும்‌ அளவற்ற கல்யாண குணங்கள்‌ நிரம்பிய ஒப்பற்றவனான சக்ரவர்த்தித்‌ திருமகனை (இராமனை) பெரியஉடையார்‌ என்ற ஜடாயு அளவற்ற ஆர்வத்தால்‌ அணைத்தார்‌. அது போல்‌, பெருங் கருணைக் கடலான பாஷ்யமாசாரியர்‌, பவித்திரத்தை உண்டாக்கும்‌ கண்ணென்னும்‌ தோளால்‌ அடியேனை அணைத்துக்‌ கொண்டார்‌.

இன்றன்‌ றிறைவன்பா லுள்ளவுற வொன்பதும்‌
ஒன்றும்‌ உணரோம்யாம்‌ தானறிவான்‌ – இன்றயிந்தை
பாடியன்பால்‌ சேர்த்தும்‌ பரிவின்‌ முழுக்களித்தான்‌
ஈடிலம்யாம்‌ என்றுலகின்‌ தேர்வு–25-

அநாதிகாலமாக எம்பெருமானுக்கும்‌ நமக்கும்‌ உள்ள உறவு ஒன்பதையும்‌ நாம்‌ அறியோம்‌. முற்றுணர்வினாகிய எம்பெருமான்‌ தானறிவான்‌. இத்தகு உறவின்‌ காரணமாக அடியேனை உய்வு பெற நினைத்து தகுந்தவரான பாஷ்யமாசாரியரிடம்‌ பரிவோடு சேர்த்து, மெய்யுணர்வை முழுக்க உண்டாக்கினான்‌. இதனால்‌, இன்று உலகவர்‌ இவன்‌ ஒப்பற்றவன்‌ என்று நிர்ணயிப்பதற்கு ஏதுவானேன்‌ – என்றவாறு –

தேர்வ லிதமென்னாச்‌ சிந்தியேன்‌ பாவியேன்‌
ஊரோ டுழல்வேனைப்‌ பாடியனாம்‌ – நாரணன்‌
மந்திரத்தின்‌ நுண்பொருளை மாட்டிச்‌ செவிவழியே
தந்தருள்‌ செய்தான்‌ நேர்ந்து–26-

ஆத்மாவாகிற நமக்கு நன்மையைச்‌ சிந்திக்காமல்‌ உண்டியே உடையே என்று உகந்தோடும்‌ ஊரவரோடு உழல்கின்ற பாவியான என்னை, பாஷ்யமாசாரிய ஸ்வாமிகள்‌ அடியேனுக்கு இதம்‌ செய்வதற்காக, என்னை வளைத்துப்பிடித்து நாரணன்‌ மந்திரமாம்‌ எட்டெழுத்தின்‌ உட்பொருளை செவியின்‌ மூலம்‌ உபதேசித்தருள்‌ செய்

நேர்ந்து நினைந்தும்‌ வணங்கி வழிபட்டும்‌
கூர்ந்துமிகும்‌ அன்பின்‌ குறிக்கொண்டும்‌ – தீர்ந்துநின்பால்‌
தஞ்சம்‌ அடைந்தனன்‌ பாடிய நின்‌ தாளிணையே
எஞ்சுத லில்லா அரன்‌–27-

பெருமான்‌ அருள்தமக்கு வேண்டுமென்று ஈடுபட்டு, வணங்கி வழிபாடுகளைச்‌ செய்யும்‌ மிகமிக அன்புடையவரான பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளே! தேவரீரையே தஞ்சமென்றடைந்தேன்‌. ஆதலின்‌, தேவரீர்‌ அடியேனுடைய உய்வு பேற்றிற்குக்‌ குறைவற்றக்‌ காப்பாளாராக ஆகக் கடவீர் –

அரணென்‌ றடைந்தனன்‌ ஆரியநின்‌ தாள்கள்‌
முரணும்‌ அழுக்குடம்பும்‌ ஞானம்‌ – முரணும்‌
ஒழுக்கமும் தெற்றென அற்றன தேர்ந்தேன்
விழுப்பொருள்‌ நீயா விழைந்–28-

ஆசாரிய ஸ்வாமிகளே! தேவரீர்‌ திருவடிகளே காப்பாகுமென்று தஞ்மென்று அடைந்தேன்‌. அடைந்த இம்மாத்திரத்‌ தாலேயே, தீயவிஷயத்தில்‌ ஈடுபாட்டை விளைவிக்கும்‌ அழுக்குடம்பு, அதன்காரணமான தீயவொழுக்கம்‌, அதன்காரணமான பொய்யறிவு இவையனைத்தும்‌ பறந்தோடின. இதனால்‌, தேவரீரே விழுமிய பொருளென்று உணர்ந்தேன் –

விழைந்தேன்‌ இனியதா வேகடஞ்செய்‌ நின்னை
விழைந்திலன்முன்‌ மாயவன்சேற்‌ றள்ளல்‌ – அழுந்தி
பல் பகல் பாழ் பட்ட மீட்பதினி யுண்டாயின்
நல் வகையில் நீ இனி நல்கு –29-

முன்காலமெல்லாம்‌ வலிய சேறாகிய இந் நிலவுலகில்‌ அழுந்தி உருப்படி யில்லாமல்‌ கிடந்தமையால்‌ இரும்பைப்‌ பொன்னாக்குவாரைப்‌ போல் இருக்கிற தேவரீருடைய ஸ்வபாவத்தை அறியாமல்‌ நீண்டகாலம்‌ பாழே போனேன்‌. இன்றாகத்‌ தேவரீரை அறிந்து அன்பு பூண்டேன்‌. ஆனால்‌, பாழே கழிந்த காலத்தை இனி மீட்பதொன்று உண்டே? தேவரீரே இதை யருளிச்‌ செய்ய வேணும்‌-

நல்கும்‌ குருகூர்ச்‌ சடகோபன்‌ வேட்பன
அல்லனே தான் பொதுவன்‌ நீர்சிறப்பின்‌ – அல்லரே
ஏந்தூர்‌ சடகோபன்‌ வேட்பன ஈவதே
உந்தம்‌ சிறப்பினுக்‌ கொப்பு–30-

குருகூருக்குத்‌ தலைவரான நம்மாழ்வார்‌ எவ் வண்ணம்‌ எம்பெருமானை ஆசைப்படுவாரோ உபய விபூதிக்கும்‌ பொது நின்ற எம்பெருமான்‌ அவ் வண்ணமே நல்குவான்‌. எமக்கு ஆசாரியரான தேவரீரோ, உம்மைத் தஞ்சமென்று அடைந்தாரை அவர்கள்‌ விரும்பியது தரும்‌ சிறப்புடைய நியதி யுடையீர்‌. இத்தகைய நீர்‌, உம்மையே தஞ்சமாக அடைந்த ஏந்தூர்‌ சடகோபனாகிய அடியேன்‌ விரும்பியதைக்‌ கொடுப்பதே சிறப்பாகக்‌ காப்பவரான உமக்குத்‌ தகும்‌ என்று அடியேன்‌ விண்ணப்பம் –

ஒக்கும்‌ அடியேனைக்‌ கைக்கொளல்‌ உந்தமக்கே
ஒக்கும்‌ அடியேனும்‌ தாள்சாரல்‌ – தக்கதே
ஈடினை யில்லாப்‌ பெருமையீர்‌ நீரன்றே
ஈடினை யில்சின்ன வனான்‌–31-

சிறப்புடைய ஆசாரியரான உமக்கே அடியேனைக்‌ கைக்கொளல் தகும்‌. தேவரீரோ ஈடியிணையில்லாப்‌ பெருமை-யுடையவரெனத்‌ தக்கவராகையாலே, அடியேன்‌ தேவரீர்‌ திருவடிகளைக்‌ சார்வதே ஒக்கும்‌. அடியேனோ சிறியவர்களில்‌ ஈடிணையில்லவன்‌ என்பதே உண்மையாகும்‌

நானென்‌ றெனதென்றும்‌ நான்பெரிய கோனென்றும்‌
வானொன்‌ றகங்காரத்‌ தியான்வளர்ந்தேன்‌ – தேனென்‌
றமுதென்றும்‌ மும்மநுப்பால்‌ ஆழ்ந்ததின்‌ ஆசான்‌
நமவென்‌ நலங்கொடுத்தனன்‌–3
2–

அடியேன்‌ கீழ்க்கழிந்த நாள்களிலெல்லாம்‌ நானென்றும்‌,எனதென்றும்‌, நானே பெரியவன்‌ என்றும்‌ இப்படி வானைவிட உயர்ந்தஅகங்காரத்தில்‌ முதிர்ந்தவனாய்‌ இருந்தேன்‌. இந்நிலையில்‌ ஆசார்ய சுவாமிகள்‌ அடியேனுக்கு மூன்று மந்திரங்களில்‌ முதல்‌ மந்திரமான திருமந்திரத்தில்‌ நடுவில்‌ பதமான நம: என்ற சொல்லை விவரித்து, தேனில்‌ இனியதும்‌ அமுதம்‌ போன்றதும்‌ மரண மற்றதுமான இந்த விஷேச அர்த்தங்களை உபதேசித்து அடியேனை உய்வித்தார் –

கொடுத்தான்‌ குருகூர்ச்‌ சடகோபன்‌ ஈந்த
கொடுத்தான்‌ பதின்மர்‌ குறிக்கும்‌ மொழிகள்‌
கொடுத்தான்‌ கலம்பகம்‌ மற்றும்‌ அனந்தம்‌
மடுத்தேன்‌ மதுவெனப்‌ பெற்று–33-

உலகோர்‌ துன்பத்தைப்‌ போக்க திருநகரியில்‌ அவதரித்தவர்‌ நம்மாழ்வார்‌, அவர்‌ அருளிய பிரபந்தங்கள்‌, மற்றுள்ள ஆழ்வார்கள்‌ பிரபந்தங்களையும்‌ கொடுத்தார்‌. அடியேன்‌ பாஷ்யமாசாரியரை அடைந்ததே காரணமாக, அடியேனைக் கொண்டு திருவாய்மொழிக்‌ கலம்பகத்தையும்‌ இயற்றும்படி செய்து, மதுரமிக்க ஸம்பிரதாய அர்த்தங்களையும்‌ அடியேனை அநுபவிக்கச்‌ செய்தார் –

பெற்றேனின்‌ தாளிணையில்‌ பாமாலை பெய்கலையைக்‌
கற்றேன்‌ கடும்பிறவி காய்ந்தொழித்தேன்‌ – நற்றேன்‌
ஒழுகுநின்‌ கீர்த்தி நயந்துரைத்தேன்‌ ஓர்கால்‌
பழகு பரிந்துரைப்பால்‌ பட்டு–34-

ஆசாரியரே! மறு பிறப்பறுக்கும்‌ உமது தாளிணையே தஞ்சமாகப்‌ பெற்றேன்‌. நின்‌ திருவடி விஷயமான பாமாலையாகிற கலையைக்‌ கற்றேன்‌-இதனால்‌, துன்பத்துக்குக்‌ காரணமான பிறவி மீண்டும்‌ வாரா வண்ணம்‌ தேவரீர்‌ கீர்த்திகளை உலகறியச்‌ செய்தேன்‌.சில சமயம்‌ உலகோர்க்கு தேவரீர்‌ திருவடியை அடைய புருஷகாரமாகவும்‌ வாய்ப்பேன்‌ – என்றவாறு-

பட்டேன்‌ பருவரல்‌ பல்லூழிக்‌ காலமெல்லாம்‌
தொட்டேன்‌ பாடியன் தன்‌ தூமலர்த்தான்‌ – தொட்டதுமே
முன்ன வினை பின்ன வினை ஆரத்த மூன்று ஒழிந்த
என்னை நிகர் யாரே யினி –35-

கீழ்க் கழிந்த நாட்களிலெல்லாம்‌ பிறப்பிறப்புப்‌ பிணியால்‌ படாத பாடுபட்டேன்‌. காதாகித்கமாக பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளின்‌ திருவடியைத்‌ தொட்டேன்‌-தொட்டதும் இப் பிறப்புக்கு முற்பட்ட பிறவிகளில்‌ செய்த வினைகள்‌, பிற்பட்ட வினைகள்‌ இவை யனைத்தும்‌ தீயினில்‌ தூசாகி கழிந்தொழிந்தன. இனி, வினை யற்றவர்களில்‌ எனக்கு நிகராக யவருமில்லை என்றவாறு–

இனியோர் குறை யுண்டோ பூதூரில் வள்ளல்
பனி மலர்த் தாளிணையே பற்றா -நனி விழையும்
சிங்களில் பாடியன் தன் செங்கமலத் தாளிணையே
துங்கமா தூய் மௌளிக் கொண்டு –36–

ஸ்ரீபெரும்புதூர்‌ யதிராசருடைய குளிர்ந்த தாமரை மலர்‌ போன்ற திருவடியினையே பற்றாக மிக விரும்பி, ஆறும்‌ பேறுமாகப்‌ பற்றிய பாஷ்யமாசாரியருடைய திருவடித்‌ தாமரையையே அடியேன்‌ உத்துங்கமான முடியாகக்‌ கொண்ட பிறகு, இனியும்‌ ஒரு குறையுள்ளதோ? எனக்கு –

கொண்டான்‌ வரமுநி கோயில்‌ உகந் தயிந்தை
கொண்டான் நல மந்தம் இல்லத–கொண்டோம்
உலகளந்தான்‌ பொன்னடியோம்‌ பாடியன் போல் யமும் ன்பம்‌
நிலமளந்தான்‌ சொம்மாயினோம் –37–

மணவாளமாமுநிகள்‌ திருவமீந்திர புரத்தையே தமக்குகந்த கோயிலாகக்‌ கொண்டார்‌. அதை யறிந்த பாஷ்யமாசாரியரும்‌ நலமந்தமில்லாததான அந்தக்‌ கோயிலையே தமக்கேற்ற வாச ஸ்தலமாகக்‌ கொண்டார்‌. இவர்‌ அபிமாநித்த சிஷ்யர்களாகிய யாமும்‌ உலகளந்தான்‌ பொன்னடியார்‌ ஆதலால்‌ நிலமளந்தவனுடைய சொத்தாக ஆயினோம் —

நேமிசங்கம்‌ கண்கைகால்‌ வாய்முகம்‌ நாபியணி
தாமரைகள்‌ தாங்கி கருணைக்‌ கண்ணோட்டம்‌
அயிந்தையில்‌ ஈருருவும்‌ ஆறு பயன்‌ ஆவதே!
நயந்தெரிந்து நானடைந்தேன்‌ நன்கு–38-

அடைந்தாரைக்‌ காப்பாற்ற வேண்டி பஞ்ச ஸம்ஸ்காரார்த்தமாகத் தரித்த திருவாழித்‌ திருச் சங்கமும்‌, தன்னை அடைந்தாரை நோக்கும்‌ மலர்ந்த திருக் கண்களும்‌, பிறவி போக்கும்‌ திருவடிகளும்‌, அஞ்சலென்ற திருக் கைகளும்‌, உபதேசம்‌ செய்யும்‌ திரு முகமும்‌, எம்பெருமான்‌ திருமேனிக்குப்‌ போலி யுருவான திரு நாபிக்‌ கமலமும்‌ ஆகிய இவைகளைத்‌ தாங்கி கருணைக்‌ கண்ணோட்டங்‌ கொண்டு எழுந்தருளி யிருக்கும்‌ ஸ்ரீமந்‌ மணவாள மாமுனிகளும்‌ அவரின்‌ நிழல்‌ என்னலாம்படியான பாஷ்யமாசாரியரும்‌ இவர்கள்‌ இருவரும்‌ ஈருருவோ? என்று நினைக்கலாம் படி யிருக்கும்‌ இருப்பை நினைத்து அவர்களையே தஞ்சமடைந்தேன்‌.

நன்றென்‌ றுளதேயோ? பொய்யறியா நானறிந்த
என்றென்றும்‌ யாண்டும்‌ இலதன்றே – குன்றாக்‌
கருணைக்‌ கடலே தான்‌ பாடியன்‌ வேறன்‌
றிருனிலத்தில்‌ பேரொளியே யின்று–39-

பொய்யென்ப தறியாத அடியேன்‌ அறிந்த தொன்றைச்‌ சொல்லுகின்றேன்‌. இருள் தரு மா ஞாலத்தில்‌ பேரொளிப்‌ பிழம்பாகத்‌ திகழும்‌ திருவயீந்திர புரம்‌ பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளே ஆவர்‌. கருணைக் கடலான அவரைப்‌ போல்‌ நன்றான ஒரு பொருள்‌ இன்று எவ்விடத்திலாகிலும்‌ உளதோ? இல்லை யென்றபடி –

இன்றன்றே? என்றென்றும்‌ ஈடிணை யென்பதில்லை
பொன்றாப்‌ புகழோன்‌ சடகோபன்‌ – பொன்றாத
பேரறிஞன்‌ நாதமுநி யாமுநன்‌ பேராளன்‌
நேராவ ரென்பதிலை நேர்‌–40-

இன்றும்‌ முற் காலத்திலும்‌ மேல் வரும்‌ காலத்திலும்‌ என்றும்‌ அழியாத புகழை யுடைய நம்மாழ்வாருக்கு ஒப்பானவர்‌ எவருமில்லை எனலாம்‌. அவரை அடி பணிந்த குறை வற்ற போறிஞரான ஸ்ரீமந்‌ நாத முநிகள்‌, அங்ஙனமே யாமுந முளிகள்‌, திக்கெட்டும்‌ புகழ் பரவும்‌ பேராளரான ராமாநுஜர்‌ முதலான இவர்களுக்கும்‌ ஒப்பாகக்‌ கூடியவர்‌ ஒருவரும்‌ இலர்‌ எனலாம்‌. நன்மை யொன்று மில்லாத அடியேனை அங்கீகரித்தமையால்‌ பாஷ்யமாசாரியரை வேண்டுமானால்‌ அந்த பூர்வாசாரியர்களுக்கும்‌ ஒப்புச்‌ சொல்லலாம்‌ – என்றவாறு –

நேராவார்‌ யாரே? கருணை நிரம்பியதில்‌
நேரார்‌ நிகரில்‌ புகழொன்றில்‌ – நேராவார்‌
உண்டேயோ? பாடியற்குப்‌ பெம்மானும்‌ உள்ளதேல்‌?
புண்டரீகம்‌ வான்பூத்த போல்‌–41-

கருணை நிரப்பத்திலும்‌ வாத்சல்யாதி குணங்களிலும்‌ பாஷ்யகாரருக்கு நிகர்‌ ஒருவருண்டோ? எல்லா நற் பண்புகளால்‌ நிறைந்தவனான எம்பெருமானும்‌ அவருக்கு நிகராக மாட்டான்‌. உளர்‌ என்பீரேல்‌! ஆகாயத்தில்‌ பூத்தத்‌ தாமரைப்‌ போலாகும்‌ என்பேன் –

போலா மதுரகவி மாறன் தன்‌ பொன்னருளே
ஏலாரே? சான்றோ ரெனக் கொண்டு – மேலாத்‌
தகவுடைய தாய் தந்தை என்று நின்ற அஃதே
மிக விரும்பும்‌ பாடியனே மெய்‌–42-

மதுரகவியார்‌, தன்புன்மையைக்‌ கண்டால்‌ சான்றோர்‌ தன்னை ஏற்க மாட்டார்‌ என்று கருதியே அழகிய அருளை யுடைய ஸ்வாமி நம்மாழ்வாரையே தகவுடையதாய்‌, தந்தையான எல்லா வுறவுமாய்க்‌ கொண்டு தஞ்சமடைந்தார்‌. ஆழ்வாரும்‌ அவரை ஏற்றார்‌. அதைப் போலவே புன்மை யுடைய அடியேனை பாஷ்யமா-சாரியர்‌ ஏற்றுக்‌ கடைக் கணித்ததும்‌ மெய்யே யாகும்‌-

மெய்ம்மைத் திருவயிந்தை பாடியன் மேல் நாளில்
செம்மை யுறச் செய்யா திருப்பேனேல் -அம்மே
நலன் துறந்து நாண் துறந்து பாழ் படுவன் அன்றே
இலனாகி எய்த்து இருப்பன் இன்று –43-

பொய்யில்லா மணவாள மா முநிகள்‌ திருவயீந்திரபுரத்தில்‌ கோயில்‌ கொண்டதனால்‌ அத் தலம்‌ இன்று மெய்த்தல மாயிற்று. அத் தலத்தையே தனக்கு இருப்பிடமாகக்‌ கொண்டு ஸ்ரீமத்‌ பாஷ்யமாசாரியர்‌ முன் காலத்தில்‌ அடியேனை செம்மைப் படுத்தா திருப்பாரானால்‌, அம்மம்மே ! அடியேன்‌ எல்லா நலன்களையும்‌ துறந்து லஜ்ஜையும்‌ துறந்து அசத்தாகிப்‌ பாழ்பட்டிருப்பேன்‌ இன்று – என்றவாறு –

இன்றன்றே மாறன்‌ சடகோபன்‌ என்றென்று
நன்றானேன்‌ உண்ணாட்டுத்‌ தேசிதனை – நன்றா
குடிகஷணைன்‌ கோவிந்தன்‌ மாதவன்‌ அன்பர்‌
மடிவைத்து கந்தருள்வான்‌ மால்‌–44-

பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளால்‌ அடியேன்‌ செம்மைப்‌ பெற்றமையால்‌, இன்று மாறன்‌ என்றும்‌, சடகோபனென்றும்‌ உலகவர்‌ இயம்புகின்றதால்‌, அடியான்‌ தொண்டன்‌ என்ற உள் நாட்டுத்‌ தேஜஸ்ஸைத்‌ தரும்‌ பேர் பெற்றவனானேன்‌; கோவிந்தன்‌ குடியடியானென்றும்‌, மாதவன்‌ தமரென்றும்‌ சொல்லத்‌ தரமுடையவனானேன் . இதனால்‌ ஸ்ரீவைகுண்டத்தில் தேவிமாரோடு எழுந்தருளி யிருக்கும்‌ பர வாசுதேவன் இவனால்‌ அலம்பி லாபம்‌ பெற்றோம்‌ என்று உச்சி முகந்தருள்‌ செய்யும்‌ பாக்கியம்‌ பெற்றேன்‌ – என்றவாறு –

மாலே படைத்துக்‌ கடைக் கணித்தான்‌ மற்றுள்ள
ஏலா திருத்தான்‌ அன்றோ! – தோலாப்‌
புகழா இத்தைப் பாடியன் பூதூர்‌ முனிபோல்‌
மிகப் பரிந்தாட்‌ கொண்டான்‌ விழைந்து –45-

எம்பெருமான்‌ பிரளய காலத்தில்‌ இறகொடிந்த பக்ஷிகளைப்‌ போலான ஜீவாத்மாக்களைக்‌ கடைக் கணித்து, கை கால்‌ உறுப்புக்களோடுக்‌ கூடிய சரீரத்தைக்‌ கொடுத்து, அறிவைக்‌ கொடுத்து விட்டு விட்டான்‌. அயிந்தைப்‌ பாடியனோ ஸ்ரீபெரும்புதூர்‌ இராமாநுஜரைப்‌ போல்‌ ஜீவர்கள்‌ விஷயத்தில்‌ ஐயோ! ஐயோ! என்று மிகப்‌ பரிந்து அவர்களை விரும்பி அடிமை கொண்டான் –

விழையொழி யாதாயின்‌ வெந்துயரே வீவில்‌
விழைவுளதேல்‌ பாடியன் பால்‌ இன்பம்‌ – கழியும்‌?
விதிசூழ்ந்‌ திலனென்று வீறுசால்‌ தானே
பதிந்தான் தன்‌ பாலாம்பேரன்பு–46-

உலகியலில்‌ இருக்கும்‌ ஆசையை ஒருவன்‌ விடவில் யென்றால்‌, அவன்‌ பிறவித்‌ துன்பத்தில்‌ ஆழ்ந்து கிடக்க வேண்டியதே. ஆனால்‌, உத்தாரக ஆசாரியரான பாஷ்யமாசாரிய ஸ்வாமிகள்‌ திறத்து பேரன்பு உளதேல்‌, அந்தமில்‌ பேரின்பம்‌ நீங்குமா? நீங்காது. எம்பெருமான்‌ கருனை ஜிவர்களிடம்‌ ஏறிப்‌ பாயவில்லை என்று நினைத்து பாஷ்யமாசாரியர்‌ ஜீவர்கள்‌ தன் பால்‌ கொள்ள வேண்டிய பேரன்‌பை தாமே பதியும்படி செய்தார் –

அன்பின்‌ நிகரில்லா னாங்கே கருணையின்‌
இன்பி னிணையில்லான்‌ தோற்றத்தால்‌ – பொன் பிறங்கும்‌
மேரு மிசைப்‌ பூத்த செந்‌ தாமரையே ஒருருத்தாள்‌
கண் கை முகம் வாய்‌ மதி –47.

ஸ்ரீ பாஷ்யமாசாரியர்‌, எம்பெருமான்‌ திறத்தும்‌, தன்னை தஞ்சமென்றடைந்த சீடர்‌ திறத்தும்‌ அளவிலா அன்புடைமையின்‌ இன்புறுவதிலும்‌ இணையில்லாதவரே. இவர்‌ தோற்றத்தில்‌ பொன்னிறத்தால்‌ அழகிய திருமேனி, திருவடிகள்‌, திருக்கண்கள்‌, திருக்கைகள்‌, திருப்பவளம்‌, திருமுகம்‌ இவையனைத்தும்‌ அப்போதலர்ந்த செந்தாமரையொத்து பொன்மலையான மேருமலை௰ல்‌ பூத்தபல செந்தாமரைப் போல்‌ காட்சி யளிக்குமென்பதாம் –

மதியொன்றில்‌ மான்குறள்நேர்‌ மாயை கடிவில்‌
எதி சட கோப னிவனே – கதியில்லான்‌
என்போலும்‌ ஏழையைக்‌ கண்போலும்‌ காப்பவன்‌
விண்போகும்‌ சீர்பாடி யன்‌–48–

செயல்‌ செய்யச்‌ சிந்திப்பதில்‌ வாமந மூர்த்தி போலும்‌, மாயயைக்‌ கோபித்துப்‌ போக்குவதில்‌ முற்றுந் துறந்த சடகோபனே யாவான்‌. தன்‌ பாலீடுபாடு இல்லாத என்னைப்‌ போல்‌ அறிவிலியைக்‌ கண்‌ போலும்‌ சிறப்புறச்‌ செய்து காத்தருள்வார்‌ வானளாவிய கீர்த்தி வாய்ந்த பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌- என்பதாம்

பாடியனோ சானகியோ போல்வீர்நன்‌ குத்தமரில்‌
வீடில்சீர்‌ ஆழ்வான்‌ தனையடைந்தார்‌ – கோடல்‌
பதி பரவும்‌ பாங்கில்‌ கலியனோ டொப்பீர்‌ மதி நலத்தால்‌ மாறனே நீர்‌–49-

தான்‌ நரகமடைந்தாலும்‌ பரவாயில்லை. ஆனால்‌, ஆசை யுடையோர்‌ இழக்கலாகாது என்று எண்ணி ஆசாரியன்‌ ஆணையை மீறி திருமந்திரத்தை ஆசையுள்ள எல்லோருக்கும்‌ தூளி தானம்‌ செய்த எம்பெருமானாரைப்‌ போலவும்‌, தேவ மாதரை மீட்கத்‌ தான்‌ சிறையிருந்த சீதாப் பிராட்டியைப்‌ போலவும்‌, தரிசனத்தைக்‌ காக்க தன்‌ கண்ணை யிழந்த கூரத்தாழ்வானைப்‌ போலவும்‌, தன்னை அடைந்தாரைக்‌ கைக் கொண்டு திவ்விய தேசங்களை வாழ்த்திய திருமங்கை யாழ்வாரைப்‌ போலவும்‌, மயர்வற மதிலம்‌ அருளப்‌ பெற்றவர்களில்‌ தலைவரான நம்மாழ்வாரைப்‌ போலத்‌ திகழும்‌ பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளே! இவர்களில்‌ நீவீர்‌ எவரோடு ஒப்பாவீர்‌-

நீரே சயமே யடிமைத்‌ தலை நின்றீர்‌ நீரே அடிமையில்‌ நீக்கமிலீர்‌ – நீர்தாமே கோதிலடி யாருங்‌ குணந்திகழ்‌ கொண்டலும்‌ நீதி நெறி வித்தகரும்‌ நீர்‌–50-

பாஷ்யமாசாரியரே! பயனாகிற அடிமையில்‌ தலை நின்றவர்‌ நீரே; எம்பெருமானுக்‌ காற்றும்‌ தொண்டில்‌ பிரிவதில்லாதவரும்‌ நீரே; குற்றம்‌ யாதுமில்லாது அடிமையில்‌ தலை நின்ற தோடல்லாமல்‌ அடைந்தாரைக்‌ கைக் கொண்டு குணந் திகழ்‌ மேகத்தோடு ஒத்தவரும்‌ ஆவீர்‌. ஆத்ம பரமாத்மாக்களின்‌ நீதியை முற்றும்‌ அறிந்தவரும்‌ நீரே யாவீர் –

நீரே நிகரற்ற நீசனெனை கைக்கொண்டீர்‌
பாருடன்‌ நீரும்‌ பரிவுமிகு – ஊரவரும்‌
எக்காலத்‌ தெவ்வெவரும்‌ ஏற்பதொண்‌ றுண்டேயோ?
மிக்க புகழ் தத்துவமே –51–

நிகரற்ற நீசனான என்னை நீரே உகந்துக்‌ கைக் கொண்டீர்‌. நிலத் தேவரும்‌ ஸ்வேதத்‌ தீப வாசிகளும்‌, மங்களாசாஸனமே யாத்திரை யாயுள்ள நித்திய விபூதியிலுள்ளாரும்‌ முதலாக எக்காலத்திலும்‌ எவ்வுலகிலுள்ளாரும்‌ ஏற்பது என்பது இல்லை யேயாம்‌. மேலாம்‌ புகழே வடிவான தத்துவமே இதுவாகும்‌. தேவரீருடைய வாத்சல்ய குணம் –

மேதினியில்‌ ஐம்புல வாஞ்சை மிகவுடையன்‌
காதுங்‌ கடுநெஞ்சன்‌ தீச்செயல்கள்‌ – யாதும்‌
எனையன்றே அண்டி நிலை பெறுவ யாண்டும்‌
வினையமென்ப தொன்றும்‌ மிகை–52-

பாருலகில்‌ ஐம்புலன்‌ நுகரும்‌ விஷய விருப்பம்‌ மிக உடையவன்‌; கொலை செய்ததற்குரிய கடுமை மிக்க நெஞ்சினை யுடையவன்‌; கொடிய செய்கைகளை யுடைய இப்படிப்பட்ட யாவும்‌ என்னைச்‌ சேர்ந்தே நிலை பெறுவனவாம்‌. எம்பெருமான்‌ விஷயமாக அன்பின்‌ பட்டும்‌ அடக்கமென்பதே யில்லாதவனடியேன் –

மிகையனே மெய்யடியாா கூட்டத்து யானோ
தகையிலன்‌ சாது கோட்டி தம்மில்‌ – நகையிலன்‌
நள்ளருட்கண்‌ இங்கலம்போல்‌ நானொருவன்‌ உள்ளேன்பால்‌
உள்ளதெல்லாம்‌ தீய துள–53-

மெய்யடியார்‌ கூட்டத்து அதிகப்‌ படுவேன்‌ யானொருவன்‌ என்பதாகும்‌. சாது கோட்டிக்குரிய பண்பற்றவன்‌; பகவதநுபவ மில்லாதவன்‌; குதூகலமில்லாதவன்‌; நடுநிசியில்‌ அடுப்புக்கரிபோல்‌ ஒளியற்றவன்‌; இலனென்பாரில்‌ நானொருவன்‌ உளன்‌; என்னிடம்‌ உள்ளதெல்லாம்‌ தீயதே உள்ளதாம் –

உளதேயோ? நீர்செய்‌ செயலின்‌ தரந்தான்‌
உளதேயோ? எம்பெருமான்‌ செய்த – உளதே?
இருவீரும்‌ செய்தசெயற்‌ கொப்பறிவணர்‌ உண்டோ?
பெருமைமிகு பாடியனே! பேசு–54-

தேவரீர்‌ அடியேன்‌ திறத்துச்‌ செய்த செயலின்‌ தரமறிதலுண்டோ? தேவரீரை அடியேற்குத்‌ தந்த எம்பெருமான்‌ செய்த செயலுக்கு ஈடுண்டோ? தேவரீர்களிருவரும்‌ செய்த நல்லுதவிக்‌ கொப்புண்டோ? ஒப்பறிவாரிங்குளரோ? இவற்றை பெருமை மிகு பாஷ்யமாசாரியரே! நீரே அருளிச்‌ செய்ய வேணும் –

பேசுதல்‌ வல்லீரே? நீர்செய்த பேருதவி
பேசுந்‌ தரமுடைத்‌ தல்லவே – நீசனேனைக்‌
கைக்கொண்ட காரியமே எற்கறி வித்ததால்‌
இக் குறிப்பே கொண்டுரைத்தேன்‌ இங்கு–55-

ஆசாரிய ஸ்வாமிகளே! அடியேன்‌ திறத்து தேவரிர்‌ செய்த பேருதவியானது, தேவரீரே அருளிச்‌ செய்யும்‌ தரமற்றது. ஆதலினால்‌ பேசுதல்‌ வல்லீராக மாட்டீர்‌. உனக்கெப்படித்‌ தெரியும்‌ என்று கேட்பீரானால்‌, அடியேனோ நிகரற்ற நீசனானவனெனக்‌ கொண்டு செம்மை படுத்திய செயலே, அடியேற்கறிவித்தாகுமிதைக்‌ கொண்டே நிகரற்ற செயலென்கிறேனாகும் –

இங்கறிந்தேன்‌ இன்றாக எம்பெருமான்‌ செய்தநன்றி
துங்கமிகு பாடியனைத்‌ தோற்றுவித்தல்‌ – இங்கிலதேல்‌
தொல்லூழிக்‌ காலந்‌ தொலைந்தகீழ்‌ மேல்நாளும்‌
பல்லூழிக்‌ காலம்‌ பழுது –56-

எம்பெருமான்‌ அடியேனை உய்விக்க வேண்டியே பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளைத்‌ தோற்றுவித்தான்‌ என்பதனை இன்றாக அறிந்தேன்‌. அப்படி அவரைத்‌ தோற்றுவிக்க வில்லையானால்‌, அடியேற்கு கீழ் கழிந்த காலமும்‌ இனி மேல்‌ வருங்காலமும்‌ பழுதாய்‌ முடிந்திருக்கு மன்றோ –

பழுதாகா வண்ணம்‌ பாடியன்தன்‌ சீலம்‌
விழுமிதென்‌ றுள்ளில்‌ விரித்தான்‌ – கழிபேர்‌
கருணையான்‌ அவ்வளவே வேறன்று கொண்டு
சரணடைந்தேன்‌ பாடியன்தா ளின்று–57-

ஆசாரிய ஸ்வாமிகள்‌, பிறர்‌ நலமே பேணும்‌ மிக்கப்‌ பெருங் கருணையால்‌ தன்னைச்‌ சார்ந்தாரை உய்வு பெறுத்தலில்‌ மிகவும்‌ ஊற்றமுடையவர்‌ ஆவார்‌ என்பதனை அடியேன்‌ உள்ளத்தில்‌ மிக விரியக்‌ காட்டி யருளினார்‌. இவ்வளவிலேயே அடியேன்‌ நிர்ணயித்து, இவர்‌ திருவடிகளில்‌ தஞ்சமென்றடைந்தேன்‌. இதனால்‌, அடியேன்‌ வாழ் நாளைப்‌ பழுதாகா வண்ணம்‌ மேற் கொண்டேன்‌ இன்றெ என்பதாம் –

இன்றயிதை மாமுநிதன்‌ தாளில்‌ இருந்து தொண்டு
நன்றியற்றும்‌ பாடியன் தன்‌ நாண்மலர்த்தாள்‌ – குன்றாத
ஆறுடன்‌ பேறாக வானில்‌ அரியயயன்‌
வீறுடன்‌ பெற்றேன்‌ விரைந்து–.58-

இன்றாக திருவயிந்திரபுரத்தில்‌ கோயில்‌ கொண்டுள்ள மணவாளமாமுநிகள்‌ திருவடிகளில்‌ செய்யும்‌ தொண்டு நிலை நின்ற பேறென்றறிந்து தொண்டு செய்யும்‌, ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுடைய அன்று பூத்த தாமரை போன்ற அழகிய திருவடிகளையே அழிவற்ற ஆறுடன்‌ பேறாக வானில்‌ பெறும்‌ பயனின்‌ பெறுதற்கரிய பயனாக சிறப்புற்ற வகையில்‌ விரைந்து பெற்றேன்‌ என்பதாம் –

விரைந்து திருமலை யாழ்வார்‌ விரும்பி
வரமுநியை சீடராகக்‌ கொண்டார்‌ – வரமுநியும்‌
கோயில் அயிந்தை கொடு பாடியற் கொண்டார்
ஆய்விலடி யேற்கொண்டான்‌ ஆர்ந்து –59-

திருமலையாழ்வார்‌, தீவிரமாக மிக விரும்பி மணவாள மாமுனிகளை உபயாத்திரையும்‌ தமதாகக்‌ கொண்டு சிறப்பித்தார்‌. மணவாள மாமுனிகள்‌
திருவயிந்திபுரம்‌ விரும்பி கோயில்‌ கொண்டு ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளை உய்யும்படியே பெற்றார்‌. பாஷ்யமாசார்ய சுவாமிகளடியேனை அளவிடற்கரிய பேரன்பினில்‌ கைக் கொண்டார் —

ஆர்ந்தபுகழ்‌ அச்சுதனே வந்தான்‌ உலகார்யன்‌
தேர்ந்தறிய வல்லமே? தன்பெருமை – தேர்ந்தறிவ
தென்ப தொருபொருள்‌ நாடுறைவர்‌ யாரறிவார்‌?
பண்பனே பாடியற்குக் காப்பு –60-

நிரம்பிய புகழுடைய அடைந்தாரைக்‌ கைவிடாத எம்பெருமான்‌ பிள்ளை யுலகாசார்யராய்‌ வந்துதித் தருளுகையால்‌ இவர்‌ பெருமை நாமறியோ மென்பதொரு பொருளல்ல, உலகிலுள்ளார்‌ எவருமே அறிய முடியாத பெருமையாகக்‌ கருதக் கூடிய பண்புடையரான உலகா சாரியரே ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுக்குக்‌ காப்பாவார் –

காப்பு வடக்குதிரு வீதிப் பிள்ளை காத்திலரேல்‌
காப்பெவர்‌ வாய் மொழி ஈட்டுரைக்கு – காப்பன்றி
நுண் பொருள்‌ முற்றவும்‌ நோக்குவித்தான்‌ பாடியற்கு
பண்பினெற்‌ கீந்தான்‌ பயன்‌–61-

வடக்குத்‌ திருவீதிப்பிள்ளை நம்பிள்ளை சொன்னை திருவாய்மொழி ஈட்டின்‌ உரையைக்‌ காத்து எழுதவில்லையானால்‌, காப்பாவார்‌ யார்‌? இந்த வடக்குத்‌ திருவீதிப்பிள்ளை ஸ்ரீவைஷ்ணவத்தை காப்பது மட்டுமல்லாமல்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாசாரியருக்கு ஈட்டுரையை தன்னருளால்‌ இவரிடம்‌ வந்து சேரும்படி நோக்குவித்தார்‌. இந் நோக்கை பாஷியமாசாரியர்‌ தம் பரம கருணையாலே அடியேன்‌ திறத்தில்‌ பயனுறும்படி செய்தார் –

பயனாநம்‌ பிள்ளையின்றேல்‌ ஆழ்வார்கள்‌ பாக்கள்‌
பயனோயோ? உம்பர்‌ திவத்தொப்பாம்‌ – பயனுடைத்தே
ஈடின மில்லார் இறையின்பம் மில்லாதோர்
பாடியனே பெற்றான் தன்‌ சீர்‌–62-

உலகுக்குப்‌ பெரும்‌ பயனாக உயர்வற உயர்நலமுடையவனால்‌ மயர்வற மதிநலம்‌ அருளப்‌ பெற்றவர்களாழ்வார்கள்‌ பதின்மரும்‌, இப்படி இவர்களால்‌ இறை யனுபவம்‌ கரைந்து வழிந்தவாறே அருளிச்‌ செயல்கள்‌ தொண்டர்க்கமுத மாயமைந்தன அருளிச்செயல்கள்‌. நம்பிள்ளை என்ற ஸ்வாமிகள்‌ அவதரிக்கவில்லையானால்‌ இந்த அருளிச்செயல்‌ பயனுடையதாகாது. இதன்றி தாழ்த்திக்கு முடிந்த நிலமான இருள்தருமா ஞாலம்‌ உம்பர்‌ திவத்தொப்பாம்‌ பயனுடைத்‌ தாயிற்று. இத்தகு அனுபவம்‌ நம்பிள்ளைகளால்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாச்‌ சார்ய சுவாமிகளுக்கு அருளப் பெற்ற அவ் வனுபவம்‌ தம் பரம கருணையால்‌ எமக்குக்‌ கொடுத்தார் –

தஞ்சீரை ஞானியர்கள்‌ தாம்புகழும்‌ வேதாந்தி
நஞ்சீயர்‌ தாம்பட்டர்‌ நல்லருளால்‌ – எஞ்சாத
ஆர்வமுடன்‌ மாறன்‌ மறைப்பொருள்‌ நூறுரு
ஆர்ந்தெற்கீந்‌ தான்பா டியன்‌–63-

தம்‌ கீர்த்தியை மெய் ஞானியர்கள்‌ கொண்டாடும்‌ தரமுடைய நஞ்சீயர்‌ என்றும்‌ வேதாந்தி என்றும்‌ பெயருடையார்‌, பட்டர்‌ திருவருளால்‌ மாறன்‌ மறையாகிய திருவாய்மொழியின்‌ நுண்‌ பொருள்கள்‌ முற்றும்‌ தம்மைச்‌ சார்ந்தார்‌ தமக்கு நூறுருவமையைக்‌ கொடுத்ததை, ஸ்ரீமத்‌ பாஷ்யமாச்சார்ய சுவாமிகள்‌ மேற்படியார்‌ அருள்களால்‌ தாம்‌ பெற்று தன் பேரருளால்‌ அடியார்க்கருளினார் –

அன்பின்‌ அலைகடல்‌ ஆயிரம்போக்‌ காழ்பொருள்‌
இன்பின்‌ இளங்குமரன்‌ எம்பிராற்‌ – கின்புருவன்‌
எட்டெழுத்‌ தெட்டுகாதை பண்ணின்‌ தனிச் சுவையன்‌
பட்டர்திருத்‌ தாள்பா டியன்‌–64-

எம்பெருமானார் திறத்தும்‌ மெய்யடியார் திறத்தும்‌ அலைகடலை யொத்த அன்புடையாரும்‌, இன்பம ளிக்கும்‌ இளங்குமரனும்‌, பிறவித்‌ துயரொழிய வேண்டுவார்க்கு துன்பமொழித்து எம்பிரான் பால்‌ சேர்த்து இன்பமளிக்கும்‌ எட்டெழுத்துக்கு அஷ்டச்லோகி என்ற நூலருளியவரும்‌ பண்ணின்‌ தனிக் கலைஞரும்‌ ஆயிர நாமத்துக்கு ஆழ் பொருளெல்லாம்‌ அருளிச்‌ செய்தவருமாகிய ஸ்ரீமத்‌ பட்டருடைய திருத் தாளை தஞ்சமடைந்த ஸ்ரீமத்‌ பாஷ்யமாச்சார்ய சுவாமிகளின்‌ திருவடிகளே அடியேற்குத்‌ தஞ்சமாகும் –

பாடியன்‌ எம்பார்‌ பதற்சேர்ந்‌ திதந் தெரிவான்‌
ஈடில்‌ சுவையன்‌ தமிழ் மறையின்‌ – நாடு புகழ்‌
நாலாயிரம் பாவில்‌ எம்பெருமானார் தாள் சேர்த்‌
தோலாத்‌ துணைச் சீட னாம்‌–65-

ஸ்ரீபாஷ்யமருளிச்‌ செய்த எம்ருமானார்‌ திருத்தாளினைச்‌ சேர்ந்து உய்யும்‌ இதந்தெரிந்தவரும்‌, தமிழ்‌ வேதமாகிய நாலாயிரம்‌ பாசுரங்களில்‌ ஈடிணை யில்லாச் சுவையுடைய பண்ணின்‌ தணிக் கலைஞருமாகியவரும்‌ உலகெல்லாம்‌ புகழும்படியான எம்பார்‌, சிஷ்யாச்சார்ய முறையில்‌ சிறிதும்‌ மாறுபடாதவராய்‌ எம்பெருமானாருக்கு துணைமிக்க சீடனுமாவார்‌. இவர்‌ திருவடிகளைப்‌ பற்றின ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்யர்‌ அடியேனை ஏற்ற குருவாகும் –

சீடன்‌ பெரியநம்பி சேர்ந்தசீடர்‌ ஐவர்‌
சேடனிரா மானுசனா சீர் தரும் -பாடியற்கும்
எம்பெருமான் உட்பட இந் நிலத் தேவர்க்கும்
இம்பர் நலமந்தமில் –66-

அர்ச்சாவதார மூர்த்திகளாய்‌ கோயில்‌ கொண்டுள்ள எம்பெருமான்களுட்பட ஸ்ரீமத்‌ பாஷ்யமாச்சார்ய ஸ்வாமிகளோடு நிலத் தேவரான ஸ்ரீ வைஷ்ணவர்களோடு வாசி யற அனைவர்க்கும்‌ இவ் வுலகிலுள்ளவர்‌ கட்கும்‌ இங்குண்டான ஆநந்தம்‌ நிலைத்திருப்பதற்குக்‌ காரணம்‌, ஐவர்களான பெரிய நம்பி, திருக்கோட்டியூர்‌ நம்பி பெரிய திருமலை நம்பி, திருமலை யாண்டான்‌, திருவரங்கப்‌ பெருமாளரையர்‌ இவர்களுக்கு சிஷ்யராய்‌ திருவனந்தாழ்வான்‌ அம்சமாய்‌ இராமாநுசராய்‌ வந்தவதரித் ததாலாகும் –

இலரேல்‌ இருநூ றகவைகளும்‌ ஈங்கே
நலமொன்‌ றுளதேயோ? நாட்டில்‌ – பலவென்‌?
பரமன் படைப்போடு பாடியன் எற்கோடல்‌
தரமன்று சத்திய மீது–67-

எம்பெருமானாரும்‌ அவருடைய மறு அவதாரமான மணவாள மாமுனிகளும்‌ இருநூறு ஆண்டுகள்‌ இந்த நிலத்தின் கண்‌ எழுந்தருளி யிருக்க வில்லையே யானால்‌ இந்த நானிலத்தில்‌ ஆனந்த மென்பதொன்றும்‌ உண்டோ? இல்லையேயாம்‌. நிற்க. பல பேசி என்‌? பரமன் படைத்த படைப்பும்‌ ஸ்ரீமத் பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌ அடியேனைக்‌ கைக் கோடலும்‌ முதலானவை பயனற்றுப்‌ போயிருக்கும்‌ இது சத்தியம்‌.

இதுவொப்ப தின்பமில்லை யாமுநர்த்‌ தாள்கள்‌
கதி பெற்றூர்‌ யாமுநர்த்‌ தாதை – கதி பெற்றேன்‌
இவ் விருவர்‌ தாங்களே ஆறுடன்பே றென்றபடியேன்‌
செவ்வி யுறச்‌ சேர்ந்தூய்ந்த னன்‌-68

ஸ்ரீமத்‌ ஆளவந்தார்‌ திருவடிகளையே ஸ்ரீமத் பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளும்‌, இவர்‌ திருக் குமாரரான யாமுநாசார்ய ஸ்வாமிகளும்‌ தமக்குக்‌ கதி என்று பெற்றிருந்த இந்த இரண்டு ஸ்வாமிகளுடைய திருவடிகளையே கதி யென்றும்‌ ஆறும்‌ பேறுமா செவ்வி யுறச்‌ சேர்ந்துய்ந்தே னென்பதில்‌ இது ஓப்பதின் இல்லையாம் –

சேர்ந்தூய்ந்தோன்‌ சீராமன்‌ பங்கயக்கண்‌ ணன்தாள்கள்‌
ஆர்ந்த புகழ்ப்‌ பாடிய னம்பொனடிச்‌ – சேர்ந்துய்ந்தேன்‌
இவ்வளவே பேற்றினுக்கு ஏய்ந்த யானும் பெற்றனன்
கவ்வை யென்பால்‌ காட்டா தலை–69-

அடியேன்‌ நிரம்பிய புகழாளரான ஸ்ரீமத் பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌, மணக்கால்‌ நம்பி, உய்யக் கொண்டார்‌ இவ் விருவருடைய திருவடிகள்‌ அடைந்து உய்ந்தவர்‌. இந்த ஸ்வாமிகளின்‌ திருவடிகளே கதி யென்று சேர்ந்த இவ்வளவே பேறு பெறுதற்குரிய யாவும்‌ பொருந்தி விட்டன. ஆதலால்‌ துர் விஷயங்கள்‌ என்பால்‌ தலை காட்டாது –

தலைகாட்டாத்‌ தண்ணென்ற ஞானவவொழுக்‌ கங்கள்‌
தலைக்காட்டாத்‌ தண்ணென்ற முக்கும்‌ – நிலைநாட்டும்‌
வாள்நேர்‌ உயர்கதியும்‌ வள்ளலெனும்‌ பாடியன்தன்‌
தான்தர முந்தும்‌ தகவு–70-

மிகத்‌ தாழ்ந்தான பொய்யறியும்‌ தீயொழுக்கம்‌ அழுக்குடம்பும்‌ என்பாலும்‌ தலைக் காட்டாதவைகள்‌. ஒளி பொருந்திய நித்திய விபூதியாம்‌ உயர் கதி வள்ளலெனும்‌ ஸ்ரீமத்பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுடைய தயையால்‌ தானே முந்தும்‌.

தகவில்‌ உலகின்‌ தகவுடையீர்‌ நீரேதகவென்னும்‌ தத்துவம்‌ வேட்கும்‌ – தகையீர்‌
தகுதியில்‌ தத்துவம்‌ நாயேனைக்‌ கொண்டு தகும் கூட்டம்‌ தந்தளித்தீர்‌ நீர்‌–71-

பெருமை யென்பதறியாத உலகில்‌ பெருமை மிக உடையீர்‌ நீர்‌. தயை யென்ற தத்துவம் தானே விரும்பும்‌ தயை யுடையீர்‌ நீர்‌. தகுதி என்பது இல்லாத அடியேனான கீழோனைக்‌ கைக் கொண்டு நிலத்தேவர்‌ கூடத்திலடியேனை இருத்தினீர்‌. இவற்றை யெல்லாம்‌ அடியேனைக்‌ கைக் கொண்டவாற்றானே அறிந்தேன் –

நீர்தந்த சேமம்‌ நிமலனாம்‌ நாதமுநி
பார் நிரம்பும்‌ பல் புகழ்ப்‌ பாவினத்தை – சீருநவே .
மீள்வித்த விஞ்சுசுவைப்‌ பண்ணமர்நா லாலிரத்தால்‌
ஆள்வித்த பாடியனன்றோ–72-

மிக்க சுவை யுடையதும்‌ பண்ணமைந்ததும்‌ உலகம்‌ நிறைந்த புகழுடையதுமான நாலாயிரத்தில் திவ்ய ப்ரபந்த பாசுரங்களைக்‌ ‘குற்றமன்றிக் குணம்‌ மிக்கவரான ஸ்ரீமந் நாதமுநிகள்‌, மறைந்து போனதை மீள்வித்ததைக்‌ கொண்டு அடியேனை ஆள்வித்தீர்‌. ஆதலால்‌, இத்தகைய பாஷ்யமாசார்யரான நீர்‌, அடியேற்கு எல்லாச்‌ சேமமும்‌ நீரன்றோ –

அன்றே குருகூர்ச்‌ சடகோபன்‌ தாளிணையும்‌ பொன்றாப்‌ புகழ்நிரம்பும் வாய் மொழியும்‌ –
நன்றுதவி பொந்நிலத்தில்‌ பொன்னிலத்தில்‌ மன்னு புகழ்ப் பாடியன்
என்னை நிகர்‌ யானென்றனன்‌–73-

திருக்குருகூரிலவதரித்த நம்மாழ்வருடைய இரண்டு திருவடிகளையும்‌, அழிவற்ற இவரருளிச்‌ செயலாம்‌ திருவாய்மொழியும்‌ அடியேற்குய்யும்‌ வண்ணம்‌ உதவி, இருள்தருமாஞாலமாகிய இவ்வுலகிலும்‌ தெளிவிசும்பு திருநாடான பரமபதத்திலும்‌ நிரம்பப்‌ பொருந்தியுள்ள புகழாளரான ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌ ‘உனக்கு நிகர்‌ நீதா னென்றார் –

என்றறிவேன்‌ என்னாயன்‌ செய்தநன்றி முற்றவும்‌
இன்றறிந்தேன்‌ ஓரளவே சேனையர் கோன்‌ – தன் திறத்தில்‌
அன்பின்‌ அளவில்யான்‌ அங்ஙனமே என்பாலும்‌
அன்பின்‌ அளவில்லான்‌ என்று–74-

அடியேற்கு வகுத்த ஸ்வாமியான ஸ்ரீமத் பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌ அடியேனை உய்வித்தல்‌ பொருட்டு, அடியேன் திறத்தில்‌ செய்த நலம்‌ முற்றவும்‌ என்றும்‌ அறியப் போகாது. ஆயினும்‌ இன்றாக ஓரளவே அறிந்து கொண்டேன்‌. ஸ்ரீவைஷ்ணவ சமயாசார்யர்களில்‌ முதல்வரான ஸ்ரீமத் விஷ்வக்சேனரிடத்தில்‌ தாழுய்யும்‌ பொருட்டும்‌ பிறரை உய்வித்தல்‌ பொருட்டும்‌ அளவிறந்த அன்புடையாரானார்‌. அதே நிலையில்‌ அடியேனை உய்வித்தல்‌ பொருட்டு அளவு கடந்த அன்புடையரானார் –

என்றும்‌ மறவேன்‌ மறந்தேன்‌ இனியுணர்ந்தேன்‌
குன்றேய் குணக் கொண்டல்‌ பாடி – நின்ற புகழ்‌
கேள்வன் பொன்‌னாகத்து நீங்காத்தாய்‌ தாள்கட்கு
ஆளென்று புக்கான்‌ தனை–75-

குன்று போல்‌ மிக்க குணங்களால்‌ நிறைவாளனும்‌, கொண்டல் மேகம்‌ போல்வானும்‌ குறையேது மின்றி நற்குணக் கடலாக நின்ற புகழாளனான இறைவன்‌ திருமார்பை இறையும்‌ அகலாத உலக மாதாவான திருமகள்‌ திருவடிகளைத்‌ தஞ்சமென்று பற்றும்‌ ஸ்ரீமத் பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளை உணராமையால்‌ மறந்தேன்‌; அடியேன்‌ உணர்ந்தேன்‌; இனி மறவேன் –

கேள்வனாகம்‌ நீங்காத்தாய்‌ தாள்கள்‌ சிரங்கொண்டு
கேள்வனையே தஞ்சமென்று கொள்ளும்‌ – மீள்வில்சீர்‌
பாடியன் தன் ஆர்ந்த புகழ் எக்காலும் பண் தொடுத்து
பாடுதற்‌ குற்றதொரு பற்று–76-

உலக நாயகன் தன்‌ திருமார்பை இறையும்‌ அகலாத உலக மாதாவின்‌ திருவடிகளைச்‌ சிரத்திற்‌ கணியாகக்‌ கொண்டு இவளைப்‌ புருஷகாரமாக, எம்பிரான்‌ தன்‌ திருவடிகளையே தமக்குத்‌ தஞ்சமென்று கொள்ளும்‌, பழுதின்றி குணங்களால்‌ நிறைந்த புகழாளரான ஸ்ரீமத்பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுடைய கெளரவம்‌ மிக்க புகழை எக்காலத்தும்‌ பண்ணின்‌ இசையோட தொடுத்துப்‌ பாடுதற்குரிய தொரு உபாதானமாகும் –

பற்றோ சிறிதில்‌ பரன்சீர்க்‌ கடல்மூழ்கி
நற்றமிழ்நூல்‌ நான்களித்த இன்பமாரிப்‌- பெற்றியன்‌
வண்குருகை வந்தருளும்‌ மாறன்‌ மலரடியே
பண்புமிகும்‌ பாடியருக்‌ கின்பு –77

உலகியலில்‌ பற்று சிறிதுமின்றி பரனாம்‌ பெருமானுடைய குணக்கடலில்‌ மூழ்கி அந்த குணங்களையே உபாதாநமாகக்‌ கொண்டு, திருவாய்மொழி திருவிருத்தம்‌, பெரிய திருவந்தாதி, திருவாசிரியம்‌ என்கிற நான்குப்‌ பிரபந்தங்களளித்த வளமிக்க குருகூரில்‌ வந்தவதரித்த நற்குணக்கடலாகிய சடகோபருடைய திருவடிகளே ஸ்ரீமத்பாஷ்யமா சார்ய ஸ்வாமிகளுக்கு என்‌றும்‌ இன்பமேயாம் –

இன்புருவன்‌ பொய்கை எழிலியகல்‌ வார்கடல்நெய்‌
மின்சுடரா வேங்கடவற்‌ காட்டுமவன்‌ – பொன்னடிகள்‌
வன்சரணா வாழும்‌ அயிந்தைவரும்‌ பாடியன்தூள்‌
உன்சரணா நெஞ்சமே யுள்‌–78-

பகவதநுபவ இன்பமே வடிவான பொய்கையாழ்வார்‌, ஸ்ரீபூமியையே அகலாக, நிறைகடலை நெய்யாக விளக்கேற்றி இந்த ஒளிமிக்க விளக்கால்‌ திருவேங்கடத்தெம்பெருமானை உலகங்காணக்‌ காட்டும்‌ அவர்‌ திருவடிகளையே தமக்கு வாழ்வாக அவதரித்த, ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்யஸ்வாமிகள்‌ திருவடிகளையே நெஞ்சமே! உனக்குத்‌ தஞ்சமாக நினைவில்‌ கொள்ளுவாயாக –

உள்ளிருள்‌ நீக்கும்‌ ஒளிவிளக்‌ கேற்றுதற்கு
தெள்ளுதமிழ்‌ தேர்ந்து துணைக்கோடும்‌ – விள்ளரிய
கீர்த்தியார்‌ பூதத்தார்‌ தாளினையே பாடியற்கு
சீர்த்த பயன்‌ எற்கிவனே வாழ்வு–79-

உலகவருடைய அகவிருளைப்‌ போக்குதற்கு உள்ளத்திலுண்டான கோணலைப்‌ போக்கும்‌ தெளிந்த தமிழ் பாசுரமே நம்‌ செயலுக்கேற்ற துணை என்று தேர்ந்து துணையாகக்‌ கொண்ட, எவராலும்‌ புகழ்ந்து சொல்லுதற்கரிய சிறப்பு வாய்ந்த பூதத்தாழ்வார்‌ திருவடிகளையே, தமக்குற்ற பயனாகக்‌ கொண்ட ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளே, அடியேற்கேற்ற பேரின்ப வாழ்வாகும்‌ என்பதாம் —

வாழ்வான்‌ வலிய வழி கண்டேம்‌ நன்மைமிக்காள்‌
கேழில் திருக்‌ கண்ட பொன்‌ னாழி கண்ட – கீழ்வில்‌
தமிழ்த் தலைவன்‌ பொன்னடியே தன் சரண்‌ கொண்டான்‌
எமைக்காக்கும்‌ ஏற்ற வழி–80-

நலமந்தமில்லதொரு நாட்டில்‌ போய்‌ வாழ்ச்சி பெற, சிறப்புற்ற மார்க்கமொன்று நாம்‌ கண்டு கொண்டோம்‌. எல்லா நலன்களாலும்‌ மிக்காளரான திருக்கண்டதோடு பொன்னாழி கண்டேன்‌ என்று பாடிய எக்குறையுமற்ற பேயாழ்வாராகிய தமிழ்த்‌ தலைவன்‌ அழகிய திருவடிகளே தன்‌ சரண் என்று கொள்ளும்‌, ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌ எம்மைக்‌ காப்பதற்கு ஏற்ற வழியாகுமென்பதாம் –

வழியல்‌ வழி யனைத்தும்‌ வாள் கொண்டு வெட்டி
கழிய மிகு நல்வழியே காட்டும்‌ – பழுதில் புகழ்‌
பத்திசாரன்‌ தாளிணையே பாடியற்காம்‌ பரிசு
இத்தகையோன்‌ ஏற்ற பரிசு–81-

தேவதாந்தர சாதனாந்தர ப்ரயோஜநாந்தர முதலான வழியில்லா அல் வழிகள்‌ பலவும்‌, தம்‌ நாவென்னும்‌ வாளால்‌ அறத் தொலைத்து எம்பெருமான்‌ நாரணனே ஆறும்‌ பேறும்‌ என்பது முதலா மிக மிக நல்ல வழிகளனைத்தும்‌ தெளியக் காட்டி உலகவரை உய்வித்த திருமழிசைப்‌ பிரான் திருடியிணைகளே, ஏற்ற பயனாகக்‌ கொண்ட ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளே எமக்குரிய எல்லாப்‌ பயனுமாவாரென்பதாம் –

பரிசறிவார்‌ பல்லோர்‌ பரிசறிவார்‌ ஈடே?
குருகை வரு வண்சட கோபன்‌ – திருவடியே
பாடியற்‌ கேற்ற நிதி பாடியன் சேர்ப்‌ பாடியனே
ஈடிணையில்‌ எந்தம்‌ நிதி–82-

உலகில்‌ உற்ற பயனறிவார்‌ தாம்‌ கண்டதுவே பயனென்பார்‌ பல்லோர்‌, ஆனால்‌ பாஷியமாசாரியர்‌ கண்ட பரிசே அனைவர்க்கும்‌ ஏற்ற பயனாகையால்‌ பயனறிவார்‌ இவர்க்கீடில்லை. திருக்குருகூரில்‌ அவதரித்த சடகோபன்‌ திருவடிகளே நிதி போன்ற கதியாகும்‌ என்றருளியவர் ஸ்வாமி ராமாநுஜர்‌. இந்த ராமாநுஜர்‌ திருவடியைச்‌ சாரும்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்யஸ்வாமி ஈடும்‌ எடுப்புமில்லா நிதியாகும்‌ எம் தமக்கு –

நிதிகண்‌ டுரைசெய்தோன்‌ நீள்குன்றத்‌ தியாவும்‌
நிதியா அடியா ரடித்தூள்‌ – நிதியாக இன்பப்‌
பெருங்குழுசேர்‌ சேரலர்‌ கோனின்பம்‌
பாடியற்‌ கின்பமெற்‌ கு-83

திருவேங்கட மலையின்‌ தொடர்பே நிதி என்றும்‌, மெய்யடியார்‌ திருவடித் துகளே நிதியாகவும்‌, எம்பெருமானை நினைந் தின்‌புறும்‌ பெருங் குழுவே பேரின்பமாகச்‌ சேரும்‌ குலசேகரப்‌ பெருமானே ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுக்கு இன்பம்‌. இந்த ஸ்வாமிகளே அடியேனுக்கு ஏற்ற ‘இன்பமென்பது –

எமக்குக்‌ கதியாவார்‌ பாடியரென்‌ போல்வார்‌
தமக்குங்‌ கதியாவர்‌ தாமே – குமைக்கும்‌ .
உலகென்று பல்லாண்‌டு ஓதும் விட்ணு சித்தர்‌
உலகிய லென்று பல்லாண்‌ டோதிய பட்டர் பிரான்‌– 84

இவ்வுலகின்‌ தன்மையால்‌ எம்பெருமான்‌ திருமேனிக்குக்‌ கண்ணேறு வரும்‌ என்று பல்லாண்டு பாடிய பட்டர்பிரான்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுக்கும்‌ உற்ற காப்பாவார்‌. இத்தகு ஸ்வாமி எமக்குக்‌ கதியாவதன்றி, என் போல்வார்‌ கீழோர்‌ பலருக்குங்கதி தாமே யாவாரென்பதாம் –

உற்று நோக்கில் தேவியர் மூவர் உயர்ந்தோர் யார்
பற்றிப்‌ பரன் தாள்‌ உலகுய்ய – முற்றுணர்வை
ஒதியருள்‌ கோதை உயர் கதி கொள்‌ பாடியன் தாள்‌
மா துயர் மாய்க்கும் மருந்து–85-

எம்பெருமானுடைய தேவியார்‌ மூவராகும்‌. இவர்களில்‌ உலகவர்களுக்கு உபசரிப்பதில்‌ உயர்ந்தோர்‌ யாவரென உற்று நோக்கில்‌ உலகோர்‌ பரன் தாள்‌ பற்றி உய்வடைய இன்றியமையாச்‌ சாதனமான மெய் யுணர்வை இரண்டு ப்ரபந்தங்களில்‌ தெள்ளத்‌ தெளிய ஒதி யருளிய கோதை நாச்சியரே என்பது தேறும்‌. இத்தகு நாச்சியார்‌ திருவடிகளையே உயர்ந்த கதியாகப்‌ பற்றிய ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌ திருவடிகளே பிறவித் துயர்‌ ஒழிக்கும்‌ மருந்தாகுமென்பதாம் –

மருந்தாய தொண்டர் தாள்‌ தொண்டர் தாள்‌ தூளே
பெருவடிவாப்‌ பேணிக் கொள்‌ பெம்மான்‌ திருவடி சேர்‌
பாடியன் தன் தாளிணையே ஒப்பில் பரகதிக்கு
ஈடில்லா நம்நல்‌ தவம்‌–86-

பிறவி நோய மாத்திரமன்று, அனைத்து நோய்க்கும்‌ மருந்தாவது தொண்டரடித் தூளே யாகும்‌. இத் தகுத்‌ தொண்டரடிப்‌ பொடியே தமக்கு மேம்பட்ட திருமேனியாக விரும்பிக்‌ கொண்டதையே நிரூபகமாக உடையவர்‌ தொண்டரடிப்‌ பொடியாழ்வாராகும்‌. இந்தப்‌ பெருமை யுடைய இவ் வாழ்வார்‌ திருவடிகளையே தமக்குத்‌ தஞ்சமாகச்‌ சேர்ந்த ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுடைய திருவடி-யிணையே ஒப்பற்ற நலமந்தமில்லதோர்‌ நாட்டிற்குப்‌ போவான்‌ ஈடிணை யில்லா நம்முடைய நல்ல தவமாகும்‌ என்பதாம் –

நற்றவம்‌ மொன்றுமிலேன்‌ நாரணன்‌ தாள் பணியேன்‌
உற்ற உறவறியேன்‌ ஊழ்வினையேன்‌ — பற்றி நின்‌
தாள்பணியேன்‌ தண் கழலே பொய்யன்‌ புறந் திரிவேன்‌
ஆள் கொண்டாய்‌ கொண்டதுவே மெய்‌–87-

நலமந்தமில்லாதோர்‌ நாடுபுகுவான்‌ பொருட்டு உலகவர்‌ செய்வதாகிய நல்ல தவங்களொன்றும்‌ செய்திலேன்‌. இதைத்‌ தருவானான நாராயணன்‌ திருவடிகளைப்‌ பணிவதும்‌ செய்திலேன்‌. இவைகளின்‌ காரணமாக ஊழ்வினை வயத்தவனாய்‌, மெய்யுணர்வு மறைக்கப்‌ பெற்றவனாய்‌ பரனுக்கும்‌ எனக்கும்‌ உள்ள உறவுகளை ஒன்றும்‌ அறியேன்‌. இந்தக்‌ குறைகளெல்லாம்‌ தீர்த்து தெளிய பரம காருணிகரான தேவரீர்‌ திருவடிகளைத்‌ தஞ்சமென்று பற்றி பணியேன்‌. இன்னும்‌ பொய்யனாய்‌ தேவரீரையும்‌, எம்பெருமானையும்‌ விட்டுப்‌ புறந் திரியுமவனான அடியேனை மேல்‌ விழுந்து அடிமை கொண்டதுமன்றி, மெய்யாம்‌ வகையில்‌ மேல்‌ செய்வனவற்றைச்‌ செய்து அருளினீர் –

மெய்யார்‌ திகிரியையும்‌ மேவார்‌ செருக்களத்தில்‌
உய்யா வகை முழங்கும்‌ ஒண்ணந்தும்‌ – மெய்யாரும்‌
எட்டெழுத்தும்‌ புண்டரமும்‌ இன்னருளே நாமமும் நின்‌
பட்டழுந்தும்‌ பங்கயமீந்‌ தாய்‌–88-

ஒளிப் பிழம்பாகத்‌ திகழும்‌ திருமேனியை யுடைய சுதரிசனாழ்வானையும்‌, விரோதிகள்‌ நிறைந்துள்ள யுத்தக் களத்தில்‌ புகுந்து, விரோதிகள்‌ குடல்‌ குழம்பும்படி முழுங்கும்‌ பாஞ்ச சந்நியாழ்வானையும்‌ முறையே வலது தோளிலும்‌ இடது தோளிலும்‌ பொறித்து உண்மை யறிவினை விளைப்பதற்கு இன்றியமையாத திருவஷ்டாக்ஷர மந்திர முதலான வற்றையும்‌ திருமண்‌ காப்பையும்‌ திருவாராதன தெய்வமான தேவரீருடைய திருவடி நிலையும்‌ ஈந்தருளினீர் –

(ஈந்த) அருளே அருள் தந்த அன்னே சுரக்கும்‌
பொருளே இணையடிகள்‌ பொன்னே – மருவார்கள்‌
அங்கம் அடரும் அயிந்தை வாழ் அண்ணலே
இங்கு இறைவர் ஆள்கவத்‌ தா–89-

இவையெல்லாம்‌ தந்த, அருளே ஒருவடி வென்னலாம்படியான ஸ்வாமிகளே! அடியேன்‌ கடைத்தேற அருளைத் தந்த இறைவன்‌ போன்றவரே! மிகவும்‌ சுரந்து மிக உண்டான செல்வமே! பொன் போலுமழகிய இணைந்த திருவடிகளை யுடையீரே! விரோதிகளைப்‌ பறிப்பது போல்‌ ஒழிக்கும்‌ திருவயிந்தையில்‌ கோயில்‌ கொண்டுள்ள உற்ற ஸ்வாமியே! மேன்மேலும்‌ இங்ஙனமே ஆள்வீராக!

நல்குங்‌ கமலநேர்‌ நாண்மலர்த்‌ தாள்தொடங்கி
பல்சுவைய மேனி பரியந்தம்‌ – பல்சுவையில்‌
பாடிப்‌ பரவிய பாணன்சேர்‌ பாடியனே
ஈடில்‌ கதியாம்‌ எமக்கு–91-

நலமனைத்தும்‌ நல்குந் திருமகள்‌ தோற்றத்துக் கேதுவாகிய அன்று பூத்த தாமரைப்‌ போன்ற திருவடி மலர்‌ தொடங்கி, மிக்க பேரழகுக்குக்‌ கொள்கலமாகிய திருமேனி பரியந்தமாக பல விதமான பாட்டுச்‌ சுவையுண்டாம்படி பாடிப் பரவிய திருப்பாணாழ்வாரைத்‌ தஞ்சமடைந்த ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளே! நீரே எந்தமக்கு ஒப்பற்ற கதியாகுமென்பதாம் –

எமக்குங்‌ கதியுண்டே எண் பதினாறு தலம்
தமை வாழ்த்தியதே தகும்பே றமைக்கும்
பரகாலன் தாளிணையே தஞ்சம் கொள் பண்பன்
அரவிந்த மன்ன திருத்தாள் –92-

திருமங்கையாழ்வார்‌ எண்பத்தியாறு திவ்விய தேசங்களை வாழ்த்தி, அதுவே பெறும்‌ பயனான நலமந்த மில்லாதொரு நாடென்றமைக்கும்‌ இவர் திருவடிகளே தஞ்சமென்று கொள்ளும்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுடைய தாமரை போன்ற திருவடிகளே ஏதிலனான அடியேற்கு கதியாகு மென்பதாம் –

தாளிணைகள்‌ தானவர்‌ தேவர்‌ தொழுதிறைஞ்ச
நாள்தொறும்‌ மாமுனி வாழ்த்துரைக்க – நாள்தொறும்‌
பாவியேனைக்‌ கைக்கொண்ட பாடியன்‌ நாவழுத்த
தேவனாதன்‌ சேரயிந்‌ தை–93-

திருவயீந்த்ர புரமானது தினந்தோறும்‌ தானவர்களும்‌ தேவர்களும்‌ வந்து வந்து தொழுதிறைஞ்சவும்‌, ஸ்ரீமன்‌ மணவாளமாமுனிகள்‌ நாள்தொறும்‌ வாழ்த்துரைக்கவும்‌, பாவியேனான அடியேனையும்‌ கைக்கொண்ட ஸ்ரீமத்‌ பாஷ்யமாசாரிய ஸ்வாமிகள்‌ நாவினால்‌ நாள் தொறும்‌ நவின்று வழுத்தவும்‌ தேவனாதன்‌ கோயில்‌ கொண்ட தலமாகும் –

அயிந்தையில்‌ பாடிய யாதறியா நாயேன்‌
கயவனெனைக்‌ கண்டுகந்‌ தன்பின்‌ – நயந்தழைத்த
நன்மைமுற்றும்‌ ஊட்டினையே! நாண் மூன்றில்‌ அன்றின்‌றும்‌
நன்மைமிகும்‌ பேறனைத்தும்‌ நல்கு–94-

திருவயீந்திரபுரத்தில்‌ நித்திய வாசம்‌ செய்யும்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யாசார்ய ஸ்வாமிகள்‌, உண்மை உணர்வில்‌ ஒன்றும்‌ அறியாத கீழோனானக்‌ கயவனாகிற என்னைக்‌ கண்டு செளசீல்யத்தால்‌ உகந்தருகில்‌ அழைத்து நன்மை யென்பதனைத்திலும்‌ மேம்பட்ட நன்மையை முற்றூட்டாக மூன்று நாளில்‌ அக் காலத்து ஊட்டி யருளினீர்கள்‌. அது போல்‌ நன்மை மிகும்‌ பேறனைத்தும்‌ இன்று நல்குவீராக –

நல்கும்‌ நலமிக்க ஆசார்யர்க்‌ கெல்லைநீர்‌!
பல் புகழில்‌ மிக்‌க புகழ்ப் பாடியர் நீர் -அல்வழியில்‌
செல்வேன்‌ சிரத்தில்‌ அடி சூட்டிச் சீடர்களில்‌
எல்லையிவ லென்னும்‌ பேர் –95-

பல புகழில்‌ மிக்க புகழாளராம்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌ நீராகும்‌. அதே நிலையில்‌ ஆசார்யரென்பவரில்‌ முடிவில்‌ உயர்ந்தவரெனத்‌ தக்கவர்‌ நீரே. அடியேனோ நன்மைக்கு மாறான அல் வழியிலேயே செல்பவன்‌. இத் தகு அடியேனுக்கு சிரோ பூஷணமாக தேவரீர்‌ திருவடித் தாமரைகளைச்‌ சூட்டி அலங்கரித்தருளி சிஷ்ய வர்க்கத்தில்‌ இவன்‌ முடிவானவனென்னும்‌ பேர்‌ நல்குவீராக –

போ் பிதற்றிப்‌ பெற்றேன்‌ பெறும் பரி சங்ஙனமே
சீர்ப் பாடிப்‌ பெற்றேன்‌ சிறப்பெல்லாம்‌ – காரேய்‌
கருணை தனைக்‌ கண்டு கலக்கங்கள்‌ தீர்ந்தேன்‌
இருணிலத்தில்‌ பாடியன்தாள்‌ ஏய்ந்து–96-

ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளின்‌ திருநாமத்தைக்‌ கண்டவாறு பிதற்றியும்‌ மெய்யடியார்‌ கூட்டத்துப்‌ பெற வேண்டிய பகவதனுபவ பயனைப்‌ பெற்றேன்‌. அவ்வாறே அவர்‌ சீர்களைப்‌ பாடி உய்வு பேற்றுக்குரிய சிறப்பெல்லாம்‌ பெற்றேன்‌. கைம்மாறு கருதாத கொண்டல்‌ முகில்‌ போல்‌ இந்த இருள் தரு மா ஞாலத்தில்‌ அவர் தம்‌ கருணைப்‌ பெருக்கத்தைக்‌ கண்டு உய்வகையில்‌ குறை யுண்டாக்கும்‌ கலக்கங்கள்‌ தீரப் பெற்றேன்‌. இவ்வளவும்‌ இவர்‌ தம்‌ திருவடிகளைப்‌ பொருந்தியதலாகும் –

ஏய்ந்த கருணைவடி வானோன்‌ இவனன்றே
வாய்ந்த ஒழுக்கநிலை நின்றோனே – மாய்ந்து
அறிவின்மை முற்றறிவின்‌ பாடியன்‌ மிக்கோன்‌
பிறிது பெறுவ தெவன்‌?–97-

ஒழுக்கத்திற்‌ காணுமிடத்து மிகப் பொருந்திய கருணையே வடிவானவர்களாகிய ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளே யாவர்‌. இந்த கருணைக்கேற்ற ஒழுக்க மிக்காரும்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்யரே தான்‌. அறிவின்மை தொலைந்து முழு மெய்யுணர்வின்‌ மிக்கவரென்பதில்‌ குறை யேதுமில்லாதவர்‌. இத்தகு பண்புகளிருக்க இதில்‌ மிக்க பிரிதொரு பண்பு பெறுவதெது –

எவன்தான்‌? அயிந்தையில்‌ ஈடிணை யில்லான்‌
எவன்தான்‌? மதுரகவி நிட்டை – எவன்தான்‌?
வரயோகித்‌ தாள்சேர்ந்த தேவநாதன்‌ சேயாம்‌
பரனாம்‌ இவனெங்‌ கதி–98-

திருவயிந்திரபுரத்தில்‌ ஈடிணையில்லா ஆசார்யர்யவரே? மதுரகவி நிட்டையை மேற்கொண்டிருந்தவர்‌ யாவரே? ஸ்ரீமன்‌ மணவாள மாமுனிகளையே கதியென்று பற்றிய தேவனாதாசார்யர்‌ திருக்குமாரரென்ற சிறப்புற்றவர் யாவரே? இத்‌ தன்மைகளால்‌ மேன்மை யுள்ளவராகிய ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்யஸ்வாமிகள்‌ ஆகிய நீரே எங்களுக்குக்‌ கதி யாவீர் –

கதியொன்‌ நிலதென்போல்‌ காசினியில்‌ யாது?
மதிதான்‌ இலதில்‌ உலகில்‌ – எதுவொன்‌
றிதுவேயோ? பாடியற்குப்‌ பற்றுதற்‌கேது
இதுபோல்வார்‌ யாரே? இனி–99-

யாரும்‌ பற்றத் தகாத கதியற்றவன்‌ என்போல்வாருலகில்‌ யாவர்‌? அறிவின்மையில்‌ இந்நில உலகில்‌ என் போல்வார் யாரே? இனி இத்தகு நிராதீன நிலைகளே ஸ்ரீமத்பாஷ்யமாசார்யர்‌ தனக்குத்‌ தஞ்சமெனக்‌ கருதி கைக் கொள்வதற்குங்‌ காரணமாயினவாம்‌. இதனால்‌ ஸ்ரீமத்பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுக்கு உலகில்‌ நிகரில்லை யென்பதாம் –

இனிமறவேன்‌ செம்‌ ப்க்கொண்‌ டிசைத்து
வினவி முறுவல்‌ மிகப்பூத்து – நனிமகிழ்ந்து
செந்தா மரைக்கண்‌ கடைக்கணித்த சீர்மைதனை
அந்தோ யான்‌ உய்வழியீ தென்று–100-

அடியேனை ஒரு பொருளாக மதித்து எதிரிலமரச்‌ செய்து சிவந்த பவளம்‌ போன்ற செவ்வாய்க்‌ கொண்டு மந்திரார்த்தங்களைச்‌ சொல்லி வினாவுதல்‌ செய்து, தக்க விடையளிக்க வெண்முறுவல்‌ மலரச்‌ சிறு நகைபுரிந்து மிக்கபேருவகை கொண்டு செந்தாமரை யொத்த திருக்கண்கள்‌ கொண்டு கடைக்கணித்து உகந்த, இந்த கெளரவச்‌ செயலை அந்தோ! அந்தோ! இவைகளே அடியேற்கு உய்யும்‌ மாழ்க்கமென்று எக்காலும்‌ நினைவிற்கொண்டு இனி எக்காலும்‌ மறவேன்‌ என்பதாம் –

என்றும்நின்‌ தாளிணைக்கண்‌ சென்னி யிலக்காகும்‌
என்றும்‌ அருண்மொழியுள்‌ ளெஞ்சாது – நின்றருளும்‌
சேமத்‌ திருமேனி செவ்விக்கள்‌ ஈன்றிலகும்‌
யாமிழைத்த தென்ன தவம்‌? –101-

ஸ்ரீமத்‌ பாஷ்யமாச்சார்ய ஸ்வாமிகளே! தேவரீருடைய திருவடித்‌ தாமரைகளே அடியேன்‌ சென்னிக்கு இலக்காக அமைந்துள்ளன. தேவரீர்‌ கருணை கொண்டு அருளிச்‌ செய்த அருள் மொழிகளே உள்ளத்தில்‌ குறைவற்று என்றும்‌ நின்‌று பிரகாசிக்கும்‌. தேவரீர்‌ திவ்ய மங்கள விக்ரஹமே அழகிய கண்களில்‌ விளங்கிக்‌ கொண்டிருக்கும்‌. இத்தகு, சீரிய பயன்களைக்‌ கொண்டிருக்க யாம்‌ எத்தகைய தவமியற்றினேனோ? தெரியாது.

தவமிழைத்தோர்‌ யாரே? தமியன்போல்‌ கல்லா
தெவையெனைத்தும்‌ கேட்டுத்‌ தெளிந்தார்‌? – யவரேயோ?
பாடியன்தன்‌ னின்னருளே யிங்கன்‌ பகர்வித்த
ஈடில்லா நீசனெனை ஏற்று–102–

தனித்து கதியற்று நிற்பவன்‌ யான்‌. இத்தகையன்‌ பெருந்தவம்‌ செய்த அடியனைப்‌ போல்‌ யாரே? இனி முறையாகக்‌ கல்லாமலே சீரிய நூல்களைக்‌ கேட்டுத்‌ தெளிந்தோர்‌ யார்‌? ஐயந் திரிபுகளாகிற குற்றங்களைந்து தெரியக் கற்பிக்கும்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளருள்‌ ஈடில்லா நீசெனனை ஏற்று இவ் வண்ணம்‌ சொல்லும்படி செய்தது –

ஏற்றேன்‌ பிராட்டி திருவருளால்‌ எம்பிரானை
ஏற்ற னிவனருளால்‌ பாடியனை – ஏற்பதும்‌
ஏலாத தென்பதிலை பாடியன்தன்‌ இன்னருளால்‌
ஏலாவை குந்தமுத லேற்பு–103-

கருணை வடிவாயமைந்த பிராட்டி கடாக்ஷத்தால்‌ எம்பிரானை கதியாக ஏற்றேன்‌. இவன்‌ தன்னின்னருளால்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாசாரியனை கதியாக ஏற்கப்‌ பெற்றேன்‌. இவனருளால்‌ பேறு பெருவதெவையுளதோ அவைகளில்‌ இன்னது ஏற்க முடியும்‌ இன்னது ஏலாதது என்பதில்லை. ஏற்றரும்‌ வைகுந்த முதலாக வுள்ளதனைத்தும்‌ ஏற்கும்‌ வாய்ப்பினைப்‌ பெற்றோம்‌ என்பதாம்‌-

ஏற்பதே நின்‌ தாளின்றி என் சிரத்தால்‌ வேறொன்றை
ஏற்றறேல் நின்‌ சார்பன்‌ றயலொன்றை – ஏற்பதே?
தாளருமை கண்டேன்‌ குருகூர்ச்‌ சடகோபன்‌
ஆளுடையான்‌ கண்ட வாறு–104-

ஆசாரிய ஸ்வாமிகளே! அடியேன்‌ தேவரீர்‌ திருவடிகளின்‌ அருமைப் பாட்டை அறிந்தவன்‌. எவ்வாறறிந்தேனென்னில்‌? திருக்குருகூரில்‌ அவதரித்த சடகோபனாம்‌ நம்மாழ்வாரை எம்பெருமான்‌ நோக்கி, நீர்‌ விலக்ஷணமான மோக்ஷமென்று அடிக்கடி சொல்வீரே அந்த மோக்ஷம்‌ தந்தோமென’ ‘அந்த மோக்ஷம்‌ வேண்டா, தேவரீர்‌ திருவடிகளை சிரசிலணிவித்தருள வேண்டு மென்றார்‌. அதைப் போல்‌ தேவரீர்‌ திருவடிகள்‌ சார்பன்றி வேறொள்றை ஏற்க மாட்டேன்‌ என்பதாம் –

ஆறும்பே றென்றறியார்‌ ஆசிரியா்‌ இந்நிலையில்‌
மாறில்‌ மறைமுற்றும்‌ ஐயபின்றித்‌ – தேறியநீர்‌
ஏதிலன்‌ என்னை இருயென்று முற்றுணாத்தும்‌
கோதிலருள்‌ உந்தங்‌ குணம்‌.–105-

உலகில்‌ ஆசாரியனென்று தம்மைச்‌ சொல்லிக்‌ கொள்ளுமவர்கள்‌ இன்னது சாதனம்‌, பயன்‌ இன்னது என்று வேறுபடுத்தி அறிய மாட்டார்கள்‌. இந்த நிலையில்‌ தேவரீர்‌ வேதங்களும்‌ இவைகளின்‌ சாரமான மந்திரங்கள்‌. இவைகளில்‌ பொருள்களை ஐயந் திரிபற நன்குணர்ந்தவர்‌ நீரே. இத்‌ தகுதி யுடைய நீர்‌ அடியேனோ மூடர்களில்‌ முதல்வன்‌. இத்தகைய அடியேனை எதிரிலிரு என்று இருத்தி அனைத்தும்‌ ஐயம்‌ திரிபற உணர்த்தினீர்‌. இதனால்‌ உந்தம்‌ குணம்‌ யாதுங்‌ குறைவில்லா அருளொன்றேயாக அறிகிறேன்‌.

குணந்திகழ் சீர்க்‌ கொண்டலே பாடியனே தூயோய்‌
மணமலிந்த தாமரைத்‌ தாளோய்‌! – குணமலிந்த
சீநிவாசன்‌ தாளிணையோய்‌! தேவநாதன்‌ கதனேயோ!
கோபாலன் சொல்லமுதக் கூட்டு -105-

குணங்களால்‌ கைம்மாறு கருதாது பெய்யும்‌ கொண்டல்‌ மேகம்‌ போன்ற ஸ்வாமிகளே! ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்யர்‌ என்ற திருநாமமுடையவரே! மணமே உபாதாநமான தாமரையே போலுந்‌ திருவடிகளை யுடையீரே! அடைந்தாரை உய்விக்கும்‌ நற்பண்புகளே திருமேனியான ஸ்ரீநிவாச ஆசார்ய ஸ்வாமிகளின்‌ திருவடிகளாகவே இருப்பவரே! ஸ்ரீமத்‌ தேவநாதசார்ய ஸ்வாமிகளின்‌ திருக்குமாரரே! ஸ்ரீமத்‌ கோபாலாசார்ய ஸ்வாமிகளின்‌ சொல்லமுதமே திருமேனியாக வுடைய ஸ்வாமிகளே என்றவாறு.

கூட்டமு துள்ள தினிமையொருங்‌ கேக்கூட்டி
நாட்டும் தெளி யுணர்வை ஐயமின்றி – நாட்டிச்
சிரத்தில்‌ பரன் தாளும்‌ பாடியன் தாள்‌ சேர்க்கும்‌
வரமிக்க வைகுந்த வான்‌–107–

முன் தோன்றல்களான ஆழ்வாராசார்யர்களாகிய சான்றோர்களுடைய கூட்டமுதின்‌ இனிமையை அடியேனுள்ளத்‌ தொருங்கே கூட்டி இதன்‌ பயனான மெய்யுணர்வை ஐவந்திரிபின்றி நிலை நிறுத்தியும் இதன்‌ பயனாக திருமகள்‌ கேள்வன்‌ திருவடித் தாமரைகளையும்‌, ஸ்ரீமத் பாஷ்ய மாசார்ய ஸ்வாமிகளின்‌ திருவடித் தாமரைகளையும்‌ அடியேன்‌ சிரோ பூஷணமாக சேர்த்தது யாதோ எனின்‌? ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளின்‌ அபிமானம்‌ பெற்ற, இவனுக்கு நாம்‌ முற்பட்டோமாக வேண்டுமென்று சிறப்புக்களனைத்தும்‌ ஒருங்கே யுடைய வைகுந்தமென்கிற பரமபதமானது, ‘சிரோபூஷணத்‌ தோடு கூடிய இவனை நம்மிடத்தில்‌ நிறுத்திக்‌ கொள்ள வேண்டு” மென்ற அவாவோடு இருத்திக்‌ கொண்டது என்பதாம் –

வானாளும்‌ சீர்சீநி வாசன்‌ மலரடியைத்‌
தான்சேர்‌ தகவுடைய பாடியன்தன்‌ – தேன்பெருகு
செந்தா மரையிணையே சிந்திப்ப தென்பேறா
அந்தோ! அவனருளும்‌ சீர்‌–108-

வைகுந்த வானாட்டில்‌ ஆட்சி செலுத்தும்‌ சிறப்புகளனைத்தும்‌ ஒருங்கே பொருந்திய ஸ்ரீமத்‌ ஸ்ரீநிவாசாசார்ய ஸ்வாமிகள்‌ தாமரை போன்ற திருவடிகளைச்‌ சேர்ந்த கருணையே வடிவான ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுடைய செந்தாமரை யொத்த திருவடி யிணையையே சிந்திப்பதையே அடியேனுடைய பரம பிரயோஜனமாக உடைய அடியேனை, ஆசார்ய ஸ்வாமிகள்‌ தம்‌ கருணையால்‌ ஐயோ!” என்றிரங்கி யருளும்‌ அருளையே அடியேன்‌ சிறப்பாக உடையவனாவேன்‌ – என்பதாம் –

இருள் தரு மா ஞாலத்து இயங்கும் உயிர்கள்
அருந்துயரில்‌ ஆழ்ந்தழுந்தல்‌ உண்மை -அருந்துயர்தீர்ந(து)
அந்தமில்பே ரின்பமுற ஆசார்ய னைத்துதி நூற்‌
றந்தாதி யன்றோ கதி.–நூற்‌ பயன்‌

இருள்தருமாஞாலமாகிய லீலா விபூதியில்‌ நிரந்தரமாக இயங்கிக்‌ கொண்டிருக்கும்‌ ஆத்மாவானது, எய்தற்கரிய நிரம்பிய துன்பத்தில்‌ அழுந்துதலென்பது உண்மை விஷயமாகும்‌. இந்த துன்பத்தில்‌ மீண்டு எல்லையில்லா இன்பமேயான பேரின்பமெய்த ஆசார்யனிடத்து தான்‌ பெற்றபேற்றினைஎண்ணித்‌ துதிப்பதேயாகும்‌–அதற்கு வழி ஆசார்ய நூற்றந்தாதியை இடைவிடாமல்‌ அநுசந்திப்பதே ஏற்ற கதியாகும்

சுபமஸ்து

ஸ்ரீ கச்சிக்‌ கிடாம்பி சின்ன ஸ்வாமிகள்‌ வாழித் திருநாமங்கள்‌ –ஸ்ரீ க.கி. யாமுநாசார்ய ஸ்வாமிகள் –

ஆத்ரேய ராமாவரஜ குரோர்‌ புத்ரம்‌ ததாஸ்ரயம்‌
வேதாந்த த்வய ஸம்பந்தம் யாமுனம் ப்ரணமாம்யகம் –

மடஞ்சால்‌ மநனே வல் வினைகள்‌ சிந்தும்‌
உடைந்தோடும்‌ ஊழ் வினைசால்‌ சென்மம்‌-தடஞ் சூழ்ந்த
பூதூர் மன்‌ தன்னருளும்‌ பொன்னருளும்‌ நின்வயமாம்‌
யாதானும்‌ யாமுநனென்‌ றேத்து

சீராரும்‌ திருவயிந்தை திகழவந்தோன்‌ வாழியே
சேயாய்பா டியர்க்கவன்தன்‌ தாளடைந்தோன்‌ வாழியே
நீராரைப்‌ பசி உத்தி ராடத்தோன்‌ வாழியே
நீள்சரணா எதிபதிதன்‌ னிணையடியோன்‌ வாழியே.
பார் புகழும்‌ பூருவர் தாள்‌ பற்றுமவன்‌ வாழியே
பதின்மர் அருள் மொழி கோதை பரவுமவன் வாழியே
ஏரார்‌ உலகார்யன்‌ நூலுரைப்போன்‌ வாழியே
எஞ்ஞான்றும்‌ யாமுனன் தாள்‌ எம் கதியா வாழியே

வாழி திருப்பாடி யன்தன்சீர்‌ மல்கிய மாதகவால்‌
வாழும்‌ சிரீயா முநனென்‌ நிறைகுரவன்‌ – வாழியவன்‌
மாறன்‌ பிறைப்‌ பொருளும் ஆகமத்தின்‌ மான்‌ பொருளும்
தேறும்‌ படி யுரைக்கும்‌ சீர் –

சேவிப்போர்‌ பிறப்பறுக்கும்‌ திருவடிகள்‌ வாழியே
செம்பொன் செய்மலை வெயிலேய் செம்பட்டும் வாழியே
பூவியலும்‌ நாபியொடு புரிநூலும்‌ வாழியே
பொருவரிய தோளிணையும்‌ புரிகண்டம்‌ வாழியே
பாவியரும்‌ உய்யப் பணிக்கும்‌ பவள வாய்‌ வாழியே
பாண் மதிஏய்‌ திரு முகமும்‌ கருணை விழி வாழியே
நீவியெனும்‌ குரவரருண்‌ மொழி உளத்தோன்‌ வாழியே
நீள் புகழ் யாமுநன் தாள்‌ நினைப்போரும்‌ வாழியே

அடியார்கள் வாழ அரங்கம் முதல் வாழ சடகோபன்‌ தண்டமிழ்நூல்‌ வாழ-படியிலிரு
மன்னும்‌ மறைப் பயிற்றும்‌ யாமுனனென்‌ தேசிகனே! இன்னுமொரு நூற்றாண்‌ டிரும்‌.

ஸ்ரீ கச்சிக்‌ கிடாம்பி யாமுநாசார்ய ஸ்வாமிகள்‌ திருவடிகளே சரணம்

ஸ்ரீ கச்சிக் கிடாம்பி பெரிய ஸ்வாமிகள்‌ வாழித் திருநாமங்கள்‌ -ஸ்ரீ க.கி. பாஷ்யமாச்சார்ய ஸ்வாமிகள்‌

ஆத்ரேய ஸ்ரீநிவாசார்ய பதபங்கே ரூஹாஸ்ரயம்‌
தேவநாத குரோர்‌ ஸூனும்‌ ராமாநுஜ குரும் பஜே.

ஏங்கும்‌ மடநெஞ்சே! எம்பெருமான்‌ ஈந்தநிதி ஒங்கு புகழ்‌ பாடியன்தன்‌ ஒண்மலர்த்தாள்‌-தேங்கிய நீர்க்‌
கண்டா மரையிணைகள்‌ கைத்தாமரை யிணைகள்‌ உண்டாய் காலமெல்லாம் உள் –

அநவரதம்‌ தெளி சிங்கர்‌ அடிதொழுவோன்‌ வாழியே
அருள்ஸ்ரீ னிவாசார்யன்‌ அடைந்துயந்தோன்‌ வாழியே
அநகன் தேவ நாதாரயன்‌ அருஞ்சேயோன்‌ வாழியே
ஆதிரைநாள்‌ புரட்டாசி அவதரித்தோன்‌ வாழியே
அனைத்தறிந்த கோபாலர்‌ அடைந்தறிந்தோன்‌ வாழியே
அரங்கம் முதல் உகந்தருள்‌ மாநிலத் தன்பன்‌ வாழியே.
அநர்த்தமிலா(து) உலகார்யன்‌ நூலுரைப்போன்‌ வாழியே
அமிந்தைவர முனி தாள்சேர்‌ பாடியன் தாள்‌ வாழியே-

எதிபதிதன்‌ இணையடியே கதியுடையோன்‌ வாழியே
ஈடில்லா ஈடுதனை எடுத்துரைப்போன்‌ வாழியே
பதின்மருடன்‌ கோதைமொழி பரிந்து கற்றோன்‌ வாழியே
பார்புகழும்‌ பூருவர்தாள்‌ பற்றுமவன்‌ வாழி
மதுரகவி நிட்டையையே நிட்டை கொள்வோன்‌ வாழியே
வன்முடும்மை இருகுரவர்‌ மலரடியோன்‌ வாழியே
மதிமிகுந்த வரமுனிதாள்‌ வாழ்த்துமவன்‌ வாழியே
பாடிய ராமாநு சாரியன் தாள்‌ வாழியே

வாழிசிரீ நிவாசார்யன்‌ கோபாலன்‌ மாதகவால்‌
வாழும்சீ பாடிய மாசார்யன்‌ – வாழியவன்‌.
மாறன் மறைப்பொருளும் பாடியத்தின் மான் பொருளும்
தேறும்‌ படியுரைக்கும்‌ சீர்‌.

சென்மம்‌ தவிர்த்தருளும்‌ சேஷிகள்‌ வாழியே
சேமஞ்செய்‌ பொன்னாடைத்‌ திருநாபி வாழியே
தன்மம்‌ விரிந்தணைய திருமார்பும்‌ வாழியே
தரணிதனில்‌ அஞ்சலெனும்‌ கரதலமும்‌ வாழியே
நன்மருந்து பொழிமதிபோல்‌ திருமுகமும்‌ வாழியே
நளினஞ்செய்‌ கருணை மொழி கண்ணினையும்‌ வாழியே
மென்மை குவிந்தனைய திருமேனி வாழியே
மெய்மைஇரா மாநுசன்தாள்‌ மேன்மேலும்‌ வாழியே.

ததியர்கள்‌ வாழ தலநூற்‌(று) எண்வாழ
மதிநலஞ்சால்‌ மாறன்‌ மறை வாழ – பதியார்ந்த
மண்ணுலகும்‌ வாழ சிரீ பாடியமா தேசிகனே
இன்னுமொரு நூற்றாண்டி டிரும்

ஸ்ரீ கச்சிக்‌ கிடாம்பி பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌ திருவடிகளே சரணம் –

—-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ சடகோப நான்மணிமாலை-

April 24, 2026

ஸ்ரீ சடகோப நான்மணிமாலை

நானிலத்‌ தேவரும்‌ மாமுடி கோளுறு நாறுமகிழ்‌
தேனலந்‌ தாரிதை மாமுடி கோளுறுந்‌ தேசிகன்தன்‌
நான்மணி மாலை உலகவ ருய்ய நவில்வதற்கு
மான்மறைச்‌ சீடன்‌ குருவவன்‌ காப்பாகு மாமுனியே –காப்புச்‌ செய்யுள்‌-

நால்வகைப்பட்ட நிலங்களிலுள்ள யாவருமே சடகோபன்‌” என்ற சொல்‌ கேட்டதும்‌ தங்கள்‌ திருக் கரங்களை சிறந்த முடி மேல்‌ கொள்ளுதற்கு உரியவரும்‌, பரிமளம்‌ மிகுத்து தேன்‌ வெள்ளமிடும்‌ மகிழ மலர்‌ மாலையை முடிமேல்‌ கொண்டுள்ளவருமான ஆதி குருவாம்‌ மாறன்‌ (நம்மாழ்வார்‌) விஷயமான நான்மணிமாலை என்ற நூலை உலகை உய்வித்தல்‌ பொருட்டு, திராவிடவேதத்தின்‌ பொருளை காலட்ஷேப ரீதியில்‌ நம்பெருமாளுக்குணர்த்தி அவனைச்‌ சீடனாக்கிக்‌ கொண்ட மணவாள மாமுனிகளே இதற்குக்‌ காப்பாகும்

வீறுசால்‌ தெய்வ வெறிகொள்‌ துழாய்கமழும்‌
நாறுநவ நீத முடைநாற்றம்‌ – நாறுமால்‌
மச்சகந்தம்‌ மாறன்கண்‌ ணன்வியாசன்‌ வந்தவிடம்‌
நச்சுவது யாரைநெஞ்சே நாம்‌?–1-

உலகிலுள்ள மற்ற மணங்கள்‌ தனக்கு ஒவ்வாத தெய்வத் தன்மை வாய்ந்த துழாய்‌ மணம்‌ கமழும்‌ குருகூர்‌ நம்பி அவதரித்த இடமும்‌, கண்ணன்‌ வந்தவதரித்த வெண்ணெய்‌ முடநாற்றம்‌ கமழும்‌ ஆயர்சேரியும்‌, வியாசன்‌ வந்தவதரித்த மச்சகந்தம்‌ நாறும்‌ புலைச்சேரியும்‌ இத்தகையவர்கள்‌ அவதரித்த இடம்‌ இத்தன்மையாதனால்‌ நெஞ்சே! இவர்களில்‌ நாம்‌ விரும்பித்‌ தொழுதற்குரியவர்‌ யார்‌? என்று சொல்வாயாக –

நாமே? யியம்புவ நானிலந்‌ தாழ்ந்த வருணமிதை
தாமேந்‌ துதற்கு வராககோ பாலராம்‌ தண்ணியராய்‌
ஆமா றுலகோர்‌ பிறவிக்‌ கடலாழ்ந்‌ தனத்தமுற
பூமா தவர்ச்செய மாறன்‌ புகுந்த வருணநான்கே–2-

ஒரு காலத்தில்‌ பிரளய வெள்ளத்தில்‌ அழுந்தித்‌ தாழ்ந்த உலகையும்‌, யயாதி சாபத்தால்‌ தாழ்ந்துபோன யது குலத்தையும்‌ மேல்‌ நோக்கி உயர்த்துவதற்கு வராக மூர்த்தியாகவும்‌, கோபால கிருஷ்ணனாகவும்‌, தாழ்ந்து வந்தவதரித்தாற்‌ போன்று, உலகத்தவர்கள்‌ பிறவிக் கடலில்‌ அழுந்திக்‌ கிடக்கின்றவர்களை மெய்யுணர்வைக்‌ கொடுத்து நிலத்தேவராக்குவதற்கு உயர்ந்த மாஞானியாகிய குருகூர்ச்‌ சடகோபன்‌, தாழ்ந்ததென்று உலகம்‌ நினைக்கும்‌ நான்காம்‌ வருணத்தில்‌ வந்தவதரித்த வியப்பை, நாம்‌ சொல்லும்‌ தரமுடையதன்றே? (நெஞ்சே நீ சொல்வாயாக )-

நான்முகன்‌ நான்மறை நாபியா றங்கம்‌ ஒருமுடி யிருகண்மூன்‌ றந்தாதி
நோன்புளம்‌ திருமொழிப்‌ பல்லாண்டு திருமொழி முகங்கழுத்‌ திருபது நூறோடும்‌
நான்கிரு பதினான்‌ கேழ்பதி னைந்துதோள்‌ நாற்பதைந்‌ தடித்தூள்‌ பத்தாகம்‌
வானிடந்‌ தோள்பத்‌ தடிஎதி மதுர கவியுடல்‌ உறுப்புபாங்‌ கந்தாமே–3–

நான்கு முகங்களாலே வேதங்களின்‌ கருத்தாக தமிழில்‌ திருவாய்மொழி பாடினவர்‌ நம்மாழ்வார்‌. இவருக்கு நாபியாக வந்தவதரித்தவர்‌ கலியன்‌. இவர்‌ வடமொழியிலுள்ள ஆறுஅங்கங்களையும்‌ தமிழில்‌ பாடிய பிரபந்தங்கள்‌. அதைப் போலவே வடமொழி வேதத்தை தமிழில் பாடியவர்களான பொய்கையாழ்வார்‌ நம்மாழ்வாருக்கு முடி– பூதத்தாழ்வாரும்‌ பேயாழ்வாரும்‌ இரண்டு திருக்கண்கள்‌– இவர்கள்‌ மூவரும்‌ பாடிய மூன்றந்தாதிகள்‌– நோன்பென்று நோற்ற திருப்பாவையும்‌ நாச்சியார்‌ திருமொழியும்‌ நம்மாழ்வாரின்‌ திருவுள்ளம்‌ ஆண்டாள்‌ பாடிய பிரபந்தம்‌. நம்மாழ்வாருக்கு திருமுகமாகிய பெரியாழ்வார்‌ பாடிய திருப்பல்லாண்டும் பெரியாழ்வார்‌ திருமொழி. இந்த நம்மாழ்வாருக்கு திருக் கழுத்தாக அவதரித்த திருமழிசை பிரான்‌ இவர்‌ பாடி யருளிய நூற்றிருபது திருச்சந்தவிருத்தம்‌ நான்முகந்திருவந்தாதி தொண்ணூத்தாறும்‌– நம்மாழ்வாரின்‌. திருத் தோளான குலசேகரப்‌ ‘பெருமாள்‌ பாடிய பெருமாள்‌ திருமொழி நூற்றைந்து. இவர்‌ திரு மார்பான தொண்டரடிப்‌ பொடியாழ்வார்‌ திருமாலை நாற்பத்தைந்து திருப்பள்ளியெழுச்சி பத்து. இவர்‌ இடது தோளான திருப்பாணாழ்வார்‌ பாடிய அமலனாதிபிரான்‌ பத்து-எம்பெருமானார்‌ இவர்‌ திருவடிகள்‌. இவர்‌ விஷயமாக பதினொரு பாசுரங்கள்‌ பாடியவர்‌ மதுரகவியாழ்வார்‌ இவர்‌ திருமேனி, நம்மாழ்வார்‌ தவிர்த்த மற்ற ஆழ்வார்கள்‌ பாடின பிரபந்தங்கள்‌ உபஅங்கங்களாகும்

தாயேத்‌ திரந்திடற்‌ குற்றவர்‌ தங்குரு ஆமா றறிந்துடன்‌ பயில்பவர்‌ சோத்தரி தங்கிளை மாணவர்‌ தாமிவர்‌ சேர்ப்பார்‌ பரிந்துரைத்‌ திரக்கும்‌ பராங்குச நாயகி பறவையாய்‌ பாவணை சிறையறி வொழுக்கும்‌ வீசுஞ்‌ சிறகீர்‌ விண்ணுமக்‌ கெளிதே அஞ்சிறை சேவலோ டாடுவென்‌ றருளீர்‌ கூட்பிகைச்‌ சொல்லீர்‌ குருகினத்‌ தவரே உணர்த்தல்‌ ஊடல்‌ உணர்ந்துறை அன்னம்‌ புணர்த்த பூந்‌ துழாய்முடி பெருமாற்‌ கண்டு புணர்த்தகை யடியேற்‌ பொருட்டுப்‌ போற்றுமின்‌ நன்னலப்‌ புள்ளினம்‌ நான்வினை யாட்டியேன்‌ இரந்தேன்‌ என்முல்லை மேல்சேர்‌ தும்பிகாள்‌ இதுவோ தக்கவா றென்னவே வேண்டும்‌ செங்கால நாராய்‌ குடக்கூத்‌ தென்துதாய்‌ நுங்கால்‌ நுமரோடென்‌ தலைமேல்‌ செழுமிரே கொக்கினங்‌ குருகினந்‌ தக்கிலங்‌ கேளிரே உடன்‌ மாணாக்கர்‌ கேண்மி ஸுயர்குரு இளங்கிளி சிறுபுவாய்‌ யான்வளர்‌ நீரலீர்‌ வினையேன்‌ வளர்சிறு பூவை மீர்காள்‌ இன்னமா ஸணாக்கர்‌ மக்கள்பா லிரந்து பிரிவின்‌ வேட்கை மிகுந்திடப்‌ பெருமான்‌ பால் அணைந்திடுமாப்‌ பரிந்‌துரை செய்மின்னென்‌(று) இரந்திடும்‌ பறவை தாள்‌ வீழ்த்து பரிந்தே–4–

பறவைகளைத்‌ தூதுவிடுவதற்கு உள்ளூறைப்பொருள்‌:-

குருகூர்‌ மாறன்‌ தான்‌ நாயகி பாவத்திலே களவில்‌ கூடி பழிக்கஞ்சி நாணத்தால்‌ பிரிந்து, பிரிவுத்துயர்‌ தாங்காது எம்பெருமான்‌ பக்கல்‌ தூதுவிடுகின்ற பராங்குசநாயகியுடைய சொற்கள்‌ இவைகள்‌. பராங்குச நாயகி நெய்தல்‌ நிறத்து மங்கையாய்‌ அங்குள்ள பறவைகளைக்‌ கண்டு பெருமானைப்‌ பிரிந்த பிரிவாற்றாமையால்‌ பறவைகளைத்‌ தூதுவிடுகின்ற பராங்குச நாயகி, தூது விடுதற்குற்றவர்‌ தனக்கு குருவாகவும்‌ தான்‌ பயிலும்‌ போது உடன்‌ மாணாக்காராகவும்‌ நினைத்து பெருமான் பால்‌ தூது விடுகிறார்‌. பெருமானிடத்தில்‌ செல்வதற்குப்‌ பறவைகளுக்கு இரண்டு இறகுண்டு என்று நினைத்து அவைகளைத்‌ தூது விட, தான்‌ தூது விடுபவர்களுக்கு ஞான ஒழுக்கங்கள்‌ உண்டு. அவை இறைவனை அடைதற்குச்‌ சாதனம்‌ எனக்‌ கருதி, ‘சிறகுகளலே ஆகாயத்தில்‌ பறந்து செல்கின்‌றவர்களே! பறவைகளாகிய நீங்கள்‌ எம்பெருமானிடத்தில்‌ செல்வது சுலபம்‌. சேவலோடு என்‌ துயரத்தைக்‌ கண்டு ஐயோ! என்று அருள வேண்டும்‌. ‘நீங்கள்‌ பெருமானிடத்தில்‌ சென்று கை கூப்பிச்‌ சொல்லுங்கள்‌ குருகினத்தாவர்களே! உணர்த்தல்‌ உடையவர்களாயும்‌ ஊடல்‌ செய்கின்றவராயும்‌ உணர்ந்து உறையும்‌ அன்னங்களே! தொடுக்கப்பட்ட திருத் துழாய்‌ மாலைகளை முடி மேல்‌ தரித்துக்‌ கொண்டிருக்கும்‌ பெருமானுக்கு அடியேன்‌ பொருட்டு புணர்த்த கையராய்‌ போற்றிச்‌ சொல்லுங்கள்‌. கூடியிருத்தலாலே மிக்க இன்பத்தை அடைந்திருக்கிற புள்ளினங்களே! நான்‌ வினை வயத்தால்‌ பிரிந்து வருந்துகிறேன்‌. ஆதலால்‌ உம்மை இரந்து கேட்கிறேன்‌, முல்லைகளின்‌ மீது சேர்ந்திருக்கும்‌ தும்பிகளே! என்னைப்‌ பெருமானைக்‌ கண்டு பிரிந்து வருந்தும்படி விட்டிருப்பது தக்கதோ? என்று பெருமானைக்‌ கேளுங்கள்‌, சிவந்த கால்களுடைய நாரைகளே! குடக்கூத்தாடிய பெருமானுக்கு காதலன்‌ காதலியின்‌ திறத்தில்‌ வேட்கை மிகுதியால்‌ அவள்‌ தன்‌ எச்சிலை ஆதராம்ருதம்‌ என்று விரும்புவது போல, இவ்வாழ்வார்‌ திறத்துண்டான ஞான பக்தி வைராக்கியங்களின்‌ மிகுதியால்‌ எம்பெருமான்‌ மிக விருப்பமுற்று இந்த ஞான பக்தி வைராக்கியங்கள்‌ வளர்வதற்குக்‌ காரணம்‌ திருமேனி சத்துவ குணத்தாலாயது என்று திருவுள்ளம்‌ பற்றி இவரை திருமேனியோடே திருநாட்டுக்கு எழுந்தருளப் பண்ண வேணும்‌ என்ற திரு உள்ளம்‌ உடையனாய்‌ எம்பெருமான்‌ இவருடைய திருமேனியிலே ஐம்பெரும்‌ பூதம்‌ சேர்க்கை என்ற நினைவில்லாதவனாய்‌, இவர்‌ திறத்துண்டான ப்ரேமையின்‌ மிகுதியால்‌ இவர்‌ திருமேனியில்‌ குரவை துவரைகளில்‌ பற்பல உருவம்‌ கொண்டு பரிமாறியது போலே இவ்வாழ்வார்‌ திருமேனியில்‌ உகந்தருளின நிலங்கள்‌ எல்லாவற்றிலும்‌ பண்ணும்‌ ஆதரத்தோடு வைகுந்த வள நாட்டில்‌ பண்ணும்‌ ஆதரத்தையும்‌ உடையவனாய்‌ இவர்‌ திருமேனியில்‌ புகுந்து, இவர்‌ திருமேனியோடே கொண்டு போக விரைவானாக திருக் கையைப்‌ பற்றி வாரும்‌ என்றழைக்க, ‘இங்குத்தான்‌ விலங்கென்றால்‌ அங்கும்‌ எனக்கு விலங்கா” என்று இவ்வாழ்வார்‌ அவன்‌ திருவடிகளைப்‌ பற்றிக்‌ கொண்டு தன்‌ திருமேனியில்‌ அவன்‌ பண்ணும்‌ ஆதரத்தை கைவிடும்படி விடுவித்துக்‌ கொண்டார்‌. இதனால்‌ பரமார்த்தனுடைய சரீரத்திலே எம்பெருமான்‌ பண்ணும்‌ வியாமோகம்‌ திருமாலிருஞ்சோலை மலையிலே தழைக்கும்‌. “தூது செல்லும்‌ பொருட்டு உமது திருவடிகளை நும்‌ இனத்தவரோ டென்‌ தலை மீதாக்குங்கள்‌. கொக்கினங்களே! குருகினங்களே! பெருமானைக்‌ கண்டு, ‘நான்‌ தகுதியற்றவளா’ என்று கேளுங்கள்‌. உயர்ந்த குருகுகளே நீங்களும்‌ (சப்ரம்மசாரிகளே) கேளுங்கள்‌ இளங்கிளிகளே! சின்னஞ்சிறு நாகனவாய்‌ பறவைகளே! என்னால்‌ வளர்க்கப்பட்ட நீங்களல்லையோ? வினையேன்‌ வளர்த்த சிறு பூவைகாள்‌! கேண்மின்‌” என்று இவ்வாறு மாணாக்கர் பாலும்‌ மக்கள்‌ பாலும்‌ பிரிவின்‌ வேட்கையால்‌ துயரமிகந்து ‘பெருமான்‌ என்பால்‌ அணைந்திடுமாறு பரிந்துறை செய்மின்‌” என்று பறவைகள்‌ தாள்களில்‌ வீழ்ந்து யாசிக்கிறாள் –

பரிந்திங்‌ கிருள்தரும்‌ பாருல குய்யப்‌
பொருந்துமா மேகம்‌ புகன்றான்‌ – பெருந்தவங்கள்‌
நீத்துக்‌ கலைதெளியக்‌ கண்டுரை ணவ
வாய்த்தகுரு கூர்வந்தவன்‌-5-

லீலா விபூதியான இருள்தருமா ஞாலத்தில்‌ உள்ள சேதநர்களை உய்விப்பதின்‌ பொருட்டு இரக்கங்கொண்டு உய்விப்பதற்குப்‌ பொருந்தியதான “மாமேகம்‌ சரணம்‌ வரஜ” என்றெம்‌ பெருமான்‌ சொன்ன வார்த்தைக்குப்‌ பொருந்த தாம்‌ முயன்று செய்யும்‌ (உபாயாந்தரங்களை அறக் கைவிட்டு ஆத்ம பரமாத்ம சொரூபங்களுக்கு) பொருந்தியதான சரணாகதி நிலையைக்‌ கண்டு சொன்ன நியதியை உடையவனானவன்‌ இதற்கு வாய்த்த குருகூர்‌ வந்த பராங்குசனாகும் –

வந்தவன்‌ வேதம்‌ மயக்கும்‌ பொருளைத்‌ தெளிவுறுத்த
அந்தமில்‌ சீரன்பர்‌ கூட்டுணும்‌ ஆயிரம்‌ பா வமுதைத்
தந்தவன்‌ மாலன்பர்‌ தம்படிச்‌ சாயைசார்‌ ஏழ்‌ கீழ்‌
சந்ததம்‌ நின்றவன்‌ தாளெம்மை என்றும்‌ விளைக்குமாலே–6-

வேதமானது சரீராத்ம சம்பந்த முதலிய காரணங்களால்‌ முரண்படுவது போல்‌ சொல்லும்‌. அர்த்தங்களைத்‌ தெள்ளத்‌ தெளிய சொல்ல வந்த எல்லை காண்பரிய நலமிக்க அன்பர்கள்‌ கூட்டம்‌ கூட்டமாகக்‌ கூடி அனுபவிக்கும்படியாக அமுதமயமான ஆயிரம்‌ பாக்களைத்‌ தந்தவன்‌ சடகோபனாவார்‌. அவர்‌, எம்பெருமானுடைய அடியார்களுக்கு அடியார்‌ என்ற முறையிலே ஏழு தலைமுறைக்கு கீழே போய்‌ நின்றவர் அவருடைய திருவடிகள்‌ என்றும்‌ எமக்கு வியாமோகத்தை உண்டாக்கும் –

மாலேழ்‌ கடலேழ்‌ மலையேழ்‌ உலகேழ்‌ நும்படைப்பு மற்றுளவும்‌
மாலே எவர்க்கும்‌ அழியக்‌ கடிவான்‌ தனக்குமொரு மால்விளைக்கும்‌
மாலே!நும்சீர்‌ பரவும்‌ கவியால்‌ நுமக்குமொரு
மால்விளைக்கும்‌ பாலேய் தமிழர் இசையர் பரவும் தமிழ் மறைப்‌ பூட்டினனே–7-

திருமகள்‌ கேள்வனே! தேவரீர்‌ உலகவர்‌ திறத்துண்டான கழிவிரக்கத்தால்‌ ஏழுகடல்களோடும்‌ ஏழுமலைகளோடும்‌ கூடிய ஏழ்‌ உலகங்களும்‌ மற்றும்‌ உண்டானவையும்‌, உங்களுடைய படைப்பு படைத்த உலகத்தில்‌ உண்டான உண்டியே உடையே என உகந்து ஒடும்படியான நீர்‌ விளைத்த மயக்கத்தை அழியும்படி போக்கும்‌ தன்மையுடையவன்‌ குரு கூர்ச்‌ கோபன்‌. இத்தகைய குருகூர்‌ சடகோபனுக்கும்‌ உம்முடைய சொருபம்‌, குணங்கள்‌, திருமேனி முதலாகிய செளந்தர் யத்தைக்‌ காட்டி வியாமோகத்தை விளைத்தீர்‌. இந்த குருகூர்ச்‌ சடகோபன்‌ பாலே போல்‌ இனிக்கும்‌ உன்‌ கீர்த்திகளைப்‌ பாடும்‌ கவிகளால்‌ இனிய இசையில்‌ வல்லவர்களுக்கும்‌ நுமக்கும்‌ இன்ப மயக்கத்தை விளைக்கும்‌ தமிழ்மொழியாம்‌ திருவாய்மொழியை புணைந்து கொடுத்தான் –

பூண்டநாள்‌ பொருவரு சீர்க்கடல்‌ உட்கொளும்‌
நீண்டதோள்‌ மால்துயில்‌ நீள்கடல்‌ தன்னின்‌
பூண்டநா ளெல்லாம்‌ நீராடப்‌ புகுமே
திருமால்‌ சீர்க்கடல்‌ உட்பொதி சிந்தையர்‌
நீலநன்‌ மேனி நின்றநன்‌ நிறமொத்து
திருமால்‌ திருமேனி யோகம்‌ ஒத்து
நினைஅடை முகில்வணன்‌ நிழலீட்‌ டாலே
தீர்த்த கரராய்த்‌ திரிந்துயி ரளிப்பான்‌
தீதில்‌ நன்னெறி காட்டித்‌ திரிந்து
ஞானமா மடுவை யுடையதும்‌ அன்றி
நீள நினைவுறு நீரை யுடையதும்‌
ஆசை வெறுப்பாம்‌ அழுக்ககற்‌ றுவ்தும்‌
ஆன மனத்தில்‌ உளவாம்‌ தீர்த்தத்து
ஆடுவான்‌ எவனவன்‌ மேற்கதி அடைவதும்‌
எம்பிரான்‌ இலங்கு குணநீர்‌ நிறைந்து
தீங்கின்றி வாழ உலகில்‌ பெய்து
கொடுத்த நினைந்திடா வள்ளல்‌ தன்மையுள்‌
வெட்கி வெறுத்து கொடுக்கப்‌ பெற்றிலம்‌
பிறர்தம்‌ நலமே தம்பேறாக
அன்பின்‌ நிறைந்த அன்பன்‌ பாலன்பு
கூறும்‌ அடியவர்‌ உறையில்‌ இடாதவர்‌புயல்கை மாரி குணந்திகழ்‌ கொண்டல்‌
போல்வார்‌ மேகம்‌ போல்‌ தந்திடுமே.
–8-(அகவற்பா)

பூண்ட நாள்‌ சீர்க்கடலை உட்கொண்டு மழை பெய்ய வேண்டிய காலங்களில்‌, கடலிலே புகுந்து அதில்‌ நீரைப்‌ பருகிப்‌ பொழியும்‌ மேகம்‌ போலே, பூண்ட நாளெல்லாம்‌ புகும்‌ என்றும்‌ திருமால்‌ சீர்க்கடலை உட்பொதிந்த சிந்தனையேன்‌’ என்றும்‌ சொல்லுகிறபடியே விடிந்த நாளெல்லாம்‌ அவன்‌ கண்வளர்ந்தருள்கிற கடலிலே புகுந்து திருமகள்‌ கேள்வனான அவனுடைய கல்யாண குணக்கடலை உள்ளே அடக்கிக்கொண்டு மேகமானது அவன்‌ திருமேனியோடு ஒத்த நிறத்தை யுடைதாயிருக்குமாப் போலே உள்ளே தியானிக்கப்படுகிற முகில்‌ வண்ணனுடைய நிழலிட்டாலே அவனோடு ஒத்த நிறத்தையுடையதாய்‌, மேகமானது மழை மூலமாக உயிர்களைப்‌ பாதுகாப்பதற்காக விரிந்திருக்கிற ஆகாசப்‌ பரப்பெங்கும்‌ சஞ்சரிக்குமா போலே, பிறப்பு இறப்புகளிலே உழலுகிற ஆன்மாக்களைப்‌ பாதுகாப்பதற்காக உலகத்தை தூய்மை செய்பவர்களாய்‌ உய்யும்‌ வழியைச்‌ காட்டுமவர்களாய்‌, எவ்விடத்தும்‌ திரிந்து கொண்டு ஞானமாசின்ற அறிவினையுடையதும்‌ தியானமாகிற நீரையுடையதும்‌ ஆசை துவேஷம் ஆகிற அழுக்கை யகற்றுவதும்‌ ஆன மனத்தில்‌ உறவாகிய தீர்த்தத்தில்‌ எவன்‌ ஆடுகிறானோ அவன்‌ உயர்ந்த கதியை அடைகிற நான்‌ என்று: மனத்திலுள்ள தீர்த்தத்தைச்‌ சிறப்பித்துச்‌ சொன்ன ஞானமாகிற மடுவைத் தாங்கள்‌ பெய்கிற பகவானுடைய குணங்களாகிற தண்ணீரால்‌ நிறைத்த தீங்கின்றி வாழ நிதி சொரிந்து “தீங்கின்றி நாடெல்லாம்‌ திங்கள்‌ மும்மாரி பெய்து” என்றும்‌, “வாழ உலகினில்‌ பெய்திடாய்‌” என்றும்‌, மத்த நிதி சொரிந்து” என்கிறபடியே கேடு சிறிதும்‌ இன்றியே வரும்படி பகவானுடைட குணங்களாகிற நீரைப்பொழிந்து பொழிந்து, கொடுத்தது நினையாதே வெட்கி வள்ளல் தன்மை மிகுதிபினாலே இன்னமும்‌ கொடுக்கப்‌ பெற்றிலோம் செய்தது போருமோ என்று வெட்கி வெளுத்துப்போய்‌ ஒளித்து மேகமானது :மழை பெய்யாத போது வெளுத்துப்‌ போய்க்‌ கண்களுக்கு புலப்படாமல் இருப்பது போலே ஆர்த்தவிசேடங்களை உபதேஸிக்கப் பெறாதே பேறாக போது உடம்‌பு மறைத்து வெளியே முகம்‌ காட்டாதவர்களாய்‌ கண்டு உவந்து பிறந்த பேறான, மேகமானது தனக்கு என்று காரியம்‌ செய்யாது பிறர்நலத்துக்‌காகவே கொடுப்பது போன்று, கொடுக்குமிடத்து சிஷ்யர்களின்‌ நிறைவினைக் கண்டு மகிழ்ந்து அந் நிறைவினையே தங்களுக்கு பயனாகக் கொண்டிருக்கும்படியான ஆங்கரும்பிச்‌ கண்ணீ சோர்ந்தன்பு கூ.றும்‌ அடியவர்களான முதலாழ்வார்கள்‌, உருவினா வாள்‌ உறையில் இடாதே முதல்‌ நடு இறுதிகளிலே மாறுபட்டவர்கள்‌ குறையினை கூறுதல்‌ முன்னாக எம்பெருமானுடைய முதன்மையை எடுத்துக்‌ கூறிய திருமழிசைப்பிரான்‌, வள்ளற்றன்‌மையினையுடைய மேகத்தைப்‌ போன்றவராய்‌ அருளைப்‌ பெய்யும்‌ திருமங்கையாழ்வார்‌, “குணம்‌ திகழ்‌ கொண்டல்‌ இராமானுசன்‌” என்று குணங்கள்‌ ஒளிவீசும்‌ மேகமாகச்‌ சொல்லும்‌ எம்பெருமானார்‌ போன்றவர்களை குணங்களின்‌ ஒப்புமைக்‌ கொண்டு மேகம்‌ என்று சொல்லும்‌ என்கை, பயனுக்குக்‌ காரணம்‌ இவர்களாகையாலே பயனில்‌ விரைவுத்‌ தோன்றப்‌ பலகாலும்‌ தூதுவிடுவர்‌ என்கை –

தந்திடும்‌ அற்ற களைகணார்‌ தங்கட்கு
அந்தமில்‌ ஆர்வம்‌ அடைந்திடத்‌ – தந்த
உடலம்‌ உருக பெருகும்‌ மதுரம்‌
குடமுக்கில்‌ வெள்ளங்‌ கொடு –9-

எம்பெருமானையன்றி வேறு கதியற்றவர்க்கு எல்லையில்லா ஆர்வம்‌ பெருகும்‌ வகையில்‌ தந்த உடலம்‌ உருகும்படியாக இனிமை பெருகும்‌ வண்ணம்‌ பேரார்வத்தை திருக்குடந்தையில்‌ பெருவெள்ளம்‌ பெருக தந்திடும்‌.

கொடுமை யுடைய விருத்தம்‌ இலதாக்கும்‌ எம்‌பெருமான்
கடுமை யுடன்‌ கழகம்‌ புகவேண்டா போகுநம்பி
திடமா யெதிர்த்திடு நாயகி ஊடல்‌ திருவடியால்‌
விடச் செய்து விண்ணகர்‌ கோயில் கொள்‌ அப்பனாம்‌ ஒப்பிலானே.
–10-கட்டளைக்‌ கலித்துறை

திருவிண்ணகர்‌ கோயில்‌ கொண்ட விருத்த விபூதியனான ஒப்பிலியப்பன்‌ வராமைக்‌ கண்டு, மின்னிடைமடவார்‌ என்ற திருவாய்‌ , மொழியில்‌ பராங்குசனாயகி வைகல்பூங்கழிவாய்‌ என்ற திருவாய்மொழியில்‌ நாயகனாம்‌ எம்பெருமானை குறித்து பிறிவாற்றாமை மீதுற பறவைகளைத்‌ தூதுவிட்டாள்‌. தூதுபோன பறவைகள்‌ போய்‌ சொல்லி அவன்‌ புறப்பட்டு வருவதற்குள்‌ வேட்கையின்‌ மிகுதியாலே பராங்குச நாயகி அவன்‌ திறத்து ஊடல்‌ கொண்டு, அவன்‌ இனி வந்தாலும்‌ அவன்‌ முகத்தில்‌ விழிப்பதில்லை என்று தன்‌ ஆற்றாமையை போக்குவதற்காக சிற்றிலமைத்து பராக்காக பொழுது போக்கும்‌ காலத்தில்‌ எம்பெருமான்‌ வந்தான்‌. வந்தவிடத்தில்‌ பராங்குசநாயகி முகம்‌ கொடாமலிருக்கக்‌ கண்டு, தன்பால்‌ சேர்த்துக்‌ கொள்ள பலவித உபாயங்களைச்‌ செய்தான்‌. அதில்‌ ஒன்று கூட்டமாகக்‌ கூடியிருந்த கழகத்தில்‌ உள்ளே நுழைந்தான்‌. அப்போது பராங்குச நாயகி ‘எங்கள்‌ கூட்டத்தில்‌ புகாதே வெளியேறு’ என்று கடிந்து சொல்ல, இவர்கள்‌ இழைத்து நின்ற கடுந்தன்மை நீங்கி அவனிடம்‌ கலந்துக்‌ கொண்டார்கள்‌. அனைவர்க்கும்‌ உபாயமான திருவடியே அவர்களோடு கூடுவதற்குத்‌ தனக்கும்‌ உபாயமாயிற்று. அஃதன்றி பராங்குசநாயகி ஊடே நின்றிருந்த கடுந்தன்மை நீங்கி இணைந்ததை வியப்பாகக்‌ கொண்டு விருத்த விபூதியனான எம்பெருமானை அடுத்த திருவாய்‌ மொழியில்‌ ஒப்பிலா அப்பனான அவனை மங்களாசாசனம்‌ பண்ணினார் –

ஒப்பில்பே ரன்புடையாள்‌ உடன்கூடி உலகிரைக்கும்‌ பழிக்கஞ்சி நாணமுற்றுப்‌ பிரிந்தாள் அந்தோ
இப்பரிசால்‌ ஆற்றாளாய்‌ இழிபுடைய மடப்பத்தால்‌ பறவைகளைத்‌ தூதுவிடற்‌ கிணக்க முற்றாள் செப்பரிய தம் பிழையும் சிறந்த செல்வம் படைப்பலுவல் தமர்கூட்டம்‌ மறப்பிக்க மறந்தா னன்றே
துப்புடைய பொறை விரதம்‌ சுவையமகு இருபரங்கள்‌ வியூகவிப வர்ச்செய்‌ இவை விடைய மன்றே–11-
-(எண் சீர் கழி நெடிலாசிரிய விருத்தம் )

ஒப்பற்றவளான பராங்குசநாயகி எம்பெருமான்‌ பக்கல்‌ பேரன்புடையவளாய்‌ காதாசித்கமாக அவனைக்‌ கிட்டி நின்றநுபவிக்க உலகவர்‌ பழித்துச் சொல்லும்‌ பழிக்கஞ்சி வெட்கமுற்றுப்‌ பிரிந்தான்‌. அந்தோ பாவம்‌! பிரிந்த இந்தக்‌ காரண த்தால்‌ ஆற்றாமை மீதூர்ந்து பெண்மையால்‌ இழிவுடைய மடப்பத்தால்‌ பறவைகள்‌ தூது செல்வதற்கு தகுமா? தகாதா? என்ற விவேகமின்றி ஆற்றாமை கை கொடுக்க பறவைகளை தூது விட்டாள்‌ இப்படி இவள்‌ தூது விட அந்தப் பெருமான்‌ இவளை மறந்திருந்தான்‌. அதற்குக் காரணம்‌ குறையுடைய நாயகி செய்யும்‌ பிழையை பொறுத்துக் கொள்ளும்‌ அபராத ஸஹத்வம்‌ என்ற குணம்‌ தனக்கிருப்பதை மறக்கையாலே நாயகியை மறந்தாள்‌. இது, வியூக மூர்த்தியின் பால்‌ அஞ்சிறையமட நாரையில்‌ தூதுக்கு விஷயம்‌. அடியார்களைக்‌ காக்கும்‌ விரதமுடையவனாகையாலே நாயகியை மறந்தான்‌. இது, “வைகல்பூங்கழிவாய்‌” என்ற பதிகம்‌ இரண்டாம்‌ தூதுக்கு விபவத்துக்கு விஷயம்‌ – “பொன்னுலகாளீரோ” என்ற திருவாய்மொழியில்‌ அந்தர் யாமித்வம்‌ பரத்வம்‌ நிலைகளுக்கு தூதுவிடும்படியாய்‌ அவன்‌ தன்‌ படைப்பின்‌ மீதாகிய ஈடுபாட்டில்‌ நாயகியை மறந்தான்‌. “எங்கானலங்கழிவாய்‌”” எனத் தொடங்கும்‌ திருவாய்மொழியில்‌ “திருவல்லவாழ்கோயில்‌ கொண்ட” என்ற அர்ச்சாவதார மூர்த்தி அடியார்கள்‌ கூட்டத்தின்‌ இனிமையாலே பாரங்குசநாயகியாகிற தலைவியை மறந்தான்‌. அந்தர்யாமித்வம்‌ பரத்வாமாகிற இவைகள்‌ மூன்று நான்கு தூதுக்கு விஷயம்‌ என்றவாறு –

விடுதற்‌ கரிய பேரழகின்‌ மிக்கவள்‌ புனிதாப்‌ பிரிந்து பொறுக்‌ கிலளாகி நினைவற்‌ றுணங்கினள்‌ தாயர்‌ நுணங்கினர்‌ கட்டுவிச்‌ சியரைக்‌ கதியெனக்‌ கொண்டு இனதென நோயும்‌ மருந்தும்‌ இனதெனீர்‌ முனநாள்‌ முருகற்‌ பற்றினில்‌ முடிக்கிலீர்‌ நீர்மறந்‌ திட்டால்‌ தான்மறந்‌ திடுமே வேலனைக்‌ குறித்து வெறியாடத்‌ தீர்மென மறந்தும்‌ புறந்தொழில்‌ மாய்வளே அந்தோ !
இழப்பர்‌ இதனை முந்துற விடுமின்‌
துலைவிலி மங்கலம்‌ துணைகொடு காட்டினீர்‌
வகுத்தவன்‌ வடிவில்‌ மயங்கினள்‌ மீள்வளோ?
இவள்விடாள்‌ தாயீர்‌ நீர்விடும்‌ ஆசை
மணமுரசு அறையீர்‌ செவிப்படின்‌ மாய்வள்‌
திருப்புலி யூரில்‌ நாயனார்‌ திறத்துக்‌
கலவி இவட்குள போலும்‌ காண்மின்‌
அந்தண்‌ துழாய்‌இவள்‌ கமழ்தலில்‌ அறிந்தனன்‌
,புனையிழை அணிவும்‌ புதுக்கணிப்‌ பறிமின்‌
அவைகளால்‌ பிறர்க்கும்‌ தனக்கும்‌ அல்லள்‌
வகுத்தவன்‌ திறத்துத்‌ தகுந்ததென்‌ றமைமின்‌
தோழிக்கூற்‌ நிஃதேல்‌ தாய்நிலை சொல்வதென்‌?
வாடி மெலிந்துபித்‌ தேறியும்‌ மற்றும்‌
ஏறப்‌ பேசி கட்டிழந்‌ தகன்றும்‌
சார்வதே வலித்தமை சாதன மென்று
அஞ்சி ஏழில்‌ அவனருள்‌ அல்லதோர்‌
நெறிபிற தில்லெனல்‌ நிச்சய மாமே?
மகள்பல்கால்‌ ஆள்விட்டு ஆற்றாமை சொல்லி

கண்புதையப்‌ போக்கற்‌ றுறுநெஞ்‌ சுள்ளெழ
கூடுநாள்‌ கூடித்‌ தாழ்த்ததுக்‌ கூடி
உசாத்துணை அற்று சூழவும்‌ பகைமுகம்‌
செயத்தடை நிலாது புயக்கற்‌ றதனொடும்‌
மாலையும்‌ காலையும்‌ பூசல்‌ பதினேழ்‌
விரைதலின்‌ விரைவு தெரிந்த தெளிவே–12( அகவற்பா)

விட்டுப்பிரிய முடியாத அப்பேர்பட்ட அழகின்மிக்கவனாய்‌, தூயவற்றுக்கெல்லாம்‌ தூயனாய்‌ மிக்க பேரழகனாய்‌, கல்வி செல்வம்‌ இவற்றால்‌ பூர்ணனாய்‌ திருமகள்‌ கேள்வனான எம்பெருமான்‌ ஒருக்கால்‌ தோழரோடு வேட்டையாடித்‌ தோழர்களைப்‌ பிரிந்து வந்தானாக. எல்லாவற்றிலும்‌ சிறந்தவளான பராங்குச நாயகி தோழியரோடு பறித்துக்‌ கொண்டிருந்தவள்‌ தெய்வகதியால்‌ தோழியரைப்‌ பிரிந்து தனித்த வந்தாளாக, இப்படித்‌ தனித்து வந்த இருவரும்‌ தெய்வயோகத்தால்‌ ஒருவரை ஒருவர்‌ கண்டு காதலுற்று கூடீன ர்கள்‌. இப்படிக்‌ கூடினவர்கள்‌ உலகவர்கள்‌ நகைப்பார்களே என்று அஞ்சி பிரிந்தார்கள்‌. பிரிந்தவர்கள்‌ ஒருவரை ஒருவர்‌ மறந்ததில்லை. பெரிய பேதமைச்‌ சின்மதிப்‌ பெண்பையாச்‌ பராங்குசநாயகி நினைவு முதிர்ந்து தந்நிலை இழந்து உணர்ச்சியந்றுச்‌ கிடக்கிறாள்‌.இப்படிக்‌ கிடந்த பராங்குச நாயகியை தோழியரும்‌ தாய்மார்களுப்‌ கண்டு ஒரு மகள்‌ தன்னையுடையவர்களாகையாலே திருமகள்‌ போ6 வளர்த்தவர்கள்‌ ஆற்றாமையால்‌ ஒன்றும்‌ தோன்றாமல்‌ கவலையுற்ற:£ கலங்கினார்கள்‌. அந்தத்‌ தாய்மார்களில்‌ ஒருத்தி குறி சொல்லுகிள்‌ கட்டுவிச்சியைக்‌ கண்டு இந்த நோயின்‌ தன்மை என்ன? இதற்குப்‌ பரிகார: என்ன?” என்று வினவியபோது அவள்‌ “நீங்கள்‌ முன்னொரு காலத்தி வேலனுக்கு ஏதேதோ செய்வதாக பிரார்த்தித்தீர்கள்‌. ஆனால்‌ அந்‌: பிரார்த்தனை செலுத்தவில்லை. கால நீட்டிப்பால்‌ மறந்து விட்டீர்கள்‌ அதனால்‌ கோபமுற்றவனாய்‌ இந்தப்‌ பெண்ணின்‌ பீதாவேசித்து இந்நின௦ யெய்தும்படி நேர்ந்தது. வேலனைக்‌ குறித்து பூஜை செய்கின்‌! வெறியாட்டக்காரை அரைத்து வெளியாட வேண்டும்‌; அர்‌: ர ர… ட்டம்‌ மதுவாராதனை பஸண்‌ஈ “வண்டு. இல ச்ச்‌ ளைக்‌ 0 ப்பு ண்ண மேளம்‌; அதல. ஐன்‌ மடம்‌ ஜ்‌ த. ந்நோயுக்கிடமில்வாதபடி செய்து னிதுகான்‌” என்ட்‌ கட்டுவிச்சிச்‌ ௦ சொன்னாள்‌. மகள்‌ நிமித்தமாக நீள உருகும்‌ சாய்மார்கு6 தங்கள்‌ குடிமரபின்‌ ஒழுக்கத்துக்கு மாறாக மறந்தும்‌ பறந்தெ:ழாத்தன்‌ ௮ விட்டு, மகளின்‌ நிமித்தமாக கட்டுவிச்சி சொன்ன துக்கிணங்க இசை நட்‌ வெறியாட இறைச்சி, கள்‌, மீன போன்றவற்றை வைத்து வெறியாட்ட।! நடத்தினார்கள்‌. இதை அந்தரங்கத்‌ தோழி கண்டாள்‌. “பெருந்தேவனா எ பெருமான்‌ திறத்தில்‌ ஈடுபட்ட இவளை, இவள்‌ நிலை இன்னதென்றறியா£ வைணவக்‌ குடும்பத்தைத்‌ தூஷிக்க வேண்டும்‌ என்று கட்டுவிச்‌ஈ சொன்னதை மெய்க்‌ கொண்டு நீங்கள்‌ ஆராயாமல்‌ செய்த இந்த செயலா? பராங்குச நாயகியை இழந்துவிடுவீர்‌” என்று தோழியானவள்‌ ஆராய்ந்‌ சொல்வது போலச்‌ சொன்னாள்‌. உலகொருங்காக உண்ட பெருந்தேவஃ திறத்தீடுபட்டு சித்தியாமையாலே உணர்ச்சியற்றுக்‌ கிடக்கின்ற பராங்கு, நாயகி உண்மை நிலைமை யுணர்ந்து வெறியாட்டம்‌, களியாட்டம்‌ நம்‌ மரபுக்‌ ஒவ்வாதென விளக்கிவிட்டாள இது, தீர்ப்பாரை என்று தொடங்கு: திருவாய்மொழியின்‌ சாரம்‌. அடுகதபடியாக “‘துவளில்‌ மணிமாடமோங்கும்‌ என்று தொடங்கும்‌ உரையிலே தோழியரும்‌ தாய்மாரும்‌ திருத்தொலைவில்‌ஈ மங்கலத்தை சேளித்தார்கள்‌. அரவிந்த லோசனஎனக்‌ கண்டபோச நெடுங்கண்‌ இளமானான பராங்குச நாயகி அவன்‌ அழகிலே ஈடுபட்டு அவனை விட்டுப்‌ பிரியமுடியாமல்‌ பேராசையுற்று அங்ஙனே நிற்கின்றாள்‌. தாய்மார்‌ அவளை மீட்கப்‌ பலகால்‌ முயன்றும்‌ முடியவில்லை. இதைக்கண்ட அந்தரங்கத்தோழி (“நலியக்கூடிய பொருள்கள்‌ நலியா நின்றன என்று கூப்பிட்டும்‌ போருகிற பதினேழில்‌ த்‌ வரையும்‌ தெரியும்‌”. மேற்கூறிய பதினேழு திருவாய்‌ மொழிகளிலே பேற்றிலே பதற்றம்‌. தோன்றும்‌ என்கை.) “சிறப்புடைய பேரழகனைக்‌ கண்டால்‌ இவள்‌ மீளமாட்டாள்‌ என்று நீங்கள்‌ குறிக்கொள்ளாது வலிய அழைத்து வந்து சேவிக்க வைத்துவிட்டீர்கள்‌. அவன்‌ அழகில்‌ ஈடுபட்டு அவனைவிட முடியாதபடி நிற்கிறாள்‌, நீங்கள்‌ இவள்‌ திறத்து ஆசையை துறக்க வேண்டுமே தவிர அவன்‌ திறத்து ஆசையை அவள்‌ துறக்கமாட்டாள்‌ என்றாள்‌. மற்றோர்‌ நிலையில்‌ குட்ட நாட்டுத்‌ திருப்புலியூர்‌ ஆயன்‌ விஷயத்தில்‌ மிக்க பேரழகுக்‌ கண்டு பேரன்புடையவளாகி ஈடுபாடு கொண்ட பருவம்‌ நிரம்பிய இவளை யாருக்கேனும்‌ மணமுடிக்க வேண்டும்‌ என்று சுயம்வரம்‌ கூட்ட மணமுற சறைவிக்க ஆரம்பித்தார்கள்‌. அந்தரங்கத்‌ தோழி, “இவள்‌ ஏற்கனவே குட்டநாட்டுத்‌ திருப்புலியூர்‌ ஆயன்‌ விஷயத்தில்‌ ஈடுபட்டவள்‌; அவனோடு கலவியுள்ளவன்‌; அதனால்‌ அவள்மேல்‌ திருத்துமாய்‌ மணம்‌ கவிழ்கின்றது; இவன்‌ பேசுகின்ற பேச்செல்லாம்‌ அவன்‌ திறத்ததுவே; அவனுக்கு நேராக வேண்டும்‌ என்று நினைத்து சிறந்த ஆடை அணிகலன்கள்‌ எல்லாம்‌ அணிந்து கொண்டு புதுக்களிப்புற்றிருக்கிறாள்‌; ஆதலால்‌ இவளை திருப்புலியூர்‌ ஆயன்‌ திறத்தில்‌ சேர்ப்பிப்பதுதான்‌ தர்மம்‌, அங்ஙனம்‌ இன்றி நீங்கள்‌ நினைப்பது செய்தால்‌ அது அதர்மம்‌” என்றாள்‌. கருமாணிக்க மலைமேல்‌ மணித்தடத்தாமரை என்று தொடங்கும்‌ திருவாய்மொழியில்‌ அனுபவம்‌. இது தோழி அறத்தொடு நிற்றல்‌ என்ற பிரணவத்தில்‌ ஜீவபரர்கள்‌ சம்பந்தம்‌ சொல்லும்‌ தோழி உரையைச்‌ சேர்ந்த கூற்று.

தாய கூற்று–தலைமகளின்‌ பதற்ற நிலை கண்டு இது சாதநத்தில்‌ மூளுமோ என்றஞ்சும்‌ நிலைதாய பேச்சாகும்‌. ஆடி ஆடி என்று தொடங்கும்‌ திருவாய்மொழியில்‌, வாடிவாடும்‌ என்கிறபடி அடியார்கள்‌ குழாங்களை உடன்கூட பையால்‌ வந்த துன்பத்தாலே கொம்பை இழந்த தளிர்போலே வாடி மெலிந்து என்றும்‌, “பாலனாய்‌ ஏழுலகு” என்று தொடங்கும்‌ திருவாய்மொழியில்‌, “கண்ணன்‌ கழல்‌ துழாய்‌ பொன்‌ செய்‌ பூண்மென்முலைக்கு ” என்கிறபடியே, கை கழிந்தவற்றை ஆசைப்பட்டு மெலிந்து பித்தேரி என்றும்‌. “மண்ணை இருந்து துழாவி என்ற திருவாய்‌ மொழியில்‌, என்‌ பெண்கொடி ஏறிய பித்தே” என்கிறபடியே, ஒப்புமையுள்ள பொருள்களையும்‌ அவனாக நினைத்துக்‌ கிட்டும்படி, பித்தேறி ஏறப்பேசி என்றும்‌, “கடல்ஞானம்‌” என்ற திருவாய்மொழியில்‌, ஈசன்‌ வந்தேறக்‌ கொலோ என்கிறபடியே ஆற்றாமையாலே இறைவன்‌ ஆவேசித்தானோ-என்னும்படியும்‌ கட்டிழந்த மாலுக்குஎன்ற திருவாய்மொழியில்‌, கற்புடையாட்டி இழந்தது கட்டே என்று பகவானைப்‌ பிரிந்த க்லேசத்தாலே கட்டடங்க இழந்து அகன்று என்றும்‌, உண்ணுஞ்சோறு என்ற திருவாய்மொழியிலே, இன்றெனக்குதவாதகன்ற என்கிறபடி, தன்னைப்‌ பிரிந்து துன்பப்படுகின்ற இன்னிலையிலே எனக்கு உதவாதே போன என்‌ பெண்பிள்ளை என்னும்படியாகவும்‌, “கங்குலும்‌ பகலும்‌” என்ற திருவாய்மொழியிலே, “சந்தித்து உன்‌ சரணம்‌ சார்வதே வலித்த தையலை என்கிறபடி அவனைக்‌ கிட்டி அவன்‌ திருமுன்னரே முடிய வேண்டும்‌ என்று உறுதி பூண்டமை சாதனம்‌ ஆமோ? என்று உபாஸக பரபக்தி தசையில்‌ உண்டாம்‌ வாட்டம்‌ மெலிதல்‌ முதலிய போலே சாதனத்திலே முதலிடுமோ ? என்று மாதா அஞ்சி, அவனையும்‌ வினவ வந்தவர்களையும்‌ மயங்கா நின்றாள்‌. மெலியா நின்றாள்‌, “எந்தன்‌ கோவே” என்று முறையிடுகிற ஏழில்‌, “முறையோ அரவணை மேல்‌ பள்ளிகொண்ட முகில்‌ வண்ணனே ” என்கிறபடி “இவள்‌ பக்கல்‌ உள்ளவை ஒன்றும்‌ உபாயம்‌ அன்று ஆனபின்பு இப்படித்‌ துடிக்கவிட்டிருக்கை உம்முடைய கருணைக்கும்‌ பாதுகாக்கும்‌ தன்மைக்கும்‌ தகுமோ?” என்று கூப்பிடுகின்ற ஏழு திருவாய்மொழிகளிலும்‌ உபாயத்திலே உறுதி தோன்ற பேசும்‌ இது தாய்க்‌ கூற்று-

தெளிவுறுத்தி நான்முகற்கு தென்மறைமால்‌ சொன்னான்‌
தெளிவின்‌ றிருக்கவே சொன்னான்‌ – தெளிவின்றித்‌
தேக்கு வடவேதம்‌ தெளிவிக்கும்‌? தேர்த்தெளிவால்‌
காக்குமத்‌ தென்மறையே காண்‌–13-(வெண்பா)

எம்‌ பெருமானானவன்‌ ஒரு நான்முகற்கு (நம்மாழ்வாருக்கு) மயர்வற மதி நலமருளி தென்மொழியாகிற திருவாய்மொழி என்ற திராவிட வேதத்தை தான்‌ சொன்னான்‌. மற்றுமோர்‌ நான்முகனுக்கு மயர்வறமதி நலமருளி கீர்வாணவேதத்தை உபதேசித்தான்‌. இந்நிலையில்‌ பிரம்மாவுக்கு உபதேசித்த வடமொழி மறை உலகவரை தெளிவிக்குமா? என்பது ஐயம்‌. மயர்வற மதிநல மருளிச்‌ சென்ற திராவிட வேதமே உலகவருடைய அறிவின்மையைப்‌ போக்கி மெய்புணர்வை உண்டாக்கி இறைவனடியிலே சேர்த்துக்‌ காக்கும்‌ தன்மையுடையதாகும் –

காணத்‌ தடைசெய்‌ மயர்வைக்‌ கழித்து மதிநலமாப்‌
பூணும்‌ பொலன்முகம்‌ தன்முகம்‌ ஏழ்பத்து முப்பதிகம்‌
நாணும்‌ நலங்கொள்‌ மகள்முகம்‌ பத்துடன்‌ ஏழ்பதிகம்‌
தோணற்றாய்‌ தோழி இருமுகம்‌ வாய்மொழி ஏழுமூன்றே–14-
-(கட்டளைக்‌ கலித்துறை)

ஐம்பொருளையும்‌ காணவொட்டாமல்‌ தடை செய்கின்ற வினைவழி வந்த உடல்வயத்தால்‌ வந்த அறிவின்மையை எம்பெருமான்‌ கழித்து முழுமெய்ஞானமும்‌ முழுமையான பக்தியும்‌, விட்டு நீங்காதபடி 73 திருவாய்மொழிகள்‌ தோன்றின. நாணத்தை மிகவுடைய தலைமகள்‌ கூற்றாக 27-திருவாய்மொழிகள்‌ தோன்றின. தலைமகளை வலது தோளாக உடைய தாய்முகமாக ஏழுதிருவாய்மொழிகள்‌ தோன்றின. அந்தரங்கத்‌ தோழி முகமாக மூன்று திருவாய்‌ மொழிகள்‌ தோன்றின. ஆக, தன்‌ முகம்‌, தாய்‌ முகம்‌, தலைமகள்‌ முகம்‌, தோழி முகம்‌ ஆக நான்கு முகங்களாக நூறுதிருவாய்‌ மொழிகள்‌ தோன்றின-

மூன்றும்‌ ஐந்தும்‌ அறியா தவர்க்கு உய்யும்‌ வகையை முதலு ரைப்பர்‌
ஏன்ற குருவின்‌ இன்ன ருளால்‌ இக்கரை சார்ந்தார்க்‌ கின்ப வெள்ளம்‌
தோன்றா மடுவும்‌ மேடு காணும்‌ துவளறு சீல மாழங்‌ காணா
தான்றன்‌ னருளால்‌ கரை சேர்ப்பார்க்‌கு உடற்கு றைகாண்‌ சடகோபன்‌ னுண்டே–15-
(ஆசிரிய விருத்தம்‌)

தத்துவங்கள்‌ மூன்றென்றும்‌, முதல்‌ தத்துவம்‌ எம்பெருமான்‌ என்றும்‌, அர்த்த பஞ்சகத்தை அறியாதவர்கட்கு அவற்றை அறிவித்தும்‌, துன்பக்‌ கடலை நீந்தி இக்கரை ஏறி இளைத்திருப்பாருக்கு என்கிறபடியே, பிரபன்னனுக்கு உபாயம்‌ அவனே என்று துணிந்திருப்பார்க்கு க்ருதக்ருத்யனாகையாலே முகில்வண்ண வானத்தவர்‌ சூழ பேரின்ப வெள்ளத்தை முத்தர்க்கு அறிவித்தும்‌, பரமார்த்தனுடைய திருமேனியைவிட இசையாமல்‌ வியாமோகத்தாலே அங்கு கொண்ட போக நினைக்கும்‌ உபய விபூதி நாயகனுக்கு “‘மங்கவொட்டு உன்‌ மாமாயையை” என்ற பாசுரப்படியே விகாரமான தேகதோஷத்தை எம்பெருமானுக்கறிவித்தும்‌, நித்திய தொண்டாற்றும்‌ சுவை மிகுதியாலே எம்பொருமானுடைய ஆச்ரிய பாரதந்தரியத்தால்‌ சீலகுணத்தாலே பரிமாறும்‌ பரிமாற்றத்தாலே சீலகுணம்‌ ஆழங்கால்படுத்தும்‌ என்று நித்தியர்கட்கு அறிவித்தும்‌ போருவர்‌. முழுக்ஷுக்களுக்கு நிச்சயமாக எய்வது பேரின்ப வெள்ளம்‌ என்று உபதேசித்தும்‌, இப்படி நான்கு வித அதிகாரிகளுக்கும்‌ ஆழ்வார்‌ உபதேசம்‌ செய்வர்‌ என்றபடி –

உண்டே? ஆயிரம்‌ கவிகொள்‌ கீதையும்‌ ஆதித்தியன்‌ ஆயிரங்‌ கதிர்‌ பரப்பியும்‌ இராம திவாகரன்‌ இலங்கை யெரித்தும்‌ உள்ளிருள்‌ நீங்கிய தென்பதுளதே? ஊற்றாறா பிறவிக்‌ கடலும்‌ ஒய்ந்ததே? ‘குருகையில்‌ வருமோர்‌ கோதில்‌ வகுள பூடணபாற்‌ கரன்‌ உதிக்க அப்பொழுதே பிறவியாம்‌ பெருங்கடல்‌ இறையும்‌ இலதே போதிற்‌ கமலம்‌ புரையற மலர்ந்தே உள்ளிருள்‌ எனும்‌ அறிவின்மை உலர்ந்ததே இவ்வெலாம்‌ நேர்ந்த இல்‌ வுலகின்‌ புறவே-16-( ஆசிரியப்பா )

திருத்தேர்த்‌ தட்டில்‌ கண்ணன்‌ எம்பெருமான்‌ அருளிய கீதையெனும்‌ ஆயிரம்‌ கவி உதித்தும்‌, ஆதித்தியன்‌ ஆயிரம்‌ கிரணம்‌ பரப்பியும்‌. சக்கரவர்த்தி திருமகன்‌ என்னும்‌ திவாகரன்‌ இலங்கை தகிக்க ஆயிரம்‌ அம்பு எய்வித்தும்‌ உள்ளிருள்‌ என்னும்‌ அஞ்ஞானம்‌ நீங்கியதில்லை. மேன்மேலிருளைச்‌ சுரக்கும்‌ பிறவிப்‌ பெருங்கடல்‌ வற்றவில்லை. திருக்குரு கூரில்‌ வந்துதித்த குறை யாதும்‌ இலாது வகுள பூஷண பாஸ்கரன்‌ உதித்த அந்தக் கணமே பிறவியாம்‌ பெருங்கடல்‌ அல்பம்‌ இன்றி வற்றி இதய கமலம்‌ நன்கு மலர்ந்தது; உள்ளிருள்‌ என்பதான அறிவின்மை உலர்ந்து போயிற்று. இவை யெலாம்‌ நேர்ந்ததால்‌ இவ் வுலகம்‌ இன்புற்றது.

இன்பமாரி இன்பப்பா வீட்டின்பம்‌ இம்மூன்றுள்‌
பண்பறிவார்‌ யாரே! பயனறிவார்‌ – உண்மை
தரமுயர்‌ மாறன்‌ இசைவேதம்‌ அர்ச்சை
திரிபறிவார்‌ சேர்வர்‌ நரகு–17-
(வெண்பா)

இன்பமாரியாம்‌ குருகூர்ச்சட்கோபனையும்‌, இவர்‌ திருவாய்‌ மலர்ந்தருளிய திருவாய்‌ மொழியையும்‌, அர்ச்சாமூர்த்தியை உலோகங்களால்‌ புனையப்‌ பெற்றது என்றும்‌, நான்காம்‌ வர்ணத்தார்‌ என்றும்‌, தமிழ்பாக்கள்‌ என்றும்‌ பண்பறியார்‌ கூறுவர்‌. பண்பறிவார்‌, தொழுகுலத்தோன்‌ என்றும்‌,உயர்வேதமென்றும்‌, சுத்த ஸத்வ திருமேனி என்றும்‌ காண்பர்‌. இதற்கு மாறுபட அறிவர்‌ நரகம்‌ சேர்வர்‌ என்பதே-

நரகை யொழித்து நன்கழல்‌ சேர்க்கும்‌ அனந்தபுரம்‌
அருச்சித்‌ தமரர்‌ தலைவன்‌ அயனும்‌ நிலத்தேவர்‌
ஒருத்தர்‌ தவறா(து) ஒருங்குமூ வாசல்‌ கடைப்பிடித்து
திருத்தம்‌ உறவே சமமாகச்‌ சேவிக்கச்‌ சீர் கொளுமே-
-18-(கட்டளைக்‌ கலித்துறை)

மலைநாட்டு திருப்பதிகளில்‌ ஒன்றானது திருவனந்தபுரம்‌. அதில்‌ அமரர் கோனாகிய விஷ்வக்சேனர்‌, முதல் வாசல்‌ கடைபிடித்து திருமுடிபக்கம்‌ நின்று சேவித்தும்‌, எம்பெருமான் நாபியில்‌ தோன்றிய பிரமன்‌ இரண்டாம்‌ வாசல்‌ கடைபிடித்து திரு உந்திக் கமலம்‌ சேவித்தும்‌, நிலத் தேவர்கள்‌: மூன்றாம்‌ வாசல்‌ கடைபிடித்து திருவடிகளைச்‌ சேவித்தும்‌, இப்படிச்‌ சேவித்தாலும்‌ தன் பால்‌ வேற்றுமை இன்றி சமமாக சேவிக்கும்‌ வாய்ப்பினை உடையதாம் –

கொள்ளும்‌ எழுத்தொன்‌(று) இகுளைஎன உறவில்‌ உணர்த்திகுறை வில் பொருள்
விள்ளும்‌ நமம செவிலியென அருளே நெறிகொள்‌ மிக்கதிடம்‌
துள்ளும்‌ பதற்றம்‌ மகன்நான்கில்‌ துவளில்‌ போகத்‌ துறுவேட்கை
தெள்ளென்‌ ஞானச் சட கோபன்‌ தெறிக்கும்‌ நால்வர்‌ நான்முகத்தே–19-
(அறுசீர்க்‌ கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்‌)

பிரணவத்தின்‌ அர்த்தமான ஜீவபரர்கள்‌ சம்மந்தத்தைத்‌ தோழிக்‌ கூற்றாகச்‌ சொல்லும்‌. குறைவிலா நிறைபொருள்‌ தரும்படியான நமப்பதம்‌, எம்பெருமான்‌ அருளல்லது வேறு உபாயம்‌ இல்லை என்னுபடியான திட நம்பிக்கையை வலியுறுத்தும்‌ தாய்க்கூற்று. தலைமகனை சேர்ந்தல்லது தரிக்க முடியாத பதற்றமுடைய நாராயணாய என்ற நான்காம்‌ வேற்றுமைப்‌ பொருளைத்‌ தலைமகள்‌ கூற்றாகச்‌ சொல்லும்‌. இப்படித்‌ தோழி, தாயார்‌, தலைமகள்‌ மூன்றோடு பெண்‌ பேச்சாகவும்‌ பேசும்‌ ஆழ்வார்‌ தம்‌ பேச்சாக நான்கு அதிகாரிகளைப்‌ பார்த்து நான்கு முகமாக உபதேசிப்பர் –

என்பெறு தென்ன மலைக்கா துள்ளத்து ஊறிய மதுவிர தமாய்‌ தூமது வாய்கொள்‌ கொண்டு குழல்வாய்‌ வகுளத்தின்‌ சாரமுட்‌ கொண்டு தேனென என்று ஆளம்‌ வைத்துச்‌ சிறுகாலில்‌ லியம்போது குறிஞ்சி மருளறும்‌ காமரம்‌ கந்தாரம்‌ தகைவறப்‌ புக்கு வண்டொத்‌ திருண்ட குழலில்‌ சங்கையற மருவி யருளாத யாமென்‌ றோடிவந்து வாசமே ஊதி வண்டே கரியாய தெய்வ வண்டோடே சேர்விக்கும்‌ சேமம்‌ உடைய நாரதன்‌ முனிவா கனர்தம்‌ பிரான்மார்‌ போல்வார்‌ இவர்களை வண்டு தும்பியாம்‌ பொருளே--20-( அகவற்பா)

அழகிய மலரெலாம்‌ ஊதி நீ என்பெறுதி என்று மீட்க வேண்டும்படி தகாத பொருள்களை இனிய பொருள்களென்று மயங்காதே, இறைவனாகிய தன்னுடைய அழகு சீலம்‌ முதலியவைகளை நினைத்து உள்ளம்‌ கனிந்திருக்கும்‌ அடியார்களுடைய மனத்திலே பகவனாகியத்‌ தேனை விரும்பி அவனையே உணவாக உடைய வண்டு, தாமரை மலரில்‌ இருந்து கொண்டு அதனை விட்டு, அடைவதற்கே அரியதாய்‌ அடைந்தாலும்‌ நாவினை நனைப்பதற்கும்‌ போராதே, தேனை உடைய முள்ளிற்‌ பூவை கண்ணாலும்‌ பாராததைப்‌ போன்று, “தேவரீருடைய தேனே மலரும்‌ திருவடித் தாமரைகளுடைய இனிமையில்‌ மனம்‌ அழுந்திய ஒருவன்‌ மற்றொரு அற்ப இன்பத்தை விரும்ப மாட்டான்‌” என்கிறபடியே, மற்றொன்றினைப்‌ பிரித்து பாராதே இந்தத்‌ தேனை உண்ணுதலையே விரதமாக உடையராய்‌ பகவானாகிய இனிய பொருளை அனுபவிக்கும்‌ அனுபவத்தாலே பரிசுத்தமாய்‌ வகுள மாலையைத்‌ தரித்த ஆழ்வாருடைய இனிமை பரத்துவம்‌ முதலான வற்றின்‌ இனிமையும்‌ அளவிற்குட்பட்டது என்னும்படியான திருக்குழலில்‌ வைத்த ஒளிமா மலரான வகுளத்தின்‌ தரத்தை எடுத்து அவ்வழியாலே இத்தலையில்‌ இனிமையை அனுபவித்து, இப்படி பகவானுடையவும்‌ பாகவதருடையவும்‌ இனிமைகளை அனுபவித்த செருக்குக்குப்‌ போக்கு வீடாக ஆலத்தி வைத்து, காலங்கட்கு தகுதியான பண்களைப்‌ பாடி, திருவாசல்களிலே சேவிக்க வந்தவர்கள்‌ நிறைந்து தலைப்புகவொண்ணாதபடி நெருக்க தெருவாசல்‌ காப்பர்‌ திருக்கதவு திறக்க வேண்டும்‌ என்று விரும்பிக்‌ கேட்டு, கண்ணையும்‌ மனத்தையும்‌ கவருகின்ற திருவாசலில்‌ அழகில்‌ துவக்குண்ணாதே அதனைக்‌ கடந்து புகவேண்டுகையால்‌ தடையற பாடுவாராக இருக்கின்ற அந்தரங்கத்‌ தன்மையாலும்‌, ஒன்றிலேயே நோக்குடைய மனத்தினை உடைமையாலும்‌, தனக்கு ஒத்த விஷபமுள்ள இடத்திலே சேர்ந்து அச்சமில்லாமல்‌ அவனுடைய அண்மையில்‌ இருப்பவர்களாய்‌, இத்தலையில்‌ துன்பத்தை அவனுக்கு அறிவித்து அவனோடே கூடிவர இராதே முந்துறவே தேடிவர வேண்டும்‌ என்று விரும்பி விட்டபடியே இத்தலையில்‌ துன்பத்துக்குத்‌ தகுதியாக அவன்வரவினை அறிவிக்க, விரைந்து வந்து தங்கள்‌ வரவாலே இத்‌ தலையில்‌ பிறந்த செவ்வியை அனுபவித்து அத்தலையில்‌ தாங்கள்‌ அனுபவித்த இனிமையை தங்கள்‌ வரவாலே இத்தலைக்கு விளக்கிக்‌ கொண்டு தரிக்கச்‌ செய்து, வேத சாகைகளின்‌ மேலேயுள்ள சாரத்தை உட்கொள்ளும்‌ ஆறுபத நிஷ்டர்களாய்‌ இரண்டு சிறகுகளோடு கூடியிருப்பதாலே தடையின்றி எங்கும்‌ செல்லக்‌ கூடியவர்களை முன்னிட்டு அங்கீகரிக்கும்‌ அவனாய்‌, வேதாந்தங்களாலே அறியப்படுமவன்‌ என்று தோன்றும்படி கெருடவாகனனாய்‌ சாரத்தையே எடுக்கின்ற சர்வேச்வரனோடே சேர்விக்கும்‌ பிரம்மமாவனையாகிற சேமத்தையுடைய நாரதன்‌, பகவானுடைய குணங்களை அனுபவித்து போரானந்தமுடையவனாய்‌ அந்த ஆனந்தத்தில்‌ பாடிக்கொண்டும்‌, நடனம்‌ ஆடிக்கொண்டிருக்கும்‌ ஸ்ரீநாரதமாமுனி, லோக சாரங்கமாமுனிகளாலே தாங்கப்படுகையாலே முனிவரென்று கூறப்படுகின்ற திருப்பாணாழ்வார்‌, திருவாய்மொழி இசையினையே தங்களுக்கு இனிய பொருளாகக்‌ கொடுக்கின்ற தம்பிரான்மார்‌ போன்றவர்களை வண்டு தும்பி என்னும்‌ என்கிறபடி.

பொருளில்‌ அடிமையிற் புக்கிலர் ஞாநம்
இருந்தும்‌ இசையார்‌ அழுக்கை – விரும்பியும்‌
ஏற்பரோ? மாறன் பா மெய்யுணர்ந்தார் ஏலாரே
காற்கடை கொள்ளுவர் காண்
–21-(வெண்பா )

தடையற்ற சுவாதீனான பரம்‌ பொருளுக்கு ஆன்மா அடிமை என்பதையும்‌, அந்த அடிமைகளோட தொண்டாற்றுதலையும்‌ அறியாதவனானவனுடைய ஆன்மா அறிவு மயம்‌ ஆனந்த மயனானாலும் மாறன் பாவாகிய திருவாய்மொழி உணர்ந்தோர்‌ இவ் வாத்மாவை வேண்டுமென்றிசைய மாட்டார்கள்‌. இவ் வான்மாவால்‌ தரிக்கப்‌ பெறா அறிவில்லாப்‌ பொருளாம்‌ அழுக்குடம்பை ஏற்க மாட்டார்கள்‌ என்பதை சொல்ல வேண்டிடுமா? அவற்றைக்‌ காற்கடை கொள்வர் –

காண்மின்‌ உலகீர்‌ சனக தசரதர்‌ காசினியில்‌
பேணும்‌ பிறங்கொளி இலதாம்‌ நந்தன்‌ இவர்கள்குலம்‌
தோணும்‌ முதலும்‌ இடையும்‌ கடையும்‌ துலங்குவபோல்‌
நாணுறு நான்கினில்‌ மாறன்‌ எனவரு பாற்கரனே
–22-(கட்டளைக்‌ கலித்துறை)

உலகவர்களே! இந்த வியப்பைக்‌ காணுங்கள்‌. ஜனகர்‌ மூத்த மகளான சீதா பிராட்டியும்‌, தசரத சக்கரவர்த்தியுடைய நடுப்‌ பிள்ளையான பரதாழ்வானும்‌, உலகவர்‌ விருப்பத்துக்‌ குரித்தல்லாத குலத்தில் தோன்றிய நந்த கோபனுடைய கடைக்‌ கூற்றுப்‌ பிள்ளையான கண்ணனும்‌ தோன்றி,குலத்தை சார்ந்த குறைகளைப்‌ போக்கி புகழுண்டாக்கினது போல்‌ மாறன்‌ நான்காம்‌ வர்ணத்துத்‌ தோன்றி குலத்துக்குப்‌ புகழும்‌ உலகவருடைய பிறவிச் சிறையும்‌ அறுத்தார் –

பாற்கரன்‌ கதிரின்‌ ஞானமா ந்தம்‌ அடியவன்‌ பாலதோர்‌ நூல்களின்‌ நுகர்பவன் பகர்வே
நூற்களின்‌ சாரமாம்‌ நுவலரு மறையின்‌ உயிர்களாம்‌ நுவல்பர தந்திரன்‌ நுகர்பவன்‌ பரனே
பாற்படா பரன்தன்‌ தன்வழி நுவல்பவை முதற்கடை பகையிவை நான்கும்‌ நமவும்‌ பின்னவே
ஏற்ப திவ்வாறாம்‌ குறை யறக் காண்‌பார் பரனுயிர் இயல்பை அறிவெனும் கடலெனப் பெறுவரே -23-
(ஒன்பதின்‌ சீர்க்கழி நெடில்‌ ஆசிரிய விருத்தம் )

பகலவனுடைய பேரொளியைப்‌ போன்ற ஞான ஒளியும்‌, அவற்றின்‌ காரியமான ஆனந்தமும்‌ உடையவனான இந்த ஜீவன்‌, தான்‌ பரனுக்கு அடியவனாய்த்‌ தொண்டு செயது தொண்டினால்‌ வரும்‌ இன்பம்‌ தனதாகக்‌ கருதுபவன்‌ என்பது சாஸ்திரங்களில்‌ சொல்லப்பட்டதாகும்‌. சாஸ்திரங்களின்‌ ஸாரமாய்‌ சொல்வதற்கரிய பெருமைகளைபுடையதான திருமந்திரத்தில்‌, சேதனனை பரதந்திரன்‌ என்றும்‌, இந்தப்‌ பரதந்திர இயல்புக்கு ஏற்ப ஜீவன்‌ செய்கின்ற தொண்டினால்‌ விளையும்‌ இன்பத்தை நுகர்பவன்‌ இறைவனென்றும்‌ சொல்வதாகும் –
நூல்களில்‌ சொன்ன ரீதியில்‌ பரனுக்கு ஜீவனானவன்‌ பரதந்திரன்‌ என்றும்‌ போக்யம்‌ என்றும்‌ கொள்ளாது, சேஷத்துவ போக்த்ருவத்தோடு கூடிய இவ்‌- விரண்டும்‌ அகங்காரத்தை ஏற்றிருப்பதால்‌ பரன்‌ திருவுளத்திற்கு மாறுபட்டவை. (அவன்‌ உகப்புக்கு மாறுபட்டவை) இவற்றைத்‌ திருமந்திரத்தில்‌ ப்ரணவத்தில்‌ முதல்‌ எழுத்தாகிய அகாரமும்‌ ஈற்றெழுத்தாகிய மகாரமும்‌ சொல்லியிருக்க, பின்வரும்‌ நாராயணாய என்று வரும்‌ நான்காம்‌ வேற்றுமையும்‌ இரண்டாம்‌ பதமான நமசும்‌ சேஷத்வ போக்த்ருத்வத்தை அறத்தள்ளி முதற்சொன்ன அகார மகாரங்களை விட்டு, பின்‌ சொன்ன நமபத ஆய பதங்கள்‌ பின்‌ வந்து பாரதந்த்ரிய போக்யதையை. சொல்லிற்று. இதில்‌ அகங்காரத்திற்கு யோக்யதை இல்லையாயிற்று. இவ்வாறாக பரமாத்மாவின்‌ இயல்பையும்‌ ஜீவாத்மாவின்‌ இயல்பையும்‌ மாறுபடக்‌ காணாது. மேற்சொன்ன ரீதியில்‌ யதார்த்தமாக காண்பவர்களை கண்ணனெம்‌ பெருமான்‌ “ஸமஹாத்மா” என்று சொன்னதாலே, மகாமதியுடைய வன்‌ என்பதால்‌ இவன்‌ கடல்‌ போன்ற பேரறிஞன்‌ எனப்படுவான்‌-இதை நம்மாழ்வாரும்‌ “தனைக்கேயாக எனைக்‌ கொள்ளுமீதே” என்ற ருளியிருக்கின்றார் -“சேஷத்வ போக்த்ருத்வங்கள்‌ போலன்றே பாரதந்தர்ய போக்யதைகள்‌” என்று தொடங்கும்‌ ஆசார்ய ஹ்ருதய ஸூத்திரத்தின்‌ அடிப்படையில்‌ அமைந்தவை இவை-

கடல்நீர்‌ உப்புநீர்‌ நித்தம்‌ காணலாம்‌ உவாவில்‌ அன்றித்‌ தொடற்‌ குதவாத போல்‌ நூற்கடல்‌ ஆங்கே கலங்குநீர்‌ நொய்யவாம்‌ தெளிவிலாக்‌ கலங்கல்‌ பருகத்‌ தெளிவிலாது ஐயத்‌ திரியறி வின்மையின்‌ ஆழ்ந்து வேண்டா நாற்ற மிகுமுடல்‌ முகந்து நானென தென்னும்‌ நலமி லுழல்வான்‌ இறையருள்‌ கடைக்கண்‌ இயங்கக்‌ குருகை நேர் வகுள பூஷணன்‌ பாற்கரன்‌ வந்து இன்ப மாரி இயந்ததோர்‌ ஞானத்து வீட்டின்ப வாரி தன்‌ குணநீர்‌ மிசைந் ஆயிரங்‌ கதிரா யிரங்‌ வியமுதின்‌ நிலத்தே யிவரால்‌ நிறைஞா னம்பெரும்‌ புகல்வதோர் புகழே மாறன் தன் வேதமே –-24-(ஆசிரியப்பா)

உப்புத்‌ தன்மை வாய்த்தாய்‌ அந்தக்‌ கடலுக்குள்‌ வசிக்கின்ற மீன்‌ முதலான பொருட்களுக்கொழிய, புறம்புள்ளார்க்கு உள்ளே புகுவதற்கும்‌ அரிதான பவுர்ணமி முதலிய பருவ காலங்களில்‌ ஒழிய ஏனைய காலங்களில்‌ தீண்டத்தகாது என்கையாலே முழுகுதற்குக்‌ கால நியதியை உடைத்தாய்‌ இருக்கிற கடல்‌ நீரானது, மேகம்‌ பருகி மழையாகப்‌ பெய்ய அம்மேகத்தின்‌ சம்பந்தத்தில்‌ கடல்நீரினது உப்புத்தன்மை நீங்கி எப்பொழுதும்‌ எல்லார்க்கும்‌ பயன்படுவத போன்று, வடமொழி மறையானது, பிராமணன்‌ ஆவணிமாதத்திலாவது புரட்டாசி மாதத்திலாவது சாஸ்திரத்தில்‌ சொல்லியபடி உபாகர்மங்களைச்‌ செய்யும்‌ நியமத்துடன்‌ கூடியவனாய்‌ நாலரை மாதங்களில்‌ வேதங்களை அத்யயனம்‌ செய்யக்கடவன்‌. இதற்குப்‌ பிறகு நியமத்துடன்‌ கூடியவனாய்‌ சுக்கில பட்சத்தில்‌ வேதங்களை ஒதக்கடவன்‌. 4 வேதம்‌ 6 அங்கங்கள்‌ உபநிடதங்களையும்‌ கிருஷ்ணபட்சத்தில்‌ நன்றாக அத்தியயனம்‌ செய்யக்கடவன்‌ என்கிறபடியே அத்தியயனம்‌ செய்வதற்கு கால நியதியும்‌, மேல்‌ மூன்று வர்ணத்தாரும்‌ ஒதற்கு அதிகாரிகள்‌ ஆகையாலே, அதிகாரி நியதியையும்‌ உடைத்தாயிருக்கிற நூற்கடல்‌ என்ற வேதம்‌, இவள்‌ வாயனகள்‌ திருந்தவே என்கிறபடியே நம்மாழ்வார்‌ திருவாக்காலே வெளிவந்து கால நியதி அதிகாரி நியதியை வேண்டாத பண்பை அடைந்து கட்டளைப்பட்டவாறே, பெண்களாலும்‌ நான்காம்‌ வர்ணத்தவர்களாலும்‌ அத்யயனம்‌ செய்யத்தக்கது. இதனை அத்தியயனம்‌ செய்யும்வாகட்கு மோக்ஷம்‌ கையில்‌ இருக்கும்படியே. ஒரு காலவரையின்றியே எல்லார்க்கும்‌ எல்லாக்‌ காலமும்‌ கற்பதற்குரியதாம்‌ இந்தத்‌ திருவாய்மொழி. இந்த மறையும்‌ இதன்‌ பயனும்‌ சிறப்புடைவனவாகும்‌. வடமொழி மறை முக்குணமான தோஷத்தைக்‌ குறிக்கொண்டதால்‌ அம்மறை பயின்றவர்கட்கு யதார்த்த ஞானம்‌ வருவது அருமை. ஐய உணர்வு, திரிபுணர்வு, அறிவின்மை இவைகளில்‌ ஆழ்ந்து இதனால்‌ பொல்லா ஒழுக்கு ஒழுகி துர்நாற்றமுடைய உடலெடுத்து, நான்‌ எனதென்னும்‌ அகங்காரமமகாரங்களால்‌ ஆனந்தம்‌ இல்லாத காட்டில்‌ உழல்வாருக்கு வேதம்‌ பிரமாணம்‌, இதைக்கண்ட இறைவன்‌ மனம்‌ வருந்தினவனாய்‌, சேதனர்பால்‌ அருள்‌ பெருகி உண்மை உணர்ந்த நல்லாள்‌ ஒருவனைத்‌ தோற்றி வைக்க வேண்டும்‌ என நினைத்து, அமலங்களால்‌ விழிக்கும்‌ தம்கடைக்‌ கண்களால்‌ நோக்க, அந்நோக்கம்‌ ஜாயமான காலத்தில்‌ அவதரிக்கப்பட்ட இனபமாரியாம்‌ ஆழ்வார்‌ என்ற முகிலானது அர்ச்சாவதாரத்தின்‌ குண நீரைப்பருகி, ஆயிரம்‌ கவியமுதமாக்கி, இதையுண்டவர்‌ நிலத்தேவராய்‌ நிறைஞானம்‌ பெற்று தாங்கள்‌ உய்ந்தார்கள்‌; உலகை உய்வித்தார்கள்‌. இதனால்‌ மாறன்‌ வேதம்‌ புகழ்வதற்கரியதோர்‌ புகழுடையது.

வேதங்கள் கற்றல் ஒழுகலில் விப்ரராய்
சாதியால் தாழ்த்தி உயர்த்திகள் -ஓதுவர் சந்தங்கள்‌ ஆயிரவர்‌ சாதி பிரித்தறியார்‌
வந்தனைக்காம்‌ வைணவன்‌ தான்‌
–25-(வெண்பா )

மறைகளை குருமுகமாகக்‌ கற்றறிந்து அறிந்ததின்‌ ஒழுக்கத்தை மேற்கொண்டொழுகலால்‌ பிராமணன்‌ என்ற தகுதியை பெறுவர்‌. இவர்‌, தன்‌ குலத்தை மேலாக மற்றது தாழ்வாகக்‌ கொள்வர்‌. குருகூர்‌ சடகோபன்‌ திருவாய்‌ மலர்ந்தருளிய சந்தங்கள்‌ ஆயிரத்தைக்‌ கற்று வல்லவரானால்‌ வைணவன்‌ என்ற தகுதி பெறுவான்‌. இவன்‌ ஆன்மாவின்‌ உண்மை அறிந்து அனைத்தும்‌ சமமே என்றொழுகுவான்‌-

தானே உயர் தின்னணை ஒன்று சாற்றினான்‌ நோற்ற நான்கில்‌
கானேய்‌ பயிலேறு கண்கரு வீடொருக்‌ கொண்ட சொன்னால்‌
தேனே எம்மா ஒழி வேய்‌ நெடு நான்கில்‌ தெரிபயனும்‌
ஊனேய்‌ தடைஉயிர்‌ ஆறெம்மான்‌ ஐம் பொருள்‌ ஓர்ந்துரைத்தே –26
–(கட்டளைக்‌ கலித்துறை)

மிக்க இறை நிலையும்‌ என்ற தனியனின்படி திருவாய்மொழியில்‌ அர்த்த பஞ்சகம்‌ உள்ளதென்பதை உயர்வற என்றும்‌, திண்ணன்‌ வீடு, அணைவதரவணை, ஒன்றும்‌ தேவு என்றும்‌ தொடங்கும்‌ நான்கு திருவாய்மொழிகளில்‌ பரத்வ தன்மை சொல்லியதாம்‌. பயிலும்‌ சுடரொளி, ஏறாளும்‌ இறையோனும்‌, கண்கள்‌ சிவந்து, கருமாணிக்கம்‌,என்று தொடங்கும்‌ திருவாய்‌ மொழிகளில்‌ ஆன்மாவின்‌ தன்மையும்‌, வீடுமின்‌, ஒரு நாயகம்‌, கொண்ட பெண்டீர்‌, சொன்னால்‌ விரோதம்‌ என்று தொடங்கும்‌ திருவாய்மொழியில்‌ இறைவனை அடையத்‌ தடை பண்ணும்‌ விரோதியின்‌ தன்மையும்‌ சொல்லிற்று. நோற்ற நோன்பு, ஆராவமுதே, மானேய்‌ நோக்கு நல்லீர்‌, பிறந்தவாறு என்று தொடங்கும்‌ நான்கு திருவாய்மொழியில்‌ பகவானை அடைவதற்கு சாதனத்‌ தன்மையும்‌ சொல்லிற்று. எம்மா வீடு, ஒழிவில்காலம்‌, நெடுமாற்கடிமை, வேய்மரு தோளினை என்று தொடங்கும்‌ திருவாய்‌ மொழிகளில்‌ பரன்‌ திறத்து அடைந்து பெரும்பயனைச்‌ சொல்லிற்று —

ஈதே முடிவில்‌ விடுமுடம்பில்‌ எச்சில்‌ உகக்கும்‌ காதலன்போல்‌
ஏதும்‌ உடம்பின்‌ குறைகாணான்‌ மாயஆக்கை இதில்‌ புகுந்து
யாதும்‌ உகந்த நிலமாக இவன்திரு மேனிவா னாட்டிருப்பா
பாதம்‌ பற்றி மங்கவொட்டுன்‌ மாயை எனவே விடுவிக்கும் –27-(
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்‌)

மாலையாக பிறக்கும்‌ பிறவிகளின்‌ உடம்பில்‌ இறைவனருளால்‌ வினைத்‌ தொடர்பு இல்லாததாக இதுதான்‌ கடைசி உடம்பு என்றும்‌, இணி, உடம்பின்‌ தொடர்பு இந்த ஆத்மாவிற்கு கிடையாது என்றும்‌, இந்த நிலையில்‌ இருக்கும்‌ ஆழ்வார்‌, இறைவன்‌ இடத்திலும்‌ அடியார்களின்‌ திறத்திலும்‌ மற்றும்‌ இறைவன்‌ சம்பந்தப்பட்ட எல்லைக்‌ காண்பரீய பிரேமையும்‌ மதிப்பும்‌ உடையவராக ஆகவும்‌, இதைக்கண்ட எம்பெருமான்‌ பல கல்பங்களாக படைத்துக்‌ கொண்டு வருகிற நிலைபில்‌ இந்த ஆழ்வாருடைய பண்புகளைக்‌ கொண்டு, இதுவரைக்கும்‌ படைத்த படைப்பில்‌ இப்படி ஒருவர்‌ இல்லை மேலும்‌ இருக்க முடியாது என்ற திருவுள்ளமுடையவனாய. இவர்‌ திருமேளியில்‌ வாஞ்சையறு, காதலியின்‌ அழுக்கை விரும்பும்‌ காதலன்‌ போல்‌ இவர்‌ திருமேனியில்‌ புகுந்திருந்து, இ வரை இந்தத்‌ திருமேனியோடு பரமபதத்திற்குக்‌ கொண்டு செல்ல வேண்டும்‌ என்று நினைத்து, “இந்த ஸ்தூல உடம்போடு கையைப்‌ பிடித்து அழைக்கின்றானே என்று இங்கு தான்‌ அருவருக்கத்தக்கப்‌ பிறவி என்ற சிறை என்றால்‌ அங்குமா?” என்று கலங்கி எம்பெருமான்‌ திருவடிகளைப்‌ பற்றிக்கொண்டு முக்குணத்தோடு கூடிய மாயையின்‌ பரிணாமமாகையாலே இதை விடுவிக்க வேண்டுமென்று ஆழ்வார்‌ பிரார்த்திக்க, திவ்யசூரிகளான இவர்களால்‌ வாழ்த்தப்‌ பெற்ற திவ்ய தேசங்கள்‌ தோறும்‌ செய்யும்‌ பிரேமையை இவருடம்பில்‌ செய்வானாக. இவர்‌ இசையாமல்‌ இறைவனைப்‌ பார்த்து, அருவருக்கத்தக்க மாயை காண்‌ இந்த அழுக்குடம்பு ஆதலால்‌ இதை விடுக்க வேண்டுமென்று திருவடிகளிலே மன்றாட எம்பெருமான்‌ ஆச்ரித பரதந்தரனாய்‌ இசைந்து விடுவித்தான்‌ என்பதாம்‌. இந்த குணம்‌ “மருள்கள்‌ கடியும்‌ மணிமலை திருமாலிருஞ்சோலைமலையே” என்ற பதிகத்தில்‌ காணலாம்‌.

என்றனை நீஇன்று ஒருபொரு ளாக்கி என்னுள்ளே நின்றனை வைத்தாய் அன்றெனை புறம் போகப்‌ புணர்த்த தென்செய்க? குன்றென திகழ் மாடங்கள் சூழ்ந்த திருப்பேரா ஒன்றெனக்‌ கருள்செய்‌ யுணர்த்த லுற்றேன்‌ என்றே மாறன்‌ நின்றே இயம்ப தலைநிலம்‌ கவிழ்ந்து தரையைக்‌ கீறி இறைவன்‌ இதற்கொரு மாற்றங்‌ காணா கடிமணக்‌ காட்சியில்‌ மந்திரம்‌ மறந்த மறையவன்‌ வாத்திய ஒலியை முழக்கி செய்யச்‌ செய்யும்‌ செய்கை போலே சூழ் விசும்‌ பணிமுகில்‌ தூரியம்‌ முழக்கம் முரசங்கள்‌ வலம்புரி முழக்கம்‌ செய்து அர்ச்சி ராதி கதியைக்‌ காட்ட அமானவர்‌ அடையும்‌ நிலையுங்‌. காட்டி அந்தமில்‌ பேரின்பத்‌ தடியரோ டிருந்தமை இவ்வெலாங்‌ காட்டி இறைவன் ஆழ்வாரை திசைதிருப்பிக்‌ கேட்ட கேள்வியை ‘ மறக்கச்‌ செய்வதில்‌ மாயன்‌ சதுரன்‌ மாறனே! வாரீர்‌ ஓங்காரத்‌ தேரில்‌ ர்‌ ஏறுமென இறைவன்‌ இதமொ ழிந்தானே--28-(ஆசிரியப்பா )

வைராக்கியங்களைக்‌ கண்டு எம்பெருமான்‌, ர அல்‌ கப்பன்‌ திருப்பாற்கடல்‌ முதலான திவ்ய தேசங்களில்‌ பண்ணும்‌ ஆதரத்தையும்‌, அன்பையும்‌ ஆழ்வார்‌ திருமேனி முதலான அவயங்கள்‌. – உறுப்புகள்‌ எல்லாவற்றிலும்‌ செய்து பஞ்ச பூதங்களினுடைய சேர்த்தியாலான ஆழ்வாருடைய திருமேனியை பரமபதத்திற்கு எடுத்துச்‌ செல்ல விரும்பி அவசரப்படுத்துவதைக்‌ கண்ட ஸ்வாமி நம்மாழ்வார்‌, எம்பெருமானைப்‌ பார்த்து ஒரு கேள்வி கேட்டார்‌. எம்பெருமானே! அடியேனை இன்று ஒப்பற்ற வஸ்துவாக்கி-பொருளாக்கி உபயவிபூதிக்கும்‌ நாயகனான உம்மை என்னிடத்தில்‌ இருத்தி, என்‌ இருதய கமலத்தில்‌ வீற்றிருந்து, இவ்வளவு பாரிப்புகளைச்‌ செய்து என்னைச்‌ சூழ்ந்து கொண்டு ஒரு நொடிப் போதும் என்னை விட்டகலாமல்‌ பேரருள்‌ செய்கிறீர்‌. அடியேனைக் கடந்த காலங்களில்‌ மாறிப்‌ மாறி பல பிறப்புகளை எடுத்து அனர்த்தப்படும்படி விட்டு வைத்தது எதுக்காக? இதை யருளிச்‌ செய்ய வேணும்‌’ என்றார்‌. அதற்கு எம்பெருமான்‌, இவர்‌ கேள்விகளுக்குப்‌ பதில்‌ சொல்ல ஆரம்பித்தால்‌, பிறகு வேறு ஒரு கேள்வியைக்‌ கேட்பார்‌. இதனால்‌ இவரிடமிருந்து தப்பிக்கவே முடியாது என அறிந்து, தலை கவிழ்ந்து பூமியை தனது பெரு விரலால்‌ கீற,கல்யாணத்தில்‌ மாங்கல்ய தாரணம்‌ செய்யும் போது சொல்லக் கூடிய மந்திரத்தை மறந்த புரோகிதனைப்‌ போல, திசைத்‌ திருப்புவதில சாதுரியமுடைய எம் பெருமான்‌. “சூழ்விசும்‌ பணிமுகில்‌” என்ற திருவாய்மொழியில் சொல்லப்பட்ட அரச்சிராதி கதியைக்‌ காட்டி ஆழ்வாருடைய கேள்வியை மறக்கச்‌ செய்தான் –

மொழிபல செப்பம்‌ பிறந்தது முத்தி
வழிபல வாயவிட்‌ டொன்றாம்‌ – சுழிபல
தாழ்த்தும்‌ பொருநைக்‌ குருகைச்‌ சடகோபன்‌ :
வாழ்த்துரைத்த வாய்மொழித்‌ தேன்‌–29-(வெண்பா )

உலகின்‌ பல மொழிகளும்‌ இயங்குவதால்‌ இறைவன்‌ தொடர்பின்‌ மையால்‌ செப்பமற்றன. திருவாய்‌ மொழி இறையனுபவத்தையே கொண்டிருத்ததலால்‌ மற்ற மொழிகளும்‌ இதைக்‌ கண்டே செப்பமுற்றன. முக்தி மார்க்கங்கள்‌ பலவாக நுல்கள்‌ கூறியதை, பரன் பால்‌ தஞ்சம்‌ அடைவதொன்றே முக்தி மார்க்கமென்று திருவாய்மொழி கூறும்‌. வெள்ளப் பெருக்கால்‌ சுழித்தோடும்‌ பொருனைத்‌ தென்கரையிலுள்ள திருக்குருகூரிலவதரித்த மாறனருளிய திருவாய்‌ மொழியின்‌ செப்பங்களிதுவாம்‌ –

தேனென்றி னிக்கும்‌ சொலக்கேட்க சென்மங்கள்‌ கைத்தழலும்
தானொன்றி தந்தான்‌ கவியா னமையின்‌ புளிகவாது
கானொன்று செவ்வாய்‌ துவர்ப்பாம்‌ கூடிக்‌ களிப்புறு மால்
வானொன்று சீர்த்திரு வாய்பொழித்‌ தேன்கொள்‌ கடலிதுவே-
-30-(கட்டளைக்‌ கலித்துறை)

சுவை மிக்கதும்‌ சிறப்பு மிக்கதுமான திருவாய்மொழி ஆறுசுவைகளைக்‌ கொண்டதொரு தேன் கடல்‌. “எங்ஙனே சொல்லினும்‌ இன்பம்‌ பயக்கும்‌” என்று சடகோபன்‌ வாய்மொழி பண்புரை சாமத்தின்‌ சதோக்யமாகையாலே சொன்ன மாத்திரத்திலேயே தேனுறலின்‌ இனிக்கும்‌. குருமுகமாகக்‌ கேட்கப்‌ பிறவிகளில்‌ விரத்தி யுண்டாக்கிப்‌ பிறவியைக் கடிந்து போக்கும்‌, எம்பெருமான்‌ “ஒன்றி ஒன்றி உலகம்‌ படைத்தான்‌ கவியாயினேன்‌ “என்பதனால்‌ உளதாய இன்பம்‌ உள்ளே நிரந்தரமாக நிரம்பி மிடைந்த சொல் தொடையா யிரமாக வழிந்து வந்ததாகையாலே, உள்ளே என்றும்‌ நிற்கும்‌ பராங்குச நாயகி எம்பெருமானைக்‌ கூடிக்களிப்புற்றதால்‌ எம்பெருமான்‌ திருவதரம்‌ துவர்த்துப்பாம்‌. இதில்‌ அறுசுவையும்‌ சொல்லப்பட்டது.-

கடலகடு வகிர்பொருநை காவிரியின்‌ கரையிகந்து கிளை கொண்டோடும்‌
உடனிகுளை கூறு பல உற்றதாய் பல் கூறுதலை மகள் பல் கூறா
படர் வேட்க்கை தன் கூறோ பல பல கால் விரித்து திருமகள் கேள்வாரி
குடைந்து புகும் குருகூரர் வாய் மொழியாம் குடைந்து பிறகுடைதல் தீர்ந்ததுவே –31–
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் )

கடலின்‌ வயிறு கிழியும்படியாக வேகமாகச்‌ சென்று சங்கமமாகம்‌ தாமிரபரணி, காவேரி என்ற நதிகள்‌ போலே திருவாய்மொழியாம்‌ பெரியதோர்‌ ஆறு கரை கடந்து தோழிக்கூற்று, தாய்க்கூற்று, தலைமகள்‌ கூற்று என்ற பல கிளைகளாலும்‌ பெருகியும்‌ தன்‌ கூற்றோடு சிதிதும்‌ குறையாது கம்பீரமான கடலைக்‌ கிழித்துக்‌ கொண்டு திருவாய்மொழி என்ற ஆறு திருமகள்‌ கேள்வன்‌ என்ற பெருங்கடலிலே சங்கமிக்கும்‌. இத்தகைய குணக்கடலாகிய திருவாய்மொழி என்றதோர்‌ பெரிய தோராற்றில்‌ படிந்து குடைந்து பெருமுத்தாபமும்‌ பிறவிக்கேதமும்‌ தணிந்து சந்ததம்‌ சுகித்துக்‌ கொண்டிருக்கிற யாம்‌, பிரிதொன்றில்‌ தொடர்புக்‌ கொள்ள மாட்டோம் –

வித்தைநல்‌ தாயெனக்‌ கொடுபெறு வித்து பாலும்‌ அமுதுமாம்‌ பரம்பரன்‌ பேர்கொடு வளர்த்தது திருமகள்‌ போன்றென வளர்த்த தஞ்சமாத்‌ தந்‌தை மற்றைப்‌ பேச்சன்றி
உபய விபூதி நாயகன்‌ நன்கொடு
நாலிரண்‌ டிழைசேர்‌ முப்புரி நாண்கொடு
பிரம சூத்திர பந்தம்‌ பிணைக்க
பரம்புரு டன்தான்‌ பாங்குடன்‌ கைக்கொள
நான்கினில்‌ புக்கு நடுக்கிடக்‌ கும்நாள்‌
நான்கினைக்‌ கழித்து சூழ்விசம்‌ பின்படி
உடன்வழி சென்று குடைந்துநீ ராடி
வியன்துழாய்‌ அஞ்சனம்‌ நீறுநா னப்பொடி
பீதக வாடை பல்கலன்‌ கொண்டு
நோக்‌கியர் அலங்கரித்துப் பல் லாண்டு
கவரிசெய்‌ நிறைகுட விளக்கம்‌ ஏந்தி
இளமங்‌ கையர்தாம்‌ வந்தெதிர்‌ கொள்ள
வைகுந்தம்‌ புக்‌கு வாய் மடுத்‌ துப்பெரும்‌
களிச்சியா வானவர்‌ போகம்‌ உண்டு
கோப்புடைக் கோட்டுக்கால்‌ கட்டில்‌ மிதித்து
ஆரோ கித்துப்‌ பரதன்‌ அக்ரூரன்‌
மாருதி இவர்களை அணைதிரு மார்பில்‌
குருமா மணியா அணையும்‌ பொருளிவள்
மணிவல்லிப்பேச்சி இவள் தன் பரமே –32
-(அகவற்பா)

பிரம்ம வித்தையாம்‌ திருமந்திரத்தை இலனென்பது போய்‌ உளனாம்‌ ஞாநப்பிறவியாகப்‌ பெற்று, பாலும்‌ அமுதுமான திருமால்‌ திருநாமங்‌ கொண்டு திருமகள்‌ போலவளர்த்தேன்‌ என்கிறபடியே திருமகளுக்கு ஒப்பாக வளர்த்த ஆசாரியனாகிய தஞ்சமாகிய தந்தையானவன்‌, வினைவழி வந்த பிறவி ஆகிய ஊணஜென்மத்துக்‌ காரணமாகிய தந்‌ைத போலன்றியே, உபய விபூதிக்கும்‌ தந்தையாயிருந்தும்‌ பந்த மோஷங்களின்ரண்டுக்கும்‌ காரணமான தந்தையைப்‌ போலுமன்றிக்கே ஞானசென்மத்தைக்‌ கொடுத்து மோஷத்துக்கே காரணனாகிய தந்தையாய்‌, எந்த நிலையிலும்‌ கைவிடாதவனாய்‌ உய்விப்பதையே நோக்குகிறவனாய்க்‌ கொண்டு ஆபத்துக்களில்‌ காப்பாற்றுபவனாம்‌ ஆசாரியனாகிய தந்தை. எம்பெருமான்‌ தவிர மற்றவர்க்குப பேச்சுப்படாமல்‌ பரம்புருடன்‌ உகந்து, கைக்கொண்டு போக, அகாரத்தில்‌ நான்காம்‌ வேற்றுமை வழியேயணைந்து இதற்கிடையூறாக ஆத்ம பரமாக்களுக்கு “நண்ணியும்‌ நண்ண கில்லேன்‌ “என்கிறபடியே நடுவே யோருடம்பிற்கிடக்கும்‌ நான்கு நாள்‌ கழித்து, சூழ்விசும்பிற்படியே உடன்வழி சென்று விரஜையில்‌ சென்று குடைந்தாடி என்கிறபடியே, “தெய்வத்தன்மை வாய்ந்த நூறு பெண்கள்‌ மாலைகளைக்‌ கையில்‌ ஏந்தினவர்களாய்‌, நூறு பெண்கள்‌ அஞ்சனத்தைக்‌ கையில்‌ ஏந்தினவர்களாய்‌, நூறு பெண்கள்‌ வஸ்திரத்தைக்‌ கையில்‌ ஏந்தியவர்களாய்‌, நூறு பெண்கள்‌ ஸ்ரீசூர்ணத்தை கையில்‌ ஏந்தின வரகளாய்‌, நூறு பெண்கள்‌ திருவாபரணத்தைக்‌ கையிலேந்தியவர்களாய்‌ மானேய்‌ நோக்கியா ஆன தெய்வப்‌ பெண்கள்‌ எதிரே வந்து முத்தனைய பிரம்ம அலங்காரத்தாலே அலங்கரிக்கின்றார்கள்‌” என்கிறபடியே, சர்வேச்வரனுக்கு இனிதாம்படி அலங்கரித்து இவர்களிடத்தில்‌ அவர்களுக்குண்டான தொண்டு செய்வதில்‌ உண்டான இச்சைக்கேற்ப திரள நின்று போற்றி பணிமாற அங்குள்ள பெண்கள்‌ மங்கள தீபம்‌ முதலியவற்றை ஏந்திக்‌ கொண்டு எதிரே வந்து உபசரிக்குமாறு போலே புதிய இளமையினை எப்பொழுதுமே இயல்பாக உடையவர்களான வேறு தெய்வம்‌ பெண்கள்‌ சிலர்‌ எதிர்‌ கொள்ள, திருமகள்‌ கேள்வனுடைய பேரின்பத்திற்கு நிலைக்களமான வைகுந்தம்‌ அடைந்து அவனோடே கூடியிருந்து வாய்மடுத்துப்பெருங்களிச்சியாக அடைந்து அடியார்‌ குழாங்களும்‌ அவனுமாக இருக்கிற சேர்த்தியாக முழுமிடறு செய்து நித்திய சூரிகள்‌ அனுபவிக்கிற போகத்தை, ‘ முக்தன்‌ எல்லாக்‌ குணங்களையும்‌ பரமாத்மாவோடு அனுபவிக்கிறான்‌” என்கிறபடியே எல்லாப்‌ பொருள்கட்கும்‌ புகலிடமான தொன்மை பொருந்திய கட்டிலிலே பாத பிடத்திலே அடியிட்டேறி, பரத அக்ரூர மாருதிகளைத்தழுவிய மணிமிகு மார்பிலே ஸ்ரீபரதாழ்வானையும்‌ அக்ரூரனையும்‌ திருவடியையும்‌ ஆதரித்து அணைத்துக்கொண்ட கெளஸ்துபம்‌ நிறம்‌ பெறும்படியான அழகியதான திருமார்பிலே இறைமைத்‌ தன்மைக்கு அடையாளமாக ஸ்ரீகெளத்துபமணியைப்போன்று இனிய ஒளியுடையதாய்க்‌ கொண்டு அணைகிற ஆன்மாவிற்கு இனியதாய்‌ தனக்குத்தானே அழகியதாய்‌ கொள்‌ கொம்பு பிரியில்‌ தரைப்பட்டுக்கிடக்கும்‌ ‘கொடி போன்றவள்‌” என்கிற தன்‌ தன்மையோடு கூடியதாய்‌ வரும்‌ பேச்சு வந்தேறியன்‌ று இயல்பாகவே
அமைந்தது-

பரனும்‌ பிறனும்‌ உறைகோயில்‌ ஓங்காரம்‌
பிறனாக்‌ குருகூர்ப்‌ பிறந்தோன்‌ – பரனிவனில்‌
வேறிலன்‌ மெய்ம்மைப்‌ பொலிந்து நின்றாசனா
தேறுமெனத்‌ தக்கா னிவன்
–33-(வெண்பா )

பரன்‌ என்பது எம்பெருமான்‌, எம்பெருமானுக்கு பிரதியாய்‌ இருப்பவன்‌ ஜீவன்‌ (ஆன்மா). இந்த இருவருடைய பெயரான அகாரமும்‌ மகாரமும்‌ உகாரமும் அகாரத்தாலும்‌, உகாரத்தாலும்‌, சொல்லப்பட்ட பரனுக்கும்‌ பிராட்டிக்கு! மகாரத்தை பெயராக உடைய ஜீவன்‌ இருவருக்கும்‌ அடிமை என்‌ பொருளைத்‌ தருவதாய்‌, இந்த மூன்று எழுத்துக்களும்‌ சேர்ந்தே ப்ரணவம் ஆகையால்‌, திருக்குருகூரில்‌ ஆதிநாதப்‌ பெருமானும்‌ ஆதிநாத வல்லியும் ஆழ்வாரும்‌ ஆகிய மூவரும்‌ உறை கோயில்‌ திருக்குருகூர்‌. இதனால் திருக்குருகூரும்‌ ப்ரணவத்திற்கு நிகரானது. குருகூரில்‌ அவதரித்‌த நம்மாழ்வார்‌, பரனோடு சொத்தாக ஒத்திருப்பதால்‌ பொலிந்து நின்ற பிரானே ஈசன்‌ என்று ஆழ்வார்‌ அருளியுள்ளதால்‌ “ஈ சேசி தவ்ய” என்கிறபடி உடையவன்‌ உடமை என்று சம்பந்தத்தால்‌ வேறிலர்‌ என தேறுதல் தக்கதாம் –

வன்பெரு வான்முதல்‌ உய்ய உலகம்‌ இனிமையுற என்றும்‌ இவற்றில்‌ இவள்திறத்‌ தென்கோலோ நேர்வதென என்பிக்‌ கின்ற வியூகநட்‌ புண்மை முதன்மையிதே –34-(கட்டளைக்‌ கலித்துறை)

திருவரங்கத்‌ எம்பெருமானுடைய ஐவகை நிலைகளையும்‌ கண்‌ இந்த ஆழ்வார்‌, வடியுடை வானோர்‌ தலைவனே என்றும்‌, கடலிடங்கொண் கடல்வண்ணா என்றும்‌, கட்கிலி என்றும்‌, காகுத்தா கண்ணா என்று! திருவரங்கத்தானே என்றும்‌ ஐந்து நிலைகளை பேசியதி6 அர்ச்சாவதாரத்தில்‌ எல்லா குணங்களும்‌ பூர்ணமாக ஒளிவிடும்‌ என்‌! இருந்தாலும்‌ இவ்வாழ்வார்‌ இந்த மூர்த்தியிடத்தில்‌ வியூக செளகார்த்த0 (உலகை காத்தல்‌ பொருட்டு சிந்தனை செய்வது) பிரகாசிப்பதாக அருளி செய்கின்றார்‌. திரு வுள்ளம்‌ உகந்து, திருக்கண்‌ வளர்ந்து அருளுகி திருவாளனுடைய திருப்பதியான திருவரங்கம்‌ ஐவகை நிலைகளை வைத்துக்கொண்டு இவள்‌ திறத்து என்‌ சிந்தித்தாய்‌ என்று சொல்லும்ப உலகை காப்பதைப்‌ பற்றி சிந்தனை பண்ணும்‌ குணம்‌ முதன்மையுடையத என்கோலோ இவள்‌ திரத்து முடிகின்றது என்று பாற்கடலில்‌ யோக நித்திள செய்யும்‌ வியூகத்தின்‌ குணமான செளகார்த்தத்தை முதன்மையா உடைத்தாய்‌ இருக்கும்‌ (உடையதாய்‌ இருக்கும்‌) –

வாமணன்‌ வந்து கோயில்‌ கொண்ட குறியவன்தான்‌ குறுங்குடிக்கண்‌ நாமம்‌ வைணவ நம்பி என்று எதிவரனார்‌ இடப்பெற்று பூமி மூவடி வேண்டி நின்ற பேரழகின் பொலங்கழளால்
ஏமம் மிகுத்து நின்று இரந்த விபவம் இங்கு பூர்ணமே –
35-(அறுசீர்‌ ஆசிரியர்‌ விருத்தம் )

விபவ மூர்த்தியான வாமணன்‌ திருக்குறுங்குடியில்‌ அர்ச்சாவதாரமாகக்‌ கோயில்‌ கொண்டிருந்தான்‌. ஒருநாள்‌ உடையவர்‌ என்ற திருநாமம்‌ உடைய இராமாநுஜரைக்‌ கண்டு, “மண்மிசை பிறந்த நாம்‌ பெருக்க முயன்று திருத்த முடியாத இத்நிலவுலகத்தவர்களை எப்படி திருத்தினீர்‌?” என்று கேட்க, “கேட்கும்‌ கிரமத்தோடு கேட்டால்‌ நான்‌ சொல்லும்‌ கிரமத்தோடு சொல்கிறேன்‌ ” என்று இராமானுஜர்‌ சொல்ல, எம்பெருமான்‌ அவருக்கு ஒரு பீடம்‌ கொடுக்க, இராமாநுஜர்‌ அந்த பீடத்தின்‌ அருகில்‌ கீழ்நின்று தன்‌ வலக்கையை அதன்‌ மீது வைத்துக்கொண்டு பெரிய நம்பிகள்‌ உபதேசிப்பதாக பாவனை செய்து கொண்டு துயத்தை உபதேசஞ்செய்து வைஷ்ணவ நம்பி’ என்று தாஸ்யநாமம்‌ இட்டார்‌. அன்று முதல்‌ வைஷ்ணவ நம்பி என்று பெயர்பெற்றான்‌. அவனேவிபவ அவதாரத்தில்‌ மாபலி இடத்தில்‌ சென்று “என்‌ காலால்‌ மூவடி மண் தா”‘ என்று யாசித்து நின்ற பேரழைக்கண்டு அப்படியே தந்தேனென்று உதக பூர்வமாகக்‌ கொடுத்தான்‌ மாபலி என்பர்‌. இதனால்‌ இந்த விபவ அவதாரத்தில்‌ லாவண்யம்‌ பூர்ணம் –

பூரணம்‌ கண்வலைப்‌ பொருந்தாப்‌ போலிகள்‌ வளர்த்‌ தெடுப்பார்தம்‌ கையில்‌ இருந்து தயிர்நெய்‌ யமாபால்‌ அமுதமுண்‌ டேநீமீர்‌ போற்றி ஓர்வண்ணம்‌ திருந்த நுவலாது என்பிழைக்‌ கும்நீ யலையே நல்வளம்‌ துரப்பன்‌ என்னும்‌ அவற்றுக்கு முகந்து சொல்லை எடுத்துச்‌ சோர்ந்தவாறே கற்பியா வைத்த மாற்றங்கள்‌ கூப்பி வணங்கப்‌ பாடி ஆலியா அழையா பராபி மானத்து ஒதுங்கின அன்றே நம்பிக்‌ கன்பர்‌ தலைமீ தடிப்பொடி உடையவர்‌ உடையார்‌ போல்வார்‌ தன்மை கிளியும்பூவை குயிலும்‌ மயில்‌ எனுமே –36-(அகவற்பா)

“மாதரார்‌ கயற்கண்‌ என்னும்‌ வலையில்‌ பட்டு” என்கிறபடியே பெண்களின்‌ கண்ணாகிற வலையில்‌ அகப்பட்டு அழிந்து போகாமல்‌; “தாமரைத்‌ தடங்கண்‌ விழிகளின்‌ அகவலைப்‌ படுப்பான்‌” என்று பூரணனான ஸர்வேச்வரனுடைய தாமரைப்‌ போன்ற திருக்கண்களின்‌ நோக்காகிற வலைக்குள்ளே அகப்பட்டு, இதற்குப்‌ பொருந்தாத மற்றவற்றைப்‌ பொருந்தாப்‌ போலிகளென விட்டு, “வளர்த்தனால்‌ பயன்‌ பெற்றேன்‌ மடக்கிளியை” என்று எடுத்து வளர்த்தவர்‌ கைகளிலிருந்து, “தயிர்ப்‌ பழம்‌ சோற்றொடு பாலடிசிலும்‌ தந்து” என்றும்‌, ‘நெய்யமரின்‌ னடிசில்‌” என்கிறபடி-உபதேக்ஷயந்திதே ஜ்ஞானம்‌” அவர்கள்‌ உனக்கு ஞானத்தை உபதேசிப்பார்கள்‌ என்கிறபடியே காலத்துக்‌ கேற்றவாரும்‌, நிலைமைக்‌ கேற்றவாரும்‌ தாராளமாய்‌ அவர்களுக்கு பகவத்‌ குணங்களாகிற உணவை அநுபவிக்கும்படி செய்து, “போற்றி யானிரந்தேன்‌ புன்னை மேலுறை பூங்குயில்காள்‌” என்று அவர்களைப்‌ பல்லாண்டு பாடி அவர்களை ஆசாரியனாக பாவித்து, ஆதரித்தாலும்‌, “ஒருவண்ணம்‌ சென்று புக்கெனச்‌ கொன்றுரை யொண்கிளியே” என்று எனக்காக இறைவனிடம்‌ சென்று ஒருவழியாக என்‌ நிலைமையை அறிவி என்றால்‌ அறிவிக்காமல்‌, “என்பிழைக்கும்‌ நீயலையே-நுவலென்ன? நுவலாதே யிருந்தொழிந்தாய்‌” என்று ‘என்னுடைய ஆற்றாமையைப்‌ பெருமானிடம்‌ சீக்கிரமாய்‌ அறிவியென்றால்‌’ “சொல் பயிற்றிய நல்வளமூட்டினீர்‌ பண்புடையீரே” ‘எனக்குதவன்‌ பெயரைச்‌ சொல்லாதே என்றால்‌ “கண்ணன்‌ நாமமே குழறிக்‌ கொன்றீர்‌” என்கிறபடி எனக்கு உதவாத எம்பெருமானை எனக்கு ஞாபகமூட்டி துன்புறுத்துகிறீர்‌ உம்மை நான்‌ வளர்த்து நல்‌ விஷயத்தில்‌ ஈடுபடும்படி செய்த எனக்கு நல்ல உதவி செய்கிறீர்கள்‌, நல்ல பண்புதான்‌! என்று அவற்றைக்‌ கடிந்தும்‌,
“இன்று நாராயணனை வரக் கூவாயேல்‌ இங்குத்து நின்றும்‌ துரப்பன்‌ ” என்று தன்னை ஆதரித்த சமயத்திலும்‌ அநாதரித்த சமயத்திலும்‌ இன்சொற்களும்‌ வன்சொற்களும்‌ வகுத்த விஷயத்தில்‌ கோபமும்‌ அருளும்‌ பகவத்‌ விஷயத்தில்‌ விநியோகப்படுத்தலாம்‌ என்னும்‌ நினைவாலே உகந்து; சொல்லை எடுத்துத்தொடுப்பதற்கு இயலாமல்‌ சோர்ந்தவாறே- அதாவது, அவன்‌ திருநாமத்தை சொல்‌ என்றால்‌ நெஞ்சாழும்‌ கண்சுழலும்‌ என்றபடி சொல்ல பலமில்லாமையாலே துவள, ஏற்கனவே உமக்கு கற்பித்துள்ளேன்‌ அவற்றைச்‌ சொல்ல என்ன, அந்த கிளிகள்‌ இறைவன்‌ திருநாமத்தைச்‌ சொல்ல “மடக்‌ கிளியை கைகூப்பி வணங்கினாளே “‘ என்று அவற்றைப்‌ பராங்குச நாயகியான தான்‌ கை கூப்பி வணங்கி சந்தோஷ மிகுதியாலே பாடியும்‌ “ஆலியா அழையா” என்கிறபடி ஆனந்தத்தோடே போது போக்குபவர்களாய பராபிமானத்திலே ஆசார்யாபிமானத்திலே ஒதுங்கி “தென்குருகூர்‌ நம்பிக்‌ கன்பன்‌ ” என்‌ கிறபடி, ஸ்ரீமதுர கவிகள்‌ ஆசாரியரான நம்மாழ்வார்‌ விஷயத்தில்‌ அன்பே வடிவாக இருப்பர்‌ “நாவலிட்டுழி தருகின்றோம் நமன்‌ தமர்‌ தலைகள்‌ மீதே” என்று யமன்‌ போன்றோர்‌ தலைகள்‌ மீது காலடியிடும்படி செருக்கை யுடையராய்‌ பாகவதவர்களுக்குப்‌ பாத தூளி போலே நிரூபித்த தொண்டரடிப்‌ பொடியாழ்வார்‌, ஆழ்வான்‌ ஆண்டான்‌, எம்பார்‌, அருளாளப்‌ பெருமாளெம்‌பெருமனார்‌ முதலானவர்களை குணத்தை யிட்டு, கிளி, பூவை, மயில்‌, குயில்‌ என்று சொல்லும்‌ என்றுபடி –

குயிலும்‌ மயிலையும்‌ தூதென்‌ றனுப்பி
அயர்வின்‌ விரோதம்‌ அழிக்கும்‌ – பயிற்சி
விருத்தம் ஒழிக்கும் கடனா சாமர்த்யம்
நன்னகரில்‌ வித்தீர்‌ ணம்‌–37–(வெண்பா)

பாரங்குச நாயகி குயில்‌ முதலான பறவைகளை தூதுவிட, அவைகள்‌ சென்று சொல்லி அவன்‌ வருமளவுக்கும்‌ பொறுக்காத ஆற்றாமை மிகுதியால்‌ பிரணய ரோஷம்‌ உண்டாகி, அவன்‌ வந்தாலும்‌ இனி வேண்டாம்‌ என்று ஊடல்‌ பண்ணி சிற்றிலிழைக்க, அவன்‌ வந்து இவர்களோடு கலப்பதற்குப்‌ பல உபாயம்‌ பண்ணியும்‌ முகம்‌ கொடாதிக்க, இவர்கள்‌ இழைத்த சிற்றிலை தன்‌ திருவடியால்‌ கலைத்தான்‌. அனைவர்க்கும்‌ உபாயமாயிருக்கும்‌ திருவடிகள்‌ தனக்கும்‌ உபாயமாய்‌ பாரங்குச நாயகி “எங்கள்‌ சிற்றிலும்‌ யாமடும்‌ சிறு சோறும்‌ கண்டு முறுவல்‌ செய்து நின்று அழித்தாயே”‘ என்று சொல்லி கூடுவாளாகி, நாம்‌ ஊடிய ஊடலைத்‌ தீர்த்த இவன்‌ முரண்பட்டவை எல்லாம்‌ பொருந்த விடுவான்‌ என்று நினைத்து, திருவிண்ணகர்‌ பெருமானை நல்குரவும்‌ செல்வம்‌ என்று தொடங்கும்‌ திருவாய் மொழியால் விரிவுற வாழ்த்தினார்-

கைய கழிந்தார்க்கு உணவுடன்‌ நீருக்குறு நிதியா
வெய்ய தோராபத்‌ துடன்‌ தோழனுமா விழையுமிவ
னொய்ய உறவினன்‌ தூய்மை நிகரில்‌ புகழுடையோன்‌
செய்ய நற் பண்புகள் திண்ணம்‌ புகுமூர்‌ பெருமையிதே ? –38-(கட்டளைக்‌ கலித்துறை)

பராங்குச நாயகி இறைவன்‌ திறத்தான விருப்ப மிகுதியால்‌ தன்கையகத்தி ருந்த மற்றைப்‌ பொருட்களெல்லாம்‌ கைகழிய, திருக்கோளூர்‌ வைத்தமாநிதி பெருமானே உண்ணுர் சோறும்‌ பருகும்‌ நீரும் தின்னும் வெற்றிலை எல்லாம்‌ கண்ணன்‌ என்று நிஷ்டை யுடையவளாக பராங்குச நாயகி, ஆபத்துக்குதவும்‌ உடன்‌ தோழனுமாய்‌ எல்லா உறவுகளை! முடையவனாய்‌ விருப்புற்று நிகரில புகழான வாத்சல்ய குணத்தை உடையவனுமாய்‌ உள்ள பெருமானைச்‌ சென்றடைவது என்று, தான்‌ தன் வழியே திருக்கோளூருக்குப்‌ போய்விட, தாயானவள்‌ இன்று எனக்குதவாதகன்றவள்‌ தின்ன மென்னிளமான்‌ புகுமூர்‌ திருக்கோளூரே என்று உலகவற்கு உரைக்கும்படியான பெருமை யுடையவள் –

பெரும்புறக்‌ கடலிது அலைத்தும்‌ ஆழ்ந்தும்‌ ஒடுமிவ்‌ விடங்களில்‌ பெறுவதற்‌ கியல்வில பேதுறுவார்‌
விருப்புறு விசும்பும்‌ பாற்கடல்‌ கரந்தசில்‌ லிடங்களோ டயோத்தியும்‌ காலமும்‌ தேசமும்‌ சேய்மைத்தே
பருகுபே ராவல்க ளுடையவர்க்‌ கவையிவை இயல்வில பயனில சாககண்‌ டத்துறு முலையேதான்‌
திருவுடைக்‌ குணங்களால்‌ நிரம்பிய மடுவொடு திருவுடை நிறை நூல்‌ இன்ப மாரி மான மேயம்‌ உயர்ந்ததே–39-(ஒன்பதின்‌ சீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம் )

எம்பெருமான்‌ பர வாசு தேவனாக பரமபதத்தில்‌ இருக்கும்‌ நிலையை பெரும்புறக்‌ கடலென்பார்கள்‌. அந்த மூர்த்தியும்‌ பாற்கடலுள்‌ பள்ளி கொண்டுள்ள வியூக மூர்த்தியும்‌, சேதந அசேதநங்களனைத்திலுட்‌ அந்தர் யாமியாக உறைபவனும்‌, காகுத்தன்‌ கண்ணனாக வரும்‌ அவதார நிலையுமாகிய நான்கு நிலைகளிலும்‌ பகலோலக்‌ கமிருந்து காரியம் மந்திரிந்து கருப்புடுத்தி நகர சோதனை செய்து வேட்டையாடி (ஆராமங்களில் விளையாடும்‌ ராஜநீதி). இவற்றில்‌ பர வாசு தேவ மூர்த்தியும்‌ பாற் கடல்‌ மூர்த்தியும்‌ தூர தேசத்திலிருப்பவர்கள்‌. விபவ அவதார மூர்த்தியுடம் காலங்கடந்தது. அந்தர்யாமித்துவமோ எவராலும்‌ காண முடியாதநிலை. ஆக இந்த நான்கு மூர்த்தி இருந்தும்‌ உலகவர்க்கு காண இயலாது பயனற்றன முதுவேனில்‌ காலத்தில்‌ குளிர்ந்த மடுவில்‌ சம்சார தாபத்தால்‌ தவிக்கப் பெற்றவன்‌, நீர் நசை மிகுந்து பருகுவதற்கு நீரைக்‌ காணாது தவிக்கப்படுவது போன்றும்‌, ஆட்டின்‌ கழுத்தில்‌ உள்ள மூலைக்காம்புகள்‌ போல பயனற்றவை இந்‌ நிலையில்‌ கல்யாண குணங்களால்‌ நிரம்பிய பெருக்காற்று வெள்ளத்தில்‌ தேங்கிய மடுவோடு ஒத்தது அர்ச்சாவதாரம்‌. மேற்சொல்லப்பட்ட நான்கு மூர்த்திகளையும்‌ அறிவதற்குப்‌ பிரமாணமாயிருப்பது, பரவாசுதேவனைச்‌ சொல்லப்பட்டது வேதம்‌, வியூக மூர்த்தியைப்‌ பற்றி பேசுவத பாஞ்சராந்திரம்‌, விபவ அவதாரங்களைப்‌ பேசுவது இதிகாச புராணங்கள் -அந்தர்யாமியைப்‌ பற்றி பேசுவது மனுநீதி என்னும்‌ நூல்கள்‌. காணமுடியாததைப்‌ பற்றி பேசுவதால்‌ மேற்சொன்ன பிரமாணங்கள்‌ நான்கும்‌ குறைவுடையதே. தேங்கிய மடுக்களுக்கு ஈடாக சொல்லப்பட்ட குணங்களால்‌ பூர்ணமான அர்ச்சாவதாரத்தைப்‌ பற்றிப் பேசுவது திருவாய்‌ மொழியாம்‌. பிராமணம்‌ என்பது ஒரு விஷயத்தைச்‌ சான்று காட்டிப்‌ பேசும்‌ நூல்‌. பிரமேயம்‌ அந்த நூலால்‌ சொல்லப்பட்ட விஷயங்களாகும்‌. மேற்சொல்லப்பட்ட நான்கு பிரமாணங்களாலும்‌ பேசிய விஷயங்களை நான்கு மூர்த்திகளும்‌ குறைவுடையனவே. அஞ்சாம்‌ பிரமாணத்தால்‌ பேசப்பட்ட அர்ச்சாவதார மூர்த்தியே உயர்ந்தது. அதே போன்று அந்த மூர்த்தியைப்‌ பற்றி வாழ்த்தி பேசும்படியான திருவாய்மொழியும்‌ உயர்ந்தததேயாம்‌.

உயர்வற உயர்நலத்‌ தொண்பொருள்‌ பகலிடை அயர்வறும்‌ அமரர்கோன்‌ மூதுவர்‌ தியாகிகள்‌ கணாதிபர்‌ துவார பாலனர்‌ கணத்துடன்‌ சோர்வர செங்கோல்‌ செலுத்திரா சநீதி சனக சநாதி சீரியர்‌ கூட்டத்து காப்புடை காரியம்‌ மந்திரித்‌ தொழுங்குற ஓல்வன அல்லன காணுமி ராசநீதி சீரிய உபய விபூதியில்‌ செய்தியை கருப்புடை உடுத்தி ஒருவரும்‌ காணாது. , உழற்றுஉழன்று காணுமி ராசநீதி மீனம்‌ கூர்மம்‌ வராகம்‌ வீறுசால்‌ நார சிங்கம்‌ நன்மதி வாமனன்‌ மூவுரு வினிரா மன்கண்‌ ணன்கற்கி அரக்க ரசுரர்‌ நாத்திகர்‌ புறத்தோர்‌ வெறுப்பொடு வேட்டையா டுமிரா சந்தி பெருந்தே வுடையமூ வுலகில்‌ பெய்த காவெனும்‌ அரங்க முதலா ராமங்கள்‌ ஒண்டோடி யாளெனும்‌ திரும ளோடு விளையாடு வீவிலி ராச நீதிகள்‌ மனக்கண் கண்டு களிக்கும்‌ வாய்ப்புடை உம்பர் தம்‌ உலகு நமக்‌ கொப்புண்டே? வீவிலம்‌ மிராச நீதிவீ றுடையதே -40-( அகவற்பா)

கதிரவன்‌ ஒளிக்கு முன்‌ மற்றை ஒளிகள்‌ இருந்தும்‌ இல்லையாவது போல, உலகில்‌ மற்றுமுண்டான ஆனந்தமிருக்க இறைவனுடைய ஆனந்தத்திற்கு முன்‌ இல்லையாவது போல்‌ உயர்வற உயர்ந்த ஆனந்தமுடைய பரம்பொருளான பரவாசு தேவனுடைய பேரொளிப்பிழம்பான பரமபதத்தில்‌, அறிவின்மையின்‌ வாசனை கூட இல்லாது நிரந்தரமான பேரறிஞர்களான விஷ்வசேனர்‌ முதலிய நித்யசூரிகள்‌, சம்சாரத்தை அறத்துறந்து விட்டு வானோர்க்குலம்‌ புகுந்த முக்தர்கள்‌, கணாதிபர்‌, துவாரபாலகர்‌, கணம்‌ கணமாக வாழ்த்தி ஸேவிக்கும்படியாக செங்கோல்‌ செலுத்தும்படியான ராஜ நீதி ஒன்று. சனகாதிகள்‌ முதல்‌ ஸ்வேதத்தீப வாசிகள்‌ கூடியிருந்து வாழ்த்தும்படியான பாற்கடலில்‌ மந்திராலோசனை அதாவது ஜகத்‌ ரட்சனை சிந்தனை பண்ணுகின்ற வியூக மூர்த்தி ஒரு ராஜநீதி–கருப்புடை தரித்து நகரசோதனைச்‌ செய்யும்‌ அரசர்கள்‌ போல்‌, தன்னால்‌ வியாபிக்கப்பட்ட பொருளை மறைந்திருந்து நகர சோதனை பண்ணுகிற ஒரு ராஜ நீதி.-மச்சம்‌, கூர்மம்‌, வராகம்‌, நரசிங்கம்‌, வாமனம்‌, மூவுருவின்‌ ராமன்‌, கண்ணன்‌, கல்கி என அவதரித்து அரக்கர்‌, அசுரர்‌, நாத்திகர்‌ மற்றும்‌ புறத்தோர்‌ உலக நலத்தை பாழ்படுத்துவார்‌. இவர்களைச்‌ சினத்தோடு வேட்டையாடும்‌ ஒரு ராஜநீதி -“செய்த திண்மதில்‌ சூழ்‌ திருவிண்ணகர்‌ சேர்ந்தபிரான்‌ பெய்த காவு கண்டீர்‌ பெருந்தேவுடை மூவ்வுலகு” என்கிறபடி திருவரங்கம்‌ முதலான ஆராமங்களான பூஞ்சோலைகளில்‌ ஒண்டொடியாள்‌ திருமகளும்‌ தானுமாக விளையாடுவது ஒரு ராஜ நீதி. இந்த ராஜ நீதிகளை எல்லாம்‌ சான்றோர்கள்‌ அருளிய நுல்களைக்‌ கொண்டும்‌ ஆசாரியர்கள்‌ உபதேசங்களைக்‌ கொண்டும்‌ மளக்கண்ணால்‌ கண்டு களிக்கும்‌ முழுக்ஷுக்களாகிய எம்போல்வார்கள வாய்க்கப்‌ பெற்றவாகள்‌. இத்தகைய நாம்‌ இருக்கும்‌ இருள்தருமாஞாலத்திற்குத்‌ தெளிவிசும்பு திருநாடு ஈடாகாது என்னும்படியான வீறுடைய ராஜ நீதி ஒன்று –

திருமகள்‌ கேள்வன்‌ திருவருள்‌ நலத்தால்‌ மயர்வற மதிநல மருள
அரும்பொரு எனைத்தும்‌ ஒருங்குடன்‌ அமுத கடமென ஆயிரம்‌ விரித்தான்‌
குருகையில்‌ வருநல்‌ பிறவியில்‌ துறவிதன்‌ நான்மணி மாலையாம்‌ குளிகை
இருள்தரு ஞாலம்‌ தெருள்தரு விசும்பா வேகடம்‌ செய்வதொன்‌ றன்றே

திருமகள்‌ கேள்வனாகிய ஸ்ரீமந்‌ நாராயணன்‌ தன்‌ திருவருள்‌ வயப்பட்டு தென்‌ திசையில்‌ தன்‌ திருக்கண்‌ பார்வை செலுத்த, ஜாயமான காலத்தில்‌ குருகூர்‌ சடகோபன்‌ மேல்‌ வீழ்ந்து, அதனால்‌ அறிவின்மை அறத்தொலைந்து ப்ரீதி ரூபமான ஞானம்‌ உண்டாகப்‌ பெற்று, திருக்குரு கூரில்‌ வந்தவதரித்த பிறந்த போதே துறந்த சடகோபன்‌ விஷயமாக “நான்மணிமாலை” என்று சொல்லப்பட்ட, ரசகுளிகை இயல்பில்‌ இருந்து இருள்தருமாஞாலமான இந்த லீலாவிபூதியை தெளிவிசும்பாம்‌ நித்திய விபூதியாக மாற்றும்‌ தகுதியுடையதொன்றாதாகும் –


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ அலர்மேல் மங்கை யந்தாதி-

April 23, 2026

ஸ்ரீ அலர்மேல்மங்கையந்தாதி
முதல் நூலான இந்நூல் கட்டளைக் கலித்துறையிலான பாயினத்தாலாயது.இஃது, நான்கு அடிகளையுடையதாய் அடிதோறும் ஐந்து சீர்களோடு கூடி, முதற்சீர் நான்கும் வெண்டளை பிறழாமல் இறுதிச்சீர் கூவிளங்காயும் கருவிளங்காயுமாக ஏதேனும் ஒன்றைப் பெற்று ஒவ்வொரடியும் முதற்சீர் நேரசையாயிருந்தால் ஒற்றெழுத்து நீங்கலாக பதினாறு எழுத்தும், நிரையசையாயிருந்தால் பதினேழ் எழுத்துக் கணக்கோடு ஈற்றடியின் இறுதிச்சீரின் ஈற்றசை ஏகாரம் பெற்று முடிதல் வேண்டும். உதாரணம்,
அடியடி தோறும் ஐஞ்சீ ராகி முதற்சீர் நான்கும் வெண்டளை பிழையாக் கடையொரு சீரும் விளங்கா யாகி நேர்பதி னாறே நிரைபதி னேழென்று ஓதினர் கலித்துறை ஓரடிக் கெழுத்தே.”என்பது இலக்கண விதியாகும்.

இங்ஙன்‌ கட்டளைக்‌ கலித்துறை என்ற நூறு பாக்களான்‌ அமைந்த அலர்மேல்மங்கை அந்தாதியின்‌ முதற்பா காப்புச்‌ செய்யுள்‌, நூல்‌ தடையின்றி இனிது நிறைவேறும்‌ பொருட்டு சுவாமி நம்மாழ்வாராகிற ஆசாரிய வணக்கமும்‌ செயப்படுபொருளும்‌ எய்த உரைக்கும்‌ தற்சிறப்புப்‌ பாசிரமாக அமைந்துள்ளது

இழைத்தா ரிலதா மறையின்‌ பொருள் சீர்த்த இன்தமிழால்‌
இழைத்தான்‌ இவனே சராசரம் முற்றும் நினைவகத்தே
இழைத்தான்‌ சிரம் தான்‌ குலுங்க ஓர்‌ ஆயிரம்‌ பாவிழைத்தான்‌
இழைத்தான்‌ அலர் மேல் மங்கை யந்தாதி க்கருள்‌ முற்றுறவே-
காப்புச் செய்யுள்

எவராலும்‌ செய்யாமல்‌ இயல்பாக தோன்றிய வேதங்களின்‌ பொருளை இனிய தமிழில்‌ ஆயிரம்‌ பாசுரங்களாகச்‌ சொன்ன குருகூர்‌ நம்பியே, அறிவுடை பொருள்கள்‌ அறிவில்‌ பொருள்கள்‌ இவைகளை நினைவாற்றலாலேயே தோற்றுவித்த இறைவன்‌, தன்‌ சிரத்தை குலுக்கி கேட்கும்படியாகத்‌ திருவாய்மொழி என்ற ஆயிரம்‌ சொன்னவனே-இந்த அலர்மேல்மங்கை அந்தாதிக்கு இடையூறின்றி நிறைவு பெரும்படி காப்பாக இருந்து தானே அடியேனுக்கு அருள்‌ செய்தான்-

உலகொருங்‌காக வணங்குதற்‌ காக உடையவன்தான்‌
உலகொருங்‌ காக உளப்படுத்‌தாகத்‌ தகலகில்லாள்‌
உலகொருங்‌காக உடையவளாகக்‌ கலைக்கு நில்லா
உலகொருங்‌காக உதவுவாளாகத்‌ தெழில் வணங்கே.

நெஞ்சே! எல்லா உலகும்‌ தன்னை வந்து வணங்குவதற்காக அவர்களுக்கு இறைவனிடத்தில்‌ பரிந்துரை கூறுவதற்காக அனைத்து சராசரங்களையம்‌ ஊழிக்‌ காலத்தில்‌ தன்‌ வயிற்றில்‌ கொள்ளும்‌ இறைவனுடைய திருமார்பை விட்டு அகலாதவளான திருமகள்‌, இறைவனையும்‌ அவன்‌ உடைமைகள்‌ ஆன உபய விபூதிகளும்‌ ஒருங்கு சேர்த்துப் பார்த்தாலும்‌. பிராட்டியின்‌ பேர்‌ அழகு பதினாறு கலைகளில்‌ ஒரு கலைக்கும்‌ போதாத பேரழகு உடைய பிராட்டியை வணங்குவாயாக —

வணங்குக நெஞ்சே! மதிமுகம்‌ தீஞ்சொல்‌ அமுதனையவ்‌ i
வணங்குக ளுத்தமை பங்கயத் தாள் தாள் பராபரர் நீர்
வணங்குக சென்னி மகரம்‌ அகரம்‌ சுதந்திரத்தை
வணங்குக நுஞ்சீர்ப்‌ பெறஇரு வீர்க்கொரு வாய்ப்பெனுமே–2-

நெஞ்சே! முழு மதி போன்ற முகமும்‌, இனிய சொற்களும்‌, அமுதம்‌ ஒத்த இனிமையும்‌ உடைய தெய்வ பெண்களுள்‌ மிக மேம்பட்ட பிராட்டியின்‌ திருவடி தாமரைகளை வணங்குக! பிராட்டியின்‌ தொடர்பால்‌ அகாரத்தை பேராக உடைய மேலார்க்கும்‌ மேலாலனாகிய எம்பெருமான்‌ தன்‌ சுதந்திரத்தை தளர்த்தி கொடுப்பானாக- மகாரத்தை பேராக உடைய ஆன்மாக்கள்‌ தங்கள்‌ சென்னிகளை வணங்குவாராக.- இவ்வாறு பிராட்டியின்‌ இருப்பு பெருமானுக்கும்‌, ஆன்மாக்களுக்கும்‌ சிறப்புப்‌ பெற உதவுவதாகும்-

வாய்த்தவத்‌ தாயவள்‌ சேர்த்தியின்‌றேல் வேத வேத்தியன் தான்‌
வாய்த்தவத்‌ தாவனே? காட்டியும்‌ ஊட்டி மறைத்திடுமவ்‌
வாய்த்தவத்‌ தாயவக்‌ காரியம்‌ சீரிய வாமதுவே
வாய்த்தவத்‌ தாயவச்‌ சேதநன்‌ சேர்ந்து நல்‌ வாழ்வுறுமே–3–

உலகங்களுக்குத்‌ தாயாக வாய்ந்த பிராட்டியின்‌ சேர்த்தி இல்லை யென்றால்‌, வேதங்களால்‌ பரம்‌ பொருளென்று போற்றப்‌ பெறும்‌ திருமாலும்‌, மெய்ப் பொருள்‌ ஆக முடியுமா? அவனால்‌ செய்யப்படும்‌ படைத்தல்‌, காத்தல்‌, அழித்தல்‌ என்ற செயல்களும்‌ சிறப்புற நிகழுமா? அநாதியான சீவான்‌ மாக்கள்‌ எம்பெருமானைச்‌ சேர்ந்து உய்வு பெறுமா-

வாழ்வது மாகம னுந்திரி யம்பகனும்‌ ககரன்‌
வாழ்வது மாகலை யாதிய மோன முனிக் கணமும்‌
வாழ்வது மாகமும்‌ தாரணி பூவிவ ரத்துயிர்கள்‌
வாழ்வது மாக முதல்தனி வாய்த்த கருணையினே–4-

எல்லா பொருள்களுக்கும்‌, தாயாய்‌ கருணையே வடிவெடுத்த பிராட்டி எம்பெருமான்‌ திருமார்பில்‌ வீற்றிருப்பதினாலேயே வானவர்‌ மன்னனாகிய இந்திரனும்‌, ககாரம்‌ என்ற பெயருடைய பிரமனும்‌, முக்கண்ணனாகிய உருத்திரனும்‌, மேம்பட்ட கலைகள்‌ முதலியனவும்‌ இடையறாத தவத்திலேயே ஈடுபட்டு இருக்கும்‌ முனிவர்‌ குழுவும்‌, பூமியும்‌, வானுலகும்‌, அவ்வுலகுகளில்‌ உள்ள ஜீவன்மாக்களும்‌ நல் வாழ்வு வாழ்கின்றன-

கருணைத்‌ திருவுரு காரணத்‌ தோருரு காவலன்தன்‌
கருணைத்‌ திருவுரு உள்ளங்‌ கசிவரக்‌ காகமொடு
கருணைத்‌ திருவுரு தானே யரக்கியீர்‌ காப்பெனென்ற
கருணைத்‌ திருவுரு உள்ளமன்‌றோ நமைக்‌ காப்பதுவே–5–

கருணையே வடிவு எடுத்தவனும்‌, உலக காரணனும்‌ பேரழகிய உருவினனும்‌, உலகைக்‌ காப்பவனும்‌ அழகிய பெருமானுடைய திருவுள்ளம்‌ பெருந் தவறு செய்த காக்கையின்‌ திறத்துக்‌ கருணையால்‌ உருகி அதனை கொல்லாது விடுத்தற்கும்‌, கருணையே வடிவெடுத்தவளாய்‌, தன்னை ஓயாது நலிவுறுத்திய அரக்கியரையும்‌, அனுமனால்‌ ஏதம்‌ வராது காப்பேன்‌’ என்ற பிராட்டியின்‌ கருணை வடிவான உள்ளம்‌ அன்றோ? காரணமாகும்‌. அந்தத்‌ திருவுள்ளமே வாழ்க்கையில்‌ பல தவறுகளையும்‌ செய்யும்‌ நம்மையும்‌ பாதுகாப்பதாகும் –

காப்பது நாம்தாங்‌ கருமமே முன்னா எவருமென்னின்‌
காப்பது நாம்தாமென் காப்பதா வைதிகச் சொல்வ தெவன்
காப்பது நாந்தாங்‌ கருமமே முன்னா அடைந்திவரை
காப்பதுங்‌ காசில்‌ குணத்தா லருள் வடைந்தவர்க்கே–6-

அவரவர்‌ செய்த நல் வினை தீ வினைகளுக்கு எற்‌ப நாம்‌ அவர்களைக்‌ காப்பாற்றுகிறோம்‌ என்று எம்பெருமான் திருவுள்ளம்‌ பற்றினால்‌ நீர்‌ பெருமானை நோக்கி உலகை காப்பதாக வேதம்‌ வல்லார்‌ கூறுவது பொருந்துமா? உங்களைச்‌ சரணாக அடையாதாரை அவர்கள்‌ வினைகளுக்கு ஏற்ப பயனளிப்பீர்‌; தன்னைச்‌ சாணாக அடைந்தவர்‌ திறத்து உம்முடைய வாத்சல்யாதி குணங்களால்‌ அவர்களை வினைகளை நோக்காது அருள் செய்யக்‌ கடவீர்‌”‘ என்பாள் –

அடைந்திடும்‌ ஏதெதோ நுந்தான்‌ அடையாத கல்வதுவே
அடைந்தில தாகா தெவரெவை தீவினை மாய்வதுவே
அடைந்தவை எவ்வெப்‌ பயனும்‌ அடையா திழக்குமதோ?
அடைந்திடு வாரும்‌ அடைகிலா தாரும்‌ உமது சேயே–7–

பிராட்டியே! உன் திருவடிகளை சரணாகப்‌ பற்றுபவரும்‌ பற்றாதவரும்‌ உன்‌ மக்களே. உன்‌ திருவடிகளைச்‌ சரணாகப்‌ பற்றாததனால்‌ பலவகை துன்பங்களும்‌ வந்து சேரும்‌; திருவடிகளைச்‌ சரணாக பற்றாமையால்‌ எந்த தீவினையும்‌ அழிய மாட்டா; திருவடிகளைப்‌ பற்றினவர்கள்‌ தாம்‌ கருதிய எவ்வெப்‌ பயன்களையும்‌ அடையாமல்‌ இழப்பதில்லை. இவ்வாறாக தாயாகிய உன்னைச்‌ சரணடையாமல்‌ பலர்‌ துன்பப்படுகிறார்கள்‌ என்பது குறிப்பாகும் –

உமது சேயாவா ரலாதார்‌ உளரே? கணிப்பதற்கும்‌
உமது சேயாவ சராசரம்‌ உள்ள அனைத்துமன்றோ!
உமது சேயாவ னலாதவன்‌ ஓர் பொருள்‌ நாரணனே
உமது சேய்க்கூட்டத்து அடியவன் ஓர் பொருள் கைவிடவே –8–

உம் மக்களல்லாதார்‌ என்று குறித்தறிவதற்கும்‌ சிலர்‌ உளரோ?-எல்லா இங்கியற்‌ பொருள்களும்‌ உமது குழந்தைகளே- உனக்கு வசப்படாத ஸ்வதந்திரப்‌ பொருள்‌ எம்பெருமான்‌ ஒருவனே- உம்முடைய மக்கள்‌ குழாத்தில்‌ அடியேனும்‌ ஒருவன்‌ ஆகலில்‌ அடியேனைக்‌ கைவிட்டு விடாதீர் –

கைவிடாக்‌ காப்ப தவனெனச்‌ சான்றோர்‌ பறையறைவர்‌
கைவிடாக்‌ காப்பவர்‌ நீரா அவனா எவரறிவார்‌?
கைவிடாக்‌ கொள்கை யனுமனைக்‌ கை விடச்‌ செய்தவர் யார்‌?
கைவிடாக்‌ காவல்‌ எழுநூ றரக்கியர்‌ கண்டதன்றே?–9-

எல்லா உயிர்களையும்‌ கைவிடாமல்‌ காப்பவன்‌ என்று சான்றோர்‌ பரக்கக்‌ கூறுவர்‌. அப்படிக்‌ கைவிடாமல்‌ காப்பவர்‌ நீரா? நும்‌ கணவராகிய எம்பெருமானா? என்பதனை உண்மையாகவா அறிகிறார்கள்‌? அரக்கியரை அழிக்க வேண்டும்‌ என்ற உறுதியான எண்ணத்தோடு வந்த அனுமனை, உம்மை விடாமல்‌ துன்புறுத்தி வந்த அரக்கியர்‌ எழுநூற்றுவரைப்‌ பாதுகாத்து, அனுமன்‌ எண்ணத்தைக்‌ கை விடச்‌ செய்த நும்‌ செயலை நோக்க, எல்லா உயிர்களையும்‌, கை விடாது காக்கும்‌ செயல்‌ உம்முடையதே என்று புலப்படுகின்றதன்றோ-

கண்ட அமுதம்‌ திசை திருப்பும் செயல் காப்பதற்கோ
கண்ட அமுதம் உமைக் குறிக்‌ கொண்டே கடல் கடைந்தான்‌
கண்ட அமுதச்‌ செயலில்‌ களவிதைக்‌ கண்டறிந்தீர்‌
கண்ட அமுதென வையகம்‌ காப்பதார் ? எய்துவதே–10-

தேவர்கள்‌ உள்ளத்தைத்‌ திசை திருப்பி அவர்கள்‌ நலன்‌ பெறுவதற்காகப்‌ பாற் கடல்‌ கடைந்து அமுதினைக்‌ கொண்ட எம்பெருமானுடைய செயல்‌ அவர்களை அமுதத்தால்‌ காப்பதற்காகவோ நிகழ்ந்தது? ஆய்ந்து கண்டால்‌ உண்மையான அமுதமாகிய உம்மைப்‌ பெற்ற பின்னரே எம்பெருமானுடைய உலகங்காத்தல்‌ தொழில்‌ சிறப்புற நிகழ்ந்து வருகிறது எனலாம்‌. ஆதலின்‌ உலகினை உண்மையாகக்‌ காப்பவர்‌ நீரே என்பது தேற்றம்‌–

எய்துவ துண்டே? அருளின்றி எம்மோய்‌ எனைத்தையுமே
எய்துவ துண்டே? சிவனயன்‌ இந்திரன்‌ தம் பதங்கள்‌
எய்துவ துண்டே?
அடியவன்‌ என்றென்‌ றிறைவனுமே
எய்துவ துண்டே? நுமநோக்‌ கிலதெனின்‌ முத்தியுமே–11-

அலர்மேல்‌ மங்கையீரே! தேவரீர்‌ அருளின்றி எந்தப்‌ பயன்களையும்‌ உலகவர்‌ எய்த இயலுமா? எம்பெருமானும்‌ தனக்கு அடியவன்‌ என்று எவனையும்‌ எய்துதல்‌ இயலுமா? பிரம்மன்‌, சிவன்‌, இந்திரன்‌ முதலியோரும்‌ தத்தம்‌ பதவிகளை அடைதல்‌ இயலுமோ? நும்‌ அருள்‌ நோக்கிலதெனின்‌ வீடு பேற்றினையும்‌ எய்த இயலுமா? என்றவாறு –

முத்தி யுளதென்‌ றளிப்பான்‌ முகுந்தன்‌ ஒருவனன்றே?
முத்தி யுளசுவைக்‌ கீடில்லை என்பதே முற்றுமுண்மை
முத்தி யுளசுவைக்‌ குற்றான்‌ முகுந்தன்‌ ஒருவனன்றே?
முத்தி யுளசுவை நீரின்றேல்‌ முற்றும்‌ பயனிலதே–12-

முத்தியை ஆன்மாக்களுக்கு வழங்குபவன்‌ முகுந்தனாகிய திருமாலே.-முத்திப் பேரின்பத்துக்கு இணையான இன்பம்‌ இல்லை என்பதே முழுமையான உண்மையாகும்‌. அம் முத்திச்சுவையை ஆன்மா பெறத்‌ திருமாலே காரணம்‌ ஆவான்‌ என்பதும்‌, அம் முத்திப்‌ பேரின்பம்‌ நல்கும்‌ என்பதும்‌, தாயாகிய நீர்‌ இல்லை யென்றால்‌ பயனிலவாகும் –

பயனற்‌ றிருப்பன உபய வி பூதிமான் பண்ணவனேல்‌
பயனற்‌ றிருப்பன்‌ நிகரில்‌ புகழ்சால்‌ பரமனேலும்‌
பயனற்‌ றிருப்பன்‌ தனிமாப்‌ புகழின்‌ படைப்பனேலும்‌
பயனற்‌ றிருப்பன்‌ அலர் மேல மங்கை தன்‌ பாலிலதே–13–

அலர்மேல்‌ மங்கை தன் பக்கம்‌ இல்லையாயின்‌, மண்‌ விண்‌ என்ற ஈருலகங்களுக்கும்‌ தலைவனாகத்‌ தான்‌ இருந்தாலும்‌, ஒப்பற்ற புகழை யுடைய பரம் பொருள்‌ என்ற நிலை இருந்தாலும்‌, ஒப்பற்ற மேம்பட்ட புகழுக்குரிய படைப்புச்‌ செயல்களைச்‌ செய்தாலும்‌ எம்பெருமான்‌ அவற்றால்‌ பயனற்றவனாகவே இருப்பான் –

பால தடைந்தனன்‌ பாதகத்‌ தாபமாழ்‌ தூறதனின்‌
பால தடைந்தனன்‌ பொய்ம் மதிப்‌ பற்றும்‌ ஒழுக்கமதின்
பால தடைந்தனன்‌ தீவினைப்‌ பாவிய காடதனின்‌
பால தடைதல்‌ கழிய நின்‌ பங்கயத்‌ தாளருளே–14-

அடியேன்‌ தீவினையாகிய வெப்பம்‌ சூழ்ந்துள்ள புதர்களில்‌ அகப்பட்டு அடைந்துள்ளேன்‌. அதனால்‌ பொய்யான அறிவைப்‌ பின்பற்றி ஒழுகும்‌ ஒழுக்கத்தை மேற் கொண்டேன்‌. இதனால்‌ தீவினை பரவிய காடாகிய உலக வாழ்க்கையில்‌ ஈடுபட்டேன்‌. அவ் வாழ்க்கையில்‌ ஈடுபடும்‌ அடியேனை மீட்டு பிறவித்‌ துயர்‌ சேர்வதில்‌ நின்றும்‌ நீங்குமாறு உன்‌ தாமரைப்‌ போன்ற திருவடிகளைச்‌ சேர்ப்பாயாக –

அருளால்‌ நிறைந்தொளிர்‌ கண்ணுடை அன்னைநீ, ஆதுவர்பால்‌
அருளால்‌ நிறைந்த அழகின்‌ இனியைநீ எம்பிரான்பால்‌
அருளால்‌ நிறைந்த அளியை நீ தேவர் தம்‌ மாததம்பால்‌
அருளால்‌ நிறைந்த அலர்மேல் மங்கை நீ ஆளெமையே–1
5-

அருளால்‌ நிறைந்த அலர்மேல்‌ மங்கையீர்‌ ! நீர்‌ பிறவிப்‌ பிணியால்‌ வருந்துவோர்பிணி தீர்க்க அருளால்‌ நிறைந்து விளங்கும்‌ அன்னையாய்‌ உள்ளீர்‌; அருளால்‌ நிறைந்த நீர்‌ எம்பெருமான்பால்‌ இனிய அழகிய உருவெடுத்து அமைந்துள்ளீர்‌, தேவ மாதர்‌ திறத்தில்‌ அருளால்‌ நிறைந்த இரக்கமே வடிவாக உள்ளீர்‌; அத்தகைய அருள்‌ வடிவாகிய நீர்‌ அடியேனையும்‌ ஆட்கொண்டு அருள்வீராக –

எமையாள வந்தே புணரி எழுந்தீர்‌ அமுதுடனே
எமையாள வந்தே துழாய் கமழ்‌ மார்பத்‌ ‘ தினிதிருப்பீர்‌
எமையாள வந்தநீர்‌ மங்கா புரத்தில்‌ இருந்தருள்வீர்‌
எமையாள வந்தெம்‌ மனத்தில்‌ இருப்பதும்‌ மாலுடனே–16–

எம்மை ஆட்கொள்வதற்காகவே திருமகளாகிய நீர்‌ அமுதத்தோடு அவதரித்தீர்‌; திருத்துழாய்‌ மணம்‌ கமழும்‌ திருமாலின்‌ திருமார்பில்‌ மகிழ்ச்சியாக இருக்கிறீர்‌; அலர்மேல்‌ மங்கா புரத்தை உகந்து அருளி வீற்றிருக்கின்றீர்‌; எம்மை ஆட்கொள்வதற்காக எம்பெருமானுடன்‌ சேர்ந்து எங்கள்‌ உள்ளத்தில்‌ அமர்ந்துள்ளீர் –

மாலுநும்‌ கூட்டும்‌ மலமற்‌(று) அமானவன்‌ பால்தருமே
மாலுநும்‌ கூட்டும்‌ மணிமண்‌ டபத்துட் புகுந்திடவே
மாலுநும்‌ கூட்டும்‌ மணிமண்‌ டபமேவி கேள்விகொள
மாலுநும்‌ கூட்டும்‌ மகிழ்ந்‌து அணைந்து உச்சி முகப்பதுவே ! –17–

எம்பெருமானுடன்‌ கூடிய தாங்கள்‌ சேர்ந்திருப்பது உலகம்‌ மாசற்று வீட்டுலகிற்கு அழைத்துச்‌ செல்லும்‌ அமானவன்‌ தொடர்பை உண்டாக்கும்‌; வைகுந்‌தத்திலிருக்கும்‌ திருமாமணி மண்டபத்தில்‌ புகும்‌ வாய்ப்பினை ஆன்மாக்களுக்கு நல்கும்‌; எம்பெருமான்‌ ‘நீ யார்‌ என்ன? நான்‌ ப்ரஹ்மம் ஆகிறேன்‌’ என்‌று ஜீவான்மா விடை கூறவும்‌, அவ்வான்மாவை மகிழ்வோடு தழுவி தாயன்பால்‌ உச்சி மோக்கும்‌ உயர்நிலையும் தரும் –

முகந்தருள்‌ நுந்தம்‌ கருணையின்‌ முன்னர்‌ இணையெதுவே?
முகந்தருள்‌ அண்ணல்‌ கருணை பிறிதின்‌ முனைந்ததுவே?
முகந்தருள்‌ மாறன்‌ அருள்நு மதருளின்‌ முன்வருமே?
முகந்தருள்‌ பூதார்‌ முனைவன்‌ அருளும்‌ இணையிலதே–18-

ஆன்மாக்களை விரும்பித் தழுவும்‌ எம்பெருமானுடைய கருணை இணையற்றதே? அத் தகைய செயலைச்‌ செய்யும்‌ மாறனுடைய கருணையும்‌ இணை யற்றதே? அதனை ஒத்த இராமாநுசர்‌ கருணையும்‌ ஈடு அற்றதே? என்பர்‌. இவற்றுக்கு எல்லாம்‌ காரணமாக அமையும்‌ தாயாராக அன்பு காட்டும்‌ உம்‌ அருளுக்கு முன்னர்‌ ஒப்பாகாது இவைகள்‌ குறைவடையும் –

இணையிலை என்பது நித்ய விபூதியி லெய்துமின்பம்‌
இணையிலை என்ப பிறவிக் கண்‌ ஆழ்வதில்‌ எய்துதுன்பம்‌
இணையிலை யென்ப திறைவன்‌ உயிர்கள்பால்‌ செய்யுமருள்‌
இணையிலை நும்மருட்‌(கு) இத்தனை சேரிலும்‌ ஒன்றினக்கே?-19-

நித்திய விபூதி என்னும்‌ பரமபதத்தில்‌ எய்தும்‌ இன்பம்‌ இணையற்றது; பிறவித் துயரில்‌ ஆழும்‌ துன்பமும்‌ இணையற்றது; இறைவன்‌ ஆன்மாக்கள்‌ பக்கம்‌ செலுத்தும்‌ அன்பும்‌ இணையற்றது; இவ்வளவும்‌ ஒன்று சேரினும்‌ தாயாராகிய நுமது அருளுக்கு நிகராக மட்டா –

ஒன்றினும்‌ ஒன்றா உலகியல்‌ பற்றைக்‌ களைவதற்கே
ஒன்றினும்‌ ஒன்றா உயர்பரன்‌ பால் நின்‌றகலகிலீர்‌
ஒன்றிலும்‌ ஒன்றாக்‌ கயவன்‌ சிறைநின்‌று பகரித்தீர்‌!
ஒன்றினும்‌ ஒன்றா உலைப்பும்‌ அரக்கியர்‌ நற்றமிதே–20-

தாழ்வில்லாத தனக்கு பிரிதொன்று இணையாகாத இவ் வுலக பற்றினை எம்மிடத்தில்‌ இருந்து போக்குவதற்காகவே, தன்னை ஓக்கும்‌ பொருள்‌ பிரிதொன்று இல்லாத மேம்பட்ட எம்பெருமான்‌ மார்பினில்‌ அகலாது தங்கி இருக்கின்றீர்‌. இழிவில்‌ தனக்கு ஒப்பவர்‌ இல்லாத இராவணனுடைய சிறையில்‌ இருந்து, அவனுக்கு உபதேசித்த நிலையிலும்‌ அரக்கியர்‌ ஈடு இணையில்லா தாழ்ந்த மொழிகளால்‌ அலைத்த நிலையிலும்‌ உம்‌ ஈடில்லா உபதேசத்தால்‌ அவர்களுக்கு நன்மையே புரிந்தீர் –

நற்றமாம்‌ நுந்தாள்‌ சரணா நணுகுவ தோர் செயலே
நற்றமாம்‌ நுந்தாள்‌ நணுகி இறை தாள்‌ நணுகுவதே
நற்றமாம்‌ நுந்தாள்‌ நணுகப்‌ பிறர் தாள்‌ நணுகுவதோ?
நற்றமாம்‌ நுந்தாள்‌ நணுகா திறைதாள்‌ நணுகுவதோ?–21-

நன்மையே தரும்‌ நும்‌ திருவடிகளைத்‌ தஞ்சமென்று பற்றுவதே மேம்பட்ட செயலாகும்‌. உம்‌ திருவடிகளை முதற்கண்‌ பற்றிட்ட பின்‌ எம்பெருமான்‌ திருவடிகளைப்‌ பற்றுவதற்குப்‌ பிறருடைய பரிந்துரைக்கு முயல்வது தேவையற்ற செயலாகும்‌. உம்‌ திருவடிகளைப்‌ பற்றாது எடுத்த எடுப்பிலேயே எம்பெருமான்‌ திருவடிகளைப்‌ பற்றுவது முறையல்லவே –

நணுகுவ துண்டே? அகப்புறப்‌ பற்றுசால்‌ நாகரீகம்‌
நணுகுவ துண்டே? பிறவித்‌ தொழுவினில்‌ நாலுசெயல்‌
நணுகுவ துண்டே? நமன்தமர்‌ சித்திர குத்தனாதி
நணுகுவ துண்டே? பரத்துவம்‌ நக்கனைப்‌ போல்பவர்க்கே–22-

உம்மைச்‌ சரணமடைந்தவர்களை யான்‌ எனது என்ற அகப்புறப்‌ பற்றுக்கள்‌ கொண்ட பண்பாடு அடையுமோ? பிறவியாகிய தொழுக்கட்டையில்‌ இயங்கும்‌ செயல்‌ அடையுமோ? இயமனுடைய ஏவலன்‌ சித்திரகுப்தனும்‌ நமனும்‌ நலிவதற்கு அணுகுவார்களா? உம்மைச்‌ சரணமடைவோருக்குச்‌ சிவன்‌ முதலான தேவர்களைப்‌ பரம்‌ பொருளாம் தன்மை உண்டென்ற நினைவு ஏற்படுமா-

கேதங்கள்‌ வாரா நமன்தமர்‌ கேள்விகொள்‌ தீயசொற்கள்‌
கேதங்கள்‌ வாரா பராசத்தி போல்பவர் கீழ் படிதல்‌
கேதங்கள்‌ வாரா புறசமயத்துறு கேடுசெயல்‌
கேதங்கள்‌ வாரா நும திருதாள் மலர் கிட்டுவார்க்கே –23-

உம்முடைய திருவடிகளிரண்டினையும்‌ சரணாகப்‌ பற்றுபவர்களுக்கு, யமனுடைய ஏவலர்‌ பழித்துக்‌ கூறும்‌ தீயசெயல்களைக்‌ கேட்கும்‌ தீவினையாகிய துயரங்கள்‌ வாரா. உமாதேவி முதலிய சிறுதெய்வங்களை வழிபாடு நிகழ்த்தும்‌ குறைபாடுவாரா. வேற்றுச்‌ சமயங்களைப்‌ பின்பற்றுவதாகிய தீயசெயல்களும்‌ ஏற்பட மாட்டாதென்பதாம் –

கிட்டுவ துண்டே? நுமதடி யாரெனும்‌ கேழில்பதம்‌
கிட்டுவ துண்டே? மிதுநநும்‌ கீழிருந்‌ தாற்றுதொண்டு
கிட்டுவ துண்டே? மிதுநநும்‌ கேழில புன்முறுவல்‌
கிட்டுவ துண்டே? மிதுநறும்‌ தாண்மலர்க்‌ கீழிருப்பே–24-

நும்முடைய அடியவரெனும்‌ ஒப்பிலாப்‌ பதவி எல்லோருக்கும்‌ கிட்டுமோ? பெருமானும்‌ நீருமாக இருக்கும்‌ இருவர்‌ திருவடிகளின்‌ கீழிருந்தாற்றும்‌ தொண்டு எல்லோருக்கும்‌ கிட்டுமோ? நும்மிருவருடைய ஒப்பற்ற புன்முறுவலைக்‌ காணும்‌ வாய்ப்புகள்‌ எல்லோருக்கும்‌ கிட்டுமோ? இருவருடைய திருவடித் தாமரைகளின்‌ கீழ்‌ என்றும்‌ இருக்கும்‌ இருப்பு எல்லோருக்கும்‌ கிட்டுமோ-

தாள்மலர்க்‌ கீழ்நின்‌ றிரப்பா தரணி புரப்பவரும்‌
தாள்மலர்க்‌ கீழ்நின்‌ றிரப்பார்‌ தமதியல்‌ பெய்துவாரும்‌
தாள்மலாக்‌ கீழ்நின்‌ றெனைவரும்‌ தாங்குவார்‌ மெய்யுணர்வே
தாள்மலாக்‌ கீழ்த் தொண்‌ டலர் மேல் மங்கை! தனமெமதே–25-

அலர்மேல்‌ மங்கையாகிய அன்னையே! இவ் வுலகைக்‌ காக்கும்‌ அரசர்களும்‌ உன்‌ திருவடித் தாமரைகளின்‌ கீழ்‌ நின்று வேண்டிய செல்வத்தை இரப்பர்‌. கைவல்ய இன்பம்‌ வேண்டுவாரும்‌, அந்தமில்‌ பேரின்பம்‌ வேண்டுவாரும்‌ இவற்றின்‌ காரணமாகிய மெய் யுணர்வு பெற விரும்புவாரும்‌ உன்‌ திருவடித் தாமரைகளைப்‌ பற்றியே இருப்பர்‌. உம்‌ திருவடிக் கீழ்‌ தொண்டே அடியேன்‌ வேண்டும்‌ செல்வமாகும்-

தனத்தவர்‌ தாய் நின கோட்டி தனி முதல் கோட்டியையும்
தனத்தவர்‌ நேர்மைத்‌ தனிமனந்‌ தன்னில்‌ நிறுத்தெடுத்து
தனத்தவர்‌ கெளரவத்‌ தாய்நின கோட்டி லகுமிகுத்த
தனத்தவர்‌ சாமிதன்‌ கோட்டி எனுநிலை தந்தனரே–26-

தாயே! ஸ்ரீயபதி. திருவடிகளில்‌ தொண்டு செய்தலையே தமக்குச்‌ செல்வம்‌ என்று கருதும்‌ அடியவர்‌, உமது குழாத்தின்‌ பெருமையையும்‌, ஒப்பற்ற முதற் பொருளாகிய எம்பெருமானுடைய குழாத்தின்‌ பெருமையையும்‌, தங்கள்‌ மனமாகிய தராசின்‌ இரு தட்டுகளிலும்‌ நிறுத்துப் பார்த்து தாயாகிய உங்கள்‌ குழாத்தின்‌ பெருமையே மதிப்புடையது எனவும்‌, எம்பெருமானுடைய குழாத்தின்‌ பெருமை சற்று மதிப்பு குறைந்ததுவே எனவும்‌ நிலைநாட்டி யுள்ளனர் –

தந்த மலைக்கும்‌ வினையர்‌ தகவிலர்‌ என்னநிரை
தந்த மலைக்குடை யான்தள்ளு மென்றும்‌ தருக்கியிகல்‌
தந்த மலைக்குமைத்‌ தான்திருத்‌ தாளிணைத்‌ தஞ்சமென்று
தந்த மலையவர்‌ மேல்மங்கை சற்றே தரிப்பதுண்டே–27-

பசுக்களையும்‌ ஆயர்களையும்‌ காப்பதற்காக கோவர்த்தன மலையை குடையாக எடுத்தவனும்‌, தன் மேல்‌ செருக்குற்று போர்‌ செய்யவந்த சாணுரன்‌, முஷ்டிகன்‌ என்ற மல்லர்களை அழித்தவனான எம்பெருமான்‌, வினைகளால்‌ துன்பத்தை யடைந்த அடியார்க்‌ தன்னை நேராக தஞ்சமடைந்தால்‌, இவர்கள்‌ நெடுநாள்‌ செய்த அபராதங்களைக்‌ கணக்கிட்டுச்‌ சீறுவான்‌ என்று நினைத்து, தேவரீர்‌ புருஷகாரமாகிய சிபாரிசு பண்ணி அடியார்களை எம்பெருமான்‌ திருவடிகளை அடையத்‌ தந்து, பெருமான்‌ அவர்களை ஏற்கும் வரையில்‌ ஆறியிராமல்‌ அடியார்களுக்காகப்‌ பதறுபவள்‌ அன்றோ நீர்‌-

உண்டே? திரிபோ டுனர்வின்மை ஐயம்‌ முதலதீர்தல்‌
உண்டே? இவற்றின்‌ ஒழிந்துப் பெறப்பெறு மெய்யுணர்வும்
உண்டே? பரனெனுந்‌ தாரக மாதியாம்‌ உச்சநிலை
உண்டே? உடையான்‌ குறைதீர்‌ வதின்றேல்‌ உமது நோக்கே.
–28-

அன்னையீர்‌! நுமது கடைக்கண்பார்வை எங்கள்‌ மேல்‌ பொருந்தாவிடில்‌ அறிவின்மை திரிபுணர்ச்சி, ஐயம்‌ என்ற குறைபாடுகள்‌ ஆன்மாக்களை விட்டு நீங்குமா? இவற்றின்‌ நீங்கிப்‌ பெறக்கூடிய மெய்யுணர்வு ஏற்படுமா? எம்பெருமானே தாரகம்‌, போஷகம்‌, போக்கியம்‌ என்ற மனநிலை ஏற்படுமா? ஆன்மாக்கள்‌ தன்னை கிட்டவில்லையே என்ற எம்பெருமானுடைய குறையும்‌ தீருமா?

உமதுநோக்‌ கன்றே? பலபல அண்டங்கள்‌ உள்ளவாதல்‌
உமதுநோக்‌ கிவ்வெலாம்‌ பாலநம்‌ செய்பொருள்‌ உள்ளதுவும்‌
உமதுநோக்‌ கின்றே? இவை தாம்‌ நிரல்பட ஊர்வதுவே?
உமது நோக்‌கா மாதின் ஒப்பின்ற அருளும் இவ்வின்பமிதே -29-

அம்மையீர்‌! உம்‌ கடைக்கண்‌ பார்வை செலுத்தப்படாவிடின்‌ எம்பெருமான்‌ பல அண்டங்களைப்‌ படைப்பதுவும்‌, அவனால்‌ காக்கப்பட்ட இவ் வண்டங்கள்‌ உளவாதலும்‌, இவற்றின்‌ செயல்கள்‌ நிரல்பட நிகழ்வதுவும்‌ ஒப்பற்ற வீட்டின்பத்தை இவ்வான்மாக்கள்‌ எய்தி வாழ்வதுவும்‌ நிகழற்பாலதா–

இன்பம்‌ உளதா எவரும்‌ மயங்கி விடமரத்தில்‌
இன்பம்‌ உளதா எவரும்‌ பறிப்பர்‌ விடக்கனிகள்‌
இன்பக்‌ கனிதான்‌ மிதுநநும்‌ பாலன்‌ பியைவதின்றி
இன்பக்‌ கனியாம்‌ நுமதடி யாரோ டிணங்குமிதே–30-

இன்பம்‌ உளதாகக்‌ கருதி மன மயக்கங்கொண்டு சிலர்‌, உலகியலாகிய விஷமேறிய மரத்தில்‌ தோன்றும்‌ விஷக் கனிகளைப்‌ பறிப்பர்‌. பிராட்டியும்‌ பெருமானும்‌ ஆகிய நும்‌ இருவரிடம்‌ அன்பு செய்வதன்றி இன்பமாகிய கனிதான்‌ வேறுளதோ? உங்கள்‌ அடியவரோடு இணங்கி வாழும்‌ வாழ்வே உண்மையான இன்பச்சுவை தரும்‌ பழமாகும் –

இணங்கிநும்‌ தொண்டர் தம்‌ கூட்டத்‌ திருந்திட லென்பதென்ன
இணங்கிநும்‌ தொண்டர் தம்‌ கூட்டத்து இரானொரு தொண்டனாமே?
இணங்கிநும்‌ தொண்டர் தம்‌ கூட்டமே வானுலக இன்பமாமே
இணங்கிநும்‌ தொண்டர் தம்‌ கூட்டத் திருந்திடச் செய்‌கெனையே — 31-

நும்மடியார்தம்‌ கூட்டத்தோடும்‌ கலந்து வாழ்தலென்பது ஒரு சாதாரணச்‌ செயலாகுமா? உங்கள்‌ அடியார்‌ கூட்டத்தின்‌ இணக்கம்‌ இல்லாதவனும்‌ தொண்டருள்‌ ஒருவனாவானா? நும்‌ தொண்டரோடு இயைந்து வாழும்‌ வாழ்வே வானுல கின்பமாகும்‌. ஆதலின்‌ அடியேனை நும்‌ அடியார்‌ நடுவின்‌ இருந்திடச்‌ செய்யும்‌ அருளினைச்‌ செய்வீராக –

எனைப்போல்‌ பிழைசெய்வார்‌ யாரே? உலகினில்‌ இல்லையென்றும்‌
எனைப்போல்‌ பிழை செய்யார்‌ யாரே? உலகினில்‌ இல்லையின்றும்‌ ்‌
எனைப்போல்‌ பிழையாமை செய்தொறும்‌ யானென தின்மையுண்டேல்‌
எனைப்போல்‌ பிழையாமை உம்மரு ளாலல்ல தில்லையன்றே–32-

என்னைப்போல்‌ தவறான செயல்கள்‌ புரிந்தவர்கள்‌ உலகில்‌ என்றுமில்லை, என்னைப்போல்‌ மனமொத்து பிழை செய்யாதவர்‌ உலகில்‌ யாருமில்லை. யானென்று அகப்பற்றும்‌ புறப்பற்றும்‌ கழிந்ததென்றால்‌ செயலில்‌ பிழையில்லையாம்‌. அத்தகைய அகப்புறப்‌ பற்றும்‌ நீக்கிச்‌ செயல்களைப்‌ பிழையறச்‌ செய்தல்‌ உம்மருளாலல்லது ஏற்படாது –

அன்றே மகரமும்‌ ஆமையுங்‌ கேழலுந்‌ சிங்கமாவான்‌
அன்றே சறையினான்‌ ஆன்மேய்க்‌ கரைசால்‌ துவருடையான்‌
அன்றே இரணியன்‌ ஊனுண்‌ டவனென அறிந்திலிரே?
அன்றே வனசத்‌ தமுதின்‌ அமுதுடன்‌ தோன்றினீரே–33-

ஒவ்வொரு காலத்தில்‌ மீனாகவும்‌, ஆமையாகவும்‌, பன்றியாகவும்‌, நரசிங்கமாகவும்‌ அவதரித்த எம்பெருமானே மாட்டாரங்கழியில்‌ தோல்பை தொங்க அழுக்குப்படிந்த செந்நிற ஆடையை அணிந்த ஆயனாகிய கண்ணனாவான்‌. அடியவனுக்கு தீங்கு செய்த இரணியனுடைய மார்பைப்‌ பிளந்த அவன்‌ உடலை உண்டவனும்‌ அப்பெருமானே யன்றோ? அன்று பாற்கடலில்‌ அமுதம்‌ தோன்றியபொழுது தாமரை மலரில்‌ தோன்றிய தாங்கள்‌ அவன்‌ மார்பில்‌ இணைந்திருக்கின்றீர்‌. அவனைத்‌ தாங்கள்‌ அறியவில்லையா

மறைதலும்‌ தோன்றலும்‌ உண்டே? உலகினில்‌ மானிடர்க்கும்‌
மறைதலும்‌ தோன்றலும்‌ வாச வனாதியா தேவர்களும்‌
மறைதலும்‌ தோன்றலும்‌ உண்டே? மலரயன்‌ சூலியொடும்‌
மறைதலும்‌ தோன்றலும்‌ மங்கைநும்‌ ஆட்சிக்‌ கிலைகறங்கே–34-

அலர்மேல்‌ மங்கையீர்‌! உம்முடைய ஆளுகை நன்றன்றே! மறைதலும்‌ தோன்றலுமாகிய சுழற்சி இல்லை. ஆனால்‌ உலகில்‌ உள்ளமானிடர்‌ முதலியோருக்கும்‌ இந்திரன்‌ முதலிய தேவர்களுக்கும்‌ தாமரை மலரில்‌ தோன்றிய பிரமனுக்கும்‌ அவன்‌ தனயனாகிய சிவனுக்கும்‌ பிறப்பிறப்பாகிய தோன்றலும்‌ மறைதலும்‌ உண்டன்றோ-

கறங்குபு சக்கர கையன லதிலேன்‌ காசினியில்‌
கறங்குபு செல்வக்‌ றந்திலேன்‌ கல்விதனில்‌
கறங்குபு நெஞ்சின்‌ இளந்துணுக்‌ குற்றனென்‌ காத்திலையே
கறங்குங்‌ கரிசறத்‌ தேற்றந்‌ தருவித்தை நீயலையே? –35-

சுழலும்‌ சக்கரத்தை என்றும்‌ கையிலேந்திய திருமாலைப்‌ பற்றிய அடியேன்‌ வேறு தெய்வங்களை அறியேன்‌. மாறி, மாறி வரும்‌ செல்வமாகிய மாசு என்பக்கல்‌ வராதபடியானேன்‌. கல்வியைப்‌ பெற அற்பத்துணிவுடையேனாய்‌ முற்றப்பெறாத வனானேன்‌. நின்றவாநில்லா நெஞ்சின்‌ கரிசைப்‌ போக்கித்தெளிவைத்தரு வித்தை நீயாயிருந்தும்‌ கல்வியை முற்றநீர்‌ தந்திடவில்லையே –

நீயலை யேயணு வாயே விபுவின்‌ நிமிர்ந்துறைவாய்‌
நீயலை யேநிதி யாளி பெறுவதும்‌ நின்னிடமே
நீயலை யேயவன்‌ பாலநம்‌ நேருறச்‌ செய்வதுவே?

நீயலை யேழுத்தி இன்பம்‌ இணைந்திருந்‌ தாக்குவிப்பே–36-

அணுவளவாக இருந்தும்‌ நீர்‌, எங்கும்‌ வியாபித்துள்ள விபுவான பெருமானைப் போல்‌ சக்தி விசேஷத்தாலே கரந்தெங்கும்‌ பரந்தெங்கும்‌ உள்ளாய்‌ நீரன்றோ? செல்வத்துக்கு உரிய தெய்வம்‌ நீரல்லையோ? அனைவரும்‌ எல்லாச்‌ செல்வமும்‌ பெறுதல்‌ உமமிட மிருந்தன்றோ? எம்பெருமானுடைய காத்தல்‌ தொழிலை முறையாகச்‌ செய்பவரும்‌ நீயல்லையே? எம்பெருமானோட கூடியிருந்து புருஷகாரம்‌ செய்து அடியார்கள்‌ வீடு பேற்றின்பம்‌ அடைவதற்காக முயற்சி செய்பவள்‌ நீரன்றோ –

ஆக்கலுங்‌ காத்தல்‌ உமதுளத்து கப்பினுக்‌ கெம்பெருமான்‌
ஆக்கலுங்‌ காத்தலும்‌ ஆவவே? உந்தங்கண்‌ ணோக்கிலதேன்‌
ஆக்கலுங்‌ காத்தல்‌ அழிப்பதொன்‌ றன்றி நுமக்காக
ஆக்கலுங்‌ காத்தல்‌ அழித்தல்‌ ஆம்பயன்‌ சேதநனே–37-

எம்பெருமான்‌ படைத்தல்‌ காத்தல்‌ அழித்தல்‌ தொழில்களைச்‌ செய்வது உமக்கு இன்பத்தை அளிப்பதற்கே. உம்‌ பார்வையின்றேல்‌ பெருமானுடைய ஆக்கலுங்காத்தலு முறையாக நிகழா. எம்பெருமான்‌ முத்தொழிலும் செய்வது உமக்காக. இம் முத்‌ தொழில்களால்‌ ஆகும்‌ பயன்‌ சேதனனைத் தம்போடிணைத்துக்‌ கொள்வதற்காகவே-

உடனிருந்‌ தன்பர்போல்‌ ஊறுபல்‌ லாற்றற்‌ களவுமுண்டே?
உடனிருந்‌ தாக்கம் அறிவொடு வீக்கும் உணக்குவமே
உடனிருந்‌ தைம்பொறி ஊட்டும்‌ புலநலத்‌ தொன்றுவமே
உடனிருந்‌ துந்தம்‌ கடைக்கணின்‌ நோக்குவீர்‌ தீர்ந்திடவே–38-

ஐம்பொறிகள்‌ இவ்வுடம்பில்‌ ஆன்மாக்களோடு கூடியிருந்து ஆற்றும்‌ பலவகை இடையூறுகளுக்கு எல்லை யுண்டோ? அவை ஆன்மாவோடு தொடர்ந்திருந்தே பக்தி செல்வத்தையும்‌ ஞானத்தையும்‌ கெடுக்கிறது, அவை: போக்கும்‌ திறத்தை நாங்கள்‌ அறிவோமா? அவ்வாறு அறியாமல்‌ ஐம்பொறிகள்‌ உண்பிக்கும்‌ புலனின்பத்தில்‌ ஈடுபட்டுக்‌ காலங்கழிக்கின்றோம்‌. இத்தகைய அறியாமை எம்மை விட்டு நீங்குமாறு தாயாகிய நீர்‌ எம்‌ பக்கம்‌ இருந்து உமது கடைக் கண்ணால்‌ நோக்கி எமக்கு அருள்‌ செய்வீராக –

தீர்ந்திடச்‌ செய்தீர்‌ துருவனைச்‌ சிற்றனைச்‌ செய்கொடுமை
தீர்ந்திடச்‌ செய்தீர்‌ இரணியற்‌ கொன்றவன்‌ சேய்‌ கொலையைத்
தீர்ந்திடச்‌ செய்தீர்‌ சிறைப்படு மாதர்‌ பிறர்துயரும்‌
தீர்ந்திடச்‌ செய்வீர்‌ அடியேன்‌ படுங்கடுந்‌ தீமைகளே–39-

துருவன்‌ என்ற அரசிளங்குமரனுக்கு அவன்‌ சிற்றன்னையால்‌ ஏற்பட்ட துயரங்கள்‌ எம்பெருமானைக்‌ கொண்டு நீங்குமாறு செய்தீர்‌. இரணியனைக்‌ கொன்று அவன்‌ மகன்‌ பிரகலாதன்‌ கொலை செய்யப் படுதலை நீங்குமாறு செய்தீர்‌, இத்தகைய தாங்கள்‌ அடியவனாகிற நான்‌ படும்‌ கடுந்தீவினைகளும்‌ நீங்குமாறு செய்வீராக –

தீமைகள்‌ செய்வன ஐம்பொறி சேர்க்கும்‌ புலனலங்கள்‌
தீமைகள்‌ செய்வன பெண்ணெனும்‌ ஆணெனும்‌ ஈருடல்கள்‌
தீமைகள்‌ செய்வன ஒன்றினோடு ஓன்றுடன் சேர் பிணக்காம்
தீமைகள்‌ செய்வனடொன்‌ மேல்நலம்‌ சேரத்‌ தடைமிழைத்தே–40-

ஐம்பொறிகளால்‌ நுகரப்பெறும்‌ புலனின்பங்கள்‌ சேதநன்‌ எம்பெருமானை அடையாதபடி தீமைகள்‌ செய்கின்றன. பெண்ணுடல்‌ எனவும்‌, ஆணுடல்‌ எனவும்‌ பருத்து உலாவப்படும்‌ இருவகை உடல்களும்‌ தீமைகள்‌ தருவனவேயாம்‌. மேம்பட்ட வீட்டின்பம்‌ அடைய முடியாதபடி தீமை செய்யும்‌ இவற்றை அகற்றுவீராக –

இழைப்ப துலகென காப்ப தழிப்ப திவைசெயல்கள்‌
இழைப்பதற்‌ கோர்துணை இன்றித்‌ தனதிடத்‌ தாக்குமவன்‌
இழைப்பவன்‌ மார்வத்‌ திருந்துநீ ரீதின்‌ இகந்தெவையும்‌
இழைப் பவற் கொண்டே இணை இல் பேரின்பத்‌ திருத்துவீரே–41-

உலகங்களைப்‌ படைத்தலும்‌, காத்தலும்‌, அழித்தலும்‌ என்ற முத்தொழில்களையும்‌ பிறருதவியின்றி எம்பெருமான்‌ தானே தனதிடத்தே நிகழ்த்தும்‌ போது, தேவரீர்‌ திருமார்பில்‌ பிரியாமல்‌ உறைந்து கொண்டு முத்தொழில்களிலும்‌ தொடர்பின்றி, எல்லா உயிர்களும்‌ எம்பெருமானைக்‌ கொண்டே, இணையில்லாப்‌ பேரின்ப உலகமாகிய பரம பதத்தில்‌ சேர்வதற்கு ஆவன செய்கின்றீர் –

இருத்துவீர்‌ நான்முக னாதி எவரையும்‌ தம்பதத்தே
இருத்துவீர்‌; தாளடையாரை அவர்தம்‌ இருவினையில்‌
இருத்துவீர்‌; தத்தம்‌ வரம்புடை யார்தம்‌ இயல்பறிந்து
இருத்துவீர்‌; தஞ்சமா ஈரிணைத்‌ தாள்களில்‌ தொண்டுடனே–42-

நான்முகன்‌ முதலிய தேவர்களை அவரவர்‌ பதவிகளில்‌ நிலையாகப்‌ பலகாலம்‌ வரை இருக்கச்‌ செய்கின்றீர்‌. உம்மை வணங்காதவர்களை அவரவர்‌ நல்வினை தீவினைகளுக்கேற்பப்‌ பயன்‌ தந்து நுகரும்‌ வண்ணம்‌ வாழ்க்கையிலிருக்கும்படி காலம்‌ கழிக்க வைக்கின்றீர்‌. ஆன்மாநந்தமே போதும்‌ என்ற வரம்புடையவர்களை கைவல்யத்திருக்கச்‌ செய்கின்‌றீர்‌. உம்மையே தஞ்சமாக துடைந்த அடியார்களை நும்மிருவருடைய இணைந்துள்ள திருவடிகளில்‌ செய்யும்‌ திருத்தொண்டை நிலையாக ஈடுபடுத்துகின்றீர் –

தொண்டினை யன்றிச்‌ சுகமே? உலகொரு நாயகமே
தொண்டினை யன்றிச்‌ சுவர்க மெனுமோர்‌ தனிச்சுகமே?
தொண்டினை யன்றி உயிர்சுகத்‌ தாழ்தல்‌ ஒருசுகமே?
தொண்டினை யன்றிக்‌ குழாத்தொடும்‌ உந்தம்‌ தொண்டுமொன்நே? –43-

உமது திருவடிகளில்‌ தொண்டு செய்வதால்‌ ஏற்படும்‌ இன்பம்‌ உலகொரு நாயகமாக ஆளும்‌ தலைமையாலும்‌ கிட்டாது. இதனை ஒத்த இன்பம்‌ சுவர்கம்‌ முதலான எவ்வுலகத்திலும்‌ இல்லை. இதனை ஒத்த இன்பம்‌ ஆன்மா தன்னைத்‌ தானே அநுபவிக்கிற கைவல்யீத்திலும்‌ இல்லை. தங்கள்‌ திருவடிகளில்‌ அடியார்‌ குழாத்தொடும்‌ ஒன்றிச்‌ செய்யும்‌ தொண்டே பேரின்பம்‌ பயப்பது. தனித்துச்‌ செய்யும்‌ தொண்டு பேரின்பம்‌ பயவாது –

ஒன்றும்‌ அறிந்திலன்‌ ஒள்ளிய உம் தம் அருள் பெருக்கை
ஒன்றும்‌ அறிந்திலன்‌ எம்மான்‌ பரத்துவத்‌ துண்மைதனை
ஒன்றும்‌ அறிந்திலன்‌ அணுவில் விபூவினை உட்படுத்தல்
ஒன்றும றிந்திலன்யான்‌ எங்கும்‌ அணுநீர்‌ எனவொத்தே–44

மேம்பட்ட தாயாகிய உம்முடைய அருள் வெள்ளம்‌ பற்றி ஒன்றும்‌ அறியேன்‌ அடியேன்‌. அது போலவே எம்பெருமானுடைய மேலார்க்கும்‌ மேலானாகிய, உண்மையும்‌ அறியேன்‌. எங்கும்‌ பரந்திருக்கும்‌ தனித் தன்மையை உடைய எம்பெருமான்‌ அணுவளவினதாகிய ஆன்மாவுக்குள்‌ மறைந்திருப்பதையும்‌ அணு அளவு நுண்ணிய தாங்கள்‌ எங்கும்‌ பரவியிருக்கும்‌ விபுவாகிய எம்பெருமான்‌ அளவினை ஒத்திருப்பதனையும்‌ அறியேன்-

ஒத்திருப்‌ பீர்நீர்‌ உபேய நிலைதனக்கு எவ்வுயிர்க்கும்‌
ஒத்திருப்‌ பீர்நீர்‌ உபாய நிலையில்‌ புருடகாரம்‌
ஒத்திருந்‌ தேயுநீர்‌ காக்கும்‌ நிலையில்‌ உடனருள்வீர்‌
ஓந்திருந்‌து அண்மையில் நீக்கும்‌ தொழிலில்‌ உடன் இருப்பே-45-

எம்பெருமான்‌ எல்லா உயிர்களுக்கும்‌ சென்று சேரத்தக்க பயனாகிய நிலையில்‌ இருக்கும்போது உயிர்களுக்கு இன்பம்‌ அருளும்‌ நிலையில்‌ தாயாகிய நீங்கள்‌ எம்பெருமானை ஒத்திருப்பீர்‌. உயிர்‌ எம்பெருமானை அடையும்‌ உபாய நிலையில்‌ பரிந்துரைக்‌ கூறி, உயிர்களைப்‌ பாதுகாக்கும்‌ தொழிலில்‌ எம்பெருமானோடு உடனிருந்து செயல்படுகின்றீர்‌. அவன்‌ பக்கலில்‌ உடனிருந்தும்‌ அவன்‌ செய்யும்‌ அழித்தல்‌ தொழிலையும்‌ ஆமோதிக்கிறீர்-

ஒட்டிலிர்‌ எம்பிராற்‌ சேடம்‌ உளதன்றிப்‌ புன்னிமயொன்றும்‌
ஒட்டிலீர்‌ ஒன்றும்‌ சுதந்திரம்‌ இன்றன்றிப்‌ பண்பிலதில்‌
ஒட்டிலீர்‌ இவ்விரு தன்மையும்‌ இன்றி ஒருகுறையும்‌
ஒட்டிலீர்‌ உம்பர்கோன்‌ சேதநர்‌ பற்றருள்‌ மற்றவையே –46-

தாயாராகிய தாங்கள்‌ எம்பெருமானுக்கே யடிமையாயுள்ளீர்‌. மற்றவர்‌ திறத்து அடிமையாம்‌ கீழ்மை யன்றித்‌ தலைவியாக உள்ளீர்‌. தங்களுக்கு எம்பெருமானை விடுத்துச்‌ சுதந்திரம்‌ இல்லை.-எம்பெருமானுக்கு அடிமை-மற்றவருக்குத்‌ தலைமை. ஏனைய உயிர்‌ பண்புகள்‌ யாவுக்‌கும் நிபந்தனம்‌ என்ற இரு தன்மை அன்றி நுமக்கு குறை தரும்‌ பண்புகள்‌ எதன்‌ கண்ணும்‌ தொடர்பில்லை. எம்பெருமான்‌ திறத்துப்‌ பற்றும்‌ உயிரினங்கள்‌ திறத்தருளுவதன்‌றி மற்றைய கீழான பண்புகளோடு தொடர்புடையீ ரல்லீர் –

மற்றவை தாம்சுவை, யற்றவை மாயையை யாரறிவார்‌?
மற்றவை தாம்சுவை யுற்றவை யாமென மாலுமிதே
மற்றவை தாமற்ப சாரம்‌ உயிர்ச்சுவை மாரணமே
மற்றவை தீர்ந்தும்‌ தொண்டர்‌ குழுவுடன்‌ வாழ்சுவையே –47-

உம்‌ திருத்தொண்டு தவிர ஏனையவை சுவையற்றவையாகவும்‌,சேதனன்‌ அவற்றை சுவையுடையனவாகக்‌ கருதச்‌ செய்யும்‌ உமது மாயையின்‌ ஆற்றலை அறியவல்லவர்‌ யார்‌? மற்ற பொருள்கள்‌ சுவையுள்ளன என்று சேதனன்‌ கருதுதல்‌ மாயையின்‌ மயக்கமே. ஏனைய புலனின்பங்கள்‌ மிகக் குறைவான சுவை புடையனவே. மரணமாகிய கைவல்யம் முதலான இவற்றை விடுத்து நும்‌ தொண்டர்‌ குழாத்தொடும்‌ வாழும்‌ சுவையே மேம்பட்ட சுவையாகும் –

வாழ்சுவை மிக்கசீர்த்‌ தொண்டர்க்‌ கமுதெனும்‌ வாய்மொழியும்‌
வாழ்சுவைப்‌ பேருரை ஐவர்‌ வழங்கிய கோலமுடன்‌
வாழ்சுவை மிக்க கலியன் சொல்‌ மாலையா றங்கமுடன்‌
வாழ்சுவை வேரிமா மாறாத பூமேல்‌ இருப்பருளே–48-

மேம்பட்ட நறுமணம்‌ மாறாத தாமரை மேல்‌ இருக்கும்‌ பெருமாட்டியே! நல் வாழ்வுக்கு உரிய சுவை மிக்க சிறப்பினையுடைய தொண்டருக்கு அமுதம்‌ எனப்படும்‌ திருவாய்மொழியும்‌, இந்நூலுக்குத்‌ திருக்குருகைப்‌ பிரான்‌ பிள்ளான்‌, நஞ்சீயர்‌, வாதிகேசரி, பெரியவாச்சான்பிள்ளை, நம்பிள்ளை சொன்னதை ஏடுபடுத்திய வடக்குத்‌ திருவீதிப்பிள்ளை இவர்கள்‌ வழங்கிய ஐந்து உரைகளும்‌ ஆறாயிரப்படி, ஒன்பதினாயிரப்படி, பன்‌ னீராயிரப்படி, இருபத்திநாலாயிரப்படி, முப்பதாறாயிரப்படி என்று போற்றப்படும்‌ அழகிய ஐந்து உரைகளும்‌, மேம்பட்ட திருமங்கை மன்னன்‌ அருளிய பெரிய திருமொழி திருக்குறுந்தாண்டகம்‌, திருநெடுந்தாண்டகம்‌, சிறிய திருமடல்‌, பெரிய திருமடல்‌, திவெழுகூற்றிருக்கை என்ற பெயர்களையுடையதாய்‌ அருளிய சொல்‌ மாலைகளும்‌ உன்‌ அருளால்‌ ஏற்பட்டனவாகும் –

இருப்பதும்‌ வந்தும்‌ உறைவதும்‌ ஏற்றசீர்த்‌ தாமரையே
இருப்பதும்‌ நாச்சியார்‌ கோயிலும்‌ வெள்ளறை ஏருறையூர்‌
இருப்பதும்‌ எல்லா இதய கமலத்‌(து) இறைவனுடன்‌
இருப்பதும்‌ நித்திய ஸூரிகள்‌ வாழ்த்த இறையுடனே–49-

உனக்குப்‌ பொருத்தமான சிறப்பை யுடைய தாமரையே நீ காட்சி வழங்குமிடமும்‌ தோன்றுமிடமும்‌, நிலையாத்‌ தங்கி இருக்குமிடமும்‌, நீ கோயில்‌ கொண்டிருக்கும்‌ திருப்பதிகள்‌ திருநறையூர்‌, திருவெள்ளறை, திருஉறையூர்‌, முதலியனவும்‌. ஆன்மாக்களின்‌ இதய தாமரைகளும்‌ நித்திய ஸூரிகள்‌ வாழ்த்தும்படி இறைவனுடன்‌ வீற்றிருக்கும்‌ பரமபதமும்‌ உனக்கு நிலையான இருப்பிடங்களாகும் –

இறையுடன்‌ எவ்வெப்‌ பிறப்பினும்‌ தோன்றல்‌ இணக்கமுடன்‌
இறையுடன்‌ சேர்ந்திருந்‌ தெவ்வெவ்‌ வளத்தினு முந்துகிறீர்‌
இறையுடன்‌ சேர்ந்தே பரனெனும்‌ ஏற்றம்‌ விளைப்பதுவே
இறையுடன்‌ சேர்க்கவும்‌ இன்பநீர்‌ சேதனர்‌ ஏற்பதுவே –50-

எம்பெருமான்‌ எடுக்கும்‌ எவ்வெவ்வதாரத்திலும்‌ அவன்‌ திருவுள்ளத்துக்கு ஏற்பவே தோன்றுதலும்‌, எம்பெருமானுடன்‌ சேர்ந்திருந்தே எல்லா அறங்களிலும்‌ முற்பட்டு செயற்படுதலும்‌, எம்பெருமானை நீர்‌ சேர்ந்திருந்திருப்பதாலேயே அவனுக்கு எல்லாரிலும்‌ மேம்பட்டவன்‌’ என்று ஏற்றம்‌ விளைவிப்பதும்‌, எம்பெருமானுடன்‌ ஆன்மாக்களைச்‌ சேர்ப்பதும்‌, அவற்றை அவன்‌ ஏற்றுக்‌ கோடலும்‌ ஆகியவை அனைத்தும்‌ தாயாராகிய உங்களுக்கு மதிப்புடைய செயல்களாகும் –

ஏற்பதும்‌ எல்லா உலகும்‌ இணையில்‌ தனம்விரும்பி
ஏற்பதும்‌ ஞாநிகள்‌ எல்லாம்‌ பரனிடம்‌ சேர்ந்திடவே
ஏற்பதும்‌ நித்தரும்‌ முத்தரும்‌ தந்தொண்‌ டெழிலுறவே
ஏற்பதும்‌ எம்மான்‌ அகத்தெழில்‌ நீர்தாம்‌ முகத்தெளிவே–51-

எல்லா உலகத்திலுள்ளவர்களும்‌, ஒப்பற்ற செல்வத்தை விடும்‌ ஞாநிகள்‌ எல்லோரும்‌ தம்மை எம்பெருமானிடம்‌ சேர்ப்பிப்பதை விரும்பியும்‌, நித்தியசூரிகளும்‌, முத்தி பெற்றுப்‌ பரமபதத்திலுள்ளவர்களும்‌, தங்கள்‌ தொண்டுசிறக்க அவர்களால்‌ வழிபடப்படுகின்ற தாங்கள்‌ எம்பெருமான்‌ உள்ளத்தெய்தும்‌ உகப்பைக்‌ சுண்டு, அதனால்‌ ஏற்படும்‌ மகிழ்வால்‌ முகத்தின்‌ தெளிவான அழகைப்‌ பெற்றுள்ளீர்கள் –

முகத்தெளி வுள்ள தறிவிலார்க்‌ குத்தனம்‌ முந்துதலால்‌
முகத்தெளி வுள்ளதாம்‌ மூதறி ஞர்தமது மெய்யுணர்வால்‌
முகத்தெளி யுண்டாம்‌ பரனுக்குத்‌ தம்மை முகந்தளிப்பால்‌
முகத்தெளி வுண்டாம்‌ முகம்பரன்‌ சீர்தனைக்‌ கண்டுமக்கே–52-

அறிவில்லாதார்க்கு செல்வம்‌ மிகுதலினாலே முகத்தெளி வேற்படுகிறது. உண்மை யறிவுடையவர்களுக்குத்‌ தத்துவ ஞானத்தால்‌ முகத்தெளிவுண்டாகிறது. மெய்யடியார்கள்‌ தம்மை முற்றவும்‌ வழங்குதலால்‌ அப்பரனுக்கு உள்ளத்துகப்பால்‌ முகத்‌ தெளிவுண்டாகிறது. எம்பெருமான்‌ உகப்பைக்‌ கண்டு உகத்தலால்‌ தாயாராகிய உமக்கு முகத்தெளிவும்‌ மகிழ்ச்சியுமேற்படுகிறது –

உமக்கொரு பாதப்‌ பயனாம்‌ உலகோர்‌ செழிப்புறவே
உமக்கொரு பாதிப்‌ பயனாம்‌ சுவர்க துற்றிடுதல்‌
உமக்கொரு முக்கால்‌ பயனாம் தமதியல்பு ஊர் புகுதல்‌
உமக்கொரு முற்றாம் அடியார் குழுவில்‌ உடனிருப்‌பே –53-

உலகவர்‌ செழிப்புறும்‌ செயல்‌ எம்பெருமானுக்கும்‌, தாயாராகிய உமக்கும்‌ காற்பங்கு மகிழ்ச்சியாகிய பயனைத்‌ தருகிறது; ஆன்மாக்கள்‌ சுவர்க்க இன்பம்‌ அடைதலால்‌ உமக்கு அரைப்பங்கு மகிழ்ச்சியாகிய பயன்‌ கிட்டுகிறது; ஆன்மாக்கள்‌ வீட்டுலகம்‌ அடைந்து கைவல்லிய இன்பம்‌ நுகர்தலைக்‌ கண்டு உங்களுக்கு முக்காற்‌ பங்கு மகிழ்ச்சிப்‌ பயன்‌ ஏற்படுகிறது; அடியார்‌ குழாத்தில்‌ நடுவில்‌ நீவிர்‌ இருவரும்‌ இருப்பது உமக்கு நிறை மகிழ்ச்சியாகிய பயனை உண்டாக்குகிறது –

அடியார்‌ குழாங்களைக் காணுதல் வாய்ப்பென்‌ றறிவளித்திர்‌
அடியார்‌ குழாங்களைக் காணும்‌ பெரும்பயன்‌ ஆய்ந்தளித்தீர்
அடியார்‌ குழாத்தின்‌ அகத்துறை பேரின்பம்‌ ஈந்தநீரே
அடியார்‌ அடிசூடும்‌ பேரரசாள நினைப்பிரன்றே–54-

அடியார்‌ குழாங்களைக்‌ காணுதலே உண்மையான செயல்‌ என்ற அறிவைத்‌ தந்துள்ளீர்‌. அதனால்‌ ஏற்படும்‌ பெரும்‌ பயனை அடியேன்‌ பெறுமாறு என்‌ நிலையை ஆராய்ந்தருள்‌ செய்தீர்‌. அடியார்‌ குழாத்துள்‌ அடியேனும்‌ ஒருவனாக அவருடனே இணைந்து தங்கும்‌ வாய்ப்பினை நல்கிய தாங்களே, அடியேன்‌ அடியார்களுடைய திருவடிகளைத்‌ தலையில்‌ சூடி மகிழ்தலாகிய பெரிய அரசாட்சியை அருளுமாறு திருவுள்ளம்‌ பற்ற வேண்டும்‌-

நினைப்பதும்‌ எல்லா உயிர்களும்‌ உய்யுமா நீக்கமின்றி
நினைப்பதும்‌ எம்பிரான்‌ காப்பும்‌ நிகில செயல்நலங்கள்‌
நினைப்பதும்‌ தேவிகள்‌ மற்றவர்‌ நும்போல்‌ நினைவுகொள்ள
நினைப்பதும்‌ செவ்விதான்‌ நீள உபய விபூதியுமே –55-

எல்லா உயிர்களும்‌ எம்பெருமானும்‌ பிராட்டியுமாகிய நும்மை நீங்காமல்‌ பற்றிப்‌ பிறவித்‌ துயரிலிருந்து பிழைத்து வீடு பேறுஅடையுமாறும்‌, எம்பெருமானுடைய காத்தல்‌ செயலோடு ஏனைய செயல்களும்‌ முறையாக நிசுழுமாறும்‌, எம்பெருமானுடைய தேவியருள்‌ ஏனையராகிய மண்மகளும்‌, ஆயர்‌ மடமகளும்‌, நும்மைப்‌ போன்ற நினைவினையே கொள்ளுமாறும்‌, லீலா விபூதியும்‌ நித்திய விபூதியையும்‌ தொடர்ந்து எல்லா நலன்களும்‌ பெறுமாறும்‌ தாயாகிய நீங்களே திருவுள்ளம்‌ பற்றியுள்ளீர்கள் –

விபூதி விபூதிமான்‌ நும்நோக்கில்‌ உள்ளதும்‌ ஓர்பொருளே!
விபூதி விபூதிமான்‌ உந்தம்சீர்‌ சார்பன்றி உள்ளதாமே?
விபூதி விபூதிமான்‌ சீரலர்‌ மேல்மங்கை உம்மதாட்சி
விபூதி விபூதிமான்‌ உந்தம தேர்கடைக்‌ கண்ணதன்றே–56-

அலர்மேல்‌ மங்கையீரே! ஈருலகமும்‌ அவற்றையுடையானும்‌ நும்பார்வை தம்மேல்‌ பதிவதாலேயே ஒப்பற்ற பொருள்களாகின்றன. உம்‌ தொடர்பின்றேல்‌ உலகுகளுக்கும்‌ அவற்றை உடையானுக்கும்‌ நிறை நலம்‌ ஏற்படுமா? உலகுகளும்‌ உம்‌ அன்பிற்கு வசப்பட்ட உடையானும்‌ உம்‌ செல்வங்களாம்‌. எல்லா உலகுகளும்‌ உம்‌ கடைக்கண்‌ நோக்கினை எதிர்நோக்கி உள்ள பொருள்களே –

உந்தங்‌ கடைக்கணின்‌ பல்கூற்றில்‌ ஒன்றயி ராணிதன்கண்‌
உந்தங்‌ கடைக்கணின்‌ பல்கூற்றில்‌ ஒன்றே மலைமகள் கண்‌
உந்தங்‌ கடைக்கணின்‌ பல்கூற்றில்‌ ஒன்றே கலைமகள் கண்‌
உந்தங்‌ கடைக்கணின்‌ பல்கூற்றில்‌ ஒன்றதே தாமரையே –57-

உம்‌ கடைக்கண்ணின்‌ அருள்‌ நோக்கத்தின்‌ பல கூறுகளில்‌ ஒரு கூறு தம்மீது பொருந்தியதனால்‌ இந்திராணியும்‌, பார்வதியும்‌, நாமகளும்‌ சிறப்புறுகின்றனர்‌. அங்ஙனமே பெருமானுடைய தாமரைக்‌ கண்களும்‌ வீறுபெற்று விளங்குகின்றன-

தாமரைக்‌ கண்ணன்‌ தகவிலை அன்றே கதிர் முழக்கே
தாமரைக்‌ கையய யம்மேலும்‌ வீடணர்த்‌ தாழ்ததியதே
தாமரைத்‌ தாள்பிறப்‌ பீர்பதாச்‌ சொல்லுதல்‌ சொல்லளவே
தாமரைத்‌ தந்தநும்‌ மொக்கும்‌ உபய விபூதிவேந்தே–58-

எம்பெருமான்‌ தாமரைக்‌ கண்ணனாய்‌ இருக்கும்‌ செயல்‌ உன்னீடில்லாக்‌ கதிர்‌ முழக்குப்‌ போன்ற வெளி அழகு மாத்திரமே. எம்பெருமானுடைய தாமரைக்கை அபய முத்திரை உடையதேனும்‌ அவனைத்‌ தஞ்சமென்றடைந்த விபீஷணாழ்வானை ஐயுறச்‌ செய்தது. எம்பெருமானுடைய தாமரைத்‌ திருவடிகள்‌ அடியாருடைய பிறவிப் பிணியைப்‌ போக்குவன என்ற செய்தி அடியேங்கள்‌ பக்கல்‌ செயற்படுவதாகத்‌ தெரியவில்லை. தாமரையில்‌ தோன்றிய தாயாராகிய தங்களை ஈருலக வேந்தனாகிய எம்பெருமானும்‌ ஒப்பானோ-

வேந்தர்‌ தலைவன்‌ தயரதன்‌ மேலாம்‌ மருகிமானீர்‌
வேந்தர்‌ தலைவன்‌ சனகன்‌ விரும்பும்‌ திருமகள் நீர்‌
வேந்தர்‌ தலைவன்‌ இராமன்‌ வியத்தகு தேவியானீர்‌
வேந்தர்‌ தலைக்கடை வேசரி நாசமாக்‌ கண்டீர்‌ நீரே–59-

அரசர்‌ தலைவர்களாகிய தயரதற்கும்‌ சனகர்க்கும்‌, இராமபிரானுக்கும்‌ முறையே மருமகளும்‌, விரும்பி வளர்த்த செல்வமகளும்‌, வியத்தகு தேவியுமாகிய தாங்கள்‌, அரசருள்‌ கடைப்பட்ட கோவேறு கழுதை போன்ற இராவணனைப்‌ பூண்டோடு அழியுமாறு செய்தீர் –

நீரே பரம புருடன்‌ புருடனா நிரணமிப்பீர்‌
நீரே உயிர்கள்‌ உடையான்‌ அணையுமா நேர்ந்திடுவீர்‌
நீரே அடியான்‌ பணியவன்‌ உள்ளம்‌ நிலைக்கவைப்பீர்‌
நீரே இவன் செயும்‌ தொண்டை நினைத்து மகிழவைப்பீர்‌–60-

நீரே எம்பெருமானைக்‌ கணவனாகத்‌ தேர்ந்தெடுத்தீர்‌. நீரே ஆன்மாக்களை எம்பெருமான்‌ தன்னோடு பொருந்துமாறு ஏற்றுக்‌ கொள்ளுதற்குரிய பரிவுரை கூறிச்‌ சேர்த்து வைப்பீர்‌. நீரே அடியவன்‌ செய்யும்‌ திருத்‌ தொண்டினை எம்பெருமான்‌ உகந்தருளுமாறு அவன்‌ உள்ளத்தில்‌ நிலைபெறச்‌ செய்வீர்‌. நீரே அடியவன்‌ செய்யும்‌ தொண்டுகளை நினைத்து எம்பெருமான்‌ மகிழுமாறு செய்வீர் –

மகிழ்வீர்‌ மணாளன்‌ படைத்ததைக்‌ காத்திவை யீர்ப்பிதனை
மகிழ்வீர்‌ மணாளன்‌ சராசரம்‌ பந்தென ஆடுசெயல்‌
மகிழ்வீர்‌ மணாளன்‌ உலகம்‌ முறையுடன்‌ பாலடைதல்‌
மகிழ்வீர்‌ மணாளன்‌ வனமாலை சேர்திரு மார்பினையே–61-

நீரே உங்கள்‌ மணாளனாகிய எம்பெருமான்‌ உலகைப்‌ படைத்துக்‌ காத்து ஊழிக் காலத்தில்‌ அவற்றை வயிற்றினிட்டு மறைப்பதனையும்‌, இவ்வுலகத்து உயிர்களை அவன்‌ பந்து போல ஆட்டுவித்தலையும்‌, உலகத்துயிர்கள்‌ தத்தம்‌ பக்குவத்திற்கு ஏற்ப முன்னோ பின்னோ அவன்பால்‌ அடைதலையும்‌ கண்டு, மகிழ்தலோடு எம்பெருமானுடைய வனமாலை அணிந்துள்ள மார்பினை உங்கள்‌ இருப்பிடமாகக்‌ கொண்டு மகிழ்வீர் —

மார்பினைத்‌ தீர்ந்தூசல்‌ மல்கிய வெண்மை முதலுகத்தும்‌
மார்பினைத்‌ தீர்ந்தூசல்‌ நீர்கொளும்‌ செம்மை மறுயுகத்தும்
மார்பினைத்‌ தீர்ந்தூசல்‌ மல்கிய சாமளம்‌ மூன்றினிலும்‌
மார்பினைத்‌ தீர்ந்தூசல்‌ கொள்‌ளுவான்‌ மாநிறம்‌ நான்கினி்‌லே -62-

அலர்மேல்‌ மங்கையீர்‌! நீர்‌ எம்பெருமான்‌ திருமார்பினை விடுத்துத்‌ தனியே ஊஞ்சலில்‌ ஆடும்‌ போது கொள்ளும்‌ வெண்ணிறத்தைக்‌ கிருத யுகத்தும்‌, பின்‌ ஒருகால்‌ செம்மை நிறத்தைத்‌ திரேதா யுகத்தும்‌, மீண்டும்‌ ஒருகால்‌ கொள்ளும்‌ நீல நிறத்தைத்‌ துவாபர யுகத்தும்‌, மறுபடியும்‌ ஊழியாகிய கலியுகத்தும்‌ எம்பெருமான்‌ கரு நிறமும் முறையே தனக்குரிய நிறங்களாக்‌ கொண்டுள்ளான்-

நான்கெனும்‌ வேதம்‌ நவில்வநுங்‌ கீர்த்தியே நானிலத்தே
நான்கெனுந்‌ தோளால்‌ நலனுற சார்வதே நாரணனாம்‌
நான்கெனுந்‌ தாளால்‌ நடையறம்‌ பெற்ற நுமதுநோக்கின்‌
நான்கெனும்‌ மார்க்கம் நலமிகு மார்க்கம் செலுத்துவீரே –63-

தாயீர்‌! நான்கு வேதங்களும்‌ கூறுவன இறைவன்‌ புகழே-நாரணனாகிய எம்பெருமான்‌ தன்‌ நான்கு தோள்களாலும்‌ மகிழ்வுறத்‌ தழுவவது உம்மையே- உம் பார்வையாலேயே அறம்‌ என்னும்‌ பசு நான்கு கால்களால்‌ நடக்கிறது-கர்ப்பம்‌, யாம்யம்‌, தூமம்‌, அர்ச்சிராதிகதி என்ற நான்கு கதிகளுள்‌ நன்மை மிக்க அர்ச்சிராதிகதி மார்க்கத்தில்‌ உம்‌ அடியார்களை எம்பெருமானைக் கொண்டு செலுத்துவீராக —

செலுத்தும்‌ வினைகளைத்‌ தீய்ந்திடச்‌ செய்யும்‌ உமதருளை
செலுத்தும்‌ படைப்புப்‌ பதம்பெறு வானுறும்‌ சீரருளே
செலுத்தும்‌ சதமகன்‌ மூவுல காட்சி நும்சீரருளே
செலுத்துநும்‌ நேர்மைசால்‌ சீர்மை உபய விபூதிமனே –64-

துயரத்தில்‌ செலுத்தும்‌ கரும பயன்களை உமது அருள்‌ அழித்து ஒழிக்கும்‌. பிரமன்‌ படைப்புத் தொழில்‌ செய்வதும்‌, இந்திரன்‌ மூவுலகம்‌ ஆளுவதும்‌, எம்பெருமான்‌ தன்‌ இரு செல்வங்களாகிய உலகங்களை ஆட்சி செய்வதும்‌ நும்‌ இச்சையின்‌ பொருட்டே –

விபூதி பெறுமே விலகி நும்‌ பார்வை தனதனேலும்
விபூதி நும் கூட்டின்றி வில்வமே யாயின்‌ விளைவதுண்டே?
விபூதிசால்‌ இந்திர போகம்‌ விளையுமே? வாசவற்கும்‌
விபூதி விளைக்கும்‌ அருளன்றி உண்டே? எவர் தமக்கே–65-

நும்‌ அருட்பார்வை விலகின்‌ செல்வத்துக்கு உரிய குபேரனும்‌ செல்வத்தைப்பெறுதல்‌ இயலுமா? வில்வத்தினால்‌ கூட உம்‌ தொடர்பில்லையேல்‌ செல்வம்‌ விளைத்தல்‌ இயலுமா? உம்‌ அருளினாலேயே இந்திரனுக்கும்‌ செல்வம்‌ மிக்க தேவ இன்பம்‌ விளைகிறது. செல்வத்தை நல்கும்‌ உம்‌ அருளன்றி ஒருவருக்கும்‌ எவ்வகைச்‌ செல்வமும்‌ கிட்டாது —

தன்னலம்‌ நீத்துப்‌ பிறர் நலம்‌ பேணுமித்‌ தாயினம்யார் ?
தன்னலத்‌ தாழ்வில்‌ தரிக்கிலர்‌ மூவராந்‌ தேவதேவர்‌
தன்னலத்‌ தாழ்விலர்‌ முப்பத்து முக்கோடி தேவர்தாமும்‌
தன்னலம்‌ நீத்தல்‌ உபய விபூதிக்கும்‌ தாயதாலே–66-

மூம் மூர்த்திகளும்‌ தன்னலம்‌ குறைந்தால்‌ அமைதி யுற மாட்டார்கள்‌-முப்பத்து மூவருடைய வரிசையில்‌ சேர்ந்த தேவர்களும்‌, தன்னலம்‌ தாழ்வதைப்‌ பொறுக்க மாட்டார்கள்‌. தன்னலத்தை விடுத்துப் பிறர்‌ நலத்துக்காகவே வாழும்‌ தாய்க் குலம்‌ உம்‌ அம்சமே. நீர்‌ ஈருலகங்களுக்கும்‌ தாயராக இருப்பதால்‌ தன்னலம்‌ நீத்துச்‌ செயல்‌ புரிகிறீர் —

தாயெனக்‌ கோடல்‌ சசியும்‌ உமையும்‌ கலைமகளும்‌
தாயெனச்‌ சித்திதே வானை பிடாரி குறமகளும்‌
தாயெனப்‌ பத்தினித்‌ தெய்வ மாச்சாற்றும்‌ மகளிரெல்லாம்‌
தாயெனும்‌ நீயெனும்‌ பொருளன்றி மற்றைத்‌ தகவுளதே–67-

உலகவர்‌ தாய்மார்‌ என்று போற்றும்‌ இந்திராணியும்‌, உமா தேவியும்‌, கலை மகளும்‌, சித்தி தேவியும்‌, தெய்வானை அம்மையாரும்‌. பிடாரியும்‌, வள்ளியும்‌, தாயார் என்று போற்றப்படும்‌ பத்தினிப்‌ பெண்டிரும்‌ உம்மைப்‌ போன்ற தாயாவார்களா? ஈருலகிற்கும்‌ தாயெனப்படும்‌ உன்னுடைய அம்சமே என்று கூறுவதைத்‌ தவிர வேறு பொருளுடைய சொற்றொடர்‌ உள்ளதோ?-

உளதே? கருணை சால்‌ சீலம்‌ உமதிரு பாலதன்றி
உளதே? உலகவர்‌ தாய்தந்தை மற்றுள உற்ற சுற்றம்‌
உளதே? அணுவும்‌ விபுவுமாய ஒன்றிலும்‌ நீக்கமின்மை
உளதே? உபாயமும்‌ பேறாம்‌ உயர்வுறு மிக்க பண்பே –68-

பெருமானும்‌ நீருமாகிய இருவர்‌ பக்கத்தலன்‌றி வேற்றுத்‌ தெய்வங்கள்‌ பால்‌ கருணையும்‌ அதற்கேற்ற செயலும்‌ உளவோ? மற்ற தெய்வங்கள்‌ உங்கள்‌ இருவரைப்‌ போல்‌ உலக மக்களுக்குப்‌ பெற்றோரும்‌ சுற்றமும்‌ ஆவாரோ? நீரும்‌ எம்பெருமானும்‌ அணுவும்‌ விபவுமாய்‌ இருந்து உடல் மிசை உயிர்‌ எனக் கலந்து பரந்திருக்கும்‌ செயல்‌, மற்ற தெய்வங்கள்‌ பால்‌ உண்டோ? வீட்டிற்கு நிமித்தப்‌ பொருளான உபாயமும்‌ உபயே யமுமாக இருக்கும்‌ உயர் தன்மை உங்கள்‌ இருவர் பால்‌ அன்றி மற்ற தெய்வங்கள்‌ பக்கம்‌ உள்ளதோ?

பண்பிவை நுந்தம்‌ பரனுக்‌ கடிமை பிறிதிலின்மை
பண்பிவை நுந்தம்‌ பரனருட்‌ சார்பன்றி சார்பிலதாம்‌
பண்பிவை நுந்தம்‌ பரனுகப்‌ பின்முகம்‌ பூப்பதுவே
பண்பிவை நீழல்‌ பரன்சார்‌ புளதில தோர் வழக்கே–69-

எம்பெருமானுக்கே அடிமையா யிருத்தலன்‌றிப் பிற தெய்வங்களுக்கு அடிமையா யிருக்கும்‌ பண்பு நும்மிடம்‌ இல்லை. எம்பெருமான்‌ அருளைச்‌ சார்தலன்றிப்‌ பிற சாதனங்களைப்‌ பின்பற்றாமை நும்‌ பண்பாகும்‌. எம்பெருமான்‌ உகப்பிணைக்கண்டு உகத்தலே நும்‌ பண்பு-எம்பெருமானுடைய நிழலாக அவனைப்‌ பிரியாது இருப்பதும்‌ நும்‌ பண்பு. இப் பண்புகள்‌ எம்பெருமான்‌ சார்பு உளதேல்‌ நும் பால்‌ உண்டு. இலதேல்‌ நம்பால்‌ இல்லை- எனவே, நீர்‌ என்றும்‌ எம்பெருமானைப்‌ பிரியாது இருக்கின்றீர் –

வழக்கோ நன்‌ மக்கள் பால்‌ தீர்ந்து புன்‌ மக்கள்பால்‌ சார்வதுவே
வழக்கோ? சிறைக்கண்யம் தேவ மகளிர் சிறை கழிப்பீர்
வழக்கோ? மண் மாதர்‌ சிறை எமைத் தீர்ப்பதை பார்த்திருப்பீர்‌
வழக்கோ? படு துயர் யாம் கண்டு கத்தல் மணாளனோடே –70-

தாயாராகிய தாங்கள்‌ நன் மக்கள்‌ பக்கலினின்று நீங்கிப்‌ புன் மக்கள் பக்கல்‌ சேர்வது முறையோ? அடியவராகிய நாங்கள்‌ பிறவிச்‌ சிறையில்‌ கிடக்கவும் சிறைப்பட்டுத் தேவ மகளிரைத் தாங்கள் சிறைவீடு செய்தமை முறையோ – பூ மடந்தை கோதை நாச்சியராக அவதரித்து எமக்கு மெய்யுணர்வு அளித்து எம்மைப்‌ பிறவிச் சிறையிலிருந்து விடு விப்பதனை நீங்கள்‌ பார்த்துள்ளீர்கள்‌. நாங்கள்‌ படுந்துயரைக் கண்டும்‌ அதனைப்‌ போக்க முயலாது தங்கள்‌ மணாளனாகிய எம்பெருமானுடன்‌ தாங்கள்‌ உகந்திருப்பது முறையோ

ஓடுங்‌ கறங்கன்ன ஊழ்வினைச்‌ சூழலில்‌ ஒத்திருப்போம்‌
ஓடுங்‌ கறங்கின்‌ உலகியல்‌ ஒன்றின்பின்‌ ஒன்றுறுவ
ஒடுங்‌ கறங்கின்‌ இறை நெறி ஆம்பரிசு ஊர்ந்தலைப்ப
ஓடுங்‌ கறங்கிவை வீடுசெய்‌ யுந்தங்கண்‌ நோக்கிலதே–71-

உம்முடைய கடைக்கண்‌ நோக்கம்‌ எம்மேல்‌ பதியாததால்‌ முன்செய்த வினைகளால்‌ காற்றாடிபோலச்‌ சுழற்றப்படுகிறோம்‌. உலகியல்‌ வாழ்வும்‌ ஒன்றன்பின்‌ ஒன்றாக எங்களைச்‌ சுழலச்‌ செய்கின்றன, பல தெய்வங்களையும்‌ வழிபடும்‌ ஆராதனைகள்‌, நெறிமுறைகள்‌ போல்வன எம்மை அணுகி சுழல்விக்கின்றன. இச் சுழற்சி களிலிருந்து எங்களை விடுவிக்கத்‌ தங்களாலேயே இயலும் –

நோக்கில தாயிடின்‌ உள்ளதோர்‌ நுண்ணறிவு யார்க்குளதாம்‌?
நோக்கில தாயின்‌ நுவலுமி யாவும்‌ நிலை பெறுமே?
நோக்கில தாயின்‌ நுவல்படைப்‌ பீர்ப்பதும்‌ ஆமதுவே?
நோக்கில தாயின்‌ உகந்தருள்‌ நோன்தலம்‌ புல்லெழுமே–72-

உங்களுடைய அருள் நோக்கு இல்லையேல்‌ ஒருவருக்கும்‌ மெய் உணர்வு ஏற்படாது. எம்பெருமானுடைய உடைமைகளாகிய இயங்கியற் பொருள்ளும்‌ நிலையியற்‌ பொருளும்‌ நிலையாக இருக்கமாட்டா. எம்பெருமானுடைய படைத்தல்‌, காத்தல்‌, முதலிய செயல்களும்‌ முறையாக நிகழா? எம்பெருமாள்‌ உகந்தருகின்ற திருப்பதிகள்‌ யாவும்‌ தரிசிப்பார் இன்மையால்‌ புல்‌ தோன்றி வளரும்‌ பாழிடங்கள்‌ ஆகும் –

புல்லெழும்‌ நும்சார்‌ பிலதென்ன புண்ணிய நோன்பிடங்கள்‌
புல்லெழும்‌ புண்ணிய கேத்திரம்‌ புண்ணிய தீர்த்தங்களும்‌
புல்லெழும்‌ முத்தி தருமென போற்று நும்‌ ஏழ்தலமும்‌
புல்லெழும்‌ வேங்கடம்‌ சோலை நல்‌ வான மலையதுவே–73–

நும்‌ தொடர்பு இல்லை யெனின்‌ அறச் செயல்கள்‌ செய்வதற்கு ஏற்றன என்று போற்றப்படும்‌ புண்ணிய பூமிகளும்‌, புண்ணிய திருத் தலங்களும்‌,புண்ணிய தீர்த்தங்களும்‌, முத்தி தரும்‌ திருப்பதிகளாகிய அவந்தி அத்தினாபுரி, துவாரகை முதலியனவும்‌, எம்பெருமான்‌ உகந்தருளி யிருக்கும் வேங்கடமலை, வானமாமலை முதலியனவும்‌, பயன்‌ கொள்ளும்‌ அடியவருடைய வருகை இன்மையால்‌ பாழ் பட்டுவிடும்

மலையுமால்‌ நெஞ்சும்‌ பொறியும்‌ புலனொடு மாறி மாறி
மலையுமால்‌ முன்முன்‌ வினையும்‌ சுவையொடு வாசனையும்‌
மலையுமால்‌ தாபக்‌ கனலும்‌ மறித்து வரு பிறப்பும்‌
மலையுமால்‌ ஈங்கிதின்‌ வைத்திருப்‌ பான்றனைக்‌ கேட்கிலீரே–74–

இவ் வுலக வாழ்க்கையில்‌, நும்‌ அடியார்களை நெஞ்சமும்‌ அறிவும்‌ பொறியும்‌ புலன்‌ நுகர்ச்சியும்‌ செயற்‌ பொறிகளும்‌ தனித்தும்‌ கிளர்ந்தும்‌ நலியும்‌. பண்டைய வினைகளும்‌ அவற்றின்‌ வழிவரும்‌ சுவைகளும்‌ அவற்றின்‌ சுவடுகளும்‌ நலிகின்றன. ஆதியாத்மிகம்‌, ஆதிதைவிகம்‌, ஆதிபெளதிகம்‌ என்று கூறப்படும்‌ இடுக்கண் தரும்‌ மூவகைத்‌ தீக்களும்‌, மாறிமாறித்‌ தோன்றும்‌ பிறவிப்‌ பிணியும்‌ நலிவுறுத்துகின்றன. அடியார்கள்‌ படும்‌ இத் துயர்களை இம் மண்ணுலகில்‌ அவர்களை வைத்து வருந்தச்‌ செய்யும்‌ செயல்‌ பற்றித்‌ தாங்கள்‌ எம்பெருமான்‌ பக்கல்‌ வினவ மாட்டீர்களா –

கேட்கிலீர்‌ ஆய்பாடி வெண்ணை கவர்ந்துண்ணும்‌ கேவலத்தை
கேட்கிலிர்‌ முன்பகை வாய் வந்த கேட்டவன்‌ மேனிகொண்டான்‌
கேட்கிலீர்‌ பாஞ்சாலி மூர்க்கர்‌ கிளரவைக்‌ கூக்குரலைக்‌
கேட்கிலீர்‌ நீருமே பல்லூழி யான்படுங்‌ கேடிதையே–75-

எம்பெருமான்‌ ஆயர்பாடியில்‌ வெண்ணையைக்‌ களவினால்‌ உண்ணலாகிய இழி செயல்‌ செய்தான்‌. தன்‌ கண் முன்‌ பகைவனாய்‌ வந்து தன்னோடு பொருது உயிர் நீத்த சிசுபாலனுக்குத்‌ தன்‌ திருவடிமில்‌ இடம்‌ அளித்தான்‌. அரசவையில்‌ பாஞ்சாலியைக்‌ கெளரவரும்‌ அவரைச்‌ சேர்ந்தவர்களும்‌ பழித்துப்‌ பேசினர்‌. இவற்றைக்‌ குறித்து எந்த வினாவும்‌ எழுப்பாத தாங்கள்‌, பல ஊழிக் காலமாக அடியேன்‌ அனுபவிக்கும்‌ கேடுகளையும்‌ பற்றி வினவாதிருப்பதில்‌ வியப்பு ஒன்றும் இல்லை –

கேடில்‌ விழுப்புகழ்‌ நுந்தம்‌ பிணைதலும்‌ கேழிலதே
கேடில்‌ விழுப்புகழ்‌ நுந்தம்‌ உளத்துக்‌ கிளருமருள்‌
கேடில்‌ விழுப்புகழ்‌ நுந்தம்‌ வடமறை நேருமொழி
கேடில்‌ விழுப்புகழ்‌ நுந்தம்‌ உபதேசக்‌ கேள்வியதே–76-

எம்பெருமானும்‌ நீங்களும்‌ சேர்ந்திருக்கும்‌ சேர்த்தியும்‌ உங்கள்‌ உள்ளத்தில்‌ மேன்‌ மேலும்‌ பெருகும்‌ அருளும்‌, வேதத்தை ஒத்து இனிய நும்‌ மொழிகளும்‌, இரக்கத்தால்‌ நீங்கள்‌ பிறருக்கு வழங்கும்‌ நல்லுரைகளும்‌ என்றும்‌ அழிவில்லாத பெரும்‌ புகழுக்கு உரியனவாம் –

கேள்விகொள்‌ வீர்நும கேள்வி யவன்கொள வையமுய்யும்‌
கேள்விகொண்‌ டானலன்‌ கேடுவுந்‌ துற்றதால்‌ கெட்டொழிந்தான்‌
கேள்விகொள்‌ வீரே சிறைப்பட்ட ரக்கியர்கே ழில்நிந்தை
கேள்விகொள்‌ வீர்பிற மாதர்தம்‌ கேடு தவிர்ப்பதற்கே–77-

அடியார்களுடைய குறைகளைச்‌ செவி மடுக்கும்‌ தாங்கள்‌ எம்பெருமானுக்கு அவற்றைத்‌ தெரிவிப்பதனால்‌ உலகவராம்‌ அவர்கள்‌ ‘நன்மை அடைகிறார்கள்‌. தங்கள்‌ சொற்களைக்‌ கேளாததனால்‌ கேடுகளை அடைந்து இராவணன்‌ அடியோடு அழிந்தான்‌. சிறையிலிருந்து அரக்கியர்‌ கூறிய கடஞ்சொற்களைத்‌ தாங்கள்‌ செவி மடுத்தீர்கள்‌. ஏனைய தேவ மாதர் தம்‌ சிறையைத்‌ தவிர்ப்பதற்கே தாங்கள்‌ அவ் வரக்கியர்‌ கூற்றைப்‌ பொறுமையோடு செவி மடுத்தீர் —

தவிர்ப்பதும்‌ எம்பிரான்‌ சேதநர்த்‌ தள்ளும்‌ சுதந்திரத்தைத்‌
தவிர்ப்பதும்‌ சேதனர்‌ தம்பிழைக்‌ கண்டு நடுங்குமதைத்‌
தவிர்ப்பதும்‌ தம்ம தியல்பின்‌ முரண்பிறர்‌ சொல்லுமதைத்‌
தவிர்ப்பதும்‌ சார்வார்‌ மிதுநத்‌ திருப்பின்‌ தமபிறப்பே–78

பிராட்டியாரே! ஆன்மாக்களைப்‌ புறக்கணிக்கும்‌ எம்பெருமானுடைய சுதந்திரத்தைத்‌ தாங்களே பரிந்துரை கூறி நீக்குகிறீர்‌. ஆன்மாக்கள்‌ தம்‌ பிழைகளை நினைத்து நடுங்குவதைத்‌ தாங்கள்‌ கருணையால்‌ போக்குகிறீர்‌. ஆன்மாவின்‌ இயல்புக்கு மாறாகப்‌ பிறர்‌ பேசுவதைப்‌ போக்குவீரும்‌ நீர்‌. எம்பெருமானும்‌ நீரும்‌ இருக்கும்‌ இருப்பினைச்‌ சரணாகச்‌ சார்பவர்‌ தம்‌ பிறவியைப்‌ போக்குபவரும்‌ நீரே-

பிறப்பதற்‌ கோர்வினைக்‌ கட்டில்லை என்றும்‌ பிறந்தருள்வீர்‌
பிறப்பதற்‌ கும்மொரு தாய்தந்தை யில்லை பிறந்தருள்வீர்‌
பிறப்பது தாமரையாம்‌ பெற்றிக்கோ ருறுப்புமில்லை
பிறப்புத்‌ தவிரா(து) அவன்பிறப்‌ பொக்கப்‌ பிறக்குமதே–79-

உலகில்‌ பிறப்பதற்குரியதொரு வினையின்‌ தொடர்பு இல்லாமலேயே நீங்கள்‌ உலகில்‌ பிறப்பெடுக்கிறீர்கள்‌. தாய்‌ தந்தையர்‌ இல்லாமலே இயல்பாலேயே நீங்கள்‌ பிறவி எடுக்கிறீர்‌. தாங்கள்‌ பிறப்பிடமாகிய தாமரைக்குத்‌ தங்களைப்‌ பிறக்கச்‌ செய்யும்‌ உறுப்பு எதுவும்‌ இல்லை.
எம்பெருமான்‌ உலகில்‌ பிறவி எடுக்குந்‌ தோறும்‌ அவனுக்கு ஏற்க நீங்களும்‌ பிறவி எடுக்கின்றீர்‌-

பிறப்பதோ பெம்மான்‌ சுரர்குலம்‌ தாமும்‌ சுரர்குலமே
பிறப்பதோ பெம்மான்‌ மனிதனே தாழும்‌ மனிதகுலம்‌
பிறப்பதோ பெம்மான்‌ விலங்கது தாமும்‌ விலங்கினமே
பிறப்பதோ பெம்மான் தான்‌ தாவரம்‌ தாமுமோர்‌ தாவரமே ! –80–

பெருமான்‌ தேவனாகப்‌ பிறப்பின்‌ நீங்களும்‌ தேவியாகவும்‌,மனிதனாகப்‌ பிறப்பின்‌ பெண்மகளாகவும்‌, விலங்காகப்‌ பிறப்பின்‌ மறைந்து நின்‌று பெண்‌ விலங்காகவும்‌, தாவரமாகப்‌ பிறப்பின்‌ நீங்களும்‌ மறைந்து நின்று தாவரமாகவும்‌ பிறப்பெடுக்கின்றீர்‌. நும்‌ இணை பிரியாமை இருக்குமாறு என்னே? என்பது குறிப்பெச்சம் –

தாவி லருங்கலை நும்மருள்‌ கூட்டின்‌ தகவுடைத்தாம்‌
தாவி லருங்கலைக்‌ கற்றோன்‌ கதிரோன்முன்‌ சாயிழந்தான்‌
தாவி லருங்கலைக்‌ சாற்றற்‌(கு) அரியவன்‌ நும் வயமே
தாவி லருங்கலைக்‌ முற்றும்‌ இயல்பி னறி வரிதே? –81-

வருத்தமில்லாத அரிய கலைகள்‌ நும்‌ அருளொடு கூடியே பெருமை பெறுகின்றன. நீங்குதலில்லாத அரிய கலைகளைச்‌ ஸூரியனை அடுத்துச்‌ கற்ற அனுமனும்‌ நும்‌ சொற்களால்‌ தன்‌ எண்ணத்தைக்‌ கை விட்டு நும்மைச்‌ சூழ்ந்த அரக்கியரை நலியாது விடுத்தான்‌. நீங்குதலில்லாத பல கலைகளாலும்‌ உள்ளவாறு அறிய முடியாத எம்பெருமானும்‌ நுமக்கு வசப்பட்டவனே. நீங்குதலில்லாத அரிய கலைகளும்‌ உம்மை உள்ளவாறு அறிதல்‌ இயலாது–

அறிவி தேயலர்‌ மேல்மங்கை நுந்தரத்‌ தாயிரத்தொன்‌(று)
அறிவரி தேயயன்‌ நெற்றியில்‌ அங்கணன்‌ இந்திரனும்‌
அறிவரி தேஅயன்‌ தேவி அயிராணி பார்வதியும்‌
அரிவரி தேயுடன்‌ தேவியர்‌ நீரும்‌ அமலனுமே–82-

அன்னையார்‌! நும்‌ தகுதியின்‌ ஆயிரத்திலொரு கூறு கூட மற்றவர்‌ அறிதல்‌ இயலாது. பிரமன்‌, சிவன்‌, இந்திரன்‌ என்ற பெருந்தேவரும்‌ அவர் தேவியராகிய நா மகள்‌, பார்வதி, இந்திராணி என்பவரும்‌ கூட நும்‌ தகுதியை உள்ளவாறு அறிதல்‌ இயலாது. மற்றவரைக்‌ கூறுதல்‌ ஏன்‌? உம்முடன்‌ இருக்கும்‌ நில மடந்தையும்‌, ஆயர் குல மடந்தையும்‌ நீரும்‌ எம்பெருமானும் கூட நும்‌ பெருமையை அறிதல்‌ அருமையாகும் –

அமலன்‌ அமுதங்‌ கடைந்தான்‌ பிறர்க்கென்‌ றுமை யடைந்தான்‌
அமலன்‌ அனைத்தும்‌ இயக்கற்‌ குரியன்‌ நினைவினாலே
அமலன்‌ அனைத்தும்‌ தனதா உடையான்‌ இயல்புறவே
அமலன்‌ உடையன்‌ செயலன்‌ உமதவன்‌ மார்பி௫ப்பே –83-

களங்கமற்ற எம்பெருமான்‌ பிறருக்கு அமுதம்‌ கடைந்து கொடுப்பதான பொய்க் காரணம்‌ காட்டிக் கடல்‌ கடைந்த செய்கை உலகத்துக்‌ தாயாராகிய உம்மைப்‌ பெறவே, எல்லா உலகப்‌ பொருள்களையும்‌ ஆட்டுவிக்கும்‌ செயலையும்‌ யாவற்றையும்‌ தன்னை உடைமையாகப்‌ பெற்றிருக்கும்‌ சிறப்பினையும்‌ உடையவனாய்‌, அனனத்தையும்‌ உடையவனாகவும்‌ ஆள்பவனாகவும்‌ சிறந்து விளங்குகிறான்‌. இதற்குக்‌ காரணம்‌, நீர்‌ அவன்‌ மார்பிலிருந்து உற்சாகப் படுத்து வதலாலேயே –

இருப்ப திறையும்‌ பிரிவிலை மேன்மை பிரிவிலையே
இருப்பதும்‌ வில்வத்‌ திரிணியக்‌ கூட்டினும்‌ சேமமுற
இருப்பதும்‌ ஐயந்‌ திரிபறத்‌ தேர்ந்த தெளிவுணர்வின்‌
இருப்பதும்‌ மெய்யடி யார் தம்‌ குழுவில்‌ இறையுடனே–84-

ஒரு கண நேரமும்‌ பிரிவினை மேற் கொள்ளாது எம்பெருமான்‌ திரு மார்பில்‌ இருக்கும்‌ மேம்பட்ட நிலையை உடைய நீர்‌ பொற் குவியலிலும்‌ வில்வத்திலும்‌, ஐய உணர்வும்‌ திரிபுணர்வும்‌ நீங்குதலால்‌ தெளிவுடைய அடியாருடைய மெய்யுணர்வில்‌ வீற்றிருப்பதும்‌, மெய்யடியார்‌ குழுவில்‌ எம்பெருமானோடு தங்கியிருப்பதும்‌ ஆகிய உயரிய செயல்களைச்‌ செய்கின்றீர் —

உடனுறை யானென தென்பதின்‌ உற்ற கொடியதெது?
உடனுறை ஐம்பொறி கோட்புலன்‌ சார்தலின்‌ ஊனமுன்டே?
உடனுறை ஊழ்வினைக்‌ கட்டில்‌ வலிய பிரிப்புமுண்டே?
உடனுறைந்‌ தெம்மான்‌ உறுவன தீர்ப்புறும்‌ வேண்டுகோளே –85-

ஆன்மாக்கள்‌. உடலில்‌ தங்கியிருந்து ‘யான்‌’ என்று அகங்கரிக்கும் அகங்காரத்தை விடக்‌ கொடியது யாது உள்ளது? ஐம்பொறி புலன்களைச்‌ சார்ந்த சிற்றின்ப நுகர்ச்சியின்‌ குறைபாடுகளுடன்‌ கூடியது வேறு உண்டே? முன்‌ செய்த வினைகள்‌ இப் பிறப்பில்‌ நம்மைப்‌ பிணித்து இன்ப துன்பங்களை நுகர்விக்கும்‌ பிணைப்பை விட வலிய பிணைப்பு உளதோ? பெருமானுடன்‌ இருந்து ஆன்மாக்களின்‌ இத் தீமைகளைத்‌ தீர்க்குமாறு வேண்டுவதனையே நும்‌ பண்பாகக்‌ கொண்டுள்ளீர்‌–

வேண்டியார்‌ பாலும்‌ அரக்கியர்‌ தீமையை விள்ளகிலீர்‌
வேண்டிப்‌ பிறந்தகம்‌ புக்ககம்‌ விட்டோர்‌ கணம் விரும்பீர்
வேண்டி முயலீர்‌ சிறையிருள்‌ தீயின்‌ விடுதலையை
வேண்டிடில் எம்மான் அடைந்தவர் ஏற்குமா வேட்கையிதே –86-

அசோக வனத்தில்‌ அரக்கியர்‌ நுமக்கு இழைத்த கொடுமைகளை நும்‌ நெருங்கிய உறவினரிடத்தும்‌ நீர்‌ தெரிவிக்க வில்லை. புக்ககத்தை விடுத்துப்‌ பிறந்தகம்‌ சென்று வர ஒரு கணமும்‌ நீர்‌ விரும்பினீர்‌ அல்லீர்‌. தீயினும்‌ கொடிய சிறையினின்றும்‌ நும்‌ முயற்சியால்‌ விடுதலை பெற நீர்‌ முயன்றீர்‌ அல்லீர்‌. எம்பெருமானைச்‌ சரணம்‌ அடைந்த அடியவர்களை ஏற்குமாறு கொள்ளும்‌ விருப்பத்தையே நீர்‌ வேண்டி நிற்கிறீர் —

வேட்கை பரன்பால்‌ அடியான்‌ விரும்பி அடைந்திடவே
வேட்கை பிரியில்‌ அடியார்க்‌(கு) அனர்த்தம்‌ விளையுமென்றே
வேட்கை யிருளுமிஞ்‌ ஞாலம்‌ தெருளும்‌ விசும்புறவே
வேட்கை திரு மா மணி மண்டபம் என்னும் வேங்கடமே –87–

அடியவன்‌ எம்பெருமானை விரும்பிச்‌ சரண்புகும்‌ செயலொன்றே நும்‌ வேட்கையாகும்‌. அத்தகைய வேட்கையை நீர்‌ நீத்துவிட்டால்‌ அடியவருக்குத்‌ தீங்கே விளையும்‌. இவ்விருள்‌ தருமாஞாலமாகிய நிலவுலகைப்‌ பரமபதமொத்த துன்பக்‌ கலப்பில்லா இன்ப மயமாக்குவதே உம்முடைய ஆசை. நீர்‌ உகந்தருளி யிருக்க விரும்புமிடம்‌ நில வுலக வைகுந்தத்‌ திரு மா மணி மண்டபமாகிய திருவேங்கட மலையே —

வேங்கடம்‌ வேங்கட மேவாய்‌ வெருவி இருந்திடுவீர்‌
வேங்கடம்‌ கீழிருந்‌ தன்புப தேசம்‌ விரித்துரைப்பீர்‌
வேங்கட மார்பகம்‌ நீங்கா விழைந்தே அபயமீவீர்‌
வேங்கடற்‌ குற்றதோர்‌ தொண்டொன்று பத்தா விரிப்பது–88-

நீர்‌ பரகால நாயகியை ஆவேசித்து! வேங்கடமே! வேங்கடமே! என்று விருப்பத்தோடு பல நாளும்‌ தன்னை மறந்து கூப்பிடச்‌ செய்தீர்‌. வேங்கட மலையின்‌ கீழிருந்தவாறே எம்பெருமானுக்குச்‌ சேதனர்‌ பக்கல்‌ அன்பு காட்டுமாறு உபதேசிக்கின்றீர்‌. வேங்கடத்தான்‌ மார்பினைப்‌ பிரியாமலிருந்தே அடியார்க்கு அஞ்சற்க! என்ற அருளுரை வழங்குகின்றீர்‌. குறை காணாது அடியாரை ஏற்றுக்‌ கொள்ளுமாறு எம்பெருமானிடம்‌ பரிந்துரை கூறும்‌ திருப் பணியை அடியவர்‌ உய்வதற்கே விரிவாகச்‌ செய்கின்றீர் –

விரியத்‌ தமர்செய்‌ வினைதான்‌ கழிவ தவனருளால்‌
விரியு மியல்பாழ்‌ வினைநீங்க ஒங்க நிகரில்சீர்‌
விரியத்‌ தமா்பால்‌ குறைகாணான்‌ மேன்மேல்‌ அருளுமவன்‌
விரியுஞ்‌ செயலுகப்‌ பீரலர்‌ மேல்மங்கை உம் மியல்பே–89-

அலர்மேல்‌ மங்கையீர்‌! அடியார்கள்‌ மிகுதியாகச்‌ செய்யும்‌ வினைகள்‌ யாவும்‌ எம்பெருமான்‌ அருளால்‌ நீங்கற்பாலன. அப் பெருமானிடத்தில்‌ தவறு கண்டு புறக் கணிக்கும்‌ சுதந்திர உணர்வு நீங்கவும்‌, தவறுகளையும்‌ உகக்கும்‌ ஒப்பற்ற புகழுடைய தூயன்பு அவன் பால்‌ தழைக்கவும்‌, அவன்‌ அடியார்களிடத்துக்‌ குறை காணாது அவர்களுக்கு விரிவாக அருள் புரியும்‌ மேம்பட்ட செயலுக்காக அடியவர்‌ திறத்தப்‌ பரிந்துரை கூறுவது உம்‌ பணபாகும் –

இயல்பீ திருவரைக்‌ காணும்‌ மறைப்பது மெய்யுணர்வை
இயல்பிது முக் குணத் தேய்ந்து மயக்கம் விளைக்குமதாம்‌
இயல்பீ திருவினை பாசப்‌ பிணக்கின்‌ இயக்குமிதே
இயல்பீ திறையுடன்‌ சார்ந்திவை முற்று மகற்றுவீரே–90-

எம்பெருமானும்‌ நீருமாகிய இருவரையும்‌ மனத்தால்‌ காணும்‌ உண்மை யறிவை மறைப்பது இவ் வுடம்பின்‌ இயல்பாகும்‌. காமம்‌, வெகுளி, மயக்கம்‌ என்ற முப் பண்புகளுடன்‌ பொருந்தி மெய்ப் பொருளை உள்ளவாறு அறிய முடியாதபடி மறைத்து மயங்கச்‌ செய்வதும்‌ இவ் வுடம்பின்‌ இயல்பாம்‌. நல் வினை தீ வினைகளாகிய பற்றுக்களால்‌ ஆன்மாவை ஆட்டுவிப்பதும்‌ இவ் வுடம்பின்‌ இயல்பாம்‌. எம்பெருமானைச்‌ சார்ந்து நீங்கள்‌ உடல்‌ குற்றங்கள்‌ அனைத்தையும்‌ நீக்குகின்‌றீர்‌. இது உமக்கு இயல்பாக அமைந்த பண்பாகும்‌-

வீராங்‌ கனைநீர்‌ விமலன்‌ திறத்தாறு பண்புடையீர்‌
வீராங்‌ கனைகள்‌ உமைப்போல்‌ விரதியர்‌ யாவரேனும்‌
வீராங்‌ கனைகள்‌ விழுமத்‌ தொழுதெழு மூவியலார்‌
வீராங்‌ கனைகளை நீர்‌ தத்த மியலால்‌ விளைப்பீரே-91-

வீரம்‌ சான்ற பெண்மகளாராகிய தாங்கள்‌ எம்பெருமான்‌ ஞானம்‌, சக்தி பலம்‌, ஐஸ்வரியம்‌, வீரியம்‌, தேஜஸ் என்ற ஆறு பண்புடையனாதல்‌ போல அவன்‌ திறத்தில்‌ உசுப்பில்‌ உகத்தல்‌, நோவின்‌ நோதல்‌, ஒண்பொருள்‌ கொடுத்தல்‌, நன்கு இனிது மொழிதல்‌, புணர்வு நனிவேட்டல்‌, பிரிவு நனி இரங்கல்‌ என்ற ஆறு பண்புகளை உடையீர்‌. உம்மைப்போல்‌ விரதமுடையார்‌ யாவரும்‌ வீரப் பெண்களே. எம்பெருமானைத்‌ தொழுது எழும்‌ வீரப் பெண்கள்‌ எம்பெருமானே ஆண்டான்‌, அவனே ஆறு, அவனே பேறு என்ற மூன்று இயல்பு உடையவர்கள்‌ தம்‌ பண்புகளில்‌ நெகிழ்வில்லாதபடி வீராங்கனைகளைத்‌ தயாரிப்பவரும்‌ தாங்களே —

விப்பிர நாரா யணனொடும்‌ விஞ்சு சீர்‌ மாறனொடும்‌
விப்பிரத்‌ தோன்றலாம்‌ விட்டுசித்‌ தன்னொடு வீசு புகழ்‌
விப்பிர ஊர்தி வியன் தமிழ்ப்‌ பாணன்‌ பிறவி வெரு
விப்பிர புத்தி செய்‌ வேந்தன்‌ குலசே கரனொடுமே–92-

தொண்டரடிப்‌ பொடியாழ்வார்‌ ஆகிய விப்பிரநாராயணர்‌, மேம்பட்ட சிறப்பினை உடைய சடகோபர்‌, அந்தணருள்‌ மேம்பட்ட விட்டு சித்தர்‌, யோக சாரங்க முனிவர்‌ தோளில்‌ சுமக்கப்பட்டு எம்பெருமானைத்‌ தரிசிக்க வந்த திருப்பாணாழ்வார்‌, பிறவிப்‌ பிணிக்கு அஞ்சி விற்றுவக்‌ கோட்டம்மானைச்‌ சரண்‌ புகுந்த குலசேகரப்‌ பெருமான்‌ ஆகியவரும் –

ஒடுங்கலில்‌ சீரார்‌ முதல்வர்கள்‌ மூவராம்‌ ஒன்தமிழர்‌
ஒடுங்கலில்‌ ஞானமும்‌ பத்தி விரத்தியும்‌ ஒங்கு கோதை
ஒடுங்கலில்‌ யோகி மழிசை மன்‌ உற்ற மதுரகவி
ஓடுங்குலில்‌ வாழ்த்துக்‌ கலியன்‌ உதிப்பித்‌தும் மருளே –93-

மற்றும்‌ குறைவற்ற சிறப்புடைய முதலாழ்வார்கள்‌, மூவர்‌ ஞான பக்தி வைராக்கியத்தால்‌ மேம்பட்ட கோதையராகிய ஸ்ரீஆண்டாள்‌, யோகியாய்‌ வாழ்ந்த திருமழிசைப்‌ பிரான்‌ மதுரகவியார்‌, 86 திவ்விய தேசங்களைப்‌ ்‌ பாடியருளிய திருமங்கையாழ்வார்‌ முதலானாருடைய திருஅவதாரங்கள்‌ தாயாராகிய உமது முனைப்பினாலும்‌ எம்பெருமான்‌ அருளாலும்‌ இந்த பூலோகத்தில்‌ உண்டாயின–

உமதரு ளொன்றே உதவு மெய்‌ ஞானநீர்‌ வித்தையதால்‌
உமதருள்‌ சேதனர்‌ பாலதாம்‌ உற்ற நல்‌ தாயதனால்‌
உமதருள்‌ ஏற்பன் உலகுண் பரனின் இனியையதால்
உமதருள்‌ முற்றவும்‌ உற்றதே யாக்கும்‌ நெகிழ்தலிலே–94-

அன்னையாராகிய நீர்‌, வித்தையே வடிவினராய்‌ இருப்பதால்‌ உம்‌ அருளே மெய்யுணாவை உண்டாக்குவதாகும்‌. தாங்கள்‌ உலகின்‌ தாயாக இருப்பதனால்‌ தங்கள்‌ அருள்‌ இவ்வுலகினுள்ள உயிர்களின்‌ பக்கல்‌ பரவியுள்ளது. எம்பெருமான்‌ உகப்பிற்குரிய தேவியராக நீர்‌ இருப்பதால்‌ ஊழியில்‌ உலகை வயிற்றில்‌ வைத்துப்‌ பாதுகாக்கும்‌ எம்பெருமான்‌ உம்‌ அருள்செயல்களைத்‌ தானும்‌ இசைகிறான்‌. உம்‌ அருள்‌ செயல்களைக் குறைவுறாமல்‌ உயிர்களுக்கு ஏற்புடைய நன்மைகளையே உண்டாக்கும் —

நெகிழ்வதே உந்தம்‌ அருளிலர்‌ நேர்வது முற்றவுமே
நெகிழ்வதே இந்திரன்‌ நீடு சிவனயன்‌ நேர் பதங்கள்‌
நெகிழ்வதே ஓரிரு கோள்கதி யைம்பூத நேர்மையதும்‌
நெகிழ்வதில்‌ நித்த விபூதி நும்‌ சார்பில்‌ நிலைத்திடுமே-95-

உம்‌ அருள்‌ பெறாதார்‌ செய்யும்‌ செயல்கள்‌ முழுமையாக நிறைவேறாமல்‌ இடையிலேயே தடைபட்டு அழியும்‌. உம்‌ அருளின்‌றேல்‌ இந்திரன்‌, சிவன்‌, அயன்‌ என்பார்‌ பதவிகள்‌ நிலை பேறு அடைய மாட்டா, மேலும்‌, ஞாயிறு, திங்கள்‌ இயக்கமும்‌ ஐம் பூதப்‌ பண்புகளும்‌ நெகிழ்ந்து விடும்‌. அழிவில்லாத பரம பதமும்‌ உம்‌ தொடர்பினாலேயே நிலை பெற்றிருக்கும் —

நிலை நிற்கு மன்றோ கயவன்‌ சிறைவைத்த பாதகத்தை
நிலை நிற்கு மன்றோ நெருப்பிடை மூழ்க நீர்‌ நேர்ந்த செயல்‌
நிலை நிற்கு மன்றோ நிமலன் தன்‌ பள்ளி இருந்த செயல்‌
நிலை நிற்கு மன்றோ நிலத்தின்‌ புகு செயல்‌ மாதருக்கே–96-

இராவணன்‌ உங்களைச்‌ சிறை வைத்த நீசச்‌ செயல்‌ உலக மக்கள்‌ உள்ளத்தில்‌ துன்பத்தை உண்டு பண்ணும்‌. தாங்கள்‌ நெருப்பில்‌ மூழ்குவதற்கு ஈடுபட்ட செயலும்‌, வான்மீகியின்‌ ஆசிரமத்தில்‌ நீங்கள்‌ பல காலம்‌ இருந்த செய்தியும்‌, இறுதியில்‌ பூமிக்குள்‌ புகுந்து மறைந்த செயலும்‌ உலகவர்‌ உள்ளத்தில்‌ என்றும்‌ நிலை நிற்பனவாம் —

மாதா நுமதே அழகின்‌ சிகரமே மற்றுமுண்டே
மாதா நுமதே அருளின்‌ வடிவம்‌ பிறிதிலதே
மாதா நுமதே பிறர் நலம்‌ பேணும்‌ சிறப்புடைமை
மாதா நுமதே நிலை பிரி தொண்டர்‌ அடிப்படுத்தே–97-

அன்னையீர்‌! அழகின்‌ உயர்ந்த நிலையும்‌ அருளின்‌ வடிவமும்‌, பிறர்‌ நன்மையே வேண்டிச்‌ செயற்படும்‌ மாட்சிமையும்‌ உடைய நீங்கள்‌ அடியார்‌ தொண்டினை மிகைப்படுத்தி எம்பெருமானுக்குப்‌ பரிந்துரை கூறி, அவர்களை ஆட்கொள்வதற்காகப்‌ பெருமானைப்‌ பிரியாது இருக்கின்றீர் —

அடியனைக்‌ கொண்டதே யாவும்‌ அடைந்தது போலுமானீர்‌
அடியனில்‌ கீழ்மையோன்‌ முன்பின்‌ படைப்பிலும் யாருமுண்டே
அடியர்பால்‌ காணீர்‌ குறையடி யேன்கேட்‌ டறிந்ததுண்டு
அடியனின் தாழ்வையும் கொண்ட நீர் ஆய்ந்திடின் உண்மை யன்றே –98-

மிகக் கீழனோகிய அடியேனை ஆட் கொண்ட திறத்தால்‌ தங்கள்‌ விருப்பமெல்லாம்‌ நிறைவேறியது போன்ற நிறை மகிழ்வைப்‌ பெற்றுள்ளீர்‌. முன்‌ ஊழிகளிலும்‌ இனி வரும்‌ ஊழிகளிலும்‌ நிகழ்ந்த, நிகழ இருக்கின்ற படைப்புகளில்‌ அடியேனிலும்‌ கீழானோர்‌ இருக்க மாட்டார்கள்‌. தாங்கள்‌ அடியார்களுடைய குறைகளைப்‌ பொருட்படுத்த மாட்டீர்‌ என்று கேட்டறிந்ததுண்டு. தங்கள்‌ உயர்வையும்‌ அடியேன்‌ தாழ்வையும்‌ ஆராய்ந்தால்‌ தாங்கள்‌ அடியேனை ஆட் கொண்டது மெய்யான செயலேயாகும் –

உண்மைப் பொருள் அலர்மேல் மங்கை சேர்ந்து இங்கு உளன் ஒருவன்
உண்மைப் பொருள் பொறைத் தாயினை ஒக்கலை யேந்து கேழல்
உண்மைப்‌ பொருள்ளேழ்‌ விடை செற்று வந்து கொள்‌ பின்னை கேள்வர்
உண்மைப் பொருள் மூன்றே ஓர்த்துப் பொதுவுறக் காண்ப தென்றே –99-

மெய்ப்பொருளாம்‌ பெருமான்‌ அலர்மேல்‌ மங்கையுடன்‌ சேர்ந்து வேங்கட மலையில்‌ உள்ளான்‌. பொறுமைக்கு இருப்பிடமாகிய பூமித் தாயை தன்‌ இடையில்‌ வைத்துக்‌ கொணர்ந்த மகா வராக மூர்த்தியும்‌, அசுரா உட்புகுந்த ஏழு காளைகளை அழித்துப்‌ பின்னையை மணந்த கண்ணனும்‌, வேங்கடவனும்‌ ஒரே உண்மைப்‌ பொருளின்‌ அவதாரங்களே என்பதனைக்‌ காணலாம்‌

என்றலர்‌ மேல்மங்கை நின் தாள்சார்‌ என்கண்‌ அருளுவதே?
என்றலர்‌ மேல்மங்கை மன் தாள்சார்‌ என்கண்‌ அருளுவதே?
என்றலர்‌ மேல்மங்கை தொண்டர் சார்‌ என்கண்‌ அருளுவதே?
என்றலர்‌ மேல்யங்கை போற்றும்‌ அருளென்கண்‌ பார்த்துலகே –100-

அலர்மேல்‌ மங்கைத்தாயே! என்னிடம்‌ உன்திருவுளச்‌ சார்பினை அருளுவது என்றோ? நீர்‌ எம்பெருமான்‌ திருவடிகளை அடியேன்‌ சாரும்‌ வாய்ப்பினை அருளுவது என்றோ? பிராட்டி பெருமாள்‌ என்ற இருவரையும்‌ சரணாகப்‌ பற்றிய தொண்டர்கள்‌ சார்பினை அடியேனுக்கு அருளுவது என்றோ? அடியேன்‌ மாட்டு அலர்மேல்‌ மங்கை பாலிக்கும்‌ அருளும்‌ எம்பெருமாள்‌ அடியேன் திறத்தில்‌ செய்யும்‌ அருளையும்‌ உலகவர் போற்று நாள்‌ என்று வருமோ?

அலர்மேல மங்கை நல்‌ தாய்திருத்‌ தாளன்ப ரும்பயனை
அலர் மேல மங்கையந்‌ தாதி தனையோதி ஆர்வமும
அலர்மேல மங்கை இணையடித்‌ தாமரை தம்மினெஞ்சம்‌
அலர்மே லமர்ந்துறை யன்னமாய்‌ நின்றன்பு பெற்றிடுமே –நூற்பயன்

நற்றாயாகிய அலர்மேல்‌ மங்கை திருவடிகளில்‌ அன்பு பெருகுதலாகிய அரிய பயனாய்‌, இந்த அலர்மேல்‌ மங்கையந்தாதியை ஆர்வத்தோடு ஒதுவதால்‌ நம்‌ நெஞ்சமானது, அப்பெருமாட்டியின்‌ திருவடித்‌ தாமரைகளில்‌ அன்னம்போல்‌ நீங்காதிருந்து தூய அன்பினைப்‌ பெற்றுச்‌ சிறந்து விளங்கும்-


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்த சங்கல்ப ஸூர்யோதய நாடகம்–

April 21, 2026

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

யதி பக்தி ப்ரசயாத்மகே தினமுகெ த்ருஷ்டி ஷம ஷேத்ரிண
ஷிப்‌ரம் ஸம்ஸ்ருதி சர்வரீம் ஷிடதியத்‌ ஸக்கல்ப ஸூர்யோதய
தத் வைரஸ்‌த்‌ர விபூஷணை ரதிகத ஸ்வாதீன நித்யோன்னதி
ஸ்ரீமாநஸ்‌ துஸமே ஸமஸ்த விபதுத்தாராய நாராயண

நாடக பாத்திரங்கள்
ஸ்ரீ மஹாவிஷ்ணு ; ஸ்ரீதேவி; பூதேவி, நீளாதேவி–நாரதர்‌, தும்புரு-ஆசார்யன்‌, சிஷ்யன்‌ -ஹித்தாக்த வாதிகள்‌
ஸுத்ரதாரன்‌, நடி.
புருஷன்‌ (ஜீவாத்மா)
விவேகன்‌ – ராஜா
மஹா மோஹன்‌ — அஞ்ஞானம்‌
வ்யவஸாயன்‌ –விவேகனது ஸேனாதிபதி
தர்த்கன்‌ விவேகனது ஸாரதி
ஸம்ஸ்காரன்‌ -விவேகனது சில்பி த்ருஷ்டப்‌ரத்யயன்‌ -விவேகனது தூதன்‌
ஸங்கல்பன்‌, விஷ்ணு பக்தி –பகவானுடைய ஆட்கள்‌
விரக்தி, துஷ்டி, ௮தி௧ த்ருஷ்டி–வேலைக்காரிகள்‌–சாந்தி, ஸத்ருச த்ருஷ்டி–வேலைக்காரிகள்‌
காமன்‌ –மன்மதன்‌
வஸந்தன்‌ காமன்‌ நண்பன்‌
ராகன்‌, த்வேஷன்‌, க்ரோதன்‌, லோபன்‌, டம்பன்‌, தர்ப்பன்‌ (கர்வன்‌)–மஹா மோஹனது மந்திரிகள்‌
ஸம்வ்ருதி ஸ்‌த் யன்‌ -மஹாமோஹனுடைய தூதன் —

புத்தி -புருஷனுடைய பத்னி
ஸுமதி –விவேகனுடைய மனைவி விசாரணை –ஸுமதியின்‌ தோழி
முதிதா –ஸூமதியின்‌ தோழி
துர்மதி –மஹா மோஹனின்‌ மனைவி
ரதி –காமனின்‌ மனைவி
த்ருஷ்ணை ( ஆசை) -லோபனின்‌ மனைவி
குஹனை (வஞ்சனை) –டம்பனின்‌ மனைவி
அஸூயை –தர்ப்பனின்‌ மனைவி

இடம்‌ :–ஸ்வேத த்வீபம்‌.

ஸூத்ர தாரன்‌ பிரவேஸம் –

ஸ்ருங்காராதி ஸகல ரஸ ரூபங்களையும்‌ தன்னிடத்தேயே பூண்டதாயும்‌, மகா ஸ்லாக்யமுமான சாந்தி ரஸம்‌ ததும்ப, விவேகாதி மனுஷ்ய ஸ்வபாவங்கள் அனைத்தையும்‌ நாடக பாத்‌திரங்களாக அமைத்து, மாறி மாறிப்‌ பிறந்திறந்து கரை யறியாது உழன்று வரும்‌ பாமரர்களை ஸம்ஸார அந்தகாரத்தினின்றும்‌ மீட்க வல்லதான பகவத்‌ ஸங்கல்பமாம்‌ ஸுூர்யோதயத்தை வெளிப்படுத்த, யாவரையும்‌ நித்ய ஆனந்தத்‌திற்கு உள்ளாக்க வேண்டுமென்பது, சகல கலா வல்வைர்களும்‌ ஆசார்ய ஸ்ஷ்ரேடர்களுமான பெரியோர்களது ஆக்ஞை. ௮த்தகைய ௮ஞ்ஞான அந்த காரத்தைப்‌ பேதித்து, நித்யானந்த வெளிச்சத்தில்‌ நம்மைப்‌ புகுத்த வல்ல ௮ருணோதயமாகக்‌ கூடிய ஞான வொளியை அளிக்குமாறு ஆதி மூர்‌த்தியான ஸ்ரீ ஹயக்ரீவ மூர்த்தி ௮ருள்‌ புரிவாராக.

நடிப்‌பிரவேஸம்

ஸுத்ர.--ஆர்யே ! நமது நாடக பாத்திரங்கள்‌ தயாராயுள்ளனரா?

நடி.--ஆர்ய! எந்த க்ஷணத்தில்‌ எந்த நாடகத்தை நடித்துக்‌ காட்ட உத்திரவோ, ௮ந்த ஷணத்திலேயே அதற்காக. ஆயத்தமாகக்‌ கூடிய நடிகர்கள்‌ நம்மிடமிருக்கையில்‌ உமக்குச்‌ சிந்தையேன்‌ ? இப்பொழுது தாங்கள்‌ நடித்துக் காட்ட விரும்பும்‌ நாடகம்‌ யாதோ?

ஸூத்ர.–மனுஷ்ய ஸ்வபாவம்‌ ஒவ்வொன்றையும்‌ ௮தற்க்‌குரித்தான அபிமான தேவதையாக நடிக்கச்‌ செய்து விவேகனைக்‌ கதா நாயகனாக்‌கி ,-அன்னான்‌ தன்‌ வைரியாம்‌ மஹா மோகனை எதிர்க்குமிடங்களில்‌ யுத்த வீர ரஸத்தையும்‌, பரமாத்மா ஜீவனுக்காக வருந்தி இரங்கு மிடகளில்‌ தயா வீர ரஸத்தையும்‌, மற்றும்‌ ஞான வைராக்ய மடைந்த ஜீவாத்மாவை முக்தனாக்கு மிடங்களில்‌ சாந்தி ரஸ ஸ்வரூபத்தையும்‌ மிகுத்‌து , இதர ரஸ பாங்களை ஆங்காங்கே ஏற்றபடி அமையக் கொண்டதுமான ஸ்ரீ ஸங்கல்ப ஸூர்யோதயமென்னும்‌ தனக்கிணை யற்றத்‌ தனிப் பெரும்‌ நாடகத்தை நடித்துக்‌ காட்ட விரும்பி யுள்‌ளேன்‌– அர்ஜூனனை வியாஜ மாத்‌திரமாகக் கொண்டு கீதை என்கிற அமிர்தத்தைக்‌ கண்ணன்‌ உலகத்தோர்க்கு அளித்தருளினாப் போல லோகோத்தாரணார்த்தம்‌ ஓர்‌ வ்யாஜ மாத்‌திரமாக, கவி ஸ்ரேஷ்டரும்‌ ஆசார்ய ஸ்ரேஷ்டருமானவரால்‌- குணாகுணங்‌கலைப்‌ பிரித்துக்‌ காட்டி ஞானத்தை உண்டாக்குமாறு எழுதப்பட்டதாகும்‌ இந்த நாடக ரத்னம் –

நடி. -ஆச்சர்யம்‌! நம்மைக்‌ கெளரவிக்க வந்திருக்கும்‌ இச்‌ சபையோரது மட்டிலா மதிப்பைப் பெற்ற அந்நாடகத்‌தின்‌ ஆசிரிய ஸ்ரேஷ்டர்‌ யாவரோ

ஸுத்ர.–நீ அறியாயா ₹—தன்‌ தபோ பலத்‌தினால்‌ புதியதோர்‌ இந்திர லோகம்‌ படைத்த விஸ்வாமித்ரருடைய கோத்ர பரம்பரையினரும்‌, புண்டரீகாஷ ஸோமயாஜி யென்னப்‌ பட்டவரின்‌ புத்‌திரராம்‌ ௮நந்த ஸூரியென்னும்‌ வித்யா நிதியின்‌ திருக் குமாரருமான வேங்கடநாத னென்னும்‌ திருநாமங்‌ கொண்ட கவிதார்க்கிக ஸிம்ஹமே இந் நாடக ஆசிரியராவர்‌–கமலாஸனனால்‌ எம்பெருமானது திரு வாராதனக்‌ காலங்களில்‌ ௮ஸுர குல த்வம்ஸத் தொனி போல்‌ கண கணவென சப்‌திக்கும்‌ கண்டையின்‌ திருவவதாரமே யென சாஸ்திரஞ்ஞர்களால்‌ ஊகிக்கப்‌ பட்டவரும்‌, ஸ்ரீரங்ககாதனது நியமனத்தால்‌ வேதாந்தாசார்யனென்ற பிருது பெற்றவருமான ஸ்ரீ பாஷ்யகாரரின்‌ சிஷ்ய பரம்‌பரையை உடைய ௮ந்த உபய வேதாந்தப் பிரவர்த்தகரே பகவத்‌ பிரீதி கரமாக இவ்வஸாதாரண நாடகத்தை உலகோர்க்களித்‌தவர்‌ ! |

நடி- அவருடைய கருணாப்‌ பிரபாவம்‌ அளவிடத் தக்கதல்ல தான்‌. ஆயினும்‌, சாந்தி ரஸம்‌ நாடகத்திற்கு எடுக்கப்‌ பட்டத்ல்ல வென்று ஒரு வகுப்பார்‌ கூறுகிறார்களே-

ஸூத்ர-மஹா ஸ்லாக்யமான சாந்தி ரஸானுபவஞ் செய்ய வல்ல ்‌ சபையோரும்‌, சாந்தி ரஸ பாவங்களை நடித்‌துக் காட்ட வல்ல “நடிகர்களும்‌ கிடைப்பது துர்லபமான காரியமென்ற அபிப்பிராயத்தினாலேயே தான்‌ நாடக நூல்களில்‌ சாந்தி ரஸம்‌ எடுக்கப்படுவதில்லை. ஆகவே தான்‌ அதை ஸபைகளில்‌ ௮பிநபிப்பது ௮சக்யமென்று ஒரு தரப்பரால்‌ ஒதுக்கப் பட்டது, ஆனால்‌, உண்மையில்‌, நவ ரஸங்களிலும்‌ ஸ்லாக்யமானது இந்த சாந்‌தி ரஸமே. ஸ்ருங்கார ரஸத்தில்‌ சபைபில்‌ அபிநயிக்கத்‌ தகாத பாவங்கள்‌ உண்‌டாகக் கூடும்‌-வீர ரஸ அபிநயத்தில்‌ ஒருவர்‌ மற்றொருவரை அவமதிப்பதே மேம்படுகின்றது– அத்புக ரஸமோ நம்பத் தகாக பொய் மிகுந்த விஷயங்களையே எடுத்துக்‌ காட்ட வல்லது- இதர சாதாரண ரஸ பாவங்களும்‌ ௮ற்ப மானவையே. சாந்தி ரஸமோ மனோ துக்கங்களைப்‌ போக்கி உண்மையை வெளிப் படுத்திச்‌ சந்‌தோஷத்தைக் கொடுக்க வல்லது காண்‌.

நடி.-வாஸ்தவமே! ஆயினும்‌, ஸாதாரண ஜனங்களும் பார்தது அனுபவிக்க வேண்டிய நாடகங்களில்‌, இந்தப்‌ பரமோத்‌ திருஷ்டமான சாந்தி ரஸத்தை மிகுத்திக்‌ காட்டக்‌ கூடுமா வென்று தான்‌ எனக்குச்‌ சந்தேகமா யிருக்கிறது –
ஸுத்ர–பெண்ணே ! நாடகத்தின்‌ உண்மையான தத்வத்தை நீ பூர்ணமாய்‌ அறிந்திட்டாயில்லை போலும்‌. நாடகானு குணமாக உபயோகப் படுத்தக் கூடத சாஸ்‌திரங்கள சாஸ்‌திரங்களல்ல-வித்யைகள்‌ வித்யைகளல்ல-சித்திரங்கள்‌ சித்திரங்களல்ல, கலைகள்‌ கலைகளல்ல, யோகங்கள்‌ யோகங்களல்ல, ஞானமும்‌ ஞானமல்ல.
நடி.--எப்படியாபினும்‌, சபல சித்தம்‌ வாய்ந்த என்‌ பேதை மனத்துள்‌, தாம்‌ கைக் கொண்ட காரியம்‌ மகா பிரயாஸகரமானதாகவே படுகிறது-துவேஷ வசத்தினராகிய பண்டிதர்களது கண்டன மொழிகளைக்‌ குறித்தே அஞ்சுகிறேன்‌. ஸுத்‌ர. பேதாய்‌! இதற்கோ அஞ்சுவது ? பகவத்‌ ஸங்கற்ப மாத்‌திரமாய்‌ கல்விக் களஞ்சியத்தினின்றும்‌’ நமக்குக் கிடைத்த, தோஷ ரஹிதமான ரஸ பாவ ஸ்ரேந்த யஸ்‌ மிகுந்த இந்த நாடகத்தை, தேர்ந்த நடிகர்கள்‌, பஷபாதமற்ற மஹா பெரியோர்கள்‌ நிறைந்த இந்த ஸபையில்‌ நடித்‌துக்‌ காட்டுவதைக்‌ குறித்துமா நீ அஞ்சுவது? பெரியோர்‌கள்‌ மனத்தில்‌ ௮வர்களையுமறியாது ௮ஸுூயை உதித்‌தாலும்‌ ௮து மின்னல் போல்‌ ஷணத்திலேயே மறைந்து ஓழியக்‌ கூடியதாகும்‌. துவேஷ வசப்பட்டவர்‌, வெளிக்கு வெறுப்புக் காட்டிய போதிலும்‌, மனத்துள்‌ நம்‌ நாடகத்தைப்‌ புகழ்ந்தே மதிப்பார்கள்‌ என்‌பதை நம்‌பு -ஆகவே ஸபையோரின்‌ ஆதரவை மேற் கொண்டு அன்னாரது ௮னுக்‌ரகத்தை வேண்டிக்‌ குதாகலக்துடன்‌ நடிகர்களை வரச் செய்‌து நாடகத்தை ஆரம்பிக்கலாம்‌ வா. (போகிறார்கள்‌)

அங்கம்‌ 1-முதற்‌ காட்‌சி -இடம்‌ :–ஸ்ருங்கார வனம்‌-வஸந்தன்‌ தொடர, ரதியும்‌ காமனும்‌ குதூகலத்‌துடன்‌ பிரவேஸம் –
காமன்‌:–
வஸந்தா !. விவேகனது வீண்‌ ‘ ‘ஆரவாரத்தைப்‌ பார்த்தாயா ?. ஸ்திரிகளின்‌ புருவமாகிற தனுஸ்ஸினின்‌றும்‌- அவர்களது அகத்தின்‌ சஞ்சலத்தைப்‌ புறத்‌தே காட்டுவன போன்ற விழிகளாம்‌ புஷ்ப பாணங்களாகிற கடைக் கண்‌ நோக்கு வெளிப்படுமாயின்‌, இந்‌த விவேகன்‌ எந்தத்‌ திக்கில்‌, தான்‌ இருக்கக்‌ கூடுமென்பதை அறிவனா-

வஸந்‌.—வாஸ்‌தவமே !–நண்ப! நமது மகாராஜா மகாமோகனுக்கே மங்கள முண்டாகுமாறும்‌, விவேகளுக்குப்‌ பீதியை யுண்டாக்குமாறும்‌, மன்மத மகோத்ஸவமாம்‌ உனது திருவிழாவை இப்பொழுதே நான்‌ தொடங்கப்‌ போகிறேன்‌.

காமன்‌.–௮தவே ஸரி, விவேகன்‌ ஜெயிக்கப்படுவது திண்ணம்‌, |

ரதி.-நாதா! உத்ஸவம்‌ உண்மையில்‌ எனக்கு உத்ஸாகத்‌தைக்‌ கொடுக்க வில்லையே ! தடுத்தற்கரிகானதோர்‌ விதியினால்‌, வெல்லுதற்கரிதான விவேகன்‌, மகாராஜன்‌ மகா மோகனது ஜென்ம வைரியாக அமைந்ததை நினைக்க நினைக்க, எனக்கு மனவமைதி உண்டாக வில்லை!

காமன்‌.–பேதமை மிக்கவளே! சமமானதோர்‌ வீர வைரியை எதிர்த்‌து வெற்றியுடன்‌ வெளிவர வேண்டிய சந்தர்ப்பம்‌ நமக்குக்‌ கிடைத்ததைக் கண்டு மகிழ்வதை விட்டு, அவ்‌ விவேகனது வைபவத்தைப் பாராட்டி புகழ்வதுவோ முறை? ‘ஹ! ஹ! ஹ! மேருவையே தனுஸ்ஸாகக்‌ கொண்ட முக் கண்ணனும்‌ என்‌ கரும்பு வில்லின்‌ கணைக்‌குட்பட்ட வனல்லவா

வஸர்‌.–.ராணி யறியாத ரகஸ்யமல்லவே ௮து ! மன்மத ராஜனின்‌ மகிமை பண்டை பரம்பரையாய்ப்‌ பரவி வருவ தல்லவா ? பிரம்மனும்‌ பத்தினியை வேதமோதும்‌ தன்‌ நாவிலேயே வைத்து மகிழ்வதேன்‌ ? ருத்‌ர மூர்த்தியும்‌ தனது வாம பாகத்தையே ஓர்‌ மாதுவுக்கு, அர்ப்‌பணஞ்‌ செய்து விட்டதேன்‌ ? யாவராலும்‌ கொண்டாடப்படும்‌ அந்தப்‌ பரதத்வமும்‌ ஆய்‌ச்சியர்க்கே ௮தீனமாய்க் கிடந்ததேன் ? மும்மூர்‌த்திகளுமே காமன்‌ கணைக்‌கிலக்காகிக்‌ கலங்கிக்‌ கிடந்தனரென்றால்‌, விவேகனது கூட்டத்தாராம்‌ ௮ற்பர்களா மதன பாணாவஸ்தையை மீற வல்லவர்கள்‌ –

ரதி-எனினும்‌, வைராக்யமென்னும்‌ கோட்டைக்குள்‌, முன்‌னறிவு மித்க மந்திரிகளது உதவியும்‌ விடா முயற்சியுமுடையவனாகிய ௮ஸகாய ஸூரனான விவேகன்‌ நமக்கு எக்கணம்‌ யாது இன்னல்‌ விளைவிப்பனோ என்‌ற கலக்கம்‌ என் மனத்தை விட்டு ௮கலத் தான்‌ இல்லை.

காமன்‌. –௮டி. பயங்கொள்ளி ! ஸ்திரீகளுடைய சரீர ௮மைப்‌பையே ஓத்த இந்த வில்லும்‌ நாணும்‌ ௮ம்புமே, இப்‌ பிரபஞ்சமனைத்தையும்‌ ஜெயிக்க வல்ல உன்‌ பர்த்தாவின்‌ கொடி கணைகள்‌ ஆகும் காண்‌. மதுரச்‌ சொற்‌களை யுடைய ஸ்‌திரீகளது பெயரையே கேட்ட மாத்திரத்தில்‌ ஒருவனது விரக்தியாதி சகல நற் குணங்களும்‌ இருந்த விடரம் தெரியாது பறந்தோடிப் போய்‌ விடாதா !
வஸந்‌, -ஸ்திரிகளது, குணங்களைப் பற்றி யோசிப்பது இருக்கட்‌ டும்‌. அவர்களிடம்‌’ தோஷத்தை எண்ணுவதற்காக அவர்களை நினைப்பதே போதுமே வைராக்யத்தை விலகி நிற்கச் செய்ய ! ஹ! ஹ! மத யானையாம்‌ மனததைத் தன்‌ தைர்யத்தினால்‌ அடக்கப்‌ பார்ப்‌பது-ஐராவதத்‌தைத் க தாமரைத்‌ தநதுவினால்‌ கட்டச் சமைவது ஓக்கும்‌.

ரதி.–ஏன்‌ ?– புத்தியால்‌, மோஷ பர்யந்தமான யாவற்றையும்‌ ஒருவன்‌ ஸாதித்துக்‌ கொள்ளக்‌ கூடுமென்பது ப்‌ரஸித்த மல்லவா ?

காமன்‌.–(கோபச்‌ சிரிப்புடன்‌) என்ன ₹ நான்‌ இருக்குமிடத்‌திலுமா ஸ்‌திரபுத்‌தி நிலைக்கக்‌ கூடும்‌ -அத்துடன்‌ கூட, க்ரோதனும்‌ என்‌ துணைக்கு வருவானாகில்‌ எங்களை எதிர்க்க வல்லவருமுளரோ – கோபாதீநனானவன்‌ புத்‌தியை யிழந்து செய்ததை மறந்து செய்ய வேண்டுவனவற்றை விடுத்து அஞ்ஞாந அந்தகாரத்தில் ஆழ்ந்து நாசமடைவது நிச்சயமல்லவா ? ௮ச் சமயம்‌ விவேகனால்‌ அக் கோபரதீநனனை அணுகவும்‌ முடியுமோ? விவேகனாலும்‌ ௮வன்‌ மந்திரிகளாலும்‌ நமது ஸாகஸங்கள்‌ ஆகக் கூடியனவோ !

ரதி-௮துகிடக்‌ கட்டும்‌.–நாதா | விவேகனாதியோர்களுக்கும்‌ நம்‌ கக்ஷியாருக்கும்‌ இப்படி. வீர வைரம்‌ ஏற்படக்‌ காரணமென்ன ?
காமன்‌.—காரணமா !–ஸத்வம்‌, ரஜஸ்‌, தமஸ் என்று முக்‌குணங்கொண்ட ஜீவாத்மாவுடன்‌, புத்தியென்ற பத்னியின்‌ சேர்க்கையால்‌, அவ் வக்‌ குணங்கள் மிகுந்த காலத்‌திலுண்டாகிய முக்குலங்கள்‌ தோன்றின-இக் குலங்களே முறையே, விவேகன்‌, ராகன்‌, மோகன்‌ முதலியோரதாகும்‌. இவற்‌றுள்‌, ஸத்வ குண மிகுதியால்‌,, ஸம்ஸார சுக துக்கங்களை த்வேஷிக்கிற விவேகன்‌, விஷ.யாநுபவங்களில்‌ தோஷத்தை ௮றிபவளாம்‌ ஸூமதியை மணந்து, தன் குலத்திற்கு ராஜாவாகத்‌ தனித்து நிற்கிறான்‌. ரஜஸ்ஸும்‌ தமஸ்ஸும்‌ மிக்க மற்ற இரு குலத்தினரும்‌ ஒன்று சேர்ந்து, மகா மோகனைச்‌ சக்ரவர்த்‌தி யாக்கிக்‌ கொண்டு, மோஷத்தில்‌ தோஷத்தையே ஆராயுந்‌ தன்மை யுள்ள துர்மதியை அவனுக்கு மனைவியராக்கி மகிழ்ந்து பெருகி விளங்குகின்றனர்‌.

ரதி.--அப்படியா ?…பிறகு?

காமன்‌.–-இக்குலத்தோர்‌ யாவருக்கும்‌ பிதாவாகிய ஜீவாத்‌மாவும்‌ மாதாவாகிய புத்தியும்‌, தத் சமயம்‌ மகா மோகன்‌ கக்ஷியின் மீதே ௮பிமானம்‌ மிகுந்துள்ளார்‌.. இதைக்‌ கண்டு சகியாக விவேகனது கக்ஷியினர்‌ தம்‌ கக்ஷி’ க்ஷீணித்து நசிக்க யிருப்பதைக்‌ கவனியாது ஜீவாத்மா வின்‌ ஸம்ஸார சுக போகத்தையும்‌, அத்தகைய விஷயாதிகளை விருத்தி செய்‌.து வரும்‌ எங்கள்‌ கக்ஷியினரையும்‌ வேரறுக்கக்‌ கங்கணக்‌ கட்டியுளர்‌

ரதி –உம் –அப்புறம்
காமன்‌–குரங்குகளுக்கும் ரஷஸர்களுக்‌ கும்‌ அரசர்களாம்‌ சுக்ரீவ விபீஷணாதிகளைப்‌ பிரமாணமாகக் காட்டி, ப்‌ரக்ருதியினிடத்தில் ஜீவாத்மாவுக்கு விரக்தியை உண்டாக்‌கி அந்த ஜீவனை இந்த விவேகனாதியர்‌ பலவிதத்‌ தொல்லைகளுக்கும்‌ ௮வஸ்தைகளுக்கும்‌. ஆளாக்கி வருகின்றனர்‌. இதனால்‌ நம்‌ பிதா, பிறர்‌ குற்றத்தைக்‌ காண்பதில்‌ பிறவிக்‌ குருடனாகவும்‌, பர நிந்தை சொல்வதில்‌ ஊமையனாகவும்‌, அவற்றைப் பற்றிக்‌ கேட்பதில்‌ பிறவிச்‌ செவிடனாகவும்‌, பரஸ் ஸ்திரிகளை வசப்பித்துவதிலும்‌’ ௮வர்‌களால்‌ வச்யப் படுத்தப் படுவதிலும்‌ இந்திரிய வியாபாரங்‌களற்ற வராகவும்‌ நபும்ஸகனாகவும்‌ மாறி, பேராபத்திற்குள்ளாக இருக்கிறார்‌. இத்‌தகைய ஆபத்‌தினின்றும்‌ எம் தந்தையை மீட்பதற்காகவே, ப்ராத்ருஸ்‌ ஸ்நேகத்‌தைப்‌ பாராமலும்‌ நாங்கள்‌ விவேகனாதியாரை ஓழிக்க வேண்டி, ஓரே பிரம்மாவினால்‌ படைக்கப்பட்டவராயினும் தேவாசுரர்கள்‌ தீராப்‌ பகைவாராய் இருந்தது போலே ஒருவருக்கொருவர்‌ ஜென்ம வைரிகளாயிருக்கிறோம்‌.

ரதி-ஐயையோ ! பெற்றோரது பேரானந்தங்களைப்‌ பிள்ளைகளே போக்க வழி தேடுகிறார்களே ! நாதா!–ஸகோதரர்களாம்‌ உங்களுக்குள்‌ யுத்தமொழிந்து ஒற்றுமை ஏற்‌படும்‌ மார்க்கங்‌ கிடையாதா

காமன்‌.–பைத்தியமே!புலி பசித்தாலும்‌ புல்லைத்‌ தின்னுமா? அர்த்தம்‌,காமம்‌ இவைகளையே. மிகப்‌ போக்யமாகக்‌ கொண்ட எங்களுக்கும்‌, நாராயணனே பரம போக்யமெனப்‌ பாடுபட்டு வரும்‌ எமது விரோதிகளுக்கும்‌, கனவிலும்‌ சமாதான மேற்படுவது முடியாத காரியமாகும் எங்களுள்‌ வெற்றி பலிஷ்டருக்கே! மகா மோகன்‌ எக் காரணத்தாலும்‌ ஸமாதானத்தை வேண்டான்‌. நானும்‌ உடன்‌
படேன்‌-

ரதி, –குல நாசகர்களாகிய விவேகனாதயோர்‌ மகா பலிஷ்டர்க ளாம்‌ உங்களை நசிக்கச் செய்ய உத்தேசித்திருக்கும்‌ உபாயங்கள்‌ தாம்‌ யாவையோ ?
காமன்‌.–காமினி ! ௮து ஸ்திரீகளிடத்தில்‌ பிரஸ்தாபிக்கத்‌ தகாததோர்‌ ராஜ ரகஸ்யமாகும்‌–
ரதி –(மன்றாடு பவளாய்‌) நாதா! என்‌ மீதாணை ! ! உமது நண்‌பர்‌ மீதாணை ! ராஜ ரகஸ்யமாயிலும்‌ யதார்த்தத்தை என்‌ னிடம்‌ வெளியிடத்தான்‌ வேண்டும்‌.
வஸன் – (தனக்குள்‌ பெருமூச்செறிந்து) ஹும்‌ விதி வலிது!(வெளிப்படையாய்‌) ஸகே- மகர த்வஜ ! ‘விரோதிகளின்‌ ரஹஸ்யங்களை வெளிப்‌ படுத்‌துவதில்‌ யோசனையேன்‌ ? அது முறையே யன்றோ ?
காமன்‌.– வாஸ்‌தவந்தான்‌–பிரியே ! ! அவர்களின்‌ உபாயத்தை அறிவிக்கிறேன் கேள்‌ -ஓவ்வொரு கர்மங்களிலும்- கர்த்தா நானல்ல, பகவானே அவற்றைச்‌ செய்விக்கிறான் -என்று ௮னுஸந்திக்கும்‌ ௮கர்த்ருத்வாபிமானம்‌, ஸாத்விக த்யாகம்‌ முதலிய விபரீத ஞானங்களை உதவியாய்க் கொண்ட நிவ்ருத்தி தர்மங்களாம்‌ பெரும் பேய்‌ ஜீவன் மேல்‌ ஆவேசித்து, புத்தியின்‌ . சேர்க்கையால்‌ ௮ந்த ஜீவனிடத்தில்‌ நமது குலத்திற்கே வேர்ப்புழு போன்றவளாம்‌ சாந்தி ஸ்வரூபையாகிய பரபக்தி யென்‌னும்‌ ப்ரஹ்ம ராக்ஷஸியைப்‌ பிறப்பிக்கப் போகிறது -௮ப்‌பரபக்தி யென்பாள்‌, வைராக்யம்‌ மிக்கு, ஐம் புலன்களையு மடக்‌கி , மகா உக்ரமான தபஸ்‌ செய்யுங்காலத்தில்‌, பகவானுடைய கருணா ப்‌ரபாவத்தால்‌, கோடி கைடபாஸுரர்‌களுக்குச்‌ சமானமானதோர்‌ ௮ஸுரன்‌, அப் பர பக்திக்குச்‌ சகாயனாகத்‌ தோன்றுவான்‌,—மவ்னம்

வஸந்‌.-(மனத்துள்‌) ௮வன்‌ வருகையே, ‘நம்மை நிர்மூல மாக்கும்‌ பகவானது ஸங்கல்ப ஸூர்யோதயமாகும்‌ !-.. (வெளிப்படையாய்‌) அத்துடன்‌ நிறுத்துங்கள்‌-பிறகு நடக்கப்‌ போவதைச்‌ சொல்லத் தகாது
ரதி.–(பயத்தினால்‌ பரபரப்புடன்‌ காமனைக் கட்டிக்‌ கொள்‌கிறாள்‌). ஐயையோ ! நாதா ! என்னைக் காரும்‌ ! என்னைக்‌ காரும் –

காமன்‌,–( ஆலிங்கனத்தால்‌ ஆனந்த பரவசனாகி), பிரியே! , மகா மோக ராஜனது சேனாபதியின்‌ வீர பத்னியா இப்படிப்‌ பயப்படுவது? ஹ!ஹ!- நான்‌ கூறிய தவ்வளவும்‌ வேதாந்திகளென்‌னும்‌ வழி போக்கர்கள்‌, மாளா வழியில்‌ நடக்கும்‌ களைப்பு தெரியாதிருக்கும்‌ பொருட்டு கற்பனை செய்‌து சொல்லிக்‌ கொண்டே. போகும்‌” கட்டுக்‌ கதையே யாகும்‌,-அவ்வளவும்‌ இந்தரஜால வித்தை !’ ஹ! ஹ! ஹ! என்‌ கரும்பு வில்லின்‌ நாணொலி கிளம்பிய மாத்திரத்திலேயே விரக்தியின்‌ வீட்டை நாடுபவனுமுளனோ ? மகா மோகனை ஜெயிக்க வல்ல உபாயமுமுளதோ ?
ரதி–மகாராஜனுக்கு மங்களமுண்டாக வேண்டியதே என்‌ கோறிக்கை.
வஸந் –-அப்படியே ஆகுக: மகா மோகனாதியோர்‌ உயிர்த்திருக்கும்‌ வரை , ஜீவாத்மா மூல ப்ரக்ருதியை நாடி விரக்திக்கு ஆளாவதில்லை யென்பது நிச்சயமே.
காமன்‌.–ஆம்‌! விவேகன்‌ முயற்சிகள்‌ வீணே ! யுத்தத்தில்‌ இறந்தும்‌ பிமைத்தெழுந்த ஸுத்ரீவ ஸைன்யங்கள்‌ போல்‌, காமத்தின்‌ சச்தியால்‌ நம்‌ குலத்தவர்களும்‌ புத்‌துயர்‌ பெறுவார்களே –
(திரைக்குள் )

அடே துரா சாரா ! ! லோக நாடக அரங்கத்தில்‌, ஸம்‌ஸாரமென்னும்‌ நாடகத்தில்‌, ஜீவாத்மா ப்ரபன்னென்‌னும்‌ வேஷந்தரித்து நடித்த மாத்திரத்‌திலேயே ஸந்தோஷத்தை அடையப் பெற்ற பிரபுவாகிய ஸ்ரீமந் நாராயணன்‌ தனது ஸாம்யத்தை ௮ந்த ஜீவனுக்குக்‌ கொடுக்‌கக்‌ காத்திருக்கையில்‌, வீண்‌ பிதத்றலேன்‌ ? பகைவரை வென்ற. கீர்த்தியும்‌, பிதாவை ரஷித்தலாகிய தர்மமும்‌,எத்தனித்த எம்‌ காரியத்தை நிறைவேற்றிய தாலாகிய ஸந்தோஷமும்‌ இக் கணமே எங்களை வந்தடையப் போகிறது காண்‌.

காமன்‌-(பயத்‌துடன்‌, பேச்சை மறைக்க வெண்ணி )பிரியே ! ஸூமதியோடு விவேகன்‌ நம்மை எதிர்த்து வருகிறான்‌.இடம்‌, காலம்‌, வ்லிமைகளை ஓர்ந்தறிந்தே எதிரி முன்‌ தோன்றுவது வீர லக்ஷண மாதலால்‌, தனித்திருக்கும்‌ நாம்‌ இச் சமயம்‌ அவர்கள்‌ கண்களில் படாது மறைவோம்‌. வாருங்கள்‌.
(போகிறார்கள்‌)

இரண்டாங்‌ காட்சி – இடம்‌ :—ஓர்‌ நதிக்கரை –விவேக ராஜனும்‌ ஸூமதி ராணியும்‌ பிரவேஸம் –
விவேக.–
நம்மைக் கண்டு ௮ஞ்சியோடும்‌ ௮ந்தப்‌ பாப சாரப்‌ பேய்களைப்‌ பார்த்தனையா ? நம்மையே யன்றோ பாபிகளென்று தூஷித்துத்‌ திரிகிறார்கள்‌ ! மோக மென்னும்‌ மாயையின்‌ ஸ்வபாவம்‌ இது தான்‌ ! பிறரிடத்தில்‌ இருக்கும்‌ குணங்களை ஓர்ந்து அறியாது, ௮வரிடம்‌ இல்லாத குற்றங்களை இருப்பது போல்‌ காண்பிப்பதும் தன்னிடம்‌ இருக்கும்‌ குற்றங்களை தெளிந்தறியாது, இல்லாத குணங்கள் இருப்பது போல்‌ பிரசுரித்திக் கொள்‌வதுமே யன்றோ மாயை !
ஸூமதி.- ஆம்‌, நாதா ! குரூபிகள்‌ தம்‌ முகத்தைக்‌ கண்ணாடியில்‌ காண்பார்களாகில்‌, தமது விகாரத்தை அறிந்து கொள்ளாமல்‌ கண்ணாடியிலேயே, தோஷத்கைக்‌ கூறுகிறார் களல்லவா ₹
விவேகன் –நன்றாய் உரைத்தனை -சுருங்கச் சொல்லி விளங்க வைத்‌தனை தத் வார்த்தத்தை ! எனது தர்ம பத்னியாம்‌ உன்‌ உதவியைக்‌ கொண்டு நான்‌ நிறைவேற்ற வேண்‌டிய கர்ரியததை இதோ ‘ஸங்கல்பித்துக் கொண்டேன்‌-ஜீவனுக்கு உள்ளம்‌ புறமும்‌ ஸஞ்சரித்‌து , ஜீவனைப்‌ பீடிப்பதையே தமது விளையாட்டாக உடைய மகா மோகனாதி பகைவர்களை வென்று, ஜீவனை ஸமாதியில்‌ நிறுத்திப்‌ பரமாத்மாவை அடைந்து க்ருதார்‌தனாகச் செய்ய வேண்டிய நியமங்களைக்‌ கண்ணுகம் கருத்துமாய்ப்‌ பெருக்குவதே எனது ஸங்கல்பமாகும்-

ஸூமதி.–சித்தம்‌. . ஆயினும்‌, நித்தியன்‌, நிர்மலன்‌, ஸ்வயம்‌ பிரகாசன்‌, ,ஆனந்த ஸ்வரூபன்‌, என்றெல்லாம்‌ போற்றப்‌ படுகிற ஜீவாத்மா, மகா கொடூரமான துக்க ஸாகரத்துள்‌ எப்படி ௮கப்பட்டு ஏன்‌ பரிதவிக்க நேரிடுகிறது ?

விவேக.--ஏனா ?–ஆகமப்‌ பிரமாணத்தை நம்புவதே அதற்கான பிரதியுத்திரமாகும்‌.-ஜீவன்‌ நிர்மலனே : நித்யனே : ஸ்வயம்‌ பிரகாசனே : ஆயினும்‌, ௮நாதியான கர்ம உபாதியால்‌ பாதிக்கப்பட்டு, ௮ந்தக்‌ கர்ம சேர்க்கையால்‌ மகா மோகன்‌ வசப்பட்டு துக்க ஸாகரத்தில்‌ மூழ்க நேரிடுகிறது. அந்தக்‌ கர்மமென்னும்‌ உபாதி நீங்கும் காலத்‌தில்‌ ஜீவனும்‌ ஸ்வயம்‌ பிரகாசத்துடன்‌ ஆனந்த ஸ்வரூபனாய் நிர்மலனாகி நிதயனாகக்‌ காணப் படுகிறான்‌. ‘ இயற்கை ஸ்வபாவத்‌துடன்‌ செயற்கை காரணத்தின்‌ கூட்டுதலா லுண்டாகும்‌ மாறுதல்களை நாம்‌ ௮னுபவத்தில்‌ காண்பதில்லையா ? வெள்ளை ஸ்படிகத்கினுடன்‌ செம்பருத்திப்‌ பூவைச்‌ சேர்த்து வைத்தால்‌, ஸ்படிகமும்‌ ரக்த வர்ணமாகச்‌ சோபிக்கிற தல்லவா ? அப் பூவை அப்புறப் படுத்‌துவோமாகில்‌ அப்படிகமும்‌ ஸ்வயம்‌ பிரகாசத்துடன் விளகங்கு கிறதல்லவா ?
ஸூமதி.–உண்மை யறிந்தேன்‌. ஸர்வஞ்ஞ ஸர்வ சக்‌தனான. ஸ்ரீ லஷ்மீபதியாம்‌ பரம காருண்ய மூர்ததி, கர்ம சம்பந்தத்‌தால்‌ ௮வதிப்படும்‌ ஜீவாத்மாவை இது காறும்‌ ஏன்‌ உபக்ஷித்தார்‌ ? |
லிவேகன்‌.–இதை ௮றியாயா? லீலை–கருணை என்லும்‌ நேர்‌ முரண்பாடு கொண்ட தேவிகளை ௮ங்கீ கரித்துப்‌ பராதீனனாகப்‌ பரவசப்படும்‌ லீலா விநோதன்‌, எந்தக்‌ கர்மமென்‌னும்‌ பந்தத்‌தினால்‌ ஜீவாத்மாவை சுக துக்கமென்னும்‌ நேர்‌ முரண்பாடு கொண்ட பிரவாஹ மத்‌தியில்‌ ஆழ்த்திக்‌ கரை காண முடியாது தவிக்கச்‌ செய்து ஆனந்திக்கிறானோ அதே கர்மத்தின் பலனாகவே சுக்ருதமென்லும்‌ வியாஐத்தைக் கொண்டு அந்த ஜீவனைக்‌ கர்ம பந்தத்‌தினின்‌றும் விடுவித்து ஸ்வயம்‌ பிரகாசனாக்குவான் –

ஸூமதி..-இதுவரையிலும்‌ ஜிவாத்மாவைக்‌ கவனியாத பகவான்‌, இனி இப்படிச் செய்ய முன் வருவான் என்பது என்ன நிச்சயம்
விவேக.-பேதாய்‌!! உனக்குமா சந்தேகம் ஒவ்வொரு ஜீவனுக்கும்‌, அநாதியாகவும்‌ விசித்ரமாகவு மிருக்கின்‌ற கர்மம்‌, வாஸனை, ருசி , ப்‌ரக்ருதி ஸம்பந்தம்‌ என்னும்‌ சக்கரச் சுழல்‌ உண்டு என்பது யாவரும்‌ ஒப்புக் கொண்ட விஷயமே யல்லவா –அச் சுழலில்‌ கர்மம்‌, பரிபாகப் பட்டுப்‌ பக்குவ தசையை: அடைய முயலுகையில்‌, ஓர் அனுகூல பரிபாகத்‌தில்‌, ஓர்‌ வ்யாஜத்தினால் , ப்‌ரதம ஆசார்யனான பகவான்‌, ஜீவன் மீது அனுக்ரஹித்து அவனை மோஷ ஸாம்ராஜ்யத்திற்கு ஆளாக்குவான்‌-அதுவரை, தாண்டு வதற்கரிய சமுத்‌ர மத்தியிலுள்ள லங்கா த்விபத்தில்‌ தச கண்டனால்‌ சிறை வைக்கப்‌ பட்டிருந்த சீதையைப் போல்‌, கரை காண முடியாத பவ சாகரம் சூழ்ந்த. சரீரமென்னும்‌ த்வீபத்தில்‌ இந்த ஜீவாத்மாவும்‌, ஞானேந்திரிய கர்மேந்ரியக்களாகிய பத்துத்‌ தலைகளை யுடைய மனமென்னும்‌ ராக்ஷஸனால்‌ பீடிக்கப் பட்டவனாய்ச்‌ சிறை வாஸம்‌ செய்ய வேண்டியது தான்‌- ஆஞ்சநேயனை முன்னிட்டுத்‌ தனது சிறை மீட்‌ச்சிக்காகப்‌ பகவானது வருகையை எதிர் பார்த்து அழுது வருந்திக் கொண்டிருந்த அந்தச்‌ சீதையைப் போலே இந்த ஜீவனும்‌, தகுந்ததோர்‌. ஆசார்யானுக்ரகம்‌ பெற்று பரிபக்‌குவமடைந்து பகவானது கிருபா கடாக்ஷத்தால்‌ தானிருந்து வரும்‌ சிறைனின்றம்‌ மீட்கப்பட வேண்டிய காலத்தை எதிர்‌ நோக்கி வருந்த வேண்டியதே. ப்ரக்ருதி ஸம்பந்தத்தால்‌ ஒளியிழந்த ஜீவனது தேவியாம்‌ புத்தியும்‌, ஆசார்யோபதேச பாக்யம்‌ கிடைக்கும்‌ காலம்‌ வரை தானும்‌ சக்தி யற்றவளாகவே தான்‌ இருக்க வேண்டி வருகிறது.

ஸுமதி.–கொடிது ! கொடிது! புத்திபுடன்‌ கூடிய ஜீவாத்மா வுக்கு மோக்ஷஸாம்ராம்யம்‌ கிட்டுவது துர்லபம் என்றே எனக்குத்‌ தோன்றுகிறது. ்‌

விவேக.—அப்படி. எண்ணாதே | தோஷ ரஹிதனானதோர்‌ ஆசார்யனது கடாக்ஷமாகிய ௮மிர்தத்தால்‌ ௮பிஷேபிக்‌கப் பட்ட ஜீவனுக்கே, பாக்ய வசத்தால்‌ பரப்பிரம்ம விஷயத்தில்‌ பரபக்தி யென்பது கைகூடும்‌. சமம்‌ தமம்‌ முதலிய நற்குணங்களின்‌ உதவியால்‌ என்னையும்‌ உன்‌னையும் கொண்டு அந்தப்‌ பக்தி பரீ்ணாம ஸமயத்தில்‌ ஓர்‌ யஞ்ஞம்‌ நடந்தேறும்‌-௮ந்தத் காரணத்தால்‌, பத்த ஜீவனாகிய யாகப் பசு, கர்மமென்னும்‌ . பாசத்தை அறுத்துக்‌ கொண்‌டு ஸ்ரீ மந் நாராயணனிடம்‌ ஓப்படையும்‌. ரஷண பாரத்தைப்‌ பரமாத்மாவிடம்‌ ஓப்படைத்‌த க்ஷணத்திலேயே, லஷ்மீ பதியும்‌ சரணாகதனான அந்த ஜீவனுக்குப்‌ பற்றில்லாததோர்‌ நிலையைச் செய்‌ து கொடுக்கிறான்‌. மோக் ஷஸாம்ராஜ்யத்தை ஜீவன்‌ அக் கணத்திலேயோ அல்லது ஜென்மாந்திரத்தலேயோ கோறுகிறபடியே சரணாகத ரக்ஷகன்‌ லபிக்கச் செய்வான்‌-ஆகவே வேதாந்தமென்‌னும்‌ பட்டணத்தை அறிந்து சேர்ந்‌தவனே, பகவானுடைய தயா ரூபமான்‌ ஒற்றை யடிப் பாதை வழியாய்‌ மோஷமாகிற பட்டணத்தை யடையக் கூடியவனாவன்‌. எனவே ஜீவன்‌ மோஷ ஸாம்ராஜ்யத்தை அடைவது துர்லபமல்ல என்பதை அறிவாய்‌.

ஸூமதி.–பிரபோ ! -அழுகிற குழந்தைக்குப்‌ பழத்தைக் காட்டிச்‌ சமாதானப் படுத்‌துவது போல்‌, எனக்கு இவ்வார்த்‌கைகளைக்‌ கூறியதால் மட்டும்‌ தெளிவு ஏற்படுமா ?மோஷத்தில்‌ ஆசை யுடைய புருஷர்களால்‌. பல தேவதைகளும்‌ உபாஸிக்கப்படுகையில்‌, ஸ்ரீலக்ஷ்மீபதியே மோக்ஷத்‌திற்கு மூல காரணனென்று .நீர்‌ . எப்படிச்‌ சொல்லக்‌ கூடும்‌? அந்த மூல காரணனை அறியப்‌ பலரும்‌ பிரமிக்‌கையில்‌, தாங்கள்‌ ‘௮வனிடத்தில்‌ முடிவான நிச்சயம்‌ வைக்கக்‌ காரணமென்ன -இந்த வேதாந்தங்களின்‌ ஸாரார்‌த் தங்களை நான்‌ ௮றிந்து ஜீவாத்மாவுக்குத்‌ தெரிவிமாறு உபதேசம் செய்தருள்வீராக-

விவேகன் – அப்படியே சொல்‌லுகிறேன்‌ கேள்‌ : தாக விடாயைப்‌ போக்கப்‌ பனித்‌ துளிகளால்‌ ஆகுமோ-சித்திரத்‌தில்‌ எழுதப்பட்ட ஆயிரம்‌ ஸூரியர்கனை ஓன்று சேர்ப்பினும்‌ துளி இருட்டாவது அகலுமோ ? ௮து போலவே ஸ்ரீயபதி விஷயத்தில்‌ செய்யப் படுகின்ற பரமபக்தி தவிர்த்து, இதர தேவதைகள உபாஸிப்பதால்‌ ஸம்‌சாரத் துக்கமும்‌ பந்தமுமாகிற இருள்‌ நீங்குமோ ? அவ் விருளை நீக்க வல்லது ௮ந்தப்‌ பகவானுடைய ‘ஸங்கல்பமென்னும்‌ ஸூர்யோதயாமொன்றே ! உன் மீதும்‌ ஆஸ்திகத்தின்‌ மீதும்‌ ஆணை யிட்டுக்‌ கூறுகிறேன்‌ நம்பு : ௮ஹ்ங்கார மென்னும்‌ முதலையால்‌ பீடிக்கப்பட்டு வருந்திக் கதறும்‌ சரீரி யென்னும்‌ யானையை வெகு வேகமாய்க் காத்தனின்றுமே முராரியின்‌ கருணா பிரபாவம்‌ உனக்கு, விளங்க வில்லையா ?

ஆகவே ௮ந்த லக்ஷ்மீ பதியை ௮டையவல்ல மார்க்கங்கள்‌ பக்தியும்‌ பிரபத்தியுமே. பக்தியோகஞ்‌ செய்ய சிலருக்குத் தான்‌ ௮திகாரம்‌ உண்டு. பிரபத்தியோ ஜாதி மத வித்யாஸமும்‌, ஸ்திரீ புருஷ வித்யாஸமுமின்‌றி எல்லோராலும்‌ அனுஷ்டிக்கசக் கூடிய எளிதான மார்க்கமே யாகும்‌. இந்தப்‌ பிரபத்தியைத்‌ தானாகவும்‌ செய்யலாம்‌. ஆசார்யனையும்‌ தனக்‌காகச்‌ செய்யும்படிப்‌ – பிரார்த்‌திக்கலாம்‌. குறி வைத்து: அடிப்பதற்குப்‌ பழக்கம்‌ வேண்டுவது போல, தானாகவே: ௮னுஷ்டிப்பதற்குப்‌ பழக்கம் வேண்டும்‌. இந்தப்‌ பிரபத்தி ஒரு க்ஷண காலத்தில்‌ நடந்தேறக்‌ கூடிய காரியம்‌. அனுஷ்டானத்தில்‌ ஏதேனும்‌ குறைவு நேரிடினும்‌ ஸ்ரீமந் நாராயணனுடைய பரம காருண்யத்தினால்‌ குறைவு குன்றி நிறைவு ஏற்படக்கூடியது. ஆனால்‌ பக்‌தி மார்க்கமோ கஷ்டமும்‌. பொறுமையும்‌ கூடிய மார்க்கமாகும்‌. இந்திரியங்களை அடக்கி நிச்சல நிர்மல மனத்துடன்‌, சதா பரந்தாமனைக்‌ கோறி அனுஷடிக்க வேண்டிய யோகமாகும்‌. ஒரே ஜன்மத்தில்‌ முடியக்‌ கூடாது போயினும்‌ போகும்‌. ஆயினும்‌, ஜன்ம ஜென்‌மங்கங்களாக விட்ட இடத்தினின்றும்‌ தொட்டுப்‌ பிடித்துப்‌ பூர்த்தி செய்து கொள்ளக்‌ கூடியது. சரணமடைந்தவன்‌ எத்தகை யோனாயினும்‌ அவனை ரக்ஷிக்க வேண்டியதே முறை யென்பது தொன்று தொட்டு ஸ்தாபிக்கப்‌.பட்ட தருமமல்லவா – ஆகவே, பிரபத்தி செய்‌தோரைப்‌ புறக்கணிக்க மாட்டான்‌ பரமாத்மா : எனவே யாவரும்‌ அறியத்தக்க’ தத்வம்‌ அந்த ஸ்ரீமஹா விஷ்ணுவே ! அதற்குப்‌. பிரமாணங்கள்‌ வேத வாக்யங்களே -இதை அறிகின்றவர்‌ ஸத்வம் மிகுக்த ஜீவன்கனே ! *மூத்தோர்‌ சொல்‌ வார்த்தை ௮மிர்தம்‌ ‘ என்பதும்‌ பொய்யோ –

ஸூமதி–நாதா? தெளிவடைந்‌தேன்‌. ‘தன்னுடம்பிலுள்ள வியாதியைத்‌ தானே அறிந்து போக்கிக் கொள்ள வழி தேடாத மூடர்களைப் போலல்லவா ஜீவன்‌ பரிதபிக்கிறது

குளவயி மோக்கணுூ ஸவ மி யங்க கஹாசயியா
ணவ ஸம ரூ ஸூயாவிணய ஹோயிக யிந்த கடா –
தஹ்வி ஜுயந்த ஹோந்த தண யிண்ணுணி ஹக்கணி ஓ
கஹகஹ கோவி ஹந்தணி ஹினம் முஹளே யிணஹம்

விவேகன் – ப்ரியே! உன்னைத் துணையாகக் கொண்ட எனக்கு இனி. வெற்றி கிடைப்பது திண்ணமே. சத்ருக்களை ஜெயிக்க விரும்பும்‌ என்‌ ஆசையாகிய நீர்த்‌ திவலை, ஸ்ரீயபதியின்‌: காருண்யப்‌ பிரவாகத்தினால்‌ பெரு நதியாக, விடா முயற்சி யென்லும்‌ கற்பகத்‌ தருவை! நனைத்து வளர்த்து என்‌ இஷ்டத்தைப்‌ பூர்த்தி செய்விக்கப் போகிறது சத்யமே: ஆகவே இது காறும்‌ ஸ்வபஷ பெருமையை நிலை நிறுத்துவதிலேயே கருத்துக்‌ கொண்டிருந்த நாம்‌, இனி நிர்ப் பயமாய்‌ பர பக்ஷத்தை நிராகரிக்‌கப்‌ போக்க வேண்டிய வழிகளைத் தேடுலோம்‌. வா
(போகிறார்கள் )

மூன்றாம் காட்சி -இடம் -கங்கைக் கரை யோரம் -ஓர் பூஞ்சோலைக்கு எதிரில் —விசாரணையும் ஸ்ரத்தையும் ப்ரவேஸம்

விசாரணை –சகி -வேர்வையும் களைப்பும் காணப்பட்டும் உத்ஸாகம்‌ குறையாது விரைந்து செல்லும் உன் கார்யம் தான் யாதோ
ஸ்ரத்தை--வேதாந்த ஸித்தாந்தம் அல்லாதவற்றைக் களைந்தெறியக் கங்கணம் கட்டியிருக்கும் விவேக மஹா ராஜனது ப்ரதிஜ்ஜை பூர்த்தியாக வேண்டி, மகாராணி ஸூமதி தேவியார்‌ ஓர்‌ மங்கள விரதம்‌ கைக் கொண்டிருக்கின்றனள்‌. அதற்‌காக, ஸ்ரீலஷ்மீபதியின்‌ பாத பங்கயங்களை ௮ர்ச்சிக்கத் தகுந்த தாமரை மலர்களைக்‌ கொண்டு வர எனக்கு ஆஞ்ஜை – அவைகளைத் தேடிக்‌ கங்கையை நாடிச்‌ செல்கிறேன் இவ்வளவு ஸ்ரமப்பட்டுக் கொண்டு –

விசா. -கங்கையும்‌ அதோ நெருங்கி விட்டது -இந்தப்‌ பூஞ்‌ சோலையில்‌ சற்று இளைப்பாறிச்‌ செல்லலாமே-
ஸ்ரத்‌தை – செய்தால்‌ போகிறது . “நீ: இந்தப்‌ பிரதேசம்‌ வந்த காரணம் என்ன-
விசா-விவேக ராஜனின்‌ பிரதிஞ்ஞையைக்‌ ‘கேட்டறிந்த மகா மோகன்‌ கோபாதீனனாகி , ஜீவாத்மாவைப்‌ பல விதத்‌திலும்‌ பீடித்து, கபட யுக்திகள்‌ செய்து புத்தி மாறாட்‌டத்திற்கு ஆளாக்கி வருத்துவதற்கு ஏற்பாடு செய்து வருவது நம் ராணியாருத்துத் தெரிந்தது -தக்ஷணமே விரோதிகளது சூழ்ச்சிகளை சேனாபதியாகிய வ்யவசானனிடம் ஏகாந்தத்தில் தெரிவித்து வருமாறு ஸூமதி தேவியார் என்னை அனுப்பி இருக்கிறார்கள் –

ஸ்ரத்தை--பேய்களின் விவாகத்தில் கழுதைகள் படுவது போல் தான் மஹாமோஹன் பிரயத்தனத்தில் கபட வாதிகளின் கோலாகலம் -இவர்கள் கொள்கை நிலையற்றது -சாத்தியமே நித்யமானது -விவேக ராஜனே முடிவில் வெற்றி பெறுவார் காண் –
விசா -அப்படியே தான் ஆக வேண்டும்-நாழிகையாகிறது -நான் சேனாதிபதியை நாடிச் செல்ல வேண்டும் –
ஸ்ரத்தை–செய் -நானும் மலர்களைக் கொய்து செல்கிறேன் -சீக்கிரத்திலேயே இருவரும் அரண்மனையில் திரும்ப சந்திப்போம் –
(போகிறார்கள் )

நான்காம்‌ காட்சி -வாத மண்டபம் –விவேக ராஜனும் சேனாபதி வ்யவசாயனும் ப்ரவேஸம்

விவேக.–பாதகங்களைப்‌ பரவச் செய்யும் மஹா மோஹனே நிஷ்காரண த்வேஷம் கொண்டு கலகத்துக்காகவே கபட ஸித்‌தாந்‌திகளை ஏற்படுத்தி அன்னாரது சிஷ்ய வர்க்கங்களை விருத்தி செய்வித்து என்‌ அபிஷ்டத்தைக் கெடுக்கப் பார்க்கிறாய்‌–இதோ நானும் என் ஸித்தாந்திகளையும் சிஷ்யர்களையும் பரவச்செய்து மோஹித்த ஜீவனை விடுவிக்கிறேன் பார் அப்யாசங்களின் நின்றும் -என் கோறிக்கை நிறைவேற ஈடேற ஸ்ரீ ஹயக்ரீவர மூர்த்தி தான் அனுக்ரஹித்து அருள வேண்டும்(த்யானம் செய்கிறார்கள்)

ஸமாஹாரஸ் ஸாம்நாம்‌ ப்ரதிபதம்ரு சாந்தாம யஜுஷாம்‌
லய:ப்‌ரத்யூஹாநாம்‌ லஹரி விததிர் போத ஜலதே:
கதாதர் பஷுப் யத்ப்‌ரதி கதக கோலா ஹல பவம்‌
ஹாத்வந்தர் த்வாந்தம் ஹய வதந ஹேஷா ஹல ஹல

வ்யவ.–பிரபோ! வெற்றிக்குச்‌ சற்றும்‌ சந்தேகமில்லை, புருஷனுக்கு வேதாந்தத்தில்‌ உண்மையான ஞானம்‌ உம்மால்‌ உண்டாக்கப்பட்டு விட்டது. ஸ்ரத்தை குறைவு மாத்திரமே விலக்கப்‌ பட வேண்டியதாயிருக்‌கிறது -‘சத்ரு பக்ஷத்தைக்‌ களைவதற்காகத்‌ தம்மால்‌ நியமிக்கப்பட்ட வாதத்துடன்‌ வேதாந்த ஸித்தாந்தம் அடித்தார்‌ இதோ வருகிறார் பாரும் –
[அவ் விருவரும்‌ ஓர்‌ புறமாய்‌ நின்று கவனிக்க ஆசார்ய சிஷ்ய பாவனையுடன்‌ ஸித்தாந்தமும் வாதமும்‌ பிரவேசம்‌. ]

ஆசார்யர் -ஆயுஷ்மன்‌ ! பந்தக்காலை ௮சைத்தசைத்தே மணலிலிறக்கி உறுதி செய்வது போல சத்ருவாதிகளாகி ராஷஸர்களுக்கு ஹநுமானை யொத்த உன்னால்‌ நமது வேதாந்த தத்வார்‌த்தங்கள் திடமாக ஸ்தாபிக்கப்படும் என்று நம்புகிறேன்-

சிஷ்யர் -பகவன் –சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறார் –

உபிவீதி ந மூர்த்வ புண்ட்ர வந்தம் த்ரிஜகத் புண்ய பலம் த்ரிதண்ட ஹஸ்தம்
சரணாகத ஸார்த்த வாஹ கந்த்வாம் சிகாய சேகர சாலிநம் பஜாமி –

ப்ரதிஷ்டாபி வேதாந்த ப்ரதி ஷிப்த பஹிர் மத
பூயாஸ்த்ரை வித்ய மாந்யஸ்த்வம் பூரி கல்யாண பாஜநம்

ஆசார் – ஆயுஷ்மன்‌ ! பரமத கண்டனஞ்‌ செய்து நிகமாந்த ஸித்தாந்தத்‌தை ஸ்தாபித்து ஸர்வ மங்களத்துடனும்‌ விளங்குவாயாக
(ஒரு திவ்ய பவித்ரத்தைக் கொடுக்கிறார் )
சிஷ்யர்
–பவித்ரத்தை வாங்கி சிரமேல் அணிந்து விரல்களில் அணிந்து கொள்கிறார் ) கேட்க யோக்யதை உள்ளவன் என்று கருதப்படுவேனாகில்‌ சில சந்தேகங்களைக்‌ கேட்டு நிவர்‌த்தித்திக்‌ கொள்ள ஆசைப்படுகிறேன்

ஆசார்யர் -ஸ்ரேயஸ் மிகுந்த சிஷ்யனுக்கு ஸம்ஸயம் வாய்த்த போது சொல்லத் தகாததும் உண்டோ -உன் ஸம்ஸயம் யாது –

சிஷ்யன் –பகவன் -வாதத்தில் வெற்றி பெற்றவர் ஸ்மஸாநத்தில் மலட்டு மரமாகப் பிறப்பார்கள் என்பது மஹ ரிஷிகளின் வாக்காயிற்றே -அப்படி இருக்க அடியேன் எதிரிகளை வாதித்து ஜெயிக்க வேண்டும் என்று எப்படி விரும்புவது –

ஆசார்யர் -பத்ர நன்றாய்க் கேட்டனை -விதி நிஷேதங்களாகிற செய்யத் தக்கனவும் செய்யத் தகதானவும் ஆகிற கார்யங்கள் யாவும் –வர்ணம் ஆஸ்ரமம் ஜாதி கோத்ரம் ப்ரவரம் குலம் சரணம் இடம் காலம் இவைகளைப் பொறுத்ததல்லவா -விச்வாமித்ரரது நியமனப்படி ஸ்ரீ ராகவன் யாக ரக்ஷணம் செய்தது போலே நீயும் என்னுடைய அதிகாரம் பெற்றவனாய் விரக்தர்களோடு பிரசங்கிக்கும் வேளை தவிர்த்து பிரதிவாதிகளை எதிர்க்கும் காலத்தில் பலை அதி பலை என்பதைக் போன்ற வீரவாதம் விதண்டா வாதங்களால் ஜெயிப்பாயாகில் இத்தகைய விலக்குகளுக்கு இலக்காக மாட்டாய் –

சிஷ்‌-பாக்யம்‌? எந்த ஸித்தாந்தத்தை ஆதாராமாக வைத்துக் கொள்ள வேண்டுமோ அதை அடியேனுக்கு அனுக்ரஹித்து அருள வேண்டும் –

ஆச்சார் -பத்ர ஸ்வ கோஷ்ட்டி வாதங்களில் இரு கக்ஷியினரும் ஒப்புக் கொண்ட ப்ரமாணத்திலேயே நிற்கக் கடவாய்–பராசரர் வியாசர் சுகர்‌, செளநகர்‌, போதாயனர்‌ முதலானோரது வழிகளைப் பற்நியதான நமது ஐந்தாறு கிரந்தங்கள்‌ இருக்கின்றன; அவைகளை ஆதாரமாக வைத்துக் கொண்டு, நீ கூறும்‌ பிரமாணங்களும்‌ ‘ யுக்திகளும்‌ ஸபையோர்களது மனத்‌தில்‌ ௮ழுந்தி அவர்களை மகிழ்விக்கக்‌ கூடியனவா யிருத்தல்‌ வேண்டும்‌
சிஷ்யன் -ஒரு சம்சயம்

ஆசார்‌. என்ன

சிஷ்ய -தானே தர்ம உபதேசம் செய்து அதற்கு விரோதமாக ஜீவன்களை நடக்கும்படித் தானே நியமிக்கிற பகவானை எப்படி ஆப்தன் என்று சொல்லக் கூடும் –

ஆசார் -ஓ ஓ மிகவும் ஸூஷ்மமான அர்த்தத்தையே கேட்டனை

சிஷ் –மேலும் எப்பேர்க்கு ஒத்தவனுக்கும் சிற்சில காரணங்களினால் எதனாலும் தடுக்க முடியாததாக சம்பவிக்கக் கூடிய பாபங்களை விட்டுவிட வேண்டுமென்று விதித்திருக்கிறதே -அது எப்படி ஆகக் கூடியது –

ஆசார்‌. -௮தி ஸூஷ்மமான கேள்வியே இ து!

சிஷ் –தவிற தன்‌ நியமனத்தினுலே பாபாதிகளில்‌ பிரவேஸிக்கும்‌ ஜீவலுக்கும்‌, அந்தப்‌ பகவான்‌ தானே தண்‌டனைகள்‌ விதிப்பது எப்படி நியாயமாகும்‌?

ஆசார்‌.-நன்றாய்க்‌ கேட்டனை! ‘இவைகள்‌ எதிலும்‌ ஒருவித விரோதமுமில்லை.-ஏனெனில்‌, கர்மம்‌ என்னும்‌ ஒரு காரணமே இம் மூன்று கேள்விகளுக்கும்‌ ஏற்ற சமாதானமாகிறது. பகவானது இச்சை, ௮நாதியான கர்ம வாஸனையின்‌ காரணத்தால்‌ ஜீவ்னைத்‌ தடுக்க முடியாக பாபத்திற்‌குள்ளாக்குகிறது. அந்தக்‌ கர்ம வசமானவனுக்கும்‌, ஸுஹ்ருதம்‌ பரி பாகம்‌ ௮டையுங்‌ காலத்தில்‌, அந்தப்‌ பாபகங்களயும்‌ தடுக்க வல்ல கர்மங்களினாலேயே பாபங்களை நிவ்ருத்தி செய்யப்‌ பிரயத்தனம்‌ ஸம்பவிக்கும்‌. ௮ப்‌படிக்கல்லாதவனுக்கு, அவனவன்‌ கர்மானுஸாரமான பலம்‌ லபிக்க வேண்டியதே முறை. ஆதலால்‌, பகவான்‌ ஆப்‌தனென்பதிலும்‌, பாபம்‌ நிவ்ருத்‌திக்கக் கூடியதென்‌பதிலும்‌, தண்டனை ௮வஸ்யமே என்பதிலும் வேண்டல்‌ விரோதம் ஏதும் இல்லை யல்லவா –

சிஷ்யன் -(குதூகலத்துடன் ) தெளிந்தேன்‌ ‘தெளிந்தேன்‌ ‘- (திரும்பிப்‌ பார்த்‌து) ௮டே மூர்க்கர்களே ! எங்கள்‌ மதப்‌ பெருக்கைச்‌ சிறிய தென்றா ௮வமதிக்‌கிறீர்கள்‌? ௮நேகம்‌ கந்தைகளால்‌ முடிந்து ஒன்றாக்கப் பட்ட உங்கள்‌ ஸித்‌தாந்தங்கள்‌ யாவற்றினையும்‌ இதோ கிழித்தெறிந்து உதறி யெரிகிறேன்‌ காணுங்கள்‌?, என்ன ?…என்ன (செவி சாய்த்துக் கேட்டு) இது புது மதமா – ஹ ஹ ஹா ! (கை கொட்டிச்‌ சிரித்‌து) எந்தப் பொருளும் உண்டாகும் பொழுது புதியது தான்‌. நாளா விருத்தியில்‌ இந்தப்‌ புதியதே பழையதாக . விடுகிறது ! புதியதும்‌ பழையதுமா யிருத்தல்‌ குணத்தக்கும்‌ தோஷத்துக்கும்‌ காரணமாகாது. எது வஸ்துவின்‌ உண்மையை ௮னுஸரித்ததோ ௮துவே புத்திசாலிகளால்‌ நம்பத் தக்கதாகும்‌. எம்‌ மதமும்‌ புதிய தல்லவே !

ஆசார்‌.–பத்‌ர! கபட வாதிகளைப்‌ பேதித்தெறியக்‌ கூடிய யோக்யதை பெற்றுள்ள உனக்கேற்ற ஸபாத்யக்ஷரும்‌ ஸப்யரும்‌ இல்லையே என்று தான்‌ சிந்திக்கிறேன்‌.

விவேக. –(ஒரு புறமாய்‌: ஸேனாபதியுடன்‌) ஸேனாபதி! நாம் இவர்கள் முன்‌ தோன்ற இது தான்‌ ஸமயம்‌ (முன்‌ வந்‌து நமஸ்கரிக்கின்‌றனர்‌. )

ஆசார. -ஸர்வ மங்களானி பவந்து.! ஹே ராஜன்‌ ! கோமுக வியாக்ரர்களை நிக்ரஹிக்கும்‌ பகவான்‌, உம்மை ரக்ஷித்து வேதத்தை நிலை நிறுத்திக்‌ கொள்வாராக !
விவேக.–பாக்யம்‌ !
ஆசார்‌.–ராஜன்‌ ! நற் சமயத்தலேயே வந்தீர்கள்‌ !: உமது இஷ்ட பூர்த்தியை இந்தச்‌ சிஷ்யன்‌ மூலமாய்‌ ௮டைவீராக! உமது ஏவல்களைச்‌ செய்து முடிக்கச்‌ சித்தமாய்‌ உளன்‌ இவன்‌.

விவேக–நியமனம் -சிஷ்யனை நோக்கி -சவும்ய ! நீரே வாதிராஜனாகுவீர்‌! ஸாத்விகர்களது சேர்க்கையும்‌ அனுக்ரஹமும்‌ கிடைக்கும்படி நடந்து கொள்ளும்‌. பெரியோர்களது அனுஷ்டானத்தையே நிலை நிறுத்தும்‌. ப்ரஹ்ம வித்துக்களுடைய அபசாரம் பெறாதேயும் -ஸர்வாபசாரங்களையும்‌ பொறுக்க வல்லவனான ஸ்ரீமந்‌ நாராயணனிடத்திலேயே எல்லா பாரத்தையும்‌ ஒப்புவித்து, ௮வனது ஆஞ்ஞானுக்ஞா காரியங்களையே செய்து கொண்டிரும்‌. வேதாந்த வாக்யங்களையே சதா பரிசயம்‌ செய்து கொண்டிரும்‌. பெரியோர்களுக்கே சர்வதா சிச்ரூஷை செய்து கொண்டிரும்‌. வேதாந்த. விரோதிகளை திரஸ்காரஞ்‌ செய்யும்‌,

ஆசார.-ஆயுஷ்மந் ! ஸாவதானத்துடன்‌ கேட்டுக்‌ கொள்ளும்‌. அவ்வளவையும்

சிஷ்‌.–௮னுக்ரஹம்‌!

விவேக–ஓரு பானை சாதத்திற்கு ஒரு ௮விழே பதம்‌ போலவும்‌, மாற்றுப்‌ பார்க்கும்‌ நிமித்தம்‌ தங்கக் கட்டி பூறாவாகவும்‌ உரைக்கப்‌ படாதது போலவும்‌, ப்‌ரமாண மார்க்‌கத்தை விட்டு நழுவின முக்யாம்சங்களையே எடுத்து, கோடி. காண்பிப்பது போல, வாதிகளை வென்றால்‌ போதுமானது.

சிஷ்‌.–உத்திரவு -என்னுடன்‌ வாதத்தித்கு வருபவர்கள் வரட்டும்

ஜயதி ஸகல வித்யா வாஹிநீ ஜென்ம சைலோ
ஜனிபத பரிவிருத்தி ஸ்ராந்த விஸ்ராந்தி ஸாகீ
நிகில குமதி மாயா சர்வரீ பால ஸூர்யோ
நிகம ஜலதி வேலா பூர்ண சந்த்ரோய தீந்த்ர

(திரைக்குள்‌) ஸேது முதல்‌ ஹிமாசலம் வரையிலு முள்ள எந்த ஸித்தாந்த வாதிகளையும்‌ நாங்கள்‌ லக்ஷியஞ்‌ செய்ய மாட்டோம்‌.” ।
வ்யவ.–கேட்டீர்களா -கபட வாதிகளது வீர வாதத்‌தைக்‌ கேட்டீர்களா ? |

சிஷ்யன்–கேவலம் தமது உத்ஸாகத்தையே சாதனமாகக் கொண்ட கடட வாதிகள் எல்லோரும் ஏக காலத்தில் எதிர்த்தாலும் எனக்கு எதிர் நிற்க மாட்டுவரோ -குருடனுக்கு குருடன் கோல் கொடுக்கும் கதை யல்லவா இவர்கள் வாதம் – நம்‌ யதிராஜனால்‌ பிரகாசிக்கப்பட்டதும்‌, ௮ஞ்‌ஞானமென்னும்‌ இருட்டிற்கு விடியற்காலமானதுமாகிய சரீர சரீரி பாவமென்னும்‌ ப்‌ரதிதந்திரத்தை எவன்‌ அறின்றானோ, ௮நத மஹானைக் கண்ட மாத்திரத்திலேயே , தத்தம்‌ மதஸ்தாபனத்திலேயே குதாகலித்துத் துள்ளும்‌ கபடவாதமென்னும்‌ பெரு முழக்கம்‌ கணப்‌ பொழுதில்‌ விநாசமடையுமல்லவா –

வ்யவ.–நன்கு ‘கூறினீர்‌:! இனி, ப்‌ரதிவாதிகளது கொள்‌கைகளை ஒவ்வொன்றாகக்‌ கண்டனஞ்‌ செய்வோம்‌–.

சிஷ்‌ –அப்படியே ! !

ஆசார்‌--ஸவ்மய ப்‌ரகிருதியையும்‌ ஜீவாத்மாவையும்‌ பிரித்‌து விட்டு , பரபுருஷன்‌ என்ற ஒருவன்‌ இல்லை யென்னும்‌ சாங்கிய மதத்திற்கு. என்ன பதில்‌ சொல்லுவாய் ‘

சிஷ் -ஆசார்யரையும் சபையோரையும் வணங்கி — ப்ரக்ருதியும்‌ ஜீவாத்மாவும்‌ ஸ்ருதி பலத்தால்‌ இவர்களால் அங்கீகரிக்கப்‌படுமாயின்‌, ௮தே அநேகம்‌ ஸ்ருதிகளுக்கும்‌ நாதனான அந்தப்‌ பரமபுருஷன்‌ மாத்திரம்‌ ஏன்‌ கிடையாது? யோக சாஸ்‌திராப்பியாச காரணத்தால் , பரம புருக்ஷனுடைய ஐச்வரியத்தைப்‌ பிரதிபிம்பத்துக்குச்‌ சமானமாகக்‌ கூறுகிறார்களே இவர்கள்‌–ஈஸ்வரனுக்கு ஞானம்‌, சத்தி, பலம்‌ முதலிய குண ஐச்வர்யங்கள்‌ ஸ்வபாவமாகவே உண்டு என்கிற வேத-வாக்கிரங்களக்கு ஏன்‌ பதில்‌ சொல்ல வில்லை

வ்யவசா -நன்றாகக் கண்டனம் செய்தாய் -கணாநாதருடைய மதத்திற்குப் பதில் என்ன –

சிஷ் -பதிலா ?–. மோஷானுபவம்‌ ஆனந்தரூபமன்று என்றும்‌, ௮ஃது பாஷாணத்தை யொத்தது என்று மல்லவா கூறுகிறார்கள்‌ இந்த வாதிகள்‌ ? அப்படியாயின்‌, கும்பகர்ணனுடைய ௮னுபவமே பரம சுகமானதாகிறது இவர்கள்‌ வாதப்படி ! ௮வன்‌ தூக்கம்‌ சாபமல்ல, அநுக்ரஹமே ஆகிற தல்லவா இந்தக்‌ கக்ஷியின்படி.

வ்யவ.–ஒரே வார்த்தையில்‌ கண்டித்‌து விட்டீர்‌ -கணந தோறும்‌ ப்ரபஞ்சம்‌ நாசமடை தென்‌று வாதிப்‌போரை ௮டக்கும்‌ முறை?

சிஷ்ய –பலமற்ற அக் கஷியினோரைப்‌ பற்றியும்‌ பேச வேண்‌டுமோ ?. ஒருவரை யொருவர்‌ பொய்யனென்று சொல்‌லிக்‌ கொள்ளும்‌ பல பிரிவுகள்‌ கொண்ட இவர்கள்‌, தங்கள்‌ தங்கள்‌ வாதத்தை ௮றிந்து ஸ்‌திரப்படுத்தப்‌ பார்க்கிறார்களா, அல்லது, சொல்வதை அறிந்து கொள்‌ளாமிலேயே பொய்‌ என்று பிதற்றித்‌ திரிகிறார்களா –

வ்யவசா -ஸ்லாகையோடு. சுருக்கமமாயும்‌ : கம்பீரமாயும் இருக்கறது பதில்‌!–, ஆயினும்‌, உலகமே பொய்‌யென்று ஓரு சாரார்‌ வாதிக்கிறார்களே -அவர்களுக்கு என்ன பதில்‌ –

சிஷ் -தன்னைப் பெற்ற தாய் மலடி என்றும் வாதிப்போருடன் பிரதிவாதம் செய்து என்ன பலன் –
திரைக்குள் பிசாசுகள் பிசாசுகள் என்ற கூக்குரல்

வ்யாவ –அது ஒரு மதஸ்தர் கூக்குரல் -அவர்களையும் நிராகரிக்க வேண்டும் நாம்

சிஷ் –-தவறுதல்‌ தவிர்த்த வேறு விஷயம்‌ இவரிடம்‌ இடையாது, *உண்டு ” என்பதை *இல்லை’ யென்பார்கள்‌- இல்லை ” என்று கூறியதையே *உண்டு ‘ என்பார்கள்‌. முரண்பாடுகொண்ட இவர்கள்‌ வார்த்தைகளே இவர்‌கள்‌ மதத்தைக்‌ கண்டிக்கப்‌ போதுமானதாகும்‌. வேத மார்க்கத்தை இவர்கள்‌ தூஷித்ததால்‌, தேவதைகளை ‘ இவர்களுக்குத்‌ தகுந்த தண்டனை விதித்திருக்கிறா கள்‌. தங்கள்‌ தலைமயிரைத்‌ தாங்களே பிடுங்கிக்‌ கொள்ள விதிக்கப்பட்டிருக்கும்‌ இவர்களது ௮வஸ்யே இவர்‌களுக்குப்‌ போதுமான கண்டன தண்டனையாகும்‌.

(உள்ளே, பேரிரைச்சல்‌, இடி முழக்சம்‌, காரிருள்‌, கனத்த மழை )

வ்யவஸா – கேட்டீர்களா ! ஸூர்யஸ்தம்பநம்‌ முதலிய, செய்து வரும்‌ திகம்பரர்‌ நமது கண்டனத்தைக்‌ கண்டு சகியாது, வஞ்சனையால்‌ இந்த ௮கால மழையை உண்டாக்கி ஜனங்களை மருளச் செய்து தமது சித்தாந்தத்திலேயே நம்பிக்கை யுண்டாக்க முயல்இறார்‌கள் ! இவர்களை இக் கணமே கண்டித்தல்‌ வேண்டும்‌!

ஆசார்‌ -தன்னைச்‌ சரண மடைந்தவர்கள்‌ ௨ழன்று தவிக்கும்‌ ஸம்ஸார ஸாகரத்தைப்‌ பானஞ் செய்த, ஜீவனைக்‌ கரை யேற்றுவிப்பவனான ஸாக்ஷாத்‌ பகவான்‌, இவ் வஞ்சனைகளைத்‌ தானே கண்டனஞ் செய்யக்‌ காத்திருக்க, நாம்‌ கவலை கொள்வானேன்‌?

(இரைச்சலடங்‌க, மழை நின்று, வெளிச்சம்‌ பிரசாசிக்கிறது )
யாவரும்‌.-
ஆச்சர்யம்‌! ஆச்சர்யம்‌! பகவான்‌ பிரஸந்நனே – பிரஸந்நனே-

அங்கம் 1—நான்காம்‌ காட்சி

விவேக–குரோ தேவரீர்‌ சிஷ்யர் மற்றொரு வேத வ்யாஸர்‌ போல,பாஞ்சராத்‌ர மஹிமையைத்‌ தெளிவுற ஸ்தாபிததார்‌ ! கெளமாரில கக்ஷியாரது கொள்கையையும்‌ கண்டனம் செய்யும்‌ மார்க்கம்‌ கூறில்‌, நம்‌ சித்தாந்த வாதம்‌ பூர்ணமாகு மென்று நம்புவேன்‌,

ஆசார்‌-வேத ஸம்‌ரக்ஷகர்களாயும்‌, வேதாந்தத்தை விட்டவர்களாயு மிருக்கிற கெளமாரிலராதியோர்‌, சந்தோஷப்படுத்தவும் பயமுறுத்தப்படவும்‌ தக்கவர்‌களே.

சிஷ் –தலையில்லாத உடல்‌”. அவ்வளவே தான்‌ ௮வர்‌ கள்‌ சித்தாந்தம்‌.

விவேக-பாஷண்டிகளால் சூழப்பட்ட இந்தக் காலம்‌, மஹா ஸமர்த்த வாதியான உம்மால்‌ புண்யமடைந்ததாகவே ஆகிறது !

வ்யவ.–அரசே! இவருக்குத்‌ தகுந்ததோர் சம மானம் செய்தருள்வேண்டும்‌.

சிஷ்‌-.ஆசார்ய ஸ்ரேஷ்டரது அனுக்‌ரகமும்‌, இந்த மகாராஜனது கடாஷமும்‌ கிருபையுமே எனக்குப் போதுமான சம்மானமாகும் –

விவேக, பகவந்‌ ! சேனாபதி கூறியது நியாயமே–. ஸ்வாமின்‌! தாங்கள்‌ பூஜ்பரே ! சிஷ்ய.– ஆயின்‌, அடியேனது ஆசார்ய ஸ்ரேஷ்டரான இந்த பகவானே தமது பூஜைக்கு ௮ர்‌ஹராகிறார்‌-
ஆசரர்‌–என்‌ நியமனத்தால்‌ நீயும்‌ சம்மானிக்கத்‌ தகுந்தவனே!

விவேக..-பகவரந் ! தேவரீரது சிஷ்யர்‌ வேதாந்த ஸித்தாந்தத்தை ஸ்தாபித்தார்‌. இவரால்‌, தத்வ ஞ்ஞானம்‌ மிகவும்‌ உறுதியாக உண்டாக்கப் பட்டதென நகரத்தில்‌ தண்டோரா போடப்படட்டும்‌. இந்தக்‌ கடகத்தைத்‌ தன்‌ இடது காலில்‌ இந்த வாதி கேஸரி ௮ணிந்து கொள்ள வேண்டும்
(கடகத்தைக் கொடுக்கிறார் )
சிஷ்
–(ஆசார்யனை நோக்கிய வண்ணம்‌ மெளனம்‌)

ஆசார்‌..-ராஜாஞ்ஜை மீறத் தகாதது. அப்படியே செய்வாயாக!
சிஷ் . -நியமனப் படியே–(கடகத்தை வாங்கிக்‌ கொள்கிறார் )
ஆசார்‌-ஆயுஷ்மன்‌ ! இனி நீ செய்ய வேண்டிய கடமைகளைக்‌ கூறுறேன்‌ கேள்‌ –பணம்‌, கியாதி, பூஜை இவைகளை அடைவதில்‌ ஆசை வையாதே. உத்தம சிஷ்யர்கள்‌ கிடைக்குமிடத்து எவ்விதப்‌ பிரதி ப்ரயோஜனமும்‌ எதிர்பாராமல்‌ அவர்களுக்கு வேதாந்த சாஸ்‌திரப்‌ பரவசனம்‌ செய்வதையே விரதமாகக்‌ கொள்ள வேண்டும்‌;

சிஷ்‌-பகவந் நியமனப்படியே

விவேக-— தமது ஆஞ்ஜையை ஊக்கத்துடன் நிறைவேற்றுவிக்க இப்பொழுதே புறப்படும்‌-நாங்களும்‌ சத்ருக்களின்‌ சேனையை நாசம்‌ செய்வதற்காகப்‌ ப்ரயத்தனிக்க இதோ செல்கிறோம் (போகிறார்கள்‌-திரை விழுகிறது )

ஐந்தாம்‌ காட்சி–இடம்‌ :—ஓர்‌ காட்டுப் பாதை–ராகனும்‌, த்வேஷனும்‌. பிரவேஸிக்கிறார்கள்‌.]
ராகன்‌-
-நண்ப ! விவேகனது ‘வஞ்சனையினால்‌ மகா மோக ராஜன்‌. வளர்த்து வந்த பல்வேறு ஸித்தாந்தங்களெல்‌லாம்‌ தீவிரமாய்க்‌ கண்டிக்கப் பட்டன. இனி உன்‌ உதவியினால் தான்‌ நான்‌ மகா மோக ராஜ்யத்தைத் திரும்பவும்‌ நிலை நிறுத்த முயல வேண்டும்‌. நமது முதல்‌ முயற்சி விரக்தியையும்‌ விஷ்ணு பக்தியையும்‌ ஜீவனை ௮ணுகாதிருக்கச்‌ செய்வதே யாகும்‌. மாரீசன்‌ வஞ்சனையினால்‌ ராமனைச்‌ ஸீதையிடமிருந்து அகற்றினது போல, நானும்‌ விரக்தியை விரட்டி விடுகிறேன்‌. ராவணன்‌ ஸீதையை ௮பகரித்‌துச் சென்றது போலே நீயும்‌ ௮தே சமயம்‌ விஷ்ணுபக்தியைப்‌ பலாத்கரித்தேனும்‌ விலக்க வேண்டும்‌. தெரிந்ததா?
துவே –அப்படியே|

ராகன்‌. –அற்ப சுகத்தை இச்சிப்பவன்‌ ஆசைக் காரன்‌ எனப்‌படுவானாயின்‌, பேரின்பமென்பதைக்‌ கோறுபவன்‌ பேராசைக்‌காரனாகிறா னல்லவா – அன்னாக்கு விரக்தி எப்படி உண்டாகக்‌ கூடும்‌? தன்னைத் தானே ௮டைவது” என்‌றதே சுகமாகுமா? மற்றொன்றை அனுபவிப் பதினாலல்லவா சுக, மேற்படக் கூடும்‌–ஆகவே காமமே யன்றோ ப்ரஸித்தமான புருஷார்த்தமாகக் கூடியது

துவே. நன்றாய்‌ சொன்னாய்‌ -ஹ ஹ! இந்த உலகம்‌ பரமாத்மாவுக்குச் சரீரமாம்‌ ! உலகமோ துக்கம்‌ நிறைந்தது -ஆகவே பராமாத்மாவும்‌ துக்கத்தை அடைந்த வனல்லவா? பரமாத்மாவை அடைவதால்‌ துக்கம்‌ எப்படி நிவ்ருத்தியாகக் கூடும்‌ ? ௮ப்படிக்கின்‌றி , அடையப்படுவது நிர் விசேஷப்‌ ப்ரஹ்ம மானால்‌, ௮து ஸூக ரூபமாக ஆக மாட்டாதே! ஆகவே உபநிஷத்‌து வாக்கியங்கள்‌ கேவலம்‌ ஏட்டுச்‌ சரக்காய் தானே ஆகின்றன –

ராகன்‌–சபாஷ்‌! இந்த ஞானம்‌ ஜீவனுக்கு இருக்குமாயின்‌, விஷ்ணு பக்தி இருந்த இடம்‌ தெரியாமல்‌ ஓட்டம்‌ பிடிக்க வேண்டியது தான்‌ ! எந்த ஸ்‌தீரிகளது மோகத்தினின்றும்‌ ஜீவனை விடுவிக்க வேண்டுமென்று விவேகன்‌ முயற்சிக்கிறானோ ௮ந்த ஸ்‌த்ரீகளின்‌ குணங்களாலேயே இதே விவேகனே கட்டுப்படுகையில்‌, விரக்தி உலகில்‌ எப்படி உண்டாகக் கூடும்‌ நாம்‌ காம வலையைத் தீவிரமாய்‌ விசி வருவோமாகில்‌ பேரானந்த ௮னுபவங்களுக்குக்‌ காரணமான ௮ங்க ௮வயவங்களையுடைய ஸ்‌த்ரீகளை மாம்ஸ பிண்டங்களென்று வைதிகப்‌ பிசாசுகள்‌ மூடர்களை வஞ்சித்து வருகிறார்களே.! ஆயினும்‌ ௮ந்த யுவதிகளின்‌ நடை யென்னுங்‌ கதியைக்‌ கண்ட க்ஷணத்திலேயே, இவர்கள்‌ ஸ்மாதியின்‌ ௧கி ௮தோ கதி யடைந்து விடுறதல்லவா ! (உற்றுக்கேட்டு) இல்லையா ? ௮ந்தோ ! குருடனுக்கு? பாலின்‌ நிறத்தை எப்படிக் காட்டுவது –

துவேஷ- விவேகனை வெல்வோமாகில்‌ இந்த வைதீகப்‌ பேய்‌களனைத்தையும்‌ வென்றவராவோம் -நானே அக்காரியத்தை முடிக்க வல்லவன்‌ -ஹ! ஹ! ! ஹ! (உரக்கச்‌ சிரித்‌து ) எந்த உபநிஷத்தில்‌ விழுந்து புரண்ட போதிலும்‌, அழுக்கடைவதைத்‌ தவிர்த்து விவேகனால் ப்ரஹ்மத்தைக் கண்டு விட முடியுமோ நானிருக்கும்‌ வரை?
(திரைக்குள்‌: யார்‌ அப்படிக்‌ கூறுவது – அப்படிக்‌ கூறுவது யாரடா ? )

ராகன்‌. (பயத்‌துடனும்‌, பரபரப்புடனும்‌., ஐயையோ ! நாம்‌ எவ்வளவோ சிரமப்பட்டும்‌, விரக்தியும்‌ விஷ்ணு பக்தியும்‌ நம்‌ வலைகளைக் கடந்து ௮தோ வரும்‌ விவேகனையும்‌ ஸூமதியையும்‌ ௮ணுகுகிறார்களே ! நம்‌ மகாராஜனின்‌ உத்திரவை எப்படி நிறைவேற்றுவிக்கப்‌ போகிறோம்‌ ? நம்‌ ௮திர்ஷ்டம்‌ மாறி விட்டது போல்‌ காண்கிறதே -இச் சமயம்‌ நாம்‌ தனித்து இவர்களிடம்‌ அகப்பட்டு கொள்ளக் கூடாது! நம்‌ தோழர்களான காம க்ரோதாதியோரைக்‌ கலந்து யோஸித்தே. தகுந்த வழி செய்ய வேண்டும்
(ஒடி விடுகிறார்கள் )

ஆறாம் காட்சி -இடம்‌ :–ஸபா, மண்டபம் –விவேக்கும் ஸூமதியும்‌ பிரவேசம்‌. | விவேக –பெண்ணே ! இன்னமுமேன்‌ உனக்குப்‌ பயம்‌? எதிரி ஏவின சோரார்களிடமிருந்து தப்‌பி ) விரக்தியும்‌ . விஷ்ணு பக்தியும்‌ உன்னைத்‌ திரும்பவும்‌ அடைந்து விட்‌டார்களே!
ஸூமதி , (பெருமூச்செறிந்து ) ஆயினும்‌, எப்பொழுதும்‌ மறைவிலைேயே இருக்கும்‌ ராகனும்‌ துவேஷனும் எச்சமயம் என்ன தீங்கு செய்வார்களோ என்றே என் மனம் சலிக்கிறது

விவேக.--பேதாய்‌! அக்கவலை நீ கொள்ளத் தக்கதல்ல.கீதோபசேசம்‌ செய்த பகவான்‌, முடிவில்‌ கூறியதை மறந்தனையோ ? தன்னையே சரணமடைந்தோரைக்‌ காப்‌ பாற்றுவது ௮வன்‌ பொறுப்பே யல்லவா ? அப்படிச்‌ ச்ரணமடைந்த பிறகு ஜீவனுக்குப்‌ பயம்‌ ஏது?
ஸுுமதி. _-(துக்கத்‌துடன்‌) எனிலும்‌, . சுக துக்காதிகளில்‌ மாறி மாறிச்‌ சுழன்று வருந்தும்‌ ஜீவாத்மாவின்‌ கஷ்டங்களைக்‌ கண்டு ஸூகிக்க என்னால்‌ ஆக வில்லையே !
விவேக.–(அனுதாபத்துடன்‌)–. இனி வருந்துத லொழி! ஜீவனுடைய புண்ய விசேஷத்தால்‌ அவனது புத்தி பர ப்ரஹ்மத்தினிடத்தில் அவனுக்கு அளவில்லாத ஆசையை உண்டாக்குகிறது -சிற் சில ஸமயம்‌, புத்தி, மோகத்தால்‌ சலித்த போதிலும்‌ திரும்பவும்‌ ஜீவன சக்திக்‌ கேற்றாப் போல்‌, பக்‌தியிலோ பிரபத்தியிலோ வந்‌து நிலை நிறுத்தப்படுறது. “இந்தச்‌ சக்தி உண்டானதும்‌, ஸ்வர்க்க சுகத்தைத் கூட நரக வேதனையாய்‌ நினைத்துப் பரமாத்‌மாவின்‌ பாதார விந்தங்களிலே ஸ்‌திரப்பட்டு நிலைத்து விடுகிறான்‌. ௮ப்பொழுதே அவனக்கு மோக்ஷம்‌ ஸித்‌தம்‌ ௮த்தகைய உபாஸனை ஏற்படுங் காலத்திலேயே புருஷன்‌ மகானந்த ஸ்வரூபமான ப்ரஹ்ம அனுபவத்தில்‌ ஆசை, யுடையவனாகிப்‌ பேராநந்தத்தைப்‌ பெறுகிறான்‌ !

ஸுமதி -. நாதா! சந்திரனைப்‌ பிடிக்கக்‌ கை நீட்டும்‌ குழந்தை போல, ப்ரம்மாதி யோகிகளும்‌ சப்தாதி விஷயங்களில்‌ மயங்கும் போது , சாதாரண ஜீவனுக்கு. மோக்ஷம்‌. எப்‌படிக் கிடைக்கக்‌ கூடும் என்கிற சந்தேகம் என்னை விட்டபாடு இல்லை தான் –

விவேக,–பேதாய்‌! திடத்துடன்‌ மரத்திலேறிய சாமர்த்திய சாலிக்குக் கிடைக்காத கனிகள்‌, அசிரத்தையுடன்‌ , போய்க்‌ கொண்டிருக்கும்‌ வழிப் போக்கனுக்கு, அவனது புண்ய விசேஷத்தால்‌ கிடைப்பது சந்தேகமற்ற அனுபவமல்லவா?

ஸூமதி.-வாஸ்தவமே! என்‌ சந்தேகம்‌ தீர்ந்தது. ஆனாலும்‌ தங்களால்‌ கை கொடுக்கப்‌ பட்ட ஜீவன்‌, ஸம்ஸார ஸாகரத்தைத் தாண்டத்‌ தக்கவனானால்‌, இடையிடையே ஏன்‌ பயத்தினால்‌ பீடிக்கப் பட்டவனாகிறான்‌ ?
விவேக.–என்ன மயக்கம்‌ ! மோக்ஷத்தை அடையப் போகிறவனையும்‌ மோக்ஷத்தை அடைந்தவனாகவே பாவித்துப்‌ பேசுகிறாயே? மனஸ்‌ அஜாக்‌ரதையா யிருந்தால்‌ பயம்‌ உண்டாவது சகஜந்தானே ! வர்ணம்‌, ஆச்‌ரமம்‌, இடம்‌ காலம்‌ இவைகளுக்கு ஏற்ற சாஸ்‌திர நியமனப்படி நடந்தால்‌ எவ்வித பயமம்‌ உண்டாவதற்குக் காரணமே இல்லை –

ஸூமதி –பயத்திற்கு ஹேது இதுவானால் தியானம்‌ எவ்விதம் பூர்த்தி அடையக்‌ கூடியது ?

விவேக எவனொருவன்‌ மனத்தை வேறொன்நிலும்‌ செலுத்‌தாமல்‌, பகவத் கிருபை யொன்றையே ஆதாரமாக வைத்‌துக்‌ கொள்கிறானோ அவன்‌. த்யானம்‌ தடங்கலின்‌றி பூர்த்தி அடைவது நிச்சயம்‌.

ஸூமதி -சரிதான் -மஹா புருஷர்களுக்கும் கூட ஏன் மோக்ஷம் சீக்கிரத்தில் கிடைக்கிறதில்லை –

விவேக-மஹா ஸூஷ்மமான விஷயமாகும் இது -பாகவத அபசாரம் சகல புண்யங்களையும் போக்கடிக்க வல்லது -பாதகங்களிலும்‌ கொடியது செய்த நன்றியை மறப்பது-அதனினும்‌ கொடியது செய்யப்படுகிற நன்றியை மறப்பது. அதனினும்‌ கொடியதானது செய்யப் போகிற நன்றியை மறப்பது! ஆகவே சிறிது ௮ஜாக்ரதையும்‌ பெரிய ௮பசாரத்தை உண்டாக்குகிற தல்லவா-

ஸூமதி,–நாதா! பாகவதாபசாரக்‌ கொடுமையை அறிந்‌தேன்‌. அதற்குப்‌ பரிகாரம்‌ கிடையாதா ?

விவேக –திரும்பவும்‌ ௮தே பாகவதர்களைச்‌ சரணமடைந்து அவர்களது ௮நுக்ரஹத்தைப்‌ பெறுவதே அதற்கேற்ற பரிஹாரமாகும்‌. நீரின்றித்‌ தவிக்கும்‌ மீன்‌, மறுபடியம்‌ நீரினாலேயே பிழைத்து சந்தோஷமடைவது போலத் தான்‌ இதுவும்‌! இம்மாதிரி யோகத்திற்கு, விக்னங்கள்‌ ஸம்பவித்த பிறகு ௮வைகளை நிவர்த்தித்துக் கொள்ள வழி தேடுவதை விட, அவைகளை நெருங்க விடாமல்‌ ஆரம்பத்திலேயே தடுத்துக்‌ கொள்வதே மோஷாமடையச்‌ சிறந்த மார்க்கமாகும்
(ஓர் தூதன்‌ பிரவேசம்‌.]

தூதன்‌-–பிரபோ! ராஜாதி ராஜ -ராஜ மார்த்தாண்ட, ராஜ காம்பீர்ய, ‘ஸார்வ பெளம திவ்ய ரத்ன ஸிம்‌ஹாஸனாதி ரூட .மகாமோக மகா ராஜனின்‌ ‘தூதன்‌, ஸம்வ்ருதி ஸதயன்‌ நமஸ்கரிக்கிறேன்‌. (அஞ்சலி ஹஸ்‌தனாய்‌, ஒர்‌ பனை ஓலையைக் காட்டி,) எங்கள்‌ சக்ரவர்த்தியார் உத்திரவு இது –

விவேக (அலஷியத்தடன்‌)– நீயே படி

தூதன்‌. உத்திரவு (படிக்கிறான்‌)– எங்கள்‌ மகா மோக மஹா ராஜனின் உத்திரவு என்ன என்றால்

விவேக.–(வெளிக் கிளம்பிய சிரிப்பை அடக்கிக் கொண்டு) பிரியே! மோக ராஜன்‌ நமக்கு உத்திரவு இடுகிறானாம் !.பேஷ்‌! எதிரியின்‌ அபிப்ராயத்தை முற்றிலும்‌ கேட்டறிவோம்‌!– மேலே படி.

தூதன்‌.–(படிக்‌கிறான்‌) * ஜீவாத்மாவிற்குப்‌ பரப் ப்ரஹ்மத்‌தினிடம்‌ ஸ்ரத்தையை உண்டாக்கி விட்டாய்‌. அந்தஸ் ஸ்ரத்‌தை ஐஸ்வர்யாபேஷைக்காக மட்டிலும்‌ நிற்குமாக-அப்படியாயின்‌ நாமும்‌ உன்னை மன்னிப்போம்‌.”

விவேக, (அலக்ஷிய்ச்‌ சிரிப்புடன்‌)–பேஷ்‌. ! பிரம்மசாரிக்கு நிற்க இடம் கொடுத்த நியாயந்தான்‌ இது !–௨ம்‌– மேலே?

தூதன்‌.–* மீறி நடப்பாயாகில்‌, நமது சம்ஞ்ஞா மாத்‌திரத்‌திலேயே ஏவப்படும்‌ ‘ க்ரோதன்‌ முதலிய ஸேனுபதிகள்‌ உன்னைத்‌ த்வம்ஸம்‌ செய்து விடுவார்கள்‌, ஜாக்ரதை,.”

விவேக –சாபாஷ் -இவ்வளவு தானா ?. இன்னமும்‌ உண்டோ ௨த்திரவு –

தூதன்‌-காமக்ரோதாதி ஸேனாபதிகளின் திவ்ய பிரபாவம் எடுத்துக் காட்டப் படுகிறது –

விவேக. எங்கே , படி ?

தூதன் – ‘காமனுடைய ஒபில்லா ‘செளர்யத்தை வெல்ல” எ்வனாலாகும்‌?’ ‘கோபத்தணலாலுண்டாகிய ருத்ரனது: . மூன்றாவது கண்ணும்‌ மதனனது சிருங்காரத்‌தினால்‌ மயக்கமடைந்து சீதளமாகி விடவில்லையா –ஆதி பகவானும்‌ ராகத்‌ துவேஷாதிகளுக்கு ஆட்பட்டவனாகியே யன்றோ ஸ்ருவ்டி. ஸ்திதி ஸம்ஹாரமென்னும்‌ லீலைகளைப்‌ புரிந்து வருகிறான்‌ ! ஆசைக்கு ஆளாகாதவர்களும் அவனியில் உண்டோ

ஸூமதி -காமத்தின்‌ கொடுமை கணக்கிடக் கூடாததுதான்‌ !

விவேக-இந்த உளறல்‌களையா லக்ஷியம்‌ செய்வது ?–. தூதா! மீதி உளறல்கள்‌ ஏதேனுமுண்டோ?

தூதன் -க்ரோதன் மஹிமையைக் கேள் -கோபத்தை விலக்கும் பொருட்டுக்‌ குரோதத்தைக்‌ கோபிப்பது, கோபத்தை ஓழிப்பதாகுமா? கோபத்தை ஜெபிக்க எண்ணும்‌ பொழுதே க்ரோதம்‌ ஏற்படுகிறதல்லவா ?

ஸுமதி –ஐயையோ! காமனை விடக்‌ க்ரோதன்‌ வெல்வதற்‌ கரிதானவனா ! ்‌

விவேக.-இந்தப்‌ பிதற்றல்களுக்குக்‌ காது கொடாதே !–. உசிதமான. கால இடங்களில்‌ கோபம்‌ உண்டாக வேண்டியது கொண்டாடத் தக்கதே யொழிய குற்றமாகாது -ஹே தூத! அநங்கனாக்கப் பட்ட காமனையும்‌, யாவரும்‌ பரிஹஸித்து வரும்‌ க்ரோதனையுமே நம்பிக்‌கிடக்கும்‌ பேடியாம்‌ மகா மோகனை நான்‌ அழிக்கவே போகிறேன்‌ என்‌பதை என்‌ உத்திரவாக உனது அரசனிடம் தெரிவி போ

தூதன் -சரி -கொஞ்ச தூரம் சென்று திரும்பி -ப்ரபோ எங்கள் மஹா ராஜனும் தாங்களும் ஒரே குலம் -ஒரு குலத்தைக் காப்பாற்றுவதற்காக ஒருவனைப் பலி கொடுக்கலாம் என்ற நியாயத்தை மறக்கக் கூடாது –போய் வருகிறேன் -(போகிறான் )

ஸூமதி –நாதி முக்தி யுபாய ஆரம்பம் செய்ய இருக்கும் ஜீவாத்மா, மோகனால்‌ ஏவப்பட்‌ட காம க்ரோத மாச்சர்யங்களால்‌. பீடிக்கப்படுவானாகில்‌ உமது ப்ரதிஜ்ஜஞை எப்படிக்‌ கை கூடும் –

விவேக –ஏன்‌ சந்தேகம்‌?_-, தெளிந்த புத்தி யுடைய திடஞ்ஞானிகளை இம் மயக்கங்களால்‌ சற்றும்‌ சலிக்கச்‌ செய்ய முடியாது. ௮வன்‌ இடத்தைக்‌ கண்டதும்‌ இவை யாவும்‌ தாமே பறந்து விடும்‌! ஸுர்யாஸ்‌தமன காலம்‌ நெருங்கி ஸந்தியா காலம்‌ கிட்டி விட்டது! வர இருக்கும்‌ இருட்டே மோகனுக்கும்‌ காமனுக்கும்‌ வஸதியான காலம்‌. ௮தைத் தடுக்க நானும்‌ ஸந்த்ய அனுஷ்டானங்களை முடித்‌துக் கொண்டு ஜீவாத்மாவின்‌ பக்தியை ஸ்திரப்படுத்தச்‌ செல்கிறேன்‌. நீயும்‌ ஷமை சாந்தி முதலியவர்களுடன்‌ வேண்டிய மங்களாசாரங்களைக்‌ கைக் கொண்டு, அஞ்ஞானாந்தகாரத்தை விலக்கி ஞான விளக்கை ஏற்றி என்‌ வரவை எதிர்பார்த்திருப்பாயாக,

ஸூமதி -பாக்யம்
(இருவரும் செல்கிறார்கள்)

அங்கம்‌ -2-முதற்‌ காட்சி –இடம்‌ :—நந்தவனம்‌-[காமனும்‌ வஸந்தனும்‌ பிரவேசம்‌)
காமன்‌–
வஸந்தா ! என்னே என்‌ மஹி மையும்‌ என்‌ பாணங்க ளின்‌ பெருமையும்‌! மதுரமான கரும்பை வில்லாகவும்‌, சுகந்தமான புஷ்பங்களை பாணங்களாகவும்‌, ரீங்காரஞ்‌ செய்யும்‌ வண்டுகளை நாணாகவும்‌, ௮பலைகளாகிற சுந்தர யுவதிகளே சைன்யமாகவும்‌ கொண்ட நான்‌ சூலாயுத பாணியையே வெல்ல வில்லையா ?

வஸந் .–உன்‌ வீரம்‌ ௮ஸாதாரணமானது. அறிவாளிகள்‌ ஓரோர்‌ பயன்களை விரும்பி நன்மையோ தீமையோ செய்து ௮ரும் பெருமை யுள்ள உம்மிடத்தில்‌ **காமன்‌ செய்தான்‌, கோபம்‌ செய்தான்‌ – என்று தியாகம்‌ செய்‌கிறார்கள்

காமன்–நற்றாய்க் கூறினை–உன்னோடு கூடிய என்னாலேயே நமது மோகனுக்கு இனி வெற்றி நிலைக்கப் போகிறது !

வஸந் ,–ஸமாதி செய்வதில்‌ பிரயத்தனிக்கும்‌ புருஷன்‌ மனத்‌தை கலைக்க வேண்டிய ஸ்ருங்கார ரஸங்களை விருத்தி செய்ய வேண்டிய காரியத்தை நான்‌ செய்து முடிக்கிறேன்‌! அதற்கு ஆதாரமான ஆலம்பந விபாவங்களாகிற ஸ்‌திரீகள்‌ முதலியோரது சேஷ்டாதிகள்‌ உன்னால்‌ உண்டாக்கப்‌ படட்டும்‌ !

காமன்‌ -௮துவே ஸரி!–. ஹ! ஹ! பரப் ப்ரஹ்மமா எது ? பரப்‌ரம்மமா சுந்தர யுவதிகளே பரப்ரம்மம்‌ என்பதற்குமா சந்தேகம்‌.? ஸ்ருஷ்டிக்குக்‌ காசணமா யிருக்கற தல்லவா பரப்‌ரம்மம்‌! ஆனந்தத்தைக்‌ கொடுப்பதல்லவா பரப்ரம்மம்‌?–. ஸ்திகளேதான்‌ ஸ்ருஷ்டிக்‌குக்‌ காரணமாகுபவர்கள்‌ ! ௮வர்களே ஆனந்தத்தைக்‌ கொடுக்க வல்லவர்கள்‌ ! ஆகவே ஸ்‌திரீகளே பரப்ரம்ம மென்பதிலுமா சந்தேகம்‌ ?

வஸந் –உபநிஷத்துக்களும்‌ ஆமோதிக்கக் கூடிய வாக்யமே கூறியது! யோகியின்‌ புத்தியும்‌ ஸ்‌திரீகளைக்‌ கண்ட மாத்‌திரத்தில்‌ கலங்கயே விடுகிறது ! ஸ்திரீகளாகிற நம்‌ ஸேனை உயிரோடிருக்கும்‌ பொழுது இந்திரிய ஜயம்‌ செய்‌ய வேண்டு மென்ற ஆசை யுடையவனும்‌ உயிர்த்திருப்‌ பானா? புருஷனது தியானம்‌ அபாய கரமான ஸந்தேதேஹ ஸ்‌திதியிலேயே இருக்கிறது இப்பொழுது ! ஸம்ஸார கஷ்டங்களை வெறுக்கிறான்‌ ! ஸம்ஸார சுகங்களை விரும்புகிறான்‌! ௮தை விரும்புவதற்காக வெட்கப்படுகிறான்‌ ! வெட்கப்பட்டும்‌, அதையே திரும்வும்‌ விரும்புகிறான்‌ ! -ஆகவே, இதுவே நம்‌ ஸைன்யத்தைக் கொண்டு அவனை ஜயிக்க வேண்டிய தருணம்‌!

காமன்‌ -நன்றாயுரைத்தனை ! எவ்விதத்திலும்‌ அவ்விவேகன்‌ அவிவேகனே ! என்‌ ஸைன்யங்களின்‌ ப்‌ரபாவத்தை ௮றிந்தவனில்லை! ஹ! ஹ!–, இரு பக்கங்களிலும்‌ சுருக்கை ‘ யுடைய கயிற்றை யல்லவா கொண்டிருக்கிறான்‌. ஜீவாத்மா என்னிடம்‌ கோபம் கொள்‌வானிகில்‌, அக் கோபக்தினாலே2ய அவன்‌ ஜயிக்கட்பட்டவனாகிறான்‌ ! கோபம் கொள்ளாமல்‌ இருப்பானாகில்‌, என்னை எப்படி விலக்க முடியும்‌ ௮வனால்‌ ?

[பயங்கர ரூபத்துடன்‌ க்ரோதன்‌ (கோபன்‌) பிரவேசம்‌. ]

க்ரோத–.!விரைவுடன்‌ வந்து) மன்மத ராஜனே! விவேகனுடன்‌ சேர்ந்து காம க்ரோதாதிகள வெல்வதாகக்‌ கூறும்‌ விணன்‌ யாவன்‌ ? (ஆர்ப்பரித்து) ஹ.! ஹ!! ஹ!!! நானிருக்கையிலுமா விவேகனைப்‌ பற்றிய பிரஸ்‌தாபம்‌ –

காமன்‌ –உன் வரவு நல் வரவாகுக ! மஹாமோஹ மஹா ராஜனுக்கு ஜே-

வஸந்‌–ஜே!…நெருப்புப்‌ பிடித்ததும்‌ காற்றடிக்க ஆரம்பித்‌தது போலக்‌ காமனும்‌ க்ரோதனும்‌ சேர்ந்த பிறகு ஜீவன்‌ முக்‌தி யடைவதேது – இனித்‌ தைர்யமாய்‌ நம்‌ காரியத்தைச்‌ செய்ய ஆரம்பிப்போம்

காமன்‌ -எனக்கு ஸஹாயங்கள்‌ வெகு அ௩லமாகவே இச்‌ சமயம்‌! , சேர்ந்திருக்கின்றன- சந்திரன்‌ எனக்குப்‌ பிரியமான: ஸ்நேஹிதன்‌ ! ! நிலா எனக்கு இஷ்டையான தோழி-ஸ்ருவங்கார ஸ்ரஷ்டி கர்‌த்‌தாவாகிய வஸந்தன்‌ ஆத்ம பந்து ! மஹா வேகத்தையும்‌ பலத்தையுமுடைய க்ரோதன்‌ ஆபத்‌ பந்து !–. இத்தகைய ஸஹாயங்கொண்ட புஷ்பபாணனை உயிருடன்‌ எதிர்த்து நிற்க வல்வவனுமுளனோ –

க்ரோத.-இல்லவே யில்லை–… இருந்தால்‌ முன்‌ வரட்டும்‌ !

காமன்‌.–ஸமாதியை விரும்பும்‌ ஜீவனப் பிடிப்போம் வாருங்கோள்
ஆர்ப்பரிக்கின்றனர் –

வஸந்‌– அதோ பாருங்கள் விவேகனால்‌ பீடிக்கப்பட்ட ஜீவன்‌ ஊசலாடுவதை ! பயத்திற்குக்‌ காரணமான கிரந்தங்‌களைக் கவலையுடன்‌ பரிசீலனை செய்து கொண்டிருக்‌கிறான்‌ ! தேக போஷணத்தையும்‌ கைவிட மனமில்லை !
துக்க ஸாகரத்தை நிவ்ருத்‌தித்திக் கொள்ள ஆசைப்படுகிறான்‌–, ஸம்ஸார ஸுகங்களை அகற்றவும்‌ இஷ்டமில்லை! இப்படி ஊசலாடும்‌ இந்த ஜீவனை இப்பொழுதே நம்‌ வசமாக்கிக்‌ கொண்டால்‌ தான்‌ ! ஜயித்தோமாவோம்‌.

காமன்‌.-மமகாராதிகளான பழைய வாஸனை, கயிறு போலிருக்‌கிறது, நம் பக்கலிலேயே ஜீவனை இழுத்து விடும்‌ ஸந்தேஹமின்றி !

வஸந் -அப்படி. நம்பி அஜாக்ரதையா யிருக்கக் கூடாது ! இக்‌ கணமே க்ரோதன்‌ ஜீவனைப்‌ பிடித்‌துக் கொள்ள வேண்‌டும்‌. அதோ! அதோ! ஸதா பகவந் நாம ஸ்மரணத்துடனும் , குணானுபவத்துடனும்‌, அவனையே ஆராதித்துக்‌ கொண்டும்‌, விவேகனது கோட்டைக்குள்‌ புகுந்து விட்‌டான் -இனி ஜீவனை மீட்டு வர நம்மால்‌ முடியாது !

காமன்-(வெட்சத்துடன்‌ சிரித்‌து.) வஸந்தா ! என்ன வார்த்‌தை. “கூறினாய்‌ ?.ஸாமர்த்திய மில்லாதவனைப்‌ போல்‌,இந்த. ஸமயத்திலா பயமடைகிறாய்‌? ௮சுவத்தாமா முதலியோர்‌ – முன் காலத்தில்‌ செய்து காட்டிய வழி அடைக்கப் பட வில்லைேயே? நாமும்‌ எதிரிகள்‌ தூங்கும்‌ பொழுதே அவர்களை வதம்‌ செய்து வருவோம் காண்‌!

வசந் –அதுவும் முடியாத காரியமே இனி! ட்‌ அதோ ஜீவாத்மா பரமாத்மாவை சரணமாக அடைந்து விட்டானே -வீடு கொள்ளை போன பிறகு விழித்‌துக் கொண்ட. காவல்காரர்கள்‌ போலாகி விட்டோம்‌ நாம்‌ இப்பொழுது –

க்ரோ — (பரபரப்புடன்‌!) ஹ! ஹ!! ஹ!!! பயப்படாதீர்கள்‌ – எனக்கு எங்கும்‌ செல்வாக்குண்‌டு ! மஹா புருஷர்களும்‌, அவர்களுடைய கந்கைத் துணி, கமண்டலு, தாப்பாஸனம்‌ ஆகிய சிறிய வஸ்துக்களை அவர்கள்‌ அறியாது மறைத்து விடுவேனாகில்‌, அவர்கள்‌ ஒருவர்க்கொருவர்‌ கோபமும்‌ மனஸ்தாபமும்‌ கொண்டவராக, பொய்‌ சொல்லுதலும்‌, தோஷாரோபணம்‌ செய்வித்தலும்‌,கோட்‌ சொல்லிக் கொள்ளுதலுமாகிய சகல தோஷங்களும்‌ உடையவராய்‌, தியானத்தை இருந்‌தவிடந்தெரியாது மறந்து போகும்படிச் செய்து விடுவேன்‌ அவர்‌களிடமிருந்து

காமன்‌.-வாஸ்‌தவமே!

வஸந் .–காமனையும்‌ க்ரோதனையும் “வெல்வதரிது தான்‌-. யாரது வருவது ?… சபாஷ்‌! தர்ம த்வம்ஸி ‘லோபன்‌ த்ருஷ்ணா பத்னி ஸமேதராக எழுந்தருளுகிறார! நமது உதவிக்காக! கவனிப்போம்‌
(லோபனும் -பேராசையும் -திருஷ்ணையும் துராசையும் ஒரு புறமாய் பேசிய வண்ணம் பிரவேசம் )

லோபன் -என்னை திருப்தி செய்ய வல்லவரும்‌ உண்டோ -திருப்‌தி என்றால்‌. என்ன -த்ருஷ்ணே ! நீயே எனக்‌கேற்ற ஸஹ தர்மிணி! உன்‌ ௮ழகே அழகு! ஸ்‌திரீகளுக்‌கு இடை சிறியதாய் இருப்பது அழகாமே -உன் வயிற்றில் பிரபஞ்சத்தில் உள்ள பொன் வெள்ளி ரத்ன மயங்கள் அனைவற்றையும் மலை மலையாகக் கொட்டி நிரப்பினாலும் உன் இடை மட்டுமே மேன்மேலும் இளைத்ததாகவே காட்டுகின்றதே

திருஷ்‌.–நான்‌ அழகில் சிறந்தவளாயிருப்பது ஓர்‌ ஆச்சர்யமா? அதற்கேற்றதாக மூவுலகலிலுள்ளவர்களது பொன்‌ தனம்‌ எல்லாவற்றையும் கொண்டு வந்து எனக்குச்‌ சகல வித ஆபரணங்களும்‌ செய்து கொடுக்க வல்ல சாமர்தியம்‌ உங்களிட மிருந்தாலல்லவா என்‌ ௮ழகு சோபிக்‌கும்-

லோப.-௮து தானா பிரமாதம்‌ -என்னால்‌ ஆக்ரமிக்கப்‌ பட்டவர்களும்‌ என்னால்‌ வெல்லப்‌ படாதவர்களாவரோ? உமியையும் மேருவாக எண்ணிச்‌ சண்டையிட்டுச்‌ சாகிறார்களே ! குபேரனை நான்‌ படுத்தும்‌ பாட்டைக் கேள்‌ ! இருக்கும்‌ தனத்தை எவர்க்கும்‌ கொடுப்பது மில்லை- தானும்‌ திருப்‌தியாக அனுபவிப்பதுமில்லை-மேல்‌ ‘மேலும்‌ தனத்திலேயே – ஆசை கொண்டு, இருக்கும்‌ தனத்தைக்‌ காக்க வேண்டிய கவலையால்‌ நித்ரா ஸூகத்தையும்‌ இழந்தவனா யிருக்கிறான்‌ அக் குபேரன்‌ !–. மகா மோகனாஞ்ஜைப்படி விவேகனை வெல்வதற்காகக்‌ காத்‌திருக்கும்‌. காமக் க்ரோதர்களை, ஜீவன்‌ சாந்‌தி யடையுமுன்‌ கண்டு நம்‌ வெற்றிக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்‌.
(காம க்ரோதரர் முன் வர நமஸ்கரித்‌து ) தமையன்மார்களே !–அபிவாதயே–; ஸர்வ ருஷி ப்‌ரவராந்வித ஸர்வகோத்‌ர, ஸர்வ ஸூத்‌ர ஸர்வ வேதாத்யாயீ -லோப சர்மாநாமாஹம்‌ அஸ்மிபோ –

காம- க்ரோ .–தீர்க்காயுஸ்யமான் பவ லோப சர்மா
திருஷ்‌--நாட்டுப்பெண்‌ திருஷ்ணை இதோ நமஸ்கரிக்கிறேன்‌ !:
காம- க்ரோ….-தீர்க்க ஸுமங்கலி பவ ! (யாவரும்‌ ஒருவர்க்கொருவர்‌ ஆலிங்கனஞ்‌ செய்து கொள்கிறார்கள்‌,).
வஸந்‌.--மஹா அநந்த கரமான சேர்க்கை! பற்றி யெரியும்‌ கோடையில்‌, குடிக்கத் தண்‌ ணீரில்லாத இடத்‌தில்‌, நெருப்‌பு பிடித்துக் கொள்ளக் காற்றும்‌ சேரந்தாப்‌ போல நாம்‌ சேர்ந்த பிறகுமா விவேகன்‌ தலை நிமிர்த்தக் கூடும்‌ ?

காமன்‌ –புறப்படுவோம்‌ அணி வகுத்து ஜீவாத்மாவை: வெல்வ !–. முதலில்‌ நான்‌ போகிறேன்‌ -நீங்கள்‌ மூவரும்‌ த்ருஷ்ணையை நடுவில்‌ நிறுத்தி எனக்குப்‌ பின் பலமாகவும்‌ பக்க பலமாகவும்‌ வாருங்கள்‌—
(அப்படியே வ்யூஹம்‌ வகுத்து ஐந்தாறு அடி நடக்கிறார்கள்‌.)
காமன்‌.–
(இரண்டு மூன்று பாணங்களை : அதி வேகமாகத் தொடுக்கிறான்‌.)
வஸந்‌–ஜாக்ரதை ! ஜாக்ரதை : ! விவேகன்‌ ஏதோ ரகஸ்யமானதோர்‌ மந்திர உபேதேசம்‌ செய்கிறான் ஜீவாத்மாவுக்கு !
க்ரோ.-விவேசன்‌ என்ன செய்யுக் கூடும்‌ நம்மை ? ஜீவன்‌ இன்‌னமும்‌ காமன்‌ கணைகளைக்‌ கடக்க வல்லவனாக வில்லை அறிவாய்‌- |

வஸ்ந் . -நண்பர்களே ! சத்ரு மிகவும்‌ பலலான்‌ ! விண்‌ வீர வாதங்கள்‌ அவனெதிரில்‌ கூற வேண்டாம்

இரண்டாங்‌ காட்சி–இடம்‌ -கங்கையும்‌ யமுனையும்‌ சங்கமமாகுமிடம்‌ : டம்பன்‌ ஆஸ்ரமத்திற்‌ கெதிரில் ([டம்பனும்‌, வஞ்சனை (குஹனை) யும்‌ பிரவேசம்‌)

டம்பன்‌--ஹ!ஹ! ஹ!: ஹ!–. அடியே ! உன்னைத் தான்‌ – ப்ருஹஸ்பதிக்குக்‌ தாரை போல பர புருஷ ஸ்பர்ச மறியாத எனது இன்னுயிர்க்‌ காதலியாகத்‌ தர்மானுஷ்டானம்‌ செய்து வருகிறா யல்லவா நீ ?

வஞ்ச.–நல்ல உதாரணம்‌! வெட்கமாயிீருக்கிறது எனக்கே! வஸிஷ்டருக்கு அருந்ததி போல என்று சொல்லக்‌ கூடாதோ என்னை – பாருங்கள்‌,–எவ்வளவு சோரர்‌கள்‌, எவ்வனவு சூதாடுபவர்கள்‌, எவ்வளவு -கிராமாதிகாரிகள்‌, எவ்வளவு மந்திரி ஸ்ரேஷ்‌டர்கள்‌, எவ்வளவு பாஷாண்டிகள்‌ என்னைச்‌ சதா பிரார்த்தித்துக் கொண்டே காத்‌திருக்கின்‌ றனர்‌ பாருங்கள்‌ !. என்னைப்‌ பிரார்த்திக்கும்‌ அவ்வளவு பெயர்களையும்‌ அவர்கள்‌ பிரார்த்திக்கும்‌. பொழுதெல்லாம்‌ ௮வரவர்களை உங்களைப் போலவே பாவித்‌தல்லவா சேருகிறேன்‌

டம்பன்‌-(மனத்துள்‌ சிரித்துக் கொண்‌டு )_- நீயே நித்ய பதி விரதை! இதோ பார்‌–. என்னுடைய கார்ஹ்பத்‌யாக்னி அணைந்து போனல்‌ எந்த நெருப்பை யாவது கொண்டு வந்து போட்டு: எனது – அக்னி ஹோத்ரகம் குறைவுறாது செய்கிற யஞ்ஞ பத்னி நீயே. தீண்டாக் காலம்‌ கிட்டிய போதிலும்‌ வெளி யிட்டுக்‌ கொள்ளாது சர்வதா என்னுடனேயே யிருந்து கொண்டு என்னுடைய தர்ச பூர்ணமாஸ இஷ்டிகளையும்‌, பிண்ட தான ஸ்ரார்த்தம்‌ முதலிய கர்மாக்களையும்‌ குறைவறச்‌ செய்வித்‌து , ப்ராயச்‌ சித்தாதி உபத்ரவங்களுக்கு என்னை ஆளாக்காது, என்‌ பிராம்மண்யத்தை நிலை நிறுத்து கின்றனை! ஹ! ஹ! உன்‌ சாமர்த்தியம்‌ வேறு யாருக்கு வரும்‌-

வஞ்சனை–நாராயண ! நாராயண ! என்ன வார்த்தை நீங்கள்‌ சொல்வது ? நம்‌ க்ருஹத்தில்‌ என்றாவது அக்னி ௮ணைந்‌ததுண்டோ ? ருது தோஷமும்‌, தெய்வாதீனத்தால்‌, பர்வ ஸ்ரத்தாதி காலங்களில்‌ நேராது ஏற்படுகிறது ! அதற்‌கென்ன பிரமாதம்‌ !

டம்பன்‌ – அதைத் தான்‌ நானும்‌ சொல்கிறேன்‌- தப்பென்ன? ஆகவே தான்‌ உன்னை- ஸ்லாகித்துப்‌ போற்றுகிறேன்‌! ஏகாதசியில்‌ பட்டினி யிருப்ப.து போல்‌ பாவித்து வரும்‌ எனக்குப்‌ பூர்ணமாகப்‌ போஜனம்‌ பண்ணி வைத்‌தும்‌, ௮தை மறைத்து, துவாதசி யன்‌ று விடியுமுன்னமே பர பரப்புடன்‌ பாரணைக்குப்‌ பதார்த்தங்கள்‌ ௮க்கம்‌ பக்‌கத்‌தில்‌ ஸம்பாதிக்கப்‌ போகிறாயே !. ௮தனல்‌ என்‌ ஏகாதசி விரதமும்‌ உலகோர்க்குப்‌ பிரசுரிக்கப் படுவதுடன்‌, உண்மையான துவாதசிப்‌ பலனுமல்லவா எனக்கு லபிக்‌கச் செய்‌கிறாய்‌!– உன்னை ஸஹ தர்மிணியாயடைந்த என்‌ பாக்யமே பாக்யம்‌! ஒரு ரகஸ்யம்‌ ஞாபகத்திலிருக்கட்டும்‌’-என்‌னை விட்டு உன்னை எடுத்துச் செல்ல பலர்‌. சதி யாலோசனை செய்து வருகிறார்கள்‌. ஜாக்ரதையா யிருக்க வேண்‌டும்‌ நீ இதோ பார்‌!–. ஸ பதிகளாம்‌ நம்மை விவேகனைக்‌ கொல்ல வேண்டிய அபிசார யாகத்தை நிறை வேற்றி க் கொடுக்கும்படி. மகாமோக ராஜன்‌ தர்ம பத்னி தூர்மதி தேவி என்னை வேண்டிக் கொண்‌டு இருக்கிறார்கள்‌. நமது ஸ்லாக்யமான பிராம்மண்‌யமும்‌ இதிலிருந்தே பிரகாசிக்கிற தல்லவா! அவர்‌கள்‌ தாஷிண்யத்தை மீறாமல்‌. ஓத்துக் கொண்டு விட்டேன்‌. ‘இன்னதென்று தெரியாததோர்‌ தேவதையை நான்‌ ஆராதிக்க வேண்டும்‌-அதற்காக ஆகாச கங்கையில்‌ ௮னுஷ்டானம்‌ முடித்துப்‌ புனிதானாயிருக்கும்‌: தேவ குருவான பிருஹஸ்பதியால்‌ சேகரிக்கப்பட்ட கற்‌பக மலர்களையும்‌, கனிகனையும்‌ சீக்கிரத்திலேயே கொணர்‌வாயாக –

வஞ்-விவேகனை ௮பிசாரஞ்‌ செய்து கொல்ல முடியுமோ ? ௮வனைக்‌ கொல்லாவிட்டால்‌ ௮ந்தகத் தேவதை ௮பிசாரம்‌, செய்தவன் மீதே திரும்பு மல்லவா ?
டம்பன்‌–அடி அடே !”என்‌னுடைய மஹிமைஈய நீ இன்னமும்‌ வறியவில்லைபா? 18-வித்பைகளும்‌ 64-கலைகளும்‌ எளிதில்‌ ௮றிந்த என்‌ சாமர்த்யத்தால்‌, இம் மாதிரி ஆயிரக்கணக்கான யாகங்கள்‌ செய்து முடிக்கப் பட்டிருக்‌கின்றதல்லவா !. என்‌ வைராக்பம்‌ சாமான்யப்‌ பட்டதா? பூமண்டலம்‌ முழுவதையும்‌ ஜபித்த பரசுராமன்‌ ௮ம்மண்டலத்தைப்‌ பெற்றுக் கொள்‌ளும்படி என்னை மன்‌றாடியும்‌ மறுத்து விட்டேன்‌. அதைக் கண்டு ஆச்சர்யப்‌ பட்ட தேவாதி தேவர்கள்‌, ஸ்வர்க்கத்தைபும்‌, மோகத்‌தையும்‌ வருந்தி வருந்தி வேண்டிக்‌ கொடுக்கவந்தும்‌ அவற்றையும்‌ வேண்டாமென்‌று திரஸ்கரித்து விட்‌ டேனே! சாந்தியே எனது. ஐச்வர்யம்‌! ஓம்‌- சாந்தி சாந்தி சாந்தி?

வஞ்ச.–வாஸ்‌தவகம் தான்‌-அந்த யாகம்‌ ச்யேன யாகமா ? தங்கள்‌ தர்ம பத்னியாகிய என்க்கும்‌ காரியம்‌ அந்த யாகத்‌தில்‌ உண்டல்லவா—பைத்யமே! இதோ பார்‌; பரம ரஹஸ்ய மொன்று கூறுகிறேன்‌. ௨னது பரமாப்கைகளான திருஷ்ணை முதலியோருக்குக் கூட தெரியக் கூடாது இது – நான்‌ செய்யப் போவது யாகமமில்லை, ஹோமமுமில்லை–எந்‌த நல்ல காரியத்திலும்‌ டம்பனாகிய என்னுடைய ஸம்‌பந்தம்‌ ஏற்பட்ட மாகத்திரதிலேயே விவேகனுக்கு ௮பிசாரம்‌ ஏற்பட்டு விடிகிற தென்பதை ௮றிவாய்‌ : இதுதான்‌ ஸுஷ்மமான ரஹஸ்பம்‌.

வஞ்ச.–தெரிந்து கொண்டேன்‌. இந்த யாகத்தில்‌ உங்களுக்‌கும்‌ புரோஹிதர்‌ யாராவது உண்டோ?

டம்பன்‌--௮டி மூடாத்மா ! எனக்குமா புரோஹிதர்‌? எனக்கு சொல்லி வைக்கக் கூடிய ஒருவனுமா இருக்கிறான்‌ ?’ பண்டிதனென்று என்னப் படுபவர்கள்‌ ஓவ்‌வொருவரும்‌ என்னை யடைந்து உபதேசம் பெற்றுப்‌ போகிறார்களே- இருந்தபோதிலும்‌, லோக வியவஹாரத்திற்கேற்ப, கர்வனாகிய தர்ப்பன்‌ இந்த யாகத்திற்குப்‌ பேருக்கு ப்ரம்மாவாக யிருப்பன்‌.’ அவனை எதிர்பார்த்தே ஒன்பது தடவை புண்யாஹவாகனம்‌ செய்யப்பட்ட இந்த சித்தாச்ரமத்தில்‌ யாகத்‌துக்கான ஸகலத்தையும்‌ சேகரித்துக்‌ கொண்‌டு ஸப்த ரிஷிகளினாலும்‌ விரிக்கப்பட்ட இந்த தர்பாசனத்தில் உட்கார்க்திருக்கிறேன்‌ :–. அதோ அந்த மஹாத்மாவும்‌. வருகிறார் காண்‌ -நாம்‌ ஆஸ்ரமத்‌துள்‌ செல்வோம்‌–(ஆஸ்ரமத்துள்‌ போகிறார்கள்‌.)

[பெரிய பாதுகைகளை தரித்தவனாய்‌, கழுத்தில்‌ மாலைகளும்‌, கைகளை வீசிக் கொண்டும்‌, பெருந் தடியில்‌ கொடி போல்‌ பத்திரிகை கட்டிக் கொண்டும்‌ கர்வனாகிற தர்ப்பன்‌ பிரவேசம்‌. ]

கர்வ,–உத்தமர்களை நிந்திக்கும்‌ பொருட்டு மகா மோக ராஐனால்‌ நியமிக்கப்பட்ட நான்‌ சகல லோகங்களின்‌ தாரதம்‌யங்களைப்‌ பார்க்க உத்தேசித்து இப்பொழுது பாரத வர்‌ஷமடைந்திருக்கிறேன்‌. “சென்ற விடமெல்லாம்‌ என்ன சிறப்பு எனக்கு ! என்ன உபசாரம்‌! என்ன வரவேற்பு ! என்ன பகுமானம்‌ ! மற்றோர்‌ கொடுத்த பஹுமானங்களைவிட, ஸ்ரீமகா விஷ்ணுவுக்கு லக்ஷ்மியைக்‌ கொடுத்‌ தோனாம்‌ ஷீர ஸாகரனளித்த இந்த ரத்னஹாரத்‌தின்‌ காந்தியே என்‌ மதிப்பை பெருக்குகின்‌றது ! என்னைப்‌ பார்ப்பவர்‌ பலரும்‌ பதின்மூன்றாவது ஸூர்யனோ, பன்னிரண்டாவது ருத்ரனோ, ஒன்பதாவது வஸூவோ வென ஐயமுறுகிறார்கள்‌ ! | (சிறிது யோசித்‌து கோபச்‌ சிரிப்புடன்‌) :என்னே உலகின்‌ மடத்தனம்‌ ! நமது பரிசாரகர்களின்‌ பரம்பரையில்‌ சேர்க்கத் தக்க யோக்‌யதை யற்றவர்களு மல்லலா நமக்கு ஸமமானதது்‌ம் மேம்பட்டதுமான ஸ்தானத்தை வஹிக்க வீணாசை கொள்கிறார்கள்‌ ! ஸகல சாஸ்திர பண்டிதர்களையும்‌ வென்று ஆளாக்கிக் கொண்ட எனக்குமா இணை உண்டு – ஹ ஹ! ஹ. | சிஷை யாரிடத்திலா ? பாலினின்றும்‌ நீரைப்‌ பிரித்தப்‌ பாலையே பருக ஹம்ஸத்திற்கும்‌, சாகரம் அனைத்தையுமே ஒரே ஆசமனத்தில்‌ வற்றடிக்க அகஸ்தியருக்கும் யாரிடம் சிஷை என்‌ கல்விச் சிறப்பு ௮ப்படி யிருக்க, என்‌ குலச் சிறப்பு தானென்ன ? எமக்கு யாகஞ்‌ செய்விக்க யோக்யதை யுள்ளவர்‌ இல்லாத காரணத்தாலேயே மூல புருஷர் முதல்‌ எம்‌ குலத்தோர்‌ எவ்வித யஞ்ஞங்களும்‌ செய்ய வேண்டிய ஆவஸ்யகம் இன்றிக்கே இருக்கிறோம் ஆக்கும்‌! .ஹ! ஹ!! !ஹ! (வலது பக்கம்‌ பார்த்து) வஞ்‌சனையாலும்‌ கண்டறிய முடியாத யுக்திகளால்‌ உலகத்தை. வென்று வரும்‌ என்‌ சிஷ்யர்களின்‌ சாமர்த்‌தியம்‌ எவருக்‌கு வரும்‌ -பெளத்த மதத்தில்‌ 48 பிரிவுகளுண்டாக்கி ௮ந்த வைதிகர்களுடைய வித்யா கர்வத்தை ௮பஹரித்து விட்டேன்‌ !. மதவாதிகளைப்‌ பெருக்கி அவர்களுக்குள்‌ ஆக்‌ரஹத்தை ௮திகரிக்கச்‌ செய்து, அவர்களிடும்‌ சண்‌டைகளைக் கண்டு, மல்லர்கள்‌ செய்யும்‌ யுத்தத்தையும்‌ ஆடுகள்‌ இடும்‌ சண்டையையும்‌ கண்டானந்திப்பது போல்‌, வாத யுத்த ரசத்தை சதா அனுபவித்துக்‌ கொண்‌டே யிருக்கறேன்‌ !(மற்றோர்‌ பக்கம்‌ திரும்பிப்‌ பார்த்‌து ) அதோ! அதோ! கை நிறையப்‌ பவித்ரமும்‌ கட்‌ஷத்தில்‌ புஸ்‌தகக்‌ கட்டுமாக தாடி மீசை வளர்த்துக்‌ கொண்டு தம்மைப் பண்டிதனெனக்‌ கூறிக் கொண்டு சகலரையும்‌ ஏமாற்றிப்‌ போதனை செய்து. வருகிற நிரஷர குக்ஷிகள்‌ கூட்டமல்லவா அதோ அந்த மிலேச்ச தேசத்‌தில்‌ தென்படுவது ? (வடக்கு திக்கைப் பார்த்‌து )–.,ஐயா வடதேசத்தவரே ! துர்மதி தேவியின்‌ ஆஞ்‌ஜையால்‌ ஹிமவகத் பர்வதச்‌ சாரல்‌ சென்ற என்‌ பத்னிகள்‌ ௮ஸூயை, ஈர்ஷ்யை என்பார்களைக்‌ கண்டீரோ – (உற்றுக்‌ கேட்டு(–என்ன ஸுமதியின்‌ தோழிகளான “மைத்ரீ ,முதிதை, . கருணை, உபேஷை ஆதிகளால்‌ நிவ்ருத்தி மார்க்கமென்னும்‌ சுரங்கத்தில்‌ அடைபட்டு விட்டார்களா (கோபத்துடன்‌) பொய்‌! பொய்‌!-ஏ விதவாஸுதனே ! பிராம்மணப்‌ பைசாசமே ! என் பத்‌னிகளுக்கா ௮க்கதி வரக்கூடும்‌?…(உற்று?நோக்கி, ௮டடா! பழைய ஆசாமி தான்‌ இவன்‌ ! வைதீகனாகிய மித்யா சாரனல்லவா! இவனுடன்‌ பேசியதும்‌ தப்பு..

ஸ்வஸ்ரூரஸ்ய திகம்பர வ்‌ரவததீ ஸம்பந்தி நஸ்ஸெளகதா:
மாதா சாஸ்ய பிதா ச பாஸூபதிநெள வைஷஸேஷிகோ தேசிக |
ஜாயா திஷ்டதி ஸாங்க்ய யோக ஸமயே சார்வாக சிஷ்யஸ் ஸாகா
மித்யாசார ஸமாஹ்வய: ஸ்வயமஸெள விப்லாவகோ வைதிக –

(வேறு திக்கு நோக்கி) அதோ! வெளி வேஷத்தால்‌ மட்‌டும்‌ காப்பாற்றப்பட்ட வர்ணாஸ்ரம தர்மங்களை யுடைய பிராம்மணர்களின்‌ ௮க்‌ரகாரம்‌ ! உபநயநாதி ஸம்ஸ்காரங்கள்‌ கேவலம்‌ உத்ஸவார்த்தமாக நடத்தப்படுகின்றன ! ஸந்தியாவந்தனம்‌ ஓர்‌ விளையாட்டாகவும்‌ பொழுது போக்காகவும்‌ செய்யப்படுகிறது ! காயத்ரீ ஜபம்‌ ‘கோஷ்டியாகப்‌ பலர் கூடி. ஊர் வம்பளக்க வேண்டிய பிரக்ருதமாகக்‌ கொண்டாடப்படுகிறது! ஸுரதகேளி ௮க்னி ஹோத்ரம்‌ ஸாங்கோபங்கமாக ஸதா நடை பெறுகிறது ! அவ்வளவும்‌ மோஹ ராஜன்‌ வெற்றிக்கு அறிகுறியையே ஸூஸிப்பிக்‌கிற தல்லவா ! (வேறு பக்கம்‌ பார்த்‌த) அதோ! மடங்களின்‌ மூலைகளில்‌, மெளன ஸமாதியில்‌ இருப்பவர்கள்‌ யார்‌ ?–. வலதுகை விரல்கள்‌ நிறைய தர்ப்பம்‌! மூக்கை இறுக்கிப்‌ பிடித்திருக்கிறார்‌கள்‌ !–. ஹ!- ஹ! ஹ! (கை கட்டிக்‌ குதூகலித்து) பேசுந்திறனில்லாமையாலும்‌, ஆதரிப்‌பாரில்லாமையாலும்‌ மெளன விருதம்‌ கொண்டு குதிரைப்‌ ப்‌ரம்மசர்யம்‌ பூண்டு உஞ்ச விருத்தி செய்யும்‌ வேஷக்காரர்களல்‌லவா –. (வேறு பக்கம்‌ திரும்பி) பேஷ்‌ ! பிடிக்கடங்காத பூணூல்‌ வடம்‌! மூடிய கண்‌! ௮சக்கிய வாய்‌! கையில்‌ ஜெப மாலை ! வஸ்திரத்‌தின் மேல்‌ கிருஷ்‌ணாஜினம்‌! அதன் மேல்‌ தர்ப்பாஸனம்‌ !–பேஷ்‌ இவர்கள்‌ வேஷம்‌! மார்ஜார வ்ருத்தி! கொக்கின்‌ வாட்டம்‌ ! நல்ல் தபஸ்விகள்‌! காலடியில்‌ விழும் காசுகள்‌ தவிர்த்து வேறு எதின் பேரிலும்-கண்ணோட்டம் இருப்பதாகக்‌ காணோமே இந்த யோகிகளுக்கு!–, ஸ்வர்ண மலையை இச்சித்து ௮க்னிபில்‌ ஹோமம்‌ செய்கிறான்‌ ஒருவன்‌ ! கலி யுக ஸந்யாஸிகளின்‌ -வைராக்யம்‌ மெச்சத்‌ தக்கதே ! மடம்‌ கட்டுவதாயும்‌ கிரந்தங்கள்‌ பிரசுரிப்பதாயும்‌, பிஷையென்றும்‌, சிஷ்ய ரக்ஷணமென்றும்‌ பணம்‌ பறித்துப்‌ பிழைக்கிறார்‌களே இக்தக்‌ காஷாயதாரிகள்‌ ஸ்பாஷ் ! உலகம்‌ இப்படி இருக்கையில் மஹா மோஹ ராஜ்யம் நிலை நாட்டப்படுவதற்கா சந்தேகம் -விவேகனுக்கு இடமேது இனி இவ்வுலகில்‌?–அதோ காணப்படும்‌ ஆஸ்ரமம்‌ யாருடையது – தர்ப்பக்கட்டு–துளஸீ ! புஷ்பங்கள்‌ குவியல்‌ குவியலாக : ! ஸூர்யனுக்கு ஸூதனோ, ஜேஷ்‌டப் ப்ரதாவோ, பிதாவோ என்று ஐயுறும்படியான ஐவலிப்பு -உண்மையானதோர் முக்தன் தானோ -நெருங்கி –எனது வலது கண் துடிக்கிறது -என்ன ஆச்சர்‌யம்‌! இந்த சகுனத்திற்குப்‌ பத்னியின்‌ சேர்க்கை யல்லவா ஸம்பவிக்க வேண்டும்‌!-யோகி யாஸ்ரமத்தில்‌ இந்த விபரீதச்‌ சகுனமேன்‌ –அதோ! ஓர் யோகியார் வெளி வருகிறார் –மறைந்திருந்து கவனிப்போம் –
(ஸந்யாஸ வேஷ்த்‌துடன்‌ அஸூயை ப்ரவேசம்‌ )
அஸூயை –
-துர்மதி தேவியின் உத்தரவால் இத்தகைய கோலத்துடன் இவ் வீரேழு உலகிலுமுள்ள விவேகிகள் ஒவ்வொருவரிடம் தோஷ ஆரோபணம் செய்து -அவற்றையே பெரிதாக்கிப் பிரசுரித்தி வந்தேன் –தோஷமற்ற பெரியோரும் உளரோ -ஹ ஹ ஹ -ராமனையே எடுத்துக் கொள்வோம் –

நிரவதி குண க்ராமே ராமே நிராகஸி வாகஸி
ஸ்புரண முஷிசாலோகா லோகா வதந்தி ஸசந்திகே |
வரதநு ஹதிம்‌ வாலி த்ரோஹம்‌ மநாகப ஸர்பணம்‌
பரிமிதகுணே ஸ்பஷ்டாவத்யே முதா கிமுதாஸதே

ப்‌ரபஞ்சத்திலுள்ள தோஷங்களைப்‌ போக்கடிக்க வல்ல அந்தப்‌ பகவானிடமும்‌ தோஷத்தைக்‌ கூற வல்லேனல்லவா நான்‌ !–, (கர்வனைக்‌ கண்டு)அதோ ! ஸ்வர்ண குண்டலங்கள்‌ ! தண்ட கமண்டலு! இடையில்‌ தர்ப்‌பக் கயிறு, ! வயிறோ -அஷ்டகா ஸ்ராத்த போஜனத்தால்‌ பருத்த ஏற்றச்‌ சால்‌ !
(கர்வன்‌ முன்வர )
அடிக்கடி ஹுங்காரக்‌ கனைப்பு -இந்த ஆஸ்ரமத்துள்‌ நுழையப்‌ பார்க்கிறான்‌ போலும்‌ !–தடுத்து நின்று யாரென அறிகிறேன்‌|

கர்வன்‌.– (வணக்கத்துடன்‌) பகவதி? மகா யோக ஸித்தி பெற்றவளாய்த்‌ தோன்றும்‌ உனது ஊர் , குலம்‌, கோத்‌ரம்‌ முதலியனவற்றை நான்‌ அறிய விரும்புகிறேன்‌.

௮ஸுூ.–பிள்ளாய்‌! என் போன்ற இவ்வாஸ்ரமத்தில்‌ உள்‌ளவர்கள்‌ சொல்லக் கூடாத விஷயங்களை என்னைச்‌ சொல்‌லச் சொல்லுகிராய்‌ ? என்னை ஏன்‌ நமஸ்கரியாது தம்பம் போல்‌ நிற்கிறாய்‌ –

கர்வன்‌.–நீ ஆஸ்ரசமமொன்றில்‌ மட்டும்‌ பெரியவள்‌, நானோ வயது, கர்மம்‌, வித்யை எல்லாவற்றிலும்‌ உன்னை விடப் பெரியவனா யிருக்க, நான்‌ எப்படி. உன்னை நமஸ்‌கரிக்கக்‌ கூடும்‌ என்றுதான்‌ தயங்குகிறேன்‌.
௮ஸூ .—இந்த ஸந்தேகத்தை இந்த ஆஸ்ரமத்திலுள்ள பெரியாரைக்‌ கேட்டுத்‌ தெளிவோம்‌ முதலில்‌.

கர்வன் -சரி ஆயினும்‌.–. நீ இதற்கு முன்‌ என்னால்‌ அனுபவிக்கப்பட்டவளாகவே . காண்கிறாயே!—வேஷம்‌ மட்டும்‌ வேறாயிருக்கிறது !
அஸு,–நீயும்‌ பழைய பரிச்சயா முள்ளவனாகத் தான்‌ தோன்றுகிறாய்‌ ! இருந்த போதிலும்‌ உன்‌ ஸந்தேகத்தை ஆசஸ்ரமத்திலுள்ள பெரியாரிடம்‌ கேட்டு நிவர்த்தித்‌து பிராயச்சித்தாதிகளை முடித்‌து உன்னைப்‌ பரிசுத்தனாக்க வேண்டும்‌ முதலில்‌ !

கர்வன்‌.–(தனக்குள்‌) கொண்டிருக்கும்‌ வேஷத்தால்‌ தைரியமாய்ப்‌ பிதற்றுகிறாள்‌ ! (வெளிப்படையாய்‌), இந்த ஆஸ்ரமத்திலுள்ள பெரியார்‌ யார்‌

அஸு,—பார்த்கால்‌ தெரிய வரும்‌ ௮வர்‌ பெருமை.
(ஆஸ்ரமத்துள்‌ செல்கின்றனர்‌.)

மூன்றாம்‌ காட்சி- இடம்‌ :–டம்பன்‌ ஆஸ்ரமத்திற்குள்‌ [டம்பனும்‌, வஞ்சனையும்‌ –கர்வனும்‌, அஸூயையும்‌ வருவதைக் கண்டு டம்பன்‌ மெளன விரதம்‌ அபிநயித்து பத்னியை ஜாடையால்‌ ஏவுகிறான்‌.]

வஞ்சனை– ஜயா (பரபரப்புடன்‌)--. ஐயா பிராம்மணோத்தமரே ! அம்மா பகவதி! வெகு தூரம்‌ நடந்து வந்து ௮சுத்‌தமா யிருக்கும்‌ உங்கள்‌ நிழல் கூட மஹா யோகியாகிய இவர் மேல்‌ படக் கூடாது. : எட்டி நில்லுங்கள்‌.–கங்கா ஜலத்தையே மஹ ரிஷிகளே கொண்டு வந்தாலும்‌ அதையையும்‌ கையாலே நனைக்க மாட்டார்‌ என்‌ யஜமான் ! கிட்டி வராதேயுங்கள்‌ !

கர்வன்‌–அபூர்வ தம்பதிகள்‌ -நீங்கள்‌! கங்கா யமுனா ஸங்கமத்தில்‌ தீர்த்த மாடிய மஹாபரிசுத்தர்கள்‌ நாங்கள் -எங்கள்‌ தேஜஸ் என்ன ! கியாதியென்ன ! சூர்யனைப்‌ போல்‌ ஸ்வயம்‌ பிரகாசிகளான எங்கள்‌ நிழலும்‌ கீழே விழுமா ? ஸந்தேக நிவ்ருதயர்த்தம்‌ இங்கே வந்தால்‌, ௮திதி ஸத்காரம்‌ ஏதும் செய்யாததுடன் ௮நாதரவுமாகவும் செய்கிறீர்கள்‌? ஹ!ஹ! ஹ! தனது மூடத்தனத்தை மறைத்துக்‌ கொள்ள உனது யஜமானர்‌ மெளன விரதம்‌
கொண்டிருக்கிறாரோ ?

டம்பன்‌.--(புருவத்தை நெறித்து ஹுங்காரஞ்‌ செய்கிறான்‌)

வஞ்சனை, — (வேகத்துடன்‌ ௮ருகில்‌ சென்‌று வாயைப்‌ பொத்‌திய கையுடன்‌) மெளன விரதத்தை சாஸ்திரோக்தமாக முடித்துக் கொண்டு அதிதிகளுக்குப் பதில்‌ சொல்லலாம்‌–.

டம்பன்‌.–(உரத்‌து ஓமென்று ப்ராணாயாமம்‌ ௮பிநயத்‌து )-அடே வராத்யப்‌ பிராமணா ! மூட சிகாமணியே ! தபோ பலம்‌ குறையப் போகிறதே யென்று உன்னைச்‌ சபிக்காமல்‌ விட்டேன்‌ ! என்‌ சாபத்தினால்‌ சாம்பலானோரைக்‌ கணக்‌கிட முடியாது? போ இக் கணமே என்‌ எதிர்‌ நில்லாதே!
என்‌ நேத்ர ஜ்வாலை உன்னைப் பஸ்மப்படுத்து முன்‌ தப்பி மறை! |

கர்வன்‌.--(கோபத்‌துடன்‌) மூடா! ஜாத்யாபிமானத்தினால்‌, என்‌ பாதங்களால்‌ உன்‌ கபோலம்‌ அலங்கரிக்கப்படாது தப்பியது அறிவாய்‌ ! நான்‌ யார்‌ தெரியுமா –

துண்டீரம்‌ மண்டலம்‌ மே குலபதிரபி ச ஸ்கந்த பூபால வந்த்ய
க்ஷேத்ரம் ஸத்ய வ்‌ரதாக்யம்‌ க்ஷிதி தல திலகம்‌ ஷூத்ர காஞ்ச்யக்‌ரஹார
ப்ரக்யாதச்‌ சிஷ்ய பூம்நாதி சிதிசி பவதா கூப கூர்மோபமேக
ஸ்தாதாவா தாஹவேஷுஸ்‌தவிர !கதமஹம்‌ ந ஸ்ருதோநாபி த்ருஷ்ட-

(சிரித்து )–அடே டாம்பிகா! என்‌ ப்ரபாவம்‌ என்னைத்‌ தவிர வேறு எவரால்‌ ௮றிய வல்லது ? என்‌ யோக்யதைகளில்‌ லவ லேசமாவது மஹா யோகிகளுக்கும்‌ இருக்குமா- எனவேயன்றோ மூத்தோரையும்‌ என்‌ ஸேவைக்கு ௮ர்‌ஹரல்ல என்று கருதி நான்‌ ஸேவிப்பதுமில்லை –. என்‌ தர்ம அனுஷ்டான ஸ்ரத்தையை நீ ௮றிவாயோ? ஹ! ஹ! ஹூ ஊராரரால்‌ ஸம்சயிக்கப்பட்ட பந்து ஒருத்தி, தானாக வந்து என்‌ தாயாரிடம்‌ பேச யத்தனித்த நிமித்தத்தினால்‌, மஹா பதி வ்ரதா சிரோமணியான என்‌ தாய்‌ ௮னாசாரப் பட்டு விட்டதாக அவளையே துறந்தவனடா நான்‌ !
டம்பன்‌–ஹ! ஹ! நல்ல ப்‌ரம்ம பந்து தான்‌ நீ, அடே விநயமற்ற துராசார! இந்த ஸக்யாஸிநியை நீ நமஸ்கரிக்க வில்லை ! போகட்டும்‌–மஹா கியாதி வாய்ந்த பெரியவனான என்னையும்‌, யாவரும்‌ ௮ஞ்சி வணங்கும்‌ என்‌ பத்னியையும்‌ நீ நமஸ்கரியாத காரணம்‌ யாது?

கர்வன்‌.-௮டே ஆத்ம ஸ்தோத்திரஞ்‌ செய்து கொள்ளும்‌ பாலி! மஹா பூஜ்யனான என்னைப்‌ பூஜியாத தோஷத்‌தால்‌ நீ நாய்‌ ஜென்மமோ சண்டாள ஜென்மமோ அடையப்‌ போகிறாய்‌ :
வஞ்சனை.–௮ம்மா ஸந்யாஸிநி ! இந்த நீசப்‌ பிராமணன்‌ இந்த மஹரிஷியை நிந்திப்பதால்‌ நாசமடையப்‌ போகிறான்‌ பார்‌ !
௮ஸூ.–௮திதிகளை ஆராதிக்கும்‌ யோக்யதை யற்ற தார்மிக பத்னியின்‌ நிந்தனை வெகு நன்றா யிருக்கிறது !.

டம்ப–(கோபத்‌துடன்‌) அடே! காக்கையைப் போல வீணில்‌ கத்துகிறவனே ! நீ தான்‌ நாய் மாதிரி ஊரூராய்த் திரிந்து வருபவன்‌ ! மூடு வாயை –

கர்வ.–(கை கொட்டிச்‌ சிரித்து) ஹ! ஹ! உள்ளதைச்‌ சொன்‌னால்‌ கோபம் தான்‌ வரும்‌! ஏனடா குரங்கைப் போல்‌ அப்படிக்‌ கோபித்துக்‌ கொக்கரிக்கிறாய்

டம்ப -தூணைப் போல்‌ பருத்‌திருக்கிறாயே யொழிய லோக . வ்யவஹாரம்‌ ஒன்று மறியாதவனாகக்‌ காண்‌கிறாய்‌ நீ ! ப்‌ரம்மாவே தன்‌ ஹஸ்‌தங்களினால்‌ எனக்கு அர்க்ய மளித்‌திருக்கிறார்‌! இவர்‌ பரம்பரையில்‌ பிறந்த பலரும்‌ இன்றும்‌ கிருதார்த்தர்களாக வேண்டி. ‘எனது ஸ்ரீபாத தீர்த்‌தத்‌தினால்‌ ப்ரோக்ஷிக்கப்‌ படுகின்றனர்‌ காண்‌!

வஞ்சனை-ஸ்வாமிகள்‌ ஸாதித்தருளிய தவ்வளவும்‌ யதார்த்தமே! ஸஹ தர்மிணியான நான்‌ பிரத்யஷமாகக்‌ கண்‌டதுவே!

கர்வன்‌-பேஷ்‌! அம்மா ஸந்யாஹிநி ! யுக்தி விசேஷத்தால்‌ நான்‌ இப்பொழுது. அறிந்ததைக்‌ கூறுகிறேன்‌ கேள்‌! பிறார் ஸொத்திலேயே கண்ணுள்ளவளும்‌, கோண புத்தி மிகுந்தவளுமான இவளே என்‌ மதினி குஹனா தேவி! ஸ்வாமிகள்‌ தான்‌ என்‌ முத்தண்ணா ‘டம்பாசாரியார்‌-நமது தர்ம ஸந்தேகம்‌ இவர்களால் எப்படித் தீர வல்லது –

டம்பன்‌–(மந்த ஹாஸத்துடன் ) ஸரி தான்‌ ! ஸரி தான்‌! வீண் சப்த ஆடம்பரம் செய்பவனும்‌ மிகுந்த குணசாலிகளையும்‌ தூஷிப்பவனாகிய நீ, தம்பி கர்வனாகத் தான்‌ இருக்க வேண்டும்‌ ! ஸந்யாஸி வேஷம் பூண்டிருப்பது உனது தர்ம பத்னி ௮ஸூயை யம்மாள்‌ தான்‌! தர்ம ஸந்தேகம்‌ நிவர்த்தியாயிற்றா ? என்னால் –

கர்வன்‌.–௮ண்ணா ! ௮டியேன்‌ ௮பராதங்களை க்ஷமித்‌தருள வேண்டும்‌! டம்பன்‌–௮பராதமென்ன ! ௮துவே யன்றோ நம்‌ குணம்‌ (ஒருவரை யொருவர்‌ கட்டிக்‌ கொள்‌கிறார்கள்‌.)
கர்‌வன்‌.–௮தோ ! மகா ராஜனும்‌ தேவியாரும்‌ வருகிறார்கள்‌ -நாம்‌ சற்று அடங்கி ஒதுங்கி நிற்போம்‌- (ஒதுங்‌கி நிற்கிறார்கள் ) (மஹா மோகனும் துர்மதியும்‌ பிரவேசம்‌]

மோகன்‌.--என்ன ஆச்சர்யம்‌ ! விவேகளை வெல்வதற்காக அனுப்பப்பட்ட காம க்ரோதாதியர்‌, வ்யூஹம்‌ கலைந்து, பயந்தோடி, நம்மைக்‌ காண்பதற்கு அஞ்சிப்‌ பிராயோபவேசஞ்‌ செய்து விட்டார்களாமே! குயுக்‌திகளாலான பல்வேறு மதங்களும்‌ பிரயோசன மற்றன ! பெண்ணாசையும்‌, மண்ணாசையும்‌, பொன்னாசையும்‌, பேராசை கோபம்‌ முதலியனவற்றின்‌ உதவியைப்‌ பெற்ற போதிலும்‌, விவேகனால்‌ பீடிக்கப்பட்ட ஜீவாத்மாவால்‌ நிராகரிக்கப் பட்டன ! இருந்தும்‌ ஜீவன்‌ பூர்ணமாக விவேகன்‌ வசம்‌ ஆகாமல்‌ ஊசலாடிக் கொண்டிருக்கும்‌ தற்கால நிலையில்‌, ஊக்கம் விடாது நமது ராஜ்யத்தை நிலை நிறுத்த முயன்றே தீர வேண்டும்‌ ! அதற்கேற்ற ஸாமர்‌த்யமுள்ள மந்திரிகளைத்‌ தேட வேண்டும்‌ !
(டம்பன்‌ முதலானோர்‌ முன் வந்து நமஸ்கரிக்கின்‌றனர்‌;)
ப்ரியே ! நீ கவலை விடு ராக்ஷஸர்களை வெல்வதில்‌ ராமன்‌ தனித்தே நின்று ஜெயித்தாப்‌ போல, காம க்ரோதாதியரால்‌ கை விடப்‌ பட்டாலும்‌ நான்‌ தனித்தேனும் நின்று, விவேக மோஹ யுத்தத்தில்‌ வெற்றி பெறாது திரும்பேன்‌ என்பைத நிச்சயமாய் நம்பு –

டம்பன்‌,– பிரபோ! அந்த ராமனுக்குக்‌ குரங்குகளல்லவா உதவி செய்து வெற்றியைக் கொடுத்தன. கிருஷ்ணனுக்குக்‌ கேவலம்‌ இடையர்களே யன்றோ பக்க பலம்‌.ஆகவே, இதோ நிற்கும்‌ நாங்கள்‌ இருக்க உமக்கேன்‌ கவலை?

மோகன்‌.–பேஷ்‌ !–, இந்தக்‌ கலி காலமே எனக்குத்‌ தேர்‌! துர்மதீ! நீயே என்‌ ஸாரதி! டம்பனே எனது ஜயத்‌தைக்‌ தெரிவிக்கும்‌ துந்துபியாகிறான்‌–. கர்வனே இனி எனது கவசம்‌! வெற்றி என்னுடையதே !–டம்பா மீண்டும்‌ புண்ய நதிகளின்‌ சமீபங்களில்‌ சஞ்சரித்து உனது தர்மங்களை ஜாக்ரகையாகக்‌ காத்து வருவாயாக!–. தர்ப்பா! – மகா வைராக்யத்துடன்‌ தபஸ்‌ செய்பவர்கள்‌ . நிறைந்த காடுகளிலும்‌ வேறிடங்களிலும்‌ சஞ்சாரஞ் செய்து என்‌ ஆஞ்ஞாசக்ரத்தைக்‌ கை விடாது செலுத்தி வருவாய்‌. ‘

டம்ப -தர்ப்ப மஹா ராஜன் உத்தரவுப்படியே இதோ செல்கிறோம்
(தம் தம் மனைவிகளுடன் செல்கிறார்கள் )

மோகன்–பிரியே -இனி நாம்‌ தைரியத்துடன் செல்‌வோம்‌ வா –விவேகனை வெல்வது அசாத்யமானது அல்ல -ஜயம் நன்மை விட்டு விலக வில்லை இன்னமும்‌ !
(குதூஹலத்துடன்‌ செல்கிறார்கள்‌)

நான்காம்‌ காட்சி-இடம்‌ :–விவேகனது கோட்டைக்‌கெதிரில்‌–[விவேகன்‌, தன்‌ ஸாரததியான தர்க்கனுடன்‌ ரதா ரூடனாய்க்‌ காணப்படுகிறான்‌.]

விவேகன்‌.-தர்க்கா! தியானத்திற்கேற்‌ற ஸ்தலத்தைத் தேடி வரும்‌.என்‌ மனோ ரதத்தை வெகு சாமர்த்யத்‌துடன்‌ செலுத்தத்‌ கூடியவன்‌ நீ ஒருவனே ! ஜீவாத்மா சகல இந்‌தியங்களையும் தனக்கு வசமாக்கிக்‌ கொண்டு விட்‌டான்‌ ! கர்ம பூமியாகிய பாரத வர்ஷத்‌தில் தான்‌ யோகம்‌- ௮துள்‌, கைலாஸம்‌ பவனீபதிக்கு ஸ்தானமாயினும் அநந்யப்‌ பிரயோஜனமான தியானத்‌திற்கு ௮து ஏற்ற இடமல்ல- ஸித்தர்களினால்‌ ௮டையப் பட்டிருக்கும்‌ கந்தமாதன பர்வதமும்‌ யோக ஸித்தி உண்டாகக் கூடிய இடமில்லை. ஆயினும்‌!. யுத்தத்தில்‌ உண்டான காய வடுக்களுடன்‌ ஸ்ரீராமனை ஸ்தோத்திரஞ்‌ செய்து குதூகலத்துடன்‌ காணப்பட்ட ஆஞ்சநேயன்‌ ஆங்கு பாடிய ஸ்லோகமொன்று இன்னமும்‌ என் காதில்‌ ஒலித்துக் கொண்டே மனதில்‌ பதிந்திருக்கறது ! | ஹா ஹா!

பகவதி பரத்வாஜே புக்திஸ்‌ ததா ஸபரீ க்ருஹே
ப்‌ரபுரனுஸ்ருதோ விஸ்வாமித்ர: ப்லவங்க பதிஸ்‌ சதா |
ப்ருகுபதி தபோலூநம்‌ திருஷ்டி: ககஸ்ய ச தக்ஷிணா
ஜயதி லளிதோத்துங்கா வ்ருத்திர்‌ தஸாஸ்ய ரிபோரியம்

இங்கிருந்தால்‌, மனது , த்யானத்தை மறந்து இந்தக் காரணாம்ருதத்‌தால்‌ மயக்கப்பட்டு நிலை தடுமாறக் கூடும்‌!–, ஹிமவத் பர்வதச் சாரலிலோ, கங்கையின்‌ சலனமும்‌ ஸமாதியைக் கெடுக்க வல்ல பல ஸ்ருங்காரங்களுங்‌ காணப்‌ படுகின்‌றன–. ஆர்யா வர்த்த தேசமும்‌ பாஷண்டர்கள்‌ நிறைந்துளதால் நம்‌ காரியத்திற்கேற்ததல்‌ல -. ஹ! ஹி! -. அயோத்யையை நினைத்தால்‌ மயிர்க்‌ கூச்சலிடுகிறது –

நமஸ்‌தஸ்மை கஸ்மை சந பவது நிஷ் கிஞ்சந ஜன
ஸ்வயம்‌ ரஷா தீஷா ஸமதிக ஸமிந்தாந யஸஸே |
ஸுராதி ஸஸ்வை’ ரஷண குபித ஸாபாயுதவ தூ:
த்ருஷத்தா துர்ஜாத ப்ரஸமந பதாம்போஜ ரஜஸே.

ஆனால்‌ தத் ஸமையமோ, இவ்‌ வயோத்யையும்‌ கிருத யுக தர்‌மம்‌ நீக்கியும் , நிவர்த்தி தர்மத்தைக்‌ கொண்ட ஸாதுக்களால்‌ விடப்பட்டதாயு மிருக்கறது !–. பூமி பாரத்தைப்‌ போக்க வேண்டிப்‌ பகவான்‌ ௮வதரித்‌து லீலா விநோதங்‌கள்‌ நடத்தி வந்த மதுரா பட்டினமோ, அந்தக்‌ காரணத்தால்‌ பூஜிக்கத்‌ தக்கதே !…

ஹர்த்தும் கும்பே விநிஹிதகர ஸ்வாது ஹய்யங்க வீநம்
த்ருஷ்ட்வா தாம க்ரஹண சடுலாம்‌ மாதரம்‌ ஜாத ரோஷாம்‌|
பாயா தீஷசத் ப்ரசலிசபதோ நாப கச்சந் ந திஷ்டந்
மித்யா கோபஸ்‌ ஸபதி நயநே மீலயந் விஸ்வ கோப்தா

ஆனாலும்‌ சுந்தரிகளான கோபிமார்களது லீலைகளையே ஞாபகப் படுத்துவதும்‌, தத் காலம் அதர்மத்தால் முழுங்கப் பட்டதுமான ௮ந்த மதுராபுரியும்‌ சமாதிக்கு ஏற்ற இடமில்லை. ஸ்ரீஹரி க்ஷேத்ர மெனப்படும்‌ ஸாளக்ராம ஷேத்ரமும்‌ என் மனத்திற்குப்‌ பிடித்ததாயில்லை! வாரணாசியும்‌ வஸதியானதல்ல–. விந்த்யாசலச் சாரலும்‌ பிரயோஜனமில்லை–. பாலைவனங்கள்‌, -பணமே பிரதானமாகக்‌ கொண்டவர்கள்‌ நிறைந்த இடம்‌

ப்ராளபதி பூர்ணதி ஸ்கலதி முஹ்யதி ஹுங்குருதே
ந ச பதவீமவைதி ந ச தாம ந சத்ரபதே |
விக்ருதி ச ப்ரஸூதி விஷமாஸய தோஷபூமா
தனமதி ராமதேந தமதீவ தாரவலயம்

காவிரிப்‌ பிரதேசமும் மகா கடின சித்தர்களும்‌, அங்குள்ள ஸாதுக்களிடம்‌ விஷமம்‌ செய்பவர்களும்‌, ஹிம்சிக்‌குமவர்களாலும்‌ நிறைக்கப் பட்டிருக்கறது –யாதவாசலம்‌ பரவாயில்லை–பரசுராம க்ஷேத்ரம் மோக்ஷ ஆசையுள்ள பெரியோர்களை நிந்திக்கும்‌ இடம்‌–மலய பர்வதம்‌ பூலோக ஸ்வர்க்கந்தான்‌–பாண்டிய தேசம்‌ நம்‌ ஸம்பிரதாய கூடஸ்‌தரான ஸ்ரீ சடகோபன்‌ திருவவதரித்த பிரதேசம்‌ ! (கை கூப்பி)

ஸாரஸ்‌ ஸாரஸ்வதாநாம்‌ ஸடரிபுபனிதி ஸ்ஸாந்தி ஸூத்தாந்த ஸீமா
மாயா மாயாமிநீபி:ஸ்வ குணவிததி பிர் பந்த யந்தி ந்தயந்தி |
பாராம்பாரம்‌ பரீதோ பவ ஜலதி பவந் மஜ்ஜநாநாம்‌ ஜநாநாம்‌
ப்ரத்யக் ப்‌ரத்யஷ யெந்ந ப்‌ரதி நியதரமா ஸந்நிதாநம்‌ நிதாநம்‌ ॥

திருமாலிருஞ்‌ சோலைக்‌ கண்ணிருக்கும்‌ அழகர்‌ க்ருபை எல்லா இடங்களிலும்‌ பரவி இருக்கிறதல்லவா

த்வயா ஜுஷ்ட துஷ்டிம்‌ பஜதி பரமேஷ்‌டீ நிஜப்தே
வஹந் முர்த்தீ ரஷ்டவ் விஹரதி ம்ரூடாநீ பரி ப்ருட: |
பிபர்தி ஸ்வாராஜ்யம்‌ வ்ருஷ சிகரி ஸ்ருங்காரி கருணே
ஸூநா ஸீரோ தேவாஸூர ஸமர நாஸீரஸுபட: |

அப்பப்ப ? சோள தேசத்தில்‌ தங்குவ்தும்‌ பிசகு! கலைமகள்‌ நூபூரம்‌ ஒலியின்‌ மிகுதியை ஸூசிக்கும்‌ கவிஞர்கள்‌ வாக்கு மலிந்து சஞ்சல சித்தர்களைக் கவரும் இங்கு தங்கினால்‌, நமக்குள்ள சிறிது மநோ திடமும்‌ மறைந்து போகும்‌ !–ஆனல்‌, ஸ்ரீரங்கம்‌ (ஸந்தோஷத்துடன் )

கநகருணாரஸெள கபரிதாம்‌ பரிதாப ஹராம்‌ நயந மஹஸ்சடாம்‌ மயி தரங்கய ரங்க பதே
துரிதஹு தாஸந ஸ்புரித துர்தம து:கமஷீ மலிநித விஸ்வஸெளத துரபஹ்நவ வர்ண ஸுதாம்‌.

மகா ஸ்லாக்யமான க்ஷேத்ரமே தான்‌ இது !–.தொண்‌டை மண்டலத்திலுள்ள ஸத்ய விரத ஷேத்தரமென்‌னும்‌ ஹஸ்‌கிரியும்‌ வெகு ஸ்லாக்கியமானது தான் –

ஸம்ஸாரா வர்தவேக ப்ரஸமந ஸூப த்ருக் தேசிக ப்ரேக்ஷிதோஹம்‌
ஸந்த்யக் தோந்யை ருபாயை யநுசித சரி தேஷ் வத்ய ஸாந்தாபிஸந்தி :
நிஸ் ஸங்கஸ்‌ தத்வ த்ருஷ்ட்யா நிரவதிக தயம்‌ ப்ரார்த்ய ஸம்‌ ரக்ஷகம்‌ த்வாம்‌.
ந்யஸ்ய தவத் பாதபத்மே வரத நிஜ பரம்‌ நிர்பரோ நிர் பயோஸ்மி-

ஸ்ரீவரதனையே ரக்ஷகனாகப்‌ பிரார்த்தனை செய்து என்னுடைய பாரத்தை ௮வன்‌ திருவடித்‌ தாமரைகளிலேயே சமர்ப்‌பித்து விட்டேன்‌ — நிர்ப்பபயனானேன்‌ -என்‌ ஸந்தேகங்களெல்லாம்‌ ஓழிந்தன!–. கசடறக் கற்ற ஆசார்‌ய ஸ்ரேஷ்டர்களது கடாக்ஷமும்‌ பெற்‌றவனானேன்‌ !-(ஸ்ரீவேங்கடாசலமோ ! -அஞ்சலி ஹஸ்‌தனாய் )

நிஷாதாநாம்‌ நேதா கபிகுலபதி காபி சபரீ
குசேல: குப்ஜா ஸா வ்‌ரஜ யுவ தயோ மால்ய க்ருதிதி
அமீஷாம்‌ நிம்நத்வம்‌ வ்ருஷிகிரிபதே ருந்நதிமபி
ப்ரபூதை: ஸ்ரோதோபி; ப்ரஸபமநுகம்‌ பேஸமயஸி

தர்க்கன்‌…-பிரபோ பாரத வர்ஷத்திலுள்ள சகல தேசங்களையும்‌ பார்த்து விட்டோம்‌. ௮வற்றுள்‌, யோக ஸித்திக்கு எந்த இடம்‌ யுக்தமான தென்று மகா ராஜனுக்குப்‌ படுகிறதோ?
விவேக. ஸாரிதி ! பஞ்சேந்திரியங்களையுமடக்‌கி எவனொருவன்‌ எங்கிருக்க வல்லனோ ௮துவே ஸ்லாக்யமான இடம்‌! கலியின்‌ கொடுமையால்‌ விபாபிக்கப்பட்ட உலகில்‌ ஸமாதிக்கு ஏற்ற இடம் இது தான் என்று சொல்ல முடியாது -. தன்னைச்‌ சரணடைந்தவரைக்‌ காப்பதாக அருளிச்‌ செய்திருக்கும்‌ பகவானைச்‌ சரணமடைவதற்குச் சாதனமான இடம்‌ ஒருவனுடைய நிர்மல மனஸே — அம் மனத்துள்‌ ஞானக்குன்றிலேறி, ஆசார வனத்துள்‌ இருந்து , லக்ஷ்மீபதியின்‌ திஸ்ருவடிகளே சரணமென்னும்‌ ஆசைப் பெறுக்கில்‌ நீராடி, உபநிஷ அர்த்தங்களைச்‌ சிந்தித்தலாம்‌ தவமியற்றுபவன்‌ எங்கிருந்தால் என்ன ? எப்‌படி யிருந்தாலென்ன -ஆழ்வார்‌ ஆசாரியர்கள்‌ புகழ்ந்து பாடி யிருக்கும் ஸ்தலங்களில்‌, எங்கு ஸ்ரீமந் நாராயணனது திருவடி ஸேவை செய்து வரும்‌ பெரியோர்கள்‌ இருக்‌கிறார்களோ ௮துவே தியானத்‌ததிற்கேற்ற இடமாகும்‌. ஸ்‌தலமாயிருந்து பெரியோரில்லாத இடத்தை விட, ஸ்‌தலமென்ற பேரற்றதாயினும்‌ பெரியோர்களான ஸாத்விகர்களை யுடைய இடமே சிறந்தது. எந்த இடமான போதிலும்‌, பகவானுடைய திவ்ய மங்கள விக்ரஹத்‌தை ஸதா அவனவன்‌ ஹ்ருதய கமலத்தில்‌ வைத்துத்‌ தியானஞ்‌ செய்து வர வேண்டுவதவஸ்யம்‌. இனி, நாம்‌ போய்‌, ஜீவனுக்குப்‌ பகவானுடைய திவ்ய மங்கள விக்‌ரகத்தை. நிர்த்தாரணஞ்‌ செய்து தியானத்தில்‌ தெளிவான வ்ருத்தியை உண்டாக்குவோம்‌, வா-
(போகிறார்கள் )

ஜந்தாம்‌ காட்சி–இடம்‌ விவேகனது சித்ர சாலை[ஸம்ஸ்காரன்‌ பிரவேஸம் )
ஸம்ஸ்‌.
–தேவ சில்பியான விச்வ கர்மாவையும்‌, ௮ஸூர சில்பியான மயனையும்‌ வென்று இளைப்பாறி வந்தேன்‌ விவக ராஜனது சிற்பியான யான்‌ ! ஸுமதி தேவியின்‌ உத்திரவால்‌ ஸஹதிருஷ்டி, ஸத்ருச த்ருஷ்டி என்ற சேடிகளால்‌ எழுப்பப் பட்டவனாய்‌ ஸேனாபதி வ்யவஸாயனால்‌ ஏவப்‌ பட்டவனாக ஜீவாத்மாவினுடைய மனத்தையே சுவராக வைத்‌துக் கொண்டு, சுத்தம்‌ ௮சுத்தமென்று பிரிக்கக் கூடியதான ப்ரபஞ்சம்‌ முழுவதையும்‌ சித்திரித்து “எழுதி விவேக மகாராஜனின்‌ ஆஞ்ஞஜையைப்‌ “பூர்த்தி செய்து விட்டேன்‌! -சித்திரமும்‌. கைப் பழக்க மல்லவா- மஹா ராஜன்‌ என்‌ சித்திரத்தை ஆதரித்து , சந்தோஷித்து நல்ல பஹுமானமே கொடுப்பார்‌! அதோ அவரே வந்து விட்டார்‌!

[விவேகன்‌, ஸூமதி, வ்யவஸாயன்‌ பிரவேசம்‌.]

வ்யவ.–ப்ரபோ! தேவி! ஸம்ஸ்காரனென்னும்‌ நமது சில்பியால் உள்ளத்தை உள்ளபடி சித்‌திரத்துக்‌ காட்டப்‌ பட்டிருக்கும்‌ முக்காலுத்தையும் உணர்த்தும் இந்தத் சித்ர சாலையைக்‌ கடாக்ஷித்‌தருள வேண்டும்‌–
விவேக.–(சுற்றிப்பார்‌த்‌து ) கண்ணே! என்றும்‌ காணாதோர்‌ ஆச்சர்யமே இது -யாவும்‌ வெகு சிறப்பாகவும்‌ உண்மையாகவுமே ௮மைந்திருக்கின்றன-ஹ ஹ ஜான திருஷ்டியைச் செலுத்த விரும்பும் புருஷனுக்கு முக் குணங்களால்‌ செய்யப்பட்ட இந்த ப்ரக்ருதி என்‌னும்‌ குதிரை, அதோ ௮வன்‌ புத்தயை மறைக்கிறது -அதனால்‌, : ஸம்ஸாரமென்னும்‌ ஜ்வராக்னிக்கு ஜன்ம பூமியாகிய வற்றைத்‌ தெரிவிக்க ௮ந்த அசுத்த பாகத்தை நீ பார்க்க வேண்டாம்-

ஸூமதி .-நாதா! பழைய வாஸனையின்‌ காரணத்தால்‌, கண்‌ ப்‌ரக்ருதியின்‌ பக்கம்‌ செல்கின்றதாயினும்‌, தங்கள்‌ உத்‌திரவின்‌ படியே நான்‌ ௮வைகளைக்‌ காணப் போவதில்லை!
வ்யவ.–சுதத ஸ்ருஷ்டி ஸ்‌வரூபமான பகவானது நித்ய விபூதி யென்னும்‌ பாகத்‌தை மகா ராஜனும்‌ ராணியாரும்‌ நன்முகக்‌ கடாக்ஷித்தருள வேண்டும்‌.

விவேக.–௮ப்‌.படியே செய்வோம்‌. ௮துவே, மனது நிலைத்‌திருப்பதற்கு ப்‌ரயத்னமில்லாமல்‌ ஸுலபமாகச்‌ செய்‌யக் கூடிய காரியமாகும்‌. பரமாத்மாவினுடைய ௮வதாரரங்கள்‌ யாவும்‌ ௮வனது ௮பார தயையினால்‌ உண்‌டானவை யல்லவா”?
வ்யவ.–ஆம்‌ ப்ரபோ !இதோ !-, (ஆச்சர்ய பரவசனாக) மகா அத்புதமான இந்தச்‌ சித்‌திரத்தை எழுத மயனாலுமாகாது – விச்வ கர்மாவாலுமாகாது ! அந்த ஸாஷாத்‌ ஸ்ரீமந் “நாராயணனே தான் தன்னைப் பற்றிய இச் சித்திரங்களை எழுதினான்‌ போலும்‌!-அதோ பாருங்கள்‌! ஸமுத்திரத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டு மூன்று அவதாரங்கள்‌ காட்டப் பட்டிருக்கின்றன ! முழுகிப் போன வேதங்களைத்‌ தேடுவதற்காக பார்வைகளால்‌ ஸமுத்‌ரமத்தியில்‌ தாமரைக் காடு பூத்தது போலத்‌ தோன்‌றும் பகவானது மச்சாவதாரம்‌ முதலானது! ஹா! ஹா! – உச்சைச்ரவஸ்‌, ஐராவதம்‌, அம்ருதம்‌ முதலானவற்றைக் கொடுத்த ஸமுத்ரம்‌ மந்தரசரியால்‌ கடையப்‌ பெற்ற: போது அம்மலையை ௮நாயாஸமாகத்‌ தாங்கிக் கொண்டும்‌ தூங்கிக் கொண்டுமிருக்கும்‌ கூர்மாவாதார மூர்த்தியின்‌ விசித்‌ரத்தைப்‌ பாருங்கள்‌ !--கல்பக விருஷம்‌, சந்திரன்‌ கெளஸ்துப ரத்னாதி அபூர்வ வஸ்துக்களுடன்‌ ஸ்ரீ மகா விஷ்ணுவின்‌ : வஷஸ்‌ ஸ்தல் லக்ஷ்மியையே கொடுத்த ஷீரஸாகரமல்லவா அந்தக்‌ கூர்மத்தை உடைய சமுத்திரம் ! – (ஆனந்த பரவசனாகி )

விவேக:–ஆச்சர்யம்‌ ! ஆச்சர்யம்

கல்யாணாநா மவிகலநிதி காபி காருண்ய ஸீமா –
நித்யாமோதா நிகமவசஸாம்‌ மெளளி மந்தார மாலா –
ஸம்பத் திவ்யா மதுவிஜயிநஸ் ஸந்நி தத்தாம்‌ ஸதாமே
ஸைஷாதேவீ சகல புவந ப்ரார்த்தநா காமதேநு :

அந்த லஷ்மியின்‌ கிருபா கடாக்ஷத்தாலேயே என்‌ கோறிக்கை ஈடேற வேண்டும்‌ –, ஸுமதி! இந்த லஷ்மியை முன்னிட்டுக் கொண்டு போனால்‌ பகவானை மிகவும்‌ சுலபமாய்‌ அடையலாம்‌!
வ்யவ..–தேவி ! ‘ பெளராணிகர்கள்‌ வார்‌த்தை யாதெனில் –

தேவ திர்யங்‌ மனுஷ்யேஷு புந்நாமா பகவாந் ஹரி :
ஸ்‌த்ரீநாம்நீ லஷ்மிர்‌ மைத்ரேய நாநாயோர்‌ வித்யதே பரம்‌.’

தேவ மனுஷ்ய திர்யக்குகளில்‌ ஆண் பாலெல்லாம்‌ பகவானாகிய ஸ்ரீவிஷ்ணு . ஸ்வரூபமே- பெண் பாலெல்லாம்‌ ஸ்ரீ மஹா லஷ்மீ ஸ்வரூபமே.
விவேக.–ஸரியே !

ஸாதாரண்யே ஸத்யபி ஸ்வேச்சயைவ : த்வேதா விஸ்வம்‌ யத் விபூதிர்‌ வ்யபாஜி சூடாபாகே தீப்யமாநவ் ஸ்ருதீ நாம்‌ திவ்யா வேதெள தம்பதீமே தயேதாம்

வ்யவ –இது லஷ்‌மியைத் தரித்துக் கொண்டிருக்கிற ரூபம்‌–பூமியைத்‌ தரிக்கிற மத்றொரு ரூபத்தை அதோ பாருங்கள்‌ !-

விவேக-– மஹத் ஆச்சர்யம்‌ இந்த ஆதி வராஹ அவதாரம் – ஹா? ஹா! லக்ஷ்மியை மார்பில்‌ வைத்து உபசரித்த பகவான்‌ பூ தேவியை ஆதி சேஷ ரூபியாய்‌ ஆயிரம்‌ ஸ்ரங்களால்‌ வஹித்துப்‌ போகிக்கும் காக்ஷி மகத்‌ ஆனந்த கரமாயிருக்கறது !

ஸூமதி — நாதா! எப்படி இந்த மஹா வராஹர்‌, பிரளயத்தில்‌ மூழ்க பூமியை ஹீரண்யாக்ஷனைக் கொன்று மீட்டு வந்தாரோ, ௮ப்படியே, ஆர்ய புத்ரரான தாங்களும்‌ ஸம்ஸார ஸாகரத்தில்‌ மூழ்கிய புருஷனை மோக்ஷ சத்ருக்‌களைக்‌ கொன்று மீட்டு வருங்‌ காஷியைக்‌ காண விரும்புகிறேன்‌ !
வ்யவ.–தேவி! உமது ௮பீஷ்டம்‌ நிச்சயம்‌ ஸித்திக்கும்‌– ௮தோ பாருங்கள்‌ நரஸிம்ஹாவதாரக்‌ காஷியை !

விவேக.–௮ஸூரர்களுக்குப்‌ பயங்கரமாயும்‌, பிரஹ்லாதனுக்‌குக்‌ குளிர்ச்சியைக்‌ காட்டுவதுமாகிய பார்வையைக்‌ கொண்ட ஹிரண்யகசிபுவின்‌ காலனே நம்மை மோஹ மாயைகளினின்றும்‌ காத்து ரக்ஷிக்க வேண்டும்‌ !
வ்யவ.–வாமனாவதாரக்‌ காஷியை ௮தோ கண்டீர்களா ?
விவேக ;–திரிவிக்‌ரமனின்‌ பராக்ரமமே நம்மையும்‌ பாதுகாத்தருள வேண்டும்‌! வ்யவ.–அதோ!மூன்று லோகங்களையும்‌ காப்பாற்‌றிய ப்ருகு, ரகு யதுவினுடைய வம்சங்களில்‌ பிறந்த மூன்று ராமர்‌களும்‌ !

௮நேந கில கோஸல ஸுதா குமாரபாவ கஞ்சுகித காரணா காரேண
கெளமார கேளிகோபாயித கெளசிகாத்வரேண, ராணாத்வர துர்யபவ்ய
திவ்யாஸ்த்ர ஸாலிநா, ப்‌ரணத ஜந விமதந துர் லளித தோர்லளிதேந மை
திலநகர ஸுலோசநா லோசந சசோர சந்த்ரேண, திநகர குல கமல திவாகரேண, கண்ட பரஸூ கோதண்ட ப்‌ரகாண்ட கண்டந சவ்ண்ட புஜ தண்டேந , பித்ரு வசந பரிபாலந ப்‌ரதிஜ்ஞாவஜ்ஞாத யெளவராஜ்யேந , தண்டக தபோவந ஜங்கம பாரிஜாதேந , ௧ரதரகரதரு கண்‌டந சண்ட பவநேந , த்வி ஸப்‌த ரஷஸ் ஸஹஸ்‌ர–நளவந விலோளந : மஹா களபேந , மஹித மஹாம்ருத தர்ஸந முதித மைதிலீ த்ருட தர,சச பரி ரம்பண விரோபித விகடவீர வ்ரணேந, க்ருத்ர ராஜ தேஹ திதஷா லக்ஷித பக்தஜந தாக்ஷிண்யேந , ௮வந்த்ய மஹிம முநி ஜந பஜந முஷித: ஹ்ருதய கலுஷு சபரீ மோஷ ஸாஷி பூதேந , ப்‌ரபஞ்ஜநதநய பாவுக பாஷித ரஞ்ஜித ஹ்ருதயேந , தரணிஸுதா , சரணாகதி பர தந்த்ரீ க்ருத, ஸ்வாதந்தர்யேணே, விமதஸஹோதர ரஷ : பரிக்ரஹ ஸம்ரம்ப விஜ்ரும்பித ஸர்வேஸ்வர பாவேந , ஸக்ருத் ப்‌ரபந்ந ஜந ஸம்ரஷண தீஷித ஸத்ய விரதேந , கபிகுலகரதல துலித கிரி நிகர ஸாதித ஸேது பத ஸீமா ஸீமந்தித ஸமுத்ரேண, விஸ கட விசிக விதாடந விகடித மகுட விஹ்வல விஸ்‌ரவஸ் தநய விஸ்ரம ஸமய விஸ்ராணந விக்யாத விக்ரமேண, விபீஷண வசம்வதீக்ருத லங்கைஸ்வர்‌யேண, ப்‌ரதிஜ்ஞார்ணவ,தரண க்௫த ஷண பரத மநோரத,ஸிஹ்‌மாஸநாதி ரூடேந , திவ்ய பெளமாயோத்தயாதி தைவதேந , ஜாநகீ ஸஹ தர்ம சாரிணா, ஸர்வ தர்ம ஸமாராதநீயேந , ஸநாதந தர்மேண, ஸாகேத ஜந பத ஜநிதநிக ஜங்கம ததிதர ஜந்து ஜாத திவ்ய ௧தி தாந தர்சித நித்ய நிஸ்ஸீம வைபவேந , பகவதா பக்‌த ஜநாபி ராமேண ஸ்ரீ ராமேண விஸ்வ மேதத் ஸநாதி க்ருதம் –

விவேக– ரகுராமனே ஸாதுக்களைக்‌ காப்‌பாற்றும்‌ ப்ரபத்‌தி சாஸ்‌திரத்‌தினால்‌ பிரதிபாதிக்கப் பட்டவராவர்‌ !

வ்யவ.–வேதாந்த ஸாரமாகிய கீதையை உபதேசம்‌ செய்‌தருளிய ஆசார்யனான ஸ்ரீவாஸூ தேவன்‌ ! இதோ
விவேக, -நமாமி!

நிகடேஷு நிஸா மாயாமி நித்யம்‌ நிக மாந்தை ரதுநாபி ம்ருக்ய மாணம்‌ யமளார்ஜுந த்ருஷ்ட பால கேளிம்‌ யமுநா ஸாஷிக யவ்வனம் யுவாநாம்

வ்யவ.–ஸகல பாபத்தையும்‌ போக்கடிக்கக் கூடிய கல்கி இதோ !-ப்ரபோ : பகவானது இந்தப் பல அவதாரங்களில்‌, புருஷனுக்குத்‌ தியானத்திற்கு விஷயமாகக்‌ கூடிய அவதாரம்‌ எது என்பதை மகா ராஜன்‌ நிர்த்தாரணஞ்‌ செய்து அருள வேண்டும்‌ !

லிவேக:–நமக்கு ‘இதில்‌ -௮தி௧ பாரமே யில்லை ! தன்‌ திருவடிகளில்‌ தலை வணங்கினவர்களுக்குப்‌ பிரமாணங்களில்‌ உள்ளபடி பகவான்‌ தானே பிரகாசிக்கிறார் | பழைய ஸம்ஸ்காரங்களுக்கு தகுந்தாப் போல , ஒவ்வொருவருக்‌கும்‌ ஒவ்வொரு சுவையை உண்டு பண்ணுகிறார்‌. மகாப்‌ பிரபுவான அவர்‌ இஷ்டத்திற்குத்‌ தடங்கல்‌ யாரால்‌ உண்டாக்கக்‌ கூடும்‌? ஆகவே, புருஷனது த்யானத்திற்குத் தகுந்த ரூபத்‌தை ௮வரே அவனுக்குக் கொடுப்பதால்‌ நமக்கேது பாரம்‌ ?–ஸேனாபதி ! சில்பி மஹா ஸமர்த்‌தன்‌! அவனுக்குத்‌ தகுந்தபடி பஹுமானம்‌ செய்‌. இனி எதிர்‌த்து நிற்கும்‌ ‘விரோதிகளை வெல்ல வேண்டிய விஷயங்களைக்‌ குறித்து நாம்‌ யோசிக்கச்‌ செல்‌வோம்‌ வா. (போகிறார்கள்‌)

ஆறாம்‌ காட்சி –இடம்‌ :–யுத்தகளம்‌: -மஹாமோஹன்‌ தண்டிறங்கி இருக்கும்‌ இடம்‌.-[நாரதர்‌ பாடிய வண்ணம்‌ பிரவேசம்‌.)

நாரதர்‌–அதராஹித சாருவம்‌ ஸநாநா மகுடாலம்பி மயூரபிஞ்சமாலா:
ஹரிநீலசிலா விபங்கநீலா: ப்‌ரதி பாஸ் ஸந்து மமாம்‌திம ப்‌ரயாணே- [மஹா மோஹனும்‌, துர்மதியும்‌ பிரவேசம் )

மோஹன்‌.–பகவந் ! ஸர்வ லோக ஸஞ்சாரியான தேவரீரால்‌, மாயை என்ற எனது ராஜ தானி ௮னுக்ரகிக்கப்பட நாங்கள்‌ கிருதார்‌தர்களானோம்‌–, தேவி! ‘மஹர்ஷிக்கு அர்க்ய பாத்யாதிகளும் மதுபர்க்கமும் சமர்ப்பி

துர்மதி -இதோ

நாரதர் (தடுத்த ஜாடையாய் ) உபவாஸ விரதத்தில் இருக்கிறேன்‌-துவாதசி பாரணை வரையில்‌ எவரிடமிருக்தும்‌ எதையும்‌ பெற்றுக் கொள்வதற்கில்லை

மோஹன்‌.–பர்க்யம்‌ ! ப்‌ராபோ தங்கள்‌ பிரபாவம்‌ அளவிட முடியாததன்றோ -நமது ஸுகம்‌ விருத்தி யடைவதற்குக் காரணமேயாகும் தேவரீர் இங்கு இப்பொழுது வந்தது –

நார- (தனக்குள்‌) நம்‌ அபீஷ்டம்‌ ஜயமே அடையும்‌ (வெளிப்படையாய்‌)–மகாராஜ ! உன் ப்‌ரபாவமன்றோ அளவிட முடியாதது! . தாமரை யிலையில்‌ பட்ட நீர்‌ போல்‌ எதிலும்‌ பட்டு நிலைக்காத ஜீவாத்மாவை அநந்த போகங்களையும் ௮னுபவிக்கச்‌ செய்யும்‌ உன் பிரபாவமே ஸ்லாக்கியமானது
[வாயில்‌ காப்போன் பிரவேசம்‌.].

வாயில்காப்‌:-தேவ ! விவேக ராஜன்‌ தூதன்‌, திருஷ்ட ப்ரத்யயன்‌ பேட்டிக்குக்‌ காத்‌திருத்கிறான் –

மோஹன்‌.- வரச் சொல்‌

[வாயில்‌ காப்போன்‌ போக த்ருஷ்ட ப்ரத்யயன்‌ பிரவேசம்‌. ]

தூதன்‌. (ஓருபுறம்‌ தனக்குள்‌). ஓகோ! கலகப் பிரியரும்‌ இங்கிருக்கிறாரா? நமக்கு நல்லது தான்‌–,

நாரதர்‌: “ப்ரபோ! தூதன்‌ அதோ வருகிறான்‌ ! உபசரித்து விசாரிக்கலாம்‌;

மோஹன்‌. -உபசாசமிருக்கட்டும்‌-. என்னடா ஸமாசாரம்‌?

தூதன்‌. (ஓர்‌ பனை ஓலையை நீட்டி) இதோ எங்கள்‌ மகா ராஜனுடைய உத்திரவு !

‘மோஹன்‌– என்ன? எனக்குமா உத்தரவு

நாரதர்‌,– வேலைக்காரர்கள்‌ தம் யஜமானனைப் பற்றி உயர்த்திப்‌ பேசுவது ஸகஜம் தானே ! அதை யெல்லாம்‌ லக்ஷஷியம் செய்யக் கூடாது.
மோஹன்‌. -௮டே தூதா! உங்கள்‌ லிபி எமக்குப்‌: பரிசயமில்லாததால்‌ நீயே படி, கேட்போம்‌.
தூதன்‌ அப்படியே. (படிக்கிறான்‌). “மங்களம்‌? மகா ராஜன்‌ விவேகன்‌, மகா மோஹனுக்குத்‌ தெரிவிப்பது : துஷ்டர்கள்‌. . சண்டையை விரும்புவதும்‌ ஸாதுக்கள்‌ ஸந்தியைக்‌ கோறுவதும்‌ ப்‌ரஷித்தம்‌ ”’.

மோஹன்‌..–ஸரி தான்‌ ! தனது தாழ்மையையே விவேகன்‌ தெரிவித்துக்‌ கொள்கிறான்‌–உம்‌. மேலே–
தூதன்‌.-தீ யந்தாமிஹ தக்ஷிணா பதபுவோ யாவத்கலே ரத்யயஸ்‌ தத்‌ர ஸ்‌தாவர திர்யக் அம்‌சம் அகிலம்‌ புங்க்க்ஷவ த்வமய்பக்ஷத இத்தாந் நாம குலஷயோப சமநோபாயே த்வயா தஸ்துஷா ஸந்திஸ்‌ ஸத்ய கிராம துச்ச மநஸா மச்சாத் மநாமஸ்‌து ந —

நமக்குள்‌ சமாதானம்‌ ஏற்படுவதே முறை யல்லவா ?
(கை கொட்டிச்‌ சிரித்து )மோஹன்‌- யுத்தத்‌திற்குப்‌ பயந்த இந்த. .விவேகன்‌ சில போகங்களை அனுபவிக்க எல்லை யில்லா ஐஸ்வர்யமுள்ள எனக்கு உத்தரவு செய்வது சூர்யனுக்கு தேஜஸ்‌ உண்டாக வரம்‌ கொடுப்பது போலத் தான்‌ இருக்கிறது –

நார.–(தனக்குள்‌ சிரித்து )–. இந்த ஸமாதானம்‌ ஏற்‌படாதபடி. தடுக்க வேண்டியதே எனது முக்ய கடமை00இனி : (வெளிப்படையாக, துக்க பாவத்துடன்‌) என்ன ஆச்சர்யம்‌? | (பாடுகிறார் )

ப்ரூபங்கேஷ- ப்ருதக் விதேஷு பலிநோ யஸ்யா யதந்தே
ஜகத் யாஸம்‌ ஸாரமலங்க்ய ஸாஸநகதே ராஜந் மதீராத்மந : –
ப்‌ரஹ்மஸ்‌ தம்ப படஸ்ய முக்‌த ஜநக த்ரோஹஸ்ய மோஹஸ்யதே –
தஸ்யா ஸீதிதரேண ஸந்தி வசநம்‌ கிங்கஸ்யவா கத்யதே

அடா? டா! மகா சூரனாகிய மகா மோஹ ராஜனிடமா ஸந்தி என்னும்‌ பேச்சு பேசும்படியாக ஆயிற்று

துர்மதி ,.–நாதா ! சமாதானம்‌ என்கிற வியாஜத்தினால்‌ விவேகனை இங்கு வரவழைத்துப்‌ பிறகு அவனை உயிருடன்‌ பிடித்துப்‌ பீடிப்பதே உசிதமென எனக்குத்‌ தோன்றுகிறது | |

மோஹன்‌. (உரத்துச்‌ சிரித்த) பேதையே ! மகாமோஹனிடமா இத்தகைய பேச்சுக்கள்‌ ? ஸ்‌திரிகளுக்கு ராஜ காரியம்‌ என்ன தெரியும்‌? கேள்‌ என்‌ வீர வ்‌ரதத்தை ! என்னை வெட்டி னாலும்‌ ஸரி,–கொளுத்‌தினாலும்‌ ஸரி;-ஊசி முனை நாட்டக் கூடிய பூமியையும்‌ விவேகவன் அதீனத்தில் விடேன்‌ !–. எவ்வித ஸமாதானமும்‌ அவனுடன் கோறேன்‌!. தெரிந்ததா ?–௮ப்படிக்கேதாவது செய்‌வேனாயின்‌ நான்‌ மஹா மோக மஹா ராஜனல்ல –

நார-(மனத்துள் ) பிணப்பிடிபோல்‌ பிடிவாதம்‌ கொள்ளும்‌ மூர்க்கனல்லவா இவன்‌–(வெளிப்படையாய்‌) தேவி _துர்மதி! உனது நாதன்‌ வார்த்தைகள்‌ ஸ்லாகிக்கத்‌ தத்கவைகளே -தூதன்‌ படிக்க இருப்பதை
மேலேயும்‌ கேட்போம்‌.

மோஹன்‌.–(அலக்ஷியத்துடன்‌) கேட்பதற்கு என்ன இருக்கப் போகிறது ?–ஸரி.–மேலே படி–..

தூதன்‌.–.ஆகவே, ஸமாதான மேற்பட்டால்‌ நாம்‌ நம் நம்‌ வரம்பிற்குள்‌ இருக்கப் போகிறோம் – சண்டை உண்‌டானால்
(படுகிறான் )

நிஷ்காம க்ரோத லோப்ந்நி பதிதகுஹநா டம்ப தர்பாபி மாநம்
நிர்தூ தேர்ஷ்யாப்ய ஸூயாமத விஹ்ருதி ஐஹந் மஸ்தா ஸ்தம்ப ஜாட்‌யம்
அத்யஸ்வோ வா விதத்யாதபி சரமயுகே விஸ்வம ஷுத்ர ஸத்வம்‌
வேலாதீத ப்‌ரஸர்பந் மதுமதந தயா தத்த ஸேகோ விவேக

சண்டை யுண்டானால்‌, இன்றோ நாளையோ உனது மந்திரிகளனைவரையும்‌ ஓழித்து , இந்தப் ப்ரபஞ்சத்தை ஸத்வ குணமுடையதாக விவேகன்‌ செய்யப் போவது நிச்சயம்‌.”

மோஹன்‌ (கோபாதீனனாகி )–. ஹா! ஹா! எவனும்‌ என்‌னுடன்‌ பேசத் துணியாத வார்த்தைகள்‌ !–யாரடா அங்கே? இந்தத்‌ தூதனைக்‌ கொன்று விடு இக் கணமே?

நார--இவன்‌ ராஜ தூதனல்லவா

மோஹன்‌: ஆயின்‌, அங்க ஹீனப்படுத்தி. யனுப்பி விடுங்கள்‌”!
தூதன்‌.-யோஜனையேன்‌?–இதோ நானே ஒடிவிடுகிறேன்‌’ (மறைவில் சென்று )-(தனக்குள் ) இங்கு நடப்பதை கவனித்துச்‌. செல்கிறேன்‌.

நார-தூதனை ஜாடையாகக் கண்டு ஸ்லாகிக்கிறார்-

மோஹன் -(கோப வெறியால் பாத பீடத்தைக் காலால் உதைத்துத் தள்ளி பற்களால்‌ உதட்டைக்‌ கடித்துக் கொண்டு ) ஹ!’ஹ! எத்‌திக்கும்‌ துதிக்கும்‌ கீர்த்திக்கும் நேர்த்திக்கும் சேர்த்திக்கிடமான எனக்குமா இந்த அவமானம் – இதைப்‌ பொறுத்திருப்பதாலேயே ௮தம நீசனாகிறேனல்‌லவா? (யோசித்து )--. ப்ரியே! வஞ்சிக்கப்பட்ட என்‌ பிதாவுக்கே வருந்துகிறேன்‌! இது வரை சுகமாக இருந்து வந்த ஜிவாத்மாவுக்கு இனிப் போக்கு என்ன -அடே துராசாரா விவேகா வீண்‌ காரியங்களில்‌ ஏன்‌ தலை யிட்டுக் கொள்கிறாய் –

நார-ஏன் வருத்தம் உமது ஸுவ்ர்யம் யாவராலும் காணப்பட்டதும் கேட்கப்பட்டதுமே -சம்சாரம் நிலைத்து இருக்கும் வரை உனது பிரபாவம் நிலைத்தே இருக்கும் -அதோ! ஸூர்யன்‌ ௮ஸ்தமிக்கிறான்‌, மாலைக்‌ கடன்கள்‌ முடிக்க வேண்டும்‌. நான்‌ போய்‌ வருகிறேன்‌ (பாடிக் கொண்டே போகிறார் )

ஜயதி லளித வ்ருத்திம்‌ சிக்ஷிதோ வல்லவீநாம்‌ சிதில வலய சிஞ்ஜா சீதளைர்‌ ஹஸ்‌த தாளை ௮கில புவந ரக்ஷா கோபவேஷஸ்ய விஷ்ணோ ரதா மணி ஸுதாயாமம்‌ ஸவான் வம்ஸந நாள :

மோஹன்‌.--ப்ரியே ! இரவு கிட்டியது ! இனி நாம்‌ சயன ஸுகமனுபவிக்கச்‌ செல்வோம்‌ ! பொழுது புலர்ந்ததும்‌ விவேகனை வெல்ல வேண்டிய வழிகளைச்‌ சிந்திக்கலாம்‌,
துர்ம–நாதா ! விரோதி எதிர்த்‌து வர சயன ஸுகம்‌ கோறுவது பைத்யத்தினாலா ? அல்லது அதி தீரத்தினாலா
மோஹன்‌.–பேதாய்‌ 1! அளவில்லாத ஸைன்யமும்‌ சூராதி வீரர்களும்‌ கொண்ட எனக்கேன்‌ யுத்தத்தைப்‌ பற்றிக்‌ கவலை? காமனை ஆராதிப்பதே ! விவேகனை வெல்லக்‌ கூடிய ஒரே உபாயம்‌. ஆகவே தான்‌ நான்‌ சயன ஸுகம்‌ கோறியதும்‌ ! என்‌ வீரர்கள்‌ தாமே மிகுதியை கவனிப்பார்கள்‌, வா போவோம் (போகிறார்கள் )

அங்கம்‌- 3-முதற்‌ காட்சி – இடம்‌ ?-யுத்த களம்‌ ஓர் புறம்‌ (நரதரும்‌, தும்புருவும்‌ விமானத்தில்‌ ஏறிக் கொண்டு வருகிறார்கள்‌)
நார-
ராம ராவண யுத்தக் காட்ஷியைக் கண்டு வெகு நாளாயிற்று -அதை யொத்ததாக நடக்கும்‌ விவேக மஹா மோஹ யுத்தமும்‌ மஹா கடோரமானதாகவே இருக்கப்‌ போகிறது -முடிவில் விவேகன் ஜெயிப்பது திண்ணமே

தும்பு -யுத்தம் முடியும் வரை எந்தக் கட்சி ஜெயிக்கும் என்பதை எப்படி நாம் நிச்சயித்து முன் கூறக் கூடும்

நார-என் வார்த்தையுமா பொய்க்கும் -பாருமே
(திரைக்குள் பெரிய சல சல சப்தம)

தும்பு –(சந்தோஷத்துடன் ).அதோ! யுத்த பேரிகை !.அதோ ..’ஸேனைகளும்‌ ஆயுதங்களும்‌ கலந்து தாக்க ஆரம்பித்து விட்டன -அதோ. லோபன்‌ யுத்த சன்னத்தனாகி கிளம்பி விட்டான்‌ !
நார-(சிரிப்புடன் )௨லகம் முழுவதையும்‌ : ஸ்வர்ண மயமாக்கி அதை இந்த லோபனுக்கு அளித்தாலும்‌, அந்தப்‌ பொன்னையும்‌ வட்டிக்கு விட்டுப் பெருக்க ஆசைப்‌ படுபவன் அல்லவா இந்த லோபன் –

தும்பு. -ஹா! ஹா! அதோ ! மூஞ்சூரைப்‌ பாம்பு விழுங்குவது போல்‌ துஷ்டி யென்னும்‌ திருப்தி லோபனை விழுங்கி விட்டாள்‌ ! லோபன்‌ ஸேனை யெல்லாம்‌ சிதறுண்டு ஓடுகிறது அதோ! அதோ !–. சிதறுண்டோடும்‌ ஸேனையைத்‌ தைரிய வார்த்தைகள்‌ கூறித்‌ திரட்டி, வருபவன்‌ யார்‌?
நார. –௮வன் தான்‌ காமன்‌ !மன்மதன் -மீனக்கொடியோன் ! ஸ்திரீகளே ௮வனது ஸைன்யம்‌!–ஹ! ஹ! ‘எதற்கெல்லாமோ அஞ்சா நெஞ்சனாகிய விவேகன்‌ ! இந்த ஸ்‌திரீ லோலனுக்கா பயப்படுபவன்‌?–அதோ ! இந்த ஸ்திரீ லோலனை ஜெயிக்க விரக்தி என்னும் ஸ்த்ரீயையே விவேகன்‌ ஏவி யிருக்கிறான்‌ பாரு !
(திரைக்குள் விரக்தி )

அதப்‌ரஜ கநஸ்தந ப்ரப்ருதி மாம்ஸ விஷ் பூர்ஜித ப்‌ரஸக்த விகட வ்ரண ப்‌ரதி பதஞ்ஞயா ப்‌ரஞ்ஞயாஸ்த்ரிய ஸ்த்ரிகுண வீசிமத்கரள வீசிகாஸ் சிந்தயந் கஸப்ய பரிபாடிகரம்‌ படதி காட மூடோ ஜந

காம புருஷார்த்தத்தில ஸாரமில்லை..

நார--கேட்டாயோ: விரக்தியின்‌ வார்த்தைகளை -அதோ மன்மதனும் அவன் ஸைன்யமும் விரக்த்தியால் இருந்தவிடம் தெரியாமல் துரத்தப் பட்டிருப்பதைக் காண்பாய்-

தும்பு–ஆச்சர்யம்‌ .–. அதோ!” லோபனும்‌ காமனும்‌ தோற்கடிக்கப் பட்டதைக்‌ கண்டு ஸஹியாத கோபன்‌ மகா வேகத்துடன்‌ நெருப்பு ஜ்வாலைகளை வீசிக்கொண்டு யுத்தரங்கம்‌ வந்திருக்கிறான்‌ பாரும்‌!

நார-இந்த ௮ஸுரனுக்கு ஆயுதமாக எதுவும்‌ உதவுகிறது–. ஸமயோசிதமாக சரீரத்தோடு. சேர்ந்த வைகளான கை, கால் , நகம்‌, பல்‌ யாகிய சகலமும்‌ ஆயுதமாக்கப் படுகிறது ! பேஷ் ! . இவனை எதிர்க்கப்‌ பொறுமையை ஏவி விட்‌டார்‌ விவேக ராஜன்‌!–. ஹ ! ஹா! கோபத்தின்‌ கர்ஜனம்‌ சுத்தமான ஷமையின்‌ மந்த ஹாஸத்தினால் நாஸத்தை அடைந்து விட்டது.

தும்பு –ஆம் ஆம் -ஷமையினால் தடுக்கப்பட்ட க்ரோதன் முன்னும்‌ போகாது , பின்னும்‌ நகராது வெட்கிக்‌ கோபாதீனனாகிப்‌ பரதவிக்கும்‌ காட்சி வெகு விநோதமாயிருக்‌கிறது -. ஆச்சர்யம்‌! அதோ கோபன்‌ பின் வாங்க யத்தனிக்கிறான் -அதோ க்ரோதனை க்ஷமை கட்டிக் கொண்டு விட்டாள்‌ !

நார-. பொறுமையைக்‌ கவசமாய்க்‌ கொண்டவனை எவ்வித தோஷமும்‌ அணுகாதல்லவா ‘–அன்னானை வெல்வதும்‌ கூடாத ‘கரரியமல்லவா !:

தும்பு. இவ்வளவு சூரர்கள்‌ கொல்லப்பட்ட பிறகும்‌ யுத்த ரங்கத்தில்‌ முன்னணிக்கு- வரும்‌ அல்பன்‌ யார் ?.ஹ ஹ,தர்ப்பனே!–.. அட! அட! காண்பதற்குள் மறைந்த விடடானே கர்வன்‌.! எப்படி.

நார-சிம்ஹத்தை மான் எதிர்த்தது போல் விவேகனது திருஷ்டியால் தோன்றிய அதிக திருஷ்ட்டி என்பவளால் கர்வன் வீர ஸ்வர்க்கம் அனுப்பப் பட்டான்-

தும்பு.–௮தோ வரும்‌ கலியுகக்‌ தாடகை யார்‌? தர்ப்பன்‌ மனைவி அஸூயையோ !–பேஷ்‌! முதிதை சந்தோஷத்‌துடன்‌ அவளைக்‌ கொன்று விட்டாள்‌ !
நார.–மதுகைடபர்களே புனர் ஜென்ம மெடுத்து வந்தார்களோ வென்று ஐயுற வல்ல மஹா மோஹனுடைய மஹா ப்ர தானிகளும்‌ தத்‌தம்‌ மனைவிமார்களுடன்‌ மாண்டது தைவ ஸங்கல்பமென்லும்‌ நியதியைத்‌ தாண்ட எவராலுமாகாது என்பதை ஸந்தேகமற நிரூபிக்கிறதல்லவா–ஆஹா! அதென்ன. த்வந்தவ யுத்தம்‌?,..ஹா ! ஹா! ஸூமதி வல்‌லபனுக்கும்‌ துர்மதி காந்தனுக்கும் அல்லவா யுத்தம்‌ மும்‌ முறமாக நடக்கிறது ராம ராவண யுத்தம் போல்‌ –பல முறை விவேகனால்‌ அடிக்கப் பட்டும்‌ சளையாதவனாகி மஹா மோஹன்‌ மேன்மேலும்‌ ஆக்ரோசத்துடன்‌ எதிர்த்து வருகிறான்‌…அதோ! விவேகன் பலத்ததோர்‌ அடியினால்‌ கீழே வீழ்த்தி விட்டார்‌ மஹா மோஹனை !

தும்பு-அதோ ! திரும்பவும்‌ பிரஞ்‌ஜை பெற்று யுத்த சன்னத்தனாகி விட்டானே அந்த மாயாவி

நார– (பரபரப்பு டன்‌ மேல் போட்டிருந்த கிருஷ்ணாஜினத்தை உதறிக் கொண்டு)–௮தோ !. அதோ! கொல்லப் பட்டான்‌ (மஹா மோஹன்‌ !—. தர்மமே ஜயம் –

பவது ஸ ப்ரஹ்மதா பவது ஸ ப்ரஹ்மதா
தர்மமே ஜயம்
(திரைக்குள் அழுகை )

துர்மதி
மஹா ராயா ஹா தும்மயி ஜீவியேஸா ஹா ணிஹிள ஜணமோஹண ! கஹிம் கயோஸி ? பந்திக்காஹம்‌ கஹீதோ மமனாஹா தாஹிம்‌ தியஸ மஹிளாஹிம்

ஹா நாதா எங்கே போனீர் எப்படிப் போனீர்

நார-கஷ்டம்‌! கஷ்டம்‌! துர்மதியின்‌ பிரலாபமும்‌ மார்பில் அடித்துக் கொண்டு செய்யும் ரோதனமும் கேட்க ஸஹிக்க வில்லை
(திரைக்குள் )

துர்மதி -ஐயோ கணமும் என்னை விட்டுப் பிரியாத நீர் இப்பொழுது என்னை இப்படி தனியாகத் தவிக்க விட்டுச் செல்லத் துணிந்தீர்

நார-யுத்தம் முடிந்து விட்டது -குரூரமான காலத்தின் பரிபாகம் யாராலும் தடுக்க முடியாததல்லவா -தேவ ஸ்த்ரீகளின் வளையல் ஸப்தம் கேட்ட மஹா மோஹன் இனி இவர்களது ரோதனங்கள் எல்லாம் தொந்திரவு செய்யப் படக் கூடாத தீர்க்க நித்திரையை அடைந்து விட்டான் -அதோ மது கைடபர்களை நிக்ரஹித்த பகவானைப்போல மோகனை வென்ற விவேகனும் தேவ ஸ்ரேஷ்டர்களால் ஸ்தோத்ரம் செய்யப்படுகின்றனன்-

தும்பு,–எங்கும்‌ புஷ்‌ப வர்ஷம்‌ ! துந்துபி முழக்கம்‌

நார.–இந்த வெற்றிக்‌ கொண்டாட்டத்தை நாமும்‌ ௮னுபவித்து விவேக மகாராஜனுடைய ஜயத்தை உலக முழுவதும்‌ ப்‌ரஸித்தம்‌ செய்வோம்‌ :–. . இனி விவேக மகா ராஜனுக்கும்‌ ஸூமதிக்கும்‌ ஆகவிருக்கும்‌ பட்டாபிஷேக மஹோத்ஸவத்கைக்‌ கண்டு களிக்கச்‌ செல்கிறேன்‌.

தும்பு.—நானும்‌ விவேக ராஜன்‌ வெற்றியைப்‌ பிரசித்தப் படுத்தி வருகிறேன்‌. (போகிறார்கள் )

இரண்டாம்‌ காட்சி – இடம்‌ யுத்த களம்‌-விவேகன்‌ பாசறை[ விவேகனும்‌ வ்யவஸாயனும் ப்ரவேஸம் )
விவேக.
–சேனாபதி ! உன்னாலே தான்‌ ஸகல தோஷங்களுக்கும்‌ உத்பத்தி ஸ்‌தானமாகிய வெல்வதற்கு அரிதான மஹா மோஹனை நான்‌ முறிய அடித்‌தொழித்தது
வ்யவ.-ப்ரபோ! – நாங்கள்‌ தங்கள்‌ கருவிகளே யல்லவா -தாமே யன்றோ எம்மை ஆட்டி வைப்பவர்

விவேக- ஸர்வ ஸ்வாமியான ‘ பகவானுடைய கர்யத்தில்‌ பராதீனனான என்னை ஏன்‌ ஸ்தோத்திரம்‌ செய்கிறாய்‌ -யாவும்‌, பரமாத்மாவின்‌ லீலைகளுடைய அலைகளின் பரம்பரை-

வ்யவ.–பிரபோ ! தங்கள்‌ வணக்கமே ச்லாகிக்கத் தக்கது ! ௮து இன்மையே மகா மோகன்‌ வீழ்ச்சிக்குக்‌ காரண மாயது !– மோக்ஷ மார்க்கத்திலிருந்த முள் முனைகளைப்‌ பிடிங்கி தங்கள்‌ ஆட்கள்‌ வழியைச்‌ சுத்தப்‌ படுத்தி விட்டனர்‌.–இனி வேதாந்தமாகிய ஸிம்ஹாஸ னத்தில்‌ தாங்கள்‌ அமர்ந்‌து பட்டாபிஷேகக் கோலத்‌துடன்‌ அளிக்கும்‌ மகோத்ஸவக்‌ காஷியைக்‌ கண்டு களிக்கக்‌ கோறுகிறோம்‌ நாங்கள்‌.
விவேக.—ஸேநாபதே! ஜீவாத்மா முடிவை அடையாத த்யானத்திலிருக்கையில்‌ நான்‌ எப்படிப்‌ பட்டாபிஷேகத்திற்கு அர்ஹனாவேன்‌? ப்ரஹ்மஞ்ஞாந ஆரம்பம்‌ மாத்திர மல்லவா இப்பொழுது செய்யப்பட்டிருக்‌கிறது ! ௮து பூர்‌த்தி யடைந்தாலன்றோ என்‌ பிரதிஞ்ஞை நிறைவேற வல்லது ! –

வ்யவ .–இன்னமும்‌ ஏன்‌ கலக்கம்‌ ?: ஜீவன்தான்‌, தன்‌ சரீரமே ஆத்மா என்கிற புத்தியை விட்டு, தான்‌ பரமாத்‌மாவின்‌ சரீரம்‌ என்னும் புத்தியைப்‌ பெற்று விட்‌டானே.

விவேக –தொந்திரவு! முற்றிலும் விட்டபாடில்லை இன்னமும்‌!மனக் குரங்கு சபலஸ்வ பாவத்திலிருந்து ஒய்வடைந்த போதிலும்‌, சாம்பலால்‌ மூடப்பட்ட தணல் போல, ஒவ்வொரு ஸமயங்களில்‌ பரவசனாகி வெளி விஷயங்களை நினைக்கிறான்‌–. ஆகவே, நாம்‌ ஸாதித்ததைவிட, ஸாதிக்க வேண்டிய காரியங்களே கஷ்‌டமானவை !—காமன்‌ முதலியோர்‌ ‘இறந்த போதிலும்‌, கர்மமென்னும்‌ அவித்யை இறந்து போன அவர்களை உயிர்ப்பிக்கக்‌ கூடிய மருந்தாக. இன்னமும். இருந்து வருகிறது -(அனுதாபத்துடன்‌) ஜீவாத்மா இன்னமும்‌ கோடிக் கணக்கான பாபம்‌ செய்து கொண்டே யிருக்கிறானே ! இவைகளை எப்படித்‌ தாண்டப்‌ போகிறான்-

வ்யவ.–இதற்கா கவலை? இந்தப்‌ பாபங்களைப்‌ பகவானிடததி லிருந்து உண்டானதாகிய யோகமாகிய ப்‌ரளய காலாக்நி க்ஷணத்தில்‌ பஸ்‌மீகரித்து விடாதா? மேலும்‌, தன்‌னுடைய பாரமனைத்தையும்‌ முகுந்தனிடத்தில்‌ சமர்ப்பித்து நிர்ததோஷனாகி முக்தன்‌ போலிருக்கிறான்‌ அந்தப்‌ புருஷன்‌ பகவானுடை.ய அபிப்ராயங்களை சாஸ்‌திரத்‌தில்‌ உள்ளபடி தெரிந்த செய்து பாப ரஹிதனாகி விடுவான்-

(ஸூமதியும் சேடியும் ப்ரவேஸம்)

ஸூமதி -நாதா தங்கள் ஜெயத்தை அப்சரஸ் ஸுக்களுடைய குதூஹல கான கோஷங்களில் நின்றும் அறிந்து வந்தேன்
வ்யவ -தேவி ஜயம் ஒரு லக்ஷியமா நமக்கு -இனி இன்னமும் ஜெயமடைய வேண்டியதற்கான உபாயங்களைச் சிந்திக்க வேண்டும் அல்லவா
விவேக-எல்லா உலகத்திற்கும் அந்தர்யாமியாய் இருக்கும் பரமாத்மாவே சகல பாரத்தையும் நிர்வஹிக்க வல்லவராதலால் அவரே தாம் நம் ஜயம் பூர்த்தி யாவதற்கான உபாயங்களைக் காட்டி அருள வேண்டும் –

ஆதேயத்வ ப்ரப்ருதி நியமை ராதிகர் துஸ் ஸரீரம்‌
ஸ்த்தாஸ்தே மப்‌ரயத நபலேஷ்வே: ததா யத்தமே தத்
விஸ்வம்‌ பஸ்யந்நிதி பகவதி வ்யாப காதர் த்ருஷ்டே
கம்பீராணா மக்ருதக க்ராம்‌ காஹதே சித்தவ்ருத்திம்‌.

வ்யவ –-வாஸ்‌தவமே ! ஸமாதி உண்டாவதற்காக ஜீவனுக்குச்‌ சிறந்த ஆசார்யனால்‌ ச்ரேஷ்டமான மந்த்‌திரத்ன்‌ ரஹஸ்யார்த்தங்கள்‌ உபதஸிக்கப்பட்டு அவனும்‌ ஞானி யாக்கப்பட வேண்டி இருக்கிறது இனி-

விவேக –ஆம்‌ அது பூர்‌த்தி யடைவது பகவானுடைய வசத்தில் தான்‌ இருக்கிறது இனி –ஹா. என்ன தேஜஸ் அங்கே தெரிவது –

வ்யவ –(உற்று நோக்கி )பகவான் நாரதர் வருகிறார் போலே காண்கிறது

ஸூமதி –ஆம் நாதா நாரத மஹரிஷியுடன் தாங்கள் பேசும்வரை நான் என் தோழிகளுடன் தங்கள் அபீஷ்ட பூர்த்திக்கான யோஜனைகளைச் செய்து வருகிறேன் (போகிறாள் )(நாரதர் பாடிய வண்ணம் ப்ரவேஸம்)

அதராஹித சாருவம்‌ சநாளா – மகுடாலம்பி மயூர பிஞ்ச மாலா: –
ஹரிநீல சிலா விபங்க நீலா: ப்‌ரதிபாஸ் ஸந்து மமாந்தி மப்ரயாணே

விவேக.--(விரைந்‌து சென்று வரவேற்று உபசரித்து நமஸ்‌கரிக்கிறான்‌)–. பகவந் ! அடியோங்க்கள ௮னுக்‌ரஹித் தருள வேண்டும்‌ !
நார--ஆயுஷ்மன்‌ ! ஜீவாத்மாவை எவ்விதத் தடங்கலுமின்‌ றி | மோக்ஷத்‌தில்‌ சேர்க்கக் கடவாய்‌ ! – மஹா மோஹனை ஜயித்‌தவனாகிய நீ கலியையே நீக்கி விட்டாயே இப்‌ பிரபஞ்சத்தில்‌!
விவேக..-பகவந் ! இன்னமும்‌ நாங்கள்‌ ஜாக்‌கிரதையுடன்‌ பார்த்திருந்து ஜயிக்க வேண்டிய சத்ருக்கள்‌ இருந்தால்‌ வெளிப்படுத்‌தி யருள வேண்டும்‌ !
நார--ஜீவாத்மா பிரக்ருதியைத்‌ தாண்டி இன்னமும்‌ மோஷமடைய வில்லை யல்லவா -ஆகவே ௮வன்‌ கால சக்கரத்தில் ௮கப்பட்டுத்‌ துர் வாஸனையினால்‌ இன்னமும்‌ அல்ப சுகங்களில்‌ புத்‌தியைச்‌ செலுத்தாமல் இருக்கும்படி ஜாக்ரதை செய்ய வேண்டும்‌-
விவேக.—பாக்யம்‌-கால சக்‌ரத்‌தினுடைய சுழலில் இருந்து புருஷனை வெகு சீக்ரத்திலேயே வெளிப்படுத்த வேண்டிய பிரயத்தனங்களைச்‌ செய்து முடிக்கிறேன்!தாங்களும் அதற்கேற்ற உதவிகளைச்‌ செய்தருள வேண்டும் -ஆசாரியனற்றவன்‌ வேத மார்க்கத்தில்‌ நடக்க முடியாதல்லவா! ஆகவே தேவரீரே என்னால்‌ அங்கீ கரிக்கப் பட்ட. புருஷனுக்கு மந்த்ரோபதேசம்‌ செய்து வழி காட்டி உத்தரித்து அருள வேண்டும்

நார- இவ் விஷயத்தில்‌ என்‌ சக்திக்குத்‌ தகுந்தபடி நான்‌ பிரயத்தனப்‌ படுவதற்குமா ஆஷேபம்‌ ? அப்படியே செய்து வருவேன்‌–இதோ புறப்பட்டேன்‌ உங்‌கள்‌ ௮பீஷ்டத்தை நிறைவேற்றி வைக்க!”
( ஆனந்தத்துடன்‌ செல்கிறார்‌)

விவேக.-இனி ஸமாதி ஸித்தியானதுவே! பக்தி அல்லது ப்‌ரபத்தியில்‌ ஆசை யுடையவனுக்குப்‌ பகவானுடைய தயையே ஆதாரம்‌! இந்த புருஷனும்‌ ௮ந்த தயையினால்‌ ௮ங்கீகரிக்கப் பட்டவனாகக்‌ காணப்படுகிறான்‌-ஆகவே நான்‌ ஜீவனுக்குப்‌ பகவத்‌ ஸங்கல்பம்‌ சீக்கிரத்தில் ஸித்திக்கும்படி செய்கிறேன்‌ ! நீ போய்‌ விஷ்‌ணு பக்தியை த்வரிதப்படுத்து (போகிறார்கள் )-

மூன்றாம்‌ காட்சி -இடம்‌ ஆகாயம்‌ -மோக்ஷ-மார்க்கம்‌-(விஷ்ணு ப்க்தி பிரவேஸம் )
விஷ்ணு பக்தி -(தனிமை )
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா உன் சேவடி செவ்வி திருக்காப்பு –

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வலமார்பினால் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே

ஜீவனுக்குப்‌ பகவானைப் பற்றிய தியானம்‌ பரி பூர்‌ணமாக ஏற்பட்டிருக்கிறது. இனி ௮வனைப்‌ பாப ரஹிதனாக்க வேண்டும்‌. பகவத்‌ ஸங்கல்பத்தாலேயே ஆகக்‌ கூடிய: காரியம்‌ ௮து – நற் குணங்கள்‌ உண்டாகின்றன ! பகவத்‌ ஸங்கல்பமாகிற ஸூர்யன்‌ உதயமாகப் போவது நிச்சயமே –
(கைகளைக் கூப்பி )

பல விதரண தக்ஷம் பஷ பாதாநபிஞ்ஞம் பிரகுண மது விதேயம் ப்ரப்ய பத்மா ஸஹாயம்
மஹதி குண ஸமாஜே மாந பூர்வம் தயே த்வம் பிரதி வதஸி யதார்ஹம் பாப்மநாம் மாமகாநாம்

தயா தேவியே என் பாவங்களுக்குப் பிரதிவாதம் செய்ய வேண்டும் அப் பரமாத்மாவிடம் -ஹா ஹா தயாதேவியின் ஏவுதல் தானா -அதோ வேதாத்மாவான கருடாழ்வாரும் நர்த்தனம் ஆடுபவர் போல் சேவை சாதிக்கிறாரே -இவரே தான் ஆஸ்ரித ரக்ஷகனை சீக்கிரத்தில் ஆஸ்ரிதர்களிடம் அழைத்து வந்து அவர்களைக் காத்தருள வேண்டும் –(கைகூப்பி )

நமோ பன்னகநத்தாய வைகுண்ட வச வர்த்திநேஸ்ருருதி ஸிந்து ஸூதோத்பாத மந்தராய கருத்மனே
என்ன ஆசார்யம் எங்கு பார்த்தாலும் ஒரே தேஜோ மயமான ப்ரகாஸம் விளங்குகிறதே -தயாதேவிக்குப் பர்த்தாவான பகவானுடைய ஸங்கல்பன் வருவதை ஸூசிப்பிக்கிறது இப்பிரகாஸம்
(ஸங்கல்பன் ப்ரவேஸம் )

வி பக்தி -சந்தோஷத்துடனும் பரபரப்புடனும் எதிர்கொண்டழைத்து நமஸ்கரிக்கிறாள்
ஸங்கல் –ப்ரீதியுடன் கைகொடுத்து எழுப்புகிறார்
வி பக்தி -பகவானுடைய ஸங்கல்பமாகிய தேவரீருக்கு சதகோடி நமஸ்காரங்கள் -அடிக்கடி சேவிக்கிறாள்
ஸங்கல்-பத்ரே போதும் போதும் சிறந்த யோகங்களுக்கு எல்லாம் சிறந்தவளாகிய உன் மஹிமையும் நமஸ்காரமும் என்னையே உன்னை வணங்கும்படி செய்கின்றன -உன் விருப்பம் யாது
வி பக்தி -ஹா ஹா பிரபோ தாம் பரதந்த்ர பாவத்தை ஒப்புக் கொள்வதும் ஸ்வ தந்தரராய் இருப்பதால் தான் -நான் ஞாபகமூட்ட விரும்புவது ஒன்றே -ஜீவாத்மாவை மஹா மோஹாதி பிசாசங்கள் விட்டுவிட்டன -அவனும் பிரணவம் திரு அஷ்டாக்ஷரம் இவைகளை ஜபித்துக் கொண்டு ஸந்தோஷமாக மோஷ தர்மத்திலேயே தான்‌ இருக்‌கிறான்‌. எது நேர்ந்தாலும்‌ ௮தை நன்மையாகவே தான்‌ நினைக்கிறான்‌

ஸங்க.— இருந்தாலும்‌, எவ்வளவோ காலங்களாக ஸம்ஸாரமாகிய அல்ப ஸுகங்களில்‌ ஈடுபட்டு கர்ம பாச வசப்பட்டவனான இந்த ஜீவாத்மா, ஸத்ய லோகம்‌ மாதிரியான அல்ப ஸுகமுள்ள இடங்களையே கோறுவானாகில் எவ்விதம் மோஷத்திற்கு அர்ஹனாவான்‌ !

வி பக்தி -(காதுகளை மூடிக்கொண்டு )தாங்கள்‌ அப்படிச்‌ ஸந்தேகிக்கலாகாது – பரமாத்மாவின்‌ நாபிகமலத்‌துதித்த வேதனுக்கும்‌ மதுகைடபர்கள்‌ மூல்யமாய்‌ ஆபத்து நேர்ந்ததை ஜீவாத்மா அறியாதவனல்ல-ஆகவே மோஷித்திற்குத்‌ தாழ்ந்த ஸ்வர்க்காதி போகங்களையும்‌ இனி இச்சிக்க மாட்டான்‌–தாங்கள் தான் இவன்‌ விலங்குகளைச்‌ சீக்கிரத்தில் அறுத்துத் தள்ள வேண்‌டும்‌–. இதோ ! .. தங்களையே அந்தக்‌ காரியத்திற்காக நிச்சயமாய்‌ நம்பி யிருக்கும்‌. விவேக மஹாராஜனை உம்மிடம் அழைத்து வருகிறேன் -(விரைந்து செல்கிறாள் )

ஸங்க -(தனிமை )(நாற்புறமும் பார்த்த வண்ணம் )ஜீவாத்மா க்ருதார்த்தனாகி விட்டான் -ஸ்ருங்காரம் வீரம் கருணை அத்புதம் ஹாஸ்யம் பயம் பீபத்ஸம் ரவ்த்ரம் ஆகிய அஷ்ட ரஹஸ்யங்களுடைய விஷயங்களின்றும் விலகினவனாகி -தத்வ ஞானம் உண்டாகி ஸாந்தி ரஸத்தோடு பிரகாசிக்கிறான் -மோக்ஷ மார்க்கத்தில் மநோ ரதத்தில்‌ அதிவேகமாகவே. சென்று கொண்டிருக்கிறான்‌–. மறைவிலிருந்தே இன்னமும்‌ சிறிது காலம்‌ இவனைப்‌ பரீஷித்தறிகிறேன்‌-(போகிறான்‌)

நான்காம் காட்சி -இடம் -விரஜைக்கு இக்கரை -ஸாந்த ஸ்வரூபனான புருஷன்‌ ஸ்ரத்தையுடன்‌ பிரவேஸம்‌.]

புருஷ- (துக்கத்‌துடன்‌ சிந்தித்தவனாய்‌) : ஹா ஹா – பிறப்புப்பிணி யொழித்தேன்‌ ! துக்க ஸாகரத்தையும் தாண்டிக் கரை யேறி விட்டேன்‌! பகவானது கிருபையால்‌ நிவ்ருத்‌தி தர்மத்தில்‌ வைக்கப் பட்டேன்‌ ! விவேகனது மகிமையினால்‌ காம க்ரோதாதிகளை வென்றேன் !–(ஆயினும்‌ ! (பெரு மூச்செறிந்து .)–. பரமாத்மாவை மட்‌டிலும்‌ இன்னமும்‌ கிடைக்கப்‌ பெற்றிலேனே ! முன்‌ போல்‌ பக்தனாகவும்‌ இருக்க வில்லை! விரும்பியபடி முக்தனாகவும்‌ ஆக வில்லை !. தீனனாயிருக்கும்‌ அடியேன்‌ எதைச்‌ செய்வது? எதை விலக்குவது ? எப்பொழுது எனக்கு முக்தி கிட்ட வல்லது ?

ஸ்ரத்–நாதா! முழு ஞானியல்‌லேனாயினும்‌, முக்திக்குப்‌ பாத்திரமாகியே உள்ளீர்‌ என்றோ அடியாள்‌ விஞ்‌ஞாபித்துக்‌ கொள்கிறேன்‌, – ஆகவே தாம்‌ சந்‌ தோஷப்‌பட வேண்டி இருக்க, இன்னமும்‌ வருந்துவானேன்‌-

புருஷ –பேதாய் -சப்தாதி விஷயங்கள் என்னை இன்னமும் தொடர்ந்து என் ஞானத்தைத் தடுக்கின்றனவே -துராசைப் பேய் என்னை எப்படிக் கெடுத்து விடுமோ என்ற பயம் என்னை விட்டபாடில்லையே -நான் தீனன் -மஹா தீனன்-

ஸ்ரத்தா –நாதா பேதையான நான் தங்களுக்கு யாது சொல்லக் கூடும் -வெகு காலத்திற்கு முன் நடந்தேறியவைகளைக் குறித்து ஏன் இப்பொழுது சிந்தித்து வருந்து கிறீர்கள்-

புருஷ –நீ கூறுவது வாஸ்தவமே -சென்றதையோ வரப்போவதையோ நினைத்து வருந்துவதில் பிரயோஜனம் இல்லை தான் -மரணம் எப்பொழுது நேர்ந்தால் என்ன-இன்றைக்காய் என் என்றைக்காய் என்ன-நாம் செய்ய வேண்டுவன வற்றை முன் ஜாக்கிரதையுடனேயே சீக்கிரத்திலேயே செய்து முடித்துக் கொள்வதே உசிதம் –

ஸ்ரத்தா -விரோதிகளைப் பற்றித் தாம் இனி சிந்திப்பதே தவறு -இன்றைக்கோ என்றைக்கோ மோக்ஷம் கிட்டுவது திண்ணம் என்ற நிச்சயத்துடனே இருக்க வேண்டியதே —

புருஷ –நல்ல ஸமயத்திலேயே இந்த நித்ய ஞானத்தை ஞாபகமூட்டினை -நீ உடனே விஷ்ணு பக்தியை அடைந்து என் ஸ்திதியை அவளுக்கு அறிவித்து என்னை சீக்கிரத்திலேயே மீட்க்கும் வழியை நாடி வா

ஸ்ரத்–அப்படியே (போகிறாள் )

புருஷ–(சிந்தனையில் ஆழ்ந்து –)சம்சாரச் சழல்களில் இருந்து கரை யேற்றப் பட்டுக் களைத்திருக்கும் ஏழையேனை, நித்யானந்த ஸ்வரூபனான ஹரியெனும்‌ சந்தன விருஷம்‌ தன் நிழலில்‌, ‘தன்‌ ஆதி வாஹிகர்களால்‌ அழைத்து இருத்தி இன்னமும்‌ ஆனந்திக்கச் செய்ய வில்லையே !
[ஸங்கல்பன்‌ பிரவேசம்‌.)

ஸங்கல்‌.–(புருஷனைக் கண்டு தனக்குள்‌ சந்தோஷத்‌துடன்‌ ஒருபுறமாய்‌)--. ஹா! ஹா! ஸ்ரீலக்ஷ்மீபதியின்‌ திருவடிகளில்‌ தன்னை ஒப்படைக்திருக்கும்‌ இந்தப்‌ புருஷனுக்குள்ள மேன்மை எவ்வளவே கணக்கிலாது கர்மானுஷ்டான பரர்களுக்கும்‌, யோகானுஷ்டான பரர்களுக்கும்‌ இருக்க வில்லை யல்‌லவா ! இந்தப்‌ புருஷனிடம்‌ யம படர்களும்‌, ௮ந்த யமனுமே அணுக அஞ்சுகின்றனர்‌! தேவதைகளும்‌ நடுங்குகின்றனர்‌! ராக்ஷஸாதி துஷ்டர்கள்‌ கண்ணில் படாது ஒடுகின்‌றனர்‌ ! இவன்‌ இருக்கும்‌ தேசத்திலும்‌ பசி பிணி மூப்‌புத்‌ துன்ப மென்பவைகளைக்‌ காணவே காணும்‌!–. பகவானிடத்தி லிருப்பதை விட அவன்‌ பக்தர்களிடத்த லல்லவா இந்த புருஷனுக்குப்‌ பிரேமம் ௮திகமாயிருக்கிறது –. இவனை அடைவதால்‌ தானும்‌ கிருதார்த்தனாவேன்‌ அன்றோ !
(புருஷன்‌ முன்‌ ஸந்தோஷம்‌ பஹுமானம்‌ இவைகளுடன்‌ நெருங்கி )
மகாத்மான் பகவானுடைய கைங்கர்யத்தில்‌ பரம ப்ரீதி யுள்ளவரா யிருக்கிறீர்‌ நீர்‌ என்பதைக்‌ காண மிவும்‌ ஸந்தோஷிக்கிறேன்‌ !

புருஷ.–(பரபரப்புடனும்‌ பயத்துடனும்‌ ஸந்தோஷத்துடனும்‌ நமஸ்கரித்து அஞ்சலி ஹஸ்தனாய் )--.. பகவந் தாம்‌ யாரென்று அறியச்‌ சக்தி யற்றவனாயிருககிறேன்‌ !–. பகவானே தானே, இல்லை, ௮வருக்குப்‌ பரம அந்தரங்‌கமானவரோ ?

ஸங்கல்‌.–மகாத்மரந் ! பகவத்‌ ஸங்கல்‌பன்‌ நானே. தீன ஜன பந்துவும்‌. பரம புருஷனது பத்னியுமாகிய க்ருபா தேவியினால்‌ ஏவப்பட்ட நான்‌, உம்மை ஸகல பாப புண்யங்க ளென்னும்‌ விலங்குகளினின்றும்‌ விடுவிப்ப தாதியாகப்‌ பரப் பிரம்மத்தினது ஸேவையை அந்தமாக வுடைப கரரியாதிகளைச்‌ செய்து முடிக்க உம்மை அடைந்துள்‌ளேன்‌!–ஆகவே மோஷ ஐஸ்வர்யம்‌ உமக்கு ஸமீபத்திலேயே கிட்டக் கூடியதென்பதைச்‌ ஸந்‌தேகமற நம்பும்‌. ரஜோ குண தமோ குணங்கள்‌ ௮டங்‌கி உம்மிடம்‌ ஸத்வ குணம்‌ விருத்தி யடைகின்றதா? இந்திரியங்கள்‌ யாவும்‌ உமக்கு வசப்பட்டனவா? மனம்‌ நிர்மலமாகவும்‌ நிச்சலமாகவும்‌ இருக்கிறதா ?

புருஷ:–(ஸந்தோஷத்துடன்‌ தழதழத்து)--. ப்ரபோ மிகவும்‌ கிருதார்தனானேன்‌ !. பகவானுடைய கிருபா கடாஷத்தினால் உமது அனுக்ரஹம்‌ பெற்றுள்ள அடியேனுக்கு ஸித்திக்கக்‌ கூடாததும்‌ உண்டோ.?

ஸங்கல்‌.–( தனக்குள்‌) இவரை இன்னமும் சிறிது சோதிக்க வேண்டும்‌–. (வெளிப்படையாய்‌) பத்ர! கிடைத்‌தற்கரிய ஸமாதியின்‌ பூர்த்தி உமக்கு எப்படி இருக்‌கிறது?

புருஷ.–ப்ரபோ! ஸமாதி விசேஷமாக அனுபவிக்கக்‌ தக்கதாய்‌ இருந்த போதிலும்‌, விசேஷித்து இவ்விதமிருக்‌கிறதென்று சொல்ல முடிய வில்லையே. -ஸ்ரீ பூமி நீளா ஸமேதனைத்‌ தியானம்‌ செய்யும் பொழுது மஹா ஆநந்த மாகவே யிருக்கிறது. வெகு சீக்கிரத்தில்‌ மனம்‌ அவ்விடத்திலேயே லயம்‌ ௮டைகிறது !

ஸங்கல்‌.–(ஸந்‌தோஷத்துடன்‌) மகாத்மந் ! பகவதனுக்ரகம்‌ உம்மிடம்‌ பூர்ணமாகவும்‌ நிச்சயமாகவும்‌ உண்டாயிருக்‌கிறது–, ப்‌ரகிருதி ஸம்பகந்தத்தைப் போக்‌கி பரமாத்மாவுடன்‌ ஸாம்யத்தை யடைந்து, நீரும்‌ ஆதிசேஷாதியரைப்‌ போல்‌ பகவத்‌ கைங்கர்ய ஸித்தி பெற்ற முத்த ராகப்‌ போகிறீர்‌! ப்ராரப்த கர்மாவின்‌ முடிவில்‌ நீரும்‌ பரமபதத்தை அடைவீர்‌. அப்பொழுது உம்மால்‌ த்தயஜிக்கப்பட்ட சுக்ர பலன்களை உமது நண்பர்கள்‌ அடைவார்கள்‌. பாப பலன்களை உமது திவேஷிகள்‌ அடைவார்கள்‌.

புருஷ.–தேவ –. ஓரு விஷயம்‌ அனுக்ரஹித்தருள. வேண்டும்‌. ஆதி வாஹிகர்கள்‌ அழைத்துப் போய்ப்‌ பகவானிடம்‌ சமர்ப்பித்‌து , – அவனுடைய ஆகாராங்கள்‌ பிரகாசமாக எற்பட்டு, “இனிமேல்‌ : ஜன்‌மமில்லை யென்று சொல்லப்படுகிறதே ௮ந்த விஷயத்தை அடியேன்‌ அறியத் தகுந்தவனாயின்‌ ௮றிய விரும்புகிறேன்‌.

ஸங்கல்‌.–நீர்‌ அறியத் தகாததும்‌ உண்டோ இனி? புனர்‌ ஜென்மம் என்பது இல்லாது அழிவில்லாததான பரமபதத்‌தையே நீர்‌ அஅடையப் போகிறீர்‌- பரமாத்ம ஸேவா கைங்கர்யமாகிய ஒரு ஸார்வ பெளமத்வம்‌ உமக்குக்‌ கிடைக்கப்‌ போகிறது. விவேகனுக்கும்‌ யெளவ ராஜ்‌யம் கொடுக்க நிச்சயிக்கப் பட்டிருக்‌கிறது -இனி நான்‌ போய்‌ வருகிறேன்‌–. (சிறிது தூரம்‌ சென்று திரும்பி) ப்‌ரஹ்ம வித்யையின்‌ சம்பிரதாய ப.ரம்பை விட்டுப்‌ போகாதிருக்க ௨மது மூலமாய்‌ உலகத்தார்க்கு ஓரு வார்த்தை சொல்லிச்‌ செல்கிறேன்‌ கேளும்‌. பகவானிடத்தில்‌ மிகுந்த பத்தியுள்ள மகாத்மாவாகிய புருஷன்‌ சிஷ்யர்களுக்குத்‌ தாமே ஸந்தேககம் தெளிவித்து சகல அர்த்தங்களையும்‌ போதித்து, ௮வர்கள்‌ மூலமாக ஸத் ஸம்ப்ரதாயம்‌, ஆசார்ய சிஷ்யக்‌ கிரமமாக வ்ருத்தியாகி , அந்‌தணரந்திய ரெல்லையில்‌ நின்ற அனைவருக்கும்‌ ஷேமத்தையும்‌ மங்களத்தையும்‌ உண்டாக்க வேண்டு மென்பதே.
(புருஷனை திரும்பிப்‌ பார்த்துக் கொண்டே போகிறார் .)

புருஷ–(தனிமை)–ஹா! ஹா! அளவில்லா அபராதங்கள்‌ நிறைந்த நானும்‌ மோக்ஷமடையும்‌ ஸம்பவத்‌தினால்‌ எவராலும்‌ செய்ய முடியாததையும்‌ செய்யக் கூடிய ஸாமர்தய மென்னும்‌ பகவானுடைய ௮பாரா சக்தி என்னிடத்தில்‌ இப்பொழுது ப்‌ரத்யஷமாகவே காண்பிக்கப்பட்ட தல்லவா!–ம ஹா ஆச்சர்யம்‌ –இந்தச்‌ சரீரம் எவ்வளவு அசுத்தமானது -ஜல மலப்‌ பேழை ! எலும்புக்‌ கூடு! ரக்த மாம்ஸாதிகளாகிய நாற்றக் குழி! சேற்றில்‌ விழுந்த குழந்தையை எடுக்கத்‌ தானும்‌ சேற்றில்‌ குதிக்கும்‌ தகப்பனைப் போல்‌ இந் நரகக்‌ குழியினின்றும்‌ நம்மைக்‌ காக்கப்‌ பரமனும்‌ அந் நரகக்‌ குழியில்‌ தானும் குதித்‌து , இந்தச்‌ சரிரத்திலிருந்து, ஜீவன்‌ சரீரத்தை விட்டுப்‌ போகும் காலத்தில் மோஷ வழியாகிய நூற்றியோராம்‌ நாடியில்‌ அதைப்‌ பிரவேசிக்கச்‌ செய்கிறார் அல்லவா ! இவ்வளவும்‌ :அந்த அஸஹாய சூரனான விவேகனுடையவும்‌, ஆச்சர்ய மஹிமையுடைய விஷ்ணு பக்தியினுடையவும்‌. காரியமேயல்லவா * அந்த மஹாத்மாக்களின்‌ திவ்ய தர்சன பாக்யம்‌ எனக்கு எக்காலம் கிட்டுமோ !–. ௮தோ! அவர்கள் தான்‌ போலும்‌ ! என்‌ பாக்யமே பாக்யம்‌ !
(ஒர்‌ புறம்‌ ஒதுங்‌கி நிற்கிறான்‌,) (விவேகன்‌, ஸூமதி, விஷ்ணு பக்தி பிரவேசம்‌)

வி- பக்தி--மஹா ராஜ கர்ப்ப ஜன்ம ஜரா மரணங்கள்‌ என்ற சக்கரச்‌ சுழல்களில்‌ சிக்கிய ஜீவாத்மாவிற்கு மோக்ஷ ஸாம்‌ராஜ்ய பதவி கிடைக்கும் படியான வஸதிகள்‌ ஏற்‌படுத்திக்‌ கொடுத்த தங்கள்‌ ப்‌ரதாபம்‌ சொல்லில் அடங்‌காததுவே யாகிறது !
விவேச.–யாவும்‌ உன்னுடைய ௮னுக்‌ரஹத்தால்‌ உண்டானதுதான்‌ : (பக்த்யா த்வநந்யயா)அநந்ய பக்தியே அவனை அடைவதற்குக் காரணமாகும் எனப் பகவான் கீதையில் அருளிச் செய்ய வில்லையா -அது கிடக்கட்டும் -புருஷன் . இன்னமும் பிரக்ருதியைக் கடக்க வில்லையே ! விரஜா நதியைத் தாண்டி வந்த பின்னரன்றோ நித்யானந்த ஸ்வரூனாகக்‌ கூடியவர்‌?

வி-பக்தி..-இதைக்‌ குறித்து மஹா ராஜன்‌ வ்யஸனப்பட வேண்டியதில்லை. பகவத்‌ ஸங்கல்பத்தால்‌ புருஷனுடைய பாப ஸமுத்ரம்‌ வரண்டு போய் விட்டது . பாம்பு தோலுரிப்பது போல, ப்ருஷனும் ப்ரக்ருதியை தியஜித்து விடுவார்‌.

விவேக. _ஆயின்‌ நாம்‌, ஆரம்பித்த கார்யமும்‌ பூர்த்தி ஆகி விட்டது. நம்‌ முயற்சியும்‌ ப்ரயோஜனத்தை உடையதாய் ஆயிற்று
(ஆகாயத்தில்‌. வாத்ய முழக்கம்‌, யாவரும்‌ ஆச்சர்யப்‌ படுகின்றனர் )

வி-பக்தி.-ஜீவாத்மாவிற்கு மோஷ ஐஸ்வர்யம்‌ கிட்டிவிட்டதென்று தேவதைகள்‌ ஆனந்தித்துச்‌ செய்யும்‌ குதூ ஹலவாத்ய முழக்கங்களைக்‌ கேட்டீர்களா !

புருஷா.–(ஒரு புறம்‌ ஸந்தோஷத்‌துடன்‌) நம்முடைய ஷேம லாபத்தால்‌ சந்தோஷ மடைந்திருக்கும்‌ விவேகாதியரை நான்‌ எதிர் கொண்டு வரவேற்பதே முறை. (முன்‌ வருகிறான்‌.)
விவேக.--௮தோ ! பகவத்‌ ஸங்கல்பத்தினால்‌ பாப ரஹிதரான புருஷன்‌ இதோ வருகிறார்‌ – நாம்‌. நமஸ்கரிப்போமாக!.
(நமஸ்கரிக்கிறார்கள் )

புருஷ –ஸர்வே தீர்காயுஷோ பூயாஸ்த
பத்ரே !. விஷ்‌ணு பக்தி! : ஜெயசீலனாய் விளங்கும் விவேகனை தைவாதீனமாய்‌ அடைந்த என்‌ பாக்யமே பாக்யம்‌ –
(விவேகனை ஆலிங்கனம் செய்து ஆனந்த பரவசனாய் )
வத்ஸ!
விரோதிகள்‌ வசப்பட்டு பாபங்களையே செய்து ப்‌ரக்ருதியில்‌ உழன்று வந்‌த என்னை நற்பத்தி புகட்டி. மீட்டு ரக்ஷித்தாய்‌ ! என்‌ பாபமனத்தையும்‌ போக்கியவள் இந்த விஷ்ணு பக்தியே யல்லவா –

விவேகோயம்‌ தத் வேஷ்வ விதத விஸேஷக்ர ஹதனுர்‌ பவோதஙத் தோஷ ப்‌ரதிகமநிகாத்மா ச ஸுமதி : பாப்ரேமாகாராத்வ மிதி ஸமவேதாஸ்த்ர ய இமே தம: பாரே த்ரி குணமபி ச த்யக்ஷத நமாம்

திவ்யம்ஸ் ஸம்ப்‌ரதி துந்துபிர்‌தி சிதிசித் வாநைர் முஹு ஸ்ரூயதே தேவாநாமபி ஹாவு ஹாவு லஹரீ விக்ஷோபய த்யம் பரம்‌ ஆரப்த ப்‌ரதி ஸம்ஸ்க்ருதி க்ருத முகைரர்சிர் முசைமஸ் ஸ்ரீபதே ராஜ்ஞா தாரி பிராதி வாஹிக கணை ராதிஸ்யதே பத்‌ததி : ॥

தத்வங்களில்‌. உண்மையான விசேஷத்தையே க்‌ரஹித்‌ கும்‌ ஸ்வ பாவனான விவேகனும்‌, ஸம்ஸார ஸாகரத்தின்‌ தோஷங்களை ௮றிவதையே ஸ்வரூபமாக வுடைய ஸூமதியும் பரந்தாமனின் ப்ரீதி ஸ்வரூபையான விஷ்ணு பக்தியும் பரமபதத்தில் என்னை விட்டு அகலாதிருப்பீர் களாக

ஜந்தாம்‌ காட்சி.-இடம் -பரமபதம் முக்தர்களின் நித்யானந்த-பல்லாண்டு பாடு பஜிக்கிறார்கள் (நடிகர்கள் எல்லாரும் )

பரத வாக்யம்
அங்கீ குரவந்வ கலுஷதியோ நித்ய மத்யாத்ம வித்யாம் ஆத்யோ தர்ம ஸ்ப்ருசது வஸூதா மாசிஷ பாரவர்தீ தேவ ஸ்ரீ மான் நிரவதிதயா ஸிந்து ரஸ்மின் ப்ரபந்யே வக்தா ஸ்ரோத வசன விஷய ப்ரீயதாம் வாஸூ தேவ

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா உன் சேவடி செவ்வி திருக்காப்பு –

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வலமார்பினால் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர விளக்கங்கள்-இரண்டாம் அத்யாயம்-அவிரோத அத்யாயம் –மூன்றாம் பாதம் – வியத் பாதம்-ஸ்ரீ வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்-

April 16, 2026

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநித விவித பூத விராத ரக்ஷைக தீக்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||-இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

பாராசர்ய வசஸ்ஸுதா₄ம் உபநிஷத் து₃க்₃தா₄ப்₃தி₄ மத்₄யோத்₃த்₄ருதாம்
ஸம்ஸாராக்₃நி விதீ₃பந வ்யபக₃த ப்ராணாத்ம ஸஞ்ஜீவநீம் |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் ப₃ஹுமதி வ்யாகா₄த தூ₃ரஸ்தி₂தாம்
ஆநீதாம் து நிஜாக்ஷரை : ஸுமநஸ: பௌ₄மா: பிப₃ந்து அந்வஹம்
 ||இரண்டாவது மங்கள ஸ்லோஹம்-

ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||

யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந   தர்சிதா:
வரம் ஸுதர்சனார்யம் தம் வந்தே கூர குலாதிபம்-ஸ்ருத  ப்ரகாசிகா பட்டருடைய தனியன்:

————————-

அவிரோத அத்யாயம் -பர ப்ரஹ்மமே நிகில ஜகத் ஏக காரணம் -இந்தப் பொருளோடு எந்த முரண்பாடும் இல்லை என்றும் இதில் நிரூபணம் -எந்த விதத்தாலும் அசைக்க முடியாதது-ஸர்வ பிரகார துர் தர்ஷணம் –

2-3-1-வியத₃தி₄கரணம்-ப்ரஹ்மம் தவிர அனைத்தும் படைக்கப் படுவதே

பாதத்தின் ஸங்கதி
முதல் அத்யாயத்தில் “-அகில ஜகத் ஏக காரணம்-உலகம் அனைத்துக்கும் ப்ரஹ்மம் ஒன்றே காரணம்” என்கிற முடிவு எட்டப்பட்டது. இரண்டாவது அத்யாயத்தில் அந்த முடிவை எதிர்த்து எழக் கூடிய ஆஷேபங்களுக்கெல்லாம் வேத வ்யாசர் பதில் கூறுகிறார்.-உலகம் அனைத்துக்கும் ப்ரஹ்மம் ஒன்றே காரணம்” என்பதில் இரண்டு பகுதிகள் உள்ளன. “ப்ரஹ்மம் ஒன்றே காரணம்” என்பது ஒரு பகுதி, “உலகம் அனைத்துக்கும் காரணம்” என்பது இரண்டாவது பகுதி.-அதில் முதல் பகுதியைத் தாக்குவதற்காக ப்ரஹ்மம் காரணமாக இருக்க முடியாது என்று பலரும் செய்த ஆஷேபங்கள் அனைத்துக்கும் இரண்டாவது அத்யாயத்தின் முதல் பாதத்தில் வேத வியாசர் பதிலுரைத்தார். அதற்கு மேல் இரண்டாவது பாதத்தில் மற்ற மதங்களில் உலகத்துக்கு காரணமாக மற்ற பொருள்கள் சொல்லப் படுகின்றனவே , அவை எதுவும் ஜகத் காரணமாக இருக்க முடியாது. அந்த மதங்கள் அனைத்துமே தவறானவை என்பதை வேத வியாசர் நிரூபித்தார். ஆக இரண்டு பாதங்களால் “ப்ரஹ்மம் ஒரே காரணம்” என்பது நிலை நாட்டப்பட்டது.
இனி அடுத்த இரண்டு பாதங்களில் நாம் எடுத்த முடிவின் இரண்டாவது பகுதியான “உலக அனைத்துக்கும் காரணம்” என்கிற பகுதியைத் தாக்குவதற்காக பல விதமான ஆஷேபங்களை மற்றவர்கள் எழுப்புகிறார்கள். ப்ரஹ்மம் ஒரு சில பொருட்களுக்குக் காரணமாக இருக்கட்டும், உலகில் அனைத்தும் ப்ரஹ்மத்தால் படைக்கப்பட்டதல்ல, என்ற கேள்விகளை எழுப்புகிறார்கள். அதற்கு பதில் சொல்லி “உலகம் அனைத்துக்கும் ப்ரஹ்மம் ஒன்றே காரணம்” என்கிற முடிவை மறுபடியும் நிலை நாட்டுகிறார் வேத வியாசர் அடுத்த இரண்டு பாதங்களால்.

இந்த அத்யாயத்தின் முதல் பாதத்துக்கு ஸ்ம்ருதி பாதம் என்று பெயர்,ஸ்ம்ருதிகளைக் கொண்டு பூர்வ பக்ஷிகள் ஆஷேபங்களை எழுப்பிய படியால். இரண்டாவது பதத்துக்கு தர்க்க பாதம் என்று பேயர், தர்க்கத்தின் அடிப்படையில், அதாவது யுக்திகளைக் கொண்டு மற்ற மதங்கள் எல்லாம் தவறானவை என்று வியாசர் நிரூபித்த படியால். இந்த மூன்றாவது பதத்துக்கு வியத் பாதம் என்று பெயர். வியத் என்றால் ஆகாசம். ஆகாசம் முதலான பொருள்களும் கூட ப்ரஹ்மத்தால் தான் படைக்கப் படுகின்றன என்று இதில் நிரூபிக்கிற படியால். அடுத்தது நான்காவது பதத்துக்கு ப்ராண பாதம் என்று பெயர், ப்ராணன், இந்திரியங்கள் முதலானவையும் பகவானால் தான் படைக்கப் படுகின்றன என்று அந்த பாதத்தில் நிரூபிக்கப் போகிறார். இது தான் இந்த பாதத்திற்கும் முன் பின் பாதங்களுடன் இருக்கும் ஸங்கதியாகும்.

ஆகாசம் உண்டாக முடியுமா?
2-3-1-வியத₃தி₄கரணம் – பூர்வ பக்ஷம் – ஆகாசம் உண்டாக்கப் படுவதில்லை , அது நித்யமானது என்கிறார் பூர்வ பக்ஷீ
1-ந வியத் அஸ்ருதத:
– “ஆகாசம் உண்டாவதில்லை , அப்படிச் சொல்லும் ஸ்ருதி இல்லாதபடியால்”
பூர்வ பக்ஷி சொல்வது – உலகத்தில் நாம் புலன்களால் அறிந்ததோடு முரண்பட்ட ஒரு விஷயத்தை வேதமாகவே இருந்தாலும் போதிக்க முடியாது. வேதமே கூட “நெருப்பு குளிர்ந்தது” என்று சொன்னால், அதை அப்படியே ஏற்க முடியாது, புலன்களால் ’நெருப்பு சூடானது’ என்று நாம் அறிந்திருக்கிற படியால். எனவே , அச் சொல் தொடருக்கு வேறு மாதிரி தான் பொருள் கொள்ள வேண்டும்.
அதே போல், ஆகாசம் உண்டாவது என்பது நடக்க முடியாத ஒன்று. எனவே , வேதத்தால் கூட “ஆகாசம் உண்டாக்கப் படுகிறது” என்று போதிக்க முடியாது.

ஆகாசம் உண்டாக்கப் படமுடியாது என்பதற்கு இரண்டு காரணங்கள்
(1) உலகில் உண்டாக்கப்படும் பொருள்கள் அனைத்துமே பகுதிகளோடு கூடியவை தான். ஆனால் ஆகாசத்துக்குப் பகுதிகள் இல்லை . எனவே ஆகாசம் உண்டாக்கப் படமுடியாதது
(2) உலகில் உண்டாக்கப்படும் பொருள்கள் அனைத்துமே நடுத்தர அளவோடு (பரிமாணத்தோடு) தான் இருக்கும்.-ஆனால் ஆகாசமோ எல்லா இடத்திலும் பரந்துள்ளது. எனவே ஆகாசம் உண்டாக்கப் படமுடியாது.

மேலும், சாந்தோக்ய உபநிஷத்தில் ப்ரஹ்மம் உலகத்தைப் படைக்கும் முறையை வருணிக்கும் போது “(ததை ₃ஷத ப₃ஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி, தத்வதஜ: அஸ்ருஜத) அதாவது ’அந்த ப்ரஹ்மம் ஸங்கல்பம் செய்தது – “நான் பலவாக ஆகக் கடவேன், அதற்காக ஸ்ருஷ்டிக்கக் கடவேன்” என்று. (ஈஷத் அதிகரணம் -1-1-5 முன்பே பார்த்துள்ளோம்-நெருப்பு ஜலம் பிருத்வி மூன்றும் இங்கு சொல்லப்பட்டுள்ளது -ஆகாசம் வாயு இவை பற்றி சொல்லப் பட வில்லை இங்கு -)அந்த ப்ரஹ்மம் தேஜஸ் என்ற நெருப்பைப் படைத்தது’ எனப்படுகிறது. எனவே , ஸ்ருஷ்டியைச் சொல்லும் போது முதன் முதலில் ஐம்பூதங்களுக்குள் தேஜஸ் தான் உண்டாக்கப் படுகிறது என்று கூறி, அதற்குப் பிறகும் ஜலம் பூமி ஆகியவற்றின் ஸ்ருஷ்டி மட்டும் தான் சொல்லப்படுகிற படியால் ஆகாசம் உண்டாக்கப் படுவதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஆக இவ்வாறு ஆகாசம் ப்ரஹ்மத்தால் படைக்கப் படாதபடியால் “உலகமனைத்தும் ப்ரஹ்மம் காரணம்” என்று நீங்கள் சொல்வது தவறானது என்று வாதிடுகிறார் பூர்வ பஷி

ஆகாசமும் உண்டாக்கப்படுவதே
ஸித்தாந்தம் – 2-அஸ்தி து
– “ (ஆகாசம் உண்டாவதைச் சொல்லும் வேத வாக்யம்) இருக்கிறது அ்ன்றோ ”
தைத்திரீய உபநிஷத்தில் (ஆத்மந: ஆகாச: ஸம்பூ₄த: ) அதாவது “பரமாத்மாவிடமிருந்து ஆகாசம் உண்டானது” என்று ஸ்பஷ்டமாக ஆகாசத்தின் ஸ்ருஷ்டி சொல்லப்படுவதால் ஆகாசமும் படைக்கப்படுவதே .(ஆனந்தாதி அதிகரணம் -முன்பே இது பற்றி பார்த்துள்ளோம்)
புலன்களால் அறியப்பட்ட விஷயங்களோடு முரண்பட்ட ஒரு விஷயத்தை வேதமாகவே இருந்தாலும் போதிக்க முடியாது என்று நீங்கள் சொன்னதை ஏற்கிறோம். ஆனால் வேதத்துக்கு ஒரு சிறப்பு உள்ளது, புலன்களோடு முரண் படாமல் ஆனால் புலன்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை வேதத்தால் போதிக்க முடியும். இவ் விடத்திலும் ஆகாசத்தின் உத்பத்தி என்பது நம்முடைய புலன்களுக்கு அப்பாற்பட்டது. அப்படிப்பட்ட ஸ்ருஷ்டி உண்டு என்று வேதம் சொல்லும் போது அது புலன்களுக்கு முரண் பட்டதே அல்ல. “ஆகாசம் உண்டாவதில்லை ” என்று நாம் புலன்களால் அறிந்தது கிடையாது. “ஆகாசம் உண்டாகிறது” என்று தெரிந்து கொண்டதில்லை , அவ்வளவே . ஆகையால் புலன்களுக்கு முரண் படாமல், ஆனால் புலன்களுக்கு அப்பாற்பட்ட ஆகாசத்தின் உத்பத்தியை வேதம் சொல்வதில் எந்த முரண்பாடும் இல்லை

மேலும் பகுதிகள் இல்லாத்படியால் ஆகாசம் உண்டாக்கப் படவே முடியாது என்று சொல்லியிருந்தீர்கள். அதுவும் தவறானது. ஏன் என்றால் ஆகாசத்துக்கு பகுதிகள் கண்டிப்பாக உள்ளன. வேதத்திலும் புராணங்களிலும் த்ரிவித் கரணம் என்றும்
பஞ்சீகரணம் எ
ன்ற ஒரு செயல் சொல்லப்படுகிறது. ஐம் பூதங்களையும் படைத்த பிறகு பரமாத்மா இந்த ஐந்து பூதங்களையும் ஒன்றோடு ஒன்று கலக்கிறாராம். கலந்த பிறகு பார்த்தோ மென்றால் ஆகாசம் என்பதில் 50% ஆகாசமும் தலா 12.5% நிலம், நீர், தீ, காற்று ஆகிய மற்ற நான்கு பூதங்களும் உள்ளன என்று சாஸ்த்ரம் கூறுகிறது. ஆகாசத்திற்கு பகுதிகளே இல்லை என்றால் எப்படி இப்படி பிரித்து கலக்க முடியும்? அதனால் பகுதிகளில்லை என்று நீங்கள் சொல்வதும் தவறானது.
ஆகவே , இந்த வேத வாக்கியம் ஆகாசத்தின் உண்டாக்கத்தைச் சொல்லுகிறபடியால் ஆகாசமும் உண்டாக்கப் படுவது தான் என்பது வேத வ்யாஸரின் ஸித்தாந்தம்.

பூர்வ பக்ஷியின் கேள்வி
3-கௌ₃ணீ அஸம்ப₄வாத் சப்₃தா₃த் ச –
“இரண்டாம் பக்ஷம், முடியாத படியாலும் சொல்லாலும்”
இங்கு பூர்வபக்ஷீ ஆஷேபம் செய்கிறார் –கௌ₃ணீ- “ஆத்மந: ஆகாச: ஸம்பூ₄த:” என்ற வாக்கியத்தில் உள்ள ’ஸம்பூ₄த:’(உண்டானது) என்ற சொல்லுக்கு நேரடியாக உண்டாக்கம் என்ற பொருள் கொள்ள முடியாது. இரண்டாம் பஷமாக-கௌணமாக) தோற்றம் -வெளிப்பாடு என்று பொருள் கொள்ள வேண்டும். ஒரு வீரனை ’இவன் சிங்கம்’ என்று சொல்வது எப்படி Figurative (உருவகம்) என்று சொல்லப்படுகிறதோ அது போல் இங்கும் முதன்மையான பொருளல்ல.
அஸம்ப₄வாத் – முடியாத படியால் – தேஜஸ்ஸே முதலில் தோன்றுகிறது என்று வேதம் சொல்வதால் ஆகாசம் உண்டாக்கப்பட முடியாதபடியால்
சப்₃தா₃த் ச – சொல்லாலும் – வேதத்திலேயே (्வாயு: ச அந்தரிஷம் ச ஏதத் அம்ருதம்) அதாவது
’வாயுவும் ஆகாசமும் நித்யமானவை ’ என்று சொல்கிற படியாலும் ஆகாசத்துக்கு உண்டாக்கம் கிடையாது.

4-ஸ்யாத் ् ச ஏகஸ்ய ப்₃ரஹ்ம சப்₃த₃வத் – “ஒ்ன்றுக்கு இருக்கலாம், ப்ரஹ்மம் என்ற சொல் போல்”
இங்கு ஒரு கேள்வி எழுகிறது. அதற்கான விடையை இந்த ஸூத்ரத்தில் பூர்வ பஷி கூறுகிறார்.
கேள்வி – “பரமாத்மாவிடமிருந்து ஆகாசம் உண்டானது” என்று சொன்ன பிறகு “வாயுவிலிருந்து நெருப்பு”,“நெருப்பிலிருந்து ஜலம்” முதலான வாக்கியங்கள் உள்ளன. முதல் வாக்யத்தில் இருக்கும் ’உண்டானது’ (ஸம்பூ₄த: ) என்ற சொல்லை பின் வாக்கியங்களிலும் சேர்க்க வேண்டும்.இதை அனு க்ஷங்கம் என்பர் – அப்போது, முதல் வாக்கியத்தில் ஆகாசம் உண்டாக முடியாததால் ’உண்டாகிறது’ என்ற சொல்லுக்கு ’வெளிப்படுகிறது’ என்று பொருள் கொண்டு விட்டு, பின்னால் உள்ள வாக்கியங்களில் தேஜஸ் முதலானவை உண்மை யாகவே உண்டாகிற படியால் ’உண்டாகிறது’ என்ற சொல்லுக்கு ’உண்டாக்கம்’ என்ற பொருளை எப்படிக் கொள்ள முடியும்?-பதில் – ஒரே சொல்லுக்கு வேறு இடங்களில் வேறு பொருள்கள் இருக்கலாம். உபநிஷத்தில் ஒரே இடத்தில் ஒரு முறை ப்ரஹ்மம் என்ற சொல்லுக்கு மூல ப்ரக்ருதி என்றும் இரண்டாம் முறை பரமாத்மா என்று பொருள் கொள்வது போல்.

வ்யாஸரின் பதில்
5-ப்ரதிஜ்ஞ அஹாநி அவ்யதிரேகாத் –
“ப்ரதிஜ்ஜைக்கு பாதிப்பில்லாமை வேறல்லாத படியால்”
பூர்வ பக்ஷியின் வாதத்துக்கு இந்த ஸூத்ரத்தில் வேத வ்யாஸர் பதில் அளிக்கிறார்.
சாந்தோக்ய உபநிஷத்தில் முதலில் தேஜஸ்ஸின் உண்டாக்கம் சொல்லப்படுவதைக் கொண்டு ’ஸம்பூ₄த:’ என்ற சொல்லுக்கு இரண்டாம் பஷமாகப் பொருள் கொள்ள இயலாது-சாந்தோக்யத்திலேயே ஆகாசத்தின் உத்பத்தி சொல்லப் பட்டுள்ள படியால் என்கிறார் வேத வ்யாஸர்.

சாந்தோக்ய உபநிஷத்தின் ஆறாம் ப்ரபாடகத்தில் உள்ள ஸத்₃வித்யையில் தான் தேஜஸ்ஸின் உண்டாக்கம் சொல்லப் பட்டுள்ளது. ஆனால் அந்த ப்ரகரணத்தின் தோடக்கத்திலேயே உத்தாலகர் என்ற தந்தை ஸ்வேத கேது என்ற மகனைப் பார்த்து “எந்த ஒன்றை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகுமோ அதை உன் ஆசார்யர்களிடம் கேட்டாயா?” என்று வினவுகிறார். இதில் ஒரு ப்ரதிஜ்ஜை (அறிவிப்பு) உள்ளது – “ப்ரஹ்மத்தை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகும்” என்று. அந்த ப்ரதிஜ்ஜை உண்மையாக இருக்க வேண்டும், அதற்கு அஹாநி(பாதிப்பில்லாமை ) இருக்க வேண்டும் என்றால், ஆகாசமும் உண்டாக்கப் படுவது தான் என்று ஏற்கத் தான் வேண்டும்.

இவ் விடத்தில் உத்தாலகர் சொல்வது – ’உலகத்தில் ஒரு காரணப் பொருளை அறிந்தால் அதன் கார்யங்கள் அனைத்தையும் அறிந்ததாகும். எடுத்துக் காட்டுக்கு, ஒரு மண் கட்டியை அறிந்தால், அதிலிருந்து உண்டாகும் குடம், தட்டு, சுவர் முதலான அனைத்தையுமே நாம் ஒரு விதத்தில் ’மண்’ என்ற அளவிற்கு அறிந்ததாகத் தான் ஆகும். ஏனெனில் குடம் என்பது மண்ணைக் காட்டிலும் வேறு பொருள் அல்ல. அது போல் தான் இங்கும் ப்ரஹ்மத்தை அறிந்தால் உலகனைத்தையும் அறிந்ததாகும் என்கிறார். அதாவது, உலகில் அனைத்துமே ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாவதால், ப்ரஹ்மத்தைக் காட்டிலும்
வேறு பொருளல்ல. ஆகையால் ப்ரஹ்மத்தை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகும் என்கிறார். இது உண்மையாக இருக்க வேண்டுமென்றால் ஆகாசமும் ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகி யிருக்கத் தான் வேண்டும். இல்லா விட்டால், ப்ரஹ்மத்தை அறிந்தாலும் ஆகாசத்தை அறிந்ததாக ஆகாதபடியால் உத்தாலகர் ’அனைத்தையும் அறிந்ததாகும்’ என்று சொன்னது பொய்யாகி விடும். எனவே சாந்தோக்யமே ஆகாசத்தின் உத்பத்தியைக் கூறுகிறது.

மேலும் சில யுக்திகள்
6–சப்₃தே₃ப்₄ய: –
“(ஆகாசம் உண்டாவதை மற்ற சில வாக்கியங்களிலிருந்து அறியலாம்”
ஸதே₃வ ஸோம்ய இத₃ம் அக்₃ரே ஆஸீத் ஏகமேவ அத்₃விதீயம்” –-ஸ்ருஷ்டிக்கு முன்னால் இந்த உலகனைத்தும் ஸத் என்ற ஒரே பொருளாக இருந்தது, வேறு எதுவுமில்லை –இவ்வாறு வேதம் சொல்வதால், ப்ரளயத்தின் போது ஸத் என்ற பரமாத்மா மட்டுமே இருந்தார் என்று தெரிகிற படியால், அப்போது ஆகாசமும் இல்லை , பிற்பாடு தான் ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாயிற்று என்று தெரிகிறது.

(ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர்படைத்தான்
குன்றம் போல் மணிமாடம் நீடு திருக் குருகூரதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!
–4-10-1-)

“ஐததா₃த்ம்யம் இத₃ம் ஸர்வம்” – இது அனைத்தும் ப்ரஹ்மமே -குடம் தட்டு சுவர் முதலான பொருள்கள் எல்லாம் மண்ணிலிருந்து உண்டான படியால் ’இவை அனைத்தும் மண் தான்’ என்று சொல்வது போல் இங்கு வேதம் ’இவ் வுலகில் அனைத்துமே ப்ரஹ்மம் தான்’ என்று கூறுவதால், உலகில் ஒரு பகுதியான ஆகாசமும் ப்ரஹ்மத்திட மிருந்து தோன்றியது தான் என்று தெளிவாகிறது.

7– யாவத் ₃விகாரம் து விபா₄க₃: ஸ்யாத் லோகவத்
விகாரம்
என்றால் காரியப் பொருள். விபா₄க₃ம் என்றால் உண்டாக்கம். ஆகாசம் முதலானவை காரியப் பொருள்கள் தான் என்று சொல்வதாலேயே அவை ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகின்றன என்பது சொன்னதாகிறது
லோகவத் – உலகத்தில் போல் – உலகத்தில் ’இவர்கள் அனைவரும் தேவ தத்தனின் புதல்வர்கள்’ என்று சொல்லி விட்டு, ஒரு சிலர் அவனிடமிருந்து பிறந்தது விளக்கப் பட்டால், அனைவரும் அவனிடமிருந்து பிறந்தது சொல்லப்பட்டதாகும். -அது போல், ’உலகில் அனைத்தும் ப்ரஹ்மத்தின் காரியங்கள்’ என்று சொல்லி விட்டு, தேஜஸ் ஜலம் பூமி என்பவை உண்டாகும் முறையை வேதம் காட்டினால், அது மற்றவை உண்டாக வில்லை என்ற பொருளைத் தராது, அவை அனைத்தும் அதே போல் தான் ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகி யுள்ளன என்பதையே குறிக்கும்-’வாயுவும் ஆகாசமும் நித்யமானவை ’ என்று வேதம் சொல்வது, முற்றிலுமாக உண்டாக்கமும் அழிவும் இல்லாததால் அல்ல, மற்ற பொருள்களை விட நீண்ட காலத்துக்கு இவை இரண்டும் அழியாமல் இருப்பதால் மட்டுமே –

அனைத்துமே ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகிறது
8–ஏதேந மாதரிச்வா வ்யாக்₂யத:
– “இத்தால் வாயு (உண்டாகக் கூடியதாக) விளக்கப் பட்டது”
இப்படி ஆகாசம் உண்டாகக் கூடியது தான் என்பதற்குச் சொன்ன யுக்திகளாலேயே வாயுவும் உண்டாகக் கூடியது தான் என்பது நிரூபமாகிறது.-இதை முன் ஸூத்ரத்திலேயே சேர்க்காமல், தனி ஸூத்ரமாக வ்யாஸர் வைத்தது, அடுத்த அதிகரணத்தில் வாயுவை மட்டும் நினைவு கூறுவதற்காக. இது அடுத்த அதிகரணத்தில் தெளிவாகும்

9-அஸம்ப₄வஸ்து ஸத: அநுபபத்தே :
(உண்டாக) முடியாமை ஸத் என்கிற பரமாத்மாவுக்கே , (மற்ற பொருள்களுக்கு உண்டாகாமை ) பொருந்தாத படியால்-இவ் வதிகரணத்தில் ஆகாசமும் வாயுவும் உண்டாகக் கூடியவை என்று சொன்னதோடு நிற்காமல், உலகில் அனைத்துமே உண்டாகக் கூடியது தான் என்று நிரூபிக்கிறார் இந்த ஸூத்ரத்தால். உலகில் உண்டாகாமை என்ற பண்பு பரமாத்மாவுக்கு மட்டுமே பொருந்தும், மற்றப் பொருள்களுக்குப் பொருந்தாது. ஏன் என்றால், முன்னமே சொன்னபடி, சா₂ந்தோக்₃ய உபநிஷத்தின் 6ஆம் ப்ரபாடகத்தில் உள்ள ஸத் வித்யை என்ற பகுதியில் உத்தாலகர் என்ற தகப்பனார் ஸ்வேதகேது என்ற மகனிடம் ’ப்ரஹ்மத்தை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகும்’ என்கிறார். இது உண்மையாக வேண்டுமென்றால், அதற்கு ஒரே வழி தான் உள்ளது –உலகப் பொருள்களும் ப்ரஹ்மமும் ஒரே போருளாக இருக்க வேண்டும். அதற்கு ஒரே வழி தான் உள்ளது – உலகப் பொருள்கள் அனைத்தும் ப்ரஹ்டமிருந்து உண்டாகி யிருக்க வேண்டும். ஆகையால், எந்தப் பொருளுமே உண்டாகாததாக
இருக்கவே முடியாது.

ஆக, இவ்வதிகரணத்தால், தன்னைத் தவிர்ந்த அனைத்துப் பொருள்களுக்கும் பரமாத்மாவான ப்ரஹ்மம் காரணமாக உள்ளது என்று நிரூபிக்கப் பட்டது. எனவே , முதல் அத்யாயத்தில் நாம் எட்டிய முடிவு சரியானதே என்று நிலை நாட்டப்படுகிறது.


2-3-2-தேஜோதி₄கரணம்-அனைத்தும் ப்ரஹ்மத்திடமிருந்தே உண்டாகிறதுபூர்வ பக்ஷியின் வாதம்-ஸங்கதி – முன் அதிகரணத்தில் ஆகாசமும் வாயுவும் உண்டாக்கப் படுகின்றன எனப்பட்டது.-அதற்கடுத்து உண்டாகக் கூடிய தேஜஸ், ஜலம், ப்ருதிவீ ஆகியவற்றைப் பற்றின ஆராய்ச்சி இங்கு செய்யப்படுகிறது
முன் அதிகரணத்தில் உலகப் பொருள்கள் அனைத்துமே உண்டாக்கப் படுகின்றன என்று சொல்லப் பட்டது. மூல ப்ரக்ருதியிலிருந்து அவ்யக்தம், மஹான், அஹங்காரம், புலன்கள், தன்மாத்ரங்கள், ஐம் பூதங்கள் என்பவை அனைத்தும் உண்டாகின்றன என்று வேதம் கூறுகிறது. அதில் ஒரு கேள்வி எழுகிறது – இவை ஒவ்வொன்றுமே ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகின்றனவா? அல்லது ப்ரஹ்மம் மூல ப்ரக்ருதியிலிருந்து அவ்யக்தம் என்பதை மட்டும் உண்டாக்கும், அதற்குப் பின் அந்தந்த அசேதனப் பொருள்களே அடுத்தடுத்த அசேதனப் பொருள்களை உண்டாக்குகின்றனவா? என்று.

பூர்வ பக்ஷம் – அந்தந்த அசேதனப் பொருள்களே அடுத்தடுத்த பொருள்களை உண்டாக்குகின்றன
1-தேஜ : அத: ததா ₂ஹிஆஹ
அத:
– அதிலிருந்து -முன் அதிகரணத்தின் 8ஆம் ஸூத்ரத்தில் சொல்லப்பட்ட மாதரிச்வா எனும் வாயுவிடமிருந்து
தேஜ : – தேஜஸ் என்ற நெருப்பு உண்டாகிறது
ததா₂ஹிஆஹ– அவ்வாறு அன்றோ (வேதம்) சொல்கிறது
தைத்திரீய உபநிஷத்தில் ஆத்மாவிடமிருந்து ஆகாசம் உண்டாயிற்று, ஆகாசத்திலிருந்து வாயு உண்டாயிற்று என்று சொன்ன பிறகு, (வாயோர் : அக்₃நி: ) அதாவது வாயுவிலிருந்து நெருப்பு உண்டாகிறது என்று தான் கூறப்பட்டுள்ளது. எனவே அசேதனப் பொருளே அடுத்த அசேதனப் பொருளை உண்டாக்குகிறது, ப்ரஹ்மம் அல்ல.

2-ஆப: – “(அதிலிருந்து அதாவது தேஜஸ்ஸிலிருந்து) ஜலம் (உண்டாகிறது, அவ்வாறு அன்றோ சொல்கிறது)”
தைத்திரீயத்தில் (அக்₃நே : ஆப: ) அதாவது “அக்₃நியிலிருந்து ஜலம் உண்டானது” என்றும், சாந்தோக்யத்தில்(தத் அப: அஸ்ருஜத) அதாவது “அந்த தேஜஸ் ஜலத்தைப் படைத்தது” என்றும் தான் சொல்லப்படுகிறது.

பூர்வபக்ஷியின் வாதம் தொடர்கிறது
3-ப்ருதி₂வீ –
(அதிலிருந்து அதாவது ஜலத்திலிருந்து) ப்ருதி₂வீ (உண்டாகிறது, அவ்வாறு அன்றோ சொல்கிறது)”
தைத்திரீயத்தில் (அத்₃ப்₄ய: ப்ருதி₂வீ ) அதாவது “ ஜலத்திலிருந்து ப்ருதிவீ உண்டானது” என்றும்,
சாந்தோக்யத்தில் (தா: அந்நம் அஸ்ருஜந்த) அதாவது “அந்த ஜலம் அந்நத்தைப் படைத்தது” என்று தான் சொல்லப்படுகிறது. எனவே அந்தந்த அசேதனப் பொருளே அடுத்த காரியத்தை உண்டாக்கி விடுகிறது.

4–அதி₄கார-ரூப- சப்₃தா₃ந்தரேப்₄ய: – அந்நம் எனப்படுவது ப்ருதி₂வீ தான் என்று நிரூபிக்கிறார்
அதி₄காரம் – இந்த ப்ரகரணத்தில் (வேதப் பகுதியில்) ஆகாசம் வாயு முதலான பூதங்களின் உண்டாக்கமே பேசப்படுகிற படியால் இங்கும் அந்நம் என்பது உணவல்ல, உணவுக்கெல்லாம் காரணமாக இருக்கும் ப்ருதிவீ தான்
ரூபம் – இதே வேதப் பகுதியில் “நெருப்பில் இருக்கும் சிவப்பு, வெண்மை மற்றும் கருமை ஆகிய வண்ணங்கள் தேஜஸ், ஜலம் மற்றும் அந்நத்திலிருந்து வந்தவை ” என்று கூறப் படுகிறது. இப்படி தேஜஸ்ஸுக்கும் ஜலத்துக்கும் ஸமமாகச் சொல்லப்படுவதால், அந்நம் என்பதும் ஐம் பூதங்களில் ஒன்றான ப்ருதிவியாகத் தான் இருக்க வேண்டும்.
சப்₃தா₃ந்தரம் – சாந்தோக்ய உபநிஷத்தில் அந்நம் என்ற சொல் பயன்படுத்தப் பட்டாலும் இதே போன்ற இடத்தில் தைத்திரீயத்தில் ப்ருதிவீ என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே அந்நம் என்பது ப்ருதிவீ தான்.எனவே அந்நம் என்பது ப்ருதி₂வியே . ஆக, தேஜஸ் முதலான அசேதனங்களே அடுத்த பொருள்களை உண்டாக்குகின்றன

கேள்வி – வேதத்தில் ஓரிடத்தில் எல்லாப் பொருள்களும் ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாவதாகச் சொல்லப்படுகிறதே ?-ஏதஸ்மாத் ஜாயதே ப்ராண: மந: ஸர்வேந்த்₃ரியாணி | க₂ம் வாயு: ஜ்யோதி: ஆப: ப்ருதி₂வீ விச்வவஸ்ய தா₄ரிணீ || ப்ரஹ்மத்திடமிருந்து ப்ராணன், மனது, புலன்கள், ஆகாசம், வாயு, தேஜஸ், ஜலம், ப்ருதி₂வீ ஆகியவை உண்டாகின்றன –

பதில் – இவை யெல்லாம் நேரடியாக ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகின்றன என்று வேதம் சொல்லவில்லை , அடுத் தடுத்து வரிசையாக இவை உண்டாகிற படியால், பரம்பரையாக எல்லாம் ப்ரஹ்மத்திடமிருந்து உண்டானது என்றே சொல்கிறது

ஸித்தாந்தியின் பதில்-ஸித்தாந்தம் –5–த₃பி₄த்₄யாநாத் ஏவ து தல்லிங்காத் ஸ:
ஸ: து
– (மஹான் முதலானவைக்கு காரணம்) அவரே = அவ்யக்தம் முதலானவற்றை சரீரமாகக் கொண்ட பரமாத்மாவே –
த₃பி₄த்₄யாநாத் ஏவ தல் லிங்காத் – அபி₄த்₄யாநம் (ஸங்கல்பம்) என்கிற தனிப்பட்ட லிங்கத்தால் (அடையாளத்தால்) தேஜஸ், ஜலம் முதலானவை அடுத்தடுத்த பொருளைப் படைப்பதற்கு முன் ஸங்கல்பம் (எண்ணம்) செய்கின்றன என்று வேதம் சொல்கிறது – தத் தேஜ ஐக்ஷத” தா ஆப ஐக்ஷந்த” என்று. அசேதனப் பொருள்களுக்கு இது பொருந்தாது, எனவே அந்தந்த அசேதநப் பொருளே சரீரமாகக் கொண்ட பரமாத்மா தான் அடுத்தடுத்த பொருளை உண்டாக்குகிறார் என்பதே பொருத்தமானது. பரமாத்மா அனைத்துக்கும் அந்தர்யாமியே –

(ஏ தஸ்மாத் ஜாயதே பிராணன் மனஸ் ஸர்வேந்த்ரியாணி கம் வாயு ஜ்யோதி ஆபோ பிருத்வீ -அனைத்துமே ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகிறது -என்றும் வேத வாக்கியம் உள்ளது)

6–விபர்யயேண து க்ரம: அத: உபபத்₃யதே ச –”மாறுபட்ட வரிசை இத்தால் பொருந்துகிறது”
விபர்யயேண து – (அவ்யக்தம் மஹான் அஹங்காரம் என்கிற ஸ்ருஷ்டி வரிசையிலிருந்து) மாறுபட்ட
க்ரம: – (எல்லாமே ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகிறது என்று சொல்லப்பட்ட) க்ரமம் அதாவது வரிசை
அத: – இதனால் (அதாவது அனைத்துமே பரமாத்மா விடமிருந்தே உண்டாகிற படியால்)
உபபத்₃யதே ச – பொருந்துகிறது-

“ஏதஸ்மாத் ஜாயதே ப்ராண :” என்ற வேத வாக்கியத்தில் பரமாத் மாவிடமிருந்து அவ்யக்தம், அதிலிருந்து மஹான்,-அதிலிருந்து அஹங்காரம், அதிலிருந்து ஐம் பூதங்கள் உண்டாகின்றன என்கிற வரிசையைச் சொல்லாமல் “எல்லாமே பரமாத்மாவிடமிருந்து உண்டாகிறது” என்று சொல்லப்படுகிறது.
அதற்கு பூர்வ பஷி – எல்லாமே நேரடியாக பரமாத்மாவிமிருந்து உண்டாகா விட்டாலும், பரம்பரையாக உண்டாவதை இந்த வாக்கியம் சொல்கிறது என்றார்.
இப்போது ஸித்தாந்தத்தில் அந்தந்த அசேதனப் பொருள்களை சரீரமாகக் கொண்ட பரமாத்மாவிடமிருந்தே அனைத்தும் உண்டாகிற படியால், அனைத்துமே நேரடியாக பரமாத்மாவிடமிருந்து உண்டாகிறது என்று சொல்வது கூடப் பொருத்தமானதே – அதனால் “ஏதஸ்மாத் ஜாயதே ப்ராண :” என்ற வாக்கியம் எங்கள் பக்ஷத்துக்கு ஸாதகமானது-

7-அந்தரா விஜ்ஞாந மநஸீ க்ரமேண தல் லிங்காத் இதி சேத் ந அவிசேஷாத்
பூர்வ பஷி கேள்வி கேட்கிறார்
– இந்த வேத வாக்கியம் அனைத்தும் நேரடியாக பரமாத்மாவிடமிருந்து உண்டாகிறது என்று சொல்லவில்லை , ஒரு வரிசையில் தான் அடுத்தடுத்த பொருள்கள் உண்டாவதைச் சொல்கிறது என்று.
தல் லிங்காத் – (’ஆகாசம் வாயு தேஜஸ்’ என்ற வரிசையோடு சேர்த்துப் படிக்கப் படுதல் என்ற) அடையாளத்தால்
அந்தரா விஜ்ஞாந மநஸீ க்ரமேண – ப்ராணனுக்கும் பூதங்களுக்கும் நடுவில் புலன்களும் மனதும் உண்டாகின்றன
இதி சேத் ந – என்று நீங்கள் கூறினால் அது தவறானது
அவிசேஷாத் – வேறுபாடில்லாத படியால்

’ஏதஸ்மாத் ஜாயதே ’ அதாவது ’பரமாத்மாவிடமிருந்து உண்டாகிறாது’ என்ற சொற்றொடர் ப்ராணனோடு மற்றும் சேரவில்லை , இங்கு சொல்லப்பட்ட அனைத்துப் பொருள்களோடும் சேர்கிறது. எனவே எல்லாமே பரமாத்மாவிடமிருந்து நேரடியாக உண்டகிறது என்று தான் கொள்ள வேண்டும்.
மேலும், இங்கு ஒரு குறிப்பிட்ட வரிசை சொல்லபடுகிறது என்று கூறுவது உங்கள் வேதத்திலும் பொருந்தாது. ஏனென்றால் இந்த வாக்கியத்தில் முதலில் ப்ராணன் உண்டாகிறது என்று கூறி, அதற்குப் பிறகு தான் ஆகாசத்திலிருந்து வாயு உண்டாகிறது என்று சொல்லப்படுகிறது. இது பொருந்தாது. ப்ராணன் (மூச்சுக் காற்று) என்பது வாயுவின் குறிப்பிட்ட வகையானபடியால் அது வாயுவுக்கு முன் உண்டாக முடியாது. எனவே இங்கு க்ரமம் (வரிசை ) சொல்லப்படவில்லை , எல்லாமே பரமாத்மாவிடமிருந்து உண்டாகிறது என்று தான் சொல்லப் படுகிறது.

ஆக இந்த அதிகரணத்தில் ’தேஜஸ்’’ஜலம்’ முதலான சொற்கெல்லாம் அந்தந்த அசேதனப் பொருளை மட்டும் குறிப்பிடவில்லை , அந்தந்த அசேதனப் பொருளை சரீரமாகக் கொண்ட பரமாமைவையே குறிக்கின்றன என்று கூறப்பட்டது. இதில் ஓர் ஆஷேபத்தை பூர்வபஷி எழுப்புகிறார் – எல்லாச் சொற்களும் ப்ரஹ்மத்தையே குறிக்கின்றன என்றால், உலகில் அனைவரும் தினமும் குடம் துணி மேஜை ஆடு மாடு முதலான பொருள்களைக் குறிக்க அந்தந்த சொற்களைப் பயன்படுத்துவது தவறாகி விடுமே ? பிறகு உலகப் பேச்சு வழக்கு என்பதே நின்று போய் விடுமே? என்று.-இதற்கு வேத வ்யாஸர் அடுத்த ஸூத்ரத்தில் விடை அளிக்கிறார்.

8-சராசர வ்யபாஸ்ர யஸ்து ஸ்யாத் தத் வ்யபதேசோ பாக்த தத் பாவ பாவாத்
சராசர வ்யபாஸ்ர யஸ்து-
-அசையும் மற்றும் அசையாத உலகப் பொருள்களைப் பற்றி
தத்₃வ்யபதே₃ ச : – அந்தந்த சொற்களின் ப்ரயோகமானது (பயன்பாடானது)
பா₄க்த: ஸ்யாத் – உடைக்கப்பட்டதாக – இரண்டாம் பக்ஷமாக இருக்கும்
தத்₃பா₄வ பா₄வித்வாத் – அனைத்துச் சொற்களும் பரமாத்வையே சொல்கின்றன என்று தெரிந்து கொண்ட பிறகு மட்டுமே எல்லாச் சொற்களும் பரமாத்வையே போதிக்கிறபடியால்.

அதாவது, உலகத்தில் பொதுவாகக் காணப்படும் சொற்களின் பயன்பாடு தவறானது அல்ல, ஆனால் முழுமையானதும் அல்ல. ஒவ்வொரு சொல்லுக்கும் பரமாத்மா வரை போதிக்கும் சக்தி இருந்தாலும், அது தெரியாமல் மக்கள் அந்தந்தச் சொற்களைப் பயன்படுத்துவதால், அக் காலத்தில் குடம் துணி முதலான பொருள்களை மட்டும் அந்தந்தச் சொற்கள் குறிக்கின்றன. எப்போது வேதாந்தம் கற்று, ’எல்லாச் சொற்களும் பரமாத்வையே கூறுகின்றன’ என்று உணர்கிறார்களோ அப்போது அந்தந்தச் சொற்களின் முழுமையான சக்தியை உணர்ந்த படியால் அதற்குப் பின் அவர்களுக்கு அந்தந்தச் சொற்கள் பரமாத்மா வரை போதிக்கின்றன.

(அனைத்து சொற்களும் அவனைக் குறிக்கும் என்றும் அறிந்த பின்பு –புகழும் நல் ஒருவன் என்கோ –இத்யாதிகண்ணனைக் கூவுமாறு அறியேன்–குன்றங்கள் அனைத்தும் என்கோ -ஆழ்வார் –)

ஆக, இந்த அதிகரணத்தில், அனைத்துப் பொருள்களும் ப்ரஹ்மத்திடமிருந்து தான் உண்டாகின்றன என்று நிரூபித்தார்.

2-3-3-ஆத்மாதி₄கரணம்–ஜீவாத்மாவும் உண்டாக்கப்படுகிறாரா?—-ஸங்கதி – இந்த பாதத்தின் முதல் அதிகரணத்தில் ப்ரஹ்மத்தைத் தவிர்ந்த மஹான், அஹங்காரம், ஆகாசம், வாயு முதலான அனைத்துப் பொருள்களுமே உண்டாக்கப் படுகின்றன என்று நிரூபிக்கப் பட்டது. அதற்கு மேல் இரண்டாவது அதிகரணத்தில் அவை அனைத்துமே பரமாத்மாவிடம் இருந்து தான் உண்டாகின்றன என்றும் சொல்லப்பட்டது. இப்படி அசேதன பொருள்களின் உண்டாக்கத்தைச் சொன்ன பிறகு சேதனனான ஜீவாத்மாவைப் பற்றி விசாரம் செய்யப்படுகிறது. ஜீவாத்மாவும் ஆகாசம் முதலானவற்றைப் போல் உண்டாக்கப் படுகிறாரா? இல்லையா? என்பது இந்த அதிகரணத்தில் செய்யப்படும் ஆராய்ச்சி.

(இதில் ஸித்தாந்தம் ஸூத்ரம் ஒன்றே உள்ளது)

பூர்வ பக்ஷியின் வாதம்–ப்ரஹ்மத்தைத் தவிர அனைத்தும் உண்டாக்கப்படுகிறது என்று முன் அதிகரணங்களில் நிரூபித்ததால், ஜீவாத்மாவும் உண்டாக்கப் படுகிறார் என்று பூர்வபக்ஷி வாதிடுகிறார். இதற்கு இரண்டு யுக்திகளைக் கூறுகிறார் –
1-ஏக விஜ்ஞாநேந ஸர்வ விஜ்ஞாந பிரதிஜ்ஞா உபபத்தி –
அதாவது சாந்தோக்ய உபநிஷத்தின் ஆறாவது ப்ரபாடகத்தில் ஸத் வித்யா என்கிற பிரகரணத்தில் உத்தாலகர் என்கிற தந்தை ஸ்வேதகேது என்கிற மகனைப் பார்த்து, “எந்த ஒன்றை அறிந்தால் உலகத்தில் அனைத்தையும் அறிந்ததாகுமோ , அதை உன் ஆசார்யர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டாயா?” என்று கேட்கிறார். அங்கு இருக்கும் பிரதிஜ்ஜை – “ப்ரஹ்மத்தை அறிந்தால் உலகத்தில் அனைத்தையும் அறிந்ததாகும்” என்பது. இது எப்படிப் பொருந்துமென்றால் – எப்படி ஒரு மண் கட்டியை அறிந்தால், அதிலிருந்து உண்டாகக் கூடிய குடம், தட்டு முதலானவற்றை அறிந்ததாகுமோ , அதே போல் உலகமே ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகிறபடியால் ப்ரஹ்மத்தை அறிந்தால் உலகத்தில் அனைத்தையும் அறிந்ததாகும் என்று உத்தாலகர் கூறுகிறார். இந்த ப்ரதிஜ்ஜை பொருந்த வேண்டும் என்றால் ஜீவாத்மாக்களும் ப்ரஹ்மத்திடம் இருந்து உண்டாகி யிருக்க வேண்டும். இல்லா விட்டால் ப்ரஹ்மத்தை அறிந்தால் ஆகாசம் முதலான அசேதனப் பொருள்களை மட்டுமே அறிந்ததாகுமே தவிர ஜீவாத்மாக்களை அறிந்ததாக ஆகாது. எனவே ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும் என்று சொல்வது பொய்யாகி விடும். அதனால் ஜீவாத்மாக்களும் ப்ரஹ்மத்திடம் இருந்து உண்டாகிறார்கள் என்று ஒப்புக் கொள்ள வேண்டும்.

(2) ப்ராக் ஸ்ருஷ்டே : ஏகத்வ அவதாரணம் – “ஸ்ருஷ்டிக்கு முன்னால் இந்த உலகமனைத்தும் ஒரே பொருளாகத் தான் இருந்தது” என்று வேதம் கூறுகிறது. இந்த வாக்கியம் சரியாக இருக்க வேண்டும் என்றால் ப்ரளய காலத்தில் ஆகாசம், வாயு முதலானவை எப்படி இல்லையோ , அதே போல் ஜீவாத்மாக்களும் தனித்து இல்லை . பரமாத்மா ஒருவரே இருந்தார் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். ஆகையால் ப்ரளய காலத்தில் ஜீவாத்மாக்கள் இருக்க வில்லை . அதற்குப் பிறகு தான் ப்ரஹ்மத்திடமிருந்து உண்டானார்கள் என்று தான் ஒப்புக் கொள்ள வேண்டும்.
ஆகவே , ஜீவாத்மாவும் உண்டாக்கத் தான் படுகிறார். இதற்கு வேதத்திலும் சில வாக்கியங்கள் வலுவூட்டுகின்றன –
தோயேந ्ஜீவான் வ்யஸ்ஸர்ஜ பூ₄ம்யாம் –
தண்ணீரோடு ஜீவன்களைப் படைத்தார்
ப்ரஜாபதி: ப்ரஜா: அஸ்ருஜத – ப்ரஜாபதி உடலோடு கூடிய ஆத்மாக்களைப் படைத்தார்
யதோ வா இமாநி பூ₄தாநி ஜாயந்தே – இந்த ஜீவ ராசிகள் எதிலிருந்து உண்டாயினவோ
இந்த வாக்கியங்களில் எல்லாம் ஜீவனோடு கூடின உலகப் பொருட்கள் உண்டாக்கப் படுகின்றன என்று சொல்லப் படுகிறபடியால் ஜீவாத்மாவும் உண்டாக்கத் தான் படுகிறார்.

கேள்வி – ப்ரஹ்மம் நித்தியமானது என்று வேதம் சொல்கிறது. “தத் த்வம் அஸி”. “அஹம் ப்ரஹ்மாஸ்மி” முதலான வாக்கியங்கள் ஜீவாத்மாவும் ப்ரஹ்மமும் ஒன்று தான் என்று சொல்லுகின்றன. ஆகையால் ஜீவாத்மாவும் நித்தியமானவராக தானே இருக்க வேண்டும் என்று ஒரு சிலர் கேள்வி யெழுப்புகிறார்கள்.
பூர்வ பக்ஷியின் பதில் – அப்படிப் பார்த்தால் “ஸர்வம் க₂லு இத₃ம் ப்₃ரஹ்ம”, ”ஐததா₃த்ம்யம் இத₃ம் ஸர்வம்”-முதலான வாக்கியங்களில் அசேதனப் பொருட்கள் கூட ப்ரஹ்மமே தான். ஜகத்தே ப்ரஹ்மம் தான் என்று சொல்லப் படுகிறபடியால், ப்ரஹ்மம் நித்தியமான படியால் அசேதனப் பொருள்களும் நித்யமானவை என்று ஏற்க வேண்டி வரும். அது எப்படிப் பொருந்தாதோ , அதுவே போல் உங்கள் வாதமும் பொருந்தாது.
எனவே ஆகாசம் முதலானவற்றைப் போல் ஜீவாத்மாக்களுக்கும் உத்பத்தி உண்டு என்று பூர்வ பக்ஷி கூறுகிறார்.

ஸித்தாந்தியின் பதில்
ஸித்தாந்தம் – 1- ந ஆத்மா ச்ருதே : நித்யத்வாத் ச தாப்₄ய:
ஆத்மா ந –
ஜீவாத்மாக்கள் (உண்டாக்கப் படுவது) இல்லை
ச்ருதே : – வேதத்திலிருந்து (அவர்களுக்கு உண்டாக்கம் இல்லை என்று தெரிகிறபடியால்)
தாப்₄ய: – அந்த வேத வாக்கியங்களிலிருந்தே
நித்யத்வாத் ச – ஆத்மாக்கள் நித்யமானவை என்று அறிகிற படியாலும்
வேதத்தில் தெளிவாகவே ஆத்மாக்களுக்கு உண்டாக்கம் இல்லை என்று சில வாக்கியங்களில் சொல்லபடுகிறது.
ந ஜாயதே ம்ரியதே வா விபஶ்சித்-அனைத்தையும் அறியும் சக்தி கொண்ட ஜீவாத்மா உண்டாவதும் இல்லை, அழிவதும் இல்லை
ஜ்ஞாஜ்ஞௌ த்₃வௌ அஜௌ ஈசநீசௌ-முழுமையான ஜ்ஞாநம் கொண்ட பரமாத்மா, குறைந்த ஜ்ஞாநம் கொண்ட ஜீவாத்மா ஆகிய இருவருமே அஜர்கள்-அதாவது உண்டாக்கம் இல்லாதவர்கள்
அதே போல் சில வேத வாக்கியங்கள் ஜீவாத்மாக்கள் நித்யமானவர்கள், அதாவது அழிவற்றவர்கள் -எப்போதும் இருக்கக் கூடியவர்கள் என்று கூறுகின்றன –நித்யோ ् நித்யாைநாம் யோ வித₃தா₄தி காமாந்--நித்யமானவரான ஒரு பரமாத்மா நித்யமான எண்ணிறந்த ஜீவாத்மாக்களுக்கு ஆசைப்பட்டதைக் கொடுக்கிறார்-
அஜ: நித்ய: சாச்வத: அயம் புராண:-ஜீவாத்மா பிறப்பில்லாதவர், நித்யமானவர், மாறுபாடுகள் அற்றவர், மிகப் பழமையானவராய் இருந்தாலும் புதுப் பொருள் போல் ஆச்சர்யமூட்டுபவர்
ஆகவே , ஜீவாத்மாக்கள் உண்டாக்கப் படுவதில்லை என்று வேதத்திலிருந்து தெரிகிறது என்கிறார் வேத வ்யாஸர்.

ஸித்தாந்தியின் பதில் -இதற்கு மேல் பூர்வ பக்ஷி சொன்ன யுக்திகளுக்கு பதில் கூற வேண்டும்.
கேள்வி
– ஜீவாத்மாக்கள் ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகவில்லை என்றால் “ப்ரஹ்மம் ஒன்றை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகும்” என்று உத்தாலகர் கூறியது எப்படிப் பொருந்தும்?
பதில் – ஜீவாத்மாக்கள் உண்டாக்கப் படாவிட்டாலும் ப்ரஹ்மத்தினுடைய கார்யங்கள் தான் என்று ஏற்கப்படுகிறது. மண்ணை அறிந்தால் அதன் கார்யங்களை அறிந்ததாவது போல் ப்ரஹ்மத்தை அறிந்தால் ஜீவர்களை அறிந்ததாகும்.
கேள்வி – ஜீவாத்மாக்கள் கார்யம் தான், ஆனால் உண்டாவதில்லை என்று சொல்வது எப்படிப் பொருந்தும்?
பதில் – ’கார்யம்’ என்றால் ’வேறொரு நிலையை -மாறுபாட்டை அடைந்திருக்கும் பொருள்’அவஸ்தாந்தர ஆபபத்தி-. அந்த வேறொரு நிலை மாறுபாடு (Transformation) என்பது இரண்டு வகைப்படும்
1-ஸ்வரூப விகாரம் உருவ மாறுபாடு – இது தான் ஒரு பொருளின் உண்டாக்கம் என்று சொல்லப்படுகிறது.
2-ஸ்வபா₄ப விகாரம் – தன்மையில் மாறுபாடு – இது ஏற்படும் போது உண்டாக்கம் என்று சொல்வதில்லை .-அசேதனப் பொருள்களுக்கு மட்டும் தான் ஸ்வரூப விகாரம் (உருவ மாறுபாடு) என்பது உண்டு. ஒரே தங்கம் காசாகவும், மோதிரமாகவும், தோடாகவும், சங்கிலியாகவும் வெவ்வேறு வடிவங்களை அடைகிறது. அப்போது மோதிரம் உண்டாகிறது, சங்கிலி உண்டாகிறது என்று சொல்கிறோம்.
சேதனர்களான ஜீவாத்மாக்களுக்கு ஸ்ருஷ்டியின் போது உருவ மாறுபாடுகள் கிடையாது, ஆனால் தன்மைகளில் மாறுபாடுகள் உண்டு -– ஒரு ஸமயம் அறிவு குறைந்திருக்கும், ஒரு ஸமயம் மலர்ந்திருக்கும். இதற்கு ஸ்வபாவ விகாரம் என்று பெயர். இது ஏற்படும் போது அந்தப் பொருள் உண்டாகிறது என்று சொல்வது கிடையாது.
ஆக, அசேதனங்கள் சேதனர்கள் அனைத்துமே ப்ரஹ்மத்தால் மாறுபாடுகளை அடைகிறபடியால் ப்ரஹ்மத்தின் கார்யங்கள் தான், ஆனால் ஜீவாத்மா உண்டாகிறார் என்று கூற முடியாது என்று வ்யாஸர் கூறுகிறார்.-ஜீவாத்மாவைப் பற்றி பிறப்பு மரணம் முதலான சொல்லாலெல்லாம் ஓர் உடலை எடுத்துக் கொள்வதையும் அதை விடுவதையும் வைத்துச் சொல்லப்படுகின்றன. ஜீவாத்மா உண்டாவதுமில்லை அழிவதுமில்லை என்பதே உண்மை .

(சம பரதேவ ஏகி பவதி-நாம ரூப விபாகம் இல்லாமல் ஒன்றாகவே ப்ரஹ்மம் இருந்தது என்று சொல்லிற்று தவிர சேதன அசேதன பொருள்கள் இல்லை என்றதல்ல –தத்வ த்ரயங்களும் நித்யமானவையே தான்)

2-3-4-ஜ்ஞாதி₄கரணம்-ஜீவாத்மாவைப் பற்றின ஆராய்ச்சி-
முதல் பூர்வ பக்ஷம் -ஜ்ஞாதி₄கரணம் –ஸங்கதி
– இந்தப் பாதத்தின் முதல் மூன்று அதிகரணங்களால் உலகிலுள்ள அனைத்துமே ப்ரஹ்மத்தால் தான் படைக்கப் படுகிறது என்று நிரூபித்தார் வ்யாஸர். அதில் மூன்றாவது அதிகரணத்தில் ஜீவாத்மாவைப் பற்றிய பேச்சு வந்தபடியால், இனி அடுத்த நான்கு அதிகரணங்களால் ஜீவாத்மாவினுணடய ஸ்வரூபம் எப்படிப்பட்டது என்று ஆராய்கிறார்.
இந்த விவாதத்தில் மூன்று பக்ஷங்கள் இருக்கின்றன–2 பூர்வ பக்ஷங்கள், 1 வேதாந்தம் சொல்லும் ஸித்தாந்தம்.
1-பௌத்தர்கள், ஸாங்க்யர்கள் முதலானவர்களின் பக்ஷம்
– ஜீவாத்மா ஜ்ஞாநம் மட்டுமே
இந்த மதங்களில் ஆத்மாவை ’சிந் மாத்ரம்’ -’ஜ்ஞாந மயம்’ என்று கூறுவார்கள். இதற்கு “ஜ்ஞாநம் மட்டுமே ஆத்மா ”என்று பொருள். அதாவது, ஒரு குடம் மண்ணால் ஆனது, ஒரு மோதிரம் தங்கத்தால் ஆனது, அது போல் ஜீவாத்மா ஜ்ஞாநத்தாலேயே ஆனவர் என்று பொருள். “மாத்ரம்” சொல்லால் “ஜ்ஞாநம் மட்டுமே ” என்று சொல்வதால் ஆத்மா ஜ்ஞாநமுடையவர் (ஜ்ஞாதா) அல்ல, அதாவது அறிவாளி அல்ல, அறிவே தான் ஜீவாத்மா.

இதற்கு இவர்கள் சில வேத வாக்யங்களைச் சான்றாகக் காட்டுகிறார்கள் –
1–சுக்ல யஜுர் வேதத்தில் இரண்டு சாகைகள் (கிளைகள்) உள்ளன. ஒன்று மாத்யந்தின சாகை , மற்றொன்று காண்வ சாகை -இரண்டிலுமே அந்தர்யாமி ப்ராஹ்மணம் என்ற உபநிஷத் பகுதி உள்ளது. இப் பகுதியில், நிலம் நீர் தீ காற்று ஆகாயம் ப்ரக்ருதி மஹான் அஹங்காரம் புலன்கள் ஆத்மாக்கள் முதலான உலகிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் அந்தர்யாமி பரமாத்மாவே என்று கூறப்படுகிறது. அச் சமயத்தில், மாத்யந்தின சாகையில் (ய: ஆத்மநி திஷ்ட₂ன்) அதாவது ’யாரொருவர் ஆத்மாவில் இருக்கிறாரோ ’ என்று கூறப்படுகிறது. அதே இடத்தில் காண்வ சாகையில் (யோ விஜ்ஞாநே திஷ்ட₂ன்) அதாவது ’யாரொருவர் ஜ்ஞாநத்தில் இருக்கிறாரோ ’ என்று கூறப்படுகிறது. ஆகவே ,ஆத்மா என்பவரைத் தான் ஜ்ஞாநம் என்று வேதம் கூறுவதை நாம் உணரலாம். எனவே ஜ்ஞாநமே ஆத்மா .

2-தைத்திரூய உபநிஷத்தில் ஓரிடத்தில் (விஜ்ஞாநம் யஜ்ஞம் தநுதே ) அதாவது “அறிவு யாகம் செய்கிறது” என்றுள்ளது. ஆத்மா தானே யாகம் செய்ய முடியும். அதனால் ஆத்மா தான் இங்கு அறிவு எனப்படுகிறார்

இரண்டாவது பூர்வபக்ஷம்–வைஸேஷிகம்- ந்யாய மதம் முதலானவற்றின் பக்ஷம் – ஜடமான ஆத்மாவுக்கு அறிவு செயற்கையான பண்பு-இவர்கள் முன் சொன்ன பக்ஷத்திலிருந்து முற்றிலும் மாறுபடுகிறார்கள். ஆத்மா ஜ்ஞாநமே வடிவானவர் என்று முன் பக்ஷத்தில் சொல்லப்பட்டதை இவர்கள் ஏற்கவில்லை-ஆத்மா குடம் மேஜை புத்தகம் போன்ற ஒரு பொருள் தான்,அதாவது ஜடமான பொருள் தான், ஜ்ஞாந வடிவானவர் அல்ல என்கிறார்கள்.

இந்த ஸந்தர்பத்தில் ஜ்ஞாநம் என்றால் என்ன என்று பார்ப்போம். ஜ்ஞாநம் என்ற பொருளுக்கு இலக்கணமே-’ஸ்வயம் ப்ரகாஸத்வம்’ அதாவது ’தானாகத் தோற்றுவது – அறியப்படுவது’ என்ற பண்பு தான். உலகத்தில் குடம் மேஜை முதலான பொருள்கள் அறியப் படுவதற்கு அவை மட்டும் இருந்தால் போதாது, வெளிச்சம் வேண்டும், கண் வேண்டும், நமக்கு அறிவு வேண்டும்; இப்படி மற்ற பொருள்களின் உதவியால் அறியப்படும் பொருள்களை ஜடம் என்பார்கள். இவை அஸ்வயம் ப்ரகாஸம் -அதாவது தானாகத் தோற்றாத பொருள்கள்-ஆனால் ஜ்ஞாநம் என்பது அப்படி யல்ல, தான் இருந்தாலே தானாகத் தோற்றிவிடும், ஜ்ஞாநத்தை அறிவதற்கு வேறொரு ஜ்ஞாநம் கூடத் தேவை யில்லை – தானே அறியப் படுகிறது. எனவே அதை அஜடம் என்றும்ஸ்வயம் ப்ரகாஸம் என்று கூறுவார்கள். ந்யாய மதத்தவர்கள் சொல்வது ஆத்மா குடம் முதலானவற்றைப் போல் ஜடமான பொருள் தான் என்று.

அதே போல், முதல் பக்ஷத்தில் ஏற்கப்படாத ஒன்றை இவர்கள் ஏற்கிறார்கள் – ஆத்மா அறிவாளி (ஜ்ஞாதா) தான், அவருக்கு அறிவு (ஜ்ஞாநம்) என்ற பண்பு உள்ளது, ஆனால் அது இயற்கை யானதோ நிரந்தரமானதோ அல்ல, அவ்வப்போது செயற்கையாக வரக் கூடியது என்கிறார்கள். மோக்ஷம் அடையும் பொழுது ஜ்ஞாநம் முழுமையாக இல்லாமல் போய்விடும், எனவே ஆத்மா முழுமையாக ஒரு கல்லைப் போல் ஆவதே மோக்ஷம் என்கிறார்கள்.

இதற்கு இவர்கள் கூறும் யுக்திகணளப் பார்ப்போம் –முதலில், ஜீவாத்மா உலகெங்கும் வ்யாபித்து அதாவது நீக்கமற நிறைந்திருக்கிறார் என்று ஏற்க வேண்டும். ஏனென்றால்,ஒரு ஜீவாத்மா பயன்படுத்தப் போகும் பொருள்கள் உலகில் வெவ்வேறு இடங்களில் உண்டாகின்றன. அவற்றின்
உண்டாக்கத்துக்கு அந்த ஜீவாத்மாவின் பாபமும் புண்யமும் காரணம் என்று கண்டிப்பாக ஏற்க வேண்டும். (ஸர்வத்ர கார்ய உத்பத்யதே -பொருள்கள் உண்டாவதற்கு ஆத்மாவின் கர்மங்கள் காரணம் –
)ஆனால் பாப புண்யங்களை உடைய ஆத்மா ஓரிடத்தில் இருந்தால், வேறிடத்தில் உண்டாகும் பொருளுக்கு எப்படி காரணமாக முடியும்? எனவே ஆத்மா எங்கும் வ்யாபித்து இருக்கிறார் என்று ஏற்க வேண்டும்.

இப்படி வ்யாபித்திருக்கும் ஆத்மாவை ’ஜ்ஞாநமே வடிவானவர்’ என்று சொன்னாலோ ’இயற்கை யாகவே ஜ்ஞாநம் என்ற நிரந்தரமான பண்பை உடையவர்’ என்று சொன்னாலே கீழ்க் கண்ட குற்றங்கள் ஏற்படும் –
1-(ஸர்வத்ர உபலப்த பிரஸங்க)உலகெங்கும் இருக்கும் பொருள்களை எல்லாம் நாம் எப்போதும் அறிய முடிய வேண்டும். அப்படி ஏற்பட வில்லை
2-பொருள்களை அறிவதற்கு புலன்களின் தேவையே இல்லாமல் போய் விடும்.
3-ஆழ்ந்த உறக்கத்திலும் கூட ஆத்மாவுக்கு அறிவு ஏற்பட வேண்டும், ஆனால் அப்படி நாம் கண்டதில்லை

தங்கள் பக்ஷத்துக்குச் சான்றாக இவர்கள் காட்டும் வேத வாக்யங்கள் –
1-நாஹ க₂ல்வயம் ஸம்ப்ரதி ஆத்மானம் ஜானாதி-அயம் அஹம் அஸ்மி இதி, நோ ஏவ இமாநி பூதாநி–என்ற வாக்கியத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் பொழுது இந்த ஜீவாத்மா தன்னையும் அறிவதில்லை , மற்றப் பொருள்களையும் அறிவதில்லை என்று கூறப் படுகிற படியால் உறக்கத்தில் ஆத்மாவுக்கு ஜ்ஞாநம் எதுவும் இல்லை என்று தெரிகிறது.

(ந ப்ரேத்ய ஸம்ஜ்ஞா அஸ்தி) என்ற வாக்கியத்தில் ’முக்திக்குப் பின் ஜ்ஞாநம் இல்லை ’ என்று சொல்லப்படுவதால், முக்தியில் ஆத்மா கல்லைப் போல் தான் இருக்கிறார். எனவே ஜ்ஞாநம் என்பது ஆத்மாவுக்கு இயற்கையான நிரந்தரமான பண்பல்ல, செயற்கையாக அவ்வப்போது வரக்கூடியது மட்டுமே என்கிறார்கள்.

வேதாந்தம் கூறும் ஸித்தாந்தம்
இந்த இரண்டு பூர்வ பக்ஷங்களையும் தகர்த்து, வேதாந்தம் கூறும் ஆத்மாவின் உண்மையான தன்மையை வேத வ்யாஸர் இந்த அதிகரணத்தில் காட்டுகிறார். முதலில் ஸித்தாந்தம் என்ன என்று பார்ப்போம், பிறகு ஸூத்ரங்களின் பொருளைப் பார்க்கலாம்.(இதில் 14 ஸூத்ரங்கள் உள்ளன )

உபநிஷத்துக்கள் கூறும் பக்ஷம் – ஜ்ஞாநமே வடிவான ஆத்மாவுக்கு ஜ்ஞாநம் என்ற இயற்கையான பண்பும் உள்ளது-உபநிஷத்துக்களை ஆராய்ந்தால், முன் சொன்ன இரண்டு பக்ஷங்களிலிருந்து வேறுபட்ட ஒரு பக்ஷம் சொல்லப்படுகிறது.-முதல் பக்ஷத்தில் சொன்னது போல் ஆத்மா ஜ்ஞானமே வடிவானவர் என்பதை நாமும் ஏற்கிறோம். எனவே ந்யாய மதத்தவர்கள் சொல்வது போல் ஆத்மா குடம் போல் ஜடமானவர் அல்ல, ஸ்வயம் ப்ரகாஸமான ஒரு பொருள் தான் என்றுnஆகிறது. ஆனால் முதல் பக்ஷத்தில் ஆத்மா அறிவாளி அல்ல, ஆத்மாவுக்கு அறிவு என்ற பண்பு கிடையாது என்றார்கள்,
அதை நாம் ஏற்க வில்லை . ஆத்மா ஜ்ஞானமே வடிவானவர், அதோடு கூட அவருக்கு ஜ்ஞாநம் என்ற பண்பும் உள்ளது என்று கூறுகிறோம். ஜ்ஞாந வடிவான ஆத்மாவுக்கு த₄ர்மி ஜ்ஞாநம் அதாவது பண்பாளனான ஜ்ஞாநம் என்று பெயர். ஆத்மாவிடம் இருக்கும் ஜ்ஞாநத்துக்கு த₄ர்ம ஜ்ஞாநம் – த₄ர்மபூ₄த ஜ்ஞாநம் – பண்பான ஜ்ஞாநம் என்று பெயர்.

ஒரு விளக்கு எரியும் பொழுது அதில் ஜ்வாலை என்ற ஒரு பொருள் உள்ளது. அது நெருப்பே வடிவானது. ஆனால் அது ஓரிடத்தில் மட்டும் தான் இருக்கும். அதற்கு மேல், அந்த ஜ்வாலையில் பண்பாக, அந்த ஜ்வாலையையே அண்டி இருக்கும் ’ஒளி’ – ’ப்ரபா₄’ என்ற ஒரு பொருள் உள்ளது. அது பல இடங்களுக்குப் பரவுகிறது. அதுவும் நெருப்பால் ஆனது தான். எப்படி தேஜஸ்ஸால் (நெருப்பால் ) ஆக்கப்பட்ட ஜ்வாலைக்கு நெருப்பால் ஆக்கப்பட்ட ஒளி என்பது பண்பாக இருக்கிறதோ , அதே போல் ஜ்ஞாநமே வடிவான ஜீவாத்மாவுக்கும் பண்பாக வேறொரு ஜ்ஞாநம் இருக்கிறது.

ஜீவாத்மா ’நான்’, ’நான்’ என்று தோற்றுவதெல்லாம் த₄ர்மி ஜ்ஞாநத்தின் தோற்றம். தன்னைத் தவிர்ந்த மற்ற பொருள்களை யெல்லாம் அறிவது தன்னுடைய த₄ர்ம ஜ்ஞாநத்தைக் கொண்டு தான். இந்த ஜ்ஞாநம் என்பது ஆத்மாவுக்கு இயற்கையானது, என்று ஆத்மாவோடு நிரந்தரமாக இருப்பது, உறக்கத்திலும் சரி மோக்ஷத்திலும் சரி இது ஒரு நாளும் ஆத்மாவை விட்டுச் செல்லாது, மோக்ஷத்தில் ஜ்ஞாநம் முழுமையாக மலர்கிறது என்பதே வேதாந்தத்தின் ஸித்தாந்தம்

2-3-4-ஜ்ஞாதி₄கரணம்-ஜீவாத்மா அறிவுடையவரே -ஜீவாத்மா இயற்க்கையாக அறிவுடையவரே – ஸித்தாந்தம் – முன் சொல்லப்பட்ட இரண்டு பூர்வ பக்ஷங்களையும் கண்டித்து வேதாந்தம் கூறும் ஸித்தாந்தத்தை வேத வ்யாஸர் இந்த அதிகரணத்தில் 14 ஸூத்ரங்களால் காட்டுகிறார்.

1– ஜ்ஞ: அத எவ – “(ஜீவாத்மா) அறிவுடையவர் தான், அதனாலேயே ”
ஜ்ஞ:என்றால் அறிபவர் -அறிவாளி-ஜ்ஞாதா என்று பொருள். (ஸர்வஞ்ஞன் -அனைத்துக்கும் அறிபவர் போல் )ஜீவாத்மா அறிவாளி தான் என்கிறார் வ்யாஸர். இத்தால், ஜீவாத்மா அறிவு மட்டுமே , அறிவாளி அல்ல என்ற ஸாங்க்யர்களின் மதத்தை மறுக்கிறார்.
அத ஏவ’ என்றால் அதனாலாயே -அந்தக் காரணத்தாலேயே என்று பொருள். முன் அதிகரணத்தில் ஆத்மா நித்யமானவர் என்று நிரூபிக்க ஸ்ருதி என்ற வேதத்தையே காரணமாகக் கூறி யிருந்தார் வ்யாஸர் – “நாத்மா ஸ்ருதே :” என்று. ஆகவே , ஸ்ருதி (வேதம்) என்ற அதே காரணத்தாலேயே ஜீவாத்மா அறிவுடையவர் என்றும் தெரிகிறது என்று ஸூத்ரத்தின் பொருள்.

வேதத்தில் பல இடங்களில் ஆத்மா அறிவுடையவர் என்று கூறப்படுகிறது –
அத₂ யோ வேத₃ ஜிக்₄ராணீதி ஸ ஆத்மா – “எவனொருவன் ’நான் முகர்கிறேன்’ என்று அறிகிறானோ அவன் தான் ஆத்மா
ஸத்ய ஸங்கல்ப: – “முக்தனான ஜீவாத்மா நினைப்பதெல்லாம் நடக்கிறது”
ய: அயம் விஜ்ஞாந மய: ப்ராணேஷு ஹ்ருதி₃ அந்தர் ஜ்யோதி: புருஷ: -“ஹ்ருதயத்தில் மூச்சுக் காற்றோடு இருக்கும் ஜீவாத்மா தான் ஜ்ஞாநமே வடிவானவர், ஜ்ஞாநத்தை உடையவரும் கூட”

ஞானாத்யேவ அயம் புருஷ போன்ற ஸ்ருதி வாக்கியங்களும் உண்டு

ஆத்மா மிக நுண்ணியவர் (அணு) ஆத்மா விபு₄வாக எங்கும் வ்யாபித்திருப்பதால், அவருக்கு ஜ்ஞாநம் இயற்கையான பண்பாக இருந்தால் அவர் எப்போதும் அனைத்தையும் அறிய வேண்டுமே ? அப்படி உலகில் காண்பதில்லை -.எனவே ஆத்மாவுக்கு இயற்கையாக ஜ்ஞாநம் கிடையாது – என்று பூர்வ பஷி கேள்வி எழுப்புகிறார். இதற்கு பதில் சொல்கிறார் வ்யாஸர் –
2–உத் க்ராந்தி ् க₃தி ஆக₃தீநாம் –
“புறப்படுதல், செல்லுதல் மற்றும் வருதல் (சொல்லப் படுவதால்)”
ஆத்மா எப்போதும் அனைத்தையும் அறியாததற்குக் காரணம் அவருக்கு இயற்கையாக ஜ்ஞாநம் இல்லாமை அல்ல.-அவர் விபு₄வாக இல்லாத படியால் தால். வேதத்தில் உத்க்ராந்தி (ஆத்மா உடலில் இருந்து புறப்படுதல்) க₃தி (ஆத்மா ஓரிடத்திலிருந்து மற்றொரிடத்திற்குச் செல்லுதல்) மற்றும் ஆக₃தி (திரும்பவும் இவ் வுலகுக்கு வருதல்) சொல்லப்படுவதால் ஆத்மா சிறிய அளவுடையவர் தான் என்று நாம் அறியலாம். எங்கும் நிறைந்திருக்கும் பொருள் எப்படி ஓரிடத்திலிருந்து புறப்படவோ வேறிடம் செல்லவோ முடியும்?
உத்க்ராந்தி ஏஷ ஆத்மா நிஷ்க்ராமதி சக்ஷுஷோ வா மூர்த்₄நோ வா. –“இந்த ஆத்மா கண் மூலமோ தலை மூலமோ வேறொன்றாலோ உடலிலிருந்து புறப்படுகிறார்”
க₃தியே அஸ்மாத் லோகாத் ப்ரயந்தி சந்த்ர மஸமேவ ரத க₃ச்ச₂ந்தி -“யாரெல்லாம் இவ் வுலகத்திலிருந்து புறப்படுகிறார்களோ அவர்கள் சந்த்ரனையே அடைகிறார்கள்”
ஆக₃தி – தஸ்மாத் லோகாத் புந: ஏதி அஸ்மை லோகாய கர்மணே – “அவ் வுலகத்திலிருந்து திரும்பவும் இவ் வுலகத்துக்கு வருகிறார்கள், வினைப் பயன்கணை அநுபவிக்க”

3-ஸ்வாத்மநா ச உத்தரயோ : – “கடைசி இரண்டையும் தானாகவே தான் (செய்கிறார்)”
ஆஷேபம் – ஆத்மா உடலை விடுவது என்பது செல்வதல்ல, இருக்கும் இடத்திலேயே தொடர்பு அறுவது தான்
பதில் – அவ்வாறு இருந்தாலும் க₃தி (செல்லுதல்) ஆக₃தி (வருதல்) என்ற அடுத்த இரண்டையும் ஆத்மா தானாகவே தான் செய்ய வேண்டும், எனவே ஆத்மா சிறியவர் தான். நீக்கமற நிறைந்தவராக இருக்க முடியாது.

ஆத்மா மிக நுண்ணியவர் (அணு)
4- ந् அணு: அதச்ச்₂ருதே : இதி சேத் ந இதராதி₄காராத்
ந அணு:
– ஜீவாத்மா அணுவானவர் அல்ல
அதச்ச்₂ருதே : – அதற்கு நேர் எதிரான மஹத்த்வம் (பெரிய அளவு) அவருக்குச் சொல்லப்படுகிறபடியால்
இதி சேத் ந – என்று நீங்கள் கூறினால் அது தவறானது
இதராதி₄காராத் – வேறொருத்தரைப் பற்றின பேச்சுக்கு நடுவில் இருப்பதால்.

பூர்வ பக்ஷியின் கேள்வி – உபநிஷத்தில் “
ய: அயம் விஜ்ஞாந மய: ப்ராணேஷு ஹ்ருதி₃ அந்தர்ஜ்யோதி: புருஷ:
” என்று ஹ்ருதயத்தில் இருக்கும் ஜீவாத்மாவைப் பற்றிப் பேசத் துவங்கி விட்டு, (ஸ வா ஏஷ மஹாந் அஜ ஆத்மா) அதாவது “இந்த ஆத்மா பிறப்பில்லாதவரும் பெரியவரும் ஆவார்” என்று கூறப்படுகிறது. மஹாந் என்ற சொல்லுக்கு பெரிய அளவுடையவர் என்று பொருள். எனவே ஜீவாத்மா அணுவாக இருக்க முடியாது.
பதில் – ஜீவாத்மாவைப் பற்றிப் பேசி வரும் போது இந்த வாக்கியம் இடம் பெற வில்லை , இடையிலேயே பரமாத்மாவைப் பற்றி உபநிஷத் பேசத் துவங்கி விட்டு – “ (யஸ்ய அநுவித்த: ப்ரதிபு₃த்₃த₄: ஆத்மா) அதாவது “இந்த ஜீவாத்மாவால் உபாஸிக்கப்படுபவர் சிறந்த ஜ்ஞாநமுடைய பரமாத்மா” என்று. அதற்குப் பின்னால் தான் நீங்கள் காட்டிய வாக்கியம் உள்ளது. எனவே , அதில் மஹாந் என்று சொல்லப்படுபவர் பரமாத்மா தான், ஜீவாத்மா அல்ல.

5–ஸ்வ சப்₃த₃ உந்மாநாப்₄யாம் ச – “தன் சொல்லாலும், எடுத்து அளப்பதாலும் (ஆத்மா அணு தான்)”
ஸ்வ சப்₃த₃
: – நேரடியாகவே நுண்ணிய அளவைக் கூறும் ’
அணு’ என்ற சொல் ஜீவாத்மாணவப் பற்றிப் பயன் படுத்தப் படுகிறது உபநிஷத்தில் – (ஏஷ: அணு: ஆத்மா சேதஸா வேதி₃தவ்ய: )-அதாவது “இந்த அணுவான (நுண்ணிய) ஆத்மா மனதால் அறியப் பட வேண்டும்” என்று.
உந்மாநம் – ஒரு பொருளை அளவு கோலாக எடுத்து, அதைக் கொண்டு வேறொன்றை அளப்பது. வேதத்திலும்-(வாலாக்₃ர சத பா₄க₃ஸ்ய ததா₄ கல்பிதஸ்ய ச பா₄க₃: ஜீவஸ்ய விஞ்ஞஸ்ய:) அதாவது’ஒரு நெல் மணியின் நுனியில் நூற்றில் ஒரு பங்கில் நூற்றில் ஒரு பங்கு அளவு ஆத்மா இருப்பார்” எனப்படுகிறது –

ஓரிடத்திலிருந்து அனைத்தையும் அறிதல்
பூர்வ பக்ஷியின் கேள்வி –
ஆத்மா நுண்ணியவராக இருந்தால் உடல் முழுவதும் எப்படி உணர்ச்சி ஏற்படுகிறது? இதற்கு வேதவ்யாஸர் முதலில் வேறொருவரின் கண்ணோட்டத்தில் பதில் கூறுகிறார் அடுத்த 2 ஸூத்ரங்களால் –

6–அவிரோத சந்த₃நவத் – “முரண்பாடு இல்லை , சந்தநத்தைப் போல்”
சந்தனம் எப்படி உடலின் ஒரு பகுதியில் பூசப் பட்டாலும் உடல் முழுவதுக்கும் குளிர்ச்சி (ஆஹ்லாதம்) ஊட்டுகிறதோ , அதே போல் ஜீவாத்மாவும் உடலில் ஓரிடத்தில் மட்டும் இருந்தாலும் உடலெங்கும் ஏற்படும் வேதனையை அறிவதில் முரணில்லை –

7–அவஸ்தி₂தி வைஸேஷ்யாத் இதி சேத் ந அப்₄யுபக₃மாத், ஹ்ருதி₃ ஹி
மேற் சொன்ன பதிலில் பூர்வ பஷி கேட்கும் கேள்வியும் அதற்கு வ்யாஸரின் பதிலும் இந்த ஸூத்ரத்தில் உள்ளன.
அவஸ்தி₂தி வைஸேஷ்யாத் – “குறிப்பிட்ட (சிறப்பான) இடத்தில் இருப்பதால்” என்று பொருள். சந்தனம் உடலில் எங்கு பூசப் பட்டாலும் உடல் முழுவதுக்கும் குளிர்ச்சி ஏற்படுத்தாது. அதற்கென்று சில மர்மமான இடங்கள் உள்ளன –-நெஞ்சு, மூக்கு, கண், காது, என்பது போல். அங்கு பூசப் பட்டால் மட்டுமே உடலுக்குக் குளிர்ச்சி தரும். அதுபோல் ஆத்மாவுக்கு சிறப்பான ஸ்தா₂னம் (இருப்பிடம்) இல்லாத படியால் அவருக்கு உடல் முழுவதிலும் உணர்ச்சி வராது.
இதி சேத் ந – இவ்வாறு நீங்கள் கூறினால் அது தவறானது
அப்₄யுபக₃மாத் – ஆத்மாவுக்கும் உடலில் அதுபோல் குறிப்பிட்ட சிறப்பான இருப்பிடத்தை ஏற்கிறபடியால்
ஹ்ருதி₃ ஹி – ஹ்ருதயத்திலன்றோ (ஜீவாத்மா உணர்கிறார்)
(ஹ்ருதி₃ ஜி அயம் ஆத்மா தத்ர ஏக சதம் நாடீ₃நாம்) அதாவது உடலிலிருக்கும் 101 நாடிகளும் வந்து சேரக் கூடிய ஹ்ருதயத்திலன்றோ ஜீவாத்மா இருக்கிறார்” என்று வேதம் கூறுகிறது. எனவே நாடிகள் அனைத்தும் வந்து சேரக் கூடிய ஹ்ருதயம் என்கிற சிறப்பான இடத்தில் ஜீவாத்மா உள்ள படியால் அவரும் உடலெங்கும் ஏற்படும் இன்ப துன்பங்களை உணர்வதில் எந்த முரண்பாடும் இல்லை-

ஓரிடத்திலிருந்து அனைத்தையும் அறிதல்
-இவ்வாறு பூர்வபஷி எழுப்பிய கேள்விக்கு இரண்டு ஸூத்ரங்கைளால் வேறொருவர் கண்ணோட்டத்தில் பதிலளித்து விட்ட அநந்தரம் இனி தன்னுடைய பதிலைக் கூறுகிறார் வ்யாஸர் –

8– கு₃ணாத் வா ஆலோகவத் – “அல்லது (தன்னுடைய) குணத்தின் மூலம், ஒளியைப் போல்”
ஜீவாத்மா உடலில் ஓரிடத்தில் இருந்தாலும், உடலெங்கும் உணர்ச்சி ஏற்படுவதில் எந்த முரண்பாடும் இல்லை -ஏனென்றால், அந்த ஜீவாத்மா தன்னுடைய தனித் தன்மையான ஜ்ஞாநம் (அறிவு) என்ற குணத்தின் மூலம் இந்த உடல் முழுவதிலும் வ்யாபித்து (நிறைந்து) இருக்கிறார்.
ஒளியைப்போல் – தீபம் (சுடர் -ஜ்வாலை ) என்பது ஓரிடத்தில் இருந்தாலும், அதனுணடய ஒளி (ப்ரபா₄) என்பது அறை முழுவதும் நிறைந்திருப்பது போல், ஜீவாத்மாவும் தன் ஜ்ஞாநத்தால் உடலை வ்யாபித்து இருக்கிறார்-(ஸுவ்பரி ஆபாத விருத்திக்கு -50 சரீரங்களை எடுத்துக் கொண்டு ஞானத்தைக் கொண்டு இயக்கிய வ்ருத்தாந்தம் உண்டே-).
பூர்வ பக்ஷியின் கேள்வி – ஜ்ஞாநம் என்பது ஆத்மாவின் பண்பு என்று எப்படி அறிகிறீரர்கள்? ஜ்ஞாநமே தானே ஆத்மா?
வ்யாஸரின் பதில் – அடுத்த இரண்டு ஸூத்ரங்களால்

9– வ்யதிரேக: க₃ந்த₄வத் ததா₂ ச த₃ர்ஸயதி –“(ஜ்ஞாநத்துக்கு ஆத்மாவிடமிருந்து) வேறுபாடு மணத்தைப் போல், (வேதம்) அவ்வாறு காட்டுகிறது”
உலகில் “மணமுடைய புஷ்பம்” என்று அறிவதால், புஷ்பம் என்கிற பொருளுக்கு மணம் என்பது குணம் (பண்பு) ஆகிறது. அதனால் மணம் என்பது புஷ்பத்தைக் காட்டிலும் வேறுபட்டது என்று தெரிகிறது. அதே போல் வேதமும்- (ஜாநாத் யேவாயம் புருஷ:) அதாவது இந்த ஆத்மா அறிவுடையவரே ” என்று கூறுவதால், ஜ்ஞாநம் என்பது ஆத்மாவின் பண்பாகிறது, எனவே ஆத்மாவைக் காட்டிலும் ஜ்ஞாநம் வேறு என்று தெரிகிறது.

10-ப்ருத₂க் உபதே₃சாத் – “தனியானது என்கிற உபதேசத்தால் ”
வேதத்தில் (ந விஜ்ஞாது: விஜ்ஞாதே : விபரிலோபோ வித்₃யதே ) அதாவது “ஆத்மாவினுடைய ஜ்ஞாநத்துக்கு அழிவு இல்லை ” என்று தெளிவாக ஆத்மா வேறு ஜ்ஞாநம் வேறு என்று உள்ளது –

ஆத்மாவை எப்படி ஜ்ஞாநம் என்று அழைக்கலாம்?–பூர்வ பக்ஷியின் கேள்வி – ஜ்ஞாநம் ஆத்மாவின் பண்பு தான் என்றால், அந்தர்யாமி ப்ராஹ்மணத்திலும் தைத்திரீயத்திலும் ஏன் ஜீவாத்மா ’ஜ்ஞாநம்’ என்று குறிப்பிடப்படுகிறார்? ஜ்ஞாநமுடையவர் என்று தானே சொல்ல வேண்டும்?
பதில் –
11-தத் ₃கு₃ண ஸாரத்வாத் து தத்₃வ்யபதே ₃ச : ப்ராஜ்ஞவத்
தத்₃கு₃ண ஸாரத்வாத் து –
ஜ்ஞாநம் என்ற குணத்தையே ஸாரமாகக் (முக்கியமான அடையாளமாகக்) கொண்டபடியால்
தத்₃வ்யபதே ₃ச : – ஜீவாத்மா ’ஜ்ஞாநம்’ என்றே அழைக்கப்படுகிறார்
ப்ராஜ்ஞவத் – பரமாத்மாவைப் போல
ஒரு பொருளினுடைய ஸாரமான (ப்ரதானமான) பண்பு எதுவோ , அப் பண்பைக் குறிக்கும் சொல்லைக் கொண்டு அந்தப் பொருளையும் குறிக்கலாம் என்று உலகில் ஒரு வழக்கமுண்டு. நம்மாழ்வாரை ’க்ருஷ்ண த்ருஷ்ணா தத்த்வம்’அதாவது ’க்ருஷ்ண பக்தி’ என்றே அழைக்கிறோம், அவருக்கு க்ருஷ்ண பக்தியை முக்கியமான பண்பான படியால்.

(நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் தன்னைத் தாழ்ந்தவன் என்று கொள்ளாமல் -புன்மையாகக் கருத்துவர் -தாழ்ச்சி யாகவே-கருதுவர் என்கிறார்)

அதுபோல் ஜீவாத்மாவின் ப்ரதானமான குணம் ஜ்ஞாநம். அதனால் ஆத்மாவையே ஜ்ஞாநம் என்று சொல்லலாம். இதுபோல் பரமாத்மாவுக்கும் உள்ளது. பரமாத்மாவின் ஸாரமான குணம் எல்லை யற்ற ஆநந்தம்-(ஸ ஏகோ ப்₃ரஹ்மண ஆநந்த₃: ) முதலான இடங்களில் ஆநந்தம் பரமாத்மாவின் பண்பு எனபட்டிருந்தாலும், (ஆநந்தோ ₃ ப்₃ரஹ்மேதி வ்யஜாநாத்) முதலான இடங்களின் பரமாத்மாவை ஆநந்தம் என்றே குறிப்பிடப்படுகிறது வேதம். இதுவும் இதே வழக்கத்தை அடி யொற்றித்தான்.
12-யாவதா ₃த்ம பா₄வித்வாத் ச ந தோ₃ஷ: தத்₃த₃ர்ஸநாத்
ஜ்ஞாநத்தைக் குறிக்கும் சொல் ஆத்மாவைக் குறிப்பதில் எந்த தோஷமும் இல்லை , ஏனென்றால் ஜ்ஞாநம் என்பது ஆத்மாவின் இயற்கையான நிரந்தரமான பண்பு, ஆத்மா உள்ள வரை அதுவும் இருக்கும்.
இங்கு ’ ச ’ என்ற சொல்லால் ஆத்மாவை ஜ்ஞாநம் என்று அழைப்பதற்கு வேறொரு காரணமும் கூறப்படுகிறது – நம் மதத்தில் அறிவாளியான ஆத்மா தானும் ஜ்ஞாநமே வடிவமானவர் என்பதால் எந்த தோஷமும் இல்லை – என்று.

(ஸ்வரூப நிரூபக தர்மம் என்பதால் ஞானம் என்றே சொல்லலாம் –ச -அதனாலும் தோஷம் இல்லை என்றது மறைமுகமாக வேதாந்தப்படி ஞானமயமாயும் ஞானத்துடனும் இருப்பதால் -)

உறங்கும் போது ஏன் ஜ்ஞாநம் தோன்றவில்லை ?
பூர்வ பக்ஷியின் கேள்வி –
ஆத்மாவுக்கு ஜ்ஞாநம் இயற்கையாக என்றுமே இருக்கும் பண்பு என்றால் ஆழ்ந்த உறக்கத்தில் அது வெளிப்பட வேண்டுமே ? அப்படி காணப்படவில்லை . ஆக அப்போது ஆத்மாவுக்கு ஜ்ஞாநமே இல்லை – பதில் –
13–பும்ஸ்த்வாதி ₃வத் து அஸ்ய ஸத: அபி₄வ்யக்தி யோகா₃த்
அஸ்ய-
– இந்த ஜ்ஞாநத்துக்கு
ஸத: எப்போதும் இருப்பினும்
அபி₄வ்யக்தி யோகா₃த் –ஒரு காலத்தில் வெளிப்பாடு என்று ஏற்பட முடியுமான படியால்
பும்ஸ்த்வாதி₃வத் து – ஆண்மை முதலானவற்றைப் போல
ஒரு குழந்தை பிறக்கும் போதே ஆண் தன்மை அல்லது பெண் தன்மை யோடும், அதற்கான உருப்புகளோடும் தான் பிறக்கிறது.(சரீரம் ஏழு தாதுக்களுடன் பிறக்கிறது – ) ஆனால் ஒரு குறிப்பிட்ட வயது வரை அப் பண்புகள் வெளிப்படுவதில்லை -, உருப்புகள் இயங்குவதில்லை -. அதற்காக அது வரை அந்தக் குழந்தைக்கு ஆண் தன்மையோ பெண்தன்மையோ இல்லவே இல்லை என்று சொல்லி விட முடியாது. அதே போல் தான் ஜ்ஞாநம் எப்போதுமே ஆத்வாவிடம் இருந்தாலும், விழித்திருக்கும் போது மட்டும் வெளிப்படுகிறது -தோற்றமளிக்கிறது என்று கொள்வதே பொருத்தமானது. ஜ்ஞாநமே இல்லை என்னக் கூடாது.
(ந ப்ரேத்ய ஸம்ஜ்ஞாஸ்தி) என்னும் வாக்யமும், முக்திக்குப் பின் ஜ்ஞாநமே இல்லை என்று சொல்லவில்லை – உடலையும் ஆத்மாவையும் ஒன்றாக நினைக்கும் மயக்கமில்லை என்று தான் கூறுகிறது.

14-நித்யோ பலப்₃தி₄ப்ரஸங்க₃: அந்ய தர நியமோ வா அந்யதா₂-
இப்படி வேதாந்தம் சொன்ன பக்ஷத்தை ஏற்காமல் எங்கும் நிறைந்த ஆத்மா ஜ்ஞாநம் மட்டுமே என்று கொண்டால் எப்போதுமே அறிவும் அறிவின்மையும் சேர்ந்தே இருக்க வேண்டும், அல்லது எப்போதுமே அறிவு மட்டும் தான் இருக்க முடியும், அல்லது எப்போதுமே அறிவின்மை தான் இருக்க முடியும். எனவே அது பொருந்தாது.

இவ்வாறு இவ்வதிகரணத்தில் ஜ்ஞாநமே வடிவான ஆத்மா ஜ்ஞாநத்தை உடையவரும் கூட என்று நிரூபிக்கப்பட்டது

2-3-5-கர்த்ரதி₄கரணம் –ஜீவாத்மா தான் செயல் படுபவர் -கர்த்ரதி₄கரணம்–ஸங்கதி – முன் அதிகரணத்தில் ஆத்மா ஜ்ஞாந முடையவர் தான் என்று நிரூபிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த அதிகரணத்தில் அந்த ஆத்மா ’கர்த்தா’ அதாவது செயல்படுபவரா? அல்லவா? என்கிற ஆராய்ச்சி செய்யப்படுகிறது.-
பூர்வ பக்ஷியின் வாதம்-– ஆத்மா ’கர்த்தா’ அல்ல, அதாவது அவர் எந்தச் செயல்களையும் செய்வதில்லை . ஸத்த்வம் ரஜஸ் தமஸ் என்ற மூன்று குணங்களை உடைய ப்ரக்ருதி- ப்ரதானம் என்ற அசேதனப் பொருள் தான் எல்லாச் செயல்களையும் செய்கிறது. ஆத்மாவைப் பற்றிப் போதிக்கும் பல ஸாஸ்த்ரங்கள் இவ்வாறே கூறுகின்றன-

கடோபநிஷத்தில் -ஹந்தா சேத் மன்யதே ஹந்தும் ஹத: சேத் மந்யதே ஹதம்| உபௌ₄தௌ ந விஜாநீத: நாயம் ஹந்தி ந ஹந்யதே || “ஒருஜீவாத்மா தன்னைக் கொல்பவனாக நினைத்தால் அவன் தன்னை உணர வில்லை என்று பொருள். ஜீவாத்மா கொல்வதே இல்லை ”

பகவத்கீதையில்- ப்ரக்ருதே : க்ரியமாணாநி கு₃ணை : கர்மாணி ஸர்வச : | அஹங்கார விமூடா₄த்மா கர்த்தா அஹம் இதி மந்யதே || “ப்ரக்ருதியின் குணங்களான ஸத்த்வம் ரஜஸ் தமஸ் என்பவை தான் அனைத்துச் செயல்களையும் செய்கின்றன. உடலும் தானும் ஒன்று என்னும் மயக்கத்தில் இருப்பவன் தான் தன்னையே கர்த்தா என்று தவறாக நினைத்துக் கொள்கிறான்.
ஆக இப்படி பல இடங்களில் ஆத்மா எந்தச் செயலையும் செய்வதில்லை என்று சொல்லப்பட்டுள்ளதால் ஆத்மா கர்த்தா அல்ல, ப்ரக்ருதி தான் செயல் படுகிறது என்று பூர்வ பஷி கூறுகிறார்.

வேதம் வீணாகக் கூடாது (இந்த பூர்வ பக்ஷத்தை 7 ஸூத்ரங்களால் கண்டித்து உபநிஷத் சொல்வதை நிரூபிக்கிறார் வ்யாஸர்)1–கர்த்தா ஸாஸ்த்ரார்த்த₂ வத்த்வாத்–“(ஜீவாத்மா தான்) செய்பவர்; ஸாஸ்த்ரம் பயனுள்ளதானபடியால்” • வேதங்களில் உள்ள கட்டளைகள் எல்லாம்-

(ஜ்யோதிஷ்டோமேந ஸ்வர்க₃காம: யஜேத) அதாவது “ஸ்வர்கத்தை ஆசைப் படுபவன்(அதை அடைவதற்காக) ஜ்யோதிஷ்டோமம் என்னும் யாகத்தைச் செய்யக் கடவன்” என்பது போல் தான் உள்ளன. எனவே , யார் பயனை அடையப் போகிறாரோ (போ₄க்தா) அவர் தான் செயல்களைச் செய்பவர் (கர்த்தா) என்று தெரிகிறது. எனவே , இன்ப துன்பங்களை அநுபவிக்கக் கூடியஜீவாத்மா தான் கர்த்தாவாக(செயல் படுபவராக) இருக்க முடியும், ப்ரக்ருதி அல்ல.
மேலும், இந்த ஸூத்ரத்தில் வேதத்தை ’ஸாஸ்த்ரம்’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறார் வ்யாஸர்.’ஸாஸ்த்ரம்’ என்ற சொல்லுக்கே ’ஸாஸநம் செய்வது – ஆணை யிடக் கூடியது-செயல் பட வைப்பது’ என்று பொருள். அதாவது, செயல் படாமல் இருப்பவனை செயல் பட வைக்கும் நூல் தான் ஸாஸ்த்ரம். ஒரு நூலானது அறிவை ஏற்படுத்துவதன் மூலம் தான் ஒருவனை செயல் பட வைக்க முடியும். எனவே , அறிவுடையவனான(ஜ்ஞாதா) ஜீவாத்மா தான் செயல்படுபவனாக(கர்த்தா) இருக்க முடியும், ப்ரக்ருதி அல்ல. –இதை ஏற்காமல், அறிவும் இல்லாத இன்ப துன்பங்களையும் அநுபவிக்காத ப்ரக்ருதி தான் செயல்படுகிறது என்றால், அப்போது ஸாஸ்த்ரத்தால் அந்த செயல்பாடு ஏற்பட முடியாத படியால் ஸாஸ்த்ரம் அனைத்தும் வீணாகி விடும்

(ஞாத்ருத்வம் கர்த்ருத்வம் போக்த்ருத்வம் -அறிவு செயல்பாடு அனுபவம் -மூன்றும் யாருக்கு யாரால் என்பதை சரியான அறிய வேண்டும்-ஆத்மா நித்யம் என்பதைக் காட்டவே கீழ்ச் சொன்ன வேத வாக்கியங்களும் கீதா ஸ்ம்ருதியும் – கொல்லவும் இல்லை கொலை பண்ணவும் இல்லை என்கிறது -கொல்லப்படுபவன் கொல்கிறேன் என்றும் நினைப்பவன் முட்டாள் என்கிறது -பிரக்ருதியுடன் தொடர்பால் வந்தவை செயற்கை -இயற்கையில் சுக வடிவம் -இங்கு குணங்களால் செய்விக்கப்படுகிறாய் என்பதைக் காட்டவே கீதா வசனம் –உடல் ஜீவாத்மா இந்திரியங்கள் மூச்சுக் காற்று பரமாத்மா ஐவரும் சேர்ந்து தான் செயல்களைச் செய்கிறார்கள் என்றும் கீதையில் உண்டே)

2–உபாதா₃நாத் விஹாரோ தே₃ஸாத் ச – “கைக் கொள்வதும் திரிவதும் சொல்லப்படுவதாலும்”
வேதத்தில்(ஏவமே வைஷ ஏதாந் ப்ராணாந் க்₃ருஹீத்வா ஸ்வே ஸரீரே யதா₂காமம் பரிவர்ததே )அதாவது “இந்த ஜீவாத்மா ஐந்து வகையான ப்ராண வாயுக்களையும் எடுத்துக் கொண்டு தன் ஆணைப்படி உடலுக்குள் திரிகிறார்” என்று சொல்லப் படுகிறது. இதில் தெளிவாக ப்ராணங்களை எடுத்தல்- கைக் கொள்ளுதல் என்ற செயலையும் திரிதல் என்ற செயலையும் செய்பவர் ஆத்மாவே என்று கூறப்படுள்ள படியாலும் எல்லாச் செயல்களிலுமே ஜீவாத்மா தான் கர்த்தாவாக இருக்க வேண்டும், ப்ரக்ருதி அல்ல.

ஸித்தாந்தியின் வாதங்கள் -தொடர்கிறது –
3) வ்யபதே ₃சாத் ச க்ரியாயாம், ந சேத் நிர்தே₃ச விபர்ய்ய:
க்ரியாயாம்
– எல்லாச் செயல்களிலும் வ்யபதே ₃சாத் (ஜீவாத்மாவையே செய்பவராக வேதம்) குறிப்பிடுகிற படியாலும்(அவரே கர்த்தா)
தைத்திரீய உபநிஷத்தில் (விஜ்ஞாநம் யஜ்ஞம் தநுதே கர்மாணி தநுதே அபி ச ) அதாவது “விஜ்ஞாநம் எனப்படும் ஜீவாத்மா யாகம் முதலான வைதிகச் செயல்களையும் ஸாதாரண உலகச் செயல்களையும் செய்கிறார்” என்று தெளிவாக ஜீவாத்மாவே கர்த்தா என்று சொல்லப்பட்டுள்ளது என்று காட்டுகிறார் வ்யாஸர்.
ந சேத்–(இவ்வாறு) இல்லை யென்றால்-(அதாவது இந்த வேத வாக்யத்தில் விஜ்ஞாநம் என்று சொல்லப்படுவது ஜீவாத்மாஅல்ல, புத்₃தி₄ எனப்படும் மனது தான்,-அது தான் செயல்களை யெல்லாம் செய்கிறது என்றால்)
நிர்தே ₃ச விபர்ய்ய:-குறிப்பிடுவதில் மாற்றம் இருந்திருக்க வேண்டும்–அதாவது, மனது என்பது கருவியான படியால் “விஜ்ஞாநத்தால் யாகம் செய்யப் படுகிறது” என்று சொல்லி யிருக்க வேண்டும், ஆனால் “விஜ்ஞாநம் யாகம் செய்கிறது” என்றே சொல்லப் பட்டுள்ளது. எனவே இங்கு விஜ்ஞாநம் என்பது மனது அல்ல, ஜீவாத்மாவே ; அவரே கர்த்தா.

4–உபலப்₃தி₄வத் அநியம:- “அறிவைப் போல் வரை யறை இல்லாமை ஏற்பட்டு விடும்”
முன் அதிகரணத்தில் “நித்யோபலப்₃த்₄யநுபலப்₃தி₄ப்ரஸங்க₃:…” என்ற கடைசி ஸூத்ரத்தில் இவ்வாறு கூறப்பட்டது– ஜீவாத்மா எங்கும் உள்ளார், அவர் ஜ்ஞாநமே வடிவமானவர் என்று பூர்வபக்ஷிகள் சொல்வது உண்மை யானால் ஒன்று எப்போதுமே நமக்கு அறிவு ஏற்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும், அல்லது எப்போதுமே ஏற்படாமலேயே இருக்க வேண்டும். ஒரு ஸமயத்தில் அறிவு, ஒரு ஸமயத்தில் அறிவின்மை என்கிற வரை யறை பொருந்தாது”.
அதே போல் ப்ரக்ருதி தான் செயல்படுகிறது என்றால், அது எல்லா ஜீவாத்மாக்களுக்கும் பொதுவானபடியால், ப்ரக்ருதி ஒரு செயலைச் செய்ததும் ஒரே ஸமயத்தில் எல்லா ஜீவாத்மாக்களும் அதே பயனை அடைந்து விட வேண்டும், ப்ரக்ருதி செய்யா விட்டால் எல்லாருமே பயனை அடையாமல் இருக்க வேண்டும். சிலர் அடைந்து சிலர் அடையாமலிருப்பது என்கிற நியமம்(வரை யறை ) ஏற்பட முடியாமல் போய் விடும். அதனால் ஜீவாத்மா தான் கர்த்தா.-

( ஸித்தாந்தியின் வாதங்கள் தொடர்கின்றன )
5-சக்தி விபர்யயாத்
– “(இன்ப துன்பங்களை அநுபவிக்கும்) சக்தி மாறி யிருக்க வேண்டும்”
புத்தி எனப்படும் மனது தான் செயல்படுகிறது என்றால், அப்போது அச் செயல்களின் பயனாய் ஏற்படும் இன்ப துன்பங்களையும் அந்த மனது தான் அநுபவிக்க வேண்டும். அப்படியானால் போ₄க்த்ருத்வம் (இன்ப துன்பங்களை அநுபவிக்கும் சக்தி) என்பதும் ஜீவாத்மாவிட மில்லை -மனதில் தான் உள்ளது என்று மாற்றி ஏற்க வேண்டும்.
ஆனால் உங்கள் மதத்தில்“(புருஷ: அஸ்தி போ₄க்த்ரு பா₄வாத்) அதாவது“இன்ப துன்பங்களை அனுபவிக்கும் தன்மை யிருப்பதால் தான் ஜீவாத்மா என்ற பொருளை ஏற்கிறோம்”என்று கூறுகிறீர்கள். அந்த போ₄க்த்ருத்வமும் மனதுக்குத் தான் உள்ளது என்றால், ஜீவாத்மா என்ற ஒரு பொருளே இல்லை என்றாகி விடும்.

6–ஸமாத்₄ யபா₄வாச் ச – “ஸமாதி₄ என்பதும் ஏற்ப முடியாமல் போய்விடும்”
உங்களுடைய(ஸாங்க்ய) மதத்தில் “அசேதனமான ப்ரக்ருதி வேறு, அறிவுடையவனான நான் வேறு” என்கிற த்யானம் தான் மோக்ஷத்தை அடையும் வழி ஆகும். இதற்கு ஸமாதி₄ என்று பெயர் (நிரீஸ்வர சாங்க்ய மதத்தில் ஈஸ்வரனே இல்லை -நாம் த்யானம் என்பதை பரமாத்மாவைப் பற்றியே-இது வாசி ). ப்ரக்ருதி தான் எல்லாச் செயல்களையும் செய்கிறது என்றால், அப்போது ஸமாதி எனும் த்யானத்தையும் ப்ரக்ருதி தான் செய்ய வேண்டும். ஆனால், ப்ரக்ருதி எப்படி “நான் ப்ரக்ருதி அல்ல” என்று த்யானிக்க முடியும்? எனவே உங்கள் மதத்தில் ஸமாதி என்பதே பொருந்தாது

பூர்வ பக்ஷியின் கேள்வி–ஜீவாத்மா தான் கர்த்தா என்றால், ஏன் எப்போதுமே செயல்பாடுகள் இருப்பதில்லை?
பதில் –7– யதா₂ ச தக்ஷா உப₄யதா₂-
“தச்சனைப் போல் இரண்டு விதமாகவும் (பொருந்தும்)”
ஒரு தச்சன், தன்னிடம் எல்லாக் கருவிகளும் இருந்தாலும், தான் சில ஸமயங்களில் வேலை செய்கிறான், சில ஸமயங்களில் ஓய்வெடுக்கிறான். அதே போல் புலன்கள் என்ற கருவிகளை உடைய ஜீவாத்மாவும் தன்னுடைய ஆணைப்படி சில ஸமயங்களில் மட்டும் செயல்படுகிறார் என்பது பொருத்தமானதே . உங்கள் மதத்தின் படி ப்ரக்ருதி செயல்படுகிறது என்றால் தான் அதற்கு அறிவு- ஆணை இல்லாத படியால் எபபோதுமே செயல்பாடு ஓயாது.

ஆக, இவ்வாறு அறிவுடையவரான ஜீவாத்மா தான் கர்த்தா (செயல்படுபவர்) என்று நிரூபித்தார் வ்யாஸர்.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-