ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -66-உண்ணாது உறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும்-ஆராவமுதே–5-8-

March 1, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

புண்டரீகாக்ஷன் கண்ணிலே அன்றோ ஈடுபட வேண்டும் என்று பாங்கன் சொல்ல
தலைவன் தோழன் பேச்சை மறுத்தல் –-கீழே 57 பாசுரம் ஐந்தே துறை பார்த்தோம்
ஆராவமுதே இதன் விவரணம்-மலர்க்கண் வளர்கின்றான் அங்கும் உண்டே
நீர் பஞ்ச பூதங்கள் நல்லது செய்ய அந்தர்யாமியான அவன் நம்மைத் துன்புறுத்துவதே -என்று உள்ளுறைப் பொருள்-1-வைகுந்தம் போல் போக்யம்-2-எனக்கு உயிர்-3-யோகிகளால் என்ன அரியன
மூன்று விஷயங்கள் ஆழ்வாரது கண்கள்-

அவதாரிகை-தலைமகள் கண் அழகில் ஈடுபட்ட தலைமகன் வார்த்தை இதுவும் தலைவன் பாங்கனுக்கு கழற்றெதிர் மறுத்தல்-

கீழே புலக்குண்டல புண்டரீகத்த -பாசுரம் போலே இதுவும் -நாயகி உடைய கண் அழகில் ஈடுபட்டமை
தலை மகளை இயற்கையில் கலந்து பிரிந்த தலைவன் தன் உறாவுதல் கண்டு வினவிய பாங்கனைக் குறித்து உற்று உரைத்த பாசுரம் –

இப்படி இவருடைய ஞான வைலக்ஷண்யத்தைக் கண்ட அன்பர் நம்முடைய அளவிலேயே இவருடைய ஞானம் விஷயீ கரித்தது விலக்ஷண ஞானரான பரம யோகிகளுக்கும் நித்ய அனுபாவ்யமாய் யன்றோ இருப்பது என்று தங்கள் ஸூஹ்ருத்துக்களுக்குச் சொன்ன பாசுரத்தை-தலை மகளை இயற்கையில் கலந்து பிரிந்த தலைவன் தன்னுறாவுதல் கண்டு வினாவின பாங்கனைக் குறித்து உற்றது யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு–அவதாரிகை–தலைமகள் கண் அழகிலே ஈடுபட்ட தலைமகன் வார்த்தையாய் இருக்கிறது கீழ் போலே

உண்ணாது உறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும்
எண்ணாய் மிளிரும் இயல்வினவாம் எரி நீர் வளி வான்
மண்ணாகிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாள்
கண்ணாய் அருவினையேன் உயிராயின காவிகளே
– -66–தலைவன் தோழன் பேச்சை மறுத்தல் –

ஆராவமுதாழ்வார் ஆதரித்த பேறுகளை
தாராமையாலே தளர்ந்து மிக -தீராத
ஆசையுடன் ஆற்றாமை பேசி யலமந்தான்
மாசறு சீர் மாறன் எம்மான் 
—48–ஸ்ரீவர மங்கை வாணன் திருவடிகளிலே சரண் புக்க விடத்திலும் அங்கே தம் அபேஷிதம் கிடையாமையாலே ஆஸ்ரித ரஷண தீஷிதனான ஸ்ரீ சர்வேஸ்வரன் நம் கார்யம் செய்யாமை இல்லை –-எங்கே கார்யம் செய்ய நினைத்து இருக்கிறான் என்று தெரியாது என்று ஸ்ரீ திருக் குடந்தையிலே ஸ்ரீ ஆராவமுதாழ்வார்-திருவடிகளிலே செல்லவே நம் அபிமதம் சித்திக்கும் என்று மநோ ரதித்து சென்ற இடத்தில் அவர் எழுந்து இருத்தல்-இருத்தல்-உலாவி அருளுதல்-இன் சொல்லுச் சொல்லுதல்-குளிர நோக்குதல்-அரவணைத்தல்–செய்து அருளக் காணாமையாலே -ஸ்ரீ பிராட்டியும் அவனுமான சேர்த்தியும் யுண்டாய்–நமக்கு அபேஷையும் யுண்டாய் இருக்க அபிமதம் பெறாது ஒழிவோமோ-என்று துடித்து இவ்வளவிலும் திருவடிகளே உபாயம் என்னும் துணிவு குலையாது ஒழியப் பெற்றோமே என்று வருந்தி தரித்தாராய் தலைக் கட்டுகிற ஸ்ரீ ஆராவமுதத்தில் அர்த்தத்தை அருளிச் செய்கிறார்–இவ்வளவான தசையிலும்-உபாயாந்தரங்களில் கண் வைக்கை யாகிற மாசு இன்றிக்கே இருக்கிற அத்யாவச்ய ஞானாதி குணங்களை யுடையரான ஸ்ரீ ஆழ்வார் தம்மை அடைந்து பிரபன்ன ஜனமான நமக்கு ஸ்வாமி

உண்ணாது இத்யாதி –பிராக்ருத போகங்களால் தரியாதாராய் –பிரக்ருதி-ப்ராக்ருதங்கள்-த்யாஜ்யம் -என்னும் புத்தியை உடையராய் –அவ் வாத்மா வஸ்து தான் ஸ்வதந்த்ரம் -என்று இருக்கை யன்றிக்கே –
ஆத்மா யாதாம்ய ஜ்ஞான பூர்வகமாக -ஈஸ்வர ஜ்ஞானத்தை உடையராய் –இது அவனுக்கு பிரகாரம் -என்று இருக்கும்படி –பரம யோகம் கை வந்துள்ள அவர்களுக்கும் –எண்ணாய் மிளிரும் இயல்வினவாம் –அவர்களும் இக் கண்ணுக்கு இலக்கானாராகில் அவர்களுக்கும் ஆஸ்ரயமான பரத்வம் தன்னையும் காற்கடை கொண்டு –இத்தையே அது அது -என்று எண்ணும்படி பிரகாசிக்கையே ஸ்வ பாவமாய் உள்ளன –(கரையேற்றுவனுக்கும் அறு நான்கும் உபதேசித்த ஞானம் அன்றோ ஆழ்வாரது )-எரி நீர் வளி வான் மண்ணாகியகாரணமான பூத பஞ்சகங்களும் கார்ய ஜாதத்துக்கு எல்லாம்  உப லஷணம்-
அக்நி-நீர் -காற்று -ஆகாசம் -பூமி -இவை அடைய தனக்கு விபூதியாக உடையவன் –எம்பெருமான் –
அவனுடைய விபூதி யோகம் தமக்கு பேறாய் இருக்கிறபடி –   அவனுடைய குணங்களோபாதி  
விபூதி யோகமும் தமக்கு உத்தேயமாய் இருக்கிறபடி –தனது வைகுந்த மன்னாள் –0மானாதி போல்
(மஹா நவமி சோலை போல் லீலா விபூதி போல் )ஆவது அழிவதாம் விபூதி போல் அன்றிக்கே –
ஒரு நாளும் அழியாததாய் –அவனுக்கு அசாதாரணமாய் –அந்தரங்கமாய் இருக்கும் நித்ய விபூதி உடன் ஒத்து இருக்கிறவள் –கண்ணாய் அருவினையேன் உயிராயின காவிகளே –அப்படிப் பட்டவள் பக்கலிலே வந்தவாறே –பிரதான அவயவகமாய் –என் பக்கலிலே வந்தவாறே – அசேத்யமாய் –அதாஹ்யமாய் – அழியாதாய் இருந்துள்ள ஆத்ம வஸ்துவாய் –பாதகமாம் இடத்தில் ஸ்வதந்த்ரமாய் –
கண்ணுக்கு விஷயமாய் நின்று பாதகம் ஆகா நின்றன –அரு வினையேன் –ரஷகம் ஆனவையே
பாதகமாம் படி பாபத்தை பண்ணினேன் –உயிரான காவிகளே –அவள் பக்கலிலே வந்தவாறே கண்ணாய் –(நிரூபித்தவாறே ) என் பக்கலிலே வந்தவாறே உயிராய் – இவை தான் நிரூபித்த வாறே
வடிவு சில காவிகளாய் இரா நின்றன –உயிரான காவிகளே –உயிர் தான்-கொண்டு நின்று பாதகம் ஆகுமா –

வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாள்-கண்ணாய் -பரம பதம் போல் பேர் இன்பம் வடிவு எடுத்த தலைவியின் கண் –யோகியர்க்கும்-எண்ணாய் மிளிரும் இயல்வினவாம்-யோகம் கை வந்த பரம யோகிகளுக்கும் சிந்தனைக்கு உரியன-அவர்கள் பரம் பொருளை சிந்தனை மாற்றி இவள் கண் அழகையே சிந்தனை செய்வார்கள்-அருவினையேன் உயிராயின-பிரிந்து ஆற்றாமையும் துடிக்கும் அரு வினையேன் -உயிர் போலே தரிக்க முடியாமல் பண்ணுமே –

உண்ணாது உறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும் எண்ணாய் மிளிரும் இயல்வினவாம்
அத்யசனமும் அதி நித்தரையும் யோக விரோதியாம் என்று துறந்து-யுக்தாஹார விஹாரராய்-யுக்த ஸ்வப்ந அவ போதராய்க் கொண்டு நிரந்தர த்யான தத் பரரான ஸநகாதி பரம யோகிகளுக்கும் ஹ்ருதயமாய்க் -(எண்ணாய் )கொண்டு நிரந்தர அனுபாவ்யமாய் மிளிர்ந்து தோற்றும் ஸ்வ பாவத்தை யுடையனவாகா நிற்கும்(ஆழ்வாரது கண்கள் )–எரி நீர் வளி வான் மண்ணாகிய வெம்பெருமான்
பிராணிகளுக்கு சீதோஷ்ண பரிஹார ரூபமாயும் (எரியும் நீரும் ) ஆஸ் வாஸ கரமாயும் (காற்று)
அவகாஸ ப்ரதமாயும் தாரகமாயும் யுள்ள பஞ்ச பூதங்களுக்கும் அந்தராத்மாவாய் அக் கணக்கிலே நமக்கு ஸ்வாமியான ஸர்வேஸ்வரனுடைய–தனது வைகுந்த மன்னாள் கண்ணாய்-அசாதாரணமாய்
அழிவற்ற தேசம் போலே நித்ய அநுபாவ்யை யானவளுடைய கண் என்ற பேராய்–அருவினையேன் உயிராயின–நிரந்தர அனுபவம் பண்ணப் பெறாமல் பிரிகைக்கு–அடி முடி காண ஒண்ணாத (அநாதியான -அந்தமும் இல்லாத ) பாபத்தை யுடையேனான எனக்கு முடிய ஒண்ணாத படி பிராணனாய்ப் புக்கு நில்லா நிற்பன வாயின–காவிகளே— ராக உத்தரதையாலே செங்கழுநீர்த் தடாகம் போலே இருக்கையாலே காவி என்னாலானவை--கண்ணாய் அருவினையேனு யிராயின காவிகள் எண்ணாய் மிளிரும் இயல்வினவாம்-என்று அந்வயம்–இத்தால் ஆஸ்ரிதரான அன்பருக்கு தாரகமாய்
ராகோத்தரமான ஆழ்வாருடைய ஞானமானது அசநாத்ய தீதராய் அசங்குசித ஸ்வ பாவராய் நிரந்தர அனுபவ தத் பரரான நித்ய யோகத்தை யுடைய ஸூரிகளுக்கும் நித்ய அனுபாவ்யமாய்க் கொண்டு
விளங்கித் தோற்றும் ஸ்வ பாவத்தை யுடைத்தாகா நிற்கும் என்றதாயிற்று –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம்-உண்ணாது உறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும்
பிராகிருத போகங்களால் தரியாதாராய் ப்ரக்ருதி ப்ராக்ருதங்கள் த்யாஜ்யம் என்கிற புத்தியே யன்றியே
உபாதேயமான ஆத்ம வஸ்து உத்தேச்யம் என்னும் புத்தியை யுடையராய் அவ்வாத்ம வஸ்து தான் ஸ்வ தந்திரம் என்று இருக்கை அன்றிக்கே ஆத்ம யாதாத்ம்ய ஞான பூர்வகமாக ஈஸ்வர ஞானத்தை யுடையராய் இது அவனுக்கு பிரகாரம் என்று இருக்கும் படி பரம யோகம் கை வந்து இருக்குமவர்களுக்கும்-எண்ணாய் மிளிரும் இயல்வினவாம்–அவர்களும் இக்கண்ணுக்கு இலக்கானார்கள் ஆகில் தங்களுக்கு ஸூபாஸ்ரயமான பரதத்வம் தன்னையும்
காற்கடைக் கொண்டு இத்தையே அது அது என்னும்படி பிரகாசிக்கையே ஸ்வ பாவமாக யுடையனவாய் யுள்ளன-எரி நீர் வளி வான் மண்ணாகிய-காரணமான பூத பஞ்சகங்களும் கார்ய ஜாதத்துக்கு எல்லாம் உப லக்ஷணம்-அக்னி நீர் காற்று ஆகாசம் பூமி இவை யடையத் தனக்கு விபூதியாக யுடையவன்-வெம்பெருமான்–அவனுடைய விபூதி யோகம் தனக்குப் பேறாய் இருக்கிற படி–தனது வைகுந்த மன்னாள்-மானாவிச்சோலை போலே ஆவது அழிவதாம் இவ்விபூதி போல் அன்றிக்கே ஒரு நாளும் அழியாததாய் அவனுக்கு அஸாதரணமாய் அந்தரங்கமான நித்ய விபூதியோடே ஒத்து இருந்தவள்
அவனோடே அழியாத விபூதியோடே ஒத்து இருந்துள்ளவள்–கண்ணாய் அருவினையேன் உயிராயின காவிகளே–அப்படிப்பட்டவன் பக்கலிலே வந்தவாறே பிரதான அவயவமாய் என் பக்கலிலே வந்தவாறே அச்சேத்யமாய் அதாஹ்யமாய் அழியாததாய் இருந்துள்ள ஆத்ம வஸ்துவாய் பாதகமாம் இடத்தில் ஸ்வ தந்திரமாய் நின்று பாதகமாகா நின்றன–அறு வினையேன்-ரக்ஷகமானவை தானே பாதகமாம் படி பாபத்தைப் பண்ணினேன் 

ஸ்வாபதேசம் –ஆழ்வார் ஞானத்தின் சிறப்பை பாகவதர்கள் அன்பர்களுக்கு சொல்லும் பாசுரம் –
பரமபதம் போலே அழிவற்ற -அனுபவிக்கத் தக்க ஞானம் –எங்களுக்கு மட்டும் இல்லை நிறைந்த அனுபவம் செய்யும் நித்ய ஸூரிகளுக்கும்-இன்பம் பயக்குமதாய்-யாவரும் மகிழ்ந்து சிரஸ் மேல் வைத்து கொண்டாடும் படியான ஞான வகைகளை காவி மலர்கள் என்கிறது –

ஸ்வா பதேசம்-இத்தால் ஆழ்வார் உடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை கண்டு அனுபவிக்கும் பாகவதர்களுக்கு –தேவு மற்று அறியேன் -என்னும் படி இறே இருப்பது –
அவர்கள் அதை ஆதரிக்கிறது-பகவத் சம்பந்தத்தால் இறே –அதுக்கு அடியான பகவத் விஷயத்தை அநாதரித்து –இவரை ஆதரிக்க-வேண்டும்படி இவருக்கு ஸ்ரீ வைஷ்ணத்வம்  தலை நிரம்பின படியை சொல்கிறது –சரம அவதியை-கண்டு அனுபவித்தவர்கள் பிரதம அவதியில் நில்லார்கள் இறே –
அவன் ஸ்ரீ வைஷ்ணவன் ஆகமாட்டானே

தாத்பர்யம்-ஆழ்வார் உடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீரியில் ஈடுபட்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள்-நாயகி நோக்கில் ஈடுபட்ட தலைவன் பாசுரத்தால் அருளிச் செய்கிறார்-தோழன் இந்த அளவில் இவளின் கண் அழகில் உனக்கு ஈடுபாடு கூடாது என்ன அதற்கு மறுத்து தலைவன் பேசுகிறான்-செங்கழு நீர் போல் குளிர்ந்து மணமுடைய-கண் -ஆழ்வாரது ஞானம் –இத்தைக் கொண்டே-எனக்கு பிராண தாரகம் போல் நல் ஜீவனாய் -உள்ளதே-ஸ்ரீ வைகுண்ட திவ்ய நகர் போல் அபரிச்சின்ன போக்யம் உள்ள கண்கள் இவற்றில் ஈடுபட்டது நான் மட்டும் அல்ல–நித்ய ஸூரிகளும் ––அன்ன பானாதிகளை விட்டு சம்சாரம் த்யாஜ்யம் ஸ்ரீயப்பதியே உத்தேச்யம் என்று இருக்கும் மஹா யோகிகளுக்கும் இக்கண்ணைக் கண்டதும் வேறே ஒன்றில் கண் வைக்க இயலாதே இந்தக் கண்ணை நித்தியமாக அனுபவிக்கப் பெறாத பாக்யம் இழந்தேன் என்று வருந்துவதாகச் செல்லும் பாசுரம் –

5-8-ஆரா அமுதே! ப்ரவேஸம்

ஸ்ரீ நாதமுனிகள் திருவவதாரம் -823–ஸ்ரீ கீதாச்சார்யன் தானே மனுவுக்கு அருளிச் செய்ததை மீண்டும் வெளியிட்டால் போலே அன்றோ –
திராவிட ஸ்ருதி தர்சகாய நம-திரு நாமம் ஸ்ரீ ஆராவமுத ஆழ்வாருக்கு -அகதிகளுக்கு ஒரே சரண் அன்றோ இவன் –
மகர சங்கராந்தி–ஸ்ரீ கோமள வல்லித் தாயார் – பொற்றாமரை -தேரோடு இற ங்கி திருக் கல்யாணம் –
ஸ்ரீ ஆராவமுத ஆழ்வார் -ஸ்ரீ திரு மழிசை பிரான்
ஆத்மாவுக்கு ஸ்வரூபம் அழியாமல் இருக்க ஆராவமுதம் -சரீரம் அழியாமல் இருக்கவே அமுதம் -உப்புச் சாறு –

ஸ்ரீ சிரீவரமங்கல நகரிலே எழுந்தருளியிருக்கின்ற வானமாமலை திருவடிகளிலே, வேர் அற்ற மரம் போலே வீழ்ந்து
அநந்ய கதியாக-வேறு கதி இல்லாதவராய்க் கொண்டு சரணம் புக்கார்;
இவர் அப்படிப் பெரிய ஆர்த்தியோடே சரணம் புகச் செய்தேயும் வந்து முகங்காட்டாதிருக்க;
கடலில் அமிழ்ந்துவார் அங்கே ஒரு மிதப்புப் பெற்றுத் தரிக்குமாறு போலே,
“இவ்வளவிலும் ‘வேறு ஒன்றாலே பேறு’ என்றிருத்தல்,-ஆகிஞ்சன்யம் கீழே –
மற்றொருவர் வாசலிலே சென்று கூப்பிடுதல் செய்தல் -அநந்ய கதித்வம் இதில் –
என்னும் மயக்கத்தைத் தவிர்த்தானே அன்றோ” என்று கொண்டு தரித்தார்;
தரித்த இது தான் திருக் குடந்தை யளவும் கால் நடை தந்து போகைக்கு உடலாயிற்று.

“ஆறு எனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” என்றதனைக் கடாக்ஷித்து,
‘இவ்வளவிலும்’ என்று தொடங்கி அருளிச் செய்கிறார்.
இங்கே, ‘வேறு ஒன்றாலே பேறு என்றிருத்தல், மற்றொருவர் வாசலிலே சென்று கூப்பிடுதல் செய்தல்’ என்றிருக்கையாலே,
“ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” என்பதற்கு, மேல் அருளிச் செய்த மூன்று யோசனைகளையும் தவிர,
(உபாயம் ப்ராப்யம் -க்ருஹம் –
இரண்டுமே உபாயம்
சபதம் இட்டு சொன்னது -மூன்றும் )
இன்னமும் ஒரு யோசனை உண்டு என்று தோற்றுகிறது. அதாவது,
எனக்கு உன் பாதமே உபாயமாகவும், ரக்ஷகமாகவும் தந்தாய் என்பது.
“நின் பாதமே ஆறாக” என்கையாலே வேறு ரக்ஷகங்களை நீக்குகிறது;
“நின் பாதமே சரணாக” என்கையாலே வேறு உபாயங்களை நீக்குகிறது;
ஆக, “ஆறு” என்றதனால், ஆகிஞ்சந்யமும், “சரண்” என்கையாலே, அநந்யகதித்வமும் போதரும்.
ஆகிஞ்சந்யமாவது, வேறு உபாயம் இன்மை. அநந்யகதித்வமாவது, வேறு இரக்ஷகரில்லாமை.

தரித்த இது தான் திருக் குடந்தையளவும் கால்நடை தந்து போகைக்கு உடலாயிற்று.
என் தான்? இங்கு, தம் விருப்பம் கிட்டா தொழியவும் அங்கு ஏறப் போக வேண்டுவான் என்? என்னில்,
வஸ்து ஐக்கியம் உண்டே -பிரபத்தி ஒரு தடவை தானே பண்ண வேண்டும் -விசுவாசம் குலையாதோ என்னில் –
‘ஒரு கால் சரணாகதி செய்தோம், அது பலித்தது இல்லை’ என்னா,
நாஸ்திக புத்தியாலே விசுவாசம் குலைந்து ருசியும் நெகிழுமவரன்றே;
“அடியார்களுக்காக எழுந்தருளி யிருக்கிறவன் நம் காரியம் செய்து தலைக் கட்டாமை இல்லை,
‘இன்ன இடங்களிலே செய்யக் கடவோம்’ என்று அறுதி யிடப்பட்டதா யிருக்குமே அன்றோ,
ஆன பின்பு, இங்குச் செய்யப் பார்த்திலனாகில் மற்றோர் இடத்தில் செய்கிறான்;
(ராஜா ஆசன பேதத்தாலே கார்யம் செய்யுமா போல் )
ஸ்ரீ ரெங்கம் போன்ற இடங்களில் சரண் அடைந்த கலியன் திருக் குருங்குடியிலே பேறு பெற்றாரே –

இனித் தான், ஸ்ரீ பரதாழ்வான் ஸ்ரீ பெருமாளை மீட்டுக் கொண்டு வந்து திருமுடி சூட்ட வேண்டும்’ என்று பாரித்துக் கொண்டு செல்ல.
‘பதினான்கு ஆண்டும் கழித்தல்லது மீளோம்’ என்ற ஸ்வதந்திரனே அன்றோ;
ஆகையாலே, நமக்கு நான்கு நாள் தாழ்த்ததே யாகிலும் நம் காரியம் செய்யாமை இல்லை” என்று பார்த்து,
ஸ்ரீ திருக் குடந்தையிலே சென்று புகவே நாம் விரும்பினவை அனைத்தும் கிட்டும்,
நமக்கு ஒரு குறையும் இல்லை’ என்று ஸ்ரீ திருக் குடந்தையை அடைந்தார்.

அவ்வாறு அடைய, ஸ்ரீ பரதாழ்வான் ‘இராச்சியத்துக்கு நிமித்தமானவனானேன்’ என்றதாலே ஒரு புண்பாடும்,
தாயைக் கொண்டு இராச்சியத்தை வாங்கிப் பெருமாளைக் காடேறப் போகவிட்டான்’ என்று நாட்டார் சீறுபாறு என்றிருப்பார்கள்”
என்றத்தாலே வந்ததொரு அச்சத்தையுமுடையவனாய்க் கொண்டு;
(ஆழ்வார் ப்ரவ்ருத்திகளை உபாயாந்தரம் என்று சங்கை கொள்வானோ என்ற புண்பாடும்
அன்னை ஊரார் என் சொல்வார் என்ற பயமும்
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என்று சொல்லிக் கொள்பவர் அன்றோ ஆழ்வாரும் )
நான் திருவடிகளிலே சென்று கிட்டினால்,
ஏபிஸ்ச ஸசிவை: ஸார்த்தம் ஸிரஸா யாசிதோ மயா
பிராது: ஸிஷ்யஸ்ய தாஸஸ்ய ப்ரஸாதம் கர்துமர்ஹஸி”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 101 : 12.
உடன் பிறந்தவன் அல்லனோ! சிஷ்யன் அல்லனோ! தாசன் அல்லனோ!
என் பக்கல் மலர்ந்த முகத்தராய்த் திரு அருள் செய்யாதொழிவரோ! என்று பார்த்து;

அம்பு எய்வார் படை திரட்டிக் கொண்டு போமாறு போல, திரு வயோத்தியிலுள்ளாரில் மரங்கள் அகப்பட ஆர்த்தியில்
தன்னில் குறைந்த பொருள்கள் இல்லை அன்றே, நம் ஆர்த்தி கண்டு மீண்டிலராகிலும் ஆர்த்தர் பலரையும் கண்டால்
மீளாமை இல்லை என்று பார்த்து “இந்த மந்திரிமார்களோடுங்கூட என்னால் தலையால் வணங்கி யாசிக்கப்பட்ட தேவரீர்,
பின் பிறந்தவனும் சிஷ்யனும் தாசனுமான அடியேனுக்குத் திருவருள செய்ய வேண்டும்” என்கிறபடியே,
இவன் செல்ல;

ஸ்ரீ பெருமாளும் “இராச்சிய தந்திரங்களில் குறைவு படாமல் நடத்தா நின்றாயே?
காரியங்கள் செய்யுமிடத்தில் மந்திரிகளோடு கூடிச் செய்யா நின்றாயே? என்பன போலே
இவனுக்கு இடம் அற வார்த்தைகள் கேட்டாற்போலே;

இவர் அடைந்த இடத்தில் திருக் கண்களை அலர விழித்துக் குளிர நோக்கி யருளுதல்,
திறந்து ஒரு வார்த்தை அருளிச் செய்தல், அணைத்தல் செய்யக் கண்டிலர்.
“அந்த ஸ்ரீ கிருஷ்ணன், என்னை அக்ரூரனே! என்று அருளிச் செய்வர்” என்றாற்போலே
பகைவன் சோறு உண்டு வளர்ந்தவன் மனோ ரதம் பெற்றானே அன்றோ;
(அக்ரூரரும் யாதவ வம்சம் )
அப்படியே தம்மையும் கிட்ட வந்து அணைக்கப் பெறாமையாலே மிகவும் துக்கித்தவராய்,
இனிமையாலும் ஈடுபட்டு, அழகு முதலாயினவற்றாலும் போர நொந்து,
(ஆரா அமுதம்-போக்யதை -செந்தாமரைக் கண்ணன் -ஸுந்தர்யம்
உனக்கு ஆட்பட்டும் இன்னும் உழல்வேனோ -போர நொந்து )
பால் குடிக்கும் குழந்தை தாய் பக்கலிலே கிட்ட முகம் பெறா விட்டால்
அலமந்து நோவு படுமாறு போலே, அவன் சந்நிதியிலே தளர்ந்து கிடந்து கூப்பிட்டு,
இன்னம் எத்தனைத் திரு வாசல் தட்டித் திரியக் கடவேன் என்னும் ஆர்த்தியோடே தலைக் கட்டுகிறார்.
(அநந்ய கதி ஞானம் உடையவர் அன்றோ -இவன் நித்ய சந்நிதி உள்ள வேறே திவ்ய தேசங்களைச் சொன்னவாறு )

எட்டாம் திருவாய் மொழியில் கீழ் -ஸ்ரீ வானமா மலை திருவடிகளில் அனுபவத்தை அபேக்ஷித்து அவன் தம் திருவடிகளில்
உபாய பாவத்தையும் பிரகாசிப்பிக்கக் கண்டு ஸந்துஷ்டாராய் பின்பும் அனுபவம் சித்திக்கக் காணாமையாலே அவசன்னரான இவருக்கு
ஆராவமுத ஆழ்வார் தம் வடிவு அழகை பிரகாசிப்பிக்க -அங்கே தம் அபிமதம் தலைக் கட்டிக் கொள்ளலாம் என்று நினைத்து
ஆராவமுதாழ்வாருடைய நிருபாதிக சம்பந்தத்தையும்
சம்பந்த கார்யமான அவதார உஜ்ஜ்வல்யத்தையம்
அவரை ஒழியத் தம்மை அந்நிய நிரபேஷராக்கின படியையும்
அவருடைய அபரிச்சின்ன மஹாத்ம்யத்தையும்
மஹாத்ம்ய ப்ரகாசகமான புண்டரீகாக்ஷத்வத்தையும்
நித்ய ஸூரி ஸேவ்யமான நிரதிசய போக்யத்தையும்
போக்யதா பிரகாசகமான விக்ரஹ வை லக்ஷண்யத்தையும்
விபரீதமே பலிக்கிலும் விடாதபடியான தம்முடைய அநந்ய கதித்வத்தை பிரகாசிப்பித்த படியையும்
அனுமதியையும் பிறப்பித்து அனுபவிப்பிக்கும் ஆகாரத்தையும்
ஆந்திர அனுபவ விஷயமான அதிசயித சாரஸ்யத்தையும்
அனுசந்தித்து -ஏவம் பிரகார விசிஷ்டரானவர் ஆலோக அலாபாதிகளாலே நம்மை அனுபவித்திலரே என்று
ஸூத்தி சாஷாத்கார ஸந்நிஹிதரான அவர் தம்மையே நோக்கி அத்யந்தம் ஆர்த்தராய்க் கூப்பிட்டு
எல்லா அவஸ்தையிலும் முன்பு பிரகாசிப்பித்த திருவடிகளே யல்லது உபாயம் இல்லை என்று பிரதிபத்தி பண்ணித் தலைக் கட்டுகிறார் –

ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே
–5-8-1-

முற்படக் காட்சியாய், அதன் பின்னர் அணுகி, பின்னர் ஸ்பரிசமாய், இப்படியே அன்றோ அநுபவப் பிரகாரங்கள் இருக்கின்றன;-அத்துணைக் கிரமங்களைப் பார்த்திருக்க ஒண்ணாதபடி-ஆரா அமுதே--சர்வாதிகாரமுமாய், எப்பொழுதும் உண்ணக் கூடியதாய், பிரஹ்மசரியம் முதலான வற்றினின்றும் நழுவுதலால் வரும் குற்றங்களையும் தானே போக்கக் கூடியதாயிருக்கும்.-தான் தன்னை அநுபவிக்கும் போதும் கூட்டுத் தேட வேண்டும்படி யாயிற்று ஆராமை இருக்கும்படி என்பதனைச் சொல்லியவாறாம்.-ஆரா அமுதே – இத் திருவாய்மொழியில் இவர்க்கு உண்டான ஆற்றாமைக்கெல்லாம் வித்து இச் சொல்லே ஆயிற்று.

வட தேசத்திலே லோக சாரங்க மஹாமுனிகள் வசித்துக்கொண்டிருக்க, இங்கேயுள்ள ஒருவன் அங்கு ஏறச்செல்ல, ‘பிள்ளாய்! தென்தேசத்தில் விசேஷம் என்?’ என்று கேட்க, ‘திருவாய்மொழி என்ற ஒரு பிரபந்தம் அவதரிக்க, அதனைச் சிஷ்டர்கள் மேற்கொண்டு போரக் கொண்டாடிக் கொடு போகா நின்றார்கள்’ என்ன,
அதிலே உனக்குப் போவது ஒரு பாசுரத்தைச் சொல்லிக் காணாய்’ என்ன,‘“ஆராவமுதே’” என்கிற இத்துணையே எனக்கும் போம்” என்ன,
நாராயணன் முதலான நாமங்கள் கிடக்க, இங்ஙனேயும் ஒரு பெயர் உண்டாவதே’ என்று அதனைக் காண மிக்க ஆவலுடையவராய், இச்சொல் நடையாடுகிற தேசத்து ஏறப்போவோம்’ என்று அப்பொழுதே புறப்பட்டுப் போந்தார்.

அடியேன் –-மயர்வு அற மதிநலம் அருளப் பெற்ற ஸ்வரூபத்தால் சொல்லுகிறார் அல்லர்,
இனிமைக்குத் தோற்றுப் புற்கவ்விச் சொல்லுகிறார்.-இளைய பெருமாள் -“பரவாநஸ்மி – அடியவன் ஆகிறேன்” என்றவர் “அவர் குணங்களால் கைங்கர்யம் செய்து கொண்டிருக்கிறேன்” என்றாற்போலே குணங்கள் தானே ஈர்க்கும்-

நான்’ என்று இருக்கக்கூடிய இவர் தாம் ‘அடியேன்’ என்கிறது, விஷயத்தினுடைய இனிமையின் மிகுதியே அன்றோ;-அப்படியே சரீரமும் விஷயத்திற்கு வசப்பட்டதாய் அழிந்தபடி.-சேஷத்வமே உருவமான ஆத்மாவைத் தன் வழியே இழுக்கை தவிர்ந்து
அதன் வழியே தான் ஒழுகும்படியாயிற்று விஷயத்தினுடைய இனிமை. –
ஞானியை விக்ரகத்துடன் ஆராதிக்கும் -திருமேனி ஆத்மா தத்வம் ஆனதே –சேதனம் என்றும் அசேதனம் என்றும் கூறப்படுகின்ற வேற்றுமை அற அழிக்கவல்ல உன் பக்கலிலே அன்புக்கு இருப்பிடமாகை தவிர்ந்து அன்பு தான் ஒரு வடிவு கொண்டாற்போலே இரா நின்றது என்பார் ‘நின்பால் அன்பாயே’ என்கிறார்.–கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் அன்றோ ‘உருக்குகின்ற’-அழிக்கிறவன் ‘ஆபரணங்கள்’ என்று பாராதே உருக்கி அழிக்குமாறு போலே காணும் இவனும் உருக்கி அழிக்கிறபடி.-தேசமான அணிகலனும் இவர் கை கூப்புச் செய்கையே அன்றோ.

நெடுமாலே’-எதிர்த் தலையில் அழிவு கண்ட பின்பே அன்றோ இத் தலையில் அழிவு-அவனுடைய அழிவு சொல்லும் போது இனி இவ்வடைவில் சொற்களைக் கொண்டு சொல்ல ஒண்ணாது.-மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவன்-அவனுடைய பெருமையும் இவரை அழிக்கைக்குக் காரணமாம்-பரத்வமும் நீர்மையும் உருக வைக்கிறது-என்னில் முன்னம் பாரித்து தான் முற்றப் பருகினான் –-

சீர் ஆல் செந்நெல் கவரி வீசும் – மிக்க கனத்தை யுடைத்தான செந்நெற் கதிர்களானவை திருக் கண் வளர்ந்தருளுகிற அழகைக் கண்டு-கைங்கர்யம் செய்வாரைப் போலே அசையா நிற்கும்.-சீர் – கனமும், அழகும்-ஆராவமுதாழ்வாருக்கு அமுதுபடி யாகிற சீர்மை-எம்பொழுதும் செந்நெற்கள் உள்ளன என்பார் ‘வீசும்’ என நிகழ் காலத்தாற் கூறுகிறார்.–நித்ய ஸூரிகளாய் வந்த சீர்மை

கிடந்த கிடைக்கு ஆலத்தி வழிக்க வேண்டும்படி இருத்தலின் ‘ஏரார் கோலம் திகழ’ என்கிறார்.-‘இவன் உணரில் செய்வது என்’ என்றுவயிறு பிடிக்க வேண்டி இருக்கை.
கிடந்தாய் கண்டேன் –-“சுகமாகத் தூங்குகிறவன்” என்கிறபடியே, கிடை அழகினைக் கண்களாலே காணப்பெற்றேன்,-நினைத்த பரிமாற்றம் பெற்றிலேன். என்றது, எழுந்திருத்தல், இருத்தல், உலாவுதல், ‘என் செய்தாய்’ என்று வினவுதல், அணைத்தல் செய்யப் பெற்றிலேன் என்றபடி

எம்மானே--இது நம்மது’ என்று இரா தொழியப் பெற்றேனாகில் நான் ஆறி இருக்கலாயிற்றே.-சம்பந்தத்தைக் கொண்டு என்னை இப்படி நலியலாமோ –
வடிவினைப் போன்றே சம்பந்தமும் என்னை நலியா நின்றது -ஸ்தநந்த்ய பிரஜை தாய் அறிந்தால் முலை முலை என்னுமா போலே சம்பந்த ஞானம் அன்றோ கூப்பிடப் பண்ணுகிறது –என்கிறார் –

—————

எம்மானே! என் வெள்ளை மூர்த்தி! என்னை ஆள்வானே
எம்மா உருவும் வேண்டு மாற்றால் ஆவாய்! எழிலேறே!
செம்மா கமலம் செழுநீர் மிசைக் கண் மலரும் திருக் குடந்தை
அம்மா மலர்க் கண் வளர்கின்றானே! என் நான் செய்கேனே?
–5-8-2-

எம்மானே! என் நான் செய்கேன் –-உடைமையோ! உடையவனோ உடைமையை நிர்வஹிப்பார்.-நீயே உன் காரியத்தைச் செய்து தலைக் கட்டிக் கொள்’ என்கைக்கு வெறும் நானேயாய் இருந்தேனோ.-பரதந்த்ரன் அடியேன் அன்றோ -ஸ்வா தந்த்ரன் அல்லன்-சுத்த ஸ்வரூபனாகையாலே தன் படிகளில் ஒன்றும் குறையாதபடி எனக்குத் தன் பேறாகத் தானே காட்டக் கண்டேன்.- சிறிது மயர்வு கிடக்க நீ அருளினாயாகில் நான் ஆறி இருக்கலாயிற்றே.-

என்னை ஆள்வானே –காட்டுகிறபோது தெரியக் காட்டி, பின்னர் என் வழியே யாக்கி என்னைக் கை விட்டாயோ. என்றது,-அஞ்சிறைமடநாராய்”, “மாசறு சோதி” தொடக்கமான திருவாய்மொழிகளிலுண்டான வியசனங்களையும் போக்கி, குண ஞானத்தாலே தம்மைத் தரிப்பித்துக்கொண்டு போந்த படியைத் தெரிவித்தபடி.

எம் மா உருவும் ஆவாய் –-எனக்காகவும் அடியார்கட்காகவும் நீ படும்பாடு அறிவுதியே-எவ்வகையாலும் விலக்ஷணமான விக்கிரஹங்களை மேற்கொள்ளுகின்றவனே!-பிரகிருதி சம்பந்தமில்லாத தெய்வத்தன்மை பொருந்திய -அப்ராக்ருத திவ்ய சமஸ்தானம்-திருமேனியாக இருக்கை.-வேண்டுமாற்றால் – “தனக்கு வேண்டு உருக்கொண்டு” என்கிறபடியே, இச்சையாலே என்னுதல்.-அடியார்கள் வேண்டுமாற்றால் என்னுதல்;
“தமருகந்ததெவ்வுருவம் அவ்வுருவம் தானே” -முதல் திருவந். 44.-என்னக்கடவதன்றோ.
அன்றிக்கே,-‘எ மா உருவும் ஆவாய்’ என்று கொண்டு-“எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய்” என்கிறபடியே, அடியார்களைக் காக்கும் பொருட்டு நீ கொள்ளாத வடிவு உண்டோ என்னுதல்.
எல்லா வடிவங்களும் அவன் கொண்டவையாகையாலே சிலாக்கியமாயிருக்கிறபடி;

கர்மம் அடியாக இவன் பிறக்குமாறு போலே அன்றோ அநுக்கிரஹம் அடியாக அவன் பிறக்கும்படி என்பார்-“வேண்டுமாற்றால் ஆவாய்” என்கிறார்.
இருவர்க்கும் பிறவி ஒக்கும். இவனுக்குக் கர்மங்கள் அழியப் பிறவி நீங்கும்,
இவன் கர்மங்கள் அவன் காலிலே குனியப் போம்; அவனுக்கு நித்தியமாகச் செல்லா நிற்கும்.-இனி, அவனுக்குக் கர்மம் என்னப் பார்க்கிறது, அநுக்கிரஹத்தை அன்றோ, அதுதானும் நித்தியமே அன்றோ அவனுக்கு.-இவனுக்கு இவன் தன் அளவிலே பிறக்க அமையும், அவனுக்கு எல்லார்க்குமாகப் பிறக்க வேணுமே.-இவனுக்குக் கர்மங்காரணமாக வந்ததாகையாலே தன் பொருட்டேயாயிருக்கும், அவனுக்கு அநுக்கிரஹம் காரணமாக வந்ததாகையாலே பிறர் பொருட்டேயாயிருக்கும்.-எழில் ஏறே ––பண்டு இல்லாத எழிலும் உண்டாயிருக்கை.-கர்மத்தால் பிறக்கில் அன்றோ நிறக்கேடாவது. பல பிறப்பாய் ஒளி வரும் முழுநலமே அன்றோ.பட்டி மேய்ந்த ஓர் காரேறு – என்கிறபடியே, ‘பிறக்கப் பெற்றோம்’ என்னும் மேனாணிப்பை யுடையவனாயிருக்கும்.-ஆத்மாநம் மாநுஷம் மந்யே ராமம் தசரதாத்மஜம்-அஹம்வோ பாந்தவோ ஜாதோ-சூழ்த்துக் – ஆணையிட்டுக் கொடுக்கும்படி.

என் நான் செய்கேனே –-இவை இரண்டும் மலர்ந்தால் அல்லது தரியாதிருக்கிற நான் என் செய்கேன்? திருக் குடந்தையிலே தாமரைகள் அலர்ந்தால் தேனைக் குடிக்கக் கூடிய வண்டுகள் தேனைக் குடித்துக் களியா நின்றன,
இத் தாமரைகள் அலர்ந்தால் தேனைக் குடிக்கக் கூடிய வண்டு இங்ஙனே பட்டினி கிடந்து போமித்தனையோ! –-தெய்வ வண்டு அன்றோ
‘இக் கூப்பீடு உருவச் செல்லும்’ என்று இருக்கிறாயோ, சென்றற்றது கண்டாய்.
‘இவை ஒழிய -திருக் கண்கள் கடாஷம் ஒழிய -மது பானம் செய்யோம்’ என்கை யன்றோ
இவர்க்கு இங்ஙன் பட வேண்டுகிறது.
இனி, இவை அலர்தலாவது, விசேஷ கடாக்ஷம் பண்ணுகை காணும்.-அவன் கண் விழியாத போது இவர் கண் விழிக்க மாட்டாரே.

—————–

என்னான்  செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3-

என்மேலே விட்டிருக்கிறாயோ? பிறர் மேலே விட்டிருக்கிறாயோ? நீயே செய்யக் கடவதாக நினைத்திருக்கிறாயோ?-என் நான் செய்கேன்’ என்றதனால் ‘நான் செய்வது எது’ என்று கேட்கிறார் அல்லர்,-என் நான் செய்கேன்” என்றது, அநுவாதமன்று, வினாவுமன்று;
க்ஷேபோக்தியாய், அஜ்ஞனாய் அசக்தனான நான் என்ன நான் செய்து தலைக்கட்டுவதாக
நினைத்திருக்கின்றவற்றுக்கும் எனக்கும் என்ன சேர்த்தி உண்டு என்கிறார்.-“என் நான் செய்கேன்’-என்றவிடத்தில் இம் மூன்றும் உண்டு” என்ற ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூக்தி 

‘யாரே களை கண்’ என்றதனால்,-அமிழ்ந்துகிறார் அமிழ்ந்துகிறாரை எடுக்கவோ?
ஒருவருக்கு ஒருவர் உணர்த்திக்கொள்வதற்கும் ஆள் அல்லாதவர்கள்-என் காரியம் செய்யவோ? -நெறி காட்டி நீக்குதியோ

என் நான்செய்கேன் யாரே களைகண் என்னை என் செய்கின்றாய் –-என்னை அறியாயோ!
பிறரை அறியாயோ!-உன்னை அறியாயோ-என்னை நானாகவன்றோ புத்தி பண்ணி இருக்கிறது.-ஆக, “என் நான் செய்கேன், யாரே களைகண், என்னை என் செய்கின்றாய்” என்ற இம் மூன்றாலும், உன் அபேக்ஷை ஒழிய, முகங்காட்டாமைக்கு வேறு காரணம் இல்லை- இம் மூன்றாலும், ஆகிஞ்சந்ய அநந்ய கதித்வங்களும், அவனே ரக்ஷகன் என்னுமதுவும் சொல்லப் படுகின்றன 

உபாயாந்தரம் வேண்டாம் -என் நலம் நீ தேடுவதே உக்தம் –-உபாயம் தன்னைப் பொறுக்கும் -உபாயாந்தரம் இரண்டையும் பொறுக்கும் -பிரபத்தி எதையும் பொறாதே –‘யாவையாலும்’ என்னாமல், ‘யாவராலும்’ என்கிறது உபாய பாவம் ஒரு சேதனனாலே என்றிருக்கையாலே. பெறுவது உன்னையே யாகிலும் உன்னாலே பெறுமன்று வேண்டுவன்,-என்னாலும் பிறராலும் பெறும் உன்னையும் வேண்டேன்-காலன் கொண்டு மோதிரம் இடுமாறு போலே
ஸ்வரூப விரோதியானது எனக்கு வேண்டாம்.

‘உன்னால் அல்லால்’ என்கிற இதனை, உபேய விஷயமாக்கி,-‘உன்னை ஒழியமற்றென்றால் எனக்கு ஒருகுறை இல்லை’ என்று சொல்லுவாருமுளர்.

கன் ஆர் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய்–இவருடைய உபாயம் அரண் செய்து கிடக்கிறபடி. ‘அவனே உபாயமும் உபேயமும்’ என்று அறுதியிட்டவர்கள்-அத்தலையில் உண்டான பரிவாலே அவனைக் காக்கை பணியே அன்றோ.

உன தாள் பிடித்தே செலக் காணே--உன் திருவடிகளையே பெற்றுச் செல்லும்படி பார்த்தருள வேண்டும்.-காற்கூறும் விடாதபடி பார்த்தருள வேண்டும்.‘ஒன்றும் குறை வேண்டேன்’ என்ற பின்னர், வந்து குறை நிரப்பக் கண்டிலர்;
இனி அநுபவம் பெற்றபோது பெற, ‘உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்’ என்கிற இந்த உறுதிகுலையாதபடி பார்த்தருள வேண்டும் என்கிறார்.
அடிவிடில் உறுதி குலையுமே, அடியே பிடித்து ஜீவித்தவர் அதனை விடாரே இப்போதாக. அத்யவசாயம் இது,-ருசியில் வந்தால் பரபக்தியை யுடையவர், விளம்பத்துக்குக் காரணம் என்? என்னில்,-பக்தி விபாகத்துக்காகவும், இவருடைய பிரேமம் வழிந்த சொல்லால் நாட்டினைத் திருத்துகைக்காகவும்.-

————————-

செலக் காண்கிற்பார் காணு மளவும் செல்லும் கீர்த்தியாய்!
உலப்பிலானே! எல்லா உலகு முடைய ஒருமூர்த்தி!
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான் நான்
அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே.
–5-8-4-

எல்லாவுலகுமுடைய ஒரு மூர்த்தி” என்பதற்கு, மூன்று வகையாகப் பொருள் -“மூர்த்தி” என்பது விக்கிரஹமாய், அதனாலே அழகினை விவக்ஷித்து, வடிவழகைக் காட்டி எல்லா உயிர்களையும் காற்கீழே இட்டுக் கொள்ளக் கூடியவனே!-அழகைக் கொண்டே நாதன் ஆனவன் –மூர்த்தி’ என்ற சொல்லானது, விக்கிரஹத்துக்கும் பெயராய், ஐஸ்வரியத்துக்கும் பெயராய் இருக்கும்.-செல்வந்தர் என்றபடி-அப்போது, இவனே எல்லா உலகங்களுக்கும் சேஷி-ர்வாஹகனாய் –ஒப்பற்றவனான –சர்வேச்வரன்

நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்--நீ ஸ்வரூபங்களால் வேறுபட்டவனாய்க் கொண்டு அங்கே இருந்தாயாகில் நான் ஆறி இரேனோ,-உன்னால் அல்லது செல்லாதாருடைய தேசத்தை விரும்பிப் படுகாடு கிடவா நின்றாய்,-கிரமப் பிராப்தி பற்றாதபடி அன்பு செலுத்தியிருப்பவர்களாதலின் ‘நலத்தால் மிக்கார்’ என்கிறது.-உன்னைக் காண்பான் நான்-
ஸ்ரீ வைகுண்டம் கலவிருக்கையாக இருக்க, அடியார்களை விடமாட்டாதே திருக் குடந்தையில் திருக் கண் வளர்ந்தருளுகிற உன்னை,-மிக்க காதலையுடைய நான், அத்தலை இத் தலையாய்க் காண ஆசைப்பட்டு அலமாவா நின்றேன்.-உன்னைக் காண்பான் நான்-
காண்கிறவன் நான் அன்றோ, காண்கிறது உன்னை அன்றோ; ஆன பின்னர், எங்ஙனே ஆறியிருக்கும்படி.-உன்னை –-மேலே கூறிய –ஆராவமுதே –மூர்த்தி –இரண்டு இனிமையும் உண்டே –

உன்னை’ என்னா நிற்கச் செய்தே ‘ஆகாசத்தை நோக்கி’ என்பான் என்? என்னில்,
‘அலப்பாய்’ என்றாரே அன்றோ, –கலக்கத்தின் காரியம் இருக்கிறபடி.
விஷயம் அண்மையில் இருக்கச்செய்தே ஆகாசத்தைப் பார்க்கிறது. நினைத்த பரிமாற்றம் பெறாமையாலே.-ஸ்ரீகஜேந்திராழ்வானுக்கு வந்து தோற்றினாற் போலே தம் தசையைப் பார்த்துத் தோற்றுகிறானோ’ என்று பார்த்து.-இனிமையையுடைய உன்னை-ஆகாசத்தை நோக்கி என்பதற்கு, என்னுடைய நிராலம்பநதையைப் பார்த்து” என்று ஆண்டான் அருளிச் செய்வர்.
அன்றிக்கே,-வயோதிகரான தசரத சக்கரவர்த்தி அப்படியே வெம்மை தோன்ற பெருமூச்சு விட்டு ஆகாசத்தை நோக்கிய கண்களை யுடையவராய்த் துக்கத்தால் பீடிக்கப்பட்டவன் போலக் கதறினார்” என்று கொண்டு, கண்கள் இலக்கில் தைக்க மாட்டாதபடியாயிற்றுச் சென்றற்றபடி என்னுதல்
“ததைவ உஷ்ணம் விநிஸ்வஸ்ய விருத்தோ தசரதோ ந்ருப: விலலாப ஆர்த்தவத் துக்காத் ககநாஸக்தலோசந:”-ஸ்ரீராமா. அயோத். 13 : 16.-இது, கைகேசின் வார்த்தையைக் கேட்ட தசரதனது துக்கம்.

அழுவன் தொழுவன்-உபாசகர்கள் செய்யுமதனையும் செய்யா நின்றேன்,-பிரபந்நர்கள் செய்யுமதனையும் செய்யா நின்றேன்.-சபலர் செய்யுமதனையும் செய்யா நின்றேன்,-விரக்தர் செய்யுமதனையும் செய்யா நின்றேன்.

—————-

அழுவன் தொழுவன் ஆடிக் காண்பான் பாடி அலற்றுவன்
தழுவல் வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன்
செழு வொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்! செந்தாமரைக் கண்ணா!
தொழுவனேனை உனதாள் சேரும் வகையே சூழ்கண்டாய்.
–5-8-5-

அழுவன் –-குழந்தைகள் செய்வதனையும் செய்யா நின்றேன்.-“மற்றவள் தன் அருள் நினைந்து அழுங்குழவியதுவே போன்றிருந்தேன்” என்னக் கடவதன்றோ-.தொழுவன் –
வேதாந்த ஞானமுடையார் செய்வதனையும் செய்யா நின்றேன்“அஞ்சலி: பரமா முத்ராஆடிக் காண்பன் – இத்தனை சோறு இடுகிறோம், ஆட வல்லையோ’ என்றால், கலியர் -பசியர்-ஆடுமாறு போலே ஆடியும் பார்ப்பன்.-என் பட்டால் பெறலாம்’ என்று அறியாரே. —–பாடி அலற்றுவன் – காதலால் வழிந்த சொல் பாட்டாய், அது தானும் அடைவு கெடக் கூப்பிடுகை, அலற்றுகை.

தழு வல் வினையால் –-இப்படிப் பட்டாலும் காண ஒண்ணாதே அன்றோ -‘உடன் வந்தியான-வர்த்தியான- வல்வினை.-என்னைத் தழுவி விடாதே நிற்கிற காதலாகிற பிரபலமான பாவத்தாலே.-பக்தியை, பாவம் என்கிறது,வேண்டாததைக் கொடுப்பது பாபம் ஆகையாலே.
வாராயோ என்றார்க்கு-சென்றேன் என் வல் வினையால் –போலே –சத்ருக்னன் அநக போலே –

செந்தாமரைக் கண்ணா
1-கையிலே நிதி உண்டாயிருக்க வறியர்க்கு-ஆர்த்தருக்கு- இடாதாரைப் போலே.
2-வேறு முகத்தாலே -சம்பந்தத்தாலே -என் ஜீவனமாய்க் கிடக்கிறாய் இல்லை,
3-என் ஜீவனம் ஒருமுகம் -ஒரு லஷ்யம்-செய்து கிடக்கிற தன்றோ.

தம்முடைய ஆற்றாமை பேற்றுக்குக் காரணம் அன்றிக்கே, அது பிரகிருதியாய்,-ஸ்வரூபம் – ‘அவனாலே பேறு’ என்று இருக்கிறபடி.-வேறு பிரயோஜனங்களை விரும்பாதார் திறத்தில் காரிய சிந்தையும் அவனதாக இருக்கிறபடியைத் தெரிவித்தபடி.-தேக யாத்ரை கர்மாதீனம் -ஆத்மா யாத்ரை கிருபாதீனம் –த்ருஷ்டம் அத்ருஷ்டம் இரண்டுக்கும் நமக்கு பொறுப்பு இல்லையே-கைங்கர்யத்திலே நாம் கண் வைக்க வேண்டும் –

——————–

களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது
இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே
.–5-8-8-

களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் – நீ உன் காரியத்தைச் செய்யிலும் செய், தவிரிலும் தவிர்வாய், நான் குறைவற்றேன், -ரஷணம்-அவன் கார்யம் தானே“நீயே உபாயமாக எனக்கு ஆவாய்” என்கிற அம்சத்தில் குறையில்லை;-அறிவிப்பே அமையும் –என்னுடைய ரக்ஷணத்துக்காக அன்றோ இக்கிடை-களையாதொழிகைக்குச் சொல்லலாம் கண்ணழிவு உண்டோ?-பரிகரம் இல்லை என்னப் போமோ;-நேமிப்படையாய்-இனிப் படை திரட்ட வேண்டும்’ என்னும் கண்ணழிவு உண்டோ?-தொழுவித்துக் கொள்ளும் கைக்கு பரிகரம் உண்டு -சங்கு சக்கரம் ஏந்தும் கையான் –தொழும் கைக்கு அஞ்சலி பரிகரம் உண்டே-வளைவாய்-உன் கையில் ஆயுதத்துக்கு வாய் இல்லாத இடம் உண்டோ, அது வாய் படைத்த பிரயோஜனம் பெற வேண்டாவோ? ‘’ –மா ஸூ ச சொல்ல வேண்டாமோ

குடந்தைக் கிடந்தாய் மா மாயா – சக்தி வைகல்யம் சொல்ல ஒண்ணாது -ஸூ லபன் அன்று என்ன ஒண்ணாது -ருசியுதபாதகன் அன்று என்ன ஒண்ணாது-திருக் குடந்தையிலே வந்து ஆச்சரியமான அழகோடே திருக்கண் வளர்ந்தருளுகிறது அடியார்களுக்காக அன்றோ. நீ “மாம்” என்றதன் பின் இவ்வருகுள்ள ஏற்றமெல்லாம் பாராய். இதனால், அவதார தசையிலும் அர்ச்சாவதாரம் சுலபம் என்றபடி.-இளையாது உன தாள் ஒருங்கப் பிடித்துப் போத நீ இசை – அபேக்ஷிதம் பெற்றிலேனேயாகிலும், நான் விரும்பியது சித்திக்கும்படி உன் திருவடிகளைப் பற்றின பற்று நெகிழாமற் பண்ணி அருளவேண்டும்.-அநுபவம் கிடையாமையாலே, ‘அதற்கு அடியான உபாய அத்யவசாயமும் குலைகிறதோ’ என்று அஞ்சி, இது குலையாமல் பார்த்தருள வேண்டும் என்கிறார். ஒருங்க – ஒரு படிப்பட.-

———

இசைவித் தென்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே!
அசைவில் அமரர் தலைவர் தலைவா! ஆதிப் பெரு மூர்த்தி!
திசைவில் வீசும் செழுமா மணிகள் சேரும் திருக்குடந்தை
அசைவில் உலகம் பரவக் கிடந்தாய்! காண வாராயே.–
5-8-9-

என்னை இசைவித்து – நெடுநாள் விமுகனாய் நித்திய சம்சாரிகளுக்கும் இவ்வருகாயிருக்கிற என்னை அடிமையிலே இசைவித்து.-இசையாத என்னை இசைவித்த அருமை வேணுமோ இசைந்திருந்த நீ காரியம் செய்கைக்கு.–தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சினை வஞ்சித்து -எதிர் சூழல் புக்கு -ஒருவனை வளைக்க ஊரை வளைப்பாரைப் போலே –-உன் தாள் இணைக்கீழ் இருத்தும் – நித்தியஸூரிகள் அடிமை செய்கின்ற உன் திருவடிகளிலே இருத்தினவனே!-சாக்கியம் கற்றோம் -இத்யாதி -பரகு பரகு என்று திரியாதபடி தன் திருவடிகளிலே விஷயமாம்படி செய்யுமவன் என்கை.
நிழலும் அடிதாறும் ஆனோம்” என்கிறபடியே, மிதி அடியாம்படி ஸ்ரீசடகோபன் ஆக்கி-அவன் இசைவிக்க வேண்டின சம்பந்தம் சொல்லுகிறது.-அசைவு இல் அமரர் தலைவா –குறைதல் விரிதல் இல்லாமல் எப்பொழுதும் ஒரே தன்மைத்தான ஞானத்தை யுடையவர்கள்-ஆதிப் பெரு மூர்த்தி--இவ் வருகுள்ளாருடையவும் சத்தைக்குக் காரணமாக இருப்பவனே!-மூர்த்தி – ஐஸ்வர்யம் உடைய ஸ்வாமி.

அசைவு இல் உலகம் பரவக் கிடந்தாய் – உலகமானது வருத்தம் அற்று அடையும்படி கிடந்தாய்.-வருத்தம் அறுதலாவது, கண்களால் காண முடியாதவனை நாம் எங்கே அடையப் போகிறோம் என்கிற வருத்தம் தீர்தல்.-அன்றிக்கே, அசைவில்லாத உலகமான நித்திய விபூதியிலுள்ள நித்தியசூரிகளும் வந்து அடையும்படி கிடந்தாய் என்னுதல்.
அன்றிக்கே, அசைவுண்டு – இடம் வலம் கொள்ளுகை, அதனைக் கண்டு உலகமானது பரவும் படி கிடந்தாய் என்னுதல்.
ஆக சத்தையை நோக்கி, மேலுள்ளனவற்றை இவர்கள் தாமே நிர்வஹித்துக் கொள்ள இருக்கை அன்றிக்கே,-மேலுள்ளனவற்றையும் தானே செய்வானாக நினைத்து வந்து கிடக்கிறபடியைத் தெரிவித்தபடி
கிடந்தாய் காண வாராய் – திருக்கண் வளர்ந்தருளுகின்ற அழகினைக் கண்டு அநுபவித்தேன், இனி நடையழகு கண்டு நான் வாழும்படி வரவேணும்.
செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை என்பதற்கு, -புருஷ ரத்னங்கள் ––‘ஆராவமுதாழ்வார், திருமழிசைப்பிரான் போல்வார் புருஷ ரத்நங்கள் சேரும் திருக்குடந்தை’ என்று நிர்வஹிப்பர்கள்.-

——————

வாரா அருவாய் வரும் என் மாயா! மாயா மூர்த்தியாய்!
ஆரா வமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்!
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை
ஊராய்! உனக் காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?–
5-8-10-

வாராஅருவாய்--வாராத அருவாய். என்றது, புறத்திலே கண்களாலே கண்டு அநுபவிக்கலாம்படி வாராத அரூபிப் பொருளாய் என்றபடி.-நம் சம்ப்ரதாயம் -அரூபமும் ஒரு வகை ரூபம் தானே -சர்வசக்தன்-அருவாய் வரும் என் மாயா –மறந்து பிழைக்க ஒண்ணாதபடி அகவாயிலே அருவாய்க் கொண்டு பிரகாசிக்கின்ற ஆச்சரியத்தை யுடையவனே!-அரு என்று ஆத்மாவாய், அகவாயிலே தாரகனாய்க்கொண்டு என்றபடி.
மாயா மூர்த்தியாய் – நித்தியமான திவ்விய மங்கள விக்கிரஹத்தை யுடையவனே! 

உன்னை அநுபவிப்பதற்குத் தடையாக வுள்ள கருமங்களைப் போக்குவித்து,
‘அடியேன் ஆவியகமே தித்திப்பாய்’ என்னும்படி புகுர நிறுத்தினவனே!-“தீர்ப்பாரை யாம் இனி” என்று திருவாய்மொழியில் கூறிய வினைகள் தொடக்கமானவற்றைப் போக்கி
என்னை அடிமை கொண்டாய்-திருக்குடந்தை ஊராய் –-என்னை அடிமை கொள்ளுகைக்குத் திருக்குடந்தையிலே வந்து அண்மையில் இருப்பவனே! என்றது,-நான் கிட்டாத அம்சத்துக்கு நீ கிட்ட வந்து கிடக்கிறவனே! என்றபடி.-நீ இருக்கிற பரமபதத்தே நான் கிட்ட வேண்டும்படி யாயிருக்க, நான் இருக்கிற இடத்திலே நீ கிட்ட வந்து கிடக்கிறவனே-பர வ்யூஹ விபவங்களை-வ்யாவர்த்திக்கிறது ––உனக்கு ஆட்பட்டும் – சம்சாரிகளை அநுபவிப்பிக்க வந்து கிடக்கிற உனக்கு ஆட்பட்டும்.-அடியேன் – யாருடைய வஸ்து இங்ஙனே அலமந்து திரிகிறது.-இன்னம் உழல்வேனோ--என்னுடைய முயற்சிகள் எல்லாவற்றையும் உன் திருவடிகளிலே பொகட்டு, நீ செய்து தலைக் கட்டக் கடவையாக நினைத்திருக்கிற நான், இன்னம் எத்தனை திருப்பதிகள் புக்குத் தட்டித் திரியக் கடவேன் –

——————

உழலை என்பில் பேய்ச்சி முலை யூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே.
–5-8-11-

திருக்குழல் ஓசையிற்காட்டிலும் விஞ்சி, கேட்டார் நோவுபடும்படியாக இருக்கிற ஒப்பற்ற
ஆயிரம் திருவாய் மொழியில் இப்பத்தையும், மரங்கள் நின்று மதுதாரைகள் பாய்தல் அன்றோ அங்கு,-மரங்களும் இரங்கும் வகை இங்கு; இனி, நாம் இரங்குகிற இது தன்னேற்றமே அன்றோ இங்குத்தைக்கு;-ஆதலின், ‘குழலின் மலிய’ என்கிறது.

அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன் பாடி அலற்றுவன்” என்பதே அன்றோ இவர் சொன்ன ஆற்றாமையோடே சொல்ல வல்லாரை-இது கற்றாரை எம்பெருமானும் ஸ்ரீவைஷ்ணவர்களும் மேல் விழுந்து இனியராகக் கொள்ளுவர்கள்–மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே.–தங்கள் மௌக்த்யம் தீர்ந்து பாவ வ்ருத்தியுடன் சொல்ல வல்லவர்கள்-மான் போலே இருக்கிற நோக்கையுடைய மதிமுக மடந்தையரான திவ்ய அப்சரஸ் ஸூக்களுக்கு- ப்ரஹ்ம அலங்கார முகத்தாலே கமநீயராம்படி ஆதரிக்கப்படுவர்கள்
மானேய் நோக்கியர்க்குக் காமுகரைப் போலே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஆதரணீயர் என்று த்ருஷ்டாந்த அபிப்ராயமாகவும் சொல்லுவர்–அவர்களுக்குப் போல்’ என்ற ஒரு தொடர் இங்குக் கண்டிலோமே! என்னில், முற்றுவமை என்ற ஒரு இலக்கணம் இருக்கிறபடி.-உவமை புக்க இடத்தே உபமேயமும் வரக்கடவது. ““தாவி வையங்கொண்ட தடந் தாமரைகள்” என்னா நின்றதே அன்றோ.-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -65-கற்றுப் பிணை மலர்க் கண்ணின் குலம் வென்று -நோற்ற நோன்பு -5-7-

March 1, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

இதுவும் அடுத்த பாசுரமும் கிளவித் தலைவனின் பேச்சு-தலைவியின் கண் அழகு ஸ்லாகித்து பேசும் பாசுரம் இது-அடுத்து இதில் இவ்வளவு ஈடு பாடு கூடாது என்று கழன்று பாங்கன் பேச-அத்தை மறுத்துப் பேசுவது -ஆழ்வாரது ஞானத்தின் சீர்மையைச் சொன்னபடி-நல்லார் நவில் குருகூரான் அன்றோஇந்த இரண்டுக்கும் நோற்ற நோன்பிலேன் ஆகிஞ்சன்யம் சொல்லும் -உபாயாந்தர சம்பந்தம் இல்லை -ஆறு எனக்கு நின் பாதமே சரணம் அநந்ய கதித்வம் சொல்லும் ஆராவமுது விவரணம் உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் உனக்கு ஆட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ –பதிகங்களும் அடுத்து அடுத்து உள்ளன –ஆழ்வார் ஞானம் –அவன் திருவடியே சரணம் என்று இருந்தும் நமக்கு உபதேசித்தும் அருளிச் செய்த -பாசுரங்கள் இவை-இதுவே புகல் இப் பாசுரம் -வேறே கிஞ்சித்தும் இல்லை-இத்தை விட்டால் வேறே இல்லை அடுத்த பாசுரம் –ஓரோ கருமம் உற்று -உன்னை விட்டு ஒன்றும் ஆற்றகில்லேன் செய்த வேள்வியர் -அங்கு போல்-காதுடன் உசாவி -போதயந்த பரஸ்பரம் -சாஸ்திரம் கேட்டு ஞானி காதுகள் தானே பேசித்தான் ஞானம் வளரும் –செவி அளவு நீண்டு என்றுமாம் –1-கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று-உள்ள கண்கள்–2-ஒரோ கரும முற்றுப் பயின்று செவியொடு உசாவி -உள்ள கண்கள்–3-உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ் உள்ள கண்கள்–4-உற்றமுறாதும் மிளிர்ந்து உள்ள கண்கள் -யெம்மை உண்கின்றவே -என்றவாறு-

அவதாரிகை தலை மகள் நோக்கி வீடுபட்ட தலைமகன் -அக் கண்கள்  தனக்கு பாதகமானபடியை
பாங்கனுக்குச் சொல்லுகிறான் –தலைவி நோக்கின் வாசி கண்டு தலைவன் குறிப்பறிந்து உரைத்தல் –
ஆழ்வாருடைய ஞான வைபவத்தில் ஈடுபட்ட அன்பர் பாசுரத்தை நாயகியின் நோக்கில் அகப்பட்டு உரைத்த நாயகன் பேச்சாலே அருளிச் செய்கிறார்

இப்படி இவ்வாழ்வாருக்கு பகவத் விஷயத்திலே-எண்ணம் புகுந்து –திரு விருத்தம் -63-என்கிறபடியே
மானஸ அனுபவம் நடக்கிற படியும்-கருக்காய் கடிப்பவர் போல் –திரு விருத்தம் -64-என்று பூர்ண அனுபவம் பெறாமையால் யுண்டான அதிருப்தி நடக்கிற படியையும் கண்டு-(உற்றும் -எண்ணம் புகுந்தது படி -மானஸ அனுபவம்-உறாததும் -கனி இருக்க காய் -உண்ட பூர்ண பாஹ்ய அனுபவம் கிடைக்காமல்)இந்த உபய ஆகார விசிஷ்டமான இவருடைய ஞானத்திலே (கண்ணிலே ) அன்பர் அகப்பட்டு உரைத்த பாசுரத்தை–தலைவி நோக்கின் வாசி கண்டு தலைவன் குறித்து ( விரித்து )யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-அவதாரிகை-தலைமகள் நோக்கிலே ஈடுபட்ட தலைமகன் ஆக்கங்கள் தனக்கு பாதகம் ஆகிறபடியைப் பாங்கனுக்குச் சொல்லுகிறான்

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்–அவதாரிகை-வண்ணம் சிவத்தில் அவள் நோக்கில் அவனுக்கு அகப்பட்ட தலைமகன் அவன் நோக்கின் வாசியை-செங்கண் சிறுச் சிறிதே -திருப்பாவை -22-
என் மேல் செய்த படியைக் கண்டு நாயகன் கருத்து அறிந்த தாயாருக்கும் தோழிமார்க்கும் உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் இதில்

கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று ஒரோ கரும
முற்றுப் பயின்று செவியொடு உசாவி உலகமெல்லாம்
முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்
உற்றமுறாதும் மிளிர்ந்த கண்ணா யெம்மை உண்கின்றவே
–65 –தலைவியின் கண்கள் கவர்ந்ததைத் தலைவன் கூறல் –

நோற்ற நோன்பாதி யிலேன் உன் தனை விட்டாற்ற கில்லேன்
பேற்றுக்கு உபாயம் உன் தன் பேர் அருளே -சாற்றுகின்றேன்
இங்கு என்னிலை (இது) என்னும் எழில் மாறன் சொல் வல்லார்
அங்கு அமரர்க்கு ஆராவமுது
—-47–அப்ரீதியாலே அனுகரித்து தரிக்க வேண்டும்படி அபிநிவேசம் அதிசயித்து செல்லா நிற்கச் செய்தேயும் ஸ்வ அபிமதம் பெறாமையாலே அவசன்னராய்-இப்படி அனுபவ ருசி ரூபமான தம் அபிநிவேசத்தை சாதனமாகக் கருதி அது முற்றினவாறே கார்யம் செய்கிறோம் என்று ஸ்ரீ ஈஸ்வரன் நினைத்து இருந்தானாகா கொண்டு பேற்றுக்கு உறுப்பாக சாஸ்திர சித்தமான கர்மாத் யுபாயங்களிலே-தமக்கு மறந்தும் அந்வயம் இல்லாமையை சொல்லிக் கொண்டு
அவன் அடியிலே காட்டின உபாயம் ஒழிய-(சிலேடை -பாட்டுக்கு அடி -திருவடி) வேறு ஒரு உபாயம் இல்லை -என்று சம்சாரி சம்ரஷண அர்த்தமாக ஸ்ரீ பிராட்டிமாரோடும்-ஸ்ரீ நித்ய பரிகரத்தோடும் கூட ஸ்ரீ வர மங்கையிலே வந்து எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ வான மா மலை திருவடிகளிலே-வேர் அற்ற மரம் போலே புகல் அற்று விழுந்து சரணம் புகுகிற-நோற்ற நோன்பில் – அர்த்தத்தை-அருளிச் செய்கிறார்
நோற்ற நோன்பாதியிலேன்-என்று தொடங்கி -என்கை-சேஷத்வ பாரதந்த்ர்யங்கள் ஆகிற ஆத்ம பூஷணத்தாலே அபிராமராய் இருக்கிற ஸ்ரீ ஆழ்வார் உடைய வுபாய நிஷ்கர்ஷகமான இத் திருவாய் மொழியை அப்யசிக்க வல்லார் –அவ்விடத்தில்- அளப்பரிய ஆராமுதை அனுபவிக்கிற ஸ்ரீ நித்ய ஸூரிகளுக்கு நித்ய அபூர்வமான அம்ருதமாகப் பெறுவார்

கற்றுப் பிணை மலர் –கன்றான மான் –முக்தமான மானுடைய கண் –மலர்க் கண் –மலர் போல் இருக்கிற கண் என்னுதல் –விகசிதமான கண் என்னுதல் –குலம் வென்று –அஜ் ஜாதியாக வென்று–ஒரோ கரும முற்றுப் பயின்றுஒரோ கார்யத்திலே உற்று –அதிலே நெருங்கி –அதை செவியொடு உசாவி –சர்வ விஷயமாக ஓர் இடத்திலும் பற்று இன்றிக்கே இராமே –ஒன்றிலே துணிந்து –அதிலே நெருக்கி –அத்தை தேசிகரோடே-போத யந்த பரஸ்பரம் -பண்ணுவாரைப் போலே- இவனையே ச விஷயமாக (விசேஷமாக )கடாஷிப்பது –இவன் பார்த்தவாறே கண்ணை மாற வைப்பதா-இருந்தபடி –யான் நோக்கும் காலைநிலை நோக்கும் நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும் (திருக்குறள்) -என்கிறபடியே –உலகம் எல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்சர்வ ரஷகனாவன் திருவடிகளில் இருந்து –அவன் எல்லைக்குள்ளே இருந்ததாயிற்று பாதகம் ஆகிறது –உற்றாம் உறாது மிளிர்ந்த –உற்றும் உறாதும் மிளிர்ந்த மாறுபாடுருவும்படி இவனை நோக்குவது –அந் நோக்கிலே பரவசனாய் –இவன் பார்த்தவாறே அந் நோக்கை மாற வைப்பதாக கொண்டு மிளிரா நின்றுள்ள –கண்ணா யெம்மை உண்கின்றவே –கண் என்கிற வ்யபதேசத்தாலே –ஒரு பாதக பதார்த்தம் என்னை நலியா நின்றது –இணைக் கூற்றங்கள் கொலோ அறியேன் -ஆழ்வார் அருளிச் செய்தது போல்-

ஸ்வா பதேசம்-இத்தால்–ஆழ்வார் படியை கண்டவர்கள் இருக்கிற படி இறே இது – கற்றுப் பிணை மலர்க் கண்ணின்-குலம் வென்று -என்கிற இத்தால் கார்ய புத்தி இல்லாத மௌக்த்யத்தை -நினைக்கிறது (அறியாத பிள்ளைகள் போல் ) ஒரோ கருமம்-உற்ற பயின்று -என்ற இத்தால்
பிரபத்தியை சொன்னபடி இறே-இது பின்னை ஜ்ஞான கார்யம் அன்றோ – கீழ் சொன்ன மௌக்த்யத்துக்கு சேர்ந்த படி எங்கனே என்னில் –அதில் கர்த்தவ்யதா புத்தி இன்றிக்கே இருக்கையை நினைக்கிறது –இது தன்னைச் செய்யா நிற்கச் செய்தே –சாதனத்தில் அன்வயியாதே- ஸ்வரூபத்தில் அந்தர்பவித்து இருக்கும் இறே-பிரார்த்தனா மதி சரணாகதி–அறிவும் வேணும்-பற்றினதுவும் உபாயம் இல்லை என்ற அறிவும் வேண்டுமே-அவன் திருவடியே -இசைவித்து அவன் தாளிணைக் கீழ் இருத்துமவன் -ஸ்வீ காரத்தில் உபாய புத்தியுயைத் தவிர்ந்த ஞானம் -ஆழ்வாரது – இது தானே குலமாக வென்ற ஞானம் ப்ரபந்ந ஜன கூடஸ்தர் அன்றோ கண்ணா இத்யாதி –சொன்ன படியை உடையராய் இருக்கிற(ஞானிகள் அனைவருடைய ஞானங்களையும் விழுங்கிய ஞானம் தானே ஆழ்வாரது )
இருப்பு தான் கண்டவரை ஈடுபடுத்துகிற படியை சொல்லுகிறது –கற்றுப் பிணை மலர்க் கண்ணின் குலம் வென்று இருப்பதாய் – ஒரோ கருமமும் உற்றுப் பயின்று – செவியொடு உசாவினால் போல் இருப்பதாய் – உலகம் எல்லாம் முற்றும் விழுங்கி உமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ் இருந்து – உற்றும் உறாத மிளிர்ந்த கண்ணா யெம்மை உண்கின்ற – என்று அந்வயம் –

தலைவியின் நோக்கில் ஈடுபட்ட தலைவன் பாசுரம் –கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று —இளைய மான் பேடை நோக்கும் நோக்கத்தினும் இவள் நோக்கம் அழகியதாய் உள்ளதே-ஒரோ கரும முற்றுப் பயின்று செவியொடு உசாவி-தான் நாயகியை நோக்காத பொழுது அவள் தன்னை மனத்தில் பொருந்திய காமத் குறிப்பு வெளியாம்பாடி அன்போடு நோக்கியும் தான் நோக்கும் பொழுது அவள் நாணத்தால் எதிர் நோக்காது வேறு ஒரு வஸ்துவை பார்ப்பவள் போலே வேறு இடத்தில் செலுத்தியும்
இப்படி பல கால் விரைவில் நிகழும் பொழுது அவள் கண் பார்வை காதல் அளவும் செல்லுதல் –
தான் கருத்தூன்றியதொரு கார்யத்தைப் பற்றி காதை யடுத்து வினவி-அதனோடு ஆராய்தல் போலும் –
நாயகியின் கண்கள் காது அளவும் நீண்டு விலக்ஷணமாக இருப்பதை வெளியிட்ட வாறு –உற்றமுறாதும் மிளிர்ந்த –குறிப்பு நோக்கை அனுகூலமாகவும் புறம்பு நோக்குவதை பிரதிகூலமாகவும் கொண்டு –உலகமெல்லாம்-முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்யெம்மை உண்கின்றவே-சர்வ ரக்ஷகனான சர்வேஸ்வரன் விபூதியின் கண் தமக்கு இந்த நலிவு உண்டாவதே –உண்கின்றன -என்னை வசப் படுத்து கின்றன -நலிகின்றன –

கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று–இளைய மான் பேடைகளுடைய மலர்ந்த கண்ணின் ஜாதியை வென்று–ஒரோ கரும முற்றுப் பயின்று-தன்னில் தான் பலகாலும் கிட்டுகையாலே-பர்யாயம் தோறும் ஒரு கார்யத்தைக் கிட்டி அறுதியிடுகிறது என்னலாய்–செவியொடு உசாவி-மாண்டு கர்ணத்து அளவும் செல்லுகையாலே அறுதியிட்ட காரியத்தை ஸ்ரவண இந்த்ரியத்தோடே விசாரியா நின்றது என்னலாய்–உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்-லோகம் அடைய பிரளய ஆபத்தில் ஈடுபடாமல் திரு வயிற்றிலே வைத்து நோக்கியும் நெருக்குப் படாமல் வெளிநாடு காட்டியும் ரஷித்த ஈஸ்வரனுடைய திருவடிகளிலே–உற்றமுறாதும்-உற்றும் உறாதும்-கிட்டினார் கண் போலேயும் கிட்டாதார் கண் போலேயும்–அதாவது உகப்பும் செல்லாமையும் தோற்றி இருக்கை-நாயகனைக் கண்ட உகப்பும் இவனை ஒழியச் செல்லாமையும் தோற்றும்படி பார்வையிலே அறியலாய் இருக்கை–மிளிர்ந்த கண்ணாய்-உகப்பும் செல்லாமையும் மிளிர்தலிலே காணலாம் படி கண் என்று பேராய்-எம்மை உண்கின்றவே-நம்மைத் தனக்குள்ளே யாம் படி க்ரஹியா (க்ரஸியா) நின்றன என்று தன்னை இவள் கண்களுக்கு ஆக்கிக் கொண்டமை சொன்னான் ஆயிற்று-

இத்தால்–கற்றுப் பிணை -இத்யாதியாலே–இவ்வாழ்வாருடைய ஞானம் ஸம்ஸாரம் ஆகிற காட்டிலே திரிகிற முக்தமான ம்ருக பிராயருடைய ஸப்தாதி விஷயங்களிலே விகஸிதமான ஞான ஜாதியை
வென்று இருக்கும் என்றபடி-ஒரோ கரும முற்றுப் பயின்று -என்கையாலே -ஞாதவ்யமான பகவத் ஸ்வரூபாதிகளிலும் ஸ்வரூப விரோதிகளிலும் புருஷார்த்த விரோதிகளிலும் சாதன விரோதிகளிலும்
வ்யவசிதமாய்க் கொண்டு சீலித்த படி–செவியொடு உசாவி –என்கையாலே இவ் வர்த்த நிஷ் கர்ஷங்கள் இதுக்கு நிர்ணாயக ப்ரமாணமான ஸ்ருதியோடே சம்வதித்து இருக்கும் என்றபடி
(ஸ்ருதி சொல்வதை ஸ்ராவ்ய காது இடம் தானே கேட்க வேண்டும் )உலகம் இத்யாதியாலே
ஸர்வ ரக்ஷகனான ஸர்வேஸ்வரன் திருவடிகளிலே மானஸ அனுபவத்தால் வந்த உறுதலையும்
பாஹ்ய அனுபவத்தால் வந்த உறாமையையும் சொல்லுகிறது-மிளிர்ந்த கண்ணாய் -என்கையாலே
ஸர்வ அவஸ்தைகளிலும் ஞானத்தினுடைய விகாஸம் சொல்லிற்று–எம்மை யுண்கின்றனவே -என்கையாலே-இந்த பிரகாரத்தாலே இவருடைய ஞானம் ஆஸ்ரிதரை வஸீ கரித்த படி சொல்லிற்று ஆயிற்று-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம் கற்றுப் பிணை-கன்றான மான் முக்தமான மானினுடைய-மலர் கண்ணின்-மலர் போலே இருக்கிற கண் என்னுதல்-விகஸிதமான கண் என்னுதல்-குலம் வென்று
அஜ்ஜாதியாக வென்றதாயிற்று-ஒரோ கரும முற்றுப் பயின்று செவியொடு உசாவி-ஒரோ கார்யத்திலே யுற்று அதிலே நெருங்கி அத்தைச் செவியோடே உசாவி ஸர்வ விஷயமாய் ஓர் இடத்திலும் பற்று இன்றியிலே இராதே ஒன்றிலே துணிந்து அதிலே நெருங்கி அத்தை தேசிகாரோடே போதயந்த பரஸ்பரம் –ஸ்ரீ கீதை –10-9-பண்ணுவாரைப் போலே இவனையே ச விசேஷமாகக் கடாக்ஷிப்பது
இவன் பார்த்தவாறே கண்ணை மாற வைப்பதான போது இருந்தபடி–உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்-ஸர்வ ரக்ஷகரானவர் திருவடிகளிலே இருந்து அவர் எல்லைக்குள்ளே இருந்தாயிற்று இவை பாதகம் ஆகிறது–உற்றமுறாதும் மிளிர்ந்த கண்ணாய்-மாறுபாடு யுருவும்படி இவனை நோக்குவது-அந்நோக்கிலே பரவசனாய் இவன் பார்த்தவாறே அந்நோக்கை மாற வைப்பதாய்
மிளிரா நின்றுள்ள கண்ணாய்–எம்மை உண்கின்றவே-கண் என்கிற வியபதேசத்தாலே ஒரு பாதக பதார்த்தம் என்னை நலியா நின்றது–இத்தால் ஆழ்வார் படியைக் கண்டவர்களுக்கு இருக்கிற படி இறே இது கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று -என்கிற இத்தால் கார்ய புத்தி இல்லாத முக்யத்தை நினைக்கிறதுஒரோ கரும முற்றுப் பயின்று -என்கிற இத்தால் ப்ரபத்தியைச் சொன்னபடி இறே இது–பின்னை ஞான கார்யம் அன்றோ –கீழ்ச் சொன்ன மௌக்த்யம் இதுக்குச் சேர்ந்த படி எங்கனே என்னில் அதில் கர்தவ்யதா புத்தி இன்றிக்கே இருக்கையை நினைக்கிறது-இது தன்னைச் செய்யா நிற்கச் செய்தே சாதனத்தில் அந்வயியாதே ஸ்வரூபத்திலே அந்தர்பவித்து இருக்கும் இறே-செவியொடு உசாவி உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்
உற்றமுறாதும் மிளிர்ந்த கண்ணா யெம்மை உண்கின்றவே
-சொன்னபடியே யுடையராய் இருக்கிற இருப்புத் தான் கண்டாரை ஈடுபடுத்தும் படியைச் சொல்லுகிறது-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-வியாக்யானம்-கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று
இள மான் பேடைகளுடைய மலர்க்கண்களை எல்லாம் ஜயித்தாய்–ஒரோ கரும முற்றுப் பயின்று
பரஸ்பர ஸ்ப்ர்த்தை யுள்ளதாய்-தன்னில் தான் பர்யாயத சலிக்குமதாய் ஓர் காரியத்தை எண்ணி அறுதியிடுகிறது என்னவாய்-செவியொடு உசாவி-அறுதியிட்டு கார்யத்தைச் செவியோடே உற்றுப் பேசுகிறது என்னலாய்–உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்-லோகங்களை பிரளயம் வர திருவயிற்றிலே வைத்து ரஷித்தும் அது போக வெளிப்படுத்தி ரஷித்தும்
உபகரித்த அவன் திருவடிகளுக்கு அடிமை செய்ய–உற்றமுறாதும்-கிட்டின அவளாயும் கிட்டாத அவளாயும்–மிளிர்ந்த கண்ணாய்-கடாஷமுள்ள திருக்கண் மலர்களாய்–எம்மை-என்பது -ஸ்வீ யரைக் கூட்டிக் கொண்டு–உண்கின்றவே-எம்மை அனுபவிப்பதாய் ப்ரதிமையைப் பண்ணுமவையாய்
இரா நின்றதுகன் –

ஸ்வாபதேசம் –-கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று–சம்சாரமாகிய காட்டில் -பேதமையுள்ள மிருகம் போலே ஐம்புல வழியில் பரவும் ஞான சாதியை அதிசயித்து உத்க்ருஷ்டமான ஆழ்வார் ஞானம்
ஒரோகரும-முற்றுப் பயின்று-ஆழ்வார் ஞானம் அவன் ஸ்வரூபாதி களில் பொருந்தி உன்று ஆராய்ந்து நிலை பெற்ற ஞானம் செவியொடு உசாவி –செவி -சுருதி -ஆழ்வார் ஞானம் மறைகளு உடன் ஓத்தே இருக்கும் என்றபடி –உலகமெல்லாம்-முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்-உற்றமுறாதும் எண்ணம் புகுந்து -மானஸ அனுபவம் உற்றது –கருக்காய் கடிப்பவர் போல் திருநாமம் சொல் கற்றனமே-பூர்ண அனுபவம் இல்லாத -உறாத -இரண்டையும் காட்டிய படி-மிளிர்ந்த கண்ணா -எல்லா நிலையிலும் ஆழ்வார் ஞானம் குவியாது விசாலித்து உள்ளபடி யெம்மை உண்கின்றவே -இப்படிப் பட்ட ஆழ்வார் ஞானம் தம்மை வசப்படுத்திய படி –

தாத்பர்யம்–ஆழ்வாருடைய ஞான வைபவம் -சொல்லும் பாசுரம் நாயகி பேச்சால் அருளிச் செய்கிறார்
இரண்டு கண்கள் என்னை ஈடுபடுத்தி -வேறே எங்கும் செல்ல வேண்டாத படி ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்–மான் பேடைகள் சேர்ந்தாலும் -குலத்தையே வெல்லும் பிரபன்ன ஜன கூடத்ஸ்தர் அன்றோ-அதி ஸூந்தரமாய் சாமான்யம் இல்லாமல் -விலக்ஷணமான கண்கள் நான் வேறே இடம் பார்க்க என்னையே பார்க்கும் நம்பினான் –மடவாரையும் முன் எல்லாம் செம் பொன் மாடத் திருக் கோயில் – திருடப் போனேன் பயன் ஒன்றும் இல்லாமல் பாங்கும் இல்லாமல் இருக்க என்னைத் திருத்திப் பணி காய்ந்து அருளினாரே –நான் திருந்திய பின்பு-இங்கு இல்லாமல் -தன்னுடைச் சோதி புறப்பட்டு போனார்–செவியுடன் ஆலோசித்து -செவியாலேயே ஸ்ருதி சொல்வதைக் கேட்டு நிச்சயித்து-ஆழ்வார் நினைவால் இவர் தமக்கு சிஷ்யன் அல்லர் -தான் ஆச்சார்யர் உடைய ஸஹ சிஷ்யரே என்று திரு உள்ளம் கொண்டவர் அன்றோ -இத்தை அறிய உசாவி ஆலோசித்து-செவி அளவும் நின்று உலாவும் உலகம் அளந்த அவனது திருவடிகள் போல் ரக்ஷகனாய் இல்லாமல் என்னைப் பாதிக்கின்றனவே–மத் பாபமே-ஆழ்வார் -அனுபவம் பகவத் அனுபவத்துக்கும் மேலே அன்றோ-ததீய சேஷத்வ பாரதந்தர்யம் சரம பர்வ நிஷ்டை பெறாமல்-ஆழ்வாரது திருக்கண்கள் துன்பம் கொடுக்கின்றனவே -என்று வருந்திச் சொல்லும் பாசுரம் –

5-7-நோற்ற நோன்பிலேன்-ப்ரவேஸம்

மேல் திருவாய்மொழியில் அநுகரித்துத் தரிக்கப் பார்த்தார்;
அநுகரித்துத் தரிக்க வேண்டும்படியான கலக்கம் பிறந்த இடத்திலும் வந்து முகங்காட்டிற்றிலன்; இதற்குக் காரணம் என்?
தன் பக்கல் ஆசை சிறிதுடையார்க்குத் தானே வந்து முகங்காட்டிக் காப்பாற்றக்கூடிய சர்வேச்வரன்
நம் பக்கல் ஆறி இருக்கைக்கு நிபந்தனம் என்?’ என்று பார்த்தார்;
இனி இங்ஙனேயாமித்தனை; நம் பிரகிருதி ஸ்வபாவத்தாலே தன்னால் அல்லது செல்லாதபடியாயிருப்பதோர் ஆற்றாமை உண்டாயிருந்தது;
அது நமக்கு ஸ்வரூபம்’ என்று அறியாதே ‘உபாயம்’ என்றிருந்தானாக வேணும் என்று பார்த்து,
தம் கையில் ஒன்று இல்லாமையை அறிவித்து அவன் திருவடிகளிலே சரணம் புகுகிறார்.

“ஆற்றகிற்கின்றிலேன்” என்றதனைத் திருவுள்ளம்பற்றி. ‘உபாயம் என்றிருந்தானாக வேணும்’ என்றது,
ஆற்றாமையாவது சிநேகமாய், சிநேகத்தை முன்னாகக் கொண்ட தியானம் பக்தி யாகையாலே,
இது உபாயமாகவேணும் என்றிருந்தானாகவேணும் என்றபடி.–
பிரசக்தி -தஸ்ய பிரதி நிஷேதம் -இருந்தால் தானே சொல்ல வேண்டும் –

கடற்கரையின் வெளியில் மஹாராஜரை உள்ளிட்ட முதலிகளோடும், லக்ஷ்மணம் புண்ய லக்ஷ்மணம்” என்பது, ஸ்ரீராமா. யுத். 18:7.-
“புண்ணியத்தையே இலக்ஷணமாகவுடைய இளைய பெருமாள்” என்கிற தம்பியோடுங்கூட எழுந்தருளி யிருக்க,
ராவணோ நாம துர்வ்ருத்தோ ராக்ஷஸோ ராக்ஷஸேஸ்வர: தஸ்ய அஹம் அநுஜோ ப்ராதா விபீஷண இதி ச்ருத:” என்பது, ஸ்ரீராமா. யுத். 17:10.
ஸ்ரீவிபீஷணாழ்வான் “கெட்ட ஒழுக்கத்தை யுடையவன், இராவணன் என்று பிரசித்தி பெற்றவன், அரக்கர்களுக்கெல்லாம் அரசனான
அரக்கன் இருக்கிறான்; நான் அவனுக்குப் பின் பிறந்த தம்பி; விபீஷணன் என்று பிரசித்தி பெற்றவன்” என்று தன்னுடைய தாழ்ச்சியை
முன்னிட்டுக்கொண்டு பெருமாள் திருவடிகளிலே விழுந்தாற்போலே,
இவரும், அவன் கடற்கரையிலே தனி இருந்த இழவு தீர,
பிராட்டிமாரோடும் நித்திய பரிகரத்தோடுங் கூடச் சிரீவரமங்கல நகரிலே திருவனந்தாழ்வான் மேலே எழுந்தருளியிருக்கின்ற
வானமாமலை திருவடிகளிலே, வேர் அற்ற மரம் போலே புகல் அற்று விழுந்து சரணம் புகுகிறார்.

இவர் தாம் என் கொண்டு அவனை வடிம்பிடப் பார்க்கிறது என்னில், அவன் காத்தற்குரிய பொருள்களை விரும்பியுள்ளான்,
காவலனை விரும்புதல் தமக்கு உண்டாயிருந்தது; ஆன பின்னர், இதற்கு மேற்பட சம்பந்தம் உண்டோ? என்று.

நோற்ற நோன்பு -நாலிலும் சரணாகதி -ரகஸ்ய த்வயம் படி-திருமந்தரம் -சரம ஸ்லோகம்
-5-7 முதல் 6-10 நாராயணா –சராணாகதி பூர்வாக கல்யாண குணங்கள் அனுபவம்
6-10- வாக்ய த்வயம் பிரக்ரியை படி சரணாகதி –
ஸ்ரீ வைகுண்ட இருப்பு போலே -சேவை -அமர்ந்த திருக் கோலம் -கூந்தல் –கேள்வன் -வைகுண்ட நாதன் -ஸ்வயம் வ்யக்த ஷேத்ரம்
தோத்தாத்ரி -தெற்கு கோடி வடக்குக் கோடி அமர்ந்த திருக் கோலம் -பத்ரி விசால் -நாராயணன் –
நடுவில் நின்றது -திருவேங்கடம்-ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரங்களில் -கிடந்தது ஸ்ரீ ரெங்கம் மட்டுமே
நாச்சியார் அனுக்ரகம் -பொன்னடிக்கால் ஜீயர் -பெண்ணாகப் பாவித்து -கனுப்பொடிக்கு
இன்றும் ஸ்வாமி திருமடத்துக்கு -உத்சவம் கண்டு அனுபவிக்கிறார் –
ருசி விவசர்க்குப் பாதமே சரணாக்கும் ஔதார்யம் வானமா மலையிலே கொழுந்து விடும் -சூர்ணிகை -163-

நீசர்களை ரக்ஷிக்க அன்றோ இங்கே வீற்று இருந்து அருளுகிறார் -ரஷ்ய
ரஷக அபேக்ஷையும் இருக்க அடியேன் இழக்கவோ

ஏழாம் திருவாய் மொழியில் -கீழில்- திருவாய் மொழியில் அநுகாரம் ப்ராப்தியோடு தலைக் கட்ட மாட்டாமையாலே
ஆர்த்தியே அதிசயித்து பாவனையால் வந்த அநு கார்த்தாலே அல்பம் ஆஸ்வஸ்தராய் ப்ரசோகம் பிறந்து
இவ்வளவில் தன்னை லபிக்கைக்குத் தானே உபாயமான இவன் முகம் காட்டாது ஒழிந்தது நம்முடைய அநுகார
அர்த்தமான பாவனையை உபாசனமாக நினைத்து
அதனுடைய சரம தசையில் வருகிறோம் என்று என்று விளம்பித்தானாக அதி சங்கை பண்ணி
நம் ஆகிஞ்சன்யத்தை முன்னிட்டுக் கொண்டு அபேக்ஷிக்க அவன் ஆபி முக்கியம் பண்ணும் என்று அறுதியிட்டு
ஆகிஞ்சனரும் ஆசைப்படும்படியான அவனுடைய ஆச்ரித சம்ச்லேஷ ஸ்வ பாவத்தையும்
அநிஷ்ட நிவர்த்தகத்வத்தையும்
அதிசயித பரத்வ பிரகாசகங்களான அசாதாரண ஆகாரங்களையும்
ஆஸ்ரித சம்ரக்ஷண பிரகாரத்தையும்
ஆஸ்ரித விரோதிகளை அந்தரப்பேதம் பண்ணும் ஆகாரத்தையும்
ஆஸ்ரித உபகாரத்தால் வந்த உஜ்ஜ்வல்யத்தையும்
அகில சத்தா ஹேதுத்வத்தையும்
ஆஸ்ரித விரோதி அவன் இட்ட வழக்கு என்னும் அத்தையும்
விரோதி நிவர்த்தகத்வத்தால் வரும் விசேஷ உஜ்ஜ்வல்யத்தையும்
விரோதி நிவர்த்தகமான உபாய ப்ரகாஸகத்வத்தையும்
அநு சந்தித்து ஏவம் விசிஷ்டனான நீ உன்னை பிராபிக்கைக்கு ஹேது வான உபாயாந்தரங்களில் அகிஞ்சனாய்
ஆர்த்தனான எனக்கு உன் திருவடிகளே உபாயமாக அபகரித்த இதற்கு என்ன பிரதியுபகாரம் பண்ணுவேன் என்று அலமரும்படி
தமக்குப் பிறந்த ஆசுவாச விசேஷத்தை ஸ்ரீ வர மங்கையிலே ஆசன்னமாக எழுந்து அருளி இருக்கிற
ஸ்ரீ வானமா மலையை நோக்கி விண்ணப்பம் செய்கிறார் –

நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்று
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே
.—5-7-1-

என்னுடைய பேற்றுக்குக் காரணமாயிருப்பதொரு கைம்முதல் என்னிடத்தில் இல்லை,-“நோற்ற நோன்பிலேன்”–இல்லாமையாலே ரக்ஷகன் வேண்டும் என்ற விருப்பம் உண்டு;-“ஆற்றகிற்கின்றிலேன்–பரிபூர்ணரான தேவர், காத்தற்குரிய பொருள்களை விரும்புகின்றவராய் இருந்தீர்;-சிரீவரமங்கலநகர் வீற்றிருந்த”--ஆகையாலே, தேவரே என் விருப்பத்தை முடித்தருள வேண்டும் என்கிறார்.

கர்ம யோகத்தில் நிஷ்டையுடையேன் அல்லேன், ஞானயோகத்தையுடையேன் அல்லேன்,மேற்சொல்லிய அவை இரண்டும் உண்டானால் வருமதுவே அன்றோ -பக்தியுடையேனல்லேன்-‘நோன்பிலேன்’ என்ன அமையாதோ? ‘நோற்ற நோன்பிலேன்’ என்ன வேண்டுமோ? என்ன-சாதனங்களைச் சமைய அநுஷ்டித்து, பலத்தோடே கூடியிருப்பதாகப் பார்த்திருக்கலாவது-க்கர்வர்த்தி, ஸ்ரீ வசுதேவரைப் போலே பேற்றுக்கு அடியாக நினைத்திருக்கலாவது ஒன்று இல்லை என்கைக்காகச் சொல்லுகிறார்.‘அறிவிலேன்’ என்னாமல், ‘நுண்ணறிவிலேன்’ என்கிறார். என்றது,
ஆத்ம ஞானம் முன்னாகப் பரம்பொருளின் சொரூபத்தைக் காணும் அளவாக அறியும் அறிவை யுடையேனல்லேன் என்றபடி.

அவை இரண்டும் உண்டானால் வருமதுவே யன்றோ பக்தி; அவை இல்லாமையாலே எடுத்துக் கழிக்கவும் வேண்டாவே அன்றோ.-ஆனால், இதைப் போன்று, ‘கர்மம் இல்லை’ என்ற போதே, ‘ஞானம் இல்லை’ என்பது போதருமே அன்றோ,-அதனை எடுத்துக் கழிக்க வேண்டுவது என்? என்னில், முற்பிறவியில் கர்மங்கள் முடிந்த அளவிலே மரணம் உண்டானால்-அடுத்த பிறவியிலே ஞானம் உண்டாகக் கடவது. ஆயின், பக்தியும் அப்படி ஆனாலோ? என்னில்,-ஞான கர்மங்கள் இரண்டும் உண்டானால்
பக்திஸ்ச ஞான விஸேஷ:” என்றும், “ஞானம் கனிந்த நலம்” என்றும் சொல்லுகிறபடியே,
பக்தி கூடி அல்லது நில்லாது, ஆன பின்பு, இங்கு அப்படி ஆக ஒண்ணாது.
‘உன்னைவிட்டு ஒன்றும் ஆற்றகிற்கின்றிலேன்’ என்று இவர் சொல்லுகிற இது, பக்தி அன்றோ,-“உபய பரிகர்மித ஸ்வ அந்தஸ்ய ஏகாந்திக ஆத்யந்திக பக்தியோ கைகலப்ய:”-என்பது, — ஏகாந்திக அத்யந்திக -அவனைப் பற்றியே இடைவிடாமல் ஆத்ம சித்தி “சிநேகத்தை முன்னிட்ட தியானமானது பக்தி” அன்றோ; ஆன பின்பு, இது உபாயம் ஆனாலோ? என்ன, அங்ஙனம் ஒண்ணாது அன்றோ,
கரும ஞானங்களோடு கூடியுள்ள மனத்தை யுடையவனுக்கு உண்டாகும் பரபக்தி அன்றோ
சாஸ்திரங்களில் சாதனமாகச் சொல்லிப் போருகிறது;
“ஸ்நேஹ பூர்வம் அநுத்யானம் பக்தி: இதி அபிதீயதே பஜ இதி ஏஷதாது: வை ஸேவாயாம் பரிகீர்தித: தஸ்மாத் ஸேவாபுதை: ப்ரோக்தா பக்தி ஸப்தேந பூயஸீ”-இது, அங்ஙன் அன்றிக்கே, அவனுடைய திருவருள் காரணமாக வந்தது ஆகையாலே இது ஸ்வரூபமாமித்தனை.–புராணங்களிலே தனித்தனியே கர்ம ஞானங்களைச் சாதனமாகச் சொல்லுகையாலே சொல்லிற்றாகவுமாம்.-கர்ம ஞான ரஹித்யம் -பக்தி ராஹித்தியம் உப லஷணம் -சாதனம் இல்லை என்றால் சாத்தியம் இருக்காதே-புராண பிரகிரியையில் -கர்ம ஞானம் இல்லை என்றது பக்தியும் இல்லை -என்றவாறு – சாதனம் இல்லா விடில் சாத்தியம் கிட்டாது

உபாயம்’ என்றிருந்தாராகில், ‘ஆகிலும்’ என்கைக்கு இடம் இல்லை.-ஆனால், நீர் இந்நாள் வரை ஆறி இருந்தீரே? என்ன,-இனி--உன்னையும் அறியாதே என்னையும் அறியாதே இருந்த அன்று இழக்க அமையாதோ,-உன் நிறைவும் என் குறைவும் அறிந்த இன்றும் இழக்க வேண்டுமோ?-ஒருவன் கையிலே சோறும் உண்டாய் அவன் இடுவானுமானால்,-காருணிகனாயும் இருந்து –-ஒருவனுக்குச் சோறும் இன்றிக்கே பசியனும் ஆனால் இழக்க வேணுமோ?-இனி –-என் கையிலேயும் ஒன்று உண்டாய் அது சமையும் தனையும் ஆறி இருக்கிறேனோ.-ஸ்வரூபத்தை உபாயத்திலே செலவு எழுதிக் கைவிடப் பார்க்கில் பார்க்குமித்தனை.-அநாதி காலம் மெய் மறந்து இழந்த காலம் போராதோ, நான் மெய்யாக இசைந்த இன்றும் இழக்க வேண்டுமோ?

உன்னை விட்டு-நீயும் என்னைப் போலே இருந்தாயாகில் நான் ஆறி இரேனோ,
நானும் சிறிது செய்து வரவேண்டும்படியோ நீ இருக்கிறது.
அன்றிக்கே,-உயிரை விட்டு உடல் தரிக்கவற்றோ என்னலுமாம்.-ஒன்றும் ஆற்ற கிற்கின்றிலேன் – உன்னுடைய ஸ்வரூப ஞானம் என்னுடைய தாரணத்துக்குக் காரணமாய் இருக்கிறதில்லை.-“அங்ஙனம் அழைத்துக் கொண்டு செல்லும் செயல் அவருக்குத் தக்கதாகும்” என்று ஆறி இருக்கைக்கும் ஒருவழி உண்டே அன்றோ அவளுக்கு.
கடலை அணை செய்யவும் இராவணனை அழியச் செய்யவும் வேண்டாவே அன்றோ இவளுக்கு.

உன்னுடைய போகப் பிராவண்யம் என்னால் ஆறி இருக்கலாயிருக்கிறதோ?
நீ பரம போகியாயிருக்க, என்னால் ஆறியிருக்கப்போமோ?

சம்சாரிகளுடைய இரக்ஷணத்துக்காக நித்திய வாசம் செய்யும் தேசம். பரம பதத்தையும் மறக்கச் செய்யும் தேசம்-வீற்றிருந்த--‘அங்கே இருக்கக்கூடிய நமக்கு, இவ்விருப்பு இருக்க வேண்டா நின்றதே!’ என்னும் வெறுப்போடு அன்றிக்கே,-தட்டியிலிருந்தவன் முடி சூடினாற்போலே தன் வேறுபாடு தோற்ற இருக்கை (அங்கே சிறை இருப்பு போலே அவாக்ய அநாதர )– அங்குத்தை இருப்பு நித்தியசூரிகளுக்கு ஆனாற்போலே, இவ்விருப்பு எனக்காக அன்றோ இருக்கிறது. சிரீவரமங்கல நகரான அங்கே வீற்றிருந்த எந்தாய்! -பரம பதத்திலே நெடுங்கை நீட்டாக இருந்தாயாகில் நான் தரித்திருக்கலாயிற்றே, எனக்காக வந்த இடத்தை நான் இழக்கவோ.-அங்கே வீற்றிருந்த உனக்கு மிகை அல்லேன் –-காக்கும் பொருள்களைத் தேடிக் கொண்டிருக்கின்ற உனக்குப் புறம்பு அல்லேன்.-உனக்கு மிகையான போது அல்லேனாய் ஆகி விடுவேன்-இத்தால் வரும் பிரயோஜனமும் தேவரீருடையதே.
பால் குடிக்கும் குழந்தையை, பால் குடித்து வயிறு நிறையக் கண்டு உகக்கும் தாயைப் போலே, அடிமையாக இருப்பவன்-ஸ்வரூபம் பெற்று அடிமை செய்கை சேஷிக்குப் பேறே அன்றோ.–ப்ரீதி உன் பக்கலிலே யானால் இழவும் உன் பக்கலிலே யாக வேண்டாவோ –

—————-

அங்குற்றேனலேன் இங்குற்றேனலேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான்
எங்குற்றேனுமலேன் இலங்கை செற்ற அம்மானே!
திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவர மங்கல நகருறை
சங்கு சக்கரத்தாய்! தமியேனுக்கு அருளாயே
.–5-7-2-

“நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன்” என்று சொன்ன உபாயம் இன்மையை,
இத் திருப்பாசுரத்தில் “அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன்” என்று வேறு வகையாக அநுபாஷிக்கிறார் –அங்குற்றேன் அல்லேன் – முக்தர் இந்தச் சம்சாரத்திலே – -உலாவினாற் போன்று சித்த சாதனனாய்த் -பேறு நிச்சயம் என்று உணர்ந்து -திரிகிறேன் அல்லேன்.-இங்குற்றேன் அல்லேன் –-இங்கே இருந்து சாதனங்களைச் செய்கின்றவர்களிலே ஒருவனாய் இருக்கிறேன் அல்லேன்.-உன்னை அநுபவித்துச் சம்சாரத்தை நினையாதிருக்கிறேன் அல்லேன்.-உன்னை மறந்து,“அவர் தரும் கலவியே கருதி”அதுவே பேறாக இருக்கிறேன் அல்லேன் -‘உன்னைக் காண வேணும்’ என்னும் ஆசையாலே வலிமை குன்றினவனாய்த் தளர்ந்தேன்.- ஆதலால் சாதனங்களைச் செய்வதற்கு ஆற்றலுடையவன் அல்லேன். இது, பூர்வர்கள் நிர்வாஹம்.

அங்குற்றேன் அல்லேன் – நித்திய சூரிகளோடு கூட அங்கே இருக்கிறேன் அல்லேன்.
இங்குற்றேன் அல்லேன்-சம்சாரிகளைப் போன்று இங்கே உண்டு உடுத்துப் போருகிறேன் அல்லேன்.-இங்ஙனே ஆனால்,-பக்தி பாரவச்யத்தால் -நிரதிசய பக்தியால் – நீ வந்து முகங்காட்டுமளவும்-நடு ஓர் இடத்தில் நிற்கப் பொறாதவனாக இருக்கிறேன். -( எங்குற்றேனும் அல்லேன்-உம்மைத்தொகை )-பிரபந்நர் ஆர்த்தப் பிரபந்நர் என்றும், திருப்தப் பிரபந்நர் என்றும் இரு வகையர்;-அவர்களுள், திருப்தப் பிரபந்நனல்லேன் என்கிறார்
உன்னைக் காணும் அவாவில் -நிரதிசய பக்தியால் -வீழ்ந்து யான் எங்குற்றேனுமல்லேன் –
“காலாழும்”(பெரிய திருவந்.) என்றபடியே, பக்தி பாரவஸ்யத்தாலே அசக்தனான நான்,
மேலும் சாதந அநுஷ்டானத்துக்குத் தக்கவனல்லேன்-சேஷிசெய்தபடி கண்டிருக்கிறோம்” என்று ஆறியிருக்கப் பொறுமை யுடையவனல்லேன் –

ஸ்வரூபம் பிரகாசித்தால், அவன் தலையிலே தள்ளி வைக்கவுங்கடவதாய், அவனும் பிராட்டிமாரைப் போன்று மேல் விழுந்து விரோதிகளையும் போக்கி அணைக்கைக்கு வேண்டும் சம்பந்தம் உண்டாய்க் காணும் இருப்பது-அதற்குப் பிற்பட்டதே? என்ன,
அக்கண்ணழிவு அறுத்துவைத்தாய் அன்றோ-சிரீவரமங்கல நகரிலே, அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாதே நித்தியவாசம் செய்கின்றாயில்லையோ?

சங்கு சக்கரத்தாய் –-பரிகரம் இல்லையே? என்ன, ஒரோ கைக்குப் படை அன்றோ கூட நிற்கிறது -1-நீ அண்மையிலிருப்பவன் அல்லாமையோ,-நீ சந்நிஹிதன் —
2-நீ ஆற்றலுடையவன் அல்லாமையோ,
3-உனக்குப் பரிகரம் இல்லாமையோ,
4-பரிகரம் தான் கை கழிய நின்றோ,-
சங்கு சக்கரத்தாய் -இதுவே நிரூபகம் – எதனாலே தான் இழக்கிறது?

தமியேனுக்கு – 1- இத்தலையும் குறைவற்றது என்கிறார். ருசி உள்ளதே –
அங்கே பிரியாதிருக்கிறார் படி அல்லேன், -அங்கே சதா பஸ்யந்தி அன்றோ
இங்கே பிரியாதிருக்கிறார் படி அல்லேன். -இங்குள்ளார்க்கு இவ்விஷயத்தை அறியாமையாலே பிரிவு இல்லையே.-தமியேனுக்கு--2-உன்னை ஒழியத் துணை இல்லாத எனக்கு.-தமியேன்–3-பிராட்டியில் வேறுபாடு அங்காகில் ஒரு திரிசடையாகிலும் உண்டே அன்றோ, இங்கு “ஆவார் ஆர் துணை” என்னும்படி அன்றோ தனிமை.

அருளாயே –-என் வெறுமையும் உன் நிறைவும் அறிகைக்கு, நீ அடியில் தந்த அருள் இன்று குடி போயிற்றோ,-அன்று நான் விரும்பாதிருக்க அருளின நீ, விரும்புவதற்குத் தகுதியைப் பிறப்பித்துப் பொகடவோ.-ருசியை உண்டாக்குவார் ஒருவரும், உபாயத்தை அநுஷ்டிக்கிறவர் ஒருவருமாயோ இருப்பது.-நின்னருளே புரிந்திருக்கிற எனக்கு அருளாயாகில் பின்னை யார்க்கு வேறு அருள இருக்கிறாய்.-

————-

கருளப் புட்கொடி சக்கரப் படை வானநாட என் கார் முகில் வண்ணா
பொருள் அல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்
தெருள் கொள் நான் மறை வல்லவர் பலர் வாழ் சிரீவர மங்கல நகர்க்கு
அருள் செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே
 –5-7-3-

கைங்கர்யத்து அளவும் வர புகுர நிறுத்தினோம் -அதுக்கு அவிச்சேதம் யுண்டான போது நம் சந்நிதி வேணும் என்று அங்கே இருந்தாய்-அறியேன் ஒரு கைம்மாறே-இவ்வளவு உபகரித்ததுக்கு நான் ஒரு பிரதியுபகாரம் பண்ணினேனாக அறிகிறி லேன்-பிராங் நியாயத்தாலே மேல் உள்ளதும் நீயே செய்யும் அத்தனை-சாஸ்திர பலம் ப்ரயோக்த்ரி-என்கிறபடி பலம் உம்ம தான பின்பு சாதனத்திலும் அந்வயம் வேண்டாவோ என்ன இவ்வளவும் வர இதுக்கு முன்பே நிர் ஹேதுகமாக விஷயீ கரித்த பின்பு நீயே செய்து அருள வேணும்-

———–

மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காயன்று மாயப் போர் பண்ணி
நீறு செய்த எந்தாய்! நிலம் கீண்ட அம்மானே!
தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர்
ஏறி வீற்றிருந்தாய்! உனை எங்கு எய்தக் கூவுவனே?
–5-7-4-

கேவலம் கிருபையாலே தாழ்ந்த தலையிலே நின்றாயே –-ஐவர்க்காய் –-அவர்களுக்குத் தன்னை வேண்டியவாறு உபயோகப்படுத்திக் கொள்ள வைத்தபடி.–மாயப்போர் தேர்ப்பாகு–எந்தாய் –-எந்தையே! பாண்டவர்களுக்காகத் துரியோதனாதியர்களை அழித்ததும் தம் பேறாக இருக்கிறபடி.

பிரளயம் கொண்ட இப்பூமிக்கு என்ன தக்கோர்மை இருந்தது நீ செய்வதற்கு?
‘எடுக்க வேணும்’ என்ற விருப்பமும் இல்லாமல், செய்ந்நன்றி யறிதலும் இல்லாமல் இருக்கிற இந்தப் பூமிக்கு உதவி செய்தாயில்லையோ? –அம்மானே –‘உடைமை இழக்க ஒண்ணாது’ என்று, வெறும் உன் கிருபையாலே செய்த இத்தனை அன்றோ.

அநுஷ்டானத்தையும் அநநுஷ்டானத்தையும் விகல்பிக்கலாம்படி தெளிந்திருக்குமவர்கள்.
அநநுஷ்டானம் சாதனம் ஆகாதே அன்றோ. ‘விலக்கிய ஒழுக்கங்கள் நமக்கு இரக்ஷகம் ஆகா’ என்றிருக்குமாறு போன்று,-‘விதித்த ஒழுக்கங்களும் நமக்கு இரக்ஷகம் ஆகா’ என்றிருக்குமவர்கள். ஆனால், இவற்றைச் செய்வது என்?என்னில், சர்வேச்வரனுடைய ஆணையைச் செய்தவன் ஆகிறான்.-சிரீவரமங்கல நகர் ஏறி வீற்றிருந்தாய்-இவனும் அவர்களிலே ஒருவனாய் ஒரு சேரக் குடி ஏறி இருக்கிறபடி. ‘இவர்கள் நடுவே இருக்கப் பெற்றோமே’ என்று பெறாப்பேறு பெற்றனாய் இருக்கிறபடி.—வேறு உபாயங்களாலே அடைய முடியாதவனான உன்னை எங்கு எய்தக் கூவுவன் – நீ இவ்விருப்பு இருக்கைக்கு நான் செய்தது ஏதேனும் சாதனம் உண்டாகில் அன்றோ என்பேற்றுக்கு நான் ஏதேனும் செய்வது. என்றது,-இவ்வளவாகச் செய்த நீ இனியும் உன் கிருபையாலே செய்தருள வேணும்-

———-

எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? எவ்வ தெவ்வத் துளாயுமாய் நின்று
கை தவங்கள் செய்யும் கருமேனி அம்மானே!
செய்த வேள்வியர் வையத் தேவர் அறாச் சிரீவர மங்கலநகர்
கைதொழ இருந்தாய் அது நானும் கண்டேனே!
–5-7-5-

அவனாலே பேறு என்றிருக்குமவர் ஆகையாலே’; நீ கைவிட்ட அன்று நான் அநுஷ்டிக்கும்படி,
திருமகள் கேள்வனான உன்னோடு ஒக்க விகல்பிக்கலாம்படி இருந்தேனோ என்கிறார்.
எய்தக் கூவுதல் ஆவதே –நீ எனக்குக் கைப்படும்படியாக விரும்புதல் ஆவதே.
எனக்கு--வலி இல்லாதான் ஒருவன் தலையிலே ஒரு மலையை வைத்தாற்போலே இருக்கிறது காணும் இவர்க்கு.மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவ ஏஷ்யஸி யுக்தா ஏவம் ஆத்மானம் மத் பராயண:
” -ஸ்ரீ கீதை, 9: 34-
“என்னை வணங்குவாய்” என்றால்,உபாயாந்தர பக்தி யோகம் விதித்தால் – பின்னர் இல்லை யாவரே அன்றோதான்.-இனி, பிரபலனாயிருப்பான் ஒருவன் அதனைத் தள்ளி ‘அஞ்சாதே கொள்’ என்ன வேண்டுமே அன்றோ,-ஆகையாலே, அவன், பகைவர்களை அழித்த தன்மையை அருளிச் செய்கிறார் மேல்:

எவ்வ தெவ்வத்துளாயும் ஆய் நின்று கைதவங்கள் செய்யும் கருமேனி அம்மானே –-அடியர் அல்லாதார் பக்கல் செய்வதனை, வேறு கதியற்ற வற்றவர்களாயிருக்கின்ற அடியார் பக்கலிலும் செய்யப் புக்கதோ இப்போது.-அங்கு புத்த முனியாய் அவர்கள் நடுவே புக்கு நின்று அவர்களுக்குண்டான வைதிக ஸ்ரத்தை குலைத்தீர் -இங்கு நீயே உபாய அத்யவசாய ஸ்ரத்தை குலைக்கப் பார்க்கிறீர் –கை தவங்கள் செய்யும் கருமேனி அம்மானே –
வசனங்களாலும் யுக்திகளாலும் வஞ்சகங்களைச் செய்து -தன்னுடைய வார்த்தைகளாலே அவர்களைச் சவப்பிராயராக்கி,-வைதிக சிரத்தையைப் போக்கி, அவ்வளவிலும் கேளாதார்க்கு வடிவைக் காட்டி வாய் மாளப் பண்ணினபடி

அம்மானே– சம்பந்தம் ஒருத்திருக்கச் செய்தே, நீ அவர்களை அழியச் செய்தது அடியார்களுக்காக அன்றோ?-உன்னை ஒழிய -ஒரு தெய்வம் உண்டு’ என்று இருக்கின்றவர்களை அழித்ததைப் போன்றதே அன்றோ.
உன்னை ஒழிய -‘ஒரு தெய்வம் இல்லை’ என்றிருக்கிற என்னை ஒன்று செய்யச் சொல்லுகையாவது.
“ஒரு மா தெய்வம் மற்றுடையமோ யாமே” -திருவாசிரியம், 7.-என்றாரே அன்றோ இவர்.
அவர்களுடைய வைதிக சிரத்தையை அழித்தாற்போலே இருக்கிறதாயிற்று,
சித்த சாதனத்தைப் பற்றி இருக்கின்ற தன்மையினின்றும் நெகிழ்த்துச் சாதனத்திலே மூட்டுகிற இது.

அறாச் சிரீவரமங்கல நகர் கைதொழ இருந்தாய் –-அவர்கள் நித்தியவாசம் செய்கிற ஸ்ரீ வரமங்கல நகரிலே அங்குள்ளவர்கள் அடிமை செய்ய, அதுவே தாரகமாக இருந்தாய்.——-அது நானும் கண்டேன் –-ஸ்ரீவைகுண்டத்தைக் கல விருக்கையாகவுடைய நாம் இங்கே வந்து உமக்காக இருக்க, ஒன்றும் செய்திலோமாகச் சொன்னீரே? என்ன,
இருந்தாய், அதில் தடை இல்லை, நான் அநுபவித்த அம்சத்தை இல்லை செய்கிறேன் அல்லேன்;-அநுபவித்த அம்சம் போராமல் படுகிறேன். என்றது, தேவர் செய்தருளின அம்சம் இவ்வளவு உண்டு,-அதில் குறை இல்லை, எனக்கு அவ்வளவால் போராது என்கிறார் என்றபடி.-திருவடிகளில் கைங்கரியமே யாத்திரையாகப் பெற வேண்டும் என்பது அவாய் நிலை.-வாக்ய சேஷமாகத் தலைக் கட்டுகிறது-

————–

ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா! என்றும் எனை ஆளுடை
வான நாயகனே! மணி மாணிக்கச் சுடரே!
தேனமாம் பொழில் தண் சிரீவர மங்கலத்தவர் கை தொழ உறை
வான மாமலையே! அடியேன் தொழ வந்தருளே.
–5-7-6-

வாக்ய சேஷத்தால் சொல்லப்பட்ட கைங்கர்யத்தை விரும்புகிறார் இப்பாசுரத்தில்.—-ஏனமாய் நிலம் கீண்ட – ஆபத்தை அடைந்தவர்கள் அறிவிக்கையும் மிகையாம்படி அன்றோ உன்படி இருப்பது.-காத்தல் ஒருதலையானால் உன்னைப் பேணாதவன் அன்றோ என்றபடி.-சம்சார பிரளயம் கொண்ட என்னை ஸ்ரீ கிருஷ்ணனாய் எடுத்தாய்.-என் அப்பனே-பிரளயத்தாற் கொள்ளப்பட்ட பூமிக்கு உதவி செய்தது தமக்கு உதவி செய்ததாயிருக்கிறபடி.
என் அப்பனே கண்ணா –என்னைக் காப்பாற்றுவதற்கு ஏதேனும் முகம் பண்ண வேண்டுமோ?-கோலம் கொள்ள வேண்டுமோ?-(முகம் – வேறொரு பிரகாரமும்,-வராகத்தினது முகமும். கோலம் – வராகமும், அலங்காரமும்.)

என்றும் என்னை ஆளுடை வான நாயகனே –-தனக்குத் தகுதியானவரோடு இருக்கும்போதும் இவர் இடையாட்டமாயிற்று-ரக்ஷகமே- ஆராய்ந்து போருவது.
இவர் சத்தையே தொடங்கிக் கை தொட்டு நோக்கிக் கொண்டாயிற்றுப் போந்தது.
நித்ய ஸூரிகள் உடன் இருக்கும் பொழுதும் இவர் நினைவே அவனுக்கு-மணி மாணிக்கச் சுடரே –உளரான பின்பு ஓர் ஏற்றம் செய்து கொடுத்தலன்றிக்கே, அடியே பிடித்து நோக்கிக் கொண்டு போந்து,-இச்சை பிறந்தவாறே, அவ்வளவிலே நித்திய ஸூரிகளுக்கு விடும் படியையும் இவர்க்கு விட்டான்.மணி -நீல மாணிக்கம் -பத்ம- ராகம் –-சுடர் -லஷ்மி சமேதத்வாத் -தேஜஸ் -ஸ்வா பாவிக தேஜஸ் —-இரண்டு வித தேஜஸ் உண்டே –அப்ரமேயம் சீதயா உண்டே-ருசி விவசர்க்குப் பாதமே சரணாக்கும் ஔதார்யம் வானமா மலையிலே கொழுந்து விடும் –

அடியேன் தொழ வந்தருளே –சந்நிஹிதனாய் எழுந்து அருளி இருக்கிற படி கண்டேன்-நான் அடிமை செய்து வாழும்படிக்குத் தகுதியாக வந்து தோற்ற வேண்டும்.-நான் அடிமை செய்து வாழும்படிக்குத் தகுதியாக என் முன்னே நடந்து வரவேணும்-என் கண் வட்டத்திலே உலாவி நின்று நீ அடிமை கொள்ள வேண்டும்-நடந்து ஓர் இடத்தில் நின்றால் இளைப்பாற சிசிரோபசாரம் பண்ண வேண்டும் –

—————-

வந்தருளி என் னெஞ்சிடம் கொண்ட வானவர் கொழுந்தே! உலகுக்கோர்
முந்தைத் தாய் தந்தையே! முழு ஏழுலகும் உண்டாய்!
செந் தொழிலவர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர்
அந்தமில் புகழாய்! அடியேனை அகற்றேலே
.–5-7-7-

‘வந்தருளி என் நெஞ்சிடம் கொண்ட வானவர் கொழுந்தே’ என்பதற்கு, –சுரத்தாலே அறியும் பொருள் உண்டே –
“பட்டர், ஸ்ரீ புஷ்ப யாகம் அணித்தானவாறே, நஞ்சீயரைப் பலகாலும் இயல் கேட்டருளுவர்;
ஒரு கோடையிலே திருவீதியிலே நீரை விட்டு எழுந்தருளியிருந்து இப் பாட்டை இயல் சொல்லும் என்று சீயரை அருளிச் செய்து, தாம் இதனை அநுசந்தித்திருந்து பின்பு தாமும் இப்பாசுரத்தை இயல் சொல்லி, – சந்நிதியில் உபன்யாச உபயுக்தமாக திருப் பாசுரம் கேட்டு அருளுவாராம் –
இயமம் நியமம் முதலிய கிரமத்தாலே தியானம் செய்யத்தக்க சர்வேச்வரனை மனனம் செய்து புறம்புள்ள பராக்கை அறுத்துஅநுசந்திக்கப் புக்காலும் சுக்கான் பரல் போன்று இருக்கக்கூடிய நெஞ்சுகளைப் பதம் செய்யும்படி, தார்மிகராயிருப்பார்
இவை சில ஈரச் சொற்களைப் பொகட்டுப் போவதே!’ என்று அருளிச் செய்தார்;
நஞ்சீயர், இவ் வார்த்தையை உருத்தோறும் அருளிச் செய்வர்” என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்.

உத்தேஸ்ய வஸ்து இருந்த இடத்து ஏற இவன் தான் போக வேண்டியவனாக இருக்க,
அது பெறாவிட்டால் இருவரும் பாதிப்பாதி வழிதான் வரப்பெற்றார்களோ.
‘வந்தருளி’ என்று நெஞ்சுளுக்கிச் சொல்லுகிறாரன்றோ. -நெஞ்சு உருகி தாழ்ந்த குரலில் —
ஸ்ரீ ஆப்பான் திருவழுந்தூர் அரையர் கையிலே தாளத்தை வாங்கி ‘வந்தருளி, வந்தருளி’ என்று மேல் போகமாட்டாதே பாடுவராம்.

நெஞ்சிடம் கொண்ட’ என்றதனால்-திரவிய குணங்கள் போலே சேர்ந்தான்-அப்ருதக் சித்தம்- என்பதனைத் தெரிவித்தபடி.-திரவியமாக இருக்கச் செய்தேயும் குணங்களைப் போன்று சில பொருள்கள் சேரக் காணா நின்றோமே யன்றோ.-நித்திய ஸூரிகளுக்குத் தலையானவன் அன்றோ நித்திய சம்சாரிகளுக்குத் தலையான என் நெஞ்சு பெறுகைக்குப் பிரார்த்திக்கிறான் 

ஒருநாளும் அழியாத மாதா பிதாக்கள் அன்றோ இவர்கள்.-இவைதாம் நோவு படாதொழியப் பெற்றோமே’ என்று இதனைத் தன் பேறாக நினைத்திருப்பான்.-

வேத வேள்வி அறா – வேத ஒலியும் வைதிக கார்யங்களின் கோலாகலமும் மாறாதே செல்லுகை.-பிராப்பிய விரோதியாதல் பிராபக விரோதியாதல் இல்லாமையாலே, நாய்ச்சிமாருடைய கலவியைப் போன்று நித்தியமாய்ச் செல்லா நிற்கும்.
காதலியை அணைக்கிறதற்கு வேறு ஒரு பலம் உண்டாகில் அன்றோ இதற்கு வேறு ஒரு பலம் உண்டாய் அவ்வளவிலே தலைக் கட்டுவது.-சிரீவர மங்கலநகர் அந்தம் இல் புகழாய் –
ஸ்ரீ வைகுண்டத்திலே இருந்தானாகில் புகழுக்கு முடிவு உண்டு போலே காணும்-அடியேனை அகற்றேலே – ஒரு தேசத்திலிருந்து மற்றொரு தேசத்திற்குச் சென்று நீ படைத்த புகழை,
‘வேறு ஒரு கதியும் இல்லாதவனைக் கை விட்டான்’ என்ற பழி ஆக்கித் தலைக் கட்டுவித்துக் கொள்ளப் பாராதே கொள்ளாய்.
’அகற்றேல்’ என்பது, அரைக்கணம் தாழ்க்கப் பொறுக்க மாட்டாமை சொல்லுகிற வார்த்தை.
விளம்பம் பொறாதார் சொல்லப் பெறுவர் போலே காணும்.-இறுக்கி அணைக்க கை நெகிழ அத்தையும் பொறுக்க மாட்டாமல் சொல்லும் வார்த்தை அன்றோ –-இதனுடைய இரக்ஷணத்தில் உன்னை ஒழிய வேறு ஒரு சம்பந்தம் உண்டாய்த் தான் அகற்றுகிறாயோ என்பார் ‘அடியேனை’ என்கிறார்.-வர வேணும் என்கிற நிலையும் போய் அகற்றாது ஒழிய வேணும் என்கிறார்

————

அகற்ற நீ வைத்த மாய வல் லைம் புலன்களா மவை நன்கறிந்தனன்
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்தி கண்டாய்
பகர்க் கதிர் மணிமாட நீடு சிரீவர மங்கை வாணனே! என்றும்
புகற்கரிய எந்தாய்! புள்ளின் வாய் பிளந்தானே!
–5-7-8-

உம்மை அகற்றுவதற்குக் காரணம் என்? இங்கு வந்து அண்மையினேனாய் நின்றது உமக்காக அன்றோ? என்ன, அடிமைக்குப் பகையாக இருக்கின்ற ஐம்புல இன்பங்கள் நடையாடுகிற சம்சாரத்திலே வைத்த போதே-என்னை அகற்றினாய் அல்லையோ -உன்னை விரும்பாதார் அகன்று போம்படிக்குத் தகுதியாகச் சர்வேச்வரனான நீ வைத்த-மாய வல் லைம் புலன்கள் –நமக்கே பழியாய் வந்து விளையப் புகா நின்றது’ என்று நீர்மை யுடையார் காரியம் செய்து தலைக் கட்டுவர்கள் என்று நினைத்துச் சொல்லுகிறார்.-பகாசுரனை அழித்தாற்போலே, என் சரீர சம்பந்தத்தைப் போக்கியருளாய் நான் வந்து கிட்டும்படி என்கிறார்.-

————–

புள்ளின் வாய் பிளந்தாய்! மருதிடை போயினாய்! எருதேழ் அடர்த்த என்
கள்ள மாயவனே! கருமாணிக்கச் சுடரே!
தெள்ளியார் திரு நான்மறைகள் வல்லார் மலி தண் சிரீவர மங்கை
யுள்ளிருந்த எந்தாய்! அருளாய் உய்யுமாறு எனக்கே
.–5-7-9-

கலியர் சோறு இட்ட நாட்களை எண்ணுமாறு போன்று, பண்டு உபகரித்த படிகளைச் சொல்லுகிறார்.-பகாசுரனை அழித்தாய், இரட்டை மருதமரங்களைப் பொடிபடுத்தினாய், இடபங்கள் ஏழனையும் ஊட்டியாக நெரித்தாய்.-ஒருவர்க்கும் தெரியாத ஆச்சரியமான செயல்களையுடையையாய், அவை எல்லாம் எனக்குத் தெரியும்படி செய்து, என்னை அகப்படுத்திக் கொண்டவனே!-நப்பின்னை பிராட்டிக்கு சர்வ ஸ் வதானம் பண்ணின நிரதிசய போக்யமான வடிவை எனக்குத் தந்தவனே –மற்றவர்க்கு கள்ளன் –மாயவன் -எனக்கு கள்ள மாயவன்

தெள்ளியார் – தங்கள் தங்களுக்கும் சில உண்டேயாகிலும், அவற்றைப் பொகட்டு அவன் கைபார்த்திருக்குமவர்கள்.-இவர்கள் ஞானத்துக்கு விநியோகம் இதுவே அன்றோ-அசோக வனத்திலே தனியிருப்பில் பிராட்டியின் தெளிவினைப் போன்ற தெளிவினை யுடையவர்கள்- நீ வழி தப்பினாலும் ஆஸ்ரிதரை கை விடாமல் உன்னைத் திருத்தும் தெள்ளியார் –நலியா நின்றாலும் தாய் முகமே பார்த்துக் கிடக்கும் குழந்தையைப் போலே,ஸ்ரீ விபீஷணாழ்வான் தெளிவு போன்ற தெளிவினை யுடையவர்கள்-மாதவன் பேர் சொல்லுவதே ஓத்தின் சுருக்கு.-என்றிருக்குமவர்கள்-

எனக்கு உய்யுமாறு அருளாய் அறச்சென்றற்றது கண்டாய்,– ஏஹி பஸ்யாமி சரீராணி போலே -விரஹ தாபம் தின்ற இவர் திருமேனியைக் காட்டுகிறார்-உன் திருவடிகளில் கைங்கர்யத்தைத் தந்தருள வேணும். -கைங்கரியம் என்றும், உய்கை என்றும் இரண்டு இல்லை இவர்க்கு.-விரைந்திலராகில் அவன் வைலக்ஷண்யத்தில் ஞானம் இல்லையாகக் கடவது,-இங்கே கால் பாவிற்றாகில் சம்சாரத்தின் தண்மையில் ஞானம் இல்லையாகக் கடவது.-

ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக் கோர் கைம்
மாறு நான் ஒன்றிலேன் என தாவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெருஞ் செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை
நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!
–5-7-10-

ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் 
1–உபாய உபேயங்கள் இரண்டும் உன் திருவடிகளேயாம்படி செய்து தந்தாயே என்று பிள்ளான் பணிப்பர்.-ஆறு – வழி. வழி – உபாயம்.
எவ்வாறு நடந்தனை? எம்மிராமாவோ! எம்பெருமான்! என் செய்கேனே?” என்பது, பெருமாள் திருமொழி, 9 : 2.
“இப் பொய்கைக்கு”என்பது, நாய்ச்சியார் திருமொழி, 3 : 2.– என்னக் கடவதன்றோ.
சரண் – க்ருஹமாய் அத்தால் உபேயம்.-சரண் –வீடு -புகலிடம் -பிராப்யம்-ரக்ஷிதா அர்த்தங்கள்-ஆறு உபாயம் -நின் பாதங்களே உபாய உபேயம் என்றவாறு –
ஏவகாரம்-சரண் ஆகிற நின் பாதமே எனக்கு ஆறு –
கரு முகைப் பூ மாலை சும்மாடு போலே -புருஷார்த்தமாக அனுபவிப்பதை புகல் இல்லாமல் உபாயம் ஆக்குகிறோம்

2-அன்றிக்கே. “இவை இரண்டாலும் உபாயத்தையே சொல்லுகிறது’ என்று பட்டர் அருளிச் செய்வர்.-ஆறு – உபாயம். -நெடுமாற்கு அடிமை -ஒழிவில் காலம் எல்லாம் தானே உபேயம் –
“உபாயே க்ருஹ ரக்ஷித்ரோ : ஸப்த: ஸரணம் இதி அயம் வர்த்ததே ஸாம்ப்ரதம் ச ஏஷ: உபாயார்த்தைகவாசக:” என்பது, பாஞ்சராத்திரம்.
“சரணம் என்கிற இந்தச் சொல்லானது உபாயம், வீடு, காப்பவன் என்ற இம் மூன்று பொருள்களைக் காட்டும்;-இப்போது இந்தச் சரணம் என்ற சொல் உபாயத்தையே சொல்லாநின்றது” என்கையாலே ‘சரண்’ என்பதும் உபாயம்.-ஆக, எனக்கு உபாயம் உன் திருவடிகளேயாம்படி செய்து தந்தாய் என்றபடி.
பட்டர் நிர்வாஹத்துக்கு “எனக்கு ஆறு தருமிடத்தில், நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” என்று சொற்களைக் கூட்டிக் கோடல் தகும்.

நின் பாதமே’ என்ற ஏகாரத்தாலே–மாம் ஏகம் – ஏக பதத்தை நினைக்கிறது. -இத்தால் ஸ்வீகாரத்தில் உபாய புத்தியைத் தவிர்க்கிறது –ஆத்ம சமர்ப்பணம் செய்கையாவது, இராஜ மகேந்திரன் படியை எடுத்து ‘என்னது’ என்று கொண்டு பெருமாளுக்குக் கொடுப்பாரைப் போன்று களவு வெளிப்படுதலே அன்றோ.

3-“சரண்-திருவடிகளை; ஆறாக எனக்குத் தந்தொழிந்தாய்; நின் பாதமே, எனது ஆவியும் உனதே” என்று கூட்டி-நின் பாதமே’ என்பதனைச் சபதமாக்கி நிர்வஹிப்பர் ஆப்பான் திருவழுந்தூர் அரையர்.-நின் பாதமே -உன் திருவடிகளில் ஆணை இட்டு சொல்கிறேன் -எனது ஆவியும் உனதே -என்கிறார் என்றபடி –

4-ரஷித்தா-அர்த்தம் அடுத்த பாட்டில் –மேலே அருளிச் செய்வார் –

நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!– திருத் துழாய் மாலை சர்வாதிக வஸ்துவுக்கு லக்ஷணம் – பரிமளிதமாய்-தர்ச நீயமான திருத் துழாய் -நித்ய ஸூரிகளுக்கு அதிபதியானவனே – தேசம் அது –போக்யம் அது -குறைவற்றவர்கள் சாபேஷராய் இருக்கிறார் -நான் எங்கனே யுபகரிக்கும் படி-நீ குறைவாளன் ஆதல் -நான் அகிஞ்சனன் இன்றிக்கே ஒழிதல்-நீ உபகரியாது ஒழிதல் -நான் சேதனன் இன்றிக்கே ஒழிதல் செய்யப் பெற்றதோ-

—————–

தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக்
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்த ஆயிரத்துள்ளிவை தண் சிரீவர மங்கை மேய பத்துடன்
வைகல் பாடவல்லார் வானோர்க்கு ஆராவமுதே.
–5-7-11-

குருகூர்ச் சடகோபன் –-ஸ்ரீகீதையில் வேறுபாடு.-தமப்பன் இல்லாத இழவு தீரச் சக்கரவர்த்திக்குப் பிள்ளையானாற் போன்று, வேதமும் இவர் பக்கல் வந்து பிறந்தது ஆதலின் ‘செய்த ஆயிரம்’ என்கிறது–வேதம் பர தசை போலே -அவதாரம் போலே திரு வாய் மொழி-வேறு உபாயங்களில் விருப்பம் இல்லாமல் பகவத் ருசியையுடைய இவரை விரும்பி இருக்கையாலே,-வேறு உபாயங்களில் விருப்பம் இல்லாதவராய் இதனை அனுபவிக்க வல்லரானவர்கள் நித்திய ஸூரிகளுக்கு அமுதாவர்.-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -64-இருக்கு ஆர் மொழியால் நெறி இழுக்காமை –பாமுரு மூவுலகும் -7-6-

February 28, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

திருநாமம் கற்க வில்லை -சொல் கற்றேன் -அர்த்தம் அறியாமல் கடாக்ஷம் பெற்றது -திரு நாமம் அஹ்ருத்யமாக சொன்னதால் என்றம் கனி கிடைக்காமல் காய் உண்பாரைப் போல் சொல் கற்றேன்–ஸர்வ ஸப்த வாஸ்யன் -அனைத்தும் அவனையே சொல்லும் -முனியே நான்முகனே -போன்ற சொற்களும் அவனையே சொல்லும்-நாராயண அனுவாஹம் நேராகச் சொல்லுமே-அதிகாரம் இல்லை எனக்கு -ருக் -வேத வாக்கியம் அறியாதவன் –பூ ஸூரர்கள் முறை மாறாமல் நீதி வானவர் போல் வணங்க நானும் நப்பாசை கொண்டு -வினைகள் பூரித்து நொந்து கொள்ள வேண்டும் படி உள்ளனவே-பாமுரு மூவுலகும் -7-6-இதன் விவரணம்-ஓ ஓ என்று அடையாமல் -ஆழ்வார் ஆர்த்தி நம்மால் சொல்ல முடியாதே என்பர் அம் மங்கி அம்மாள் -அதில் வியாக்யானம்-வினையோடு நொந்து இங்கு -வினை -ஸஹஜ பக்தி -பகவத் ப்ரீதியையே சொன்னவாறு-லௌகிக விஷயத்துக்கு மடைமாற்ற விடமுடியாமல் தடுக்கும்-வினை என்பது கர்மம் அர்த்தம் கொண்டால் லௌகிக விஷய ஆசையை பகவத் விஷயத்தில் மாற்ற முடியாமல் தடுக்கும்-அரன் அயன் பெற்றார்கள் என்று கொல் சார்வது -அங்கு அதிகாரம் இல்லாத நான் வணங்குகிறேன் இங்கு ப்ரயோஜனாந்தர பரர்களே அடைந்தார்கள் எனக்கு கிட்டவில்லை அங்கு-ஆர்த்தி மிக்கு உரைத்த பாசுரம் –

அவதாரிகை–திருக் கண்களால் குளிர கடாஷித்தான் என்று இறே கீழ் நின்றது – அல்லாதார் மேல் வையாதே- தம்மேல் விசேஷ கடாஷம் பண்ணுகைக்கு நிபந்தனம் என் -என்று ஆராய்ந்தார் –அஹ்ருதயமாக-திரு நாமத்தை சொன்னேனே என்ன – அத்தாலே ஆகாதே -என்கிறார் –
(திருமால் இருஞ்சோலை மலை என்றேன் என்ன திருமால் வந்து நெஞ்சு நிறைய புகுந்தானே )

இப்படி அனுபாவியனான ஸர்வேஸ்வரனுடைய திருக்கண்கள் உம்முடைய திரு உள்ளத்திலே
அபரோக்ஷ சித்தமாம் படி அனுபவித்து -இதுக்குப் பாசுரம் இட்டுச் சொல்லுவதும் செய்யா நின்றீர்
இனி வேண்டுவது என் என்ன–விலக்ஷணமான புருஷர்கள் ச க்ரமமாக ஆஸ்ரயித்து அனுபவிக்கிறாப் போலே பூர்ண அனுபவம் பண்ணப் பெறாமையாலே தரித்து இருக்கைக்காக அவன் திரு நாமத்தைச் சொல்லப் பெற்றேன் இத்தனை யன்றோ என்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு–அவதாரிகை--இவரைத் திருக்கண்களால் கடாக்ஷித்தான் என்று இறே கீழ் நின்றது
அல்லாதார் மேல் வையாதே நம் மேலே இவ்விசேஷ கடாக்ஷம் பண்ணுகைக்கு நிபந்தம் என் என்று ஆராய்ந்தார்–அஹ்ருதயமாகத் திரு நாமத்தைச் சொன்னேன் அத்தாலே அன்றோ என்கிறார் –

இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகளந்த
திருத் தாளிணை நிலத் தேவர் வணங்குவர் யாமுமவா
ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து கனியின்மையின்
கருக்காய் கடிப்பவர் போல் திருநாமம் சொல் கற்றனமே
– -64 –தலைவன் பேர் கூறி தரித்து இருத்தலைத் தலைவி தோழிக்குக் கூறி இரங்கல் –

பா மருவு வேதம் பகர் மால் குணங்களுடன்
ஆ மழகு வேண்டர்பாடாம் அவற்றை -தூ மனத்தால்
நண்ணியவனைக் காண நன்குருகிக் கூப்பிட்ட
அண்ணலை நண்ணார் ஏழையர்
–66–கற்பாரில் – நிரவதிக போக்யங்களான கல்யாண குணங்களை யுடைய ஸ்ரீ எம்பெருமான் உடைய பிராப்யத்வம்-பிராபகத்வம்-விரோதி நிவர்த்தகம் ஆகிற இவ்வோ ஸ்வபாவங்களை அனுசந்தித்து இப்படி குணாதிகன் ஆனவனை அனுபவிக்க வேணும் என்று ஆசைப்பட்டு கிடையாமையாலே அம்பு பட்டாரைப் போலே கிடந்தது உழலுகின்ற -உழைக்கின்ற -அழைக்கின்ற –பாமருவு மூவுலகில் அர்த்தத்தை-பா மருவு வேதம் இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -இதர விஷயத்தில் சாபல்யராய்-தத் அலாபத்தாலே கூப்பிடுகிற சம்சாரிகள் நடுவே
ஸ்ரீ பகவத் அலாபத்தாலே கூப்பிடுகிற சர்வாத்ம சேஷியான ஸ்ரீ ஆழ்வாரை ஆஸ்ரயியார்கள்-
அதுக்கு அடி இதர விஷய சாபல்யம் இறே-இப்படி ஸூலபராய் பிராப்த சேஷியான ஸ்ரீ ஆழ்வாரை லபியாதே இதர விஷய சாபல்யர் ஆவதே என்று வெறுக்கிறார் –

இருக்கார் மொழியால் –இருக்கில் ஆர்ந்த மொழியாலே –பிரதிபத்தாக்களுடைய புத்தி விசேஷங்களாலே–அறை வயிறாகவும்–பதராகவும் பார்க்கலாயிருக்கும் இடங்கள் உண்டாய் இருக்கும் ஆயிற்று –வேதங்களிலே அவன் விபூதியை பரக்க சொல்லா நின்றால்-அதிலே ஏக தேச பூதரானவர்கள் பக்கலிலே பரத்வ பிரதி பத்தியை பண்ணியும் –  ப்ரசம்சா பரம் என்றும் சொல்லா நிற்பார்கள் –அவன் ஸ்வரூப ரூப குண விபூதிகளை பேசுகிற இடத்தில் – ஸ்வரூப ரூப குண விபூதிகளில் பிரமிப்பார்க்கும்
பிரமிக்க அவகாசம் இல்லாதபடி பேசுகிற அநந்ய பரமான நாராயண அநு வாகாதிகளை ஆயிற்று –
அதில் ஆர்ந்த (ஆர்த்த )மொழியாக சொல்லுகிறது –சர்வே வேதா யத்ர ஏகம் பவந்தி -என்ற
வாக்யங்களுக்கும் ஒருவனே வாச்யன் ஆகை இறே உக்தம் —(ஓதுவார் ஒத்து எல்லாம் அவனையே சொல்லுமே )உத்க்ருஷ்ட பதார்த்தங்களுக்கு வாசகமான சப்தங்களை(சிவா சம்பு போன்ற சப்தங்கள் )
இவ் அநு வாகத்தில் நின்றவன் பக்கலிலே பிரயோக்கிகை யாலே எல்லாம் அவனையே சொல்லுகிறதாக வேணும் இறே –நெறி இழுக்காமை – பகவத் சமாராதனம் ஆகிற வைதிக மரியாதையை தப்பாமே –உலகு அளந்த திருத் தாளிணை –இவை அறியுமாம் -அறியாது ஒழியுமாம்  –
என் உடம்பை நான் விடேன் -என்று ஸ்வீ கரிக்கும் ஸ்வா பாவனாய்  உள்ளவனை –இவை அறியாது இருக்கச் செய்தே –தானே எல்லை நடந்து-மீட்டுக் கொண்டான் இறே –நிலத் தேவர் வணங்கும் –சம்சாரத்தில் வர்த்தியா நிற்கச் செய்தே –-விண்ணுளாரிலும் சீரியர் –என்னும்படியான பூஸூரர்  ஆனவர்கள் – உலகு அளந்த திருத் தாளினை நெறி இழுக்காமை வணங்குவர் –யாமும் –அவர்கள் உடைய பரிகரம் இன்றிக்கே இருக்கிற நானும் –அவா ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து
சப்தாதி விஷயங்களில் உண்டான அவாவை –பகவத் விஷயத்தில் ஒருங்க பண்ண ஒட்டாத பாபத்தோடும்- அத்தை அனுஷ்டித்த என்னோடும் கூட நொந்து – இப்படி இருப்பதொரு பாபம் உண்டாவதே – இத்தை அனுஷ்டிக்கைக்கு-நான் ஒருவன் உண்டாவதே -என்று நொந்து

கனி இன்மையில் கருக்காய் கடிப்பவர் போல் – நெறி இழுக்காமை வணங்கும் படி அவர்கள் தம் பாவம் எனக்கு இல்லை யாகிலும் – கனி இல்லாமையாலே கருக்காய்-மெல்லுவாரைப் போலே — பழம் இல்லாமையாலே பசும் காயைக் கடிப்பாரைப் போலே –திரு நாமம் சொல் கற்றனமே – இதில் அர்த்த அனுசந்தானம் எனக்கு இல்லை –-இதில் நான் உட் புகாத நிலை பார்க்கிறிலேன் – நிர்ஹேதுகமாக கடாஷித்தான் இத்தனை –அன்றிக்கே-அவா -இத்யாதி –-பகவத் விஷயத்தில் அபிநிவேசத்தை அங்கு நின்றும் மீட்டு இதர-விஷயங்களிலே மடை மாற ஒட்டாத வினை உண்டு –பக்தி –அத்தோடும் –இப்போது பகவத்-அலாபத்தாலே படுகிற கிலேசத்துக்கு ஹேதுவாகையாலே பக்தியை வினை என்னலாம் இறே –பகவானை அடையாமல் இருக்க கர்மம் காரணம் நமக்கு பக்தி இல்லை நமக்கு அடையாத போது துன்பம் இல்லை நமக்கு ஆழ்வாருக்கு பக்தி உண்டே -ஆகவே அலாபத்திலே கிலேசம் உண்டே-அநிஷ்டாவஹம் பாபம் இத்தனை இறே – இது இல்லாதார் உண்டு உடுத்து சுகமே திரியா நின்றார்கள் இறே-கனி இன்மையால் கருக்காய் கடிப்பார் போல் – கனி இல்லாமையால் கருக்காய் கடிப்பார் போல் ஆயிற்று- இவருடைய அபிநிவேசத்துக்கு திரு நாமம் –அவனைக் கண்ணாலே கண்டு கையாலே அணைக்க-ஆசைப்பட்டாருக்கு   அவன் பேரைக் கொண்டு என் செய்வார்–இனி மூன்றாவது நிர்வாகம்
காயாக இருக்கும் பொழுது கடித்தால் கனி யாகாதே -அன்றிக்கே–கனி இன்மைக்கு இங்கனே பொருள் ஆகவுமாம் –
மேல் கனி இன்றிக்கே ஒழியும்படி முன்பே கருக்காய் கடிப்பாரைப் போலே – நித்ய ஸூரிகளுக்கு போக்கியம் அன்றிக்கே ஒழியும்படி இவ் வஸ்துவை  நான் பேசி அழித்தேன் என்று ஆகவுமாம் –பரமே வணங்கும்படி –அவர்களைப் போல் -சதுர்த்த வர்ணத்வாத் -அதிகாரம் இல்லை யாகிலும் திரு நாமம் மாத்ரம் சொன்னேன் – இத்தை வ்யாஜ்யமாக்கி நிர்ஹேதுகமாக கடாஷித்தான் என்றபடி –அவர்களைப் போல் பக்தி பரவசனாய் அனுபவிக்க பெறாமை இழந்தேன் என்றும் –அவர்கள் அனுபவிக்கும் விஷயத்தை கிட்டி அவத்யத்தை விளைத்தேன் என்றும் விஷாதத்திலே தாத்பர்யம்  –கற்றனமே ஏகாரம் -இரக்கம்-ஒருக்கா- ஈறு கெட்ட வினை எச்சம்

நாயகி திரு நாமங்களை சொல்லி தரித்து இருந்தமை –ப்ராஹ்மண உத்தமர்கள் வேத மந்த்ரங்கள் ஓதி அனுபவிக்கும் அவனை-கருக்காய் கடிப்பவர் போல் திருநாமம் சொல் கற்றனமே-என்கிறார் –
கண்ணாலே கண்டு கையாலே அணைக்க ஆசைப் பட்டவருக்கு திரு நாம சங்கீர்த்தனம் மட்டுமே போதாதே–இருக்கார் மொழியால்-ருக்காதி வேதங்கள் பொருந்திய புருஷ சூக்தம் -அன்றிக்கே –திரு மந்த்ரம் –நெறி இழுக்காமை உலகளந்த-திருத் தாளிணை -வழி படும் முறைமையில் தவறாமல் சர்வ ஸூலபனானவன் திருவடித் தாமரைகளை வினையொடும் எம்மோடும் நொந்து-அனுபவிக்கப் பெறாத பிரதிபந்தகங்காளல் வெறுத்து கனியின்மையின்-கருக்காய் கடிப்பவர் போல்-கருக்காய் -பசுங்காய் -இளங்காய் -நைச்சயானு சந்தானம்-யாமுமவா-யாமும் அவ்வோ -அப்படி பாக்யம் செய் தேன் அல்லேன் என்றபடி –அவா ஆசைப்பட்டது தோன்ற ஒருக்கா வினையொடும் -பரிஹரிக்கப் போகாத வினை என்றபடி – அபரிஹரியமாய் இருபத்தொரு பாபம் உண்டாவதே-இத்தை அனுஷ்டிக்கைக்கு நான் உண்டாவதே –

இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகளந்த திருத் தாளிணை நிலத் தேவர் வணங்குவர்-வேதங்கள் எல்லாம் தனக்குள்ளே யாகும்படியான மூல மந்திரமான மொழியாலே (ஓம் என்னும் படி உள்ளத்துக்கு எல்லாம் சுருக்காய் இருக்குமே ) ஆஸ்ரயண பிரகாரத்தில் ஒன்றும் வழுவாதபடி அந்த மந்த்ரார்த்த ப்ரகாசமாய்க் கொண்டு ஸகல லோகங்களையும் தனக்குள்ளே யாக்கின திருவடிகளை
பூமிக்கு தேவர்களான ப்ராஹ்மண உத்தமர் ஆஸ்ரயித்து அனுபவியா நிற்பர்கள்–யாமுமவா-யாமும் அவா அந்த அதிகாரம் இல்லாத நாமும் அப்படியோ-அல்ல என்றபடி–ஆனால் உம்முடைய அளவு என் என்னில்–ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து–அனுபவ விரோதியான பாபத்தை ஒருங்க விடாமையையும் பிரதிபந்தகம் யுண்டானால் ஆறி இருக்க ஒண்ணாதபடி சபலமான ஸ்வரூபத்தையும்
பார்த்து ஈடுபட்டு -துன்பப்பட்டு–கனியின்மையின் கருக்காய் கடிப்பவர் போல்-பழம் கிடையாமையாலே பசுங்காயைத் தின்பாரைப் போலே–திருநாமம் சொல் கற்றனமே–பூர்ண அனுபவம் பெறாமையாலே சத்தை கிடைக்கைக்காக அவன் திரு நாமத்தைச் சொல்லுகையை அப்யஸித்தோம் (இத்தனை ) என்றபடி–இப் பாட்டு–கலந்து பிரிந்த நாயகி–கலவி கிட்டாமையாலே நாயகனான ஈஸ்வரனுடைய குண நாமங்களைத் தான் தரித்து இருக்கைக்காக உரைத்தேன் என்று பாங்கியிடம் உரைத்தலாகவுமாம்-

சொல் எடுத்துத் தன் கிளியைச் சொல்லே –திரு நெடும் -13-திருமாலைப் பாடக் கேட்டு வளர்த்ததனால் பயன் பெற்றேன் -திரு நெடும் -14–என்றதாய்க் கொண்டு-திரு நாமத்தால் நாயகி தரித்த இடங்களும் உண்டு இறே

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு–வியாக்யானம்–இருக்கார் மொழியால்–இருக்கில் ஆர்ந்த மொழியாலே
பிரதிபத்தாக்களுடைய புத்தி விசேஷங்களாலே அரை வயிறாகவும் பதராகவும்-பார்க்கலாய் இருக்கும் இடங்கள் உண்டாய் இருக்குமாயிற்று வேதங்களிலே-அவன் விபூதியைப் பரக்கச் சொல்லா நின்றால் –
அதில் ஏகதேச பூதரானவர்கள் பக்கலிலே பரத்வ பிரதிபத்தியைப் பண்ணியும்-ப்ரஸம்ஸா பரம் என்றும் சொல்லா நிற்பர்கள் இறே–அவன் ஸ்வரூப ரூபா குண விபூதிகளைப் பேசுகிற இடத்தில்-ஸ்வரூப ரூப குண விபூதிகளில் பிரமிப்பாரும் பிரமிக்க அவகாசம் இல்லாதபடி பேசுகிற அநந்ய பரமான நாராயண அநு வாகாதிகளை யாயிற்று இதில் ஆர்ந்த மொழியாகச் சொல்லுகிறது–ஸர்வே வேதா யத்ரைகம் பவந்தி -(யஜுஸ் ஆர ப்ரச்னம் -3)இத்யாதியால் எல்லா வாக்யங்களுக்கும் அவனே வாஸ்யனாகை இறே யுக்தம்-உத்க்ருஷ்ட பதார்த்தங்களுக்கு வாசகமான ஸப்தங்கள் இவ் வநுவாகத்திலே நின்று அவன் பக்கலிலே ப்ரயோகிக்கையாலே எல்லாம் அவனையே சொல்லிற்று ஆக வேணும் இறே–நெறி இழுக்காமை-பகவத் ஸமாராதநம் ஆகிற வைதிக மர்யாதையைத் தப்பாமே–உலகளந்த திருத் தாளிணை–இவை அறியவுமாம்-அறியாது ஒழியவுமாம்–என்னுடைமையை நான் விடேன் -என்று ஸ்வீகரிக்கும் ஸ்வ பாவனாய் யுள்ளவனை-இவை அறியாதே இருக்கச் செய்தேயும்-தானே எல்லை நடந்து மீட்டுக் கொண்டான் இறே–நிலத் தேவர் வணங்குவர்–ஸம்ஸாரத்திலே வர்த்தியா நிற்கச் செய்தேயும்–விண்ணுளாரிலும் சீரியர் –திரு விருத்தம் –79- என்னும்படியே பூ ஸூரர் ஆனவர்கள் உலகு அளந்த திருத்தாளிணை நெறி இழுக்காமை வணங்குவர்–யாமும்-அவர்களுடைய பரிகரம் இன்றிக்கே இருக்கிற நானும்–அவா ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து கனியின்மையின்
கருக்காய் கடிப்பவர் போல் திருநாமம் சொல் கற்றனமே

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்–வியாக்யானம்–இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகளந்த
திருத் தாளிணை நிலத் தேவர் வணங்குவர் யாமுமவா ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து-கனியின்மையின் கருக்காய் கடிப்பவர் போல்-
கனிந்த பழம் இல்லாத போது காய்ப்பழத்தைப் புஜிப்பாரைப் உபாயத்தில் ஸூ விசத ஞானமும் அனுஷ்டான சக்தியும் உண்மைக்கு கனி நிதர்சனமும்
மந்த ஞான சக்திகளுக்குக் கருக்காயும்–திருநாமம் சொல் கற்றனமே–அவன் அறியப் பரி பூர்ண உபாய கர்ப்பமாய் அவன் திரு நாமத்தை உட் கொண்ட சொல்-நமோ நாராயணாய என்பது அத்தை உச்சரித்தேன் அத்தால் கடாக்ஷத்தைப் பெற்றேன் என்றதாயிற்று –

தாத்பர்யம்–கீழ் சர்வேஸ்வரன் கடாக்ஷிக்க காரணம் ஆராய்ந்து திருநாமத்தை அஹ்ருதயமாகச் சொன்னதையே வியாஜமாக்கி நிர்ஹேதுகமாக அருளினான் என்று உணர்ந்து அருளிச் செய்யும் பாசுரம் மந்தமாதிகளாகப் பிரமிக்கும் அந்த சப்தங்கள் போல் இன்றிக்கே அசாதாரண நாராயண நாமம்
ஸூ ஸ்பஷ்டமாக அவனையே காட்டுமே-திருநாம அர்த்த அனுசந்தான பூர்வகமாக பகவத் சமாராதானம் செய்யும் பூ ஸூரர்கள் போல் இன்றிக்கே அர்த்தம் அனுசந்தானம் இல்லாமலே திருநாம சொல்லையே சொன்னதையே வியஜமாக்கி கடாக்ஷித்தான் என்கிறார் –

7-6-பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!ப்ரவேஸம்-

இப்படித் தெளிந்தால்,(தெளிவுற்ற ஆழ்வார் -அவனே உபாயம் உபேயம் என்று தெளிந்த பின்பு )
பின்னைச் செய்வது கூப்பிடுகை போலே காணும்;
இல்லையாகில் ‘சம்சாரம் நன்று’ என்று கலங்கினார் ஆவரே.

‘அம்மங்கி அம்மாள்’ இத் திருவாய்மொழியில் பாடக் கேட்டு அனுபவித்துப் போரும் இதற்கு மேற்பட,
இதில் ஓடுகிற ஆர்த்திக்கு நம்மாற்பாசுரம் இட்டச் சொல்லப் போகாது’ என்று பணிக்கும்’ என்று அருளிச் செய்வர்.

மேலே, ‘ஆழி எழச் சங்கும்’ என்ற திருவாய்மொழியிலே,
சர்வேஸ்வரன் காட்டிக் கொடுத்த வெற்றிச் செயல்களை அனுபவிக்கைக்கு உறுப்பாக,
அவனுடைய வீரச் செயல்களை அருளிச் செய்தார்;

அருளிச் செய்த முகத்தாலே
அவனுடைய அவதாரங்களையும்
அதற்கு அடியான கிருபை முதலான குணங்களையும் நினைத்து,
‘இக் குணங்களும் நடையாடா நிற்க,
இவற்றிலே சம்பந்தம் உண்டாய் இருக்க,
தாங்கள் சேதநராய் இருக்க,
சம்சாரிகள் இதனை இழப்பதே!’ என்று ஆச்சரியப்பட்டார் மேல் திருவாய்மொழியில்.

‘அவர்கள் விருப்பம் இல்லாமையாலே இழக்கிறார்கள்;
விருப்பமுடைய நாம் இழப்போம் அல்லோம்;
அவனுடைய அவதாரங்களையும்
வடிவழகையும் அனுபவிப்போம்,’ என்று பார்த்த விடத்து,

அவற்றை அப்போதே கிட்டி அனுபவிக்கப் பெறாமல்
மிகவும் துக்கித்தவராய்ச்
சர்வேஸ்வரனுக்குப் பரம பதத்திலும் இருப்பு அரிதாம்படி ஆர்த்தியாலே
நிரம்பிற்று ஒரு கடல் கையெடுத்துக் கூப்பிடுமாறு போலே கூப்பிடுகிற கூப்பீடு கேட்டு
அவ் விருப்புக் குலைந்து வந்து முகங்காட்ட வேண்டும்படி,

அவன் பிராப்பியனாய் இருக்கிற படியையும்-(1-2-பாசுரங்கள் -தாமரைக் கண்ணாவோ -ஸ்ப்ருஹணீயன் )
பிராபகனாய் இருக்கிறபடியையும் -(3-7–பாசுரங்கள் -வந்து எய்துமாறு அறியேன் )
விரோதிகளை அழிக்கும் தன்மையனாய் இருக்கிறபடியையும் சொல்லி,
கேட்டாரடைய நீராகும்படி பெரு மிடறு செய்து கூப்பிடுகிறார்.

‘பஹவோ ந்ருப’ – சக்கரவர்த்தி, ‘பெருமாளைத் திருமுடி சூட்ட’ என்று கோலி,
‘அறுபதினாயிரம் ஆண்டு ஒரு தலை மிதிக்க ஒரு தலை மேல் எழும்படியான இராச்சியத்தை வருந்தி ஒருபடி அடிப்படுத்தினோம்;
இதனை ஒரு சிறு பிள்ளையின் தலையிலே வைத்தால் பொறுக்குமோ, போறாதோ?’ என்று விசாரித்து,
‘இதனை உலகத்தோடே கூட்டிப் பார்ப்போம்’ என்று கோலி,
அரசர்கள் எல்லாரையும் திரட்டி,
‘நான் இங்ஙனே பெருமாளைத் திருமுடி சூட்டப் பாரா நின்றேன்: உங்களுக்கு இஷ்டமோ, இன்றோ?’ என்று கேட்க,
உடனே, ‘கிழவா! போகாய்’ என்ன, கிழவா போகாய்’ என்றது

‘அநேக வர்ஷ ஸாஹஸ்ரோ வ்ருத்தஸ்த்வம் அஸி பார்த்திவ
ஸராமம் யுவராஜாநம் அபிஷிஞ்சஸ்வ பார்த்திவம்’-(ஸ்ரீராமா. அயோத். 2 : 21 .)

(இச்சா மோஹி மஹா பாஹூம் ரகுவீரம் மஹா பலம்
கஜேந மஹதா யாந்தம் ராமம் சத்ரா வ்ருதா நநம –அயோத்யா -2-22-

இச்சா மோஹி -ஆசைப்படுகிறோம் அன்றோ
மஹா பாஹூம் -நீண்ட திருக் கைகளை யுடையராய்
ரகுவீரம்-ரகு குல ஸ்ரேஷ்டராய்
மஹா பலம் -பெரும் பலத்தை யுடையரான
கஜேந மஹதா -மஹதா கஜேந -பெரிய யானையின் மேலே
யாந்தம் -எழுந்து அருளுமவராயும்
ராமம் -ஸ்ரீ ராமனை
சத்ரா வ்ருதா நநம –குடையால் வெய்யில் படாதபடி மறைக்கப் பட்ட திரு முகத்தை யுடையவராயும்
இச்சா மோஹி -ஆசைப்படுகிறோம் அன்றோ –)
என்றதனைத் திருவுள்ளம் பற்றி.

‘கதம்நு மயி தர்மேண ப்ருதிவீம் அநுஸந்ஸதி
பவந்தோ த்ரஷ்டும் இச்சந்தி யுவராஜம் மமாத்மஐம்’-என்பது, ஸ்ரீராமா. அயோத். 2 : 25.

நாம் ஒருப்பட்ட காரியம் நன்றாக விழுந்தது; அரசர்கள் கூட்டம் இப்படி விரையப் பெறுவதே!’ என்று
அதிலே மிகுந்த உவகையனாய், அந்த உவகையை நெஞ்சிலே இட்டு வைத்து,
‘அதனை இவர்கள் வாயாலே சொல்லக் கேட்கலாகாதோ?’ என்று நினைத்து,

‘வாரீர்கோள்! அறுபதினாயிரம் ஆண்டு அரசைச் செலுத்துகிற இடத்து. இற்றைவரை எனக்கு என்று ஒரு சுகத்தைக் கோலாதே
உங்கள் இரட்சணத்துக்கு ஆமவையே தேடிக்கொடு போந்த நான். ஒரு வார்த்தை சொன்னால்,
‘இப்போது நீ இருந்தாயாகில் வீகம் என்? கிரமத்திலே செய்து கொள்ளுகிறோம்,’ என்னதல்:
அன்றாகில், ‘உனக்குப் பிரியமாகில் அப்படிச் செய்யலாகாதோ?’ என்று ஒரு வார்த்தை சொல்லி ஆறியிருத்தல் செய்கை ஒழிய,
படுகொலைக்காரர் கையிலே அகப்பட்டார், ‘தப்ப வேணும்’ என்று பார்க்குமாறு போலே
நீங்கள் இங்ஙன் கூப்பிடுகைக்கு நான் செய்த குற்றம் என்?’ என்ன,

‘ஓ அரசனே! உன் பிள்ளையான ஸ்ரீராமபிரானுக்கு மங்களகரமான குணங்கள் பல இருக்கின்றன’ என்கிறபடியே,

‘‘தே தம் ஊசு: மஹாத்மாநம் பௌரஜாபதைஸ்ஸஹ
பஹவோ ந்ருப கல்யாண குணா: புத்ரஸ்ய ஸந்தி தே’-என்பது, ஸ்ரீராமா. அயோத். 2 : 26.

எதிரிகள் அம்பால் அழியப் பெற்றது இல்லை உன்னுடைய தேசம்;
உன் மகனுடைய குணத்தாலே நாட்டைப் படுகொலைக் குத்தினாய் காண் நீ,’ என்றார்கள் ஆயிற்று. என்றது,
‘நாங்கள் குணங்களால் வெல்லப்பட்டவர்களாய் இவ்வார்த்தை சொன்னோமித்தனை அல்லது ஒரு காரியபுத்தியோடு
சொன்னோம் அல்லோங்காண்,’ என்றார்கள் என்றபடி.

‘தாதுக்களுக்கு இமயமலை போன்று குணங்களுக்குப் பிறப்பிடமாய் இருக்கின்றான்,
ஒருவராலும் அசைக்கக் கூடாத ஆற்றலை யுடையனாயும் இருக்கிறான்,’ என்கிறபடியே,

‘ஜ்ஞாந விஜ்ஞான ஸம்பந்நோ நிதேஸே நிரத: பிது:
தாதுநாம் இவ ஸைலேந்த்ரோ குணாநாம் ஆகரோ மஹாந்’-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 15 : 21.

தாதுக்களானவை ‘இன்ன மலையிற்பொன்’ என்றவாறே விலை போமாறு போலே,
புறம்பே குணங்கள் சிலவற்றைக் கண்டால்,
பெருமாள் பக்கல் குணம்’ என்று இட்டாயிற்று அங்கு விலை போவது,
‘இவ் வடித்தில் குணம்’ என்றாயிற்றுப் புறம்பு விலை போவது;
இப்படிப் பட்டவனுடைய குணங்களைச் சொல்லிக் கூப்பிடுகிறார்.

ஆறாம் திருவாய் மொழியில்
இப்படி ஆஸ்ரித பவ்யனாய் விரோதி நிவாரகனான சர்வேஸ்வரனுடைய குணாதிக்யத்தைக் கீழே அனுசந்தித்து
அவனை ஒழிய வேறு விரோதி நிவர்த்தகர் இல்லாமையால்
அவனுடைய காரணத்வாதி ப்ரயுக்தமான சம்பந்த்ய விசேஷத்தையும்
தத் கார்யமான சர்வாத்ம பாவத்தையும்
ரக்ஷணைகாந்தமான பரதவ ஸுலப்யங்களையும்
அவற்றோடு கூடின போக்யதா அதிசயத்தையும்
அந்த போக்யதா ப்ரயுக்தமாய் அத்யுஜ்ஜ்வலமாய் யுள்ள ப்ராப்யதையையும்
அந்த ப்ராப்யதா ப்ரகாசகமான ஆபி ரூப்ய அதிசயத்தையும்
ஸ்வேந ரூபேணவும் காரண புருஷ ரூபேணவும் உண்டான ரக்ஷண பிரகாரத்தையும்
தத் உபயுக்தமான மாலி ப்ரப்ருதி நிரசனத்தையும்
விபீஷண பஷ பாதத்தையும்
ஸ்வ ஜன ரக்ஷணத்தையும்
அனுசந்தித்து -ஏவம் பிரகார விசிஷ்டனான சர்வேஸ்வரனுடைய ப்ராப்தியாலும் பஷ பாதத்தாலும் அவனைக் கொண்டு
விரோதியைக் கழித்துக் கொண்டு அவனை பிராபிப்பதாக அத்யார்த்தராய்க் கூப்பிடுகிறார் –

சரணாகதி பண்ணி 6-10-
இந்திரியங்கள் நலிய அடுத்து -7-1-
பின்பு தாய் பாசுரம் கங்குலும் பகலும் -7-2-
திருநாம ப்ரஸ்த்துதம் -தரித்து தென் திருப்பேரை -வேத ஒலி கேட்டு வியசனம்-7-3-
விஜய பரம்பரை காட்டி சமாதானம்-7-4-
இலங்கை செற்ற நேரே -ராமாவதாரம் பிரஸ்த்துதம்
கற்பாரை -அனுபவம்-7-5-
மோக்ஷம் கிடைக்க உபாய பாவம் நீயே -கூப்பாடு -7-6- கை கூப்பி –
ப்ராப்யம் 1-2-
ப்ராபகம் -3-7-
அநிஷ்டம் தொலைப்பவன் -8-9-
இஷ்ட பிராப்தி -10 பாசுரம்
முமுஷுக்களுக்கு அனுபாவ்யமான குண யோகம் படைத்தவன் -இதுவே இப்பதிக அர்த்தம்-

பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!
பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ!
தாமரைக் கண்ணாவோ!தனியேன் தனி ஆளாவோ!
தாமரைக் கையாவோ! உன்னை என்று கொல் சேர்வதுவே?
–7-6-1-

பாமரு மூன்று உலகும் படைத்த பற்பநாபாவோ –-பா என்பது,பதார்த்த வாசகமாய்
தேவர் மனிதர் முதலான பொருள்களைக் காட்டுவதாய்,-பா மருவி இருந்துள்ள;
அதாவது,‘பொருள்களினுடைய நெருக்கத்தை யுடையவான மூன்று உலகு’ என்னுதல்.-அன்றிக்கே,-‘பாபம் மருவி இருந்துள்ள மூன்று உலகு’ என்னுதல்: பாபம் என்றது, ‘பா’ எனக் கடைக் குறைந்து வந்தது.-அன்றிக்கே,-‘பா’ என்று பரம்புதலாய்,-‘பரப்பை யுடையவான மூன்று உலகு’ என்னுதல்.-‘மூன்று உலகு’ என்று, கீழும் மேலும் நடுவுமான உலகங்களைச் சொல்லுதல். அன்றிக்கே, கிருதகம், அகிருதகம், கிருதகாகிருதகம் என்று இவ்வகையிலே ஆக்கிச் சொல்லுதல்.-‘என் தாயே’ என்பாரைப் போலே ‘படைத்த பற்ப நாபாவோ!’ என்கிறார்.
இதனை உண்டாக்குகைக்கு அடியான சம்பந்தமேயாய், இனிமை இன்றிக்கே ஒழிந்ததாகில் தான் நான் ஆறி இரேனோ?-நீ இதனை வருந்திப் படைத்தது அழிக்கைக்காகவோ?

தோன்றுதலும், வளர்தலும், வாழ்தலும் எல்லாம் உன் பக்கலிலே யாயிற்று,-பரதன் அக்ரூரர் மாருதி -அணைத்த –தாமரைக் கையாவோ–பதினான்கு ஆண்டுகளும் முடிந்த பின் பஞ்சமி திதியில்’ என்று நாள்-‘பூர்ணே சதுர்த்தஸே வர்ஷே பஞ்சம்யாம்’-என்பது, ஸ்ரீராமா. யுத். 127 : 1.-இட்டுக் கொடுக்கலாவது தம்பிமார்க்கோ?-உனக்கே உரியரான அடியார் ஆனால் ‘இன்ன நாள் பெறக்கடவது’ என்று ஒருநாள்-இட்டுக் கொடுக்கல் ஆகாதோ?

தனியேன் உன்னை என்று கொல் சேர்வதுவே – நாராயணனை ஒழிந்து இருப்பது ஒரு நாரம் இல்லையே? இனிச் ‘சேருகையாவது, அடியார்கள் குழாங்களை உடன் கூடுகை அன்றோ?-‘உன்னை என்று கொல் சேர்வதுவே’ என்னா நிற்க,-அது சேரும்படி என்?’ என்னில்,
ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்பக் கண்டு வைக்கையாலே,-‘உன்னைச் சேர’ என்ற போதே தன்னடையே வருமன்றோ?-

———

என்று கொல் சேர்வது அந்தோ!அரன் நான்முகன் ஏத்தும் செய்ய
நின் திருப் பாதத்தை யான்? நிலம் நீர்எரி கால் விண்ணுயிர்
என்ற இவை தாம் முதலா முற்றுமாய் நின்ற எந்தாயோ!
குன்று எடுத்து ஆநிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தாவோ!
–7-6-2-

அழிப்பாருடன் ஆக்குவாருடன் வாசி அற உகக்கும் படியான திருவடிகளை.
வேறு பிரயோஜனங்களை விரும்புகின்றவர்களுக்கும் கூட விரும்பத் தக்கனவாம்படி இருக்கிற திருவடிகளை வேறு பிரயோஜனங்களை விரும்பாத நான் என்று பெறக் கடவேன்?

படைப்பதற்கு முன்பே இவற்றை உண்டாக்குகைக்காகத் திருவ்ருத் கரணத்தை-தேஜஸ் அப்பு பிருத்வி மூன்றும் — நினைத்துப் பஞ்சீகரணத்தைச் செய்து,-ரக்ஷணத்தில் உள்ள பாரிப்பால் – இவற்றை அடையப் படைத்து,படைக்கப்பட்ட பொருள்கள் பொருளாந்தன்மையைப் பெறுதல், பெயரை அடைதல் முதலியவைகளுக்காக உயிர் வழியாக அநுப் பிரவேசித்து, பின்னர், இவற்றைச் சொல்லுகிற சொற்கள்,
அசித்தும் அசித்தை விரும்பி நிற்கிற உயிரும் உயிருக்குள் உயிராய் இருக்கிற பரமாத்துமாவுமான இக்கூட்டத்தைச் சொல்லுகின்றன வாய்க் கொண்டு,
தன்னளவிலே வரும்படி நிற்கிற நிலையைச் சொல்லுகிறது, ‘முற்றுமாய் நின்ற’ என்னும் இதனால்.-ஸ்வரூப ஐக்கியம் இல்லை -அனு பிரவேசித்து பெற்ற பிரகார பிரகாரி பாவம் அருளிச் செய்கிறார்-இவை அறியாது இருக்க, இவற்றின் பேற்றுக்கு அவன் வருந்த வேண்டுவதற்கு உரிய காரணத்தைச் சொல்லுகிறது,

ரக்ஷணத்துக்காக மலையை எடுத்து நின்ற நிலை இவர்க்கு வல்லார் ஆடினால் போலே இருந்தது –

ஆக, இந்த இரண்டு பாசுரங்களாலும்-அவன் விரும்பப்படுகின்றவனாக இருக்கும் தன்மையைச் சொல்லும் முகத்தால்,-பிராப்பியத்துவம் சொல்லப்பட்டது:
மேல் ஐந்து பாசுரங்களாலே, அவனுடைய பிராபகத்துவம் சொல்லப்படுகிறது.

—————

எங்குத் தலைப் பெய்வன் நான்! எழில் மூவுலகும் நீயே
அங்கு உயர் முக்கண் பிரான் பிரம பெருமான் அவன் நீ
வெங்கதிர் வச்சிரக்கை இந்திரன் முதலாத் தெய்வம் நீ
கொங்கலர் தண் அந் துழாய் முடி என்னுடைக் கோவலனே!
–7-6-4-

ப்ரஹ்ம ஈஸா நாதிகளுக்கு உண்டான உச்சாரயமும் நீயே கொடுத்து அருளினாய் -அப்படியே என்னுடைய அபேக்ஷிதமும் நீயே செய்து அருளும் இத்தனை போக்கி என்னால் செய்யலாவது ஒன்றும் இல்லை என்கிறார்–கொங்கு அலர் தண் அம் துழாய் முடி’ என்கையாலே, இனிமையின் மிகுதி சொல்லிற்று;-என்னுடைக் கோவலனே!’ என்கையாலே, அடியார்கட்குப் பவ்யனாய் இருக்கும் தன்மையைச் சொல்லுகிறது. -உன்னை ஒழிந்த பொருள்களினுடைய உயர்வுகளும் உன் அதீனமாம்படி இருக்கிற நீ, உன்னுடைய உயர்வு நான் இட்ட வழக்காம்படி ஆனாய்.-அடியார்கட்கு அடக்க முடையவனாய் இருக்கிற கிருஷ்ணனே!

————-

என்னுடைக் கோவலனே! என் பொல்லாக் கரு மாணிக்கமே!
உன்னுடைய உந்தி மலர் உலகமவை மூன்றும் பரந்து
உன்னுடைச் சோதி வெள்ளத்து அகம்பால் உன்னைக் கண்டு கொண்டிட்டு
என்னுடை ஆர் உயிரார் எங்ஙனே கொல் வந்து எய்துவரே?
–7-6-5-

உன்னடைய உந்தியிலே மலரா நின்றுள்ள உலகங்கள் மூன்றிலும் உண்டான விஷயங்கள் தோறும், தனித் தனியே அற்றுக் கால் தாழ்ந்து போந்தவனாய் இருந்தேன் நான்.
நீ ஸர்வ சத்தி யோகத்தாலே பரந்திருக்கும் இடம் முழுதும் நான் என்னுடைய ஆசையாலே கால் தாழ்ந்து திரிந்தேன்.-இது என் நிலை இருந்தபடி.-அதற்கு மேலே நீ எட்டா நிலத்தை இருப்பிடமாக வுடையையாய் இருந்தாய்.-என் நிலை இருந்தபடி இது;-உன் நிலை இருந்தபடி அது; -என் நெஞ்சில் ஈடுபாடு இருந்தபடி இது;-ஆன பின்பு இந்த முதலியார் கடுக வந்து உன்னைக் கிட்டாரோ?

ஆக. ஸ்வரூபம் உன் அதீனமாய் இருந்தது,-அவர் அவர்களுடைய உயர்வுகளும் உன் அதீனமாய் இருந்தன;-என் நிலை இது, உன் நிலை அது; என் நெஞ்சில் ஈடுபாடு இது;
ஆன பின்பு, நான் ஒரு சாதனத்தைச் செய்து வந்து கிட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ?’ என்கிறார்.-

————

வந்து எய்துமாறு அறியேன் மல்கு நீலச் சுடர் தழைப்பச்
செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல்
அந்தர மேற் செம்பட்டோடு அடி உந்தி கை மார்பு கண் வாய்
செஞ்சுடர்ச் சோதி விட உறை என் திரு மார்பனையே.
–7-6-6-

வடிவழகு இல்லை என்று விடவோ,(மல்கு நீலம் சுடர் தழைப்ப )
பெறுவிக்கைக்குப் புருஷகாரம் இல்லை என்று விடவோ,(திருமார்பனை)
எனக்கு ஆசை இல்லையாய் விடவோ(வந்து எய்துமாறு அறியேன் –ஆசை உண்டு -என்னால் வர முடியாதே )

‘மல்கு நீலம் சுடர் தழைப்ப’ என்கையாலே, நிறம் இருந்தபடி சொல்லிற்று;
‘நெஞ்சுடர்ச் சோதிகள் பூத்து’ என்கையாலே, திவ்விய அவயங்கள் இருந்தபடி சொல்லிற்று;
‘ஒரு மாணிக்கம் சேர்வது போல்’ என்கையாலே,
இரண்டுக்கும் -ஆஸ்ரயமான-பற்றுக்கோடான திருமேனியைச் சொல்லுகிறது.

செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து’ என்கிற இடத்தில் தெரியாதபடி மறைத்துச் சொல்லிற்று ஒன்று உண்டே அன்றோ? அதனை விளக்கமாக அருளிச் செய்கிறார் மேல்:

அந்தரம் மேல் செம்பட்டோடு அடி உந்தி கை மார்பு கண் வாய் செஞ்சுடர்ச் சோதி விட –
அந்தரம் – நடுவு. உடம்புக்கு நடுவு, அரை. திருவரையில் (பன்னீராயிரப்படி -அந்தரம் பரம வ்யோமம் )-திருப் பீதாம்பரத்தோடே, திருவடிகள், திருநாபி கமலம், திருக் கைகள்,
பெரிய பிராட்டியார் எழுந்தருளி யிருக்கையாலே மேலே கூறியவற்றோடு ஒக்கச் சொல்லலாம்படி சிவந்திருக்கிற திரு மார்பு, திருக் கண்கள், திருப் பவளம்
இவை, சிவந்த சுடரை யுடைத்தான ஒளியை வீச.-உறை என் திரு மார்பனை –-இதுவும் ஓர் ஆபரணம் போலே:-என் தலைவியான பெரிய பிராட்டியாரைத் திரு மார்பிலே உடையவனை.-எனக்கு பவ்யனான ஸ்ரீ யபதி என்னுதல் –

—————

என் திரு மார்பன் தன்னை என் மலைமகள் கூறன் தன்னை
என்றும் என் நா மகளை அகம்பாற் கொண்ட நான் முகனை
நின்ற சசி பதியை நிலங்கீண்டு எயில் மூன்று எரித்த
வென்று புலன் துரந்த விசும்பாளியைக் காணேனோ?
–7-6-7-

என் திரு மார்பன் தன்னை 
ஆஸ்ரயண தசையில் அவளைப் பற்றும் –
பிராப்தி தசையில் அவனைப் பற்றும் –
பிராபகத்தில் இருவரையும் பற்றும் –
(இப்படி மூன்றிலும் -விசேஷணத்திலும் விசேஷ்ய அம்சத்திலும் விசிஷ்டத்திலும் உண்டே )

‘என் மலை மகள் கூறன்’ என்பது முதலான இடங்களில் உள்ள ‘என்’ என்பது,
விசேடிய அமிசத்திலே ஊற்றம்.-அவனுடைய விபூதி யோகத்துக்கு உறுப்பாகச் சொல்லுகிறார்-இப்போது இவை சொல்லுகிறதற்குக் கருத்து என்?’ என்னில்,
‘ஸ்வரூபமும் உயர்வும் அவன் அதீனம்’ என்றார்;
இங்கே, ‘தக்க வயதினை அடைந்த புத்திரர்களுக்கு ஒத்த இடங்களிலே திருமணம் செய்விக்கும் தமப்பன் மார்களைப் போலே, இவர்கள் தாம் மனைவிகள் அடைந்ததும் தந்தாமால் அன்று; சர்வேஸ்வரனாலேயாம்’ என்பதனைத் தெரிவித்தபடி-‘இவர்களுடைய செயல்கள் எல்லாம் அவனுடைய அதீனம்’ என்கிறது மேல்:

காணேனோ?–என்னுடைய சத்தையே தொடங்கி உன் அதீனமாய் உன்னாலே பேறான பின்பு நான் இங்கனம் இழந்து போம் இத்தனையோ –-இனி.-இத் தலையாலே பேறு ஆம் அன்று விளம்பத்திற்குக் காரணம் உண்டாய் இருந்தது; அவனாலே பேறு ஆம் அன்று விளம்பத்திற்குக் காரணம் இன்றிக்கே இருந்தது.-இப்படி இருக்கச் செய்தேயும் தம்மை இழந்து இருக்கக் கண்டார் ஆகையாலே, ‘இனி, இந்த இழவோடே இங்ஙனே முடிந்து போமித்தனையே அன்றோ?’ என்று வருந்துகிறார்.

———–

ஆளியைக் காண் பரி யாய் அரி காண் நரியாய் அரக்கர்
ஊளை இட்டு அன்று இலங்கை கடந்து பிலம்புக்கு ஒளிப்ப
மீளியம் புள்ளைக் கடாய் விறன் மாலியைக் கொன்று பின்னும்
ஆளுயர் குன்றங்கள் செய்து அடர்த்தானையும் காண்டுங்கொலோ?–
7-6-8-

அவன் அரக்கர் கூட்டத்தை அழியச் செய்தாற்போலே, நம் விரோதிகளைப் போக்கி
நமக்குக் காட்சியிலே தொடர்புண்டாய் நாம் கண்டோமாய்த் தலைக் கட்ட வல்லோமோ?

———-

காண்டுங் கொலோ நெஞ்சமே!கடிய வினையே முயலும்
ஆண் திறல் மீளி மொய்ம்பில் அரக்கன் குலத்தைத் தடிந்து
மீண்டு மவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி
ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரி ஏற்றினையே
?–7-6-9-

அவனோடு சம்பந்தமுடையான் ஒருவன் வந்தானாகை அன்றிக்கே,
அவன் தானே வரப் பெறுவது காண்’ என்று செவி சீப்பாய்ந்து இருந்தார் அன்றோ?-‘அங்கு நின்றும் வந்தான் ஒருவனைக் கைக் கொண்டாராக அமையாதோ? இந் நிர்பந்தம் என்?’ என்னில்,-அவனோடு சம்பந்தமுடையான் ஒருவனைக் கைக் கொண்டால், அவன் தானும் நான்கு பேருமாகப் போம்;-அவன் தானே வரப் பெற்றதாகில் துருப்புக் கூடாக நோக்கிற்று ஆகலாம் அன்றோ?-மேலும், பகைமையில் முதிர நின்றானும் அவனே ஆகையாலே,
‘காப்பாற்றுமவனாக வேண்டும்’ என்ற விருப்பம் உள்ளதும் அவனிடத்திலே அன்றோ?
இப்படி அவனை அங்கீகரிப்பதற்குக் கோலிப் பெறாத இழவு தீர்ந்தது இவனைக் கைக் கொண்ட பின்பாயிற்று.

தன் சோதி புக்க – அம்புக்கு இலக்கு ஆக்குவார் இருந்த இடத்தை விட்டுத்
தனக்கே சிறப்பாய் எல்லை அற்ற பேரொளிப் பிழம்பு வடிவமாய் இருக்கிற
பரம பதத்திலே போய்ப் புக்க.-அமரர் அரி ஏற்றினையே– அம்பு இட்டு எய்வார் இன்றிக்கே ஆநுகூல்யமே தன்மையாய்த் தொண்டிலேயே நிலை பெற்றவர்களான நித்திய ஸூரிகள்
நடுவே அவன் இருக்கும் இருப்பைக் காண வல்லோமே?-பசுக்களின் கூட்டத்தின் நடுவே ஓர் இடபம் செருக்கித் திரியுமாறு போலே, நித்திய ஸூரிகள் கொண்டாட, அவர்கள் நடுவே அதனாலே செருக்கி மேனாணித்திருக்கும் இருப்பைச் சொல்லுகிறது.-நித்திய ஸூரிகள் திரளிலே அந்த ஓலக்கத்தின் நடுவே இருக்கும் இருப்பைக் காண்கை அன்றோ பிராப்பியமாகிறது?

———-

ஏற்றரு வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர்குலத்து
ஈற்றிளம் பிள்ளை ஒன்றாய்ப் புக்கு மாயங்களே இயற்றிக்
கூற்றியல் கஞ்சனைக் கொன்று ஐவர்க்காய்க் கொடுஞ்சேனை தடிந்து
ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க அரியே
.-7-6-10-

முதல் இரண்டு பாட்டாலே -ப்ராப்யம் அவனே என்றார் –
அநந்தரம் ஐந்து பாட்டாலே உபாயமும் அவனே என்றார் -அநந்தரம் இரண்டு பாட்டாலே பிரதிபந்தகங்களைப் போக்குவானும் அவனே என்றார் –
இதில் குணாகுண நிரூபணம் பண்ண மாட்டாத மவ்க்யத்தாலே பரமபதத்தை தந்து அருளும் என்று அறுதி இடுகிறார் –

ஆற்றல் மிக்கான் .-துரியோதனாதிகளை அழிய செய்து -தர்ம புத்ரனையும் முடி சூட்டி -திரௌபதி குழல் முடித்த பின்பும் -நாதிஸ் வஸ்த்தமநா -என்றும் -ருணம் ப்ரவ்ருத்த மிவ மே -என்றும் -ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்றும் அஸந்துஷ்டனாய் எழுந்து அருளினான் –பெரிய பரஞ்சோதி புக்க அரியே – கம்ஸனும் துரியோதனனும் இல்லாத இடத்தில் பரம பதத்திலே போய்ப் புக்க பின்பும்,-நித்திய ஸூரிகள் நடுவே இருந்தோம் அன்றோ?’ என்று பாராதே, கம்ஸன் துரியோதனன், கர்ணன் என்று,ஆசிலே வைத்த கையுந்தானுமாய்ப்
பகைவர்கள் மேலே சீறன சீற்றத்தின் வாசனை அங்கேயும் தொடர்ந்தபடி.-

————–

புக்க அரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த
சக்கரச் செல்வன் தன்னைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன
மிக்க ஒர் ஆயிரத்துள் இவை பத்தும் வல் லார் அவரைத்
தொக்குப் பல்லாண்டிசைத்துக் கவரி செய்வர் ஏழையரே
.–7-6-11-

இத்திருவாய்மொழி கற்றாரை மதி முக மடந்தையர் விரும்பித் திருப் பல்லாண்டு பாடி -மங்களா சாசனம் பண்ணி -சிலாகிப்பார் -என்கிறார் –நம்முடைய பிரகிருதி நமக்கு பய ஹேது என்று  அபேக்ஷித்தால்  நிரசிக்கும் என்று கருத்து –

புக்கு அ அரி உருவாய் – உக்ரம் வீரம் –இத்யாதி அந்த அரி உருவாய்ப் புக்கு. அவ்வரியுரு என்னுமித்தனையாயிற்றுச் சொல்லலாவது.-நரசிங்கமான வேடத்தைக் கொண்டு பகைவன் அண்மையிலே கிட்டி.-அன்றிக்கே,-இரணியன் உடலைப் பிளந்து கொடு புறப்பட்ட போதைக்கடுமை,(அங்கு அப்பொழுதே தோன்றிய என் சிங்கப்பிரான் பெருமை )
புறம்பு இட்டு ஒருவன் வந்து செய்தானாகை அன்றிக்கே, உள்ளு நின்றும் ஒரு சிங்கம் பிளந்து கொண்டு புறப்பட்டாற்போலே யாயிற்று அதனைச் சொல்லுதல்.

சக்கரச் செல்வன் தன்னை –-இரணியனுடைய உடலுங்கூடத் திரு உகிருக்கு அரை வயிறாகப் போகையாலே,-பின்னை அழகுக்குப் பத்திரங்கட்டின இத்தனையாயிற்று.
(அழகுக்கும் ஐஸ்வர்யத்துக்கும் உறுப்பாக திருவாழி பத்ரம் கட்ட -பல்லாண்டு பாட
திரு உகிரின் அழகுக்கு )

தொக்குப் பல்லாண்டு இசைத்துக் கவரி செய்வர் ஏழையர் –
கிண்ணகத்தில் இழிவாரைப் போலே தனி இழிய ஒண்ணாமை திரண்டு கொண்டு,
‘பொலிக! பொலிக!’ என்று மங்களாசாசனம் செய்து,
சர்வேஸ்வரன் பக்கல் செய்யக் கூடிய அசாதாரண கைங்கரியங்களை யடைய இப் பத்தைக் கற்றவர்கள்
பக்கலிலே செய்யா நிற்பார்கள் மதிமுக மடந்தையர்.
நெடுநாள் சம்சாரத்தில் பட்ட இழவெல்லாம் தீரும்படி அவர்களாலே கொண்டாடப் பெறுவர்கள்.-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -63-வண்ணம் சிவந்துள வான் நாடு அமரும் –இவையும் அவையும் -1-9-

February 28, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

சரணம் என்றால் கார்யம் செய்யாமல் மரணம் என்றாலே தானே கடல் கார்யம் செய்யும்
இவளோ அபலை-நீர் முகில்வண்ணன் அரவணை மேல் பள்ளி கொண்டு அருளி
உமது இரக்கமே இவளுக்கு கார்யகரம் ஆகும்-தேவிமாராவார் – ஆஸ்ரித பரதந்த்ரன் -ஸர்வ சரீரீ -இரண்டாலும் கார்யம் ஆகவில்லை என்றால் -கூப்பீடு அங்கு-தலைவன் இயல்பை பழித்துப் பேசும் பாசுரம் அது-அத்தை மறுக்கும் குணம் தானே கற்பு இது தலைமகள் பாசுரம்-தலைவி தோழியிடம் தலைவன் இயல்பை எடுத்துக் கூறுதல் –-பழிப்பைத் தடுத்து பேசும் பாசுரம் இது
திருக் கண்கள் காட்சி பெற்று –
சாத்மிக்க -சாத்மிக்க போக பிரதாத்ருதம் -புள்ளு பிள்ளைக்கு இரை –-அனுபவம் மெதுவாக கொடுத்து அருளுபவர் தானே செங்கண் சிறுச் சிறிதே விழிப்பான் –ஆர்த்தி விளைக்க -இவையும் அவையும் -சூழல் உளானே -இதன் விவரணம்-சுவையன் திருவின் மணாளன் -திருமுடியில் நேராக வராமல்-
சூழலில் -அருகில் -ஒக்கலில் –நாவில் -உச்சியில் -படிப்படியாக -அமலங்களாக விளிக்கும்
வானாடமரும் குளிர் விழிய-நித்ய ஸூரிகள் -ஆர -அமர -தரிக்க கடாக்ஷம் அருளுபவர் –
பொலிந்து நின்ற பிரான் ஆழ்வாருடைய திருமுடி சேவை இன்றும் பிரஸித்தம்ஒழிவிலன் என்னோடே உடனே –திருவாய் மொழியில் உண்டே –அடியேனோடு இக்காலம் இருக்கின்றனவே இங்கும்

அவதாரிகை ––முறையோ -என்று கூப்பிட்டால் ஆறி இரான் இறே –-வந்து குளிர நோக்கினான்-

இப்படித் தாங்களும் ஆர்த்தராய்க் கூப்பிடும்படி இவருக்கு ஆர்த்தியை ஈஸ்வரன் ஜநிப்பித்து
கடுக முகம் காட்டாமையாலே ஈஸ்வரன் பக்கலிலே க்ரூர்ய சங்கையைப் பண்ணின ஸூஹ்ருத்துக்களைக் குறித்து அவனுடைய பூர்ண கடாக்ஷம் நடத்தாத தம்முடைய திரு உள்ளத்தில் ப்ரதிஷ்டிதமாம் படி ப்ரகாசிப்பித்த பிரகாரத்தை அவர்களுக்கு அறிவித்து சமாதானம் பண்ணின பாசுரத்தை தலைவன் கொடுமையைச் சொல்லி இயல்பு அழித்த தோழிக்கு இயற்பட மொழிந்த தலைவி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-அவதாரிகை-இது உசிதமோ என்று நொந்து சொன்னால் ஆறி இரான் இறே-வந்து குளிர நோக்கினான் அந் நோக்குக்கு இலக்கான தலைமகள் ஹ்ருஷ்டையாய் தன் தாய்க்கும் தோழிக்கும் சொல்லுகிறாளாய் அருளிச் செய்கிறார் இதில்

வண்ணம் சிவந்துள வானாடமரும் குளிர் விழிய
தண் மென் கமலத்தடம் போல் பொலிந்தன தாமிவையோ
கண்ணன் திருமால் திருமுகம் தன்னோடும் காதல் செய்தேற்கு
எண்ணம் புகுந்து அடியேனோடு இக்காலம் இருக்கின்றதே
— 63–தலைவி தோழியிடம் தலைவன் இயல்பை எடுத்துக் கூறுதல் –

இவை யறிந்தோர் தம்மளவில் ஈசன் உவந்து ஆற்ற
அவயவங்கள் தோறும் அணையும் -சுவையதனைப்
பெற்று ஆர்வத்தால் மாறன் பேசின சொல் பேச மால்
பொற்றாள் நம் சென்னி பொரும் —9–இத்தலையில் செவ்வைக் கேடு தனக்கு செவ்வையாம்படி
இவர்களுக்கு பாங்காக தன்னை அமைத்து பரிமாறும் ஆர்ஜவ குண யுக்தனே ஆகிலும்-தன் நினைவு அறிந்து செவ்வியராய் பரிமாறும் திருவடி திரு வநந்த ஆழ்வான் துடக்கமான நித்ய ஆஸ்திரரோடு உகப்போடே கலக்குமா போலே இன்று ஆஸ்ரயிக்கும் அவர்களோடு உகப்போடே கலந்து பரிமாறக் கூடுமோ என்னில் அவர்கள் எல்லாரோடும் ஓரோர் பிரகாரத்தில் பரிமாறுகிறவன் அவர்கள் எல்லாரோடும் பரிமாறுகிற பரிமாற்றம் எல்லாவற்றையும் இவன் ஒருவனுடனே சர்வ இந்த்ரியங்களாலும் சர்வ காத்ரங்களாலும் பொறுக்கப் பொறுக்க பரிமாறும் -என்கிற இவையும் அவை யில் அர்த்தத்தை இவை அறிந்தோர் தம் அளவில் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –இப்படிப் பெறாப் பேறு பெற்று அத்தால் உண்டான அபி நிவேசத்தாலே ஆழ்வார் அருளிச் செய்த திவ்ய ஸூக்தியை கேவலம் வாக்காலே வசிக்க-உணர வேண்டாம் -அஹ்ருதயமாக உக்தி மாத்ரத்தாலே ஆஸ்ரித வ்யாமுக்தனான சர்வேஸ்வரன் யுடைய ஸ்ப்ருஹணீயமான சரணங்கள் நம்முடைய சென்னித் திடரிலே சேரும் –

வண்ணம் சிவந்துள ––திருக் கண்களுக்கு சிவப்பு பிறப்பே ஸ்வா பாவமாய் இருக்கும் இறே –இப்போது
வண்ணம் சிவந்துள -என்கிற இத்தால் – பூர்வ அவஸ்தையிலும் வைவர்ண்யம் அத்தலையிலே என்னும் இடம் தோற்றுகிறது-ந ஜீவேயம் ஷணம் அபி – என்னும் ஆற்றாமையில் ஏற்றம் அத் தலையிலே இறே –ஆகையால் கண்ணும் –காணாமையால் வந்த சிவப்பில் வைவர்ண்யம் தீர்ந்தது இப்போது என்று-தோற்றும்படி இருக்கை –வானாடு அமரும் குளிர் விழிய – த்ரிபாத் விபூதியாக -கண்ணில் குமிழிக்கு (மதகுக்கு )கீழே யாயிற்று ஜீவித்து கிடப்பது – வானாடு அமரும்படியான (தரிக்கும் படியான )-குளிர்ந்த கடாஷங்களை உடைய-அமருகை யாவது –இத்தாலே உண்டு உடுத்து வர்த்திக்கை – தாரக போஷாக போக்யமும் -எல்லாம் இவையாய் இருக்கை –தண் இத்யாதி – குளிர்ந்து மிருதுவாய் இருப்பதொரு -தாமரைப் பொய்கை பரப்பு மாறப் பூத்தால் போலே-யாயிற்று திருக் கண்கள் இருப்பது –தாம் இவையோ –தஸ்ய யத்ர கப்யாசம் புண்டரீக மேவ அஷணீ-என்று கேட்டார் வாய் கேட்டு இருந்தோமே –
அவை தான் இருக்கும்படி இதுவே –கண்ணன் திருமால் –திருமால் கண்ணன் – ஸ்ரீ ய பதி யாகையாலே ஆஸ்ரிதர்க்கு கையாளானவன் –திரு முகம் தன்னோடு காதல் செய்தேற்கு – அழகிய திரு முகத்தோடு வந்து -குளிர நோக்க வேணும் என்று ஆசைப்பட்ட எனக்கு –எண்ணம் புகுந்து – நான் மநோ ரதித்தபடியே -கை புகுந்தது என்னுதல் –அன்றிக்கே- எண்ணம் புக்கு என்றாய் – என்னுடைய மநோ ரதத்தை தானே ஏறிட்டு கொண்டு –

அடியேனோடு-ஜிதம் -என்கிறார் –-அஹம் அர்த்தத்தின் உடைய ஸ்வரூபம் அடியேன் என்று போலே காணும் இருப்பது –(ஜிதந்தே புண்டரீகாக்ஷம் -தாமரைக் கண்ணன் என்றதுமே ஜிதந்தே சொல்ல வைக்கும் -அடியேன் உள்ளான் உடல் உள்ளான்-ஞாத்ருத்வமா சேஷத்வமா -சேஷத்வம் என்கிற ஞாத்ருத்வமே – சேஷத்வமே பிரதானம்)-அஹங்காரம் ஆழ்வாராதிகள் -அடியேன் -அர்த்தம் தான் -நான் அர்த்தம் இல்லையே மணத்தையும் ஒளியையும் — -ஆத்மாவை சேஷம் என்றே ஆதரிக்கும்-ஓம் -பிரணவம் -அநந்யார்ஹ சேஷ பூதன்-ஜீவ ஸ்வரூப பரமான வாக்யத்தில் படியே இறே (அடியேன்) சொல்லுகிறது –அது (ஓம்) ஜீவ ஸ்வரூப பரமோ  என்றால் –ஒமித் யாத்மானம் யுஞ்சித –என்றும் உண்டு –
ஓங்காரோ பகவான் விஷ்ணு -என்றும் சொல்லா நின்றது இறே –பர ஸ்வரூபம் அன்றோ என்னில்
உபய பிரதானம் -திருக்குருகூர்-பரே சப்தம் பொலியும்-திருத்தேர் தட்டுப் போல்-ராஸ க்ரீடை போலவும்
இதுக்கு இரண்டு பிரமாணங்கள் காட்டி அருளுகிறார்-ஓம் என்று சொல்லி -உயிரை அறவிலை செய்தனன் –ஒமித் யாத்மானம் யுஞ்சித -ஜீவ ஸ்வரூபத்துக்கும்-ஓங்காரோ பகவான் விஷ்ணு–விஷ்ணு ஸ்வரூபத்துக்கும்-

இக் காலம் –இப் பேற்றுக்கு வருமாறு முனை நாள் அறிந்திலேன் கிடீர் –இருக்கின்றனவே –நச புன ஆவர்த்ததே -என்னும் பேற்றைப் பெற்றோம் என்று தோன்றி இரா நின்றது –ஒரு நாளும் இனி பிரிக்கைக்கு சம்பாவனை இல்லை என்று தோற்றும்படி இரா நின்றது –மானஸ அனுபவம் )பிரத்யஷ சமாநகாரம் ஆகிலும் இவருக்கு சமானகாரமாக தோற்றாதே-பிரத்யஷம் என்று இறே தோற்றுவது –
-அவ்வளவு ஆழமான அனுபவம் கொடுத்து அருளுவான் அன்றோ ஆழ்வாருக்கு -கண் அழகுக்கு தோற்று அடியேன்  என்கிறார் என்னுதல் –ஸ்வா பாவிகமான சேஷத்வத்தை இட்டு சொல்லுகிறார் ஆதல் –குண க்ருதம் ஆதல் –ஸ்வரூபம் ப்ரயுக்தம்  ஆதல் –சிறந்த வர்ணத்தை உடையவனாய் -வானாடு அமரும்படியான குளிர்ந்த கடாஷத்தை உடையவனாய் – தண் மென் கமலத் தடம் போல் பொலிந்து இருப்பவனவான இந்த கண்களானவை –திருமால் கண்ணனுடைய திருமுகம் தன்னோடும் காதல் செய்த என்னுடைய எண்ணம் புகுந்தபடி – அடியேனோடு -இக்காலம் இருக்கின்றது -என்று அந்வயம் –ஜீவ ஸ்வரூப -ராஜ புருஷ -சப்த பிரதாந்யத்தாலே-ஜீவ பரமும் -ராஜ்ஞா புருஷ  -என்கிற அர்த்த பிரதாந்யத்தாலே- பகவத் பரமுமாய் இருக்கும் என்றபடி இருக்கின்றதே -அருளிச் செய்கிறார் –அரசனின் ஆள் -வேற்றுமை உருபு இல்லாமல் அரசனுடைய ஆள் -அரசனுக்கு ப்ராதான்யம் –

தோழி நாயகனை பழித்துச் சொல்வதை பொறுக்காத நாயகி -அவன் திருக் கண்கள் என் நெஞ்சுள்ளும்
கண்ணுள்ளும் தோன்றி நீங்காது இருக்கின்றன –

இங்கனம் அன்போடு அணியனாய் உள்ளவனை அநாதரம் செய்து பிரிந்து சென்றான் என்று பழிப்பாயோ-என்கிறாள் – வண்ணம் சிவந்துள வானாடமரும் குளிர் விழிய-அநு ராகத்தாலும் சீற்றத்தாலும் சிவக்கலாம் -இங்கு குளிர்ந்த வேட்க்கையால் அன்றோ – தாம் இவையே -மானஸ அனுபவம் மாத்திரம் இன்றியே உரு வெளிப்பாடால் பிரத்யக்ஷம் ஆனவாறு-நினைவின் முதிர்ச்சியால் –அடியேனோடு யக்காலம் இருக்கின்றதே-அவன் பூர்ண கடாக்ஷம் தம் நெஞ்சில் நிலை பெறும் படி பேர் அருள் செய்த விதத்தை அறிவித்து அவர்களை சமாதானப் படுத்திய பாசுரம் –

வண்ணம் சிவந்துள-தம் பக்கல் இவருக்கு யுண்டான ராகம் இக் கண்களினுடைய நிறத்தில் சிவப்பிலே காணலாம்–அது சீற்றத்தாலோ என்னில்–வானாடமரும் குளிர் விழிய–நித்ய விபூதியிலே இருந்து நித்ய அனுபவம் பண்ணி நிரதிசய ஆனந்தத்தாலே குளிர்ந்த பார்வையை யுடைத்தாய் இரா நின்றன–இவர் திரு உள்ளத்தில் பிரகாசிக்கிற தசையிலும் குளிர்த்தி மாறாது இருக்கை –தண் மென் கமலத்தடம் போல் பொலிந்தன-இக் கண் அழகுக்கு சீதளமாய் மிருதுவான தாமரைத் தடாகத்தைப் போலி யாக்கினால் மிகுத்துத் தோன்றா நின்றன –தாமிவையோ-இவை ஸ்ம்ருதி மாத்ரமும் இன்றியே உரு வெளிப்பாடாம் படி பிரகாஸியா நின்றன–ஸ்ம்ருதி -நினைவு மட்டும்-அத்தையும் தாண்டி உருவ வெளிப்பாடு -முழுவதாக அறிவது அத்தையும் தாண்டி பிரத்யக்ஷம் நேராக் காண்பதுகண்ணன்
பெண் பிறந்ததற்கு பவ்யனானவன்(சுவையன் திருவின் மணாளன் )திருமால்
— நாரீணாம் உத்தமையான பிராட்டிக்குப் பிச்சனாவான்–திருமுகம் தன்னோடும் காதல் செய்தேற்கு-கண்ணன் கோள் இழை வாண் முகம் -திருவாய் -7-7-8-என்கிறபடியே சகல ஸுந்தர்ய ஸாம்ராஜ்ய ஸ்த்தலமான திரு முகத்திலே ஸாமான்ய ஸ்நேஹம் பண்ணின எனக்கு–எண்ணம் புகுந்து-தடாகத்தின் சுழி போலே கொண்டு முழுகும் படியான கண்கள் தானே-என் நெஞ்சிலே புகுந்துஅடியேனோடு-தனக்கே சேஷமான என்னோடே கூட(ஏவகாரம்-அநந்யார்ஹ சேஷத்வம் )இக்காலம் இருக்கின்றதே-க்லேசிக்கிற இக்காலத்திலும் விடாதே இரா நின்றன–ஆதலால் அவன் நம்மை அநாதரித்தான் என்று
இயல் பழிக்கப் படாது காண் என்று தோழிக்கு இயற் பட மொழிந்ததாயிற்று–இத்தால் வண்ணம் சிவந்துள என்கையாலே ஆழ்வார் பக்கலிலே ஈஸ்வரனுக்குப் பிறந்த ராகம் ஸூசிதமாயிற்றுவானாடு இத்யாதியாலே அந்த விபூதியில் அனுபவத்தாலே யுண்டான செவ்வியும் இவர் பக்கல் செறிவாலே உண்டானமை தோற்றிற்று ஆயிற்று-(அந்தா மத்து அன்பு செய்து –என்னாவி சேர் அம்மான்
சேர்ந்த பின்பு தானே அவையும் சித்தி பெற்றது-என் உச்சி உள்ளே நிற்கும் -தேவதேவன் -நின்றபடியாலே தேவ தேவன் ஆனான் )

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம்-வண்ணம் சிவந்துள-திருக்கண்களுக்குச் சிவப்புப் பிறப்பே பிடித்து
ஸ்வ பாவமாய் இருக்கும் இறே-இப்போது வண்ணம் சிவந்துள -என்கிற இத்தால்-பூர்வ அவஸ்தையில் வை வர்ண்யம் அத்தலையில் என்னும் இடம் தோற்றுகிறது-ந ஜீவேயம் க்ஷணம் அபி -ஸூந்தர –66010-என்னும்படி இறே அத்தலையில் ஆற்றாமை ஆகையால் கண் உறங்காமையாலே வந்த சிவப்பும் வை வர்ண்யமும் தீர்ந்தது இப்போது என்னும்படி இருக்கை–வானாடமரும் குளிர் விழிய-ஒரு த்ரிபாத் விபூதியாக ஒரு கண்ணில் குமிழில் கீழே யாயிற்று ஜீவித்துக் கிடப்பது வானாடு அமரும்படியான குளிர்ந்த கடாக்ஷத்தை யுடையவன்–அமருகையாவது-இத்தாலே உண்டு உடுத்து வர்த்திக்கை-தாரகமும் போஷகமும் போக்யமும் எல்லாம் இவையே என்று இருக்கை–தண் மென் கமலத்தடம் போல் பொலிந்தன-குளிர்ந்து மிருதுவாய் இருபத்தொரு தாமரைப் பொய்கை பரப்பு மாற அலர்ந்தால் போலே யாயிற்று திருக்கண்கள் இருப்பது–தாமிவையோ-தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ -(சாந்தோக்யம் -1-6-7-)என்று கேட்டார் வாய் கேட்டு இருந்தோம் அவை தான் இருக்கும் படி இதுவோ–கண்ணன் திருமால்–திருமால் கண்ணன் -ஸ்ரீ யபதி யாகையாலே ஆஸ்ரிதற்குக் கையாள் யானவன்-திருமுகம் தன்னோடும் காதல் செய்தேற்கு–அழகிய திரு முகத்தோடு வந்து குளிர நோக்க வேணும் என்று ஆசைப்பட்ட எனக்கு–எண்ணம் புகுந்து–மநோ ரதித்த படியே கை புகுந்தது என்னுதல்
அன்றிக்கே-எண்ணம் புகுந்து என்றாய்-என்னுடைய மநோ ரதத்தைத் தானே ஏறிட்டுக் கொண்டு-அடியேனோடு-ஜிதம் -ஜிந்ததே ஸ்தோத்ரம் என்கிறார்-அஹம் அர்த்தத்தினுடைய ஸ்வரூபம் தான் அடியேன் என்று போலே காணும் இருப்பது-ஜீவ ஸ்வரூப பரமான வாக்கியத்தில் அப்படியே இறே சொல்லுகிறது-அது ஜீவ ஸ்வரூப பரமோ என்னில்-ஓம் இத்யாத் மாநம் யூஞ்ஜீத -தைத்ரியம் –என்றும் யுண்டு-ஓங்காரே பகவான் விஷ்ணு என்றும் சொல்லா நின்றது இறே–இக் காலம்-இப் பேற்றுக்கு வரவாறு முன் நாள் அறிந்திலேன் கிடீர்–இருக்கின்றதே-நச புநரா வர்த்ததே -சாந்தோக்யம் -8-15- என்னும் பேற்றைப் பெற்றோம் ஆகாதே என்று தோற்றி இரா நின்றது-ஒரு நாளும் இனிப் பிரிகைக்கு சம்பாவனை இல்லை என்று தோற்றி இரா நின்றது-ப்ரத்யக்ஷ ஸமாநா காரமாகிலும் இவர்க்கு
சமாநாசா காரம் என்று தோற்றாதே -ப்ரத்யக்ஷம் என்றே தோற்றுகிறது –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-வியாக்யானம்-வண்ணம் சிவந்துள என்னில் அநு ராக உத்தரமான கண்ணில் சிவப்பு இப்போது யுண்டாயிற்று–அதுக்கும் மேலே–வானாடமரும் குளிர் விழிய தண் மென் கமலத்தடம் போல் பொலிந்தன தாமிவையோ-இவை திருக்கண் மலர்கள்-வான் நாட்டில் உள்ளாரில் காட்டிலும் என்னிவ் வக்நமாய் ஸூ சீதளமான பார்வையை யுடைத்தாய் குளிர்த்தியும் மார்த்தவமும் யுள்ள கமலங்களேயான தடாகத்தைப் போன்றதாய் அது தான் இவைக்கு சரியோ என்னலாய் இரா நின்றது–ஓ-இது ஹாவு ஹாவு -தைத்ரியம் என்றபடி-கண்ணன் திருமால் திருமுகம் தன்னோடும் காதல் செய்தேற்கு எண்ணம் புகுந்து அடியேனோடு யக்காலம் இருக்கின்றதே-என்பது இங்கே கூடும்
திருமால் வ்யாமோஹம் செய்யும் கண்ணனுடைய திரு முகத்தோடே
கோள் இழைத்த தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோள் இழையா வுடைய கொழுஞ்சோதி வட்டம் கொல் கண்ணன்
கோள் இழை வாண் முகமாய்க் கொள்கின்ற
–திருவாய் –7-7-8–ஸகல ஆனந்த ஸுந்தர்ய ஸாம்ராஜ்ய ஸ்த்தலமான திரு முகத்தில் அதீப் தீயா நித்ய உபாயான சீலர்க்கு த்யான ரூடமாய் இருக்குமே அது-அடியேனோடு இக்காலம் இருக்கின்றதே–தனக்குப் பூவின் மீசை நங்கை போல் அடிமை செய்ய வேண்டின என்னோடே இப்போது அநு பாவ்யமாய் இருக்கிறது-ப்ரத்யக்ஷமாய்த் தானே இங்கும் ஓ என்பது அன்விதம்

தாத்பர்யம்–கீழே நாயகியின் ஆர்த்தியையே சொல்லி முறையிட்ட தோழி பாசுரம் கேட்டு த்வரித்து அவன் கடாக்ஷித்து அருளmநாயகி அத்தாலே அவனது ஸ்வ பாவத்திலே ஈடுபட்டு பாடுகிறார்
ஆஸ்ரித ஸூ லபனாயும் ஸ்ரீயப்பதியாயும் -கண்ணன் திருமால் –நித்ய ஸூரிகளுக்கு ஜீவன ஹேதுவாய் –கடாக்ஷம் தாரக போஷக போக்யமாய் -உள்ளவர்கள் அன்றோ –
தாமரைத் தடாகம் போல் குளிர்ந்த மிருதுவாய் சகல குண பரிபூர்ணமாய் குளிரக் கடாக்ஷித்து
இப்பொழுது ஆழ்வாரது மனோரதம் நிறைவேற்றி அதனாலேயே தானும் உளனாகி
அந்தாமத்து அன்பு செய்து -உளன் ஆனால் போல் ஆனான் அன்றோ ஆகவே அவன் மேலே குற்றம் சொல்லாதே என்றவாறு

1-9-இவையும் அவையும் -பிரவேசம் –

கீழ் திருவாய்மொழியில் இறைவனுடைய ஆர்ஜவ குணத்தை அநுசந்தானம் செய்தார்;
இப்படி அநுசந்தித்தார் திறத்தில் ஸ்ரீ சர்வேஸ்வரன் இருக்கும்படியை அருளிச் செய்கிறார் இத் திருவாய்மொழியில்-
ஸ்ரீ சர்வேஸ்வரனாய் ஸ்ரீ திருமகள் கேள்வனாய்ப் பரம ரசிகனாய் இருக்கிற இறைவன்,
ஸ்ரீ ஆழ்வார் பத்தியிலே துவக்குண்டு இவரோடே கலந்து -ஏக ரசனாய் -இனிமையில் ஒன்று ஆனான்;

இவ் வாழ்வார்க்கும் தன்னை அனுபவிக்கைக்கு ஈடான  விடாயைப் பிறப்பித்துப்
ஸ்ரீ பரம பதத்தில் உள்ளாரோடு பரிமாறுவது போன்று பரிமாறக் கோலித் தன்னை அனுபவிப்பிக்கிறான்.
அதாவது, ஸ்ரீ பிராட்டிமாரோடு பரிமாறுவது, தேவியர் என்னும் முறையாலே;
ஸ்ரீ திருவடியோடு பரிமாறுவது, வாகனம் என்னும் முறையாலே;
ஸ்ரீ திருவனந்தாழ்வானோடு பரிமாறுவது, படுக்கை என்னும் முறையாலே.
இப்படி  அவர்களோடு ஒவ்வொரு முறையாலே பரிமாறும் பரிமாற்றங்கள் எல்லாம் இவர் ஒருவரோடு பரிமாறுகிறானாய்,
அது தன்னையும் குளப்படியிலே கடலை மடுத்தாற்போன்று அன்றி,(குளப்படி-மாடு முதலியவற்றின் குளம்பு படிந்த சுவடு)-
(‘என்னுடைச் சூழலுளான்’, ‘என்னருகலிலான்’ என்பன போன்று அருளிச் செய்வதால் )பொறுக்கப் பொறுக்கப் பரிமாற,
இவரும் அவனை  எல்லா இந்திரியங்களாலும் எல்லா உறுப்புகளாலும் தாம் விரும்பியவாறே நுகர்ந்து,
(‘என் நெஞ்சினுளான்’, ‘என் கண்ணிலுளான்’ என்பனவற்றை நோக்கி, ‘எல்லா இந்திரியங்களாலும்’ என்கிறார்,
‘ஒக்கலையான்’, ‘நெற்றியுளான்’ என்பனவற்றை நோக்கி, ‘எல்லா உறுப்புகளாலும்’ என்கிறார்.)
அந் நுகர்ச்சியால் உண்டான பிரீதியாலே அவன் குணங்களைப் பேசி அனுபவிக்கிறார்.

ஒன்பதாம் திருவாய் மொழியில் இப்படி ஆர்ஜவ குணத்தை யுடைய சர்வேஸ்வரன் -பொய் கலவாது என் மெய் கலந்தான் –1–8–5–என்றும்
என் எண் தான் ஆனான் -1–8–7-என்றும் கீழ் சொன்ன க்ரமத்திலே தன்னுடைய குண விக்ரஹ மஹிஷீ பரிஜன விபூதி சேஷ்டிதங்களோடே கூட இவரோடு
பரிபூர்ணமாக ஸம்ஸ்லேஷித்து அனுபவிக்கப் பார்த்து -இவர் வெள்ளக் கேடாய் உடை குலையப் படில் செய்வது என் என்று பார்த்து சாத்மிக்க சாத்மிக்க
புஜிப்பிப்பானாக -1-இவர் பரிசரத்திலே வர்த்திப்பது –2-இவருக்கு அந்திகஸ்தனாவது -3-கூட நிற்பது –4-இவர் சரீரத்தில் ஒரு பக்கத்திலே யாவது –
-5-ஹிருதய பிரதேசத்தில் ஆவது -7-தோள்களில் சேர்வது -8-நாவிலே நிற்பது -9-கண்ணுக்குள்ளே யாவது -10-நெற்றியிலே யாவது -11-உச்சியிலே யாவதாகக்
கொண்டு க்ரமத்திலே போகம் தலை மண்டையிடும் படி சாத்மிக்க சாத்மிக்க ஸம்ஸ்லேஷித்த படியை அருளிச் செய்கிறார் –

இவையும் அவையும் உவவையும் இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே
 –1-9-1-

ஜகத் காரண பூதனனாய் -சர்வ அந்தராத்மாவாய் -ஸ்ரீ யபதியாய் இருந்துள்ள கிருஷ்ணனானவன் –என்னுடைய பர்யந்தத்தை விட்டு போக மாட்டாத படியானான் -என்கிறார் –

அவையுள் தனி முதல்- இதனால், உண்டாக்கிய பொருள்கள் தொழில் செய்தல் தொழில் செய்யாமைகட்குத் தகுதியாம்படி அவற்றுள் அந்தராத்துமாவாய் நிற்கும் நிலையைச் சொல்லுகிறார்.
‘ஆயின், அந்தராத்துமாவாய் நிற்கும் இந்நிலை ‘ஆக்கியும்’ என்று படைத்தலைக் கூறிய போதே அடங்காதோ?’ எனின், தத் அநு ப்ரவேஸ்ய  ‘படைத்து அவற்றுள் அநுப்பிரவேசித்தார்’ என்கிறபடியே,-இவற்றுடைய -வஸ்துத்வ நாம பாக்த்வங்களுக்கு -அவை பொருளாதலுக்காகவும் பெயர் அடைதலுக்காகவும் பண்ணும் அநுப் பிரவேசத்தைச் சொன்னார் அங்கு;
இங்கு அவற்றிற்குக் கூறப்படும் பெயர் இறைவனாகிய தன் அளவில் வந்து முடியும்படியாக நிற்கும் நிலையைச் சொல்லுகிறார்; ஆதலின், அடங்காது என்க.

கண்ண பிரான் –‘இப்படி இருக்கிறவன் தான் யார்?’ என்னில், ஸ்ரீ கிருஷ்ணன்.
இனி, கண்ணபிரான் என்பதற்கு, ‘கண்களுக்குத் தோன்றித் திருவருள் செய்கின்றவன்’ என்று கூறலுமாம்.-என் அமுதம்-தேவர்கள் அதிகாரிகளாய் இருக்கிற அமிருதத்தில் வேறுபாடு.-சுவையன்-பரம ரசிகன்; அவ்வமிருதத்திற்குச் சுவையை நுகருந்தன்மை இல்லையே!-திருவின் மணாளன் – இவருடைய அமிருதம் ஒரு மிதுனம் ஆயிற்று. இதனால், மேற்கூறிய சுவைக்கு ஊற்றுவாய் அருளிச் செய்கிறார்.-திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே- ஸ்ரீ பெரிய பிராட்டியார் ‘அகலகில்லேன் இறையும்’ என்னப் பிறந்தவன், என் பக்கத்தில் வாழ்தல் தன் பேறாக வாழ்கின்றான்-‘ஆகியும் ஆக்கியும் காக்கும் தனி முதல் எம்மான்’ ஆகிய இறைவன், என்னை விட்டுப் பிரிதற்கு மனம் இன்றி என் அருகிலேயே தங்கி இருக்கிறான் என்பார்,‘என்னுடைச் சூழலுளானே’என்கிறார்.

————

சூழல் பல பல வல்லான் தொல்லை யம் காலத்து உலகை
கேழல் ஒன்றாகி இடந்த கேசவன் என்னுடை யம்மான்
வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடும் கடல் சேர்ந்தான் அவன் என் அருகில் இலானே
 –1-9-2-

என் பரிசரத்தில் சுற்றுப் புறத்தில் வசித்தவன், அது சாத்மித்தவாறே பொறுத்தவாறே
என் அருகே வந்து நின்றான்,’ என்கிறார்.-சேதநரை அகப்படுத்திக் கொள்ளுமது ஆகையாலே அவதாரத்தைச் ‘சூழல்’ என்கிறார்.-ஜாதி பேதத்தையும் அவாந்தர பேதத்தையும் நோக்கிப் ‘பல பல’ என்கிறார்.-சர்வ சத்தியான தானே ‘இவ் வடிவைக் கொள்ளவேண்டும்’ என்னிலும் ஒண்ணாதபடி இரண்டு அற்றதாய் இருந்தது ஆதலின், ‘கேழல் ஒன்றாகி’ என்கிறார். அதாவது, பூமி பிரளயத்தில் அகப்பட்டவாறே, நீருக்கும் சேற்றுக்கும் பின் வாங்காத வடிவைக் கொண்டான்;
அது அவன் கொண்ட வடிவாகையாலே அழிவுக்கு இட்ட வடிவு தனக்கே ஆலத்தி வழிக்க வேண்டியிருக்கின்றது என்றபடி.  ‘பன்றியாம் தேசு’ என்பர் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியார். கேசவன்– அப்போதைத் திருமேனியும் உளை மயிருமாய் நின்ற நிலையினை நினைந்து. ‘கேசவன்’என்கிறார். கேசம் – மயிர்.வேழம் மருப்பை ஒசித்தான் –குவலயாபீடத்தினுடைய தந்தங்களை வருத்தம் இன்றி முறித்தவன்.
அப்படியே, என்னுடைய மத களிறுகளாகிய ஐம் பொறிகளையும் சேரி திரியாமல் செய்தவன் என்பதனைக் குறித்தபடி.-விரோதி நிரசன சீலன் என்றபடி-வாரி சுருக்கி மத களிறு ஐந்தினையும், சேரி திரியாமல் செந் நிறீ இ’ (முதல் திருவந். 47.)

———

அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நன்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொருசிறைப் புள்ளுவந்தேறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே
 –1-9-3-

ஸ்ரீ திருவடி ஸ்ரீ திருவானந்தாழ்வான் ஸ்ரீ பிராட்டிமார் தொடக்கமானவரோடு ஒரோ வகையாலே பரிமாறுமவன்-என்னளவில் ஒரோ வகையிலே பரிமாறி விட மாட்டுகிறிலன் -என்கிறார் –தண் தாமம் செய்து -என்று நித்ய விபூதியில் பண்ணும் விருப்பத்தைப் பண்ணினார் என்றார் கீழில் திருவாய் மொழியில்
இதில் அவ்விபூதியில் உள்ளாரோடு பரிமாறும் படியை என் ஒருவனோடு பரிமாறினார் -என்கிறார் –இவன் ஒரு விபூதிமான் -அந்ய பரன் என்று தோற்ற இருக்கிறிலன்-
நித்ய விபூதியில் கேள்வியும் இங்கே இருந்தாம் அத்தனை

———-

உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண் மகள் ஆயர்
மடமகள் என்று இவர் மூவர் ஆளும் உலகமும் மூன்றே
உடன் அவை ஒக்க விழுங்கி யாலிலைச் சேர்ந்தவன் எம்மான்
கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் என் ஒக்கலையானே
 –1-9-4-

மேன்மை அது -அகடிகடநா சாமர்த்தியம் அது -இப்படி இருக்கிறவன் ஸ்ரீ யசோதைப்பிராட்டி மருங்கிலே இருக்குமா போலே என் மருங்கிலே வந்து இருக்கை தனக்குப் பெறாப் பேறாக நினைத்து இரா நின்றான் என்கிறார் –

திருமகள்-ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு பிரதான மகிஷியாய் -பட்டத்துக்கு உரியவளாய் –
ந கச்சின் ந அபராத்யதி -என்று இருக்கும் ஸ்ரீ பெரிய பிராட்டியார்-மண் மகள் முதலிலே குற்றம் பார்க்கக் கடவதோ -என்று அவனுக்கு பொறைக்கு உவாத்தாய்
பொறை விளையும்படியான ஸ்ரீ பூமிப் பிராட்டி –ஆயர் மட மகள் -அனுபவ ஸூகம் தானாய் தன் வடிவு அழகாலே துவக்கித் திரு உள்ளத்திலே குற்றம் படாதபடி இருக்கும் ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டி –திருமகள் அவன் ஐஸ்வர்யம்-மண் மகள் அது விளையும் பூமி-ஆயர் மட மகள் அத்தைப் புஜிக்கிற போக்தாவானவள் -என்றுமாம் –என்று இவர் மூவர்-மேன்மைக்கும் புருஷகாரத்துக்கும் தனித்தனியே அமைந்து இருக்கிற இவர்கள் மூவர்-என் ஓக்கலையானே —ஸ்ரீ யசோதைப் பிராட்டி மருங்கிலே இருக்குமா போலே என் மருங்கிலே இரா நின்றான் –

———

ஒக்கலை வைத்து முலைப்பால் உண் என்று தந்திட வாங்கி
செக்கஞ்ச்செக வென்று அவள் பாலுயிர் செகவுண்ட பெருமான்
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக
ஓக்கவும் தோற்றிய வீசன் மாயன் என் நெஞ்சின் உளானே
 –1-9-5-

விரோதி நிரசன சீலனாய் ‘மாற்றாரை மாறு அழிக்க வல்லவனாய்,- சர்வ ஸ்ரஷ்டாவானவன் – எல்லாப் பொருளின் தோற்றத்திற்குங்காரணனாய் உள்ளவன் என் ஹ்ருதயஸ்தன்- மனத்தினன் ஆனான்,’ என்கிறார்.-மாயன்- ஸ்ருஷ்டமான -உண்டாக்கிய உலகத்திலே அநுப் பிரவேசம் முதலான ஆச்சரியமான செயல்களை யுடையவன். சர்வ சரீரியாய் இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் அன்றோ-என் நெஞ்சின் உளான் – என் சரீரத்தில் ஏக தேசத்தை ஓரிடத்தைப் பற்றி நின்றான்.-ப்ரஹ்மாதி ஸ்தாவர அந்தமான சர்வ ஜகத்துக்கும் ஸ்ரஷ்டாவாய் -சர்வ ஜெகன் நியந்தாவாய் –ஆச்சர்ய பூதனுமாய் -விரோதி நிரசன ஸ்வ பாவனுமாய் –
இருந்தவன் என் ஓக்கலையில் தான் இருந்த இருப்பு எனக்கு சாத்மித்தவாறே -என் மார்விலே வந்து இருந்து அருளினான் -என்கிறார் –

———–

மாயன் என் நெஞ்சினுள்ளான் மற்றும் யவர்க்குமதுவே
காயமும் சீவனும் தானே காலும் எரியும் அவனே
சேயன் அணியன் யவர்க்கும் சிந்தைக்கும் கோசரம் அல்லன்
தூயன் துயக்கன் மயக்கன் என்னுடைத் தோளிணை யானே
 –1-9-6-

சர்வாந்தராத்மாவானவன் ‘எல்லாப் பொருள்கட்கும் அந்தராத்துமாவாக இருப்பவன்
என் தோளைப் பற்றி வர்த்தியா நின்றான் – வாழ்கின்றான்’ என்கிறார்.-காயமும் சீவனும்
சர்வ அந்தராத்மா என் தோளைப் பற்றி வர்த்தியா நிற்கிறான்-தூயன்-இப்படி இருக்கிறவன் ஸ்ரீ யசோதை முதலானவர்கட்கு யதி சக் நோஷி ‘நீ வல்லையாகில் போய்க் காணாய்’‘
என்னலாம்படி இருப்பான்.-இதனால், அணிமைக்கு எல்லை கூறினார்.-துயக்கன் மயக்கன் –
உகவாதார்க்கு-சம்சய விபர்யயங்களை – ஐயம் திரிபுகளைப் பிறப்பிக்கின்றவன்.-என்னுடைத் தோளிணையானே–என் அளவில் அங்ஙன் அன்றிக்கே, ஸ்ரீ திருவடி திருத் தோளில் இருக்குமாறு போன்று, என் தோளில் இரா நின்றான்.-சம்சய விபர்யய ரஹிதமாக என் தோளிலே வர்த்தியா நின்றான்-பெரிய திருவடி தோளில் இருப்பை மாறி என் தோளிலே இரா நின்றான் –-இவனுக்கு என் பக்கலுள்ள அபி நிவேசம் இருக்கும் படியே இது -என்கிறார்

————

தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும்
தாளிணை மேலும் புனைந்த தண்ணம் துழாய் யுடை யம்மான்
கேளிணை ஒன்றும் இலாதான் கிளரும் சுடர் ஒளி மூர்த்தி
நாள் அணைந்து ஒன்றும் அகலான் என்னுடை நாவில் உளானே
 –1-9-7-

நான் உகந்தபடியே அலங்கரித்துக் கொண்டு வந்து என் நாவிலே கலந்தான்’ என்கிறார்.-ஆழ்வார் விரும்பிய வாறே திருத் துழாயால் தன்னை அலங்கரித்துக் கொண்டு சென்றான்.
இவர் உகப்பதும் திருத் துழாயே, அவன் கொடுப்பதும் திருத் துழாயே அன்றோ?
‘புள் ஊர்திகள் ஊரும் துழாய்க் கொயல் வாய் மலர் மேல் மனத்’ தையுடையராய் இருப்பர்.
‘எங்ஙனம்?’ எனின்,
திருத் தாயார் கூறும் போதும் ‘வண்டு திவளும் தண்ணம் துழாய் கொடீர்’ என்பர்.
இவள் தானும் ‘விரை மட்டு அலர் தண் துழாய் என்னும்’, 
‘கண்ணன் கழல் துழாய் பொன் செய் பூண் மென் முலைக்கு என்று மெலியும்’,
அவனும், ‘தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கு அன்றி நல்கான்’ என்கிறபடியே,
இவளுக்கு அன்றி நல்கான்.

அணைக்க-கணிசிக்கிற விரும்புகிற திருத் தோள்களிலும்,–அணைப்பிக்குமவள் இருக்கிற திரு மார்பிலும்.-அணைத்துக்கொண்டு நின்று மேல் நோக்கிப் பார்த்தவாறே
தன்னுடைய தலைமைக்குப் பிரகாசமாயிருக்கிற திருமுடியிலும்.-தன்னுடைய இறைமையை நிலை நிறுத்துகின்ற திருவடிகளிலும் சாத்தின திருத்துழாயினை யுடைய ஸ்ரீ சர்வேஸ்வரன்.

இவ்வடிகட்கு ஸ்ரீ பட்டர் மிக அழகாகவும் ரசோக்தியாகவும் விசேடப் பொருள் அருளிச் செய்வர்;-அப் பொருள் வருமாறு:
வீரராய் இருப்பார் முற்பட ஆயுதத்திற்கு இடுவார்கள்; அப்படியே திருத்தோள்களுக்கு இட்டான்.
பிரணயிகளாய்- காதலர்களாய் இருப்பவர்கள்-அபிமத விஷயத்துக்கு அன்புக்குரிய காதலிக்கு இடுவார்கள்;-அப்படியே பெரிய பிராட்டியார் எழுந்தருளியிருக்கும் கோயில் கட்டணத்துக்குக் கொடுத்தான்;
ஆயுதத்திற்கும் காதலுக்கு உரியவர்களுக்கும் இட்டால், பின்னைத் தாம் தாம் அணிந்து கொள்ளுவார்கள் இத்தனை யன்றோ?-ஆதலின், தான் சூடினான்;
சேஷம் பின்னர் அடியார் அன்றோ கைக் கொள்ளுவார்? ஆகையால், திருவடிகளுக்குச் சாத்தினான்;-ஆபத்துக்குத் துணை செய்வார் அடியார் அன்றோ?
தளர்ந்தும் முரிந்தும் சகட அசுரர் உடல் வேறாப் பிளந்து வீயப் பொருவார் அடியாரே அன்றோ? ‘ஆயின், நம்முடைய ஆபத்துக்கு ஒழிய ஸ்ரீ இறைவனுடைய ஆபத்துக்கும் திருவடி துணையாமோ?’ எனின், நம்முடைய ஆபத்துகளுக்குத் திருவடிகளே துணையாயினாற்போலே காணும் அவனுடைய ஆபத்துகளுக்கும் திருவடிகளே துணையாயினபடி.

————–

நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே
பூவியில் நால் தடம் தோளன் பொரு படை யாழி சங்கேந்தும்
காவி நன் மேனிக் கமலக் கண்ணன் என் கண்ணினுள் உளானே
 –1-9-8-

சகல வித்யா வேத்யனான ‘எல்லாக் கலைகளாலும் அறியப் படுகின்ற சர்வேஸ்வரன்,
பிரமாணங்களாலே காணக் கூடிய வடிவை என் கண்ணுக்கு விஷயமாக்கினான்,’ என்கிறார்.-சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள சம்பந்தம் அவன் இட்ட வழக்கு-கமலக் கண்ணன் என் கண்ணினுளானே-திருமேனியின் அழகாகிய பெரு வெள்ளத்திலே ஒரு சுழி போன்று திருக்கண்கள் இருத்தலின்  ‘நன்மேனிக் கமலக் கண்ணன்’ என்கிறார்.
பிராகிருத -வெளிப் பொருள்களை நுகர்ந்து போந்த இவருடைய கண்களுக்கு இறைவன் தன்னை விஷயமாக்கினான் ஆதலின், ‘என் கண்ணினுளான்’ என்கிறார். இவர் கண் வட்டம் ஒழியப் புறம்பே போனால் கண் வட்டக் கள்ளனாம் -ஆதலின், ‘கண்ணினுளானே’ என ஏகாரங்கொடுத்து அருளிச் செய்கிறார்-

————

கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே
அமலங்களாக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி
கமலத்தயன் நம்பி தன்னைக் கண்ணுத லானொடும் தோற்றி
அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி என் நெற்றி உளானே
 –1-9-9-

ஸ்வ சங்கல்ப ஏக தேசத்தில் சர்வத்தையும் உண்டாக்கினவன்-என்னுடைய சரீர ஏக தேசத்தைப் பற்றி தான் உளனாக நினையா நின்றான்-கண்ணிலே நின்ற நிலை சாத்மித்தவாறே -பொறுத்தவாறே என் நெற்றியிலே வந்து நில்லா நின்றான்,’ என்கிறார் –அவன் தன் திருக் கண்களாலே என் குற்றம் எல்லாம் கழிந்து நான் காண வல்லேனாம்படி குளிர நோக்குகின்றான்.-என் நெற்றி யுளான் –  கர்மானுகுணமாக -கர்மங்களுக்குத் தகுதியாக உலகத்தை உண்டாக்கி விட்டான். பிரயோஜன நிரபேஷமாக ‘பிரயோஜனத்தில் விருப்பம் இல்லாமல் என் நெற்றியில் புகுந்து நின்றான்’ என்பார்,  நெற்றியுளானே’ என ஏகாரம் கொடுத்து ஓதுகின்றார்.

————–

நெற்றியுள் நின்று என்னை யாளும் நிரை மலர்ப்பாதங்கள் சூடி
கற்றைத் துழாய் முடிக் கோலக் கண்ண பிரானைத் தொழுவார்
ஒற்றைப் பிறை யணிந்தானும் நான்முகனும் இந்த்ரனும்
மற்றை யமரரும் எல்லாம் வந்து என் உச்சி உளானே
 –1-9-10-

ப்ரஹ்மாதிகள் தன்னைப் பெறுகைக்குக் காலம் பார்த்துத் தடுமாறும்படி இருக்கிறவன் தான்  என்னைப் பெறுகைக்கு-அவசரம் – காலம் பார்த்து வந்து என் உச்சியுள் ஆனான்,’ என்கிறார்.

ஒரு வாடல் மாலையைக் கொண்டு வந்து திரு முடியிலே வைத்தாலும், திருக் குழலின் சம்பந்தத்தால் செவ்வி பெற்றுத் தழையா நிற்குமாதலின் ‘கற்றைத் துழாய் முடி’ என்கிறார். –கற்றை – தழைத்தல். -இராசாக்கள் அந்தப் புரத்தில் ஒரு கட்டினின்றும் மற்றைக் கட்டு ஏறப் போகா நிற்க, அந்தரங்கர் நடுவே முகங்காட்டித் தம் காரியங்கொண்டு போமாறு போன்று,
இறைவன் இவர் திரு நெற்றியினின்றும் திரு முடி ஏறப் போகா நின்றால் பிரமன் முதலான தேவர்கள் நடுவே முகங்காட்டித் தங்கள் காரியம் கொண்டு போவர் ஆதலின், 
‘அமரரும் எல்லாம் தொழா நிற்க வந்து எனது உச்சிளானே-என்று அருளிச் செய்கிறார் –

———

உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவற்கு கண்ண பிராற்கு
இச்சையுள் செல்ல யுணர்த்தி வண் குருகூர்ச் சடகோபன்
இச்சொன்ன வாயிரத்துள் இவையுமோர் பத்து எம்பிராற்கு
நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே
 –1-9-11-

நிகமத்தில் -இத் திருவாய் மொழியை ஸ்ரீ எம்பெருமானுக்கு விண்ணப்பம் செய்ய –
அவர்கள் தலையிலே ஸ்ரீ எம்பெருமான் திருவடிகள் நாள் தோறும் சேரும் என்கிறார் –அமரர் சென்னிப் பூவான தான் என் சென்னிக்கு அவ் வருகு கந்தவ்ய பூமி இல்லை -என்று
என் உச்சியுள்ளே வர்த்தியா நின்றான்-என் உச்சியுள்ளே நிற்கையாலே தேவ தேவன் ஆனான் என்றுமாம்-தனக்குப் பாங்கான சமயத்தில் ஒரு கால் விண்ணப்பம் செய்ய நாள் தோறும் ஆசாலேசம் உள்ளார் இடத்திலே செல்ல வளரும் திருவடிகள் சென்னியோடே சேரும்-ஸ்ரீ ஆழ்வார் க்ரமத்திலே உச்சி உளானே என்ற பேறு-இது கற்றற்கு முதல் அடியிலே உண்டாம்-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -62-இறையோ இரக்கினும் ஈங்கு ஓர் பெண் பால் –தேவிமார் ஆவார் -8-1-

February 28, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடியவர் அங்கு அணை மேல் பள்ளி கொண்டமை வியக்தமாக இல்லை-இதில் தான் முகில் வண்ணன் பத பிரயோகமும்-அரவணை மேல் பள்ளி கொண்டவன் வியக்தமாக உள்ளது-ஆனால் இப் பாசுர விவரணம் தேவிமார் ஆவார் –8-1-திருவாய் மொழியே அங்கும் ஓங்காரம் பல உண்டே–இங்கு முறையோ கேள்வி போல் அங்கும் திருத் தாயார் உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய்-தோழி கடல் ஓசைக்கு ஆற்றாத தலைவியின் தளர்ச்சியைப் பற்றி புலம்பும் -பாசுரம்-தலைவன் மறைந்து இருக்க -முறையோ என்று அவனையே குறித்து சொல்லும் பாசுரம் என்றுமாம்–முறையோ ஓங்காரம் -இரக்கம் குறித்து–அறையோ -சந்தேகம் -அறை கூவுகிறதோ ஐயம் இது-நிறையோ -அடக்கம் -தெரிநிலை ஓங்காரம் -நிறை யானது-உனது திரு அருளாலே காக்கப்பட வேண்டும்-தேவிமார் -தாள்களைத் –பேர் உதவிக்கைம்மாறு –ஆத்மா சமர்ப்பணம் -உயிரை அறவிலை செய்தனன்-அதுவும் அவனது இன்னருள் -எனது ஆவி யார் யான் யார் தந்த நீ உனது இரக்கமே சாதனம் -தடுமாறி சொல்லுவார் அங்கும்-ஆளவந்தார் -மயா சமர்ப்பித்தம் -கின்னு ஸமர்ப்பயாமி போல் உண்டே இரக்கமே உபாயம் இதில் வியக்தமாக உள்ளதே

அவதாரிகை–கீழ் கிருஷ்ண அவதார சௌலப்யம் இறே  அனுசந்தித்தது – அந்த அவதார சம காலத்திலேயே-தாம் உளராகப் பெறாமையாலே வந்த ஆற்றாமையாலே – கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி தசையை பிராப்தரானார் –அவள் பிறிவாற்றாமைக்கே மேலே கடலோசையும் பாதகமாக நின்றது என்று திருத் தாயார் (செவிலித்தாயார் )சொல்லுகிறாளாய்  இருக்கிறது- தலைவியின் ஆற்றாமையைத் தோழி தலைவனுக்கு கூறுதல் –

இப்படி ஆஸ்ரித ஸூலபனாய் வந்து அவதரித்தது தமக்குச் சடக்கென லபிக்கைக்கு உறுப்பாகக் காணாமையாலே(கீழே நமக்கு இறை என்றாரே ஸ்வாமித்வம் தானே ஆய்க் குலத்துக்குத் தான் எளியவன் ) ஆர்த்தரான இவருக்கு ஸம்ஸார சாகர கோலாஹல தர்சனத்தால் பிறந்த ஸைதில்யத்தைக் கண்ட ஸூஹ்ருத்துக்கள் வெறுத்து யுரைத்த பாசுரத்தை கடவோதத்துக்கு ஆற்றாத தலைவி யுடைய தளர்த்தி கண்ட தோழி புலம்பி யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-அவதாரிகை-கீழ் ஸ்ரீ கிருஷ்ண அவதார ஸுலப்யத்தை அனுசந்தித்து அவதார சமகாலத்திலே தாமாகப் பெறாமையாலே வந்த ஆற்றாமையாலே கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி தசையை ப்ராப்தரானார் அந்த பிரிந்த ஆற்றாமைக்கு மேலே கடலோசையும் வந்து பாதகமாகா நின்றது என்று சொல்லா நின்றாள் என்று திருத்தாயார் சொல்லுகிறாளாய் இருக்கிறது –

இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது
அறையோ என நின்றதிரும் கருங்கடல்  ஈங்கிவள் தன்
நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே
– 62–தலைவியின் ஆற்றாமையைத் தோழி தலைவனுக்குக் கூறுதல் –

தேவனுறை பதியில் சேரப் பெறாமையால்
மேவும் அடியார் வசனாம் மெய்ந்நிலையும் -யாவையும் தா
னாம் நிலையும் சங்கித்தவை தெளிந்த மாறன் பால்
மா நிலத்தீர் நாங்கள் மனம் —-71-இவர் மநோ ரதித்த படியே அத் தேசத்திலே புக்கு ஸ்ரீ திருவாய் மொழி கேட்ப்பித்து அடிமை செய்யப் பெறாமையாலே மிகவும் அவசன்னராய் – அவன் ஆஸ்ரித பர தந்த்ரன் –சர்வ நிர்வாஹகன் என்று இருந்தோம் இவையும் நம்மைத் தோற்றிப் பொய் ஆகிறதோ -என்று
இவர்-அவன் குணத்திலும் ஸ்வரூபத்திலும் அதி சங்கை பண்ண கீழ் தம்மைக் கொண்டு ஸ்ரீ திருவாய் மொழி பாடுவித்துக் கொண்ட யுபகாரத்தை ஸ்மர்ப்பித்து அவன் தம் அதி சங்கையைப் போக்க அத்தை அனுசந்தித்து அதி சங்கை தீருகிற தேவிமாரில் -அர்த்தத்தை-தேவனுறை பதியில் -இத்யாதி யாலே அருளிச் செய்கிறார் -இதர விஷயங்களிலே மண்டி இருக்கிற மகா ப்ருதிவியில் உள்ளவர்களே உங்களைப் போலே அன்றிக்கே ஸ்ரீ ஆழ்வார் விஷயத்திலேயாய் இருக்கும் நம்முடைய மனஸ்ஸூ — உங்களுக்கு இதர விஷயத்திலேயாய் இருக்கும்-ஸ்ரீ ஆழ்வாருக்கு பகவத் விஷயத்திலேயாய் இருக்கும்
உபய வ்யாவ்ருத்தரான எங்களுக்கு ஸ்ரீ ஆழ்வார் விஷயத்திலேயாய் இருக்கும் மனஸ்ஸூ —

இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இறையோ இரங்காது--காலிலே விழுந்து சரணம் புகச் செய்தேயும் – சரணம் புகை தான் மிகையாம்படிக்கு ஈடே இறே இவள் தசை -என்று தசையைக் காட்டச் செய்தேயும் – புறம்பொரு புகல் இல்லாதாள் ஒரு அபலை கிடாய் -என்னச் செய்தேயும் – ஏக தேசமும்  இரங்குகிறது  இல்லை –பாதகர்க்கு இத் தலைவி எளிமையை அறிவித்த அளவாய் விட்டதே –
இத்தனை எளிதாகில் நமக்கு-நினைத்தபடி பாதிக்கலாம்  ஆகாதே என்று அதிலேயும் முறைக்கைக்கு உடலாயிற்று  —இது தான் சரணம் என்றால் இரங்குமதும்  அன்றிக்கே –
அம்புக்கு முகம் காட்டுமது இறே –அது ஆர்த்திக்கு இரங்கும் அது அல்லவே -அம்புக்கு இரங்கும் அது இறே –தனக்கு சரணம் என்றால்-இரங்கும் அது   அன்றே –மரணமானால்  இரங்கும் அது இறே –அறையோ என நின்றதிரும்  கருங்கடல் –-இங்கனே வெளியிலே புறப்பட்டாயோ –-அறையோ அறை என்று கூறுவாரைப் போலே இரா நின்றது –கருங்கடல் –அகவாயில் சீற்றம் உடம்பிலே நிழல் இட்டால் போலே இருக்கை –சிவப்பும் கருப்பும் சினம் -என்னக் கடவது இறே –ஈங்கு இத்யாதி –இவ் அவஸ்தா பந்னையான இவளுடைய அடக்கமானது –உன் திருவருளால் அன்றி காப்பது அரிதால் –உம்முடைய  பிரணயித்வத்தால் நோக்கும் எல்லை கழிந்தது இறே –ஸ்வரூப பிரயுக்தமான கிருபையாலே -அல்லது நோக்க ஒண்ணா தாய்  வந்து விழுந்தது –ஊரார் சொல்லும் பழிக்கு அஞ்சி மீளும் எல்லையும் கழிந்தது-முறையோ – தத் தஸ்ய சத்ரு சம்பவேத் -என்று இருக்கும் நிலை கழிந்து – கூப்பிட்டுப் பெற வேண்டும் தசையேயாய் வந்து விழுந்தது –அரவணை -இத்யாதி –செங்கற் சீரை கட்டி கூப்பிட்டாகிலும் பெற வேண்டும் படி யாயிற்று வடிவு அழகும் படுக்கையும் –அரவணை மேல் – இவள் கடின ஸ்த்தலத்திலே கிடக்க–நீர் மெல்லிய படுக்கையை தேடிக் கிடக்கிறீரே –முகில் வண்ணனே-இத்தை எம்பார் அருளிச் செய்கிற போது –இயலைச் சொல்லுகிறவரைப் பார்த்து -இவ்வளவிலே முகம் காட்டாதே-செங்கற் சீரை கட்ட இருக்கிறவர் -முதலிகளாய்  இருப்பார் –தலையிலே பிரம்புகள் விழிலும்-முகில் வண்ணரே -என்னீர் -என்று அருளிச் செய்தார் –இருவருமான வன்று சேர நிற்கவும்- பிரிந்த வன்று தாய்க் கூற்றிலே நிற்குமவர் இறே இவர் –முகில் வண்ணன் -என்று ஏக வசனமாக சொன்னால் – நம்மை ஏக வசனமாக உதாசீனமாக சொல்லுகிறது -என் -என்றபடி – ஆகையால் முகில் வண்ணர் -என்று பூஜ்யமாக சொல்லீர் என்று அருளிச் செய்தார் -என்றபடி –மிதுனமே உத்தேச்யமாய் இருக்க – எம்பார் பிராட்டி பஷமாய் இருந்து ஈஸ்வரனை வெறுக்கிறது என் என்ன என்று அருளிச் செய்கிறார்-(அன் விகுதி இல்லாமல் அர் விகுதி வெறுத்துப் பேசுவான் என் என்னில் பிரிந்தால் தாயார் பக்கமே ஒதுங்கி இருப்பார் அது போல் பட்டரும் நாச்சியார் திருவிழி விளிக்க ஒண்ணாது என்றாரே )

நாயகனை நோக்கி நாயகியின் ஆற்றாமையை தோழி கூறுதல் – தானே இரங்க ப்ராப்தமாய் இருக்க -அப்படி செய்யாததோடு இவளது பெண்மையையும் ஸுகுமார்யத்தையும் இளமையையும் காட்டி இரங்குமாறு வேண்டிக் கொண்டாலும் இப்பாழும் கடல் இரங்குகிறது இல்லை-மேலில் காணும் கருமை நிறத்தோடு உள்ளுள்ள கருமையும் -கொடுமையையும் -காட்டுவதற்கு கருங்கடல் -என்றது –
இனி -கடல் ஆகிய பெரும் பகையும் யுண்டாய் -தனக்கு நிறை காக்கும் சக்தியும் இல்லையுமான பின்பு –
நீ படுக்கை வாய்ப்பு அறிந்து கிடைக்க -அரவணைமேல் பள்ளி கொண்ட-படுக்கை கொள்ளாமல் கருந்தரையில் இவள் கிடக்க இவளுக்கு இடம் கொடாமல் மெல்லிய படுக்கை தேடிக் கிடக்கிறீரே –
முறையோ — முகில் வண்ணனே -மேகம் போலே உதார குணம் கொண்ட நீர் இவளுக்கு உதவாமல் இருப்பதும் ஒரு முறைமை தான் –

இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது -சக்ரவர்த்தி பரசுராமனை இரந்து
பிள்ளைகள் பால்யத்தை முன்னிட்டால் போலே நான் ப்ரார்த்தனா ரூபமான பிரபதனத்தைப் பண்ணிலும் அவள் ஒரு பெண் அன்றோ இன்று பல ஹானியை முன்னிடிலும் இவ்விடத்தில் இறையும் இரக்கம் இன்றியே இருந்தது ஓ ஒரு கொடுமையே–இரக்கம் இல்லாமை கண்டபடி என் என்னில்–அறையோ என நின்றதிரும் இவள் எதிராக அறை கூவுகிறதோ -என்னலாம் படி நிலை நின்று கோஷியா நிற்கும்–கருங்கடல்-இவள் அளவில் கடலுக்கு யுண்டான நெஞ்சில் கருகுதல் வடிவிலும் தோன்றா நின்றது–ஈங்கிவள் தன் நிறையோ-இவ் விடத்தில் ஸ்வ ரக்ஷணத்தில் அசக்தையான இவளுடைய ஸ்த்ரீத்வ பூர்த்தி யானது-வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்-பிரபல விரோதி யுண்டாய் ஸ்வ சக்தியும் இல்லாத பின்பு ப்ராப்தனான உன்னுடைய நிருபாதிகையான கிருபையால் அன்றி ரஷிக்கை சக்யம் அன்று-முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே-
அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே முறையோ-நீ படுக்கை வாய்ப்பு அறிந்து கிடக்க
இவள் பாடாற்ற மாட்டாத இது கிரமமோ–முறையோ என்று க்ரம ஹானியை ஸூசிப்பித்துக் கூப்பிட்ட படி–1-ஸ்ரம ஹரமாய்–2-தர்ச நீயமாய்–3-உதாரமான வடிவை யுடைய நீ-இவள் ஆர்த்தி தீர உபகரியாதது முறையோ என்று தோழியானவள் தன் ஆற்றாமையாலே தலைவனை யுட் கொண்டு விளித்து யுரைத்தாள் யாயிற்று-இது செவிலி இரங்கல் யாகவுமாம் –(தமிழர் அகத்துறைப்படி தோழி பாசுரம் கொள்ளத் தகும் என்பர் )இத்தால் அநந்த க்லேச பாஜனமாய் கோரமான ஸம்ஸார ஸாஹரத்தினுடைய
கோலாஹலத்தைக் கண்டு ஆழ்வார் ஈடுபாட்டுக்கு அஞ்சின ஸூஹ்ருத்துக்களால் இது பரிஹரிக்க அரிது என்று நினைத்து ஆழ்வாருடைய ஸ்வரூபம் ஈஸ்வரனுடைய கிருபா ஏக ரஷ்யம் ஆகையால்
ரக்ஷகரான பெரிய பெருமாளைக் குறித்துத் தங்கள் ஆர்த்தி தோற்ற விண்ணப்பம் செய்த பாசுரமாய் இருக்கிறது —

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம்–இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது
காலிலே விழுந்து சரணம் புகச் செய்தேயும் சரணம் புகுகை தான் மிகை என்னும்படிக்கு ஈடாய் இருக்கிறவளுடைய தசையைக் காட்டாச் செய்தேயும் புறம்பு ஒரு புகல் இல்லாதாள் ஒரு அபலை கிடாய் என்னச் செய்தேயும் ஏக தேசமும் இரங்குகிறது இல்லை பாதகர்க்கு இத்தலையிலே அருமை காற்றுமது அன்று இறே-அறையோ என நின்றதிரும்-இங்கனே வெளியில் புறப்படாயோ என்று அறையோ என்று அலற கூவுகிறால் போலே இரா நின்றது –கருங்கடல் ஈங்கிவள் தன்நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால் முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-வியாக்யானம்-இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது அறையோ என நின்றதிரும் கருங்கடல் ஈங்கிவள் தன் நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்-ரக்ஷகன் அநாதரித்தால் சத்ருக்கள் எதிர்ப்பட்டு நின்று ஒருபடிப்பட அறை கூவுவர்கள் இறே அவர்களை போலே இக்கடல் தன ஸ்வரூபத்தால் உம்மை ஸ்மரிப்பக்கவும்
ஒருபடிப்பட நின்று அறை கூவுவுமாய்இவள் பக்நைர்யையாம் படி அதிரா நின்றது –இவ் வவஸ்தையில் இவள் நிறை அடக்கமானதது ஓ -என்னாலும் துர் பேத்யமே இனி அது அழித்து உன்னையே கூப்பிடுமதான பின்பு உன்னருளால் அன்றி இல்லையே அத்தால் அவ்வவஸ்தை யானானாள் முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே –

ஸ்வாபதேசம் –
ஆழ்வார் ஆற்றாமைக்கு வருந்தும் பாகவதர்கள் -சம்சார சாகரம் பயங்கரம் -இவள் ஸ்வரூபத்தை உன் திருவருளால் அன்றி பாதுகாக்க ஒண்ணாது -ஆதி சேஷன் இடம் கைங்கர்யம் பெறுவது போலே இவள் இடமும் அருள் காட்ட வேணும் உமது இனிய வடிவை இவர் அனுபவிக்கப் பெறும் படி செய்வதே உமக்குத் தகுதி –

ஸ்வாபதேசம் –
இப் பாட்டால் ஸ்வரூபத்தாலே பெற இருக்கை அன்றிக்கே – ஸ்வரூபத்தை அழித்தாகிலும் பெற வேண்டும்படி -ஆற்றாமை கரை புரண்டபடி சொல்லுகிறது – கருங்கடல் இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இறையோ  இரங்காது  -அறையோ என நின்று அதிரும்- இனி ஈங்கிவள் தன் நிறையோ உன் திருவருளால் அன்றி காப்பது அரிது – அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே -முறையோ -என்று அந்வயம்-
ஒ ஸ்வாமி  -இப்போது நீ இவள் இடம் அருள் செய்து -உன் வடிவு அழகை காட்டினால் அல்லது- இவள் ஜீவிக்க உபாயம் இல்லை – ஆகையால் ஒருகால் நீ வந்து தோற்ற வேணும் என்கிறார்கள் –

தாத்பர்யம்
கீழ் அனுசந்தித்த கிருஷ்ண அனுபவ ஸுலப்யம் அனுபவிக்கப் பெறாமையால் நம்மிறை என்றாரே -ஸ்வாமித்வம் ஒழிய ஆயர்கள் போல் அனுபவிக்க வில்லையே அத்தாலே கலங்கி அதுக்கும் மேலே
சம்சார கடல் ஓசையும் நலிவதை ஸூஹ்ருத்துக்கள் சொல்லும் பாசுரம்-கடலைச் சரணம் புகுந்தால்
அது சரணாகதி தர்மம் அறியாது என்பது பிரசித்தம் அன்றோ பெருமாளும் சரண் புகுந்து பாலியாதே அம்பை எடுக்க வேண்டிற்றே-இவள் ஒரு அபலை தாங்க மாட்டாள் என்றால் அதுவே ஹேதுவாக மேலும் நலிந்து ஜெயகோஷம் பண்ண இவள் இப்படி இருக்க நீ அரவணை மேல் பள்ளி கொண்டு அருளுவதே
ஓ ஸ்வாமி உனது அருளாலே தான் இவள் தரிக்க முடியும் நீ நேரே வந்து தோற்ற வேண்டும்
இத்தால் தலைமகன் மறைந்து இருந்தான் என்றும் அவன் முன்னிலையாகச் சொன்னது என்றும் இரண்டு நிர்வாஹங்கள் உண்டே –

8-1-தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்-ப்ரவேஸம்-

முதல் பத்தால் பகவத் கைங்கர்யம் புருஷார்த்தம் என்று அறுதி இட்டார் –
இரண்டாம் பத்தால் அந்த கைங்கர்யத்தில் களை அறுத்தார்
மூன்றாம் பத்தால் -அந்த களை அறுக்கப் பட்ட கைங்கர்யம் ஆனது பாகவத சேஷத்வ பர்யந்தமான பகவத் கைங்கர்யம் என்றார் –
நான்காம் பத்தால் -இப்படிப்பட்ட கைங்கர்யத்துக்கு விரோதிகள் ஐஸ்வர்ய கைவல்யங்கள் என்றார்
ஐந்தாம் பத்தால் அந்த விரோதிகளைப் போக்குவானும் அவனே என்றார்
ஆறாம் பத்தல் விரோதிகளைப் போக்குமவனான சர்வேஸ்வரன் திருவடிகளில் சரணம் புகுந்தார்
ஏழாம் பத்தால் இப்படி பெரிய பிராட்டியார் முன்னிலையாக சரணம் புக்க இடத்திலும்
தக்தபட நியாயம் போலே சம்சாரம் தொடருகிறபடியைக் கண்டு நோவு பட்டார் –
இப்படி பிரபன்னராய் இருக்கச் செய்தே தகத பட நியாயம் போலே நம்மை விடாமலே தொடருகிறது –
நமது ஆத்மாவிலும் ஆத்மா சம்பந்தப்பட்ட பொருள்களிலும் நசை அறாத படியாலே என்று பார்த்து
அவற்றில் ஒரு நசை இல்லை என்கிறார் இந்த எட்டாம் பத்தில்

சர்வ சக்தன் -ஏழாம் பத்தில்
சத்ய காமத்வம்-எட்டாம் பத்தில்
ஆபத் சஹத்வம் ஆர்த்தி ஹரத்வங்கள் -9/10-பத்தும் பத்தாக்கி –
ஞப்தி பல முக்தி பல வ்ருத்தி -முதல் மூன்றும்
விரக்தி -நாலாம் பத்தில்
பக்தி ராகம் கழிய மிக்கு -பேரமர் காதல் பின் நின்ற காதல் கழிய மிக்கதொரு காதல்
பிரபத்தி ஆறாம் பத்தில்
சக்தி வெளியிட்டு ஏழாம் பத்தில்
பிராப்தி -எட்டாம் பத்தில்
பூர்த்தி -ஒன்பதாம் பத்தில்
ஆர்த்தி ஹரத்வம் -பத்தாம் பத்தில்

கிருதஞ்ஞாதா பலம் பிரதி க்ருதமானம் உணர்ந்து – -நின்ற உன்னை உணர்ந்தேன் –
தோள்களை ஆரத் தழுவி தாள்களை –பேர் உதவிக்கு கைம்மாறா –
கண்கள் சிவந்து –நின்ற உன்னை உணர்ந்தேன்-8-8- -அநந்யார்ஹ சேஷ பூதன் அடியேன் உள்ளான்-சேஷம் பிரதானம்

பிராட்டிமாரோடே நித்ய பரிகரம் சேவிக்க
பர்யங்க வித்தையில் சொல்லுகிறபடியே
திரு வனந்த ஆழ்வான் மேலே சர்வேஸ்வரன் நாம் பாடின திருவாய்மொழி
கேட்க்கைக்காக திரு வாறன் விளையிலே எழுந்து அருளி இருந்தான்
நாம் அங்கே சென்று திருவாய்மொழி கேட்ப்பித்து அனுகூலமான கைங்கர்யங்களையும்
செய்து அனுபவிப்போம் என்று பாரித்தார் –

அது எண்ணம் மாத்ரமேயாய் நினைத்தபடி தலைக்கட்ட பெற்றது இல்லை –
1-பிராட்டிமார் -எழில் மலர் மாதரும் -அருகே எழுந்து அருளி இருக்க-தேவிமார் ஆவார் திருமகள் பூமி
2-நித்ய ஸூரிகள் -யாவரும் வந்து வணங்கும் -உளராய் இருக்க-ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்-
3-நினைத்த படி கார்யம் செய்து தலைக் கட்டுக்கைக்கு தகுதியான ஐஸ்வர்யம் குறைவற்று இருக்க-மேவிய வுலகம் மூன்றவை யாட்சி
4-அடியார்கள் உகந்தனவற்றை தனக்கு திரு மேனியாக கொண்டு உதவும் தன்மையனாய் இருக்க-வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்-
5-நான் ருசியில் குறைவற்றவனாய் இருக்க -காணுமாறு அருளாய் –
நினைத்த கார்யம் பெறாமல் ஒழிவோமே என்று வெறுத்தார் –

இவர் தாம் சர்வேஸ்வரன் பக்கல் தமக்கு தஞ்சமாக நினைத்து இருப்பது இரண்டு ஸ்வ பாவங்களை -தன்மைகளை –
அவை –
1-அடியார்களுக்கு பரதந்த்ரனாய் இருக்கும் இருப்பும் –உமர் உகந்து உகந்த உருவம் –
2-தனக்கு வேறு பட்ட எல்லா பொருள்களும் தனக்கு பிரகாரமாய்–தான் பிரகாரியாய் –
இவற்றுக்கு வந்த வ்யசனம் தனக்கு வந்ததாக நினைக்கும் சம்பந்தமும்

(இறந்ததும் நீயே -இத்யாதி -பூத பவ்ய பவிஷ்ய பிரபு)

வ்யசுகேஷு மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கிதா
உச்த்வேஷு ச சர்வேஷூ பித்தேவ பரிதுஷ்யதி -அயோத்யா 2-40-
அவை இரண்டும் தனக்கு கார்யகரமாக கண்டிலர்

நான் ஒருவன் தோன்றி சர்வேஸ்வரனுக்கு இவையும் பொய்யாக புகுகின்றனவோ -என்று ஐயம் கொண்டார்
குண ஞானத்தாலே ஜீவிக்குமவர் குணங்களில் –அதி சங்கை -ஐயம் கொண்டால் ஜீவிக்க மாட்டாரே
இவர் தம்மை நாம் இழக்க ஒண்ணாது
இவரை சமாதானம் செய்யும் விரகு ஏதோ -என்று பார்த்து

வாரீர் -நீர் கண்டது எல்லாவற்றிலும் –அதி சங்கை -ஐயம் கொள்கிறது என்
நாம் உமக்கு ஒன்றும் செய்திலமோ
இவ்வளவாக உதவிய நாம் மேலே உள்ளனவற்றையும் செய்வோம் காண்
நீர் இங்கனே ஐயம் கொள்ள வேண்டா என்று
நம்பத் தக்கவனாக இருக்கை முதலான தன்னுடைய கல்யாண குணங்களையும் -பெரிய அப்பனை -பாசுரம்
தான் இவ்வளவாக செய்த உபகாரங்களையும் காட்டி -தாள்களே எனக்கே தலைத் தலை சிறப்பத் தந்த பேருதவி –
இவருடைய ஐயத்தை தீர்த்து சமாதானம் செய்ய
சமாதானம் அடைந்தவராய்
அதனை அனுசந்தித்து – இனிதர் ஆகிறார்

ப்ராஜ்ஞ -க்ருதஜ்ஞஸ் ச –ஸாநு குரோஸஸ் ச-ராகவ-சத் வ்ருத்த–க்யாத-நிரநுக்ரோச சங்க–மத் பாக்ய சங்க்ஷயாத் –ஸூந்தர காண்டம் -26-13-

ப்ராஜ்ஞ –
விரும்பினவற்றை தம்மாலே பெற இருப்பார் அறிவில் குறையாலே இழக்க வேண்டாதபடி தம்
அளவையும் அவர்கள் அளவையும் அறிக்கைக்கு தகுதியான அறிவை உடையவர்
க்ருதஜ்ஞஸ் ச –
கிட்டுமவன் தன் பக்கல் முகம் பாராமை பண்ணுமது தவிர்ந்து ஓர் அடி வர நின்ற எல்லையும் அறிவர் –
ஸாநு குரோஸஸ் ச-
அறிவு கொண்டு கார்யம் கொள்ளவும் அறியாதே இருக்கும் அவர்களுக்கு
அவர்கள் இழவை நினைந்து ஐயோ என்று இரங்குமவராய் இருப்பர்-(அநு க்ரோஸம் -தயை)
ராகவ –
இது இவர் தம்மைத் தோற்றி -தொற்றி- வந்தது அன்று -குடிப் பிறப்பாலே
சத் வ்ருத்த
பிறருடைய நன்மையே தன் பிரயோஜனமாக கொண்டு இருப்பவர்
க்யாத
இப்படி பகைவர் கோஷ்டியிலும் பிரசித்தமானவர்(க்யாதி புகழ்)
நிரநுக்ரோச சங்க-இந்த குணங்களை உடைய பெருமாளை
இந் நிலைமையில் எனக்கு முகம் காட்டக் காணாமையாலே
இந்த குணங்களில் ஒன்றும் இல்லாத (ஆன்ரு சம்சயம் இல்லாதவராக)
அருள் அற்றவரைப் போன்றவராக ஐயப்படா நின்றேன் –
அவர் குணங்களை உடையவர் அன்றோ
மத் பாக்ய சங்க்ஷயாத்
எனக்கு புண்யம் இல்லாமை யாலேயாம் அத்தனை அன்றோ

அறிவு ஒன்றும் சங்கிப்பேன் -வினையேன் -திருவாய்மொழி -8-1-7-என்றார் அன்றோ இவரும் –

இத் திருவாய்மொழிக்கு ஆளவந்தார் அருளிச் செய்யும் ஸ்லோகம் இது-

எட்டாம் பத்தில் -இப்படி -ஏழாம் பத்திலே –
உபாய நிவர்த்யமான விரோதி ப்ராபல்யத்தை அனுசந்தித்து தன் நிவ்ருத்தி பிரகாரத்தை இப்பத்திலே அனுசந்திப்பதாக –
விரோதி நிவர்த்தகனுடைய ஆஸ்ரித ஆகாங்ஷ அதீன சாந்நித்யத்தையும்
ஸ்வ விஷயத்தில் சங்கம் யுண்டே யாகிலும் இதர சங்கம் அற்றார்க்கு அல்லது ஸூலபன் அல்லன் என்னும் அத்தையும்
ஸ்வ ஆஸ்ரித ஜன விஸ்லேஷத்தில் தான் அஸஹாயன் என்னும் படியான ப்ரேம ஜனகத்வத்தையும்
ஆஸ்ரித விஷயத்தில் அத்யந்த துர் மோசமான விரோதிகளைப் போக்கி அவர்கள் சம்பத்தே சம்பத்தாய் இருக்கும் ஆகாரத்தையும்
ப்ராப்ய பூதனான தன் பக்கலிலே ப்ராவண்யம் யுண்டானால் பிரதிபந்தகம் தன்னடையே கழலும் என்னும் இடத்தையும்
ஆஸ்ரித விரோதியைப் போக்குகைக்கு ஆசன்னமாய் இருக்கும் இருப்பையும்
அந்தஸ்த்திதனாய்க் கொண்டு அசேஷ விரோதி நிவர்த்தகனாம் படியையும்
அப்ருதக் ஸித்தமான ஆத்ம ஸூத்தீயை பிரகாசிப்பித்து உபாதி அடியாக தோஷத்தினுடைய அதி பூரி கரணத்தையும்
அபாஸ்த தோஷனான அதிகாரியை அதிசயித தாஸ்ய அம்ருதத்திலே மக்நனாக்கும் படியையும்
ஸ்வ தாஸ்யத்திலும் அதிகமான ஸ்வ கீரை தாஸ்ய போகத்தை பிரகாசிக்கும் படி தத் விரோதி நிவர்த்தன பிரகாரத்தையும்
அருளிச் செய்து –
பூர்வ நிரூபிதமான விரோதியினுடைய நிவ்ருத்தி கிரமத்தை உபபாதித்து அருளுகிறார் –

இதில் -முதல் திருவாய் மொழியில்
அடிமை செய்யப் பாரித்த அர்ச்சாவதார ஸ்தலத்தில் ஆசானுரூபமான அபிமதம் சித்தியாமையாலே ஆர்த்தராய்
மிகவும் பகவத் அனுபவ ஆகாங்ஷை நடக்க -அந்த ஆகாங்ஷைக்கு ஹேதுவான
அனவதிக விபூதி பூர்த்தியையும்
அந்த விபூதி ரக்ஷண அர்த்தமா அவதாரங்களினுடைய அதிசயித போக்யதையையும்
ஆஸ்ரித பவ்யதா விசிஷ்டமான அநிஷ்ட நிவர்த்தகத்வத்தையும்
ஆஸ்ரித அநாஸ் ரித விபாகேந யுண்டான அனுகூல பிரதிகூல ரூபத்தையும்
அசேஷ பிரகார ரக்ஷகத்வத்தையும்
அகிலாத்ம பாவத்தையும்
அசேஷ பிரகார போக்யதையையும்
ஆஸ்ரித சம்ரக்ஷண அர்த்தமான ஷீரார்ணவ ஸாயித்த்வத்தையும்
அதிசயித புருஷார்த்தமான ப்ராப்ய தேச வர்த்தித்தவத்தையும்
ஆசானுரூப உபகாரத்தால் வந்த அத்யந்த மஹத்தையையும்
அனுசந்தித்து ஏவம் பிரகார விசிஷ்டனான சர்வேஸ்வரன் தம்முடைய ஆகாங்ஷ அநுரூபமாக முகம் காட்டி
ஆஸ்வசிப்பித்த பிரகாரத்தை அருளிச் செய்கிறார்-

தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்
மேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்
பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணது ஓர் பவள வாய் மணியே
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாயே–8-1-1-

வேண்டு வேண்டு உருவம் நின் உருவம் –
அந்த ரட்ஷணத்துக்கு வேண்டின வேண்டின உருவம் நின் உருவம் –
அன்றிக்கே
இச்சையால் கொள்ளப்படுகின்ற உருவம் நின் உருவம் என்னுதல் –
அன்றிக்கே
அடியார்கள் உகந்தவற்றையே தனக்கு திருமேனியாக கொள்ளும் உருவம் நின் உருவம் என்னுதல் –

இவருக்கு பிராணன் ஒரு வாயு விசேஷம் அன்று –
நாய்ச்சிமாரோடும் நித்ய ஸூரிகளோடும் கூடிய கண்ணும் வாயும் வடிவும் ஆயிற்று–இவருடைய உயிர் இருப்பது

காணுமாறு அருளாய் –
எனக்கு கடல் கடைய வேண்டா–அவ்வடிவைக் காட்ட அமையும்—வடிவை காண்கை பிராப்யம்
அருள் பிராபகம்
பிராப்ய பிராபகங்கள் நீயே -என்று இருப்பார் கார்யம் செய்யலாகாதோ

————

காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கிக் கண்ண நீர் அலமர வினையேன்
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ
காணுமாறு அருளாய் காகுத்தா !கண்ணா !தொண்டனேன் கற்பகக் கனியே !
பேணுவாரமுதே !பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா !–8-1-2-

காண வேண்டும் -என்று மிகவும் நோவு பட்டு இருக்கும் இருப்பேயோ -என் திறத்து செய்து அருளப் பார்த்தது –
நான் இங்கனம் படாமே உன்னைக் காணும்படி திருவருள் செய்து அருள வேணும் –என்கிறார் –

இவருக்கு வகுத்த விஷயம் விருப்பமாய் இருக்கும் –கடமை இனிமை இரண்டும் ஒன்றே –

உன்னை நீ பிரிந்து அறியாய் –
பிரிந்தாரை கண்டு அறியாய் -என்றது
நித்ய ஸூரிகள் பிரிந்து அறியார்கள் –சம்சாரிகள் பிரிவு அறியார்கள் –
ஆதலால் இந்த ஆற்றாமை உடையவன் நான் ஒருவனே ஆயிற்று -என்ற படி
சேஷத்வம் மறந்தால் நம்மை நாம் பிரியலாம் -சேஷித்வம் மறவானே அவன் –

உன்னை ஆசைப்படுதல் ,ஆபத்தை அறிவித்தல் செய்ய மாட்டாத உலகத்தை அன்றோ காத்தாய் -என்றது
அதாவது
நீ அறிய ஆபத்து உண்டாம் அத்தனை அன்றோ காத்தற்கு வேண்டுவது –
இரட்ச்சகனுடைய பாரிப்பு இரட்சிக்கப் படுகின்ற பொருள்களின் அளவுக்கும் விஞ்சி இருத்தலின்
பேராளா -என்கிறார்-

———–

எடுத்த பேராளன் நந்தகோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே ! அசோதைக்கு
அடுத்த பேரின்பக் குல விளங்களிறே ! அடியனேன் பெரிய வம்மானே !
கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவாக் கை யுகிராண்ட எம் கடலே !
அடுத்த தோர் உருவாய் இன்று நீ வாராய் எங்கனம் தேறுவரும் உமரே ?–8-1-3-

அடியாருக்கு எளியனாய் இருக்கிற நீ –
இன்று வந்து என் ஆபத்தை நீக்காது ஒழியின்–உன் குணமே ஜீவனமாக இருக்கும் அடியவர்கள்
உன்னை எங்கனே நம்பும்படி -என்கிறார்

நான் முறையில் நின்றவாறே நீயும் முறையிலே நில்லா நின்றாய் -என்றது
அடியேன் என்று நான் சொல்ல நீ ஈச்வரனாய் இரா நின்றாய் என்றபடி-

——

உமர் உகந்த உகந்த வுருவம் நின்னுருவமாகி உன் தனக்கு அன்பரான
அவர் உகந்து அமர்ந்த செய்கை யுன் மாயை அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்
அமரது பண்ணி யகலிடம் புடை சூழ் அடுபடை யவித்த அம்மானே
அமரர் தம் அமுதே ! அசுரர்கள் நஞ்சே ! என்னுடை யார் உயிரேயோ !–8-1-4-

உன்னை அடியார்கள் இட்ட வழக்கு ஆக்கி வைப்புதி -என்னும் அறிவு ஒன்றாலுமே தரித்து இருக்கிற
அதுவும் பொய்யோ என்று ஐயப்படா நின்றேன் -என்கிறார்

அமர்ந்த செய்கை உன் மாயை –
ஒருவகையான பிரயோஜனத்தையும் விரும்பாமலே கிட்ட வேண்டும் செயல்கள்-உன்னுடைய ஆச்சர்யமான செயல்கள்-
அநந்ய பிரயோஜனராக தூண்டும் அவன் சேஷ்டிதங்கள் எல்லாம் –
(ப்ரயோஜன நிரபேஷமாகவே நம்மை செய்விக்கும் படி தூண்டும் அவனது ஆச்சர்யமான சேஷ்டிதங்கள் )

அறிவு ஒன்றும் சங்கிப்பன் –
இந்த ஒரு குணத்தையும் பற்றின அறிவு ஆயிற்று இவர் உடைய -சத்தா ஹேது -இருப்புக்கு காரணம்-
அதிலே ஆயிற்று இவர்க்கு இப்போது ஐயம் தொடர்கிறது –

என்னுடைய ஆர் உயிரேயோ-
நான் தரித்து இருப்பதற்கு காரணம் ஆனவனே-
தேவர்களுக்கு இனியனாய்–அசுரர் கூட்டத்துக்கு நஞ்சாய் இருக்கிற இருப்பு-
தம்முடைய இருப்புக்கு காரணமாய் இருக்கிறபடி-

———

ஆருயிரேயோ ! அகலிடமுழுதும் படைத்திடந்துண்டு மிழ்ந்த ளந்த
பேருயிரேயோ ! பெரிய நீர் படைத்து அங்குறைந்தது கடைந்தடைத்துடைத்த
சீருயிரேயோ ! (சீரியரேயோ) மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ !
ஒருயிரேயோ ! உலகங்கட் கெல்லாம் உன்னை நான் எங்கு வந்துறுகோ ?–8-1-5-

நான் முயற்சி செய்து வந்து காண என்று ஒரு பொருள் இல்லை -காண் என்கிறார் –

பேறும் என்னது இல்லையே -உம் பேற்றை நீர் அடையாததால் தான் கதறுகிறேன்-சேதனன் என்பதால் –
ஞான கார்யம் -சரணாகதி -உபாயம் இல்லை -ராஜ்யஞ்ச அஹஞ்ச -பரதன் -சொல்லாது ராஜ்யம் -சொல்லுவது சேதனன்

இங்கே சீர்மை என்றது –
பிராட்டியாரோடு அல்லாதாரோடு வாசி அற அங்கீகரிக்கும் தன்மையினை –

ஆத்துமா சரீரத்துக்கு வேண்டிய ஹிதம் சிந்தனை செய்யுமது ஒழிய-
சரீரம் தன்னை தான் காத்துக் கொள்ளுவது என்று ஓன்று உண்டோ-
ஆதாரமாய் -நியமிக்கிறவனாய் -சேஷியாய் இருக்கிற நீ ஒழிய-
ஆதேயமாய் நியமிக்கப் படும் பொருளாய் -சேஷமான இது தன்னைத் தான் பாதுகாத்துக் கொள்ளவோ –
ஆதார ஆதேய -நியந்த்ரு நியாமய – பாவங்களால் சரீர லஷணம் இந்த உலகுக்கு உண்டான பின்பு-
சிறிது அறிவும் -நீயே கடவாய் -என்கிற எண்ணத்துக்கு கண்ட இத்தனை அன்றி-
ஒரு சாதனத்தைச் செய்யக் கண்டதோ –

——–

எங்கு வந்துறுகோ !என்னை யாள்வானே ! ஏழு லகங்களும் நீயே
அங்கவர்க்கமைத்த தெய்வமும் நீயே அவற்றவை கருமமும் நீயே
பொங்கிய புறம் பாற் பொருளுளவேலும் அவையுமோ நீ யின்னே யானால்
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே வான் புலன் இறந்ததும் நீயே—8-1-6-

இதனால் என் சொல்லியவாறோ எனின் –
காரிய நிலையோடு -காரண நிலையோடு -முக்தனான நிலையோடு
வாசி அற உன் கை பார்த்து இருக்க வேண்டின பின்பு
நான் என் கார்யத்துக்கு கடவேன் ஆதல் எனபது ஒரு பொருள் உண்டோ -என்பதனைச் சொல்லியபடி –

——–

இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதோ நீ யின்னே யானால்
சிறந்த நின் தன்மை யது விது வுது வென்று அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்
கறந்த பால் நெய்யே ! நெய்யின் சுவையே ! கடலினுளமுதமே !அமுதிற்
பிறந்த இன் சுவையே ! சுவையது பயனே ! பின்னை தோள் மணந்த பேராயா !–8-1-7-

எல்லா பொருள்களும் பிரகாரமாய் இருப்பதனால் சேஷமாய்–நீ பிரகாரியாய்-
நீயே அவற்றுக்கு நிர்வாஹகன் என்னும் அறிவு ஒன்றும் கொண்டு தரித்து இருக்கிற நான்-
என் பாவத்தால்
அதிலும் ஐயம் கொள்ளா நிற்கிறேன் -என்கிறார்-

நாலாம் பாட்டில் ஐயப் பட்டத்துக்கும் இதுக்கும் நெடு வாசி உண்டு
அடியாருக்கு பரதந்த்ரப் பட்டவன் என்ற தன்மையிலே ஐயப்பாட்டால்
திருவருள் செய்யாமை நம்முடைய ஆஸ்ரயணத்தில் குறையாலே என்று நினைத்து இருக்கலாம்-ஸ்வபாவ சங்கை அது –

இப் பாசுரத்தில் அவனுடைய சத்பாவத்தில் அன்றோ ஐயம்-ஸ்வரூப சங்கை இது –
பிரகாரியாய்க் கொண்டு அன்றோ அவனுடைய சத்தை-
அவன் நின்றும் வேறு பட்ட பொருள்கள் அவனுக்கு பிரகாரமாய்க் கொண்டே அன்றோ உண்டாவது-

இத்தால்
பிரியில் உலகம் அழியும் என்று நினைக்க வேண்டும்படியான
அவனது இனிமையின் மிகுதியே ஐயத்திற்கு காரணம் என்பதாயிற்று –

——–

மணந்த பேராயா !மாயத்தால் முழுதும் வல்வினையேனை ஈர்கின்ற
குணங்களை யுடையாய் !அசுரர் வன்கையர் கூற்றமே ! கொடிய புள்ளுயர்த்தாய் !
பணங்கள் ஆயிரம் உடைய பைந்நாகணைப் பள்ளியாய் ! பாற் கடல் சேர்ப்பா !
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே–8-1-8-

ஆத்மாவும் ஆத்மாவோடு சம்பந்தப் பட்ட பொருள்களும் ஆகிய அனைத்தும் உன் அதீனமான பின்பு
என்னால் செய்யலாவது ஒன்றும் இல்லை
நீயே பாதுகாக்க வேண்டும் -என்கிறார்-

மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே-
எனக்கு ஆய் இருப்பது ஒரு நெஞ்சும் வாக்கும் செய்கையும்-
எனக்கு ஆய் இருப்பது ஒரு நானும் உண்டாக வேண்டுமே –
எல்லாம் நீ இட்ட வழக்காய் அன்றோ இருக்கின்றன-
வணங்க வேண்டும் என்ற நினைவு உண்டு-
வணங்கும் வகை அறிகின்றிலேன் –

———-

யானும் நீ தானே யாவதோ மெய்யே அரு நரகவையும் நீ யானால்
வானுயரின்பம் யெய்திலென் மற்றை நரகமே யெய்திலென் எனினும்
யானும் நீ தானாய்த் தெளி தோறும் நன்றும் அஞ்சுவன் நரகம் நானடைதல்
வானுயரின்பம் மன்னி வீற்று இருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே–8-1-9-

எல்லா பொருள்களும் நீ இட்ட வழக்கு -என்கிற ஞானத்தோடு இருக்கும் இடத்தில்-
சம்சாரத்தோடு பரமபதத்தோடு வாசி இல்லை ஆகிலும்-
இந்த ஞானத்துக்கு விரோதியான சம்சாரத்தில் இருக்க அஞ்சுகிறேன் –
இதற்க்கு தகுதியான பரம பதத்தில் என்னைக் கொண்டு போக வேண்டும் என்கிறார் –

வான் உயர் இன்பம்,மன்னி வீற்று இருந்தாய் –
நின் தாள்களை எனக்கு அருளு -இதுவே அன்றிக்கே–
நித்ய விபூதியிலே நிரதிசய ஆனந்தத்தை உடையனாய்–உன்னுடைய சேஷியாம் தன்மைக்கு உரிய வேறுபாடு தோற்ற
இருப்பதோர் இருப்பு உண்டு -அவ் இருப்பில் என்னை அழைத்து–அசாதாரணர்களுடைய கைங்கர்யத்தை எனக்குத் தர வேண்டும்

——–

தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த பேருதவிக் கைம்மாறா
தோள்களை யாரைத் தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ
தோள்கள் ஆயிரத்தாய் !முடிகள் ஆயிரத்தாய் ! துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் !
தாள்கள் ஆயிரத்தாய் !பேர்கள் ஆயிரத்தாய் ! தமியனேன் பெரிய வப்பனே !–8-1-10-

தாம் நினைத்த படியே திருவடிகளைத் தந்து அருளின மகா உபகாரத்துக்கு பிரத்யுபகாரமாக-
இந்த ஆத்ம வஸ்துவை உனக்கு தந்தேன் என்கிறார் –
இப்போது திருவடிகளைக் கொடுக்கையாவது-
சம்சாரத்தோடு பொருந்தாத படியையும்-தன்னை ஒழிய செல்லாத படியையும்-
தமக்குப் பிறப்பித்த நிலையைப் பிரகாசிக்கை-

தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய்
தாள்கள் ஆயிரத்தாய் பேர்கள் ஆயிரத்தாய்
முன்பு இழவாலே கூப்பிட்டவர் தரித்து பிரத்யுபகாரத்தில் இழிந்ததைக் கண்டு
அதனாலே அவனுக்கு பிறந்த பௌஷ்கல்யத்தை பேசுகிறார் –

உபகாரத்தின் நினைவாலே இவர் உடைய ஆத்ம வஸ்து தாளும் தோளுமாக தளிர்த்தாப் போலே
எப்பொழுதும் ஒரே தன்மையான அவன் வடிவும் நூறு கிளைகள் ஆயிற்று

அவாப்த சமஸ்த காமனாய் இருக்கும் தன்மையும் பிரமாணத்தால் சித்தித்ததாய்-
அடியார்கள் இடம் வாத்சல்யமும் பிரமாண சித்தம் ஆனால்-அப்படியே கொள்ளுமத்தனை அன்றோ –

எனக்கு உவகையைப் பிறப்பித்து-அந்த உவகையைக் கண்டு அதனாலே தான் இப்படி-
விரிந்தவன் ஆவதே -என்று கொண்டாடுகிறார் –

——–

பெரிய வப்பனைப் பிரம னப்பனை உருத்திர னப்பனை முனிவர்க்
குரிய வப்பனை யமரரப்பனை உலகுக்குகோர் தனியப்பனை தன்னை
பெரிய வண் குருகூர்ச் சடகோபன் பேணின ஆயிரத்துள்ளும்
உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால் உய்யலாம் தொண்டீர் ! நம் கட்கே–8-1-11-

முனிவர்க்கு உரிய அப்பனை என்றதனால்
அடியார்க்கு பரதந்த்ரப் பட்டு இருக்கும் தன்மையை சொல்லுகிறது-சாமீப்யம் –
ஸ்வ பாவம் சங்கை உரிய சேஷி என்பதால் தீர்ந்தமை -பெரிய அப்பன் இத்யாதியால் ஸ்வரூபம் சங்கை தீர்ந்தது –

ஸ்வரூப சங்கை தீர்ந்தமையை ஸ்பஷ்டம்
ஆஸ்ரித பரதந்த்ரன் -ஸ்வ பாவ சங்கை அஸ்பஷ்டம்
பரம சேஷீ
உபய பாவனையில் இல்லாத சனகாதிகளுக்கு அசாதாரணம் -உரிய விசேஷணம்
இதனால் ஆஸ்ரித பரதந்த்ரன்
அவர்களுக்கு உரிய -பாரதந்த்ரம் காட்டுபவன்-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -61-வாசகம் செய்வது நம் பரமே –பிறந்தவாறும் -5-10-

February 28, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

உபய விபூதி நாயகன் -நித்ய ஸூரி நாயகன் -ப்ரஹ்மாதிகளும் ஆஸ்ரயிக்கும் படி –-நம் இறை -மநுஷ்யர்களுக்கும் ஸ்வாமி அன்றோ அவனே உலகு அளந்தான் -உலகமாகத் தொட்டு
வேய் மூங்கில் -குத்தும் இடமும் இல்லாமல் முழுவதும் அளந்தவன் அன்றோ-தாயவன் -தாவி அளந்தவன்-பரத்வ வாசகம் முதல் மூன்று அடிகள்-ஸுலப்யம் அடுத்து -கண்ணனாக ஊராகத் தொட்டு
பெரியவன் எளிமை சொல்ல முடியுமோ -வாசகம் செய்வது நம் பரமோ என்கிறார் –பரமே -எதிர்மறை ஏகாரம் -நம் பரம் அல்ல-இரண்டே அடியால் -பிரிவினை ஏகாரம்-தோன்றிற்று இறந்த காலம் தொழில் பெயர் -வந்து அவதரித்த படியை –-இரண்டாம் வேற்றுமை -தோன்றின படி என்றபடி–துறை
தோழி தலைவனது நீர்மையைத் தலைவிக்கு கூறல் —-பிறந்தவாறும் -5-10-இதன் விவரணம்
கிருஷ்ண அவதாரத்தில் சரணாகதி-நோற்ற நான்கும் -முதல் மூன்றும் அர்ச்சையில் சரணாகதி
அதி ஸூலபனாக அவதரித்தவன் அன்றோ-

அவதாரிகை –பெருமான் மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகம் -என்று
இவள் சொன்ன அநந்தரம்-(கற்கின்ற -வாசகம் -வர்த்தமானம் -நிகழ் காலம் -வேங்கடம் என்றே அப்யசிப்பாளே-மயங்கிய நிலையிலும் -தேறியும் தேறாமலும் இதே தானே வாசகம் இவளுக்கு )திருத் தாயார் (செவிலித்தாயார் )அத்தை அநுபாஷிக்கையாலே  – அத்தைக் கேட்டு –பிராட்டியான தசை போய் தாமான தசையாம் படியாய் தரித்தார் –(இது இரண்டு பாசுரங்களுக்கு நடுவில் உள்ள நிலை
திருத் தாயார் சேர்த்து வைப்பாள் என்று உணர்ந்து தரித்தார்-மீண்டும் தோழி பாசுரமாக இருப்பதால் இது நடுவில் உள்ள அவஸ்தை என்றபடி )இவர் தம்மை தாம் உணர்ந்தால் இவர்க்குப் பாழி கிருஷ்ணாவதாரம்  இறே –-அங்கே  புக்கு -எத்திறம் -என்கிறார் – தோழி தலைவனது நீர்மையைத் தலைவிக்கு கூறல் —

இப்படி இவளுடைய பிராப்தி த்வரையைக் கண்ட ஸூஹ்ருத்துக்கள் உபய விபூதிக்கும் நாயகனான மேன்மையை யுடைய ஸர்வேஸ்வரன் ஆஸ்ரித ஸூலபனாகைக்காக கிருஷ்ணனாய் வந்து அவதரித்த பிரகாரம்-வாஸா மகோசரம் ( மொழியைக் கடக்கும் பெரும் புகழான்) அன்றோ என்று அவனுடைய ஸுலப்ய அதிசயத்தைச் சொல்லி ஆஸ்வஸிப்பித்த பிரகாரத்தை வரைந்து தோளிலிலே விரைந்த தலைமகனைக் குறித்து அவன் பெரியவனே யாகிலும் நமக்கு எளியனாய் வரும் காண் என்று
தோழி நாயகனுடைய சீலம் புகழ்ந்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-அவதாரிகை-பெருமாள் மலையோ திருவேங்கடம் -என்று இவள் சொன்ன பாசுரமாகத் திருத்தாயார் அநு பாஷித்த இத்தைக் கொண்டு பிராட்டியான தசை போய் தாமான நிலையானாம் படி தரித்தார்-இவர் தம்மைத் தாம் உணர்ந்தால் பின்னை இவர் இழியும் துறை ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் இறே அங்கு புக்கு எத்திறம் -என்கிறார்

வாசகம் செய்வது நம் பரமே தொல்லை வானவர் தம்
நாயகன் நாயகர் எல்லாம் தொழுமவன் ஞால முற்றும்
வேயகமாயினும் சோராவகை இரண்டே யடியால்
தாயவன் ஆய்க் குலமாய் வந்து தோன்றிற்று நம்மிறையே
– -61 –தோழி தலைவன் நீர்மையைத் தலைவிக்கு கூறுதல் –

பிறந்து உலகம் காத்து அளிக்கும் பேர் அருட் கண்ணா உன்
சிறந்த குணத்தால் உருகும் சீலத் -திறம் தவிர்ந்து
சேர்ந்து அனுபவிக்கும் நிலை செய் என்ற சீர் மாறன்
வாய்ந்த பதத்தே மனமே வைகு
–50–கீழ்-ஸ்தான த்ரயத்திலும் தம் அபேஷிதம் கிடையாமையாலே ஸ்ரீ அர்ச்சா ஸ்தலங்களிலே ஆஸ்ரிதர் நினைவுக்கு ஈடாக ஆலோக ஆலாப ஆலிங்கநாதிகளான அனுபவ விசேஷங்களை வுபகரித்து அருளக் கடவோம் அல்லோம் -என்று அவன் சங்கல்ப்பித்து அருளுகையாலேயாய் இருக்கும் நம் அபிமதம் சித்தியாது ஒழிந்தது-அவன் சங்கல்பம் குலையும்படி அங்கு நிர்பந்திக்கக் கடவோம் அல்லோம் – ஆஸ்ரிதர் நினைவு அறிந்து முகம் கொடுத்த அவதாரத்தில் செல்லுவோம் -என்று ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்திலே அனுபவிப்பதாகச் செல்ல அதுவும் கை கழிந்து தாம் பிற்பாடராய் அத்தாலே நொந்து அவ் வவதார குண சேஷ்டிதங்களை யாகிலும் அனுசந்தித்து தரிப்போம் என்று பார்த்த இடத்தில் அதுவும் விஸ்லேஷ தசையில் அனுசந்திக்கையாலே சைதில்யத்தை விளைக்க நான் தரித்து நின்று உன் குண சேஷ்டிதங்களை அனுபவிக்க வல்லேனாம் படி பண்ணி அருள வேணும் என்று சரணம் புகுகிற -பிறந்த வாற்றில் அர்த்தத்தை பிறந்து உலகம் காத்து அளிக்கும் -என்று அருளிச் செய்கிறார்–தாம் தரித்து நின்று அனுபவிக்கும் பிரகாரம் பண்ணி அருள வேணும் என்று அர்த்தித்த-ஞானாதி குணங்களை யுடையரான-ஸ்ரீ ஆழ்வார் உடைய பரஸ்பர-சத்ருசமாய்-பொருந்தி இருக்கிற திருவடிகளிலே –மனசே தங்கிப் போரு-அவருக்கு நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் ஆனாப் போலே உனக்கும் ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே பிராப்தம் என்று சென்று அங்கேயே தங்கிப் போரு-

வாசகம் செய்வது நம் பரமே–எத்திறம் -என்று மோஹித்து கிடக்கும் இதுக்கு மேற்ப்பட பாசுரம் இட்டு சொல்லுமது நம்மால் செய்யவாவது ஒன்றோ –என் தான் –-பாசுரம் இட்டு சொல்ல ஒண்ணாது ஒழிகிறது என் என்னில் –தொல்லை வானவர் உண்டு –யத்ர ருஷய ப்ரத்ம ஜாயே புராண -என்கிறவர்கள்-(முன்னில் முன்னவர் அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்த நித்ய ஸூரிகள் ) அவர்களுக்கு நிர்வாஹனானவன் –ஆய்க் குலமாய் வந்து தோன்றிற்று வாசகம் செய்வது நம் பரமே -என்கிறார் –
வேதங்களோடு வைதிக-புருஷர்களோடு வாசி இல்லை ஆயிற்று பாசுரம் இட்டு சொல்ல மாட்டாமைக்கு வேதங்களும் ஆநந்த குணத்தை சொல்ல புக்க மாத்ரத்திலே இறே – யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று மீண்டது –தொல்லை வானவர் தம் நாயகன் -வாசகம் செய்வது நம் பரமே-நாயகர் எல்லாம் தொழுமவன் -வாசகம் செய்வது நம் பரமே-ஞால முற்றும் வேயகமாயினும் சோராவகை இரண்டே யடியால் தாயவன் -வாசகம் செய்வது நம் பரமே-ஆய்க் குலமாய் வந்து தோன்றிற்று -வாசகம் செய்வது நம் பரமே நம் மிறையே-வாசகம் செய்வது நம் பரமே என்று தனித் தனியாகவும்தொல்லை வானவர் தம் நாயகன் நாயகர் எல்லாம் தொழுமவன் ஞால முற்றும் வேயகமாயினும் சோராவகை இரண்டே யடியால் தாயவன் ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று நம்மிறையே-வாசகம் செய்வது நம் பரமே சேர்த்தும் அந்வயிக்கலாமே

தஸ்ய தீர பரிஜானந்தி யோநீம் –தஸ்ய யோநீம் –அகர்ம வச்யனாய் இருக்கிறவன் – பிறக்கைக்கு ஹேதுவான கர்மம் இன்றிக்கே இருக்க –வந்து பிறந்த-நீர்மையை –தீர–தீமதாமக்ரேசராய்-அது தன்னில்-(நீர்மையில்) இழிந்து அறியப் போகாமையாலே –அத்தை-பரிஜானந்தி யோநீம் – சுற்றும் வந்து
ஆழங்கால் படா நிற்ப்பார்கள் –சர்வஞ்ஞனான தான் சொல்லிலும் –-ஜன்ம கர்ம ச மே திவ்யம் -என்றும் –
பரம்பாவம் -என்றும் -சொல்லும் இத்தனை –இவருக்குத் தானே எத்திறம் என்று மோஹித்து கிடக்கை
பிரகிருதி (ஸ்வ பாவம் )இறே –ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத:-த்யக்த்வா தேஹம் புநர் ஜந்ம நைதி மாமேதி ஸோऽர்ஜுந-ஸ்ரீ கீதை -4-9--எனது தெய்வத் தன்மை கொண்ட பிறப்பும் செய்கையும் இங்ஙனமென்பதை உள்ளபடி யுணர்வோன் உடலைத் துறந்த பின்னர் மறுபிறப்பு எய்துவதில்லை. அர்ஜுனா! அவன் என்னை எய்துகிறான்.–அவ்யக்தம் வ்யக்திமாபந்நம் மந்யந்தே மாமபுத்தய: பரம் பாவமஜாநந்தோ மமாவ்யயமநுத்தமம்-ஸ்ரீ கீதை -7-24-அறிவற்றவர்கள் என்னுடைய இணையற்றதும்,அழிவற்றதும் உத்தமமும் ஆகிய பர நிலையை,அறிந்து கொள்ளாமல்,புலன்களுக்கு அப்பாற்பட்டவனான என்னை,கண்களால் காணக் கூடிய தோற்றத்தை அடைந்தவன் என்றுமனிதனைப் போல பிறப்புள்ளவனாக கருதுகின்றனர்.–

தொல்லை வானவர் தம் நாயகன் –-நித்ய ஸூரிகளுக்கும் அவ்வருகு ஆனவன் – நாயகர் எல்லாம் தொழுமவன் –(விரஜைக்கு )இவ்வருகிலாக்கரான  ப்ரஹ்மாதிகளும்-சதுர் தச புவனத்துக்கும் கடவோம் – என்று இருக்கும் அபிமானத்தைப் பொகட்டு வந்து தொழா நிற்பர்கள் –பிறவாதவராய் இருக்கிறவர்கள் இறே -பிறக்கிற ஈஸ்வரனை வந்து ஸ்தோத்ரம் பண்ணுகிறார்கள் –
(நியமன சாமர்த்தியம் உள்ளவன் என்பதால் கண்ணன் என்று சொல்லாமல் ஈஸ்வர பத பிரயோகம் )
மனுஷ்யர் கண்ணுக்கும் கூட தோற்றாதவர்கள் – ராவண வத அனந்தரத்திலே-வந்து ஸ்தோத்ரம் பண்ணினார்கள் –வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்தானே -தனது இச்சையால் பிறக்கும் ஈஸ்வரனை பிறக்காத ஈஸித்வயர்கள் ஸ்தோத்ரம் பண்ணுகிறார்கள்-இப்படிச் சேராச் சேர்க்கை வாழி
நரர்கள் கண்ணுக்குத் தோற்றாமல் வானரர்களுக்கு தோற்றும் படி உண்டே-

ஞாலம் இத்யாதி –பூமிப் பரப்பை அடைய ஓர் கோல் குத்தும் விடாதே இரண்டடியால்-அளந்து கொண்டவன் –துரியோத நாதிகள் பாண்டவர்களுக்கு ஒரு கோல் குத்து நிலமும் விடோம் -என்று
அபிமானித்ததால் போல் ஆயிற்று – இவனும் இந்த்ரனுக்காக மகா பலி இடம் ஒரு கோல் குத்து-நிலமும் விடேன் என்றபடி –இரண்டே அடியால் தாயவன் – மூவடியை இரந்து ஓர் அடியால் அவனை சிறை-இட்டு வைக்கைக்காக இரண்டு அடியால் அளந்து கொண்டவன் –ஆய்க் குலமாக வந்து தோன்றிற்று –பூமிப்-பரப்படைய தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்டவன் –தன் காலின் கீழே துகை உண்ட ஒரு-பதார்த்தத்துக்கு தான் புத்ரனான இது – நம்மால் பாசுரம் இட்டு சொல்லலாவது ஓன்று  அன்று இறே  –ஆய்க் குலமாய் –சம்சாரிகளில் ஒருவனுக்கு அல்பம் விவேகம் உண்டானால் – பால்யேன திஷ்ட்டா  சேத் -என்று அபிஜன வித்யா வ்ருத்தாதிகளாய் வந்த அபிமானத்தை பொகடா நின்றான் இறே –(ப்ரஹதாரண்யம் சொல்லுமே-தஸ்மாத் பாண்டித்யம் நிர்வித்யே –மறைத்துக் கொண்டு இருக்கக் கடவன் )-அல்பம் விவேகம் உண்டாய் இருக்கிற இவன் அகப்பட இத்தை பொகடா நிற்க –
சர்வஞ்ஞனான தான் பரத்வத்தையும் கால்கடைக் கொண்டு இக்குல அபிமானத்துக்கு அவ்வருகு ஓன்று அறியாதனாய் வந்து பிறந்தான் –அர்த்தித்தோ மானுஷ்ய லோகே –ஜஜ்ஞ்ஞே விஷ்ணு சநாதன-என்கிறபடியே –தன்னைப் பற்றினாரும் பழையருமாய்  பிறவாதருமாய் இருக்க அவன் வந்து பிறந்த
இதுக்கு பாசுரம் இடப் போமோ –வந்து தோன்றிற்று –ஆவிர்பூதம் -என்னக் கடவது இறே –
(கிழக்குத் திக்குக்கும் சூரியனுக்கும் உள்ள சம்பந்தம் போல் இவனுக்கும் கர்ப்பத்துக்கு சம்பந்தம் )இரண்டே அடியால் தாயவனாய்-நம் இறையாய்ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று வாசகம் செய்வது-
நம் பரமே -என்று அந்வயம் –
வேயகமாயினும் –வேய் -என்று மூங்கில் கோலை சொல்லுகிறது –
அகம் -உட்பட்ட அளவாய் –கோல் குத்தும் -என்றது-தாயாரும் அநு பாஷித்து – இவள் திறத்து என் நினைந்து இருந்தாய் -என் சிந்தித்தாய் -அவனைக் கேட்டு கூட்டுகிறாள் என்று தேறி இருந்து தானான தன்மை பிறந்து வேங்கடத்தாயன் படியில் ஈடுபடுகிறார் –

அவன் ஸுலப்யன் என்று சொல்லி தோழி தலைவியை ஆசிவசிப்பிக்கிறாள்
வாசகம் செய்வது நம் பரமே-யதோ வாசோ நிவர்த்தக்கே -என்று வேதங்களே மீண்டனவே –
வேயகமாயினும்-ஒரு மூங்கில் நடும் சிறு இடங்களையும் விடாமல் அன்றோ அளந்தான்
இரண்டே யடியால்-தாயவன்–ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி உலகு அனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும் தருக என்னா-மாவலியைச் சிறையில் வைத்த தாடாளன் –என்றபடி இரண்டு அடிகளாலாயே அளவிட்டு முடித்தவன் –-ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று–அரசர் குலத்திலே ஒருத்தி மகனாய் வந்து பிறந்து இடையர் குலத்திலே-ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்த எளிமை -வாசகம் செய்வது நம் பரமே–ஆஸ்ரித ஸூலபனாய் கண்ணனாய் வந்த நீர்மை யுடையவன் -உம்மை விரைந்து வந்து சேர்த்துக் கொள்வான்-இந்த நீர்மை -எத்திறம் என்று மோஹிக்கப் பண்ணும் -அது ஒழிய புகழ சாத்தியப் படுமோ –

வாசகம் செய்வது நம் பரமே-அவன் மேன்மைக்கு வேதங்களும் அகப்படப் பாசுரம் இட்டுச் சொல்ல மாட்டாமல் மீளா நிற்க அவன் நீர்மைக்குப் பாசுரம் இட்டுச் சொல்லுகை நம் தலையிலே கிடப்பது ஒன்றோ–தொல்லை வானவர் தம் நாயகன்-நீர்மைக்கு ஊற்றான மேன்மையைச் சொல்லுகிறது
யத்ர பூர்வே ஸாத்யா சந்தி தேவா -புருஷ ஸூக்தம் -என்று பழையவரான நித்ய ஸூரிகளுக்கு அசாதாரண சேஷி யானவன் என்று நித்ய விபூதி யோகம் சொல்லிற்று-மேல் லீலா விபூதி யோகம் சொல்லுகிறது-நாயகர் எல்லாம் தொழுமவன்–ஈஸ்வர அபிமானிகளான ப்ரஹ்ம ருத்ராதிகளோடே
இந்த்ராதிகளான லோக பாலாதிகளோடே வாசியற ஸ்வ அதிபத்ய ஸித்யர்த்தமாகத் தொழப்படுமவன்–ஞால முற்றும் வேயகமாயினும் சோராவகை-ரக்ஷணீயமான விபூதி எல்லாவற்றையும் குழற் குத்தும் சோராத படி–இரண்டே யடியால் தாயவன்-அந்நிய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்தர்யங்கள் இரண்டும்
இரண்டு திருவடிகளாலும் போம்படி அளந்து கொண்டவன்–இப்படி-1-ஸூரி போக்யனுமாய்-2-ப்ரஹ்ம ருத்ராதி ஸேவ்யனுமாய்-3-நிருபாதிக பந்துவுமானவன்-4-ஆஸ்ரிதற்கு பவ்யனாகைக்காக–ஆய்க் குலமாய் வந்து தோன்றிற்று–இடைக் குலத்தை யுடையனாய்க் கொண்டு ஆவிர் பவித்தது–நம்மிறையே-நமக்கு ஸ்வாமி யானவன்–நம் இறை வந்து தோன்றிற்று வாசகம் செய்வது நம் பரமே
என்று அந்வயம்
இத்தால் பிராப்தி த்வரையாலே கலங்கின இவரை ஸூஹ்ருத்துக்கள் ஸுலப்ய அதிசயத்தைச் சொல்லி ஆஸ்வஸிப்பித்த தாயிற்று –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம்-வாசகம் செய்வது நம் பரமே எத்திறம் -திருவாய் -1-3-1- என்று
மோஹித்திக் கிடக்குமத்தனை போக்கி பாசுரம் இட்டுச் சொல்ல ஒண்ணாது–என் தான் பாசுரம் இட்டுச் சொல்லப் போகாமை என் என்ன–தொல்லை வானவர்-நித்ய ஸூரிகள் உண்டு- யத்ர ர்ஷய பிரதமஜா யே புராணா -(அச்சித்ரம் -92-)என்கிறவர்கள்–தம் நாயகன்–அவர்களுக்கு நிர்வாஹகனானவன்-ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று வாசகம் சேருவது நம் பரமே -என்கிறார்-வேதங்களோடு
வைதிக புருஷர்களோடு வாசியில்லை யாயிற்று பாசுரம் இட்டுச் சொல்ல மாட்டாமைக்கு வேதங்களும் ஆனந்தாதி குணங்களைப் பேசப்புக்க மாத்திரத்திலே இறே —யதோ வாஸோ நிவர்த்தந்தே -(தைத்ரியம் ஆனந்த வல்லி )என்றது–தஸ்ய தீரா பரிஜாநந்தி யோநிம் -(புருஷ ஸூக்தம் )அகர்ம வஸ்யனானவன்
பிறக்கைக்கு ஹேதுவான கர்மம் இன்றிக்கே இருக்க வந்து பிறந்த நீர்மையை-தீமதாம் அக்ரேசரராய் இருக்குமவர்கள் அது தன்னிலும் இழியப் போகாமையாலே அத்தைச் சுற்றும் வந்து ஆழங்கால் படுகிறார்கள்-ஸர்வஞ்ஞனான தான் சொல்லும் போதும்-ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத: த்யக்த்வா தேஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோऽர்ஜுந-ஸ்ரீ கீதை -4-9-எனது தெய்வத்தன்மை கொண்ட பிறப்பும் செய்கையும் இங்ஙனமென்பதை உள்ளபடி யுணர்வோன் உடலைத் துறந்த பின்னர் மறுபிறப்பு எய்துவதில்லை. அர்ஜுனா! அவன் என்னை எய்துகிறான்.–அவ்யக்தம் வ்யக்திமாபந்நம் மந்யந்தே மாமபுத்தய: பரம் பாவமஜாநந்தோ மமாவ்யயமநுத்தமம்-ஸ்ரீ கீதை -7-24-அறிவற்றவர்கள் என்னுடைய இணையற்றதும்,-அழிவற்றதும் உத்தமமும் ஆகிய பர நிலையை,-அறிந்து கொள்ளாமல்,-புலன்களுக்கு அப்பாற்பட்டவனான என்னை,கண்களால் காணக் கூடிய தோற்றத்தை அடைந்தவன் என்று மனிதனைப் போல பிறப்புள்ளவனாக கருதுகின்றனர்.–என்றும் சொல்லும் அத்தனை-இவருக்குத் தான் எத்திறம் என்று மோஹித்துக் கிடக்கை ப்ரக்ருதி இறே–தொல்லை வானவர் தம் நாயகன்-நித்ய ஸூரிகளுக்கும் அவ்வருகு வானவன்–நாயகர் எல்லாம் தொழுமவன்-இவ்வருகு ஆக்கரான நாயக்கர் உண்டு -ப்ரஹ்மாதிகள் சதுர்தச புவனங்களுக்கும் கடவோம் என்கிற அபிமானத்தைப் பொகட்டு வந்து தொழா நிற்பர்கள்-பிறவாதாய் இருக்கிறவர்கள் இறே பிறக்கிறவனை வந்து ஸ்தோத்ரம் பண்ணுகிறார்கள்-மனுஷ்யர் கண்ணுக்கும் கூடத் தோற்றாதவர்கள்
ராவண வத அநந்தரத்திலே வந்து ஸ்தோத்ரம் பண்ணினார்கள் இறே–ஞால முற்றும் வேயகமாயினும் சோரா வகை-பூமிப் பரப்பு அடங்க ஒரு கோல் குத்து நிலம் விடேன் என்று அபிமானித்தால் போலே யாயிற்று -இவனும் இந்திரனுக்காக மஹா பலிக்கு ஒரு கோல் குத்தும் விட்டேன் என்றபடி–இரண்டே யடியால் தாயவன் மூன்று அடியை இரந்து இரண்டு அடிக்காக்கி ஓரடிக்காக அவனைச் சிறை யிடுகைக்காக இரண்டு அடியாலே யாயிற்று அளந்து கொண்டதுஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று
இப்படிப் பூமிப் பரப்பு அடங்கலும் தன் காலின் கீழே இட்டுக் கொண்டவன் காலின் கீழே துகையுண்ட பதார்த்தத்துக்குத் தான் புத்ரனாய் வந்தவன் இது நம்மாலே பாசுரம் இட்டுச் சொல்லலாவது ஓன்று அன்று இறே–ஆய்க்குலமாய்— ஸம்ஸாரிகளிலே ஒருவன் அல்ப விவேகம் யுண்டானால்-பால்யேந திஷ்டா ஸேத் -(ப்ருஹதாரண்யம் -5-4-) என்று அபிஜன வித்யா விருத்தங்களால் வந்த அபிமானத்தைப் பொகடா நின்றான் இறே அல்பம் விவேகியாய் இருக்கிறவன் உட்பட பொகடா நிற்க ஸர்வஞ்ஞனான தான் அபஹத பாப்மத்வாதிகளைக் காற் கடை கொண்டு இக் குல அபிமானத்துக்கு அவ் வருகு ஓன்று அறியாதானாய் வந்து பிறந்தான்–ஜஜ்ஜே விஷ்ணு ஸநாதந –அயோத்யா -1-7-என்றபடியே தன்னைப் பற்றினாரும் பழையாரும் பிறவாதாருமாம் படி இருக்கிறவன் வந்து பிறக்குமதுக்குப் பாசுரம் இடப் போமோ-வந்து தோன்றிற்று நம்மிறையே ஆவிர் பூதம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-2-2-என்னக் கடவது இறே–இரண்டே அடியால் தாயவனான நம் மிறை ஆய்க் குலமாய் வந்து தோன்றிற்று வாசகம் செய்வது நம் பரமே-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி-வியாக்யானம் வாசகம் செய்வது நம் பரமே-வாய் அவனை விட்டுச் சொல்லுவது நம்மால் தகுமோ அவன் பர ஸானத்தைக் கேளாய்–தொல்லை வானவர் தம் நாயகன் நாயகர் எல்லாம் தொழுமவன்யத்ர பூர்வே -என்னப்பட்ட விண்ணவர்க்கு எல்லாம் நித்ய நிர்வாஹக சேஷி யானவன் சில ஒவ்பாதிக சேஷியான விதி சிவ இந்த்ராதிகளால் தொழப்படுமவன்-இப்படிப்
பரனே ஸூஸீலனுமானவனே -என்கிறார்கள்-ஞால முற்றும் வேயகமாயினும் சோராவகை இரண்டே யடியால் தாயவன் பூ லோக உபரித லோகங்களில் ஒரு கோல் குத்து நிலமும் விடாதபடி க்ருத்ஸ்நத்தையும் இரண்டு அடியால் அளந்து கொண்டவன்-இப்படியான நம்மிறையே அவனே
ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று – இடைக்குலத்திலும் ஆவிர் பவித்தான்-இவனுடைய-1- பரத்வ 2-ஸுசீல்ய 3-ஸுலப்யங்கள் வாசா -இவ்வளவு என்று நம்மால் சொல்லப் போமோ

தாத்பர்யம்--கீழே திருவேங்கடம் என்று ஸ்ரீ வைஷ்ணவர்கள் சொல்லக் கேட்டு மோஹம் தெளிந்து தாமான தன்மை அடைந்து தமது பாழியான கிருஷ்ண அவதாரத்தில் இழிகிறார்
அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தரான அபரிச்சின்ன வைபவம் உள்ள நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகன்
இந்த விபூதியில் ஆக்கரான ப்ரஹ்மாதிகளும் வணங்கும் ஸர்வேஸ்வரன் ஓங்கி உலகு இரண்டு அடியால் அளந்த நமது ஸ்ரீ யபதி நமது இறை -ஸ்வாமி -மிதுன சேஷித்வம் தானே
இப்படியுள்ள தனது மேன்மையும் பாராதே இடைக்குலத்தில் வந்து பிறந்த ஸுலப்யம் சொல்லப் போமோ முடியாதே என்றபடி

5-10-பிறந்த வாறும் வளர்ந்த வாறும்-ப்ரவேஸம்-

திருவல்லவாழ் என்னும் திவ்விய தேசத்திலே சென்று புக்கு அங்கு நிற்கின்றவனோடே பரிமாற வேண்டும் என்று
மநோ ரதித்துக் கொண்டு போக, கால் நடை தாராமல் நடுவழியிலே விழுந்து கிடந்து கூப்பிட்டார்;

இனி, “இவ்வளவில் குணாநுபவம் பண்ணியாகிலும் தரிப்போம்” என்று பார்க்க,
அது தானும் பேற்றினைப் போன்று அரிது என்னலாம்படி சைதில்யத்தை விளைப்பிக்க;
எல்லா அவஸ்தைகளிலும், உன்னைப் பிரிந்து நின்றாலும் தரித்து நின்று
குணாநுபவம் பண்ண வல்லேனாம்படி செய்தருள வேணும் என்று திருவடிகளிலே சரணம் புகுகிறார்.

மோஷத்துக்கு சரணாகதி பண்ண வில்லை -தரிக்கவே -இது -வேற நான்கும் வேற ரீதியில் –

கூரத்தாழ்வானுடைய நிர்வாஹத்தைச் சுருங்க அருளிச் செய்கிறார்.
‘குணாநுபவம் பண்ணியாகிலும்’ என்ற இவ்விடத்திலே
“கோவிந்தன் குணம் பாடி —- ஆவி காத்திருப்பேனே” என்னும் நாய்ச்சியார் திருமொழி அநுசந்தேயம். 8. 3.

இருடிகளுக்குண்டான சம்சார பயத்தை ஒத்ததாயிற்று ஆழ்வார்களுக்குப் பகவானைப் பிரிந்த விரஹத்தால் வரும் கிலேசம்;
அவர்கள், தங்கள் தங்கள் பேற்றிற்குத் தாங்கள் தாங்கள் சில முயற்சிகள் செய்யா நிற்பர்கள்,
இவர்கள் அத்தலையாலே பேறாகுமளவும் அசோகவனத்திலே பிராட்டியைப் போன்று துடியா நிற்பர்கள்;
அவர்களுக்குத் தங்கள் தலையிலேயும் சில கிடக்கையாலே விளம்பம் பொறுக்கலாம்,
இவர்களுக்கு அங்ஙன் சொல்லலாவது ஒன்று இல்லையாகையாலே கிடந்து அலமாப்பார்கள்.
‘அவன் அடியாலே நம் பேறு’ என்றிருக்குமவர்களுக்கு ஒரு கண்ணழிவு இல்லையே சொல்லலாவது.
“இரகு வம்சத்தில் அவதரித்தவரே! உம்மை நீங்கினால் சீதா பிராட்டி உயிர் வாழாதது போன்று,
நானும் உயிர் வாழ மாட்டேன்” என்கிறபடியே,

“நச ஸீதா த்வயா ஹீநா நச அஹமபி ராகவ முஹூர்த்தமபி ஜீவாவ:
ஜலாந் மத்ஸ்யாவிவ உத்ருதௌ:-என்பது, ஸ்ரீராமா. அயோத், 53 : 31.

லாபாலாபங்களில் பிராட்டியையும் தம்மையும் ஒரு தன்மையராகச் சொன்னாரன்றோ இளைய பெருமாள்.
“சுவாமியே! சிறந்த பிரீதியானது எப்பொழுதும் தேவரீரிடத்திலேயே நிலைத்து விட்டது, பக்தியும் நியதமாக இருக்கிறது,
என் எண்ணமும் வேறிடத்தில் எனக்குச் செல்வது இல்லை” என்று,
திருவடி ஸ்ரீராமாவதாரம் ஒன்றிலும் சக்தனாயிருக்குமாறு போன்று,

“ஸ்நேஹோ மே பரமோ ராஜந் த்வயி நித்யம் ப்ரதிஷ்டித:பக்திஸ்ச நியதா வீர
பாவோ நாந்யத்ர கச்சதி”-என்பது, ஸ்ரீராமா. உத். 40 : 16.

இவர் எல்லா அவதாரங்களிலும் எல்லாச் செயல்களிலும் அகப்பட்டிருப்பார் ஒருவர்.
அர்ச்சாவதாரத்தில் தம் அபேக்ஷிதம் பெற ஆசைப்பட்டவர், அது கிடையாமையாலே அவதாரங்களிலே போகிறார்;
விபவம் உள்ள இடத்தே சென்றால் சிறிது அபேக்ஷிதம் கிடைக்கும்’ என்று இருப்பரே.
நன்று; அவதாரங்களிலே இழந்தார்க்கும் இழவு தீர்க்கிற இடம் அர்ச்சாவதாரமாயிருக்க, இதனை விட்டு,
‘பெறலாம்’ என்று அவதாரமுள்ள இடம் தேடிப் போகையாவது என்? என்னில்,
அர்ச்சாவதாரத்தில், கண்களால் காண முடியாதவனான தன்னை,
சம்சாரிகள் கண்களுக்கு விஷயமாக்குகையும்
விரும்பினவை அனைத்தையும் கொடுக்கையும் ஒழிய,
குளிர நோக்குதல், வினவுதல், அணைத்தல் செய்யக்
கடவோம் அல்லோம் என்று சங்கல்பித்திருக்கையாலே,
‘சத்திய சங்கல்பனுடைய சங்கல்பம் குலையும்படி அதி நிர்ப்பந்தம் செய்யக் கடவோமல்லோம்’

‘சத்திய சங்கல்பனுடைய சங்கல்பம் குலையும்படி’ என்ற இவ்விடத்திலே,
“கூரத்தாழ்வான் ஆர்த்தராய்ச் சரணம் புக, பெருமாளும் இரங்கி ‘மூன்றாம் நாளைக்கு வீடு தந்தோம்’ என்ன,
‘ஆழ்வான் திரு மதிளுக்குப் புறம்பானார்’ என்னக் கேட்டு
உடையவர் ஓடிச் சென்று, ‘ஆழ்வான் நாம் இங்கே இருக்க உமக்குப் பரம பதத்தே போக வேண்டிற்றோ’ என்ன,
அடியேன் சம்சாரத்திலே அடிக் கொதிப்பாலே மறந்தேன்’ என்ன,
‘ஆகில் நாமும் சரணம் புக்கால் இன்னம் சில நாள் ஆழ்வானை இங்கே வைக்க இரங்குவர்’ என்று திரு வாசலளவும் சென்று,
‘சத்திய சங்கல்பனுடைய சங்கல்பத்தைக் குலைக்க வேண்டா’ என்று மீண்டு எழுந்தருளினார்” என்ற
சரிதம் அநுசந்திக்கத் தகும். என்றது,
நான் ஒருவன் தோன்றிப் பெருமாளை இரண்டு வார்த்தை சொல்லுவாராகச் செய்யலாமோ என்றபடி.
‘அதி நிர்ப்பந்தம் செய்யக் கடவோம் அல்லோம்’ என்கையாலே, நிர்ப்பந்தித்தால் செய்வர் என்பது கருத்து.

“ஸோப்யேநம் த்வஜ வஜ்ராப்ஜ க்ருத சிஹ்நேந பாணிநா
ஸம்ஸ்ப்ருஸ்ய ஆக்ருஷ்யச ப்ரீத்யா ஸுகாடம் பரிஷஸ்வஜே”-என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 5. 18 : 2.
என்று, “அந்தக் கிருஷ்ணனும் துவஜம், வஜ்ஜிரம், தாமரை என்னும் இந்த ரேகைகளை அடையாளமாகவுடைய
கைகளாலே நன்றாகத் தொட்டு இழுத்து அன்போடு கெட்டியாக ஆலிங்கனம் செய்து கொண்டார்” என்னும்

கிருஷ்ணாவதாரத்திலே போந்தார் அண்மைக் காலமாகையாலே.
இவ்வாழ்வார்கள் கிருஷ்ணாவதாரம் என்றவாறே போர மண்டியிருப்பர்கள்,
இதற்குக் காரணம் என்’ என்று பட்டரைக் கேட்க,
ஒருவனுக்கு உண்டான துக்கம் சில நாள்கள் கழிந்தால் பொறுக்கலாம், அணித்தானால் ஆறியிருக்கப் போகாதே அன்றோ;
அப்படியே, அல்லாத அவதாரங்களைப் போல அன்றிக்கே, சம காலமாகையாலே,
‘ஒரு செவ்வாய்க்கிழமை முற்படப் பெற்றிலோம், பாவியேம்! பல்லிலே பட்டுத் தெறிப்பதே’ என்னும் இழவாலே
வயிறு எரிதலாலே யாயிருக்கும்’ என்று அருளிச் செய்தார்.

இனித் தான், இராமவதாரத்தில், தமப்பன் சம்பரனனாய்- கொன்றவனாய் – ஏக வீரனாய் இருப்பான் ஒருவன்;
பிள்ளைகள் தாம் ஆண் புலிகள், குடி தானே வன்னியம் அறுத்திருப்பதொரு குடி; இவை எல்லாம் மிகையாம்படி,
குணத்தாலே நாடுகளை யெல்லாம் ஒருமார்வு எழுத்தாக்கிக் கொண்டிருப்பர்கள்,
ஆகையால் எதிரிகள் என்கிற சொல்லும் இல்லை; இங்கு அங்ஙன் அன்றிக்கே,
தமப்பன் ஒரு சாது விருத்தன்; பிறந்தது கம்சன் சிறைக் கூடத்திலே, வளர்ந்ததும் அவனகத்து அருகே;
ஸ்ரீ பிருந்தாவனத்திலே எழும் பூண்டுகளகப்பட அசுர மயமாயிருக்கும்;
ரக்ஷகரானவர்கள் ஓர் அடி தாழ நிற்கில் பாம்பின் வாயிலே விழும்படி யாயிற்று இவன் தன் படிகள் இருப்பன;
அப்படியானால் வயிறு எரியாதே செய்வது என் இவர்கள்;

அக்காலத்திலே உணர்ந்து நோக்கப் பெற்றிலர்கள்,
அவ்விழவுக்கு இன்று இருந்து நோவு படுகிறார்கள்.
அவர்களிலே ஒருவரான இவர் சொல்லுகிறபடி யன்றோ இது, ‘தெரிந்துணர்வு’ என்ற திருப்பாசுரம்;

தெரிந்துணர்வொன் றின்மையால் தீவினையேன் வாளா
இருந்தொழிந்தேன் கீழ் நாள்களெல்லாம் – கரந்துருவின்
அம்மானை அந் நான்று பின் தொடர்ந்த ஆழி யங்கை
அம்மானை ஏத்தாது அயர்த்து.-என்பது, பெரிய திருவந்தாதி. 82.

புலையாம் பிறவி பிறந்தென் செய்தோம் பொன்னி பொன் கொழிக்கும்
அலையார் திருவரங்கத் தெம்பிரான் நம தன்னையொடும்
தொலையாத கானம் கடந்த அந்நாள் தடந்தோறும் புல்லாய்ச்
சிலையாய்க் கிடந்திலமே நெஞ்சமே கழல் தீண்டுகைக்கே.-என்னும் திருப்பாசுரம் ஒருபுடை ஒப்பு நோக்கலாகும்.

மாயா மிருகத்தின் பின்னே சென்று இளைத்து மீண்டு எழுந்தருளின போது அடி சுட்டுப் பொறுக்க மாட்டாமையாலே
தழைகளை முறித்துப் பொகட்டு அவற்றிலே நின்று ஆறி எழுந்தருளினார் என்று கேட்டு,
‘பாவியேன்! அன்று உதவி அத் திருவடிகளிலே என் தலையை மடுக்கப் பெற்றிலேன்,
ஒரு பயனுமின்றியே கழிந்தனவே யன்றோ அநாதி காலம் எல்லாம் என்று நொந்தாரன்றோ.
இப்படியன்றோ கழிந்தனவற்றிற்கு இவர்கள் வயிறு எரியும்படி.

‘திருநீல மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே’ என்றும் வயிறு பிடித்தாரன்றோ இவர்.
“தணியா வெந்நோய் உலகில் தவிர்ப்பான் திருநீல மணியார் மேனியோடு
என் மனம் சூழ வருவாரே.”- என்பது, திருவாய். 8. 3 : 6.

சங்கர மங்கலம் -பெண்மணி திரு வல்ல வாழ் வந்து -ஏகாதசி விரதம் -இருந்து த்வாதசி -சேவிக்க வருவாளாம்
தொலகாசுரன் தடுக்க -பிரமச்சாரி -வேஷம் கொண்டு அழித்து-மூன்று கூறாக்கி
தலைப்பகுதி – -தலையாறு -இடைப்பகுதி -கால் பகுதி -வெவேற இடங்களில் போக -இவன்
பிரமச்சாரி -அங்கி அவிழ -பெண் மணி -திருமார்பில் பிராட்டியைக் கண்டு -திருமார்பை மறைத்து –
திரு இருப்பைக் காட்ட -திரு வல்ல வாழ் -திரு வாழ் மார்பன் –திருவல்லா –என்றே இங்கே பழக்கம்
கண்ட கர்ணன் தபஸ் இருந்த திவ்ய தேசம் இது என்பர்-
கிருபையைக் காட்டி அருளினான் இங்கு –

‘இவர் அவனுடைய அவதாரங்களையும் உலகைப் படைத்தல் முதலான வியாபாரங்களையும்,
“தாயர் மகிழ ஒன்னார் தளரத் தளர் நடை நடந்த” – பெரியாழ்வார் திருமொழி, 1. 7 : 11.-என்கிறபடியே,
அடியார்களை வாழ்விக்கவும், பகைவர்களை அழியச் செய்யவும் அடி யிட்டு அப்படி வளர்ந்தருளின
கிருஷ்ணாவதாரத்தையும் அநுசந்தித்து மிகவும் சிதிலரான இவர்,–
1-தரித்து நின்று உன்னை அநுசந்திக்க வல்லேனாம்படி செய்தருள வேணும் என்று அவனைச் சரணம் புகுகிறார்” என்று
ஆழ்வான் பணிக்கும். -தரித்து நின்று அநுசந்திக்க–மானஸ அனுபவம்

அன்றியே,
2-‘பிரிந்திருக்கும் சமயத்திலே உன் குணங்கள் மனத்திலே நிலை பெற்று மிகவும் நலிய,
அதனாலே நெருக்குண்டு நோவு படுகை தவிர்ந்து, உன் திருவடிகளிலே வந்து சேர்ந்து உன்னைக் கிட்டி அநுபவிக்கும்படி
செய்தருள வேண்டுமென்று அவனைக் குறித்து அருளிச் செய்கிறார்’ என்று எம்பார் அருளிச் செய்வர்.–
உன் திருவடிகளிலே வந்து சேர்ந்து உன்னைக் கிட்டி அநுபவிக்கும்படி–காயிக அனுபவம்

அங்ஙனம் அன்றிக்கே,
3-“சர்வேஸ்வரன் கிருஷ்ணனாய் வந்து திருவவதரித்துத் திருவாய்ப்பாடியிலே வளர்ந்தருளா நின்றான்’ என்று கேட்டு,
‘அங்கே மநோ ரதித்தபடியே நாம் கலந்து பரிமாறலாம்’ என்று தெற்குத் திருவாசலாலே சென்று புக,
‘இப்போது இங்ஙனே வடக்குத் திரு வாசலாலே புறப்பட்டுத் தன்னுடைச் சோதி யேற எழுந்தருளினான்’ என்று
கேட்டு விழுந்து கிடந்து கூப்பிடுகிறார்” என்று
பிள்ளான் பணிப்பர் என்று அருளிச்செய்வர்.-பாவியேன் பல்லில் பட்டுத் தெறிப்பதே -வருத்தம் —

கொப்பூழ்ச் செந்தாமரை மேல் திசைமுகன் கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும்–கடாக்ஷித்து ஸ்ருஷ்டிகள்
அசுரரை வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும்–கடாக்ஷித்து பகைவர்களை அழியச் செய்ய
“நின்று நின்று நினைகின்றேன்” என்பது போன்றவைகளைக் கடாக்ஷித்து எழுகின்றது ஆழ்வான் நிர்வாகம்.

எம்பார் நிர்வாகம், “என் கண் கட்குத் திண் கொள்ள” என்பது போன்றவைகளிலே நோக்காக எழுந்தது.

“செய்து போன மாயங்களும்” என்றதிலே நோக்கு, பிள்ளான் நிர்வாகம்.

கோ கோபிரளர் மக ரிஷிகள் –வாசு தேவர் மூலவர் -சேவை ஸ்ரீ வித்யா ராஜகோபாலன் உத்சவ சேவை –
இருந்த இடமே- 32-சேவை பெற்றார்களே -மன்னார்குடி சேவை-

பத்தாம் திருவாய் மொழியில் இப்படி திரு வல்ல வாழிலே யநுபவிக்க ஆசைப்பட்டு அது கிடையாமையாலே ஆர்த்தராய்
நினைந்து இருந்தே சிரமம் தீர்ந்தேன் -என்கிறபடியே
அவனுடைய ஸர்வ அவதார ஸித்தமான குண சேஷ்டிதங்களை அனுசந்தித்து தரிக்கப் பார்த்து –
ஸ்ரீ கிருஷ்ணனுடைய அவதாராதி வ்ருத்தாந்தத்தையும்
அபிமத விஷய வியாபாராத்தையும்
பால சேஷ்டிதங்களையும்
திரிபுர வாசிகளான அஸூர வர்க்கத்தினுடைய அந்தர் பேதத்தையும்
அதி மானுஷ சேஷ்டிதங்களையும்
ஸ்த்தித் யாஸன சயநாதி வியாபாரத்தையும்
ஆந்தரமாகவும் பாஹ்யமாகவும் பிரகாச அப்பிரகாச கரத்வத்தையும்
சர்வாதிகத்வ ஸூ சகமான ஸ்ருஷ்ட்டி வ்யாபாரங்களையும்
அர்த்தியாயும் தன் அபேக்ஷிதம் தலைக் கட்டிக் கொள்ளும் ஆகாரத்தையும்
ஆஸ்ரித விஷயத்தில் யரும் தொழில் செய்து அபகரிக்கும் படியையும்
அனுசந்தித்து அவை தானே அபிராப்தி தசையில் சையில்யாவஹம் ஆகையால் ஆர்த்தராய்
உன்னுடைய சேஷதீதாதிகளை நான் நிலை நின்று அனுபவிக்கும் படி பண்ணி அருள வேணும் என்று அபேக்ஷித்து
அவன் திருவடிகளில் பிறந்த உபாய விசுவாசம் யாவத் பிராப்தி அனுவர்த்திக்கும் படியை அருளிச் செய்து
இப்படி உபாய பூதனுடைய ஸ்வரூப யாதாம்யத்தை நிரூபித்துத் தலைக் கட்டுகிறார் –

பிறந்த வாறும் வளர்ந்த வாறும் பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத்
திறங்கள் காட்டி யிட்டுச் செய்து போன மாயங்களும்
நிறந்த னூடு புக்கென தாவியை நின்று நின்று ருக்கி உண்கின்ற இச்
சிறந்த வான் சுடரே! உனை என்று கொல் சேர்வதுவே?–
5-10-1-

பிறந்தவாறும் – தாய் தந்தையர்கட்குக் காற்கட்டு அறும்படி யன்றோ பிறந்தது. -பாசம் அறுத்து —-தன்னைப் பெற்றவர்களுடைய பந்தத்தை அறுத்துக் கொண்டு வந்து பிறப்பாரும் உளரோ.‘இவன் அன்றோ நமக்குக் காற்கட்டு ஆனான்’ என்றிருந்தார்கள் அவர்கள்;
அது பொறுக்க மாட்டாமல், ‘உங்களுடைய கட்டு நான் பொறுக்க மாட்டேன்’ என்று விட்டான்.தந்தை காலில் விலங்கு அற அன்றோ வந்து தோன்றிற்று-நானும் பிறந்து அர்ஜுனா நீயும் பிறக்க வேண்டுமோ –பிள்ளாய்! பிறக்கிற போதும் ஒரு விளக்கு எரிந்தால் ஆகாதோ, தானே விளக்காக அன்றோ பிறந்தது.-ஆயர் குலத்தினில் தோன்று மணி விளக்கன்றோ.-கர்மங்கட்குக் கட்டுப்படாதவனான தான் கர்மங்கட்குக் கட்டுப்பட்டவரோடு ஒக்கப் பிறப்பது,-பிறந்தால் -ஆஸ்ரித சம்ரக்ஷணமே -அடியார்களைப் பாதுகாத்தலே தனக்குப் பிரயோஜனமாக இருப்பது,-அவர்கள் ஆபத்துப் படுங்காலமே தனக்குப் பிறக்கைக்கும் காலமாவது,-பிறவா நின்றால் தன் ஐஸ்வர்யத்தில் ஒன்றும் குறையாமற் பிறப்பது,-அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தை -பிரகிருதி சம்பந்தமில்லாத திருமேனியை இதர சஜாதீயமாக்கா நிற்பது,-தன் பிறப்பை அநுசந்தித்தாருடைய பிறவிகள் போகும்படியாக இருப்பது, இவை யெல்லாவற்றையும் நினைக்கிறது. – நமக்காக இவர்கள் பிணை பட்டுச் சிறையிருக்கும்படி இவர்களுக்கு இங்ஙனே பிறப்பதே!’ என்று ஈடுபடா நிற்பனவான படிகளை யெல்லாம் நினைக்கிறது.-பிறந்தார் பால் குடித்தார் நினைத்தால் பிறக்காமல் பால் குடிக்க வேண்டாமல் போவதே –-அவதார ரகசியம் நான்கு ஸ்லோகங்கள் -ஆறு விஷயங்கள் –-1-மெய் 2-பெருமைகள் குறையாமல் -3-சுத்த சத்வ மயம்
4-இச்சையால் பிறக்கிறான் -5- சாது சம் ரஷணம் -தர்ம சம்ஸ்தாபனம் -6-துஷ்ட நிக்ரகம் 

அவளுக்கு முலை சுரக்கையாலும், முலை பெறாவிடில் இவன் தான் நோவு படுகையாலும்,
தன்னைக் கட்டவும் அடிக்கவுமாம்படி எளியனாக்கி வைக்கையாலும் பிறந்தவாறும் என்கிறார்.-பகல் கண்ட குழியிலே இரவிலே விழுவாரைப் போன்று, பருவம் முற்றினவளவிலே “எத்திறம்” என்று மோஹித்து விழக்கடவ இவர்,
அதற்கும் அவ்வருகே சென்று இழிகிறாரன்றோ, கலக்கம் இருக்கிறபடி.
‘எத்திறம்’ என்று அங்கே ஆறு மாதங்களும், ‘பிறந்தவாறும்’ என்று இங்கே ஆறு மாதங்களும் மோஹித்துக் கிடந்தார் என்று பிரசித்தமன்றோ!
ஸ்ரீபரதாழ்வான் ஸ்ரீராமபிரானுடைய பிரிவாலே மோஹித்துத் தறைப்பட்டுக் கிடக்க,
தாய் மார் அடங்கலும் சுற்றும் பார்த்து நிற்க, “சத்ருக்நாழ்வான் செயலற்று நின்றான்” என்கிறபடியே,-ஸ்ரீ சத்துருக்நாழ்வான் கிட்டவுங்கூடப் பயப்பட்டுச் செயலற்றவனாய் நின்றானன்றோ-

வளர்ந்தவாறும் – வளர்ந்தபடியை அநுசந்தித்தால் பிறந்தவாற்றிலே கால் வாங்கி இளைப்பாற வேண்டும்படி யன்றோ இருப்பது.-பிறக்கிற போது சிறைக் கூடத்திலே தான் பிறந்தால், வளருகிற போது நாட்டாரைப் போன்று வளரத்தான் பெற்றதோ.
விபவத்தில் ஓர் அந்தர்யாமி பட்டது அன்றோ பட்டான் –பூதனை முதலாயினோர்கள் உயிர்கள் மாளவும், யசோதை முதலானவர்களுடைய சிநேகம் வளரவுமன்றோ வளர்ந்தது.-இவன் கால் நெடுக நெடுக, பகைவர் உடலும் மாண்டது, அநுகூலர் உடலும் மாண்டது;-திறங்கள்’ என்றது, தூது சென்றும், தேரை ஓட்டியும், ‘ஆயுதம் எடேன்’ என்று ஆயுதம் எடுத்தும், பகலை இரவாக்கியும், எதிர்கள் உயிர் நிலைகளைக் காட்டிக் கொடுக்கை தொடக்கமானவற்றை யெல்லாம் சொல்லுகிறது.நிறந்தனூடு புக்கு--தோல் புரையே போமதன்று, மர்மத்திலே நலிகிறபடி.-

உன்னை என்று கொல் சேர்வதுவே – நான் தரித்து நின்று அநுசந்திக்க வல்லேனாம்படி செய்தருள வேண்டும்.என்கிறார். –-மானஸ -கூரத் ஆழ்வான் நிர்வாகம் –அன்றிக்கே, சேருகையாவது இரண்டு தலையும் சேருகையாய், நான் அநுசந்தித்து நைகின்றவனாதல் தவிர்ந்து உன்னைப் பிரியாதபடி கிட்டப் பெறுவது என்று? என்கிறாராகவுமாம்.– காயிக -எம்பார் நிர்வாகம் –ஒரு தமிழன் -பிறந்த வாற்றாலும் என்று தொடங்கி –செய்து போன மாயங்களாலும்–உருக்கி உண்கின்ற இச் சிறந்த வான் சுடரே -என்று அவன் பக்கலிலே யாக்கி நிர்வஹித்தான்-

———

வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் மாய மாவினை வாய் பிளந்தும்
மதுவை வார் குழலார் குரவை பிணைந்த குழகும்
அது இது உது என்ன லாவன அல்ல என்னைஉன் செய்கை நைவிக்கும்
முதுவைய முதல்வா! உனைஎன்று தலைப்பெய்வனே?
–5-10-2-

என்னை உன் செய்கை நைவிக்கும் – அச் செயலாகவுமாம், இச் செயலாகவுமாம், உச் செயலாகவுமாம், அவற்றில் எனக்கு ஒரு தாத்பர்யம் இல்லை;-உன்னுடைய செயல்களாகையும், நானாகையுமே எனக்கு நோவு படுகைக்கு வேண்டுவது.
“இத்தால் சொல்லிற்றாயிற்று, இப் பாசுரத்தில் மூன்று பொருள்கள் சொல்லப்படுகின்றன.
அவை யாவன: அனுகூல சம்ஸ்லேஷமும், பிரதிகூல நிரசனமும், மத்தியஸ்த ரக்ஷணமும்;
இவற்றையே, ‘அது இது உது’ என்கிறது” என்று பிள்ளான் பணிக்கும்.

முதுவைய முதல்வா! உனைஎன்று தலைப்பெய்வனே?
பிரவாஹா ரூபேண நித்தியமாய் -பிரளய காலத்தில் அழிந்த ஜகத்தை உண்டாக்கினவனே -அழிந்த வஸ்துவை உண்டாக்கின அருமை -உண்டோ உள்ள வஸ்துவை தரிப்பிக்கைக்கு –அழிந்த வஸ்துவை உண்டாக்கினால் போலே சிதிலனான என்னை தரித்து நின்று அனுபவிக்க வல்லேனாம் படி பண்ண வேணும் –உன்னை என்று கிட்டுவது -என்றுமாம் 

இத் திருவாய்மொழியில், கிட்டுகைக்கு வாசகங்களான சொற்களெல்லாம், ஆழ்வான் நிர்வாஹத்திலே மானசாநுசந்தான பரங்கள் என்றும் எம்பார் நிர்வாஹத்திலே சரீரத்தாலே கிட்டுதல் என்றும் கொள்க.-

————

பெய்யும் பூங்குழல் பேய் முலை யுண்ட பிள்ளைத் தேற்றமும் பேர்ந்தொர் சாடிறச்
செய்ய பாதமொன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்
நெய் யுண் வார்த்தை யுள் அன்னை கோல் கொள நீயுன் தாமரைக் கண்கள் நீர்மல்கப்
பையவே நிலையும்வந்து என்நெஞ்சை உருக்குங்களே
.–5-10-3-

பெய்யும் பூங்குழல் பேய் முலை உண்ட பிள்ளை--பிரதிகூலருடைய பிராணன்களும் அடியார்கள் சம்பந்தமுடைய திரவியமுமே தாரகமாக வளர்ந்தான் என்று ‘வளர்ந்தவாறு’ என்று சொன்ன இடத்தை விவரிக்கிறது இங்கு.-பிள்ளைத் தேற்றம் – ஐஸ்வர்யமான ஞானம் இன்றிக்கே, ‘தாய் முலை’ என்றும், ‘வேற்று முலை’ என்றும் அறியும் தெளிவு.
மிகச் சிறிய இளமைப் பருவத்திலும் பிள்ளைகள் முலைவாசி அறிவர்கள் அன்றோ.
இவனும் ‘தாய்’ என்றே நினைத்து உண்டான் காணும். பால்யத்தில் தெளிவு இருக்கிறபடி. என்றது,-யசோதைப் பிராட்டி முலை கொடுக்கும் போது பிரீதியினாலே செய்யும்-முக்த ஜல்பிதங்களை – மழலைச் சொற்களை-இவள் பக்கலிலே செய்தானாயிற்று.
‘பாதகர்’ என்று அறியவுமாம், அறியாதிருக்கவுமாம், பகைவர்கள் கிட்டினால் முடியக் கடவதான பொருளின் ஸ்வபாவம் இருக்கிறபடி.

செய்த நின் சிறுச் சேவகமும் – நீ சேவகம் செய்ய அடியிட்டபடியும். என்றது, அரச குமாரனாய்ப் பிறந்து, பருவம் நிரம்பி, ஆயுதப் பயிற்சி செய்து, வசிஷ்டர் முதலியவர்களைப் பின் சென்று, விஸ்வாமித்திரர் முதலியோர் பக்கலிலே அத்திரங்களைப் பெற்றுப்
பின்பே யன்றோ தாடகை மாரீசன் சுபாகு முதலியவர்களைக் கொன்றது;
அவை யெல்லாம் பருவம் நிரம்புவதற்கு முன்பே, வாயாலும் காலாலுமாயிருக்கிறபடி இங்கு. -முலை உண்டதும் சகடாசுர நிரசனமும் வாயால் வலியார்க்குத் தாயாரும் வேண்டாவாயிற்றுக் காணும். இவனைப் போன்று கால் கடியார் இலர், ஆகையாலே யன்றோ காலிலே கொடி கட்டி வைக்கிறது.

நெய் உண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள நீ உன் தாமரைக் கண்கள் நீர் மல்க பையவே நிலையும் –பருவம் நிரம்புவதற்கு முன்பு, தான் பிரதிகூலரை அஞ்சப் பண்ணுமாறு போலே காணும் பருவம் நிரம்ப நிரம்ப அநுகூலர்க்குத் தான் அஞ்சும் படியும்.

நீ உன் தாமரைக் கண்கள் நீர் மல்க –-வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டியிருக்கிற நீ, அதற்கு மேலே கண்களும் கோட் புக்கால் பொறுக்கப் போமோ.-கோட் புக்கால்-நூதனமாக அலர்ந்தால்–வன் தாம்புகளால் புடைக்க அலந்தான் அலர்ந்தான் -பட்டர் நஞ்சீயர் சம்வாதம் –
“பிராட்டிக்குத் தகுந்தவர் பெருமாள்” என்கிறபடியே அவனுக்குத் தகுதியான கண்கள் ஆதலின் ‘உன் தாமரைக் கண்கள்’ என்கிறது.-“துல்ய ஸில வயோ வ்ருத்தாம் துல்யாபிஜன லக்ஷணாம் ராகவோர்ஹதி வைதேஹீம் தஞ்சேய மஸி தேக்ஷணா–

நெய் யுண் வார்த்தை யுள் அன்னை கோல் கொள நீயுன் தாமரைக் கண்கள் நீர்மல்கப்
நெய் யைக் களவு கண்டான் என்னும் வார்த்தா பிரஸ்தாவத்திலே ஸ்நேஹ அதிசயத்தாலே தாயார் கையில் கோலை எடுத்தாள்-எதிரிகள் அஞ்சும் படி கோல் கொள்ளுமவன் கிடீர் இவள் கையில் கோலுக்கு அஞ்சுகிறான் -சத்ருக்களை அஞ்சப் பண்ணும் -ஆஸ்ரிதற்கு தான் அஞ்சும் -தாய் எடுத்த சிறு கோலுக்கு -என்ன கடவது இறே
நீ -வெறும் புறத்தில் ஆலத்தி வழிக்க வேண்டும் அழகை யுடைய நீ -சர்வ சக்தியான நீ என்றுமாம்-உனக்குத் தகுதியான கண்கள் –கண்ணில் பரப்பு அடங்க நீரிலே நிறையும் படி
பையவே நிலையும்வந்து என்நெஞ்சை உருக்குங்களே.–-அஞ்சி முகத்தை பாரா நிற்க செய்தே-தெரியாத படி பின்னே கால் வாங்கி நிற்கும் என்னுதல் -பேகணித்து நின்ற நிலை என்னுதல்-பூத காலத்தில் செய்து போனது என்று இருக்க ஒண்ணாத படி புக்க இடம் புக்கு என்நெஞ்சை நீராக்கா நின்றன-

———–

கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புரம் புக்க வாறும் கலந்த சுரரை
உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும்
வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும்
உள்ளமுள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே.
–5-10-4-

சேதனனைக் கொண்டு காரியங் கொண்டதோடு, அசேதனத்தைக் கொண்டு காரியங் கொண்டதோடு வாசி இல்லை இவனுக்கு.-சிவன் தன்னோடு அவன் கையில் வில்லோடு வாசியில்லை இவனுக்கு.-காரண நிலையில் சித்து அசித்துக்களைக் கொண்டு காரியங்கொண்டதைப் போன்றதாயிற்று.-

வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறு அலாமை விளங்க நின்றதும் –-“பிரஹ்ம ருத்திரர்கள் நடுவே நின்றது ஒரு முதல் களவு உண்டு, அதனைச் சொல்லுகிறது” என்று
ஆளவந்தார் அருளிச் செய்ததாகத் திருமாலையாண்டாள் பணிப்பர். என்றது, -மத்யே விரிஞ்சக்ரீசம் பிரதம -விஷ்ணு அவதாரம் – சிவனையும் தன்னையும் சமமாகச் சொல்லலாம்படி திரிமூர்த்தி மத்திய நிலையைச் சொல்லுகிறது என்றபடி.
இதனை எம்பெருமானார் கேட்டருளி, “அழகிது, அத்தனை தூரம் தேடிப் போக வேணுமோ,
இவன் தன் விஷயத்திலே, முன்பு செய்த உபகாரத்துக்கு ஓர் அளவு உண்டோ,
இதுதானே அமையாதோ” என்று அருளிச் செய்தார்.

அவனுடைய சேஷத்வத்துக்கும் இவனுடைய சேஷித்வத்துக்கும் பிரமாணம் ஒரு வெள்ளம் என்கிறார் காணும்.-சிவன் சடையில் கொன்றையும் சர்வேச்வரன் அடியில் திருத்துழாயும் கூடி வந்து இழிகிறபடி.-அலகனந்தா பாகீரதி இரண்டும் கலக்கும் -முடி மலரும் திருவடி துழாயும் கலந்து இரண்டு நிறங்களில் வரும்–கண்டம் என்னும் கடி நகரே பிரமாணம்

உள்ளம் உள் குடைந்து –என் மனத்திலே புக்கு மூழ்கி. என் உயிரை உருக்கி உண்ணும் –ஆத்மாவைப் புக்கு அழித்து நோவு படுத்தா நின்றன.-ஞானத்திற்கு வழியாக இருக்கின்ற மனத்திலே புகுந்து ஆத்மாவை நீராக்கி முடியா நின்றன.-

———-

உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்
வண்ண மால் வரையை எடுத்து மழை காத்ததும்
மண்ணை முன்படைத் துண்டுமிழ்ந்து கடந்திடந்து மணந்த மாயங்கள்
எண்ணுந் தோறு மென்னெஞ்சு எரி வாய் மெழுகொக்கும் நின்றே
.–5-10-5-

இவன் தானே சொன்னவை மறுக்க ஒண்ணாதபடியாயிருக்குமே;-இம்மலையின் முன்னே இடுங்கோள்” என்ன, அங்கே கொடுவந்து குவித்தார்கள்;-அதனைத் தான் புக்கிருந்து அமுது செய்தான். தனக்கே உரியராயிருப்பாருடைய பொருளை வேறே சிலர்க்குக் கொடுக்கையாவது,-மஹிஷீ ஸ்வேதத்தைப் பிறர்க்குக் கொடுத்த அளவே யன்றோ. அவன் தன் பரிகரத்தோடுங்கூட இதனைக் கொண்டு திருப்தனாக இருக்க, இதனைத் தான் கைக் கொண்டானாயிற்று.

எண்ணுந்தோறும் என் நெஞ்சு எரிவாய் மெழுகு ஒக்கும் நின்றே –-அவனுடைய ரக்ஷணத்திலும் பரப்பு உண்டாகாதே இவருடைய பாரிப்பு.
எண்ண மாட்டார், எண்ணாதிருக்க மாட்டார்; ரக்ஷணத்திற்கு அவன் சமைந்தாற்போலே காணும் அழிகைக்கு இவர் சமைந்தபடி.
தரிக்க எண்ணுவார் -எண்ண சிதிலம் ஆவாரே அதனால் எண்ண மாட்டார் -மாறி மாறி அன்றோ இவர் நிலை –
இதனை நினைத்தே நாட்டார் உண்டு உடுத்துக் காலம் போக்கா நின்றார்களாதலின் ‘என் நெஞ்சு’ என்கிறார்.
நெருப்பின் அருகில் இருக்கும் மெழுகு போலே உருகா நின்றது என்பார் ‘எரிவாய் மெழுகு ஒக்கும்’ என்கிறார்.
அது ஒருகாலே உருகுதல் கரிதல் செய்யுமன்றோ, இது உருகினபடியே இரா நின்றதாதலின் ‘நின்றே’ என்கிறார்.-

—————

நின்றவாறு மிருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன
ஒன்றலா உருவாய் அருவாய நின் மாயங்கள்
நின்று நின்று நினைகின்றேன் உனை எங்ஙனம் நினைகிற்பன்? பாவியேற்கு
ஒன்று நன்குரையாய் உலகமுண்ட ஒண்சுடரே!
–5-10-6-

நின்றவாறு மிருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன-திரு ஊரகம்-திருப் பாடகம் -திரு வெக்கா -இவற்றிலே நின்றபடியும் இருந்த படியும் கிடந்தபடியும்
அப்படியே ஆஸ்ரிதர் ஹிருத்யங்களிலே பிராமண சித்தமாம்படி வர்த்தித்த படியாகவும் -நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுள்ளே –
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் திருத் தொட்டிலிக்குள்ளே நின்று இருந்து கிடந்த படியையும் சொன்னபடி ஆகவுமாம்-இவர் இவ் விஷயத்தில் படுகிற பாடு எல்லாம் நமக்கு இதர விஷயங்களிலே அநுபவ சித்தமன்றோ. இவ் விஷயத்தில் இன்றிக்கே ஒழிகிறதித்தனை.

நின்ற வாறும் –-இலங்கையின் வாசலிலே கையும் வில்லுமாய் நின்றபடியாதல்,
வாலி வதம் பண்ணிக் கையும் வில்லுமாய் நின்றபடியாதல்;-இருந்தவாறும்-
“பர்ண சாலையில் எழுந்தருளியிருந்த ஸ்ரீ ராமனை” என்று இருந்த இருப்பும்,-கிடந்தவாறும்-
“ஸ்ரீ ராமன் கடற்கரையில் கடலை நோக்கிக் கிழக்கு முகமாகக் கையைக் கூப்பிக் கொண்டு-கடற்கரையிலே கிடந்த கிடையும்.-ஒரு கடலோடே ஒரு கடல் ஸ்பர்சித்து பொறாமை கொண்டு கிடந்தாற்போலே இருக்கையாலே;-“கருணையங்கடல் துயின்றனன் கருங்கடல் நோக்கி” என்றான் அன்றோ-நின்றும் இருந்தும் கிடந்தும்’ என்று திரளச் சொல்ல அமையுமாயிருக்க, ‘நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும்’ என்கிறார் அன்றோ,
தனித் தனியே உளுக்கினபடி.-நின்றானாகில் ‘நிலையார நின்றான்’-இருந்தானாகில், “பிரான் இருந்தமை காட்டினீர்” என்னும்படி இருக்கும்-கிடந்தானாகில், “கிடந்ததோர் கிடக்கை” என்பர்கள்.-

நம் பெருமாள் நிற்க -பெரிய பெருமாள் கிடக்க -நம் பெருமாள் -நாச்சியார் திருக்கோலம் இருந்து-திருவல்லிக்கேணி -நின்றும் இருந்தும் கிடந்தும் -பரந்தும் -நடந்தும் -சேவிக்கலாம்-
திரு நீர் மலையிலும் நின்றான் இருந்தான் நடந்தான் கிடந்தான் –

கோவர்த்தன மலையைத் தூக்கிப் பிடித்து நின்ற நிலையாதல்,-திருக் குரவைக்கு முற் ஜாமமாகப் பெண்களோடே கழகம் இருந்த இருப்பாதல்,-ஓரொருத்தர் மடியிலே சாய்ந்த படியாதல்.

அன்றிக்கே-“நிற்பதும் ஒர் வெற்பகத் திருப்பும் விண் கிடப்பதும், நற் பெருந் திரைக் கடலுள்” என்கிறபடியே,-திருமலையிலே நின்றபடியும்,-பரம பதத்திலே இருந்தபடியும், திருப் பாற் கடலிலே திருக்கண் வளர்ந்தருளின படியுமாகவுமாம்

நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும்’ என்று ‘ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் பாடா நிற்க,-‘இவை யெல்லாம் தொட்டிலிலே’ என்று அருளிச் செய்தார் எம்பெருமானார்.
தொட்டிற் பழுவைப் பிடித்துக் கொண்டு நிற்கும்படியும்,
தரித்து நிற்க மாட்டாமை விழுந்திருக்கும்படியும்,
அது தான் பொறுக்க மாட்டாமை சாய்ந்து கிடக்கும்படியும் சொல்லுகிறது.

அன்றிக்கே,-போரார் வேற்கண் மடவாள் போந்தனையும் பொய்யுறங்கி-சிறிய திருமடல். கண்ணி. 31.-அவள் போனவாறே எழுந்திருந்து நின்றவாறும்,-அடி ஓசை பட்டவாறே வந்து இருந்தபடியும்,-நிழல் ஆடினவாறே முன் கிடந்த தானத்தே ஓராதவன் போல் கிடந்தவாறும் என்றுமாம்.

போரப் பாட வல்லாராய் இருப்பார் ஒருத்தர்,வடக்கு நின்றும் பெருமாளைத் திருவடி தொழ வேண்டும் என்று வர,
ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் தீர்த்தத்தின் அன்று-தீர்த்தவாரி உத்சவம் அன்று –
இருந்து திருமாலையைப் பாடிச் சமைந்துப் பெருமாளை
மத்த கஜங்களை ஏத்துமாறு போலே ஏத்தி வசமாக்கிக் கணிசம்-சபதம் – கொண்டு,
“நாயன்தே! தேவர் திருவடிகளுக்குப் போர நல்லான் ஒருத்தன், எழு நூற்றுக் காதம் ஆறு உண்டு
தேவரைத் திருவடி தொழ வேண்டும் என்று வருகிறது; இவனை அழைத்துக் கொண்டு சம்பாவனை செய்தருள வேண்டும்” என்ன
பெருமாளும் ‘அப்படியே செய்கிறோம்’ என்று திருவுள்ளமாய் அருளப் பாடிட்டு,
திருப் புன்னைக் கீழ் நின்றும் அவர் நின்ற விடத்தளவும் செல்ல நாலு கோல் தறை திருக் கைத்தலத்திலே எழுந்தருளி
விண்ணப்பஞ் செய்வார்களை எல்லாம் அருளப் பாடிட்டு,
‘வாரீர் கோள், இவன் வந்த தூரத்துக்கெல்லாம் போருமோ நாம் இவனுக்குச் செய்த தரம்’ என்று திருவுள்ளமானார்.
இப்படியே யன்றோ நம்மிழவுகளும் திருவுள்ளத்திலே பட்டவை யெல்லாம் ஆறும்படிக்கு ஈடாக முகம் தந்தருள வல்லபடியும்.
இதுவே யாம் பெரும் சம்மானம் நாடு புகழும் பரிசு –

ஒரு நாள் ஸ்ரீ வைஷ்ணவ வண்ணாத்தான் திருப் பரிவட்டங்களை அழகிதாக வாட்டி எம்பெருமானார்க்குக் கொண்டு வந்து காட்ட,
போரத் திருவுள்ளமுகந்தாராய் இவனையும் கூடக் கொண்டு பெருமாள் பாடே புக்கு,
‘நாயன்தே! இவன், திருவரைக்குத் தகுதியாகும்படி இவற்றைத் தொட்டபடி-வெளுத்த படி- பார்த்தருள வேண்டும்’ என்று காட்ட,
கண்டு போர உகந்தருளி எம்பெருமானாரை அருளப் பாடிட்டு,
‘இவனுக்காக, கம்சனுடைய ஈரங்கொல்லி நம் திறத்திற் செய்த குற்றம் பொறுத்தோம்’ என்று திருவுள்ளமானார்.

ஆகவே பக்தனுக்காகவும் அபக்தனுக்காகவும் செய்து அருளினார் என்பதைக் காட்டிய வாறே-அனைத்து உலகும் வாழப் பிறந்த எதிராசர் அன்றோ –

ஒன்று நன்கு உரையாய்-ஆத்ம ஸ்வரூபத்தின் சித்தி யன்றோ பேறு ஆகிறது. பேற்றின் பலமான கைங்கரியம் சொல்ல வேண்டாவே,-பேற்றின் அளவுமன்றோ பிரமாணம் சொல்லுவது. அதற்கு அப்பாலுள்ளது பிரமாணத்துக்கு விஷயம் அன்றே.
வாசா மகோசரம் அன்றோ அது–அப்படியே ‘உனக்கும் நானே கடவேன்’ என்று ஒரு வார்த்தை சொல்ல வல்லையே.

உலகம் உண்ட ஒண் சுடரே!-உண்டி உடல் காட்டுமே. நினைக்கை குற்றமாய் விட்டதோ. நினைவுங்கூடத் தேட்டமானால் நீயே செய்து தலைக் கட்ட வேண்டாவோ.
(நினைக்கின்றேன் என்று சொன்னதே குற்றம் -நீயே அறிந்து செய்ய வல்லை அன்றோ )
இவை, ஆபத்துங்கூட அறிவிக்க மாட்டாத சமயத்திலே நீயே அறிந்து வயிற்றிலே வைத்து நோக்கி,இந்த உபகாரத்தை இவை அறியாதொழிய ‘இது உன் பேறு’ என்னுமிடம் வடிவில் புகரிலே தோற்ற இருப்பான் ஒருவன் அல்லையோ.-‘உன் பேறாக ரக்ஷித்தாய்’ என்பதனை மெய்யே யன்றோ சொல்லுகிறது- மெய்யே -சத்தியமாக -சரீரமே லோகம்-
(ஜகம் சரீரமான படியால் நீயே ரக்ஷித்தாய் என்றபடி )-இங்கிதம் நிமிஷிதம் -தாவகம் -உன் செயல் எல்லாம் நைவிக்கும் –

—————

ஒண் சுடரோ டிருளுமாய் நின்றவாறும் உண்மை யோடின்மையாய் வந்து என்
கண் கொளா வகை நீ கரந்து எனைச் செய்கின்றன
எண் கொள் சிந்தையுள் நைகின்றேன் என் கரிய மாணிக்கமே! என் கண் கட்குத்
திண் கொள ஒருநாள் அருளாய் உன் திருவுருவே
.–5-10-7-

உண்மையோடு இன்மையாய் வந்து ஒண் சுடரோடு இருளுமாய் நின்றவாறும் 
எனக்கு உண்மையோடே ஒண் சுடராய் நிற்கும் மனத்தின் கண்ணே;-இன்மையோடு இருளாய் நிற்கும் புறத்திலே காண்கையில்.
அன்றிக்கே,-அடியார்கட்குத் தன் படிகளில்-சேஷித்வம்- ஒன்றும் குறையாதபடி காட்டிக் கொடுத்து, அவர்கட்கு ‘இவ்வளவு’ என்று அளவிட்டு அறியும்படி பிரகாசித்து நின்றபடியும்,
அடியரல்லாதார்கட்குத் தன் படிகளில் ஒன்றும் தெரியாதபடி செய்து, அதனாலே அவர்களுக்கு ‘இல்லை’ என்னும்படி இருளச் செய்து கொண்டு நின்றபடியும் என்னுதல்;
அடியார்கட்கு ஒண் சுடரோடு உண்மையாய் நின்றும், அடியரல்லாதார்க்கு இருளோடு இன்மையாய் நின்றும் 

வந்து என் கண் கொளா வகை நீ கரந்து என்னைச் செய்கின்றன – இவை யெல்லாம் தவிர, என் பக்கல் பரிமாறுகிற வேறுபாடும்.-ஒண் சுடராதல், இருளாதல் இரண்டத்தில் ஒன்றாகப் பெற்றிலேன்; நடுவே நின்று கிலேசியா நின்றேன்.
முத்தர்க்குக் கூட்டு அல்லர், சம்சாரிகளுக்குக் கூட்டு அல்லர்; அந்தரப்பட்டு நிற்கிறாரன்றோ இவர் தாம்.-என் நெஞ்சிலே வந்து புகுந்து கண்களுக்கு விஷயமாகாமல் மறைய நின்று நீ என்னை நலிகிறவற்றையும்.

ஒரு நாள் அருளாய் – ஒரு நாள் அமையும் என்கிறாரல்லர், விடாயின் பெருமை சொல்லுகிறார்; விடாய் கொண்டவன் ‘ஒரு கால் நாக்கு நனைக்க அமையும்’ என்றாற்போலே. ‘கிட்டினால் பின்னை விடும் படி சொல்லுகிறோம் என்று.

உன் திரு உருவே – இது ஏதேனும் உன்னதோ! நோக்கிக் கொண்டு கிடக்கைக்கு;
“உன் திரு மேனி உனக்காக அன்று, உன் அடியார்கட்காகவே” அன்றோ
பிரிநிலை ஏவகாரம் இது உனது திரு உருவமே அன்றே என்னது அன்றோ பக்தானாம்-

———

திருவுருவு கிடந்தவாறும் கொப்பூழ்ச் செந்தாமரை மேல் திசைமுகன்
கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும்
பொருவிலுன் தனி நாயக மவை கேட்குந்தோறும் என்நெஞ்சம் நின்று நெக்கு
அருவி சோருங் கண்ணீர் என்செய்கேன் அடியேனே
.–5-10-8-

ஒப்பின்றிக்கே அத்விதீயமாய் ஐஸ்வர்யப் பிரகாசமான உன் குணங்களையும் செயல்களையும் கேட்குந்தோறும் என் நெஞ்சமானது மலை நெகிழ்ந்தாற் போன்று நெகிழ்ந்து, கண்ண நீர் அருவியாய்ப் பாயா நின்றது.-என் செய்கேன் அடியேனே – பர தந்திரனான நான் காரியம் செய்து கொள்ளப் பார்த்திருக்கிறாயோ,-வேறு ஒன்றாலே போது போக்கித் தரித்திருக்கவோ,-நான் எதனைச் செய்வேன்?ப்ராப்தியை உணர்ந்த வாறே விட்டுத் தரிக்கப் போகிறது இல்லை –பரதந்த்ர வஸ்து யாகையாலே பேற்றுக்கு யத்னம் பண்ணப் போகிறது இல்லை —

——————-

அடியை மூன்றை இரந்தவாறும் அங்கே நின்றாழ்கடலும் மண்ணும் விண்ணும்
முடிய ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும்
நொடியு மாறவை கேட்குந்தோறும் என் நெஞ்சம் நின்தனக்கே கரைந்துகும்
கொடிய வல் வினையேன் உனை என்று கொல் கூடுவதே.
–5-10-9-

ஆழ் கடலும்-இவருடைய நெஞ்சினைக் கரைக்க அடி இட்டபடி.-பூமி ஆகாசம் முதலியவைகள் அடங்கலும் இரண்டு அடிகளிலே அடங்கும்படிக்குத் தகுதியாக அளந்து-தலைக் கட்டிக் கொண்டபடியும்.-மஹாபலியைப் போலே ஒளதார்யம் கொண்டாடுகிறேன் அல்லேன்,
இந்திரனைப் போலே இராஜ்யம் ஆளுகிறேன் அல்லேன்,
என்னுடைய மனமானது உன் பக்கலிலே உருக்குலைந்து மங்கா நின்றது.-என் நெஞ்சம் நின் தனக்கே கரைந்துகும் அவாப்த ஸமஸ்த காமனான நீ ஆஸ்ரித அர்த்தமாக அர்த்தியான நீர்மையை அனுசந்தித்து -என் மனஸ் ஸூ இது என்ன நீர்மையே என்று த்ரவித்து சிதிலமாகா நின்றது

கொடிய வல் வினையேன் –பிராயச்சித்த சாத்தியம் அன்று -அனுபவ விநாஸ்யம் அன்று -சைத்திலய ஹேதுவான பிரமத்தை இ றே பாபம் என்கிறது -திரு நாம சங்கீர்த்தனம் மஹா பாதகங்களையும் போக்கும் என்று சொல்லா நிற்க,-அது தானே-சைதில்ய ஹேதுவாகும் படி – நிலை குலைவதற்குக் காரணமாம்படி மஹா பாவத்தைச் செய்தேன்.-உன்னை என்று கொல் கூடுவதே – நான் தரித்து நின்று உன்னை அநுபவிப்பது என்றோ? அநுபவிப்பதற்கு வந்து கிட்டுவது என்றோ?-

—————

கூடி நீரைக் கடைந்தவாறும் அமுதம் தேவர் உண்ண அசுரரை
வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும்
ஊடு புக்கென தாவியை உருக்கி உண்டிடுகின்ற நின் தனை
நாடும் வண்ணம் சொல்லாய் நச்சு நாகணையானே!
–5-10-10-

ஊடு புக்கென தாவியை உருக்கி உண்டிடுகின்ற நின் தனை
தோல் புரையே போகாதே மர்மத்திலே புக்கு -அச்சேத்யயோயம் அயமதாஹ்யோயம் என்கிற ஆத்மவஸ்துவை -த்ரவ்ய த்ரவ்யமாக்கி முடித்து விடாதே ஒழிகிற யுன்னை -புருஷோத்தமன் இப்படி செய்வதே என்கிற குண பிரசங்கத்தில் சிதிலன் ஆகா நின்றேன்

நாடும் வண்ணம் சொல்லாய் நச்சு நாகணையானே!-தரித்து அநுபவிக்கும்படி நல் விரகு சொல்ல வேண்டும்.–உம்மைத் தரிப்பிக்கப் போமோ நம்மால் என்ன, ‘நச்சு நாகணையானே’ என்கிறார். என்றது,-ஒருவன் பரம போகியாய் நின்று தரித்து உன்னை அநுபவிக்கப் பண்ணிக் கொடுத்திலையோ;-அப்படியே நானும் தரித்து உன்னை அநுபவிக்கும்படி செய்தருள வேண்டும் –

————-

நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்
ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ் வெய்துவர் வைகலுமே.
–5-10-11-


‘சரணே சரண்’ என்ற ஏகாரத்தாலே, வேறு உபாயத்தை விரும்பாத உபாயம் என்கிறது.
இத்தால் ‘ஏக’ பதத்தில் அர்த்தம் சொல்லுகிறது.–ஈஸ்வர நைரபேஷ்யம் -பல பிரபத்தி என்றும் சொல்வார்கள் –-உபாய எதிர்பார்க்க மாட்டார் -அதிகாரி ஸ்வரூபம் வேண்டுமே –
ஆகிஞ்சன்யம் அனந்யகதி மகா விஸ்வாசாதிகள் எல்லாம் இதுவே –
அன்றிக்கே,-சம்சார சம்பந்தப்பட்ட ஸ்வபாவங்கள் மேலிட்டு விபரீதமே பலியா நின்றாலும்
அப்படி அடிக்கழிவு செய்வார் ஒருவரல்லரே இவர்.-மஹா விஸ்வாசமாகிறது, இஃது ஒழிய வேறொன்றில் கால் தாழாதொழிகை ஆம்.

நாடொறும் ஏக சிந்தையனாய் – புறம்பு உண்டான சிந்தனை போய், இவ் விஷயத்திலே ஒரே தன்மையான எண்ணத்தை யுடையராய்,-பொருள் ஈட்டுதற்குச் செல்வார் ஒருவர் ஒரு சிராயை -மரக்கலம் -நம்பி நாலாண்டு பதிற்றாண்டு இழியா நின்றார்களன்றோ,
பேற்றின் சீர்மையைப் பார்த்தால் அவ்வளவாகிலும் வேண்டாவோ இவ் விஷயத்தில்.
சம்சாரத்தின் இயல்பால் வியசனங்கள் தொடர்ந்து வந்தாலும் உறுதி குலையாமே போருமதன்றோ ஸ்வரூபமாவது.-மித்ர பாவேனே –ஸூசகம் -தொழுது எழு மிகை என்பான் என் என்னில் -மகா விஸ்வாசம் இதில் வைப்பது சுலபம் தானே –

வைகலும் மகிழ்வு எய்துவர்- காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும் நித்திய அநுபவம் பண்ணப் பெறுவர்.-‘அநுசந்தானத்துக்குத் தடை வாராதபடி பண்ணி யருள வேண்டும்’ என்று பிரார்த்திக்க வேண்டும் படியான சம்சாரத்தை விட்டு, பகவானுடைய அநுபவத்துக்கு நழுவுதல் ஒரு நாளும் இல்லாத பரம பதத்திலே புக்கு அநுபவிக்கப் பெறுவர் என்றபடி.–மாக வைகுந்தத்து-‘மா’ என்றது, மஹத் என்னும் தத்துவத்தினை. ‘கம்’ என்றது ஆகாசம்.

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -60-முலையோ முழு முற்றும் போந்தில –அறுக்கும் வினையாயின -9-8-

February 28, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

திருத்துழாய் அங்குரிக்கும் போதே பால்ய பிராயத்தில் ஸஹஜ பக்தி உடையவள் செவிலித்தாயார் இரங்கி –தலைமைகளின் இளமைக்கு-குறுக்கும் வகை -திருநாவாய் -ஆழ்வார் -ஆளவந்தார் உகந்த திருவாய்-ஆகத்து அவனை நிறுத்தும் மனம் -ஆகத்து வினையை அறுப்பானே
ஓ -என்று கிட்டுமோ -அங்கும் உண்டே-இங்கு திருவேங்கடம் கிட்டுமோ-இங்கு–ஐந்து ஓங்காரங்கள்

முலையோ என்னில்-கலையோ என்னில் நாவோ என்றால் தெரிநிலை ஓங்காரம் -இவை மூன்றும் -ஆச்சர்யம்-விலையோ -விலை ஆகாதே -கண்கள் பெருத்து உள்ளனவே-மலையோ -கேட்டால் திருவேங்கடம் என்று இத்தையே சொல்லிக் கொண்டே இருப்பாள்-இத்தையே அப்யஸித்துக் கொண்டே இருப்பாளே-இவை இரண்டும்-ஒரு ஏவகாரம் இவள் பரமே-எதிர்மறை ஏவ காரம்

அவதாரிகை –தளப் பெரும் நீண் முறுவல் செய்யவாய் தட முலை வளப் பெரும் நாடன் மது சூதன் என்னும் – என்றாளே –ப்ராப்த யௌ வநையாய்–பருவம் நிரம்பின இன்று இவள் சொல்லுக்கு கேட்க-வேணுமோ – பால்யமே பிடித்து இவளுக்கு இது அன்றோ யாத்ரை என்கிறாள் – தலைமகள் இளமைக்கு செவிலி இரங்கல்

இப்படி பார்ஸ்வஸ்தரும் ஈடுபடும்படியான இவருடைய ஆர்த்தியைக் கண்ட பரிவரானவர்கள்
ஈஸ்வரனுடைய அநந்ய ஸாத்யத்வத்தை அறியாதே அவனை லபிக்கைக்கு உபாயமான பக்த்யாதிகள் பூர்ணம் அன்றியே இருக்க நடக்கிற த்வரையானது என்னாய் இருக்கிறது என்று சொல்லுகிற பாசுரத்தை தலைவி ஈடுபாடு கண்ட தோழி அறத்தோடு நின்று யுறைக்கக் கேட்ட செவிலி
பேதைப் பருவத்தாளான இவளுக்குத் தலைவன் இடம் வினாவும்படியான புணர்ச்சி யறிவு
வந்தவாறு என்னாய் இருந்தது என்று சொன்ன பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்-ஈஸ்வரனுடைய அநந்ய சாத்யத்வம் இரக்கமே உபாயம்-இவளுக்கு சாதனம் இல்லையே-முலை இத்யாதி -பக்த்யாதிகள் என்று பார்ஸ்த்வத்தார் அவன் ஸ்ரீ வைகுண்டம் விரக்தி யடைந்து திருவேங்கடம் வந்தது மயர்வற மதிநலம் அருளினதை அறியாமல் பேசுகிறார்கள் என்றபடி

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு–அவதாரிகை–தளப் பெரு நீண் முறுவல் செய்ய வாய தடமுலை வளப்பெரு நாடன் மது ஸூதனன் என்றாளேப்ராப்த யவ்வனையாய் -பருவம் நிரம்பின பின்பு இது சொல்லக் கேட்க வேணுமோ அடியே பிடித்தும் இவளுக்கு இதுவே யன்றோ யாத்திரை என்கிறாள்

முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே
– 60-தலைவியின் இளமைக்குச் செவிலி இரங்குதல் –

அறுக்கும் இடர் என்று அவன் பால் அங்கு விட்ட தூதர்
மறித்து வரப் பற்றா மனத்தால் -அறப் பதறிச்
செய்ய திரு நாவாயில் செல்ல நினைந்தான் மாறன்
மையலினால் செய்வது அறியாமல்
—88–இப்படி விட்ட தூதர் அத்தலைப் பட்டு அவனுக்கு ஸ்வ தசையை அறிவித்து மீண்டு வருவதற்கு முன்னே பிராப்ய த்வர அதிசயத்தாலே அவன் எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ திரு நாவாயிலே போய்ப் புக்கு அவ் வோலகத்திலே அங்கு உள்ளவர்களோடு கூட சபத்நீகனான அவனைக் கண்டு அனுபவித்து அடிமை செய்யப் பெறுவது எப்போதோ –என்று மநோ ரதிக்கிற
அறுக்கும் வினையில் -அர்த்தத்தை அறுக்கும் இடர் என்று தொடங்கி அருளிச் செய்கிறார் 

முலையோ இத்யாதி –இவை எல்லாம் நிரம்பினால் சொல்லுகை பிராப்தம் -இறே –இவை எல்லாம் -ஓங்காரம்-இவை இருந்தால் திருவேங்கடம் -திரு நாமம் சொல்லுகை பிராப்தம்-முலை வளர்ந்து கலை நின்று நா குழறாமல் இருக்க வேண்டுமே -முலையோ முழு முற்றும் போந்தில – முலைகள் சமைய வளர்ந்தன வில்லை என்று சொல்லும் அளவல்ல –முலை எழும் எல்லை இன்னது என்று கொண்டிக் கோல் நாடிற்றும் இல்லை –மொய் பூம் குழல் குறிய –செறிந்து அழகியதாய் இருந்துள்ள குழல்கள் ஆனவை –குறிய –நாயகன்-பேணி சூழி யஞ்சுற்றினால்-கொண்டை(க் கோலால் ) முடிந்தால் —
இவள் வினை கேட்டாலே செயல் அறுதியால் அழகு இல்லை என்று )குலைத்தால் அதுக்கு அவன் கால் பிடிக்கும் அளவு அல்ல –  கொண்டை முடிக்க நீளம் போராது என்னுதல்–கலையோ அரை இல்லை
உடுக்கும் இடம் அறியாள் –நாவோ குழறும் –தாய்மார் உருச் சொல்லி அவ்யக்தமானவற்றை அவள் பக்கலிலே கேட்கும் இத்தனை –(அவள் -தாய் பக்கம் என்றும் மகள் பக்கம் என்றும் ) ஐயர் ஆச்சி என்று சிலவற்றை கற்பிப்பர்கள் இறே அவர்களுடைய தெளிந்த சொற்களில் காட்டில் இவளுடைய கலங்கின சொல்லே நன்றாய் இருக்கும்-

கடல் இத்யாதி –இவ் விடத்தை பட்டர் அருளிச் செய்யா நிற்க – அல்லாத அவயவங்களினுடைய-நிரம்பாமையைச் சொல்லி வைத்து  இதனுடைய பெருமையைச் சொன்னால் விரூபமாகாதோ -என்று ஜீயர் கேட்க –இதிலும் சிறுமையே காணும் சொல்கிறது –இங்கனே சொல்லலாவது தானும்  இன்று -(பால்யத்தில்)-நாளை-இது தானும் சொல்லப் போகாது -என்று அருளிச் செய்தார் — இப்படி விசதமாக பார்க்கிறது இந்த பால்யத்தில்-இத்தனை –யௌவனம் குடி புகுந்தால் ஒறுக்கிப் பார்க்குமது ஒழிய இப்படி நன்றாகப் பாராள் –ஆகையால் இதுவும் பால்யத்துக்கு ஸூசகம் என்றபடி-

கடல் சூழ்ந்த பூமிப் பரப்பு அடங்கலும் விலையாகப் போகும் என்னும் படிக்கு-ஈடாக வாயிற்று
கண்கள் மிளிருகிறபடி –மிளிரும் –திரை மோதிக்கரையாலும்-வழிப் போக ஒண்ணாதபடி இரா நின்றது களவு கலந்து -(யௌவனம் குடிபுகுந்து -என்றபடி )நாயகனை ஒதுக்கிப் பார்க்குமது அன்றியிலே
சர்வ சாதாரணமாக ஜனனியோடு காந்தனோடு-வாசியற பார்க்கிறவள் ஆயிற்று–இவள் பரமே –
இவள் பருவத்துக்கு தகுதியோ – இது இவள் பரம் அல்ல –இணக்கத்தின் பொல்லாங்கு -(சஹவாசத்தாலே வந்தது -என்றபடி ) சாய்விலாத குறுந்தலை -(பெரியாழ்வார் -ஸஹ வாஸ தோஷத்துக்கு இப் பாசுரம் )பெருமான் மலையோ திருவேங்கடம் என்று –பர வ்யூஹாதிகளை விட்டு -திரு வேங்கடமுடையான்-பக்கலிலேயாய்-அவன் தன் அளவில் அன்றிக்கே   திருமலையே உத்தேச்யம் என்று சொல்லுகிற-பாசுரம் இவள் பருவத்துக்கு தகுதியோ –பரத்வாதிகளையும் விட்டு அர்ச்சை அளவும் சென்று மேலே திவ்ய தேசமே பிராப்தம் என்கிறாளே-அதுவே சாம்யா பத்தி கொடுக்கும் -சமன் கொள் தடம் குன்றமே-அளவிட முடியாத திருமலையின் ஸுலப்யாதிகளை அன்றோ பேசுகிறாள் 

ஆனந்த குணத்தை பேசப் புக்கவாறே வேதங்கள் நிலம் அல்ல என்று மீண்டது – இங்குத்தை சீல பிரசுர்யம்  நிலமல்ல என்கைக்கு நிலம் இல்லை இறே- அபரிச் சின்ன-வஸ்துவை -அர்ச்சாவதாரத்தில் சௌலப்யம் -பேசப் புக்கவாறே – அவை நிலம் அல்ல என்று கை வாங்கிற்று –கற்கின்ற வாசகம்
சொல்லுகிற பாசுரம் என்னுதல் –அன்றிக்கே-இவள் வாயாலே சொல்லும்படி-கேட்கைக்காகவே –
தாங்கள் இவை தன்னை கற்பியா நிற்பர்கள் இறே –-இவள் வாயனகள் திருந்தவே -என்னக் கடவது இறே –பெருமான் மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகம் இவள் பரமே -என்னுதல் –அன்றிக்கே-பெருமான் மலையான திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகம் –-ஒ  இவள் பரமே -என்னுதல் – ஒ -இது என்ன ஆச்சர்யம் –

உண்மையில் நாயகி யவ்வன பருவத்தை அடைந்து இருந்தும் அன்பு மிகுதியால் இவளது இளமையை தோற்றுகிறது–செய்ய நூலின் சிற்றாடை செப்பன் உடுக்கவும் வல்லள் அல்லள் –வாயில் பல்லும் எழுந்திலே -மயிரும் முடி கூடிற்று இல–மாயன் மா மணி வண்ணன் மேல் இவள் மாலுறுகின்றாளே –கொங்கை இன்னம் குவிந்து எழுந்திலே –போன்ற பெரியாழ்வார் பாசுரங்களும் – முள் எயிறு ஏய்ந்தில கூழை முடி கொடா- தெள்ளியள் என்பதோர் தேசு இலள் –திரு மங்கை ஆழ்வார் பாசுரமும் காண்க –கடல் மண்ணெல்லாம் விலையோ -ரத்நாகரமான கடல்களும் பூ லோகமும் மற்று எல்லா உலகங்களும் விலை போதா –பருவத்தின் மிக்க இளமையை சொன்னவாறு-நாயகனை வசப்படுத்தும் சாதனங்கள் இல்லை என்றவாறு-

முலையோ முழு முற்றும் போந்தில-யவ்வன ஸூ சகமான முலைகளானாவை மிகவும் முழுக்கத் தோற்றிற்றன இல்லை- முழு முற்றும் என்று மீமிசையாய் மிகுதியைக் காட்டுகிறதுமொய் பூம் குழல் குறிய-செறிந்த பூவை யுடைத்தான குழல்-பூக்களைச் செறியச் சொருகும் அளவு ஒழிய முடி கூடின வில்லை-கலையோ அரையில்லை–பரிவட்டமானது அறையில் பொருந்த வுடுக்கும் அளவன்று-நாவோ குழறும்-நாவானது வார்த்தையைத் திருந்தச் சொல்லாது–கடல் மண்ணெல்லாம் விலையோ வென மிளிரும் கண்–கடல் சூழ்ந்த பூமியும் மற்றும் யுள்ள லோகங்களும் இவற்றுக்குத் தகுதியோ என்னும் படி கண்கள் மிளிரா நிற்கும்–இவள் பரமே-இப்படிப் பேதைப் பருவத்தை யுடையளான இவளுக்குத்
தலைவருமதே (கை வருமோ என்றபடி –நாயகனை வசீகரித்து-முலை அழகாலே யாதல்-மயிர் முடி அழகாலே யாதல் உடை அழகாலே யாதல் உக்தி சாதுர்யத்தால் யாதல் ஸா பிப்ராயமாக கடைக் கணிக்கும் பார்வையின் வைஷம்யத்தாலே யாதலாய் இருக்க-(இந்த நான்கும் நாயகனை வசீகரிக்காது போல் கண் பார்வையாலும் அவனை வசீகரிக்காதே இவர் பார்வையில் சமத்துவம் தான் தெரியும்
வை ஷம்யம் இல்லையே )முலையும் அரும்பாதே குழலும் முடி கூடாதே பரிவட்டமும் செவ்வனே உடுக்க அறியாதே சொல்லும் மழலையாய் கண்ணும் ஒதுக்கிப் பாராமல் செவ்வே நோக்கும்படியான இந்தப் பேதைக்கு இப்படித் தலைவன் இடம் வினாவுதல் யுண்டானவாறு என் கொல் என்று அதிசயப்பட்டாள் ஆயிற்று–பெருமான் மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே-ஸ்வாமியானவனுடைய மலையோ திருவேங்கடம் என்று சந்தை சொல்வாரைப் போலே பலகாலும் அப்யஸிக்கிற பாசுரம் இவள் தலையிலே கிடப்பது ஒன்றே என்றாள் ஆயிற்று-

இத்தால்-பரிவரானவர்கள் – பகவத் பிராப்தி சாதனங்களான பக்த்யாதிகள் இன்றியே இருக்க
இவ் வாழ்வார் அவனுடைய தேசத்தைப் பிராபிக்கத் த்வரிக்கிறது என்னோ என்று பரிவாலே கலங்கி உரைத்தார்களாய் இருக்கிறது–முலையானது-போக உபகரணமான பக்திக்கு ஸூசகமாகையாலே –
அந்த பக்தியானது பிராப்தி சாதனமான பரமபக்தியாம்படி பரிணமித்தது இல்லை என்றபடி–குழல் குறிய -என்று முடி அழகில்லை என்றபடியாலே நமஸ் யந்தஸ் ச -கீதை -9-14-என்கிறபடியே தலையாலே வசீகரிக்கிற பிராணாமம் இல்லை என்றபடி–உடை அழகில்லை என்கையாலேபந்த பரிகரஸ் தஸ்ய –ஹர்யஷ்டகம் -என்னுமா போலே-யதந்தச்ச த்ருட வ்ரதா -கீதை -9-14-என்று சொல்லுகிற நிரந்தர கீர்த்தமாம் இல்லை என்றபடி–ஸததம் கீர்தயந்தோ மாம் யதந்தஸ்ச த்ருடவ்ரதா:-நமஸ்யந்தஸ்ச மாம் பக்த்யா நித்யயுக்தா உபாஸதே-கீதை-9-14-திடவிரதத்துடன்,இடைவிடாது நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டும்,முயற்சி புரிவோராகவும்,என்னைப் பக்தியால் வணங்குவோராய்,நித்திய யோகிகள் உபாசிக்கிறார்கள்.–மனது எதைப் புகழ்கிறதோ அதன் மயமாகிறது; எத்துறையில் முயல்கிறதோ அத்துறையில் மேன்மையடைகிறது; எதை விரும்பி வணங்குகிறதோ அதன் இயல்பை அடைகிறது. இத்தனை விதங்களில் பக்தர் தமது மனதை பகவானிடம் செலுத்துகிறபடியால் அவர்கள் நித்திய யோகிகள் ஆகிறார்கள். பகவானுக்கு அருகில் வீற்றிருப்பவரும் ஆகின்றார்கள்-மிளிரும் கண் -என்கையாலே-ஸ்வரூபாதி ஸமஸ்த அர்த்த அவகாஹியான ஸ்வாபாவிக ஞானம் ஒழிய ஒதுக்கிப் பார்க்கும் த்யான ரூப ஞானம் இல்லை என்றபடி–இவள் பரமே -என்கையாலே-கேவலமான ஸ்வரூப பாரதந்தர்யம் யுடையாருக்கு சாதனம் இல்லாமல் த்வரையைத் தலையிலே ஏறிட்டுக் கொள்ளுமோ என்று வ்யதிரேகம் சொன்னபடி–பெருமான் மலை -இத்யாதியாலே-அடிமை செய்ய வேண்டும் நாம் –திருவாய் -3-3-1-என்கிறபடியே அவன் எழுந்து அருளி நிற்கிற (இருக்கிற) திருமலையே போக ஸ்த்தானம் என்றதாயிற்று (கைங்கர்ய ஸ்தானம் என்றவாறு )

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம்-முலையோ முழு முற்றும் போந்தில-இவை எல்லாம் பருவம் நிரம்பினவாறே பிராப்தம்-முலைகள் சமைய வளர்ந்தவில்லை என்னும் அளவல்ல-முலை எழும் எல்லை இன்னவிடம் என்று கொண்டைக்கோல் நாட்டிற்றும் இல்லை–மொய் பூம் குழல் குறிய— செறிந்து அழகியதாய் இருந்துள்ள குழல்களை அவன் பேணி சூழி யஞ்சுற்றினால் இவள் வினை கேட்டாலே குலைத்தால் அவன் அதுக்குக் காலைப் பிடிக்கும் அளவல்ல–கலையோ அரையில்லை— தாய்மார் உடுத்தினால் அது அப்படியே இருக்குமதுக்கு அவ்வருகு தான் திரஸ்கரிக்கும் இது இன்னவிடம் என்று அறியும் விவேகம் தான் நெஞ்சில் நடையாடிற்று இல்லை–நாவோ குழறும்-சொல் தெளிவு யுண்டாய்ப் பொருள் யுடைத்தான சப்தங்களைச் சொல்லி அவ்யக்தமானவற்றை அவள் பக்கலிலே கேட்டு ஐயர் ஆய்ச்சி என்று சிலவற்றைக் கற்ப்பிப்பார்கள் இறே அவர்கள் தெளிந்த சொல் தான் குற்றமாம் படி இவளுடைய கலங்கின சொல்லே நன்றாய் இருக்கும் இறே–கடல் மண்ணெல்லாம் விலையோ வென மிளிரும் கண்-இத்தை பட்டர் அருளிச் செய்யா நிற்க எல்லா அவயவங்களுடைய நிரம்பாமையைச் சொல்லி இவற்றினுடைய பெருமையைச் சொன்னால் விரூபமாய் இராதோ என்று-இவள் பரமே பெருமான் மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்–வியாக்யானம் ––முலையோ முழு முற்றும் போந்தில-முழு முற்றும்
எவ்வளவும் முலையைச் சொல்லுவேனோ எவ்வளவும் உத் பவித்தது இல்லை–மொய் பூம் குழல் குறிய
செறிந்த குழலுக்கு வாரிப்பூ முடிக்க உரியள்ன் அல்லள்-கலையோ அரையில்லை-கலை -பரிவட்டம்
அரையில் பரிவட்டம் நிற்கும்படி உடுக்க அறியாள்-நாவோ குழறும்-நாக்கால் குழறு மதான மழலைச் சொல்லே–கடல் மண்ணெல்லாம் விலையோ வென மிளிரும் கண்-இவள் முழித்தலுக்குக் கடல்கள் எல்லாம் சூழ்ந்த மண் விலையாமோ-என்னும்படியான கண் பார்வையள்–இவள் பரமே பெருமான் மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே ––என்னை யாளும் யவன் மலையோ திருவேங்கடமே என்பதாய் அப்போது சொல்லும் வாக்யமாவிது–இவள் பரமே-இவளுக்குத் தக்கதோ-இத்தால் அவளுக்கு அவனில் அதி ப்ரணதையும் பிரிவில் அத்யாவசன்னதையும் ஒவ்த் பத்திகம் என்றதாயிற்று-இதுக்கு வல் வினையேன் என்று நொந்து கொள்வான் என் என்று இவள் தாயைத் தேற்றுகிறாள் –

ஸ்வாபதேசம் –
ஆழ்வாருடைய ஆற்றாமையைக் கண்ட ஞானிகள் –எம்பெருமானை அடைய பக்தி முதலியன நிறையாமல் இருக்க -த்வரிப்பது ஏனோ –-முலை -பக்தி முதிர்ந்து பேற்றுக்கு சாதனமான பரம பக்தி அடைய வில்லை-மொய் பூம் குழல் குறிய-தலையால வசப்படுத்தும் பிரணாமம் பூர்ணமாகத் தோன்ற வில்லை-கலையோ அரையில்லை-மடிதற்று தான் முந்துறும் -திருக் குறள்-அரையில் ஆடையை இறுக உடுத்திக் கொண்டு முந்துற்று-கிளம்பும் முயற்சியில் இல்லை -முயற்சியை அதன் காரணத்தால் கூறின படி-நாவோ குழறும் -இடை விடாத பகவத் திரு நாம சங்கீர்த்தனம் இல்லை-கடல் மண்ணெல்லாம்-விலையோ வென மிளிரும் கண் -ஞானத்தின் சிறப்பு -மிளிரும் -த்யானம் -அவ்வறிவை-ஓர் இடத்தில் நிலை நிறுத்தி -த்யான ரூபமான ஞானம் இல்லை-இவள் பரமே-பரதந்த்ரராய் இருப்பார்க்கு -சாதனம் ஒன்றுமே இன்றி இருக்க இத்தனை விரைவு த்வரை கூடுமோ –-பெருமான்-மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே – வெருவதாள் வாய் வெருவி வேங்கடமே வேங்கடமே என்கின்றாளால்
என்கிறபடியே திருமலையையே வாய் புலத்தும் – ஆழ்வார் திருவவதரித்தது முதலே எம்பெருமானால் அல்லது தரியாமையைச் சொன்னவாறு –

ஸ்வாபதேசம்-பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ்நிக்த-என்றும் – அறியாக் காலத்துள்ளே -என்றும் -சொல்லுகிறபடியே-இவருக்கு பகவத் விஷயத்தில் உண்டான ப்ராவண்யம் சத்தா பிரயுக்தமான படி -சொல்லுகிறது-முலையோ முழு முற்றும் -மீ மிசை யாலே ஒன்றும் இல்லை என்கிறது
இவள் இப்படி கூப்பிடுவது பால்யம் தொடங்கி உள்ளதாகையால் இது ஸ்வத ஸித்தம்-என்கிறார் —

தாத்பர்யம்–கீழ்ப் பாட்டில் யவ்வன அவஸ்தை ப்ராப்தமான இவள் சர்வேஸ்வரனையே கூப்பிடா நின்றாள்-இது பால்யாத் ப்ரவ்ருத்தி அன்றோ – ஸ்வதஸ் சித்தம்-நாயகன் விரும்பும் ஸ்தனங்கள் வளர வில்லை-அரையில் களையும் நிற்க வில்லை-நாவால் குழறுகிறாள்-நாயகனையும் மாதா பிதாவையும் ஒன்றாகவே வெட்கம் இல்லாமல் பார்க்கிறாள்-இவ்வளவு சிறிய பருவத்திலேயே திருவேங்கடமே என்றே அப்யஸியா நிற்கிறாள்-இத்தால் கீழே சொன்ன சர்வேஸ்வரத்வமும் விரோதி நிரசனத்வமும் – ஓங்கு முந்நீர் வளப் பெரு நாடன் என்றும் மது சூதனன் என்றதும் ஆச்சர்யம் இல்லையே -என்கிறாள்

9-8-அறுக்கும் வினையாயின ஆகத்து அவனைநிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு-ப்ரவேஸம்-

திருவடி சென்று பிராட்டியைத் திருவடி தொழுது-மீண்ட பின்னர் பெருமாளை அடைவதற்கு முன்பு பிராட்டிக்கு பிறந்த
எண்ணங்கள் போலே
த்வம் சமேஷ்யசி ராமேண சசாங்கேந இவ ரோஹிணீ-ஷிப்ரம் ச தேவி சோகச்ய பராம் யாச்யசி மைதிலி -சுந்தர -39-45-
சந்த்ரனோடு ரோஹிணி சேர்வதைப் போலே நீ ராமபிரானோடு சேர்வாய்
அதி விரைவில் சோகத்தின் உடைய முடிவை அடைவாய் –
திருவடி வார்த்தையை எப்பொழுதும் எண்ணிக் கொண்டே இருந்த சீதைப் பிராட்டி போலே
மேல் திருவாய் மொழியில் விட்ட தூதுவர்கள்
அத்தலைப் பட்டு அவனைக் கொண்டு வருவதற்கு முன்பே-நடுவில் இவர்க்குப் பிறந்த
எண்ணங்களைச் சொல்லுகிறது இத் திருவாய் மொழியில் –

இப்படி தம்முடைய துயரத்தை அறிவிக்கச் செய்தேயும்-அப்போதே வரக் காணாமையாலே துயர் உற்றவர்
தூது விடுகையாலும்
அவன் குணங்களை அனுசந்திப்பதாலும்
மனத்தின் தெளிவினாலும்
அவன் வந்து நம்மை அங்கீ கரித்து-அமர்ந்த நிலமான திரு நாவாயிலே கொடு போகை நிச்சயம்
என்று அறுதி இட்டு-
க்ரமத்தில் போக பற்றாமையாலே பதறி-அங்கே புக வல்லேனே-புகும் நாள் என்றோ
அங்கே புக்கு என் கண்ணாரக் கண்டு அடிமை செய்ய வல்லேனே-குறுக்கும் வகை உண்டு கொலோ –
என்று இப்படி பல வகையான எண்ணங்களை எண்ணுகிறார் –

உபாயமும் உபேயமும் இரண்டும் ஈஸ்வரனே -என்று அறுதி-இட்டார்க்கு
பிராப்யத்திலே ருசி கண் அழிவு அற்றால்-
விளம்பத்துக்கு காரணம் இல்லாமையால் –பேறு சித்திக்கும் அளவும் எண்ணம் செல்லா நிற்கும் அன்றோ-

இவ் எண்ணம் தான் இவனுக்கு தவிரதாதுமாய்-அது தான் இனியதுமாய்-
இவனுடைய ஸ்வரூபத்தோடு சேர்ந்து இருப்பதுமான-ஓன்று அன்றோ –
பெரிய முதலியார் -ஆளவந்தார் –பேற்றினை பெறுவதில் உள்ள விரைவாலே-
எப்பொழுதும் இத் திருவாய் மொழியினைச் சொல்லிக் கொண்டே இருப்பார் –ஆளவந்தார் மிகவும் உகந்த திருவாய்மொழி –
ஆகையால் இத் திருவாய்மொழி யினை-பெரிய முதலியார் திருமொழி -என்று ஆயிற்றுச் சொல்லுவது –
அன்றிக்கே
விட்ட தூதுவர்கள் தாழ்ந்தார்கள் என்று-தாமே அவன் எழுந்து அருளிய தேசத்துக்கு
ஏறப் போக ஒருப்படுகிறார் –என்பாரும் உளர் –

மூன்று அடுத்து அடுத்து வரும் திருவாய் மொழிகள் மலையாள திவ்ய தேசங்களுக்கு –
தாயாருக்கு தனி சந்நிதி -திரு நாவாய் முகுந்தன் -ஸ்ரீ விஷ்ணு போதம் –
வைகுந்தன் என்னும் தோனி பெறாமல் உழல்கின்றேன் -விபு -இவன் -அதனால் -இந்த தோனி -இக்கரைக்கு அக்கரைக்குமாக விபுவாக –
லீலா விபூதியில் இருந்து நித்ய விபூதி வரை பரந்து இருக்க – -நாமே -அனுபவித்து -விஷ்ணு போதம் -நாவாய் நாராயணன் -நாவாய் முகுந்தன்-
நவ யோகி ஸ்தலம் -எட்டு பேர் முத்தி ஒன்பதாவது யோகி வேண்டி சேவை நவ யோகி மருவி நாவாய்
திருவடி சேவை இல்லை -கால் வாசி உள்ளே -வற்கலை திருக்கையால் ஆசமனம்
இங்கு வேத விமானம் செங்கமல சரஸ் -பாரத புழா நதிக் கரையில்
பிண்ட பிரதானம் செய்வது இங்கே பிரசித்தம் -கடத்த -துன்பக் கடன் பித்ரு கடன் தீர்க்கவும் இந்த ஸ்தலம்
மு மோக்ஷம் கு பூமி த ததாதி முகுந்தன் –பிரிந்த துன்பக் கடல் கடத்தும் விஷ்ணு போத ஆன்ரு ஸம்ஸயம் நாவாயிலே நிழல் எழும் -சூர்ணிகை -180-

எட்டாம் திருவாய் மொழியில் -இப்படி கடக முகத்தால் பிராபிக்க அபி நிவேசித்தவர் -ப்ராப்ய த்வர அதிசயத்தாலே –
அவன் பரிபூர்ணனாய்க் கொண்டு திரு நாவாயிலே எழுந்து அருளி இருக்கிற படியை பிரகாசிப்பித்துக் கொண்டு அவனுடைய
அனுபவ விரோதி நிராசக தேச வர்த்தித்வத்தையும்
அனுபாவ்யத்வ வைபவத்தையும்
அசாதாரண ஸம்பந்தத்தையும்
நித்ய கைங்கர்ய விஷயத்வத்தையும்
பத்னீ பரிஜன ஸ்தாந அநு பூர்த்தியையும்
ஆஸ்ரித பவ்யதையும்
சேஷித்வ ரக்ஷகத்வ ஆகார பூர்ணதையையும்
அனுபவ ஞான பிரதத்வத்தையும்
ஸூ ர வஸ்ம ஸர்வேஸ்வரத்வத்தையும்
அதி ரமணீய விக்ரஹ யோகத்தையும்
அனுசந்தித்து -ஏவம் பிரகாரனான சர்வேஸ்வரன் எழுந்து அருளி இருக்கிற தேசத்தைக்கிட்டி அனுபவிப்பது
ஒரு நாளே என்று பஹு முகமாக மநோ ரதிக்கிறார்-

அறுக்கும் வினையாயின ஆகத்து அவனை
நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு
வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
குறுக்கும் வகை உண்டு கொலோ கொடியேற்கே –9-8-1-

ஆஸ்ரித அனுபவ விரோதி நிரசன நிரதிசய போக்யம் -குறுகும் வகை உண்டோ -நாம் கிட்டுவோமோ-திரு நாவாயைக் குறுகைக்கு-எனக்கு உபாயம் உண்டோ-என்கிறார்-

அறுக்கும் வினையாயின–வினையாயின -அறுக்கும் – வினை என்ற பேர் பெற்றன அனைத்தையும் போக்கும் -என்றது-ருசி விரோதி -பிரயோஜநாந்தரம் -தேவதாந்தரம் போன்றவை-உபாய விரோதி -உபாயாந்தரங்கள்-பேற்றினைப் பெரும் இடத்தில் வரும் விரோதிகள் -அவித்யா கர்ம வாஸநா ருசிகள் -பாகவத அபசாரம் -ஸ்வயம் போக்யத்வ பேறு போல்வன-நின்ற நின்ற நிலைகள் தோறும் உண்டாய் இருக்குமன்றோ விரோதிகள் –
இந்த சரீரத்தோடு முடியும் அளவு அன்றிக்கே-அனுபவிக்கப் படுமவற்றின் எஞ்சியவைகளாய் நின்று- அவ்வருகே போம்படி விளம்பிக்க கடவனாய்-இருப்பவன வற்றைத் தெரிவித்த படி –

அந்நலம் உடை ஒருவனை நணுகினம் நாமேநாளேல் அறியேன் என்பார்-மேல் இப்பதிகத்திலே

நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு-ஒருமைப் பட்ட மநோ ரதம் உடையவர்க்கு -விருப்பமே போதும் – உள்ளத்தில் விட்டுப் பிரியாமல் உள்ளான் -உடன் இருந்து அறிவான் –
உள்ளத்தே உறையும் மால் -ஸர்வஸ்ய -பரம யோகிகள் மட்டும் இல்லை -யார் உள்ளத்தே விசேஷணம் இல்லையே –
உள்ளுவான் உணர்வு ஒன்று இல்லா -இருப்பதை அறியாமல் – வெள்கிப் போய் -விலவறச் சிரித்திட்டேனே –
நினைக்க சிந்தை வேணுமே -உளன் கண்டாய் -உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் நல் நெஞ்சே –
யந்த்ரா ரூடானே மாயையா -பிரகிருதி கார்யமான சரீரத்தில் -உத்தமன் என்று உளன் கண்டாய் -கர்மாதீனமாக அன்றோ இது-கங்கைக்குள் இருக்கும் மீன் -இருக்கும் ஞானம் வேண்டுமே
மனு -கங்கை -ஸ்ரீ பாத தீர்த்தம் -நம்பிக்கை இல்லாதவர் தீர்த்தம் ஆட வேண்டாம் -நம்பிக்கை உள்ளாறும் தீர்த்தம் ஆட வேண்டாம் -குரு ஷேத்ரமும் இப்படியே
தனக்கு அடிமை பட்டது தான் அறியேனே லும் மனத்தடைய வைப்பதாம் மால் —அனைத்து உள்ளத்திலும் இருந்தாலும் அவர் இருக்கிறார் என்ற உணர்வே வேண்டுவது

குறுக்கும் வகை உண்டு கொலோ கொடியேற்கே–குறுக்கும் -பிறந்த வீட்டு பாஷை மறக்காமல் அருளிச் செய்கிறார்
அமரர் கோன் அர்ச்சிக்கின்று -மலையாள வாசனை –எம்பெருமானார் திருவடி தொழ எழுந்து அருளா நிற்க –
திரு நாவாய் எத்தனை இடம்போரும் -என்று-எதிரே வருகிறார் சிலரை கேட்டருள-குறுக்கும் -என்றார்களாக-அதனைக் கேட்டு
இத்திசைச் சொல்லாலே அருளிச் செய்வதே ஆழ்வார் -என்று-மிகவும் ஈடுபட்டு அருளினார் –

ஆகத்து அவனை நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு –மனத்திலே அவனை 1-நிறுத்த வேண்டும் என்னும் 2-உறுதியிலே-3-ஒருமைப் பட்ட-4-எண்ணத்தை உடையார்க்கு –
நான்கு விசேஷணங்கள்-மநோ ரதம் மட்டுமே –தத் அபி சந்தி விரோதமாத்ராத் கூரத்தாழ்வான்-ஒருமைப்பாட்டை -அத்யாவசியம் -இருதயத்தில் நிறுத்த –

கஜேந்திரன் பூ பறிக்க -நாச்சியார் முன்பே பறிக்க -இடது கையால் அபய பிரதானம் -இரண்டு கையால் அனுக்ரஹித்தால் நித்ய விபூதி ஆகுமே -அதனால் வலது திருக்கை
திருவடி காட்ட -கஜேந்த்ரனுக்கு வீட்டுக் கொடுத்த -ஸ்தல புராணம் -பிராட்டி /ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் / நவ யோகிகளுக்கும் பிரத்யக்ஷம் –

————–

கொடி ஏர் இடைக் கோகன கத்தவள் கேள்வன்
வடி வேல் தடம் கண் மடப்பின்னை மணாளன்
நெடியான் உறை சோலைகள் சூழ் திருநாவாய்
அடியேன் அணுகப் பெரும் நாள் எவை கொலோ–9-8-2–

வடி வேல் தடம் கண் மடப்பின்னை மணாளன் –கூரிய வேல் போன்று-ஓர் ஆளும் ஒரு நோக்கும் நேராய் -நோக்காலே அகப்படுத்தி கொள்பவள் –
அனுபவிக்கின்ற்றவன் அளவு அல்லாத இனிமையை உடைய-கண்களை உடையவளாய்-ஆத்தும குணங்கள் நிறைந்தவளுமான
நப்பின்னை பிராட்டி உடைய செவ்வி நுகர்வதற்கு இட்டுப் பிறந்தவன் ஆயிற்று –வடி -மா வடுவாய் பிளவு போலேயும்-என்றுமாம் –

நெடியான்-இப்படிப் பட்ட தேவிமார் முதலிய பரிகரங்களால்-எல்லை காண ஒண்ணாதவன் –

அடியேன்- பவாமஸ்து சஹ வைதேஹயா கிரிசாநுஷூ ரம்ச்யதே அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ச்வபதஸ்ஸ தே-அயோத்யா -31-25–ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகள் ஒருத்தியுமே அன்றோ அங்கு இங்கு அதை விட ஏற்றம் உண்டே –

———

எவை கொல் அணுகப் பெரும் நாள் என்று எப்போதும்
கவை யில் மனம் இன்றி கண்ணீர்கள் கலுழ்வன்
நவை இல் திரு நாரணன் சேர் திருநாவாய்
அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே–9-8-3-

நவை இல் திரு நாரணன் சேர் திருநாவாய் அவையுள்–நிருபாதிக பந்து-அசாதாரண சம்பந்தம் -நாராயணன் -எளிமைக்கு ஊற்றான பிராட்டியோடு கூடத்-திரு நாவாயிலே வந்து-ஸூலபனானவன்–வர்த்திக்கும் ஓலக்கத்தில் புகும் நாள் என்று-என்று அறிகின்றிலேன் –என்கிறார் –அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -2-3-10-என்று ஆசைப் பட்ட நான்-அத்திரளிலே சென்று கூடப் பெரும் நாள் என்று-என்று அறிகிலேன் –

கவை யில் மனம் இன்றி–ஏகாக்ர சித்தனாய்க் கொண்டு-கவை -கார்யம் -வேறு விஷயம் –-பரந்து திரி தரினும் –மறந்தும் பிரித்து ஒன்று அறிய மாட்டா -என் ஒரு நா வாய் -வாழ்த்தாது நாவோ வாயோ பாடாது -பிள்ளை பெருமாள் ஐயங்கார்

———–

நாளேல் அறியேன் எனக்கு உள்ளன நானும்
மீளா அடிமைப் பணி செய்யப் புகுந்தேன்
நீளார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வாளேய் தடம் கண் மடப்பின்னை மணாளா –9-8-4-

நீளார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய் – ஓங்கிப் பரப்பு மாறப் பூத்த-சோலைகளை உடைத்தான தேசம் -என்றது
அடிமை செய்கைக்கு பூக்கள் முதலான சாதனங்கள்-குறைவற்ற தேசம் -என்றபடி –
அன்றிக்கே –
நப்பின்னை பிராட்டியும் தானுமாக மலர்களைப் பறித்து குவிக்கலாம் தேசம் -என்பதனைத் தெரிவித்தபடி -என்னுதல்-
பிராட்டியும் கஜேந்திர ஆழ்வான் போலே தாமும் சேர்த்துக் கொள்கிறார் –

மடப்பின்னை மணாளா –அழகே அன்றிக்கே-ஆத்தும குணங்களாலும் துவக்க வல்லவளுக்கு-கணவன் ஆனவனே-
வேறு தேசத்துக்கு சென்று இருந்த குழந்தை ஊர்-அணித்தவாறே-தாய்மாரை பலகால் நினைக்குமாறு போன்று-அடையத் தக்க தெளி விசும்பு அணித்தானவாறே-
திரளவும் தனித் தனியும் பிராட்டிமாரை-அனுசந்திக்கிறார் பாட்டு தோறும் –

————

மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கு எல்லாம்
விண்ணாளன் விரும்பி உறையும் திருநாவாய்
கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே–9-8-5-

மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்–புருஷகாரம் ஆவாரும் பொறைக்கு உவாத்து ஆவாரும்-உபாத்தியாயர் – உளராய் இருக்க இழக்க வேண்டுமோ -என்கிறார் –

கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கு எல்லாம்–எல்லார்க்கும் நிர்வாஹகன் ஆனவன்-இதனால் அவர்கள் உடைய படுக்கைப் பற்று -சீதனம் –நோக்குகிற படியைத் தெரிவித்த படி

விண்ணாளன் –படுக்கை தான் இருக்கிறபடி -என்றது-பிராட்டிமாரும் தானும் -தனக்குத் தகுதியான பரமபதத்தில்-திவ்யமான கட்டிலிலே இருந்து-நித்ய ஸூரிகளை நிர்வஹிக்கிறவன் -என்கிறபடி –

பத்னி – பரிஜன -ஸ்தாநாதி– பரிபூர்ணன் –விரும்பி உறையும் திருநாவாய் –உபய விபூதி நாதன்-பெறாப் பேறாக விரும்பி வர்த்திக்கிற தேசம்–திருநாவாயை கண்ணின் விடாய் தீரக் கண்டு-அனுபவிப்பது என்று-என்கிறார்-

கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே –காண்பது நிச்சயம் -என்னும் நம்பிக்கையாலே-களிக்கை அன்றியே–ஏவகாரத்தாலே –கண்டே களிப்பது என்றோ

———-

கண்டே களிக்கின்றது இங்கு என்று கொல் கண்கள்
தொண்டே உனக்காய் ஒழிந்தேன் துரிசு இன்றி
வண்டு ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய்
கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே–9-8-6-

திருநாவாய் கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே–ஊரை அன்றிக்கே-ஊரில் நின்று அருளின–ஆஸ்ரித ஸூலபன் -உன்னைக் கண்டு களிப்பது என்றோ-என்கிறார்

திருநாவாய் கொண்டே உறைகின்ற–நமக்கும் நம்மை உகந்தாருக்கும் நினைத்த படி செய்து-அனுபவிக்கலாம் தேசம் -என்று
திரு உள்ளத்திலே ஆதரித்துக் கொண்டு வசிக்கிற தேசம் ஆயிற்று – -உகந்து அருளினை திவ்ய தேசம் அன்றோ-என் கோ கோவலர் கோ -எம் கோவலர் கோவே –கிருஷ்ணனாய் வந்து அவதரித்து-ஆயர்கட்கு சுலபன் ஆனால் போலே-திரு நாவாயிலே வந்து -எனக்கு சுலபன் ஆனவனே –

கண்டே களிக்கின்றது இங்கு என்று கொல் கண்கள்-கரணங்கள் தனித் தனியே விரும்பும் நிலை அன்றோ ஆழ்வாருக்கு –கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே-கீழ் தமக்கு இங்கு அசேதனமான கண்களுக்கு

———–

கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய்
தேவா சுரம் செற்றவனே திருமாலே
நாவாய் உறைகின்ற என் நாரண நம்பீ
ஆவா அடியான் இவன் என்று அருளாயே–9-8-7-

அடியார்களுக்காக திரு நாவாயிலே நித்ய வாசம் செய்கிற தேவரீர்-வேறு ஒரு கதியும் இல்லாதவன் இவன் -என்று
என் பக்கலிலே கிருபை செய்து அருள வேண்டும் –என்கிறார் –மதீயையா கிருபையா -கேவலம் கிருபையையா –அருளால் -மட்டுமே பெறுவோம் –

சேஷித்வ-கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய் ரக்ஷகத்வ-தேவா சுரம் செற்றவனே திருமாலே பிராப்யத்வ –ருமாலேநாவாய் உறைகின்ற என் நாரண நம்பீ-திரு மந்த்ரார்த்தம் -திருமாலே திரு -இருந்தும் அடியேன் இழப்பதே -ஆகார பூர்த்தியை உடைய -ஆகார த்ரய சம்பந்தனாம் -அரவிந்த நிவாஸினி கூடி இருப்பதால் -வந்தே வரத வல்லபம் –

நாரண நம்பீ-ஸமஸ்த குண விபூதி விசிஷ்டத்தால் வந்த நாராயணன் – -நாராயணத்தவத்தால் வந்த பூர்ணம் —என் நாரண நம்பீ-அடியார்களை பாதுகாப்பதே நோக்காக-எல்ல பொருள்களிலும் அந்தராமியாய் இருப்பவன்-அதற்கு உறுப்பாக அடியார்கள் இடத்தில்-அன்பு உள்ளவனாய்-அவர்களுக்கு உறுப்பாகப் பெற்றோம் என்றதனாலே-பரி பூரணன் ஆனவனே -என்பார் -நம்பீ -என்கிறார் – பஹு வரீஹீ சமாசம் -அந்தர்யாமித்வம் -வாத்சல்யம் ஸுலப்யம் இவற்றால் பூர்ணன்-

ஆவா அடியான் இவன் என்று அருளாயே-ஆஹா ஆஹா என்று ஆராய்ந்து -சேஷ பூதன் என்று -ஆகார த்ரய விசிஷ்ட சம்பந்தம் பார்த்து இரங்கி அருள வேணும்-அவன் அருளுகைக்கும்-இவன் அருள் கொள்கைக்கும்-சம்பந்தம் சொல்லுகிறது-அடியான்

————-

அருளாது ஒழிவாய் அருள் செய்து அடியேனைப்
பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்
மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும்
தெருளே தரு தென் திரு நாவாய் என் தேவே –9-8-8-

மேல் பாசுரத்திலே அருளாய் -என்றார் அப்போதே விரும்பியதை பெறாமையாலே-அருளவுமாம்-தவிரவுமாம்
அறிவின்மை சிறிதும் இல்லாதபடி உன்னை-என் நெஞ்சிலே இருத்தும்படி-தெளிவைத் தர வேண்டும் –என்கிறார் –

அடியேனைப் பொருளாக்கி -உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்-அறிவில்லாத பொருளைப் போன்று இருக்கிற என்னை
அசந்நேவ ச பவதி அசத் ப்ரஹ்மேதி வேத சேத்-அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத சந்தமேனம் ததோவிது-தைத்ரியம்-என்கிறபடியே
ஒரு பொருள் ஆகும்படி செய்து-எல்லை இல்லாத இனிமையை உடைய-உன் திருவடிகளின் கீழே-வைத்துக் கொள்ளிலும் கொள்
பொருள் ஆனாரை வைத்துக் கொள்ளும் இடம்-உன் பொன்னடிக் கீழ் போலே காணும் –-பொருள் ஆனாரை -பொருளும் செல்வமும் –

மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும் தெருளே தரு-தென் திரு நாவாய் என் தேவே–அடியில் மயர்வற மதி நலம் அருளின படியே-அஞ்ஞான கந்தமே இல்லாதபடி-
உன்னை என் மனத்தினில் எப்பொழுதும் வைத்துக் கொள்ளும் படி தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -2-9-4-என்கிற தெளிவினைத் தந்து அருள வேண்டும் –
தென் திரு நாவாய் என் தேவே -தெருளே தரு -என்று முடிக்க –அருளாது ஒழிவாய்-அருள் செய்து-அடியேனைப் பொருள் ஆக்கி -உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்- உன் திரு உள்ளம் ஆன படி செய் -என்று பிள்ளான் பணிப்பர்-

———

தேவர் முனிவருக்கு என்றும் காண்டற்கு அரியன்
மூவர் முதல்வன் ஒரு மூ உலகு ஆளி
தேவன் விரும்பி உறையும் திரு நாவாய்
யாவர் அணுகப் பெறுவார் இனி அந்தோ –9-8-9-

இனி அந்தோ-இப்படி சொன்ன இடத்திலும்-ஒரு விசேஷ கடாஷம் செய்யாமையாலே-நான் இவ் வாசையோடு முடியா நின்றேன்
நான் விரும்பிய பொருளைப் பெற புகுகிற-யாவர் அணுகப் பெறுவார் –மிக்க புண்ணியத்தை உடையவர்கள் யாரோ –என்கிறார்

எனக்கு உள்ள ஆற்றாமை அபி நிவேசம் அவனுக்கு உண்டாக பெறாது ஒழிவதே -என்பார் அந்தோ –என்கிறார் –

மூவர் முதல்வன் ஒரு மூ உலகு ஆளி தேவன் விரும்பி உறையும் திரு நாவாய் – இப்படி எல்லா பொருட்கட்கும் நிர்வாஹகன் ஆனவன்
தனக்கு என ஒரு குடி இருப்பு இல்லாதவன் ஒருவன் குடி இருப்பு பெற்றால் போலே-அடியார்களைப் பாது காப்பதற்கு பாங்கான தேசம் என்று மிகவும் விரும்பி வர்த்திக்கிற தேசத்தை –

————

அந்தோ அணுகப் பெரு நாள் என்று எப்போதும்
சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன்
கொந்தார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வந்தே உறைகின்ற எம்மா மணி வண்ணா–9-8-10-

வந்தே உறைகின்ற எம்மா மணி வண்ணா–பரமபதாதிகளை விட்டு -திருப்  பாற் கடல் -சூர்ய மண்டலம் -விட்டு -நீல ரத்னம் போலே -விட ஒண்ணாத ரமணீய விக்ரகம் கொண்டு-நித்ய வாசம் செய்யும் உன்னைக் காணப் பெறாமையாலே-நெஞ்சு அழிந்து கூப்பிடா நின்றேன்-என்கிறார்-அணுக பெருநாள் எவை கொலோ அந்தோ என்று சொல்லப் பலம் இல்லாமல் –அந்தோ

என்று எப்போதும் –ஒருகால் சொல்லப் புக்கு இளைத்தால் விடுகை அன்றிக்கே-எல்லா காலத்திலும் –சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன் – மனம் கலங்கி-துயர் உற்ற பிள்ளைகள் தாய் தந்தையர் கல் பெயரைச் சொல்லிக் கூப்பிடுமா போலே –திருமால் என்று அழைப்பன் –

————-

வண்ணம் மணிமாடம் நல் நாவாய் உள்ளானைத்
திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன்
பண்ணார் தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மண் ஆண்டு மணம் கமழ்வர் மல்லிகையே--9-8-11-

இத் திருவாய் மொழி கற்றார்—உபய விபூதியில் உண்டான ஆதரணீயத்தையை -பலமாக-இவ் உலகம் அவ் உலகம் என்னும் இரண்டு உலகங்களிலும்-எல்லா இன்பங்களையும் அனுப்பிக்கப் பெறுவர்-என்கிறார்

மண் ஆண்டு–இவ் உலகில் ஸ்ரீ வைஷ்ண ஸ்ரீ யால் நிறைந்தவராய் –மணம் கமழ்வர் மல்லிகையே–மல்லிகை மணம் கமழ்வர் –-மல்லிகையை கூறியது எல்லா வாசனைக்கும் உப லஷணமாய்-
சர்வ கந்த -என்கிற விஷயத்தோடு ஒத்து இருத்தலைப் பெறுவார்- இவருடைய எண்ணம்-அவர்களுடைய பேற்றுக்கு உடலாகும் –

மல்லிகை போலே பரிசுத்த -அழுக்கு இல்லாமல் -அனுபவிக்க பரிமளம் -கொண்டு -கமழ்தல்–யசஸ் கீர்த்தி உடையவர் ஆவார்

நாவாயில் உளானை நறையூரில் கண்டேனே -ஆழ்வார் மநோ ரதம் திருமங்கை ஆழ்வார் பெற்றார் -தீர்த்தம் சடகோபர் பிரசாதம் பெற்று உஜ்ஜிவ்விப்போம் –

திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன்–சர்வேஸ்வரனுக்கு செல்வம் ஆழ்வார் ஆகையாலே- செல்வம் கிடக்கிற இடத்தில் அன்றோ மதிள் இடுதல் -என்னுதல் –ஆழ்வார் பரியவே அப்பரிவு தான் அவ் ஊருக்கு காவல் -என்னுதல்-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -59-அளப்பரும் தன்மை அவ் ஊழி அம் கங்குல் –முந்நீர் ஞாலம் -3-2-

February 28, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

இரவு நீடுதற்கு ஆற்றாத தலைவியைப் பற்றிச் செவிலி இரங்குதல் – ஊழி காலம் போல் கங்குல் அளக்க முடியாத படி நீடிய –அம் தண் துழாய்க்கு உளப் பெரும் காதலின் -ஆழ்வாரது பக்தியைக் காட்டிலும் – அதனில் பெரிய அவா-தத்வ த்ரயத்தையும் விஞ்சிய காதலையும் விஞ்சி நீண்ட போனதே
அஞ்சுடர் ஆதித்யனும் உதிக்க மறுக்கிறார்-பெண் பிறந்தார் எய்யும் பெரும் துக்கம் காண மாட்டாமை
என்னுடைய பெண் -செவிலித் தாயார் பாசுரம் -மத் பாபமே நிமித்தம்
-முறுவல் செய்யவாய் தட முலை -பெண்ணின்-வைலக்ஷண்யம் போக்யதை —-மந்தஸ்மிதம் அதரம் -அபரிச்சேத்ய பக்தி –
அவ்வூழி -கல்ப காலம் விட அழகிய -குரூரமான -விபரீத லக்ஷணை யில் தண் அம் வெறுப்பில்
நீண்டு இருப்பதை என் மகள் சொல்கிறாள் என்று செவிலித்தாய் சொல்லும் பாசுரம்
ஓங்கு முந்நீர் வளப்பெறும் நாடன் -மது ஸூதனன் -இங்கும் முந்நீர் பத பிரயோகம்-முந்நீர் ஞாலம் படைத்த என் முகில் வண்ணனே – -திருவாய் மொழி இதன் விவரணம்எந்நாள் நான் இனி வந்து கூடுவேன்-பாவியேன் அலமருகின்றேன் -இங்கு வல் வினையேன்-அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்கின்றேன் -அதனால் நீண்ட இரவு -இங்கு

அவதாரிகை
எட்டா நிலத்திலே ஸ்ரீ வைகுண்டத்திலே ஓலக்கம் கொடுத்து இருக்கை அன்றிக்கே – அவதரித்து இங்கே வந்து -ஸூலபனானான் என்றவாறே – தாம் பெற்றால் போலே இருக்க ஹ்ருஷ்டரானார் –அங்கே இருந்து இழக்கை அன்றிக்கே –(ஸ்ரீ வைகுண்டத்தில் அவன் இருக்க நான் இங்கே இருந்து இழப்பது பொறுக்கலாம் ) இங்கே வந்து கிட்டச் செய்தே – பேரா விட்டவாறே அவசன்னரானார் – அவ்வஸாதம் ஒரு பிராட்டி தசையை விளைவித்து —கலந்து பிரிந்து பிரிவாற்றாத் தலைமகள்- சம்பந்தம் உண்டாய் இருக்க –(ஓங்கு முந்நீர்வளப் பெரு நாடன்-ஸ்வாமி -சம்பந்தம் உண்டே ) போக யோக்யமான காலத்தில் -வந்து உதவக் காணாமையாலே- இருள் பாதகமாகா நின்றது என்று சொல்லா நின்றாள் -என்று அவள் பாசுரத்தை திருத் தாயார்-சொல்லுகிறாளாய்   இருக்கிறது –இரவு நீடுதற்கு ஆறாத தலைவியைப் பற்றி செவிலி இரங்குதல்-

இப்படி சக்தனான ஸர்வேஸ்வரன் விளம்பிக்கையாலே இவருக்குப் பிறந்த ஆர்த்தியைக் கண்ட
ஸூஹ்ருத்துக்கள் நொந்து யுரைத்த பாசுரத்தை இரவு நீடுதலுக்கு ஆற்றாளாய்த் தலை மகள் ஈடுபாடு கண்டு பாங்கி இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு–அவதாரிகை–எட்டா நிலத்திலே ஸ்ரீ வைகுண்டத்திலே ஓலக்கம் கொடுத்து இருக்கை அன்றிக்கே அவதரித்து ஸூலபனானான் -என்றவாறே நாம் பெற்றால் போலே இருக்க ஹ்ருஷ்டரானார் -அங்கே இருந்து இழக்கை யன்றிக்கே–இங்கே வந்து கிட்டச் செய்தே பெறா விட்டவாறே அவசன்னரானார்–அவ்வவஸாதம் ஒரு பிராட்டி தசையை விளைவித்தது கலந்து பிரிந்து பிரிவாற்றாத தலைமகள் ஸம்பந்தம் யுண்டாய் இருக்க போக யோக்யமான இருளிலே வந்து உதவக் காணாமையாலே இருள் பாதகமாக நின்றது என்று சொல்லா நின்றாள் என்று அவள் பாசுரத்தைத் திருத்தாயார் சொல்லுகிறாளாய் இருக்கிறது –

அளப்பரும் தன்மைய ஊழி யங்கங்குல் அந் தண் அம் துழாய்க்கு
உளப் பெரும் காதலின் நீளிய வாயுள ஓங்கு முந்நீர்
வளப் பெரு நாடன்   மது சூதன் என்னும் வல்வினையேன்
தளப் பெரு நீள் முறுவல் செய்ய வாய தட முலையே
-59 –இரவு நீடுதற்கு ஆற்றாத தலைவியைப் பற்றிச் செவிலி இரங்குதல் –

முன்னம் அழகர் எழில் மூழ்கும் குருகையர் கோன்
இன்ன வளவென்ன எனக்கு அரிதாய்த் -தென்ன
கரணக் குறையின் கலக்கத்தை கண்ணன்
ஒருமைப் படுத்தான் ஒழித்து
——22–அழகர் உடைய அழகு முதலானவற்றை அனுபவிக்கப் புக்க இடத்தில் விளாக் கொலை கொண்டு அனுபவிக்க ஒண்ணாது ஒழிய அதுக்கு அடி விஷய பௌஷ்கல்யம்-என்று அறிய மாட்டாமல் கரண சங்கோசம் -என்று அனுசந்தித்து-இஸ் சங்கோசம் அற்று தன்னை அனுபவித்து வாழுகைக்கு உடலாக அவன் பண்ணின சிருஷ்டி அவதாராதிகள் தப்பி
அனர்த்தப் பட்ட நான் இனி கிட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ என்று சோக பரவசராய்க் கூப்பிட்ட முந்நீர் ஞாலத்தின் அர்த்தத்தை முன்னம் அழகர் எழில் -என்று துடங்கி அருளிச் செய்கிறார் –

அளப்பரும் தன்மை யவ்வூழி யங்கங்குல் – ஊழி ஆகிற ராத்திரி களானவை –அளக்க அரியத்தை- அளந்த திருவடிகளாலும் அளக்கப் போகிறதில்லை –அளக்கல் ஆகில் வந்து தோற்றானோ –அளக்க அரிதாகையை  ஸ்வபாவமாக உடையவன் —ஊழி யங்கங்குல் –ஊழி ஆகிற ஆகாரமே காணும்-நிரூபகமாய் இருக்கிறது –ஆனால் பரிச்சேதிக்க ஒண்ணாத வற்றையும் ஒரு பாசுரம் இட்டு சொல்ல ஒண்ணாதோ -என்ன –அம் தண் அம் துழாய் இத்யாதி –அதனில் பெரிய என் அவா விறே– இதில் (இந்த அவாவைக் காட்டிலும் ) பெரிது என்னும் இத்தனை –பகவத் தத்துவத்தை விளாக்குலை கொண்டது இறே இவர் அவா –  பகவத் ஆனந்தத்தை பரிசேதிக்க-புக்க வேதம் பட்டது படும் இத்தனை –இத்தை பரிச்சேதிக்கப் புக்காலும்  –நேதி நேதி (ந இதி ந இதி )-என்கிறபடியே இதன்று என்னும் இத்தனை போக்கி – இப்படி என்று பாசுரம் இட ஒண்ணாது –அம் தண் துழாய் உண்டு –தோளில் இட்ட மாலை –
அதுக்கு என் உள்ளத்திலே உண்டாய் –சர்வாதிகத்வத்தையும் விளாக்குலை கொண்ட-காதலினும்
பெருத்து இருப்பனவாய் உள்ளது –ஓங்கு முந்நீர் வளப் பெரு நாடன் மது சூதன் என்னும் –1-அவன் எல்லைக்கு புறம்பே இருந்து நோவு படுகிறேனோ-2-அவன் அசக்தியால் நோவு படுகிறேனோ-
கடல் சூழ்ந்து இருப்பதாய் –வளப்பத்தை உடைத்தாய் இருந்துள்ள பெரு நாட்டை உடையவன் –மது சூதனன் –ரஷ்ய வர்க்கத்துக்கு களையான மதுவை நிரசித்தவன் –1-சம்பந்தம் இல்லாமையோ –
2-விரோதி நிரசன சீலன் அல்லாமையாலேயோ –நான் இங்கனம் படுகிறது –வல் வினையேன் –
இவள் வடிவு அழகைப் பார்த்தால் இப்படி கிலேசப்படுக்கைக்கு ஓர் அடி இல்லையே — அத்தலை இத்தலையாய் -அவன் படக் கடவத்தை இவள் படா நின்ற-இதுக்கடி – காண்கிற என் பாபம் இறே –
மத் பாபம் ஏவ –(ந மந்த்ராயா இத்யாதி பரதன் வார்த்தை-இல்லாத குற்றத்தை உண்டு என்று ஏறிட்டுச் சொன்னாலும் இல்லை செய்யாதே ஏற்றான் அன்றோ )

இவள் படுகிற வியசனத்துக்கடி என் பாபமாக-வேணும் என்கைக்கு ஹேது என் என்னில்-தனப் பெரு இத்யாதி –இவள் நோவு படுகைக்கு இவள் வடிவிலே ஏதேனும் குறி உண்டோ -என்கிறாள் –தளப்பு என்றது –தள வென்றாய் –முல்லை-யரும்பு போலே இருப்பதாய் – பெறுதற்கு அரியதாய் –புரவமே சாரு ததீம் -என்கிறபடியே-(பெருமாள் வார்த்தை –கோவைப்பழம் அதரம் -சிரித்த சிரிப்பு மாறாமல் சீதையைத் திருப்பிக் கொடுக்கா விட்டால் உலகைத் தலை கீழாக ஆக்குவேன் )நாயகன் பெற ப்ரார்த்திக்குமதாய் –
நாயகன் புக்க இடம் புக்கு -அவன் நெஞ்சை வடிம்பிடவற்றாய்-இருந்துள்ள முறுவலை உடைய –நீள் முறுவல் -என்றது – நரசிம்ஹத்தினுடைய அட்டகாசத்தை சொன்னது அன்று இறே – ஒரு ஸ்திரீயினுடைய மந்த ஸ்மிதத்தை இறே சொல்லுகிறது –ஆனால் இப்படி பொருளாக வேணும் இறே –
எப்படி எனில் –அதனுடைய போக்யதையை – நீண்மை -என்கிறது –செய்ய வாய் -இத்யாதி –அம் முறுவலுக்கு-பரபாகமான சிவந்த அதரத்தை உடையாள் என்னுதல் –அன்றிக்கே –மேல் தட முலை -என்று முலைகளினுடைய சுற்றுடைமையைச் சொல்லுகிறதாகையாலே- இது செவ்வையைச் சொல்லி நேரே வளர்ந்த முலைகளை உடையாள் என்னுதல் –தட முலையே –விரஹத்தாலே தலை சாவி வெட்டின பின்பு காணும் இவ்வளவு சொல்லலாகிறது- சர்வேஸ்வரன் வைத்த அவகாசம் போராது போலே இரா நின்றது –தளப் பெரும் நீண் முறுவல்   செய்யவாய் தட முலை யானவள் –“அளப்பரும் தன்மை அவ்வூழி யங்கங்குல் அம் தண் அம் துழாய் குளப்பெரும் காதலில் நீளியவாயுள “- என்னும் –அதுக்கு மேலே –
ஓங்கு முந்நீர் வளப் பெரு நாடன் மதுசூதன் என்னும் வல்வினையேன் – என்று அன்வயம் –

தலைமகள் ஆற்றாமை மிக்கு அலறுவதை திருத் தாய் சொல்லுகிற பாசுரம் –காதலுக்கு முடிவு இல்லாதது போலே இரவுக்கும் முடிவு இல்லையே -நீளிய வாயுள-என்னும் -வினை முற்று -என்னும் என்பது இப்பாட்டுக்கு வினை முற்று –அளப்பரும் தன்மைய ஊழி யங்கங்குல்–ஊழி ஆகிற ராத்திரி களானவை -அளக்க அரியத்தை-அளந்த திருவடிகளாலும் அளக்கப் போகிறதில்லை -அளக்கல் ஆகில் வந்து தோற்றானோ -அளக்க அரிதாகையை ஸ்வபாவமாக உடையவன்-பெரியவாச்சான் பிள்ளை
ஓங்கு முந்நீர்-வளப் பெரு நாடன் -கடல் விழுங்காமல் நோக்கி ரஷிப்பவன் மது சூதன் -துஷ்ட நிக்ரஹன்
ஊழி யங்கங்குல்-கங்குலுக்கு அழகாவது கல்பத்தினும் நெடிதாகை – வல்வினையேன்-கங்குலை நீட்டவோ -அவனைக் கூட்டவோ முடியாத பாவியேன் காதலின் நீளிய வாயுள-ஒப்பு பொருளில் இல்லை -காதல் போலே நீண்டது என்ற படி தள-தளவு -முல்லை அரும்பு -என்றபடி-

அளப்பரும் தன்மைய ஊழி யங்கங்குல்-அளவிட வரிதாம் படியான ஸ்வ பாவத்தை யுடைத்தான கல்பங்களில் காட்டில் அழகிய கங்குலானவை–கங்குலுக்கு அழகாவது-கல்பத்திலும் நெடிதாய் இருக்கை-அந் தண் அம் துழாய்க்கு உளப் பெரும் காதலின் நீளிய வாயுள-அழகிய குளிர்ந்த திருத் துழாய்க்கு என்னுள்ளத்திலே வளருகிற காதல் போலே நீளிய வாயுள்ளன–காதலுக்கு முடிவு காணாதவோ பாதி கங்குலுக்கும் முடிவு காண ஒண்ணாது என்கை (கங்குலும் காதலும் முடிவு காண ஓண்ணாமை -)ஓங்கு முந்நீர் வளப் பெரு நாடன்–உயர்ந்த முந்நீரை யுடைத்தாய் வளப்பத்தையும் யுடைத்தான பெரிய நாட்டை யுடையவன் என்கையாலே லோகம் கடல் விழுங்காமல் நோக்குமவன் என்றபடி–மது சூதன்--அந்த லோகத்துக்கு ஆஸூர ப்ரக்ருதிகளால் வந்த நலிவு தீர்த்துக் கொடுக்குமவன்–என்னும்-1-இப்படிக் கங்குலின் நெடுமையையும்-2-ரக்ஷகத்வத்தையும்-3-விரோதி நிவர்த்தகத்வத்தையும் வாய் விட்டுச் சொல்லா நிற்கும்–வல் வினையேன்–கங்குலைக் குறுக்குதல்
அவனைக் காட்டுதல் செய்ய மாட்டாத மஹா பாபத்தை யுடையேனான என்னுடைய —தளப் பெரு நீள் முறுவல் செய்ய வாய தட முலையே-அவன் தன்னை ஓர் ஒன்றிலே எழுதிக் கொள்ள வல்லவான
அவயவ வை லக்ஷண்யத்தை யுடையவள்–தளம் என்று முல்லை–முல்லை யரும்பின அளவான பெருமையையும் நீட்சியையும் யுடைத்தான முறுவலையும் (போக்யதையில் நீட்சி )-இங்கு முறுவல் என்பது தந்த பங்க்தியை–செய்ய வாய்-முறுவலுக்குப் பரபாகமாய் சிவந்த வாய் அழகையும்-தடமுலை
பெரிய முலைகளையும் யுடையவள் என்னும் -என்று கீழோடே அந்வயம்இத்தால் ஸர்வ ரக்ஷகனான ஸர்வேஸ்வரன் விரோதியைப் போக்கி அனுபவிப்பிக்க சக்தனாய் இருக்க விளம்பிக்கையாலே இவ்வாழ்வாருக்கு இருள் தரும் மா ஞாலத்தில் இருப்பு நெடுகித் தோற்றுகையாலே ஆர்த்தி பிறந்தமை சொல்லிற்று ஆயிற்றுதளப் பெரும் இத்யாதியாலே–1-பரிஸூத்தமான இவருடைய அந்தர் விகாஸத்தையும் (வெளுப்பு) (அதரத்துக்கு அந்தர் தந்தபந்தி-செங்கல் பொடிக்கூறை வெண் பல் தவத்தவர்போல் )–2-ராகோத்தரமான வாக் விகாஸத்தையும் (சிகப்பு-பக்தியின் நிறம் )–3-நிரதிசயையான பக்தி அபி விருத்தியையும் காட்டுகிறது (முலை வளர்ந்து கொண்டே இருக்குமே -அவா -காதல் நீண்டு கொண்டே போகுமே )

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு வியாக்யானம்-அளப்பரும் தன்மைய ஊழி யங்கங்குல்— ஊழியான ராத்ரி யானவை
அளக்க அரியத்தை அளந்து கொண்டவன் திருவடிகளாலும் அளக்கப் போகிறது இல்லை-அளக்கலாமாகில் வந்து தோற்றானோ–அளக்க வரிதாகையை ஸ்வ பாவமாக யுடையதான–ஊழி யங்கங்குல்–ஊழி யாகிற ஆகாரமே காணும் நிரூபகமாய் இருக்கிறது-ஆனால் பரிச்சேதிக்க ஒண்ணாத வற்றையும் ஒரு பாசுரம் இட்டுச் சொல்ல ஒண்ணாதோ என்ன–அந் தண் அம் துழாய்க்குஉளப் பெரும் காதலின் நீளிய வாயுள–அதனில் பெரிய என் அவா -10-10-10-
பெரியத்தில் பெரியது என்னும் அத்தனை பகவத் தத்துவத்தையும் விளாக்குலை கொண்டது இறே இவ்வவா பகவத் ஆனந்தத்தைப் பரிச்சேதிக்கப் பார்த்து அவை பட்டது படும் அத்தனை யாயிற்று
இவற்றைப் பரிச்சேதிக்கப் புக்காலும் நேதி நேதி -ப்ரஹதாரண்யம் என்கிறபடியே இது அன்று இது அன்று என்னும் அத்தனை போக்கி இப்படி என்று பாசுரம் இட்டுச் சொல்ல ஒண்ணாது–அம் தண் துழாய் யுண்டு -அவன் தோளில் இட்ட மாலை–அதுக்கு என்னுள்ளத்தில் யுண்டான சர்வாதிகத்வத்தையும்
விளாக்குலை கொள்ள வற்றாது காதலிலும் பெருத்து இருப்பனவாயுள்ளன–ஓங்கு முந்நீர் வளப் பெரு நாடன் மது சூதன் என்னும்–அவன் எல்லைக்குப் புறம்பே இருந்து நோவு படுகிறேனோ-கடல் சூழ்ந்து இருப்பதாய் வளப்பத்தை யுடைத்தாய் இருந்துள்ள பெரு நாட்டை யுடையவன்-ரஷ்ய வர்க்கத்துக்குக் களையான மதுவை நிரசித்தவன்-சம்பந்தம் இல்லாமையே -விரோதி நிரசன சீலன் அல்லாமையோ நான் இங்கனே படுகிறது–வல்வினையேன்–இவன் வடிவு அழகைப் பார்த்தால் இப்படி கிலேசப்படுகைக்கு ஓரடி இல்லை-அத்தலை இத்தலையாய் அவன் படக்கடவதை இவள் படா நின்றாள்
இதுக்கடி இவள் வடிவு அழகில் ஏதேனும் குறை யுண்டோ-மத் பாபம் ஏவ -என்கிறாள்-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்–போக்கினவள் -என்றும் இங்கனே வாய் விட்டுக் கூப்பிடுமதே கார்யமாய் இரா நின்றாள்–வல்வினையேன்-வலியதான வெவ்வினையால் இறே-நான் இவள் அவஸாதத்தைக் காணவும் கேட்கவுமாயிற்று-தன் அழகில் ஈடுபடுத்தி அவனை இங்கனே கூப்பிடப் பண்ண வல்லவள் தான் இப்படிக் கூப்பிடா நின்றாள் என்கிறாள்–தளப் பெரு நீள் முறுவல் செய்ய வாய தட முலையேதளவு என்று முல்லை-அதில் பெருத்த அரும்பு போன்ற தந்த பங்க்தியாய் உத் பவித்த
நீண்ட வெண் மின்னல் போன்ற புன்சிரிப்புள்ளவள்-சிவந்த திருவதரத்தை யுடையவன்-அவனுடைய ஸந்தாபத்தைத் தீர்க்கவும் ஆசா பூர்த்தியைச் செய்யவும் வல்ல முலைகளை யுள்ளவள் என்னும் என்றத்தோடே இதுக்கு அந்வயம் –

ஸ்வாபதேசம் –
ஆழ்வார் ஆற்றாமையைக் கண்டு கால தாமதத்தை வெறுத்துப் பேசும் பாகவதர்கள் –சர்வ சக்தனாய் இருக்கச் செய்தேயும் இருள் தரும் மா ஞாலத்தில் இருப்பு நெடுகத் தோற்றுகையாலே-ஆற்றாமை விஞ்சி அத்தன்மையை வாய் விட்டுக் கூறினமை ஆழ்வாருடைய திரு முக மண்டலமும் சொல் திறமும் பக்தி வளமும் ஈற்றடியில் சொல்லிற்றாம் –

ஸ்வா பதேசம்
இத்தால்-அனுபவ யோக்யமான சம்பந்தமும் ஸ்வரூப ஞானமும் உண்டாய் இருக்க போக யோக்யமான காலமும் போகத்துடன் செல்லப் பெறாமையாலே வந்த ஆற்றாமையை- பார்ஸ்வத்தார் சொல்லுகிறார்கள்–மது சூதனன் -என்கையாலே ஸ்வரூப ஞானம் –

தாத்பர்யம்
சர்வேஸ்வரன் சக்தனாய் இருந்தும்-தமக்கு வந்து உதாவாமையால் ஆற்றாமை மிக்கு வருந்தும் தலை மகளைப் பற்றி செவிலித் தாயார் பேசும் பாசுரத்தை விரஹினி இரவு நீட்சியைச் சொல்லும் பாசுரத்தாலே சொல்கிறாள் கல்பத்துக்கும் ஓர் அளவு உண்டே-1000 சதுர்யுகம் ப்ரஹ்மாவின் பகல் பொழுது சொல்லலாம் -இந்த நீண்ட இரவால் கொடுக்கும் துன்பம் அளவற்றதே -இவளுக்கு திருத்துழாய் மேல் உள்ள அபி நிவேசமே அபரிச்சேதயமாய் இருந்ததே-அதனில் பெரிய அவாவை விடவே இது பெரியதாய் -அத்தை விட நீண்டதாய் பெரியதாய் நீண்டதே முல்லை அரும்பு போல் இவள் அதரம் தடமுலை போன்ற இவளுடைய போக்யதையை அழகை அழித்து-பெரு நாடன் ஸ்வாமி -ரக்ஷகன் -மதுசூதனன் உதவாமல் உள்ளானே -என்று கூப்பிடா நின்றாள் -அவன் வராமல் இவள் துக்கப்படுவதுக்கு எனது வலிய வினைகளே காரணம் என்கிறாள்

3-2-முந்நீர் ஞாலம் பிரவேசம் 

பட்டர் திருக்கோட்டியூரிலே எழுந்தருளியிருக்கச் செய்தே -சீராமப்பிள்ளை,
‘இவர் பரத்துவ அனுபவத்தை ஆசைப்பட்டு, அது ஒரு தேச விசேஷத்திலே போனால் அனுபவிக்குமதாய் நோவுபடுகிறாரல்லர்;
அவதாரங்களில் ஆசைப்பட்டுப் பிற்பாடர் ஆனோம்’ என்று நோவுபடுகிறாரல்லர்;
உகந்தருளின நிலங்களிலே ஆசைப்பட்டார்;
அவற்றிலும் திருமலையிலே அனுபவிக்க இழிந்து –
பின்னர் மேன்மேலென அனுபவிக்குமதொழிய இவர் இழந்து நோவுபடுகைக்குக் காரணம் என்?’ என்று கேட்க,
‘பரத்துவம் வியூகம் விபவங்களோடு அர்ச்சாவதாரத்தோடு வேற்றுமையறத் தர்ம ஐக்கியத்தாலே
விஷயம் எங்கும் பூர்ணமாக இருக்கும்.
குறைந்து தோன்றுகிற இடம் -ப்ரதி பத்தாக்களுடைய பிரதிபத்தி தோஷத்தாலே –
நினைக்கின்ற மக்களுடைய நினைவின் தோஷத்தாலே யாயிருக்கும்.
கடலருகே சென்று நின்றால் தன் கண்களாலே முகக்கலாமளவு இறே காண்பது ;
அப்படியே, அழகருடைய ஸுந்தர்யாதிகளை அனுபவிக்கப்புக்க இடத்தில் விளாக்குலை கொண்டு அனுபவிக்கலாய் இருந்தது இல்லை –
பெருவிடாய்ப்பட்டவன், சேர்ந்த குளிர்ந்த தண்ணீர் சந்நிஹிதமாய் இருக்க –
ஆஸ்யம் பிஹிதமானால் – வியாதியினாலே வாய் மூடப்பட்டால் அதனைக் குடிக்க முடியாது —
துடிக்குமாறு போன்று, விஷயமும் சந்நிஹிதமாயும் விடாயும் மிக்கிருக்கச்செய்தே,
அபரிச்சின்ன விஷய மாகையாலே பரிச்சேதித்து அனுபவிக்கவொண்ணாதொழிய நோவுபடுகிறார்.
ஆயின், ‘பிரகிருதி சம்பந்தத்தை அறுத்துத் தந்தருள வேணும் என்று வேண்டுவான் என்?’ எனின்,
‘இவ்வாறு அனுபவிக்க வொண்ணா தொழிந்தது விஷயத்தினுடைய -தவ்ர் ஜன்யத்தாலே – வைலக்ஷண்யத்தாலே வந்தது’
என்று அறிய மாட்டாது, தம்முடைய கரண சங்கோச நிபந்தனமாக வந்தது என்று அநுசத்தித்து.
‘அவன் தான் முதலிலே இத்தைக் கழித்துத் தன்னை அனுபவிக்கைக்கு உறுப்பாக-
ஜகத் ஸ்ருஷ்டியைப் பண்ணினான் -(முந்நீர் ஞாலம் படைத்த)
ஸ்ருஷ்டமான ஜகத்திலே தான் வந்து அவதரித்தான்; (‘எம் வாமன’ )
அதற்குமேல் அந்தர்யாமி ரூபேண நின்று-(‘எங்கணும் நிறைந்த எந்தாய்’ ) சத்தா திகளை நிர்வஹித்தான்;
அவன் இப்படி உபகார பரம்பரைகளைப் பண்ண ,
நான் அவற்றையெல்லாம் அசத்துக்குச் சமமாக்கிக்கொண்டேன்-(‘ஆக்கையின் வழி உழல்வேன்);
இனி, நான் அவனைக் கிட்டுகை என்று ஒன்று உண்டோ?’ என்று
நிர்மர்யாத வ்யஸன சாகர அந்தர் நிமக்நராய் ‘முடிந்தேனேயன்றோ?’ என்று இவர் சோகிக்க-(எங்கினித் தலைப்பெய்வன்?’),
‘நீர் கரண சங்கோசத்தாலே வந்தது என்று சோகிக்க வேண்டா;
கரண சங்கோசமில்லாதாரும் நம்மை அனுபவிக்குமிடத்தில் இப்படியே காணும் படுவது-(சிந்து பூ மகிழும்’)’ என்று
இவர் இழவினை பரிஹரிக்கக் கோலி ,
‘நீர் நினைத்த வகைகளெல்லாம் பரிமாறுகைக்கு ஈடாக வடக்கில் திருமலையில் நின்றோம்;
அங்கே கிட்டி அனுபவியும்,’ என்று தான் அங்கு நிற்கிற நிலையைக் காட்டிச் சமாதானம் பண்ண, –
ஸமாஹிதராய்த் தலைக்கட்டுகிறார்-(‘நிலை பெற்று என் நெஞ்சம்’).

‘ஆயின், தெற்குத் திருமலையிலே நிற்கிற நிலையை அனுபவிக்க நினைத்துப் பெறாமல் நோவுபட்ட இவரை
வடக்குத் திருமலையில் நிற்கிற நிலையைக் காட்டிச் சமாதானம் செய்தபடி என்?’ என்னில்,
முலை வேண்டி அழுத குழந்தைக்கு முலையைக் கொடுத்துப் பரிஹரிக்கும் இத்தனையேயன்றோ?
(‘தென்னன் உயர்பொருப்பும் தெய்வ வடமலையும் என்னும் இவையே முலையா வடிவமைந்த
அன்ன நடைய அணங்கு’–பெரிய திருமடல்))
‘நன்று; இன்ன முலையைத் தரவேண்டும் என்று அழுதால் அம்முலையையே கொடுத்து ஆற்ற வேண்டாவோ?’ என்னில், வேண்டா;
இவர் தாம் வழி திகைத்து அலமருகையாலே
‘அதுவே வேணும்; அது அன்று இது,’ என்கிற தெளிவில்லை ஆயிற்று இவர்க்கு.
மற்றும், ‘ஒரு பொருள்தானே ஒருபோது தாரகமாய், மற்றைப்போது அதுதானே பாதகமாகக் காணாநின்றோம்;
பசியில்லாத காலத்தில் பாதகமான சோறு தானே அது கழிந்தவாறே தாரகம் ஆகாநின்றதே?
‘இவர்க்கு இன்னது இன்ன போது தாரகமாம்: இன்னது இன்ன போது பாதகமாம்’ என்று தெரியாது;
குணங்களின் ஆவிஷ்காரத்தாலே தரிப்பித்துக்கொண்டு செல்லுகிற ஈஸ்வரனுக்கும்
தரித்த இவருக்கும் தெரியுமத்தனை இதுதான்.
ஆரியர்கள் இழந்த மிலேச்ச பூமியில் உள்ளாருக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கிற நீர்மை அங்கு;
கானமும் வானரமும் வேடுமானவற்றுக்கு முகம் கொடுத்த நீர்மை உண்டே இங்கு.

இப்படி ஸ்வா பாவிகமான சேஷத்வத்துக்கு பிரதிசம்பந்தியான சேஷியினுடைய திவ்ய சவ்ந்தர்யாதிகளை அனுபவிக்கப் ப்ராப்தமாய் இருக்க
அது ஸித்தியாது ஒழிகிறது தத் விரோதியான சரீர சம்பந்தாதிகள் அடியாக என்று அனுசந்தித்து -தந் நிவ்ருத்தியில் அபேக்ஷையாலே
1–அது அவன் தனக்கு விதேயமாம் படியான ஸ்ரஷ்ட்ருத்வத்தையும்
2–ஸ்ருஷ்டமான ஜகத்தை அநந்யார்ஹம் ஆக்கின அபதானத்தையும்
3–ஆஸ்ரித விரோதி நிராசன ஸ்வ பாவத்தையும்
4—ஆஸ்ரித சம்ரக்ஷண அர்த்தமான வ்யாப்தியையும்
5–அனுபவித்து அல்லது நிற்க ஒண்ணாத விலக்ஷண விக்ரஹ யோகத்தையும்
6— ஸமஸ்த சேதனரும் ஸ்வ அதீனராம் படியான பாரம்யத்தையும்
7– வ்யாப்தியிலும் கார்ய காரமான சவ்லப்யத்தையும்
8—அந்த சவ்லப்யம் அடியாக வந்த குண விக்ரஹ உஜ்வல்யத்தையும்
9–ஞான அஞ்ஞான விபாகம் இல்லாத படியான ௭உபகாரகத்வத்தையும்
10—அதுக்கு பிரகாசகமான சகல வேத வேத்யத்வத்தையும் —
அனுசந்தித்துச் சொல்லிக் கூப்பிட்டு -ஸ்வ சந்நிதியாலே ஆர்த்தி சமிப்பித்த ஈஸ்வரனை அபரோக்ஷித்து ப்ரதிஷ்டிதராகிறார்-

முதற்பாட்டில், ‘நீ தந்த கரணங்களைக் கொண்டு அனர்த்தத்தை விளைத்துக்கொண்ட நான் உன்னை வந்து கிட்டுகை என்று ஒன்று உண்டோ? என்றார்;
இரண்டாம் பாட்டில், ‘இப்படிச் சூழ்த்துக் கொண்ட பாவங்களைப் போக்கி, தேவரீரை நான் எப்போது வந்து கிட்டுவேன்?’ என்றார்;
மூன்றாம் பாட்டில், ‘இதற்கு முன்பு உன்னைப் பெறுகைக்குத் தந்த கரண களேபரங்களைக்கொண்டு நான் சூழ்த்துக்கொண்ட
பாவங்கள் ‘நான் போக்கி வர’ என்றால் அது செய்யப்போகாது; இனி, நான் அறியாததாய் நீ அறிந்திருப்பதோர் உபாயத்தை அருளிச்செய்ய வேணும்’ என்றார்;
நான்காம் பாட்டில், ‘உன்னையொழிந்த வ்யதிரிக்தங்களிலே – வேறுபட்ட பொருள்களிலே என்னுடைய தாழ்ச்சியைத் தவிர்த்து,
உன் திருவடிகளிலே வாழ்ச்சியே யாம்படி செய்யவேணும்,’ என்கிறார்;
ஐந்தாம் பாட்டில், ‘அப்படிச் செய்யப் பார்த்திலையாகில், உன்போக்யதையை – இனிமையை எனக்கு எதற்காக அறிவித்தாய்? என்றார்;
ஆறாம் பாட்டில், ‘இல்லாத அன்று உண்டாக்கின அருமையுண்டோ, உண்டாக்கின இதற்கு ஒரு குண தானம் பண்ண ?’ என்றார்;
ஏழாம் பாட்டில், ‘நம் படியறியாதே நாம் அவனை வெறுக்கிறது என்?’ என்றார்;
எட்டாம் பாட்டில், ‘தீரக் கழியச் சாதன அனுஷ்டானம் பண்ணினேனோ , நான் இங்ஙனம் கூப்பிடுகைக்கு?’ என்றார்;
ஒன்பதாம் பாட்டில், ‘அந்த திரைவிக்ரம அபயதானத்துக்கும் தப்பின நான் இனி எங்கே கிட்டப்போகிறேன்?’ என்றார்;
பத்தாம் பாட்டில், அவ்வளவிலே வந்து அவன் முகங்காட்டித் தரிப்பிக்கத் தரித்தார்;
நிகமத்தில் , பலம் சொல்லித் தலைக்கட்டினார்.

முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன்
 –3-2-1-

முந்நீர் –ஆற்றுநீர், ஊற்றுநீர், வர்ஷ ஜலம் -மழைநீர் என்னும் மூன்று நீரையுடையதாதலின் ‘முந்நீர்’ எனப்பட்டது.-இனி, அப ஏவ ச சர்ஜ்ஜாதவ் ‘இறைவன் முதலிலே தண்ணீரையே படைத்தான்,’ என்கிறபடியே,-முற்பட ஜல ஸ்ருஷ்டியைப் பண்ணி – பின்பு இறே அண்ட ஸ்ருஷ்டி தான் பண்ணிற்று , –முந்நீர் -முன்னே படைத்த நீர் -என்னுதல்.ஸ்ருஷ்டிப்பது கர்மங்களை கடாக்ஷித்து ஆகிலும் , யௌகபத்யம் அனுக்ரஹ காரியம்; ஒவ்வொரு கால விசேஷங்களிலே சிறை வெட்டி விடுமாறு போன்று தன் பேரருளாலே உண்டாக்குமத்தனை இறே-அசித் அவிசேஷிதான் பிரளய சீமனி சம்சரத கரண கலேபரைர்க் கடயிதும் தயமான மநா-என்றார் பட்டர்.-சொரூப ஞானம் பிறந்த பின்பு சமுசாரத்திலிருக்கிற இருப்பு, பிராட்டி இலங்கையிலே இருந்தால் போலே-தோற்றா நின்றது காணும் இவர்க்கு; ஆதலின், ‘வெம்நாள்’ என்கிறார்.-இனி, பகவத் விஸ்லேஷத்தோடே இருக்கையாலே, நெருப்பை ஏறட்டினாற் போலே இருக்கிறதாதலின் ‘வெம்நாள்’ என்கிறார். என்னுதல்.

எந்நாள் –எனக்கு இப்போதே பெறவேண்டும்’ என்னும் விருப்பமில்லை;
இன்ன நாள் பெறக்கடவை’ என்று ஒரு நாளிட்டுத்தர அமையும். –இனி வந்து கிட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ?’ என்று நிராசராகிறார் என்று முன்புள்ள முதலிகள் அருளிச்செய்வர்.
எம்பெருமானார் ‘நிராசர் ஆனால் பின்னை முடிவார் ஒருவர்;
ஒன்பதாம் பாட்டில் – நிராசராக, பத்தாம் பாட்டில் – அவன் வந்து சமாதானம் பண்ணினானாக அமையும்’ என்று அருளிச்செய்வர்.
ஆதலால், இப்பாசுரத்தில் ‘நான் வந்து உன்னைக் கிட்டுவேனாக நீ பார்த்து வைத்த நாளைச் சொல்லாய்,’ என்கிறார் என்றபடியாம்-

—————

வன் மா வையம் அளந்த எம் வாமனா நின்
பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்
தொன் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ
 –3-2-2–

‘வடிவிணை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை’க்கொண்டு காடும் மலையுமான பூமியை அளந்தானாதலின் ‘வன்வையம் அளந்த’ என்கிறார்.-வன்மை என்பது ஈண்டு வையத்துக்கு அடை.-அவன் தானே தன்னைக் கொடு வந்து காட்டின இடத்திலும் நெஞ்சில் நெகிழ்ச்சியின்றியிருந்த சமுசாரிகளுடைய நெஞ்சில் வன்மையைச் சொல்லுகிறார் என்னுதல்.-மஹாபலி தோள் மிடுக்காலே ஒருவர்க்கும் நுழைவதற்கு அரிதான வன்மையை உடைத்தாயிருந்ததாதலின்,‘வன் மா வையம்’ என்கிறார் என்னுதல்.

எம் வாமனா –அபஹ்ருத ராஜ்யத்தை யுடையவனான இந்திரனுக்காக அன்று,
வாமனாவதாரமும் மதர்த்தம் என்றிருக்கிறார்.

படிகின்ற –தரை காணாதே அவகாஹிக்கிற – இவ்வனர்த்தத்திலே வெறுப்பின்றிப் பொருந்தி இருப்பதால் -‘விழுகின்ற’ என்னாது, ‘படிகின்ற’ என்றார். ‘படிகின்ற’ என்ற வர்த்தமான நிர்த்தேசத்தால் , ‘இன்னம் தரை கண்டதில்லை’ என்பது போதரும்.

அந்தநாள் இந்த நாளாகவேண்டும்,’ என்பது போன்று ‘எஞ்ஞான்று கொலோ!’ என்கிறார் என்றபடி.-இனி, இதற்கு ‘இந்நாள் என்று ஓரவதி பெற்றதாகில், இன்று பெற்றதோடொக்கும் என்றும் சொல்லுவார்கள் –

—————

கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர்
யெல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்
பொல்லா வாக்கையின் புணர்வினை யறுக்கலறா
சொல்லாய் யான் உன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே
 –3-2-3-

என்னை விஷயீ கரிக்கைக்கு என்று வந்து திருவவதாரம் பண்ணி அருளி -கொலைக்குக் கருவியல்லாத குதிரையை நடத்துகிற கோலைக்கொண்டு முடித்துப் பொகட்டான்.-அவித்த – பீஷ்மாதிகள் காட்டுத் தீகிளர்ந்தால் போலே வர, காளமேகம் மழை பெய்வது போன்று அவித்தான்.-‘மழை கொலோ வருகின்றது!’ என்னும்படி யன்றோ அவன் வரவுதான் இருப்பது?இவர் இச்சரீரத்தின் தன்மைகளையெல்லாம் ஒருசேர நினைத்துப் ‘பொல்லா ஆக்கை’ என்கிறார்.-இராவணன் தலைகள் போன்று முளையா நிற்றலின், ‘அறுக்கல் அறா’ என்கிறார்.-ஒரு தேச விசேஷத்திலே நித்ய ஸூ ரிகள் அனுபவிக்கும்
உன்னைக் கிட்டலாதொரு விரகு சொல்ல வேணும்-நான் கிட்டவும் வேணும் -நான் அறியில் இறாய்ப்பேன்-நான் அறியாதபடி சூழ்ச்சி யாகவும் வேணும்- இது இன்ன நாள் என்று சொல்லவும் வேணும் என்கிறார் –

—————-

சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளியாகி என்றும்
ஏழ்ச்சிக் கேடு இன்றி எங்கணும் நிறைந்த வெந்தாய்
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ்
வாழ்ச்சி யான் சேரும் வகையருளாய் வந்தே 
–3-2-4-

எந்தாய் -ஒருவனைப் பிடிக்க ஊரை வளைப்பாரைப் போலே வியாப்தியும் என்னை உத்தேசித்து என்கை –நீ அன்றிக்கே ஒழிய அமையும் நான் மேல் விழுகைக்கு-வகுத்த திருவடிகளில் அனுபவத்தை – -வாழ்ச்சி -என்கிறார் –யான் சேரும் வகையருளாய் வந்தே –
இதுக்கு முன்பு புதியது உண்டு அறியாத நான் -சேரும் வகை அருள வேணும் –
அது செய்யும் இடத்து முகம் தோற்றாதே அந்தர்யாமித்வத்தால் ஒண்ணாது –
வந்து அவதரித்து உன் குண சேஷ்டிதங்களாலே புறம்பு போகாத படி பண்ணிச் சேர்த்து அருள வேணும் –

—–

வந்தாய் போலே வந்து மென் மனத்தினை நீ
சிந்தாமல் செய்யா யிதுவே யிதுவாகில்
கொந்தார் காயாவின் கொழு மலர்த் திரு நிறத்த
எந்தாய் யானுன்னை எங்கு வந்து அணுகிற்பனே
–3-2-5-

யிதுவே யிதுவாகில்- உதவாது ஒழிகையே ஸ்வ பாவமாகச் செல்லுமாகில்–கொந்தார் காயாவின் கொழு மலர்த் திரு நிறத்த-எந்தாய் –நீ உதவாது போது ஆறி இருக்கலாயோ உன் வடிவு இருக்கிறது -விலக்ஷணமான வடிவு அழகைக் காட்டி என்னை அநந்யார்ஹன் ஆக்கினவனே–உன்னைக் கிட்டுகைக்கு ஒரு கைம்முதல் இல்லாத யான்.- ‘இவ்வடிவின் போக்யதையை யறிந்த யான்’-பிரியில் தரியாதபடி வடிவு படைத்திருக்கிற உன்னை.-எங்கு வந்து அணுகிற்பன் –என்ன சாதன அநுஷ்டானத்தைச் செய்து எங்கே வந்து கிட்டக்கடவேன்?‘நான் உன்னைக் கிட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ?’-

—————-

கிற்பன் கில்லேன் என்றிலன் முன நாளால்
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்
பற்பல்லாயிரம் உயிர் செய்த பரமா நின்
நற் பொற் சோதித் தாள் நணுகுவது எஞ்ஞான்றே
 –3-2-6-

என்னைப் பார்த்தால் கிட்டுவதற்கு விரகு இல்லை;-உன்னைப் பார்த்தால் தப்புவதற்கு விரகு இல்லை;ஆன பின்னர், நிரதிசய போக்யமான உன் திருவடிகளைக் கிட்டுவது என்று?’ என்கிறார். என்றது, ‘விதி விலக்குகளுக்குக் கட்டுப்படுதல் இன்றி இதர விஷயப் பிரவணனாய்க் கைகழிந்து போன நான் உன் திருவடிகளைக் கிட்டுவது என்று?’ என்கிறார்

கிற்பன் கில்லேன் என்றிலன்-விஹிதத்ததைச் செய்யாமையும், அவிஹிதத்தைச் செய்கையும்-காலமெல்லாம் எனக்கு இதுவே அன்றே யாத்திரை –அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்றொழிந்தேன் – முள்ளிப்பூவில் ரசம் போலே அல்பமாய், அவைதாம் பலவாய், தன் நாவில் பசை கொடுத்துப் புஜிக்க வேண்டும்படி இருக்கிற விஷயங்கள் தோறும் கால் தாழ்ந்து சர்வ சத்தியான தேவரை ‘ஓடினேன் என்கிறபடியே கைகழியப் போனேன்.-உயிர் செய்கையாவது – ஸ்திதி கமன சயனாதிகளுக்கு – நிற்றல், நடத்தல், படுத்தல் முதலியவைகட்குத் தகுதியாம்படி-யோக்யமாம்படி சரீரத்தோடே-சம்பந்திப்பிக்கை சேர்ப்பித்தல்.–இல்லாத பொருள்களை உண்டாக்கின உனக்கு உள்ள வஸ்துவுக்கு ஒரு குண தானம் பண்ணுகை அரிதோ?-நின் நன்பொன் சோதித்தாள் நணுகுவது எஞ்ஞான்று –உன்னுடைய ப்ராப்தமாய் -அப்ராக்ருதமாய்  நன்றாய் -ஸ்ப்ருஹணீயமான -விரும்பத்தக்கதாய் நிரவதிக தேஜோ ரூபமான திருவடிகளை நான் என்று வந்து கிட்டக் கடவேன்?

———–

எஞ்ஞான்று நாம் இருந்து இருந்து இரங்கி நெஞ்சே
மெய்ஞ்ஞானம் இன்றி வினையியல் பிறப்பு அழுந்தி
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்து நின்ற
மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே 
–3-2-7-

பரம்பொருளை யறியும் அந்த ஞானமே ஞானமென்று சொல்லப்படும்;மோக்ஷத்தைக் கொடுக்கக்கூடிய ஞானமே ஞானம் –கண்ணனை மேவுதுமே – ஸூலபன் என்று நினைத்து நம்மாலே கிட்டப்போமோ?’ என்னுதல். ‘நிர்வாஹகனானவனை நம்மால் கிட்டப்போமோ?’ என்னுதல்.நினைவுக்கு வாய்த் தலையிலே புகுந்து நம் படியை உள்ளபடி அறியுமவன் ஆனவனை-‘நெஞ்சே! மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை எஞ்ஞான்று மேவுதும்?’ என்று கூட்டிப் பொருள்-

——————

மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்
ஓவுதல் இன்றி யுன் கழல் வணங்கிற்றிலேன்
பாவு தொல் சீர்க் கண்ணா வென் பரஞ்சுடரே
கூவிகின்றேன் காண்பான் எங்கு எய்தக் கூவுவனே
 –3-2-8-

சாதன கர்மங்களைப் பண்ணினார் பலம் தாழ்த்துக் கூப்பிடக்கூடிய கூப்பீட்டைப்
பேற்றுக்கு ஈடாய் இருப்பதொரு கைம்முதல் இல்லாத நான் எங்கே வந்து கிட்டக் கூப்பிடுகிறேன்?’ -‘ஒரு கொசுக் கூப்பிட்டது’ என்று பிரமனது ஓலக்கத்திலே கேட்கப் போகின்றதோ? எங்ஙனே வந்து கேட்கக் கூப்பிடுகிறேன்?-என்கிறார்.-ஓவுதல் இன்றி மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன், ஓவுதல் இன்றி உன்கழல் வணங்கிற்றிலேன்’ என்று ‘ஓவுதலின்றி’ என்பதனை முன்னும் பின்னும் கூட்டிப் பொருள் அருளிச்செய்வர் எம்பார்.

மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்’ என்றதனால் கர்மயோகம் இன்மையையும்,
‘ஓவுதலின்றி உன்கழல் வணங்கிற்றிலேன்’ என்றதனால் பத்தியோகம் இன்மையையும் கூறினாராயிற்று.-உபலக்ஷணத்தால் ஞானயோகம் இன்மையையும் கொள்க.

கண்ணா என் பரஞ்சுடரே’ என்று ஒன்றாக்கி, ‘தாழ நின்று இவ்வடிவழகை எனக்கு முற்றூட்டு ஆக்கினவனே!’-‘பரஞ்சுடராய் உடம்பாய்’ –

——————

கூவிக் கூவிக் கொடு வினைத் தூற்றுள் நின்று
பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன்
மேவி அன்று ஆ நிரை காத்தவன் உலகம் எல்லாம்
தாவிய வம்மானை எங்கினித் தலைப் பெய்வனே 
–3-2-9-

ஒரு கால் கூப்பிட்டு பின்பு ஸ்வரூப ஞானத்தால் ஆறி இருக்க மாட்டாதே மேல் மேல் எனக் கூப்பிடுகிற படி இவர் கூப்பிட்டால் ஈஸ்வரனுக்கு கை நீட்டி எடுக்க ஒண்ணாத தூற்றிலே யாயிற்று இவர் புக்கு நிற்கிறது –மேவி அன்று ஆ நிரை காத்தவன் -ஆபத்துக்கு உதவாதானாயத் தான் படுகிறேனோ -வழி திகைத்து அலமருகின்றேன் மேவி அன்று ஆ நிரை காத்தவன்’ என்ற சொற்றொடரால்,‘காட்டிலே வழி திகைத்தார்க்கு -இடையர் -அங்கேயுள்ள ஆயர்கள்- போலே காணும் வழி காட்டுவார்’ என்று பொருளும் போதரும்.-திருத்தேர்த்தட்டிலே நின்று சகல ஆத்மாக்களும் உஜ்ஜீவிக்கும் படி சரம ஸ்லோகத்தைக் கூறி வழி காட்டியவன் அவனே யன்றோ?’-–உலகு எல்லாம் தாவிய -அது ஓரூர் அளவேயோ தப்பவுமாம்–தான் ஸ்வாமி என்னுமிடத்தை அறிவித்தவனை.-எல்லார் தலையிலும் திருவடிகளாம் படி சர்வ லோகங்களையும் அளந்த அன்று எம்மூலையிலே கிடந்தேன்-அவன் தான் வந்து அபகரித்த அன்று தப்பின நான் சாதன அனுஷ்டானம் பண்ணி எங்கே சென்று கிட்டப் புகுகிறேனோ -இனி அவனுடைய ஈஸ்வரத்வம் விகலமாக வாகாதே புகுகிறது –என்று நிராசர் ஆகிறார் –

—————-

தலைப்பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால்
அலைப்பூண் உண்ணும் அவ் வல்லல் எல்லாம்
அகலக் கலைப்பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டுகொண்டு
நிலைப்பெற்று என்னெஞ்சம் பெற்றது நீடுஉயிரே
.–3-2-10-

இவர் நசை யற்றவராய் முடியப் புக்கவளவில், ‘இவர் கிரமப் பிராப்தி -பற்றாதார் -பொறாதவர் போலும்!’ என்று நினைத்து, ‘நீர் ஒரு பெரு விடாயர் உண்டு என்றறிந்து, உமக்காக அன்றோ வடக்குத் திருமலையில் நிற்கிறோம்?’ என்று அந் நிலையைக் காட்டித் தரிப்பிக்கத் தரித்து, இனியராகிறார்.

‘அவையெல்லாம் காணக்காண விட்டுக் கடக்க நிற்க, அவற்றோடு-சஜாதீயமான – ஒத்ததான துன்பம்’ என்று எம்பார் அருளிச்செய்வர். என்றது, அவ்வோபாதி கிலேசம் – ‘அந்தத் துக்கத்தைப் போலேயிருக்கிற, பகவானைப் பிரிந்ததனால்-விஸ்லேஷத்தால் –
உண்டான துக்கமெல்லாம் இவர்க்கும் அகல’ என்றபடி.
இனி,‘பகவான் கைவிட்ட பின்னர்-பகவத் அலாபமே யான பின்பு – யமனுக்கு வஸ்யனாகையும் வந்ததேயன்றோ?-அந்த யம வஸ்யதை போம்படியாக’ என்று ஆண்டான் அருளிச்செய்வர்.

நெடுங்கை நீட்டாகப் பிரமாணங்களால் கேட்டுப் போகாதபடி கண்களுக்கு விஷயமாகக் கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவனைக் கண்டு கொண்டு.நெஞ்சும் ஒரு படி தரிக்கப் பெற்றது–உயிர் நீடு பெற்றது –அழியப் புக்க ஆத்மாவும் இப்போதாயிற்று -நித்யத்வம் -அழிவின்மையைப் பெற்றது.-நித்யமான ஆத்மாவிற்கு நாசமாவது, தாஸ்ய அசித்தி; சேஷமான பொருளுக்குச் சேஷத்துவம் நிரூபகமானால், நிரூபகத்தை யொழிய நிரூப்ய சித்தி யில்லையே’ 

———–

உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக்
குயில்கொள் சோலைத் தென்குருகூர்ச் சடகோபன்
செயிர்இல்சொல் இசைமாலை ஆயிரத்துள் இப்பத்தும்
உயிரின்மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே
.–3-2-11-

இவர் தரித்த பின்பாயிற்று அவன் எல்லா வுயிர்களையும் எல்லா உலகங்களையுமுடையவனாயிற்று;-இங்கு இவர் ஒருவரையுமே ஆயிற்று இழக்கப்புக்கது;
அங்கு ஸவிபூதிகனானவனை ஆயிற்று இழக்கப்புக்கது’ என்றபடி.-இவரைப் பெற்ற பின்பாயிற்று ஈஸ்வரத்வம் பூர்ணமாயிற்று ’பிரகாரியானவன் தரித்து,-பிரகாரரான இவரும் தரித்து,-இவர் தம்மளவேயன்றித் திருநகரியும் தரித்து,-அங்கு உண்டான சோலைகளும் தரித்து,-அங்கு உண்டான திர்யக்குகளினுடைய – பறவைகளுடைய-ஹர்ஷ ஸூசகமான த்வனியும் -மகிழ்ச்சிக்கு-அறிகுறியான ஒலியும் கேட்கும்படியாயிற்று,-நித்யமாய் ஞான ஆனந்த லக்ஷணமாய் ஈஸ்வரனுக்கு சேஷமாய் -அடிமையாயிருக்கிற ஆத்மாவையும்,-
பரிணாமி த்ரவ்யமான அசித்தையும் -வளர்தல் குறைதல் முதலிய மாறுபாடுகளையுடைய சரீரத்தையும் தன்னிலே-பந்தித்துக் – கட்டுவித்துக் கிடக்கிற அவித்தியை முதலானவைகளை வாசனையோடே போக்குவிக்கும்.-இவரோடு சம்பந்தமுடையவர்களுடைய சரீர சம்பந்தத்தை அறுத்துக் கொடுக்கும்.

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -58-கழல் தலம் ஒன்றே நிலம் முழுது ஆயிற்று –திண்ணன் வீடு -2-2-

February 27, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

தோழி தலைவன் பெருமையை கூறி தலைவியை ஆற்றுதல் -துறை இது-தோழி பாசுரம்
உலகு அளந்த அவதார பரத்வம் சொல்லும் பாசுரம் திண்ணன் வீடு -இதன் விவரணம்
உயர் திண் அணை ஓன்று -நான்கும் பர ஸ்வரூபம் சொல்லும் பதிகங்கள்
உயர் -பரத்வே பரத்வம்-திண் -விபவ பரத்வம் ஒன்றும் -அர்ச்சையில் பரத்வம்
இங்கும் அளந்த பெருமையை உரைத்து தோழி ஆற்றாமையை சமிப்பிக்கிறாள்
ஒரு திருவடியே பூமி எங்கும் வியாபித்ததே –கழல் -தலம் –-மற்ற ஓன்று போய் வளர்ந்து நிழலைக் கொடுக்க ஆகாசம் எங்கும் பூர்ணமாக வியாபித்ததே-அண்டம் எங்கும் சஞ்சரிக்கும் ஞானச் சுடர் விளக்கு -பெருமாளுக்கு -நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் –-பின்னானார் வணங்கும் சோதி
திருமூழிக் களத்து விளக்கு
-தன்னையும் காட்டி மற்ற அனைத்தையும் காட்டும்-மிகுநர் இல்லாத- ஒப்பார் மிக்கார் இலையா மா மாயன்-சம அப் யதிக ராஹித்யம் தாமரைக் கண்ணன் –-எத்தை அளக்க வந்தான் -பக்தர் திரு உள்ளத்தையா லோகங்களையா

அவதாரிகை –
கீழ் பிறந்த அவசாதம் எல்லாம் நீங்கும் படிக்கு ஈடாக – ஆஸ்ரித நாஸ்ரித விபாகம் இன்றி எல்லார் தலையிலும் பொருந்தும்படியான திருவடிகளைக் காட்டி –(தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட வெந்தாய் சேவியேன் உன்னை அல்லால் சிக்கென செங்கண்மாலே ஆவியே அமுதே என் தன் ஆர் உயிர் அனைய எந்தாய் பாவியேன் உன்னை அல்லால் பாவியேன் பாவியேனே -ஸ்ரீ திரு மாலை-35) ஆன பின்பு நமக்கு ஆகாதவர் இல்லை காணும் -என்று ஆஸ்வசிப்பித்து- இப்படி எல்லாம் செய்யச் செய்தேயும் -ஒன்றும் செய்யாதானாய் – அவன் நிற்கிறபடியைக் கண்டு  அத்தை பேசுகிறார்-தோழி தலைவன் பெருமையை யுரைத்து தலைவியை ஆற்றுதல் –

இப்படி விலக்ஷணமான ஞான பாகத்தை யுடைய இவர் ஈஸ்வரன் தம்மைத் தனக்கே யாம்படி பண்ணிக் கொள்ளுகைக்கு விளம்பம் என் என்று தளும்ப அவனுடைய ஸர்வ சக்தி யோகத்தை பிரகாசிப்பித்து
ஸூஹ்ருத்துக்கள் ஆற்றின பாசுரத்தை தன்னை வரைந்து கொள்ளாமையாலே தளர்ந்த தலைவியைக் குறித்து உன்னுடைய நாயகனான ஈஸ்வரனுக்குச் செய்யப்படாதது யுண்டோ என்று தோழி தலைவன் தலைமையை யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

கழல் தலம் ஒன்றே நில முழு தாயிற்று ஒரு கழல் போய்
நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட வண்டத்து
உழறலர் ஞான சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லா
அழறலர் தாமரைக் கண்ணன் என்னோ விங்களக்கின்றதே
– 58-தோழி தலைவன் பெருமையை கூறி தலைவியை ஆற்றுதல் –

திண்ணிதா மாறன் திருமால் பரத்துவத்தை
நண்ணி யவதாரத்தே நன்குரைத்த -வண்ணம் அறிந்து
அற்றார்கள் யாவரவர் அடிக்கே ஆங்கு அவர் பால்
உற்றாரை மேலிடா தூன்
—-12-பிரிந்தாரை கண்ணாஞ்சுழலை இடப் பண்ணும் அளவன்றிக்கே
கூடினாலும் பிரிவை மறக்கும்படி பண்ணவற்றான விஷய வைலஷண்யம் அதுக்கு ஈடான குண வைலஷண்யம் அதுக்கு அடியான சர்வேஸ்வரத்வம் இவற்றை அனுவதித்து இப்படி ப்ராசங்கிகமாக பிரஸ்துதமான சர்வேஸ்வரத்வத்தை   இதிஹாச புராண பிரக்ரியையாலே பிறரைக் குறித்து உபதேசித்துச் செல்லுகிற திண்ணன் வீட்டில் அர்த்தத்தை – திண்ணிதாம் மாறன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார்–இப்படி பரோபதேச பிரகாரத்தை அறிந்து பரத்வ ஸ்தாபகரான ஆழ்வார் இடத்திலே –அற்றுத் தீர்ந்து அனந்யார்ஹராய் இருப்பார் யாவர் சிலர் –அவர்கள் திருவடிகளுக்கு அனந்யார்ஹராய் அவ்விடத்திலே அப்படியே அவர்கள் விஷயத்தில் அந்தரங்கராய் கிட்டினவர்களை
மாம்ஸாஸ்ருகாதி மல ரூபமான தேஹம் அபி பவியாது- இத்தால் தேக சம்பந்தம் மேலிடாது -என்றபடி-

கழல் தலம் ஒன்றே நில முழு தாயிற்று – மகாபலி பக்கலில் நின்றும் திருக் கையிலே நீர் விழுந்த போதே-ஒரு திருவடிகளே பூமிப் பரப்பு அடங்கலும் போய் விளாக்குலை கொண்டது –கழல் தலம் –-பாத தலம்-(அகன்ற திருவடித் தாமரை ) ஒன்றே –அவன் வினைவும் வேண்டாதே திருவடிகள் தானே எங்கும் ஒக்க பரந்தது –ஒரு கழல் போய் –மற்றை ஒரு திருவடிகளும் போய்-நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது – அவதரித்து மீண்டும் போய் -தன்னுடை சோதியில் புக்காலும் –அவன் ஒருவன் உளன் என்று-விஸ்ரம்பித்து அவன் நிழலில் ஒதுங்கலாம் படி –யாகாசாவகாசம் -ஆகாச அவகாஸம் -உள்ளிட எங்கும் போய் பரம்பிற்று –ஒருத்தி மகனாய் பிறந்து -ஒருத்தி மகனாய் வளர்ந்து போல் இரண்டு திருவடிகளும் அத்விதீயம்–

நிழல் தர –பள்ளம் உள்ள இடம் எங்கும் வெள்ளம் பாயுமா போலே – வெளி உள்ள இடம் எங்கும் போய் வியாபித்தது –வாஸூ தேவ தருச்சாயா — எங்கும் ஒக்க வ்யாப்தமாய் இருப்பதொரு வ்ருஷத்தின் உடைய நிழல் ஆயிற்று –(ஸர்வத்ர வசதி வாஸூதேவ -எங்கும் ஓக்க வியாபிக்க இந்தப் பத பிரயோகம் )–நாதி சீதா -இத்யாதி –மிக வெப்பதும் செய்யாதே – மிக வவ்வ விடுவதும் செய்யாதே – நரகம் ஆகிற பெரு நெருப்பையும் விலக்கவற்று–சாகிமர்த்தம் ந சேவ்யதே – –இந் நிழலுக்கு புறம்பாய் இருப்பதொரு நிழல் உண்டாய் அங்கே ஒதுங்கவோ – இது நன்று அல்ல என்னவோ – இதின் உள்ளே இருந்த அநிச்சையை சொல்லும் இத்தனை –(தாழ்ச்சி மற்று எங்கும் -உனது திருவடி நிழலே வாழ்ச்சி -நம்மாழ்வார் ) –(திருமால் இரும் சோலை எந்தாய் -உன் பாத நிழல் அல்லால்  மற்றோர் இருப்பிடம்
நான் எங்கும் காண்கின்றிலேன் 
– பெரியாழ்வார் ) ஆஸ்ரித ரஷகனுமாய் –ஆஸ்ரித விரோதி நிரசகனுமாய் இருக்கையாலே –உன் திருவடிகளின் நிழல் ஒழிய வேறு எனக்கு ஒதுங்கலாவது  ஒரு நிழல்  கண்டிலேன் –ஆஸ்ரித ரஷகனுமாய் –ஆஸ்ரித விரோதி நிரசகனுமாய் இருக்கையாலே –உன் திருவடிகளின் நிழல் ஒழிய வேறு எனக்கு ஒதுங்கலாவது  ஒரு நிழல்  கண்டிலேன் –

நிவாச வ்ருஷ ஸாதூநாம் ஆபன்நாநாம் ஆர்த்தா நாம் யசஸ் சஸ்ஸ ஏக பாஜனம்—-இத்யாதி (தாரை வார்த்தை )-நிவாச வ்ருஷ ஸாதூநாம்--வாலிக்கு சுக்ரீவனோடு நீ விரோதிக்கை கார்யம் அல்ல காண்- அங்கத பெருமாள் காட்டிலே விளையாட போன இடத்தில் அவனுக்கு ஓர் அபாஸ்ர்யம் உண்டாக-கேட்டு வந்து சொன்னான் காண் -என்ன–அபாஸ்ர்யம் ஆகிறவர் தாம் யார் -என்ன –பெருமாள்-என்றாள் –ஆனால் அவர் பின்னை நமக்கு அபாஸ்ர்யம் ஆக மாட்டாரோ-என்ன – சொல்லுகிறாள்–நிவாச வ்ருஷ ஸாதூநாம் இந் நிழலிலே ஒதுங்குவோம் என்பாருக்கு நிழலாய் காண் இருப்பது –பூவாயும்-பழமாயும்  -நிழலாயும்- தான் வெய்யிலை சுமந்தும் -பிறர்க்கு இடம் கொடுத்தும் -தன் கீழே இருந்து தன்னை அழியச்  செய்ய நினைப்பார்க்கு பல பிரதமாயும் – இவை எல்லாம் உண்டு இறே-அதுக்கு –(வாஸம் மட்டும் அல்லவே-நிவாஸம் அன்றோ என்பதுக்கு வியாக்யானம் -கல்லடி பட்டாலும் பழத்தைக் கொடுக்கும் )நான் தான் அவர்க்கும் ஏதேனும் அநிஷ்டம் உண்டோ – செய்தது நமக்கு நிழலாக ஒதுங்கத் தட்டு என் -என்ன –ஆபன்நாநாம் –ஒதுங்கோம் என்னாமை போராது காண் –   ஆபன் நராகவும் வேணும் காண் –நான் தான் ஆபன்னன் அன்றோ –உடன் பிறந்தான் சத்ருவாம்படி அன்றோ நம்முடைய நிலை -என்ன –ஆர்த்தா நாம் – ஆபன் நராக இருக்கவே அமையாது காண் –ஆபத்தை இசையவும் வேணும் காண் –நமக்கு ஒரு ரஷகன்  வேணும் என்று இருக்க வேணும் காண் என்ன –இவர் அவனுக்கே புகலாய்–புகவாய் நின்றாகில் நமக்கு இப்படி இருப்பான் ஒரு அபாஸ்ரயத்தை தேடிக் கொள்கிறோம் -என்ன–யசஸ் சஸ்ஸ ஏக பாஜனம்–இனி இங்கன் இருப்பதொரு நிழல் இல்லை காண் ஒதுங்க –நாலு வகையாலே மூன்று அதிகாரிகளை ஸ்ரீ கீதையிலே சொல்லிற்று இறே அவர்களை சொல்லுகிற  இதில் ஒரு ஸ்திரீ வசனமாய் இருக்க இதுக்கு இத்தனை கருத்து-உண்டாக வற்றோ என்னில் – வேத உப ப்ருஹ்மண அர்த்தமாக பிரவ்ருதமான ப்ரபந்தம்-ஆகையாலே – கோல் விழுக்காடாலே அவையும் சம்பவிக்கும் இறே –ஏக பக்திர் விசிஷ்யதே –என்கிற ஞானியை சொல்கிறதாய்- முந்துற சம்சாரத்தில் நொந்து –   பிரகிருதி-சம்பந்தத்தை அறுத்து கொள்ள வேணும் என்று இருக்கிற ஆத்ம ப்ராப்தி காமனையாய்-அநந்தரம்–பிரஷ்ட ஐஸ்வர்ய காமனையாய்    – இது பிரதமமாக ஐஸ்வர்யத்தை பெற இருக்கும்-அவனுக்கும் உப லஷணமாய் இருக்கிறது –நிவாச வ்ருஷ ஸாதூநாம் ஆபன்நாநாம் ஆர்த்தா நாம் யசஸ் சஸ்ஸ ஏக பாஜனம்—-இத்யாதி (தாரை வார்த்தை )–இதிலும் அதிகாரி பேதங்களுக்கு பலம் சொல்லிற்றே–ஞானி சாதுக்களுக்கு நிவாஸ மாகவும்–ஆபன்னானாம் கைவல்ய பரர்–ஆர்த்தா நாம் -இழந்த ஐஸ்வர்யம் -பிரஷ்ட ஐஸ்வர்யா காமர் இருவரையும் சொன்னபடி -அனைவருக்கும் -பராம் கதி —

நீண்ட வந்ததது உழறலர் ஞான சுடர் விளக்காய் –பரப்பை உடைத்தான அண்டத்தை அடைய புக்குழருகையாலே விகசிதமாய் இருந்துள்ள ஞானம் ஆகிற பிரகாசம் ரூபம் ஆகிய தீபத்தை உடையவனாய் – எல்லார் தலை மேலேயும் திருவடிகளை வைத்து –தன் பேறாய்- அத்தால் வந்த அலப்ய லாபத்தாலே  சஹஜ சார்வஜ்ஞமும் விகசிதம் ஆயிற்று –உயர்ந்தோரை இல்லா – ப்ரஹ்மாதிகளும் திருவடிகளின் கீழே அகப்படுகையாலே – நான் -என்பார் இல்லை யாயிற்று –-அழறலர் தாமரைக் கண்ணன்--அழற்றிலே  நின்று அலர்ந்த தாமரைப் பூ போலே இருந்த உள்ள திருக் கண்களை உடையவன் –-தச்யதா கப்யாசம் புண்டரீகம் மேவ அஷணீ -என்னக் கடவது இறே–என்னோ விங்களக்கின்றதே ––அளந்தால் வரும் விகாசம் காணா நின்றோம் இறே–அளக்கைக்கு ஓர் அவகாசம் காண்கிறிலோம்–நின்ற நிலையிலே நின்றாரை -அளந்தார் -என்ன ஒண்ணாது இறே–அடி மாறி இடில் இறே அளந்தது ஆவது –-இவன் இங்கு அளந்தானாக ஒன்றும் காண்கிறிலோம்  என்னுதல்  –அன்றிக்கே நிர்ஹேதுகமாக எல்லார் தலையிலும் திருவடிகளை வைக்கச் செய்தே ஒன்றும் செய்யாதால் போல் இன்னமும் பாரியா நின்றான் –என் செய்யாதானாய் திரு உள்ளத்தால் இங்கன் பாரிக்கிறது –என்னோ விங்களக்கின்றதே –கால் பெருத்து போலி சிறுத்தாலும் அளப்பார் உண்டோ-மரக்கால் பெருத்து நெல் அல்பமானால் அளப்பார் உண்டோ–ரஷ்ய வர்க்கம் சுருங்கி ரஷகன் பாரிப்பே விஞ்சி இருக்கிறது என்றபடி-

ஸாதூநாம் ஞானியை சொல்லுகிறது–ஆபன் நானம் கேவலரை-ஆர்த்தானாம் த்ரிவித ஐஸ்வர்யார்த்திகளைச்  சொல்லுகிறது–ஆழ்வாரை கண்ட ப்ரீதி அளந்த அன்றையில் ப்ரீதி போலே இருந்தது என்றபடி–அன்றிக்கே என்னை விஷயீகரித்த பின்பும் வேறு ஒரு விஷயம் உண்டோ  –வியலிடம் என்கிற பாட்டில் –குண ஞானத்தினாலே தரிக்கை யாகிற-சம்ஸ்லேஷம் ப்ரவ்ருத்தம் ஆகையாலே –-தானான தன்மை பிறந்து –அந்த குணம் தானும் சௌசீல்யம் ஆகையாலே-
அத்தை இப் பாட்டில் அருளிச் செய்கிறார் என்று சங்கதி உட் கொண்டு அருளிச் செய்கிறார் –
கீழ் -இத்யாதி -அவசாதம் எல்லாம் என்றது -இனி இதுக்கு அவ்வருகு இல்லை என்னும்படி –1- பண்டும் பல பல வில் பட்ட வியசனம் என்ன–2-மலை கொண்டு என்றதில் கார்ச்யம் என்ன—3-வர்ஷா காலத்தில் வந்த கிலேசம் என்ன–4-வாராயின முலையாளில் மோஹம் என்ன –5-வீசும் சிறகாலில் தூஷ ப்ரேஷ்ணம் என்ன -இவை எல்லாம் என்றபடி –விளாக்குலை கொண்டது –வியாபித்தது–பூவாயும் இத்யாதி –பூ -போக்கியம் –பழம்- தாரகம் – நிழல் -போஷகம்

சர்வ சக்தன் அன்றோ -அவன் பிரதிபந்தகங்கள் எவ்வளவு இருந்தாலும் அவற்றை களைந்து
சம்ச்லேஷிக்க விரைந்து வருவான் என்று தோழி சொல்லி தலைவியை ஆற்றுகிறாள் –தாமரைக் கண்ணன் என்னோ விங்களக்கின்றதே -என்ன ஆச்சர்யம் -என்றும் எப்படி பொருந்தும் என்றுமாம் –
அளந்தால் வரும் விகாசம் காணா நின்றோம் இறே–அளக்கைக்கு ஓர் அவகாசம் காண்கிறிலோம்
நின்ற நிலையிலே நின்றாரை -அளந்தார் -என்ன ஒண்ணாது இறே–அடிமாறி இடில் இறே அளந்தது ஆவது –இவன் இங்கு அளந்தானாக ஒன்றும் காண்கிறிலோம் என்னுதல்–நீண்ட வண்டத்து உள்ளவன் -மேலும்–உழறலர் ஞான சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லாதவன் -அழறலர் தாமரைக் கண்ணனாய் இருப்பவன் ––அழறலர் தாமரை-பங்கஜம் -சேற்றுத் தாமரை -நீர் நிலையிலே இருந்து அலர்ந்து செவ்வி குன்றாத இருக்கும் தாமரை போன்ற திருக் கண்கள்–

கழல் தலம் ஒன்றே நில முழு தாயிற்று-ஒரு அடித் தலமே பூமி அடையாத தானாயிற்று–ஒரு கழல் போய்–ஒரு திருவடி பூமியில் இடம் இல்லாமையாலே போய்–நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது
சேஷத்வமாகிற நிழலைக் கொடுக்கைக்காக ஊர்த்வ லோகம் எல்லாவற்றிலும் நிறைந்தது-ஈஸ்வரரான ப்ரஹ்ம ருத்ரர்களும் –ஒருவன் திருவடியை விளக்க – ஒருவன் தீர்த்தத்தைச் சுமக்கும் படியான நிழலை இறே அவர்களுக்குள் கொடுத்தது–நீண்ட வண்டத்து-அபரிச்சின்னமாய் பரம ஆகாஸ ஸப்த வாஸ்யமான பரமபதத்திலே–உழறலர் ஞான சுடர் விளக்காய்-உழன்று சஞ்சரிப்பதால் அலர்ந்து விகஸிதமான ஞானமாகிய சுடருக்கு ஆஸ்ரயமான விளக்காய்–இத்தாலே-ஈஸ்வரனுடைய ஞானமும்
அஃதே கொண்டு எல்லாக் கருமங்களை செய் –திருவாய் -4-1-8-என்கிற கணக்கிலே ஸகல வியாபார மூலமாய் ஸர்வத்ர விகஸிதமாய் இருக்கும் என்றும் ஆஸ்ரயமான ஸ்வரூபமும் ஸ்வயம் ப்ரகாசமாய் இருக்கும் என்றும் சொல்லிற்று ஆயிற்று–உயர்ந்தோரே இல்லா–தன்னில் உயர்ந்தவர்களை உடையவன் அல்லாதவன்–இத்தாலே–உயர்வற உயர்நலம் யுடையவன் –1-1-1- என்னும்படி-ஆனந்த வல்லி ப்ரக்ரியையாலே சத குண உத்தரிதமாய் வளர்ந்து வளர்ந்து-யதோ வாசோ நிவர்த்தந்தே -தைத்ரியம் என்கிறபடியே வாக்குக்கும் மனஸ்ஸுக்கும் நிலம் அல்லாத ஆனந்தத்தை யுடையவன் என்றபடி–அழறலர் தாமரைக் கண்ணன்— இந்த ஆனந்தத்துக்குப் ப்ரகாசகமான கண்ணழகை யுடையவன்-அழறு என்று அளறு நீரிலும் சேற்றிலும் நின்று வளர்ந்து செவ்வி மாறாத தாமரை போன்ற கண்ணை யுடையவன் என்றபடி–என்னோ விங்களக்கின்றதே-இப்படி நித்ய விபூதி லோகத்தையும்
நிரதிசய ஞான ஆனந்த யோகத்தையும் விலக்ஷண விக்ரஹ யோகத்தையும் யுடையவன் ஒரு திருவடியாலே பூமியை அநந்யார்ஹமாக்கி ஒரு திருவடியாலே ஊர்த்வ லோகத்தைக் கீழ்ப்படுத்திக் கொண்டவனுக்கு இவ் விபூதியில் அளக்க வேண்டுவது உண்டோ–அளப்பது நின்ற இடம் ஒழிய மாறி இட வேண்டும் இடம் யுண்டாகில் இறே நிலமும் விசும்பும் இரண்டு திருவடிகளுக்கு இடமாயின இத்தனையே இறே -என்று அவன் பெருமை உரைத்தாள் ஆயிற்று –இத்தால்-விலக்ஷணமான ஸ்வரூப ரூப குண விபூதியை யுடைய ஸர்வேஸ்வரன் த்ரைவிக்ரம அபதானத்தாலே ஸமஸ்த விபூதிகளையும் தனக்கே யாக்கினால் போலே தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே -திருவாய் -2-9-4- என்று உம்முடைய அபேக்ஷைக்கு ஈடாகக் கொண்டு அருளக் குறையில்லை என்று அவனுடைய ஸம்பந்தத்தையும் ஸக்தியையும் பிரகாசிப்பித்து ஆஸ்வஸிப்பித்தாராயிற்று –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-விபூதி த்வய வ்யாப்த ஞான ப்ரபர் அநேகர் உளர்–இப்படிக் கொத்தவன்
அழறலர் தாமரைக் கண்ணன்-அதிகர்தம ஸூத்த ஜவாப்த் யுத்பூத ரவி கர விகஸித தாமரை போன்ற
கண்ணுள்ள கண்ணன் அழறு -சேறு–என்னோ விங்களக்கின்றதே – எந்தப் பிரகாரமாக இங்கு அளந்தானோ-அளப்பது நின்ற இடம் ஒழியவாம் நிலமும் விசும்பும் இரண்டும் திருவடிகளுக்கு இடமான வித்தனை –ஸ்ருதியும் த்ரிணீ பாத்தா வி சக்ரமே -ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம் என்றது –இவன் எங்கனே மூட்டியோ தாள் அளந்தான் சொல்லாய் நீ தான் தோழி –

ஸ்வாபதேசம் —
பாகவதர்கள் ஆழ்வாரை தேற்றுகிறார்கள் -சர்வ சக்தனைப் பற்றி சொல்லி-த்ரிவிக்ரமனாக உடைமையை உடையவன் சேர்த்துக் கொள்வான் –சம்பந்தம் சக்தி விசேஷங்களை-எடுத்துக் கூறி ஆழ்வாருடைய ஆற்றாமையை தணித்தனர்-

தாத்பர்யம் –
கீழ் பகவத் குண அனுசந்தானம் ஆகிற பகவத் சம்ஸ்லேஷத்தை பெற்று – ஆற்றாமை-நீங்கி -தாமான நிலையில் இருந்து –அவனுடைய சீலாதி குணங்களைப் பேசுகிறார் இப்பாட்டில்–த்ரி விக்கிரம அவதாரத்தில் ஆஸ்ரிதர் அநாஸ்ரிதர் என்றும் பாராமல் சகல பிராணிகள் உஜ்ஜீவிப்பைக்காகாக
அவர்கள் தலையில் திருவடி படும் படி -ஓர் திருவடியினால் பூமியை அளந்தான் –இத் திருவடி சேஷி என்றும் – நாம் சேஷ பூதர் என்றும் எல்லாரும் அறிக்கைக்காகவும் – தன் திருவடி கீழே  சம்சார ஆபத்தரான இவர்களை அகப்படுத்தி -ஆஸ்வசிப்பைக்காகாவும்–மற்று ஒரு திருவடியை ஆகாசத்திலே தூக்கி -அவ் ஆகாசத்தை அளந்தான் –இப்படி சர்வஞ்ஞனாய் –பராத் பரனான புண்டரீ காஷன் – இவ் விபூதியிலே சேர்ந்த என்னையும்-முன்னமே அளந்து இருக்க இப்போது அத் திரிவிக்கிரம அவதாரத்தை எனக்கு பிரகாசிப்பத்தது – மறுபடியும் எதை அளைக்கைக்காவோ தெரிய வில்லை –

2-2-திண்ணன் வீடு -பிரவேசம் –

கீழ் திருவாய்மொழியில், இவருக்குப் பிறந்த ஆற்றாமை, பேச்சுக்கு நிலம் இல்லாததாய் இருந்தமையின்,
‘கடல் வெதும்பினால் விளாவ நீரில்லை’ என்னுமாறு போன்று, ஆற்றாமையோட முடிந்து போமித்தனை என்று இருந்தார்.
பின்னர், அவன் வந்து முகங்காட்டினவாறே ஆற்றாமை புக்க இடம் கண்டிலர்;
‘இதற்கு அடி என்?’ என்று பார்த்து ஆராய்ந்தவாறே,
இதர – மற்றைப் பொருள்களினுடைய பேறு இழவுகளில் அளவு அல்லாத-விஷய வை லக்ஷண்யம் –
இறைவனுடைய வேறுபட்ட சிறப்பாய் இருந்தது;
அதாவது, பிரிந்த போது தன்னை ஒழிய வேறொன்று தோன்றாதபடியாய்,
கலந்து போதும் தன்னை ஒழிய வேறொன்று தோன்றாதபடியான இறைவனுடைய வைலக்ஷண்யமாய் இருந்தது என்றபடி.

‘இது தனக்கு அடி என்?’ என்று பார்த்தவாறே,
ஸமஸ்த கல்யாண குணாத்மகனாகையாலே -எல்லா நற்குணங்களையும் உருவமாக உடையவனாகையாலேயாய் இருந்தது;
இது தனக்கு அடி என்?’ என்று பார்த்தவாறே, சர்வேஸ்வரன் ஆகையாலே இருந்தது.
‘ஆயின், சமஸ்த கல்யாண குணாத்மகனாய் இருப்பின், சர்வேஸ்வரனாயும், இருத்தல் வேண்டுமோ?’ எனின்,
‘உயர்வற உயர் நலம் உடையவன்’ என்றால், ‘அயர்வறும் அமரர்கள் அதிபதி’ என்றே தோன்றுமாதலின்,
எல்லா நலமும் உடையவனே அமரர்கள் அதிபதியாயும் இருத்தல் வேண்டும்.
ஆக, இவ்வகையில் ஒன்றைப்பற்றி ஒன்றாக-அத்விதீயமான – இடத்திற்கு ஏற்பத் தோன்றிய -பரத்வத்தை
இறைமைத் தன்மையினை அருளிச் செய்கிறார்.இத்திருவாய்மொழியில்.

இது வரை ப்ராசங்கிக சங்கதி -இனி சாஷாத் சங்கதி –
ஈஸ்வரன் சாத்ம்ய போக ப்ரதனாகையாலே-முதலில் தன்னுடைய ஈச்வரத்வத்தை அனுபவிப்பித்து
மேலே -2-3-ஊனில் வாழ் உயிரிலே தன்னை அனுபவிப்பிக்கிறான்
வைலக்ஷண்யத்துக்கு அடி குணங்கள் என்ற இடத்து -தாந்தைஸ் சர்வ பிரஜா காந்தை ப்ரீதி சஞ்சநைந பிதுர் குணைர்
விருருசே ராமோ தீப்தஸ் ஸூர்ய இவாம்ஸூபி -என்றது சம்வாதமாகக் கண்டு கொள்வது
இத்யாதிகளால் பெருமாள் குணங்களைச் சொல்லிக் கொடு போந்து-
ச ஹி தேவைர் உதீர்ணஸ்ய ராவணஸ்ய வாதார்த்திபி -அர்த்திதோ மானுஷே லோகே ஜஜ்ஜே
விஷ்ணுஸ் சனாதன -இத்யாதியாலே ஈஸ்வரத்வம் சொல்லிற்றே

இனி, ‘கீழ் திருவாய்மொழியின் ஈற்றில், ‘மூவா முதல்வா’ என்றார்;
அங்கு ‘முதல்வா’ என்றதனால் தோன்றிய முதன்மையினை – காரணத்வத்தை –
இத்திருவாய்மொழியில் விரித்து அருளிச்செய்கிறார்,’ என்று பணிப்பர் திருக்குருகைப்பிரான் பிள்ளான்.

‘ஆயின், முதல்  திருவாய்மொழியிலும் சர்வேஸ்வரனாந் தன்மையினை அருளிச் செய்தனரே?’ எனின்,
‘ஒருகால் சொன்னோம்’ என்று கைவாங்கி இருக்க வல்லர் அல்லர் இவர்;
ஒருகால் சொல்லிற்று என்று கைவாங்கி இருக்கலாம் விஷயம் அல்லன் அவன்,
இனி, பகவத் விஷயத்தில் கூறியது -புநர் யுக்தி தோஷம் -கூறல் என்ற குற்றமும் ஆகாது.
‘யாங்ஙனம்?’ எனின், ஒரு குணத்தையே எல்லாக்காலமும் அநுபவிக்க வல்லார் ஒருவர் இவர்;
ஒரு குணந்தன்னையே ‘இதற்கு முன்பு அநுபவிப்பித்தது இக்குணம்’ என்று தோன்றாதபடி
ஷணந்தோறும் புதுமை பிறப்பித்து அநுபவிப்பிக்க வல்லான் ஒருவன் அவன்.
‘ஆயின் ‘ஷணந்தோறும் புதுமை தோன்றுமோ?’ எனின்,
பயிலா நிற்கச் செய்தே ‘பண்டு இவரைக் கண்டு அறிவது எவ்வூரில் யாம் என்றே பயில்கின்றாளால்’ என்றார் திருமங்கை மன்னன்;
‘எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழிதொறும், அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதம்’ என்றார் இவர் தாமும்.
ஆகையாலே அன்றோ, ஒரு பொருளே நித்தியப் பிராப்யம் ஆகிறது?

ப்ரஸம்ஸாயாம் ப்ரதிஞ்ஞாயாம் ப்ரலாபே தர்ஜனே அபி வா பயே ச விஸ்மயே சைவ பவ்ன புந்ய மலங்க்ருதி -என்றபடி
பகவத் பரத்வ ப்ரதிஞ்ஜை யாகையாலே புநர் யுக்தி தோஷம் இல்லை
அனுபாவ்யத்தினுடைய ரஸ்யதையாலே
-அனுபவ ஜெனித ப்ரீதியாலே – பின்னையும் பின்னையும் சொல்லப் பண்ணும் இறே
இவர் ஆராத காதலை யுடையவர் ஆகையால் -2-1-11–கை வாங்கி இருக்குமவர் அல்லர்
ஆக உபதேஷ்ட்ரு ஸ்வபாவத்தாலும் உபதேஸ்ய ஸ்வபாவத்தாலும் -அனுபாவ்ய ஸ்வபாவத்தாலும் -அனுபவித்ரு ஸ்வபாவத்தாலும் –
அனுபாவயித்ரு ஸ்வபாவத்தாலும் புநர் யுக்தி தோஷாவாயன்று -என்கிறார்
நித்ய அபூர்வமான விஷயம் -பயில்கின்றாளால் -என்றது கண்டாயே -வர்த்தமான அர்த்தம்

ஆயினும், முதல் திருவாய்மொழிக்கும், இத்திருவாய் மொழிக்கும் வேற்றுமையும் உண்டு;
1-முதல் திருவாய்மொழியில் கூறிய பரத்துவம், ஸ்வாநுபவமாய் இருக்கும்;
இங்கு, அந்தப் பரத்துவந்தன்னை எல்லாரும் அநுபவிக்கலாம்படி பிறர் நெஞ்சிலே படுத்துகிறார் ஆகையாலே பரோபதேசமாய் இருக்கும்.
2-அங்கு அன்வய – விதி முகத்தால் பரத்துவத்தை அருளிச்செய்தார்;
இங்கு அன்வய -விதிமுகம்-வ்யதிரேக – மறைமுகம் என்னும் இரண்டாலும் பரத்துவம் சொல்லுகிறார்.
நம் கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே —
3-அங்கு, சுருதிச் சாயையாலே பரத்துவஞ் சொன்னார்; இங்கு, இதிகாச புராணங்கள் மூலமாகப் பரத்துவஞ்சொல்லுகிறார்.
கிருஷ்ண ஏவ ஹி லோகாநாம் உத்பத்திர் அபி சாப்யய -என்றும் –
மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்-என்றும் உண்டே
4-அங்கு, பரத்வத்திலே பரத்வம் -முதன்மையில் முதன்மை; இங்கு அவதாரங்களில் பரத்வம் -முதன்மை

இரண்டாம் திருவாய் மொழியில் -கீழ் யுக்தமான போக்யத்வத்தினுடைய நிரதிசயத்தவாபாதகமாய் –மா வாய் பிளந்து –2–1–10-என்று தொடங்கி –
1-கீழ் ப்ரக்ருதமான ஸுலபயத்துக்கும் ஸ்வாமித்வத்துக்கும் ப்ரகாசகமான மனுஷ்யத்வே பரத்வத்துக்கு உபபாதகமான அவதார தசையிலும் அவனுடைய சர்வ நிர்வாஹகத்வத்தையும் —
2-அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி ஹேதுத்வத்தையும் -3-சர்வாதிகாத்தவத்தையும் -4-சர்வ பிரகார சமாராத்யதையும்–5-ஆதிக்ய ஸூசகமான புண்டரீகாக்ஷத்வத்தையும் –
6-ஆஸ்ரித ரேஷன் அர்த்தமான அர்ணவ ஸாயித்வத்தையும் -7-அகடிதகடநா சாமர்த்யத்தையும் -8-சர்வ பிரகார ரக்ஷகத்வத்தையும் -9-ஜெகஜ் ஜென்மாதி ஹேதுத்வத்தையும் –
10-சர்வ தேவதா ஸமாச்ரயணீயத்வத்தையும் –
அருளிச் செய்து -சர்வ ஸ்மாத் பரனாய் -சர்வ ஸூலபனான் ஈஸ்வரனுடைய போக்யத்வ வர்த்தமான உத்துங்க லலிதத்வத்தை உபபாதிக்கிறார் –

முதற்பாட்டில், மேல் பரக்க அருளிச் செய்கிற இத்திருவாய் மொழியின் அர்த்தத்தைத் தொகுத்து -ஸங்க்ரஹேன -அருளிச்செய்தார்.
இரண்டாம் பாசுரம் முதல்,
துக்கத்தைப் போக்குமவன்-நிவர்த்தகன் – ஆதலானும்,
சீலவான் ஆதலானும்,
ஸூகுமாரன் ஆதலானும், புண்டரீகாக்ஷன் -தாமரைக்கண்ணன் ஆதலானும்,
ஆபத்சகன் ஆகையானும்,
அகடிதகடநா சமர்த்தன் ஆதலானும், ஸ்ருஷ்ட்டி ஸ்திதிகளை -படைத்தல் காத்தல்களைச் செய்கையாலும், அழித்தலைச் செய்கையாலும்,
ஈஸ்வர அபிமானிகளாய் இருக்கிறவர்களுடைய ஸ்துதிகள் முதலியவைகளாலும்,
இப்படிப் பல வகைகளாலே அவனுடைய பரத்துவத்தை அருளிச் செய்து, இது கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக் கட்டினார்.

திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்
கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே 
–2-2-1- 

இது திருவாய் மொழியில் சொல்லுகிற பரத்வத்தை சங்க்ரஹேண -ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் பிரளய ஆபத் சகனான கிருஷ்ணனே ஈஸ்வரன்-என்கிறார் –எண்ணின் மீதியன் –எல்லை இல்லாத கல்யாண குணங்களையுடையவன்.-எண்ணுக்கும் மேற்பட்ட மோக்ஷம் முதலான உலகங்களை உடையவன்’ -முழுதுமாய் -சாலோக்ய சாரூப்ய சாமீப்ய சாயுஜ்ய பேத பின்ன சகல வித மோக்ஷ ப்ரதன்-காத்தல் அவனுக்குத்  தாரகமாகையாலே  ‘உண்ட’ என்கிறார்; இன்றேல், ‘காக்கும்’ என்ன அமையும்.நம்-கண்ணன்-என்று ரக்ஷகத்வ பிரசித்தியை சொல்லுகிறது-

‘நம் கண்ணன் கண்’ என்கையாலே அன்வய -விதி-முகத்தால் பரத்துவமும்,
‘அல்லது இல்லை’ என்கையாலே வ்யதிரேக- மறை-முகத்தாலே பரத்துவமும் அருளிச் செய்தார்.  
‘எல்லாம் உடன் உண்ட நம் கண்ணன்’ என்றது,அன்வய – விதி-முகத்தாற் கூறியது.
அல்லது இல்லை ஓர் கண்’ என்றது -வ்யதிரேக -மறைமுகத்தாற்கூறியது.

———–

ஏ பாவம் பரமே யேழு லகும்
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பாரார்
மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்
கோபால கோளரி யேறன்றியே
 –2-2-2-

அல்லது இல்லை’ என்று நீர் சொல்லுவான் என்? ப்ரஹ்ம ருத்ரர்களும் இறையவர்களாகப் பேசப்படுகின்ற பிரமாணங்களும் சில இருக்கின்றனவே?’ எனின்,
‘அவர்கள் நிலையினை ஆராய்ந்தால், தலை அறுப்பாரும் தலை அறுப்புண்டு நிற்பாருமாக இருக்கிறார்கள்;-கர்ம வஸ்யரை ஈஸ்வரராக சொல்ல ஒண்ணாது இறே-அவர்கள் ஆபத்தினைப் போக்கிக் காத்தளிக்கின்றான்-ரக்ஷிக்கிறவன் இவன்;-அவர்களோ, இவனோ சர்வேஸ்வரன்?’ என்கிறார்-அவன் -சர்வ விஷயமாகப் பண்ணின ரக்ஷணம் -எல்லாப் பொருள்களையும் காக்கின்ற தன்மை-கிடக்கக்கிடீர் – நிற்க; 
தந்தாம் காலைத் தாம்தாம் நீட்டி முடக்க வல்லராய் இருக்கிறவர்களும் ஓரோர் அளவுகளிலே-ஆபன்னரானால் –ஆபத்தை அடைவர்களாயின், அவற்றைப் போக்கிக் காக்கும்படியைப் பார்க்கலாகாதோ?’ -துக்கத்தைப் போக்கியது அங்கே இங்கே தோன்றித் திரிகிற இடத்திலே என்பார், ‘கோபாலன்’ என்கிறார்.
இதனால், இவர்கள் எத்துணை உயர நிற்பினும் கேட்டினையே சூழ்த்துக் கொள்ளுவார்கள் என்பதும்,-இறைவன் எத்துணைத் தன்னைத் தாழ விட்டாலும் காப்பாற்றுமவனாம் என்பதும் சொல்லப்பட்டன.-கோபால கோள் அரி ஏறு –-கோபாலருடைய மிடுக்கையுடைத்தான ஆண் சிங்கம்.-கோள் – வலிமை.

———-

ஏறனைப் பூவனைப் பூ மகள் தன்னை
வேறின்றி விண் தொழத் தன்னுள் வைத்து
மேறன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட
மாறனில் மிக்குமோர் தேவுமுளதே
–2-2-3-

ஏறனை –சர்வேஸ்வரன் ‘கருட வாகனன்’ என்று இறுமாந்து இருக்குமாறு போன்று,
ஓர் எருத்தைத் தேடிக் கைக்கொள் ஆண்டிகளைப் போன்று இறுமாந்து இருப்பவன்.பூவனை –‘திருநாபிக் கமலத்தில்-அவ்யவதாநேந- நேரே பிறந்தவன் அன்றோ?’ என்று இறுமாந்து இருக்கும் நான்முகன்.-

ப்ரஹ்மாதிகள் -‘பிரமன் முதலானோர் எப்போதும் திருமேனியைப் பற்றி இருப்பார்களோ?’ என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க,  ‘ஒரோ ஆபத்துகளிலே திருமேனியிலே இடங்கொடுக்கிறான்; அந் நீர்மையை விட மாட்டாமையாலே ஆழ்வார்கள் அதனையே வாய் புலற்றுகிறார்களத்தனை’ என்று அருளிச் செய்தார். ஓர் தேவும் உளதே –
ஒக்கப் பரிமாறாநிற்க, ‘கட்டக்குடி’ என்று கழிக்கலாம் தெய்வந்தான் உண்டோ?
‘எல்லார் தலைகளிலும் காலை வைத்தவனை ‘ஈஸ்வரன்’ என்னவோ,
இவன் காலிலே துகையுண்டவர்களை ‘ஈஸ்வரர்கள்’ என்னவோ?’

————

தேவும் எப்பொருளும் படைக்க
பூவில் நான்முகனைப் படைத்த
தேவன் எம்பெருமானுக்கு அல்லால்
பூவும் பூசனையும் தகுமே 
–2–2-4–

பூவுக்கு ஈடான ஸுகுமார்யமும் பூஜைக்கு ஈடான ப்ராதான்யமும் அவனை ஒழிய வேறு ஒரு வியக்தியிலே இல்லாமையால் இவனே ஈஸ்வரன்-ஒரு பூவில்-உந்தித் தாமரை- நான்கு பூக்கள் பூத்தாற் போன்று நான்கு முகங்களையுடைய பிரமனை உண்டாக்கினவன்.-சிக்குத் தலையனுக்குப் பூத்தகாது; பிச்சை உண்ணிக்குப் பூசனை தகாது;

அல்லது இல்லை ஒரு கண்ணே’ என்றும்,
‘கோள அரியேறு அன்றி அருளால் அளிப்பார் ஆர்’ என்றும், 
‘மால்தனில் மிக்குமோர் தேவும் உளதே?’ என்றும்,
‘பூவும் பூசனையுந் தகுமோ?’ என்றும்
தாமரைக் கண்ணன் எம்மான் மிகும் ஜோதி மேல் அறிவார் யவரே என்றும்
அவ் வைராக்கியத்தையே அருளிச் செய்தார்.-ஆகையால் ஞானத்தில் காட்டில் இதர விஷயத்தில் சரக்கு அறுகை யாகிற வைராக்யம் ஸ்ரேஷ்டம் 

————-

தகும் சீர்த் தனி முதலினுள்ளே
மிகும் தேவும் எப்பொருளும் படைக்க
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்
மிகும் சோதி மேலறிவார் யவரே 
–2-2-5-

புண்டரீகாக்ஷனாகையாலும் – இவனே ஈஸ்வரன் ,-தகும் அம்மான் -படைக்கத் தகும் தாமரைக் கண்ணன் -தகுகைக்கு ப்ரகாசகங்கள் திருக்கண்கள்-எம்பெருமானுடைய திருமேனியின் அழகு ஒருவர்க்கு நினைக்க நிலமோ –

—————

யவரும் யாவையும் எல்லாப் பொருளும்
கவர்வின்றித் தன்னுள் ஒடுங்க நின்ற
பவர்கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி
அவர் எம் ஆழியம் பள்ளியாரே
 –2-2-6-

ஆபத் சகனாகையாலும் இவனே ஈஸ்வரன்-கவர்வு இன்றி –-கவர்கையாவது-க்ரஹிக்கை – பற்றுகை:அதாவது,-ஹிம்சையாய் – துன்பமாய் ஒருவரை ஒருவர் நெருக்காதபடி.-பவர் கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி அவர் – இவர்களைக் காப்பதற்கு-ரஷிப்பதற்கு- உறுப்பான பரம்பின ஞான வெள்ளத்தை யுடையனாய்.-இப்படிக் காக்கப் பெற்ற இடம் தன் பேறு என்று தோன்றும்படி இருக்கிற (சுடர் என்றதிலே நோக்கு ) திவ்விய விக்கிரகத்தை யுடையரான அவர்,-இப்படி– ஆபத்துக் காலத்தில் துணைவனாய் -இவனே ஈஸ்வரன்-அசம்பாதகமாகத் தன்னுள்ளே வைக்கப்பட்ட சர்வ ஜகத்தையும் யுடையனாய்- ஸ்வாபாவிக சார்வஞ்ஞத்தை யுடையனாய்-ஆபத் சகனாய்-ஷீரார்ணவ நிகேதனான வண் துவரைப் பெருமானாய்- அணியன் ஆகையாலும் சர்வேஸ்வரன்-

————–

பள்ளி யாலிலை யேழுலகும் கொள்ளும்
வள்ளல் வல் வயிற்றுப் பெருமான்
உள்ளுள்ளார் அறிவார் அவன் தன்
கள்ள மாய மனக் கருத்தே 
–2-2-7-

அகடிதகடநா சாமர்த்தியத்தாலும் இவனே ஈஸ்வரன்-அவாந்தர பிரளயத்தில் மூன்று லோகமாய் இருக்க இங்கு ஏழு உலகம் என்றது ரக்ஷணத்தில் உள்ள பாரிப்பைக் காட்டவே-கண்டது ஒன்றைச் சொன்னேன் இத்தனை. போக்கி,‘முழுதும் யான் தான் அறிந்தேனோ?’அவன் தன் கள்ள மாய மனக் கருத்தை உள்ளுள் அறியார் யார்-இவனுடைய சர்வேஸ்வரத்வ சிஹ்ன பூத திவ்ய சேஷ்டிதங்களுக்கு ஒரு முடிவு யுண்டோ-

————–

கருத்தில் தேவும் எல்லாப் பொருளும்
வருத்தித்த மாயப்பிரானை யன்றி யாரே
திருத்தித் திண்ணிலை மூவுலகும் தன்னுள்
இருத்திக் காக்கும் இயல்வினரே
 –2-2-8-

ஸ்ருஷ்டியும் பாலனமும் ஸ்வ அதீனமாக உடையவன் ஆகையாலே இவனே ஈஸ்வரன் -ஸ்ருஷ்ட்டி ரக்ஷணங்கள் இரண்டும் பரம புருஷ ஏக கர்த்ருகம்-

——-

காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
சேர்க்கை செய்து தன்னுந்தி யுள்ளே
வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர்
ஆக்கினான் தெய்வ வுலகுகளே
 –2-2-9-

ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரங்கள் மூன்றும் ஸ்வ அதீனமாம்படி இருக்கை யாலும் இவனே ஈஸ்வரன்-சம்ஹாரம் ஒன்றே கீழ்ப்பாட்டில் இருந்து இதுக்கு வாசி )பரம புருஷ கர்த்ருகம் -ப்ரஹ்மாதி ஸ்தம்ப பயந்த சர்வ ஜகத் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரங்கள் மூன்றும்
பரம புருஷ கர்த்ருகம் 

———–

கள்வா எம்மையும் ஏழுலகும் நின்
னுள்ளே தோற்றிய இறைவ என்று
வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர்
புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவரே
–2-2-10-

நமோ கண்டாய கர்ணாய நம கட கடாயச -என்று இவன் ஸ்தோத்ரம் பண்ணின படியை வாசிக்கக் கேட்ட ப்ராஹ்மணன்-ஸ்தோத்ரம் பண்ணி அறியாத வாயாகையாலே மீன் துடிக்கிறபடி பாராய் -என்றான்-‘நீ கறுப்புடுத்துத் தாழ நின்ற நிலையிலே இச் செயலைச் செய்தால் இதனை நாட்டார் ‘மெய்’ என்றிருப்பார்களோ?‘கள்வா’ என்பர்கள்-அவர்கள் தங்களுடைய வாக்யமே பிரமாணம் -என்கிறார் ––ஈண்டுக் களவாவது,தன் ஸ்வாதந்தர்யத்தை மறைத்துப் பரதந்திரனாய் நிற்கும் நிலை.-கடவுளை வணங்குகின்றவர்கள்  வாகனத்தோடு வருதல் பொருந்துமோ?’ எனின், இராஜ சேவை செய்வார் தம் தமது அடையாளங்களோடே சட்டையும் பிரம்புமாய்ச் சேவிக்குமாறு போன்று,
இவர்களும் தத்தம் அடையாளங்களோடே வந்து சேவிக்கிறார்கள். புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவரே-அந்தப்புரத்தில் செல்லுகைக்கு அந்தரங்கதை போராமையாலே ஆட்டத்து வெளியிலே யானைக் காலிலே விழுந்து கூப்பிடுவாரைப் போலே பெரிய திருவடியின் மேலே ஏறிப் புறப்பட்ட இடத்தே யாயிற்றுப் புகழ்வது –வேத மயமான கருடன் வாஹனமாகையாலே ஈஸ்வரனுடைய வேதாந்த வேத்யத்வமும் தோற்றுகிறது-

———

ஏத்த வேழுலகும் கொண்ட கோலக்
கூத்தனை குருகூர்ச் சடகோபன் சொல்
வாய்ந்த வாயிரத்துள் இவை பத்துடன்
ஏத்த வல்லார்க்கு இல்லையோ ரூனமே
 –2-2-11-

இத்திருவாய் மொழியைக் கற்று உணர வல்லவர்கட்கு, -தேவதாந்த்ரங்கள் பக்கல்
ஈஸ்வரத்வ புத்தி பண்ணுகையாகிற ஊனம் குற்றம் இல்லை,’-ஏத்தி ஸ்துதிக்க,
அந்த ஹர்ஷத்தாலே -அம்மகிழ்ச்சியாலே எல்லா உலகங்களையும் திருவடியின் கீழே இட்டுக் கொண்ட. கோலக் கூத்தனை-வடிவழகினை அனுபவித்தலே இவர்க்குப் பேறு

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -57 -புலக் குண்டலப் புண்டரீகத்த போர்க் கெண்டை –முடியானே மூவுலகும் -3-8-

February 27, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

கழற்றெதிர் மறுத்தல் என்று கிளவி-அதாவது-பாங்கன் -தலைமகனின் தோழன் தலைமகள் இடம் இவ்வளவு ஈடுபாடு கூடாது என்று சொல்ல-அத்தை மறுத்துப் பேசுகிறான் –கழறலரே-இடித்துச் சொல்ல மாட்டார்களே -என்று மருத்துச் சொல்லும் பாசுரம்-அவளது அழகைக் கண்டவர்கள் -ஆத்ம தேஹ குணங்கள் -ஈடுபட்டவர்கள் –-அத்தைத் தாண்டி பெருமாள் இடம் கூட வர மாட்டார்களே-அந்த அழகு உனக்குத் தெரியாமல் பேசுகிறாய் என்று மருத்துக் கூறுவதால்-கிளைவித் தலைமகன் -ஸ்ரீ வைஷ்ணவர்கள் பாசுரம்–குண்டலம் -காது ஸ்ரவணம்-ஹ்ருத் புண்டரீகம் -நினைவு -மனனம்
வேல் விழிக்கின்ற -கண்கள் -தர்சனம் -காட்சி-மூன்றும் இப்பாசுரத்தில் உண்டே
-நம்மாழ்வார் இடம் ஈடுபட்டுப் பரவசப்பட்டு இருப்பதை -அத்தைத் தெரியாதவர்களுக்கு எடுத்துச் சொல்வது
முடியானே- -இதன் விவரணம்-ஆழ் கடலைக் கடைந்தாய் அங்கும் உண்டு-ஒவ்வொன்றின் அவயவமும் தனது வியாபாரத்துடன் நிற்காமல் மற்ற அவயவங்கள் செயலை விரும்பும் -பதிகம்-கட் செவி சஷுஸ் ஸ்ரவ -ஆதி சேஷனுக்கு கொடுத்த வைபவம் தனக்கும் வேண்டும் என்று பிரார்த்தனை–புலக் குண்டலம் புலப்படுவது கண்ணுக்குத் தெரிகிறதா -புரிகிறதா -இரண்டும் உண்டே–காதாலே கேட்டுக் கேட்டு -அறிவது -புண்டரீகத்த -தாமரை முகம் இங்கு -கண்ணுக்கும் மூக்கும் வேறே சொற்கள் உண்டே
போர் கெண்டை -சண்டை போடும் மத்ஸ்யங்கள் -கண்கள் இங்கு கெண்டை என்று வல்லி ஒன்றால் -மூக்கால் விலக்குண்டு -நடுவர் -நடுநிலையாளர்-சண்டையைத் தீர்த்து நடுவிலும் இருக்கிறது –
விலக்குண்டு சஞ்சரிக்கும் கண்கள் -வேலாயுதம் -கண்கள் இங்கு –-இவற்றாலே முக வர்ணனை
இத்தால் தலைமகன் ஈடுபட்டு அடிபட்ட வற்றுக்கு த்ருஷ்டாந்தம்-அலை எறியும் கடல் -கண்ணுக்கும் விசேஷணம் -தலைமகனுடைய ஹ்ருதயத்துக்கும் இதே த்ருஷ்டாந்தம்-இத்தைப் பார்த்தவர்கள் -யாரும் என்னை நிர்பந்திக்க மாட்டார்களே-

அவதாரிகை –சம்ஸ்லேஷித்து விஸ்லேஷமும் வ்ருத்தம் ஆயிற்று-ஒரு கார்ய புத்யா பிரிந்தான் ஆகிலும் ந ஜீவேயம் ஷணம் அபி -என்னும்படி இறே  தலை மகன்-ஆற்றாமை இருப்பது –(ஸ்ரீ வைஷ்ணவர்கள் -பகவத் கைங்கர்யம் ஆகிற கார்ய புத்தியால் –அதுவும் ஆழ்வார் உகப்புக்காவே சென்றார்கள் )-அவனுடைய ஆற்றாமையால் வந்த தளர்தியை கண்ட பாங்கானவன் – லோக யாத்ரையில் ஒன்றுக்கு ஈடுபடாத நீ ஒரு விஷயத்துக்காக இப்பாடு படும் அது தலைமைக்கு போராது காண் -என்று திருத்தப் பார்க்க –அவளுடைய நோக்குக்கு இலக்கானார் படுமது அறியாமை காண் நீ இப்படி சொல்லுகிறது –
நீயும் அவள் நோக்குக்கு இலக்கு ஆனாய் ஆகில் -இப்படி சொல்லாய் காண் -என்று அவன் கழறினததை  மறுத்து வார்த்தை சொல்லுகிறான்-கழற்றெதிர் மறுத்தல் என்று கிளவி-தலைவன் பாங்கனுக்கு கழற்று எதிர் மறுத்தல்–பாங்கன் -தோழன் –

தலைமகன் பாங்கனுக்கு கழற்று எதிர் மறுத்தல் துறை விரஹ வியசனத்தினால் மெலிய
ஒருத்தி வலையிலே அகப்பட்டேன் காண் என்ன-ஸ்த்ரீ நிமித்தமாகப் படுவது உனது பெரும் தன்மைக்குத் தகாது என்று சொல்ல-என்னால் காணப்பட்ட வடிவை நீ கண்டாய் அல்லை
கண்டவர் இவ்வாறு வன்சொல் கூரார் -பரம விலக்ஷண வியக்தி அன்றோ என்கிறான் –
கண்டவர்கள் அனைவருமே தன்னைப் போல் பிச்சேறிப் போவார்களே என்கிறான்

இப்படி இவர்க்கு பகவத் ஸம்ஸ்லேஷத்தால் பிறந்த ஞான வைலக்ஷண்யத்தை அனுபவித்து
ஈடுபட்ட அன்பரானவர்கள் தங்கள் ஈடுபாட்டைக் கண்டு ப்ராவண்யத்தை மட்டம் செய்விக்க வேணும் என்று நியமித்த பந்துக்களைக் குறித்துச் சொன்ன பாசுரத்தை-தலைவி கண் அழகிலே ஈடுபட்ட தலைமகனைக் குறித்துக் கழறின பாங்கனுக்குத் தலைமகன் கழற்று எதிர்மறையான பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-அவதாரிகை-நீ இங்கனே அவனில் தானே ஆழங்கால் பட்டு ஈடுபடா நின்றாய் அவனில் அத்தனை பிரவணை யாவது உனக்கு உசிதமோ என்றால் போலே
உயிர்த் தோழி சில சொன்னாள்-அதுக்கு அவன் தான் நாயகன் கண் அழகுப் பார்வைகளில் தான் ஈடுபட்ட நாயகியாய் அருளிச் செய்கிறார்

புலக் குண்டலப் புண்டரீகத்த போர்க் கெண்டை வல்லி யொன்றால்
விலக்குண்டுலாகின்று வேல் விழிக்கின்றன கண்ணன் கையால்
மலக்குண்டமுதம் சுரந்த மறி கடல் போன்றவற்றால்
கலக்குண்ட நான்று கண்டார் எம்மை யாரும் கழறலரே
 – -57-தலைவன் தோழனிடம் எதிர் வார்த்தை பேசுதல் –

முடியாத வாசை மிக முற்று கரணங்கள்
அடியார் தம்மை விட்டவன் பால் -படியா ஓன்று
ஒன்றின் செயல் விரும்ப உள்ளது எல்லாம் தான் விரும்ப
துன்னியதே மாறன் தன் சொல்
——28–பயிலும் சுடர் ஒளியிலே உத்தேச்யராக அனுசந்திக்கப் பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்வரூபத்துக்கு நிரூபகத்வேன பிரச்துதமான பகவத சௌந்தர்யாதிகள்
விடாய்க்கு உத்தகம்பாய் அத்தாலே விடாய் கரை புரண்டு- அன்று தேர் கடாவிய கழல் காண தானே முன்பு தாகம் -ஆழ்வாருக்கு – அனுபாவ்யமான பூஷண ஆயுத குண விக்ரக சேஷ்டிதங்களைச் சொல்லி
தாமும் தம்முடைய கரணக்ராமமுமாய் முழு மிடறு செய்து கூப்பிடுகிற முடியானேயின் அர்த்தத்தை
சங்க்ரஹித்து அருளிச் செய்கிறார்-இப்படி கரண க்ரமத்தின் யுடையவும் கரணியான ஆழ்வார் தம்முடையவும் ஆர்த்தி அதிசயத்தை யுடைத்தான ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தியான இத் திருவாய் மொழி
மிடைந்த சொல் -என்னும்படி சப்த நிபிடமாய் இருந்தது

புலக்குண்டல —  இத்யாதி--கெட்டேன்-இவன் செய்வது என் என்று அவன் (பாங்கன் )புத்தியிலே படுகைக்காக அவை (ஆழ்வாரின் திருமுக அழகை ) தன்னை பேசுகிறான்–சர்வ இந்திரிய அபஹார ஷமமான குண்டலம் உண்டு -கர்ண பூஷணம்-அத்தை உடைத்தாய் இருப்பதொரு தாமரைப் பூ போலே ஆயிற்று முகம் (புண்டரீகம்) இருப்பது-குண்டலம் என்று வட்டணிப்பை சொல்லவுமாம்-(புல-புலப்படுகிற )-புல என்றத்தை-பொல என்றாக்கி  -பொன்னாலே செய்த குண்டலம் என்றும் சொல்வார்கள்–புண்டரீகத்த போர் கெண்டை –அத் தாமரைப் பூ மேலே சிலை கெண்டைகள் பொருகிறார் போலே ஆயிற்று கண்கள்-அல்லாத அவயவங்களில் காட்டில் கால் கட்ட வற்றாய் இறே முகம் இருப்பது –
அதில் பிரதானமாய் இறே கண்கள் இருப்பது–வல்லி ஒன்றால் விலக்குண்டு – இரண்டு மத்த கஜம் தன்னிலே பொரா நின்றால்-நடுவே ஒரு கணயத்தை பொகட்டால் போலே-ஆயிற்று மூக்கு இருப்பது-உலாகின்றது-நடுவே இது கிடைக்கையாலே  இரண்டும் தன்னிலே வந்து கிட்டப் பெறாதே – அவ் வாசியையும் இங்கே (குண்டலத்தில் )ஏற வைத்துக் கொண்டு – கர்ண பர்யந்தம் -உலாவா நின்றது –
ஈஸ்வரன் வைத்த மர்யாதையில் செவ்விதாக நிற்க மாட்டாது போலே இரா நின்றன –(செவ்வி – நேர்மை –வளைந்து இருக்குமே-செவ்விதாக -செவி அளவாக )வேல் விழிகின்றன–வேலை இட்டு மறுபாடு உருவக்  குத்தினால் போலே ஆயிற்று நோக்குகள் இருப்பது-

கண்ணன் இத்யாதி –ஒரு மகா பாஹுவான கிருஷ்ணன் கையாலே கடல்(ஆயிரம் கையால்; அலை கடல் கடைந்து தாள்கள் ஆயிரத்தாய் இத்யாதி ) கீழ் மண் கொண்டு மேல் மண் எறியும் படி-மறுகக் கடை யுண்டு –தன் நல் ஜீவனான அம்ருதத்தை காட்டிக் கொடுத்த கிளர்ந்த-கடல் போலே ஆயிற்று – இவன் காம்பீர்யம் அடைய விழுந்து நின்ற படி –மறி கடல் போன்று -என்னுதல்-மறி கடல் போன்றவற்றால் -என்று கண்களுக்கு விசேஷம் ஆதல்–அவள் நோக்கினவாறே இவனும் எதிரே நோக்கும் இறே
அந் நோக்கிலே தான் ஈடுபட்டு தன் அக வாயில் ஈடுபாடு எல்லாம் தன் கண்ணுக்குளே தோற்றும்படி நின்றாளாய்  –அவற்றை நினைக்கிறான் –அவற்றால்-அவை தான் இப்போதும் வடிம்பு இடுகிறபடி-கலக்குண்ட நான்று கண்டார் – நான் கலங்கின அன்று கண்டார்–எம்மை யாரும் கழறலேரே-என் பிரகிருதி அறியும் நீயே அன்றிக்கே – இத்தனை பாவ பந்தம் இல்லாத புறம்பு உள்ளாறும்- இப்படி கழறி வார்த்தை சொல்லுவார்கள்-

குண்டலப் புண்டரீகம் –வட்டணித்த தாமரை ஆகவுமாம்-அவளுடைய கண்களாலே கடல் போலே அவன் கலங்கின அன்று -என்று நாயகனுக்கு விசேஷணம் ஆதல்-கடல் போல் கலங்கி இரங்கி இருக்கிற கண்கள் என்று கண்களுக்கு விசேஷம் ஆதல் -சம்ச்லேஷித்து -பாகவதர் ஆகிற நாயகன் சம்ச்லேஷித்து-கார்யா புத்தி -அவர் உகந்த  விஷயம் அன்றோ என்று பகவத் விஷயத்தில் கைங்கர்யம் ஆகிற புத்யா -என்றபடி-புண்டரீகத்த -என்று முற்று உவமையால் -முகத்தை சொல்லும்-செவ்விதாக -சாடு -செவ்வையாக கோணாமல் என்றும் செவி அளவாக என்றும் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ -ஞான வைபவம்-

நாயகன் நாயகி வலையில் அகப்பட்டதை சொல்வது-கடல் போன்ற கம்பீர ஸ்வபாவனான நீயோ இப்படி என்ன – பரம விலக்ஷண-வ்யக்தி அன்றோ –-துஷ் கரம் க்ருதவான் ராமோ ஹீ நோ யத நயா பிரபு -தாரயத் யாத்ம நோ தேஹம் ந சோகே நாவ ஸீததி-நான் கண்ட நாயகியை நீ காணப் பெறில் திருவடி பட்ட பாடு படுவாய் –புலக் குண்டலம் -புலப்படும் குண்டலம்-பொலக் குண்டலம் -பொன்னாலாகிய குண்டலம்-குண்டலம் என்பதை கெண்டைக்கு அடை மொழி யாக்கி காதணி வரை நீண்ட திருக் கண்கள்–குண்டலப் புண்டரீகம் -வட்ட வடிவமான முக மண்டலம் -புண்டரீகம் போன்ற முகம் –
கெண்டை போன்ற கண்கள் -கொடி போன்ற மூக்கு -உபமான பதங்களையே சொல்லி –உவமை ஆகு பெயர் –வல்லி யொன்றால் விலக்குண்டுலாகின்று–இரண்டு மத்த கஜம் தன்னிலே பொர உத்யோகித்து நடுவிலே கணையம் இட்டவாறே தாம் நினைத்த படி பொராப் பெறாது ஒழிந்து பெரும் சீற்றத்தோடு சஞ்சரிக்குமா போலே நின்று -பூர்வர்கள் ஸ்ரீ ஸூக்தி–கொடுமை இன்னம் மாறாமல் இருப்பதை -வேல் விழிக்கின்றன-என்கிறான்-ஆழ் கடலைக் கடைந்து -கலக்கி – சாரமான அம்ருதத்தை கொண்டால் போலே நாயகியின் கண்களும் ஆழ்ந்த என் நெஞ்சைக் கலக்கி சாரமான அறிவைக் கவர்ந்து கொண்டன-அவள் கண்ணின் வைலக்ஷண்யம் அனுபவித்தற்கு அன்றி மற்றை யாருக்கும் அரிய ஒண்ணாது –யாரும் -எவ்வளவு வைராக்யம் கொண்டவர்களுக்கும் –மறி கடல் போன்றவற்றால்-போன்று அவற்றால் -பிரிக்காமல் போன்றவற்றால் ஒரே சொல்லாக கொண்டு -கடையய் பட்டு
அமிருதத்தை சுரந்த அலை எறி கடல் போன்ற அக் கண்கள் –தன் அழகைக் கண்டு கலங்கி மருண்டு நோக்கிய கண்ணுக்கு கண்ணன் கையால் கலக்குண்ட கடல் உவமை -என்றும் கூறுவார் –கண்டார் எம்மை யாரும் கழறலரே -தன்னைப் போலே பித்தேறிப் போவார்கள் –

புலக் குண்டலப்-புலப்படும்படி அழகிதான் குண்டலத்தை யுடைய புலப்படுத்தல் -காணப்படுதல்-பொலக் குண்டலம் என்று பாடமாய்-பொற் குண்டலம் என்றுமாம்–புண்டரீகத்த-குண்டலத்தை யுடைய புண்டரீகம் என்கையாலே செவ்வியும் அழகும் மணமும் யுடைமையால் புண்டரீகம் ஒப்பான முகத்தைச் சொல்லுகிறது-போர்க் கெண்டை-அப் புண்டரீகத்திலே தன் நீல முகம் ஒன்றிப் போருவது (பொருவது)
இரண்டு கெண்டையானது என்கையாலே கண்ணைக் காட்டுகிறது–வல்லி யொன்றால் விலக்குண்டு
வல்லி ஒன்றாலே விலக்கப் பட்டு-அதாவது மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ -திருவாய் -7-7-2- என்று
கற்பகக் கோடியை மூக்குக்கு உவமையாகச் சொல்லுகையாலே பொருகிற கெண்டை போன்ற கண்கள் மூக்காகிற கற்பகக் கொடியால் விலக்கப் பட்டால் போன்றன என்கை–உலாகின்று-உலவா நின்று கொண்டு விலக்கின அளவிலும் ஸ்ப்ரத்தை யாற்றாமையாலே உலவா நின்றன என்னலாய் இருக்கை-வேல் விழிக்கின்றன-வேல் போலே கூரிய பார்வையை யுடையன -என்கையாலே க்ரூர்யம் மாறாதன என்கை-கண்ணன் கையால் மலக்குண்டமுதம் சுரந்த மறி கடல் போன்றவற்றால் -ஆஸ்ரித ஸூலபனான கிருஷ்ணன் கைகளாலே மலங்கும்படி கடையப்பட்டு அகவாயில் கிடந்த அம்ருதத்தைச் சுரந்த அலை எறிகிற கடல் போலே அபரிச் சின்னையான போக்யதையை யுடைய அவற்றாலே
வெறும் கொடுமையே யன்றியே ஆஹ்லாத கரமானவை என்றபடி-கலக்குண்ட நான்று கண்டார்
அக்கடல் அவன் கையிலே பட்டது அத்தனையும் இக்கண் என்னைப் படுத்தின நாள் கண்டவர்கள்
அதாவது அவன் கடலைக் கலக்கி ஸாரமான அம்ருதத்தை க்ரஹித்தால் போலே இக் கண் அகாதமான நெஞ்சைக் கலக்கி ஸாரமான அறிவை அபஹரித்தது என்கை-நான்று கண்டார் -என்கையாலே
அனுபவித்தார்க்கு அல்லது அறிய முடியாது என்கை-எம்மை யாரும் கழறலரே-இப்படி அகப்பட்டுக் கலங்கின எங்களைப் பரிவாலே நியமிக்கிற நீயே யன்றியே விஷய விரக்தராய் அதிசயித ஞானரான சனகாதி முனிகளும் வாசி அறிவாராகில்(ஆழ்வார் வை லக்ஷண்யம் -உண்ணும் சோறு எல்லாம் கண்ணன் என்று இருப்பார் என்று அறிந்து ) நியமிக்க மாட்டார்கள் என்றதாயிற்று –

இத்தால்-இவருடைய ஞானமானது
1-ஸ்ரவண
2-மனன
3-சாஷாத்கார ரூபமாய்ப் பரிணமித்த பிரகாரத்தை ஸூசிப்பிக்கிறது-எங்கனே என்னில்-புலக் குண்டலம் என்று கர்ண ஆபரணத்தைச் சொல்லுகையாலே
1-பிரதம பாவியான ஸ்ரவணமான அலங்காரத்தைக் காட்டுகிறது-(ஸ்ரோதவ்யா-ஸ்ரவணம் -பக்தி நவ லக்ஷணம் -அங்கும் முதல் )-குண்டலப் புண்டரீகம் -என்கையாலே
2-அந்த ஸ்ரவண முதித ஹ்ருதய புண்டரீகத்தைக் காட்டுகிறது –
(வட்ட வடிவு தாமரை-கவிழ்த்தால் போல் -ஆனந்தப்பட்டு உள்ளம் )போர்க் கெண்டை -என்கையாலே
3-அந்த ஸ்ரவண ஞானத்தை மனனம் பண்ணும் இடத்தில் பூர்வ பக்ஷ ஸித்தாந்த யுக்தியாலே விரோதத்தை உப பாதித்துப் பண்ணும் ஆராய்ச்சியைக் காட்டுகிறது–வல்லி யொன்றால் விலக்குண்டுலாகின்று -என்கையாலே
4-மத்யஸ்த்தை யான ஸித்தாந்த யுக்தியாலே விரோதம் சமித்து ஸ்வ காரியத்தில் வ்யாபாரித்தமையைக் காட்டுகிறது–வேல் விழிக்கின்றன -என்கையாலே
5-இப்படி யுக்தித ப்ரதிஷ்ட அபிதமான ஞானமானது பாவநா ஸித்தமான கூர்மையாலும்
நெடுமையாலும் சாஷாத்கார ரூபமான ஆபரோஷ்யத்தைப் பண்ணினமையைக் காட்டிற்று
(கண் முன்னே தோற்றும்படி கூர்மையான தெளிந்த ஞானம் )-கண்ணன் கையால் மலக்குண்டு -என்கையாலே
6-இப்படி அபரோக்ஷ ரூபமான ஞானத்துக்கு த்யேய விஷய வை லக்ஷண்யத்தாலே
பிறந்த பாரவஸ்யத்தையைக் காட்டிற்று (பக்தி ரூபா பன்ன ஞானம் -க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -அவன் வசம் பட்டாரே )-அமுதம் சுரந்து -என்கையாலே
7-இந்த பாரவஸ்யம் அடியாக இந்த ஞானத்துக்கு அத்யந்த ப்ரீதி ரூபையான பக்தி ரூபாபத்தியைக் காட்டிற்று (மதி நலம் -பிரேம ரூபமான பக்தி )மறி கடல் போன்று -என்கையாலே
8-காதல் கடல் புரைய-5-3-4-என்றும்-கடலின் மிகப் பெரிதால் -7-3-4-என்றும் -கழியப் பெரிதால் -7-3-6- என்றும் சொல்லுகிற விகாஸ அதிசயத்தைக் காட்டிற்று –அவற்றால் கலக்குண்ட -என்கையாலே
9-இந்த ஞானம் அனுபவ உபகரணமாம் அளவன்றியே பிறரையும் தன் வசமாக்கிக் கொள்ளும் படியைக் காட்டிற்று –(கடல் போன்ற ஞானம் -பக்தி ரூபா பன்ன ஞானம் ஆழ்வாருக்கு ஆனபின்பு
நம்மளவும் -இது அடுத்த நிலை நம் உள்ளமும் கலங்கிற்றே-ஆழ்வார் ஞானம் பக்தி நினைத்து நினைத்து -அம்ருதம் போன்ற பக்தி-நாமும் உருகுகிறோமே காண்பதற்கு உதவும் -கண்டவர்களைக் கலக்குவத்துக்கும் இதே தானே )-நான்று கண்டார் எம்மை யாரும் கழறலரே – என்கையாலே
10-புறம்புள்ளாரும் புகுந்தால் தாங்களும் ஈடுபடும்து ஒழிய பிறரை நியமிக்கைக்கு சக்தர் அல்லர் என்னும் இடம் சொல்லிற்று ஆயிற்று

பவத பரமோ மத -ஸ்ரீ சஹஸ்ர நாம-அவர் உகந்தது என்று இறே பின்னை பகவத் விஷயத்தை விரும்புவது

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-வியாக்யானம்-புலக் குண்டலப் புண்டரீகத்த போர்க் கெண்டை வல்லி யொன்றால் விலக்குண்டுலாகின்று வேல் விழிக்கின்றன–ஒரு புண்டரீகத்துக்கு இரு புறமும்
சுடர் இலகு விலகு மகர குண்டலங்கள் -8-8-1- தானே தானாய்ப் புறப்படும் படியான குண்டலங்களால் அலங்க்ருதமான புண்டரீகத்திலே பரஸ்பர ஸ்பர்தையால் பொருகிற கெண்டை மீன்களானவை
வல்லி ஒன்றால் தடுக்கப் பட்டு ஸ்பர்தை தீராமையாலே உலவா நின்று கொண்டு வேல் போலே ஒன்றுக்கு ஓன்று கூரிய பார்வையை உடையனவாயிற்று-அவைகள் எது போன்றன வென்று கேட்டாள் தோழி அதுக்கு-கண்ணன் கையால் மலக்குண்டமுதம் சுரந்த மறி கடல் போன்று -என்கிறாள்
கிருஷ்ணன் கைகளால் கலங்கும்படி கடையப்பட்டதாய் அகவாயில் அம்ருதத்தைச் சுரந்த மறுக்கத்தால்
அலை எறிகிற கடலைப் போன்றன காண் அவை என்றான்–அவற்றால் உனக்கு என் என்றான்
அதுக்கு–அவற்றால் கலக்குண்ட நான்று கண்டார் எம்மை யாரும் கழறலரே -என்கிறாள்
என் அகாதமான நெஞ்சாகிற கடலானது அவைகளால் கலங்கினதாயிற்று என்றாள்–கலங்கிற்றோ என்ன–அந்நாள் அவைகளை நீ கண்டாயாகில் நீயும் என்னைப் போல்வாய் காண் –
அவ் வழகையும் ஆகர்ஷணத்தையும் கண்டவர்கள் என்னை யாராகிலும் கழறலாய் இருக்குமோ
இராது கிடாய் நீ அத்தைக்கு காணாதவளாகையாலே இங்கனே சில என்னில் சொன்னாயாளாய் என்று
இங்கனே சொன்ன தோழியை ஒக்கும் எண்பித்தாள் ஆயிற்று–இவ்வளவும் அருளிச் செய்ய மாட்டாத பட்டர்-விதோ பத்தஸ் பர்த்த ஸ்புரித சபரத் வந்த் வவளிதே-ஸ்ரீ ரெங்கராஜா ஸ்தவம் -1-99-
த்ருஸவ் தே -ஸ்ரீ குணரத்ன -9-
என்று அருளிச் செய்தார் –

ஸ்வாபதேசம் –
ஆழ்வார் உடைய ஞானக் கண் கண்டு ஈடுபட்ட பாகவதர் – அத்தை குறைவாக பேசிய சுற்றத்தார்களை நோக்கி மறுத்து சொல்லும் வார்த்தை –-முக்திக்கு காரணமான முதல் பொருளை அரிய மூன்று உபாயம்-கேள்வி -சிந்தனை -காட்சி -ஆச்சார்யர் பக்கல் கேட்டு பிரமாணம் உக்தியால் உள்ளத்தில் தெளிந்து -ஐயம் திரிபறத் தெளிதல்-
புலக் குண்டலம்-செவிக்கு அணி -கேள்வி-புண்டரீகம் ஹிருதய கமலம் -சிந்தனை –-போர்க் கெண்டை-சிந்தனை -பூர்வ பக்ஷ உக்திகளால் விரோதியை உண்டாக்கி –
வல்லி யொன்றால்-விலக்குண்டுலாகின்று-மத்யஸ்த சித்தாந்த உக்தியால் அவ்விரோதம் தீர்ந்தமை –
வேல் விழிக்கின்றன-சஞ்சலம் இல்லாமல் நிலை நின்ற ஞானத்தால் நுண்மையான நெடிய திருமாலை தர்சித்தமை –கண்ணன் கையால்-மலக்குண்டமுதம் சுரந்த மறி கடல் போன்ற-சபல சித்தரான யாம் பரவசப்பட்டு இனிய பக்தியைச் சுரந்து நிலை மாறிய பொழுது -ஆழ்வார் ஞான விசேஷம் அறிந்தார் யாவரும் எம்மை இங்கனம் கூறார் -என்கிறார்-கண்டார் எம்மை யாரும் கழறலரே-புறம்புள்ளாரும் புகுந்தால் தாங்களும் ஈடுபடும்து ஒழிய பிறரை நியமிக்காமல்-தேவு மற்று அறியேன் -மதுரகவி நிலைமையை பெறுவார் என்றபடி

ஸ்வாபதேசம் –
இத்தால் ஆழ்வாருடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயில்(ஆழ்வாருடைய ஞான வைபவம் -ஸ்ரவண -மனன -தர்சன -பர பக்தி பர ஞானம் பரம பக்திகளில் )அகப்பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்களை –பகவத் விஷயத்தை காட்டியும் மீட்க ஒண்ணாத படியை சொல்லிற்று –அவர்கள் -தேவு மற்று அறியேன் -என்று இருப்பவர்கள் காணும் –(மதுரகவி ப்ரக்ருதிகள் ) பவத பரமோ மத -என்கிறபடி அவர் உகந்தது என்று இறே பின்னை பகவத் விஷயத்தை விரும்புவது –(பீஷ்மர் உகந்த திரு நாமங்கள் என்று தர்மர் விரும்பியது போல்
இங்கு ஆழ்வார் உகந்தது என்று பகவத் விஷயத்தை விரும்புவது )

தாத்பர்யம்
ஆழ்வாரைப் பிரிந்து படும் ஆற்றாமையை -விஸ்லேஷ வியசனத்தை அறியாமல் இத்தனை ஈடுபாடு கூடாது என்று விலக்கப் பார்க்க-ஓ தோழனே நீ அவள் முகத்தின் வை லக்ஷண்யம் அறியாமல் பேசுகிறாய்-அதி சுந்தரம் அதி மிருதுவாய் அதி கந்தம் மிக்கு -தாமரை போல் உள்ள முகம்
சர்வ இந்த்ரியங்களையும் அபகரிக்கும்-வல்லிக்கொடி போன்ற நாசிகை அணையை இட்டு விலக்கப்படும் யுத்த உன்முகமாய் இருக்கும்-இரண்டு – மத்ஸ்யங்கள் போல் நேத்ரங்கள்
காது வரை நீண்டு -சங்கு சக்கரம் வரை நீண்டு இருக்குமே –-திருக்கண்கள் -நீண்டு மலர்ந்து வேல் போல் -அம்ருத மதனம் செய்யும் பொழுது கலக்குண்ட கடல் போல் என்னைக் கலக்கிற்றே
ஆழ்வார் ஸ்வரூபம்-வை லக்ஷண்யம் – அறிந்தவர் இப்படி ஈடுபடக் கூடாது என்று தடுக்க மாட்டார்களே -என்று சொல்லும் பாசுரம் –

3-8-முடியானே -பிரவேசம் –

செய்ய தாமரைக் கண்ணனாய்’ என்ற -3-6-திருவாய் மொழியில் –
‘தேர் கடவிய பெருமான் கனைகழல் காண்பது என்று கொல் கண்கள்!’ என்று தம்முடைய கண்கள் அவனைக் காண வேண்டும்
என்று விடாய்த்தபடி சொன்னார். நிழலும் அடிதாறுமான ஸ்ரீவைஷ்ணவர்களைக் காட்டிக்கொடுக்க, பின்னர்த் தொடங்குகின்ற
பாகவதர்களுடைய சேர்க்கை-போதயந்த பரஸ்பரம் – ஒருவர்க்கு ஒருவர் உணர்த்திக்கொண்டு தரிக்கைக்கு உடல் அன்றிக்கே,
பகவானுடைய குணங்களை நினைவு மூட்டக்கூடியதாய் மேலே பிறந்த விடாயினை மேன்மேல் வளரச் செய்தது.
‘அச் சேர்க்கை விடாயினை மேன்மேல் வளரச் செய்தவாறு யாங்ஙனம்?’ என்னில், மேலே பாகவதர்களுடைய
சொரூபத்தை நிரூபிக்கும் முறையாலே பகவானுடைய குணங்கள் முதலாயினவும் சொல்லப்பட்டன அன்றோ?

அடியார்கள் குழாங்களை கூடுவது என்று கொலோ கேட்டது கிடைக்காமல் -ஆடி ஆடி -சோகம் விஞ்சி அழுதார் -அங்கே
இங்கு -தேர் கடவிய பெருமான் கனைகழல் காண்பது என்று கொல் -என்று கேட்டதும் அடியார்களைக் காட்டிக் கொடுக்க
-சம்ச்லேஷம் வேறு ஒன்றை கிளப்பி விட -இங்கும் அழுகிறார் -சம்ச்லேஷம் விடாயை -உத்கம்பகம் -ஆனதே -வளர்த்ததே –
ஐச்வர்யார்த்தி கைவல்யார்த்தி பகவல்லாபார்த்தி திருமாலுக்கு போவது போலே அனைவரையும் ஈர்க்க maall கட்டி வைத்து இருக்கிறார்கள்

‘நன்று; நிரூபகமாகச் சொன்னால் அது விடாயை வளர்க்கக் கூடுமோ?’ என்னில், வேறு ஒன்றற்காகப் புகுந்தாலும்
தன்னை ஒழியப் புறம்பு ஒன்றுக்கு ஆள் ஆகாதபடி தன் பக்கலிலே துவக்கிக்கொள்ள வற்றாய் அன்றோ
பகவானுடைய கல்யாண குணங்கள் இருப்பன? அவற்றாலும் காதல் கரை புரண்டு, ‘என்றுகொல் கண்கள் காண்பது!’ என்னும்
அளவே அன்றி, மற்றை இந்திரியங்களும் விடாய்த்து,-3-6 -கண்கள் மட்டும் தாகம் -இங்கு -3-8-அனைத்து இந்திரியங்களும் தாகம் –
ஒர் இந்திரியத்தின் தொழிலை மற்றை இந்திரியங்களும் ஆசைப்பட்டும்,
மற்றை இந்திரியங்களினுடைய தொழிலை மற்றை இந்திரியம் ஆசைப்பட்டும்,
அவை எல்லாவற்றினுடைய தொழில்களையும் தாம் ஆசைப்பட்டும், –அவன் செய்த கிருஷி பலன் இப்படி விடாயை வளர்த்து –
தம்மிலும் விடாய்த்த உறுப்புகளும் உறுப்புகளிலும் விடாய்த்த தாமுமாய், பல குழந்தைகளைப் பெற்றான் ஒருவன்,
வற்கடம் உண்டான காலத்திலே தன் பசிக்கு ஆற்றமாட்டாமல் அவற்றின் வாயிற் சோற்றைத் தான் பறித்து ஜீவிப்பது,
தன் வாயிற்சோற்றை அவை பறித்து ஜீவிப்பதாய், ‘என் பசிக்கு என் செய்வேன்? என் குழந்தைகளின் பசிக்கு என் செய்வேன்?’
என்னுமாறு போன்று, தாமும் தம்முடைய இந்திரியங்களின் கூட்டமுமாக நோவுபட்டுக் கூப்பிடுகிறார்.

‘மிக்க அன்போடு கூடின யான் துக்கத்தால் மிக இளைத்திருக்கிற உறுப்புகளால் ஆடவர் திலகனான அவ்விராமபிரானைத் தொடுவதற்குத்
தகுதியாக நீ என்னிடத்தில் அருளைச் செய்’ என்றாள் அன்றோ பிராட்டியும்? ‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின்,
சிலர் பட்டினி கிடக்கச் சிலர் ஜீவிக்குமாறு போன்று, இவ்வுடம்பைக்கொண்டு அணைய ஆசைப்பட்டு, இவ்வாசையோடே முடிந்துபோய்
இனி வேறு ஒரு சரீரத்தை மேற்கொண்டு அவரை அனுபவிக்க இராமல், ஆசைப்பட்ட இவ்வுறுப்புகளைக்கொண்டே நான்
அநுபவிக்கும்படி செய்து தரவேண்டும் என்றாள் என்பது. அப்படி இவரும் நோவுபட்டு, ஆயுதங்களையும் ஆபரணங்களையும்
அவற்றுக்குப் பற்றுக்கோடான திருமேனியையும் குணங்களையும் செயல்களையுமுடைய எம்பெருமானைக் காணவேண்டும் என்று,
‘ஈசுவரனால் முன்பு போலே குணங்களை அனுபவிப்பித்தல் முதலியவைகளாலே பட்டினியைப் போக்க ஒண்ணாது’ என்னும்படி,
கேட்டார் எல்லாம் நீராகும்படி பெருந்தானத்திலே பெருமிடறு செய்து கூப்பிடுகிறார்.

குண வை லஷண்யம் தான் உம்மை படுத்து கிறது -கரண அசங்கு சத்தால் அல்ல என்றீரே முன்னம்
-இப்படி ஒரே கரணம் அனைத்தையும் அனுபவிக்கும் குணமும் உண்டே -கட்செவி -சஷூஸ் காது ஒன்றே தானே -பாம்பணையான் –
சாம்யா பத்தி அருளுவீரே -நித்ய ஸூ ரிகள் அனுபாவ்யம் கொடுக்கிறீர் என்றேனே -கொடுக்கலாகாதோ
இப்படி மடி பிடித்து கெஞ்சி பிரார்த்திக்கிறார் -தொண்டை கிழிய கூப்பாடு போடுகிறார் –

பொன்னெடுஞ் சக்கரத் துன்னையே’ என்பது போன்றவைகளை நோக்கி, ‘ஆயுதங்களை’ என்றும்,
‘முடியானே’ என்றதனை நோக்கி, ‘ஆபரணங்களை’ என்றும்,
‘மூவுலகும் தொழுதேத்தும் சீர்’ என்பது போன்றவைகளை நோக்கி,‘குணங்களை’ என்றும்,
‘முன்பு போலே’என்றது, ‘முந்நீர் ஞாலம்’ என்ற திருவாய்மொழியில் அருளிச்செய்த முன்னுரையை நோக்குக,
பெருந்தானம் – பெரிய ஸ்வரம்.

ஸ்ரீ குகப்பெருமாளோடே கூட, பெருமாளைப் பிரிந்த இடத்தினின்றும் கால் வாங்க மாட்டாதே நின்றான் ஆயிற்றுச் சுமந்திரன்;
சக்கரவர்த்தி ஜீவிக்கும் பொழுதே சுமந்த்ரன் திரும்பினான் -5 நாள்களில் —
அங்கு நின்றது ஒன்று இரண்டு நாளாய் இருக்கச்செய்தே,-திவாசான் பஹூன் ‘பலநாள்’ என்னாநின்றான் ஆயிற்று; பிரிவாலே காலம் நெடுகினபடி.
‘ஸ்ரீ குகப்பெருமாளோடே நிற்க, காலம் நெடுகுவான் என்?’ என்று மிளகாழ்வானைக் கேட்க.
‘ஸ்மாரக சந்நிதியில் ஆற்றாமை இரட்டிக்கும் அன்றோ? என்று அருளிச்செய்தாராம்.
‘மேகக்குழாங்காள்! காட்டேன்மின் நும்முரு; என் உயிர்க்கு அது காலன்,’ என்றார் அன்றோ?

‘ஞானம் வெளிப்படுதற்கு வழியாக உள்ள கரணங்கள் விடாய்க்கையாவது என்?’ என்னில், ஆழ்வாருடைய காதல்
மிகுதியைச் சொன்னபடி. அன்றியே, ‘இந்திரியங்களும் தனித்தனியே அறிவுடைப்பொருள்களைப்போன்று விடாய்க்கு
இதர விஷயங்களில் வாசனை விடாயைப் பிறப்பியாநின்றால், நற்குணக்கடலான இறைவன் விஷயத்திற் சொல்ல வேண்டா அன்றே? ‘நன்று;
இதர விஷயங்கள், தாமே இனியவைகள் ஆகையாலே, அவற்றில் வாசனை விடாயைப் பிறப்பிக்கும்;
இறைவனிடத்தில் வாசனை பண்ணுகிறது பலத்தைப் பெறுதற்குச் சாதனமாக அன்றோ? அங்ஙனம் இருக்க, இவ்வாசனை,
விடாயைப் பிறப்பிக்கக் கூடுமோ?’ எனின், பகவத் விஷயத்தில் வாசனை பண்ணுகிறார் பண்ணுகிறது ஒரு பயனைப் பெறுவதற்காக அன்று;
இதர விஷயங்களைப்போன்று இவ்விஷயம் ரசிக்க வேண்டும் என்று. ’அறிவில்லாதவர்களுக்குச் சிற்றின்பங்களில் இடையீடு இல்லாத
பிரீதி இருப்பதைப் போன்று, தேவரீரை நினைக்கிற எனக்கு அத்தகைய பிரீதியானது மனத்தில் நீங்காதிருக்க வேண்டும்,’ என்றான் ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான்.

பூ உடன் சேர்ந்த நாறும் மணக்கும் -ஆழ்வார் அபிநிவேச அதிசயத்தால் இவைகளும் -அவன் பெருமையும் இவற்றை தூண்டுவிக்குமே –
சாத்ய புத்தியே வேண்டும் -நம் இயலாமைக்காக அவனை சாதனமாக்குகிறோம் –

‘நன்று; ஓர் இந்திரியத்தின் தொழிலை மற்றை இந்திரியம் ஆசைப்படக் கூடுமோ?’ எனில், பாம்பு கண்ணாலே காண்பதுஞ்செய்து
கேட்பதுஞ்செய்யாநின்றதே அன்றோ? அதுவும் அவன் கொடுத்ததே; அவன் தந்தால் அது நமக்குத் தட்டு என்?
அடியார்கட்கு அவன் கொடுக்க எங்கே கண்டோம்?’ என்னில், தம்மையே ஒக்க அருள வேண்டுகையாலே, ஒரு தேச விசேஷத்திலே
தன்னை அனுபவிப்பார்க்குக் கொடா நின்றானே அன்றோ? தூது செய் கண்கள் கொண்டு ஒன்று பேசித் தூ மொழி இசைகள் கொண்டு
ஒன்று நோக்குவது –9-9-9-அன்றோ அவன்றன் படி?
‘நன்று; கரணங்களும் அறிவுடைப் பொருள்களைப் போன்று விடாய்த்தால், தம் காதல் குறையாதோ?’ என்னில்,
ஆறு கிண்ணகம் எடுத்தால் பல வாய்த்தலைகளாலும் போகச் செய்தேயும் கடலில் புகும் பகுதி குறைவற்றுப் போமாறு போன்று,
இவருடைய -அபி நிவேச அதிசயம் -காதலின் மிகுதி இவருடைய கரணங்களாகிற வாய்த்தலைகளாலே பெருகினாலும் காதல் குறையற்றே நிற்கும்.-

எட்டாம் திருவாய் மொழியிலே
கீழ் இவர் அனுபவித்த பாகவத சேஷத்வத்துக்கு அடியான பகவத் குண வைலக்ஷண்யமானது இவர் திரு உள்ளத்திலே அனுபவ அபி நிவேசத்தை ஜநிப்பிக்க
அத்தாலே ப்ரஸ்துதமான பாகவத சம்ச்லேஷம் விடாய்க்கு உத்தம்பகமாக-நெஞ்சு முதலான தம்முடைய கரணங்களோடு தம்மோடு வாசியற
அனுபவ அலாபத்தாலே ஆர்த்தி பிறந்து
1-அனுபாவ்யனுடைய சேஷித்தவாதி ஆகாரத்தையும்
2-அநிஷ்டத்தைப் போக்கி அநந்யார்ஹம் ஆக்கும் படியையும்
3-ஆஸ்ரித வ்யாமோஹத்தையும்
4-அவதார மூலமான அநந்த ஸாயித்வத்தையும்
5-ஆஸ்ரிதற்கு முகம் காட்டுகைக்கு ஈடான வாஹனத்வதையையும்
6-அவர்களுக்கு அனுபாவ்யமாம் படி கையும் திருவாழியுமான அழகையும்
7-இவ் வாஹன ஆயுத விசிஷ்ட வஸ்துவே தாரகாதிகளான படியையும்
8-அனுபவிப்பிக்கும் சவ்ந்தர்ய ஸ்வ பாவத்தையும்
9-அனுபவ பிரதிபந்தக நிவ்ருத்தி பிரகாரத்தையும்
10-நிவர்த்தனத்தில் அனாயாசத்தையும்
அனுசந்தித்து -அனுபவம் கிட்டாத ஆர்த்தியாலே அதிசயிதமாகக் கூப்பிடுகிறார் –

முடியானேஎ! மூவுலகும் தொழுது ஏத்தும்சீர் அடியானேஎ! ஆழ்கடலைக் கடைந்தாய்! புள்ளூர்
கொடியானேஎ! கொண்டல்வண்ணா! அண்டத்து உம்பரில் நெடியானேஎ! என்று கிடக்கும்என் நெஞ்சமே
.–3-8-1-

‘பெருந்தானத்தில் பெருமிடறு செய்து கூப்பிடுகிறார்’ என்று அருளிச்செய்வதனால், அளபெடை கொண்ட பாடமே சிறப்புடைத்தாம்.-பொன் முடியன்’ என்றதுதான், முடியத் தொடர்ந்து வருகிறபடி.-தொடங்கின வற்றை முடிக்கிறார் –அல்லாதார் முடிகளைப் பொய்ம்முடி ஆக்கும்படி-அசத் சமம் -அலங்காரத்துக்கு இட்டவை – தலையான முடியே அன்றோ இது? மற்ற தலைகள் வணங்கும் -அடி சேர் முடியனராகி -அபிமான பங்கமாய் வந்து சங்கம் இருப்பார்களே – உபய விபூதிகளும் ஒரு முடியிலே கட்டுண்ணும்படி கவித்த முடியே அன்றோ இது? இவர்க்கு இதில் ஓடுகிற விடாயின் மிகுதி, ‘முடியானேஎ!’ என்னும் இசையின் ஓசையிலே காணலாமித்தனை-இத்தால் இசையின் முக்கியத்வம் -அரையர் சேவை -புகும் முறைகள் எல்லாம் இல்லை இதில்:நெடிலுக்கு பின்னால் குறில் வருவது அக்ரமம்

மூன்று உலகும் தொழுது ஏத்தும் சீர் அடியானேஎ – குணா குண நிரூபணம் பண்ணாதே எல்லா உலகங்கட்கும் புகலிடமானதிருவடிகளையுடையவனே! திருமுடியின் அழகை நினைந்து தோற்றுத் திருவடிகளிலே விழுகிறார். ஒருகாலும் அடி விடாரே.
மேல் திருவாய்மொழியில் ‘தன் தாள் இணைக்கீழ்க் கொள்ளும் அப்பனை’ என்றது, வடிம்பு இடுகிறபடி. ‘எல்லார்க்கும் பொதுவான திருவடிகளை என் தலையிலே வையாய்,’ என்பது கருத்து.

ஆழ்கடலைக் கடைந்தாய் –ஆர் அமுது ஊட்டிய அப்பனை’ என்றது, பின்னாடுகிறபடி. இதனால், ‘இத்திருவடிகளில் இனிமையை விட்டு வேறு பிரயோஜனத்தை ஆசைப்பட்டார்க்கும் வருந்தி அவர்கள் விரும்பியவற்றைக் கொடுக்குமவன்’ என்பதனைத் தெரிவித்தவாறு.

புள் ஊர் கொடியானேஎ – தன்னை உவந்தார் பக்கல் வந்து தோற்றும்படி பெரிய திருவடியை வாகனமாகவும் கொடியாகவும் உடையவனே!-அடியார்கள் இருந்த இடத்தே செல்லுகைக்கு வாகனம்; தூரத்திலே கண்டு வாராநின்றான் என்று தரிக்கைக்குக் கொடி.-கொண்டல் வண்ணா – திருவடி முதுகிலே தோன்றினபோது ஒரு மேருவைக் கினிய – கபளீகரித்த -முழுதும் அபகரித்த -காளமேகம் படிந்தாற்போலே ஆயிற்று இருப்பது –என் நெஞ்சமே –கொண்டாடிச் சொல்லுகிறார் அல்லர்;-தன் விடாய்க்கு என்செய்வேன்!’ -‘நாதா! காப்பாற்ற வேண்டாவோ! இவ்வயிறு தாரி-ஒன்றின் ஒன்றின் செயலை கேட்க்கிறதே ஒரு வயிறு இல்லையே –நெஞ்சை என்னால் பரிக்கப் போமோ?’ –பொன்மலையின் மீமிசைக் கார் முகில் போலே பெரிய திருவடி திருத் தோளின் மேல் ஏறி அருளி இந்த லோகத்தில் வந்து தோன்றாய் -என்று எம்பெருமானைக் காண ஆசைப்பட்ட போதே காணப் பெறாமையாலே குறைப் பட்டுக் கிடைக்கும் என் நெஞ்சம் என்கிறார்.

————–

நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே! தண் இலங்கைக்கு இறையைச் செற்ற
நஞ்சனே! ஞாலம் கொள் வான் குறளாகிய வஞ்சனே! என்னும் எப்போதும் என் வாசகமே
.–3-8-2-

நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே –‘என்றும் நெஞ்சிலே இருந்துபோம் இத்தனையேயோ? என் பக்கலிலும் ஒரு கால் இருத்தல் ஆகாதோ?’ என்னா நின்றது;
வாக்கின் வார்த்தை இருக்கிறபடி இது-பரமபதத்தில் இட்டளமும் -சங்கோசம் -தீர்ந்தது இவர் நெஞ்சிலே ஆதலின், ‘நீள் நகராக’ என்கிறார்.-என் வாக்கானது இவ் வஞ்சனத்தையே சொல்லா நின்றது. ‘இவ் வஞ்சனத்தை அநுசந்தித்த பின்பு இராமாவதாரத்தின்
செவ்வையிலும் போகிறது இல்லை,’ என்பார், ‘வஞ்சனே என்னும்’ எனப்பிரிநிலை ஏகாரங்கொடுத்து ஓதுகிறார்.
‘இராமாவதாரத்திலும் இதற்குப் பெருமை என்?’ எனின், தன் பெருமை அழியாமற் செய்த இடம் அன்றோ இராமாவதாரம்?
தன் பெருமை அழிய மாறின இடம் அன்றோ இது? எப்போதும் – கலியர் ‘சோறு சோறு’ என்னுமாறு போன்று.

———-

வாசகமே ஏத்த அருள் செயும் வானவர் தம் நாயகனே! நாள் இளந் திங்களைக் கோள்விடுத்து
வேய் அகம் பால் வெண்ணெய் தொடு வுண்ட ஆன் ஆயர் தாயவனே! என்று தடவும் என் கைகளே.
–3-8-3—

என் கைகள் வாசகமே ஏத்த அருள் செய்யும் வானவர்தம் நாயகனே என்னும்– கைகளானவை ‘இவ்வாக்கே ஏத்திப் போமித்தனையேயோ! நானும் ஒருகால் ஏத்தினால் ஆகாதோ!’ என்னா நின்றது.‘தன் நிறத்தின் இருட்சியாலும் அவ்விடத்தின் இருட்சியாலும்
தெரியாமையாலே தடவாநிற்கச் செய்தே, கையிலே வெண்ணெய்த் தாழிகள் தட்டின அளவிலே பிரியத்தாலே நகைத்தலைச் செய்வான்-அவ்வாறு நகைத்தலைச் செய்யுமதுவே கை விளக்காக அமுது செய்வான்,’புதிய சந்திரனைப்போலே ஆயிற்று முறுவல் இருக்கிறது;-அவன் கை வெண்ணெய் தடவ -கையும் மெய்யுமாக பிடிக்க ஆழ்வார் கை தடவுகிறது-வெண்ணெய் களவு கண்டு புசித்த விருத்தாந்தத்தை நினைந்தவாறே கைகளுக்குக் கண் தோற்றுகிறது இல்லை; அதனாலே, தேடுகின்றன’ என்னுதல். –கைகளும் மயங்கின -ஆழ்வார் அபி நிவேசம் இவற்றுக்கும் உண்டே –-‘கடல் கொண்ட பொருள் மீளுமோ?-ராமம் மே அநு கதாத்ருஷ்ட்டி –-

—————–

கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை வைகலும் மாத்திரைப் போதும் ஓர் வீடு இன்றிப்
பைகொள் பாம்பு ஏறி உறை பரனே! உன்னை மெய்கொளக் காண விரும்பும் என் கண்களே.
–3-8-4-

வாய்க்கு ஏத்துதல் போன்று கைக்குத் தொழுகையும் ஆதலின், வாய் வந்தபடி சொல்லவும் கை வந்தபடி செய்யவுமே அன்றோ இவர் ஆசைப்படுகிறார்?’ என்றபடி-இத்தலை தொழுது இருப்புப் பெறுமாறு போன்று, தொழுவித்துக் கொண்டு இருப்புப் பெறும் உன்னை. என்றது,
‘தொழுது அல்லது தரியாத கையாலே தொழுவித்துக்கொண்டு அல்லது தரியாத உன்னை’ என்றபடி.-பை கொள் பாம்பு ஏறி உறை பரனே – திருமேனியின் பரிசத்தாலே விரிந்திருக்கிற பணங்களையுடைய திருவனந்தாழ்வான்மேலே சாய்ந்தருளுகையாலே தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே இருக்கையாலே ‘பரன்’ என்கிறது.-இதனால் தொழுவித்துக் கொள்ளுகைக்கு ஈடான உயர்வு அற உயர்ந்த உயர்வினையும், விரும்பத் தக்கதாகையையும்
தொழுமவர்கள் இருக்கும்படியையும் சொல்லிற்று.-அரவு அணையான் அன்றோ சர்வேசுவரனாவான்? -பர்யங்க வித்தையிற் சொல்லுகிற பேற்றை ஆசைப்படா நின்றது என்றபடி.

மெய் கொள்ளக் காண – பத்தும் பத்தாக மெய்யே காண. என்றது, ‘மனத்தின் அனுபவம் எப்பொழுதும் இடையறாது நிற்கின்ற நினைவின் மிகுதியாலே நேரே கண்கூடாகக் காணுதலைப் போன்று நன்கு வெளிப்பட,-பாவனா பிரகர்ஷம் -உருவ வெளிப்பாடு – ‘இனிக் கிட்டிற்று’ என்று அணைக்கத் தேட, -கைக்கு எட்டாமையாலே கூப்பீட்டோடே முடிந்து போதலன்றிக்கே, பிரத்ய பிஜ்ஞார்ஹமாம்படி தேடாநின்றது,’ என்றபடி. விரும்பும் –
ஆசைப்படாநின்றது. ‘கிடைப்பது, கிடையாது ஒழிவது, ஆசைப்படுகின்றது’ என்றபடி.
என் கண்கள் தம் கைகளாலே தொழவும் தாம் காணவும் ஆசைப்படா நின்றன.
‘ஸ்ரீபரதாழ்வான் பெருமாள் பின்னே போன இளைய பெருமாளை ‘அவரும் ஒருவரே’ என்று கொண்டாடி, அவர் போய்ச் செய்த அடிமையையும் தான் செய்ய ஆசைப்பட்டாற் போலே ஆசைப்படாநின்றன,’ என்றபடி.

————

கண்களாற் காண வருங் கொல் என்று ஆசையால் மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல்
பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்துத் திண் கொள்ள ஓர்க்கும் கிடந்து என் செவிகளே.
–3-8-5-

தன்னைக் காணவேண்டும் என்று விடாய்த்த இக்கண்களாலே ஒருகால் காண வருமோ?’ என்னும் ஆசையாலே செவிகள் கிடந்து ஓர்க்கும்; கன்னம் இட்டும் காண வேண்டும்படி யன்றோ இறைவனுடைய சிறப்பு இருப்பது? பிச்சை புகினும் கற்கை நன்றே போலே திருடியும் காண வேண்டும் படி அன்றோ விஷய வை லக்ஷண்யம் -கன்னக் கோல் இட்டு காண ஆசைப்பட்டன செவிகள்-மண் கேட்ட வாமனன் -என்றும் – மண் கொண்ட திரிவிக்ரமன் சொல்லாமல் முடி சூடின பின்பும் கருந்தரையில் பேர் சொல்லும் அந்தரங்கரைப் போலே மண் கொண்ட பின்பும் ‘வாமனன்’ என்கிறார் காணும்.
அன்றியே, இதிலே தாம் துவக்குண்டபடியாலே வளர்ந்த பின்பும் ‘வாமனன்’ என்கிறார் என்னுதல்.பண் கொண்ட – வாகனத்தின்மேல் இடுகிற சேணத்தைச் சொல்லுதல்;
அன்றி, கருடன் உருவம் வேதமே ஆகையாலே பிருஹத்ரதந்தரம் முதலிய சாமங்களைச் சொல்லுதல்.திண்கொள் ஓர்க்கும் என் செவிகள் – முன்னே நின்று சிலர் வார்த்தை சொன்னால் அதிலே செவி தாழ்கிறது இல்லை; இதனையே திண்ணிதாகப் புத்தி பண்ணா நின்றது. அதன் பக்கல் பக்ஷபாதமன்றோ அதற்கு அடி? பெரிய திருவடியின் மேல் உள்ள ஆசை -இறகின் ஒலி கேட்க ஆசை என்றுமாம் –

———–

செவிகளால் ஆர நின் கீர்த்திக் கனியெனும் கவிகளே காலப் பண் தேன் உறைப்பத் துற்றுப்
புவியின் மேல் பொன் நெடுஞ் சக்கரத்து உன்னையே அவிவு இன்றி ஆதரிக்கும் எனது ஆவியே.
–3-8-6-

‘கவி கனி போல் இருக்கையன்றிக்கே, இனிமையின் மிகுதியாலே கனி கவியாயிற்று,’ என்கிறார்.-புவியின்மேல் – ‘எங்கேனும் விடாய்த்தாரை எங்கேனும் விடாய் தீர்க்க ஒண்ணாது; பசித்த இடத்தே சோறு இடவேண்டும்,’ என்கிறார்.
‘தேசம் இதுவே ஆனதைப் போன்று விஷயமும் இதுவேயாக வேண்டும்,’ என்கிறார் மேல்;
பொன் நெடும் சக்கரத்து உன்னையே – விரும்பத்தக்கதாய், இனிமை எல்லை இன்றிக்கேயிருக்கிற திருவாழியை அடையாளமாக உடைய உன்னையே-எனது ஆவியே –
‘தன்னடையே வரப்பெற வேண்டுங்காண்’ என்றால், அது கேளாது-‘அவன் அருள் பெறுமளவில் நில்லாது’ என்னும்படியான ஆவி.-என்னுடைய பிராணனானது உன்னுடைய கீர்த்தியை கேட்க வேணும் என்று ஆசைப் படா நின்றது -என்கிறார் –

———–

ஆவியே! ஆரமுதே;என்னை ஆளுடைத் தூவி அம் புள்ளுடையாய்!சுடர் நேமியாய்!
பாவியேன் நெஞ்சம் புலம்பப் பல காலும் கூவியும் காணப்பெறேன் உன கோலமே
.–3-8-7-

கரணங்களை ஒழியத் தம்முடைய இழவு சொல்லுகிறார். மக்களினுடைய இழவும் பசியும் சொன்னார் மேல்;-இனி, தம் இழவும் பசியும் சொல்லுகிறார். இப்பாசுரத்தில், ‘நான் மஹாபாபி ஆகையாலே, நெஞ்சின் விடாயும் தீரப்பெற்றிலேன்;-என் விடாயும் தீரப்பெற்றிலேன்,’ என்கிறார்.-ஆரமுதே- ஆர்ந்த அமுது; நிறைந்த அமுதம்; உள்ளுந்தோறும் தித்திக்கும் அமுது.-நினைக்கும் பொழுது எல்லாம் அமுதிலும் ஆற்ற இனிய அமுதே அன்றோ? தேவசாதியினுடைய அமுதைக்காட்டிலும் வேறுபாடு தோன்ற ‘ஆர் அமுது’ என்கிறார்.-இவற்றால், தாரகமுமாய் இனிய பொருளுமாய் இருக்க, விட்டிருக்கப் போமோ?’ என்கிறார் என்றபடி.-என்னை ஆளுடைத் தூவி அம் புள்ளுடையாய்!-மற்றை அமுதத்தைக் கொண்டு வருமவனே காணும், இவ்வமுதத்தையும் கொண்டு வருவான்,’ என்கிறார் என்பதும்,‘தாரகமுமாய் இனிய பொருளுமாய் இருப்பது ஒன்றைக் கொண்டு வந்து தருவார் உண்டாயிருக்க, ஆறி இருக்க விரகு உண்டோ?’ என்கிறார் என்பதும் பெறுதும்.

மடல் ஊர்ந்தார் பெற்ற பேற்றைப் பெற்றேன் அல்லேன்.-என் சொரூபத்தையும் அழித்தேன், அவன் சொரூபத்தையும் அழித்தேன். அவன் நீர்மையையும் அழித்தேன்,உன கோலமே –
இரண்டு தலையையும் அழித்துப் பெற வேண்டும் விஷயத்தினுடைய சிறப்புச் சொல்லுகிறது.-கண்ணும் உறங்காதே போது போக்கவும் அரிதாய் அன்றோ இருப்பது?

———

கோலமே! தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன நீலமே! நின்று எனது ஆவியை ஈர்கின்ற
சீலமே! சென்று செல்லாதன முன் நிலாம் காலமே! உன்னை எந்நாள் கண்டு கொள்வனே?–3-8-8-

கோலமே –அழகும் அழகுக்குப் பற்றுக்கோடான பொருளும் என்று இரண்டு இன்றிக்கே, அழகுதானே வடிவாய் இருக்கிறபடி.-தத் குணசாரத்துவத்தாலே-விஜ்ஞ்ஞாதா என்னாமல் -விஜ்ஞ்ஞானம் யஜ்ஞ்ஞம் தனுதே -பண்ணும் என்பதே போலே –அப்படி அழகே விஞ்சி அதனையிட்டு நிரூபிக்க வேண்டும்படி இருக்கையாலே, ‘கோலமே!’ என்கிறார்.

அஞ்சன நீலமே –‘அஞ்சனமே! நீலமே!’ என்றபடி.-ஒன்றே உபமானமாவது ஒன்று இல்லாமையாலே அங்கும் இங்கும் கதிர் பொறுக்குகிறார்-நின்று எனது ஆவியை ஈர்கின்ற சீலமே –பிரிவு காலத்தில் வடிவை மறக்கிலும் மறக்க ஒண்ணாதபடி பின்னாடி என் நெஞ்சை அறுத்துக்கொண்டு இருக்கின்ற சீலமே சொரூபமானவனே! இங்கே ‘சீலம்’ என்றது, ‘செய்ய தாமரைக்கண்ணன்’ என்ற திருவாய்மொழியில் ‘நெஞ்சினால் நினைப்பான் எவன்? அவனாகும் நீள்கடல் வண்ணன்,’ என்கிற அர்ச்சாவதாரத்தின் நீர்மையை.
அன்றிக்கே,-‘வளவேழ் உலகின்’ என்ற திருவாய்மொழியில் தம்மைச் சேரவிட்டுக் கொண்ட சீலமாதல்.

சென்று செல்லாதன முன்னிலாம் காலமே – இறந்த காலம் நிகழ்காலம் எதிர் காலம் என்னும் மூன்று காலத்தையும் நீ இட்ட வழக்காக உடையவனே! இதனால், ‘அக்காலமும் நீ இட்ட வழக்கு அன்றோ?’ என்கிறார்-உன்னை எந்நாள் கண்டுகொள்வன் – வடிவழகும் குணங்களும் விடலாய் இருந்தன இல்லை; காலக் கழிப்புச் சொல்ல ஒண்ணாதபடியாய் இருந்தது; ஆனபின்பு, நான் உன்னைக் காண்பது என்று சொல்லாய்? என்றது,-இக்காலம் தன்னையே அந்தக் காணக் கடவிய காலம் ஆக்குவம் என்றால் உன்னால் ஆக்க முடியாதோ -என்கிறார்

———–

கொள்வன் நான், மாவலி! மூவடி தா’என்ற கள்வனே! கஞ்சனை வஞ்சித்து வாணனை
உள்வன்மை தீர,ஓர் ஆயிரம் தோள் துணித்த புள்வல்லாய்! உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே?
–3-8-9-

கொள்வன்-1-மலையாளர் வளைப்புப் போலே கொண்டு அல்லது போகேன் என்றானாயிற்று.-அன்றிக்கே,2-இவனுடைய வாமன வேஷத்தைக் கண்டு -விநீத வேஷம் கண்டு -‘இவன் நம் பக்கல் ஒன்று கொள்வதுகாண்’ என்று நினைந்தமை தோன்ற இருந்தான் ஆயிற்று மகாபலி; நினைத்ததை அறிந்து, ‘நான் கொள்வேன் என்கிறான்’ என்னுதல். அன்றிக்கே, 3-இவன் ஒன்றிலும் பற்று இல்லாதவனாய் இருத்தலை வடிவில் கண்டு, ‘இவன் நம் கையில் ஒன்று கொள்ளுமோ?’ என்று இருந்தான் மஹாபலி;
‘நீ அங்ஙன் நினைக்க வேண்டா; நான் விருப்புடையேன்,’ என்கிறான்

‘இவன் ஒரு பாலன் தன் முன்பே நின்று சிறு பேரைச் சொல்லி அழைக்கிறான்,’ என்று நினைத்து இனியனாய் முகத்தைப் பார்த்து,-‘உனக்கு வேண்டுவது என்?’அவனை வடிவழகாலும் பேச்சழகாலும் வாய் மாளப் பண்ணின வஞ்சனங்கள் எல்லாவற்றையும் நினைத்துக் ‘கள்வனே’ என்கிறார்.-

புன் சிறு தெய்வத்தைப்பற்றி இருந்த வாணனுடைய நெஞ்சுவலி கைமேலே போகும்படியாகப் பெரிய திருவடியின்மேலே ஏறிச் சாரிகை-வையாளி-வந்தவனே!
‘கரபாதை அன்றோஇவனை இப்படிக் கலங்கப் பண்ணிற்று’ என்று அடுத்தேறாக வந்த கரத்தைக் கழித்து இரண்டு கரங்களோடு நிறுத்தினவன்,’‘இவன் கைவிஞ்சினான்’ என்று இவனைக் கை கழிய விட்டான் என்றபடி.-வாள் வல்லாய், தோள் வல்லாய்’ என்பன போன்று ‘புள் வல்லாய்’ என்கிறார்.

உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே –-சொரூபஞானம் பிறந்தவாறே அவன்பக்கல்நின்றும் பிரிந்தாற்போலே இருக்கிறது காணும் இவர்க்கு.பிராட்டியினுடைய
வார்த்தை எல்லார்க்கும் சொல்லலாம்படி அன்றோ சொரூபத்தை உணர்ந்தால் இருப்பது?ஈசுவரனில் பிராட்டிமார்க்குப் பேதம் சொல்லுகிற பிரமாணங்கள் எல்லாம், அல்லாதாரைப் போன்று பிரிவு உண்டு என்னுமிடம் சொல்லுகின்றன;
ஐக்கியம் சொல்லுகிற இடமெல்லாம் -கச்சதா மாதுல குலம் போலே – ‘பாரதந்திரிய எல்லையைப் பற்றச் சொல்லுகின்றன’ என்று இடைப்பிற வரலாக-ப்ராசங்கிகமாக – ஓர் உருவிலே அருளிச்செய்தார்-

ஆயிரம் கரம் கழித்த ஆதி மால் –கரபாஹை கலங்கப் பண்ணியது -அடுத்தேறாக வந்த -அடுக்கு அடுக்க -வந்தவற்றை நீக்கி -பிராப்த கரத்திலே நிறுத்தி -இரண்டில் நிறுத்தினான்
வாணன் உடைய கைப்பற்றையும் கழித்து இறையிலி -கரம் இல்லாமல் -என்றுமாம் –
கைப்பற்று -பரமசிவன் -இறை இல்லாமல் ஆக்கி -இறை -கரம் என்றும் அர்த்தம் உண்டே –
‘வாணனுடைய கைப்பற்றையும் கழித்து இறையிலி ஆக்கின உன்னை எந்நாள் வந்து கிட்டுவேன்?’ என்கிறார்.

———–

பொருந்திய மாமருதின்னிடை போய எம் பொருந் தகாய்! உன் கழல் காணிய பேதுற்று
வருந்தி நான் வாசக மாலை கொண்டு உன்னையே இருந்திருந்து எத்தனை காலம் புலம்புவனே?
–3-8-10-

பொருந்திய மா மருது – மருது, மா மருது, பொருந்திய மா மருது.
மருது என்கையாலே மரத்தைச் சொல்லி, ‘மரங்கள்போல் வலிய நெஞ்சம்’ என்று வன்மைக்கு மரத்தைச் சொல்லுகையாலே, நெஞ்சின் வன்மையைத் தெரிவித்தபடி.
‘மா’ என்கையாலே, மா–மாறுஎன்று கறுப்பாய், அத்தால், சீற்றத்தைத் தெரிவித்தபடி.
அன்றிக்கே, ‘மா’ என்பதனால் பெருமையைச் சொல்லி, அதனால், வேறு வினை செய்யாமல் மேலே விழ அமைந்திருத்தலைத் தெரிவித்தபடி ஆகவுமாம்.
‘பொருந்திய’ என்றதனால், நினைத்த காரியத்திற்குப் பொருந்தியிருத்தலைக் கூறியபடியாய், இவற்றின் நெஞ்சில் பொருத்தத்தைத் தெரிவித்தபடி.
ஆக, ‘இப்படிச் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டை யுடையராய், சீற்றத்தை யுடையராய் கிருஷ்ண தரிசனத்தாலும் நெஞ்சு நெகிழாத வன்மையையுடையராய், மரத்தின் வடிவாய் அமைந்த அசுரர்கள்’ என்றபடி-மருதங்களின் இடை -சொல்லாமல் ஒருமை -பொருந்தி -காம குரோதங்கள் சொல்லி ஒருமை ஒரு தாய் பிள்ளைகள் -லஷ்யம் ஓன்று போலே இங்கும்

எம் பெருந்தகாய் – அவற்றின் நடுவே அவற்றைத் தப்பிப் போய் எனக்கு இறைவனான உன்னைத் தந்த பெரியோனே!-ஜகத் சேஷி உடைத்தாய் ஆயிற்றே என்று உகக்கிறார் —உன் கழல் காணிய – ‘அப்போது கடகட என்ற ஓசையைக் கேட்டுப் பரவசப்பட்டு’ என்கிறபடியே, கடகட என்று அவை முரிந்து விழுகிற போதை ஓசையைக் கேட்டுப் புரிந்து பார்த்து முன் இல்லாத காட்சியைக் கண்ட காரணத்தால் மலர்ந்த அக்கண் போலே சிவந்திருக்கிற
திருவடிகளைக் காணவேண்டும் என்று ஆசைப்பட்டு. –தம்முடைய ஜீவனத்தை நோக்கத் தேடுகிறார்.-எல்லா அவச்தைகளிலும் திருவடி விடாதவர் இவர் -ரிஷி ஜீவனம் திருக் கண்கள் இவர் ஜீவனம் திருவடி

வாசகமாலை கொண்டு – ஒருமலை எடுத்தாற் போலே ஆயிற்று- இவர்க்கு ஒரு சொற் கொண்டு சொல்லுகை-எத்தனை காலம் புலம்புவனே –‘சாதனமாக நினைத்துச் சொல்லமாட்டார், அடையத்தக்க பேறாக நினைத்துத் தவிரமாட்டார்; இதற்கு முடிவு என்?’ என்கிறார்.-

——————-

புலம்பு சீர்ப் பூமி யளந்த பெருமானை நலங்கொள் சீர் நன் குருகூர்ச் சடகோபன் சொல்
வலங்கொண்ட வாயிரத்துள் இவையுமோர் பத்து இலங்குவான் யாவரும் ஏறுவர் சொன்னாலே 
–3-8-11-

சப்த மாத்ரத்தாலே -பரமபதம் பெறுவார் -சொன்னாலே -இதில் பிரார்த்தித்த படியே –
ஒவ் ஒரு இந்த்ரியமும் -மற்ற வியாபாரம் பெற அங்கே தானே நடக்கும் –பூமி யளந்த பெருமானை-அந்ய சேஷத்வ -ஸூவ ஸ்வதந்த்ர்யம் -இரண்டையும் தவிர்ந்தார் -சர்வ ஸ்வாமி –நலங்கொள் சீர்-கரணங்கள் சேதன சமாதியால் விடாய்த்து-அவை தான் ஓர் இந்த்ரிய வ்ருத்தி மற்றவற்றை ஆசைப்பட்டு இவர் அவைகள் உடன் ஆசைப்பட்டு பகவத் விச்சேதம் இல்லாத
ச ஏகதா பவதி -அநேக சரீரங்கள் பரிகரித்து
அவ்வோ சரீரங்களிலும் ஒவ் ஒரு இந்த்ரியமும் மற்றவற்றை எல்லாம் விரும்பி அனுபவித்து
பூர்ண அனுபவம் பண்ணலாம் படி
தேசம் பெறப் பெறுவார் –

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –