ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
கடல் ஓசைக்கு ஆற்றாமல் அருளிச் செய்கிறார் -நெய்தல் நிலம் பிரிந்தார் உள்ள இடம்-கடலைக் கடைந்து அமுதம் கொண்டு போக –அத்தை திரும்பி வாங்கக் கொள்ள மாட்டாமல் -முடியாமல் பரதர் முத்துச் சிப்பி விற்பவர்கள் -அவர்கள் இடம் விலை கொடுத்து வாங்கிய வளையல்களைப் பிடுங்க என்னிடம் தானே இவை உத்பத்தி ஆகும் -சங்கு -ஸஜாதீயம் கொண்டாடி பிடுங்க யத்தனிக்க -ஈருகிறது
வேரித் திருத்துழாயைத் துணையாகக் கூட்டி வந்து -ஓ என்று சப்திக்கிறது-நண்ணாதார் முறுவலிப்ப -4-9–கண்ணாளா கடல் கடைந்தாய் அதிலும் உண்டே-அங்கும்-நண்ணாதார் முறுவலிப்ப-நல்ல உற்றார் கரைந்து என்க -உலகு இயற்கை- தாய முறை பற்றி –-தலைத் தலைப்பெய்து -வந்து வந்து அழுது -அலைக் கரங்கள் போல் – ஸம்ஸார சாஹர கோலா ஹலம் ஆற்றாமை அதில் —
இவன் வந்து கிட்டுவதற்கு முன்னே கடலோசை வந்து செவிப்பட்டு பாதகம் ஆகிற படியை சொல்கிறது –பதினாலாண்டு கூடிப் போன வழியை ஒரு பகலே வாரா நிற்கச் செய்தே – க்ரம ப்ராப்தி பற்றாமை நடுவே திருவடியை வரக் காட்டினார் இறே-அப்படியே-இங்கு ஓர் ஆள் வராவிட்டால் கண்டதெல்லாம் பாதகமாம் இறே –சங்கத்யாத் பரத ஸ்ரீ மான் ராஜ்யே நார்த்தீ ஸ்வயம் பவேத் –சங்கத்யாத்–சேர்ந்து -பெருமாள் உடன் சேர்ந்து- ராஜ்ஜியம் உடன் சேர்ந்து –அத்தையே விரும்புவானாக ஆவானோ என்று அறிய ஆள் அனுப்பினானோ யவ்ராஜ்ய பட்டாபிஷேகம் விருப்பம் கொள்வானோ -இது தான் அர்த்தம் ஐயர் நியமிக்க –ஆச்சி உடைய வர வ்யாஜத்தாலே –நாம் ராஜ்யத்தை தனக்கே கொடுத்து போரச் செய்தேயும் –நம்மை பின் தொடர்ந்து வந்து -சொன்ன நாள் எல்லை கழிந்தால் –பின்னை ஒரு ஷணம் நான்-தாழ்க்கில் தன்னைக் கிடையாது -என்னும்படி நம் நெஞ்சிலே படுத்திப் போனான் –இன்று நாம் சென்று-கிட்டினால் பதினாலாண்டு பிரிந்து கண்ட ஹர்ஷத்தாலே –நீ முடி சூடு என்றால் -அல்லேன் -என்னாதே -அத்தை இசையப் பெறுவது காண்-ஐயர் நம்மை முடி சூட்டப் பாரித்து பெறாதே ஒழிந்த இழவு –நாம் பிள்ளையை-முடி சூட்டிக் கண்டு தீரப் பெறுவது காண் –சநைர் ஜகாம சாபேஷ -என்கிறத்தை சாவேஷ –என்று திருத்தி -கீழ் விழியாலே பார்த்து போனார்-என்று பொருள் சொன்னபடியை -பட்டர் கேட்டருளி –அது வேண்டா காண் -கிடந்த பாடம் தனக்கே-பொருள் சொல்லலாம் காண் என்று –இவ் உபகரணங்களைக் கொண்டு நாம் பிள்ளையை முடி சூட்டிக்-காணப் பெற்றிலோம் என்னும் அபேஷையோடே போனார் என்கிறது காண் -என்று அருளிச் செய்தார் – அத்தலை மகன் வந்து கிட்டுவதற்கு முன்னே இறே-அபிஷேகத்துக்காக வந்த வற்றை வலம் வந்து விருப்பத்துடன் பார்த்து பெருமாள் சா பேஷா -விருப்பத்துடன் பெருமாளுக்கு ராஜ்ஜியம் விருப்பம் இல்லையே கீழ் பார்வை பார்த்து நகன்று போனார் சாவேஷா என்று மாற்றி அப்படி மாற்ற வேண்டாம் ஆசையுடன் தான் பிரதக்ஷிணம் செய்தார் என் பின்னவன் பெற்ற செல்வம் அடியேனும் பெற்றது அன்றோ
பரதாழ்வானுக்கு முடி சூட்டப் பாரித்து 14 வருஷம் காத்து இருந்தார் -என்றார் –
அடுத்த வேளை ஸ்நானம் பரதாழ்வான் உடனே நாட்டாரோடு சேர்ந்து இருக்கிற படி சங்க
என்னோடு சேர இருக்கிற படி ஆஸ்வாஸம் செய்யவே திருவடியை வர விட்டார்
ராஜ்ஜியம் 14 வருஷம் இருந்ததால் தானே விருப்பம் கொண்டு இருந்தானாகில் இங்கேயே இருக்கலாம்
என்று நாட்டார் சொல்லும் அர்த்தம் என்னுடன் சங்காத் -மத் விஷய சங்கம்
யவராஜ்யம் செய்து கொள்ள நியமித்தால் விருப்பம் கொள்வானோ என்று பெருமாள் நினைவு
திருவாய் இங்கிதம் ஞானம் அறிந்தவர்-பாவம் அறிந்தவர் பெருமாள் -திரும்பி வராமல் அங்கேயே இருப்பதைக் கொண்டே அறிந்தார் பரத அபிஷேகத்தில் சா பேஷை உண்டே பெருமாளுக்கு –
உபகரணங்களை நன்றாகக் கடாக்ஷித்துப் போனார் அதே போல் இங்கே தலைமகன் ஆள் விட்டு இருந்து என்னைத் தரிப்பிக்க வேண்டாவோ – ஆள் வரவிடாமையாலே கடலோசை மிகவும் பாதகம் ஆனதே –
தூரஸ்தரான அன்பரும் த்வரித்து வந்து ஆஸ்வஸிப்பிக்கும் படி ஆர்த்தரான இவர்-அதுக்கு மேலே
ஸம்ஸார கோலஹலத்தைக் கண்டு சிதிலரான பிரகாரத்தை கடலோசைக்கு ஆற்றாத தலைவி வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-அவதாரிகை–அவன் வந்து கிட்டுவதற்கு முன்னே கடலோசை வந்து செவிப்பட்டு அது பாதகமாகிற படியைச் சொல்லுகிறது – பதினாலு ஆண்டு கூடப்போன வழியை ஒரு பகலிலே வாரா நிற்கச் செய்தே க்ரம பிராப்தி பற்றாமை நடுவே திருவடியை வரக்காட்டினார் இறே
அப்படியே இங்கு ஓர் ஆள் வரவிட்டால் கண்டது எல்லாம் பாதகமாம் இறே
சங்கத்யா பரத ஸ்ரீ மான் ராஜ்யே -நார்த்தீ ஸ்வயம் பவேத் -யுத்த -128-17-அய்யர் நியமிக்க நடுவில் ஆய்ச்சி யுடைய வர வ்யாஜத்தாலே நாம் நம்மைப் பின் தொடர்ந்து வர அவனுக்கு நாம் சொன்ன நாள் எல்லை கழிந்தால் பின்னை ஒரு க்ஷணம் தாழ்க்கில் தன்னைக் கிடையாது என்னும்படி நம் நெஞ்சிலே படுத்திப் போனான்-இன்று சென்று நாம் கிட்டினால் பதினாலாண்டும் பிரிந்து கண்ட ஹர்ஷத்தாலே
நீ முடி சூடு என்றால் அத்தை அல்லேன் என்னாதே இசையப் பெறுவது காண்-அய்யர் நம்மை முடி சூடிக் காணப் பெறாதே போன இழவு தீர நாம் பிள்ளையை முடி சூடக் கண்டு வாழப் பெறுவது காண்–சநைர் ஜகாம ஸா பேஷ -அயோத்யா -19-31- இத்தை ஸா வேஷ -என்று திருத்தி கீழ் விழியாலே பார்த்துப் போனார் என்று பொருள் சொன்னபடியாலே அத்தை பட்டர் கேட்டு அருளி–அது வேண்டா காண் -கீழ் நடந்த பாடம் தனக்குப் பொருள் சொல்லலாம் காண் -என்று இவ் வுபரணங்களைக் கொண்டு பிள்ளையை முடி சூட்டிக் காணப் பெற்றிலோம் என்னும் அபேஷையோடே போனார் – என்று அருளிச் செய்தார்–அத் தலை மகன் வந்து கிட்டுவதற்கு முன்பே கடலோசை வந்து பாதகமாகிற படியைச் சொல்லுகிறது–
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி–அவதாரிகை-இவர் வந்து கிட்டுவதற்கு முன்னே கடலோசை வந்து செவிப்பட்டு அத்தால் பாதைப்படும் நாயகியாய் அருளிச் செய்கிறார்
மலை கொண்டு மத்தா வரவாற் சுழற்றிய மாயப் பிரான்
அலை கண்டு கொண்ட வமுதம் கொள்ளாது கடல் பரதர்
விலை கொண்டு தந்த சங்கமிவை வேரித் துழாய் துணையாத்
துலை கொண்டு தாயம் கிளர்ந்து கொள்வான் ஒத்து அழைக்கின்றதே -51 –கடலோசைக்கு ஆற்றாத தலைவி இரங்கல் –
நண்ணாது மாலடியை நாநிலத்தே வல் வினையால்
எண்ணாராத் துன்பமுறு மிவ் வுயிர்கள் -தண்ணிமையைக்
கண்டிருக்க மாட்டாமல் கண் கலங்கும் மாறன் அருள்
உண்டு நமக்கு உற்ற துணை யொன்று-39–சர்வேஸ்வரனை பார்த்து -ரஷகனான நீ உளனாய் இருக்க
இவை நோவு படுகை போருமோ -பிரானே என்று விஷண்ணராய் இவர்கள் நோவைப் போக்குதல்
இது கண்டு பொறுக்க மாட்டாத என்னை முடித்தல் செய்து அருள வேணும் -என்ன
இவர்களுக்கு இச்சை இல்லாமையாலே உம்மோபாதி நாமும் நொந்து காணும் இருக்கிறது -என்ன
ஆனால் இவர்கள் நடுவில் நின்றும் என்னை வாங்க வேணும் -என்ன
இவர் கிலேசம் தீரும்படி பிராட்டியும் தானுமாக திரு நாட்டில் இருக்கும் இருப்பை அவன் காட்டிக் கொடுக்க அத்தைக் கண்டு அனுபவித்து க்ருதார்த்தர் ஆகிற நண்ணாதார் முறுவலிப்ப -வில் அர்த்தத்தை நண்ணாது மாலடியை -இத்யாதியாலே அருளிச் செய்கிறார்
மலை கொண்டு மத்தா –அசல -பதார்த்தத்தை-ஸ்வ புத்ய அதீனமாக திரியும்படி பண்ணினான் –அரவால் –அதி மிதுனமான வாசுகியை கயிறாகக் கட்டிக் கொண்டான்–சுழற்றிய-வைத்த நேர்ப்பம் இருந்த படி –அமிர்தம் எழும் அளவும் செல்லத் தானே திரியும் படி –குசவன் திரிகை ஒருகால் திரித்து விட்டால் சிறிது போது திரியுமா போலே –சர்வ சக்தி திரித்தது ஆகையாலே கார்யம் முடியும் தனையும் திரிந்தது –இத்தால்-சகல பதார்த்தங்களின் உடைய பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் ஸ்வ புத்தி அதீனம் என்றபடி –மாயப் பிரான் –ஆஸ்ரிதமான குண சேஷ்டிதங்கள் உடையவன்-மாயிரும் குன்றம் –பெரிய திருமொழி -5-7-4-இத்யாதி –சாத்தின திருமாலையும் பரி வட்டமும் அலைய நின்று கடைந்த படி–பிரான் –எனக்கு அவ்வடிவு அழகை உபகரித்த உபகாரகன் –இவருடைய அம்ருதம் இருந்த படி—அலை கண்டு இத்யாதி –தன்னை கீழ் மண் கொண்டு மேல் மண் எறியும் படி நெஞ்சிலே மந்தரத்தை நட்டு உலக்கையை-விடு நகம் கட்டி நல் ஜீவனை வாங்கிக் கொண்டவன் பாடு சென்று அத்தை மீட்டுக் கொள்ள மாட்டாது –கடலே கடலே உன்னைக் கடைந்து கலக்குறுத்து –நாச்சியார் திருமொழி -10-9-என்கிற அவன் பாடு போக மாட்டாது-பரதர் இத்யாதி –வளை விற்கும் செட்டிகள் பக்கலிலே விலைக்கு கொண்ட சங்கங்களை வாங்கிக் கொள்ளப் பாரா நின்றது –நாங்கள் தன் பாடே சென்றோமோ-தன்னை நெருக்கிக் கொண்டோமோ–வேரித் துழாய் துணையா –நறு நாற்றத்தை உடைய திருத் துழாயை தனக்கு கூட்டுப் படையாகக் கொண்டு – அங்கு நின்றும் இலை யமுது கொண்டு வந்து காணும் நலிகிறது –(இலை அமுது -சாடு -வெற்றிலை -இலை திருத்துழாய் அமுது )சக்கரவர்த்தி திருமகனை அண்டை கொண்டு மகாராஜர் வாலியை அறை கூவினால் போலே- திருத் துழாயை அண்டை கொண்டு நலியத் தொடங்கிற்று –
தேன நாதேன மஹதா-மஹதா – மகாராஜர் மிடற்றில் தசைப்புக்கு உரம் உண்டு என்று தோற்றும்படி இருக்கை –நிர்ஜகாம –புறப்பட்டான் –ஹரீஸ்வர-பண்டு சிலர் அறை கூவ இருந்து அறியாதவன் –அநுமான்ய--ஆண்களோடு கலக்க வேண்டாவோ என்றான் –ததா- சர்வ ஸ்வஹரணம் பண்ணினாலும் புறப்பட ஒண்ணாத அவஸ்த்தை -(அணைத்த தசையில் )-பர்த்தாரம் பரிஷஸ்யஜேக்கு -ஆசைப் பட்டு இருக்குமே அவள்–சுக்ரீவேந ஸமாஹிதா-சுக்ரீவன் அறை கூவப் போனானே வாலி –துலை கொண்டு-தானும் ஒரு துலை இட்டுக் கொண்டு–
தாயம் இத்யாதி –தாயம் -ஞாதிகள் நாலைந்து க்ரயம் சென்று போனத்தை-எங்களது என்று தொடருவாரைப் போலே –சங்கு களுக்கு உத்பத்தி ஸ்தானம் தன பக்கலிலே ஆகையாலே –சஜாதீயம் -என்று தொடரா நின்றது –அழைக்கின்றதே –கார்யப் பாட்டால் கூப்பிடா நின்றது –வழிப் பறிக்காரர் அழைக்குமா போலே –ஒரு சர்வ சக்தி தன் தோள் வலியாலே உலக்கையை விடு நகம்-கட்டி தன் பக்கல் உள்ளது கொண்டு அன்று அங்கு ஒரு குரல் கூப்பிட மாட்டிற்று இல்லை – அபலை என்று பற்றி நலியத் தொடங்கிற்று–இப்படி ஓசைப் படுத்தின இடத்துக்கு மேல் பிரிவில் சக்ரவாக பக்ஷி ஓசை நலிந்ததே
பூர்வ அவஸ்தை சீதாப் பிராட்டிக்கு –நிச்வசஞ் சக்ரவாகாநாம் –பிரிவிலே ஆகையாலே அவற்றின் பேச்சு அசஹ்யமான படி–சஹ சாரணாம்--பூர்வ அவஸ்தையில் அவற்றைப் போலே அக்தே தாமும்–புண்டரீக விசாலாட்ஷி--வேல் போலே அவற்றின் சப்தம் -செவி வழியே குளிக்கப் புக்கவாறே வெளுக்க விழித்த-விழி இருந்தபடி –கதேமேஷா பவிஷ்யதி –-என்ன துன்பம் பட்டாளோ-
கடலோசைக்கு இரங்கி –வலியார் இடத்தே வலிமை காட்ட முடியாமல் -அமுதம் எடுத்த எம்பெருமான் இடம் காட்ட முடியாமல் எளியோரை வலிந்து நலியுமா போலே -சங்கு வளைகளை கவர்ந்து சென்று -தன் வலிமை போதாது என்று திருத் துழாயையும் கூட்டி மிக்க ஒலியால் அறை கூவுகின்றதே-வேரித் துழாய் துணையாத்–திருத் துழாய் மேலே ஆசைப் பட்டு கிடைக்காமையால் தளருவது போலே –
வாலி-ஸூ க்ரீவன் -நாமி பலம்-தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் நாம பலம் -போலே
துலை தலைக் கொண்டும் -என்னை தொலைப்பதற்காக-தாயம் கிளர்ந்து கொள்வான் ஒத்து-
தாயாதிகள் வழக்கு தொடர்ந்து சொத்து பறிப்பது போலே-அழைக்கின்றதே–அவன் திருமேனிக்கும் கம்பீரமான குரல் ஒலிக்கும் போலியாக வருத்தும்-
மலை கொண்டு மத்தா வரவாற் சுழற்றிய மாயப் பிரான்-மந்த்ர பர்வதத்தை மத்தாகக் கொண்டு
வாஸூகி யாகிற பாம்பாலே கடைந்த ஆச்சர்யத்தை யுடைய ஸர்வேஸ்வரன்–அலை கண்டு கொண்ட வமுதம் கொள்ளாது கடல்-தன்னை அலையும் படி தன் பக்கலில் நின்றும் வாங்கிக் கொண்ட அம்ருதத்தை மீட்டுக் கொள்ள மாட்டாது கடலானது–பரதர் விலை கொண்டு தந்த சங்கமிவை–
இச் சங்கங்கள் விலை வாங்கிக் கொண்டு பரதர் தந்தவை–பரதர் என்று -நுளை யருக்குப் பேர்—வேரித் துழாய் துணையா-மதுவை யுடைத்தான திருத்துழாயைத் தனக்குத் துணையாகக் கொண்டு
அதாவது-திருத்துழாயில் ஆசையால் யுண்டான தளர்த்தி இவளை நலிகைக்கு உறுப்பாகை-துலை கொண்டு-ஒத்து எதிர் ஏறி-துலைத்தல் -முடித்தலாய்-இவளை முடிக்க வேணும் என்று உட்கொண்டு என்றுமாம் –தாயம் கிளர்ந்து— ஞாதேயம் கொண்டாடுவாரைப் போலே மேல் எழுந்து–கொள்வான் ஒத்து
வளையை மீட்டு வாங்கிக் கொள்வாரைப் போலே–அழைக்கின்றதே–அவஷ்டம்ப (பற்றுக் கொம்பு )பலமுடையார் வியவஹாரத்துக்குத் தொடர்ந்து அழைக்கும் கணக்கிலே அதி கோஷம் பண்ணா நின்றது என்று தன் ஆற்றாமை கூறினாள் ஆயிற்று –இத்தால்-மலை கொண்டு என்று தொடங்கி -அமுதம் கொள்ளாது கடல் -என்கையாலே ஸம்ஸார சாகர மத்யத்திலே நிச் சலமான வியவசாய மந்த்ரத்தை நாட்டி ப்ராப்ய ருசி யாகிற பாசத்தாலே நித்ய மதனம் பண்ணின ஸர்வேஸ்வரன் தானே
தமருற்றார் தலைத்தலைப் பெய்து -திருவாய் -4-9-2- நூற்றும்படி யாக்கி அம்ருத அக்ஷர -ஸ்வேதாஸ்வர
ஸப்த வாஸ்யனான இவ்வாத்மாவை உத்தரித்துக் கொண்டு போய் புஜிப்பிக்கிற இத்தை ஸம்ஸார சாகரம் மீட்டுக் கொள்ள மாட்டாது என்று தோற்றுகிறது –பரதர் இத்யாதியாலே-எங்கள் கையில் யுண்டான இந்த ஸூத்த பாவமானது தேசிகரானார் எங்களுடைய சமர்ப்பணாத் அநு விருத்தியாலே தந்தது என்று காட்டுகிறது–வேரித் துழாய் இத்யாதியாலே-பகவத் போக்யதையில் யுண்டான அபி நிவேசமானது ஸாம்ஸாரிக கோலா ஹலத்தையும் ஸஹியாதபடி பண்ணுகையாலே ஆற்றேன் உலகு இயற்கை -திருவாய் -4-9-3-என்கிறபடியே -இவருக்கு ஆர்த்தியை ஜெநிப்பித்தமை தோற்றுவித்தாயிற்று
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு -வியாக்யானம் –மலை கொண்டு மத்தா-ஒரு தாழிக்கு உட்பட்ட தயிரை ஒரு மத்தை இட்டுத் திரிக்குமா போலே மலையை மத்தாகக் கொண்டு அசலத்தை சலிப்பிக்கும் படி பண்ணி-அரவால்-ஸர்ப்ப ஜாதிக்கு மார்த்தவம் ஸ்வ பாவம் இறே-அத்தை வலிக்கைக்கு ஈடான திண்மையை உடைய கயிறாகக் கொண்டு பதார்த்தங்களுக்கு நியதமாய் இருபத்தொரு ஸ்வ பாவம் இல்லை
அவன் புத்தி அதீனமாய் இருக்கும் அத்தனை காண்-சுழற்றிய— அஜ் ஜலத்தை பிரமிப்பித்தான்-மாயப்பிரான்–அதுக்கு ஈடாக ஆச்சர்ய சக்தியை யுடையவன்-அன்றிக்கே-தோளும் தோள் மாலையுமாய் நின்று கடைந்த வாற்றைச் சொல்லவுமாம்–அலை கண்டு கொண்ட-அப்ரமேயோ மஹோ ததி-யுத்த -19-31-என்கிறபடியே ஒருவரால்-
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி-வியாக்யானம்-மலை கொண்டு மத்தா வரவாற் சுழற்றிய மாயப் பிரான்
மஹா அசலத்தை மத்தாகக் கொண்டு அதி மிருதுவான வாஸூகி யாகிற கயிற்றால் கடலைக் கடைந்த ஆச்சர்யத்தைக் காட்டி எனக்கு உபகரித்தவன் –அலை கண்டு கொண்ட வமுதம் கொள்ளாது கடல்-தன்னை மிகவும் அலையும்படி மதித்தது கண்டு தன்னால் வாங்கிக் கொண்ட அம்ருதத்தைத் தான் அபஹரித்துக் கொள்ள மாட்டாது-இக் கடலானது அவனில் அத்யந்தம் அசமர்த்தனான தான்–பரதர் விலை கொண்டு தந்த சங்கமிவை-வளைகாரரால் விலை கொடுத்துப் பெற்ற வளைகள் அன்றோ இவை-வேரித் துழாய் துணையாத்— இவைகளைத் தானே அபஹரிக்க மாட்டாமல்-ஸ்வ அபஹாரத்துக்கு வேரித் துழாயையும் துணையாக்கிக் கொண்டது என்கிறாள்–வேரித் துழாய் துணையா-என்று-அவ்வளவு அன்றிக்கே-ஓர் துர் வ்யவஹாரத்தையும் அவலம்பித்ததாய் என்னை அழையா நின்றது என்கிறாள்-துலை கொண்டு தாயம் கிளர்ந்து கொள்வான் ஒத்து அழைக்கின்றதே-என்று அந்யாயப் படுகிறாள்--சங்கு எல்லாம் தன்னதேயாய்-பரதர் தன் தம்பிமார்களாய் இந்த வளையிலும் தன்னினுள்ள சங்கு ஸாம்யத்தைக் கொண்டு தன் தம்பிமார்கள் அல்ப விலைக்கு இட்டார்கள் என்கிற தாயத்தைக் கொண்டு வ்யவஹார ஸப்த உத் கோஷத்தால் விஜ் ரும்பித்ததாய் காட்டில் வழி பறிப்பார்-தன் கிட்ட வா என்று அழைப்பாரைப் போலே என்னை அழையா நின்றது
இதுக்கு நான் என் செய்கேன் -என்கிறாள் –
ஸ்வாபதேசம் –
சம்சார கோலாஹலத்தைக் கண்டு தளர்தல் – கடல் என்று சம்சாரத்தை –சம்சார சாகரம்-மன உறுதி -மந்தர மலை -அன்பாகிய கயிற்றைக் கொண்டு -கடைந்து ஆத்மாவை கொண்டு சென்று அனுபவிக்க-மீட்டுக் கொள்ள சம்சாரத்துக்கு சக்தி இல்லையே-எம்பெருமான் போக்யதையில் விருப்பம் கொண்டதால் —கண்டு ஆற்றேன் உலகு இயற்கை கடல் வண்ணா அடியேனை- பண்டே போல் கருதாது உன்னடிக்கே கூய்ப் பணி கொள் -திருவாய் -4–9–3-பரதர்-விலை கொண்டு தந்த சங்கமிவை கொள்வான் ஒத்து –ஆச்சார்யர்களால் பெற்ற சுத்த ஸ்வபாவத்தை சம்சார கடல் மீட்க ஒண்ணாது என்றபடி-பரதர் -நெய்தல் நில புருஷர் -வலையர் -நுளையர்-என்றும் சொல்வர் – அந் நிலத்து ஸ்திரீகளுக்கு -பரத்தையர் வலைச்சியர் துளைச்சியர் என்றும் பெயர் உண்டே –
தாத்பர்யம்-ஆற்றாமை மிக்கு இருக்கும் இவரை ஆஸ்வாஸி பிக்க தேரை வேகமாக ஒட்டி வரும் தலைமகன் தான் வருவதற்கு முன்னே ஒராளை வரவிட்டு செய்யாமல் இருக்க-சமுத்திர ஓஸை நலிய -இவள் ஒரு அபலை -எது செய்தாலும் பிரதி கிரியை செய்ய சக்தி கொண்டவள் அல்ல-இவள் தளருவதற்கு ஏற்ற பரிமளம் மிக்க திருத்துழாயை கூட்டுப் பகையாகக் கொண்டு கை வளையைப் பிடுங்க எத்தனிக்க-தன்னுள் உடையும் படி ஆகாசம் வரை அலை போகும்படி தன்னைக் கடைந்து சார அம்சம் எடுத்துக் கொண்ட போன சர்வ சக்தன் தனது வஸ்துவை திரும்பிக் கொள்ள மாட்டாதே என்னுடைய வளையல்கள் செட்டியார் விற்க இவள் வாங்கி கொண்டாள் என்று பாராமல் என்னிடம் உள்ள சங்கோடு ஒத்ததாக படியால் எனக்குச் சேரவே வேண்டும்-தாயம் கொள்ளுவரைப் போலே யத்னம் செய்கிறதே என் செய்வேன் என்கிறாள்
4-9–நண்ணாதார் முறுவலிப்ப–ப்ரவேஸம்-
உடம்பு வேண்டா; உயிர் வேண்டா,’ என்று இவற்றை வெறுத்துப் பார்த்தார்,
தாம் ‘வேண்டா’ என்றவாறே தவிரும் என்று நினைந்து. அவை தவிர்ந்தன இல்லை.
ஒன்றனைப் பெறுகைக்கு மாத்திரமே அன்றி முடிகைக்கும் உன் தரவு -சீட்டு-வேண்டுமாகில்
அதனைத் தந்தருள வேண்டும்,’ என்கிறார் இத் திருவாய் மொழியில்.
இந்த அமங்கள வார்த்தையைத் -பணி கண்டாய் சாமாறே –
திரு முன்பே விண்ணப்பஞ் செய்ய வேண்டும்படியாகக் காணும் இவர் இவ்வுலக வாழ்வினை வெறுத்தபடி. –
புருஷார்த்தம் பெற உனது சங்கல்பம்
லோக யாத்ரையை நினைத்து -இவை கண்டு இராதே திருவடி சேர்த்து கொள்ள வேண்டும் -எனபது பொருந்தாதே –
விச்லேஷத்தில் துக்கிக்கார் -அத்தைப் போக்கி கேட்க வேணுமே -முதலில் -இதுவே தான் பிரகரணம்
இதற்கு இரண்டு வழிகளில் எம்பார் கூரத் ஆழ்வான் நிர்வாகங்கள் -மேலே
வைராக்ய சீலர் எம்பார் -காமத்துக்கு இருள் தேட்டம் -அவன் எங்கும் நிறைந்து இருப்பதால்
ஒளி மயமே எங்கும் என்பார் -மற்றவற்றைப் பார்க்காமல்
கூரத் ஆழ்வான் -தவளையும் பார்த்து ஜீவ காருண்யம் அதிகம் அவர் நோக்கு வேற எம்பார் நோக்கு வேறே –
எம்பார்,-
உன்னைப் பிரிந்திருந்து படுகிற துன்பத்தின் அளவு அன்று, உன்னை ஒழியப் புறம்பே பேறும் இழவுமாய்
இருக்கிற இம்மக்கள் நடுவே இருக்கிற இருப்பால் படுகிற துன்பம்;
இதனைத் தவிர்த் தருள வேண்டும் என்கிறார்,’ என்று அருளிச் செய்வர்
கதையைக் கையிலே யுடையவனாய் நான்கு மந்திரிகளோடு உயர எழுந்தான்,’ என்கிறபடியே,
இராவணனோடு பொருந்தாமை பிறந்த பின்பு நெருப்புப்பட்ட தரையில் கால் பாவாதாப்போலே அவ்விடம்
அடி கொதித்துப் போந்தான் ஆயிற்று.
ந நமேயம் என்னாதது கதை ஒன்றே ஆயிற்று -அத்தை எடுத்து தோளில் வைக்க வேண்டும் –
அதுவும் வேண்டாத படி நால்வரும் –இவன் கைகள் கால்கள் போல நால்வரும்
இத்தால், ஒருவன் ‘பகவானிடத்தில் பகைமை கொண்டு அதிலே நிலை நின்றான்’ என்று
அறிந்தானாகில் தன்னைக் கொண்டு அகல அன்றோ அடுப்பது என்பது போதருகின்ற தன்றோ?-
கர்ணன் இந்த தப்பித் தானே பண்ணினான் –
ஆத்மா உஜ்ஜீவனம் பார்க்காமல் செஞ்சோற்று கடன் என்று தேக யாத்ரை பார்த்தானே –
ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் –தாழ்வாக நினைப்பார்கள் -பக்கல் நெஞ்சே கூசித் திரி –
அசோகா வனம் பிரிவு –வால்மீகி ஆஸ்ரமம் பிரிவில் அவ்வளவு துயரம் இல்லையே –
ராம விரஹத்துக்கு மேலே ராஷசி கணங்கள் கூட இருப்பது அதில் -சாதுக்கள் கோஷ்டியில் அன்றோ இது –
அங்ஙன் அன்றிக்கே,
ஏறு ஆளும் இறையோனும்’ என்ற திருவாய் மொழியில் தம்முடைய ஆற்றாமைக்குக் கூட்டு ஆவார் உளரோ என்று
உலகத்தாருடைய செயல்களை ஆராய்ந்து மக்களைப் பார்த்தார்;
அவர்கள், தாம் சர்வேசுவரனிடத்தில் ஈடுபட்டவராய் இருப்பது போன்று, ஐம்புல இன்பங்களில் ஈடுபட்டவராய்
அவற்றினுடைய பேறு இழவுகளே லாபாலாப மாம்படி இருந்தார்கள்;
அதனைக் கண்டவாறே வாளேறு காணத் தேளேறு மாய்ந்தாற் போலே, தம் இழவை மறந்தார்;
இவர்களுடைய துக்கமே நெஞ்சிலே பட்டது;
சர்வேசுவரனைப் பார்த்தார்; அவன் முற்றறிவினனாய் அளவில்லா ஆற்றலையுடையவனாய்ப்
பரம வள்ளலாய் எல்லாருடைய பாதுகாப்பிலும் விரதம் பூண்டிருக்குமவனாய் எல்லாக் குற்றங்களையும்
பொறுக்குமவனாய் எல்லாரையும் நியமிக்கின்றவனாய் இருந்தான்.
ஆமாறு ஓன்று அறியேன் -பிரதிகோடி-சர்வஜ்ஞ்ஞன் / கடல் கடைந்தாய் -சர்வ சக்தன் /வள்ளலே -பரம உதாரன் /
அரவணையாய் -ரஷணத்தில் தீஷிதன் –கூப்பாடு கேட்க ஷீராப்தி –
நம்மைப் போலே தாழ்ந்தவர்களை ரஷிக்க ஸ்ரீ ரெங்கத்தில் சயனம்
வினையேனை அடியேனாகக் கொண்டாய்-அபராத சஹத்வம் / கண்ணாளா -சர்வ நியந்த்ருத்வம் –இது ஒரு ஐந்து –
அவன் படி இதுவாய் இருக்க, இவை இப்படி நோவு படுகைக்கு இவ்விடம் ‘தன்னரசு நாடோ?’ என்று பார்த்து,
நீ சர்வேசுவரனாய்ப் பேரருட்கடலாய்ச் சம்பந்தம் உள்ளவனுமாய் —
கண்ணாளா -பரம கிருபாவான் -அம்மானே -சர்வேஸ்வரன் -பிராப்தன் –
இவற்றின் துன்பம் அறிந்து போக்குவதற்குத் தக்க ஞான சத்திகளையுடையையுமாய் இருக்க,
இவை இங்ஙனம் கிடந்து நோவு படுகை போருமோ?
இவற்றைக் கரை மரம் சேர்க்க வேண்டும்,’ என்று அவன் திருவடிகளைப் பிடிக்க,
நம்மால் செய்யலாவது உண்டோ? இவர்கள் அறிவுடை மக்களான பின்பு இவர்கட்கே ருசி உண்டாக வேண்டுமே?
நாம் கொடுக்கிற இது புருஷார்த்தமாக வேண்டுமே? புருஷன் விரும்பக் கொடுக்குமது அன்றோ புருஷார்த்தமாவது?
அறிவில் பொருளாய் நாம் நினைத்தபடி காரியங் கொள்ளுகிறோம் அல்லோமே? இவர்கட்கு நம் பக்கல் ருசி பிறக்கைக்கு
நாம் பார்த்து வைத்த வழிகளை யடையத் தப்பின பின்பு நம்மாற் செய்யலாவது இல்லை காணும்;
நீர் இதனை விடும்,’ என்று சமாதானம் செய்தான்.
அதனைக் கேட்ட இவர்,
நீ கூறிய இது பரிஹாரமாய் நான் சமாதானத்தை யடைந்தேனாவது
இவர்கள் தம் காரியத்திற்குத் தாம் கடவர்களாய் நோவு படுகின்றார்கள்’ என்று உன்னால் சொல்லலாம் அன்று அன்றோ?’ என்ன,
இவர்கள் அறிவுடையவர்களாகையாலே இவர்களின் வாசி அறிய வேண்டும் என்று
நம்மை -விபவம் அர்ச்சை -ஒரு தட்டும் ஐம்புல இன்பங்களை ஒரு தட்டுமாக வைத்து,’ ‘
உங்களுக்கு வேண்டியது ஒன்றனைக் கொள்ளுங்கோள்,’ என்ன,
ஐம்புல இன்பங்கள் இருந்த தட்டுத் தாழ்ந்திருக்கையாலே அந்தத் தட்டை ‘அமையும்’ என்று பற்றினார்கள்; –
பாரமான பொருள் தாழும் -தாழ்ந்த சம்சாரம் –
நாமும் ஆகுந்தனையும் பார்த்து முடியாமை காணும் கை வாங்கியது;
இனி நம்மாற் செய்யலாவது இல்லை; இனி, நீரும் இதனை விடும்,’ என்றான்.
அறப் பொருளை அறிந்து ஓரார் –
ஆகில், உன்னை ஒழியப் புறம்பே பேறும் இழவுமாய் இருக்கிற இவர்கள் நடுவினின்றும்
என்னை முன்னம் வாங்க வேண்டும்,’ என்ன, ‘
முன்பே உம்மை வாங்கினோமே! சமுசாரிகளோடு பொருந்தாதபடி செய்தோமாகில்,
இவ்வுலக வாழ்வினை நினைத்த நினைவாலே வந்த துன்பம் எல்லாம் போகும்படி உம்முடைய இருப்பு இது காணும் என்று
பரமபதத்தில் அயர்வு அறும் அமரர்கள் அடிமை செய்யப் பிராட்டியாரும் யாமுமாக வேறுபாடு
தோன்ற இருக்கும் இருப்பைக் காட்டித் தந்து அங்கே உம்முடைய மனம் ஈடுபடும்படி செய்தோமாகில்,
இனி, உமக்குப் பேற்றுக்குக் குவால் உண்டோ? நாம் செய்ய வேண்டுவது என்?’ என்ன,
இவை இரண்டனையும் நினைத்துத் தரித்துக் கிருதார்த்தராய்த் தலைக் கட்டுகிறார்,’ என்று பணிக்கும் ஆழ்வான்.
ஆழ்வான், தாம் ஓரிடத்திலே வழியிலே போகா நிற்க, ஒரு பாம்பினாலே பிடிக்கப்பட்ட தவளையானது கூப்பிடா நிற்க,
இது யார் அறியக் கூப்பிடுகிறது?’ என்று மோகித்தாராம்; இவ்வாழ்வான் தன்மைக்குச் சேருமே இவர் நிர்வாஹமும்.
ஆழ்வார் தயாளு ஆழ்வான் பரம தயாளு என்பதற்கு சேர இந்த நிர்வாஹம் –
கொடு உலகம் காட்டேல்–ஒரே பாசுரம் -இரண்டுக்கும் –
அநர்த்தம் கொடுமை -ஆழ்வான் -சம்சாரிகள் கொடியவர் காட்டேல் -எம்பார்
ஸ்த்ரீக்கு ஆழ்வார் தண்ணீர் எடுத்துக் கொடுத்த வ்ருத்தாந்த
ஆழ்வாருக்கு
மூன்று ஆர்த்தி திருவாய்மொழி
முந்நீர் -பிரகிருதி சம்பந்த நிமித்த ஆர்த்தி
சீலமில்லா சிறியேனில் பகவத் விஸ்லேஷ பிரயுக்த ஆர்த்தி
சம்சாரிகள் இழவால் வந்த ஆர்த்தி இது
ஒன்பதாம் திருவாய்மொழியிலே-இப்படி அவன் விரும்பாத ஆத்மாத்மீயங்களிலும் அநாதரம் பிறந்த அளவிலும்
அத்யந்தம் ஆர்த்தரான தமக்கு உஸாத் துணையாகைக்கு யோக்யர் அல்லாதபடி சம்சாரத்தில் உள்ளாறும் அதிசயித துக்க மக்நராய்க் கொண்டு
கிலேசிக்கிற படியைக் கண்டு -சகல கிலேச நிவர்த்தகனாய் நிரதிசய போக்யனான சர்வேஸ்வரனுடைய
அர்த்தி தார்த்த கரணத்தையும்
சாதாரண பந்தத்தையும்
அபரிச்சின்ன ஸுந்தர்யத்தையும்
அவ்வழகை அனுபவிக்கும் உதார குணத்தையும்
அனுபவிப்பார்க்கு கைக்கு அடங்கும் படியான ஸுலப்யத்தையும்
போக்யதா அதிசயத்தையும்
சர்வாத்ம பாவத்தையும்
சகல ஜகத் காரணத்வத்தையும்
ஆஸ்ரித சம்ச்லேஷ ஸ்வ பாவத்தையும்
ஸ்ரீ லஷ்மீ ஷஹாதவத்தால் வந்த பரம ப்ராப்யத்வத்தையும்
அனுசந்தித்து -ஏவம் விசிஷ்டனான நீ அத்யந்த அஸஹ்யமாம்படி கிலேச உத்தரமான சம்சாரத்திலே இருத்தி என்னை
கிலேசிப்பிக்காதே உன் திருவடிகளிலே சேர்த்துக் கொள்ள வேணும் என்று கூப்பிட்டு
இவர் அபேஷா அநு ரூபமாக அவனும் பரமபதத்திலே இருக்கிற இருப்பைக் காட்ட மானஸ ஞானத்தால் கண்டு
ஐஸ்வர்ய கைவல்யங்களினுடைய ஹேயதா பிரதிபத்தி பூர்வகமாக அவன் திருவடிகளையே
பரம ப்ராப்யமாகப் பற்றின படியை அருளிச் செய்கிறார் –
நண்ணாதார் முறுவலிப்ப, நல்லுற்றார் கரைந்துஏங்க,
எண்ணாராத் துயர்விளைக்கும் இவைஎன்ன உலகியற்கை?
கண்ணாளா! கடல்கடைந்தாய்! உனகழற்கே வரும்பரிசு,
தண்ணாவாது அடியேனைப் பணிகண்டாய் சாமாறே.–4-9-1-
உன்னை ஒழியப் புறம்பே பேறும் இழவுமாய் இருக்கின்ற இவர்கள் நடுவினின்றும் நான் உன் திருவடிகளிலே வந்து-கிட்டும்படி எனக்கு இச்சரீரத்தின் பிரிவினைச் செய்து தந்தருள வேண்டும்,’ என்கிறார்.-அவதாரிகை -எம்பார் நிர்வாஹத்துக்குச் சேர –
கரைந்தேங்க, முறுவலிப்ப’ என்ற-இரண்டும் துக்கமாய் அன்றோ இருப்பன? ஆதலால், இரண்டாய் வரும் துக்கங்களையடைய நினைக்கிறது.
சுகம் -சுக ரூபத்தில் வரும் துக்கம் -துக்கம் -துக்க ரூபத்தில் வரும் துக்கம் -இரட்டை தாண்டியவர்கள் உண்டோ –அந்தமில் பேரின்பத்துக்கு எல்லை காணிலும் துக்கத்துக்கு எல்லை காண ஒண்ணாதபடி ஆயிற்று இருப்பது;-அதனால் ‘எண் ஆரா’ என்கிறார்.
பரமபதத்தில் துக்கம் கலவாத இன்பமேயாக இருக்குமாறு போலே, இதுவும்
எல்லை இல்லாத துக்கமேயாய் இருக்குமாயிற்று.
கண்ணாளா – இவர்கள் செய்த கர்ம பலன்களை இவர்களே அனுபவிக்க வேண்டும் என்று இருந்தாயாகில், உன் கிருபைக்குப் புறம்பு விஷயம் எங்கே? கண்ணாளன் – அருளை உடையவன்.-அருள் உடையவனைக் ‘கண்ணுடையவன்’ என்னக்கடவதன்றோ?
அன்றிக்கே, கண் என்று இடமாய், அதனால், அகலிடம் என்றபடியாய், ‘பூமியை ஆளுகின்றவனே!’ என்னுதல்.
அன்றிக்கே, ‘இது ஏதேனும் தன்னரசு நாடோ?’ என்றது, ‘நீ நிர்வாஹகனாய் இருக்க இவை சொரூப விரோதங்களிலே செல்லுதல் என்?’ என்னுதல்.
கண் என்பது நிர்வாஹகனுக்குப் பெயர். ‘தாங்கள் தாங்கள் சூழ்த்துக்கொண்ட கர்மங்களைத் தாங்கள் தாங்களே அனுபவிக்க வேண்டாதபடி நாம் உதவ எங்கே கண்டீர்?’ என்ன, ‘ஒரு வெள்ளம் அன்றோ?’ என்று உதாஹரணம் காட்டுகிறார் –கடல் கடைந்தாய் :
உன கழற்கே வரும் பரிசு –-விலக்கடிகளில் போகாமல், வகுத்ததுமாய் இனியதுமான உன் திருவடிகளிலே வந்து கிட்டுவது ஒரு வகை.
இவர்க்குக் காற்கூறு இச்சை உண்டாய் இருந்தபடியாலே, ‘அப்படிச் செய்கிறோம்,’ என்றான் ஈசுவரன்.
தண்ணாவாது –தாழாது; தண்ணாக்கை – தாழ்க்கை. என்றது, ‘செய்கிறோம் என்று ஆறியிருக்க ஒண்ணாது;-செய்துகொடு நிற்க வேண்டும்,’ என்றபடி. ‘நாம் இப்படிப் பதறிச் செய்ய வேண்டுவது என்?’ என்ன,
அடியேனை’ என்கிறார்; என்றது, ‘சொரூப ஞானத்தாலே இவ்வுலக மக்களோடு பொருந்தாத என்னை’ என்றபடி.
பணி கண்டாய் சாமாறே –பணிக்கை -சொல்லுகை; சொல்லுதல் நினைவோடே அன்றோ கூடியிருப்பது?
அன்றிக்கே,-சாமாறு பணிக்கவேண்டும்,’ என்றது, ‘உனக்கு ஒரு சொலவு; அடியேன் பெறுகிறது உயிரை,’ என்கிறார் என்றபடி.
அன்றிக்கே, ‘அடியேன் மரணத்தைப் பெறும்படி பார்த்தருளவேண்டும்’ என்னுதல்.
நன்று; பிரபந்த ஜனகூடஸ்தரான இவர், கேவலரைப் போன்று இவ்வளவை விரும்புகிறது என்?’ என்னில், கண்ணபிரானுடைய தியானத்தில் ஆசையில்லாத மனிதர்களோடு சகவாசம்செய்தலாகிற பெருந்துன்பத்தைக் காட்டிலும் நெருப்பினுடைய சுவாலைகளாகிற கூட்டின் நடுவில் அடங்கி இருப்பதானது சிறந்தது,’ என்கிறபடியே,
இவர்கள் நடுவில் இருக்கிற இருப்புத் தவிருகைதானே இப்போது தேட்டம் ஆகையாலே சொல்லுகிறார். என்றது,
காட்டுத் தீயில் அகப்பட்டவனுக்கு நீரும் நிழலுமே அன்றோ முற்படத் தேட்டமாவது?
பின்பே அன்றோ இனிய பொருள்களிலே நெஞ்சுசெல்வது? அப்படியே, இப்போது இவர்கள் நடுவில் இருத்தற்கு அடியான சரீரத்தின் பிரிவைப் பிறப்பிக்கவேண்டும் என்கிறார்,’ என்றபடி.-
——–
சாமாறும் கெடுமாறும் தமர்உற்றார் தலைத்தலைப்பெய்து
ஏமாறிக் கிடந்துஅலற்றும் இவைஎன்ன உலகியற்கை?
ஆமாறுஒன்று அறியேன்நான், அரவணையாய்? அம்மானே!
கூமாறே விரைகண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே.–4-9-2-
முதற்பாசுரத்திலே ‘எண் ஆராத் துயர்’ என்று தொகுத்துக் கூறினார்;
அவற்றிலே சில வகைகளைச் சொல்லித் துன்பம் அடைந்தவராய்,
இவர்கள் துக்கத்தைப் போக்காயாகில் என்னை உன் திருவடிகளிலே அழைத்தருள வேண்டும்,’ என்கிறார்.-கூரத் தாழ்வான் நிர்வாஹம் ஒற்றி அவதாரிகை இதில்
இவர் நோவுபடுகைக்கு வேறே சில உளவாயின;
நின்னலால் இலேன் காண்’ என்றும்,
பல நீ காட்டிப் படுப்பாயோ?’ ‘இன்னம் கெடுப்பாயோ?’ என்றும்,
பகவானை அடையா தொழிவது விநாசத்திற்குக் காரணம்,’என்றும்,
இதர விஷயங்களைப் பார்ப்பது கேட்டிற்குக் காரணம், என்றும் ஆயிற்று இவர் இருப்பது.இவர்கள் இவை ஒழிய விநாசத்தையும் கேட்டினையும் எங்கே தேடிக் கொண்டார்கள்? ‘-என் ஒருவர் தீக் கதிக் கண் செல்லும் திறம்?’ என்னுமவர்களே அன்றோ இவர்கள்?
தமர் உற்றார் – சரீர சம்பந்தம் காரணமாக வந்தவர்களாய்த் ‘தாயத்தார்’ என்றும், ‘சம்பந்திகள்’ என்றும் சிலரை உறவாக நினைத்துப் பாரம் அற்றவர்களாய் இருப்பார்கள் ஆயிற்று; இஃது ஒழியவே, வேறே ‘தமர்கள் தமர்கள் தமர்கள்’ என்று ஓர் உறவு முறை உண்டாயிற்று இவர்க்கு-இவர் கேசவன் தமர் மாதவன் தமர் என்றே கொள்ளுவார் ஏமாறிக் கிடந்து அலற்றும் – ஏ’ என்று ஏக்கமாய், மாறுகை – தவிருகையாய், ‘ஏங்காதே கூப்பிட்டு’ என்னுதல்.-அன்றிக்கே, ‘ஏமாற்றம்’ என்பதே ஒரு சொல்லாய், அதாவது, துக்கமாய், ‘துக்கித்துக் கிடந்து கூப்பிட்டு’ என்னுதல்.-ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்’ என்னக் கடவதன்றோ? அன்றிக்கே, ‘ஏ’ என்பது தெளிவு; ‘மாறுகைஏமாறிக் கிடந்து அலற்றும் –
ஏ’ என்று ஏக்கமாய், மாறுகை – தவிருகையாய், ‘ஏங்காதே கூப்பிட்டு’ என்னுதல்.
அன்றிக்கே, ‘ஏமாற்றம்’ என்பதே ஒரு சொல்லாய், அதாவது, துக்கமாய், ‘துக்கித்துக் கிடந்து கூப்பிட்டு’ என்னுதல்.
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்’ என்னக் கடவதன்றோ? அன்றிக்கே, ‘ஏ’ என்பது தெளிவு; ‘மாறுகை’ என்பது அழிகை;
அதாவது, ‘தெளிவு அழிகை’ என்று பிள்ளை அமுதனார் பணிப்பர்.பிள்ளை அமுதனார் பணிப்பர்.
நீர் நம்மையே சொல்லிக் கூப்பிடும்படி பண்ணினோமே!
சீலமில்லாச் சிறியனேலும்’ என்ற திருவாய்மொழியில் கூப்பிடு அன்றோ உம்மது?’ என்ன, அருளிச் செய்கிறார் மேல்:
நான் ஆமாறு ஒன்று அறியேன் – அவர்கள் தாம் கூப்பிடுகிறது உன்னோடு சம்பந்தம் இல்லையாயோ?-சரீரத்தோடே இருக்கையாலே அன்றோ?-அதனை என்னினின்றும் தவிர்த்தாயோ?-இவ் வுடம்பு கிடக்கையாலே, இன்னதற்கு நான் கூப்பிடப் புகுகின்றேன் என்று அறியா நின்றேனோ?’ என்கிறார்.
அன்றிக்கே, ‘மக்களுடைய இந்தத் துக்கம் போதற்கு விரகு ஏதோ என்று அறிகிலேன் என்கிறார்,’ என்னுதல்; என்றது, ‘நீ எனக்குச் செய்து தந்த வாசி, நான் இவர்களுக்குச் செய்து கொடுக்கும் விரகு ஏதோ என்று அறிகிலேன் என்கிறார்,’ என்றபடி.
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் பொய்யும் ஸ்ரீ ராமாவதாரத்தில் மெய்யுமே ரஷண ஹேது –
கண்டாய் –என்னைக் கண்ட உனக்கு விரையாதே இருக்கலாய் இருந்ததோ?பாராய்’ என்று தம் வடிவைக் காட்டுகிறார்.விரஹம் தின்ற உடம்பு இவருக்கு- அடியேனைக் குறிக்கொண்டே இந்த உலக வாழ்வில் செல்லாதபடியாய் இருக்கிற என் வாசியைத் திருவுள்ளம் பற்றியருள வேண்டும்.-உன் திருவடிகளில் சம்பந்தம் அறிந்த அன்று தொடங்கி உன்னைப் போன்று பிறருடைய துக்கத்தைப் பொறுக்க மாட்டாதபடியான என் வாசியைத் திருவுள்ளம் பற்றி யருள வேண்டும்’ -.சம்சாரிகள் கிலேசம் பொறுக்க மாட்டாதே என் வாசியைத் திரு உள்ளம் பற்றி நம்மோட்டை சம்பந்தத்தை அறிவித்த பின்பு பர அநர்த்தம் பொறுக்க மாட்டாதான் என்று திரு உள்ளம் பற்றி-என்னுதல்
நன்று; ‘கூமாறே விரை கண்டாய்’ என்ற அளவில், பிறருடைய துக்கம் பொறுக்க மாட்டாதவர்’ என்னுமிடம் தோற்றுமோ?’ என்னில்,
இவை என்ன உலகியற்கை?’ என்று
இந்த உலக வாழ்வினை நினைத்து வெறுத்து, என்னை அங்கே அழைக்க வேண்டும் என்கையாலே தோற்றுமே அன்றோ?
————————-
கொண்டாட்டும் குலம் புனைவும் தமர் உற்றார் விழு நிதியும்
வண்டு ஆர் பூங் குழலாளும் மனை ஒழிய, உயிர் மாய்தல்
கண்டு ஆற்றேன் உலகியற்கை! கடல்வண்ணா! அடியேனைப்
பண்டே போல் கருதாது,உன் அடிக்கே கூய்ப் பணி கொள்ளே.–4-9-3-
கொண்டாட்டும் –முன்பு ‘இன்னான்’ என்று அறிய ஒண்ணாதபடி பொருள் அல்லாதானாய்ப் போந்தான் ஒருவன் சிறிது வாழப் புக்கவாறே-முதலியார்’ என்றாற் போலே சொல்லுவார்கள்.-பயிலும் திருவுடையார்’ என்றே அன்றோ இவர்கள் கொண்டாடும் விஷயம்?சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும், மேலாத் தாய் தந்தையும்’ இவை எல்லாம் சர்வேசுவரனே யன்றோ இவருக்கு?
கடல் வண்ணா – இந்த உலக வாழ்க்கையின் படி அன்றிக்கே அனுபவிக்கலாவதும் ஒரு படி உண்டே.–படி -முறை -திருமேனி சாடு –இவர்கள் துக்கத்தை நினைத்தலால் வந்த துன்பம் தீரச் சிரமஹரமான உன் வடிவைக் காட்டி யருளாய்.
அடியேனைப் பண்டே போல் கருதாது – ‘பொய்ந்நின்ற ஞானம்’ என்ற பாசுரத்தில் ‘இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை’ என்ற அளவாக என்னைத் திருவுள்ளம் பற்ற ஒண்ணாது. ‘என்னை?’ எனின், பகவத் விஷயத்தில் மூழ்கிச் சொல்லுகிற சொல், மற்றைய விஷயங்களினுடைய தோஷங்களைப் பார்த்துச் சொல்லுகிற சொற்களைப் போன்று இராதே அன்றோ?
சிற்றாள் கொண்டார், இவர்க்காகில் இது சேர்க்கை பல்லி போலே பணி யன்றோ என்று இருக்க ஒண்ணாது,’ என்கிறார் என்றாராம்.
அன்றிக்கே, மேலே, ‘உன்னைப் பிரிந்து கூப்பிட்ட அவ்வளவாக நினைக்க ஒண்ணாது, பிறருடைய துக்கத்தைக் கண்டு கூப்பிடுகின்ற இதனை,’ என்னலுமாம்.-கூரத் ஆழ்வான் -நிர்வாகம் -முன்பு தன் அநர்த்தம் மட்டுமே
உன் திருவடிக்கே கூய்ப் பணி கொள்ளே –-உன் திருவடிகளிலே அழைத்து என்னை அடிமை கொண்டருள வேண்டும். உன் திருவடிகளிலே அழைத்தாலும்,-அடிமையின் இனிமை அறியில் அன்றோ நான் மீளாதொழிவது?-ஆன பின்னர், என்னை நித்ய கைங்கரியம் கொண்டருளவேண்டும்,’ என்னுதல்;
அன்றிக்கே, ‘சோற்றை யிட்டுப் பணிகொள்’ என்னுமாறு போலே, ‘கூய்ப் பணிகொள்’ என்கிறார் என்னுதல்.-பரமபதத்தில் வைத்து கைங்கர்யம் கொடுத்து அருள பிரார்த்திக்கிறார் –
—————
கொள் என்று கிளர்ந்து எழுந்து பெருஞ்செல்வம் நெருப்பாகக்
கொள் என்று தமம் மூடும்; இவை என்ன உலகியற்கை!
வள்ளலே! மணிவண்ணா! உனகழற்கே வரும்பரிசு,
வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே.–4-9-4-
நெருப்பாக –-அடியோடு அழிய’ என்னுதல்;-அன்றிக்கே ‘தன்னுடைய அழிவிற்குக் காரணமாக’ என்னுதல்.-செல்வம் அழிவிற்குக் காரணமாதல் யாங்ஙனம்?’ எனின்,
இவன் வாழ்கிறான்’ என்கிற இது கேட்டுப் பொறுக்க மாட்டாமலே அன்றோ
பிறர் இவனை அழிக்க வருவது? ஆதலால், தன் அழிவிற்குச் செல்வம் காரணமாதல் காண்க.
கொள் என்று தமம் மூடும் –-மீளவும் அச் செல்வத்தை அவன் விரும்பும் போது தமோ குணத்தாலே மூடப் பட்டவனாய்த் தானே இருத்தல் வேண்டும்?-அன்றிக்கே, ‘கொள்’ என்று தூண்டுகிறது, மனமாகவுமாம்.
அன்றிக்கே, ‘இது அழிவிற்குக் காரணமாம்,’ என்று அறியச் செய்தேயும், இவனுடைய மனத்தைத் தமோ குணத்தாலே மறைப்பித்து, அதனைக் கொள்’ என்று தூண்டி இவனை விரும்பும்படியாகச் செய்யும் இச் செல்வத்தினுடைய வலிமை,’ என்னலுமாம்.
வள்ளலே மணி வண்ணா –-மாணிக்கப் பண்டாரத்தை அன்றோ ஒளதார்யம் செய்தது? சாதந அநுஷ்டானம், மற்றொன்றனைப் பண்ண-ஆச்சார்யர் உபதேசாதிகள்- அன்றாயிற்று.
அன்றிக்கே,-வள்ளலே-மணி வண்ணா-செல்வம் முதலானவற்றில் வெறுப்பினைப் பிறப்பித்தது, பிடாத்தை விழவிட்டு வடிவழகைக் காட்டியாயிற்று,’என்பார்,
‘மணி வண்ணா’ என்கிறார் என்னலுமாம்.–பச்சை வடம் கழற்ற விட்டு -அழகைக் காட்டி அருளினாய் –
உன கழற்கே வரும் பரிசு – ஞான லாப மாத்திரத்தால் போதுமா? பேற்றினைப் பண்ணித் தர வேண்டாவோ?-மயர்வு அற மதி நலம் அருளினதைப் போன்று, துயர் அறு சுட ரடி தொழுது எழப் பண்ண வேண்டாவோ?-பசியை விளைத்தால் சோறு இட வேண்டாவோ?
வள்ளல் செய்து –உன் திருவடிகளிலே நான் வந்து கிட்டும்படியாக ஒளதார்யத்தைப் பண்ணி. என்றது,-இவன் இப் பேற்றைப் பெறுவான்,’ என்று அங்கீகரித்து, என்றபடி.ஔதார்ய விசேஷம் பண்ணி
ஆறு -எனக்கு நின் பாதமே தந்து ஒழிந்தாய் பாதமே -ஔதார்யம் வானமாலையில் கொழுந்து விடும்-அவன் தன் சரண் தந்திலன் -நீ தந்து அருளினாய் ராமானுசா –
அடியேனை –பிறர் உடைமை நசியாமல் நோக்க வேண்டும்’ என்று பிரார்த்திக்கின்ற என்னை.-அடியோங்களை-
உனது அருளால் – மயர்வு அற மதிநலம் அருளினதைப் போன்று பேற்றுக்கும் தனியே ஓர் அருளைச் செய்ய வேண்டும்.
வாங்காய்’ என்று அஃறிணையைப் போன்று சொல்லுகிறார். அதற்கு அடி, இத் தலையில் பரம பத்தி பர்யந்தமாகப் பிறந்தாலும், பெறுகிற பேற்றின் கனத்தைப் பார்த்தால், அத் தலையின் அருளாலே பெற்றதாம்படி இருக்கையாலே.-
————-
வாங்கு நீர் மலர் உலகில் நிற்பனவும் திரிவனவும்
ஆங்கு உயிர்கள் பிறப்பிறப்புப் பிணி மூப்பால் தகர்ப்புண்ணும்;
ஈங்கு இதன் மேல் வெந்நரகம்; இவை என்ன உலகியற்கை!
வாங்கு எனைநீ, மணிவண்ணா! அடியேனை மறுக்கேலே.–4-9-5-
வாங்கு நீர் மலர் உலகில் –இவ்வருகு உண்டான காரிய வர்க்கத்தை யடையத் தன் பக்கலிலே வாங்கா நின்றுள்ள நீரிலே உண்டாய் விரிவடைந்துள்ள உலகத்திலே–காரியத்துக்கு காரணத்தில் இ றே உத்பத்தியும் லயமும்-.அன்றிக்கே, ‘நீராலே சூழப்பட்டதும் திருநாபிக்கமலத்தில் பிறந்ததுமான உலகத்திலே’ என்னுதல்.வாங்கு –வளைந்த.
ஆங்கு வாங்கு எனை –நினைவிற்கும் எட்டாத உலக நாதரானா ஸ்ரீ விஷ்ணுவானவர் நித்தியர்களாலும் முத்தர்களாலும் சூழப்பட்டுப் பிராட்டியோடு கூட ஸ்ரீ வைகுண்டம் என்கிற மேலான உலகத்தில் எழுந்தருளியிருக்கிறார்,’ என்கிறபடியே. ஏழுலகும் தனிக் கோல் செல்ல நீ வீற்றிருக்கிற இடத்திலே என்னை வாங்க வேண்டும். –விஷய பரரான இவர்கள் நடுவில் நின்றும் -பக்தைர் பாகவதஸ் ஸஹ -என்கிற திரளில் கொடு போக வேணும்
மணி வண்ணா – ஐம்புல இன்பங்களிலே ஈடுபாடு உடையவனாய் அவற்றின் வடிவிலே துவக்குண்டு இருக்கிற என்னை,‘அவ்வடிவை நாய்க்கு இடாய்?’ என்னும்படியான உன் வடிவைக் காட்டிக் கொண்டு போகவேண்டும்.‘மனைப்பால், பிறந்தார் பிறந்தெய்தும் பேரின்பம் எல்லாம், துறந்தார் தொழுதார் அத்தோள்,’ என்கிறபடியே,இவன் படியைக் கண்டால் வேறு ஒன்றும் பிடியாதே அன்றோ?
அடியேனை –உன் படி அறிந்த என்னை; என்றது,-நீயும் அவ்வோலக்கமுமாய் இருக்கிற இருப்பில் இனிமை அறிந்த என்னை’ என்றபடி.
மறுக்கேலே –பிறப்பு மூப்பு மரணம் முதலியவைகளாலே நெருக்கு உண்கிற இவர்கள் நடுவே இருந்து நெஞ்சு மறுகாதபடி பண்ண வேண்டும்.-என்னைக் கலங்கப் பண்ணாதே கொள். தெளி விசும்பிலே வாங்கி யருள வேண்டும். ‘உனக்கே உரியராய் அடியருமாய் இருப்பாரைக்கொண்டு லீலாரசம் அனுபவிக்கக் கடவதோ?’ என்பார், அடியேனை மறுக்கேல்’ என்கிறார்.-அடியேனை -அசாதாரணமான -சேஷத்வ ஞானம் -இருந்தும் லீலா ரசம் அனுபவிக்கக் கடவதோ –
—————
மறுக்கி வல் வலைப்படுத்திக் குமைத்திட்டுக் கொன்றுண்பர்;
அறப் பொருளை அறிந்து ஓரார்; இவை என்ன உலகியற்கை!
வெறித் துளவ முடியானே! வினையேனே உனக்கு அடிமை
அறக் கொண்டாய் இனி என்னாரமுதே!கூய் அருளாயே.–4-9-6-
அறப் பொருளை அறிந்து – தேகத்திற்கு வேறுபட்டதாய் இருப்பது ஒரு ஆத்தும வஸ்து உண்டு; நாம் இப்போது செய்கிறவை அதிலே வந்தவாறே தட்டுப்படும்,’ என்று தர்மத்தின் உண்மையை அறிந்து.
ஓரார் – அதனுடைய தன்மையிலே முதலிலே இழியார்கள்.
அன்றிக்கே, ‘பிறரைத் துன்புறுத்துவதினின்றும் நீங்கார்’ என்றுமாம்;-
ஓர்தல் – ஒருவுதலாய். ஒருவுதல் -நீங்குதல் என்றபடி.
அன்றிக்கே,
பொருளை -சொத்தை –அற அறிந்து -நன்றாக அறிந்து என்று கொண்டு – செல்வமாகிய புருஷார்த்தம் ஒன்றையுமே அற விரும்பி.- நன்மை தீமைகளை ஆராய்ந்து பாரார்’ என்னுதல்.
வெறித் துவள முடியானே-இம் மக்கள் நடுவே இருக்கிற என்னை உன்னுடைய இனிமையைக் காட்டி அடிமை கொண்டவனே!வினையேனை –’ஐம்புல இன்பங்களிலே ஈடுபட்டிருக்கிற இவர்களிலே ஒருவனாகப் பிறப்பதற்கு அடியான பாபத்தையுடைய என்னை.-உனக்கு அடிமை அறக் கொண்டாய் –நான் நின்ற நிலைக்குச் சேராத படியான உன் திருவடிகளில் அடிமையை ஒரு காரணமும் இன்றியே என்னைக் கொண்டருளினாய்-இனி –அடிமை கொண்ட பின்பு.-என் ஆர் அமுதே –-எனக்கு எல்லை இல்லாத இனியன் ஆனவனே!-கூய் அருளாயே – நான் இவர்கள் நடுவே இருக்கிற இருப்பை விட்டு உன் திருவடிகளிலே சேரும்படி அழைத்துக் கொண்டருள வேண்டும்.
இனி என் – அவர்கள் ஒரு படியாலும் பேற்றிலே நெஞ்சு வையாரான பின்பு, நான் அவர்கள்
கேட்டிற்குக் கரைந்ததற்குப் பிரயோஜனம் என்? அதனை விடலாகாதே?’-என்னை முதல் அங்கே அழைத்துக் கொண்டருள வேண்டும்,’-
——————
ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயே மற்று ஒருபொருளும் இன்றிநீ நின்றமையால்
நோயே மூப்பு இறப்பிறப்புப் பிணியே என்றிவை ஒழியக்
கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டேலே.–4-9-7-
ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்-நீயே-ஆயே -என்றது தாயே என்றதாய் -தாய் போலே பரிவனானவனே -மாதா பிதா பிராதா –நீயே ஆயே -என்று கூட்டவுமாம்
இந்த லோகத்தில் ஸ்தாவர ஜங்கமமாத்மகமாய் உள்ள சகல பதார்த்தங்களும் நீயே என்கிற சொல்லுக்கு உள்ளே யாம் படியாக –சர்வம் கல்விதம் ப்ரஹ்ம–மற்று ஒருபொருளும் இன்றி-பரம் பொருளினின்றும் நீங்கி நிற்பதாய்- ஸ்வதந்தரமாய் இருப்பது ஒரு பொருளை ஆயிற்று,-ஈண்டு ‘இல்லை’ என்கிறது.-அவனைத்தவிர விஷயமும் கருவியும் இல்லையே-அவனைக் கொண்டு அவனையே பார்க்க வேண்டும்
நோயும் பிணியும் –ஆதி வியாதிகள்.-ஆதி -மநோ வியாதி என்றவாறு –வியாதி தேக வியாதி
காட்டேல் –த்ருஷ்ட்டி விஷம் போலே காணில் முடிவன்.
இந்த உலக வாழ்வு என் கண்களுக்கு இலக்கு ஆகா தொழிய வேண்டும் என்கையாலே,
இந்த உலக வாழ்வு இவர் கண்களில் பட்டது இல்லையாய் இருந்தபடி.
மயர்வு அற மதிநலம் அருளினதைப் போன்று சர்வ சத்தியானவன் இதனைக் காட்டில் காணுமித்தனை.-யாவையும் திருமால் திரு நாமமே கூவி –-இவர் பிராக்ருத பதார்த்தங்களில் கண் வைப்பார் அல்லர் –
காட்டேல் –-இவன் தான் அவருக்குக் காண்பித்தான் -என்றவாறு
ஆனால், ‘இவை என்ன உலகியற்கை,’ என்றதனோடு சேரும்படி என்?’ என்னில்,
பர ஹிதம்’ என்கிற புத்தியாலே முன்பு நினைந்தார்;
இது தான் வந்து தம்மைக் கிட்டாதபடி பண்ண வேண்டும்,’ என்கிறார் இத் திருப் பாசுரத்தில்.–
———–
காட்டி நீ கரந்து உமிழும் நிலம் நீர் தீ விசும்பு கால்
ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி முட்டைக்
கோட்டையினிற் கழித்து எனை உன் கொழுஞ்சோதி உயரத்துக்
கூட்டரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே?–4-9-8-
காட்டி –முன்பு தானே தான் ஆம் படி இவற்றை அடையத் தன் பக்கலிலே உப சம்ஹரித்து -சேர்த்துச்-சத்’ என்னும் நிலையினதான உலகத்தை, பிரமன் முன்னிருந்தபடியே படைத்தான்,’ என்கிறபடியே, இதனை உண்டாக்கிக் காட்டி.
காட்டி–என்ற சொற்போக்கால், ஐந்திர ஜாலிகரைப் போலே இதனை உண்டாக்கிக் காட்டுகிறான்’ என்பது போதரும்.
ஈட்டி – திரட்டி,-திரி விருத் கரணத்தைச் சொன்னபடி-திரி விருத்கரணம் – பூமி தண்ணீர் நெருப்பு இவற்றைக் கூட்டுதல்.-திரிவிருத்கரணத்தைக் கூறியது, பஞ்சீகரணத்துக்கும் உபலக்ஷணம்.
இமையோர் வாழ் தனி முட்டைக் கோட்டையினிற் கழித்து –-பிரமன் முதலானோர் வன்னியம் செய்கிற ஒப்பற்ற அண்டமாகிற கோட்டையினின்றும் என்னைப் புறப்பட விட்டு.
கோட்டை என்பது, புறம்புள்ளாரால் புகுர ஒண்ணாததுமாய், உள் உள்ளாரால் புறப்படவும் ஒண்ணாதே,-புக்க இடமும் புறப்பட்ட இடமும் தெரியாததாய் இருக்குமே அன்றோ?
அப்படியே, இந்த உலக வாழ்வும் இருத்தலின், இதனைக் ‘கோட்டை’ என்கிறது.
என் மாயை ஒருவராலும் தாண்ட முடியாதது’ என்றானே அன்றோ அவனும்?-விரோதியைப் போக்கிலும் இவனைப் பற்ற வேண்டும்: தன்னைப் பெறிலும் தன்னாலே பெற வேண்டும்.
ஒரு குருவி பிணைத்த பிணை ஒருவராலவிழ்க்க ஒண்ணுகிறது இல்லை;-ஒரு சர்வ சத்தி, கர்மத்திற்குத் தகுதியாகப் பிணைத்த பிணையை.-அவனைக் காற்கட்டாதே இவ்வெலி எலும்பனான சமுசாரியால் அவிழ்த்துக் கொள்ளப் போமோ?’-என்று பணிப்பர் பிள்ளை திருநறையூர் அரையர்.-
—————
கூட்டுதி நின் குரை கழல்கள்; இமையோரும் தொழா வகைசெய்து,
ஆட்டுதி நீ; அரவணையாய்! அடியேனும் அஃது அறிவன்;
வேட்கை எலாம் விடுத்து எனை உன் திருவடியே சுமந்து உழலக்
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே.–4-9-9-
வேட்கை எல்லாம் விடுத்து –-எனக்கு உன்னை ஒழிந்தவை ஆமத்தனை அன்றோ ஆசைப் படுகைக்கு?-உன் உலகத்தில் நான் ‘எனக்கு, எனக்கு’ என்னாதது உண்டோ?-யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்திலையோ?-உன் திரு வடியே சுமந்து உழல – புறம்பான விஷயங்களிலே உண்டான ஆசை எல்லாம் உன் பக்கலிலே யாய், உன் திருவடி களையே நான் ஆதரித்து, அதுவே வாழ்க்கையாய்ச் செல்லும்படிக்காக.-கூட்டரிய திருவடிக்கள் எனைக் கூட்டினை – யாவர் சிலர்க்கும் தந்தாமால் சேர்த்துக் கொள்ள அரிய திருவடிகளை நான் சேரும்படி-என்னைச் சேர்த்துக் கொண்டாய்.-நான் கண்டேனே – இது கேட்டார் வாய்க் கேட்டு நான் சொல்லுகிறேன் அல்லேன்: அனுபவத்தாலே சொல்லுகிறேன்.
—————
கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி
கண்ட இன்பம், தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப,
கண்ட சதிர் கண்டொழிந்தேன்; அடைந்தேன் உன் திருவடியே.–4-9-10-
கீழ் பாசுரத்தில், ‘விடுத்து’ என்றும், ‘கூட்டினை’ என்றும் சொல்லப்பட்ட பேற்றினைப் பிரீதியின் மிகுதியாலே விட்டது இது; பற்றினது இது’ என்று விளக்கமாக அருளிச் செய்கிறார் இத் திருப் பாசுரத்தில்.
ஐங்கருவி கண்ட இன்பம் – உழக்காலே அளக்குமாறு போன்று அளவிற்குட்பட்ட பொருள்களை அறியத் தக்கவைகளான இந்திரியங்களாலே அனுபவிக்கப்பட்ட இவ்வுலக இன்பம். ஆத்துமாவிற்கு ஞானம் நித்திய தர்மமாய், அதுதான் விபுவாயிருக்கக் கூடியது;
இப்படி இருக்கச் செய்தேயும், கர்மம் காரணமாகக் குறைவு பட்டதாய், மனம் அடியாகப் புறப்பட்டு, புற இந்திரியங்கள் வழியாக விஷயங்களை அறியக் கூடியதாய் அன்றோ இருப்பது?ஆதலின், ‘ஐங்கருவி கண்ட இன்பம்’ என்கிறது.
ஒண் தொடியாள் திரு மகளும் நீயும் –-தொடி என்பது, முன்கை வளை.-அதற்கு ஒண்மையாவது, இவள் கையினின்று நீங்காதிருக்கை.-எப்பொழுதும் சர்வேசுவரனை விட்டுப் பிரியாமல் இருப்பவளாகையாலே, முன்பு ஒருகால் கழன்று பின்பு பொறுக்கவேண்டும்படி இருப்பது இல்லையே அன்றோ?-சங்கு தங்கு முன்கை நங்கை’ என்னக் கடவதன்றோ?-ஆதலால், ‘ஒண்டொடியாள்’ என்கிறது;
இப்படியிருக்கிற பிராட்டியும், அவள் தானுங்கூட ‘இறையும் அகலகில்லேன்’ என்றிருக்கிற நீயும்.
நீயுமே நிலா நிற்ப – இருவருடையவும் அபிமானத்துக்குள்ளே திரிபாத் விபூதியாக அடங்கிக் கிடக்கும்.-புருஷன் என்பவன் பகவானாகிய நாராயணனே; பெண் என்பவள் பிராட்டியே;
நானயோர் வித்யதே பரம் -இவர்களைத் தவிர வேறு பொருள் இல்லை,’ என்னா நிற்க,
வாசல்கள் தோறும் ஈஸ்வரர்களாய் இருக்கை யன்றோ இங்கு? அது போல் அன்றிக்கே இருக்கை –நிலாவுகை -வர்த்திக்கை–ஆதலின், ‘நீயுமே நிலா நிற்ப’ என்கிறது.
நிலா நிற்பக் கண்ட சதிர், உங்கள் இருவருடையவும் அபிமானத்திலே கிடக்குமதுவே
வாழ்க்கையாம்படி நீ பார்த்து வைத்த நேர்பாடு.(நிலா நிற்ப -வர்த்திக்க இருக்க என்றபடி )
‘ஒண்தொடியாள் திருமகளும் நீயுமே’ என்ற அளவில், நித்ய விபூதியில் அடியார்களுடன் இருக்கும் இருப்பைச் சொல்லியது ஆமோ?’ என்னில், அடியார்கள் குழாங்களை உடன் கூடுவதென்று கொலோ!’ என்று இவர் சொல்லுகையாலும், பக்தைர் பாகவத சஹ -‘நித்யர்களோடும் முத்தர்களோடுங்கூட’ என்று வேறு பிரமாணங்கள் உண்டாகையாலும் சொல்லத் தட்டு இல்லை’
கண்டு –-நினைவிற்கும் எட்டாத, உலகத்திற்கெல்லாம் பதியான மகா விஷ்ணுவானவர்
நித்ய முத்தர்கள் சூழப் பிராட்டியோடு கூட ஸ்ரீ வைகுண்டம் என்கிற மேலான உலகத்திலே எழுந்தருளியிருக்கிறார்,’ என்கிறபடியே,-நீ பார்த்து வைத்த வாய்ப்பான அதனைக் கண்டு. என்றது,-பெரிய பிராட்டியாரும் நீயுமாகச் சேர இருக்கிற உங்கள் இருவருடையவும்
அபிமானத்திலே ஓர் உலகமாக அடங்கியிருக்கிற இருப்பைக் கண்டேன்,’ என்றபடி.
உன் திருவடியே அடைந்தேன் –அந்த நித்ய ஸூரிகளோடு ஒரு கோவையாய் உன் திருவடிகளிலே அடிமை செய்யவேண்டும் என்று உன் திருவடிகளைக் கிட்டினேன். இது நான் உற்றது; கீழ்ச்சொன்னவை நான் விட்டவை.-அவர்கள் இருவருமே’ என்ற இடத்தில், அவர்கள் அபிமானத்திலே அடங்கிக் கிடப்பது-ஒரு உலகம் உண்டாகச் சொல்லத் தட்டு இல்லையே அன்றோ?-இளைய பெருமாளை அடிமை கொண்டாற்போலே,-இவரை அடிமை கொள்ளுவது ஒரு தேச விசேஷமாகவே இருக்க வேண்டும் அன்றோ?-
இப்பால் கைவளையும் மேகலையும் காணேன்-கண்டேன் கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும்-கலியன்-கை வளை- கைவல்யம் – மேகலை ஐஸ்வர்யம் -காண வில்லை கலியனும் –
————
திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரைத்
திருவடி சேர்வது கருதிச் செழுங் குருகூர்ச் சடகோபன்
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே.–4-9-11-
புறம்பு உண்டான ருசியைப் போக்கித் தன் பக்கலிலே ருசியைப் பிறப்பித்த உபகாரத்தை
நினைத்து ஏத்துகிறார்-திருவடியை – எல்லார்க்கும் ஸ்வாமியாய் உள்ளவனை.-நாரணனை –கேவலம் ஸ்வாமியாய் இருக்குமளவே அன்றிக்கே, இவை அல்லோம்’ என்ற அன்றும் தான் விடமாட்டாத படி அன்பு உள்ளவனாய் இருப்பவனை.-கேசவனை – அன்பு உள்ளவனாய்க் கடக்க இருக்கை அன்றிக்கே, இவர்களோடே ஓர் இனத்தானாய் வந்து அவதரித்து, இவர்கள் விரோதியைப் போக்குமவனை.-பரஞ்சுடரை – இப்படி அவதரித்து நின்ற இடத்திலே உண்டான மனிதத் தன்மையிலே பரத்துவத்தைச் சொன்ன படி.-திருவடி சேர்வது கருதி –
அவன் திருவடிகளைக் கிட்டினோமாக வேண்டும்’ என்னும் எண்ணத்தை யுடையராய்;
துயர் அறு சுடர் அடி தொழுது எழு’ என்று அடியே பிடித்து வருகின்ற எண்ணம் இதுவே அன்றோ?-செழுங்குருகூர்ச் சடகோபன் – திரு வயோத்தியையில் மண்பாடு தானே ஸ்ரீராம பத்தியைப் பிறப்பிக்குமாறு போலே, அவ் வூரில் பிறப்பாயிற்று இவர்க்கு இந்த ஈடுபாட்டிற்குக் காரணம்.
இந்தப் பத்தும் அவன் திருவடிகளிலே சென்று அடைவிக்கும்;-நீங்களும் அதற்கு உறுப்பாகத் திருவடிகளிலே சென்று கிட்டுங்கோள்.-நீங்கள் உங்களுக்குமாய் இராமல், அடிசிற் பானை போலே அவன் திருவடிகளிலே நித்ய கைங்கரியத்திலே சேரப் பாருங்கோள்.--சாயுஜ்யம் பிரதி பன்னாயா-என்றும் –யேந யேந தாதா கச்சதி தேந தேந ஸஹ கச்சதி –என்றும் சொல்லுகிறபடியே -இளைய பெருமாளைப் போலே பிரியாதே நின்று அவன் நினைவிற்குத் தகுதியாக அடிமை செய்யப் பாருங்கோள்.-தன்னடையே ஐம்புல இன்பங்களில் விரக்தியையும் பிறப்பித்து அவன் திருவடிகளில் சேர விடும் இத் திருவாய் மொழி தானே,’
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும் திருவடிகளிலே வைத்து சொன்ன ஆயிரம் என்னுதல் – இவ் விசேஷணங்களை ஆயிரத்திலும் இட்டு நிர்வஹிப்பர்கள் பூர்வாச்சார்யர்கள் -பட்டர் அவ்வோ திருவாய்மொழியிலே இட்டு நிர்வஹிப்பர்-
——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –