ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -80-சீர் அரசு ஆண்டு தன் செங்கோல் சில நாள் –முடிச் சோதியாய் -3–1-

March 18, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

ஸூர்யன் அஸ்தமித்தது -அரசாண்டு கழிந்த மன்னர் போல் நித்ய லீலா உபய விபூதிக்கு அரசே -என்னை நீத்து வஞ்சித்த நிகர் அற்ற அரசே-எம் விசும்பு அரசே -ஆழ்வாருக்கு பரமபதம் அண்ணியது தானே –அக்கரை இக்கரை -பெரியாழ்வார் போல் இங்கும்-அருளாய்-உரு வெளிப்பாட்டில் -கண்ணுக்கு தோன்றும் தலைவனை சம்போதித்து -இரங்கி பேசும் தலைவி பாசுரம்–வேதனை-கீழ் பாசுரம் -தானான தன்மையாகவும் கொள்ளலாம்-இதில் பெண் நாயகி பாவனை-பிராட்டி தசையைப் பிராபித்து -அரும்பதம்–முடிச் சோதியாய் -3–1-இதன் விவரணம்–மூன்று முடிக்கு உரிய அரசு -நாயனார்-வைரமுடி – ராஜ முடி -கிருஷ்ண ராஜ முடி-கிரீடம் மகுடம் சூடாவதம்சம் –மூன்றும்-

ஆதித்யனும் போய் அஸ்தமித்து – இருளும் வந்து பாதகமாக நோவு படுகிறாள்-ஒரு பிராட்டி வார்த்தையாய் இருக்கிறது –

இப்படி அனுபவ அபி நிவேசம் பிறந்தவர் அதுக்கு ஈடாக அனுபவிக்கப் பெறாமையாலே தம்முடைய விவேக பிரகாசம் குலைந்து மோஹ அந்தகாரம் மேல் இடுகிறபடியை பிரிவாற்றாது பொழுதொடு புலம்பின தலைவி வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-அவதாரிகை-இவ்விபூதியில் தம் இருப்பைத் தாம் அசஹமாநராய்
வைத்தவனையே நிவர்த்திப்பாய் என்ற அபிப்ராயத்தால் இருளுக்கு அஞ்சின நாயகியாய் அருளாய் என்று பிரார்திக்கிறார் இதில்

சீரரசாண்டு  தன் செங்கோல் சில நாள் செலீஇக் கழிந்த
பார் அரசு ஒத்து மறைந்தது நாயிறு பாரளந்த
பேரரசே எம் விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்த
ஓரரசே அருளாய் இருளாய் வந்து உறுகின்றதே
 – -80 –பிரிவு ஆற்றாத தலைவி மாலைப் பொழுதுக்கு இரங்குதல் –

சீர் அரசு ஆண்டு–சிறப்பாக ராஜ்ய பரிபாலனம் பண்ணி
தன் செங்கோல் சில நான் செலீ இ–தனது நீதி தவறாத ஆஜ்ஞையைச் சில காலம் (உலகத்திற்) செலுத்தி
கழிந்த–பின்பு இறந்தொழிந்த
பார் அரசு–ஸார்வபௌமனான ஒரு சக்ரவர்த்தியை
ஒத்து–போன்று
ஞாயிறு–ஸூர்யன்
மறைந்து–அஸ்தமித்தான்;
பார் அளந்த–உலகத்தை அளந்து கொண்ட
பேர் அரசே–சிறந்த தலைவனே!
எம் விசும்பு அரசே–பரமபதத்துக்கு நாயகனான எம்பெருமானே!
எம்மை நீத்து வஞ்சித்த–எம்மைத் தனியே பிரித்து வஞ்சனை செய்த
ஓர் அரசே–ஒப்பற்ற நாதனே!
அருளாய்–(இங்ஙனம் நீங்கியிராதபடி எமக்கு, வந்து) அருள் புரிவாய்; (அங்ஙனம் அருள் புரியாமையினால்)
இருள் ஆய் வந்து கூறுகின்றது–இருள் மிக்கதாய் வளர்ந்து கொண்டு வந்து சூழ்ந்து (எம்மை) வருந்துகிறது.

முடியார் திருமலையில் மூண்டு நின்ற மாறன்
அடிவாரம் தன்னில் அழகர் -வடிவழகைப்
பற்றி முடியும் அடியும் படி கலனும்
முற்றும் அனுபவித்தான் முன்—
——-21-கீழ்-அயன் மலையோடு-புறமலையோடு-திருப்பதியோடு
உத்தேச்யமாக திருமலை ஆழ்வாரை அனுபவித்துக் கொண்டு வருகிற மருளில் வண் குருகூர் வண் சடகோபனான ஆழ்வார் வட மா மலை உச்சி –என்கிற படியே அம் மலையிலே ஒரு கொடி முடி என்னலாம் படியையும் அதுக்கு அவயவமாய் இருப்பதொரு கல்பக தரு பஹூ சாகமாகத் தழைத்து பூத்தாப் போலேயாயுமாய் இருக்கிற மேலிரும் கற்பகமான அழகர் உடைய திவ்ய அவயவங்களும்
திரு அணிகலன்களுக்கும் உண்டான ஸூகடிதத்வத்தையும் வேத வைதிக புருஷர்களாலும் அளவிட ஒண்ணாத பெருமையையும் அத்தையும் விளாக் கொலை கொள்ளும்படியான ஆஸ்ரித வாத்சல்யத்தையும் அனுபவித்து விஸ்மிதர் ஆகிற முடிச் சோதியில் அர்த்தத்தை முடியார் திருமலையில் -என்று துடங்கி அருளிச் செய்கிறார் –

சீரரசாண்டு –குணமாக ஆண்டு –தர்ம புத்ரம் ராஜ்ஜியம் பண்ணாவிடில் நாங்களும் இங்கு இரோம்-
என்று அக்னி ஹோத்ரங்களையும் கொண்டு அவன் இருந்த காடேறப் புறப்பட்டு போனார்கள் இறே –
அப்படி சீரியதாக ராஜ்யத்தை நடத்தி –தன் செங்கோல் சில நாள் செலீஇ–இது தான் அல்ப காலத்தோடு பர்யவசிக்கை அன்றியே –தன்னுடைய-ஆஜ்ஜையை நெடு நாள் நடத்தி-(சில நாள் -விபரீத லக்ஷணை )-கழிந்த  பாரர சொத்து –-இப்படி நெடுநாள் லோகத்தை நடத்திப் போந்த மாந்தாத்ரு பிரமுகரான-ராஜாக்களைப் போலே–பார் அரசு ஒத்து-மறைந்தது நாயிறு- ஆதித்ய சன்னதியிலே -நாயக சன்னதியில் போல ஆஸ்வசித்து இருக்க கடவதாய்- ராத்ரியில் வந்தால் கரணங்களுக்கு எல்லாம் பிரிந்த விஷயம் ஒன்றுமே இலக்காகையாலே – ராத்திரி என்றால் வெருவக் கடவதாய் இறே இருப்பது –
பகலில் இந்திரியங்கள் ஸ்வ  விஷயங்களிலே-பாவி பாய்கையாலே வியசனம் அரையாறு பட்டு இருக்கும் இறே –மறைந்தது –-ஆதித்யன் எல்லாருக்கும் கண்ணாய்  இருக்க ஆகாரம் கிடக்கச் செய்தே
விசேஷித்து இவளுக்கு கண்ணாய் இருக்கையாலே –-நாயகனைப் போக விட்டு வழி பார்த்து -நின்றாப் போலே –கண் மறைய பார்த்து நின்றால் போலே காணும் –கண்ணாஞ்சுழலை இட்டுப் பார்த்தாள் –பார் அளந்த பேர் அரசே –இருளின் கையில் அகப்பட்ட ஆதித்யனை மீட்கும் போது – மகா பலி-கையிலே அகப்பட்ட பூமியை மீட்டவனே வேணும் போலே காணும் –அளந்த –பூமிப் பரப்படைய அளந்த திருவடிகளைக் கொண்டு இவ்விருளையும் அளந்தால் ஆகாதோ –இருளார் வினை கெட இறே-(39 ) செங்கோல் நடத்துகிறது –(அளப்பது ஸ்வ அதீனமாக்குவது )பேரரசே –-எளிய செயல்கள் செய்யுமவன் அல்லனே –செய்யுமவை அடங்க பெருத்தாயிற்று இருப்பது –எம் விசும்பரசே –பகவத் விஷயத்தில் ஜ்ஞானம் பிறந்த பின் சம்சாரத்தில் காட்டில் பரம பதம் அணித்தாய் காணும் இவருக்கு இருப்பது –பொன் உலகு ஆளீரோ -என்று முதல்-அதுவே இறே கொடுத்தது –எம்மை நீத்து வஞ்சித்து ஓரரசே
உபய விபூதிக்கும் தனித் தனியே கடவனோபாதி- என்னை அகற்றி-முடிக்கைக்கும் தனி முடி சூடி இருக்கிறவனே -என்று பிள்ளான் –(என்று எம்பார் என்றும் சிலர் சொல்வர் )என்னை அகற்றி -அது செய்கிற போது பிரியேன்  என்று வைத்து பிரிந்து – இஸ் ஸ்வபாவதுக்கு புறம்பு-என்னோடு ஒப்பார் யார் -என்று இருக்கிறவன் ஆயிற்று — என்னால் அல்லது செல்லாதவரை பொகட-வல்லார் யார் – என்னோபாதி  இல்லையே -என்று இதுக்கும் தனி முடி சூடி இருக்கிறவன் ஆயிற்று-என்று பட்டர்-அருளாய் –அருளுக்கு விஷயமறக் கிடாய் புகுகிறது – சத்தை போனால் அருளுக்கு விஷயம் இல்லையாம் இறே –பரம பதத்தில் உள்ளார் நித்ய அனுபவத்தாலே நிரபேஷராய் இருப்பார்கள் –
சம்சாரிகள் அன்ன பாநாதிகளாலே தரித்து இருப்பார்கள்-இங்கே இருந்தே அவ் விபூதியில் உள்ளார் படியாய் இருப்பார்க்கு அருளல் ஆகாதோ –குண அனுபவத்தால் அங்குள்ளார் (அநந்ய )அந்ய பரராய் இருப்பார்கள்-இங்குள்ளார் சப்தாதி விஷயங்களிலே (அநந்ய) அந்ய பரராய் இருப்பார்கள் –
குண ஜ்ஞானமே யாய் அனுபவம் இன்றிக்கே இருக்கிற இவர் பக்கலிலே இறே அவனுக்கு-
தான் அருளின படி காட்டலாவது –அருள வேண்டும்படி இப்போது இங்கு வந்தது என் என்ன –
இருளாய் வந்து உறுகின்றதே--இருளாய் வந்து கோமுக வ்யாக்ரமாகை தவிர்ந்து – வ்யாக்ரமாயே வரா நின்றது –ஊழி என்கிற பேராய் தலைக் காட்டுகை தவிர்ந்து – இருளாயே பாதகமாய் நின்றது –மத்யஸ்தர்க்கு இறே ஊழி பாதகமாவது —பிரிந்தார்க்கு இராத்திரி இறே பாதகமாவது –ஜகதுப சம்ஹாரத்துக்கு ஹேதுவாகையாலே நாட்டார்க்கு இறே ஊழி பாதகமாவது –உறுகின்றதே  
இருள் வந்து ஸ்பர்சிக்க புகா நின்றது –அதுக்கு முன்னே –இருளன்ன மா மேனியை-( பெரிய திருவந்தாதி )கொண்டு வந்து இடை இட்டுக் கலக்க வேணும் என்கிறாள் –

மாலைப் பொழுது கண்டு தலைவி இரங்கும் பாசுரம் -உரு வெளிப்பாட்டால் நாயகன் நேராக தோன்றி-அவனை நோக்கி அருளிச் செய்யும் பாசுரம் –சீரரசாண்டு தன் செங்கோல் சில நாள் செலீ இ க்கழிந்த-பார் அரசு ஒத்து மறைந்தது நாயிறு – சூர்ய அஸ்தமனம் அரசன் ஆண்டு மறைந்தால் போலே என்றவாறு – நீர் வந்து ரஷியா விடில் அரசர்கள் இல்லாத ராஜ்யத்தில் கணவனை இழந்த பெண் மக்கள் கொடியோரால் படும் பாட்டை இருளினால் நான் பாடுவேன் என்கிறார் யாயிற்று-இருளில் அகப்பட்ட தன்னையும் சூரியனையும் மீட்க ஓங்கி இலக்கு அளந்த உத்தமன் வேண்டுமே –பாரளந்த பேரரசே -என்கிறார் –பரமபதம் போலே என்னையும் அனர்யார்ஹம் ஆக்கிக் கொள்ளத் தக்கவனே-எம் விசும்பரசே-பிரியேன் பிரிந்தால் தறியேன் -இன்ன காலத்தில் வருவேன் சொல்லி வராமல் -எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே –-ஓரரசே -இப்படியும் ஒரு தலைவன் உண்டாவதே – என்னை உபேக்ஷித்து உன்னைக் காட்டாது இருக்கும் இந்த ஸ்வபாவத்தில் முடி சூடி இருக்கிறவனே-வஞ்சித்ததோர் அரசே –
அவனைச் சேர பெறாமையாலே விவேக பிரகாசம் குலைந்து மோஹாந்தகாரம் மேல் இடுகின்ற படியை-எம்பெருமானைக் குறித்து விண்ணப்பம் செய்கிறார்-இத்தால் சம்சாரத்தில் இருப்பு அஞ்ஞானம் வந்து மேல் இடும்படி இருக்கையாலே கடுக இவ்விருப்பைக் கழித்துத் தர வேணும்-என்று அருளிச் செய்கிறார் -நம்பிள்ளை -ஸ்ரீ ஸூ க்திகள்--பிரிவாற்றாத தலைவி மாலைப்பொழுது கண்டு இரங்கி யுரைக்கும் பாசுரம் இது.-இப் பாட்டில் நாயகனை நோக்கின் விளியுள்ளதனால், உருவெளிப்பாட்டில் கண்ணெதிரில் நாயகன் காணப்பட்டாதென்றும்-அன்னவனை நோக்கி இது கூறுகின்ற தென்றுங் கொள்க.-ஸூர்யன் உலகமுழுவதும் பகலெல்லாம் தடையறத் தனது செய்ய கிரணத்தைச் செலுத்திப் பின் அப்பாற் சென்றபடியை-“சீராசாண்டு தன் செங்கோல் சில நாள் செலீஇக் கழிந்தஅ பாராசொத்து மறைந்தது நாயிறு” என்றார்.–ஓரரசன் சிறப்பாக ராஜ்யத்தை அரசாட்சி செய்து தனது நீதி தவறாது ஆஞ்ஞையைச் சிலகாலம் உலகததிற் செலுத்திப் பிறகு இறந்தொழியுமா போலே யிருக்கிறதாயிற்று ஸூர்யாஸ்தமனம், நாயகனே! இப்பொழுது நீ என்னை வந்து சேர்ந்திடாயாயின்
அரசனில்லாத ராஜ்யத்தில் கணவனையிழந்த பெண்மகள் கொடியரால் படும் பாட்டை யான் இருளினால் படுவேன் என்பது தோன்ற இது சொல்லப்பட்ட தென்க.–இருளின் கையிலே யகப்பட்ட ஸூர்யனையும் தன்னையும் மீட்கைக்கு மஹாபலிகையிலே யகப்பட்ட உலகத்தை மீட்டவன்
வேண்டுமென்பாள் பாரளந்த பேரரசை விளித்தாள்.-எம் விசுபரசே!= பரமபதத்தைப் போலவே எம்மையும் அநந்யார்ஹ சேஷமாக்கிக் கொள்ளதக்கவனே! என்றபடி.-முதலில் என்னை விட்டுப் பிரியவேமாட்டேன், என்று சொன்னதும், பின்பு ‘இன்ன காலத்தில் வருவேன்’ என்று காலங் குறித்துக் கூறினாலும் இரண்டும் பொய்யாம்படி. தன்னைப் பிரிந்து சென்று நெடுநாள் வாராது விளம்பித்தது பற்றி “எம்மைநீத்து வஞ்சித்த ஓராசே” என்றாள். ‘இவ்விடத்து ஓராசே!’ என்றது இப்படியும் ஒரு தலைவனுண்டோவென்று குறை கூறியவாறு.–“எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே!” என்பதற்கு- “என்னை உபேக்ஷித்து உன்னைக் காட்டாதிருக்கிற இந்த ஸ்வபாவத்திலே முடிசூடியிருக்கிறவனே!”
என்று விசேஷார்த்தம் உரைப்பர். ‘வஞ்சித்த’ என்னும் பெயரெச்சத்தின் ஈறு தொக்கியிருப்பதால் ‘வஞ்சித்தோராசே’, என்றாயிற்று.செலீஇ = செலுத்தி; சொல்லிசை யளபெடை! இங்கு அளபெடை அலகுபெறவில்லை.–“எம்பெருமானைச் சேர்ந்து அநுபவிக்கப் பெறாமையாலே தமது விவேக ப்ரகாசங் குலைந்து மோஹாந்தகரநம் மேலிடுகிறபடியை எம்பெருமானைக் குறித்து இதனால் ஆழ்வார் விண்ணப்பஞ் செய்தாராயிற்று. இங்கே நம்பிள்ளையீடுகாண்மின்;-“இத்தால் ஸம்ஸாரத்திலிருப்பு அஜ்ஞானம் வந்து மேலிடும்படியிருக்கையாலே கடுக இவ்விருப்பைக் கழித்துத் தரவேணுமென்று அருளிச்செய்கிறார்.

சீரரசாண்டு தன் செங்கோல் சில நாள் செலீஇக் கழிந்த பார் அரசு ஒத்து மறைந்தது ஞாயிறு-அழகிய ராஜ்யத்தைப் பண்ணி தன்னுடைய அபங்குரையான ஆஜ்ஜையைச் சில காலம் நடத்திக் கழிந்து போன பூமியில் ராஜாக்களோடு ஒத்தது என்னலாம் படி ஆதித்யனானவன் பகல் எல்லாம் ப்ரதா போத்தரனாய் நடத்தி அஸ்தமித்தான்–பாரளந்த பேரரசே-ரக்ஷணீயமான பூமிக்கு அந்நிய அபிமானத்தைக் கழித்து
உன் திருவடிகளின் கீழே ஆக்கிக் கொண்ட பெரிய ஸ்வாமி யானவனே–எம் விசும்பரசே அந்நிய அபிமான ப்ரஸங்கம் இல்லாத நித்ய விபூதிக்கு ஸ்வாமி யானால் போலே எங்களையும் அநந்யார்ஹமாக ஆண்டு கொண்டவனே–எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே -இப்படி அநந்யார்ஹதை ஒத்து இருக்க-அவர்களைப் போலே அனுபவம் பெறாதபடி எங்களை நீக்கி வஞ்சித்து வைத்தமைக்கு அத்விதீய நாயகன் ஆனவனே–அருளாய்-இப்படி நீங்கி இராதபடி கிருபை பண்ணி அருள வேணும்-இருளாய் வந்து உறுகின்றதே –தனித்து இருக்கில் இருளின் கையிலே அகப்படும் அத்தனை-ஆகையால் அருள வேணும் என்றதாயிற்று–இத்தால் ஆதித்ய ப்ரகாஸம் என்னலாம்படி ஸர்வ லோகத்தையும் வெளிச் சிறப்பிக்கிற தம்முடைய விவேகம் அனுபவ அலாபத்தாலே குலைந்து
மோஹ அந்தகாரமும் மேலிடுகையாலே ஸமஸ்த விபூதி ரக்ஷகனாய் நம்மைக் காரியப்பட்டாலே
பிரித்து வைத்து இருக்கிற ஸர்வேஸ்வரனுடைய கிருபையை இவ் வஸ்தைக்கு ரக்ஷகம் என்று அறுதியிட்டு இரங்க வேணும் என்று அபேக்ஷித்தார் ஆயிற்று

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்வியாக்யானம்–சீரரசாண்டு-இந்த லோகமான பூமி எல்லாவற்றையும்
ராஜ்ய ஆஜ்ஞக ராஜாவாய் அனுபவித்தவனாய்–தன் செங்கோல் சில நாள் செலீஇக்-தன் ஆஜ்ஜையைச் சில நாள் நடத்தி–கழிந்த பார் அரசு ஒத்து-கழிந்து போன பூபரோடு ஒத்தவளாய்-மறைந்தது ஞாயிறு-மறைந்தான் ஆதித்யன்–பாரளந்த பேரரசே -இந்தப் பூமியை எல்லாம் ஓர் அடியால் அளந்து கொண்ட மஹா பிரபுவானவனே-எம் விசும்பரசே-எங்களதான தெளி விசும்புக்கு அரசானவனே
அங்காகவே இருப்பதான எங்கள் பதின்மரையும் சில நாள் அங்கு இராதபடி விலக்கி எங்களை வஞ்சிப்பதற்கு அத்விதீய பிரபு ஆனவனே-அருளாய்-அங்காக நான் வந்து இருப்பதாக அருளிச் செய்யாய்–இங்கு உமக்கு என்ன பாதகம் என்ன-இருளாய் வந்து உறுகின்றதே –அஞ்ஞான அந்தகாரமே எவரிலும் வந்து திணுங்கி எல்லாரையும் பாதியா நின்றது-ஆர் தான் இந்த ப்ரபந்ந அதிகாரிகள்
இவர்களுக்கு அனுபவ காரகமான இந்த பிரபந்தங்களை இங்கனே வைத்து தேவரீர் ப்ரவர்த்திப்பத்துக்கு என்ன பலம் ஆகையால் என்னை அங்கு வாங்கு என்றபடி –

ஸ்வாபதேசம் –இத்தால்-சம்சாரத்தில் இருப்பு அஞ்ஞானம் வந்து மேலிடும்படியாய் இருக்கையாலே
கடுக இவ்விருப்பை கழித்து தர வேணும் என்று   அருளிச் செய்கிறார் –

தாத்பர்யம்–கீழே விண்ணுளாரிலும் சீரியரான பாகவதர்களைக் கண்டு களித்த ஆழ்வார் அந்த அனுபவம் தமக்கு கிட்டாமல் தளர்ந்து இங்கு அஞ்ஞானம் வளர்க்கும் ஸம்ஸாரத்திலே இருப்பு பொறுக்க மாட்டாமல் இரவுக்கு வருந்தும் நாயகி பாசுரத்தால் அருளிச் செய்கிறார்-மாந்தாதா போன்ற ராஜாக்கள் சாது சம்மதித்து செங்கோல்- தர்ம ஆஜ்ஜை -நடத்தி பின்பு காலம் கழிந்து சென்றால் போல் இத்தனை காலமும் இந்திரியங்கள் வேறே வேறே விஷயம் போகும்படி உபகரித்த ஆதித்யனும் அஸ்தமிக்க
நீண்ட இருளும் வந்து பாதித்து மனசை ஏக முகமாக உபய விபூதி நாயகனையே நினைக்கும் படி பண்ணி என்னையும் ரக்ஷிப்பதாகச் சொல்லிப் போந்த நீ என்னை –‘உன்னையே கதியாக கொண்ட என்னை – உனது அருளுக்கு விஷயம் ஆக்க வேண்டும் -என்று பிரார்திக்கிறார்

3-1-முடிச் சோதி பிரவேசம்-

பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல் மருளில் வண் குருகூர் வண் சடகோபன் –2-10-1-என்று அவன் கல்யாண குண விஷயமாக
அஜ்ஞ்ஞானம் இல்லை என்றார் கீழில் திருவாய்மொழியில் –அந்த குணாதிக விஷயம் தன்னில் ஒரு அஜ்ஞ்ஞானம் அனுவர்த்திக்கிற படி
சொல்லுகிறார் இதில் -கீழ்ச் சொன்ன அஜ்ஞானத்துக்கு அடி கர்மமாய் இருக்கும் -இங்குத்தை அஜ்ஞானத்துக்கு அடி
விஷய வைலஷண்யமாய் இருக்கும் -நித்ய ஸூரிகளுக்கும் உள்ளதொரு சம்சயம் ஆயிற்று இது –
ஸ்வரூப அனுபந்தியாய் இருப்பதொரு சம்சயம் ஆகையாலே ஸ்வரூபம் உள்ளதனையும் நிற்பது ஓன்று இறே இது

திருமலையை அனுபவித்துக் கொண்டு வாரா நிற்கச் செய்தே -வடமா மாலை உச்சியை -என்னுமா போலே திருமலையில் ஏக தேசம்
என்னலாம் படியாய் கல்பக தரு பஹூ சாகமாய்ப் பணைத்துப் பூத்தால் போலே நிற்கிற அழகருடைய சௌந்தர்யத்தை அனுபவித்தார் –
-வேதங்களோடு வைதிக புருஷர்களோடு ப்ரஹ்ம ருத்ராதிகளோடு வாசியற ஸ்வ யத்னத்தால் காணும் அன்று காண ஒண்ணாதபடி
இருக்கிற இருப்பரையும் தானே கொடு வந்து காட்டும் அன்று ஜன்ம வ்ருத்தாதிகளால் குறைய நின்றார்க்கும் காணலாய் இருக்கிற இருப்பையும்
அனுசந்தித்து விஸ்மிதர் ஆகிறார் –

திருமலை -சரம பர்வம் -சுந்தர தோள் உடையான் -பிரதம பர்வம் –சரம பர்வம் அனுபவித்த பின்பு பிரதம பர்வம் அனுபவிப்பது எதனால் –
ஏக தேசம் -திருமலைக்குள் அவனும் அடக்கம் -சரம பர்வத்தில் பிரதம பர்வமும் அடங்குமே –
வேதங்கள் – -ஓதுவார் ஒத்து எல்லாம் –நின் புகழை
மறையாய நால் வேதத்துள் நின்ற -வியாசாதிகளும் காண முடியாதவன்
அரன் முதலாய -நான் முகனும் இந்த்ரனும் பிறை ஏறும் சடையானும் -அறிய முடியாதவன்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே -தானே கொடு வந்து காட்டுவதற்கு திருஷ்டாந்தம்-

கீழ் இரண்டு பத்தாலும் –
ப்ராப்யமான ப்ரஹ்ம ஸ்வரூபத்தினுடைய சேஷித்வ ஸித்தமான-ரக்ஷகத்வ போக்யத்வங்கள் சொல்லிற்றாய்
அநந்தரம்-முன்றாம் பத்தாலும் நாலாம் பத்தாலும்
ப்ராப்தாவான ப்ரத்யகாத்ம ஸ்வரூபத்தினுடைய பகவத் ஏக சேஷத்வ ஸித்தமான தத் ஏக அநு பவத்வமும்-
தத் ஏக ப்ரியத்வமும்-சொல்லுகிறது –
அதில் தத் ஏக அனுபவத்வ பரமான இம்மூன்றாம் பத்தில் –
1-பகவச் சேஷித்வ பாரம்ய ஸித்தமான ஆத்ம சேஷத்வத்தினுடைய ஸ்வாபாவிகத்வத்தையும்
2-அதுக்கு விரோதியான தேஹ சம்பந்தாதி நிவர்த்த நீயம் என்னும் இடத்தையும்
3-நிவ்ருத்த விரோதிகனுக்கு சேஷ வ்ருத்தி பிரகாரம் பரார்த்த நீயம் என்னும் இடத்தையும்
4-சேஷியினுடைய சர்வாத்ம பாவ ப்ரயுக்தமான சேதனனுடைய அப்ருதக் சித்த பிரகாரத்வம் -சேஷத்வ வேஷம் என்னும் இடத்தையும்
5-ஏவம் வித சேஷத்வ ரசத்தால் வந்த ப்ரேம விகாரத்தையும்
6-சேஷத்வ பிரதிசம்பந்தி அர்ச்சாவதார பர்யந்தம் என்னும் இடத்தையும்
7-தச் சேஷத்வாபி வ்ருத்தி ரூபமான ததீய சேஷத்வ காஷ்டயையும்
8-ததீயா பாரதந்தர்ய நிதானமான தத் அனுபவ அபி நிவேசத்தையும்
9-அனுபவ விசேஷமான வாசிக்க அனுபவ வை லக்ஷண்யத்தையும்
10-சர்வ பிரகார அனுபவ ஸித்தமான ஸமஸ்த விருத்தி நிவ்ருத்தியையும்
அருளிச் செய்து -இச் சேதனனுடைய பகவத் ஏக அனுபவத்தை ப்ரதிபாதிக்கிறார் –

இதில் முதல் திருவாய் மொழியில்
சேஷத்வத்தினுடைய ஸ்வா பாவிகத்வத்துக்கு மூலமான சேஷியினுடைய சர்வ பிரகார பாரம்யத்தை ப்ரதிபாதிப்பதாக
தெற்குத் திருமலையில் கைங்கர்ய பிரதிசம்பந்தி தயா சந்நிஹிதரான அழகருடைய திவ்ய சவ்ந் த்ர்யத்தை அபரோக்ஷித்து
1-ஆபரண அவயவ சோபையினுடைய ஸூ கடிதத்வத்தையும் –
2-உஜ்ஜ்வலமான சவ்ந்தர்யத்தினுடைய உபமான ராஹித்யத்தையும்
3-சர்வ பிரகார உஜ்வல்யத்தால் உண்டான ஸர்வேஸ்வரத்வத்தையும்
4-அந்த பாரம்யத்தினுடைய போக்யதாதிசயத்தையும்
5-இந்த வை லக்ஷண்யத்தினுடைய வாசா மகோசர மாஹாத்ம்யத்தையும்
6-ஸமஸ்த வேதங்களாலும் சாகல்ய யுக்தி பண்ண ஒண்ணாமையும்
7-அதிசயித ஞானரான ப்ரஹ்ம ருத்ராதி தேவதா வர்க்கமும் சொல்ல நினைத்தாலும் அவ் உஜ்வல்யத்துக்கு மாலிந்யாவஹம் என்னும் இடத்தையும்
8-அபூர்வனாய் அதிசயித ஞானனாய் இருப்பான் ஒரு ப்ரஹ்மா தலைப் படிலும் அதேஜஸ் கரம் என்னும் இடத்தையும்
9-ஆச்ரித வாத்சல்ய அதிசயத்துக்கு சங்கல்ப முகத்தாலே பண்ணும் ஸம்ஸ்ரித ரக்ஷண பாராம்யமும் திரஸ்கார கரம் என்னும் இடத்தையும்
10-ஏவம் விதமான பாரம்யத்தை அறிந்து ஈஸ்வர அபிமானிகளும் ஆஸ்ரயிக்கை ஏற்றம் அல்ல என்னும் இடத்தையும்
அருளிச் செய்து பரம சேஷியான ஈஸ்வரன் சந்நிதியில் தச் சேஷத்வத்தினுடைய ஸ்வா பாவிகத்வத்தையும் உபபாதித்து அருளுகிறார் –

முதல் பாட்டில் அழகருடைய திரு அணி கலன்களுக்கும் திருமேனிக்கும் உண்டான ஸூ கடிதத்வத்தை அனுசந்தித்தார்
இரண்டாம் பாட்டில் அதுக்கு நாட்டார் திருஷ்டாந்தம் இட்டுச் சொல்லுமவை எல்லாம் உனக்கு அவத்யத்தை விளைக்கும் என்றார்
மூன்றாம் பாட்டில் -நாட்டாரை விடும் மயர்வற மதிநலம் அருளப் பெற்ற நீர் சொல்லீர் என்ன என்னால் சொல்லி முடியாது என்றார்
நாலாம் பாட்டில் -இப்படி விலஷணனாய் நிரதிசய போக்யனாய் இருக்கிற உன்னை நாட்டார் இழந்து போம்படி
அவர்களை மதி விப்ரமங்களைப் பண்ணினாய் என்றார்
அஞ்சாம் பாட்டில் நாட்டாரில் வ்யாவ்ருத்தர் அல்லீரோ உம்மால் பேச ஒண்ணாமைக்கு குறை என் என்ன
-என்னை வ்யாவ்ருத்தன் ஆக்கினவோபாதி உன்னை சாவதி ஆக்கிற்று இல்லையே என்றார்
ஆறாம் பாட்டில் வேதங்களும் நீரும் கூடப் பேசினாலோ என்ன அவையும் உன்னைப் பரிச்சேதிக்க மாட்டாது என்றார்
ஏழாம் பாட்டில் வேதங்கள் கிடக்கட்டும் -வைதிக புருஷர்கள் என்று சிலர் உண்டே அவர்கள்
ஏத்தக் குறை என் என்ன அதுவும் உனக்கு நிறக்கேடு என்றார்
எட்டாம் பாட்டில் கர்ம பாவனை இன்றிக்கே ப்ரஹ்ம பாவனையேயாய் இருப்பான் ஒரு ப்ரஹ்மாவை உத்ப்ரேஷித்து
அவனும் ஏத்தினாலும் தேவர்க்கு அவத்யம் என்றார்
ஒன்பதாம் பாட்டில் மேன்மை பேச ஒண்ணாது என்கைக்கு நீர்மையோ தான் பேசலாய் இருக்கிறதோ என்றார்
பத்தாம் பாட்டில் உன்னாலே ஸ்ருஷ்டரான ப்ரஹ்மாவாலே ஸ்ருஜ்யரான இவர்கள் உன்னை ஏத்துகையாவது
உனக்கு அவத்யம் அன்றோ என்றார்
நிகமத்தில் இத்திருவாய் மொழி தானே ப்ராப்யத்தைத் தரும் என்கிறார் –

முடிச் சோதி யாயுனது முகச் சோதி மலர்ந்ததுவோ
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் யலர்ந்ததுவோ
படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே
 –3-1-1-

கடலுக்குள் பட்டதொரு த்ருணம் ஒரு திரை ஒரு திரையிலே தள்ளக் கடந்து அலையுமா போலே -ஓர் அழகு ஓர்-அழகிலே தள்ளக் கிடந்து அவற்றை அனுபவிக்கிறார்-சேஷித்வ ஸூசகமான அழகை அனுபவித்து தம் சேஷத்வத்துக்கு அனுரூபமான திருவடிகளின் அழகை அனுபவிக்கிறார் –மருளில் வ ண் குருகூர் வ ண் சடகோபன் -என்ற தத்வ ஹிதங்களில் சம்சயம் அற்ற இவருக்கு இது ஒரு நித்ய சம்சயம் விளைந்தது
விஞ்ஞான பலமாய் விஷய வை லக்ஷண்யம் அடியாக பிறந்த சம்சயம் ஆகையால் நித்யமாகச் செல்லும் என்கை –

திருமாலே கட்டுரையே —இதுவும் ஒரு சேர்த்தி அழகு இருக்கிறபடி-இப்படி இன்று அனுபவிக்கப் புக்க இவரோடும் நித்ய அனுபவம் பண்ணுபவர்களோடு அவன் தன்னோடு வாசியில்லை இச்சம்சயம் அனுவர்த்திக்கைக்கு-தமக்கு இந்த சம்சயம் அறுதியிட ஒண்ணாதாப் போலே அவர்களுக்கும் என்று இருக்கிறார்-கட்டுரையே -சொல்ல வேண்டும் என்றபடி -ஷேப உக்தி -சொல்ல முடியாது என்றபடி –அறிந்தேன் என்பவன் அறியாதவன் ஆகிறான் –

————-

கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை யொவ்வா
சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது
ஒட்டுரைத்து இவ்வுலகு உன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி 
–3-1-2-

முதல் உறவு பண்ணும் கண் -அதுக்கு தோற்று ஜிதந்தே என்று விழும் திருவடிகள் -அவ் விழுக் காட்டுக்கு தோற்று அவன் தான் ஜிதந்தே என்று அணைக்கும் கை-இவை இருக்கிற படி –நின் கண் -என்கையாலே -உனது முகச் சோதி -என்றத்தை நினைக்கிறது-பாதம் என்று -அடிச் சோதி என்றத்தை நினைக்கிறது –-கை என்று தாம் நடு வனுபவித்த அழகுக்கு உப லஷணம் –ரத்னம் அறியாதான் ஒருவன் குருவிந்தக் கல்லோடு ஒக்கும் இது -என்றால் -அவ்வளவாக இ றே இவனுக்கு இதில் பிரதிபத்தி –
அவ்வழியாலே அதுக்கு அவத்யமாம் இ றே -அப்படியே இவன் பண்ணும் ஸ்தோத்ரம் இங்குத்தைக்கு அவத்யமாகவே தலைக் கட்டும் –இங்குத்தைக்கு புன்மையைக் காட்டுகைக்கு நிபந்தனம் என் -என்னில் பரஞ்சோதி –நாராயண பரோ ஜ்யோதி -என்கிறபடியே நீ சர்வ வஸ்து விசஜாதீயன் ஆகையாலே –

——————

பரஞ்சோதி நீ பரமாய் நின்னிகழ்ந்து பின் மற்றோர்
பரஞ்சோதி யின்மையில் படியோவி நிழல்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த எம்
பரஞ்சோதி கோவிந்தா பண்புரைக்க மாட்டேனே
 –3-1-3-

உன்னுடைய சங்கல்ப லவ லேசத்தாலே கார்யகரமாய்க் கொண்டு விஸ்த்ருதமாக நின்றுள்ள லோகங்களை எல்லாம் உண்டாக்கின எம் பரஞ்சோதி –மேன்மையை எல்லை காணிலும்-நீர்மை தரை காண ஒண்ணா தாய் இருக்கிறதே-நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய்யூண் என்னும் ஈனச் சொல் -திரு விருத்தம் -98-என்று நெஞ்சால் நினைக்க ஒண்ணாதது சொல்லத்தானே போகாதது இறே- -ஸூலபதையால் வந்த தேஜஸ் ஸூம் உன்னது-அழகுக்கு மேற்பட்டார் இல்லாமையால் அழகால் வந்த தேஜஸ் ஸூம் உன்னது-லோகத்தில் உபமான ரஹிதர் நீயே யாகையாலே உபமான ராஹித்யத்தால் வந்த தேஜஸ் ஸூம் உன்னது–ஜகத் காரணத்வ ப்ரயுக்தமான தேஜஸ்ஸூம் உன்னது
பண்புரைக்க மாட்டேனே-பண்பு -படி -உன் படிகள் இவையான பின்பு என்னால் பேசப் போகாது-அனுபவித்துப் போம் இத்தனை- என்கிறார் –

———–

மாட்டாதே யாகிலும் மலர்தலை மா ஞாலம் நின்
மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம் வைக்க
மாட்டாதே பல சமய மதி கொடுத்தாய் மலர்த்துழாய்
மாட்டே நீ மனம் வைத்தாய் மா ஞாலம் வருந்தாதே
 –3-1-4-

மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம் வைக்க–உன் இடத்திலேயான -உன் பக்கலிலே யான -அன்றிக்கே -மாட்டு -என்று மாடாய் -நிதி போலே ஸ்லாக்க்யமான என்னுதல்-
மாட்டு என்று மட்டாய்-மத்வ உத்ஸ – என்று மதுஸ் யந்தி யாகையாலே நிரதிசய போக்யம்-என்னுதல் – –மாட்டு -இடம் -தேன் -நிதி மூன்று பொருள்கள்

மாஞாலம் -இத்யாதி-இம் மஹா பிருத்வியானது இங்கனே நோவு பட்டே போமித்தனை ஆகாதே
1–கர்ம வச்யர் ஆகையாலே தானே உன் பக்கலிலே நெஞ்சை வைக்க மாட்டிற்றிலர்-
2–அதுக்கு மேலே நீ பல விலக்கடிகளையும் உண்டாக்கி வைத்தாய் –
3–நீயோ நிரதிசய போகய ஜாதத்திலே பிரவணனானாய்-இனி சம்சாரிகளுக்கு க்லேசமேயோ சேஷித்தது –-உன்னை விட்டால் பின்னை புத்தி நாசாத் ப்ரணச்யதி -ஸ்ரீ கீதை -2-63–என்னும் விஷயங்களிலே இவர்கள் பிரவணராய் இங்கனே நோவு பட்டே போம் இத்தனையாகாதே –படிக்கட்டு-விஷாயாந்தர -நினைவு -சங்கம் பற்று -விருப்பம் -பேராசை கிடைக்காமல் –கோபம் -சம்மோஹம் மயக்கம்-நினைவு போகும் -புத்தி நாசம் -ஸ்வரூப நாசம் –பிரானே தமக்கு பகவத் விஸ்லேஷம் கிலேச கரமாய் இருக்கையாலே எல்லாருக்கும் இப்படி இருக்கும் என்று இருக்கிறார்–

————

வருந்தாதே வருந்தவத்த மலர்கதிரின் சுடருடம்பாய்
வருந்தாத ஞானமாய் வரம்பின்றி முழுதியன்றாய்
வரும் காலம் நிகழ்காலம் கழிகாலமாய் உலகை
ஒருங்காக வளிப்பாய் சீரெங்குலக்க வோதுவனே
 -3-1-5-

மூன்றாம் பாட்டுக்கும் இப்பாட்டுக்கும் நேரே சங்கதி -நாட்டார் இழவு நடுவு பிரசங்காத் ப்ரஸ்துதம் இத்தனை – கோவிந்தா பண்புரைக்க மாட்டேனே -என்று சொல்லுவான் என்-நாட்டார் பேர் இழவு கிடக்கிடீர் -மயர்வற மதிநலம் அருளப் பெருகையாலே நீர் வ்யாவ்ருத்தரே – நாட்டாரில் வ்யாவ்ருத்தரான அளவேயோ -விண்ணுளாரிலும் வ்யாவ்ருத்தரே -நீர் நம்மைப் பேச மாட்டீரோ என்ன – என்னை வ்யாவ்ருத்தன் ஆக்கினாய் இத்தனை அல்லது உன்னை சாவதி ஆகிற்றிலையே -என்கிறார் –

திரு மேனியைக் கண்டவாறே -அரிய தப பலமோ -என்று தோற்றி இருக்கும் -ஆபாத ப்ரதீதி –
சிறிது அவஹாகித்தவாறே -ஒரு தப பலம் அல்ல -சஹஜ பாக்ய பலம் -என்று தோற்றி இருக்கும் -நிர்ணயம் -காலத் த்ரயத்திலும் லோகத்தை ஒருங்காக ஒருமடைப்பட ஒரு படியே ரஷிக்கிற உன்னுடைய குணங்களை எங்கே முடிய நான் பேசுவேன்-உடையவன் ஆகையால் எல்லாவற்றையும் உடைய உன் சர்வ ரக்ஷகத்வம் இவற்றை எங்கே நான் முடிவு காண –

—————

ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும்
சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிறிதில்லை
போது வாழ் புனந்துழாய் முடியினாய் பூவின் மேல்
மாது வாழ் மார்பினாய் என் சொல்லி நான் வாழ்த்துவனே
 -3-1-6-


எங்குலக்க ஓதுவன் -என்றார் -வேதங்கள் நம்மைப் பேசா நின்றனவே -உமக்குப் பேசத் தட்டு என் -என்ன-அவையும் இவ்வளவு அன்றோ -தகையல்லால் பிறிதில்லை -செய்தது -வேதங்கள் உன்னைப் பேசி சத்தை பெற்றன-என்கிறார் –

ஸ்ரீ ராமாயணம் என்றால் ப்ரஹ்ம லோகத்தில் அநேகம் க்ரந்தமாய் இருக்கச் செய்தே இங்கு இருபத்து நாலாயிரமாய் இரா நின்றது-

பூவின் மேல் மாது வாழ் மார்பினா-பிராட்டி பிரிந்து இருக்கில் இறே வைத்த வளையம் சருகாவது –இவ்வொப்பனையை ஒப்பனை யாக்கும் அவளோட்டை சேர்த்தி தான் என்னாலே பேசலாய் இருந்ததோ –தாமரைப் பூவை இருப்பிடமாக உடைய பெரிய பிராட்டியார் பூ அடி கொதித்துப் போந்து வர்த்திக்கும் மார்வை உடையவனே –
பிராட்டி பெருமாளைக் கைப்பிடித்த பின்பு பிறந்தகமான ஸ்ரீ மிதிலையை நினைக்கும் அன்றாயிற்று இவளும் இம்மார்வை விட்டு பிறந்தகமான தாமரையை நினைப்பது –
என் சொல்லி யான் வாழ்த்துவனே-இவ்வொப்பனைக்கும் இச்சேர்த்திக்கும் என்னாலே பாசுரம் இட்டு சொல்லலாய் இருந்ததோ –சர்வேஸ்வர சிஹ்னமான திருத் துழாய் ஆகையால் அவ் வைஸ்வர்யத்தைப் பேசவோ –பிராட்டி யோட்டைச் சேர்த்திக்கு நான் பாசுரம் இட்டுச் சொல்லவோ –

——————

வாழ்த்துவார் பலராக நின்னுள்ளே நான்முகனை
மூழ்த்த நீருல்லெல்லாம் படை என்று முதல் படைத்தாய்
கேழ்த்த சீரரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து
சூழ்த்தமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே 
–3-1-7-

உன்னாலே ஸ்ருஷ்டனான சதுர்முகனாலே ஸ்ருஷ்டரானவர்கள் உன்னை ஏத்த என்ற ஒரு பொருள் உண்டோ –இப்பங்களத்தை விட்டு கால்கடியரானவர்கள் ஏத்தப் புக்கால் எல்லை காணப் போமோ -கால் கடியார் -சக்தர் –இவர்கள் ஏத்தும் அளவோ இவன் குணங்கள் என்ன — அவ்வழியாலே அவத்யமாய்த் தலைக்கட்டாதோ –

————-

மாசூணாச் சுடருடம்பாய் மலராது குவியாது
மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய்
மாசூணா வான் கோலத்தமரர் கோன் வழிப்பட்டால்
மாசூணா வுனபாதம் மலர்ச்சோதி மழுங்காதே
–3-1-8-

இவனைப் போல் அன்றியே கேவலம் ப்ரஹ்ம பாவனையேயாய் இருப்பான் ஒரு ப்ரஹ்மாவை உத்ப்ரேஷித்து-அவன் ஏத்தினாலும் தேவர்க்கு அவத்யமாம் அத்தனை அன்றோ – என்று பட்டர் அருளிச் செய்யும் படி-

மலராது குவியாது -என்கிறது கீழும் மேலும் அந்வயிக்கக் கடவது-சம்சாரிகள் கர்ம நிபந்தமாக பரிக்ரஹித்த தேஹத்துக்கு வரக் கடவதான ஸ்வரூப அந்யதா பாவமும் இல்லை இவன் திருமேனிக்கு – அவர்கள் ஞானத்துக்கு வரக் கடவதான ஸ்வபாவ அந்யதா பாவமும் இல்லை இவனுடைய ஞானத்துக்கு -என்கை-தம்முடைய சேஷத்வ அனுரூபமாக உன் திருமேனி என்னாதே உனபாதம் என்கிறார்-திருமேனி -சோதி சொல்லாமல் –சுடர் உடம்பாய் -தொடங்கி -சேஷ பூதர் என்பதால் –பாத மலர்ச் சோதி மழுங்காதே -என்கிறார்-மாசூணா வுனபாதம் மலர்ச்சோதி-ஹேய பிரதி படமான உன்னுடைய திருவடிகளின் அழகு –

—————

மழுங்காத வைந் நுதிய சக்கர நல் வலத்தையாய்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படையாக மலருலகில்
தொழும் பாயர்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே
 –3-1-9-

கையில் திரு வாழி இருந்தது அறிந்திலன்-அறிந்தான் ஆகில் இருந்த விடத்தே இருந்து அத்தை ஏவிக் கார்யம் கொள்ளலாம் இறே-ஆர்த்த நாதம் செவிப் பட்டவாறே -தன்னை மறந்தான் -கையும் திரு வாழியுமான தன்னை -தான் ரஷகன் என்பதை மறக்க வில்லை –
நினைத்தாலும் இருந்த இடத்திலே இருந்து துக்க நிவ்ருத்தி பண்ண ஒண்ணாது
தொழும் காதல் களிறு ஆயிற்று-கையும் திரு வாழியுமான அழகு காண ஆசைப்பட்டு இருக்கிறவன் ஆயிற்று –காதலே இதுக்கு நிரூபகமாய் இருக்கை-சேஷ பூதனுக்கு காதல் அடையாளம் -சேஷிக்கு அடையாளம் நல் சக்கர வலத்தை புள்ளூர்வது-சங்கல்பத்துக்கு முற்பட்டாயிற்று திருவடி வேகம் இருப்பது-அவன் வேகம் போராமல் அவனையும் இடுக்கிக் கொண்டு இறே வந்து விழுந்தது -ஹூம் ஹூம் -பட்டர் –-தோன்றினையே -இடர் பட்டார் தாமாய்-தமக்குத் தோற்றினால் போலே காணும் இருக்கிறது –மலருலகில்-திரு நாபீ கமலத்தை அடியாக யுடைததான சம்சாரத்தில் -மலரும் உலகம் -மலரை அடியாக கொண்ட உலகம் –மறையாதே என்ற இதுக்கு மறையும் மறையும் -என்று சிற்றாட் கொண்டான் வார்த்தை —பெரு முதலியாய் இருந்து வைத்து திருவடிகளை ஆஸ்ரயித்தார்க்கு தானே தடுமாறி கொண்டு வந்து உதவும் என்னும் இவ் வழகிய தேஜஸ்ஸை இழந்தாய் ஆகாதே –

————–

மறையாய நால் வேதத்துள் நின்ற மலர்ச் சுடரே
முறையால் இவ்வுலகெல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய்
பிறையேறு சடையானும் நான்முகனும் இந்த்ரனும்
இறையாதல் அறிந்து ஏத்த வீற்று இருத்தல் இது வியப்பே 
–3-1-10-

மறை என்றும்-வேதம் என்றும் இரண்டு படியாகச் சொல்கிறது –
பாஹ்யராய் நாஸ்திகராய் இருப்பாருக்கு தன் படிகளை மறைக்கையாலும்
ஆஸ்திகராய் இருப்பார்க்கு தன் அர்த்தத்தை வெளியிட்டுக் காட்டுகையாலும்-வேதங்களிலே சர்வாதிகனாகவும் நிரதிசய போக்யனாகவும் பிரகாசிக்கிறவனே-சர்வவித ரஷணங்களையும் பண்ணிணவனே-விஷம சிருஷ்டிக்கு அடியான கர்ம விசேஷம் இறே சேதனர் பண்ணி வைப்பது-யௌ கபத்யம் அனுக்ரஹ கார்யம் -ஒருவன் ஒரு குழமணனைப் -மரப்பாச்சி பொம்மை -பண்ணி -அதன் கழுத்திலே காக்கைப் பொன்னித் தொற்றி -அதன் தலையிலே காலை வைத்து-இது என்னை வணங்கிற்று என்று இறுமாந்து இருக்குமா போலே நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணி -திருவாய்மொழி -7-5-4-என்கிறபடியே-உன்னாலே மனையப் பட்ட பிரம்மாவும் அவனாலே ஸ்ருஷ்டரான இவர்களும் உன்னை ஏத்த அத்தாலே இறுமாந்து இருந்தால் என்றால் இது உனக்கு ஏற்றமோ -ஹாச்யமாய்த் தலைக்கட்டும் அத்தனை அன்றோ-உனக்கு அவத்யம் அன்றோ –-

—————

வியப்பாய வியப்பில்லா மெய்ஜ்ஞான வேதியனை
சயப்புகழார் பலர் வாழும் தடம் குருகூர் சடகோபன்
துயக்கின்று தொழுதுரைத்த வாயிரத்துள் இப்பத்தும்
உயக்கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே 
-3-1-11-

துயக்காவது -மனம் திரிவு சம்சார விபர்யய ரஹிதமாக சாஷாத்கரித்து அருளிச் செய்த ஆயிரத்தில் வைத்துக் கொண்டு இப்பத்தும் அராஜகமான தேசத்தில் ராஜ புத்திரன் தலையில் முடியை வைத்து விலங்கு வெட்டி விடுமா போலே அழகர் திருவடிகளிலே கைங்கர்யத்தை அன்வயித்து பின்னை தத்விரோதியான சம்சார சம்பந்தத்தை அறுத்துக் கொடுக்கும்-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -79-வேதனை வெண் பூரி நூலனை-மொய்ம்மாம் பூம் பொழில் –3 -5-

March 18, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

சீதளம் -குளிர்ந்த -பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளியதால் –அருமை பெருமைகளை வரிசைப்படுத்தி அருளிச் செய்கிறார்-சீதனையே தொழுவாரைக் கொண்டாடுகிறார்-மொய்ம்மாம் பூம் பொழில் –3 -5-திருநாம வைபவம் சொல்லும் பதிகம்போற்ற தேவர்கள்-ஏச நான்உலோகர் சிரிக்க நின்று ஆடி ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப்படுவாரே.–3-5-8-சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே – இங்கு

பாவியேன் -பகவத் விஷயம் என்றால் தளராதே நின்று அனுபவிக்குமவர்களும் சிலரே -என்கிறார் –
தலைவனை பிரியாத மகளிரது சிறப்பைக் கூறித் தலைவி இரங்கல் –

இப்படி ஆர்த்தி அதிசயத்தாலே ஈடுபட்டவர் இவ் விஷயத்தை அனுபவிக்கப் பெற்றவர்கள் ஸூரிகளிலும் விலக்ஷணர் ஆவர்கள் இறே என்று தம்முடைய இழவை அருளிச் செய்கிறார்

இது நாயகி வார்த்தை யாகவுமாம்

வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற
நாதனை ஞாலம் விழுங்கும்  அநாதனை ஞாலந்தத்தும்
பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும்   சீரியரே
– – -79–தலைவனைப் பிரியாத மகளிரது சிறப்பைக் கூறித் தலைவி இரங்குதல் –

வேதனை–வேதம் வல்லவனும்
வெள் புரி நூலனை–சுத்தமான யஜ்ஜோபவீதம் முடையவனும்
விண்ணோர் பரவ நின்ற சாதனை–மேலுலகத்தார் துதிக்க அவர்களுக்குத் தலைவனாய் நின்றவனும்
ஞானலம் விழுங்கும் அநாதனை–(பிரளயகாலத்திலே) உலகத்தை வயிற்றினுள் வைத்து நோக்கி
(அங்ஙனம் தன்னை நோக்குதற்கு) ஒரு தலைவனை யுடையனாநாதவனும்
ஞாலம் தத்தும் பாதனை–உலகத்தை யளந்த திருவடியை யுடையவனும்
பால் கடல் பாம்பு அணைமேல்–திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வானாகிற் படுக்கையின் மேல்
பள்ளி கொண்டு அருளும்–யோக நித்திரை கொண்டருளுகிற
சீதனையே–குளிர்ந்த தன்மையுடையவனுமான எம்பெருமானையே
தொழுவார்–இடைவிடாது வணங்கி யநுபவிக்கப் பெற்றவர்
விண் உளாரிலும் சீரியர்–பரமபதத்திலுள்ளவர்களிலுஞ் சிறப்புடையராவர்.

வேதனை –புக்க இடமும் புறப்பட்ட இடமும் தாம் பட்டது படும் வேதத்தை நினைக்கிறார் –வெண் புரி நூலனை-மைவரை போல் பொலியுமுரு -என்று அவ் வடிவை இறே வேதங்களும் பிரதிபாதிக்கிறது –
அவ் வடிவுக்கு பரபாகமான திரு யஜ்ஜோபவீதத்தை உடையவனே–விண்ணோர் பரவ நின்ற நாதனை –
நித்ய ஸூரிகளும் அடைவு கெட்டு கிடந்தது கூப்பிடுவது-அவ் வடிவை இறே –ஞாலம் விழுங்கும்  அநாதனை--குறைவற்றார் சிலர் கொண்டாட இருந்தோம் என்று மேன்மை பார்த்து இராதே –
குறைவாளரான சம்சாரிகளை பிரளயம் நலியாதபடி வயிற்றிலே-எடுத்து வையா நின்றால் – நீ இது  செய்யக் கடவ இல்லை -என்று சிலரால் சொல்ல ஒண்ணாது-இருக்கிறவனை –ஞாலம் இத்யாதி –
புழுக் குறித்தது எழுத்தாமாப்  போலே –ஒருகால் ரஷித்து விடுகை அன்றிக்கே – ஜகத்தை அடைய வளைந்து கொண்ட திருவடிகளை உடையவனை –எல்லாம் செய்தாலும் ஒன்றுமே செய்யப் பெற்றிலோம் என்று இவற்றின் உடைய ரக்ஷண சிந்தனை செய்து கிடக்கிற படி-உன் அடியார்க்கு என் செய்வான் என்றே இருத்தி-இந்திரனுக்கு இழந்தத்தைக் கொடுத்து -(மஹா பலி -அம்ருத மதனம் இரண்டிலும் -) தான் பேர்ந்து கிடக்கிறபடி யாதல் தனது படுக்கையாக பாற்கடலையே கடைந்தான் அன்றோ-சீதனை-திருப்பாற்கடலில் கிடக்கிறபடியை நினைத்தாலே தாபம் போக்கி குளிர வைப்பவன் அன்றோ-தாபார்த்த ஜல ஸாயீனம் –சீதனையே-அவனைத் தொழுது வேறே ஒரு பிரயோஜனத்தைக் கொள்ள இருக்காமல் அவனைப் பிரசங்கிக்க மாத்திரத்தாலே நெஞ்சு தளராமல் அனுபவிக்க வேண்டுமே-இதுவே அவதாரிகையில் பார்த்தோம்-நிறுத்தி நிதானமாக அனுபவிக்க வேண்டும்-விண்ணுளாரிலும் சீரியரே –நிரந்தர பகவத் அனுபவமே யாத்ரை யான -அத்தேசத்தில் அன்றியிலே –
அப்படிக்கு விரோதியான சம்சாரத்திலே இருந்தே -அதுவே யாத்ரையாய் இருக்கையாலே – இவர்கள் நித்ய ஸூரிகளிலும் சீரியர்–அநாதனை –ஆத்மேஸ்வரம் –என்னுமா போலே தனக்கு ஒரு நியந்தா இல்லாதவன் –

நாயகனைப் பிரியாத மகளிர் பாக்யத்தை கூறித் தலைவி இரங்கும் பாசுரம் –-இங்கேயே அவனை-இடைவிடாமல் அனுபவிக்கப் பெற்றவர் முக்தர்களிலும் சீரியர்-பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும்-சீதனையே-ஸ்ரீ தேவி பூ தேவி திருவடி வருட – அப்படிப்பட்ட இடையில்லாத் போகம் தனக்கு கிடையாமையை சொல்லி-வேத முதல்வன் விளங்கு பூரி நூலன் -ஞாலந்தத்தும் பாதனைப்
திரு உலகு அளந்த திருவடி யுடையவன் -உத்பத்தி ஸ்தானமான திருவடியை யுடையவன் என்றுமாம்
திருமாலின் திருவடியின் நின்றும் பூ லகம் வந்தமை புருஷ ஸூகதம் சொல்லுமே-உண்ணும் சோறு இத்யாதி -மனம் மொழி காயம் மூன்றாலும் இங்கேயே பகவத் அனுபவமே யாத்திரையாக-கொண்ட
ஆழ்வார் நித்ய ஸூரிகளிகளும் மேம்பட்டவர் என்றதாயிற்று –-நாயகனைப் பிரியாத பாக்கியம் பெற்ற மகளிர்களின் சிறப்பைக் கூறித் தலைவி இரங்கும் பாசுரம் இது.-வேதம் வல்லவனாய் சுத்தமான யஜ்ஞோபவீத மணிந்தவானய் மேலுலகத்தார் துதிக்குமாறு அவர்கட்குத் தலைவனாக நிற்பவனாய்ப்
பிரளய காலத்தில் உலகங்களை வயிற்றினுள் வைத்து நோக்குபவனாய்த் தனக்கொரு தலைவனை யுடையனாகாதவனாய் உலகத்தை யளந்த திருவடியையுடைவனாய்த் திருப்பாற்கடலில் க்ஷேசாயி யாகி யோகந்துயிர் கொண்டருள்பவனாய்க் குளிர்ந்த தன்மையயுடைவனான எம்பெருமானையே இடைவிடாது வணங்கி யநுபவிப்பவர் யாரோ, அவர்கள் பரமபதத்தில் வாழும் நித்ய முக்தர்களிற் காட்டிலும் சிறப்புடையராவர் என்கிறது.–நாயகனுடைய பிரிவிலே தனித்து மிக வருந்துகிற நாயகி, தன்னை சிறப்புடையராவர் என்கிறது.-நாயகனுடைய பிரிவிலே தனித்து மிக வருந்துகிற நாயகி, தன்னை யாற்றுவிக்கிற தோழியை நோக்கி,-‘நாயகனைப் பிரியாமல் அவனுடன் என்றுங்கூடி வாழ்பவர் முத்தியுலகத்துப் பேரின்பம் நுகர்வாரினுஞ் சிறப்புடையாராவர், என்ற இதனால்
‘அப்படிப்பட்ட பாக்ய விசேஷத்தை யான் பெற்றிலனே!’ என்று தன் ஆற்றாமை மிகுதியை வெளியிட்டாளாயிற்று.–ஸ்ரீதேவியும் பூதேவியும் ஒருகாலும் விட்டுப் பிரியாது திருவடி வருடக் கூடிக்குலவி யின்புற அவர்களுடன் அறிதுலமருந்தன்மையை‘பாற்கடல் பாம்பணை மேற் பள்ளிகொண்டருளுஞ் சீதனை’ என்றதனால் குறிப்பிட்டு,அப்படிப்பட்ட இடையீடில்லாப் போகம்
தனக்குக் கிடையாமையைப் பற்றிப் பொறாமையும் வருத்தமுங் கொண்டவை கொள்க.–‘வேதனை’ என்பதற்கு– வேதம் வல்லவன் என்றும், வேதங்களாலே பிரதிபாதிக்கப்படுபவன் என்றும் பொருள் கொள்ளலாம்.-வெண்புரிநூல் = வெண்ணிறமான முப்புரிநூல் வைதிக புருஷனென்கைக்கு அடையாளமான சுத்த யஜ்ஞோவீதத்தையுடையவன் என்றவாறு. “வேதமுதல்வன் விளங்கு புரிநூலன் (8-4-2.) என்ற திருமொழியுங் காண்க. “ஞாலந்தத்தும் பாதன்” என்பதற்கு- ‘உலகத்தை யளந்த திருவடியையுடையவன்’ என்று பொருள் கொள்வதன்றியே, பூமிக்கு உற்பத்தி ஸ்தாநமான திருவடியை யுடையவன் என்றும் பொருள் கொள்வர்;-திருமாலின் திருவடியினின்று பூலோக முண்டாயிற்றென்று வேதங்கள் கூறும். சீலன் – அருளுடையானென்றபடி.–இடைவிடாது பகவதநுபவம் செய்வதற்கென்றே வாய்த்த இடமான பரமபதத்தில் பகவதநுபவத்திற்கு எவ்வகையான இடையூறு மில்லாதலால் அங்கிருந்து கொண்டு பகவானை யநுபவித்தல் வியப்பன்று; உண்டியே உடையே உகந்தோடு மிம்மண்டலம் பகவதநுபவத்திற்கு நேர்விரோதி யாதலால் அப்படிப்பட்ட இந்த இருள் தருமா ஞானத்திலிருந்து கொண்டே அங்ஙனம் நித்யாநுபவஞ் செய்தலில் மிக அருமை யுண்டாதலால் அவ்வருமையைப் போக்கி எம்பெருமானை இடைவிடாது அனுபவிக்குமவர்களை நித்ய முக்தர்களிலும் மேம்பட்டவராகக் கூறத்தடையுண்டோ?-ஒரு சிறந்த காரியத்தைப் பிரதிபந்தகமில்லாத விடத்தில் தலைக்கட்டுதலிற் காட்டிலும் பிரதிபந்தகம்மலிந்த விடத்தே தலைக்கட்டுதல் வியக்கத்தக்கதன்றோ
எம்பெருமான் புக்கல் ஈடுபாடு கொண்ட- ஆவார் மற்றொன்றிற் சிந்தை செலுத்தாது அப் பெருமானையே மனமொழி மெய்களால் பூர்ணாநுபவஞ் செய்யப் பெற்றவர். இவ்வுலகத்திலிருந்து கொண்டே நித்யஸூரிகளிலும் மேம்பட்டவராவர் என்று அருளிச் செய்தாராயிற்று. அப்படிப்பட்ட அநுபவம் தமக்குக் கிடைக்கவில்லையே! என்று வருந்துகின்றமையும் இதில் தோன்றும்.

வேதனை-வேதங்களால் சொல்லப் படுமவனை-வெண் புரி நூலனை -வைதிக புருஷன் என்கைக்கு அடையாளமான ஸூத்த யஜ்ஜோபவீதத்தை யுடையவனை–விண்ணோர் பரவ நின்ற நாதனை-வேத ப்ரதிபாத்யர்களான அல்லாத தேவதைகள் தம் தாமுடைய பத ஸித்திக்காக ஸ்தோத்ரங்களைப் பண்ண
அவர்களுக்கு அபிமத பல ப்ரதாநம் பண்ணி அவர்களுக்கு ஸ்வாமியாய் நின்றவனை-ஞாலம் விழுங்கும் அநாதனை-அத் தேவதைகளோடு அவர்களுக்கு இருப்பிடமான ஜகத்தோடு வாசியற பிரளயம் கொள்ளாமல் திரு வயிற்றிலே வைத்து நோக்கி தன்னை நோக்குகைக்கு ஒருவர் வேண்டாதவனை-ஞாலந்தத்தும் பாதனைப் அந்த ஜகத்துக்குத் தானே சேஷி என்னும் இடம் தோற்றத்
தன் கீழே ஆக்கிக் கொள்ளும் திருவடிகளை யுடையவனை-பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும் சீதனையே தொழுவார்-ஜகத்துக்குப் பின்னையும் இடையூறு வந்தால் ரக்ஷிக்க வேணும் என்று திருப்பாற்கடலிலே பிரிய ஒண்ணாத போகத்தை யுடைய திரு அனந்தாழ்வான் ஆகிற படுக்கையின் மேலே ரக்ஷண சிந்தை பண்ணிக் கொண்டு கண் வளர்ந்து அருளும் சீதள ஸ்வ பாவம் உள்ளவனை–சீதனையே-அந்நிய விமுகராய்க் கொண்டு (வேறே ஒன்றைக் காணாமல் -கணிசியாமல்) அனுபவிக்கப் பெற்றவர்கள்-விண்ணுளாரிலும் சீரியரே – நித்ய அனுபவம் பண்ணப் பெற்ற பரமபத வாஸிகளிலும் கனத்தவர்கள்–இவ்விடத்தில் சீதன் என்றது தாப ஆர்த்தோ ஜல சாயிநம் –ஸ்ரீ விஷ்ணு தர்மம் –41-30-என்று அனுபவிக்கப் பெறாதார் ஆர்த்தி தீர்க்கைக்காகத் திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகையாலே நாராயணத்வ ப்ரயுக்தமான ஸுசீல்ய சீதனத்தைச் சொல்லிற்று ஆயிற்று –

தாத்பர்யம்-இதில் பகவத் அனுபவத்தில் தம்மைப் போல் நெஞ்சு தளராமல் திட ஸித்தராய் இருந்து அவனை அனுபவிக்கும் பாகவதரைக் கண்டு ஹ்ருஷ்டராகிறார்-கரிய மேனிக்கு பரபாகமாக -யஜ்ஜோபவீதம் கண்டு வேதமும் வைதிகரும் எப்பொழுதும் ஏத்தும் கல்யாண குணங்கள் நிரம்பிய ஸர்வேஸ்வரன் சிறியவருக்கு ஆபத்து வர மேன்மையை நினைத்து மதம் பிடித்து இல்லாமல்
திரு வயிற்றிலே வைத்து ரஷிப்பவன் இவ்வாறு செய்யாதே என்று நியமிக்க யாரும் மேம்பட்டவர் இல்லாதவனாய் இவ் விபூதியை ஒருகால் ரஷிக்கும் அளவு அன்றிக்கே திருவிக்ரமனாய் அளந்து
இன்னும் ரக்ஷண சிந்தை பண்ணும் ஸ்ரீ யபதியை விரோதி பஹுளமான சம்சாரத்தில் இருந்தே
ஆஸ்ரயிக்கும் பாகவத உத்தமர்கள் நிரபாதகமான அங்க நித்ய அனுபவம் செய்பவர்களை விட மேம்பட்டவர் என்கிறார்

3-5-மொய்ம் மாம் பூம் பொழில் — பிரவேசம் –

‘புகழும் நல் ஒருவன்’ என்ற திருவாய்மொழியிலே, பகவானுடைய சொரூப ரூப குண விபூதிகளை அனுபவித்து, அதனால் வந்த ஹர்ஷப் பிரஹர்ஷத்தாலே களித்து அவ்வனுபவமில்லாதாரை நிந்தித்து, அவ்வனுபவமுடையாரைக் கொண்டாடிச் சொல்லுகிறது ‘மொய்ம்மாம்பூம்பொழில்’ என்ற இத்திருவாய் மொழி.
இவர் ‘முந்நீர் ஞாலம்’ என்ற திருவாய்மொழியில், சரீர சம்பந்தத்தை அநுசந்தித்தும்,
மற்றைய விஷயங்களில் ஈடுபாட்டினை அநுசந்தித்தும் சோகித்த சோகம் சிலர்க்கு நிலமாகில் அன்றோ,
இத்திருவாய்மொழியில் பகவானை அனுபவித்த அனுபவத்தாலே மகிழ்ச்சி கொண்டவரான இவருடைய மகிழ்ச்சி சிலர்க்கு நிலமாவது?
‘ஆயின், இவரும் பகவானை அனுபவம் பண்ணுகிறார்; நாமும் அவ்விஷயத்திலே கை வைக்கிறோம்;
இவருக்கு இங்ஙன் இருப்பான் என், நமக்கு இங்ஙன் இராதொழிவான் என்?’ என்னில்,
நாமாகிறோம் கண்டார்க்கு ஒளிக்க வேண்டுமவையாய், சாஸ்திரங்களெல்லாம் ஒருமுகஞ்செய்து நீக்குகின்றவையாய்,
முதல் தன்னிலே கிடையாதவையாய், கிடைத்தாலும் நிலை நில்லாதவையாய், பின்னர் நரகத்திலே மூட்டிக் கேட்டினை
விளைக்கக்கூடியனவான மற்றைய விஷயங்களினுடைய லாபாலாபங்களில் பிறக்கும் சோகமும் மகிழ்ச்சியுமே ஆயிற்று அறிவது.
நெருப்பும் நெய்யும் பக்கம் -ஆண் பெண் -தஸ்மாத் நாரீச சம்சர்க்கம்
விஷத்தை விட விஷயாந்தரம் தாழ்ந்ததே -நினைத்தாலே விநாசம் –
ஞானவான்களையும் அழிக்கும்-மனம் சஞ்சலம் -பிரம்மா த்யானமே பண்ண வேண்டும் –
ராக -பய -குரோத மூன்றையும் வெல்ல வேண்டும் -பிடித்தது -நடக்காமல் போகுமே -பயம் -நடந்தால் கோபம் வருமே –

‘நன்று; ஆசையற்றவராய், சத்துவ குணத்தையுடைய பெரியோர்கட்குத் தலைவராய் இருக்கிற இவர்க்குச் சாஸ்திரங்கள்
‘கூடாதவை’ என்று விலக்கிய சோகமும் மகிழ்ச்சியும் கூடினபடி எங்ஙனே?’ எனின்,
‘இவருடைய சோகமும் மகிழ்ச்சியும் சாஸ்திரங்களிலே விலக்கிய சோகமும் மகிழ்ச்சியும் அல்ல;
சமஸ்த கல்யாணகுணாத்மகனான சர்வேசுவரனை அனுபவித்து அவ்வனுபவத்தால் உண்டான பிரீதியாயிற்று இவர்க்கு மகிழ்ச்சியாவது.
‘இப்படி வகுத்த சர்வேசுவரனை அநாதிகாலம் இழந்து இதர விஷயத்தில் ஈடுபாடு உடையோமாய்க் கேட்டினை அடைவோமே!’
என்னுமதாயிற்று இவர்க்குச் சோகமாவது.
மேலும் ‘காமம் ஆகாது’ என்று விலக்கியிருக்கவும், ‘இடைவிடாது தியானம் செய்யத் தக்கவன்’ என்று கொண்டு
பகவத் காமத்தைச் சாஸ்திரங்கள் விதியா நின்றனவே அன்றோ?
சேம நல் வீடும் –சீரிய நல் காமமும் -கண்ணனுக்கே ஆமது காமம் -அத்தை கிட்ட இது வேண்டுமே –
இனி, முத்தரும் பகவானுடைய அனுபவத்திலே ‘நான் பரமாத்துமாவுக்கு இனியவனாய் இருக்கிறேன்; நான் பரமாத்துமாவாகிற
இனிய பொருளை அனுபவிக்கிறவன்,’ என்று-அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம்-
களியாநிற்பர்கள் அன்றோ? ‘இறந்தகாலம் எதிர்காலம் இவற்றில் நடந்த நடக்கும் காரியங்களைச் சொல்லுகிறவராயும்,
ஒன்றிலும் ஐயம் இல்லாதவராயும், எல்லாத் தர்மங்களையும் அறிந்தவராயுமுள்ள நாரதர்’ என்று சொல்லப்படுகிற நாரதர்
முதலிய முனிவர்களும் பகவானுடைய சந்நிதியில் வந்தவாறே ஆடுவது பாடுவது ஆகாநிற்பர்கள் அன்றோ?
விரக்தரில் முதல்வனான திருவடியும் பிராட்டியைக் கண்டுவந்த மகிழ்ச்சியினாலே முதலிகளைப் பார்த்து,
‘நீங்கள் மதுவனத்தை அழித்து உண்ணுங்கோள்! நான் உங்களுடைய விரோதிகளைத் தடுக்கிறேன்!’
(விரோதிகளாவார், காத்திருந்த ததிமுகன் முதலியோர்) என்றானன்றோ? மஹாராஜர்க்கு, ‘உம்முடைய காவற்காடு அழிந்தது’ என்று அறிவிக்க,
‘நம்மோடு கூறிப்போந்த காலமுந்தப்பி, நாந்தாம் ‘தீக்ஷ்ண தண்டர்’ என்று அறிந்திருந்தும், இவர்கள் காவற்காட்டை அழிக்கும் போது,
‘செய்யவேண்டிய காரியத்தைச் செய்யாதவர்கட்கு இப்படிப்பட்ட ஆரம்பம் உண்டாகமாட்டாது. ஆதலால், எல்லாப்படியாலும்
பிராட்டியைத் திருவடி தொழுதார்களாக வேண்டும்,’ என்று அப்போது உண்டான மகிழ்ச்சி, இருந்த இடத்தில் இருக்க வொட்டாமல்,
வாலானது ருஸ்யமூக பர்வதத்தின் கொடுமுடியிலே சென்று அறைந்ததாயிற்று. நடுவே ‘காவற்காடு’ என்று ஒன்று உண்டாயிற்று,
ராஜபுத்திரர்களுடைய ஜீவன அத்ருஷ்டமாயிற்று; அன்றாகில், முதலிகளுடைய மகிழ்ச்சி இராஜபுத்திரர்கள் முதுகோடே போமாயிற்று.

வெற்றிலைச்சாறு சிறிது மிடற்றுக்குக் கீழே இழியப்பெற்ற ஒருவன், தன்னைத்தான் அறிகின்றிலன்; அங்ஙனம் இருக்க
உள் கலந்தார்க்கு ஓர் அமுதமாய், அமுதிலும் ஆற்ற இனியனாய், எனக்கே தன்னைத் தந்த கற்பகம் என் அமுதம்,’ என்று
தாமே முற்றூட்டாக இவ்வமுதத்தை உண்ட இவர்க்கு மகிழ்ச்சி உண்டாகச் சொல்ல வேண்டாவே அன்றோ? நிற்க.
இப்படிப்பட்ட பகவானுடைய அனுபவத்தால் வந்த பிரீதியின் மிகுதியினாலே முதலிலே-1- இதில் அறிவில்லாதாரையும்,
-2- அறிவுண்டாய்ப் புறம்பே கருத்தூன்றினவர்களாயிருப்பாரையும்,-3- சந்தி செய்தல் முதலிய ஒழுக்கங்களையே முக்கியமாகக் கொண்டவர்களாய்,
‘அநுஷ்டான காலங்களில் திருநாள் சேவிக்கலாகாது,’ என்று இருப்பாரையும், -4-அறிவு உண்டாகியே புறம்பே பரபரக்கற்று
‘அதற்கும் இதற்கும் வாசி என்?’ என்று சமானபுத்தி பண்ணி இருப்பாரையும், -5-தங்களை ஆஸ்திகராகப் புத்தி பண்ணி
அவ்வாஸ்திக்யத்துக்குப் ‘புறம்பே விநியோகம்’ என்று இருப்பாரையும்,6- இராஜச தாமசங்கட்கு ஒத்தனவான
அற்பப் பலன்களைக்கொண்டு போவாரையும், -7-அந்த அந்தப் பலன்களுக்காகத் தாமத தேவதைகளை அடைகின்றவர்களையும் எடுத்து,
அவர்களுக்குப் புறம்பே எல்லா நன்மைகளும் உளவேயானாலும், பகவானுடைய குணங்களை அநுசந்தித்தால் அவிக்ருதராகில்,
‘அவர்கள் அவஸ்துக்கள்’ என்று அவர்களை நிந்தித்து,
‘உயர்குடிப்பிறப்பு, உயர்ந்த தொழில், ஞானம் இவைகள் இல்லாதிருப்பினும், பகவானை அனுபவம் பண்ணி விக்ருதராமது உண்டாகில்,
அவர்களுக்கு நான் அடிமை’ என்று அவர்களைக் கொண்டாடிப் பிரீதராகிறார்.
ரத யாத்ரை – -தாரு ப்ரஹ்மம் -தள்ளு முள்ளு நடுவில் -பூரி -ஏழு நாளும் தொட்டு சேவிக்கலாம் -752 அடுப்புக்கள் -மடப்பள்ளி -2000 படி தளிகை –
ஸ்ரீ பத்ரி அலக நந்தாவில் குளித்து–ஸ்ரீ த்வாரகையில் பட்டு ஆடை உடுத்தி -ஸ்ரீ பூரியில் உண்டு – ஸ்ரீ ரெங்கம் வந்து
கண் வளர்ந்து அருளுவதே நித்ய கைங்கர்யம் என்பர் –
மத்யானம் -சந்த்யா வந்தனம் -கைங்கர்யம் -செய்யும் பொழுது கர்ம லோபம் -மூன்று கோடி ரிஷிகள் இவன் விட்ட கைங்கர்யம் செய்வார்களாம் –
விஷ்ணு பக்தி இல்லாதவனுக்கு ஜபம் தபஸ் போல்வன -பிணத்துக்கு அலங்காரம் பண்ணினது போலே -பிரமாணம்

அஞ்சாம் திருவாய் மொழியில் –கீழ்ச் சொன்ன பகவத் பிரகார தயா சேஷத்வத்தில் தமக்குப் பிறந்த ரசாதிசயத்தாலே அத்யந்த ஹ்ருஷ்டராய்
1-பிரதிசம்பந்தியான சேஷியினுடைய ஆபந் நிவாரகத்வத்தையும் –
2-அஸூரா நிராசன சாமர்த்யத்தையும்
3-ஆர்த்த சம்ரக்ஷணத்தையும்
4-அபிமத விரோதி நிவர்த்தகத்வத்தையும்
5-அவதார ப்ரயோஜனத்தையும்
6-அதிசயித போக்யதையையும்
7-ஆஸ்ரித பக்ஷபாதத்தையும்
8-அர்ச்சாவதார சவ்லப் யத்தையும்
9-உபய விபூதி நாதத்வத்தையும்
10-விலக்ஷண விக்ரஹ யோகத்தையும் —
அனுசந்தித்து -ப்ரீதி ப்ரகரஷத்தாலே சம்ப்ராந்த ராகாதாரை நிந்தித்தும்– உகந்து ஆடுவது பாடுவதாவாரை உகந்தும்–
இந்த சேஷத்வ சாரஸ்யத்தை உபபாதிக்கிறார்

மேல் திருவாய்மொழியிலே, அவன் உடைமை என்னும் தன்மையாலே இவ் விபூதிமுழுதும் உத்தேஸ்யம் என்று அனுபவித்தார்;
இத்திருவாய்மொழியில், இவ்விபூதி தன்னிலே, ‘எண்ணாத மானிடத்தை எண்ணாத போதெல்லாம் இனியவாறே’ என்றும்,
‘பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே’ என்றும் சொல்லுகிறபடியே, சிலரைக் கழித்துச் சிலரைக் கூட்டிக்கொள்ளா நின்றார்;
‘இது சேருகிறபடி யாங்ஙனம்?’ என்னில்,
இவ்வாகாரமும் கிடக்கச்செய்தே, வேறு ஆகாரம் தோற்றாதபடியான பாகம் பிறந்தவாறே, அவன் உடைமை என்னும் தன்மையே தோற்றி
,மேல் திருவாய்மொழியில் உபாதேயம் என்று அநுசந்தித்தார். ‘இவர்தாம் எல்லார் படிகளும் உடையராயன்றோ இருப்பது?
முத்தர் படியையுடையர் என்னுமிடம் சொல்லிற்று மேல் திருவாய்மொழியாலே. முமுக்ஷூக்கள் படியையுடையர் என்னுமிடம் சொல்லுகிற இத்திருவாய்மொழியாலே,’ என்று அருளிச்செய்வர்.

மொய்ம்மாம் பூம்பொழிற் பொய்கை
முதலைச் சிறைப்பட்டு நின்ற
கைம்மாவுக்கு அருள் செய்த
கார்முகில் போல்வண்ணன் கண்ணன்
எம்மானைச் சொல்லிப் பாடி
எழுந்தும் பறந்தும் துள்ளாதார்
தம்மால் கருமம் என்? சொல்லீர்,
தண் கடல் வட்டத்து உள்ளீரே!
–3-5-1-

கலங்கிய மடுவின் கரைக்கு கலங்கா பெரு நகரின் இருந்து வந்தானே –அச்சோலையோடு பொய்கையோடு வேற்றுமை அற-இவர்க்கு உத்தேஸ்யமாயிருத்தலின் வர்ணிக்கிறார். ‘வல்லரக்கர் புக்கு அழுந்த –தயரதன் பெற்ற மரகத மணித் தடத்துக்கு இப் பொய்கையும் போலியாய் இருத்தலின், வர்ணிக்கிறார்,’தாமரைக்காடு மலர்க் கண்ணொடு கனிவாய் உடையதுமாய்’ என்கிறபடியே, உபமான முகத்தாலும் விரும்பத் தக்கதாய்
இருக்கிறதாதலின், வர்ணிக்கிறார் -அற்பமாய் இருப்பதொரு நீர்ப்புழுவின் கையிலே அகப்பட்டது என்பார், ‘முதலைச் சிறைப்பட்டு’ என்கிறார்.-முதலையின் செயலே யாய் யானையின் செயல் ஒழிந்ததாதலின், ‘நின்ற’ என்கிறார்-கால் வாசி அறிந்தே அன்றோ பற்றிற்று? முன்பு ஒன்றைப் பிடித்தது இல்லையே? –

பலம் இருக்கிறது என்ற எண்ணம் -யானைக்கு வந்து நோவு ஆதலின், ‘கைம்மா’ என்றது.
அன்றியே, ‘துதிக்கையும் முழுகிப் போய்விட்ட துன்பம் ஆதலின், ‘கைம்மா’ என்கிறது ‘என்னுதல்.‘யானைக்கு நெடுங்கை நீட்டாக ஒண்ணாது என்று ‘தூவாய புள் ஊர்ந்து வந்து’ பூ இடுவித்துக்கொண்டான்-யானையின் காலில் விலங்கை அன்றோ வெட்டிவிட்டது? ‘கொடிய வாய் விலங்கே’ -பெரிய திருமொழி, 6-8-3.-அன்றோ? ‘விலங்கு’ என்றது, சிலேடை: கால் விலங்கு, முதலை, ‘முதலையை ‘விலங்கு’ என்றல் கூடுமோ?’ எனின், அதற்குப் பிரமாணம் காட்டுகிறார்,-கண்ணன் – கண்ணையுடையவன்; இதனையே ‘குளிரக் கடாக்ஷித்து நின்ற நிலை’ –கார் முகில் போல் வண்ணன் கண்ணன் –யானையின் இடரைப் போக்கின போது வடிவிற் பிறந்த துடிப்பும் குணத்திற் பிறந்த துடிப்பும் இருக்கிறபடி.
வடிவழகை யனுபவிப்பித்து யானைக்குக் கையாளாய் நின்ற நிலை; தன்னை அனுபவிப்பித்துத் தாழ நின்றாயிற்றுப் போக்கிற்று.எம்மானை –யானைக்கு உதவியவதனால் அதன் சிறை விட்டது; அந்நீர்மையிலே தாம் சிறைப்படுகிறார்;பட்டர், இவ்விடத்தை அருளிச் செய்யும் போது மேலும் இயலைச் சொல்லச் செய்து ‘அவன் நூறாயிரம் செய்தாலும் மனமும் செயலும் வேறுபடாதிருப்பதற்கும் நாமே வேணும்; நமக்கு ஒரு ஆபத்து உண்டானால் இருந்த விடத்தில் இருக்க மாட்டாமல் விரைந்து வருவதற்கும் அவனே வேணும்,’ என்று அருளிச் செய்தார்.

தண் கடல் வட்டத்து உள்ளீர் சொல்லீர்-விசேஷஜ்ஞர்களோடு அல்லாதாரோடு இவ் வர்த்தம் பிரசித்தம் என்று இருக்கிறார்.-சதுஸ் சஹார பர்யந்த பூமியில் உள்ள நீங்கள் சொல்லி கோளே-இப்பூமியில் பிறந்தது பகவத் அனுபவத்துக்காக என்கை-ப்ரஹ்ம தேசத்தில் அப்பன் பிள்ளையோடு திருவாயமொழி கேட்ட போதை வார்த்தை நினைப்பது –

———

தண் கடல் வட்டத்து உள்ளாரைத்
தமக்கு இரையாத் தடிந்து உண்ணும்
திண் கழற்கால் அசுரர்க்குத்
தீங்கு இழைக்கும் திருமாலைப்
பண்கள் தலைக் கொள்ளப் பாடிப்
பறந்தும் குனித்தும் உழலாதார்
மண் கொள் உலகிற் பிறப்பார்
வல்வினை மோத மலைந்தே.
–3-5-2-

‘ஸ்ரீ கஜேந்திராழ்வானுக்கு உதவின உதவி, நித்தியசூரிகட்கு உதவிய உதவி என்னலாம்படியன்றோ,-தங்களுக்கு இடர் உண்டு என்று அறியாத சமுசாரிகளுடைய விரோதியைப் போக்கி உதவி செய்வது?-ஆபத்துக்கு உள்ளே இருந்து சம்பத்து என்று நினைத்துக் கொண்டு இருப்பார்களுக்கும் வந்து ரஷித்தானே-என்று நீர்மையை நினைந்து விக்ருதர் ஆகாதார்

தண் கடல் வட்டத்துள்ளார் – ஏக தேச வாசித்வ பாந்தமே -ஒரே தேசத்தில் வசிக்கும் காரணத்தால் வந்த சம்பந்தமே காரணமாக ஆயிற்று நலிவது-தமக்கு இரையாகத் தடிந்து உண்ணும் திண்கழல் கால் அசுரர் – சர்வேசுவரன் ரக்ஷிக்கைக்கு ஹேது -ஏது யாது ஒன்று? அதுவே ஆயிற்று இவர்கள் நலிவதற்குக் காரணமும்.மஹா பாவம் அனுபவிக்கப் பிறக்கிறவர்கள்,’இறைவன், ரக்ஷிக்கைக்கு ‘அது எனக்கு விரதம்,’ என்று அறுதியிட்டு இருக்குமாறு போன்று, இவர்கள் பிறரை நலிவதற்கு அறுதியிட்டு வீரக்கழலைக் கட்டியிருப்பவர்கள்’ என்பார், ‘கழல் கால் அசுரர்’ என்கிறார். ‘அவனுடைய ரக்ஷணத்துக்கு ஈடான கிருபையைத் தவிர்க்கிலும், இவர்கள் பிறரை நலிவதற்கு இட்ட வீரக்கழலைத் தவிர்க்க ஒண்ணாது,’ என்பார், ‘திண்கழல்’ என்கிறார்.

பண்கள் தலைக்கொள்ளப் பாடி –
1-‘திருமகள் கேள்வனைப் பாடாநின்றார்கள்’ என்று,
2- பண்கள்தாம் ‘என்னைக்கொள், என்னைக்கொள்’ என்று வந்து தலை காட்ட. என்றது,
3- ‘பண் சுமக்கப் பாடி’ என்றபடி. -அதிகமாக பாடி -ராக மாலிகையில் என்றுமாம் –
4-அன்றி, ‘பண்கள் தலைமை பெறும்படி பாடி’ என்றுமாம். என்றது, ‘தலையான பண்ணிலே பாடி’ என்றபடி.
5-அன்றி, ‘அன்பினாலே அடைவு கெட்டு, ஒரு பண்ணிலே எல்லாப் பண்களும் வந்து முகங்காட்டும்படி பாடி’ என்னலுமாம்.

———-

மலையை எடுத்துக் கல் மாரி
காத்துப் பசு நிரை தன்னைத்
தொலைவு தவிர்த்த பிரானைச்
சொல்லிச் சொல்லி நின்று எப்போதும்
தலையினொடு ஆதனம் தட்டத்
தடு குட்டமாய்ப் பறவாதார்
அலை கொள் நரகத்து அழுந்திக்
கிடந்து உழக்கின்ற வம்பரே
.–3-5-3-

தான் பிறந்து வளருகிற ஊரிலே ஒரு பொருளை வேறு ஒரு தேவதை கொள்ளுகையாகிற இது-மஹிஷீ ஸ்வேதம் பிறரதானதைப் போன்றது’ என்று பார்த்து, ‘அவ்வாகாச வாயனுக்கோ இடுவது? -ஆகாசம் வாசமாக கொண்ட இந்த்ரன் – நமக்கும் மழைக்கும் காற்றுக்கும் இடம் தந்து பசுக்களுக்கும் புகலாய்ப் புல்லும் தண்ணீரும் உண்டாய் இருக்கிற
இம்மலைக்கு அன்றோ இடுவது?’

வீரராயிருப்பார் வினை முடுகினால் எதிரியுடைய ஆயுதந்தன்னைக் கொண்டு அவரை வெல்லுவார்களே அன்றோ? அப்படியே, முன்னே நின்ற கல்லை எடுத்துக் கல் மாரியைக் காத்தான்.-அவன் செய்த தீங்கிற்குத் தோளைக் கழிக்க வேண்டியிருக்க, ‘பாவி பசிக் கோபத்தாலே செய்தானாகில் செய்வது என்? அசுரர்கள் பக்கல் செய்யுமதனை இவனோடு செய்ய ஒண்ணாது; தானே கையோய்ந்து போகிறான்!’ என்று, அவனால் வந்த நலிவைக் கணக்கிட்டு ஏழு நாள் ஒருபடிப்பட்ட மலையை எடுத்துக்கொண்டு நின்றானாயிற்று.
குன்று குடையாக எடுத்தான் குணம் போற்றி – ‘கல்லை எடுத்துக் கல் மாரி காத்து’ என்னும் இவ்விடத்தில் ‘நீராலே வர்ஷித்தானாகில் கடலை எடுத்துக் காக்குமித்தனை காணும்’ என்று பட்டர் அருளிச்செய்வர்.

ஆயர்களுடைய இளிம்பு கண்டால் சிரிப்பன பசுக்களே யன்றோ?-அன்று அம்மழையிலும் காற்றிலும் அடியுண்டாரும் தாமாய், உதவிற்றும் தமக்காக என்றிருக்கிறாராதலின், ‘பிரானை’ என்கிறார்.நிலா, தென்றல், சந்தனம், தண்ணீர் போலே பிறர்பொருட்டாக ஆயிற்று வஸ்து இருப்பது.

‘அரியன செய்து பாதுகாப்பதற்குப் பண்ணும் செயலை விலக்காது ஒழியுமத்தனையே வேண்டுவது; இத்தலையில் தரம் இல்லை,’

என் தஞ்சனே! நஞ்சனே! வஞ்சனே! என்னும் எப்போதும் என் வாசகம்,’ என்கிறபடியே,
‘வாய் படைத்த பிரயோஜனம் பெற்றோம்’ என்று ஏத்தாதார்.

அவன் தன்னை தங்களுக்காக ஒக்கினால்-அவனுக்காக தங்களை ஒக்காதார் அவஸ்துக்கள் என்கை-தடு குட்டம் -குணாலை கூத்து –

————-

வம்பு அவிழ் கோதை பொருட்டா
மால் விடை ஏழும் அடர்த்த
செம் பவளத்திரள் வாயன்
சிரீதரன் தொல் புகழ் பாடிக்
கும்பிடு நட்டம் இட்டு ஆடிக்
கோகு உகட்டு உண்டு உழலாதார்
தம் பிறப்பால் பயன் என்னே
சாது சனங்க ளிடையே?
–3-5-4-

கோகு கட்டுண்கை –ஆரவாரம் கொட்டுகை –கோகு கொட்டு என்றும்- பாடம் –

ஒப்பனை யழகையும் மயிர் முடியையுங்கண்டவாறே தன்னைப் பேணாதே ‘தவாஸ்மி – உனக்காக இருக்கிறேன்’ என்று அவளுக்காகத் தன்னை ஓக்கினான்-அடர்த்த – பின்னர் அணையப் புகுகிறது அவள் தோள்களை ஆகையாலே கிரமப் பிராப்தி பற்றாமே ஒரு காலே ஊட்டியாக நெரித்தான் ஆயிற்று.

செம்பவளம் திரள் வாயன் – விருப்பத்திற்குத் தடையாய் இருந்தவைகள் போகையாலே புன்முறுவல் செய்தபடி.
அன்றியே,
‘அவை திருத்தோள்களுக்கு இரை போராமையாலே புன்முறுவல் செய்து நின்றபடி’ என்னுதல்.
சிரீதரன் – இவ்விடைகள் ஏழையும் வென்று வீர லக்ஷ்மியோடே நின்ற நிலை
அன்றி,-‘அவள் அணைக்கும்படியாக நின்ற நிலை’ என்றுமாம்.-தந் திருஷ்ட்வா -மஹர்ஷீணாம் சுகாவஹம்-பபூவ –ஹ்ருஷ்டா-வைதேஹீ –பர்த்தாரம் –-பரிஷஸ்வஜே –இப்போதாயிற்று ‘ஆண்பிள்ளை’ என்று அணைத்தது; ஸ்த்ரியம் புருஷம் விக்ரஹம் என்றவள் –‘ஆண் வடிவாக இருக்கின்ற பெண்’ என்றவளே யுத்தவடு உள்ள இடமெங்கும் திருமுலைத் தடத்தாலே வேது கொண்டாள். ’பிராட்டி பெருமாளை அணைத்தது போன்று நப்பின்னைப்பிராட்டி அணைக்க நின்றபடி’ 

‘திருப்புன்னைக்கீழ் ஒருவர் இருக்குமிடத்திலே நம் முதலிகள் பத்துப்பேர் கூட நெருக்கிக் கொண்டிருக்கச் செய்தே, கிராமணிகள், மயிரெழுந்த பிசல்களும் பெரிய வடிவுகளும் மேலே சுற்றின இரட்டைகளுமாய் இடையிலே புகுந்து நெருக்குமாறு போலே காண்’ என்று பிள்ளைப் பிள்ளை ஆழ்வான்– கூரத்தாழ்வான் சிஷ்யர்.-அருளிச் செய்வர்.–பகவானுடைய குணங்களைக் கேட்டு ஆனந்தத்தால் வேறுபாடு இல்லாதவர்கள் நடுவே வந்தால் அவர்களுக்கு அஸஹ்யமாயிருக்கும் என்று கூறுதற்குத் திருவுள்ளம் பற்றி, அதற்கு ஆப்த சம்வாதம்-

——–

சாது சனத்தை நலியும்
கஞ்சனைச் சாதிப்பதற்கு
ஆதி அம் சோதி உருவை
அங்கு வைத்து இங்குப் பிறந்த
வேத முதல்வனைப் பாடி
வீதிகள் தோறும் துள்ளாதார்
ஓதி உணர்ந்தவர் முன்னா
என் சவிப்பார் மனிசரே?
–3-5-5-

பாகவத அபாசாரம் பொறாமையாலே இவன் அவதரித்து ஆனைத் தொழில்கள் -ஆஸ்ரிதர்களுக்காகவே திருவவதாரம் –என்பர் -நித்திய விபூதியில் உள்ளார் அனுபவிக்கிறபடியே -அனுபவிக்கிற பிரகாரமும்,-அனுபவிக்கிற திருமேனியும்.-லீலா விபூதியில் உள்ளாரும் அனுபவிக்கும்படியாக அவதரித்தான்-பல படிகளாலும் இவர்களை நாம் பாதுகாக்க வேணும்,’ என்று அவன் வந்து அவதரித்தால் ஒரு படியாலும்
திருந்தாதபடியே அன்றோ இவர்கள் படி இருப்பது
-இக்ஷ்வாகு வமிசத்திலே யுவநாஸ்வான் என்பான் ஒருவன் மந்திரத்தாலே சுத்தம் செய்யப்பட்ட தண்ணீரைக் குடிக்க, அவன் வயிற்றிலே கர்ப்பம் உண்டாயிற்றே யன்றோ ஒரு சத்தி விசேஷத்தாலே?
அங்கு ஆணும் பெண்ணுமாய்க் கலந்து பிறந்தமை இல்லையே? அப்படியே, இங்கும் சர்வ சத்தி யோகத்தாலே இவ்வர்த்தம் பொருத்தமாகத் தட்டு இல்லையே யன்றோ? இதற்குப் பிரமாணம் ‘அஜாயமாந:’ என்ற சுருதியே யன்றோ?

வேத முதல்வனைப் பாடி – வேதங்களால் அறியப்படுகின்றவனைப் பாடி; அன்றி, ‘வேதங்களாலே முதல்வனாகச் சொல்லப்படுகின்றவனைப் பாடி’ என்னுதல்.
‘பிறந்த முதல்வனைப் பாடுகிறது என்? வளர்ந்த விதங்களையும் பாடலாகாதோ?’ எனின்,
‘பிறந்தவாறு எத்திறம்?’ என்னா, வளர்ந்தவாற்றில் போகமாட்டாதே அன்றோ இருப்பது?
‘எத்திறம்!’ என்றால், பின்னையும் ‘எத்திறம்!’ என்னுமித்தனை.

‘துள்ளி ஆடினால் உலகத்தார் சிரியாரோ?’ என்ன, அதற்கு விடையாக, ‘மிளகாழ்வான் வார்த்தையை நினைப்பது’ என்கிறார். இதனால், ‘உலகத்தாருடைய நகையே பூஷணமாய்விடும்,’ என்பது கருத்து.

ஈசுவரன் கை விட்டாலும் விடாத என் நெஞ்சிலும் அவர்களைஉபேக்ஷித்தேன் என்கிறார்

மேல் திருவாய்மொழியிலே, அவன் உடைமை என்னும் தன்மையாலே இவ் விபூதிமுழுதும் உத்தேஸ்யம் என்று அனுபவித்தார்;
இத்திருவாய்மொழியில், இவ்விபூதி தன்னிலே, ‘எண்ணாத மானிடத்தை எண்ணாத போதெல்லாம் இனியவாறே’ என்றும்,
‘பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே’ என்றும் சொல்லுகிறபடியே, சிலரைக் கழித்துச் சிலரைக் கூட்டிக்கொள்ளா நின்றார்;
‘இது சேருகிறபடி யாங்ஙனம்?’ என்னில்,
இவ்வாகாரமும் கிடக்கச்செய்தே, வேறு ஆகாரம் தோற்றாதபடியான பாகம் பிறந்தவாறே, அவன் உடைமை என்னும் தன்மையே தோற்றி
,மேல் திருவாய்மொழியில் உபாதேயம் என்று அநுசந்தித்தார். ‘இவர்தாம் எல்லார் படிகளும் உடையராயன்றோ இருப்பது?
முத்தர் படியையுடையர் என்னுமிடம் சொல்லிற்று மேல் திருவாய்மொழியாலே. முமுக்ஷூக்கள் படியையுடையர் என்னுமிடம் சொல்லுகிற இத்திருவாய்மொழியாலே,’ என்று அருளிச்செய்வர்.

————-

மனிசரும் மற்றும் முற்றும் ஆய்
மாயப் பிறவி பிறந்த
தனியன் பிறப்பிலி தன்னைத்
தடங்கடல் சேர்ந்த பிரானைக்
கனியைக் கரும்பின் இன் சாற்றைக்
கட்டியைத் தேனை அமுதை
முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார்
முழுது உணர் நீர்மையினாரே.
–3-5-6-

கர்மங்கட்குக் கட்டுப்படாதவனாய் இருந்து கர்மங்கட்குக் கட்டுப்பட்டவர்களும் பிறக்கமாட்டாத பிறவிகளிலே பிறக்கின்றானாதலின், ‘மாயப்பிறவி’ என்கிறது.
‘ஒரு காரணமும் இல்லாமல் காரணமுடையார்க்கும் அவ்வருகே பிறக்க வல்லவன்

’தனியன் –இப்படி அவதரித்தும், போகும் அன்று உடுத்த ஒலியலோடே-கட்டின வஸ்த்ரத்துடன் – ஆயிற்றுப் போவது.
‘சேர்ந்து போனார் ஒருவரும் இலரோ?’ எனின், தொடர்ந்து செய்த இவ்வவதாரங்களிலே இராமாவதாரம் ஒன்றிலும்‘நாலிரண்டு பேர் கூடப்போனார்கள்’ என்று கேட்டோமித்தனையே யன்றோ? -அவர் பட்ட பிரயத்னத்துக்கு இது நாலிரண்டு போலே என்றவாறே –
‘சேர்ந்து போனார் இலரேயாயினும், இங்கிருந்த நாளில் பரிவருண்டோ?’ எனின்,
‘இவன் நமக்காகப் பிறந்தான்’ என்று நினைக்கைக்கும் ஒருவரும் இலரே அன்றோ?

பிறப்பிலி தன்னை – இப்படிப் பிறருக்காக அவதரித்தால் அவ்வவதாரத்தால் பயன் முழுதும் பெறாதே ஒழிந்தாலும்,நாம் வருந்தியும் இது பலித்தது இல்லையே!’ என்று கைவாங்குகை யன்றி,இவர்களுக்கு ஒன்றுஞ் செய்யப்பெற்றிலோம்’ என்று,பிறந்திலனாய்ப் பிறக்கைக்கு ஒருப்பட்டானாய் இருப்பவன்.
தடங்கடல் சேர்ந்த பிரானை –இன்னமும் பிறக்கைக்குத் தவயோகம் பண்ணுகிறபடி.
திருப்பாற்கடலிலே அநிருத்த உருவமாய்க் கொண்டு கண்வளர்ந்தருளுகிற இடம் அவதாரத்திற்கு மூலமேயன்றோ?‘வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை’ என்றார் ஸ்ரீஆண்டாள். இவர்கள் பிறவி என்னும் பெருங்கடலைப் போக்குகைக்காக அன்றோ அவன் கடலிலே வந்து கிடக்கிறது?
கனியை –
கடல் பழுத்தபடி. அன்றி, ‘பாலிலே பழுத்த படி’ என்னுதல்
அங்குச் சாய்ந்து கிடக்கிற போதை வடிவழகால் வந்த இனிமையை ‘சர்வரஸ:’ என்று ஒரு சொல்லாலே சொல்லமாட்டார்;-எல்லாம் சொல்லப்புக்கால் சொல்லித் தலைக்கட்டமாட்டார்;
அவற்றால் போதரும் கூற்றிலே வைத்துச் சிலவற்றைச் சொல்லுமித்தனை, ஆகையாலே, ‘கனியை’ என்கிறார்.

கனியை கரும்பினின் சாற்றை கட்டியை தேனை அமுதை– கண்ட போதே நுகரவேண்டும் கனியும், கோது அற்ற இனிய கருப்பஞ்சாறும், உடல் முழுதும் ரசத்தையுடைய கட்டியும்,
எல்லா ரசமும் சேர்ந்திருக்கிற தேனும் நுகர்கின்றவனை என்றும் உள்ளவனாகச் செய்யும் அமுதமும் போலே இனியனானவனை.
கண்ட போதே நுகரலாம்படியாய், அதுதான் கோதுகழிந்த ரசாமிசமாய், அதுதன்னைத் திரட்டினதாய், அதுதான் பருகலாம்படியாய், இனிமையேயன்றிச் சாவாமல் காக்கமதாய் இருக்கையைத் தெரிவித்தபடி. மேல் திருவாய்மொழியில் ‘நலங்கடல் அமுதம்
என்கோ!’ 
என்று தொடங்கி அனுபவித்த இனிமை

முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார் – பகவானுடைய குணங்களைக் கேட்டால் அசூயை பண்ணாமல் ஏத்திக் குனிப்பவர்கள்;முனிவாகிறது, வெறுப்புத் தன்மையாய், அது இன்றிக்கே ஒழிகையாவது, கலங்குகையாய், அடைவு கெட்டு ஏத்திக் குனிப்பார் என்று பொருள் 

முழுது உணர் நீர்மையினாரே –1- ஏக விஞ்ஞாநேந சர்வ விஞ்ஞானம்-‘ஒன்றை (பரம்பொருளை) அறிந்ததனாலே எல்லாம் அறிந்தவர் ஆகிறார்கள்,’ என்கிறபடியே, அவர்கள் எல்லாவற்றையும் அறிந்தவர்கள் ஆகிறார்கள்; அவர்கள் முற்றறிவினர்கள் ஆகிறார்கள்:
2-ஞான பலமான இது -ஏத்திக் குனிப்பது-உண்டான போதே ஞான விசேடத்தில் இல்லாதது இல்லை யன்றே?

———–

நீர்மை இல் நூற்றுவர் வீய
ஐவர்க்கு அருள்செய்து நின்று
பார் மல்கு சேனை அவித்த
பரஞ் சுடரை நினைந்து ஆடி
நீர் மல்கு கண்ணினர் ஆகி
நெஞ்சம் குழைந்து நையாதே
ஊன் மல்கி மோடு பருப்பார்
உத்தமர்கட்கு என் செய் வாரே!
–3-5-7-

அவர்கள் இழந்த பரிகரம் எல்லாம் தானேயாய் நின்றானாதலின், ‘நின்று’ என்கிறது.பரஞ்சுடரை –‘ஆயுதம் எடுக்க ஒண்ணாது’ என்றார்களே? அதற்காக, சேநாதூளியும் முட்கோலும் சிறுவாய்க்கயிறும் தேருக்குக் கீழே நாற்றின
திருவடிகளும் சிறு சதங்கையுமாய்ச் சாரதி வேஷத்தோடே நின்ற நிலையைச் சொல்லுகிறது.-ஆதி யம் சோதி உரு -ஏஷ நாராயண ஷீராப்தி நாதனே இவன்-

நினைந்து ஆடி –அவன் அடியார்கட்குப் பரதந்திரப்பட்டு இருக்குங் குணத்தை அநுசந்தித்து,
ஈசுவரன், தன்னையும் தன் விபூதியையும் அடியார்களுக்கு உடைமையாக்கி யன்றோ வைப்பது?

அடியார்களுக்கு உடைமை ஆக்கி வைக்கும் என்றதற்கு ஐதிஹ்யம் காட்டுகிறார், ‘ஆயிரத்தளியிலே’ என்று தொடங்கி. ஆயிரத்தளி – பழையாறை – நாதன்கோயில் – நந்திபுரவிண்ணகரம் என்னும் தலம். இங்கே சோழர்களும், பின்னர்ப் பல்லவர்களும், பின்னர்ச் சோழர்களும் சில காலம் இருந்து அரசாண்டனர். இராஜா – கி.பி. 11ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்த சோழ அரசன்.-கிருமி கண்ட சோழன் –
ஆயிரத்தளியிலே இராஜா இருக்கச்செய்தே பெரிய நம்பியையும் ஆழ்வானையும் நலிந்தானாய், ஆழ்வான் மடியிலே சாய்ந்து கிடக்கச்செய்தே, பெரிய நம்பி திருநாட்டுக்கு எழுந்தருளினார்; அவ்வளவிலே ‘ஒருவரும் இல்லாதாரைத் தகனம் பண்ணக்கடவோம்,’ என்று திரிகிறார் சிலர் அங்கே வந்து, ஆழ்வானைக் கண்டு, ‘ஒருவன் உண்டிறே’ என்று போகப் புக, ஒருவரையும் ஒரு குறை சொல்லியறியாதவன், ‘வாரிகோள் மாணிகள்! வைஷ்ணவனுமாய் ஒருவனும் இல்லாதான் ஒருவனைத் தேடிப் பிரதிபத்திபண்ண
இருக்கின்றீர்களோ நீங்கள்? ஈசுவரனும் ஈசுவர விபூதியும் வைஷ்ணவனுக்குக் கிஞ்சிக்கரிக்க இருக்க, வைஷ்ணவனுமாய் அறவையுமாயிருப்பான் ஒருவனை நீங்கள் எங்கே தேடுவீர்கள்?’ என்றானாம்.

ஸ்ரீ வைஷ்ணவன் -அநாதி இல்லையே ச நாதன் அன்றோ -ஜென்மத்துக்கு பிரயோஜனம் -ஸ்ரீ வைஷ்ணவனுக்கு உறுப்பாக-கூரத் ஆழ்வான்-மாருதி ஆண்டான் மூலம் அனுப்பி அருளிச் செய்த ஸ்லோகம்
அஷ்டகாக அஷ்ட அத்யாயி -வையாகரனிகள் -தீ விஷய -அஸ்தி -நாஸ்தி -திஷ்டன் -மனுஷ்யாணாம் –
ஆஸ்திகன் -நாஸ்திகன் -திஷ்டன் -பூர்வம் -மத்யம் -பச்சிம -யதீஸ்வரன் -துரந்தவன்-பின்னால் உள்ள -பூர்வம் பிரதமம் –
கிருமி கண்ட சோழன் நாஸ்திகன் –
உன் சேவை எப்படி கிடைக்குமோ -என்று கேட்பது போலே
ஆந்தர அபிப்ராயம் -மத்யம நமஸ் – -பெருமானுக்கு கிங்கரன்
பகவத் பக்தன் -பாகவத பக்தன் -பிரணவம் -பாகவத சம்பந்தம் தெளிந்த பின்பு தானே நாராயண கைங்கர்யம் சித்திக்கும் -என்றவாறு
அஷ்டாஷர-தீ விஷய -ஸ்வரூப -உபாய -புருஷார்த்த -ஞானம் -த்ரிவித நிஷ்டன் -மத்யமபத ஏக தேச -ஷட்யந்தமான மகார வாஸ்ய உபாய விரோதி –
பூர்வம் மாம்-ஸ்வரூப நிஷ்ட மாம் -அடியேனை -கிழக்கு தேசத்தில் உள்ளவர் -பிரணவம் நிஷ்டர் -இரண்டும்-மன் நாசாயா முயற்சிக்கிறது -இங்கு அர்த்தம் –
ஹே பச்சிம -ஹே கைகர்யா நிஷ்டர் -மேலேதேசத்தில் உள்ள பாஷ்யகாரர் -என்றுமாம் –
திருதிய பத -நாராயணாய -கைங்கர்யம் பண்ணி ஆனந்தப்பிபது புருஷார்த்த விரோதி -நலிகிறது-பாகவத ஆச்சார்ய கைங்கர்ய அலாபத்தால் ஞானமே வியர்த்தம்
போக்கி கொடுத்து அருளும் -என்கிறார் -திரு உள்ளம் உகந்தார் –

உத்தமர்கட்கு என் செய்வாரே –பகவானுடைய குண அநுசந்தானத்தாலே மெலிகின சரீரத்தையுடையராய் இருந்துள்ள மஹா புருஷர்களுக்கு ஒருவருக்கொருவர் உணர்த்திக்
கொள்வதற்கு உசாத்துணை ஆவார்களோ? ‘பிறப்பிற்குப் பிரயோஜனம் வைஷ்ணவர்களுக்கு உறுப்பாமதுவே,’ என்கிறார்.

———–

வார் புனல் அம் தண் அருவி
வட திரு வேங்கடத்து எந்தை
பேர் பல சொல்லிப் பிதற்றிப்
பித்தர் என்றே பிறர் கூற
ஊர் பல புக்கும் புகாதும்
உலோகர் சிரிக்க நின்று ஆடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார்
அமரர் தொழப்படுவாரே
.–3-5-8-

‘திருவேங்கடமுடையானுடைய நீர்மைக்கு ஈடுபடுவாரைக் கொண்டாடுகைக்கு நாம் யார்?
நித்தியஸூரிகள் அன்றோ அவர்களைக் கொண்டாடுவார்கள்?’ என்கிறார்.

பேர் பல சொல்லிப் பிதற்றி – அவனுடைய திருநாமம் பலவற்றையும் அடைவுகெடச் சொல்லி. சொரூப ரூப குணங்களுக்கு வாசகமாயும், விபூதிக்கு வாசகமாயுமுள்ள பெயர்கள் பலவாதலின், ‘பேர் பல’ என்கிறார். என்றது, தாம் ‘ஒழிவில் காலத்’திலும், ‘புகழும் நல் ஒருவனி’லுமாகச் சொன்னவற்றைச் சொல்லுகிறார்-

ஒழிவில் காலம்’ என்ற திருவாய்மொழியில் ‘வானவரீசன்’ ‘ஈசன் வானவர்க்கு’ என்பன, ஸ்வரூப வாசகம்; ‘காரெழில் அண்ணல்’ ‘கருமாணிக்கம்’ என்பன,ரூப வாசகம்; ‘திருவேங்கடத்து அந்தமில் புகழ்’ என்றது, குணவாசகம்;
‘புகழும் நல் ஒருவன்’ என்ற திருவாய்மொழியில் ‘வானவராதி என்கோ’என்றது, ஸ்வரூப வாசகம்; ‘பங்கயக் கண்ணன்’ என்றது, ரூப வாசகம்; ‘புகழும் நல் ஒருவன்’ என்றது, குணவாசகம்.

‘‘பொருவில் சீர்ப் பூமி என்கோ!’ என்னா, ‘கண்ணனைக் கூவுமாறே’ என்பது; ‘குன்றங்கள் அனைத்தும் என்கோ!’ என்னா, ‘பயங்கயக் கண்ணனையே, என்பது; ‘ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை எண்ணுமாறு அறியமாட்டேன் யாவையும் எவரும் தானே’ என்பதாகா நின்றார்;

வைஷ்ணவர்கள் அங்கீகாரம் பெறுமதிலும் வைஷ்ணவர்கள் அல்லாதார் ‘இவன் நமக்கு உடல் அல்லன்’ என்று கைவிடுகைதான் உத்தேஸ்யமாதலின், ‘பிறர் கூற’ என்கிறார்.இராவணன் ‘இராக்கதர் குலத்தில் தள்ளுண்ட உன்னை’ என்றதனை உத்தேஸ்யமாக நினைத்திருந்தான் அன்றோ ஸ்ரீ விபீஷணாழ்வான்?
மிளகாழ்வான் வார்த்தை: இராஜா அகரம் வைக்கிறானாய் அங்கே செல்ல,‘உமக்குப் பங்கு இல்லை’ என்ன,
‘அது என்? வேதபரீக்ஷை வேணுமாகில் அத்தைச்செய்வது, சாஸ்திரப் பரீட்சை வேணுமாகில்
அத்தைப் பரீக்ஷிப்பது,’ என்ன, ‘உமக்கு அவையெல்லாம் போதும்; அதற்கு உம்மைச்சொல்ல வொண்ணாது,’ என்ன,
‘ஆனால், எனக்குக் குறை என்?’ என்ன, நீர் வைஷ்ணவர் அன்றோ? ஆகையாலே காண்,’ என்ன, புடைவையை முடிந்து ஏறிட்டுக் கூத்தாடினான் ஆயிற்றுத் தன்னை அவர்கள் கைவிட்டதற்கு; ஆதலால், வைஷ்ணவர் அல்லாதாரான மற்றையோரால்
‘இவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்’ என்று தள்ளப்படுவதே வேண்டுவது.

———

அமரர் தொழப் படுவானை
அனைத்து உலகுக்கும் பிரானை
அமர மனத்தினுள் யோகு
புணர்ந்து அவன் தன்னோடு ஒன்றாக
அமரத் துணிய வல்லார்கள்
ஒழிய அல்லாதவர் எல்லாம்
அமர நினைந்து எழுந்து ஆடி
அலற்றுவதே கருமமே .
–3-5-9-

சர்வேசுவரனை அடைந்து அற்பப் பிரயோஜனங்களைக்கொண்டு அகலப்போகிறவர்கள் மக்கள் ஆகார்,’கேவலம் ஆத்தும அநுசந்தானத்தைப் பண்ணி, சீலம் முதலான குணங்களோடு கூடின இறைவனிடத்திலே நெஞ்சு போகாதபடி நெஞ்சை இறுகப் பிடிக்க வல்ல தாழ்ந்தவர்கள் நீங்க மற்று உள்ளார் எல்லாம்.-யாத்ருச தாத்ருச -நின்ற நின்ற நிலையிலே வாரும் -பக்தியிலே குறைந்தார்களும் மிக்கார்களும் -என்றவாறு –
அமர நினைந்து எழுந்து அலற்றுவதே கருமம் – வேறு பிரயோஜனங்களைக் கருதாதவர்களாய் இறைவனை நெஞ்சிலே பொருந்த அனுசந்தித்து, அவ் வனுசந்தானத்தாலே வந்து மகிழ்ச்சி கொண்டு கிளர, அக்கிளர்த்தியோடே ஆடி அடைவு கெட ஏத்தும் இதுவே செய்யத்தக்க காரியம்.-பக்திபாகம் பிறவாதார்க்கும் நிஷ் பன்ன பக்திக ப்ரவ்ருத்தியை அநு விதானம் பண்ணுகை பிராப்தம் -என்று கருத்து –

————

கருமமும் கரும பலனும்
ஆகிய காரணன் தன்னைத்
திரு மணி வண்ணனைச் செங்கண்
மாலினைத் தேவ பிரானை
ஒருமை மனத்தினுள் வைத்து
உள்ளம் குழைந்து எழுந்து ஆடிப்
பெருமையும் நாணும் தவிர்ந்து
பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே
.-3-5-10-

ஒருமை மனத்தினுள் வைத்து – ஒரு பிரயோஜனத்துக்காக அன்றி, நெஞ்சிலே இருக்கை தானே பிரயோஜனமாக நெஞ்சிலே வைத்து.-இதனால், மேற் பாசுரத்திலே பிரயோஜநாந்தர பரரை நிந்தித்தார் என்னுமிடம் தோன்றுகிறதே அன்றோ?
உள்ளம் குழைந்து எழுந்து ஆடிப் பெருமையும் நாணும் தவிர்ந்து பேதைமை தீர்ந்து பிதற்றுமின்– இப்படி வேறு பலனைக் கருதாதவராய் நெஞ்சிலே வைத்தவாறே, அகவாய் நெகிழ்ந்து அந்த நெகிழ்ச்சியோடே இருந்த இடத்தில் இராமல் ஆடி,
‘பகவானுடைய குணங்களைக் கேட்டார் உரையும் செயலும் வேறுபட்டவராதல் விக்ருதராய் -நமக்குப் போருமோ? ‘எல்லாவளவிலும் நம் அகவாய் ஒருவர்க்கும் தெரியாதபடி மறைத்துக் கொண்டு இருக்க வேண்டாவோ?’ என்றிருக்கிற அறிவு கேட்டையும், இவற்றை அடையப் பொகட்டு, அடைவுகெட ஏத்துங்கோள். இதுவே உங்களுக்குப் புருஷார்த்தம் என்கிறார்.

———

தீர்ந்த அடியவர் தம்மைத்
திருத்திப் பணிகொள்ள வல்ல
ஆர்த்த புகழ்அச் சுதனை
அமரர் பிரானைஎம் மானை
வாய்ந்த வளவயல் சூழ்தண்
வளம் குரு கூர்ச்சட கோபன்
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப் பத்தும்
அரு வினை நீறு செய்யுமே.
–3-5-11-

பிராப்பியப் பிராபகங்கள் அவனே’ என்று இருக்குமவர்கள் ஆயிற்றுத் தீர்ந்த அடியவராகிறார்;-அவர்களைத் திருத்திப் பணி கொள்ளுகையாவது, அவர்களுடைய பிராப்பியப் பிராபக விரோதிகளைப் போக்கி அடிமை கொள்ளுகை.
‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி, வழுவிலா அடிமை செய்ய வேண்டும்’ என்று இருந்தாலும்,-‘முகப்பே கூவிப் பணிகொள்வானாய் குறைவற்ற கல்யாண குணங்களை யுடையவனாய்,-அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று இருந்தாலும் -கிரியதாம் இதி மாம் வத -என்ன வேண்டுமே –அருவினை நீறு செய்யும் –பகவானுடைய குணங்களைக் கேட்டால் வேறுபடாதே திண்ணியராய் இருக்கைக்கு அடியான மஹாபாவங்களைச் சாம்பல் ஆக்கும்.-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -78-நலியும் நரகனை வீட்டிற்றும் –இன்பம் பயக்க-7-10–

March 18, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

கண்ணன் சாத்தி அருளிய திருத்துழாயில் ஆசைப்போட்டு கிடையாமல்-இன்பம் பயக்க-7-10–திருவாறன் விளை -வலம் செய்து கை கூப்பும் காலம்-துறையடைவு-பிரிவாற்றாத தலைவி தலைவன் ஆற்றலை எண்ணி நெஞ்சு அழிந்து இரங்கல் –ப்ராக்ஜோதி புரத்தில் நரகாசூர நிரஸனம் -ஸத்யபாமை உடன் சென்று -முராசூரனை அழித்து முராரி -நரகாந்தன் பெயர் –சோணித புரத்தில் -பாணாசுரன் தோள்களை துணித்த சரிதம்-வலிமையையும் பெருமையும் வாசா மகோசரம் -வலியின் பெருமை என்றுமாம் – அஞ்சன கிரி போன்ற திருமேனி -சாத்திய திருத் துழாயில் ஆசைப்பட்டு -நெஞ்சு கொடுத்த வேதனை-அது அவன் குற்றம் அல்ல -நானே தான் ஆயிடுக –

அவதாரிகை – இதில் கிருஷ்ண அவதாரத்தில் பரிமாற்றத்தை பெற வேண்டும் என்று ஆசைப் பட்டாள்
ஒரு பிராட்டி வார்த்தையாய் இருக்கிறது பிரிவாற்றாத தலைவி தலைவன் ஆற்றலைக் கருதி நெஞ்சு அழிந்து இரங்கல் —

இப்படி ஆர்த்தரான இவ்வாழ்வாருடைய –விரோதி நிரசன ஸ்வபாவங்கள் உண்டாகச் செய்தே
நம்முடைய பிரதிபந்தகங்கள் போய் அவனுடைய போக்யதையை அனுபவிக்கப் பெறாமல்
(இவ்வாழ்வாருடைய )திரு உள்ளம் தளும்பி அத்தாலே கிலேசித்த பிரகாரத்தை நாயகனான ஈஸ்வரன் சக்தனாய் இருக்கக் கிட்டப் பெறாமையாலே நெஞ்சு அழிந்து இரங்கின நாயகி பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

நலியும் நரகனை வீட்டிற்றும்  வாணனை திண் தோள் துணித்த
வலியும் பெருமையும் யான் சொல்லும் நீர்த்தல்ல  மைவரை போல்
பொலியும் உருவில் பிரானார் புனை பூம் துழாய் மலர்க்கே
மெலியும் மட நெஞ்சினார் தந்து போயின வேதனையே
– 78–பிரிவாற்றாத தலைவி தலைவன் ஆற்றலை எண்ணி நெஞ்சு அழிந்து இரங்கல் –

(எமது நாயகனார்)
நலியும்நரகனை வீட்டிற்றும்–(உலகத்தை) வருத்துகிற நரகாசுரனைக் கொன்றதும்
வாணன் திண்தோள் துணிந்த வலியும்–பாணாஸுரனது வலிய தோள்களை அறுத்துத் தள்ளிய வலிமையும்
பெருமையும்–(அப்போரில் வெளிக்காட்டிய) தலைமையும்
யாம் சொல்லும் நீர்த்து அல்ல–(எளிமையான) யாம் புகழ்ந்து சொல்லி முடிக்குத் தன்மையானவல்ல;
மை வரைபோல் பொலியும் உருவின் பிரானார்–அஞ்சனகிரிபோல விளங்குகிற வடிவத்தையுடைய அத்தலைவரது
புனை பூதுழாய் மலர்க்கே–சாத்திய அழகிய திருத்துழாய்ப் பூமாலையைப்பெறுவதற்காகவே
மெலியும்–ஆசைப்பட்டு வருந்துகிற
மட நெஞ்சினார்–(எமது) பேதைநெஞ்சு
தந்து போயின–(தான் எம்மைவிட்டுப் போம் பொழுது எமக்குக்) கொடுத்துவிட்டுப் போனவை
வேதனை–இத் துன்பங்கள்.

இன்பக் கவி பாடுவித்தோனை இந்திரையோடு
அன்புற்று வாழ் திரு வாறன் விளையில் -துன்பமறக்
கண்டு அடிமை செய்யக் கருதிய மாறன் கழலே
திண் திறலோர் யாவர்க்கும் தேவு 
—70-தாம் பாடின ஸ்ரீ திருவாய் மொழியைக் கேட்கைகாக ஸ்ரீ பெரிய பிராட்டியார் உடன் பேர் ஒலக்கமாக ஸ்ரீ திரு வாறன்விளையிலே அவன் வந்து எழுந்து அருளி இருக்கிற படியை அனுசந்தித்து நாம் அங்கே சென்று ஸ்ரீ திருமாலவன் கவி -என்ற வாயோலைப் படியே அவனும் அவளுமான சேர்த்தியிலே ஸ்ரீ திருவாய் மொழியை அவர்கள் இருவரும் உகந்து திருச் செவி சாத்தும்படி கேட்ப்பித்து அடிமை செய்யப் பெறுவது எப்போதோ – என்று மநோ ரதிக்கிற -இன்பம் பயக்க -வில் அர்த்தத்தை இன்பக் கவி பாடுவித்தோனை -என்று அருளிச் செய்கிறார் –தர்சன அனுபவ கைங்கர்ய அனுபவ மநோ ரதத்தை யுடைய ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே-திருட அத்யாவச்ய உக்தராய் உள்ளவர்க்கு எல்லாம் பர தேவதை –ஸ்ரீ ஆழ்வாரும் வேண்டா – நமக்கு உத்தேச்யம் ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே -அமையும்
அன்றிக்கே – மாறன் கழல் சேர் திண் திறலோர் -உண்டு-திருட அத்யாவசாய உக்தரான ஸ்ரீ மதுரகவி ஸ்ரீ நாத முனி பரப்ரக்ருதிகளாய் உள்ளவர்கள் – மற்றும் அத்யாவசாய யுக்தராய் உள்ளார் -எல்லாருக்கும் குல தைவம் என்றாகவுமாம் — அவன் விட்டாலும் அவள் விடாள் -அவள் விட்டாலும் விடாத திண்ணிய கழல் –நமது ஆச்சார்யர்கள் – வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாருக்கும் -நம் போலே அத்யாவச்யம் இல்லாதவர்களுக்கும் –உபகார ஸ்ம்ருதியோடே தன் சரிதை கேள்வி யாகாமல் இன்பம் பயக்க விருந்த நிலத் தேவர் குழுவிலே பாட்டு கேட்பிப்பதாக கான கோஷ்டியையும் ஸ்ரீ தேவ பிரான் அறிய மறந்தவர்–என்று இறே ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் ஸ்ரீ நாயனார் அருளிச் செய்தது –

நலியும் நரகனை –சர்வேஸ்வரன் பரிகிரகைக்கு யோக்யதைகளாய் இருக்குமவர்களை கொண்டு
வந்து சிறை செய்தான் இறே –நலியும் –அந் நலிவு  தம்மதாம் படி இருத்த படி –வீட்டிற்றும் –-வீழ்த்ததும்
முடித்ததும் –வாணன் இத்யாதி –உஷையும் அநித்ருதனையும் சேர ஒட்டாதே சிறை வைத்த வாணனுடைய–திண் தோள் –தேவதாந்திர சமாஸ்ரயணம்  பண்ணி திண்ணிய தோள் உடையனாக நினைத்து இருந்தான் –ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் -ப்ரஹ்மத்தினுடைய ஆனந்தத்தை அறிந்தவன் –நபிபேதி குதஸ் சன –என்றும் –ஏஷஹ்யேவா சநந்த -இத்யாதி -இறே –அத்தால் வந்த தைரியத்தாலே தான் புத்தி  பூர்வம் பண்ணினவற்றையும் மதியாது இருக்கும் இறே –அவன் திண்ணிய தோளை துணித்த வலியும் பெருமையும் -என்னுதல்–வலியின் பெருமை என்னுதல் –மிடுக்கும் மேன்மையும் — அன்றிக்கே வலியினுடைய பெருமையும் –யான் சொல்லும் நீர்த்தல்ல –நாம் இப்போது சொல்லும் அளவோ –நீர்த்தல்ல –தன்மை உடைத்ததல்ல – ஸ்வபாவத்தை உடைத்ததல்ல –அவனுடைய விரோதி நிரசன சீலத்தையும்    –ஆண் பிள்ளைத் தனத்தையும் –மேன்மையையும் – நாம் இன்று இருந்து சொல்லும் அளவோ –அவன் வாராமையால் படுகிற நலிவால் வந்த குறை-அத் தலையில் இட ஒண்ணாத படி இறே அவன் ஸ்வரூபத்தை நிரூபித்தால் இருப்பது –ஆனால் பின்னை இதரராலே  வந்தது ஆகாதோ என்ன –மைவரை -இத்யாதி – நமக்கு சாத்மிக்கும் விஷயம் சாத்மியாத விஷயம் என்று ஆராயாதே ஆசைப்பட்ட நம் நெஞ்சு தந்து போன ஐஸ்வர்யம் இறே இது எல்லாம் என்கிறார் –மை வரை போல் –அஞ்சன கிரி போலே யாயிற்று திருமேனி இருப்பது –பொலியுமுரு – ஒரு த்ருஷ்டாந்தத்தை சொல்லிற்று என்ன –அவ்வளவாய் இராதே –ஸர்வதா ஸாத்ருச வஸ்து இல்லாமையால்- உள்ளத்தில் உரு செய்த ஒன்றை போலியாக சொல்லப் புக்கு – பின்னையும் அது தானும் போராதே இறே இருப்பது –பிரானார் –பக்தாநாம் -என்று இறே இவர் படி –புனை இத்யாதி –
அவர் சாத்தின அழகிய திருத் துழாய் மலர்க்கே –மெலியும் மட நெஞ்சினார் – சாத்மிக்கும் விஷயத்தில் ஆசைப்பட்டு கிடையா விட்டால் படும் அதைப்பட்டு கிடையாது என்று இருந்தாலும் – பற்றிற்று விடாதே நிற்கிற நம் நெஞ்சு தந்து  போன-கிலேசம் இறே இது எல்லாம் –

ஆழ்வார் திரு உள்ளம் அவன் திருத் துழாய் மாலையைப் பெற ஆசைப்பட்டு கிடையாமையாலே இவருக்கு வருத்தம் விளைவித்து அவன் இடம் தான் போய் அடைந்ததே-இவரே தேவாதி தேவன் என்பதை நரகாசுர வத – பாணாசூர விருத்தாந்தங்களால் வெளியிட்டு –-வருணன் குடை -மந்தரகிரி சிகரம் ரத்னா கிரி -அதிதி உடைய குண்டலங்கள் -ஐராவத யானை -கவர்ந்து போக -சத்யாபாமை தேவி யுடன் கருட வாகனத்தில் வந்து முரனை அழித்து-நாயகனையும் அழித்து 16100 — தேவ கன்னிகைகளையும் -கொண்டு பாரிஜாதம் கொணர்ந்து துவாரகையில் சத்யா பாமை வீட்டுப் புழக்கடையில் நாட்டினானே-அவனது விரோதி நிரசன வல்லமை பரத்வம் நம் போல்வாருக்கும் வேதங்களுக்கும் கூட சொல்ல முடியாதே-அவனைக் கிட்டி அனுபவிக்கப் பெறாமல் அவனது போக்யத்தையிலே மனம் செலுத்துவதும் ஆற்றாமையையே விளைவிக்கும் -என்றவாறு–பிரிவாற்றாத தலைவி தலைவனது ஆற்றலைக் கருதிநெஞ்சழிந்து இரங்கும் பாசுரம் இது.-நானோ வென்னில் எனது நாயகருடைய அதிமாநுஷ சேஷ்டிதங்களையும் ப்ரபுத்வத்தையும் நோக்கி ‘நமக்கு அவர் துர்லபர்’ என்று கருதி ஒருவாறு காதலையடக்கி ஆறியிருக்குந் தன்மையுடையேன்;-எனது மனமோ அங்ஙனம் ஆறியிராமல் அவனது மாலையைப் பெறுதற்கு ஆசைப்பட்டு அது கிடையாமையால் எனக்கு இப்படிப்பட்ட வருத்தத்தை வினைத்துத்தான் அவனிடம் போய்விட்டது என்று இரக்கத்தோடு உரைத்தானாயிற்று.-நரகாஸுரனைக் கொன்று பதினாறாயிரத்தொருநூறு கன்னிகைகளை மணஞ்செய்து கொண்டவரும், பாணாஸுரனது தோள்களைத் துணித்து ஆவன் மகனான உஷை தனது போனான அநிருத்தனை வெளிப்படையாக மணஞ் செய்துகொண்டு கூடி வாழும்படி செய்தவருமான தலைவர் அவர் பக்கற்காதலியாகிய என்னை வந்து அடைந்து இன்பமடைவிக்க வேண்டாவோ வென்பால் அவ் விரண்டு வரலாறுகளையும் எடுத்துக் கூறினாள்.-தாமே தேவாதிதேவ ரென்று தோன்றும்படி வெளியிட்ட வீர்ய சக்தியை ‘பெருமை’ என்றது.-வீட்டிற்று உயிர் விடுவித்தது; இறந்த காலத் தொழிற்பெயர். விடு என்பதன் விகாரமாகிய வீடு என்பதனை பிறவினையான ‘வீட்டு’- பகுதி;
று- விகுதி. இனி, வீழ்த்திற்கு என்பது வீட்டிற்று என மரூஉ வாயிற்றென்பாருமுளர்.
-நீர்த்து = நீர்மை என்னும் பண்பின் அடியாய்ப்பிறந்த ஒன்றன்பாற் குறிப்புமுற்று. மை வரை = மேகம் படிந்த மலை என்னவுமாம்.-பாட்டின் முடிவில் ‘வேதகா’ என்னும் வடசொல் ஐயீறாகத் திரித்தது. வலியின் பெருமையும், என்றும் பாடமுண்டாம்.-ஆஸ்ரித விரோதிகளை அழிக்குங்குணம் எம்பெருமானுக்கு இயல்பாயிருக்கவும் தாம் அவனருளால் தமது பிரதிபந்தங்கள் ஒழிய அவனது போக்யத்தையை அநுபவிக்கப் பெறாமல் மனங்கலங்கி அதனால் வருந்துகிறபடியை ஆழ்வார் அருளிச் செய்தல் இதற்கு உள்ளுறை பொருள்.-எம்பெருமானது விரோதி நிரஸந் சக்தியும் பரத்வ மஹிமையும் எம்போலியர்க்கு வரையறுத்துச் சொல்லக் கூடியவையல்ல; தேவங்களுக்கும் எட்டாதவை; அப்படிப்பட்ட ஸர்வேஸ்வரனைக் கிட்டி அநுபவிக்கப் பெறாத வளவில் அவனது யோக்யதையில் மனஞ் செலுத்துதலும் ஆற்றாமை துயரையே மூட்டுகின்ற தென்றவாறு.

நலியும் நரகனை வீட்டிற்றும்-மேலிட்டு நலிந்து வருகிற நரகா ஸூரனை ஸத்யபாமைப் பிராட்டி வார்த்தைக்காக விழப் பண்ணினதும்–வாணனை திண் தோள் துணித்த வலியும்-உஷையையும் அநிருத்தரையும் கொண்டு போய் இருக்கைக்காக பாணனுடைய யுத்த ஆகாங்ஷியான திண்ணிய ஆயிரம் தோளையும் அறுத்து விழவிட்ட ஆயுத பலமும்–பெருமையும் அந்த பாண யுத்தத்தில் ஈஸ்வர அபிமானியான ருத்ரனை முதுகு புறம் கொண்ட சர்வேஸ்வரத்வமும்-யான் சொல்லும் நீர்த்தல்ல-வேதங்கள் அகப்பட எல்லை காண மாட்டாத இக்குணங்கள் அல்ப ஞானனான நான் சொல்லும்படியான நீர்மையை யுடையது அல்ல–மைவரை போல் பொலியும் உருவில் பிரானார்-அஞ்சன கிரி போலே வளர்ந்த வடிவை யுடையராய் இருக்கிற உபகாரகர் ஆனவர்–புனை பூம் துழாய் மலர்க்கே-வெற்றிக்கும்
அழகுக்கும் சூட்டின அழகிய திருத் துழாய்த் தாருக்காக-மெலியும் மட நெஞ்சினார்-ஈடுபட்டு பற்றிற்று விட மாட்டாத நெஞ்சினாரானவர்-தந்து போயின வேதனையே –அத் தார் நசையாலே நம்மை விட்டுப் போகிற போது நமக்குத் தந்து போனவை கிலேசங்களாய் இருந்தன விறே என்று அழிந்து உரைத்தாள் யாயிற்று-இத்தால் ஈஸ்வரனுடைய விரோதி நிரசன சக்தி அபரிச்சிந்னையாய் இருக்கச் செய்தேயும்
அநுபவ ஸித்தி பிறவாத அளவிலே அதிசயித போக்யதை ஆர்த்தியைப் பிறப்பிக்கும் என்றதாயிற்று

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-வியாக்யானம்-திவ்ய ஆயுதாதிகளை நமக்கு அனுபாவ்யமாக்கி உபகரிக்குமவரால் தம் அழகுக்கும் ஐஸ்வர்யத்துக்கும் அநு குணமாகச் சாத்திக் கொள்ளப்பட்ட
அழகிய திருத்துழாய் மாலையில் உள்ள குஸூ மங்களுக்கே ஆசைப்பட்டு கிலேசிக்கும் எனக்கு பவ்யமான பெருமையுள்ள மனஸ்ஸாகிறவர் தாம் என்னை விட்டு அவன் இடத்தில் போம் போது தந்து போன வேதனை இது என்று அறியுங்கோள் என்கிறாளாய் அருளிச் செய்தார் –

தாத்பர்யம்–கிருஷ்ணாவதார திருத்துழாய் மேல் ஆசைப்பட்டு அவன் அப்பொழுதே வந்து தந்து ஆஸ்வாசப் படுத்தாமல் போனது அவர் தோஷம் இல்லை-கிடைக்காத ஒன்றை ஆசைப்பட்ட நெஞ்சு –
அதன் தோஷம் தான் இது என்று-மனதை வெறுத்து நாயகி பாசுரம்-மணம் செய்ய யோக்யதை கொண்ட தேவ மஹிஷிகள் -16108 -சிறை வைத்த நரகாசுரனை சத்யபாமை கூட்டிச் சென்று சம்ஹரித்த மஹா உபகாரகன் உஷை அநிருத்த சேர விட்ட வலிமையையும் பெருமையும் -வேதமே சொல்ல முடியாத பெருமை அன்றோ-மஹா குணங்களை யுடையவன்-எட்டா நிலத்தில் அஞ்சன கிரி போன்ற அவனது திருத்துழாயில் ஆசைப்பட்டு அரியதை ஆசைப்பசுடாதே என்று சொன்னாலும் கேளாத மனம் தந்து போன நலிவே இது

7-10-இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும்-ப்ரவேஸம்-

சர்வேஸ்வரன் தம்மைக் கொண்டு திருவாய்மொழி பாடுவித்துக்கொண்ட மஹோபகாரத்துக்குப் பிரதியுபகாரம்
தேடிக் காணாமை தடுமாறினார், மேல் திருவாய்மொழியிலே;
இவர் தாம் தம்முடைய மயக்கத்தாலே பிரதியுபகாரந்தேடித் தடுமாறினார்த்தனை போக்கி
இவர் தம்மால் கொடுக்கலாவது ஒன்றும் இல்லை;
அவன் ஒன்று கொண்டு குறைதீர வேண்டும் விருப்பமுடையன் அல்லன்;
இவர் தம்முடைய உபகார ஸ்மிருதி இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலே செய்தது ஒன்றே அன்றோ?

ஆனாலும், ஆறி இருக்கமாட்டாரே! இனி, நாமும் அவனுக்கு ஒன்று கொடுத்தோமாய்,
அவனும் நம் பக்கல் ஒன்று பெற்றானாகச் செய்யலாவது ஒன்று உண்டு.
அவன், தனக்கு வகுத்த கைங்கரியத்தைச் செய்யவே,
அதனைத் தனக்குப் பிரதியுபகாரம் செய்ததாக நினைத்திருக்கும் தன்மையனாய் இருந்தான்;
ஆன பின்பு, உம்முடைய சொரூபத்திற்குத் தகுந்ததான ஆத்துமா உள்ள அளவு உளதான அடிமையிலே அதிகரிப்போம்’ என்று பார்த்தார்.

இனித்தான் வேத வாக்கியங்களும் ‘தனது இயல்பான வடிவினை அடைகிறான்’ என்று
சொரூபத்தின் அடைதல் அளவும் சொல்லவே, அதற்கு அப்பால் கைங்கரியமானது அவகாத ஸ்வேதம் போலே
தன்னடையே வரும் என்று ப்ரஹ்மத்தினை அடைதல் அளவும் சொல்லிவிடும்.
ஸவேந ரூபேண அபிநிஷ்பத்யதே’-என்பது, சுருதி.
அவகாத ஸ்வேதம் – நெல் முதலியவற்றைக் குற்றும் போது சரீரத்தில் தோன்றும் வியர்வை.

ஆழ்வார்கள் ‘வழுவிலா அடிமை செய்யவேண்டும் நாம்’ என்று அது தன்னையே சொல்லா நிற்பார்கள்;
அடைந்தன் பலமான கைங்கரியத்தில் ருசியாலே.
‘சம்சாரம் தியாஜ்யம்; சர்வேஸ்வரன் உத்தேசியன்’ என்கிற ஞானம் பிறந்து, பகவானை அடைந்தவர்கள்,
‘பகவானை அடைதல் (பிறவிப் பிணிக்கு) மருந்து’ என்று பகவானை அடைதல் அளவிலே நின்றார்கள்;
பேஷஜம் பகவத் ப்ராப்தி:’ என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 6. 5 : 59.-

அவர்களைக் காட்டிலும்’ மயர்வற மதிநலம் அருளினன்’ என்கிறபடியே, பகவானுடைய திருவருளாலே
அடைந்த ஞானத்தையுடையரான இவர்களுக்கு வாசி இதுவாயிற்று.
இனி, அடிமை செய்யுமிடந்தன்னில் ‘சரீர சம்பந்தம் அற்றுப் பரமபதத்தை அடைந்தால் பின்பு செய்யுகிறோம்’ என்று
அவ்வளவும் ஆறியிருக்கும்படியன்றே, செய்ந்நன்றி நினைவு இவரை நலிகிறபடி?

ஆகையாலே, ‘ஸ்ரீவால்மீகி பகவான் பாடின ஸ்ரீராமாயணம் கேட்கைக்குத் திருவயோத்தியையிலே
திருத்தம்பிமாரும் தாமுங்கூடப் பெருமாள் பேரோலக்கம் இருந்தாற்போலே,
சர்வேஸ்வரனும் நாம் பாடின திருவாய்மொழி கேட்கைக்காகத் திருவாறன்விளியிலே
பரியங்க வித்தியையிற்சொல்லுகிறபடியே திருவனந்தாழ்வான் மேலே நாய்ச்சிமாருடனே கூடி
நித்திய பரிஜனங்களோடே கூட எழுந்தருளியிருந்தான்’
அங்கே சென்று திருவாய்மொழி கேட்பித்து அடிமை செய்வோம்,’ என்று எண்ணுகிறார்.

(அயோத்யையில் கேட்டதாக இங்கு தெளிவாக
வால்மீகி ஆஸ்ரமம் அருகில் -நைமிசாரண்யத்தில் கேட்டு அருளினார் என்பாரும் உண்டு
முக்காலும் அறிந்த வால்மீகி அயோத்யைக்கு வந்ததாக சொல்லலாம் )

அங்ஙனம் எண்ணுமிடத்திலும், சர்வேஸ்வரன் அடையத் தக்கவனானால் அர்ச்சிராதி கதியோடு
தேசவிசேடத்தோடு வாசி அற அடையத்தக்கதில் சேர்ந்த தேயாமன்றோ? என்றது,
‘முன்பு அடையப்படாதனவாய்ப் பின்பு உபாயத்துக்குப் பலமாய் வருவன யாவை சில?
அவையெல்லாம் அடையத்தக்கதில் சேரக் கடவனவாம் அன்றோ?’ என்றபடி.அப்படியே,
‘திருவாறன்விளையிலே எழுந்தருளியிருக்கிற சர்வேஸ்வரன் திருவடியிலே போய் அடிமை செய்யக் கடவோம்.
அதுதானும் வேண்டா;
அந்தத் தேசத்தை அடைதல்தானே அமையும். அதுதானும் வேண்டா;
இங்கே, இருந்தே அங்கு ஏறப்போவதாக எண்ணுகிற அவ்வெண்ணந்தானே அமையும்.

இனி, நாம் அத்தேசம் அடையத் தக்கது என்று புத்தி பண்ணிப் போருவதைப் போன்று,
அவனும் நாம் இருந்த தேசத்தைக் குறித்து வரக்கடவன்:
அவ்வளவிலும் நாம் அவனைத் தொடர்ந்து சென்று விட்டு நாம் அத்தேசத்திலே போய்ப் புகக்கடவோம்;
அத்தேசமே நமக்கு அடையத் தகுந்தது; அங்கே போய்ப் புகவே, நம்முடைய கைங்கரிய விரோதிகள் அனைத்தும் கழியும்.
இனி, நான் வேறு ஒன்றிலே இச்சை பண்ணினாலும், என் நெஞ்சமானது அத்தேசத்துக்கு ஒழிய ஒரு தேசத்துக்கு ஆளாக மாட்டாது;

‘என்னுடைய மனமானது வேறு ஒன்றிலும் செல்லுவது இல்லை’ என்கிறபடியே.
’ பாவோ நாந்யத்ர கச்சதி’ என்பது, ஸ்ரீராமா. உத்தர. 40 : 15
ஆக, திருவாறன்விளையிலே புக்கு அடிமை செய்யக்கூடிய படிகளை எண்ணி இனியர் ஆகிறார்.
ஸ்ரீ ராமாயணத்தைக்காட்டிலும் இதற்கு வாசி, பாடினாரே கேட்பிக்கையும், பாட்டுண்டாரே கேட்கையுமாயிற்று.

சீதையின் மஹத்தான சரிதம்’ என்னா நிற்கச் செய்தே,
கவி பாட்டுண்டவளை ஒழியத் தானே அன்றோ கேட்டது?
பாடினான் ஸ்ரீவால்மீகி பகவான்; கேட்பித்தாரும் குசலவர்கள் அல்லரோ?

7-2-கங்குலும் பகலும் -அடுத்த 7-3-நிகரில் முகில் வண்ணன் பின்பு ஆறு திருவாய் மொழிகளும்
திவ்ய தேச பதிகங்கள் இல்லையே
இதில் மீண்டும் திவ்ய தேசம்
வன்னி பழம்-அர்ஜுனன் சம்பந்தம் -பாம்பை ஆற்றங்கரை -இன்றும் இங்கே பிரசாதம் –
ஆகிஞ்சன்யம் இவருக்கு -அவனுக்கு பூர்த்தி -அவாப்த ஸமஸ்த காமன் -பிரதியுபகாரம் இங்கும் அங்கும் இல்லை என்றவர்
வகுத்த கைங்கர்யம் உண்டு என்று கண்டு பிடித்தார்
ஸ்வரூப சித்திக்கு செய்வதை பிரதியுபகாரம் என்று அவன் திரு உள்ளம் பித்தன் அன்றோ-
துணைக் கேள்வி -இங்கு -நம்மைப் பார்க்கும் வேகத்தில் பாசுரம்விடாதீர் -திருக் குறள் அப்பன் –
32 நாள் லவ குசர் ஸ்ரீ ராமாயணம் அருளி -சிலர் நைமிசாரண்யத்தில் என்பர் -இங்கு ஈட்டில் திரு அயோத்யையில் என்று தெளிவாக உள்ளதே –

பத்தாம் திருவாய் மொழியில்
கீழ் இப்படி தம்மைக் கொண்டு கவி பாடுவித்துக் கொண்ட மஹா உபகாரத்தால் தம்முடைய விரோதி அஸத் சமமாம்படி
ஹ்ருஷ்டரானவர் -அவன் உபகாரத்துக்கு ஒரு பிரதியுபகாரம் காணாமையாலே
சேஷியானவனுக்கு அதிசய ஜனகமான சேஷ வ்ருத்தி ஒழிய இல்லை என்று அறுதி இட்டு -பிரதி சம்பந்தியான அவனுடைய
அசேஷ சேஷித்வ ப்ரகாசகமான ஸ்ரீ யபதித்தவ பூர்த்தியையும்
அநந்யார்ஹ சேஷத்வ அபதானத்தையும்
ஆஸ்ரித ரக்ஷண ஆகாரத்தையும்
அனுபாவ்யமான விக்ரஹ யோகத்தையும்
அனுபவ அர்த்தமான அவதாரத்துக்கு மூலமாயுள்ள அனந்த சயனத்வத்தையும்
அநிஷ்ட நிவ்ருத்தி விசிஷ்டமான அபிமத சயாகத்வத்தையும்
பிரபல விரோதி பஞ்சநத்வத்தையும்
ஆந்திர துக்க நிவர்த்தகதத்தையும்
பாபம் நிவ்ருத்தமாய் ப்ராப்ய தேசம் சித்திக்கிலும் உத்தேசியமான ஆஸன்ன தேச யோகத்தையும்
நிரதிசய வ்யவசாய ஜனகத்வத்தையும்
அனுசந்தித்து -ஏவம் வித ஸ்வ பாவனான அவன் நம்மை விரோதியைக் கழித்து அடிமை கொள்ளுகைக்காக ஆசன்னமான
திரு வாறன் விளையிலே ஸந்நிஹிதனான அவன் திருவடிகளிலே அடிமை செய்யக் கடவோம் என்று மநோ ரதித்து
இப்படி நிவர்த்திய விரோதி பல நிரூபண பூர்வகமாக அதனுடைய சரண்ய நிவர்த்யத்வத்தை நிஷ்கர்ஷித்து நிகமிக்கிறார் –

இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற் றமர்ந் துறைகின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை
அன்புற் றமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களு மாகுங் கொலோ?–
7-10-1-

இன்பம் பயக்க – எப்பொழுதும் துக்கத்தையே அடைந்து கொண்டிருக்கிற சம்சாரி சேதனனுக்குத் தன்னுடைய சேர்த்தியாலே ஆனந்தம் உண்டாமாறு போலே ஆயிற்று பிராட்டியுடைய சேர்த்தியாலே
‘ஆநந்த மய:’ என்கிற வஸ்துவான அவன் தனக்கும் ஆனந்தம் உண்டாம்படியும்;
‘அல்லி மலர் மகள் போக மயக்குகளாகியும் நிற்கும் அம்மான்’ திருவாய். 3. 10 : 8.என்று
பிராட்டியுடைய சேர்த்தியாலே பிச்சு ஏறி இருக்குமாயிற்று.-இருவருமான சேர்த்தியிலே, இதற்கு முன்பு ஆனந்தம் புதியது உண்டு அறியாதான் ஒருவனுக்கு ஆனந்தம் உண்டாமாறு போலே ஆயிற்று, கணந்தோறும் உண்டாம்படி.’-இருவருமான சேர்த்தியாலே தங்களுக்கு ஆனந்தம் உண்டாக, அச் சேர்த்தியைக் காண்கையாலே உலகத்துக்கு ஆனந்தம் உண்டாக,
அதனைக் கண்டு குழந்தை பால் குடிக்கக் கண்டு உகக்கும் தாயைப் போலே
இவர்களுக்கு உண்டான பிரீதியைக் கண்டு அதனாலே தாங்கள் இனியராய் இருப்பர்களாயிற்று.

இனிது உடன் வீற்றிருந்து ஆள்கின்ற – தன் சந்நிதியாலே உலகம் அடையத் தளிரும் முறியுமாம்படி இருக்கிறவன், தான் பெறாப் பேறு பெற்றாற்போலே, ‘திருவாய்மொழி கேட்கைக்குத் தகுதியாக இருப்பது ஒரு தேசம் பெற்றோம்’ என்று விரும்பி வசிக்கிற தேசமாயிற்று.-

அன்புற்று –‘திருவாய்மொழி கேட்கலாய் இருப்பது ஒரு தேசம் பெறுவோமே!’ என்று அங்கே அன்பினை வைத்து.-அமர்ந்து – அந்தத் தேச வாசத்துக்கு மேற்பட ஒரு பிரயோஜனத்தைக் கணிசியாதே விரும்பி.-உறைகின்ற – அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதியாதே, நித்திய வாசம் செய்கிற.

அணி பொழில் சூழ் திருவாறன்விளை –-‘பிராப்பிய பூமி’ என்று தோற்றும்படி இருப்பதாய், அவன் தனக்கும்-விபூதியில் உள்ளாருக்கும் -உலகத்துள்ளார்க்கும் இருந்து
திருவாய்மொழி கேட்கைக்குத் தகுதியான பரப்பை யுடைத்தாய். காட்சிக்கு இனியதாய் இருக்கிற பொழிலாலே சூழப்பட்ட திருவாறன்விளையை.

அன்புற்று – ‘திருவாய்மொழி கேட்கைக்குத் தக்கதான தேசம் பெற்றோம்’ என்று அவன் விருப்பத்தை வைத்தாற்போலே, ‘திருவாய்மொழி கேட்பிக்கைக்குத் தக்கதாய் இருப்பது ஒரு தேசத்தைப் பெறுவோமே!’ என்று அத் தேசத்திலே விருப்பத்தை வைத்து.-அமர்ந்து – அத் தேச வாசத்துக்கு அப்பால் ஒரு பிரயோஜத்தை -கணிசியாதே -விரும்பாமல்.-வலஞ்செய்து 
வலம் வருதல் முதலானவற்றைச் செய்து.-கை தொழும் நாள்களும் ஆகுங்கொலோ 
‘அந்தக் காலம் இந்த நாளாக வேண்டும்’ என்றாரே ஸ்ரீகௌசல்யையார்.
‘போய் வருகை தவிராராகில் மீண்டு புகுரும் நாள் இன்று ஆயிற்றாகிலோ’ என்றார் போலே,இந்த எண்ணத்திற்கு அடைத்த காலமே அனுபவத்துக்கு அடைத்த காலமாகப் பெற்றோம் ஆகிலோ?’ என்கிறார்.-

———-

ஆகுங்கொல் ஐயம் ஓன்று இன்றி அகலிடம் முற்றவும் ஈரடியே
ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறளப்பன் அமர்ந்து உறையும்
மாகந் திகழ் கொடி மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளை
மாகந்த நீர் கொண்டு தூவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொலோ?
–7-10-2-

அமர்ந்து உறையும் – இந்திரனுக்கு இராச்சியத்தை வாங்கிக் கொடுத்துத் திருப் பாற் கடலிலே போய்ச் சாய்கை அன்றிக்கே, அவன் வந்து நித்திய வாசம் செய்கிற.

மாகம் திகழ் கொடி மாடங்கள் நீடு மதிள் திருவாறன்விளை –-அவன் திருவடியால் அளந்த ஆகாசப் பரப்பு அடங்கலும் பரந்துள்ள கொடிகளை யுடைத்தான மாடங்களை,
ஓங்கி யிருந்துள்ள மதிள்களை யுமுடைத்தான திருவாறன் விளையை. -கொண்டைக் கோல் நாட்டிய இடம் இது

மா கந்தம் நீர் கொண்டு தூவி வலஞ்செய்து கை தொழக் கூடுங்கொல் –‘பூமியை அடங்கலும் பனி போன்ற குளிர் நீரால் நனைக்கட்டும்’ என்று ஸ்ரீ நந்திக் கிராமம் தொடங்கி
ஸ்ரீ பரத்துவாச பகவான் ஆஸ்ரமத்தளவும் வர, பனி நீராலே விடுவித்தான் ஸ்ரீசத்துருக்நாழ்வான் என்றது அன்றோ?-அப்படியே, மா கந்த நீர் கொண்டு தூவி அநுகூலமான காரியங்களைச் செய்து கை தொழக் கூட வற்றேயோ?-

———

கூடுங்கொல்? வைகலும் கோவிந்தனை மதுசூதனைக் கோளரியை
ஆடு பறவை மிசைக்கண்டு கைதொழுது அன்றி யவன் உறையும்
பாடும் பெரும்புகழ் நான்மறை வேள்வி யைந்து ஆறங்கம் பன்னினர் வாழ்
நீடு பொழில்திரு வாறன் விளை தொழ வாய்க்குங்கொல் நிச்சலுமே?
–7-10-3-

கோவிந்தனை மதுசூதனைக் கோள் அரியை – அங்கு நிற்கிறவனைக் கண்டால் மூன்று படி தொடை கொள்ளலாய் இருக்கும்.-1-ஆஸ்ரித வாத்சல்யம், 2-ஆஸ்ரித விரோதி நிரசின சீலதை, 3-அடியர் அல்லார்க்குக் கிட்டுதற்கும் அரியன் என்னும் இவை.

ஆடு பறவை மிசைக் கண்டு – வெற்றிப் புள்ளின் மேலே கண்டு. ஆடு – வெற்றி.
அன்றிக்கே,-சர்வேஸ்வரன் வாகனம் என்கிற உவகையின் மிகுதியாலே-மது பான மத்தரை-  கட் குடியர் போன்று களித்து ஆடா நின்றுள்ள திருவடி திருத் தோளிலே கண்டு என்னுதல்.
நாம் திருவாறன்விளையைப் பிராப்யம் என்று போகிறதைப் போன்று, அவனும் திருநகரியையே’உத்தேஸ்யமாம் என்று வாரா நிற்கும் அன்றோ?-கண்டு –-நடு வழியிலே கண்டால். கை தொழுது – காரியங் கொண்டிலோமே ஆகிலும், கிட்டினால் கை தொழுகைக்குச் சம்பந்தம் உண்டே அன்றோ? ஆகையாலே முறை தப்பாமல் பணிதல் செய்து.(நமஸ்கரித்து கிட்ட மாட்டோம் -கிட்டினால் நமஸ்கரிப்போம்)-போதயந்த பரஸ்பரம் -‘ஓருவர்க்கு ஒருவர் உணர்த்திக் கொண்டு’ என்னும்படி, அவ்வூரிலுள்ளாரோடு சென்று கூடவேணும்–.வாய்க்குங்கொல் நிச்சலுமே – அங்குத்தை ஸ்ரீவைஷ்ணவர்களோடே கூடி நித்தியானுபவம் பண்ணக் கூடவற்றேயோ?-

————-

வாய்க்குங்கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத் தீங்கு நினைக்கப் பெற
வாய்க்குங் கரும்பும் பெருஞ்செந்நெலும் வயல் சூழ் திரு வாறன்விளை
வாய்க்கும் பெரும்புகழ் மூவுலகீசன் வடமதுரைப் பிறந்த
வாய்க்கும் மணி நிறக் கண்ணபிரான் தன் மலரடிப் போதுகளே?
–7-10-4-

நித்திய அக்நி ஹோத்திரம் போலே ஒரு கால விசேடத்திலேயாய்ப் போக ஒண்ணாது,
எல்லா நிலைகளிலும் உண்டாக வேணும்.-மனத்து ஈங்கு நினைக்கப் பெற – அங்குச் சென்று அனுபவிக்க வேண்டா. இங்கே இருந்து நெஞ்சாலே அங்குத்தைப் பரிமாற்றங்களை நினைக்கப்பெற அமையும்.-‘பெற’ என்கையாலே,-இந்த எண்ணத்துக்கு அவ்வருகு ஒரு பேறு இல்லை என்று இருக்கிறார் ஆயிற்று இவர்.-இதுக்கு மேலே யோக்யதை எதிர் பார்க்க மாட்டானே -ஆசை உடையார்க்கு எல்லாம் என்று இதனாலே எம்பெருமானார் வரம்பு அறுத்தார் –

முற்காலத்தில் இடையாற்றுக்குடி நம்பி என்பார் ஒருவர் இருந்தனர்;-அவர் திருநாள்கள் தோறும் வந்து பெருமாளைச் சேவித்துப் போனால், மறித்துத் திருநாள் வருந்தனையும் அதனையே போது போக்காக நினைத்துக் கொண்டு இருப்பாராயிற்று;
ஒருநாள் ஒரு திருநாளின் வைபவத்தை நினைத்திரா நிற்கச் செய்தே, ‘அமுது செய்கைக்குப் போது வைகிற்று’ என்றார்களாக, ‘ஆகில் வருகிற திருநாள் அணித்தாகிறது’ என்றாராம்.

அவர் நூறு வயதும் புகுகையாலே வலிமை குன்றித் திருமுளைத் திருநாளில் பெருமாள் புறப்பட்டருளுகைக்கு உதவ வந்து புகுரப் பெற்றிலர்:
பெருமாளும் தேடி யருளக் காணாமல், ‘நம் இடையாற்றுக்குடியான் வந்திலன்’ நங்கண்ணாலம் அல்லவோ!’ என்று திருவுள்ளமானாராம்.

அவர் தாம் ஆறாந்திருநாளிலே சேவித்திருக்கச் செய்தே, ‘நாம் உனக்குச் செய்ய வேண்டுவது என்?’ என்று கேட்டருள,
‘தேவரீர் தந்தருளின சரீரத்தைக் கொண்டு போரக் காரியம் கொண்டேன்; இனிப் போக்குவரத்துக்குத் தகுதி இல்லாதபடி போர இளைத்தது’ என்ன,
‘வாராய், மெய்யே இளைத்தாயாகில்: இங்ஙனே இரு’ என்று அருளிச் செய்தார்;
பெருமாள் நடுவில் திருவாசலுக்கு அவ் வருகே எழுந்தருளுங்காட்டில் அவர் திருநாட்டுக்கு எழுந்தருளினார்.(திருக்கோளூர் பெண் பிள்ளை வார்த்தை–58– நில் என்று பெற்றேனோ இடையாற்றூர் நம்பியைப் போலே)

அழகிய நீல மணி போன்ற திரு நிறத்தை யுடைய உபகாரத் தன்மையனான கிருஷ்ணனுடைய மலர்ச்சி பொருந்திய திருவடிகளாகிற செவ்விப் பூக்களை ஈங்கு மனத்து நினைக்கப் பெற வாய்க்குங்கொல். நிச்சலும் எப்பொழுதும்.-

————–

மலரடிப் போதுகள் என்நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்கப்
பலரடியார் முன்பு அருளிய பாம்பணை யப்பன் அமர்ந்துறையும்
மலரின் மணிநெடு மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளை
உலக மலி புகழ் பாடநம் மேல் வினை ஒன்றும் நில்லா கெடுமே.
–7-10-5-

பலரடியார் முன்பு அருளிய-ஸ்ரீ வேத வியாச பகவான், ஸ்ரீ வால்மீகி பகவான், ஸ்ரீ பராசர பகவான், ‘இன்கவி பாடும் பரமகவிகள்’ என்று சொல்லப்படுகிற
முதலாழ்வார்கள் எல்லாரும் உளராயிருக்க, என் பக்கல் விசேட கடாட்சம் செய்வதே!-கிழக்குத்தை இராசாக்கள் பொல்லாங்காலே இங்கே நலிவு பிறக்குமளவிற்செய்வது என்?’ என்று எம்பெருமானார் அதனை நினைந்தருளி, ‘இத் தேசத்தை விடாதே நோக்கிக்  கொண்டு கிடந்தோம்;-இவ் விடத்துக்கும் அழிவு வரும்படி ஆசுர வர்க்கம் மேலிடாநின்றது; மேல் செய்ய அடுப்பது என்?’ என்று பெரிய நம்பிக்கு அறிவிக்க,
‘நான் பெருமாளுடைய திரு எல்லையிலே ஒரு பிரதக்ஷணம் வரும்படியாக உம்முடைய சிஷ்யர்களிலே ஒருவரைப் போர விடுவது’ என்ன
‘அதற்கு ஆவார் ஆர்?’ என்ன, ‘என் பின்னே போராநின்றால் ‘ஒருவன் பின்னே போகாநின்றேன்’ என்று தன் நெஞ்சிற்படாதே சாயை போலே என்னைப் பின் செல்வான் ஒருவனாக வேணும்’ என்ன, கச்சதா மாதுல குலம்-உடை வாள்-அனகா- நித்ய சத்ருக்ந ப்ரீதி உடன் போனது போலே –
‘அதற்கு ஆவார் அர்?’ என்ன,‘ஆழ்வானைப் போக விடலாகாதோ?’ என்றாராம்.
ஆக, பல முதலிகள் இருக்க, ஆழ்வானைக் கொடுத்தாற்போலே

உலகம் மலி புகழ் பாட – ஈண்டின இடத்தில் வெள்ளம் போலே உலகத்தில் அடங்காதபடியான அவனுடைய கல்யாண குணங்களைப் பிரீதியினாலே தூண்டப்பட்டவராய்க் கொண்டு பாட.-நம் மேல் வினை ஒன்றும் நில்லா கெடும் –
பாபம் போகைக்காகத் தனித்து ஒரு முயற்சி செய வேண்டா; பால் குடிக்க நோய் தீருமாறு போலே நம்முடைய பாபங்கள் தாமே நசித்துப் போம்

—————

ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீவினை உள்ளித் தொழுமின் தொண்டீர்!
அன்றங்கு அமர்வென்று உருப்பிணி நங்கை அணி நெடுந் தோள் புணர்ந்தான்
என்றும் எப்போதும் என்நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக் கின்ற பிரான்
நின்ற அணி திரு வாறன்விளை என்னும் நீணக ரமதுவே.–
7-10-6-

ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீவினை –இவன் தான் போக்கப் பார்க்கும் அன்று அன்றோ, புதுப் புடவை அழுக்குக் கழற்றுமாறு போலே சிறிது கிடக்கச் சிறிது போவது?
அங்ஙன் அன்றிக்கே, வரம்பில் ஆற்றலை யுடை இறைவன் போக்கும் அன்று வாசனையோடே போமே அன்றோ?

அங்கு –இவன் விரையா நின்றான், உடையவன் வந்து கைக் கொள்ளானோ என்று இருக்கிற அளவிலே, தூணிலே தோற்றினாற்போலே தோற்றினான் ஆயிற்று. -குண்டின புரம் -ருக்மிணி தேவி சந்நிதி உண்டு –தாருகன் தேரோட்டி –அங்கே அவன் வீயத் தோன்றியது போலே -மடுத்தூதிய சங்கு ஒலி கேட்டு மகிழ்ந்தாள் –இதனால், ‘விரும்பினவர்கள் விரும்பும் சமயத்திலே வந்து தோன்றுமவன்’ என்பதனைத் தெரிவித்தபடி.-

நின்ற அணி திருவாறன்விளை என்னும் நீள் நகரமது –பிரகாசியா நிற்கச் செய்தேயும் கண்களுக்கு இலக்கு ஆகாதபடி இருக்கை அன்றிக்கே,‘இவன் நமக்கு உளன்’ என்று அச்சந் தீரும்படி கண்களாலே கண்டு அனுபவிக்கும்படி நிற்கிறஅழகிய திருவாறன்விளையாகிற மஹா நகரத்தை.-உள்ளித் தொழுமின் தொண்டீர்! –-‘தாம் அடிமை செய்ய நினைக்கிறாகில் ‘உள்ளித் தொழுமின்’ என்கிற பரோபதேசத்துக்குக் கருத்து என்?’ என்னில்,
இவர்க்குச் சுவானுபவந்தான் பரோபதேசத்தை ஒழிந்து இராது; நெஞ்சினை விளித்ததோடு ‘தொண்டீர்’ என்றதனோடு வாசி இல்லை.நெஞ்சு போல்வாரை தொண்டீர் -என்கிறார் -சுய அனுபவ ஹானி இல்லையே –

————-

நீணகரமதுவே மலர்ச் சோலைகள் சூழ் திரு வாறன்விளை
நீணகரத் துறைகின்ற பிரான் நெடுமால் கண்ணன் விண்ணவர்கோன்
வாணபுரம் புக்கு முக் கட்பிரானைத் தொலைய வெம் போர்கள் செய்து
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்றொன்று இலமே
.–7-10-7-

திருவாறன்விளையே பிராப்பியம் என்னா நின்றீர்; அவன் அன்றோ பிராப்பியன்?’ என்ன,
‘அன்று என்ன வல்லேனோ? என் சித்தாந்தம் இருக்கும்படி கேட்கலாகாதோ?’ என்கிறார்.
‘உபாசனத்தின் பலமாய் வருமவை யெல்லாம் பிராப்பியத்திலே சேர்ந்தனவாகக் கடவன;(ஆஸ்ரயண பலமான அர்ச்சிராதிகதி தொடக்கமான எல்லாமே ப்ராப்ய அந்தர் கதம் தானே )-அன்றிக்கே,-‘சாத்தியத்தின் வளர்சிக்கு உடலாய் வருமவை யெல்லாம் பலத்துக்கு உடலாகக் கடவன,’ என்னுதல்,-ஆகையாலே, பிராப்பிய பூமி அந்தத் தேசமே; அங்கே கொடு போய்ச் சேர்க்கும் கடகன் அவன்;-இது என் சிந்தாந்தம் இருக்கும்படி’ என்கிறார்.

‘அவனுக்குக்கூடப் பிராப்பிய பூமி’ என்று தோற்றும்படி இருக்குமாயிற்று.
ஸ்ரீ வைகுந்த நாதன் இத்தை பிராப்யம் என்று அன்றோ உகந்து நித்ய வாசம் செய்கிறான் –சரண் – அவன் கடகன்; திருவாறன்விளையே பிராப்பியம்.-பிராப்பியனானவன் வந்து எழுந்தருளி யிருக்கும் தேசம் ஆகையாலே அவனுடைய சம்பந்தத்தாலே
அத் தேசமும் பிராப்பியம் என்கைக்குத் தட்டு இல்லை.-ஓர் அறப் பெரியவன் உபாயமாய்ப் பலத்தைக் கொடுக்கிறவனாக வேணுமே: ஆகையாலே, அவன் உபாயம்; அத் தேசம் பிராப்பியம்.-அன்றி மற்று ஒன்று இலமே –இங்ஙன் அல்லது உபேய உபாயங்கள் மாறாடக் கடவோம் அல்லோம்.

———–

அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று அகலிரும் பொய்கையின் வாய்
நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான்
சென்று அங்கு இனி துறைகின்ற செழும் பொழில் சூழ் திரு வாறன்விளை
ஒன்றி வலஞ்செய ஒன்றுமோ? தீவினை உள்ளத்தின் சார்வல்லவே
.–7-10-8-

அவனைப் பார்த்தால் தானும் அல்லாதாரைப் போன்று புறம்பாய்க் கடக்க நிற்கும்படியாய் அன்றோ சம்பந்தம் இருக்கும்படி?-ஆகைச் சுட்டி அன்றோ பிரணவத்தில் நடுப் பதம் கிடக்கச் செய்தே அன்றோ திரு மந்திரத்தில் நடுப் பதம் ஜீவிக்கிறதும்?திருமந்திரத்தில் நடுப்பதம் ‘நம:’என்பது, ‘இத்தால் (உகாரத்தால்) தனக்கும் பிறர்க்கும் உரித்தன்று என்கிறது.’
‘நமஸ்ஸூ, ந என்றும், ம: என்றும் இரண்டு பதம்.’ ‘ம:என்கிற இத்தால் தனக்கு உரியன் என்கிறது. ‘ந’ என்று அத்தைத் தவிர்க்கிறது.’-65-
‘ஆக, நம: என்கிற இத்தால், தனக்குரியன் அன்று என்கிறது,’
ஈஸ்வரன் தனக்கே யாயிருக்கும்; அசித்துப் பிறர்க்கே யாயிருக்கும்;
ஆத்துமா தனக்கும் பிறர்க்கும் பொதுவாயிருக்கும் என்னும் முற்பட்ட நினைவு;
அங்ஙனன்றிக்கே அசித்துப்போலே தனக்கேயாக எனைக் கொள்ள வேணும் என்கிறது நமஸ்ஸால்’ –91.

ஆனையின் நெஞ்சு இடர் தீர்த்த பிரான் –துதிக்கை முழுத்தின இடரே அன்றோ? நீண்ட கை குறுகும் அளவுமன்றோ பார்த்து நின்றது?இவன் கை விட்டால் கைக் கொள்ளா நின்றானித்தனை அன்றோ?அன்றிக்கே, ‘நம் காரணமாகச் சர்வேஸ்வரனுக்கு ஒரு தாழ்வு வருகிறதோ?’ என்னும் இடராதல். என்றது, இவன் இப்படி வருந்த அவன் காத்தபடி அழகியதாய் இருந்தது! இவனையோ நாம் இப்படிக் காப்பவன் என்று நினைத்திருந்தது?’ என்று உலகத்தார் இவனை இப்படி நினைக்கின் செய்வது என்?’ என்று துன்புற்ற துன்பத்தைத் தெரிவித்தபடி.-இரண்டற்கும் இடர் வாராதபடி
கரையிலே கொண்டு ஏறி, பின்னர் முதலை வாயினைக் கிழித்து யானையின் இடரை நீக்கினானாயிற்று.

இங்கே, ‘இராச புத்திரனைச் சிறையிலே இட்டு வைத்தால் கைக் கூட்டனுக்கும் பாலுஞ்சோறும் இடுவாரைப் போலே காண்,’ என்று இதற்குப் பட்டர் அருளிச் செய்வர். இரண்டும் மோட்சத்தைப் பெற்றதே! முதலை சாப மோட்சமும், ஸ்ரீகஜேந்திராழ்வான் சாக்ஷாத் மோட்சமும் பெற்றமையைத் தெரிவித்தபடி.

பிரான் –யானையின் இடரைப் போக்கின இதுவும், அதற்கு அன்றித் தமக்கு உதவி செய்தானாக நினைத்திருக்கிறார் காணும் இவர்.-இவ் வெண்ணத்தை உடையவனாகை அன்றோ ஒருவன் வைஷ்ணவன் ஆகையாவது? என்றது,-அநுகூலரிலே ஒருவனுக்கு ஒரு நன்மை உண்டானால் அது தன்னதாக நினைத்திருக்கையும் கேடு வந்தால்
அதனைத் தனக்கு வந்ததாக நினைத்திருக்கையுமாகிற இவ்விரண்டும் உண்டானால் அன்றோ வைஷ்ணவத்துவம் உண்டாயிற்றாவது?’ என்றபடி.

சென்று அங்கு இனிது உறைகின்ற செழும் பொழில் சூழ் திருவாறன்விளை ஒன்றி வலஞ்செய ஒன்றுமோ –இவன் உதவாத அன்று அவ் யானைக்கு உள்ள இடரைப் போன்று போருமாயிற்று.-அத் தேசத்தை அடையாத போது சர்வேஸ்வரனுக்கு உண்டான இடரும்.
அவன் வந்து தன் ஆதரம் எல்லாம் தோன்ற வசிக்கின்ற அழகிய பொழிலாலே சூழப்பட்ட திருவாறன்விளையைக் கிட்டி-வலஞ்செய்தல் முதலானவற்றைச் செய்யக் கிட்டுமோ?

தீவினை உள்ளத்தின் சார்வு அல்லவே –அப்போது தீவினை உள்ளத்தின் சார்வு ஆகாது.
‘ஒளியும் இருளும் சேர்ந்து இருத்தல் உண்டோ?’ என்றது,‘அவன் வந்து நித்திய வாசம் செய்யத் தீவினை ஒதுங்க இடம் உண்டோ?’ என்றபடி.-

————–

தீ வினை உள்ளத்தின் சார்வல்லவாகித் தெளி விசும்பு ஏறலுற்றால்
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று
யாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனை
மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல்?’ என்னுமென் சிந்தனையே.
–7-10-9-

‘எனக்கு ஸ்ரீவைகுண்டமும் திருவாறன்விளையும் இரண்டும் கிடைப்பதானால், ஸ்ரீவைகுண்டத்தை விட்டுத் திருவாறன்விளையே அமையும் என்னும் என் நெஞ்சம்’ -அங்கு உள்ளாரும் வந்து விரும்பும் திருவாறன் விளை யமையும் -.-மேவி வலஞ்செய்து –அத் தலத்தை நான் சென்று அடைந்து அநுகூலமான கைங்கரியத்தைச் செய்து-கைதொழக் கூடுங்கொல் என்னும் என் சிந்தனை –என் நெஞ்சு எனக்கு அடங்கியது அன்று; ‘வேறு ஒன்றிலும் என் மனம் செல்லுவது இல்லை,’ என்கிறபடியே.–பாவோ நான்யத்ர கச்சதி -போலே –

————

சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அல்லாத்தன்மை தேவபிரான் அறியும்
சிந்தையினால் செய்வதா னறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத் தேவர் குழு வணங்கும்
சிந்தை மகிழ் திரு வாறன் விளையுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே.
–7-10-10-

இது தான் ஒரு வார்த்தை மாத்திரமேயாய் உம்முடைய நெஞ்சு பரம பதத்தை விரும்பினாலோ?’ என்ன,-‘அதனை. என் நினைவிற்கு வாய்த் தலையிலே-மூலம் – இருக்கிற சர்வேஸ்வரனைக் கேட்டுக் கொள்வது’ என்று இங்ஙனே அருளிச் செய்வர் சீயர்.
அன்றிக்கே,-‘நீர் திருவாறன்விளையை பிராப்பியம் என்று இருக்கிறீர்; ஈஸ்வரன் ஸ்வதந்திரன் அல்லனோ?-அவன் பரம பதத்தைத் தரிலோ?’ என்ன,
‘அவன் முற்றறிவினன் அல்லனோ? அறியானோ?’ என்கிறார் என்று பிள்ளான் பணிப்பர்;
புருஷார்த்தத்தைக் கொடுப்பவன் அல்லனோ? புருஷன் விரும்பியதனை யன்றோ கொடுப்பது?

யாரேனுமாகப் புக்காரை எல்லை இல்லாத ஆனந்தத்தை யுடையவர்களாகச் செய்யும் தேசம் ஆதலின், ‘சிந்தை, மகிழ் திருவாறன் விளை’ என்கிறார்.-இதனால், பிராப்பிய பூமி’ என்று தோற்றும்படி இருக்கும் என்பதனைத் தெரிவித்தபடி.

தீர்த்தனுக்கு அற்ற பின் –அவன் தன்னுடைய இனிமையின் மிகுதியாலே எனக்குப் புறம்பு உண்டான பற்றைத் தவிர்த்துத் தனக்கே அநந்யார்ஹனாம்படி செய்து கொண்ட அன்று தொடங்கி; உஜ்ஜீவிக்கப் பண்ணின அன்று தொடங்கி; நடுவே உஜ்ஜீவியாதே கிடந்து போந்ததே பல காலம்.விசேஷ கடாக்ஷத்துக்கு முன்புள்ள காலம் -உகாரார்த்தம் அர்த்தம் அறிந்த பின்பு -உ ஜீவியாத காலம்-

———

தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குரு கூர்ச்சட கோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே
.–7-10-11-

தீர்த்தன் –இன்னார்க்குத் தீர்த்தன் என்னாமையாலே தன்னினின்றும் வேறுபட்டவர்க்கு எல்லாம் தீர்த்தன் ஆயிற்று.-தீர்த்தமாவது,-தான் பரிசுத்தமுமாய், தன்னைத் தீண்டினாரையும் பரிசுத்தராம்படி செய்யுமதாயிற்று.-இத்திருவாய் மொழி வல்லார் அயர்வறும் அமரர்களால் ஸ்லாக நீயர் என்கிறார் –மஹீஷிகளை ஸ்நேஹித்து கொண்டாடும் தசையில் அவர்களுக்கு சர்வ ஸ்வதானம் பண்ணினார்களாகச் சொல்லுவார்கள் -நித்ய ஸூ ரிகள் மஹீஷிகளை கொண்டாடி இருக்கும் போது ஆகிறது -தாங்கள் கைங்கர்யத்தில் இழிந்தால் எடுத்துக் கை நீட்டும் போது-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -77-திங்கள் அம் பிள்ளை புலம்ப -தாள தாமரை -10-1-

March 18, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

மூன்று பாசுரங்களில் திருத்துழாய்-(76-77-78) உலகு அளந்த திரிவிக்ரமன் சாத்திய இலங்கை அளித்த பெருமாள் சாத்திய பாணாசூரனை முடித்த கண்ணன் சாத்திய-அன்று இவ்வுலகம் அளந்தான் அடி போற்றி-சென்று அங்கு தென் இலங்கை செற்றான் திறல் போற்றி -பொன்றச் சகடம் உதைத்தான் கழல் போற்றி -அங்கும் இதே வரிசை-துறையடைவு-மாலைப் பொழுதுக்கு ஆற்றாது தொலைவு இரங்குதல்–
தாள தாமரை -10-1-இதன் விவரணம் -திருமோகூர் ஆத்தன்–சிறப்பான உருவக அணி-ஸூர்யன் அரசன்
ஸூர்யன் கிரணம் செங்கோல்-அஸ்தமனம் அரசன் இறந்து போக -மேற்குத் திக்கு அமர்க்களம் -செக்கர் வானம் சிவந்து ரத்தம் பட்டு –-மாலைப்பொழுது மனைவி-சந்திரன் குழந்தை-கடலோசை யாதல் -பறவை சப்தம் அழுகை –

அவதாரிகை-சந்த்யையில் நோவு படுகிறாள் ஒரு தலை மகள் வார்த்தையாய் இருக்கிறது –தலைவி மாலைப் பொழுது கண்டு வருந்துதல் –

இப்படி ஆர்த்தரான இவர் தமக்கு அனுபவ யோக்ய காலம் சந்நிஹிதமாய்க் கொண்டு போக்ய விஷயத்தை ஸ்மரிப்பித்து பாதகமான பிரகாரத்தை மாலைக்கு ஆற்றாத தலைவி வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-அவதாரிகை-இதுக்கு மேல் மாலை வந்து தோன்றி நலிய அம் மாலைக்கு ஆற்றாத் தலைமகளாய் நலிவு படுகிறாள் இதில்

திங்களம் பிள்ளை புலம்பத் தன் செங்கோலரசு பட்ட
செங்களம் பற்றி நின்று எள்கு    புன்மாலை தென் பாலிலங்கை
வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா
நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே
–  -77-மாலைப் பொழுதுக்கு ஆற்றாது தொலைவு இரங்குதல்–

திங்கள்–பிறைச் சந்திரனாகிய
அம்பிள்ளை–அழகிய தனது இளம்பிள்ளை
புலம்ப–(தந்தையை இழந்து) தனிப்பட
செங்கோல் தன் அரசுபட்ட–சிவந்த ஒளியை எங்குந்தடையறச் செய்துதலாகிய
செங்கோள்மையை யுடைய தனது தலைவனான ஸூர்யன் இறந்தொழிதற்கிடமான
செம் களம்–செவ்வானமாகிய (ரத்தத்தாற்) சிவந்த போர்க்களத்தை
பற்றி–அடைந்து
நின்று–(நீங்கமாட்டாமல் அங்கு) நின்று
எள்கு–வருந்துகிற
புல்மாலை–சிறுமைப்பட்ட மாலைப்பொழுதாகிய பெண்பால்
தென்பால் இலங்கை–தெற்குத் திக்கிலுள்ள லங்காபுரியை
வெம் களம்செய்த–கொடிய போர்க்களமாகச் செய்த
நம் விண்ணோர் பிரானார்–நமது தேவாதி தேவனான தலைவனது-சக்ரவர்த்தி திருமகன்
துழாய்–திருத்துழாயை
துணை ஆ–தனக்குத் துணையாகக் கவர்ந்து கொள்வதற்கு
நங்களை மாமை கொள்வான்–நமது மாமை நிறத்தைக் கவர்ந்துகொள்வதற்கு
வந்து தோன்றி நலிகின்றது–எதிரில் வந்து தோன்றி வருந்துகின்றது-

தாள் அடைந்தோர் தங்கட்குத் தானே வழித் துணையாம்
காளமேகத்தைக் கதியாக்கி -மீளுதலாம்
ஏதமிலா விண்ணுலகில் ஏக வெண்ணும் மாறன் என
ஏதம் உள்ளது எல்லாம் கெடும்—
91-சரீர அவசானத்தில் பேறு-என்று-ஸ்ரீ சர்வேஸ்வரன் நாள் இட்டுக் கொடுக்கையாலே-போக்கிலே ஒருப்பட்டு நெடும் காலம் முகம் பழகின சரீரத்தை விட்டு
ஹ்ருதய குகையில் நின்றும் வழி கண்டு மூர்த்தன்ய நாடியாலே சிர கபாலத்தை பேதித்துக் கொண்டு
ஸ்ரீ அர்ச்சிராதி மார்க்கத்தாலே-ஸ்ரீ பரம பதத்தே ஏறப் போம் இடத்தில் கேட்ட போதே துளங்க வேண்டும்படியான யாம்ய மார்க்கத்திலே பட்ட இளைப்பு எல்லாம் ஆறும்படி தன் கடாஷாம்ருத வ்ருஷ்டிகளாலே குளிர வழிய வார்த்து யம படருடைய சரவண கடுகமான கடும் சொற்களை
கேட்ட யுள் வெதுப்பு ஆறும்படி செவிக்கினிய செம் சொற்களாலே செந்தளிப்பித்தும்
உக்ரமான யம தர்சனத்தால் வந்த வெக் காயம் ஆறும்படி தன்னுடைய சௌம்ய வர்ஷத்தை நிரந்தரம்-வர்ஷித்துக் கொண்டு வழியில் உண்டான இடையூறுகளையும் திவ்ய ஆயுதங்களாலே இரு துண்டமாக விட்டு-நயாமி பரமாங்கதம் -என்கிற படியே-ஸ்ரீ பெரிய திருவடி திருத் தோள்களிலே வைத்துக் கொண்டு
ஆதி வாஹகரைக் காட்டாமல் தானே கொண்டு போய்-ஸ்ரீ திரு நாட்டிலே விடுகைக்கு வேடன் -வேடுவிச்சி -பஷி -குரங்கு -பிசாசம் -சராசரம்-18 நாடன் பெரும் கூட்டம் – முதலானாரை வருத்தம் அறக் கொண்டு போய் ஸ்ரீ வைகுந்தத்து ஏற்றி அருளின-காளமேகமான ஸ்ரீ அரங்கத்து உறையும் இன் துணைவனை ஒழிய-வேறு ஒருவரும் இல்லை என்று ஸ்ரீ காளமேகத்தை வழித் துணையாகப் பற்றுகிற-தாள தாமரையில் அர்த்தத்தை தாள் அடைந்தோர் தங்கட்கு -என்று தொடங்கி அருளிச் செய்கிறார்–பரம வ்யோம சப்த வாச்யமான -பரமபதத்திலே மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணுமே -என்றும் எழுந்து அருள மனனம் பண்ணுகிற மோஷ லஷ்மியை உடைய-ஸ்ரீ ஆழ்வார் -என்று அனுசந்திக்க –மனக்கேதம் சாரா -என்னும்படி-துக்கம் என்று பேர் பெற்றவை எல்லாம் நசிக்கும் –
பிராப்ய லாப துக்கம் எல்லாம்-நிவ்ருத்தமாம்-

திங்களம் பிள்ளை –சந்தரன் ஆகிய அழகிய பிள்ளை –மகாதா தபஸா -என்கிறபடியே வருந்திப் பெற்ற பிள்ளை இறே –புலம்ப –வாய் விட்டுக் கூப்பிட மாட்டாதே-கடலோசை யாதல் –-அக் காலத்தில் பஷிகளுடைய ஆரவாரம் ஆதல் இறே யதாவது–தன் செங்கோல் இத்யாதி – தன்னுடைய ஆஜ்ஜா பிரதானனான ராஜாவானவன் –சந்த்யா காலத்துக்கு ராஜாவான ஸூர்யன் -ராஜாவானவன் –பட்ட யுத்த பூமியை பற்றி நின்று ஈடுபடுகிற புல்லிய மாலை – உதிர வெள்ளத்திலே சிவந்த யுத்த பூமி போலே இருக்கும்  இறே -அப்போதைக்கு ஒப்பு –ராவணன் பட்ட களத்திலே மண்டோதரி கூப்பிட்டாப் போலேயும்-வாலி பட்ட களத்திலே -தாரை அங்கத பெருமாளையும் கொண்டு கூப்பிட்டாப் போலேயும் ஆயிற்று-
இவ் வாதித்யனை  இழந்த சந்த்யையும் அப் பிரதேசத்தைப் பற்றி நின்று ஈடுபடுகிற படி –இத்தால்
வாயும் திரை யுகிளில் படியே  – கண்டது அடங்க தம்மோடு சம துக்கிகளாய் தோற்றுகிறபடி – பகல் கண்டேன் ( பூதத்தாழ்வார் )-என்கிற ஆதித்யனை இழந்து இறே இவள் நோவு படுகிறது –தென் பால் இத்யாதி –
ஆர்யர்கள் இழந்த மிலேச்ச பூமியான தெற்குத் திக்கில் அறிவுடையார் நடை யாடாத
இலங்கையை வெவ்விய களமாம் படி பண்ணி – இலங்கை ஒள் எரி மண்டி உண்ண (பெரிய திருமொழி -10 )-என்னக் கடவது இறே –நம் விண்ணோர் பிரானார் – ராவண வத அனந்தரமாக –பவான் நாராயணோ தேவ -என்று ப்ரஹ்மாதிகள் ஸ்துதிக்கும் படி நின்ற உபகாரகர் ஆனவர் –துழாய் துணையா –அவர் தோளில் மாலையைப் பெற வேணும்-என்ற ஆசைப்பட்ட இதுவே பரிகரமாகக் கொண்டு –நங்களை இத்யாதி –தன் இழவுக்கு கூப்பிடுகை அன்றிக்கே – நம்மை நலிகைக்கு கூப்பிடுகிறதாய் இருந்தது இறே –நங்களை மாமை கொள்வான் – நிறம் கொள்வாருக்கு நிறம் தான் வேண்டாவோ – தன் இழவுக்கு கூப்பீடும் கிடக்கச் செய்தே  – பண்டே குறை பட்டு நொந்து இருக்கிற நம்மை நலிகைக்கு பாரிக்கிற பாரிப்பாய் இருந்ததீ –

மாலைப் பொழுதை மகளாகவும் -சூரியனை அவள் கணவனாகவும் -சந்திரனை அவர்கள் பிள்ளையாகவும் சூரியனது சிவந்த கிரணங்களை செங்கோலாகவும் சூர்யன் அஸ்தமிப்பதை கணவன் இறந்ததாகவும் -அஸ்தமித்த திக்கை அவன் இறந்து விழுந்த போர்காலமாகவும்
அஸ்தமிக்கும் காலத்து செவ்வானத்தை அவன் ரத்தம் தெரித்ததாகவும் உருவாக்கப் படுத்தியவாறு
கணவனை பிரிந்தவளுக்கு பார்த்த பொருள்கள் எல்லாம் தம்மைப் போலே கணவனை இழந்ததாகவே கருதுவாளே-இப்படி கண்டார் இரங்கத் தக்க நிலைமையை அடைந்த மாலைப் பொழுது ஞாபக முகத்தால் வருத்தப்படுகிற திருத் துழாயை துணையாகக் கொண்டு நாயகியை வருத்துதலை
தனது மக்கள் தனிமைப்பட தன் கணவனை இழந்து வருந்திய தாடகை அகஸ்திய சாபத்தை உதவியாகக் கொண்டு முனிவர்களை எதிர்த்து வருந்துதல் போலே கொள்க–மாலைப் பொழுதில் காணப்படும் பிறையின் பிரகாசக் குறையை வாடுதலாகவும் -அக்காலத்தில் பறவைகள் கடல் ஓசையை அழுகை குரலாகவும் தென் பாலிலங்கை-வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் –பிராட்டிக்கு உதவியவர் -விண்ணோர்களுக்கு உதவியவர் எமக்கு கொடுமை தீர்த்திலரே –துழாய் துணையா-மாலைப் பொழுதும் தம்மைப் போலவே திருத் துழாய் துணையாக பெற வில்லையே என்று வருந்துவதாக ஆழ்வார் திரு உள்ளம் அவன் போக்யத்தை தம்மை நினைப்பூட்டி வருந்துவதை இத்தால் ஆழ்வார் அறிவிக்கிறார்-திங்களம் பிள்ளை புலம்பத் தன் செங்கோலரசு பட்ட-செங்களம் பற்றி நின்று எள்கு புன்மாலை--தமக்கு உண்டான ஞான பிரகாசமும் துயர் அடையும் படி விவேகமும் குலைந்து-பக்தியே விஞ்சி ஆற்றாமையே விளைக்கும் கொடிய காலம்-தென் பாலிலங்கை-வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா--துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலன சீலரான-எம்பெருமானது போக்யதையை நினைப்பூட்டிக் கொண்டு – நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே – -எமது ஸ்வரூபத்தை மாற்றும் படி வருத்துகிறது –மாலைப்பொழுதுக்கு ஆற்றாத நாயகி இரங்கி யுரைக்கும் பாசுரம் இது.-கீழ் “பால்வாய்ப் பிறைப்பிள்ளை” என்ற முப்பத்தைந்தாம் பாட்டின் முன்னடிகளை இப்பாட்டின் முன்னடிகட்கு ஸ்மரிப்பது.-இதில் மாலைப்பொழுதை ஒரு மகளாகவும், ஸூர்யனை அவளது கணவனாகவும், சந்திரனை அவர்களது பிள்ளையாகவும் ஸுர்யனது சிவந்த கிரணங்களை அவனது செங்கோலாகவும், அந்த ஸூர்யன் அஸ்தமிப்பதை அக்கணவன் இறந்து போவதாகவும், அவன் அஸ்தமிக்கின்ற திக்கினிடத்தை அவனிறந் விழுந்தொழிந்த போர்க்கலமாகவும்,
ஸூர்யாஸ்தமாக காலத்து மேற்குத் திக்கில் அவன் கிரணஸம்பந்தத்தால் தோன்றுகிற செவ்வானத்தை அவன் போரில் பட்டு இறக்கும்போது-அவனது ரத்தம் தெரித்த இடமாகவும் உருவகப்படுத்தியவாறு.-கணவனைப் பிரிந்த இவளுக்கு, கண்ணிற்காணும் பொருளெல்லாம் கணவனை யிழந்ததாகத் தோன்றுதலால் இக்கற்பனை கூறினானென்க.-இப்படி கண்டாரிரங்கத்தக்க நிலைமையை யடைந்த மாலைப்பொழுது, ஞாபக முகத்தால் வருத்தப்படுகிற திருத்துழாயைத் துணையாகக் கொண்டு நாயகியை வருத்துதலை, தனது மக்கள் தனிமைப்படத்தன் கணவனை யிழந்து வருந்திய தடாகை
அகஸ்திய சாபத்தை உதியாகக் கொண்டு முனிவர்களை எதிர்த்து வருந்துதல் போலக் கொள்க.-புலம்ப’ என்பதற்கு-தனிப்பட்ட என்றும், வாட என்றும், அழ என்றும், உரையிடலாம்.-புலம்புதலென்பதும தனித்தலென்னும் பொருளதாதலை ‘புலம்பே தனிமை’ (தொல்காப்பியம்- சொல்லதிகாரம்- உயிர்ச்சொல்லியல்-33.) என்பதனால் அறிக.-மாலைப்பொழுதிற் காணப்படும் பிறையின் பிரகாசக் குறையை வாடுதலாகவும், அக்காலத்தில் பறவைகள் மிகுதியாக ஒலித்தலையாவது
கடலொலியையாவது அழுகைக் குரலாகவும் கருதுக. இலங்கை வேங்களஞ்செய்த = எல்கையிலள்ள ராக்ஷஸர்களை வேரறும்படி போர் செய்தழித்த என்றபடி. ‘வெங்களஞ்செய்தல்- ச்மசாநமாக்குதல்’ என்றுமுரைப்பர். ‘ஒரு பிராட்டியைப் பிரிந்திருக்கமாட்டாமல் தாம் பெரு முயற்சி செய்து
கடல்கடந்த கொடும் பகை யொழித்துக் கூடியருளியவர், இப்பொழுது எம்மை இங்ஙனம் உபேக்ஷப்பதே!’ என்ற இறக்கந்தோன்ற-தென்பாலிலங்கை வெங்கனஞ் செய்த நம் விண்ணோர் பிரானார்’ என்றது. தேவர்களுக்குக் கொடுமை தீர்த்தவர் எமக்குக் கொடுமை நீர்த்திலரே என்று குறிப்பிட வேண்டி, ‘விண்ணோர் பிரானார்’ என்றது.-துழாய் துணையா = மாலைப் பொழுதுக்குத் திருத்துழாய் துணையானதாகச் சொல்ல தன் கருத்து,-திருத்துழாய் நமக்குக் கிடையாததாய்க் கொண்டு நம்மை எப்படி வருத்துகின்றதோ அப்படியே இந்த மாலைப்பொழுது வந்து வருத்துகின்றது என்பதாம். நங்களை- நங்களது உருபு மயக்கம்.–இப்பாட்டுக்கு உள்ளுறை பொருளாவது- எம்பெருமானைச் சேர்ந்து அநுபவிப்பதற்கு உரிய காலம் ஸமீபித்து அவனது போக்யதையை நினைப்பூட்டித் தம்மை வருந்தும் விதத்தை ஆழ்வார் அருளிச் செய்தலாம். (திங்களம்பிள்ளை + எள்குபுன்மாலை) தமக்கு உண்டான ஜ்ஞாநப்ரகாசம் துயரமடையும்படி செவ்விதான மஹா விவேகமுங் குலைந்து பக்தியே விஞ்சி ஆற்றாமை விளைக்கிற கொடிய இக்காலமானது (தென்பால் + துழாய் து¬ணா) துஷ்ட நிக்ர சிஷ்ட பரிபாலன சீலரான எம்பெருமானது யோக்யதையை நினைப்பூட்டிக் கொண்டு. (நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே) எமது ஸ்வரூபத்தை மாற்றும்படி வருத்துகிறது என்கை.

திங்களம் பிள்ளை புலம்பத் தன் செங்கோலரசு பட்ட செங்களம் பற்றி நின்று எள்கு புன்மாலை-சந்த்ரனாகிற அழகிய பிள்ளை தாத் காலிக பக்ஷி கோஷ முகத்தாலே புலம்பிற்று என்னும் படியாக
சிவந்த கிரணங்கள் நடப்பாகிற செங்கோலை யுடைய தன்னரசான ஆதித்யன் பட்ட ரக்தத்தாலே
சிவந்த களம் என்னலாம்படியான செக்கர் வானத்தைப் பற்றி நின்று ஈடுபடுகிறது என்னலாம் படி புல்லிதாய் உறாவித் தோற்றின மாலையானது–தென் பாலிலங்கை வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார்-இப்படி இழந்து கிலேசிக்க வேண்டாதபடி தெற்குத் திக்கு இடத்திலேயான லங்கையிலே சத்ருக்களை ச புத்ர பவ்த்ர பாந்தவமாம் படி கொன்று கொடிய களத்தைப் பண்ணின வெற்றியாலே ப்ரஹ்ம ருத்ராதிகளான தேவர்களுக்குக் குடி இருப்புக் கொடுத்த மஹா உபகாரத்தாலே
பெண் பிறந்த நமக்கு விஸ்வஸித்துப் பற்றலாம் படியானவருடைய–துழாய் துணையா-வெற்றி மாலையான திருத்துழாய் நமக்கு ஸ்மரிப்பிக்கிற முகத்தாலே நலிகைக்குத் துணையாகக் கொண்டு-நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே – நம்முடைய மாமை நிறத்தை அபஹரித்துக் கொள்ளுவதாக வந்து தோன்றி தன் தைன்ய பிரகாரத்தாலே நலியா நின்றது என்று ஆற்றாது உரைத்தாள் ஆயிற்று –இத்தால் தமக்கு உண்டான ஞான ப்ரகாஸமும் (திங்கள் அம் பிள்ளை )ப்ரலாப பர்யவசாயியாம் படி அநுராக உத்தரமான மஹா விவேகமும் (ஸூர்யன் )குலைந்து
அநுபாவ்ய விஷயமான ராகம் விஞ்சும்படியான அவஸ்தா விசேஷமானது அநந்யார்ஹர் ஆனவருக்கு அதிசயித விரோதிகளை அழித்துக் கொடுக்கும்-சர்வாதிகனான ஸர்வேஸ்வரனுடைய நிரவதிக போக்யதா ஸஹ சரிதமாய்க் கொண்டு நம்முடைய ஸ்வரூப விபர் யாசத்தைப் பிறப்பித்து ஈடுபடுத்தா நின்றது என்று தம்முடைய ஆர்த்தியை அருளிச் செய்தார் ஆயிற்று

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்வியாக்யானம்-திங்களம் பிள்ளை புலம்பத் தன் செங்கோலரசு பட்ட செங்களம் பற்றி நின்று எள்கு புன்மாலை-மாலைக்கு அரசு ஆதித்யன் சாயம் ஸந்த்யையிலே திங்களாகிற இளம் பிள்ளை தாத் காலிக பக்ஷி கோஷ முகத்தால் கோஷிக்கவே தனக்கு அரசாய்ச் சிவந்த கிரண தண்டங்களை ப்ரவர்த்திப்பித்த ஆதித்யன் ஹதன் -என்னும்படி அஸ்தமித்த இடமான
செங்களம் -ரக்தமயமான களம் -யுத்த பூமி அதிலே தான் நின்று எள்கு -துக்கத்தால் ஈடுபடுகிறது கண்டு-புன்மாலை புன்னிய -ஏழைத்தனம் பெற்று மாலை -ஸந்த்யையானது வந்து தோன்றி நலிகின்றது என்று அந்வயம்–அது தனக்குத் துணை கூட்டிக் கொண்டு நலிகிற பிரகாரத்தை அருளிச் செய்கிறார்-தென் பாலிலங்கை வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா நங்களை மாமை கொள்வான்-தெற்கில் உள்ள லங்கா த்வார அங்க கணத்தை வெவ்விய போர்க்களமாக்கி தன் விரோதிகளை நிரசித்த நம் ஸ்வாமியாய் இந்த்ராதிகளான விண்ணோர்க்குக் குடி இருப்பைத் தந்து உபகரித்தவனுடைய துழாய் மாலையை அவனால் வரப் பெற ஆசைப்பட்டாள் என்பதே தனக்குத் துணையாகக் கொண்டு நல் நிறத்தை அபஹரிப்பதாய் வந்து நமக்கு எதிர்ப்பட்டு நம்மை நலியா நின்றது-வந்து தோன்றி நலிகின்றதே-புன்மாலை என்றதால் செக்கர் நல் மேகங்களைக் காட்டி பீதாம்பரம் சாத்திக் கொண்டு மேகம் போன்று இருக்குமவர் திருமேனியை ஸ்மரிப்பித்து நலிகிற படி சொல்லிற்று ஆயிற்று-தன் சைதன்ய பிரகாச நத்தாலே நலிகிறது என்பாரும் உண்டு –

ஸ்வாபதேசம்-கீழ் திரு உலகு அளந்து அருளின போது இட்ட மாலையை பெற வேணும் என்று ஆசைப் பட்டு பெறாமையாலே நோவு பட்ட படி சொல்லிற்று –இதில் ராவண வத அநந்தரம்-இட்ட வெற்றி மாலையை பெற வேணும் என்று ஆசைப் பட்டு வந்து கிடையாமையாலே- நோவு பட்ட படி சொல்லுகிறது –

தாத்பர்யம்-இதில் மாலைக்கு அஞ்சி நைந்து போன நாயகி பாசுரம்-புத்தி ஹீனரான அரக்கர் வாழும் இலங்கைக்குச் சென்று அவர்களை வென்று கூறாக்கி ஸ்மாசனம் -சுடுகாடு போல் அழித்து நின்ற
மஹிமையைக் கண்டு ப்ரஹ்மாதிகள் ஸ்தோத்ரம் பண்ணும் சக்ரவர்த்தி திருமகன் சாத்தி அருளும் திருத் துழாயை ஆசைப்பட்டு கிடையாமல் நலிய அப்பொழுது மாலை பொழுது செக்கர் வானம்
வாலியைக் கண்டு தாரை அங்கத பிள்ளையைக் கூட்டி புலம்பினது போல் புலம்பி என்னை நலிகிறதே

10-1-தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர்-ப்ரவேஸம்-

முதல் பத்தால் -பகவத் விஷயம் -புருஷார்த்தம் -என்று அறுதி இட்டார் –
இரண்டாம் பத்தால் -அந்த கைங்கர்யத்தில் களை அறுத்தார் –
மூன்றாம் பத்தால் -களை அறுக்கப் பட்ட அந்த கைங்கர்யமானது பாகவத சேஷத்வ பர்யந்தமான பகவத் கைங்கர்யம் -என்றார்
நான்காம் பத்தால் -இப்படிப் பட்ட கைங்கர்யத்துக்கு விரோதிகள் ஐஸ்வர்ய கைவல்யங்கள் -என்றார் –
ஐந்தாம் பத்தால் -அந்த விரோதிகளைப் போக்குவானும் அவனே என்றார்
ஆறாம் பத்தால் -விரோதிகளை அழிக்கும் தன்மையான சர்வேஸ்வரன் திருவடிகளிலே சரணம் புக்கார் –
ஏழாம் பத்தால் – இப்படி பெரிய பிராட்டியார் முன்னிலையாக சரணம் புக்க இடத்திலும்
தக்தபட நியாயம் போலே சம்சாரம் தொடருகிறபடியை கண்டு நோவு பட்டார் –
எட்டாம் பத்தால் -இப்படி பிரபன்னராய் இருக்கச் செய்தே தக்தபட நியாயம் போலே நம்மை விடாமல் தொடருகிறது
நம்முடைய ஆத்மாவிலும் ஆத்மா உடன் சம்பந்தப் பட்ட-பொருள்களிலும்-நசை அறாத படியாலே -என்று பார்த்து அவற்றில் ஒரு நசை இல்லை என்றார் –
ஒன்பதாம் பத்தால் -இப்படி நசை அற்ற பின்பும் பாதுகாவாமல் ஒழிவான் என் -என்று ஐயம் கொள்ள –
நான் நாராயணன்-எல்லா ஆற்றலோடும் கூடினவன்-உம்முடைய விருப்பங்கள் அனைத்தையும் செய்து முடிக்கிறேன்
என்று அருளிச் செய்ய -அவனுடைய சீல குணத்தில் ஆழம் கால் பட்டார்
ஆழ்வார் உடைய பதற்றத்தைக் கண்டு-திரு மோகூரிலே-தங்கு வேட்டையாய் வந்து தங்கி
இவருக்கு அர்ச்சிராதி கதியையும் காட்டி இவருடைய விருப்பத்தை நிறைவேற்றின படியை-அருளிச் செய்கிறார் இந்தப் பத்தாம் பத்தால் –

–பக்தி பாரவஸ்யத்தையால் -அர்ச்சையிலே சரணா கதி பண்ணி
திருக் கண்ண புரம் பெருமாள் வார்த்தை அருளி –
திரு மோகூர் –ஆப்தன் வழித்துணை -யாய் இருப்போம் –
திரு வனந்த புரத்தில் -கூட்டிச் சென்று உமக்கு – சாம்யம் காட்டுவோம் –
திரு வாட்டாற்றில் ஆதி கேசவ பெருமாள் -எம் விதி வகை யே -கச்ச லோக -பெருமாள் சொன்னால் போலே –ஆணை இடுவோம் –
திருப் பேர் நகரில் -அப்பால ரெங்கன் ஸ்வாமித்வம் நாம் என்று ஏற்போம் –
திருமால் இரும் சோலை மலையிலே சரீர ஆதார அதிசயம் காட்டுவோம் –
மேலே ஸ்ரீ வைகுந்தம் கூட்டிப் போவோம் –
ஈரரசு ஆகாமல் -அது நமது விதி வகையே –
செஞ்சொல் கவிகாள் உயிர் காத்து ஆட் செய்மின் -என்றும்
மங்க ஒட்டு உன் மா மாயை -ஆழ்வார் களுக்கும் அவனுக்கும் -நாலு ஆறும் – உபதேசித்து –
பத்தாம் பத்தால் -ஆர்த்தி ஹரத்வம் காட்டி -அருளுகிறார் –
அவா -கடல் -குளப்படி போலே -தான் திருவடிகளில் சேர்த்துக் கொண்டு இத்தால் புகர் பெற்றான் –
அர்ச்சிராதிகதி நேராகக் கண்டு -அவன் காட்டக் கண்டு -அனுபவித்து அருளிச் செய்கிறார் –

பத்தாம் பத்தில் -கீழ்ப் பத்திலே சர்வேஸ்வரனுடைய பல ரூபத்வத்தை நிரூபித்து அருளி –
தத் அனுபவ ரூபமான பலத்தினுடைய அவாப்தி பிரகாரத்தை இப்பத்திலே நிரூபித்து அருளுவதாகக் கொண்டு –
ஆப்தனான அவனுடைய அதி சாஹாய்யத்தையும்
முன்பு யுண்டான நிரவதிக கிலேச சாந்தியைப் பண்ணும் போக்ய நாமாதி யோகத்தையும்
சம்ஸ் லிஷ்டனாய் இருக்கச் செய்தேயும் விஸ்லேஷ சங்கை பண்ணி கிலேசிக்கும் படியான சாரஸ்ய அதிசயத்தையும்
அநந்ய ஸாதனரோ பாதி உபாசகர்களுக்கும் ப்ராப்யனாம் ஆகாரத்தையும்
ச பிரகார உபாஸன பரர்க்கும் அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட ப்ராப்திகளுக்குத் தானே நிர்வாஹகன் என்னும் இடத்தையும்
ததீய சேஷத்வ பர்யந்தமாக தன்னை ஆஸ்ரயித்தாருடைய சித்த அநுவிதானம் பண்ணிக் கொண்டு பல பிரதானத்திலே அபி யுக்தனாம் படியும்
தன் பக்கல் ப்ரவணரானாருடைய சரீராதிகளையும் தான் விரும்பா நின்று கொண்டு அவர்கள் அபேக்ஷைக்காக அவற்றை விடுவிக்கும் படியையும்
யாத்ருச்சிகமான ஆனுகூல்யமே பற்றாசாக யதாவத் போக ப்ரதானாகையும்
போக ஸித்திக்கு உறுப்பான அர்ச்சிராதி மார்க்கத்தில் ஆதி வாஹிந ஸத்கார பிரதர்சனகத்தையும்
அதிசயிதையான பயபக்தி ரூபமான அபி நிவேசத்தை யுடைய தமக்கு
ஸ்ரீ யபதியான தன்னோடு உண்டான ஸ்த்திர சாயுஜ்ய ப்ரகாசத்தைப் பண்ணின படியையும்
அபரோக்ஷித்து அத்யந்த ஹ்ருஷ்டராய் அவாப்த பலராய் முடித்து அருளுகிறார் –

முதல் திருவாய் மொழியில் -கீழ் ப்ரஸ்துதமான கைங்கர்ய பிரதி சம்பதித்வம் ஒரு தேச விசேஷத்திலே பூரணமாய் இருக்கையாலே –
இந்த தேசத்தில் நின்றும் அங்கு ஏறப் போகைக்கு பாதகமான நம்முடைய விரோதியைக் கழித்து உகப்போடே
வழி நடத்திக் கொண்டு போவான் ஒரு ஸஹாய பூதன் வேணும் என்று அறுதியிட்டு திருமோகூரிலே ஸந்நிஹிதனான சர்வேஸ்வரனுடைய
நிரவதிக போக்யமான யுதார ரூபதையையும்
நித்ய அனுபாவ்யத்வ யுக்தமான திரு நாம பூர்த்தியையும்
நிகில ஜகத் ரக்ஷகத்வத்தையும்
ரக்ஷண அர்த்தமான அநந்த ஸாயித்வத்தையும்
அசேஷ ஜன சம்ச்லேஷத்தையும்
அனுபவ ப்ரீதி கரமான ஆப்தத்வத்தையும்
அகில லோக ஸ்ரஷ்ட்ருத்வத்தையும்
அவதார ப்ரயுக்த சீல சீதலத்வத்தையும்
திவ்ய அவயவ வைலக்ஷண்யத்தையும்
ஆஸ்ரித ரக்ஷணத்தில் அபீஷ்ட திவ்ய விக்ரஹ பரிக்ரஹத்தையும்
அனுசந்தித்து ஏவம் விதனான ஸர்வேஸ்வரனே நமக்கு வழித் துணையாவான் என்று
ஸ்ரீ காளமேகத்தின் திருவடிகளையே தஞ்சமாகப் பற்றி அருளுகிறார் –

தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர்
நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்
காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே-
10-1-1-

பகைவர்களை அழிக்கும் தன்மையனான-காள மேகம் அல்லது துணை இல்லை –என்று அவனைப் பற்றுகிறார் –பிரதி கூல நிரசன ஸ்வ பாவன் நிரதிசய போக்யன் -தவிர நமக்கு சகாயம் வேறு கதி இல்லை

நாளும் மேவி–இவருடைய குஹ்யதே ரங்க யாத்ரே -அகலகில்லேன் இறையும்-இருக்கும் படி நன்கமர்ந்து நின்று –இவ் ஊரில் வசித்தலை ஒழிய-வேறு ஒரு பிரயோஜனத்தை கணிசியாதே-இது தானே பிரயோஜனமாய் நின்று –

———–

இலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின்
அலம் கலம் கண்ணி ஆயிரம் பேருடை யம்மான்
நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர்
நலம் கழல் அவனடி நிழல் தடம் அன்றி யாமே-
-10-1-2-

இன்பத்துக்கு காரணமான ஒப்பனையும்-உய்வு பெறுவதற்கு காரணமான திருப் பெயர்களையும் உடையவனுடைய திருவடிகளை அல்லது காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும்- வேறு புகல் உடையோம் அல்லோம் –என்கிறார்

அவனடி நிழல் தடம் அன்றி யாமே –அவனுடைய திருவடி நிழல் ஆகிற பொய்கையை ஒழிய-நாம் வேறு ஒரு கதியை உடையோம் அல்லோம் –

———

அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி
நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட
வென்றி இம் மூ வுலகளித்து உழல்வான் திரு மோகூர்
நன்று நாம் இனி நணுகுதும் நமது இடர் கெடவே
-10-1-3-

அகில ஜகத் ரக்ஷண-ஸ்வ பாவம்-மூன்று உலகங்களையும் காப்பாற்றுகின்ற இறைவன்-எழுந்து அருளி இருக்கின்ற திரு மோகூரை நம்முடைய எல்லா துக்கங்களும் கெடச் சென்று அடைவோம்-என்கிறார் –நமது இடர் கெடவே –ஆவார் ஆர் துணை -திருவாய் மொழி -5-1-9-என்று-இருக்கிற நம்முடைய துன்பம் கெடும்படியாக-

நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட – பிரமன் சிவன் இவர்களோடு கூட தேவ சாதி முழுவதும் வந்து அடைய- அநந்ய பிரயோஜனர்களைப் போலே-தங்கள் பிரயோஜனம் கை புகுரும் அளவும்–நின்று-அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி--தப்பாக பாடினாலும் பொறுப்பார் -கண்ணன் கழலிணை –நாரணமே -எப்படி சொன்னாலும் பலம் -அதே போலே-வென்றி இம் மூ வுலகளித்து உழல்வான் திரு மோகூர் –
அவர்களுடைய பகைவர்களை வென்று-அவர்களுக்கு இடமான மூன்று உலகங்களையும் காப்பாற்றி-அதுவே யாத்திரையாக-தொழிலாக இருக்குமவன் வந்து வசிக்கிற நகரம் ஆயிற்று —

——-

இடர் கெட வெம்மைப் போந்து அளியாய் என்று என்று ஏத்தி
சுடர் கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர
படர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திரு மோகூர்
இடர் கெட வடி பரவுதும் தொண்டீர் வம்மினே
–10-1-4-

சுடர் கொள் சோதியைத் –ஆபத்து வந்த காலத்திலேயே யாகிலும் நம் பாடே வரப் பெற்றோமே என்று-பேர் ஒளிப் பிழம்பாய் இருக்கிறவனை
அன்றிக்கே-மிக சிறந்த அழகினை உடையவன் ஆகையால்-அவ் வழகினை அனுபவிக்கும் அதுவே பிரயோஜனமாக உள்ளவனைக் கண்டீர் துக்கத்தைப் போக்குமவனாக நினைத்து என்னுதல் –

தேவரும் முனிவரும் தொடர –-தேவர்களும் இருடிகளும்-ஈச்வரோஹம் -என்று இருப்பாரும்
செல்வத்தின் நிமித்தம் முயற்சி செய்கின்றவர்களும் –சாப அனுக்ரகங்களைச் செய்ய வல்ல முனிவர்களும்-என்றுமாம்

படர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் –வேறு பிரயோஜனங்களை கருதாதவர்களை-அநந்ய பிரயோஜனரை-அடிமை கொள்ளுகிறவன் கண்டீர் –பிரயோஜநாந்த பரர்களுக்காக முகம் கொடுக்கைக்காக-திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளிகிறான்-
தன் ஸ்பர்சத்தால் வளரா நின்றுள்ள திரு வநந்த ஆழ்வான்-ஆதலின் –படர் கொள் பாம்பு -என்கிறார் –தன்னுடைய சேர்க்கையாலே-சர்வஞ்ஞனானவனை அறிவற்றவரைப் போன்று நித்தரைக்கு இடம் கொடுக்கும்படி பண்ண வல்லவனான திரு வநந்த ஆழ்வான் ஆதலின் –பள்ளி கொள்வான் -என்கிறார்-

————–

தொண்டீர் வம்மின் நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன்
அண்ட மூ வுலகளந்தவன் அணி திரு மோகூர்
எண் திசையும் ஈன் கரும்போடு பெரும் செந்நெல் விளைய
கொண்ட கோயிலை வலம் செய்து இங்கு ஆடுதும் கூத்தே
–10-1-5-

அசேஷ ஜன சம்ச்லேஷ ஸ்வ பாவன் -த்ரிவிக்ரமன் வர்த்திக்கும் –கொண்ட கோயிலை 
திரு உள்ளத்தாலே ஏற்ற கோயில்-திரு மோகூரை அடைந்து அனுபவிக்க வாருங்கோள்-

நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன் –-தனக்கு மேல் ஓன்று இல்லாத பேர் ஒளிப் பிழம்பாய்-மூன்று விதக் காரணமும்-தானே யானவன்-தஸ்ய மத்யே வஹ்னி சிகா அணி யோர்த்த்வா வியவச்தித்த நீலதோயதா மத்யஸ்தா வித்யுல்லேதேவ பாஸ்வர-நீவார சூகவத் தன்வீ பிதாப ஸ்யாத் தநூபாமா -என்றும் சதைவ சோமய இதம் அக்ரே ஆஸீத் ஏகம் ஏவ அத்விதீயம் -என்றும் -என்கிற-பிரமாண சித்தியைப் பற்றி –நம் -என்கிறார்
அன்றிக்கே தம் வடிவு அழகினையும்-தமப்பனான தம்முடைய சம்பந்தத்தையும் நமக்கு அறிவித்தவன் -என்னுதல் –

இங்கு ஆடுதும் கூத்தே –அங்கு சென்று-அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம்-அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத – என்று களிக்கும் களிப்பினை-இங்கே களிப்போம்

————

கூத்தன் கோவலன் குதற்று வல்லசுரர்கள் கூற்றம்
ஏத்தும் நம் கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
வாய்த்த தண் பணை வளவயல் சூழ் திரு மோகூர் ஆத்தன்
தாமரை யடி யன்றி மற்று இலம் அரணே
–10-1-6-ஆத்தன்-சப்த பிரயோகம் -நடு பாசுரம்-ஆப்ததமன் -ஆஸ்ரிதர் விசுவாசம் உடன் பற்ற

தாமரை யடி யன்றி –நம்பத் தகாதவனாய் இருப்பினும்-விட ஒண்ணாத தாயிற்று திருவடிகளின் இனிமை –மற்று இலம் அரணே –பாது காப்பவர்களாக வேறு சிலரை உடையோம் அல்லோம் —தாமரை யடி யன்றி மற்று இலம் அரணே-இனிமை இல்லை யாகிலும்-விட ஒண்ணாதபடி-புறம்பு புகல் இல்லை -என்கிறார் -என்றபடி –
குண க்ருத தாஸ்யம் மட்டும் இல்லாமல் –ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம் உண்டே -அநசூயை சீதை பிராட்டி சம்வாதம் —

———-

மற்று இலம் அரண் வான் பெரும் பாழ் தனி முதலா
சுற்றும் நீர் படைத்து அதன் வழித் தொல் முனி முதலா
முற்றும் தேவரோடு உலகு செய்வான் திரு மோகூர்
சுற்றி நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே
-10-1-7-

நம்மை பாது காத்தல் தனக்கே உரியதாய்-அகில ஜகத் ஸ்ரஷ்டாவான சர்வேஸ்வரன் –அப ஏவ -பெரிய நீர் படைத்து -வர்த்திக்கும் -அனுகூல வ்ருத்திகளை பண்ண-சுற்றி நாம் வலம் செய்ய– நம் துக்கம் -வழித் துணை இல்லை என்கிற நம் துன்பம் சடக்கென போம் –

——–

துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின்
உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே
–10-1-8-

தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே-குணங்கள் ரத்னம் மாணிக்கம் முத்து -இத்தை அன்றோ சக்கரவர்த்தி பெற்றான் –திரு மோகூரிலே நின்று அருளினவனான-ஆண் பிள்ளையான-சக்கரவர்த்தி திருமகனை அடைய-நம்முடைய துக்கம் எல்லாம் போம்-வாசத் தடம் போல் வருவான் அன்றோ அவன் தானே –புண்டரீகத் தடாகம் நின்ற சேவை தானே நம்பெருமாள் –

பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர்-சர்வேஸ்வரன் அளித்துப் படைத்த-பெயர்களோ பாதி போரும் ஆயிற்று இவர்கள் பிறர்களை துன்புறுத்தி பெற்ற பெயர்கள்-யஞ்ஞ சத்ரு – ப்ரஹ்ம சத்ரு (மேக நாத ஹரி -இந்திர ஜித் வென்ற லஷ்மணன்)-என்பன போன்றவனவே அன்றோ இவர்கள் பெயர்கள் –

மயா த்வம் சம் அநுஜ்ஞாத கச்ச லோகன் அநுத்தமான்-ஆரண்ய -68-30–என்னால் நீவிர் அனுமதிக்கப் பட்டவராய் மேலான உலகத்தை அடைவீராக-என்கிறபடியே –பறவையையும் -ஜடாயுவையும் –வழி நடத்துமவன் அன்றோ

————–

மணித் தடத்து அடி மலர்க் கண்கள் பவளச் செவ்வாய்
அணிக் கொள் நால் தடம் தோள் தெய்வம் அசுரரை என்றும்
துணிக்கும் வல்லரட்டன் உறைபொழில் திரு மோகூர்
நணித்து நம்முடை நல்லரண் நாம் அடைந்தனமே
–10-1-9-

நமக்கு அரணான திரு மோகூரை நாம் அடையப் பெற்றோம்-என்று தம் லாபத்தை பேசுகிறார்-

மலர்க் கண்கள் –அத் தடாகம் பூத்தால் போல் ஆயிற்று திருக் கண்கள் இருப்பன-மூன்று காலம் -மலர் கண் வைத்த -தன்னடியார் பாசுரம் –முன்பு மலர்ந்த -இன்று மலரும் -நாளையும் மலர இருக்கும்-இங்கே மலர்க் கண்கள் -மலர்ந்த திருக் கண்கள்

அணிக் கொள் நால் தடம் தோள் தெய்வம்-அவன் வழித் துணையாகப் போம் போது
சிரமத்தை போக்கக் கூடிய வடிவும்-தன் உகப்பு தோற்றின புன் முறுவலும்- கடைக் கண் நோக்கம்-முதலானவைகளையும் உடையவனாய்- ஒரு கல் மதிளுக்கு உள்ளே போமாறு போலே-அச்சம் கெட்டுப்போம்படி ஆயிற்று-தோள் நிழலிலே ஒதுங்கினால் இருக்கும்படி

உறை பொழில் திரு மோகூர் –சிங்கம் வசிக்கும் முழைஞ்சு என்னுமா போலே –

———–

நாமடைந்த நல்லரண் நமக்கென்று நல்லமரர்
தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்றடைந்தால்
காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர்
நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்
-10-1-10-

மூ வேழ் உலகும்-உலகினுள் -எல்லாவற்றையும் காக்கின்ற இறைவன் வசிக்கின்ற திரு மோகூரை-நமர்காள் ஆதரித்து-நினைந்து- ஏத்துங்கோள்-திருமோகூர் நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்–நம்முடையவர்களே–மூன்று கிரியா பதங்கள்- திருமோகூர் நவின்று-ஊரின் பெயரைச் சொல்லி ஸ்தோத்ரம் பண்ணி -வாக் வியாபாரங்கள் –எண்ணுமின் -மநோ வியாபாரம்-பயிலுதல் -நினைந்து -மேலும் ப்ரீதி பிரேரிராய் ஏத்துமின்

————

ஏத்துமின் நமர்காள் என்று தான் குடமாடு
கூத்தனை குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
வாய்த்த வாயிரத்துள் இவை வண் திரு மோகூர்க்கு
ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே
–10-1-11-

குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள் – ஆழ்வார் உடைய குற்றேவல்கள் என்றது-அவன் குடக் கூத்தினை நினைத்து-இவர் நாவினால் பாடுகிற அடிமையிலே மூண்டார் -என்றபடி –

இவை-ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே – இப் பத்தினை கற்க வல்லார்க்கு-உடலை விட்டு உயர் நீங்குகிற காலத்திலேயே-வழித் துணை இல்லை என்று-வருந்த வேண்டாதபடி-காளமேகம் வழித் துணையாம்-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -76 -இடம் போய் விரிந்து இவ்வுலகு அளந்தான் –ஓராயிரமாய் -9 -3-

March 17, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

சந்திரன் துன்பம் கொடுப்பதில் ஆச்சர்யம் இல்லையே-தாமரையை மூடுவித்து ஆம்பலை அலர்விக்குமே -வெளுத்த வளையை -விஷம் போல் -துன்பம் படுத்துவது வியப்போ தலைவனது மாலை பெறாது வருந்தும் தலைவி சந்த்ரனைக் கண்டு வருந்துதல் — உலகு அளந்தவன் உடைய ஸுலப்யம் ஸுசீல்யம் சொல்லும் பாசுரம்-ஓராயிரமாய் -9 -3-இதன் விவரணம்-மனமே யுன்னை வல்வினையேன் இரந்து கனமே சொல்லினேன் இது சோரேல் கண்டாய்-புனமேவிய பூம் தண் துழாய் அலங்கல்-இனமேதும் இலானை அடைவதுமே –9-3-5- -அங்கும் உண்டே-சீலம் எல்லையிலான் அடி மேல் அணி கோல நீள் குருகூர்ச் சடகோபன் சொல் மாலை யாயிரத்துள் இவை பத்தினின் பாலர் வைகுந்தம் ஏறுதல் பான்மையே –9-3-11- நிகம பாசுரத்தில் ஸுசீல்யம் பாடினது உண்டே அங்கும் உண்டே

சந்த்ரோதயத்தில் நோவு படுகிறாள் ஒரு பிராட்டி தன் நெஞ்சைக் குறித்து –சந்த்ரனுக்கு இங்கனே எளிய செயல்கள் செய்கை ஸ்வ பாவம் காண்- நீ இதுக்கு சோகியாதே கொள் -என்று ஆஸ்வசிப்பிக்கிறாள் –

இப்படியான பின்புடையாரும் ஆச்சர்யப்படும்படியான ஞான வைலக்ஷண்யத்தை யுடையவர்-இதுக்கு அநுரூபமான பகவத் அனுபவம் ஸித்தியாமையாலே தமக்கு உண்டான ப்ரகாஸமும் ( ஞானம் மதி சந்திரன் ) ப்ரதிகூலமான பிரகாரத்தை தலைவனான ஸர்வேஸ்வரனுடைய திருத்துழாய் மாலையிலே நசை பண்ணி சிதிலமான நெஞ்சைக் குறித்து சந்திரனுடைய விகாஸத்துக்கு ஆற்றாளாய்த் தலைவி வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-அவதாரிகை- சந்த்ர உதயத்திலே நோவு படுகிறாள் ஒரு பிராட்டி தன் நெஞ்சைக் குறித்து இச்சந்திரனுக்கு இங்கனே எளிய செயல் செய்கை ஸ்வபாவம் காண் இதுக்கு சோகியாதே கொள் -என்று ஆஸ்வஸி ப்பிக்கிறாள்

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-அவதாரிகை-இப்படியுள்ள ப்ரஹ்ம வித்துக்களில் இவருடைய பரிவால் வந்த ஸ்மரணம் பிரிவாற்றாத் தலைமகள் ஆக்க அப்போதே இவள் வளை கழலப் பண்ணும் வெண் திங்கள் உதிக்க அத்தைக் கண்ட இவருடைய நெஞ்சு ஐயோ என்று சோகிக்க அப்போதில் நையும் நீ வெண் திங்கள் நம் வளை கழலப் பண்ணுமத்துக்கு ஆச்சர்யப்படவும் சோகிக்கவும் வேண்டா-அவன் அல்ப விகாசகனும் அதிக சங்கோசகனும் காண் என்று விஷம் பரந்தால் போல் வியாபிக்கும் நிலவுக்குத் தளர்ந்தவளாய்த் தன் நெஞ்சுக்கு அருளிச் செய்கிறாள் இதில்

இடம் போய் விரிந்து இவ் உலகளந்தான் எழிலார் தண் துழாய்
வடம் போதினையும் மட நெஞ்சமே நங்கள் வெள் வளைக்கே
விடம் போல் விரிதல் இது வியப்பே வியன் தாமரையின்
தடம் போதொடுங்க மெல் ஆம்பல் அலர்விக்கும் வெண் திங்களே
– -76 – வடம் போதில் -பாட பேதம்-தலைவனது மாலை பெறாது வருந்தும் தலைவி சந்த்ரனைக் கண்டு வருந்துதல் —

இடம்போய் விரிந்து–எல்லாவிடங்களிலும்போய் வளர்ந்து
இ உலகு அளந்தான்–இவ்வுலகத்தை அளந்து கொண்டவனுடைய
எழில் ஆர்–அழகு நிறைந்த
தண்–குளிர்ந்த
துழாய்போது வடம்–திருத்துழாய் மலர் மாலையைப் பெறும் பொருட்டு
இனையும்-வருந்துகிற
மட நெஞ்சமே–பேதைமையுடைய மனமே!
வியல் தாமரையின் தடபோது–சிறந்த பெரிய தாமரைமலர்
ஒடுங்க–குவிய
மேல் ஆம்பல்–புல்லிய ஆம்பலை
அலர்விக்கும்–அலரச் செய்கிற
வெள் திங்கள்–வெள்ளிய சந்திரன்
நங்கள் வெள்வனைக்கே வடம் போல் விரிதல் இது–நமது வெளுத்த வளைகளைக் கழலச்
செய்வதற்காகவே விஷம்போல ஒளி பரப்புதலாகிய இது
வியப்பே–ஓர் ஆச்சரியமோ?

ஓரா நீர் வேண்டினவை உள்ளதெல்லாம் செய்கின்றேன்
நாராயணன் அன்றோ நான் என்று –பேருரவைக்
காட்ட அவன் சீலத்தில் கால் தாழ்ந்த மாறன் அருள்
மாட்டி விடும் நம்மனத்து மை–
83-உம்முடைய பேற்றுக்கு நீர் பிரார்த்திக்க வேணுமோ –நாமே பிரார்த்திதுச் செய்ய வேண்டும்படி அன்றோ நமக்கு யுண்டான ஸ்ரீ நாராயணத்வ பிரயுக்தமான ரக்த ஸ்பர்சம் – ஆன பின்பு நாமே உம்முடைய சர்வ அபேஷிதங்களையும் செய்யக் கடவோம் -என்று
அவன் அருளிச் செய்ய தனது பெருமை பாராதே-எனது சிறுமை பாராதே-இப்படி அருளிச் செய்வதே
இது ஒரு சீலம் இருக்கும் படியே -என்று அவனுடைய சீல குணத்திலே வித்தராகிற ஓர் ஆயிரத்தில் அர்த்தத்தை-ஓரா நீர் வேண்டினவை -இத்யாதியாலே அருளிச் செய்கிறார்-சீல குணத்திலே ஆழம் கால் பட்டு அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் அருள் உண்டு – கிருபை –அந்த கிருபை –மாட்டி விடும் நம் மனத்து மை – நம்முடைய அஞ்ஞானத்தை நிச்சேஷமாகப் போக்கும் –

இடம் போய் விரிந்து--பள்ளம் உள்ள இடம் எங்கும் வெள்ளம் பரக்குமா போலே –அவகாசம் உள்ள இடம் எங்கும் போய் வளர்ந்து – இந்த லோகத்தை அளந்து கொண்டவனுடைய –எழிலார் தண் துழாய்-உண்டு —இதுக்கு எல்லாமாக முதலியாராக  இட்ட மாலை –அவன் திரு மேனியிலே ஸ்பர்சத்தாலே அழகியதாய் குளிர்ந்து இருந்துள்ள திருத் துழாய் மாலையிலே செவ்வியைப் பெற வேணும் என்று ஆசைப்பட்டு
பெறாமையால் தளரா நிற்பதாய் –அதன் அருமை -சொன்னால் கேளாதே -பற்றினத்தை விடாதே -கிடக்கிற நெஞ்சே -(மட நெஞ்சமே)-வடம் என்று மாலையாய் போது என்று புஷ்பமாய் – இத்தாலே செவ்வியைச் சொல்லி அதற்க்கு ஆசைப் படுகிறாள் என்றது ஆய்த்து –நங்கள் இத்யாதி –நம்முடைய சங்கு வளையின் மேலே விஷம் போலே பரக்கும் இது ஒரு விஸ்மயமோ –வெள் வளைக்கே –தம் தாமுக்கு பிராப்தியாய் உள்ள இடங்களிலே நலிகை முறை இறே –தானும் வெண் திங்களாய்
இதுவும் வெள் வளை யாகையாலே –நிறத்திலே சாம்யம் கொண்டு -நலியலாம் இறே –வியன் தாமரை இத்யாதி –வாசி அறியாதார் என் செய்யார்கள் –விஸ்மயநீயமான தாமரையினுடைய பெருத்த பூவானது ஒடுங்கவும் – ஷூத்ரமுமாய் புல்லிதமுமான ஆம்பல் அலரும்படியாகவும் பண்ணுமதான வெண் திங்கள் –நங்கள் வெள் வளைக்கே விடம் போலே விரிதவிது வியப்பே –முதலியாராக -ஸ்வாமி ஆகைக்காக-

சந்திரன் தாமரையை வருத்தி மூடச் செய்து ஆம்பலை அலர்த்துவது போலே -தாமரைக்கு தலைவன் ஸூரியன் மறைந்த இடத்தில் தலைவனை பிரிந்த என்னை வருத்தி கை வளைகள் கழல பண்ணுவதில் ஆச்சர்யம் இல்லையே-வடம் போதினையும்-போது வடம் இனையும் -மாலையைப் பெரும் பொருட்டு வருந்துகிற –வடம் போதில் நையும் என்றும் பிரித்து அதே பொருள் விடம் போல் விரிதல் -நம்மை கொலை செய்யவே தோன்றியது என்றபடி-

ஸ்வாபதேசம் – பேறு பெறாத நிலையில் தமக்கு உண்டான விவேகமும் பிரதிகூலமாய் வருத்தும் தன்மையை ஆழ்வார் திரு உள்ளத்தை நோக்கி கூறுதலாம்-இடம் போய் விரிந்து இவ் உலகளந்தான் எழிலார் தண் துழாய்-வடம் போதினையும் மட நெஞ்சமே-சர்வ ஸூலபனானவனுடைய
போக்யதையில் ஈடுபட்டு பூர்ண அனுபவம் கிடைக்காமல் வருந்தும் இள மனமே – வியன் தாமரையின்-தடம் போதொடுங்க மெல்லாம் பலலர்விக்கும் வெண் திங்களே-சிறந்த பொருள்களை வெளிக் காட்டாமல் இழிந்த பொருள்களை வெளிக்காட்டுகிற விவேகம்-நங்கள் வெள் வளைக்கே-விடம் போல் விரிதல் இது வியப்பே –நம் சுத்தமான அடிமைத் தன்மையை குலைக்க பரப்பும் இது ஆச்சர்யமோ –நாயகனது மாலைபெறாமல் வருந்துகின்ற நாயகி மதிக்கு இரங்கி நெஞ்சொடு கூறல் இது.
எல்லாவிடங்களிலுஞ் சென்று வளர்ந்து இந்தவுலகத்தை அளந்து கொண்டவனான ஸர்வேச்வரனுடைய திருத்துழாய் மாலையைப் பெறும்பொருட்டு வருத்திக் கிடக்கிற நெஞ்சமே! சந்திரன், சிறப்பில்லாத ஆம்பலினிடத்து அன்பு வைத்து அதற்கு மகிழ்ச்சி தந்து சிறந்த தாமரையை அழிக்கும் அற்ப குண முடையவனாதலால் அவன் நமது அழகிய கைவளைகளைக் கழலச் செய்தல் ஒரு வியப்பன்று என்கிறாள். இது சந்திரோபாலம்பம். -தாமரைக்குத் தலைவனான ஸூர்யன் கண் மறைந்த விடத்து அத்தாமரையை வருத்துகிற இவனுக்கு, தலைவனைப் பிரிந்த எம்மை வருத்துதல் இயல்பே என்றவாறு.-வடம்போதினையும் = ‘வடம்போது இனையும்’ என்று பிரிப்பதன்றி, வடம்போதில் நையும் எனவும் பிரிக்கலாம்; பொருள் ஒன்றே.மடநெஞ்சமே! = தூலபமான பொருளில் பற்றுவைத்ததோடு அப்பற்றை என்றும் விடமாட்டாமல் வீணே வருந்துகின்ற நெஞ்சமே! என்றவாறு, ‘விடம்போல் விரிதல் என்றது- விஷம் கொலைசெய்வது போல நம்மைக் கொலை செய்வதற்காகவே வந்து தோன்றல் என்றபடி;-ஆகவே இவ்வுலமை- வருத்துந் தன்மை பற்றியதேயன்றி நிறம்பற்றியதன்று. வியப்பே = ஏ- எதிர்மறை; வியப்பன்று என்றவாறு.–இதற்கு உள்ளுறை பொருளாவது– பேறு பெறாத நிலையில் தமக்குண்டான விவேகமும், பிரதிகூலமாய் வருத்துந் தன்மையை-ஆழ்வார் தமது திருவுள்ளத்தை நோக்கிக் கூறுதலாம். (இடம் போய் + மடநெஞ்சமே!) ஸவஸகூலபனான ஸர்வேச்வரனுடைய
போக்யதை முதலியவற்றறில் ஈடுபட்டுப் பூர்ணாநுபவங் கிடையாமை பற்றி வருத்தம் இளமனமே!
(வியல் தாமரையின் தடம்போது ஒடுங்க மெல்ஆம்பல் அலர்விக்கும் வெண்திங்கள்) சிறந்த பொருள்களை வெளிக்காட்டாமல் இழிந்த பொருட்களை வெளிக்காட்டுகிற விவேகம். (எங்கள் வென்வளைக்கே விடம்போல் விரிதல் இது வியப்பே) நமது சுத்தமான அடிமைத் தன்மையையும் குலைப்பதாகப் பரவுகிற விது ஆச்சரியமோ! என்று ஆழ்வார் திருவுள்ளத்தில் க்லேசத்தோடு அருளிச் செய்தராயிற்று.

இடம் போய் விரிந்து இவ் உலகளந்தான் எழிலார் தண் துழாய் வடம் போதினையும் மட நெஞ்சமே– அவகாசம் யுள்ள இடம் எல்லாம் சென்று பரம்பி இந்த லோகத்தை அளந்து கொண்டவனுடைய வெற்றி அழகாலே புனையப்பட்ட செவ்வித் திருத்துழாயினுடைய தொடையு ண்ட பூந்தாரிலே சிதிலமாய்
பற்றிற்று விடமாட்டாமல் ஈடுபடா நிற்கிற நெஞ்சமே-வடம் -என்று தொடை-நங்கள் வெள் வளைக்கே விடம் போல் விரிதல் இது வியப்பே வியன் தாமரையின்-தடம் போதொடுங்க மெல் ஆம்பல் அலர்விக்கும் வெண் திங்களே – வியன் தாமரையின் தடம் போது ஒடுங்க மெல் ஆம்பல் அலர்விக்கும் வெண் திங்கள்-நாங்கள் வெண் வளைக்கே விடம் போலே விரிதல் இது வியப்பே என்று அந்வயம்-பெரிய வைலக்ஷண்யத்தை யுடைத்தான தாமரையினுடைய இடமுடைத்தான பூவானது மொட்டிக்கும்படி அல்பமான ஆம்பலை அலர்விக்கும் வெளுத்த சந்த்ரனானவன் நம்முடைய வெளுத்த வளைக்கு விஷம் போலே பரம்புகிற இது ஆச்சர்யமோ என்று நெஞ்சைக் குறித்து இரங்கி உரைத்தாள் யாயிற்று–இத்தால் ஸர்வ ஸூலபனாய் ஸூ சீலனான ஸர்வேஸ்வரனுடைய சேஷித்வ போக்யத்வாதி குண உன்மேஷத்திலே ஈடுபட்ட திரு உள்ளத்தைக் குறித்து நிரதிசயமான போக்ய விகாஸத்தை ஸங்கோசிப்பித்து அர்வா சீத விகாஸம் பண்ணிப் போருகிற இந்தப் ப்ரகாஸ விகாஸமானது
நம்முடைய கையில் ஸூத்த ஸ்வ பாவமான மினுக்கத்தையும் குலைப்பதாக ப்ரசரிக்கிற இது ஆச்சர்யமோ என்று வெறுத்து உரைத்தாள் ஆயிற்று –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம்-இடம் போய் விரிந்து பள்ளமுள்ள இடம் எங்கும் போய் வெள்ளம் பரக்குமா போலே அவகாசமுள்ள இடம் எங்கும் பரந்து-இவ் உலகளந்தான் எழிலார் தண் துழாய்-இந்த லோகத்தை அளந்து கொண்டவனுடைய எழிலார் தண் துழாய் யுண்டு இதுக்கு எல்லாமாக முதலியாய் இட்டமவை அவன் திருமேனியிலே ஸ்பர்சத்தாலே அழகியதாய்க் குளிர்ந்து இருந்துள்ள திருத்துழாய்-வடம் போதினையும் மட நெஞ்சமே-வடமாகிற பூவை இச்சித்துப் பெறாமல் சிதிலமாய் இருக்கிற திருத்துழாய் மாலையில் செவ்வியைப் பெற வேணும் என்று ஆசைப்பட்டுப் பெறாமையாலே தளரா நிற்பதாய் அதில் அருமை சொன்னால் கொள்ளாதே பற்றிற்று விடாதே கிடக்கிற நெஞ்சே–நங்கள் இத்யாதி-நம்முடைய சங்கு வளையின் மேலே விஷம் போலே பரக்கும் இது ஒரு விஸ்மயமோ-வெள் வளைக்கே விடம் போல் விரிதல் இது வியப்பே-தம் தாமுக்கு பிராப்தி யுள்ள இடங்களிலே நலிகை முறைமை இறே தானும் வெண் திங்களாய் இதுவும் வெள் வளையாகையினாலே நிறத்தில் ஸாம்யம் கொண்டு நலியலாம் இறே-வியன் தாமரையின் தடம் போதொடுங்க மெல்லாம் பலலர்விக்கும்
வாசி அறியாதார் என் செய்யார்
-விஸ்மய நீயமாய் இருந்துள்ள தாமரையினுடைய பெருத்த பூவானது ஒடுங்கும்படியாகவும் ஷூத்ரமாய்ப் புல்லிதான ஆம்பல் அலரும்படியாகவும் பண்ணும்படியான-வெண் திங்களே –வெள் வளைக்கே விடம் போல் வருமிது வியப்பே-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-வியாக்யானம்–இடம் போய் விரிந்து இவ் உலகளந்தான் எழிலார் தண் துழாய் வடம் போதினையும் மட நெஞ்சமே-அவகாசம் உள்ள இடம் எல்லாம் சென்று பரம்பி இந்த லோகத்தை அளந்து கொண்ட அவனுடைய விபூதி த்வய ஆதி ராஜ்ய அர்ஹமான செவ்வித் திருத்துழாய்த் திருமாலைக்குஅழகு பெறுத்தும் குஸூ மங்களில் பாடிய ஆசைப்பட்டு அது கிடையாமையாலே நைந்து இருக்கிற எனக்கு பவ்யமான நெஞ்சமே அவன் துஸ் ஸ்வ பாவத்தைக் கேளாய்–வியன் தாமரையின் தடம் போதொடுங்க மெல்லாம் பலலர்விக்கும் வெண் திங்களே
இந்த வெளுத்த சந்த்ரனான இவன் விஸ்மய நீயமும் விசாலமுமான தடாகங்களில் யுள்ள கமலங்கள் எல்லாம் முகிளிதமாம் படி அதி ம்ருதுவும் அதி அல்பமுமான ஆம்பல்களை விகசிப்பிக்குமவன் அன்றோ-ஏவம் பூதன் நங்கள் வெள் வளைக்கே விடம் போல் விரிதல் இது வியப்பே நம்முடைய வளைகள் கழலுமதுக்குத் தன் நிலவால் விஷம் போலே விஸ்த்ருதனாமது இது நமக்கு ஓர் விஸ்மயமோ-ஆளும் பரமன் -திருவாய் -3-7-2-என்றும்-அளிக்கும் பரமன் -திருவாய் -3-7-6-என்றும்
பேர் பெற்ற நம் இறைவன் நமக்குத் தன் எழிலார் தண் துழாய் வடத்தைத் தந்தால் நாம் நையோமே
அப்போது நம் வளை கழலப் பண்ண வல்லவன் அல்லனே என்கிறாள் —

ஸ்வாபதேசம்-இத்தால் -திரு வுலகு அளந்து அருளின போது சாத்தின அச்செவ்வி மாலை
இப்போது பெற வேணும் என்று ஆசைப்பட்டுப் பெறாமையாலே அநுகூல பதார்த்தங்கள் அடைய பாதகமான படியைச் சொல்லுகிறது

தாத்பர்யம்--இந்நாயகி திருவிக்ரமனாக எங்கும் ஆக்ரமித்த -திருவிக்ரமன் –புருஷோத்தமன் அணிந்த திருத்துழாய்க்கு ஆசைப்பட்டு கிடைக்காமல் தளர்ந்து இருக்க-அதுக்கும் மேலே சந்திரனும் வந்து நலிய
அது கிடைக்காமல்-கிடைக்க அரிது என்று பலவாறு உரைக்கிலும் கேளாமல் பிடிவாதமாக நெஞ்சு
அதிலேயே அபி நிவேசம் மிக்கு இருக்க-சந்திரனும் இந்த சமயத்தில் ‘வெளுத்த வளை என்று -சஜாதீய பதார்த்தம் -என்று நலிய-வருத்தம் படும் விஸ்லேஷ சந்திரன் நலிவது ஆச்சர்யமோ-தாமரையை மூடப் பண்ணும் -மகான்களை நலிய பண்ணுவதுக்கு த்ருஷ்டாந்தம்-ஆம்பல் மலரை அலர்விக்கும் -தாழ்ந்தவர்களை உயர்த்தும் -ஸ்வ பாவன் அன்றோ -ஆகவே நம்மை நலிவதில் ஆச்சர்யம் இல்லையே -என்கிறாள்

9-3-ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்-ப்ரவேஸம்-

நீர் இங்கனே விரும்பிக் கேட்க வேண்டுமோ-நம்முடைய குடல் துவக்கை அறியீரோ -என்ன
அதனை-நினைந்தும் சொல்லியும் இனியர் ஆகிறார் –
நாராயணனே நங்கள் பிரான் -என்றத்தை கடாக்ஷித்து சுருக்கமாக பிரவேசம் அருளிச் செய்தார் –
கூவுதல் வருதல் செய்யாய் -என்று வேண்டிக் கொண்டார் மேல் –யார் வேண்டிக் கொள்ள வேண்டியதை யார் வேண்டிக் கொள்ளுகிறார் –
உம்முடைய லாபத்துக்கு நாம் வேண்டிக் கொள்ளும்படி அன்றோ-உம்மோடு நமக்கு உண்டான இரத்த சம்பந்தம் –குடல் துவக்கு –
ஆனபின்பு நீர் விரும்பியவை அனைத்தையும் செய்யக் கடவோம்-நீர் வெறுக்க வேண்டா -என்று சமாதானம் செய்தான் –
இவரும் சமாதானத்தை அடைந்தார் –
மையல் ஏற்றி மயக்க உன் முகம் மாய மந்த்ரம் தான் கொலோ-நாச்சியார் திரு மொழி -2-4-என்னக் கடவது இறே-
ஸ்ரீ கௌசல்யார் ஒரே பிள்ளையை உடையாளான நாம் உம்மைப் பிரிந்து தனி இருக்க மாட்டேன்-கூட வருவேன் இத்தனை -என்று பின் தொடர-
புரிந்து பார்த்து -அம்மையீர் நீர் என்னைப் பின் தொடருகிற இடம் தர்மத்துக்கு குறைவு வரும் காண் -என்று
முகத்தை பார்த்து ஒரு வார்த்தை அருளிச் செய்ய-மீட்பதற்குப் போன இவர் மங்களா சாசனம் செய்து மீண்டாரே அன்றோ –
இப்படி அன்றோ -அவனுடைய பார்வைகளும் -மையல் ஏற்றி -வார்த்தைகளும் -பெருமாள் வார்த்தைகள் -இருக்கும்படி –
அவன் வார்த்தை சொன்னால் பின்னை அவன் வழியே போக வேண்டும்படியாய் அன்றோ இருப்பது –அம்மான் பொடி போலே அன்றோ –
இதே போலே தான் ஸ்ரீ சீதா பிராட்டி வார்த்தை கேட்டு -பெருமாள் உடன் கூட்டி சென்றார் -இதுவும் அவனுக்கு இவள் போட்ட அம்மான் பொடி –

ஆக –
அவன் நாராயணனாய் இருக்கிற இருப்பை நினைந்தார் –நாராயணன் அவனே
அந் நாராயண மந்த்ரத்தின் உடைய பொருளை ஆராய இழிந்தவாறே-
ஒரு பொருளுக்கும் தன்னுடைய பேறு இழவுகட்கு வேண்டிக் கொள்ளுதற்கு தனக்கு சம்பந்தம் இல்லாமலே இருந்தது –
இப்படி இருக்கிறவன் தம் பக்கலிலே விசேடக் கடாஷம் செய்த படியையும்- நங்கள் பிரான் அவனே-
இந்த நாராயண மந்த்ரத்தின் அர்த்தத்துக்கு எல்லையான அவன் சீல குணத்தையும் நினைத்தார்-கடைவதும் கடலுள் அமுதம்
நினைந்தவாறே -இப்படி சீல குனமுடையவனை இப்பொழுதே காண வேண்டும் என்னும் விருப்பம் பிறந்தது-என் மனம் ஏகம் என்னும் இராப்பகல் –
அதில் தமக்கு அவன் இருந்த இடத்தளவும் கால்நடை தராதபடிக்கு ஈடாயிற்று-
அவனுடைய சீலம் முதலான குணங்களிலே ஈடுபட்டு தாம் துவக்கு உண்டபடி –சீலம் எல்லை இலான் –
இனித்தான் இவர் போனாலும் ஒரு கைங்கர்யத்தை செய்கை மிகையாம்படி இருப்பான் ஒருவனாய் இருந்தான் அவன்-
சுணை கேடன்-ஓதி நாமம் குளித்து -உச்சி தன்னால் —-நமக்கே நலம் ஆதலின் -தொழுது எழுதும் என்னும் இது மிகை –
இவர்தாம் ஓன்று செய்து அனுபவிக்க வல்லவர் அன்றிக்கே இருந்தார் –
அவனுடைய சீல குணங்களிலே கால் தாழ்ந்து இருக்குமவர் ஆகையாலே –
இப்படிப் பட்டவனுடைய சீல குணத்தின் மிகுதியைச் சொல்லி-தலைக் கட்டுகிறது இத் திருவாய் மொழி-

அன்றிக்கே-
முதல் பாசுரத்தால் பிராப்யமாக இருந்துள்ள ரூபம் -திரு மேனி வைலக்ஷண்யம் -இரண்டாம் பாட்டால் அதற்கு ஆதாரமான
ஸ்வரூபம் அடியேன் உள்ளான் -அகாரத்தால் -சேஷி -காரணம் -அழகன் -ஸ்வரூபத்தால் மேம்பட்ட -அர்த்த பலத்தால் வந்த
ஸ்ரீ யபதித்தவமும்-அகாரம் ரக்ஷணம் ரஷிக்கும் பொழுது பிராட்டி சம்பந்தம் வேணும் –
மூன்றாம் பாட்டில் முதல் பாதியால் -அவனது அருளால் –உணர்வின் உள்ளே நிறுத்தினேன் -அதுவும் அவனது இன்னருள் -ரக்ஷகத்வம்
காரணத்வத்தையும் -சப்த காரணம் அகாரம் -சுத்தமான உபாயத்வத்தையும் அருளிச் செய்து -அகரார்த்தம் அருளிச் செய்தார் ஆயிற்று –

கண்கள் சிவந்து -என்ற திருவாய் மொழியிலே பிரணவத்தின் அர்த்தத்தை அருளிச் செய்தார்-
அத் திருவாய் மொழியிலே முதல் இரண்டரை பாசுரங்களிலே-அகாரார்தம் -அகாரத்தின் பொருளை -அருளிச் செய்தது-

மேல்-ஒன்றரைப் பாசுரங்களாலே நான்காம் வேற்றுமையின் பொருளையும் -அடிமைத் தன்மையும் –
மகாரத்தின் பொருளையும் -யானும் தானாய் ஒழிந்தான் -அத்யந்த சேஷன் -அநந்யார்ஹ சேஷ பூதன் -அருளிச் செய்தார்-
நன்று -இது அடிமையாம் தன்மை -இது அவனுக்கே உரிமையாம் தன்மை -இது அவற்றுக்கு இடமாய் இருக்கிற ஆத்துமா-
என்று பிரித்து சொல்லாமல்-மகாரத்தின் பொருளாய் இருக்கின்ற ஆத்துமாவோடு கூட்டியே அருளிச் செய்தது என் -எனில்-
அவற்றைத் தனித் தனியே பிரித்து அருளிச் செய்யாதது
நான்காம் வேற்றுமையின் அர்த்தமும்–சேஷத்வம் -உகாரத்தின் அர்த்தமும்-அநந்யார்ஹத்வம் -ஆத்துமாவை விட்டுப் பிரிந்து
தனித்து இராமையாலே கூட அருளிச் செய்தார் -என்க –-
நர நாராயணன் -நியத பிரகாரம் -சரீர தயா -சாமான்ய கரண்யம் –
அதற்க்கு மேல நான்கு பாசுரங்களாலே-மகாரத்தால் சொல்லப்படுகின்ற ஆத்துமாவின் உடைய ஞான ஆனந்தங்கள்
முதலிய வற்றின் சிறப்பினை அருளிச் செய்தார்
மேல் இரண்டு பாசுரங்களாலே-இம்முறையில் பிரணவத்தின் அர்த்தத்தை நினையாத-வேதத்துக்கு புறம்பான
புறச் சமயத்தாரையும்-அகச் சமயத்தார் ஆகிற குத்ருஷ்டிகளையும் மறுத்தார் –
ஆக –
கண்கள் சிவந்து -என்ற திருவாய் மொழியாலே பிரணவத்தின் அர்த்தத்தை அருளிச் செய்து –
மேல்
கருமாணிக்க மலை -நெடுமாற்கு அடிமை -என்னும்-இரண்டு திருவாய் மொழி களாலும்
-நம –என்றதன் அர்த்தத்தை அருளிச் செய்தார்
எங்கனே எனின் –
சொல்லால் கிடைக்கின்ற பொருளும்-பொருளால் கிடைக்கின்ற பொருளும்
என்னும் இரண்டு வகையான பொருள்களும் கூறப்படும் -நம -என்ற சொல்லுக்கு-
அவற்றுள் சொல்லால் -கிடைக்கும் பொருளை -கரு மாணிக்க மலை -என்னும் திருவாய் மொழியில் அருளிச் செய்து
பொருளால் கிடைக்கும் பொருளை -நெடுமாற்கு அடிமை -என்னும் திரு வாய் மொழியில் அருளிச் செய்தார்-
நம -என்பதன் சொற்பொருள் -நானஎனக்கு உரியன் அல்லேன் -என்பதே அன்றோ –
ஒரு கன்னியானால் ஒருவனுக்கேயாய் இருக்கையும்-தான் தனக்கு உரியன் அன்றிக்கே இருக்கையும்-அன்றோ ஸ்வரூபம் –
அதனை அருளிச் செய்தார் கரு மாணிக்க மலை என்ற திருவாய் மொழியில்-
பொருள் ஆற்றலால் கிடைக்கும் பொருள் -அவன் அடியார்க்கு அடிமை பட்டு இருத்தல்-
அதனை அருளிச் செய்தார் – நெடுமாற்கு அடிமை -என்ற திருவாய் மொழியில்-
அதற்கு மேல்-கொண்ட பெண்டிர் -என்ற திருவாய் மொழியில்-நாராயண மந்த்ரத்தின் பொருளை அருளிச் செய்தார்
யாங்கனம் எனின் –
நாராயண பதத்துக்கு பொருள்-
தத் புருஷ சமாஹம் -ஸ்வாமித்வம் -நும்மது ஆகும் அவன் அன்றி மற்று இல்லை -தொண்டரோமாய் -பாசுரங்களால் –
-பஹு வ்ருஹீ சமாஹம் -வாத்சல்யம் -வண் புகழே -என்றும் -கணை ஒன்றாலே ஏழு மரமும் எய்த
உபாயத்வம் -கண்ணன் அல்லால் இல்லை கண்டீர்
உபேயத்வம்-குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே
வியாபகத்வம் -நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லை
என்னும் இவை முதலானவைகள் அன்றோ –
அதற்கு மேல்
பண்டை நாளால் -என்கிற திருவாய் மொழியில் ஆய -என்னும் நான்காம் வேற்றுமையும்-அர்த்தத்தை அருளிச் செய்தார்
நான்காம் வேற்றுமைக்கு பொருள் -கைங்கர்யத்தை பிரார்த்தித்தல் அன்றோ –
பிரணவத்தின் பொருளும்
நம -என்ற சொல்லின் பொருளும்
எங்கும் பரந்து இருத்தலும் -பரந்து இராமையும் –
வாசு தேவன் -விஷ்ணு -என்னும் வியாபக மந்த்ரங்களிலும் உண்டு-
அதில் தாம் ஆதரித்து அருளியது -திரு எட்டு எழுத்தே -என்னுமதனை-ஓர் ஆயிரமாய் -என்னும் இத் திருவாய் மொழியிலே
அருளிச் செய்கிறார்-இங்கனம் -நடுவில் திரு வீதிப் பிள்ளை -அருளிச் செய்வர் –

அர்த்தத்தை மட்டும் அருளிச் செய்யாமல் சப்தம் -நாராயண -தனிச் சிறப்புடன் அருளிச் செய்து -ஆப்த உபதிஷ்டம்-
சரம சதுர்த்தியில் -ஆய -தாதரத்தே சதுர்த்தி -சேஷத்வம் லுப்த சதுர்த்தி -அவனையே பிரதானமாக என்று சொல்லி –
இது பிரார்த்தனா சதுர்த்தி -கைங்கர்யம் பிரார்த்திக்கிறது -அநந்யார்ஹ சேஷத்வம் சித்திக்க பிரார்த்திக்க வேண்டுமே –
சேஷத்வம் நிலை நாட்டும் கைங்கர்யம் -சகல வித கைங்கர்யங்களையும் –பிரார்த்திக்க வேண்டுமே –
அவனும் சித்தம் -கைங்கர்யமும் சித்தம் -ஆய பிரார்த்தனா கர்ப்பம் –
தத் பிரார்த்தனா உபபத்தி பலத்தாலும் -பிரார்த்தனா சதுர்த்தி என்பது சித்திக்கும் –

மூன்றாம் திருவாய் மொழியிலே
கீழே கைங்கர்ய பிரார்த்தனையைப் பண்ணி கூவுதல் வருதல் செய்ய வேணும் -என்று அபேக்ஷிக்க –
அவனும் தன் நிருபாதிக பந்யத்தாலே-நீர் அபேக்ஷிக்க வேணுமோ நம்முடைய கார்யம் செய்கைக்கு என்று
தன்னுடைய பிரகார பிரகாரி சம்பந்த தயோதகமான நாராயணத்வத்தை பிரகாசிப்பிக்கக் கண்டு –
கார்யமான சர்வ லோக ரக்ஷண ரசமர்த்தமாயுள்ள
திவ்ய நாம சம்பத்தையும்
ரக்ஷணாதி வியாபாரத்தையும்
அகில வேத வேத்யதா பிரகாரத்தையும்
நித்ய ஸூரி போக்யதையையும்
அதனுடைய நிருபம வைலக்ஷண்யத்தையும்
அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி ஹேதுவான ஸ்ரீ லஷ்மீ சம்பந்தத்தையும்
பிரபல அநிஷ்ட பஞ்சநத்வத்தையும்
அபீஷ்ட தேச வர்த்தித்தவத்தையும்
ஆஸ்ரயண மிகையான அதிசயித்த சீலத்வத்தையும்
அதனுடைய வாசா மகோசர மஹத்தையையும்
அனுசந்தித்து எவம்வித ஸ்வ பாவனான சர்வேஸ்வரனை ஆசைப்பட்டு அவனுடைய சீலத்திலே வித்தராய்
அனுபவம் தன்னிலும் அஷமரான பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –

ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்
பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்
கார் ஆயின காள நல் மேனியினன்
நாராயணன் நங்கள் பிரான் அவனே–9-3-1-

அவன் நாராயணன் அன்றோ-நம் விருப்பத்தை முடித்தல் நிச்சயம்-என்று தம் திரு உள்ளத்தை குறித்து அருளிச் செய்கிறார் —

ஓர் ஆயிரமாய் அளிக்கும் –ஒவ்வொரு திருப் பெயரே ஆயிரம் முகத்தாலே எண்ணிறந்த வகைகளில் –காக்க வல்லதாய் இருக்கும் –

அவன் தூரஸ்தான் ஆனாலும் இது கிட்டி நின்று ரக்ஷிக்கும் –
இது தானே யோக்யதை பண்ணிக் கொடுக்கும் -வேறே யோக்யதை சம்பாதிக்க வேண்டாமே

உலகு ஏழ் அளிக்கும் –ஷிபாமி -அசுர யோனிக்யில் தள்ளினாலும் தள்ளுவார் -இவை அளிப்பது மட்டுமே செய்யும் -ஓர் உலகம் மாத்ரம் அன்றிக்கே-எல்லா உலகங்களையும் பாதுகாக்கும் –

புத்திரன் இறக்க அதனாலே வருந்திய –கோயிலாய்த்தான்-பட்டர் திருவடிகளிலே வந்து தன்-
சோகம் எல்லாம் தோற்ற விழுந்து கிடக்க-அவர் அருளிச் செய்த வார்த்தையை நினைப்பது-
நீ நம்முடைய திருப் பெயர் சாற்றின பிள்ளை இறந்தான் என்று அன்றோ துக்கப் படுகிறாய் -அதற்கு துக்கப் பட வேண்டா-
அந்த பெயரை உடைய நாம் இருந்தோமே -என்று
தம்மைப் போலே ஒரு விக்ரஹத்தை ஏறி அருளப் பண்ணி-அவர்க்கு கொடுத்து அருளினார் -என்பது சரித்ரம் –

நங்கள் பிரான் அவனே –-நம்மை காப்பாற்று கின்றவனான உபகாரகன் அவனே-
கூவுதல் வருதல் செய்திடாய் -என்று நம் பேற்றுக்கு நாம் பிரார்த்திக்க- நமக்கு உரிமை இல்லை என்கிறது –அவனே -என்கிற ஏகாரத்தாலே –
நம்மோட்டை குடல் துவக்கு -அயன சம்பந்தம் அறியீரோ–அயனம் ஆஸ்ரயம் பற்றி இருப்பதால் நாராயணன்-நாரங்களை அவன் ஆஸ்ரயித்து இருக்கிறான்
எவ் உயிர்க்கும் தாயாக –அத்தை அனுசந்தித்து இனியர் ஆகிறார் –

அசிஷ்ட பரிக்ரகமும் அபூர்த்தியும் உண்டே -விஷ்ணு வாஸூதேவ மந்திரங்களுக்கு –

————–

அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான்
அவனே அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான்
அவனே யவனும் அவனுமவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே–9-3-2-

அனைத்தும் பொதுச் சொல் -இதில் -கீழே -நாராயணன் நங்கள் பிரான் அவனே-மேலே சொல்லப் பட்ட நாராயணன்-என்னும் திருப் பெயரின்-பொருளை -அருளிச் செய்கிறார்-

அவனே -என்ற ஏ காரத்தால்-படைத்தல் முதலான கார்யங்களில் வேறு-ஸஹகாரி துணைக் காரணம் இல்லாமையைச் சொல்லுகிறது –

ஸ ப்ரஹ்மா ஸ சிவ ஸ இந்த்ரா —ஸ அஷர பரம ஸ்வராட் –-என்கிற பிரசித்தியைப் பற்றிச் சொல்லுகிறார்

ஆக-இரண்டு பாசுரங்களாலும்-திரு மந்தரத்தையும் அதன் பொருளையும் அருளிச் செய்தாராய் நின்றார்

———–

அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள்
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே–9-3-3-

உபாயமாக ஆபத்து போக்க வல்ல என்று தானே -அனுபவிக்கும் விருந்து என்று அடியேன் தானே அறிந்தேன் –
போக்யத்தை சீலாதிகளை அவன் கட்டக் கண்டு அறிந்தோம் -அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே-என்று கீழே சொல்லிய படி –

யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹ-ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபி பேதி குத்ஸ ஸ நேதி-தைத்ரியம் -என்றும்
யஸ்யாமதம் தஸ்ய மதம் அவிஜ்ஞாதம் விஜா நதாம்-கௌஷீதகி- -வாக்குக்கும் மனசுக்கும் எட்டாமல் -அறிவதற்கு அரியன் என்றே அறிந்த வேத வைதிக புருஷர்கள்

அஹம் வேதிமி மஹாத்மநாம் – ராமம் சத்ய பராக்ரமம் -வசிஷ்டர் அபி -வைதிகர் –அரியை வணங்கி அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே

சா பேஷ உபாயம் -வணங்கினால் செய்வான் -நிரபேஷ உபாயன் என்று கூட அறியவில்லையே

பிறவித் துன்பத்துக்கு மருந்து -என்னும் இவ்வளவே அறிந்தார்கள்-அவனுடைய இனிமையில் இழிந்திலர்கள்

வேதங்களும்-வேதார்த்தங்களை அறிந்த முனிவர்களும்-அறிந்த அளவு அன்றிக்கே
நான் அவனை முழுதும் அறியும் படி-எனக்குத் திருவருள் புரிந்தான் –என்று இனியர் ஆகிறார்-

————-

மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று
பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்
கருந்தேவன் எம்மான் கண்ணன் விண்ணுலகம்
தருந்தேவனை சோரேல் கண்டாய் மனமே–9-3-4-

1-நித்ய ஸூரிகளுக்கு இனியனாய் வைத்து–2-கிருஷ்ணனாய் வந்து அவதரித்து-
3-நம்மையும் அவர்கள் நடுவே வைப்பானாய் இருக்கிறவனை-விடாதே காண் -என்று-மூன்று ஆகாரங்கள் –
திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்

திவ்ய விக்ரகம் -காட்டி என்னை அடிமை சாசனம் எழுதிக் கொண்ட ஸுலப்யன் –
அந்நிய பரத்தையாதல் -அயோக்கியன் நைச்சிய அனுசந்தானம் பண்ணி போகாமல்
போகத்தை மட்டுப் படுத்தி -பரிகரம் -பொறுக்க பொறுக்க -கோபிகளுக்கு தன்னை மறைத்தால் போலே

சோரேல் கண்டாய் மனமே –அவனை உடம்பு வெளுக்க பண்ணாதே காண் -நெஞ்சே-இவன் விடுகையாவது-அவனுக்கு இழவு போலே காணும்-

————–

மனமே யுன்னை வல்வினையேன் இரந்து
கனமே சொல்லினேன் இது சோரேல் கண்டாய்
புனமேவிய பூந்தண் துழாய் அலங்கல்
இனமேதும் இலானை அடைவதுமே–9-3-5-

மனமே அவனை விடாதே காண் -என்றார் மேல்-
அவ்வார்த்தையை ஒலக்க வார்த்தையாக-நினைத்திராதே காண்-என்கிறார் இப்பாசுரத்தில்

வல்வினையேன்-பகவானை அடைவதை முறையாலே அடைவோம் என்று-இராதபடி பாவத்தைச் செய்தேன் –-விளம்பம் சஹியாத பாவம்-

கனம் -பொன் -சீரிய பொருளைச் சொன்னேன் -என்றபடி –-திடமாகவே சொன்னேன்-என்றுமாம் -உனக்கு மிக மேலான பொருளைச் சொன்னேன் என்க –

எதனை தான் நீர் இப்படி சோரேல் என்று சொல்லுகிறது -என்ன-
புனமேவிய பூந்தண் துழாய் அலங்கல் –எல்லை இல்லாத இனியனாவனை பற்றுதலை சோரேல் என்கிறேன் -என்கிறார் –
புனத்தில் மேவி இருப்பதான அழகை உடைய திருத் துழாய் மாலையை-உடையவன் ஆகையாலே ஒப்பு இன்றிக்கே இருக்கிறவனை
அத் தோள் மாலையை உடையனாகை அன்றோ அறப் பெரியன் ஆகையாவது-
ஒரு திரு முளைத் திரு நாளிலே -ப்ரஹ்மோஸ்தவம் – இப்பாட்டை அருளிச் செய்தது-
முன்னாள் -கையார் சக்கரத்துக்கு -ஆழ்வார் திருநாள் -–புறப்பட்டு அருளினபடி திரு உள்ளத்தில் கிடக்க
புனம் மேவிய பூந்தண் துழாய் அலங்கல் இனம் ஏதும் இல்லான் ஆகையாவது-நேற்றுப் புறப்பட்டு அருளின படி அன்றோ -என்று அருளிச் செய்தார் –
சேனை முதலியார் புறப்பாட்டை பெருமாள் புறப்பாடாக அருளிச் செய்தார் -நஞ்சீயர் என்ற படி -திருத் துழாய் மாலை சூடி இருப்பதால் –
ஐப்பசி கார்த்திகை ப்ரஹ்மோத்சவம் இருந்து இருக்க வேண்டும் -ஆழ்வார் திருநாள் -மார்கழி மாசம் என்பதால் –

———–

அடைவதும் அணியார் மலர் மங்கை தோள்
மிடைவதும் அசுரர்க்கு வெம்போர்களே
கடைவதும் கடலுள் அமுதம் என் மனம்
உடைவதும் அவற்கே யொருங்காகவே—9-3-6-

திரு மார்புக்கு எல்லாம் தானே ஆபரணமாய் போரும்படி இருப்பாளாய்–லஷ்மீ விசிஷ்டன் -அநிஷ்ட நிவ்ருத்தி -இஷ்ட பிராப்தி -ஆகாரத்ரயம்

இவர் திரு உள்ளம் உடைகுலைப் படுகைக்கு காரணங்கள் இவை –அடைந்த படியால் மிடைந்த படியால் கடைந்த படியால் ஒரு மடைப் பட உடைந்ததே

அவன் பனிக் கடலை கடைய-இவர் மனக்கடல் உடையப் புக்கது

அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி -ஹேதுவான –ஸ்ரீ லஷ்மி சம்பந்தம் -அவளுக்கு வல்லபன் –அறிந்து மனம் இழந்தேன்

தம்முடைய உபதேசம் பலித்து-இவ்விஷயத்தில் திரு உள்ளம் உருக் குலையா நின்றது –என்று இனியர் ஆகிறார்-

——

ஆகம் சேர் நரசிங்கமதாகி ஓர்
ஆகம் வள்ளுகிரால் பிளந்தான் உறை
மாகவைகுந்தம் காண்பதற்கு என் மனம்
ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே–9-3-7-

பிரபல அநிஷ்ட -பஞ்சகன் -வார்த்தைக்கும் பிராப்ய பூமி-நித்ய வாஸம் செய்கிற-பரம பதத்தை சென்று காண வேண்டும்-என்னா நின்றது -என் நெஞ்சு-என்கிறது

ஆகம் சேர் நரசிங்கமதாகி –-நர வடிவும் சிங்க வடிவும்-சேர்ப்பாலும் கண்ட சக்கரையும் போலே பொருந்திய-நரசிங்கமாய்
அன்றிக்கே-நரசிங்கத்தின் உடைய இவர் நெஞ்சிலே சேர்ந்த படி -என்னுதல் -என்றது –
ப்ரஹ்ம தண்ட பிரகாசானாம் வித்யுத் சத்ருச வர்ச்சசாம்-ஸ்மான் ராகவ பாணாநாம் விவ்யதே ராஷசேச்வர-யுத்தம் -60-3-
இராகவன் உடைய பாணங்களை நினைத்துக் கொண்டு -என்கிறபடியே- மறக்க ஒண்ணாதபடி திரு உள்ளத்திலே சேர்ந்த படியை சொன்னவாறு
அன்றிக்கே-இரண்டு வடிவு களையும் சேர்த்துக் கொடு வந்து தோன்றின போது-ஸ்தம்பே சபாயாம் -தோன்றின போது –
இவர் மனத்துக்கு இனியதாய் சேர்ந்து இருந்த படியைச் சொன்னவாறுமாம் –

மாகவைகுந்தம் காண்பதற்கு –அந் நரசிங்கம் வசிக்கிற முழஞ்சு காண ஆயிற்று-ஆசைப் படுகிறது-

————–

இன்றிப் போக இருவினையும் கெடுத்து
ஒன்றி யாக்கை புகாமை உய்யக் கொள்வான்
நின்ற வேங்கடம் நீணிலத் துள்ளத்து
சென்று தேவர்கள் கை தொழுவார்களே--9-3-8-

ஆசன்னமாக அவன் வர்த்திக்கும் –ஸ்ரீ வைகுண்ட விரக்தாய -அவன் வர்த்திக்கும் அபீஷ்ட திவ்ய தேசம் –

இச் சரீர சம்பந்தம் அற்றால் சென்று அனுபவிக்கைக்கு -பரம பதம் வேண்டுமோ-அது மாக வைகுந்தம் இது நீள் நிலம் –
இச் சரீரத்தோடு இருந்து கொண்டே அனுபவிக்கத் தகுந்த-திருமலை இம் மண் உலகிலே உள்ளது அன்றோ –திருமலையை உடைத்தது ஆகையாலே உளதாய-பெருமையை நோக்கி -நீள் நிலம் -என்கிறார் –
சென்று கை தொழுவார்கள் தேவர்கள் – அவ்வளவு தூரம் கால் நடை தந்து போக வல்லார்-புண்யம் மிக்கவர் அன்றோ–அவனுடைய சீலம் முதலான குணங்களை நினைத்து சொல்கிறார்-இவர் சக்ரவர்த்தி போல் பிரியாமல் சேர்ந்து இருந்தே துன்பம் -ஸுசீல்யம் படுத்தும் பாடு ஆழ்வாருக்கு –
அன்பினாலே மூடப் பட்டார்க்கு-அவ் உலகத்தோடு இவ் உலகத்தோடு-வாசி அற்றதே அன்றோ -எட்டாமைக்கு –திருப் புளிங்குடியும் திருமலையும் பரம பதமும் இவருக்கு ஒரே மாதிரி தானே இதனால் –

——–

தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு
எழுது மென்னுமிது மிகை யாதலில்
பழுதில் தொல் புகழ்ப் பாம்பணைப் பள்ளியாய்
தழுவுமாறு அறியேன் உன தாள்களே–9-3-9-

ஆச்ரயண உத்தியோகமும் அதிகம் -ஸூ பிரயத்தனம் கூடாதே-முயன்றால் க்ஷமிக்க மாட்டான் அவன் -பிராப்தி இல்லையே –

முயற்சி செய்ய ஷமர் அல்லர் ஆழ்வார் -சக்தி இல்லையே -கால் ஆளும் கண் சுழலும் அன்றோ

அவன் திரு முன்னர் முறையாக அடிமை செய்ய-ஒண்ணாத படி அழிக்கும் அவனுடைய
சீல குணத்தைச் சொல்லுகிறது -என்று-நம் உடையவர்கள் அருளிச் செய்வார்கள் –

தழுவுமாறு அறியேன் உன தாள்களே–உன் திருவடிகளை அணையும் விரகு அறிகிலேன் –
வலி இல்லாமையாலே முதலிலே கிட்டுதல் அரிது-கிட்டினாலும்-சீலத்தின் மேன்மையை நினைத்தால்-ஓர் அடிமை செய்ய இயலாதவனாக இருக்கிறேன் –

———-

தாள தாமரையான் உனதுந்தியான்
வாள் கொள் நீள் மழு வாளி உன்னாகத்தான்
ஆளராய்த் தொழுவாரும் அமரர்கள்
நாளும் என் புகழ் கோ உனசீலமே–9-3-10-

தாஸ்ய சுவடே அறியாத -அடிமையின் இனிமையை அறியாத-பிரமன் முதலாயினோர்கட்கும்
பற்றப் படுமவனாய்-இருக்கிற உன்னுடைய சீலம்-என்னால் புகழ்ந்து முடிக்க ஒண்ணாது -என்கிறார்

அநந்ய சரண்யத்வ லக்ஷணமான (வேறு ஒருவரையும் அடைகலமாகப் பற்றாமையை-தெரிவிக்கிற)-
தொடை ஒத்த துளவமும் கூடையுமாக -புகுந்து இருக்கிறான் அல்லனே –

——-

சீலம் எல்லை இலான் அடிமேல் அணி
கோல நீள் குருகூர்ச் சடகோபன் சொல்
மாலை ஆயிரத்துள் இவை பத்தினின்
பாலர் வைகுந்தம் ஏறுதல் பான்மையே–9-3-11-

நிகமத்தில்-இத் திருவாய் மொழி கற்றார்-பரம பதத்தே செல்லுதல்-ஆச்சர்யம் அன்று –பிராப்தம் -தக்கதே –என்கிறார் –

ஸ்வ பாவம் -இயற்க்கை -ஜகத் ரக்ஷணம் -ஸ்ரீ யபதித்தவம்-இவை எல்லாம் ஸ்வ பாவம் – வாத்சல்யாதிகள் பிரபாவம் என்றவாறு –

இத் திருவாய்மொழி சொல்லப் பட்டது –அமர்யாத-சாஸ்திரத்துக்கு மீறிய எல்லை இல்லா -சீல குணத்தின் மேம்பாட்டை ஆயிற்று- அதனை முடித்துக் காட்டுகிறார் -சீலம் எல்லை இலான் -என்று

ஆயிரத்துள் இவை பத்தினின் பாலர் –இப்பத்தின் பக்கத்தில் உளராமவர் -என்றது-
இப்பாசுரங்களை ஒருகால் சொல்லுதல்-
இவற்றைப் பாடம் செய்தல்-
இவற்றைப் பொருள் அறிவோடு படித்தல் –-என்னும் இவற்றில் ஒரு வழியாலே இதில் சம்பந்தம் உடையவர் -என்றபடி –

வைகுந்தம் ஏறுதல் பான்மையே –-பரம பதத்தில் செல்லுதல் இயல்பாகவே இருக்கும் –-யாங்கனம் -எனின்
மாக வைகுந்தம் காண்பதற்கு ஏகம் எண்ணினார் இவர் –
இப்பாசுரங்களில் யாதானும் ஒரு வகையில் சம்பந்தம் உள்ளவர்களுக்கு- பிரார்த்தித்துப் பெற வேண்டுவது தானாகவே கிடைக்கும்- பிராப்தம் என்பதாம் –
தமப்பன் செல்வம் மகனுக்கு-தாய பாகமாக அடைய வேண்டியதாகவே-இருக்கும் அன்றோ –

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -75 -உலாகின்ற கெண்டை ஒளி யம்பு –சன்மம் பல பல -3 -10 –

March 16, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே-தலைவன் தலைவியின் வூரைப் பற்றி விசாரித்தல் –
ஸ்ரீ வைகுண்டமோ -வையகமோ -உங்கள் ஊர்-பதி வினாவுதல் -மதி உடன் படுக்கை -தலைமகன் தனது எடுத்துக் காட்ட -கேள்வி எழுப்பி -வியாஜமாக -ஆழ்வாருக்கு நிகர் இங்கும் அங்கும் இல்லை
கிளவித் தலைமகன் -பாகவத உத்தமர் வார்த்தை – கண்ணாலே இங்கேயே இருப்பதை பார்த்து -உபய வியாவ்ருத்தராக ஆழ்வார் இருப்பதைச் சொல்வது -இப்பாசுரம் – சன்மம் பல பல -3 -10 –இதன் விவரணம்-திருமாலின் சீர் பரவி –யானோர் குறை இலனே –பரிவிலனே -ஒன்றும் துயர் இலனே
இன்புறும் இவ்விளையாட்டுடையானைப் பெற்று யாதும் அல்லல் இலனே-குறைவில் தடம் கடல் தன் கோலச் செங்கண் –உறைபவன் போல் -யோகு செய்யும் அவனைப் பற்றி குறைவிலனே-அங்கு
இங்கும் திருப்பாற்கடல் சேஷசாயி -சேவிக்க வந்த நித்ய ஸூரிகள் நித்ய வாஸம் செய்யும் ஸ்ரீ வைகுண்டம் – உலாவும் அழகிய மீன் -பாயும் அம்பு போல் ஒளிபடைத்த கூர்மையான ஆழ்வார் கண் –
ஞான வைலக்ஷண்யத்துக்கு விசேஷணங்கள்-முகத்தீர் -ஆழ்வார் தமரையும் தம்மைப் போலே ஆளாக்கி அருளியதைக் காட்டுமே )

அவதாரிகை – கலந்து இருக்கிற தலைமகன் கொண்டாடுகிற படியிலே ஒரு வகை யாதல் –
(தென்றல் ஆகிற பாகவதர் -தலைமகன் )-அன்றிக்கே-இயற்கையிலே (கண்டவுடனேயே )ஐயமாதல்  –ஒரு நாள் சம்ஸ்லேஷித்து –விஸ்லேஷித்து –பின்னையும் வந்து சம்ஸ்லேஷித்த நாயகன்-நாயகி உடைய வைபவம் உபய விபூதியிலும் அடங்காது என்று கொண்டாடுகிறான் என்னுதல் –அன்றிக்கே –
யாத்ருசிகமாக பிரதமத்தில் சம்ஸ்லேஷித்து பரிச்சேதிக்க மாட்டாதே சம்சயிக்கிறான் என்னுதல்-மதி யுடம்படுக்கலுற்ற தலைவன் தலைவிப் பற்றி தோழியரை வினாதல் —

இவருடைய ஆஸ்வாஸ அதிசயம் கண்ட அன்புடையார் இவர் திவ்யராய் இருக்கிறாரோ இந்த விபூதியிலே இவ்வதிசயத்தைப் பெற்றவரோ என்று விஸ்மிதராய்ச் சொன்ன பாசுரத்தை தலைவன் பாங்கியுடன் தலைவியை எதிர்ப்பட்டு வியந்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-அவதாரிகை -ப்ரஹ்ம வித் அக்ர கண்யர்கள் இவருடைய ப்ரபாவத்தைத் தங்கள் பார்வையால் முகந்து கொண்டு ஸந்துஷ்டார்களாய் ஸேவித்துப் பரிமண்ட விதராய் நிற்க
அவர்களைக் கடாக்ஷித்து இன்னபடியாக அருளிச் செய்கிறார் இதில்

உலாகின்ற கெண்டை  யொளி யம்பு எம்மாவியை யூடுருவக்
குலாகின்ற வெஞ்சிலை வாள்   முகத்தீர் குனிசங்கிடறிப்
புலாகின்ற வேலைப் புணரி யம்பள்ளி யம்மான் அடியார்
நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே
– -75 –தலைவன் தலைவியின் வூரைப் பற்றி விசாரித்தல் 

உலாகின்ற–(காதளவுஞ் சென்று மீண்டு) உலாவுகிற
கெண்டை–கெண்டை மீன் வடிவமான
ஒளி அம்பு–ஒளியையுடைய (கண்களாகிய) அம்புகள்
எம் ஆவியை ஊடு உருவ–எமது உயிரை ஊடுருவித் துளைக்கும்படி
குலாவுகின்ற–(அவ்வம்புகளைப் பிரயோகிப்பதற்கு) வளைகிற-இந்திரியங்களுக்கு விஷயமாக –
வெம்சிலை–(புருவமாகிய) கொடிய வில்லையுடைய
வாள் முகத்தீர்–ஒளியுள்ள முகமுடையவர்களே!
குனி சங்கு இடறி–வளைந்த வடிவமுள்ள சங்குகளைக் கொழித்து எழுந்து
புலாகின்ற–மீன் நாற்றம் வீசப்பெற்ற
வேலை–அலைகிளர்ச்சியையுடைய
புணரி–கடலை
அம்பள்ளி–அழகிய படுக்கை யிடமாகவுடைய
அம்மான்-ஸர்வேஸ்வரனது
அடியார் நிலா கின்ற–பக்தர்களான நித்யமுக்தர் விளங்கி வாழப்பெற்ற
வைகுந்தமோ–ஸ்ரீவைகுண்ட லோகோமோ
வையமோ–இந்த நிலவுலகமோ
நும் நிலை இடம்–உங்களது இருப்பிடம்?

சன்மம் பல செய்து தான் இவ்வுலகு அளிக்கும்
நன்மை யுடைய மால் குணத்தை நாடொறும் -இம்மையிலே
ஏத்தும் இன்பம் பெற்றேன் எனும் மாறனை யுலகீர்
நாத் தழும்ப வேத்தும் ஒரு நாள்
—30-இதரரைக் கவி பாடுகைக்கு அனர்ஹ கரண மாத்ரமாகை அன்றிக்கே பகவத் விஷயத்தை கவி பாடுகைக்கு அர்ஹ கரணனாகவும் ஆகப் பெற்றேன்
எனக்கு இனி வேண்டுவது உண்டோ என்று ஹ்ருஷ்டராகிற சன்மம் பல பல-வின் அர்த்தத்தை
சங்க்ரஹித்து அருளிச் செய்கிறார்–இப்படி அவன் கல்யாண குணங்களை ஸ்துதிக்கப் பெற்றேன் என்று அருளிச் செய்த ஆழ்வாரை லௌகிகராய் உள்ளவர்களே நாத் தழும்பு ஏறும்படி ஸ்துதியுங்கோள்
அது தான் பல நாள் வேண்டா-ஒரு நாள் அமையும்-வீவில் காலம் இசைமாலைகள் ஏத்தி மேவப் பெற்றேன் -வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்நதனன் மேவியே – பகலிராப் பரவப் பெற்றேன் -என்கிற நிர்பந்தம் வேண்டா-நாத் தழும்ப வேத்தும் ஒரு நாள்–சத்ருத் சேவிக்க அமையும்-சர்வதா சரசமாய் இருக்கும்-நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் -என்னும் விஷயம் இறே –

உலாகின்ற கெண்டை –உலாகின்ற கெண்டை போல் ஆயிற்று மௌக்த்யம் (அழகு )இருக்கிறபடி-ஒளி யம்பு –இவன் பார்த்த போது (அவள் ) பாராதே – பாராத போதாகப் (அவள் )பார்க்கையாலே – வரவு தெரியாதபடி-காணாக் கோலாக வந்து தைக்கிற படி – ஒளிக்கிற அம்பு –ஒளி யம்பு –கண் கொண்டு தப்ப ஒண்ணாது இருக்கிறபடி –(சாடு-கண் என்று பார்வையாய்-நாயகி பார்வையில் இருந்து தப்ப ஒண்ணாதபடி இருக்குமே–கண்ணாலே கண்டு தப்ப ஒண்ணாது-தோற்று ஜிதம் என்று சொல்லப் பண்ணுமே )எம்மாவியை ஊடுருவ – இது தான் புறம்பு ஒருவர் மேல் தையாதே –நம் மேல் தைப்பதுமாய் இருந்தது –-அது தன்னிலும்-தோல் புரையே போமது அன்றிக்கே -பிராணனிலே தைப்பதுமாய் இருந்தது – அது தன்னிலும் – தோற்றம்பு அன்றிக்கே -மறுபாடுருவத்தை தைப்பதுமாய் இரா நின்றது –(தோல் புரைய –வேதாந்த தாத்பர்யம் -சரீரம் பார்க்காமல்-மனமுடையீர் என்ற இதுக்கு ஸ்ரத்தையே அமையும்-பழுதிலா ஒழுகலாற்று பல சதுப்பேதி மாரில் -எம்மடியார்கள் ஆகில் -கொடுமின் கொள்மின்
கண்ணன் கழல்கள் நண்ணும் மனமுடையீர் என்னும் திரு நாமம் திண்ணம் நாரணமே-ஆவி
-ஆத்மாவையே பார்க்கும் அன்று மேலோட்டமாக தொடாமல் –மறுபாடுருவத்தை தைப்பதுமாய் இரா நின்றது -)

குலாகின்ற வெஞ்சிலை வாள்   முகத்தீர் –எப்போதும் ஒக்க வளைந்த படியாய் இருப்பதாய் –
ஒரு வியாபாரம் பண்ண வேண்டாதே –கண்ட காட்சியிலே இலக்கானார் அழியும் படியாய் –
அல்லா வில்களோபாதி  – கையிலே இருக்கை அன்றிக்கே –முகத்திலே இருக்குமதான வில்-வர்த்தியா நின்றுள்ள முகத்தை உடையீர் –(வாள் -வர்த்திக்கிற-உடைத்தான -வில் போன்ற புருவம் உள்ள திருமுகம் )அன்றிக்கே –வாள் என்று ஒளியாய் –வெஞ்சிலையையும்- ஒளியையும் உடைத்தான முகத்தை உடையீர் என்னுதல் –முகம் பழகின வில்லு -காணும் –இவளை நலிகிறது –(சாடு
பழகின வில் என்றும் முகத்திலே உண்டான வில் என்றும் )குனி சங்கு இத்யாதி – வலம்புரி தொடக்கமான சங்குகளை இடறி –புலாகின்ற வேலைப் புணரி யம் பள்ளி யம்மான்புலாகின்ற
புலம்புகின்ற –சப்தியா நின்றுள்ள -திரைக் கிளர்த்தியை உடைய   -கடலாகிற அழகிய-படுக்கையை உடைய சர்வேஸ்வரனுடைய –புலாகின்ற –அச் சங்குகளின் உடைய ஒளியாலே எப்போதும் ஒக்க
ப்ரபாத சமயமே யாய் இருக்கிற-கடல் என்னவுமாம் –(புல புல விடிந்தது -பொழுது புலர்ந்தது என்ற அர்த்தத்தில் பகர் அல்ல பகல் செய் ஒளி விளக்கு போல் )

அம்மான் -இத்யாதி –நித்ய விபூதியிலே போது போக்கி-ஓலக்கம் கொடுத்து இருக்கை அன்றிக்கே –
தன் சந்நிதானத்தாலே கிளர்ந்து வருகிற திருப்பாற் கடலிலே புகுந்து குடில் கட்டி நோக்கிக் கிடப்பாரைப்-போலே –இஜ் ஜகத் ரஷண அர்த்தமாக வந்து கண் வளர்ந்து அருளுகிற –இந் நீர்மைக்குத் தோற்று இருக்கிற நித்ய ஸூரிகள் நித்ய வாசம் பண்ணுகிற ஸ்ரீ வைகுண்டமோ-
அன்றிக்கே –மானாவிச் சோலை போலே ஆவது அழிவதாய் –காதாசித்கமாக அவன் வந்து முகம் காட்டிப் போகும்-லீலா விபூதியோ –உங்களுடைய வாஸ ஸ்தானம் —வானவர் நாடு -என்கிறபடியே –அவர்கள் இட்ட வழக்காய் இருக்கும் இறே அவ் விபூதி –அஹங்கார மமஹாரங்களாலே -ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யம்-நடை யாடாதபடி –பண்ணிக் கொண்டு இருப்பார்கள் இறே இங்கு உள்ளோர் –(அவனது வைகுண்டமோ அடியார்களான நமது வையமோ என்று நாம் நினைப்போம்-மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே-அங்கு ஆழ்வார் ஏக ராஜா-இங்கு ஆழ்வார் தேவநாதன் இருவரும் ராஜாக்கள்
ஈர் அரசு கிடையாதே அங்கு அவர்கள் நீதி வானவர்கள் அன்றோ ) பிள்ளை திரு நறையூர் அரையர் –
அடியார் நிலாகின்ற வைகுந்தமோ – அன்றிக்கே அவனதான வையமோ -என்று பணிப்பாராம் –
(ஒன்றுமே சொல்லா விட்டாலவனே ஆளாகிறான்-பாலின் நீர்மை -கிருத யுகம் சத்வகுணம் வெளுப்பு -பிரார்த்திக்க அப்படி சேவை –த்ரேதா சிகப்பு –மான் தளிர் பச்சை இரண்டும் கலந்து – கலியுகம் -கறுத்து -இயற்கையான வர்ணம் போல் இங்கும் அவனே ஆள்கிறான் இங்கு )

நாயகியும் தோழியும் ஒருங்கு இருந்த சமயம் நோக்கி நாயகன் அங்குச் சென்று தன் கருத்தை குறிப்பதற்கு வியாஜமாக ஊர் வினவுகிறான் – இவர்கள் வடிவு அழகு மிக வேறுபட்டு சிறந்து இருத்தலால் –நும் நிலையிடம் வைகுந்தமோ –இவ்வுலகத்தில் இல்லாதால் – வையமோ-உமது இடம் அந்த நித்ய விபூதியோ -ஞான விசேஷங்கள் கண்டால் முக்தரோ என்னலாம் படி – பூர்ண அனுபவம் கிடைக்கப் பெறாமையாலே இவர் இவ்வுலகத்தவரோ என்றும் -சம்சார சம்பந்தம் இல்லாமையால் அவ்வுலகத்தவரோ என்றும் சங்கை –மதியுடம்படுக்கலுற்ற நாயகன் நாயகியின் தோழியரைப் பதிவினாதல் இது. நாயகியும் தோழியும் ஒருங்கிருந்த ஸமயம் நோக்கி நாயகன் அங்குச்சென்று தன் கருத்தைக் குறிப்பிப்பதற்கு ஒரு வியாஜமாக ஊர் வினாவுகின்றானென்க.–காதளவும் நீண்டு கெட்டை மீன் வடிமான கண்களாகிய அம்புகள் எமது உயிரை ஊடுருவித் துளைக்கும்படியாக அவ்வம்புகளைப்
பிரயோகிப்பதற்கு வளைந்திருகின்ற புருவமாகிய கொடிய வில்லையுடைய அழகிய முகமுடையவர்களே! என்று நாயகியையும் அவளது தோழியரையும் விளித்தபடி. கண்களை அம்பாகவும் புருவத்தைச் சிலையாகவும் வருணித்தல் கவிமரபு. -கையிற்கொள்ளும் வில்லம்புகளால் வருத்தும் உலகவியல்பு’ எனப்பட்டது.-பின்னடிகள் பதிவினாவுவன. இவ்வுலகத்தவரினும் இவர்களது வடிவழகு மிக வேறுபட்டுச் சிறந்திருத்தலால் ‘-நும் நிலையிடம் வைகுந்தமோ?’ என்றது; இவர்களைக் கண்டது இவ்வுலகத்திலாதலால் ‘வையமோ?’ என்றது.-இப்பாட்டுக்கு உள்ளுறை பொருளாவது- ஆழ்வாரது ஸ்வரூபத்தைக் கண்டு ஈடுபட்ட பாகவதர் அவரையும் அவரோடொத்த அவரது அன்பரையும் நோக்கி ‘நுமது இடம் அந்த நித்யவிபூதியோ? என்று வியந்துரைத்தலாம்.
(உலாகின்ற + வாண்முகத்தீர்!) பரந்த குளிர்ந்த நுண்ணிய விளக்கமுடைய உமது ஞானத்தை எமது நெஞ்சிலே பதியும்படி செலுத்தும் முகமலர்ச்சியுடையவரே! என விளித்தபடி.
எம்பெருமானுடைய நித்யமுக்தர் வஸிக்கும் நித்ய விபூதியோ இந்த லீலாவிபூதியோ உமது இருப்பிடம்?
ஆழ்வார், ஞானம் முதலியவற்றின் மஹிமையால் முக்தரென்று சொல்லும்படியும் அங்கு நின்று இங்கு வந்தவரொருவரென்று சொல்லும்படியும் உள்ள தன்மை இப்படி விகற்பித்து வினாவுதற்குக் காரணம்.
அன்றியும் பூர்ண அனுபவம் கிடைக்கப் பெறாமையால் இவர் இவ்வுலகத்தவரோவென்றும்,
ஸம்ஸார ஸம்பந்தம் இல்லாமையால் அவ்வுலகத்தவரோவென்றும் சங்கை நிகழ்ந்ததென்க.

உலாகின்ற கெண்டை யொளியம்பு எம்மாவியை யூடுருவக் குலாகின்ற வெஞ்சிலைவாள் முகத்தீர்
குழை யளவும் சென்று மீளுகையாலே உலாவா நிற்பதாய்-கெண்டையான ஒளியையுடைய அம்புகளானவை என்னுடைய ப்ராணனைத் தோற் புரையிலே போகாதே உள்ளுருவும் படியாக வளைந்து வியாபரிக்கிற புருவமாகிற கொடிய சிலையையுடைய ஒளி விஞ்சின முகத்தை யுடையவர்களே-குனிசங்கிடறிப் புலாகின்ற வேலைப் புணரி யம்பள்ளி யம்மான்-குனி சங்கைக் கீழ்ப்படுத்தி மேலே போய்த் தன் வெறி நாற்றத்தை யுடைத்தான திரைக் கிளப்பத்தை யுடைய கடலை அழகிய படுக்கையாக யுடைய ஸ்வாமி யானவனுடைய-வேலை -என்று கரை யாகவுமாம் (அலை யுடைய கடல் என்றும் கரையை யுடைய கடல் என்றும் )-அடியார் நிலாகின்ற வைகுந்தமோ-சேஷத்வ பாரதந்தர்யங்களை வடிவாக யுடையவர்கள் நித்ய வாஸம் பண்ணுகிற அழிவற்ற தேசமோ-வையமோ
அவனுடைய லீலா விபூதியோ-வையம் என்று-விபூதிக்கு உப லக்ஷணம்–நும் நிலை இடமே-உங்களுடைய வாஸஸ்தானமானது-வைலக்ஷண்யத்தைப் பார்த்தால் நித்ய விபூதி என்னலாய் இரா நின்றது-இங்கே காண்கையாலே இந்த விபூதி என்னலாய் இரா நின்றது என்கை –இத்தால்
உலாகின்ற கெண்டை யொளி யம்பு எம்மாவியை யூடுருவக் குலாகின்ற வெஞ்சிலை வாள் முகத்தீர் -என்கையாலே
நித்ய விகாஸ ப்ரவ்ருத்தி ஸீலமாய் (சென்று சென்று பரம் பரமாய் -அறிந்து அறிந்து தேறித் தேறி ) சீதள ஸ்வபாவமாய் பிரகாசத்தையும் கூர்மையையும் உடைத்தாய் இருக்கும் ஞானம் என்றபடி–எம்மா வீடு -திருவாய் 2-9-இத்யாதியாலே-இந்த ஞானத்தை அன்புடையார் நெஞ்சிலே அவகாடமாம்படி ப்ரதிபாதிக்கும் அளவில் ப்ரூ விஷேபாதியான முக விகாஸத்தை ஸூ சிப்பிக்கிறது-(வீடு வேண்டாம்-மா வீடு-கைவல்யம் வேண்டாம்-எம்மா வீடும் வேண்டாம் – ப்ரூவம் அழுத்தி திருத்தமாக சொல்வாரே-நின் செம் பாத பற்ப்பு ஒல்லை தலை மேல் சேர்க்கவே வேண்டும் -அடியேன் வேண்டுவது ஈதே -திருவடித் தாமரை தரித்து கைங்கர்யம் என் நெஞ்சுள் நிறுத்தினான் -ஆழமாக காட்டி அருளினார் அன்றோ )குனிசங்கிடறிப் புலாகின்ற வேலைப் புணரி யம் பள்ளி யம்மான் -என்கையாலே-சேஷத்வ நிரூபித ஸ்வபாவரான ஸூத்த ஸ்வபாவரைக் கீழ்ப்படுத்தி தன்னுடைய தவ்ராத்ம்யமமே (துராத்மாவின் ஸ்வபாவமே ) கந்திக்கும்படியான மேல் எழுச்சியை யுடைய ஸம்ஸார சாகரத்தை நாராயணத்வ ப்ரயுக்தமான ஸம்பந்தத்தாலே கைவிடாமல் நினைக்கிற ஸ்வாமியான என்று லீலா விபூதி யோகம் சொன்னபடி-(நாரங்களுக்கு அயனம் -கைவிடாமல் இங்கே வந்து கண் வளருபவன் அன்றோ
அம்மான் -ஸ்வாமி )-அடியார் நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே – என்கையாலே
ஸ்வரூப பிரகாசம் யுடையாருக்கு உத்தேச்யம் நித்ய விபூதி என்றும் இந்த விபூதியிலே யானாலும்
நேமிப்பிரான் தமர் போந்தார் -திருவாய் -5-2-6- என்று அங்குள்ளார் இங்கே வந்தார் என்று சொல்ல வேண்டும்படியாய் இருக்கும் என்றதாயிற்று –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-வியாக்யானம்-உலாகின்ற கெண்டை யொளியம்பு எம்மாவியை யூடுருவக் குலாகின்ற வெஞ்சிலைவாள் முகத்தீர் எம்மாவியை -எனக்கு ஆவியான அகண்ட ப்ரஹ்மத்தை ஊடுருவ -வியாபகாவதி வியாபாரிக்க வல்ல ஒள்ளிய அம்பாயும் ஒள்ளிய கெண்டையாயுமுள்ள கண்களைக் கொண்டே அவர்களைத் திரஸ்கரிக்க வுமானது கொண்டு
ஒளி பெற்ற முகங்களை யுடையவர்களே-கிஞ்ச-குனிசங்கிடறிப் புலாகின்ற வேலைப் புணரி யம்பள்ளி யம்மான் அடியார் வேலையில் -கரையிலே குனிந்து இருக்கும் சங்குகளை புணரி -ஆஸ்வேஷிப்பித்தும் இடறியும் உலாவும் அவைகளால் அழகிய பாற்கடலில் பள்ளிகொள்ளும் அஸ்மத் ஸ்வாமிக்கு அடிமைப் பட்டவர்காள்-நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே – உங்களுடைய ஞான வைஸத்யத்தை அப்பார்வையுள்ள முகத்தால் கண்டோம் உங்கள் இருப்பிடமே கேட்க்கிறோம்
ஸ்வரூபவ யாதாத்ம்ய ஞானம் நிலையாகி நிற்கும்படியான அவ்வைகுந்தமேயோ இவ்வையம் தானேயோ சொல்லுங்கோள் விருப்புற்றுக் கேட்க்கிறேன் என்றபடி –

ஸ்வாபதேசம்-இத்தால் ஆழ்வார் இருக்கிற இருப்பைக் கண்டாருக்கு – உபய விபூதியிலும் இவர் படிக்கு ஒப்பு இல்லை -என்று சொல்லும்படி இருக்கிற படியை சொல்லுகிறது –அங்கு உள்ளார் நிரந்தர-பகவத் அனுபவமேயாய் இருப்பார்கள் – இங்குள்ளார் இதர விஷயங்களின் உடைய வ்யாபாரங்களேயாய்-
லாபாலாபங்களாய்-இருப்பார்கள் –இப்படி இவர் உபய வ்யாவ்ருத்தராய் இறே இருப்பது – நிரந்தரமான பகவத் அனுபவமும் இன்றிக்கே – அன்ன பாநாதிகளால் தரித்து இருக்குமது அன்றிக்கே இறே இருக்கிறது –இரண்டு-விபூதியிலும் கைக்கு அடங்காதபடி யாய் இருக்கிற இருப்பைச் சொல்லிற்று –
இங்கன் அன்றாகில்-இரண்டு இடத்திலும் ஐயம் கூடாது இறே –லீலா விபூதியை தானே ஆளுகின்றான் -சம்சாரிகள் கையில் கொடாத படி -அரையர் ஸ்ரீ ஸூக்தி –மௌக்த்யம் -அழகு -தன் ஐயம் தீர்க்க அவள் இடமே கேட்கிறானாம் சர்வேஸ்வரன் –

தாத்பர்யம்-இதில் ஆழ்வார் ஆகிற நாயகி உடன் பாகவதர் கிளைவித் தலைமகன் ஸம்ஸ்லேஷித்து
கண் அழகில் -அவருடைய ஞான வைலக்ஷண்யத்திலே ஈடுபட்டு-ஓ பெண்ணே -நான் அன்ய த்ருஷ்டியாய் இருக்க -பார்க்காத போது என்னைப் பார்த்து -நான் பார்த்த போது -அப் பார்வையை என்னிடம் இருந்து விலக்கி உன்னுடைய அழகிய முகத்தில் உள்ள புருவம் தனுர் ஆகாரமாக வளைந்து
கண்கள் மீன் போல் -காது வரை நீண்டு பானம் போல் அதி க்ரூரமாய் -அத்யந்த ஆகர்ஷகமாய் இருக்க
உனது வைலக்ஷண்யம் கண்டு எனக்கு வந்த சங்கை இதுவே – இங்கேயே இருப்பதால் நித்யர் போல் இல்லை -அன்ன பானாதி தத் பரராய்-ஸம்ஸாரிகள் போல் இல்லாமல் இருப்பதால் -இது வையமாகவும் இருக்க முடியாது-இப்போது வாசம் செய்யும் பிரதேசம் எது-ஷீராப்தி நாதனை அனுபவிக்க வந்த நித்ய அனுபவ நித்ய ஸூரிகள் நிரந்தர வாஸம் செய்யும் நித்ய வைகுந்தமோ-விஷயாந்தர பரர் வாழும் வையகமோ -ஆழ்வாருக்கு உபய விபூதியிலும் நிகர் யாருமே இல்லையே -என்றவாறு

3-10-சன்மம்-பல பல -பிரவேசம் –

மேல் திருவாய்மொழியிலே பிறரைக் கவி பாடுகிறவர்களைப் பகவானிடத்தில் மீட்கப் பார்த்து, அவர்கள் மீளாது ஒழிய,‘இவர்களைப் போலே ஆகாமல் யான் முதன் முன்னம் பிறரைத் துதி செய்யாமைக்குத் தக்க உறுப்புகளை உடையவனாகப் பெற்றேன்,’ என்கிறார்;
‘பிறரைத் துதி செய்யாமைக்குத் தக்க உறுப்புகளையுடையவனான அளவேயோ?
பகவானைத் துதிப்பதற்குத் தக்க உறுப்புகளை உடையவனாகவும் பெற்றேன்,’ என்கிறார் இத்திருவாய்மொழியில்.
‘முடியானே’ என்ற திருவாய்மொழியில், தாம் அவனை அனுபவிக்கக்கோலி, அது பெறாமையாலே, தாமும் தம்முடைய உறுப்புகளும் பெருவிடாய்ப்பட்டுக் கூப்பிட்டார்;
தாம் பகவத் விஷயத்திலே கூப்பிடுகிறது போன்று, சமுசாரிகள் மனைவி மக்கள் முதலியவர்களைப் பற்றிக் கூப்பிடுகிறபடியை நினைத்து, அவர்கள் கேட்டினைக் கண்டவாறே தமக்கு- ‘முடியானே’ என்ற திருவாய்மொழியில் பிறந்த இழவு -தானே பேறாய்த் தோன்றிற்று.

அதற்கு மேலே, ‘அடியார்களின் பொருட்டுக் கர்மங்கட்குக் கட்டுப்பட்டவர்களைப் போன்று சமுசாரிகள் நடுவே அவர்களோடு ஒத்த வடிவைக்கொண்டு அவதரித்த திவ்விய அவதாரங்களையும் அவதாரங்களில் செய்த திவ்விய செயல்களையும் வடிவழகையும்
ஆபரணங்கள் சேர்ந்த சேர்த்தியையும் திவ்விய ஆயுதங்கள் சேர்ந்த சேர்த்தியையும் அகடிதகடநா சாமர்த்தியத்தையும் ஆகிய இவற்றை
எல்லாம் அனுபவிக்கப்பெற்றேன்; எனக்கு ஒரு குறையும் இல்லை,’ என்கிறார்.

இத்திருவாய்மொழியில் வருகின்ற ‘சன்மம் பலபல செய்து’ என்றுதனை நோக்கித் ‘திவ்விய அவதாரங்களை’ என்றும்,
‘மாளப்படைபொருத’ என்றதனை நோக்கித் ‘திவ்விய செயல்களை’ என்றும்.
‘எங்கும் அழகு அமர்’ என்பது போன்றவைகளை நோக்கி ‘வடிவழகை’ என்றும்,
‘மட்டவிழ் தண்ணம் துழாயான்’ என்றதனை நோக்கி, ‘ஆபரணங்கள் சேர்ந்த சேர்த்தி’ என்றும்,
‘சங்கொடு சக்கரம் வில்’ என்பன போன்றவைகளைத் திருவுள்ளம் பற்றித் ‘திவ்விய ஆயுதங்கள் சேர்ந்த சேர்த்தி’ என்றும்,
‘துக்கம் இல் ஞானம்’ என்ற பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றி, ‘அகடித கடநா சாமர்த்தியத்தை’ என்றும் அருளிச்செய்கிறார்.

பத்தாம் திருவாய் மொழியில்
கீழ் -இதர ஸ்தோத்ரத்தினுடைய ஹேயத் வாதிகளையும் பகவத் ஸ்தோத்ரத்தினுடைய வை லக்ஷண்யத்தையும் உபதேசித்து
இப்படி விலக்ஷணமான பகவத் விஷயத்தை நாம் சர்வ பிரகாரத்தாலும் அனுபவிக்கப் பெற்றதே என்று அதி ப்ரீதராய்
1-அனுபாவ்யனான சர்வேஸ்வரனுடைய அவதார பலமான விரோதி நிரசனத்தையும்
2-அவதாரத்துக்கு மூலமான ஷீரார்ணவ ஸாயித்வத்தையும்
3-அனவதிக அதிசயையான சர்வவித போக்யதையும்
4-போக பிரதி சம்பந்தி ஸமஸ்த விரோதி நிவர்த்தகத்வத்தையும்
5-அர்த்திகளுக்கு அர்த்திதார்த்த காரித்வத்தையும்
6-அவதார திசையிலும் அதிமானுஷ சேஷ்டிதத்தையும்
7-அவதார நிர்வாஹ்யமான லீலா விபூதி யோகத்தையும்
8-இந்த நிலையிலும் பரதவ ஸூ சகமான ஸ்ரீ லஷ்மீ பதித்தவத்தையும்
9-சர்வ பிரகார ரக்ஷகத்வத்தையும்
10-சர்வாந்தராத்மத்தையும்
அனுசந்தித்து -ஏவம்விதனான சர்வேஸ்வரனை சர்வ பிரகார அனுபவம் பண்ணப் பெற்ற எனக்கு
ஒரு வைகல்யம் -விச்சேதம் -மன பீடை -மிறுக்கு–கிலேசம் -அப்ரீதி -அலமாப்பு -துக்கம் -அவசாதம் -விநாசம் -என்று சொல்லப் பட்ட
ஸமஸ்த துரிதங்களும் இல்லை என்று அதி ப்ரீதராய் -இப்பத்துக்கு தாத்பர்யமான
ஸ்வரூபத்தினுடைய தத் ஏக அனுபவத்தையும் உபபாதித்து முடிக்கிறார் –

சன்மம் பலபல செய்து வெளிப்பட்டுச் சங்கொடு சக்கரம் வில்
ஒண்மை யுடைய உலக்கை ஒள் வாள் தண்டு கொண்டு புள் ஊர்ந்து உலகில்
வன்மை உடைய அரக்கர் அசுரரை மாளப் படை பொருத
நன்மை உடையவன் சீர் பரவப் பெற்ற நான் ஓர் குறைவு இலனே.
–3-10-1-

இத்திருவாய்மொழியிற்சொல்லுகிற பொருளைச் சுருக்கமாக அருளிச் செய்கிறார்;
‘திவ்விய ஆயுதங்களோடே அவன் வந்து அவதரிக்கும்படியைச் சொல்லப் பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை,’ என்கிறார்.
அன்றிக்கே,
‘அடியார்களைக் காத்தற்பொருட்டு பல அவதாரங்களைச் செய்து அவர்கள் விரோதியை அழிக்கின்ற எம்பெருமானுடைய நற்குணங்களைப் புகழப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை,’ என்கிறார்.
அன்றிக்கே,
‘கர்மங்கட்குக் கட்டுப்படாத தான் கர்மங்கட்குக் கட்டுப்பட்டவர்களும் கூடப் பிறவாத பிறவிகளை ஏறிட்டுக் கொண்டு வந்து காக்கின்றவனாய் இருக்கிறபடியைச் சொல்லப் பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை,’ என்கிறார்.
அன்றிக்கே,
‘சர்வேசுவரனாய் மேன்மை அடித்து இவற்றோடே தோய்வு இன்றி இருக்கை அன்றிக்கே இவை பட்ட இடரைத் தானும் ஒக்க வந்துபட்டுக் காக்கின்றவனாய் இருக்கிறபடியைச் சொல்லப் பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை,’ என்கிறார் என்னுதல்.

ஓர் அவதாரத்தைச் சொன்னால், ‘எத்திறம்!’ என்று ஈடுபடுகின்றவர், பல அவதாரங்களைப் பொறுக்க மாட்டார் அன்றோ? அதனால், ‘பல’ என்கிறார்.
‘கர்மங்கட்குக் கட்டுப்பட்டவன் பிறவிக்கு எல்லை காண்கின்றோம்; கர்மங்கட்குக் கட்டுப்படாதவன் பிறவிக்கு எல்லை காண்கின்றிலோம்,’ என்பார், ‘பலபல’ என்கிறார்.கர்மம் காரணமாக வரும் பிறவிகட்கு எல்லை உண்டு; திருவருள் காரணமாக வரும் பிறவிக்கு எல்லை இல்லை,’ என்றபடி.-எல்லாப் பொருள்கட்கும் காரணனாய் இருக்கின்ற தான் தன்னுடைய காரியங்களிலே ஒரு பொருளுக்குத் தான் காரியமாக வந்து அவதரிக்கின்றான்,’ என்பார், ‘செய்து’ என்கிறார் -என்றேனும், கட்கண்ணாற் காணாத அவ்வுருவை’ அன்றோ கண்ணுக்கு இலக்கு ஆக்கினான்?’-அவதரிக்கும்போது திவ்விய ஆயுதங்களோடே வந்து அவதரிக்கின்றான்–ஸ்ரீ பரத ஆழ்வான் திருச்சங்கு அம்சம் ஸ்ரீ சத்ருன ஆழ்வான் திருச்சக்கர அம்சம் -விண்ணுளாரிலும் சீரியர் –அழகிற்குக் காரணமாகவே கொண்டு, ‘ஒள்வாள்’ என்கிறார். ஒண்மை – அழகு.
‘ஒரு கற்பகத்தரு பணைத்துக் கணுத்தோறும் அரும்பினாற்போலே ஆயிற்று வடிவும் திவ்விய ஆயுதங்களும் சேர்ந்த சேர்த்தி இருப்பது,’இங்கு நின்றும் போவார்க்கு அடையத் தக்கவர்களான நித்திய ஸூரிகளோடே கூட வந்து அவதரிக்கிறான் என்பதனையும்,
அவ்வாறு அவதரிப்பதுவும் கண்டு அனுபவித்த பின்னர், ‘அடியார்கள் குழாங்கனை உடன் கூடுவது என்றுகொலோ!’ என்று பிரார்த்திக்க வேண்டாதபடி அவர்களோடே கூடக் காட்சி கொடுக்கைக்காக என்பதனையும் தெரிவித்தபடி.–‘வன்மையுடைய அரக்கர்-திவ்விய ஆயுதங்களோடே அழகிய வடிவழகைத் திருவடி திருத்தோளிலே கண்டால், ‘சரணம்’ என்னுதல், எழுத்து வாங்குதல் செய்கை அன்றியே எதிர் இடுவதே பையல்கள்!’ என்று ஆச்சரியப்படுகிறார். ‘அழகுக்கு இலக்காய் வாழ மாட்டாது, அம்புக்கு இலக்காய் முடிந்து போவதே!’ என்கிறார் 

ஓர் குறைவு இலன் –ஒரு குறையும் உடையேன் அல்லேன்.
1-முதலிலே சமுசாரிகளைப் போன்று அறியாதொழிதல்,
2-அவதரித்துக் கண்ணுக்கு இலக்காய்ப் பாசுரமிட்டுப் பேச நிலமன்றிக்கே இருத்தல்,
3-சிசுபாலன் முதலியோர்களைப் போன்று ‘நம்மிலே ஒருவன்’ என்று தாழ்வாகப் பேசி முடிந்து போதல்.
4- ஸ்ரீ விஸ்வரூபத்தில் அருச்சுனனைப் போன்று நீச்சு நீராதல் -கரை காண ஒண்ணாமல் -இன்றிக்கே இறைவனைப் புகழ்ந்தவர் ஆதலின்,‘ஓர் குறைவிலன்’ என்கிறார்.
அன்றிக்கே,
‘அவன் எல்லா விதமான கல்யாண குணங்களை பரமாத்துமாவோடு கூட அனுபவிக்கின்றான்,’ என்கிறபடியே,-பரமபதத்திலே அனுபவிக்கக் கூடிய குணங்களின் அனுபவத்தை இங்கே அனுபவிக்கப்பெற்ற எனக்குப் ‘பரமபதத்திற் போகப் பெற்றிலேன்’ என்ற குறை உண்டோ?’ என்கிறார் என்னுதல்.

———–

குறைவு இல் தடம் கடல் கோள் அரவு ஏறித்தன் கோலச் செந்தாமரைக் கண்
உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த ஒளி மணி வண்ணன் கண்ணன்
கறை அணி மூக்குடைப் புள்ளைக் கடாவி அசுரரைக் காய்ந்த அம்மான்
நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டு இலனே
.–3-10-2-

குறைவு இல் தடம் கடல்-ஈண்டுக் குறைவு இல்லாமையாவது, ‘திருமேனி நீ திண்டப் பெற்று, மாலும் கருங்கடலே என் நோற்றாய்’ என்னுமாறு போன்று,-அவனுடைய பரிசத்தால் குறைவு அற்று இருக்கை. யசோதைப் பிராட்டி ஸ்ரீ கிருஷ்ணனைத் தன் மடியிலே வளர்த்தி உவக்குமாறு போன்று, சர்வேசுவரனைத் தனக்குள்ளே இட்டுக் கொண்டு அத்தாலே உவந்து குறைவு அற்று இருக்கை

காத்தலுக்கு உரிய வழியைச் சிந்தை செய்தவாறே அந்நினைவு பொறாமையாலே நாக்கு உலரும்; அப்போது, கர்ப்பூரத் திரள் வாயிலே இடுவாரைப் போலே ‘வாசுதேவனாகிய தன்னைச் சிந்தித்துக் கொண்டு’ என்கிறபடியே, தன்னைத்தானே சிந்திப்பான்-இப்படித் தன்னைத் தானே நினைத்தவாறே காத்தற்கு உரிய உபாயம் தோன்றுமே? தோன்றினவாறே கண்ணனாய் அவதரித்தான்-திருமேனியினுடைய பரிசத்தால் திமிர்ந்து செல்லாது நிற்றலின், தேர் முதலிய பொருள்களை நடத்துமாறு போன்று வடிம்பிட்டுத் தாக்கி நடத்த வேண்டி இருத்தலின், ‘கடாவி’ என்கிறார்.-

நிறைபுகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டு இலனே – ‘இத்தகைய பாதுகாத்தலால் குறைவற்ற புகழைப் பிரீதியின் மிகுதியினாலே ஏத்தியும் பாடியும் பத்தி பாரவஸ்யத்தாலே இருந்த இடத்தில் இராமல் ஆடியும் வாழ்கின்ற நான், பகவானுடைய இன்பத்துக்கு ஒரு தடையை உடையேன் அல்லேன்,’ என்கிறார். முட்டு – விலக்கு.-

———–

முட்டு இல் பல் போகத்து ஒரு தனி நாயகன் மூவுலகுக்கு உரிய
கட்டியைத் தேனை அமுதை நன் பாலைக் கனியைக் கரும்பு தன்னை
மட்டு அவிழ் தண் அம் துழாய் முடி யானை வணங்கி அவன் திறத்துப்
பட்டபின்னை இறை யாகிலும் யான் என்மனத்துப் பரிவு இலனே
.–3-10-3-

பிரமன் சிவன் முதலானோர்கட்கும் முதன்மை சொல்லுவார்கள் ஆதலின், அவர்களை வேறுபடுத்துவதற்காக ‘ஒரு தனி நாயகன்’-விலஷணர்கள் -வீத ராகம் இல்லாத முமுஷுக்கள் அனுபவிக்கும் அமுதம் அன்றோ-இவருடைய அறுசுவை இருக்கிறபடி-பரமபதத்திற்குச் சென்றால் பூர்ண அனுபவம் பண்ணலாவது, இங்கே இருந்து குறைய அனுபவியாநின்றேன்’ என்னுமதனாலே-வரும் மனத்தின் துக்கம் உண்டோ எனக்கு?’ என்கிறார்.-

———

பரிவு இன்றி வாணனைக் காத்தும் என்று அன்று படையொடும் வந்து எதிர்ந்த
திரிபுரம் செற்றவனும் மகனும் பின்னும் அங்கியும் போர் தொலையப்
பொரு சிறைப் புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப் பொன் சக்கரத்து
அரியினை அச்சுதனைப் பற்றி யான் இறையேனும் இடர் இலனே
.–3-10-4-

இங்கு ஆச்சரியமாவது, வாணனுடைய கரத்தைக் கழித்து, அவனை இறையிலி செய்து, நாட்டுக்குத் தானே நின்று இறையான ஆச்சரியம்.– ‘வாணன் ஆயிரம் கரம் கழித்த ஆதி மால்’ அன்றோ?-ஆயனை –அவன் தோற்றதும் தன் தரம் குலையாதே நிற்கிற நிலையிலே; -இவன் வென்றதும் தன்னைத் தாழவிட்ட இடத்திலே.-பொன் சக்கரத்து
அரியினை
-அனுகூலர்க்கு விரும்பத்தக்க திருவாழியைத் தரித்துப் பகைவர்களுக்குச் சிரமப்பட்டும் காண முடியாதவனை.-பற்றி யான் இறையேனும் இடர் இலனே – இவனைப் பற்றின எனக்குச் சிறிது துக்கமும் இல்லை. ‘‘பேரன்’ என்று இருக்கையாலே அநிருத்தாழ்வானுக்கு நாலு நாள் சிறையில் இருக்க வேண்டிற்று; ‘அடியேன்’ என்று பற்றின எனக்கு அதுவும் வேண்டிற்று இல்லை,’ என்பார், ‘இறையேனும் இடர் இலன்’ என்கிறார்.-நான் ஏகதேசமும் மிறுக்கை யுடையேன் அல்லேன் இடர் -இடைஞ்சலாய் மிறுக்கு-என்றபடி –

———–

இடர் இன்றியே ஒருநாள் ஒரு போழ்தில் எல்லா உலகும் கழியப்
படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏறத் திண் தேர் கடவிச்
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை
உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே
.–3-10-5-

காலத்தால் உண்டாகின்ற மாறுபாடு ஒன்றும் இல்லாத தேசமாகையாலே, கொண்டுபோகிற போதைப் படியில் ஒன்றும்
குறையாதபடி கொண்டு வந்து கொடுத்தவன்.-பால உடலோடும் –
அன்றிக்கே,
‘பூசின மஞ்சளும், உடுத்தின பட்டும், இட்ட சவடிப் பூணுநூலும், இட்ட காது பணிகளுமான ஒப்பனையில் ஒன்றும்
குறையாதபடி கொண்டு வந்து கொடுத்தவன்’ என்னுதல்.
‘பிறக்கப் பிறக்கக் கொண்டு போனார்களாகில், இப்போது இவை எல்லாம் உண்டோ?’ என்று பட்டரைக் கேட்க, ‘ரிஷி புத்திரர்கள்
ஆகையாலே பிறக்கிற போதே அவற்றோடே பிறப்பர் காணும்’ என்று அருளிச்செய்தார்.

கர்ம சம்பந்தம் அற்றுப் போகாமையாலே ஆயிற்று இவர்களுக்கு மீள வேண்டிற்று-கர்ம சம்பந்தம் அற்றார் போகக்கூடிய
தேசத்திலே இவர்கள் சென்றபடி என்?’ என்னில், ‘நாய்ச்சிமார் தங்கள் சுவாதந்தரியம் காட்டுகைக்காக இவர்களை அங்கே அழைப்பித்தார்கள் ஆயிற்று.

இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை’ என்று தொடங்கி, ‘மங்கவொட்டு’ என்று மடிபிடித்துக் கூப்பிடும்படி சமுசாரத்தில் விரக்தி பிறந்தும்,
‘காதல் கடலின் மிகப் பெரிதால்’ என்றும், ‘மண் திணி ஞாலமும் ஏழ்கடலும் நீள்விசும்பும் கழியப் பெரிதால்’ என்றும்,
‘அதனிற்பெரிய என் அவா’ என்றும் இப்படிப் பகவத் விஷயத்தில் கண்ணழிவு அற்ற பக்தி விளைந்து போக ஆசைப்படுகிற
எனக்கு ஒரு துக்கம் இல்லை’ என்கிறார் –

————-

துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி நின்ற வண்ணம் நிற்கவே
துயரின் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து
துயரங்கள் செய்து தன் தெய்வ நிலை உலகில் புக உய்க்கும் அம்மான்
துயரம் இல் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் ஓர் துன்பம் இலனே.
–3-10-6-

துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி –தள்ளத்தக்க குற்றங்கட்கெல்லாம் எதிர்த்தட்டாய், சுத்த சத்துவமயம் ஆகையாலே தனக்கு மேல் ஒன்று இல்லாததான ஒளியுருவமாய்
பிறர்க்கு உள்ளது ஒன்று அன்றிக்கே, தனக்கே சிறப்பாகவுடைய விக்கிரகமானது.
நின்ற வண்ணம் நிற்கவே –-அங்கு இருக்கும்படியில் ஒன்றும் குறையாமல், விளக்கிலே கொளுத்தின விளக்குப் போன்று அங்கு நின்ற வண்ணம் இங்கு நிற்க-நித்திய ஸூரிகளுக்கு எப்பொழுதும் காண்பதற்கு விஷயமான தன்னைஊனக் கண்களுக்குப் புலப்படச் செய்து.-தூது சென்று, சாரதியாய் இருந்து தேரை ஓட்டித் தன் படியைத் தெரிவித்து, இச்செயலாலே உலகத்தாரை எழுதிக்கொண்டவன்’அம்மான்-அபேஷா நிரபேஷமாக-இவர்களுக்கு தன் படிகளை வெளியிடுகைக்கு வேண்டும் ப்ராப்தியைச் சொல்லுகிறது

புகழ் துற்ற யான் – அவனுடைய கல்யாண குணங்களை நெருங்க நுகரப்பெற்ற யான்.
ஓர் துன்பம் இலன் –‘இவ்வுலக சம்பந்தம் இல்லாத திவ்விய மங்கள விக்கிரகத்தைக்கொண்டு இவ்வுடம்போடே அணையலாம் படி அவன் கிட்டுவான் ஆயிற்ற பின்பு, நான் இச்சரீரத்தை விட்டு அங்கே போய் அவ்வுடம்போடே அணைய வேண்டும்,’ என்றால் எனக்கு அவன் அருமைப்படுத்துவானோ?-

———–

துன்பமும் இன்பமும் ஆகிய செய் வினையாய் உலகங்களுமாய்
இன்பம் இல் வெந் நரகாகி இனிய நல்வான் சுவர்க்கங்களுமாய்
மன்பல் உயிர்களும் ஆகிப் பலபல மாய மயக்குகளால்
இன்புறும் இவ் விளையாட்டுடையானைப் பெற்று ஏதும் அல்லல் இலனே
.–3-10-7-

கொடுத்த அறிவுதான் பொதுவாய் ருசி பேதத்தாலே வழி விலங்கிப் போய்க் கேட்டினை விளைத்துக்கொண்டு இருக்கிறபடியைக் கண்டு, ‘நாம் ஒன்றை நினைத்துச் செய்ய, இவை ஒன்றைச் சூழ்த்துக்கொண்ட படி கண்டாயே!’ என்று பிராட்டி முகத்தைப் பார்த்துப் புன்முறுவல் செய்ய, ‘அது கோல் விழுக்காட்டாலே லீலா ரசமாக முடியும்’ என்றபடி.

ஏதும் அல்லல் இலனே –-‘அவனுடைய கர்மங்கட்குக் கட்டுப்படாத தன்மையைச் சொல்லிய எனக்குக் கர்மங்கட்குக் கட்டுப்படுதலாகிய துக்கம் இல்லை,’ -லீலா விபூதி அன்வயமும் ஆகிற துக்கமும் இல்லை -என்கிறார். -புருஷோத்தம ஞானம் வந்தால் கர்மங்கள் தீண்டாதே -அந்த பிறவியிலே பிரபன்னன் போலே பேறு கிட்டுமே-அவன்றன்னையே பற்றி விடுவித்துக்கொள்ள இருக்கிற எனக்கு ஒரு துன்பமும் இல்லை,’ –அவன் காலைக் கட்டி நாம் கால் கட்டு விடுவித்திக் கொள்ளலாமே –

————

அல்லல் இல் இன்பம் அளவு இறந்து எங்கும் அழகு அமர்சூழ் ஒளியன்
அல்லி மலர்மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான்
எல்லை இல் ஞானத்தன் ஞானம் அஃ தேகொண்டு எல்லாக் கருமங்களும் செய்
எல்லை இல் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே
.–3-10-8-

எங்கும் அமர் அழகன் –-மோக்ஷ உலகம் முழுவதும் வெள்ளமிடும் காந்தியை யுடையவன்.
எங்கும் சூழ் ஒளியன் – திருமேனி எங்கும் ஒக்கப் பரந்து நிறைந்து அலை எறியும்படியான இலாவண்யத்தையுடையவன்.
அன்றிக்கே,
‘அழகு என்று அவயவ சோபையாய், சூழ் ஒளி என்பது சமுதாய சோபையைச் சொல்லுகிறது,’ என்னலுமாம்.
அன்றிக்கே,
‘எங்கும் அழகு அமர் – பாதம் முதல் முடி வரையில் அவயவங்களைத் தனித்துப் பார்த்தால்
‘இங்கே அழகு குடி கொண்டது, இங்கு அழகு குடி கொண்டது,’ என்னும்படி பாதாதி கேசம் பழிப்பு அன்று,
சூழ் ஒளியன் –
மோக்ஷ உலகம் அடங்கலும் காநதியின் நிறைவினாலே வெள்ளமிடாநிற்பவன்,’ என்னுதல்.அல்லி மலர் மகள் போக மயக்குகள் –-இதனால், இவ்வழகு காட்டில் எறித்த நிலவு ஆகாதபடி நெஞ்சோடே அனுபவ்விப்பாரைச் சொல்லுகிறது.-உளமார அனுபவிப்பார் -மார்பிலே இருந்தே அனுபவிப்பார் –ஆகியும் நிற்கும் – தன்னுடைய ஆனந்தத்துக்கு மேலே திருமகள் கேள்வனாய் இருக்கும் தன்மையால் வந்த ஆனந்தத்தையுடையனாய் இருக்கும்.
ஸ்ரீ யை அணைத்து ஆனந்தம் -ஸ்ரீ யபதி என்பதை அனுசந்தித்து ஆனந்தம் –
அம்மான் –ஆனந்த மயனாய் திருமகள் கேள்வனாய் இருக்குமவன் அன்றோ சர்வேசுவரன்?எல்லை இல் ஞானத்தன்-யஸ்யா வீக்ஷம் முகம் ததிங்கித பராதீ நோ விதத்தே அகிலம் -அவளுக்காகவே புருஷ பிரசவம் —-இவளுக்கும் ஆனைக்கு குதிரை வைப்பார் போலே அவனது ஞானம் –

கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே-பிராட்டி சந்நிதியும் உண்டாய், அவள் புருஷகாரமாக வேறு துணைக்காரணம் வேண்டாமலே நம் காரியம் செய்யுமவனுமாய், ‘இந்தப் பரமாத்துமா தானே சந்தோஷிப்பிக்கிறான்’ என்கிறபடியே, ‘ஆனந்தத்தை உடையவனைப் பற்றின எனக்கு ஒரு துக்கம் இல்லை,

—————–

துக்கம் இல் ஞானச் சுடர் ஒளி மூர்த்தி துழாய் அலங்கல் பெருமான்
மிக்க பன் மாயங்களால் விகிர்தம் செய்து வேண்டும் உருவுகொண்டு
நக்க பிரானோடு அயன் முதலாக எல்லாரும் எவையும் தன்னுள்
ஒக்க ஒடுங்க விழுங்க வல்லானைப் பெற்று ஒன்றும் தளர்வு இலனே
.–3-10-9-

ஒடுங்க விழுங்குகையாவது,-‘ஏழுலகும் உண்டும் இடமுடைத்து’ என்கிறபடியே, சிறிய வயிற்றிலே பெரிய உலகங்களை வைத்தால், ஈர்க்கில் அத்திக்காய்
கோத்தது போன்று விசைத்து வேறாய் இராமல், அடங்கித் தகுதியாய் இருக்கை. இப்படிப்பட்டவனை பெற்று ஒன்றும் தளர்வு இலனே – எல்லாவற்றையும் செய்து முடிக்கும் ஆற்றலை உடையவனாய்ப் பிரமன் முதலானவர்களையும் காப்பாற்றுகின்றவனானவனை
வேறு பயன் ஒன்றையும் கருதாதவனாய் அடைந்த எனக்கு ஒரு துக்கம் உண்டோ?’ என்கிறார்.-நைமித்திகப் பிரளயமான போது, அவர்களால் காக்கப்படுகின்ற மூன்று உலகங்களையும் பாதுகாக்கையாலே அவர்களையும் பாதுகாப்பவன்’ என்கை.-

—————

தளர்வு இன்றியே என்றும் எங்கும் பரந்த தனிமுதல் ஞானம் ஒன்றாய்
அளவுடை ஐம்புலன்கள் அறியா வகையால் அருவாகி நிற்கும்
வளர் ஒளி ஈசனை மூர்த்தியைப் பூதங்கள் ஐந்தை இருசுடரைக்
கிளர் ஒளி மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடு இலனே.
–3-10-10-

கிளர் ஒளி மாயனைக் கண்ணனை– நிரவதிக தேஜோ ரூபமான விக்ரஹத்தை இதர சஜாதீயம் ஆக்கிக் கொண்டு வ ஸூ தேவ க்ருஹே அவத்தீர்ணன் ஆனவனை பற்றின எனக்கு-யான் என்றும் கேடு இலன் – ‘இவன் விருப்பம் இல்லாதவனாய் இருந்த அன்றும் சம்பந்தத்தாலே சத்தையை நோக்கி, இவன் விரும்புகிற அன்று கண்ணுக்குத் தோற்றி நின்று காக்குமவன் திருவடிகளை முறையிலே பற்றின எனக்கு ஒரு நாளும் கேடு இல்லை,’ என்கிறார்.

மூர்த்தியை, தனி முதல் ஞானம் ஒன்றாய், பூதங்கள் ஐந்தை, இரு சுடரை, என்றும் எங்கும் பரந்து, தளர்வு இன்றியே, அளவுடை ஐம்புலன்கள்
அறியா வகையால் அருவாகி நிற்கும் வளர் ஒளி ஈசனை, கிளர் ஒளி மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடு இலன்
’ என்று கூட்டுக.

வியாப்யமே மூன்றாம் பத்தின் -சாரம் -எங்கும் வியாபித்து -த்ரிவித காரணன் – சங்கல்ப ஞானத்தாலே -ஞானம் மிக்கு -வியாபகத தோஷம் இல்லாமல் -விபுவாக -அந்தர் பஹிஸ்ஸ சர்வம் –நியந்த்ருத்வம் தொடங்கி -அடுத்த பத்தின் சாரமும் கோடி காட்டி -பொசிந்து காட்டுவதை காணலாமே –

————

கேடு இல் விழுப் புகழ்க் கேசவனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் பயிற்ற வல்லார்க்கு அவன்
நாடும் நகரமும் நன்குடன் காண நலனிடை ஊர்தி பண்ணி
வீடும் பெறுத்தித் தன் மூவுல குக்கும் தரும் ஒரு நாயகமே.
–3-10-11-

‘இத்திருவாய்மொழியைக் கற்றவர்களை எல்லா உலகங்களிலும் பிரசித்தமாம்படி ஸ்ரீ வைஷ்ணவ செல்வத்திலே நடத்தி,-மேலே பரமபதத்திலே சென்றால் தன் செல்வத்தை இவர்கள் இட்ட வழக்கு ஆக்கும்,’ என்கிறார்.

நலன் இடை ஊர்தி பண்ணி – நன்மைக்கு நடுவே நடக்கும்படி செய்து. நன்மையா வது, ஸ்ரீ வைஷ்ணவஸ்ரீ.-வீடும் பெறுத்தி – பரம புருஷார்த்த மோக்ஷத்தையும் கொடுத்து.
மூவுலகுக்கும் தரும் ஒரு நாயகம் – தன்னதான மூன்று விதமான உயிர்களின் கூட்டத்துக்கும் இவன்தான் ஒப்பு அற்ற தலைவன் ஆம்படி பண்ணிக் கொடுக்கும்-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -74 -தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப் பாயில்-செய்ய தாமரை -3 -6 –

March 14, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

செய்ய தாமரை -3 -6 -அவன் இவன் என்று கூழேன்மின் அவனாகும் நீள் கடல் வண்ணன் -அர்ச்சாவதார சீர்மை-இவன் அவன் ஆக மாட்டானே -இங்கே தானே சரணாகதியும் அனுபவமும்-தமர் உகந்த இவ்வுருவம் அவ்வுருவம் தானே-கடல் வண்ணன் கண்ணன் -கருமாணிக்கம் –அன்று தேர் தடவிய கண்ணன் கழல் காண்பது என்றோ – கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -தனது துறையிலே இரங்குகிறார்
அர்ச்சை கிடைத்த சந்தோஷமும் -தேர் கடாவிய கழல் காண்கை இழந்த வருத்தமும் உண்டே-ஹந்த -அந்தோ -சந்தோஷ ஸூ சகம்-பாயில் -திருப்பாற்கடலில் -திரு அனந்தாழ்வான் -திரு -அழகிய நெடும் -அபரிச்சின்ன கண்கள் -வளர்ந்து -உறங்குவான் போல் யோகு செய்யும் – அறிவு -உற்றும் -ஜகத் ரக்ஷண சிந்தை –

அவதாரிகை –ஒரு தென்றல் வந்து உலாவிற்றாய் – தென்றல் வந்தது -அவன் வரக் கண்டிலோம் -என்று தலைமகள் தளர – அத்தைக் கண்ட தோழி யானவள் –இத்தை வெறும் தென்றல் என்று இருந்தாயோ –
மாளிகை சாந்து நாறா நின்றால்-ராஜ புத்திரன் -வரவணித்து – என்று இருக்க வேண்டாவோ –இது அவன் வரவுக்கு ஸூ சகம் காண் -நீ சோகிக்க வேண்டா -என்று ஆஸ்வசிப்பிக்கிறாள்-ஆக இருக்கிறது –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-அவதாரிகை-இப்படி இவருடைய ஜகத் ரக்ஷணமும் ஜகத் ஆஹ்லாதனமும் ஸ்வா தந்தர்ய அசஹை களானவர்களுடைய வதனே யாமதோ என்று
மோஹங்கதையான தன்மைகளை ஆஸ்வஸிப்பிக்க இவளின் பரம பிரணயியான சர்வ ரக்ஷகன் திரு அபிஷேகத்தில் சாத்தின திருத்துளாய்ப் பரிமள மயமான தென்றலை இவன் மேலே ப்ரஸவிப்பித்தான்
அத்தால் ஆஸ்வஸ் தையான நாயகி பாவம் பெற்றாராய் அவள் தன் தோழிக்கு உரைத்த பாசுரத்தால் தாம் அதுக்கு ஆச்சர்யப்படுகிறார்

தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப்பாயில் திரு நெடுங்கண்
வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும் மால் வரையைக்
கிளர்ந்து  மறிதரக் கீண்டு எடுத்தான் முடி சூடு துழாய்
அளைந்து உண் சிறு பசுந்தென்றல் அந்தோ வந்து உலாகின்றதே
– – -74 -திரைப்பாயல் பாட பேதம்–தலைவி மகிழ்வுடன் சொல்லும் பாசுரம் என்றும் -தென்றல் வருகிறதே -அவன் வரவில்லை -என்று வருந்த தோழி திரு மேனி ஸ்பர்சம் முகந்து வருவதால் அருகில் வந்து கொண்டு இருக்கிறார் -அறியலாம் –தோழி அவன் வருகைக்கு அறிகுறி என்பதாகவும் கொள்ளலாம்

தளர்ந்தும் முறிந்தும் வருதிரை–(கொந்தளித்து விழுவதெழுவதாயக்) கனத்தாலே தளர்ந்தும்
காற்றாலே முறிந்தும் வருகிற அலைக் கிளர்ச்சியையுடைய திருப்பாற்கடலில்
பாயல்–(ஆதிசேஷனாகிய) சயனத்தில்
திருநெடு கண் வளர்ந்தும்–அழகிய நீண்ட திருக்கண்களுறங்கியும்
அறிவுற்றும்–(அவ்வுலகத்தில் யாவும்) அறிந்தும்
வையம் விழுங்கியும்–பிரளயகாலத்திலே உலகங்களை வயிற்றினுட்கொண்டு காத்தும்
மால்வரையை கிளர்ந்து மறிதர தீண்டு எடுத்தான்–கோவர்த்தனகிரியை மேலெழுந்து குடையாகக் கவியும்படி
பெயர்த்தெடுத்தும் உதவிகிற எம்பெருமானது
முடிசூடு துழாய்–திருமுடியிற் சூடியுள்ள திருத்துழாயை
அளைந்து உன்–அளாவியுண்ட
பசு சிறு தென்றல்–புதிய இளமையான தென்றற் காற்றானது
அந்தோ வந்து உலாகின்றது–மகிழ்ச்சி யுண்டாம்படி (என்மேல்) வந்து வீசுகிறது.

செய்ய பரத்துவமாய்ச் சீரார் வியூகமாய்
துய்ய விபவமாய்த் தோன்றி வவற்றுள் -எய்துமவர்க்கு
இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிது என்றான்
பன்னு தமிழ் மாறன் பயின்று
—26-தாமே விழுவாரைத் தடி கொண்டு அடிக்கை அன்றோ நாமும் கை விடுகை -என்று தம்மாலே பொடியப் பட்டார் நாட்டார் இழவு பொறுக்க மாட்டாத கிருபா அதிசயத்தாலே
மீண்டும் அவனுடைய சௌலப்யத்தை உபதேசிக்கைக்காக பர வ்யூஹ விபவங்களை அடைவே அருளிச் செய்து கொண்டு சென்று நீங்கள் உகந்த படியே உகந்து எழுந்து அருளப் பண்ண
அத்தை அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தோடு ஒக்க விரும்பும் சீலாதி அதிசயத்தாலே உங்களோடு புரையறக் கலந்து சர்வ அபேஷிதங்களையும் குறைவற உபகரிக்கும் அர்ச்சாவதாரத்தில் ஆஸ்ரயிங்கோள் என்கிற செய்ய தாமரைக் கண்ணனில் தாத்பர்யத்தை அருளிச் செய்கிறார்

தளர்ந்தும் -இத்யாதி –பெருத்து மலை போலே இருக்கிற திரைகளை எடுத்து – அக் கனத்தாலே தளர்ந்தும் – காற்றாலே முறிந்தும் வருகிற -திரைகளை உடைத்தான படுக்கையிலே – இவன் சர்வேஸ்வரன் -என்று ஐஸ்வர்யத்தை கோள் சொல்லிக் கொடுப்பதாய் –அழகுக்கு எல்லை இன்றிக்கே இருக்கிற கண்களைக் கொண்டு உறங்கியும் – ஜகத் ரஷணத்தை பண்ணிக் கொண்டு கண் வளர்ந்தும் –அறிவுற்றும் – பிரளயம் வந்து நலியப் புக்கவாறே -இவற்றின் உடைய ரஷண அர்த்தமாக –  நாம் வந்து கிடக்கச் செய்தே இவற்றை நோவு பட விட்டு இருக்கை யாவது என் -என்று உணர்ந்து அருளியும் –வையம் விழுங்கியும் –பிரளயத்தில் நோவு படாத படி பூமியை எடுத்து வயிற்றிலே வைத்து நோக்கியும் –மால் வரை -இத்யாதி – அப்படி ஜகத்துக்காக வருகை அன்றிக்கே – ஒரூராக நோவு படப் புக்கால் வந்து நோக்கும்படியைச் சொல்லுகிறது –-கோவர்த்தனம் ஆகிற மகா கிரியை நின்ற நிலையிலே நின்று கிளப்பி – கீழது மேலதாம்படி பேர்த்து எடுத்தவனுடைய –முடி சூடு துழாய் இத்யாதி –தாளிணை மேல் தண் அம் துழாய் -என்று அவள் இருந்தாலும் –-ஏகாந்தி விதி ப்ரயுக்தாம் பூஜாம் -க்ருஹ்னாதி சிரஸா ஸ்வயம் -என்று-அவன் இருக்கும்படியாலே இவள் அத்தைச் சொல்லுகிறாள் –இவன் திரு அபிஷேகத்தில் சாத்தின-திருத் துழாயிலே புக்கு உழறி- அதிலே வாசனையைப் பண்ணி –
நடுவிலே ஒன்றிலும் தங்காதே- கலப்பற்று வருகிற மந்த மாருதம் அன்றோ வந்து உலாவுகிறது –
இனி உனக்கு சோகிக்க அவகாசம் உண்டோ –அவன் முடி சூடு துழாய் என்று அமைந்து இருக்க கீழ்ச் சொன்ன விசேஷணங்களுக்கு கருத்து என் என்னில் – அவன் ஆஸ்ரித அர்த்தமாக வ்யாபரித்த-இடம் எங்கும் புக்கு ஸ்வேத கந்தத்தைக் கொண்டு வாரா நின்றது என்கை –சிறு தென்றல் –-மந்த மாருதம்திரு  –ஐஸ்வர்யமாகவும்–அழகாகவும்

நாயகன் உடைய திரு முடியில் சூடிய திருத் துழாய் வாசனை பருகி வந்து தென்றல் வீச நாயகி மகிழ்ந்து பேசும் பாசுரம் –அவன் வரவுக்கு ஸூ சகம் என்று சொல்லி தோழி தலைவியை ஆற்றாமை தணிக்கும் பாசுரம் என்றுமாம்–திரு நெடுங்கண்-வளர்ந்தும் அறிவுற்றும்– லோக ரக்ஷணம் சிந்தனை -யோக நித்திரை -அறிதுயில் -விழி துயில் -துயிலாத துயில் -போய் உறக்கம் –-மால் வரையைக்-கிளர்ந்து மறிதரக் கீண்டு எடுத்தான்–பசுக்கள் எட்டிப் புல் மேயலாம் படி கோவர்த்தன மலையைத் தலை கீழாக எடுத்துக் பிடித்தமை –-சிறு பசுந்தென்றல்-மந்த மாருதம் –

ஸ்வாபதேசம் –-ஆழ்வார் எம்பெருமானது காருண்யம் ஐஸ்வர்யம் போக்யதைகளில் ஈடுபட்டு தரித்தமையும் அவனது மஹா குணங்களை சொல்லி ஆழ்வாரை பாகவதர்கள் ஆற்றாமை தனித்தவையும் சொல்லிற்று யாய்த்து–நாயகனது திருத்துழாயிற்பட்ட தென்றல், நாயகி மகிழ்நதுரைக்கும் பாசுரம் இது.-நாயகனது மேனியோடு ஸம்பந்தப்பட்ட பொருள் தன் உடம்பின்மீது வந்து பட்டுத் தனது பிரிவாற்றாமைத் துயரைச் சிறிது தணிப்பித்தலாகிய ஸந்தோஷத்தைத் தலைவி தோழிக்கு உரைக்கின்றாளென்க.–கொந்தளித்து வீசுகின்ற அலைக்கிளர்ச்சியையுடைய திருப்பாற்கடலில் சேஷசயனத்தில் உறங்குவான் போல் போகு செய்தும் பிரளய காலத்தில் உலகங்களை வயிற்றினுட்கொண்டு காத்தும் கோவர்த்தநகிரியைக் குடையாக வெடுத்துப் பிடித்துப்
பெருமழைத் துன்பத்தைப் போக்கியும் உபகரித்தருள்கின்ற எம்பெருமானுடைய திருமுடியில் அணிந்துள்ள திருத்துழாயை யளைந்த புதிய இளந்தென்றற் காற்றானது மகிழ்ச்சியுண்டாகும்படி என் மேல் வந்து வீசுகின்றது என்றாளாயிற்று.-இனி, இதனை, வழக்கம்போலத் தென்றல் வரவு கண்டு அதற்கு வருந்தத் தொடங்கிய நாயகியை நோக்கித் தோழி ‘இதை நீ வெறுந்தென்றலென்று கருதாதே; அவனுடம்பிற்பட்டு வருகிறது காண் இது;-இது அவன் வரவுக்கு அறிகுறி’ என்று கூறிச் சோகந்தணிக்கிறதாகவுங்கொள்வர்.-ஹந்த! என்னும் வடசொல் (அவ்பயம்)- மகிழ்ச்சி, இரக்கம், துன்பம் முதலிய பொருள்களில் வருமென்று வடமொழி நிகண்டினால் தெரிகிறதனால் அதன் விகாரமாகிய அந்தோ வென்பது இங்கு மகிழ்ச்சிப் பொருளில் வந்ததென்க.-திருநெடுங்கண் வளர்ந்து மறிவுற்றும் = எம்பெருமானது தூக்கம் நமது தூக்கம் போல் தமோகுண காரியமாய் உடம்பு தெரியாது கொள்ளுந் தூக்கமன்றியே எல்லாப் பொருளையும் அறிந்து கொண்டே லோகரக்ஷணை சிந்தனை பண்ணும் தூக்கமாதலால் ‘கண்வளர்ந்தும் அறிவுற்றும்’ எனப்பட்டது; இது பற்றியே அத் தூக்கம்- யோக நித்திரை, அறிதுயில், விழிதுயில் துயிலாத் துயில், பொய்யுறக்கம் எனப்படும்.-“மால்வர¬யை மறிதர எடுத்தான்” என்றதனால் பசுக்கள் எட்டிப் புல்மேயலாம்படி கோவர்த்தந மலையைத் தலைகீழாக எடுத்துப் பிடித்தமையுந் தோன்றும்.சிறு தென்றல் – மந்தமாருதம்.–இப்பாட்டுக்கு உள்ளுறை பொருளாவது- பிரிந்த நிலையில் ஆழ்வார் தாம் எம்பெருமானது காருண்யம் ஆச்வர்யம் யோக்யதை
என்னும் இக்குணங்களின் நடையாட்டத்தைக் கண்டு ஆறியிருக்குந் தன்மையை அருளிச் செய்தலாம். மற்றவை வெளிப்படை. இனி தோழிவார்த்தை யென்னும் பக்ஷத்தில், அவன் ஆச்ரிதர்களை ரக்ஷித்தருளும் பொருட்டுக் கடலிலே யோக நித்திரை கொண்டருள்வதும் பிரளயாபத்தில் உலகத்தை வயிற்றில் வைத்து நோக்குவதும் கோவர்த்தநோத்தாரணம் பண்ணினமையுமாகியமஹா குணங்களைச் சொல்லி அன்பர்கள் ஆழ்வாரை ஆற்றுகின்றதாக ஸ்வாபதேசம் கொள்கை.

தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப்பாயில்-பகவத் ஸ்பர்ச ஸூகத்தாலே கொந்தளித்து விழுவது எழுவதாய் பரஸ்பர ஹானியாலே முறிந்தும் வருகிற திரைக் கிளப்பத்தை யுடைத்தான
ஷீரார்ணவத்தில் படுக்கையிலே--திரு நெடுங்கண் வளர்ந்தும் ஸ்ரீ மத்தாய் அதிசய ஸூசகமான திருக்கண்கள் உறங்கியும்-அழகிய நெடும் கண் என்றுமாம்-அறிவுற்றும்-அவ்வுறக்கம் தமஸ் கார்யம் அல்லாமையாலே அத்தோடே ஜகத் ரக்ஷண சிந்தை பண்ணியும்-வையம் விழுங்கியும்-ரக்ஷணீயமான ஜகத்துக்கு பிரளய ஆபத்து வந்தவாறே திரு வயிற்றிலே வைத்து நோக்கியும்–மால் வரையைக் கிளர்ந்து மறிதரக் கீண்டு எடுத்தான்-ஆஸ்ரித ரானவர்களை -அந்தர் வர்க்கமான இந்த்ராதிகள் பசிக் கோபத்தாலே வர்ஷாதிகளாலே நலியும் அளவிலே பெரிய மலையை உயர மறித்துக் குடையாக்குகைக்காக இடந்து எடுத்த மஹா உபகாரகனுடைய-முடி சூடு துழாய் இந்திரன் கோவிந்த அபிஷேகம் பண்ணின திரு முடியிலே சாத்தின திருத்துழாயை-அளைந்து உண் சிறு பசுந்தென்றல்
தழுவி முழுசி அனுபவித்த மந்தமான புதிய தென்றலானது-அந்தோ வந்து உலாகின்றதே-ஐயோ வந்து உலவா நின்றது என்று தன்னுடைய சந்தோஷத்தைத் தோழிக்கு உரைத்தாளாயிற்று-அன்னோ -என்ற பாடமாய் உலவா நின்றதீ என்றுமாம்–இவ் விடத்தில் தென்றல் உலாவுதலை உகந்து உரைத்தது
தலைவனான ஈஸ்வரன் ஆசன்னனானான் என்கிற அபிப்ராயத்தாலே-இத்தால் தன்னோட்டை ஸம்ஸ்லேஷ ஸூகத்தாலே பெரும் கடல் கிளர்ந்தால் போலே தான் நித்ய வாஸம் பண்ணுகிற தேசத்தின் நீர்மையை யுடையரானவர்கள் அனுபவிக்கும் படி தன்னை ஸர்வ ஸ்வ தானம் பண்ணி ஜகத்துக்கு ஸர்வ பிரகார ரக்ஷகனாய் ஆபத் சகனாய் விரோதி நிவர்த்தன சீலனான கிருஷ்ணனுடைய நிரவதிக சேஷித்வ போக்யத்வங்களானவை அவனுடைய தாக்ஷிண்ய அதிசயத்தாலே பிரகாசியா நின்றது என்று ஆஸ்வஸ் தராய் ஸூஹ்ருத்துக்களுக்கு அருளிச் செய்தார் ஆயிற்று-(சிறு பசும் தென்றல் தழுவி முழுசி -தாக்ஷிண்ய அதிசயம் )

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம் –தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப்பாயில் திரு நெடுங்கண்
வளர்ந்தும்
-தளர்ந்து பெரும் திரையாக எடுத்து -அக்கனத்தாலே தளர்ந்தும் காற்றாலே முறிந்தும் வருகிற திரைகளை யுடைத்தான படுக்கையிலே இவன் ஸர்வேஸ்வரன் என்று ஐஸ்வர்யத்தைக் கோள் சொல்லிக் கொடுப்பதாய் பரப்புக்கு எல்லை இன்றிக்கே இருக்கிற கண்களைக் கொண்டு உறங்கியும்
ஜகத் ரக்ஷண சிந்தையைப் பண்ணிக் கொண்டு கண் வளர்ந்ததும்-அறிவுற்றும்-பிரளயம் வந்து நலியப் புக்கவாறே இவற்றினுடைய ரக்ஷண அர்த்தமாக நாம் வந்து கிடக்கச் செய்தே இவற்றை நோவு பட விட்டு இருக்கையாவது என் என்று உணர்ந்து அருளியும்-வையம் விழுங்கியும்-பிரளய ஆபத்திலே நோவு படாதபடி பூமியை எடுத்து திருவயிற்றிலே வைத்து நோக்கியும்–மால் வரையைக் கிளர்ந்து மறிதரக் கீண்டு எடுத்தான்-அப்படி ஜகத்துக்காக வருகை அன்றிக்கே ஒரூராக நோவு படப்புக்கால்
வந்து நோக்கும் படியைச் சொல்லுகிறது-கோவர்த்தனம் ஆகிற மஹா கிரியை நின்ற நிலையிலே கிளம்பும்படி கீழது மேலதாம் படி பேர்த்து எடுத்தவனுடைய-முடி சூடு துழாய் அளைந்து உண் சிறு பசுந்தென்றல் அந்தோ வந்து உலாகின்றதேதாளிணை மேல் அணி தண்ணம் துழாய் -திருவாய் -4-2-1- என்று அவன் இருந்தாலும் கிருஷ்ணாதி சிரஸா ஸ்வயம் -என்று அவன் இருக்கும்படியாலே
இவள் அத்தைச் சொல்லுகிறாள் அவன் திரு அபிஷேகத்திலே சாத்தின திருத்துழாயைப் புக்கு உழறி
அதிலே வாஸனை பண்ணி நடுவு ஒன்றிலே தங்காதே கலப்பற்று வருகிற மந்த மாருதம் அன்றோ வந்து உலவுகிறது இனி உனக்கு சோகிக்கைக்கு அவகாசம் உண்டோ–அவன் முடி சூடு துழாய் என்ன அமைந்து இருக்க கீழ்ச் சொன்ன விசேஷணங்களுக்குக் கருத்து என் என்னில்-அவன் ஆஸ்ரித அர்த்தமாக வியாபாரித்த இடம் எங்கும் புக்கு ஸ்வேத கந்தத்தைக் கொண்டு வாரா நின்றது என்கை-இத்தால் அவன் ஆஸ்ரித அர்த்தமாகாது திருப்பாற் கடலிலே வந்து கண் வளர்ந்து அருளின படியையும்
பிரளய ஆபத்திலே ஜகத்தை திரு வயிற்றிலே வைத்து நோக்கின இம் மஹா உபகாரத்தையும்
கோவர்த்தன உத்தரணம் பண்ணின படியையும்
ஆக இக் குணங்களைச் சொல்லி பார்ஸ்வஸ்த்தர் ஆஸ் வஸி ப்பிக்கும் படியைச் சொல்லுகிறது
ஆக குண ஞானத்தாலே ஜீவித்த படியைச் சொல்லுகிறது

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-வியாக்யானம்-தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப்பாயில்
ஒன்றுக்கு ஓன்று கொந்தளித்து விழுந்தும் புரளுமதாய் முறுகளைப் பெற்றும் மேல் வருகிற திரைப்பாயனுள்ள ஆழ் கடலிலே திரு நெடுங் கண் வளர்ந்தும் திருவும் தாமும் தீர்க்க லோசனாத்மக யோக நித்திரை செய்தும்-அறிவுற்றும்-மத்யே வந்தவர்களைக் கடாக்ஷிக்கக் கண் விழித்தும்–வையம் விழுங்கியும்மால் வரையைக் கிளர்ந்து மறிதரக் கீண்டு எடுத்தான் -மஹத்தான கோவர்த்தனத்தை விஜ்ரும்பணத்தால் விஜ்ரும்பித்து மேற்புறம் உட் படும்படி நிலத்தோடு ஒட்டு விடுவித்தவனுடைய-முடி சூடு துழாய் அளைந்து உண்-திரு அபிஷேகத்தில் சாத்தின திருத்துழாயில் விளையாடி தத்கத கந்த மகரந்த ஆஸ்வாதீ யானதாய்–சிறு பசுந்தென்றல்-சிறுகச் சிறுக வருகிற குளிர்ந்த தென்றலானது-அந்தோ வந்து உலாகின்றதே – இப்போதாக ஸஞ்சரியா நின்றபடி என்று ஆஸ்வஸிக்கிறார் –

ஸ்வாபதேசம்
இத்தால் –
1-அவன் ஆஸ்ரித அர்த்தமாக திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின படியும் –
2-பிரளய ஆபத்தில் ஜகத்தை வயிற்றில் வைத்து நோக்கின இம் மகா குணமும் –
3-கோவர்த்தனம்-உத்தரணம் பண்ணின படியும் – ஆகிற அக் குணங்களைச் சொல்லி பார்ஸ்வஸ்தார் ஆஸ்வசிப்பிக்கிற படியை சொல்லுகிறது –
குண ஜ்ஞானத்தாலே ஜீவித்த படியை சொல்லுகிறது –

தாத்பர்யம்–கீழ்-ராக -பூர்ண -சந்த்ரனைக் கண்டு மோஹித்துக் கிடந்த நாயகி திருத்தாயார் அடல் ஆழிப்பிரான் -பொழில் ஏழும் காத்து அளித்த பிரான் என்று திரு நாமம் செவிப்பட்டவாறே மோஹம் தெளிந்து அப்பொழுது குளிர்ந்த மந்தமாருதமும் வீச அத்தாலே நலிந்த தலைமகளைக் கண்ட தோழி
அவன் திருப்பாற் கடலிலே கள்ள நித்திரை –ஏரார் கோலம் திகழக் கிடந்தான் அன்றோ-கண் மூடி தூங்காமல் -கூப்பீடு சப்தம் கேட்பதற்க்காகவும் அழகை வெளிப்படுத்திக் கொண்டு -ரக்ஷண ஏக சிந்தையானாய் அதி ஸூந்தரமான விசாலமான திருக்கண்கள் காட்டி உபகரிப்பவனுமாயும்
பிரளய ஆபத்தில் திருவயிற்றிலே ஸகல லோகங்களையும் வைத்து ரக்ஷிப்பவனாயும்
கோவர்த்தனம் உதாரணம் பண்ணி ஆ நிரைகளையும் கோபர்களையும் ரக்ஷிப்பவனாயும் இருப்பவன் என்று அவன் ரக்ஷகத்வ குண சேஷ்டி தங்களைக் காட்டி தோழி ஆஸ்வஸிப்பிக்கிறாள்
நாயகன் குணங்களை அறியாயோ-இப்படி ரக்ஷணமே குணமாக உள்ள அவன் உன்னை உபேக்ஷிக்க மாட்டானே -இத் தென்றலும் வெறும் தென்றல் அல்லவே-அவன் சாத்தி அருளும் திருத்துழாய் மதுவில் அளைந்து –அந்த தேன் துளியை நம் மேல் தெளித்து நாயகன் அருகில் வந்தமை ஸூ சிப்பிக்கிறதே
தண்டகாரண்ய ரிஷிகள் பெருமாள் வந்ததை நீல மேக ஸ்யாமளன் -தண்டகாரண்யம் நிறுத்தாலேயே
அறிந்தால் போல் இதுவும் அவனது வரத்த்துக்கு ஸூ சகமே நீ சோகிக்க வேண்டா என்று ஆஸ்வஸிப்பிக்கிறாள் –

3-6-செய்ய தாமரைக் கண்ணன் -பிரவேசம் 

சர்வேசுவரன் திருவடிகளில் கைங்கரிய ருசியுடையார்க்கு அதனைக் கொடுக்கக் கடவனுமாய், அவ்வடிமைதான் அவன் தனக்கு
இனியதாயிருக்கக்கடவதுமாய், அவ்வழியாலே இம்மக்களுக்கு உத்தேஸ்யமாகக் கடவதுமாயிருக்க,
அதனை இழக்கையாலே நிந்திக்க வேண்டும்படி இருந்தமையின், இவ்வடிமையிலே சேர்ந்தவர்களைக் கூட்டிக்கொண்டு,
அது இல்லாதாரை வெறுத்தவராய் நின்றார் மேல் திருவாய்மொழியில்;

அவ்வாறு வெறுத்தல், தாமே விழுவாரைத் தடிகொண்டு அடித்தலைப் போன்றது என்று நினைந்து, ‘இவர்கள் பண்டே
அறிவு கேட்டாலே வழி தப்பிப் போய்க் கேட்டினை அடையாநின்றார்கள்; நாம் இவர்களைக் கைவிட ஒண்ணாது;
நலத்தைச் சொல்லுவோம்,’ என்று பார்த்து, -தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவருக்கும் இவர் அடி பணிந்தார்க்கும் இவை உள்ளதே —
பிராட்டி நலம் அருளிச் செய்தாற்போலே நலத்தை அருளிச்செய்கிறார் இத்திருவாய்மொழியில்.
இராவணன் பிராட்டிபக்கல் ‘பெற்றதாய்’ என்ற நினைவு இன்றிக்கே திருமுன்பே நின்று சிலவற்றைப் பிதற்றப் புக்கவாறே
‘ஸ்ரீராமபிரான் யானையைப் போல எண்ணப்படுகிறார்; நீ மிகச் சிறிய முயலைப் போல எண்ணப் படுகிறாய்,’ என்று வெறுத்து வைத்து
பின்னையும் ‘ஐயோ! இவன் நினைவு இருந்தபடி என்? இவனுக்கு ஒரு நல்வார்த்தை சொல்லுவார் இன்றிக்கே ஒழிவதே!’ என்று
இரக்கங்கொண்டு ‘நீ ஸ்ரீராமபிரானோடு தோழமை கொள்,’என்று அவன்தனக்கே நலத்தை அருளிச்செய்தாற்போன்று,
இவரும் மேல் திருவாய்மொழியில் அவர்களை நிந்தித்து வைத்து, இரங்கி இத்திருவாய்மொழியில் நலத்தை அருளிச்செய்கிறார்.

ஸ்ரீராமா சுந். 21 : 19.- இந்தச் சுலோகத்திற்கு வியாக்கியாதா அருளிச்செய்த பொருள் வருமாறு:
மித்ரம் ஒளபயிகம் கர்த்தும் ராம :-
‘பெருமாளைச் சரணம் புகு’ என்றால் அப்பையல் அதனைத் தனக்கு எளி வரவாக நினைத்திருக்குமே? அதற்காகத் ‘தோழமை கொள்’ என்கிறாள்.
தங்களைச் சரணம் புக்காரைத் தங்களிற் காட்டில் குறைய நினைத்திருப்பதில்லையே இவர்கள்;
‘மித்ரபாவேந’ என்றும்,‘மித்ரம் ஒளபயிகம் கர்த்தும்’ என்றுமிறே இருவர் படியும்.-துல்ய சீல வயோ வ்ருத்தாம் -முதலிலே சொன்னது பிராட்டியே –
இவள் துவம்சிக்கும் ராவணனை பார்த்து -சொல்ல -சரணாகதி என்று சொல்லாதவன்
-பெருமாள் -சரண் அடைந்த விபீஷணன் இடம் -ஊருக்கு பந்தல் போட சொன்ன வார்த்தை
ஸ்தாநம் பரீப்ஸதா
– வழியடிப்பார்க்கும் தரையிலே கால் பாவி நின்று வழியடிக்கவேணுமே? உனக்கு ஓர் இருப்பிடம் வேண்டியிருந்ததேயாகிலும் அவரைப் பற்ற
வேணுங்காண்.-கிளை மேலே இருந்து மரத்தை அடியிலே வெட்டுவது போலே உள்ளேயே —
எளிமையாக எதிரி காலிலே குனிந்து இவ்விருப்பு இருப்பதில் பட்டுப் போக அமையும் என்றிருந்தாயோ?
வதஞ்சாநிச்சதா கோரம் –
அப்படி உன்னை நற்கொலைப்பட விடுவரோ? உன்னை வைத்து உன் முன்னே உன் சந்தான கூட்டத்தைக் கொன்று பின்னை உன்னைச்
சித்திரவதை பண்ணுகையாகிற இவ்வதத்தை இச்சித்திலையே யாகிலும் அவரைப் பற்ற வேணுங்காண்.
த்வயா –
உன் நிலை இருந்தபடியால் விசேடித்து உனக்கு அவரைப் பற்றவேணும்.
அசௌ-
உருவெளிப்பட்டாலே முன்னிலையாயிருக்குமிறே இவளுக்கு;
அவனுக்கும் தானே மாயாமிருகத்தின் பின்னே போகிற போது கண்ட காட்சியாலே அச்சத்தாலே எப்போதும் முன்னிலையாயிருப்பரிறே.
புருஷர்ஷப:-
‘நான் பண்ணின அபராதத்துக்கு என்னை அவர் கைக்கொள்ளுவாரோ?’ என்றிருக்க வேண்டா; இவற்றை ஒன்றாக நினைத்திரார்காண்;
அவர் புருஷோத்தமர்காண்.
அசௌ புருஷர்ஷப: ராம: த்வயா மித்ரம் கர்த்தும் ஒளபயிகம்.

பிராப்தி ஒத்து இருக்க ‘இவர்கள் தாம் வழி தப்பிப் போய்க் கேட்டினை அடைதற்குரிய காரணம் யாதோ, சம்பந்தம் ஒத்திருக்க?’ என்று பார்த்தார்;
பகவானுடைய பரத்துவ ஞானம் இல்லாமையும் அவனுடைய சௌலப்ய ஞானம் இல்லாமையுமாயிருந்தது
அதாவது, ‘ஈசுவரனாகிறான் பெரியான் ஒருவனன்றோ? அவன், விசைக்கொம்பு; நமக்கு அவனை எட்டப்போகாதொன்றாய் இருந்தது’
என்று சமுசாரிகள் கைவாங்க,
விசைக்கொம்பு -பனி பட்டு மூங்கில் சாயுமே -காலை கட்டு சாதம் வைத்து பாட -ராகம் பாட -மாலைக்குள் போஜனம் மேலே போனதே –
விசை எந்தரம் -கிட்டே போனால் அடிக்கும் என்றுமாம்
‘அவனுடைய சௌலப்யத்தை விரித்துப் பேசுவோம்,’ என்று பார்த்து,
‘நீங்கள் அவன் அரியவன் என்று கைவாங்க வேண்டா; அவன் அடைவதற்குச் சுலபன்; அவனை அடையுங்கோள்,’ என்கிறார்.
ஆயின், மேல் ‘பத்துடையடியவர்’ தொடங்கிச் சௌலப்யமே யன்றோ சொல்லிக்கொண்டு போந்தது?
இப்போதாகச் சௌலப்யம் சொல்ல வேண்டுகிறது என்?’ என்னில்,
அங்குச் சொன்ன சௌலப்யந்தான் பரத்துவம் என்னும்படி அர்ச்சாவதாரம் எல்லையான சௌலப்யத்தின் எல்லை நிலத்தை அருளிச்செய்கிறார்.
அர்ச்சாவதாரம் -சௌலப்ய காஷ்டை -என்றவாறே -திருமால் இரும் சோலை -சொன்னாரே -கிருஹார்ச்சா -காஷ்டை என்றபடி –

‘அர்ச்ய – சமுசாரிகளுக்கும் அர்ச்சிக்கலாம்படி வணங்கத் தக்கவனாய் இருக்கும்.
சீலா ஜடீ பூயதே -நீராக உருக்கப் பண்ணுமே -குணா பரிவாஹம் -அவதாரம் –
‘சமுசாரிகளாகில் அர்ச்சிக்கிறார்கள்; அவர்கள் குற்றமே அன்றோ பண்ணுவது?’ என்னில், -அபசாரமே -செய்து போவது –
ஸர்வ ஸஹிஷ்ணு: – அவற்றையடையப் பொறுத்துக்கொண்டு நிற்கும். ‘ஆனாலும், நினைவு இரண்டாய் இராநின்றதே!’ என்னில்,
அர்ச்சக பராதீந அகிலாத்ம ஸ்திதி : – ‘நமக்கு ஒரு நினைவும் அவர்களுக்கு ஒரு நினைவுமாகில் அன்றோ சேராச் சேர்த்தியாவது?’ என்று
அவர்களுக்கு ஈடாகத் தன்னை அமைத்து நிற்கும்,’ என்றார் பட்டர்.
‘தமர் உகந்தது எவ்வுருவம்? அவ்வுருவந் தானே; தமருகந்தது எப்பேர்?மற்றப்பேர் – தமருகந்து,
எவ்வண்ணம் சிந்தித் திமையா திருப்பரே? அவ்வண்ணம் ஆழியானாம்,’ என்றார் பொய்கையார்.
‘எவர் சிலர் அதிகாரிகள் யாதொருபடியாகவேண்டும் என்று நம்மை வணங்குகிறார்கள்? அவர்களைக் குறித்து அப்படிக் கிட்டலாம்படிக்கு
ஈடாக நம்மை அமைத்துக்கொண்டு நிற்போம்; இப்படி அவர்கள் நினைவே நமக்கு நினைவாம்படி இருக்கையாலே அவர்கள்
எல்லாரும் நம் வழி போனார் ஆவர்கள்,’ என்பது இறைவன் திருவாக்கு.
‘சங்கல்பத்துக்குத் தகுதியாக நினைக்கப்படுகின்ற விஷ்ணு’ என்பது ஸ்ரீவிஷ்ணு புராணம். ‘நன்று; ‘சங்கல்பத்துக்குத் தகுதியாக’ என்பது,
பரத்துவம் முதலான நிலைகளைச் சொல்லுகிறது என்று கொள்ளாமல், அர்ச்சாவதார விக்கிரஹத்தைச் சொல்லுகிறது என்று
கொள்ளுதற்குக் காரணம் யாது?’ எனின், பரமபதத்தில் அசாதாரண விக்கிரஹத்தோடும் குணங்களோடும் இருக்கும்;
விபவங்களில் வந்தால் அது தன்னைத் தன்னின் வேறுபட்ட மற்றைச் சாதிகட்குத் தகுதியாக -இதர சஜாதீயனாய்
-ஆக்கிற்றாய் இருக்கும்;-நம் போல்வார் கண்ணுக்கு இலக்காக ஆகிறானே –
தேவகி வாசுதேவன் யசோதா நந்த கோபன்-சங்கல்பத்துக்கு தகுதியாகவே அமைத்துக் கொள்பவன் கிருஷ்ணன் -அன்றோ
தமர் உகந்த அவ்வுருவம் போலே அன்றோ இங்கும்
அசாதாராண விக்ரகம் -தான் அபிமாநிக்கிறார் -பிரக்ருதிம் ஸ்வாம்-அதிஷ்டாயா -ச விக்ரகனாய் -நாம் வைத்த விக்ரகத்துக்குள் புகுகிறான் -வட தேசம் –
புகுந்தால் தாழ்மை வரும் என்றதே தப்புதானே -தாழ்ந்தது என்ற எண்ணமே அவனுக்கும் வாராதே -இரண்டு குற்றங்களும் வருமே –
அபசாரம் பட்டு அவன் மகாத்மயம் குறைக்க முடியாது -நாம் தான் நம்மை காத்துக் கொள்ள படாமல் இருக்க வேண்டும் -சாந்நித்த்யம் குறையாது அவனுக்கு –
அந்தர்யாமியாய் இருந்து அமிர்தமாய் இருக்கிறான் -சுருதி -அவன் சம்பந்தத்தால் அமிர்தம் ஆக்குவான் தான் புகுந்து -வியாப்தகத தோஷம் வாராது
தூப்பில் பிள்ளை கத்ய வியாக்யானத்தில் -ஷாட் குணிய பிரகாச -சுத்த சத்வமயம் -நாம் உகந்த வற்றிலே -அர்ச்சாபி-என்கிறார் –
அர்ச்சாவதார திருமேனியாக இருந்தாலும் -உம்மைத் தொகை சொல்வதையே ஒத்துக் கொள்ள மாட்டார்கள் –
இங்ஙன் அன்றிக்கே, அடியவன் தான் உகப்பது யாதேனும் ஒரு பொருளைத் திருமேனியாகக் கோலினால், அதனையே
தனக்குத் திருமேனியாகக் கொண்டு, அதிலே அசாதாரண விக்கிரஹத்தில் பண்ணக்கூடிய அபிமானத்தைப் பண்ணி,
இவ்வழியாலே முகங்கொடுக்கும்படியாய் இருப்பது இந்நிலை.மேலும், தன்னினின்றும் வேறுபட்ட எல்லாப் பொருள்களினுடையவும்
சொரூபம், நிலை பேறு, தொழில் நடத்தல், தொழில் நடவாமை முழுதும் தன் அதீனமாம்படி இருக்கிற இறைவன்,
தன்னுடைய சொரூபம் நிலைபேறு முதலியவைகள் அடியார்களுடைய அதீனமாம்படியாய் அவர்களுக்கு வீடு நிலம் முதலியவைகளைப் போன்று
கூறு கொள்ளலாம்படி நின்ற நிலை அன்றோ இது? மேலும், இவனுக்கு ருசி பிறந்த போது மற்றொரு இடத்தில் போக வேண்டாதே,
இங்கே அனுபவிக்கலாம்படி நிற்கிற நிலையாய், இச்சரீர சம்பந்தமற்று ஒரு தேச விசேடத்திலே போய் அதற்கு ஈடாய் இருப்பது
ஒரு சரீரத்தைப் பெற்றுச் செய்யக்கூடியனவான அடிமைகளை இதர விஷயங்களின் ஆசைக்கு உறுப்பான இவ்வுடம்போடே செய்யலாம்படியாய்,
இவன் வேறொன்றிலே நோக்குள்ளவனான அன்றும் இவன் கையையே பார்த்திருக்கக் கூடியவனாய்
, இவன் தான் பசித்த போது உண்ணும் பொருளை ‘அமுது செய்ய வேண்டும்’ என்று விரும்பினால், அப்போதே அமுது செய்யக்கூடியவனாய்,
ஆசனம் படுக்கை அணிகள் முதலியனவெல்லாம் இவன் இட்ட வழக்காக்கி, திருமகள் கேள்வனாய், அடையப்பட்ட
எல்லா விருப்பத்தையுமுடையவனான இறைவன் அடியார்கட்கு வசப்பட்டவனாய், இவன் யாதேனும் ஒரு பொருளை இட்டால்
அதனைத் திருவாய்ப்பாடியில் யசோதை முதலானோர் வெண்ணெயைப் போன்று விரும்பக்கூடியவனாய்,
இப்படித் தன்னை அமைத்துக் கொண்டு நிற்கிற இடமே அன்றோ அர்ச்சாவதாரமாவது?

பரத்துவமே தொடங்கி அவதாரங்களிலே வர அவன் குணங்களைச் சொல்லிக்கொண்டு போந்து அர்ச்சாவதாரத்தின்
எல்லை நிலமான சௌலப்யத்தின் எல்லை நிலத்தை உபதேசிக்கிறார்.
‘ஆயின், இப்போது உபதேசிக்கப்புகுகிறது சௌலப்யமேயாகில், பரத்துவமே தொடங்கி உபதேசிக்க வேண்டுவான் என்?’ என்னில்,
‘மேன்மையுடையவன் தாழாநின்றான்’ என்றால் அன்றோ குணமாவது? தாழ்ந்த நிலையினனான ஒருவன் தாழாநின்றால்
சொரூபமாமித்தனையே அன்றோ? இப்படித் தாழ நிற்கிறவன் மேன்மையையுடையவன் என்கைக்காகச் சொல்லுகிறது.
உபாயங்களில் பிரபத்திமார்க்கம் போன்றது, சௌலப்யங்களில் அர்ச்சாவதார சௌலப்யம்.
‘தான் உகந்த பொருளைத் திருமேனியாகக் கொண்டு சந்நிதி பண்ணுவானேயாயின், கௌரவபுத்தி உண்டாகுமோ?’ எனின்,
தாய்க்கும் பெண்களுக்குரிய தன்மை ஒத்திருந்தும் பண்ணுகிற உபகாரங்களைக் காண்கையாலும்
சாஸ்திரம் சொல்லுகையாலுமன்றோ கௌரவிக்கிறது? அப்படியே,பிரமாணத்தை நம்புகிறவனுக்கு அடையத்தக்க இடம் அர்ச்சாவதாரம்
ஒழிய இல்லை என்று இவ்வளவான சௌலப்யத்தின் எல்லை நிலத்தை உபதேசிக்கிறார் ஆதலின், கௌரவபுத்தி உண்டாகும்.

தாம் உபதேசிக்கிற அதிகாரிகளுக்கும் தம்மைப் போன்று கைங்கரியத்தில் பிராப்தியுண்டு என்று காட்டுகைக்காக ‘ஒழிவில் காலமெல்லாம்’ என்ற
திருவாய்மொழி தொடங்கிச் சங்கதி அருளிச்செய்கிறார், ‘சர்வேஸ்வரன்’ என்று தொடங்கி. ‘சர்வேஸ்வரன்’ என்றது முதல் ‘உத்தேஸ்யமாகக் கடவதுமாயிருக்க’
என்றது முடிய, ‘ஒழிவில் காலமெல்லாம்’ என்ற திருவாய்மொழியின் அநுவாதம். அதற்குமேல் ‘வெறுத்தவராய் நின்றார்’ என்றது முடிய, மேல்
திருவாய்மொழியின் அநுவாதம். ‘இப்படி நிந்திக்கத் தக்கவர்கட்கு உபதேசிக்கைக்குக் காரணம் என்?’ என்ன, ‘அருள் கண்டீர் இவ்வுலகினில்
மிக்கதே’ என்கிறபடியே, மிக்க பேரருளே காரணம் என்கிறார், ‘அவ்வாறு வெறுத்தல்’ என்று தொடங்கி.

‘நண்ணாதார் மெய்யில் ஊன் ஆசை நிர்வேதத்தோடே ஆஸ்திக்ய அமாநித்வாதிகள் விஞ்சின பிரணிபாத அபிவாதந பரிப்ரச்ந சேவாபரர்க்கு
உளங்கொள் பேசுமளவன்று என்னும் அர்த்தத்தை வம்மின் விரோதம் ஈனச் சொல் எவ்வுயிர்க்கும் அறிய என்று அடைவுகெட அதபஸ்கர்க்கு
உபதேசிக்கிறது ஞாலத்தார் பந்தபுத்தியும் அநர்த்தங்கண்டு ஆற்றாமையும் மிக்க கிருபையுமிறே.’ ‘தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும்
இவர்க்கும் இவர் அடிபணிந்தவர்க்குமே இவையுள்ளது’ என்னும் ஆசார்யஹ்ருதய ஸ்ரீசூக்திகளை இங்கு அநுசந்திக்கத் தகும்.
வேத வேத்ய நியாயம் பரதவ பரமுது வேதம் வ்யூஹ வ்யாப்தி அவதாரங்களிலே ஓதின நீதி கேட்ட மனு படு கதைகளாய் ஆக
மூர்த்தியில் பண்ணிய தமிழ் ஆனவாறே வேதத்தை த்ராவிடமாகச் செய்தார் என்னும்
-பெரும் புறக்கடலும் சுருதி சாகரமும் அலைத்து ஆழ்ந்து ஓடும் இடங்களில் அயோக்யருக்குச் சமைத்த மடுவும் சாய்கரமும் மாந மேய சரமம் –
கௌரவ பிரதிபத்தி நமக்கு வருமோ என்னில் -ஜனனிக்கு ஸ்திரீ சாம்யம் ஒத்து இருக்கச் செய்தே பண்ணும் உபகாரங்களை
பிரத்யஷிக்கையாலும் -மாத்ரு தேவோ பவ -பிதா விட சதா -100 மடங்கு -சாஸ்திரம் சொல்லிற்றே
பிரத்யஷமாக நாமும் பார்க்கிறோம் -த்ரவ்ய புத்தி மாத்ரு யோனி பரிஷை உடன் ஒக்கும் –
வீட்டு இன்பப் பாக்களில் த்ரவ்ய பாஷா நிரூபண சமம் இன்ப மாரியில் ஆராய்ச்சி
இது பூர்ணம் –அது பூர்ணம் -பர -அங்கு இருந்து அது பூர்ணம் -வ்யூஹம் -அங்கு இருந்து அது பூர்ணம் -விபவங்கள்
அங்கு இருந்து அது பூர்ணம் -அர்ச்சை –அதுவே பூர்ணம் -க்ருஹ அர்ச்சை –

ஆறாம் திருவாய் மொழியில் -கீழ் சேஷத்வ ஸாரஸ்யத்தால் பிறந்த ப்ரீதி விகாரம் உத்தேச்யம் என்று அருளிச் செய்தவர்
அந்த இனிமை இல்லாமையால் அவிகிருதரான சம்சாரிகளுக்கும் பகவச் சேஷத்வத்தை உபதேசிப்பதாக
சேஷியினுடைய அர்ச்சாவதார பர்யந்தமான சவ்லப் யத்தை உப பாதிப்பதாக நினைத்து
1-அந்த சவ்லப்யத்துக்கு ஊற்றான ஜகத் ஸ்ரஷ்ட்ருத்வத்தையும்
2-ஸ்ருஷ்டமான ஜகத்தினுடைய ரக்ஷண அர்த்தமான அவதார கந்தத்வத்தையும்
3-அவதீர்ணனுடைய அதிசயித சேஷ்டிதத்வத்தையும்
4-ஈஸ்வர அபிமானிகளுக்கும் ஆஸ்ரயணீயனான ஸீலாதிசயத்தையும்
5-அவதார திசையிலும் அகில விபூதித்வம் தோற்றும் படியான ஆதிக்யத்தையும்
6-ஆஸ்ரித விஷயத்தில் அதிசயித வாத்சல்யத்தையும்
7-நிரவதிக போக்யதையும்
8-பற்றினாரை நழுவ விடாத பக்ஷபாதத்தையும்
9-சர்வவித பந்துவுமாய்க் கொண்டு ஆஸ்ரிதர் இட்ட வழக்கான அர்ச்சாவதார பாரதந்த்ரியத்தையும்
10-ஆஸ்ரித பரதந்த்ரனான அவன் பக்கல் தமக்குப் பிறந்த அபி நிவேசத்தையும்
அருளிச் செய்து பகவச் சேஷத்வத்தை பிரதிபாதித்து அருளுகிறார் –

செய்ய தாமரைக் கண்ணனாய் உலகு
ஏழும் உண்ட அவன் கண்டீர்
வையம் வானம் மனிசர் தெய்வம்
மற்று மற்றும் மற்றும் முற்றுமாய்
செய்ய சூழ் சுடர் ஞானமாய் வெளிப்
பட்டு இவை படைத்தான் பின்னும்
மொய்கொள் சோதியோடு ஆயினான் ஒரு
மூவர் ஆகிய மூர்த்தியே.
–3-6-1-

கம் பிபதீதி கபி–கம்பீராம்ப -சமுத்பூத ச்ம்ருஷ்ட நாள- ரவி கர விகசித -புண்டரீக தல -அமல ஆயத ஈஷண-அமலங்களாக விளிக்கும் கரியவாகி –நீண்ட அப்பெரிய வாய கண்கள்

‘மற்றும்’ என்றது, விலங்கு பறவை தாவரங்களை.-மீண்டும், ‘மற்றும்’ என்றது, அவற்றுக்குக் காரணமான ஐம்பெரும்பூதங்களை.-மீண்டும் மற்றும் என்றது, அவை தமக்கும் காரணமான மகான் முதலிய தத்துவங்களை. ‘முற்றும்’ என்றது, எல்லாவற்றையும்.-முற்றவும், உண்டாகைக்காக இவையாய்க் கொண்டு தான் படைத்தலில் கருத்து உள்ளவனாய்த் தோன்றி இவற்றைப் படைத்தான்–அதனுடைய கர்மத்துக்குத் தகுதியாகப் படைத்த செவ்வை’ –சூழ்தலாவது, காரியக் கூட்டத்தில் எல்லாம் பரந்திருக்கை. சுடராவது, மழுங்காத ஞானமாய் மிக விளக்கமாயிருக்கை.

சோதி – குணம். ‘சோதி’ என்றது, குணங்களுக்கெல்லாம் உபலக்ஷணம்.-‘இப்போது குணங்களைச் சொல்லுகிறது என்?’ என்னில், குணங்களையுடைய பொருள் அன்றோ பற்றத்தக்கது? ஆதலால், சொல்லுகிறது.

மூவராகிய மூர்த்தி –செய்ய தாமரைக் கண்ணனாய் -உலகம் ஏழும் உண்ட அவன் கண்டீர் -என்று அந்வயம் –

———

மூவர் ஆகிய மூர்த்தியை முதல்
மூவர்க்கும் முதல்வன் தன்னைச்
சாவம் உள்ளன நீக்குவானைத்
தடங் கடற் கிடந்தான் தன்னைத்
தேவ தேவனைத் தென்னிலங்கை
எரி எழச்செற்ற வில்லியைப்
பாவ நாசனைப் பங்கயத் தடங்
கண்ணனைப் பரவுமினோ
.–3-6-2-

அகில காரணாய அத்புத காரணாய நிஷ்காரணமாய் –‘பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரம் – தனக்குத் தானே தலைவன்’-தடம் கடல் கிடந்தான் தன்னை –‘இன்னம் இவர்கட்கு ஆபத்து வந்த போது நம்மைத் தேடித் திரிய ஒண்ணாது’ என்று ஏற்கவே கடலில் இடங் கொண்டவனை-தென்னிலங்கை எரி எழச்செற்ற வில்லியை- நெருப்பானது இராவணபயத்தாலே புகமாட்டாத ஊரிலே தான் நினைத்தபடி பரவும்படி செய்ய வல்ல வில் வலியை யுடையவனை,-இதனால், பிரமன் முதலியோர் கூப்பீடு கேட்டு எழுந்திருந்து செய்த தொழிலைத் தெரிவித்தபடி.-முதல்வன் – காரணன்-தலைவன்.-தேவதேவன்-எரி எழச் செற்ற வில்லி-மனிதத்தன்மையில் பரத்துவம்-பங்கயம் தடம் கண்ணனை –-பாப நாசனாய் இல்லாமல் – பாவத்தை வளர்ப்பவன் ஆனாலும், விடவொண்ணாத படியான கண்ணழகை யுடையவனை.-பரவுமினோஜிதந்தே புண்டரீகாஷே நமஸ்தே -‘தாமரைக் கண்ணரே! தேவரீருக்கு வெற்றி!’ என்று முறை கெடப் புகழுங்கோள்.

————

பரவி வானவர் ஏத்த நின்ற
பரமனைப் பரஞ்சோதியைக்
குரவை கோத்த குழகனை மணி
வண்ணனைக் குடக்கூத்தனை
அரவம் ஏறி அலைகடல் அம
ருந் துயில் கொண்ட அண்ணலை
இரவும் நன் பகலும் விடாது என்றும்
ஏத்துதல் மனம் வைம்மினோ
.–3-6-3-

இராமாவதாரம் பரத்துவம் என்னும்படியான கிருஷ்ணாவதாரத்திலே பற்றுங்கோள்-ஏத்துவதனாலே பரமன்’ -ஏத்தினாலும் அதற்கும் அப்பாற்பட்டவன்’ -பரஞ்சோதியை – அவர்கள் ஏத்த, அதனாலே ஒளியை உடையவனாயிருக்கிறவனை;-அவர்கள் ஏத்துமது தன் பேறாக நினைத்து, அது தன் வடிவிலே தோன்ற இருக்கின்றமையைத் தெரிவித்தபடி.

நித்திய ஸூரிகளோடு செய்யும் செயல்களை ஆயர் பெண்களோடு கலக்கும் இடத்தில், வாசி அறக் கலக்க வல்லவனை. குழகன் – பவ்யன்-மணி வண்ணனை – அவர்களை வசீகரிக்கைக்கும் மருந்திடும் பரிகரத்தை உடையவனை;குடக்கூத்தனை –திருக் குரவைக் கூத்தில் சேராதவர்களும் இழக்க ஒண்ணாதபடி மன்றிலே தன்னுடைய வடிவழகினை முற்றூட்டாக அநுபவிப்பிக்குமவனை.-மன்றம் அமர கூத்தாடி -இவன் ஆடி விட்டு போன பின்பும் கோபிமார்கள் மன்றிலே அமரும் படி –இரவும் நன்பகலும் விடாது என்றும் ஏத்துதல் மனம் வைம்மினோ –‘காலம் நடையாடாத தேசத்தில் அனுபவத்தை அன்றோ காலம் நடையாடும் தேசத்திலே நான் உங்களை அனுபவிக்கச் சொல்லுகிறது?’ என்கிறார்.
ஏத்துகைக்கு ஈடான காலம் ஆகையாலே ‘நல் இரவும் நன்பகலும்’ என்கிறார்.
‘துதி செய்துகொண்டேயிருக்கின்றார்கள்’ என்கிறபடியே ஆதல் வேண்டும் என்பார், ‘என்றும் ஏத்துதல்’ என்கிறார்.-‘நீங்கள் அங்கே நெஞ்சை வைக்குமித்தனையே வேண்டுவது; விஷயம் தன்னடையே கொண்டு முழுகும்,’ என்பார், ‘மனம் வைம்மினோ’ என்கிறார்;

‘நித்தியஸூரிகள் ஏத்தும் விஷயத்தை அன்றோ நான் உங்களை ஏத்தச் சொல்லுகிறது?
அறப் பெரியவனை அன்றோ நான் உங்களை ஏத்தச் சொல்லுகிறது? நீங்கள் ஏத்துகிற இது தன் பேறு என்னுமிடம் வடிவிலே தோன்ற இருக்கிறவனை அன்றோ நான் உங்களை ஏத்தச் சொல்லுகிறது?
உங்களுடைய விலக்காமையே பற்றாசாக வந்து கலக்குமவனை அன்றோ நான் உங்களை ஏத்தச் சொல்லுகிறது?
யாதாயினும் நேர்ந்து அணுக வேண்டும் வடிவழகையுடையவனை அன்றோ ஏத்தச் சொல்லுகிறது?
சேஷசயனத்தை யுடையவனை அன்றோ ஏத்தச் சொல்லுகிறது?
உங்களுடைய சேர்க்கையாலே செருக்கியிருக்கிறவனை அன்றோ ஏத்தச் சொல்லுகிறது?
ஒரு கால நியதி உண்டாய் இருக்கின்றீர்களோ? ஏத்துகைக்குச் சாதனம் இல்லாதவர்களாய்த்தான் இருக்கின்றீர்களோ?
அதில் ஒரு அருமை உண்டாய்த்தான் இருக்கின்றீர்களோ?
ஆன பின்னர், விஷயங்களிலே ஓடித்திரிந்த மனத்தினை மீட்டு இவ்விஷயத்திலே வைக்கப் பாருங்கோள்,’ –ஓவாதே என்றும் ஸ்தோத்ரம் பண்ணுகையிலே நெஞ்சை வையுங்கோள் —-விஷய வைலக்ஷண்யத்தாலே இது தானே கொண்டு முழுகும் என்று கருத்து —

————

வைம்மின் நும் மனத்து என்று யான் உரைக்
கின்ற மாயவன் சீர்மையை
எம்மனோர்கள் உரைப்பது என்? அது
நிற்க; நாடொறும் வானவர்
தம்மை ஆளுமவனும் நான்முக
னும் சடைமுடி அண்ணலும்
செம்மையால் அவன் பாத பங்கயம்
சிந்தித்து ஏத்தித் திரிவரே
.–3-6-4-

செருக்கு மிக்கவர்களான பிரமன் உருத்திரன் முதலாயினார்கட்கும் தடையின்றிக்கே புக்குப் பற்றும்படியாக இருக்கிற சீலகுணத்தைப் பேசுகிறார்.-பாடித் திரிவனே’ என்னுமாறு போலே. வேறு பலன்களைக் கருதும் தன்மையும் நெஞ்சிலே கிடக்கச் செய்தே வேறு பலனைக் கருதாதவர்களைப் போல வந்து பற்றாநிற்பர்கள் ஆதலின்,-‘செம்மையால் திரிவர்’ என்கிறது;-அளவிறந்த நீர்மையை யுடையனாய் இருந்தவன் அநந்ய ப்ரயோஜனராய்க் கொண்டு ஆஸ்ரயிக்குமவர்களைக் கை விடுமோ -என்கிறார் –

————-

திரியும் காற்றோடு அகல் விசும்பு திணிந்த மண் கிடந்த கடல்
எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம் மற்றும் மற்றும் முற்றுமாய்
கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன் கண்ணன் விண்ணோர் இறை
சுரியும் பல் கருங்குறிஞ்சி எங்கள் சுடர் முடி யண்ணல் தோற்றமே 
–3-6-5-

ஆஸ்ரித பரதந்த்ர தயா நிர்வதிக தேஜஸான திரு அபிஷேகத்தை உடையனான சர்வேஸ்வரனுடைய தோற்றரவு –பிரகாசம் -என்னுதல் -அவதாரம் என்னுதல்-

———

தோற்றக் கேடு அவை இல்லவன் உடையான் அவன் ஒரு மூர்த்தியாய்ச்
சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக்கீழ்ப் புக நின்ற செங்கண்மால்
நாற்றம் தோற்றம் சுவை ஒலி உறல்ஆகி நின்ற எம்வானவர்
ஏற்றையே அன்றி மற்றொருவரை யான் இலேன் எழுமைக்குமே.
–3-6-6-

தனக்கு மேல் ஒரு இனிய பொருள் இல்லாதவனான-நரசிம்ஹத்தை ஒழிய வேறு ஒருவரை உத்தேசியமாக உடையேன் அல்லேன், காலன் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும்,’ என்கிறார்.-பரோபதேசம் செய்து கொண்டு –இங்கு ஸூய அனுபவம் -தம்மைப் போலே சம்சாரிகளும் இருக்க வேண்டும் என்று காட்ட அருளிச் செய்கிறார் -இதுவும் பர உபதேச உக்தி-

இரணியன் துவேஷத்திற்கு விஷயம் ஆனாற்போலே இவன் அருளுக்கு விஷயமானான் ஆதலின்,‘சீற்றத்தோடு அருள் பெற்றவன்’ என்கிறது.
இனி, ‘சீற்றத்தோடு’ என்பதனை ‘ஒரு மூர்த்தி’ என்பதற்கு அடையாக்கலுமாம். -சீற்றமே வடிவு கொண்ட ஒரு மூர்த்தி -என்றவாறு —
‘இரணியன் பக்கல் சீற்றமும் செல்லா நிற்க, ஸ்ரீ பிரஹ்லாதாழ்வானுக்குக் கிட்டலாய் இருந்தபடி எங்ஙனே?’ என்று எம்பெருமானாரைச் சிலர் கேட்க, ‘சிம்ஹம் யானை மேலே சீறினாலும் குட்டிக்கு முலை உண்ணலாம்படி இருக்கும் அன்றோ?’ என்று அருளிச் செய்தார்.
‘அடியாரிடத்துள்ள அன்பினாலே அவர்கள் விரோதி மேலே சீறின சீற்றமானால், பின்னை அவர்களுக்கு அணைய ஒண்ணாதபடி இருக்குமோ?’ என்று அருளிச் செய்தார் என்றபடி. எழுமைக்குமே – காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும். அவன் நித்தியசூரிகள் பக்கலிலே இருக்கக்கடவ இருப்பை என் பக்கலில் இருக்க, நான் வேறொன்றை இனிய பொருளாக நினைத்திருப்பேனோ? அவர்கள் அவனை ஒழிய வேறொன்றை இனிய பொருளாக நினைக்கில் அன்றோ நான் வேறொன்றை இனிய பொருளாக நினைப்பது?சீற்றத்தோடு அருள் பெற்றவன் -என்று சிஸூபாலனாகவும் சொல்லுவர் –

————-

எழுமைக்கும் எனது ஆவிக்கு இன்அமுதத்தினை எனது ஆருயிர்
கெழுமிய கதிர்ச் சோதியை மணிவண்ணனைக் குடக் கூத்தனை
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னற் கனியினைத்
தொழுமின் தூய மனத்தராய்;இறையும் நில்லா துயரங்களே.
–3-6-7-

இப்படிச் சுலபனானவன் பக்கல் அரியன் என்னும் ஐயத்தை நீக்கி அவனைப் பற்றுங்கோள்,
உங்களுடைய எல்லாத் துக்கங்களும் போம்படி,’ என்கிறார்.மணி வண்ணனைக் குடக்கூத்தனை –வடிவழகையும் மனத்தை அழிக்கும்படியான செயல்களையும் உடையவனை. வண்ணம் – நிறம்.-இனி, ‘நீலமணிபோலே முடிந்து ஆளலாம்படி இருக்கிறவன்,’ எனலுமாம்.-இத்தலையில் இசைவு பாராமலே அகப்படுத்திக் கொள்ளுகைக்கு ஏதுக்கள் இருக்கிறபடி.-தொழுமின் – இதுவன்றோ நான் உங்களுக்கு இடுகிற வேப்பங்குடி நீர்? பால்குடிக்கக் கால் பிடிக்கிறேன் அன்றோ?

———–

துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய் அவை அல்லனாய்
உயர நின்றது ஓர் சோதியாய் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் தனை
அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன் தனைத்
தயரதற்கு மகன் தனையன்றி மற்றிலேன் தஞ்சமாகவே
.–3-6-8-

இப்படி எல்லாம் நிறைந்தவனாய் இருந்தானேயாகிலும், தன் விபூதியில் ஒரு கூறான இவ்வுலகத்தைப் பிரளயங்கொண்டது என்றால்,-இங்கே வந்து வயிற்றிலே எடுத்து வைத்து நோக்கி, ‘இத்தனை போதும் காணப்பெறாமையாலே இவை என்படுகின்றனவோ!’ என்று
உமிழ்ந்து பார்க்குமவனை; வழிபறிக்கும் நிலத்திற் போவார் சீரிய தனங்களை விழுங்கி பின்னை அமர்ந்த நிலத்திலே புக்கால் புறப்பட விட்டுப் பார்க்குமாறு போலே.‘தயரதன் மகன்’ என்னாதே, தயரதற்கு மகன் தன்னை’ என்கிறது,-ஒருகால் வெற்றிலைச் செருக்கிலே ‘அரசு தந்தேன்’ என்னா, மீண்டு பெண்ணுக்கு வசப்பட்டவனாய், ‘நான் தந்திலேன்; நீ காடு ஏறப் போ,’என்னா, இப்படிச் சொல்லலாம்படி அவனுக்கு இஷ்ட வினியோகத்திற்குத் தக்க புத்திரனாய் இருந்தான் ஆதலின்-

அன்றி மற்று இலேன் தஞ்சமாகவே –இவ்விடத்தைப் பட்டர் அருளிச்செய்யாநிற்க, நஞ்சீயர், ‘இவர் புக்க இடம் எங்கும் இப்படியே சொல்லுவர்; இவர்க்கு இது பணியே அன்றோ?’ என்ன,
ஞானப்பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -என் சிங்க பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே -போலே – ‘இவர் மற்றோரிடத்தில் தலை நீட்டுவது பாவநத்வத்தைப் பற்ற; இவர் தஞ்சமாக நினைத்திருப்பது சக்கரவர்த்தி திருமகனையே,’ என்று அருளிச் செய்தார்.போக்யத்தை பற்ற இவர் இடம் -மற்றவர்கள் -பாவனத்வம் -இவரையே அனுபவிக்க ஆழ்வார் –

ராவண வத சமனந்தரத்திலே முதலிகளிலே சிலரை காணாது ஒழிய தேவதைகளைக் கொண்டு மீட்டும்-ஒரு பாலனுக்கு அகால ம்ருத்யு வர அம்பாலே மீட்டுக் கொடுத்தும் செய்த சக்கரவர்த்தி திருமகனை அன்றி – ததவ் கௌசிக புத்ராய -என்று ராஜ்யத்தை தந்தேன் என்னா அத்தை தவிர்ந்து காடு ஏறப் போம் என்னா ஒரு சம்சாரிக்கு இஷ்ட விநியோக அர்ஹன் ஆனவனை – பவான் நாராயணோ தேவ -என்று ஈஸ்வர அபிமானிகள் தங்கள் வந்து சொன்னால் ஆத்மா நம் மானுஷம் மன்யே என்னுமவன் –

பட்டர் இராமாவதாரத்தில் பக்ஷபாதத்தாலே அருளிச்செய்யுமது கேட்கைக்காக,
சிறியாத்தான், ‘பெருமாளுக்கு எல்லா ஏற்றங்களும் அருளிச்செய்ததேயாகிலும், பாண்டவர்களுக்காகக் கழுத்திலே ஓலை கட்டித் தூது போன கிருஷ்ணனுடைய நீர்மை இல்லையே சக்கரவர்த்தி திருமகனுக்கு? என்ன,
‘அதுவோ! பெருமாள் தூது போகாமை அன்றுகாண்; இக்ஷ்வாகு குலத்தாரைத் தூது போக விடுவார் இல்லாமைகாண்,’ என்று அருளிச் செய்தார்.
‘அவ்வவதாரத்தில் அக்குறை தீருகைக்காக அன்றோ கிருஷ்ணனாக அவதரித்துத் தூது போயிற்று? ‘முன்னோர் தூது வான ரத்தின் வாயில் மொழிந்து அரக்கன், மன்னூர்தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே, பின்னோர் தூது ஆதிமன்னர்க்காகிப் பெருநிலத்தார்,
இன்னார் தூதன் என்ன நின்றான் எவ்வுட் கிடந்தானே,’ என்பது மங்கை மன்னன் மறைமொழி;-பாரதந்திரிய ரசம் அனுபவிக்கைக்காகப் போந்த பின் அதில் ஒன்று குறைந்தது என்று ஏன் இருக்க வேண்டும்?’
‘எம்பெருமானார் திருவாராதனம் பண்ணிப் போருவது வெண்ணெய்க்காடும் பிள்ளையாய் இருக்கும்.-இங்ஙனமிருக்கவும், ஒரு நாள் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் சக்கரவர்த்தி திருமகனை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வந்து கொடுத்தாராய் அவரைப் பார்த்து, இந்த ‘என் ஒருவனையே சரணமாகப் பற்று’ என்று தேவையிடாதார் எழுந்தருளினார்,’ என்றாராம்.

‘இத்தலையில் ஆபிமுக்கியத்திற்கு மேற்பட வேண்டா,’ என்று சொல்லுகிறவை எல்லாம்,
பற்றப்படுகின்ற சர்வேசுவரனுடைய நீர்மையைப் பற்றச் சொல்லுகிறது;-இவனுக்கு வேண்டுவன சொல்லப்புக்கால் ‘மஹாவிஸ்வாச பூர்வகம் – மஹாவிசுவாசம் முன்னாக’ என்ன வேண்டும்படியாய் இருக்கும்.-‘ஒரு சிறாயை நம்பி ஆறுமாதங்கட்கு வேண்டும் சோறும் தண்ணீரும் ஏற்றிக்கொண்டு கடலிலே இழியாநின்றான்;-அதைப் போன்ற நம்பிக்கையாகிலும் வேண்டாவோ பகவத் விஷயத்தைப் பற்றுகிறவர்களுக்கு?’ என்று அருளிச் செய்தார்-

————–

தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு தானுமாய் அவை அல்லனாய்
எஞ்சல் இல் அமரர் குல முதல் மூவர் தம்முளும் ஆதியை
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் அவன் இவன் என்று கூழேன்மின்;
நெஞ்சினால் நினைப்பான் எவன்?அவன் ஆகும் நீள்கடல் வண்ணனே
.–3-6-9-

நீங்கள் விரும்பியபடியே உகந்தருளப் பண்ண,-அத்திருமேனியையே இவ்வுலக சம்பந்தமில்லாத தெய்வத் திருமேனியைப் போன்று விரும்பும் அர்ச்சாவதாரத்தைப் பற்றுமின்,’ என்கிறார்-இத்திருவாய்மொழிக்கு நிதானம் இப்பாசுரம்

இழவுக்குக் கண்ணநீர் பாயவேண்டாத தந்தையாய் இருப்பான்.-தஞ்சமாகி தாய் -தஞ்சமாகிய தந்தை -தஞ்சமாகிய தான் –‘தஞ்சமாகிய தானும்’ என்று ஓதியது என்?’ என்னில், -அந்நாள் நீ தந்த ஆக்கையின்வழி உழல்வேன்-ஆகையாலே, தனக்குத்தான் தஞ்சம் அல்லன்.-

அவன் இவன் என்று கூழேன்மின் –‘அவன் ஆகிறான், தேச கால வஸ்துக்களால் அளவிடமுடியாதவனாய் அசாதாரண விக்கிரஹத்தோடே நித்தியஸூரிகளுக்கு
அனுபவிக்கப்படுகின்றவனாய்க் கொண்டிருக்கிறான் ஒருவன்;
இவன் ஆகிறான், தேச கால வஸ்துக்களாற்பிற்பட்டு, நாம் விரும்பியது ஒரு பொருளைத் தனக்குத் திருமேனியாகக் கொண்டு இவ்வழியாலே நம் புத்திக்கு உரிமைப்பட்டவனாய் இருப்பான் ஒருவன்;
ஆன பின்பு, அவன் அளவிடப்படாதவன்; இவன் அளவிற்கு உட்பட்டவன்,’ என்று இங்ஙனம் சந்தேகம் பொருந்திய மனம் உடையவர் ஆகாதே கொள்ளுங்கோள்.
நெஞ்சினால் நினைப்பான் எவன் – மனத்தினாலே யாதொன்றைத் திருமேனியாகக் கோலினீர்கள்-நீள்கடல் வண்ணன் அவன் ஆகும் – அளவிட முடியாத பெருமையையுடைய சர்வேசுவரன் அதனையே தனக்கு அசாதாரண விக்கிரஹமாகக் கொண்டு விரும்பும்.
‘பிராஹ்மணர்கள் அக்நியில் பார்க்கிறார்கள்; யோகிகள் இருதயத்தில் பார்க்கிறார்கள்; அறிவில்லாதவர்கள் பிம்பங்களிலே; சமமாகப் பார்க்கும் ஞானிகள் எங்கும் பார்க்கிறார்கள்,’ என்று ரிஷிகளைப் போலே தம் வாயாற்சொல்ல மாட்டாமையாலே ‘அவன், இவன்’ என்கிறார்.

‘நெஞ்சினால் நினைப்பான் எவன்? அவனே நீள்கடல் வண்ணன் ஆகும்’ என்று கொண்டு கூட்டி,‘அங்குத்தைக்கு உகந்தருளின இடத்தை விபூதியாக நினையாதே, இங்குத்தைக்கு அவ்விடத்தை விபூதியாக நினையுங்கோள்,’ என்று பணிப்பர் ஆண்டான்.நெஞ்சால் நினைக்கும் அங்குத்தைக்கும் -உகந்து அருளினை நிலம் விபூதி சேஷம் அர்ச்சை என்று நினையாதே-அர்ச்சைக்கு பரவாசுதேவன் சேஷன் என்பர் முதலியாண்டான்
தெளி விசும்பு திரு நாடும் அர்ச்சையிலே சேர்த்தே -108-திவ்ய தேசம்

இவ்வுலக சம்பந்தமில்லாத விக்கிரகத்திலே செலுத்தும் விருப்பத்தை அர்ச்சாவதாரத்தில் செலுத்தமுடியுமோ?’ எனின்,-அசாதாரண விக்கிரகத்தை நாம் ஆதரிக்கிறதும் ‘அவன் விரும்பி மேற்கொண்டது’ என்றுதானே?-அதைப் போன்று, இதுவும் அவன் விரும்பி மேற்கொண்டானாகில், ஆதரிக்கத் தட்டு இல்லையே?-முதல் தன்னிலே அவன் திருமேனியை விரும்பி மேற்கொண்டதும்‘பக்தாநாம் – பத்தர்களுக்காகவே’ என்கிறபடியே, அடியார்களுக்காக அன்றோ?-அது காரியமாய்ப் பயன் தருமிடத்திலே அன்றோ மிகவும் உறைக்க இருப்பது?ஆகையாலே, நீள் கடல் வண்ணன் அவன் ஆகும்.-அர்ச்சாவதார சேதன புத்தியால் மூச்சு விடுவான் உண்பான் அன்றோ –

———–

கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர் கருமாணிக்கம் எனது ஆர்உயிர்
பட அரவின் அணைக் கிடந்தபரஞ்சுடர் பண்டு நூற்றுவர்
அடவரும் படை மங்க ஐவர்கட்கு ஆகி வெஞ்சமத்து அன்று தேர்
கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே?
–3-6-10-

தாம் உபதேசிக்கத் தொடங்கின சௌலப்யத்தை அர்ச்சாவதாரம் முடிவாக அருளிச்செய்து, பின், தன் துறையான கிருஷ்ணாவதாரத்திலே போய், ‘நான் கண்ணாலே கண்டு அனுபவிக்கப் பெறுவது என்றோ!’ என்னும் மனக் குறைவோடே தலைக்கட்டுகிறார். ‘தயரதற்கு மகன்தன்னை அன்றிமற்றிலேன்’ என்றது செய்வது என்?’ என்னில், கிருஷ்ணாவதாரத்தில் நீர்மை காணுமளவுமே இது சொல்லுகிறது. கிருஷ்ணாவதாரத்திற்காட்டிலும் அர்ச்சாவதாரத்துக்குச் சௌலப்யம் மிக்கிருந்ததே யாகிலும், இவர் ‘எத்திறம்!’ என்று ஆழங்காற்பட்டது கிருஷ்ணாவதாரத்திலே ஆயிற்று.

விண்ணவர் கருமாணிக்கம்’ என்றதனால், நித்திய ஸூரிகளுக்கு அனுபவிக்கத் தகுந்த விக்கிரகத்தையுடையவன் என்பதனைத் தெரிவித்தபடி.
‘பட அரவின் அணைக் கிடந்த’ என்றதனால், அங்குநின்றும் பேர்ந்து, பிரமன் முதலியோர் கூக்குரல் கேட்கைக்காகத் திருப்பாற்கடலிலே அணித்தாய் வந்து கண்வளர்ந்தருளுகிறவன் என்பதனைத் தெரிவித்தபடி.
‘கண்ணன்’ என்றதனால், அங்கு நின்றும் பேர்ந்து எல்லார்க்கும் அனுபவிக்கலாம்படி கிருஷ்ணனாய் வந்து அவதரித்தமையைத் தெரிவித்தபடி.

தேர் கடவிய பெருமான் கனை கழல் –‘சேநா தூளியும் உழவுகோலும் சிறுவாய்க் கயிறும் தேருக்குக் கீழே நாற்றின திருவடிகளும் அத்திருவடிகளிலே சார்த்தின சிறுச் சதங்கையுமாய்ச் சாரதி வேஷத்தோடே நின்ற போதைத் திருவடிகளில் ஆபரணத்தின் ஒலி செவிப்படவும் அவ்வடிவைக் காணவும் காணும் ஆசை.

கண்கள் காண்பது என்று கொலோ– இக்கண்கள் அடிப்படுவது –திருவடிப் படுவது -எப்போதோ? இவை முடியப் பட்டினி விட்டே போந்தவை இப்பட்டினி விடக்கடவது என்றோ?
‘அவ்வடிவைக் காண வேண்டும்,’ என்று விடாய்த்த கண்கள் ‘காணப் பெறுவது என்றோ?’ என்றபடி.-இவர் மனஸ் சஹகாரியம் இல்லாமலே கண்கள் காண ஆசைப் படுகின்றனவே –

————-

கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
மண்கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள்செய்யும் வானவர் ஈசனைப்
பண்கொள் சோலை வழுதி வளநாடன் குருகைக்கோன் சடகோபன் சொல்
பண்கொள் ஆயிரத்து இப் பத்தால் பத்தராகக் கூடும் பயிலுமினே
.–3-6-11-

காண ஒண்ணாது’ என்று மறந்து பிழைக்க ஒண்ணாதபடி நெஞ்சுக்கு மிகவும் முன்னிலையாய் காணப்பெறாத இன்னாப்போடே சொல்லுகிறார். இவர்க்குப் பிரிவாவது, புறக்கண்களால் காணவேண்டும் என்னும் நசையாலே மனத்தின் அனுபவத்துக்கு வரும் கலக்கம். கலவியாவது புறக்கண்களால் நேரே காண்டலைப் போன்று உட்கண்ணால் காண்டல்.-நித்தியஸூரிகளுக்கு அனுபவிக்கத் தக்கவன் ஆனாற்போலே, சமுசாரிகள் என்று வாசிவையாமல் அர்ச்சாவதார முகத்தாலே வந்து சுலபன் ஆனவனை.

1- பரத்துவ ஞானத்துக்கு அடியான புண்ணியமாதல், -2-சாஸ்திர ஞானமாதல்,
3- நற்குருவின் உபதேசமாதல், 4-பகவானுடைய நிர்ஹேதுகத் திருவருளாதல் இவையனைத்தும் இல்லாதார்க்கும் அர்ச்சாவதார சௌலப்யத்தை அநுசந்திக்கவே பகவானிடத்தில் பத்தி உண்டாகக் கூடும் என்பார், ‘பத்தராகக் கூடும் பயிலுமின்’ என்கிறார்.
ஒரு பொருளிலும் விருப்பம் இல்லாதவனான சர்வேசுவரன் அடியார்களிடத்து வைத்த வாத்சல்யத்தாலே இவன் உகந்தது ஒன்றைத் திருமேனியாக விரும்பி, ‘இவன் உண்பித்ததை உண்டு, அகங்கள்தோறும் புக்கு விடமாட்டாமல் இருந்தால்,
‘இவன் நம்மை விடமாட்டாதே இருந்த பின்பு நாமும் இவனிடத்தில் அன்பு வைத்தல் ஆகாதோ?’ என்னக் கூடும் அன்றோ?’ என்றபடி.
‘‘பயிலுமின்’ என்றால், பயில்வர்களோ?’ எனின், ‘நிதி இங்கே உண்டு’ என்ன, அவ்விடத்தைத் தோண்டுவார்களே அன்றோ? அப்படியே, ‘பத்தி உண்டாம்’ என்ன, கற்பார்கள் என்று அருளிச்செய்கிறார்.-கல்லுவார்கள் -தோண்டுவார்கள் கற்பார்கள் அப்யசிப்பார்கள்-

என் ஆத்மாவை முற்றும் உண்ணுவதற்காக–எனக்கு உன்னுடைய எல்லை இல்லாத இனிமையைக் காட்டி-என்னை அடிமைப் படுத்தினாய் –-என் விடாய் தீரக் கலந்தாய் -என்று இருந்தேன்-உன் விடாய் தீரவாய் இருந்ததே அன்றோ -என்றது-உனக்காக அன்றோ உன்னைக் காட்டிற்று -என்றபடி-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -73 -வால் வெண் நிலவு உலகு ஆரச் சுரக்கும்-வேய் மரு தோள் இணை-10-3 –

March 8, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

அழகிய உருவகம் கொண்ட பாசுரம் -துறையடைவு-தலைவி இளம் பிறை கண்டு தளர்தலைக் கண்டு தோழி இரங்கல் –இரவைக் கண்டு ஆற்றாமல் தலைவி தளர தோழி இரங்கி பேசும் பாசுரம்
ரக்ஷகத்தின் -சால்பின் தகைமை கொலாம் -நன்றாக இருக்கிறதே – ஆகாசத்தில் சஞ்சரிக்கும் வெண் திங்கள் என்னும் தேவப் பசு சுரபி பாலாகப் பொழிய – சந்திரன் கிரணங்கள் -நிலவைச் சுரக்க -அமுதம் போன்ற கலைகள்-வால் வெண் -மிகவும் வெளுத்த நிலாவாகிற பாலை-உலகம் என்னும் பாத்திரம் நிறையும் படி பொழிகின்றன-அம்ருத கலைகளைப் பெற்று நாம் ஆனந்தம் படுவது போல் -தேவப்பசு பாலைச் சுரந்து – காணாத ஒன்றுக்கு காணும் சந்திரன் த்ருஷ்டாந்தம் –-உலகம் எல்லாம் மகிழ இவள் மட்டும் தளர்ந்து இதுக்கு நேராக எதிர் கோஷ்ட்டி பரிதி வட்டம் -ஸூரியன் -போலும் ஆழி -ஆயிரம் ஸூர்யன் போல் -இதுவும் வட்டம் அதே போல் – பற்றிய பிரான் -உபகாரகன் -ரக்ஷகத்வ ஸ்வபாவம் இதுவோ – தர்மமே உரு எடுத்த இவளை ரக்ஷிக்காமல் இது என்ன தர்ம ஹானி -திருத்தாயார் -தோழி பாசுரம்-வேய் மரு தோள் இணை -10 -3 -இதன் விவரணம் -காலைப் பூசல் – ஒரே படுக்கையிலே இருக்க -பசு மேய்க்கப் போந்தானாகவே -தோள் மெலிய அவனுக்கு இவளை விட ப்ராவண்யம் மிக்கு –-இவள் தோள் மெலிவைக் கண்டு போந்தானாகவே அவனும் நினைத்து –-எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல் -இந்தப்பாசுரத்திலும் பசு சுரக்கும் பால் – வர்ணாஸ்ரமம் தாய் சொல்படி -அதுவும் காரணம் இல்லை-உன் தன் திரு உள்ளம் இடர் தோறும் -பெண்மை ஆற்றோம் -அவர்களைக் கூட்டி என் முன்னே –
களை அற்ற கைங்கர்யம் –செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு -ஸூவ போக்த்ருத்வம் ஒழிக்க வேண்டுமே –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடுஅவதாரிகை –நிலவு போய் முடிய நின்று பாதகமாய் —போய் என்றது மிகுதியாய் –-அத்தாலே இவளும் நோவு பட்டு -மோஹித்து கிடக்க – இத்தைக் கண்ட திருத் தாயார் -தர்ம ஹானி கிடீர் -என்று கூப்பிடுகிறாள் – பிறை யுடை மாலைக்கு ஆற்றாத தலைவியின் தளர்ச்சிக்குப் பாங்கி இரங்கல்-

இப்படி விஷய வைலக்ஷண்ய ஞானம் மிகவும் நடக்க அனுபவ யோக்ய காலத்தில் போக ஸித்தி இல்லாமையாலே பிறந்த தளர்த்தியைக் கண்ட ஸூஹ்ருத்துக்கள் நொந்து உரைத்த பாசுரத்தை நிலவு விஞ்சும்படியான மாலைக்கு ஆற்றாத் தலைவி தளர்த்தி கண்டு இரங்கின பாங்கி வார்த்தையாலே
அருளிச் செய்கிறார் –(இருள் -அனுபவம் பெறாமல் நலிய அதுக்கும் மேல் ஸ்வரூப ஞானம் -நிலவு போல் -அறிவு பெற்றாலும் -பக்தி முத்த -அனுபவம் பெறாமல் – இப்படி வைலக்ஷண்யம் அறிந்தாலும் -இழந்து தவிக்கிறோம் -என்று மேலும் துன்பம் பட்டத்தைக் கீழே பார்த்தோம் )

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-அவதாரிகை-ரக்ஷகத்வ ஸ்வபாவமாமதோ இதோ வெண் திங்களாகிற ஸூரபி பால் வெண் நிலாவாகிற முதிர்ந்த பாலை எங்கும் சுரக்கப் பண்ணுகையாலும் இந்த முதிர்ந்த மாலையாலும் தனியாட்டி தளர்ந்ததுவே தம் பொழில் ஏழையும் ரக்ஷகத்வ ஸ்வ பாவமாய் என்னை நலியா நின்றான் என்று தளருகிற தலைவி பாசுரத்தால் அருளிச் செய்கிறார் இதில்

வால் வெண்ணிலா வுலகாரச் சுரக்கும் வெண் திங்கள் என்னும்
பால் விண் சுரவி சுர முதிர்மாலை பரிதி வட்டம்
போலும் சுடர் ஆழிப் பிரான் பொழில் ஏழும் அளிக்கும்
சால்பின் தகைமை கொலாம் தமியாட்டி தளர்ந்ததுவே
– 73-தலைவி இளம் பிறை கண்டு தளர்தலைக் கண்டு தோழி இரங்கல் –

விண்–ஆகாயத்தில் நின்று
வால் வெள் நிலவு–மிகவும் வெளுத்த நிலாவாகிய
பால்-பாலை
உலகு ஆர சுரக்கும்–உலகமெங்கம் நிறையும்படி சுரந்து சொரிகிற
வெண் திங்கள் என்னும் வெளுத்த சந்திரனாகிய
சுரவி–பசுவினது
சுர–சுரம்பு
முதிர்–மிகப்பெற்ற
மாலை–மாலைப்பொழுதிலே
தமியாட்டி தளர்ந்தது–(நாயகன் வாராமையாலே) தனிமையையுடைய இவள் தளர்ச்சியை யடைந்த தன்மை
பரிதிவட்டம் போலும்–இத் திங்களொளியை விழுங்க வல்ல ஸூர்யமண்டலம் போலும் ஒளியையுடைய
அடல் அழி–வலிய சக்கராயுதமுடைய
பிரான்–அத்தலைவன்
ஏழ்பொழில்–ஏழுவகைப்பட்ட லோகங்களையும்
அளிக்கும் சால்பின் தமைகை கொல் ஆம்–ரக்ஷிக்கிற அமைவின் பெருமையா?

வால் வெண் நிலா -இத்யாதி –இவள் நலிவைக் கண்டு -அவன் ரஷகத்வத்திலேயும் அதி சங்கை பண்ணுகிறாள் –வலியதாய் –வெளுத்த நிறத்தை உடையதாய் –நிலவாகிற பாலை -(அம்ருத கலையைச் சொன்ன வாறு ) லோகமடைய நிரம்பும்படி -சுரக்கிற வெளுத்த நிறத்தை உடைய சந்தரன் ஆகிற ஆகாசத்தில் உண்டான ஸூரபி யானது – சுரக்கிற சுரப்பு போய் –முதிர்ந்த ராத்திரி -வெண் -திங்கள் என்னும் வெண் சுரவியானது வால் வெண் நிலா வாகிற பாலை உலகாகிற தாழி நிறையும் படி சுரக்கிற சுரப்பு முதிர்ந்த மாலையிலே –விண் சுரவி –இப் பிரளயம் தன் பக்கல் தட்டாதபடி உயரத்திலே நிற்கை –(விரஹ தாபம் பிரளயம் – வெக்காயம் சந்திரனையும் ஸூரபியையும் பாதிக்காதே )-பரிதி வட்டம் இத்யாதி –இந்நிலவுக்கு பகை உண்டு கிடீர் இங்கே -என்கிறாள் –ஆதித்ய மண்டலம் போல் இருக்கிற சுடரை உடைத்தாய் – எப்போதும் உத்தோன்முகமாய் –ஆஸ்ரித விரோதிகளைப் போக்கும் திரு ஆழியை கையிலே உடைய மகோ உபகாரகன் –பொழில் ஏழும் அளிக்கும் சால்பின் தகைமை கொலாம்-
பூமி அடைய ரஷித்து போருகிறவனுடைய ரஷகத்வ ஸ்வ பாவமோ   இது –பொழில் ஏழையும் அளிக்கிற சால்புண்டு -மகா புருஷத்வ மரியாதை –அதின் ஸ்வ பாவம் இருந்த படியோ -இது –அவன் ரஷகனாக –
அவன் கை பார்த்து இருப்பார்க்கு அழகிதாக ஜீவிக்கலாய் இருந்தது –பிரளய ஆபத்து வந்தாலும் அவன் உளன் என்று அழகிதாக விஸ்வசிக்கலாய் இருந்தது –கையும் திரு ஆழியுமாய் இருந்து -ரஷித்து போந்தபடி இதுவோ –முன்பு பண்ணிப் போந்த ரஷகத்வத்துக்கு நமஸ்காரம் –தமியாட்டி தளர்ந்ததுவே –
அசாதாரண பரிகரம் படுகிறபடி கண்டால் –விபூதி மாத்ரமாய் -ரஷ்ய கோடியிலே அந்வயித்து இருப்பார்க்கு அழகிதாக ஜீவிக்கலாய் இருந்தது –(தனி -நிகர் அற்ற -ஒருத்தி என்றுமாம்-கருதும் இடம் பொருதும்-சக்கரமே பிரிய வேண்டி இருக்க ரக்ஷிக்கும் கோஷ்ட்டியில் உள்ள அவன் பாடும் இதுவேயாய் இருக்க நமக்கு இப்படி இருக்கச் சொல்ல வேண்டுமோ )தமியாட்டி என்கிறாள் இறே –-தாயாரான தானும் கூட இருக்கச் செய்தே-அவள் கருத்தை அநுவர்த்தித்து -அவனை ஒழிந்தார் அடங்கலும் கழுத்துக் கட்டி அவன் ஒருவனுமே துணை என்று இறே இவள் இருப்பது –அந்திம சமயத்தில் யம படர் சூழ நின்றார்கள் என்னா அவர்கள் துணை ஆகார்கள் இறே –க்ரம ப்ராப்தி அமையும் என்று ஹிதம்-சொல்லுவார் பாதகராம் இத்தனை இறே –(பேற்றுக்குத் த்வரை -அவன் வை லக்ஷண்யம் பார்த்து இருக்கும் இவளுக்கு பேறு தப்பாது என்று துணிந்து இருக்கச் சொல்வதும் பாதகம் தான் அன்றோ
நல்கித் தான் காத்து அளிக்கும் –நல்கத்தான் ஆகாதோ வினையேற்கே நாரணனைக் கண்டக்கால் -பேறு தகுமோ )வால் வெண்ணிலவு  வுலகார்ச் சுரக்கும் வெண் திங்கள் என்னும் பால் விண் சுரவி
சுர முதிர் மாலையிலே -தமியாட்டி தளர்ந்தது – பரிதி வட்டம் போலும் சுடர் அடல் ஆழிப் பிரான்- பொழில் ஏழு  அளிக்கும் சால்பின் தகைமை கொலாம் –

நிலாவின் இடத்து பாலின் தன்மையையும் -அதை வெளியிடும் அம்ருத கிரணான சந்திரன் இடத்து பால் சுரக்கும் பசுவின் தன்மையையும் ஏறிட்டுச் சொல்வது ரூபக அலங்காரம்-அரும் தவன் சுரபியே ஆதி வானமா விரிந்த பேருதயமே மடி வெண் திங்களா -வருந்தலின் முலை கதிர் வழங்கு
தாரையாய்ச் சொரிந்த பால் ஒத்தது நிலவின் தோற்றமே -கம்பர் –விண் சுரவி சுர-தெய்வப்பசு சுரப்பி –
உரிய காலத்திலே பேறு கை புகாமையாலே ஞான விளக்கமும் பாதகமாக ஆழ்வார் தளர்ச்சியைக் கண்ட பாகவதர்கள் நொந்து அருளிச் செய்யும் பாசுரம் – பிரான் பொழில் ஏழும் அளிக்கும்-
சால்பின் தகைமை கொலாம் தமியாட்டி தளர்ந்ததுவே-ஸ்வாபாவிகமான சர்வ ரக்ஷகத்வமும் இவர் பால் கிடையாது ஒழிவதே–  -பாட பேதம் –பிறைபடை மாலைக்கு ஆற்றாத தலைவியின் தளர்ச்சி கண்டு தோழி இரங்கிக் கூறும் பாசுரம் இது.-மாலைப்பொழுதுக்கும் இளம்பிறைக்கும் வருந்தும்படி இவளைத் தனியே விட்டிருத்தல் உலக முழுவதும் ரக்ஷிக்கும் அவனுடைய பெருந்தன்மைக்குச் சிறிதும் ஏழாது என்கிறாளாயிற்று.-ஆகாசத்தில் நின்றும் மிகுந்த வெளுத்த நிலாவாகிய பாலை உலகமெங்கும் நிறையச் சுரந்து சொரிகிற சந்திரனாகிய காமதேநுவின் சுரப்பு அதிகரித்திருக்கின மாலைப் பொழுதிலே இத் தலைவி தனிமைப்பட்டுத் தளர்ந்திருப்பதானது-ஆழியங் கையவன் அனைத்துலகங்களுயும் காத்தருளுந் திறத்துக்குப் பொருந்துமோ? (பொருந்தாது) என்றவாறு.
நிலாவினிடத்துப் பாலின் தன்மையையும்,அதனை வெளியிடுகிற அம்ருத கிணனான சந்திரனிடத்துப் பால்சுரங்கும் பசுவின் தன்மையையும் ஏற்றிக்கூறினது ரூபகாலங்காரம். (கம்பராமாயணம் சுந்தரகாண்டம் – ஊர் தேடு படலம் 56.) “அருந்தவன் சுரபியே ஆதிவானமா,விரிந்த பேருதயமே மடிவெண்டிங்களா, வருத்தலின் முலைக்கதிர் வழங்கு தாரையாச், சொரிந்த பாலொத்தது நிலவின் தோற்றமே” என இவ்வர்ணனைப் பிறவிடத்துஞ் சிறிது வேறுபடக் கூறப்பட்டிருக்குமாறு காண்க.
உலகு ஆர்ச்சுருக்கும்- உலகமாகிய தாழி நிறையும்படி சுரக்குமென்க. விண்சுரவி- தெய்வப்பசு, ஸுரபி: என்னும் வடசொல் சுரவியெனத் திரிந்தது.-சுர- சுரப்பு; முதனிலைத் தொழிற்பெயர். பரிதி- வடசொல் (பொழிலேழனிக்கும்) பொழில்- உலகம்.-இனி, பொழில்- சோலையுமாம்; உலகங்களை எம்பெருமானுடைய சிங்காரப் பூந்தோட்டமென்ப; “பிரான் பெய்த காவுகண்டீர் பெருந்தேவுடை மூவுலகே” 6-3.5) என்பர் திருவாய்மொழியிலும்,

இப்பாட்டுக்கு ஸ்லாபதேசப் பொருளாவது: உரிய காலத்தில் பேறு கைபுகாமையாலே ஞானவிளக்கமும் பாதகமாக ஆழ்வார் அடைந்த தளர்ச்சியைக் கண்ட அன்பர்கள் நொந்து உரைத்த வார்த்தையாம்.
(பிரான பொழிவேழளிக்குஞ் சால்பின் தகைமை கொலாம் தமிபாட்டி தளர்ந்ததுவே)
எம்பெருமானுக்கு இயல்பான ஸ்வாக்ஷகத்வமும், இவ்வாழ்வார் திறத்தில் நிகழா கொழிவதே! என்று சங்கித்தபடி. ‘சால்வின்’ என்றும் பாடமுண்டாம். வால் வெள்- ஒருபொருள் பன்மொழி.
–“நிலவுகார” என்றவிடத்து, ‘நிலவு’ என்னாமல் ‘நீல’ என்றும் பிரிக்கலாம்;-“குறிய தன் கீழ் ஆக்குறுதலுமதனோடு, உகர மேற்றலுமியல்புமாந் தூக்கின்” என்ற நன்னூல் அறிக.

வால் வெண்ணிலா வுலகாரச் சுரக்கும் வெண் திங்கள் என்னும் பால் விண் சுரவி சுர முதிர்மாலை
மிகவும் வெளுத்த நிலவை லோகம் நிறைய சுரவா நிற்பதாய் வெள்ளைத் திங்கள் என்று சொல்லப்படுவதான விண்ணில் பால் பசுவினுடைய சுரப்பு முதிரா நிற்கிற மாலையிலே-பரிதி வட்டம் போலும் சுடர் ஆழிப் பிரான்-இத் திங்கள் ஒளியை விழுங்குவதான ஆதித்ய மண்டலம் போலே ஒளியை உடைத்தாய் ஆஸ்ரித விரோதி நிரசன ஸீலமாய் யுத்த காலத்தில் பரிகரமாக திருவாழியை யுடையனாய்த் தன்னைப் பற்றினார்க்கு உபகாரகனானவன்–பொழில் ஏழும் அளிக்கும் சால்பின் தகைமை கொலாம்-லோகம் ஏழையும் ரக்ஷிக்கிற அமைவு யுடைமையின் பெருமையாகக் கூடும் இறே-தமியாட்டி தளர்ந்ததுவே-தாம் வாராமையாலே தனிமையை உடையளான இவள் தளர்ந்தது என்று நொந்து உரைத்தாள் யாயிற்று–இத்தால்-அனுபவ யோக்ய காலத்திலே அநுபாவ்ய விஷய வைலக்ஷண்யம் அடியாக ஞான பிரகாசம் அதிசயித்து நடக்க அனுபவ ப்ரதாநம் பண்ணாமையாலே
ஸ்வாபாவிகமான ரக்ஷகத்வமும் அகிஞ்சித் கரமாம் படி இருந்ததீ என்று ஸூஹ்ருத்துக்கள் சங்கித்து உரைத்தாராயிற்று

வால் வெண்ணிலா வுலகாரச் சுரக்கும் வெண் திங்கள் என்னும் பால் விண் சுரவி சுர முதிர்மாலை
வெண் திங்கள் என்னும் விண் சுரபி உலகார வாழ் வெண்ணிலவு என்ற முதிர்ந்த பால் சுரக்கும் முதிர் மாலை என்று அந்வயம்

முதிர்ந்த மாலையில் வெளுத்த சந்த்ரனாகிற ஆகாசத்தில் உள்ள ஸூரபியானது லோகங்கள் எல்லாம் நிறையும்படி வான் -மிகவும் வெளுத்த நிலாவாகிற முதிர்ந்த பாலை சுரக்குமாயிற்று முதிர்ந்த மாலை பால் சுரக்கும் காலமாகையாலே அற முதிர் மாலை யாயிற்று-பரிதி வட்டம் போலும் சுடர் ஆழிப் பிரான் பொழில் ஏழும் அளிக்கும் சால்பின் தகைமை கொலாம்-பரிதி வட்டம் -ஆதித்ய மண்டலம்-தேஜஸ்ஸில் அத்தைப் போன்றதாய் யுத்தத்தில் அசூரரைத் தொடருமதான திருவாழியால் அவர்களை நிரசித்தும்
கையும் திருவாழியுமான அழகை நமக்கு காட்டியும் உபகரிக்கிறவனுடைய விஹாரணா ராமமான ஸப்த லோகங்களுக்கும் ரக்ஷகனானவனுடைய சால்பு ரக்ஷண சாமர்த்தியம் அதின் தகைமை -அதனுடைய விஜ்ரும்பணம்–கொலோ–ஆமதோ–தமியாட்டி தளர்ந்ததுவே-தம்மால் தனிப்பட்டவள் அத்யாவசந்நை யாமதுவே ஜகத் ரக்ஷண விஜ்ரும்பணம் ஆமதோ –

ஸ்வாபதேசம் இத்தால் இவருடைய தசா விபாகத்தை கண்டார்க்கு அவனுடைய ரஷகத்வத்தையும் அதி சங்கை பண்ண வேண்டும்படியான  நிலையை சொல்லுகிறது-தமியாட்டி -தமி -தனியாய் -அத்வதீயை —தனி -யாய் ஒருத்தி என்னுதல்-இப் பிரளயம் -இவளுடைய விரகம்-

தாத்பர்யம் –இதில் பூர்ண சந்த்ரனைக் கண்டு நலியும் தலை மகளைக் கண்டு தாயார் நாயகனான சர்வேஸ்வரனை வெறுத்து ஷோடச கலா பரிபூர்ண சந்த்ரன் ஆகாசத்தில் மத்யம் வந்து அமுத கிரணங்களை உலகு எங்கும் வியாபிக்கச் செய்து அதி ரம்யமான இரவில் நாயகனான சர்வேஸ்வரன் வந்து உதவாமல் துன்புறுத்த அவனும் திருக்கையில் ரஷ்ய பரிகரமான வட்ட வடிவமான ஒளிப் பிழம்பு போன்ற திருச் சக்ரமும் ஏந்திக்கொண்டு உலக எழும் ரசிப்பவன் என்று விருதூதிக் கொண்டு இவளை உபேக்ஷிப்பது தகுந்ததாய் இராதே -என்கிறாள் –

10-3-வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ-ப்ரவேஸம்-

திரு வனந்த புரத்திலே புக்குப் பாரித்த படியே அடிமை செய்யப் பெறாமையாலே -அதி சங்கை ––ஐயப்பட வேண்டும்படியாய் வந்து விழுந்தது –
ஸ்ரீ வைஷ்ணவர்களும் தாமுமாய் அடிமை செய்ய வேண்டும் என்று பாரித்தார் –
பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும்-காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும் -என்னுமவர் ஆகையாலே –
பாரித்த படியே அந்நகரிலே போய் புக்கு அடிமை செய்யப் பெற்றிலர் –
1-அந்நகரிலே அப்போதே சென்று சேரப் பெறாமையாலும்–
2-பாரித்த படி அடிமை செய்யப் பெறாமையாலும்-
-பல காலம் பிரிந்து போன வாசனையாலும் -திருவிருத்தம் -95-
3-தொன்று தொட்டு வருகின்ற சரீரத்தின் சேர்க்கையை நினைந்து அஞ்சின அச்சத்தாலும்-
4-சர்வேஸ்வரனுடைய ஸ்வாதந்த்ர்யத்தை நினைந்து அஞ்சின படியாலும் -அதாவது –
சிசுபாலனுக்கு தன்னைக் கொடுத்தும்-ஸ்ரீ பரத ஆழ்வான் வளைப்பு கிடக்க மறுத்து மீண்டு போரும்படியும் அன்றோ-ஸ்வா தந்த்ர்யம் இருப்பது -அதனாலும்
5-இனி–சர்வேஸ்வரன் தானே வந்து அங்கீ கரிக்கைக்கு ஈடான பக்தி தமக்கு இல்லை என்று இருக்கையாலும்
இன்னம் இவ் உலகில் வைக்கில் செய்வது என் -என்னும்-அச்சத்தாலே துன்புற்றவராய்
-தமக்குப் பிறந்த நிலை வேறுபாட்டினை-ஒரு பிராட்டி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்-

காலைப் பூசல் –கீழும் மேலும் இரண்டு திருவாய் மொழிகளில் பர உபதேசம் –

அச்சம் நீங்குதற்கு உடலான இவை தாமே அன்றோ இப்போது-இவர்க்கு அச்சத்துக்கு காரணங்கள் ஆகின்றன –
1-இப்போதே அந்நகரிலே சென்று சேரப் பெற்றிலோம் -என்று இருக்க வேண்டா –
அவனை நினைந்தால் காலாழும் நெஞ்சழியும் -பெரிய திருவந்தாதி -34-என்கிறபடியே
பத்தியினால் பரவசப் பட்ட காரணத்தால் இப்போது அடி இட மாட்டாதே ஒழிகிறார் ஆகையாலே-
2-அடிமை செய்யப் பெற்றிலோம் என்று அஞ்ச வேண்டா –
புகழும் நல் ஒருவன்-என்கிற திருவாய் மொழியின் படியே
இருந்த இடத்தே இருந்து ஏதேனுமாக சொன்னவற்றையே-தனக்கு அடிமையாகக் கொள்ளும் தன்மையன் ஆகையாலே
இன்று நினைத்தவற்றையும் செய்தவற்றையும் எல்லாம் தனக்கு அடிமையாக-நினைத்து இருக்குமவன் அன்றோ அவன் –
3-இனித் தமப்பன் பகையாக அவனிலும் இவன் அண்ணியன்-என்று வர நின்ற பிரகலாதன் அன்றோ-முடிவில் வந்து எதிர் இட்டான்-
ஆக-மயக்கம் கொண்டவனுக்கு பிறந்த தெளிவு போலே-இச் சரீரத்தோடு சேர்ந்து இருக்கிறவனுக்கு பிறக்கும் ஞானத்தினை நம்ப ஒண்ணாது என்றே அன்றோ
இவர் தாம் இச் சரீர சம்பந்தத்தை நினைந்து-தேறேல் என்னை -2-9-10-என்று அஞ்சிற்றும் –அங்கண் அஞ்ச வேண்டா –
முடியானே -என்ற திருவாய் மொழியிலே கூறப் பட்ட உறுப்புகளை உடையவர் ஆகையாலே-
4-அவனுடைய ஸ்வா தந்த்ர்யத்தை நினைத்து அஞ்ச வேண்டா–சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மாசுச -ஸ்ரீ கீதை -18-66-எல்லா பாபங்களில் நின்றும்
உன்னை விடுவிக்கிறேன்-நீ துக்கப் படாதே -என்கிறபடியே –பாபங்களைத் துண்டித்துக் கொண்டு போகைக்கும் உடலாய் இருக்கையாலே ..
5-பக்தி தமக்கு இல்லை என்று இருக்க வேண்டா -பிரபத்தியை உபாயமாக பற்றினவர் ஆகையாலே –
நாராயணாயா – ஏக நிஷ்டை யில் இருந்தால் எத்தை செய்தாலும் கைங்கர்யம் -யோ யோ ஜல்ப -ஜபம் -தது தியானம் —
பிரகலாதன் போலே இவருடைய கரணங்கள் பிராகிருத போகங்களில் இல்லையே –
நெடு நாள் பிரிந்து -போன வாசனை-முடியானே கரணங்கள் உடையவர் -பிரகிருதி சம்பந்தம் நினைத்து அஞ்ச வேண்டாம் என்பதை
அத்தால் வந்த பிரிவையும் கண்டு அஞ்ச வேண்டாம் என்றபடியும் ஆகுமே –

இனி –ச உத்தம புருஷ சதத்ரபர்யேதி ஜஷத் கிரீடன் ராமமான-
ஸ்த்ரீபிர்வா யானைர்வா ஜ்ஞாதிபிர்வா நோபஜனம் ஸ்மரன் இதம் சரீரம் -சாந்தோக்யம் -8-12-3-என்கிறபடியே
இதனை நினையாதபடியான சாஷாத் காரம் இல்லாமல் படுத்துகிற பாடே அன்றோ இது –
நேரே கண்கூடாக காண்கிற காட்சியும் பயன் இல்லாததாய்-கூட இருக்கச் செய்தே பிரிந்தான் -என்று மயங்கும்படி
பிரிவால் வந்த வாசனை மேற்கொள்ளுகிறது அன்றோ-தகுதி கிடந்து படுத்துகிற பாடே அன்றோ-

கெடும் இடரில் பிரத்யக்ஷ சாமானாகாரம் கிட்டிற்றே -வைகுந்தம் கிட்டினால் போலே -என்றாரே -எதற்காக துன்பப் பட வேண்டும்
பிரத்யக்ஷமும் அகிஞ்சித் கரமாய் கூட இருக்கச் செய்தே பிரிந்தான் என்று அதி சங்கை
பிரிந்தான் என்று இவள் உடம்பு மெலிய -அத்தைக் கண்டு அவனும் பிரிந்தோமோ என்று அவனும் நினைக்கும் படி
-இப்படி இருவரும் ஊமத்தங்காய் தின்றால் போலே மயங்கி
கலப்பார் பிரிவார் என்கிற வாசனை மேலிட –யோக்யதை கிடந்து படுத்தும் பாடு இது -சரீரம் இருப்பதால் -விஸ்லேஷ ஹேது அன்றோ சரீரம் –
அதி சங்கை பிராந்தி கார்யம் இல்லை -மயர்வற மதி நலம் அருளப் பெற்றதால் —

மயர்வற மதிநலம் அருளினன் – என்கிறபடியே-பகவானுடைய திருவருளால் கிடைத்ததாய்-
பரபக்தி ரூபமாய்-ருசி கார்யமாய்-இருக்கிற இருட்சி இருக்கிறபடி அன்றோ இது –
இனி ஈஸ்வரனுக்கு கால் நடையாடாதது ஒரு தேசத்தில்-இவரை வைத்து அதனைப் போக்கலாம் அத்தனை –
கலந்து பல நாள் பிரிந்து போந்தாள் ஒரு பிராட்டியாய்-அவ் வாசனையாலே
கிருஷ்ணன் கூடி இருக்கச் செய்தேயும் -நீ கண்ணா -என்கிறாள் இங்கே –
இவன் பண்டு பிரிந்து போந்த விடியில் காலமும் வந்து அக்காலத்துக்கு அடைத்த காற்றுக்கள் அடிக்கையாலும் -வாடை தூவ –
குயில்கள் கூவுகையாலும்-மயில்கள் ஆலிக்கையாலும்-காடு எங்கும் ஒக்க கன்றுகளும் பசுக்களும் பரக்கையாலும்-இக்காலத்தில் அவன் போகை தவிரான்
பசுக்களை ஒரு தலையாக காப்பாற்றுமவன் ஆகையாலே அவற்றை விட்டு நம்மோடு இருப்பான் ஒருவன் அல்லன் –
ஆனபின்பு அவன் போனான் -என்று-கூட இருக்கச் செய்தேயும் அவன் பிரிவினை நிச்சயித்து-
இன்னுயிர் சேவல்-மல்லிகை கமழ் தென்றல்-தொடக்கமான திருவாய் மொழிகளில்
அவன் முன்னம் இல்லாமையால் பட்ட துக்கம் முழுதினையும் அவன் கண் முகப்பே படுகிறாள்-
எல்லா வற்றையும் செய்து முடிக்கும் ஆற்றல் வாய்ந்த-அவனாலும் போக்க ஒண்ணாதபடி ஆயிற்று இவ் வாபத்து-
அதாவது-போனானாய் வருகிறவன் அல்லன்-போக நினைத்தானாய் தவிருகிறவன் -அல்லனே -என்றபடி –

இப்படி நோவு பட்டு-நீ பசு மேய்க்கப் போதலை நிச்சயமாக தவிராய்-
நீ போதல் எனக்கு விருப்பம் இல்லாத கார்யம் ஆகையாலே உன் செலவினை விலக்க வேண்டும் என்று நினையா நின்றேன்-
இதற்கு நா நீர் வருகிறது இல்லை
அதற்கு மாற்றாக-உன் கையை என் தலையிலே வைக்க வேண்டும் –அணி மிகு தாமரைக் கையை –
நீபசு மேய்க்கப் போகாது ஒழிய வேண்டும்-வீவ நின் பசு நிரைமேய்க்கப் போக்கு –
தீங்கினை விளைக்கக் கூடிய காட்டில் நீ பசு மேய்க்கப் போனால் அங்குள்ள-அசுரர் இராக்கதர்கள் முதலியோர்களால் என் வருகிறதோ –
அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் –என்று அஞ்சா நின்றேன் –என்கிறாள் –
அஞ்சன வண்ணனை -பெரியாழ்வார் திருமொழி –என் செய்யப் பிள்ளையை போக்கினேன் ஏ பாவமே -தாயார் பாசுரம் –
இனி-மாதா பிதா ப்ராதா நிவாஸ சரணம் சூக்ருத் கதி நாராயணா -சுபால உபநிஷத் -என்கிறபடியே
அவன் எல்லா வகையான உறவுமாய் இருப்பதைப்போன்று –
இத்தலைக்கும் சம்பந்த ஞானம் பிறந்தால் எல்லா பிரிவுகளும் உளவாய் இருக்கும் அன்றோ –அதனால் இவளும் தாய் போலே படுகிறாள் என்றவாறு –
யதா யதா ஹி கௌசல்யா தாசிவச்ச சகீவச-பார்யாவத் பைநீவச்ச மர்த்ருவச்ச உபநிஷ்டதே -அயோத்யா -18-68-
ஸ்ரீ கௌசல்யார் சகரவர்த்திக்கு-வேலைக்காரி தோழி மனைவி உடன் பிறந்தவள் தாய் ஆகிய இவர்களைப் போன்று இருந்தாரே -என்கிறபடியே –
ஆனபின்பு–நீ செல்லில் நான் உளளாக மாட்டேன் -என்று-இப்படி நோவுபட-அவனும் இவை முழுதினையும் நினைந்து -நான் போகிறேன் அல்லேன் -என்று
தன் போகாமையை இவள் நெஞ்சிலே படுத்தி தரிப்பிக்க-தரிப்பததாய் -செங்கனிவாய் எங்கள் ஆயர் தேவு –தலைக் கட்டுகிறது -இத் திருவாய் மொழியில்-

இதனால்
திரு மந்த்ரத்தில் கூறிய அடிமைத் தன்மையின் எல்லை இருக்கிறபடியைத் தெரிவித்தபடி-
உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் -அவனுக்கே உறுப்பாக பயன் கொடுக்கை -தானே அடிமைத் தனத்தின் எல்லை-
எம்மா வீடு -திருவாய் மொழியில்-தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -என்று அறுதி இட்டது ஓன்று உண்டே அன்றோ –
அதனை அழிக்கிறதாயிற்று இங்கு –என்னைக் கொள்ள வேண்டும் என்றே அன்றோ அங்குச் சொல்லிற்று-
என்னோடு கலக்கவுமாம்-வேறு சிலரோடு கலக்கவுமாம் –அங்குத்தைக்கு குறை தீரும் அத்தனை வேண்டுவது என்கிறது இங்கு-
அங்கு -எனக்கு என்ற இடம் புருஷார்த்தம் ஆகைக்கு சொன்ன இத்தனை அன்றோ –
உனக்கே நான் ஆட் செய்வோம்-அது அறிவில்லா பொருளின் வேறுபாட்டுக்கு உடலாம் இத்தனை-
இவன் தான் எனக்கு என்னாத அன்று புருஷார்த்தம் ஆகாது-அவன் தான் விரும்பி கார்யத்தை செய்யவும் தொடங்கான்-
உனக்கு நல்லவரோடும் உழி தந்து -உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும் எம் பெண்மை யாற்றோம் –
தாதார்த்தம் -அத்தலைக்கே உறுப்பாக -தாதர்த்த சதுர்த்தி லுப்த சதுர்த்தி -பகவான் பிரயோஜனம் பிரதானம் -எம்மா வீட்டிலும் இதுக்கு ஆதிக்யம் –

மூன்றாம் திருவாய் மொழியில் -கீழே -திருவனந்த புரத்திலே அடிமை செய்யப் பாரித்தவர்
அவிம்பலேன -கிட்டப் பெறாமையாலே -அவனுடைய
போக்யத்தையும்
ப்ராப்ய பாவமும்
அடிமை கொள்ளப் பாரித்து இருக்கிற படியும்
புத்திஸ்த்தமாம் படி ஹ்ருதய ஸந்நிஹிதனாய் இருக்கச் செய்தேயும்
சீக்ர ப்ராப்தியில் இச்சையால் த்வரிக்கும் படியான ஸுபாக்ய அதிசயத்தை யுடையானாகையாலே -அவனுடைய
புண்டரீகாக்ஷத்வத்தையும்
அர்ஜனீய சம்ச்லேஷத்வத்தையும்
அசகாய ஸ்வ பாவத்தையும்
ரமணீய ஸுலப்யத்வத்தையும்
ஆகர்ஷக திவ்ய அவயவத்தையும்
அசாதாரண நாயகத்வத்தையும்
ஆச்ரித ஜன போக்யத்வத்தையும்
அனுசந்தித்து விளம்பம் பொறாமையால் விஸ்லேஷத்தை அதி சங்கித்து
ஏவம் பூதனான நீ என்னை அகலாது ஒழிய வேணும் என்று அபேக்ஷித்து தமக்குப் பிறந்த ஆர்த்தியை
அவன் சந்நிதியில் விண்ணப்பம் செய்த பிரகாரத்தை
ஸ்ரீ கிருஷ்ணனோடு ஸம்ஸ்லேஷித்து ப்ரபாத சமயத்திலே அவனுடைய பிரிவை சங்கித்து அஞ்சினாள் ஒரு கோபிகை –
சந்தியில் பாதகங்கள் நலிவு செய்யா நிற்கும் என்னை நீ ஆஸ்வசிப்பித்துக் கொண்டு இருக்கவும் வேணும் –
போன இடத்தில் ஆஸூரா ப்ரக்ருதிகள் வரில் என் ஆமோ என்று அஞ்சா நின்றேன் -என்று
திருவாய்ப்பாடியில் பெண்கள் எல்லார்க்குமாகச் சமைந்தவனுடைய போக்கை விலக்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

——

வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ
மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்காக்
காமரு குயில்களும் கூவும் ஆலோ
கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு
ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ
தகவிலை தகவிலையே நீ கண்ணா-
-10-3-1-ஆலோ-துக்கத்தின் மிகுதியைக் குறித்தபடி –

தன்னுடைய பிரிவில் இவள் ஆற்றாமை கேட்டார் வாய் கேட்கை அன்றிக்கே-
கைம்மேல் காணலாய் இருக்கிறது காணும் இவள் மெலிவு –தனக்குப் பிறந்த துன்பத்தினை தோழி மாருக்கு சொல்லுமாறு போலே-அவனுக்கு சொல்கிறாள்-கூட இருந்தாலும் பயன் இல்லையே அகவாயிலே பிரிவு உண்டானால்-அதன் கார்யமான மெலிவு பிறந்தன்றி நில்லாதே-தன் தோள்கள் மெலிகிற இதனை -உன்னுடைய தோள்கள் மெலியா நின்றன -என்பாரைப் போலே-சொல்லுகிறாள் காணும்-இவள் தோள் மெலிந்தால் தன்னுடைய அபிமதம் -வருத்தமும் -தனக்கு வந்ததாய் இருக்கையாலும் -வலியுமும்-ஆக -இரட்டிப்பாய் இருக்கும்-மெல்லியல் தோள் தோய்ந்தாய் –திரு நெடும் தாண்டகம் -13-அன்றோ விடாய் ஆறுவது-இருவருக்கும் விடாய் ஆற்ற முடியாதே – -தேவதத்தன் என்றதனோடு வாசுதேவன் என்ற சொல்லோடு-வாசி அறும்படி அவனுக்கு சரீரமாக அன்றோ இவ் உயிர்ப் பொருள் இருப்பது-பர்யவசான விதி -சர்வ சப்த வாச்யன்

போனோம் அல்லோம்-போக நினைத்தோம் அல்லோம்-நாம் கூட இருக்கச் செய்தே பிரிந்தோமாகக் கொண்டு நோவு பட்டு-பார்க்கப் படும் பொருள்கள் எல்லாம் துன்புறுத்தும் படியாக இருப்பதே-இது ஒரு அன்பின் தன்மை இருக்கும் படி என் -என்று-கண்களாலே குளிர நோக்கினான் –தாமரைக் கண்டால் கொண்டு ஈர்தி யாலோ –-நீ நோக்காலே நலிவதில் இன்னம் பசு மேக்கப் போக்கையே நன்று –

————

தகவிலை தகவிலையே நீ கண்ணா
தடமுலை புணர்தொறும் புணர்ச்சிக்கு ஆராச்
சுகவெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க்கச்
சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே
அக உயிர் அகம் அகம் தோறும் உள் புக்கு
ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ
மிக மிக இனி உன்னை பிரிவை ஆமால்
வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே
–10-3-2-

தகவிலை தகவிலையே நீ கண்ணா–நம்மை அருள் இல்லாதவன் -என்பதே –
பிரிய நினைத்தோம் அல்லோம் –பிரிந்தோம் அல்லோம் -என்று இவள் தரித்து இருப்பதற்காக-நெருக்கி அணைத்தான் —இவள் தரிப்பதற்க்காக பலகால் அணைத்து அருள – இச் சேர்க்கையால் ஆய இன்பம் எல்லாம் -நீ நீங்கக் கூடியவன் என்னும் இதனாலே- கனாக் கண்டு விழித்தால் போலே யாய் நோவு படா நின்றேன் -என்கிறாள்

ஆவியின் பரம் அல்ல வேட்கை –அணு அளவிதனா உயிர் பொருளின் அளவன்று காதல் –
என் தன் அளவன்றால் யானுடைய அன்பு -இரண்டாம் திருவந்தாதி -100-என்றாரே அவரும்
உயிரின் அளவன்று ஆயிற்றுக் காதல் –

———–

வீவன் நின் பசு நிரை மேக்கப் போக்கு
வெவ் உயிர் கொண்டு எனது ஆவி வேமால்
யாவரும் துணை இல்லை யான் இருந்து உன்
அஞ்சன மேனியை ஆட்டம் காணேன்
போவது அன்று ஒரு பகல் நீ அகன்றால்
பொரு கயல் கண்ணினை நீரும் நில்லா
சாவது இவ் ஆய்க் குலத்துக்கு ஆய்ச்சி யோமாய்
பிறந்த இத் தொழுத்தையோம் தனிமை தானே-
-10-3-3-

சாவது -இவ் ஆய்க் குலத்துக்கு ஆய்ச்சி யோமாய்பிறந்த இத் தொழுத்தையோம் தனிமை தானே-நீ போகிலும் போ-இருக்கிலும் இரு-இத் தனிமை நசிப்பது-இவனுக்கு நான் நூறு பிள்ளை பெற வேண்டும் -என்ற சாவித்ரியை போலே சொல்லுகிறாள் –அன்றிக்கே-தனிமை தானே சாவது-எங்களுக்கு தனிமை என்றும் சாதல் என்றும் இரண்டு இல்லை காண்–தனிமை தானே சாக்காடு -என்றுமாம்
நின்னலால் இலேன் -2-3-7- என்னுமவர் அன்றோ-இறப்பதற்கே எண்ணாது-திரு நெடும் தாண்டகம் -1- என்றாரே அவரும்-சேஷ பூதை-அடிமையாக இருக்கும் எங்கள் உடைய தனி இருப்பு ஒழியட்டும் -தனிமை ஸ்வ பாவம் என்பதால் அதன் முடிவு தங்கள் முடிவு என்கிறாள் கூடி இருந்தால் வாழ்ச்சி பிரிந்தால் வீழ்ச்சி –அன்றிக்கே-தனிமை சாவது-இத் தனிமை சாலப் பொல்லாதது -என்னவுமாம்-ஒரு தலைக் காமம் தனிமை என்றுமாம் –
இவ் ஒருதலைக் காமம் போவது-கைக் கிளைத் தலைவி பொறை அழிந்தால்-எல்லாம் சொல்லப் பெறுவள் அன்றே

————–

தொழுத்தையோம் தனிமையும் துணை புரிந்தார்
துயரமும் நினைகிலை கோவிந்தா நின்
தொழுத்தனில் பசுக்களையே விரும்பி
துறந்து எம்மை இட்டு அவை மேய்க்கப் போதி
பழுத்த நல் அமுதின் இன் சாற்று வெள்ளம்
பாவியேன் மனம் அகம் தோறும் உள் புக்கு
அழுத்த நின் செங்கனி வாயின் கள்வப்
பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்
–10-3-4-

இவன் போக்கினை நினைத்து நோவு படப் புக்கவாறே –நின் செங்கனி வாயின் கள்வப்
பணி மொழி
-உன்னைப் பிரிகைக்கு காரணம் உண்டோ -என்று-இப்புடையிலே தாழ்வோடு சில வார்த்தைகளைச் சொல்ல –இவை அன்றோ என்னை அழிக்கின்றன –என்கிறாள் –பிரிவினை நினைத்து பிரியேன் -என்னும் இது நஞ்சுக்கு சமம் அன்றோ –

இங்கு உள்ளது பொய் ஆலிங்கனமே – பிள்ளை அமுதனார்-ஒரு பசுவின் காலிலே முள் பாய்ந்தால்-ஆயன் தலை காண் சீய்க் கொள்வது -என்பாராம்-
சரீரத்தில் ஓன்று வந்தால் இன்ப துன்பங்கள் அனுபவிப்பது ஆத்மா அன்றோ –அந்தராத்மா இவன் அன்றோ –எம்மைத் துறந்து – அவற்றை விரும்ப விரும்ப-தங்களை துறந்தான் என்று இருக்கிறார்கள் – பசுப் பால் மனம் சுளிப்ப பராங்குச நாயகி தோள் கை விட்டு அன்றோ இவன் இருப்பது

—————-

பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்
பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா
பிணியவிழ் மல்லிகை வாடை தூவப்
பெரு மத மாலையும் வந்தன்றாலோ
மணி மிகு மார்வினின் முல்லைப் போது
என் வன முலை கமழ்வித் துன் வாயமுதம் தந்து
அணி மிகு தாமரைக் கையை யந்தோ
அடிச்சியோம் தலை மிசை யணியாய்
-10-3-5-வந்தன்றாலோ-வந்தின்றாலோ பாட பேதங்கள்

நான் உன் முன்னம் இருந்து கொண்டு இருக்க-நீ இப்படி படுகிறது என் என்ன –
நீ பசு மேய்க்கக் கடவனான பின்பு நீயும் போனாய் –கண்ணா என்று விளித்து -அவன் தன்னையே-நீ போனாய் என்கிறாள்- அப்படி தெளிவில்லாமல் தவிக்கும் நிலை அன்றோ இவளுக்கு –நீ போனால் நலியக் கடவ மாலைக் காலம் முதலிய பொருள்களால்-நலிவுபடுகிற என்னை நலிவு படா வண்ணம்-செய்து அருள வேண்டும் -அணைக்க என்று நேராகச் சொல்லாமல் அக்ராமமாக -நகர வார்த்தை போல் மூன்று கிரியைகள் பிராத்தனை –

மணி மிகு மார்வினின் –ஸ்ரீ கௌஸ்துபம் நிறம் பெறும்படியான மார்பு -என்னுதல்-
திரு மார்பு அடங்க ஸ்ரீ கௌஸ்துபத்தின் புகரே யாம்படி இருக்கும் -என்னுதல்-
கலவியிலும் கழற்ற ஒண்ணாதபடி அன்றோ கௌஸ்துபம் இருப்பது –இவளுடைய பெண்மைக்கு முலை போலே ஆயிற்று-அவனுடைய ஆண்மைக்கு ஸ்ரீ கௌஸ்துபம்-
புருஷோத்தமன் ஆகும் தன்மைக்கு இலக்கணம் அன்றோ –

உன் போக்கினை நினைக்க நா நீர் வருகிறது இல்லை –அதற்கு மாறாக உன் கையை தலை மேலே வைக்க வல்லையே-நா நீர் வருகைக்கு இவர்களுடைய முந்தரி கைப் பழம் இருக்கிறபடி-ராஜ குமாரர்க்கு நாக்கு வாற்றாமைக்கு பச்சைக் கற்பூரம் போலே- த்வய உச்சாரணம் நம் பூர்வர்களுக்கு-

அணி மிகு தாமரைக் கையை யந்தோ தலை மிசை நீ அணியாய் –ஆபரணத்துக்கு அந்தக் கை போலே ஆயிற்று-இவள் தலைக்கு அந்தக் கை-பாத பங்கயமே தலைக்கு அணியாய் -9-2-2-எனபது-அணி மிகு தாமரைக் கையை யந்தோ
அடிச்சியோம் தலை மிசை
 அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் -என்பதே-காலைக் கையைப் பிடித்து கார்யம் முற்றுவிக்கப் பார்க்கிறார்கள் –உன் பேற்றுக்கு நீ தானே பிரயத்தனம் பண்ண வேணும் –ப்ரேமையை கை விட்டது நீ செய்த அல்வழக்கு -ராமன் விட்டாலும் ராமானுஜர் விட மாட்டாரே –

—————

அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய்
ஆழி அம் கண்ணா உன் கோலப் பாதம்
பிடித்து அது நடுவு உனக்கு அரியையரும்
பலர் அது நிற்க எம் பெண்மை ஆற்றோம்
வடித்தடம் கண் இணை நீரும் நில்லா
மனமும் நில்லா எமக்கு அது தன்னாலே
வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு
வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே
–10-3-6-

சென்ற சென்ற இடம் எல்லாம் அபிமதைகள் பலர் உளர் –உனக்கு ஒரு குறை இல்லை-அரிவையர் –தங்கள் பருவத்தாலே துவக்க வல்லவர் பலர் -ஒருவர் இருவரா –பெண்கள் பதினாறாம் ஆயிரவர் –நாங்கள் உன்னைப் பிரிந்து தரிக்க மாட்டு கிற்றிலோம்-ஆதலால் உன் செலவினை எங்களால் பொறுக்க முடியாது –என்கிறாள்-

ஆழி அம் கண்ணா –என்கையாலே-திருக் கண்களாலே குளிர நோக்க வேண்டும் -என்பது போதரும் –உங்கள் கைகளால் தீண்டுதல் வேண்டும் என்று அன்றோ நான் இருப்பது –
எனக்கு போக்கு உண்டோ –போனாலும் உங்களை ஒழிய புறம்பு விஷயம் தான் உண்டோ-என்பது போல் கண்களாலேயே பேசினான்

வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கு
வெள் வளை மேகலை கழன்று வீழ
தூ மலர்க்கண் இணை முத்தம் சோரத்
துணை முலை பயந்து என தோள்கள் வாட
மா மணி வண்ணா உன் செங்கமல வண்ண
மென் மலரடி நோவ நீ போய்
ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு
அசுரர்கள் தலைப் பெய்யில் எவன் கொல் ஆங்கே–
10-3-7-

நாங்கள் நோவு பட-உன் மெல்லிய திருவடிகள் நோவ பசு மேய்க்கப் போனால்-அங்கு அசுரர்கள் கிட்டினால்-என்னை விளையும்-என்கிறாள்-எமது உயிர் வேம் -என்கையாலே-உனக்கு அது இல்லை என்று தோன்றுமே அன்றோ –இந்த பாடு எல்லாம் எங்களுக்கே –

தூ மலர்க்கண் இணை முத்தம் சோரத்-இது காறும் பார்த்து இராத ஓன்று நீ காணலாம்-இப்பொழுது தானே சந்நிஹிதனாக இருக்க நீர் -அதனால் அபூர்வம் -போகாதே காண் -என்கிறாள் –தாமரைப் பூவிலே முத்துப் பட்டது-கண்ணான முத்தே அன்றோ –நேத்ர பூதம் -சாடு -கண்ணிலே தோன்றிய முத்து -சிலாக்கியமான முத்து -கண் மணி போலே

———–

அசுரர்கள் தலைப்பெய்யில் எவன் கொல் ஆங்கு என்று
ஆழும் என்னார் உயிர் ஆன் பின் போகல்
கசிகையும் வேட்கையும் உள் கலந்து
கலவியும் நலியும் என் கை கழியேல்
வசி செய் உன் தாமரைக் கண்ணும் வாயும்
கைகளும் பீதக வுடையும் காட்டி
ஓசி செய் நுண்ணிடை இள வாய்ச்சியர்
நீ யுகக்கும் நல்லவரோடும் உழி தராயே-1
0-3-8-

பிரபல தர விரோதி இதில் ஆரம்பம் -அடுத்த பாசுரம் விளக்கம் –

நீ சென்றால் தீங்கு விளையுமோ என்று அஞ்சா நின்றேன்-உன்னைப் பிரியவும் மாட்டேன்-
பசு மேய்த்தலை வ்யாஜ்யமாகக் கொண்டு-காதலிமார்களை நினைத்து போகிறாய் ஆகில்-
-நீ விரும்பி இருக்கும் அவர்களோடு என் கண் வட்டத்தே சஞ்சரிக்கப் பார் என்ன-
ஆனால் அவர்களை அழைத்து தருவார் யார் என்ன-வசி செய் உன் தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக வுடையும்- உனக்கு தூது செய் கண்கள்-9-9-9- உளவாக இருக்க புறம்பே பரிகரம் தேடி அழைக்க வேண்டி இருந்ததோ-இனிப் பொருந்தோம் என்று இருப்பார் மரத்தை மாற்றி அவர்களை வசீகரித்து தரும் கண்களும்-அந்நோக்கில் கருத்தினை வெளிப்படுத்தும் வாயும்-அந்நோக்கிலும் முறுவலிலும் நேர் விழிக்க மாட்டாதே நாணத்தாலே கவிழ்ந்தவர்களை-எடுத்துக் கொள்ளும் கைகளும்-தொடுதலாலே தோற்றவர்களை கீழே போகாதபடி தன் செல்லாமையாலே-மேலே ஏறட்டு கொள்கிற பொன்னாடையும்-உனக்கு புறம்பே அழைத்து தருவார் வேண்டி இருந்ததோ-பிடாத்தை விழ விட்டு வடிவைக் காட்ட அமையாதோ-என்கிறாள்

————-

உகக்கும் நல்லவரோடும் உழி தந்து உன் தன்
திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள்
வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம்
எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்
மிகப் பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு
நின்று உழி தருவர் கஞ்சன் ஏவ
அகப்படில் அவரோடும் நின்னொடு ஆங்கே
அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ
–10-3-9-இதுவே இத் திருவாய் மொழிக்கு நிதான பாசுரம்

உகக்கும் நல்லவரோடும் உழி தராய்-என்று நான் போகாமைக்கு சொன்ன வார்த்தை இத்தனை ஒழிய-உங்கள் முன்னிலையிலே நான் வேறு பெண்கள் சிலரோடு கலந்து பழகுதல்- உங்களுக்கு விருப்பம் இல்லாதது அன்றோ என்ன –
எங்களோடு கலக்கும் கல்வியால் உண்டாகும் இன்பத்தைக் காட்டிலும்-உன் திரு உள்ளத்தில் பிரியமே எங்களுக்கு மிகப் பெரிய இன்பமாகும்–நாங்கள் வியக்க இன்புறுதும் –புறம்பு உள்ளாரைப் போலே அன்றியே-உன் உகப்பையே பிரயோஜனமாக கொண்டுள்ள நாங்கள் மிகவும் உகப்புதோம் –பிரதான அவன் ஆனந்தம் சொல்லி பின்பு நம் ஆனந்தம்-உன்னிலும் அவர்களிலும் நாங்கள் வியக்க – -நீ உகந்தாரை ஒழிய உன்னை உகக்குமவர்கள் அல்லோம் காண் நாங்கள்–ஆன பின்பு தீமை விளையும் இடத்திற்கு போகாது ஒழிய வேணும்-என்கிறார்கள் –

மூன்றில் சுருக்கிய ஐந்தையும்-உயர் தினை ஒன்று பயில் /ஏறு கண் கரு வீடு /சொன்னால் ஒருக் கொண்ட/நோற்ற நாலும் /எம்மா ஒழிவில் நெடு வேய் –என்கிற இருபதிலே விசதமாக்கி-எண்பதிலே பரப்புகையாலே -ஐந்தையும்
அருளினான் வீடு பெற்ற என்கையாலே ஐந்தில் இரண்டையும்
தொழுது களித்தேன் சொல்லுப் பெற்றேன் பணி செய் என்கிற முக்த லக்ஷண வ்ருத்தியாலே இரண்டில் ஒன்றையும் இதுக்கு ப்ரமேயம் என்னும் -சூர்ணிகை -211-

————-

அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ
அசுரர்கள் வன்கையர் கஞ்சன் ஏவ
தவத்தவர் மறுக நின்று உழி தருவர்
தனிமையும் பெரிது உனக்கிராமனையும்
உவத்திலை உடன் திரிகிலையும் என்று என்று
ஊடுற வென்னுடை யாவி வேமால்
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி
செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே–
10-3-10-

திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி –ஆமாம் -நீ ஒவ்வோர் இருப்புகளை குலைத்துக் கொண்டு- போந்து அறியாயே-பரம பதத்தில் இருப்பினைக் குலைத்து அன்றோ பசு நிரை மேய்க்கப் போந்தது –அங்கு இருந்தான் ஆகில் என் வயிறு எரிய வேண்டாவே-நாம் பெறுவோம் இழப்போம் -அங்கே இருந்து வந்தது உன்னை கடாக்ஷிக்க அன்றோ என்ன -நாம் பெறுவோம் இழப்போம் -இவனுக்கு ஒரு தீங்கு வாராது ஒழியுமே-இது ஒரு அன்பின் தன்மை இருந்தபடி என் -என்று முறுவல் பூத்தான் –
செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே –அதிலே ஈடுபடுகிறார்கள் –அவ்விருப்பு குலைந்து போந்தமை உண்டு-உங்களை விட்டுப் போந்தேனோ-என்று முறுவல் செய்ய-இவர்களும் வாய்க்கரையிலே -அதரத்தில் -அழுந்துகிறார்கள்-இத்தை நம்பி திருவாய்மொழி நிகமிக்கிறார் –பரம பதம் விட்டாலும் உம்மை விடோம் என்றானே –

————

செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு
அத் திருவடி திருவடி மேல் பொருநல்
சங்கணி துறைவன் வண்தென் குருகூர்
வண் சடகோபன் சொல்லாயிரத்துள்
மங்கையர் ஆய்ச்சியர் ஆராய்ந்த மாலை
அவனோடும் பிரிவதற்கு இரங்கி தையல்
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன
இவையும் பத்து அவற்றின் சார்வே
-10-3-11-

பொருநல் சங்கணி துறைவன் –தாம் இருந்த இடத்தில் மேன்மக்கள் அடங்கலும் வந்து (பவிஷ்யத் எம்பெருமானாரும் பெரிய ஜீயரும்)சேருமாறு போலே ஆயிற்று –திருப் பொருநலில் சங்குகள் வந்து சேரும்படி –

இவையும் பத்து அவற்றின் சார்வே –அவை -என்கிறது 1-மேலே போந்த திருவாய் மொழிகளாய் –அவற்றின் அருகே இதுவும் ஒரு திருவாய் மொழியே-என்ற ஆச்சர்யத்தில் ஆக்கி-ஆயிற்று சீயர் அருளிச் செய்ததும் -9000 படி வியாக்யானம் செய்ததும்
அன்றிக்கே –2-இவையும் பத்து அவற்றின் சார்வே —மேல் திருவாய் மொழிகளுக்கு சொன்ன பலம் இதற்கு பலம்-என்கிறது ஆகவுமாம்-
அன்றிக்கே-3-அவை -என்கிறது-மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை -என்கிறவற்றையாய்-இவையும் அவற்றோடு ஒக்கும் என்னுதல் -என்றது-அதனுடைய பலமே இதற்கும் பலம்-அது பலத்தோடு கூடியதாயின் இதற்குபேறு உண்டாம் -என்றபடியாம் –அவர்கள் நீ போகாதே கொள் -என்ன-அவன் தவிர்ந்து அவர்கள் உடன் கலந்தால் போலே-
இது கற்றாரும் அவனோடு நீங்காத கலவியைப் பெறுவார் –என்றவாறு –

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -72 -சூழ்கின்ற கங்குல் சுருங்கா இருளின்-சீலமில்லாச் சிறியன் -4-7-

March 8, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

இருளும் -திங்கள் அம் பிள்ளை -பாலசந்த்ரனும் -விரோதிகள் -ஸஹஜ சத்ருக்கள்-இருந்தாலும் தனித்தனியே என்னை நலிகின்றனவே-இருளுக்கு ஆற்றாத தலைவி இளம்பிறை கண்டு தளர்ந்து உரைத்தல் – இருட்டைப் போக்க பாலசந்திரன் வர -அத்தைக் கண்டு ஆற்றாமை-திருமேனி இருள் போல்
பாலசந்திரன் போல் தாப ஹரன்-இரண்டுமே நிறத்தை அழிக்கின்றனவே சீலமில்லாச் சிறியன் -4-7-இதன் விவரணம் 

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-அவதாரிகை  – போலி கண்டு தரிக்க வேண்டும்படி ஆற்றாமை மிக்கு இருக்கிற சமயத்திலே – ராத்திரி வந்து இருளாலே நலிய – இத்தால் வந்த நலிவைப் போக்கி நம்மை ரஷிப்பார் யாரோ -என்று இருக்கிற அளவில் சந்தரன் வந்து தோன்றினான் –

இவ்விடத்தே பிள்ளை அமுதனார் -ஒரு கதை சொல்லுவார் –-ஒரு சாது பிராமணர் காட்டிலே தனி வழியே போனானாய்- ஒரு பசு தொடர்ந்து வந்ததாய் – இத்தால் வந்த நலிவை போக்கி நம்மை ரஷிப்பார் யார் -என்று இருக்கிற சமயத்தில் ஒரு புலி வந்து தோன்றி அப்பசுவையும் கொன்று –
அதனுடைய ரத்த பானத்தைப் பண்ணி – இவன் முன்னே வந்து தண்டையை முறுக்கி இட்டு இருந்ததாய் அந்த பசுவையாகில் ஒருபடி பிராண ரஷணம் பண்ணி போகல் ஆயிற்று –-இனி இத்தைத்  தப்பி நம் சத்தையை நோக்குகை  என்று ஒரு பொருள் இல்லை ஆகாதே -என்று-அது போலே இறே இதுக்கும் –

இப்படி பிறரும் அதி சங்கை பண்ணும் படி பலத்தில் த்வரையை யுடைய இவருக்கு அனுபவ ஸித்தி இல்லாமையாலே பிறந்த மோஹமும் பல வை லக்ஷண்ய விஷயமான ஞானமும் நடந்து அலாப நிபந்தநமான கிலேசத்தை விளைக்க ஆர்த்தரான பிரகாரத்தை இருளுக்கு ஆற்றாத ஈடுபாட்டின் மேலே
இளம்பிறை கண்டு தளர்ந்து உரைத்த தலைவி வார்த்தையால் அருளிச் செய்கிறார்

சூழ்கின்ற கங்குல் சுருங்காவிருளின்  கருந்திணிம்பை
போழ்கின்ற திங்களம் பிள்ளையும் போழ்க துழாய் மலர்க்கே
தாழ்கின்ற நெஞ்சத்தொரு தமியாட்டியேன் மாமைக்கின்று
வாழ்கின்றவாறு இதுவோ வந்து தோன்றிற்று வாலியதே
– 72-இருளுக்கு ஆற்றாத தலைவி இளம்பிறை கண்டு தளர்ந்து உரைத்தல் –

சூழ்கின்ற–(இடைவிடாது) சூழ்ந்து நிற்கிற
கங்குல்–ராத்ரியினுடைய
சுருங்கா இருளின்–சுருங்காமற் பெருகுகிற இருளினுடைய
கரு திணிம்பை–கறுத்த செறிவை
போழ்கின்ற–பிளக்கிற
அம்பிள்ளை திங்களும்–அழகிய இளஞ் சந்திரனும்
போழ்க–(என்னையும்) பிளக்கட்டும்;
துழாய் மலர்க்கே தாழ்கின்ற நெஞ்சத்து–(நாயகனது) திருத்துழாய் மலரைப் பெறுதற்காகவே யீடுபடுகிற மனத்தையுடைய
ஒரு தமியாடடி யேன்–ஒரு துணையும் இல்லாமல் மிக்க தனிமையை யுடையேனான என்னுடைய
மாமைக்கு–(இயல்பான) மேனி நிறத்துக்கு
இன்று வாழ் கின்ற ஆறு–(இப்பொழுது வாழ்க்கை நேரும்படி
வாலியது வந்து தோன்றிற்று–சுத்தமான இளம் பிறை வந்து தோன்றியது
இதுவோ–இப்படியோ?

சீலமிகு கண்ணன் திரு நாமத்தால் உணர்ந்து
மேலவன் தன் மேனி கண்டு மேவுதற்கு சால
வருந்தி இரவும் பகலும் மாறாமல் கூப்பிட்டு
இருந்தனனே தென் குருகூர் ஏறு—37-வர்ஷேண பீஜம் பிரதிச்ஜ்ஞ ஹர்ஷா -என்னுமா போலே
தோழி சொன்ன ம்ருத சஞ்ஜீவியான-திரு நாம பிரசங்கமே சிசிரோபோபசாரமாக வாஸ்வச்தராய்
உணர்ந்த அநந்தரம்-பிறந்த உணர்த்தி பேற்றுக்கு உடல் அன்றிக்கே கிலேச அனுசந்தானத்துக்கு உடலாய் அத்தாலே நோவு பட்டு ஆபத் சகனாக தந் நிதான பரிஹாரங்களை உள்ளபடி அறியும் சர்வஞ்ஞனாய் கார்யம் செய்கைக்கு உறுப்பான உறவையும் உடையனாய் இருக்கிறவன் ரஷியாது ஒழிகையாலே ஆர்த்தி நிரம்பின கடல் கை எடுத்துக் கூப்பிடுமா போலே அவனைக் காண வேணும் என்று கேட்டார் அடைய நீர்ப் பண்டமாம்படி கூப்பிடுகிற சீலமில்லா சிறியனில் அர்த்தத்தை அருளிச் செய்கிறார்–இவர் நெஞ்சு உருகி நோவு பட்டு அருளுகிறார் –இனி திரு நகரியில் ஆழ்வார் பிரதான்யம்
எங்கனே நடக்கக் கடவதோ என்று சங்கிக்கும் படியாய் இருக்கிறது –

சூழ்கின்ற –பிரளயம் கோக்குமா போலே எங்கும் ஒக்க தானே வந்து சூழ்ந்தது –-இது ஓர் இடத்திலேயாய்-மற்றொரு இடத்தில் ஒதுங்க நிழலாம் படி இருக்கை அன்றிக்கே–கங்குல் சுருங்கா  இருளின் –இன்னதினை போதை-இருள் செறிந்து வரக் கடவது –இன்னதினை போதை அதாகக் கடவது -என்று ஓர் மரியாதை உண்டு இறே – அது இன்றிக்கே இரா நின்றது –கரும் திணும்பை –
கறுத்த நிறத்தை உடைய திணும்பை என்ற ஒரே சொல்லாய்- அத்தால் திண்மையை சொல்லுகிறது –
இருளினுடைய புற இதழைக் கழித்து – அகவாயில் திண்மையான-வயிரத்தை சேர பிடித்தால் போல் இருக்கிறது–போழ்கின்ற இத்யாதி –-இவ்விருளை போழ்ந்து கொடு கீண்டு கொண்டு தோற்றுகிற சந்திரனும் – தனக்கு புறம்பு பாத்யம் இல்லாத படியாலே நம்மையே பாதித்திடுக –தண்டையை  முறுக்கி இட்டு –தண்டு வாலாய் வாலை முறுக்கிக் கொண்டு என்றபடி  –போழ்கின்ற –சஹஜ சாத்ரவத்தாலே –
இத்தால் அவன் சன்னதியிலே இது போழ்கின்றது  அன்றியிலே கை தொட்டு அழிக்கிறாப் போலே ஆயிற்று –இதனுடைய திண்மையும் சந்தரனுடைய பருவம் நிரம்பாமையும் –திங்களம் பிள்ளை –
சந்திரன் ஆகிற அழகிய பிள்ளை –முந்துற அநு கூலரைப் போலே தோற்றி பின்னை இறே இவன் பாதகன் ஆவது –இருளைப் போக்குகிற ஆகாரத்திலே அநு கூலனாய் – பின்பு இறே தான் நின்று பாதகனாவது –பத்ம கோச -இத்யாதி –பத்ம கோச பலாசாநி த்ருஷ்டாத்ர்ஷ்டிர் ஹி மந்யதே -ஸீதாயா நேத்ர கோசாப்யாம் சத்ருசா நீதி லஷ்மணா -இதனுடைய விபாகம் அறிகிறதில்லை- ரசனை என்னா நஞ்சைத் திண்ண ஒண்ணாது இறே –-பஸ்ய லஷ்மண -இத்யாதி –தர்சி ஸௌமித்ரி -என்னுமிவ் வாகாரத்தை பார்க்கிற இத்தனை போக்கி பின்பு அது பாதகம் என்னும் இடத்தை பார்க்கிறது இல்லை –மிருக விஷயத்தில் பொன் மான் மேலோட்ட வடிவில் ஆசை கொண்டாள் சீதா -இத்தைப் பார் லஷ்மணா –

துழாய் மலர்க்கே இத்யாதி –அவன் தோளில் இட்ட திருத் துழாய் மாலையை பெற வேணும் என்று ஆசைப்பட்டு –அதிலே கால் தாழ்ந்து கிடக்கிற நெஞ்சை உடைய – துழாய் மலர்க்கே தாழ்கின்ற -அதில் அருமை ஒன்றையும் புத்தி பண்ணாதே-ஒரு தமியாட்டியேன் – ஸ்ரீ ஜனக ராஜனின் திரு மகளும் ஒப்பன்று காணும் இவளுடைய தனிமைக்கு – இருளுக்கும் நிலவுக்கும் நொந்து தனிமைப் பட்டாள்  இவள் இறே –ஒரு -என்கிற இத்தால்-உபமான ராஹித்யம் சொல்லுகிறது —மாமைக்கு இன்று வாழ்கின்றவாறு இதுவோ--இருளால் வந்த நலிவைப் போக்கி-நம் நிறத்தைத் தருகைக்கு சந்தரன் வந்து தோன்றினான் என்று நாம் பாரித்து இருந்தது எல்லாம் இதுவோ–வந்து தோன்றிற்று வாலியதே –
இருளைப் போக்குகைக்கு சந்தரன் வந்து தோன்றினால் போலே- இச் சந்தரனைப் போக்குகைக்கு ஒரு ஆதித்யன் இல்லையே -என்கிறாள் –இதுவே நிலை நின்று-நலியும் என்று இருக்கிறாள் –வாலியது –
வலியது –

திங்களம் பிள்ளையும் போழ்க  – அதுவும் நம்மை வந்து நலிந்திடுக –வந்து தோன்றிற்று வாலியதே –
அவ்விருளுக்கு  மேலே இத் திங்களும் வந்து பாதகமாய் தோற்றிற்று – மாமைக்கு இன்று வாழ்கின்றவாறு இதுவோ
-என்று அந்வயம் –

இருளுக்கு ஆற்றாத தலைவி அதுக்கு மேலே இளம் பிறை கண்டு தளர்ந்து உரைத்தல் -துயர் நீக்க வந்தான் என்று கருதும் படி வந்து மேலும் துயரை விளைவிப்பதே-பேறு கிட்டாததால் வந்த மோகாந்தகாரமும் -அதனை அடக்கி மேலிடுவதான தத்வ ஞான பிரகாசமும் இரண்டும் ஒன்றின் மேல் ஒன்றுடன் சேர்ந்து வருந்தி ஸ்வரூபத்தை அழிக்க இருக்கும் தன்மை –சந்திரோதயம் -என்றது விவேகத்தை –இருளுக்கு ஆற்றாத தலைவி இளம்பிறை கண்டு தளர்ந்து உரைத்தல் இது. நாயகனைப் பிரிந்த நிலையில் பகலிற் காட்டிலும் இரவில் இருளில் மிக வேதனைப்படுகிற நாயகி, அப்பொழுது இளம்பிறை தோன்றி அவ்விருளை அழிக்கத் தொடங்கியதை நோக்கி இனி நமக்கு இருளினாலாகுந் துயரம் குறைவுபடுமென்று கருதி ஒருவாறு தணிந்திருக்கத் தொடங்கிய வளவிலே, இளம்பிறையும் விரஹிகளுக்குத் தாபஹேதுவான பொருள்களும் ஒன்றாதலால் அது இவளை இருளினும் அதிகமாக வேதனைப் படுத்த, அது நோக்கி அத் தலைவி இரங்கிக் கூறியதென்க.–எனக்குப் பகையாய்ச் சூழ்கிற இருளைப் பிளந்தொழிக்கிற இளம்பிறை அவ்வருளின் ஒழிவுக்கு மகிழ்கிற என்னையும் பிளந்தொழிக்கட்டும்.-பிறைதோன்றி இருள் அகன்றதைக் கண்டு இனி என் துயரங் குறைந்து இழந்த மாமை நிறத்தைப் பெற்று வாழ்வேனென்று கருதிய எனக்கு அந்தோ! பிறை தோன்றியது இங்ஙனமோ முடிந்தது! என்கிறான். துயர் நீக்க வந்தானென்று கருதப்பட்டவன்தானே துயர¬ மிகுவிக்கின்றானே! என்செய்வேன்! என்கிறாள்.-வாலியது – வாலிமை யென்னும் பண்பிணடியாய் பிறந்த ஒன்றன்பாற் குறிப்பு வினையாலனையும் பெயர். இதுவோ வந்து தோன்றிற்று–இப்பிறையோ வந்து தோன்றியது. வாலியதே- இதன் தன்மை சீரிதாகவுள்ளது! என்றுங் கொள்ளலாம்; இப்பொருளில் விபரீத லக்ஷனையால் வெறுப்புத் தோன்றும். பிள்ளை– இளமைப்பெயர்.-தாம் நினைத்தபடியே பேறு கிடைத்திடாமையா லுண்டான மோஹாந்தகாரமும் இதனையடக்கி மேலிடுவதான தத்துவ ஞானப் பிரகாசமும் இரண்டும் எம்பெருமானைச் சேராது நிலையில் தம்மை ஒன்றினுமொன்று மிகுதியாக வருத்தித் தமது ஸ்வரூபத்தையும் அழிக்கவிருந் தன்மையை ஆழ்வார் வெளியிடுதல் இதற்கு உள்ளுறை பொருள். சந்திரோதய மென்றது விவேகத்தை.

சூழ்கின்ற கங்குல் சுருங்காவிருளின் கருந்திணிம்பை போழ்கின்ற திங்களம் பிள்ளையும் போழ்க
சூழ்ந்து நிற்கிற ராத்ரியின் நீண்ட இருளினுடைய கறுத்த செறிவைப் பிளவா நிற்கிற அழகிய பாலசந்த்ரனும் என்னைக் கீளுக-திணும்பு -என்று செறிவு-பிள்ளையும் என்று இருளை போக்குகையாலே உபகாரகமான இதுவும் ப்ரகாசத்தாலே நலிகிறமை சொல்லுகிறது-துழாய் மலர்க்கே தாழ்கின்ற நெஞ்சத்தொரு தமியாட்டியேன்-திருத்துழாயினுடைய பூந்தாரினுக்கு ஈடுபட்ட நெஞ்சை யுடைய மிக்க தனிமையை யுடையேனான என்னுடைய –மாமைக்கின்று வாழ்கின்றவாறு-ஸ்வா பாவிகமான நிறத்துக்கு வாழ்ச்சி யுண்டாகிற பிரகாரம்-இதுவோ வந்து தோன்றிற்று வாலியதே
முன் இருளிலும் கனத்த இந்த இளம்பிறை வந்து தோன்றிற்று-இதுவும் போழ்க–வாலிமையாவது
சீர்மையாய் கனத்தைச் சொல்லுகிறது–அன்றியே பிறையின் வெளுப்பு ஆகவுமாம்–இத்தால்
போக ஸித்தி பெறாமையாலே வந்த மோஹ அந்தகாரத்திலும் மோஹத்தை அமுக்கி மேல் இடுவதான விஷய வைலக்ஷண்ய ஞான சந்த்ர உதயம் தானும் அலாப தசையில் மிகவும் பாதகம் என்னும் இடம் சொல்லிற்று ஆயிற்று –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்–சூழ்கின்ற கங்குல் சுருங்காவிருளின் கருந்திணிம்பை போழ்கின்ற திங்களம் பிள்ளையும் போழ்க துழாய் மலர்க்கே தாழ்கின்ற நெஞ்சத்தொரு தமியாட்டியேன்
தனிமைப் பட்டேனான என்னுடைய– மாமைக்கின்று வாழ்கின்றவாறு-இதுவோ வந்து தோன்றிற்று
உடலுக்கு இன்றாக இப்பிறையால் பிளக்கப்படும் இதுவோ வாழ்கின்ற பிரகாரம் என் உடலுக்கு உலகள நிறத்தையும் கெடுத்து அத்தையே பிளந்து விடவும் தோன்றிற்று--வாலியதே-இந்தப் பிறையானது இதுக்கே வந்ததாய் நிராதாரமாகத் தொங்குமதாய் தன் மிக்க வெளுப்போடும் சீர்மையோடும் ஆவிர்பவித்தது இதுக்கு எங்கே ஒதுங்குவேன் என்கிறாள் –

ஸ்வா பதேசம் –இத்தால் –இருளன்ன மா மேனி -என்கிறபடியே –திரு நிறத்துக்கு போலியான இருள் –
அதுக்கு ஸ்மாரகமாய் நலிகிற படியையும் – (கண்ணன் என்னும் கரும் தெய்வம் )அதுக்கு மேலே சந்திரனும்  –திரு முகத்துக்கு ஆதல்-திருக் கையில் திரு பாஞ்ச ஜன்யத்துக்கு ஆதல் –நாள் இளம் திங்களைக் கோள் விடுத்து திருவாய்-என்கிறபடியே திரு முகத்துக்கு ஸ்மாரகமாய் நலிகிற படியால் இவற்றைச் சொல்லுகிறது  –பால சந்தரன் ஆகையாலே இருளானது சந்திரனையும் கை தொட்டு நலியா நின்று-கொண்டு தன்னையும் நலிகிறது என்றபடி –=புலிக்கு பசுவும் பிராமணனும் எதிரி போல் இவள் ஹிருதயம் பத்ம கோசம் -போன்றது ஆகையாலே ஆதித்யனுக்கே அலரக் கடவது
ஆகையாலே -பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் –இருளுக்கும் சந்த்ரனுக்கும் மலராமையாலே
சாத்ரவம் சஹஜம் என்றபடி – மாயா மிருகத்தில் பிராட்டி ஆசைப்பட்டாள் -ரசனை உள்ளோருக்கு  நஞ்சு இடுவாரோ – இது மேல் எழுந்த ஆகாரம் -என்றபடி –பஸ்ய லஷ்மண வைதேஹ்யாஸ் ஸ்ப்ருஹாம்
ம்ருக கதாமிமாம் ரூபஸ் ஸ்ரேஷ்ட தயாஹ்யேஷ ம்ருகோத்யந  பவிஷ்யதி
-இத்யாதி கண்டு கொள்வது அது போல் பிரதமத்தில் அழகிய சந்தரன் என்றாள் –ஊர்த்வம் மாசான்ன ஜீவிஷ்யதே -பிரிந்த பத்து மாசங்களிலே ராத்ரியும் உண்டு இறே –

தாத்பர்யம்-பகவத் அனுபவ அலாபத்தாலே பிறந்த மோஹ அந்தகாரம்-அதுக்கும் மேலே விவேக ஸ்வரூப ஞானம் -பேறு தப்பாது என்று துணிந்து இருக்க வேண்டும் -ஆறி இருக்க -வேண்டும் –
பரதந்த்ரன் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை -என்பதாலும் வந்த நலிவு படுகிற தமது படியையும்
சொல்லும் பாசுரத்தை-இருளுக்கும் சந்திரோதயத்துக்கும் நலியும் தலைவி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –இதுவரை பலகல்பங்களாகச் சென்ற இருள் காலம் முடிந்து ஆதித்யன் வர அவனுக்கு ஸத்ருச போலி பதார்த்தங்களைக் கண்டு தரித்து இருந்த ஆழ்வாருக்கு போக யோக்ய காலமும் வந்து
இருளும் எங்கும் ஓக்க வியாபிக்க இவரது இந்திரியங்களை நலிய இவ்வளவில் பால சந்த்ர உதயம் ஆக – –நாயகன் திருமேனிக்கு போலியான இருளும் நீங்கி எனது நலிவைப் போக்கவே -பால சந்திரன் மிக உபகாரகன் என்று இருந்தேன்-சந்த்ர காந்த திருமுகம் அன்றோ-பாஞ்ச ஜன்யமும் சந்திரன் போல் தானே-இவ்வாறு போலியான அவன் உருவைக் காட்டி நிறம் அழியும்படி இரண்டுமே செய்தனவே
நாயகன் திருத்துழாய்க்கு ஆசைப் பட்டு நலிந்த என்னைப் போல் வேறே யாரும் உண்டோ என்கிறாள்

4-7-சீலம் இல்லாச் சிறியே னேலும்,–ப்ரவேஸம்-

காற்றாலும் வெயிலாலும் அடிபட்டு உலர்ந்த பயிரானது, மழை பெய்தவாறே பச்சை பெற்றுப்
பருவம் செய்வது போன்று, மகிழ்ச்சி அடைந்தாள்,’
என்கிறபடியே, மழை பெய்தால் பயிர் பருவம் செய்வது தன் உணர்த்தியால் அன்றே?
அப்படியே, திருநாமப் பிரசங்கத்தால் இவர் உணர்ந்தார்.
‘ஆயின், மேல் திருநாமப் பிரசங்கம் உண்டோ?’ எனின், ‘வண் துவராபதி மன்னனை ஏத்துமின்’ என்று
அமிருத சஞ்சீவினியான திருநாமப் பிரசங்கம் உண்டாயிற்றே அன்றோ?
அந்தத் திருநாமப் பிரசங்கமே குளிர்ந்த உபசாரமாக உணர்த்தி உண்டாயிற்று.
அதனால் பெற்ற பலம், முன்புத்தை மயக்கத்தையும் இழப்பதற்கு உறுப்பானது இத்தனை.
மயங்கியிருக்கும் நிலையில் நினைவு இல்லாமையாலே துன்பம் இல்லை;
பிறந்த உணர்த்தி பேற்றுக்குக் காரணம் அல்லாமையாலே துன்பத்தை விளைக்க, அதனாலே கூப்பிடுகிறார்.

உறக்கத்தில் பசி பொறுக்கலாம்; உறக்கத்தினின்றும் உணர்ந்தால் உண்டு அன்றி நிற்க ஒண்ணாதே அன்றோ?
உணர்ந்த பின்னர்ப் பொறுக்க ஒண்ணாதபடி தனக்குப் பிறந்த-அலாப கிலேசத்தை அனுசந்தித்து- பயனில் துன்பத்தை நினைத்து,
1-அவன் ஆபத்துக்கு உதவும் தன்மையனாய் இருக்கிறபடியையும்,
2-ஆபத்தின் காரணத்தை அறிந்து அதனைப் போக்குவதில் வல்லன் என்பதனையும் நினைத்து,
3-ஆபத்துக்கு உதவுகைக்குத் தகுதியான சம்பந்தத்தையுடையவனாவது,
4-பிரிந்தால் பொறுக்க ஒண்ணாதபடியான வடிவழகையுடையவனாவது,
5-ஆபத்துகளிலே விரோதியைப் போக்கி உதவுகைக்குத் தகுதியான ஆற்றலையுடையவனாவது,
6-அதற்குத் தகுதியான சாதனங்களையுடையவனாவது,
7-வரையாதே, எல்லாரையும் ஒருசேரப் பாதுகாக்க வல்லவனாவது,
இப்படியிருக்கத் தம் ஆற்றாமைக்கு உதவக் காணாமையாலே, பரமபதத்திலே இருந்தானாகிலும் அவ்விருப்பு நிலை குலைந்து
வந்து முகம் காட்டும்படி துக்கத்தாலே நிரம்பியது ஒரு கடல் கை எடுத்துக் கூப்பிட்டாற்போலே,
8-கேட்டார் அனைவரும் நீராகும்படி கூப்பிடுகிறார்.

‘அதனாலே கூப்பிடுகிறார்’ என்றதனை விரித்து அருளிச்செய்கிறார்,
‘உணர்ந்த பின்னர்’ என்று தொடங்கி. இத்திருவாய்மொழியில் வருகின்ற
1-‘ஞாலமுண்டாய்’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘ஆபத்துக்கு உதவும் தன்மையன்’ என்கிறார்.
2-‘ஞானமூர்த்தி’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி,‘ஆபத்தின் காரணத்தை அறிந்து’ என்கிறார்.
3-‘நாராயணா’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘சம்பந்தத்தையுடையவனாவது’ என்கிறார்.
4-‘கோலமேனி’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘வடிவழகையுடையவனாவது’ என்கிறார்.
5-‘ஆழ்கடலைக் கடைந்த துப்பனே’ என்றதனைத் திருவுள்ளம் பற்றித் ‘தகுதியான ஆற்றலையுடையவனாவது’ என்கிறார்.
6-‘அடலாழியானே’ என்றதனைத் திருவுள்ளம் பற்றித் ‘தகுதியான சாதனங்களையுடையவனாவது’ என்கிறார்.
7-‘வையங்கொண்ட வாமனாவோ’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘வரையாதே’ என்கிறார்.
8-‘வள்ளலேயோ! வாமனாவோ! என்பனவற்றைத் திருவுள்ளம் பற்றிக் ‘கூப்பிடுகிறார்’ என்றார்.

‘ஓ கௌசல்யே! ஓ சுமித்திரே! ஓ ராமா! ஓ லக்ஷ்மணா!’ என்றாற்போலேயும், ஸ்ரீ கௌசல்யையார் பெருமாளைப் பிரிந்த
ஆற்றாமையாலே ‘பிரியேதி புத்ரேதிச ராக வேதிச’ என்று கூப்பிட்டாற்போலேயும் இவரும் கூப்பிடுகிறார்.

‘ததாபி சூதேந’ என்ற சுலோகத்திற்கு வியாக்கியாதா அருளிச்செய்த பொருள் வருமாறு :-
‘ஸ்ரீ கௌசல்யையார் பெருமாளைப் பிரிந்த ஆற்றாமையாலே கூப்பிட, ஸ்ரீ சுமந்திரன், ‘அவரைப் பிரிந்தோம் என்று
கூப்பிட வேண்டாகாணும்; தாமே வந்து புகுவர் காணும்,’ என்று தேற்றினான்.
சூதேந –
சொன்ன வார்த்தை ‘நம்பத்தகுந்தது’ என்று கைக்கொள்ள வேண்டும்படி அந்தரங்கன் ஆவது,
சாரதிகள் சொல்லுவனவெல்லாம் நம்பத் தக்கன அன்றோ?
சு யுக்த வாதிநா –
அஃது இல்லையேயாகிலும் வார்த்தையைக் கேட்டால், ‘இது அப்படியே’ என்று நம்பி ஓடுகிற சோகம்
தீரும்படி வார்த்தை சொல்ல வல்லன் ஆவது.
நிவார்யமாணா –
இவனாலே ‘இது வேண்டா’ என்று தடுக்கப்படா நிற்கச் செய்தேயும்.
சுத சோக கர்சிதா –
இப்படி இவனைப் போரப் பொலியச் சொல்லுங்காட்டில் நீங்காதே அன்றோ, இவள் பிரிந்த விஷயத்தில் ஆற்றாமை?
நெடு நாள் கூடிப்பெற்ற பிள்ளையைப் பிரிந்தால் தரிக்கப் போகாதே!
ந சைவ தேவீ விரராம கூஜிதாத் –
பிறர் கண்ணீரையும் மாற்றி, இதற்கு முன்பு சோகமும் புதியது உண்ணாதே போந்தவள்,
கூப்பிடுகிற கூப்பீட்டினின்றும் ஓவிற்றிலள்;
கூப்பிடுகிற போதுதான் கேட்டார்க்கு அடைய இரக்கம் பிறக்கும்படி குயில் கூவினாற் போலே
காணும் கூப்பிடுவது. கூப்பிட்ட பாசுரம்,
பிரியேதி புத்ரேதி ச ராகவேதி ச –
‘பிரிந்தால் தரிக்க ஒண்ணாதபடி எனக்கு இனியவரே!
உம்மைப் பிரிந்தாருடைய ஆற்றாமையை நீக்கும் தன்மையை யுடையவரே!
எல்லாரையும் பாதுகாக்கும் குடியிலே பிறந்து, பெற்ற தாயை நலியலாமோ!’ என்று
அவள் கூப்பிட்டாற்போலே இவரும் கூப்பிடுகிறார்.

ஏழாம் திருவாய் மொழியிலே
கீழ் ஏத்துதலும் தொழுதாடும் -என்று பகவத் நாம ஸ்ரவணத்தால்பிறந்த ஆச்வாஸம் அவனைக் கிட்டி அனுபவிக்கைக்கு உடல் அன்றியே
அலாபத்தாலே ஆர்த்தராகைக்கு உடலாகையாலே அபிநிவேச அதிசயத்தை யுமுடைய இவ்வாழ்வார் தமக்கு அநு பாவ்யமான சர்வேஸ்வரனுடைய
அகில வஸ்து சத்தையும் அழியாமல் நோக்கும் அசாதாரண சம்பந்தத்தையும்
அநந்யார்ஹமாக்கி அனுபவிப்பிக்கும் உதார குணத்தையும்
அநந்யார்ஹமான ஆஸ்ரிதர் பக்கல் அத்யந்த பவ்யதையையும்
அவர்களுக்கு ஆஸா ஜநகமான ஆபி ரூப்யாதி அதிசயத்தையும்
அரும் தொழில் செய்தும் ஆஸ்ரிதர்க்கு அபேக்ஷிதம் கொடுக்கும் படியையும்
ஆசைக்கு தீபகமான ஆந்திர ஸ்திதியையும்
அந்த அவஸ்தா நத்தினுடைய அதிசயித போக்யதையையும்
போக்யதா நிபந்தமான அபிநிவேச ஜனகத்வத்தையும்
அபி நிஷ்டர்க்கு அநு பாவ்யமான அசாதாரண சிஹ்னவத்தையும்
அகில வேத வேத்யத்வத்தையும்
அனுசந்தித்து -ஏவம் விசிஷ்டனான போக்ய பூதன் பக்கல் அனுபவ அபி நிவேசத்தால் பிறந்த ஆர்த்யதிசயத்தை அருளிச் செய்கிறார்-

சீலம் இல்லாச் சிறியே னேலும், செய்வினையோ பெரிதால்;
ஞாலம் உண்டாய்! ஞான மூர்த்தி! நாராயணா! என்று என்று
காலந் தோறும் யான் இருந்து, கைதலை பூசலிட்டால்,
கோல மேனி காண வாராய்; கூவியும் கொள்ளாயே.
–4-7-1-

இங்குச் ‘சிறியன்’ என்கிறது, அணுத்துவமன்று; ஞான சூக்ஷ்மத்தை,’ என்கிறார்,-செய்வினை ஓ பெரிது – செய்த பாவத்தைப் பார்த்தவாறே, ‘சித்து அசித்தோடு ஈசன் என்று செப்புகின்ற மூவகைத் தத்துவங்களையும்’ விளாக்குலை கொள்ளும்படி பெருத்திருந்தது.-ஈசுவரனுடைய குணங்களைக் காட்டிலும், அவன் தந்த மதி நலன்களைக் காட்டிலும் பெரிதாய் ஆயிற்று இருக்கிறது-செய்வினை –-இவைதாம் ஈசுவரனைப் போலே சங்கற்பத்தாலே உண்டாக்கப்பட்டன அல்ல ஆதலின், ‘செய்வினை’ என்கிறது,-இதற்குப் பரிஹாரம் அவன் கையிலே’ என்றே யன்றோ அறுதியிட்டிருப்பது?
எப்போதும் ‘கை கழலா நேமியான் நம்மேல் வினை கடிவான்’ என்றேயன்றோ இவர் சொல்லுவது?-இதுதான் ஸூதரிசனமாய் இருக்குமேயன்றோ? (-ஸூ தர்சனமாய் –திருவாழியையும் அழகிய தர்சனமாயும் என்று சாடு)

பூமியாகப் பிரளயங்கொள்ளிலோ பாதுகாக்கையாவது? எல்லார்க்கும் உண்டான ஆபத்து ஒருவனுக்கே உண்டானால், உதவலாகாதோ? தங்கள் தங்களுடைய ஆபத்தை அறிந்து கூப்பிடாதார்க்கோ உதவலாவது?-‘ஆபத்து அறிந்து கூப்பிடுவார்க்கு உதவோம்’ என்னும் நிர்ப்பந்தம் உண்டோ?’பிரளயத்தால் கொள்ளப்பட்ட பூமி, தன்னைத்தானே எடுக்க முயற்சி செய்யும் அன்றேயன்றோ தாங்கள் தாங்கள் செய்த கர்மங்களைத் தாங்கள் போக்கிக் கொள்ளத் தகுதியுள்ளது? சம்பந்தமும் ஆபத்தையுடைய வராகையும் அன்றோ
உனக்குக் காப்பாற்றுவதற்கு வேண்டுவது?’ என்கிறார் என்னுதல்.-
ஆபத்து -சம்பந்தம் -இரண்டும் இருந்தும்- ஆத்ம ஞானமும் அப்ரதிஷேதமும் வேண்டுமே 

நான் அறிவது ஒன்றும் இல்லை; நீ அறியாதது ஒன்றும் இல்லை;
நான் செய்ய வல்லது ஒன்றும் இல்லை; நீ செய்யமாட்டாதது ஒன்றும் இல்லை.
யார் காரியம் யாருக்குப் பரம்? ஒருவனுக்குக் கண் தோற்றாதே காலும் நடை தாராதே இருந்தது;-ஒருவனுக்குக் கண்ணும் தோற்றிக் காலும் நடை தருவதுமாய் இருந்ததானால். யார்க்கு யார் வழி காட்டிப் போவார்?’ -கேவலம் சரீரமோ, சரீரியைப் பெறுகைக்கு முயற்சி செய்வது?

இவர்தாம் ஒரு பிரயோஜனத்திற்காக ஒருகால் சொல்லி, ‘அது கைபுகுந்தது’ என்று ஆறியிருக்குமவர் அல்லரே!-நம் உபாயத்தில் வர்த்தமானம் போலே இதுதான் பிரயோஜனமாய் இருக்குமே இவர்க்கும்! ஆதலின், ‘என்று என்று’ என்கிறார் என்னுதல்.
‘நமோ நாரணா என்று ஓவாது உரைக்கும் உரை’-முதல் திருவந்தாதி, 95.- அன்றோ இதுதான்?-இனிமையாலே நித்தியமாக அநுசந்திக்கப்படும்

கை தலை பூசல் இட்டால் –
‘தலையிலே கை வைத்தால் -பூசல்’ என்று பொருந்துதலாய், தலையிலே கை பொருந்தினால்; அதாவது, ‘அஞ்சலி செய்தால்’-மெய் காட்ட வேண்டாவோ?
அன்றிக்கே, ‘தலையில் கை வைத்துக் கூப்பிட்டால்’ -பூசலிடல் – கூப்பிடுதல்.-என்னுதல்;
அன்றிக்கே, ‘கையும் தலையுமான பூசல் மாறாதே ஒருபடியே இருந்தால்’ -காலந்தோறும் இருந்து அஞ்சலி இட்டால்’-என்னுதல்.

சேர்ந்து குளிர்ந்த தண்ணீரை விடாயர்க்கு எட்டாமல் வைப்பாரைப் போலே,
வேட்டார்க்கு உதவாத தண்ணீர் ஆவதே! ‘மரகத மணித்தடம்’ என்னப்படுமவன் அன்றோ அவன்?

காண –கருமுகை மாலை தேடுவார், சூட அன்றிக்கே, சும்மாட்டைக் கொள்ளத் தேடுவர்களோ?கிட்டினாலும் ‘ஸதா பஸ்யந்தி – எப்பொழுதும் பார்த்துக்கொண்டே இருக்கின்றார்கள்’ என்பதே அன்றோ?
‘காரார் திருமேனி காணுமளவு’மே -சிறிய திருமடல், 69.-அன்றோ இங்கும்?
‘அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண’- இத்தனையே அன்றோ-

வாராய் –‘வாராய்’ என்றதனால் உபாயம் சொல்லுகிறது. அவ்வடிவைக் காணும்போது என்றும் அத்தலையாலே வரப்பெற இருக்கை போலே காணும் முறை.
‘நீ முறை செய்யப் பார்த்திலையேயாகிலும், என் துன்பம் தீரும் அத்தனையே எனக்கு வேண்டுவது,’ என்கிறார்.
காண –பிராப்யம் -தர்சனமே பிராப்யம் -வாராய் -பிராபபகம் -அவனே உபாயம்

கூவியும் கொள்ளாயே –முறை கெட அழைத்தாகிலும் கொள்ளுகின்றிலை.
காலந்தோறும் யான் இருந்து கைதலை பூசல் இட்டால் கோல மேனி காண வருகின்றிலை;
கூவியும் கொள்ளுகின்றிலை;
இதற்குக் காரணம், சீலமில்லாச் சிறியனேலும் செய்வினையோ பெரிதால்,’ எனக் கூட்டுக.

நாராயணன்’ என்கையாலே, இறை நிலை சொல்லிற்று;
‘சிறியன்’ என்கையாலே, உயிர்நிலை சொல்லிற்று;
‘வாராய்’ என்கையாலே, உபாயம் சொல்லிற்று;
‘காண’ என்கையாலே, பலம் சொல்லிற்று;
‘செய்வினையோ பெரிதால்’ என்கையாலே, விரோதி சொல்லிற்று;
ஆக, ஐந்து பொருள்களும் இத்திருப்பாசுரத்திலே சொல்லப்பட்டன.

ப்ராசாங்கிகம் -த்வயார்த்தம் விவஷிதம்
ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி -ஞான சக்தியாதிகள் -உத்தர வாக்யார்த்தம்-
நாராயணா -ஆஸ்ரயண சௌகர்யர்ய ஆபாதக -வாஸ்தல்யாதிகள்-பூர்வ வாக்யார்த்தம்
ஞாலம் உண்டான் -ரஷகம் -சப்த சாமர்த்தியத்தால் ஸ்ரீ மத் பதார்த்தமும்
கோல மேனி -சரண -திருவடி -சப்தார்த்தம்
வாராய் -சரண உபாயம் சப்தார்த்தம்
கை தலை பூசல் இட்டால் — கிரியா பிரபத்யே பிரபதனம்
பதில் கதௌ தாது -காலம் தோறும் -மகா விஸ்வாசம்-பிரகர்ஷனே பர்த்யே- பிரபர்த்யே
யான் -உத்தம அதிகாரி -அஹம் –
என்று என்று -பூர்வ உத்தர வாக்யமும்– கிரியா பதம்–வர்த்தமானம் –
காண -சதுர்த்யந்தமான பிராப்யம் -ஆய –
செய்வினையோ பெரிது -நமஸ் -அவித்யாதி கழி உண்ணும்

————–

கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோது இல தந்திடும் என்
வள்ளலேயோ! வையம் கொண்ட வாமனாவோ!’ என்று என்று
நள் இ ராவும் நன்பகலும் நான் இருந்து,ஓலம் இட்டால்
கள்ள மாயா! உன்னை என்கண் காணவந்து ஈயாயே
.–4-7-2-

அனுபவிக்க அனுபவிக்கத் தன் பக்கலிலே ஆசையைப் பிறப்பித்து, இதர விஷய வைராக்கியத்தையும் பிறப்பிப்பதான ஆனந்தமாதலின், ‘கோதில’ -இப்படி இப்போது கூப்பிடப் பண்ண நினைத்திருந்தால், ‘வீற்றிருந்தேழுல’கிலே அப்படி என்னை அனுபவிப்பிக்க வேண்டுமோ?’ -இரந்தார்க்குக் கொடுக்கைக்காக நீ இரக்குமவன் அன்றோ? -நீ இரந்து தருகை ஒழிய நான் இரந்து கூப்பிட இருப்பதே இப்போது!’-

என்று என்று –இந்திரனைப் போன்று இராச்சியம் பெற்றுப் போகிறார் அல்லர்,
மஹாபலியைப் போலே ஒளதார்யம் கொண்டாடிப் போகின்றார் அல்லர்,
எப்போதும் இதனையே சொல்லி. வையங்கொண்ட பின்பும் வாமன வேஷமாயிற்று இவர் திருவுள்ளத்தில் ஊற்று இருந்தது;-ஆதலின், ‘வையம் கொண்ட வாமனா!’ என்கிறார்

நடையழகு கண்டு வாழும்படி முன்னே நடந்து வந்து தர வேண்டும்.-உன்னை நீயே கொண்டு வந்து தரவேண்டும்.-மாநச அனுபவத்தால் போராது; கண்களுக்கு இலக்காம்படி வரவேண்டும்’ –  ஈகிறிலை-பாடமான போது-செய்விவினையோ பெரிதால்’ ஈகின்றிலை

———–

ஈவு இலாத தீ வினைகள் எத்தனை செய்தனன் கொல்?
தாவி வையம் கொண்ட எந்தாய்! தாமோதரா! என்று என்று,
கூவிக் கூவி நெஞ்சு உருகி, கண்பனி சோர நின்றால்,
பாவி நீ என்று ஒன்று சொல்லாய், பாவியேன் காணவந்தே
.–4-7-3-

அனுபவித்தாலும் குறையாதிருக்க வேண்டுமோ?-அனுபவிக்காத கர்மம் தொலையாது
அனுபவித்த கர்மம் தொலைய வேண்டுமே-நானோ அனுபவித்தேனே -ஆனால் கர்மம் தொலைய வில்லையே –-‘ஆயின், அனுபவித்தாரோ?’ என்னில், -அரை ஷணம்-சிறிது நேரம் முகம் மாற வைத்த போதே எல்லாம் அனுபவித்தார் அன்றோ?
‘செய்வினை’ என்று ஒன்றாய் இருந்ததோ? எத்தனை கோடி பாவங்களைச் செய்தேனோ!’ என்பார்,-‘தீவினைகள் எத்தனை செய்தனன் கொல்?’ என்கிறார்.-அவன் இவற்றைக் காப்பதற்கு அடியிட்டான்;-அச்செயலிலே இவரும் தோற்று அவனுக்கு உரியவராய் ‘எந்தாய்!’ என்கிறார்.-உன் வயிறு வாழாமல் அன்றோ இப்படிக் களவு கண்டு கட்டுண்டு அடி உண்டது?முந்துறக் கூவுகிற இது பிற்படக் கூவுமதனை விருத்தி செய்யும்படி கூவுகிற தம் மிடற்று ஓசை செவிவழியே புக்கு, நெஞ்சமானது நீர்ப்பண்டமாய் உருகும் ஆயிற்று.

நான் ஆசையற்றவன் ஆகும்படி ஒரு வார்த்தை சொல்ல வேண்டும்’ என்பார், ‘நீ பாவி’ என்று சொல்லாய் என்கிறார்-இரண்டு அவதாரத்துக்கும் புறம்பாம் படியான பாபத்தை பண்ணினாய் நீ என்று நான் நிராசனாயத் தரிக்கும் படி ஒரு வார்த்தை சொல்லாய்-.-‘‘நீ பாக்கியவான்’ என்னவுமாம். ‘பாக்கிய ஹீநன்’ என்னவுமாம்; அதில் அர்த்தங்கொண்டு காரியம் இல்லை; உன் மிடற்றோசை கேட்குமித்தனையே எனக்கு வேண்டுவது,’ என்பார், ‘ஒன்று சொல்லாய்’ என்கிறார்.-அங்ஙனம் சொல்லுமிடத்து நிர்ப்பந்தம் ஒன்று உண்டு;-பாவியேன் காண வந்து –‘என் கண்களுக்கு இலக்காம்படி வந்து சொல்ல வேண்டும்;

———-

காண வந்து,என் கண் முகப்பே தாமரைக் கண் பிறழ,
ஆணிச் செம்பொன் மேனி எந்தாய்! நின்று அருளாய் என்று என்று,
நாணம் இல்லாச் சிறு தகையேன் நான் இங்கு அலற்றுவது என்
பேணி வானோர் காண மாட்டாப் பீடுடை அப்பனையே?
–4-7-4-

‘மானச அனுபவம் மாத்திரம் அன்றிக்கே, புறப்படுதல் தொடங்கி  கண்களாலே, காணும் படிக்குத் தகுதியாக வந்து-ஆணிப்பொன் – அதிக மாற்றுடைய பொன்.-‘மற்று ஒப்பாரை இல்லா ஆணிப் பொன்னே!’ -திருவிருத்தம், 85.-சுட்டு உரைத்த நன்பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது’-என்னாவகம்பால் மாற்றின்றி உரைத்துக்கொண்டேன்’-நெஞ்சாகிற மெழுகிலே இட்டுப் பார்த்தால், அது தள்ளுண்ணுமே அன்றோ? இவர் தாம் கண் ஆணியாக அன்றோ காண்பது?

கண் கரு விழியால் காண -ஆழ்வாருக்கு உரைகல்லே வேண்டாமே-தாமரைக் கண் பிறழ –‘கடல் கலங்கினாற்போலே, ஆழ்வாரைக் கண்ட காட்சியிலே திருக்கண்கள் மிளிர’ -என்னுடைய முன்னைய ஒழுக்கத்தை நினைக்க மாட்டாத நாணம் இல்லாதவனும், மிகச் சிறியனுமான சிறுதகையேன் –ஆக, பேணி வானோர் காண மாட்டாப் பீடு உண்டு. பீடு – பெருமை;‘அதனையுடைய சர்வேசுவரனை, -ப்ரஹ்மாதிகளுக்கும் குத்ஸிதமான நிலத்திலே இருந்து அவர்களுக்கும் நிலம் இல்லாத விஷயத்தை கூப்பிட்டு என்ன பிரயோஜனம் உண்டு –நாணமில்லாச் சிறு தகையேன் நான் இங்கு அலற்றுவது என்?’ என்கிறார் –

—————–

அப்பனே!அடல் ஆழி யானே! ஆழ் கடலைக் கடைந்த
துப்பனே!‘உன் தோள்கள் நான்கும் கண்டிடக் கூடுங்கொல்?’என்று
எப்பொழுதும் கண்ணநீர் கொண்டு, ஆவி துவர்ந்து துவர்ந்து,
இப்பொழுதே வந்திடாய் என்று ஏழையேன் நோக்குவனே.–
4-7-5-

ஆழ்கடலைக் கடைந்த துப்பனே – உன்னை விரும்பாமல் ‘வேறு பிரயோசனங்களே அமையும்’ என்னுமவர்களுக்கும் ‘அளவிட முடியாத கடல்’ என்கிறபடியே,
ஒருவரால் அளவிட ஒண்ணாதபடியான கடலைக் கடைந்து கொடுத்த ஆற்றலை உடையவனே!

உன் தோள்கள் நான்கும் கண்டிடக் கூடுங்கொல் என்று ‘உன் தோள்கள் நான்கனையும் கண்டேனாய் விடக் கூடுமோ?’ என்று. அவர்களைப் போன்று உப்புச்சாறு கொண்டு போமவர் அல்லரே இவர்! அந்தக் கடலைக் கடைகிற போது பரந்திருந்த தோள்களைக் காணக் காணும் இவர் ஆசைப்படுகிறது. மதுரக் கொழுஞ்சாறு கொண்ட சுந்தரத் தோள்களே அன்றோ அவை?- நாய்ச்சியார் திருமொழி, 9 : 1.

இப்பொழுதே வந்திடாய் என்று – தம் துன்பமே செப்பேடாக-தாமர சாசனம்- அரைக்கணமும் தாழாமல் வரவேண்டும் என்று.-நோக்குவனே –வருவதற்குச் சம்பாவனை யுள்ள திசையைப் பாரா நிற்பன். ‘வருகைக்கு அவன் பக்கலிலும் ஏதேனும் நினைவு உண்டாயோ இவர் இப்படிச் செய்கிறது?’ என்னில் –ஏழையேன் – அஃது ஒன்று இல்லை. இவர் தம் ஆசையே உள்ளது.-ஆழ்வான் பணித்த வரதராஜ ஸ்தவத்திலே ஒரு சுலோகத்தைக் கேட்டு, எம்பெருமானார், ‘இப்பாசுரங் கேட்டால் பெருமாள் இரங்காமை இல்லை; ஆழ்வான், உன் முகத்தைக் காட்டிக் காணாய்,’ என்று பார்த்தருளினார்.-நாள்தோறும் – எப்பொழுதும். ‘நாள்தோறும் நாக்கு நீள்வன்’ எனக் கூட்டலுமாம். நாக்கு நீளுதல் – ஆசைப்படுதல்.-

———-

நோக்கி நோக்கி, உன்னைக் காண்பான், யான் எனது ஆவியுள்ளே
நாக்கு நீள்வன், ஞானம் இல்லை; நாள்தோறும் என்னுடைய
ஆக்கை யுள்ளும் ஆவி யுள்ளும் அல்ல புறத்தினுள்ளும்
நீக்கம் இன்றி, எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே
.–4-7-6-

யான் எனது ஆவியுள்ளே நாக்கு நீள்வன் – என் மனத்திலே ஆசைப்படாநின்றேன். ‘வாய் விட்டுச் சொல்லமாட்டாமல்’ என்பார், ‘எனது ஆவியுள்ளே’ என்கிறார் ஒரு விஷயத்திலே ஆசையுள்ளவனை ‘இவன் இவ்விஷயத்திலே நாக்கு நீட்டாநின்றான்,’ என்பார் அன்றோ?
ஆதலால், ‘நாக்கு நீள்வன்’ என்பது, ‘ஆசைப்படுவன்’ என்னும் பொருளைக் காட்டாநின்றது.
‘ஆசைப்படுவதற்குக் காரணம் என்?’ என்னில், ஞானம் இல்லை – இது இருந்தபடியால் என்னைப் போன்ற அறிவு கேடர் இலர். ‘சர்வேசுவரனைக் காண வேண்டும் என்று ஆசைப்படுகிற இது அறிவு கேடாக வேண்டுகிறது என்?’ என்னில்
என்னுடைய ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும் அல்ல புறத்தினுள்ளும் நீக்கம் இன்றி எங்கும் நாள்தோறும் நின்றாய் – உன்னைப் பெறுவதற்குத் தடையாக உள்ள என் சரீரத்திலும்,
பெற இருக்கிற ஆத்துமாவிலும்,இவை ஒழிந்த தடையாய் உள்ள உறுப்புகளிலும் விடாதே எங்கும் எல்லாக்காலத்திலும் புக்கு நின்றாய்.-கிழிச் சீரையிலே தனம் கிடக்கப் புறங்கால் வீங்குவாரைப்போலே காணும் இவர் படி.

நின்னை அறிந்து அறிந்து –இதன் பாதுகாவலுக்குச் சம்பந்தம் உடையன் ஆவது,
நிதானமறிந்து பரிஹரித்தற்கு முற்றறிவினன் ஆவது,-தொடங்கினது முடிக்க வல்ல எல்லா ஆற்றலையுமுடையன் ஆவது,-‘ஐயோ!’ என்று இரங்குகைக்கு நீர்மையுடையன் ஆவது,
எப்பொழுதும் உடனிருத்தலையுடையனாவது;-இப்படியிருக்க, ‘இவன் முகங்காட்டாதொழிகிறது, செய்ய நினையாமையே அன்றோ?’ என்று
இருக்க மாட்டாதொழிகிறது என் அறிவு கேடாமித்தனையே அன்றோ?‘

நான் சம்பந்தம் உள்ளவனாய் நீ சம்பந்தம் இல்லாதவனாய் இருக்கிறாய் அல்லை;
நான் முற்றறிவினனாய் நீ அறிவு இல்லாதவனாய் இருக்கிறாய் அல்லை; நான் எல்லா ஆற்றலையும் உடையவனாய் நீ ஆற்றல் இல்லாதவனாய் இருக்கிறாய் அல்லை; நான் எங்கும் பரந்திருப்பவனாய் நீ அணுவாய் இருக்கிறாய் அல்லை;
இத்தலை நோவு பட விட்டு அருள் அற்றவனாய் இருக்கிறாய் அல்லை; ‘உடையவனாய் வைத்து உடைமை நோவுபட விட்டிருக்கிறது செய்ய நினையாமையே அன்றோ?’ என்று ஆறி இருக்க மாட்டாதொழிகிறது என் அறிவு கேடாமித்தனை அன்றோ?’

நாராயணனே’ என்றதனை நோக்கிச் ‘சம்பந்தமுடையனாவது’ என்றும்,
‘ஞானமூர்த்தி’ என்றதனை நோக்கி,‘முற்றறிவினனாவது’ என்றும்,
‘துப்பனே’ என்றதனை நோக்கி, ‘ஆற்றலையுடையனாவது’ என்றும்,
‘ஞாலமுண்டாய்’ என்றதனை நோக்கி,‘நீர்மையுடையனாவது’ என்றும்,
‘நீக்கமின்றி எங்கும் நின்றாய்’ என்றதனை நோக்கி, ‘உடனிருத்தலை யுடையனாவது’ என்றும் அருளிச் செய்கிறார்.

1-நாராயணா -பிராப்தம் உண்டு
2-ஞான மூர்த்தி -சர்வஜ்ஞ்ஞன்
3-துப்பன் -சர்வசக்தன்
4-ஞாலம் உண்டாய் -இரக்க ஸ்வபாவம்
5-நீக்கம் இன்றி எங்கும் நின்றாய் -சதா சந்நிஹிதன்

—————

அறிந்து அறிந்து, தேறித் தேறி,யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
நறுந்து ழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே
.–4-7-7-

இத்திருப்பாசுரம் எச்சமாய்க் கிடக்கிறது; அதாவது,‘பேதைமை தீர்ந்தொழிந்தேனித்தனை; மார்பும் மாலையுமான வடிவழகைக் கண்ணிட்டுக் காணப் பெற்றிலேன்,’ என்பது எச்சம். அடைவிப்பவன் நீ -அடைந்து அனுபவிப்பனும் நீயே -மயர்வற மதி நலம் அருளினீரே -சிறிது செய்தமை உண்டு; இந்த அமிசத்தைப் பெற்றேன்; எனக்கு இதனால் போராது,’ என்கிறார்.

அறிந்து தேறி அறிந்து தேறி –முதல் திருவாய்மொழியிலே பரத்துவத்தை நினைந்தார், அது விஷயமானவாறே பிறப்பது ஒரு தெளிவு உண்டே அன்றோ?
அந்தத் தெளிவும்; பின்பு, ‘வணங்கத்தக்கவன்’ என்று அருளிச்செய்தார், அதனாலே பிறந்த ஒரு தெளிவும்;-பின்பு ‘சுலபன்’ என்று கூறினார், ‘அங்ஙனம் கூறியதால் பிறந்ததொரு தெளிவும்;-பின்பு, ‘குற்றங்களைப் பொறுப்பவன்’ என்று கூறினார், அதனாலே பிறந்தது ஒரு தெளிவும்-இப்படிக் கிரமத்திலே அன்றோ திருவாய்மொழி முடிய நடந்தது? இவையெல்லாம் மானச அனுபவங்களே அன்றோ?
அன்றிக்கே,
இனி, ‘அறிந்து அறிந்து தேறித்தேறி’ என்றதனை அர்த்த பஞ்சக பரமாக்கி வேறும் ஒரு கருத்து அருளிச் செய்கிறார், ‘
‘பரம்பொருளின் சொரூபத்தை அறிந்து தேறி, அந்தப் பரம்பொருளின் யாதாத்மியத்தை யறிந்து தேறி’ என்றபடி-இப்படியே, மற்றை நாலுக்கும் கண்டு கொள்க. யாதாத்மியம் – அதனுடைய முடிவின் எல்லை;அதனுடைய உண்மை நிலை.
நீ மயர்வு அற மதிநலம் அருளுகையாலே,
மிக்க இறைநிலை,
மனன் உணர்வு அளவு இலன், பொறி உணர்வு அவையிலன், எதிர் நிகழ் கழிவினும் இனன் இலன், மிகுநரை இலன்,-உணர் முழுநலம், இனன்’-. திருவாய். 1. 1 : 2.- என்று அறிய,
அதனாலே பிறப்பது ஒரு தெளிவும், அந்தப் பரமாத்தும சொரூபத்தினுடைய யாதாத்மியம்,
‘அது நமது விதி வகையே,’ -. திருவாய். 10. 6 : 1.-
‘நெஞ்சினால் நினைப்பான் எவன் அவன் ஆகும் நீள்கடல் வண்ணன்’-. திருவாய். 3. 6 : 9.- என்கிறபடியே, அர்ச்சாவதார பரியந்தமான அடியார்கட்குப் பரதந்திரப்பட்டவனாய் இருத்தல் என்று அறிய, அதனாலே பிறப்பது ஒரு தெளிவும்;
உயிர்நிலை,
‘சென்று சென்று பரம்பரமாய் யாதும் இன்றித் தேய்ந்து அற்று, நன்று தீது என்று அறிவு அரிதாய் நன்றாய் ஞானம் கடந்திருக்கும்’ . திருவாய். 8. 8 : 5.என்று அறிய, அதனாலே பிறந்தது ஒரு தெளிவும், அதனுடைய யாதாத்மியம்,
‘சிறுமாமனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரிய, நறு மா விரை நாண்மலர் அடிக்கீழ்ப் புகுதல் உறுமோ?’-6. திருவாய். 8. 10 : 3. என்றும்,
‘தம்மடியார் அடியோங்களே’ -. திருவாய். 3. 7 : 10.-என்றும் ‘அடியார்கட்கு அடிமையாய் இருத்தல் எல்லையாய் இருக்கும்’ என்று அறிய,-அதனாலே பிறந்ததொரு தெளிவும்;
தக்க நெறியின் சொரூபம்,
‘நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு’ -5-10-11-என்று அறிய, அதனாலே பிறந்தது ஒரு தெளிவும்;
அதனுடைய யாதாத்மியம், அறிவின் காரியமாய் அதிகாரி விசேஷணமான பிரபத்தியையும் உபாயமாகக்-கொள்ளப் பொறாதது என்று அறிய, அதனாலே பிறந்ததொரு தெளிவும்;
பல சொரூபம்
‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி, வழுவிலா அடிமை செய்கை’ -3-3-1-என்று அறிய, அதனாலே பிறந்தது ஒரு தெளிவும்;
அதனுடைய யாதாத்மியம், ‘உன்றன் திருவுள்ளம் இடர் கெடுந்தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும்’ -10-3-9-என்று அறிய, அதனாலே பிறப்பதொரு தெளிவும்;
விரோதி சொரூபம்,
‘யானே என்றனதே என்று இருக்கை’-2-9-9- என்று அறிய, அதனாலே பிறந்தது ஒரு தெளிவும்; அதனுடைய யாதாத்மியம்,
‘கைங்கரியத்தில் அகங்காரத்தை உட்கொண்டதான மமகாரம்’ என்று அறிய, அதனாலே பிறப்பது ஒரு தெளிவும் என்று பொருள் கூறலுமாம்.

ஆக, பரம்பொருளின் சொரூபத்தை அறிதலாலது, சித்து அசித்து இவற்றைக்காட்டிலும் வேறுபட்டிருப்பது என்று அறிதல்;
பரம்பொருளின் யாதாத்மியத்தை அறிதலாவது, ஆஸ்ரிதபாரதந்திரியம் என்று அறிதல்.
ஜீவாத்துமாவின் சொரூபத்தை அறிதலாவது, ஞான ஆனந்தங்கள் தொடக்கமானவை என்று அறிதல்;
ஜீவாத்துமாவின் யாதாத்மியத்தை அறிதலாவது, அவன் அடியார்கட்கு அடிமைப்பட்டிருத்தல் என்று அறிதல்.
உபாயத்தின் சொரூபத்தை அறிதலாவது, அவனே மோக்ஷத்திற்குச் சாதனமாக இருப்பவன் என்று அறிதல்;
உபாயத்தின் யாதாத்மியத்தை அறிதலாவது, இவன் செய்யும் பிரபத்தியையும் சாதனமாகப் பொறாது தானே சாதனமாக இருப்பவன் என்று அறிதல்;
பலத்தின் சொரூபத்தை அறிதலாவது, கைங்கரியம் புருஷார்த்தம் என்று அறிதல்;
பலத்தின் யாதாத்மியத்தை அறிதலாவது, தனக்கும் அவனுக்கும் பொதுவாக இல்லாமல், அவனுக்காகவே செய்தல் என்று அறிதல்;
விரோதி சொரூபத்தை அறிதலாவது, அகங்கார மமகாரங்கள் என்று அறிதல்;
விரோதி யாதாத்மியத்தை அறிதலாவது, கைங்கரியத்தில் அகங்கார மமகாரங்கள் என்று அறிதல் எனக் கொள்க.

நறுந்துழாயின் கண்ணி வேந்தே –-வைத்த வளையத்தைக் காட்டி அவ்வடிவிலே குருகுலவாசத்தைப் பண்ணுவித்து அறிவு பிறப்பித்தாயிற்றுத் தனக்கு ஆக்கிக் கொண்டது.
இவ்வறிவு பிறக்கைக்கு அவன் இட்ட பச்சை இருக்கிறபடியைத் தெரிவித்தபடி.-நான் உனைக் கண்டு கொண்டே.–-பெற்ற அம்சத்தாலே திருப்தி பிறவாத நான் – நிரதிசய போக்யனான உன்னைக் கண்டு கொண்டு -அறிந்து அறிந்து தேறி தேறி -என்று அந்வயம்

—————–

கண்டு கொண்டு, என் கைகள் ஆர, நின் திருப்பாதங்கள் மேல்
எண் திசையும் உள்ள பூக்கொண்டு ஏத்தி, உகந்துகந்து,
தொண்டரோங்கள் பாடி ஆட, சூழ் கடல் ஞாலத்துள்ளே
வண் துழாயின் கண்ணி வேந்தே! வந்திட கில்லாயே
.–4-7-8-

மேல் திருப்பாசுரத்தில் பெற்ற அமிசம் சொன்னார்; ‘பெறாத அமிசம் இது’ என்கிறார் இத்திருப்பாசுரத்தில்.கண்டுகொண்டு –‘காண விரும்பும் என் கண்கள்’-3. 8 : 4. என்கிறபடியே, காணப் பெறாமல் பட்டினி விட்ட கண்கள் பட்டினி தீரும்படி கண்டு கொண்டு.
‘அரவிந்தம் போன்று நீண்ட கண்ணானைக் கண்ணாரக் கண்டு கொண்டு’-பெரிய திருமொழி. 2. 5 : 8. என்கிறபடியே, இக் கண்களின் வயிறு ஆரக் கண்டு கொண்டு.

என்கைகள் ஆர –‘தாயவனே என்று தடவும் என்கைகள்’-3. 8 : 3.- என்கிற கைகளின் உறாவுதல் தீரும்படியாக.-கலியர், ‘வயிறார உண்ண’ என்னுமாறு போன்று, ‘கைகள் ஆர’ என்கிறார்.

நின் திருப்பாதங்கள் மேல் –உனக்குத் தாரகமுமாய் இனிய பொருளுமான திருவடிகளிலே. பிடித்துச் சுவைத்து உண்ணும் பாதக் கமலம் ஆதலின்,-பெரியாழ்வார் திருமொழி 1. 2 : 1. தாரகம் தானேயாய் நின்றது.-‘சுவைத்துண்ணும் பாதம்’ என்றதிலே நோக்கு.
‘திரு’ என்றதனாலே, போக்கியமும், ‘பாதம்’ என்றதனாலே, தாரகமும் பெறப்படுதலின்,
‘தாரகமுமாய் இனிய பொருளுமான’ என்கிறார்.
அன்றிக்கே,
‘உன் தேனே மலரும் பாதமாதலின்,-திருவாய். 1. 5 : 5.- எனக்கு வகுத்ததுமாய் இனிய பொருளுமான உன் திருவடிகளிலே’ என்னுதல்
முன்பும் விஷயங்களிலே தொடர்ந்து செல்லுமது உண்டே அன்றோ?
அங்ஙன் அன்றிக்கே,-அடையத் தக்கவனாக உன் திருவடிகளிலே; ‘உன்னுடைய தாமரை போன்ற பாதங்களை அடைவதனாலே பிறவியின் பயனை அடைந்தவனாகக் கடவேன்,’ -மாலதீ மாதவ நாடகம்.-என்பதனைக் கேட்ட ஆளவந்தார்,
‘வார்த்தை அழகியது! வகுத்த விஷயத்திலேயாகப் பெற்றிலோம்,’ என்று அருளிச் செய்தார்.
‘போக்கியதை யுண்டானாலும் அடையத் தக்கதாய் இராதாகில், அது தியாஜ்யம்,’ என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார்,

எண் திசையும் உள்ள பூக்கொண்டு –
விஷயத்திற்குத் தகுதியாகவும் தம்முடைய ஆசைக்குத் தகுதியாகவும் இருக்க வேண்டுமாதலின், ‘எண் திசையும் உள்ள பூ’ என்கிறார்.
தம்முடைய ஆசைக்குத் தகுதியாக ‘ஆசையில் உள்ளவை எல்லாம் வேண்டும்,’ என்கிறார்.
அவ்வாசைதான் திக்குப்பட்டே அன்றோ இருப்பது? கலியர் ‘கல அரிசிச்சோறு உண்ண வேண்டும்,’ என்னுமாறு போன்று.-இங்ஙனமே அன்றோ கைங்கரிய ருசியுடையார் வார்த்தை இருப்பது? ‘நான் உமக்கு எல்லா அடிமைகளையும் செய்வேன்,’ என்றாரே அன்றோ இளைய பெருமாள்?
உகந்து உகந்து –பிரீதி மாறாதே செல்லும்படியாக.
தொண்டரோங்கள் – இந்தக் கைங்கரியத்தில் இனிமை அறிந்த நாங்கள்.-‘கேசவன் தமர்’க்குப் பின் தனியர் அல்லராதலின், ‘தொண்டரோம்’ என்கிறார்.

பாடி ஆடபிரீதியினாலே தூண்டப்பட்டவர்களாகிப் பாடுவது ஆடுவதாம்படி.
‘இதுவாயின், முன்பே நாம் செய்வதாக இருந்தது ஒன்றே அன்றோ? இந்தச் சரீர சம்பந்தம் அற்றால், ஒரு தேச விசேடத்தில் கொண்டுபோய், ‘மேலே சொல்லப் போகிற சாமத்தைப் பாடிக் கொண்டிருக்கிறான்’ என்னும்படி பண்ணுகிறோம்,’ என்ன, ‘அதுவோ நான் விரும்புகிறது? அன்று; இங்கேயே,’ என்கிறார் மேல் :

சூழ் கடல் ஞாலத்துள்ளே – கடல் சூழ்ந்த இவ்வுலகத்துள்ளே நான் காண வரவேண்டும். என்றது,-‘எங்கேனும் விடாய்த்தாரை எங்கேனும் விடாய் தீர்க்க ஒண்ணாது என்கிறார்’

வண் துழாயின் கண்ணி வேந்தே –-இவ்வுலகத்துக்குள்ளே காட்டுமிடத்தில், அங்குள்ளார்க்குக் காட்சி கொடுக்குமாறு போலே காட்டவும் வேண்டும்.
நித்திய ஸூரிகளுக்குக் காட்சி கொடுக்கும் ஒப்பனையோடே காட்டவும் வேண்டும்,’ என்பார்,
‘துழாயின் கண்ணி வேந்தே’ என்கிறார்.

வந்திடகில்லாயே
வந்திடுகின்றிலை. இதனால் ‘கூவியுங்கொள்ளாயே’ என்றது பற்றாது என்கிறார். இது நான் பெறாத அமிசம்.

‘இவைதாம் இருந்தபடி என்? இந்தச் சரீர சம்பந்தம் அற்றமையும் இல்லை; கைங்கரியம் பெற்றமையும் இல்லை;-இங்ஙனம் இருக்க, ‘இவ்வமிசம் பெற்றேன், இவ்வமிசம் பெற்றிலேன்’ என்கிறபடி என்?’ என்னில், ஒன்று குறிக்கோளாய், மற்றையது அதற்கு உறுப்பாய் வருவதே அன்றோ? -( கைங்கர்யத்துக்கு தேக விநியோகம் உறுப்பு அன்றோ )
இவர்தாம் முதலிலே ‘இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை’ என்றார்;-அவனும் அளவிலா ஆற்றலை யுடையவனாய் இருந்தான். ஆதலால்,-இது கழிந்ததே அன்றோ?’ என்று அதனைப் பெற்றாராக நினைத்திருந்தார்;-கைங்கரியம் அவசியம் பெற்றல்லது நிற்க ஒண்ணாமையாலே, ‘அது கை புகுராமையைப் பற்றப் பெற்றிலேன்,’ என்கிறார்.-

————–

இடகிலேன் ஒன்று; அட்டகில்லேன்; ஐம்புலன் வெல்லகிலேன்;
கடவனாகிக் காலந்தோறும் பூப்பறித்து ஏத்தகிலேன்;
மடவல் நெஞ்சம் காதல் கூர, வல்வினையேன் அயர்ப்பாய்த்
தடவுகின்றேன்; எங்குக் காண்பன் சக்கரத்து அண்ணலையே?
–4-7-9-

நூல் பிடித்தாற்போலே சாஸ்திரங்களிலே சாதனரூபமாகச் சொல்லுகிற சமாராதனத்தில் இவர்க்குச் சம்பந்தம் இல்லை;-நூல் – சாஸ்திரமும், முறையும். ‘முறை தப்பாமல்’ என்றபடி. தேக யாத்திரைக்கு – கைங்கரியத்திற்கு.-அதாவது, கைங்கரியம் செய்யாத போது தரிக்கமாட்டாமையாலே செய்துகொடு நிற்பர்.இதனால், ‘பிராப்பியம் என்ற எண்ணத்தால் செய்யுமது உண்டு’ என்றபடி.

மடம் வல் நெஞ்சம் –மடப்பத்தால் மென்மையை நினைக்கிறது : அதாவது, ‘பகவத் விஷயம்’ என்றால் கடுக விழுந்து கொண்டு நிற்கை.
வன்மையாவது, விழுந்தால் பின்னை அங்கு நின்றும் மீட்க அரிதாய் இருக்கை.
காதல் கூர – இப்படிப்பட்ட மனத்திலே அன்பு மிக. வல்வினையேன் எங்குக் காண்பன் –
அன்பிற்குத் தகுதியாகக் காணப் பெறாத பாவத்தைச் செய்தவன். காதலுக்கு விஷயம் பெற்றேன் அல்லேன்;-இதனை அகஞ்சுரிப்படுத்தினேன் அல்லேன், ஆசை சிறிதுடையார்க்கு முகங்கொடாதவனாய் இழந்தேன் அல்லேன்;-என் பாவம் இருந்தபடி என்?’ என்கிறார்.

சக்கரத்து அண்ணலையே –கையில் திருவாழியையுடைய சர்வேசுரனை. எங்கே காணக் கடவேன்? யசோதைப் பிராட்டி கையும் வெண்ணெயுமாகப் பிடித்துக் கொண்டாற்போலே, கையும் நெய்யார் ஆழியுமாகப் பிடித்துக் கொள்ளவாயிற்று இவர் ஆசைப்படுகிறது.
நெய் -கூர்மை -நெய் பூசப்பட்ட என்றுமாம்-

————

சக்கரத்து அண்ணலே! என்று தாழ்ந்து, கண்ணீர் ததும்ப,
பக்கம் நோக்கி நின்று, அலந்தேன்; பாவியேன் காண்கின்றிலேன்;
மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கினை என்
தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே
.–4-7-10-

கண் நீர் ததும்ப –கண்கள் நீர் மிகைக்கும்படி. இவருடைய துக்கத்தின் எல்லை காண்பது கண்ண நீரிலே காணும்.-காணப்பெறாது ஒழிந்தால் மறந்து பிழைக்கலாம்படி நெஞ்சில் பிரகாசிக்காமல் ஒழியத்தான் பெற்றேனோ?’

வேத விளக்கினை –வேதமாகிற விளக்காலே காணப்படுமவனை.–வேதத்துக்கு விளக்கு’-‘வேதத்தைப் பிரகாசிக்கச் செய்கின்றவனை’-நெஞ்சில் பிரகாசிப்பதுவும் துக்கத்திற்குக் காரணம் ஆகாநின்றது. என்றது,-‘மயர்வு அற மதிநலம் அருளினன்’ என்கிற ஞான பத்திகள் இரண்டும் கழுத்துக் கட்டியாய் விட்டன,’-கண்டு அனுபவிக்கவும் ஒட்டாது,
மறந்து பிழைக்கவும் ஒட்டாது,’ என்றபடி-

————-

தழுவி நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன்றனைக்
குழுவு மாடம் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல்
வழு விலாத ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இப்பத்தும்
தழுவப் பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே.
–4-7-11-

தழுவி நின்ற காதல் தன்னால்-நான் விடுவேன்’ என்றாலும் விட ஒண்ணாதபடியாய் உடன் வந்தியான அளவு கடந்த காதலாலே-தாமரைக் கண்ணன் தன்னை –இந்தக் காதலுக்குக் கிருஷி பண்ணின –நேத்திரபூதரைச் சொல்லுகிறார்.-அந்தரங்கர் -என்றுமாம் –செந்தாமரைக் கண்ணோடு மறப்பற என்னுள்ளே மண்ணினான் -என்னக் கடவது இறே -இது இறே மதி நலம் அருளின படி

குழுவு மாடம் தென் குருகூர்-‘ஆழ்வார்க்குத் துக்கம் மிக மிகச் சர்வேசுவரன் வரவு தப்பாது’ என்று திருநகரி குடி நெருங்கிக் குளிர்ந்து தேறினபடி-ஆழ்வாருடைய மனநலம் ஒருவர்க்கும் பிறக்கமாட்டாதே அன்றோ? தழுவப் பாடி-அதிலே சிறிது அணைய நின்றாகிலும்-காண ஆசைப்பட்டுக் கூப்பிடுகிற இவ்வுலகத்தைக் கழித்து, எப்பொழுதும் அனுபவிக்கத் தக்க பரமபதத்திலே புகப்பெறுவர்.-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -71 -ஊழி களாய் உலகு ஏழும் உண்டான் –எங்கனேயோ அன்னைமீர்காள் -5-5-

March 8, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

தலைவி களாம் பழம் ஆழி வண்ணம் போல் உள்ளது என்றதே கொண்டு அன்னை -தாயானவள்
பிறக்கும் போதே தாயார் போல் இவள் நான் படும் கஷ்டம் அறியாதவள்-நாழ்-சாமர்த்தியம்-பல பல நாழ் சொல்லி சிசுபாலன் போல்-திருத்தாயார் -செவிலித்தாயார் வெறுத்துப் பேச-தோழிக்கு தலைவி அப்படி பேசவில்லை நீ சொல்லி -தப்பு உண்டோ உரையீர்-தாய்க்கு பரிகாரம் உரையீர் என்றுமாம்-உபாயாந்தர சம்பந்தம் என்று கொள்வானோ என்று–எங்கனேயோ அன்னைமீர்காள் -5-5-இதன் விவரணம்–ஊழி-கால உபலஷித்த அனைத்து பதார்த்தங்களும் நிர்வாஹகன்-சொல்ல வேண்டியவற்றை எல்லாம் சொல்லி என்று இலோம் சொன்னால் தாயார் இன்னாவாள் என்று –

அவதாரிகை –களவிலே புணர்ந்து நீங்கின தலைமகன் –இவள் ஆற்றாமையை பரிகரிக்கைக்காக
இவள் வர்த்திக்கிற தேசத்தில் தன் நிறத்தோடு போலியான பழங்களை சிலர் விற்பர்களாக பண்ணி –
இவளும் அத்தைக் கண்டு தரிக்க –அத்தை தாயார் நிஷேதிக்கிறாள் – தாயார் சொல்லுகிற மிகையை தலைமகள்  தோழி மாருக்கு சொல்லுகிறாள்–செவிலி  வெறுத்தலைத் தலைவி   தோழியர்க்கு உரைத்தல் —உண்டு ரக்ஷித்தான் -காரணம் ரஷகன் -சொன்னால் –காரணந்து த்யேய -உபாசகன் பேச்சு என்று கொள்வானோ என்று அஞ்சும் தாயார்-

இப்படித் தளர்ந்தவர் தம்முடைய ப்ராவண்ய அதிசயத்தாலே பல வை லக்ஷண்யத்தின் பெருமையை அனுசந்தித்து வார்த்தை சொன்னபடியைக் கேட்ட பரிவுடையார் இவர் ப்ராப்ய ப்ராவண்யத்தாலே சொன்ன பாசுரம் என்று அறியாதே சாதநந்தர நிஷ்டரைப் போலே உபாஸ்ய வேஷத்தைப் போற்றி விடுகிறாராக நினைத்துப் பரிவாலே நியமித்த பாசுரத்தைத் தம்முடைய ஸூஹ்ருத்துக்களுக்கு ஆவிஷ் கரித்து இவர்கள் நெஞ்சு அறியாமல் ஆரோபித்துச் சொல்லுகிறார்கள் என்று அருளிச் செய்து அந்த ஸூஹ்ருத்துக்களை விட்டுப் பரிவரைத் தெளிவிக்கும் பாசுரத்தை-தலைவன் அடியான தலைவி தன் ஆர்த்தியை ஊரார் முதலான குறியாலே அறிந்து அன்னை முனிந்த பாசுரத்தைத் தோழிமார்க்கு யுரைத்து அவர்களால் தெளிவித்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு –அவதாரிகை களவிலே புணர்ந்து பிரிந்த தலைமகன் இவள் ஆற்றாமையைப் பரிஹரிக்கைக்காக இவள் வர்த்திக்கிற தேசத்தில் தன் நிறத்தோடு போலியான பழங்களைச் -பலங்களைச் – சிலர் விற்பார்களாகப் பண்ண-இவளும் அத்தைக் கண்டு தரிக்க அத்தைத் தாயார் அறிந்து நிஷேதித்துச் செய்கிற மிகையைத் தலைமகள் தோழிமார்க்குச் சொல்லுகிறாளாய் இருக்கிறது

ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம் பழம் கண்டு
ஆழி களாம்  பழ வண்ணம் என்றேற்கு அக்தே கொண்டு அன்னை
நாழி வளோ வென்னும் ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்
தோழிகளோ உரையீர் எம்மை யம்மனை சூழ் கின்றவே 
– – -71-செவிலித் தாயின் கோபத்தைத் தலைவி தோழியிடம் கூறுதல் –எங்கனேயோ  அன்னைமீர்காள் -5-5-

ஊழிகள் ஆய்–காலங்களுக்கு நிர்வாஹகனாய் (மஹாகல்பகாலத்தின் முடிவிலே)
உலகு ஏழும் உண்டான்–உலக முழுவதையும் திருவயிற்றில் வைத்துக் காத்தருளியவன்
என்றிலம்–என்று (யாம் தலைவனது பெயர் பெருமை தொழில் முதலியவற்றை வெளிப்படையாகக் ) கூறினோமில்லை.
களா பழம் கண்டு–களாப் பழத்தைப் பார்த்து
பழம் வண்ணம் ஆழி என்றேற்கு–‘இப்பழத்தின் நிறம் கடலின் நிறம்’ என்று(குறிப்புப் பொருளொன்றுங் கருதாமல் இயல்பாகச்) சொன்ன எனக்கு
அஃதே கொண்டு–அந்தச் சொல்லையே பொருளாகக் கொண்டு
அன்னை–(எனது) தாய்
இவளோ நாழ் என்னும்–‘இப்பெண்பிள்ளையோ (என் சொற்கேளாது தன் நினைவின்படி) சுதந்தரமாய் நடக்குஞ் செருக்குடையவள்’ என்று (கடுஞ் சொற்) கூறுவன்;
ஞானம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்–உலகமுண்ட அத்தலைவனது நிறத்தைச் சொன்னவாறு-இது என்று குற்றங் கூறுவன்;
தோழிகளோ–தோழிகளே!
எம்மை அம்மனை சூழ்கின்ற–எம்மை எமது தாய் மாறுபட நினைத்து ஏறிட்டுச் சொல்லுஞ் சொற்களுக்கு
உரையீர்–நீங்கள் (சமாதானஞ்) சொல்லுங்கள்

எங்கனே நீர் முனிவது என்னை யினி நம்பி அழகு
இங்கனே தோன்றுகின்றது என் முன்னே -அங்கன்
உரு வெளிப்பாடா வுரைத்த தமிழ் மாறன்
கருதும் அவர்க்கு இன்பக் கடல்
—45-உறங்குவான் போல் யோகு செய்த பெருமான் -என்று ரஷகனுடைய குண ஞானத்தாலே மீளவும் தெளிவு குடி புகுந்து-நம்பியைத் தென்குருங்குடி நின்ற -1-10–என்று
முன்பு அனுபூதமான ஸ்ரீ நம்பி உடைய வடிவு அழகு நெஞ்சிலே ஒருபடிப்பட பிரகாசிப்பிக்கையாலும்
யதா மநோ ரதம் அவ் வடிவு அழகைக் கண்ணால் கண்டு அனுபவிக்கப் பெறாமையாலும் ப்ரீத்ய அப்ரீத்ய சமமாய் செலுகிற தம் தசையை ஸ்ரீ நாயகனோடு கலந்து பிரிந்து உரு வெளிப்பாட்டாலே உருவ நோவுபட்டு செல்லுகிற ஸ்ரீ பிராட்டி பேச்சாலே அருளிச் செய்கிற எங்கனயோ – வில் அர்த்தத்தை-எங்கனே நீர் முனிவது -என்று தொடக்கி அருளிச் செய்கிறார் -என்கை —அது ஆண் தன்மையான அனுபவம் -இது பெண் தன்மையான அனுபவம் – உரு வெளிப்பாடு –முன்பு அனுபூத அனுபவம் இருக்க ரசாந்த்ரம் தேடுவது அன்றோ –சென்னி நீண் முடி யாதியாய வுலப்பில் அணி கலத்தன் கன்னல் பாலமுதாகி வந்து என்நெஞ்சம் கழியான்-என்று ஸ்ரீ ஆழ்வார் தமக்கு அவ் வாகாரம் இனிதாய் இருக்குமா போலே அவர் சம்பந்திகள் ஆனவர்களுக்கும் ஸ்ரீ ஆழ்வார் அப்படியே இருப்பார் -என்றபடி –

ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம்–இப்படி சொன்னேன் ஆகில் குற்றமாம் இறே
கால உபலஷித ஸகல பதார்த்தங்களுக்கும் நிர்வாஹகனாய்-இவற்றை பிரளயம் வர எடுத்து திரு வயிற்றிலே வைத்து நோக்கின மஹா உபகாரகன் என்றிலேன்–குண நிஷேதத்தைப் பண்ணப் புக்கவர்கள் ஸத்ய ஞானாதி பதங்களுக்கு வ்யாவர்த்ய பதத்தாலே பேதம் சொல்லுமா போலே
இவளும் குண ஸத் பாவத்தை சாதிக்கைக்காக வ்யதிரேக முகத்தாலே குணங்களை சொல்லித் தரிக்கிறாள்–இவளுக்குச் சொல்லுகைக்கு பிராப்தி யுண்டு-அவளுக்கு இதிலே ஒரு கருத்து உண்டு என்று நிஷேதிக்கைக்கு பிராப்தி யுண்டு-உபகரித்த விஷயத்தில் உபகாரம் கொண்டவர்களும் பேசாது இருக்க ஒண்ணாது இறே-சேதனரானார் பேசாது இரார்கள் இறே-இவளுக்கு இது விபாகத்திலே பொல்லாதாம் என்று ஆயிற்று அவள் நிஷேதிக்கிறது -குணாதிக விஷயத்தில் ப்ராவண்யம் கிலேச அவஹமாய்த் தலைக்கட்டும் என்று இருக்கும் இறே–ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம்-இப்படிச் சொன்னாள் ஆகில் குற்றம் ஆகுமே-எதிர்மறையாய்ச் சொல்லி குணம் சொல்லுகிறாள்சத்யம் ஞானம் அனந்தம்-ப்ரஹ்மம் ச விசேஷம் -கூடியே இருக்கும் -குணம் குணி இரண்டும் வருமே–விஸிஷ்ட ப்ரஹ்மம்-ஏகமேவ ப்ரஹ்மம்-ப்ரஹ்மம் ஒன்றே சத்யம் அத்வைதி–ஞான மயமாகவே இருக்கும் சத்தியமாக இருக்கும்-ஞானம் சத்யம் கூடியதாக சொல்ல மாட்டார்கள்-அசத்தியம் வேறுபட்டதாய்-எல்லாவற்றையும் விட வேறுபட்டதாய்-அபேதம் சித்திக்க மாயாவாது-தர்சனம் பேத ஏவச -தேவப் பெருமாள் ஆறு வார்த்தைகள்-ஈஸ்வரன் நிர்குணன் என்று கூறும் மாயாவாதிகள் இப்படி கூறுவார்கள்-ஸத்ய ஞானாவாதி வியாவர்த்தம் –-எதிர்சொல் பொய் -ஜடம் ஞான சூன்யம் -பரிச்சின்னம் -சொல்களைக் கொண்டு இவை இல்லாமல் வேறுபட்டதாய் ப்ரஹ்மம் இருக்கும் என்பர்–சத்யம் என்கையால் சத்யாதி வேறுபாடு-ஹனானாம் ஜடம் வேறுபாடு-அனந்தம் -பரிச்சின்ன வேறுபாடு–அசத்தியத்வம் கூடி இருக்கும் வருமே -இங்கும் பேதமே சித்திக்கும்-கூடியே இருப்பதால் ப்ரஹ்மம் விசிஷ்டம் தானே சித்திக்கும் -பிரளயம் வர தனது வயிற்றிலே வைத்து ரஷித்தவன் அல்லேன் என்று சொன்னேன் அல்லேன்–குணங்களை சொல்லி தரிக்கிறாள்–உண்டான் -உண்மை -நாம் சொல்ல வில்லை -உண்மையை எனது வாயால் சொல்ல வில்லை உண்ணவில்லையே ஆகுமோ -ஆழமான அர்த்தம் -இவளுக்கு சொல்லுகைக்கு பிராப்தி உண்டு–அவளுக்கு நிஷேதிக்கவும் பிராப்தி உண்டு–அபகரித்த விஷயத்தில் உபகாரம் கொண்டவர்கள் பேசாமல் இருக்க ஒண்ணாதே -சேதனர்கள் ஆனால் பேசாமல் இருக்க மாட்டார்களே -குணாதிக விஷயத்தில் இவ்வளவு ஈடுபட்டால் கிலேஸிக்க வேண்டி வருமே–இவளும் குணம் சாதிக்கவேஏழு உலகும் உண்டான் சொல்லி சொன்னேன் அல்லேன் என்று தப்பிக்கப் பார்க்கிறாள்

பழம் கண்டு புரோ வர்த்தியான பதார்த்தங்களை கடமாகில் கடம் என்றும் படமாகில் படம் என்றும் சொல்லக் கடவது இறே-பிள்ளாய் கண்டது சொல்லுகையும் குற்றம் ஆவதே–ஆழி களாம் பழ வண்ணம் என்றேற்கு –-களாம் பழ வண்ணமானது ஆழி போலே இருந்தது-என்று இத்தனை கிடி கோள் நான் சொல்லிற்று – அவள் ஆழி வண்ணரை அன்றா சொல்லிற்று -என்று கொண்டாள் அவள் –அக்தே கொண்டு –இவ் உக்தி மாத்ரத்தில் பர்யவசியாதே இதுக்கு-வேறு ஒரு கருத்து உண்டு என்று கொண்டு –அன்னை –இவள் பிறந்த அன்று தொடங்கி தாயாயோ-வளர்ந்தது – ஒரு கால் பெண் பிள்ளையாயும் வளர்ந்திலள் போலே காணும்  –குற்றம் உண்டாகில் பிராப்தம் இறே –குற்றம் இல்லாத இடத்திலும் நியந்த்ரு நியாம்ய பாவம் அமையுமோ நியமிக்கைக்கு –நாழ் இவளோ என்றும் –நாமும் எல்லாம் பழம் கண்டது சொல்லிப் போருகிறோம் இறே –இவளுக்கும்-நாம் சொல்லுகிற அளவே அமையாதோ –இவளுக்கு ஓர் ஏற்றம் என் செய்ய வென்னா நின்றாள் –நாழ் -என்று தரம் உடைமை – அத்தாலே ஏற்றத்தை சொல்லுகிறது –அதாகிறது-நருவட்டாணித் தனம் –இவளுடைய ஏற்றம் எது என்னில்
ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்றும் –பிரளய ஆபத்திலே ஜகத்தை அடங்க வயற்றிலே வைத்து நோக்கிய அக் குணத்திலே  வித்தையாய் ஆற்ற மாட்டாமை சொன்ன வாரத்தை யன்றோ  இது -என்னா  நின்றாள் –தோழிகளோ உரையீர் –நீங்கள் முன்னம் என்னோடு சமான சுக துக்ககைகள்   அன்றோ தாய்மார் அல்லீர்கோள்–எம்மை அம்மனை சூழ் கின்றனவே  – என்னை மனைப்பாம்பு போலே புக்க விடமும் புறப்பட்ட விடமும் தானே யாய் நலிகிறபடிக்கு நீங்கள் தானே ஏதேனும் சொல்ல வல்லீ  கோளோ–சூழ்கின்ற –முத்துலை இட்டுக் கொண்டு (ஒன்றுக்கு மூன்றாகச் சொல்லி )இவள் நலியா நின்றாள் –காண்கிறதும் சொல்லுகிறதும் கிடக்க –இதுக்கு வேறே ஒரு கருத்து உண்டு என்று இவள் நலிகிறதற்கு  நீங்கள் தான் ஒரு பரிகாரம் சொல்லீ கோளே-

ஊழி களாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம் பழம் கண்டு களாம் பழ வண்ணம்
ஆழி என்றேற்கு அக்தே கொண்டு அன்னை நாழி களோ வென்றும் ஞாலம் உண்டான்
வண்ணம் சொல்லிற்று என்றும் எம்மை அம்மனை சூழ்கின்ற வற்றை தோழிகளே உரையீர்-என்று அந்வயம் –

மனைப் பாம்பு -கிரகத்தில் வர்த்திக்கிற பாம்பு முத்துலை இட்டு -நீர் ஏற்ற ஒரு குழி கல்லி ஏற்றம் இட்டு அதிலே ஏற்றி மீண்டும் ஒரு குழி கல்லி ஏற்றம் இட்டு ஏற்றுவாரைப் போலே –ஒன்றைச் சொல்லி அதுக்கு மேலே ஒன்றை கற்ப்பிக்கிறாள்  – பழம் என்கிறது காண்கிறது ஆழி –ஆழி வண்ணன் -என்கிறது சொல்கிறது —உரையீர் -நான் சொல்வதில் குற்றம் உண்டோ என்னுதல் -இவள் சொல்லுக்கு பரிகாரம் சொல்லுங்கோள்  என்னுதல்-என்றேற்கு -என்று சொன்னேன் என்றபடி
வட்டாணி -சமத்காரம் -சாமர்த்தியமாக சொல்லுதல் -நறு வட்டாணி -நல்ல சமர்த்து-மனைப் பாம்பு கடியா விட்டாலும் பயங்கரமாய் இருக்குமா போலே-இவள் சொன்னது செய்யா விட்டாலும்-பயங்கரமாய் இருக்கும் என்றபடி-முத்துலை ஒன்றுக்கு மூன்று சொல்லுகை -கடியன் கொடியன் -அப்படிப்பட்டவன் பிரளய காலத்திலேயே வந்து உதவினான் -என்று வ்ருத்த கீர்த்தன முகேன உபகாரத்தை ஸ்த்ரீகரிக்கைக்காக--ஸத்ருச வஸ்துக்களை ஆகிலும் கண்டால் ஒழிய ஜீவிக்கக் கூடாமையாகிய
ப்ராவண்ய அதிசயத்தைக் கண்ட சில அன்பர்-சாதனாந்தர பரராக பிரமித்து இவரது ப்ராவண்யத்தை நிஷேதிக்க தம்முடைய அபிப்ராயத்தை மற்றும் சில ஸூஹ்ருத்துக்களுக்கு ஆவிஷ்கரித்து
அவர்களைக் கொண்டு இவர்கள் பிராந்தியைப் போக்கினை பாசுரத்தை நாயகனுடன் ஒத்த பாதார்த்தங்களைக் கண்டு தரிக்க நினைத்த விரஹிணியான நாயகியை நிஷேதித்த தாயமார்க்கு
சகிகளைக் கொண்டு தன் அபிப்ராயத்தை அறிவித்து தெரிவித்த நாயகியின் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்-ஆழி -கடல்-வண்ணமே இந்த களாம் பழம் என்றேன்-ஆழி வண்ணனின் வண்ணம் என்று சொன்னேனோ-ஆனால் அன்னை இவள் மனதில் அவனையே நினைத்து இப்படியே சொல்கிறாள் என்கிறாள்-காரணந்து த்யேய -உபாசகர் போல் சொல்கிறாள் என்று ஒன்றுக்கு மூன்றாகச் சொல்லி அன்றோ சொல்கிறாள்

அலர் பரவும் தாய் முனியவும் இருக்கிற இக்கள வொழுக்கம் இனி ஆகாது –-மணந்து கொள்ளல் வேண்டும் என்று விவாஹ ருசியை வெளியிட்டவாறு –ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம்–ஊழிகள்-பன்மை காலத்தின் பகுப்புக்களைக் குறிக்கும் -சகல காலங்களுக்கும் நிர்வாஹகன் -சர்வ ரக்ஷகன்-பழம் கண்டு-ஆழி களாம் பழ வண்ணம் என்றேற்கு-பழத்தின் நிறம் கடலின் நிறம் என்றே சொன்னேன் – நாழ் குற்றம் –தாயின் முனிவைத் தலைவி தோழியர்க்கு உரைத்த பாசுரம் இது.
நாயகனைக் களவொழுக்கத்தாற் புணர்ந்து பிரிந்து நாயகி வருந்துமளவில் அக்களவொழுக்கம் மெல்ல வெளிப்பட்டு ஊரெங்கம் பழி பரவ,அதனை யறிந்த தாய் ‘இது நம் குடிக்குக் குறையாம்’ என்று கருதி இவளை நிர்பந்தத்திலே வைத்திருக்க, அவளுக்கு அஞ்சி நாயகி தன் ஆற்றாமையால் வாய் பிதற்றுதலொன்றுஞ் செய்யாத ஆற்றாமையை அடக்கிக் கொண்டிருக்க, அவ்வளவிலே சிலர் களாப்பழங்கொண்டு விற்க, அதனை நோக்கி நாயகி ‘இதன் நிறம் கடல்போலுள்ளது’ என்று பாராட்டிக் கூற, ஏற்கனவே இவன்மேல் குறிப்புக் கொண்டுள்ள தாய் ‘இவள் இப்படி சொன்னது நாயகனது நிறத்தைப் பாராட்டிக் கூறியபடியாம்’ என்று உட்கொண்டு இப்படியும் ஒரு அடங்காத்தன்மை யுண்டோ’ என்று வெறுக்க, அதற்குக் கலஙகிய நாயகி தோழியரை நோக்கி ஒருவகையான உட்கருததையுங் கொண்டு சொல்லவறியாத எனது தன்மையை நீங்கள் அவளுக்குச் சொல்லி அவளுடைய கோபத்தைத் தனிப்பீராக வென்று வேண்டிக் கொள்ளுகிறாளென்க.–சில பிரதிபந்தங்களினால் நாயகனை அடையப் பெறாத நாயகி, அவன் தன்னை வெளிப்படையாக விரைவில் விவாஹஞ் செய்து கொள்ள வேண்டுமெனக் கருதிச் சிறைப்புறத்தானாகுமளவில் தோழியர்க்குச் சொல்லுவாள் போன்று
ஊர்ப்பழி மிகவும் பரவியிருக்கிறபடியையும் அதனைக் தாயுமறிந்து வெறுக்கிறபடியையும் தெரிவிக்கும் முகத்தால் விரைவில் வெளிப்படையாக விவாஹஞ் செய்து கொள்ளத் தூண்டியதாமிது.
அவர் பரவவும் தாய் முனியவும் இருக்கிற இக்களவொழுக்கம் இனி ஆகாது, மணந்து கொள்ளல் வேண்டும் என்று விவாஹ ருசியை வெளியிட்டவாறு.–ஊழிகளாய் உலகேழு முண்டானென்றிலம் = ஊழிகள் என்ற பன்மை காலத்தின் பகுப்புகளைக் குறிக்கும்; ஸகல காலங்களுக்கும் நிர்வாஹகனாய் மஹாகல்பகாலத்தின் முடிவிலே திருவயிற்றில் வைத்துக் காத்தருளியவனான எம்பெருமான் என்று அவன் திருநாமத்தையோ தொழிலையோ பெருமையையோ ஒன்றையும் நான் வெளிப்படையாகச் சொன்னேனில்லை;-ஒருகால் அப்படி சொல்லியிருந்தேனாயின் தாய் குறை கூறுவது தகுதியேயாம்;
அந்தோ! ஆதாரமொன்று மின்றிக்குறை கூறுகின்றானே யென்றவாறு. ஊழிகளாய் என்பதற்கு- கல்பமும், அக்காலத்தில் அழிவு செய்கிற கடல் நெருப்பு முதலியனவுமாகிய இவற்றின் வடிவமாய் என்றும் உரைப்பர். என்றிலும்- என்று சொல்லிற்றிலோம்.–ஊழிகளாயுலகேழு முண்டான என்று சொல்லவில்லையாகில் பின்னை என்ன வென்று சொல்லிற்றென்ன. பழங்கண்டு ஆழிகளாம் பழ வண்ணமென்றேற்கு’ என்கிறான். (விற்பனைக்காக வீதியில் வந்த) களாப்பழத்தைப் பார்த்து
இப்பழத்தின் நிறம் கடலின் நிறம் போன்றுள்ளதென்று உட்கருத்து ஒன்றுமின்றியே இவ்வளவே சொன்னேன்:குறிப்பொருளொன்றுங் கருதாது இயல்பாகச்சொன்ன இச்சொல்ல¬யே பற்றிக்கொண்டு எனது தாய் “இப்பெண்பிள்ளை என் சொற்கேளாது தன் நினைவின்படி ஸ்வதந்த்ரமாய் நடக்குஞ் செருக்குடையவளாயினள்’ என்று கடுஞ்சொல் கூறத்தலைப்பட்டாள். களாம் பழவண்ணம் கடல் வண்ணமென்று இவள் சொன்னதானது வெறுமனோ? உலகமுண்ட பெருவாயனுடைய திமேனி நிறத்தைச்சொன்னபடியன்றோவென்று குற்றங்கூறுகின்றான்; தோழிமார்களே! இப்படி எனது தாய் என்னை மாறுபட நினைத்து ஏறிட்டுச் சொல்லுஞ் சொற்களுக்கு நீஙகளே ஸமாதானஞ் சொல்லித் தெளிவிக்க வேணுமென்றாயிற்று.-நாழ் –குற்றம்; “நாமா மிகவுடையோம் நாழ்” “நாழாலமர் முயன்ற” என்ற திருவாந்திதிப் பாசுரங்களில் இப்பொருளில் பிரயோகங்காண்க.-பெரியாழ்வார் திருமொழியில் “பல நாழஞ்சொல்லிப் பழித்த சிசுபாலன்” என்ற விடத்தில் இச்சொல்‘அம்’சாரியை பெற்று வந்தமையும் காண்க. இங்கே, நாழுடையாள் என்ற பொருளில் ‘நாழ்’ என்றது உபசார வழக்கு.

இப்பாட்டுக்கு ஸ்வாபதேசப் பொருளாவது-–ஆழ்வார் எம்பெருமானிடத்தில் தமக்கு உண்டான ஈடுபாட்டினை மிகுதியால் அப்பெருமானது பயனாகிய வடிவத்தின் கடல்போலளவிடப்படாத பெருமையைப் பாராட்டி ஒரு வார்த்தை சொல்ல, அது கேட்ட ஞானிகள் அவ்வார்த்தைக்கு வேறு பொருள் சங்கித்து,-ஸாதநாந்தர நிஷ்டையுடையோர்போல உபாஸஸநக்கு உரியதொரு காரணவடிவத்தைப் போற்றினதாக நினைத்து அது தகுதியன்றென்று அறியாமல் ஆரோபித்துச் சொல்லும் வார்த்தைக்கு என் நினைவறிந்து பழகிய நீங்கள் மறு மாற்றஞ் சொல்லி இவர்களைச் சொல்லும் வார்த்தைக்கு என் நினைவறிந்து பழகிய நீங்கள் மறு மாற்றஞ் சொல்லி இவர்களைத் தெளிவியுங்க ளென்று அருளிச் செய்தலாம். (ஊழிகளாய் உலகேழு முண்டானவற்றிலம்) ஸாதுநாந்தா நிஷ்டையுடையார்போல உபாஸகைக்கு உரிய காரணவடிவத்தைச் சொன்னோமில்லை.
(பழங்கண்டு ஆழி களாம்பழ வண்ணமென்றேற்கு.) பயனாகிய வடிவத்தைக் குறித்து அவ்வடிவம் கடல்போலும் என்று கூறிய எமககு.(அஃதே கொண்டு) அந்தச் சொல்லுக்கே வேறு பொருள் கொண்டு. (அன்னை) ஞானிகள்(இவளோ நாழ் என்னும்) இவரே பரதந்த்ரமான ஸ்வரூபத்துக்கு விரோதியான ஸ்வாதந்திரியத்தை யுடையாரென்று குறையேறிட்டுச் சொல்வார்கள்.(ஞாலமுண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்) உபாஸகைக்கு விஷயமாகின்ற காரணவடிவத்தை யாம் கூறியதாகக் குற்றங்கூறுவார்கள்.(அமனை எம்மை சூழ்கின்ற) தாய்போ லெம்மிடத்தும் பரிவுடையான் ஞானிகள் எமது ஸ்வரூபத்துக்கு எங்கே குறைபாடு வருகிறதோவென்று ஏறிட்டுச் சங்கித்த சங்கைக்கு (தோழிகளோ! உரையீர்) என நெஞ்சரிந்த அன்பர்களே! நீங்கள் பரிஹாரஞ் சொல்லித் தெளிவிக்க வேணும் என ஸ்வாபதேசப்பொருள் காண்க.-ப்ரபத்தி மார்க்கத்தை யனுட்டிப்பவர் எம்பெருமானது பயனாகிய வடிவத்தையே கருதிப் பாராட்டக் கடவரென்றும், அதுவே முக்தி பெறுவதற்குச் சிறந்த வழியாகுமென்றும், உபாஸகைக்கு உரிய காரண வடிவத்தையே பாராட்டி உபாளித்தல் முக்தி பெறுவார்க்கு அவ்வளவாகச் சிறவா தென்றும் உணர்க.

ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம்-மஹா கல்பமான காலங்களுக்கு நிர்வாஹகானாய்
(பூத பவ்ய பவத் பிரபு -காலங்களில் உள்ள வஸ்துக்களுக்கு பிரபு அங்கும் ) கால அவசாநத்திலே ஸப்த லோக உப லஷிதமான ஸமஸ்த ஜகத்தையும் பசியர் உண்டால் போலே அமுது செய்ததுவே பற்றாசாக
திருவயிற்றிலே வைத்து நோக்கினவன் என்று சொல்லிற்றிலோம்–பழம் கண்டு ஆழி களாம் பழ வண்ணம் என்றேற்கு-களாப் பழத்தைக் கண்டு அதின் நிறம் ஆழியின் நிறம் என்று சொன்னேனுக்கு-அக்தே கொண்டு-அந்தச் சொல்லிலே பொருள் கொண்டு–அன்னை-எனக்கு பிரியம் செய்து போந்த தாயானவள்–நாழி வளோ வென்னும்-இவள் தன்னிலே நடத்தும் ஸ்வ தந்தரையாய் இரா நின்றாள் என்னும்–நாழ்-என்று-மேனாணிப்பு-நறு வட்டாணித்தனம் என்றும் சொல்லுவார்-தோழிகளோ உரையீர்
என் நினைவு அறிந்து பரிமாறிப் போந்த நீங்கள்-நான் சொன்ன வார்த்தையின் உட்பாடு சொல்ல வேணும்-தோழிகள் -என்ற பன்மையாலே பலரும் சொல்லித் தெரிவிக்க வேணும் என்றபடி-எம்மை யம்மனை சூழ் கின்றவே –உள் ஓன்று வைத்துச் சொல்ல அறியாத எம்மைப் பெற்ற தாயானவள்
சூழ்ந்து ஏறிட்டுச் சொல்லுகிறவற்றை உரையீர் என்று இதற்கு மறுமாற்றம் சொல்லுகிறீலீர் -என்றுமாம்

இத்தால்-களாம் பழ வண்ணம் ஆழி போலும் -என்கையாலே-பல வேஷம் அபரிச்சின்னம் என்று
ஸூசிப்பித்ததாயிற்று–ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம் -என்கையாலே-உபாஸ்யமான காரண வேஷம் சொல்லிற்றிலோம் என்றபடி–நாழி வளோ வென்னும் ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்-என்கையாலே பரதந்த்ரமான ஸ்வரூபத்துக்கு விருத்தமான ஸ்வா தந்தர்யத்தை
ஏறிட்டமை சொன்னபடி (குகன் குக பரிகரங்கள் சங்கித்தால் போல் )தோழிகளோ உரையீர் -என்கையாலே-ஸ்வரூப விரோதி சங்கை பிறந்தால் நெஞ்சு அறிவாரை இட்டுத் தெளிவிக்க வேணும் என்றபடி–எம்மை யம்மனை சூழ் கின்றவே-என்கையாலே-பரிவுடையாரானார் ஸ்வரூபத்துக்கு எங்கே விரோதம் வருகிறதோ என்று ஏறிட்டு சங்கிப்பர் என்றதாயிற்று —

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம்–ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம்-இப்படி சொன்னேன் ஆகில் குற்றமாம் இறே -கால உபலஷித ஸகல பதார்த்தங்களும் நிர்வாஹகனாய் இவற்றை பிரளயம் வர எடுத்து திரு வயிற்றிலே வைத்து நோக்கின மஹா உபகாரகன் என்றிலேன் குண நிஷேதத்தைப் பண்ணப் புக்கவர்கள் ஸத்ய ஞானாதி பதங்களுக்கு வ்யாவர்த்ய பதத்தாலே பேதம் சொல்லுமா போலே
இவளும் குண ஸத் பாவத்தை சாதிக்கைக்காக வ்யதிரேக முகத்தாலே குணங்களை சொல்லித் தரிக்கிறாள்-இவளுக்குச் சொல்லுகைக்கு பிராப்தி யுண்டு அவளுக்கு இதிலே ஒரு கருத்து உண்டு என்று நிஷேதிக்கைக்கு பிராப்தி யுண்டு-உபகரித்த விஷயத்தில் உபகாரம் கொண்டவர்களும் பேசாது இருக்க ஒண்ணாது இறே-சேதனரானார் பேசாது இரார்கள் இறே இவளுக்கு இது விபாகத்திலே பொல்லாதாம் என்று ஆயிற்று அவள் நிஷேதிக்கிறது-குணாதிக விஷயத்தில் ப்ராவண்யம் கிலேச அவஹமாய்த் தலைக்கட்டும் என்று இருக்கும் இறே-பழம் கண்டு-புரோ வர்த்தியான பதார்த்தங்களை
கடமாகில் கடம் என்றும் படமாகில் படம் என்றும் சொல்லக் கடவது இறே-பிள்ளாய் கண்டது சொல்லுகையும் குற்றம் ஆவதே-ஆழி களாம் பழ வண்ணம் என்றேற்கு-களாம் பழ வண்ணமானது –அக்தே கொண்டு அன்னை

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-வியாக்யானம்–ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம்
ஸர்வ கல்ப நிர்வாஹகனாய்-லோகங்கள் ஏழையும் ஸ்வ முகம் கொண்டு தன் திரு வயிற்றிலே வைத்து ரஷித்தான் என்று சொல்லேன் அல்லேன்–பழம் கண்டு-களாம் பழத்தைக் கண்டு–ஆழி களாம் பழ வண்ணம் என்றேற்கு–இக் களாம் பழத்தின் வண்ணம் கருங்கடல் போன்றது என்ற அளவே சொன்ன எனக்கு–அக்தே கொண்டு அன்னை-அவ்வளவே கொண்டு எனக்குத் தாயானவள்–நாழி வளோ வென்னும்நாழ்-என்று நிறம் உடைமை-அத்தாலே ஏற்றத்தைச் சொல்லுகிறது-இவள் எங்களில் ஏற்றம் பெற்றவளோ என்னா நின்றாள்-நான் என்ன குற்றம் செய்தேனாய் இவள் என்னைப் பொடியுமது-இவ்வளவு அன்றிக்கே-ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும் இந்தப் பெண் இந் நிலத்தோடு கூடியவற்றை எல்லாம் உண்டவனுடைய வர்ணத்தைச் சொல்லிற்று என்னா நின்றாள்
நான் அங்கனே சொன்னேனோ–தோழிகளோ உரையீர்-ஓ தோழிகாள் -என் அன்னைக்கு உன் மகள் அங்கனே சொல்லவில்லை என்று சொல்லா நின்றாளே–அவளை நீ தூற்றாதே கொள் —என்னுங்கோள்-எம்மை யம்மனை சூழ் கின்றவே-என்னை மனைப்பாம்பு போலே நான் போன போன இடம் எங்கும் தான் சூழ்ந்து கொண்டாடியும் தூற்றியும் என்னைக் கொல்லா நின்றாள்-ஓ தோழி காள்
என்று இலம் என்றேர்க்கு என்கிற பஹு வசனம் இங்கனே தரிப்பாரைக் கூட்டிக் கொண்டுமாம் –

ஸ்வாபதேசம் —ஆழ்வார் அவன் வண்ணம் ஸ்வபாவம் கடல் போலே என்று சொல்வதைக் கேட்டு –
இது சாதனாந்தர நிஷ்டையில் உள்ளோர் வார்த்தை யன்றோ என்ன-என் நெஞ்சு ஆராயாமல் ஆரோபித்துச் சொன்ன வார்த்தை ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம்-உபாஸனைக்கு உரிய காரண வடிவத்தை சொன்னோம் இல்லை-பழம் கண்டு-ஆழி களாம் பழ வண்ணம் என்றேற்கு-பலத்தைக் கண்டு கடல் போலென்ற வடிவம் என்றே சொன்னேனே-அக்தே கொண்டு அன்னை-அந்த சொல்லுக்கே வேறே பொருளைக் கொண்டு ஞானிகள்-நாழி வளோ வென்னும்-பரதந்த்ர ஸ்வரூபத்துக்கு விரோதமான ஸ்வாதந்தர்ய வார்த்தை என்று ஏறிட்டுச் சொல்வார்கள்
ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்-உபாஸனைக்கு உரிய காரண வடிவைச் சொன்னேன் என்பர்-தோழிகளோ உரையீர் எம்மை யம்மனை சூழ் கின்றவே -ஏறிட்டு சங்கித்த சங்கைக்கு என் நெஞ்சு அறிந்த நீங்களே பரிஹாரம் சொல்லுங்கோள்-

ஸ்வா பதேசம் –-இத்தால் அவனோடு போலியாய் இருப்பது ஓன்று அல்லது தரியாதபடியையும் –
பகவத் விஷயத்தில் உண்டான பிராவண்ய அதிசயம் ஒருவராலும் மீட்க ஒண்ணாதபடி
இருக்கிறதையும் சொல்லுகிறது –

தாத்பர்யம்-சர்வேஸ்வரனை நேராகவே சேவிக்கா விட்டாலும் அவனுக்கு சத்ருச லௌகிக பதார்த்தம் கண்டு தரிக்க எண்ணி இருந்த ஆழ்வாரைக் கண்ட அன்பர் சாதநாந்தர- உபாயாந்தர -சம்பந்தம் ஆகிவிடுமோ என்று பிரமித்து ஆழ்வாருடைய பிராவண்யத்தை நிஷேதிக்க தம்முடைய அபிப்ராயத்தை வேறே சில ஸூஹ்ருத்துக்களுக்கு ஆவிஷ்கரித்து – எடுத்துச் சொல்லி இவர்களுடைய -பிராந்தியைப் போக்கச் சொல்லும் பாசுரத்தைத் தலைவியை நிந்திக்கும் திருத் தாயாரை ஸஹிக்களைக் கொண்டு சமாதானப்படுத்தும் பாசுரத்தால் அருளிச் செய்கிறார்–கீழே அநேகம் கல்பமாக போன இரவு கழிந்ததும்
விற்க வந்த களாம் பழத்தைக் கண்டு ஆழி வண்ணம்- கடல் வண்ணமாக இப்பழம் உள்ளதே -என்று சொல்ல தாயார் ஆழி வண்ணனான எம்பெருமானை இவள் நினைத்தே இவ்வாறு சொல்கிறாள் என்று நிஷேதிக்க-தோழிகளே நான் சகல ஜகத் ஸ்ரஷ்டாவானர் சகல ரக்ஷகன் சகல கல்யாண குண பரிபூர்ணன் ஸ்ரீயப்பதி ஆபத் சகன் என்று இவ்வாறெல்லாம் சொல்லி -அவனது திரு நாமமே சொல்ல வில்லையே-சிறிய திருமடல் யாராலே கல் மாரி காக்கப்பட்டது – ஆரால் இலங்கை பொடி பொடியாக வீழ்ந்தது -பெயர் சொல்லாமல் சொன்னது போல் -இவள் சொன்னேன் என்று சொல்லி சமாளிக்கிறாள்
இத்தால் நம்மை நிஷேதிப்பது யுக்தம் அல்லவே-நான் ஒன்றையும் சொல்லாமல்-பழம் கடல் வண்ணம் என்று கொள்ளாமல் -இவள் மகளது சாமர்த்தியத்தால் சர்வேஸ்வரன் வண்ணம் சொல்கிறாள் என்று அன்றோ நிஷேதிக்கிறாள் நீங்கள் சம சுக துக்கம் காணும் ஸஹிகள் அன்றோ இதுக்கு பரிகாரம் சொல்லுங்கோள் என்று தோழிகளைக் குறித்து சொல்கிறாள் –

5-5-எங்ஙனேயோ அன்னை மீர்காள்! -ப்ரவேஸம்-

மாசறு சோதி” என்ற திருவாய்மொழியில் “நாடும் இரைக்கவே, யாம் மடல் ஊர்ந்தும்” என்று மடல் ஊரப் பாரித்தாள்;
பாரித்தபடியே தலைக்கட்டப் பெறாமையாலே “ஊரெல்லாம் துஞ்சி” என்ற திருவாய்மொழியில்
1-ஊரெல்லாம் துஞ்சி உலகு எல்லாம் நள் இருளாய் என்று முதலிலே மடல் ஊருகைக்கு
விஷயந்தான் -பழிச் சொற்கள் -இல்லாதபடி பழி சொல்லுவாருங்கூட உறங்கினார்கள்’ என்று வெறுத்தாள்;
ஏசிப் பேசினால் தானே அவனைப் பற்றி ஸ்மரணம் வரும் –
2-“அம் சுடர வெய்யோன் அணி நெடும் தேர் தோன்றாதால்” என்று,
சூரியோதயத்திற்குச் சூசகமும் கூட இல்லையாயிற்று’ என்று வெறுத்தாள்;
3- “நீயும் பாங்கு அல்லை காண் நெஞ்சமே” என்று-வேறு – ‘ஒன்றை நினைத்துத்
தரிக்கைக்கு விரகு அற்றது’ என்றும் வெறுத்தாள்.

“மாசறு சோதி” என்ற திருவாய் மொழியில், பிராப்பியத்தைப் பெற வேண்டும் என்னும்
மனோ வேகத்தாலே உபாய அத்யவசாயம் கலங்கினபடி;
ஊரெல்லாம்” என்ற திருவாய் மொழியில், அந்த மனோ வேகமுங் கூடக் கலங்கினபடி; –
எரு நீர் இல்லாமல் பயிர் விளையாதே –
இத் திருவாய்மொழியில், ‘ரக்ஷகன் அவன்’ என்னும் தெளிவும் செல்லா நிற்க, பிராப்பிய ருசி நலிகிறபடி.
மடல் -பிராப்ய த்வரை -காள ராத்ரி வியசனம் -இழந்த உபாய அத்யவசாயமும் பிராப்ய த்வரையும் மீண்டதே –
மூன்று ஹேதுக்களும் போனத்தை அருளிச் செய்கிறார் மேலே

இந்தக் குறைகள் -மூன்று வெறுப்புகள்- எல்லாம் தீரும்படி போதும் விடியப் பெற்று,
அன்னையரும் தோழியரும் துஞ்சுவர்” என்கிற இழவு தீர
உகப்பாளும் பொடிவாரும் ஹிதம் சொல்லுவாருமாகப் பெற்றது இத் திருவாய் மொழியில்.
என்றது, பின்னர், உறவினர்கள் அனைவரும் உணர்ந்து,
1-“தீர்ந்த என் தோழி” என்ன வேணும்படி இவளுடைய துணிவு கண்டு உகப்பாளும்,
2- “எங்ஙனேயோ அன்னைமீர்காள் என்னை முனிவது நீர்” என்ன வேண்டும்படி பொடிவாரும்,
3-“தோழிமீர் என்னை இனி உமக்கு ஆசை இல்லை” என்ன வேண்டும்படி ஹிதம் சொல்லி அலைப்பாருமாகப் பெற்றது;
அவ் வழியாலே அவர்கள் தாம் இவ் விஷயத்தினை நினைப்பூட்டுகின்றவர்கள் ஆவர்களே அன்றோ.

சூரியனும் உதித்துப் பொருள்களைக் காணவும் பெறுகையாலே வியசனமும் பாலி பாயப் பெற்றது.
இவ்வளவு ஆஸ்வாசம் உண்டானவாறே, நெஞ்சு நினைத்துத் தரிக்கைக்கும் துணையாயிற்று என்றபடி.
இப்படி இரவு வியசனம் போம்படி போது விடியப் பெறுகையாலே ஒரு தரிப்பும் உண்டாய், அவனை அநுபவிக்கப் பெறாமையாலே
ஆற்றாமைக்கும் காரணமாய் நோவு பட்டுச் செல்லா நிற்க, உணர்ந்த உறவினர்கள் அனைவரும்,
நீ இப்படி இவ்விஷயத்தில் எல்லை இல்லாத காதலை யுடையவளா யிருத்தலாகிற இது உனக்குக் குடிப் பழி,
உன்னுடைய பெண் தன்மைக்குப் போராது, அவன் தலைமைக்கும் போராது’ என்று ஹிதம் சொல்லி மீட்கப் பார்க்க,
இவர்கள் உகந்தருளின நிலங்களின் வாசி அறியார்கள்’ என்று இருந்தாள் இவள்,

நீங்கள், சிலர் காட்டக் கண்டீர் கோள் அல்லாமையாலே இவ் விஷயத்தை உள்ளபடி அறிந்திலீர்கோள்;
நான் அங்ஙன் அன்றிக்கே, அவன் தானே மயர்வு அற மதிநலம் அருளித் தன்னைக் காட்டக்
காண்கையாலே உள்ளபடி கண்டேன்;
ஆகையாலே, நம்பியுடைய வடிவழகிலும் ஒப்பனை அழகிலும் ஆபரணச் சேர்த்தியிலும் பெருமையிலும்
நீல மேனி -1-வடிவு அழகு–நீல மேனி /-
2-ஒப்பனை அழகு–பூம் தண் மாலை /3-மின்னு நூலும் குண்டலும் -ஆபரண அழகு /4-பொன் முடி வேண்டற்பாடு
நான் உங்கள் ஹித வசனத்துக்கு மீளாதபடி அகப்பட்டேன்’ என்று இங்ஙனம் தம் படிகளைச் சொல்லா நிற்கச் செய்தே;
தம் முயற்சி கொண்டு அறிவார்க்கு அறிய ஒண்ணாதபடி பெற்றோமே அன்றோ,
இவ் வஸ்து தான் உண்டாகப் பெற்றால் நாம் பெற்ற போது பெறுகிறோம், பிறர் அறியாது
ஒழியப் பெற்றோமே யன்றோ’ என்னும் பிரீதியோடே தலைக் கட்டுகிறது.

ஸூவ யத்னத்தால் காண்பார் -அறிவரிய பிரான் -அறிவுக்கு அரிய –
பிரான் -உபகாரகன் –தன்னால் காட்டக் கொடுப்பவன் -ஆழி யங்கை பிரானை அலற்றி –
ஸ்வகத ஸ்வீகார நிஷ்டர்களுக்கும் உபாசகர்களுக்கும் கிட்ட அரியவன் –
பரகத ஸ்வீகார நிஷ்டர்களுக்கு அவன் காட்டக் காண்கையாலே-காணலாம் என்றபடி

ஆக, போதும் விடிந்து ஹிதம் சொல்லி அலைப்பாரும் உண்டாகப் பெறுகையாலே ஒரு தரிப்பும்,
அதுதான் நினைத்த விடியலாகப் பெறாமையாலே ஒரு பிரீதி இன்மையும்;
அவனை நினைக்கப் பெறுகையாலே ஒரு பிரீதியும்,
அதுதான் அநுபவமாகப் பெறாமையாலே ஒரு பிரீதி இன்மையும்;
சூரியன் உதித்துப் பொருள்களைப் பார்க்கப் பெறுகையாலே ஒரு பிரீதியும்,
அதுதான் அவனைக் காணப் பெறாமையாலே ஒரு பிரீதி இன்மையுமாய்;
பிரீதியும் பிரீதி இன்மையும் சமமாகச் செல்லுகின்றன.

நன்று; “ஏழையராவி” -7-7-என்ற திருவாய்மொழியும், ‘உரு வெளிப்பாடு’ சொல்லா நின்றதே,
அதற்கும் இத் திருவாய் மொழிக்கும் வேற்றுமை என்? என்னில்,
அதில், “இணைக் கூற்றங்கொலோ” என்றும், “உய்விடம் ஏழையர்க்கும் அசுரர்க்கும் அர்க்கர்கட்கும் எவ்விடம்” என்றும்
பாதகத் தன்மை உறைத்திருக்கும்; இதில், மேலே உண்டான துக்கம் நீங்குதல் உண்டாம்படி நினைத்துத் தரிக்கவும் பெற்று,
அது தான் அநுபவமாகப் பெறாமையாலே வந்த பிரீதி இன்மையுமாய், –
இப்படிப் பிரீதியும் பிரீதி இன்மையும் சமமாகச் செல்லுகிறதாக இருக்கும்.

1-ஜாபாலி பகவானும் வார்த்தை சொல்லி, ‘ஸ்ரீ வசிஷ்ட பகவானும் இக்குடியில் போந்த படிகள் எல்லாவற்றையும் சொல்லி,
இனி மீண்டு திருவபிடேகம் செய்துகொள்ள அமையும் என்ன, பெருமாள் ‘அங்ஙனம் செய்வது இல்லை’ என்று
முடிய நின்றபடியைக் கண்டவாறே, நகரத்து ஜனங்கள் எல்லாம் உகப்பது செய்தார்கள், வெறுப்பதும் செய்தார்கள்;
ரக்ஷகனானவன் தொடங்கின காரியத்திலே இப்படி முடிய நின்ற இடம் நம்முடைய ரக்ஷணத்துக்கும் உண்டே அன்றோ’ என்று
உகப்பதும் செய்தார்கள்; ‘அதனாலே நாம் பெற்றது என்? இப்போது பதினான்காண்டு இழந்திருக்கும்படி வேண்டி இருந்ததே!’ என்று
வெறுப்பதும் செய்தார்களே அன்றோ.
2-பிராட்டியைத் திருவடி தொழுதபோது, ‘நாம் இலங்கையை அடைவதற்குரிய ஆற்றல் உண்டாகப்பெற்றோமே அன்றோ’ என்று உகப்பதும்
செய்தான், ‘இவள் அவரைப் பிரிந்து இந்த நிலையில் இருப்பதே!’ என்று வெறுப்பதும் செய்தான்.
3-பிராட்டி, திருவடி வார்த்தையைக் கேட்டபோது “வாநர! உன்னால் சொல்லப்பட்ட பெருமாள் என்னை அல்லது அறியார்,
பிரிவாலே தளர்கின்றார் என்ற இரண்டு வார்த்தைகளும் விஷத்தோடு கூடின அமுதம் போல் இருக்கிறது” என்று,
பெருமாள் என்னைப் பிரிந்த இடத்தில் என்னை அல்லது அறிந்திலர் என்று சொன்னது எனக்கு இனியதாயிருந்தது,
அவர் பிரிவாலே தளர்கின்றார் என்று சொன்னபடியாலே வெறுப்பாய் இருந்தது என்றாளே அன்றோ.
அப்படியே, இவர்க்கும் பிரீதி அப்ரீதிகள் சமமாகச் செல்லுகின்றன.

திரு மங்கை ஆழ்வாரால் கடைசியில் பேசப் பெற்ற திவ்ய தேசம் –
சுந்தர பரி பூரணன் -நின்ற இருந்த கிடந்த நம்பிகள் திருக் கோலம் -ஆழ்வாராகவே திருவதரித்த எம்பெருமான் -அன்றோ –
நம் ஆழ்வார் விக்ரகம் தனியாக இங்கு இல்லை –
வைஷ்ணவ நம்பி -குருகியவன் -குறுங்குடி -நெடும் தகை -கரண்ட மாடு பொய்கை –உருவ வெளிப்பாடு -மானஸ பிரத்யஷம்
-5-3-/5-4/5-5- மூன்று காதல் தசைகள் -பேரமர் காதல் -பின் நின்ற காதல் கழிய மிக்கதோர் காதல்
நான்கு நாயகி பாவம் தொடர்ந்து -5/3 –5/4 –/5-5 தலைமகள் -5-6 தாயார் -அடுத்த நான்கும் நோற்ற நான்கு –

பிரத்யஷமாக தோற்றுவதே உருவ வெளிப்பாடு –ப்ரீதி அப்ரீதி -முனியே நான் முகனும் வரை மானஸ அனுபவம் தானே –
பூர்வ அனுபூத ரசத்தை மறந்து — ரசாந்தரமாகச் செல்லுவதே மானஸ அனுபவம் –
பரத்வம் பஜநீயத்வம் இத்யாதி -பராங்குச பக்தி கடல் தழும்பி இருக்கும்
இக்கரை அக்கரை தொட்டு காவேரி போவது போலே நடுவிலும் உண்டே -எல்லா மநோ பாவமும் உண்டே பூர்த்தியாக
அனுபூத ரசம் அனுபவியா நிற்கச் செய்தே -ரசாந்தரம் தேடிச் செல்வதே உருவ வெளிப்பாடு –
வ்ருஷே வ்ருஷே -பயத்தாலே மாரீசன் -உருவ வெளிப்பாட்டால் பயந்தான் –
இங்கு பிராவண்யத்தால் உருவ வெளிப்பாடு இவளுக்கு-

எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்!
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என்நெஞ்சமே
.–5-5-1-

என்னுடைய பிராவண்யத்தை நீக்குதற்குப் பார்த்தால், எனக்கு இவ்வளவான பிராவண்யத்தை விளைத்த நம்பியுடைய அழகினை அறிந்து அதனை அன்றோ பொடிவது நம்பியுடைய அழகினை அறிந்து அநுபவிக்கிற நீங்கள், அதிலே துவக்குண்டு இருக்கிற
என்னை மீட்கப் பார்க்கிறபடி எங்ஙனேயோ?நீங்கள் சொல்லுகிற வார்த்தைகளைக் கேட்டு
வளர்ந்தவள் அன்றோ நான்.-தாம் தாம் செய்வனவற்றை வயிற்றிற் பிறந்தார் செய்தவாறே குற்றமாமித்தனையேயோ.

புத்திரர்களாகவுமாம், சிஷ்யர்களாகவுமாம், பகவத் விஷயத்தில் ஓர் அடி வர நின்றவர்கள் சிலாகிக்கத் தக்கவர்களத்தனை அன்றோ;
கூரத்தாழ்வார் ஓரளவிலே நங்கையார் திருவடி சார்ந்தவாறே, ‘இன்னமும் ஒரு விவாகம் செய்து கொள்வேமோ’ என்று ஆராய்ந்து,
இது தான் கிரமத்திலே வந்து ஆழ்வானுக்கு விரோதமாகத் தலைக் கட்டும்;
இனித் தான் -ப்ரஹ்மசாரீ க்ருஹஸ்தோ வா வானப் பிரஸ்தோத பிக்ஷுக: அநாஸ்ரமீந திஷ்டேத்து தினம் ஏகம் அநாபதி”-சாமான்ய தர்மம்-
பிரஹ்மசாரி யாகவாவது இல்லறத்தா னாகவாவது வானப் பிரஸ்தனாகவாவது சந்நியாசி யாகவாவது ஒருவன் இருக்க வேண்டும்;
ஆபத்து இல்லாத சமயத்தில் ஒருநாள்கூட ஓர் ஆச்ரமத்திலும் சேராதவனாக இருக்கக் கூடாது” என்று சாஸ்திரம் சொல்லா நின்றது;
இந்தச் சாஸ்திரத்தின் அர்த்தத்தை அநுஷ்டிப்போமோ! பாகவத பரிசர்யையைச் செய்வோமோ! என்று ஆராய்ந்து,
அந்தச் சாமான்ய தர்மத்திற் காட்டில் இந்த விசேஷ தர்மமே பிரபலம்’ என்று அதனைத் தவிர்ந்தார்.

நங்கள் நம்பி–கடகர் களான -உங்களை அறியா விட்டால் அவ்விஷயத்தையும் அறியாது ஒழிய வேணுமோ என்கிறாள்.-இக்குடிக்கு -ஏக போகம் -முற்றூட்டுப் போலே காணும் நம்பியுடைய அழகு -சர்வேச்வரனை நோக்கிப் பல விரதங்களை நோற்றுப் பெற்றவர்களைப் போலன்றிக்கே, நம்பியை அடைந்தாயிற்று இவரைப் பெற்றது.
உடைய நங்கையார் நம்பியை அடைந்து ஆழ்வாரைத் திருவயிறு வாய்த்தார்’ என்பது பிரசித்தமே அன்றோ.-நெடுங்காலமும் கண்ணன் நீண்மலர்ப் பாதம் பரவி” அன்றோ பெற்றது.நம்பியை நான்–அகப் படுத்துகைக்கு அழகு சீலம் முதலிய குணங்களால் அத் தலை குறைவற்றிருக்குமாறு போலே ஆயிற்று,-அகப் படுக்கைக்குரிய ஆசையால் இத் தலை குறைவற்றிருக்கிறபடி என்பாள் ‘நம்பியை நான்’ என்கிறாள்.

காண்பதற்கு முன்னே மீட்டீர் அல்லீர்கோளே, இனி மீட்கப்போமோ? என்பாள் ‘கண்ட பின்’ என்கிறாள்.-தண்ணீர் போன பின்னர் அணையைக் கட்டுதல் அன்றோ நீங்கள் செய்கிறது என்றபடி.-கை மேலே ஒரு முகத்தாலே தான் அகப் பட்டபடியைச் சொல்லுகிறாள் மேல்:-சங்கினோடும் நேமியோடும் தாமரைக் கண்களோடும் செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே –கரு நிறமான திரு மேனிக்குப் பரபாகமான
வெளுத்த நிறத்தையுடைத்தான ஸ்ரீ பாஞ்சசன்யத்தோடும்,-இந்தக் கைக்கு இது ஆபரணமானால், வேறு ஒன்று வேண்டாதே தானே ஆபரணமாகப் போரும்படி
இருக்கிற திருச் சக்கரத்தோடும்,மலர்ச்சி முதலியவைகளால் தாமரை போன்று இருக்கிற திருக் கண்களோடும்,–இதனால், கண் காணக் கை விட்டுப் போயிற்றுக் காணும்.-கண்ட போது, நான் உன் சரக்கு அன்றோ, “தவாஸ்மி-உன்னுடையவன் ஆகிறேன்” என்ற முறுவலோடும்,-சம்சார யாத்திரையை முக்தன் மறக்குமாறு போலே, இவ் வருகுண்டான வற்றோடு அவ்வருகுள்ள வற்றோடு வேற்றுமை அற எல்லாவற்றையும் மறக்கும்படி செய்ய வல்லதான திரு அதரத்தோடும். –உங்கள் சொற்களை மறுத்தேனே யாகிலும் நம்பியுடைய திரு முகம் மறுக்க ஒண்ணாது –என் நெஞ்சமே –-உங்களைப் போலன்றிக்கே, அவன் தானே காட்டப் பெறுகையாலே முழுக்க அநுபவித்த என் நெஞ்சமானது.

மீண்டும் இப்போதாக ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் வர அருளிச் செய்கிறார்
எங்ஙனேயோ என்னை முனிவது நீர் – பிராவண்யமே ஸ்வபாவமாம்படி வளர்த்து வைத்து, இப் போதாகப் பொடிகிற படி எங்ஙனேயோ?-முன்பு நீங்கள் கற்பித்துப் போந்து, அது பயன் பட்டவாறே பொடியு மத்தனையோ?
கோலம்--உங்கள் ஹித வசனத்துக்கும் மீளாதபடியான அழகு.
திருக் குறுங்குடி நம்பியை- பரத்துவத்தில் முதன்மையிலேயோ அகப்பட்டது மீளுகைக்கு.
நம்பியை–குணங்களில் நிறைவின்மை உண்டாய்த் தான் மீளுகிறதோ
நான் கண்ட பின்--இவ் விஷயத்தில் ஆசை இல்லாமல் மீளுகிறேனோ.
சங்கினோடும்- ஸ்ரீ பாஞ்ச சன்யத்தோடே விசேஷித்து ஒரு சம்பந்தம் உண்டு காணும் இவளுக்கு; திரு வாயின் அமிர்த இனிமையை அறிந்திருக்கையாலே; ஒரு கலத்திலே ஜீவிப்பாரைப் போலே.-

————

என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே
தென்னன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திருமறுவும்
மன்னு பூணும் நான்கு தோளும் வந்தெங்கும் நின்றிடுமே.–
5-5-2-

என் நெஞ்சினால் நோக்கிக் காணீர்’-என்கையாலே உங்களுக்குப் பக்தி இல்லை என்கிறாள்- கண புரம் கை தொழும் பிள்ளையைப் பிள்ளை என்று எண்ணப் பெறுவரே’ என்னக் கூடியதாக இருக்க,-நம் வயிற்றிற் பிறந்த இதுவே காரணமாக, இவள் நின்ற நிலை பாராமல் நாம் பொடிந்தோமித்தனை அன்றோ” என்று-பின்னையும் உங்களை நீங்களே பொடிந்து கொள்ளுவீர்கோள்.-திருதராட்டிரரே! உமது வித்யையானது வித்யை அன்று, என்னுடைய வித்யையானது அழயாதிருக்கின்றது,-வித்யை அற்றவரும் இருளில் தள்ளப்பட்டவருமான நீர் கேசவனை அறிய மாட்டீர்” என்று,-தங்கள் தங்களுக்கு என்னவும் ஒரு கைம் முதலுடையார்க்கு அவனை அறியப் போகாது என்றதே அன்றோ.

வந்து எங்கும் நின்றிடும் – ‘உங்கள் ஹித வசனத்தின் படியே செய்ய வேணும்’ என்று நான் கடக்க நிற்கவும், அங்கேயும் பல வகையாக வாரா நின்றன.-“மர வுரி, மான் தோல் இவற்றை உடுத்திருப்பவரும், வில்லைத் தரித்திருப்பவருமான ஸ்ரீ ராம பிரானை, பாசக் கயிற்றைக் கையிலே யுடைய யமனைப் போன்று ஒவ்வொரு மரத்திலும் பார்க்கிறேன்” என்பது போலே,
உகப்பார்க்கும் உகவாதார்க்கும் பலம் ஒன்றாய் விட்டது. நான் எங்கே ஒதுங்குவேன், சொல்லிக் காணீர் கோள்.

————

நின்றிடும் திசைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும்
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா நெஞ்சுளும் நீங்காவே
.–5-5-3-

இராம பாணங்கள் ஒன்று செய்தது மற்றொன்று செய்யாதாப் போலே ஆயிற்று,
நம்பியுடைய அழகுகளும்-சேர்த்தி அழகு முக பேதத்தாலே நையும் –
ஒன்று செயல் அறுதலைப் பண்ணும், ஒன்று அறிவைக் குடி போக்கும்,
ஒன்று அறிவைக் கொடுத்து வருந்தப் பண்ணும். செயல் அற்றவள் ஆகா நின்றாள்,
அறிவு கெடா நின்றாள், வருந்தா நின்றாள் என்று என் குற்றமாக நினைத்துப் பொடியா நின்றீர்கோள்.

அன்னையரும் முனிதிர் – தெளிந்திருப்பார் தாம் பொடியப் பெற்றதோ. இவற்றிற்கெல்லாம் தாயா யிருக்கிற இப்படிச் செய்யக் கடவதோ.-தெளிவது கலங்குவதாய் இவை தாமே யாத்திரையாகப் போந்த நீங்களும் முனியா நின்றீர்கோள்.-இது, பெண் பிள்ளை வார்த்தை யானாலும், இங்கு, “அன்னையர்” என்றது,-அத்யவசாய நிஷ்டரான ஸ்ரீ வைஷ்ணவர்களை ஆகையாலே, அவர்களுக்கும் தெளிவதும் கலங்குவதும் உண்டு-யௌவனத்தில் நீங்கள் செய்து போந்தவற்றை அப் பருவத்தில் நான் செய்தவாறே குற்றமாயினவோ.
இந்தக் குடிக்காகப் பகவத் பிராவண்யமே யாத்திரை போலே காணும்.

நான் கண்ட பின் – ஆயுதம் பிடித்த பிடியில் வாசி அறியும் நான் கண்ட பின். வீரபத்தினி ஆகையாலே வாசி அறிவாளே அன்றோ!-பெருமாளுக்கு வில் எடுத்துக் கொடுப்பவள் பிராட்டி அன்றோ.-பெருமாள் ‘வில்லைத் தா’ என்ன, கொடுத்து, அவர் கையும் வில்லுமாய் நின்ற நிலையைக் கண்டவாறே,-நீர் இப்படி வில்லைத் தரித்தவராய்த் திரியப் புக்கால் உம்மை ரிஷிகள் வந்து சரணம் புகுவார்கள்;-அவர்களுக்குப் பகைவர்களான இராக்கதர்களோடு எதிரிட வேண்டி வரும்; அது பின்னை ஜாதிப் பகையாம்,
பின்னை நீரும் நானும் இரண்டு இடத்திலே இருக்க வேண்டிவரும்.
ஆன பின்னர், வில்லைப் பொகட்டுத் தாபத வேடத்தோடே திரிய அமையும்’ என்றாளே அன்றோ.-பெருமாள் பக்கல் சாங்கமே -பஷ பாதம் -சார்ங்கம் -சாடு -அன்றோ இப்படிச் சொல்லுவித்தது.-திவ்விய ஆயுதங்களுக்கு, ஆயுதங்கள் ஆபரணங்கள் என்னும் இரண்டு இடங்களிலும் மெய்க் காட்டு உண்டு காணும்.-போர்த் தலையில் ஆயிற்று ஆயுதம் என்று அறியலாவது.

நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா--கண் வட்டத்தை விடாதே நின்று தோன்றா நின்றன.
இவை கண் முகப்பே நின்று நலியப் புக்கவாறே,-அஞ்சிக் கண்களைச் செம்பளித்தவாறே நெஞ்சுக்குள்ளே நின்று பிரகாசிக்கத் தொடங்கின.-நெஞ்சுள்ளும் நீங்கா – கீழே “வந்து எங்கும் நின்றிடுமே” என்றாள்;-இங்கு உள்ளும் புறம்பும் ஒக்க நலியா நின்றன என்கிறாள்.
இவற்றிற்கு வாசி என்? என்னில், நம்பியுடைய அழகுக்கு உள்ளன எல்லாம் உண்டாயிற்று இவளுக்கும்.-அவ் வழகு எங்கும் ஒக்க நலிகிறாப் போலே ஆயிற்று, இவளும் கட் கண்ணாலும் உட் கண்ணாலும் அநுபவிக்கிறபடியும்.-பக்தி பெருக்காலே இவள் வியாபகத்வம் –

————

நீங்க நில்லா கண்ண நீர்கள் என்று அன்னையரும் முனிதிர்
தேன் கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
பூந்தண் மாலைத் தண் துழாயும் பொன் முடியும் வடிவும்
பாங்கு தோன்றும் பட்டும் நாணும் பாவியேன் பக்கத்தவே.
–5-5-4-

நீங்க நில்லா கண்ண நீர்கள் –அவன் நீங்க, கண்களில் நீர் நீங்குகின்றது இல்லை.
அன்றிக்கே,-நீங்க நில்லா- பேர நில்லா என்னுதல்.
அன்றிக்கே-நீங்க நில்லா என்பதனை மெலித்தல் விகாரமாகக் கொண்டு நீக்க நிற்கின்றன இல்லை என்னுதல்.-நீக்க – நீங்க என வல்லொற்று மெல்லொற்றாகத் திரிந்தது.-இந்தக் கண்ண நீர்க்கு ஸஹ்யம் அவ்வூரில் இனிமை போலே காணும்.

வடிவும் – அம் மாலைக்கும் முடிக்கும் இசைந்த வடிவும் – ‘இவனே மாலைக்கும் முடிக்கும் உரியான்’ என்று படி எடுத்துக் காட்டலாமே.-வடிவும்’ என்பதே!” என்று ஈடுபட்டவராய் இருப்பர் நஞ்சீயர் –பூந் தண் மாலைத் தண் துழாயும் –-பொன்முடியும் –வடிவும்–மூன்றுக்கும் உம்மைத் தொகை –-இவற்றை உடைய வடிவு சொல்லாமல் -வடிவும் ஆபரண கோஷ்டியில் சேர்த்து அருளிச் செய்து உள்ளார் –பாவியேன் பக்கத்தவே– அநுபவிக்கத் தருதல்- உரு வெளிப்பாடாய்த் தோன்றாதே ஒழிதல் – செய்யாத படியான மஹா பாவத்தைச் செய்தேன்.
அருகே நின்று பிரகாசித்துக் கொண்டு நின்றன; அநுபவ யோக்கியமாகப் பெறுகின்றன இல்லை.-அணைக்கத் தருதல், அகல நிற்றல் செய்கின்றன இல்லை.-

————-

பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
தொக்க சோதித் தொண்டை வாயும் நீண்ட புருவங்களும்
தக்க தாமரைக் கண்ணும் பாவியேன் ஆவியின் மேலனவே
.–5-5-5-

ஒன்றற்கொன்று தகுதியான நம்பியுடைய திருமுகத்தில் அழகுகள் என்-உயிர்நிலையிலே நலியா நின்றன என்கிறாள்.-அவன் வருகைக்குச் சம்பாவனை யுள்ள பக்கத்தைப் பார்த்துக்கொண்டு நிற்குமாயிற்று.-அந்தத் திக்கில் வந்து தோற்றாமையாலே வருந்துவாள்.-அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து வைத்த படியை அறிந்து வைத்த நீங்களும் பொடியா நின்றி கோள்–பாவியேன் ஆவியின் மேலனவே- தோல் புரையிலே போகை யன்றிக்கே -உயிர் நிலையிலே நின்று நலியா நின்றது -அகவாயில் வெளிச் சிறப்பு அழகிது.-அப்படியே புறம்பேயும் தோற்றப் பெறுகிறது இல்லை என்பாள், தன்னைப் ‘பாவியேன்’ என்கிறாள்.

———————-

மேலும் வன்பழி நங்குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்
சோலை சூழ் தண் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
கோல நீள்கொடி மூக்கும் தாமரைக் கண்ணும் கனிவாயும்
நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே
.–5-5-6-

அன்னை காணக் கொடாள்–தன்னோடு ஒத்தவர்கள் சொல்லுகை அன்றிக்கே, அடியிலே என்னைப் பெறுகைக்கு நோன்பு நோற்ற-இவளும் இப்படிச் சொல்லா நின்றாள்.
முன்பு- அன்னைமீர் -வளர்த்த தாய்கள் இவள் உடன் சாம்யம் உண்டே -இதில் பெற்ற தாய் –

அழகு மிக்க கொடி போலே இருக்கிற திரு மூக்கும்,-அதன் படியேயாய் இருக்கிற தாமரை போன்ற திருக் கண்களும்,-அந்தக் கொடி பூத்தாற் போலே யாயிற்றுத் திருக் கண்கள் இருப்பது.-அது ஒரு பலத்தை உண்டாக்கினாற்போலே இருக்கிற கனி வாயும்,-அத் தாமரையின் இலை போலே நீலமாய் இருக்கிற திரு மேனியும்,-ஒரு பெரு வெள்ளம் போலே ஆயிற்றுத் திருமேனி, அதனை நீந்துகைக்குச் சில தெப்பங்கள் போலே இருக்கிற திருத் தோள்கள் நான்கும்,-என் நெஞ்சம் நிறைந்தனவே- உங்கள் ஹித வசனங்கட்கெல்லாம் என் நெஞ்சில் இடம் இல்லை.-

————-

நிறைந்த வன்பழி நம்குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்
சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும்
நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் நேமி அம் கை உளதே.
–5-5-7-

ஆண்டாள், ஒரு நாள் பட்டரையும் சீராமப் பிள்ளையையும் காட்டி, ‘இவர்கள் விவாகத்தைச் செய்வதற்குரிய பருவத்தை அடைந்தார்கள், பேசாதே இருக்கிறது என்?’ என்ன, ‘ஆகில், நாளைப் பெருமாள் பாடே போனவாறே வரக் காட்டு’ என்ன,
அவர்களையும் கொண்டு திரு முன்பே நிற்கச் செய்தே, பெருமாள் அருளப் பாடிட்டு,
ஒன்று சொல்வாய் போலே இருந்தாயே!’ என்று திரு வுள்ளமாக,
“இவர்கள் விவாகத்தைச் செய்வதற்குரிய பருவத்தினர் ஆனார்கள் என்று சொல்லா நின்றார்கள்” என்ன,-நாமே ஒத்ததான இடத்தில் சம்பந்தம் செய்து தருகிறோம்’ என்று அருளிச் செய்ய,-பிற்றை நாள் மன்னியைக் -கன்னிகையைக் -கொடு வந்து நீர் வார்த்தார்கள்.
ஆக, ‘அத்தலையாலே வருமது ஒழிய, தாம் தாம் ஒன்றை ஆசைப்படுகையும் கூடப் பழி’ என்று இருக்குங் குடி – பிரபன்ன குடி-காணும்.

இப்போது ‘பழி’ என்று பரிஹரிக்கப் பார்க்கிறது -இவ்விஷயத்தில் உள்ள-நம்பியிடத்துள்ள பிராவண்யத்தை அன்றோ;-“பழி’ என்று பரிஹரிக்கப் பார்க்கிற திருத் தாயாராயும், ‘பழி என்று மீளேன்’ என்கிற பிராட்டியாயும் ஓடுகிற இந்த இரண்டு ஆகாரமும்- நிலைகளும் ஆழ்வார் தமக்குப் பிறந்த அவஸ்தா விசேஷங்களே அன்றோ;-பழி என்று பரிஹரிக்கப் பார்க்கிற திருத் தாயார் வார்த்தையான இடம், சரம ஸ்லோகத்துக்கு மேலுள்ளவற்றை அநுபாஷித்தாற் போலே இருக்கிறதாயிற்று.
(பகவத் ப்ராவண்யம் தோஷம் -உபாய அத்யவசாயத்தில் நிலை நின்ற -திட சித்தம் -திருத்தாயார் நிலை )பழி என்று மீளேன்’ என்கிற இவள் வார்த்தையான இடம், சரம ஸ்லோகத்தில் நிஷ்கர்ஷம் போலே இருக்கிறதாயிற்று.
பழி’ என்று பரிஹரிக்கப் பார்க்கிற இது, உபாயத்தில் கொத்தை அறுக்கிறது;பழி என்று மீளேன், என்கிற இது, உபேயத்தில் கொத்தை அறுக்கிறது;
ஆக, உபாயத்தினுடைய நைரபேக்ஷ்யத்தை (வேறு ஒன்றினையும் விரும்பாமையைப்) பார்த்தால், தங்களுடைய முயற்சிகள் அனைத்தும் குற்றமாயிருக்கும்;
உபேய வைலக்ஷண்யத்தைப் பார்த்தால், விரையாமல் ஆறியிருத்தல் குற்றமாயிருக்கும்;
ஆகையால், இரண்டு குற்றங்களையும் அறுக்கிறது என்றபடி. கொத்தை-குற்றம்.
ஸ்வரூபமாய் அந்வயித்ததில் மிகுதியாய்க் கழிவது ஒன்று உண்டோ? என்றபடி; (மகள் வார்த்தை ) (அடிமைத்தனத்துக்குத் தக்க கைங்கர்யமே ஸ்வரூபம் -ஒரே காரியத்துக்கு உபாய உபேய ஆகாரங்கள் உண்டே )

அவனுக்கு அக் கீர்த்தியைப் போன்று,-தன்னுடைய சம்பந்தமும் ஏற்றமாம்படி இருக்குமவளே அன்றோ.-நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனி யொடும்-
கங்கையின் அலைகளின் நடுவே வசிப்பாரைப் போலே ஒளிகளாகிய அலைகளின் நடுவே ஆயிற்று இருப்பது.-ஒளிகளின் நடுவே வடிவு ஊகிக்கப் படுவதாயாயிற்று இருப்பது.
அவ் வடிவு தான் எவ்வளவு போரும் என்னில், அளவிட்டு அறிதற்கு அரியதாய்ச் ஸ்லாக்கியமாய் இருக்கும்.-நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் – ஒருநாள், சீயர் கோயிலுக்கு எழுந்தருளா நிற்க, வழியிலே பிள்ளானைக் கண்டு, ‘ஈச்வரனுக்கு ஸ்வரூப வியாப்தியேயோ உள்ளது,-விக்கிரஹ வியாப்தியும் உண்டோ?’ என்று கேட்க, ‘சர்வ விஷயமாக ஸ்வரூப வியாப்தியே உள்ளது;-உபாசக விஷயத்தில், அவர்கள் பக்கல் அநுக்ரஹத்தாலே, அவர்கள் பற்றுக் கோடாகப் பாவித்த விக்கிரஹத்தோடே எழுந்தருளியிருக்கும்;-இனி, ஸ்வரூப வியாப்திக்குப் பிரமாணம் கண்ட இடம் சாமான்ய விஷயமாகிறது,-விக்கிரஹ வியாப்திக்குப் பிரமாணம் கண்ட இடம் விசேஷ விஷயமாகிறது’ என்று பணித்தானாம்.

நேமி அம் கை உளதே.–-அல்லாத அழகுகள் எல்லா வற்றிலும் மிகுதியாய் யாயிற்று கையும் திரு வாழி யும் இருப்பது -வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும் படியான திருக் கையிலே திரு வாழி யானால் மீட்கப் போமோ –-அவன் கையில் திருவாழி பிடித்திலனாகில் நான் பழி பரிஹரித்து மீளேனோ?-அவன் கையில் திருவாழி இருக்க, என்னாலே பழிக்கு அஞ்சி மீளப்போமோ? என்றபடி.
உங்கள் ஹித வசனங்களைக் கேட்கைக்கு உள்ளே இடம் இல்லாதபடி நிறைந்து நின்றான் என்பாள்,-நிறைந்து என் உள் நின்றொழிந்தான்’ என்கிறாள்
இனி, போக்கிடம் இல்லையாம்படி அவன் வந்து உள்ளே நிற்க, எனக்கு ஒரு போக்கிடம் உண்டோ என்பாள், நின்றொழிந்தான்’ என்கிறாள் என்னுதல்.
அவனை என் மனத்தினின்றும் புறப்படச் சொல்ல மாட்டீர்களோ நான் என் பழி நீக்குவதற்கு.
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும்படியான கையிலே திருவாழியுமானால் மீளப் போமோ,-அவனுடைய நிறைவினைக் குறைக்கவோ, என் பழி நிறைவினைக் குறைக்கவோ.

——-

கையுள் நன்முகம் வைக்கும் நையும்என்று அன்னையரும் முனிதிர்
மைகொள் மாடத் திருக்கு றுங்குடி நம்பியை நான் கண்டபின்
செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும்
மொய்ய நீள்குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன்னிற்குமே
.–5-5-8-

கையுள் நன் முகம் வைக்கும் – அவனைப் பிரிகையால் வந்த தளர்த்தியாலே கையிலே முகத்தை வையா நின்றாள். இத்தனை சாகசத்திலே துணியும் படி ஆவதே இவள். தன் முகத்தின் வாசி தான் அறியாது ஒழிய வேணுமோ.கணவனுடைய கரத்தின் பரிசமே யாயிற்றுப் பொறுப்பது. இதனால், தன்னோடு தனக்குச் சம்பந்தமில்லாத பாரதந்திரியத்தைச் சொல்லுகிறது.-அதுவே அன்றோ “நம:” என்ற சொல்லின் அர்த்தமாகிறது.-இதனுடைய சுருக்கமாக இருக்கின்ற உகாரத்திலேயும் இது உண்டாயிருக்கச் செய்தே இங்கேயும் –-நமஸ்-சொல்லும்போது இதுவே அர்த்தமாக வேணுமே அன்றோ.

வடிவும்-என்னை மீள ஒட்டாத வடிவும், மெய்யே மீள ஒட்டுகிறது இல்லை காணும் இவளை.-பாவியேன் முன் நிற்குமே –-அநுபவத்திற்குத் தகுதி யில்லாதவை முன்னே நிற்கை யாகிறது மிகுந்த கிலேசத்திற்குக் காரணமாய் இருப்பது ஒன்றே அன்றோ.
‘முன் நிற்கும்’ என்னா நிற்கச் செய்தே அன்றோ ‘பாவியேன்’ என்கிறது.
கண்களுக்குத் தோற்றா நிற்கச் செய்தே யானைக்குக் குதிரை வையா நின்றது.-

————

முன்னின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர்
மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
சென்னி நீண்முடி ஆதியாய உலப்பில் அணி கலத்தன்
கன்னல் போல் அமுதாகி வந்து என் நெஞ்சம் கழியானே
.–5-5-9-

பார் அளந்த விசும்பு அரசே —எம்மை வஞ்சித்த ஓர் அரசே -மூன்று வித கிரீடங்கள் –
செல்லப் பிள்ளை – ராஜ முடி -வைர முடி -கிருஷ்ண ராஜ முடி -மூன்று நாள்கள் உத்சவங்கள்
மூன்று பாகங்கள் –கிரீட மகுட சூடாவதம்ச —-ஆதி ராஜ்ய ஜல்பிகா –தத்வ த்ரய சம்ப்ரதாயம்

பூஷண பூஜ்யங்களுடைய சேர்த்தியால் கண்ட சக்கரையும் சேலப் பாலும் கலந்தால் போலேயாய்-வந்து என் நெஞ்சம் கழியானே –-வந்து என் நெஞ்சில் நின்றும் போகின்றிலன்.
முன்னே நிறுத்தினவனைப் பொடிய மாட்டார்கள்; ‘பெற்றோம், பிழைத்தோம்’ என்று,
‘முன்னின்றாய்’ என்று என்னைப் பொடியுமித்தனை காணும் இவர்கள் வல்லது.
எனக்கு மறக்கை தேட்டம், முடியாமை இருக்கிறேனத்தனை.-நம்பி புகுந்து விடுகின்றிலன்

—————–

கழிய மிக்கதோர் காதலள் இவள் என்று அன்னை காணக்கொடாள்
வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
குழுமித் தேவர் குழாங்கள் கைத்தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே
எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே.
–5-5-10-

கழிய மிக்கது ஓர் காதலள் இவள் –-எல்லாருடைய காதலைக் காட்டிலும் வேறுபட்ட காதல்; -இதர விசஜாதீய காதல்–அன்றிக்கே,-நாள் கழியக் கழியப் பெருகி வருகிற காதல் என்னுதல் நாட்டார், “நாள் செல்லச் செல்லச் சோகத்தை மறந்து போகா நிற்பர்கள்;
எனக்கு, அங்ஙன் அன்றிக்கே, நாள் செல்லச் செல்லச் சோகம் பெருகி வாரா நின்றது” 

அன்னை காணக் கொடாள்--‘இவள் ஒரு விஷயத்திலே காதலைச் செய்யக் கண்டேனாக வல்லேனே’ என்றிருக்குமவளும் காண வேண்டுகின்றிலள்.-ஆனால், இப்போது இங்ஙனம் படுகிறது என்? என்னில்,-தர்மி லோபம் வரும்படிப் பிராவண்யத்திலே மூழ்கினவளாக ஒட்டாளே,-சரீரம் உண்டாய் மேல் நடக்க வேணும் என்று இருப்பவள் அன்றோ.
காண்கையாவது –-அநுசந்தித்தல்.-நெஞ்சு என்னும் உட் கண்”-நெஞ்சையுங் கூட வாய் கட்டா நின்றாள்.-வழு இல் கீர்த்தி –-குறை வற்ற கீர்த்தியை யுடைய. நான்-அக் கீர்த்திக்குப் பிரிந்து நிலைபெறுதல் இல்லாதது போன்று, அவனை ஒழியத் தனித்து நிலை பெறுதல் இல்லாத நான்.–நித்ய ஸூ ரிகளுடைய சமூகங்கள் திரண்டு அனுபவிக்க கிண்ணகத்தில் இழிவாரை போலே திரள் திரளாக வாயிற்று இழிவது-அழகு வெள்ளத்தின் நடுவே-எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே-உஜ்ஜவலமாய் தோற்றுகிற அத்விதீயமான விக்ரஹம்
இன்னார் என்று அறியேன் என்கிறபடியே நித்ய அபூர்வமாய் இருக்கும் வடிவு -தேஜஸாம் ராசி மூர்ஜ்ஜிதம்–கண்ட பின் –இவர்க்கு இப்போது காட்சியாவது தான் ஏது? என்னில்,
அடியில், ‘பொய்ந் நின்ற ஞானம்’ தொடங்கி ‘முனியே நான்முகனே’ என்ற பாசுரம் அளவும் செல்ல ஒரே வாக்கியமே அன்றோ,-நடுவில் உள்ளவை அநுபவப் பிரகாரங்களாலே பிறக்கிற விசேடங்களே அன்றோ.-நித்திய ஸூரிகள் நடுவே தோன்றுமாறு போலே என் நெஞ்சுக்குள்ளே பிரகாசியா நின்றது.-ஆர்க்கும் அறிவு அரிது –-எனக்கு மறக்க ஒண்ணாதாப் போல ஆயிற்று, தம் முயற்சியால் அறிவார்க்கும் அறிய ஒண்ணாதிருக்கிறபடியும்.

————

அறிவரிய பிரானை ஆழி அம் கையனையே அலற்றி
நறிய நன்மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துளிவை பத்தும் திருக்குறுங்குடி யதன்மேல்
அறியக் கற்று வல்லார் வைட்ணவர் ஆழ்கடல் ஞாலத்துள்ளே
.–5-5-11-

அறிவு அரிய பிரானை– நாம் பெறுதல் இழத்தல் செய்கிறோம், தம் முயற்சியால் சாதித்துக் கொள்ளப் படுவது அன்றிக்கே ஒழியப் பெற்றோமே முன்னம்.-வஸ்து தான் உண்டானால் நினைத்த போது பெற்று அநுபவிக்கலாமே அன்றோ.-இவர்கள்- தாய் மார்கள் -பின்னைத் தங்கள் முயற்சியாலே அறியுமவர்களோ? என்னில்,-ஆக வேணுமே அன்றோ, ‘மீட்கலாம்’ என்று இருந்த போதே, தங்கள் தங்களாலே அறியவுமாம்’ என்று இருந்தார்களாக வேணுமே அன்றோ.-ஆழி அம் கையனையே அலற்றி – “சங்கினோடும் நேமியோடும்” என்று, தொடங்கின படியே தலைக் கட்டுகிறார்.-அவனைக் கை விடாமல் -இடைவிடாமல் -அநுபவித்ததித்தனை இதற்கு முன்பெல்லாம்;-இதில், கையும் திருவாழியுமான அழகை யாயிற்று உருவச் சொல்லிக் கூப்பிட்டது.

ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு, நம்பியுடைய அழகினை மெய் காட்டுக் கொண்ட இப் பத்தும் திருக் குறுங்குடி விஷயம்-திவ்விய ஆயுதங்களும் திவ்விய ஆபரணங்களும் சேர்ந்த சேர்த்தியாலுண்டான நம்பியுடைய அழகைத் திரளச் சொன்ன பத்தும்-அறியக் கற்று வல்லார்--இதனைக் கற்று அறிய வல்லவர்.-அறியக் கற்கையாவது, ஸ்ரீ வைகுண்டத்தில் நித்திய ஸூரிகள் நடுவே இருக்கிற இருப்பைக் காட்டிலும், திருக் குறுங்குடியில் நிற்கிற நிலையிலே குணாதிக்யம் உள்ளது என்னுமிடத்தை அறிந்து கற்க வல்லவர்கள்.
வஸ்துவுக்குக் குணத்தாலே அன்றோ உயர்வு; அந்தக் குணாதிக்யம்-சௌலப்யாதிகள் எங்கே உண்டு, அங்கே அன்றோ ஏற்றம்.-ஆழ் கடல் ஞாலத்துள்ளே வைட்ணவர் –
மரு பூமியான சம்சாரத்தில் இருக்கச் செய்தே நித்திய ஸூரிகளோடு ஒக்கச் சொல்லலாம் படி ஆவர்கள்-உகந்தருளின நிலங்களில் வாசி அறியுமவர்கள்.-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –