ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
இருட்டு படுத்தும் பாடு முதலில் சொல்லி -மாறி மாறி அஸ்திரமாக இருப்பதைக் கண்டும் –-ஜலத்துறை -ஆச்சார்ய படித்துறை -பகவத் பக்தியில் ஆழ்ந்து -ப்ரஹ்ம அனுபவமே நீராடல் –போது செய்து -ஈடுபடுத்தி –பொழுது மலர் என்றும் வேறே இடங்களில்-மாலை – நாவில் கொள்ளாமல் நினையாமல் -இழந்து போகிறார்களே ஸம்ஸாரிகள்-கீழ் தேவர்கள் இழவுக்கு-ஒரு நாயகமாய் -4–1-இதன் விவரணம்-ஐஸ்வர்யம் கைவல்யம் த்யாஜ்யம் -விரோதி ஸ்வரூபம்–
தேவர்கள் தானோ ஓர் அபிமான விசேஷத்தாலே (பகவத் விஷயத்தை )தவிருகிறார்கள் –-அல்லாதாரோ தான் பகவத் பஜனம் பண்ணுகிறார்கள் –அவர் இவர் என்று விசேஷிககிறது என் –
எல்லார்க்கும்-புறம்பே அன்றோ போது போக்கு என்கிறார் –இருள் கண்டு அஞ்சுகிற தலைவி தோழி செவிலியரை வெறுத்தல் —
இப்படி ப்ரயோஜனாந்தர பரராய்ப் போருகிற அளவன்றியே ஸம்ஸாரிகள்-அஹோ ராத்ர விபாகத்தாலே காலம் கழிக்கிற படி கண்டு வைத்து பகவத் விஷயத்தில் அந்வயியாதே இருப்பதே -என்று அவர்கள் இழவுக்கு வெறுத்து அருளிச் செய்கிறார் –
காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்
மாலை வெய்யோன் பட வையகம் பரவுவர் அன்ன கண்டும்
காலை நன் ஞானத் துறை படிந்தாடிக் கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் அவன் மைப்படியே – – -93 –இருளைக் கண்ட தலைவி -தோழி செவிலி தாயாரை வெறுத்தல் —
காலை–உதய காலத்தில்
வெய்யோற்கு முன்–ஸூர்யனாகிய சக்கரவர்த்திக்கு எதிரில்
ஒட்டுக் கொடுத்த–நிற்க மாட்டாமல் புறங்கொடுத்தோடுதலைச் செய்த
கங்குல குறும்பர்–இருளாகிய சிற்றரசர்கள்
மாலை–ஸாயங்காலத்திலே
வெய்யோன்–அந்த ஸூர்யனாகிய பேரரசன்
பட–அழிய-அஸ்தமிக்க
வையகம் பரவுவர்–(தாங்கள்) உலக முழுவம் பரவுவார்கள்;
அன்ன கண்டும்–அப்படிப்பட்ட தன்மையைப் பார்த்திருந்தும்.
காலை–காலத்திற்கு ஏற்றபடி
நல் ஞானம் துறை படிந்து ஆடி–நல்ல ஞானமாகிய துறையிலே இறங்கி மூழ்கி
(ஆச்சார்யர் கீழ் படிந்து -பகவத் பக்தியாகிய வெள்ளத்தில் ஆழ்ந்து ஈடுபட்டு)
கண் போது செய்து–பக்தி பாரவஸ்யத்தாலே கண்களை மூடிக் கொண்டு–(உலக விஷயத்தில் மொட்டு போல் பகவத் விஷயத்தில் மலர்ந்து)
மாலை–எம்பெருமானை
நல் நாவில் கொள்ளார்–(தங்களுடைய) நல்ல நாவினால் பெயர் கூறித் துதியார்;
அவன் மைபடி–அவனது கரிய திருமேனியை
நினையார்–நினைப்பதற்கு செய்யார்.-
ஒரு நாயகமாய் யுலகுக்கு வானோர்
இரு நாட்டில் ஏறி யுய்க்கும் இன்பம் -திறமாகா
மன்னுயிர்ப் போகம் தீது மாலடிமையே யினிதாம்
பன்னியிவை மாறன் உரைப்பால் —-31-சீர் பரவப் பெற்ற நான் -என்று கீழ் பகவத் அனுபவத்தாலே ஹ்ருஷ்டரான ஆழ்வார்-அந்த ஹர்ஷத்தாலே இவ் விஷயத்தை ஒழிய ஐஸ்வர்யாதிகளிலே மண்டி இருக்கிறவர்களைக் குறித்து-மீளவும் இவற்றின் யுடைய அல்ப அஸ்திரத்வாதிகளாகிற தோஷங்களை அறியாதே இவற்றிலே மண்டி இருக்கிறார்கள் என்று இவற்றின் தோஷங்களைப் பரக்க பேசா நின்று கொண்டு பரம புருஷார்த்த பூதனான ஸ்ரீயபதியின் திருவடிகளை ஆஸ்ரயுங்கோள் என்று பிறருக்கு உபதேசித்துச் செல்லுகிற ஒரு நாயகத்தின் அர்த்தத்தை சங்க்ரஹித்து ஒரு நாயகமாய் -இத்யாதியால் அருளிச் செய்கிறார்
காலை இத்யாதி –உத்பவ அபிபவ ரூபத்தாலே ஆதித்யன் இருளை மேலிடுவது –ராத்திரி ஆதித்யனை- மேலிடுவதாகிற இத்தைக் கண்டு வைத்தும் –நந்தத் யுதித ஆதித்யே-விடிந்த வாறே அபிமத விஷயத்தை சாதிக்கைக்கு த்ரவ்யார்ஜனம்-பண்ணுக்கைக்கு ஈடான காலம் வந்தது என்று உகவா நிற்பர்கள் –நந்தந்த் யஸ்தமிதே ரவவ் –அஸ்தமித்தவாறே இவற்றைக் கொண்டு பிறர் அறியாதவாறே
அவ் விஷயங்களை புஜிக்க-காலம் வந்தது என்று உகவா நிற்பர்கள் –காலை இத்யாதி –பிரபாத சமயத்திலே -வெய்யோன் உண்டு -ஆதித்யன் –அவனுக்கு முன்னோட்டுக் கொடுப்பர்கள் ஆயிற்று-கங்குல்கள் ஆகிற குறும்பர் –அவன் கிரணங்கள் பட- கை விட்டு ஓடா நிற்பர்கள் இறே –மாலையில் பெரிய பிரதாபத்தை உடைய ஆதித்யனை அழித்து-அவன் ஆண்ட பரப்பை அடையக் கைக் கொள்வர்கள் –நித்ரையாலே பூமியாகப் பரவசமாம்படி-பண்ணிக் கொண்டு வரும் இறே–ஆத்மந இத்யாதி-பகல் என்றும் இரவு என்றும் கூறிட்டுக் கொண்டு இங்கனே தந்தமுடைய ஆயுசை ஈர்க்கிறதோர் ஆயுதம்-சாலில் வார்த்த நீர் போல் நம் ஆயுஸ்ஸூ போகிறபடி படி என்று புத்தி பண்ணுகிறவர்கள் அல்லர்-சாவக்கடவராய் இருக்கிறவர்கள்-காலை -ப்ரபாத சமயத்திலே வெய்யோன் உண்டு ஆதித்யன் அவனுக்கு முன்னோட்டுக் கொடுப்பர்கள் ஆயிற்று கங்குல் ஆகிற குறும்பர்
அவன் கிரணங்களைப் பரக்க விட ஓடா நிற்பர்கள் இறே-மாலையிலே பெரிய பிரதாபத்தை யுடைய ஆதித்யனை அழித்து அவன் ஆண்ட பரப்பை அடையக் கைக்கொள்வர்கள்-நித்ரையாலே பூமியாகப் பரவசமாம் படி பண்ணிக்கொடு வரும் இறேஅன்ன கண்டும் –அப் படியைக் கண்டு வைத்தும் –பகவத் விஷயம் பிரத்யஷத்துக்கு அவிஷயம் ஆகையாலே -தான் அறியாது ஒழிகிறார்கள்-இதனுடைய அஸ்தர்யத்தை பிரத்யஷியா நிற்கச் செய்தேயும்-நெஞ்சில் படாது ஒழிவதே –காலை –சத்வோத்தரமான காலையிலே –நல் ஞானம் –ஞானம் ஆகில்-பகவத் விஷயத்தை பற்றி அன்றி இராது இறே –ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -(முதல் திருவந்தாதி )என்னக் கடவது இறே –தத் ஜ்ஞானம் அஞ்ஞானம் அதோன்யதுக்தம் (பராசர மகரிஷி )- என்றும் –வித்யான் யாசில் பகை புணம் – புறம்பே ஒன்றை அறிந்ததோடு துன்னம் பெய்ய அறிந்ததோடு வாசி இல்லை இறே –துறை படிந்தாடி –ஜ்ஞானம் ஆகிற இத் தீர்த்தத்திலே புக்கு அவஹாகித்து –கண் போது செய்து –போது செய்து என்று மொட்டிக்கைக்கும் பேர் –அலருகைக்கும் பேர் புறம்புத்தை விஷயங்களில் கண் செம்பளித்து என்னுதல் –பகவத் விஷயத்தில் விழித்து என்னுதல் –மாலை –இவன் அனுசந்திக்க என்று உபக்ரமிக்கும் அத்தனை இறே வேண்டுவது –மேல் உள்ளது எல்லாம்-தானே செய்து -கொடு வந்து மேல் விழும்படியான வ்யாமோஹத்தை உடையவனை –நல் நாவில் கொள்ளார்-நல் நா- என்கிறது புறம்புத்தை ஜல்பங்களைத் தவிர்ந்து -பகவத் விஷயத்தை-பேசுவோம் என்றால் – அதுக்கு பாங்கான நாவைப் படைத்து வைத்து -இவர்கள் புறம்பே போகிறது என்-என்கிறார் –சா ஜிஹ்வா -ஹரி -(பேச்சும் நினைவு கைகூப்பும் செய்ய வேண்டுமே )-நினையார் அவன் மைப்படியே –வ்யாமோஹம் பண்ணாதே -த்வேஷத்தைப் பண்ணினாலும் விட ஒண்ணாத வடிவு அழகை நினைப்பார் இல்லை –தருணவ்–த்வேஷத்துக்கு விஷயமாய் மூக்கு அறுப்புண்டவள் இறே – இவ்வார்த்தை சொன்னாள் –தான் பரிபூதையாம்படியை போய் சொல்லுகிற-இடத்திலே இது எதுக்கு உறுப்பாக சொன்னாள் தான் –
உலகில் அநேகர் -வைகலும் வைகல் வரக் கண்டும் அஃது உணரார் -நாலடியார் —-ஆழ்வார்கள் தான் பொழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுவார்கள்-இங்கனம் வாள்களாகி நாள்கள் செல்லுகின்றனவே -பொழுதே பல பகலும் போகின்றனவே-ஊமனார் கண்ட கனவிலும் பழுதா ஒழிகின்றனவே நாள்கள் -என்று கவலைப் படுவார் யாரும் இலை -ஒரு க்ஷணம் பொழுதாகிலும் பகவத் விஷயத்தில் செலுத்துவார் இல்லையே பிறர் இழவுக்கு பரிகிறார் –காலை –சத்வ குண பிரதானம் –
நன் ஞானத் துறை படிந்தாடிக் -சிறந்த ஆத்ம ஞானத்துக்கு இறங்கு துறையான ஆச்சார்யரை வணங்கி -அவர் உபதேசங்களில் ஆழ்ந்து-பெருமானை இலக்காகக் கொண்ட ஞானமே நல் ஞானம் –-ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு-கண் போது செய்து-விஷயாந்தரங்களிலே அறிவு செல்லாத படி உள்ளடக்கி-எம்பெருமான் பக்கலிலே-ஞானம் என்னும் உட் கண் மலர்ந்து –போது செய்து என்று மொட்டிகைக்கும் பேர் -அலருகைக்கும் பேர் -புறம்புள்ள விஷயங்களில் கண் செம்பளித்து என்னுதல்-பகவத் விஷயத்திலே விழித்து என்னுதல் –மாலை நல் நாவில் கொள்ளார் -தம் பக்கல் வ்யாமோஹம் கொண்டவனை நாவால் ஸ்துதியாதார் –-நல் நா -எம்பெருமானை ஸ்துதிப்பதற்கு என்றே அமைந்த நா –நாராயணா என்னா நா என்ன நாவே –நினையார் வன்மைப்படியே-அவன் மைப்படி நினையார் -அவனது கரிய திருமேனியை தியானிப்பதும் செய்யார் -லௌகிகரைப் பழித்த படி
பெயரினையே புந்த்தியால் சிந்தியாது ஓதி யுரு என்னும் அந்தியால் ஆம் பலம் எங்கனம் என்பதால்
மாலை நல் நாவில் கொள்ளார் என்று மாத்திரம் சொல்லாமல் மேலே நினையார் வன்மைப்படியே – என்கிறார்-முந்தின வாக்யத்தால் இருளின் கொடுமையையும் -மேலே அது அவன் திருமேனிக்கு ஸ்மகரமாய் வருத்துகிற படியை தோழிமார் சிந்தியாமையும் -அந்த நோய் தணிக்கும் உபாயத்தையும் செய்யாமையும் பழித்தவாறு –உலகத்தில் அனேகர் “வைகலும் வகைல் வரக்கண்டு மஃதுணரார்” (நாலடியார்- அறன்வலியுறுத்தல் 9) என்றபடி-காலைப்பொழுதும் மாலைப்பொழுதும் மாறிமாறி வந்துகொண்டு காலங்கழிந்துகொண்டே செல்லுகிறபடியை ப்ரத்யக்ஷமாகவே பார்த்துக் கொண்டிருக்கச் செய்தேயும் தங்களுடைய இளமைப் பிராயம் விரைவாகக் கழிந்து போவதில் கருத்தூன்றுதலின்றி-எம்பெருமான் பக்கல் ஈடுபாடு கொள்ளாமல் வீணேயிழந்து பழுதே பலபகலும் போக்குகிறார்களேயென்று ஆழ்வார் வெறுத்து அருளிச் செய்கிறார்.-உலகர்கள் தினப்படி ஸூர்யன் உதிக்கும்போது வேண்டியபடி பொருள்களைத் திரட்டலராமென்று களிக்கிறார்கள்;-பிள்ளை ஸூர்யன் அஸ்தமிக்கும்போது வேண்டிபடி விஷய போகங்களைச் செய்யலாமென்று குதூஹலிக்கிறார்கள்;
இப்படி ஸூர்யனுடைய உயத்தேடு அஸ்தமனத்தோடு வரசிய ஸம்ஸாரிகள் களிப்பதே கருமமாயிருக்கிறார்களே யன்றி,‘இங்ஙனம் வாள்களாகி நாள்கள் செல்லுகினற்னவே, பழுதே பலபலகும் போகின்றனவே!-ஊமனார் கண்ட கனவிலும் பழுதா யொழிகின்றனவே நாள்கள்’ என்று கவலைப்படுவாருமில்லையே!-ஒரு கணப்பொழுதையும் பகவதநுஸந்தாகத்திற் செலுத்துவாரில்லையே! என்று ஸம்ஸாரிகளுக்காக ஆழ்வார் தாம் கவலைப்படுகிறார்.-இவ்வாழ்வார் உலகத்தாரைச் சீர்திருத்தி உஜ்ஜிவிக்கச் செய்யும் பொருட்டுத் திருவவதரித்தவராதலாலும் மிக்க ஜீவ காருண்ய முடையவராதலாலும் பிறரிழவுக்குப் பரிவு கொள்ளக்கடவராவர். முதலிரண்டடிகளால் பகலும் இரவுமாக மாறி மாறி வந்து ஆயுள்நாளைக் கழியச் செய்தலை எடுத்துக்காட்டியபடி, இது செல்வ நிலையாமைக்கும் ஒரு திருஷ்டாந்தமாம்.–பின்னடிகளிரண்டும் நாட்டாரைப் பழிப்பன; காலை- ஸத்வகுண ப்ரதாநமான விடியற்காலத்தில் நல்ஞானத் துறைபடிந்து--சிறந்த ஆத்மஜ்ஞாநத்துக்கு இறங்கு துறையாகிய ஆசார்யனை வணங்கி, ஆடி- அவ்வாசார்யோபவதேசத்திலே ஆழ்ந்து
கண்போதுசெய்து- விஷயாந்தரங்களில் அறிவு செல்லாதபடி அதனை உள்ளடக்கி, மாலை நல்நாவில் கொள்ளார்--தங்கள் பக்கதல் அன்புடைய ஸர்வேச்வரனை நல்ல நாவினால் துதியார்;
அவன் மைப்படி நினையார்- அவனுடைய கரிய திருமேனியை தியானிப்பதுஞ் செய்யார் என்று லௌகிகரைப்பழித்தபடி.-நல்ஞானம்- எம்பெருமானை இலக்காகக்கொண்ட ஞானமே நல்ல ஞானம்; மற்றை விஷயமான ஞானமெல்லாம் அஜ்ஞானமும் விபரீதஜ்ஞானமுமா மென்க.
“ஒண் தாமரையான் கேள்வனொருவனையே நோக்குமுணர்வு” (முதல் திருவந்தாதி) என்ற பொய்கையார் பாசுரமறிக.–ஸ்நாநத்துக்கு உரிய காலம் வைகறையாதலால் ‘துறைபடிந்தாடி’ என்பதற்கு ஏற்ப ‘காலை’ எனப்பட்டது.“கண்போதுசெய்து” என்பதற்கு- இரட்டுற மொழிதல் என்னும் உத்தியால் ‘எம்பெருமான் பக்கலிலே ஞானெமன்னும் உட்கண் மலர்ந்து’என்ற பொருளும் கொள்ளத்தகும். இங்கே நம்பின்னை யீடு காண்க:- “போது செய்து என்று மொட்டிக்கைக்கும பேர்,அலருகைக்கும் பேர்; புறம்புற்ற விஷயங்களின் கண் செம்பிளித்து என்னுதல்; பகவத் விஷயத்திலே விழித்து என்னுதல்.” என்று.“பெயரினையே புந்தியாற் சிந்தியாது ஓதியுறு வெண்ணு மந்தியாலாம் பயனங்கென்” (முதல் திருவந்தாதி) என்றபடி மனப் பூர்வமாக தியானித்தலின்றிச் சொல் மாத்திரத்தால் ஓதி யுருவிடுதல் சிறப்பன்றாதலால் “மாலை நன்னாவிற் கொள்ளார்” என்ற மாத்திரத்தோடு நில்லாமல் “நினையாரவன் மைப்படியே” என்றும் அருளிச் செய்தது.
போது- மலரும் பரவத்து அரும்பு; போரும்பு. நல்நா- எம்பெருமானைத் துதிப்பதற்கென்ற அமைந்த நா:
“நாராயணா வென்னாநா என்னநாவே” (சிலப்பதிகாரம்- ஆய்ச்சியர் குரவை) என்றார் பிறரும்.–இப்பாட்டுக்குக் கிளவித்துறை கூறவேணுமென்னும் நிர்ப்பந்தமில்லை; அங்ஙனே கிரபபந்தங் கொள்ளில், இருள்கண்டு அஞ்சுகிற தலைவி, தோழியையும் தாயும் வெறுத்தல் இது என்று கொள்ளலாம். நாயகி எம்பெருமானாகிய நாயகனைப் பிரிந்து அப்பிரிவை ஆற்றாது
நிற்கிற நிலையில் ஸூர்யன் அஸ்தமித்துக் காமோத்தீபமான இராப்பொழுது வந்து எங்கும் இருள் பரவி அவ்விருள் எம்பெருமானது கரிய திருமேனியை ஞாபகப்படுத்தி வருத்த, அதற்கு ஆற்றாத அந்த நாயகி “உலகேழு முண்டான சொன்மொழிமாலை அந்தண்ணந்துழய் கொண்டு சூடுமின்” (திருவிருத்தம் 20) என்று சொல்லும்படி தன் நோய்க்குப் பகவந்நாமோச்சாரணமாகிய மந்த்ர பரிஹாரத்தையே உடையவளாதலால், நோய்நிலையும் அதன் பரிஹாரத்தையும் ஆராய்ந்து நடத்தாத தோழியர் செவிலியர் என்பவரைக் குறித்து வெறுத்துக் கூறியது இது என்று கொள்க. முந்தின வாக்கியத்தால், இருளின் கொடுமையை வெளியிட்டாள்; பிந்தினவாக்கியத்தால், அவ்விருள் அவனது திருமேனிக்கு ஸ்மாரகமாய்த் தன்னை வருத்துகிறபடியைத் தேதி முதலியோர் சிந்தியாமையையும், சிந்தித்து அந்நோய் தணிக்கும் உபாயத்தைச் செய்யாமையையும் பழித்தவாறு.—வெய்யோன் – உஷ்ணகிரணமுடையவன்; பகைவர்க்குக் கொடிய பராக்ரமசாலி. குறும்பர் – குறுநில மன்னர்.
அன்னகண்டும் = அழியாது பாதுகாக்கிற நீதிமானான செங்கோலரசன் அழிந்ததையும், சமயம் நோக்கி எளியாரை வருத்தும் அநீதியையுடைய கொடுங்கோலரசர் பரவினதையும் ப்ரத்யக்ஷமாகப் பார்த்திருந்தும் என்றபடி.–ஓட்டு- ஓடுதல்; முதனிலைதிரிந்த தொழிற் பெயர்.
காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்-ப்ராத காலத்திலே ஆதித்யன் வருகிறான் என்று அவன் பிரதாபத்துக்கு அஞ்சி ஏலக்கோலி ஓடிப்போன ராத்ரியாகிற குறும்பர்-மாலை வெய்யோன் பட வையகம் பாவுவர்-சாயம் காலத்திலே அந்த பிரதா போத்தரனான ஆதித்யனானவன் அஸ்தமிக்க லோகம் அடங்கப் பரம்பா நிற்பர்கள்-அன்ன கண்டும்–அப்படிக் கால பேதேந ப்ரகாஸ அந்தகாரங்கள் கலசி வருகிறபடி கண்டு இருக்கச் செய்தேயும்–காலை நன் ஞானத் துறை படிந்தாடிக்
ஸத்வ உத்தர காலத்திலே வைதிகமான அத்யாத்ம ஞானத்துக்குத் துறையான ஆச்சார்ய விஷயத்தைப் பிராணாமம் பண்ணி அவன் உபதேசத்தில் அவகாஹித்து–கண் போது செய்து-பாஹ்ய இந்த்ரியத்தைப் புறம்பு போகாதபடி மொட்டுவித்து-மாலை நல் நாவில் கொள்ளார்-ஆஸ்ரித வத்ஸலனான ஸர்வேஸ்வரனை ஸ்தோத்ரம் பண்ண இட்டுப் பிறந்த நாக்கிலே ஸ்வீ கரியார்கள்-நினையார் அவன் மைப்படியே –-அவனுடைய ஸ்யாமளமான திருமேனியை நெஞ்சுக்கு விஷயமன் ஆக்கார்கள்-இப்பொழுதைப் பழுதே போக்குவதே என்று வெறுத்து உரைத்தார் ஆயிற்று
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-நன்மை பெற வல்ல நாக்கால் அனுசந்திப்பதும் செய்யார்கள்
அவன் மை போன்ற திருமேனியை ஸாஸ்த்ரத்தில் பஞ்சத்தாவிபக்த காலங்களில் ஸ்மரியார்கள்
யூகித்தார்த்த விபரீதமாய் நந்தத்த் யுதித ஆதித்யே நந்தத்த் யஸ்தமிதே ரவவ் ஆத்மநோ நாவபுத் வந்தே மனுஷ்யா ஜீவிதா ஷயம் -அயோத்யா -105-24–என்றபடியாய் இரா நின்றார்கள் என்கிறார்
தாத்பர்யம்-இதில் ப்ரஹ்மாதி தேவர்கள் ஈஸ்வரன் என்னும் துர்மானத்தால் நினையாமல் போகிறார்கள்
சம்சாரிகள் இழந்து போவதை நினைத்து இழவுக்கு வருந்தி அருளிச் செய்கிறார்-தினம் தோறும் -இருள் வந்ததால் தூங்கி -ஞானம் அபகரித்து இருள் தீம்பு செய்யுமே-காலையில் உதிக்கும் பொழுது ஓடிப்போய் ஒழியுமே-மாறி மாறி பகலும் இரவும் வர-ஆயுசை கழிக்க -இருந்தும் அறியாமல்
சத்வ உத்தரமான காலையில் -எழுந்து இருந்து சகல இந்திரியங்களை புறம்பே விஷயாந்தரங்களில் மண்டி அவன் திரு நாமம் சொல்லாமல் அஞ்சன திரு மேனியை நினையாமல் கெட்டுப்போகிறார்கள் என்று சோகிக்கிறார்-பர உபதேசம்-ஒரு நாயகமாய் இதனால் தானே–
4-1-ஒரு நாயகமாய் ப்ரவேஸம்-
முதற்பத்தால், பகவத் கைங்கர்யம் புருஷார்த்தம் என்று அறுதியிட்டார்;
இரண்டாம் பத்தால், அந்தக் கைங்கர்யத்தில் களை அறுத்தார்;
மூன்றாம் பத்தால், களை அறுக்கப்பட்ட அந்தக் கைங்கர்யமானது பாகவத சேஷத்வ பர்யந்தமான பகவத் கைங்கர்யம் என்றார்;
இப்படிப்பட்ட கைங்கர்யத்திற்கு விரோதிகள் ஐஸ்வர்ய கைவல்யங்கள் என்கிறார் இந்த நான்காம் பத்தால்.
முதல் மூன்று பத்துகளாலும் துவயத்தில் பின் வாக்கியத்தின் பொருளை அருளிச்செய்தார்;
இனி, மேல் வருகின்ற மூன்று பத்துகளாலே அதில் முன் வாக்கியத்தின் பொருளை அருளிச் செய்கிறார்.
மேல் வருகின்ற மூன்று பத்துகளாலே’ என்றது, 4-ஆம் பத்து, 5-ஆம்பத்து, 6-ஆம் பத்துகளைக் குறித்தபடி.
இம்மூன்று பத்துகளாலே ‘ஸ்ரீமந்நாராயண சரணௌ சரணம் பிரபத்யே’ என்ற முன் வாக்கியத்தின் பொருளை அருளிச்செய்கிறார் என்றபடி.
பெரிய பிராட்டியார் புருஷகாரமாக, வாத்சல்யம் ஸ்வாமித்வம் சௌசீல்யம் சௌலப்யம் ஞானம் சத்திகளாகிய குணங்களையுடைய
எம்பெருமானுடைய திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறேன்,’ என்பது இவ்வாக்கியத்தின் பொருள்.
இப்பொருள்தன்னையே 4,5,6-ஆம் பத்துகளில் அருளிச்செய்கிறார் என்பதனைத் தெரிவிக்கின்றார்.
(முதல் பத்து அவதாரிகை – ‘திருமகள்
கேள்வன் இரண்டு’ காண்க.)
“இதில் (துவயத்தில்) முற்கூற்றால், பெரிய பிராட்டியாரை முன்னிட்டு ஈசுவரன் திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறது;
பிற்கூற்றால், அச்சேர்த்தியிலே அடிமை இரக்கிறது,” என்பது ஸ்ரீபிள்ளைலோகாசார்யர் ஸ்ரீசூக்தி.
அக்ரமாக அருளிச் செய்தது -அனுஷ்டான பரம் த்வயம் –சரணாகதி பண்ணினால் பலம் கிடைக்கும் -இங்கு உபதேசம் பலத்தை முதலில் சொல்லி
-பின்பு உபாயம் சொல்ல வேண்டுமே -பிரயோஜனம் இல்லாமல் மந்த மதிகளும் கார்யம் செய்ய மாட்டார்களே –
ஸ்வர்க்க காம-பலம் சொல்லி -ஜ்யோதிஷ்ட ஹோமம் யஜெத -செய்யச் சொல்லிற்றே
பஹூச்யாம் -பிரஜா யேய-சங்கல்பம் -பலத்தை -வியஷ்டி சிருஷ்டி முதலில் சொல்லி -சமஷ்டி சிருஷ்டி பின்பு சொன்னால் போலே
முதல் மூன்று பத்துகளாலும் சொன்ன புருஷார்த்தத்துக்கு உரிய உபாயத்தை அடியிலே அறுதியிடுகிறார்.
‘அடியிலே’ என்றது, சிலேடை : முதல் திருவாய்மொழியிலே என்பதும், திருவடிகளிலே என்பதும் பொருள்.
திருவடிகளிலே என்று பொருள் கொள்ளும்போது ‘உபாயத்தை’ என்பதற்கு உபாயத்தின் தன்மையை என்று பொருள் கொள்க. ‘
சிந்தித்துய்ம்மினோ’ என்பது போன்ற இடங்களில் உபாயத்வம் கூறப்பட்டிருத்தல் தெளிவு.
உபாயத்வம் – உபாயத்தினது தன்மை. உபாயம் – வழி.
இவ்வடி அறியாதாரே அன்றோ வேறு உபாயங்களாகிற விலக்கடிகளில் செல்லுகின்றவர்கள்?
‘அல்லாதார் கர்மம் ஞானம் பத்திகளை உபாயமாகக் கொள்ளாநிற்க, இவர் திருவடிகளை உபாயம் என்கிறது என்?’ என்னும்
வினாவிற்கு விடையாக,‘இவ்வடி அறியாதாரேயன்றோ’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார். அடி – திருவடிகள்.
நிரவதிகப் பிரீதியோடேயன்றோ, மேல், திருவாய்மொழியை இவர் அருளிச்செய்தது?
-நிரவதிகம்– தனக்குமேல் ஒன்று இல்லாதது.
தாமும் குறைவற்று, பற்றினார் குறைகளையும் தீர்க்க வல்லவராம்படி இருந்தார் மேல்.
சமுசாரிகளைப் பார்த்து, ‘நீங்கள் பற்றின விஷயங்கள் தண்ணியவான பின்பு அவற்றைவிட்டுத் திருமகள் கேள்வனைப் பற்றுங்கோள்’ என்று
பரோபதேசத்தில் இழிகிறார் இத்திருவாய்மொழியில்.
ப்ராப்யாந்தர நசை ஒழிந்தே -பரித்யாகம் பூர்வாகமாகவே -உபாயாந்தர பரித்யாகம் -சர்வ தர்மான்-பரித்யஜ்ய என்பதால் சொல்லிற்றே –
‘நன்று; ‘வீடுமின் முற்றவும்’ என்ற திருவாய்மொழியிலும் பரோபதேசம் செய்தார்;
‘சொன்னால் விரோதம்’ என்ற திருவாய்மொழியிலும் பரோபதேசம் செய்தார்;
இந்தத் திருவாய்மொழியும் பரோபதேசமாய் இருக்கின்றது; இவற்றிற்குக் கருத்து என்?’ எனின்,
இவை எல்லாவற்றிலும் எல்லா அர்த்தங்களும் உளவேயாகிலும் ஒவ்வொன்று ஒவ்வோர் அர்த்தத்தில் நோக்காய் இருக்கும்.
‘யாங்ஙனம்?’ எனில்,
‘வீடுமின் முற்றவும்’ என்ற திருவாய்மொழியில் ‘இதர விஷய வைராக்கியம் முன்னாகப் பகவத் பத்தியைச் செய்யுங்கோள்’ என்றார்;
‘சொன்னால் விரோதம்’ என்ற திருவாய்மொழியில் ‘பகவானைத் துதிப்பதற்குத் தக்கனவான உறுப்புகளைக் கொண்டு
பிறரைத் துதி செய்யாமல் சர்வேசுவரனைத் துதி செய்யப் பாருங்கோள்’ என்றார்;
இத்திருவாய்மொழியில் ‘இவர்கள் தாம் பிறரைத் துதி செய்வது சில பிரயோஜனத்திற்காகவே அன்றோ?’ என்று
அவற்றினுடைய–அல்ப அஸ்திரத்வாதி – சிறுமை, நிலையின்மை -அனர்த்தாவகத்வம் -துக்க மிஸ்ரத்வம் முதலிய
தோஷங்களின் மிகுதியை அருளிச்செய்கிறார்.
செல்வம் அற்பமானது, நிலையாதது முதலிய குற்றங்களை யுடையதாகையாலே தண்ணிது;
ஆத்துமலாபமாகிய கைவல்யம் நிலைத்து நிற்பதாயினும், புருஷார்த்தம் அல்லாதது ஆகையாலே, தண்ணிது;
இப்படி ஐஸ்வரிய கைவல்யங்களுக்கு உண்டான தண்மையைச் சொல்லி, ‘சர்வேசுவரன் ஆகிறான் மங்களம் பொருந்திய
எல்லா நற்குணங்களையும் உடையவனாய் விரும்பினவை அனைத்தையும் கொடுக்கக் கூடியவனாய் இருப்பான் ஒருவன்;
ஆனபின்பு அவற்றை விட்டுப் பகவானைத் துதி செய்யப் பாருங்கோள்’ என்று இங்ஙனே பகவானைப் பற்றுவதற்கு உண்டான
நன்மையை விளக்கிப் பேசா நின்று கொண்டு பரோபதேசம் செய்ய இழிகிறார்.
தான் பெற்ற அனுபவம் பேசி அருளிய பின்பு ஆழ்வார் ஐஸ்வர்யம் கைவல்யம் அனுபவிக்கும் சம்சாரிகளைப் பார்த்து
நிலை அற்ற அத்ய அல்பம்விட்டு பகவத் விஷயம் பற்ற அருளுகிறார் இந்த திருவாய்மொழியில்
ப்ராப்யாந்தர பரித்யாகம் முன்னாக பற்ற வேண்டுமே –
இவர் தாம், மக்கள் இந்திரியங்களை வென்றவர்களாய் வந்து நின்றுகொண்டு,
‘எங்களுக்கு நலத்தை உபதேசிக்க வேண்டும்’ என்று கேட்க,
உபதேசிக்கிறார் அன்றே?
பிராட்டியும் ஸ்ரீ விபீஷணாழ்வானும் இராவணனை நோக்கி நலத்தைக் கூறினாற்போன்று இருப்பது ஒன்றேயன்றோ
இவருடைய பரோபதேசம்? ‘எல்லா ஆத்துமாக்களையும் கவரக்கூடியதான காலபாசத்தினால் கட்டு உண்டவனும் நாசத்தை அடைகின்றவனுமான
இராவணனை – பற்றி எரிகின்ற வீட்டினைப் போன்று – உபேக்ஷை செய்யமாட்டேன்’ என்பது ஸ்ரீ விபீஷணாழ்வான் வார்த்தை.
‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின்,
‘வெந்து அற்ற வீட்டிலே ‘ஒரு கம்பாகிலும் கிடைக்குமோ?’ என்று அவிக்கப் பார்ப்பாரைப் போன்று, நானும் நலத்தைக் கூறுவேன்’ என்கிறார் என்பது.
மூன்றாம் பத்தில் –
இப்படி பகவச் சேஷ பூதனான தத் ஏக அனுபவத்தை ப்ரதிபாதித்த அநந்தரம் -தத் ஏக பிரியத்வத்தை நாலாம் பத்திலே ப்ரதிபாதிப்பதாக –
அஸ்திரமாய் -அல்பமான-ஐஸ்வர்ய -கைவல்யங்களில் காட்டில் பகவத் ப்ராப்தியினுடைய உத்கர்ஷ உபதேசத்தாலே சேதனனுடைய அநந்ய போக்யத்வத்தையும் –
அவனுடைய பஹு வித போக்யத்வத்தாலே இவனுக்குப் பிறந்த போக இச்சையையும்
இவனுடைய ஆத்மாத்மீயங்கள் தனக்குப் போக்யமாம் படி ஈஸ்வரன் தான் இவனோடு கலந்த ப்ரணயத்தையும்
அனுபவ அலாபத்தில் துல்ய சம்பந்தி வஸ்து தர்சனத்திலும் ஸ்மாரகத்வேந ஆர்த்தி பிறக்கும் படியையும்
ஆர்த்தி சமிக்கும் படி ஸம்ஸ்லேஷித்த போக்ய விஷயத்தில் ஸ்தோத்ரத்தாலே போத்தாவுக்கு யுண்டான ஹர்ஷ உத்கர்ஷத்தையும்
அவசன்ன தசையிலும் அந்நிய ஸ்பர்சம் பொறாத படியான தத் அனுபந்தமே ஆச்வாஸ கரம் என்னும் இடத்தையும்
போக்ய பூதனுடைய குண அனுபவ இச்சையாலே தீவிர ஸைதில்யம் பிறக்கும் படியையும்
அவன் ஆதரியாத ஆத்மாத்மீயங்கள் அஸஹ்யங்கள் ஆகையாலே அநாதரணீயங்கள் என்னும் இடத்தையும்
அதி துஸ் ஸஹ சம்சார நிவ்ருத்தி பூர்வகமாக ஸ்ரீ யபதி சரணங்கள் அதிசயித புருஷார்த்தம் என்னும் இடத்தையும்
சர்வாதிக சேஷியானவனுடைய கைங்கர்யமே உத்கர்ஷமாய் உசிதமான ப்ராப்யம் என்னும் இடத்தையும்
அருளிச் செய்து சேஷபூதனுடைய தத் ஏக பிரியத்வத்தை உபபாதிக்கிறார் –
அதில் முதல் திருவாய் மொழியில்
சேதனனுடைய அனன்யா போக்யத்வத்தை ப்ரதிபாதிப்பதாக போக்ய பூதனுடைய நிருபாதிக சம்பந்தத்தையும்
சர்வாதிகாத்தவ ஸூ சகமான ஸ்ரீ யபதித்வத்தையும்
போக்யத்வ விசிஷ்டமான ஸுலப்யத்தையும்
போக பிரதிபந்தக விரோதி நிவர்த்தநகத்வத்தையும்
விலக்ஷண விக்ரஹாதி யோகத்தையும்
அவதார போக்யதைக்கு மூலமான அர்ணவ ஸாயித்வத்தையும்
அதுக்கும் அடியான பரத்வ உத்கர்ஷத்தையும்
ஆஸ்ரித சம்ச்லேஷ ஸ்வ பாவத்தையும்
பல பிரதத்வ ஸூ சகமான கருட த்வஜனத்வத்தையும்
நிரவதிக நியந்த்ருத்வத்தையும் அருளிச் செய்து -இப்படி ப்ராப்ய பூதனான ஈஸ்வரனை –
அஸ்திரமாயும் அல்பமாயும் உள்ள ஐஸ்வர்ய கைவல்யங்களில் அகப்படாதே ஆஸ்ரயிங்கோள் என்கிற
உபதேச முகத்தால் ஆத்மாவினுடைய அநந்ய போக்யதையை அருளிச் செய்கிறார் –
ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ.–4-1-1-
நிலை நில்லாத ஐஸ்வரியத்தைப் பற்றி நீர்க்குமிழி போலே உடைந்து போகின்ற மனிதர்களாதலின், ‘நாயகம் ஆய்’ என்கிறார்.-நிலா நாளிலே இருட்டுப் புரைகளிலும் இருட்டு நாளிலும் ஆயிற்றுப் புறப்படுவது;-இருள் ஓர் இடத்திலே திரண்டாற்போலே கறுத்த நாய்கள் கிடக்கும்; அதனை அறியாதே அவற்றின் வாயிலே காலை இடும்;-அவை கடிக்கும்.
அன்றிக்கே,-கருநாய் என்பதற்கு, கருமை –-கறுமை- சீற்றமாய், வெட்டிய நாய் என்னுதல்.
அன்றிக்கே, கரு நாய் – கருவையுடைத்தான நாய் என்னுதல்;-என்றது, குட்டி இட்ட நாய், என்றும் குட்டியைக் காத்துக்கொண்டு கிடக்குமாகையாலே, ‘அதற்கு ஏதேனும் தீங்கு வருகிறதோ!’ என்று கண்டாரை ஓடிக் கடிக்குமே அன்றோ? அதனைச் சொல்லுகிறது என்றபடி.
காலர் – ‘வீரக் கழல் இட்ட கால்’ என்றே அன்றோ முன்னர்ச் சொல்லிப்போருவது?
இப்போது, ‘நாய் கடித்த காலர்’ என்றாயிற்றுச் சொல்வது என்பார், ‘நாய் கவர்ந்த காலர்’ என்கிறார்.-முன்பு பொற்கலத்திலே உண்டு வாழ்ந்தவனுக்கு இப்போது ஒரு புத்தோடு கிடையாதபடியாயிற்று’ என்பார்,-‘சிதைகிய பானையர்’ என்றும் அருளிச்செய்கிறார்.
முன்பு அரசர்களுக்கு இராச்சியம் வழங்கினானாய் அன்றோ போந்தது? இப்போது ஒரு பிச்சை மாத்திரமேயாயிற்று இவன் விரும்புவது.-முன்பு இராசாக்கள் கொண்டு வந்த பச்சையை, சிலர் இடத் தாம் கொண்டார் என்பது ஆகாமைக்கு ஆள் வைத்தே அன்றோ வாங்குவது? இப்போது தாமே கொள்வர்.
அன்றிக்கே.-இடுகின்றவர்கள் பக்கல் நினைவு இன்றிக்கே, தம் விருப்பம் மாத்திரமே உள்ளது என்பார், தாம் கொள்வர்’ என்கிறார் என்னுதல்.
இராச்சியத் திரு இங்ஙனேயான பின்பு,-திருநாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ –‘ஸ்ரீமானான நாராயணன் திருவடிகளை அடைந்து உய்வு பெற்றுப் போருங்கோள்,’தாள் –‘பிள்ளாய்! உன் உள்வெதுப்பு ஆறுவது எப்போது?’ என்ன,
‘நானும் எனக்கு வகுத்த முடி சூடி அவரும் தமக்கு வகுத்த முடி சூடின அன்றே,’ என்றான் அன்றோ ஸ்ரீ பரதாழ்வான்?-அப்படித் தலையாகப் பிரார்த்திக்கப்பட்ட திருவடிகளை
‘அடி சூடும் அரசு’ என்னக் கடவது அன்றோ?
‘பேறு எல்லார்க்கும் வேண்டும்’ என்று இருக்கையாலே எல்லார்க்குமாக-‘உய்ம்மின்’ எனப் பன்மையாக அருளிச்செய்கிறார்.-தாள் சிந்தித்து உய்ம்மின் – அடி அற்றால் வாடும் அத்தனையே அன்றோ? -அடி உற்றால் வாழலாம் அடி அற்றால் வாடலாம் –-ஆதலால், அடியைப் பேணி நோக்கி உய்ந்து போருங்கள்.-உபாயமாகவும் ப்ராப்யமாகவும் உய்ம்மினோ –உஜ்ஜீவித்து ஆனந்தம் அடைவோம் –ரக்ஷகன் என்கிற ப்ரபத்தியே அமையும் -ப்ரபத்திக்கும் இதுவே அர்த்தம் என்கிறார் நினைவோடு வ்யாப்தமாயிற்று உஜ்ஜீவனம் இருப்பது-
—————
உய்ம்மின் திறை கொணர்ந்து’ என்று உலகு ஆண்டவர் இம்மையே
தம் மின்சுவை மடவாரைப் பிறர் கொள்ளத் தாம் விட்டு
வெம்மின் ஒளி வெயில் கானகம் போய்க் குமைதின்பர்கள்;
செம்மின் முடித் திரு மாலை விரைந்து அடி சேர்மினோ. –4-1-2-
அடியிலே நாய் அடி இட்டு நலியத் தொடங்கிற்றே? நாய் முதலிலே காற்கூறு கொண்டது;செம்மின் முடித் திருமாலை விரைந்து அடி சேர்மின் – சிவந்து மின்னுகின்ற முடியையுடைய திருமகள் கேள்வனுடைய திருவடிகளை விரைவில் பற்றுவதற்குப் பாருங்கோள்.-தன்னை அடைந்தார்க்குக் கொடுக்கைக்குத் தலையான முடி உண்டு; கொடுப்பிக்கைக்கு அருகே இருப்பாரும் உண்டு;-‘விரையாமையால் உள்ள இழவே உள்ளது’ ‘அவன் முடியைத் தரினும் நீங்கள் திருவடியைச் சேருங்கோள்’ என்பார், ‘அடி சேர்மினோ’ என்கிறார்.– ‘நீங்கள் உங்கள் அடிவிடாதே கொள்ளுங்கோள்-அடி – திருவடியும் மூலமும்.-தாஸ்யம் விடாதே -அடிப்படைக் கருத்து -சேஷத்வ பாரதந்த்ர்யம் விடாதே கொள்ளுமின் –
அடி சேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ
இடி சேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்
பொடி சேர் துகளாய்ப் போவர்கள் ஆதலில் நொக்கெனக்
கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ.–4-1-3-
அங்கு நிற்கின்ற தூணைக் காட்டிலும் ஒரு வாசி இல்லை காணும் இவருடைய நினைவால்: ஆதலின், ‘இருந்தவர்’ என்கிறார்.-இப்படி இருந்தவர்கள் என் ஆவர்?’ என்றால், பொடிபடுவர் என்கிறார் மேல் :பொடி சேர் துகளாய்ப் போவர்கள் –கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமின் – முடி கொடுத்தால் மாலையும் கொடுக்க வேண்டுமே! திருமேனியின் பரிசத்தால் நாட்செல்ல நாட்செல்ல வாசனை ஏறி வாரா நின்றுள்ள திருத்துழாய் மாலையைத் திருமுடியிலேயுடையனாய் அடியார்கட்கு எளியவனான கிருஷ்ணன் திருவடிகளை நினைக்கப் பாருங்கோள்.-‘நினைத்தல் மாத்திரம் போதியதாமோ? துதிசெய்தல் வேண்டாவோ?’ எனின், நினைத்த மாத்திரத்தில் கொண்டு முழுகுமே அன்றோ திருவடிகளின் இனிமை?
அன்றிக்கே, ‘இவ்வடியை நினைக்கவே சமுசாரம் அடி அறும்’, என்னுதல்-
——–
நினைப்பான் புகின் கடல் எக்கலின் நுண் மணலிற் பலர்
எனைத்தோர் உகங்களும் இவ்வுலகு ஆண்டு கழிந்தவர்
மனைப்பால் மருங்கு அற மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம்
பனைத்தாள் மத களிறு அட்டவன் பாதம் பணிமினோ.–4-1-4-
உலகில் கழிந்த பிரமர்கள் கங்கையிலே உள்ள மணல் போலவும் இந்திரனாலே பெய்விக்கப்படுகின்ற மழைத்தாரைகள் போலவும் எண்ணுதற்கு முடியாதவர்கள் ஆவர்,’ எனப்படுதலால். ‘கழிந்தவர் நுண் மணலிற்பலர்’ என்கிறார்.பனைத்தாள் மதகளிறு அட்டவன் பாதம் பணிமின் –‘பனைபோலே இருக்கையாலே அச்சத்தை உண்டாக்குகின்ற காலையுடைத்தான மதயானை உண்டு, குவலயாபீடம்; அதனை முடித்தவன் திருவடிகளைப் பற்றுதற்குப் பாருங்கோள். அவன் உங்களுடைய பிரபலமான தடைகளைப் போக்க, நீங்கள் அவன் காலிலே தலை சாய்க்கப் பாருங்ககோள்,’ என்கிறார்.
மேற்பாசுரத்தில். ‘மாம்’ என்றபதத்தின் பொருள் சொல்லப்பட்டது:
இப்பாசுரத்தில் ‘அஹம்’ என்ற பதத்தின் பொருள் சொல்லப்படுகிறது.-வலிய பிரதிபந்தகங்களை நிரயத்னமாக தள்ள வல்லவனை ஆஸ்ரயிங்கோள் –
————–
பணிமின் திருவருள் என்னும் அம் சீதப் பைம் பூம் பள்ளி
அணி மென் குழலார் இன்பக் கலவி அமுது உண்டார்
துணி முன்பு நாலப் பல் ஏழையர் தாம் இழிப்பச் செல்வர்
மணி மின்னு மேனி நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ.–4-1-5-
‘பணிமின் திருவருள் என்னும் அணி மென் குழலார்’ என்று முன்புள்ள முதலிகள் நிர்வஹிப்பர்கள்;-இவர்கள் நிர்வாஹத்தில் ‘என்னும்’ என்னும் எச்சம் ‘குழலார்’ என்னும் பெயருக்கு அடைமொழி.
பட்டர், அங்ஙன் அன்றிக்கே,‘திருவருள் பணிமின் என்னும்’ என்னும் இதனை ‘இன்பக் கலவி அமுது உண்டார்’ என்றதனோடே சேர்த்து அருளிச் செய்வர்.பணிமின் திருவருள் என்னும் – தான் இராச்சியத்தை அவர்களுக்குப் படுக்கைப் பற்று ஆக்கி,-அவர்களைப் படுக்கையிலே வைத்துத் தான் தாழ நின்று ‘திருவுள்ளத்தில் கிடக்கிறதை அருளிச் செய்யலாகாதோ?’ என்னும்; தன்னைத் தொழுது வணங்குகின்றவர்கள் புறம்பே உண்டே?
இனி. இன்பச் சுவையாவது, தான் இவர்களுக்குத் தாழ நிற்கையே அன்றோ?
அடி சேர் முடியனராகி இருந்தவன் இவளுக்கு அடிமை என்று தாள நின்று ரசிகத்வம் காட்டுகிறான் என்றவாறு -பட்டர்-
கிருஷ்ண த்ருஷ்ணா வாகக் கூடாதோ –-‘ஆன பின்பு, ‘பக்தாநாம் – ‘பக்தர்களுக்காகவே என்று இருக்கிற உடம்பைப் பற்றப் பாருங்கோள்’ என்கிறார் மேல் :
மணி மின்னு மேனி –-நீலமணி போன்று காந்தியையுடைத்தான திருமேனி;
அன்றிக்கே,-‘நீலமணியைக்காட்டிலும் விஞ்சின அழகையுடைத்தான திருமேனி’ என்னுதல்.
திருமேனியைக் கொடுக்கவே எல்லாம் கொடுத்ததாமிறே; சர்வ அபாஸ்ரயமாயன்றோ திருமேனிதான் இருப்பது!-மற்றுக் கொடுக்குமதிலும் இதுக்கு உண்டான வியாவிருத்தி தோற்றி இருக்கிறது
பரிஷ்வங்கோ ஹநூமத : – அமிருதாசிக்குப் புல்லையிட ஒண்ணாதே!பிறந்தது குரங்கு ஜாதி -நம்மை சேவிக்க அன்றோ பிறந்தான் –-ஸ்ரீ வைகுண்டம் -புல் ஸ்தானம் –
ஸ்நேஹோமே பரம : – (உத்தரராமாயணம்) – என்று இவ்வுடம்பை விரும்பினவனுக்கு இத்தையே கொடுக்கவேணுமே.- மயா காலமிமம் பிராப்ய தத்த: ‘இவன் ஒன்று கொள்வான் ஒருவன் அல்லன்; நாம் இவனுக்கு ஒன்று கொடுக்கப் பெறுவது காண்,’ என்று குறைபட்டிருந்தவர், இவன் விலக்காததொரு சமயம் பெற்று இப்படிக் கொடுத்துக் கொண்டு நின்றார்.
தஸ்ய மஹாத்மந : – ஒரு படி கொடுத்தாராய் ஒன்று செய்த இத்தனை போக்கி, இரண்டு உடம்பு கொடுத்தவனுக்கு ஓர் உடம்பு தரம் அன்றிறே.-வேணி உத்க்ரதனத்திலே பிராட்டி ஒருப்பட்ட அன்று அவளை உளள் ஆக்கினான்;‘அவகாஹ்யார்ணவம் ஸ்வப்ஸ்யே’ (ஸ்ரீராமா. யுத்.) என்ற பெருமாளை மீட்டு அவரை உளராக்கி இப்படி இவர்க்கு இரண்டு உடம்பு
கொடுத்தானிறே அவன். அவன் பல படி உபகரிக்கையாலே இவர் ஒருபடி உபகரித்தார்,’
பேர் சொல்லி வாழ்மினோ –-செய்ய வேண்டிய முயற்சி இவ்வளவே; பின்னை வாழ்வோடே தலைக்கட்டும். வாழ்க்கைக்கு ஒரு பேரோ!
‘அச்சுவை பெறினும் வேண்டேன்’ என்னும்படி அன்றோ இது தன்னுடைய இனிமை இருப்பது?-பேரே வாழ்க்கை என்றவாறு -பேர் சொல்வது உபாயம் இல்லையே
கெடும் இடராய –கேசவா என்ன -நாளும் கொடு வினை –தமரும் குறுககில்லார்-
—————
வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை மொக்குளின் மாய்ந்து மாய்ந்து
ஆழ்ந்தார் என்று அல்லால், அன்று முதல் இன்று அறுதியா
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பது இல்லை ; நிற்குறில்
ஆழ்ந்தார் கடற் பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ.–4-1-6-
‘திருப்பாற்கடலிலே வந்து கண் வளர்ந்தருளுகிறது கர்மத்திற்குக் கட்டுப்பட்டவனாய் அல்லவே?-நம்மால் பற்றப்படுமவன் ஆகைக்காக அன்றோ? ஆன பின்னர், அவன் நினைவோடே சேரச் சொரூபத்திற்குத் தகுதியான பேற்றினைப் பற்றுங்கோள்,’ என்பார், ‘கடற்பள்ளி அண்ணல்’ என்கிறார்.-சர்வ சமாஸ்ரயணீயனாக ஆவதற்கே -இங்கே கிடக்கிறான் –அடியவர் ஆமினோ – அவன் தலைவனாயிற்ற பின்பு நீங்கள் உங்கள் அடிமையை இசையப் பாருங்கோள்.
அன்றிக்கே,-தாச பூதர் -இயற்கையிலே-அடிமை அல்லாதது ஒரு பொருளை இன்று அடிமை ஆக்கிக் கொடுத்ததாக நினைத்திருக்கும் பகவானுடைய அபிப்பிராயத்தாலே சொல்லுகிறார் ஆகவுமாம்.-
—————
ஆமின் சுவை அவை ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்த பின்
தூமென் மொழி மடவார் இரக்கப் பின்னும் துற்றுவர்,
‘ஈமின் எமக்குஒரு துற்று’என்று இடறுவர் ; ஆதலின்,
கோமின் துழாய்முடி ஆதிஅம் சோதி குணங்களே.–4-1-7-
அன்ன பாநாதி போகங்களும் அநித்தியம் என்கிறார் –-ஆதி அம் சோதி குணங்கள் கோமின் –-எல்லா ஐஸ்வர்யத்திற்கும் அறிகுறியான திருத்துழாய் மாலையைத் திருமுடியிலே உடையனாய், உலக காரணனாய், எல்லை இல்லாத ஒளி உருவமான விக்கிரஹத்தை யுடையவனாய் இருந்துள்ளவனுடைய குணங்களைச் சேர்த்து அனுபவியுங்கோள்
ஆதி-சொரூபத்தைப் பற்றியதாயும்–அம் சோதி– விக்கிரஹத்தைப் பற்றியதாயும் உள்ள கல்யாண குணங்கள்’ என்பார்,-ஆதி அம் சோதி குணங்கள்’ என்கிறார்.
———-
குணங்கொள் நிறை புகழ் மன்னர் கொடைக்கடன் பூண்டிருந்து
இணங்கி உலகு உடன் ஆக்கிலும், ஆங்கு அவனை இல்லார்
மணங்கொண்ட போகத்து மன்னியும் மீள்வர்கள்; மீள்வு இல்லை;
பணங்கொள் அரவணையான் திரு நாமம் படிமினோ.–4-1-8-
‘இராச்சிய இலக்குமி நிலை நில்லாது ஒழிவது, நாட்டாரோடு பொருந்தி வாழாது ஒழியில் அன்றோ?-அவர்களோடு பொருந்தி வாழவே அது நிலை நிற்குமே?’ என்ன,
1-‘பொருந்தி வாழ்ந்தாலும், எம் பெருமானை அடையாவிடில் கிடையாது;
2-அவனை அடைந்து பெற்றாலும், அதன் தன்மையாலும் நிலை நில்லாது;
3-ஆன பின்பு, அவன் தன்னையே பிரயோஜனமாக அடையுங்கோள்,’ என்கிறார்.
இனி, ‘பலத்தில் நோக்கம் இல்லாதவனாய்த் தான தர்மங்களைச்செய்து எம்பெருமானையே பலமாகப் பற்றாமல், பலத்தில் நோக்கம் உள்ளவனாய்த் தான தர்மங்களைச் செய்து சுவர்க்கம் முதலானஉலகங்களை விரும்பினால் அவை நிலை நில்லா,’
என்று இத்திருப்பாசுரத்திற்குப் பொருள் கூறலுமாம்
யோக ஷேமம் வஹாம் அஹம் -கிடைக்காதது கிட்டும் -கிடைத்தது நிற்கும் அவனைப் பற்றினால் என்றபடி –
பணம் கொள் அரவு அணையான் திருநாமம் படிமின் – தன்னுடைய பரிசத்தாலே விரிந்த படங்களையுடைய திருவனந்தாழ்வானை நிரூபகமாக வுடையவனுடைய திருநாமங்களிலே மூழ்குங்கோள் ‘திருநாமத்திலே மூழ்கினவர்களைத் திருவனந்தாழ்வானைப் போன்று விடான்’ என்பார்.– ‘அரவணையான் திருநாமம் படிமின்’ என்கிறார்.
அன்றிக்கே,
‘இவ்விதமாக அறிந்தவர்கள் பாதங்களால் ஏறுகிறார்கள்,’ என்கிறபடியே, துகைத்து ஏறலாம்படியான படுக்கையையுடையவன்–பஞ்ச சயனத்தின் மேல் ஏறி கோட்டுக் கால் கட்டில் மேல் ஏறி -என்பார்,‘அரவணையான் திருநாமம் படிமின்’ என்று அருளிச்செய்கிறார் என்னுதல்.
———-
படி மன்னும் பல்கலன் பற்றோடு அறுத்து,ஐம் புலன்வென்று,
செடி மன்னு காயம் செற்றார்களும், ஆங்கு அவனை இல்லார்
குடி மன்னும் இன் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள்; மீள்வு இல்லை;
கொடி மன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ. –4-1-9-
மேல் எட்டுப் பாசுரங்களால் ‘இவ்வுலக இன்பம் நிலை அற்றது,’ என்றார்;
இப்பாசுரத்தில். ‘உடலை வருத்தும் தன்மையையுடைய தவத்தைச் செய்து அந்தத் தவத்தின் பலம் சுவர்க்கமாகக் கொண்டு ஸ்வர்க்கத்தை அடையும்போது பகவானுடைய திருவருள் வேண்டும்; அவனுடைய திருவருளால் சுவர்க்கத்தை அடைந்தாலும், அதனுடைய இயற்கையாலே நிலை நில்லாது,’ என்கிறார்.
அங்கு அவனை இல்லார் –-அவன் திருவருள் இல்லையாகில் தானே சித்தியாது.
அவன் திருவருளால் பெற்றதாகில், குடி மன்னும் இன்சுவர்க்கம் எய்தியும் – ‘இதற்கும் ஆள் பற்றுவதே!’ என்பர் பட்டர்.
கொடி மன்னு புள்-கொடியாய் மன்னா நின்றுள்ள பறவை. என்றது, தன்னை அடைந்த அடியாரையும் தனக்கு வேறுபடுத்தும் விசேஷணமாகக் கொள்ளுமவன் என்பதனைத் தெரிவித்தபடி. ‘அல்லாதாரைக் காட்டிலும் அவனை வேறுபடுத்தும் விசேஷணமாகக் கொள்ள வேண்டுவான் என்?’ என்னில், அவனுடைய மூக்கு வலியும் அவன் பக்கல் பக்ஷபாதமும் அதற்கு அடி.
புள்ளுடை அண்ணல் –‘திருமகள் கேள்வன்’ என்னுமாறு போலே ஈசுவரனுக்கு நிரூபகமே யன்றோ அவன்? அண்ணல் – தலைவன்.
கழல்கள் குறுகுமின் – உங்கள் பிறவி கழல அவன் கழல்களைக் குறுகுங்கோள்.
‘திருநாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ’ என்றார் முதற்பாசுரத்தில்.
இங்கே, ‘புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ’என்கிறார் காணும், அவளோபாதி இவனும் அங்குத்தைக்கு நிரூபக தர்மம் என்று.
———–
குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம் விட்ட
இறுகல் இறப்பெனும் ஞானிக்கும் அப்பயன் இல்லையேல்,
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்; பின்னும் வீடு இல்லை,
மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில், வீடு அஃதே.–4-1-10-
திருமகள் கேள்வன் பெரிய திருவடி திருத்தோளிலே தோளும் தோள் மாலையுமாய் வந்து நின்றாலும், சாணகச் சாற்றைப் போன்று-சாணகச்சாறு – பஞ்ச கவ்யம்.– சுத்தி மாத்திரத்தையே பற்றிக்கொண்டு, இனிமையிலே நெஞ்சு செல்லாதபடி அதனையும் விடுவது.-தேவோஹம் – நான் தேவன், மனுஷ்யோகம் – நான் மனிதன்’ என்கைக்கு அடியான தளை ஆதலின்,‘சிறுக நினைவது ஓர் பாசம்’ என்கிறார்.
அண்டாதிபதே -சொல்லி ஐஸ்வர்யம் பெற்று போவான் – அசுத்த சரீரம் -கர்மா தீனம் இல்லாமல் -சுத்தன் என்றே உபாசித்து -கைவல்யம் பெற்று போவான் –
அவன் அழகை அனுசந்தித்து -பகவத் ப்ரீதி காரித கைங்கர்யம் பெற்று போவோம் –அந்திம ஸ்மிருதி இல்லையாகில் ஆதி பரதனைப்போலே மான் ஆதல், மரை ஆதல் ஆமித்தனை.
அஃதே வீடு –‘திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ’ என்று நான் சொல்லுகிற அதுவே புருஷார்த்தம்.
பன்னீராயிரப்படி மட்டும் -அவனைப் பற்றி பிரயோஜ நாந்தரம் பெற்று விடா விடில் -அஃதே வீடு –
—————
அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய்கோலத்து ஆயிரம் சீர்த்தொடைப் பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற் பாலரே.–4-1-11-
‘காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ’ என்று தாம் சொன்னபடியே உடையவர் ஆவர்
‘கண்ணனைத் தாள் பற்றி’ என்று தாமும் சொல்லி, கண்ணன் கழல்கள் நினைமினோ’ என்று பிறர்க்கும் உபதேசித்து நின்றாரே?-அது தன்னையே அருளிச்செய்கிறார். ‘இப்படி அடியுடையார் புறம்பு இல்லை’ என்றே அன்றோ இவ்வடிகளைத் தாம் பற்றியது?
‘துயர் அறு சுடர்அடி தொழுது எழு’ என்று தம் திருவுள்ளத்திற்கு அருளிச்செய்தார்;
‘வண் புகழ் நாரணன் திண்கழல் சேரே’ என்று பரோபதேசம் செய்தார் அங்கு.
இங்கு, ‘கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடு இலனே,’ என்றார்;
‘கண்ணன் கழல்கள் நினைமினோ,’ என்று பரோபதேசம் செய்தார்.
இது என்ன அடிப்பாடுதான்! ‘கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண்,’
என்றே அன்றோ பரோபதேசம் முடிக்கிறதும்?
——————–——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –