ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
செய்ய தாமரை -3 -6 -அவன் இவன் என்று கூழேன்மின் அவனாகும் நீள் கடல் வண்ணன் -அர்ச்சாவதார சீர்மை-இவன் அவன் ஆக மாட்டானே -இங்கே தானே சரணாகதியும் அனுபவமும்-தமர் உகந்த இவ்வுருவம் அவ்வுருவம் தானே-கடல் வண்ணன் கண்ணன் -கருமாணிக்கம் –அன்று தேர் தடவிய கண்ணன் கழல் காண்பது என்றோ – கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -தனது துறையிலே இரங்குகிறார்
அர்ச்சை கிடைத்த சந்தோஷமும் -தேர் கடாவிய கழல் காண்கை இழந்த வருத்தமும் உண்டே-ஹந்த -அந்தோ -சந்தோஷ ஸூ சகம்-பாயில் -திருப்பாற்கடலில் -திரு அனந்தாழ்வான் -திரு -அழகிய நெடும் -அபரிச்சின்ன கண்கள் -வளர்ந்து -உறங்குவான் போல் யோகு செய்யும் – அறிவு -உற்றும் -ஜகத் ரக்ஷண சிந்தை –
அவதாரிகை –ஒரு தென்றல் வந்து உலாவிற்றாய் – தென்றல் வந்தது -அவன் வரக் கண்டிலோம் -என்று தலைமகள் தளர – அத்தைக் கண்ட தோழி யானவள் –இத்தை வெறும் தென்றல் என்று இருந்தாயோ –
மாளிகை சாந்து நாறா நின்றால்-ராஜ புத்திரன் -வரவணித்து – என்று இருக்க வேண்டாவோ –இது அவன் வரவுக்கு ஸூ சகம் காண் -நீ சோகிக்க வேண்டா -என்று ஆஸ்வசிப்பிக்கிறாள்-ஆக இருக்கிறது –
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-அவதாரிகை-இப்படி இவருடைய ஜகத் ரக்ஷணமும் ஜகத் ஆஹ்லாதனமும் ஸ்வா தந்தர்ய அசஹை களானவர்களுடைய வதனே யாமதோ என்று
மோஹங்கதையான தன்மைகளை ஆஸ்வஸிப்பிக்க இவளின் பரம பிரணயியான சர்வ ரக்ஷகன் திரு அபிஷேகத்தில் சாத்தின திருத்துளாய்ப் பரிமள மயமான தென்றலை இவன் மேலே ப்ரஸவிப்பித்தான்
அத்தால் ஆஸ்வஸ் தையான நாயகி பாவம் பெற்றாராய் அவள் தன் தோழிக்கு உரைத்த பாசுரத்தால் தாம் அதுக்கு ஆச்சர்யப்படுகிறார்
தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப்பாயில் திரு நெடுங்கண்
வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும் மால் வரையைக்
கிளர்ந்து மறிதரக் கீண்டு எடுத்தான் முடி சூடு துழாய்
அளைந்து உண் சிறு பசுந்தென்றல் அந்தோ வந்து உலாகின்றதே – – -74 -திரைப்பாயல் பாட பேதம்–தலைவி மகிழ்வுடன் சொல்லும் பாசுரம் என்றும் -தென்றல் வருகிறதே -அவன் வரவில்லை -என்று வருந்த தோழி திரு மேனி ஸ்பர்சம் முகந்து வருவதால் அருகில் வந்து கொண்டு இருக்கிறார் -அறியலாம் –தோழி அவன் வருகைக்கு அறிகுறி என்பதாகவும் கொள்ளலாம்
தளர்ந்தும் முறிந்தும் வருதிரை–(கொந்தளித்து விழுவதெழுவதாயக்) கனத்தாலே தளர்ந்தும்
காற்றாலே முறிந்தும் வருகிற அலைக் கிளர்ச்சியையுடைய திருப்பாற்கடலில்
பாயல்–(ஆதிசேஷனாகிய) சயனத்தில்
திருநெடு கண் வளர்ந்தும்–அழகிய நீண்ட திருக்கண்களுறங்கியும்
அறிவுற்றும்–(அவ்வுலகத்தில் யாவும்) அறிந்தும்
வையம் விழுங்கியும்–பிரளயகாலத்திலே உலகங்களை வயிற்றினுட்கொண்டு காத்தும்
மால்வரையை கிளர்ந்து மறிதர தீண்டு எடுத்தான்–கோவர்த்தனகிரியை மேலெழுந்து குடையாகக் கவியும்படி
பெயர்த்தெடுத்தும் உதவிகிற எம்பெருமானது
முடிசூடு துழாய்–திருமுடியிற் சூடியுள்ள திருத்துழாயை
அளைந்து உன்–அளாவியுண்ட
பசு சிறு தென்றல்–புதிய இளமையான தென்றற் காற்றானது
அந்தோ வந்து உலாகின்றது–மகிழ்ச்சி யுண்டாம்படி (என்மேல்) வந்து வீசுகிறது.
செய்ய பரத்துவமாய்ச் சீரார் வியூகமாய்
துய்ய விபவமாய்த் தோன்றி வவற்றுள் -எய்துமவர்க்கு
இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிது என்றான்
பன்னு தமிழ் மாறன் பயின்று—26-தாமே விழுவாரைத் தடி கொண்டு அடிக்கை அன்றோ நாமும் கை விடுகை -என்று தம்மாலே பொடியப் பட்டார் நாட்டார் இழவு பொறுக்க மாட்டாத கிருபா அதிசயத்தாலே
மீண்டும் அவனுடைய சௌலப்யத்தை உபதேசிக்கைக்காக பர வ்யூஹ விபவங்களை அடைவே அருளிச் செய்து கொண்டு சென்று நீங்கள் உகந்த படியே உகந்து எழுந்து அருளப் பண்ண
அத்தை அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தோடு ஒக்க விரும்பும் சீலாதி அதிசயத்தாலே உங்களோடு புரையறக் கலந்து சர்வ அபேஷிதங்களையும் குறைவற உபகரிக்கும் அர்ச்சாவதாரத்தில் ஆஸ்ரயிங்கோள் என்கிற செய்ய தாமரைக் கண்ணனில் தாத்பர்யத்தை அருளிச் செய்கிறார்
தளர்ந்தும் -இத்யாதி –பெருத்து மலை போலே இருக்கிற திரைகளை எடுத்து – அக் கனத்தாலே தளர்ந்தும் – காற்றாலே முறிந்தும் வருகிற -திரைகளை உடைத்தான படுக்கையிலே – இவன் சர்வேஸ்வரன் -என்று ஐஸ்வர்யத்தை கோள் சொல்லிக் கொடுப்பதாய் –அழகுக்கு எல்லை இன்றிக்கே இருக்கிற கண்களைக் கொண்டு உறங்கியும் – ஜகத் ரஷணத்தை பண்ணிக் கொண்டு கண் வளர்ந்தும் –அறிவுற்றும் – பிரளயம் வந்து நலியப் புக்கவாறே -இவற்றின் உடைய ரஷண அர்த்தமாக – நாம் வந்து கிடக்கச் செய்தே இவற்றை நோவு பட விட்டு இருக்கை யாவது என் -என்று உணர்ந்து அருளியும் –வையம் விழுங்கியும் –பிரளயத்தில் நோவு படாத படி பூமியை எடுத்து வயிற்றிலே வைத்து நோக்கியும் –மால் வரை -இத்யாதி – அப்படி ஜகத்துக்காக வருகை அன்றிக்கே – ஒரூராக நோவு படப் புக்கால் வந்து நோக்கும்படியைச் சொல்லுகிறது –-கோவர்த்தனம் ஆகிற மகா கிரியை நின்ற நிலையிலே நின்று கிளப்பி – கீழது மேலதாம்படி பேர்த்து எடுத்தவனுடைய –முடி சூடு துழாய் இத்யாதி –தாளிணை மேல் தண் அம் துழாய் -என்று அவள் இருந்தாலும் –-ஏகாந்தி விதி ப்ரயுக்தாம் பூஜாம் -க்ருஹ்னாதி சிரஸா ஸ்வயம் -என்று-அவன் இருக்கும்படியாலே இவள் அத்தைச் சொல்லுகிறாள் –இவன் திரு அபிஷேகத்தில் சாத்தின-திருத் துழாயிலே புக்கு உழறி- அதிலே வாசனையைப் பண்ணி –
நடுவிலே ஒன்றிலும் தங்காதே- கலப்பற்று வருகிற மந்த மாருதம் அன்றோ வந்து உலாவுகிறது –
இனி உனக்கு சோகிக்க அவகாசம் உண்டோ –அவன் முடி சூடு துழாய் என்று அமைந்து இருக்க கீழ்ச் சொன்ன விசேஷணங்களுக்கு கருத்து என் என்னில் – அவன் ஆஸ்ரித அர்த்தமாக வ்யாபரித்த-இடம் எங்கும் புக்கு ஸ்வேத கந்தத்தைக் கொண்டு வாரா நின்றது என்கை –சிறு தென்றல் –-மந்த மாருதம்—திரு –ஐஸ்வர்யமாகவும்–அழகாகவும்
நாயகன் உடைய திரு முடியில் சூடிய திருத் துழாய் வாசனை பருகி வந்து தென்றல் வீச நாயகி மகிழ்ந்து பேசும் பாசுரம் –அவன் வரவுக்கு ஸூ சகம் என்று சொல்லி தோழி தலைவியை ஆற்றாமை தணிக்கும் பாசுரம் என்றுமாம்–திரு நெடுங்கண்-வளர்ந்தும் அறிவுற்றும்– லோக ரக்ஷணம் சிந்தனை -யோக நித்திரை -அறிதுயில் -விழி துயில் -துயிலாத துயில் -போய் உறக்கம் –-மால் வரையைக்-கிளர்ந்து மறிதரக் கீண்டு எடுத்தான்–பசுக்கள் எட்டிப் புல் மேயலாம் படி கோவர்த்தன மலையைத் தலை கீழாக எடுத்துக் பிடித்தமை –-சிறு பசுந்தென்றல்-மந்த மாருதம் –
ஸ்வாபதேசம் –-ஆழ்வார் எம்பெருமானது காருண்யம் ஐஸ்வர்யம் போக்யதைகளில் ஈடுபட்டு தரித்தமையும் அவனது மஹா குணங்களை சொல்லி ஆழ்வாரை பாகவதர்கள் ஆற்றாமை தனித்தவையும் சொல்லிற்று யாய்த்து–நாயகனது திருத்துழாயிற்பட்ட தென்றல், நாயகி மகிழ்நதுரைக்கும் பாசுரம் இது.-நாயகனது மேனியோடு ஸம்பந்தப்பட்ட பொருள் தன் உடம்பின்மீது வந்து பட்டுத் தனது பிரிவாற்றாமைத் துயரைச் சிறிது தணிப்பித்தலாகிய ஸந்தோஷத்தைத் தலைவி தோழிக்கு உரைக்கின்றாளென்க.–கொந்தளித்து வீசுகின்ற அலைக்கிளர்ச்சியையுடைய திருப்பாற்கடலில் சேஷசயனத்தில் உறங்குவான் போல் போகு செய்தும் பிரளய காலத்தில் உலகங்களை வயிற்றினுட்கொண்டு காத்தும் கோவர்த்தநகிரியைக் குடையாக வெடுத்துப் பிடித்துப்
பெருமழைத் துன்பத்தைப் போக்கியும் உபகரித்தருள்கின்ற எம்பெருமானுடைய திருமுடியில் அணிந்துள்ள திருத்துழாயை யளைந்த புதிய இளந்தென்றற் காற்றானது மகிழ்ச்சியுண்டாகும்படி என் மேல் வந்து வீசுகின்றது என்றாளாயிற்று.-இனி, இதனை, வழக்கம்போலத் தென்றல் வரவு கண்டு அதற்கு வருந்தத் தொடங்கிய நாயகியை நோக்கித் தோழி ‘இதை நீ வெறுந்தென்றலென்று கருதாதே; அவனுடம்பிற்பட்டு வருகிறது காண் இது;-இது அவன் வரவுக்கு அறிகுறி’ என்று கூறிச் சோகந்தணிக்கிறதாகவுங்கொள்வர்.-ஹந்த! என்னும் வடசொல் (அவ்பயம்)- மகிழ்ச்சி, இரக்கம், துன்பம் முதலிய பொருள்களில் வருமென்று வடமொழி நிகண்டினால் தெரிகிறதனால் அதன் விகாரமாகிய அந்தோ வென்பது இங்கு மகிழ்ச்சிப் பொருளில் வந்ததென்க.-திருநெடுங்கண் வளர்ந்து மறிவுற்றும் = எம்பெருமானது தூக்கம் நமது தூக்கம் போல் தமோகுண காரியமாய் உடம்பு தெரியாது கொள்ளுந் தூக்கமன்றியே எல்லாப் பொருளையும் அறிந்து கொண்டே லோகரக்ஷணை சிந்தனை பண்ணும் தூக்கமாதலால் ‘கண்வளர்ந்தும் அறிவுற்றும்’ எனப்பட்டது; இது பற்றியே அத் தூக்கம்- யோக நித்திரை, அறிதுயில், விழிதுயில் துயிலாத் துயில், பொய்யுறக்கம் எனப்படும்.-“மால்வர¬யை மறிதர எடுத்தான்” என்றதனால் பசுக்கள் எட்டிப் புல்மேயலாம்படி கோவர்த்தந மலையைத் தலைகீழாக எடுத்துப் பிடித்தமையுந் தோன்றும்.சிறு தென்றல் – மந்தமாருதம்.–இப்பாட்டுக்கு உள்ளுறை பொருளாவது- பிரிந்த நிலையில் ஆழ்வார் தாம் எம்பெருமானது காருண்யம் ஆச்வர்யம் யோக்யதை
என்னும் இக்குணங்களின் நடையாட்டத்தைக் கண்டு ஆறியிருக்குந் தன்மையை அருளிச் செய்தலாம். மற்றவை வெளிப்படை. இனி தோழிவார்த்தை யென்னும் பக்ஷத்தில், அவன் ஆச்ரிதர்களை ரக்ஷித்தருளும் பொருட்டுக் கடலிலே யோக நித்திரை கொண்டருள்வதும் பிரளயாபத்தில் உலகத்தை வயிற்றில் வைத்து நோக்குவதும் கோவர்த்தநோத்தாரணம் பண்ணினமையுமாகியமஹா குணங்களைச் சொல்லி அன்பர்கள் ஆழ்வாரை ஆற்றுகின்றதாக ஸ்வாபதேசம் கொள்கை.
தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப்பாயில்-பகவத் ஸ்பர்ச ஸூகத்தாலே கொந்தளித்து விழுவது எழுவதாய் பரஸ்பர ஹானியாலே முறிந்தும் வருகிற திரைக் கிளப்பத்தை யுடைத்தான
ஷீரார்ணவத்தில் படுக்கையிலே--திரு நெடுங்கண் வளர்ந்தும் ஸ்ரீ மத்தாய் அதிசய ஸூசகமான திருக்கண்கள் உறங்கியும்-அழகிய நெடும் கண் என்றுமாம்-அறிவுற்றும்-அவ்வுறக்கம் தமஸ் கார்யம் அல்லாமையாலே அத்தோடே ஜகத் ரக்ஷண சிந்தை பண்ணியும்-வையம் விழுங்கியும்-ரக்ஷணீயமான ஜகத்துக்கு பிரளய ஆபத்து வந்தவாறே திரு வயிற்றிலே வைத்து நோக்கியும்–மால் வரையைக் கிளர்ந்து மறிதரக் கீண்டு எடுத்தான்-ஆஸ்ரித ரானவர்களை -அந்தர் வர்க்கமான இந்த்ராதிகள் பசிக் கோபத்தாலே வர்ஷாதிகளாலே நலியும் அளவிலே பெரிய மலையை உயர மறித்துக் குடையாக்குகைக்காக இடந்து எடுத்த மஹா உபகாரகனுடைய-முடி சூடு துழாய் இந்திரன் கோவிந்த அபிஷேகம் பண்ணின திரு முடியிலே சாத்தின திருத்துழாயை-அளைந்து உண் சிறு பசுந்தென்றல்
தழுவி முழுசி அனுபவித்த மந்தமான புதிய தென்றலானது-அந்தோ வந்து உலாகின்றதே-ஐயோ வந்து உலவா நின்றது என்று தன்னுடைய சந்தோஷத்தைத் தோழிக்கு உரைத்தாளாயிற்று-அன்னோ -என்ற பாடமாய் உலவா நின்றதீ என்றுமாம்–இவ் விடத்தில் தென்றல் உலாவுதலை உகந்து உரைத்தது
தலைவனான ஈஸ்வரன் ஆசன்னனானான் என்கிற அபிப்ராயத்தாலே-இத்தால் தன்னோட்டை ஸம்ஸ்லேஷ ஸூகத்தாலே பெரும் கடல் கிளர்ந்தால் போலே தான் நித்ய வாஸம் பண்ணுகிற தேசத்தின் நீர்மையை யுடையரானவர்கள் அனுபவிக்கும் படி தன்னை ஸர்வ ஸ்வ தானம் பண்ணி ஜகத்துக்கு ஸர்வ பிரகார ரக்ஷகனாய் ஆபத் சகனாய் விரோதி நிவர்த்தன சீலனான கிருஷ்ணனுடைய நிரவதிக சேஷித்வ போக்யத்வங்களானவை அவனுடைய தாக்ஷிண்ய அதிசயத்தாலே பிரகாசியா நின்றது என்று ஆஸ்வஸ் தராய் ஸூஹ்ருத்துக்களுக்கு அருளிச் செய்தார் ஆயிற்று-(சிறு பசும் தென்றல் தழுவி முழுசி -தாக்ஷிண்ய அதிசயம் )
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம் –தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப்பாயில் திரு நெடுங்கண்
வளர்ந்தும்-தளர்ந்து பெரும் திரையாக எடுத்து -அக்கனத்தாலே தளர்ந்தும் காற்றாலே முறிந்தும் வருகிற திரைகளை யுடைத்தான படுக்கையிலே இவன் ஸர்வேஸ்வரன் என்று ஐஸ்வர்யத்தைக் கோள் சொல்லிக் கொடுப்பதாய் பரப்புக்கு எல்லை இன்றிக்கே இருக்கிற கண்களைக் கொண்டு உறங்கியும்
ஜகத் ரக்ஷண சிந்தையைப் பண்ணிக் கொண்டு கண் வளர்ந்ததும்-அறிவுற்றும்-பிரளயம் வந்து நலியப் புக்கவாறே இவற்றினுடைய ரக்ஷண அர்த்தமாக நாம் வந்து கிடக்கச் செய்தே இவற்றை நோவு பட விட்டு இருக்கையாவது என் என்று உணர்ந்து அருளியும்-வையம் விழுங்கியும்-பிரளய ஆபத்திலே நோவு படாதபடி பூமியை எடுத்து திருவயிற்றிலே வைத்து நோக்கியும்–மால் வரையைக் கிளர்ந்து மறிதரக் கீண்டு எடுத்தான்-அப்படி ஜகத்துக்காக வருகை அன்றிக்கே ஒரூராக நோவு படப்புக்கால்
வந்து நோக்கும் படியைச் சொல்லுகிறது-கோவர்த்தனம் ஆகிற மஹா கிரியை நின்ற நிலையிலே கிளம்பும்படி கீழது மேலதாம் படி பேர்த்து எடுத்தவனுடைய-முடி சூடு துழாய் அளைந்து உண் சிறு பசுந்தென்றல் அந்தோ வந்து உலாகின்றதே–தாளிணை மேல் அணி தண்ணம் துழாய் -திருவாய் -4-2-1- என்று அவன் இருந்தாலும் கிருஷ்ணாதி சிரஸா ஸ்வயம் -என்று அவன் இருக்கும்படியாலே
இவள் அத்தைச் சொல்லுகிறாள் அவன் திரு அபிஷேகத்திலே சாத்தின திருத்துழாயைப் புக்கு உழறி
அதிலே வாஸனை பண்ணி நடுவு ஒன்றிலே தங்காதே கலப்பற்று வருகிற மந்த மாருதம் அன்றோ வந்து உலவுகிறது இனி உனக்கு சோகிக்கைக்கு அவகாசம் உண்டோ–அவன் முடி சூடு துழாய் என்ன அமைந்து இருக்க கீழ்ச் சொன்ன விசேஷணங்களுக்குக் கருத்து என் என்னில்-அவன் ஆஸ்ரித அர்த்தமாக வியாபாரித்த இடம் எங்கும் புக்கு ஸ்வேத கந்தத்தைக் கொண்டு வாரா நின்றது என்கை-இத்தால் அவன் ஆஸ்ரித அர்த்தமாகாது திருப்பாற் கடலிலே வந்து கண் வளர்ந்து அருளின படியையும்
பிரளய ஆபத்திலே ஜகத்தை திரு வயிற்றிலே வைத்து நோக்கின இம் மஹா உபகாரத்தையும்
கோவர்த்தன உத்தரணம் பண்ணின படியையும்
ஆக இக் குணங்களைச் சொல்லி பார்ஸ்வஸ்த்தர் ஆஸ் வஸி ப்பிக்கும் படியைச் சொல்லுகிறது
ஆக குண ஞானத்தாலே ஜீவித்த படியைச் சொல்லுகிறது
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-வியாக்யானம்-தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப்பாயில்
ஒன்றுக்கு ஓன்று கொந்தளித்து விழுந்தும் புரளுமதாய் முறுகளைப் பெற்றும் மேல் வருகிற திரைப்பாயனுள்ள ஆழ் கடலிலே திரு நெடுங் கண் வளர்ந்தும் திருவும் தாமும் தீர்க்க லோசனாத்மக யோக நித்திரை செய்தும்-அறிவுற்றும்-மத்யே வந்தவர்களைக் கடாக்ஷிக்கக் கண் விழித்தும்–வையம் விழுங்கியும்–மால் வரையைக் கிளர்ந்து மறிதரக் கீண்டு எடுத்தான் -மஹத்தான கோவர்த்தனத்தை விஜ்ரும்பணத்தால் விஜ்ரும்பித்து மேற்புறம் உட் படும்படி நிலத்தோடு ஒட்டு விடுவித்தவனுடைய-முடி சூடு துழாய் அளைந்து உண்-திரு அபிஷேகத்தில் சாத்தின திருத்துழாயில் விளையாடி தத்கத கந்த மகரந்த ஆஸ்வாதீ யானதாய்–சிறு பசுந்தென்றல்-சிறுகச் சிறுக வருகிற குளிர்ந்த தென்றலானது-அந்தோ வந்து உலாகின்றதே – இப்போதாக ஸஞ்சரியா நின்றபடி என்று ஆஸ்வஸிக்கிறார் –
ஸ்வாபதேசம்
இத்தால் –
1-அவன் ஆஸ்ரித அர்த்தமாக திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின படியும் –
2-பிரளய ஆபத்தில் ஜகத்தை வயிற்றில் வைத்து நோக்கின இம் மகா குணமும் –
3-கோவர்த்தனம்-உத்தரணம் பண்ணின படியும் – ஆகிற அக் குணங்களைச் சொல்லி பார்ஸ்வஸ்தார் ஆஸ்வசிப்பிக்கிற படியை சொல்லுகிறது –குண ஜ்ஞானத்தாலே ஜீவித்த படியை சொல்லுகிறது –
தாத்பர்யம்–கீழ்-ராக -பூர்ண -சந்த்ரனைக் கண்டு மோஹித்துக் கிடந்த நாயகி திருத்தாயார் அடல் ஆழிப்பிரான் -பொழில் ஏழும் காத்து அளித்த பிரான் என்று திரு நாமம் செவிப்பட்டவாறே மோஹம் தெளிந்து அப்பொழுது குளிர்ந்த மந்தமாருதமும் வீச அத்தாலே நலிந்த தலைமகளைக் கண்ட தோழி
அவன் திருப்பாற் கடலிலே கள்ள நித்திரை –ஏரார் கோலம் திகழக் கிடந்தான் அன்றோ-கண் மூடி தூங்காமல் -கூப்பீடு சப்தம் கேட்பதற்க்காகவும் அழகை வெளிப்படுத்திக் கொண்டு -ரக்ஷண ஏக சிந்தையானாய் அதி ஸூந்தரமான விசாலமான திருக்கண்கள் காட்டி உபகரிப்பவனுமாயும்
பிரளய ஆபத்தில் திருவயிற்றிலே ஸகல லோகங்களையும் வைத்து ரக்ஷிப்பவனாயும்
கோவர்த்தனம் உதாரணம் பண்ணி ஆ நிரைகளையும் கோபர்களையும் ரக்ஷிப்பவனாயும் இருப்பவன் என்று அவன் ரக்ஷகத்வ குண சேஷ்டி தங்களைக் காட்டி தோழி ஆஸ்வஸிப்பிக்கிறாள்
நாயகன் குணங்களை அறியாயோ-இப்படி ரக்ஷணமே குணமாக உள்ள அவன் உன்னை உபேக்ஷிக்க மாட்டானே -இத் தென்றலும் வெறும் தென்றல் அல்லவே-அவன் சாத்தி அருளும் திருத்துழாய் மதுவில் அளைந்து –அந்த தேன் துளியை நம் மேல் தெளித்து நாயகன் அருகில் வந்தமை ஸூ சிப்பிக்கிறதே
தண்டகாரண்ய ரிஷிகள் பெருமாள் வந்ததை நீல மேக ஸ்யாமளன் -தண்டகாரண்யம் நிறுத்தாலேயே
அறிந்தால் போல் இதுவும் அவனது வரத்த்துக்கு ஸூ சகமே நீ சோகிக்க வேண்டா என்று ஆஸ்வஸிப்பிக்கிறாள் –
3-6-செய்ய தாமரைக் கண்ணன் -பிரவேசம்
சர்வேசுவரன் திருவடிகளில் கைங்கரிய ருசியுடையார்க்கு அதனைக் கொடுக்கக் கடவனுமாய், அவ்வடிமைதான் அவன் தனக்கு
இனியதாயிருக்கக்கடவதுமாய், அவ்வழியாலே இம்மக்களுக்கு உத்தேஸ்யமாகக் கடவதுமாயிருக்க,
அதனை இழக்கையாலே நிந்திக்க வேண்டும்படி இருந்தமையின், இவ்வடிமையிலே சேர்ந்தவர்களைக் கூட்டிக்கொண்டு,
அது இல்லாதாரை வெறுத்தவராய் நின்றார் மேல் திருவாய்மொழியில்;
அவ்வாறு வெறுத்தல், தாமே விழுவாரைத் தடிகொண்டு அடித்தலைப் போன்றது என்று நினைந்து, ‘இவர்கள் பண்டே
அறிவு கேட்டாலே வழி தப்பிப் போய்க் கேட்டினை அடையாநின்றார்கள்; நாம் இவர்களைக் கைவிட ஒண்ணாது;
நலத்தைச் சொல்லுவோம்,’ என்று பார்த்து, -தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவருக்கும் இவர் அடி பணிந்தார்க்கும் இவை உள்ளதே —
பிராட்டி நலம் அருளிச் செய்தாற்போலே நலத்தை அருளிச்செய்கிறார் இத்திருவாய்மொழியில்.
இராவணன் பிராட்டிபக்கல் ‘பெற்றதாய்’ என்ற நினைவு இன்றிக்கே திருமுன்பே நின்று சிலவற்றைப் பிதற்றப் புக்கவாறே
‘ஸ்ரீராமபிரான் யானையைப் போல எண்ணப்படுகிறார்; நீ மிகச் சிறிய முயலைப் போல எண்ணப் படுகிறாய்,’ என்று வெறுத்து வைத்து
பின்னையும் ‘ஐயோ! இவன் நினைவு இருந்தபடி என்? இவனுக்கு ஒரு நல்வார்த்தை சொல்லுவார் இன்றிக்கே ஒழிவதே!’ என்று
இரக்கங்கொண்டு ‘நீ ஸ்ரீராமபிரானோடு தோழமை கொள்,’என்று அவன்தனக்கே நலத்தை அருளிச்செய்தாற்போன்று,
இவரும் மேல் திருவாய்மொழியில் அவர்களை நிந்தித்து வைத்து, இரங்கி இத்திருவாய்மொழியில் நலத்தை அருளிச்செய்கிறார்.
ஸ்ரீராமா சுந். 21 : 19.- இந்தச் சுலோகத்திற்கு வியாக்கியாதா அருளிச்செய்த பொருள் வருமாறு:
மித்ரம் ஒளபயிகம் கர்த்தும் ராம :-
‘பெருமாளைச் சரணம் புகு’ என்றால் அப்பையல் அதனைத் தனக்கு எளி வரவாக நினைத்திருக்குமே? அதற்காகத் ‘தோழமை கொள்’ என்கிறாள்.
தங்களைச் சரணம் புக்காரைத் தங்களிற் காட்டில் குறைய நினைத்திருப்பதில்லையே இவர்கள்;
‘மித்ரபாவேந’ என்றும்,‘மித்ரம் ஒளபயிகம் கர்த்தும்’ என்றுமிறே இருவர் படியும்.-துல்ய சீல வயோ வ்ருத்தாம் -முதலிலே சொன்னது பிராட்டியே –
இவள் துவம்சிக்கும் ராவணனை பார்த்து -சொல்ல -சரணாகதி என்று சொல்லாதவன்
-பெருமாள் -சரண் அடைந்த விபீஷணன் இடம் -ஊருக்கு பந்தல் போட சொன்ன வார்த்தை
ஸ்தாநம் பரீப்ஸதா
– வழியடிப்பார்க்கும் தரையிலே கால் பாவி நின்று வழியடிக்கவேணுமே? உனக்கு ஓர் இருப்பிடம் வேண்டியிருந்ததேயாகிலும் அவரைப் பற்ற
வேணுங்காண்.-கிளை மேலே இருந்து மரத்தை அடியிலே வெட்டுவது போலே உள்ளேயே —
எளிமையாக எதிரி காலிலே குனிந்து இவ்விருப்பு இருப்பதில் பட்டுப் போக அமையும் என்றிருந்தாயோ?
வதஞ்சாநிச்சதா கோரம் –
அப்படி உன்னை நற்கொலைப்பட விடுவரோ? உன்னை வைத்து உன் முன்னே உன் சந்தான கூட்டத்தைக் கொன்று பின்னை உன்னைச்
சித்திரவதை பண்ணுகையாகிற இவ்வதத்தை இச்சித்திலையே யாகிலும் அவரைப் பற்ற வேணுங்காண்.
த்வயா –
உன் நிலை இருந்தபடியால் விசேடித்து உனக்கு அவரைப் பற்றவேணும்.
அசௌ-
உருவெளிப்பட்டாலே முன்னிலையாயிருக்குமிறே இவளுக்கு;
அவனுக்கும் தானே மாயாமிருகத்தின் பின்னே போகிற போது கண்ட காட்சியாலே அச்சத்தாலே எப்போதும் முன்னிலையாயிருப்பரிறே.
புருஷர்ஷப:-
‘நான் பண்ணின அபராதத்துக்கு என்னை அவர் கைக்கொள்ளுவாரோ?’ என்றிருக்க வேண்டா; இவற்றை ஒன்றாக நினைத்திரார்காண்;
அவர் புருஷோத்தமர்காண்.
அசௌ புருஷர்ஷப: ராம: த்வயா மித்ரம் கர்த்தும் ஒளபயிகம்.
பிராப்தி ஒத்து இருக்க ‘இவர்கள் தாம் வழி தப்பிப் போய்க் கேட்டினை அடைதற்குரிய காரணம் யாதோ, சம்பந்தம் ஒத்திருக்க?’ என்று பார்த்தார்;
பகவானுடைய பரத்துவ ஞானம் இல்லாமையும் அவனுடைய சௌலப்ய ஞானம் இல்லாமையுமாயிருந்தது
அதாவது, ‘ஈசுவரனாகிறான் பெரியான் ஒருவனன்றோ? அவன், விசைக்கொம்பு; நமக்கு அவனை எட்டப்போகாதொன்றாய் இருந்தது’
என்று சமுசாரிகள் கைவாங்க,
விசைக்கொம்பு -பனி பட்டு மூங்கில் சாயுமே -காலை கட்டு சாதம் வைத்து பாட -ராகம் பாட -மாலைக்குள் போஜனம் மேலே போனதே –
விசை எந்தரம் -கிட்டே போனால் அடிக்கும் என்றுமாம்
‘அவனுடைய சௌலப்யத்தை விரித்துப் பேசுவோம்,’ என்று பார்த்து,
‘நீங்கள் அவன் அரியவன் என்று கைவாங்க வேண்டா; அவன் அடைவதற்குச் சுலபன்; அவனை அடையுங்கோள்,’ என்கிறார்.
ஆயின், மேல் ‘பத்துடையடியவர்’ தொடங்கிச் சௌலப்யமே யன்றோ சொல்லிக்கொண்டு போந்தது?
இப்போதாகச் சௌலப்யம் சொல்ல வேண்டுகிறது என்?’ என்னில்,
அங்குச் சொன்ன சௌலப்யந்தான் பரத்துவம் என்னும்படி அர்ச்சாவதாரம் எல்லையான சௌலப்யத்தின் எல்லை நிலத்தை அருளிச்செய்கிறார்.
அர்ச்சாவதாரம் -சௌலப்ய காஷ்டை -என்றவாறே -திருமால் இரும் சோலை -சொன்னாரே -கிருஹார்ச்சா -காஷ்டை என்றபடி –
‘அர்ச்ய – சமுசாரிகளுக்கும் அர்ச்சிக்கலாம்படி வணங்கத் தக்கவனாய் இருக்கும்.
சீலா ஜடீ பூயதே -நீராக உருக்கப் பண்ணுமே -குணா பரிவாஹம் -அவதாரம் –
‘சமுசாரிகளாகில் அர்ச்சிக்கிறார்கள்; அவர்கள் குற்றமே அன்றோ பண்ணுவது?’ என்னில், -அபசாரமே -செய்து போவது –
ஸர்வ ஸஹிஷ்ணு: – அவற்றையடையப் பொறுத்துக்கொண்டு நிற்கும். ‘ஆனாலும், நினைவு இரண்டாய் இராநின்றதே!’ என்னில்,
அர்ச்சக பராதீந அகிலாத்ம ஸ்திதி : – ‘நமக்கு ஒரு நினைவும் அவர்களுக்கு ஒரு நினைவுமாகில் அன்றோ சேராச் சேர்த்தியாவது?’ என்று
அவர்களுக்கு ஈடாகத் தன்னை அமைத்து நிற்கும்,’ என்றார் பட்டர்.
‘தமர் உகந்தது எவ்வுருவம்? அவ்வுருவந் தானே; தமருகந்தது எப்பேர்?மற்றப்பேர் – தமருகந்து,
எவ்வண்ணம் சிந்தித் திமையா திருப்பரே? அவ்வண்ணம் ஆழியானாம்,’ என்றார் பொய்கையார்.
‘எவர் சிலர் அதிகாரிகள் யாதொருபடியாகவேண்டும் என்று நம்மை வணங்குகிறார்கள்? அவர்களைக் குறித்து அப்படிக் கிட்டலாம்படிக்கு
ஈடாக நம்மை அமைத்துக்கொண்டு நிற்போம்; இப்படி அவர்கள் நினைவே நமக்கு நினைவாம்படி இருக்கையாலே அவர்கள்
எல்லாரும் நம் வழி போனார் ஆவர்கள்,’ என்பது இறைவன் திருவாக்கு.
‘சங்கல்பத்துக்குத் தகுதியாக நினைக்கப்படுகின்ற விஷ்ணு’ என்பது ஸ்ரீவிஷ்ணு புராணம். ‘நன்று; ‘சங்கல்பத்துக்குத் தகுதியாக’ என்பது,
பரத்துவம் முதலான நிலைகளைச் சொல்லுகிறது என்று கொள்ளாமல், அர்ச்சாவதார விக்கிரஹத்தைச் சொல்லுகிறது என்று
கொள்ளுதற்குக் காரணம் யாது?’ எனின், பரமபதத்தில் அசாதாரண விக்கிரஹத்தோடும் குணங்களோடும் இருக்கும்;
விபவங்களில் வந்தால் அது தன்னைத் தன்னின் வேறுபட்ட மற்றைச் சாதிகட்குத் தகுதியாக -இதர சஜாதீயனாய்
-ஆக்கிற்றாய் இருக்கும்;-நம் போல்வார் கண்ணுக்கு இலக்காக ஆகிறானே –
தேவகி வாசுதேவன் யசோதா நந்த கோபன்-சங்கல்பத்துக்கு தகுதியாகவே அமைத்துக் கொள்பவன் கிருஷ்ணன் -அன்றோ
தமர் உகந்த அவ்வுருவம் போலே அன்றோ இங்கும்
அசாதாராண விக்ரகம் -தான் அபிமாநிக்கிறார் -பிரக்ருதிம் ஸ்வாம்-அதிஷ்டாயா -ச விக்ரகனாய் -நாம் வைத்த விக்ரகத்துக்குள் புகுகிறான் -வட தேசம் –
புகுந்தால் தாழ்மை வரும் என்றதே தப்புதானே -தாழ்ந்தது என்ற எண்ணமே அவனுக்கும் வாராதே -இரண்டு குற்றங்களும் வருமே –
அபசாரம் பட்டு அவன் மகாத்மயம் குறைக்க முடியாது -நாம் தான் நம்மை காத்துக் கொள்ள படாமல் இருக்க வேண்டும் -சாந்நித்த்யம் குறையாது அவனுக்கு –
அந்தர்யாமியாய் இருந்து அமிர்தமாய் இருக்கிறான் -சுருதி -அவன் சம்பந்தத்தால் அமிர்தம் ஆக்குவான் தான் புகுந்து -வியாப்தகத தோஷம் வாராது
தூப்பில் பிள்ளை கத்ய வியாக்யானத்தில் -ஷாட் குணிய பிரகாச -சுத்த சத்வமயம் -நாம் உகந்த வற்றிலே -அர்ச்சாபி-என்கிறார் –
அர்ச்சாவதார திருமேனியாக இருந்தாலும் -உம்மைத் தொகை சொல்வதையே ஒத்துக் கொள்ள மாட்டார்கள் –
இங்ஙன் அன்றிக்கே, அடியவன் தான் உகப்பது யாதேனும் ஒரு பொருளைத் திருமேனியாகக் கோலினால், அதனையே
தனக்குத் திருமேனியாகக் கொண்டு, அதிலே அசாதாரண விக்கிரஹத்தில் பண்ணக்கூடிய அபிமானத்தைப் பண்ணி,
இவ்வழியாலே முகங்கொடுக்கும்படியாய் இருப்பது இந்நிலை.மேலும், தன்னினின்றும் வேறுபட்ட எல்லாப் பொருள்களினுடையவும்
சொரூபம், நிலை பேறு, தொழில் நடத்தல், தொழில் நடவாமை முழுதும் தன் அதீனமாம்படி இருக்கிற இறைவன்,
தன்னுடைய சொரூபம் நிலைபேறு முதலியவைகள் அடியார்களுடைய அதீனமாம்படியாய் அவர்களுக்கு வீடு நிலம் முதலியவைகளைப் போன்று
கூறு கொள்ளலாம்படி நின்ற நிலை அன்றோ இது? மேலும், இவனுக்கு ருசி பிறந்த போது மற்றொரு இடத்தில் போக வேண்டாதே,
இங்கே அனுபவிக்கலாம்படி நிற்கிற நிலையாய், இச்சரீர சம்பந்தமற்று ஒரு தேச விசேடத்திலே போய் அதற்கு ஈடாய் இருப்பது
ஒரு சரீரத்தைப் பெற்றுச் செய்யக்கூடியனவான அடிமைகளை இதர விஷயங்களின் ஆசைக்கு உறுப்பான இவ்வுடம்போடே செய்யலாம்படியாய்,
இவன் வேறொன்றிலே நோக்குள்ளவனான அன்றும் இவன் கையையே பார்த்திருக்கக் கூடியவனாய்
, இவன் தான் பசித்த போது உண்ணும் பொருளை ‘அமுது செய்ய வேண்டும்’ என்று விரும்பினால், அப்போதே அமுது செய்யக்கூடியவனாய்,
ஆசனம் படுக்கை அணிகள் முதலியனவெல்லாம் இவன் இட்ட வழக்காக்கி, திருமகள் கேள்வனாய், அடையப்பட்ட
எல்லா விருப்பத்தையுமுடையவனான இறைவன் அடியார்கட்கு வசப்பட்டவனாய், இவன் யாதேனும் ஒரு பொருளை இட்டால்
அதனைத் திருவாய்ப்பாடியில் யசோதை முதலானோர் வெண்ணெயைப் போன்று விரும்பக்கூடியவனாய்,
இப்படித் தன்னை அமைத்துக் கொண்டு நிற்கிற இடமே அன்றோ அர்ச்சாவதாரமாவது?
பரத்துவமே தொடங்கி அவதாரங்களிலே வர அவன் குணங்களைச் சொல்லிக்கொண்டு போந்து அர்ச்சாவதாரத்தின்
எல்லை நிலமான சௌலப்யத்தின் எல்லை நிலத்தை உபதேசிக்கிறார்.
‘ஆயின், இப்போது உபதேசிக்கப்புகுகிறது சௌலப்யமேயாகில், பரத்துவமே தொடங்கி உபதேசிக்க வேண்டுவான் என்?’ என்னில்,
‘மேன்மையுடையவன் தாழாநின்றான்’ என்றால் அன்றோ குணமாவது? தாழ்ந்த நிலையினனான ஒருவன் தாழாநின்றால்
சொரூபமாமித்தனையே அன்றோ? இப்படித் தாழ நிற்கிறவன் மேன்மையையுடையவன் என்கைக்காகச் சொல்லுகிறது.
உபாயங்களில் பிரபத்திமார்க்கம் போன்றது, சௌலப்யங்களில் அர்ச்சாவதார சௌலப்யம்.
‘தான் உகந்த பொருளைத் திருமேனியாகக் கொண்டு சந்நிதி பண்ணுவானேயாயின், கௌரவபுத்தி உண்டாகுமோ?’ எனின்,
தாய்க்கும் பெண்களுக்குரிய தன்மை ஒத்திருந்தும் பண்ணுகிற உபகாரங்களைக் காண்கையாலும்
சாஸ்திரம் சொல்லுகையாலுமன்றோ கௌரவிக்கிறது? அப்படியே,பிரமாணத்தை நம்புகிறவனுக்கு அடையத்தக்க இடம் அர்ச்சாவதாரம்
ஒழிய இல்லை என்று இவ்வளவான சௌலப்யத்தின் எல்லை நிலத்தை உபதேசிக்கிறார் ஆதலின், கௌரவபுத்தி உண்டாகும்.
தாம் உபதேசிக்கிற அதிகாரிகளுக்கும் தம்மைப் போன்று கைங்கரியத்தில் பிராப்தியுண்டு என்று காட்டுகைக்காக ‘ஒழிவில் காலமெல்லாம்’ என்ற
திருவாய்மொழி தொடங்கிச் சங்கதி அருளிச்செய்கிறார், ‘சர்வேஸ்வரன்’ என்று தொடங்கி. ‘சர்வேஸ்வரன்’ என்றது முதல் ‘உத்தேஸ்யமாகக் கடவதுமாயிருக்க’
என்றது முடிய, ‘ஒழிவில் காலமெல்லாம்’ என்ற திருவாய்மொழியின் அநுவாதம். அதற்குமேல் ‘வெறுத்தவராய் நின்றார்’ என்றது முடிய, மேல்
திருவாய்மொழியின் அநுவாதம். ‘இப்படி நிந்திக்கத் தக்கவர்கட்கு உபதேசிக்கைக்குக் காரணம் என்?’ என்ன, ‘அருள் கண்டீர் இவ்வுலகினில்
மிக்கதே’ என்கிறபடியே, மிக்க பேரருளே காரணம் என்கிறார், ‘அவ்வாறு வெறுத்தல்’ என்று தொடங்கி.
‘நண்ணாதார் மெய்யில் ஊன் ஆசை நிர்வேதத்தோடே ஆஸ்திக்ய அமாநித்வாதிகள் விஞ்சின பிரணிபாத அபிவாதந பரிப்ரச்ந சேவாபரர்க்கு
உளங்கொள் பேசுமளவன்று என்னும் அர்த்தத்தை வம்மின் விரோதம் ஈனச் சொல் எவ்வுயிர்க்கும் அறிய என்று அடைவுகெட அதபஸ்கர்க்கு
உபதேசிக்கிறது ஞாலத்தார் பந்தபுத்தியும் அநர்த்தங்கண்டு ஆற்றாமையும் மிக்க கிருபையுமிறே.’ ‘தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும்
இவர்க்கும் இவர் அடிபணிந்தவர்க்குமே இவையுள்ளது’ என்னும் ஆசார்யஹ்ருதய ஸ்ரீசூக்திகளை இங்கு அநுசந்திக்கத் தகும்.
வேத வேத்ய நியாயம் பரதவ பரமுது வேதம் வ்யூஹ வ்யாப்தி அவதாரங்களிலே ஓதின நீதி கேட்ட மனு படு கதைகளாய் ஆக
மூர்த்தியில் பண்ணிய தமிழ் ஆனவாறே வேதத்தை த்ராவிடமாகச் செய்தார் என்னும்
-பெரும் புறக்கடலும் சுருதி சாகரமும் அலைத்து ஆழ்ந்து ஓடும் இடங்களில் அயோக்யருக்குச் சமைத்த மடுவும் சாய்கரமும் மாந மேய சரமம் –
கௌரவ பிரதிபத்தி நமக்கு வருமோ என்னில் -ஜனனிக்கு ஸ்திரீ சாம்யம் ஒத்து இருக்கச் செய்தே பண்ணும் உபகாரங்களை
பிரத்யஷிக்கையாலும் -மாத்ரு தேவோ பவ -பிதா விட சதா -100 மடங்கு -சாஸ்திரம் சொல்லிற்றே
பிரத்யஷமாக நாமும் பார்க்கிறோம் -த்ரவ்ய புத்தி மாத்ரு யோனி பரிஷை உடன் ஒக்கும் –
வீட்டு இன்பப் பாக்களில் த்ரவ்ய பாஷா நிரூபண சமம் இன்ப மாரியில் ஆராய்ச்சி
இது பூர்ணம் –அது பூர்ணம் -பர -அங்கு இருந்து அது பூர்ணம் -வ்யூஹம் -அங்கு இருந்து அது பூர்ணம் -விபவங்கள்
அங்கு இருந்து அது பூர்ணம் -அர்ச்சை –அதுவே பூர்ணம் -க்ருஹ அர்ச்சை –
ஆறாம் திருவாய் மொழியில் -கீழ் சேஷத்வ ஸாரஸ்யத்தால் பிறந்த ப்ரீதி விகாரம் உத்தேச்யம் என்று அருளிச் செய்தவர்
அந்த இனிமை இல்லாமையால் அவிகிருதரான சம்சாரிகளுக்கும் பகவச் சேஷத்வத்தை உபதேசிப்பதாக
சேஷியினுடைய அர்ச்சாவதார பர்யந்தமான சவ்லப் யத்தை உப பாதிப்பதாக நினைத்து
1-அந்த சவ்லப்யத்துக்கு ஊற்றான ஜகத் ஸ்ரஷ்ட்ருத்வத்தையும்
2-ஸ்ருஷ்டமான ஜகத்தினுடைய ரக்ஷண அர்த்தமான அவதார கந்தத்வத்தையும்
3-அவதீர்ணனுடைய அதிசயித சேஷ்டிதத்வத்தையும்
4-ஈஸ்வர அபிமானிகளுக்கும் ஆஸ்ரயணீயனான ஸீலாதிசயத்தையும்
5-அவதார திசையிலும் அகில விபூதித்வம் தோற்றும் படியான ஆதிக்யத்தையும்
6-ஆஸ்ரித விஷயத்தில் அதிசயித வாத்சல்யத்தையும்
7-நிரவதிக போக்யதையும்
8-பற்றினாரை நழுவ விடாத பக்ஷபாதத்தையும்
9-சர்வவித பந்துவுமாய்க் கொண்டு ஆஸ்ரிதர் இட்ட வழக்கான அர்ச்சாவதார பாரதந்த்ரியத்தையும்
10-ஆஸ்ரித பரதந்த்ரனான அவன் பக்கல் தமக்குப் பிறந்த அபி நிவேசத்தையும்
அருளிச் செய்து பகவச் சேஷத்வத்தை பிரதிபாதித்து அருளுகிறார் –
செய்ய தாமரைக் கண்ணனாய் உலகு
ஏழும் உண்ட அவன் கண்டீர்
வையம் வானம் மனிசர் தெய்வம்
மற்று மற்றும் மற்றும் முற்றுமாய்
செய்ய சூழ் சுடர் ஞானமாய் வெளிப்
பட்டு இவை படைத்தான் பின்னும்
மொய்கொள் சோதியோடு ஆயினான் ஒரு
மூவர் ஆகிய மூர்த்தியே.–3-6-1-
கம் பிபதீதி கபி–கம்பீராம்ப -சமுத்பூத ச்ம்ருஷ்ட நாள- ரவி கர விகசித -புண்டரீக தல -அமல ஆயத ஈஷண-அமலங்களாக விளிக்கும் கரியவாகி –நீண்ட அப்பெரிய வாய கண்கள்
‘மற்றும்’ என்றது, விலங்கு பறவை தாவரங்களை.-மீண்டும், ‘மற்றும்’ என்றது, அவற்றுக்குக் காரணமான ஐம்பெரும்பூதங்களை.-மீண்டும் மற்றும் என்றது, அவை தமக்கும் காரணமான மகான் முதலிய தத்துவங்களை. ‘முற்றும்’ என்றது, எல்லாவற்றையும்.-முற்றவும், உண்டாகைக்காக இவையாய்க் கொண்டு தான் படைத்தலில் கருத்து உள்ளவனாய்த் தோன்றி இவற்றைப் படைத்தான்–அதனுடைய கர்மத்துக்குத் தகுதியாகப் படைத்த செவ்வை’ –சூழ்தலாவது, காரியக் கூட்டத்தில் எல்லாம் பரந்திருக்கை. சுடராவது, மழுங்காத ஞானமாய் மிக விளக்கமாயிருக்கை.
சோதி – குணம். ‘சோதி’ என்றது, குணங்களுக்கெல்லாம் உபலக்ஷணம்.-‘இப்போது குணங்களைச் சொல்லுகிறது என்?’ என்னில், குணங்களையுடைய பொருள் அன்றோ பற்றத்தக்கது? ஆதலால், சொல்லுகிறது.
மூவராகிய மூர்த்தி –செய்ய தாமரைக் கண்ணனாய் -உலகம் ஏழும் உண்ட அவன் கண்டீர் -என்று அந்வயம் –
———
மூவர் ஆகிய மூர்த்தியை முதல்
மூவர்க்கும் முதல்வன் தன்னைச்
சாவம் உள்ளன நீக்குவானைத்
தடங் கடற் கிடந்தான் தன்னைத்
தேவ தேவனைத் தென்னிலங்கை
எரி எழச்செற்ற வில்லியைப்
பாவ நாசனைப் பங்கயத் தடங்
கண்ணனைப் பரவுமினோ.–3-6-2-
அகில காரணாய அத்புத காரணாய நிஷ்காரணமாய் –‘பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரம் – தனக்குத் தானே தலைவன்’-தடம் கடல் கிடந்தான் தன்னை –‘இன்னம் இவர்கட்கு ஆபத்து வந்த போது நம்மைத் தேடித் திரிய ஒண்ணாது’ என்று ஏற்கவே கடலில் இடங் கொண்டவனை-தென்னிலங்கை எரி எழச்செற்ற வில்லியை- நெருப்பானது இராவணபயத்தாலே புகமாட்டாத ஊரிலே தான் நினைத்தபடி பரவும்படி செய்ய வல்ல வில் வலியை யுடையவனை,-இதனால், பிரமன் முதலியோர் கூப்பீடு கேட்டு எழுந்திருந்து செய்த தொழிலைத் தெரிவித்தபடி.-முதல்வன் – காரணன்-தலைவன்.-தேவதேவன்-எரி எழச் செற்ற வில்லி-மனிதத்தன்மையில் பரத்துவம்-பங்கயம் தடம் கண்ணனை –-பாப நாசனாய் இல்லாமல் – பாவத்தை வளர்ப்பவன் ஆனாலும், விடவொண்ணாத படியான கண்ணழகை யுடையவனை.-பரவுமினோ–ஜிதந்தே புண்டரீகாஷே நமஸ்தே -‘தாமரைக் கண்ணரே! தேவரீருக்கு வெற்றி!’ என்று முறை கெடப் புகழுங்கோள்.
————
பரவி வானவர் ஏத்த நின்ற
பரமனைப் பரஞ்சோதியைக்
குரவை கோத்த குழகனை மணி
வண்ணனைக் குடக்கூத்தனை
அரவம் ஏறி அலைகடல் அம
ருந் துயில் கொண்ட அண்ணலை
இரவும் நன் பகலும் விடாது என்றும்
ஏத்துதல் மனம் வைம்மினோ.–3-6-3-
இராமாவதாரம் பரத்துவம் என்னும்படியான கிருஷ்ணாவதாரத்திலே பற்றுங்கோள்-ஏத்துவதனாலே பரமன்’ -ஏத்தினாலும் அதற்கும் அப்பாற்பட்டவன்’ -பரஞ்சோதியை – அவர்கள் ஏத்த, அதனாலே ஒளியை உடையவனாயிருக்கிறவனை;-அவர்கள் ஏத்துமது தன் பேறாக நினைத்து, அது தன் வடிவிலே தோன்ற இருக்கின்றமையைத் தெரிவித்தபடி.
நித்திய ஸூரிகளோடு செய்யும் செயல்களை ஆயர் பெண்களோடு கலக்கும் இடத்தில், வாசி அறக் கலக்க வல்லவனை. குழகன் – பவ்யன்-மணி வண்ணனை – அவர்களை வசீகரிக்கைக்கும் மருந்திடும் பரிகரத்தை உடையவனை;குடக்கூத்தனை –திருக் குரவைக் கூத்தில் சேராதவர்களும் இழக்க ஒண்ணாதபடி மன்றிலே தன்னுடைய வடிவழகினை முற்றூட்டாக அநுபவிப்பிக்குமவனை.-மன்றம் அமர கூத்தாடி -இவன் ஆடி விட்டு போன பின்பும் கோபிமார்கள் மன்றிலே அமரும் படி –இரவும் நன்பகலும் விடாது என்றும் ஏத்துதல் மனம் வைம்மினோ –‘காலம் நடையாடாத தேசத்தில் அனுபவத்தை அன்றோ காலம் நடையாடும் தேசத்திலே நான் உங்களை அனுபவிக்கச் சொல்லுகிறது?’ என்கிறார்.
ஏத்துகைக்கு ஈடான காலம் ஆகையாலே ‘நல் இரவும் நன்பகலும்’ என்கிறார்.
‘துதி செய்துகொண்டேயிருக்கின்றார்கள்’ என்கிறபடியே ஆதல் வேண்டும் என்பார், ‘என்றும் ஏத்துதல்’ என்கிறார்.-‘நீங்கள் அங்கே நெஞ்சை வைக்குமித்தனையே வேண்டுவது; விஷயம் தன்னடையே கொண்டு முழுகும்,’ என்பார், ‘மனம் வைம்மினோ’ என்கிறார்;
‘நித்தியஸூரிகள் ஏத்தும் விஷயத்தை அன்றோ நான் உங்களை ஏத்தச் சொல்லுகிறது?
அறப் பெரியவனை அன்றோ நான் உங்களை ஏத்தச் சொல்லுகிறது? நீங்கள் ஏத்துகிற இது தன் பேறு என்னுமிடம் வடிவிலே தோன்ற இருக்கிறவனை அன்றோ நான் உங்களை ஏத்தச் சொல்லுகிறது?
உங்களுடைய விலக்காமையே பற்றாசாக வந்து கலக்குமவனை அன்றோ நான் உங்களை ஏத்தச் சொல்லுகிறது?
யாதாயினும் நேர்ந்து அணுக வேண்டும் வடிவழகையுடையவனை அன்றோ ஏத்தச் சொல்லுகிறது?
சேஷசயனத்தை யுடையவனை அன்றோ ஏத்தச் சொல்லுகிறது?
உங்களுடைய சேர்க்கையாலே செருக்கியிருக்கிறவனை அன்றோ ஏத்தச் சொல்லுகிறது?
ஒரு கால நியதி உண்டாய் இருக்கின்றீர்களோ? ஏத்துகைக்குச் சாதனம் இல்லாதவர்களாய்த்தான் இருக்கின்றீர்களோ?
அதில் ஒரு அருமை உண்டாய்த்தான் இருக்கின்றீர்களோ?
ஆன பின்னர், விஷயங்களிலே ஓடித்திரிந்த மனத்தினை மீட்டு இவ்விஷயத்திலே வைக்கப் பாருங்கோள்,’ –ஓவாதே என்றும் ஸ்தோத்ரம் பண்ணுகையிலே நெஞ்சை வையுங்கோள் —-விஷய வைலக்ஷண்யத்தாலே இது தானே கொண்டு முழுகும் என்று கருத்து —
————
வைம்மின் நும் மனத்து என்று யான் உரைக்
கின்ற மாயவன் சீர்மையை
எம்மனோர்கள் உரைப்பது என்? அது
நிற்க; நாடொறும் வானவர்
தம்மை ஆளுமவனும் நான்முக
னும் சடைமுடி அண்ணலும்
செம்மையால் அவன் பாத பங்கயம்
சிந்தித்து ஏத்தித் திரிவரே.–3-6-4-
செருக்கு மிக்கவர்களான பிரமன் உருத்திரன் முதலாயினார்கட்கும் தடையின்றிக்கே புக்குப் பற்றும்படியாக இருக்கிற சீலகுணத்தைப் பேசுகிறார்.-பாடித் திரிவனே’ என்னுமாறு போலே. வேறு பலன்களைக் கருதும் தன்மையும் நெஞ்சிலே கிடக்கச் செய்தே வேறு பலனைக் கருதாதவர்களைப் போல வந்து பற்றாநிற்பர்கள் ஆதலின்,-‘செம்மையால் திரிவர்’ என்கிறது;-அளவிறந்த நீர்மையை யுடையனாய் இருந்தவன் அநந்ய ப்ரயோஜனராய்க் கொண்டு ஆஸ்ரயிக்குமவர்களைக் கை விடுமோ -என்கிறார் –
————-
திரியும் காற்றோடு அகல் விசும்பு திணிந்த மண் கிடந்த கடல்
எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம் மற்றும் மற்றும் முற்றுமாய்
கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன் கண்ணன் விண்ணோர் இறை
சுரியும் பல் கருங்குறிஞ்சி எங்கள் சுடர் முடி யண்ணல் தோற்றமே –3-6-5-
ஆஸ்ரித பரதந்த்ர தயா நிர்வதிக தேஜஸான திரு அபிஷேகத்தை உடையனான சர்வேஸ்வரனுடைய தோற்றரவு –பிரகாசம் -என்னுதல் -அவதாரம் என்னுதல்-
———
தோற்றக் கேடு அவை இல்லவன் உடையான் அவன் ஒரு மூர்த்தியாய்ச்
சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக்கீழ்ப் புக நின்ற செங்கண்மால்
நாற்றம் தோற்றம் சுவை ஒலி உறல்ஆகி நின்ற எம்வானவர்
ஏற்றையே அன்றி மற்றொருவரை யான் இலேன் எழுமைக்குமே.–3-6-6-
தனக்கு மேல் ஒரு இனிய பொருள் இல்லாதவனான-நரசிம்ஹத்தை ஒழிய வேறு ஒருவரை உத்தேசியமாக உடையேன் அல்லேன், காலன் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும்,’ என்கிறார்.-பரோபதேசம் செய்து கொண்டு –இங்கு ஸூய அனுபவம் -தம்மைப் போலே சம்சாரிகளும் இருக்க வேண்டும் என்று காட்ட அருளிச் செய்கிறார் -இதுவும் பர உபதேச உக்தி-
இரணியன் துவேஷத்திற்கு விஷயம் ஆனாற்போலே இவன் அருளுக்கு விஷயமானான் ஆதலின்,‘சீற்றத்தோடு அருள் பெற்றவன்’ என்கிறது.
இனி, ‘சீற்றத்தோடு’ என்பதனை ‘ஒரு மூர்த்தி’ என்பதற்கு அடையாக்கலுமாம். -சீற்றமே வடிவு கொண்ட ஒரு மூர்த்தி -என்றவாறு —
‘இரணியன் பக்கல் சீற்றமும் செல்லா நிற்க, ஸ்ரீ பிரஹ்லாதாழ்வானுக்குக் கிட்டலாய் இருந்தபடி எங்ஙனே?’ என்று எம்பெருமானாரைச் சிலர் கேட்க, ‘சிம்ஹம் யானை மேலே சீறினாலும் குட்டிக்கு முலை உண்ணலாம்படி இருக்கும் அன்றோ?’ என்று அருளிச் செய்தார்.
‘அடியாரிடத்துள்ள அன்பினாலே அவர்கள் விரோதி மேலே சீறின சீற்றமானால், பின்னை அவர்களுக்கு அணைய ஒண்ணாதபடி இருக்குமோ?’ என்று அருளிச் செய்தார் என்றபடி. எழுமைக்குமே – காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும். அவன் நித்தியசூரிகள் பக்கலிலே இருக்கக்கடவ இருப்பை என் பக்கலில் இருக்க, நான் வேறொன்றை இனிய பொருளாக நினைத்திருப்பேனோ? அவர்கள் அவனை ஒழிய வேறொன்றை இனிய பொருளாக நினைக்கில் அன்றோ நான் வேறொன்றை இனிய பொருளாக நினைப்பது?சீற்றத்தோடு அருள் பெற்றவன் -என்று சிஸூபாலனாகவும் சொல்லுவர் –
————-
எழுமைக்கும் எனது ஆவிக்கு இன்அமுதத்தினை எனது ஆருயிர்
கெழுமிய கதிர்ச் சோதியை மணிவண்ணனைக் குடக் கூத்தனை
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னற் கனியினைத்
தொழுமின் தூய மனத்தராய்;இறையும் நில்லா துயரங்களே.–3-6-7-
இப்படிச் சுலபனானவன் பக்கல் அரியன் என்னும் ஐயத்தை நீக்கி அவனைப் பற்றுங்கோள்,
உங்களுடைய எல்லாத் துக்கங்களும் போம்படி,’ என்கிறார்.மணி வண்ணனைக் குடக்கூத்தனை –வடிவழகையும் மனத்தை அழிக்கும்படியான செயல்களையும் உடையவனை. வண்ணம் – நிறம்.-இனி, ‘நீலமணிபோலே முடிந்து ஆளலாம்படி இருக்கிறவன்,’ எனலுமாம்.-இத்தலையில் இசைவு பாராமலே அகப்படுத்திக் கொள்ளுகைக்கு ஏதுக்கள் இருக்கிறபடி.-தொழுமின் – இதுவன்றோ நான் உங்களுக்கு இடுகிற வேப்பங்குடி நீர்? பால்குடிக்கக் கால் பிடிக்கிறேன் அன்றோ?
———–
துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய் அவை அல்லனாய்
உயர நின்றது ஓர் சோதியாய் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் தனை
அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன் தனைத்
தயரதற்கு மகன் தனையன்றி மற்றிலேன் தஞ்சமாகவே.–3-6-8-
இப்படி எல்லாம் நிறைந்தவனாய் இருந்தானேயாகிலும், தன் விபூதியில் ஒரு கூறான இவ்வுலகத்தைப் பிரளயங்கொண்டது என்றால்,-இங்கே வந்து வயிற்றிலே எடுத்து வைத்து நோக்கி, ‘இத்தனை போதும் காணப்பெறாமையாலே இவை என்படுகின்றனவோ!’ என்று
உமிழ்ந்து பார்க்குமவனை; வழிபறிக்கும் நிலத்திற் போவார் சீரிய தனங்களை விழுங்கி பின்னை அமர்ந்த நிலத்திலே புக்கால் புறப்பட விட்டுப் பார்க்குமாறு போலே.‘தயரதன் மகன்’ என்னாதே, தயரதற்கு மகன் தன்னை’ என்கிறது,-ஒருகால் வெற்றிலைச் செருக்கிலே ‘அரசு தந்தேன்’ என்னா, மீண்டு பெண்ணுக்கு வசப்பட்டவனாய், ‘நான் தந்திலேன்; நீ காடு ஏறப் போ,’என்னா, இப்படிச் சொல்லலாம்படி அவனுக்கு இஷ்ட வினியோகத்திற்குத் தக்க புத்திரனாய் இருந்தான் ஆதலின்-
அன்றி மற்று இலேன் தஞ்சமாகவே –இவ்விடத்தைப் பட்டர் அருளிச்செய்யாநிற்க, நஞ்சீயர், ‘இவர் புக்க இடம் எங்கும் இப்படியே சொல்லுவர்; இவர்க்கு இது பணியே அன்றோ?’ என்ன,
ஞானப்பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -என் சிங்க பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே -போலே – ‘இவர் மற்றோரிடத்தில் தலை நீட்டுவது பாவநத்வத்தைப் பற்ற; இவர் தஞ்சமாக நினைத்திருப்பது சக்கரவர்த்தி திருமகனையே,’ என்று அருளிச் செய்தார்.போக்யத்தை பற்ற இவர் இடம் -மற்றவர்கள் -பாவனத்வம் -இவரையே அனுபவிக்க ஆழ்வார் –
ராவண வத சமனந்தரத்திலே முதலிகளிலே சிலரை காணாது ஒழிய தேவதைகளைக் கொண்டு மீட்டும்-ஒரு பாலனுக்கு அகால ம்ருத்யு வர அம்பாலே மீட்டுக் கொடுத்தும் செய்த சக்கரவர்த்தி திருமகனை அன்றி – ததவ் கௌசிக புத்ராய -என்று ராஜ்யத்தை தந்தேன் என்னா அத்தை தவிர்ந்து காடு ஏறப் போம் என்னா ஒரு சம்சாரிக்கு இஷ்ட விநியோக அர்ஹன் ஆனவனை – பவான் நாராயணோ தேவ -என்று ஈஸ்வர அபிமானிகள் தங்கள் வந்து சொன்னால் ஆத்மா நம் மானுஷம் மன்யே என்னுமவன் –
பட்டர் இராமாவதாரத்தில் பக்ஷபாதத்தாலே அருளிச்செய்யுமது கேட்கைக்காக,
சிறியாத்தான், ‘பெருமாளுக்கு எல்லா ஏற்றங்களும் அருளிச்செய்ததேயாகிலும், பாண்டவர்களுக்காகக் கழுத்திலே ஓலை கட்டித் தூது போன கிருஷ்ணனுடைய நீர்மை இல்லையே சக்கரவர்த்தி திருமகனுக்கு? என்ன,
‘அதுவோ! பெருமாள் தூது போகாமை அன்றுகாண்; இக்ஷ்வாகு குலத்தாரைத் தூது போக விடுவார் இல்லாமைகாண்,’ என்று அருளிச் செய்தார்.
‘அவ்வவதாரத்தில் அக்குறை தீருகைக்காக அன்றோ கிருஷ்ணனாக அவதரித்துத் தூது போயிற்று? ‘முன்னோர் தூது வான ரத்தின் வாயில் மொழிந்து அரக்கன், மன்னூர்தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே, பின்னோர் தூது ஆதிமன்னர்க்காகிப் பெருநிலத்தார்,
இன்னார் தூதன் என்ன நின்றான் எவ்வுட் கிடந்தானே,’ என்பது மங்கை மன்னன் மறைமொழி;-பாரதந்திரிய ரசம் அனுபவிக்கைக்காகப் போந்த பின் அதில் ஒன்று குறைந்தது என்று ஏன் இருக்க வேண்டும்?’
‘எம்பெருமானார் திருவாராதனம் பண்ணிப் போருவது வெண்ணெய்க்காடும் பிள்ளையாய் இருக்கும்.-இங்ஙனமிருக்கவும், ஒரு நாள் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் சக்கரவர்த்தி திருமகனை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வந்து கொடுத்தாராய் அவரைப் பார்த்து, இந்த ‘என் ஒருவனையே சரணமாகப் பற்று’ என்று தேவையிடாதார் எழுந்தருளினார்,’ என்றாராம்.
‘இத்தலையில் ஆபிமுக்கியத்திற்கு மேற்பட வேண்டா,’ என்று சொல்லுகிறவை எல்லாம்,
பற்றப்படுகின்ற சர்வேசுவரனுடைய நீர்மையைப் பற்றச் சொல்லுகிறது;-இவனுக்கு வேண்டுவன சொல்லப்புக்கால் ‘மஹாவிஸ்வாச பூர்வகம் – மஹாவிசுவாசம் முன்னாக’ என்ன வேண்டும்படியாய் இருக்கும்.-‘ஒரு சிறாயை நம்பி ஆறுமாதங்கட்கு வேண்டும் சோறும் தண்ணீரும் ஏற்றிக்கொண்டு கடலிலே இழியாநின்றான்;-அதைப் போன்ற நம்பிக்கையாகிலும் வேண்டாவோ பகவத் விஷயத்தைப் பற்றுகிறவர்களுக்கு?’ என்று அருளிச் செய்தார்-
————–
தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு தானுமாய் அவை அல்லனாய்
எஞ்சல் இல் அமரர் குல முதல் மூவர் தம்முளும் ஆதியை
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் அவன் இவன் என்று கூழேன்மின்;
நெஞ்சினால் நினைப்பான் எவன்?அவன் ஆகும் நீள்கடல் வண்ணனே.–3-6-9-
நீங்கள் விரும்பியபடியே உகந்தருளப் பண்ண,-அத்திருமேனியையே இவ்வுலக சம்பந்தமில்லாத தெய்வத் திருமேனியைப் போன்று விரும்பும் அர்ச்சாவதாரத்தைப் பற்றுமின்,’ என்கிறார்-இத்திருவாய்மொழிக்கு நிதானம் இப்பாசுரம்
இழவுக்குக் கண்ணநீர் பாயவேண்டாத தந்தையாய் இருப்பான்.-தஞ்சமாகி தாய் -தஞ்சமாகிய தந்தை -தஞ்சமாகிய தான் –‘தஞ்சமாகிய தானும்’ என்று ஓதியது என்?’ என்னில், -அந்நாள் நீ தந்த ஆக்கையின்வழி உழல்வேன்-ஆகையாலே, தனக்குத்தான் தஞ்சம் அல்லன்.-
அவன் இவன் என்று கூழேன்மின் –‘அவன் ஆகிறான், தேச கால வஸ்துக்களால் அளவிடமுடியாதவனாய் அசாதாரண விக்கிரஹத்தோடே நித்தியஸூரிகளுக்கு
அனுபவிக்கப்படுகின்றவனாய்க் கொண்டிருக்கிறான் ஒருவன்;
இவன் ஆகிறான், தேச கால வஸ்துக்களாற்பிற்பட்டு, நாம் விரும்பியது ஒரு பொருளைத் தனக்குத் திருமேனியாகக் கொண்டு இவ்வழியாலே நம் புத்திக்கு உரிமைப்பட்டவனாய் இருப்பான் ஒருவன்;
ஆன பின்பு, அவன் அளவிடப்படாதவன்; இவன் அளவிற்கு உட்பட்டவன்,’ என்று இங்ஙனம் சந்தேகம் பொருந்திய மனம் உடையவர் ஆகாதே கொள்ளுங்கோள்.
நெஞ்சினால் நினைப்பான் எவன் – மனத்தினாலே யாதொன்றைத் திருமேனியாகக் கோலினீர்கள்-நீள்கடல் வண்ணன் அவன் ஆகும் – அளவிட முடியாத பெருமையையுடைய சர்வேசுவரன் அதனையே தனக்கு அசாதாரண விக்கிரஹமாகக் கொண்டு விரும்பும்.
‘பிராஹ்மணர்கள் அக்நியில் பார்க்கிறார்கள்; யோகிகள் இருதயத்தில் பார்க்கிறார்கள்; அறிவில்லாதவர்கள் பிம்பங்களிலே; சமமாகப் பார்க்கும் ஞானிகள் எங்கும் பார்க்கிறார்கள்,’ என்று ரிஷிகளைப் போலே தம் வாயாற்சொல்ல மாட்டாமையாலே ‘அவன், இவன்’ என்கிறார்.
‘நெஞ்சினால் நினைப்பான் எவன்? அவனே நீள்கடல் வண்ணன் ஆகும்’ என்று கொண்டு கூட்டி,‘அங்குத்தைக்கு உகந்தருளின இடத்தை விபூதியாக நினையாதே, இங்குத்தைக்கு அவ்விடத்தை விபூதியாக நினையுங்கோள்,’ என்று பணிப்பர் ஆண்டான்.நெஞ்சால் நினைக்கும் அங்குத்தைக்கும் -உகந்து அருளினை நிலம் விபூதி சேஷம் அர்ச்சை என்று நினையாதே-அர்ச்சைக்கு பரவாசுதேவன் சேஷன் என்பர் முதலியாண்டான்
தெளி விசும்பு திரு நாடும் அர்ச்சையிலே சேர்த்தே -108-திவ்ய தேசம்
இவ்வுலக சம்பந்தமில்லாத விக்கிரகத்திலே செலுத்தும் விருப்பத்தை அர்ச்சாவதாரத்தில் செலுத்தமுடியுமோ?’ எனின்,-அசாதாரண விக்கிரகத்தை நாம் ஆதரிக்கிறதும் ‘அவன் விரும்பி மேற்கொண்டது’ என்றுதானே?-அதைப் போன்று, இதுவும் அவன் விரும்பி மேற்கொண்டானாகில், ஆதரிக்கத் தட்டு இல்லையே?-முதல் தன்னிலே அவன் திருமேனியை விரும்பி மேற்கொண்டதும்‘பக்தாநாம் – பத்தர்களுக்காகவே’ என்கிறபடியே, அடியார்களுக்காக அன்றோ?-அது காரியமாய்ப் பயன் தருமிடத்திலே அன்றோ மிகவும் உறைக்க இருப்பது?ஆகையாலே, நீள் கடல் வண்ணன் அவன் ஆகும்.-அர்ச்சாவதார சேதன புத்தியால் மூச்சு விடுவான் உண்பான் அன்றோ –
———–
கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர் கருமாணிக்கம் எனது ஆர்உயிர்
பட அரவின் அணைக் கிடந்தபரஞ்சுடர் பண்டு நூற்றுவர்
அடவரும் படை மங்க ஐவர்கட்கு ஆகி வெஞ்சமத்து அன்று தேர்
கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே?–3-6-10-
தாம் உபதேசிக்கத் தொடங்கின சௌலப்யத்தை அர்ச்சாவதாரம் முடிவாக அருளிச்செய்து, பின், தன் துறையான கிருஷ்ணாவதாரத்திலே போய், ‘நான் கண்ணாலே கண்டு அனுபவிக்கப் பெறுவது என்றோ!’ என்னும் மனக் குறைவோடே தலைக்கட்டுகிறார். ‘தயரதற்கு மகன்தன்னை அன்றிமற்றிலேன்’ என்றது செய்வது என்?’ என்னில், கிருஷ்ணாவதாரத்தில் நீர்மை காணுமளவுமே இது சொல்லுகிறது. கிருஷ்ணாவதாரத்திற்காட்டிலும் அர்ச்சாவதாரத்துக்குச் சௌலப்யம் மிக்கிருந்ததே யாகிலும், இவர் ‘எத்திறம்!’ என்று ஆழங்காற்பட்டது கிருஷ்ணாவதாரத்திலே ஆயிற்று.
விண்ணவர் கருமாணிக்கம்’ என்றதனால், நித்திய ஸூரிகளுக்கு அனுபவிக்கத் தகுந்த விக்கிரகத்தையுடையவன் என்பதனைத் தெரிவித்தபடி.
‘பட அரவின் அணைக் கிடந்த’ என்றதனால், அங்குநின்றும் பேர்ந்து, பிரமன் முதலியோர் கூக்குரல் கேட்கைக்காகத் திருப்பாற்கடலிலே அணித்தாய் வந்து கண்வளர்ந்தருளுகிறவன் என்பதனைத் தெரிவித்தபடி.
‘கண்ணன்’ என்றதனால், அங்கு நின்றும் பேர்ந்து எல்லார்க்கும் அனுபவிக்கலாம்படி கிருஷ்ணனாய் வந்து அவதரித்தமையைத் தெரிவித்தபடி.
தேர் கடவிய பெருமான் கனை கழல் –‘சேநா தூளியும் உழவுகோலும் சிறுவாய்க் கயிறும் தேருக்குக் கீழே நாற்றின திருவடிகளும் அத்திருவடிகளிலே சார்த்தின சிறுச் சதங்கையுமாய்ச் சாரதி வேஷத்தோடே நின்ற போதைத் திருவடிகளில் ஆபரணத்தின் ஒலி செவிப்படவும் அவ்வடிவைக் காணவும் காணும் ஆசை.
கண்கள் காண்பது என்று கொலோ– இக்கண்கள் அடிப்படுவது –திருவடிப் படுவது -எப்போதோ? இவை முடியப் பட்டினி விட்டே போந்தவை இப்பட்டினி விடக்கடவது என்றோ?
‘அவ்வடிவைக் காண வேண்டும்,’ என்று விடாய்த்த கண்கள் ‘காணப் பெறுவது என்றோ?’ என்றபடி.-இவர் மனஸ் சஹகாரியம் இல்லாமலே கண்கள் காண ஆசைப் படுகின்றனவே –
————-
கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
மண்கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள்செய்யும் வானவர் ஈசனைப்
பண்கொள் சோலை வழுதி வளநாடன் குருகைக்கோன் சடகோபன் சொல்
பண்கொள் ஆயிரத்து இப் பத்தால் பத்தராகக் கூடும் பயிலுமினே.–3-6-11-
காண ஒண்ணாது’ என்று மறந்து பிழைக்க ஒண்ணாதபடி நெஞ்சுக்கு மிகவும் முன்னிலையாய் காணப்பெறாத இன்னாப்போடே சொல்லுகிறார். இவர்க்குப் பிரிவாவது, புறக்கண்களால் காணவேண்டும் என்னும் நசையாலே மனத்தின் அனுபவத்துக்கு வரும் கலக்கம். கலவியாவது புறக்கண்களால் நேரே காண்டலைப் போன்று உட்கண்ணால் காண்டல்.-நித்தியஸூரிகளுக்கு அனுபவிக்கத் தக்கவன் ஆனாற்போலே, சமுசாரிகள் என்று வாசிவையாமல் அர்ச்சாவதார முகத்தாலே வந்து சுலபன் ஆனவனை.
1- பரத்துவ ஞானத்துக்கு அடியான புண்ணியமாதல், -2-சாஸ்திர ஞானமாதல்,
3- நற்குருவின் உபதேசமாதல், 4-பகவானுடைய நிர்ஹேதுகத் திருவருளாதல் இவையனைத்தும் இல்லாதார்க்கும் அர்ச்சாவதார சௌலப்யத்தை அநுசந்திக்கவே பகவானிடத்தில் பத்தி உண்டாகக் கூடும் என்பார், ‘பத்தராகக் கூடும் பயிலுமின்’ என்கிறார்.
ஒரு பொருளிலும் விருப்பம் இல்லாதவனான சர்வேசுவரன் அடியார்களிடத்து வைத்த வாத்சல்யத்தாலே இவன் உகந்தது ஒன்றைத் திருமேனியாக விரும்பி, ‘இவன் உண்பித்ததை உண்டு, அகங்கள்தோறும் புக்கு விடமாட்டாமல் இருந்தால்,
‘இவன் நம்மை விடமாட்டாதே இருந்த பின்பு நாமும் இவனிடத்தில் அன்பு வைத்தல் ஆகாதோ?’ என்னக் கூடும் அன்றோ?’ என்றபடி.
‘‘பயிலுமின்’ என்றால், பயில்வர்களோ?’ எனின், ‘நிதி இங்கே உண்டு’ என்ன, அவ்விடத்தைத் தோண்டுவார்களே அன்றோ? அப்படியே, ‘பத்தி உண்டாம்’ என்ன, கற்பார்கள் என்று அருளிச்செய்கிறார்.-கல்லுவார்கள் -தோண்டுவார்கள் கற்பார்கள் அப்யசிப்பார்கள்-
என் ஆத்மாவை முற்றும் உண்ணுவதற்காக–எனக்கு உன்னுடைய எல்லை இல்லாத இனிமையைக் காட்டி-என்னை அடிமைப் படுத்தினாய் –-என் விடாய் தீரக் கலந்தாய் -என்று இருந்தேன்-உன் விடாய் தீரவாய் இருந்ததே அன்றோ -என்றது-உனக்காக அன்றோ உன்னைக் காட்டிற்று -என்றபடி-
——————–——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –