ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
நித்யர் அமரர் சம்சாரிகள் -மூவருக்கும் ஆஸ்ரயம்-இவன் தனக்கு யாரும் ஆஸ்ரயம் இல்லாதவன்-கெடுமிடராய-10-2-இதன் விவரணம்-மூன்று திருவாசல்கள் உண்டே -இங்கு-ச ஸைன்ய -நித்யர் -புத்ர சிஷ்யர் -சனகாதி ப்ரஹ்மாதிகள் -பூ ஸூ ரர்கள் அர்ச்சனத்துக்கு – முடி முக பாதங்களைக் காட்டி -த்வார த்ரய -சாம்யம்–தோழி இவன் பெருமையை நித்ய ஸூ ரிகளும் சொல்லி முடிக்க முடியாமல் வருந்த
நீ இவ்வாறு ஈடுபடலாகாது -என்று அறிவுறுத்துகிறாள் –அப்படி இருக்க -கண்ணன் எளிமையைப் பேச முடியாது என்று சொல்லவும் வேண்டுமோ–செயலே மட்டும் இல்லாமல் சொல்லே -இவன் திருடினான் என்று லோக ப்ரஸித்தமாக அனைவரும் ஏச நின்ற எஞ்சாப் பிறவி இடர் கடிவான் -திரு நாமம் சாத்துகிறார்-எம்மிடர் கடிவான் -உத்சவர் திரு நாமம் உண்டே—சார்வே தவநெறிக்கு தாமோதரன் தாள்கள் நமக்கு எல்லாம்-தன்னைத் தான் சார்ந்து இருந்து ஸமஸ்த நிர்வாஹம் –-அவனுக்கும் அவன் திருவடிகளே உபாயம் ரக்ஷகம் -திருக்காலாண்ட பெருமாள் அன்றோ-வெண்ணெய் -நவநீதம் -இளகின நிலையில் அப்போது திரண்ட வெண்ணெய் –
அவதாரிகை –-இவ் விஷயத்திலே கை வைத்து அதில் உமக்கு உண்டான ஈடுபாட்டைச் சொல்லுவது –
பிறரைத் திருத்தப் பார்ப்பதாய்க் கொண்டு -க்லேசியாய் கிடவாதே –-உம்முடைய துறை அன்றோ கிருஷ்ணாவதாரம் –-நவநீத ஸௌர்ய வ்ருத்தாந்தத்தை அனுபவித்து போது போக்க பார்த்தாலோ -என்றார்கள் சிலர் – இவர்க்கு அது ஆழம் கால் என்று அறியார்களே – இவர் -எத்திறம் -என்று மோஹித்து கிடக்குமது இறே அது தான் -அது நெஞ்சாலும் நினைக்கப் போகாது –
இப்படி அனுபாவ்யனான ஈஸ்வரனுடைய-1- மேன்மையிலும் -2-நீர்மையிலும் உண்டான போக்யதை பரிச்சேதிக்க அரிது என்கிறார்
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-அவதாரிகை-ஸம்ஸாரிகளையும் என் படி ஆக்கக் கடவேன் என்றீர்-பகவத் விஷயத்தில் கை வைத்தார்க்குக் கண் உறக்கம் இல்லை என்றீர்-இப்படி கிடந்தது அலமாவாதே உம்முடைய பாழி யன்றோ கிருஷ்ண அவதாரம் நவநீத ஸுர்ய விருத்தாந்தத்தை அனுசந்தித்து ஈடுபடுமவர் அன்றோ நீர் ஆனபின்பு அத்தை அனுசந்திக்கப் பார்த்தாலோ என்ன-அல்லா இடங்களில் கரை மேலே யாகிலும் போகலாம் இதில் இழிய என்றால் நினைக்கவும் போகாது அதில் இழிவதில் கை வாங்கி இருக்கையை நன்று என்கிறார் –
துஞ்சா முனிவரும் அல்லாதவரும் தொடர நின்ற
எஞ்சாப் பிறவி இடர் கடிவான் இமையோர் தமக்கும்
தன் சார்விலாத தனிப் பெரு மூர்த்தி தன் மாயம் செவ்வே
நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே – -98 –தலைவனது அருமை நினைந்து கவல்கிற தலைவிக்கு தோழி கூறல் —
துஞ்சா முனிவரும்–கண்ணுறங்குதலில்லாத ரிஷிகளும்-ஸநகாதி முனிவர்கள் -ப்ரஹ்ம ஏக பாவனை –
அல்லாதவரும்–தேவர்கள் முதலிய மற்றையோரும்
தொடர நின்று–பின்பற்றி வழிபட நிற்பவனும்
எஞ்சா பிறவி இடர் கடிவான்–(அடியார்களுடைய) குறைவற்ற -சுருக்கம் அற்ற -பிறப்புத் துன்பங்களைப் போக்கி யருளுபவனும்
தன் சார்வு இலாத–தன்னோடு இணைத்துச் சொல்லலாம் படி ஓர் உவமை பெறாத
தனி பெரும் மூர்த்தி தன்–ஒப்பற்ற சிறந்த ஸ்வரூபத்தை யுடையவனுமான எம்பெருமானது.
வெண்ணெய் ஊண் என்னும் ஈனம் சொல்–வெண்ணெய் உணவாயிற்றென்று சொல்லப்படுகிற இழி சொல்லுக்கு இடமான
மாயம்–ஆச்சரியம்
இமையோர் தமக்கும்- மேலுலகத்தாருக்கும்–ஞான சங்கோசம் இல்லாத நித்ய ஸூ ரிகள்
செவ்வே நெஞ்சால் நினைப்பு அரிது–நன்றாய் மனத்தால் நினைப்பதற்கும் அருமையானதாம்.-செவ்வே நெஞ்சால்-திருட்டுக்கு உண்மையான -யதார்த்த ஆழ்ந்த ஞானம் கொண்ட நெஞ்சு-யோ வேத்தி தத்வதக –
கெடுமிடர் வைகுந்தத்தைக் கிட்டினால் போல்
தடமுடை அனந்தபுரம் தன்னில் -படவரவில்
கண் துயில் மால்க்கு ஆட்செய்யக் காதலித்தான் மாறன் உயர்
விண் தனில் உள்ளோர் வியப்பவே—-92-குறைவற ஸ்ரீ பரம பதத்தினில் போனால்- வானிளவரசான வைகுந்த குட்டனுக்குச் செய்யக் கடவ-வழு விலா அடிமைகளை-நித்ய ஸூரிகளில் தலைவரான ஸ்ரீ சேனாதிபதி ஆழ்வான் எடுத்துக் கை நீட்டும்படி-நிரதிசய போக்யமான ஸ்ரீ திருவனந்த புரத்திலே ஸ்ரீ திருவனந்த ஆழ்வான் மேலே பள்ளி கொண்டு அருளுகிற பரம பிராப்ய பூதரான ஸ்ரீ பத்ம நாபப் பெருமாள் திருவடிகளிலே அனுகூல ஜனங்களும் தாமுமாய் போய் அடிமை செய்ய வேண்டும் என்று மநோ ரதிக்கிற கெடும் இடரில் அர்த்தத்தை-கெடும் இடர் வைகுந்தத்தை -இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் –ஸ்ரீ திருவடி-ஸ்ரீ திருவனந்த ஆழ்வான்-ஸ்ரீ சேனாபதி ஆழ்வான் தொடக்கமானவர்கள் – நாம் தெளி விசும்பு திரு நாட்டில் இருந்து செய்யும் அடிமையை இவர் – இருள் தரும் மா ஞ்லாலத்தில் இருந்து பாரிப்பதே -என்று விஸ்மயப்ப்படும்படி ஸ்ரீ சேஷசாயியாய்-ஸ்ரீ யபதியான-ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு சர்வ வித கைங்கர்யங்களையும் செய்ய வாதரித்தார் ஸ்ரீ ஆழ்வார் – இவரும் ஒருவரே -என்று இவருக்கு ஈடுபாடாய் இருக்கிறது- அங்கே செய்வதை விட இங்கே பாரிப்பது மேல் -ருசி வந்தால் தானே கிட்டும் –
எஞ்சாப் பிறவி இடர் கெடுவான் துஞ்சா முனிவரும் அல்லாதவரும் தொடர நின்ற -துஞ்சா முனிவர் –
யா நிசா சர்வ பூதானாம் (2-69)-என்கிறபடியே –என் நெஞ்சு அவனை ஒழிய வேறு-ஒன்றைப் பேணாது -என்றார் –பகவத் விஷயத்திலே கண் வைத்தார்க்கு உறக்கம் இல்லை -என்றார் –யா நிஸா ஸர்வ பூதாநாம் தஸ்யாம் ஜாகர்தி ஸம்யமீ. யஸ்யாம் ஜாக்ரதி பூதாநி ஸா நிஸா பஸ்யதோ முநே–৷৷2.69৷৷
யா -யாதொரு ஆத்ம விஷயமான அறிவு
ஸர்வ பூதாநாம் -எல்லா ஜீவ ராசிகளுக்கும்
நிஸா-இரவு போல் இருண்டு கிடக்கிறதோ
தஸ்யாம் -அவ்வறிவு விஷயத்தில்
ஸம்யமீ–இந்திரியங்களை அடக்கிய ஞான யோகி
ஜாகர்தி-விழிப்புடன் இருக்கிறான்
யஸ்யாம் -யாதொரு ஸப்தம் முதலான அறிவில்
பூதாநி -ஜீவ ராசிகள்
ஜாக்ரதி -விழிப்புடன் விளங்குகின்றனவோ
ஸா -அவ் வறிவு
பஸ்யதோ -ஆத்மாவைப் பார்க்கிறவனாய்
முநே நிஸா–அதை மனனம் செய்பவனான ஞான யோகிக்கு-இரவு போல் இருண்டு கிடக்கிறது )
சம்சாரிகளையும் என் படி ஆக்கக் கடவேன் -என்றார் – இப்படி கிடந்தது அலமாவா நில்லாதே –
உம்முடைய பாழி-துறை -அன்றோ கிருஷ்ணாவதாரம் – நவநீத ஸௌர்ய விருத்தாந்தத்தை அனுசந்தித்து ஈடுபடுபவர் அன்றோ நீர் –ஆன பின்பு அத்தை அனுசந்திக்க புக்காவோ -என்ன –அல்லாத இடங்களில் கரை மேலே யாவது போகலாம் –-இது இழிய வென்று நினைக்கவும் போகாது –
இதில் இழிவதில் கை வாங்கி இருக்கையே நன்று -என்கிறார் –துஞ்சா முனிவரும் –சம்சாரிகள் சப்தாதி விஷயங்களில் மண்டி இருக்குமா போலே –ஆத்ம விஷயத்திலும்- ஈஸ்வர விஷயத்திலும் உணர்தியை உடையவராய் – தமோ குணா அபிபூதர் அன்றிக்கே இறே சனகாதிகள் இருப்பது –யா நிச –அவர்கள் தங்களை சர்வேஸ்வரன் சிருஷ்டிக்கு உடலாக உண்டாக்கச் செய்தேயும் –ஜன்மாந்தரத்தில்-ஸூஹ்ருத்தாலே சம்சாரத்தில் வ்ரக்தராய் – முமுஷுக்களாய் இருக்கிறபடியைக் கண்டு –
இவர்கள்-அதுக்கு ஆள் அல்லர்- இதுக்கு புறம்பே ஆள் தேடிக் கொள்வோம் -என்னும்படி இருந்தவர்கள் இறே –அல்லாதாரும் –ஸூஹ்ருத தாரதம்யத்தாலே அவர்கள் போல் அன்றிக்கே கர்ம பாவனையும்-ப்ரஹ்ம பாவனையும் இரண்டும் கூடி இறே ப்ரஹ்மாதிகள் இருப்பது –ப்ரஹ்ம பாவனை-உண்டாவது சத்வத்தாலே இறே –காதசித்கமாக சத்வம் தலை எடுக்கிறபோது – சம்சாரம் த்யாஜ்யம் – சர்வேஸ்வரன் உபாதேயன் -அவனைப் பெற வேணும் -என்று அதுக்கு ஈடாக வர்த்தியா நிற்பர்கள் இறே –அல்லாத போது -சம்சார வர்த்தகர்களேயாய் இருந்தார்களே ஆகிலும்-எஞ்சாப் பிறவி – ஒருக்காலும்-சுருங்க கடவது அன்றிக்கே – முடிவு காண ஒண்ணாதபடி -அநாதியாய் வருகிற ஜன்ம பரம்பரையால் உண்டான-
இடரைத் தவிர்த்துக் கொள்ளுக்கைக்கு ஈடாக –துஞ்சா முனிவரும் அல்லாதாரும் -எஞ்சாப் பிறவி இடர் கடிவான்-தொடர நின்ற -அநாதி காலம் கூடி இவ்வளவாக சூழ்ந்து கொண்ட இது-அசக்தனான தன்னால் போக்கிக் கொள்ள-ஒண்ணாமையாலே –ஒரு உத்யோகத்திலே தன்னுடைய ஆஸ்ரயண மாத்ரத்திலே போக்க வல்லான் ஒரு சர்வ சக்தியைப் பற்ற வேணும் இறே –தன் சார்விலாத –
ருத்ரம் சமாஸ்ரிதா தேவா -ருத்ரோ ப்ரஹ்மாணம் ஆஸ்ரித-ப்ரஹ்மா மாம் ஆஸ்ரிதே ராஜன் நாஹம் கஞ்சிதுபாஸ்ரித -என்கிறபடியே ப்ரஹ்மாதிகள் தங்கள் துக்க-நிவ்ருத்திக்கு உடலாக தன்னை ஆஸ்ரிக்கிறவோபாதி- தான் வேறு சிலரை ஆஸ்ரயணீயராக உடையன் அன்றிக்கே இருக்குமவன் என்கிறது –வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லாகிற மாயம் உண்டு – ஆச்சர்யம் –இமையோர் -தமக்கும் செவ்வே நெஞ்சால் நினைப்பு அரிதால் –சம்சாரிகள் ஷுத்திர விஷயங்களைக் கூட-உண்டு அறுக்க மாட்டாதே இருக்க —நிரந்தர பகவத் அனுபவம் பண்ணுகிறார் சிலராய்- செய்ய முடியாது செய்தாராய் இருக்கிறார் நித்ய ஸூரிகள் இறே – அவர்களுக்கு கூட அனுசந்திக்கப் போகாது இவ் வாச்சர்யம் – என் தான் அவர்களுக்கு நினைக்கப் போகாது ஒழிகிறது என் என்ன – ப்ரஹ்மாதிகளுக்கும் கூட துக்க நிவ்ருதியைப் பண்ணிக் கொடுக்கிற தான் ஆஸ்ரிதரால் தனக்கு வந்த வாச்சர்யம் தனக்குத் தான் நிலமோ -(ஜென்ம கர்ம மே திவ்யம் -அவனுக்கும் திவ்யமாக இருக்குமே –சர்வேஸ்வரனாய்-
ப்ரஹ்மாதிகளுக்கும் கூட ஆஸ்ரயணீயனாய்-அவாப்த சமஸ்த காமனாய் இருக்கிறவன் – ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யமே தனக்குத் தாரகமாய் –அது தான் நேர் கொடு நேர் கிட்டப் பெறாதே -இப்படி களவு கண்டாகிலும் புஜிக்க வேண்டி –அது தான் தலைக் கட்டப் பெறாதே –வாயது கையதாக அகப்பட்டு –கட்டுண்டு –அடியுண்டு – பிரதி க்ரியை அற்று -உடம்பு வெளுத்து பேகணித்து நின்ற நிலை சிலருக்கு நிலமோ –அரையனுக்கு போகிற பாலை ஓர் இடையன் களவு கண்டான் -என்று கட்டி அடியா நிற்க –
பிள்ளை உறங்கா வல்லி தாசர் கண்டு பரவசராய் இருந்து – இத்தால் வந்ததுக்கு எல்லாம் நான் கடவன் -என்று விடுவித்துக் கொண்டாராம் –செவ்வே நெஞ்சால் – சிசுபாலாதிகளைப் போலே தோஷத்தை ஏறிட்டு கொண்டு சில சொல்லில் சொல்லலாம்- அல்லது -குணமான படியை நேரில் அனுசந்தித்து போம் என்றால் அது செய்யப் போகாது –துஞ்சா முனிவரும் அல்லாதாரும் -எஞ்சாப் பிறவி இடர் கடிவான் -தொடர நின்ற -தன் சார்விலாத- தனிப் பெரும் மூர்த்தி வுடைய வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லான மாயமானது- இமையோர் தமக்கும் செவ்வே நெஞ்சால் நினைப்பு அரிதால் -என்கிறார் –
பரத்வத்தை எல்லை கண்டாலும் காணலாம் -ஸுலப்யத்தை எல்லை காண முடியாதே –
சர்வேஸ்வரனாய் -ப்ரஹ்மாதிகளுக்கும் கூட ஆஸ்ரயணீயனாய்-அவாப்த ஸமஸ்த காமனாய் இருக்கிறவன் -ஆச்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யமே தனக்கு தாரகமாய் -அது தான் நேர் கொடு நேர் கிட்டப் பெறாதே இப்படி களவு கண்டாகிலும் புஜிக்க வேண்டும் படி அது தானும் தலைக் கட்டப் பெறாதே வயது கையதாக அகப்பட்டுக் கொண்டு -கட்டுண்டு -அடியுண்டு பிரதிகிரியை அற்று உடம்பு வெளுத்து பேகணித்து நின்ற நிலை சிலர்க்கு நிலமோ -நம்பிள்ளை ஸ்ரீ ஸூ க்திகள் நித்ய ஸூரிகளுக்கே முடியாதே-சனகாதி யோகிகளும் -ப்ரஹ்மாதி தேவதைகளும் -சரண் அடையும் படி நிற்கும் முழு முதல் கடவுள் இவன் ஒருவனே அன்றோ –நல்ல வென் தோழி நாகணை மிசை நம் பரர் செல்வர் பெரியர் சிறு மானிடர் நாம் செய்வது என்-என்று கை வாங்கி இருக்காமல் ஸுலப்யன் என்று அறிந்து அவன் நம்மை உடைமையாக்கிக் கொள்ளாது ஓழியான்-அஞ்ச வேண்டாம் என்றபடி –ஸர்வேச்வரனுடைய பரத்வத்திலும் ஸௌலப்யத்திலுமண்டான போக்யதை எவர்க்கும் அளவிட்டு நினைப்பதற்கு முடியாதென் றருளிச் செய்கிறார்.‘வெண்ணெயூணென்னு மீளச் சொல்லே’ என்றதனால் ஸௌலப்யகுணமும், மற்றவற்றால் பரந்த குணமும் குறிக்கப்பட்டனவென்க.‘பரத்வத்தை ஒருவாறு எல்லைகண்டாலும் காணலாகும். ஸௌலப்யம் யார்க்கும் எல்லைகாண்பதரிது’ என்பது தோன்ற
‘நெஞ்சால் நினைப்பதரிதால் வெண்ணெயூணென்ன மீளச்சொல்லே’ எனறு நவீத சௌர்ய வ்ருத்தாந்தம் ப்ரதாத விசேஷ்ய மாகத் தலைக்கட்டப்பட்டுள்ளதென்க.–‘வெண்ணெயூணென்னு மீளச்சொல்- நெஞ்சால் நினைப்பரிதால்’ என்றவிடத்திற்கு நம்பிள்ளையீடு காண்மின்:-
“ஸர்வேச்வரனாய் ப்ரஹ்மாதிகளக்குங் கூட ஆச்ரயணீயனாய் அவரப்த ஸமஸ்தகாமனாயிருக்கிறவன்,
ஆச்ரிதஸ்பர்சமுள்ள த்ரவ்யமே எனக்கு தாரகமாய் அதுதான் நேர்கொடுநேர் கிட்டப்பெறாதே இப்படி களவு கண்டாகிலும் பூஜிக்க வேண்டி அதுதான் தலைக்கட்டப் பெறாதே வாயாது கையதாக அகப்பட்டுக் கட்டுண்டு அடியுண்டு ப்ரதிக்ரியை யற்று உடம்பு வெளுத்துப் பேகணித்து நின்றநிலை சிலர்க்கு நிலமோ?” என்று.–‘இமையோர்தமக்கும் செவ்வே நெஞ்சால் நினைப்பபரிதால்’ என்றதனால், எப்போதும் அவனுடன் ஒக்க இருப்பவரும் வரம்பிலா ஞானமுடையவரும் நிரந்தர பகவத்நுபவ சீலருமான நித்ய ஸூரிகளுக்கே இக்குணம் வரையறுத்து நினைக்க முடியாமை கூறின முகத்தால்,மற்றையோர்க்கு எட்டாத தன்மையைக் கைமுக ந்யாய ஸித்தமாக்கினபடி.–“துஞ்சா முனிவருமல்லாதாரும் எஞ்சாப்பிறவி யிடர்கடிவான் தொடரநின்ற தன் சார்விலாத தனிப் பெரு மூர்த்தி தன்” என்று இங்ஙனே அந்வயக்ரமாக்கி யுரைக்கவுமாம் துஞ்சா முனிவரும்- ஆத்மவிஷயத்திலும் ஈச்வா விஷயத்திலும் உணர்ச்சி நீங்காத ஸநகாதி யோகிகளும் அல்லாதவரும்- அவர்கள் போலன்றி ப்ரஹ்ம பாவகையோடு கர்மபாவநையையுமுடைய ப்ரஹ்மா முதலிய தேவர்களும். எஞ்சாப் பிறவி இடர்க கடிவன் – தம்தம் மாளாத பிறப்புத் துன்பத்தை ஒழிக்கும் பொருட்டு, தொடர- வழிபடும்படி–நின்ற- தலைவனாய் நின்றவனும், தன்சார்வு இலாத- எல்லார்க்கும் தான் சார்பாக (சரண்யனாக) இருப்பது போலத் தான் ஒரு சார்பைத் தேடுதலில்லாதவனுமாகிய முழுமுதற்கடவுள் என்று பொருளையும் வுரைத்துக் கொள்ளலாம்.
இப்பாட்டைக் கிளவித்துறை வைகயில் நாயகனுடைய அருமையை நோக்கிக் கவலைப்படுகிற நாயகிக்கு தோழிகூறுதலாக கொள்ளலாம். நாயகனது பெருமேன்மையையே பாராட்டி-தோழி நாகணைமிசை நம்பார், செல்வர் பெரியார் எளியளான என்னைக் கை பற்றிக் கொண்டருள்வானோ? என்று மிகக் கவலைப்பட்ட தலைமகளை நோக்கி தோழி‘அங்ஙனம் பெருமை படைதத்வனா யுள்ளவனுக்கு அன்பர் திறத்தில் எளியனாந்தன்மையும் ஒன்று இயல்பில் உள்ளதாதலால்
அவன் உன்னை உரிமையாக்கிக் கொள்ளாதொழியான்’ என்று கூறி ஆற்றுவிக்கிறபடி போலும்.
‘வெண்ணெயூணென்னு மீளச்சொல்’ என்றது- தோழி தான் பற்றாசரகச் சொன்னது ஸுவ்லப்ப குணத்திற்கு ஒரு த்ருஷ்டாந்த மெடுத்துக் காட்டியபடி துஞ்சாப்பெருமூர்த்தி என்றவளவும் தலைவி தன்னுடைய அச்சததிற்கு உறுப்பான அநுஸந்தித்த பரத்வகுணத்தைத் தோழி அநுவாதம் செய்தபடி யென்க.—ஊண்- இது முதனிலை திரிந்த தொழிற்பெயர். அன்று; ‘உண்ணப்படும் பொருள்’ என்கிற அர்த்தத்தில் செயல்படுபொருள்-விகுதி புணர்ந்து கெட்ட பெயர்ச்சொல் என்க. ஹீனமென்னும் வடசொல் ஈனமெனத் திரிந்தது.
துஞ்சா முனிவரும்-முடிவில்லாத மனனத்தை யுடைய ஸநகாதிகளும்–அல்லாதவரும்
ஸ்வ அதிகார தத் பரரான ப்ரஹ்மாதிகளும்-தொடர நின்ற -தந்தாமுடைய அபிமத ஸித்தி யர்த்தமாக அனுவர்த்திக்க-அவர்களுக்குப் புருஷார்த்த ப்ரதனாய் நின்ற–எஞ்சாப் பிறவி இடர் கடிவான்-குன்றாது இருக்கிற சரீர ஸம்பந்த நிபந்தனை துக்கத்தைப் போக்குமவன்-சரீர ஸம்பந்தம் அறுக்கை ஈஸ்வரனுக்கு ஸ்வா பாவிக வேஷம்-அல்லாத புருஷார்த்தங்களை அபேக்ஷைக்கு ஈடாகக் கொடுக்கும் என்றபடி—இமையோர் தமக்கும் தன் சார்விலாத தனிப் பெரு மூர்த்தி–அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தராய் அபரிச்சின்ன ப்ரகாஸ யுக்தரான நித்ய ஸூரிகளுக்கும் தன்னோடு சேர்த்தி சொல்ல ஒண்ணாதபடி அத்யந்த விலக்ஷணமாய் த்ரிவித (கால தேச வஸ்து )பரிச்சேத ரஹிதமான ஸ்வரூபத்தை யுடையவன்-இவ் விடத்தில் மூர்த்தி என்று-ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது-ஸ்வாமித்வம் ஆகவுமாம்–(தன் சார்வு இல்லாத மூர்த்தி-தனி மூர்த்தி-பெரு மூர்த்தி)தன் சால்வு -என்ற பாடமாய் தன்மை இல்லாத என்றுமாம்-தன் மாயம் செவ்வே நெஞ்சால் நினைப்பரிதால்-இப்படி பெரியனானவனுடைய ஆச்சர்ய சேஷ்டிதமானது நேரே நெஞ்சால் பரிச்சேதித்து நினைக்கை அரிது–அவ் வாச்சர்யம் ஏது என்னில்
வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே –வெண்ணெயை அமுது செய்தான் என்று சொல்லப்பட்ட அபக்ருஷ்ட வசனம்-இவ் வபதானத்திலும்-இவ் வபதான ப்ரஸம்ஸியான வசன ஸாரஸ்யம் தான் பரிச்சேதிக்க அரிது என்று கருத்து –
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம்-துஞ்சா முனிவரும்-ஸம்ஸாரிகள் ஸப்தாதி விஷயங்களிலே உணர்ந்து இருக்குமா போலே ஆத்ம விஷயத்திலும் ஈஸ்வர விஷயத்திலும் உணர்த்தியை உடையவர்களாய் தமோ குண அபி பூதர் இன்றிக்கே இறே ஸநகாதிகள் இருப்பது
யா நிசா –ஸ்ரீ கீதை -2-69–இவர்கள் தங்களை ஸர்வேஸ்வரன் ஸ்ருஷ்டிக்கைக்கு உடலாக உண்டாக்கி இருக்கச் செய்தேயும் ஜன்மாந்தரத்தில் ஸூ ஹ்ருதத்தாலே ஸம்ஸாரத்தில் விரக்தராய் முமுஷுக்களாய் இருக்கிறபடியைக் கண்டு இவர்கள் இதுக்கு ஆள் அல்லர் இதுக்கு புறம்பே ஆள் தேடிக்கொள்ள வேணும் -என்னும்படி இருந்தவர்கள் இறே-அல்லாதவரும்-ஸூஹ்ருத தாரதம்யத்தாலே அவர்கள் போல் அன்றிக்கே கர்ம பாவனையும் ப்ரஹ்ம பாவனையும் இரண்டும் கூடி இ ப்ரஹ்மாதிகள் இருப்பது-எஞ்சாப் பிறவி இடர் கடிவான்-ஒருகாலும் சுருங்கக் கடவது அன்றிக்கே முடிவு காண ஒண்ணாத படியாய் அனாதியாய் வருகிற ஜென்ம பரம்பரையால் உண்டான இடரைத் தவிர்த்துக் கொள்ளுகைக்காக துஞ்சா முனிவரும் அல்லாதவரும் எஞ்சாப் பிறவி இடர் கடிவான் இமையோர் தமக்கும்-தன் மாயம் செவ்வே நெஞ்சால் நினைப்பரிதால்-மாயாம் து ப்ரக்ருதிம் வித்யாத் மாயிநம் து மஹேஸ்வம் -ஸ்வேதாஸ்வரம் மயே த்யஷேண ப்ரக்ருதி ஸூயதே ஸ சதாசனம் -ஸ்ரீ கீதை -9-10-
ப்ரக்ருதிக்யா மயாக்யாதா வ்யக்தா வ்யக்த ஸ்வரூபிணி -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-4-39-இத்யாதிகளில்
சொல்லப்பட்ட அவனுடைய ப்ரக்ருதி ஸ்வரூபாதிகள் தான் வாங் து மனஸ் பரிச்சேத்யமோ–நெஞ்சால் தான் இவ்வளவு என்று எண்ணப் போமோ-இனி அவன் ஸ்வரூபாதிகளையோ இவ்வளவு என்று எண்ணுவது மூடர்காள் ஸ்ருதிகளாலும் யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ -தைத்ரியம் என்னப்பட்ட அவன் ஆனந்தாதிகளில் நாம் அபரிச்சிந்ததையைச் சொல்ல வேணுமோ–வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே –அவனுடைய ஒரு கிருஷ்ண அவதாரத்தில் ஒரு போதில் வெண்ணெய் யூண் தான் தத் காலகத்தில் சொன்ன ஹிதச் சொற்கள் தான் பக்தர் நெஞ்சால் தான் நினைத்துத் தரிக்கப் போமோ-ஒவ்வொன்றில் -எண்ணானாய் என்னானாய் -திருநெடும் -10-என்று உருகினீராய் நீ மக்நராய்க் போக வேண்டாவோ -என்கிறார் –
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்–வியாக்யானம்–துஞ்சா முனிவரும்-இவ்வகண்ட காலத்தில் சிஷ்ய குரு பரம்பரா விச்சேதம் இல்லாமலே சாதன பக்தி யதிக்ருதரான ஸர்வரும்–அல்லாதவரும் அப்படியே ஸாத்ய பக்தி க்ருதரான ஸர்வரும்-மற்றும் ஸ்ரோத ஸ்மார்த்த கர்மாதி க்ருதரும்-தொடர நின்ற எஞ்சாப் பிறவி இடர் கடிவான்-ஸம்ஸாரி ஆத்மாவைத் தொடர்ந்து நின்ற எண்ணப்படாத ஜன்ம பரம்பரைகளால் வந்த ஜரா மரணாதி துக்க பரம்பரையை-கடிவான்-நிச்சேஷமாக நிவர்த்திக்குமவன்–இமையோர் தமக்கும் தன் சார்விலாத தனிப் பெரு மூர்த்தி-நித்ய ஸூரிகளுக்கும் ஸ்வ விக்ரஹங்களால் தன் விக்ரஹங்களுக்குச் சேர்த்தி சொல்ல ஒண்ணாதபடி அத்விதீயமான ஸ்வ பாவமுள்ள திவ்ய மங்கள விக்ரஹங்களையும் அப்படியே அபரிச்சின்னமான திவ்ய மங்கள விக்ரஹத்தை யுமுடையவன்
தாத்பர்யம்--இதில் தேவரீர் சர்வேஸ்வரனுடைய சகல சேஷ்டிதங்களையும் அனுபவித்து சொல்லி
உமக்குப் பிடித்த வெண்ணெய் திருடிய வ்ருத்தாந்தம் ஒன்றிலே அனுசந்தித்து ஸூகமாக இருக்கலாமே என்று மதுர கவிகள் போல்வார் சொல்ல-அவ்விஷயம் தரிக்க விஷயம் இல்லையே-ஈஸ்வர அபிமானிகள் ப்ரஹ்மாதிகளும் மானஸ புத்திரர்கள் -சத்வ பிரதானராய் -ப்ரஹ்ம ஏக பாவம் பகவத் சரணாரவிந்தத்தில் மக்நரான -சனகாதிகளும் சம்சார ஆபத்தை நீக்கித் தர அநவ்ரதம் இவனைப் பற்றி நிற்பார்கள்-இவர்களைப் போல் தனக்கு ஒருவர் சார்பு இல்லாத-அத்வீதிய சர்வேஸ்வரன் கிருஷ்ணனாய் அவதரித்து வெண்ணெய் களவு கண்டு இதுக்காகவே அவதரித்தான் –-புத்துருக்கு வெண்ணெய் நவநீதம் அமுது செய்ய அதுக்கு அவர்கள் கட்டி அடிக்கப்புக-தப்பிக்க மாட்டாமல் ஏங்கி நிற்கும் நிலைnநித்ய ஸூரிகளுக்கும் நெஞ்சால் நினைக்க அரிதாய் இருக்க இத்தை நான் நினைத்து பொழுது போக்க ஒண்ணுமோ நான் இவ்வவஸ்தை போய் மோஹமேயாய் விடும் அல்லது ஸூகமாய் இருக்கப் போமோ என்கிறார்
10-2-கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன -ப்ரவேஸம்–
ஒரு நல் சுற்றம் -என்ற -10-1-பெரிய திரு மொழியிலே-பல திருப்பதிகளையும் அருளிச் செய்த -இதற்கு கருத்து என் –
என்று சீயர் பட்டரைக் கேட்க –
பிறந்தகத்தின் நின்றும் புக்ககத்துக்கு போகும் பெண் பிள்ளைகள்-பந்துக்கள் இருந்த இடம் எங்கும் கண்டு
வினவப் போமாறு போலே-அடையத் தக்க பரமபதம் அணித்தான வாறே
திருப்பதிகள் தோறும் புகுகிறார் -என்று அருளிச் செய்தார் –
பண்டை நாளாலே தொடங்கி இவரும்-திருப்பதிகள் மங்களா சாசனம் செய்து அருளுகிறார் –
திருப் புளிங்குடியிலே புகுவது-9-2-
திரு காட் கரையிலே புகுவது-9-6-
திரு மூழிக் களத்திலே புகுவது-9-7-
திரு நாவாயிலே புகுவது-9-8-
திருக் கண்ணபுரத்திலே புகுவது-9-10
திரு மோகூரிலே புகுவது-10-1-
திரு வநந்த புரத்திலே புகுவதாகிறார் –10-2-
அடையத் தக்க பரமபதம் ஏறப் போவதாக ஒருப்பட்டு-நடுவிலே உண்டான தடைகளைப் போக்கி
வழி கொடு போய் விடுகைக்கு-காளமேகத்தை துணையாகப் பற்றினாராய் நின்றார் மேல் –
அவ்வளவு தான் நமக்கு போக வேண்டுமோ
இங்கே உள்ள திரு வநந்த புரமே அடையத் தக்க பரம பதமாக இருக்க-என்று திரு வநந்த புரத்தை பரம பதமாக அறுதி இட்டார் –
அங்கனம் அறுதி இட்டு
அந் நகரமாகிற இது தான்-வாசமே கமழும் சோலை வயல் அணி அனந்தபுரம் ஆகையாலே
அவன் விரும்பி வசிக்க வேண்டும்படி எல்லை இல்லாத இனியதுமாய் -தேசம் செய்து –
அவன் வந்து வசிக்கையாலே சம்சார துக்கமும் தட்டாத இடமுமாய் -தீரும் வினை நோய்கள் எல்லாம் தீரும் –
இச் சரீர சம்பந்தம் அற்று அவ்வருகு போனால் செய்யும் அடிமையை
ருசி பிறந்த போதே இங்கேயே செய்யலாம் படியாய் -கடைத் தலை சீய்க்கப் பெற்றால் –
இனித்தான் –
அமரர்கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர் -10-2-6-என்கிறபடியே
நித்ய சூரிகளும் வந்து அடிமை செய்யும் நகரம் ஆகையாலே
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -2-8-10-என்று
ஆசைப் பட்டபடி அவர்களோடு கூடவுமாய்-அவ்வருகு போக வேண்டினாரே ஆகிலும்
பெரியோரை ஒருகாலும் பிரிகிலேன் -பெரிய திருமொழி -7-4-4-என்கிறபடியே-அவர்களோடு போகவுமாய் இருக்கும் அன்றோ –
உகந்து அருளின நிலங்களில் நிலை இது தான் –
முதலிலே பகவான் இடத்தில் ருசியைப் பிறப்பிக்கைக்கு உடலுமாய் –
ருசி பிறந்தால் –
யே யதா மாம் ப்ரபத்யந்தே தான் ததைவ பஜாமி அஹம்-மம வர்த்ம அனுவர்த்தந்தே மனுஷ்யா பார்த்த சர்வச -ஸ்ரீ கீதை -4-11-
எவர்கள் என்னை இந்த விதமாக வணங்குகிறார்களோ-அவர்களுக்கு அந்த விதமாகவே
நான் அருள் செய்கிறேன் -என்கிறபடியே
சுலபனாய் இருக்கும் தன்மைக்கு எல்லை நிலமும் ஆகையால் –உபாயத்துக்கு உரிய தன்மைகளும் நிறைந்ததாய்
பரம பதத்துக்கு கொடுபோம் இடத்தில்-ஆதி வாஹிக கணத்தில் முதல்வனான தானே-
ஹார்த்த அனுக்ருஹீத சதாதிகயா -உத்தர மீமாம்சம் -4-அத்யாயம் -2-பாதம்
உள்ளத்தில் உறையும் இறைவனால் அருளப் பட்டவன் ஆகிறான் -என்கிறபடியே
வழியில் உண்டாகும் தடைகளையும் போக்கி கொடு போகைக்கும்-முற்பாடானாகைக்கும் உடலாய் –
பிறப்பு இறப்புகளின் தளை நீங்கி அவ்வருகே போனால் செய்யும் அடிமையை-இவ் உடலோடு கிடக்கச் செய்தேயும்
யாதாயினும் ஒரு காலத்தில் செய்கைக்கும் உடலாய் இருக்கும் அன்றோ-ஆகையால் -கூடும் என்க –
ஆக –
ருசியைப் பிறப்பிக்கைக்கும் உடலாய் –
ருசி பிறந்தவாறே உபாயம் ஆகைக்கும் உடலாய் –
ஞானத்தையும் பக்தியையும் வளர்க்கக் கூடியதுமாய் –
இச் சரீரத்தோடு இருக்கச் செய்தே அடிமை செய்கைக்கும் உடலாய் இருக்கையாலே-
திருவனந்த புரமே -அடையத் தக்க மேலான பரமபதம் -என்று-அறுதி இட்ட படியே -நடமினோ நமர்கள் உள்ளீர்-
நம்மோடு சம்பந்தம் உடையவர்கள் எல்லாரும் அங்கே போய் திரளுங்கோள் -என்கிறார்-
இதுதான்
மற்ற திவ்ய தேசங்களுக்கும் ஒவ்வாதோ
யாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனை
மேவி வலம் செய்து கை தொழக் கூடும் கொல் எண்ணும் என் சிந்தனையே -7-10-9-
என்பது போன்றவைகளும் உண்டே -என்னில்
எல்லாவற்றுக்கும் எல்லாம் உண்டாய் இருந்தாலும்-
ஒவ்வோர் இடங்களிலே ஒவ்வொரு வகையான-
நினைவின் விசேடங்கள் ஓடினால் -அவற்றுக்குச் சேர வார்த்தை சொல்லும் இத்தனை-
ஸ ஸைன்ய புத்ர சிஷ்ய சாத்ய சித்த பூ ஸூ ரார்ச்ச நத்துக்கு முக நாபி பாதங்களை
த்வார த்ரயத்தாலே காட்டும் சாம்யம் அநந்த சயனத்தில் வ்யக்தம் –சூர்ணிகை -183-
திரு நாம சங்கீர்த்தனம் பிரதானம் -அனந்தன் காடி இலுப்ப மரம் தாரு -ப்ரஹ்மம் 1686- நெருப்பு பிடிக்க
-மீண்டும் -மார்த்தாண்ட வர்ம அரசர் 40 வருஷம் வேலை பார்த்து 72 யானைகள் 24000 சாளக்கிராமம் பாகன் இல்லாமல் யானைகள் வர –
பெருமாள் சொப்பனம் பாதி ஜாக்கிரதையாக கீழே -பின்பு ஒரு காலம் ஆபத்து வரும் –
சாளக்கிராமம் கடு சக்கரை பூசி –
சமஷடி ஸ்ருஷ்ட்டி ஆரம்பம் முன்னே திரு வாட்டாறு -நான் முக்கண் இல்லை அங்கே
வில்வ மங்கள சாமியார் -சின்ன பெருமாள் வைத்து ஆராதனை -சின்ன பிள்ளை உடன் இருக்க -காலில் சதங்கை -காட்டுக்கு ஓட
மலை வால் பெண் இருக்க -அனந்தன் காட்டில் போடுவேன் -சதங்கை ஓசை அங்கே -இலுப்ப மரம் -விழுந்து –
12 mile நீளம்
திவாகரன் துளுவ பிராமணர் நம்பூதிரி கலந்து திரு ஆராதனம்
பிரார்த்திக்க -18 அடி நீளம் -குறைத்து –
மூன்று ஊருக்கு காட்சி முதலில் -அதனால் மூன்று துவாரங்கள் –
ஸ ஸைன்ய -விஷ்வக் சீனர் நித்ய ஸூ ரிகள் உடன் -சாத்ய தேவர்கள் முகம் சேவிக்க
புத்திரர் -நான் முக்கண் -சித்த புருஷர் சாரணர் நாபி கமல துவாரம்
சிஷ்யர் நாம் -பூ சூரர்கள் நிலத்தேவர் பரம பக்தர்கள் பாத கமல துவாரம்
சாம்யம் குணம் காட்டி அருளி -சமோஹம் சர்வ பூதேஷூ –
சுதை -சிலா -தாரு -பூரி ஜெகந்நாத பெருமாள் -களேபரம் நவ களே பரம் -12-19 வருஷங்களுக்கு ஒரு முறை –
1726 -முதல் சேவை இந்த திரு மேனி உடன் –
ஒத்தக் கால் மண்டபம் முன் –
பாதாதி கேசம் -சேவிக்க வேண்டும் பாரதந்தர்யம் ஸ்வரூபம் –
பத்ம நாப தாசர் -அரசர்களுக்கு திரு நாமம் –
ஹாடாகமாடம் -ஸ்வர்ண மயமான மண்டபம் ஸ்வர்ணமயமான திருமேனி -மார்த்தாண்ட வர்மா -பத்ம நாப தாசர்கள் –
அரசர்கள் -திருமால் பிரதிநிதிகள் -அமரர்கோன் அர்ச்சிக்கின்று -இன்றும் -அரசர் அர்ச்சிக்கிறார்கள் Rs-160 அபராதம் -வர முடியாவிடில்
ஐப்பசி பங்குனி -ப்ரஹ்ம உத்சவங்கள் சங்க முகத்துறை அளவு
பள்ளி வேட்டை முதல் நாள் -அரசரே அம்பு போட்டு -தேங்காய் மேலே அம்பு -காம க்ரோதங்கள்
ஆராட்டு உத்சவம் தீர்த்தவாரி 9 நாள் நடக்கும்
ஆண்டாள் 9 நாள்
இலுப்ப மரம் பெரிய திரு உருவம் -இருந்த இடம்
குல சேகர மண்டபம் –
வெண்ணெய் காப்பு ஹனுமான் எப்பொழுதும் –
நரசிம்மர் உக்ர ஸ்ரீ ராமாயணம் பாராயணம் உக்ரம் குறைய -ஹிரண்ய வைத்த படலம் கம்பர் –
மார்த்தாண்ட-சூர்ய வம்சம் -ராஜ புத்திரர் -நான்கு கோத்த்ரம் வஸிஷ்ட கோத்ரம் –
நீண்ட கத்தி கீழே வைத்து பத்ம நாப தாசர் -குடும்ப சொத்து ஒன்றும் இல்லை
1008 வேத வித்து நான்கு வேதம் ஏழு தடவை முறை ஜபம் உத்சவம் -என்பர்
கடைசி நாள் லக்ஷ தீபம் நடக்கும் –
இரண்டாம் திருவாய் மொழியிலே -கீழே -வழித் துணையாகக் காளமேகத்தை ஆஸ்ரயித்து ப்ராப்ய தேசத்து
ஏறக் கொண்டு போக உத்யோகித்த சர்வேஸ்வரன் –
தேசத்தினுடைய ப்ராப்யத்வத்தையும் தன்னுடைய கைங்கர்ய பிரதி சம்பந்தித்தையும் இந்த விபூதியில் பிரகாசிப்பித்து
இவர் உகப்பை விளைவித்துக் கொண்டு போவோம் என்று திரு உள்ளம் பற்றி –
நிரதிசய போக்யமான திரு வனந்த புறத்திலே கண் வளர்ந்து அருளுகிறபடியைக் காட்டாக கண்டு ஸந்துஷ்டாராய் -அவனுடைய
ஆஸ்ரித சம்ச்லேஷ ஸ்வ பாவத்தையும்
ஆச்சர்ய அவஹமான அன்வயத்தையும்
அசேஷ ஜகத் ரக்ஷகத்வத்தையும்
அனவதிக வாத்சல்யத்தையும்
அனுபஹித சேஷித்வத்தையும்
சர்வ தேவ நிர்வாஹகத்வத்தையும்
சகல ஜகத் ஸ்ருஷ்ட்யாதி யோகத்தையும்
பரம ப்ராப்யத்வத்தையும்
கைங்கர்ய பிரதிசம்பந்தித்யித்வத்தையும்
ஆராதன வைலக்ஷண்ய அபாதகத்வத்தையும்
அநு சந்தித்து -ஏவம் பூதனான சர்வேஸ்வரன் வர்த்திக்கிற திரு வனந்த புரம் தன்னையே ப்ராப்யமாக அறுதியிட்டு
இங்கே தம்முடைய சகல கிலேசமும் தீரும்படி
அவனுடைய போக்யமான திரு நாமங்களைக் கீர்த்தித்தும்
பஹு முகமான கைங்கர்யங்களைப் பண்ணியும் அனுகூல ஜனங்களோடே அனுபவிக்கப் பார்க்கிறார் –
கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்த புரநகர் புகுதும் இன்றே-10-2-1-
கேசவா வென்ன –-அவன் ஒரு விரோதியை போக்கின படியைச் சொல்ல-விரோதி என்ற பேர் பெற்றவை எல்லாம் நசிக்கும்-வார்த்தை மாத்ரமே அமையும் என்பார் –கேசவாவென்னக் கெடும் -என்கிறார் –ஸ்வரூப ரூப குண விபவ நான்கும் இதில் உண்டே பிரம்மா ருத்ர நியாமகன் ஸ்வரூபம் -கேசி ஹந்தா -விபவம் -குணம் -கிலேச நாசன் -ரூபம் கேச பாசம் யுடையவன்–இந்த பிரகரணத்துக்கு சேர கிலேச நாசனே உசிதம்
—————–
இன்று போய்ப் புகுதிராகில் எழுமையும் ஏதம் சாரா
குன்று நேர் மாட மாடே குருந்து சேர் செருந்தி புன்னை
மன்றலர் பொழில் அனந்த புர நகர் மாயன் நாமம்
ஒன்றும் ஓர் ஆயிரமாம் உள்ளுவார்க்கும் உம்பரூரே–10-2-2-
தீ வினைகள் போகைக்கு சொன்ன-திருப் பெயர் தானே -கேசவா என்ன – ஆயிரம் வகைகளாய் பாது காவலாய் இருக்கும்-என்கிறார் –சர்வாதிகாரம் பிராப்தம் – முன்பே இவனை இச்சித்து -இசைவு பார்த்து இருக்கும் விஷயத்துக்கு இச்சா மாத்திரமே போதுமே –
எழுமையும் ஏதம் சாரா-ஒரு காலமும் பொல்லாங்கு வந்து கிட்டாது –
சாரா -என்றதனால்-அதற்கு அவனும் தானும் நினைப்பிட வேண்டா-இராஜ குல சம்பந்தத்தாலே விட்டு ஓடிப் போம் –
குன்று சேர் மாடம் – பிள்ளை திரு நறையூர் அரையரும் பட்டரும் உள்ளே புக்கு-வலம் வரா நிற்க-நான் சேவித்துப் போந்தேன் – அல்லாதார் எல்லாரும் விரைந்து சடக்கென வாரா நிற்க-இவர்கள் திரு மாளிகைகளையும் திரு கோபுரங்களையும்
கண்களாலே பருகுவாரைப் போலே பார்த்துக் கொண்டு வருகிறபடியைக் கண்டு-
அல்லாதார்க்கும் இவர்களுக்கும் செயல் ஒத்து இருக்கச் செய்தே இவர்களான வாசி இருந்தபடி என் -என்று இருந்தேன் -என்று நஞ்சீயர் அருளிச் செய்வர் –
குருந்து சேர் செருந்தி புன்னை–நித்ய ஸரிகளை சொல்லக் கடவதாய் இருக்க-இங்கே தாவரங்களைச் சொல்லுகிறது என் -என்ன-உகந்து அருளின நிலங்களிலே மேன் மக்களோடு தாவரங்களோடு வாசி இல்லை என்று இருக்கும் உத்தேச்ய புத்தியாலே-
நித்ய ஸூரிகளுக்கு ஆனால் அவ்வருகு போக நினைவு உண்டாகைக்கு தகுதி உண்டு -நினையார்கள் இத்தனை –ஞானத்தின் கார்யமான அன்பின் மிகுதியாலே நினைக்கைக்கும் தகுதி உண்டே அன்றோ–வேறு ஒரு இடத்தில் போக நினைக்கைக்கு தகுதி இல்லை அன்றோ இவற்றுக்கு –
பிள்ளை ஜனநாத ப்ரஹ்மராயர் திரு முடிக் குறையிலே மரம் வெட்டுவியா நிற்க-எம்பார் அருளிச் செய்த வார்த்தையை நினைப்பது –ஈஸ்வர பிரக்ருதியை அழிக்கவோ -மிதுனம் கூட நீர் வார்த்து வளர்ந்தவை அன்றோ –சுரவன் பாக்குகளை -உயர்ந்த பாக்குகளை -சிலவற்றை பட்டருக்கு கொடு வந்து கொடுக்க-அவற்றைக் கண்டு இவை இருந்தபடி என்-திருவருள் கமுகினின்றும் வந்தவையோ -என்று அருளிச் செய்தாராம்
உம்பரூரே-திருப் பெயர்களை நினைப்பார்க்கு-அவ்விடம் தானே உம்பரூர் ஆகும்
அன்றிக்கே-உள்ளுவார் பெருமிடம் உம்பர் ஊர் -என்னவுமாம் –
அவ் உம்பர் ஊர் தானும் நம்பால் விரும்பப் படுவதும் அவன் விடாதே வசிப்பதனால் அன்றோ-அவனே தான் இவ்விடத்தே வசியா நின்றால்-பின்னை இவ்விடமே உத்தேச்யமாக தட்டு இல்லை அன்றோ –
—————
ஊரும் புள் கொடியும் அக்தே உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான்
சேரும் தண்ணனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில்
தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறியச் சொன்னோம்
பேரும் ஓர் ஆயிரத்துள் ஓன்று நீர் பேசுமினே-10-2-3-
தீய வினைகள் போகைக்கு அந்நகரத்தை அடைதலே போதியதாம்
ஆயிரம் திரு நாமங்களில் ஏதேனும் ஒன்றைச் சொல்லி-அனுபவியுங்கோள்-
ஊரும் புள் கொடியும் -அந்த திருவடியே –புள்ளினை கூறியது நித்ய ஸூரிகளுக்கும் உப லஷணம் – அநேக சேஷ வ்ருத்திகள் நித்ய ஸூரிகள் அனைவரும் செய்வதற்கு உப லக்ஷணம் –ஏகதா பவதி
சேரும் தண்ணனந்தபுரம்-தானும் உகந்து நித்ய ஸூரிகளும் உகக்கும் இடம் அன்றோ பரமபதம்-இங்கு தன் உகப்பு மாத்ரம் அன்றோ இருப்பது -என்றது இவர்கள் விருப்பு அற்று இருப்பினும் தான் விட மாட்டாதே-காலத்தை எதிர் நோக்கினவனாய் நிற்கிற இடம் அன்றோ
பேரும் ஓர் ஆயிரத்துள் ஓன்று நீர் பேசுமினே-ஸ்ரீ ராம ராமேதி -ராம திரு நாமம் -கேசவ திரு நாமம் -போக்யம் அனைத்தும் என்றவாறு —பள்ளியில் -சிறுவன் வாயில் ஓர் ஆயிர நாமம்-நாராயண திரு நாமம் -பிரதானம் அப்ரதானம் வாசி இல்லையே இவற்றுள் –ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும் –9-9-3-அவற்றில் வாய்க்குத் தோற்றிற்று ஒரு திருப் பெயரைச் சொல்லுங்கோள் –மனத்தின் துணையும் வேண்டா -என்பார் –பேசுமின் -என்கிறார் –
————
பேசுமின் கூசமின்றிப் பெரிய நீர் வேலை சூழ்ந்து
வாசமே கமழும் சோலை வயல் அணி அனந்த புரம்
நேசம் செய்து உறைகின்றானை நெறிமையால் மலர்கள் தூவி
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே–10-2-4-
பற்றுகின்றவர்க்கு ருசி பிறப்பதற்காக-திரு வனந்தபுரத்திலே புக்கு அடிமை-செய்கின்றவர்கள்–எத்தகைய புண்ணியம் செய்தவர்கள் -என்கிறார் –
அன்றிக்கே அவர்கள் புண்ணியம் செய்த படியைப்-பேசுங்கோள் -என்கிறார்
வாசமே கமழும் சோலை –நறு மணமே கமழா நிற்கும் ஆயிற்று சோலை –
சூழப் போந்த சோலையிலே நறு மணம் புறம்பு போகாதபடி-மதிள் இட்டால் போலே யாயிற்று இருப்பது கடல்-கடலில் நாற்றம் மேலிடாதபடி-சோலையின் நறு மணமே விஞ்சி இருத்தலின்-வாசமே கமழும் -என்று ஏகாரம் கொடுத்து ஓதுகிறார் – சம்சார கந்தம் தட்டாத படி -ஸ்வாபதேசம் –
நேசம் செய்து உறைகின்றானை – பரம பதத்தில் தவிர ஒண்ணாமை யாலே இருக்கின்றான் அத்தனை-அப்பரம பதத்தை வசை சொல்லி ஆயிற்று இங்கு வசிப்பது-
பிரதம பரிகரத்துக்கு செங்கல் சீறை வைப்பது போலே அன்றோ பரமபதத்தில் –
துன்புறு கின்றவர்களை பாது காப்பதற்கு உடல் அல்லாத இடமும் ஓர் வசிக்கும் இடம் ஆயிற்றதோ–தர்சனம் சித்ரகூடச்ய மந்தாக்னி யாச்ய சோபனே-அதிகம் புரவாசாச்ச மன்யே தவச தர்சநாத் -அயோத்யா -95-12-என்கிறபடியே இந்த சித்ரகூடத்தில் வசிப்பது அயோத்யா வாசம் விட மேலானது –
நேசம் செய்து உறைகின்றானை பூசனை செய்கின்றார்கள்-புண்ணியம் செய்த வாற்றை கூசம் இன்றி பேசுமின் -எனக் கூட்டலுமாம்- -பாகவதர்கள் பெருமையை கூசம் இன்றி பேசுதல் ஆவது என் என்னில்-பகவத் விஷயம் போலே வாய் வந்த படி சொல்ல ஒண்ணாது-பாகவத விஷயம்
புண்ணியம் செய்தவாறே –-சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி -திரு விருத்தம்-21 -அடிமை செய்கிறவர்களுடைய அடிமையும் ஓர் அடிமை யாயற்றதோ –
ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே ஆயிற்று அவர்கள் –இளைய பெருமாளைப் போலே ஆயிற்று இவர்கள் –-அவன் விட்டுப் போரச் செய்தேயும்-பாரதந்திரியத்தாலே விட மாட்டாதே கிடக்கிறார்கள் இத்தனை அன்றோ –இங்கே அடிமை செய்பவர்கள் பாக்ய சாலிகள் என்கிறார்-
—————
புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப்பு அறுக்கும் அப்பால்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்த புரத்து
அண்ணலார் கமல பாதம் அணுகுவார் அமரர் ஆவார்–10-2-5-
திரு வனந்த புரத்தை அடையுமவர்கள் நித்ய ஸூரிகள் ஆவார்கள்-ஆகையால் நீங்களும் அடைமின் –நாம் அறியச் சொன்னோம் –அவனாலே மயர்வற மதிநலம் அருளப் பெற்ற நாம்-தேகத்தையே ஆத்மாவாக அபிமானித்து இருக்கிற நீங்களும்-அறியும் படி-
உங்கள் கேட்டினைப் பார்த்துச் சொன்னோம்
புண்ணியம் செய்து –பக்தியைச் செலுத்தி-புண்ணியம் காரணம் -காரியம் பக்தி –
எந்தை நாமம்–இடறினவன் அம்மே என்னுமா போலே-திருநாமம் சொல்லுகைக்கு ஒரு தகுதியைத் தேடிக் கொள்ள வேண்டா-
நஞ்சீயர் பட்டரை-திரு நாமம் சொல்லும் பொழுது பக்தி உடையனாய் சொல்ல வேண்டுமோ -என்று கேட்க- கங்கையில் முழுகப் போமவனுக்கு-வேறு உவர்க் குழியிலே முழுகி போக வேண்டுமோ- மேல் உண்டான நன்மையைத் தருகிற இது-அதிகாரி சம்பத் ஆகிய -தகுதியையும் தர மாட்டாதோ -என்று அருளிச் செய்தாரம் –
இப்பிறப்பு அறுக்கும் –இ -சுட்டு எழுத்து-கண்டதே அன்றோ இதனுடைய இழையீடு -நூலாலே தைத்தல்-இழை இட்டால் போலே இருக்கிற அவயவங்களுடைய சேர்த்தி-கவிழ்ந்து பார்க்கவே அமையுமே இதனுடைய அகவாயை-தன்னைடையே வைராக்கியம் பிறக்குமே –நாம் நன்றாக நினைத்து இருக்குமது அன்று இதன் தன்மை –அல்பம் அஸ்திரம் -ஆகாரம் பிரத்யஷிக்கலாமே –இப்படி தாழ்வு உள்ளதாக அறியப் படுகின்ற இச் சரீர சம்பந்தத்தை அறுக்கும் –-நல்லவர்கள் இதனுடைய தாழ்வினைக் கண்டு இதனைக் கழித்து கோடற்க்கும்-மற்றையோர்கள் இதிலே இனிமை உண்டு என்று நினைத்து கேடு உறுகைக்கும்-உடலாம்படி கர்மங்களுக்கு தகுதியாக இதனை எடை எடுத்து காணும் -நிறுத்து -அறுதி இட்டு -காணும் –ஈஸ்வரன் பண்ணிற்று என்று பட்டர் அருளிச் செய்தார்-அனந்த புரத்து அண்ணலார் கமல பாதம் அணுகுவார் அமரர் ஆவார்–விரோதியைப் போக்கும் அளவே அன்றியே- விரும்பிய பொருளைப் பெறுகைக்கும்-திரு வனந்த புரமே-அடையத் தக்க தலம் -என்கிறது
————
அமரராய்த் திரிகின்றார் கட்கு ஆதிசேர் அனந்த புரத்து
அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப் பணி செய்வர் விண்ணோர்
நமர்களோ சொல்லக் கேண்மின் நாமும் போய் நணுக வேண்டும்
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே-10-2-6-(அர்ச்சிக்கின்று-மலையாள பாஷை)
ச சைன்ய புத்ர சிஷ்ய-சாத்ய சித்த பூஸூரர்-அர்ச்சனத்துக்கு முக நாபி பாதங்களை-த்வார த்ரயத்தாலே காட்டும் சாம்யம் -அனந்த சயனத்திலே -வியக்தம் -ஆச்சார்ய ஹிருதயம் ஸ்ரீ ஸூக்தி-3-84-
குமரனார் தாதை துன்பம் துடைத்த-சிவன் முதலாயினோர்க்கு துக்கத்தினை போக்குமவனாய் இருக்கும்-கோவிந்தனாரே -பசுக்களுக்கும் ஆயர்களுக்கும் கையாளாய் இருக்கும் கோவிந்தனாரை நாமும் போய் நணுக வேண்டும்-
————
துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவு மற்றும்
படைத்த வெம் பரம மூர்த்தி பாம்பணைப் பள்ளி கொண்டான்
மடைத் தலை வாளை பாயும் வயல் யணி யனந்த புரம்
கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடு வினை களையலாமே–10-2-7-
கடைத்தலை சீய்க்கப் பெற்றால் –திருவாசலிலே திரு வலகு திருப் பணி செய்யப் பெற்றால்-சம்மார்ஜனம் திரு அலகு இடுதல் –அடிமை செய்யப் பெற்றால்-கடு வினை களையலாமே –
வினை சேஷத்வ ஞானம் பிறந்தால் –ஸ்வரூபத்துக்கு அனுரூபமான கைங்கர்யத்தை-பெறாமையால் வரும் துயரம் –ஒரு தேச விசேடத்திலே போய் அடிமை செய்யப் பெற்றிலோம் கைங்கர்ய அலாப -நிபந்தமான கடு வினை–அதிசயித துக்கம் களையலாம் –கழுவாயால்-பிராயச்சித்தம் செய்து போக்குமது அன்றே-என்பதால் கிலேசம் என்று இல்லாமல் வினை என்கிறார்
எம் பரமமூர்த்தி-அடியார்க்கு எளியனான சர்வேஸ்வரன்-ஆஸ்ரித பவ்யன் -எம் -சர்வேஸ்வரன் -பரம மூர்த்தி
———————
கடுவினை களையலாகும் காமனைப் பயந்த காளை
இடவகை கொண்ட தென்பர் எழில் அணி அனந்த புரம்
படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
நடமினோ நமர்கள் உள்ளீர் நாமும் உமக்கு அறியச் சொன்னோம்--10-2-8-
நமர்கள்-நம்முடையார் -மாதா பிதா -மத அந்வயானாம் -ஆளவந்தார் -இவர் அவன் இடம் நடமினோ-அதன் படி நடக்க பாருமின் -அனுஷ்டானம் என்றுமாம்-நடமினோ-வழி எல்லாம் உள்ளார் ஸத்காரம் -அர்ச்சிராதி கதி போலே-பாதம் காணநடமினோ நமர்கள் உள்ளீர் —வரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற-கரியான் கழல் காண கருதும் கருத்து -9-4-5- என்கிறபடியே-என்று இருக்கும் என்னோடு ஒரு குடல் தொடக்குடையார் அடங்கலும்-போகப் பாருங்கோள் –
கடுவினை களையலாகும் காமனைப் பயந்த காளை-குரூரமான பாபங்கள் -பிராப்தி விளம்ப பிரதிபந்தகங்கள் –இதில் – பாபம் -முன்பு கிலேசம் -ஆய -கைங்கர்யம் -மன்னவர் விதியே -அடைவது உறுதி -அதனால் விளம்பம் என்கிறார் இதில் –
காமனைப் பயந்த காளை-மன்மதனை பயந்த -பிரசவித்தும் காளை இளகிப் பதித்து –சாஷாத் மன்மத மன்மதன் -அவனும் மடல் எடுக்கும் படி அன்றோ இவன் அழகு – –
எழில் அணி அனந்த புரம் –பரம பதத்தில் ஒரு புதுமை செய்ய ஒண்ணாது அன்றோ-
அங்குத்தை காட்டிலும் இங்குத்தைக்கு தன்னேற்றம் இருக்கிறபடி –
திரு அத்த்யயனம் பாடா நிற்க -இதனைக் கேட்டருளி-ஆளவந்தார் –நமக்கு ஆழ்வார் உடன் ஒரு சம்பந்தம் உண்டாக வேண்டும் -என்று-அப்போதே ஸ்ரீ பாதத்தை உடையாரைக் கூட்டிக் கொண்டு-எழுந்து அருளினார்- இத்தைச் செய்தாவது ஆழ்வார் சம்பந்தம் பெறலாம் என்று நாமோ -ஆழ்வார் சம்பந்திகள் என்று இறுமாப்புடன் போவோமே –
நாம் -திருக் கண் வளர்ந்து அருளுகிற அழகில் சுவடு அறிந்து-எவரேலும் அவர் எம்மை ஆளும் பரமர் -8-7-1-என்னக் கடவ நாம் –
————
நாமும் உமக்கு அறியச் சொன்னோம் நாள்களும் நணியவான
சேமம் நன்குடைத்துக் கண்டீர் செறி பொழில் அனந்த புரம்
தூம நல் விரை மலர்கள் துவளற வாய்ந்து கொண்டு
வாமனன் அடிக்கென்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே–10-2-9-
மாய்ந்து அறும் வினைகள் தாமே –இவன் தன்மைக்கு தகுதியான தொண்டிலே சேர-விரோதிகள் அடைய ஒழிந்து போகும்–ப்ராப்தனானவன் -திருவடிகளில் கைங்கர்யம் பண்ண -கைங்கர்யம் பிரதி பந்தகங்கள் போகும் –
————–
மாய்ந்து அறும் வினைகள் தாமே மாதவா வென்ன நாளும்
ஏய்ந்த பொன் மதிள் அனந்த புர நகர் எந்தைக்கு என்று
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல
ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே–10-2-10-
கேசவா தொடங்கி மாதவா -இங்கு -வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை -திரு வனந்த புரத்திலே புக்கு-அடிமை செய்கிறவர்கள் பெருமை-பேச நிலம் அன்று –-அந்தமில் புகழினாரே –அமரர் ஆவார் -என்கிற அளவு அன்றிக்கே-விண்ணுளாரிலும் சீரியரே -ஆவர்
————–
அந்தமில் புகழ் அனந்த புர நகராதி தன்னை
கொந்தலர் பொழில் குருகூர் மாறன் சொல் லாயிரத்துள்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போய் அமர் உலகில்
பைந்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள் இணையே–10-2-11-
நிகமத்தில்-இத் திருவாய் மொழி வல்லார்-திரு நாட்டில் உள்ளாருக்கு-இனியர் ஆவார்-அங்குத்தை அமர மகளிர்கள் உடைய விருப்பத்துக்குப்-பொருளாக இருப்பார் -என்றபடி-
முடியுடை வானவர் முறை முறை எதிர்கொள்ள -10-9-10-என்றதனோடு-வேய் மரு தோள் இணை அணைவர் -என்கிற இதனோடு-வாசி இல்லை-மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே -10-9-10-என்னக் கடவது அன்றோ-சூடகமே -பராபர குருக்கள் பூட்டும் ஆத்ம பூஷணங்கள் -சததம் மாலா ஹஸ்தா -இத்யாதி -அலங்காரம் பெறப் பெறுவர்-
அந்தமில் புகழ் அனந்த புர நகராதி தன்னை –
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் –கேவலம் பர உபதேசம் ஐந்து -தம்மையும் கூட்டி அருளிய ஐந்தும் -நாமும் நணுக வேண்டும் -கூட்டிக் கொண்டு அருளிச் செய்தவை
அந்தமில் புகழ் அனந்த புர நகராதி தன்னை –புகழிற்கு ஒரு முடிவு இல்லை ஆயிற்று அவனுக்கு –திரு வனந்த புரத்திலே-எல்லை இல்லாத நற் குணங்களை உடையனாய்-உலகத்திற்கு எல்லாம்-காரணனாய் உள்ளவனை –அடைகின்றவர்களும் அந்தமில் புகழினார்கள் –அடையப் படுகின்றவனும் அந்தமில் புகழினான் காணும் –
பரம பதத்தை விட்டு-திரு வனந்த புரத்திலே வந்து-அடியார்களுக்காக திருக் கண் வளர்ந்து-அருளுகையாலே-பற்றினை விட்டு உகந்து அருளின நிலத்தில் அடிமை செய்கையாலே-புகழிற்கு அந்தம் இல்லை ஆயிற்று இவர்களுக்கு –
இவனுக்கு அடிமை கொள்ளுகையாலே புகழிற்கு எல்லை-இல்லை ஆயிற்று அவனுக்கு-
அவனுக்கு அடிமை செய்கையாலே புகழிற்கு அந்தம் இல்லை ஆயிற்று இவர்களுக்கு-
இந்த உலகத்திலே பிறப்பு இறப்புகளிலே உழன்று திரிகிற-இவனுக்கு புகழ் உண்டாகில் ஆயிற்று-பரம பதத்தில் இருந்தால் அவனுக்கு புகழ் உண்டாவது-
இந்நிலத்தை விட விட இவனுக்கு புகழ் உண்டாமாறு போலே-அந்நிலத்தை விட விட அவனுக்குப் புகழ் உண்டாம்–இருவருக்கும் இரண்டும் கிடைக்காத பேறு ஆம் அன்றோ –
——————–——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –