ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -48-மெல்லியல் ஆக்கிக் கிருமி-என்றைக்கும் என்னை -7-9–

February 25, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

கொட்டாய் பல்லிக்குட்டி -போல் -கத்துவதே-பல்லி விழுந்த பலன் -வருடம் தோறும் எழுதி
அதன் கார்யங்களை ச பலமாக -ஆக்குவார்களே-தலைவி தோளிக்கு நல்ல நிமித்தம் கண்டு ஆஸ்வசிப்பிக்கும்-வேர் குரு -புண்ணில் -அதிலே பிறந்து வளர்ந்து மாயும் கிருமிகள் போல்
பிறந்து சொல்லாமல் மிளிர்ந்து -மின்னல் போல் தோன்றி மறைவதால் – புழு பூச்சி போல் கிருமி போலும்-பல்லிக்குட்டி போலும்-நைச்ய அனுசந்தானம் பண்ணுகிறார் என்னை வைத்துக் கொண்டு தன்னைப் பாடுவித்துக் கொண்டானே

என்றைக்கும் என்னையுய் யக்கொண்டு போகிய,
அன்றைக்கன் றென்னைத்தன் னாக்கியென் னால்தன்னை,
இன்றமிழ் பாடிய ஈசனை யாதியாய்
நின்றவென் சோதியை, எஞ்சொல்லி நிற்பனோ?
-7-9-1-தன்னைச் சொல்லிய-வேதமே மீண்ட விஷயத்தை -ப்ரதிபாதித்துக் கொண்டானே –திருமாலவன் கவி-கிருமி போல் பிறந்து பல்லிக்குட்டிப் போல் பேசினாலும் உலகமே கொண்டாடும் படி ஆக்கி அருளினான்-அங்கே போயும் ஏதத் சாம கானம் பாடுவது போல் அன்றோ இங்கும் திவ்ய பிரபந்தம் பாடவே வைக்குதும்-கர்ம சம்பந்தம் இல்லையே உமக்கு-பிரபந்தம் தலைக்கட்ட -நச்சு பொய்கை ஆகாமைக்காக -ஆர்த்தி பெருக்க அன்றோ வைத்தான்
மகிழ்ச்சியில் பாடும் பாசுரம் இது

இஸ் சம்சாரத்தில் நம்மை வைத்த இதுக்கு ஹேது ஏதோ -என்று இறே இவர் நொந்தது –
இவருக்கு இவ்விருப்பு நிலம் கொதிப்பது -ஸ்வார்த்தமாக இருக்கிறோம் என்று இருக்கலில் இறே –
அங்கன் இன்றிக்கே –நமக்காக இருக்கிறீர்-என்னும் இடத்தை அறிவிக்கவே இவரை தரிப்பிக்கலாம் –
மேல் இவர் போய் பெற இருக்கிற ஸ்வரூபமும் இதுவே என்று பார்த்து –வாரீர் நீர் உமக்கு இங்கு ஒரு-சம்பந்தம் உண்டாய் இருக்கிறீர் அல்லீர் –நமக்காக இருக்கிறீர் அத்தனை –நாமும் ரசித்து நம்முடையாரும்-ரசிக்கும்படியாக உம்மை கொண்டு நம் சீல வ்ருத்தங்களை வெளி இடப் பார்த்தது –
அதுக்காக வைத்தோம் இத்தனை காணும் -என்று ஈஸ்வரன் அறிவிக்க –ஆனால் தட்டென்-நம் ஸ்வரூபத்தோடு சேர்ந்தததுவுமாய்- நாம் பெற இருக்கிறது இது வாகில் குறை என் -என்று
விஷயீகரித்த படியை கண்டு விஸ்மிதராய்- அவ்விஷயீ காரத்தை பேசுகிறார்-

இப்படி ஸூஹ்ருத பூதரும் வெறுக்கும் படி ஆர்த்தி விஞ்சின படியைக் கண்ட பார்ஸ்வஸ்தரானவர்கள்-பரமபத அனுபவத்தில் த்வரிக்கக் கடவீரோ-உம்மைக் கொண்டு லோகத்தைத் திருத்துகைக்காகக் கவி பாடுவித்துக் கொள்ளுகைக்கு ஒரு முகத்தாலே ஈஸ்வரன் வைத்தான் இத்தனை காணும் -என்று இவரை ஆஸ்வஸிப்பிக்க அவர்களைக் குறித்து ஸ்வ நிகர்ஷாதிகளை அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-அவதாரிகை--இஸ் ஸம்ஸாரத்திலே வைத்தச இதுக்கு ஹேது என் என்று இறே
கீழ் நொந்தது இவருக்கு இவ்விடம் நிலம் கொதிப்பது -ஸ்வார்த்தமாக இருக்கிறோம் என்று இருக்கில் இறே அங்கன் இன்றிக்கே நமக்காக இருக்கிறோம் -என்னும் இடத்தை அறிவிக்கவே இவரைத் தரிப்பிக்கலாம் மேல் இவர் போய்ப் பெற இருக்கிற ஸ்வரூபமும் அதுவே இறே என்று பார்த்தாராய்-ஆழ்வீர் நீர் வாரீர் உமக்கு இங்கே ஒரு ஸம்பந்தம் யுண்டாய் இருக்கிறீர் அல்லீர் -நமக்காகவே இருக்கிறீர் அத்தனை-நாமும் ரசித்து நம்முடையாரும் ரசிக்கும்படியாக உம்மைக் கொண்டு சில பிரபந்தம் தலைக் கட்டுவதாகப் பார்த்தோம் – அதுக்காக வைத்தோம் அத்தனை காணும் -என்று அறிவிக்க–ஆனால் தட்டு என்-நம் ஸ்வரூபத்தோடு சேர்ந்ததுமாய் -நாமும் பெற இருக்கிறதுவுமாகில் அதில் குறை என்-ஆனாலும் நம்மைக் கொண்டு இத்தைத் தலைக் கட்ட நினைப்பதே
இதுக்கு ஈடான ஞானமாதல் -மற்றும் வேண்டும் உபகரணங்களாதல் ஒன்றும் இன்றிக்கே இருக்க
நம்மைக் கொண்டு இத்தைத் தலைக் கட்ட நினைப்பதே இது ஒரு நீர்மையே என்று ஸர்வேஸ்வரன் தம்மை விஷயீ கரித்த படியைக் கண்டு விஸ்மிதராய் விஷயீ காரத்தைப் பேசுகிறார் –

மெல்லியல் ஆக்கைக் கிருமி குருவில் மிளிர் தந்தாங்கே
செல்லியசெல் கைத்துலகை என் காணும் என்னாலும் தன்னைச்
சொல்லிய சூழல் திருமாலவன் கவியாது கற்றேன்
பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ வுண்டு பண்டு பண்டே
-48 –-நன்னிமித்தம் கண்டு -பல்லிக் குரல் கேட்டதை –தான் ஆறி இருத்தலை தலைவி தோழிக்கு கூறுதல் –

என்தனை நீ யிங்கு வைத்தது ஏதுக்கு என மாலும்
என்தனக்கும் எந்தமர்க்கும் இன்பமதா -நன்றுகவி
பாட வெனக் கைம்மாறிலாமை பகர் மாறன்
பாடு அணைவார்க்கு உண்டாம் இன்பம் 
-69–எனக்கு ருசி இன்றிக்கே இருக்க சம்சாரத்தில் என்னை
வைத்ததுக்கு ஹேது என் என்று கேட்க – உம்மைக் கொண்டு நமக்கும் நம்முடையாருக்கும் அனுபவிக்கலாம் படி விலஷணமான திருவாய் மொழி பிரபந்தத்தைப் பாடுவித்து கொள்ள வைத்தோம் காணும் -என்று நேர் கொடு நேரான பரிஹரத்தை அவன் அருளிச் செய்ய – வேதங்கள் வ்யாசாதிகள் முதல் ஆழ்வார்கள்இவர்கள் யுண்டாய் இருக்க-அத்யந்த ஹேயனான என்னைக் கொண்டு
வேதங்களாலும் எல்லை காண ஒண்ணாத தன் வைபவத்ததுக்கு தகுதியாக விலஷணமான திருவாய் மொழியை பாடுவித்துக் கொண்ட இந்த மகா உபகாரத்துக்கு உபய விபூதியிலும் சத்ருசமாக செய்ய தக்கதொரு பிரத்யுபகாரம் இல்லை என்று தலை சீய்த்துப் படுகிற என்றைக்கும் என்னையில் அர்த்தத்தை என்தனை நீ -இத்யாதியால் அருளிச் செய்கிறார் –இப்படி க்ருதஞ்ஞாரான ஆழ்வார்
பரிசர வர்த்திகளாம் படி கிட்டுவார்க்கு ஆனந்தம் யுண்டாம் – எங்கனே சொல்லிலும் இன்பம் பயக்குமே -என்கிற நிர்பந்தமும் வேண்டா-கேவலம் -கிட்டவே அமையும்-

மெல்லியல் ஆக்கை இத்யாதி – இவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளிலே என்னுடைய  ஜ்ஞானத்துக்கு விஷயம் ஆவது ஏக தேசம் கிடீர் – நான் அறிவது ஒன்றும் இல்லை என்னும்படி இருக்கிற என்னைக் கொண்டு கிடீர் இத்தை தலைக் கட்டிற்று என்கிறார் –மெல்லியல் ஆக்கை கிருமி –ம்ருது ஸ்வாபமான சரீரத்தை உடைய கிரிமியானது –இமையோடு இமை பொருந்தும் போதைக் காற்று படப் பொறாதே முடியும்படியான மிருதுவான சரீரத்தை உடைய – ஒன்றாக எண்ணப்படாத ஷுத்திர ஜந்துவானது –குருவில் மிளிர் தந்து – கிரந்தியாலே மிளிர்ந்து -உற்பத்தியும் விநாசமும் ஒழிய –
நடுவு பட்டதொரு காலம் இன்றிக்கே – தோற்றி மாயும் படி இருக்கையாலே –மிளிர்ந்தது என்கிறது –பஞ்சாக்னி வித்தையில் -சொல்லுகிறபடியே புருஷார்த்ததோப யோகியாய் இருப்பதொரு-
சரீரத்தை பரிஹரிக்கில் இறே பிறந்தது என்னாலாவது –ஆங்கே –அந்த கிரந்தியிலே-செல்லிய செல்கைத்து--செல்லுகிற செல்லுகையை உடைத்து –நடக்கிற யாத்ரையை உடைத்தானது –உத்பத்தியும் ஜீவனமும் நடுவு பட்ட நாளில் பரிபவமும் விநாசமும்-இவை அடங்க அங்கேயாய் இருக்கும் இறே –அங்கே இறே அழகு செண்டு ஏறுகிறது –நெற்காய்க்கும் மரம் எது -என்று இருப்பாரைப் போலே-
அக்க்ராந்திக்கு அவ்வருகு அறியாத இது-
உலகை என் காணும் –லோக வ்ருத்தாந்தத்தில் என்ன அறியவற்று–இது கிடீர் நான் தன்னளவில் நின்ற நிலை –

என்னாலும் –இப்படி அஞ்ஞான அசக்திகளுக்கு எல்லை நிலமான-என்னைக் கொண்டு -தன்னை
உலகை என் காணும் -என்கிற லோக வ்ருத்தாந்த்தத்திலே தான் ஒன்றை என்னைக் கொண்டு -சொல்லி வைத்தானோ –யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று ஸ்ருதி ஸ்ம்ருதாதிகள் நமக்கு நிலம் அன்று என்று மீண்ட தன்னை –சொல்லிய –-சொல்லி வைப்பதாக கணிசித்து இருந்தானாய்–இது எவ்வளவாய் தலை கட்டுமோ என்று இருக்கிறதோ –-சொல்லி யற்றதாயிற்று –இப்படி சொல்லிவிக்கைக்கு ஹேது என் என்னில் –சூழல் – ஆச்சர்ய சக்தி யுக்தன் ஆகையாலே–திரு மால் –இந்த ஆச்சர்ய சக்தி தான் புறம்பு கிடவாதே –இவ்வாஸ்ரயத்தில் கிடக்க வேண்டுவான் என் என்னில் – ஸ்ரீய பதி ஆகையாலே –திருமாலவன் கவி –அவனும் அவளுமான சேர்த்திக்கு தகுதியான கவி –இத்தால் – ஸ்ரீ ராமாயணத்தில் வ்யாவ்ருத்தி சொல்லுகிறது –ஸீதாயாஸ் சரிதம் மகத்-என்று தொடங்கச் செய்தே அவளை ஒழிய-தனியே இறே இருந்து கேட்டது –

1-யாது கற்றேன் -என்னுதல் –
2-ஆறு கற்றேன் என்னுதல் –
3-அவன்  கவி யாது கற்றேன் என்னுதல் –
4-யாதொன்று நான் கற்றது -அது திருமாலவன் கவி -என்னுதல் –யாது ஓன்று நான் கற்றது -எந்த சிறியத்தையும் நான் கற்றாலும் அதுவும் திருமாலவன் கவியே-ஆறு -ஸமஸத்தையும் கற்றேன்கற்றேன் -என் முன் சொல்லும் -என்கிறபடியே அவன் முன்னே  சந்தை இட – நான் பின்னே சொன்னேன் இத்தனை –ஆனாலும் இது தலைக் கட்டின படி எங்கனே என்ன –பல்லியின் சொல்லும் இத்யாதி – அல்பஜ்ஞராய் இருப்பார் ஒன்றை தொடங்கினால்- ஞானாதிகராய் இருப்பார் அத்தை நன்றாக்கி
தலைக் கட்டிக் கொள்ளக் கடவதாய் இருப்பது ஓன்று-உண்டு இறே –பல்லியானது ஓர் அர்த்த பிரத்யாயகம்  இல்லாதபடி –தன்னுடைய ப்ரீதி யப்ரீதிகளாலே -நத்து நத்து -என்ன –அத்தை ஞானவான்களாய்  இருப்பார் தம்தாமுடைய லாப அலாபங்களுக்கு உடலாக்கிக் கொள்ளா நிற்ப்பர்கள் இறே –அப்படியே நான் எனக்கு பிரதிபந்தங்களைச் சொல்ல –அத்தை தனக்கு ஈடாம் படி நன்றாகத் தலைக் கட்டிக் கொண்டான் –பண்டு பண்டே –பழையதாக இப்படி போருவதொரு மரியாதை உண்டு இறே –அத்தை இப்போது என் பக்கலிலே கை காணும்படி பண்ணினான் –

நல் நிமித்தம் கண்டு தலைவி ஆறி இருந்தமை —-பல்லி குரல் கேட்டு –கொட்டாய் பல்லி குட்டீ -குடமாடி உலகு அளந்த மட்டார் பூங்குழல் மாதவனை வரக் கொட்டாய் பல்லிக் குட்டீ -கலியன் -10 -10 – 4 –புருஷோத்தமன் இடம் ஈடுபட்ட தனக்கு புண்ணில் வெளிப்பட்ட புழுவை உபமானமாக கூறியது
அதனை யன்றி வேறு ஒன்றை அறியாமை சாதரம்யம்–வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது அடியேன் நான் பின்னும் உன் சேவடி அன்றி நயவேன் -கலியன் -11-8-7–நிஹிந உவமை குற்றத்தின் பால் படாது –என்னாலும் தன்னைச்-சொல்லிய சூழல் திருமாலவன் —உம்மை உயர்வு சிறப்பு உம்மை -காமுற்ற பெண்ணுக்கு அணிகலம் நாணுடைமை பரவசப்பட்டு அவன் விஷயமாக வாய் பிதற்றும்படி மோகத்தை உண்டாக்கியவன் –பிதற்றும் படி காம வேதனை படுத்தினவன்-பெரிய பிராட்டியார் பக்கல் வேட்க்கை மிக்கு உள்ளவன்–பல்லியின் சொல்லும்-இழிவு சிறப்பு உம்மை -விவேக உணர்ச்சி இல்லாத ஐந்து–ஆழ்வீர் இப்படி த்வரை விஞ்சி பரம பதத்துக்கு விரைய துடிக்க வேண்டுமோ –உம்மைக் கொண்டு கவி பாடுவித்து உலகத்தை திருத்த அன்றோ வைத்துள்ளான் -என்ன–தம் தாழ்வை –
மெல்லியல் ஆக்கைக் கிரிமி குருவில் மிளிர் தந்தாங்கே-செல்லியசெல் கைத்துலகை என் காணும்-

அல்ப ஞானம் சக்தி கொண்ட நான் -நைச்யத்துக்கு புழுவை உதாரணம் காட்டி-என்னாலும் தன்னைச் சொல்லிய சூழல் –நீசனான என்னைக் கொண்டும் -வியாஜமாக கொண்டதை சூழல் என்கிறார்–ஈஸ்வரன் தானே லோகத்தைத் திருத்துகைக்கு இவர் ஆவார் என்று அங்கீ கரித்து –
என்னாலும் தன்னைச் சொல்லிய சூழல் திருமாலவன் கவியாது கற்றேன்-என்னும் படி
இவர் திரு உள்ளத்திலும் நாக்கிலும் நின்று இவர் தம்மைக் கொண்டு தானே பிரவர்த்திப்பிக்கை யாலும் அத்யந்த வியாவருத்தராய் இருப்பார் ஒருவர் -என்பர் வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர்

திருமாலவன் கவி –-அவனும் பிராட்டியுமான சேர்த்தி போலே அவனும் கவியும் பொருந்தி -அவன் முன்னுருச் சொல்லி கொண்டு போக நான் பின்னுருச் சொல்லிக் கொண்டு வந்த அவ்வளவே –
நான் என் உணர்வால் கவி பாடினேன் அல்லேன் -என்பதை யாது கற்றேன் -என்கிறார்
நான் என் வசம் இழந்து பக்தி பரவசப் பட்டு வாய்க்கு வந்த படி பாடினேன் அவ்வளவே –
பரதந்த்ரமாக கூறும் சொல்லையும் என் இழிவு பாராது அங்கீ கரித்து பாராட்டுகிறார்கள் -என்பதை –
பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ வுண்டு–பண்டு பண்டே-அடுக்கு மிகுதியைக் காட்டும் -மிகு வெகு நாளாக –
என்றவாறு –

மெல்லியல் ஆக்கைக் கிரிமி குருவில் மிளிர் தந்தாங்கே செல்லியசெல் கைத்துலகை என் காணும்
ம்ருது ஸ்வ பாவமான சரீரத்தை யுடைத்தான கிரிமியானது-புண்னிலே கிளர்ந்து அவ் விடத்திலே நடத்தக் கடவதான ஸமஸ்த வியாபாரத்தையும் யுடைத்தானது லோக வியாபாரத்தை எங்கனே அறியும் படி-இத்தால் அல்ப ஞான சக்திகனான நான் லோகத்தைத் திருத்துகையாவது என் -என்கிறார் ஆயிற்று-ஆனாலும் உம்மைக் கொண்டு கவி பாடுவித்துக் கொள்ளா நின்றானே என்ன
என்னாலும்-இப்படி அத்யந்த அபக்ருஷ்டமான ஜன்ம வித்யா விருத்தங்களை யுடைய என்னாலும்-தன்னைச்-அத்யந்த விலக்ஷணமாய் அபரிச்சின்னமான ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களை உடையவனை–சொல்லிய சூழல்-சொல்லிக் கொண்ட சூழ்கையை (சாமர்த்தியத்தை) யுடைய
அதாவது தத்வமான தான் சொல்லுமதிலும் தத்வ தர்சிகள் சொன்னால் பரிக்ரஹம் யுண்டாம் என்கிற விரகு யுடையவன் -என்கை–வேதம் பெருகின சம்த்ராம்பு போல் இவர் வாயாதனவாறே
லஷ்மீ நாதாயோ சிந்து ஸ்வாதந்ரியம் போக்கி -நாதமுனிகள் மலை –காட்டாறு -ராமானுஜர் காட்டும் ஏரி -சிம்ஹாசனபதிகள் மூலம் நம்மிடம் – மண் குடம் போல் அல்லவே பொன் குடம் ஐஞ்சாம் ஒத்தும் அறு மூன்றும் கழி யுண்ணுமேதிருமால்-அர்த்தோ விஷ்ணுரியம் வாணீ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-3-18-என்கிறபடியே ஸப்த அர்த்தங்கள் இரண்டும் அவளும் தானுமான ஸ்ரீ லஷ்மீ பதியானவன் –அவன் கவி
அவனுடைய கவி ஸப்த அர்த்தங்கள் தான் ஆனவோ பாதி கவி பாட்டுண்டானும் தானேயாய் இருக்கை-யாது கற்றேன்-அது நான் கற்றேன் அத்தனை என் முன் சொல்லும் –திருவாய் -7-9-2- என்கிறபடியே
அவன் முன்னுருச் சொல்ல பின்னுருச் சொன்னேன் அத்தனை –ஆனால் என் நீர் பாடின கவி என்று ஈஸ்வர ஹ்ருதயத்திலும் யுண்டாய் லோக பரிக்ரஹமும் பிறந்து நடவா நின்றதே என்ன-பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ வுண்டு-ஷூத்ர ஜந்துவினுடையதாய் இருபத்தொரு ஸ்வைர ஸப்தத்தையும் தம் தம்முடைய பெரிய நன்மைக்கு ஸூசகமாக லோகத்திலே கொண்டு போகிற இது யுண்டே–பண்டு பண்டே-இது அநாதியாய்ப் போருகிற மரியாதை இறே என்று தம்முடைய நிகர்ஷத்தைப் பாராதே தம்மை ஈஸ்வரன் அங்கீ கரித்து பாரதந்த்ர்யமே பற்றாசாக வாசிக கைங்கர்யத்தைக் கொண்டபடி அருளிச் செய்தார் ஆயிற்று –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம்-மெல்லியல் ஆக்கை— இவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளில் என்னுடைய ஞானத்துக்கு விஷயமாவது ஏக தேசம் கிடீர் நான் அறிவது ஒன்றும் இல்லை –இப்படி இருக்கிற என்னைக் கொண்டு கிடீர் இத்தைத் தலைக்கட்டிற்று என்கிறார் –மெல்லியல் ஆக்கைக் கிருமி-ம்ருது ஸ்வ பாவமான சரீரத்தை யுடைய கிருமியானது இமையோடு இமை பொருந்தும் போதைக் காற்றுப்படப் பொறாதே முடியும்படி மிருதுவான சரீரத்தை யுடைய ஒன்றாக எண்ணப் படாதே ஷூத்ர ஜந்துவானது–குருவில் மிளிர்ந்தது-அந்த க்ரந்தியிலே மிளிர்ந்து-உத்பத்தியும் விநாசமுமேயாய்
நடுவு பட்டதொரு காலம் இன்றிக்கே தோற்றி மாயும்படியாலே மிளிர்ந்து என்கிறது – பஞ்சாக்னி வித்யையிலே சொல்லுகிறபடியே புருஷார்த்த உபயோகியாய் இருபத்தொரு சரீரம் பரிக்ரஹிக்கில் இறே பிறந்தது என்னாலாவது–ஆங்கே-அந்தக் கிரந்தியிலே–செல்லிய செல் கைத்து-செல்லுகிற செல்கையை யுடைத்து நடக்கிற யாத்திரையை யுடைத்து உத்பத்தியும் ஜீவனமும் நடுவுபட்ட நாளில் பரிபவமும் விநாசமும் இது அடைய அங்கேயாய் இருக்கும் இறே-அங்கே இறே அழகு செண்டேறுவது
அந்தக் கிரந்தியிலே தன் வியாபாரம் எல்லாம் ராஜ மார்க்கத்தில் போலே நிராபாதமாய் நடப்பது என்றபடி-செண்டேறுகை யாவது-ராஜ மார்க்கத்தில் ஸஞ்சரிக்கை-நெல் காய்க்கும் மரம் ஏது -என்று இருக்குமா போலே -அந்தக் கிரந்திக்கு அவ்வருகு அறியாத இது –உலகை என் காணும்-லோக விருத்தாந்தத்தை ஒன்றை அறியவற்றோ-இது கிடீர் நான் தன்னளவில் நின்ற நிலை-ஏது உண்டு
அத்தை அவனே எனக்குச் சொல்ல அத்தைச் சொல்லப் பெற்றேன் காண்-இப்படி நீர் சொன்னத்தை பிராமண தர்மமாக நாங்கள் கொள்ளா நின்றோமே என்ன-பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ யுண்டு பண்டு பண்டே-பல்லி சொன்னாலும் முன் முற்காலத்திலும் அபிஞ்ஞர் ஸ்வ ஸ்வ உத்தேஸ்ய ஸித்தியிலே அத்தை பிராமணத்வேந கைக் கொள்ளுவது யுண்டே – இது இன்று முதலோ –

தாத்பர்யம்
ஆழ்வார் ஆர்த்தியை சமிப்பிக்கைக்காக சர்வேஸ்வரன் உம்மைக் கொண்டு லோகத்தை வாழ்விக்கைக்காக நம் விஷயமாக பிரபந்த நிர்மாணம் பண்ண சங்கல்பித்தோம்
இப்படி விஷயீ கரித்தான் என்று ஹ்ருஷ்டராய் பேசுகிறார்
காற்றையும் பொறாத ஜென்ம மரணம் தவிர வேறு ஒன்றை அறியாதே புழு
நித்ய ஸூ ரிகளுக்கும் வாக் மனஸ் ஸூக்களுக்கும் அரிததான தம்மை என்னைக் கொண்டு பாடுவித்துக் கொண்டான் -சர்வ சக்தித்வத்தால் ஞானிகள் ஸூபம் அஸூம் என்று பல்லி சொல்வதைக் கொள்ளுமா போல் என்னே அவனது சர்வ சாமர்த்தியம் என்று ஹ்ருஷ்டராய் அருளிச் செய்கிறார்

7-9-என்றைக்கும் என்னை உய்யக்கொண்டு போகிய-ப்ரவேஸம்-

மேலே பலகாலும், ‘சர்வேஸ்வரன், தன்னைப் பெறுவார்க்குத் தடைகள் உண்டாய் இருந்தாலும்
தானே தன்னைத் தரப்பார்க்கும் அன்று தகைய வல்லது ஒரு தடை இன்றிக்கே இருக்க,
‘தன்னாலே பேறு’ என்று இருக்கிற என்னை இங்கே வைத்தது என்?’ என்று கேட்டுப் போருவார் ஒருவர்.
அவனும், இதற்கு நேரான பரிகாரத்தைப் பண்ணாதே ஏதேனும் ஒரு குணத்தைப் பிரகாசப்படுத்தி
வேறொன்றிலே நோக்கைப் பண்ணுவிப்பான் ஒருவன், இவர்க்கு இதிலே நெஞ்சு செல்லாதபடி.
இனி, மேல் திருவாய்மொழியிலும் ‘சம்சாரத்திலே பொருந்தாமை உண்டாய், உன்னை ஒழியச் செல்லாமை உண்டாய்,
நீயே உபாயமாய் இருக்க, பின்னையும் என்னை இங்கே வைத்து ஜீவிப்பித்துக் கொடுபோருகிற ஆச்சரியம் இருந்தபடி என்?
இதனை எனக்கு அருளிச்செய்ய வேணும்,’ என்ன,
‘கண்டீரேதான் இது ஓர் ஆச்சரியம் இருந்தபடி? என்று அவ்வழியாலே தன்னுடைய ஆச்சரியமான உலகமே
உருவமாக இருக்கும் தன்மையைக் காட்டிக்கொடுத்து அதனோடே பணி போரும்படி செய்தான்.
இவரும் அப்போது அத்தனையும் அதனைச் சொல்லி, அது தலைக் கட்டினவாறே பின்பு பழையபடியே கேட்கத் தொடங்குமவர் அல்லரோ?

இச்சம்சாரத்திலே பொருந்தாது இருக்கிற என்னை இங்கு வைத்ததற்குக் காரணம் என்?’ என்ன,
‘நம்மை இதற்கு ஒரு காரணத்தை நிர்பந்தித்துக் கேட்க வேணுமோ?
கண்டன எல்லாவற்றிலும் நாக்கு நீட்டி அவற்றிலே ருசி பண்ணிப் போந்தீராகில்,அதற்கு அடியான கர்மத் கிடந்ததாகில்,
வாசனை ருசி கிடந்தனவாகில், அவற்றாலே இருந்தால் ஆகாதோ?’ என்ன,

‘அவையும் கிடக்கச் செய்தே, அவற்றையும் பாராதே எனக்கு மயர்வு அற மதி நலம் அருளிப் பாசங்கள் நீக்கி
என்னை உனக்கே அறக் கொண்ட பின்பு நீ சொல்லுகிற இது பரிகாரம் அன்று;
ஆகையாலே, என்னை இங்கு வைக்கிறது என்?’ என்று வடிம்பிட்டுக் கேட்க,

‘நீர்தாம் உம்மை நமக்காக ஓக்கி வைத்ததாகச் சொன்னீரே,
‘தனக்கேயாக எனைக்கொள்ளும் ஈதே’ –திருவாய். 2. 9 : 4.-என்று!
ஆன பின்பு நாம் வேண்டினபடி உம்மைக் காரியங் கொள்ளக் கடவோம் அன்றோ?
ஆன பின்பு, நமக்கு அதிசயத்தைப் பிறப்பிக்கை உமக்குச் சொரூபமாய் இருக்குமன்றோ?
ஆன பின்பு, உம்மைக் கொண்டு, ஸ்ரீ வீடுமரைப் பாணங்களாகிய படுக்கையிலே இட்டு வைத்து
நாட்டுக்கு வெளிச் சிறப்பைப் பண்ணிக் கொடுத்தாற்போலே,
நமக்கும் நம்முடையார்க்கும் போது போக்காகச் சில பிரபந்தங்கனைப் பண்ணுவிக்கப் பார்த்தோம்:
அது தலைக்கட்டுந்தனையுங்காணும் உம்மை இங்கு வைப்பது,’ என்று நேரான பரிகாரத்தை அருளிச் செய்தான்.
உடையவருக்கும் -உரு பெரும் செல்வமும் -நெறி தரும் செந்தமிழ் ஆரணமே -போது போக்காக-கால ஷேபமே -உயர்ந்த பிரயோஜனம் –

‘கண்டு கொண்டு என் கண்ணிணை ஆரக் களித்துப்
பண்டை வினையாயின பற்றோடு அறுத்துத்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன் மாலைகள் சொன்னேன்
அண்டத் தமரர் பெருமான் அடியேனே.’–என்பது, திருவாய். 9. 4 : 9.

அருளிச்செய்ய, இவரும் அதனை அநுசந்தித்து.
சர்வேஸ்வரனாய் அவாப்த சமஸ்த காமனாய்ச் சர்வ பிரகார பரிபூரணனாய் இருக்கிற அவன்
தனக்கு ஒரு குறை உண்டாய். அக்குறை தன்னைத் தம்மைக் கொண்டு தீர்ப்பதாகச் சொன்ன வார்த்தையைப் பொறுக்க மாட்டிற்றிலர்.
தனக்குச் சில பிரபந்தங்கள் வேண்டினால், அதற்குத் தகுதியான ஞானத்தாலும் சத்தியாலும் குறைவற்ற ஸ்ரீவேத வியாச பகவான்,
ஸ்ரீவால்மீகி பகவான் ஸ்ரீபராசர பகவான் தொடக்கமானார்,
‘செந்தமிழ் பாடுவார்’ –பெரிய திருமொழி, 2. 8 : 2.-என்று சொல்லப்படுகிற முதலாழ்வார்கள், இவர்கள் எல்லாரும் உண்டாயிருக்க,
அநாதி காலம் சம்சாரத்திலே பழகி ஐம்புல இன்பங்களிலே ஈடுபட்டவனாய்,
‘அவன் இல்லாதவன் ஆகவே ஆகிறான்’ என்கிறபடியே -‘அஸந்நேவ ஸ பவதி அஸத் ப்ரஹ்மேதி வேத சேத்’என்பது, தைத்திரீய. ஆன. 6.
அசத்தைப் போன்றவனாய் உரு மாய்ந்து போன என்னைக் கொண்டு
தனக்குத் தகுதியாகக் கவி பாடுவித்துக் கொள்ளவதாகச் சொன்ன வார்த்தை என்ன வார்த்தை!
இது ஒரு நீர்மை இருக்கும்படியே! இது என்ன நீர்மை!’ என்று,
சர்வேஸ்வரன் தம் திறத்தில் செய்த உபகாரத்தை அநுசந்தித்து,
அதற்கு ஒரு பிரதியுபகாரம் காணாமையாலே தடுமாறிச் சொல்லுகிறது.

ஒன்பதாம் திருவாய் மொழியில்
கீழ் -தம்முடைய விரோதி நிவ்ருத்திக்கு அனுரூபமான ஈஸ்வரனுடைய ஆச்சர்ய சக்தி யோகத்துக்கு ப்ரகாசகமாயுள்ள
விசித்திர விபூதிமத்தையை அனுபவித்து ஸந்துஷ்டரான இவர் –
இவன் விரோதி நிவர்த்தகத்தில் விளம்பிக்கைக்கு அடி என் என்று நிரூபித்து அவன் தம்மை வாசிக கைங்கர்யம் கொள்ளுகைக்காக
வைத்த பிரகாரத்தைக் காட்டக் கண்டு ப்ரீதராய் –
தம் விரோதி கிடக்கச் செய்தே அத்தை மதியாமல் அசித் கல்பமாக்கி அடிமை கொள்ளுகைக்கு அடியான
நிருபாதிக சம்பந்தத்தையும்
பிரதம பிரவர்த்தனத்தையும்
பக்தார்த்த ப்ரவ்ருத்தியையும்
விரோதியை மதியாமல் விரும்பின படியையும்
விருப்பத்தால் வந்த மேன்மையையும்
மேன்மைக்கு எல்லை நிலத்தையும்
அப்பரத்வ அனுபவத்துக்கு விலக்கான பாபத்தினுடைய நிவர்த்தனத்தையும்
அதிசயித அனுபாவ்ய குண யோகத்தையும்
அதனுடைய நித்ய அநுபாவ்யத்தையையும்
நிஷ் ப்ரத்யுபகாரமான நிரவதிக உபகாரகத்வத்தையும்
அனுபவித்து ஏவம்வித ஸ்வ பாவனானவன் என் விரோதியைக் கழித்து என்னை வாசிக கைங்கர்யம் கொண்ட படிக்கு
எத்தைச் செய்வேன் என்று உபகார ஸ்ம்ருதியாலே அத்யந்தம் ஹ்ருஷ்டராகிறார் –

என்றைக்கும் என்னை உய்யக்கொண்டு போகிய
அன்றைக்கு அன்று என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
இன் தமிழ் பாடிய ஈசனை ஆதியாய்
நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ?
–7-9-1-

தன்னை நம்பி உடனே கிடந்தவனை மடி தடவினவன் ‘என் செய்தோமானோம்!’ என்று வருந்துமாறு போலே, எல்லாம் செய்தும் ஒன்றும் செய்யாதானாய் ‘இவனுக்கு என் செய்வோம்!’ என்று இருக்கும் ஒருவன்.-என்னைத் தன்னாக்கி –தன்னோடு ஒக்க ஞானம் சத்தி முதலானவைகளை யுடையேனாம்படி செய்து. அன்றிக்கே, ‘என்னைத் தன்னுடையேனாம்படி செய்து’ என்னுதல்.-பாடிய –-‘என்னைக் கொண்டு பாடுவித்தான்’ என்னுதல்;-பாடினான் என்னுதல்.-ஆதியாய் நின்ற--‘நான் கவி பாடுகைக்குக் காரணமாய் நின்றான். அவன் அடியாக நான் கவி பாடினேன்,’என்றபடி-என் சோதியை – பிடாத்தை விழவிட்டுத் தன் வடிவழகைக் காட்டினான்.-‘திருத்திரை எடுத்தாற் கூப்பிடுமாறு போலே கூப்பிட்டேன்; அது கவியாய்த் தலைக்கட்டிற்று. அன்றிக்கே, தன் வடிவழகைக் காட்டியாயிற்றுக் கவிக்கு உள்ளுறை கொடுத்தது,’ என்னுதல். ‘நீரும் கவி பாடினீராகில் பின்னை இப்படிக் கிடந்து படுகிறது என்?’ என்ன,

என் சொல்லி நிற்பனோ –
1-‘நானும் பாதி வழி வந்து அவனாலே அங்கீகரிக்கப்பட்டவனாய் இருக்கிறேனோ?
2-அன்றிக்கே, பெற்ற பேறும் தான் அளவுபட்டு ஆறி இருக்கிறேனோ?’ என்றது,
3-‘ஒரு சாதனத்தைச் செய்தார்க்குப் பலம் தப்பாமையாலே, நானும் இப்பேற்றுக்குச் சில செய்தேனாய் இது தக்கது என்று இருக்கிறேனோ?
4-பெற்ற பேறுதான் பொறுக்குமதாய் ஆறி இருக்கிறேனோ? எதனைச் சொல்லித் தரிப்பது?’ என்றபடி.

இதற்கு ஆளவந்தார் அருளிச் செய்யும்படி: ‘சர்வேஸ்வரன் செய்யப் புக்கால் அரியதும் ஒன்று உண்டோ?’ என்றாம்.-இன் தமிழ் பாடிய ஈசன்’ என்றதிலே நோக்கு. ஈசன் – ‘சமர்த்தன்’ என்றபடி.அங்ஙன் அன்றிக்கே, எம்பெருமானார், ‘இவர் தாம் சொன்னாராகிலும் ஒருபடி போகச் சொல்லித் தலைக் கட்டுவர்: என்னால் தன்னை இன் தமிழ் பாடிய ஈசனை’ என்றதிலே நோக்கு.-ஈசன்-குற்றங்கட்கு எல்லாம் எதிர்த் தட்டானவன்.அவனும் தானே சொன்னானாகில் ஒரு குற்றுமும் இல்லாதபடி தலைக் கட்டுவான்: சிறு குழந்தை எழுத்திடப் புக்காரல் தானே ஏதேனும் ஒருபடி இட்டுத் தலைக் கட்டும்; தந்தையாதல் உபாத்யாயனாதல் இடப் புக்கால் தானே எழுத்தாய் இருக்கும்? அங்ஙன் அன்றிக்கே, இவன் கையைப் பிடித்து இடுவிக்கப் புக்கவாறே, இவன் ஓரிடத்தே இழுக்க அவன் ஓரிடத்தே இழுக்கக் குதறிக் கொட்டியாய் உருவம் அழிந்து சிதறிப்போம்; அப்படியே, என்னை உபகரணமாகக் கொண்டு கவி பாடா நிற்கச் செய்தேயும, என்னால் வரும் குற்றம் தன் பக்கல் தீண்டாதபடி பாடுவித்தான் என்கிறார்’ என்று அருளிச் செய்வர்.

நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ?–அத்தாலே நிலை பெற்று உஜ்ஜஜ்வல விக்ரஹனாய் இருக்கிறபடியை-எனக்குப் பிரகாசிப்பித்தவனை எத்தைச் சொல்லி தரிப்பேன்-பிரதமம் ஆபி முக்கியம் பண்ணும்படி அங்கீ கரித்தான் என்னவோ
அத்தை முழுக்க நடத்திற்றிலன் என்னவோ-என்னைத் தனக்கே யாக்கிற்றிலன் என்னவோ
நான் பாடினேனாம்படி தான் பாடிற்றிலேன் என்னவோ-அத்தால் உஜ்ஜவலன் ஆயிற்றிலன் என்னவோ எத்தைச் சொல்லி தரிக்கலாவது –

————-

என் சொல்லி நிற்பன்?என் இன்னுயிர் இன்று ஒன்றாய்
என் சொல்லால் யான் சொன்ன இன்கவி என்பித்துத்
தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன் என்
முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே.
–7-9-2-

உடையவன் உடைமையை கொண்டு போனான் -தான் விஷயீ கரித்தானாய் இருக்கை அன்றிக்கே இவர் வாக்காலே இவர் கவி பாட தானும் உளனாய் தன் விபூதியும் உளனாக அன்றோ கருதினான்-திவ்ய தேசம் அருளிச் செயல் பெற்றதால் அன்றோ -ஆகையால் தரிக்கைக்கு இயலாமல் உள்ளேன்

என் சொல்லி நிற்பன் – ‘அவன் என்னை அங்கீகரித்த அங்கீகாரம் காரணம் இல்லாதது என்னவோ, காரணத்தோடு கூடியது என்னவோ?-இத்தலையை ஆராய்ந்து பார்த்த இடத்து ஒரு காரணத்தைக் காண்கின்றிலர்; அத்தலையை அநுசந்தித்துப் பார்த்த இடத்து ஒரு காரணத்தைக் காண்கின்றலர்; அநாதி காலம் கைவிட்டதற்கு ஒரு காரணத்தைக் காண்கின்றிலர்; இன்று இனி, சேதனனுக்குத் தனித்து ஒரு காரியத்தைச் செய்தலுக்கும் செய்யாமைக்கும் யோக்கியதை இல்லை அன்றோ, சொரூபம் ஸ்திதி முதலானவைகள் அவன் அதீனமாய் இருக்கையாலே? இதனை இனிய கவி என்று நாட்டிலே பிரசித்தம் ஆக்கினான்.

தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த – சொல்லும் தன்னது: சொன்னவனும் தான்; சொல்லிற்றும் தன்னை. -தன் சொல்லால் தன்னை தான் கீர்த்தித்த-மூன்றுமே அவனது-
கவிபாட்டுண்டேன் நானாகில் அன்றோ கவிபாடினேன் நானாவது-என் முன் சொல்லும் 
அவன் முன்னே சந்தையிடப் பின்னே நான் சொன்னேன்.-தான் சொன்னான் ஆகில் ஸ்ரீகீதையைப் போன்று வறுமுறுகலாய்ப் போம் அன்றோ?

நம்பி திருவழுதிநாடு தாசர், ‘ஸ்ரீகீதை போவான் ஒருவன் சந்தியா சதஸ்ஸிலே வந்து கண்டால், பின்னை இவனுக்கு உழக்கு அரிசியைக் கொடுப்பித்து விடு மத்தனை போக்கி அங்கு அவர்கள் உள்ளிடம் கொடார்கள்; திருவாய்மொழி கற்றவன் ஒரு விண்ணப்பன் செய்வான் சென்றால், சர்வேஸ்வரனும் கிராமத்திலுள்ளாரும் புறப்பட்டு எதிர் கொண்டு தங்கள் இருப்பிடத்தை ஒழித்து அவனுக்குக் கொடுத்து ஆதரியா நிற்பார்கள்,’ என்று அருளச் செய்வர்.-தானே பிரபந்தத்தைச் செய்து, நான் செய்தேன் என்று என் தலையிலே ஏறிட்டு எனக்கு ஒரு பிரசித்தியைத் தந்தான்.

பிரமன் சிவன் முதலானோர்களைத் தனக்குச் சரீரமாகக் கொண்டு நின்று படைத்தல் அழித்தல்களைச் செய்து அவர்கள் மேல் ஏறிட்டாப் போலே கண்டீர், என் மேலே ஏறிட்டுக் கவி பாடினேன் நானாகச் சொல்லித் தலைக் கட்டினபடியும்,’ –

———–

ஆ முதல்வன் இவன் என்று தன் தேற்றி என்
நா முதல் வத்து புகுந்து நல் இன்கவி
தூமுதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்
வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ!
–7-9-3-

ஆம் முதல்வன் இவன் என்று தன் தேற்றி--‘முதல்வன் ஆம் இவன்,’ என்று தன் பக்கலிலே எனக்குத் தெளிவு உண்டாம் படியாகச் செய்து: என்றது,-‘காரண வாக்கியங்களில் உபாசிக்கத் தக்கவனாகச் சொல்லப்படுகிறான் தானே என்று தன் பக்கலிலே நான் தெளியச் செய்து,’ என்றபடி.-அன்றிக்கே, ‘பரம பதத்தைப் போன்று, சம்சாரத்தையும் திருத்த நினைத்தோம். அதற்கு அடி ஆம் இவன், என்று என் பக்கலிலே தன் சொரூபம் முதலானவைகளைத் தெளியச் செய்து என்னுதல்.

இங்கே அருளிச் செய்யும் வார்த்தை:-‘திருப் புற்றுக்குக் கிழக்கே கரிய மாணிக்காழ்வார் திருமுன்பின் படிக் கட்டிலிலே ஆளவந்தார் எழுந்தருளி யிருக்க, உடையவர் திருப் புற்றுக்குக் கிழக்காக எழுந்தருளி நிற்கிறவரைக் கண்டு,m‘ஆம் முதல்வன் இவன்’ என்று அருளிச் செய்தாராம்’ என்பது.

தான் தன்னைச் சொன்ன – தானே சொல்லுதல்,-நானே ஒருபடி சொல்லுதல் செய்கை அன்றிக்கே,-என் நா முதல் வந்து புகுந்து தான் தன்னைச் சொன்னான் ஆயிற்று.-என் வாய் முதல் அப்பனை – எனக்கு வாய்த்த காரணனான மஹோபகாரகனை.-அன்றிக்கே,-‘என் நா முதல்’ என்றது தன்னையே பின் மொழிந்து,-‘என் வாக்குக்கு முதலான அப்பனை’ என்கிறார்.என்னுதல்.-என்று மறப்பேனோ –-‘முன்பு அநாதி காலம் மறந்து போந்ததாகில் இனி மேல் நினைக்கைக்குக் காரணமான காலத்தை எல்லாம் மறக்கைக்கு உடலாக்கினால் தான் மறப்பனோ?’ என்றது,-‘முன்பு நினைக்கையில் உள்ள அருமையோ பாதியும் போரும் இனி மறக்கையில் உள்ள அருமையும்: இனி ஏதேனும் ஒரு நாள் தான் என்னாலே மறக்கப் போமோ?’ என்றபடி.

———-

அப்பனை என்று மறப்பன் என் ஆகியே
தப்புதல் இன்றித் தனைக் கவி தான் சொல்லி
ஒப்பிலாத் தீ வினையேனை உயக்கொண்டு
செப்பமே செய்து திரிகின்ற சீர்கண்டே
.–7-9-4-

என் ஆகியே –‘என் பக்கலிலே தானாய்’ என்றவாறு.-இவ்விடத்தில் ‘தான் பாடினானாகில் ஒரு குற்றமும் இல்லாமல் தலைக்கட்டும்;-நான் பாடினேனாகிலும் வருந்தி ஒருபடி தலைக் கட்டுவேன்;-என்னைக் கருவியாகக் கொண்டு கவி பாடா நிற்கச் செய்தேயும் என்னுடைய சம்பந்தத்தால் வந்த குற்றம் தட்டாதபடி கவி பாடித் தலைக் கட்டினான்’ என்று எம்பார் அருளிச் செய்வர். விஷயத்துக்குத் தகுதியாகக் கவி பாடினான் ஆதலின், ‘தனைக் கவி தான் சொல்லி’ என்கிறார்.-முற்றறிவு, வரம்பில் ஆற்றலுடைமை முதலானவைகளுக்கு ஒப்பு இல்லாதவாறு போலே ஆயிற்று,-அறிவின்மை ஆற்றலின்மை இவைகளுக்கு எனக்கு ஒப்பு இல்லாதபடியும்;-ஆதலின், நானும் அவனுக்கு ஒப்பன் என்கிறார்-

செப்பமே செய்து திரிகின்ற –-வஞ்சனை பொருந்திய மனத்தையுடையேனாய் இருக்கிற என்னோடே,-சம்சார சம்பந்தம் சிறிதும் இல்லாதவரான நித்திய ஸூரிகளோடு பரிமாறுமாறு போலோ, என்னுடனே செவ்வையே பரிமாறினான்.
அன்றிக்கே,-‘எனக்குக் காப்பினைச் செய்து கொண்டு போருகிற’ என்னுதல்.

சீர் கண்டே-இப்படி இருக்கிற சீலம் முதலான குணங்களை அநுசந்தித்து.-அப்பனை என்று மறப்பன்?

————–

சீர் கண்டு கொண்டு திருந்து நல் இன் கவி
நேர்பட யான் சொல்லும் நீர்மை இலாமையில்
ஏர்வுஇலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைப்
பார் பரவு இன் கவி பாடும் பரமரே.
–7-9-5-

தன் ஆக்கி-தன்னோடு ஒக்கச்செய்து.-அன்றிக்கே,-‘தனக்கு ஆக்கி’ என்னுதல்.-என்னால் தன்னைப் பார் பரவு இன் கவி பாடும் –என்னைக் கருவியாகக் கொண்டு பாரில் உள்ளார் அனைவரும் தன்னைப் பரவும்படி இனிய கவிகளைப் பாடினான். என்றது
‘விசேஷஜ்ஞர், விசேஷஜ்ஞர் அல்லாதார் என்னும் வேற்றுமை இன்றியே எல்லாரும் கொண்டாடும்படி செய்தான்,’ என்றபடி.
மண் மிசை–ராமானுஜன் பிறந்த பின்பே–அப்பொழுதே மாதவனுக்கு ஆளானார்கள்

பரமரே –‘அவனோடு ஒத்தவர் இல்லை’ என்கிற வாக்கியம் கொண்டு இவனுடைய உயர்வு அறிய வேண்டா;-என்னை இடுவித்துக் கவி பாடுவித்துக் கொண்ட இதுவே போரும் அவனுடைய உயர்வு அறிகைக்கு.

————

இன் கவி பாடும் பரம கவிகளால்
தன் கவி தான் தன்னைப் பாடுவியாது இன்று
நன்கு வந்து என்னுடன் ஆக்கி என்னால் தன்னை
வன் கவி பாடும் என் வைகுந்த நாதனே.–
7-9-6-

இன் கவி பாடும் பரம கவிகளால். . .என்னால் தன்னை வன்கவி பாடும் –
‘பின்னைத் தான் தனக்குச் சில கவிகளைப் பாடவேண்டினால், அதற்குத் தகுதியாக இருப்பார்
ஸ்ரீ வேதவியாசபகவான். ஸ்ரீ பராசரபகவான், ஸ்ரீ வால்மீகி பகவான் இவர்கள் உளராய் இருக்க.
மற்றும் வேணுமாகில், ‘செந்தமிழ் பாடுவார்’ என்று சொல்லப்படுகிற முதல் ஆழ்வார்கள் எல்லாரும் உளராய் இருக்க
என்னைக் கொண்டு கவி பாடுவித்துக்கொண்ட இதுவும் ஒரு நீர்மையே!’ என்கிறார்.

முதல் ஆழ்வார்களிலே ஒருவரை ‘ஒரு கவி சொல்லிக் காணீர்’ என்ன,
‘பெருகு மதவேழம்.. . . . . . . . வான்கலந்த வண்ணன் வரை’ என்றே அன்றோ அவர் பாடுவது?

தன் கவி தான் தன்னைப் பாடுவியாது –-கவியும் தன்னது; பாடினாலும் தான்; கவிகட்குப் பொருளாயுள்ளவனும் தான். அவர்களைக் கொண்டு, தன்னுடையதான சொல்லாலே, அதற்குப் பொருளாயுள்ள தான் தன்னைப் பாடுவியாதே.-இன்று நன்கு வந்து – இன்று நான் இங்ஙனே உஜ்ஜீவிக்கும்படிக்குத் தகுதியாக வந்து. அன்றிக்கே,‘நான் உவந்து’ என்று பிரித்து, ‘நன்றாக உவந்து’ என்றும்,-இக்கவி பாடுகைதானே பிரயோஜனமாக உவந்து’ என்றும் பொருள் கூறலுமாம்.-என் உடன் ஆக்கி – என்னைப் பிரியாத கருவியாகக் கொண்டு.-என் வைகுந்த நாதனே –-அழியாததான கலங்காப் பெரு நகரத்தை இருப்பிடமாகவுடையோமாய் இருப்பதைப்போன்று, அழியாத வேதம் போலே நித்தியமாய் இருக்கிற ஆயிரம் பாசுரங்களைப் பாடுவிக்க வேணும்’ என்று பார்த்தான்.
அன்றிக்கே,-‘பரமபதத்தை இருப்பிடமாகவுடையனாகையாலே வந்த ஏற்றத்தைப் போன்றதாக நினைத்திராநின்றான் ஆயிற்று,-இக்கவி பாட்டுடையான் ஆகையால் வந்த ஏற்றத்தையும் என்னுதலுமாம்.-

————

வைகுந்த நாதன் என் வல்வினை மாய்ந்து அறச்
செய்குந்தன் தன்னை என்னாக்கி என்னால் தன்னை
வைகுந்தனாகப் புகழ் வண் தீங்கவி
செய்குந்தன் தன்னை எந்நாள் சிந்தித்து ஆர்வனோ?–
7-9-7-

அயர்வு அறும்அமரர்கள் அதிபதி ஒரு சம்சாரி பக்கலிலே மேல் விழாநின்றால் எங்ஙனே ஆறி இருக்கும்படி?-‘முன்னே உலகங்களுக்கு எல்லாம் நாதனாய் இருந்தும், சுக்கிரீவனைத் தனக்கு நாதனாக இச்சிக்கிறார்,’ என்கிற இதற்கும் அவ்வருகே இருக்கிறது அன்றோ இது? -இங்கு வைகுந்த நாதன் -அதனாலே லோக நாதனுக்கு மேலே என்ற படி –-வல்வினை போக வேணும் என்று இராத என்னுடைய, ‘மயர்வுஅற மதிநலம் அருளினன்’ என்ற இத்தனை அன்றோ எனக்கு அருளினன்?’ என்கைக்கு, அருளுவதற்கு முன்பு தாம் ஒருவர் உளராகக் கண்டிலர் அன்றோ?-‘அவன் இல்லாதவன் ஆகவே ஆகிறான்’ என்னும் நிலையன்றோ முன்? அஸந்நேவஸபவதி’ என்பது தைத்திரீயம்.-உபாயத்தில் சொல்ல யோக்யதை இல்லை -அதனால் எனக்கு அருளினான் என்று சொல்ல வில்லை-பிராப்யத்தில் சொல்ல அவகாசம் இல்லை -அதனால் அருளினன் எனக்கு என்று சொல்ல வில்லை – -உபகார கௌரவம் -கைங்கர்யத்தில் ஆழ்ந்தேன் சர்வ சத்தியான தன்னாலே தான் இது செய்யலாமோ என்பார், ‘வல்வினை’ என்கிறார்.-மாய்ந்து அறச் செய்குந்தன் – என்னுடைய பிரபல விரோதியைப் போக்கின சுத்தியை யுடையவன்;-‘முகுந்தன்’ என்ற பெயர் ‘குந்தன்’ என்று முதற் குறையாய்க் கிடக்கிறது -குந்தன்’ என்று திருநாமம் ஆகவுமாம்; ‘குமுத: குந்தர: குந்த:’-ஸஹஸ்ரநாமம்.– என்று குந்தன் என்றே திருநாமம் ஆயிற்று அன்றோ?-,

வண் தீம் கவி செய் குந்தன் –வளவியனவாய் இனியனவாய் இருந்துள்ள கவிகளைப் பாடி,
அது தனைத் தன் பேறாக நினைத்திருக்கும் தூய்மையையுடையவன். என்றது,
‘துயர் அறு சுடர் அடி’ என்பது போன்று, இவரைக் கொண்டு கவி பாடின பின்பு தன் துயர் தீர்ந்தானாய் இருக்கிறபடியைத் தெரிவித்தவாறு.-இவர் துயர் போன பின்பு, தனக்கு ஒரு துயர் உண்டாய் அது போனாற்போலே நினைத்து இராநின்றானாயிற்று.-சரீரத்துக்கு வந்த வியாதி அனுபவிப்பான் சரீரி அன்றோ?

எந்நாள் சிந்தித்து ஆர்வனோ – செய்த உபகாரம் கனத்து இராநின்றது; உபகாரத்தை நினைப்பதற்குக் காலம் போருகிறது இல்லை’ நான் என் செய்வேன்? சரீரம் பிரிந்த பின்பு வாய் புகு நீர் ஆகையாலே சொல்லுகைக்குக் காலம் இல்லை; இங்கு இருக்கும் நாள் காலம் போருகிறது இல்லை; செய்த உபகாரமோ, கனத்து இரா நின்றது. நான் என் செய்கேன்?
கால தத்வம் உள்ள அளவும் அனுபவித்தாலும் திருப்தி கிடையாதே எனக்கு என்கிறார் –

———-

ஆர்வனோ ஆழி அங் கை எம்பிரான் புகழ்
பார் விண் நீர் முற்றும் கலந்து பருகிலும்
ஏர்விலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைச்
சீர் பெற இன் கவி சொன்ன திறத்துக்கே ? 
–7-9-8-

ஆழி அம் கை எம்பிரான் புகழைப் பாரிலுள்ளாரும் விண்ணிலுள்ளாரும் நீரிலே உள்ளாரும் பாதாள உலகத்திலுள்ளாரும்-மற்றும் எல்லாரும் கலந்து பருகிலும் நான் ஆர்வனோ?அன்றிக்கே,-‘பாரிலுள்ளார், விண்ணிலுள்ளார், நீரிலுள்ளாரான இவர்கள் எல்லாருடைய வாக்கு முதலான கருவிகளையும் அனுபவிக்கின்ற சத்தி விசேடங்களையும் உடையேனாய்க்கொண்டு காலம் எல்லாம் நின்று அனுபவித்தாலுந்தான் நான் ஆர்வனோ?’ அன்றிக்கே, ‘பார் விண் என்றதனால் உபய விபூதிகளையும் சொல்லி, நீர் என்றதனால் தன்மையைச் சொல்லி, உபய விபூதிகளிலும் உள்ளோர் அனுபவிக்கும் சத்தி சுபாவத்தை யுடையேனாய்க் கொண்டு அனுபவித்தாலும் ஆர்வனோ

ஏர்வு இலா என்னைத் தன் ஆக்கி – மேலே, ஐந்தாம் பாட்டில் ‘கவி பாடுகைக்கு இடமான இச்சையும் இல்லை’ என்றார்; இங்கு ‘அவ்விச்சைக்கு அடியான தகுதியும் இல்லை’ என்கிறார். இதனால், நன்மை இல்லாமையைச் சொன்னபடி.-இச்சை -முதல் படி -தபஸ் -அடுத்து -வேதனம் பலம் -ஸூத பிரகாசர்-கத்தியால் வெட்டி -கருவி தானே கத்தி -விருப்பம் இருந்தது வெட்டிற்று இல்லையே -வெட்டுதற்கு சாதனம் போலே தபசாதிகள்  ஞானத்துக்கு சாதனம் என்றவாறு –அஞ்ஞாத ஸூஹ்ருத்த விசேஷத்தால் -ஈஸ்வர அபிப்ராயத்தாலே –
தானும் அறியாமல் சாஸ்திரத்திலும் விதிக்காதே -முதலில் இச்சை பிறக்கும் –-அதுவும் இன்றிக்கே இருக்கிற என்னை என்கை.-

தன்னைச்-ஸமஸ்த கல்யாண குணாத்மகனை-சீர் பெற -என் கவி பாட்டால் அந்த குணங்களை பெற்றானாம் படி-இன்கவி சொன்ன திறத்துக்கு – இப்படி இனிய கவிகளைச் சொன்ன பிரகாரம் ஒன்றுக்கும். மற்றைக் குணங்கள் குமர் இருந்து போமித்தனை. இப் பிரகாரம் ஒன்றுக்கும் ஆழி அம் கை எம் பிரான் புகழைப் பார் விண் நீர் முற்றுங்கலந்து பருகிலும் ஆர்வனோ?

———

திறத்துக்கே துப்பரவாம் திரு மாலின் சீர்
இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ?
மறப்பிலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னை
உறப்பல இன்கவி சொன்ன உதவிக்கே?
–7-9-9-

திறத்துக்கே துப்பரவாம் திருமாலின் சீர் –-ஏதேனும் ஓர் காரியத்தில் வந்தால், ஒரு துரும்பைக் கொண்டு காரியம் கொள்ளப் பார்த்தால் அதனைக் கொண்டே காரியத்தை அப்படித் தலைக்கட்டிக் கொள்ளுதற்குத் தகுதியான ஆற்றலை யுடையனான.
வல்லவனுக்கு புல்லும் -அடியேன் புல் போலே–அதற்கு அடி என்?’ என்னில், திருமகள் கேள்வன் ஆகையாலே,-‘

மறப்பு இலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னை உறப் பல இன்கவி சொன்ன உதவிக்கு – மறப்பு இல்லையான என்னை. மறப்புக்கு முன் கணத்தில் நிகழக் கூடியதான நினைவும் எனக்கு இல்லை என்கைக்காக, ‘மறப்பிலா’ என்ற சொல்லாலே அருளிச் செய்கிறார்-‘’மறப்பு இலா’ என்ன வேண்டுவான் என்?’ என்னில், நினைவு உள்ள இடத்திலே அன்றோ மறப்பு உள்ளது? ஆக, ஏதேனும் ஒரு காலத்தில் உண்டாகிற நினைவுங்கூடத் தமக்கு இல்லை என்கிறார் என்றபடி.-மறப்பு இலா என்னைத் தன்னாக்கி – ஏதேனும் ஒரு காலத்தில் நினைத்துப் பின்னை ஒருகால் மறப்பு உண்டாய், அதனை காணாக் கண்ணிட்டுதான் இப்படி அங்கீகரித்தானோ? முதலிலே தன் பக்கலிலே நினைவு இன்றிக்கே இருக்கிற என்னைத் தன்னாக்கி.-என்னால் –-‘மறந்தேன் உன்னை முன்னம்’ பெரிய திருமொழி, 6. 2 : 2.-என்கிற அநுதாபமுங்கூட இன்றிக்கே இருக்கிற என்னைக்கொண்டு.-தன்னை உறப் பல இன் கவி சொன்ன – ‘சொல்ல மாட்டாது அந்த ஆனந்த குணத்தினின்றும் எந்த வேத வாக்கியங்கள் மீண்டனவோ’ என்கிறபடியே,
‘வேதங்கள் மீண்ட விஷயத்தை மறுபாடு உருவச் சொன்ன’ என்று சீயர் அருளிச் செய்வர்.
அன்றிக்கே, ‘சர்வேஸ்வரனுக்குச் சால உற்றது என்கிறார்’ என்று பிள்ளான் அருளிச் செய்வர்.-இனிய கவிகளைச் சொன்ன இந்த உபகாரத்துக்குத் திருமாலின் சீர் இறப்பு எதிர் காலம் பருகிலும் ஆர்வனோ?-

——

உதவிக் கைம்மாறு என் உயிர் என்ன உற்று எண்ணில்
அதுவும் மற்று ஆங்கவன் தன்னது என்னால் தன்னைப்
பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு
எதுவும் ஓன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே.
–7-9-10-

மயங்கி இருக்குங்காலத்தில் ஆத்தும சமர்ப்பணந்தான் வேணும்:
தெளிந்த பின்னர், ‘என்னுடைய பொருளை அவனுக்குக் கொடுத்தேன்’ என்று இருக்கக்கடவன் அல்லன்;-ஆத்துமா என்னுடையது என்று பல காலமாக எண்ணிப் போந்த அதிலும் கடையாயிற்று,-தெளிந்த பின்னர் ‘நான் என்னுடைய பொருளை அவனுக்குத் தந்தேன்’ என்று இருக்குமாகில்.-பின்னையும் பழைய அபகாரமே தொடர்ந்தது ஆகுமே! ஞானம் பிறந்தமை பொய் அன்றோ?-சர்வமுத்தி பிரசங்கம் வாராமைக்காக ஆத்தும சமர்ப்பணந்தான் வேண்டிவரும்;-நெஞ்சிலே வெளிச்சிறப்பு உண்டானால் அவனுடைய பொருளினை அவனதாக இசைந்திருக்கக் கடவன்.-சொரூப ஞானம் பிறந்தால் பேற்றின் அளவும் செல்ல, இவ்விரண்டு தன்மையும் தொடரக்கடவதாக இருக்கும்.

ஆக, ஆத்தும சமர்ப்பணத்துக்கும் செய்ந்நன்றி அறிதலுக்கும் தனித்து இவனுக்குச் சம்பந்தம் இல்லாத படியான-இவனுடைய அத்தியந்த பாரதந்திரியத்தைச் சொல்லுகிறது.
பிரபத்தி சமயம் -ஆத்மீய பரந்யாசம் -பிராந்தி சமயமா இது -சமர்ப்பித்த அனந்தரம் அனுதபிப்பதால் –ஆகில் வேண்டாவோ என்னில்-வேணும் -சர்வ முக்தி பிரசங்கம் வாராமைக்கு –-பின்பு சமர்ப்பித்தது என் வஸ்து என்று நினைத்தால் முன்பு விட தாழ்வு உண்டாகும் -அதனால் செய்த அநந்தரம் அனுதபிக்க வேண்டும் –-ஆளவந்தார் ஆழ்வார் போலே -இரண்டு ஆகாரமும் உண்டு -ஜீவாத்மாவுடைய பாரதந்த்ர ஸ்வரூபம் அறிந்து கொள்ள வேண்டும் –

பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு – கவிபாட்டுண்கிறவனுக்கு இக்கவி பாட்டாலே பண்டு இல்லாத நீர்மை உண்டாம்படியாகக் கவி பாடின உபகாரனுக்கு.-எதுவும் ஒன்றும் இல்லை செய்வது –-ஏதேனும் ஒன்றும் செய்யலாவது இல்லை.-‘இங்கு இருக்கும் நாள் ஞானக் குறைவினாலே செய்யலாவது ஒன்று இல்லையாகிலும், ஞானக்குறைவு அற்று முத்தனானால், பிரதியுபகாரம் செய்யத் தட்டு என்?’ என்னில்,-இங்கும் அங்கே –
இங்கு ஆனால், தேக ஆத்துமா அபிமானத்தாலே ‘நான், என்னது’ என்று போய்க் கால் கட்டித் திரிகையாலே, செய்யலாவது உண்டோ?’ என்று பிரமிக்கவுமாய் இருக்கும்;
அதுவும் இன்றிக்கே, ஞானக் குறைவு கழிந்த அளவிலே, தான் செய்யலாவது ஒன்று இல்லை என்னும் இடம் சொல்ல வேண்டா அன்றோ?-ஸ்வரூப ஞானம் பிறந்த இடத்தில் ஸ்வா தந்தர்ய கார்யமான ப்ரவர்த்திக்கு இடம் இல்லை அன்றோ?–

————–

இங்கும் அங்கும் திரு மால் அன்றி இன்மை கண்டு
அங்ஙனே வண் குரு கூர்ச் சட கோபன்
இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இப்பத்து
எங்ஙனே சொல்லிலும் இன்பம் பயக்குமே
.–7-9-11-

நமக்கும் நல்லாசிரியன் அருகே இருந்து ‘திருமகள் கேள்வன் ஒழிய இவ்வாத்துமாவுக்குத் தஞ்சமாய் இருப்பார் இலர்,’ என்று உபதேசித்தால், அத்தனை போதும்அப்படியே’ என்று இருக்குமது உண்டே அன்றோ? இவர் அங்ஙனம் அன்றிக்கே, அந்நினைவுக்குத் தகுதியான செயலையுமுடையவராய் இருப்பாராயிற்று.

எங்ஙனே சொல்லிலும் இன்பம் பயக்கும் – ஏதேனும் ஒரு படி சொல்லிலும் இன்பம் உண்டாம்.-இவர் தம்முடைய பாசுரத்தைக் கற்றவர்கள் என்றே அன்றோ ஈஸ்வரன் இவர்களைக் கடாட்சிப்பது?-இல்லையாகில், இவர் தம்மைப் போலே மனம் வாக்குக் காயம் என்னும் இவற்றினுடைய நியதி உண்டாய் அனுபவிக்கப் பெறில் அழகிது; அது இல்லாத போதும் பலம் தவறாது என்கைக்காகச் சொல்லிற்றத்தனை-இது. இன்பம் பயக்குமே –
‘இந்த இறைவனே ஆனந்தத்தைக் கொடுக்கிறான்’ என்கிறபடியே, ஏஷஹ்யேவ ஆநந்தயாதி’ என்பது, தைத். ஆன. எப்பொழுதும் பகவானுடைய அனுபவத்தாற்பிறக்கும் ஆனந்தமானது உண்டாம்.–உண்டாக்கும் என்றபடி-

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -47-திரிகின்றது வடமாருதம் திங்கள் வெந்தீ முகத்து-நங்கள் வரி வளை -8-2-

February 24, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

செவிலித்தாய் பாசுரம்-தலைவி பிரிவு ஆற்றாமை வருந்தும் நிலையைக் கண்டு இரங்கிப் பேசும் பாசுரம்-நங்கள் வரிவளை யாயங் காளோ. நம்முடை ஏதலர் முன்பு நாணி,
நுங்கட் கியானொன்று ரைக்கும் மாற்றம் நோக்குகின் றேனெங்கும் காண மாட்டேன்,
சங்கம் சரிந்தன சாயி ழந்தேன் தடமுலை பொன்னிற மாய்த்த ளர்ந்தேன்,
வெங்கண் பறவையின் பாக னெங்கோன் வேங்கட வாணணை வேண்டிச் சென்றே
-8-2-1-வளையல் களைந்து போல்-சங்கம் சரிந்தன சாய் இழந்தேன் தடமுலை பொன்னிற மாய்த்த ளர்ந்தேன்,
வேங்கட வாணனை வேண்டிச் சென்று-அதே போல் இங்கும் உள்ளதே-வட மாருதம் -வடக்கில் இருந்து வருவது-சரத்காலம் வடமாருதம் -ஐப்பசி கார்த்திகை-வடக்கு நோக்கி போகும் தென்றல் காற்று அதுக்கு முன் உள்ள ருது-தென் மேற்கு வட கிழக்கு காற்றுக்கள் –

கலந்து பிரிந்து பிரிவாற்றாமை நோவு படுகிற தலை மகளைக் கண்ட திருத் தாயார்-
பாதகங்களின் பெருமையையும் –இவள் ஆர்த்தவத்தையும் அனுசந்தித்து –என்னாய் விளையக் கடவதோ -என்கிறாள் –(மானஸ அனுபவம் கிடைத்து பாஹ்ய அனுபவம் கிட்டாமையால் தளர்ந்து )

இப்படி மானஸ அனுபவம் நடக்க பாஹ்ய அனுபவம் ஸித்தியாமையாலே வந்த தளர்த்தியாலே
லௌகிக பதார்த்த தர்சனம் ஸ்மாரகமாய்க் கொண்டு இவரை ஈடுபடுத்தின படியைக் கண்டு
ஸூஹ்ருத்துக்கள் நொந்து உரைத்த பாசுரத்தை வாடைக்கும் மதிக்கும் ஆற்றாது வளை இழந்த தலை மகளைக் கண்டு பாங்கி இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு வியாக்யானம்-திரிகின்றது வட மாருதம்-மத்த கஜமானது ஆளைக் கணிசித்து உலாவுமாப் போலே உலவா நின்றது –நாயகனுடைய தண்ணளி அற்ற ஸமயம் பார்த்து நலிவதாகத் திரியா நின்றது –அன்றிக்கே வாடையானது குளிரக் கடவது இறே -அந்த சைத்யம் மாறாடிச் சுடா நின்றது –திங்கள் இத்யாதி-இதில் ஸ்வ பாவம் அனுபவித்த வாறே நாம் தான் பேசாது இருக்கிறது என் என்று சந்திரனும் நெருப்பை முகந்து சொரியத் தொடங்கினான்–வெம் தீ-நெருப்புச் சுடுமாப் போல் அன்று இறே நீர் கொதித்தால் சுடுவது-முகந்து சொரிகின்றது-அங்குக் குறைவற்றுக் கிடந்த படி-அதுவுமது-வாடையோ பாதியும் சந்திரனோ பாதியும் பாதகமாவன சில யுண்டு இறே-ஒரு கடலோசை
அன்றில் -என்றால் போலே-குளிர்ந்து அழகிய திருத்துழாயைப் பெற அபி நிவேசத்தாலே விண்ணில் யுள்ள அவனால் பெற்ற வர்ணத்தை அமுக்கிப் பசுமை நிறமானது உடம்பு எங்கும் பரவா நின்றது-என்னாம் கொல் என் மெல்லியற்க்கே-ம்ருது ஸ்வ பாவையான என் மகளுக்கு என்னாய் முடியுமோ –

திரிகின்றது வடமாருதம் திங்கள் வெந்தீ முகத்து
சொரிகின்றது அதுவுமது ,கண்ணன் விண்ணூர் தொழவே
சரிகின்றது சங்கம் தண்ணம் துழாய்க்கு  வண்ணம் பயலை
விரிகின்றது முழு மெய்யும் என்னாம் கொல் என் மெல்லியற்கே
–47–பிரிவாற்றாது வருந்தும் தலைவி நிலை கண்டு செவிலி இரங்குதல் –

நம் கருத்தை நன்றாக நாடி நிற்கும் மால் அறிய
இங்கு இவற்றில் ஆசை எமக்கு உளது என் -சங்கையினால்
தன்னுயிரில் மற்றில் நசை தான் ஒழிந்த மாறன் தான்
அந்நிலையை யாய்ந்து உரைத்தான் அங்கு –72-கீழ்-அதிசங்கை தீர்த்த மாத்ரமாய்-ஸ்வ அபேஷிதமான பாஹ்ய சம்ச்லேஷம் பிறவாமையாலே கலங்கி-அவஸ்தாந்தரா பன்னராய்-ஸ்ரீ சர்வஞ்ஞனான அவன் அறிய-நாம் அறியாதே இருக்க நமக்கு சம்சாரத்தில் நசையும் யுண்டாக வேனும என்று பார்த்து
ஆத்மாத்மீயங்களில் தமக்கு நசை அற்ற படியை அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிற
நங்கள் வரிவளையில் அர்த்தத்தை-நம் கருத்தை -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் 

திரிகின்றது வட மாருதம் –வாடையானது -மத்தகஜம் ஆளை கணிசித்து உலாவுமா போலே உலாவா நின்றது –(சஞ்சரிக்கின்றது முதல் இரண்டு நிர்வாஹங்கள்-மாறாட்டம் -மூன்றாவது நிர்வாஹம் )
நாயகனுடைய தண்ணளி யற்ற சமயம் பார்த்து நலிவதாக திரியா நின்றது –
அன்றிக்கே –வாடை யாவது குளிரக் கடவது இறே –அந்த சைத்தியத்தை மாறாடி சுடா நின்றது –திங்கள் இத்யாதி –இதனுடைய ஸ்வ பாவம் அந்யதாபவித்தவாறே –நாம் தான் பேசாது இருக்கிறது என் –என்று சந்தரன் நெருப்பை முகந்து சொரியத் தொடங்கினான் –வெம்தீ-நெருப்பும் காற்றும் கூடிற்று காணும் –
நெருப்பு சுடுமா  போல் அன்று இறே நீர் கொதித்தால்  சுடுவது –முகந்து சொரிகின்றது –அங்கு குறைவற்று கிடக்கிறது –வாடையோபாதியும் சந்த்ரனோபாதியும் பிரிந்தார்க்கு பாதகமாவன சில உண்டு இறே –ஒரு கடலோசை  -அன்றில் -தென்றல் -விடை மணி ஓசை குழல் இசை -குயில் -என்றாப் போலே – இவற்றிலே ஓன்று புத்திஸ்தமானத்தை-அதுவும் அது –அதினுடைய பாதகத்வத்தில் உறைப்பு -தன் வாயால் சொல்ல மாட்டாமையாலே அதுவும்  அப்படியே -என்கிறாள் –(பேதை பாலகன் அதாகும் போல் )-அன்றிக்கே –திரிகின்றது என்றது(சஞ்சரிக்கின்றது என்ற பொருளில் அதுவும் அது ) அவ் வாடையும் சந்த்ரனோபாதி நெருப்பை முகந்து சொரியா நின்றது -என்கை —

கண்ணன் இத்யாதி –புறம்பே சிலர் பாதகராக நின்றார்கள் என்று சொல்ல வேணுமோ –
நங்கை-நம் கை – பட்டவை நலிகிறபடி கண்டால் -அவதரித்து ஸூலபனான இது தான்
காதா சித்கதம் ஆகையாலே -என்றும் ஒக்க ஓர்  இருப்பேயாய் காட்சி கொடுக்கிற
(கண்ணன் காதா சித்கதம் -விண்ணூர் என்றும் ஒக்க ஓர்  இருப்பேயாய் காட்சி கொடுக்கிற) கண்ணன் விண்ணூர் –ராகவஸ்ய நிவேசனே -ஸூந்தர காண்டம் – 33-7 – ஸ்ரீ ராமனுடைய அரண்மனையில் -என்னுமா போலே –(மானுஷன் லோகான் -ராகவஸ்ய வீட்டில் போல் இங்கும் கண்ணன் விண்ணூர் ) தண்ணம் துழாய் -இத்யாதி –அவையானால் கொண்டு இட்டவை இறே –ஸ்வாபாவிகமான நிறமும் வேறுபடா நின்றது –தண்ணம் துழாய் -இத்யாதி-பதி சம்மாநிதா -அயோத்யா காண்டம் –18-21 –
கணவரால் நல்ல செய்தி கூறப் பட்ட சீதை என்று-அவன் தோளின் மாலையை வாங்கி -இட்டுக் கொண்டு ஆடும்படி நினைத்து ஆயிற்று – உடம்பு வெளுக்கிறது –வண்ணம் இத்யாதி –ஸ்வாபாவிகமான நிறமானது பயலையாய்க் கொண்டு உடம்பு அடைய பரவா நின்றது –என்னாம் கொல் இத்யாதி – ஒரு வாடையும் வை வர்ணயமும் வேண்டாதபடி –ம்ருது ஸ்வபாவையாய் இருக்கிற இவளுக்கு –அதுக்கு மேலே-இவையும் ஆனால் என்னாய் விளையக் கடவதோ –(க்ஷண விரஹ அஸஹிஷ்ணுத்வம் )

திரிகின்றது வடமாருதம்--மத களிறு ஆளைக் கணிசித்து உலாவுமா போலே -வருத்தம் செய்வதில் கருத்தை வைத்து திரிதல் -விகாரப்படுகிறது என்றுமாம் –இயற்கையான குளிர்ச்சி மாறி வெவ்விதாயிற்றே-திங்கள் வெந்தீ முகத்து-சொரிகின்றது -வெவ்விய நெருப்பை குடத்தையிட்டு மொண்டு சொரியுமா போலே –-வெந்தீ -லோகத்தில் உள்ள தீயில் வியாவர்த்திக்கிறது-அதுவுமது -மீண்டும் சொல்ல வாய் கூசி –அதுவும் -அது என்கிறாள் –படியின் மேல் வெம்மையைப் பகரினும் பகரு நா முடிய வேம் -கம்பர் –என்னலாம் படி-கண்ணன் விண்ணூர் தொழவே-சரிகின்றது சங்கம் –செயற்கை அழகு குலைந்தமை–தண்ணம் துழாய்க்கு வண்ணம் பயலை-விரிகின்றது முழு மெய்யும்-இயற்க்கை அழகு குலைந்தமை-வாடை திங்கள் சொரியும் வெப்பத்துக்கு ஆற்றாமல் தண்ணம் துழாயை நாடி –
துயரங்களை பொறுக்க மாட்டாத மென்மை உடையவள் –மெல்லியற்கே-

திரிகின்றது வடமாருதம்-வாடைக்காற்று உலவா நின்றது – கொல்லும் யானை திரிகின்றது -என்னுமா போலே–திங்கள் வெந்தீ முகத்து சொரிகின்றது-பூர்ண சந்த்ரனானது லௌகிக அக்னி தண்ணீர் என்னும்படியான கொடிய நெருப்பைக் குடத்தை இட்டு முகந்து சொரிவாரைப் போலே சொரியா நின்றது-அதுவுமது ,-முன்பு திரிகிற வடமாருதமும் அப்படியே–கண்ணன் விண்ணூர் தொழவே சரிகின்றது சங்கம்-கிருஷ்ணனுடைய பரம வ்யோம ஸப்த வாஸ்யமான பரமபதத்தை
நித்ய அஞ்சலி பந்தம் -மோக்ஷ தர்மம் -1-64–பண்ணி அனுபவிக்க வேணும் என்கிற மெலிவாலே வளை சரியா நின்றது-சரிகின்றன -என்றும்-சொல்லுவர்தண்ணம் துழாய்க்கு வண்ணம் பயலை விரிகின்றது முழு மெய்யும்-முழு மதியாலும் வாடையாலும் யுண்டான வெம்மை தணிக்கைக்குக் குளிர்ந்த திருத்துழாயில் அபி நிவேசத்தாலே ஸ்வா பாவிகமான நிறத்தை அமுக்கி பயலை நிறமானது உடம்பு எங்கும் பரவா நின்றது –என்னாம் கொல் என் மெல்லியற்கே-ஆற்ற மாட்டாத ம்ருது ஸ்வ பாவையாய் எனக்குத் துணையான இவளுக்கு என்னாய் முடியுமோ என்று வெறுத்தாள் ஆயிற்று –இத்தால்-வாடையும் திங்களும் வெந்தீயும் சொரியும் என்கையாலே ஆஸ்வாஸ கரருமாய் ப்ரகாஸ கரருமாய்க் கொண்டு லோக உபகாரகரான சீதள ஸ்வ பாவரும் பகவத் விஸ்லேஷ தசையில் தாப ஹேதுவாவர் என்ற படிகண்ணன் -இத்யாதியாலே ப்ராப்ய தேசத்தில் அபி நிவேசம் பிறந்தால் தன் கையில் யுண்டான மினுக்கமும் குலைந்து (கை வளையும் மேகலையும் காணேன் )அத்தலையில் போக்யதையில் யுண்டான ப்ராவண்யத்தாலே அசாதாரண ஆகாரமும் அந்யதா பாவிக்கும் படியான
ஆர்த்தி அதிசயத்தைச் சொல்லுகிறது-என்னாம் கொல் -இத்யாதியாலே -தங்களுக்கு உஜ்ஜீவன ஹேதுவானவருக்குப் பிறந்த ஆர்த்தி என்னாய் முடிகிறதோ என்று ஸூஹ்ருத பூதர் வெறுத்து யுரைத்தார் ஆயிற்று

ஸ்வாபதேசம் –
திரிகின்றது வடமாருதம் திங்கள் வெந்தீ முகத்து-சொரிகின்றது அதுவுமது-
இனிய பொருள்கள் எல்லாம் அவனை நினைவு படுத்தி ஆழ்வாரை இப்பாடு படுத்துகின்றனவே –
கண்ணன் விண்ணூர் தொழவே-சரிகின்றது சங்கம் –சர்வ ஸூலபன் எம்பெருமான் பரம பதத்தில் விருப்பம்-உண்டானதால் பார தந்தர்யம் இழக்க வேண்டி வருமே
தண்ணம் துழாய்க்கு வண்ணம் பயலை-விரிகின்றது முழு மெய்யும் —போக்யதையில் ஈடுபட்டு ஸ்வரூபமும் மாறி ஆற்றாமை விஞ்சிய படி
என்னாம் கொல் என் மெல்லியற்கே-எங்களுக்கு உரியரான ஆழ்வாருக்கு இது என்னாய் முடியுமோ –

ஸ்வாப தேசம்
இத்தால்-ஆழ்வாருடைய ப்ரக்ருதியா உண்டான மார்த்வத்தையும் ஆற்றாமையையும்
இவர் ஆசைப்பட்டது அந்தரங்க விருத்திகள் ஆகையால் அது பெறாமையால் வரும் ஆற்றாமை பாடாற்றலாம் அல்லது என்னும் இடத்தையும் கேட்டவர்கள்- இனி இவரைக் கிடைக்க மாட்டாதோ என்னும்படியான தம் தசையைப் பார்ஸ்வத்தவர்கள் பாசுரத்தால் தாம் அனுபவிக்கிறார் –

தாத்பர்யம்–பகவத் அலாபத்தால் தளர்ந்த தசையில் பாதகமான லௌகிக பதார்த்த தர்சனத்தாலே
நொந்த ஆழ்வார் தசையைக் கண்டு பார்ஸ்வத்தார் திருத் தாயார் பாசுரமாக அருளிச் செய்கிறார்
நாயகன் பிரிந்த சமயம் பார்த்து வந்த மாந்த மாருதம் பூர்ண சந்திரன் போன்றவை இவளை மேலும் நலிய வெம்மை தணிக்கைக்குக் குளிர்ந்த திருத்துழாயில் அபி நிவேசத்தாலே இவள் அங்கே- பரமபதம் சென்று-நித்ய அனுபவம் பெற்று ஆனந்திக்க ஆசைப்பட்டு இருக்க இவற்றின் நலிவாலே இவள் காலம் என்னவாய் ஆகுமோ என்று வெறுத்துப் பேசும் பாசுரமாய்ச் செல்லுகிறது –

8-2-நங்கள் வரி வளை யாயங்களோ-ப்ரவேஸம்-

நங்கள் வரி வளை–பிரவேசம்
மேல் திருவாய்மொழி பிராபகத்தில் நோக்கு -இத் திருவாய்மொழி பிராப்யத்திலே நோக்காய் இருக்கிறது –

மேலே அவன் குணங்களிலும் ஸ்வரூபத்திலும் ஐயம் கொண்டு தெளிந்து
வணங்குமாறு அறியேன் -என்று தம் தலையிலே ஒரு சாதனத்தை செய்வதற்கு உரிய தகுதி இல்லாமையை தெரிவித்து
யானும் நீ தானே யாவதோ மெய்யே -என்று தம் பாரத்தை அவன் பக்கலிலே வைத்தமையைச் சொல்லி
இப்படி பிராசங்கிகமாக-அவனே பிராபகன் என்னும் இடத்தை அறுதி இட்டார் –

அவனே பிராபகனாம் இடத்தில் பேற்றுக்கு கால தாமதத்துக்கு–காரணம் இல்லையாய் இருக்க –
அவன் வந்து முகம் காட்டாது ஒழிதற்கு காரணம் உண்டாக வேண்டும் என்று பார்த்தார் –
அதில் அவன் பக்கல் பார்க்கலாவது ஒன்றும் இல்லை-இதுக்கடி நம் பக்கலிலே ஆக வேண்டும் என்று பார்த்தார்

என்னுடைய பாபமே சொல்ல முடியாதபடி மிகுதியும் இருக்கிறது -இதில் சந்தேகம் இல்லை -என்றாளே அன்றோ பிராட்டி –
மமைவ துஷ் க்ருதம் கிஞ்சித் மஹத் அஸ்தி ந சம்சய-சமர்தாவபி தௌ யன்மாம் நாவே ஷேதே பரந்தபௌ-சுந்தர -38-48

இவரும் அப்படியே பல நாள் அலைந்து திரிந்து–கண்டவை எல்லாவற்றிலும் ருசி பண்ணிப் போந்தோம்-
நம்முடைய முன்னைய செயல்களையும் நமக்கு இப்போது உள்ள அளவையும்
சர்வஞ்ஞனான சர்வேஸ்வரன்-அறியாமை அல்லை –

பூர்வ ஸூஹ்ருதம் -நாமும் அறியாமல் -சாஸ்திரமும் அறியாதே கிடப்பது ஈஸ்வரன் அபிப்ராயத்தால்
மடி மாங்காய் இட்டு யாதிருச்சிகம்-போலே –
நாம் அறியாது இருக்க–அவன் அறிய — அவன் பக்கல் ருசியிலே நமக்கு குறை உண்டாக வேண்டும்-என்று பார்த்து
அது உண்டாகவுமம் இல்லையாகவுமாம் –
புறம்பு உண்டானவற்றில் ருசி இல்லை என்னும் இடத்தை அவன் திரு உள்ளத்தில் படுத்துவோம் -என்று பார்த்து –

பிராப்யத்துக்கு தடையாக உள்ளவற்றிலும் -கிளி முதலானவை —
பிராபகத்துக்கு தடையாக உள்ளவர்கள் இடத்திலும் -தாயார் முதலானோர்–
பிராப்ய பிரதானம் தானே இது —
பிராபக விரோதித்வம் -தத் சிசுரூஷைகளால் பலன் கிட்டும் -அதனால் தாயார் பிராபக விரோதி என்றவாறு
தமக்கு ருசி இல்லாமையை அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிறார் –

சர்வேஸ்வரனோடு கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி–அவன் தானே வரக் கண்டு இருக்கை அன்றிக்கே-
அபி சாரிகையாய் –அபி நிவேசத்துடன் -அவன் இருந்த தேசத்துக்கு ஏறப் போவதாக ஒருப்பட-
இதனை நினைத்த தோழிமார் தொடக்கமானார்–உனக்கு இது ஆகாது காண் -என்று ஹிதம் சொல்லி மீட்கப் பார்க்க-
அவர்களைக் குறித்து
தோழிமார் தொடக்க மானவர்களிலும்–மற்றும் உள்ளவர்களிலும்–நசை இல்லாமையை அவர்களுக்கு அறிவிக்க பாசுரத்தாலே-
தமக்கு நசை இல்லாமையை அவன் திரு உள்ளத்திலே படுத்துகிறார் –

இரண்டாம் திருவாய் மொழியில் -தம்முடைய ஆகாங்ஷானு ரூபமாக அகவாயிலே அவன் வந்து முகம் காட்டினப்பாடியை அனுசந்தித்தவர் –
அவனுடைய பூர்த்தியைக் கண்டு பாஹ்ய சம்ச்லேஷம் பண்ண அபி நிவேசித்து அதித்வரித சித்தராய் ப்ராப்ய பூதனான ஈஸ்வரனுடைய
அபிகம்யத்வ ஸூ சகமான ஸுலப்யாதி குணாவத்தையையும்
அனுபாவ்ய ஆகாரத்தையும்
ஆகர்ஷகமான ஆபி ரூப்யத்தையும்
அநிஷ்ட நிராசகமான பரிகரவத்தையும்
அபரிச்சேதயமான உஜ்ஜ்வல்ய அதிசயத்தையும்
அதிசயித ஞானர்க்கும் அவபந்தும் அசக்தையையும்
அபி நிவேச ஜனகமான ஆகார விசேஷங்களையும்
அந்நிய சக்த விஷயத்தில் அஸூல பதையையும்
அநந்யார்ஹத்வ ஆபாதகத்வத்தையும்
சித்த அபஹாரியான திவ்ய விக்ரஹ உச்ச் ராயத்தையும்
அனுசந்தித்து ஏவம் பூதனான சர்வேஸ்வரனை அனுபவிக்கும் இடத்தில் இவ்வருகு யுண்டான அனுபவத்தில் சங்கம் அற்றால் அல்லது
சித்தியாது என்று அறுதி இட்டு த்வரையாலே ஆர்த்தரான தம்முடைய ஆர்த்தியை ஆற்றுகைக்காக
உன்முகரான ஸூ ஹ் ருத பிரக்ருதிகளைக் குறித்து தம்முடைய நிஸ் சங்கதையை வெளியிட்ட பிரகாரத்தை
நாயகனான ஈஸ்வரனைப் பிரிந்த நாயகியானவள் தன்னுடைய அபிசரண உத்யோகத்தாலே தோழிமார் தாய்மாராடு
தான் வளர்த்த கிளி பூவை மயில் குயில்களோடு வாசியற சர்வர் பக்கலிலும் சங்கம் அற்று
தன்னுடைய ஸ்த்ரீத்வாதி குணங்களையும் அநா தரித்து அவன் வடிவு அழகிலே அபஹ்ருத சித்தையான
ஆகாரத்தைப் பேசின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

நங்கள் வரி வளை யாயங்களோ
நம்முடை ஏதலர் முன்பு நாணி
நுங்கட்கு யான் ஓன்று உரைக்கும் மாற்றம்
நோக்குகின்றேன் எங்கும் காண மாட்டேன்
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன்
தடமுலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன்
வெங்கண் பறவையின் பாகன் எங்கோன்
வேங்கட வாணனை வேண்டிச் சென்றே–8-2-1-

நங்கள் வரி வளை யாயங்களோ–நான் சங்கை அற்று இருக்கிறேன்–
நீங்கள் சங்கை உடையீர் கோளாய் இருக்கின்றீர் கோள் அல்லீரோ –
(சாடு -கீழே பட்ட சங்கை இவளுக்குப் போந்ததே
இவள் முன்பு பட்ட அதி சங்கை தவிர்ந்து அன்றோ இருந்தாள் )

வேண்டிச் சென்று ஓன்று பெறுகிற்பாரில்
என்னுடைத் தோழியர் நுங்கட்கேலும்
ஈண்டு இது உரைக்கும்படியை அந்தோ
காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்
காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன்
விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால்
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான்
எத்தனை காலம் இளைக்கின்றேனே ?–8-2-2

தன் பக்கல் தொங்காதவை எல்லா வற்றுக்கும் புகல் அங்கே என்று இருக்கிறான் –
இவளுக்கு கை முதல் அங்கே அன்றோ–
சங்கு தங்கு முங்கை நங்கை– ஸ்வ ரஷணம் ஸூவான்வயம் போனதே -அவன் இடம் சேர்ந்ததே -அவனே சித்த உபாயம் என்றபடி
இது வாகில் உன் துணிவு காலம் சென்றவாறே நீயே இளைத்து மீளுகிறாய் -என்ன

கள்வன் —
நோக்காலே தன் செல்லாமையைக் காட்டி என் ஆத்துமாவையும் ஆத்துமாவோடு–சம்பந்தப் பட்ட பொருள்களையும் கொள்ளை கொண்டவன் –

கூடச் சென்றேன் இனி என் கொடுக்ககேன்
கோல் வளை நெஞ்சத்து தொடக்கம் எல்லாம்
பாடற்று ஒழிய இழந்து வைகல்
பல்வளையார் முன்பு பரிசு இழந்தேன்
மாடக் கொடி மதிள் தென் குளந்தை
வண் குடபால் நின்ற மாயக் கூத்தன்
ஆடற் பறவை யுயர்த்த வெல் போர்
ஆழி வலவனை யாதரித்தே–8-2-4-

ஆழி வலவனை ஆதரிப்பும்
ஆங்கவன் நம்மில் வரவுமெல்லாம்
தோழியர்காள் ! நம்முடையமே தான் ?
சொல்லுவதோ ?இங்கரியது தான்
ஊழி தோறூழி யொருவனாக
நன்கு உணர்வார்க்கும் உணரலாகா
சூழலுடைய சுடர் கொளாதித்
தொல்லை யஞ்சோதி நினைக்கும் காலே-8-2-5-

நினைக்கும் கால் நன்கு உணர்வாருக்கும் -ஒருவனாக ஊழி தோறு ஊழி உணரல் ஆகா –
சூழல் உடைய சுடர் கொள் ஆதித் தொல்லை அம் சோதி ஆழி வலவனை –ஆதரிப்பும்–ஆங்கு அவன் நம்மில் வரவும் எல்லாம்–
தோழியர்காள் நம் உடையமே தான்– சொல்லுவதோ இங்கு அரியது தான் -என்று -விலஷண வஸ்துவே சுலபன் ஆனால் பற்ற அடுக்குமோ விட அடுக்குமோ -என்கிறாள் –

தொல்லை யஞ் சோதி நினைக்குங்கால்
என் சொல்லளவன்று இமையோர் தமக்கும்
எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யும்
அத்திறம் நிற்க எம்மாமை கொண்டான்
அல்லி மலர்த் தண் துழாயும் தாரான்
ஆர்க்கிடுகோ இனிப் பூசல் ?சொல்லீர்
வல்லி வள வயல் சூழ் குடந்தை
மா மலர்க் கண் வளர்கின்ற மாலே-8-2-6-

என்னோடே இட்டீடு கொண்டு அல்லது தரியாதானாய் நம்முடைய நிறத்தை கொண்டது–தன்னுடைய வைலஷண்யத்தை பாராதே அன்றோ–

மா மலர்க் கண் வளர்கின்ற மால்–
சம்பந்தம் உள்ளவன்–மலர்ந்த தாமரைப் பூ போலே இருக்கிற கண் என் அளவில் அலரக் காண்கிறிலேன் -என்றது-
விசேஷ கடாஷம் செய்யக் காண்கிறிலேன் -என்றபடி-எங்கும் பக்க நோக்கு அறியான் என்றவாறே -இப்பொழுது இத்தைச் சொல்கிறார் –
கூக்குரல் கேட்க அண்மையில் இருப்பவன் ஆதலின்–குடந்தை மலர்க் கண் வளர்கின்ற -என்கிறாள் –

வல்லி வயல் சூழ் குடந்தை மா மலர்க்கண் வளர்கின்ற மால் தொல்லை அம் சோதி -என்று தொடங்கி
ஆர்க்கு இடுகோ இனிப் பூசல் சொல்லீர் -என்று முடிக்க –

மாலரி கேசவன் நாரணன்
சீ மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று
ஓலமிட வென்னைப் பண்ணி விட்டிட்டு
ஒன்றுமுருவுஞ் சுவடுங்காட்டான்
ஏல மலர்க்குழல் அன்னைமீர்காள் !
என்னுடையத் தோழியர்காள் ! என் செய்கேன் ?
காலம் பல சென்றும் காண்பதாணை
உங்களோடும் எங்களிடை இல்லையே–8-2-7-

ஓலம் இட
கார்யப்பாடு அற கூப்பிடும்படி

என்னை பண்ணி
ஸ்ருஷ்டஸ்த்வம் வநவாசாயா ஸ்வநுரக்த ஸூஹ்ருஜநே–ராமே பிரமாதம் மாகார்ஷீ புத்ர ப்ராதரி கச்சதி -அயோத்யா -40-5-

வனத்தில் வசிப்பதற்காகவே படைக்கப் பட்டாய் -என்றபடி –
இதுவே யாத்ரையாகச் செய்து

விட்டு -என்னை தன் பக்கலில் நின்றும் பிரித்து

இட்டு -அறிவு இல்லாத பொருளைப் போலே பொகட்டு

ஒன்றும் உருவும் சுவடும் காட்டான் –
தன் வடிவைக் காட்டுகின்றிலன்-தான் இருந்த இடத்துக்கு ஓர் அடையாளமும் காட்டுகின்றிலன் -என்றபடி

இடையில்லை யான் வளர்த்த கிளிகாள்!
பூவைகாள் ! குயில்காள் ! மயில்காள் !
உடைய நம்மாமையும் சங்கும் நெஞ்சும்
ஒன்றும் ஒழிய வொட்டாது கொண்டான்
அடையும் வைகுந்தமும் பாற் கடலும்
அஞ்சன வெற்புமவை நணிய
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி
அவனவை காண் கொடானே--4-2-8-

அவன் சுனை உடையவன்–புறம்பேயும் ஒரு விஷயத்தில் நசை கிடக்க தனது அனுபவத்தைக் காட்டிக் கொடான்

மேலே-வணங்குமாறு அறியேன் என்று பிராபக ஆபாசங்களை விட்டார்–இங்கே பிராப்ய ஆபாசங்களை விடுகிறார்

காண் கொடுப்பான் அல்லனார்க்கும் தன்னைக்
கை செயப் பாலதோர் மாயம் தன்னால்
மாண் குறள் கோல வடிவு காட்டி
மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த
சேண் சுடர்த் தோள்கள் பல தழைத்த
தேவ பிராற்கு என் நிறைவினோடு
நாண் கொடுத்தேன் இனி என் கொடுக்கேன்
என்னுடை நன்னுதல் நங்கைமீர்காள்–8-2-9-

கை செயற்பாலது ஒரு கோல வடிவு -என்பதற்கு—ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய்! -சித்திரம் உயிர் பெற எழுதினாப் போலே இருந்துள்ள கோல வடிவு என்றும் பொருள் கூறலுமாம் –

கை செயல் -அப்பால் -சித்திரம் வரைய முடியாமல் என்றுமாம் -செயல் கிருத்ரிமம் வடிவு அக்ரித்ரிமம் –

என் நிறைவினோடு நாண் கொடுத்தேன் –
நான் இரண்டு ராஜ்ஜியம் இழந்தேன் –
இந்த்ரன் ராஜ்ஜியம் பெற்றுப் போந்தான்-
மகாபலி ஔதார்யம் பண்ணிப் போந்தான்-
ஆஸ்ரித பரதந்த்ரன் ஸுலப்யன் பட்டம் பெற்றான் அவன் –
நான் எனக்கு எல்லா செல்வமான அடக்கத்தையும் நாணத்தையும் இழந்தேன்–

மேலே நான்காம் பாசுரத்திலே -இனி என் கொடுக்கேன் -என்று சொல்லிற்று-
அதற்கும் இதுக்கும் வாசி என் என்னில்
பெரிய திருவடி முதுகில் இருப்பிலும் -கையும் திரு ஆழியுமான சேர்த்தியிலும் தோற்று-மாயக் கூத்தனை ஆதரித்து -கலக்கச் சென்று
கிட்டாமையாலே வந்த இழவு அதலில் –
ஸ்ரீ வாமனின் உடைய அழகிலும் சீலத்திலும் தோற்ற மகா பலியைப் போலே–எல்லா வற்றையும் இழந்தேன் என்கிறார் இப் பாசுரத்தில் –

என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள்
யானினிச் செய்வதென் என்னெஞ்சென்னை
நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி
நேமியும் சங்கு மிரு கைக்கொண்டு
பன்னெடுஞ் சூழ் சுடர் ஞாயிற்றோடு
பால் மதி ஏந்தி யோர் கோல நீல
நன்னெடும் குன்றம் வருவதொப்பான்
நாண் மலர்ப்பாத மடைந்ததுவே-8-2-10-

இனி செய்வது என்
இப்படி ஆன பின்பு எதனைச் செய்வேன்
இவற்றை மீட்கவோ
அவனை நியமிக்கவோ

நாள் மலர்ப் பாதம் அடைந்ததுவே
செவ்விப் பூவிலே வண்டு படிந்தாப் போலே சேர்ந்தது-

பாதமடைவதன் பாசத்தாலே
மற்ற வன்பாசங்கள் முற்ற விட்டு
கோதில் புகழ்க் கண்ணன் தன்னடி மேல்
வண் குருகூர் சடகோபன் சொன்ன
தீதில் அந்தாதி ஓர் ஆயிரத்துள்
இவையுமோர் பத்திசை யோடும் வல்லார்
ஆதுமோர் தீதிலராகி
இங்கு மங்கு மெல்லாம் அமைவார்கள் தாமே–8-2-11-

திருவடிகளை கிட்டுகையில் உண்டான விருப்பத்தாலே புறம்பு உண்டான வலிய பற்றுக்களை அடியோடே விட்டார்
இது வாயிற்று இத் திருவாய் மொழியில்-8-2- சொல்லிற்று ஆயிற்று-என்றது-
புறம்பு உண்டான பற்றுக்களை அற்று திருவடிகளை ஆசைப் பட்டவர் அல்லர் –
மாற்பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு -மூன்றாம் திருவந்தாதி -14 என்றபடியே-
திருவடிகளின் பற்றாலே -ஒரு காரணம் பற்றி வந்த புறம்பு உண்டான பற்றினைத் தவிர்ந்தவர் -என்றபடி

தடங்கல் விலகினால் தானே கிட்டும் -பிராப்யாந்தர சம்பந்தம் அறுத்த பின்பு தன்னடையே வருமே

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -46-மட நெஞ்சம் என்றும் தமது என்றும் –அருள் பெறுவார் அடியார் -10-6-

February 24, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

இன்று தாறும்-இது காறும் -இன்று வரை நெஞ்சைத் தூது விட்ட ஆழ்வார் அவனைப்போலவே
சீதாபிராட்டி இரண்டாம் பிரிவு போல் ஆனதே -முதல் பிரிவில் பெருமாள் துன்பம் பட்டார்
இரண்டாம் பிரிவில் அப்படி ஒன்றும் இல்லாமல் தரித்து இருந்தாரே -இதுவும் அவரைப் போலவே ஆனதே–அவர் ஆளை நமக்குள் வைக்கும் ஒற்றர் போல் அன்றோ இந்த நெஞ்சம்
அது தெரியாமல் நமது மட நெஞ்சம் என்று பிரமம் கொண்டுள்ளோம்
அப்படி நம்பி இருந்தால் -தூது விட்டால் -நெஞ்சு -திரும்பாதே -விடாதீர் என்று உபதேசிக்கிறார் –
போவதற்கு முன்பு இள நெஞ்சமாக இருந்து இப்பொழுது திடமான நெஞ்சு ஆனதே –
ஆழ்வாரைக் கை விடுவதில் உறுதியான நெஞ்சு-அருள் பெறுவார் அடியார் -10-6–நெஞ்சே மருள் ஒழி என்பார் அதிலே-திருவாறன் விளைக்காக்கவோ பரமபதத்துக்கோ –-உடையவன் கூப்பிட திவ்ய தேச ப்ராவண்யத்தில் மயங்கி போகாமல் இருக்காதே -அங்கு 

வாழி மட நெஞ்சே -என்று நெஞ்சை ஸ்துத்திவாறே–என்னை இப்படி ஸ்துத்திக்கிறது என் -நான் என் செய்தேன் -என்ன –இந்நாள் வரை பந்த ஹேதுவாய் போன நீ – அவனுடைய கடாஷத்துக்கு இலக்காகி சஹகரித்திலையோ- உன்னாலே அன்றோ நான் இது (பெரும் கேழலார் புண்டரீக கடாக்ஷம்) பெற்றது -என்று – கொண்டாடினார் கீழ் –கொண்டாடின அநந்தரம் ஸ்வப்பனம் போலே முன்புற்றை அனுபவம் மாநசனமாய்- பாஹ்ய சம்ஸ்லேஷ-அபேஷை பிறந்து – அது கை வராமையாலே கலங்கி – இவர் படுகிற வியசநத்தை  கண்டு – திரு உள்ளம் -நான் இங்குற்றை  செய்ய வேண்டுவது என் -என்ன –அப் பொன் பெயரோன் தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடிக் கீழ் போய் என் தசையை அறிவி -என்று திரு உள்ளத்தை தூது விட்டார் –அது மீண்டு வரக் காணாமையாலே நோவு படுகிறார் –பெரும் கேழலார்-என்று ஸ்ரீ வராகமான அவதாரத்தை ஆசைப்பட்டு –ஸ்ரீ நரஸிம்ஹமான   இடத்தே தூது விடுவான் என் என்னில் – இரண்டு அவதாரமும் ஆஸ்ரிதர் அர்த்தம்  என்கையாலே விடுகிறார்

மட நெஞ்சம் -என்று கீழே சர்வேஸ்வரன் மேல் விழுவதுக்கு–அல்லேன் -என்னாதே ஆபிமுக்யத்தை  பண்ணி அதுக்கு (சர்வேஸ்வரன் மேல் விழுவதுக்கு )உடன் பட்டது என்று நெஞ்சைக் கொண்டாடினார் –இப்போது அந்நெஞ்சை இன்னாதாகிறார் –இப்போது இன்னாதாகிறது  என் – அப்போது கொண்டாடுகிறது என் -என்னில் –ஆசை கரை புரளும்படி –அதுக்கு தானே கிருஷியைப் பண்ணி –
அவ்வாசைக்கு இரை இட்டு –இனி பிராப்தி அல்லது நடவாத சமயத்திலே –அதுக்கு தானே-சஹகரியாதே –தன்னைக் கொண்டு அகல நின்றது  என் என்று -இன்னாதாகிறார் –அவன் வரவு தாழ்ந்த இந்த சமயத்தில் அவன் நமது ஆர்த்தியை வளர்க்கப் பிரிய ‘இதுவும் அவனுடன் நின்று விட்டதே–இது சஹகரிக்கை ஆவது என் என்னில் – பந்த ஹேதுவானோ பாதி மோஷ ஹேது இதுவும் இறே- ரஷ தர்மேண பலேந சைவ (கிஷ்கிந்தா)-என்கிறபடியே ப்ராப்தி அளவும் செல்ல-தான் முகம் காட்டி -நீ பட்டது என்-என்ன வேணும் இறே-அஹம் சர்வம் கரிஷ்யாமி ஸஹ வைதேஹ்யா
என்று சொல்லி-பிரிந்த போது பண்ண வில்லையே –அவனே உபாயம் என்கிறது –-ப்ராப்த அப்ராப்த விவேகம் பண்ணி -நிஷ்கரிஷித்து சொல்லுகிற வார்த்தை -இறே –அவனே உபாயமாக செய்தேயும் -இத்தலையாலேயும் வருவன-குவாலாயுண்டு இறே –அவை தான் தனித்தே பேற்றுக்கு உடலாக மாட்டாமையாலே – ஒன்றாகச் சொல்லுகிறது அத்தனை இறே –அவன் ஸாஷாத் உபாயம்-இது நெஞ்சு பரம்பரையா உபாயம் ஆகுமே-இத் தலையால் வரும் அவை தான் -எவை என்னில் –பேற்றுக்கு சேதனன் தான் உளனாக வேணுமே –தான் உளன் என்னா–உபாயத்தில் அந்வயியான் இறே –புருஷார்த்தத்தை அறிந்து –ருசித்து –சஹகரிக்கைக்கு நெஞ்சு வேணுமே –உபாயாந்தரங்களை எதிர்பார்க்க மாட்டான்
இருந்தாலும் அதிகாரி வேண்டுமே-உபாயாந்தரங்களை விடுவதும் நாம் தானே-ஆனுகூல்ய சங்கல்பமும் நாம் தானே பண்ண வேணுமே-பிரதி கூல்ய வர்ஜனமும் நாம் தானே பண்ண வேணுமே
திட அத்யவசாயத்துக்கும் நாம் வேண்டுமே –ஈத்ருசங்கள் சில உண்டு இறே – இத்தலையால் வருவன -இவை தான் உண்டாக நிற்கச் செய்தேயும் –கரண சரீரத்தில் (உபாயத்தில் )நிவேசியாதே –சந்நிதி மாத்ரத்தாலே உபகாரங்களாய் நிற்கக் கடவது –அவனே உபாயமுமாய் – அவன் சித்த ஸ்வரூபமானுமாய்-இருக்கச் செய்தே – சம்சாரமும் அனுவர்த்திக்கிற ஹேது – ஈத்ருசங்களில் இல்லாமை இறே –ஆக –இப்படி ப்ராப்தி அளவும் நின்று -முகம் காட்டி தரிப்பிக்க வேண்டி இருக்க –
அது செய்யாமையாலே -நெஞ்சை இன்னாதாகிறது –

நீர் இருக்க –மட மங்கைமீர் -கிளிகள் தாம் இருக்க -மதுகரம் எலாம் நிறைந்து இருக்க –
மட அன்னம் முன்னம் நிரையாய் இருக்க -உரையாமல் யான் ஆர் இருக்கினும்
என்நெஞ்சம் அல்லது ஒரு வஞ்சம் அற்ற துணை இல்லை என்று ஆதரத்தினொடு
தூது விட்ட பிழை ஆரிடத்து உரை செய்து ஆற்றுவேன்
சீர் இருக்கும் மறை முடிவு தேடரிய திரு அரங்கரை வணங்கியே திருத் துழாய் தரில் விரும்பியே
கொடு திரும்பியே வருதல் இன்றியே வார் இருக்கும் முலை மலர் மடந்தை உறை மார்பிலே
பெரிய தோளிலே மயங்கி இன்புற முயங்கி என்னையும் மறந்து தன்னையும் மறந்ததே
–- ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கக் கலம்பகம் –24–

இப்படி இவர் வார்த்தை கேட்டுத் திருந்தின நெஞ்சு பகவத் விஷயத்திலே அவஹாகிக்க
இம் மாநஸ அனுபவத்துக்கு அநு ரூபமான பாஹ்ய அனுபவத்தில் அபி நிவேசம் பிறந்து
அது கிடையாமையாலே யுண்டான தளர்த்தியாலே சொன்ன பாசுரத்தை நாயகனான ஈஸ்வரனுடைய விஷயத்திலே நெஞ்சைத் தூதுவிட்ட நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-அவதாரிகை–கீழ் –ஸர்வேஸ்வரன் மேல் விழுவதற்கும்-அல்லேன் என்னாதே ஆபி முக்யத்தைப் பண்ணித் தமக்கு உடன்பட்டது என்று நெஞ்சைக் கொண்டாடினார்-இப்போது-நெஞ்சை இன்னாதாகிறார்–அது என் என்னில்–ஆசை கரை புரளும்படு அதுக்குத் தான் கிருஷி பண்ணி
அவ் வாசைக்கு இரை இட்டு இனி பிராப்தியால் அல்லது நடவாத ஸமயத்தில் அதுக்கு ஸஹ கரியாதே
தன்னைக் கொண்டு அகல நின்றது என்று இன்னாதாகிறார் –இது ஸஹ கரிக்கையாவது என் என்னில்
பந்த ஹேதுவானவோ பாதி மோக்ஷ ஹேதுவாவும் இறே-ர ரஷே தர்மேண பாவேந சைவ -கிஷ்கிந்த-1-128-என்கிறபடியே-பிராப்தி அளவும் செல்ல முகம் காட்டி ஓக்க நின்று நீ பட்டது எல்லாம் நான் பாட்டன் -என்ன வேணும் இறே–அவனை உபாயம் என்கிறது-ப்ராப்த அப்ராப்த விவேகம் பண்ணி நிஷ்கர்ஷித்துச் சொல்லும் வார்த்தை இறே–அவனே உபாயமாக நிற்கச் செய்தே இத்தலையில் வருவதும் யுண்டு இறே அவை தான் தனித்து நின்று பேற்றுக்கு உடலாக மாட்டாமையாலே
ஒன்றாகச் சொல்ல மாட்டாது ஒழிகிறது அத்தனை-இத்தலையால் வருமவை தான் எவை என் என்னில்
பேற்றுக்குச் சேதனன் தான் உளனாக வேணுமே-தான் உளன் என்னா உபாயத்தில் அந்வயியான் இறே
புருஷார்த்தத்தை அறிந்து ஸ்வீ கரிக்கைக்கு நெஞ்சு வேணும் இறே-ஈத்ருசங்கள் சில யுண்டு இறே -இத்தலையிலே வருவன இவை தான் உண்டாகா நிற்கச் செய்தேயும் தான் உபாய சரீரத்திலே நிவேசியாதே ஸந்நிதி மாத்ரத்தாலே உபகாரகங்களாய் நிற்க்க கடவது-அவன் உபாயமாய்
ஸித்த ஸ்வரூபனுமாய் இருக்கச் செய்தே இவனுக்கு சம்சாரம் அநு வர்த்திக்கிறதுக்கு ஹேது ஈத்ருசங்கள் இல்லாமை இறே-இப்படி பிராப்தி அளவும் நின்று முகம் காட்டித் தரிப்பிக்க வேண்டி இருக்க
அது செய்யாமையாலே நெஞ்சை இன்னாதாகிறார் –இன்று தாறும் திரிகின்றதே

மட நெஞ்சம் என்றும் தமது என்றும் ஓர் கருமம்  கருதி
விட நெஞ்சை உற்றார் விடவோ அமையும் அப் பொன் பெயரோன்
தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடிக் கீழ் விடப் போய்
திட நெஞ்சமாய் எம்மை நீத்து இன்று தாறும் திரிகின்றதே
-46-நெஞ்சைத் தூது விட்ட தலைவி இரங்குதல் 

அருளால் அடியில் எடுத்த மால் அன்பால்
இருளார்ந்த தம்முடம்பை இச்சித்து -இரு விசும்பில்
இத்துடன் கொண்டேக இசைவு பார்த்தே யிருந்த
சுத்தி சொல்லும் மாறன் செஞ்சொல் 
–96–இப்படி பரோபதேசம் தலைக் கட்டின பின்பு தம்மை அவன் திரு நாட்டிலே கொடு போகிக்கு த்வரிக்கும் படியையும்-கொடு போகும் இடத்தில் தாம் நியமித்தபடி கொடு போக வேணும் என்று தமக்கு அவன் பரதந்த்ரனாய் நிற்கிறபடியையும்-தாம் பெற்ற பேற்றின் கனத்தையும் தம்முடைய திரு உள்ளத்துக்குச் சொல்லி-இனியராய் பேசுகிற அருள் பெறுவாரில் அர்த்தத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார்–கரை ஏற்றுமவனுக்கு நாலாறும் உபதேசித்தார் –-

மட நெஞ்சம் -என்றும் –தமது -என்றும் –-நாட்டிலே இங்கனே இருப்பதொரு பிரமமுண்டு –தந்தாம் நெஞ்சு தந்தாமுக்கு பவ்யமாய் இருக்கும் என்றும் –இச் சேதனன் புருஷார்த்தத்தை சாதித்து கொள்ளுகைக்கு உறுப்பாக சர்வேஸ்வரன் இவனோடே கையடைப்பாக்கி வைக்கையாலே – இத்தை-தம்மது -என்றும் இருப்பர்கள்-இறே –இச் சரீரத்தை கொடுத்தவோபாதி -சரீர ஏக தேசமான நெஞ்சையும் புருஷார்த்தத்தை அறிந்து –ருசி பண்ணுகைக்காக-கொடுத்து வைத்தான் -ஆன  பின்பு – இவனுக்கு -என்னது -என்கைக்கு தட்டில்லை இறே –பவ்யராய் இருப்பார்க்கு –எதிர்தலை நோவு படா நின்றால்-
ஒக்க நின்று -முகம் காட்டி -நீ பட்டது என் -நான் பட்டது என் –என்ன வேணும் -இறே –சேஷபூதன் சேஷிக்கு அதிசயத்தை பண்ண வேணும் –அவை இரண்டும் இல்லையே இற்றே இதற்கு –

ஒரு கருமம்-இத்யாதி –ஒரு பிரயோஜனத்தை குறித்து -நெஞ்சை ஏவுகையிலே துணிந்தவர்கள் –
அக் கார்யம் தன்னையே விட்டுப் பிடிக்க அமையும் -இது செய்வது என்கிறதன்று-அக் கார்யம் தன்னை விட்டுப் பிடிக்க அமையும் என்கிறது –என்றான்-எதற்காக-விட தேடுகிறது என் -என்ன –அப் பொன் பெயரோன் -இத்யாதி –பவ்யமுமாய் –சேஷமுமாய் இருக்கிற இது செய்து திரிகிற கார்யம் இது அன்றோ –அப்பொன் பெயரோன் தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமதடிக் கீழ் விட –கார்யம் கொள்ள ஒண்ணாத தோரிடத்திலே தான் விட்டேனோ –நமக்கு கார்யம் செய்து உபகரித்து நிற்கிறவன் பக்கலில் அன்றோ விட்டது –ஆஸ்ரிதரில் ஒருவருக்கு செய்தது -தமக்கு செய்ததாக இருக்கிறார்அப் பொன் பெயரோன் – தன் வயிற்றிலே பிறந்த பிரஜை வாயாலே திருநாமத்தைச் சொல்ல – அவனை சத்ருக்கள் செய்யுமத்தைச் செய்து நலியக் கோலின க்ரௌர்யத்தை நினைத்து –-அப் பொன் பெயரோன் -என்கிறார் –

பள்ளியில் ஓதி வந்த –பள்ளி ஓதும் பருவத்திலே ஏதேனும் சொல்லிலும் கோதுகலாமாய் இறே இருப்பது –தன் சிறுவன்-ஆரேனும் பிள்ளைகள் சொல்லிலும் இனிதாய் இருக்கும் பருவத்திலே –
தன் வயிற்றில் பிறந்தவனும் -இறே–வாயில் ஓர் ஆயிர நாமம் ஒள்ளியவாகிப் போத –சத்ருவைச் சொல்லிலும் – காலிலே விழ வேண்டும்படி வார்த்தையை ஆயிற்றுச் சொல்லிற்று –அப்பருவத்தில்-
அவன் சொன்ன வார்த்தையாலே –ஒன்றையே குவாலாக சொல்லுகிறார் –ஒன்றுமோர் பொறுப்பு இலனாகி –அசஹ்ய அபசாரம் ஆயிற்று –நிருபாதிக பந்தம் உண்டாய் இருக்க -அவற்றையும் காற்கடை கொண்டு – சத்ருக்கள் செய்யும் அத்தைச் செய்தான் –பிள்ளையைச் சீறி –திருநாமம் சொன்னதுவே ஹேதுவாக-இவனை -புத்திரன் அன்று -என்று-கை விட்டான் – இவர் அவனோடு தமக்கு ஒரு சம்பந்தம் சொல்லுகிறார் –தட நெஞ்சம்--தேவதைகளுடைய வரத்தை ஊட்டியாக விட்டு – திரு உகிருக்கு இரை போரும்படி வளர்த்த பெரிய மார்பை –கீண்ட –நரசிம்ஹனுடைய சீற்றத்தை கண்டவாறே அவன் சரீரம் உருகிற்று –அநாயாசேன கிழித்து பொகட்டான்–பரியனாகி வந்த -வரம் கொடுத்து பருமனாக்கி வைத்த தேவதைகள்-பொன் பெயரோன் -கோப அக்னி பட்டு உருகிற்றே —பிரானார் –தகப்பன் பகையாக வந்து உதவின இவன்-தான் அகல நிற்கையாலே வந்த ஆற்றாமைக்கும் ஆள் விட்டால் பொறுத்திரான் (பொறுக்க மாட்டான் ) இறே-அவன் தெளிவிக்கு உதவின அவன் கலக்கத்துக்கு உதவாமை இல்லை இறே –அவனதும் பக்தியே ஆகிலும் –மத்தஸ் சர்வ மகம் சர்வம் -என்கிற தெளிவோடே கூடி இருக்கும் இறே –இவரதோ கலங்கி மூவாறு மாசம் மோஹித்தவர் அன்றோ-இவரும் கடல் ஞாலம் செய்தேன யானே என்னும் என்றும் பின்பு ஒவ்வொரு சமயம் தெளிவுடன் அநு காரம் செய்வார்

தமதடிக் கீழ் விட –அவன் திருவடிகளில் விட–போய் திட நெஞ்சமாய் –போகிற போது -இத் தலையில் ஆற்றாமை கண்டு கண்ணும் கண்ண நீருமாய் -இத் தலை பட மாட்டாதோ என்னும் படி இறே போனபடி –
அங்கே புக்கவாறே -அவன் ஸ்வாபத்தைப்  பஜித்தது- பிராட்டி உடைய இரண்டாம் பிரிவு போலே —அசோக வனம் முதல் பிரிவில் -தூங்காமல் -கடித்தது ஊறுவது தெரியாமல் இருந்தவர் இரண்டாம் பிரிவில் தரித்து தெம்பாக இருந்தாரே-அவன் தான் போகிற போதும் இவன் அகல நின்றால் தாழான் என்று இறே போக விட்டது –அவன் ஸ்வபாவத்தை பஜித்தது என்று கொடுமை சொல்லுகிற இதுக்கு
கீழ் உபகாரகர்  என்றதோடு சேர்த்தி என் என்னில் –அவ்  உபகாரத்தை பற்றிச் சொல்லிற்று அது –
இவ் ஆற்றாமையிலே முகம் காட்டாமையைப் பற்றிச் சொல்லிற்று இது
எம்மை நீத்து –என்னை அற சந்யசித்து–இன்று இத்யாதி –நாம் அல்லது தஞ்சம் இல்லாதாரைப் பொகட்டு போந்தோம் என்னும் –
அனுதாபத்தோடு ஓரிடத்திலே விழுந்து கிடந்தது என்று கேட்கப் பெற்றோம்-

கீழ் பாட்டில் ஸ்ரீ வராஹ அவதாரத்தில் ஈடுபட்டு இதில் ஸ்ரீ நரசிம்ஹ அவதாரத்தில் ஈடுபட்டு மீட்க முடியாத படி ஆழ்ந்தபடியை அருளிச் செய்கிறார் –விட நெஞ்சை உற்றார்-விஷம் போலே கொடிதான மனத்தை உற்றார் –அதற்கு உரியவர் விடவோ அமையும்–விட அமையுமோ -தூது விடத் தகுமோ -தகாது என்றும் உரைக்கலாம்-ஓர் கருமம் கருதி–நெஞ்சை உற்றார்-விட அமையுமோ–ஒரு காரியத்தைக் குறித்து மனத்தைத் தூது விடத் துணிந்தவர்கள்-அப்படி விடுவதில் காட்டிலும் அந்த காரியத்தை கை விடவே அமையும் -என்றவாறு-மறந்து அங்கேயே இருந்ததே -போய்-திட நெஞ்சமாய் -போகும் பொழுது
எனது பிரிவாற்றாமையை நோக்கி நெகிழ்ச்சி கொண்டு இருக்க-அங்கே போன பின்பு அவனைப் போலவே வன்மை கொண்டு விட்டதே –திரிகின்றதே-நம்மை அல்லது தஞ்சம் இல்லாதவரை தனியே விட்டு வந்தோமே அனுதாபித்து ஓர் இடத்தில் விழுந்து கிடாமல்-உல்லாசம் தோற்ற தான் நினைத்தபடி திரிந்து கொண்டு இருக்கின்றதே –

மட நெஞ்சம் என்றும்-மடப்பத்தால் தமக்கு விதேயமாகப் போந்த நெஞ்சு என்றும்–தமது என்றும்
விதேயத்வ மாத்ரம் அன்றிக்கே-கரணத்வ ப்ரயுக்தமான சேஷத்வ ஸம்பந்தம் யுண்டு என்றும்-ஓர் கருமம் கருதி-இது புறம்புள்ளாரைக் கொண்டு கொள்ளும் கார்யம் இன்றியே அந்தரங்க பூதரைக் கொண்டு கொள்ளுவதொரு கார்யம் என்று நினைத்து-விட நெஞ்சை உற்றார்–நெஞ்சைப் போக விடுவதாக அறுதி இட்டவர்கள்–விடவோ அமையும்–அந்த அறுதிப் பாட்டைத் தவிர அமையும்–ஓ -என்று-இழவைக் காட்டுகிறது–நெஞ்சிலும் அண்ணியாரும் யுண்டோ (அருகிலே உள்ளார் உண்டோ ) தவிருகிறது என் என்னில்–அப் பொன் பெயரோன் தட நெஞ்சம் கீண்ட பிரானார் -தமது அடிக் கீழ் விட துர்மானத்தாலும்
பகவத் பாகவத ப்ரத்வேஷத்தாலும் ப்ரஸித்தனாய்-பொன்னுக்குப் பர்யாயமான ஹிரண்யன் என்னும் பேரை யுடையவனுடைய அஹங்காரம் குடி கொண்ட இடமுடைய ஹிருதயத்தை அநாயாஸேந பிளந்த மஹா உபாகாரகனான ஸர்வேஸ்வரனுடைய திருவடிகளிலே போக விட–இத்தால் ஆஸ்ரயித்தவர்களுக்கு பிரபல விரோதிகள் யுண்டாகிலும் அநாயாஸேந கழித்துக் கொடுக்குமவன் ஆகையாலே நெஞ்சைப் போக விடுகைக்கு பற்றாசாகாச் சொன்ன படிபோய்த் திட நெஞ்சமாய்
விட்டதே பற்றாசாக விஷய வை லக்ஷண்யத்தாலே சடக்கெனப் போய் த்ருட அத்யவசாய யுக்தமாய்–இவ்விடத்தில் நெஞ்சு என்றது வியவசாயத்தைஎம்மை நீத்து–கார்யம் கொள்ளப் போக விட்ட
எங்களை நினையாமல் விட்டு–இன்று தாறும் திரிகின்றதே –இன்று அளவும் முக்தரைப் போலே
அனுபவமே யாத்ரையாய் அநு ஸஞ்சரணம் பண்ணித் திரியா நின்றது –இத்தால் தம்முடைய திரு உள்ளம் மீட்க அரிதாம் படி பகவத் விஷயத்திலே அவஹாகித்தமையை அருளிச் செய்தார் ஆயிற்று

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம்-மட நெஞ்சம் என்றும் தமது என்றும்-நாட்டிலே இங்கனேயும் பிரமம் யுண்டு-தம் தாம் நெஞ்சு தம் தனக்கு பவ்யம் என்று சேதனன் தான் புருஷார்த்தத்தை சாதித்துக் கொள்ளுகைக்கு உறுப்பாக ஸர்வேஸ்வரன் இவற்றை இவனோடு கையடைப்பாக்கி வைக்கையாலே இவற்றைத் தம் தாம் என்று இருப்பார்கள் இறே-இச்சரீரத்தைக் கொடுத்தவோ பாதி-சரீர ஏக தேசமான னென்கையும் புருஷார்த்தை யறிந்து ருசி பண்ணுகைக்காகக் கொடுத்தான்-அங்கே புக்கவாறே அவன் ஸ்வ பாவத்தைப் பஜித்தது பிராட்டியுடைய இரண்டாம் பிரிவு போலே அவன் தான் போகிற போது இவன் தாழ்க்க மாட்டான் என்று இறே போயிற்று-அவன் ஸ்வ பாவத்தைப் பஜித்தது என்று கொடுமை சொல்லுகிற இதுக்கு கீழ் உபகாரம் சொன்னதோடு சேர்த்தி என் என்னில் அங்கு உபகாரத்தைப் பற்றிச் சொல்லிற்று இங்கு இவ்வாற்றாமையாலே முகம் காட்டாமையான அத்தைப் பற்றிச் சொல்லிற்றுஎம்மை நீத்து-என்னை ஸந்யசித்தது–இன்று தாறும் தாறும் திரிகின்றதே-நம்மை யல்லது தஞ்சம் இல்லாதாரைப் பொகட்டுப் போந்தோம் என்னும் அனுதாபத்தோடே ஓர் இடத்தே இழந்து கிடந்தது என்று கேட்கப் பெற்றதாகிலுமாம் இறே தான் நினைத்த படி இன்று அளவும் ஸஞ்சரியா நின்றது –

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி-வியாக்யானம்–மட நெஞ்சம் என்றும் தமது என்றும் ஓர் கருமம்  கருதி விட நெஞ்சை உற்றார் விடவோ அமையும் -தங்கள் நெஞ்சு தங்களுக்கு விதேயம் என்றும்-நெஞ்சு தான் தங்களது என்றும் அத்யவசித்து இதுவும் மிகவும் அந்தரங்கர் செய்யுமது என்று எண்ணி நெஞ்சை அதுக்காக விட நினைத்தார்-அந்த நினைவை விடத்தக்கதே–அப் பொன் பெயரோன் தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடிக் கீழ் விடப்-நான் அந்தப் பொன் பெயர் உள்ளவனுடைய பகவத் பாகவத த்வித அத்வேஷங்களால் அகன்ற மார்வை விதாரணம் செய்த மஹா உபகாரகருடைய திருவடிகளில் என் நெஞ்சைப் போக விட–போய்திட நெஞ்சமாய்-சடக்கெனப் போய் என்னை விடுமத்திலும் அவரையே தொடர்வதிலும் அத்யவசாய தார்ட்யம் யுடையதாய்–எம்மை நீத்து-என்னை நிராகரித்து–இன்று தாறும் தாறும் திரிகின்றதே–தோளில் இட்ட திருத்துழாய் தாரும் தானுமாய் அவரோடே இன்றும் அநு சஞ்சரண ஸீலமாய் இரா நின்றதே-ஆகையால் ஆர்க்கும் தன் நன் நெஞ்சு என்று தூது விடலாகாது என்று –

தாத்பர்யம்
கீழ் உபதேசம் கேட்டு சர்வேஸ்வரனை அனுபவிக்க மானஸ அனுபவம் விஞ்சி-இப்படி இவர் வார்த்தை கேட்டுத் திருந்தின நெஞ்சு பகவத் விஷயத்திலே அவஹாகிக்க-இம் மாநஸ அனுபவத்துக்கு அநு ரூபமான பாஹ்ய அனுபவத்தில் அபி நிவேசம் பிறந்து அது கிடையாமையாலே யுண்டான தளர்த்தியாலே சொன்ன பாசுரத்தை நாயகனான ஈஸ்வரனுடைய விஷயத்திலே நெஞ்சைத் தூதுவிட்ட நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் – நமக்கு உபகரணமாக கொடுவிக்கப்பட்ட கற்ப்பிக்கப்பட்ட இம் மனஸ்ஸூ நமக்கு அடங்கி உதவும் என்று கருதி பார்ஸ்வத்தாருக்கு உபதேசிக்கிறார்
பலிஷ்ட சத்ருக்கள் அனைவரும் இவர் பெயர் மாத்ரம் கேட்டு-அதனாலே மாயும் ஸ்ரீ நரசிம்மன் –
பரம உபகாரகன் இடம் எனது நெஞ்சைத் தூது அனுப்பினேன்-உண்ணப் புக்கு வாயை மறப்பாரைப் போல அனுப்பிய என்னையும் என் காரியமும் மறந்து சுகமே இருக்க நீங்களும் மனஸ்ஸை அதே போல் அனுப்பி இழவாதே கொள்ளுங்கோள்-நீ எத்தனித்த கார்யம் மறக்கவே அமையும் நினைக்கவும் மனம் வேண்டுமே

அருள் பெறுவார் -பிரவேசம் –

பொய் நின்ற ஞானம் தொடங்கி -இவ்வளவும் வர –சர்வேஸ்வரனை ஆழ்வார் பின் தொடர்ந்த படி சொல்லிற்று –
இது தொடங்கி ஆழ்வாரைச் சர்வேஸ்வரன் பின் தொடருகிற படியைச் சொல்கிறது –

கண்ணன் கழலிணை யில் -இப்படி பக்தியின் தன்மையை உபதேசித்து-
கை ஒழிந்த பின் தன் பக்கலிலே இவர்க்கு விடாய் பெருகிற படியைக் கண்டு-
இவர்க்கு முன்பே விடாய்த்து திரு வாட்டாற்றிலே தங்கு வேட்டையாக -பரஸ்தானம் போலே -வந்து நிற்கிறவன் ஆகையாலே-
ஸ்வ ஸ்தானம் பரமபதம் அன்றோ -இவரைக் கொண்டு போகையிலே அவன் விரைவு மிக்கவன் ஆனான் –
இவர் விடாயின் அளவு அன்றே அவனுடைய விடாயின் அளவு –
சிரஞ்சீ வதி வைதேஹீ யதி மாசம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷணம்அபி விநாதாம் அஸி தேஷணாம்-சுந்தர -66-30-
ஒரு கணமும் நான் உயிர் தரித்து இருக்க மாட்டேன் -என்னும் ஏற்றம்-உண்டே அன்றோ அவன் விடாய்க்கு
வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னின் முன்னம்-பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
 -9-6-10-

ஆழ்வாரும் நாமுமாய் அனுபவிக்க வேண்டும் -என்று பாரித்து-அது செய்யும் இடத்தில்-
அனுபவத்துக்கு ஒரு பிரிவு வாராதபடி தன்னந்தனியே இருப்பது ஒரு தேச விசேடத்திலே கொடு போய் வைத்து-
அனுபவிக்க வேண்டும் -என்று பாரித்து-அங்கனம் செய்யும் இடத்தில்-
இவருக்கு பர தந்த்ரனாய் இவர் ஏவுகிறபடி செய்தோமாக வேண்டும் என்று-
இவர் அனுமதி ஒழியச் செய்த மாட்டாதவனாய் நின்றான்-
சர்வேஸ்வரனை தாம் ஏவ மாட்டாரே தம்முடைய பாரதந்த்ர்யத்தாலே-
இப்படி தம் பக்கலிலே மிக்க காதலைச் செய்கிறவனுடைய மேன்மையையும்-
அப்படி மேன்மையை உடையவன் தம் பக்கல் பாரதந்த்ர்யனாய் தாழ நிற்கிற படியையும் நினைந்து-
இதற்கு உசாத் துணையாக இவ் உலக மக்களை பார்த்த இடத்து-நாட்டார் உடன் இயல் ஒழிந்து –
அவர்கள் ஐம்புல இன்பங்களுக்கு வசப் பட்டவர்களாய் அவற்றோடு பணி போந்து இருந்தார்கள்-
சோஸ்ச்னுதே ஸர்வான் காமான் -என்று அவன் உடன் கூடவே இருந்தே அனுபவிக்கும் முக்த நித்யர் போலே –
அவனைப் பார்த்த இடத்தில் மிக்க காதலை உடையவனாய் முன்னடி தோற்றாதே இருக்கிறவன்-
ஆகையாலே அவன் இதற்கு ஆளாக மாட்டு இற்றிலன்-
இனி அவன் திரு அருளுக்கு இலக்கான தாமும் தம்மோடு-உடன் கேடான நெஞ்சமேயாய் இருந்தது –
அந் நெஞ்சினைக் குறித்து-
அவனுடைய மேன்மை இருந்த படியும்-அப்படி மேன்மை உடையவன் நம் பக்கல் தாழ நின்ற நிலையும்
நாம் பெற்ற பேற்றின் கனம் இருந்தபடியும் எல்லாம் கண்டாயே-
நம் கார்யம் விழுந்தபடி கண்டாயே -என்று இதனை தம் திரு உள்ளத்தோடு கூட்டி இனியர் ஆகிறார் –

இதற்கு முன்பெல்லாம்-
சர்வேஸ்வரன் ஆகிறான் எல்லாரையும் ஏவுகின்றவனாய்-ஸ்வ தந்த்ரனாய் இருப்பான் ஒருவன்-என்று இருந்தார்
இப்போது அங்கன் அன்று –
அடியார்கட்கு பரதந்த்ரப்பட்டு இருப்பதுவே அவனுடைய தன்மை என்கிறார்-
முன்பு எல்லாம் தம்மாலே பாரதந்த்ர்யத்தை இழந்தார்-
இப்போது அவனாலே பார தந்த்ர்யத்தை இழக்கிறார்-

அதுதான் -இருந்தும் வியந்து -என்ற திருவாய் மொழியில் சொல்லிற்று இல்லையே -என்னில்
அதைக் காட்டிலும் இதற்கு வாசி உண்டு –மூன்று தத்துக்கு பிழைத்த பிள்ளை என்ற பிரிவால் அன்றோ அங்கு –
இப்பொழுது -அடியார் தம் அடியனேன் -என்று காரணத்தோடு சொல்லுகிறார்-
சரம தசையில் தாம் நிற்பத்தால் வந்த விளைவு இது என்கிறார் –
நெடுமாற்கு அடிமை -பாடியதன் பயன் பெற்றார் –பாரதந்தர்யம் இழக்க முடியாதே –
நாம் ததீய சேஷத்வத்தில் நிற்கவே -அவனும் ஆஸ்ரித பாரதந்தர்யத்தில் நிலை நிற்கிறான் 
திவ்ய தேச பிராவண்யம் விட்டு -அவன் உடன் செல்ல -இத்தையே மருள் என்கிறார் -நெஞ்சுக்கு –இந்த பிராவண்யம் போக்க தானே திரு வாட்டாற்று எம்பெருமான் இடம் –
அவன் தானே இவரை அங்கே கூட்டிச் செல்ல த்வரிக்கின்றான்-
மருள் ஒளி மட நெஞ்சே -இத்தையே அருளிச் செய்கிறார் –

மோக்ஷ தாநத்தில் பிராண பாரதந்தர்யம் வளம் மிக்க நதியிலே கரை புரளும் -சூர்ணிகை -184-

அருள்  பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-

அருள் பெறுவார் அடியார் –-ராஜாக்கள் மகிஷிகளுக்கு விபூதிகளையும் தங்களையும் அவர்கள் அதீனமாக்கி வைப்பாரைப் போலே -ஈஸ்வரன் தன்னை முற்றூட்டாக கொடுத்து அனுபவிக்குமவர்கள் –
தன் அடியனேற்கு -நீக்கமில்லா அடியார் தம் அடியார் அடியார் அடியார் எங்கோக்கள் -என்று இறே தம் ஸ்வரூபத்தை நினைத்து இருப்பது –அடிகள் அடியே நினையும் அடியவர்கள் தம் அடியான் -பெரிய திருமொழி -2-6-10-என்கிறபடியே-இதனை ஆயிற்று இவர் தமக்கு ஸ்வரூபமாக நினைத்து இருப்பது –
ஆழியான்–திரு வாழி யாழ்வானை விஷயீ கரித்தாலே போலே விஷயீ கரிக்க நினையா நின்றான் –விடல் இல் சக்கரத்து அண்ணலை மேவல் விடல் இல் -2-9-11–என்கிறபடியே-
கையில் திரு ஆழியை விடல் அன்றோ உம்மை விடுவது -என்னா நின்றான்–ஆஸ்ரிதரை நிரூபகமாக யுடையவன் -என்றுமாம் –

அருள் பெறுவார் அடியார் – தன் அடியனேற்கு-இருவருக்கும் நிரூபகம் இருக்கிறபடி –
இவர் -அருள் பெறுவார் அடியார் தம் அடியார்-அவன் -ஆழியான்- இருவருக்கும் நிரூபகர் அடியார்களே காணும் –
அருள் தருவான் அமைகின்றான் -ஆஸ்ரிதர் எல்லார் பக்கலிலும் பண்ணும் அருளை -என் பக்கலிலே பண்ணுமவனாகச் சமைந்து நின்றான் –அஸ்மா பிஸ் துல்யோ பவது -என்னுமவர்கள் இறே இவர்கள் -ஸ்வதந்த்ரனாகில் தருகிறான் — இனிக் குறை என் என்னில் –
அது நமது விதி வகையே–அது நாம் சொல்லச் செய்வானாக நினைத்து இரா நின்றான் -அது நம்முடைய  பாக்யாதி குணம் இறே -என்றாய்த்து பூர்வர்கள் நிர்வாஹம் -இது பிரகரணத்தோடு சேராது -நாம் விதித்த படியே செய்வானாக நினைத்து இரா நின்றான் -என்று அருளிச் செய்தார் எம்பெருமானார் -தன் பக்கல் குறைவற்று இருந்தாலும் இத் தலையில் இச்சை பார்த்து இருக்கும் இறே –சொல் வகையே என்னாதே- விதி வகையே -என்றது -தானே தருமது வித்யதிக்ரமம் -என்று இருக்கை யாலே –விதியை மீறுவதில் பாபத்துக்கு அஞ்சுவாரைப் போலே அஞ்சா நின்றான்-நமது விதி வகையே –
த்வதீய புக்தோஜ்ஜித சேஷ போஜிதா-த்வயா நிஸ்ருஷ்டாத்மா பிரேன யத் யதா
ப்ரீயேன சேனாபதீனா ந்யயேதி தத்-ததா அனுஜாநத்தம் உதார வீஷணை
-ஸ்தோத்ர ரத்னம் -42
சேனாபதி முதலியாராலே எந்தக் காரியம் எந்தப்படி-விண்ணப்பம் செய்யப் பட்டதோ
அந்த கார்யத்தை அந்தப் படியே நிறைந்த அருளாலே அனுமதி செய்கின்றவனான உன்னை -என்கிறபடியே
இது பட்டர் தாமே அருளிச் செய்ய நான் கேட்டேன் என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்
இருள் தரும் மா ஞாலத்துள் –-நான் அவன் வழியே போகப் பார்த்தேன் -இங்கு உகந்து அருளின நிலங்களும் பாகவத ஸஹவாசமும் உண்டாய் இருக்க அவன் வழியே போக வேண்டுகிறது என் -என்ன -அஞ்ஞான அவஹமான ஸம்ஸாரமாகையாலே-ஞானாதிகனான ப்ரஹ்லாதனையும் எதிரிடப் பண்ணிற்று இறே –
இனி–அவன் கருத்தை அறிந்த பின்பு –
பிறவி யான் வேண்டேன்–வானுயிர் இன்பம் எய்திலென் மற்றை நரகமே எய்திலென் -என்கிற அது நான் வேண்டேன் -இனி ஈஸ்வர அபிப்ராயத்தாலே இருக்கில் இருக்கும் அத்தனை —
மருள் ஒழி நீ –நீயும் என் வழியே போரப் பார் –திரு வாறன் விளையதனை மேவி வலம் செய்து கை தொழக் கூடுங்கொல் –என்று உகந்து அருளின நிலங்களில் நசையாலே பிரமித்து ஓன்று உண்டு –அத்தைத் தவிர் –இங்கே உகந்து அருளின இதுக்கு பிரயோஜனம் அங்கே கொடு போகை யன்றோ –
வாட்டாற்றான் அடி வணங்கே–நம்முடைய நலத்தையே விரும்புகிறவன் வழியே போய் அவனை அனுபவிக்கப் பாராய்-நம்மை பரம பதத்துக்கு கொண்டு போக இங்கே வந்து இருப்பவன்-
அடி வணங்கு -என்பது அவனுடைய கருத்துக்கு இணங்கு -நமஸ்காரம் பொருள் இல்லை –
உகந்து அருளின நிலங்களிலே வந்து நிற்கிறது நம்மை அவ்வருகே கொடு போகைக்காக இருக்கும் –நீயும் அவன் நினைவில் போகப் பாராய் – அடி வணங்குகை யாவது -ஈர் அரசு தவிர்க்கை அன்றோ –

இங்கு நமது விதி வகையே
மேல் வாட்டாற்றான் பணி வகையே– வரும்
இரண்டுமே ஒன்றாக இருக்குமே-அவன் பணித்தது இவர் விதி விருப்பம் படியே என்று கொண்டானே –ஏக மதம்-

———-

வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானைப்
பாட்டாயே பல பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே
–10-6-2-

இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை செய்து அடிமை கொள்ள வேண்டும் -என்று நாம் விரும்ப-அதுவும் கிடக்கச் செய்தே அடிமை கொண்டான் கண்டாயே-இங்கேயே இந்த தேகத்துடன் -அடிமை கொண்டான் கண்டாயே-
பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து –நாம் அடிமை செய்ய-அடைவதற்குத் தடைகளாய்-பலகாலமாக ஈட்டப்பட்ட அவித்யை முதலியவைகள்-எல்லாம் போகப் பெற்ற படியைக் கண்டாயே –பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் படி யன்றோ கவி பாடுவித்துக் கொண்ட படி  கேசவன் எம்பெருமானை -பாட்டாயே பல பாடி-பிரசஸ்த கேசனாய் இருக்கிற அழகைக் காட்டித் தோற்பித்து கவி பாடுவித்துக் கொண்டான் -என்றுமாம் –கேசியை கொன்றால் போல் நம் விரோதிகளை நீக்கி-நம்முடைய அடிமைத் திறத்தினை நிலை நிறுத்தி-நமக்கு ஸ்வாமியாய் உள்ளவனை -என்றபடி –இவை வினை அறுக்க குடித்த வேப்பங்குடிநீர் இது காணும் –

நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே –ஒரு காரணம் பற்றி வந்த பந்துக்களை விட்ட அளவேயோ-ஒரு காரணமே இல்லாமல் பந்துவாக இருக்கும் சர்வேஸ்வரனை பற்றவும் பெற்றோம் –விட்டவர்கள் தம்மை வேறு ஒரு தன்மையாலே பற்றுகிறார் காணும் –ஆகாராந்தரம் -நார சப்தத்துக்குள் உண்டே-நாரணனை நண்ணினமே-படுக்கைக்கு கீழே மிகப் பெரிய நிதி கிடக்க-புறங்கால் வீங்கி சாவாரைப் போலே அன்றோ–நாராயணனாக -அந்தர்யாமியாக -இருக்கச் செய்தேயும் நண்ணாமல் இருந்த படி

————-

நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி
மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே
எண்ணினவாறு ஆகா இக் கருமங்கள் என் நெஞ்சே
 –10-6-3-

நெஞ்சே – நம்மை அங்கீ கரிக்க வல்லனே-என்று நாம் இருக்க –அவ்வளவு அன்றிக்கே பலிக்கிற படி-என் -என்கிறார்-
இஷுவாகு வம்ச ராகு குல நாயகன் கிடைப்பானோ என்று நாம் இருக்க ராக்ஷஸ குல தம்பி கிடைப்பானோ என்று அன்றோ பெருமாள் இருந்தார் –

நாமங்கள் பல சொல்லி–மேன்மைக்கும் நீர்மைக்கும் போக்யத்தைக்கும் ப்ரகாசகமான பல திரு நாமங்களையும் சொல்லி –

மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான்-ரஷ்யம் குறைவற்ற தேசம் ஆகையால் ரக்ஷகனுக்கு சம்பத்து மிக்கு இருக்கும் இங்கு -கைங்கர்யத்துக்கு விச்சேதம் இல்லாமையால் சேஷ பூதனுக்கு சம்பத்து மிக்கு இருக்கும் அங்கு –

மோஷ தானத்தில் பிரணத பாரதந்த்ர்யம்-வளம் மிக்க நதியிலே கரை புரளும் -ஆச்சார்ய ஹிருதயம் ஸ்ரீ ஸூக்தி-சூர்ணிகை -85

ஆவது அழிவது ஆகிற இந்த உலகம் இவருக்கு தரம் அன்று என்று காணும் அவன் நினைவு-
இவர்க்கே கொடுக்கை யாவது -இவர் வேண்டிக் கொண்டவாறே -வழு விலா அடிமையைக் கொடுக்கையே அன்றோ –

எண்ணினவாறு ஆகா இக் கருமங்கள் –இக் காரியங்கள்- நாம் அவன் பாடே செல்லவும்- நாம் அர்த்திக்கவும்-
நாம் அதிலே தவரிக்கவும்- அவன் நினைவு பார்க்கவும் -எண்ணி இருந்த பிரகாரம் அன்றியே
தானே வருகையும் -அபேக்ஷிக்கையும் -த்வரிக்கையும் – நினைவு தான் பார்க்கையுமாக ஆய்விட்டான் –

விதி வகையே -விண்ணுலகம் தருவானாய் -விரைகின்றான் –
இவருக்கு ருசி பிறப்பதற்கு முன்பு தான் எதிர் சூழல் புக்கு விரைந்து திரிந்தான்-
ருசி பிறந்த பின்பு இவர் விரையத் தொடங்கினார்-
அது கண்டு அவனும் இவர் அளவு அல்லாதபடி விரைகின்றான்-அது கண்டு இவர் ஆச்சர்யப் படுகிறார்-உடையவன் அன்றோ உடைமையை பெறுகைக்கு விரைவான் –

————-

என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இருந்தமிழ் நூல் இவை மொழிந்து
வன்னெஞ்சத்து இரணியனை மார்வு இடந்த வாட்டாற்றான்
மன் அஞ்சப் பாரதத்து பாண்டவர்க்காய் படை தொட்டான்
நன்னெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே-
10-6-4-

என்னைக் கொண்டு திருவாய் மொழியைச் சொல்லுவிக்கையாகிற இந்த ஸம்ருத்தியில் காட்டிலும் சீரியதோ திரு நாடு என்கிறார்-என் நெஞ்சத்து உள் இருந்து-
பல காலம் இவ் உலகத்திலே தன்னை ஒழிந்த ஐம் புலன்-இன்பங்களை உகந்து போந்தது என்றாயிற்று-இவர் என் நெஞ்சு -என்று இறாய்க்கிறது
இதில் குணமும் குற்றமும் கிடந்தபடி கிடக்க இவர் -என்னது -என்றதுவே காரணமாக-அவன் மேல் விழா நின்றான்-
இவர் –என் நெஞ்சு -என்று புறம்பே கால் வாங்கா நின்றார்-
அவன் அதுவே காரணமாக உள்ளே போக அடி இடா நின்றான் –
விடாயர் மேலில் நீரை நீக்கி உள்ளே ஆழ முழுகிக் கிடக்குமாறு போலே-நெஞ்சின் உள்ளே புகுந்தார் என்பார்–உள் என்கிறார் – –என்  நெஞ்சத்து உள் இருந்து இங்கு-புறம்பு ஒரு விபூதி உண்டு என்று நினையாதே ஸ்த்தாவர ப்ரதிஷ்டையாக இரா நின்றான் -பரம பதத்தில் பரிமாற்றத்தை சம்சாரத்திலே உண்டாக்கினான்-அங்கே இல்லாத செல்வத்தையும் இங்கே உண்டாக்கினான் –திருவாய் மொழி உண்டாக்கி – என் முன் சொல்லும் -7-9-2-என்றவற்றையும் ஒன்றாக நினைக்கின்றிலர்-அதனால் மொழிவித்து என்னாமல் மொழிந்து என்கிறார் –படை தொட்டான் –படை எடுத்தான்-படை விட்டான் -என்னப் பெற்றது இல்லை-தான் மேற்கொண்ட குறிக்கோளை குலைத்தான் இத்தனையே –கார்யம் கொள்ளப் பெற்றது இல்லை-–நமக்கு அருள் தான் செய்வானே–நமக்கு அவ் வருளைப் பண்ணியே விடும் –விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் என்ற பேற்றை பண்ணியே விடும் -இது நிச்சிதம் –இசைவுக்கு நீ யுண்டு –இசைவைக் கொண்டு கார்யம் செய்கைக்கு அவனோடு சம்பந்தம் யுண்டு -நம் பேற்றுக்கு குறை யுண்டோ –நெஞ்சு அநு கூலித்தது-அல்லேன் என்கைக்கு நீ உண்டு –ஆவோம் என்கைக்கு அவன் உண்டு –அவனை பிரேரிக்கைக்கு கிருபை உண்டு -காருண்ய ரூபை ஸ்ரீ மகா லஷ்மி உண்டே –நமக்கு அருள் பண்ணியே விடும் –விண்ணுலகம் பேற்றைக் கொடுத்தே தீருவான் –இசைவிக்க அவன் உண்டு –இசைந்த பின்பு கார்யம் முடிக்க சம்பந்தம் உண்டே -நம் பெருமான் –பேறு கிட்டியே தீரும்

————–

வான் ஏற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே
நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே
தேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை
தான் ஏறித் திரிவான தாளிணை என் தலை மேலே
-10-6-5-

வான் ஏற வழி தந்த –பரம பதத்தில் பொய் புகுகைக்கு -அர்ச்சிராதி மார்க்கத்தைத் தந்த –
பரமபதத்தை பெறுவதில் காட்டிலும் அவ்வருகே ஒரு பெரும் பேறு என்னும்படி அன்றோ -அர்ச்சிராதி -அடைதல் –போம் வழியைத் தரும் -3-9-3-என்று ஈடு படும்படி அன்றோ அதனுடைய சிறப்பு இருப்பது –

வான் ஏற வழி தந்த-திருநாடு பெற வேணும் என்று அபேக்ஷை யுடையார் எல்லார்க்கும் வான் ஏறுகைக்கு ஈடான உபாயத்தைக் கொடுத்து அருளினான் –ஆறாயிரப்படி

பணி வகையே –அவன் திரு உள்ளம் ஆனபடியே -என்றது-
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்றதனைச் சொல்லுகிறார் –
பண்டே பரமன் பனித்த பணி வகையே -10-4-9-என்றாரே அன்றோ –
அன்றிக்கே-மரணமானால் -9-10-5- என்றதனை சொல்லிற்று ஆகவுமாம் –

பிள்ளை அழகிய பெருமாள் அரையர் -கிரந்தியைப் பார்த்து -கட்டியை பார்த்து-
திருவரங்க நாதன் திருமாலை திருப் பரிவட்டம் முதலானவை வரவிட்டு அருள-
நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே -என்று-கிரந்தியைப் பார்த்து சிரித்து சொன்ன வார்த்தையை நினைப்பது –

தான் ஏறித் திரிவான தாளிணை என் தலை மேலே –திருவடி திருத் தோள்களிலும் -என் தலையிலுமான-இது தவிர்ந்து-என் தலையிலே யாயிற்று-
அவன் இழவுக்கு வெறுக்க வேண்டா அன்றோ –அவன் தானே கொடு வந்து கொடுக்கப் பெற்றவர் ஆகையாலே அன்றோ ஒரு பழு ஏறப் பெற்றது –திருவடி புருஷாகாரமாக பெற்றார் இறே-

————-

தலை மேலே தாளிணைகள் தாமரைக் கண் என் அம்மான்
நிலை பேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம்பெருமான்
மலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான் மதம் மிக்க
கொலையானை மருப்பு ஒசித்தான் குரை கழல்கள் குறுகினமே
–10-6-6-

தாளிணைகள் தலை மேலே –நின் செம் மா பாத பற்புத் தலை சேர்த்து -2-9-1- என்றும்-
பாத பங்கயமே தலைக்கு அணியாய் -9-2-2- என்றும்-
நான் வேண்டிக் கொண்ட படியே அழகிய திருவடிகளாலே தலை அலங்காரமாகப் பண்ணினான் –

என் நெஞ்சிலே நிற்பது-அப்படியே கண்களுக்கு இலக்காம்படி முன்னே நிற்பது-
திருவடிகளை தலை மேலே வைப்பது-ஆகிய இவை எல்லாம் ஒரு காலே செய்யா நின்றான் –சௌபரி ஐம்பது வடிவு கொண்டால் போலேயும்-
முக்தன் இறைவனை அனுபவிக்க பல வடிவுகளைக் கொள்ளுமாறு போலேயும்-
இறைவன் தான் இவரை அனுபவிக்க பல வடிவுகள் கொள்ளா நின்றான் –

எம்பெருமான்-உடமை உடையவனைப் பெற்றால் இருக்கும் அளவு அன்று இ றே உடைமையைப் பெற்றால் உடையவனுக்கு இருப்பது –

மதம் மிக்க கொலையானை மருப்பு ஒசித்தான் –அனுபவத்துக்கு தடைகளாக உள்ளவை அடங்கலும்-குவலயா பீடம் பட்டது படும் இத்தனை –
அவன் இவன் விரோதியைப் போக்க இவன் அனுபவத்தில் சேர்த்தல் தகும் –

குரை கழல்கள் குறுகினமே –ஆபரணத்தின் ஒலி செவிப்படா நின்றது –
தடம் தாமரை கட்கே கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -6-9-9- என்று
வேண்டிக் கொண்டது பெற்றோம் –விடாய் தீரும் படி கிட்டப் பெற்றோம் –

————–

குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடி கொண்டான்
திரை குழுவு கடல் புடை சூழ் தென்னாட்டுத் திலதம் அன்ன
வரை குழுவு மணி மாடம் வாட்டாற்றான் மலர் அடி மேல்
விரை குழுவு நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே
–10-6-7-

கோவிந்தன் குடி கொண்டான் –அரவத்து அமளியினோடும் அழகிய பாற்கடலோடும்-
அரவிந்த பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து -பெரியாழ்வார் திருமொழி -5-2-10-
என்கிறபடியே திருவாய்ப் பாடியிலே ஐந்து லஷம் குடிகளோடும் கூடக் காணும் இவர் நெஞ்சிலே புகுந்தது –எம்பெருமான் ச பரிகரமாக வந்து என்னுள்ளே புகுந்து அருளினான் -அத்தாலே என் உடம்பு நிரந்தரமாக த் திருத் துழாய் நாறா நின்றது -என்கிறார் –

மெய்ந் நின்று கமழுமே –கோயில் சாந்து நாறுகிறபடி-என் உடம்பு முழுவதும் எப்பொழுதும் நாறா நின்றது –
அன்றி மற்றோர் உபாயம் என் -8-9-10-என்று தோழி சொல்லியும்-
வெறி கொள் துழாய் மலர் நாறும் -4-4-3- என்று தாயார் சொல்லியும்-போந்த இது-தன் வாயாலே சொல்லும்படி ஆயிற்று –
என் வார்த்தை அறிய வேண்டுமாகில்-
என் உடம்பை மோந்து பார்க்க மாட்டீர்களா -என்பாள் -மெய்ந்நின்று கமழுமே -என்கிறாள்-

செய்த நன்றி தேடிக் காணாதே-கெடுத்தாய் தந்தாய் என்ற-அத்வேஷ ஆபிமுக்யங்களும்
சத் கர்மத்தால் அல்ல
 -ஆச்சார்ய ஹிருதயம் ஸ்ரீ ஸூ க்தி -சூர்ணிகை 2-22-இங்கு நினைத்தல் தகும்-

———————-

மெய்ந்நின்ற கமழ் துளவ விரை ஏறு திரு முடியன்
கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது புனல்
மைந்நின்ற வரை போலும் திரு உருவ வாட்டாற்றாற்கு
எந்நன்றி செய்தேனோ என்நெஞ்சில் திகழ்வதுவே
–10-6-8-

இறைமைத் தன்மைக்கு அறிகுறியான தார் -அது
நினைத்தது செய்ய முடிக்க வல்ல கருவி அது –
வடிவு அழகு அது –
இப்படி துறை தோறும் தலைமை பெறும்படி இருக்கிறவன்-என் நெஞ்சிலே புகுந்து-பெறாப் பேறு பெற்றானாய் இரா நின்றான் –மிக உயர்ந்த மேன்மையினை உடையனான எம்பெருமான்-திரு வாட்டாற்றிலே வந்து சுலபனாய்-
என் மனத்திலே வந்து புகுந்து-பேர் ஒளியன் ஆகைக்கு -நான் என்ன நன்மை செய்தேன் 

எந்நன்றி செய்தேனோ என்நெஞ்சில் திகழ்வதுவே–என்ன நன்மை செய்தேனாக –பெரிய வுடையாரைப் போலே என்னை அழிய மாறினேனோ –திருவடியைப் போலே தனி யிடத்தில் உதவினேனோ –தன்னுடைய ஆஞ்ஞா ரூபமான விஹிதங்களை அனுஷ்டித்தேனோ –என் நெஞ்சில் புகுந்த பின்பு விளங்கினான் என்னும் படி விரும்பிற்று —

———–

திகழ்கின்ற திரு மார்வில் திரு மங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு
புகழ்கின்ற புள்ளூர்தி போர் அரக்கர் குலம் கெடுத்தான்
இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே
–10-6-9-

எல்லாப் பொருள்களாலும் நிறைவு பெற்று இருக்கின்ற தான்-இகழாதே -என் மனத்தினை-
எக்காலத்திலும் விடுகின்றிலன்-ஒருவனுடைய காதல் இருந்தபடி என் –என்று பிரீதர் -ஆகிறார்-ஸ்ரீ யபதியான ஏற்றத்தோ பாதி போருமாய்த்து திரு வாட்டாற்றை கலவிருக்கையாக யுடையவனாகையும் –

புகழ்கின்ற புள்ளூர்தி –புகழ் நின்ற புள்ளூர்தி –
புகழ் எல்லாம் தன் பக்கலிலே கிடக்கும்படி இருக்கிற பெரிய திருவடியை-வாகனமாக உடையவன்
புகழ் அடங்கலும் கிடப்பதுவும் அவன் பக்கலிலே-அதனை உடையவன் -என்கிற இதுவே இவனுக்கு ஏற்றம் –

தனக்கு திவ்ய மஹிஷி சர்வ லோக மகேஸ்வரியான பெரிய பிராட்டியார் –
சேர்விடம் திரு வாட்டாறு –
தன் திருவடிகளில் கைங்கர்ய ஏக ரதித்வமே புகழாக யுடையனாய் இருந்த பெரிய திருவடி -தனக்கு நித்ய வாகனமும்-ஆஸ்ரித விரோதி நிரசன உபகரணமும் –
இங்கனே இருந்து வைத்து என்னுடைய நிகர்ஷத்தைப் பார்த்து என்னை இகழாதே ஒரு க்ஷணம் என்னைப் பிரிவில் தரிக்க மாட்டாத
ஸ்வபாவத்தை யுடையனாய்க் கொண்டு என் நெஞ்சினுள்ளே புகுந்து இருந்து அருளினான் –ஒருவனுடைய குணவத்தை இருக்கும் படியே இது என்கிறார் –

————

பிரியாது ஆட்செய்து என்று பிறப்பறுத்து ஆள் அறக் கொண்டான்
அரியாகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று
பெரியார்க்கு ஆட் பட்டக் கால் பெறாத பயன் பெறுமாறு
வரி வாள்வாய் அரவணை மேல் வாட்டற்றான் காட்டினனே
-10-6-10-

பிரியாது ஆட் செய்து என்று பிறப்பறுத்து ஆள் அறக் கொண்டான்
நம்மைப் பிரியாதே நமக்கு அடிமை செய் -என்று அருளிச் செய்து-பிறப்பினையும் போக்கி
நித்யமாக செய்யப் படுகின்ற தொண்டினையும்-எனக்குக் கொடுத்தான் –
1-பிரியாது ஆட் செய்து என்று-எனக்கே ஆட் செய் -என்ன வேண்டும் என்று -நாம்-
எம்மா வீடு -என்ற திருவாய் மொழியிலே வேண்டிக் கொண்டபடியே – செய்தான் –
2-பிறப்பறுத்து-இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று-
பொய் நின்ற ஞானமும் -என்ற பாசுரத்திலே விரும்பியபடியே-பிறப்பினை அறுத்தான்
3-ஆள் அறக் கொண்டான்-தனக்கே யாக என்று எம்மா வீடு -திருவாய்மொழியில் வேண்டிக் கொண்ட படியே ஆள் அறக் கொண்டான் –
கால அவதி இல்லாமல் என்றும்-தனக்கே யாக அற என்றுமாம் –பெரியோர்களை அடைந்தால்-பின்னை அவர்கள் கொள்ளுகிறவன் சிறுமை பார்த்தல்
கொடுக்கிறவன் பெருமை பார்த்தல் செய்யாதே கொடுப்பார்கள்-என்று இங்கனே நாட்டில் ஓன்று உண்டு-அதனை என் பக்கலிலே காட்டினான் –உபய விபூதியிலும் தம்மைப் போலே திருவாய் மொழி பாடப் பெற்றார் இல்லை என்று இருக்கிறார் –தாம் அனுபவிப்பதற்காகவே இறைவன் அவதாரங்கள் என்று இருக்கிறார் இவர்-

————-

காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே
–10-6-11-

காட்டித் தன் கனை கழல்கள் –தன் கனை கழல்களைக் காட்டி-நிர்ஹேதுகமாக தன் ஸ்வரூப ரூப குண விபூதிகளைக் காட்டி –கழல் -திரு மேனிக்கு உப லஷணம்-

ஆரார் வானவர்கள்-இதனைச் சொல்ல கேளா நின்றால்-இன்னம் சொல் இன்னம் சொல் -என்னும் இத்தனை போக்கி-கேட்டவற்றைக் கொண்டு மனம் நினைவு பேரார்கள் ஆயிற்று-நித்ய ஸூரி போக்யதையை அருளிச் செய்கிறார் –
பகவான் உடைய குணங்களை அனுபவித்து-அதற்கு போக்கு விடுகைக்கு பாசுரம் இன்றிக்கே-விம்மல் பொருமலாய் படுமவர்கள்-இப்பாசுரம் கேட்டால் விடார்கள் அன்றோ –
அதற்கு காரணம் என்-
அவனுடைய சீல குணங்களை அனுபவித்தோ என்னில்-இப் பாசுரத்துக்கு தோற்று -என்கிறார் –செவிக்கு இனிய-
கேட்ட போதே இன்பம் பயப்பது -செவி வழியே புக்கு நெஞ்சுக்கு இனிதாகை அன்றிக்கே-செவியில் பட்ட போதே பிடித்து இனிதாய் இருக்கையாலே-

அதற்க்குக் காரணம் என் என்னில் –செஞ்சொல்லே – நினைவும் சொல்லும் செயலும்-ஒருபடிப் பட்டு இருக்கையாலே-சிந்தையினாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே -8-5-11-என்னா-செந்தமிழ் பத்தும் -என்றார் அன்றோ இவர் தாமே –

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -45-பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர் புண்டரீகம்-ஊனில் வாழ் உயிரே -2-3-

February 24, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

பக்திப்பெரும் கடல் ஆழ்வார்-தாம் பெற்ற பேற்றினை கீழே அனுபவித்தார்
தம்முடைய தமர்களுக்கு பிறப்பு இனி வராதே-பொசிந்து பொசிந்து அருகில் உள்ள ஏழு ஏழு பிறவிகளிலும் நம்மளவும் பேறு வந்ததே ஆழ்வார் சுற்றத்தார்களில் ஒருவராக ஒதுங்க வேண்டியதே நம் கர்த்தகவ்யம்–மாத பிதா உரு பெரு செல்வமும் -மாறன் செந்தமிழ் ஆரணமே
ராமானுஜ முனி வேழம் சம்பந்தியாவதே வேண்டும்
-இவன் பெருமையைச் சொல்லு பார்ப்போம் -இவன் பெருமையைச் சொல்ல வழி இல்லையே-வாழி மடநெஞ்சமே-அஹம் ஸ்மராமி -மத்பக்தம் நயாமி -ஸ்ரீ வராஹப் பெருமாள்-மொத்தமாக -ஆழ்வார் மேல் கடாக்ஷிக்க – மலர் புண்டரீகம்-மலர்ந்த- மலர்ந்து கொண்டே மலரப்போகிற -புண்டரீகம் மன்னனுடைய விபீஷணக்குக்காக மலர்கண் போல்–அகாலம் -பிரளய காலம் -அ இ உ -மூன்றும் இல்லாத இந்தக் காலத்தில் -ஸம்ஸார பிரளயம் அதிலும் மேல் அன்றோ-இப்படி பேறு பெற்றார் நம் போல் யாரும் இல்லையே-மருங்கே -ஆழ்வார் சம்பந்திகள் இடமும் வராதே-உளரே -உளர் அல்ல -வருமே -வராதே -எதிர்மறை ஏவகாரம் சொல்லு -என்பதுக்கும் சொல்ல முடியாதே-பேசாமல் இருக்கவே வாழி மடநெஞ்சமே

ஊனில் வாழ் உயிரே நல்லை போ உன்னைப் பெற்று
வானுளார் பெருமான் மதுசூதன் என்னம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே-
-சந்தோஷமாக அருளிச் செய்கிறார்
தேனும் பாலும் போல் கலந்தோம் –-அறியாத காலத்து அன்பு செய்து -பஸ்யதோ ஹரத்வம்
அறியாமை குறளாய் -அவன் அறியாமலே வஞ்சிக்கப்பட்டது போல் -எனது ஸம்ஸாரம் போக்கி
இராமடம் ஊட்டுவரைப் போல் உபகாரகன் நேரக் காண நிற்கில் ஆள் இட்டு விலக்குவோமே
அதே போல் இந்தப் பாசுரத்திலும் –எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்-நான் என்ற தத்வம் இல்லாதது போல்-ஐக்யா பத்தி அல்லவே –கூடிற்றாகில் நல் உறைப்பு – எல்லாம் தன்னுள்ளே -அப்ருதக் ஸித்த விசேஷணம்

தலைவி தலைவன் இடம் நீரிடை உதவி–பூத்தரு புணர்ச்சி ––புனல் தரு புணர்ச்சி –-களிறு தரு புணர்ச்சி
மூன்றும் உண்டே –-தன்னைக் காத்தவனுக்குத் தன்னைக் கொடுப்பாள் காதலில் இங்கு ஆழ்வார் –தன்னைக் காத்துக் கொண்டால் அதுக்குத் தன்னையே கொடுப்பார் குவலயா பீடம் தன்னை ரக்ஷித்து கொண்டதுக்கு ஆழ்வார் தம்மையே கொடுப்பார்–மஹா வராஹ -நீரில் விளையாடி -நீரிடை ரக்ஷணம் -நானும் அவர்களில் ஒருவன் தானே –-பூமி -கோட்டிடை நாமும் பூமியில் ஓர் ஏக தேசம் தானே – முன்பு செய்த உபகாரகம் -நெஞ்சுக்குக் காட்டிக் கொடுக்கிறார் –-ஸம்ஸார பிரளயத்தில் இருந்தும் ரக்ஷிப்பானே-ஊனில் வாழ் உயிர் போல் மகிழ்ந்து அருளிச் செய்கிறார்

கீழே அவன் அருளால் தான் பெற்ற பேற்றை அருளிச் செய்து-இதில் தம்முடைய சம்பந்தி சம்பந்திகளையும் சம்சாரம் கிட்ட வற்றோ – விசேஷ கடாக்ஷ விஷயீ க்ருதரானார்கள் என்று களிக்கிறார்

இப்படித் தமக்கு ஈஸ்வரன் தன் மஹாத்ம்யத்தைப் பிரகாசிப்பித்த படியை அனுசந்தித்து
ஸந்துஷ்டாரான அளவிலே –இவர் திரு உள்ளமானது ஸம்ஸார ஆர்ணவ மத்யஸ்தரான நமக்கு
பாரித்தால் போலே அவன் உபகரித்தான் என்று ஹ்ருஷ்டராகா நின்றீர்-சம்சாரத்தில் நின்றும் உத்தீர்ணரானவர்கள் பெறக் கடவ பேறானது நமக்கு நிலை நிற்கக் கூடுமோ என்று திரு உள்ளத்துக்கு கருத்தாக அவன் பூர்ண கடாக்ஷம் பெற்ற நமக்கு குறையில்லை காண் என்று அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-அவதாரிகை-இப்படி ஸ்வ யத்ன சாத்யமல்லாத வஸ்துவை ஒரு ஹேது இன்றிக்கே இருக்கப் பெற்றுக் கொடு நின்றேன்-இப்படி இருக்கிற எனக்கு ஒப்பாவார் புறம்பு யுண்டோ
ஸம்ஸார துரிதம் தான் என்னைப் பின்னாட்ட வற்றோ -என்கிறார் –

பெரும் கேழலார்  தம் பெரும் கண் மலர் புண்டரீகம் நம் மேல்
ஒருங்கே பிறழவைத்தார் இவ்வகாலம் ஒருவர் நம் போல்
வரும் கேழ்பவருளரே தொல்லை யாழி யஞ்சூழ் பிறப்பும்
மறுங்கே வரப் பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே
-45-தலைவி தலைவன் நீரில் உதவியதை நினைந்து உரைத்தல் –

ஊனம் அறவே வந்துள் கலந்த மாலினிமை
யானது அனுபவித்தற்காம் துணையா -வானில்
அடியார் குழாம் கூட ஆசை யுற்ற மாறன்
அடியார் உடன் நெஞ்சே ஆடு—-13-தம்முடைய ஆர்த்தி தீர வந்து கலந்த எம்பெருமான் உடைய
சம்ச்லேஷ ரசத்தை பேச ஒருப்பட்டு எப்பேர்பட்ட இனிமையும் விளையும் படி தம்முடனே அவன் வந்து
ராமஸ்து சீதயா ஸார்த்தம்-இத்யாதிப் படியே ஏக தத்வம் என்னலாம் படி கலந்தபடியையும்
அந்த கல்வியால் வந்த ரசம் தம் ஒருவரால் உண்டு அறுக்க ஒண்ணாத படி அளவிறந்து இருக்கிற படியையும் அனுசந்தித்து தனித் தேட்டமான இதர விஷயங்கள் போல் அன்றிக்கே துணைத் தேட்டமாய் அதுக்கு இவ் விபூதியில் ஆள் இல்லாமையாலே இவ் வனுபவத்தில் நிலை நின்ற நித்ய சூரிகள் திரளிலே போய்ப் புக்கு அனுபவிக்கப் பெறுவது எப்போதோ என்று பிரார்திக்கிற ஊனில் வாழ் அர்த்தத்தை ஊனம் அறவே வந்து -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –அபி நிவேசத்திலே ஊன்றின ஆழ்வார் அடியாரான இங்குத்தை ஸ்ரீ வைஷ்ணவர்களோடே நெஞ்சே கூடி யாடு
அன்றிக்கே – அக் குழாத்தில் முழுகி அனுபவிக்கப் பார் -என்றுமாம் அடியீருடன் கூடி நின்று ஆடுமினோ -என்றார் இறே

ஆழி யம் -மண்டலாகாரம் -ஸம்ஸார சூழல் -பெரியவாச்சான் பிள்ளை நிர்வாகம்
வாழி யம் சூழ் பிறப்பு –ஸ்வரூப ப்ரயுக்தமான வாழ்வைப் பெற்றோம் -வாதிகேசரி ஜீயர் நிர்வாகம்
ராமானுஜ அங்க்ரி சரணோஸ்மி குல ப்ரதீபத்வ ஆஸீத் ச யமுந முநேஸ் ச ச நாத வம்ஸ்யஸ்
பராங்குச முநேஸ் ச ச ஸோபி தேவ்யாஸ் தாஸஸ் தவேதி வரதாஸ்மி தவே ஷணீயஸ்
–-வரதராஜ ஸ்தவம் –102—சங்கிலி தொடர் அருளிச் செய்கிறார்-

வரத-ராமானுஜ அங்க்ரி சரணோஸ்மி –அடியேன் எம்பெருமானாருடைய திருவடிகளைச் சரணமாக அடைந்தவன்-விப்ரர்க்கு கோத்ர சரண ஸூத்ர கூடஸ்தர் பராசர பாராசர்ய போதாய நாதிகள் –-ப்ரபந்ந ஜன கூடஸ்தர் பராங்குச பரகால யதிவராதிகள்-ச து –அந்த எம்பெருமானாரோ-யமுந முநேஸ் குல ப்ரதீபத்வ ஆஸீத் –ஆளவந்தாருடைய வித்யா வம்சத்துக்கு அணி விளக்காக ஆனார்-ராமானுஜரும் –தூய் நெறி சேர் எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம் கதி பெற்று உடையன் அன்றோ –ச ச –அந்த ஆளவந்தார் தாமும்-நாத வம்ஸ்யஸ் –வித்யா அந் வயத்தாலும் குடல் துடக்காலும் ஸ்ரீ மந் நாதமுனிகளுடைய வம்சத்தவர்-பிதா மஹம் நாத முனிம் விலோக்ய ப்ரஸீத மத் வ்ருத்தம் அசிந்தயித்வா -என்ற குடல் துவக்கும் உண்டே–ச ச -அந்த நாதமுனிகளும்-பராங்குச முநேஸ் வம்ஸ்யஸ் –நம்மாழ்வாருடைய வம்சத்தவர்-குருகையில் வந்த குல முனிவனுடைய குலக் கொழுந்து
ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் அமுதத் திரு வாய் ஈரத் தமிழின் இசை உணர்ந்தோர்கட்க்கு
இனியவர் தம் சீரைப் பயின்று உய்யும் சீலம் கொள் நாத முனி அன்றோ
ச ச ஸோபி–அந்த ஆழ்வாரும்
தவ தேவ்யாஸ் தாஸஸ் –உனது பிராட்டிக்கு அடியவர்-ஆழ்வாரும் உனக்குப் படுக்கைப் பற்று அன்றோ –
பங்கயத்தாள் திரு அருளும் கொண்டவர் அன்றோ
இதி தவ கடாக்ஷணீயஸ் அஸ்மி –இந்த பாரம்பர்யத்தாலே தேவரீருக்கு அடியேன் கடாக்ஷிக்கத் தகுந்தவன் ஆகின்றேன் அன்றோ-நிகமத்தில் தம்மைக் கடாக்ஷித்து அருள வேண்டுவது பேர் அருளாளனும் அவர்ஜநீயம் என்னும் இடத்தை மூதலிக்கிறார்

பெரும் கேழலார் –ரஷ்யத்தின் அளவு அன்றிக்கே –ரஷகனுடைய பாரிப்பு இருக்கிற படி –மாசுடம்பில் நீர் வாரா –ஏறும் அழுக்கு எல்லாம் ஏறும் படியாக இருக்கை–(பரம் சுடர் உடம்பாய் -அழுக்கு பதிந்த சுடர் உடம்பாய் -வ்ருத்த விபூதி ஆகாரகன் )பன்றியாம் தேசு ஆத்மாநாம் மானுஷம் மன்யே -என்று கேழலான தேஜஸ்ஸூக்கு ஸ்ரீ வைகுண்ட நாதனாய் இருக்கும் தேஜஸ் போராது  இருக்கை –துயின்ற பரமன் -துயிலும் போதே பரமன்-இங்கும் பன்றியால் ஆனதால் வந்த தேஜஸ்ஸூ-அது இருக்கும் தேஜஸ் இது பிறந்து பெற்ற தேஜஸ் ஸ்ரேயான் உ தேஜஸ்-உகாரம் ஒவ்வொன்றிலும் வைத்து வியாக்யானம்-என் கண் பாசம் வைத்த பரம் சுடர் ஜோதியை– ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது தேசமோ -(3-3)-தன்னை அறியாதார்க்கு முகம் கொடுத்தவனுக்கு தன்னை அறியும் அவர்களுக்கு தான் முகம் கொடுத்தான் என்றது ஓர் ஏற்றமோ –பெரும் கேழலார்-
சிலம்பினிடை சிறு பரல் போல் பெரிய மேரு திருக்குளம்பில் கணகணப்பத் திருவாகாரம் குலுங்க நில மடந்தை தனை இடந்து புல்கிக் கோட்டிடை வைத்து அருளிய எங்கோமான் கண்டீர் இலங்கிய நான்மறை அனைத்தும் அங்கம் ஆறும் ஏழிசையும் கேள்விகளும் எண்திக்கு எங்கும்
சிலம்பிய நற்பெருஞ்செல்வம் திகழும் நாங்கூர்த் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே!”
.–

தம் பெரும் கண் மலர் –-பெரும் கேழலார்  என்ற உடம்பு-அடைய-கண்ணாய் இருக்கை –-கடல் போலே பெருத்து அது நிறைய தாமரை பூத்தாற் போலே இருக்கை மகா வராஹஸ் ஸ்ப்புட பத்ம லோசன –இப் பிரளயம் கொண்ட பூமியை எடுத்து பிராட்டிக்கு கார்யம் செய்தானாய்- ஸ்ரீ பூமிப் பிராட்டியை குளிர நோக்கிக் கொண்டு இருக்கிற இருப்பு –நம் மேல் –அவள் பிரஜையான நம் மேல் –ஒருங்கே –ஸ்ரீ பூமி பிராட்டி பக்கலிலும் பாலி பாயாதபடி–பிறழ வைத்தார் –மிக வைத்தார் –-தம்மால் தரிக்க போகிறது இல்லை–இவ்வ காலம்சருகாய் கிடக்கும் மரங்களும் ஒரோ காலத்தே தளிரும் முறியுமாய் நிற்குமது போலே –ஒருவர் நம் மேல் வரும் கேழ்பவர் உளரே –ஆரேனும் ஒருவர் நம்மை போலே வரும் நன்மை உடையார் உண்டோ –சர்வேஸ்வரனுக்கு சேஷத்வ ரசம் இல்லாமையாலே  இல்லை –-முக்தரும் நித்தியரும் அவ்வருகில் உள்ளார் ஆகையாலே  அவர்களுக்கு இல்லை – பக்தர் விஷய பிரவணர் ஆகையால் அவர்களுக்கு இல்லை – நஜீவேயம் ஷணம் அபி விநாதாம் அஸி தேஷனாம் -என்கிற
வை லஷண்யத்தை உடையார் ஆகையாலே பிராட்டிமார்க்கு இல்லை – இவரைப் போலே தாழ நின்று -இப் பேறு பெற்றார் இல்லை -என்றபடி –

தொல்லை இத்யாதி – பழையதாய் –ஸ்ம்ருத்தமாய்–பொல்லாதாய்-போக்கற வளைப்பதான ஜன்மம்-
என்னோடு சம்பந்தம் உடையார் பக்கல் கிட்டப் பெறுமோ –மாதா பிதா யுவதயஸ் தனயா ஸர்வம் நியமேன –மதன்வயாநாம்-சொல்லு வாழி மட நெஞ்சமே – கண்டதில் எல்லாம்  நாக்கு நீட்டி திரிந்த நீ சொல்லாய்-மட நெஞ்சமே –எனக்கு பவ்யமாக நீ வாழ்வாயாக –

வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித் துழல் வீரக்கு ஓன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய்
மண்டுகளாடி வைகுந்த மன்னாள் குழல்வாய் விரை போல்
விண்டுகள் வாரும் மலருளவோ நும்வியலிடத்தே
–ஸ்ரீ திரு-விருத்தம்-55- என்னுமா போலே –

நீரிடை உதவியை நினைத்து-எண்பது கோடி நினைத்து எண்ணுவன் – நாயகி அருளிச் செய்யும் பாசுரம் பூமிப பிராட்டிக்கு செய்து அருளின-உபகாரம் தமக்கு -தானே -அன்றியும்-பின்னை கொல்-நிலா மா மகள் கொல் திரு மகள் கொல் பிறந்திட்டாள்-அன்றோ பராங்குச நாயகி-ஒருங்கே -எங்கும் பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே – இவ்வகாலம்-தம்மை மதியாமல் அழிய மாறி-என்றோ பண்ணி அருளினாலும் அன்பின் மிகுதியால் இப்பொழுது நடப்பது போலே – சம்சார பிரளய வெள்ளம் தாண்ட பூர்ண காடாக்ஷம் வைத்து அருளினான் –நெஞ்சே கலக்கம் தெளிந்து வாழ்வாயாக -என்கிறார் –

பெரும் கேழலார்-பிரளய ஆர்ணவத்திலே புக்கு அழுந்தின பூமியை எடுக்கைக்கு-அந்த பிரளய ஜலம் கீழ் வலிற்றன வாம் படி-மஹா வராஹமானவர்-ஜலார்த்த ருஷேர் மஹா வராஹஸ்ய – (தண்ணீரால் நனைந்த அடிவயிறு கொண்டவர் )–ஸ்ரீ விஷ்ணு புராணம் –1-4-24- என்னக் கடவது இறே-தம் பெரும் கண் மலர் புண்டரீகம்மஹா வராஹ ஸ்புட பத்ம லோசன -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-4-20- என்கிறபடியே
பிரளயத்திலே மூழ்கி ஸ்ரீ பூமிப்பிராட்டியைக் கண்ட ப்ரீதியாலே விகஸிதமான கண் அழகு இருந்தபடி-நம் மேல் ஒருங்கே பிறழ வைத்தார்-அவளை அன்று பிரளயத்தில் நின்றும் எடுக்கைக்குப் பாரித்தால் போலே நம்மையும் இஸ் ஸம்ஸார ஆர்ணவத்தில் நின்றும் எடுப்பதாக நம் பக்கலிலே ஒருபடிப்பட மிளிரும்படி வைத்தார்-இவ்வ காலம்-இக்காலத்தில்–ஒருவர் நம் போல் வரும் கேழ்பவருளரே -இக் கடாக்ஷ விஷய பூதரான நம்மைப் போலே அவனோடே கேழ் முதலைப் பெற்று இருப்பார் ஒருவர் உளரோ-பிரளய ஆர்ணவமும் ஸம்ஸார ஆர்ணவமுமான ஆபத்தின் வாசி போரும் இறே ஸ்ரீ பூமிப்பிராட்டி பக்கலிலும் நம் பக்கலிலும் யுண்டான உறவின் வாசிதொல்லை யாழியம்
(தொல்லை வாழியம் ) இக் கேழ் முதல் யுண்டான உறவு அளவே அன்றியே பழையதாய்
ஸ்வரூப ப்ரயுக்தமான வாழ்வு யுடையோம் ஆவோம்–வாழ்வு என்று அனுபவத்தை நினைக்கிறது
(மிக்க இறை நிலையும் வாழ் வினையும் -ப்ராப்யம் )சூழ் பிறப்பும் மறுங்கே வரப் பெறுமே-நம்மைச் சூழ்ந்த பிறப்பும் நம் பரிசரங்களிலே வரவற்றோ-சொல்லு-பகவத் கடாக்ஷம் யுண்டால்
அனுபவம் பெற்றாருக்கு ஜென்ம சம்பந்தம் யுண்டு என்று கேட்டு அறிவது யுண்டா சொல்லிக் காண் –வாழி உன் கலக்கம் அற்றுத் தெளிந்து வாழ்வாயாக–ஜாயமான புருஷ -மது ஸூதன கடாக்ஷம்
கண்ணாவான் -அமலங்களாக விழிக்கும் கருவிலே திருவுடையார் அன்றோ
மட நெஞ்சமே
ஒடுக்கமுடைய நெஞ்சமே-உன் அறிவில் சங்கோசம் இறே நீ இப்படி சங்கித்தந்து என்று திரு உள்ளத்தைத் தெளிவித்தார் ஆயிற்று–இப்பாட்டு கிளவியாம் இடத்து நாயகனான ஈஸ்வரனுடைய நீருடை (நீரிடை )யுதவியை நினைத்து உரைத்தது ஆகவுமாம்-அவ்விடத்து சூழ் பிறப்பும் மருங்கே வரப் பெறுமே -என்ற இடம் பிரிந்தார் படும் துயர் நமக்கு யுண்டாகாது என்று கருத்து

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம்-பெரும் கேழலார் –ரஷ்யத்தினுடைய ரக்ஷணத்துக்குத் தன்னை அழிய மாறுமவர்-மஹா வராஹா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-4-26- ரஷ்யமான பூமியின் அளவல்ல வாயிற்று ரக்ஷகனான தன்னைப் பாரித்த படி–தம் பெரும் கண் மலர் புண்டரீகம்ஸ்புட பத்ம லோசனநம் மேல்-குளப்படியிலே கடலைத் தேக்குமா போலே நம் சிறுமை பாராதே ஸ்ரீ பூமிப்பிராட்டி பரிகரம் என்ற இது ஒன்றையுமே பார்த்த இத்தனை –ஒருங்கே-நம் மேல் வைத்த கடாக்ஷத்தை மாற்றிப் பிராட்டி தன் பக்கலிலே வைக்க வென்றால் அதுவும் அரிதாம் படியாயிற்று-த்வயி கிஞ்சித் ஸமா பந்நே கிம் கார்யம் சீதயா மம -யுத்த -41-4-இங்குக் கிஞ்சித் ஸமா பத்தியும் பொறுக்கப் போகாது-அங்கே தர்மியை விட்டுப் பிடிக்கிலுமாம் நீர் மஹா ராஜரான தரம் குலைய உம்மை ஒரு வார்த்தையைப் பையல் சொன்னான் ஆகில் நீர் தேடிப்போகிற சரக்கு நமக்கு என் செய்ய –பிறழ-மிகுதியைச் சொல்லவுமாம் கடாக்ஷம் நம்முடம்பிலே மிளிரும்படியாக என்னவுமாம்-வைத்தார் –இதுக்கு நம் பக்கல் ஓர் அடி இல்லை
அவன் இப்படிக்கு கடாக்ஷிக்கக் கண்டது அத்தனை-ஆகிலும் ஒரு–இவ்வகாலம் ஒருவர் நம் போல்
வரும் கேழ்பவருளரே தொல்லை யாழி யஞ்சூழ் பிறப்பும் மறுங்கே வரப் பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி வியாக்யானம்–மஹா கிருபா பரித கடாக்ஷ பிரசுரமான அந்தத் திருக்கண்களை நம் மேல் ஒருங்கே பிறழவைத்தார் இவ்வகாலம்-இக்காலத்தில் நமக்கு உபாயம் நிறைவேறின காலத்திலேயே தானே என்றபடி
யா –ஸ்மர்த்தா –தம் -அஹம் -ஸ்மராமி–நயாமி பரமாம் கதிம் –என்றுள்ள திருவருளாலே
நம்மில் உள்ள புண்ய பாபங்கள் எல்லாம் ஒருமிக்க அங்க அங்காகாச் சாயாவும் –
அவைகளுக்கு நம்மில் ஒட்டு அறவும்-ஸ்வத் யாகும் பபரீத கடாக்ஷங்களை ஒருமிக்க பிரசரிப்பித்து
அதுகளே நம்மைக் கழலப் பிறழும்படி அக்கண்களால் கடாஷித்தவர்வ்-ஒருவர் நம் போல் வரும் கேழ்பவருளரே-யாரேனும் ஒருவர் நம்மைப் போலே உபாயம் பெற்று இருப்பாரும் வரும் நன்மை யுடையாரும் யுண்டோ–தொல்லை யாழி யஞ்சூழ் பிறப்பும் மறுங்கே வரப் பெறுமே-அநாதியாய் வருந்தனை வாழ்ச்சியும் யோனிகள் தோறும் பிறப்பும் நம்மைப் பற்றி இருப்பார்க்கு வருமோ-சொல்லு வாழி மட நெஞ்சமே–உன் அதிசங்கை நீங்கி அவனோடே வாழக் கடவாய் எனக்குப் பவ்யமான நெஞ்சமே –

தாத்பர்யம்--சர்வேஸ்வரன் தன்னுடைய வைபவத்தை பிரகாசிக்க ஆழ்வார் கண்டு மகிழ
மனஸ்ஸூ -ஸம்ஸாரத்தில் இருந்தும் -உத்தரிப்பத்த அன்று தானே மகிழ வேண்டும்
என்று ப்ரஸ்னம் பண்ண அவன் நம்மை பூர்ணமாக கடாஷித்த பின்பு இனி ஒரு குறை உண்டோ
அன்று பிரளயத்தில் உத்தரித்த மஹா வராஹ நாயனார் பூமா தேவியை உத்தரித்து மகிழ்ந்து
மலர்ந்த திருக்கண்கள் கொண்டு கடாஷித்த மாதிரியே –இன்று நம்மை பூர்ணமாகக் கடாஷித்த பின்பு -வேறே எங்கும் பக்க நோக்கு அறியாமல் -ஒருங்கே கடாஷித்த பின்பு-இனி நமக்கும் நம்மைச் சேர்ந்தவருக்கும் துஸ்சரமாய் அதி குரூரமான ஜென்ம சூழல் இல்லை-ஸ்வத சித்தமான பரமபதமும் அணித்தானதே-நம்மைப் போல் பாக்கியவான்கள் இனி யாரும் இல்லை-நெஞ்சே இதில் சம்சயம் உண்டாகில் சொல்லிக் காண் என்று மகிழ்ந்து அருளிச் செய்கிறார் –

2-3-ஊனில் வாழ் உயிர் -பிரவேசம் –

வாயும் திரை உகளும்’ என்ற திருவாய்மொழியில் உண்டான துன்பமெல்லாம் தீரும்படி வந்து-
ஸம்ஸ்லேஷித்த சம்ச்லேஷத்தை – கலந்த கலவியினை அருளிச் செய்கிறார்.
இத்திருவாய்மொழியில்.
‘ஆயின், இது, ‘வாயும் திரை உகளும்’ என்ற திருவாய்மொழியினைச் சார்ந்தன்றோ இருத்தல் வேண்டும்?’ எனின்,
ஆம்; முதல் திருவாய்மொழியின் ஈற்றுப் பாசுரத்தில் இறைவனுடைய முதன்மையினை அருளிச் செய்தாராயின்,
அது சம்பந்தமாகத் தோன்றிய -ஈஸ்வரத்வம் -அம் முதன்மையினை இரண்டாந்திருவாய்மொழியில் அருளிச் செய்தார்;
பின்னர், துன்பம் எல்லாம் தீரும்படி வந்து கலந்த கலவியினை அருளிச்செய்கிறார் இத் திருவாய்மொழியில்.

ஆக, இரண்டாந்திருவாய்மொழி, நடுவில் தாம் பெற்ற பேற்றின் கனத்தைப் பார்த்தார்;
அது அளவு இறந்ததாய் இருந்தது; தமது முயற்சி காரணமாக வந்ததாயின் அளவுபட்டு இருக்கும்;
எல்லாம் வல்ல இறைவன் காரணமாக வந்த தாகலின் அவ்வின்பம் கனத்திருந்தது.
மற்றும், தாம் அநுபவித்த அநுவபத்துக்குள்ளே எல்லா ரசங்களும் உண்டாய் ஒப்பும் உயர்வும் அற்றதாய் இருந்தது;
‘இத்தகைய பேற்றுக்கு உசாத் துணையாவார் யார்?’ என்று பார்த்த இடத்தில் சம்சாரத்திலே ஆள் இல்லாமையாலே,
அவன் தன்னோடு ஒக்கப் பிராப்யருமாய் அவனை நித்தியாநுபவம் பண்ணா நிற்பாருமாய்,
பகவானுடைய அநுபவத்துக்குத் தேசிகருமாய் இருக்கிற நித்திய ஸூரிகள் திரளிலே சென்று புக்கு –
போதயந்த பரஸ்பரம் -ஒருவருக்கு ஒருவர் உணர்த்திக் கொண்டு அநுபவிக்கப் பெறுவது எப்பொழுதோ?’ என்னும்
அநவாப்தியோடே இத்திருவாய் மொழியினைத் தலைக் கட்டுகிறார்.

வாயும் திரையுக்களில் ஆற்றாமைக்கு அறிவு நடையாடாத திர்யக்குகளையும் அசேதனங்களையும் சேர்ந்தார்
சம்ச்லேஷத்தால் வந்த ப்ரீதிக்கு அறிவு நைசர்க்கிகமான நித்ய ஸூ ரிகளை உசாத் துணையாகத் தேடுகிறார் –

‘ஆயின், ‘வாயும் திரை உகளும்’ என்ற திருவாய்மொழியிற்கூறியது போன்று,
பிரீதிக்கும் பறவை முதலியவற்றைத் தேடாது, ஈண்டு நித்திய ஸூரிகளைத் தேடுவதற்குக் காரணம் என்னை?’ எனின்,
‘வாயும் திரை உக’ளில் ஆற்றாமைக்கு அறிவு நடையாடாத திரியக்குகளையும் அசேதநங்களையும் சேர்த்தார்;
ஆற்றாமைக்கு அறிவு நடையாடாத திர்யக்குகளையும் அசேதனங்களையும் -காற்றையும் கழியையும் கட்டி அழுதார்
இங்கு, கலவியால் வந்த பிரீதிக்கு-அறிவு நைசர்க்கிகமான- இயற்கை அறிவையுடைய நித்திய ஸூரிகளைத் தேடுகிறார்.
இறைவன் ஆழ்வாரோடு கலந்த கலவி,
பெருமாளும் பிராட்டியும் ஏக தத்துவம் என்னலாம்படி கலந்த கலவியைப் போன்று இருந்தது.–ஜாதி குணங்கள் திரவியத்துப் பிரகாரமாய்ப் பிரிக்க ஒண்ணாதபடியாய்
இருக்குமா போலே, பிரிக்க ஒண்ணாதபடி ஒரு நீராகக் கலந்தபடி.-‘அப் பெரியவன் இப்படித் தாழ விடுவதே!’ என்று அச் செயலிலே தன் நெஞ்சு துவக்குப்பட்டு ‘அது அது’ என்று கிடக்கு மாயிற்று. -அப்படியாயிற்று இங்குக் கலந்த கலவிதான்.

இப்படி உத்துங்க லலிதனான இவனுடைய ஸர்வவித சாரஸ்ய அதிசய ப்ரயுக்தமான திவ்ய போக்யதையை அருளிச் செய்வதாக –
1–அவனுடைய சர்வ ரசாத்மத்வத்தையும் -2-சர்வ ரஸ்ய யுக்தனான அவன் விஷயத்தில் தம்முடைய உபகார ஸ்ம்ருதியையும் —
3–ஸ்வ விஷயத்தில் தம்மை அவன் அபி நிவேசிப்பித்த படியையும் -4-அவ்வுபாஜகாரத்துக்கு பிரதியுபகாரம் இல்லாத படியையும் —
5–தன்னுடைய அப்ராக்ருத போக்யத்தையும் -பிரகாசிப்பித்துச் சேர்த்துக் கொண்ட படியையும் 6-இந்த சம்ச்லேஷம் ஸ்வரூப ப்ரயுக்தமாகையாலே அநாதி ஸித்தமான படியையும் –
7–போக்யதா அதிசயத்தாலே வ்யதிரேகத்தில் தரிக்க அருமையையும் -8-அவ்வனுபவம் தமக்குக் கைப் புகுந்தமையையும் –
9–சர்வ பிரகார அனுபவத்தால் பிறந்த ஆனந்த விசேஷத்தையும் –
இப்படி அனுபவித்து ஆனந்திகளான ஸூரி களோடு தாம் கூடி அனுபவிக்கையில் யுண்டான ஆசையையும் –
அருளிச் செய்து கீழ்ச் சொன்ன சர்வ பிரகார சாரஸ்யம் ஸூரி போக்யம் என்னும் இடத்தையும் உபபாதித்து அருளுகிறார் –

ஊனில் வாழுயிரே நல்லை போ உன்னைப் பெற்று
வானுளார் பெருமான் மது சூதன் என்னம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே
 –2-3-1-

பரம பதத்தைப் பெற்று அங்கே தான் பகவத் அனுபவம் பண்ணுகிற இடைத்தேயோ நீ உதவிற்று-மாம்ஸாதி புஞ்சமான சரீரத்திலே நித்ய ஸூ ரிகள் அனுபவிக்கும் அனுபவத்தை அன்றோ நீ உபகரித்தது –ஈஸ்வரனும் என்றும் உளன் – தத் சம்பந்தமும் அநாதி – அவன் எதிர் சூழல் புக்கு அவசர ப்ரதீஷனாய் நிற்க -நீ ஆபிமுக்யம் பண்ணாமையால் அன்றோ இழந்தது-நீ ஆபி முக்கியம் பண்ணி இறே இப்பேறு பெற்றது – ‘கைங்கரிய சாம்ராஜ்யத்திற்கு இட்டுப் பிறந்த வைத்து நெடுநாள் அதனை இழந்து கிடக்க,
இந் நெஞ்சு அன்றோ இப்போது அதனைத் தந்தது?’ என்று தம் திருவுள்ளத்தைக் கொண்டாடுகிறார்.

‘ஊனில் வாழ் உயிரே’ என்பதற்குச்  சரீரத்தைப் பற்றி அனுபவிக்கிற அனுபவத்தை யன்றி,
அதற்கு அப்பால் வேறு ஒன்றனையும் அறியாதே வாழ்ந்து போன உயிரே!’ -உயிர்’ என்றது, மனத்தினை-

வானுளார் பெருமான் மதுசூதன் என் அம்மான் தானும் யானும் –-தான் அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்தும் -அவதரித்து, மதுவாகிற அசுரனைப் போக்கியது போன்று,
என்னுடன்-சம்ச்லேஷ விரோதியை – கலப்பதற்குத் தடைகளாய் இருந்தனவற்றைப் போக்கி
என்னைத் தோற்பித்துத் தன் பக்கலிலே கைங்கரியத்திலே மூளும்படி செய்த தானும் 
கைங்கரியத்திற்கு விஷயமாக உள்ள-விஷய பூதனான – யானும்,–கிருஷி செய்த தானும்,
கிருஷிக்கு விஷயமாக உள்ள நானும்’

‘தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்துக் கலந்தோம்’ என்கிறார்.-இதற்கு,ஏக –
ஒரு ஜாதிப் பொருள்கள் தம்மில் ஒன்றனோடு ஒன்று கலந்தது போன்று கலந்தோம்’ என்று 
ஆளவந்தார் அருளிச் செய்தாராகத் திருமாலை யாண்டான் பொருள் அருளிச் செய்வர்.
அதாவது,-தானும் யானும் எல்லாம் தன்னுள் தேனும் பாலும் நெய்யும்
கன்னலும் அமுதும் ஒத்துக் கலந்தொழிந்தோம்’–தேனும் தேனும் கலந்தாற் போலவும், பாலும் பாலும் கலந்தாற் போலவும், கன்னலும் கன்னலும் கலந்தாற் போலவும்-அமுதும் அமுதும் கலந்தாற்போலவும் என்பதாம்.

இதற்கு இவற்றைச் சுவை யுடைப் பொருள்களுக்கு எல்லாம் உபலக்ஷணமாக்கித்
‘தானும் நானுமாக கலவிக்குள்ளே எல்லா ரசங்களும் பிறக்கும்படி கலந்தோம் என்கிறார்’ என்று  எம்பெருமானார் பொருள் அருளிச் செய்வர்.  ‘சர்வ ரஸ: சர்வ கந்த:’ என்கிற இறைவனோடே கலக்கும் கலவி ஆதலானும், ஞான ஆனந்தங்களையுடைய இறைவனும் ஆத்துமாவும் கலக்கிற கலவி -சேர்த்தி -ஆதலானும் சர்வ ரஸங்களும் பிறக்கத் தட்டு இல்லை.  

அநேக த்ருஷ்டாந்த தாத்பர்யம் -ஸர்வவித சாரஸ்யமும் தோற்றுகைக்காக-
தேன் என்று -சர்வ ரஸ சமவாயம் –பால் என்று ஸ்வாபாவிக ரசம் -நெய் என்று ப்ரும்ஹண ரசம் -கன்னல் என்று கரும்பாய் -அதனுடைய பாகஜ ரசத்தை நினைக்கிறது –
அமுது என்று நித்ய ரசம் –

———

ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயா
ஒத்தாய் எப் பொருட்கும் உயிராய் என்னைப் பெற்ற
அத்தாயாய் தந்தையாய்த் அறியாதன யறிவித்து
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே
 –2-3-2-

இவர் திருவுள்ளத்தைக் கொண்டாடப் புகுந்தவாறே, நெஞ்சு,-பெற்ற தாய் இருக்க மணை வென்னீராட்டுவரைப் போலே ‘நீர் அடி அறியாதே, வழிப் போவாரைக் கொண்டாடுகிறது என்? என்னையும் இசைவித்த சர்வேஸ்வரனைக் கொண்டாடீர்’ என்ன, கேட்ட ஆழ்வார்,
‘ஒக்கும் ஆராயின், அதற்கும் அடி இறைவன் அன்றோ?-நடுவே நெஞ்சைக் கொண்டாடினோமித்தனை ஆகாதே?’ என்று தம் திருவுள்ளத்தை விட்டு,
சர்வேஸ்வரனைக் கொண்டாடுகிறார்.

எம்பார் திருவாய்மொழிக்குப் பொருள் அருளிச் செய்து வருங்கால், இப்பாசுரம் ப்ரஸ்துதமான அளவிலே அளவில்,
எம்பார் கோஷ்டியிலே ‘இவ்வாத்துமாவுக்குப் பிரதம் குரு யார்?’ என்ற ஒரு வினா எழுந்தது;
இருந்த முதலிகளிற்சிலர், ‘ஆசாரியன்’ என்றனர்; சிலர்,
‘ஆசாரியன் திருவடிகளிலே அடைவதற்கு வா என்று அழைத்துக் கொண்டு போய்ச் சேர விட்ட ஸ்ரீவைஷ்ணவர்,’ என்றனர்;
எம்பார், ‘அங்ஙன் அன்று காண்; அவன் இவனை அழைத்தாலும் இவன் ‘அல்லேன்’ என்னாதபடி 
‘இசைவித்து’ என்கிறபடி,
அகவாயிலே இருந்து இசைவித்த சர்வேஸ்வரன் காண் பிரதம குரு’ என்று அருளிச் செய்தார்

திருமகள் கேள்வனுக்கும் தன்னால் கழிக்க ஒண்ணாதபடி இருப்பது ஒரு தாரித்திரியம் உண்டு என்று அருளிச் செய்வார் எம்பார்,

எப்பொருட்கும் ஒத்தாய் -இந்திரா அனுஜன் -இந்திரனுக்குத் தம்பியாகவும்,
இராமன் கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைச் செய்தும்,
திர்யக்குகளை -விலங்குகளைப் போன்று மஹா வராஹமாகியும்,
ஸ்தாவரங்களோடு ஓக்க -நிலையியற் பொருள் போன்று குட்டை மாமரமாயும் நின்ற நிலைகள் போல்வன.-குப்ஜாம்ரம் ‘குட்டை மாமரமாக நின்றது எற்றிற்கு?’ எனின்,
செவ்வே நிற்பின் பெண்ணுக்கும் பேதைக்கும் ஏற ஒண்ணாது என்று எல்லோர்க்கும் ஒக்க எளியன் ஆகைக்கு.-மேன்மையோடே வரின், ‘கிட்ட ஒண்ணாது’ என்ற அகலுவர்கள்;
தாழவிட்டு வரின், காற்கடைக் கொள்ளுவர்கள்;-ஆகையாலே, சஜாதீயனாய் வந்து அவதரிக்கிறான்.

நீ செய்தன’ என்னுமித்தனை.-செய்த நீ அறியில் அறியுமித்தனை; என்னால் சொல்லித் தலைக்கட்டப் போமோ?-அனுபவித்துக் குமிழி நீர் உண்டு போமித்தனை ஒழிய என்பார், ‘அடியேன் அறியேன்,’ 

அத்தா என்கிறதுக்கு- ஞான பிரதாத்ருத்வமும் -உபகாரத்வமும் -ஸ்வாமித்வமும்- அர்த்த த்ரயங்கள் –

————

அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று
அறியாமை வஞ்சித்தாய் எனதாவியுள் கலந்தே
 –2-3-3-

அறிவு நடையாடாத பருவத்தில் சம்பந்த ஞானத்தினைப் பிறப்பித்தாய்;
பிறப்பித்த ஞானத்தினை அழிக்கக்கூடிய தேஹ சம்பந்த்தத்தோடே பின்னையும் வைத்தாய்,’ என்னும் இன்னாப்பாலே
சொல்லுகிறார் என்று ஆளவந்தார் அருளிச் செ்யாதாராகத் திருமலையாண்டான் அருளிச் செய்வர்.

இதனை, எம்பெருமானார் கேட்டருளி, ‘முன்னிற்பாட்டுகளும் பின்னிற்பாட்டுகளும் பிரீதியோடே நடவா நிற்க,
நடுவே பிரீதியின்மை தோற்றச் சொல்லுமது சேராது;
ஆன பின்னர், இங்ஙனே யாமித்தனை.
அறியா மா மாயத்து அடியேனை அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து வைத்தாயால் என்கிறார்,’ என்று
இதனையும் ஓர் உபகாரமாக்கி அருளிச் செய்தார்.
‘அத்தா நீ செய்தன’ என்று, ‘நாம் செய்த உபகாரங்களைச் சொல்லுகின்றீர்;
அவற்றிலே நீர் மதித்திருப்பது ஓர் உபகாரத்தைச் சொல்லிக் காணீர்,’ என்ன, அதனைச் சொல்லுகிறார்

பெறாவிடில் முடியும்படியான நிலையினை உண்டாக்கினாய்’ என்பார், ‘அன்பு செய்வித்து’என்கிறார்.-அசித்தில் சேர்ந்தவனாய் இருக்கிற என்னை-நம்முடைய பொருள் அன்றோ?-அடியேனை-‘இத்தண்ணீர்ப் பந்தலை வைத்தாயே’-உபகார ஸ்ம்ருதி-எனது ஆவியுள் கலந்து – நான் இருக்குமிடத்தளவும் வந்து என்னோடே கலந்து,-
அத்யந்தம் அந்நிய பரனான ‘மிகவும் பராக்காய் இருக்கிற ஆத்துமாவிலே புகுந்து
உன் குணத்தாலும் செயலாலும் வசீகரித்தாய்,’ 

———

எனதாவியுள் கலந்த பெரு நல்லுதவிக் கைம்மாறு
எனதாவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது என்பதுண்டே
எனதாவி யாவியும் நீ பொழில் எழும் உண்ட எந்தாய்
எனதாவி யார் யானார் தந்த நீ கொண்டாக்கினையே 
–2-3-4-

அவன் திருவடிகளிலே ஆத்ம சமர்ப்பணத்தைப் பண்ணி, அனுசயிக்கிறார் –

உதவியாவது,-உபகரித்தல்.
நல்லுதவியாவது, -பச்சை கொள்ளாதே உபகரித்தல். 
பெருநல்லுதவியாவது, தன் பேறாக உபகரித்தல்.

மயா சமர்ப்பித- ‘தேவரீருடைய திருவடித் தாமரைகளில் எனது உயிரை இப்போது நான் சமர்ப்பித்தேன்,’ என்றும்,
அதவா கின்னு ஸமர்ப்பயாமி தே -‘என்னுடையதும் யானும் ஆகிய எல்லாப் பொருள்களும் தேவரீர் உடைமை அன்றோ?
இதனை நன்கு அறிந்த யான் தேவரீருக்கு என்னுடைய பொருள் என்று எதனைக் கொடுப்பேன்?-ஸ்ரீ ஆளவந்தார்

சத்தை அவன் இச்சாதீனம் ஆகையால் தந்த நீ கொண்டாக்கினையே –பிரளய ஆர்ணவத்திலே நசியாதபடி ஜகத்தை ரஷித்தால் போலே நான் பிரிந்து நோவு படாதபடி என்னோடே கலந்து அடிமை கொண்ட ஸ்வாமி-பண்டே உனக்கு சேஷமாய் இருக்கிற இவ்வாத்மாவை நீ கொண்டு அருளினாய் –

———

இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாத வெந்தாய்
கனிவார் வீட்டின்பமே என் கடல் படா வமுதே
தனியேன் வாழ் முதலே பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய் யுனபாதம் சேர்ந்தேனே
 –2-3-5-

ஞான லாபமே அமையுமோ?பிராப்தி – பேறு வேண்டாவோ?’ என்ன,தனியேன் வாழ் முதலே!! -எனக்குப் பிரதம ஸூஹ்ருதமும் நீயேயாய்,-என்னைச் சமுசாரிகளில் -வ்யாவ்ருத்தன்- வேறுபட்டவன் ஆக்கின அன்றே பெற்றேனே அன்றோ?’ என்கிறார்

கனிவார் வீட்டு இன்பமே – நீ என்றால் உள் கனிந்து பக்குவமாய் இருக்குமவர்களுக்கு மோக்ஷ சுகம் ஆனவனே!
அன்றி, ‘நீ என்றால் இனியராய் இருக்குமவர்கள் இருப்பிடத்திலே வந்து அவர்களுக்கு ஆனந்தத்தை விளைவிக்குமவனே!’ என்றுமாம். –வீட்டு இன்பப்பாக்களில் த்ரவ்ய பாஷா நிரூபண சமம் – -அர்ச்சாவதார பரத்வேந –நாயனார்-யசோதைப் பிராட்டிக்குக் காட்டி அருளியது த்ருஷ்டாந்தம்-

என் கடல் படா அமுதே –முயற்சி இன்றிக் கிடைத்த அமுதம் போன்றவனே-(இத்தால் ப்ராப்யத்வம் சொல்லிற்று )

எனக்கு என்றிருப்பார் நடுவே இருக்கையிறே இவர்க்குத் தனிமை.
தம்மை அத்தலைக்கு ஆக்கி வைக்கையிறே இவர்க்கு வாழ்வு,’ 
என்பது இருபத்து நாலாயிரப்படி

நுன பாதம் சேர்ந்ததேனே –-இமையோர் தலைவா ‘இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை’ என்னும்படி,-அறிவைத் தந்த போதே உன் திருவடிகளைப் பெற்றேனே அன்றோ?’

————

சேர்ந்தார் தீ வினைகட்கு அரு நஞ்சைத் திண் மதியைத்
தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாதவருயிரை
சோர்ந்தே போகல் கொடாச் சுடரை அரக்கியை மூக்கு
ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதன் முன்னமே
 –2-3-6-

இனி நுன பாதம் சேர்ந்தேனே’ என்றார். கீழ் திருப்பாசுரத்தில்;
‘இனி என்று தான் விசேஷிக்க வேண்டுமோ?
‘பொய்ந் நின்ற ஞானத்திலே’ நீ விசேஷ கடாக்ஷம் பண்ணின போதே கிட்டிற்றிலேனோ?’ என்கிறார் இப்பாசுரத்தில்,
அன்றிக்கே
ஸ்வரூபத்தை அநுசந்தித்தவாறே, நிலை நின்ற ஸ்வரூபம்
ஸ்வாபாவிக – இயல்பாகவே அமைந்துள்ளதான- சேஷத்துவமேயாய்,
நடுவுள்ளது வந்தேறியாய்த் தோன்றுகையாலே அருளிச் செய்கிறார் எனலுமாம்

அநாதி காலம் பிறவிகளால் உழன்று திரிந்த ஆத்துமா சர்வேஸ்வரனைக் கிட்டுகையாவது
கெடு மரக்கலம் கரை சேர்ந்தது போன்று இருத்தலின், ‘சேர்ந்தார்’ என்கிறார்;இறைவன் தானே அழிக்கப் பார்க்கும் அன்றும்-அழிக்க ஒண்ணாதபடியான திண்ணிய மதியைக் கொடுக்குமவன்-அம்பரீடன் தவம் செய்து கொண்டிருக்க, சர்வேஸ்வரன் இந்திரன் வேடத்தைத் தரித்துக் கொண்டு சென்று,  ‘உனக்கு வேண்டியவற்றை வேண்டிக்கொள்’ என்ன ந அஹம் ஆராதயாமி த்வாம் தவ பத்தோயம் அஞ்சலி ,‘நான் உன்னை ஆராதிக்குமவன் அல்லேன் காண்;-என்னைச் சமாதி பங்கம் பண்ணாதே போக வல்லையே! உன்னைக் கும்பிடுகிறேன்’ என்றான்.

தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாது அவர் உயிரைச் சோர்ந்தே புகல் கொடாச் சுடரை 
ஜலான் மத்ஸ்யா விவோத்த்ருதவ் – ‘ஸ்ரீராமரே! உம்மால் நீக்கப்பட்ட பிராட்டி உயிர் வாழாள்; நானும் உயிர் வாழேன்:-ஒருவாறு பிழைத்தோமானால், தண்ணீரினின்றும் மேலே எடுக்கப்பட்ட மீன் போன்று, ஒரு கணநேரமே பிழைத்திருப்போம்’ என்கிறபடியே,
தன்னைப் பிரிய மாட்டாதே இருக்குமவர்கள் நெஞ்சை விட்டுப் போகமாட்டாதே,
அவர்கள் உயிர், தன்னைப் பிரிந்து-த்ரவீபூதமாய் – நீர்ப்பண்டமாக மங்கிப் போகக் கொடாதே,-அது தன் பேறு என்னுமிடம் வடிவிலே தோன்ற இருக்குமவனை.-தீர்ந்தார் 
உபாயத்தில் துணிவுடையார்; அவர்கள் ஆகிறார் –-பிராப்பிய பிராபகங்கள் இரண்டும் அவனே என்று இருக்குமவர்கள்;-அவர்கள் தன்னைப் பிரிந்து நோவு படாதபடி அவர்கள் நெஞ்சிலே இருக்குமவன் –தீர்ந்தார் என்று ப்ராப்ய த்வரா நிஷ்டர் என்றும் —
ப்ராப்ய ப்ராபக நிஷ்டர் என்றுமாம்

அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே –
சேஷ பூதனான நான் பண்டே அடைந்தேன் அன்றோ
‘அநாதி காலம் இழந்த இழவை மறக்கும்படி வந்து கலக்கையாலே, இன்றோ பெற்றது?
இவ்வாத்துமா உள்ள அன்றே பெற்றேன் அல்லேனோ?’ என்கிறார்.-முதன் முன்னமே என்றதுக்கு மூன்று அர்த்தங்கள்
1-இனி என்று பொய் நின்ற ஞானத்திலே விசேஷ கடாக்ஷம் பண்ணின போதே பெற்றேன் என்று விசேஷிக்க வேணுமோ –அநாதி காலம் பிடித்துப் பெற்றேனே அன்றோ
2-இனி -என்று அறியாத அறிவித்த போதே பெற்றேன் என்று விசேஷிக்க வேணுமோ –
பொய் நின்ற ஞானத்திலே நீ விசேஷ கடாக்ஷம் பண்ணி அருளினை போதே பெற்றேனே
3-வாயும் திரை யுகளில் ஆர்த்தி தீரக் கலந்த போதே பெற்றேன் என்று விசேஷிக்க வேணுமோ –-அநாதி காலம் தொடங்கி விஸ்லேஷம் இன்றிக்கே ஸம்ஸ்லேஷமாய் அன்றோ தமக்குச் செல்கிறது –

———–

முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே
பன்னலார் பயிலும் பரனே பவித்திரனே
கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா
நின்னலால் இலேன் காண் என்னை நீ குறிக்கொள்ளே
–2-3-7-

அடைந்தேன் முதல் முன்னமே-தாம் பெற்ற பேற்றின் கனத்தையும் நினைத்தார்;
கனிவார் வீட்டு இன்பமே என் கடல் படா அமுதே -இவ்விஷயத்தினுடைய இனிமையையும்-போக்யத்தையும் – அநு சந்தித்தார்;
‘இது இருந்தபடி கண்டோமுக்குத் தொங்காது போலே இருந்தது’ என்று – அதிசங்கை கொண்டு, தேவர் என்னைக் கைவிடில் நான் உளேன் ஆகேன்;-என்னைக் கைவிடாது ஒழிய வேண்டும்,’ என்கிறார்

இவர்கள் தொழுது உளராமாப் போலே -அவர்களைத் தொழுவித்துக் கொண்டு உஜ்ஜவலனாகா நிற்குமவன்-அனுபூதாம்சம் அளவுபட்டு அனுபாவ்ய அம்சமே பெருத்து இருக்குமே ஆதலின், ‘பரனே’ என்கிறார்.-கன்னலே-அமுதே-கார் முகிலே கண்ணா –இவ்வளவும் இவருடைய சங்கா ஹேது-உன்னை ஒழிந்த அன்று-அசித்ப்ராயமான -அறிவு அற்ற பொருளாகக் கிடக்கும் என்னை,-இவ்வயிருக்குத் தாரகனாய் இருக்கிற நீ பார்த்தருள வேண்டும்;-திருவுள்ளம் பற்றல் வேண்டும்-வ்யதிரேகத்தில் அழியும்படியான என்னை -வ்யதிரேகத்தில் அழிக்கும் படியான போக்யதையை யுடைய நீ -இரண்டு தலையையும் அறிந்து திரு உள்ளம் பற்ற வேணும் –

————

குறிக் கொள் ஞானங்களால் எனை யூழி செய்தவமும்
கிறிக் கொண்டு இப்பிறப்பே சில நாளில் எய்தினன் யான்
உறிக் கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான் பின்
நெறிக் கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித் துயர் கடிந்தே
 –2-3-8-

என்னை நீ குறிக் கொள்ளே’ என்றவாறே,-அவன் குளிரக் கடாக்ஷித்தான்;-அதனால் சகல வ்யசனங்களும் – எல்லாத் துன்பங்களும் போய்-அவனை அனுபவிக்கிறார்-

அவன் பின்னே நெறிப் பட்ட நெஞ்சை யுடையனாய்.-பின் நெறி – -பின்னே சொன்ன வழி-பிறவித் துயர் கடிந்து’ என்று தடையின் நீக்கத்தை–சரம ஸ்லோகத்தில் ‘எல்லாப் பாவங்களினின்றும் உன்னை விடுவிக்கின்றேன்’-அர்த்த த்வயம் – பல பரமாயும் உபாய பரமாயும்-இவர், வெண்ணெய் களவு காணப்போன இடத்தில் அடி ஒற்றிக் கொண்டு சென்று, அவன் புக்க வீட்டிலே தாமும் புக்கு,  அவன் வெளி வாராமல் படலைத் திருகி வைத்து, உபாய நெறியினைக் கேட்டு அறிந்து, பின் பிறவித்துயர் கடிந்தார் என்ற தொனிப் பொருளும் தோன்றும்-பேறாவது–கிறியாவது பகவத் பிரசாதம் –சம்சார நிவ்ருத்தி பூர்வக பகவத் அனுபவத்தை இஜ் ஜென்மத்தில் அல்ப காலத்திலேயே அயத்நேந நான் பெற்றேன் -என்று தாம் பெற்ற ஸம்ருத்தியைச் சொல்லி அனுபவிக்கிறார் –

———

கடிவார் தண்ணம் துழாய்க் கண்ணன் விண்ணவர் பெருமான்
படிவானம் இறந்த பரமன் பவித்ரன் சீர்
செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்தாடி
அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே
 –2-3-9-

சோஸ்னுதே சர்வான் காமான் ஸஹ ப்ராஹ்மணா விபச்சிதா ‘-இவ் வுயிரானது முற்றறிவினனான இறைவனுடைய நற் குணங்களை அவ் விறைவனோடு அனுபவிக்கின்றது’ என்கிறபடியே,-தம்முடைய-சகல துரிதங்களும் – எல்லாத் துக்கங்களும் போகும்படி-‘இறைவனை அனுபவிக்கப் பெற்றேன்’ என்று ஹ்ருஷ்டராகிறார்

செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்து ஆடி அடியேன் வாய்மடுத்துப் பருகிக் களித்தேனே –-அடி காண ஒண்ணாதபடி தூறு மண்டிக் கிடக்கிற தீய வினைகளெல்லாம் போகும்படி வந்து கிட்டி,-நான்கு மூலைகளிலும் புக்கு உட் புகுந்து, -அநந்யார்ஹனான -வேறு ஒருவர்க்கும் உரியன் அல்லாத- யான்-முழுமிடறு செய்து அனுபவதித்து, யமன் முதலியோர் தலைகளிலும் அடியிட்டுக் களிக்கப் பெற்றேன்.
படிதல் – கிட்டுதல்-
குடைதல். எங்கும் புகுதல்-
ஆடுதல் – உட்புகுதல்–
வாய் மடுத்துப் பருகுதல் – பெருவிடாயோடே அனுபவித்தல்.களித்தேனே-இதர விஷய ஸ்பர்சம் -சிற்றின்பம் துக்கமே ஆயது போன்று, பகவத் குணானுபவம் களிப்பே ஆதலின், 
‘களித்தேனே’ எனத் தேற்றேகாரம் 

———-

களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக் கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான்நிலம் சுடர் ஆழி சங்கேந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே
 -2-3-10-

களித்தேனே’ என்றவர்,-மீண்டும்,-‘இவ் வுலக மக்களோடு பொருந்தி யிருத்தல் நீங்கி,
இவ் வனுபவத்திற்குத் தேசிகரான நித்திய ஸூரிகள் திரளில் போய்ப் புகுவது எப்போதோ?’ என்கிறார்-

துளிக்கின்ற வான் இந்நிலம் சுடர் ஆழி சங்கு ஏந்தி அளிக்கின்ற மாயப் பிரான் –வர்ஷிக்கையே ஸ்வபாவமாக யுடைய மழையினைப் பெய்கின்ற ஆகாயம், (துளிக்கின்ற -வர்த்தமான பதார்த்தம் )-அதனால் விளையக் கூடிய இந்தப் பூமி இவற்றைக் கடற்கரை வெளியில் நோக்கியது போன்று,  திவ்ய ஆயுதங்களைத் தரித்து நோக்குகிற ஆச்சரியத்தை யுடையவன்.

கலியர் கல அரிசிச் சோறு உண்ண வேண்டும்’ என்று நினைக்குமாறு போன்று,
இவரும் ‘அத்திரளில் போய்ப் புகப் பெறுவது என்றோ!’ என்கிறார்.
ஆற்றாமையின் மிகுதி இங்ஙனம் கூறச் செய்கின்றது. –அடியார்கள் குழாங்களையே    -இவ்விஷயத்துக்கு உசாத் துணையாம் போது அசங்க்யாதராக வேணும் என்று இருக்கிறார் –

பாண்டி நாட்டினின்றும் ஸ்ரீ வைஷ்ணவர் சிலர் வந்து நம்பிள்ளையைக் கண்டு வணங்கித்
‘தேவரீர், எங்களுக்குத் தஞ்சமாக இருப்பது ஒரு வார்த்தை யருளிச் செய்ய வேண்டும்,’ என்று விண்ணப்பம் செய்ய,
பிள்ளையும் ‘கடற்கரை வெளியை நினைத்திருமின்’ என்று அருளினார்.
அவர்களும் ‘மணற் குன்றையும் காவற் காட்டையும் நினைத்திருக்கவோ?’ என்று விண்ணப்பம் செய்ய,
பிள்ளையும் புன் முறுவல் செய்து அருளிச் செய்தபடி:

‘சக்ரவர்த்தி திருமகன் கடற்கரையில் படை வீடு செய்திருக்கும் போது
ஸ்ரீ வானர வீரர்கள் இராகவார்த்தே பராக்ராந்தராய்த் தங்களை உபேக்ஷித்துப் பெருமாளையே நோக்கிக் கொண்டு கிடக்க,
இவர்கள் கண்ணுறங்குந்தனையும் தான் உறங்கி,
இவர்கள் கண்ணுறங்கினவாறே அம்பறாத் தூணியை முதுகிலே கட்டித்
திருக் கையிலே பிடித்த சார்ங்கமும் திருச் சரமுமாய் இராமுற்றும் நோக்கின
சக்கரவர்த்தி திருமகனுடைய திருவடிகளே தஞ்சமென்று இருமின்,’ என்று அருளினார்.

ஆகையால், ஸ்வ ரக்ஷண சிந்தையற்று நியதனாகவே சர்வ ரக்ஷகன் கைக் கொண்டு ரஷிக்கும் என்றபடி’.-இந்த திருவாய் மொழிக்கு –நிதான பாசுரம் இது-ஸமஸ்த விரோதி நிவ்ருத்தி பிறந்து ஆவிர்பூத ஸ்வரூப ஸ்வ பாவரானவர்க்கு ப்ராப்யம் அடியாராக ஸூரிகள்-என்று கருத்து –

————

குழாங்கொள் பேரரக்கன் குலம்வீய முனிந்தவனைக்
குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
குழாங்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடி
குழாங்களாய் யடியீருடன் கூடி நின்றாடுமினே 
–2-3-11-

பருகிக் களித்தேனே -என்னா உடன் கூடுவது என்று கொலோ -என்று நான் பட்டது படாதே முதலிலே திரளோடே அனுபவிக்கப் பாருங்கோள்-அநு கூலராய் இருப்பார் அஹங்காராதிகளாலே பிரிய வர்த்தியாதே ஏக கண்டராய் அனுபவிக்கப் பாருங்கோள்-
அர்த்த காமாதிகளைப் பற்றி ஸ்வரூபத்தை இழவாதே கொள்ளுங்கோள் –

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -44-நிறம் உயர் கோலமும் பெரும் உருவும்-பத்துடை அடியவர் -1-3–

February 24, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

கீழே திரு நிறம்-இதில் அவன் வைபவம் பெருமை-பத்துடை அடியவர்க்கு எளியவன் -மற்றவர்க்கு அறிய வித்தகன் அன்றோ அத்வேஷம் ஆரம்ப நிலையே போதும் -முயற்சியால் அடைய முடியாது இதில் இதுவே அறிய வித்தகன் எழில் உரு பேசும் பாசுரம் கீழ் -ரூபம் இது ஸ்வரூபம் -வைபவம் பேசும் –
குண உப ஸம்ஹார பாதம்-32-ப்ரஹ்ம வித்யை இன்ன குணம் இனைய குணம் த்யானம்
எல்லா குணங்களும் இருந்தாலும் ஓன்றைப்பிடித்து தியானிக்க -அத்தையும் முழுக்க அறிய முடியாதே –
தஹர வித்யை உபாசகர் ஸத் வித்யை உபாசகர் இவர்கள் ஞானச் சமயிகள் -முனி பேர் -குணம் -இவை இவை என்று பேசினாலும் அற -முழுவதுமாக அனுபவிக்க முடியாதே ஞானத்துக்கு மட்டும் விஷயம்
அனுபவம் அவன் கொடுத்தால் தானே உண்டு-

மனோ ரதத்துக்கு எட்டாது என்றீர் – அவன் விஷயம் எட்டாதோ என்ன – அவன் அருளாலே காணலாம் அன்று காணலாம் என்கிறார் –(எம்பிரான்-எனக்கு உபகரித்தவன் -அவன் காட்டக் காணலாம் )

இப்படி அபரிச்சேத்யம் என்று சொல்லப் போமோ ஈஸ்வரனுடைய ரூப வேஷ நாம விக்ரஹங்களை நிஷ்கர்ஷித்து அவ்வவ ஸாஸ்த்ர சமயங்களிலே நிற்கிறவர்கள் சொல்லுகிறார்கள் அன்றோ என்னில்
அவர்களும் அவன் பெருமையை முடியக் காணப் பெற்றார் இல்லை என்கிறார்-இதுவும் தலைவி தலைமகன் பெருமையை யுரைத்தல் யாகிற கிளவியாம்

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி-அவதாரிகை–இதம் இத்தம் என்று-தத் தத் ஸமய நிஷ்டர்களால் அறியலாகாதோ என்ன-வாசா சொன்ன மாத்ரமே-அங்கனே அறியப் போகாது என்று அருளிச் செய்கிறார்

நிறமுயர் கோலமும் பேருமுருவமும் இவை இவை என்று
அறமுயல் ஞானச் சமயிகள் பேசிலும் அங்கு  அங்கு எல்லாம்
உறவுயர் ஞானச் சுடர் விளக்காய் நின்றதன்றி யொன்றும்
பெற முயன்றார் இல்லையால் எம்பிரான் பெருமையே
-44-தலைவி தலைவன் பெருமை கூறுதல் –

பத்துடையோர்க்கேன்றும் பரன் எளியனாம் பிறப்பால்
முத்தி தரும் மா நிலத்தீர் -மூண்டவன் பால் -பத்தி செய்யும்
என்று உரைத்த மாறன் தன் இன் சொல்லால் போம் நெடுகச்
சென்ற பிறப்பாம் அஞ்சிறை—3–சர்வ ஸ்மாத் பரனாய் அதீந்த்ரியன் ஆனவனை ஷூத்ரரான நாங்கள் கண்டு பஜிக்கும் படி எங்கனே என்று வெருவுகிற சம்சாரிகளைக் குறித்து பரனானவன் தானே அதீந்த்ரியமான வடிவைக் கண்ணுக்கு இலக்காக்கிக் கொண்டு இதர சஜாதீயனாய் சம்சாரிகளுக்கும் பஜீக்கலாம் படி தன் கிருபையாலே ராம கிருஷ்ணாதி ரூபேண அவதரித்து ஸூலபனான பின்பு
பஜிககத் தட்டில்லை என்கிற பத்துடை அடியவரில் -அர்த்தத்தை பத்துடையோர்க்கு -என்று அருளிச் செய்கிறார்–அவதார சௌலப்யத்தை முன்னிட்டு ஆஸ்ரயிங்கோள் -என்று ஆழ்வார் ஸ்ராவ்யமாக அருளிச் செய்த இத் திருவாய் மொழியின் அனுசந்த்தாநத்தாலே நிவ்ருத்தமாம் –நெடுகச் சென்ற பிறப்பாம் அஞ்சிறை-அநாதி காலம் தீர்க்கமாய்ப் போந்த ஜன்மம் ஆகிற குரூரமான சிறை –-அறுவர் தம் பிறவி அஞ்சிறை -என்றத்தை அனுவிதாயானம் பண்ணின படி –-த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மா மேதி சோர்ஜூந-என்னக் கடவது இறே-

நிறம் உயர் கோலம் -ஒப்பனையும் இவனைப் பற்றியே நிறம் பெரும் – ஆபரணங்களுக்கு அழகு கொடுக்கும் பெருமாள் அன்றோ–இவனை பற்றித் தான் நிறம் பெரும் படி யான ஒப்பனையும் –ஆயதா -திருவடி வந்த கார்யத்தை மறந்து கவி பாடத் தொடங்கினான் – வந்த கார்யம் முடிந்தது என்று அறிந்தானாகத்  தோள்களைக் கண்ட போதே –ஆயதா ஆஜான பாஹூ —-திரு முழம்  தாள் அளவும் நீண்டு பின்னையும் முடியாது இருக்கை –பாஹவ-ராமஸ்ய தஷிணோ  பாஹூ-என்கிறபடியே
(பாஹவ-பஹு வசனம் -நான்கு தோள்கள் )சர்வ பூஷண பூஷார்ஹா – அழகு இழந்து கிடக்கிற ஆபரணங்களை அலங்கரியாது ஒழிகிறது என் –கிமர்தம் ந விபூஷிதா –இவ் வாபரணங்களின் எழிலை கழற்றி இட்டு வைக்கிறது என் –திருத் தோள்களில் சாத்தினால் தானே ஆபரணங்களுக்கு அழகு
கலன் அணியாது -அங்கங்கள் அழகு மாறி -குலசேகரப் பெருமாள்-ஆபரணங்களுக்கு அழகூட்டும் பெருமாள் அன்றோ–ராஜாக்கள் வெற்றிலையை விலக்குதல்–பால் குடியோம் என்னுதல் செய்வார்கள் –
இன்ன கோட்டை அழித்தால் அன்றி -என்று திரிவாரை போலே –ஒன்றும் அறியாதேகாட்டில் திரியக் கடவ குரங்குகளும் அனுபவிக்கும் படி – பெருக்காறு போலே இவ் வெறும் புறத்தில் அழகை கொள்ளை யூட்டிக் கொள்ளுகிறது என் –(ஆபரணம் தடுப்பு அணை போல் என்றவாறு )

பேரும் –
இவ் அழகுக்கு வாசகமான திரு நாமமும் –-மகர நெடும் குழைக் காதர் போல –திரு மலை நம்பி-(பெரிய திரு மலை நம்பியின் திரு குமாரர் -பிள்ளை திரு மலை நம்பி)அந்திம தசையில் கணியனூர் சிறியாத்தானை- பிள்ளை (பட்டர்-கூரத் ஆழ்வானோ பாதி யாகையாலே பட்டரை பிள்ளை என்பர் )தமக்கு  தஞ்சமாக நினைத்திருக்கும் திரு நாமம் என் – அத்தை சொல்ல வேணும் -என்ன –இவர் முன்னே நாம் எத்தை சொல்லுவது -என்று கூசி இரா நிற்க –தாசரதீ பேசாது இருக்கும் அவஸ்தை அன்று காண் இது -என்ன-நாராயண ஆதி நாமங்களும் சொல்லிப் போருவர் –ஆகிலும் விரும்பி இருப்பது அழகிய மணவாள பெருமாள் -என்னும் திரு நாமத்தை -என்ன-பர்த்ரு நாமத்தோபாதியாய் இரா நின்றது – ஆகிலும் பிள்ளை நினைத்து இருந்தது போக்கி தஞ்சம் இல்லை -என்று அழகிய மணவாள பெருமாளே சரணம் -என்று திரு நாட்டுக்கு நடந்தார் –நா அகாரியம் சொல்லில்லாதவர் அவதாரிகையில் இந்த ஐ திக்யம் உண்டே ஆச்சார்ய திரு நாமம் சொல்லாதது நாவுக்கு அக்காரியம் என்றவாறு பஞ்சம உபாய நிஷ்டர் -கணியனூர் சிறியாத்தான்)ஆச்சி மகன் அந்திம தசையிலே தன்னை அறியாதே கிடக்க-பட்டர் எழுந்து அருளி-செவியி னில் ஊதி னாரை போலே -அழகிய மணவாள பெருமாளே சரணம் -என்ன பூர்வ வாசனையாலே அறிவு குடி புகுந்து அத் திரு நாமத்தைச் சொல்லி
திரு நாட்டுக்கு நடந்தார்  – 

உருவும் –
ஆளவந்தார் மகனார் சொட்டை நம்பி அந்திம தசையில் முதலிகள் அடைய-புக்கிருந்து –-நீர் நினைத்து கிடக்கிறது என் -என்ன-வைகுண்டத்திலே  சென்றால் நம்பெருமாளுடைய குளிர்ந்த முகம் போலே
ஸ்ரீ வைகுண்ட நாதன் முகம் குளிர்ந்து இல்லையாகில் முறித்து கொண்டு இங்கு ஏற ஓடிப் போரும் இத்தனை என்று கிடக்கிறேன்
-என்றார் – (இதே விஷயம் பட்டரும் அருளிச் செய்ததாகவும் உண்டே )பட்டர் பெருமாள் பாடு புக்கிருக்க -பெருமாள் திருமஞ்சனத்து ஏறி அருளுகிறவர் –
பட்டரை கண்டு -உனக்கு வேண்டுவது என் -என்று கேட்டு அருள –சேலையை கடுக்கி (விலக்கி )திருவரையையும் துடைப்பற்றையும் ஒரு கால் காட்டி அருள வேணும் -என்றார் –
பெருமாள் -அஞ்சினாயோ -என்று கேட்டருள –நாயந்தே -பரமபதம் என் சிறு முறிப்படி அழியும் -உம்முடைய குளிர்ந்த திரு முகமும் – திரு நாம தழும்பும் இழக்கிறேனாக  கருதி அஞ்சா நின்றேன் -என்றார்-(பெருமாள் காட்டி அஞ்சினாயோ என்று கேட்டு அருள பரமபதம் போவதும் அஞ்சினாயோ
அதில் பயம் இல்லை -சங்கையும் இல்லை வைத்த அஞ்சல் என்ற கை இருக்க அஞ்சுவேனோ
)-

உருவும் -வடிவழகும் –இவை இவை என்று –-இது ஓர் ஒப்பனையே –இது ஒரு திரு நாமமே – இது ஓர் அழகே -என்று –அறமுயல் –அறத்தில் முயலா நின்றுள்ள –(உபாயாந்தர நிஷ்டர்கள் )-ஞான சமயிகள்
தஹர வித்தை –-சாண்டில்ய வித்தை –சத் வித்தை இவற்றாலே யனவரத பாவனை பண்ணி-பக்தி நிஷ்டனாய் –அந்த ஸ்நேஹத்தாலே ஓர் ஓன்று அனுபவித்து –அதுக்கு அவ்வருகு போக மாட்டாதே-இருக்கும் அவர்கள் –பேசிலும் –சொல்லப் புக்கார்கள் ஆகிலும் –அங்கு அங்கு எல்லாம் அவ்  ஒப்பனையிலும் – திரு நாமத்திலும் –வடிவிலும் –உற-கிட்ட –உயர் ஞான சுடர் விளக்காய் நின்றதன்றி –மிக்க ஞான பிரகாசத்தை உடையரான மாத்திரம்  அன்றி –எம்பிரான் பெருமையை ஒன்றும் பெற முயன்றார் இல்லையால் –தன் அருளாலே எனக்கு விஷயமாக்கின உபகாரனுடைய பெருமையை ஒருத்தரும் கிட்டும்படி முயன்றார் இல்லை என்று அந்வயம்-

வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்-
ஊழ் கொண்ட சமயத் தன்னான் உருவு கண்டாரை ஓத்தார் -கம்பர் –

அறமுயல் ஞானச் சமயிகள்-
தர்ம மார்க்கத்தால் முயன்றும் என்றும்-அற முயல் -மிகவும் முயன்று என்றுமாம் –அளவிட ஒண்ணாத தன் பெருமையையும்   மகிமையையும் அவன் காட்டக் கண்டு மகிழ்ந்து பேசுகிறார் –
நிறமுயர் கோலமும் பேருமுருவமும் இவை இவை என்று-
நிறம் –
முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும்-நிலை நின்ற பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் –
கோலம் -கௌஸ்துபாதிகள்
பேர் – பேரும் ஓர் ஆயிரம் கொண்ட பீடுடையான்
உரு -மத்ஸ்ய கூர்மாதி ரூப பேதங்கள்

நிறமுயர் கோலமும்-திருமேனி நிறம் தான் மிகைத்துத் தோற்றும்படியான ஒப்பனையும்-அன்றியே
நிறத்தோடு சேருகையாலே உயர்த்தி பெற்ற ஒப்பனையும் என்றுமாம்-பேருமுருவமும்-இவ் வழகிலே அகப் பட்டார் பாசுரமிட்டு ஸ்துதிக்கைக்கு ஈடான திரு நாமங்களும் இவ் வழகுக்கு ஆஸ்ரயமான விக்ரஹங்களும்–இவை இவை என்று-கால பேதத்தாலும்-குண பேதத்தாலும் உண்டான அதிகாரி பேதத்தாலே தத் தத் நியதமாக அநு சந்தேயமான ரூபாதி பேதங்களை நிஷ்கர்ஷித்து–அற முயல் ஞானச் சமயிகள் பேசிலும்-தர்ம மார்க்கத்தாலே முயன்று பெற்ற ஞானத்தை யுடையரான வைதிக ஸாஸ்த்ர ஸமய நிஷ்டரானவர்கள் ஸ்ரோத்தாக்களுக்குப் பாசுரம் இட்டுப் பேசிலும்–அற முயல்
மிகவும் முயல் என்றுமாம்–அங்கு அங்கு எல்லாம்-அந்த அந்த ரூப வேஷ நாம விக்ரஹங்கள் எல்லாவற்றிலும்–உறவுயர் ஞானச் சுடர் விளக்காய் நின்றதன்றி-அவற்றிலே சிறக்க உயர்ந்து வருகின்ற ஞானமாகிற தீபத்தாலே விளக்கத்தைப் பெற்று நின்றது ஒழிய–யொன்றும் பெற முயன்றார் இல்லையால்–ஒரு பிரகாரத்தையும் பரிச்சேதிக்கப் பெறும் படி யத்னம் பண்ணினார் இல்லை–எம்பிரான் பெருமையே-இவை எல்லாவற்றையும் எனக்கு ப்ரகாசிப்பித்த மஹா உபகாரகனுடைய
நிரதிசய மஹாத்ம்யத்தை -என்று தமக்கு அவன் அருளாலே இவ் வபரிச்சித்த மஹாத்ம்யம் பிரகாசித்த படியை அருளிச் செய்தார் யாயிற்று –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-இவ்வாசிகளும் யுண்டாய்ச்-சிலர் அறிந்தார் களுமாய் அவர்களுக்கு அறியாதாரில் காட்டில் ஓர் ஏற்றம் யுண்டாய்ப் போரா நிற்க எப்பால் எவர்க்கும் எண்ணும் இடத்து -என்றத்துக்குக்
கருத்து என் என்னில் அவர்கள் அறிந்தாரான நிலை இது அன்றோ என்று அதுக்கு உத்தரம் சொல்லுகிறது –

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி வியாக்யானம்–நிறமுயர் கோலமும்-திருமேனி நிறத்துக்கு மேல் தோன்றும்
ஓர் ஓர் அழகும்–பேரும்-திருநாமங்களும்–உருவமும்-திவ்ய மங்கள விக்ரஹங்களும்–இவை இவை என்று-பேர்கள் இவை உருவங்கள் இவை என்று தனித் தனியே நிஷ்கர்ஷித்து-அறமுயல் ஞானச் சமயிகள் பேசிலும்தர்ம த்வய லீதரிநாப நிவிஷ்டராய் த்வே வித்யே வேதீ தவ்ய-முண்டக -1-1-4-
என்னப்பட்ட பரோக்ஷ அபரோக்ஷ ஞானாவாந்தர பெத்த நிஷ்கர்ஷண ப்ரவ்ருத்தர்கள் சிஷ்யர்களுக்கு ஸப்தத்தால் நிரூபித்துச் சொல்லிலும்–அங்கு அங்கு எல்லாம்-அங்கு அங்காகப் பேசும் இடங்கள் எல்லாம்–உறவுயர் ஞானச் சுடர் விளக்காய் நின்றதன்றி-விசாரிக்க விசாரிக்க அஞ்ஞாத அம்சமே மேல் மேல் விஞ்சி விபூதி த்வய நித்ய வ்யாப்த ஞான ப்ரப ஆஸ்ரய ஞான ஸ்வரூபமாய் பர ப்ரகாசமுமாய்
ப்ரகாசாந்தர நிரபேஷ ப்ரகாசமாய் நிலைக்கு நின்றது அன்றி–யொன்றும் பெற முயன்றார் இல்லையால்-இதம் இத்தம் என்று பரிச்சேதிக்க யத்னப்படுவார் என்றும் எங்கும் இல்லையே–சரி -எத்தை -என்ன-எம்பிரான் பெருமையே-இத்தை எல்லாம் எனக்கு அறிவித்து என்னை அடிமை கொண்டு உபகரித்தவனுடைய ஸர்வ உத்க்ருஷ்ட ஸ்வரூபாதிகளை ஒன்றும் பெற முயல்வார் இல்லை
என்று அந்வயம்

தாத்பர்யம்-சவுந்தர்யாதிகள் நினைக்க அரிது ஆனால் போல்-அவனை சாஷாத்கரிக்கவும் அரிது
கர்மயோகம் ஞான யோகங்கள் ஆகிற அங்கங்கள் யுடன் -பக்தி யோகமும் -பண்ணி-நிர்மல அந்தக்கரணமாய் அவனது பேரையும் உருவத்தையும் சேஷ்டிதங்களையும் அறிந்து பிறருக்கு உபதேசித்தாலும் அவன் கிருபை இல்லாமல் அவனைக் கிட்டி அனுபவிக்க இயலாது என்கிறார்

1-3-பத்துடை யடியவர்கு எளியவன்-ப்ரவேஸம்

இச் சம்சாரி சேதனனுக்கு-பஜிக்கலாம் படி – வழிபடலாம்படி -அவன் தன்னைக் கொண்டு வந்து தாழ விட்டு எளியனாமாகில், இவனுக்கு வழி படத் தட்டு இல்லையே?’ என்று
கூறுமுகத்தால் அவன் எளிமையை அருளிச் செய்கிறார்.சர்வேஸ்வரன் அரியன் என்றால் சம்சாரத்தில் ஆள் பற்றாது என்று அவன் எளிமையை விளங்க விரித்துச் சொல்லிக் கொண்டு போந்தோம்;-அது தானே ‘இவர்களுக்கு இத்தனை எளியனோ?’ என்று விடுகைக்கு உடல் ஆயிற்று? அவ் வெளிமை தானே ஆதரிக்கைக்கு உடல் ஆயிற்று உமக்கு ஒருவருக்குமே!’ என்று ஸ்ரீ எம்பாரைப் பார்த்து உடையவர் அருளிச்செய்தாராம் .

ஜென்ம கர்ம ச மே திவ்யம் (‘என்னுடைய பிறவிகளும் பிறவிகளிற் செய்யப்படுகின்ற தொழில்களும் தெய்வத் தன்மை வாய்ந்தவை,’) என்று? அதாவது, ‘என்னுடைய பிறவிகள் கர்மம் அடியாக அல்ல; இச்சை அடியாக இருக்கும்.-நாம் பிறவா நிற்கச் செய்தே பிறவாமையும் கிடக்கும்; தாழ நின்ற நிலையிலே மேன்மையும் கிடக்கும்;
அப்ராக்கிருத சம்ஸ்தானத்தை இதர சஜாதீயமாக்கி வந்து பிறப்போம்;
இவற்றுள் ஒன்றை அறிந்தவர்கட்குப் பின்னர்ப் பிறவி இல்லை; நானும் பிறந்து அவர்களும் பிறக்க வேண்டுமோ?-ஈர் இறை உண்டோ?’ என்றான் என்றபடி.-பரத்வ தசைகளில் காட்டில் திரு வவதாரங்களிலே தன்னுடைய கல்யாண குணங்கள் நிறம் பெறும்–இவ்வவதார ரகஸ்யத்தின் உடைய சீர்மை ஒருவர்க்கும் அறிய அரிது

அவதாரங்களை முன்னிட்டுக் கொண்டு, அவதாரங்களிலும் நீர்மைக்கு எல்லை நிலமான ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்திலே இழிந்து, அது தன்னிலும் பரத்துவத்தோடு ஒக்கச் சொல்லக் கூடிய நிலைகளைக் கழித்து, நவநீத சௌர்ய நகர க்ஷோபத்திலே அகப்பட்டு, இளமணற்பாய்ந்து ‘எத்திறம்!’ என்று மோஹித்துக் கிடக்கிறார்.

இப்படி பரனான நாராயணன் -பஜநீயனாம் இடத்தில் பஜன சவ்கர்யாவஹமான ஸூபாஸ்ரயத்துக்கு ஏகாந்தமான அவதார ப்ரயுக்த சவ்லப்யத்தை பிரகாசிப்பிக்கைக்காக –
1-தத் உப பாதகமான நவநீத சவ்ர்ய அபதாநத்தையும் -2-அவதார க்ருத சவ்லப் யத்தினுடைய உஜ்ஜ்வல்யகரத்வத்தையும்
3-அவதார ஆச்சர்யத்தினுடைய துரவபோதத்தையும்-
4-அவதார க்ருத ரூப நாமங்களினுடைய அபரிச்சேத்யதையும் –
5-ஸூலபனானவனுடைய பஜனத்துக்கு உண்டான ப்ரமாணிகத் வத்தையும் –
6-அவதாரத்திலும் த்ரிமூர்த்தி சாம்யம் விவேகிக்கை அரிது என்னும் இடத்தையும் –
7-அதனுடைய விவேக பிரகாரத்தையும் –
8-விவேகித்து பஜித்தவனுடைய விரோதி நிவ்ருத்தியையும்
9-பஜனீயனுடைய சஜாதிய நிபந்தநமான ஷோப கரத்வத்தையும்
10-அவதார ரஹஸ்யம் அதி கஹனம் என்னும் இடத்தையும்
உபதேசித்து –
ஏவம் விதனான ஈஸ்வரனை நான் அனுபவிக்கப் பெறுவதே என்று ப்ரீதராய் சர்வ பிரகாரத்தாலும் அனுபவிக்க உபக்ரமிக்கிறார் –

முதற்பாட்டில்,ஸூலபன் -‘எளியவன்’ என்றார்;
இரண்டாம் பாட்டில்,-ப்ரஸ்துதமான ஸுலப்யத்தை – சொன்ன அவ்வெளிமையை வகைப்படுத்தி -ச பிரகாரமாக -அருளிச்செய்தார்;
மூன்றாம் பாட்டில், ‘அவனுடைய அவதார ரஹஸ்யம் ஒருவர்க்கும் அறிய நிலம் அன்று,’ என்றார்;
நான்காம் பாட்டில், ‘அத்தன்மைகள் தாம் அடியார்க்கு அறியலாம்; அல்லாதார்க்கு அறியப்போகா,’ என்றார்;
ஐந்தாம் பாட்டில், ‘இப்படிப்பட்டவனை அவன் அருளிச்செய்த பத்தி மார்க்கத்தாலே ஆஸ்ரயியுங்கோள் – அடைமின்,’ என்றார்;
ஆறாம் பாட்டில், ஆஸ்ரயணீய வஸ்து -அடையத்தக்க பொருள் இன்னது’ என்றும், ஆஸ்ரயிக்கும் பிரகாரம் -அடையும் விதம் இன்னது என்றும் அருளிச் செய்தார்;
ஏழாம் பாட்டில், ‘நீங்கள் சில் வாழ் நாள் பல் பிணிச் சிற்றறிவினிர் ஆகையாலே, விளம்பிக்க ஒண்ணாது; கடுக அடைமின,’ என்றார்:
எட்டாம் பாட்டில், ‘பற்றிய அளவில் விரோதிகள் அடங்கலும் நசிக்கும்,’ என்றார்;
ஒன்பதாம் பாட்டில், பிரமன் சிவன் முதலியோர்கட்கும் காரணமானவன் வந்து அவதரிக்கைக்குக் காரணம் அருளிச்செய்தார்;
பத்தாம் பாட்டில், இப்படி எளியவனானவனை முக் கரணங்களாலும் அனுபவிக்கப் பாரித்தார்;
முடிவில், இதனைக் கற்றார்க்குப்-அப்யசித்தார்க்கு – பலன் அருளிச் செய்தார்.

பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே
 –1-3-1-

பத்து-பக்தி. ‘பத்து என்பது பத்தியைக் காட்டுமோ?’ என்னில்,
‘எட்டினோடு இரண்டு எனுங் கயிற்றினால் மனந்தனைக் கட்டி’ என்னக் கடவது இறே !
ஆகையாலே, பத்து என்று பத்தியைச் சொல்லுகிறதாகும்.
அது தன்னிலும் பரபத்தியை அன்று இங்குச் சொல்லுகிறது; –
பக்தி உபக்ரம மாத்ரத்தையே -பத்தியின் தொடக்கத்தைச் சொல்லுகிறது.

உடை-இந்த அப்ரதிஷேத அத்வேஷ – விலக்காமை பகையாமை மாத்திரத்தையே- கனத்த உடைமையாகச் சொல்லுகிறார்.-இவ் வுலகில் இறைவனிடத்தில் பத்தியினைச் செலுத்துகின்றவர்களை‘விண்ணுளாரிலும் சீரியர்’ என்கிறபடியே, நித்திய ஸூரிகளைக் காட்டிலும் கனக்க நினைத்திருக்கும் பகவானுடைய அபிப்பிராயத்தாலே சொல்லுகிறார்.

எளியவன் – அவர்கள் பாவத்தைப் போக்குதல், புண்ணியத்தைக் கொடுத்தல், தன்னைக் கிட்டலாம்படி இருத்தல் செய்தல் அன்றிக்கே, அவர்கள் இஷ்ட விநியோக அர்ஹமாய் – விரும்பியவாறு செய்து கொள்ளும்படி தன்னை ஆக்கி வைப்பவன். அதாவது, தன்னை ஒழிந்தது ஒன்றைக் கொடுத்தல், தான் இருக்குமிடத்தில் அவர்களை அழைத்துக் கொடுத்தல் செய்யான்;

மத்துறு கடை வெண்ணெய் –முக் கால வினைத்தொகை யாயினும், நிகழ் காலத்தில் பொருள் சிறப்புடைத்து;-கடையா நிற்கையில், பசியராய் இருக்குமவர்கள் சோறு சமையப் பற்றாமல்‘வெந்தது கொத்தையாக வாயில் இடுமாறு போன்று, கடைவதற்குள் பொறுக்காமல் நடுவே அள்ளி அமுது செய்த படியைச் சொல்லுகிறார்,’ என்று திருக் குருகைப் பிரான் பிள்ளான் பணிப்பார்.

பெரிய பிராட்டியார் நெருக்கி அணைக்கும் மார்வை யன்றே கயிற்றாலே நெருக்கிக் கட்டக் கட்டுண்டான்?’ என்பார், உரவிடையாப்புண்டு’ என்கிறார்:
அன்றியே – ‘மிடுக்கையுடைய ரிஷபம் போன்று இருக்கின்றவன் கட்டுண்டான்,’ என்று பொருள் கூறலுமாம்.-உரம் – மிடுக்கு; விடை – ரிஷபம்
உரம் என்பதனை ‘உதரம்’ என்ற சொல்லின் விகாரமாகக் கொண்டு ‘வயிற்றினிடத்தில் கட்டுண்டு’ என்று பொருள் கூறலும் ஒன்று. உதரம் – வயிறு.

த்யக்த்வா தேகம் புனர் ஜென்ம நைதி மாமேதி ‘(எனது அவதாரத்தையும் அவதாரத்தில் நிகழ்த்தும் நிகழ்ச்சிகளையும் தெய்வத்தன்மை வாய்ந்தவை என்று எவன் அறிகிறானோ அவன் இச் சரீரத்தை விட்டால் வேறு சரீரத்தை அடைகிறான் இல்லை; என்னையே அடைகிறான்,’) என்கிறபடியே, நம்முடைய கட்டை அவிழ்க்க இறே தான் கட்டுண்டு இருந்தது –பிள்ளை பெற்றுத் தாமோதரன் என்று பெயரிடும்படி அன்றே கட்டுண்டான்?

சௌலப்யத்தை உபதேசிக்கைக்காக அவதாரங்களை அனுசந்தித்தவர் -தொடங்கின உபதேசத்தை மறந்து கிருஷ்ண அவதாரத்தில் நவநீத சௌர்ய சாரித்ரத்திலே தாம் அகப்பட்டு அழுந்துகிறார் –அவாப்த சமஸ்த காமன் தனக்கு ஒரு குறை யுண்டாய் -அது நேர் கொடு நேர் கிடையாமையாலே -களவிலே இழிந்து அது தலைக் கட்டப் பெறாதே வாயது கையதாக அகப்பட்டுக் கட்டுண்டு அடியுண்டு நிற்கும் நிலையைச் சொல்லுகிறது –

உரலினோடு இணைந்து இருந்து – உரல் மூச்சு விடிலும் தான் மூச்சு விடாதே அசிதவ்யாவ்ருத்தனாய் இருந்த படி –ஏங்கிய எளிவே-இந்த சுத்தனைக் கள்ளன் என்று கட்டினால் பொறுக்க மாட்டாதே அழத் தொடங்குமே – அவள் வாய் வாய் என்றால் ஏறிட்ட த்வனி இழிய விட மாட்டாதே பயப்பட்டு நிற்கும்-எளிவு -சௌலப்யம் –

எத்திறம்-இது என்னபடி-யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று வேதம் மீண்ட பரத்வத்தை எல்லை காணலாம்-இந்த சௌலப்யம் தரை காண ஒண்ணாது இருந்ததீ-என்கிறார்-இவ்வதி மாத்ர ஆச்ரித ஸூலபத்வ மஹா குணத்தில் ஈடுபட்டு -ஆஸ்ரித ஸமாஸ்ரயணீயனாய் இருக்கைக்கு தத் சஜாதீயனாய் வந்து பிறந்து அருள அமையாதோ- இங்கனே உரலில் கட்டுண்டு நடுங்கின படியே இருந்து அருள வேணுமோ -பிரானே இது என் செய்து அருளினாய் -எதுக்காகச் செய்து அருளினாய் -என்கிறார் –

—————

எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில பல பிறப்பாய்
ஒளி வரு முழு நலம் முதலில கேடில வீடாம்
தெளிதரு நிலைமையது ஒழிவிலன் முழுவதும் இறையோன்
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே 
–1-3-2-

தப்பச் செய்தோம்;தப்பச் சொன்னோம் அழித்துச் சூளுறவு-ப்ரதிஜ்ஜை – செய்ய வேண்டும்,’ என்கிறார் இரண்டாம் பாட்டில்.-இவனுக்கு எளிமை ஸ்வரூபம் என்பதனைத் தெரிவிப்பதற்கு ‘எளிவரும் இயல்வினன்’ என்கிறார்-நிலை வரம்பு இல – இன்ன அவதாரம் இன்ன செயல் என்பது இல்லை;-‘நிலை இல, வரம்பு இல’ என ‘இல’ என்பதனை ‘நிலை’ என்பதுடனும் கூட்டி பூர்வர்கள் நிர்வாகம்
இனி, பட்டர் இவ்விரு பொருளையும் ‘நிலை இல’ என்பதன் பொருளாகவே கொண்டு,
‘வரம்பு இல’ என்பதற்கு, வேறு பொருள் அருளிச்செய்வர்.
அதாவது, ‘அவதரித்து எளியனாய் நின்ற நிலை தன்னிலே பரத்துவம் தோற்ற நிற்கிலும் நிற்கும்,’ என்று. சாரதியை வேஷத்தோடே தேர்ப் பாகனாய்த் தாழ் நிற்கச் செய்தே ஸ்ரீ விஸ்வரூபத்தைக் காட்டியும், தான் புத்திரப் பேற்றின் பொருட்டுப் போகா நிற்கச் செய்தே கண்டா கர்ணனுக்கு மோக்ஷத்தைக் கொடுத்தும், ஏழு வயதிலே கோவர்த்தன மலையைத் தரித்துக்கொண்டு நின்றும் செய்தவை.
இத்தாற் பெறப்படுவது, ‘ஒன்றிலும் ஒரு நியதி இன்று; ரக்ஷணத்துக்கு -காப்பதற்கு உறுப்பாம் அத்தனையே வேண்டுவது; ஏதேனுமாக அமையும் இவனுக்கு,’ என்கை.

வீடாம் தெளிதரு நிலைமையது ஒழிவிலன்- மோஷம் ஆகிற தெளிவைத் தரும் ஸ்வ பாவத்தை விடாதே கூட வந்து அவதரிக்கும் –இதுவும் கல்யாண குணங்களிலே ஒன்றாய் இருக்கப் பிரித்துச் சொல்லுகிறது -அவதாரத்துக்கு மோஷ பிரதானத்திலே நோக்கு ஆகையாலே

இறையோன், அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனனாய் அமைந்து, முதல் இல கேடு இலவாம்-ஒளிவரும் முழுநலம், வீடாம் தெளிதரு நிலைமையது முழுவதும் ஒழிவிலனாய், நிலை வரம்பில் பல பிறப்பாய், எளிவரும் இயல்வினன்’ என்று அந்வயம்-

————

அமைவுடை யறநெறி முழுவதும் உயர்வற வுயர்ந்து
அமைவுடை முதல் கெடல் ஓடிவிடை யறநில மதுவாம்
அமையுடைய யமரரும் யாவரும் யாவையும் தானாம்
அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே
–1-3-3-

மாயையை அறிபவர் யாரே –இவனுடைய அவதாரத்தின் மறை பொருள் ஒருவர்க்கும் அறிய நிலம் அன்று என்கிறார். ‘என்னை?’ எனின்,
பிரகாரியான தான் பிரகாரமான பொருள்களிலே ஒன்று ‘என்மகன்’ என்று அபிமானிக்கும்படி வந்து பிறந்த இவ்வாச்சரியம் ஒருவர்க்கும் அறிய நிலம் அன்று
ஆதலின். ‘ஏன், ஒருவரும் அறியாரே?’ எனின்,
நித்தியஸூரிகள் பரத்வ அனுபவம் பண்ணுகையாலே அறியார்கள்;
சம்சாரிகள் நாஸ்திகர் ஆகையாலே அறியார்கள்;
பிரமன் முதலிய தேவர்கள் தம்தமது அறிவாலே அறிய இருக்கின்றவர்கள் ஆகையாலே அறியார்கள்;
மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கள் ‘எத்திறம்!’ என்று மோஹித்துக் கிடப்பார்கள்;
தனக்குத் தானே முற்றறிவினையுடைய இறைவனும்-ஜென்ம கர்ம மே திவ்யம்
(‘என்னுடைய பிறவியும் செயல்களும் தெய்வத் தன்மையன,’) என்கின்றான்;
ஆதலின், ஒருவர்க்கும் நிலம் அன்று என்பதாம்.

———

யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய வெம்பெருமான்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய வெம்பெருமான்
பேருமோர் ஆயிரம் பிற பல வுடைய எம்பெருமான்
பேருமோர் உருவமும் உளதில்லை இலதில்லை பிணக்கே 
–1-3-4-

ஒரு குரங்கு, வேடச்சி, ஆய்ச்சி இவர்களுக்கு எளியனாய் இருக்கக் கண்டாமே!
எம்பெருமான்’ என்ற சொல்லால்,-ஆஸ்ரிதற்கு- ‘அடியார்க்கு எளியனாய் -அநாஸ்ரிதற்கு – அடியர் அல்லாதார்க்கு அரியனான-என் நாயன்- – நிலை இருந்தபடி என்னே!’ என்று ஈடுபட்டு எழுதிக் கொடுக்கிறார்.

பேரும் ஓர் ஆயிரம் – அநுபவிதாக்களுக்கு -அனுபவிக்கின்ற அடியார்கட்கு இழிந்த இடம் எல்லாம் துறையாகும்படி பல திரு நாமங்களை யுடையவனாய் இருக்கை.
குணம் பற்றி வருவனவும், ஸ்வரூபம் பற்றி வருவனவும் ஆன பெயர்களுக்கு ஓர் எல்லை இல்லை ஆதலின், ‘பேரும் ஓர் ஆயிரம்’ என்கிறார்.-தேவோ நாமோ சஹஸ்ரவான்

பிற பல உடைய எம்பெருமான்- அந் நாம த்வாரா காணும் -அப் பெயர்களின் மூலமாகக் காண்கின்ற -பல திருமேனிகளை யுடையனாய் இருக்கை. ‘பிற’ என்பது ஈண்டுத் திருமேனியைக் காட்டுகிறது.-இவர்தாமும் இதனைப் பின்னர்க் கூறுமிடத்து-அநு பாஷிக்கிற இடத்தில் –‘பேரும் ஓர் உருவமும்’ என்று அருளிச் செய்தல் காண்க.

பிணக்கே- இதில் மாறுபாடு உண்டோ? இல்லை என்றபடி.
அடியார்கள் எல்லாம் காண்கையாலே மங்களா சாசனம் பண்ணி நிற்பார்கள் –
அடியர் அல்லாதார் இவை இல்லை என்று இருக்கையாலே முதலிலேயே கிட்டார்கள்; ‘
இவ் விருவர்க்கும் நடுவே பொருள் நித்தியமாகப் பெற்றோமே!’ என்று தாம் இனியர் ஆகிறார்.

—————

பிணக்கற வறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த
கணக்கற நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புறநெறி களை கட்டு
உணக்குமின் பசையற வவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே 
–1-3-5-

அவன் தான் ஸ்ரீ கீதையில் அருளிச் செய்த பத்தி மார்க்கத்தாலே அவனை அடைமின்,’ என்கிறார்.-கணக்கு அறு நலத்தனன்-எல்லை இல்லாத குணத்தை யுடையவன்;
இனி, எல்லை இல்லாத ஸ்நேஹத்தை வாத்சல்யத்தையுடையவன் எனலுமாம்.

அம் பகவன் வணக்குடைத் தவநெறி வழி நின்று- வணக்கத்தை யுடைய பத்தி மார்க்கமாகிற வழியிலே நின்று;
ஸ்ரீ பகவத் கீதையில் பத்தியைப் பற்றிக் கூறுமிடத்தில்
நமஸ் யந்தச்ச மாம் பக்த்யா (‘பத்தியினால் என்னை வணங்கி வழிபடுகின்றார்கள்,’ )என்று கூறி, பின்னர்,(மாம் நமஸ்குரு )‘என்னை வணங்குதலைச் செய்வாய்,’ என்றும் கூறுவதால்,
இவரும் பத்தியை ‘வணக்குடைத் தவ நெறி’ என்கிறார்.
பத்தியானது –அங்கனா பரிஷ்வ்ங்கம் -காதலியோடு கலக்கும் கலவி போன்று போக ரூபமாய் -இன்ப மயமாக இருக்குமாதலின்‘அம் பகவன் தவநெறி’ என்கிறார்.
பத்தி, ஞானத்தின் விசேடமாகையாலே, ‘தவம்’ என்ற சொல்லால் பக்தியைச் சொல்லுகிறார்;
யஸ்ய ஞான மயம் தப (‘அவனுக்குத் தவமானது ஞானத்தின் மயமாய் இருக்கிறது,’) என்கிற நியாயத்தாலே யாதல், இவனுடைய பிரேம மாத்ரத்தையே -அன்பினையே தவமாக நினைக்கின்ற பகவானுடைய அபிப்பிராயத்தாலே யாதல்.

புறம் நெறி களை கட்டு –புறநெறியாகிற களையைக் கடிந்து. அதாவது,-கடிந்து – பறித்து. கட்டல் -களைதல்-பத்தி விஷயமான போது வேறு பலன்களிற்செல்லும் விலக்கடிகளைத் தள்ளி’ என்றும்,-பிரபத்தி விஷயமானபோது மற்றைச் சாதனங்களைத் தள்ளி’ என்றும் பொருள் –

அவனுடை உணர்வு கொண்டு உணர்ந்து –அவன் விஷயமான ஞானத்தைக் கொண்டு உணர்ந்து;-அதாவது, ‘பத்தி மார்க்கத்தைக் கொண்டு உணர்ந்து’ என்றபடி.
இனி,தத் யுக்த – அவன் அருளிச் செய்த ஞானத்தைக் கொண்டு உணர்ந்து;
அதாவது, ‘அவன் அருளிச் செய்த ஸ்ரீ சரம ஸ்லோகத்தின் படியைப் பற்றி நின்று’ என்னுதலுமாம்-

———————

உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உருவியந்த இந்நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறை நிலை உணர்வு வரிது உயிர்காள்
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே
 –1-3-6-

ஆஸ்ரயணீய வஸ்து இன்னது என்றும்-ஆஸ்ரயிக்கும் பிரகாரம் – பற்றுமுறை இன்னது என்றும் அருளிச் செய்கிறார்.

உணர்ந்து உணர்ந்து-உணர்வு என்னாமல் ‘உணர்ந்து’ என்கையாலே.
ஞப்தி – ‘அறிவு மாத்திரமே உள்ளது; -ஞாத்ர அம்சம் -அறிகின்றவன் இலன்’ என்கிற யோகாசாரனை மறுக்கிறார்.
‘உணர்ந்து உணர்ந்து’ என்ற-வீப்சைக்கு – அடுக்குத் தொடரால்,- சைதன்யம் ஆகந்துகம் – ‘அறிவு இடையிலே வந்தது; –முக்த அவஸ்தையிலும்- மோக்ஷ நிலையிலும்-பாஷாண கல்பமாய் – கல்லைப் போன்று இருக்கும்’ என்று கூறும்நையாயிக வைசேடியர்களை மறுத்து,-சைதன்யம் – ஞானம் நித்தியம் என்பதனைத் தெரிவிக்கிறார்.
மேலும், ஞாத்ருத்வம் -அறியுந்தன்மை நித்தியமாகையாலே, ‘ஞான கிரியா கர்த்ருத்வம்-ஞாத்ருத்வம்;அதுதான் அநித்தியம்,’ என்கிற கிரியாவாதியையும் மறுக்கிறார்.

அரி அயன் அரன் என்னும் இவரை உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து-
ஒரு உணர்த்தி, ஸ்வரூபத்தைப் பற்றியது; ஒரு உணர்த்தி, ஸ்வபாவத்தைப் பற்றியது
உரைத்து உரைத்து 
–ஸ்வரூப பரமான பிரமாணங்களையும்-ஸ்வபாவ பரமான பிரமாணங்களையும்

உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின்- தோன்றுகிற அவனைக் கேள்வி மனனம் முதலியவைகளால்-ஸ்ரவண மனனாதிகளால் உணர்ந்து,-அவன் திருப் பெயர்களைப் பலகாலும் உச்சரித்து – கை புகுந்தது என்று விஸ்வசிக்கலாம் அளவும் -ஆஸ்ரயிக்கப் பாருங்கோள் வணங்குங்கோள்-

—————

ஓன்று என பலவென வறிவரும் வடிவினுள் நின்ற
நன்ற எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து
நன்றென நலம் செய்வது அவனிடை நம்முடைய நாளே 
–-1-3-7-

நீங்கள் முடிந்து போவதற்கு முன்னே-நிர்ணய உபாயங்களாலே – உறுதி செய்யும் வழிகளால் பொருள் இன்னது என்று உறுதி செய்து,
நிர்ணீதனானவன் உறுதி செய்யப்பட்டவன் பக்கலிலே விரைவில் பத்திபைப் பண்ணப் பாருங்கோள், என்று,
மேல் பாசுரத்திற்குச் சேஷமாய் இருக்கிறது இப் பாசுரம்.
‘நீங்கள் குறைந்த ஆயுளை யுடையவர்கள் ஆகையாலே, விரைவில் செய்து கொடு நின்று, ‘செய்கிறோம்’ என்ன வேண்டும்;
-‘செய்கிறோம்’ என்று செய்ய ஒண்ணாது என்கிற இதுவே இப் பாசுரத்தில் விசேஷம்-கீழில் பாட்டில் காட்டில் –

நன்று எழில் நாரணன் –நன்று’ என்பதனால், -அநந்ய பரமான -அவனுக்கே உரிய நாராயண அநுவாகாதிகளை நினைக்கிறார்.‘எழில்’என்பதனால், அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயணா -(‘நீங்கின குற்றங்களை யுடையவனும் மோக்ஷத்தை யுடையவனும் ஒளி உருவனும் ஒருவனே யானவனும் ஆன நாராயணன்’) என்கிற புகரை நினைக்கிறார்.
இனி, ‘நன்று எழில்’ என்பதற்கு,ரூப ஸ்ரீ யை – வடிவின் அழகினைப் பார்த்தவாறே,
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான்’ என்கிறபடியே, சர்வ ரக்ஷகன் -‘அனைத்து உலகும் அனைத்து உயிரும் அளிக்கும் பரமன் இவனே,’ என்னலாம்படி இருக்கும்
நன்றான அழகு என்று கூறலுமாம்.-திருப் பெயரைப் பார்த்தவாறே தன்னை ஒழிந்தன அனைத்தையும் பிரகாரமாய்க் கொண்டு தான் பிரகாரியாய் இருப்பான் ஒருவன் என்று தோன்ற இருப்பவனாதலின்,‘நாரணன்’ என்கிறார்.–ஆன பின்பு தத் வியதிரிக்த ப்ரஹ்ம ருத்ரர்கள் பக்கல் ஈச்வரத்வ சங்கையை விட்டு அந்த நாராயணன் பக்கல் நம்முடைய சரீராத் யுபகரணங்கள் உள்ள போதே அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு அடிமை செய்வது என்கிறார் –

————

நாளும் நின்று அடும் நம் பழமை அம் கொடு வினையுடனே
மாளும் ஒரு குறைவில்லை மனனக மலமறக் கழுவி
நாளும் நம் திருவுடையடிகள் தம் நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே
 –1-3-8-

அநாதி காலம் ஆர்ஜிதமான கர்மம் ஆஸ்ரயணத்தை விலக்காதோ என்னில்
பஜன உபக்கிரம வேளையில் அவை அடங்க நசிக்கும் -நசிப்பாரும் உண்டு என்கிறது

அந்த அந்திம தசையில் யாகிலும் ஓர் அஞ்சலி மாத்திரம் ஆதல் ஓர் யுக்தி மாத்திரம் ஆதல் ஓர் ஸ்ம்ருதி மாத்திரம் ஆதல்-அவன் திறத்திலே செய்ய அந்த பக்தி யோகத்திலும் நன்று என்கிறார் –

சர்வேஸ்வரனை அடைந்தானாகில், அவன் பலனைக் கொடுக்கிறான்; பிராட்டியைத் துணையாகப் பற்ற வேண்டுகிறது என்?’ என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க, ‘அவனை அடையும் இடத்தில், இவன் குற்றம் பாராதே தன் நிழலிலே இவனை வைத்து,
அவன் பக்கல் முகம் பெற்றவாறே குற்றத்தைப் பொறுப்பிக்கும் அவள் முன்னாகப் பற்றல் வேண்டும்’ என்று கூறி, ‘நாளும் நம் திருவுடை அடிகள் தம் நலம் கழல் வணங்கி’ என்னா நின்றது கண்டீரே’ என்று அருளிச் செய்தார் பட்டர்.

————-

வலத்தனன் திரிபுரம் எரித்தனன் இடம் பெறத்துந்தித்
தலத்தெழு திசைமுகன் படைத்த நல்லுலகமும் தானும்
புலப்படப் பின்னும் தன்னுலகத்தில் அகத்தனன் தானே
சொலப்புகில் இவை பின்னும் வயிற்றுள விவையவன் துவக்கே
–1-3-9-

ஆஸ்ரியிக்குமவர்களுக்கு த்வரை பிறக்கைக்காகவும் – பற்றுகின்றவர்கட்கு விரைவு உண்டாவதற்காகவும், – ருசி ஜனகன் ஆகைக்காகவும்- ருசியைத் தோற்றுவிப்பவன் ஆகைக்காகவும் வந்து பிறப்பன்,’

பால் குடிக்குங்குழந்தைகள். தாயின் மார்பினை அகலில் நாக்கு வரளுமாறு போன்று,
பிரமனும் திரு நாபிக் கமலத்தை விடின் தன் சத்தை இல்லையாம்படி இருப்பான் ஆதலின், ‘உந்தித் தலத்தனன்’ என்கிறார்.இப் பாட்டில் இவனைப் பற்றி ப்ரஹ்ம ருத்ராதிகள் லப்த ஸ்வரூபராய் இருக்கிறபடியைச் சொல்லுகிறார் 
ஆயின், இவர்கள் எஞ்ஞான்றும் திருமேனியில் இருப்பார்களோ?’ என்னில்,
ஆபத்துகளிலே திருமேனியில் இடங்கொடுப்பான் இறைவன்; அது மகா குணம் ஆகையாலே, ஆழ்வார்கள் எப்பொழுதும் அருளிச்செய்து கொண்டு செல்வார்கள்.
மற்றும், சாமந்தர்கட்குப் புறம்பே நாடுகள் மிகுதியாய் இருந்தாலும், மாளிகைக்குள்ளே செம்பாலே நாழி அரிசியைத் தங்களுக்கு மேன்மையாக நினைத்திருப்பார்கள் அன்றோ? அங்ஙனமே, இவர்களும் திருமேனியில் பண்ணி வைக்கும் பிராப்தி விடார்கள். ‘எங்ஙனம்?’ எனின், வேற்று அரசர்களால் கலகங்கள் உண்டான காலங்களில் அடைய வளைந்தானுக்குள்ளே குடி வாங்கி யிருந்து, கலகம் நீக்கியவாறே புறம்பே புறப்பட்டாலும் ‘இவ்விடம் இன்னார் பற்று’ என்று, பின்னும் ப்ராப்தியாக – தம் இடத்தைச் சொல்லி வைக்குமாறு என்க.

இவை அவன் துயக்கே- மம மாயா துரத்யயா ‘என்னுடைய மாயையினை ஒருவராலும் தாண்ட முடியாது,’ என்கிறபடியே, அவன் தானே ப்ரக்ருதி -மாயையாகிற விலங்கை வெட்ட புண்ணியம் இல்லாதவர்கள் தன் பக்கல் அணுகாதபடி செய்து, அவர்கள் அகலப் புக்கால் அவன்தான் அனுமதி கொடுத்து, உதாசீனனாய் இருக்கையாலே தெரியாது ஒழிகிறது என்கிறார். துயக்கு–சம்சயம் -ஐயம்.

——————

துயக்கறு மதியில் நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும்
மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்
புயற்கரு நிறத்தனன் பெரு நிலம் கடந்த நல்லடிப் போது
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே
 —1-3-10-

இறைவன் விமுகர் பக்கல் பண்ணுமவை நிற்க; அவன் காட்டின வழியே காணப்புக்க நாம்,
மனம் வாக்குக் காயங்களால் நம் விடாய் கெடத் திருவுலகு அளந்த திருவடிகளை -அவன் திருவருளால் காட்டின வடிவழகை -அனுபவிப்போம் நாம் என்று பாரிக்கிறார்.பெருநிலம் கடந்த நல் அடிப்போது அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே அமர்ந்து –அநந்ய பிரயோஜனனாய் -வேறு ஒரு பயனையும் கருதாது இப்படிச் செய்வேன்.
இதற்கு ‘மனம் வாக்குக் காயங்களால் அனுபவிக்கப் பெற்றேன்,’ என்று திருக் குருகைப் பிரான் பிள்ளான் பணிப்பர்.‘இவற்றால் அனுபவிக்கப் பார்க்கிறார்’ என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்.

—————-

அமரர்கள் தொழுது எழு அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே
–1-3-11-

இத்திருவாய் மொழி வல்லாரை எம்பெருமான் பிரதிபந்தகங்களைப் போக்கி திருவடிகளில் கொண்டு போகப் பற்றாமை முந்துற திருவடிகளிலே கொண்டு போய் அந்தமில் பேரின்பத் தடியரோடு இருந்த பின்னை பிரதிபந்தகமான ப்ரக்ருதி சம்பந்தத்தைப் போக்கி அருளும் –

அமரர்கள் தொழுது எழ அலை கடல் கடைந்தவன் தன்னை – கவிழ்ந்து ‘உப்புச் சாறு கிளருவது எப்போதோ?’ என்று கிடக்கிற தேவ ஜாதி யானது எழுத்து வாங்கும்படியாக ஆயிற்று,தோளுந்தோள் மாலையுமாய் ஒரு கடல் ஒரு கடலை நின்று கடையுமாறு போன்று கடைந்த படி.-குணங்களுக்குத் தோற்றுத் ‘தொழுது எழு’ என்கிற தம் பாசுரமேயாய் விட்டது
அழகுக்குத் தோற்ற அவர்களுக்கும் ஆதலின், ‘அமரர்கள் தொழுது எழ’ என்கிறார்.

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -43–கண்ணும் செந்தாமரை கையும் அவை அடியோ அவையே –உயர்வற உயர் நலம் -1-1-

February 24, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

அவனாலே மயர்வற மதி நலம் அருளப் பெற்ற-துயர் அறு சுடர் அடி -விளக்கும் பாசுரம் இது
கீழே கண் அழகை அனுபவித்து அதுவே அவயாந்தரங்களில் சென்று மூட்ட காட்டவே கண்ட பாதம் போல் கண்ணையும் சேர்த்து அனுபவிக்கிறார் இதில் –-மற்ற அவயங்கள் யுடன் சேர்த்து கண்ணை அனுபவிக்கிறார்-தடம் கண்கள் கீழே -இதில் த்ருஷ்டாந்தம் அருளிச் செய்கிறார்

இப்படிக் கண் அழகை அனுசந்தித்தவர்-அவ் வழியாலே அவயாந்தர சோபையையும் வடிவழகையும்
அனுசந்தித்து இவ்வாழ்வாருக்கும் அதிசயித ஸ்வ பாவரானவர்க்கும் பரிச்சேதித்து நினைக்க அரிது என்று அருளிச் செய்கிறார்-இது நாயகன் உரு எழில் உரைத்த தலைவி வார்த்தையால் சொல்லப் பட்டதாகவுமாம் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு அவதாரிகை–நோக்கின அக்கண் வழியே-திருமேனியில் அழகை அடைய அனுபவித்து இவ் விஷயத்தைக் கிட்டின இத்தால் ஒரு பலம் இல்லையாய் இரா நின்றதீ -என்கிறாள்

கண்ணும் செம் தாமரை கையும் அவை அடியோ அவையே
வண்ணம் கரியதோர் மால் வரை போன்று மதி விகற்பால்
விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் யவர்க்கும்
எண்ணும்  இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறமே
-43-தலைவனின் வடிவழகு பற்றித் தலைவி கூறல் –

உயர்வே பரன்படியை உள்ளது எல்லாம் தான் கண்டு
உயர் வேத நேர் கொண்டு உரைத்து -மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு—–1–ஸ்வரூப ரூப குண விபூதிகளால் பரிபூர்ணனாய்
சர்வ ஸ்மாத் பரனாய் ஸ்ரீ யபதியாய் அபௌருஷேயமான ஸூ திருட பிரமாணமான ஸ்ருதிகளால் பிரதி பாதிக்கப் பட்டுள்ள எம்பெருமானை பாஹ்ய குத்ருஷ்டிகளால் அவிசால்யமாம்படி அவன் பிரசாதத்தாலே சாஷாத் கரித்து அனுபவித்து அனுபவித்த படியே ச விபூதிகனான எம்பெருமானைப் பேசி ஏவம் விதனானவன் திருவடிகளிலே குணைர் தாஸ்யம் உபாகத -என்னும்படி அடிமை செய்து உஜ்ஜீவி என்று தம் திரு உள்ளத்தை அனுசாதித்து அருளிச் செய்த முதல் திருவாய் மொழியின் அர்த்தத்தை அனுவதித்து உயர்வே பரன்படியாலே -அருளிச் செய்கிறான் என்கை-இப்படி சகல ஜீவ உஜ்ஜீவன தத் பரரான வாழ்வார் திவ்ய ஸூக்தியடியாக பகவத் ஜ்ஞானம் யுண்டாய் -அது அடியாக மோஷ லாபம் என்றபடி–ஸூக்தி மூலமாக இ றே முக்தி பலிக்கும் இறே
பரன் அடி மேல் குருகூர் சடகோபன் சொல் நிரல் நிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே என்றத்தை கடாஷித்து அருளிச் செய்த படி
அன்றிக்கே-2–ஆழ்வார் திரு நாமம் அடியாகவே -மாறன் சொல்-மோஷம் சித்திக்கும் என்கிறார் ஆகவுமாம்-தத் உக்தியாலே யாதல் தத் விஷயமான உக்தியாலே ஆதல் -ஆகலாம் இறே –
தென் குருகூர் நம்பிக்கு அன்பனாய் மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -என்னக் கடவது இறே

கண்ணும் செம் தாமரை –
எம்பிரான் தடம் கண்கள்
என்று கண் அழகை அனுபவித்தார் – அவ்  வழகு தான் அவயவாந்தரத்திலே மூட்டிற்று –கண்ணும் செம் தாமரை என்று மற்றை அழகுகளோடு ஒருகால் சேர்ந்து அனுபவிக்கிறார் –
முற்பட குமுழி நீருண்டார் –இப்போது ஆயிற்று வாத்சல்யமும் செவ்வியும் அனுபவிக்கிறது –கையும் அவை –கண் இட்டு கொடுக்க அணைத்த கை –சம்ஸ்ப்ருச்யா க்ருஷ்ய சப்ரீத்யா ஸூகாடாம் பரிஷஸ்வஜே-என்று அக்ருரனை அணைத்தால் போலே –அடியோ அவையே –அணைத்த போதே ஸூக ஸ்பர்சத்தால் துவண்டு விழுந்த எல்லை –-புண்டரீகாஷா நம -இறே– கண்ணுக்கு தோற்றவர்கள் காலிலே விழும் அத்தனை இறே –வண்ணம் கரியதோர் மால் வரை போன்று மதி விகற்பால் –எல்லையில் கிடந்தவர்கள் உடைய ஜீவனம் –பிரஜை முலையிலே வாய் வைத்து தாய் முகத்தை பார்க்குமா போலே -என்று பிள்ளைப் பிள்ளை ஆழ்வான்விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் யவர்க்கும்–மதி விகற்ப்பால் எண்ணும் இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறம்-என்று அந்வயம்-மதி விகற்ப்பால்-புத்தி பேதங்களால் –விண்ணும் இத்யாதி –சம்சாரிகளுக்கு  அவ் வருகே சர்வேஸ்வரன் பக்கலிலே உத்பத்தி ஸ்தானத்தை உடையவனுமாய் –அவனாலே லப்த ஞானனுமாய் இருந்துள்ள பிரம்மா தொடக்கமானவர் –அதுக்கு அவ் வருகான முக்தர் –
நித்யர் –இவர்களுக்கு மநோ ரதத்துக்கு நிலமோ ?-எனக்கு உபகாரனான அவன்  உடைய எழிலின் பிரகாரம் –யானைக்கு குதிரை வைப்பாரைப் போல் நித்யர்களுக்கும் இவனது அழகு-உயர்வற உயர் நலம் உடையவன் அன்றோ இவன் எம்பிரான்– தமக்கு அவ் வழகை இறையிலி யாக்கின உபகாரத்தை கொண்டாடுகிறார் –மயர்வற மதி நலம் அருளினான் அன்றோ –உபகாரம் கொண்டாடும் பாசுரம் அதே போல் இதுவும்-நித்யராலும் பரிச்சேதித்து அறிய முடியாத அவயவ சோபையையும் திருமேனியின் எழிலையும் அவனது நிர்ஹேதுக கிருபையால் உள்ளபடி அறிந்து அனுபவித்தேன் என்கிறார்

ந க்ராஹ்யா கேநசித் க்வசித் –யஸ்ய அமதம் தஸ்ய மதம் -இத்யாதி –ரூப சம்ஹனனம்-சம்ஸ்நானத்தை-
லஷ்மீம் -சமுதாய சோபை -இருந்தபடி –
தண்டகாரண்ய ரிஷிகள் பெருமாளின் மான் தோல் மரவுரியை அனுபவித்த ஸ்லோகம்-ஆடவர்கள் பெண்மையை அளாவும் தோளினாய் –சொவ்குமார்யம் – பிராட்டியும் இளைய பெருமாளும் அடுத்து பார்க்கவும் பொராது இருக்கை –(மையாள் கரும் கண்ணி செய்யாள் -பார்க்கவே சிவக்கும் படியான ஸுகுமார்யம் )ஸூவேஷதாம் –தாபச வேஷம் இருந்தபடி –தத்ருசிர்  விஸ்மிதாகாரா –விஸ்மித அந்தகரனராய் கொண்டு கண்டார்கள்-ராமஸ்ய வன வாஸின
அயோத்யா வாசிகளுக்கு கிடையாதது கிடீர் –நெடும் காலம் சரகு இலை தின்று கிடந்த பலம் பெற்றார்கள் என்கிறான் ருஷி –

கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண்ணனையும் அரவிந்தம் அடியும் அஃதே –
ஆழ்வார் அக கண்ணுக்கு புலப்பட்ட எம்பெருமான் வடிவு அழகில் ஈடுபட்ட இது-எமக்கே அன்றி நித்ய ஸூரிகளுக்கும் நிலம் அல்ல என்கிறார் –-யாவர்க்கும் என்பது -யவர்க்கும்- என்று குறுகி உள்ளது –

கண்ணும் செம் தாமரை-நிரங்குச ஐஸ்வர்யத்துக்கும் வாத்சல்யத்துக்கும் ஸூ சகமான திருக் கண்களும் தாமரை–கையும் அவை அடியோ அவையே-திருக் கைகளுக்கும் திருவடிகளுக்கும்
அவை (தாமரை) ஒழிய ஒப்பில்லை–ஓ –என்ற அசை -தாமரை முற்று உவமை அல்லாமையைக் காட்டுகிறது –(தாவி வையம் கொண்ட தடம் தாமரை -முற்று உவமை அங்கு )-வண்ணம் கரியதோர் மால் வரை போன்று–திருமேனி நிறம் நீலமான அத்விதீயமான பெரிய வரை போலே இரா நின்றது
அவயவங்கள் சிகப்புக்குத் திரு மேனி பரபாக சோபையைக் கொடுத்த படி–மதி விகற்பால்-மதியினுடைய வேறுபாட்டால் -மிகுதியால்–விண்ணும் கடந்தும்-மனுஷ்யாதிகளில் காட்டில் ஞானாதிகரான தேவர்கள் வர்த்திக்கிற ஸ்வர்க்கத்தையும் கடந்து–உம்பர் அப்பால் மிக்கு
மேலுண்டான ஸநகாதிகள் ப்ரஹ்மாதிகளுக்கும் அவ்வருகே போய்–மற்று எப்பால் யவர்க்கும்
இவர்களில் வியாவ்ருத்தராய் எங்கும் ஓக்க வியாப்தமான ஞானாதி குணங்களை யுடைய ஸூரிகளுக்கும்–எண்ணும் இடத்ததுவோ-தங்கள் (மதி )வைஷம்யங்களாலே பரிச்சேதிக்கலாம் படியான நிலத்திலே நிற்கிறதோ–எம்பிரானது எழில் நிறமே – இவ்வழகை முற்றும் எனக்கு உபகரித்தவனுடைய ஸுந்தர்ய சோபை யானது–ஆக உபய விபூதியிலும் இவ்வழகு பரிச்சேதிக்க அரிது என்றதாயிற்று –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு வியாக்யானம்–கண்ணும் செந்தாமரை-நோக்குக்கு இலக்கான நிலைமை மாற்றி
அவயவாந்தரத்தோடே சேர்த்து அனுபவித்த பின்பாயிற்றுப் பேசலாயிற்று–முதல் உறவு பண்ணின கண்களும் செந்தாமரை போலே இருந்தன–கையும் அவையே-நோக்கின அநந்தரம் ஸ்பர்சத்திலே அபேக்ஷை பிறக்கும் இறே அணைத்த கைகளும் தாமரை–அடியோ அவையே-ஸ்பர்சத்தாலே துவக்குண்டு விழும் துறையான திருவடிகளும் அவையே–வண்ணம் கரியதோர் மால் வரை போன்று

தாத்பர்யம்–கீழே திருக் கண்களை அனுபவித்து அது மற்ற அவயவங்களிலே மூட்ட
மற்றவற்றையும் சேர்த்து மீண்டும் திருக்கண்களை அனுபவிக்கிறார்-இவற்றின் பரபாக சோபை திருக்கைகளும் திருவடியும் திரு மேனியும் திருக்கண்கள் நிறத்துக்கு ஏற்ற படி சிவந்து விளங்கா நின்றன-அஞ்சன மேனி -மைப்படி மேனி அன்றோ-இவனுடைய சவுந்தர்யம் லாவண்யம் இவற்றை
ஞானாதிகாரண ப்ரஹ்மாதிகளும் சர்வஞ்ஞரான நித்யர்களாலும் கூட இவ்வளவு என்று பரிச்சேதித்து அனுபவிக்க முடியாதே –பகவத் நிர்ஹேதுக கிருபையால் இந்த அபரிச்சின்ன மானவற்றையும் அனுபவிக்கப் பெற்றேன் என்கிறார்

முதல் திருவாய்மொழியில் சொல்லிற்றாவது –
நாநா ரத்ன பரிபூரணமாய் -அபரிச்சேத்யமான கடலை முந்துற திரளக் கண்டால் போலே
ஸ்வரூப ரூப குண விபூதிகளாலே பரிபூர்ணனாய் -எல்லாப்படியாலே எல்லாரிலும் மேம்பட்டு -சர்வேஸ்வரனாய்
ஸ்ரீ யபதியாய் அபௌருஷேயமான ஸூ த்ருடமான ஸ்ருதிகளாலே பிரதிபாதிக்கப் பட்டுள்ள எம்பெருமானை
பாஹ்ய குத்ருஷ்டிகளாலே அவிசால்யமாம் படி அவன் பிரசாதத்தாலே சாஷாத் கரித்து -அனுபவித்து
அவ்வனுபவ ஜனித ப்ரீதி உள்ளடங்காமை -அனுபவித்தபடியே சவிபூதிகனான
எம்பெருமானைப் பேசி –எவன் என்று ஸ்வரூபமும் -சுடர் அடி -ரூபமும் -உயர்வற உயர் நலம் உடையவன் -குணங்கள் –
எவன் -என்று ஸ்வரூபம் -சுடர் அடி -ரூபம் -உயர்வற உயர் நலம் குணம் –அமரர்கள் அதிபதி விபூதியும் சொல்லிற்று -மிகுநரை இலன் -மேற்பட்டவன் –
ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்தி இவன் ஆதீனம் -1-3/4/5/6/-சர்வேஸ்வரன் -பூத பவ்ய பத பிரபு ஆமவை ஆயவை –
சுடர் மிகு சுருதியுள் உளன் -ஸ்ரீ யபதியாய் -மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு –ஏவம் விதனானவன் திருவடிகளிலே -அடிமை செய்து உஜ்ஜீவி என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –
தொழுது எழு என் மனனே -கிரியா பதம் எல்லா பாசுரங்களிலும் அந்வயித்து பொருள் கொள்ளலாமே

இவ்வாழ்வார் திருவாய் மொழி பிரபந்தத்தால் செய்ததாயற்ற அர்த்தம் ஏது என்னில் –
முதல் திருவாய்மொழியில் -உயர்வற உயர்நலம் உடையவன் –1-1-1-என்று தொடங்கி –உணர் முழு நலம் –மிகுநரையிலன் -1-1-2-என்றும்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன் -1-1-3–என்றும்
ஆமவை ஆயவையாய் நின்ற அவர் –1-1-4-என்றும் சொல்லிக் கொடு போந்து
கர விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை வரனவில் திறல் வலி அளி பொறையாய் நின்ற பரன்-1-1-11- -என்று தலைக் கட்டுகையாலே
ஸூஷ்மம் -ஆகையாலே-கர விசும்பு –அக்னி -வரன் -ஸ்ரேஷ்டம் -சப்த ரூப கந்தம் போலே –நின்ற பரன்-
நாராயணனே பரத்வம் என்கைக்காக நாராயண சப்தார்த்தத்தை அருளிச் செய்தார் –சப்தார்த்தம் -முதல் பதிகம் -சப்தம் –வண் புகழ் நாரணன் அடுத்த பத்தில்
சர்வாதிகத்வமும் –மிகுநரையிலன் —சமஸ்த கல்யாண குணாத் மகத்வமும்
-ஆமவை ஆயவையாய் –கர விசும்-அயர்வறு அமரர்கள் அதிபதி –-உபய விபூதி நாதத்வமும் இறே-நாராயண சப்தார்த்தம்-

இவ்வர்த்தத்துக்கு வாசகமான திரு நாமம் தன்னை -வண் புகழ் நாரணன் -1-2-10–என்று அருளிச் செய்தார் –
வ்யாபகாந்தரங்களிலும் இவ்வர்த்தத்தை அறியலாய் இருக்கும் இ றே -விஷ்ணு -வாசுதேவ நாராயண வ்யாபக மந்த்ரங்கள் –
அங்கன் அன்றிக்கே -இதுவே வாசகம் என்று தம் திரு உள்ளத்தில் அறுதியிட்ட ஆகாரம் தோற்ற –
நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் ஆரம்பித்து அவரும் பிரபந்தங்கள் முழுவதும் அருளிச் செய்தார் –
செல்வ நாரணன் –1-10-8-என்றும்
திரு நாரணன் -4-1-1–என்றும் –
நாரணன் முழு ஏழ் உலகுக்கு நாதன் –2-7-2-என்றும் –
காராயின காள நன் மேனியினன் நாராயணன் –-9-3-1-என்றும்
திண்ணன் நாரணன் -10-5-1–என்றும் -ஆதரித்திக் கொண்டு போந்து
வாழ் புகழ் நாரணன் –10-9-7-என்று வழிப் போக்கில் -அர்ச்சிராதி மார்க்கத்தை அருளிச் செய்யும் இடத்திலும் –
-வார்த்தையும் இதுவேயாய்த் தலைக் கட்டுகையாலே –இதுவே வாசகம் என்கிற நிர்பந்தத்தை அருளிச் செய்கிறார் –
–பாற்கடல் அடி பாடி -பொற்றாமை அடியே -நிகமித்து ஆண்டாள் அருளி -திருவடி 2/29 அதே போலே இவரும் 1-2/10-9/

இனி மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறலடிகள் -1-3-1- என்று தொடங்கி
திருவுடை யடிகள் -1-3-8- என்றும்
மைய கண்ணாள் மலர் மேல் உறை வாழ் மார்பினன் -4-5-2- என்றும்
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கு இன்பன் -4-5-8- என்றும்
கோலத் திரு மா மகளோடு என்னைக் கூடாதே –6-9-3- என்றும் -சொல்லிக் கொண்டு போந்து
திருவாணை-10-10-7- என்றும்
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -10-10-7- என்றும் தலைக் கட்டுகையாலே
ஸ்ரீ மானான நாராயணனே பரதத்வம் என்றும் சொல்லிற்று –

இத்தால் நம் ஆச்சார்யர்கள் ரஹச்யத்தில் பத த்வயத்தாலும் அருளிச் செய்து கொண்டு போரும் அர்த்தத்துக்கு
அடி இவ்வாழ்வாராய் இருக்கும் என்றது ஆயிற்று –
ஆச்ரயண வேளையிலே -மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறலடிகள் -1-3-1- என்று தொடங்கி
போக வேளையிலே -கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -10-10-7- என்று சொல்லுகையாலே
ஆச்ரயண வேளையோடு போக வேளையோடு வாசி யற ஒரு மிதுனமே உத்தேச்யம் என்று சொல்லிற்று ஆயிற்று –

இப்படி பர ஸ்வரூபம் நிர்ணீதம் ஆயிற்று-பர ஸ்வரூப பிரதி சம்பந்தியான ஸ்வ ஸ்வரூபம் இருக்கும் படி என் என்னில்
உடன்மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்து –1-1-7-என்று சரீராத்ம பாவத்தை தாம் அனுசந்தித்து பிறருக்கு உபதேசிக்கிற இடத்தில்
உம்முயிர் வீடுடை யானிடை –1-2-1-என்று –உயிர் வீடு -ஆத்மாவையும் சரீரத்தையும் யுடையான்
-உயிரை வீடாக சரீரமாக யுடையவன் -இரண்டு அர்த்தங்கள் – அந்த சரீராத்ம பாவம் தன்னையே உபதேசித்து
இந்த சரீராத்ம பாவத்தால் பலிக்கிறது அனந்யார்ஹ சேஷத்வம் என்னும் இடத்தை –
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே –2-9-4-என்றும்
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் -8-8-2- என்றும் சொல்லி

இது தத் சேஷத்வ அளவிலே நிற்பது ஓன்று அல்ல –
ததீய சேஷத்வ பர்யந்தம் ஆனால் ஆயிற்று தத் சேஷத்வ சித்தி என்னும் இடத்தை
பயிலும் சுடர் ஒளி -3-7- நெடுமாற்கு அடிமை -8-10-யிலே பரக்க அருளிச் செய்து –
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -2-3-10-என்று பிரார்த்தித்து
பிரார்த்தித்த படியே -அடியாரோடு இருந்தமை -10-9-1-என்று தலைக் கட்டுகையாலே
பாகவத சேஷத்வ பர்யந்தமான பகவத் சேஷத்வமே ஸ்வரூபம் என்னும் இடம் சொல்லிற்று –

இதில் முதல் பத்தாலே -உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன் –அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
–துயர் அறு சுடரடி தொழுது எழு என் மனனே -1-1-1- என்று
சமஸ்த கல்யாண குணாத்மகனாய்-ஸூரி போக்யனானவன் திருவடிகளிலே கைங்கர்யமே புருஷார்த்தம் என்று நிர்ணயித்து
உக்தமான அர்த்தத்துக்கும் -வஹ்யமாணமான அர்த்தத்துக்கு பிரமாணம் -உளன் சுடர் மிகு சுருதியுள் -1-1-7-என்று
நிர்தோஷமான சுருதியே பிரமாணம் என்றும்
ஏவம் விதனானவன் யார் என்ன —-வண் புகழ் நாரணன் –1-2-10-என்றும் –திருவுடையடிகள் –1-3-8-என்றும் –
செல்வ நாரணன் -1-10-8-என்றும் -விசேஷித்து –தொழுது எழு என் மனனே -1-1-1–என்று உபக்ரமித்து –
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே -1-3-10-என்று த்ரிவித காரணங்களாலும் அடிமை செய்து
தலைக் கட்டுகையாலே பகவத் கைங்கர்யமே புருஷார்த்தம் என்று அறுதியிட்டார் –உயர்த்தி -பொருந்தி விட -அடிக்கடி பேசி -புதிதாக -பலமாக -உபக்ரமம் உபஸம்ஹாரம் -அடையாளம் -லிங்கம் –
தொழுது எழு- சொற் பணி செய் ஆயிரம் -உடல் வாசா கைங்கர்யம்
அயர்ப்பிலன் -அப்பியாசம் –அபூர்வம் -பிரத்யக்ஷமாக கைங்கர்யம் புருஷார்த்தம் தெரியாதே
தொழுதால் எழு -பலன் –உயர்வற உயர்நலம் உடையவனை தொழுது எழு பொருந்த விட்டு -முதல் பத்துக்கு தாத்பர்யம் கைங்கர்யமே -புருஷார்த்தம் -என்றதாயிற்று –

திருவாய் மொழிக்காக சங்க்ரஹம் முதல் திருவாய் மொழி –
முதல் திருவாய் மொழியினுடைய சங்க்ரஹம் முதல் மூன்று பாட்டுக்கள்
முதல் மூன்று பாட்டினுடைய சங்க்ரஹம் முதல் பாட்டு
முதல் பாட்டினுடைய சங்க்ரஹம் முதல் அடி –என் போல் என்னில்-

விக்ரஹ விபூதிகள் –முதல் அடியில் –நலம் -ஆனந்தம் சொல்லி -ஆனந்தாவாஹம் விக்ரஹம் விபூதிகள் அர்த்தாத் சித்தம் -முதல் வரியில் அர்த்த பஞ்சகமும் உண்டே -த்வயமும் உண்டே -உபயோகியான குணம் -நலம் உடையவன் என்பதால்- உயர் நலம் உடையவன் -என்பதே -அனைத்துக்கும் -என்றவாறே –
ரூசோ யஜூம்ஷி சாமாநி ததைவா தர்வணாநி ச சர்வம் அஷ்டாஷர அந்தஸ் ஸ்தம் யச்சான் யதபி வாங்மயம் -என்கிறபடியே –
சகல வேத சங்க்ரஹம் திரு மந்த்ரம்
அதினுடைய சங்க்ரஹம் பிரணவம்
அதினுடைய சங்க்ரஹம் அகாரம் ஆனால் போல –
மற்றும் பாரத ஸ்ரீ ராமாயணாதி களையும் சங்ஷேப விஸ்தரங்களாலே செய்தார்கள் இறே

முதல் பாட்டுக்கு கருத்து
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாண குணாத் மகனாய்
அக் குணங்களுக்கும் நிறம் கொடுக்க வற்றான திவ்ய தேக யுக்தனாய்
ஸ்ரீ யபதியாய் -இந்த சௌந்த்ர்யாதிகளுக்கு போக்தாக்களான அயர்வறும் அமரர்களுக்கு அதிபதியாய் இருந்து வைத்து
தன்னுடைய நிரவதிக கிருபையாலே என்னுடைய தோஷாகரத்வத்தைப் பாராதே என்னுடைய அஜ்ஞ்ஞானம் எல்லாம் நீங்கும் படியாக
ஸ்வ விஷய பக்தி ரூபா பன்ன ஜ்ஞானத்தை நிர்ஹேதுகமாக சாதரனாய் கொண்டு தந்து அருளினான்
ஆன பின்பு அவன் திருவடிகளிலே அடிமை செய்து உஜ்ஜீவிப்போம் என்று திரு உள்ளத்தோடு கூட எம்பெருமானுக்கு அடிமை செய்கையிலே பிரவ்ருத்தர் ஆகிறார்
இத்தால் பிரபந்த ஆரம்பத்திலே வஸ்து நிர்தேச நமஸ்காரங்களும் பண்ணப் பட்டனவாய் விழுந்தது –

சேஷியினுடைய ரக்ஷகத்வ பரமான முதல் பத்தில்
முதல் திருவாய்மொழி ரக்ஷகத்வ உபய யுக்தமான சர்வ ஸ்மாத் பரத்வத்தையும்
இரண்டாம் திருவாய்மொழி சர்வ ஸமாஸ்ரயணீ யத்வத்தையும்
மூன்றாம் திருவாய்மொழி தத் அனுகுணமான ஸுலப்யத்தையும்-
நாலாம் திருவாய்மொழி ஆஸ்ரித அபராத சஹத்வத்தையும்
அஞ்சாம் திருவாய்மொழி ஸுசீல்ய அதிசயத்தையும்
ஆறாம் திருவாய்மொழி ஸ்வாராததையும்
ஏழாம் திருவாய்மொழி ஆஸ்ரயணத்தில் அத்யந்த சாரஸ்யத்தையும்
எட்டாம் திருவாய்மொழி ஆஸ்ரித விஷயமான ஆர்ஜவ குணத்தையும்
ஒன்பதாம் திருவாய்மொழி சாத்ம்ய போக பிரதத்வத்தையும்
பத்தாம் திருவாய்மொழி நிர்ஹேதுக மஹா உபகாரித்வத்தையும் சொல்லுகையாலே பரம சேஷியினுடைய ரக்ஷகத்வ பூர்த்தியை ப்ரதிபாதித்ததாயிற்று –

அதில் பரத்வ பிரகாசகமான முதல் திருவாய்மொழியில் தத் உபபாதகமான விலக்ஷண குண விபூதி விக்ரஹ யோகத்தையும்
தத் ஆஸ்ரயமான ஸ்வரூப வைலக்ஷண்யத்தையும் அபரிச்சின்னமான லீலா விபூதி சம்பந்தத்தையும்

அநந்தரம் மூன்று பாட்டாலே விபூதி அந்தர்கத ஸமஸ்த பதார்த்தங்களினுடைய ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி யாதிகள் ஸ்வ அதீனங்கள் என்னும் இடத்தையும்
அதில் முதல் பாட்டில் ஸமஸ்த பதார்த்தங்களின் உடைய ஸ்வரூபம் சாமா நாதி கரண்யத்தாலே தத் அதீனம் என்னும் இடத்தையும்
மேலே ரக்ஷண ரூபையான ஸ்திதி வையதி கரண்யத்தாலே தத் அதீனை என்னும் இடத்தையும்
சர்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் சாமா நாதி கரண்யத்தாலே தத் அதீனங்கள் என்னும் இடத்தையும்
தத் உபபாதகமான சரீராத்ம பாவ சம்பந்தத்தையும்
அநந்ய ஈஸ்வரத்தையும் அவைதிகரால் அப்ரகம்ப்யத்வத்தையும் அகில வியாபகத்வத்தையும் சொல்லி அசேஷ சேஷித்வ ரூபமான பரத்வத்தை ஸ்த்ரீ கரித்து அருளுகிறார் –

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே 
–1-1-1-

தான் ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் இருக்கிற இருப்பைக் காட்டி உபகரித்தான்
அக் குணங்களும் தன்னைப் பற்றி நிறம் பெற வேண்டும்படியாக இருக்கிற திவ்யாத்ம ஸ்வரூப வை லக்ஷண்யத்தைக் காட்டி உபகரித்தான்;
இப் பேற்றுக்கு என் பக்கல் சொல்லலாவது ஒன்றும் இன்றிக்கே இன்றி இருக்கவும் நிர்ஹேதுகமாகத் தானே உபகாரகன் ஆனான்;
ஸ்வ ஸ்ரூபா பந்நராய் இருக்கிறவர்களுக்கும் அவ்வருகாக இருக்கிற இருப்பைக் காட்டி உபகரித்தான்;
தன்னுடைய திவ்விய விக்ரஹ வைலக்ஷண்யத்தைக் காட்டி உபகரித்தான்,
என்று அவன் பண்ணின உபகாரங்களை அடையச் சொல்லி, ‘இப்படி உபகாரகனானவன் திருவடிகளிலே நித்தியமான கைங்கரியத்தைப் பண்ணி உஜ்ஜீவிக்க வாராய்,’ என்று தம் திரு வுள்ளத்தோடே கூட்டுகிறார்

தாம் அகப்பட்ட துறை அக் குணங்களாகையாலே அவற்றையே முதன் முன்னம் பேசுகிறார்.
இவரைக் குணத்தை இட்டாயிற்று வணங்குவித்தது.

யதோ வாஸே நிவர்த்தந்தே ’ என்று மீண்டன இறே –
இது ஆனந்த குணம் ஒன்றிலும் இறே – குணங்கள் எல்லாம் இப்படியே இறே இருப்பது –
இக் குணங்கள் எல்லாம் தமக்கு நிலமாய்ப் பேசுகிறார் இறே இவர்.

பகவத் வ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துகதமான சர்வ பிரகாரத்தாலும் உண்டான உச்சராயத்தை உயர்வு என்கிறது-இத்தைப் பற்றியே ஸ்ரீ ஆளவந்தாரும் ‘ஸ்வாபாவிகம்’ என்று அருளிச்செய்த சந்தை –அற -தன்னுடைய உச்சராயத்தையும் இவற்றைப் பார்த்தால்
ஆதித்யன் சந்நிதியில் நஷத்ராத்யாதிகளைப் போலேயும்
மஹா மேரு மலையின் சிகரத்தில் நின்றவனுக்குக் கீழுள்ள-சர்ஷபாதிகள் – கடுகு முதலியவை இருக்குமா போலவும்,
உண்டாய் இருக்கச் செய்தே இல்லை என்னலாம்படி பண்ணினால்-உயர்வற உயரா நிற்கும் -வருத்தம் அற்று இருக்கையாலே ஸ்வாபாவிகமாய் இருக்கும்

உயர்–இயத்தா ராஹித்யத்தைச் சொன்னபடி –(‘உயர்’ என்ற சொல்லால் இவ்வளவு என்று அளவிட்டுக் கூற முடியாமையைக் கூறியபடி.)

நலம்’ என்றது,-ஆனந்த குணம் ஒன்றனையே சொல்லுகிறது என்னுதல்
குண சமூகத்தைச் சொல்லுகிறது என்னுதல்
ஆனந்தாவஹமான (ஆனந்தம் உண்டாவதற்குக் காரணமான )விபூதிகளைச் சொல்லுகிறது என்னுதல்-

உடையவன் –இக் குணங்கள் தன்னை அஸ்தி என்று விடும் அளவு அன்றிக்கே இவற்றை இட்டு நிரூபிக்க வேண்டும்படியாக இருப்பவன்.
அதாவது ஆகந்துகமாக இன்றிக்கே ஸ்வரூப அநுபந்தியாய் இருக்கும்

ஸ்ரீ ஆழ்வான், ஸ்ரீ பிள்ளைப் பிள்ளையைப் பார்த்து, ‘நிர்க் குணம் என்பார் மிடற்றைப் பிடித்தாற்போலே ஸ்ரீ ஆழ்வார் ‘நலமுடையவன்’ என்றபடி கண்டாயே!’ என்று பணித்தான்.

யவன் அவன் -அஸ் ஸ்வரூபத்தைப் பற்றி குணங்களும் நிறம் பெற வேண்டும்படி இருக்கும் என்று ஸ்வரூப வைலக்ஷண்யத்தைச் சொல்லுகிறது

மயர்வு அற –ஞாநாநுதயம், அந்யதா ஞானம், விபரீத ஞானம் என்கிற இவை வாசனையோடே போகும்படியாக.
ஞாநாநுதயமாவது,-தேஹாத்ம அபிமானம் ( தேகத்தையே ஆத்துமாவாக நினைத்தல்.)
அந்யதா ஞானமாவது -தேவதாந்த்ர சேஷம் என்று இருக்கை (பிற தெய்வங்கட்குத் தன்னை அடிமையாக நினைத்தல்.)
விபரீத ஞானமாவது,-ஸ்வ தந்திரனாயும் ஸ்வ போக்யமாயும் நினைத்து இருக்கிற கேவலனுனைய ஞானம்
(தனக்குத்தானே உரியவனாகவும் ஆத்துமாவோடு அனுபவிக்கின்ற இன்பமே இன்பமாகவும் நினைக்கும் கேவலனுடைய ஞானம்,)
என்று ஸ்ரீ நம்பிள்ளை அருளிச் செய்வார் –
தம் திருவாயாலே ‘மயர்வற’ என்று சொல்லலாம்படி காணும் அவன் தான் இவர்க்கு அஞ்ஞானத்தை வாசனையோடே போக்கினபடி.

மதி நலம் –ஞான பத்திகள் இரண்டனையுந் தந்தான் என்று நிர்வகிப்பாரும் உண்டு
அன்றிக்கே (இனி, நலம் மதி என முன் பின்னாகக் கூட்டி) ‘நலமான மதி’ யைத் தந்தான் என்றதாய் –‘முளைக்கும் போதே வயிரம் பற்றி முளைக்கும் பொருள்களைப் போலே -பக்தி ரூபாபன்ன ஞானத்தை(பத்தியின் உருவத்தை அடைந்த ஞானத்தைத் )தந்தான் என்கிறார்,’ என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்யும் படி –கர்ம ஞான அநு க்ருஹீதையான பக்தி ஸ்தானத்தில் பகவத் பிரசாதமாய்-அனந்தரம் கைங்கர்யத்துக்கு பூர்வ க்ஷண வர்த்தியான பத்தி யாயிற்று இவரது .-உபாஸக வ்யாவ்ருத்தி –
ஸ்ரீ ஆழ்வார் பிரபந்நரோ, பத்தி நிஷ்டரோ?’ என்று ஸ்ரீ எம்பாரைச் சிலர் கேட்க,
ஸ்ரீ ஆழ்வார் பிரபந்நர்; பத்தி இவர்க்கு தேக யாத்ரா சேஷம்,’ என்று அருளிச் செய்தார். என் போலே என்னில் ,‘நாமும் எல்லாம் பிரபந்நர்களாய் இருக்கச் செய்தே ஆண்டு ஆறு மாசத்துக்கு ஜீவனம் தேடுகிறாப் போலே –உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே’ இறே இவர்க்கு.

அருளினன் –நிர்ஹேதுகமாக ( ஒரு விதக் காரணமும் பற்றாமல் )அருளிக் கொண்டு நிற்கக் கண்ட இத்தனை,-எனக்கு அருளினான் -என்னாது ஒழிந்தது-பகவத் விஷயீ காரத்துக்கு முன்பு தம்மை அசத் கல்பராக நினைத்து இருக்கையாலே-பிரபன்ன வ்யாவ்ருத்தி –
அருளினன்-இத் தலை அர்த்திக்க அன்றிக்கே முலைக் கடுப்பாலே தரையிலே பாலைப் பீச்சுவாரைப் போலே தானாகவே அருளிக் கொண்டு நிற்க்க கண்ட இத்தனை – என்றுமாம்-நிர்ஹேதுகத்வம் மாத்திரம் அன்றிக்கே அருளாத போது தரியாமையும் ஹேத்வனுக்தியாலே சித்தம்

அயர்வு அறும் அமரர்கள் அதிபதி –தான் அருளாத அன்று சத்தை இன்றிக்கே இருப்பாரை ஒரு நாடகவுடையவன்.-அயர்வாவது -விஸ்ம்ருதி –மறதி. -அஃது இன்றிக்கே இருப்பவர்கள், அயர்வறும் அமரர்கள்.-அவர்கள், நித்தியர்கள்–த்ரிபாத் விபூதி யோகத்தைப் பற்றச் சொல்கிறது

அதிபதி –அவர்களுக்கும் ‘தொட்டுக்கொள்’-தொட்டுக்கொள்’ என்ன வேண்டும்படி யானைக்குக் குதிரை வைத்து அவ்வருகாய் இருக்கும் என்னுதல்
ஸ்வாமி வாசகம் என்னுதல் –

அவன்-இதுக்கு அவ்வருகே விக்கிரஹ வைலக்ஷண்யம் சொல்ல ஒருப் பட்டுக் கீழ் நின்ற நிலையினைக் குலுக்கி-‘அவன்’என்று அவ்வருகே போகிறார்.

துயர் அறு சுடர் அடி –துயர் அறுக்குஞ் சுடர் அடி என்று முன்புள்ள முதலிகள் அருளிச்செய்வர்;-எம்பெருமானார் அருளிச் செய்யும் படி –
வ்யாஸநேஷு மனுஷ்யானாம் ப்ருசம்பவதி துக்கித (ஸ்ரீ ராமன், தன் கீழ் வாழும் மக்கட்குத் துன்பம் வருங்காலத்துத் தானும் துன்பத்தை அடைந்தவன் ஆகின்றான்’) என்று துக்க நிவ்ருத்தியும் அவனதாய் இருக்கும் இறே-இத்தால், இவர் மயர்வு அற அவன் துயர் அற்றபடி,’ என்று அருளிச் செய்வர்.

அடி –சேஷ பூதன் சேஷி பக்கலிலே கணிசிப்பது திருவடிகளை இறே
ஸ்தநந்தய பிரஜை முலையிலே வாய் வைக்குமா போலே-
இவரும் ‘உன் தேனே மலருந் திருப்பாதம்’ என்கிற திருவடிகளிலே வாய் வைக்கிறார்-

தொழுது –நித்திய சமுசாரியாகப் போந்த இழவு எல்லாந் தீரும்படி ஸ்வரூப அநு ரூபமான வ்ருத்தியிலே அன்வயித்து-எழு –அடியிலே தொழாமையால் வந்த சங்கோசம் தீரும்படி அடியிலே தொழுது உஜ்ஜீவி என்கிறார்.என் மனனே–இப்போதாயிற்று தம்மைக் கண்டது; ‘அருளினன்’ என்று நின்ற இத்தனை இறே முன்பு.-நெடுநாள் பந்த ஹேதுவாய்ப் போந்தது இப்போது முந்துற்ற நெஞ்சாய் முற்பட்டு நிற்கிறபடியாலே அத்தோடு தமக்கு ஒரு சம்பந்தத்தை ஆசைப்பட்டு ‘என் மனனே’ என்கிறார்.

உயர்வு அற உயர்நலம் உடையவன் யவன்? அவன் மயர்வு அற மதி நலம் அருளினன்;
மயர்வு அற மதி நலம் அருளினன் யவன்? அவன் அயர்வு அறும் அமரர்கள் அதிபதி;
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன்? அவன் துயரறு சுடரடி தொழுது எழு,’ என்று வாக்ய ஏக பாவத்தால் யோஜிக்கவுமாம்
இனி, ‘உயர்வற உயர்நலம் உடையவன் யவன் அவன், துயரறு சுடரடி தொழுது எழு;
மயர்வற மதிநலம் அருளினன் யவன் அவன், துயரறு சுடரடிதொழுது எழு’-என்று வாக்ய பேதம் பண்ணி யோஜிக்கவுமாம்

ஸ்வ பக்ஷத்தை ஸ்தாபிக்கவே பர பக்ஷம் நிரஸ்தமாம் இறே
நெற் செய்யப் புல் தேயுமா போலே, தன்னடையே நிரஸ்தர் ஆவார்கள் இறே அவர்கள்

உயர்வற உயர்நலம் உடையவன், அயர்வறும் அமரர்கள் அதிபதி’ என்கையாலே பிராப்பிய வேஷம் சொல்லிற்று;
‘மயர்வற’ என்கையாலே விரோதி போனபடி சொல்லிற்று;
‘அருளினன்’ என்கையாலே அவனே சாதனம் என்றது;
‘தொழுது எழு’ என்கையாலே பிராப்தி பலமான கைங்கரியத்தைச் சொல்லிற்று;
‘என் மனனே’ என்கையாலே பரிசுத்தமான அந்தக் கரணத்தையுடையவனே, அதிகாரி என்னுமிடம் சொல்லிற்று.
வஸ்து நிர்த்தேச நமஸ்கார ஆஸீஸ் ஸூக்களும் அடி தொழுது எழு என்கையாலே இதிலே உண்டே

—————

மனனக மலமற மலர் மிசை எழு தரும்
மனன் உணரளவிலன் பொறியுணர் யவையிலன்
இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும்
இனன் இலன் எனன் உயிர் மிகு நரையிலனே
 –1-1-2–

இரண்டாம் பாட்டில்-அகில ஹேய ப்ரத்ய நீகதையாலும் -கல்யாணை கதாநதையாலும் -சேதன அசேதனங்களில் காட்டில் அத்யந்த விலஷணமாய்-ஜ்ஞானாநந்தங்களே தனக்கு வடிவாய் -முதல் பாட்டில் அனுபவித்த குணங்களுக்கு ஆச்ரயமாய் இருந்துள்ள
நிஷ்க்ருஷ்டமான திவ்யாத்ம ஸ்வரூபத்தை சோபான க்ரமத்தாலே அனுபவிக்கிறார்

மனன் என்றது, மனம் என்றபடி-அகம் – உறுப்புகள் இல்லாத-நிர் அவயவமாய் இருக்கிற மனத்திற்கு ஓர் உள்ளும் புறம்பும் இல்லாமையாலே, ‘மனனகம்’ என்றது, மனத்திலே என்றபடி.
அன்றியே மனமானது -பராகர்த்த விஷயமாயும் ப்ரத்யகர்த்த விஷயமாயும் -(வெளிப் பொருள்களிலும் உட் பொருளிலும் ) போருகையாலே பராகர்த்தத்தைத் தவிர்ந்து ப்ரத்யகர்த்த விஷயமானத்தை -அகம் -என்கிறது ஆகவுமாம் -அகம் மனம் என்றபடி –

மலம் அற –அவித்யாதிகள் -அவை அற-அனந்தரம் மலர் —விகஸிதமாய் மலர்ந்து, மிசை – மேல் நோக்கி, எழுதரும் – கொழுந்து விட்டு மேன்மேல் எனக் கிளரா நின்றுள்ள,
மனன் உணர்வு – மனஸ் ஞானம் – அறிவு; இப்படி விகஸிதமாய் – மலர்ந்து கொழுந்துவிட்டு மேன்மேல் எனக் கிளரா நின்றுள்ள மன அறிவினால் அறியப்படுவதாக இருக்கும் ஆத்மா – அளவு இலன் – அதன் அளவுள்ள ஈஸ்வரன் –ஆக மலர் இத்யாதி விசேஷண த்ரயத்தாலும் ஆத்ம விஷயக ஞானத்தினுடைய உத்தர உத்தர பரிபாக விசேஷம் சொல்லுகிறது –விவேக விமோக -அப்யாஸ-க்ரியா -கல்யாண -அநவசாத -அநுத்தர் ஷேப்ய-என்கிற விவேகாதிகளோடே கூடின பகவத் உபாசனத்தாலே நிர்மலமான மனஸ் ஸூ வேணும் என்று பரிஹாரம் அத்யாஹரித்துக் கொள்வது –

பொறி உணர்வு அவை இலன்-‘ பொறி’ -என்று ஸஷுராதி கரணங்கள் – அவற்றால் அறியப்படும் பொருள்களின் படி அல்லன்-சித் -அசித்-விலக்ஷணன்

இனன் உணர் முழு நலம் என்பதற்கு, நேர் கொடு நேராகத் தன்னை அறிய முடியாமையாலே – என்றும் ஓக்க இனனாலே – உபமானத்தால் அறியப்படுவதான முழுநலமாய் இருக்கும் – . இனன் – உபமானம்.என்றபடியதா சைந்தவ கன-என்கிறபடியே நிரதிசய ஆனந்தமாய் இருக்கும் – ஆனந்தோ ப்ரஹ்ம-என்றும் ஆனந்த மய -என்றும் சொல்லக் கடவது இறே

எதிர் நிகழ் கழிவினும் இனன் இலன் – கால த்ரயத்திலும் இனன் உண்டு ஒப்பு -அது இல்லாதவன்-பட்டர் -‘சாதர்மிய திருஷ்டாந்தம் இல்லை என்றது முன்பு; இங்கு வைதர்ம்ய திருஷ்டாந்தம் இல்லை-என்கிறது இங்கு என்று அருளிச் செய்வார். –

எனன் உயிர் –இப்படியிருக்கின்றவன் எனக்குத் தாரகன்;-இனி, உபலக்ஷணத்தால், யஸ் ஆத்மா சரீரம் -‘என்கிறபடியே இத்தைத் தனைக்கு சரீரமாய்க் கொண்டு தான் சரீரியாய் தாரகனாய் இருக்கும் என்னும் அர்த்தமும் சொல்ல வேண்டுவைத்து ஓன்று இறே-

மிகுநரை இலன் –மிக்காரை யுடையான் அல்லன்-தான் ஜீவாத்மாவை சரீரமாகக் கொண்டு -தாரகனாய் -நியாமகனாய் இருக்குமா போலே –-தன்னையும் நியமிக்கக் கடவதொரு வஸ்த்வந்தரம் உண்டோ என்னில் தனக்கு மேம்பட்டாரை யுடையன் அல்லன்.
ந தத் சமச்சாப்யதி கச்ச த்ருச்யதே 
-(‘இறைவனுக்கு ஒப்பானவனும் மேம்பட்டவனும் காணப்படுகின்றிலன்,’) என்னுமா போலே இவரும் -‘இனன் இலன், மிகுநரை இலன்– என்று அருளிச் செய்கிறார்.-கால த்ரயத்திலும் ஒரு படியாலும் ஒப்பில்லாதவனாய் சமாப்யதிக ரஹிதனாய் பரிபூர்ண ஞான ஆனந்த ஸ்வரூபனாய் எனக்கு தாரகனுமாய் இருந்த
எம்பெருமானுடைய துயரறு சுடரடியைத் தொழுது எழு என் மனனே
 என்கிறார் –

————–

இலனது உடையனிது என நினைவரியவன்
நிலனிடை விசும்பிடை யுருவினன் அருவினன்
புலனொடு புலன் அலன் ஒழிவிலன் பரந்த வந்
நலனுடை ஒருவனை நணுகினம் நாமே –
1-1-3-

முதற்பாட்டிலே ப்ரதான்யேந கல்யாண குண யோகத்தையும் -நித்ய விபூதி யோகத்தையும் –
விக்ரஹ வைலக்ஷண்யத்தையும் அனுபவித்து

அவற்றுக்கு ஆஸ்ரயமான திவ்யாத்மா ஸ்வரூபமும் சித் அசித் விலக்ஷணமுமாய் உபமான ரஹிதமாயும் என்று இரண்டாம் பாட்டாலே அருளிச் செய்து–ததீயத்வ ஆகாரத்தாலே
லீலா விபூதியும் உத்தேஸ்யம் ஆகா நின்றது முத்தனுக்கு
.-சரீரம் கிடக்கச் செய்தே- மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் ஆகையாலே, ததீயத்வ ஆகாரமும் தோற்றி அனுபவிக்கிறார்.திரு விண்ணகர் சேர்ந்த பிரான், பெய்த காவு கண்டீர் பெருந் தேவுடை மூவுலகே’-திருவாய்மொழி -6-3-5- என்கிறபடியே, சர்வேஸ்வரனும் பெரிய பிராட்டியாருமாகக் கடாஷித்த போது உண்டாதலும், இல்லையாயின் இல்லையாதலுமாகி,
அவர்கட்கு லீலா ரஸ விஷயமாய் இருக்கிற லீலா விபூதியை அனுபவிக்கிறார் 

இலனது உடையனிது என நினைவரியவன்-‘இலன் அது’ எனின்-பரிச்சின்ன விபூதிகனாம் -,‘உடையன் இது’ எனின்,இது ஒழிந்தது இல்லாமையால் அற்ப விபூதிகனாம் –-ஆகவே, இரண்டு வழியாலும் ஐசுவரியம் குறைந்து தோன்றும்;-என -இப்படி இருக்கும் என -என்றவாறு-ஆதலின்,‘இலன் அது உடையன் இது என அரியவன்’ என்கிறார்.

நினைவு அரியவன்-அநுப பன்னங்களைச் சேர்த்து நினைக்கலாம் இறே
( ‘உலகத்துப் பொருள்களுள் ஒன்று சேராதவற்றையும் சேர்த்து நினைத்தல் கூடும்-என்றவாறு )-ஓர் ஊசி நிற்கிறதாகவும், அதன் மேலே கலசம் இருக்கிறதாகவும், அதன் மேலே சால் இருக்கிறதாகவும்,-அதன் மேலே மகா மேரு இருக்கிறதாகவும், இப்படி,-அநுபபங்களைச் சேர்த்து – சேராத பொருள்களைச் சேர்த்து- நினைக்கலாம்;-அப்படியே தான் -மநோ ரதத்துக்கு விஷயமாய் இருக்குமோ என்னில்-மநோ ரத சமயத்திலும் பரிச்சேதிக்க அரியனாக இருக்கும் ஆதலின்,‘நினைவரியவன்’என்று அருளிச் செய்கிறார்.

ஆனால் இவன் ஐஸ்வர்யத்தைப் பேசும்படி தான் என்?’ என்னில்–நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்-பதிம் விஸ்வஸ்ய (‘உலகத்திற்குத்தலைவன்’ )என்னுமித்தனை.
நிலனிடை என்கிற இது பாதாளத்தளவும் நினைக்கிறது;-விசும்பிடை என்கிற இது பரமபதத்திற்கு -இவ்வருகு உள்ளவற்றை எல்லாம் நினைக்கிறது.
உருவினன் -உருக்களை – சரீரங்களை–யுடையான்.-அருவினன் -அருக்களை யுடையான்
இனன்-என்ன உடையவன் என்று காட்டுமோ என்னில்-காராயின காளநன் மேனியினன்’ என்றால் ‘மேனியினையுடையான் என்று காட்டுமா போலே –
ஆக, கீழ் மேல் உண்டான சேதன அசேதனங்களை யுடையான் -இத்தால் ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் ஸூரி ஸேவ்யனாய் இருக்குமவன் சேதன அசேதன ஸ்வாமி என்றபடி

புலன் என்றது,-புலப்படும் பதார்த்தங்களை –ஓடுதத் ஸ்ருஷ்ட்வா -என்கிறபடி இவற்றை உண்டாக்கி, ஜீவத்வாரா அநுப்பிரவேசித்துப் பின்னர்-இவற்றிற்கு வஸ்துத்வ நாம பாக்த்வங்கள் யுண்டாகும்படி பண்ணி-சர்வ ஆத்ம அந்தராத்மாவாய் நிற்கும்படியைச் சொல்கிறது-புலன் அலன் –தத் தர்மா அல்லன் -தான் ஒட்டு அற்று நின்று விளங்கா நிற்பவன்–

ஒழிவிலன் பரந்த – ஒரு வஸ்துக்கள் ஒழியாமே இப்படி வியாபித்து இருக்கும் -என்னவுமாம் –அன்றியே -கால பரமாக்கி – எல்லாக் காலத்திலும் எல்லா வஸ்துக்களிலும் வியாபித்து இருக்கும் என்னவுமாம்-அந்நலனுடை ஒருவனை –கீழ் இரண்டு பாட்டுகளாலும் அருளிச் செய்த குண விசிஷ்ட ஸ்வரூபத்தை நினைத்து ‘அந்நலனுடை ஒருவனை’ என்கிறார்.நணுகினம் –மயர்வற மதி நலம் அருளினன்’ என்கிற ஞானத்தின் அளவே அன்றிக் கிட்டவும் பெற்றோம். நாமே – நாமேஇவ் வனுபவத்துக்குப் புறம்பான நாம்
அன்றியே-பகவத் கதா கந்த ரஹீதரான நாம் , (இறைவனுடைய பெயரின் வாசனையும் அறியாத நாம் ) நாமே இது, பொய்யோ?

ஆக இப் பாட்டில் முதல் கூற்றாலே வஸ்து பரிச்சேத ராஹித்யத்தைச் சொல்லி மேலே வ்யாப்தியால் தேச பரிச்சேத ராஹித்யத்தையும் சொல்லிற்று யாயிற்று –இப் பாட்டால் லீலா விபூதி யோகம் சொல்லுகிறது-ஆக இவ் விரண்டு பாட்டாலும் சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம என்கிற ஸ்வரூப சோதக வாக்யார்த்தம் சொல்லப் பட்டது –

————-

நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் எவள்
தாம் அவர் இவர் உவர் அது விது வுது வெது
வீமவை யிவை வுவை அவை நலம் தீங்கிவை
ஆமவை யாயவை ஆய நின்ற அவரே
 –1-1-4-

இனி, (இது முதல் வருகின்ற பாட்டுக்கள் எட்டனுள் )ஒரு மூன்று பாட்டாலே
இவ்வுலகில் ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள் -பகவத் அதீநமாய் இருக்கும் என்றும் என்று கூறி,
அவற்றிற்குமேல் ஒரு பாட்டால்,  (7) ஜகத்துக்கும் ஈஸ்வரனுக்கும் சம்பந்தம் -சரீராத்மா பாவம் என்றும்
அவற்றிற்கு மேல் ஒரு பாட்டால்,  (8)குத்ருஷ்டிகளை நிரசித்து
அவற்றிற்கு மேல் ஒரு பாட்டால்,  (9)சூன்ய வாதியை நிரசித்து
மேல் ஒரு பாட்டால் (10) வியாப்தி சௌகர்யத்தைக் கூறி,
பலத்தைச் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

இதில் விவித நிர்தேசங்களாலே நிரதிசயமான ஸமஸ்த வஸ்துக்களினுடைய ஸ்வரூபம் பகவத் ஆதீனம் என்று சொல்லுகிறது –

—————

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே 
–1-1-5-

எம்பெருமான் சர்வ தேவ அந்தராத்ம தயா சர்வ கர்ம சமாராதனாய் சகல பல ப்ரதனாய் இருக்கையாலே ஜகத் ரக்ஷணமும் தத் அதீனம் என்கிறது —ரக்ஷண ரூபையான ஸ்திதி தத் அதீனை என்று வையதி கரண்யத்தாலே அருளிச் செய்கிறார் –சர்வேஸ்வரன் இராமடம் ஊட்டுவாரைப்போலே முகம் தோற்றாதே, அந்தராத்துமாவாய் நின்று நடத்துகையாலே,
அவர்களும் ஆஸ்ரயித்தார்களாய் இவர்களும் பலபிரதான சக்தர்களாயும் ஆகின்றார்கள் அத்தனை -;இறைவனை ஒழிந்த அன்று அவர்கள் ஆஸ்ரயிக்கவும் ; இவர்கள் பல பிரதானம் பண்ணவும் மாட்டார்கள் என்கிறார் –
‘அய்யன் பாழியில் ஆனை போர்க்கு உரித்தாம் அன்றாயிற்று அவ்வத் தேவதா மாத்ரங்களுக்கு பல பிரதான சக்தி உள்ளதாவது,’ என்றபடி.

————-

நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றும் ஓர் இயல்வினர் என நிலனைவரியவர்
என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே
 –1-1-6-

நின்றனர்.-இத்யாதி--ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கு வாசகமான இச் சப்தம் அவற்றிற்கு ஆஸ்ரயமான சேதனனைக் காட்டி, அவன் தனக்கு ஈஸ்வரனை ஒழியப் ப்ரக்ருத்தி ஸ்திதி யாதல் உபலம்பமாதல் இல்லாமையாலே, அவன் அளவுங் காட்டுகின்றன.-பாபாதிகளில் ப்ரவ்ருத்தருடைய நிவ்ருத்திக்கும் ஈஸ்வர அபேக்ஷை யுண்டாகையாலே சர்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கும் ஈஸ்வர அபேக்ஷை யுண்டு – ஆக விசிஷ்ட வஸ்துவையே காட்டுகிறது –ஸூதிட- சிறந்த திடமான -பிரமாணத்தாற் சொல்லப் பட்டவரான நிலை தம்முடையஇலாபமாகத் தோற்றுகையால் ‘எம் திடர்’ என்கிறார்-

————

திட விசும்பு எரி அளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7-

இத்தால் ஸ்ருஷ்ட்டி சம்ஹாரங்களும் அநுபிரவேச நிபந்தனமான அந்தராத்மத்வமும் தத் அதீனம் என்றதாயிற்று –ஸ்ருதி இதிஹாச புராண உப ப்ரும்ஹிதமாய் -அபவ்ருஷேயம் ஆகையால் நிர்தோஷமாய் அபாதித ப்ராமாண்ய ரூப தேஜ பிரசுரமாய் இருந்த ஸ்ருதிகளிலே உளன் என்கிறார் –ஆதலால் லோகாயத மாயாவாத பாஸ்கரீய யாதவ ப்ரகாசாதி வேத விருத்த சமயங்கள் எல்லாம் நிரஸ்தமாயின -தாம் அனுசந்தித்த அர்த்தத்துக்கு ஸ்ருதியை சாஷியாகச் சொல்லுகையாலே ஸ்ருதியில் சொல்லுகிற ஸ்ரீ யபதித்வமும் நாராயண சப்த வாச்யத்வமும் அனுசந்தித்தாராக வேணும்

—————-

சுரர் அறிவரு நிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என வுலகு அழித்து அமைத்து உளனே 
–1-1-8-

விண்’என்ற சொல்லால் மூலப்பிரக்ருதியை அருளிச் செய்கிறார்.-வரன் முதல் ஆய்
காரண நிலையிலும் ஸூஷ்ம ரூபேண வியாபித்துத் தன் மேலே ஏறிட்டுக் கொண்டு நோக்கியும்,
காரியமாம் அளவில்  வந்தவாறே -அவ்யக்தம் மகான் அகங்காரம் என்கிற இவற்றிலும் ஸூஷ்ம ரூபேண வியாபித்தும் ,
காரண பரம்பரையோடு காரிய பரம்பரையோடு வாசியறத் தானே நின்று நடத்திக்கொண்டு போருகையாலே  வரிஷ்டமான காரணமாய் என்கிறது

அவை முழுது உண்ட –சம்ஹாரத்திலும் வந்தால் அவற்றை முழுவதும் சம்ஹரிக்கிறவனும் அவனே-ஏகதேச ஸ்ருஷ்டியும் ஏகதேச சம்ஹாரமுமே ப்ரஹ்மாதிகளுக்கு உள்ளவை;
அவைதாமும், அவர்களுக்கு அந்தராத்துமாவாக நின்று படைத்தல் அழித்தல்களைச் செய்கிறான் சர்வேஸ்வரன்.-குத்ருஷ்டிகள் நிரசிக்கப் படுகிறார்கள் –

——————-

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்
உளன் என இலன் என விவை குணமுடைமையில்
உளன் இரு தகைமையோடு ஒழிவிலன் பரந்தே 
–1-1-9-

உளன் என இலன் என இவை குணமுடைமையில்-உளன் என்கிற இத்தையும் இலன் என்கிற இத்தையும் இவை இரண்டையும் குணமாக யுடையவன் ஆகையால்- இவை இரண்டும் இரண்டு தர்மம் ஆயிற்று – உளன் இரு தகைமையொடு உளன் என்கிற சொல்லாலும் இலன் என்கிற சொல்லாலும் சொன்ன இரண்டு ஸ்வபாவத்தாலும் உளனானான்-ஈஸ்வரன் உளன் என்னில் அஸ்தித்வ தர்ம விசிஷ்டனாய் இருக்கும் என்று சொல்லிற்றாய் வரும் –ஈஸ்வரன் உளன் அலன் என்னில் நாஸ்தித்வ தர்ம விசிஷ்டனாய் இருக்கும் என்று சொல்லிற்றாய் வரும் –சர்வ ஸூந்யவாதிகளான மாத்யமிக புத்தரை நிராகரிக்கிறார்சூன்ய வாதியை ஹேது சொல்வதற்கு முன்பே பிரதிஜ்ஞா மாத்ரத்தில் சவிபூதிகனான சர்வேஸ்வரனுடைய உண்மையை சாதிக்கிறார் –-ஒழிவிலன் பரந்தே-நான் உளன் என்கிற சொல்லாலே சாதித்தேன் -நீ இலன் என்கிற சொல்லாலே சாதித்தாய் –ஆக இருவருமாக உண்மையை சாதித்தோம்-இனி அவன் உளனானால் உளனாமாம் போலே ச விபூதிகனாயே உளனாக அமையாதா என்கிறார் –

ஸர்வதா அநுப பத்தேச்ச-என்ற ஸூத்ரத்தை விவஷித்து –அதிகார அநு பாயத்வாத் ந வாதே ஸூன்ய வாதிந-ஸர்வதா சதுபாயா நாம் வாத மார்க்க ப்ரவர்த்ததே -என்கிற பாட்ட வசனம் அனுசந்தேயம்-நிஷேதிக்கிற ப்ரமாணத்தையும் ஸூன்யம் என்கையாலே வாதம் தந்தன்னில் உனக்கு அதிகாரம் இல்லை என்று ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்வர்-

—————

பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன்
பரந்த வண்டமிதென நில விசும்பு ஒழிவறக்
கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே –
1-1-10-

எங்கும் பரந்து உளன் – சேதனன் சரீரத்தில் உடலில் வியாபிக்கும் பொழுது அதில் ஏக தேசத்தில் நின்று ஞானத்தாலே எங்கும் வியாபிக்கக் கடவனாய் இருக்கும்
இவன் அவ்வாறு அன்றித் தன் சொரூபத்தாலே எங்கும் நிறைந்திருப்பன்.கரன் –
ஸூதிட பிரமாண சித்தன்– திடமிக்க பிரமாணங்களால் உறுதி செய்யப்பட்டவன்-ஸூ த்ருட பிராமண சித்தனுமாய் இருந்த எம்பெருமானுடைய துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே -என்கிறார் –.-கரந்த வென்றும் ஸூஷ்மமாய்-சில் என்று ஸூஷ்மமாய் -இடம் என்று சரீரமாய் அத்யல்ப சரீரம் தோறும் என்றபடி –கீழ்ச் சொன்ன பகவத் வ்யாப்தியினுடைய சௌகர்யத்தை சொல்லுகிறது
எங்கும் பரந்துளன் -பஹிர் வியாப்தியும் சொல்லுகிறது –
நித்யம் விபும் -ஏஷோர் அணுராத்மா-என்றும் இரண்டும் ஸ்ருதி சொல்லிற்றே-

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -42-வன் காற்று அறைய ஒருங்கே மறிந்து –பொரு மா நீள் படை -1-10-

February 24, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிறசொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

தலைமகன் கடாக்ஷம் வியந்து தலை மகள் பேசும் பாசுரம்-பொரு மா நீள் படை -1-10-இதன் விவரணம்
எம்பிரான் தட–கமலத் தடம் போல் கண்கள் பொலிந்தன-மேல் கமல வர்ணனை–மென் கால் கமலம் -தானே ஒடிந்து விடும்படி மெல்லிய அதுக்கும் மேல் காற்று-அதுவும் வன் காற்று அறைய ஒருங்கே சாய்ந்து விட – ஆனாலும் தாமரைக்கு ஒன்றும் ஆகாமல் கிடந்தது அலர்ந்த–இதே போல் அவன் திருக்கண்கள்-திருவிக்ரமனின் திருக்கண்கள்-மண்ணும் விண்ணும் எனது காலுக்குள்ளே லேசம் அடங்கி உள்ளதை நீங்களே பாருங்கோள் என்று சொல்வதை போல் வான் நிமிர்ந்த -தற் குறிப்பு ஏற்று அணி –மிதிலா தேச கொடிகள் அசைந்து ராமனை வரவேற்பது போல் -ஒல்லை வா என்று
அழைப்பன போல்வன போல் அதே போல் இங்கு -நடந்த செயலை -அந்த அளந்த ஹேதுவைச் சொல்லாமல் -இவர் குறிப்பை ஏற்றி -மண்ணும் விண்ணும் -என்றும்-விண்ணும் மண்ணும் என்றும் பாட பேதம் -இது -மோனைக்கு பொருத்தம்-தன் பால் என்றும் தன் கால் என்றும் பாடபேதம்-தன்னிடம் ஈடுபட்டு இருக்கும் ஆழ்வார் என்றபடி – லோக விக்ராந்த சரணம் -உலகு அளந்த பொன்னடி அடைந்து உய்ந்த ஆழ்வார் -எம்பிரானை -தந்தை –தண் தாமரைக் கண்ணன் –-அந்த திருவாய் மொழியில் உண்டே–தடம் -தளம் -ளகார டகார பேதம்-யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணீ –

பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய வாதிப்பிரான் அரங்கத்து அமலன் முகத்துக்
கரிய வாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப்
பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே
—-8–

நாயகன் நோக்கில் ஈடுபட்ட நாயகி அருளிச் செய்யும் பாசுரம் – இப்பாசுரம் ஒட்டியே -ஸ்ரீ ரெங்கராஜா உத்தர சதகத்தில் –ஸ்ரீ ரெங்கேசய சரணம் மமாசி வாத்யாவ்யா லோலாத் கமல தடாக தாண்டவேந -என்பர் ஸ்ரீ பட்டர் -தம் பக்கல் பரிபூர்ண கடாக்ஷம் பண்ணி அருளியதை அனுபவித்து அருளிச் செய்த பாசுரம்-

ஸ்ரீ ரெங்கேசய சரணம் மம அஸி வாத்யா
வ்யாலோலத் கமல தடாக தாண்டவேந
ஸ்ரக் பூஷா அம்பரம் அயதாயதம் ததாந
திக் மாம் இதி அநு கஜ கர்ஷம் ஆஜ கந்த
—2–59-ஸ்ரீ ரெங்கேசய-ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய கூக்குரல் செவிப்பட்ட உடனே-கெட்டேன் கெட்டேன் என்று இழவுக்கு நொந்து கொண்டு-மாலை ஆபரணம் திருப் பரிவட்டம் ஆகிய இவற்றை அடைவு கெட அணிந்து கொண்டவராய் –பெரும் காற்றிலே அலைந்த ஒரு தாமரைத் தடாகத்தில் விசாலத்தோடு கூடியவராய் எழுந்து அருளினீர்–இப்படி ஆஸ்ரித பக்ஷபாதியான தேவரீர்-அடியேனுக்கு புகலிடம் ஆகின்றீர்-பெரும் காத்தாலே தாமரைத் தடாகம் போலே திருமாலை திரு ஆபரணம் திருப் பரியட்டங்களை அக்ரமமாகத் தரித்து பிற்பாடானேன் என்று கர்ஹித்துக் கொண்டு எழுந்து அருளின தேவரீர் எனக்கும் ரஷகம் ஆகிறது என்கிறார்-

வாடையின் கீழ் ஜீவிக்கை அரிது -இனி முடியும் அத்தனை -என்று வார்த்தை சொன்னவாறே குளிர நோக்கினான் –ஒருங்கே ஆழ்வாரை மட்டும்-மருங்கே –எங்கும் பார்க்காமல் -பக்க நோக்கு அறியாமல் கடாக்ஷித்தான்-ஸ்வா பதேசம் பெரியவாச்சான் பிள்ளையே இதில் அருளிச் செய்கிறார்

இப்படி ஆர்த்தரான அளவிலே ஈஸ்வரன் தன்னுடைய ஸீலாதிசயத்தை இவருக்குப் பிரகாசிப்பித்துப்
பரிபூர்ண கடாக்ஷம் பண்ணின பிரகாரத்தை பாவனையாலே (மாநஸமாக)அனுபவித்து அருளுகிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு அவதாரிகை
வாடையின் கீழே ஜீவிக்க அரிது என்று இனி முடியும் அத்தனை என்று வார்த்தை சொன்னவாறே
குளிர நோக்கினான் –

வன் காற்றறைய வொருங்கே மறிந்து கிடந்தலர்ந்த
மென் கால் கமலத் தடம் போல் பொலிந்தன மண்ணும் விண்ணும்
என் கால்க்கு அளவின்மை காண்மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த
தன் பால் பணிந்த என் பால் எம்பிரான் தடக் கண்களே
-42-தலைவி தலைவன் கண் அழகில் ஈடுபட்டு உரைத்தல் –

பெருமாழி சங்குடையோன் பூதலத்தே வந்து
தருமாறு ஓர் ஏது அறத் தன்னை -திறமாகப்
பார்த்துரை செய் மாறன் பதம் பணிக வென் சென்னி
வாழ்த்திடுக வென்னுடைய வாய் —10–இப்படி உகப்புடனே பண்ணும் சர்வாங்க சம்ச்லேஷம் ஆகிற
இந்தப் பேற்றுக்குத் தகுதியாக இவனாலே நேர்ந்து செய்யத் தக்கது உண்டோ -என்னில்
புத்தியாதி சகல பதார்த்தங்களுக்கும் நியாமகன் ஆகையாலே-அத்வேஷம் துடங்கி பரிகணிநை நடுவாகபரமபக்தி பர்யந்தமாக தானே விளைவித்து வந்து நிர்ஹேதுகமாக அங்கீகரிக்கும் ஸ்வபாவன் என்று அவனுடைய நிர்ஹேதுக உபகாரத்வத்தை அனுசந்தித்து நிர்வ்ருத்தராகிற – பொருமா நீள் படையில் அர்த்தத்தை பெருமாழி சங்கு டையோன் -என்று துடங்கி அருளிச் செய்கிறார்-இப்படி நிர்ஹேதுக வைபவத்திலே நிர்வ்ருத்தர் ஆகிறபடியை வெளியிட்ட ஆழ்வார் திருவடிகளை
மூர்த்த்னா ப்ரண மாமி -என்னும்படி என் சிரஸ் சார்ந்து  பஜித்திடுக –திருக் குருகை பெருமாள் தன் திருத் தாள்கள் வாழியே-என்று என் வாக்கானது மங்களா சாசனம் பண்ணி விடுக–இப்படி உபகார ஸ்ம்ருதி அதிசயத்தாலே தாம் ஆழ்வார் திருவடிகளிலே ஆழம் கால் பட்ட படியை அருளிச் செய்து அருளினார் –

வன் காற்று இத்யாதி –மென் கால் கமலமாவது –மிருதுவான காற்றும் கூட பொறாத படியான மெல்லிய தாளை உடைத்தான கமலமாவது –இதில் வன் காற்றாவது –அது தான் கண் பாராதே அறைவது –ஒருங்கே –ஏகதோ முகமாக–மறிந்து கிடந்து அலர்ந்த –மற்றை அருகே புரியில் தர்மி லோபம் வரும் என்னும் படி ஆவது–இத்தால் சம்சாரிகளில் ஒருவன் ஓரடி வாரா நின்றால் அவன் பக்கல் வைத்த கடாஷத்தை மாறிப்- பெரிய பிராட்டியார் பக்கலிலே வைக்க என்றாலும் அது தான் அரிது ஆம் படி இருக்கை–என் பைம் தாமரைக் கண்ணன்–எங்கும் பக்கம் நோக்கு அறியான் -என்ன கடவதிறே-ஆறு படிகள்-1-ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் -கடாக்ஷம் இத்யாதி–மென் கால் -ஆபி முக்கியம் கூடப் பொறாத
வன் காற்று பூர்ண பிரபத்தி -முக்கரண–அறைவது -ஆர்த்த பிரபத்தி-ஓரடி வாரா நின்றால் -மித்ர பாவனையே போரும் என்று இருப்பவன் அன்றோ —மென் கால் கமலம் ––ப்ரக்ருத்யா தர்ம சீலஸ்ய-என்னக் கடவதிறே –இயற்கையிலே தர்ம சீலன் -எல்லார் இடத்திலும்-அப்படி இருக்கும் -ராகவனுக்கும் ருசிகரமான இருந்தது-அந்த ஸ்லோகத்தில் உள்ள பதம் -விவரணம் மேல்-இதொரு கடல் இடை சுவராய் கடவா நின்றது –-இத்தை கடந்து அவ்வருகு பட்டோமாம் விரகென்-என்று பெருமாள் முதலிகள் அடைய கேட்க – ஸ்ரீ விபீஷண ஆழ்வான்-1-தான் அணித்தாக கை கண்ட உபாயம் ஆகையாலும் –-2-சர்வ ஹிதங்களுக்கும் சாதனம் சரணா கதி -என்று அத்யவசித்து இருக்கையாலும் –-3-பல வியாப்தி இதுக்கு உள்ளது ஆகையாலும் –பெருமாளுக்கு இந்தக் கடலை சரணம் புக அடுக்கும் -என்றான் –சமுத்ரம் –பெரியவர்களை வசீகரிக்கும் உபாயம் இது அல்லதில்லை –

ராகவோ ராஜா –-ஒரு குடிப் பிறப்பும் இன்றிக்கே-அளவுடையாரும் அன்றிக்கே இருப்பாருக்கும் இது பலிக்கும் ஆனால்-இவை உடையாருக்கு சொல்லவும் வேணுமோ ?–சரணம் கந்து மர்கதி –வசிஷ்ட சிஷ்யர் பக்கலில் இது பலிக்கக் கண்ட படியாலே-அறிவில்லாத கடலின்  பக்கலிலும் அது பலிக்கும் என்று இருக்கிறான் –அதிகாரி நியமம் இல்லை-கால தேச பிரகார நியதி களும் இல்லை-கேவல விஷய நியதி மட்டும் உள்ளது என்பதை மறந்து பேசினான் –சாதேவேச்மின் பிரயுஜ்யதாம் –எருது கெடுத்தாருக்கும் ஏழே கடுக்காய் (குழந்தை பெறுவதுக்கும் ஏழே கடுக்காய் ) -என்று–அஹம் அஸ்ய அபராத ஆலய -அகிஞ்சனன் அகதி த்வமே உபாய பூதா பிரார்த்தனா மதி சரணாகதி சாதேவேச்மின் பிரயுஜ்யதாம் சா தேவ தேவனான ஸ்ரீ மானாகிற அவன் இடம் மட்டுமே சொல்லப்பட வேண்டும்மென் கால் கமலம் –காற்று தான் வேண்டா வாயிற்று -தன் காலின் மென்மை-மித்ர பாவேன-அவன் பக்கலில் பாவமே அமையும் –அவனை விடில் என்னை இழக்கும் அத்தனை இறே-அவன் பக்கல் கிடையாதது ஒன்றை வேணும் என்றால் துராராதானம் இத்தனை இறே –இவன் பக்கல் பெற்றது கொள்ளும் இத்தனை இறே –இவனால் செய்ய முடியாதது ஒன்றைச் சொல்லுகை யாவது கை விட நினைத்து சொல்லிற்றாம் இத்தனை இறே –ஆர்த்தோ வா யதி வா த்ருப்தராகவம் சரணம் கத –-என்ற உக்தி திரு  செவி பட்ட போதே இவன் நெஞ்சில் தளர்த்தியை திரு உள்ளம் பற்றினார் பெருமாள் –உக்தியே இவன் பக்கல் உள்ளது –நினைவு வேறு ஒரு படி -என்று அறிந்த முதலிகள் –ராம பக்தியால்-நினைவு ஒன்றாய் செயல் ஒன்றாய் இருக்கிறவன்-வத்யன் -என்றே இருந்தார்கள் –ஆர்த்தியாலோ த்ருப்தியாலோ கொடுப்பவன் இல்லையே பிரபத்தியால் கொடுக்கிறான் என்றபடி-அதிகாரி வேண்டுமே-புருஷனையும் புருஷகாரத்தையும் நோக்கும் -தன்னைப் பார்த்தே கொடுக்கிறான்-

ஆர்த்தன் ஆகையாவது –இத் தலையை பெறில் ஜீவித்தும் பெறா விடில் முடியும் படி யுமாய் இருக்கை–த்ருப்தன் ஆகையாவது – நெஞ்சு இன்றிக்கே இருக்கச் செய்தே நம்முடைய அனுகூல பாஷணங்களை
பிறர் அனுகரிக்குமா போலே நெஞ்சு இன்றிக்கே இருக்க செருக்காலே சொல்லுகை –நாம் திரு நாமங்களைச் சொல்ல -அவற்றை ஆபேஷித்து-கண்ணன் கள்வன் -என்று சொல்லுமவரும் உண்டே
இருவரும் அநு காரத்தோடே சொல்லுகிறார்கள் போல்-திருப்த ப்ரபன்னன் -வாய் வார்த்தையாகச் சொல்லி-ஆர்த்த ப்ரபன்னன்-நாமும் புகல் ஒன்றும் இல்லா அடியேன் உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே – ஆழ்வாரைப் போலே சொல்லுவது நெஞ்சு இன்றிக்கே சொல்வது போல்-அவனுக்கு உடன் பேறு இவனுக்கு சரீர அவசானத்தில் பேறு பலம் வேறுபாடு உண்டே என்னில் இவன் பெறுவதற்குத் தயாராக இல்லை ஆகவே பலத்தில் வேறுபாடு இல்லையே கோவிந்த ஸ்வாமி அனுபவம் பார்த்தோம்-18 நாடான் பெரும் கூட்டம் உண்டே -ஆர்த்தன் ஆகவுமாம் த்ருப்தன் ஆகவுமாம்-
ஆர்த்யோபாதி த்ருப்திக்கும் பல ஐக்க்யம் உண்டாம் படி எங்கனே எனில்-இவனைப் பார்க்கும் அன்று இது விசாரிக்க வேணுமே – சரண்யனுக்கு வேண்டுவது சொல்லுகிறது இறே இதில் –ஆர்த்தியோபாதி த்ருப்தியும் இதுக்கு பரிகராம்படி (சாதனமாம்) எங்கனே எனில் – ஆர்த்தி பரிகரமான இடத்தில் –இதுவும் பல வியாப்தமாகக் கண்டு போருகிறது –ஆகையாலே ஆகிஞ்சன்யமே ஆயிற்று அதுக்கு பரிகாரம் –த்ருப்தனுக்கு –இதுக்கு பரிகரமான ஆர்த்தியும் கூட இல்லையாய் இருந்தது இனி நாமே ஆகாதே உள்ளோம் -என்று அதுக்கும் அவன் இரங்கும் என்று பரிகரமாக தட்டில்லை –விபீஷணன் சரணாகதி பெருமாள் திரு உள்ளம் படி ஆர்த்த பிரபத்தி-முதலிகள் திரு உள்ளம் படி திருப்த பிரபத்தி
ஆர்த்தி உள்ள சாதனம் உள்ளவருக்குக் கொடுக்க அது கூட இல்லாமல் இருந்தால் கொடுப்பத்துக்குச் சொல்ல வேண்டுமே-நீசனேன் நிறை ஒன்றும் இல்லேன் என்பவரைத் தானே பூர்ண கடாக்ஷம் பண்ணி
எங்கும் பக்க நோக்கு அறியாமல் இருந்து மேல் விழுந்து கொள்ளுவானே இரக்கமே பரிகரம் என்றதாயிற்று-

பரேஷாம் கத அரி –சத்ருக்களில் வைத்து கொண்டு சரணாகதனான சத்ரு –அதாவது –உக்தி மாத்ரமேயாய் கார்யத்தில் சாத்ரவமே முடிய நடவா நிற்கை –
அன்றிக்கே –கொன்றேன் பல்லுயிரை -அன்றே வந்து அடைந்தேன் -பெரிய திரு மொழி -1-9-3-
என்னுமா போலே கொன்ற கறை கழுவாதே -வந்து புகுருகை –
(கொத்தின ரத்தத்துடன் வந்த காகாசூரனை -பரமா கிருபையா -கொண்டு ரஷித்தானே –ப்ராணான் பரித்யஜ்ய ரஷி தவ்ய –அவர்கள் பக்கலிலே வாசி உண்டாலும் -ரஷிக்கும் இடத்தில் இருவரையும் ஒக்க பிராணன்களை அழிய மாறி ரஷிக்க படும் –ப்ராணாநபி பரித்யஜ்ய -என்னாது ஒழிந்தது – அவன் செய்ததுக்கு பிராணனை அழிய மாறி-ரஷிக்கும் அதுவும் போராது என்று நினைத்து இருந்த படியால் –பிராணனை விட்டாவது ரக்ஷிக்க வேண்டாம் என்று இல்லாமல் பிராணனை விட்டே ரக்ஷிக்க வேண்டும்
இதுவும் அவன் சரணம் என்ற சொன்னதுக்குப் போராது என்று எண்ணு மவன் அன்றோ –-கபோத உபாக்யானம் -புறா கதை -அறிவோமேக்ருதாத்மன--இவனுடைய ரஷணத்துக்கு செய்தது ஓன்று அன்று –தன்னுடைய ஸ்வரூப சித்திக்காக –க்ருதாத்மன திருத்தப்பட்ட மனசை யுடையவன்
ராகவ வம்சம் –தர்மம் தெரிந்தவன் ராகவன் ஆனபடியால்–ஒருவனோடு ஒன்றை அப்யசித்து சிஷித்தமனவாய் இருக்கும் அவனுக்கு(வசிஷ்டரால் சிஷை பெற்ற பெருமாள் ) இத்தனை செய்ய வேண்டி வரும் எப்படி பட்டவன் உடைய என்றால் –பிரபத்தி சாதனமாக இருந்தால் பலத்தில் வேறுபாடு கொள்ளலாம்-இது சித்த உபாயம்-அதுக்குத்தக்க பலத்தில் வேறுபாடு இருக்காதே – அதுக்கு வேண்டிய அதிகாரி விசேஷணமே இவை

மண்ணும் விண்ணும் இத்யாதி –பூமந்தரிஷாதி களடைய என்னுடைய காலுக்கு அளவு போராதே இருக்கிற படி பாருங்கோள் என்பாரைப் போலே ஆயிற்று ஆகாச அவகாசத்தை அடைய தன் திரு மேனியாலே நிரப்பிற்று-(ஒண் மிதியில் இத்யாதி )-பரப்பை உடைத்தான பூமியும் , எல்லோருக்கும் அவகாச பிரதானம் பண்ணுகிற ஆகாசமும் என் காலுக்கு அளவு போராது இருக்கிற படியை பாருங்கோள் என்பாரை போலே யாற்று அளந்து கொண்டது–நான் அளக்க புகா நின்றேன்
உங்கள் தலையிலே என் காலை வைக்க புகா நின்றேன் -என்னில்ந நமேயம்-என்று ஒட்டோம்-என்று ஆணை இடுவார்கள் இறே –அதுக்காக-இது ஓர் ஆஸ்ர்யம் பாருங்கோள் -என்பாரைப் போலே ஆயிற்று அளந்தது –இப்போ தத் அபதானத்தை சொல்ல வேண்டுவான் என் என்னில் –இத் தலையில் அபிமுக்யம்  இன்றிக்கே இருக்க –தானே அவதரித்து வந்து மேல் விழுந்து எல்லார் தலையிலும் திரு அடிகளை வைக்கும் அவன் இறே இவர்கள் பேற்றுக்கு தான் கிருஷி பண்ணுமவன் ஆயிற்று –நான் ஒட்டுவேன் என்னுள் இருத்துவன் என்று இல்லாமல் வெட்டிக் கொண்டு போனாலும் விடாமல் தலையிலே தனது திருவடி வைப்பவன்–இத்தால் –-மென் கால் கமலம் -என்றதை நினைக்கிறது

வான் நிமிர்ந்த தன் பால் பணிந்த என் பால் –இத்தால் இந்த அனுகூல்யத்துக்கு அடியான மூல ஸூஹ்ருதமும் தானே என்கிறது-தான் முற்பட வணங்கி பின்னை இத் தலையை வணங்குவித்தான் முற் தீமை (முயற்சி)செய்தான் தானே என்கை–திருக் கமல பாதம் வந்து -பின் அரைச் சிவந்த ஆடை மேல் சென்றது சிந்தை-தான் முற்பட்டு இவனை அனுகூலிக்கும் படி பண்ணி பின்னை-நீ அனுகூலித்தாய் -என்று இவன் தலையிலே ஏறிட்டு  இரங்கும் அவன் ஆயிற்று –தன் பால் பணிந்த -என்கையாலே –வன் காற்று அறைய-என்கிறதை நினைக்கிறது –என் பால் -என்கையாலே – ஒருங்கே மருந்து கிடந்து  அலர்ந்த -என்றதை நினைக்கிறதுஎம் பிரான் தடம் கண்களே –இவன் பேற்றுக்கு தான் வருந்தினான் ஆயிராதே –இத்தால் பேறு தன்னது என்று தோற்றும் படி ஆயிற்று திரு கண்களில் விகாசம்-மென் கால் கமலம் என்றது –ஆபி முக்ய ஸூசகமான மானஸ ப்ரபத்தியையும் பொறாத அவனுடைய ஸுவ்ஹார்த்தம்–ஸூஹ்ருத் பாவம்-வன் காற்று -பூர்ண பிரபத்தி-அறைகை –ஆர்த்த பிரபத்தி

வன் காற்றறைய--தடையில்லாத நடையையுடைய கருணையால் தூண்டப பட்ட கடாக்ஷ வீக்ஷணம் –
காருண்ய மாருத நீதை -என்பர் திருக் கச்சி நம்பிகள்–வொருங்கே மறிந்து கிடந்தலர்ந்த-ஆழ்வார் பக்கல் அபிமுகமாய் நோக்கி மலர்ந்தமை –எங்கும் பக்கம் நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனேமென் கால் ஆவது –-அருள் நோக்குக்கு மூலமான திரு உள்ள நெகிழ்ச்சி–கமலத் தடம் போல் –நிறம் குளிர்ச்சி பிறப்பால் உண்டான போக்யதை –மண்ணும் விண்ணும் எம்பெருமான் பாதங்களுக்கு இடம் இல்லாமையை கம்பரும் –நின்ற கால் மண் எல்லாம் பரப்பி யப்புறம் சென்று பாவிற்றிலை சிறிது பாரென ஒன்ற வானகம் எல்லாம் ஒடுக்கி யும்பரை வென்ற கால் மீண்டதுவெளி பெறாமையே -என்றும் உலகெல்லாம் உள்ளடி அடக்கி –தன் கால் பணிந்த -தன்னிடத்தில் ஈடுபட்ட என்றுமாம் –

வன் காற்றறைய-வலிய காற்றானது சலியாமல் நிற்க ஒட்டாமல் அடிக்க–வொருங்கே மறிந்து-ஓர் இடத்திலே சேரப் புரிந்து–கிடந்தலர்ந்த–கிடைப் பாட்டிலே விகஸிதமான–மென் கால்-ஒரு முகத்திலே சாய்கைக்கு அடியான தண்டில் மார்த்தவத்தை யுடைய–கமலத் தடம் போல்-தாமரைத் தடாகம் போலே-பொலிந்தன-அழகினுடைய அபி விருத்தியை யுடையவாயின –இவ் விடத்தில் கண்களுக்குக் காற்றாவது அப்ரதிஹத கதியான கிருபா ப்ரேரிதமாகை –சமஸ்த ப்ராணி ஸந்த்ராண ப்ரவீண கருணோல்பன;-விலசந்து கடாக்ஷாஸ் தே, மய் யஸ்மின் ஜகதாம்பதே!!”–2-(தடங்கல் இல்லாத சீதளமான திருக் கண்கள் திருக்கச்சி நம்பி )-கிடந்து அலரு கையாவது -இவரை விஷயீ கரிக்கையாலே கண்ணுக்கு விகாஸம் உண்டாகை–மென் காலாவது– இக் கடாக்ஷத்துக்கு மூலமாய்-கிருபா கார்யமான சித்த மார்த்தவம் (ஸுஹார்த்தம்)–கமலத் தடம் என்று நிறத்தாலும் குளிர்த்தியாலும் பரப்பாலும் போக்யமாய் இருக்கை–பொலிவாவது-காலம் மாறி மலரும் தடம் -போது செய்யாத்- திருக்கண் அழகுக்குப் போலி அல்லாத மிகுதியைச் சொல்லுகிறது –(இதுவோ குவியாமால் எப்போதும் மலர்ந்தே -மாறாமல் -போது செய்யாமல் இருக்குமே )மண்ணும் விண்ணும் என் கால்க்கு அளவின்மை காண்மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த–பூமியும் -ஊர்த்தவ லோகங்களும்-என் காலுக்கு அளவு போராது
நீங்கள் காணுங்கோள் என்று-தத் தத் தேச வாசிகளுக்கு உபதேசிப்பாரைப் போலே –ஒண் மிதியில் புனலுருவி -திருநெடும் தாண்டகம்-என்கிற பாட்டின் படியே ஊர்த்வ லோகங்கள் அடைய வியாபரித்து-விண்ணும் மண்ணும் -என்றும் பாடபேதம் சொல்லுவார்-தன் பால் பணிந்த என் பால்-தன் திருவடிகளில் வணங்கின என்னிடத்து–தன் பால் என்ற பாடமான போது தன்னிடத்து என்றும் சொல்லுவர்-எம்பிரான் தடக் கண்களே-த்ரை விக்ரம அபதானத்தாலே அசாதாரணமான ஸம்பந்தத்தை அறிவித்த ஸ்வாமியினுடைய பெரிய திருக்கண்கள்–இப்பாட்டு நாயகனான ஈஸ்வரனுடைய நோக்கிலே துவக்குண்ட நாயகி வியந்து உரைத்தலுமாகவுமாம் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு வியாக்யானம்வன் காற்றறைய வொருங்கே மறிந்து கிடந்தலர்ந்த
மென் கால் கமலத் தடம் போல் பொலிந்தன
-மென் கால் கமலமாவது மிருதுவான காற்றும் கூடப் பொறாத படியான மெல்லிய தாளை யுடைத்தான கமலமானது-இதிலே வன் காற்றாவது-அது தான்
தன்னைப் பாராதே அறைவது–ஒருங்கே-ஏகதோமுகமாக–மறிந்து கிடந்தது அலர்ந்த-மற்றை அருகே புரியில் தரமி லோபம்–மண்ணும் விண்ணும்-என் கால்க்கு அளவின்மை காண்மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த தன் பால் பணிந்த என் பால் எம்பிரான் தடக் கண்களே

தாத்பர்யம்
இப்படி ஆர்த்தரான தன் படியைக் கண்டு பூர்ண கடாக்ஷம் பண்ணி அருளிய படியை
நாயகி பாசுரத்தால் அருளிச் செய்கிறார்
திருவிக்ரம அபதானத்தில் -சகல லோகங்களையும் திருவடிக் கீழ் இட்டுக்கொண்ட அவன்
திருவடிகளில் சரணம் புகுந்த எனது விஷயத்தில் திரு உள்ளத்தால் கிருபை உந்த கடாக்ஷம் –
ஸூஹ்ருதம் –ஸுஹார்த்தம்-இவற்றுள் எது முன்னால் என்று சொல்ல முடியாதே
அவ் வழியாலே வந்து என் மேல் வில் விழுந்து என்னைக் கடாக்ஷித்து விஷயீ கரித்த குளிர்ந்த அழகிய திருக்கண்கள்-மெல்லிய கொடியில் பூத்த தாமரை தடாகம் போல் திருக்கண்கள் தோன்றுகின்றன என்கிறார் –

1-10-பொரு மா நீள் படை -பிரவேசம் 

கீழ் திருவாய்மொழியில்,-சர்வாங்க சம்ஸ்லேஷத்தை அனுசந்தித்து –
தமது எல்லா அவயவங்களிலும் இறைவன் சேர்ந்த சேர்க்கையை -நினைத்து -நிர்வ்ருதராகிறார் -இன்புறுகின்றார்
என்று கீழ் திருவாய்மொழிக்கும் இத் திருவாய்மொழிக்கும் இயைபு அருளிச் செய்வர் முன்புள்ள பெரியோர்கள். 
இங்கு, சர்வாங்க சம்ஸ்லேஷத்தை அனுசந்தித்து – எல்லா உறுப்புகளிலும் இறைவன் சேர்ந்த சேர்க்கையை
அநுசந்தித்து ஸ்ரீ பட்டர் அருளிச் செய்வதோர் ஏற்றம் உண்டு. அதாவது,
கீழ் திருவாய்மொழியில் ‘உச்சியுள்ளே நிற்கும்’ என்று அன்றே அருளிச் செய்தார்?
பேற்றில் இனி, ‘இதற்கு இவ்வருகு ஏற்றமாகச் செய்து கொடுக்கலாவது ஒன்றும் இன்று;
இனி, இதனுடைய-அவிச்சேதத்தை – பிரிவின்மையைச்- செய்து கொடுக்கையே உள்ளது;
பேறு கனத்து இருந்தது இது வந்த வழி என்னை?’ என்று ஆராய்ந்தார்;
இப் பேற்றின் கனத்துக்கு ஈடாக இருப்பது ஒரு நன்மை தம்மிடத்தில் இல்லாது இருந்தது;
‘ஏன் இல்லையோ?’ எனின், இத்தலையில் ஏதேனும் உண்டாகப் பார்த்தாலும்,
அத்வேஷம் -வெறுப்பின்மை-ஆபிமுக்யம் – எதிர் முகமாதல் என்னும் இவையே உள்ளனவாம்;
இவற்றைத் தாம் பெற்ற பேற்றிற்கு ஒரு சாதனமாகச் சொல்லப்போகா; ‘என்னை?’ எனில்,
இத் தலையில் பரம பத்தி அளவாகப் பிறந்தாலும் பேற்றின் கனத்துக்கு இதனை ஒரு சாதனமாகச் சொல்லுதற்கு இல்லையே;
என் போல!’ எனில், ஒருவன் ஓர் எலுமிச்சம் பழம் கொடுத்து இராச்சியத்தைப் பெற்றால் அதற்கு அது விலையாய் இராதே;
மற்றும், ஸ்ரீ சர்வேஸ்வரன் அடியாக வரும் பேற்றுக்கு இத் தலையால் ஒரு காரணத்தை நிரூபிப்பதற்கும் இல்லையே?
‘வரலாறு ஒன்று இல்லையால் வாழ்வு இனிதால்’ என்னும் படியன்றே இருப்பது?
மற்றும், இவனை முதலிலே படைக்கிற போது ‘இவன் தீய வழியைத் தப்பி நல்ல வழி போக வேண்டும்’ என்று –
உபகரணங்களை -உறுப்புகளைக் கொடுத்து விடுகையாலே,
இவன் தலையால் பிறந்த நன்மைக்கும் காரணம் அவனாக இருப்பான்;
இனி, புத்தி முதலான எல்லாப் பொருள்கட்கும் நிர்வாஹகன் ஆகையாலே,
அத்வேஷம் -வெறுப்பின்மை தொடக்கமாகப் பரிகணனை நடுவாக, பரம பத்தி முடிவாகப் பிறப்பிப்பான் ஒருவனும் இறைவனே யாவன்;
ஆதலால், ‘நித்திய ஸூரிகள் பேற்றை, அநாதி காலம் உழன்று திரிந்த நமக்குத் தந்தான்,
அவன்-விஷயீகாரம் – திருவருள் இருக்கும்படி என்?’ என்று,
கீழ் திருவாய்மொழியில்-உன்மஸ்தமாக- தலைமுடிவாகப் பிறந்த -சம்ஸ்லேஷ ரசத்தை -சேர்க்கையாலாய சுவையை – அனுசந்தித்து -நினைத்து-நிர்வ்ருதராகிறார் – இன்புறுகிறார் என்பது.

பட்டர் தம்முடைய வைபவம் எல்லாம் காட்டும் திருவாய்மொழி யாயிற்று இது –

பத்தாம் திருவாய் மொழியில் -இப்படி சர்வ பிரகார சம்ச்லேஷம் பண்ணுகைக்கு அடி -அவனுடைய நிர்ஹேதுக மஹா உபகாரத்வம் இறே -என்று அனுசந்தித்து
அதுக்கு உபபாதகமாக-1- அவன் தன் வடிவைத் தம்முடைய கண்ணுக்கு இலக்கான படியையும் –2-கணநா மாத்ரத்திலும் ஸூலபன் என்னும் இடத்தையும் —
3-அவனுடைய அனுபாவ்ய ஸ்வ பாவத்தையும் –4-நிரந்தர அனுபாவயதையும்–5-ஆர்த்தித்தவம் வேண்டாத அதிசயித உபகாரகத்வத்தையும் —
6–அதுக்கடியான பந்த விசேஷத்தையும் -7-இதுக்குப் படிமாவான ஸூரி போக்யத்தையும் -8–உபகாரகத்வ உப யுக்தமான பூர்ணதையையும் –
9–இவ்வுபகார க்ரமம் மறக்க அரிது என்னும் இடத்தையும் –10–மறவாமைக்கு அவன் பண்ணின யத்ன விசேஷத்தையும் —
அருளிச் செய்து -மஹா உபகாரகத்வத்தை அனுபவித்துக் களிக்கிறார்-

பொரு மா நீள் படை ஆழி சங்கத்தொடு
திரு மா நீள் கழல் ஏழுலகும் தொழ
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்
கருமாணிக்கம் என் கண்ணுள தாகுமே
–1-10-1-

இத் திருவாய் மொழியில் சொல்லுகிற அர்த்தம் -நிர்ஹேதுக விஷயீ காரம் – ஸங்க்ரஹமாக திரள அருளிச் செய்யும் படியைக் காட்டுகிறார் –அக் கருமாணிக்கம் என்கையாலே வடிவு அழகை -என்றபடி

ஆசை சிறிது உடையார் இருந்த இடம் எல்லையாக வளர்வனவும் ஆன திருவடிகளை ஒரு சாதந அனுஷ்டானம் பண்ணாதாரும் தொழும் படியாக.  ‘நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய்’ என்றும்-கதா புந -என்றும் நான் ஆசைப்பட்டுக் கிடக்கும் திருவடியை யன்றே
ஆசை இல்லாதார் தலைகளிலும் வைத்தான் என்பார், ‘ஏழ் உலகும் தொழ’ என்கிறார்.

ஒரு –அத்விதீயமாய் இருக்கை- இன்னமும் தானே அவ்வடிவை கொள்ள வேணும் என்னிலும் அப்படி வாயாது இருக்கை-மாணிக் குறளாகி – மாணி-அர்த்தித்வத்திலே தகண் ஏறின படி -மாண்-அழகு-குறளாகி -சேர்ப்பால் போலே சுருங்கின தனையும் போக்யமாய் இருக்கை-நிமிர்ந்த –அபேக்ஷிதம் பெற்ற ப்ரீதியாலே வளர்ந்த படிநிமிர்ந்த அக் கருமாணிக்கம் – நெய்தற்காடு அலர்ந்தாற்போலே ஆகாயம் முழுதையும் தன் வடிவழகாலே பாரித்தபடி.-மயர்வற மதிநலம் அருளப்பெற்ற தம்மாலும்-பரிச்சேதிக்க – அளவிட்டு அறிய முடியாது இருத்தலின்-‘அக் கருமாணிக்கம்’ என்று சுட்டுகிறார்.-என் கண் உளதாகும்- ஏழ் உலகத்துள்ளார் வாசி அறிந்திலர்;-அவ் வாசி அறியுமவராகையாலே ‘என் கண் உளதாகும்’ என்கிறார். கண் என்று இடமாம், என்னிடத்தாகும் என்னவுமாம்.
மாணிக்கம் என்கையாலே, ‘உளதாகும்’ என்கிறார்.

—————-

கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
எண்ணிலும் வரும் என்னினி வேண்டுவம்
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம் பிரானையே
 –1-10-2-

காதன்மையால் தொழில்-பரம பத்திக்கும்  –எண்ணிலும் -பரிகணனைக்கும்-வரும்-ஒக்க முகங்காட்டுவான்’ என்கிறார்.-நம்முடைய எண்ணை மிஞ்சி வரும் -வந்தால் நிற்குமது இல்லை; இவன் ‘போ’ என்ற போதும் அதற்கும் தகுதியாக வரும் என்பார் ‘வரும்’ என்கிறார்.இவற்றால், அப்ரதி ஷேதமே- வெறுப்பின்மை ஒன்றுமே பேற்றுக்கு வேண்டுவது,
அதற்குப் புறம்பான யோக்கியதை அயோக்கியதைகள் பயன் அற்றவை என்பது பெறுதும்.

ஸ்ரீ வேல்வெட்டி நம்பியார், ஸ்ரீ‘நம்பிள்ளையைப் பார்த்துப் ஸ்ரீ‘பெருமாள் கடலைச் சரணம் புகுகிற காலத்தில் கிழக்கு இருத்தல் முதலிய சில நியமங்களோடே சரணம் புக்கார்;
ஆதலின், இப் பிரபத்தி உபாயம், வேறு சாதனங்களைப் போன்று, சில நியமங்கள் வேண்டி இருக்கிறதோ?’ என்று கேட்க,
சமுத்திரம் ராகவோ ராஜா சரணம் கந்தும் அ ர்ஹதி ( ‘அரசரான இராகவர் கடலைச் சரணம் அடையத் தக்கவர்’ ) என்று ஸ்ரீ பெருமாளுக்கு உபதேசித்தான் ஸ்ரீ விபீஷணாழ்வான்;
அவன் தான் ஸ்ரீ பெருமாளைச் சரணம் புகுகிற இடத்தில், கடலில் ஒரு முழுக்கிட்டு வந்தான்’ என்று இல்லை;
‘ஆக, இத்தால், சொல்லிற்றாயிற்று என்?’ என்னில்,
ஸ்ரீ ‘பெருமாள் இஷ்வாகு குலத்தராய் ஆசாரத்தில் மேம்பட்டவராகையாலே, சில நியமங்களோடே சரணம் புக்கார்;ஸ்ரீ விபீஷ்ணாழ்வான் இராக்கதர் குலத்தனாகையாலே, நின்ற நிலையிலே சரணம் புக்கான்;-ஆகையாலே, யோக்கியனுக்கு அயோக்கியதை சம்பாதிக்க வேண்டா,-அயோக்கியனுக்கு யோக்கியதை சம்பாதிக்க வேண்டா;

தன்னை ஒழிந்த எல்லாப் பொருள்களும் தன் சங்கல்பத்தைப் பற்றி உளவாம்படி இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன், தன் பக்கல் ஆசை சிறிதுடையார் சங்கல்பத்தைப் பற்றித் தான் உளனாம்படி இருப்பானான பின்பு, இவ் வாத்துமாவிற்கு ஒரு குறை யுண்டோ?’ என்கிறார்.

————–

எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனை
கொம்பராவு நுண்ணேரிடை மார்பனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே 
–1-10-3-

அவனுடைய இந்நீர்மைக்கு அடியானை லஷ்மீ சம்பந்தத்தை அனுசந்தித்து இவ்விஷயத்தை அனுபவிக்கப் பாராய் என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –இறைவன் ஸ்வரூபம் இருந்தபடி கண்டாயே!–ஸ்வாமி -பரம பக்திக்கும் பரி கணனைக்கும் ஓக்க வந்து முகம் காட்டும் ஸ்வரூபம் –நீயும் உன் ஸ்வரூபத்துக்குச் சேர நிற்கப் பாராய்’ -உன்னுடைய பாரதந்தர்யத்துக்கு ஈடாக தொழாய்-என்கிறார்.-தொழாய் – தொழப்படும் பொருள் – ஒரு மிதுனமாய் ஆயிற்று இருப்பது.-மட நெஞ்சமே –‘தொழுது எழு’ என்னலாம்படி பாங்கான நெஞ்சு ஆதலின் ‘மட நெஞ்சமே’ என்கிறார்.-மடம் – பவ்யம்; உரிமை.

————-

நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனி என்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனைத்
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய் 
–1-10-4-

தாம் கூறிய போதே மேல் விழுந்து தொழுதவாறே நெஞ்சைக் கொண்டாடி, நிகர்ஷ அனுசந்தானம் பண்ணி -என் தாழ்மையை நினைந்து நான் பிரிகின்ற காலத்திலும்
நீ விடாதே கொள் என்கிறார்.-பலன் தருகைக்கு இறைவன் உளன்;-விலக்காமைக்கு நீ உண்டு;-இனிச் செய்ய முடியாதது உண்டோ?-தான் அவனைக் கிட்டும் போது, ‘வளவேழ் உலகு’ தலை எடுத்து அகலப் பார்ப்பது ஒன்று உண்டு;-நீ அப்பொழுது அவனை விடாதே கொள்’ என்கிறார்;-துஞ்சுதலாவது -நிகர்ஷ அநு சந்தானத்தாலே வந்த விஸ்லேஷம்-விடாது தொடர் கண்டாய் –-நீ அவனை விடாதே தொடரப் பார்.-ஆக, இவ் வேப்பங்குடி நீரை அன்றோ நான் உன்னைக் குடிக்கச் சொல்லுகிறேன்? பிராட்டி ‘அகலகில்லேன் இறையும்’ என்கிற விஷயத்தை யன்றோ உன்னை நான் அனுபவிக்கச் சொல்லுகிறேன்?-ஆதலால், நான் அவனை அகன்று முடியும் அன்றும் நீ விடாதே அவனைத் தொடருவதற்குப் பார்,’ 

————-

கண்டாய் நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்றோர்
எண் தானும் இன்றியே வந்தியலுமாறு
உண்டானை உலகேழுமோர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே
 –1-10-5-

கீழே ‘எண்ணிலும் வரும்’ என்ற எண் தானும் மிகையாம்படி கண்டாயே!’ என்று
அவன் படியை நெஞ்சுக்கு மூதலிக்கிறார்-பிரளயம் கொண்ட உலகத்துக்கு ‘இறைவன் நம்மை வயிற்றிலே வைத்து நோக்குவான்’ என்னும் நினைவு உண்டோ?-இறைவன் உலகத்தை முழுதும் அளக்கிற போது ‘நம் தலையிலே திருவடியை வைக்கப் புகா நின்றான்’ என்னும் நினைவு உண்டோ?-இதற்கு உதாரணம் தேடிப் போக வேண்டுமோ ஒன்று?-கண்டு கொண்டனை நீயுமே –ஆபி முக்கிய பிரசங்கம் இல்லாத நீயும் லபிக்கப் பெற்றாய் இறே –விலக்குதற்கு எல்லா வழிகளையும் பெற்றிருந்த நீ விலக்காதிருந்தமையே அருமை’ என்பார், ‘நீயும்’ என உம்மை கொடுத்து ஓதுகின்றார்.

———

நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர்
நோயும் சார் கொடான் நெஞ்சமே சொன்னேன்
தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில்
வாயுமீசன் மணி வண்ணன் எந்தையே –
1-10-6–

இப்படிச் ஸூலபன் ஆனவன் நம்மை விடான் அன்றே?’ என்ன,‘நம் -அயோக்யதையை -தாழ்மையை நினைத்து அகலா தொழியில் நம்மை ஒரு நாளும் விடான்’ என்று
திரு வுள்ளத்துக்கு அருளிச் செய்கிறார்-மேல் மற்று ஓர் நோயும் சார் கொடான் – நிஷித்த அநுஷ்டானம் பண்ணி அகல விடுதல், தன்னை ஒழியப் பிரயோஜனத்தைக் கொண்டு அகல விடுதல், அயோக்கியதாநுசந்தானம் பண்ணி அகல விடுதல், வேறொரு சாதனத்தை மேற் கொள்ளச் செய்து அகலவிடுதல், முன்பு பண்ணின பாவத்தின் பலத்தை அனுபவம் பண்ண அகல விடுதல் செய்ய விட்டுக் கொடான்.-தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில் வாயும் மணி வண்ணனாய் எந்தையான ஈசன்,-நீயும் நானும் இந் நேர் நிற்கில் மேல் மற்று ஓர் நோயும் சார் கொடான் நெஞ்சமே சொன்னேன், -‘சத்யம் சத்யம்’ என்கிறபடியே, இது மெய் என்கிறார்-பகவல் லாபத்துக்கு சேதனர் பக்கல் வேண்டுவது பிராதி கூல்ய நிவ்ருத்தியே என்று இப் பாட்டுக்கு கருத்து –

—————-

எந்தையே என்றும் எம்பெருமான் என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
எந்தை எம்பெருமான் என்று வானவர்
சிந்தையுள் வைத்து சொல்லும் செல்வனையே
 –1-10-7-

கீழ் -‘துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய்’ -இவர் அஞ்சியது போன்றே முடிந்தது;
அயோக்யன்-‘தாழ்ந்தவன்’ என்று அகலுகிறார்-பாவியேன் – -விலக்ஷண போக்கியமான இப் பொருளை அழிக்கைக்கு நான் ஒரு பாவி உண்டாவதே!-சத்துவ குணத்தையுடைய ஒருவன் தமோ குணத்தால் மேலிடப் பட்டவனாய் ஒரு வீட்டில் நெருப்பை வைத்து,
சத்துவம் தலை எடுத்தவாறே வருந்துமாறு போன்று ‘பாவியேன்’ என்கிறார்.

———–

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே
அல்லும் நன்பகலும் இடைவீடின்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே
 –1-10-8-

‘நாம் இதற்கு முன்பு நினைத்தும் பேசியும் தப்பச் செய்தோம், இனித் தவிருமித்தனை’ என்று
‘அவன் குணங்கள் நடையாடாதது ஓரிடத்தில் கிடக்க வேண்டும்’ என்று போய்,
ஒரு குட்டிச் சுவரின் அருகில் முட்டாக்கு இட்டுக் கொண்டு கிடந்தார்;
அங்கே, வழியே செல்கின்றான் ஒருவன் சுமை கனத்து ‘ஸ்ரீமந் நாராயணன்’ என்றான்;
அச் சொல்லைக் கேட்டுத் தம்முடைய கரணங்கள் அங்கே -ப்ரவணம்- அன்புடைமை யாகிற படியைக் கண்டு – விஸ்மிதராகிறார் -ஆச்சரியப்படுகிறார்.-ஸ்ரீ ஆழ்வார் பரிசரத்திலே பிரமசாரி எம்பெருமான் பெயர் சொல்வார் ஒருவரும் இலராதலின், ‘செல்வ நாரணன் என்ற’என்கிறார்.-இனி, ‘அல்லேன் என்று அகலுகைக்கு நான் வேண்டியிருந்தது,
ஆவேன் என்று கூடுகைக்கு நான் வேண்டிற்று இல்லையாய் இருந்ததே’ என்பார், ‘மாயமே’ என்கிறார்-அவன் பேர் மாத்ரத்தை கேட்ட அளவிலே-என் கண்ணானது பனி மல்கா நின்றது – நெஞ்சானது தேடா நின்றது -இது ஒரு ஆச்சர்யம் இருந்தபடி என்-‘என்னை –அபூர்ணனான என்னை,-நம்பி –-பெரு மதிப்பனாக -நினைத்து, விடான் –
விடுகின்றிலன்’ -‘சம்சாரி சேதனனைப் பெற்று, பெறாப் பேறு பெற்றானாய் இருக்கிற இவனையே உலகத்தார் பரிபூர்ணன் என்கிறார்கள்,’ என்பார் ‘நம்பியே’ என ஏகாரங்கொடுத்து ஓதுகிறார்.-அவன் என்னில் காட்டிலும் அபி நிவிஷ்டனாய் என் பக்கலிலே
அதி பஹு மானத்தைப் பண்ணிக் கொண்டு என்னை விடுகிறிலன்-நான் என் செய்வன்-என்று நோகிறார் –

———

நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ
 –1-10-9–

நீர்தாம் இங்ஙனே கிடந்து வருந்தி உழலாமல், அவ் விஷயத்தை மறந்து சம்சாரிகளைப் போன்று உண்டு உடுத்துத் திரிய மாட்டீரோ?’ என்ன, ‘நான் எத்தைச் சொல்லி அவனை மறப்பது?’ என்கிறார்-

1-அபூர்ணன் என்று மறக்கவோ?
2-தூரத்திலே உள்ளவன் என்று மறக்கவோ?
3-வடிவழகு இல்லை என்று மறக்கவோ?
4-மேன்மை இல்லை என்று மறக்கவோ?
5-எனக்கு உபகாரகன் அல்லன் என்று மறக்கவோ?-எத்தைச் சொல்லி மறப்பேன்? என்றபடி.

—————

மறப்பும் ஞானமும் நான் ஒன்றும் உணர்ந்திலன்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு
மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை
மறப்பனோ இனி யான் என் மணியையே
 –1-10-10-

ஆனாலும் வருந்தி யாகிலும் மறந்தாலோ என்னில் – நெஞ்சில் இருளை அறுத்துக் கொண்டு நிறைந்த வாசம் பண்ணுகிறவனை மறக்க விரகுண்டோ-அவன் மறவாமைக்கு கிருஷி பண்ணா நிற்க -என்னாலே மறக்கப் போமோ என்கிறார் – நான் சேதனனாய் நினைத்தேன் ஆகில் அன்றோ மறப்பது-அசித் கல்பனாய்க் கிடீர் நான் கிடந்தது-கீழ் அநாதி காலம் நினைக்க விரகு இல்லாதப் போலே இறே மேல் உள்ள காலம் எல்லாம் மறக்க விரகு இல்லாத படியும்என் மணியையே -பெரு விலையனாய் முடிந்து ஆளலாம் படி கை புகுந்து
புகழை யுடைத்தான நீல மணி போலே இருக்கிற தன்னை எனக்கு அனுபவ யோக்யமாம்படி பண்ணி வைத்தான் –தன்னை நான் மறவாமைக்காக அசேதனத்தைச் சேதனமாக்க வல்ல தன்னுடைய அழகிய திருக் கண்களோடே கூட என்னுள்ளே புகுந்து எனக்குப் பரம ஸூலபனாய்க் கொண்டு — இனிப் பேரேன்-என்று இருந்து அருளினான் –இனி நான் அவனை அநாதரிப்பேனோ-

————–

மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர்
அணியை தென் குருகூர்ச் சடகோபன் சொல்
பணி செய் ஆயிரத்துள் இவை பத்துடன்
தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே
 –1-10-11-

‘இப்பத்தைக் கற்றவர்கள் -நிரதிசய – தன்னின் மேம் பட்டது இல்லாத புருஷார்த்தமான பகவத் கைங்கரியத்தைப் பெறுவர்,’ –மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர்
அணியை
-சௌலப்பியம்-மேன்மை-வடிவழகு-இம் மூன்றுங்கூடின பசுங்கூட்டே பரத்துவம் எனப்படுதலின், இவற்றை ஈண்டு ஒரு சேர அருளிச் செய்கிறார்.

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -41-என்றும் புன் வாடை இது கண்டு அறிதும்-நீராய் நிலனாய் -6-9-

February 23, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிறசொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

இரவு நலிய கீழ்-மேலும் வாடைக்காற்று நலிகிறது இதில்-புன் வாடை – மந்த மாருதம்-வாடைக்கு வருந்தின தலை மகள் வார்த்தை-அருள் அருளாத–தனது கருணையால் என்னை வந்து காத்தருளாத
அருள் உண்டு-இன்று எனக்கு அருளவில்லை -இதுக்கு என் பேரிலும் அவன் பேரிலும் பழி சொல்லுகிறார்களே-திக்கு எட்டும் பரவும் படி காற்றின் கைங்கர்யம் – நீராகி கேட்டவர்கள் நெஞ்சு அழிய மாலுக்கும் ஏரார் விசும்பில் இருப்பு அரிதாம் படி கதறுகிறார் இதில் – )

அவதாரிகை-
எம்மை நோக்குவது என்று கொலோ -என்று எமக்கு ரஷகர் ஆவார் யாரோ என்று இருந்த இவளுக்கு
ஒரு காற்று வந்து ரஷிக்கிறபடி –என்று சத் ஆகாரமாகிய இவை பாதகம் ஆகிற படி-

வாடைக்கு வருந்தின நாயகி வார்த்தை – பிரிந்த நிலையில் மீண்டும் மீண்டும் வாடை நலிவதால் இது புனர் யுக்தி தோஷம் அல்ல இன்ன வடிவம் இன்ன குணம் இன்னவாறு வருத்தம் என்று சொல்ல முடியாத படி வருத்துவதே

இப்படி ப்ராப்ய த்வரை நடவா நிற்கச் செய்தே அவிளம்பேந பிராப்தி ஸித்தியாமையாலே
பதார்த்தாந்தர ஸந்நிதியும்( வாடைக்காற்றும் )பாதகமாய் நலிகிற பிரகாரத்தை
வாடைக்கு வருந்தின தலைமகள் வார்த்தையால் அருளிச் செய்கிறார்

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு அவதாரிகை
கலந்து பிரிந்த தலைமகள் நெடுநாள் வாடை வந்து போகா நிற்கச் செய்தே இப்போது இதன் கீழ் ஜீவிக்க அரிதாய் இரா நின்றது என்று இங்கனே தன் ஆற்றாமையைச் சொல்லுகிறாள்
எம்மை நோக்குவது என்று கொலோ -என்று நமக்கு ரக்ஷகர் ஆவார் ஆரோ என்று இருந்த இவளுக்கு
ஒரு காற்று வந்து ரக்ஷிக்கிற படி சத்தா தாரகமானது தானே பாதகமாம் படி

என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் இவ்வாறு வெம்மை
ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம் ஓங்கு அசுரர்
பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இந் நாள்
மன்றில் நிறை பழி தூற்றி நின்று எம்மை வன் காற்று அடுமே
–41-வாடைக்கு வருந்திய தலைவி வார்த்தை –

நீராகிக் கேட்டவர்கள் நெஞ்சு அழிய மாலுக்கும்
ஏரார் விசும்பில் இருப்பு அரிதா -ஆராத
காதலுடன் கூப்பிட்ட காரி மாறன் சொல்லை
ஒதிடவே யுய்யும் யுலகு—
59-தம் ஆர்த்த த்வனி கேட்டு கடகர் கால் நடை தந்து போக மாட்டாமல் தரைப் பட்டுக் கிடக்கிற படியைக் கண்டு அறிவிலிகளான இவர்கள் ஈடுபட்ட படி கண்டால் ஸ்ரீ சர்வஞ்ஞன் கேட்டால் பொறுக்க மாட்டாமல் சடக்கென வந்து முகம் காட்டும் -என்று அறுதி இட்டு
ஸ்ரீ திரு நாட்டு இருப்பும் அடி கலங்கும் படி முழு மிடறு செய்து கூப்பிடுகிற
நீராய் நிலனாயில் அர்த்தத்தை நீராகிக் கேட்டவர்கள் நெஞ்சு அழிய -என்று தொடங்கி
அருளிச் செய்கிறார் -அத்யபி நிவேசத்தாலே-ஆர்த்தியை தர்சிப்பித்த அபிஜாதரான ஸ்ரீ ஆழ்வார் உடைய திவ்ய ஸூக்தியை-அப்யசிக்கவே–ஜகத்து உஜ்ஜீவிக்கும் ஜகத்தில் யுண்டான-சேதனர்களும் உஜ்ஜீவிப்பார்கள் -என்றபடி –

என்றும் புன் வாடை இது கண்டு அறிதும்-சிறை கூடத்தில் பிறந்து வளர்ந்தாரை போலே காற்றுக்கு உடல் கொடுத்து போந்த படி –புன் வாடை –மந்த மாருதம்-இது கண்டு அறிதும் – இப்படி ஒத்தது ஓன்று கண்டு அறியோம் –போந்ததை  இது என்று சொல்வான் என் எனில்-சர்வதா சாத்ருச்யம் உண்டாய் இருக்கும் அவை எல்லாவற்றிலும் -தத் தத் வியவகார யோக்யதையும் உண்டாகையாலே — ஜாதியை சொன்ன அத்தனை ஒழிய வியக்தியை சொல்லிற்று அன்று – பிரிவாற்றாமை ஒன்றையே அதிகப்  படுத்தும் ஜாதி(இது என்று படுத்தும் ஸ்வ பாவம் -ஜாதி-வாடை என்று இந்த வியக்தி )இவ்வாறு வெம்மை ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம்  –இப்படி பட்ட வெவ்விய ஸ்வாபத்தை உடைத்ததாய் இருப்பது ஒன்றும் காண்கிறிலோம்   —ஓங்கு அசுரர் பொன்றும் வகை புள்ளை ஊர்வான் –பிரிவாற்றாமை மெலிந்து இருக்கிறவர்கள் அன்றியிலே சேஷ பூதராய் ஒசிந்து இருக்கிறவர்கள் அன்றியிலே –(ஓசித்த நுண்ணிடை இடவாய்ச்சியார் அல்லவே-ஊண் மல்கி -அஹங்காரத்தால் உடல் பெருத்து இருப்பார்களே )ம மேதம் என்று ரஜஸ் தமஸ்ஸூக்களால் பிரசுரமான வடிவை உடையவராய் இருக்கிற அசுரர் பொன்றும் படி பெரிய திரு அடியை நடத்துகிற சர்வேஸ்வரனுடைய அருள் மறுத்த இந்நாள் – திரு அடி உடைய திருக் குளம்பால் அசுரரைத் துகைத்தாரைப் போலே இவ் வாடையும் துகைக்கக் காணும் நினைக்கிறது-அருள் அருளாத இந்நாள்-தாய் முலைப் பால் மறுத்த இந்நாள்–மன்றில் நிறை பழி தூற்றி நின்று எம்மை வன் காற்று அடுமே- இவள் அங்கே பெருகைக்கு அன்றியிலே – பழி சுமைக்குக்கு உருப்பாயிற்று . -லோகம் அடங்க -ஒருத்தி-(பெருமானைப்) பிரிந்த அளவிலே ஒரு காற்றுக்கு யீடு பட்டு துடிப்பதே -என்று பழி சொல்லும் படி ஆயிற்று –நிறை பழி –தன் அளவிலே அன்றியிலே இவள் காற்றிலே ஈடு பட (அவன்)வாராது ஒழிவதே -என்று நாயகனுக்கும் பழி ஆன படி –
காற்று எங்கும் பரவி -அவனுக்கும் பழி வரும் படி செய்வதால் தூற்றுகிறாள்–நின்று எம்மை வன் காற்று அடுமே –ஒரு கால் நலிந்து போகிறது இல்லை –எம்மை- இக் காற்றுக்கு தடவிப் பிடிக்க வேண்டும் படி ஆஸ்ரயம் காண ஒண்ணாத என்னை –வலிதான காற்று சத்தையை முடியா நின்றது –வன் காற்று –நீர்மை கலவாத காற்று-அடுமே –ஸ்திரீ வதமே என்று பார்க்கிறது இல்லை-

வாடைக்கு வருந்தின நாயகி வார்த்தை – நான் வாடைக்கு வருந்துவதைக் கண்டு ஊரார் அலர் தூற்றும் படி ஆனதே – இப்படி அன்றோ இவ்வாடை என்னை கொலை செய்கிறது-நிறை பழி –நாயகியையும் நாயகனையும் பற்றிய பழி –-புன் வாடை -மந்த மாருதம் –

என்றும் புன் வாடை இது கண்டு அறிதும்-எல்லாக் காலத்திலும் புல்லிமை செய்து நலிந்து போருகிற இந்த வாடை கண்டு அறியோம்-இவ்வாறு வெம்மை-இப்படிப்பட்ட வாடையினுடைய வெம்மையானது-ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம்-ஒரு பிரகாரத்தாலும் வெம்மையினுடைய ஸ்வரூபம் அறிதி யிடவாய் இருக்கிறது இல்லை-அதுக்கடியான ஸூ சகமும் அறிகிறிலோம்-ஓங்கு அசுரர் பொன்றும் வகை புள்ளை ஊர்வான்-உத்துங்கரான ஆஸூர ப்ரக்ருதிகள் மங்கும்படி பெரிய திருவடியை நடத்துகிறவன்-அருள் அருளாத இந் நாள் -தன் கிருபையை உபகரியாத இக்காலத்திலே-மன்றில் நிறை பழி தூற்றி-மன்றிலே நிறைந்த பழியை அயலாரை இட்டுத் தூற்றுவித்து-நின்று-போகாமல் நின்று–எம்மை-பிரதி கிரியை பண்ண மாட்டாத என்னை–வன் காற்று அடுமே–பலவானான வாடைக் காற்றானது அடியா நின்றது என்கிறாள்-இத்தால் பூர்வ அநு பூத துக்க பரம்பரைகள் தண்ணீர்ப் பந்தல் என்னும்படி பகவத் அலாப ஜனிதமாய்க் கொண்டு லோகோபக்ரோசகரமான -லோக உப கோசாரமாக
தாதாத்விக துக்கத்தினுடைய அதிசயத்தை ஸூசிப்பித்ததாயிற்று –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு வியாக்யானம்என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் இவ்வாறு வெம்மை
இதுக்கு முன்பு கலவி ஒரு நாளும் இல்லை போலே என்றும் விஸ்லேஷத்தோடே போந்தது அத்தனை
இவ்வாடை பாதகமாம் போது கலவி உண்டாக வேணும் இறே என்று இது கண்டதுண்டு என்று அறியும் அத்தனை–புன்வாடை-மந்தமாருதம்–இது கண்டறிதும் -இத்தோடு ஸஜாதீயமானவை எல்லாம் அனுபவித்தோம் இறே–இவ்வாறு வெம்மை ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம்-இப்படி வெம்மை உருவும் சுவடும் ஒன்றும் தெரியிலம்-பிரிந்தாருக்குச் சுடுவது அக்னியாதிகள் அல்ல-வாடை-லௌகிக வியுத் பத்தியாலே சொல்லுகிறாள் –ஓங்கு அசுரர் பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இந் நாள்–ஸர்வேஸ்வரன் என்கிற அறிவு இவர்களுக்கு இல்லாமையாலே வளர்ந்து இருந்துள்ள அஸூர வர்க்கமானது முடியும்படிக்கு ஈடாகப் பெரிய திருவடியை நடத்தா நின்று உள்ளவனுடைய ஸ்வரூப ப்ரயுக்தமான அருளும் மறுத்த படி-வாதார்ஹம் அபி –ஸூந்தர -38-35- அல்லாதாராபாதி –
பெருமாள் –மன்றில் நிறை பழி தூற்றி நின்று எம்மை வன் காற்று அடுமே-

ஸ்வாபதேசம்
என்றும் புன் வாடை இது கண்டு அறிதும்
-எப்பொழுதும் வருத்தும் தன்மையான இவ்வுலகப் பொருளை கண்டு அறிவோம் –இவ்வாறு வெம்மை ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம் –இப்படிப் பட்ட பொருளின் தன்மையும் கூறியும் ஒரு படியாலும் எம்மால் கூற முடியாத படி மிக்கு உள்ளனசரண் அடைந்தும் இங்கனம் பரிபவப் படுகிறேன் என்று உலோகர் பழி இடும் படி-பேற்றுக்குத் தான் ப்ரவர்த்திக்கையும் பழி இறே -நம்பிள்ளை –

ஸ்வாபதேசம்
இத்தால் நெடு நாள் பொருந்திப் போந்த சம்சாரம் தானே பகவத் ப்ராவண்யம் உறைக்க உறைக்க
இதில் பொருந்தாத படியான நிலை பிறந்த படி சொல்லுகிறது –

தாத்பர்யம்
பகவத் விஸ்லேஷம் பிறந்த தமக்கு சம்சாரம் அஸஹ்யமாம் படியைச் சொல்லி வாடையில் அகப்பட்ட நாயகி வார்த்தையால் அருளிச் செய்கிறார்
ஓ ஸஹியே நான் நாயகனைப் பிரிந்து பிரிவாற்றாமையால் வருந்த வாடைக் காற்று நலி வதை
முன்பே நெடும்காலமாக அறிவேனாகிலும் இப்பொழுது கருட வாஹனான -பரம காருணிகனுடைய அனுக்ரஹத்துக்கும் கூட விஷய பூதர் ஆகாமல் இருக்க அவன் இடத்தில் அன்பு -ப்ரேமம் உள்ள என் மேல் வீசி நலிகிறதே-இதனால் ஊரெல்லாம் நாயகனையும் கூட பழிக்கும் படி நலிய இப்போது தான் இதன் கொடுமையான ஸ்வபாவம் அறிந்தேன் இது அதி அஸஹ்யமாய் உள்ளதே

6-9-நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்-ப்ரவேஸம்-

யஸ்ய ஆத்மா சரீரம் -ஜெகதாகாரம் -வேதார்த்தமான அவனை ப்ரேமம் உடன் -பக்தி பாரவஸ்யத்தால்
ஞானம் மிகுந்து கூப்பிட்டு -தவித்து -ஆறி இருக்காமல் கூப்பிடுகிறார்
ஆறாம் பத்து தொடக்கத்திலும் கீழும் தூது-ஜெகதாகாரம் அறிந்தவராலும் –
அவனை அவனாகவே காண ஆசைப்பட்டுக் -கூப்பிடுகிறார் –
கிடந்த திருக் கோலத்தால் மண்ணும் விண்ணும் மகிழும் குலசேகரப் பெருமாள்
நடந்த திருக் கோலத்தால் மண்ணும் விண்ணும் மகிழ இவர் இதில் –

பிரவேசம் –

எங்குச் சென்றாகிலும் கண்டு” என்றும், “வானவர் கோனைக் கண்டு” என்றும் தூது போகச் சொன்னார்;
அவை போக மாட்டாதபடி தம்முடைய துயர ஒலியாலே அழித்தார்;
“மரங்களும் இரங்கும் வகை” திருவாய். 6. 5 : 9.-என்று அறிவில் பொருள்கள் இரங்கா நின்றால்,
சிறிது அறிவை யுடைய பறவைகள் அழியக் கேட்க வேண்டா அன்றே,
“ஊற்றின் கண் நுண் மணல் போல் உருகா நிற்பர் நீராய்” திருவாய்.6. 8 : 11.-என்றது,
தூதரை ஒழிய அல்லவே.
ஆகையாலே, தம் பக்கத்திலே கால் நடை தந்து போவார் இல்லையே.
“அறிவில் பொருள்களுங்கூட அழிகிற இடத்தில், பரம சேதனனானவனுக்குச் சொல்ல வேணுமோ?” என்று பார்த்து,
தம் மிடற்று ஓசையை இட்டு அழைத்துக் கொள்ளப் பார்க்கிறார்.

தம்முடைய துயரத்தைக் காட்டுகின்ற ஓசை கிடக்க, வேறு ஒருவர் போக வேண்டும்படியாய் இருந்ததோ?
கலங்காப் பெருநகரமான ஸ்ரீ வைகுண்டத்திலும் தரிக்க ஒண்ணாத படி,
கால் குலைந்து வரும்படி பெரு மிடறு செய்து கூப்பிடுகிறார்.
இனித் தான், தூது போவார்க்குக் காலாலே யாதல் சிறகாலே யாதல் போக வேண்டுகையாலே தடை உண்டு;
இவர் மிடற்று ஓசைக்குத் தடை இல்லை அன்றோ.

இவர் படுகிற வியசனத்துக்குக் காரணம் சொல்லப் போகாது,
பிராட்டி சிறை இருந்தமைக்குக் காரணம் சொல்லப் போகாதவாறு போலே.
அவள் இருப்பு பிறர் மேல் வைத்த திருவருளாலே ஆனாற் போலே,
இவருடைய வியசனமும் பிறர் மேல் வைத்த திருவருளுக்குக் காரணமாய் இருக்கிறபடி.

கர்மம் ஹேது வானாலோ என்னில் ஆகாது -ஹேது சொல்லப் போகாது –
காரணம் -கார்யம் பூர்வ வ்ருத்தி இருக்க வேண்டுமே –
அதுக்கு த்ருஷ்டாந்தம் பிராட்டி -சிறை இருந்தவள் ஏற்றம் –
ஆழ்வாரை இங்கு வைத்து வியசனம் செய்ய வைத்தது -பிறர் உஜ்ஜீவனத்துக்காகவே -அவன் ஸங்கல்பமே ஹேது –

அவள் சிறையிருந்த படியை ஸ்ரீ வால்மீகி பகவான் எழுதி வைக்க இன்று நாடு எல்லாம் வாழுமாறு போலே,
அன்று இவர் தாம் வியசனப் பட்டாரே யாகிலும்
இவர் அருளிச் செய்த பிரபந்தங்கள் உலகத்திற்குத் தண்ணீர்ப் பந்தலாயிற்றது.

திருக்குழல் ஓசையாலே திருவாய்ப் பாடியில் பெண்கள் எல்லாம் பட்டனவற்றைத்
தம் மிடற்று ஓசையாலே அவன் படும்படி பண்ணுகிறார்.

“வாரீர்! நீர் நம்மை இருந்த இடத்தே இருக்க ஒட்டாமல் இங்ஙன் படுத்துகிறது என்?
நாம் உம்மை விட்டுத் தூரப் போனோமோ? –
ஏதேனும் ஒன்றைப் பற்றினாலும் அது நம்மைப் பற்றிற்று என்று சொல்லலாம்படி
இருக்கிற உலகமே உருவமாக இருக்கும் தன்மையைக் காட்டினோமே” என்று அவன் திருவுள்ளமாக;
அதில் குறை என்?
நீ உலகமே உருவமாய்க் கொண்டிருக்கிற இந்த ஞானம் எனக்கு இல்லையோ?
இந்த ஞானந்தானே அன்றோ “அசாதாரண ஆகாரத்தையும் காண வேணும்” என்னப் பண்ணுகிறது;
ஆதலால், எனக்குப் பேறானது கிடக்க, அல்லாதனவற்றைக் காட்டினால் பிரயோஜனம் இல்லை என்கிறார்.

அதுவும் உன் ஐஸ்வரியத்திற்குப் புறம்பு அல்லாமையாலே வேணுமாகில் அறிதல் செய்கிறேன்;
அதனால் -ஜகதாகாரம் அறிந்து பாடியதால் -வந்தது –
உன்னதானவற்றை ‘என்னது’ என்று இருக்கிற மயக்கம் நீங்குகிறது.
அருச்சுனனும் ஸ்ரீ விஸ்வரூபம் கண்ட உடனே “உம்மைக் கிரீடத்தை யுடையவராயும் பார்ப்பதற்கு நான் விரும்புகிறேன்;
பல கைகளை யுடையவரே, விஸ்வரூபத்தை யுடையவரே, நான்கு கைகளுடன் கூடின அந்த உருவமாக ஆகக் கடவீர்”
“கிரீடினம் கதினம் சக்ர ஹஸ்தம் இச்சாமி த்வாம் த்ருஷ்டும் அஹம்ததைவ
தேநைவ ரூபேண சதுர் புஜேந ஸஹஸ்ர பாஹோ பவ விஸ்வ மூர்த்தே”-என்பது, ஸ்ரீ கீதை, 11 : 46.
என்கிறபடியே, அசாதாரணமான வடிவை எனக்குக் காட்ட வேணும் என்றான் அன்றோ.

என்னுடைய துயர ஒலியைக் கேட்டு இரங்கி வந்திலையாகிலும்,
உன்னுடைய விபூதி அழியாமல் நோக்க வேணுமாகில் வா என்கிறார் என்றுமாம்.
இவருடைய துயர ஒலி தான் அவனுக்கு உபய விபூதியிலும் குடி இருப்பு அரிதாய்க் காணும் இருக்கிறது.-

ஞானமும் பிரேமமும் கலந்து அருளிச் செய்த பதிகம் -அசாதாரணமான மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார் –
அசாதாராணமான திவ்ய மங்கள விக்ரகம் காண ஆசைப்பட்டு அருளிச் செய்கிறார்-

ஒன்பதாம் திருவாய் மொழியில் இப்படி கடக்க முகத்தால் ஸம்ஸ்லேஷிக்கப் பாரித்த இவருடைய ஆர்த்தி அதிசயத்தைக் கண்டு
ஈஸ்வரன் தன்னுடைய சர்வாத்ம பாவத்தால் சமாதானம் பண்ணப் பார்க்க –
அது இவர்க்கு த்ருஷ்ட்டி விஷயம் அல்லாமையாலே -அசாதாரணமான விக்ரஹத்தோடே காண வேணும் என்று
விஸ்வ ரூபம் கண்ட அர்ஜுனனைப் போலே ஆசைப்பட்டு அதுக்கு ஹேதுவான
அநு பாவ்ய சிஹ்ன யோகத்தையும்
அழகைக் காட்டி அநந்யார்ஹம் ஆக்கும் அதிசயித சக்தியையும்
அகில பிரகார ரக்ஷணத்தையும்
அதி பிரபல விரோதி நிவ்ருத்தியையும்
பரத்வாதி அவஸ்தா பஞ்சக யோகத்தையும்
அசேஷ ஜன சம்ச்லேஷத்தையும்
அகில வாஸ்து வ்யாபகத்வத்தையும்
விலக்ஷண விக்ரஹ யோகத்தையும்
விரோதி நியமன யோக்யதையையும்
அதி ஸயிதா வை லக்ஷண்யத்தையும்
அனுசந்தித்து ஏவம் விசிஷ்டனான நீ உன் வடிவை என்னுடைய கண்ணுக்கு இலக்காம்படி காட்டி அருள வேணும் என்று
அபி நிவேச அதிசயத்தாலே அத்யந்தம் ஆர்த்தராய்க் கூப்பிடுகிறார்
இந்த ப்ராப்ய விஷயத்தில் அபி நிவேச க்ருதையான ஆர்த்தி இறே
ஆஸ்ரயண உன்முகனான அதிகாரிக்கு விசேஷணம்

நீராய்  நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்
கூரார் ஆழி வெண்சங் கேந்திக் கொடியேன்பால்
வாராய்! ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே.–6-9-1-

யாவையும் யாவரும் தானே நின்ற மாயன் என்றாரே கீழே-திரளச் சொல்லி -கணக்கு சொல்லி ஞானம் உண்டு என்று காட்டி அருளுகிறார்-நீராய் – நாராயணன் ஆவது பண்டே அறிவன் என்கிறார்.-குலாலனானவன் மண்ணும் நீரும் செதுகும் கூட்டிச் சேரத் துகைத்துக் குடம் முதலான பொருள்களாய்க் கொண்டு தோற்றுவிக்குமாறு போலே, தண்ணீரை உண்டாக்கி, அது நீர்ப் பண்டமாகையாலே அதனோடு கடினமான பொருளைக் கூட்டி,
பின்னையும் நெகிழ்ந்திருக்கையாலே அதனைச் சிறிது வலிக்கைக்காக ஒளிப் பொருளை உண்டாக்கி, அதுதான் மிகைத்துத் தீயுமளவானவாறே அதனை ஆற்றுகைக்குக் காற்றினை உண்டாக்கி, அது தனக்குச் சஞ்சரிக்கைக்காக இடத்தைக் கொடுக்கின்ற ஆகாசத்தை உண்டாக்கி. இவ்வளவும் முதலில் சங்கல்பந்தன்னையே கொண்டு அண்ட சிருஷ்டியைப் பண்ணி நின்றது.

இனி, பெரியதொரு மாளிகையைச் சமைத்து இருள் உறைய விட்டு வைக்க ஒண்ணாதே அன்றோ; அதற்கு இரண்டு விளக்குகள் இட்டாற் போலே சந்திர சூரியர்களை உண்டாக்கி.
நீர்க் களிப்பு அறுகைக்கும் வளர்ச்சி பெறுகைக்குமாக இருவரையும் உண்டாக்கின படி. நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்ச் சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயன் ஆனாய்’என்று, இவர் தமக்கு ஈஸ்வர வியாபாரம் அடங்கலும் மனை அடைவே எண்ணுவாரைப் போலே மிக்க பிரகாசமாய் இருக்கிறபடி.

மண்ணும் விண்ணும் மகிழவே –மண்ணும்-எனக்காக வந்திலை யாகிலும் உன் விபூதி அழியாமைக்கு வா என்கிறார்.-‘மானாவிச் சோலை போலே ஆவது-மானாவிச் சோலை – நவராத்ரியில் மஹா நவமியில் செய்யும் அலங்காரம்.- அழிவதான இது போனால் என் செய்ய வேணும்?’ என்று இருக்கிறாயாகில்,-விண்ணும்--அவ் விபூதியும் அழியுங்காண்;
இது அழியவே அதுவும் அழிந்ததாமன்றோ.-இனித் தான், பிரளயத்துக்கு அழியாது என்ற அளவில், ஆழ்வாரின் ஆர்த்திக்கு துன்பத்துக்கும் அழியாது என்றதாகாதே!-ஆர்த்திக்கு அழியும் -காதல் இருந்தால் தானே உனக்கு பெருமை –
மண்ணும் விண்ணும் மகிழவே ஒரு நாள் வாராய் –

——————————-

மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலங்காட்டி
மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே
நண்ணி உனைநான் கண்டு உகந்துகூத்தாட
நண்ணி ஒருநாள் ஞாலத் தூடே நடவாயே.
–6-9-2-

மண்ணும் விண்ணும் கொண்ட –பூமி ஆகாசம் முதலானவற்றைக் காற்கீழே இட்டுக் கொண்ட. இந்திரனுக்குக் கொடுத்த என்னாமல், ‘கொண்ட’ என்கிறது,
அவன் அசுரத் தன்மை வாய்ந்தவனாகையாலே அவன் பக்கல் தானே கொண்டானாகக் கொண்ட படியும்,-தன்னை யடைந்தவனான இந்திரனுடைய வேறுபாடில்லாத ரசத்தாலும்-அ விபாக ரசம் – என்க.-என்னையே உபாசிப்பாய் -என்றான் இந்த்ரனும் ரிஷிகள் இடம் -அவிபாக ரசம் -அந்தராத்மா என்பதால் —மாய அம்மானே – திருமகள் கேள்வனானவன் இரப்பவனானபடியும்,-வடிவழகைக் காட்டி வாய்மாளப் பண்ணினபடியும்,
“கொள்வன் நான் மாவலி மூவடி ” என்றாற் போலே சில மழலைச் சொற்களைப் பேசினபடியும்,-சிறு காலைக் காட்டிப் பெரிய காலாலே அளந்த படியும் தொடக்கமான ஆச்சரியங்களைச் சொல்லுகிறது.

வருகைக்கு உண்டான வியாபாரம் அவன் தலையது;-வந்தால் உகக்கை தான் இவரது செயல்.-நான் கண்டு உகந்து கூத்தாட –-மஹாபலியைப் போலே ஒன்று கொடுக்க இருக்கிறேன் அல்லேன்;-இந்திரனைப் போலே ஒன்று கொள்ள இருக்கிறேன் அல்லேன்;
‘எனக்கு’ என்று இருப்பாரோடும், ‘என்னது’ என்று இருப்பாரோடுமோ நீ கொடுத்துக் கொண்டு பரிமாறுவது?-உன்னையே கண்டு உகப்பார்க்கு உன்னைக் காட்டலாகாதோ?-

ஞாலத்தூடே நடவாய்– நடை அழகில் வாசி கண்டு அதிலே ஈடுபடாதே கொடையைக் கொண்டாடி இருக்கும் அவன் முன்னேயோ நடக்கலாவது?-நடை அழகில் உள்மானம் புறமானம் கண்டு அதுவே ஜீவனமாயிருக்கிற என் முன்னே நடக்கலாகாதோ?

—————

ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப் பலநாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே!
கோலத் திருமா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பலநாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?
–6-9-3-

ஞாலத்தூடே நடந்தும் –-எப்பொழுதும் காணக் கூடியவர்கள் முன்னே நடக்கக் கடவ நடையை, யாதானும் ஒரு காலத்தில் வந்தாலும் பாராதவர்கள் முன்னே காணும் நடப்பது;
குருடர்களுக்கு முன்னே நடக்குமாறு போலே.

வட தேசத்தினின்றும் போரப் பாட வல்லவராயிருப்பார் ஒருத்தர் ‘பெருமாளைத் திருவடி தொழ வேணும்’ என்று வர,
ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் ஒரு தீர்த்தத்தின் அன்று இருந்து திருமாலையைப் பாடிச் சமைந்து,
பெருமாளை ஒரு மத்த கஜத்தைக் கை வசப் படுத்துமாறு போலே ஏத்தி-ஸ்தோத்ரம்-வசமாக்கிக் கணிசம்-சபதம் -கொண்டு,
“நாயன்தே! தேவரீர் திருவடிகளுக்குப் போர நல்லான் ஒருவன் தேவரைத் திருவடி தொழ நெடுந்தூரமுண்டு வந்திருக்கிறது;
இவனை அழைத்துக் கொண்டு சம்பாவனை பண்ணி யருள வேணும்” என்ன,
அவரைப் பெருமாள் அருளப் பாடிட்டு, திருப் புன்னைக் கீழ் நின்றும் அவர் நின்ற விடத்தே திருக் கைத்தலத்தே எழுந்தருளி,
விண்ணப்பஞ்செய்வார்களை அருளப் பாடிட்டு,
“வாரீர்கோள்! நாம் இவன் வந்த தூரத்துக்கு எல்லாம் போருமோ செய்த தரம்?” என்று திருவுள்ளமானார்;
அப்படியே அன்றோ நம் இழவுகளும் திருவுள்ளத்தே பட்டு, அவை எல்லாம் ஆறும்படி முகம் தந்தருளும் படியும்.

கிடந்தும் –-கடலை வேண்டி நின்று கிடக்கிற கிடை தானே இலங்கை குடி வாங்க வேண்டும்படி இருக்கை.-ஒரு கடல் ஒரு கடலோடே பொறாமை கொண்டு கிடந்தாற்போலே இருக்கை;“கருணையங் கடல் கிடந்தது கருங்கடல் நோக்கி

இன்னும் தளர்வேனோ –“ஒரு மிதுநம் எனக்குப் பேறு” என்று அறிந்த பின்பும் தளருமத்தனையோ?-‘நீ ரக்ஷகன்’ என்று அறியாதொழிதல், ‘வேறு எனக்கு ரக்ஷகமுண்டு’ என்றிருத்தல்,-‘லக்ஷ்மிக்கு நாயகனாயுள்ள வஸ்து பிராப்யம்’ என்று அறியாதொழிதல்,
அனுபவமும் எனக்கு -‘எனக்கு நான் உரியேன்’ என்று இருத்தல் செய்தேனோ இழக்கைக்கு;
ருசி பிறந்த பின்பு இழக்கவோ?

இப் பாசுரத்தால், அகாரத்தின் பொருளை முறைப்படி வியாக்கியானம் செய்கிறார்;
“அவ-ரக்ஷணே” -(காப்பான் )அன்றோ தாது.-ரக்ஷிக்குமிடத்தில், எல்லா வகையாலும் ரக்ஷிக்க வேண்டும்;-அது தான் எல்லாக் காலமும் ரக்ஷிக்க வேண்டும்;
அப்படி ரக்ஷிக்குமிடத்தில் எல்லாரையும் ரக்ஷிக்கிறவனாக வேண்டும்;

இப்படி வரையாதே ரக்ஷிக்குமிடத்தில், “குற்றம் செய்யாதார் ஒருவரும் இலர்” என்னுமவளும், “என்னடியார் அது செய்யார்” என்னுமவனும்கூட ஆயிற்று;
ஆகையாலே, அகாரம், மிதுநத்துக்கு வாசகமாயிற்று.

“ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும் காப்பானே” என்கையாலே,
எல்லா வகையாலும் ரக்ஷகத்வம் சொல்லிற்று;-“சாலப் பலநாள் யுகந்தோறும்” என்கையாலே, எல்லாக் காலத்திலும் ரக்ஷகத்வம் சொல்லிற்று;-“உயிர்கள்” என்கையாலே, சர்வ ரக்ஷகத்வம் சொல்லிற்று;-‘கோலத் திருமாமகளோடு உன்னைக் கூட’ என்கையாலே, திருமகள் கேள்வனே பிராப்யம் என்றது.

அகாரத்தின் விவரணமான திருமந்திரத்தின் பொருளும்-அர்த்த பஞ்சகமும் – சொல்லுகிறது;
“கோலத் திரு மா மகளோடு உன்னை” என்கையாலே பிரஹ்ம ஸ்வரூபம் சொல்லிற்று;
“அடியேன்” என்கையாலே, ஜீவாத்ம ஸ்வரூபம் சொல்லிற்று;
‘உயிர்கள் காப்பான்’ என்கையாலே, உபாயம் சொல்லிற்று;
‘உன்னைக் கூட’ என்கையாலே, பலம் சொல்லிற்று,
‘உன்னைக் கூடாதே – தளர்வேனோ’ என்கையாலே விரோதி ஸ்வரூபம் சொல்லிற்று.-

—————

தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல்வேறாப்
பிளந்து வீயத் திருக்கா லாண்ட பெருமானே!
கிளர்ந்து பிரமன் சிவன்இந் திரன்விண் ணவர்சூழ
விளங்க ஒருநாள் காண வாராய் விண்மீதே.
–6-9-4-

தளர்ந்தும், முறிந்தும்’ என்று தனித்தனியே சொல்லுகிறாரன்றோ, பகைவர்களைக் கோறல் ஆகையாலே அந்த அந்த நிலைகள் தமக்கு இனியவாயிருக்கையாலே.

திருக் கால் ஆண்ட – அடியார்களை ஆண்டால் ஆபத்துக்கு உதவுவர்கள் அன்றோ
இவன் இளமையாலே ஒன்றும் அறியாதே கிடக்க, திருவடிகள் காண் நம்மை நோக்கிற்று என்கிறார்.-“பால் வேண்டினவனாய் அழுதான் “என்கிறபடியே, முலை வரவு தாழ்த்தவாறே அனந்தலிலே திருவடிகளை நிமிர்த்தான்;-அவ்வளவிலே பொடி பட்டானித்தனை;

இவன் சந்நிதியில் பிரமன் முதலானோர்களுடைய ஒளிகள் ‘இருட்டு’ என்னும்படி இருத்தலின் ‘விளங்க’ என்கிறார்-ஆகாசம் அவகாசம் எல்லாம் அழகு வெள்ளம் இடும்படி என்னுதல் -ஆதித்ய சகாசத்தில் நக்ஷத்ராதிகள் போலே அவர்கள் ஒளி கீழ்ப் பட என்னுதல்.-ஒரு நாள்-நூறு ஆண்டுகள், பதினோராயிரம் ஆண்டுகள்’ என்று விரும்பினேனோ என்பார் ‘ஒரு நாள்’ என்கிறார்.-காண வாராய்-நீள் நகர் நீள் எரி வைத்தருளாய் -திருவிருத்தம், 92.-என்கிறேனோ என்பார் ‘காண வாராய்’ என்கிறார்.-விண் மீதே-இங்கே வந்து அவதரிக்கச் சொல்லுகிறேனோ என்பார் ‘விண் மீதே’ என்கிறார்.

————–

விண்மீ திருப்பாய்! மலைமேல் நிற்பாய்! கடற்சேர்ப்பாய்!
மண்மீ துழல்வாய்! இவற்றுள் எங்கும் மறைந்துறைவாய்!
எண்மீ தியன்ற புறஅண் டத்தாய்! எனதாவி
உண்மீ தாடி உருக்காட் டாதே ஒளிப்பாயோ!–
6-9-5-

விண்மீ திருப்பாய்! -இவர்க்கு இங்குத்தையிற் காட்டிலும் பரம பதத்தில் இருப்புக் காணும் முற்படத் தோற்றுகிறது.-மலை மேல் நிற்பாய் – நித்திய ஸூரிகளையும் நித்திய சம்சாரிகளையும் ஒரு துறையிலே நீர் உண்ணப் பண்ணுகிற இடம். என்றது,
இங்குள்ளாரும் தன் நிலையின் வாசி அறியும்படி ருசி உண்டாக்குமவனாய் நின்றபடி.
வேங்கடத்து ஆடு கூத்தன் அல்லனோ

கடல் சேர்ப்பாய்–கால் நடை தந்து போக வல்ல பிரமன் சிவன் முதலாயினோர்களுக்காகத் திருப்பாற் கடலிலே வந்து சாய்ந்தபடி.

விண் மீது இருப்பாய்’ என்று இருப்பில் வீறு சொன்னார்,
‘மலை மேல் நிற்பாய்’ என்று நிலையில் வாசி சொன்னார்.
‘கடல் சேர்ப்பாய்’ என்று திருப்பாற்கடலிலே கிடை அழகு நிரம்பப் பெற்றது-
பர்யவசியம்
பர்யவசிப்பாய் -சப்தங்கள் அவன் வரை பர்யவசிக்கும் போலே ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் –-ஆறு கடலில் சேருமா போலே திருப் பாற் கடலில் சேர்ந்து இருப்பார் என்றவாறு-மண் மீது உழல்வாய்--அவ்வளவு போக மாட்டாத சம்சாரிகளுக்காக அவதரித்து அவர்கள் கண் வட்டத்தில் திரியுமவனே!-இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் –-கண்ணாலே காணில் சிவிட்கு என்னுமவர்களுக்கு, அவர்கள் காண ஒண்ணாதபடி மறைந்து வசிக்கின்றவனே!-தான் மறைய நின்று அவன் உகந்தாரைக் கொண்டு ரக்ஷிக்கும் -இரா மடம் ஊட்டும் -தாயைப் போலே-அவர்கள் கண்களுக்குத் தோற்றாதபடி அந்தர்யாமியாய் நின்று நோக்கும்படி.-எண் மீது இயன்ற புற அண்டத்தாய் –-எண்ணுக்கு மேலே இருக்கிற மற்றுள்ள அண்டங்களிலும் இப்படி வசிக்கின்றவனே!-எனது ஆவியுள் மீது ஆடி –-என் மனத்தினுள்ளே குறைவறச் சஞ்சரித்து.-அன்றிக்கே,-என் ஆத்மாவுக்குள்ளும் புறம்பும் சஞ்சரித்து என்னுதல்.-உருக் காட்டாதே ஒளிப்பாயோ –-வடிவு காணப் பெறா விட்டால், மறந்து பிழைக்கவும் பெறாது ஒழிவதே.-குண ஞானத்தாலே தரிப்பார்க்கே அன்றோ வடிவு காணாது ஒழிந்தாலும் தரிக்கலாவது?-பக்தா நாம் என்கிற வடிவை எனக்கு காட்டாதே மறைய நின்றால் ஜீவிப்பனோ-

—————-

பாயோர் அடிவைத்து அதன்கீழ்ப் பரவை நிலமெல்லாம்
தாயோர் அடியால் எல்லா உலகும் தடவந்த
மாயோன்! உன்னைக் காண்பான் வருந்தி எனைநாளும்
தீயோடு உடன்சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ?
–6-9-6-

சேதனர் தலைகளிலே திருவடியை வைக்கிற போது, அவர்கள் எவ்வளவு வருந்தினார்கள்? –
சாதனம் பண்ணவில்லையே-வசிஷ்ட சண்டாள விபாகம் பாராதே வெறும் உன் கிருபையாலே செய்தருளினாய் அத்தனை அன்றோ.-ஓர் அடியைப் பரப்பி வைத்து.-கடல் சூழ்ந்த பூமிப் பரப்படங்கலும் அளந்து. -சங்கல்பத்தாலே செய்தானல்லனே, திருவடிகளைப் பரப்பிப் பின்பே யன்றோ அளந்து கொண்டது.-பரக்க வைத்து அளந்து கொண்ட பற்ப பாதன் அன்றோ-

மயர்வற மதி நலம் அருளிய பின்பு பேற்றின் அளவும் செல்ல இடையில் உண்டான நான்கு நாள்களும், அவன் எதிர் சூழல் புக்குத் திரிந்த நாள்களைப் போன்று பரப்பாகத் தோற்றுகிறபடி.-தீயோடு உடன் சேர் மெழுகாய்--நெருப்பிலே பட்டுக் கரிந்து போகவும் பெறாதே, தூர இருந்து அழியாதிருக்கவும் பெறாதே,-உருகுவது வலிப்பது ஆகிறபடி.
மானச அநுபவத்தாலே உருகுவது வலிப்பது, புறத்திலே காணுதல் பெறாமையாலே
உருகுவது வலிப்பதாய்ச் செல்லுகிறபடி.-நசை வலிக்கப் பண்ண, ஆசை உருகப் பண்ணச் சொல்லுகிறபடி.-நசை -கிடைக்குமோ கிடைக்காதோ சபல புத்தி —-ஆசை –அனுபவ அலாபத்தில் தரியாமையை விளைவிக்கும் அபி நிவேசம்-உலகில் திரிவேனோ –ஒன்றில் ஜீவித்தல், ஒன்றில் முடிதல் செய்யப் பெறாதே, குளிர்ந்த வழியில்லாத தேசத்திலே
யாதநா சரீரம் போலே நான் ஒருவன் இங்ஙனே திரிவதே!-

—————-

உலகில் திரியும் கரும கதியாய் உலகமாய்
உலகுக் கேஓர் உயிரும் ஆனாய்! புற அண்டத்து
அலகில் பொலிந்த திசைபத் தாய அருவேயோ!
அலகில் பொலிந்த அறிவி லேனுக்கு அருளாயே
.–6-9-7-

ஆகிஞ்சன்யம் இல்லை என்ற உடன் -அருளத் தட்டு என் -தயைக்கு உத்தம பாத்திரம் நான் தான்-சேதனர்க்கு தொகை உண்டாகிலும் என் அறிவுகேட்டுக்கு எண்ணில்லை-என்னளவு இதான பின்பு நீயே கிருபை பண்ணி அருளும் அத்தனை அன்றோ -அறிவை உண்டாக்கி -அத்தை பக்வமாக்கி -அதன் பலமான உன்னையும் தந்து அருள வேணும் –

——————

அறிவி லேனுக்கு அருளாய் அறிவார் உயிரானாய்!
வெறிகொள் சோதி மூர்த்தி! அடியேன் நெடுமாலே!
கிறிசெய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ?
பிறிதொன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே
.–6-9-8-

அறிவார் உயிரானாய் –-அறிவார்க்கு உயிர் ஆனவனே! என்னுதல்;-அறிவாரை உயிராக வுடையவனே என்னுதல்.-வெறி கொள் சோதி மூர்த்தி –-அருளாது ஒழிந்தாலும் விட ஒண்ணாத வடிவழகு. “சர்வ கந்த:” என்னுமதன்றோ.-அடியேன் நெடுமாலே –-எனக்கு இப்போது எட்டாது இருக்கிறவனே! என்னுதல் ;-வடிவழகைக் காட்டி எனக்கு வியாமோஹத்தை விளைத்தவனே! என்னுதல்.-என்னைப் புறத்திட்டு – பிராட்டியை அசோக வனத்திலே வைத்தாற் போலே,பகவத் குணங்கள் நடையாடாதே ஐம்புல இன்பங்கள்
நடையாடுகிற சம்சாரத்திலே பொகட்டு இன்னம் கெடுப்பாயோ – முன்பு இழந்தது போராதோ?-“சம்சாரம் தியாஜ்யம்” என்றும், “பகவத் குணங்கள் நன்று” என்றும் அறிந்த பின்பும் கெடுப்பாயோ?-கிறி செய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயே? என்று ஒன்று உண்டோ என்கிறார்.-என்னை இங்கே வைத்த போதே, குழியைக் கல்லி மண்ணை இட்டு அமுக்கப் பார்த்தாயன்றோ என்கிறார்.-பேறு அவனாலே யானால் இழவும் அவனாலே என்னலாம் இறே -ஸ்தநந்த்யபிரஜை கிணற்றில் விழுந்தால் -தாயார் தள்ளினாள் என்னுமா போலே

———

ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?
தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ.
–6-9-9-

காட்டிப் படுப்பாயோ–நாட்டார் ‘காணா விடில் பிழையோம்’ என்று இருக்கிற விஷயம் இவர்க்குக் கண்ட மாத்திரத்திலேயே-மோஹிக்கும் படியாக இருக்கிறதன்றோ; ஆகையால், ‘காட்டிப் படுப்பாயோ’ என்கிறார்.-இவர் பகவானுடைய குணங்களிலே நைந்தபடி.
இதர விஷயங்களைக் கேட்ட அளவிலே முடியும்படி ஆனார்–(அசுணமா முடியுமா போலே –ஸ்ரீ  வசன பூஷண ஸூத்ரம் 

தாவி வையம் கொண்ட தடம் தாமரை’ என்றதனால், நினைத்தது தலைக் கட்ட வல்லன்
என்னும் சத்தி யோகம் கூறியபடி.-இனிமை அளவிறந்த திருவடிகளாதலின் ‘தடம் தாமரை’ என்கிறது.-இதனால் பிராப்யம் சொல்லுகிறது.-‘கூவிக் கொள்ளும் காலம்’ என்கையாலே கூவிக் கொள்ளும் காலம்-என்று தாம் சென்று காண்கை அன்றிக்கே தானே அழைத்துக் காட்டுகை முறையாகையாலே கிட்டும் பிரகாரம் சொல்லுகிறது–பிராபகத்தின் தன்மை சொல்லுகிறது-‘இன்னம் குறுகாதோ’ என்கையாலே, ருசியின் தன்மை சொல்லுகிறது.

பிள்ளானுடைய அந்திம தசையில் நோவு அறிய நஞ்சீயர் புக்கு இருக்க,
‘கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ?’ என்று பல கால் சொல்ல,
இதனைக் கேட்டுச் சீயர் அழ,-சீயரே! நீர் கிடந்து அழுகிறது என்?
அங்குப் போய்ப் பெறப் புகுகிற பேறு இதிலும் தண்ணிது என்று தோற்றி இருந்ததோ?’ என்று பணித்தான்.-

————–

குறுகா நீளா இறுதி கூடா எனை ஊழி
சிறுகா பெருகா அளவில் இன்பம் சேர்ந்தாலும்
மறுகால் இன்றி மாயோன்! உனக்கே ஆளாகும்
சிறு காலத்தை உறுமோ அந்தோ! தெரியிலே
.–6-9-10-

‘அது தீது’ என்று விட்டும், ‘இது நன்று’ என்று பற்றுகிறேனும் அல்லேன்;
உன்னைப் பற்றிற்றும் நீ -பிராப்த சேஷி யாகையாலே ,-அவற்றை விட்டதும் நீ அல்லாமையாலே-பிராப்த சேஷி – அல்லாமையாலே’ என்கிறார்.
பிராப்த-வகுத்த விஷயத்திலே குணம் அழகு முதலானவைகளும் உண்டாகப் பெற்றேனித்தனை.–இருப்பதற்காகப் பற்ற வில்லை -என்றபடி

கைங்கர்யத்துக்கும் இதர புருஷார்த்தத்துக்கும் உண்டான நெடு வாசி உபதேசிக்க வேண்டுவதே-பர்வதத்துக்கும் பரமாணுவுக்கும் இருந்த வேற்றுமையைச் சொல்லும்படி ஆவதே!-

———–

தெரிதல் நினைதல் எண்ண லாகாத் திருமாலுக்கு
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்
தெரியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே.
–6-9-11-

சம்சாரத்தின் தன்மையை நினைத்த கொடுமையாலும்,-பகவத் விஷயத்திலே மூழ்கின கனத்தாலும்,-பெரு விடாயன் மடுவிலே விழுமாறு போலே, சேஷத்துவத்தினுடைய எல்லையிலே விழுகிறார் ‘-தொண்டர் தொண்டர் தொண்டன்’ என்று. -இது இவருடைய அஹம் புத்தி இருக்கிறபடி.-தேக ஆத்ம அபிமானியாம்போது தேகத்திலே அஹம் புத்தியைப் பண்ணுவான்;-தேகத்திற்கு வேறுபட்டது ஒன்று உண்டு’ என்று அறிந்த போது ஆத்மாவிலே அஹம் புத்தியைப் பண்ணுவான்;-தன்னைப் பகவானுக்கு அடிமையாக நினைத்த போது பிரகார மாத்திரத்திலே நின்று செல்வம் முதலானவற்றைக் கொண்டு போவன்;
‘அடிமையாக இருத்தலே பேறு’ என்று அறிந்த போது தன்னை அடியார்கட்கு அடியவன் என்னுமளவாக அநுசந்திக்கக் கடவன்.

உலகம் உண்டாற்கு உரிய தொண்டர் ஆக்கும்--சர்வ ரக்ஷகனான சர்வேஸ்வரனுக்கு அநந்யார்ஹ சேஷமாக்கும் இத் திருவாய்மொழி.-சம்சாரம் நன்றுமாய், பகவத் விஷயம் தீதானாலும் அதனை விடமாட்டாதவர்களாதலின் ‘உரிய தொண்டர்’ என்கிறார். “குண க்ருத தாஸ்யத்திலுங் காட்டில் ஸ்வரூப ப்ரயுக்தமான தாஸ்யமிறே பிரதானம்” என்பது, ஸ்ரீ வசன பூஷணம், பிரகரணம்,-

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -40-கோலப் பகல் களிறு ஓன்று கல் புய்ய குழாம் –மானேய் நோக்கு -5-9–

February 23, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிறசொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

நோற்ற நோன்பு -ஆராவமுது -மானேய் நோக்கு -திருவல்ல வாழ் -மூன்றும் அர்ச்சையிலே சரணாகதி –
அடுத்து பிறந்தவாறும் -அவதாரத்தில் சரணாகதி-சரணாகதி கூடச் சேர்ந்து பாசுரம் தோறும் திருவடி பிரஸ்தாபம் உண்டே அதில்–இருள் கண்டு இரங்கிய தலைமகள் வரவை விருப்பி உரைத்தல்
உற்றார் விரைந்து கூட்டி வருவது எப்போது என்று உரைத்தல்-இரவு விசன பாசுரம் இது என்றுமாம்
ஸூர்யன் அஸ்தமனம் -கல்லில் மலையிலே சேர –இரவுப்பொழுது புகுந்து -எங்கும் சூழ்ந்து
ஞாலம் மணாளன் -பொன் தேவி மணாளன் -சாத்தி அருளும் திருத்துழாயை சூட்டி என்னை ரஷிப்பது எப்போதோ
சர்வாதிகனை கவி பாடின இவளுக்கு ஒரு பகலை கவி பாடும்படி பிறந்த தசையை சொல்லுகிறது-ஏற்கும் புகழ் -அவனுக்குத் தக்க தெய்வக்கவி ஏற்கும் பாடல் அருளியவர் அன்றோ-

இப்படி உரு வெளிப்பாட்டாலே வடிவு அழகை அனுபவித்தவர் நேரே அனுபவிக்கப் பெறாமையாலே
தம்முடைய ப்ரகாஸம் அடையக் குலைந்து மோஹ அந்தகாரம் மேலிடும் அளவான படியாலே
இவ்வவஸ்தையில் ஆஸன்னரானார் தம்மை அத்தலைக்கு ப்ரஸாத பாத்ரமாக்கி ஸமர்ப்பியாதே விளம்பிப்பதே என்று ஸூஹ்ருத பூதரைக் குறித்து அருளிச் செய்த பாசுரத்தை
பகல் பொழுது கழிந்து இருள் கண்டு இரங்கின தலைமகள் உற்றார் விரைந்து கொடுப்பது என்றோ என்று பாங்கிமாருக்கு உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு அவதாரிகை
உரு வெளிப்பாடாய் நோவு படா நிற்கச் செய்தே பகலும் கழிந்து ராத்திரியுமாய் அது தான் அநேகம் வடிவுகளைக் கொண்டு நலிய நலிவுண்டு நம்முடைய தசையைக் கண்ட பந்து வர்க்கத்தில் உள்ளார் நம்மை நோக்குவது என்றோ என்கிறாள்-இது பாங்கியரோடே கூடின தலைமகள் வார்த்தை யாதல்
அன்றிக்கே தோழி வார்த்தை யாதல் இவளுடைய தயநீய தசை இருந்தபடி ஒரு பகலை இரந்து கவிபாடும்படி யாயிற்று –

கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய குழாம் விரிந்த
நீல கங்குல் களிறு எல்லாம்  நிறைந்தன நேரிழையீர்
ஞால பொன் மாதின் மணாளன் துழாய் நாங்கள் குழல் சூழற்க்கே
ஏலப் புனைந்து என்னைமார் எம்மை நோக்குவது என்று கொலோ
-40-இருள் கண்ட தலைவி தோழியிடம் திருமண விருப்பம் கூறுதல் –

மா நலத்தால் மாறன் திரு வல்ல வாழ் புகழ் போய்
தான் இளைத்து வீழ்ந்து அவ் ஊர் தன்னருகில் -மேல் நலங்கித்
துன்புற்றுச் சொன்ன சொலவு கற்பார் தங்களுக்கு
பின் பிறக்க வேண்டா பிற
—49-பெரிய ஆற்றாமையோடு ஸ்ரீ திருக் குடந்தையிலே புக்க இடத்திலும் தம்முடைய அபேஷிதம் கிடைக்கப் பெறாமையாலே அங்கு நின்றும் புறப்பட்டு திருவடிகளே உபாயம் –என்று துணிந்த துணிவு கை கொடுத்து நடத்த ஸ்ரீ திரு வல்ல வாழ் ஏறப் போய்-முட்டப் போக மாட்டாமல் மிகவும் தளர்ந்து ஊரில் புறச் சோலையில் கிடந்து-அங்கு உண்டான வாத்திய கோஷ-வைதிக கிரியா கோலாகலம் செவிப்பட மது மல்லிகை தொடக்கமான போக்யதை அனுசந்திக்கையாலும்-உள்ளுப் புக்கு அனுபவிக்க பெறாமையலும் தமக்கு உண்டான ஈடுபாட்டை ஸ்ரீ நாயகன் இருப்பிடத்தே செல்லுவதாக புறப்பட்டுப் போய் கிட்டி அனுபவிக்கப் பெறாமையாலே நடுவே கிடந்தது நோவு பட்டு
அங்கே புக்கு அவனைக் கண்டு ஸ்தோத்ரம் பண்ணப் பெறுவது என்றோ நாம் -என்று
தன் தளர்த்தியை பாங்கிமாருக்கு உரைக்கிற ஸ்ரீ நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்கிற
மானேய் நோக்கில் அர்த்தத்தை-மா நலத்தால் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார்-இப்படி விஸ்லேஷ வ்யசன உக்தராய் அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்தியானஇத் திருவாய் மொழியை அப்யசிக்க வல்லாருக்கு –இதன் அப்யாச அநந்தரம்-ஜன்மம் பரிக்ரஹம் பண்ண வேண்டா ஜென்மத்தை முடித்தே விடும்

கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய-தர்சநீயமாய் அத்வதீயமான பகல் களிறு கல்லிலே சேர –-அச்தமய பர்வதத்தே புக –தர்சநீயமான பகல் என்பான் என் என்னில் – இந்திரியங்கள் தனித் தனியே ஸ்வ விஷயங்களை கிரகிக்கையாலே தரித்து இருக்கலாம் –குழாம் விரிந்த இத்யாதி-ராஜாக்கள் போக பள்ளிகள் வந்து புகுருமா போலே –-ஆதித்யன் அஸ்தமித்தவாறே –ராத்ரியானது-குழாம்  குழாமாக வந்து விஸ்ருதமான படி –இந்திரியங்கள் எல்லாமொக்க உபத்ரதமாய் ஏக விஷயத்தையே காணும் ஆகையாலே அலாப தசையில் ராத்திரி பாதகம் ஆகிற படி-நீல கங்குல் இத்யாதி –கறுத்த ராத்ரியானது களிறுகள் எல்லாம் கையுமணியும் வகுத்தன –ராத்ரியை பஹு வசனமாக சொல்லுவான் என் என்னில் கல்பங்கள் ஊழிகள் என்னுமா போலே–நேரிழையீர்-இவ்வானை காலிலே துகை உண்கைக்கு நான் ஓர் அபலை இறே- -ஊரார் இவளை தரிப்பிக்கைக்காக தாங்கள் ஒப்பனையோடு இருப்பார்கள் இறே-

ஞானப் பொன் மாதின் மணாளன்-அவன் தனி இருந்தது அன்று கிடீர் நான் இந்நோவு படுகிறது –
ஸ்லாக்கியமான ஸ்ரீ பூமிப் பிராட்டியும் தானும் கூட இருக்கிற இருப்பிலே –-நிதி உடையார்-எல்லா விநியோகமும் கொள்ளுகிறோம் என்று அஞ்சாது இருக்குமா போலே-இவளுக்கும்-இவள் உண்டு என்று சொல்லி அஞ்சாது இருக்கலாய் இறே இருப்பது –கோலத் திருமா மளோடு கூடி சாலப் பலகால் உயிர்கள் உகந்து காப்பவன் அன்றோ-அவளும் நின் ஆகத்தின் இருப்பதும் அறிந்தும் ஆகிலும் ஆசை விடாதவள் அன்றோ–மாதின் மணாளன் –இவளுடைய போக்யதையாலே பிச்சேறி இறே இருப்பது –
இவள் பக்கலில் இவனுக்கு உண்டான வியாமோகம் இத்தனையும் தனக்கு உறுப்பு என்று இருக்கிறாள் (அல்லி மலர் மகள் போக மயக்குகள் -அம்மான் )துழாய் இத்யாதி – அவனுடைய பிரமச்சரியத்தே சூடின மாலை அன்றிக்கே – அவனும் அவளுமாக துகைத்த மாலையை ஆசை படுகிறாள் –ராஜ குமரன் புழுகு  நெய்யிலே பூவை தோய்த்து சூடுமா போலே- இவன் தான் –சர்வ கந்த சர்வ ரச தத்வம் இறே –வாசம் செய் பூம் குழலாள் -திருவாய்மொழி -10-10-2-என்று அங்குத்தைக்கும் வாசம் கொடுக்கும் படி இறே இவள் இருப்பது – அப்படி பட்ட மிதுனமாய் இருக்கும் இருப்பிலே சூடி துகைத்தைதை இறே இவள் ஆசைப் படுகிறது -நாங்கள் சூழ் குழற்கே  ஏலப் புனைந்து – பின்னையும் பரிகாரம் இது அல்லது இறே-ஏல-ஏற்க்கவே –அத்தை சத்தை அழிவதற்கு முன்னே புனைந்து –(இது தான் இவளுக்கும் ஏற்கும் என்றபடி )என்னைமார் –விலக்கும் தாய் மாரை இட்டு இறே பரிகாரம் தேடுகிறது – வழி அடிகாரரை தண்ணீர் வேண்டுமா போலே –எம்மை நோக்குவது என்று கொலோ – இப்படி நமக்கு ரஷை பெறுவது என்றோ-

சூர்யன் யானை அஸ்தமிக்க இருள் பொழுது வர -யானைக் கூட்டங்கள் வர -விரக விசனம் அஸஹ்யமாய் இருக்கையாலே மிதுன எம்பெருமான் திருத் துழாய் சூடுமாறு அன்னைமார் என்று அருள் செய்வார்கள்-மற்று ஒருவருக்கு என்னைப் பேசல் ஓட்டேன் மாலிருஞ்சோலை எம்மாயர்க்கு அல்லால் –கொற்றவனுக்கு இவளாம் என்று எண்ணி-கொடுமின்கள் கொடீராகில் கோழம்புமே-போலே-கோல பகல் களிறு ஓன்று– உத்தம ஜாதி யானை இயற்க்கையிலே உத்தம செம்புள்ளி லக்ஷணம் கொண்டும் செயற்கையாக செந்நிற முகப்படாம் அலங்காரம் கொண்டு இருக்குமே –
பகல் -லக்ஷனையால் சூரியன் -ஆறி இருக்க பட்ட காலம் என்பதால் கோலப் பகல் – இருட்சியாலும் திரட்சியாலும் -களிறு எல்லாம் – நிரைந்தன-அணி வகுத்து ஏறுமா போலே -நிரந்தன-கூடின -என்ற பாட பேதம் – ஞால பொன் மாதின் மணாளன்–ஞால மாது -பொன் மாது -இன் மணாளன் -மனத்துக்கு இனிய மணாளன்-நில மகள் திரு மகள் போன்ற அனுபவம் இழந்தேன்- உரித்தாக இருந்தாலும் -என்கிறாள்–ஞாலப் பொன் மாது இன் மணாளன்-தேவிமார் போன்ற அனுபவம் தமக்கு இல்லையே என்ற திரு உள்ளம் வெதும்பி அருளிச் செய்தமை

கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய-துவர் அணித்தால் போலே செக்கர் கோலத்தை யுடைத்தான ஆதித்யனாகிற களிறானது அஸ்தமய பர்வதமாகிற கல்லிலே வாங்க–புய்த்தால்-வாங்குதல்-போக என்றபடி–இவ்விடத்து ஆதித்யனைக் களிறு என்றது மேனாணிப்பாலும் புகர் யுடைமையாலும்-குழாம் விரிந்த நீல கங்குல் களிறு எல்லாம் நிறைந்தன–திரளாகப் பரந்த நீல நிறத்தை யுடைத்தான ராத்திரிகள் ஆகிற ஆனைகள் எல்லாம் எதிர்பட்டன–கங்குலைக் களிறு என்றது-இருட்சியாலும்
திரட்சியாலும்–நேரிழையீர்-தகுதியான ஆபரணத்தை உடைத்தானவர்களே-மெல்லிய ஆபரணம் என்றுமாம்–ஞால பொன் மாதின் மணாளன்–ஞால மாதினுக்கும் பொன் மாதினுக்கும் மணாளன்-துழாய் நாங்கள் குழல் சூழற்க்கே ஏலப் புனைந்து-திருத் துழாய் மாலையை நம்முடைய செறிந்த குழலிலே முற்படவே சூட்டி -தகுதியாகச் சூட்டி என்றுமாம்–என்னைமார்-என்னைமார் என்று மூத்தவர்களை சொன்னபடி–எம்மை நோக்குவது என்று கொலோ-எம்மை ரக்ஷிப்பது என்றாய் இருக்கிறது என்று வரவை விரைவித்தல் வேண்டி உரைத்தாள் யாயிற்று –

இத்தால்
கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய
-என்கையாலே ராகோத்தரமான விவேக ப்ரகாஸம் மறையும்படியாக என்றபடி(பக்தி பாரவஸ்யத்தாலே வந்த அஞ்ஞானம் -பேற்றுக்குத் த்வரிக்கப் பண்ணுமே )குழாம் விரிந்த நீல கங்குல் களிறு எல்லாம் நிறைந்தன நேரிழையீர்-என்கையாலே
மோஹ அந்தகாரம் மேலிட்டமை தோற்றுகிறது-ஞால பொன் மாதின் மணாளன் -என்கையாலே
நாய்ச்சிமாரோபாதி ஸம்பந்தம் அசாதாரணம் என்கிறது-துழாய் நாங்கள் குழல் சூழற்க்கே ஏலப் புனைந்து -என்கையாலே அத் தலையில் பிரசாத்துக்கு யோக்யமாய் இருக்கும் ஸ்வரூபம் என்கிறது-என்னைமார் எமமை நோக்குவது -என்கையாலே பிரதமஜரான கௌரவ்யரே கடிப்பிப்பர் என்கிறது-என்று கொலோ -என்கையாலே தத் விஷயமான அபேக்ஷையே இவ் வதிகாரிக்குக் கர்த்தவ்யம் என்றதாயிற்று–விருப்பமே நாம் செய்ய வேண்டியது-அடைவிப்பவன் அவனே பிராப்தாவும் பிராபகமும் பிராப்திக்கு உகப்பானும் அவனே-இவ்விடத்தில்-நேரிழையீர் என்று ஸூஹ்ருத் பூதருடைய ஆத்ம குண யோகத்தை ஸூசிப்பிக்கிறது –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு வியாக்யானம்
கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய
–தர்ச நீயமான ஆதித்யனாகிற களிறு கல்லிலே போய்ப் புக
அஸ்தா சலத்திலே போய்ப்புக-வீர பத்நீ இறே அவன் இருப்பில் புக்கிருந்து-த்வம் நீச –ஸூந்தர -21-16-என்னுமவள் ராத்திரியிலே வந்தால் ஸர்வ இந்த்ரியங்களுக்கும் பிரிந்த விஷயம் ஒன்றுமே இலக்காகையாலே வியசனம் அதிசயித்து ஆற்ற அரிதாய் இருக்கும்-பகலில் வந்தால் இந்திரியங்கள் பாளி பாய்கையாலே ஆற்றாமை ஆற்ற எளிதாய் இருக்கும் இறே–குழாம் விரிந்த நீல கங்குல் களிறு எல்லாம்-பகல் அனுகூலமாகையாலே ஒன்றாகச் சொல்லிற்று-ராத்திரி பாதகாதவத்தாலே அநேகமாகத் தோற்றா நின்றது இறே-ராக்ஷஸருக்கு ராம ஸஹஸ்ரமாய்த் தோற்றுமா போலே குழாம் குழாமாகத் திரண்டு நீலமான நிறத்தை யுடைத்தான கங்குல் யாகிற களிறு எல்லாம் எங்கும் பரம்பிற்றன-தான் என்னை யானை போலே விரும்பி வந்து இத்தனை யானைக்கு இரையாக்கி இட்டு வைத்துப் போவதே –நிறைந்தன நேரிழையீர்-இந்த ராத்திரி வியஸனத்துக்குத் தப்பி ஒப்பனை அழியாமை இருக்க நினைத்து இருக்கிறார் நாலு மூன்று அபலைகள் ஆயிற்று-அதாவது என் என்னல் மேலே எம்மை நோக்குவது என்று கொலோ -என்னா நின்றது இறே–இழை -என்று ஆபரணமாய் விலக்ஷணமான ஆபரணத்தை யுடையீர்–ஞால பொன் மாதின் மணாளன்குற்றம் பொறுப்பிப்பார் இன்றிக்கே குற்றம் அறியாதார் வேணும் ஆயிற்று-இவளுக்கு இப்போது ஸா பராதராய் வர நின்றாரை ரக்ஷிக்கும் ஈஸ்வரன் ஒரு ரக்ஷகனும் வேணும் இறே-ஒன்றும் கைம்முதல் இல்லாதாராயும் ரக்ஷிக்கும் பிராட்டி
குற்றம் கண்டு பொறுப்பிக்கும் அதுவும் இல்லையாயிற்று இவளுக்கு ஞாலம் ஆகிற ஸ்லாக்யமான நிருபாதிக ஸ்த்ரீத்வம்
மணாளன்–இக் குணங்களை யுடைய ஸ்ரீ பூமிப்பிராட்டிக்கு வல்லபனானவன் –
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு ஓலக்கம் கொடுக்கும் போது தான்

ஸ்வாபதேசம் –
எம்பெருமான் பிரசாதத்துக்கு ஆளாம்படி கால விளம்பம் செய்வதே-கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய-பக்தி மேலிட்டு செவ்வியதான விவேக பிரகாசம் மறையும் படியாக குழாம் விரிந்த நீல கங்குல் களிறு எல்லாம் நிரைந்தன-மோஹ அந்தகாரம் மிக மேலிட்டது என்னைமார்-பகவத் பக்தர்களில் தம்மிலும் மூத்தவரை நேரிழையீர்-ஆத்ம குணங்கள் நிறைந்த -ஞான வைராக்ய பூஷணம்

தாத்பர்யம்
கீழே அவன் அழகை மாநசமாக அனுபவித்த ஆழ்வார் பின்பு அந்த அழகைப் பிரத்யக்ஷமாகப் பார்த்து அனுபவிக்க மாட்டாமல் அதுவும் தளர்ந்து அருகில் உள்ள பாகவதர்கள் எப்பொழுது சேர்ப்பார்களோ
என்று வினவும் பாசுரம்
நாயகன் உடன் சேர வேண்டும் என்னும் நாயகியின் பாசுரத்தால் அருளிச் செய்கிறார்-பிரசாதம் நாம் உள்ள இடத்திலே கிட்டும்-நம்மைக் கொண்டு போய் எப்போது திருவடியில் சேர்ப்பார்களோ என்கிறார்
ஓ சகிகளே-என்னைத் தேற்றுகைக்காக நீங்கள் அலங்கரித்து வந்தீர்கள்-இதனால் நான் தேறவில்லை
ஆஸ்வாசகரமான பகலும் அஸ்தமித்து-எங்கும் இரவாக அநேக வடிவம் கொண்டு நலியத் தொடங்கிற்று-இப்பொழுது எனது பிராணன் தரிக்கும் படி ஸ்ரீ பூமி வல்லபன் திருத் துழாய் சூட்டி அவன்
திருவடிகளில் எப்பொழுது சேர்ப்பார்களோ என்கிறார்

5-9-மானேய் நோக்கு நல்லீர்!-ப்ரவேஸம்

(நோற்ற நாலும்
அர்ச்சையில் நான்கும் வைபவத்தில் ஒன்றும்
ஆண் பாவத்தால் நான்கும் பெண் பாவத்தில் ஒன்றும்
ஐந்தாம் பத்தில் நான்கும் ஆறாம் பத்தில் ஆறாம்
ஐந்தும் ஐந்து தேச திவ்ய தேசம்-பாண்டிய சோழ சேர வட விபவம் -இவர் துறை ஸ்ரீ கிருஷ்ண அனுபவம் தானே
சேர நாட்டு திவ்ய தேச அனுபவம் நம்மாழ்வார் ஆழ்ந்து அருளிச் செய்வார்
திருமங்கை ஆழ்வார் பத்து இடங்களில் சரணாகதி )

திருக் குடந்தையிலே சென்று புக்கவிடத்திலும் தம் எண்ணம் நிறைவேறாமையாலே திருவல்லவாழ் ஏறப்போக ஒருப்பட்டார்;
திருக் குடந்தையிலே சென்று புக்கவிடத்தில் தம் எண்ணம் சித்தியாதது போன்று,
திருவல்லவாழிலே முட்டப் போகவுங் கூட அரிதாயிற்று;
அங்ஙனம் அரிதாம்படி தமக்குப் பிறந்த துன்பத்தை அந்யாபதேசத்தாலே-அந்ய உபதேசம்- அருளிச் செய்கிறார்.

“மாசறு சோதி”-5-3- என்ற திருவாய்மொழியில், இவர் தாம் மடல் எடுக்கப் புக்கு, ‘அவனுக்குத் தாழ்வாம்’ என்று தவிர்ந்தார்;

ஸ்வாபதேசத்திலே சங்கித்துப் பரிஹரிக்கிறார் ‘மாசறு சோதி’ என்று தொடங்கி. ‘அவனுக்குத் தாழ்வாம்’ என்றது,
அவனுடைய ரக்ஷகத்வத்துக்குத் தாழ்வாம் என்றபடி. “ஊரெல்லாம்” என்ற திருவாய்மொழியின் முன்னுரையில்
‘சூரியன் மறைகையாலே மடல் எடுக்கை தவிர்ந்தார்’ என்று அருளிச் செய்தாரே யாகிலும், இங்கு,
‘அவனுக்குத் தாழ்வாம் என்று தவிந்தார்’ என்று அருளிச் செய்கையாலே, இதுவும் ஒரு காரணமாகக் கோடல் தகும்.
(அங்கு இரவு வந்ததால் மடல் எடுக்கவில்லை -இதுவும் ஒரு நிர்வாகம் )

இங்கு, ஆற்றாமை தோற்றக் கண்ட திருப்பதிகள் தோறும் புக்குத் திரியா நின்றார்;
இதற்கு அடி யாதும் தெரிகிறதில்லை.
அங்கு, அவன் ஸ்வரூபம் பரிஹரித்தார்,
இங்கு, தம்முடைய ஸ்வரூபம் நோக்கப் பார்க்கிறார்;

‘இதற்கு அடி யாதும் தெரிகிறதில்லை’ என்று சங்கையை இரண்டு விதமாகப் பரிஹரிக்கிறார்
‘அங்கு அவன்’ என்று தொடங்கியும்,
‘அங்கு வடிவிலே’ என்று தொடங்கியும்.
‘அவன் ஸ்வரூபம் பரிஹரித்தார்’ என்றது, அவனுடைய நிருபாதிக ரக்ஷகத்வத்துக்குத் தம்முடைய முயற்சி விரோதமாகையாலே,
தம்முடைய முயற்சியை விட்டார்-மடல் எடுப்பதைத் தவிர்த்தார் – என்றபடி.
‘இங்கு, தம்முடைய ஸ்வரூபம் நோக்கப் பார்க்கிறார்’ என்றது, அநுபவம் இல்லாத போது சத்தை கிடவாமையாலே,
திருப்பதிகள் தோறும் புக்காகிலும் அவனை அநுபவித்துச் சத்தையை நோக்கப் பார்க்கிறார் என்றபடி.
இதனால், தம்முடைய சத்தையை உண்டாக்கியே அத்தலையை நோக்க வேண்டுகையாலே தம்முடைய சத்தையைச் சித்திக்கும் பொருட்டுத்
திருப்பதிகள் தோறும் புக்கு அநுபவிக்கப் பார்க்கிறார் என்று பரிஹரித்தாராயிற்று.

அங்கு வடிவிலே அணைய வேணும் என்று ஆசைப்பட்டார்;

அங்கு, வடிவிலே அணைய வேணும் என்று ஆசைப்பட்டார்’ என்றது, “மாசறு சோதி என் செய்ய வாய் மணிக் குன்றத்தை” என்றதனைத்
திருவுள்ளம் பற்றி. ‘ஆசைப்பட்டார்’ என்றது, ஆசைப்பட்ட மாத்திரமாகையாலே
“தத் தஸ்ய சத்ருஸம் பவேத் – அச்செயல் அவருக்கு ஒத்ததாகும்” என்றிருக்கலாம் என்றபடி.

பின்பு இவ்வளவும் வர அந்த வடிவிலே இறங்கி மூழ்கினபடியாலே ஆற்றாமை முறுகி,
“கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல்” என்கிறபடியே,

“கொம்மை முலைகள் இடர்தீரக் கோவிந் தற்கோர் குற்றேவல்
இம்மைப் பிறவி செய்யாதே இனிப்போய்ச் செய்யும் தவந்தான் என்”-என்பது, நாய்ச்சியார் திரு. 13 : 9.

அடிமை செய்ய ஆசைப்படுகிறார்.
‘அடிமை செய்ய ஆசைப்படுகிறார்’ என்றது, “அடி கூடுவது என்று கொலோ” என்றதனைத் திருவுள்ளம் பற்றி.

இனி, இவர் தமக்குக் கலவியாவது, மானச அநுபவம் என்றே யன்றோ திருவாய்மொழியின் முன்னுரையிலே அடியிலே சொல்லிற்று;

‘திருவாய்மொழியின் முன்னுரையிலே’ என்றது, முதற் பத்திலே ‘திருமகள் கேள்வன் ஒன்றிலே’ என்றபடி.

இங்ஙனேயிருக்க, திருவல்ல வாழ் ஏறப் புறப்பட்டுப் போகையாவது என்? உறவினர்கள் விலக்குதலாவது என்? என்னில்,

‘புறப்பட்டுப் போகையாவது என்?’ என்றதன் பின், ‘முடியப் போக மாட்டாமல் புறச் சோலையிலே விழுந்து கிடக்கையாவது என்’ என்பது
எஞ்சி நின்றது; அதனைக் கூட்டிக் கொள்க.

அந்த மானச அநுபவத்திற்கு ஒரு கலக்கம் வர அமையுமன்றோ.

இரண்டற்கும் விடை அருளிச் செய்கிறார் ‘அந்த’ என்று தொடங்கி.
‘அந்த மானச அநுபவத்திற்கு ஒரு கலக்கம் வர அமையும் அன்றோ’ என்றது,
திருவல்லவாழ் ஏறப் போகிறது, மானச அநுபவமாய், முடியப் போக மாட்டாமல் புறச்சோலையிலே விழுந்து கிடக்கை, மானச அநுபவ
அபாவத்தால் வந்த கலக்கம் என்றபடி.
“உறவினர்கள்” என்றது, ஸ்வாபதேசத்தில், சம்பந்த ஞான உபாய அத்யவஸாய நிலைகளை.
‘அவர்கள் விலக்குதல்’ என்றது, சம்பந்த ஞான உபாய அத்யவஸாய நிலைகளோடு கூடினவராய் நிரூபிக்குமளவில், தம் முயற்சி, அவனையே
ரக்ஷகனாகக் கொண்டிருத்தல் அவனுக்கே பரதந்திரப் பட்டிருத்தல் ஆகிற ஸ்வரூபத்திற்கு முரண்பட்டதாகத் தோன்றுதலைக் குறித்தபடி.

நான்கு வீதிகளில் நான்கு பிரகரணங்கள் -ஆச்சார்ய ஹிருதயம் -சாதித்து அருளி நாயனார் –
சம்பந்தம்-ஞானம் -தோழி பாசுரம் -பிரணவார்த்தம்
உபாய அத்யவசாயம் -தாயார் -நமஸ் சப்தார்த்தம்
பேற்றுக்கு த்வரிக்கை -தலைமகள் -நாராயணாயார்த்தம் –

எம்பெருமானோடே கலந்து பிரிந்து பிரிவாற்றாமையாலே நோவு படுகிறாள் ஒரு பிராட்டி, தன்னுடைய குடிப் பிறப்பு முதலானவற்றையும் பாராமல்,
(பிராசங்கிகமாகச் சங்கித்துப் பரிகாரம் செய்து, பின், இத் திருவாய்மொழியில் அருளிச் செய்யப்பட்ட பொருளை விரித்து அருளிச் செய்கிறார்
‘எம்பெருமானோடே’ என்று தொடங்கி.
ஆபி ஜாதியாதிகளையும்-‘குடிப் பிறப்பு முதலானவற்றையும்’ என்ற உம்மை, அவனுடைய ரக்ஷகத்வம் முதலான குணங்களைத் தழுவுகிறது.)
திருவல்லவாழ் ஏறப் புறப்பட்டுப் போகப் புக, இதனை அறியும் தோழிமார் வந்து
‘இது கார்யம் அன்று, நம் தலைமைக்குப் போராது காண்’ என்று ஹிதம் சொல்லி மீட்கப் பார்க்க,
‘இனி, நீங்கள் சொல்லுகிறவற்றால் நான் பெற்றது என்;
1-அவ்வூரில் திருச்சோலையும்,
2-அங்குண்டான பரிமளத்தைக் கொய்துகொண்டு புறப்படுகிற தென்றலும்,
3-அங்கே தேனைக் குடித்துக் களித்துப் பாடாநின்றுள்ள வண்டுகளினுடைய இனிதான மிடற்றோசையும்,
4-ஊரிலுண்டான வைதிகக் கிரியைகளின் கோலாஹலங்களும்,
5-நகர சம்பிரமங்களும், இவையெல்லாம், -இந்த ஐந்தும் –

இத் திருவாய்மொழியில் வருகின்ற
1-“தேனார் சோலைகள்”,2- “தென்றல் மணம் கமழும்”, 3-“பாண் குரல் வண்டு”, 4-“பாடு நல் வேத ஒலி”, 5-“மண்ணும்
விண்ணும் தொழநின்ற” என்ற பாசுரப் பகுதிகளைத் திருவுள்ளம் பற்றி -“அவ்வூரில் திருச்சோலையும்” என்று தொடங்கி அருளிச் செய்கிறார்.

நீங்கள் என்னை மீட்க நினைப்பதைப் போன்று ‘அங்கே போரு போரு’ என்று-ஒரே திசை நோக்கி -அழையா நின்றன;
ஆன பின்பு, நீங்கள் சொல்லுகிறவற்றால் பெற்றது என்’ என்று தன் துன்பத்தை அவர்களுக்கு அறிவுறுத்தி
அவர்களை வேண்டிக் கொண்டு;
திருவல்லவாழிலே நான் நினைத்தபடியே போய்ப் புக்குப் பரிமாற வல்லேனே என்று அவர்களுக்குச் சொல்லுகிறாளா யிருக்கிறது.

இத் திருவாய்மொழியில் வருகின்ற
“மானேய் நோக்கு நல்லீர்”, “நன்னலத் தோழிமீர்காள்” என்பனவற்றைத் திருவுள்ளம் பற்றி
‘அவர்களை வேண்டிக் கொண்டு’ என்கிறார்.

‘இதுதான் நான் அநுபவித்தேன்’ என்று சீயர் அருளிச் செய்வர்.
பட்டர் திருவடிகளை ஆஸ்ரயித்துப் பின்பு ஒரு கால் மேல் நாட்டுக்கு எழுந்தருளி மீண்டு
பெரிய விரைவோடே ‘திருநாளுக்கு உதவ வேணும்’ என்று வர,
திருக்கரம்பன் துறையளவிலே வந்தவாறே நினைவின்றிக்கே காவிரி பெருகிக் கிடக்க;
இராத் திருநாள் எழுந்தருளி இங்குண்டான சம்பிரமங்களெல்லாம் செவிப் படுவது,
வந்து புகுரப் பெறாதொழிவதாய்க் கொண்டு ‘போர நோவு பட்டோம்’ என்று அருளிச் செய்வர்.

ஏகத த்வித த்ரிதர்கள் -மானச புத்ரர்கள் சனகாதிகள் -சுவேதத் தீபத்தைச் சென்று கிட்டி, உள்ளுப் புகுகைக்குத்
தகுதியில்லாமையாலே புறம்பே நின்று, அங்குள்ளார் எம்பெருமானைக் கண்டு படுகிற சம்பிரமத்தைச் செவியாலே கேட்டு நிற்பது,
கண்ணாலே காணப் போகாதொழிவதாய்க் கிடந்து- பட்டாற்போலே கிடந்து கூப்பிடுகிறாராயிற்று இவரும்.

அங்குத்தை வியாபாரங்களும் செவிப்படா நிற்கக் கிட்டப் பெறாமல் சமீபத்தில் நின்று நோவு பட்டமைக்கு இரண்டு திருஷ்டாந்தங்கள்
காட்டுகிறார் ‘இது தான்’ என்றும், ‘ஏகத த்வித த்ரீதர்கள்’ என்றும் தொடங்கி.
‘திரு நாள்’ என்றது, மார்கழி மாதத்து அத்யயன உத்ஸவத்தை.
‘ஏகத த்வித த்ரிதர்கள்’ என்றது, பிரஹ்மாவினுடைய மானச புத்திரர்களான இருடிகளை.

ஸ்ரீ வல்லபன் — கோலப்பிரான் -ஆறு திவ்ய தேசங்கள் நடுவில் நடு நாயகமாய் —
நோற்ற நாலும் 5 சரணாகதி -10 தடவை -திருமங்கை -அசக்ருத் சரணாகதி –
இது மட்டும் நாயகி பாவம் சரணாகதி –
வேத சதுஷ்டயம் -அங்கம் -17 வித பொருத்தம் -தூது நாயகி -அநுகரிக்க -மடல் -ஊடல் போல்வன -அசக்ருத் பிரபத்தி கரணம்
-திரு இந்தளூரில் ஆணாக ஊடி –
பிராட்டி சம்பந்தம் உலகம் உண்ட -ஒன்றிலும்
அர்ச்சையில் நான்கும் விபவத்தில் ஒன்றும் என்றுமாம் –
ஐந்தும் -ஐந்து விதம் -பாண்டிய -சோழ –சேர -வட நாட்டு திவ்ய தேசம் -விபவம் ஒன்றும் –
இவர் துறை -தேர் கடாவிய கனை கழல் மேலே பிராவண்யம் –

ஒன்பதாம் திருவாய் மொழியிலே -கீழ் -திருக் குடந்தையில் ஆராவமுத ஆழ்வாரை அனுபவிக்கத் தேடித் தாம் நினைத்தபடி
பரிமாறப் பெறாமையாலே இன்னமும் உழல்வேனோ -என்று ஆர்த்தரான அளவிலும்
அவனை ஒழிய ரக்ஷகர் இல்லாமையாலும் உக்காந்து அருளின திவ்ய தேசம் ஒழிய ப்ராப்யம் இல்லாமையாலும் –
நிரதிசய போக்யமாய் -சம்ருத்தமான திரு வல்ல வாழிலே எழுந்து அருளி இருக்கிற சர்வேஸ்வரன்
தம்முடைய திரு உள்ளத்திலே முகம் காட்ட -அவனுடைய ஸ்வ பாவ விசேஷங்களில் வித்தராய்
நிருபாதிக சேஷித்வத்தையும்
தத் ஸித்தமான உபகாரகத்வத்தையும்
அந்த உபகாரகத்வத்தினுடைய நை ரந்தர்யத்தையும்
உபகார ரூபமான நித்ய ஆஸ்ரித சம்ச்லேஷத்தையும்
நித்ய நிரதிசய போக்யதையையும்
ஆஸ்ரித உபகாரகமான அர்த்தித்தவத்தையும்
ஆபத் ஸகாத்வத்தையும்
வரையாமல் அங்கீ கரிக்கும் ஸீலாதிசயத்தையும்
ஆபிக்யா ஸூ சகமான ஆயுதவத்தையும்
அசாதாரண சம்பந்தத்தையும்
அனுசந்தித்து ஏவம் விசிஷ்டனான சர்வேஸ்வரனுடைய அநு பாவத்தில் அத்யந்தம் அபி நிவிஷ்டராய்
அவ்வனுபவ சித்திக்கு அவன் திருவடியே உபாயம் என்கிற விசுவாசத்தை யுடையராய்க் கொண்டு
அவன் எழுந்து அருளி இருக்கிற நிரதிசய ஸர்வ பிரகார போக்யதையை யுடைத்தான திரு வல்ல வாழிலே சென்று
அனுபவிக்கக் கூடுமோ என்று ஸூ ஹ் ருத்துக்களைக் குறித்து அருளிச் செய்த பாசுரத்தை
அந்த நாயகனோடு கலந்து பிரிந்தாள் ஒரு நாயகி அவன் வர்த்திக்கிற தேசத்திலே புகப் பெறுவோமோ என்று
தோழிமாரைக் குறித்து தன் ஆற்றாமை கூறின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

மானேய் நோக்கு நல்லீர்! வைகலும் வினையேன் மெலிய
வானார் வண் கமுகும் மது மல்லிகை கமழும்
தேனார் சோலைகள் சூழ் திரு வல்லவாழ் உறையும்
கோனாரை அடியேன் அடி கூடுவது என்று கொலோ?
–5-9-1-

மான் ஏய் நோக்கு நல்லீர் –“நான் திருவல்லவாழிலே போய்ப் புகும்படி உங்கள் கண்களாலே குளிர நோக்கித்திருவருள் புரிய வேணும் என்கிறாள்” என்று பிள்ளான் பணிப்பர்.–நோக்கு -கடாஷம் -கண்-மான் ஏய் நோக்கு நல்லீர் –மானை ஒத்த நோக்கினை யுடையீராய் எனக்கு நல்லவர்களே!
அன்றிக்கே,-‘பிரிவாற்றாமையாலே நோவு பட்டும், சோலை யழகிலே ஈடுபட்டும், நம்முடைய ஹித வசனத்தாலே தளர்ந்தும் இருக்கின்ற இவளுக்கு, ‘போகலாகாது’ என்று விலக்கும் நம்முடைய வார்த்தைகள் செவிப்படுமாகில், இவள் மோஹிக்கும் என்று விலக்குகிற காரியம் தோற்றும்படி காதரேக்ஷணைகளாய்க் கொண்டிருக்க, ‘மான் ஏய் நோக்கு நல்லீர்’ என்கிறாள் என்னுதல்.-முதலிகள் பெருமாள் திரு முகம் கன்னி விடும் என்று ஸ்ரீ விபீஷண ஆழ்வானை குற்றம் சொல்லாமல் இருந்தது போலே இவர்களும் –ஸ்ரீ கிருஷ்ணன் பக்தி யோகம் விரிவாக அருளிச் செய்வதற்கு முன்பு -பொறாமை இல்லாததே அதிகாரம் -நிஷேதிக்காமல் இருந்ததே நன்மை 

வைகலும் மெலிய –காலம் கழியக் கழியக் காதல் கழியும்படி யன்றோ-விஷயாந்தரங்களை -சிற்றின்பத்தை விரும்பி யிருப்பார்க்கு இருப்பது;-மனனம் பண்ணி, பாவனையாய், பின்பு தரிசனமாய், பிரத்யக்ஷ சமான ஆகாரமாய், பின்பு சரீரம் நீங்குங் காலத்தைப் பார்த்திருப்பார்படி அன்றோ இது.-இத்தலை மெலிய மெலிய அத்தலை மல்கா நின்றது என்பதனைத் தெரிவித்தபடி.-அவ்வூரிற் சோலைக்கு நீர் இத் தலையில் மெலிவு போலே காணும்.-பிரளய காலத்தில் மார்க்கண்டேயன் பட்டவெல்லம் படாநின்றன என்றபடி.
இருவரும் கூட இருந்து மது பானம் பண்ணிக் களிக்க வேண்டி யிருக்க, நான் மெலியத் தாமே மதுபானம் பண்ணி வாழ்கின்றவர் என்பாள், ‘தேன் வெள்ளமிடுகிற சோலைகள் சூழ்ந்த திருவல்லவாழ் உறையும் கோனாரை’ என்கிறாள்.

யாவர்க்கும் தொழுகுலமான சர்வேச்வரனுடைய உபாய பாவத்தில் நிலை போலே.
நித்தியப் பிராப்யனாய்க் கொண்டு அங்கே இருக்கிறவன், அடியார்கள் உகந்தது ஒரு பொருளைத் திருமேனியாகக் கொண்டு முகங்கொடுத்துக் கொண்டு நிற்பது போலே, அங்குள்ளாரும் இங்கே போந்து தாவரங்களையும் ஜங்கமங்களாயும் விலங்குகளாயும் அவனை விடமாட்டாதே நிற்கிறபடி.-நித்தியரும், முக்தரும், சம்சாரிகளில் ருசியுடையாரும் உகந்தருளின நிலங்களைப் பற்றி யன்றோ கிடப்பது.-இப்படிப்பட்ட மனித விலங்கு தாவரங்களின்பொருட்டு நமஸ்காரம் ஆகுக” –ஸ்ரீ ரங்கராஜஸ்தவம்.-

ஜனநாதப் பிரஹ்மராயர் திருமுடிக்குறையிலே ஒரு மரம் வெட்டப்புக, (திருமுடிக்குறை – பெருமாளுடைய திருமுடிப் பிரதேசமான உபய காவேரியின் மத்தியப் பிரதேசம். )
அதனை எம்பார் கேட்டு ‘அல்லாளப் பெருமாளே! ஈஸ்வர விபூதியை அழிக்கப் பார்த்தாயோ’ என்ன,-இவர் சொல்லும் வார்த்தையைக் கேட்கைக்காக, ‘ஈஸ்வர விபூதி அல்லாத இடம் உண்டோ’ என்ன,‘அவை போல் அல்ல காண் இவை; சார்வ பௌமனான ராஜாவும் தேவியுமாக முற்றூட்டாகக் குடநீர் வார்த்து ஆக்கும் சோலை போலே, பெருமாளும் பெரிய பிராட்டியாருங்கூடக் கைதொட்டு ஆக்குமவை காண்’ என்று அருளிச் செய்தார்.

உகந்தருளின நிலங்களிலே மெய்யே பிரதிபத்தி விளைந்தார்க்கு அங்குள்ளவை எல்லாம் உத்தேஸ்யமாகத் தோன்றுமன்றோ.-கால் வாங்கி யல்லது நிற்க ஒண்ணாத சம்சாரம் அவனுக்குரியது என்னும் தன்மையாலே ஒருகால் உத்தேஸ்யமாகா நின்றதன்றோ.
பிரமாணத்தில் பிறக்கும் எண்ணம் போலன்று கண்களுக்கு இலக்கானால் இருப்பது,
முக்தரைப் போன்று பிரத்தியக்ஷ சமானமன்றோ ஆழ்வார்க்குத் ததீயத்வ ஆகாரம்.
பிரமாணத்தை நம்பினவனுக்கு இங்ஙனமல்லது எண்ணம் இல்லையன்றோ.

நல்லான், பட்டர் திருவடிகளை ஆஸ்ரயித்து நெடுங்காலம் சேவித்து, பின்பு மரண தசையிலே பட்டர் எழுந்தருளி,-‘என் நினைத்திருந்தாய்’ என்ன, “ஒரு சர்வ சக்தி உபகரிக்கும் போது ‘இங்ஙனம் கனக்கவாகாதே உபகரிப்பது’ என்று நினைத்திருந்தேன்” என்ன,
‘அது என், உன் தேசத்தை விட்டு உறவினர்களை விட்டு நெடுந்தூரம் போந்து இங்ஙனம் நோவுபட்டுத் திருவடி சேரக் கிடந்தாயாகில் இங்கு உபகாரம் என்?’ என்ன,
‘வேறு தேசத்திலே இருந்து பொருள் அல்லாதவனாய் விழுந்து போகக் கடவ என்னை இவ்வளவும் அழைப்பித்து,-உம்முடைய திருவடிகளை அடையச் செய்து ருசியை விளைப்பித்து, இத் தேசத்திலே-உம்முடைய கண் வட்டத்திலே சரீரம் நீங்கும்படி செய்தானே’ என்ன, ‘ஆனாலும் தானாக அபிமானித்த சரீரம் போகா நிற்க, நீ இங்ஙனம் நினைத்திருந்தது என் கொண்டு?’ என்ன, ‘பிரமாணம் கொண்டு நினைத்திருந்தேன்’ என்றான்.

“ஈஸ்வரஸ்ய ச ஸௌஹார்த்தம் யத்ருச்சா ஸு க்ருதம் ததா விஷ்ணோ: ப்ரஸாதம் அத்வேஷம் ஆபிமுக்யம் ச ஸாத்விகை: ஸம்பாஷணம் ஸதாசார்ய ப்ராப்திம் ச”–என்பது, அநுசந்தேயம்.– இதற்கே ஆறு படிகள் ஸ்ரீ ரங்கத்தில்-“ஆசாரிய லாபம் பகவானாலே” என்ற ஸ்ரீ வசன பூஷண-ஸ்ரீ ஸூக்தி

கண்ணழிவற்ற வெளிச் சிறப்புடையார்க்கு இங்ஙனமன்றோ இருப்பது.-இருவராய்க் கொண்டு பரிமாற வேண்டும் தேசத்திலே தனியே நிற்கின்றான் காண் என்பாள்
‘தேனார் சோலைகள் சூழ் திருவல்லவாழ் உறையும் கோனாரை’ -என்கிறாள்.
அவதாரங்கள் போல் தீர்த்தம் பிரசாதித்தொழியாது தங்கியிருத்தலின் ‘உறையும் கோனாரை’ என்கிறாள்.

நாராயண சப்தத்திலும்-பிரணவத்திலும் போலே,-‘கோனாரை அடியேன்’ என்கிறாள்.
அவனைச் சொல்லும் போது தம்மையிட்டல்லது சொல்லப் போகாது;
தம்மைச் சொல்லும் போதும் அவனையிட்டல்லது சொல்லப்போகாது.

‘கோனாரை’ என்ற இடம், நாராயண சப்தார்த்தம்;-‘அடியேன்’ என்ற இடம், பிரணவார்த்தம்.
பிரணவம், ஜீவப் பிரதானம்; நாராயண பதம், ஈஸ்வரப் பிரதானம்.-‘அடி கூடுவது என்று கொலோ’ என்ற இடம், நான்காம் வேற்றுமையின் பொருள்; ‘என்று கொலோ’ என்று பிரார்த்தனையோடு தலைக் கட்டுகிறதன்றோ.–எல்லா அளவிலும் ஸ்வரூபம் அழியாதன்றோ.–அணைக்க வேணும் என்னும் ஸ்தானத்தில் அடி கூடுவது என்கிறார் இறே –-தாமாகவுமாம்,-பிராட்டிமார் தசையை அடைந்தவராகவுமாம்,-அதற்கும் அவ்வருகே சில அவஸ்தைகளை யுடையராகவுமாம்,-எல்லாக் காலத்திலும் ஸ்வரூபம் மாறாது;-பிண்டத்வ கடத்வ கபாலத்வ சூர்ணத்வங்களாகிற நிலை வேறுபாடுகளை அடைந்தாலும் மண்ணான வடிவுக்கு அழிவில்லை யன்றோ.

தாமான தன்மையில் “அடி தொழுது எழு”-திருவாய். 1. 1 : 1.-என்பர்;
பரோப தேசத்தில் “திண்கழல் சேர்” – திருவாய். 1. 2 : 10.-என்பர்;
தூது விடப் புக்கால் “திருவடிக் கீழ்க் குற்றேவல்”- திருவாய். 1. 4 : 2.– என்பர்;
பிறரைச் சொல்லப் புக்கால் “தாட் பட்ட தண்துழாய்த் தாமம் காமிற்றாயே” திருவாய். 2. 1 : 2.-என்பர்;
கலங்கி மடல் எடுக்குமளவானாலும் “தலையில் வணங்கவுமாங்கொலோ” –திருவாய். 5. 3 : 7.-என்பர்;
பித்தேறிச் சொல்லும் போதும் “கண்ணன் கழல்கள் விரும்புமே” – திருவாய். 4. 4 : 8.-என்னுதல்,
“ஏறிய பித்தினொடு எல்லா உலகும் கண்ணன் படைப்பு” -திருவாய். 4. 4 : 7.-என்னுதல் சொல்வார் இத்தனை.-

————

என்று கொல் தோழி மீர்காள்! எம்மை நீர் நலிந்தென் செய்தீரோ!
பொன் திகழ் புன்னை மகிழ் புது மாதவி மீதணவித்
தென்றல் மணங் கமழும் திருவல்ல வாழ் நகருள்
நின்ற பிரான் அடி நீறு அடியோம் கொண்டு சூடுவதே.
–5-9-2-

விலக்குகிற தோழிமார் தங்களைப் பார்த்தே, அவன் பாத ரேணுவை நான் சூடுவது என்று? என்கிறாள்.
கீழ் திருப்பாசுரம்,-“மதீய மூர்த்தாந மலங்கரிஷ்யதி – என்னுடைய தலையை எப்பொழுது அலங்கரிக்கப் போகிறது” (ஸ்தோத்திர ரத்நம். 31.) என்றதன் பொருள்.
“கதா நு ஸாக்ஷாத்கர வாணி சக்ஷு ஷா – என் கண்களால் உன் திருவடிகளை எப்பொழுது காணப் போகிறேன்”(ஸ்தோத்திர ரத்நம். 30.) என்றதன் பொருள் இத் திருப்பாசுரம்.

என்று கொல் தோழிமீர்காள் – ‘எல்லை கடந்த பிராவண்யம் ஆகாது’ என்று விலக்குகிறவர்களையே, தன் பேற்றுக்கு நாள் அறுதியிட்டுத் தருமவர்களாகக் கேட்கிறாளே யன்றோ.-அவர்கள் உலக அபவாதத்தைப் பற்றி விலக்குகிறார்கள்;-இவள், தனது பேற்றினை, அவர்கள் தங்கள் பேறாக நினைத்திருக்கும் ஐக கண்ட்யத்தாலே கேட்கிறாள்.
தோழிமாரே யன்றோ; இவளுடைய லாபாலாபமே யன்றோ அவர்களுக்கும் பேறு இழவு.

தோழிமீர்காள் என்று கொல் –-உங்களுக்கு நான் பெறும் நாள் ஆராய்கையிலே யன்றோ அதிகாரம்.-என் பிரக்ருதியை அறிந்து அவ்வழியில் செல்வது அன்றோ போவது உங்கள் க்ருத்யம் –எம்மை– உங்களுடைய கையாலும் காலாலும் துகை யுண்கிற என்னை. -ஹிதப் பேச்சாலும் காற்றாலும் அன்றிக்கே, அவ்வூரிலே புக்கல்லது தரிக்கமாட்டாத என்னை

நலிந்து என் செய்தீரோ –-எனது பிரக்ருதியை-தன்மையை அறியும் நீங்கள் என் வழியே போக வேண்டாவோ.-அன்றிக்கே,-உங்கள் தன்மைக்கு இது சேர்ந்ததோ, என் தன்மைக்கு இது சேர்ந்ததோ? என்னுதல்.-சம்பந்த ஞானம் உணர்த்துவதில் சேர்ந்ததோ -பேற்றில் த்வரிக்கும் என் ஸ்வ பாவத்துக்கும் சேராதே-அன்றிக்கே,-தோழிமீர்காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ என்பதற்கு,-உங்களுக்கு அவசியம் நலிய வேண்டினால் தென்றலை யன்றோ நலிய அடுப்பது என்னுதலுமாம். –-என்ன மீளவொட்டாமல் காற்கட்டா நிற்க, நான் மீளும்படி என்–காற்கட்டா நிற்க,-காற்று வருத்தா நிற்க என்பது பொருள். பந்தமாக நிற்க என்பது தொனி.

‘பொன்னைப் போன்று பிரகாசிக்கின்ற புன்னை, அப்படியே இருக்கிற மகிழ், -புது மாதவி-அப்போது அலர்ந்த குருக்கத்தி. இதனால், நலிகைக்கு இவை அமையாதோ-இவற்றின் மேலே தென்றலானது வந்து அணைந்து பரிமளத்தைக் கொண்டு போந்து கமழா நின்றது.-பூவில் கால் படாமே மேல் எழுந்த பரிமளத்தைக் கொண்டு போருகிறது என்றபடி.,பொன் திகழ் புன்னை மகிழ்’ என்றதனால், கண் இந்திரியத்திற்குக் கவர்ச்சிகரமா யிருப்பதனைத் தெரிவித்தபடி.-‘தென்றல் மணம் கமழும்’ என்றதனால், சரீரத்திற்கும் மூக்கிற்கும் அங்ஙனம் இருப்பதனைத் தெரிவித்தபடி. -இவர் கையாலே தொட வேண்டாதபடி இடைச்சுவரான கடல் கிடந்தே யாகிலும், ஒரு படுக்கையிலே இருப்பாரைப் போலே அவள் இருந்த பூமியிலே இருக்கப் பெற்றோமே என்றாரே யன்றோ பெருமாள்.-காலைப் பிடித்து ‘நீ இப்படிச் செய்ய வேணும்’ என்று வேண்டிக் கொள்ளுகிறாரே யன்றோ இவருடைய செல்லாமை.

நின்ற பிரான் அடிநீறு அடியோம் கொண்டு சூடுவது என்று கொல்-பூவில் சுண்ணம் பெறுவது என்றோ. மயிர் கழுவிப் பூச்சூட இருப்பாரைப் போலக் காணும்.
அடியோம் கொண்டு சூடுவது – இவர்கள், இப்போது பிரிய நின்றார்களே யாகிலும் கலக்கும் போது அநுபவம் இவர்களுக்கும் ஒத்திருக்குமாதலின் ‘அடியோம்’ என்கிறாள்.
அவன் வந்தாலும் இவளுக்கு முன்னே கொண்டாடுவது இவர்களை யன்றோ.-கால் கூறு விஞ்சப் பெற்றானே ஸ்ரீ பரத ஆழ்வான் – மாலடி மேல் -அரசு அமர்ந்தான் அடி -குலசேகரன் —பிராதா திருவடி -சேஷித்வ லஷணம் -இவனுக்கு தலை ஓட்டில் பொறி -சென்னியில் பொரித்துக் கொண்டானே-

—————–

சூடு மலர்க் குழலீர்! துயராட்டியேனை மெலியப்
பாடு நல் வேத ஒலி பரவைத் திரை போல் முழங்க
மாடுயர்ந் தோமப் புகை கமழும் தண் திரு வல்லவாழ்
நீடுறை கின்ற பிரான் கழல் காண்டுங் கொல் நிச்சலுமே.
–5-9-3-

சூடு மலர்க் குழலீர்--‘உங்களைச் சூடு மலர்க் குழலாராக நான் காண்பது என்றோ’ என்று பிள்ளான் பணிப்பர்.என்றது,-இவள் பூவுக்கு இறாய்க்க, அவர்கள் மலர்களைச் சூடி இரார்களே யன்றோ என்றாயிற்று அபிப்பிராயம்.
அங்ஙன் அன்றிக்கே,-அவன் தான் வந்து இவள் பக்கல் பாவ பந்தம் உறைக்க உறைக்கக் கொண்டாடுவது இவர்களை யாகையாலே, பெரிய திருநாள் சேவித்தார் இரட்டைகள் அழுக்கானாலும் மடி குலையாமல் வைக்குமாறு போன்று, இவர்களும் அவன் கொடுத்த
மாலையின் செவ்வி யழிந்ததே யாகிலும் மாறாதே வைத்துக் கொண்டிருப்பர்களே அன்றோ;
அது இவளுக்கு நினைவூட்டுவதாய் நலியா நின்றதாதலின் ‘சூடு மலர்க் குழலீர்’ என்கிறாள் என்னுதல்.-தென்றலுக்குப் பிழைக்கிலும் இவர்களுடைய தரிசனத்திற்குப் பிழைக்கப் போகிறதில்லை.-கால் ஒரு கையும் மயிர் ஒரு கையுமாகப் பிடித்து நலிகின்றது காணும்.
அவன் தான் வந்தாலும் இவளுக்கு முன்னே விரும்புவது இவள் சம்பந்தமுடையார்களை அன்றோ.

ஸுஅலங்க்ருதாந் – தங்களை அலங்கரித்தவர்களை;”-பேணாத பரிவட்டங்களையுடையராய் விருத்தருமாய் இருந்தார்களாகில் இவர்களுக்கு அலங்காரமாவது என்? என்னில்,
பெருமாள் சக்கரவர்த்தி மாளிகையிலே போய்த் திருமஞ்சனம் ஆடி அமுது செய்து
( ஆடி அமுது செய் அப்பனும் உண்டிலன் — ) மீண்டு திவ்ய அந்தப்புரத்துக்கு எழுந்தருளும் போது, சக்கரவர்த்தியைப் போன்று, பழையராகையாலும் தங்கள் பரிவாலுமாக
இவரை மடியிலே வைத்து அணைத்து உச்சியை மோந்து விடுவர்கள்;
அதனாலே, குங்குமக் குழம்பும் கோயிற்சாந்துமாக இருப்பர்கள்.
பெருமாளுடையவும் பிராட்டியுடையவும் ஒப்பனை போலன்று இவர்கள் ஒப்பனை.
அப்படியே இவர்களும் ‘சூடுமலர் குழலீர்” என்னும்படியாயிருக்கிறபடி.

இவள் தனக்கு வேத ஒலியைக் கேட்டவாறே, நாயகன் பேர் வைத்துப் புணர்த்த புணர்ப்பினைக் கேட்டாற்போலே-காணும் அஸஹ்யமாயிருக்கிறபடி.
இருவரும் கூட இருந்து கேட்கக் கூடியதனைத் தனி யிருந்து கேட்கப் புக்கால் பொறுக்க ஒண்ணாதே யன்றோ.-அவன் பெயர் வைத்துப் புணர்த்தாலும் “சீதையினுடைய மஹத்தான சரிதம்” என்றே யன்றோ புணர்ப்புத் தான் இருப்பது.

பாடு நல் வேதம்-ஈஸ்வரனைப் பாடுகிற பழம் புணர்ப்பான வேதம் -இசையை யுடைத்தான சாமவேதம்-சுடர் மிகு சுருதி-வேதங்களுக்குள் சாம வேதம் நான் ஆகிறேன்” என்கிற உயர்வினைச் சொல்லுகிறதாதல்-வேத ஒலி பரவைத் திரை போல் முழங்க-– ஓதம் கிளர்ந்த கடல் போலே காணும் சாமவேதத்தின் ஒலி இருக்கிறபடி.
அதில் பருவம் ஒழிந்த நாட்களும் பகலும் ஆறியிருக்கலாமே என்பாள் ‘முழங்க’ என்கிறாள்.
எல்லா வளவிலும் இவர்க்கு வேதத்திற் கிடக்கிற பிராவண்யம் பாரீர்,-ஹோமப்புகையும், ஹவிஸ்ஸினைக் கொள்ள வந்து நிற்கிற எம்பெருமானுடைய மாளிகைச் சாந்துமாகக்
கமழுகின்றன ஆதலின் ‘கமழும்’ என்கிறாள்.-

—————-

நிச்சலும் தோழிமீர்காள்! எம்மை நீர் நலிந்தென் செய்தீரோ?
பச்சிலை நீள் கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும்
மச்சணி மாடங்கள் மீதணவும் தண் திரு வல்ல வாழ்
நச்சரவின் அணை மேல் நம்பிரானது நன்னலமே
.–5-9-4-

என்னுடைய நல்ல உயிரானது அவன் பக்கலிலேயான பின்பு நீங்கள் சொல்லுகிறவற்றால் என்ன பிரயோஜனம் உண்டு.-எனக்கு ‘அவனைக் காண வேண்டும்’ என்னும் ஆசை எப்பொழுதும் செல்லுகிறாப் போலே,-உங்களுக்கும் ‘என்னை மீட்க வேண்டும்’ என்கிற இந்த நினைவு மாறாதே செல்லுகிறபடி.-சம்பந்தம் உணர்த்த வேண்டிய நீங்கள் உபாய அத்யவசாயம் சொல்லும் தாய் பேச்சு பேசவா –-என் செய்தீரோ–நான் ஜீவிப்பேன் என்று நினைத்தோ! உங்கள் ஸ்வரூபத்தோடு சேர்ந்ததாக நினைத்தோ என்பாள் ‘என் செய்தீரோ’ -ஒன்று செய்வது ஒரு பிரயோஜனத் தளவுமன்றோ, லாபாலாபம் அறிந்தாலும்
கை வாங்க வேண்டாவோ -பிராவண்யத்தை விளைப்பதற்கு முற்பாடரானால் பேற்றிற்கு முற்பாடராக வேண்டாவோ. –-சம்பந்த ஞானம் கொடுத்தவர்களே பிராப்தியை விலக்கவோ- “மாசறு சோதி” என்ற திருவாய்மொழி தொடங்கி இவ்வளவும் வர ஹிதம் சொல்லுகிற நீங்கள் என்ன பிரயோஜனம் பெற்றீர்கோள்’ என்று பிள்ளான் பணிப்பர்.

பச்சிலை நீள் கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும்-அந் நிலத்திலே அகப்பட்டாரையும் சிலர் மீட்க நினைப்பாரோ.-ஹிதம் சொல்லுவார் பசுமையுள்ள விடத்தே யன்றோ சொல்லுவது, இங்குப் பசலை பூத்தன்றோ கிடக்கிறது.-பிரியாதிருப்பார்க்குப் பசுமை மாறாதே யன்றோ.-“பச்சிலை நீள் கமுகு என்றாற் போலே, பச்சிலை நீள் பலவும் பச்சிலை நீள் தெங்கும் பச்சிலை நீள் வாழைகளும்’ என்று உய்ந்த பிள்ளை கூட்டி அருளிச் செய்வர் காணும்” என்று சீயர் அருளிச் செய்வர்.

நஞ்சு அரவின் அணை மேல் – மேலும் சுற்றும் சோலையுண்டானால் கீழும் சோலையுண்டாக வேண்டுமோ.-இங்கும் குளிர்ச்சி, வாசனை, மென்மைகளால் குறை இல்லையே.-படுக்கையும் தானேயாய்க் காத்து ஊட்டவும் வற்றாயிருக்கை.-அநந்த முகமான காவலேயன்றோ.-நஞ்சு அரவின் அணைமேல் நம் பிரானது நன்னலம்- திருவனந்தாழ்வான் மேலே சாய்ந்த வடிவழகைக் காட்டி என்னை அநந்யார்ஹமாக்கினவன் பாடது என்னுடைய நற் சீவன்-திருவனந்தாழ்வானைப் போலே என்னை அநந்யார்ஹமாக்கினவன்-நற்சீவன் அவன் பக்கலிலேயாயிருக்க, கேவலம் சரீரத்துக்கு ஹிதம் சொல்லுகிற இதனால் பிரயோஜனம் என்?-அவன் பக்கலிலே சென்று ஹிதம் சொல்லுங்கோள் வேணுமாகில்.தீ முகத்து நாகணை-என்று கிலாய்க்கிறாள் ஆகவுமாம் –

———-

நன்னலத் தோழிமீர்காள்! நல்ல அந்தணர் வேள்விப் புகை
மைந்நலங் கொண்டுயர் விண் மறைக்கும் தண் திருவல்ல வாழ்
கன்னலங் கட்டி தன்னைக் கனியை இன்னமுதந் தன்னை
என்னலங் கொள் சுடரை என்று கொல் கண்கள் காண்பதுவே
.–5-9-5-

நல் நலம் தோழிமீர்காள்–நலமாவது,-இவள் பக்கல் இவர்களுக்கு உண்டான அன்பு.
நன்னலமாவது,-தங்கள் காரியம் தலைக் கட்டிக் கொள்ளுகை யன்றிக்கே இருக்கை.
ஆன பின்பு, ‘தாய்மார்கள் பழி சொல்லுவர்கள்’ என்று அஞ்சி என் வழியே உங்களுக்கு ஒழுகாதிருக்கப் போமோ.-ராமர் தன்னலம் பாராமல் சுக்ரீவன் நலம் -பார்த்தார் சுக்ரீவனும் தன்னலம் பாராமல் பெருமாள் நலம் பார்த்தார்-அதே போல் நீங்களும் தாய் நலம் பாராமல் என் நலம் பார்க்க வேண்டாமோ –

குருகுலத்தில் வாசம் செய்யாத விலங்குகளுக்கும் வசிஷ்ட சிஷ்யர்களான இராஜ புத்திரர்களுக்கும் இது ஒரு சேர்த்தி உண்டானபடி எங்ஙனே;-சாஸ்திரங்களை அறிந்தவர்கள் அலரோ குரு குல வாசத்திற்குத் தக்கவர்; என்ன,- இதற்குக் காரணம் சொல்லுகிறான்.-தங்களையும் அறியாதே எங்களையும் –இஷ்வாகு குலக் கொழுந்து -குரங்கு ஜாதி – அறியாதே-இங்ஙனே விழுந்து கொடு -ஐக்யம்-நிற்கக் கண்டோமித்தனை.-தங்கள் பெருமையையும் எங்கள் சிறுமையையும் பாராமல் நினைவின்றிக்கே சேர விழுந்தது அதாவது,-1-இளைய பெருமாள் கையும் வில்லுமாய் உணர்ந்து கொண்டு நின்று நோக்கக் கூடிய அந்தப்புரக் காரியத்துக்கு அடியேன் வரும்படி யன்றோ அவர்கள்-சங்கதரான படி – ஒருங்கு சேர்ந்தபடி.-2-இளைய பெருமாள் அடிமையில் தப்பி நின்ற அளவுக்கும்-மாரீசன் வ்ருத்தாந்தம்- திருவடியைக் கொண்டு இழையிட வேண்டும்படியாக அன்றோ அவர் நிலவரானபடி;-இளைய பெருமாள் பேர நிற்கை யன்றோ பிரிய வேண்டிற்று.
3-தங்கள் அளவிலும் பெருக்கப் பார்த்தார்கள். ஐச்வரியம் அவனுக்குக் காடு படும்படியன்றோ பார்த்தது.-இப்படியன்றோ நட்பு இருப்பது; இவர்களும் தோழிமார்கள் அன்றோ-

தண் திருவல்லவாழ் கன்னல் அம் கட்டி தன்னை – கரும்பினுடைய கோது அற்ற கட்டியை. ‘இன்ன மலையின் கட்டி’ என்னுமாறு போலே, ‘திருவல்லவாழ் கட்டி’ என்கிறாள்.
கனியை – அவ்வளவும் பார்த்திருக்க வேண்டாதபடி பக்குவமான பழமாயிருக்கை.
இன் அமுதந்தன்னை –-உடம்பைப் பூண் கட்டிக் கொடுக்க வற்றாயிருக்கை. என்றது,
அநுபவிப்பதற்குத் தக்க ஆற்றலைக் கொடுக்கையைத் தெரிவித்தபடி.
(போக்தா என்பதை விட போக்யமாக இருப்பதே ஏற்றம் –-போக்த்ருத்வம் விட போக்யமாகும் தன்மை சிறந்ததே -பாரதந்த்ர்யம் விட சேஷத்வம் சிறந்ததே–அவன் நம்மை அனுபவிக்க அத்தை நாம் அனுபவிக்க ஆற்றல் வேண்டுமே )
தேவர்களுடைய உப்புச் சாறு போலன்றிக்கே, ஆத்ம உஜ்ஜீவனம் பண்ணிக் கொடுக்க
வற்றதாயிருத்தலின் ‘இன்னமுதம்’ என்கிறாள்.-சரீர ஜீவனம் அது -இது ஆத்மா உஜ்ஜீவனம் கொடுக்குமே-என் நலம் கொள் சுடரை –இவளுடைய அழகையெல்லாம் கொள்ளை கொண்டது தன் பேறு என்னுமிடம் வடிவிலே தோற்றும்படி இருக்கையைத் தெரிவித்தபடி.-என்னை எழுதிக் கொண்ட அழகை யுடையவனை என்றுமாம்.

என்று கொல் கண்கள் காண்பதுவே–நான் பட்டது பட, குழந்தை ஜீவிக்கப் பெறுவது காண்’ என்பாரைப் போலே,-என் கண்களின் விடாய் தீர்வது என்றோ? என்கிறார்
“முடியானே” என்கிற திருவாய்மொழியிற்கூறிய கரணங்களை யுடையவர் அன்றோ.
இந்திரியங்களும் தாமும் தனித்தனியே சேதன சமாதியாலே விடாய் கொள்ளுகின்றவர் அன்றோ.-குழந்தைகள் ஜீவித்தால் பசி கெடுவார் அபிமாநிகள் அன்றோ.-என்னலம் கொள் சுடரை என் கண்களின் விடாய் கெட காணப் பெறுவது என்றோ –

—————-

காண்ப தெஞ்ஞான்று கொலோ? வினையேன் கனிவாய் மடவீர்!
பாண் குரல் வண்டினொடு பசுந் தென்றலுமாகி எங்கும்
சேண் சினை ஓங்கு மரச் செழுங்கானல் திரு வல்லவாழ்
மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே
.–5-9-6-

மலர்த்தாமரைப் பாதங்கள்-அப்போது அலர்ந்த தாமரை போலே எல்லையற்ற போக்யமான திருவடிகள் என்பாள் ‘மலர்த்தாமரைப் பாதங்கள்’ என்கிறாள்.
அடியிலே இவர்க்குத் தானே அன்றோ ருசியை உண்டாக்கினான்.
வாமனனைச் சொன்னதற்கு, பாவம் அருளிச் செய்கிறார் ‘அடியிலே’ என்று தொடங்கி.
தமக்குத் திருவடிகளிலே ருசி பிறந்தது வாமனன் திருவருளாலே-என்பது கருத்து.-‘
அடிகள் அடிகள்’ என்று வாய்புலற்றும்படி அன்றோ திருவடிகளில் இனிமை இருப்பது.-

————–

பாதங்கள் மேலணி பூந்தொழக் கூடுங்கொல்? பாவை நல்லீர்!
ஓத நெடுந் தடத்துள் உயர் தாமரை செங்கழுநீர்
மாதர்கள் வாண் முகமும் கண்ணும் ஏந்தும் திருவல்லவாழ்
நாதன் இஞ்ஞால முண்ட நம்பிரான் தன்னை நாடொறுமே
.–5-9-7-

இஞ் ஞாலம் உண்ட- ஆபத்தே செப்பேடாக வயிற்றிலே வைத்து நோக்கும். என்றது,
மேன்மை பாராதே தளர்ந்தார் தாவளமாயிருக்கும் என்றபடி.
தளர்ந்தார் தாவளம்-தளர்ந்தவர்கட்கு ஆதாரமாயிருப்பவன்.-தாவளம் க்ருஹம் –
அது கதையில் கேட்க வேண்டி இருந்ததோ? எனின்,-நம் பிரான் தன்னை –சம்சாரப் பிரளயங்கொண்ட என்னை எடுத்து இவ்வளவாக்கி உபகரித்தவன்.
நாடொறும் பாதங்கள் மேல் அணி பூந்தொழக் கூடுங்கொல்?

————–

நாடொறும் வீடின்றியே தொழக் கூடுங்கொல் நன்னுதலீர்!
ஆடுறு தீங் கரும்பும் விளை செந் நெலுமாகி எங்கும்
மாடுறு பூந்தடஞ் சேர் வயல் சூழ் தண் திருவல்லவாழ்
நீடுறைகின்ற பிரான் நிலம் தாவிய நீள்கழலே.
–5-9-8-

நாடொறும் வீடு இன்றியே தொழக் கூடுங்கொல்-
‘நாடொறும்’
 என்று, ஒவ்வொரு பக்ஷத்திலும் செய்யும்-தர்ச பூர்ணமாஸ – யாகங்களைப் பிரிக்கிறது.-‘வீடு இன்றியே’ என்று நித்திய அக்நி ஹோத்ரத்தைப் பிரிக்கிறது.
“ஒழிவில் காலமெல்லாம்” என்கிறபடியே யன்றோ இவர் பிரார்த்திப்பது.
ஆசாரிய உபதேசத்தை நம்பி விரும்புகிற நம்மைப் போல் அன்றியே,
தாஸ்யம் ரசித்து ராகத்தாலே -அடிமை ரசித்து ஆசையாலே விரும்புகிறாரே அன்றோ.

நீடு உறைகின்ற பிரான் நிலம் தாவிய நீள் கழலே –-குணாகுண நிரூபணம் பண்ணாதே எல்லார் தலைகள் மேலும் பொருந்தும்படி சுலபமான திருவடிகளைக் கொண்டு,-சௌலப்யம். ஸ்ரீ வாமனனுக்கும் இவனுக்கும் ஒக்கும்,- -அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாமல் நித்திய வாசம் செய்கிற உபகாரமே இங்குத்தைக்குத் தன்னேற்றம்.-நிலம் தாவிய நீள் கழல் நாடொறும் வீடு இன்றியே தொழக் கூடுங்கொல்? 

—————

கழல் வளை பூரிப்ப நாம் கண்டு கை தொழக் கூடுங் கொலோ?
குழல் என யாழும் என்னக் குளிர் சோலை யுள் தேனருந்தி
மழலை வரி வண்டுகள் இசை பாடும் திருவல்லவாழ்
சுழலின் மலி சக்கரப் பெருமானது தொல்லருளே
.–5-9-9-

கழல் வளை பூரிப்ப“வெள் வளை” – திருவாய்– 10. 3 : 7– என்னுமாறு போலே. ‘கழல் வளை’ என்று, வளைக்கு விசேடணமாய் விட்டது காணும். இவளைக் கை விடுகையாலே அன்றோ இது விசேடணமாக வேண்டிற்று. பூரிப்ப – பூர்ணமாக. அவன் கை விட்டால் வளையல்களும் கை விடுமே அவன் வரில் கை மேலே காணலாமே இவற்றை. ‘பூரிப்ப’ என்பதனை,(சடக்கெனக் காணலாம்-அவன் கையில் சுழலும் சக்கரத்தையும் காணலாம்
இவள் கையில் வளையல்கள் பூரிக்கக் காணலாமே )

இசை பாடும்- செருக்கருமாய் ஸுகுமாரருமாயிருப்பார், ‘மரம்’ என்று சந்தனத்தைக் கழித்துப் புழுகு நெய்யை ஏறிட்டுக் கொண்டு திரியுமாறு போலே, இவையும் இயலை விட்டு இசையையே பாடுகின்றனவாதலின் ‘இசை பாடும்’ என்கிறது. (பாவின் இன்னிசை பாடித் திரிவனே போல் -இசையே உத்தேச்யம் )-அருளாலே, கழல் வளை பூரிப்ப நாம் கண்டு கை தொழக் கூடவற்றே-

————-

தொல்லருள் நல் வினையால் சொலக் கூடுங்கொல்? தோழிமீர்காள்?
தொல்லருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திருநகரம்
நல்லருள் ஆயிரவர் நலனேந்தும் திருவல்லவாழ்
நல்லருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே
.–5-9-10-

“நா, நீர் அற்று இருக்கை பாபத்தின் பலம் அன்றோ.-புண்ணியத்தாலே- ஸூஹ்ருதத்தாலே-நாக்கிலே-நீர் உண்டாய்த் திரு நாமம் சொல்ல வல்லோமே என்கிறாள்’
என்று அம்மங்கி அம்மாள் வாக்கியார்த்தமாக அருளிச் செய்வர் என்று அருளிச் செய்வர். நாக்கில் நீர் வருதல் புண்ணியத்தின் பலமாகையாலே, அவனுடைய கிருபையாகிற புண்ணியத்தாலே நாக்கிலே நீர் உண்டாய்த் திருநாமம் சொல்ல வல்லோமே என்கிறாள் 

நல் அருள் ஆயிரவர் நலன் ஏந்தும் திருவல்லவாழ் –-மக்களைக் காப்பாற்றுவதில் எம்பெருமானைக் காட்டிலும் அநுக்கிரஹ சீலர்களாயிருக்குமவர்கள்.-அவனுடைய கல்யாண குணங்களைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்ற ஊர்-பிரேமத்தாலே அவனுடைய ரக்ஷகத்வத்தைத் தாங்கள் ஏறிட்டுக்கொண்டு அவனுக்கு மங்களாசாசனம்
செய்கிற ஊர்-

நல் அருள் நம் பெருமான் –-நல்ல அருளை யுடையவனாய் நமக்கு ஸ்வாமியாயிருக்குமவன்.
நல்லருளாவது, வாத்சல்யம். வாத்சல்ய ஸ்வாமித்வங்கள், நாராயண சப்தார்த்தமாகும்.
அர்த்தத்தை அருளிச் செய்து பின்பு சப்தத்தை அருளிச்செய்கிறார்: (அஸூயை நல்லதை பொல்லாதாக எண்ணுவது -பொறாமை – எதிர்பதம் வாத்சல்யம் தீமையையே நல்லதாகக் கொள்வது )-நாராயணன் நாமங்களே –நாராயண சப்தம், தர்மி நிர்த்தேசம்.-ஸ்வரூப நிரூபகம்-இஸ் ஸ்வபாவங்களால் நிரூபித்த வஸ்துவுக்கு யுண்டான குண சேஷ்டிதங்களுக்கு வாசகம் அல்லாத திரு நாமங்கள் –

—————-

நாமங் களாயிர முடைய நம் பெருமானடி மேல்
சேமங் கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
நாமங்களாயிரத்துள் இவை பத்தும் திருவல்லவாழ்
சேமங்கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே
.–5-9-11-

தெரிந்து உரைத்த நாமங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் – ‘ஆயிரம் பாசுரங்களில் இவை பத்து’ என்னாமல், “நாமங்களாயிரத்துள் இவை பத்தும்” என்பான் என்? என்ன-அவனுடைய திரு நாமங்கள் போலே, குணங்களையும் செயல்களையும் தெரிவிக்கின்ற ஆயிரத்திலும் ஆய்ந்து உரைத்த. ஆயிரம் திருப் பெயர்களைச் சொன்னால் அவன் குணங்கள் தோற்றுமாறு போலே யன்றோ, இவற்றாலும் அவன் குணங்களும் செயல்களும் தோற்றும்படி.

சிறந்தார் பிறந்தே – ஒருவனுக்குப் பிறக்கை போக்கித் தாழ்ச்சி இன்றிக்கே இருக்க,
அவனுக்குப் பல பிறப்பாய் ஒளி வருமாறு போலே, இவர்களும் இங்கே பகவானுடைய குணங்களை அநுபவம் பண்ணுகையாலே சீரியர்கள்.-பிறந்தே சிறந்தார் என்று கூட்டுக.
பிறவியினையுடையராயிருந்தும் சிலாக்கியராயிருப்பார். பிறவியில் சிலாக்யதை கூடாது என்னுமதனையும்;-இத்தகைய பிறவியினை யுடையராயிருந்தும், சர்வேச்வரனுக்குப் பிறக்கப் பிறக்கக் குணங்கள் புகர் பெற்று வருமாறு போன்று, இவர்களும் பகவதநுபவம் பண்ணுகையாலே சிலாக்கியராயிருப்பார்கள்-இந்தப் பத்தினைக் கற்க வல்லவர்கள்; என்னைப் போலே அவன் இருந்த தேசத்திலே போகப் புக்கு பலக் குறைவின் காரணமாக நடு வழியிலே விழுந்து நோவு படாதே உகந்தருளின தேசத்திலே புக்கு அநுபவிக்கப் பெறுவர்கள்.-இவர்களுடைய ஜன்மங்கள் கர்மங்காரணமாக இருக்கச் செய்தே அவனுக்கு உறுப்பாகையாலே முக்தர்களுடைய-சரீரத்தைக் காட்டிலும் சிலாக்கியம்.
அடியார்களின் பொருட்டு அவதரித்த பகவானுடைய அவதாரம் போலே சிலாக்கியம்.-

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -39-நீலத் தட வரை மேல் புண்டரீக நெடும் -ஏழை யாராவி -7-7-

February 23, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிறசொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

திருக்கண்களின் அழகு-ஈற்று எவகாரம் -இதில் ஈடுபட்டவர் வேறு எங்கும் புகார்-கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே -அதே அர்த்தம்-தோள் கண்டார் தோளே கண்டார் போல் -இரக்கத்தைக் குறிக்கும் ஏவகாரம்-கண்ணாலே பார்த்தால் -இவ்வளவு கையால் அணைக்க முடியவில்லையே என்ற இரக்கமாகவுமாம்–ஒரே பாசுரத்தில் ஐந்து பிரான் இதில்-ஞாலப் பிரான்-விசும்புக்கும் பிரான்-மற்றும் நல்லோர் பிரான்-கோலம் கரிய பிரான் எம்பிரான்உரு வெளிப்பாடு எங்கனேயோ அன்னைமீர்காள் -செல்கின்றது என் நெஞ்சமே -அங்கும் உரு வெளிப்பாடு-நெஞ்சம் நிறைந்தன-ஏழையர் ஆவி வுண்ணும் இணைக் குற்றங்களோ அறியேன் ஆழி அம் கண்ணபிரான் திருக் கண்களோ அறியேன் சூழவும் நாண் மலர் போல் வந்து தோன்றும் -திருமேனி முழுவதுமே திருக்கண்கள் ஆகவே – தலைமகள் பாசுரம் -உருவ வெளிப்பட்டால் தலைவிக்கு தோழிக்கு கூறுவது-

கீழ்ப் பாட்டில் அனுசந்தித்த நீலங்கள் தனக்கு போலியான திரு மேனியிலே கொண்டு போய் முட்டிற்று –
திரு மேனி தனக்கு பகைத் தொடையான திரு கண்களிலே போய் முட்டிற்று -திருக் கண்கள் தனக்கு அவ்வருகு போக ஒட்டாதே நலிகிறபடி சொல்லுகிறது–க்ருஹீத் வா ப்ரேஷ மாணா ஜானகி உதிதா பவத் பர்த்தாராம் இவ -இத்யாதி சுந்தர காண்டம் -36-4- கணை ஆழி பார்த்த உடன் பெருமாளையே கண்ட படி பிராட்டி மகிழ்ந்தாள்-

நீல ரத்னமயமான மலை மேலே பெரிய தாமரைத் தடாகங்கள் போல உள்ள திருக் கண்களில் ஈடு பட்டு அருளிச் செய்கிறார்-திருக் கண்களின் அழகில் ஈடுபட்டார்க்கு மற்ற எவையும் பொருளாகாது தோன்றாதே –

இப்படி அதிகார சம்பத்தியான பல ஸித்தியை அனுசந்தித்தவர்-இதுக்கு அடியான பகவத் கடாக்ஷத்தையும் அனுசந்தித்து அவ்வனுசந்தானத்தின் முதிர்த்தியாலே ஸர்வேஸ்வரனுடைய
திருக்கண் அழகானது ஏழையர் ஆவி -யில் போலே உரு வெளிப்பாடாம் படி பிரகாசித்த பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு அவதாரிகை
சில நீலங்களைக் கண்டு இவை பண்ணின தபஸ்ஸுக்குப் பலம் பெற்றன போலே இரா நின்றன
நம்முடைய விரஹ தாபத்துக்கே யாகாதே பலம் இன்றிக்கே ஒழிகிறது என்று அவ்வழியாலே அவற்றோடு போலியான வடிவை நினைத்து அவ்வழியாலே திரு முகத்திலே அழகை அனுசந்தித்து
அது தான் போய் ப்ரத்யக்ஷ சாமானாகரமாய்-அத்தாலே அணைக்கக் கணிசித்துக் கைக்கு எட்டாமையாலே நோவு படவும் அவ்வழகு ஸ்ம்ருதி விஷயமாய் உரு வெளிப்பாடாய் நோவு பட்டுக் கிடக்கிற படியைச் சொல்லுகிறது

நீல தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள்
போல பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் பொங்கு முந்நீர்
ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்
கோலம் கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே
-39-தலைவனின் உருவம் பற்றித் தலைவி கூறுதல் –-

ஏழையர்கள் நெஞ்சை இளகுவிக்கும் மாலழகு
சூழ வந்து தோன்றித் துயர் விளைக்க -ஆழு மனம்
தன்னுடனே யவ் வழகைத் தான் உரைத்த மாறன் பால்
மன்னுமவர் தீ வினை போம் மாய்ந்து 
–67-ஸ்ரீ எம்பெருமான் உடைய அழகு திரு உள்ளத்திலே ஊற்று இருந்து அத்தையே இடைவிடாமல் பாவித்து பாவனா பிரகர்ஷத்தாலே அவ் வழகு பிரத்யஷ சாமானாகாரமாகத் தோற்றி தனித் தனியாகவும் திரளாகவும் ஒரு முகம் செய்து நலிய தாம் நலிவு பட்டு செல்லுகிற படியை உருவு வெளிப்பாட்டாலே நோவு படுகிறாள் ஒரு ஸ்ரீ பிராட்டி பாசுரத்தால் அருளிச் செய்கிற ஏழையர் ஆவியில் அர்த்தத்தை-ஏழையர்கள் இத்யாதியாலே அருளிச் செய்கிறார்-நிரவதிக போக்யமான அந்த உத்தம அங்கத்திலே சௌந்தர்யத்தை அனுபவித்து அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார்
விஷயத்திலே பொருந்தி இருக்குமவர்களுடைய பிரபல ப்ரதிபந்தகம் நசித்து நிச் சேஷமாகப் போம்

நீல தட வரை மேல்– பச்சை மா மலை போல் மேனி -என்னுமா போலே ஒரு நீல கிரி போலே காணும் திரு மேனி இருப்பது–புண்டரீக -இத்யாதி –அதன் மேல் பூரணமாக தாமரை பூத்த பெரிய தடாங்கள் போலே மிகா நின்றன –-உடம்பு எல்லாம் கண்ணாய் இருக்கிறபடி –-அவ் அவயவம் ஒழிய  அவயாந்தரத்தில் போக ஒண்ணாத படி இருக்கிற படி —(கிருபையா -சர்வ-இத்யாதி -பராசர பட்டர் -கண்கள் நாடு பிடிக்கப் புறப்பட )தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவ அஷணீ – என்று உபநிஷத்களில் -சாந்தோக்ய உபநிஷத் -16-7-சொல்லுகிற தாமரை –எமக்கு எல்லா இடத்தவும் –கந்தவ்ய பூமியில்  இல்லாத படிக்கு ஈடாக  திருக் கண்கள் தொடர்ந்த படி –கண்ணை செம்பளித்தவாறே கண்ணுக்குள்ளே தோற்றின படி –(திருக் கமல பாதம் வந்து என் கண்ணின்னுள்ளே ஒக்கின்றதே ) புறம்பு எங்கும் தோற்ப்பித்து என்னை தோற்ப்பிக்க வந்தபடி —சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் -திருவாய்மொழி -7-7-1-கரு மாணிக்க மலை மேல் மணித் தடம் தாமரைக் காடுகள் போல் -திருவாய்மொழி -8-9-1—இத்யாதி-

பொங்கு முந்நீர் ஞாலப் பிரான் –பொங்கா நின்ற மூன்று வகைப் பட்ட நீரை உடைத்தான கடல் சூழ்ந்த
பூமிக்கு எல்லாம் உபகாரகன் – பிரளய ஆபத்திலே ரஷித்தவன்-(மூன்று தொழில்கள்-படைத்து- பூமிக்கு நீரில் இருந்து தானே படைப்பு -காக்கவும் நீர் வேணுமே -பிரளயத்தில் நீர் உண்டே -இப்படி மூன்றும் உண்டே)விசும்புக்கும் பிரான் –இவர்களுக்கு ஜனகனான ப்ரஹ்மாதிகளுக்கும்  நிர்வாகனானவன்–மற்றும் நல்லோர் பிரான்-நித்ய ஸூரிகளுக்கும் நிர்வாகனானவன்–கோலம் கரிய பிரான்–இக் கண்ணுக்கு வளைத்து கொடுக்கும் உடம்பு –நித்ய ஸூரிகளுக்கு முற்றூட்டாக அனுபவிக்க கொடுக்கும் உடம்பு இவ் வடிவைக் காட்டி இறே அவர்களை பிச்சேற பண்ணுவது –(ஸகல மனுஷ நயன விஷயதாங்கன் )-எம் பிரான்-அவர்களுக்கு நாயகன் ஆனாற் போலே   எனக்கும் நாயகன் ஆனபடி–கண்ணின் கோலங்களே–எனக்கு உபகாரன் ஆனவனுடைய விலஷணன திருக் கண்கள் –நீல தட வரை மேல்-புண்டரீக நெடும் தடங்கள் போலே பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும்-

கோலங்களே-
தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழல் கமலம் அன்ன தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே
வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார் ஊழ் கொண்ட சமயத்தன்னான் உருவு கண்டாரை ஓத்தார் –
இனி ஏவகாரத்தை –
இரக்கமாக கொண்டு கண்ணுக்கு புலப்படும் வடிவு கைகளால் தழுவ எட்டாமல் வருந்துகின்ற படி யாகவுமாம்

ஞாலம் –லீலா விபூதி
விசும்பு -நித்ய விபூதி –
மற்றும் நல்லோர் -முமுஷுக்கள்-அன்றி
தேவ லோகம் நித்ய முக்தர் -என்பதை விசும்பும் மற்றும் நல்லோர்-

நீல தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள் போல-நீல ரத்ன மயமான பெரிய மலையின் மேலே
தாமரையை யுடைத்தான நெடிய தடாகங்கள் போலே–பொலிந்து-தாமரைத் தடாகம் போலி சொல்லும் படி அழகு விஞ்சி–எமக்கு எல்லா இடத்தவும்–சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் -திருவாய் -7-7-1-என்கிறபடியே ஸர்வ பிரதேசத்திலும் பிரகாசியா நின்றன–பொங்கு முந்நீர் ஞாலப் பிரான்-கிளம்பின முன்னீரை யுடைய லோகத்துக்கு ஸ்வாமி யானவன்–இத்தால் ஆற்று நீர் ஊற்று நீர் வர்ஷ ஜலத்தாலே கடல் முந்நீர் ஆனால் போலே அர்த்த காம அபிமான நீர்மையாலே (ஸ்வ பாவத்தால் ) விஞ்சின ஜகத்தை ஜிதந்தே புண்டரீகாக்ஷ -ஜிதந்தா ஸ்தோத்ரம் -1-என்னும்படி போக ப்ரதனாயக் கொண்டு தன் கண் அழகாலே தோற்பித்த ஸ்வாமியானவன் என்றபடி–விசும்புக்கும் பிரான்–வெளி நாடான நித்ய விபூதிக்கும்-தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை -திருவாய் -2-6-3-என்கிறபடியே தன் கண் அழகாலே போக பிரதனாய்க் கொண்டு நிர்வாஹகனானவன் என்கிறது

மற்றும் நல்லோர் பிரான்–முன் சொன்ன லீலா விபூதியிலும் அந்தர் பவியாதே நித்ய விபூதியிலும் புகப் பெறாதே தன் குணங்களில் ப்ரவணரான முமுஷுக்களுக்கு பாஹிமாம் புண்டரீகாக்ஷ -ஜிதந்தே -8- என்கிறபடியே தனது கடாக்ஷ விசேஷத்தாலே உபாய பூதனாய் ரக்ஷிக்குமவன்–கோலம் கரிய பிரான்
இக் கண் அழகுக்குப் பரபாக ரஸத்தை யுண்டாக்கக் கடவதான திரு மேனியில் கருமையாலே உபகாரகனானவன்-எம்பிரான்— இக் கண் அழகையும் வடிவு அழகையும் காட்டி என்னை அடிமை கொண்டவனுடைய-

கண்ணின் கோலங்களே –கண்களின் அழகுகள் ஆனவை–அதாவது
1-பரபாக சோபையும்
2-மிளிர்த்தியும்
3-பெருமையும்
4-சிவப்பும்
5-குளிர்த்தியும்–தொடக்கமானவை

கோலம் கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்கள் நீலத் தடவரை மேல் நெடும் தடங்கள் போலப் பொலிந்து எமக்கு எல்லா விடத்தவும்-என்று அந்வயம்-

இப்பாட்டு கிளவி மர்யாதையில் நாயகனான ஈஸ்வரனுடைய உரு வெளிப்பாட்டைத் தோழிமார் தொடக்கமானார்க்கு நாயகி உரைத்ததாகையாலே இவ் வாழ்வாருடைய ஸ்வ அனுசந்தானம் இன்றியே ஸூஹ்ருத்துக்களை நோக்கிச் சொன்னதாகவுமாம் 

ஸ்ரீ நம்பிள்ளை ஈடுவியாக்யானம்-நீல இத்யாதி-ஒரு நீல கிரி போலே யாயிற்று திருமேனி இருப்பது
ராம கமல பத்ராஷ -ஸூந்தர -35-8- பெரு வெள்ளத்தில் சில சுழிகள் போலே யாயிற்று திருக்கண்கள்
ஸர்வாங்க ஸூந்தரராய் இறே இருப்பது-அதன் மேலே இறே கண் அழகு–விகாசம் செவ்வி குளிர்த்தி தண்ணளி இவற்றாலே தாமரை போலே யாயிற்று இருப்பது-கண் அழகுக்கு எல்லை எவ்வளவு என்னில்-ஸர்வ ஸத்வ மநோ ஹர -ஸூந்தர -35-8- இடக்கை வலக்கை அறியாத திர்யக் ஜாதியிலே பிறந்த நாங்களும் அகப்படும் படியாயிற்று இதில் அழகு-

எல்லா உலகும் தொழும் ஆதி மூர்த்தி -திருவாய் -3-3-5- என்றார் இறே
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என் கண் பாசம் வைத்த -திருவாய் -3-3-4- என்னக் கடவது இறே
என்னில் குறைந்தார் இல்லை-நான் அகப்படத் தொழுதேன் என்று இருக்கிறேன்-நான் அகப்பட்ட பின்பு இனி யார் தான் என்று இருக்கிறார்-ரூப தாக்ஷிண்ய சம்பன்ன -ஸூந்தர -35-8–அதுக்கு அவ்வருகு சில சுழிகளாய் ஆயிற்று இவை-வடிவு அழகும் ஆனு கூல்யமும் போக்தாக்கள் இல்லாமையாலே குமர் இருந்து போம் இத்தனை ஸர்வ ஸத்வ மநோ ஹரத்வம் கண் அழகோடே அற்றது இறே–ஸம்பன்ன
இவை கூடு பூரித்துக் கிடக்கும் அத்தனை-ஸம்பன்ன ப்ரஸூத-இவை தான் ஒவ் பத்திகமாய் இருக்கை-பெருமாள் வடிவு அழகைக் கழியப் பேசினாய்-இன்னம் இப்படி இருபத்தொரு ஆஸ்ரயம் யுண்டோ இல்லையோ என்ன ஓன்று உண்டு-ஜனகாத்மஜே-உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவை -திருவாய் -10-10-6-என்கிறபடியே தேவரீரும் உண்டு-எமக்கு எல்லா விடத்தவும்-இக்கண் அழகின் கீழே நாடு ஜீவித்துக் கிடவா நின்றது இறே-நமக்கே இறே பாதகம் ஆகிறது-கண்டு அனுபவிக்க இழிந்தால் ப்ரத்யக்ஷ சாமானா காரமாய் அவ்வருகே சில பரிமாற்றத்தைக் கணிசித்துக் கை நீட்டுவது–முதலானவைகளில் பரபாக ஸ்ரீ யை உண்டாக்கி அவைகளை அனுபவிப்பிக்கும் உபகாரகன் –எம் பிரான்–இவ்வெல்லா வகையிலும் என்னை அனுபவிப்பித்து என்னை அடிமை கொண்ட உபகாரகன்–ஏவம் பூதகனுடைய கண்ணின் கோலங்களே எமக்கு எல்லா விடத்த்வும் என்று அந்வயம்-திருக்கண்களினுடைய அலகுகள் இப்போது எங்கும் அனுபாவ்யமாகா நின்றது –

ஸ்வாபதேசம் —
அவனால் காட்டக் கண்டு அனுபவித்த திருக்கண் அழகை ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஆழ்வார் அருளிச் செய்கிறார்-ஏழையராவி உண்ணும் இணைக் கூற்றாங்கொலோ அறியேன் ஆழி யம் கண்ண பிரான் திருக் கங்கள் கொலோ அறியேன்
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோற்றும் காண்டீர் தோழியர்கள் அன்னைமீர் என் செய்கேன் துயராட்டியேனே
-மிளிர்ச்சி குளிர்ச்சி மலர்ச்சி பெருமை செம்மை கோலங்களே
கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட அப் பெரியவாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே எமக்கு எல்லா இடத்தவும் – நின்று தோன்றி கண்ணுள் நீங்கா என் நெஞ்சுள்ளும் நீங்காவே போலே -தம் திரு உள்ளம் அழிந்த படி சொல்லிற்று –பிரபத்தி மார்க்கத்திலேயே நின்று சாதனாந்தரங்களைக் கழித்தமையை கடமாயினகள் கழித்ததாகச் சொல்லப்பட்டது-எம்பெருமான் திறத்தில் செய்யவேண்டிய கடைமைகளைத் தவறாமல் செய்தமையுமாம் -திவ்ய தேச யாத்திரை கைங்கர்யங்கள் செய்தவையுமாம் நீர் நிலை நிற்றல் -அவனது ஆஸ்ரித ஸுலப்யாதிகளிலே ஆழ்ந்து இருத்தல்

தாத்பர்யம்
திருமேனி சவுந்தர்யம் ஸ்மரிக்கும் பொழுது அத்துடன் திருக்கண்களும் ஸ்ம்ருதமாய் ஈடுபட்டு
நாயகனின் உருவ வெளிப்பாட்டை நாயகி தோழிக்கு உரைக்கும் பாசுரத்தால் அருளிச் செய்கிறார்
அழகிய திருமேனியோ ‘அதில் பூத்த திருக் கண்கள் சகல பிராணிகளையும் உகப்பிக்கும் அவனான திருக்கண்கள் அழகானது இந்திரிய நீல மாணிக்க மலை மேல் தடாகங்களில் உள்ள தாமரை மலர் என் பக்கம் சூழ்ந்து எனக்கு காட்டா நின்றது -என்கிறாள் –

7-7-ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங் கொலோ அறியேன்-ப்ரவேஸம்-

மேல் திருவாய்மொழியிலே
‘மல்கு நீலச் சுடர் தழைப்பச் செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல்,
அந்தர மேல் செம்பட்டோடு அடி உந்தி கை மார்பு கண் வாய், செஞ்சுடர்ச்சோதி விட உறை என் திருமார்பனையே’ என்று
அவன் வடிவழகினைச் சொன்னார்;

அவ்வடிவழகு தானே நெஞ்சிலே ஊற்றிருக்க, அதனையே பாவித்த காரணத்தாலே,
அந்த பாவனையின் மிகுதியாலே கண் கூடாகக் காண்பதே போன்றதாய்,
பின்பு கண் கூடாகப் பார்ப்பதாகவே நினைத்து
அணைக்கக் கணிசித்துக் கையை நீட்டி. அப்போதே பெறாமையாலே
தமக்கப் பிறந்த ஆற்றாமையை,
எம்பெருமானோடே கலந்து பிரிந்து உருவு வெளிப்பாட்டாலே நோவு படுகிறாள்.
ஒரு பிராட்டி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்.

சர்வேஸ்வரனோடே கலந்து பிரிந்து தளர்ந்து
உருவு வெளிப்பாட்டாலே நோவு படுகிறாள் ஒரு பிராட்டி.-
ஒருவர் ஒருவரோடு கலக்கும் போது காட்சி முன்னாகப் பின்பே அன்றோ
மற்றைப் பரிமாற்றங்களை ஆசைப்படுவது?

ஆகையாலே,-
திருக் கண்களின் அழகைக் கூறி,
அவ் வழியாலே திரு முகத்தில் அழகைக் கூறி
பின்பு அவ் வருகே சில பரிமாற்றங்களை ஆசைப்பட்டு
அப்போதே அது கை வாராமையாலே நோவு பட;
இவள் நிலையைக் கண்ட தோழிமாரும் தாய்மாரும், ‘உனக்கு ஓடுகிறது என்? என்று கேட்க,

ஆற்றாமை பிரசித்தமானபடியால் சிலர்க்குச் சொல்லிச் சிலர்க்கு மறைக்கும்படியான நிலை இல்லையே!
ஆகையாலே, அவர்களைக் குறித்து,
‘அவனுடைய திருமுகத்தில் அழகானது தனித் தனியும் திரளவும் வந்து நலியா நின்றது’ என்ன,
(திரளவும் வந்து நலியா நின்றது–கோல் இழைத் தாமாரை -என்பதைப் பற்ற )

‘நீ இங்ஙனே சொல்லுமது உன்னுடைய பெண்மைக்குப் போராது;
அவனுடைய தலைமைக்கும் போராது;
நீ தான் எங்களை நோக்கக் கடவதாய் இருப்பது ஒரு தன்மை உண்டே அதுக்கும் போராது;
ஆன பின்பு, இதனைத் தவிர்,’ என்று ஹிதம் சொல்லுவாரும் பொடிவாருமாக;

‘நீங்கள் பொடிகிற இதனைக் கேட்டு மீளும் அளவு அன்று அது என்னை நலிகிறபடி;
இனித் தான் ஏதேனுமாக உறைத்ததிலே ஊன்றி நிற்குமத்தனை அன்றோ?
ஆன பின்பு, நீங்கள் என்னை விட்டுப் பிடிக்க அமையும்,’ என்று
அவர்களுக்குத் தன் பக்கல் நசை அற வேண்டும்படி
தனக்குப் பிறந்த ஆற்றாமையை அறிவிக்கறாளாய் இருக்கிறது.

‘இவர்க்குத் திருவாய்மொழி எங்கும் ஓடுகிற தன்மைகள்
சர்வேஸ்வரனுடைய குணங்களை ஆசைப் படுகையும்,
அதுதான் மானஸ அனுபவமாய் இருக்கையும்,
அனுபவித்த குணங்கள் ஒழிய மற்றைய குணங்களிலே விருப்பம் செலுத்துதலும்.
அது தன்னில் கிரமப் பிராப்தி பற்றாமையும்,
அது தான் மேல் நின்ற நிலையை மறக்கும்படி செய்கையும் ஆகிற இவையே அன்றோ?

அவற்றைக் காட்டிலும்,
உருவு வெளிப்பாடாகச் சொல்லுகிற இதில் ஏறின அமிசம் என்?’ என்னில்
‘முன்பு பிறந்த – வைஸத்யமும் -தெளிவும் கிடக்கச் செய்தே
மேலே விருப்பத்தை உண்டாக்குமது அன்றோ உருவு வெளிப்பாடாகிறது?
மற்றைய இடத்தில்,
முன் பிறந்த தெளிவை அழித்தே அன்றோ மேலில் விருப்பம் பிறப்பது?

‘எங்ஙனேயோ?’ என்ற திருவாய்மொழியிலும்-(5-5) பெரும்பாலும் இதுவே அன்றோ ஓடுகிறது?
அதில் இதற்கு வாசி என்?’ என்னில்,
அதில் பிரீதியும் பிரீதி இன்மையும் சமமாக இருக்கும்;

இங்குப் பிரீதி இன்மை மிக்கிருக்கும்.
திருக் கண்களில் அழகை ‘இணைக் கூற்றங்கொலோ!’ என்னும்படி யாயிற்று

இங்குத் தீங்கு செய்வதில் உறைப்பு இருக்கும்படி.-

ஏழாம் திருவாய் மொழியில் –
இப்படி ஆர்த்தியோடே கூப்பிட்டவர் -அடி யுந்தி கை மார்பு கண் வாய் -என்று பிரஸ்த்துதமான விக்ரஹ வைலக்ஷண்யத்தை அனுசந்தித்து –
விலக்ஷணமான உத்தம அங்க அவயவங்கள் தனித் தனியேயும் சமுதாயமாகவும் ப்ரத்யக்ஷவத் விசதமாம் படி பிரகாசிக்க
அபரிச்சின்ன ஸ்வ பாவனான ஸ்ரீ கிருஷ்ணனுடைய திருக் கண்களையும்
ஆஸ்ரித விஷய அபி நிவிஷ்டனான அவனுடைய நாஸா தண்டத்தையும்
ஸ்யாமள விக்ரஹத்துக்கு பரபாகமான திவ்ய அதர சோபையையும்
காமனுக்கும் உத்பாதகனாம்பாடி கம நீயதையை யுடையவனுடைய பாரூ யுகளத்தையும்
கோவர்த்தன உத்தரணம் பண்ணின அனாயாசத்தை யுடையவனுடைய மந்த ஸ்மித்தையும்
அனந்தசாயியான அவனுடைய கர்ணிகா அலங்க்ருதமான கர்ண பாசத்தையும்
மஹா புஜனான அவனுடைய லலாட சோபையையும்
ஏவம்வித அவயவ விசிஷ்டமான ஸ்ரீ கிருஷ்ணனுடைய சாமான்ய திரு முக சோபையையும்
ஆச்சர்ய பூதனான அவனுடைய மயிர்முடி அழகையும்
சர்வாதிகத்வ ஸூசகமான அபிஷேக சோபையையும்
அனுசந்தித்து -அது சம்ச்லேஷ பர்யந்தம் அல்லாமையாலே அத்யந்தம் ஆர்த்தரான இவருடைய ஆர்த்தி கண்டு
நிர்விண்ணரான ஸூஹ்ருத்துக்களுக்கும் பரிவர்க்கும் தமக்கு ஓடுகிற தசையை ஆவிஷ்கரித்த பிரகாரத்தை
நாயகனான ஸ்ரீ கிருஷ்ணனுடைய விஸ்லேஷ தசையில் அவனுடைய திவ்ய அவயவங்கள் உரு வெளிப்பாடாய்த் தோன்றக் கிட்டி
அனுபவிக்கப் பெறாமையாலே க்லிஷ்டையான நாயகியானவள் தனக்கு ஹிதம் சொல்லி நியமிக்கிற
தோழிமார்க்கும் தாய்மார்க்கும் தன்னுடைய ஈடுபாட்டை அறிவித்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங் கொலோ அறியேன்
ஆழியங் கண்ண பிரான் திருக்கண்கள் கொலோ அறியேன்
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றுங் கண்டீர்
தோழியர் காள்!அன்னைமீர்!என் செய்கேன் துயராட்டியேனே
.–7-7-1-

பிரிந்து ஆற்றாமையை விளைத்தவனுக்கும் அன்றிக்கே,-‘இது ஆகாது’ என்று ஹிதம் சொல்லி மீட்கப் பார்க்கும் பருவம் கழிந்த தாய்மார்க்கும் அன்றிக்கே, அபலைகளையே முடிப்பன இரண்டு கூற்றமோ!-தன் கண் அழகு தான் அறிகின்றிலனே!-தன்னையும் நலிந்ததாகில் வாரானோ?-கண்ணாடிப் புறத்திலும் கண்டு அறியானோ?-இராம பாணம் போலே, ஒப்பனை குறி அழியாதே இருக்க உயிரை முடியா நின்றது ஆதலின், ‘ஆவி உண்ணும்’ என்கிறது.-கூற்றுவர் இருவர் தங்களிலே கிருத சங்கேதராய் வந்தாற்போலே காணும் திருக் கண்களில் அழகு பாதகமாகின்றன என்பாள், ‘இணைக் கூற்றங்கொலோ’ என்கிறாள்.-அறியேன்-என்பான் என்?-‘கூற்றம்’ என்று அறுதியிட்டாலோ?’ என்னில்,
கூற்றுவர் இருவர் கிருத சங்கேதராய் வந்தாலும் அபலைகளையே நலிய வேண்டும் நிர்ப்பந்தமில்லையே!-‘ஆடவர்களுடைய கண்ணையும் மனத்தினையும் கவர்கின்றவர்’ அன்றோ? அதனாலே ‘அறியேன்’என்று சொல்லுகிறது.(பும்ஸாம் த்ருஷ்டி ஸித்த அபஹாரிணாம் போல் அனைவரையும் நலியவில்லையே )

ஆழி அம் கண்ணபிரான் திருக் கண்கள் கொலோ அறியேன் – அன்றிக்கே, பெண் பிறந்தாரையே நலியக் கூடியவைகள் தாமேயோ? அற்பம் அண்ணியாரே பாதகராம் அன்று தப்ப விரகு இல்லை;-(நலியும்-என்றால் பிரான் என்னலாமோ என்னில் சற்று தள்ளி இருந்து -பிரதி கூலன் விரோதி யானால் உபாயத்தால் தப்பலாம் – அநு கூலன் பாதகமானால் தப்ப முடியாதே உபகார வேஷத்துடன் வந்த பாதகன் அன்றோ )

இப்படி முதலுறவு பண்ணிப் பொருந்த விட்ட இத் திருக்கண்கள் தாமேயோ? .
உபகாரம் செய்தலையே ஸ்வபாவமாக வுடைய கிருஷ்ணனுடைய கடல் போலே திருக்கண்கள் என்னுதல்;
அன்றிக்கே,-‘கடல் போன்ற ஸ்ரமஹரமான வடிவை யுடைய உபகார சீலனான கிருஷ்ணனுடைய திருக்கண்கள்’ என்னுதல்.-அறியேன் –இதற்கு முன்பு பிரிந்து அறியாமையாலே திருக் கண்கள் பாதகமாம் என்று அறியக் காரணம் இல்லை.-நாம் கேட்டிருந்தபடி அன்றிக்கே இரா நின்றது, இப்போது காண்கிறபடி.

இக் கடாக்ஷமே தாரகமாக அன்றோ உலகம் அடைய ஜீவிப்பது?-சர்வாதிகத்வமும் ரக்ஷகத்வமும் திருக் கண்கள் -நம் கண் அல்லாதது கண் அல்ல -பெரும் கேழலார் நம் மேல் ஒருங்கே பிறழ வைத்தார் – அந் நோக்கும் தொல்லை இன்பத்து இறுதி கண்டாள்-பூதராக்கும் நெடும் நோக்கு சிரமணி சபரி விதுரர் ரிஷி பத்நிகள்-நெடு நோக்கு கொள்ளும் பத்ம விலாசன்-தாமரைக் கண்களால் நோக்காய் -செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ-விஷ்ணோர் கடாக்ஷம் -அல்வழக்கை ஒழித்து படிப்படியாக -அனைத்தையும் பண்ணுமே திருக் கண்கள்-இராம பாணத்துக்கு இராக்கதர்கள் தப்பலாம் அன்றாயிற்று,
இக் கண்களின் அழகின் கீழ் அபலைகளாய் இருப்பார்க்குத் தப்பலாவது?

பிரிவில் இவ்வளவு அன்று அன்றோ அத்தலைக்கு ஆற்றாமை? அதனை அறிகிலளே இவள்.
தன்னோடே வந்து கலந்த விளைநீர் அடைத்துக் கொண்டு -பூர்ண அனுபவம் -பிரிகிற போதைச் செவ்வி அன்றோ இவள் அறிவது?-அதுவே அன்றோ இவள் நெஞ்சில் பட்டுக் கிடப்பது? பின்பு அவன் பட்டது அறியாளே; ஆகையாலே, தாமரை நாண் மலர் போல்’ என்று சொல்லுகிறாள். (ஸம்ஸ்லேஷ தசையில் பார்த்த படியே சொல்கிறாள் – அவன் படும் பாட்டை திருவடி வந்த பின்பே அன்றோ அறிவாள் )-வந்து தோன்றும் –-பிரத்யக்ஷத்லே அத் தலையாலே வரவு ஆனாற்போலே உருவு வெளிப்பாட்டிலும் அத் தலையாலே வந்து தோன்ற ஆயிற்றுத் தான் அறிகிறது.-கண்டீர் – உங்களுக்கு இது தோற்றுகிறது இல்லையோ? தோழியர் காள்!அன்னைமீர்!-தோழிமார்க்கு சொல்லக் கடவது -தாயமார்க்கு மறைக்கக் கடவது என்ற விவேகம் நடையாடாத தசா விசேஷத்தை சொல்லுகிறது –என் செய்கேன் –-இதனைத் தப்பப் பார்ப்பதோ,-அனுபவிக்கப் பார்ப்பதோ?-எதனைச் செய்கேன்?-துயராட்டியேனே –-இறைவனுடைய ஆனந்தத்தை அறிந்தவன் எப்பொருளினின்றும் அஞ்சான்,’ என்று இருக்க வேண்டி இருக்க,-அங்ஙன் அன்றிக்கே, ‘அவசியம் அனுபவிக்கத் தக்கது’ என்கிறபடியே,பழைய கிலேசமே அனுபவிக்கும்படி ஆயிற்றே.

————–

ஆட்டியும் தூற்றியும் நின்று அன்னைமீர்! என்னை நீர் நலிந்து என்?
மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன்
ஈட்டிய வெண்ணெய் உண்டான் திருமூக்கு எனதாவி யுள்ளே
மாட்டிய வல் விளக்கின் சுடராய் நிற்கும் வாலியதே
.–7-7-2-

‘இரண்டுக்கும் நடுவே நாம் இருக்க, இவை முற்படுகையாவது என்? அத்தனையோ நம் மூக்கு வலி?’ என்று திரு மூக்கில் அழகு நலிகிறபடியைச் சொல்லுகிறது.–
மூக்கு வலி -மூக்கு பலன் -வலி -வலிமை -பலம் –மூச்சு வலி -பிராணன் -ரஸோக்தி மூச்சு வலி -என்றபடி –

மாடு உயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன் –-வல்லீர் கோளாகில் இந்தச் சந்தேகத்தை அறுத்துத் தாருங்கோள்.-ஒரு கடல் அருகே அக் கடல் ஊற்றே தாரகமாக வளருகிறது ஒரு கொடி போலே ஆயிற்று.-திருக் கண்களுக்கு அருகே திரு மூக்கு இருக்கிறபடி. மாடு – அருகு.-‘உந்நஸம் – உயர்ந்த மூக்கை யுடைய’ என்கிறபடியே‘உயர்’ என்கிறது. ‘-ஸூசிஸ்மிதம் கோமள கண்டம் உந்நஸம் லலாட பர்யந்த விலம்பி தாலகம்’-என்பது, ஸ்தோத்திர ரத்தினம், 32.

ஒழுகு நீட்சியாலே கொடி என்னவுமாய், ஊக்கம் மாறாமையாலே கொழுந்து என்னவுமாய்
இரா நின்றதாதலின், ‘வல்லியோ கொழுந்தோ’ என்கிறது.-‘இன்னது’ என்று நிச்சயிக்க அரிதாக இருக்கையாலே‘அறியேன்’ என்கிறது.-ஸர்வதா சாம்யம் -முற்றுவமை இருக்கிறபடி, எங்களுக்கு அறியப் போமோ?
இதிலே உட் புக நின்று அனுபவிக்கிற நீ பின்னைச் சொல்லாய்’ என்ன, சொல்லுகிறாள் மேல்:-ஈட்டிய வெண்ணெய் உண்டான் திரு மூக்கு –-அநுகூலர்களுடைய சம்பந்தமுடைய திரவியத்தால் அல்லது தரிக்க மாட்டதே வெண்ணெய் களவு காணப் புக்குக்
கொண்டியிலே பிடி உண்டு,-பின்பு அதனை இல்லை செய்கைக்காக முகத்திலே தடவிக் கொள்ளுமே;-அவ் வெண்ணெயிலே முடை நாற்றமும் உருவு வெளிப்பாட்டிலே தோற்றுகிறதாயிற்று இவளுக்கு.-அப் போதை முடை நாற்றம் தோற்றும்படியாயிற்று உருவு வெளிப்பாட்டில் மெய்.-வாசனை உடன் அன்றோ காட்டி அருளுகிறார் –
கையும் களவுமாக பிடிப்பேன் என்பார்கள் கையை மூக்கில் தடவிக் கொண்டு கையில் இல்லை என்பான் –

விளக்காகிறது-தான் சிறிது நேரம் இருப்பதுமாய்-ஓர் இடத்திலே இருப்பதுமாய் அன்றோ இருப்பது?-இது அங்ஙன் அன்றிக்கே, எப்போதுமாய் எங்கும் உண்டாய் இரா நின்றது:
பாதகத்துவத்தில் உறைப்பை நினைத்துச் சொல்லுகிற வார்த்தை அன்றோ இது?மாட்டிய வல் விளக்கின் சுடராய் நிற்கும் வாலியதே.–சுடர் வெட்டின பெரு விளக்கின் ஒளியை யுடைத்தாய் -வலிதாய் நலியா நின்றது -ஏற்றிய பெரு விளக்கு என்று ஒரு தமிழன் சொன்னான் -விளக்குக்கு பெருமையாவது இவள் ஆற்றாமை கண்டாலும் ப்ரஜ்வலியா நிற்கை -வலிமை யாவது -க்ஷணிகமாய் ப்ராதேசிகமாய் இருக்கிற இது ஏக ரூபமாய் எங்குமாய் நின்று நலிகை – –

———–

வாலிய தோர் கனி கொல்?வினையாட்டியேன் வல் வினைகொல்?
கோலம் திரள் பவளக் கொழுந்துண்டங் கொலோஅறியேன்
நீல நெடு முகில் போல் திருமேனி யம்மான் தொண்டை வாய்
ஏலும் திசையுள் எல்லாம் வந்து தோன்றும் என் இன் உயிர்க்கே.–7-7-3-

அது தன் மூக்கு வலி காட்ட நாம் பேசாதே இருந்தால், ‘அத்தனையோ இதன் வாய் வலி’ என்று நம்மை ஏசுவர்கள் என்று திருப் பவளத்தின் அழகு வந்து நலிகிறபடியை அருளிச் செய்கிறார்–

நீல நெடு முகில் போல் திருமேனி யம்மான் தொண்டை வாய்-திரு அதரத்துக்கு கூட்டுப் படை சொல்லுகிறது -கறுத்து அபரிச்சேத்யமான முகில் போலே இருக்கிற நிறத்தை யுடைய சர்வேஸ்வரனுடைய தொண்டை போலே இருக்கிற திரு அதரம் -திருமேனிக்கு தனக்கும் உண்டான பகை என்னை நலிகைக்கு உறுப்பு ஆயிற்று -தப்பப் பார்த்தாலோ என்னில்
ஏலும் திசையுள் எல்லாம் வந்து தோன்றும் என் இன் உயிர்க்கே.–பார்த்த திக்கு எல்லாம் வந்து தோற்றா நின்றது -எதுக்காக என்னில் என்னுடைய நற்சீவனை கொள்ளுகைக்காக-

———

இன்னுயிர்க்கு ஏழையர் மேல் வளையும் இணை நீல விற்கொல்
மன்னிய சீர்மதனன் கருப்புச்சிலை கொல்?மதனன்
தன்னுயிர்த் தாதை கண் ணப் பெருமான் புருவம் மவையே
என்னுயிர் மேலனவாய் அடுகின்றன என்றும் நின்றே.
–7-7-4-

‘என் தான்! அதரம் உதரம் ஆயிற்றோ சாடு-இங்ஙனே கீழ் மேல் ஆயிற்றோ போய்?’ என்று திருப் புருவத்தில் அழகு வளைந்து கொடு வந்து நலிகிறபடியை அருளிச் செய்கிறார்.

ஏழையர் மேல் வளையும் – வளைப்பாரும் இன்றிக்கே வளைக்கைக்கு விஷயமுமின்றிக்கே,
செயப்படு பொருள் இல்லாமலும் செய்பவன் இல்லாமலும் வளையா நின்றது.
வளைப்பார் இல்லாமையாலே கர்த்தா இல்லை;-விஷயம் -லஷ்யம் – வான வில் -நீல வில்-இதுக்கும் கர்த்தாவும் விஷயமும் இல்லையே-இணை நீல வில் கொலோ – ஏழையர் மேல் வளைகிற நீலமான இரண்டு விற்களோ? என்றது,-வான வில் -நீல வில்-

தருமம் அறியாக் குறும்பனை – தருமம் அறியும் போது முடி சூடின க்ஷத்திரியன் வயிற்றிலே பிறந்தவனாக வேண்டாவோ? யாதவர்கள் நேரே முடி சூடுவது இல்லை அன்றோ? இரக்கம் இருக்கும்படி முதலிலே புதியது உண்டு அறியாதவனாயிற்று.-குறும்பனை ஸ்ரீநந்தகோபர், தம்முடைய இராச்சியத்திலே மூலையடியே நடந்து திரிவான் ஒரு பிள்ளை யாயிற்றுப் பெற்றது.-தன் கைச் சார்ங்கம் – கையிலே வில்லைக் கண்டால், ‘முகத்திலே இருக்கக் கூடிய அது கையிலே இருந்ததே! என்னாலாம்படியாய் இருக்கும்;-முகத்திலே கண்டவாறே, ‘கையிலே இருக்கக் கூடிய இது முகத்திலே இருந்ததே!’ என்னலாய் இருக்கும்.-அதுவே போல என்கிறதாயிற்று, முற்றும் ஒத்திருக்கையாலே.

அவதாரணத்தாலே -கீழ்ச் சொன்ன அழகுகள் ஆசுவாச ஹேது என்னும் படி நலியா நின்றன என்றும் நின்றே--பாதகமாக நிற்கச் செய்தேயும் அழிந்து போகக் கூடியனவாய் இருப்பன சில பொருள்கள் உள அன்றோ?-இவை அங்ஙன் அன்றிக்கே என்றும் ஒக்க நின்று நலியா நின்றன.-என்னை நலிகைக்காக நித்தியமாய் இருக்கும் தன்மையை ஏறிட்டுக் கொண்டன;
நித்தியமாய் இருப்பதும் நித்தியமாய் இருக்கும் வடிவை ஏறிட்டுக் கொண்டதும்’ என்கிறது தானே அன்றோ நலிகிறது?

——————

என்று நின்றே திகழும் செய்ய ஈன்சுடர் வெண் மின்னுக்கொல்?
அன்றிஎன் ஆவி அடும் அணி முத்தங்கொலோ? அறியேன்
குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்
ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர்!எனக்கு உய்விடமே
.–7-7-5-

முகத்தில் வாய்க்கரை நாம் இருக்க இவை முற்படப் போவதே –-வாய்க்கரை -தொடக்கம் -அதரம்-அன்றி என் ஆவி அடும் அணி முத்தங்கொலோ-அன்றிக்கே, என் உயிரை முடிக்கிற திருமுத்து நிரை தானேயோ?-யானை அணி செய்து வந்து தோன்றினாற்போலே இருத்தலின், ‘அணி முத்தம்’ என்கிற்று.-அன்றிக்கே,,‘அழகிய முத்தம்’ என்னுதல் – மேலே ‘வெண் மின்னுக்கொல்’ என்ற இடத்தே திரு அதரத்தோடே கூடின சேர்க்கையாலே நலிந்தபடி சொல்லிற்று; இங்குத் தனியே நலிகிறபடி சொல்லுகிறது.-குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்- மலையை எடுத்து மழையிலே நோவு படாத படி பெண்களை நோக்கின உபகாரகனுடைய முறுவலானது, என் ஒருத்திக்கும் பாதகமாகா நின்றது.

ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர் எனக்கு உய்விடமே – ‘எனக்குச் சென்று உஜ்ஜீவிக்கலாவது ஓரிடம் உண்டோ?’ என்று நானும் தேடா நின்றேன்;-‘இங்கு ஒதுங்குவதற்கு ஓரிடம் காண்கின்றிலேன்.-அன்றிக்கே, மேலே சொன்ன அழகுகள் பாதகமாகிற இத்தனை அல்லது. ஒதுங்க நிழலாய் இருப்பது ஓரிடம் காண்கின்றிலேன்,’ என்னுதல்.-சாதக அழகு ஒன்றும் இல்லை எல்லாமே பாதகம் தான்-

————

உய்விடம் ஏழையர்க்கும் அசுரர்க்கும் அரக்கர்கட்கும்
எவ்விடம்? என்றிலங்கி மகரம் தழைக்கும் தளிர்கொல்?
பைவிடப் பாம்பணையான் திருக் குண்டலக் காதுகளே
கைவிடல் ஒன்றும் இன்றி அடுகின்றன காண்மின்களே
.–7-7-6-

‘நாம் செவிப் பட்டிருக்க இவற்றை முன்னே போக விட்டிருந்தோம்’ என்று திருக் காதில் அழகு வந்து நலிகிற படியைச் சொல்லுகிறது. காதாட்டிக் கொண்டு சொல்லுவரே.
(செவிப் பட்டிருக்க–இவர் பாடுவதை கேட்டுக் கொண்டே இருக்க -செவியில் மகர குண்டலங்கள் இருக்க —என்னிடம் தானே ஆபரணங்கள் உள்ளன -என்று -ஆட்டிக் கொண்டு காதே பேச )

வேறும் ஒரு வகையாக ரசோக்தியாக அவதாரிகை அருளிச் செய்கிறார்,
‘காதாட்டிக் கொண்டு சொல்லுவரே’ என்று. ‘ அவனுடைய திருமகர குண்டலங்களும் திருக் காதுகளும் நலிகிறபடி சொல்லுகிறாள்’ என்பது,-இருபத்து நாலாயிரப்படி.

அசுரரும் அரக்கரும் அழகு கண்டால் பொறுக்க மாட்டாமல் முடிவர்கள்; பெண்கள் அடையப் பெறாமல் முடிவர்கள்.-திருக் காதுகளில் அழகு பாதகம் ஆமாறுபோலே ஆயிற்று, திருவனந்தாழ்வானுடைய சேர்த்தியும் பாதகம் ஆகிறபடி.-மேலே பாதகமாகக் கூறுப் பட்டவையும் ‘நன்று’ என்னலாம்படி இவை நலிகின்றனவாதலின், ‘காதுகளே’என்கிறாள். என்றது,‘அவை, தண்ணீர்ப் பந்தல் வைத்தது என்னும்படியாக ஆயின,’ என்றபடி,-காண்மின்களே – அவர்களுக்கும் எல்லாம் உருவு வெளிப்பாடாய்த் தோற்றும் என்றிருக்கிறாள்;‘வாயுந் திரையுகளில்’-நீயும் திருமாலால் நெஞ்சம் கோள் பட்டாயே -என்ற ஆழ்வார் அன்றோ?

————

காண்மின்கள் அன்னையார்காள்! என்று காட்டும் வகை அறியேன்!
நாண் மன்னு வெண்திங்கள் கொல்,நயந்தார்கட்கு நச்சிலை கொல்
சேண் மன்னு நால் தடந் தோள் பெருமான் தன் திரு நுதலே?
கோண் மன்னி ஆவி அடும் கொடியேன் உயிர் கோளிழைத்தே
.–7-7-7-

இவை அவள் முன்னே நிற்க வல்லனவோ? இவற்றுக்கெல்லாம் தாம் நெற்றிக்கை அன்றோ?’ என்று திரு நுதலில் அழகு வந்து நலிகிற படியை அருளிச் செய்கிறார்.
(நெற்றிக்கை –முந்தின வ்யூஹம் -மேலே உள்ளது அன்றோ-

நயந்தார்கட்கு நச்சு இலை கொல்--ஆசைப்பட்டார்க்கு நச்சுப் பூண்டோ?’ என்னுதல்;-அன்றிக்கே, ‘தன்னை ஆசைப் பட்டார்க்கு ஆசைப்பட வேண்டாதிருக்கிறதோ?’என்னுதல். –
நச்சினால் இல்லை–இல்லாமல் போனாயோ –-‘நச்சு மா மருந்தம்’ திருவாய். 3. 4. : 5. -என்னுமவர் அன்றோ இப்போது கண்ணாஞ்சுழலை இட்டு இவ்வார்த்தை சொல்லுகிறார்?
‘இன்ன மலையிலே உண்டு’ என்று அங்கே சென்று தேடி வருந்த வேண்டாமல், ஆசைப்படுவதுமாய் மேல் காற்றிலே காட்டப் பரிகாரமுமாம் மருந்தாயிற்று இது.மா மருந்தம்’
அபத்தியத்தையும் பொறுத்துக் கொள்ளும் மருந்தாதலின். ‘மா மருந்தம்’என்கிறது.
இவன் தலையிலே பழி இட்டுக் கைவிடும் மருந்து அன்று;
வான மா மலையில் தலையான மருந்து அன்றோ. இப்போது இவளுக்கு நச்சுப் பூண்டு ஆகிறது?

கொடியேன் உயிர் கோள் இழைத்துக் கோள் மன்னி ஆவி அடும்- என் உயிரினுடைய அழகை அழித்துக் கொள்கையிலே விருப்பத்தைச் செய்து முடியா நின்றது.-அன்றிக்கே,-‘அழகு பாதகமாம்படி பாவத்தைச் செய்த என்னுடைய உயிரை முடிக்கையிலே துணிந்து,
அதிலே விருப்பத்தை வைத்து, உயிரை முடியாநின்றது,’ என்றுமாம்.-தோல் புரை போகை அன்றிக்கே சத்தையை அழியா நின்றது-

————–

கோளிழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்
கோளிழைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோளிழை யாவுடைய கொழுஞ்சோதி வட்டங்கொல்? கண்ணன்
கோளிழை வாண் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே
.–7-7-8-

தலையான பேரை நெற்றிக்கையிலே (நெற்றியை பூசல் களத்தில் முதலில் )விட்டுக் காட்டிக் கொடுக்க ஒண்ணாது’ என்று, மேலே நலிந்தவை எல்லாம் சேர ஒரு முகமாய் வந்து நலிகிறபடி சொல்லுகிறது. அங்கும் இங்கும் சிதறிக் கிடந்த படையைப் பகைவர்கள் வந்து முடுகினவாறே ஒன்றாகத் திரட்டி ஒரு காலே தள்ளுவாரைப் போலே, தனித்தனியே நலிந்த அழகுகள் எல்லாம் திரள வந்து நலிகிறபடியைச் சொல்லுகிறாள்.

கோள் இழைத் தாமரையும்--சாதி ஒன்றாய் இருக்கச் செய்தேயும், ‘பொற்கால் தாமரை, நூற்கால் தாமரை’ என்பனவாகத் தாமரையில் சில பேதங்கள் உள அன்றோ?
1-அதில் நூற்கால் தாமரை என்னுதல்;
2-அன்றிக்கே, ‘கொள்கையிலே துணிந்திருக்கிற தாமரை’ என்னுதல்;
3-அன்றிக்கே, ‘தன்னழகே தனக்கு ஆபரணமாக வுடைய தாமரை என்னுதல்;
4-அன்றிக்கே, ‘ஒளியே ஆபரணமான தாமரை’ என்னுதல்.

ஆக,
1-நேத்திரமானவரும்
2-‘மூக்கு வலியோம்’ என்றவரும்,
3-வாய் சொல்லிப் போனவரும்,
4-‘கீழ் மேல் ஆயிற்றோ’ என்று வளைத்துக் கொடு போனவரும்,
5-வாய்க்கரையிலே இருந்தவரும்.
6-தாம் செவிப்பட்டவாறே போனவரும்,
7-‘இவற்றுக்கு நெற்றி நாம்’ என்று போனவரும்
எல்லாம் ஒரு முகமாய்த் திரண்டு வந்து’ என்றபடி.

கண் கோள் இழை வாண் முகமாய்--கண்ணனுடைய, தன்னழகே தனக்கு ஆபரணமாய் ஒளியை யுடைத்தான முகம் என்று ஒரு வியாஜத்தை இட்டு.-கொடியேன் உயிர் கொள்கின்றதே– வாழுங்காலத்தில் கெடும் படியான பாவத்தைச் செய்த என்னுடைய உயிரைக் கொள்கின்றது,-

———–

கொள்கின்ற கோள் இருளைச் சுகிர்ந்திட்ட கொழுஞ் சுருளின்
உள் கொண்ட நீல நன்னூல் தழைகொல்?அன்று மாயன் குழல்
விள்கின்ற பூந் தண் துழாய் விரை நாற வந்து என்னுயிரைக்
கள்கின்றவாறு அறியீர் அன்னைமீர்!கழறா நிற்றிரே.
–7-7-9-

இச் சமயத்துக்கு அன்றோ நமக்குப் பூவும் புழுகும் இட்டுச் சிரஸா வஹித்துக் கொடு போந்தது?’ என்று-திருக் குழற் கற்றையில் அழகு வந்து நலியா நின்றது’ என்கிறாள்.-திருக் குழலின் அழகுக்கு ஓர் உவமானம் சொல்லப் புக்கு, அழகுக்கு அது தான் நேர்கொடு நேர்
உபமானமாகப் போராமையாலே அதனைக் கிடந்து சிக்ஷிக்கிறது.

என்னுயிரைக்கள்கின்றவாறு அறியீர் -உங்களுக்கு ஒரு வ்யஸனம் இன்றிக்கே இருக்க என்னுடைய பிராணனை களவு காண்கிற படி அறிகிறிலிகோள் -களவாவது -இத்தலையில் இசைவு இன்றிக்கே இருக்க அபஹாரம் பண்ணுகை -இத்தலை அத்தலை யாயிற்று -அப்ராப்தன் களவு கண்டால் பரிஹரிக்கலாம் -ப்ராப்தரானார் களவு கண்டால் பரிஹரிக்க ஒண்ணாது -கைப்பட்ட வாறே தன்னது என்று பிரமாணம் காட்டுகையாலே-

அன்னைமீர் கழறா நிற்றிரே –-நீங்கள் வருந்தி இக் களவுக்கு நானும் பெரு நிலை நின்று கூட்டுப் பட்டேனாகப் பொடியா நின்றீர்கோள்.-இந்த உருவு வெளிப்பாட்டைத் தடை செய்தலும் வேண்டாவோ?-ஒரு நியமித்தல் நியமிக்கப்படுதல் என்னும் தன்மையேயோ வேண்டுவது பொடிகைக்கு?-கழறல் – நோவச் சொல்லுதல்.-

———–

நிற்றி முற்றத்துள் என்று நெரித் தகையராய் என்னை நீர்
சுற்றியும் சூழ்ந்தும் வைதிர் சுடர்ச்சோதி மணி நிறமாய்
முற்ற இம் மூவுலகும் விரிகின்ற சுடர்முடிக்கே
ஒற்றுமை கொண்டது உள்ளம் அன்னைமீர்!நசை என் நுங்கட்கே?
–7-7-10-

திருமகள் கேள்வனுங்கூட நம்மைத் தலை மேல் கொண்டு போருகிறது இவ் வவஸ்தைக்கு அன்றோ?’ என்று திருமுடியில் அழகு வந்து நலிகிறபடியைச் சொல்லுகிறாள்.-படுக்கையினின்றும் எழுந்திருந்து எல்லாரும் காணும்படி முற்றத்திலே நிற்கைக்கு மேற்படப் பழி இல்லையாக நினைத்திரா நின்றார்கள்.

சுடர்ச்சோதி மணி நிறமாய்முற்ற இம் மூவுலகும் விரிகின்ற சுடர்முடிக்கே-ஒற்றுமை கொண்டது உள்ளம்-ப்ராதேசிகமாக -நோக்குமவர்கள் இ றே இவர்கள்-நோக்குகிற விஷயம் தான் சுற்றும் சூழ்ந்து நலிய வல்ல படி -நிரவதிக தேஜஸ்ஸான ரத்னங்களின் ஒளியை உடைத்தாய் கொண்டு ஸமஸ்த லோகங்களையும் ஓர் இடம் ஒழியாமே வியாபிக்கிற தேஜஸ்ஸை யுடைய திரு அபிஷேகத்தில் என்னுடைய ஹ்ருதயம் ஒருப்பட்டது என்னுதல் -அங்கே விலை செய்து கொடுத்தது என்னுதல் -ஒற்றுமை -ஒருமை
அன்னைமீர்!நசை என் நுங்கட்கே?–ஆட்டியும் தூற்றியும் என்ன பயன் -பெற்று வளர்த்து போக யோக்யதை பிறக்கும் அளவும் ஹிதம் சொல்லிப் பின்னை பிறர் கையிலே கொடுத்து விடுமது ஒழிய ப்ராப்த யவ்வனைகள் ஆனாலும் பெற்ற ப்ராப்தியைக் கொண்டு ஹிதம் சொல்லி மீட்க்கத் தேடும் அத்தனையோ –

————

கட்குஅரிய பிரமன் சிவன் இந்திரன் என்ற இவர்க்கும்
கட்குஅரிய கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
உட்குஉடை ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் வல்லார்
உட்குஉடை வானவரோடு உட னாய் என்றும் மாயாரே.
–7-7-11-

அவர்கள் கண்களுக்கு அரியன் ஆனாற்போலே ஆயிற்று,-இவர் கண்களுக்குச் ‘சூழவுந் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றும்’ என்னும்படி பிரகாசித்தபடி.

சொல்லப் படுகின்ற பொருளை உள்ளபடி சொல்ல வல்ல ஆற்றலை யுடைத்தான ஆயிரத்திலும் வைத்திக் கொண்டு இப் பத்தையும் கற்க வல்லவர்கள்,
நித்தியானுபவம் பண்ணா நின்றாலும் மேன்மேலெனப் பகவத் குணங்களைப்
பூர்ணமாக அனுபவிக்கைக்குத் தகுதியான யோக்கிதை யுடைய நித்திய ஸூரிகளோடு ஒரு கோவையாய் உருவு வெளிப்பாட்டாலே நோவுபடாமல் அடியார்கள் குழாங்களை உடன் கூடி நித்தியானுபவம் பண்ணப் பெறுவர்.-என்றும் மாயாரே – மாய்கையும் உருவு வெளிப்பாடும் பரியாயம் என்று இருக்கிறார் காணும்.-அன்றிக்கே,-‘மாயார்’ என்பதற்கு, ‘பிரியார்’ என்னுதல்.-பகவத் அபசாரம் பாகவத அபசாரம் உண்டானால் வருமது போல அன்றே, –
பகவானுடைய அங்கீகாரம் உண்டாய் அது நிலை நில்லாமையால் படும் கிலேசம்? –
பிரளயம் கோத்தாற்போலே, கண்ணைக் கண் கோத்து அன்றோ கிடக்கிறது?
தம்முடைய கண் அவன் கண் கோத்து கிடந்தது -என்றபடி -ரஸோக்தி -முகமே இப்படி படுத்திற்றே –-சூழவும் – இவை எல்லாம் அவன் கழுத்துக்கு மேலே படுத்தின கிலேசம் அன்றோ?- மனஸ் சகாயம் இல்லாமல் -செய்து அருளினான் -என்றவாறு-

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –