திருமாலை அறியாதார் திருமாலை அறியாதவர் ஆவர்–
மாலை யுற்ற கடல் கிடந்தவன் வண்டு கிண்டு நறும் துழாய்
மாலை யுற்ற வரை பெரும் திரு மார்வனை மலர் கண்ணனை
மாலை உற்றுஎழுந்து ஆடி பாடி திரிந்து அரங்கன் எம்மானுக்கே
மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை யுற்றது என் நெஞ்சமே– 2-8-ஸ்வ ஸ்பர்சத்தாலே அலை எறிகிற திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிறவன்-வண்டுகள் நெருங்கி இருக்கிற செவ்வித் திருத் துழாய் மாலை சேர்ந்து -வரை போலே இருக்கிற பெரும் திரு மார்வை உடையராய் –-மை போல் நெடு வரைவாய்த் தாழும் அருவி போல் தார் கிடப்ப -என்னக் கடவது இறே-செவ்வித் தாமரைப் பூ போலே மலர்ந்த திருக் கண்களை உடையவரை-பக்தியை உடையராய் இருந்த இடத்திலே இருக்க ஒட்டாமையாலே எழுந்து ஆடுவது பாடுவதாய் – ப்ரீதி பிரேரிக்க இருக்க மாட்டாதே சஞ்சரித்து-ஸ்ரீ கோயிலிலே ஸூலபரான படியைக் காட்டி என்னை எழுதிக் கொண்ட ஸ்ரீ பெரிய பெருமாளுக்கேv
பக்தி கார்யமான பித்தேறித் திரியும் ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய ஸ்ரீ வைஷ்ணவ லஷ்மிக்கு பித்தேறா நின்றது -என்கிறார் –
மஞ்சுலாம் சோலை வண்டறை மா நீர் மங்கையார் வாள் கலிகன்றி
செஞ்சொலால் எடுத்த தெய்வ நன் மாலை யிவை கொண்டு சிக்கெனத் தொண்டீர்
துஞ்சும் போது அழைமின் துயர் வரில் நினைமின் துயர் இலீர் சொல்லிலும் நன்றாம்
நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராயணா என்னும் நாமம் —10-அதிக்ருத அதிகாரமாய் -சமஸ்க்ருதமாய் -தெரியாத சப்தங்களாலே சொன்ன அர்த்தங்களை வ்யக்தமாக எல்லார்க்கும் தெரியும்படி செவ்விய சொல்லால் சொன்ன-தெய்வ நன் மாலை – அப்ராக்ருதமாய் – கேட்டார் ஆரார்கள் செவிக்கு இனிய செஞ்சொலே -10-6-11-)-என்று நித்ய ஸூரிகள் கேட்டு அனுபவிக்கலாம் படி இருக்கிற மாலை தொடை-
யானே தவம் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
யானே தவம் உடையேன் எம்பெருமான் -யானே
இரும் தமிழ் நன்மாலை இணை யடிக்கே சொன்னேன்
பெரும் தமிழன் அல்லேன் பெரிது-74-வேத நன்மாலையில் வாசி -சர்வாதிகாரம் –அந்த தப பலமான லஷண லஷ்யங்களிலே குறைவற்று இருக்கும் பெருமையை யுடைத்தாய் –
சர்வாதிகாரமாய் -அத்யந்த விலஷணமான சப்த சந்தர்ப்பங்களையும் யுடைய
விலஷணமான தமிழாகிற மாலையைச் சேர்த்தி அழகை யுடைத்தான தேவர் திருவடிகளுக்கே சொல்லப் பெற்றேன் ஆனேன் –யாவர் நிகர் அகல் வானத்தே -திருவாய் -4-5-8–-நித்ய முக்தரும் அடைவு கெட்டுச் சொல்லுவார்கள் –நானும் அடைவு கெட்டுச் சொல்லுவேன்-என் பிரபந்தம் அடைவு பட்டு இருக்கை-அவர்களில் ஏற்றம் –ஏதத் சாம காயன் நாஸ்தே -தை ப்ருகு -10-5- -இங்கே இருக்க யுண்டானபடி –
—
பாலகன் என்று பரிபவம் செய்யேல் பண்டு ஒரு நாள்-
ஆலின் இலை வளர்ந்த சிறுக்கன் அவன் இவன்
மேல் எழப் பாய்ந்து பிடித்து கொள்ளும் வெகுளுமேல்
மாலை மதியாதே மா மதீ மகிழ்ந்து ஓடி வா -1-4 7- –இப்படி பெரியனான அவனை(மால் -வியாமோஹம் -பெருமை -கறுமை )-சிறியன் என்று பரிச் சேதியாதே–பெருமையை உடைய சந்த்ரனே –-உன் பெருமைக்கு ஈடாக – இவன் நம்மை ஆதரித்து அழைக்கப் பெற்றோமே -என்னும் உகப்பு தோற்ற ஓடி வா –
அன்னமும் மீன் உருவுமாய் ஆளரியும் குறளும் ஆமையும் ஆனவனே ஆயர்கள் நாயகனே
என்ன வலம் களைவாய் ஆடுக செங்கீரை யேழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுக என்று
அன்ன நடை மடவாள் யசோதை உகந்த பரிசு ஆன புகழ்ப் புதுவைப் பட்டன் உரைத்த தமிழ்
இன்னிசை மாலைகள் இப்பத்தும் வல்லார் உலகில் எண் திசையும் புகழ் மிக்கு இன்பம் அது எய்துவரே -1 5-11 –ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு நிர்வாகரான ஸ்ரீ ஆழ்வார் அருளி செய்த -திராவிட ரூபமாய் –
இனியதான இசையோடு கூடி இருந்துள்ள -தொடைகளான இப் பத்தையும் -அப்யசிக்க வல்லவர்கள் –
தெருவின் கண் நின்று இள ஆய்ச்சிமார்களை தீமை செய்யாதே
மருவும் தமநகமும் சீர் மாலை மணம் கமழ்கின்ற
புருவம் கரும் குழல் நெற்றி பொலிந்த முகில் கன்று போலே
உருவம் அழகிய நம்பி உகந்து இவை சூட்ட நீ வாராய் -2 7-4 –மருவும் தமநகமும் கலந்து கட்டின அழகிய மாலைகள் ஆனவை பரிமளம் கமழா நின்றன-உன் திருக் குழலிலே சேரத் தக்க மணம் பாழே போகா நின்றது என்கை-
செண்பக மல்லிகையோடு செங்கழுநீர் இருவாட்சி
எண்பகர் பூவும் கொணர்ந்தேன் இன்று இவை சூட்ட வா என்று
மண்பகர் கொண்டானை ஆய்ச்சி மகிழ்ந்து உரை செய்த இம் மாலை
பண்பகர் வில்லிபுத்தூர் கோன் பட்டார் பிரான் சொன்ன பத்தே – 2-7 10-யாரேனும் ஒருவர் ஏதேனும் ஒன்றை சொல்லிலும் பண்ணிலே சேரும்படி சொல்லா நிற்கும்-ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு நிர்வாஹரான ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செய்த-இம் மாலையும் ஒரு பத்தே -என்று இதனுடைய ஸ்லாக்கியதையை சொல்லுகிறது –இதுக்கு ஒரு பலம் சொல்லாதே இத்தை ஸ்லாகித்து விட்டது இதனுடைய ரச அனுபவம் தானே இதுக்கு பலம் என்று தோற்றுகைக்காக –
போதமர் செல்வக் கொழுந்து புணர் திரு வெள்ளறையானை
மாதர்க்கு உயர்ந்த யசோதை மகன் தன்னைக் காப்பிட்ட மாற்றம்
வேதப் பயன் கொள்ள வல்ல விட்டு சித்தன் சொன்ன மாலை
பாதப் பயன் கொள்ள வல்ல பத்தர் உள்ளார் வினை போமே -2 8-10 –பகவத் விஷயத்தில் மங்களா சாசனம் பண்ணுகையே வேத தாத்பர்யம் என்று அறிந்து –கைக் கொள்ள வல்ல ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செய்த மாலையான இத் திருமொழியில் –பாட்டுகள் தோறும் பின்னடியில் சொன்ன பிரயோஜனத்தை கைக் கொள்ள வல்ல பக்திமான்களாய் உள்ளவர்களுடைய மங்களா சாசன விரோதியாய் உள்ள பாபம் தன்னடையே விட்டு போம் –
காரார் மேனித் நிறத்து எம்பிரானை கடி கமழ் பூம் குழல் ஆய்ச்சி
ஆரா இன்னமுது உண்ண தருவன் நான் அம்மம் தாரேன் என்ற மாற்றம்
பாரார் தொல் புகழான் புதுவை மன்னன் பட்டர் பிரான் சொன்ன பாடல்
ஏரார் இன்னிசை மாலை வல்லார் இருடீகேசன் அடியாரே -3-1-11- –இயல் அழகால் மிக்கு -அதுக்கு மேலே இனிய இசையோடு கூடி இருந்து உள்ள சந்தர்பத்தை சாபிப்ராயமாக வல்லவர்கள்-இந்திரியங்களை பட்டி புகாமல் ஸ்வரூப அநுரூபமாக நடக்கும்படி நியமிக்கும் அவனுக்கு
நித்ய கிங்கராய் பெறுவர்-
என்றும் எனக்கு இனியானை என் மணி வண்ணனைக்
கன்றின் பின் போக்கினேன் என்ற யசோதை கழறிய
பொன் திகழ் மாடப் புதுவையர் கோன் பட்டன் சொல்
இன் தமிழ் மாலைகள் வல்லவர்க்கு இடர் இல்லையே -3 2-10 –ஸ்ரீ வில்லிபுத்தூரில் உள்ளவர்களுக்கு நிர்வாஹரான ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செய்த சப்தார்தங்களினுடைய ரசத்தை உடைத்தான -தமிழ் தொடைகளான இப்பத்தை சாபிப்ராயமாக வல்லவர்களுக்கு ஸ்ரீ பகவத் விஸ்லேஷ துக்கம் இல்லை
வலம் காதில் மேல் தோன்றிப் பூ அணிந்து மல்லிகை வன மாலை மௌவல் மாலை
சிலிங்காரத்தால் குழல் தாழ விட்டு தீம் குழல் வாய் மடுத்தூதி ஊதி
அலங்காரத்தால் வரும் மாயப் பிள்ளை அழகு கண்டு என் மகள் ஆசைப் பட்டு
விலங்கி நில்லாது எதிர் நின்று கண்டீர் வெள் வளை கழன்று மெய் மெலிகின்றதே – 3-4-9-வலக் காதிலே செம் காந்தள் பூவை அலங்காரமாக சாத்தி –இடக் காதுக்கு ஒன்றும் சொல்லாமையாலே –
ஒரு காதுக்கு சாத்திக் கொண்டு வருகிற இது தானும் ஓர் அழகாக சாத்திக் கொண்டு வந்தான் -என்னுதல்-ஒரு காதுக்கு சாத்தின அளவில் மல்லிகை மாலையை காண்கையாலே-அத்தை மறந்து இத்தை சாத்தி விட்டான் -என்னுதல்-வனம் -என்கிற இத்தை மல்லிகையோடு சேர்த்து -காட்டு மல்லிகை -என்னுதல்-அன்றிக்கே-வனம் என்று –வனப்பத்தை உடைத்தாய் -அழகாய் -மல்லிகையால் உண்டான அழகிய மாலை -என்னுதல்-மௌவல் மாலை-மௌவலாவது -மல்லிகையின் அவாந்தர பேதம்
பூவை காயா என்னும் இடத்தில் பூவை யாவது காயாவின் அவாந்தர பேதம் ஆனால் போலே
மௌவல் மாலை என்று இங்கும் அந்த வனப்பு கூட்டிச் சொல்லவுமாம்-கீழ் –அணிந்து -என்றதை-
இங்கும் கூட்டி இம் மாலைகளை அணிந்து என்று சொல்லக் கடவது-இவை தான் திரு மார்புக்கு அலங்காரமாக சாத்துமவை இறே-சிலிங்காரத்தால் குழல் தாழ விட்டு –சிலிங்காரம் -சிருங்காரம் -அலங்காரம் என்றபடி-இத்தால் திருக் குழல் பணியாக சாத்தும் பூம் தொடைகளை சொல்லுகிறது
விண்ணின் மீது அமரர்கள் விரும்பி தொழ மிறைத்து ஆயர்பாடியிலே வீதி யூடே
கண்ணன் காலிப் பின்னே எழுந்து அருள கண்டு இள ஆய்க் கன்னிமார் காமுற்ற
வண்ண வண்டு அமர் பொழில் புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்
பண்ணின்பம் வரப் பாடும் பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே -3- 4-10 – ஸ்ரீ வில்லிபுத்தூரில் உள்ளார்க்கு நிர்வாஹராய்-அரவத்தமளிப் படியே –-ஸ்ரீ சர்வேஸ்வரனை எப்போதும் தம்முடைய திரு உள்ளத்தில் வைத்துக் கொண்டு இருக்கையாலே –-ஸ்ரீ விஷ்ணு சித்தர் -என்னும் திரு நாமத்தை உடையரான-ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செய்த மாலையான இப்பத்தையும் –
அரவில் பள்ளி கொண்டு அரவம் துரந்திட்டு அரவப் பகை ஊர்தி அவனுடைய
குரவில் கொடி முல்லைகள் நின்று உறங்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடை மேல்
திருவில் பொலி மறை வாணர் புத்தூர் திகழ பட்டார் பிரான் சொன்ன மாலை பத்தும்
பரவும் மனம் நன்குடை பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே -3- 5-11 –ஸ்ரீ வில்லி புத்தூரிலே சர்வோத்தரராய்க் கொண்டு -விளங்கா நின்றுள்ள ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செய்த சப்த சந்தர்ப்பமான இப் பத்தையும்–
நாவலம் பெரிய தீவினில் வாழு நங்கைமீர்கள் இதோர் அற்புதம் கேளீர்
தூவலம் புரி உடைய திருமால் தூய வாயில் குழலோசை வழியே
கோவலர் சிறுமியர் இளம் கொங்கை குதுகுலிப்ப வுடல் உள் அவிழ்ந்து எங்கும்
காவலும் கடந்து கயிறு மாலையாகி வந்து கவிழ்ந்து நின்றனரே -3 6-1 – –கயிறு மாலையாகி வந்து –
கயிற்றிலே ஒழுங்கு பட சேர்த்த மாலைகள் போலே நிரை நிரையாக வந்து –இவனைச் சூழ்ந்து கொண்டு நின்றார்கள்-அன்றிக்கே – குழலோசை வழியே வந்து -இவனைக் கண்டவாறே -லஜ்ஜித்து –
கவிழ்தலை இட்டு -( சூழ்ந்து )-நின்றார்கள் என்னுதல் -எதிர் செறிக்க மாட்டாமல் கவிழ்தலை இட்டு நின்றார்கள் -என்னுதல்-
ஞாலம் முற்று உண்டு ஆல் இலை துயில் நாராயணனுக்கு இவள்
மாலதாகி மகிழ்ந்தனள் என்று தாயுரை செய்ததனைக்
கோலமார் பொழில் சூழ் புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்ன
மாலை பத்தும் வல்லார்க்கு இல்லை வரு துயரே -3 7-11 –ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செய்த –
சந்தர்ப்பமாய் ஸ்லாக்யமாய் இருந்துள்ள பத்துப் பாட்டையும் சாபிப்ராயமாக அனுசந்திக்க வல்லார்களுக்கு ஸ்ரீ பகவத அனுபவாதிகளுக்கு விரோதியாய் வருவதொரு துக்கம் இல்லை-
அல்லியம்பூ மலர்க் கோதாய் அடி பணிந்தேன் விண்ணப்பம்
சொல்லுகேன் கேட்டருளாய் துணை மலர்க் கண் மடமானே
எல்லியம்போது இனிதிருத்தல் இருந்தது ஓர் இட வகையில்
மல்லிகை மா மாலை கொண்டு அங்கு பார்த்ததும் ஓர் அடையாளம் –3-10-2-எல்லியம்போது-அம் எல்லிப் போது – இனிதிருத்தல் இருந்தது ஓர் இட வகையில் -அழகிய-ஸூக அனுபவத்துக்கு ஏகாந்தமான
காலம் என்பதால் அம் காலம்– இராத்திரி வேளையிலே- – இனிமையான இருப்பாக இருந்ததான ஓர் இடத்திலே-மல்லிகை மா மாலை கொண்டு அங்கு பார்த்ததும் ஓர் அடையாளம் — மல்லிகைப் பூவினால் தொடுக்கப் பட்ட சிறந்த மாலையினால் நீர் ஸ்ரீ ராமபிரானைக் கட்டியதும் ஓர் அடையாளம் –வனவாசம் பற்றி இன்னும் அருளிச் செய்யவில்லை என்பதால் இது திரு அயோத்யையில் நிகழ்ந்ததாகக் கொள்வதே பொருத்தம் –
கரிய முகல் புரை மேனி மாயனை கண்ட சுவடு உரைத்து
புரவி முகம் செய்து செந்நெல் ஓங்கி விளை கழனி புதுவை
திருவில் பொலி மறை வாணன் பட்டர் பிரான் சொன்ன மாலை பத்தும்
பரவு மனம் உடை பத்தர் உள்ளார் பரமன் அடி சேர்வார்களே -4- 1-10 –வேதத்துக்கு நிர்வாஹரான
ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செய்த மாலையான இப் பத்தையும் -ப்ரீதி பர வசராய் கொண்டு
அடைவு கெடப் பேசும் மனசை உடைய பக்தராய் உள்ளவர்கள் -காண்கைக்கு தேட வேண்டாதே -நித்ய அனுபவம் பண்ணலாம் படி சர்வ ஸ்மாத் பரனான அவனுடைய திருவடிகளை சேரப் பெறுவர்கள்.
எட்டுத் திசையும் எண் நிறந்த பெரும் தேவிமார்
விட்டு விளங்க வீற்று இருந்த விமலன் மலை
பட்டிப் பிடிகள் பகடு உறிஞ்சி சென்று மாலை வாய்த்
தெட்டித் திளைக்கும் தென் திரு மால் இரும் சோலையே – 4-2 -10-மாலை வாய்த்-ராத்திரி இடத்திலே-அந்த சம்ஸ்லேஷ ரசம் முற்றிக் கனியா நிற்கும்-இப்படி இருந்துள்ள சிறப்பை உடைய திரு மால் இரும் சோலை -என்கை-
மன்னு நரகன் தன்னை சூழ் போகி வளைத்து எறிந்து
கன்னி மகளிர் தம்மை கவர்ந்த கடல் வண்ணன் மலை
புன்னை செருந்தியொடு புன வேங்கையும் கோங்கும் நின்று
பொன்னரி மாலைகள் சூழ் போகி மால் இரும் சோலை அதுவே – 4-3- 3-பொற்கென்ற பூக்களை உடைத்தான புன்னையும் -செருந்தியும் – புனத்தில் உண்டான வேங்கையும் கோங்கும் ஒழுங்கு பட நின்று பூக்கையாலே – திருமலை ஆழ்வாருக்கு பொன்னரி மாலைகள் சுற்றினாலே போலே இருக்கும் பொழில்களை உடைய மால் இரும் சோலை -அதுவே -கடல் வண்ணன் மலை –(பொன்னரி-மரம் தங்கம் -பூக்கள் மணிகள் போல் )
செத்துப் போவதோர் போது நினைந்து செய்யும் செய்கைகள் தேவ பிரான் மேல்
பத்தராய் இறந்தார் பெரும் பேற்றை பாழித் தோள் விட்டு சித்தன் புத்தூர் கோன்
சித்தம் நன்கு ஒருங்கி திருமாலை செய்த மாலை இவை பத்தும் வல்லார்
சித்தம் நன்கு ஒருங்கி திருமால் மேல் சென்ற சிந்தை பெறுவர் தாமே –4- 5-10 –ஆசைவாய் சென்ற சிந்தையராகி -என்கிறபடியே கரண த்ரயமும் –புறம்பு போதல் -கலந்து இருத்தல் செய்யாதே ஸ்ரீ யபதி விஷயமாக செய்த இப் பத்துப் பாட்டையும் அப்யசித்தவர்கள் -ஸ்ரீ ஆழ்வாரைப் போலே – கரண த்ரயமும் ஒரு படிப்பட உடையராய் ஸ்ரீ யபதி பக்கல் சென்ற மனசை உடையர் ஆவார்கள்-
பொங்கு ஒலி கங்கை கரை மலி கண்டத்துறை புருடோத்தமன் அடி மேல்
வெங்கலி நலியா வில்லிபுத்தூர் கோன் விட்டு சித்தன் விருப்புற்று
தங்கிய வன்பால் செய் தமிழ் மாலை தங்கிய நா வுடையார்க்கு
கங்கையில் திரு மால் கழல் இணைக் கீழே குளித்து இருந்த கணக்காமே -4- 7-11 –நிலை நின்ற பிரேமத்தாலே செய்த தமிழ் தொடை யான இது-ஒருகாலும் நீங்காதே வர்திக்கும்படியான நாவை உடையவர்களுக்கு –அதாவது – எப்போதும் இத்தையே சொல்லிக் கொண்டு திரியும் அவர்களுக்கு -என்கை-கங்கையில் குளித்து -திரு மால் கழல் இணைக் கீழே-இருந்த கணக்காமே-அதாவது
இத் திருமொழி தங்கின நா உடையார்களுக்கு -ஏதேனும் ஓர் இடத்தில் இருந்தாலும் – ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளில் பிறப்பால் வந்த ஏற்றத்தை உடைய கங்கையிலே ஸ்நானம் பண்ணி – ஸ்ரீ திருக் கண்டம் கடி நகரிலே எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீயபதியானவன் திருவடிகளின் கீழே நிரந்தர சேவை பண்ணி -இருந்ததோடு பிரயோஜனம் ஒக்கும் -என்கை-பகவத் ப்ரீதி இறே அதுக்கு பிரயோஜனம் –-அது இவர்களுக்கும் ஒக்கும் என்றது ஆய்த்து–
பருவரங்கள் அவை பற்றி படை யாலித்து எழுந்தானை
செருவரங்க பொருது அழித்த திருவாளன் திருப்பதி மேல்
திருவரங்க தமிழ்மாலை விட்டு சித்தன் விரித்தன கொண்டு
இருவரங்கம் எரித்தானை ஏத்த வல்லார் அடியோமே -4 -8-10 –பாட்டு தோறும் திருவரங்கம் என்கிற திரு நாமத்தை உடைத்தான தமிழ்த் தொடையாக -ஸ்ரீ பெரியாழ்வார் விஸ்தரேண அருளிச் செய்த இப்பத்தையும் கொண்டு -மது கைடபர் களாகிற இவருடைய சரீரத்தையும் திரு வனந்த ஆழ்வானுடைய சுவாச உஷ்ணத்தாலே தக்தமாக்கி பொகட்டவனை-இத் திரு மொழியைக் கொண்டு இப்படி விரோதி நிரசன சீலரான ஸ்ரீ பெரிய பெருமாளை வாய் படைத்த பிரயோஜனம் பெரும் படி ஏத்த வல்லார்களுக்கு அடியாராய் உள்ளவர்கள் -நாங்கள் என்று தம்முடைய சம்பந்திகளையும் கூட்டிக் கொண்டு அருளிச் செய்கிறார் -இத்தால்-இத் திரு மொழியைக் கொண்டு ஸ்ரீ பெரிய பெருமாளை ஏத்துமவர்கள் விஷயத்தில் தமக்கு உண்டான பிரதிபத்தி விசேஷத்தை அருளிச் செய்தார் ஆய்த்து-
மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும்
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத்து அரவணைப் பள்ளியானே
வேயர் புகழ் வில்லி புத்தூர் மன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்
தூய மனத்தனராகி வல்லார் தூ மணி வண்ணனுக்கு ஆளர் தாமே – 4-10 -10-அனுபவத்துக்கும் –
மங்களா சாசனத்துக்கும் விரோதி ஆனவற்றை போக்கிக் கொள்ளுகைக்காக அருளிச் செய்த
சப்த சந்தர்ப்ப ரூபமான இப் பத்து பாட்டையும்
வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கு அப்பறை கொண்ட வாற்றை யணி புதுவை
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்–30-சங்கத் தமிழ் மாலை – குழாங்களாய்-என்னுமா போலே திரள் திரளாக அனுபவிக்க வேண்டும் பிரபந்தம் – பஞ்ச லஷம் குடியில் பெண்கள் திரள் திரளாக அனுபவித்த பிரபந்தம் இறே–பிராட்டி ஆண்டாள் ஆனால் போலே உபநிஷத் தமிழ் ஆனபடி –பாவனமான அளவன்றிக்கே போக்யமுமாய் இருக்கையும் தலையாலே சுமக்க வேண்டி இருக்கையும் –கோதை சொன்ன மாலை ––மாலையே கட்டின மாலை – மாலைக் கட்டின மாலை –அடுத்த பத்தியோடு இரண்டு தலையும் தாள் பூவும் நடுவே நாயகமுமாய் தொடுப்புண்ட மாலை–
கருப்பு வில் மலர்க்கணைக் காமவேளைக் கழலிணை பணிந்து அங்கு ஓர் கரி அலற
மருப்பினை யொசித்துப் புள் வாய் பிளந்த மணி வண்ணற்கு என்னை வகுத்திடு என்று
பொருப்பன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டு சித்தன் கோதை
விருப்புடை இன் தமிழ் மாலை வல்லார் விண்ணவர் கோன் அடி நண்ணுவரே-1-10-விருப்பம் அடியாகப் பிறந்த -பிராப்ய த்வரை விஞ்சி -அருளிச் செய்த இனிய தமிழ் தொடை வல்லார்கள்- சாத்விக அக்ரேசரான பெரியாழ்வார் வயிற்றிலே பிறந்து வைத்து-பகவல் லாபத்துக்காக மடல் எடுப்பரோபாதி-
காமன் காலில் விழ வேண்டும் படியான இவரைப் போல் அன்றிக்கே –-இப் பிரபந்தம் கற்றார்கள் -சம்சாரத்தை விட்டு நித்ய அநுபவம் பண்ணுகிற நித்ய ஸூரிகளோடே ஒரு கோவையாக –
வானவர்க்காவர் நற்கோவையே -4-2-11–திருவாய் மொழி -அனுபவிக்கப் பெறுவார்கள் –
கன்னியரோடு எங்கள் நம்பி கரியபிரான் விளையாட்டை
பொன்னிய மாடங்கள் சூழ்ந்த புதுவையர் கோன் பட்டன் கோதை
இன்னிசை யால் சொன்ன மாலை ஈரைந்தும் வல்லவர் தாம் போய்
மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கிருப்பாரே–3-10-இவ் விஷயத்தில் இவ்வளவான அவகாஹா நத்துக்கு அடி பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பு யாய்த்து –இன்னிசை யால் சொன்ன மாலை ஈரைந்தும் வல்லவர் தாம் போய்-–பாட்யே கேயே ச மதுரம் -பால -4-8--எங்கனம் சொல்லிலும் இன்பம் பயக்குமே –திருவாய் -7-9-11-மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கிருப்பாரே– நித்தியமான ஸ்ரீ வைகுண்டத்திலே போய் ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரன் உடன் கூட நித்ய அனுபவம் பண்ணப் பெறுவர்-
விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை வேல் கண் மடந்தை விரும்பி
கண்ணுற வென் கடல் வண்ணனைக் கூவு கரும் குயிலே என்ற மாற்றம்
பண்ணு நான் மறையோர் புதுவை மன்னன் பட்டர் பிரான் கோதை சொன்ன
நண்ணுற வாசக மாலை வல்லார் நமோ நாராயணாய என்பாரே–——5-11-யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று மீண்ட வேதம் போல் அன்றிக்கே-விஷயத்தை மாறுபாடுருவும் படி அருளிச் செய்த இத்தை அப்யசிக்க வல்லவர்கள்-நமோ நாராயணாய வென்று பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவார் பல்லாண்டே -என்று இறே தமப்பனார் வார்த்தை-இக்குடிக்காக உள்ளதோர் ஆசை இறே இது –மங்களா சாசனம் -அதுவே பலமாகப் பெறுவர்-
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்
வந்து இருந்து என்னை மகள் பேசி மந்திரத்து
மந்திரக் கோடி யுடுத்தி மண மாலை
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்–6-3-மண மாலை அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்- நாத்தனராய் -இதுக்கு எல்லாம் கடவாளாய் அபிமானித்த துர்க்கை யாய்த்து-மாலைகளும் மடியும் (கூறைப் புடைவையையும் ) சூட்டி ஒப்பித்தாள்–இவளுடைய ஸ்பர்சம் தானே ஓன்று தங்கி அவனோடு அணைந்தால் போலே இருக்கிறது காணும் இவளுக்கு–வேத மந்த்ரங்களால் பரிசுத்திக்கப் பட்ட கூறைப் புடைவையையும் தேன் ஒழுகும் மண மாலையையும் சித்தப் படுத்திக் கொண்டு – அவனோடு கூடப் பிறந்தவள் என்னைத் தொட்டு மண மாலை சூட்டப் பெற்றேன் காண் தோழி –
ஆயனுக்காக தான் கண்ட கனாவினை
வேயர் புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல்
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயு நன் மக்களைப் பெற்று மகிழ்வரே—6-11-அனுபவத்துக்கு பாசுரமிட்ட அத்தனை அல்லது நெஞ்சோடு கூட கவி பாடிற்று அல்லவாய்த்து –இவளோடு ஒத்த தரத்திலே பெண்கள் இத்தை அப்யசித்தார்கள் ஆகில் கிருஷ்ணனைப் போலே இருக்கும் வரனைப் பெறுவர்கள்–புருஷர்கள் அப்யசித்தார்கள் ஆகில் பெரியாழ்வாரைப் போலே பகவத் பிரவணரான புத்ரர்களைப் பெற்று ஹ்ருஷ்டராவார்கள் –ஆண்டாளுக்கும் உப லஷணம் – பகவத் பிரவணரான புத்ரர்கள் என்றது–மாயன் மணி வண்ணன் தாள் பணியும் மக்களைப் பெறுவார்களே –பெரியாழ்வார் -1-7-11- என்றார் இறே தாம் கை கண்டவர் ஆகையாலே –
கோங்கலரும் பொழில் மாலிரும் சோலையில் கொன்றைகள் மேல்
தூங்கு பொன் மலைகளோடு உடனே நின்று தூங்குகின்றேன்
பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலியும்
சாரங்க வில் நாண் ஒலியும் தலைப் பெய்வது எஞ்ஞான்று கொலோ –9-9-தாமச புருஷர்கள் புகுரும் தேசம் அன்று – சாத்விகர் இது கொண்டு கார்யம் கொள்ளார்கள்–பெரியாழ்வார் வயிற்றிலே பிறந்து பகவத் அர்ஹமான வஸ்து -இங்கனே இழந்து இருந்து கிலேசப் படுவதே –-கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா -12-4- என்றும்-மானிடர்வர்கு என்று பேச்சுப்படில் வாழகில்லேன் -1-5- அவனால் ஏற்றுக் கொள்ளப் படாமல் சம்சாரிகளுக்கும் பயன்படாமல் வீணாக போவதே –
வண்ணம் திரிவும் மனம் குழைவும் மானமிலாமையும் வாய் வெளுப்பும்
உண்ணல உறாமையும் உள் மெலிவும் ஓத வண்ணன் என்பான் ஒருவன்
தண்ணம் துழாய் எனும் மாலை கொண்டு சூட்டத் தணியும் பிலம்பன் தன்னை
பண்ணழியப் பலதேவன் வென்ற பாண்டி வடத்து என்னை யுய்த்திடுமின்–12-7-அவன் தான் இதர விசஜாதீயனாய் இருக்குமா போலே – அம்மாலையின் படியும் அத்தைக் கொடு வந்து ஸ்பர்சிக்க இது தணியும் –
மன்னு மதுரை தொடக்கமாக வண் துவாராபதி தன்னளவும்
தன்னைத் தமருய்த்துப் பெய்ய வேண்டித் தாழ் குழலாள் துணிந்த துணிவை
பொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டுச்சித் தன் கோதை
இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே –12-10-இனி தான் பண் மிக்கு -பாவ பந்தம் வழிந்து புறப்பட்ட சொல் என்று தோற்றி இருக்கிற வற்றை அப்யசிக்க வல்லார்கள் – தனக்கு கால் நடை தாராத தசையிலே- தேசிகரைப் பார்த்து- நீங்கள் என்னை கொடு போங்கோள்- என்ன வேண்டாதே – அவன் அனுமதிப்படியே- ஆதி வாஹிக குணம் நடத்த –-அர்ச்சிராதி மார்க்கத்தாலே போய்- ஸ்ரீ வைகுண்டத்திலே-அனுபவிக்கப் பெறுவர்-
கஞ்சைக் காய்ந்த கரு வில்லி கடைக் கண்ணி என்னும் சிறைக் கோலால்
நெஞ்சூடுருவ வேவுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை
அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் அவன் மார்வணிந்த வனமாலை
வஞ்சியாதே தருமாகில் மார்வில் கொணர்ந்து புரட்டீரே —13-3-ஒரு மாலை பெற வேணும் என்று அல்ல இவளுக்கு நிர்பந்தம் –அவனும் மால் தானே-அவன் மார்விலே ஆசைப்பட்டு இட்ட மாலை வேணும் என்றதாய்த்து-
அனுங்க வென்னைப் பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்துண்ணும்
குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே
கணங்களோடு மின் மேகம் கலந்தால் போலே வனமாலை
மினுங்க நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே--14-2-மின்னும் மேகமும் சேர்ந்தால் போலே யாய்த்து ஸ்யாமமான திரு மேனிக்கு பரபாகமாய் உஜ்ஜ்வலமான வனமாலை அசைந்து வரும்படியாக –
மாலையிடுவான் -மாலா காரர் -இவனுக்கு பவ்யனாய்த்து இறே இருப்பது-கர்ப்ப தாசர் -என்னுமா போலே – தானும் மாலா காரர் மகள் இறே – தான் இட்ட மாலையையும் சாத்திக் கொண்டு விளையாடுமே-இம்மாலை யிட்டால் விக்ருதராய் இருக்கும் திரு ஆய்ப்பாடியிலே காண்கை அன்றிக்கே கண்ட பெண்கள் மயங்கி விழுவார்கள் – ஸ்ரீ பிருந்தா வனத்திலே ஸ்வரை சஞ்சாரம் பண்ணி விளையாடக் கண்டோம் –
வெளிய சங்கு ஓன்று உடையானைப் பீதக வாடை யுடையானை
அளி நன்குடை திருமாலை ஆழியானைக் கண்டீரே
களி வண்டும் கலந்தால் போல் கமழ் பூங்குழல்கள் தடந்தோள் மேல்
மிளிர நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே —14-8-அக வாயில் தண்ணளி மிக்கு இருக்கும்
அதுக்கு நிபந்தனம் பிராட்டியோட்டை வாசனம்-பாஞ்ச ஜன்யத்தோடு சொல்லில் கண் எச்சில் படும் என்று பிரித்து அனுபவிக்கிறாள் –-கூராழி வெண் சங்கு ஏந்தி-திருவாய் -6-9-1- என்றும்-சங்கு சக்கரங்கள் -திருவாய் -7-2-1-என்பது போலே சேர்த்துச் சொல்லாமல் பிரித்து அனுபவிக்கிறாள் –
வாயோர் ஈர் ரைஞ்சூறு துதங்கள் ஆர்ந்த வளை வுடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ
வீயாத மலர் சென்னி விதானமே போல் மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ்
காயாம்பூ மலர் பிறங்கல் அன்ன மாலைக் கடி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
மாயோனை மணத் தூணே பற்றி நின்று என் வாயார என்று கொலோ வாழ்த்தும் நாளே ?–1-2-காயாவின் அழகிய பூவாலே செய்யப்பட மாலை போலே இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனை-அரணாகப் போரும் மதிளை யுடைய ஸ்ரீ கோயிலிலே-அப்படி பரிவனான ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிற-சமயோ போதிதஸ் ஸ்ரீ மான் -என்னும் படி கண் வளர்ந்து அருளுகிற ஆச்சர்ய பூதனை-
மாவினை வாய் பிளந்து உகந்த மாலை வேலை வண்ணனை என் கண்ணனை வன் குன்றம் ஏந்தி
ஆவினை அன்று உய்ய கொண்ட ஆயர் ஏற்றை அமரர்கள் தம் தலைவனை அம் தமிழ் இன்ப
பாவினை அவ் வடமொழியை பற்றற்றார்கள் பயில் அரங்கத்து அரவு அணை பள்ளி கொள்ளும்
கோவினை நாவுற வழுத்தி என் தன் கைகள் கொய்ம் மலர் தூ என்று கொலோ கூப்பும் நாளே—-1-4-கேசியை அநாயாசேன பிளந்து – ஆஸ்ரித விரோதி போகப் பெற்றோம் -என்று உகந்த ஆஸ்ரீத-வ்யாமுக்தனை-
திடர் விளங்கு கரை பொன்னி நடுவு பாட்டு திரு வரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
கடல் விளங்கு கரு மேனி அம்மான் தன்னை கண்ணார கண்டு உகக்கும் காதல் தன்னால்
குடை விளங்கு விறல் தானை கொற்ற ஒள் வாள் கூடலர் கோன் கொடை குலசேகரன் சொல் செய்த
நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே—1-11-உள்ளில் அர்த்தத்தில் இழிய வேண்டாதே – பதங்கள் சேர்ந்த சேர்த்திகள் பார்க்க வேண்டாதே –
இது தானே ஆகர்ஷகமாய் இருக்கிற தமிழ்த் தொடை பத்தும் வல்லார்-சீலாதி குண பூரணராய் –
சர்வ ஸ்வாமிகளாய்- வத்சலராய் இருக்கும் -ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளின் கீழே யனுபவிக்க ஆசைப் பட்டால் போலே கிட்டப் பெறுவார்கள் –
தேட்டரும் திறல் தேனினை தென் அரங்கனை திரு மாது வாழ்
வாட்டமில் வனமாலை மார்வனை வாழ்த்தி மால் கொள் சிந்தையராய்
ஆட்ட மேவி அலர்ந்து அழைத்து அயர்வு எய்தும் மெய் அடியார்கள் தம்
ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயன் ஆவதே–2-1-ஸ்பர்ஹணீயமான ஸ்ரீ திருவரங்கத்திலே நித்ய வாஸம் பண்ணுமவனாய்-திரு மேனியின் ஸ்பர்சத்தாலே-ஒருக்காலைக்கு ஒரு காலை செவ்வி செவ்வி பெறுமாய்த்து இட்ட திருமாலை –வாழ்த்தி –வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு -என்கிறபடியே-அவளும் இவனும் சேர்ந்த சேர்த்திக்கு மங்களா சாசனம் பண்ணி-மால் கொள் சிந்தையராய்-பித்தேறின மனஸை உடையராய்
மாலை யுற்ற கடல் கிடந்தவன் வண்டு கிண்டு நறும் துழாய்
மாலை யுற்ற வரை பெரும் திரு மார்வனை மலர் கண்ணனை
மாலை உற்றுஎழுந்து ஆடி பாடி திரிந்து அரங்கன் எம்மானுக்கே
மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை யுற்றது என் நெஞ்சமே– 2-8-ஸ்வ ஸ்பர்சத்தாலே அலை எறிகிற திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிறவன்-வண்டுகள் நெருங்கி இருக்கிற செவ்வித் திருத் துழாய் மாலை சேர்ந்து -வரை போலே இருக்கிற பெரும் திரு மார்வை உடையராய் –-மை போல் நெடு வரைவாய்த் தாழும் அருவி போல் தார் கிடப்ப -என்னக் கடவது இறே-செவ்வித் தாமரைப் பூ போலே மலர்ந்த திருக் கண்களை உடையவரை-பக்தியை உடையராய் இருந்த இடத்திலே இருக்க ஒட்டாமையாலே எழுந்து ஆடுவது பாடுவதாய் – ப்ரீதி பிரேரிக்க இருக்க மாட்டாதே சஞ்சரித்து-ஸ்ரீ கோயிலிலே ஸூலபரான படியைக் காட்டி என்னை எழுதிக் கொண்ட ஸ்ரீ பெரிய பெருமாளுக்கேv
பக்தி கார்யமான பித்தேறித் திரியும் ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய ஸ்ரீ வைஷ்ணவ லஷ்மிக்கு பித்தேறா நின்றது -என்கிறார் –
அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய் அடியார்கள் தம்
எல்லையில் அடிமை திறத்தினில் என்றும் மேவு மனத்தானாம்
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழி கோன் குலசேகரன்
சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர் தொண்டர் தொண்டர்கள் ஆவரே 2-10-இனிய சப்தங்களை உடைய தமித் தொடை வல்லவர்கள்-இவர் ஆசைப் பட்டுப் போந்த பாகவத சேஷத்வ பர்யந்தம் ஆகிற புருஷார்த்தத்தை லபிப்பார்கள் –-
நூலினேர் இடையார் திறத்தே நிற்கும்
ஞாலம் தன்னோடும் கூடுவது இல்லை யான்
ஆலியா அழையா அரங்கா! என்று
மால் எழுந்து ஒழிந்தேன் என் தன் மாலுக்கே 3-2..-தேநத்தேதம நு வ்ரதா-என்னுமா போலே
அவன் என் பக்கல் வ்யாமுக்தன் ஆன படி கண்டு நானும் பித்தேறினேன் –
மங்கல நல் வனமாலை மார்வில் இலங்க மயில் தழை பீலி சூடி
பொங்கிள வாடை அரையில் சாத்தி பூம் கொத்து காதில் புணர பெய்து
கொங்கு நறும் குழலார்களோடு குழைந்து குழல் இனிது ஊதி வந்தாய்
எங்களுக்கே ஒரு நாள் வந்தூத உன் குழலின் இன் இசை போதராதே– 6-9-மங்களம் என்று சொல்லப் பட்டவை எல்லாம் உடைத்தாய் –தர்ச நீயமுமாய் இருக்கிற வனமாலை-மை போல் நெடு வரைவாய் தாழும் அருவி போல் தார் கிடப்ப –என்னுமா போலே-திரு மார்விலே விளங்க-
அல்லி மலர் திரு மங்கை கேள்வன் தன்னை நயந்து இள ஆய்ச்சிமார்கள்
எல்லி பொழுதினில் ஏமத்தூடி எள்கி வுரைத்த வுரையதனை
கொல்லி நகர்க்கு இறை கூடல் கோமான் குலசேகரன் இன் இசையில் மேவி
சொல்லிய இன் தமிழ் மாலை பத்தும் சொல்ல வல்லார்க்கு இல்லை துன்பம் தானே– 6-10-பாட்யே கே யே ச மதுரம் –என்னும்படியான தமித் தொடை பத்தும்-
மல்லை மா நகர்க்கு இறையவன் தன்னை வான் செலுத்தி வந்து ஈங்கு அணை மாயத்து
எல்லையில் பிள்ளை செய்வன காணாத் தெய்வ தேவகி புலம்பிய புலம்பல்
கொல்லி காவலன் மாலடி முடி மேல் கோலமாம் குலசேகரன் சொன்ன
நல் இசை தமிழ் மாலை வல்லார்கள் நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே– 7-11-மாலடி முடி மேல் கோலமாம் குலசேகரன் சொன்ன ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளை தமக்கு முடி மேல் மாலையாக உடைய ஸ்ரீ பெருமாள்-அழகிய இசையோடு கூடின தமிழ்த் தொடை வல்லவர்கள்-இங்கே இருந்து அவதாரத்தில் ஏக தேசத்தை அனுபவிக்க ஆசைப்பட்டு அது கிடையாதே இருந்து புலம்பாதே
உபய விபூதி நாயகனை ஸ்ரீ பரம பதத்தில் நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள் –
மல்லை மா நகர்க்கு இறையவன் தன்னை வான் செலுத்தி வந்து ஈங்கு அணை மாயத்து
எல்லையில் பிள்ளை செய்வன காணாத் தெய்வ தேவகி புலம்பிய புலம்பல்
கொல்லி காவலன் மாலடி முடி மேல் கோலமாம் குலசேகரன் சொன்ன
நல் இசை தமிழ் மாலை வல்லார்கள் நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே– 7-11-அழகிய இசையோடு கூடின தமிழ்த் தொடை வல்லவர்கள்-இங்கே இருந்து அவதாரத்தில் ஏக தேசத்தை அனுபவிக்க ஆசைப்பட்டு அது கிடையாதே இருந்து புலம்பாதே-உபய விபூதி நாயகனை ஸ்ரீ பரம பதத்தில் நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள் –
கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் காகுத்தன்
தன் அடி மேல் தாலேலோ என்று உரைத்த தமிழ் மாலை
கொல் நவிலும் வேல் வலவன் குடை குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே— 8-11-ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனுடைய பால்ய அவஸ்தையில் ஸ்ரீ கௌசல்யார் சொன்ன பாசுரத்தை ஸ்ரீ திருக் கண்ணபுரத்திலே சொன்ன தமிழ் தொடை-ஸ்ரீ குலசேகரப் பெருமாள் அருளிச் செய்த-லஷணத்தால் குறைவற்ற இப்பத்தும் வல்லார்கள்
ஸ்ரீ திருத் தாயாராயும் அடியாராயும் அனுபவிக்கப் பெறுவார்கள் –
ஏரார்ந்த கரு நெடுமால் ராமனாய் வனம் புக்க வதனுக்கு ஆற்றா
தாரர்ந்த தடவரை தோள் தயரதன் தான் புலம்பிய அப் புலம்பல் தன்னை
கூரார்ந்த வேல் வலவன் கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
சீரார்ந்த தமிழ் மாலை இவை வல்லார் தீ நெறி கண் செல்லார் தாமே–9-11-–பாட்யேகேயேச மதுரம் -என்று இவை பூரணமான தமிழ் தொடை வல்லவர்கள் –பகவத் விஷயத்தை காற்கடைக் கொண்டு விஷய பிரவணர் ஆகார்கள் –
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள் திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று அது முதலா தன் உலகம் புக்கது
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள் கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–10-11–அழகிய இயலை உடைய தமிழ் மாலை பத்தும் வல்லார் – ஸ்ரீ பரமபதத்திலே விளங்கா நின்றுள்ள ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளைக் கிட்டப் பெறுவார் –
தாதுலாவு கொன்றை மாலை துன்னு செஞ்சடைச் சிவன்
நீதியால் வணங்கு பாத நின்மலா நிலாய சீர்
வேத வாணர் கீத வேள்வி நீதியான கேள்வியார்
நீதியால் வணங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே –9-தாது மிக்க கொன்றை மாலை என்ன -நெருங்கி சிவந்த ஜடை என்ன -இவற்றை உடைய ருத்ரன்-கொன்றை மாலையைச் சொல்லுகையாலே -போக ப்ரதானன் என்றும் – தீர்க்கத பாவாகையாலே செறிந்து ஸ்தான பாஹூள்யத்தாலே சிவந்து இருக்கிற ஜடையை உடையான் ஆகையாலே -அந்த போகம் தான் சாதித்து லபித்தது என்றும் சொல்லுகிறது –இத்தால் -போகமே புருஷார்த்தம் -அது தானே ஈஸ்வரனை ஆஸ்ரயித்து பெற வேணும் என்கிறது-
தூய்மை யோகமாயினாய் துழாய் அலங்கல் மலையாய்
ஆமையாகி ஆழ் கடல் துயின்ற வாதிதேவ நின்
நாமதேயமின்னதென்ன வல்லமல்ல வாகிலும்
சாமவேத கீதனாய சக்ர பாணி அல்லையே –14-சர்வேஸ்வர சிஹ்னமான திருத் துழாய் மாலையாலே அலங்க்ர்தன் ஆனவனே-திருத் துழாய் -நாதத்வ சிஹ்னம் ஆகையாலும் -போஹ்யத்வ சிஹ்னம் ஆகையாலும்-ப்ராப்ய பூதனும் நீயே என்கை
கடம் கலந்த வன் கரி மருப்பு ஒசித்து ஓர் பொய்கை வாய்
விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே
குடம் கலந்த கூத்தனாய கொண்டல் வண்ண தண் துழாய்
வடம் கலந்த மாலை மார்ப காலநேமி காலனே –38–இப்படி ஷூத்ரரான இடையருடைய சேஷ்டிதத்திலே இழிந்தவன் -சர்வ சேஷியாய் –-அவாக்ய அநாதர -என்கிற பூரணன் கிடீர் என்கிறார்
ஐஸ்வர்ய ஸூ சகமான திருத் துழாய் வடத்தோடும் வனமாலை யோடும் கூடின திரு மார்வை உடையவனே –சத்தா ப்ரயுக்தமான சக்தி யதிசயத்தையும் -அவயவ சோபையையும் -அலங்கார
சோபையையும் அனுபவிக்கிறார்-
முத்திறத்து வாணியத்தில் இரண்டில் ஓன்றும் நீசர்கள்
மத்தராய் மயக்குகின்றது இட்டு அதில் இறந்து போந்து
எத்திறத்தும் உய்வதோர் உபாயம் இல்லை யுய்குறில்
தொத்து இறுத்த தண் துழாய் நன் மாலை வாழ்த்தி வாழுமினோ –68-சர்வேஸ்வரத்வ ஸூ சுகமாய் -தொடை செறிந்து ஸ்ரமஹரமாய் இருந்துள்ள திருத் துழாயாலே அலங்க்ர்தனாய் -சௌலப்யாதி கல்யாண குண உக்தனாய் இருக்கிற சர்வேஸ்வரனை ஆஸ்ரயித்து வாழும் கோள்-நிகரில் புகழாய் உலகம் மூன்று உடையாய் -இத்யாதிகளைச் சொல்லிப் புகழ்ந்து யாவதாத்மபாவி ஆநந்த நிர்பரராய் இரும் கோள்–ஏஷஹ் யேவா நந்த யாதி -என்னக் கடவது இறே
அறிந்து அறிந்து வாமனன் அடி இணை வணங்கினால்
செறிந்து எழுந்த ஞானமோடு செல்வமும் சிறந்திடும்
மறிந்து எழுந்த தெள் திரையுள் மன்னு மாலை வாழ்த்தினால்
பறிந்து எழுந்து தீ வினைகள் பற்று அறுதல் பான்மையே –74-பரம்பி கிளர்ந்து தெளிந்த திரைகளை உடைய ஷீராப்தியிலே நித்ய வாஸம் பண்ணுகிற ஆஸ்ரித வத்ஸலனுடைய வாத்ஸல்ய வாசியான திரு நாமத்தை வாயாலே-சொன்னால் –
சலம் கலந்த செஞ்சடைக் கறுத்த கண்டன் வெண்டலைப்
புலன் கலங்க வுண்ட பாதகத்தன் வன் துயர் கெட
அலங்கல் மார்பில் வாச நீர் கொடுத்தவன் அடுத்த சீர்
நலம் கொள் மாலை நண்ணும் வண்ணம் எண்ணு வாழி நெஞ்சமே -113–ஸ்வரூப அநு பந்தியான கல்யாண குணங்களால் வந்த வைலஷண்யத்தை உடைய சர்வேஸ்வரனை-நண்ணும் வண்ணம் எண்ணு –இப்படி துர்மாநியானவனுடைய பாதகத்தைப் போக்கினவன் –அநந்ய பிரயோஜனரான நம்முடைய துர்மாநாதிகளைப் போக்குவிக்கக் குறை இல்லை –நீ அவனை ப்ராபிக்கும் பிரகாரம் அவன் இரக்கமே என்று புத்தி பண்ணி இரு-அதாகிறது –அவனை நம் தலையாலே ப்ராபிக்க விரகு இல்லை –
அவன் தானே இரங்கி தன்னைத் தந்து அருள வேணும் என்று வ்யவஸ்திதனாய் இருக்கை=
சொல்லினும் தொழிற் கணும் தொடக்கு அறாத அன்பினும்
அல்லு நன் பகலினோடு ஆன மாலை காலையும்
அல்லி நாண் மலர்க் கிழத்தி நாத பாத போதினைப்
புல்லி யுள்ளம் வீள்விலாது பூண்டு மீண்டதில்லையே -118-தமோ அபிபூதி யோடும் -விஷயாந்தர ப்ராவண்யத்தோடும் -செல்லக் கடவ ராத்ரியும் – தேக யாத்ரா சேஷமாக போது போக்கக் கடவ அஹஸ்ஸூம் – ராத்ரியோடே கூடின ஸாயம் சந்தையும் – அஹஸ் ஸோ டே கூடின ப்ராதஸ் சந்தையும் – கரண த்ரயங்களும் ஏக விஷயமானாப் போலே – சர்வ காலத்துக்கும் விஷயம் அதுவே யாகை –
பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான் பெரியதோர் இடும்பை பூண்டு
உண்டிராக் கிடக்கும் போது வுடலுக்கே கரைந்து நைந்து
தண் துழாய் மாலை மார்பன் தமர்களாய்ப் பாடி யாடித்
தொண்டு பூண்டு அமுதம் உண்ணாத் தொழும்பர் சோறு உகக்குமாறே–5—தண் துழாய் மாலை மார்பன் –சர்வேஸ்வரத்வ ஸூசுகமான திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதமானவன் –இவர்கள் பற்றின துராரராத விஷயங்கள் போல் அன்றியே தன் வெறுமையை முன்னிட்டு என்னைப் பற்றுமவனை ரஷிக்க கடவேன் என்று தனி மாலை இட்டு கொண்டு இறே அவன் இருப்பது –அவன் ரஷகன் ஆகாதவன்றும் கிட்டுவார்க்கு அவ் வடிவும் ஒப்பனையுமே பிரயோஜனம் போரும் கிடீர்-திருமாலை அறியாதார் திருமாலை அறியாதவர் ஆவர்–
எறியு நீர் வெறி கொள் வேலை மா நிலத்து உயிர்கள் எல்லாம்
வெறி கொள் பூம் துளவ மாலை விண்ணவர் கோனை ஏத்த
அறிவிலா மனிசர் எல்லாம் அரங்கம் என்று அழைப்பர் ஆகில்
பொறியில் வாழும் நரகம் எல்லாம் புல் எழுந்து ஒழியும் அன்றே –13-பரிமளத்தையும் – செவ்வியையும் உடைத்தான திருத் துழாய் மாலையாலே அலங்க்ருத்யனாய் இருக்கும் இருப்புக்குத் தோற்று நித்ய ஸூரிகள் ஏத்துமா போலே இவர்களையும் ஏத்த வாய்த்து கண்டது –
மனத்திலோர் தூய்மை இல்லை வாயிலோர் இன் சொல் இல்லை
சினத்தினால் செற்றம் நோக்கித் தீ விளி விளிவன் வாளா
புனத் துழாய் மாலையானே பொன்னி சூழ் திருவரங்கா
எனக்கு இனிக் கதி என் சொல்லாய் என்னை ஆளுடைய கோவே-30-நம்முடைய குறைகளைப் பார்த்து அகல வொண்ணாதபடி, ஒழிக்க வொழியாத உறவே ஹேதுவாகக் கைப்பற்றக் கடவோமென்று காக்கு மியல்வினனாயிருக்கு மிருப்புத் தோற்றத் தனி மாலை யிட்டிருப்பவரன்றோ தேவரீர்;-நாங்கள் கரும பலனை அனுபவிப்பதற்கு நீர் தனி மாலை யிட்டுக் கொண்டிருப்பானேன்?
உள்ளத்தே உறையும் மாலை யுள்ளுவார் உணர்வு ஓன்று இல்லாக்
கள்ளத்தேன் நான் உன் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவார் உள்லிற்று எல்லாம் உடன் இருந்து அறுதி என்று
வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே–34-நினைவுக்கு வாய்த் தலையான நெஞ்சிலே இருக்குமவன் ஆய்த்து- புறம்பு உள்ளான் ஒருவன் ஆகில் இறே-கண்ணால் கண்டத்துக்கு அவ்வருகு அறியான் என்று இருக்கலாவது –சதா சந்நிஹிதனாய் இருக்கை-போக்குப் பகுதி உண்டாகில் இறே போன போதாக மூலை அடியே நடக்கலாவது –மாலை –சர்வாதிகனை –ஆத்மாவும் உள்ளே வர்த்தியா நிற்கச் செய்தே சர்வத்தையும் அறிய மாட்டான் –ஆகாசம் வியாபியா நிற்கச் செய்தே
வ்யாப்யத்தை குறித்து அதுக்கு நியந்த்ர்தை இல்லை –இவன் –சர்வஞ்ஞனாய் சர்வ நியந்தாவாய் இருக்கும் –
வானுளார் அறியலாகா வானவா என்பாராகில்
தேனுளாம் துளப மாலைச் சென்னியா என்பராகில்
ஊன மாயினகள் செய்யும் ஊன காரகர்கள் ஏனும்
போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே –41-தேன் பெருகா நின்ற திருத் துழாய் மாலையைத் திரு முடியிலே அணியுமவனே! என்று அநுஸந்திப்பாராகில்(அப்படிப்பட்ட மஹாத்துமாக்கள்) போனகம் செய்த சேடம்–தாங்கள் அமுது செய்து மிகுந்த பிரஸாதத்தை-தருவர் ஏல் அன்றேஅநுக்ரஹிப்பாரானால் அப்போதே-புனிதம் –(அந்த ப்ரஸாதத்தைப் பெற்றவர்கள்) பரிசுத்தராவர்கள்.
வள வெழும் தவள மாட மதுரை மா நகரம் தன்னுள்
கவளமால் யானை கொன்ற கண்ணனை யரங்க மாலைத்
துளவத் தொண்டைய தொல் சீர்த் தொண்டர் அடிப் பொடி சொல்
இளைய புன் கவிதை ஏலும் எம்பிராற்கு இனியவாறே–45-கவளமால் யானை கொன்ற கண்ணனை –
கவளம் கொண்டு இருப்பதாய் பெருத்து இருந்துள்ள ஆனையைக் கொன்ற கிருஷ்ணனை –-களபமால் -என்று எதுகைக்கு சேர பாடம் ஆன போது – களபம் என்று உருவத்தில் பெருத்த யானை -என்றபடி –அவதாரத்துக்கு பிற்பாட ரான தம்முடைய விரோதியைப் போக்கி கோயிலிலே வந்தார் ஆய்த்து –-கீழே ஆனைக்கு அன்று அருளை ஈந்த -என்றார் இங்கே ஆனை கொன்ற என்கிறார்-இத்தால்
தேவாநாம் தானவாநாஞ்ச -என்றது அழிந்தது-அங்கு உள்ளார் விரோதிகளைப் போக்கி தன்னை அனுபவிப்பித்தாப் போலே இவர் தம் உடைய பிரதிபந்தங்களைப் போக்கி தம்மை அனுபவிப்பித்த படி –
திரு அவதரித்த அன்று ஒளிந்து போன ஊரிலே கண் காண வந்து விரோதியை அழியச் செய்த ஏற்றத்தை அனுபவிக்கிறார்–யரங்க மாலைத் – அவதாரத்துக்கு பிற்பாட ரான தம்முடைய விரோதியைப் போக்கி கோயிலிலே வந்தார் ஆய்த்து –மாலை -ஆஸ்ரித விஷயத்தில் பெரும் பித்தர் ஆனவரை –விரோதி நிரசனமும் தத் பூர்வகமான ஸ்வ அனுபவமும் தன் பேறாய் இருக்கை-
மஞ்சுலாம் சோலை வண்டறை மா நீர் மங்கையார் வாள் கலிகன்றி
செஞ்சொலால் எடுத்த தெய்வ நன் மாலை யிவை கொண்டு சிக்கெனத் தொண்டீர்
துஞ்சும் போது அழைமின் துயர் வரில் நினைமின் துயர் இலீர் சொல்லிலும் நன்றாம்
நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராயணா என்னும் நாமம் —10-அதிக்ருத அதிகாரமாய் -சமஸ்க்ருதமாய் -தெரியாத சப்தங்களாலே சொன்ன அர்த்தங்களை வ்யக்தமாக எல்லார்க்கும் தெரியும்படி செவ்விய சொல்லால் சொன்ன-தெய்வ நன் மாலை – அப்ராக்ருதமாய் – கேட்டார் ஆரார்கள் செவிக்கு இனிய செஞ்சொலே -10-6-11-)-என்று நித்ய ஸூரிகள் கேட்டு அனுபவிக்கலாம் படி இருக்கிற மாலை தொடை-
கரிய மா முகில் படலங்கள் கிடந்தது அவை முழங்கிட களிறென்று
பெரிய மாசுணம் வரை எனப் பெயர் தரு பிரிதி எம்பெருமானை
வரி கொள் வண்டறை பைம் பொழில் மங்கையர் கோன் கலியனது ஒலி மாலை
அரிய வின்னிசை பாடு நல்லடியவர்க்கு அரு வினை யடையாவே —1-2-10–ஸ்ரீ திருமங்கையில் உள்ளாருக்கு நியாமகரான ஸ்ரீ ஆழ்வார் ஒலி உடையதாம் படி சொன்ன தொடை ஆயிற்று-அரிய இன்னிசை-ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் தம் வாயாலே அரிய இன்னிசை -என்பதே என்று அருளிச் செய்வர்-ஸ்ரீ ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் சிலரோடு பிணக்கி-கையிலே தாளத்தை பொகட்டு-இந்த பதிகத்தை என்னுடன்- இயலிலும் இழியலாம் பொருளிலும் இழியலாம் இசையில் ஒருவராலும் இழிய ஒண்ணாது-அருமையால் நினைக்கிறது பெருமை-இனிமையால் நினைக்கிறது -சுவைப் பாட்டை –அருமை பெருமைகளையும் சுவைப் பாட்டையும் உடைத்தாய் இருக்கும்-
வண்டு தண் தேன் உண்டு வாழும் வதரி நெடுமாலை
கண்டல் வேலி மங்கை வேந்தன் கலியன் ஒலி மாலை
கொண்டு தொண்டர் பாடி யாடக் கூடிடில் நீள் விசும்பில்
அண்டம் அல்லால் மற்று அவர்க்கு ஓர் ஆட்சி அறியோமே -1-3-10-திருமங்கைக்கு நிர்வாஹகரான ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த மாலை-
தாராவாரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத் தடிகளை
காரார் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை
ஆரார் உலகத்தறிவுடையார் அமரர் நன்னாட்டரசு ஆள
பேர் ஆயிரமும் ஒதுமின்கள் அன்றி யிவையே பிதற்றுமினே –1-5-10-திரு மங்கைக்கு நிர்வாஹகரான ஆழ்வார் ஒலி உடைத்தாம் படியாக சொன்ன சொல் தொடை
செங்கணாளி யிட்டிறைஞ்சும் சிங்க வேள் குன்றுடைய
எங்கள் ஈசன் எம்பிரானை இரும் தமிழ் நூல் புலவன்
மங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார்க் கலியன்
செங்கை யாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே-1-7-10–இரும் தமிழ் நூல் புலவன் – ஒருவரால் கரை காண ஒண்ணாத படி இருக்கிற தமிழ் சாஸ்திர உக்தமான படியைக் கரை கண்ட ஜ்ஞான ஆதிக்யத்தை உடையவர் –செஞ்சொல் மாலை வல்லவர் –-அரிய அர்த்தத்தை உள்ளபடி காட்டவற்றான செவ்விய சொல் தொடை வல்லவர் –
செங்கயல் திளைக்கும் சுனைத் திருவேம்கடத்துறை செல்வனை
மங்கையர் தலைவன் கலிகன்றி வண்டமிழ்ச் செஞ்சொல் மாலைகள்
சங்கை யின்றித் தரித்து உரைக்க வல்லார்கள் தஞ்சமதாகவே
வங்க மா கடல் வையம் காவலராகி வானுல காள்வரே–1-8-10–திரு மங்கைக்கு நிர்வாஹகரான ஆழ்வார்
அழகிய தமிழில் செவ்விய சொல்லாலே செய்த தொடையை தரித்து சொல்ல வல்லவர்கள் நிச்சிதமாகவே கடல் சூழ்ந்த பூமிக்கு ரஷகராய் பின்பு நித்ய விபூதியும் தங்கள் இட்ட வழக்காம் படி
ஆகப் பெறுவர்கள் –
வில்லார் மலி வேங்கட மா மலை மேய
மல்லார் திரடோள் மணி வண்ணன் அம்மானை
கல்லார் திரடோள் கலியன் சொன்ன மாலை
வல்லாரவர் வானவர் ஆகுவர் தாமே–1-10-10-
இண்டை கொண்டு தொண்டர் ஏத்த எவ்வுள் கிடந்தானை
வண்டு பாடும் பைம் புறவில் மங்கையர் கோன் கலியன்
கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை ஈரைந்தும் வல்லார்
அண்டமாள்வதாணை அன்றேலாள் வர மருலகே—2-2-10-சீர் என்று கவிக்கு அலங்காரமாய் இருப்பது ஓன்று உண்டு – அத்தை சொல்லிற்று ஆகவுமாம் –அன்றிக்கே – இங்கே வந்து சாய்ந்த படியாலே பகவத் குணங்கள் நெஞ்சிலே ஊற்றிருந்து சொல்லி அல்லது நிற்க ஒண்ணாதபடி அவை ப்ரேரிக்க பாடின மாலை என்னவுமாம் –
மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும் மாட மாளிகையும் மண்டபமும்
தென்னன் தொண்டையர் கோன் செய்த நன் மயிலைத் திருவல்லிக்கேணி நின்றானை
கன்னி நன் மாட மங்கையர் தலைவன் காமரு சீர்க் கலிகன்றி
சொன்ன சொல் மாலை பத்துடன் வல்லார் சுகமினி தாள்வர் வானுலகே—2-3-10-ஸ்ப்ருஹணீயமான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயை உடைய ஆழ்வார் அருளிச் செய்த பத்தையும் அப்யசிக்க வல்லார்கள் –
நெடுமாலவன் மேவிய நீர் மலை மேல் நிலவும் புகழ் மங்கையர் கோன் அமரில்
கட மா களியானை வல்லான் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை வல்லார்க்கு உடனே
விடுமால் வினை வேண்டிடில் மேல் உலகும் எளிதாயிடும் அன்றி யிலங்கொலி சேர்
கொடு மா கடல் வையகம் ஆண்டு மதிக்குடை மன்னவராய் அடி கூடுவரே–2-4-10-திரு மங்கையில் உள்ளாருக்கு பிரதாநராய் இருப்பாருமாய் – யுத்தத்திலே மத்த கஜத்தை நடத்த வல்லருமான
ஆழ்வார் ஒலி உடைத்தாம்படி செய்த தமிழ் தொடை வல்லார்க்கு –
மன்னவன் தொண்டையர் கோன் வணங்கும் நீள் முடி மாலை வயிரமேகன்
தன் வலி தன் புகழ் சூழ்ந்த கச்சி அட்டபுயகரத்து ஆதி தன்னை
கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா
இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே—2-8-10—-ராஜா தொண்டைமான் சக்கரவர்த்தி அவன் பக்ன அபிமானியாய் ஆக்கின பின்பாயிற்று ஈஸ்வரன் நல் முடி தரித்ததும்-சர்வேஸ்வரத்வம் நிலை நின்றதும்-முன்பு எல்லாம் ஈரரசு பட்டு இறே போந்தது –தான் குறையக் கடவது அன்றிக்கே கேட்டார் செவிக்கும் ஆகர்ஷகம் ஆகும்படியான இசையை உடைத்தாய்
ஆஸ்ரயம் தான் செவ்வியதாய் இருக்கிற இவற்றைக் கொண்டு
பார் மன்னு தொல் புகழ்ப் பல்லவர்கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகர் மேல்
கார் மன்னு நீள் வயல் மங்கையர் தம் தலைவன் கலிகன்றி குன்றாது உரைத்த
சீர் மன்னு செந்தமிழ் மாலை வல்லார் திரு மா மகள் தன் அருளால் உலகில்
தேர் மன்னராய் ஒலி மா கடல் சூழ் செழு நீர் உலகாண்டு திகழ்வர்களே—2-9-10–கவிக்கு சொல்லுகிற லஷணங்கள் ஒன்றும் குறையாதபடி அருளிச் செய்த பகவத் குணங்கள் நெருங்கத் தொடுத்த செவ்விய தமிழ்த் தொடை வல்லார் பெரிய பிராட்டியார் உடைய கடாஷத்தாலே லோகத்திலே மகா ரதராய் கடல் சூழ்ந்த பூமியை அடைய ஆண்டு –
வாரணம் கொள் இடர் கடிந்த மாலை நீல மரகதத்தை மழை முகிலே போல்வான் தன்னை
சீரணங்கு மறையாளர் நிறைந்த செல்வத் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் என்று
வாரணங்கு முலை மடவார் மங்கை வேந்தன் வாள் கலியன் ஒலி யைந்தும் யைந்தும் வல்லார்
காரணங்களால் உலகம் கலந்து அங்கு ஏத்தக் கரந்து எங்கும் பரந்தானைக் காண்பர் தாமே–2-10-10-பிறருக்கு இடரை விளைக்கக் கடவதான அது கொண்ட இடரைப் போக்கி அதின் பக்கலிலே வ்யாமுக்தன் ஆனவனை-
சீரார் பொழில் சூழ்ந்து அழகாய தில்லைத் திருச் சித்ரகூடத்துறை செங்கண் மாலுக்கு
ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப அலை நீர் உலகுக்கு அருளே புரியும்
காரார் புயல் கைக் கலிகன்றி குன்றா வொலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார்
பாரார் உலகம் அளந்தான் அடிக் கீழ்ப் பல காலம் நிற்கும்படி வாழ்வர் தாமே–3-2-10–பரம உதாரரான திரு மங்கை ஆழ்வார் குறையாத ஓசை உடைத்தாக அருளிச் செய்த திரு மொழி பத்தும் வல்லார் ப்ருதீவி பிரசுரமான லோகத்தை அளந்த திருவடிகளில் கீழே காலம் எல்லாம் வர்த்திக்கும்படி வாழ்வாராகப் பெறுவர்- கைங்கர்ய ஸ்ரீ விச்சேதம் இல்லாமல் பெரும் தாளுடை பெருமான் அடிக்கீழ் பிரியாது இருப்பாரே –
பஞ்சிய மெல்லடிப் பின்னை திறத்து முன்னாள் பாய் விடைகள் ஏழ் அடர்த்து பொன்னம் பைம்பூண்
நெஞ்சிடந்து குருதி உகிர் வேலாண்ட நின்மலன் தாள் அணை கிற்பீர் நீல மாலைத்
தஞ்சடைய இருள் தழைப்பத் தரளம் ஆங்கே தண் மதியின் நிலாக் காட்ட பவளம் தன்னால்
செஞ்சுடர் வெயில் விரிக்கும் அழகார் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே–3-4-4—அவ் ஊரில் மாடங்களில் அழுத்தின நீல ரத்ன மாலையை தனக்கு தஞ்சமாக உடைய-அதாவது-ராத்ரியை தனக்கு அபாஸ்ரயமாக உடைத்தாய் இருக்கிற-இருளை தழைப்ப நடுவே அழுத்தின முத்தானது குளிர்ந்த சந்தரன் உடைய நிலாவைக் காட்ட இடை இடையே அழுத்தின பவளமானது புகரை உடைய
ஆதித்யன் உடைய பிரகாசத்தை காட்டா நின்றது –ஆக ஏக காலத்தில் இருளும் சந்த்ரோதயமும் வெய்யிலும் ஒக்கக் கண்டு அனுபவிக்கும் படியான தேசம் ஆயிற்று – (கோபமும் அருளும் ஓக்கக் காட்டி அருளிய ஸ்ரீ நரசிம்மன் போல்
செங்கமலத் தயன் அனைய மறையோர் காழிச் சீராம விண்ணகர் என் செங்கண் மாலை
அங்கமலத் தடம் வயல் சூழ் ஆலி நாடன் அருள் மாரி யரட்ட முக்கி யடையார் சீயம்
கொங்கு மலர் குழலியர் கோன் மங்கை வேந்தன் கொற்ற வேல் பரகாலன் கலியன் சொன்ன
சங்க முகத் தமிழ் மாலை பத்தும் வல்லார் தடம் கடல் சூழ் உலக்குக்கு தலைவர் தாமே–3-4-10—சதுர்முக சமரான பிராமணர் திரண்ட தேசத்திலே சீராம விண்ணகரிலே நித்யவாசம் பண்ணுகிற புண்டரீ காஷனை கவி பாடிற்று –தமிழுக்கு கடவார் திரள இருந்தால் இத்தையே எப்போதும்
ஒக்க கொண்டாட வேண்டும்படி இருக்கிற இத் தொடையல் பத்தும் வல்லார்-
நீடு பல் மலரிட்டு நின் இணை அடி தொழுது ஏத்தும் என் மனம்
வாட நீ நினையேல் மரம் எய்த மா முனிவா
பாடலின் ஒலி சங்கினோசை பரந்து பல் பணையால் மலிந்து எங்கும்
ஆடலோசை யறா அணி யாலி யம்மானே–3-5-5-ஒழிவில் காலம் எல்லாம் – 3-3-1–எண்டிசையும் உள்ள பூக்களைக் கொண்டு -4-7-8- என்கிறபடியே-பலவகைப்பட்ட மலரை உடைத்தான மாலைகளை இட்டு உன்னுடைய ஒன்றுக்கு ஓன்று ஒப்பாய் இருக்கிற திருவடிகளை தொழுது ஏத்துகிற –
புல்லி வண்டு அறையும் பொழில் புடை சூழ் தென்னாலி யிருந்த மாயனை
கல்லின் மன்னு திண் தோள் கலியன் ஒலி செய்த
நல்ல இன்னிசை மாலை நாலும் ஓர் ஐந்தும் ஒன்றும் நவின்று தாம் உடனே
வல்லராய் யுரைப்பார்க்கு இடமாகும் வானுலகே–3-5-10–ஆழ்வார் அருளிச் செய்த நல்ல இன்னிசையான- தொடை-இதில் உண்டான ஆதராதி அதிசயத்தாலே விட மாட்டாமை பிரித்து பிரித்து அருளிச் செய்கிறார்-
மையிலங்கு கருங்குவளை மருங்கலரும் வயலாலி
நெய்யிலங்கு சுடராழிப் படையானை நெடுமாலை
கையிலங்கு வேல் கலியன் கண்டுரைத்த தமிழ் மாலை
ஐயிரண்டும் இவை வல்லார்க்கு அருவினைகள் அடையாவே–3-6-10-நெடுமாலை – தூது விடவும் வார்த்தை சொல்லவும் மாட்டாதே நிற்கிறான் போலே காணும்-தூது விட மாட்டாத படி யாயிற்று அத்தலை பட்டுக் கிடக்கிறது – இத்தலை ஊர்த்த்வம் மாசான் நா ஜீவிஷ்யதே -என்றால்-ந ஜீவேயம் -என்னும் அத்தனை இறே அத்தலை –கண்டுரைத்த தமிழ் மாலை –-தூதருக்கு வார்த்தை சொன்னபடி கேட்டு அவன் முன்னே வந்து நிற்க கண்டு சொன்ன-
தாய் மனம் நின்று இரங்கத் தனியே நெடுமால் துணையா
போயின பூங்கொடியாள் புனலாலி புகுவர் என்று
காய்சின வேல் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை பத்தும்
மேவிய நெஞ்சுடையார் தஞ்சமாவது விண்ணுலகே–3-7-10–திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்த-இப்பத்தும் சஹ்ருதயமாக கற்க வல்லாருக்கு பரம பதம் நிச்சிதம் – தாயார் தனி வழியே போனாள் என்று பயப்பட வேண்டா – ஆதி வாஹிக கணத்தோடு தானே வழி காட்டிப் போம்-
வண்டார் பொழில் சூழ்ந்து அழகாய நாங்கூர் மணி மாடக் கோயில் நெடுமாலுக்கு என்றும்
தொண்டைய தொல் சீர் வயல் மங்கையர் கோன் கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார்
கண்டார் வணங்கக் களியானை மீதே கடல் சூழ் உலகுக்கு ஒரு காவலராய்
விண் தோய் நெடு வெண் குடை நீழலின் கீழ் விரி நீர் உலகாண்டு விரும்புவரே–3-8-10—நல்ல வயலை உடைய திரு மங்கைக்கு நிர்வாஹகரான ஆழ்வார்-ஒலியை உடைத்தாய் அருளிச் செய்த தமிழ் தொடை யாகிற இத் திரு மொழியைக் கற்றார்-
சங்கு மலி தண்டு முதல் சக்கரம் முன் ஏந்தும் தாமரைக் கண் நெடிய பிரான் தான் அமரும் கோயில்
வங்கமலி கடலுலகில் மலி வெய்து நாங்கூர் வைகுந்த விண்ணகர் மேல் வண்டறையும் பொழில் சூழ்
மங்கையர் தம் தலைவன் மருவலர் தம் உடல் துணிய வாள் வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன
சங்க மலி தமிழ் மாலை பத்து இவை வல்லார்கள் தரணியோடும் விசும்பாளும் தன்மை பெறுவாரே–3-9-10—சத்ருக்கள் உடல் துணியும்படியாக வாள் வீசுகிற பர கால ஆழ்வார் அருளிச் செய்த சங்கப் புலவர்கள் திரள இருந்து தமிழ் கொண்டாடப் புக்கால் இத்தையே கொண்டாடும்படியான தமிழ் தொடை
பத்தையும் வல்லார்கள் உபய விபூதியையும் தாங்கள் இட்ட வழக்காம் படியான பிரபாவத்தை உடையராய்ப் பெறுவர்-
சென்று சினவிடை ஏழும் பட அடர்த்துப் பின்னை செவ்வித் தோள் புணர்ந்து உகந்த திருமால் தன் கோயில்
அன்று அயனும் அரன் சேயும் அனையவர்கள் நாங்கூர் அரி மேய விண்ணகரம் அமர்ந்த செழும் குன்றை
கன்றிநெடு வேல் வலவன் மங்கையர் தம் கோமான் கலிகன்றி யொலி மாலை ஐந்தினோடு மூன்றும்
ஒன்றினோடும் ஒன்றும் இவை கற்று வல்லார் உலகத்து உத்தமர்கட்கு உத்தமராய் உம்பரும் ஆவர்களே–3-10-10-திரு மங்கையில் உள்ளாருக்கு பிரதானரான ஆழ்வார் அருளிச் செய்த-ஒலி உடைத்தான தொடை எட்டும் இரண்டும் பத்தான இத்தை அப்யசிதவர்கள் (எட்டும் -ஐந்தும் மூன்றும் -விபவ அவதார இரண்டும் -முதலும் முடிவும் )
சீரணிந்த மணி மாடம் திகழு திரு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து எண் செங்கண் மாலைக்
கூரணிந்த வேல் வலவன் ஆலி நாடன் கொடி மாட மங்கையர் கோன் குறையல் ஆளி
பாரணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
சீரணிந்து உலகத்து மன்னராகிச் சேண் விசும்பில் வானவராய்த் திகழ்வர் தாமே –4-4-10-ஆழ்வார் அருளிச் செய்த-கிருஷ்ண அவதாரம் அபதானங்கள் ஐந்தும்-அது கலசாத ஐந்தும்-
நல் லன்புடை வேதியர் மன்னிய நாங்கூர்ச்
செல்வன் திரு வெள்ளக் குளத்து உறைவானைக்
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை
வல்லர் யென வல்லவர் வானவர் தாமே —-4-7-10-தோள் வலி போலே கவி பாட வல்ல வலியும்-
ஏரார் பொழில் சூழ் இந்தளூரில் எந்தை பெருமானைக்
காரார் புறவில் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த
சீரார் இன் சொல் மாலை கற்றுத் திரிவார் உலகத்து
ஆராரவரே யமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே —4-9-10-திரு மங்கைக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்தார் –பகவத் குணங்களை நிறையத் தொடுத்த தொடை-
வையம் உண்டு ஆலிலை மேல் மேவு மாயன் மணி நீண் முடிப்
பை கொள் நாகத் தணையான் பயிலும் இடம் என்பரால்
தைய நல்லார் குழல் மாலையும் மற்றவர் தட முலைச்
செய்ய சாந்தும் கலந்து இழி புனல் சூழ் தென்னரங்கமே —5-4-2–குழலிலே பூக்களை வைத்து முலையை குங்குமத்தால் அலங்கரித்து இருந்துள்ளவர்கள்-படுக்கையை விட்டு ப்ரஹ்ம முகூர்த்தத்தில்
ஸ்நாநார்த்தமாக இழிவார்கள்-குழலிலே மாலையும் குங்குமுமாய்க் கலங்கி ஓடா நிற்கும் யாய்த்து –
அல்லி மாதர் அமரும் திரு மார்வன் அரங்கத்தைக்
கல்லின் மன்னு மதிள் மங்கையர் கோன் கலி கன்றி சொல்
நல்லிசை மாலைகள் நாலிரண்டும் இரண்டும் உடன்
வல்லவர் தாம் உலகாண்டு பின் வானுலகு ஆள்வரே –5-4-10-நன்றான இசையோடு கூடின
தொடை நாலிரண்டு இரண்டினையும் – இதில் உண்டான ஆதரத்தாலே சேர்த்து அனுபவிக்கிறார்-உந்தி – வையம் -இரண்டும் உலகுண்ட வடதள சாயி விஷயம் -விளைத்த -வம்பு -ராமன் விஷயம்-கலை -கஞ்சன் -கிருஷ்ண விஷயம்-சேயன் -அல்லி -ஸ்ரீ யபதி விஷயம்-இப்படி நாலு இரண்டும்-இப்படி இவற்றில் ஒரு ப்ரேமமும் ஆசையும்-பண்டு -திருக் குறளன் விஷயம்-ஏனம் -சகல அவதார சமுதாய விஷயம்-இப்படி இரண்டும்– இப்படி இவற்றில் ஒரு ப்ரேமமும் ஆசையும்
தாதாடு வன மாலை தாரானோ என்று என்று தளர்ந்தாள் காண்மின்
யாதானும் ஓன்று உரைக்கில் எம்பெருமான் திருவரங்கம் என்னும் பூ மேல்
மாதாளன் குடமாடி மது சூதன் மன்னர்க்காய் முன்னம் சென்ற
தூதாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சொல்லுகேனே–5-5-6–தாது மாறாத –ஆடுகை யாவது -நடை யாடுகை-காட்டிலே தானும் தன்னேராயிரம் பிள்ளைகளும் கூடப் பறித்து செவ்வி அழியாத மாலையை – அது பரார்த்தம் என்று இருந்தோம் –
சேலுகளும் வயல் புடை சூழ் திருவரங்கத்து அம்மானைச் சிந்தை செய்த
நீல மலர்க் கண் மடவாள் நிறைவழிவைத் தாய் மொழிந்த வதனை நேரார்
கால வேல் பரகாலன் கலி கன்றி ஒலி மாலை கற்று வல்லார்
மாலை சேர் வெண் குடைக் கீழ் மன்னவராய்ப் பொன் உலகில் வாழ்வர் தாமே–5-5-10–பர காலன் என்று பேர் பெற்ற ஆழ்வார் அருளிச் செய்த சொல் தொடையைக் கற்று வல்லார்கள் –(இவரைப் போல் ) கைப்பறி பறிக்கை அன்றிக்கே இதன் பொருளை ஆசார்யர்களோடே கற்று அறியுமவர்கள்-தனி முத்துக் குடைக் கீழே இதில் அபேஷை உண்டாகில் ஐஸ்வர்யத்தை அனுபவித்து பரம பதத்திலே நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள்- (இங்கே-நாடு பரிபாலனம் – கடமை நிறைவேற்றி அங்கு ஸூக அனுபவம் )
ஆ மருவி நிரை மேய்த்த வணி யரங்கத்து யம்மானைக்
கா மரு சீர்க் கலிகன்றி யொலி செய்த மலி புகழ் சேர்
நா மருவு தமிழ் மாலை நால் இரண்டோடு இரண்டினையும்
தா மருவி வல்லார் மேல் சாரா தீ வினை தானே —5-6-10–மனஸ் சஹகாரம் வேண்டாதே இத்தை ஒரு கால் நாக்கிலே இட்டால் பின்னை நா விடாதே இருக்கும் ஆய்த்து-
வண்டறை பொழில் திருப்பேர் வரி வரவு அணையில் பள்ளி
கொண்டு உறைகின்ற மாலைக் கொடி மதிள் மாட மங்கை
திண் திறல் தோள் கலியன் செஞ் சொலால் மொழிந்த மாலை
கொண்டிவை பாடி யாடக் கூடுவர் நீள் விசும்பே—-5-9-10-திரு மங்கைக்கு நிர்வாஹகராய் திண்ணிய திறலை உடைத்தான தோளை உடையரான ஆழ்வார்-அதி கிருதாதிகாரமான வேதார்த்தத்தை சர்வ அதிகாரமான சொல்லாலே அருளிச் செய்தார் ஆய்த்து –
நறை செய் பொழில் மழை தவழும் நந்தி புர விண்ணகரம் நண்ணி யுறையும்
உறை கொள் புகராழி சுரி சங்கமவை அங்கை யுடையானை ஒளி சேர்
கறை வளரும் வேல் வல்ல கலியன் ஒலி மாலை யிவை ஐந்தும் ஐந்தும்
முறையிலிவை பயில வல வடியவர்கள் கொடு வினைகள் முழுதகலுமே—5-10-10–உறையில் கிடக்க அவசரம் இல்லை யாய்த்து திரு மங்கை ஆழ்வார் வேலுக்கு சத்ரு நிரசனம் பண்ணி கறை கழற்ற அவசரம் இன்றிக்கே இருக்கும் இப் பத்தையும் முறையில் இவை பயில-
தேனார் பூம் புறவில் திரு விண்ணகர் மேயவனை
வானாரும் மதிள் சூழ் வயல் மங்கையர் கோன் மருவார்
ஊனார் வேல் கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார்
கோனாய் வானவர் தம் கொடி மா நகர் கூடுவரே –6-2-10—திருமங்கை ஆழ்வார் கையில் வேல் உருவிய சத்ரு சரீரங்கள் ஆயத்து சத்ரு சரீரங்களிலே குளித்த வேலை உடையரான ஆழ்வார் அருளிச் செய்த இப்பத்தும் வல்லார் –
தாரார் மலர்க் கமலத் தடம் சூழ்ந்த தண் புறவில்
சீரார் நெடு மறுகில் திரு விண்ணகரானைக்
காரார் புயல் தடக் கைக் கலியன் ஒலி மாலை
ஆரார் இவை வல்லார் அவர்க்கு அல்லல் நில்லாவே –6-3-10-கார் காலத்திலே கழுத்தே கட்டளையாக நீரைப் பருகின மேகம் போலே கொடுத்து வளர்ந்த கையை உடைய ஆழ்வார் ஒலி உடைத்தாம் படி அருளிச் செய்த தமிழ் தொடையை வல்லார் –
தாமத் துளப நீண் முடி மாயன் தான் நின்ற
நாமத் திரள் மா மாளிகை சூழ்ந்த நறையூர் மேல்
காமக் கதிர் வேல் வல்லான் கலியன் ஒலி மாலை
சேமத் துணையாம் செப்பு மவர்க்குத் திருமாலே–6-5-10–அழகிய புகரை உடைத்தான-காமம் என்று பிரகாமமாய்-பிரதிஷ்டமாய் -அத்தால் நினைக்கிறது மிகுதியாய்-மிக்க புகரை உடைய வேலைக் கையிலே உடைய திரு மங்கை ஆழ்வார் ஒலி உடைத்தாய் சொன்ன மாலை –செப்பு மவர்க்குத்-திருமால் -சேமத் துணையாம் – இவனை அடை கொடு பாழ் போக்குகை அன்றிக்கே இவனுடைய ரஷணத்தை முடிய தலைக் கட்டிக் கொடுக்கும் துணையாம்-கோலத் திரு மா மகளோடு உயிர்கள் காப்பான் -சாலப் பல நாள் உகந்து ஸ்ரீ யபதி அன்றோ–
செம் மொழி வாய் நால் வேத வாணர் வாழும் திரு நறையூர் மணி மாடச் செங் கண் மாலைப்
பொய்ம் மொழி யொன்றில்லாத மெய்ம்மை யாளன் புல மங்கைக் குல வேந்தன் புலமை யார்ந்த
அம் மொழி வாய்க் கலிகன்றி யின்பப் பாடல் பாடுவார் வியனுலகில் நமனார் பாடி
வெம் மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில் விண்ணவர்க்கு விருந்தாகும் பெரும் தக்கோரே —6-6-10—யதா பூத வாதிகளாய் வேதத்துக்கு வியாச பதம் செலுத்த வல்லராய் இருக்கிற பிராமணர் வர்த்திக்கிற தர்ச நீயமான மாடங்களை உடைய திரு நறையூரிலே வர்த்திக்கிற புண்டரீ காஷனான சர்வேஸ்வரனை கவி பாடிற்று –
நன்மை யுடைய மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியை
கன்னி மதிள் சூழ் வயல் மங்கைக் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை
பன்னி யுலகில் பாடுவார் பாடு சாரா பழ வினைகள்
மன்னி யுலகம் ஆண்டு போய் வானோர் வணங்க வாழ்வாரே –6-7-10–அரணாக போரும்படியான மதிளாலே சூழப் பட்ட திரு மங்கைக்கு ராஜாவான ஆழ்வார் ஒலியை உடைத்தாம் படி அருளிச் செய்த தமிழ் தொடையை-
ஒடா வரியாய் இரணியனை ஊன் இடந்த
சேடார் பொழில் சூழ் திரு நீர் மலையானை
வாடா மலர்த் துழாய் மாலை முடியானை
நாடோறும் நாடி நறையூரில் கண்டேனே –6-8-4-திரு நீர் மலையிலே சந்நிஹிதன் ஆனவனை –ஜகத் ரஷணத்துக்காக முடி கவித்து மாலை இட்டுக் கொண்டு இருக்கிறவனை-
வாவித் தடம் சூழ் மணி முத்தாற்று நறையூர் நெடுமாலை
நாவில் பரவி நெஞ்சில் கொண்டு நம்பி நாமத்தைக்
காவித் தடங்கண் மடவார் கேள்வன் கலியன் ஒலி மாலை
மேவிச் சொல்ல வல்லார் பாவம் நில்லா வீயுமே –6-10-10–முன்பு எனக்கு ஏற்றமாக நினைத்து இருப்பது இது -( பண்டு காமனானவாறும் ) இப்போது எனக்கு பிறந்த செவ்வியும் கண்டி கோளே- இப்போது மநோ வாக் காயங்கள் மூன்றுக்கும் இதுவும் விஷயமான படி கண்டி கோளே –(நாராயண நாமத்தால் வந்த மஹிமை ப்ரத்யக்ஷம் )-
வண்டார் பொழில் சூழ் நறையூர் நம்பிக்கு என்றும்
தொண்டாய் கலியன் ஒலி செய் தமிழ் மாலை
தொண்டீர் இவை பாடுமின் பாடி நின்றாட
உண்டே விசும்பு உந்தமக்கு இல்லை துயரே -7-1-10—அவன் திருவடிகளில் நித்ய கைங்கர்யத்தை அதிகரித்த திருமங்கை ஆழ்வார் ஒலி உடைத்தாம் படி அருளிச் செய்த தமிழ் தொடை –
நன்னீர் வயல் புடை சூழ் நறையூர் நின்ற நம்பியைக்
கன்னீர் மால் வரைத் தோள் கலிகன்றி மங்கையர் கோன்
சொன்னீர் சொல் மாலை சொல்லுவார்கள் சூழ் விசும்பில்
நன்னீர்மையால் மகிழ்ந்து நெடும் காலம் வாழ்வாரே –7-2-10–இத்தை அனுசந்தித்தார்க்கு -இது ஒரு சப்தமே -என்று கொண்டாடும் இதுவே ஸ்வ பாவமாம் படி இருக்கிற சொல் தொடையைச் சொல்லும் அவர்கள் இத்தை சொல்லுகையே போரும் ஆய்த்து பிரயோஜனம் –
தோடு விண்டலர் பூம் பொழில் மங்கையர் தோன்றல் வாள் கலியன் திருவாலி
நாடன் நன்னறையூர் நின்ற நம்பி தன் நல்ல மா மலர்ச் சேவடி சென்னிச்
சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும் தொண்டர்க்கு அவன் சொன்ன சொல் மாலை
பாடல் பத்திவை படுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே -7-3-10–தாம் அறிந்ததாக அனுபவித்து விடுகை அன்றிக்கே பின்பு உள்ளார்க்கும் அனுபவ யோக்யமாம் படி-பக்தாம்ருதம்–தொண்டர்க்கு அமுது உண்ண -என்கிறபடியே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு எல்லாம் விருந்து இட்டார் ஆய்த்து –
பூ மாண் சேர் கருங்குழலார் போல் நடந்து வயல் நின்ற பெடையோடு அன்னம்
தேமாவின் இன் நிழலில் கண் துயிலும் தண் சேறை அம்மான் தன்னை
வா மான் தேர் பரகாலன் கலிகன்றி ஒலி மாலை கொண்டு தொண்டீர்
தூ மாண் சேர் பொன்னடி மேல் சூட்டுமின் நும் துணைக் கையால் தொழுது நின்றே –7-4-10—ஆழ்வார்
ஒலியை உடைத்தாம் படி அருளிச் செய்த தமிழ் தொடையைக் கொண்டு பகவத் விஷயத்தில் ருசி உடையீர் –ஹேய ப்ரத்ய நீகமாய் தர்ச நீயமாய் இருந்துள்ள திருவடிகளிலே சூட்டுங்கோள்–அது செய்யும் பொது அஞ்சலியைப் பண்ணா நின்ற கையை உடையராய்க் கொண்டு தொழுது இம் மாலையைச் சூட்டுங்கோள் –பாகவத பிரபாவம் சூடுவதே பலன் -வேறே வேண்டாமே –
மாலைப் புகுந்து மலரணை மேல் வைகி அடியேன் மனம் புகுந்து என்
நீலக் கண்கள் பனி மல்க நின்றார் நின்ற ஊர் போலும்
வேலைக் கடல் போல் நெடு வீதி விண்டோய் சுதை வெண் மணி மாடத்து
ஆலைப் புகையால் அழல் கதிரை மறைக்கும் வீதி அழுந்தூரே —7-5-7-போக யோக்யமான காலத்திலே வந்து புகுந்து பூம் படுக்கையிலே தங்கி அநந்தரம் அங்கு நின்றும் போந்து –
நெல்லில் குவளை கண் காட்ட நீரில் குமுதம் வாய் காட்ட
அல்லிக் கமலம் முகம் காட்டும் கழனி அழுந்தூர் நின்றானை
வல்லிப் பொதும்பில் குயில் கூவும் மங்கை வேந்தன் பரகாலன்
சொல்லில் பொதிந்த தமிழ் மாலை சொல்லப் பாவம் நில்லாதே –7-5-10–திரு மங்கையில் உள்ளாருக்கு ராஜாவாய் உள்ளவர் பிரதி பஷ நிரசன சீலராய் உள்ளார் –சொல்களால் சம்ருத்தமாய் உள்ள தமிழ் தொடையை வாயாலே சொல்ல –
அன்னம் மன்னும் பைம் பூம் பொழில் சூழ்ந்த அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானைக்
கன்னி மன்னு திண் தோள் கலிகன்றி ஆலி நாடன் மங்கைக் குல வேந்தன்
சொன்ன இந் தமிழ் நன் மணிக் கோவை தூய மாலை இவை பத்தும் வல்லார்
மன்னி மன்னவராய் உலகாண்டு மான வெண் குடைக் கீழ் மகிழ்வாரே –7-7-10–சொன்ன இனிய தமிழான இந்த நல்ல ரத்ன மாலையை-லஷணங்களில் குறைவற்று இருக்கிற இப் பத்தையும் அப்யசிக்க வல்லார் –இந்த்ரிய வஸ்தையை அனுசந்தித்து அஞ்சின ஆழ்வார் (யோகியாக இல்லாமல் போகியாக) இத்தை பலமாகச் சொல்லுவான் என் என்னில் இவருக்கு அந்த ஐஸ்வர்யம் பாகவத சேஷமாக்குக்கைக்கு உடலாகையாலே அதுவும் புருஷார்த்தத்திலே புக்குப் போய்த்து காண்-என்று பட்டர் அருளிச் செய்தாராம் –
சீரார் நெடு மறுகில் சிறு புலியூர்ச் சல சயனத்து
ஏரார் முகில் வண்ணன் தன்னை இமையோர் பெருமானைக்
காரார் வயல் மங்கைக்கு இறை கலியன் ஒலி மாலை
பாரார் இவை பரவித் தொழப் பாவம் பயிலாவே —7-9-10–திரு மங்கைக்கு நிர்வாஹகரான ஆழ்வார்
ஒலியை உடைத்தாம்படி அருளிச் செய்த மாலை –
மெய்ந் நலத் தவத்தைத் திவத்தைத் தரும் மெய்யை பொய்யினைக் கையிலோர் சங்குடை
மைந் நிறக் கடலை கடல் வண்ணனை மாலை ஆலிலைப் பள்ளி கொள் மாயனை
நென்னலைப் பகலை யிற்றை நாளினை நாளையாய் வரும் திங்களை யாண்டினைக்
கன்னலைக் கரும்பினிடைத் தேறலைக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-2-மாலை –
சர்வாதிகனை –
பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினை மாலுருவாய் நின்ற
விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கின் ஒளி தன்னை
மண்ணினை மலையை யலை நீரினை மாலை மா மதியை மறையோர் தங்கள்
கண்ணினைக் கண்கள் ஆர அளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-9–மாலுருவாய் நின்ற விண்ணினை--த்ரிபாத்விபூதி -என்னலாம்படியான பரப்பை உடைய நித்ய விபூதி உக்தன் ஆனவனை –மாலை –-ஆஸ்ரிதர் பக்கலிலே வ்யாமோஹமே வடிவாய் இருக்கிறவனை-
வண்டமரும் வன மாலை மணி முடி மேல் மண நாறும் என்கின்றாளால்
உண்டிவர் பால் அன்பு எனக்கு என்று ஒரு காலும் பிரிகிலேன் என்கின்றாளால்
பண்டிவரைக் கண்டறிவது எவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்
கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ —8-1-9-தன் நிலத்திலே நின்ற போது மணம் மட்டமாய் –திருக் குழலிலே ஏறினவாறே இரட்டிற்றாய் இற்று இருப்பது – வண்டுகள் பரிமளம் போலே படிந்து கிடக்கும் யாயிற்று-
மா வளரும் மென்னோக்கி மாதராள் மாயவனைக் கண்டாள் என்று
கா வளரும் கடி பொழில் சூழ் கண்ண புரத் தம்மானைக் கலியன் சொன்ன
பா வளரும் தமிழ் மாலை பன்னிய நூல் இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
பூ வளரும் கற்பகம் சேர் பொன்னுலகில் மன்னவராய் புகழ் தக்கோரே –8-1-10-சந்தஸ் ஸூக்களால் குறைவற்று லஷணோபேதமுமான –
தேமருவு பொழில் புடை சூழ் திருக் கண்ண புரத் துறையும்
வாமனனை மறி கடல் சூழ் வயலாலி வள நாடன்
காமரு சீர்க் கலிகன்றி கண்டுரைத்த தமிழ் மாலை
நா மருவி யிவை பாட வினையாய நண்ணாவே —8-3-10–எல்லாருக்கும் ஸ்பருஹை பண்ண வேண்டும்படியான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயை உடையரான ஆழ்வார் அருளிச் செய்த இந்த தமிழ் தொடையை –
வண்டமரும் சோலை வயலாலி நன்னாடன்
கண்ட சீர் வென்றிக் கலியன் ஒலி மாலை
கொண்டல் நிற வண்ணன் கண்ண புரத்தானைத்
தொண்டரோம் பாட நினைந்தூதாய் கோற்றும்பீ -8-4-10–பிரமாணங்களில் கேட்டுப் போகை அன்றிக்கே
கண்ணாலே காணலாம் படியான நிரவதிக சம்பத்தை உடையருமாய் பிரதி பஷத்தை வென்று இருப்பாருமான ஆழ்வார் ஒலியை உடைத்தாம் படி சொன்ன இத் தொடையைக் கொண்டு –
மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் ராமனாய்த்
தானாய் பின்னும் ராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும்
ஆனான் தன்னை கண்ண புரத் தடியன் கலியன் ஒலி செய்த
தேனார் இன் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாதே —8-8-10-ஆழ்வார் அருளிச் செய்த
தேனோடு ஒத்த நல்ல சொல்லை உடைய தமிழ் மாலை சொல்ல-
செரு நீர் வேல் வலவன் கலிகன்றி மங்கையர் கோன்
கரு நீர் முகல் வண்ணன் கண்ண புரத்தானை
இரு நீரின் தமிழின் இன்னிசை மாலைகள் கொண்டு தொண்டீர்
வரு நீர் வையம் உய்ய விவை பாடி யாடுமினே —8-9-10-விஷய வைலஷண்யத்தை ஒழியவே
மிக்க நன்மையை உடைத்தாய் இருக்கிற இன் தமிழாகிற இசைத் தொடையைக் கொண்டு
கைங்கர்ய ருசியை உடையரான நீங்கள் –(பாவின் இன்னிசைப் பாடித் திரிவேன் -இன்னிசையே போதும் -நாவினால் நவிற்று இன்பம் எய்த )
கண்ட சீர்க் கண்ண புரத்துறை யம்மானை
கொண்ட சீர்த் தொண்டன் கலியன் ஒலி மாலை
பண்டமாய்ப் பாடும் அடியவர்க்கு எஞ்ஞான்றும்
அண்டம் போய் ஆட்சி யவர்க்கு அது அறிந்தோமே —8-10-10–ஆழ்வார் ஒலியை உடைத்ததாக
அருளிச் செய்த மாலை-
அன்னமும் கேழலும் மீனுமாய ஆதியை நாகை யழகியாரை
கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா
வின்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார்
மன்னவராய் யுலகாண்டு மீண்டும் வானவராய் மகிழ் எய்துவரே–9-2-10–திரு மங்கையில் உள்ளாருக்கு பிரதானராய் எல்லாருக்கும் ஸ்ப்ருஹை பண்ண வேண்டும்படியான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை உடைய ஆழ்வார் ஒன்றும் குறையாத படி இனிய இசையாலே அருளிச் செய்த -தம்மால் அளவிட ஒண்ணாமையால் பிரித்து அனுபவிக்கிறார்- (ஸூய அனுபவம் முதல் ஏழும் -பர உபதேசம் அடுத்த இரண்டும் -பலம் அருளி நிகமனம் )-
காலையும் மாலை யொத்துண்டு கங்குல் நாழிகை யூழியின் நீண்டுலாவும்
போல்வதோர் தன்மை புகுந்து நிற்கும் பொங்கழலே யொக்கும் வாடை சொல்லில்
மாலவன் மா மணி வண்ணன் மாயம் மற்றுளவை வந்திடா முன்
கோல மயில் பயிலும் புறவில் குறுங்குடிக்கே யென்னை உய்த்திடுமின் —9-5-3–காலையிலும் மாலையில் போலே இருக்கை -பாதித்து முடியா நின்றது –காலையும் மாலை போலே பாதகமாகா நின்றது – காலை யரும்பி –மாலை யலரும் (தமிழர்கள் சொல்வர் )-என்கிறபடியேயேயாய்
இருக்கிற படியே இருக்கிறது இல்லை – ஏக ரூபமாய் நலியா நின்றது –
திண் இமில் ஏற்றின் மணியும் ஆயன் தீங்குழ லோசையும் தென்றலோடு
கொண்டதோர் மாலையும் அந்தி ஈன்ற கோல விளம்பிறையோடு கூடி
பண்டை வல்லவிவை நமக்குப் பாவியேன் ஆவியை வாட்டம் செய்யும்
கொண்டல் மணி நிற வண்ணர் மன்னு குறுங்குடிக்கே யென்னை யுய்த்திடுமின் —9-5-5-தென்றலோடு கூட பெரிய கோட்பாட்டை உடைத்தாய் வருகிற மாலையும் –
சிலையால் இலங்கை செற்றான் மற்றோர் சினவேழம்
கொலையார் கொம்பு கொண்டான் மேய குறுங்குடி மேல்
கலையார் பனுவல் வல்லான் கலியன் ஒலி மாலை
நிலையார் பாடல் பாடப் பாவம் நில்லாவே —9-6-10–சாஸ்திர உக்தமான லஷணத்தில் ஒன்றும் குறையாத படி கவி பாட வல்லரான ஆழ்வார் ஒலியை உடைத்தாக அருளிச் செய்த –
எவ்வ நோய் தவிர்ப்பான் எமக்கு இறை இன்னகைத் துவர்வாய் நிலமகள் தம்
செவ்வி தோய வல்லான் திரு மா மகட்கு இனியான்
மௌவல் மாலை வண்டாடும் மல்லிகை மாலையோடும் அணைந்த மாருதம்
தெய்வ நாற வரும் திருக் கோட்டியூரானே —9-10-2–மௌவல் மாலையோடும் மல்லிகை மாலையோடும்
மது பானம் பண்ணின வண்டுகள் ஆடா நின்றன –-இவற்றோடு கூடி அணைந்த மாருதம் உண்டு -காற்று-அது அப்ராக்ருதமான பரிமளத்தை கந்திக்க வந்து உலவா நிற்கும் திருக் கோட்டியூரானே –
வேலை யாலிலைப் பள்ளி விரும்பிய
பாலை யாரமுதினைப் பைந்துழாய்
மாலை யாலியில் கண்டு மகிழ்ந்து போய்
ஞாலம் உன்னியைக் காண்டும் நாங்கூரிலே —10-1-3–அந்த ரஸ்யதையில் உண்டான ஏற்றம் போலே
ஐஸ்வர்ய ஸூசகமாய் அழகிதான திருத் துழாயை உடைய சர்வேஸ்வரனை – திரு வாலியிலே கண்டு உகந்து போய் –
வென்ற தொல் சீர் தென்னிலங்கை வெஞ்சமத்து
அன்று அரக்கர் குன்ற மன்னார் ஆடி யுய்ந்த குழ மணி தூரத்தைக்
கன்றி நெய்நீர் நின்ற வேற்கைக் கலியன் ஒலி மாலை
ஒன்றும் ஒன்றும் ஐந்தும் மூன்றும் பாடி நின்றாடுமினே —10-3-10—திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்தது –ஆக –ஆண் பிள்ளை கவி பாடுகிறார்-ஆண் பிள்ளைகள் தோற்று ஆடுகிறார்கள் –இப் பத்தையும் பாடிக் கொண்டாட உங்களுக்கு இனி வரக் கடவதொரு பயம் இல்லை –
நின்றார் முகப்புச் சிறிதும் நினையான் வயிற்றை நிறைப்பான் உறிப் பால் தயிர் நெய்
அன்று ஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி உரலோடு ஆப்புண்டு இருந்த பெருமான் அடி மேல்
நன்றாய தொல் சீர் வயல் மங்கையர் கோன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை வல்லார்
என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்து இமையோர்க்கும் அப்பால் செல வெய்துவாரே —10-6-10-
காலை எழுந்து கடைந்த விம்மோர் விற்கப் போகின்றேன் கண்டே போனேன்
மாலை நறுங்குஞ்சி நந்தன் மகன் அல்லால் மற்று வந்தாரும் இல்லை
மேலை யகத்து நங்காய் வந்து காண்மின்கள் வெண்ணெயே யன்றிருந்த
பாலும் பதின் குடம் கண்டிலேன் பாவியேன் என் செய்கேன் என் செய்கேனோ –10-7-2–ரஷகத்துவத்துக்கு தனி மாலை இட்டு இருக்கிறவனை ஒழிய செய்ததுக்கு நிவாரகர் இல்லாதவனை ஒழிய (நிரங்குச ஸ்வ தந்த்ரன் அன்றோ ) இது செய்யக் கடவார் இல்லை –
அன்ன நடை மட வாய்ச்சி வயிறு அடித்து அஞ்ச அருவரை போல்
மன்னு கருங்களிற்று ஆர் உயிர் வவ்விய மைந்தனை மா கடல் சூழ்
கன்னி நன் மா மதிள் மங்கையர் காவலன் காமரு சீர்க் கலிகன்றி
இன்னிசை மாலைகள் ஈரேழும் வல்லவர்க்கு ஏதும் இடர் இல்லையே –10-7-14--இத் திரு மொழியை வல்லவர்களுக்கு யசோதைப் பிராட்டியார் உடைய அனுபவித்தில் குறைய அனுபவிக்க வேண்டா -என்கிறார் –
அல்லிக் கமலக் கண்ணனை யங்கோர் ஆய்ச்சி
எல்லிப் பொழுதூடிய ஊடல் திறத்தைக்
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை
சொல்லித் துதிப்பார் அவர் துக்கமிலரே–10-8-10-
தொண்டீர் பாடுமினோ
சுரும்பார் பொழில் மங்கையர் கோன்
ஒண்டார் வேல் கலியன் ஒலி மாலைகள்
தொண்டீர் பாடுமினோ -10-10-10-அழகிய மாலையை உடைய-வேலை நிரூபகமாக உடைய
ஆழ்வார் அருளிச் செய்த மாலைகள்-தொண்டீர் பாடுமினோ –பல ஸ்ருதி சொல்லாது ஒழிந்தது
இது தானே பிரயோஜனம் -ஆகையாலே –
பெற்றார் ஆயிரம் பேரானைப் பேர் பாடப்
பெற்றான் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை
கற்றாரோ முற்று உலகு ஆள்வர் இவை கேட்க
உற்றார்க்கு உறு துயர் இல்லை யுலகத்தே –11-3-10-
நிலையிட மெங்கும் இன்றி நெடு வெள்ளம் உம்பர் வளநாடு மூட விமையோர்
தலையிட மற்று எமக்கோர் சரண் இல்லை யென்ன அரணாவான் என்னும் அருளால்
அலை கடல் நீர் குழம்ப வகடாவோடி அகல் வான் உரிஞ்ச முதுகில்
மலைகளை மீது கொண்டு வரு மீனை மாலை மறவாது இறைஞ்சு என் மனனே –11-4-1–மலைகள் அழிஞ்சு போகாத படி தரித்து ஏறிட்டுக் கொண்டு வருகிற ஜலம் தாரகமான வஸ்துவை – சர்வாதிகனான சர்வேஸ்வரனை – அவன் அப்படி தன்னுருக் கொடுத்து வேற்றுருக் கொண்டு அரியன செய்து ரஷியா நின்றான் -( பக்தானாம் ப்ரஸாததே ) உனக்குச் செய்ய வேண்டும் அருந்தேவை -அவனை மறவாது இருக்கை-( இதுவே அரிய சேவை நமக்கு
தளை யவிழ் கோதை மாலை யிரு பால் தயங்க எரி கான்று இரண்டு தறு கண்
அள வெழ வெம்மை மிக்க வரி யாகி யன்று பரியோன் சினங்கள் அவிழ
வளை யுகிர் ஒளி மொய்ம்பின் மறவோன தாகம் மதியாது சென்று ஒரு உகிரால்
பிள வெழ விட்ட குட்டமது வைய மூடு பெரு நீரின் மும்மை பெரிதே —11-4-4–மத்ஸ்ய கூர்மோ வராஹஸ்ஸ நரசிம்ஹ –இறே-கட்டு நெகிழா நின்றுள்ள தொடை கொள் மாலை-பூ மாலை என்றும் (பேதம் )-இவை இரண்டு அருகும் அசைந்து வர அந்த தோளின் மாலைகளோடு கண்ணில் புறப்படுகிற நெருப்போடு வாசி இல்லை காணும் இவருக்கு – இரண்டு வட்டணித்த கண் –
மெய்நின்ற பாவம் அகலத் திருமாலைக்
கைநின்ற ஆழியான் சூழும் கழல் சூடி
கைந்நின்ற வேற்க் கை கலியன் ஒலி மாலை
ஐ ஒன்றும் ஐந்தும் இவை பாடி ஆடுமினே –11-7-10-திருமாலைக் –-அவள் முன்னாக ஆஸ்ரயிக்கில் இறே
பாபங்கள் அகலுவது –பதினொன்று என்று கொள்ளக் கூடாது -இவை பத்தும் அவை பத்தும்வெளிக் கரணங்கள் நிந்தனை முதல் ஐந்து ‘ஆத்ம நிந்தித்து இவை ஐந்து -ஆத்ம சப்தம் மனசையும் ஜீவனையும் கீதையில் சொன்னான் அன்றோ )
நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார்
கதியினைக் கஞ்சன் மாளக் கண்டு முன் அண்டம் ஆளும்
மதியினை மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த
விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே-1-மாலை –மாலாய் பிறந்த நம்பி -இறே –
ஆசா லேசம் உடையார் பக்கல் முக்தனாய் இருக்குமவனை –
வானிடைப் புயலை மாலை வரையிடைப் பிரசமீன்ற
தேனிடைக் கரும்பின் சாற்றைத் திருவினை மருவி வாழார்
மானிடைப் பிறவி யந்தோ மதிக்கிலர் கொள்க தந்தம்
ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக்கு உறுதியே வேண்டினாரே-8-நிராலம்பனாய் இருக்கிற என்னை
நிர்ஹேதுகமாக வந்து விஷயீகரித்தவனை என்கிறார் –மாலை –-அதுக்கடியான வ்யாமோஹம் –
ஆவியை அரங்க மாலை அழுக்கு உடம்பு எச்சில் வாயால்
தூய்மையில் தொண்டனேன் சொல்லினேன் தொல்லை நாமம்
பாவியேன் பிழைத்த வாறு என் என்று அஞ்சினேற்கு அஞ்சல் என்று
காவி போல் வண்ணர் வந்து என் கண்ணுள்ளே தோற்றினாரே -12–உலகங்கட்கு எல்லாம் ஆர் உயிர் ஆனவனே –அரங்க மாலை – கண்ணுக்கு தோற்றாதபடி நின்று தாரகமாகை அன்றிக்கே கண்ணாலே காண -வ்யாமோஹம் -தான் ஒரு வடிவு என்னலாம் படி இருக்கை –
மாயமான் மாயச் செற்று மருது இற நடந்து வையம்
தாய மா பரவை பொங்கத் தட வரை திரித்து வானோர்க்கு
ஈயுமால் எம்பிரானார்க்கு என்னுடைச் சொற்கள் என்னும்
தூய மா மாலை கொண்டு சூட்டுவன் தொண்டனேனே -16-தேவ ஜாதிகள் சொல் போல் அன்றிக்கே –
தூய-பிரயோஜன நிரபேஷமான-மா மாலை சொற்கள் ஆகிற செவ்வி அழியாத -மாலையைக் கொண்டு –சூட்டுவன் தொண்டனேனே – இத்தால் அல்லது செல்லாத சபலன் – அநசூயை பிராட்டிக்கு சூட்டினாப் போலே-இப் பத்தால் அடி சூட்டலாகும் அந் தாமமே -திருவாய்மொழி -2-4-11- –நறிய நன் மலர் நாடி நன் குருகூர் சடகோபன் -திருவாய்மொழி -5-5-11-)
வானவர் தங்கள் கோனும் மலர் மிசை அயனும் நாளும்
தே மலர் தூவி ஏத்தும் சேவடிச் செங்கண் மாலை
மான வேல் கலியன் சொன்ன வண் தமிழ் மாலை நாலைந்தும்
ஊன மதி இன்றி வல்லார் ஒளி விசும்பு ஆள்வர் தாமே-20–பெரும் தன்மையை உடைய -வேலை உடைய -ஆழ்வார் அருளிச் செய்த பரமோதாரமான-தமிழ் மாலை-நாலைந்து -இருபதையும்-அநந்ய பிரயோஜனராய் கற்க வல்லார்கள் –-தெளி விசும்பான பரம பதத்தை ஆளப் பெறுவார்கள்-இந்திரனோடு …வெள்ளறை நின்றாய் -பெரியாழ்வார் திரு மொழி -2-81- இவர்கள் அர்ச்சித்து பல்லாண்டு பாடுவார்கள்-கலியன் அவன் செங்கண் மால் என்கிறார் -பெரியாழ்வார் திருவெள்ளறையான் என்கிறார் அவன் பெயரை கலியனும் ஊரின் பெயரை பெரியாழ்வாரும் சொன்னபடி –)
உள்ளூரும் சிந்தை நோய் எனக்கே தந்து – என்னொளி வளையும் மா நிறமும் கொண்டார் இங்கே
தெள்ளூரும் இளம் தெங்கின் தேறல் மாந்திச் சேலுகளும் திருவரங்கம் நம்மூர் என்ன
கள்ளூறும் பைம் துழாய் மாலையானைக் கனவிடத்தில் யான் காண்பது கண்டபோது
புள்ளூரும் கள்வா நீ போகல் என்பன் என்றாலும் இது நமக்கோர் புலவி தானே–23-தோளிலே இட்ட தனி மாலையும் தாமுமாய் வந்த வரவை நீ காணப் பெற்றது இல்லை காண் – புழுகு நெய் ஏறிட்டுக் கொண்டு வருவாரைப் போலே நான் உகந்தபடி ஒப்பித்து வந்தார் –அவனூர் பட்டது அத்தனையும் படும் காண் அவன் உடம்பு – ரச சிரைகள் திறந்து மது ஒழுகா நின்றுள்ள திருத் துழாய் மாலையாலே அலங்க்ர்தன் ஆனவனே –கள்ளூறும் –-தன்னிலத்தில் காட்டில் திரு மார்பில் ஸ்பர்சித்த பின்பு செவ்வி பெற்ற படி ––பைம் துழாய் – திருத் துழாய் குளிர்ந்து இருந்தது என்று நீ அறிந்தபடி என் என்ன – என்னை அணைக்கையாலே அறிந்தேன் -என்கிறாள் –
அன்று ஆயர் குலமளுக்கு அரையன் தன்னை அலை கடலைக் கடைந்த அம்மான் தன்னைக்
குன்றாத வலி யரக்கர் கோனை மாளக் கொடுஞ்சிலை வாய்ச் சரம் துரந்து குலங்களைந்து
வென்றானைக் குன்றெடுத்த தோளினானை விரி திரை நீர் விண்ணகரம் மருவி நாளும்
நின்றானைத் தண் குடந்தை கிடந்த மாலை நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே –29-இப்படி இத் தேசத்தில் நிற்பது இருப்பது கிடப்பது -ஆகைக்கு அடி என் என்னில்-மாலை –-ஆஸ்ரித வ்யாமுக்தன் ஆகையாலே –(மாலை) “மாயாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை“ என்கிறபடியே
தானும் வ்யாமோஹ சாலியாய் அடியார்களையும் வ்யாமோஹ சாலிகளாக ஆக்குமவன் என்க.)
மின்னு மா மழை தவழும் மேக வண்ணா விண்ணவர் தம் பெருமானே அருளாய் என்று
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை
மன்னு மா மணி மாட மங்கை வேந்தன் மானவேல் பரகாலன் கலியன் சொன்ன
பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் தொல்லைப் பழ வினையை முதலரிய வல்லார் தாமே -30–பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் –-பன்னுதல் -பரம்புதல்-ஸ்வரூப ரூப குண விபூதிகள் இத்தனையும் விளாக் கொலை கொண்டு இருக்கை –நூல் -சர்வ லஷணோபேதமாய் இருக்கை –
பின்பு லஷணம் கட்டுவாருக்கும் இது கொண்டு செய்ய வேண்டும்படி இருக்கை –தமிழ் -சர்வாதிகாரமாய் இருக்கை –மாலை-ஈஸ்வரனுக்கு சிரஸா தார்யமாய் இருக்கை –(எம்பெருமானும் அவனடியார்களும் உகந்து முடி மேற் கொள்ளும் பிரபந்தமாதலால் மாலை எனப்பட்டது.)
வையம் தகளியா வார் கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக -செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடர் ஆழி நீங்குகவே யென்று -1-சொன்மாலை – சொற்றொடை -என்னுமா போலே செவ்வி மாறாத மாலை-அநசூயையினுடைய ஒப்பனை போலே அழகியதாய் இருக்கை–அவனுடைய தார் -சர்வேஸ்வரத்வ ஸூசகம் ஆனாப் போலே இப் பிரபந்தமும் பகவத் பரத்வத்தைக் காட்ட வற்றாய் இருக்கை –சொன்மாலை -யென்று-யதோ வாசோ நிவர்த்தந்தே -என்கிற விஷயத்தை மாறுபாடுருவப் பேசின படி –
எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்
வண்ண மலரேந்தி வைகலும் நண்ணி
ஒரு மாலையால் பரவி யோவாது எப்போதும்
திரு மாலைக் கை தொழுவர் சென்று —-52–விலஷணமான புருஷ ஸூக்தாதிகளைக் கொண்டு
அக்ரமாக ஸ்தோத்ரம் பண்ணி-எப்போதும் – விச்சேதிக்கக் கடவதன்றிக்கே –திருமால் – வேண்டிற்று எல்லாம் பெறுகைக்கு அடி
அயல் நின்ற வல் வினையை அஞ்சினேன் அஞ்சி
உய நின் திருவடியே சேர்வான் நய நின்ற
நன்மாலை கொண்டு நமோ நாரணா வென்னும்
சொன்மாலை கற்றேன் தொழுது ——57-நயிக்கப் படுகின்ற -நீர்மை யுடைத்தான -திரு மந்த்ரத்துக்கு நிர் வசன ரூபமான இப் பிரபந்தத்தைக் கொண்டு-அவனுக்கு வாசகமான திரு மந்த்ரத்தை அப்யசித்தேன்-சொல் தொடை கற்றேன்-அநந்தரம் அனுகூல வ்ருத்தியையும் பண்ணினேன் –
ஓரடியும் சாடுதைத்த வொண் மலர்ச் சேவடியும்
ஈரடியும் காணலாம் என்நெஞ்சே ஓரடியில்
தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர்
மாயவனையே மனத்து வை -100-திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனாய் போக்யதை அளவிறந்து இருந்து உள்ளவனையேசாதனமாக ஹ்ருதயத்தில் அத்யவசி -ஸூலபனும் அன்றிக்கே விரோதி போக்காதே ஒழியிலும் விடப் போகாது –
தனக்கு அடிமைப் பட்டது தான் அறியான் ஏலும்
மனத்தடைய வைப்பதாம் மாலை -வனதிடரை
ஏரியாம் வண்ணம் இயற்றும் இது வல்லால்
மாரி யார் பெய்கிற்பார் மற்று——————16-அவன் ஆஸ்ரித வ்யாமுக்தனாய் இருக்க -இவன் தான் அவனை மனத்தடைய வைப்பதாம் – இவனாலே அவனை மனசிலே வைக்கப் போமோ – இவன் அவனை அறிக்கையும் ஆஸ்ரயிக்கையும் என்று ஓன்று உண்டோ-அவன் தானே ருசி ஜனகனாயும்
பிராப்தியும் பண்ணித் தரும் அத்தனை போக்கி இவன் யத்நிக்கை என்று ஒரு பொருள் உண்டோ -என்றபடி-
மற்று ஆர் இயலாவார் வானவர் கோன் மா மலரோன்
சுற்றும் வணங்கும் தொழிலானை -ஒற்றைப்
பிறை யிருந்த செஞ்சடையான் பின் சென்று மாலைக்
குறை யிரந்து தான் முடித்தான் கொண்டு———–17-தன் நெஞ்சிலே மாலைக் கொண்டு -சர்வேஸ்வரனை தன்னுடைய ஹ்ருதயத்திலே கொண்டு-
மாலை யரி உருவன் பாத மலர் அணிந்து
காலை தொழுது எழுமின் கைகோலி-ஞாலம்
அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால்
உளம் கிடந்த வாற்றால் உணர்ந்து ———47-அழகிய செவ்விப் பூ மாலைகளைக் கொண்டு ஆஸ்ரிதர்க்காக கொண்ட வடிவே தனக்கு வடிவாக நினைத்து இருக்குமவன் உடைய செவ்வித் திருவடிகளிலே சேர்த்து –
காணக் கழி காதல் கை மிக்குக் காட்டினால்
நாணப் படும் என்றால் நாணுமே –பேணிக்
கருமாலைப் பொன் மேனி காட்டா முன் காட்டும்
திருமாலை நாங்கள் திரு —56-–கருமாலைப் – கறுத்து ஸ்ரமஹரமான நிறைத்தை யுடையனான சர்வேஸ்வரன் –-ஸ்ப்ருஹணீயமான வடிவு காட்டுவதற்கு முன்னே–ஸ்ரீ யப்பதியை நமக்கு ஸ்வாமிநியான பெரிய பிராட்டியார் பேணிக் காட்டும் -ஆதரித்துக் கொடு வந்து காட்டும்-திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் -மூன்றாம் -1-என்கிறபடியே அவளைக் கண்டால் இறே அவ்வடிவு தோற்றுவது-
யானே தவம் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
யானே தவம் உடையேன் எம்பெருமான் -யானே
இரும் தமிழ் நன்மாலை இணை யடிக்கே சொன்னேன்
பெரும் தமிழன் அல்லேன் பெரிது-74-வேத நன்மாலையில் வாசி -சர்வாதிகாரம் –அந்த தப பலமான லஷண லஷ்யங்களிலே குறைவற்று இருக்கும் பெருமையை யுடைத்தாய் –
சர்வாதிகாரமாய் -அத்யந்த விலஷணமான சப்த சந்தர்ப்பங்களையும் யுடைய
விலஷணமான தமிழாகிற மாலையைச் சேர்த்தி அழகை யுடைத்தான தேவர் திருவடிகளுக்கே சொல்லப் பெற்றேன் ஆனேன் –யாவர் நிகர் அகல் வானத்தே -திருவாய் -4-5-8–-நித்ய முக்தரும் அடைவு கெட்டுச் சொல்லுவார்கள் –நானும் அடைவு கெட்டுச் சொல்லுவேன்-என் பிரபந்தம் அடைவு பட்டு இருக்கை-அவர்களில் ஏற்றம் –ஏதத் சாம காயன் நாஸ்தே -தை ப்ருகு -10-5- -இங்கே இருக்க யுண்டானபடி –
குறையாக வெம் சொற்கள் கூறினேன் கூறி
மறை யாங்கு என உரைத்த மாலை -இறையேனும்
ஈயுங்கொல் என்றே இருந்தேன் எனைப்பகலும்
மாயன் கண் சென்ற வரம் -83–மறை யாங்கு என உரைத்த மாலை – இவை எல்லாத்தாலும் வருவது ஓன்று இல்லை இறே – சொல்லப் பட்டவன் தான் மறப்பான் ஒருவனாகப் பெற்றதாகில் -வாய் திறந்து ஏதேனும் ஒன்றைச் சொன்னான் ஆகில் – அது வேத சப்தமாம்படி இருப்பான் ஒரு சர்வேஸ்வரன் ஆய்த்து-வாக் விவ்ருதாஸ் ச வேதா -முண்டகம் -2-1-4-என்று சொல்லப் படுகிற சர்வாதிகனை –அங்கன் அன்றிக்கே – அர்த்தங்களை யுள்ளபடி சொல்லப் போந்த வேதங்களும் அது என்று சொல்லும் அத்தனை போக்கி இது என்று கொண்டு பரிச்சேதித்துச் சொல்ல மாட்டாத பிரபாவத்தை யுடைய சர்வேஸ்வரனை –வேதங்கள் ஆங்கு என்று சொல்லிப் போனவனை என்றுமாம் –
அமுதென்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் –அமுதன்ன
சொன்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட
நன்மாலை ஏத்தி நவின்று –85—அமுதன்ன சொன் மாலை ஏத்தித் தொழுதேன் – அவனையும் தேவர்கள் அம்ருதத்தையும் ஒழிய இவருடைய அம்ருதம் -அவனைப் பேசும் சொல்லு –சொன் மாலை –அவை -எம்பெருமானும் அமுதமும் -கோதாம்படியான சொல்லு –-எல்லா போக்யதையும் தன்னுடைய போக்யதையிலே பொதிந்து இருக்கையாலே அவனை அமுது என்கிறது –-இது அவன் தன்னையும் பொதிந்து கொண்டு இருக்கையாலே அம்ருதம் போலே நிரதிசய போக்யமாய் இருந்துள்ள சப்த சந்தர்ப்பங்களாலே புகழ்ந்து-திருவடிகளிலே நிர்மமனாய் விழுந்தேன் –ஏத்தித் தொழுதேன் – அறிந்து கவி பாடினேன் அல்லேன் – ஏத்தித் தொழவே எம்பெருமான் அபிசந்தியாலே கவி யாய்த்து –சொலப்பட்ட நன்மாலை ஏத்தி நவின்று –யஸ்மின் அக்ருத்ரிமகிராம் கதிரேகண்டா-என்று
பிரமாணங்களாலே சொல்லப் பட்ட நன் மாலை –-விலஷணமான எம்பெருமானை சர்வ சப்தங்களுக்கும் வாச்யனானவனை-வசஸாம் வாச்யமுத்தமம் -ஜிதந்தே -9–ஏத்தி நவின்று –
மிகவும் ஆதரித்து ஏத்தினேன் –-ஆதராதிசயம் தோற்றப் புகழ்ந்து கொண்டு சொல்லி நன் மாலை ஏத்தித் தொழுதேன் –
பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே
வாச மலர்த் துழாய் மாலையான் -தேசுடைய
சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான் பொங்கரவ
வக்கரனைக் கொன்றான் வடிவு ——21-வாசம் என்று குளிர்த்தியாகவும் பரிமளமாகவும்-பரிமளத்தையும் செவ்வியையும் உடைத்தாய் சர்வ ஐஸ்வர்ய ஸூசகமான திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனானவன் –
விரும்பி விண் மண்ணளந்த அஞ்சிறைய வண்டார்
சுரும்புதுளையில் சென்றூத -அரும்பும்
புனந்துழாய் மாலையான் பொன்னங்கழற்கே
மனந்துழாய் மாலாய் வரும் ——-23-திரு மார்வில் ஸ்பர்சத்தாலே தன்னிலத்தில் நின்றாப் போலே இருக்கிற திருத் துழாய் மாலையை யுடையவன்–ஸ்ப்ருஹணீயமான திருவடிகளிலே –-மனம் விரும்பித் துழாய் மாலாய் வரும் என்று மேலே மனஸ்ஸோடே கூட்டவுமாம்-மனஸ்ஸானது ஹ்ருதயமான துழாய் கலங்கிக் கொண்டு மாலாய் வரும்-பிச்சேறா நிற்கும்-வ்யாமோஹத்தைப் பண்ணித் துழாவி வாரா நின்றது – வண்டுகள் பட்டது படா நின்றது –
முயன்று தொழு நெஞ்சே மூரி நீர் வேலை
இயன்ற மரத்தாலிலையின் மேலால் -பயின்று அங்கோர்
மண்ணலம் கொள் வெள்ளத்து மாயக் குழவியாய்த்
தண் அலங்கல் மாலையான் தாள் —–53-ஸ்ரமஹரமாய் அசைந்து வாரா நின்றுள்ள
மாலையை உடையனானவன் திருவடிகளை –
சூதாவது என்னெஞ்சத்து எண்ணினேன் சொன்மாலை
மாதாய மாலவனை மாதவனை –யாதானும்
வல்லவா சிந்தித்து இருப்பேற்கு வைகுந்தத்து
இல்லையோ சொல்லீர் இடம்–65-சொன்மாலை – தம்முடைய திருவந்தாதி
சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி வானோர்கள் நன்னீர்
ஆட்டி அம் தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்தி மிலேற்றுவன் கூன்
கூட்டிடை ஆடின கூத்து அடல் ஆயர் தம் கொம்பினுக்கே –21-சூட்டு நன் மாலைகள்
சூடுவதற்குத் தகுதியான நல்ல மாலைகள்-(தலையில் சூடி -தோளில் மாலை )
(நல் -இரண்டுக்கும் -ஹார மத்ய மணி நியாயம் தேஹளீ தீப நியாயம் -நாயக ஸ்ரீ போல் )மாலைக்கு நன்மை யாவது-அப்ராக்ருதம் -ஆகவே நல்ல மாலை-அனுரூபமாய் புனுகினில் தோய்த்தால் போல்
அநுராக ரஞ்சிதம் -(பக்தியில் தோய்க்கப் பெற்ற )-சூட்டு -திருமுடி சாத்தாய்-மாலை -தோளுக்கு விடுவதாகவும்(மூன்று முடிக்கு உரிய அரசு-பார் அளந்த பேர் அரசே விசும்பு அரசே என்னை வஞ்சித்த ஓர் அரசே-வைர முடி ராஜ முடி கிருஷ்ண ராஜ முனி -மூன்று முடிக்கு உள்ள அரசே -நாயனார் )
கிரீட மகுட சூடாவதாம்சம்) அப்போது நன்மை மத்யம விளக்கு போல் இரண்டுக்கும் அந்வயமாம்-புஷ்பத்துக்குத் தூய்மையாவது-த்ரிவித தியாகம் -கர்த்ருத்வ மமதா பல தியாகங்கள் மூன்றும்
கர்த்ருத்வமும் மமதையும் ப்ரயோஜனாந்தரமும் ஆகிய மூன்றும் இல்லாமல்(புழு மயிறு ஸ்ராய் இல்லாமல் )-அநந்ய பிரயோஜனர் இடுமதாய் இருக்கை–-கெண்டை ஒண் கண் இத்யாதி–மிக்க சீர் தொண்டர் இட்ட–தொண்டர் -லௌகிக ப்ரயோஜனாந்தரர்-சீர் தொண்டர் -மோக்ஷம் உபாசகர்-மிக்க சீர் தொண்டர் -ஸ்வயம் பிரயோஜனம் )ஏந்தி-பாரதந்தர்யத்தால்-யாவத் அங்கீ காரம் ஏந்திக் கொண்டு நின்று இருப்பதே தூய்மை (கொண்டு வைத்தேன் -நீ நீராட வேண்டும் பிரார்த்தனை தான் செய்யலாம் )தன்னை அங்குத்தைக்கு உறுப்பாக்கி , இருக்கும் அதுக்கு-மேற் பட வில்லையாய் இருக்கை
அங்குற்றைக்கு இஷ்ட விநியோக அர்ஹத்வமே ஸ்வரூபம் என்கிற படி — மஞ்சளும் செம்கழு நீரும் வாசிகையும்–பெரியாழ்வார் திரு மொழி -2-4-4–என்கிறபடி –(கொண்டு வைத்தேன் -இதுவே நம் கர்தவ்யம்-ஏற்றுக் கொள்வது அவன் இச்சை இஷ்ட விநியோக அர்ஹத்வமே ஸ்வரூபம் )
சின்மொழி நோயோ கழி பெருந்தெய்வம் இன்ன-இந்நோய் இது என்று
இன்மொழி கேட்கும் இளந்தெய்வம் அன்று இது வேல! நில் நீ
என் மொழி கேண்மின் என்னம்மனை மீர் ! உலகு ஏழும் உண்டான்
சொல் மொழி மாலை யம் தண் யம் துழாய் கொண்டு சூட்டுமினே –20–-மாலை யம் தண் யம் துழாய் கொண்டு சூட்டுமினே – அவன் தோளில் இட்ட அழகிய திருத் துழாயைக் கொண்டு இவள் மேல் ஸ்பர்சிப்பது–சொல் மொழி என்று உப ஜீவிக்கும் மருந்தும் –தண் யம் துழாய் கொண்டு சூட்டுமினே -என்று-மேல் பூசும் மருந்தும் –தேவதாந்த்ர ஸ்பர்சமும் தத் சம்பந்தி ஸ்பர்சமும் இவருக்கு சத்தயா பாதகமாய் இருந்த படியும்– பகவத் ஸ்பர்சமும் பாகவத ஸ்பர்சமும் சத்தயா தாரகமாய் இருந்த படியும் சொல்லுகிறது–உலகு ஏழும் உண்டான் சொல் மொழி -என்று நாம உச்சாரண பேஷஜாத் நஸ்யந்தி சகலா ரோகா -என்கிறபடியே ரக்ஷகனுடைய நாம உச்சாரணமே ஆர்த்தி சாந்தி கரம் என்றபடி–மாலை யம் தண் யம் துழாய் -என்று போக்ய வஸ்து ஸம்ஸ்லேஷமும் ஆஹ்லாத ஜனன முகத்தாலே ஆர்த்தியை சமிப்பிக்கும் என்றதாயிற்று–கொண்டு சூட்டுமினே –என்கையாலே போக்ய விஷயத்திலே தலை வைக்கப் பண்ணி-அத்தாலே-நோ பஜநம் ஸ்மரன் -சாந்தோக்யம் -8-12- என்கிறபடியே ஆர்த்தியை நினைக்கைக்கும் வழி இல்லை இறே-ஆகையால் உபதேச மூலமான ஸப்த உச்சாரணமும் போக்ய அந்வயமும் விஸ்லேஷ ஆர்த்தி நிவர்த்தகம் என்றதாயிற்று –
பால் வாய் பிறைப் பிள்ளை ஒக்கலை கொண்டு பகல் இழந்த
மேல் பால் திசை பெண் புலம்புறு மாலை உலகு அளந்த
மால் பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு நல்கிற்றை எல்லாம்
சோல்வான் புகுந்து இது வோர் பனி வாடை துழா கின்றதே –35–உலகு அளந்த இத்யாதி –-சர்வேஸ்வரன் பக்கல் உண்டான திரு துழாய் மாலையிலே பிரவணமான மனசை உடைய இவளுக்கு-மாலை நல்கிற்று எல்லாம்-மாலை நல்குகை-சத்த்தையை வைக்கை — சந்தான சாபம் வைத்த படி–மாலை சோல்வான் இத்யாதி–சிலரை ஹிம்சிக்கப் புக்கவர்களை ஹிம்சிக்கப் புகுவாரைப் போலே-சத்தையைத் துளாவிக் கொண்டு வரா நின்றது-
மலர்ந்தே யொழிந்தில மாலையும் மாலைப் பொன் வாசிகையும்
புலந்தோய் தழைப் பந்தர் தண்டுற நாற்றி பொரு கடல் சூழ்
நிலந்தாவிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய்
கலந்தார் வர வெதிர் கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவே – 68-மாலைகளாகவும் – அம் மாலைகளாலே சமைந்த பொன் வாசிகை போலே –சுருளவும் இறே யவை தான் பூப்பது – கண்டாருடைய ஹ்ருதயங்கள் அபஹ்ருததாம்படி -என்னுதல் –தழைப் பந்தல் தண்டுற நாற்றி மலர்ந்தே ஒழிந்தில -என்னுதல் –மாலைகளாகவும் பொன் மாலையால் சமைந்த வட்டம் போலே சுருளவும் கொன்றை பூத்தலால்–அம்மலர் அலரத் தொங்குதல் -பந்தலில் கொம்புகளின் இடையில் தொங்க விட்டதை போல் உள்ளதால்-புலந்தோய் தழைப் பந்தர் -என்கையாலே இந்திரியங்கள் படியும்படியான விஷய பிரவணர் ஒதுங்க நிழல் என்றபடி–மாலையும் மாலைப் பொன் வாசிகையும்-என்கையாலே
ருஜு வாயும் (நேர்மையாயும் -சாத்விக ஆகாரம் அளவு விஞ்சி போல் ) வக்ரமாயும் (வளைந்தும் ராஜஸ தாமஸ ஆகாரங்கள் தள்ளுபடி தானே ) யுண்டான போக்ய வஸ்துக்களை ஸூசித்தப்படி-
காரேற் றிருள் செகிலேற்றின சுடருக்கு உளைந்து வெல்வான்
போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை புவனி எல்லாம்
நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே
வாரேற்றி இள முலையாய் வருந்தேல் உன்வளைத் திறமே – -69-புல்லிதான தலையை உடைத்தான சந்த்யை யானது –(சிறிய பொழுது -ஆழ்வாருக்கு துன்பம் தருவது ஆகவே புல்லியது ) நக நிப ஸூ ஞ்சதி யாந்தமோவல்லய-என்கிறாப் போலே சந்த்யையினுடைய உபக்கிரமம் இத்தனை – சந்த்யை யானது அல்ல காண் இது –புன் தலை மாலை -நலியும் மாலை -பகலுக்கும் இரவுக்கும் நடுவில் சிறிய பொழுது என்றுமாம்-புன் தலைமாலை-புல்லிதான தலையை யுடைத்தான ஸந்த்யையானது-
வால் வெண்ணிலா வுலகாரச் சுரக்கும் வெண் திங்கள் என்னும்
பால் விண் சுரவி சுர முதிர்மாலை பரிதி வட்டம்
போலும் சுடர் ஆழிப் பிரான் பொழில் ஏழும் அளிக்கும்
சால்பின் தகைமை கொலாம் தமியாட்டி தளர்ந்ததுவே – 73–மாலைப்பொழுதுக்கும் இளம்பிறைக்கும் வருந்தும்படி இவளைத் தனியே விட்டிருத்தல் உலக முழுவதும் ரக்ஷிக்கும் அவனுடைய பெருந்தன்மைக்குச் சிறிதும் ஏழாது என்கிறாளாயிற்று.-ஆகாசத்தில் நின்றும் மிகுந்த வெளுத்த நிலாவாகிய பாலை உலகமெங்கும் நிறையச் சுரந்து சொரிகிற சந்திரனாகிய காமதேநுவின் சுரப்பு அதிகரித்திருக்கின மாலைப் பொழுதிலே இத் தலைவி தனிமைப்பட்டுத் தளர்ந்திருப்பதானது-ஆழியங் கையவன் அனைத்துலகங்களுயும் காத்தருளுந் திறத்துக்குப் பொருந்துமோ? (பொருந்தாது) என்றவாறு.-முதிர்ந்த மாலையில் வெளுத்த சந்த்ரனாகிற ஆகாசத்தில் உள்ள ஸூரபியானது லோகங்கள் எல்லாம் நிறையும்படி வான் -மிகவும் வெளுத்த நிலாவாகிற முதிர்ந்த பாலை சுரக்குமாயிற்று முதிர்ந்த மாலை பால் சுரக்கும் காலமாகையாலே அற முதிர் மாலை யாயிற்று-
திங்களம் பிள்ளை புலம்பத் தன் செங்கோலரசு பட்ட
செங்களம் பற்றி நின்று எள்கு புன்மாலை தென் பாலிலங்கை
வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா
நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே – -77-மாலைப் பொழுதை மகளாகவும் -சூரியனை அவள் கணவனாகவும் -சந்திரனை அவர்கள் பிள்ளையாகவும் சூரியனது சிவந்த கிரணங்களை செங்கோலாகவும் சூர்யன் அஸ்தமிப்பதை கணவன் இறந்ததாகவும் -அஸ்தமித்த திக்கை அவன் இறந்து விழுந்த போர்காலமாகவும் அஸ்தமிக்கும் காலத்து செவ்வானத்தை அவன் ரத்தம் தெரித்ததாகவும் உருவாக்கப் படுத்தியவாறு-புன்மாலை என்றதால் செக்கர் நல் மேகங்களைக் காட்டி பீதாம்பரம் சாத்திக் கொண்டு மேகம் போன்று இருக்குமவர் திருமேனியை ஸ்மரிப்பித்து நலிகிற படி சொல்லிற்று-
மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து இருளோடு முட்டி
ஆணிப் பொன் அன்ன சுடுர்ப்படுமாலை உலகு அளந்த
மாணிக்கமே என் மரகதமே மற்று ஒப்பாரை இல்லா
ஆணிப் பொன்னே அடியேன் அடி யாவி யடைக்கலமே – – -85–மாற்றுடைய பொன் போலே ஒளியை யுடைய சுடரானது இருளோடே வந்து கிட்டி மாணிக்யத்தைக் கொண்டு குரங்கை எறிந்தால் அக்குரங்கின் கையிலே மாணிக்யம் அகப்பட்டால் போலே படும்படியான மாலையிலே-அன்றியே மாணிக்யத்தைக் கொண்டு குரங்கை எறிந்தால் போலே என்றுமாம்–குரங்குதலாவது வளைதலாய்-உதித்த ஆதித்யன் உயர எழுந்து விழுந்து அஸ்தமித்த கொடுமையைச் சொன்னபடி-
பேண லமில்லா வரக்கர் முந்நீர பெரும் பதிவாய்
நீள் நகர் நீளெரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர்
நாள் நிலந்தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று
காண லுமாங்கொல் என்றே வைகல் மாலையும் காலையுமே – – 92-–அவ் வடிவைக் காண்கைக்கு அர்த்திப்பார் நேரும் அளவல்ல வாயிற்று இவர்கள் நேருவது –நாள் தோறும் –அது தன்னிலும் -இடைவிடாது தொழுவார்கள்
காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்
மாலை வெய்யோன் பட வையகம் பரவுவர் அன்ன கண்டும்
காலை நன் ஞானத் துறை படிந்தாடிக் கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் அவன் மைப்படியே – – -93 —உத்பவ அபிபவ ரூபத்தாலே ஆதித்யன் இருளை மேலிடுவது –ராத்திரி ஆதித்யனை- மேலிடுவதாகிற இத்தைக் கண்டு வைத்தும் –நந்தத் யுதித ஆதித்யே-விடிந்த வாறே அபிமத விஷயத்தை சாதிக்கைக்கு த்ரவ்யார்ஜனம்-பண்ணுக்கைக்கு ஈடான காலம் வந்தது என்று உகவா நிற்பர்கள்–கங்குல் ஆகிற குறும்பர் அவன் கிரணங்களைப் பரக்க விட ஓடா நிற்பர்கள் இறே-மாலையிலே பெரிய பிரதாபத்தை யுடைய ஆதித்யனை அழித்து அவன் ஆண்ட பரப்பை அடையக் கைக்கொள்வர்கள்–மாலை –இவன் அனுசந்திக்க என்று உபக்ரமிக்கும் அத்தனை இறே வேண்டுவது –மேல் உள்ளது எல்லாம்-தானே செய்து -கொடு வந்து மேல் விழும்படியான வ்யாமோஹத்தை உடையவனை
எழுவதும் மீண்டே படுவதும் படு எனை யூழிகள் போய்க்
கழிவதும் கண்டு கண்டு எள்கல் அல்லால் இமையோர்கள் குழாம்
தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு
கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே – – 97–தொல்லை மால் -சம்ச்லேஷம் பழையது என்றவாறு -அநாதியான வியாமோஹம் கொண்டவன் -என்றும் அனைத்துக்கும் பழைய பெரியவன் என்றுமாம் –பகவத் ஸ்வரூபத்தை முழுவதும் ஸாக்ஷாத்கரிக்க விரும்பித் தொடங்கினார்க்குக் காலம் முடிந்துபோவதேயன்றி அவ்வநுபவம் முடிந்து கண்வாங்குந் தன்மையில்லையென்று ஆழ்வார் அன்பர்க்கு அருளிச் செய்கிறார்.-ஸூர்யன் உதிப்பதும் மீண்டும் அஸ்தமிப்பதுமாய் இப்படியே நாள் திங்கள் நோக்கி இரங்குதலே யன்றி நித்யஸூரிகள் எப்பொழுதும் கைகூப்பிக்கொண்டு கைங்கர்யம் பண்ம் பொருட்டு சூழப்பெற்ற அநாதியான எம்பெருமானைக் கண் களிப்பக் கண்டு முடிக்க வேணுமென்பதோர் ஒப்பற்ற அன்பைக் கொண்டு நிற்பவர்களுக்கு அவன் பக்கல் வைத்தகண் வாங்கி இமைக்க இடமுண்டோ வென்கிறார்.-தொல்லை மால்’ என்றதற்கு ஜீவாத்மாக்களிடத்தில் அநாதியாகவுள்ள வ்வயாமோஹ முடையானென்றும் எல்லாவற்றுக்கும் பழமையான பெரியோனென்றும் பொருள் கொள்வர்.-
வகை சேர்ந்த நல் நெஞ்சம் நாவுடைய வாயும்
மிக வாய்ந்து வீழா வெனிலும்-மிக வாய்ந்து
மாலைத் தாம் வாழ்த்தாது இருப்பார் இது வன்றே
மேலைத் தாம் செய்த வினை–44—ஸத்வ கார்யமான ஞானத்தாலே ரஜஸ் தமஸ்ஸூக்களைத் தள்ளி
ஸர்வேஸ்வரனை வாழ்த்தாதே இருப்பர்கள்-இது வன்றோ சம்சாரம் நித்யமாக இவர்கள் பண்ணின பாபம்–இது பராசர பட்டர் நிர்வாகம்=ஈஸ்வரனுடைய குணங்களில் சேர்ந்த நெஞ்சும் குணம் ஒன்றையுமே ஏத்தும் வாயும் அல்லாத குணங்களிலும் உள் புக்கதில்லை யாகிலும் எல்லா குணங்களிலும் உள் புகும்படி ஆராய்ந்து ஸர்வேஸ்வரனை ஏத்தாது இருப்பர்கள் இது வன்றோ பண்ணின பாபத்த்தின் பலம் என்று பிள்ளை திரு நறையூர் அரையர் நிர்வாகம்-
கலந்து நலியும் கடும் துயரை நெஞ்சே
மலங்க வடித்து மடிப்பான் விலங்கல் போல்
தொல் மாலைக் கேசவனை நாரணனை மாதவனை
சொல் மாலை எப்பொழுதும் சூட்டு–65-அபரிச்சின்னனாய் -(தொல் மாலை)-ஸ்ரீ ஸூக்தி –சொல் மாலை –
மற்ற மாலைகளில் நின்றும் வ்யாவ்ருத்தமாக அன்றோ இருப்பது –வாடாத மணம் மாறாத மாலை தானே சொல் மாலை-அவனோ பராத்பரன் -நாம் சூட்டும் மாலை போகுமோ என்கிற சங்கைக்கு
தன்னைத் தாழ விட்டு நாராயணன் கேசவன் மாதவன் ஆனபடியால் வாத்சல்யம் மிக்கு -அழகு ஈர்க்கும் -பிராட்டி இருக்க ஏற்றுக் கொள்ள வைப்பவளும் அருகில் உண்டே
திருத் துழாய்த் தாரார் நறு மாலை கட்டுரைத்தாள் -கட்டுரையா –திருத்துழாய்மலர்கள் நிறைந்த மணம் மிக்க மாலையையும் அபிநயித்துக் காட்டினாள்.
கூரார்ந்த வள்ளுகிரால் கீண்டு குடல் மாலை சீரார் திரு மார்வின் மேற்கட்டிசெங்குருதி-அவ்வசுரனுடைய குடலை (பிடுங்கி யெடுத்து)-அழகிய பிராட்டிக்கு இருப்பிடமான மார்பிலே வெற்றிலையாக அணிந்துகொண்டு
சீரார் திருத் துழாய் மாலை நமக்கு அருளி தாரான் -தரும் -என்று இரண்டத்தில் ஒன்ற்றதனை-சிறந்த திருத்துழாய் மாலையை-தருவன் தரமாட்டான் என்ற இரண்டு வார்த்தைகளில் ஏதாவதொரு வார்த்தையை-
இன்னிசை வண்டு அமரும் சோலை வாய் மாலை சேர் மன்னிய மா மயில் போல் கூந்தல் மழைத் தடம் கண் ——25–இனிய இசைகளைப்பாடுகின்ற வண்டுகள் பொருந்தி யிருக்கப்பெற்ற பூஞ்சோலைகளிலே,-புஷ்பங்களை யணிந்தும் மயில் தோகை போன்றுமிருக்கிற கூந்தலை யுடையவர்களாயும்-
என் மனத்து மாலை யிடவெந்தை ஈசனை ——–119-என்மேல் வ்யாமோஹ்முடையனாகி எனது நெஞ்சை விட்டுப்பிரியாதவனாய்-திருவிடவெந்தையிலெழுந்தருளியிருக்கிற ஸர்வேவரனாய்-
சோராத காதல் பெரும் சுழிப்பால் தொல்லை மாலை யொன்றும்
பாராதவனைப் பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள்
பேராத வுள்ளத்து இராமானுசன் தன் பிறங்கிய சீர்
சாரா மனிசரைச் சேரேன் எனக்கு என்ன தாழ்வு இனியே -15 –தொல்லை மாலை –-நித்யஸ் சத்யா -என்கிறபடி -நித்ய சத்யனுமாய் –-ஏகோஹைவை நாராயணா ஆஸீத் ந பிரம்மா ந ஈசான ச ஏகாகீ நாமேத -என்றும்-அசிதவிஷ்டா ந் பிரளயே ஜந்தூ நவலோக்ய ஜாத நிர்வேத – என்றும் -சொல்லுகிறபடியே சம்சாரமாகிற பெரும் கடலிலே விழுந்து நோவு பட்டு உரு மாய்ந்து கிடக்கிற இச் சேதனருக்காக நிர்வேதப்படும்படியான வ்யாமோஹத்தை வுடைய ஸ்ரீயபதியை-
செய்யும் பசும் துளவத் தொழில் மாலையும் செம் தமிழில்
பெய்யும் மறைத் தமிழ் மாலையும் பேராத சீரரங்கத்
தய்யன் கழற்கு அணியும் பரன் தாள் அன்றி ஆதரியா
மெய்யன் இராமானுசன் சரணே கதி வேறு எனக்கே – 13-மிக்க சீர் தொண்டரான தம்மாலே –வைஜயந்தீ வனமாலை என்றும் கலம்பகன் மாலை என்றும் அனுபோக்தாக்களாலே உல்லேக்கிக்கும் படி சந்தர்ப்பிக்கப் பட்டதாய் -தம்முடைய கர ச்பர்சத்தாலே வந்த புதுக் கணிப்பு எல்லாம் நிறத்திலே காணலாம் படியான பசுமை உடைத்தான -திருத் துழாயாலே வகுப்புண்டாய் சமைத்த திரு மாலையும்-தொடை யொத்த துளபமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டர் அடிப் பொடி என்னும் இவர் தம்மை தாமே நிரூபித்து கொள்ள வல்லவர் இறே –செய்யும் மறைத் தமிழ் மாலையும் –
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் இருவகை மாலைகளை அரங்கத்து ஐயனுக்கு சமர்ப்பிக்கின்றார் –
ஒருவகை -திரு துழாய் மாலை-மற்று ஒரு வகை -தமிழ் மாலை-ஆண்டாளும் அரங்கனுக்கு பா மாலையும் பூ மாலையும் சமர்பித்து உள்ளாள்-ஆயின் அப்பூ மாலை அவளால் தொடுக்கப் பட்டது அன்று -சூடி சமர்பிக்கப் பட்டது தான்-திருத் துழாய் மாலையோ தொண்டர் அடி பொடி ஆழ்வார் தம் கையினாலேயே தொடுத்தது –ஆதலின் –-செய்யும் துளப மாலை -என்றார் –
தாழ்வு ஓன்று இல்லா மறை தாழ்ந்து தல முழுதும் கலியே
யாள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்மின் அரங்கர் மௌலி
சூழ்கின்ற மாலையை சூடிக் கொடுத்தவள் தொல் அருளால்
வாழ்கின்ற வள்ளல் இராமானுசன் என்னும் மா முனியே – -16 –-அலங்கரிக்கத் தக்க புஷ்ப மாலையை -சூடிக் கொடுத்தவள்-முந்துற முன்னம்-குழல் கோதை முன் கூறிய பாடல் பத்தும்- 4-11–சுரும்பார் குழல் கோதை தொகுத்து உரைத்த செந்தமிழ்ப் பத்தும் வல்லார் -9-10–தாழ் குழலாள் துணிந்த துணிவை -12-10–தாழ் குழலாள்–என்னும்படியான தன்னுடைய திருக் குழலிலே அலங்கரித்துக் கொண்டு -அது தன்னைக் களைந்து ஸ்வாமிக்கு சமர்ப்பிக்கும்படி கொடுத்தவள் -இப்படி யாகையாலே இவளுக்கு -சூடிக் கொடுத்தவள் -என்று அதுவே நிரூபகமாய் ஆய்த்து – சூடிக் கொடுத்த சுடர் கொடியே -என்னக் கடவது இறே –
பொன் முடியம் போரேற்றை எம்மானை நால் தடம் தோள்
தன் முடிவொன்றில்லாத தண் துழாய் மாலையனை
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீரே –2-5-8—யதோ வாசோ நிவர்த்தந்தே-என்று மீளும் படியான உத்கர்ஷத்தை உடையவனை-தண் துழாய் மாலையனை–சர்வாதிக விஷயத்துக்கு அடையாளமான திருத் துழாய் மாலையை உடையவனை-என் முடிவு காணாதே- என்னுள் கலந்தானை
தன்னுடைய உத்கர்ஷத்துக்கு முடிவு இல்லாதோபாதி உஎன்னுடைய நிகர்ஷத்துக்கும் முடிவு இன்றிக்கே இருக்க அத்தைப் பாராதே அவ்விஞ்ஞாதவாய் என்னோடே கலந்தவனை -தன்னைப் பிரிந்து நான் முடியுமது காண மாட்டாமையாலே என்றுமாம்
வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகனை
கண்ணனை நெடுமாலைத் தென் குருகூத்ச் சடகோபன்
பண்ணிய தமிழ் மாலை யாயிரத்துள் இவை பன்னிரண்டும்
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே–2-7-13-வேதம் போலே அடி அன்றிக்கே இருக்கிறது அன்று -அப்வருஷேயம் -என்னுமதில் காட்டிலும் விலக்ஷணமாய் இருக்கிறதாயிற்று வக்த்ரு சுத்தியால்-
உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக்
குயில்கொள் சோலைத் தென்குருகூர்ச் சடகோபன்
செயிர்இல்சொல் இசைமாலை ஆயிரத்துள் இப்பத்தும்
உயிரின்மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே.–3-2-11-செயிர் -குற்றம் –இல் -இல்லாமை -ஆக நிர்த்தோஷமான சப்த சந்தர்ப்பத்தை உடைய ஆயிரம்-
கண்ணனை மாயன் றன்னைக் கடல் கடைந்து அமுதம் கொண்ட
அண்ணலை அச்சு தன்னை அனந்தனை அனந்தன் றன்மேல்
நண்ணி நன்கு உறைகின்றானை ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை
எண்ணுமாறு அறிய மாட்டேன் யாவையும் எவரும் தானே.–3-4-9-ஆபத்து கண்டால் படுக்கையில் பொருந்தாதே ரக்ஷிக்கும் சர்வேஸ்வரனை-
பொருந்திய மாமருதின்னிடை போய எம் பொருந் தகாய்! உன் கழல் காணிய பேதுற்று
வருந்தி நான் வாசக மாலை கொண்டு உன்னையே இருந்திருந்து எத்தனை காலம் புலம்புவனே?–3-8-10-ஆசைப்பட்ட விஷய அநு குணமாய் இறே நோவு பாடும் இருப்பது –ஒரு சொல் தொடை எடுக்கையாகிறது ஒரு மலையை எடுத்தால் போலே இருக்கிறது-நான் விரஹம் பொறுக்க மாட்டாத மேன்மையை உடைய நான்-வாசக மாலை கொண்டு-உன் குணத்துக்கு வாசகமான சொல் தொடையைக் கொண்டு உன்னையே இருந்திருந்து யதோ வாசோ நிவர்த்தந்தே-என்னும்படியான உன்னையே-
பாவியல் வேத நன் மாலை பல கொண்டு,
தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற
சேவடி மேல் அணி செம் பொன் துழாய் என்றே
கூவுமால் கோள்வினை யாட்டியேன் கோதையே.–4-2-3–பாக்களால் இயலப் பட்ட வேதம் -சந்தஸ்ஸூக்களை உடைத்தான் வேதம் அதில் நன்றான மாலைகளைக் கொண்டு -ஸ்ரீ புருஷ ஸூக்தாதிகளைக் கொண்டு – சர்வ வேதா யத் பத்மாம நந்தி -என்கிறபடியே அல்லாத இடங்களுக்கும் ப்ரதிபாத்யனே யானாலும் ஆராத நத்திலே யாதல் -விபூதியிலே யாதல் பரந்து இருக்கும் –
பூசும் சாந்து என்நெஞ்சமே; புனையும் கண்ணி எனதுடைய
வாசகம் செய் மாலையே; வான் பட்டாடையும் அஃதே;
தேசமான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே;
ஈசன், ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே.–4-3-2-இவருடைய பாவ பந்தம் அவனுக்கு பரிமளிதமான அங்க ராகமே யாயிற்று -வழக்கனான மாலை அன்றிக்கே ஆதரித்துச் சூடும் மாலை –என்னுடைய யுக்தி மாத்திரமே-இவர் நெஞ்சிலும் பரிமளிதம் யாயிற்று இவர் வாக்கு -வாக்கான மாலை இ றே சாந்துக்கு பூக்கட்டி இறே மனம் கொடுப்பது
மாய்த்தல் எண்ணி ‘வாய்முலை தந்த மாயப் பேய் உயிர்
மாய்த்த ஆய மாயனே! வாமனனே! மாதவா!
பூத்தண் மாலை கொண்டு உன்னைப் போதால் வணங்கேனேலும்,நின்
பூத்தண் மாலை நெடு முடிக்குப் புனையும் கண்ணி எனதுயிரே.–4-3-4-பூத்தண் மாலை கொண்டு- உன்னைப் போதால் வணங்கேனேலும்-குளிந்த பூ மாலையைக் கொண்டு -பூதனை வந்து கிட்டின போது ஆதல் -அசுரர்கள் இடத்தே சென்ற போது ஆதல்-பிராட்டியும் தானும் இருந்த போது ஆதல் -அவ்வவ காலங்களில் வணங்கேனேலும் திருவடிகளில் விழுந்து சிசிர உபசாரம் பண்ணப் பெற்றிலேன் யாகிலும்-நின்-பூத்தண் மாலை நெடு முடிக்குப் புனையும் கண்ணி எனதுயிரே.
குளிர்ந்த பூ மாலையோடு நித்ய சித்தமாய்ச் செல்லுகிற உன்னுடைய திரு அபிஷேகத்துக்கு ஆதரித்து சாத்தும் மாலை என் பிராணன் ஆவதே-பிராணன் -சத்தை –
வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான்றனைப்
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?–4-5-1-கைகள் ஆரத் தொழுது--வைகுந்தம் என்று ககை காட்டும் -தாயவனே என்று தடவும் என் கைகள் -என்னும் கைகளின் விடாய் தீர்க்கும்படி தொழுது
சொல் மாலைகள்-வாடாத மாலைகள்-ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே–கிருஷ்ணா தி சிரஸா ஸ்வயம் -என்கிறபடியே சிரஸா வஹிக்கும் படியாக பாக்யம் பண்ணின எனக்கு-இவர் கவி பாட்டு ஈஸ்வரனுக்கு அலங்காரமாக இருக்கையாலே மாலை என்கிறது–இவருக்கு நோன்பு ஆகிறது -மண்ணை இருந்து துழாவி -யில் விடாய் ஆதல் பகவத் பிரசாதம் ஆதல் -தம்முடைய பேற்றுக்கு அடியாக மயர்வற மதி நலம் அருளினான் என்றார் இறே-பூர்வ க்ஷண வர்த்தி இறே ஒன்றுக்கு ஹேது ஆவது –
மைய கண்ணாள் மலர்மேல் உறை வாள் உறை மார்பினன்
செய்ய கோலத்தடங் கண்ணன் விண்ணோர் பெருமான் தனை
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேன்
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே.–4-5-2-மொய்-என்று வலி யாதல் -பெருமை யாதல்
வலி யான போது-சிதிலமாய் இராதே சொல் செறிந்து கட்டுடைத்தாய் இருக்கை–பெருமையான போது இவ்விஷயத்தை விளாக் குலை கொள்ளவற்றாய் இருக்கை –-யதோ வாசோ நிவர்த்தந்தே-என்று மீளாதே இவ்விஷயத்துக்கு நேரே வாசகமாய் இருக்கை –இசை மாலைகள் –-பரிமள பிரசுரமான பூ மாலைகள் போலே கேட்டார் நெஞ்சு பிணிப்புண்ணும் படி இசை விஞ்சி இருக்கை –-அவனும் அவளும் நித்ய ஸூரிகளுமாய் இருந்து கேட்டுக் கொண்டாட பிறந்த பிரபந்தம் இறே-ஸ்ரீ ராமாயணத்தில் காட்டில் இப்பிரபந்தத்துக்கு ஏற்றம் -பகவத் ஹ்ருதயத்தை பின் சென்ற ப்ரஹ்மா அடியாக-நாரதாதிகள் முன்னிலையாக பிறந்த பிரபந்தம் அன்றிக்கே-கேட்டாரார் வானவர்கள் – தென்னா வென்னும் என் அம்மான் -என்கிறபடி தானும் நித்ய ஸூரிகளும் கேட்டுக் கொண்டாடும் படி இருக்கை –-ஏத்தி உள்ளப் பெற்றேன்-மன பூர்வோ வாக் உத்தர -என்கிற நாட்டார் படியும் அன்று -இவர் படி-ஏத்தி பின்னை யாயிற்று நினைத்தது-கவி பாடுகைக்கு நினைவு அத்தலையில் யானாலும் பேறு தம்மதாய் இருக்கிற படி-சாஸ்திர பலம் ப்ரயோத்த்ரி என்கிற இடம் அன்றியிலே இருக்கிற படி-முடியானே -யிலே விடாய்த்த போது தனித்தனியே கரணங்கள் விடாய்த்தால் போலே இங்கு தனித் தனியே யாயிற்று அனுபவிக்கிறது–ஈஸ்வரன் நினைவாலே பாடுகிற கவி யாகையாலே தாமும் கரணங்களோ பாதி அந்வயித்தார்–
மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்
தூவி அம் புள்ளுடையான் அடல் ஆழி அம்மான் தன்னை
நாவியலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்;
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே.–4-5-4-நெஞ்சின் வருத்தம் இன்றிக்கே வாக் ப்ரவ்ருத்தி மாத்ரமான திருவாய்மொழி யைக் கொண்டு நா புரட்டின இடம் எங்கும் கவியாய்க் கிடக்கை
ஏத்தி நண்ணப் பெற்றேன்;-இவர் நண்ணி ஏத்தினவர் அல்லர் -ஏத்திக் கொண்டு பண்ணுகிறார்
ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை அமரர் தம்
ஏற்றை எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை
மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன்;
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே.–4-5-5–மாற்ற மாலை புனைந்து ஏத்தி
பண்ணின உபகாரகத்துக்கு பிரதிபகாரம் காணாமையாலே ஏத்தினேன் -அது திருவாய்மொழி யாயிற்று-சொல் மாலையைத் தொடுத்து ஏத்தி -மாற்றம் –சொல்-நாளும் மகிழ்வு எய்தினேன்;
நாள் தோறும் ஆனந்தத்தை உடையேன் ஆனேன் –-வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவி -என்னும்படி யானேன்-தேவ மாத்ருகம் போலே காதாசித்கம் அன்றிக்கே பகவத் பிரசாதம் அடியாக வந்தது ஆகையால் நதீ மாத்ருகம் போலே நித்ய ஸித்தமாய் இருக்கும் இறே–
கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும்
பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேற்கு
அரியது உண்டோ எனக்கு இன்று தொட்டும் இனி என்றுமே?–4-5-6-உரிய சொல்லால்-இவ்விஷயத்துக்கு நேரே வாசகமான சொல்லாலே-இசைமாலைகள்-ஸம்ஸரவே மதுரம் வாக்கியம் என்னும் படி திருச் செவி சாத்தலாய் இருக்கை-ஏத்தி உள்ளப்பெற்றேற்கு-ஏத்தி அனுபவிக்கப் பெற்ற எனக்கு-அரியது உண்டோ-நான் பெறாதே இனி பெற வேண்டி இருப்பது ஒரு பொருள் உண்டோ எனக்கு-ஈஸ்வரோஹம் என்று இருக்கிற சம்சாரத்தில் சேஷத்வம் ரசிக்கப் பெற்று ஸ்வரூப அநு ரூபமாக வாசிகமான அடிமை செய்யப் பெற்று வினை நோய்கள் கரியவே -என்று விரோதியும் கழிக்கப் பெற்ற எனக்கு
என்றும் ஒன்று ஆகி ஒத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு
இன்றி நின்றானை எல்லா உலகும் உடையான்றனைக்
குன்றம் ஒன்றால் மழைகாத்த பிரானைச் சொன் மாலைகள்
நன்று சூட்டும் விதி எய்தினம் என்னகுறை நமக்கே?–4-5-7–ஆபத்தே கைம்முதலாக – ரஷிக்கும் இடத்தில் பரிகர நியதி இல்லை என்கை-இடையரும் பசுக்களும் தொலையும் படி இந்திரனும் பசியாக்ரஹத்தாலே வர்ஷிக்க ரஷித்தான்-தீ மழை இறே –-பிரானை – தென்றல் சந்திரன் தண்ணீர் போலே உபகரிக்கையே செல்லமாய் இருக்குமவன்-சொன் மாலைகள்-என்னுடைச் சொற்கள் என்னும் தூய மாலை -என்னக் கடவது இறே-நன்று சூட்டும்-அவ்விஷயத்தை விளாக் குலை கொண்டு பேச வல்லேன் ஆனேன் -அவன் விரும்பும்படி சொல்லப் பெற்றேன்-
நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானைத் தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொல்மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனியாவர் நிகர் அகல் வானத்தே?–4-5-8-சொல்மாலைகள் சொல்லுமாறு-அமைக்க வல்லேற்கு-ஈஸ்வரன் அழைத்து -நமக்கு ஒரு கவி சொல் என்றால் அப்போதே சமைக்க வல்ல எனக்கு என்று பூர்வர்கள் நிர்வாஹம்-பகவத் குணங்களில் உடைகுலைப் பட்டு இருக்கிற நெஞ்சை தரித்து நின்று கவி சொல்ல வல்லேனாம் படி அமைக்க வல்ல எனக்கு என்று பட்டர் நிர்வாஹம்
ஈஸ்வரன் விஷயீ கரித்து குளிர நோக்கினால் அவ் வழகிலே சுழி யாறு பட வேண்டி இறே இருப்பது
உயிரினால் குறை இல்லா உலகு ஏழ் தன் உள் ஒடுக்கித்
தயிர் வெண்ணெய் உண்டானைத் தடங் குருகூர்ச் சடகோபன்
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இப்பத்தால்
வயிரம் சேர் பிறப்பு அறுத்து வைகுந்தம் நண்ணுவரே.–4-8-11-செயிர் -குற்றம் –இல் – இல்லாமை -குற்றமற்ற இப்பத்து –ஈஸ்வரன் விரும்பாத ஆத்மாத்மீயங்கள் வேண்டா என்கிற இடம் அகவாயிலும் உண்டாம் படி இருக்கை –
ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே.–4-10-11-நாள் தோறும் கமலா நின்றுள்ள திரு மகிழ் மாலையை திரு மார்பிலே யுடையவர்-நண்ணாதார் முறுவலிப்ப -திருவாய் மொழியில் சம்சாரிகள் கிலேசத்தை அனுசந்தித்து திரு உள்ளம் வாடின வாறே இட்ட மாலையும் வாடிற்று-பகவத் பரத்வத்தை உபதேசித்து -இவர்களுக்கு ஒரு குறை இல்லை -என்று திரு உள்ளமுகந்தவாறே அதுவும் செவ்வி பெற்றது–
நீங்க நில்லா கண்ண நீர்கள் என்று அன்னையரும் முனிதிர்
தேன் கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
பூந்தண் மாலைத் தண் துழாயும் பொன் முடியும் வடிவும்
பாங்கு தோன்றும் பட்டும் நாணும் பாவியேன் பக்கத்தவே.–5-5-4–தர்ச நீயமாய் குளிர்ந்த திரு மாலையும் -உபய விபூதி ரக்ஷணத்துக்கு முதலி என்று தோன்றும் படி இட்ட தனி மாலையும் -ஸ் ப்ருஹணீயமான திரு அபிஷேகமும் -உபய விபூதி நாதன் என்று கோட் சொல்லுகிற முடி என்கை வடிவும் -அந்த முடிக்கு தகுதியான விக்ரஹமும்-
கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி வளநாடன் மன்னு குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ்மாலை ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெருஞ் செல்வத்தராய்த் திருமால் அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே.–5-6-11-ஆராய்ந்து சொன்ன தமிழ்த் தொடை-இந்த லோகத்தில் எல்லாரும் கொண்டாடும் படியான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை யுடையராய் ஸ்ரீ லஷ்மீ பாதிக்கு அடியாரானவர்களை ஆராதிக்கப் பெறுவார்கள் -அவர்களுக்கு ஆராதனம் ஆகிறது இவர் அநு கரித்த இப் பாசுரத்தை சொல்லுகை-தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல்மாலைகள் சொன்னேன் என்னக் கடவது இறே-இவர் இவ் வநுகாரத்தாலே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ப்ரியகரர் ஆனால் போலே இது கற்றாரும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பிரியமான வ்ருத்தியைப் பண்ணக் கடவர் என்கை-
ஆய்ச்சியாகிய அன்னையால்அன்று வெண்ணெய் வார்த்தையுள்சீற்றமுண்டழு
கூத்த அப்பன்தன்னைக் குருகூர்ச் சடகோபன்
ஏந்திய தமிழ்மாலை ஆயிரத்துள் இவையும் ஒர்பத்து இசையொடும்
நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல்குரவே.–6-2-11–பிரணய ரோஷம் போனவாறே -போகு நம்பீ என்றும் -புள்ளுவம் பேசாதே என்றும் சொன்னவை ஏத்திற்றாய் விட்டது-அத்விதீயமான பத்து -ஆஸ்ரிதரோடு பாவ பந்தம் வெளியிட்ட பத்து-
மனப்பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான்பிறந்து
தனக்கு வேண்டுருக் கொண்டு தான்தன சீற்றத்தினை முடிக்கும்
புனத் துழாய் முடி மாலை மார்பன் என்னப்பன் தன் மாயங்களே
நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கினியார் நிகர் நீணிலத்தே.–6-4-7–ஆஸ்ரித விரோதிகளை போக்கப் பெற்றதால் ஒப்பித்து இருக்கிற படி-
முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் மொய்புனல் பொருநல்
துகில் வண்ணத் தூ நீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ் வண் குரு கூர்ச் சட கோபன்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே.–7-2-11-பெரிய பெருமாள் திருவடிகளிலே யாயிற்று ஆயிரமும் சொல்லிற்று –திரு மோகூர்க்கு ஈத்த பத்து -திரு வேங்கடத்துக்கு இவை பத்து –என்றும் பிரித்துக் கொடுத்த அத்தனை –திருப் பலகையில் அமுது படியில் திருப் பதிகளில் நாயன்மார்க்கு அளந்து கொடுக்குமா போலே –என்று பிள்ளை அருளிச் செய்வர் –
பெரிய வப்பனைப் பிரமனப்பனை உருத்திரனப்பனை முனிவர்க்
குரியவப்பனை யமரரப்பனை உலகுக்குகோர் தனியப்பனை தன்னை
பெரிய வண் குருகூர்ச் சடகோபன் பேணின ஆயிரத்துள்ளும்
உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால் உய்யலாம் தொண்டீர் ! நம் கட்கே–8-1-11–அவனைத் தாம் ஆசைப்பட்ட படியை சொன்ன இப்பத்து –யதோ வாசோ நிவர்த்தந்தே என்று மீளுகை அன்றிக்கே பகவத் குணங்களுக்கு நேரே வாசகமாகை-
சோலைத் திருக் கடித் தானத்துறை திரு
மாலை மதிட் குருகூர்ச் சடகோபன் சொல்
பாலோடு அமுதன்ன ஆயிரத்திப் பத்தும்
மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே-8-6-11–சிரமஹரமாய் -தர்ச நீயமான சோலையை யுடைய திருக் கடித் தானத்தில் நித்ய வாஸம் பண்ணுகிற ஸ்ரீ யபதியை-
வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரும் யவரும்
வயிற்றில் கொண்டு நிற்றொரு மூவுலகும் தம்
வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மாலை
வயிற்றில் கொண்டு மன்ன வைத்தேன் மதியாலே—8-7-9-இவற்றை அடைய தன் திரு வயிற்றிலே கொண்ட இடத்திலும் ஒரு விகாரம் இன்றிக்கே முன்பு போலே நின்ற சர்வேஸ்வரனை-
நேர்பட்ட நிறை மூவுலகுக்கும் நாயகன் தன்னடிமை
நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்
நேர்பட்ட தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பத்தும்
நேர்பட்டார் அவர் நேர்பட்டார் நெடுமாற்கு அடிமை செய்யவே–8-9-11—அந்த வாஸ்யத்துக்கு தகுதியான யுக்தி வாய்த்த தமிழ்த் தொடை ஆயிரத்திலும் இத் திருவாய் மொழி நேர் பட்டவர்கள் –
சீலம் எல்லை இலான் அடிமேல் அணி
கோல நீள் குருகூர்ச் சடகோபன் சொல்
மாலை ஆயிரத்துள் இவை பத்தினின்
பாலர் வைகுந்தம் ஏறுதல் பான்மையே–9-3-11–அழகு மிக்கு இருந்துள்ள திரு நகரி -அன்றியே -கோல நீள் -என்று சப்தம் தானே உண்டாகையாலே –அடி மேல் அணி -மாலை -என்று கூட்டிக் கொள்ளவுமாம் –
கண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து
பண்டை வினை ஆயின பற்றோடு அறுத்துத்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே –9-4-9–என்னளவு இன்றிக்கே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் உபகாரகனாகப் பெற்றேன்–இப்பேறு என்னால் வந்ததாக மாட்டாது -நான் சர்வேஸ்வரனால் விஷயீக்ருதன் ஆனேன் –
மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ வண் குறிஞ்சி இசை தவரும் ஆலோ
செல்கதிர் மாலையும் மயக்கும் ஆலோ செக்கர் நன் மேகங்கள் சிதைக்கும் ஆலோ
அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ –9-9-1-செல்லப்பட்டு இருந்துள்ள கதிரை யுடைத்தான மலையானது மயங்கப் பண்ணா நின்றது -அஸ்தமியா நின்றுள்ள ஆதித்யனை யுடைய ஸந்த்யையானது மோஹிப்பியா நின்றது -புடைவையை வாயிலே கொடுத்து நலிவாரைப் போலே ஓடுகிற வியசனத்துக்கு போக்கு விட்டு கூப்பிட ஒண்ணாத படி உணர்த்தி அழியும் படி மோஹிப்பியா நின்றது-
புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ புலம்புறு மணி தென்ற லாம்ப லாலோ
பகலடு மாலை வண் சாந்த மாலோ பஞ்சமம் முல்லை தண் வாடை யாலோ
அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்
இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான் இனி இருந்து என்னுயிர் காக்குமாறு என்–9-9-2—பதார்த்த தர்சனம் பண்ணி தரிக்கலாம் பகலையும் முடித்துக் கொண்டு மலையானது தோற்றா நின்றது –பிராட்டி தனிமையில் ஐயோ என்னும் பெரிய யுடையாரை முடித்துக் கொண்டு ராவணன் நலிந்தால் போலே-
யாமுடை நெஞ்சமும் துணையன்றாலோ ஆ புகு மாலையும் ஆகின்றாலோ
யாமுடை ஆயன் தன் மனம் கல்லாலோ அவுனுடைத் தீங்குழல் ஈருமாலோ
யாமுடைத் துணை என்னும் தோழி மாரும் எம்மின் முன்னவனுக்குமாய் வராலோ
யாமுடை யார் உயிர் காக்குமாறு என் அவனுடை யருள் பெறும் போதரிதே–9-9-5-ஒரு துணை யற்று இருக்கிற அளவிலே பசுக்கள் புகுரும் ஸந்த்யையும் ஆகா நின்றது –எனக்குத் துணை இல்லை என்று அறிந்தால் மாலைக்கு பிற்காலிக்க வேண்டாவோ -ஆச்வாஸ கரமான பகல் போய்-பிரிந்தார் வெருவும் ஸந்தயையும் ஆகா நின்றது-
அவனுடை யருள் பெறும் போதரிதால் அவ்வருள் அல்லன வருளும் அல்ல
அவன் அருள் பெறுமள வாவி நில்லாது அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன்
சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை சேர் திரு வாகம் எம்மாவி ஈரும்
எவன் இனிப் புகுமிடம் எவன் செய்கேனோ ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள்–9-9-6-ஆச்வாஸ ஹேதுவான பகலையும் முடித்துக் கொண்டு -மாலையும் ஆகா நின்றது –சர்வ காலத்துக்கும் துணையான நெஞ்சையும் காண்கிறிலேன் என்னுதல் -மாலையையும் காண்கிறிலேன் -என்னுதல்
ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான் அது மொழிந்து இடை இடைத் தன் செய் கோலம்
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித் தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கிப்
பேதுறு முகம் செய்து நொந்து நொந்து பேதை நெஞ்சு அறவு அறப் பாடும் பாட்டை
யாதும் ஒன்றும் அறிகிலம் அம்ம அம்ம மாலையும் வந்தது மாயன் வாரான்–9-9-9-மிகவும் பயாவஹமாம் படி ராத்திரியும் வந்தது -இனி இருந்து கிலே ஸிக்க வேண்டாத படி இது முடித்தே விடும் போலே இருந்தது –
மாலையும் வந்தது மாயன் வாரான் மா மணி புலம்ப வல்லேறு அணைந்த
கோல நன் நாகுகள் உகளுமாலோ கொடியன குழல்களும் குழறுமாலோ
வாலொளி வளர் முல்லை கரு முகைகள் மல்லிகை யலம்பி வண்டாலுமாலோ
வேலையும் விசும்பில் விண்டு அலறுமாலோ என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே–9-9-10-மாலையையும் அவனையும் கூடப் பிணைத்து விட்டாள் போலே காணும் -அவன் வருவதாக குறித்துப் போன காலமும் வந்தது -தான் வருகிறிலன் –
அவனை விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லா அணி யிழையாய்ச்சியர் மாலைப் பூசல்
அவனை விட்டகல்வதற்கே யிரங்கி அணி குருகூர்ச் சடகோபன் மாறன்
அவனியுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு
அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின் தொண்டீர் அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே–9-9-11–ஒப்பிக்கப் பட்ட ஆபரணங்களை யுடைய இடைப் பெண்கள் -கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழிய புகுந்து -என்கிறபடியே அவன் வரவுக்கு உடலாக தங்களை அலங்கரித்து வரும் காலத்திலே வரக் காணாமையாலே கூப்பிட்ட கூப்பீட்டை –அப்படி வியாமோஹத்தை யுடையவனைக் கிட்டி தொழுது சாபலமுடையார் பூமியிலே நின்று அடைவு கெடக் கூப்பிட்டு உஜ்ஜீவியுங்கோள் -இத் திருவாய் மொழியை அப்யசித்தார்க்கு என்னைப் போல் என் சொல்லி உய்வன்-என்று கூப்பிட வேண்டா -பேற்றிலே அந்வயம் என்கை –
மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக்
காலை மாலை கமல மலர் இட்டு நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே–9-10-1–சர்வேஸ்வரன் திருவடிகளைக் கிட்டி ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கப் பாருங்கோள் -மால் -என்று ஸ்நேஹ கார்யமான வியாமோஹமாய்-மாலையுற்று -என்னவுமாம் –பக்தி உக்தராய் -என்றபடி –காலை மாலை -ஆஸ்ரயணீயத்துக்கு கால நியதி இல்லை -என்கிறது -ஆதி நடுவந்திவாய் -என்கிறபடியே சர்வ காலத்துக்கும் உப லக்ஷணம் –
பணி மொழி நினைதொறும் ஆவி வேமால் பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா
பிணியவிழ்மல்லிகை வாடை தூவப் பெரு மத மாலையும் வந்தன்றாலோ
மணி மிகு மார்வினின் முல்லைப் போது என் வன முலை கமழ்வித் துன் வாயமுதம் தந்து
அணி மிகு தாமரைக் கையை யந்தோ அடிச்சியோம் தலை மிசை யணியாய்-10-3-5–பத்மகேசரே ஸம்ஸ்ருஷ்ட -மத்த கஜமானது முன்னே தலைப்பறை கொட்ட வருமா போலே வாடையை முன்னோடே விட்டுக் கொண்டே பெரிய கிளர்த்தியோடே ஸந்த்யையும் வந்தது -இவளை முடிக்க வேணும் என்று ஸந்த்யையானது கூட்டுத் தேடிக் கொண்டு வாரா நின்றது -/வந்தன்றாலோ—வந்தால் பரிஹரிக்க ஒண்ணாது
செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு அத் திருவடி திருவடி மேல் பொருநல்
சங்கணி துறைவன் வண்தென் குருகூர் வண் சடகோபன் சொல்லாயிரத்துள்
மங்கையர் ஆய்ச்சியர் ஆராய்ந்த மாலை அவனோடும் பிரிவதற்கு இரங்கி தையல்
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன இவையும் பத்து அவற்றின் சார்வே-10-3-11–அவனோட்டை பிரிவு பொறுக்க மாட்டாத படியால் -ஒரு பருவத்தில் இடைப் பெண்கள் அனுசந்தித்த -தொடையாய் -அவர்களில் ஒருத்தி பசு நிரை மேய்க்க வேண்டா -என்று உரைத்தாள் -எல்லாரும் திரளச் சொன்னால் அவன் செவிப்படாது என்னுமத்தாலே -நப்பின்னைப் பிராட்டியைப் போலே அவனுக்கு மறுக்க ஒண்ணாத தரம் யுடையாள் ஒருத்தியை வார்த்தை சொல்ல விட்டார்கள் -இப்படி யாகில் இறே –அடிச்சியோம் -என்றும் –தொழுத்தையோம் -என்றும் -ஆழும் என்னாருயிர் -என்றும் -என் சொற் கொள் என்றும் -சொன்ன பன்மைகளும் ஒருமைகளும் -சேரக் கிடப்பது –
பற்று என்று பற்றி பரம பரம்பரனை
மல் திண் தோள் மாலை வழுதி வள நாடன்
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
கற்றார்க்கு ஓர் பற்றாகும் கண்ணன் கழலிணையே–10-4-11-பரம பரம்பரனை–மல் திண் தோள் மாலை–பற்று என்று பற்றி-சர்வாதிகனாய் -விரோதி போக்குகைக்கு ஈடான தோள் மிடுக்கை யுடையனாய் -ஆஸ்ரிதர் பக்கல் வியாமுக்தனானவனை -பரம ப்ராப்யம் என்று பற்றி –
காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே–10-6-11—பாட்யே கே யே ச மதுரம் -என்கிறபடியே இசையோடு புணர்ப்புண்ட தமிழ்த்தொடை –நித்ய ஸூரிகள் இத்தைக் கேட்டால் பர்யாப்தர் ஆகார் -இப்பாடுகிறது உள்ளீடானவன் சீலத்தாலேயே என்னில் –பாசுரத்துக்காக என்கிறது –ஸம்ஸ்ரவே மதுரம் -என்கிறபடியே செவியே தொடங்கி ரசிக்கும்-செஞ்சொல்லே–-நினைவும் சொல்லும் செயலும் ஒருபடிப் பட்ட சொல்லு –சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினால் –என்னா செந்தமிழ் பத்தும் என்றார் இறே –
மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –10-10-2-தாம் விரும்புகிற மார்வுக்கு மாலை யானவள் -உன் திருமார்வுக்கு அலங்காரம் ஆனவள் என்கை –
——————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –