ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் —ஸ்ரீ வேதாந்த தேசிகன் பாஷ்யம்–

August 29, 2026

இதில் 65 ஸ்லோகங்கள் உள்ளன.-இந்த ஸ்தோத்திரம். 65 என்ற எண் எழுத்துக்களின் கூட்டுத் தொகையாகும்.-மூன்று ரஹஸ்யங்களில் (அஷ்டஅக்ஷரி+த்வயம்+ சரம ஸ்லோகம் ) எனவே, ஸ்தோத்திர ரத்னம் ரஹஸ்ய த்ரயத்தின் சாரம்

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்-தனியன்கள்-

ஸ்வாதயந்நிஹ ஸர்வேஷாம் த்ரய்யந்தார்த்தம் ஸுதுர்க்ரஹம் |
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்த்ர: தம் வந்தே யாமுநாஹ்வயம் ||

யோகிகளுக்குள் சிறந்தவரும், புரிந்து கொள்ள அரிதான வேதாந்த அர்த்தங்களை எல்லோரும்
புரிந்து கொள்ளும்படி ஸ்தோத்ரங்களாக அருளிச்செய்தவருமான ஆளவந்தாரை வணங்குகிறேன்.

ஸ்வாதயன்-அனுபவத்திக் கொண்டே –
யன் ப்ரத்யயம் -அனுபவிப்பித்து-
இஹ -இந்த காலத்தில் -இத்தைச் சொல்லும் பொழுது -இதில் –
சர்வேஷாம்-சர்வாதிகாரம் இந்த ஸ்தோத்ரம் -ஸ்ரத்தையே வேண்டுவது
ஸூ துர்க் ரஹம்–த்ரய்யந் தார்த்தம்-அறிவரிய வேதாந்தார்த்தங்களை
ஸ்தோத்ர யாமாஸ-ஸ்தோத்ர ரூபமாக வெளியிட்டு அருளினாரோ
யோகீந்திர-எந்த யோகி ஸ்ரேஷ்டர்–எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவனான ஆளவந்தார் –

———-

நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம: |
நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம: ||-அஷ்டாக்ஷர மந்த்ரம் போல் இதுவே-

ஆளவந்தாரை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன். என்னால் அவரை வணங்குவதை நிறுத்த முடியவில்லை.

————-

ஸ்ரீ மத யமுனா முனே நாத ஸஹாயேந -நாத முனி என்றும் பெருமாளே என்றும் -கூடியவராக -உள்ள ஆளவந்தரால்
அஹம் நாதம் உடையவராய் ஆனேன் -தேசிகன்
யஸ்ய வதன சந்த்ர உத்பன்ன புவன போக்கிய அம்ருதம்
அம்ருத கிரணங்கள் உடைய சந்திரன் -சகோர பஷி இத்தையே தாரகமாக கொள்ளுமே
ஸூ மனஸா-ஸ்ரீ வைஷ்ணவாம் போக்யம் -அமரர்கள் -பூ ஸூ ரர்களுக்கும் –

ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்னம் நாலாம் ச்லோகத்தின் பொருள் விரிக்கையில் ஸ்ரீ தேசிகன்
“மாதா பிதா”வுக்கு விளக்கம் அருள்வது காணீர் –
”அத பராசர ப்ரபந்தாதபி வேதாந்த ரஹஸ்ய வைசாத்யாதிசய ஹேதுபூதை: சாத்ய பரமாத்மனி சித்த ரஞ்சக தமை:
ஸர்வோபஜீவ்யை: மதுரகவி ப்ரப்ருதி ஸம்ப்ரதாய பரம்பரயா நாதமுநேரபி உபகர்த்தாரம் காலவிப்ரகர்ஷேபி
பரமபுருஷ ஸங்கல்பாத் கதாசித் ப்ராதுர்பூய ஸாக்ஷாதபி ஸார்வோபநிஷத் ஸாரோபதேசதரம் பராங்குசமுநிம் “
மாதா பிதா ப்ராதேத்யாதி உபநிஷத் ப்ரசித்த பகவத் ஸ்வபாவ த்ருஷ்ட்யா ப்ரணமதி மாதேதி”.

இங்கு ஸ்ரீ தேசிகன் வேத விஷயங்களை
ஆழ்வார் பராசராதி ரிஷிகளையுங்காட்டில் வெகு நன்றாக விளக்குவதாகக் காட்டியருளுகிறார்.
மேலும் ஆழ்வார் பாசுரங்கள் எல்லார்க்கும் ஏற்புடையனவாயும். ரசகனமாயும் உள்ளன.
ஆகவே எம்பெருமானைப் போன்றே ஆழ்வாரும் தாய், தந்தை என எல்லா உறவு முறையிலும் கொண்டாடப் படுகிறார்.

—————-

ஶ்லோகம் 1 –
முதல் ஶ்லோகத்தில், ஆளவந்தார் ஸ்ரீமந்நாதமுனிகளின் உண்மையான செல்வமான
ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் பெருமையை வணங்குகிறார்.

நமோ’சிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராஶயே |
நாதாய முநயே’காத பகவத் பக்தி ஸிந்தவே ||

நினைவுக்கு அப்பாற்பட்ட, உயர்ந்த ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் கூட்டத்தை
எம்பெருமானின் கருணையால் ஸ்ரீமந்நாதமுனிகள் எளிதில் அடைந்தார்.
அவர் எப்பொழுதும் பகவானையே த்யானித்தில் கொண்டிருப்பவர். பகவத் பக்திக் கடலாக இருப்பவர்.
இப்படிப்பட்டவரை வணங்குகிறேன்.

————-

ஶ்லோகம் 2 –
இதில், பகவத் அவதாரங்களில் ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு இருந்த ஞானம் ஆகியவற்றின் மேலான சிறப்பு விளக்கப்படுகிறது.
அல்லது, “(முந்தைய ஶ்லோகத்தில் சொல்லப்பட்ட) ஞானம் முதலியவை அவரிடமே தங்காமல், என்னளவும் பெருகி வருகிறது”
என்று ஆளவந்தார் அருளிச் செய்கிறார்.

தஸ்மை நமோ மதுஜிதங்க்ரி ஸரோஜ தத்வ
ஜ்ஞாநாநுராக மஹிமாதிஶயாந்தஸீம்நே |
நாதாய நாத முநயே’த்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம் ||

மது என்னும் அஸுரனைக் கொன்ற எம்பெருமானின் திருவடிகளில் சிறந்த ஞானம் மற்றும் பக்தியின் வடிவமாக
விளங்குபவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவருடைய திருவடிகளே எனக்கு இவ்வுலகிலும் பரமபதத்திலும் புகலாக இருக்கும்.
அவரே என் தலைவர். இப்படிப்பட்டவரை நான் வணங்குகிறேன்.

————

ஶ்லோகம் 3 –
தாகம் உள்ள ஒருவன் நீரை மேலும் மேலும் பருகியும் தாகம் தீராமல் இருப்பதைப் போலே,
ஆளவந்தார் “மீண்டும் மீண்டும் நான் ஸ்ரீமந் நாதமுனிகளின் தொண்டன்” என்று அருளிச் செய்கிறார்.

பூயோ நமோ’பரிமிதாச்யுத பக்தி தத்வ
ஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹ ஶுபைர் வசோபி: |
லோகே’வதீர்ண பரமார்த்த ஸமக்ர பக்தி
யோகாய நாதமுநயே யமிநாம் வராய ||

பகவானிடத்தில் எல்லை இல்லாத பக்திக் கடலில் இருந்து பெருகிய மங்களகரமான வார்த்தைகள் மற்றும்
உண்மை ஞானம் வந்து பிறந்ததைப் போலே இருப்பவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவரே சிறந்த குறிக்கோள்.
அவர் பூர்த்தியையும் பக்தி யோகத்தையுமுடையவர். யோகிகளில் சிறந்தவர். அவருக்கு மீண்டும் என் வணக்கங்கள்.

—————

ஶ்லோகம் 4 –
ஸ்ரீவிஷ்ணு புராணத்தை அளித்து உபகாரம் செய்த ஸ்ரீ பராசர பகவானை ஆளவந்தார் வணங்குகிறார்.

தத்வேந யஶ்சிதசிதீஶ்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க்க ததுபாய கதீருதார: |
ஸந்தர்ஶயந் நிரமிமீத புராண ரத்நம்
தஸ்மை நமோ முநிவராய பராஶராய ||

ரிஷிகளில் தலை சிறந்தவரான, உதார குணத்தை உடையவரான பராசர ரிஷிக்கு என் வணக்கங்கள்.
இவரே சித் (ஆத்மாக்கள்), அசித் (அசேதனப் பொருட்கள்), ஈச்வரன், இவர்களுடைய தன்மைகள்,
இவ்வுலக இன்பங்கள், மோக்ஷம், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அடையும் வழி,
ஆத்மாக்களால் அடையப்படும் குறிக்கோள் ஆகியவற்றை உள்ளபடி, புராணங்களில் ரத்னமான
ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவர்.

————-

ஶ்லோகம் 5 –
ஆளவந்தார் நம்மாழ்வார் திருவடிகளில் விழுந்து அவரிடத்தில் சரணடைகிறார்.

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

நம்மாழ்வாரின் திருவடிகளே எனக்கும் என் குலத்தவர்களுக்கும், தாய், தந்தை, மனைவி, மக்கள், சிறந்த செல்வம் மற்றும் எல்லாமாகும்.
மகிழ மாலையால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும், கைங்கர்யச் செல்வத்தை உடையராயிருக்கும், நம் வைஷ்ணவ குலத்துக்குத்
தலைவரான நம்மாழ்வாரின் இரண்டு திருவடிகளில் என் தலையை வைத்து வணங்குகிறேன்.

ஆளவந்தார்  ஸ்தோத்ர ரத்னம் நாலாம் ச்லோகத்தின் பொருள் விரிக்கையில் ஸ்ரீ தேசிகன் “மாதா பிதா”வுக்கு விளக்கம் அருள்வது காணீர் – ”அத பராசர ப்ரபந்தாதபி வேதாந்த ரஹஸ்ய வைசாத்யாதிசய  ஹேதுபூதை: சாத்ய பரமாத்மனி சித்த ரஞ்சக தமை: ஸர்வோபஜீவ்யை: மதுரகவி ப்ரப்ருதி ஸம்ப்ரதாய பரம்பரயா நாதமுநேரபி உபகர்த்தாரம் காலவிப்ரகர்ஷேபி பரமபுருஷ ஸங்கல்பாத் கதாசித் ப்ராதுர்பூய ஸாக்ஷாதபி ஸார்வோபநிஷத் ஸாரோபதேசதரம் பராங்குசமுநிம் “மாதா பிதா ப்ராதேத்யாதி உபநிஷத் ப்ரசித்த பகவத் ஸ்வபாவ த்ருஷ்ட்யா ப்ரணமதி மாதேதி”.

இங்கு ஸ்ரீ தேசிகன் வேத விஷயங்களை ஆழ்வார் பராசராதி ரிஷிகளையுங்காட்டில் வெகு நன்றாக விளக்குவதாகக் காட்டியருளுகிறார். மேலும் ஆழ்வார் பாசுரங்கள் எல்லார்க்கும் ஏற்புடையனவாயும். ரசகனமாயும் உள்ளன. ஆகவே எம்பெருமானைப் போன்றே ஆழ்வாரும் தாய், தந்தை என எல்லா உறவு முறையிலும் கொண்டாடப் படுகிறார்.

—————–

ஶ்லோகம் 6 –
திருவாய்மொழி 7.9.7இல் “வைகுந்தனாகப் புகழ” (ஆழ்வார் “ஸ்ரீவைகுண்டநாதன்” என்று எம்பெருமானைப் புகழும்படி
எம்பெருமான் செய்தான்) என்று சொன்னபடி, எம்பெருமானுக்குக் கொண்டாட்டங்கள் விருப்பம் என்பதாலும்,
எம்பெருமானைக் கொண்டாடுவது ஆசார்யர்களுக்கும் விருப்பம் என்பதாலும், எம்பெருமானைக் கொண்டாடும் எண்ணத்துடன்,
எம்பெருமானே உபாயம் (வழி) மற்றும் உபேயம் (குறிக்கோள்) என்று சுருக்கமாகச் சொல்லி,
எம்பெருமானைக் கொண்டாடத் தொடங்குகிறார் ஆளவந்தார்.

யந் மூர்த்நி மே ஶ்ருதி ஶிரஸ்ஸு ச பாதி யஸ்மிந்
அஸ்மந் மநோரத பதஸ் ஸகலஸ்ஸமேதி |
ஸ்தோஷ்யாமி ந: குல தநம் குல தைவதம் தத்
பாதாரவிந்தம் அரவிந்த விலோசநஸ்ய ||

புண்டரீகாக்ஷனின் (தாமரைக் கண்ணனின்) திவ்ய திருவடிகளைக் கொண்டாடப் போகிறேன்.
இந்த எம்பெருமானே நம் குலத்துக்கு தனமாகவும், தெய்வமாகவும் விளங்குகிறான்.
நம்முடைய அதிகமான பக்தி எல்லாம் அந்த எம்பெருமானின் திருவடிகளிலே போய்ச் சேரும்.
அந்த எம்பெருமானின் திருவடிகளே என்னுடைய தலையிலும், வேதாந்தத்திலும் காணப்படுகின்றன.

—————

ஶ்லோகம் 7 –
ஸ்ரீ கீதை 1.47இல் “விஸ்ருஜ்ய ஸசரம் சாபம்” (வில்லையும் அம்புகளையும் கீழே நழுவவிட்டான்) என்று சொன்னபடி
அர்ஜுனன் எப்படி யுத்தத்திலிருந்து பின் வாங்கினானோ, ஆளவந்தாரும் தன் முயற்சியில் இருந்து பின்வாங்குகிறார்.

தத்வேந யஸ்ய மஹிமார்ணவ ஶீகராணு:
ஶக்யோ ந மாதுமபி ஶர்வ பிதா மஹாத்யை: |
கர்த்தும் ததீய மஹிம ஸ்துதி முத்யதாய
மஹ்யம் நமோ’ஸ்து கவயே நிரபத்ரபாய ||

எம்பெருமானின் பெருமை என்னும் கடலில் ஒரு திவலையில் இருக்கும் ஒரு அணுவின் அளவு கூட ருத்ரன், ப்ரஹ்மா
போன்றவர்களால் அளக்கமுடியாது. கவிஞன் என்று வெட்கமில்லாமல் சொல்லிக் கொண்டு, அப்படிப்பட்ட
எம்பெருமானின் பெருமைகளைப் பாடத் தொடங்கியதை நினைத்து (இப்படிப்பட்ட நகைப்பிற்குரிய செயலை நினைத்து)
என்னை நானே வணங்கிக் கொள்கிறேன்.

—————–

ஶ்லோகம் 8 –
யுத்தத்திலிருந்து பின்வாங்கிய அர்ஜுனனை ஸ்ரீ கீதை 18.73இல் “கரிஷ்யே வசனம் தவ” (நீ சொல்லும்படி நான் யுத்தம் செய்கிறேன்)
என்று சொல்லும்படி உற்சாகப்படுத்திய எம்பெருமான், ஆளவந்தாரை
“வாய் படைத்த பயன் அவனைக் கொண்டாடுவதற்கே; ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் ‘ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய:’
(அவன் கொண்டாடத்தகுந்தவன்; அவன் கொண்டாட்டங்களை விரும்புபவன்)” என்று சொல்லும்படி உற்சாகப்படுத்தினான்.
இதைக் கேட்ட ஆளவந்தார், எம்பெருமானைக் கொண்டாடுவது என்று முடிவெடுத்தார்.

யத்வா ஶ்ரமாவதி யதாமதி வாப்ய ஶக்த:
ஸ்தௌம்யேவமேவ கலு தே’பி ஸதா ஸ்துவந்த: |
வேதாஶ் சதுர்முக முகாஶ்ச மஹார்ணவாந்த:
கோ மஜ்ஜதோர் அணுகுலாசலயோர் விஶேஷ: ||

அல்லது, சக்தியற்ற நான் சோர்வடையும் வரையிலோ எனக்குத் தெரிந்த அளவிலோ அவனைக் கொண்டாடுவேன்;
இவ்வாறே, வேதங்களும், நான்கு முகங்களைக் கொண்ட ப்ரஹ்மா முதலியவர்களும் எம்பெருமானைக் கொண்டாடுகின்றனர்;
கடலுக்குள் மூழ்கி இருக்கும் சிறு கூழாங்கல்லுக்கும் பெரிய மலைக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? (ஒன்றும் இல்லை)

—————–

ஶ்லோகம் 9 –
இதில், ஆளவந்தார் தான் ப்ரஹ்மா முதலியவர்களை விட எம்பெருமானைக் கொண்டாடுவதற்குத்
தகுதி படைத்தவர் என்று அருளிச் செய்கிறார்.

கிஞ்சைஷ ஶக்த்யதிஶயேந ந தே’நுகம்ப்ய:
ஸ்தோதாபி து ஸ்துதி க்ருதேந பரிஶ்ரமேண |
தத்ர ஶ்ரமஸ்து ஸுலபோ மம மந்த புத்தே:
இத் யுத்யமோ’யமுசிதோ மம சாப்ஜ நேத்ர ||

மேலும், என்னுடைய கவிதை பாடும் சிறந்த திறமையால், நீ கருணையைப் பொழியும் நிலையில் நான் இல்லை;
ஆனால், உன்னைக் கொண்டாட முயன்று சோர்வடையும் தன்மையை உடையவன் ஆகையால், நீ என் மீது உன் கருணையைப் பொழியலாம்;
எனக்கு மிகவும் குறைந்த ஞானமே உள்ளதால், எளிதில் சோர்வடைந்து விடுவேன்;
ஆகையால், உன்னைக் கொண்டாடும் இம்முயற்சி ப்ரஹ்மா முதலியவர்களைக் காட்டிலும், எனக்கே மிகவும் பொருத்தமாக உள்ளது.

—————-

ஶ்லோகம் 10 –
எம்பெருமானைக் கொண்டாடுவதிலிருந்து பின் வாங்கி, பிறகு எம்பெருமானால் ஸமாதானம் செய்யப்பட்ட ஆளவந்தார்,
எம்பெருமானைப் புகலாக ஆக்கும் அவனுடைய பரத்வத்தை, இனி வரும் ஐந்து ச்லோகங்களில் அருளிச்செய்கிறார்.
அதில், இந்த முதல் ச்லோகத்தில்,
ஆளவந்தார் சாஸ்த்ரத்தில் இருக்கும் காரண வாக்யங்களைக் கொண்டு (எம்பெருமானிலிருந்தே எல்லாம் உருவாகின்றன என்று சொல்பவை)
எம்பெருமானின் பரத்வத்தை அருளிச் செய்கிறார்.

ஆஸ்ரித வாத்சல்யத்தால் தாம் கவி பாடுவது பொருத்தமே என்றார் கீழ்
இந்த ஆஸ்ரித வாத்சல்யம் பகவான் இடத்தில் இருப்பது ஆச்சார்யம் அன்று என்று
கை முதிக நியாயத்தால் நிரூபிக்கிறார் இந்த ஸ்லோகத்தால்
இது முதல் 12 ஸ்லோகங்களால் நாராயண ஸப்த வாஸ்யனான அவனுக்கே
ஸர்வ ஸ்மாத் பரத்வமும் ஸுலப்யமும் உண்டு பிரபஞ்சித்துக் கொண்டு நமஸ்கரிக்கிறார் -என்பர் தேசிகர்

நாவேக்ஷஸே யதி ததோ புவநாந்யமூநி
நாலம் ப்ரபோ பவிதுமேவ குத: ப்ரவ்ருத்தி: |
ஏவம் நிஸர்க்க ஸுஹ்ருதி த்வயி ஸர்வ ஜந்தோ:
ஸ்வாமிந் நசித்ரமிதமாஶ்ரித வத்ஸலத்வம் ||

எம்பெருமானே! மஹா ப்ரளயத்துக்குப் பின், நீ உன்னுடைய கருணைக் கடாக்ஷத்தைக் காட்டவில்லை என்றால்,
இவ்வுலகங்கள் படைக்கப்பட்டிருக்காது; வேறு எந்த நிகழ்வுகளும் நடந்திருக்காது என்பதும் தெளிவு.
எம்பெருமானே! இப்படி நீயே எல்லோருடைய இயற்கையான நண்பனாக இருப்பதால்,
நீ உன்னுடைய அடியார்களிடம் தாயன்பைக் காட்டுவதைப் பார்ப்பதில் ஒரு ஆச்சர்யமும் இல்லை.

ஹே ப்ரபோ -உம்முடைய சங்கல்பம் இல்லா விட்டால் விசித்ரமாகத் தென்படும் இப்பிரபஞ்சம் முழுவதும்
உண்டாக்குவதற்காகவது சத்தை யுடன் கூடி இருக்கிறதற்காகவாவது ஸமர்த்தம் அன்று
அப்படி இருக்கவே சமர்த்தமாகி இல்லையாகில் ப்ரவ்ருத்தி என்பது அதற்கு எவ்விதம் ஸம்பவிக்கும்
ஹே ஸ்வாமிந் இப்படி ஸர்வருக்கும் ஸூ ஹ்ருத்தாய் இருக்கும் உம்மிடம் ஆஸ்ரித வாத்சல்யம் இருப்பதில் என்ன வியப்பு

இந்த பிரபஞ்சத்தை உண்டாக்கி
அதற்கு சத்தையைக் கொடுத்து அதை இருக்கும்படி செய்து
அதில் உள்ள ஜீவ கோடிகளுக்கு போக மோக்ஷங்களையும் குறித்து
ப்ரவர்த்திப்பதற்கு ஈடாக கரண களேபரங்களையும் கொடுத்து அருளி
இவ்வாறு ஸர்வ வித உபகார பரம்பரைகளையும் செய்து அருளும் உனக்கு
ஆஸ்ரித வாத்சல்யம் இல்லா விட்டால் பிறகு யாருக்குத் தான் ஸம்வவிக்கக் கூடும்

ஸங்கல்ப லேசத்தாலே ஜகத்தின் உபாதானத்தைச் செய்கிறீர்
அதற்குச் சத்தையைக் கொடுக்கிறீர்
ப்ரவ்ருத்தியையும் உண்டு பண்ணுகிறீர் -என்பதால்
சர்வத்துக்கும் ஸர்வ காரண கர்த்தா இவனே
நிகில காரணனாவான் ஆஸ்ரித வத்சலனான் ஆனவன்-

ஆக இந்த ஸ்லோகத்தால்
காரணத்வம்
நியந்த்ருத்வம்
ஸூ ஹ்ருத்வம்
ஸ் வாமித்வம்
வாத்சல்யம்
ஆக ஐந்து வித கல்யாண குணங்களும் பிரகாசமாகச் சொல்லப்படுகின்றன
அவேஷணம் -என்றது ஸங்கல்பத்தைச் சொன்னவாறு
இதுவும் அனுக்ரஹத்தை முன்னிட்டே செய்யப்படுகின்றது –

பிரபு என்று சொல்வதனால்
சகலமும் பகவானுக்கு ஸ்வ ஆதீனம் என்கிறார்
இச்சிக்கிறபடி செய்ய சமர்த்தன் என்கிறார்

இப்படி தான் ஸர்வ ஸக்தனாய் இருக்கையாலும்
ஸர்வ விதத்திலும் அஸக்தராய் இருக்கும் நம்மிடத்தில் அவன் வாத்சல்யம் பாராட்டுவது
அவன் ஸுலப்யத்தைக் காட்டி அருளும் படி –

இருப்பு என்றது உத்பத்தியையும் காட்டும்
ஸ்திதிக்கு மட்டும் காரணன் அல்லன் -ஸ்ருஷ்டிக்கும் இவனே காரணன்
இருப்பதற்குக் கூட ஸங்கல்பம் தேவையோ என்ற சங்கைக்கு ஸ்ருதி வாக்கியங்கள் பலவும் உண்டே

ஸ்வ பாவிக ஸூ ஹ்ருத் -இவனே
பூர்வ உபகாரமோ பிரதி உபகாரமோ எதிர்பார்க்காமல்
நிர் ஹேதுக கிருபாவான்
ஞான பலாதிகள் ஸ்வ பாவிகம் ஆமாம் போலே
ரக்ஷணமும் ஸ்வ பாவிம் –
காக்கும் இயல்பினன் கண்ணன் அன்றோ

கீழ் ஸ்லோகத்தில் பிரஸ்தாபிப்பிக்கப் பட்ட வாத்சல்யம்
அல்ப சக்தியை யுடையவர்கள் செய்யும் ஸ்துதியின் ந்யூன தயைக் கவனியாமல்
அவனுக்கு அநு கம்பை செய்து அநு க்ரஹிக்கும் ஸ்வ பாவம்
தன்னிடம் த்வேஷம் செய்பவர்கள் இடமும் அவன் வாத்சல்யம் காட்டி அருளுகிறான்

கடவல்லியில்
சர்வருக்கும் ஈஸ்வரனான பகவான் அங்குஷ்டம் அளவு ஆகாரம் யுடையவனாக நம் சரீரத்துள் எப்போதுமே வசிக்கிறான்
ஸர்வ அஸூசிக்கும் நிதானமாகிய இந்த சரீரத்தின் நடுவில் இருப்பதில் அவனுக்கு எவ்வித ஜூகுப்ஸியையும் ஜனிக்கிறது இல்லை
அவ்வளவு வாத்சல்யம் உள்ளவன் –

மழலைச் சொல் பேசும் குழவி இடம் தாய் தந்தையருக்கு கௌதூ ஹலம் உண்டாவது போல்
என்னுடைய இந்த அச்மக்ரமான ஸ்துதியைக் கேட்பதில் அவனுக்கு கௌதூ ஹலம் உண்டாவதே –

—————-

ஶ்லோகம் 11 –
இதில், எம்பெருமானின் பரத்வ லக்ஷணம் (அடையாளம்) விளக்கப்படுகிறது.

தம்முடைய ஸங்கல்பத்தாலே ஸர்வ ஜகத்தையும் உத்பாதனம் செய்து
அதற்கு ஸ்திதி ப்ரவ்ருத்தி முதலியவற்றை அளிக்கிற படியால்
பகவானுக்கு ஜகத் காரணத்வம் உண்டு என்பதையும்
அதனால் ஸர்வ குணங்களும் ஸ்வ பாவிகம் என்பதையும்
கீழே சொல்லி
அந்த ஈஸி த்ருத்வம் -காரணத்வம் -ஸ்வாமித்வம் -எப்படிப்பட்டது என்பதை
இந்த ஸ்லோகத்தால் அருளிச் செய்கிறார்

ஸ்வாபாவிகாநவதிகாதிஶயேஶித்ருத்வம்
நாராயண த்வயி ந ம்ருஷ்யதி வைதிக: க: |
ப்ரஹ்மா ஶிவஶ் ஶதமக: பரம: ஸ்வராடிதி
ஏதே’பி யஸ்ய மஹிமார்ணவ விப்ருஷஸ்தே ||

நாராயணனே! உன்னுடைய பெருமைக் கடலில் ஒரு திவலையைப் போன்றவர்களே (கர்மத்துக்கு வசப்பட்ட)
ப்ரஹ்மா, சிவன், இந்திரன் ஆகியோரும், இந்த தேவதைகளைவிடச் சிறந்தவர்களான, கர்மத்துக்கு வசப்படாத முக்தாத்மாக்களும்;
உன்னுடைய இயற்கையான மற்றும் எல்லை யில்லாத பெருமையை உடைய ஐச்வர்யத்தை (ஆளுமையை) எந்த வைதிகன் பொறுக்க மாட்டான்?

அநந்ய அதீனம் அபரிமிதம் இவனது ஈஸித் ருத்வம்
மற்றவர்களது -ப்ரஹ்மாதிகளுக்கு
கர்மாதீனம் துக்க மிஸ்ரம் அநித்யம்
முக்தர்களுக்கு பரம அதீனம் -பரிச்சின்னம்
இவனே ஸர்வ அந்தராத்மா -ப்ரவர்த்தகன் -ஸர்வ ஸாக்ஷி -அனைத்துக்கும் ஆஸ்ரயம்

ஹே நாராயணா
வேதங்களைப் பிரமாணமாக ஒத்துக் கொள்பவர்களில் எவர் தான் ஸ்வ பாவிக ஸித்தமாயும்
அளவற்ற மகிமையும் உள்ளதான உம்மிடத்தில் ஈஸித்ருத்வத்தை ஸஹிக்க மாட்டார்
நித்ய முக்தர்கள் -ப்ரஹ்மாதிகள் எல்லாம் ஸமுத்ர திவலை ஸ்தானீயர்களே

ப்ரஹ்மாதிகளின் மஹத்வமும் உனது அதீனமே
உமது மஹிமையோ அபரிச்சின்னமாயும் உனது அதீனமாயுமே இருக்குமே

இதனால் பரம புருஷனாகிற நாராயணனுடைய ஈஸித்ருத்வம்
அந்யாதீநம்
அபரிமிதம் என்றும்
இவற்றுக்கு பிரமாணம் வேதங்களே -என்றும் அருளிச் செய்கிறார்

ப்ரஹ்மன் எல்லாவற்றுக்கும் முந்தியே இருந்தவன்
முதலில் சத்தும் இல்லை அசத்தும் இல்லை சிவன் ஒருவனே ஒருந்தான்
இந்திரனுக்கு விசித்திர சக்தி உண்டு -பல ரூபங்களை உண்டு
இத்யாதி பிரமாணங்கள் லோக நாதர் இவர்கள் என்று சொல்லும்
முக்தர்களும் தங்கள் சங்கல்பத்தால் இச்சிப்பதை எல்லாம் உண்டாக்குகிறார்கள் என்று முக்த ஐஸ்வர்யமும் சொல்லும்
ஆனால் ப்ரஹ்மாதிகள் விஷயத்தில் கர்மாதீனம் துக்க மிஸ்ரம் அநித்யம் அல்பம்
முக்தர்கள் விஷயத்தில் பரம புருஷ அதீனம் பரிமிதம்

நாராயணனே
சர்வ காரணன்
சர்வ ஸ்வாமி
ஸர்வ ப்ரவர்த்தகன்
ஸர்வ ஸாக்ஷி -என்று ப்ரஸித்தன்
நாரங்களான ஜீவ சமூகங்களுக்கு அயனம் ஆத்மா
ஜீவர்களுக்கு ஸ்ருஷ்ட்டி கார்த்த ப்ரவர்த்தகன்
அகில லோக ஸாக்ஷி -ஜீவா சமூகத்தை அறிபவன்
நார -அப்புவை ஸ்ருஷ்டித்து பிரபஞ்சம் அனைத்துக்கும் ஆஸ்ரயம்
ஸ்ரீ மத் பாகவதம் 10 ஸ்கந்தம் ப்ரம்ம ஸ்துதி இவற்றைச் சொல்லும்
மனு ஸ்ம்ருதியும் சொல்லும்
சர்வ ரக்ஷகனான நாராயணனையே எப்பொழுதும் தியானிக்க வேண்டும்

வேதத்தை பிரமாணமாக ஒத்துக் கொண்டவன் -ஸநாதன் ஆகிற பகவான் வேதத்தாலே அறியத் தக்கவன்
வேதங்கள் அவனையே பரமாத்மாவாகவே சொல்லும்
இப்படி வேதம் சொல்வதில் விசுவாசம் கொண்டவனே வைதிகம் ஆவான்
ஜீவனத்துக்காக தானே கிருஷி பண்ணி வேதத்தில் நம்பிக்கை இன்றி வைதிக வேஷம் மாத்திரம் பூண்டு
பிறருடைய சிரமத்தால் ஜீவனம் செய்து வருமவனை
அவைதிகன் என்றே சொல்ல வேண்டும்
வேத ப்ரமாணகத்வமே வைதிக லக்ஷணம் ஆகும்
பகவானுக்கு சரீரமாக இருக்கும் ஆத்ம வர்க்கம் -நித்யரும் முக்தருகளுமே -பகவத் பரதந்த்ரர்களே

நாராயணனுடைய ஐஸ்வர்யத்தை ஸஹிக்காதவன் வைதிகம் ஆக மாட்டான்
முக்தன் ஸ்வராட் என்றது கர்ம வஸ்யன் அல்லன் என்று சொல்ல வந்ததே
ஸ்ருதிகளால் யதோ வாஸோ நிவ்ருத்தந்தே -அஸ்ருயன் -அக்ராஹ்யன் –
பக்தர்களுக்கோ அவனே தன்னைக்காட்டி அருளும் எளியவன்
நாராயணன் மகிமையும் விபூதியும் சமுத்திரம் போல் அபரிச்சேதயம்
மற்றவர்கள் யாவரும் திவலை போன்றவர்களே
ஆளவந்தார் ஸம்வித் சித்தியிலும் இதே கருத்தை அருளிச் செய்கிறார் –

——————-

ஶ்லோகம் 12 –
இதில், ஆளவந்தார், ஸந்தேஹத்துக்கு இடமளிக்கும் பொதுப் பெயர்களைச் சொல்லாமல்,
தன்னடையே முழுமையான மற்றும் எம்பெருமானின் பரத்வத்தை நன்றாக வெளியிடும் திருநாமங்களை அருளிச்செய்கிறார்.

கஶ்ஶ்ரீ: ஶ்ரிய: பரமஸத்வ ஸமாஶ்ரய: க:
க: புண்டரீகநயந: புருஷோத்தம: க: |
கஸ்யாயுதாயுத ஶதைக கலாம்ஶகாம்ஶே
விஶ்வம் விசித்ர சிதசித் ப்ரவிபாக வ்ருத்தம்||

ஸ்ரீ: என்று சொல்லப்படும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் செல்வம் யார்? யாரிடத்தில் சுத்த ஸத்வம் உள்ளது?
யார் புண்டரீகாக்ஷன்? யார் புருஷோத்தமன் என்று சொல்லப்படுபவன்? யாருடைய ஸங்கல்பத்தின் ஒரு சிறு பகுதி,
பலவகைப்பட்ட சேதனர்கள் மற்றும் அசேதனப்பொருள்களாக விரிந்திருக்கும் இவ்வுலகத்தைத் தாங்குகிறது?

—————–

ஶ்லோகம் 13 –
ஆளவந்தார் ப்ரஹ்மா, ருத்ரன் ஆகியோரின் க்ஷேத்ரஜ்ஞத்வத்தையும் (ஜீவாத்மாவாக இருக்கும் தன்மையையும்)
பகவானின் பரத்வத்தையும், இதிஹாஸ மற்றும் புராணங்களில் உள்ள சரித்ரங்களைக் கொண்டு அருளிச் செய்கிறார்..

வேதாபஹார குருபாதக தைத்யபீடாதி
ஆபத் விமோசந மஹிஷ்ட பல ப்ரதாநை: |
கோ’ந்ய: ப்ரஜா பஶு பதீ பரிபாதி கஸ்ய
பாதோதகேந ஸ ஶிவஸ் ஸ்வ ஶிரோத்ருதேந ||

ப்ரஜாபதி என்று சொல்லப்படும் பிரமனையும், பசுபதி என்று சொல்லப்படும் ருத்ரனையும் மற்றும் இந்திரனையும்
முறையே அவர்களுக்கு வந்த ஆபத்தான வேதம் திருடப்பட்டு அதை இழந்ததையும்,
தன்னுடைய தந்தையின் தலையைக் கிள்ளிய பாபத்தையும், அஸுரர்களால் ஏற்பட்ட துன்பத்தையும் போக்கியவன் யார்?
யாருடைய ஸ்ரீபாத தீர்த்தத்தைத் தலையில் தாங்கி, ருத்ரன் புனிதத் தன்மையை அடைந்தான்?

—————–

ஶ்லோகம் 14 –
ஆளவந்தார் எம்பெருமானின் பரத்வத்தை சாஸ்த்ரத்துக்கு அனுகூலமான ந்யாயத்தின் மூலமாக நிரூபித்து,
(இந்த ஐந்து பாசுரங்களின் தொடரை) முடிக்கிறார்.

கஸ்யோதரே ஹரவிரிஞ்சிமுக: ப்ரபஞ்ச:?
கோ ரக்ஷதீமம் அஜனிஷ்டச கஸ்ய நாபே:?|
க்ராந்த்வா நிகீர்ய புநருத்கிரதி த்வதந்ய:
க:? கேந வைஷ பரவாநிதி ஶக்யஶங்க: ||

யாருடைய வயிற்றில் ருத்ரன், ப்ரஹ்மா முதலியவர்களும் இவ்வுலகமும் அடங்கியது? யார் இந்த உலகத்தைக் காப்பவன்?
யாருடைய திருநாபியிலிருந்து இவ்வுலகம் படைக்கப்பட்டது? உன்னைத் தவிர வேறு யாரால் இவ்வுலகம்
அளக்கப்பட்டு, விழுங்கப்பட்டு மீண்டும் வெளியே உமிழப்பட்டது? இவ்வுலகத்தின் தலைவன் யார் என்பதில் ஸந்தேஹம் இருக்க முடியுமா?

——————–

ஶ்லோகம் 15 –
இதில், சாஸ்த்ரத்தின் மூலம் நன்றாக நிரூபிக்கப்பட்டாலும்,
ஸ்ரீ பகவத் கீதை 16.20இல் “ஆஸுரீம் யோனிமாபன்னா:” (அஸுரப் பிறவியில் பிறந்து) என்று சொன்னபடி,
“ஐயோ! இப்படிப்பட்ட அஸுர குணம் உடையவர்கள் எம்பெருமானை இழக்கிறார்களே” என்று அவர்கள் இழவுக்கு ஆளவந்தார் வருந்துகிறார்.
அல்லது –
ஆளவந்தார், இப்படிப்பட்ட பெருமையையுடைய எம்பெருமானை அஸுரத் தன்மை யுடையவர்கள் பார்க்கக் கூடாது என்று
திருவாய்மொழி 1.3.4இல் “யாருமோர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான்”
(அவனிடத்தில் விரோதம் பாராட்டுபவர்களால் “இவன் இன்ன தன்மையை உடையவன்” என்று புரிந்து கொள்ள முடியாதவன்)
ஆழ்வார் அருளிச்செய்த க்ரமத்தில் அருளிச் செய்கிறார்.

த்வாம் ஶீல ரூப சரிதை: பரம ப்ரக்ருஷ்ட
ஸத்வேந ஸாத்த்விகதயா ப்ரபலைஶ்ச ஶாஸ்த்ரை: |
ப்ரக்யாததைவ பரமார்த்த விதாம் மதைஶ்ச
நைவாஸுர ப்ரக்ருதய: ப்ரபவந்தி போத்தும் ||

[ஐயோ!] எல்லோரையும் விட உயர்ந்தவனான உன்னை அஸுரர்கள் அறிந்து கொள்ள முடியாது.
உன்னை அறிந்து கொள்ளும் வகைகள்:
உன்னுடைய சீல (எளிமை) குணம், வேதத்தில் கொண்டாடப்பட்ட ரூபங்கள் மற்றும் திவ்யமான லீலைகள்
சுத்த ஸத்வத்தால் நிறைந்திருக்கும் உன்னுடைய பரம பதம்
தன்னிடம் இருக்கும் நன்மையினால் திடமாக இருக்கும் சாஸ்த்ரம்
உன்னைப் பற்றிய உண்மையை அறிந்தவர்களின் அபிப்ராயத்தின் மூலம்

—————

ஶ்லோகம் 16 –
எம்பெருமானின் எளிமையினால் அவனை அடையும் உயர்ந்த ஆத்மாக்களைப் பற்றி எண்ணிய ஆளவந்தார்,
அவர்களுக்குக் கிடைத்த பேறு தனக்குக் கிடைத்ததாக நினைக்கிறார்.

உல்லங்கித த்ரிவித ஸீமஸமாதிஶாயி
ஸம்பாவநம் தவ பரிப்ரடிம ஸ்வபாவம் |
மாயாபலேந பவதா’பி நிகூஹ்யமாநம்
பஶ்யந்தி கேசிதநிஶம் த்வதநந்ய பாவா: ||

உன்னுடைய ஸ்வாமித்வத்தை நீ உன்னுடைய ஆச்சர்ய சக்தியினால் மறைத்துக் கொண்டாலும்,
உன்னையே நினைத்துக் கொண்டிருக்கும், மிகவும் உயர்ந்த ஆத்மாக்கள் கால, தேச, வஸ்துக்களுக்கு அப்பாற்பட்ட
உன்னுடைய ஸ்வாமித்வத்தை உணர்ந்து, “எம்பெருமானுக்கு ஸமமாகவோ அவனைவிட உயர்ந்தவராகவோ எவரேனும் உண்டோ?”
என்று ஸந்தேஹம் கொள்ளாமல் இருப்பார்கள்.

———–

ஶ்லோகம் 17 –
இதில் ஆளவந்தார் பகவானாலே நிர்வஹிக்கப்படும், முன்பு விளக்கப்பட்ட அவனுடைய ஸர்வேச்வரத்வத்துக்கு
உட்பட்ட பலவிதமான வஸ்துக்களை அருளிச் செய்கிறார்.

யதண்டம் அண்டாந்தர கோசரம் ச யத்
தஶோத்தராண்யாவரணாநி யாநி ச |
குணா: ப்ரதாநம் புருஷ: பரம் பதம்
பராத்பரம் ப்ரஹ்ம ச தே விபூதய: ||

1) ப்ரஹ்மாவின் ஆளுகைக்குட்பட்ட, 14 லோகங்கள் கொண்ட ப்ரஹ்மாண்டம்,
2) அந்த அண்டத்துக்குள் இருக்கும் வஸ்துக்கள்,
3) ஒவ்வொரு அண்டத்தை மூடிக்கொண்டிருக்கும், முந்தைய ஆவரணத்தைப்போலே பத்து மடங்கு அளவுள்ள, ஸப்த ஆவரணங்கள்,
4) ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய குணங்கள் 5) மூல ப்ரக்ருதி 6) இவ்வுலகில் இருக்கும் பத்தாத்மாக்கள் (கட்டுப்பட்ட ஆத்மாக்கள்),
7) ஸ்ரீவைகுண்டம் 8) (தேவதைகளைவிட உயர்ந்தவர்களான) முக்தாத்மாக்களைவிட உயர்ந்தவர்களான நித்ய ஸூரிகள்
9) உன்னுடைய திய்வ மங்கள விக்ரஹங்கள் ஆகிய எல்லாம் உனக்கு சரீரங்களே.

—————

ஶ்லோகம் 18 –
ஆளவந்தார் முன்பு ஶரண்யனான (புகல்) எம்பெருமானின் பெருமைகளைப் பேசினார்.
இதில் “இப்படிப்பட்ட உபய விபூதி நாதனை நாம் எப்படி அணுகுவது?” என்ற தயக்கத்தைப் போக்க,
அவனுடைய அடியார்கள் ஈடுபடும் பன்னிரண்டு குணங்களை அருளிச் செய்கிறார்.
முன்பு பகவானின் ஸர்வேஶ்வரத்வத்தை அருளிய ஆளவந்தார், இப்பொழுது அவனுடைய பேசத் தகுந்த குணங்களை அருளிச் செய்கிறார்.

வஶீ வதாந்யோ குணவாந் ருஜுஶ் ஶுசிர்
ம்ருதுர் தயாளுர் மதுரஸ் ஸ்திரஸ் ஸம: |
க்ருதீ க்ருதஜ்ஞஸ்த்வமஸி ஸ்வபாவதஸ்
ஸமஸ்த கல்யாண குணாம்ருதோததி:||

நீ இயற்கையாகவே அமுதக் கடல் போன்ற இனிமையான குணங்களை உடையவன். உன் குணங்களாவன
1) உன் அடியார்களுக்கு வசப்பட்டவன்
2) உன்னுடைய அடியார்களுக்கு உன்னையே தரும் குணத்தை உடையவன்
3) எல்லோரிடமும் கலந்து பழகும் ஸௌஶீல்யத்தை உடையவன்
4) உள்ளம் உரை செயல்களில் நேர்மை உடையவன்
5) நிர்ஹேதுகமாக க்ருபை பண்ணும் பரிசுத்தியை உடையவன்
6) அடியார்களின் பிரிவைத் தாங்க முடியாதவன்
7) அடியார்களின் துயரைத் தாங்க முடியாத கருணை உள்ளம் கொண்டவன்
8) இனிமையானவன்
9) அடியார்களைக் காப்பதில் உறுதியாக இருப்பவன்
10) உன்னிடம் சரணடைந்தவர்களிடத்தில் ஸமமாக இருப்பவன்
11) உன் அடியார்களின் செயல்களை உன் செயல்களாக நினைத்துச் செய்பவன்
12) அடியார்களின் சிறு உதவிகளுக்கும் நன்றியுடன் இருப்பவன்.

——————

ஶ்லோகம் 19 –
இதில், எப்படி பகவானின் திருக்கல்யாண குணங்களுக்கு எல்லை இல்லையோ அதேபோல
ஒவ்வொரு குணத்துக்கும் எல்லை இல்லை என்கிறார் ஆளவந்தார் .

உபர்யுபர்யப்ஜ புவோ’பி பூருஷாந்
ப்ரகல்ப்ய தே யே ஶதமித்யநுக்ரமாத் |
கிரஸ் த்வதேகைக குணாவதீப்ஸயா
ஸதா ஸ்திதா நோத்யமதோ’திஶேரதே ||

வேத வாக்யங்கள் “தேயே சதம்” (இது போன்ற நூறு) என்று மீண்டும் மீண்டும் புதிய ப்ரஹ்மாக்களை கற்பனை செய்து,
உன்னுடைய ஒரு (ஆனந்தம் என்னும்) குணத்தின் எல்லையைக் காண முயன்று,
சிறிதளவும் முன்னேறாமல், ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றன,

——————-

ஶ்லோகம் 20 –
ஆளவந்தார் முன்பு அருளிச் செய்த பகவத் குணங்களை அனுபவிக்கும் அடியார்களின் பெருமையை அருளிச் செய்கிறார்.
அல்லது –
ப்ரஹ்ம ஸூத்ரம் 1.1.20இல் “அஸ்மிந்நஸ்ய ச தத்யோகம் ஶாஸ்தி”
(வேதம் ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஆனந்தமாகக் கூடியிருக்கும் ஆனந்தத்தை விளக்குகிறது) என்று சொன்னபடி
பகவானிடத்திலிருந்து அடைந்த பெருமையை உடைய அடியார்களின் பெருமையே மிகப் பெரியது என்றால்,
அந்த பகவானின் பெருமை அளவிட முடியாதது என்பது தெளிவு என்கிறார்.

த்வதாஶ்ரிதாநாம் ஜகதுத்பவ ஸ்திதி
ப்ரணாஶ ஸம்ஸார விமோசநாதய: |
பவந்தி லீலா விதயஶ்ச வைதிகா:
த்வதீய கம்பீர மநோநுஸாரிண: ||

ப்ரஹ்மா முதலான உன் அடியார்களுக்கு இவ்வுலகைப் படைப்பது, காப்பது, அழிப்பது மற்றும் இந்த ஸம்ஸாரத்தை கடக்க உதவுவது
ஆகியவை எளிய விளையாட்டாக இருக்கும்;
வேதத்தின் விதிகளும் கூட உன்னுடைய அடியார்களின் ஆழமான நெஞ்சங்களையே தொடரும்.

————-

ஶ்லோகம் 21 –
ஶரண்யனான எம்பெருமானின் பெருமைகளை த்யானிக்கிறார்.
அல்லது –
முன்பு உபேயத்தை (குறிக்கோளை) விளக்கினார், இங்கே அதை அடைய விரும்புபவரின் தன்மையை விளக்குகிறார்.
மற்றொரு விளக்கம் –
முன்பு ஶரண்யனான பகவானின் தன்மையை விளக்கிய ஆளவந்தார்,
இங்கே மேலே விளக்கப்படும் சரணாகதியின் தன்மையை வெளியிடுகிறார்.

நமோ நமோ வாங்மநஸாதிபூமயே
நமோ நமோ வாங்மநஸைக பூமயே |
நமோ நமோ’நந்த மஹா விபூதயே
நமோ நமோ’நந்த தயைக ஸிந்தவே ||

தன் முயற்சியால் அறிய முயல்பவர்களின் வாக்குக்கும் மனதுக்கும் எட்டாத உனக்கு என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்;
உன்னுடைய கருணையால் உன்னை அறிந்தவர்களின் வாக்குக்கும் மனதுக்கும் எட்டுபவனான உனக்கு
என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்;
எல்லையில்லாத ஐச்வர்யத்தை உடைய உனக்கு என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்;
கருணைக்கடலான உனக்கு என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்.

—————-

ஶ்லோகம் 22 –
ஆளவந்தார் தன்னுடைய தகுதியைச் சொல்லி, முன் பாசுரத்தில் சொல்லப்பட்ட சரணாகதியைச் செய்கிறார்.
அல்லது –
முன்பு சொன்ன குறிக்கோளுக்குத் தகுந்த வழியை அனுஷ்டிப்பதை அருளிச் செய்கிறார் என்றும் சொல்லலாம்.

ந தர்மநிஷ்டோ’ஸ்மி நசாத்மவேதீ
நபக்தி மாம்ஸ்த்வச் சரணாரவிந்தே |
அகிஞ்சநோ’நந்யகதிஶ் ஶரண்ய!
த்வத் பாத மூலம் ஶரணம் ப்ரபத்யே ||

சரணடையத் தகுந்த ஸ்வாமியே! நான் கர்ம யோகத்தில் நிலையாக இல்லை; என்னிடத்தில் ஆத்ம ஞானமும் இல்லை;
என்னிடத்தில் உன் திருவடிகள் விஷயமான பக்தியும் இல்லை; இப்படி வேறு உபாயமும் புகலும் இல்லாத நான்,
உன் திருவடிகளையே உபாயமாக உறுதியாக ஏற்றுக் கொள்கிறேன்.

——————

ஶ்லோகம் 23 –
எம்பெருமான் “உம்மிடத்தில் நன்மைகள் இல்லை என்றாலும் சரி; ஆனால் உம்முடைய தகுதியைக் குலைக்கும்
தடை செய்யப்பட்ட விஷயங்களில் ஈடுபாடு இல்லாமல் இருந்தாலே, நானே உமக்கு நன்மைகளை உண்டாக்கி பேற்றையும் கொடுப்பேன்”
என்று சொல்லுவதாக எண்ணி “நான் தீமைகளின் முழுமையான வடிவமாக இருக்கிறேன்” என்கிறார் ஆளவந்தார் .

ந நிந்திதம் கர்ம ததஸ்தி லோகே
ஸஹஸ்ரஶோ யந்ந மயா வ்யதாயி |
ஸோ’ஹம் விபாகாவஸரே முகுந்த!
க்ரந்தாமி ஸம்ப்ரத்யகதிஸ் தவாக்ரே ||

மோக்ஷத்தைக் கொடுக்கும் ஸ்வாமியே! பல்லாயிரம் முறை என்னால் செய்யப்படாத நிந்திக்கப்பட்ட கர்மங்கள்
சாஸ்த்ரங்களிலேயே இல்லை; இப்பொழுது, என்னுடைய பாபங்கள் பலன் கொடுக்கும் சமயத்தில்,
வேறு புகல் இல்லாததால், நான் தேவரீர் திருமுன்பே நின்று கதறுகிறேன்.

—————-

ஶ்லோகம் 24 –
ஆளவந்தார் எம்பெருமானை அழைத்து “உன்னுடைய கருணையே எனக்கிருக்கும் ஒரே புகல்” என்கிறார்;
ஆளவந்தார் “உன்னை அடைவது எனக்கு எப்படி ஒரு பாக்யமோ, உன்னுடைய கருணைக்கும் நானே தகுதியான பேறு” என்கிறார்.

நிமஜ்ஜதோ’நந்த பவார்ணவாந்த:
சிராய மே கூலமிவாஸி லப்த: |
த்வயாபி லப்தம் பவகவந்நிதாநீம்
அநுத்தமம் பாத்ரமிதம் தயாயா: ||

தேச கால வஸ்துக்களினால் எல்லையிலாத ஸ்வாமியே! இந்த ஸம்ஸாரக் கடலில் பல காலமாக மூழ்கியிருக்கும் எனக்கு
நீ கரையைப் போலே வந்தாய்; பகவானே! உன்னுடைய கருணைக்கு நானே தகுந்த பாத்திரம்.

—————–

ஶ்லோகம் 25 –
எம்பெருமான் “உம்முடைய பாரத்தை முழுவதுமாக என்னிடம் வைத்த பின்பு,
நீர் ஸ்ரீராமாயணம் ஸுந்தர காண்டம் 9.30இல் ‘தத் தஸ்ய ஸத்ருஶம் பவேத்’
(ஸ்ரீராமனே லங்கையை அழித்து என்னை ரக்ஷிப்பதே அவன் தன்மைக்குச் சேர்ந்தது – ஆகையால் நான் அவர் வரும் வரை காத்திருப்பேன்)
என்றபடி இருக்க வேண்டாமோ? எதற்காக உடனே நான் உமக்கு உதவ வேண்டும் என்று நிர்பந்தம் செய்கிறீர்?” என்று கேட்க,
ஆளவந்தார் “என்னுடைய துயரத்தைப் போக்கும்படி நான் கேட்க வில்லை; உன்னுடைய அடியார்கள் இவ்வுலகில் துன்பப்பட்டால்
அது உன்னுடைய பெருமைக்குத் தானே அவப் பெயர்; அதைப் போக்கிக் கொள்ளும்படி ப்ரார்த்திக்கிறேன்” என்கிறார்.

அபூத பூர்வம் மம பாவி கிம்வா
ஸர்வம் ஸஹே மே ஸஹஜம் ஹி து:க்கம் |
கிந்து த்வதக்ரே ஶரணாகதாநாம்
பராபவோ நாத! ந தே’நுரூப: ||

ஸ்வாமியே! இதுவரை அனுபவிக்காத எந்தப் புதிய துன்பம் எனக்கு ஏற்படப்போகிறது இப்போது?
இந்தத் துன்பங்களை நான் பொறுத்துக்கொள்கிறேன்; இவை என்னுடன் பிறந்தவை;
ஆனால் உன்னிடம் சரணடைந்தவர்களுக்கு தேவரீரின் திருமுன்பே ஒரு அவமானம் ஏற்பட்டது என்றால்,
அது தேவரீருடைய பெருமைக்குச் சேராது.

—————

ஶ்லோகம் 26 –
ஆளவந்தார் “நீ உன்னுடைய பெருமைக்கு ஏற்படும் தோஷத்தையும் பார்க்காமல் என்னைக் கை விட்டாலும்,
நான் உன்னை விடமாட்டேன்” என்று தன்னுடைய அகதித்வத்தினாலே (வேறு புகலில்லாத நிலையினாலே)
உண்டான மஹா விஶ்வாஸத்தை வெளியிடுகிறார்.

நிராஸகஸ்யாபி ந தாவதுத்ஸஹே
மஹேஶ! ஹாதும் தவ பாத பங்கஜம் |
ருஷா நிரஸ்தோ’பி ஶிஶு: ஸ்தநந்தயோ
ந ஜாது மாதுஶ் சரணௌ ஜிஹாஸதி ||

ஸர்வேஶ்வரனே! நீ என்னைத் தள்ளினாலும், நான் உன்னுடைய திருவடித் தாமரைகளை விடத் துணிய மாட்டேன்;
பால் குடிக்கும் குழந்தையைத் தாயானவள் கோபத்தில் தள்ளினாலும், அக்குழந்தை தாயின் காலை விடாமல் இருக்குமா போலே.

—————-

ஶ்லோகம் 27 –
ஆளவந்தார் “அநந்ய கதித்வத்தினால் மட்டுமா நான் உன்னைப் பிரியாமல் இருக்கிறேன்?
உன்னுடைய போக்யமான தன்மையில் என் மனம் மூழ்கியிருப்பதால், நான் வேறு விஷயங்களை விரும்ப மாட்டேன்” என்கிறார்.

தவாம்ருதஸ்யந்திநி பாத பங்கஜே
நிவேஶிதாத்மா கதம் அந்யதிச்சதி? |
ஸ்திதே’ரவிந்தே மகரந்தநிர்ப்பரே
மதுவ்ரதோ நேக்ஷுரகம் ஹி வீக்ஷதே ||-

அதிகமான தேனைப் பெருக்கும் உன்னுடைய திருவடிகளில், உன்னுடைய க்ருபையினால் பதிந்திருக்கும் என் மனம்,
வேறு விஷயங்களை எப்படி ஆசைப்படும்?
தேன் நிறைந்த சிவந்த தாமரை இருக்கும்பொழுது, ஒரு வண்டானது முள்ளிப்பூவை விரும்பாதன்றோ?

—————

ஶ்லோகம் 28 –
ஆளவந்தார் “எனக்கு நீ உதவுவதற்கு நான் ஒரு முறை அஞ்சலி (கை கூப்புதல்) செய்வது அமையாதோ?”
என்று அருளிச் செய்கிறார்..

த்வதங்க்ரிம் உத்திஶ்ய கதா’பி கேநசித்
யதா ததா வா’பி ஸக்ருத்க்ருதோ’ஞ்ஜலி |
ததைவ முஷ்ணாத்யஶுபாந்யஶேஷத:
ஶுபாநி புஷ்ணாதி நஜாது ஹீயதே ||

காயிக சரணாகதியைக் குறிக்கும் ஒரு அஞ்சலியை யார் எச் சமயத்தில் எவ்வாறு செய்தாலும், அது எல்லாப் பாபங்களையும்
அடியோடு உடனே போக்கி விடும்; மங்களங்களை வளர்க்கும்; அந்த மங்களங்கள் அழியாமல் இருக்கும்.

—————–

ஶ்லோகம் 29 –
இந்த ச்லோகம் மானஸீக ப்ரபத்தியைக் காட்டும்.
அல்லது –
28 மற்றும் 29ஆம் ச்லோகங்களில் சரணாகதியின் பலனான பர பக்தியை விளக்குவதாக அமைந்திருக்கும்.

உதீர்ண ஸம்ஸார தவாஶுஶுக்ஷணிம்
க்ஷணேந நிர்வாப்ய பராஞ்ச நிர்வ்ருதிம் |
ப்ரயச்சதி த்வச் சரணாருணாம்புஜ
த்வயாநுராகாம்ருத ஸிந்து ஶீகர:||

உன்னுடைய சிவந்த திருவடித் தாமரைகளில் கொள்ளும் அன்புக் கடலில் ஒரு சிறு துளியே மிகவும் உக்ரமாக எரியும்
காட்டுத் தீ போன்ற ஸம்ஸாரத்தை ஒரு க்ஷணத்திலே போக்கி, உயர்ந்த ஆனந்தத்தையும் கொடுக்கும்.

—————-

ஶ்லோகம் 30 –
ஆளவந்தார், பலன் கொடுப்பதில் விளம்பமில்லாத ஸித்தோபாயமான பகவானைப் பற்றியிருப்பதாலும்,
அந்தப் பலனைப் பெறுவதற்குக் காத்திருக்க முடியாததாலும், த்வரையால் தூண்டப்பட்டு
திருவாய்மொழி 6.9.9இல் “கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ”
(என்னை உன்னிடத்தில் அழைத்துக்கொள்ளும் காலம் அருகில் வாராதோ?) என்று ஆழ்வார் கேட்டபடிக் கேட்கிறார்.
அல்லது –
ப்ரபத்தியின் பலனான பரபக்தியினால், ஆளவந்தார்,
திருவாய்மொழி 6.3.10இல் “கனைகழல் காண்பதென்று கொல் கண்கள்”
(என்னுடைய கண்கள் எப்பொழுது எம்பெருமானின் திருவடிகளைக் காணும்) என்றும்
திருவாய்மொழி 9.5.1இல் “காணக் கருதும் என் கண்ணே”
(அவனைக் காண என் கண்கள் ஆசைப்படும்) என்றும் ஆழ்வார் சொன்னபடி எம்பெருமானின் திருவடிகளை
எப்பொழுது காண்பேன் என்று கேட்கிறார்.

விலாஸ விக்ராந்த பராவராலயம்
நமஸ்யதார்த்தி க்ஷபணே க்ருதக்ஷணம் |
தநம் மதீயம் தவ பாத பங்கஜம்
கதாநு ஸாக்ஷாத் கரவாணி சக்ஷுஷா ||

என்னுடைய கண்கள் என்னுடைய தனமும், உயர்ந்த தேவர்கள் மற்றும் தாழ்ந்த மனிதர்களின் இருப்பிடங்களை
விளையாட்டாக அளந்து தன்னதாகக் கொண்டு இருக்கும், வணங்குபவர்களின் துன்பத்தைப் போக்கும்
உன்னுடைய திருவடியை எப்பொழுது காணும்?

———————

ஶ்லோகம் 31 –
இதில், ஆளவந்தார் “உன்னுடைய திருவடிகளைக் கண்டால் போதாது, அவை என்னுடைய தலையை அலங்கரிக்க வேண்டும்”
என்று ஆழ்வார் திருவாய்மொழி 9.2.2இல் “படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கணியாய்”
(இவ்வுலகத்தின் அளவுக்கு நீட்டிய திருவடித் தாமரைகளை என் தலைக்கு அணியாக ஆக்க வேண்டும்) என்றும்
திருவாய்மொழி 4.3.6இல் “கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே”
(என்னுடைய தலைக்கு உன்னுடைய தாமரை போன்ற திருவடிகளே அலங்காரமாகும்) என்றும் கேட்டபடி அருளிச் செய்கிறார்.

கதா புநஶ் ஶங்க ரதாங்க கல்பக
த்வஜாரவிந்தாங்குஶ வஜ்ரலாஞ்சநம் |
த்ரிவிக்ரம! த்வச் சரணாம்புஜ த்வயம்
மதீய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி ||

த்ரிவிக்ரமனாக அவதரித்த என் ஸ்வாமியே! சங்கம், சக்ரம், கற்பக மரம், கொடி, தாமரை, அங்குசம், வஜ்ராயுதம்
ஆகிய அடையாளங்கள் பொருந்திய உன்னுடைய திருவடிகள் எப்பொழுது என்னுடை தலையை அலங்கரிக்கும்.

—————–

ஶ்லோகம் 32 –
இதிலிருந்து 46ஆவது ச்லோகம் வரை ஆளவந்தார் எம்பெருமானுடன் கூடியிருக்கும் அவனுடைய
அழகிய அவயவங்கள், திருவாபரணங்கள், திவ்ய ஆயுதங்கள், திவ்ய மஹிஷிகள், திவ்ய அடியார்கள், செல்வம்
ஆகியவைகளை அனுபவித்து, இப்படிப்பட்ட ஆனந்தமான அனுபவத்தினால் கிடைக்கும் கைங்கர்யம்
தனக்கு எப்பொழுது கிடைக்கும் என்கிறார்.
இதன் மூலம், ஆளவந்தார் பகவானுக்குப் பரமபதத்தில் அடியார்களுடன் கூடி இருந்து கைங்கர்யம் செய்யும் குறிக்கோளை அருளிச் செய்கிறார்.

விராஜ மாநோஜ்ஜ்வல பீத வாஸஸம்
ஸ்மிதாத ஸீஸூந ஸமாமலச்சவிம் |
நிமக்ந நாபிம் தநுமத்யம் உந்நதம்
விஶால வக்ஷஸ்ஸ்தல ஶோபி லக்ஷணம் ||

எம்பெருமான் ஒளிவிடும் திருப் பீதாம்பரத்தை அணிந்துள்ளான்;
மலர்ந்த காயாம்பூவின் நிறத்தைப் போன்ற தோஷமற்ற ஒளியுடையவன்;
ஆழமான திருநாபி மற்றும் மெலிந்த இடைப்பகுதியை உடையவனாகச் சிறந்து விளங்குகிறான்,
ஒளிவிடும் ஸ்ரீவத்ஸம் என்கிற மறுவைத் தன் பரந்த திருமார்பில் உடையவன்-

————

ஶ்லோகம் 33 –
இதில், ஆளவந்தார் எம்பெருமானுடைய வீரம், சௌர்யம் முதலிய குணங்களையும்
எம்பெருமானின் திருத்தோள்களின் அழகையும் அனுபவிக்கிறார்.

சகாஸதம் ஜ்யாகிண கர்க்கஶைஶ் ஶுபை:
சதுர்பிராஜாநு விளம்பிபிர் புஜை: |
ப்ரியாவதம்ஸோத்பல கர்ண பூஷண
ஶ்லதாலகாபந்த விமர்த்த ஶம்ஸிபி: ||

வில்லில் நாணேற்றியதால் கடினமாக இருக்கும் நான்கு திருக் கைகளால் ஒளிவிடுகிறான் எம்பெருமான்;
மேலும் அவனுடைய திருத்தோள்களில் ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயாரின் காதுகளில் அணிந்திருக்கும் கரிய நிறத்தில்
இருக்கும் அல்லிப் பூக்கள், அவளின் காதணிகள் மற்றும் அலையும் கூந்தலின் அடையாளங்கள் தெரிகின்றன –

————-

ஶ்லோகம் 34 –
திருத்தோள்களை அனுபவித்த பிறகு, எம்பெருமானின் திருக்கழுத்தையும் திருமுகமண்டலத்தின் அழகையும்
ஆளவந்தார் அனுபவிக்கிறார்.

உதக்ர பீநாம்ஸ விலம்பி குண்டல
அலகாவளீ பந்துர கம்புகந்தரம் |
முகஶ்ரியா ந்யக்க்ருதபூர்ண நிர்மலா’-
ம்ருதாம்ஶு பிம்பாம்புருஹோஜ்ஜ்வல ஶ்ரியம் ||

எம்பெருமான் அணிந்திருக்கும் குண்டலங்கள் அவனுடைய உயர்ந்த திரண்டிருக்கும் திருத்தோள்களின் வரை வந்து தொங்குவதாலும்,
அவனுடைய சுருண்ட கூந்தலினாலும், மூன்று வரிகள் இருப்பதாலும் அவனுடைய திருக்கழுத்து அழகாக இருக்கிறது.
தன்னுடைய திருமுக மண்டலத்தின் ஒளியால் தோஷமற்ற நிலவு மற்றும் அப்போதலர்ந்த தாமரை மலரை ஜயித்திருக்கிறான் —

————-

ஶ்லோகம் 35 –
ஆழ்வார், திருவாய்மொழி 7.7.8இல் “கோளிழைத் தாமரை”
(எம்பெருமானின் திருக்கண்கள் அவற்றின் ஒளியையே ஆபரணமாகக் கொண்டிருக்கின்றன) என்று சொன்னபடி,
ஆளவந்தார் எம்பெருமானின் திருமுகமண்டலத்தை ஒவ்வொரு அவயமாக அனுபவிக்கிறார்.

ப்ரபுத்த முக்தாம்புஜ சாருலோசநம்
ஸவிப்ரம ப்ரூலதம் உஜ்ஜ்வலாதரம் |
ஶுசிஸ்மிதம் கோமல கண்டம் உந்நஸம்
லலாடபர்யந்த விலம்பிதாலகம் ||

எம்பெருமான் மலர்ந்த, புதிய தாமரை மலரைப் போன்ற திருக்கண்களையும், கொடி போன்று வளைந்த திருப்புருவங்களையும்,
மிகவும் ஒளிவிடும் திருவதரங்களையும், புனிதமான புன்முறுவலையும், அழகிய கன்னங்களையும், நிமிர்ந்த திருமூக்கையும்,
திருநெற்றி வரை படர்ந்திருக்கும் திருக்குழலையும் (கூந்தலையும்) உடையவன் –

——————

ஶ்லோகம் 36 –
ஆளவந்தார் எம்பெருமானின் திருவாபரணங்கள் மற்று திவ்ய ஆயுதங்களின் சேர்த்தியை அனுபவிக்கிறார்.

ஸ்புரத் கிரீடாங்கத ஹாரகண்டிகா
மணீந்த்ர காஞ்சீகுண நூபுராதிபி: |
ரதாங்க ஶங்காஸி கதா தநுர்வரைர்
லஸத் துளஸ்யா வநமாலயோஜ்ஜ்வலம் ||

எம்பெருமான் ஒளிவிடும் திருமுடி (கிரீடம்), தோள் காப்புகள், ஹாரம், கழுத்தில் அணியும் சங்கிலி, ஸ்ரீகௌஸ்துப மணி,
திவ்ய அரை நாண், திவ்ய சதங்கைகள் முதலிய திவ்ய ஆபரணங்களாலும்,
திருவாழி, திருச்சங்கு, திருநாந்தகம் என்னும் வாள், கௌமோதகீ என்னும் கதை, சார்ங்கம் என்னும் வில் ஆகிய திவ்ய ஆயுதங்களாலும்,
அவனுடைய திருமேனி ஸம்பந்தத்தால் ஒளி விடும் திருத்துழாய் மற்றும் வனமாலையால் மிகவும் ஜ்வலித்துக் கொண்டிருக்கிறான்.

—————-

ஶ்லோகம் 37 –
இனி வரும் இரண்டு ஶ்லோகங்களில் எம்பெருமான் பெரிய பிராட்டியுடன் கூடி இருப்பதை அனுபவிக்கிறார்.
இந்த ஶ்லோகத்தில், ஆளவந்தார் பிராட்டியின் பெருமையையும், ஈஶ்வரனுக்கு அவளிடத்தில் இருக்கும் பேரன்பையும் அருளிச் செய்கிறார்.

சகர்த்த யஸ்யா பவநம் புஜாந்தரம்
தவ ப்ரியம் தாம யதீய ஜந்மபூ: |
ஜகத்ஸமஸ்தம் யதபாங்க ஸம்ஶ்ரயம்
யதர்த்தம் அம்போதிரமந்த்ய பந்திச ||

எம்பெருமானே! எந்தப் பிராட்டிக்கு இருப்பிடமாக உன்னுடைய திருமார்பை ஆக்கினாயோ,
எந்தப் பிராட்டியின் பிறப்பிடமான திருப்பாற்கடல் உனக்கு விருப்பமான உறைவிடம் ஆனதோ,
எந்தப் பிராட்டியின் கடாக்ஷத்தை நம்பி இவ்வுலகம் இருக்கிறதோ, யாருக்காக நீ கடலைக் கடைந்தாயோ,
யாருக்காக நீ கடலில் அணை கட்டினாயோ–

————

ஶ்லோகம் 38 –
இதில், ஆளவந்தார் பிராட்டியின் எல்லை இல்லாத இனிமையையும், அவள் எம்பெருமானுக்காகவே இருப்பதையும்,
திருவாய்மொழி 10.10.6இல் “உனக்கேற்கும் கோல மலர்ப் பாவை”
(உனக்குத் தகுந்தவளான, அழகிய தாமரை மலரில் வசிக்கும் ஸ்ரீமஹாலக்ஷ்மி) சொன்னபடி அனுபவிக்கிறார்.

ஸ்வவைஶ்வ ரூப்யேண ஸதா’நு பூதயா’பி
அபூர்வவத் விஸ்மயமாததாநயா |
குணேந ரூபேண விலாஸ சேஷ்டிதை:
ஸதா தவைவோசிதயா தவ ஶ்ரியா ||

நீ விஶ்வரூபம் எடுத்து முழுவதுமாக அனுபவித்தாலும், பிராட்டி தன்னுடைய குணங்கள், அழகிய திருமேனிகள்
மற்றும் செயல்களால் உன்னை ஆச்சர்யம் அடையும்படிச் செய்து, உன்னுடைய பரம், வ்யூஹம், விபவம் முதலிய
எல்லா நிலைகளிலும் உனக்குப் புதிதாகத் தோன்றி, உனக்குத் தகுந்தவளாக விளங்கி, உன்னுடைய செல்வமாக இருக்கிறாள்.

—————-

ஶ்லோகம் 39 –
ஆளவந்தார், திருவனந்தாழ்வானின் திருமடியில் எம்பெருமானும் பிராட்டியும் கூடியிருப்பதைப்
பர்யங்க வித்யையில் காட்டியபடி அனுபவிக்கிறார்.

தயா ஸஹாஸீநம் அநந்தபோகிநி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞாநபலைக தாமநி |
பணாமணி வ்ராத மயூக மண்டல
ப்ரகாஶ மாநோதர திவ்யதாமநி ||

ஆதிசேஷன் சிறந்த ஞானத்தையும், பலத்தையும் உடையவன், தன்னுடைய பணாமணிகளில் இருக்கும் ரத்னங்களின் ஒளியால்
ஒளிவிடும் திருமடியில், பெருமாளும் பிராட்டியும் எழுந்தருளியிருக்கும் திவ்ய அந்தப்புரத்தைக் கொண்டிருக்கிறான்;
இப்படிப்பட்ட திருவனந்தாழானின் திருமேனியில், எம்பெருமான் திவ்யமாக சயனித்திருக்கிறான்–

—————–

ஶ்லோகம் 40 –
கைங்கர்யத்தில் இருக்கும் ஆசையால், ஆளவந்தார் திருவனந்தாழ்வானின் உயர்ந்த லீலைகளை அனுபவிக்கிறார்.
ஸ்ரீவிஷ்ணு புராணம் 1.15.157இல் ““உபமானமஶேஷாணாம் ஸாதூனாம் யஸ்ஸதா’பவத் |”
(எப்படி ப்ரஹ்லாதன் எல்லா நல்லவர்களுக்கும் உதாரணமாக இருக்கிறானோ) சொன்னபடி,
கைங்கர்யத்தில் ருசியுடைய அனைவருக்கும் திருவனந்தாழ்வானின் செயல்களே சிறந்த உதாரணம்.
ஆளவந்தார் இப்படிப்பட்ட ஆதிசேஷனின் உயர்ந்த நிலையை அருளிச் செய்கிறார்.

நிவாஸ ஶய்யாஸந பாதுகாம்ஶுக
உபதாந வர்ஷாதப வாரணாதிபி: |
ஶரீர பேதைஸ் தவ ஶேஷதாம் கதைர்
யதோசிதம் ஶேஷ இதீரிதே ஜநை: ||

நீ திருவனந்தாழ்வானின் திருமேனியிலே திவ்யமாக சயனித்திருக்கிறாய். திருவனந்தாழ்வான் நீ வசிக்கும் திருமாளிகையாகவும்,
சயனித்துக்கொள்ளும் படுக்கையாகவும், வீற்றிருக்கும் ஸிம்ஹாஸனமாகவும். அணிந்துகொள்ளும் பாதுகையாகவும்,
உடுத்திக்கொள்ளும் ஆடைகளாகவும், அணைத்துக்கொள்ளும் தலையணையாகவும்,
வெயில் மற்றும் மழையிலிருந்து காக்கும் குடையாகவும், மேலும் பல வடிவங்களையும் எடுத்துக்கொண்டு
உனக்குத் தொண்டு செய்வதால் எல்லோராலும் “சேஷன்” (தொண்டன்) என்றே அழைக்கப்படுகிறான் —

————-

ஶ்லோகம் 41 –
இதில், ஆளவந்தார் எம்பெருமான் பெரிய திருவடியுடன் (கருடாழ்வார்) கூடியிருப்பதை அனுபவிக்கிறார்.
பெரியதிருவடி, எம்பெருமானுக்குக் கொடியாகவும், மற்றும் எல்லாமாகவும் பழுத்த கனியைப் போன்று
எம்பெருமானுக்கு விரும்பத்தக்கவராக இருக்கிறார்.

தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ
யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய: |
உபஸ்திதம் தேந புரோ கருத்மதா
த்வதங்க்ரி ஸம்மர்த்த கிணாங்கஶோபிநா ||

வேதங்களையே அங்கங்களாக உடைய அந்த கருடாழ்வார், உனக்கு அடியவனாகவும், நண்பனாகவும், வாஹனமாகவும்,
ஆஸனமாகவும், கொடியாகவும், விதானமாகவும், சாமரமாகவும் இருக்கிறார்;
மேலும் உன்னுடைய திருவடிகள் அவருடைய தோள்களில் அழுத்தியதால் ஏற்பட்ட தழும்புகளாலே ஒளிவிடுகிறார்;
உன்னுடைய ஸன்னிதியில் இப்படிப்பட்ட கருடாழ்வாரால் நீ வணங்கப்படுகிறாய் —

————–

ஶ்லோகம் 42 –
ஆளவந்தார் ஸ்ரீ ஸேனாபதி ஆழ்வானின் (விஷ்வக்ஸேனர்) தாஸ்ய ஸாம்ராஜ்யத்தை அனுபவிக்கிறார்;
எம்பெருமான் தன்னுடைய எல்லாப் பொறுப்புகளையும் விஷ்வக்ஸேனரிடம் அளித்துத் தன்னையும் அவர் அதீனத்தில் அமைத்துக் கொள்கிறான்.

த்வதீய புக்தோஜ்ஜித ஶேஷபோஜிநா
த்வயா நிஸ்ருஷ்டாத்ம பரேண யத்யதா |
ப்ரியேண ஸேநாபதிநா ந்யவேதி தத்
ததா’நுஜாநந்தம் உதார வீக்ஷணை: ||

விஷ்வக்ஸேனர் உன்னுடைய ப்ரஸாதத்தையே உண்டு, உன்னுடைய நித்ய மற்றும் லீலா விபூதிகளை நடத்தும்
பொறுப்புகளை உன்னிடத்திலிருந்து பெற்றிருக்கிறார்;
எல்லோருக்கும் இனியவரான அவர், உன்னுடைய கண்ணசைவினாலே செய்ய வேண்டிய விஷயங்களுக்கு ஒப்புதல் வாங்கி,
அவற்றை நடத்தக் கூடியவர்.

—————

ஶ்லோகம் 43 –
விஷ்ணு ஸூக்தத்தில் “ஸதா பஶ்யந்தி ஸூரய:” (நித்யஸூரிகள் எப்பொழுதும் எம்பெருமானைப் பார்த்து அனுபவிக்கிறார்கள்)
என்று சொன்னபடி, எம்பெருமானுக்கு நித்யஸூரிகள் செய்யும் கைங்கர்யத்தை அனுபவிக்கிறார்.
இவருடைய ப்ரார்த்தனை திருவாய்மொழி 2.3.10இல் “அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ?”
(எப்பொழுது நான் நித்யஸூரிகள் கோஷ்டியில் இருப்பேன்?) என்று ஆழ்வார் கேட்டபடி இருக்கும்.

ஹதாகில க்லேஶமலை: ஸ்வபாவத:
*ஸதாநுகூல்யைகரஸைஸ் தவோசிதை: |
க்ருஹீத தத்தத் பரிசார ஸாதநை:
நிஷேவ்யமாணம் ஸசிவைர் யதோசிதம் ||-

* த்வதாநுகூல்யைக என்றும் ஒரு பாடம் உண்டு..

துன்பங்களும் தோஷங்களும் இல்லாத, எப்பொழுதும் உனக்குத் தொண்டு செய்யும் அனுபவத்தை உடைய,
உனக்குப் பொருத்தமாக இருக்கக்கூடியவர்களான, கையில் எப்பொழுதும் கைங்கர்யத்துக்குத் தேவையான
மாலை, தூபம், தீபம் முதலியவைகளை ஏந்தி இருப்பவர்களான, உனக்கும் முறையை உணர்த்திக்
கைங்கர்யம் செய்யக்கூடியவர்களான, அவர்கள் மற்றும் உன் தன்மைக்கேற்ப உன்னை வணங்கக்கூடிய நித்யஸூரிகளால் வணங்கப்படுபவனே!

————–

ஶ்லோகம் 44 – ஸ்ரீ ராமாயணம் அயோத்யா காண்டம் 31.25இல்
இளைய பெருமாள் “பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸானுஷு ரம்ஸ்யதே”
(நீ ஸீதாப்பிராட்டியுடன் மலைத்தாழ்வரைகளில் ரமித்திருக்கும்போது, நான் உங்கள் இருவருக்கும் தொண்டு செய்வேன்)
என்று சொன்னபடி, ஆளவந்தார் எம்பெருமான் பிராட்டிக்கு ஆனந்தம் கொடுப்பதை அனுபவிக்க ஆசைப்படுகிறார்.

அபூர்வ நாநா ரஸ பாவ நிர்பர
ப்ரபுத்தயா முக்த விதக்த லீலயா |
க்ஷணாணுவத் க்ஷிப்தபராதி காலயா
ப்ரஹர்ஷயந்தம் மஹிஷீம் மஹாபுஜம் ||

தன்னுடைய அழகான மற்றும் சிறந்ததான லீலைகளால் பிராட்டிக்கு ஆனந்தத்தைக் கொடுப்பவன் எம்பெருமான்;
இப்படிப்பட்ட லீலைகளால் பிராட்டிக்கு ப்ரஹ்மாவின் ஆயுட்காலமும் ஒரு நொடிப்பொழுதில் செல்லும்படி
ஒவ்வொரு க்ஷணமும் புதியதாக ரசிக்கும்படியாக இருக்கும்; பிராட்டியைத் தழுவுதற்கு ஏற்ற பெரிய திருக்கைகளை உடையவன்.

—————

ஶ்லோகம் 45 –
ஆளவந்தார் பிராட்டிக்கு ஆனந்தத்தைக் கொடுக்கும், ரசிக்கும்படியான விஷயங்களுக்கு இருப்பிடமான
எம்பெருமானின் திருமேனிகள் மற்றும் திருக்கல்யாண குணங்களை அனுபவிக்கிறார்.

அசிந்த்ய திவ்யாத்புத நித்ய யௌவந
ஸ்வபாவ லாவண்யமயாம்ருதோததிம் |
ஶ்ரிய: ஶ்ரியம் பக்த ஜநைக ஜீவிதம்
ஸமர்த்தம் ஆபத்ஸகம் அர்த்தி கல்பகம் ||

எம்பெருமான் நினைவுக்கு அப்பாற்பட்ட, திவ்யமான, ஆச்சர்யமான, நித்யமான, இயற்கையான இளமையை உடையவன்;
அழகுக் கடலாக இருப்பவன்; ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கும் ஸ்ரீயாக (செல்வமாக) இருப்பவன்;
தன்னுடைய அடியார்களின் உயிராக இருப்பவன்; அறிவில் குறைந்தவர்களையும் படிப்படியாக உயர்த்தக்கூடியவன்,
ஆபத்துக் காலத்தில் நண்பனாக இருப்பவன், அவனை விரும்புபவர்களுக்கு கற்பக மரமாக இருப்பவன் –

——————-

ஶ்லோகம் 46 –
ஆளவந்தார் “எப்பொழுது உலக விஷயங்களில் ஆசையைவிட்டு தேவரீருடைய ஆனந்துக்காகவும்
என்னுடைய இருப்பின் பயனாகவும், முன்பு சொன்ன ஸ்வரூபம், ரூபம், குணம், விபூதி ஆகியவைகளில்
பூர்த்தியை உடைய தேவரீருக்குக் கைங்கர்யம் செய்வேன்?” என்று கேட்கிறார்.

பவந்த மேவாநுசரந் நிரந்தரம்
ப்ரஶாந்த நிஶ்ஶேஷ மநோரதாந்தர: |
கதா’ஹம் ஐகாந்திக நித்ய கிங்கர:
ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாதஜீவித: ||

மற்ற எல்லா விஷயங்களிலுமிருக்கும் ஆசையை அடியோடு விட்டு உன்னையே தொடரும்படி இருந்து,
எப்பொழுதும் உனக்கு நித்ய கைங்கர்யம் செய்து உனக்கு ஆனந்தத்தைக் கொடுத்து என் வாழ்கைக்கும் ஒரு பயனைப் பெறுவேன்?

———————

ஶ்லோகம் 47 –
இதில், ஆளவந்தார் ஈஶ்வரனின் அடையத்தக்க உயர்ந்த நிலையையும் தன்னுடைய முந்தைய (தாழ்ந்த) நிலையையும் பார்த்து
“ஸம்ஸாரியான நான் எப்படி ப்ரஹ்மா ருத்ரன் போன்றவர்களின் எண்ணத்துக்கும் அப்பாற்பட்ட, இவ்வுலக விஷயங்களால்
தீண்டப்படாத நித்யஸூரிகள் ஆசைப்படும் கைங்கர்யத்தை ஆசைப்படலாம்?
எப்படி உயர்ந்த உணவானது விஷத்தால் தீண்டப்படலாம்?” என்று நினைத்து,
நம்மாழ்வார் “வளவேழுலகில்” செய்ததைப்போலே தன்னைத் தானே கடிந்து கொள்கிறார்.

திகஶுசிம் அவிநீதம் நிர்த்தயம் மாமலஜ்ஜம்
பரம புருஷ! யோ’ஹம் யோகிவர்யாக்ரகண்யை: |
விதிஶிவ ஸநகாத்யைர் த்யாதும் அத்யந்த தூரம்
தவ பரிஜநபாவம் காமயே காமவ்ருத்த: ||

புருஷோத்தமனே! என்னுடைய (தவறான) எண்ணப்படி நடக்கும் தன்மையை உடைய காரணத்தால் ப்ரஸித்தமான நான்,
என்னுடைய புனிதமற்ற தன்மையாலும், சீர் செய்யப்படாத தன்மையாலும், கருணையும், வெட்கமும் இல்லாத தன்மையாலும்,
ப்ரஹ்மா, சிவன், ஸனகாதி முனிவர்கள் போன்ற உயர்ந்த யோகிகளுக்கும் எட்டாததான
உன் கைங்கர்யத்தை ஆசைப்பட்டதை என்னையே நினைத்து நொந்துகொள்ள வேண்டும்.

——————

ஶ்லோகம் 48 –
ஆளவந்தார் எம்பெருமானிடத்தில் “உன்னுடைய கருணையால், என்னுடைய பாபங்களைப் போக்கி
என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று ப்ரார்த்திக்கிறார்.
அல்லது –
ஆளவந்தார் எம்பெருமானிடத்தில் “என்னுடைய குறிக்கோளை அடைவதற்குத் தடையாக இருக்கும்
பாபங்களை நீயே போக்க வேண்டும்” என்று ப்ரார்த்திக்கிறார்.
முன்பு, எம்பெருமானின் மேன்மையின் உச்சக்கட்ட நிலையைப் பார்த்து விலகினார்;
இப்பொழுது எம்பெருமானின் எளிமையின் உச்சக் கட்ட நிலையை நினைத்து அவனை அணுகுகிறார்.

அபராத ஸஹஸ்ர பாஜநம்
பதிதம் பீமபவார்ணவோதரே |
அகதிம் ஶரணாகதம் ஹரே!
க்ருபயா கேவலமாத்ஸமாத் குரு ||

துன்பங்களைப் போக்கி என்னை ரக்ஷிப்பவனே! கணக்கில்லாத அபராதங்களுக்கு இருப்பிடம் நான்;
இப்பொழுது இந்த ஸம்ஸாரம் என்கிற க்ரூரமான கடலில் முழுகியுள்ளேன்; எனக்கு வேறு புகல் இல்லை;
உன்னிடத்திலே சரணடைந்துள்ளேன்; உன்னுடைய கருணையினாலே என்னை உன்னுடையவனாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

————–

ஶ்லோகம் 49 –
எம்பெருமான் ஆளவந்தாரைப் பார்த்து “இத்தனை தோஷங்களை உடைய நீர், வேறு உபாயங்களைக் கொண்டோ
அல்லது மற்றவைகளை விட்டு என்னையே பிடித்துக் கொண்டோ அவற்றைப் போக்கிக்கொள்ளாமல்,
என்னை ‘க்ருபயா கேவலம் ஆத்மஸாத் குரு’
(உன்னிடைய கருணையாலே, என்னை உன்னுடையவனாக ஏற்றுக் கொள் என்று ஏன் நிர்பந்திக்கிறீர்?” என்று கேட்க,
அதற்கு ஆளவந்தார்
“சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்ட அனுஷ்டானங்களில் ஈடுபட எனக்கு ஞானம் இல்லை,
ஆகையால் மற்ற உபாயங்களில் ஈடுபட வழியில்லை; எனக்கு வேறு புகல் இல்லாததால்,
இருப்பவற்றைக் கைவிடவும் முடியாது. ஆகையால் உன்னுடைய பெரிய கருணையினால்,
உன்னுடைய கடாக்ஷமே எனக்கு உஜ்ஜீவனத்துக்கு வழி” என்கிறார்.

அவிவேக கநாந்த திங்முகே
பஹுதா ஸந்தத து:க்கவர்ஷிணி |
பகவந்! பவதுர்திநே பத:
ஸ்கலிதம் மாம் அவலோகயாச்யுத ||

ஞானம், பலம் முதலிய ஆறு குணங்களால் பூர்த்தியை உடைய பகவானே! உன்னுடைய அடியார்களை நழுவ விடாதவனே!
திசைகள் கரிய மேகங்களால் மறைக்கப்பட்டிருக்கும், மழைக்கால இருட்டை உடைய, பெரிய மழை தொடர்ந்து பொழியும்
இந்த ஸம்ஸாரத்தில், நல்வழியில் இருந்து நான் நழுவுகிறேன்; உன்னுடைய கருணைக் கடாக்ஷத்தை எனக்கு அருள்.

—————–

ஶ்லோகம் 50 –
ஆளவந்தார் “எனக்கு உன்னுடைய கருணையைத் தவிர வேறு புகல் இல்லாததால், உன்னுடைய கருணைக்கும்
என்னை விட சிறந்த பாத்திரம் கிடையாது; ஆகையால் இந்த வாய்ப்பை நழுவ விடாதே” என்கிறார்.

ந ம்ருஷா பரமார்த்தமேவ மே
ஶ்ருணு விஜ்ஞாபநம் ஏகமக்ரத: |
யதி மே ந தயிஷ்யஸே ததோ
தயநீயஸ் தவ நாத துர்லப: ||

ஸ்வாமி! முதலில் என்னுடைய ப்ரார்த்தனையைக் கேள்; இது பொய்யல்ல; இது உண்மையே;
உன்னுடைய கருணையை எனக்கு அளிக்காமல் என்னை இழந்து விட்டாய் என்றால்,
உன்னுடைய கருணையைப் பெற என்னைவிடத் தகுந்த எவரையும் நீ பெறமாட்டாய்.

——————

ஶ்லோகம் 51 –
ஆளவந்தார் “உன்னுடைய அருளை வேண்டும் எனக்கும் அருளை உடைய உனக்கும் உள்ள இந்த ஸம்பந்தம்,
தேவரீருடைய கருணையினாலே ஏற்பட்டது; ஆகையால் இதைக் கைவிடாமல் நீ காக்க வேண்டும்” என்கிறார்.

ததஹம் த்வத்ருதே ந நாதவாந்
மத்ருதே த்வம் தயநீயவாந் ந ச |
விதி நிர்மிதம் ஏததந்வயம்
பகவந்! பாலய மா ஸ்ம ஜீஹப: ||

ஞானம் நிறைந்த ஸ்வாமியே! ஆதலால் உன்னைத் தவிர எனக்கு வேறு ஒரு ஸ்வாமி கிடையாது;
அதே போல உன்னுடைய கருணைக்கும் என்னைத் தவிர வேறு யாரும் சரியான பாத்திரம் கிடையாது.
உன்னுடைய கருணையால் ஏற்படுத்தப்பட்ட இந்த ஸம்பந்தம் காக்கப்பட வேண்டும்; அதை நழுவ விடாதே.

—————–

ஶ்லோகம் 52 –
எம்பெருமான் “என்னுடைய ரக்ஷணம் ஆத்மாவின் ஸ்வரூபத்தின்படி இருக்கும்; உம்முடைய ஸ்வரூபத்தை ஆராய்ந்து,
என்னிடத்தில் உம்மை ஸமர்ப்பியும்” என்று சொல்ல,
ஆளவந்தாரும் ஆழ்வார் திருவாய்மொழி 2.9.6இல் “சிறப்பில் வீடு” என்று செய்தபடி,
“எனக்கு எந்த நிர்பந்தமும் இல்லை; ஆத்மா என்று சொல்லப்படும் இந்த வஸ்து தேவரீரின் திருவடிகளில் என்னால் ஸமர்ப்பிக்கப்பட்டது”

வபுராதிஷு யோ’பி கோ’பி வா
குணதோ’ஸாநி யதா ததாவித: |
ததயம் தவ பாத பத்மயோ:
அஹமத்யைவ மயா ஸமர்ப்பித: ||

நான் சரீரம் முதலான எதுவாகவோ எப்படிப்பட்ட தன்மையை உடையவனாகவும் இருக்கலாம்;
அதைப்பற்றி எனக்கு ஒரு நிர்பந்தமும் இல்லை; நான் என்று சொல்லப்படும் இந்த வஸ்து இப்பொழுது
உன்னுடைய திருவடித் தாமரைகளில் என்னால் ஸமர்ப்பிக்கப் பட்டது.

————–

ஶ்லோகம் 53 –
எம்பெருமான் கருணையுடன் “எப்படி நாம் ஆளவந்தாரைக் கலக்கத்தில் இருக்கும்படி விடுவது?” என்று எண்ணி
“நீர் யார்; நீர் யாரை என்னிடம் ஸமர்ப்பித்தீர்?” என்று கேட்க,
ஆளவந்தார், தன்னுடைய ஸ்வரூபத்தை ஆழ்வார் திருவாய்மொழி 2.3.4இல் “எனதாவி ஆவியும் நீ … எனதாவி யார்? யானார்?”
(நீயே எனக்கு அந்தராத்மா; என்னுடைய ஆத்மா யார்? நான் யார்? எல்லாம் உன்னுடையவையே) என்றபடி
“உன்னுடைய உடைமையை நீயே ஏற்றுக்கொண்டாய்; ஆத்மாவை ஸமர்ப்பிப்பதும் ஆத்மாவைத் திருடுவது போலன்றோ?”
என்று சொல்லி தன்னுடைய ஆத்ம ஸமர்ப்பணச் செயலுக்கு வருந்துகிறார்.

மம நாத ! யதஸ்தி யோ’ஸ்ம்யஹம்
ஸகலம் தத்தி தவைவ மாதவ |
நியதஸ்வம் இதி ப்ரபுத்ததீ:
அதவா கிந்நு ஸமர்ப்பயாமி தே ||

ஸர்வ ஸ்வாமியான எம்பெருமானே! லக்ஷ்மீநாதனே! என்னுடைய எல்லா உடைமைப் பொருள்களும் நானும்
எப்பொழுதும் உன்னுடையவையே. இது தெரிந்த நான், உனக்கு எதை ஸமர்ப்பிப்பேன்?

—————–

ஶ்லோகம் 54 –
ஆளவந்தார் எம்பெருமானிடம் “ஆத்மாவைத் திருடுவதற்கு ஸமமான இந்த ஆத்ம ஸமர்ப்பணத்தை நான் நிறுத்தாததால்,
உன்னுடைய நிர்ஹேதுக க்ருபையினால் என்னுடைய சேஷத்வத்தை வெளியிட்டதைப் போலே,
பரபக்தி, பரஞானம் மற்றும் பரமபக்தி ஆகியவைகளையும் அளித்து,
இந்த ஞானம் உன்னுடைய கைங்கர்யத்துக்கு உதவும்படிச் செய்” என்கிறார்.

அவபோதிதவாநிமாம் யதா
மயி நித்யாம் பவதீயதாம் ஸ்வயம் |
க்ருபயைததநந்ய போக்யதாம்
பகவந்! பக்திம் அபி ப்ரயச்ச மே ||

என் ஸ்வாமியே! எப்படி உன்னுடைய நிர்ஹேதுக க்ருபையால் என்னுடைய சேஷத்வத்தை எனக்கு அறிவுறுத்தினாயோ,
அதேபோல வேறு எங்கும் கிடைக்காத, உன்னிடத்தில் பக்தி செய்யும் அந்த இனிய அனுபவத்தையும், நீயே அளிக்க வேண்டும்.

—————–

ஶ்லோகம் 55 –
ஆளவந்தார் பகவானிடத்தில் அதிகமான பக்தியைப் பெற்றபின், பகவானிடத்தில் அடிமைத்தனத்துடன் நிறுத்தாமல்,
அவனுடைய அடியார்களுக்கு அடிமையாக இருப்பதை ப்ரார்த்திக்கிறார்.

தவ தாஸ்ய ஸுகைக ஸங்கிநாம்
பவநேஷ்வஸ் த்வபி கீடஜந்ம மே |
இதராவஸதேஷு மா ஸ்ம பூத்
அபி மே ஜந்ம சதுர் முகாத்மநா ||

எம்பெருமானுக்குத் தொண்டு செய்வதில் மூழ்கியிருப்பவர்களின் திருமாளிகைகளில் ஒரு புழுவாகவாவது பிறக்க வேண்டும்.
மற்ற க்ருஹங்களில் ப்ரஹ்மாவாகப் பிறப்பதும் எனக்கு வேண்டாம்.

—————–

ஶ்லோகம் 56 –
ஆளவந்தார் “எனக்கு ஒரு வைஷ்ணவரின் திருமாளிகையில் பிறக்கும் பெருமை தான் வேண்டுமோ?
அவர்கள் என்னைக் கண்டால், என்னைத் தள்ளி விடாமல், “இவன் நம்மவன்” என்று கருதித் தங்கள் விசேஷமான
கருணையை எனக்கு அளிக்க வேண்டும்படி நீ செய்ய வேண்டும்” என்கிறார்.

ஸக்ருத் த்வதாகார விலோகநாஶயா
த்ருணீ க்ருதாந் உத்தம புக்தி முக்திபி: |
மஹாத்மபிர் மாம் அவலோக்யதாம் நய
க்ஷணே’பி தே யத்விரஹோ’திதுஸ்ஸஹ: ||

உன்னுடைய பிரிவைத் தாங்க முடியாதவர்களான, எத்தனை இன்பங்களும் மோக்ஷமும் பெற்றிருந்தாலும்
உன்னுடைய திருமேனியை ஒரு முறை பார்ப்பதைக் கருதினால், அவற்றைப் புல்லைப் போல மதிப்பவர்களான
சிறந்த வைஷ்ணவர்களின் கருணைப் பார்வைக்கு நான் இலக்காகும் தகுதியை எனக்குக் கொடு.

—————–

ஶ்லோகம் 57 –
முன் ஶ்லோகத்தில், ஆளவந்தார் ஶேஷத்வத்தின் உயர்ந்த நிலையான அடியார்களுக்கு அடிமைப்பட்டிருப்பதை அனுபவித்தார்.
இங்கே ஶேஷத்வத்துக்கு வெளிப்பட்டிருக்கும் விஷயங்களில் தனக்கு இருக்கும் வெறுப்பைச் சொல்லி,
எம்பெருமானிடத்தில் “அவற்றை நீக்க வேண்டும்” என்று ப்ரார்த்திக்கிறார்.

ந தேஹம் ந ப்ராணாந்ந ச ஸுகம் அஶேஷாபிலஷிதம்
ந சாத்மாநம் நாந்யத் கிமபி தவ ஶேஷத்வ விபவாத் |
பஹிர்பூதம் நாத! க்ஷணமபி ஸஹே யாது ஶததா
விநாஶம் தத்ஸத்யம் மதுமதந! விஜ்ஞாபனம் இதம் ||

ஸ்வாமியே! உன் விஷயமான கைங்கர்யச் செல்வத்துக்கு வெளிப்பட்டிருக்கும் என்னுடைய
தேஹம், ப்ராணன், எல்லோராலும் விரும்பப்படும் சுகங்கள், என்னுடைய ஆத்மா ஆகிய எதுவாக இருந்தாலும்
அவற்றை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது; இவை எல்லாம் ஒழியட்டும்.
மது என்னும் அரக்கனைக் கொன்ற என் ஸ்வாமியே! இது உண்மை; இதுவே என் ப்ரார்த்தனை.

—————–

ஶ்லோகம் 58 –
எம்பெருமான் “இந்த ஸம்ஸாரத்தில் என்னுடைய கோபத்துக் காரணமான பகவத் அபசாரம் முதலிய எத்தனையோ விஷயங்கள் இருக்க,
கைங்கர்யத்துக்கு விரோதியான இவற்றில் வெறுப்பு ஏற்பட்டு, யோகிகளுக்கும் அரிதான இந்நிலையை ப்ரார்த்திப்பவரும் உளரே!”
என்று ஆச்சர்யப்பட,
ஆளவந்தார் “இந்த தோஷங்களை நீக்கக்கூடிய தேவரீரின் எல்லையில்லாத திருக்கல்யாண குணங்களை
நினைத்து இதை ஆசைப்பட்டேன்” என்கிறார்.

துரந்தஸ்யானாதேர் அபரிஹரணீயஸ்ய மஹதோ
நிஹீநாசாரோ’ஹம் ந்ருபஶுரஶுபஸ்யாஸ் பதம் அபி |
தயாஸிந்தோ! பந்தோ! நிரவதிக வாத்ஸல்யஜலதே
தவ ஸ்மாரம் ஸ்மாரம் குணகணம் இதீச்சாமி கதபீ: ||

கருணைக் கடலான ஸ்வாமியே! என்னுடன் எல்லா உறவுகளையும் உடையவனே! வாத்ஸல்யக் கடலாக இருப்பவனே!
நான் மிகப் பெரிய, அநாதி கால, முடிவில்லாத, போக்க முடியாத பாபங்களை உடையவனாக இருந்தாலும்,
மீண்டும் மீண்டும் உன்னுடைய திருக்கல்யாண குணங்களை நினைப்பதால், பயமில்லாமல் இதை ஆசைப் படுகிறேன்.

—————-

ஶ்லோகம் 59 – எம்பெருமான் “நீர் இச்சாமி என்று முன் ச்லோகத்தில் கூறியபடி உண்மையிலே
என் விஷயத்தில் ஆசை கொண்டுள்ளீரா?” என்று கேட்க
“நான் மந்த மனதை உடையவன் ஆகையால் தேவரீருடைய திருமுன்பே, தேவரீரின் பெருமைக்குத் தகுந்த
என் ஆசையை வெளியிட முடியவில்லை. என்னுடைய ஆசையைக் காட்டும் வார்த்தைகளைக் கொண்டு மனதைத் திருத்தி,
இந்நிலை எனக்கு உண்மையில் ஏற்படும்படிச் செய்ய வேண்டும்” என்கிறார்.

அநிச்சந்நப்யேவம் யதி புநரிதீச்சந்நிவ ரஜஸ்-
தமஶ் சன்னஶ்சத்மஸ்துதி வசன பங்கீமரசயம் |
ததா’பீத்தம் ரூபம் வசனம் அவலம்ப்யா’பி க்ருபயா
த்வமேவைவம் பூதம் தரணிதர! மே ஶிக்ஷய மந: ||

பூமியை எடுத்த எம்பெருமானே! இந்த அடியவன் ரஜோ மற்றும் தமோ குணங்களால் மூடப்பட்டிருந்தாலும்,
என்னிடத்தில் உண்மையான ஆசை இல்லாமல் இருந்தாலும், உண்மையான ஆசை உடையவர்களைப் போலே
உன்னை மயக்கும் வார்த்தைகளை நான் சொன்னாலும், அதையே காரணமாகக் கொண்டு,
உன்னுடைய கருணையால் என்னுடைய மனதைத் திருத்தி யருள வேண்டும்.

——————-

ஶ்லோகம் 60 –
எம்பெருமான் “உம்மிடத்தில் ஆசையும் இல்லாதபோதும், நானே உம்மிடத்தில் ஆசையை உண்டாக்கி
உம்மைக் காக்கவும் செய்ய வேண்டும் என்கிறீரே – இவற்றை நான் ஏன் செய்ய வேண்டும்” என்று கேட்க
ஆளவந்தார் தனக்கும் அவனுக்கும் உள்ள ஒழிக்க ஒழியாத உறவைக் காட்டுகிறார்.

பிதா த்வம் மாதா த்வம் தயித தநயஸ்த்வம் ப்ரிய ஸுஹ்ருத்
த்வமேவ த்வம் மித்ரம் குருரஸி கதிஶ்சாஸி ஜகதாம் |
த்வதீயஸ் த்வத்ப்ருத்யஸ் தவ பரிஜநஸ் த்வத்கதிரஹம்
ப்ரபந்நஶ் சைவம் ஸத்யஹமபி தவைவாஸ்மி ஹி பர: ||

இவ்வுலகங்களுக்கு நீயே தந்தை; நீயே தாய்; நீயே விரும்பத்தக்க பிள்ளை; நீயே நல்ல உள்ளம் கொண்ட நண்பன்;
நீயே நம்பிக்கைக்குப் பாத்திரமான நண்பன்; நீயே குரு; நீயே உபாயம் (வழி) மற்றும் உபேயம் (குறிக்கோள்);
நான் உன்னுடையவன்; உன்னுடைய அடிமை; உன்னுடைய தொண்டன்;
உன்னையே சிறந்த உபேயமாகவும், உபாயமாகவும் கொண்டுள்ளவன்; ஆகையால் நான் ஏன் உன்னால் ரக்ஷிக்கப்படக் கூடாது?

—————–

ஶ்லோகம் 61 –
எம்பெருமான் ஆளவந்தாரிடம்
“நீர் உயர்ந்த வம்சத்தில் பிறந்துள்ளீரே. ஏன் எப்படி உதவியற்றவரைப் போல் பேசுகிறீர்?” என்று கேட்க,
ஆளவந்தார்
“நான் உயர்ந்த வம்சத்தில் பிறந்திருந்தாலும், என்னுடைய பெரிய பாபங்களினாலே, ஸம்ஸாரத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறேன்;
என்னை நீயே இதிலிருந்து எடுத்தருள வேண்டும்” என்கிறார்.

ஜநித்வா’ஹம் வம்ஶே மஹதி ஜகதி க்யாதயஶஸாம்
ஶுசீநாம் யுக்தாநாம் குணபுருஷ தத்த்வ ஸ்திதி விதாம் |
நிஸர்கா தேவ த்வச்சரண கமலைகாந்த மநஸாம்
அதோ’த: பாபாத்மா ஶரணத! நிமஜ்ஜாமி தமஸி ||

புகலிடம் கொடுக்கும் ஸ்வாமியே! நான் பரிசுத்தமான, உன்னுடன் எப்பொழுதும் இருக்க விரும்புபவர்களான,
சித் மற்றும் அசித் ஆகியவற்றின் ஸ்வரூபத்தையும் தன்மைகளையும் நன்கு உணர்ந்தவர்களான,
உன் திருவடிகளிலேயே எப்பொழுதும் தன்கள் மனதை வைத்திருக்கும் சிறந்தவர்களான, ப்ரஸித்தமான புகழை உடைய
பெரியோர்கள் அவதரித்த, உயர்ந்த வம்சத்தில் பிறந்திருந்தாலும், பாபமே வடிவெடுத்தவனாகையாலே,
இந்த ப்ரக்ருதியில் ஆழமாக மூழ்கிக் கொண்டிருக்கிறேன்.

—————-

ஶ்லோகம் 62 –
எம்பெருமான் “உயர்ந்த வம்சத்தில் பிறந்தும் அது ப்ரயோஜனப்படாமல் போகும் அளவிற்கு உம்மிடத்திலே
என்ன பாபங்கள் உள்ளன?” என்று கேட்க,
ஆளவந்தார் சென்ற ஶ்லோகத்தில் பாபாத்மா என்று சொன்னதை விளக்கி அருளுகிறார்.

அமர்யாத: க்ஷுத்ரஶ் சலமதிர் அஸூயா ப்ரஸவபூ:
க்ருதக்நோ துர்மாநீ ஸ்மரபரவஶோ வஞ்சநபர: |
ந்ருஶம்ஸ: பாபிஷ்ட: கதம் அஹமிதோ து:க்க ஜலதே:
அபாராதுத்தீர்ணஸ் தவ பரிசரேயம் சரணயோ: ||

நான் சாஸ்த்ர மர்யாதைகளை மதிக்காமல் கடந்தவன், தாழ்ந்த விஷயங்களில் ஆசை உள்ளவன்,
நிலை இல்லாத மனதை உடையவன், பொறாமையின் பிறப்பிடம், எனக்கு நன்மை செய்பவர்களுக்கும் தீங்கிழைப்பவன்,
கைவிடவேண்டிய கர்வத்தை உடையவன், காமத்துக்கு வசப்பட்டவன், ஏமாற்றுபவன், க்ரூரமான செயல்களில் ஈடுபட்டவன்
மற்றும் பாபங்களில் மூழ்கியுள்ளவன். நான் எப்படி இந்த எல்லையில்லாத பாபக்கடலின் கரையை அடைந்து
உன்னுடைய திருவடிகளுக்குத் தொண்டு செய்வேன்?

—————–

ஶ்லோகம் 63 –
எம்பெருமான் “நீர் தெரிந்தே செய்த தவறுகளை நான் எப்படிப் போக்க முடியும்?” என்று கேட்க,
ஆளவந்தார் “காகாஸுரன் மற்று சிசுபாலன் ஆகியோர் செய்த அபராதங்களைப் பொறுத்த தேவரீரால்,
என்னுடைய தவறுகளைப் பொறுக்க முடியாதோ?” என்கிறார்.

ரகுவர! யதபூஸ்த்வம் தாத்ருஶோ வாயஸஸ்ய
ப்ரணத இதி தயாளுர் யச்ச சைத்யஸ்ய க்ருஷ்ண! |
ப்ரதிபவம் அபராத்துர் முக்த! ஸாயுஜ்யதோ’பூ:
வத கிமபதமாகஸ்தஸ்ய தே’ஸ்தி க்ஷமாயா: ||

ரகுகுல திலகமான ஸ்ரீராமராக அவதரித்தவனே! பெரிய தவறைச் செய்த காகாஸுரன் விஷத்தில்,
அவனை ஒரு சரணாகதனாகக் கொண்டு, உன் கருணையைக் காட்டவில்லையோ?
எந்தத் தவறுகளையும் பொருட்படுத்தாத கண்ணனே! சேதி குலத்தைச் சேர்ந்த, பிறவிதோறும் உன்னிடத்தில் அபராதம் செய்த
சிசுபாலனுக்கு நீ மோக்ஷத்தையே அளித்தாயே. எந்த பாபம் தேவரீருடைய பொறுமைக்கு விஷயமாகாது? எனக்கு தேவரீர் விளக்கியருள வேண்டும்.

————

ஶ்லோகம் 64 –
எம்பெருமான் “ஸ்வதந்த்ரனான நான் சிலருக்கு சில விசேஷ காரணங்களுக்காக உஜ்ஜீவனத்தைச் செய்து கொடுத்தால்,
அதுவே என்னுடைய பொதுவான நடத்தையாகக் கருதமுடியுமோ?” என்று கேட்க,
ஆளவந்தார் “கடற்கரையில், நீ உன்னிடத்தில் சரணடைவர்களை ரக்ஷிப்பேன் என்று சபதம் எடுத்தபோது,
அதில் என்னைத் தவிர என்று சபதம் செய்தாயோ?” என்கிறார்.

நநு ப்ரபந்நஸ் ஸக்ருதேவ நாத!
தவாஹம் அஸ்மீதி ச யாசமாந: |
தவாநுகம்ப்ய: ஸ்மரத: ப்ரதிஜ்ஞாம்
மதேகவர்ஜம் கிமிதம் வ்ரதம் தே ||

ஸ்வாமி! “நான் உன்னிடத்தில் ஒருமுறை சரணடைந்துள்ளேன்” என்றும்
“உனக்கே நான் தொண்டு செய்ய வேண்டும்” என்றும் சொல்லி,
நீ கடற்கரையில் விபீஷணன் சரணடைய வந்த ஸமயத்தில் செய்த சபதத்தை நினைக்கும் நான்,
உன்னுடைய கருணையைப் பெறத் தகுந்தவன்; தேவரீருடைய சபதம் என் ஒருவனைத் தவிர்த்தோ?

—————–

ஶ்லோகம் 65 –
ஆளவந்தார் “நீ ஸ்ரீராமாயணம் அயோத்யா காண்டம் 18.30இல் ‘ராமோ த்விர் நாபிபாஷதே’
(ஸ்ரீராமர் இரண்டு விதமாகப் பேச மாட்டார்) என்ற சபதத்தைக் கை விட்டாலும்,
என்னுடைய புண்ய பாபங்களைக் கருதாமல், பெரிய முதலியாரான ஸ்ரீமந்நாதமுனிகளுடன் எனக்கு இருக்கும்
ஞானத்தால் மற்றும் பிறப்பால் இருக்கும் ஸம்பந்தத்தைக் கருத்தில் கொண்டு, என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கேட்க,
எம்பெருமானும் “இந்த வழியில் எந்தக் குறையும் இல்லை; இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று சொல்லி
இந்த வரத்தை ஆளவந்தாருக்கு அளித்தான்.
ஆளவந்தாரும், த்ருப்தியடைந்தவராய், ஸ்தோத்ரத்தை முடிக்கிறார்.

அக்ருத்ரிம த்வச்சரணாரவிந்த
ப்ரேம ப்ரகர்ஷாவதிம் ஆத்மவந்தம் |
பிதாமஹம் நாதமுநிம் விலோக்ய
ப்ரஸீத மத்வ்ருத்தம் அசிந்தயித்வா ||

எம்பெருமானே! என்னுடைய நடத்தையைக் கருதாமல், உன் திருவடிகளில் இயற்கையான அன்பில் சிறந்தவரான,
தன் ஸ்வரூபத்தை உணர்ந்தவரான, என்னுடைய பாட்டனாரான ஸ்ரீமந் நாதமுனிகளைப் பார்த்து என்னை மன்னித்தருள வேண்டும்.

————-——————————————————————-——————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்ரீ
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ லஷ்மி நரஸிம்ஹர் திருக்கோயில் பெலகோலா-

August 28, 2026

ஸ்ரீரங்கப்பட்டணாவிலிருந்து 11 கிமீ தொலைவிலும், மைசூரில் இருந்து 15 கிமீ தொலைவிலும், பெங்களூரிலிருந்து 140 கிமீ தொலைவிலும் உள்ளது. இக்கோயில் சமீபத்தில் கட்டப்பட்டது – சுமார் 15 ஆண்டுகள் பழமையானது.-இவ்விடம் “சிம்ம கிரி” என்றும் அழைக்கப்படுகிறது. பகவான் தனது ஆழ்ந்த தியானத்தில் இருந்தபோது, ​​ஒரு இளம் துறவி, லட்சுமிநரசிம்மரின் அற்புதமான சிலையை, அப்போது மைசூரில் வசித்து வந்த, பகவானின் பக்தியும் கல்வியும் மிக்க பக்தரான திரு. யு. வே. வீரராகவாச்சாரியாரிடம் ஒப்படைத்தார். இவ்வாறு, 2003-ஆம் ஆண்டு மே 9-ஆம் தேதி, ஒரு வெள்ளிக்கிழமையன்று, அனைவரின் வியப்பிற்கும் மத்தியில் பகவான் அந்த பக்தரின் இல்லத்திற்கு வருகை தந்தார். நரசிம்மப் பெருமானின் வருகை, அவரைச் சுற்றியுள்ள செயல்பாடுகளில் ஒரு எழுச்சியை ஏற்படுத்தியதுடன், வேத மற்றும் பாரம்பரியக் கல்விக்கான ஒரு குருகுலத்தை நிறுவுவதற்கும் வழிவகுத்தது.-மாதாந்திர சுவதி நட்சத்திர யாகம் 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. அனைவரின் நலனுக்காகவும் துறவிகளில் ஒருவர் தினமும் செய்யும் நித்ய யாகம், 2005 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டு முதல், லட்சுமி நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு ஆண்டுதோறும் 11 நாட்கள் நடைபெறும் நிகழ்வு குருகுலத்தில் கொண்டாடப்படுகிறது.-இறைவனின் உள்ளுணர்வால் தூண்டப்பட்டு, நீதியுள்ள மற்றும் பக்தியுள்ள தம்பதிகளான ஸ்ரீமான் நடத்தூர் சீனிவாச ராகவன் (என்.எஸ்.ராகவன், இன்ஃபோசிஸின் இணை நிறுவனர்) மற்றும் திருமதி. ஜமுனா ராகவன் ஆகியோர் நிலத்தை வாங்கி கோவிலைக் கட்ட முன்வந்தனர். கோவிலின் பூமி பூஜை 2009 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி நடைபெற்றது. இக்கோவில் முற்றிலும் கருங்கற்களால் கட்டப்பட்ட ஒரு நவீன கால அதிசயமாகும். கோவிலைக் கட்டுவதற்கு எஃகு எதுவும் பயன்படுத்தப்படவில்லை, மேலும் இது பஞ்சராத்திர ஆகம நூல்களுக்கு ஏற்பவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

கர்ப்பகிருகத்தின் முதல் கட்டம், முகமண்டபம், கருட சன்னதி ஆகியவை கட்டி முடிக்கப்பட்டு, 2012 ஜூன் 1 ஆம் தேதி, ஒரு வெள்ளிக்கிழமை அன்று, மங்களகரமான சித்திரை நட்சத்திர நாளில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தற்போது, ​​மகாமண்டபம், பிரகாரம் மற்றும் ராஜகோபுரம் ஆகியவை கட்டுமானத்தில் உள்ளன. சுமார் 6 அடி உயரமுள்ள ஆஞ்சநேய சுவாமி சிலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.உலக அமைதிக்கான ஹோமமான நித்ய யக்ஞம் தினமும் நடத்தப்படுகிறது. உலக நலனுக்கான ஹோமமான சுவாதி யக்ஞம் மாதந்தோறும் நடத்தப்படுகிறது. மேலும், மாதந்தோறும் நடைபெறும் 5 நாள் பிரார்த்தனை நிகழ்ச்சியான மாசோத்சவமும் இந்த வளாகத்தில் நடத்தப்படுகிறது.

இக்கோயிலில் வேதங்களைக் கற்பதற்காக ஒரு கோசாலையும் குருகுலமும் உள்ளன. கோயில் நேரம்: காலை 7 மணி முதல் 12:30 மணி வரை, மாலை 5:30 மணி முதல் 7:30 மணி வரை. தொடர்பு தொலைபேசி எண்கள்: +91-9343 1294 90, +91-9343 1294 93, +91-9343 1294 95

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்- பிரமாண திரட்டுக்கள்–

August 28, 2026

1-ஏஷ சம்ப்ரசாதே அஸ்மா சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதிரூப சம்பாத்திய ஸ்வேன ரூபேணாபி நிஷ்பத்யதே –-சாந்தோ 8-12-2,(இந்த ஜீவன்‌, இந்த ஸாரீரத்திலிருக்து கிளம்பி, பரஞ்சோதியான நாராயணனை அடைந்து, ஸ்வரூப மலர்ச்சி பெறுகிறான்)

2-ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்ஜன பரமம் சாம்யம் உபைதி –-முண்டம்‌ -3-1-3-(பரம புருஷனே ஸாக்ஷாத்கரித்தவுடன்‌ ப்‌ரஹ்ம ஜ்ஞானி யானவன்‌, புண்ய பாபங்களை விட்டு, ப்ரக்ருதி ஸம்பந்த மற்றவனாய்‌, (புருஷோத்தமனுடன்‌) மேலான ஸாம்யத்தை. அடைகிறான்‌)

3-ஸ்தோத்ரம் நாம கிம் ஆம நந்தி கவயோ யத்யந்ய தீயாந் குணாந்
அந் யத்ர த்வஸதோதி ரோப்ய பணிதஸ் சா தர்ஹி வந்த்யா த்வயி
சம்யக் சத்ய குணாபி வர்ண நமதோ ப்ரூயுஸ் கதம் தாத்ருசீ
வாக் வாசஸ்பதி நாபி சக்ய ரஸநா த்வத் ஸத் குண அர்ணோ நிதவ்–ஸ்ரீ ஸ்தவம்-3
-[ஸ்தோத்ரமென்று கவிகள்‌ எதைச்‌ சொல்லுகிறார்கள்‌ ? ஒருவனுடைய குணங்களை அவைகளில்லாதவனான மற்‌ றொருவனிடம்‌ ஏறிட்டுச் சொல்லுவதே (ஸ்தோத்ரம்‌ எனில்‌,–அம்மாதிரியான ஸ்தோத்ரம்‌ உன்னிடம்‌ முடியாது; உள்ள குணங்களை நன்றாக வர்ணிப்பதே (ஸ்தோத்‌ரம்‌) என்று சொல்லுவார்களாகில்‌-—உன்னுடைய கல்‌யாண குணக்கடல்‌ விஷயத்தில்‌ ப்‌ருஹஸ்பதியாலும்‌ அப்ப டிப்பட்ட ஸ்தோத்ரம்‌ செய்ய எப்படி முடியும்‌?])

4-அந் யத்ர அதத் குண யுக்தி பகவதி ந தத் உத்கர்ஷ ஸுவ்ர்யை பரேஷாம்
ஸ்துத் யத்வாத் யாவத் அர்த்தா பணிதி அபி ததா தஸ்ய நிஸ்ஸீமகத்வாத்
ஆம்நாயாநாம் அசீம் நாம் அபி ஹரி விபவே வர்ஷ பிந்தோ இவ அப்தவ்
சம்பந்தாத் ஸ்வாத்ம லாப நது கபளநத ஸ்தோது ஏவம் ந கிம் மே –
–ர ஸ்த்வம் -1-19–[இல்லாத விஷயங்களை ஏறிட்டுச்சொல்லுவது ப,க,வானைத்‌ தவிர மற்றவர்கள்‌ விஷயத்தில்‌; ப,க,வத்‌,விஷயத்திலல்ல; அவனுடைய பெருமைகளைத்‌ திருடி மற்றவர்களைத்‌ துதிக்க வேண்டியிருக்கிறபடியால்‌, உள்ள விஷயங்களைச்‌ சொல்லு வதும்‌ (ப,க,வான்‌ விஷயத்தில்‌) முடியாது; பகவானுடைய பெருமைகள்‌ எல்லையற்றவையாகையாலே )

5-யதோ வாசோ நிவர்த்தந்தே | அப்ராப்ய மநஸா ஸஹ। ஆநந்தம்‌ ப்‌,ரஹ்மணோ வித்‌ வாந்‌। ந பி,பே,தி குதங்சநேதி ॥—தை ஆ -9-1-எந்த ப்ஏஹ்மத்தினிடமிருந்து, மனத்துடன்‌ கூடிய வாக்‌ குக்கள்‌, (அதை) அளவிட்டறியாமல்‌ திரும்புகின்‌றனவோ, அந்தப்‌ பரமாத்மாவின்‌ ஆநந்த,த்தை அறிந்தவன்‌ எதனிட மும்‌ பயப்படமாட்டான்‌-

6-யஸ்யாமதம்‌ தஸ்ய மதம்‌ மதம்‌ யஸ்ய ந வேத, ஸ:। அவிஜ்ஞாதம்‌ விஜாநதாம்‌ விஜ்ஞாதமவிஜாநதாம்‌ ॥ கேந -2-3-[எவனுக்கு ப்‌,ரஹ்மம்‌ (அளவிட்டு) அறியப்படவில்லையோ, அவனுக்கு (அது) அறியப்பட்டதாகிறது. எவனுக்கு (ப்ரஹ்‌ மம்‌) அறியப்பட்டதாகிறதோ, அவன்‌ (அதை) அறிய வில்லை. (அளவிட்டு) அறிந்தவர்களுக்கு அறியப்படாத தாகவும்‌, (அளவிட்டு) அறியாதவர்களுக்கு அறியப்பட்ட தாகவுமிருக்கிறது (ப்‌,ரஹ்மம்‌)

7-பூதார்த்தே கதமா ஸ்துதி -(உண்மையாக உள்ள விஷயத்தில்‌ ஸ்துதி எப்படி முடியும்‌?

8-ந ஸமர்த்தராஸ்‌ ஸுரா: ஸ்தோதும்‌ த்வாமநந்யப வம்‌ விபு,ம்‌ -வி.பி, 5-7-49.[ஸர்வ வ்யாபியும்‌, ஒருவரிடத்திலிருந்தும்‌ உண்டாகாதவனுமான உன்னை ஸ்தோத்ரம்‌ செய்ய தேவர்களும்‌ ஸமர்த்த,ரல்லர்‌.

9-ஸ்தவயஸ் ஸ்தவ ப்ரிய —விஷ்ணு, ஸஹஸ்ர.([ஸ்தோத்ரம்‌ செய்யத்தக்கவன்‌; ஸ்துதியை விரும்புபவன்‌

10-(தர்மார்த்தகாமமோக்ஷாக்யா:புருஷார்த்த உதராஹ்ருதா: இதம்‌ சதுஷ்டயம்‌ யஸ்மாத்‌ தஸ்மாத்‌ 8ம்‌ மிதம்‌ வச: ॥–வி-பு. 1-18.22-.ப்ரஹ்லாத வாக்யம் [தர்மம்‌, அர்த்தம்‌, கர்மம்‌, மோக்ஷ்மென்று புருஷார்த்‌த;ங்கள்‌ சொல்லப்பட்டுள்ளன. இந்த நான்கும்‌ எவனிடத்திலிருந்து அடையப்படுகின்‌ றனவோ, அவனைக் குறித்து“அவனால்‌ என்ன ப்ரயோஜனம்‌?” என்னும்‌ இந்த வார்த்தை ஏன்‌ சொல்லப்படுகிறது)

11-ததஸ்ய த்ரிவித,ஸ்யா$பி து;க்கணாதஸ்ய வை மம। கர்ப்ப ஜந்மஜராத்‌,யேஷ- ஸ்தராநேஷு ப்ரப,விஷ்யத: ॥ நிரஸ்தாதிய யாஹ்லாத; ஸுக,ப ஈவைக லக்ஷணு | பேஷஜம்‌ ப,சு,வத் ப்ராப்திரேகாந்தாத்யந்திகீ மதா—, விபு, 6 -5.58 & 59[கர்ப்ப,ம்‌, பிறப்பு, கிழத்தனம்‌ முதலிய அவஸ்தை,களில்‌ உழலும்‌ என்னுடைய (ஆத்‌,யாத்மிகம்‌, ஆதி,தைவிகம்‌ ஆதி, பெனதிகம்‌ என்னும்‌) மூன்று விதமான து;க்க ஸமூஹத்‌ திற்கு, தனக்கு மேலில்லாத ஆகந்த,ரூபமான ஸுகமா யிருக்கையே லக்ஷ்ணமாக உடையதும்‌, துன்பமற்றதும்‌, முடிவற்றதுமான ப,கவத் ப்ராப்தியே மருந்தாக எண்ணப்‌ படுகிறது.,]

12–116 ஐப் பார்க்கவும்

13-அநந்யசேதாஸ்‌ ஸததம்‌ யோ மாம்‌ ஸ்மரதி நித்யா:। தஸ்யா5ஹம்‌ ஸுலப,: பார்த்த, ! நித்யயுக்தஸ்ய யோ8,ந: ॥! –கீதை. 8-14,-[அர்ஜுனா! வேறொன்றிலும்‌ மனத்தைச்‌ செலுத்தாதவனாக, எவனொருவன்‌ தினந்தோறும்‌ எப்பொழுதும்‌ என்னை நினைக்‌கிறானோ, என்னுடைய நித்ய யோக,த்தில்‌ விருப்பமுள்ள யோகியாகிய அவனுக்கு நான்‌ ஸுலபனாகிறேன்)

14-ப்ரதான ஷேத்ரஜ்ஞபதிர் குணேச –ஸ்வே 6-16.([ப்ரக்ருதிக்கும்‌ ஜீவனுக்கும்‌ ஸ்வாமி; கல்யாண குணங்களை உடையவன்‌.])

15-ஜ்ஞாஜ்ஜௌ தவா வஜா வீஸ நீ சௌ—ஸ்வே 1-9,([(பரமாத்மாவும்‌ ஜீவனும்‌) ஸர்வஜ்ஞனாகவும்‌, அஜ்ஞனாகவுமிருக்கிறார்கள்‌; ஈஸ்வரனாகவும்‌, அநீஸ்வரனாகவும்‌ இருக்‌கிறார்கள்‌)

16-தமீஸ் வராணாம் பரமம் மகேஸ்வரம் –ஸ்வே 6-7.([ஈஸ்வரர்களுக்கும்‌ மேலான மஹேஸ்வரனான அவனை)

17-தாஸோஹம்‌ வாஸுதே,வஸ்ய தேவதேவஸ்ய சார்ங்கிண சங்க, சக்ர கதா பாணேஸ்‌ த்ரைலோக்யஸ்யைக சஷுஷ–புண்டரீகஸம் வாதம்‌; தாரத வாக்யம்‌[தேவதேவனும்‌, ஸார்ங்க,மென்னும்‌ வில்லை யுடையவனும்‌, சங்கம்‌, சக்ரம்‌, கதை; இவைகளைக்‌ கையிலே உடையவனும்‌, மூவுலகிற்கும்‌ ஓர்‌ கண்ணா யிருப்பவனுமான ‘ வாஸு தேவனுக்கு நான்‌ அடிமை.]

18-தாஸபூ,தாஸ்‌ ஸ்வதஸ்‌ ஸர்வே ஹ்யாத்மாந: பரமாத்மந: | –ஹாரீ த ஸ்ம்ருதி; ஈஸ்வர ஸம்ஹிதை . சிவ வாக்யம் [பரமாத்மாவுக்கு, எல்லா ஆத்மாக்களும்‌ இயற்கையாகவே அடிமைப் பட்டவர்களன்றோ

19-தாஸோ5ஹம்‌ கோஸலேந்த்‌,ரஸ்ய ராமஸ்யா$க்லிஷ்டகர்மண: | ஹநுமாந்‌ மத்ருஸைந்யாநாம்‌ நிஹந்தா மாருதாத்மஜ: ॥ -ரா-ஸு 42.35.=[கோஸலதேஸத்துக்கு அதிபதியும்‌, பெருங்காரியங்களையும்‌ எளிதாகச்‌ செய்து முடிப்பவனுமான ராமனுக்கு, ஸத்ரு ஸைன்யங்களை அழிப்பவனும்‌, வாயுவின்‌ புத்ரனும்‌, ஹனுமான்‌ என்னும்‌ பெயரை உடையவனுமான நான்‌ தாஸன்‌)

20-21-யஸ் யாத்மா சரீரம் –ப்‌.ருஹ 5-7-22,(எந்தப் பரமாத்மாவுக்கு ஆத்மா ஸரீரமோ-யஸ்யாக்ஷரம்‌ ஸரீரம்‌ -ஸுபால 7-[எவனுக்கு ஜீவன்‌, ஸரீரமோ)

22-அந்த ப்ரவிஷ்டச் சாஸ்தா ஜ்நாநாம் சர்வாத்மா —யஜு, ஆர 3-11-21.(ஸர்வாந்தர்யாமியான புருஷோத்தமன்‌ ஜனங்களை உள்‌ நுழைந்தவனாய்‌ நியமிக்கிறான்)

23-(பூ: ப்ராணிநஸ்‌ ஸர்வ ஏவ கு,ஹாஸயஸ்ய அஹந்யமாநஸ்ய விகல்மஷஸ்ய–ஆபஸ்தம்ப ஸூத்ரம்‌ 22.1[எல்லாப்‌ பிராணிகளும்‌, ஹ்ருதய குஹையில்‌ ஸயனித்‌திருப்பவனும்‌, அழியாதவனும்‌, தோஷமற்றவனுமான பரமாத்மாவுக்கு இருப்பிடம்‌)

24-யாநி மூர்த்தாந்யமூர்த்தாநி யாந்யத்ராந்யத்ர வா க்வூத்‌। ஸந்தி வை வஸ்துஜாதாநி தாநி ஸர்வாணி தத்‌,வபு: || விபு, 1-22-86-[உருவமுள்ளவையாயும்‌, உருவமற்றவையாயும்‌, இங்கும்‌ எங்கும்‌ ஒரு சமயத்திலிருக்கும்‌ வஸ்‌து ஸமூஹங்களெல்லாம்‌அந்தப்‌ பரமாத்மாவுக்கு ஸரீரம்‌.)என்றும் –

25-யேந யேந ததா கச்ச,தி தேந தேந ஸஹ கச்சதி। தத்‌ யத; தருணவத்ஸா வத்ஸம்‌ வத்ஸோ வா மாதரம்‌ சராயா வா ஸத்வமநுக,ச்சே,த்‌ ததா ப்ரகாரம்‌ ॥ –, பரம ஸம்ஹிதை-[இளங் கன்றையுடைய பசு கன்றையும்‌, கன்று பசுவைவும்‌ (அல்லது குழந்தை தாயையும்‌), நிழல்‌ பிராணியையும்‌ எப்படிப்‌ பின் தொடர்கின்றனவோ அப்படியே எப்படி எப்படிப்‌ பரம புருஷன்‌ செல்லுகிறானோ, அப்படி அப்‌படியே: (முக்தனும்‌) கூடப்போகிறான்‌)

26-சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா விபச்சிதா –தை-ஆ 1-2,-(முக்தன்‌ எல்லாக்‌ கல்யாண குணங்களையும்‌, ஸர்வஜ்ஞனான ப்‌ரஹ்மத்துடன்‌ கூட அனுப,விக்கிறான்‌

27-காமயே வைஷ்ணவத்வம் து சர்வ ஜன்ம ஸூ கேவலம் (ஜிதந்தே (1-13).

28-ப,வாம்ஸ்து ஸஹ வைதே,ஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே ॥ அஹம்‌ ஸர்வம்‌ கரிஷ்யாமி ஜாக்‌ரதஸ்‌ ஸ்வபதஸ்ச தே –ரா-அ 31-25, லக்ஷ்மண வாக்யம் [நீர்‌ வைதேஹியுடன்‌ கூட மலைத் தாழ்வரைகளில்‌ விளையாடுவீர்‌; அடியேன்‌ நீர்‌ விழித்துக் கொண்டிருக்கும் போதும்‌, தூங்கும் போதும்‌ உமக்கு எல்லா அடிமைகளையும்‌ செய்‌வேன்‌.]

29-விஜ்ஞாந ஸாரதிர்‌ யஸ்து மந: ப்ரக்‌ரஹவாந்‌ நர: | ஸோத்‌வந: பாரமாப்நோதி தத்‌, விஷ்ணோ: பரமம்‌ பதம்‌ ॥ -கடட 1-3-9.-[எவனொருவன்‌ நல்ல ஞானத்தை ஸாரதியாகவும்‌, மனத்‌தைக்‌ கடிவாளமாகவும்‌ கொண்டிருக்கிறானோ, அவன்‌ ஸம்‌ஸாரத்திற்கு அக்கரையான விஷ்ணுவினுடைய பரம பதத்தை அடைகிறான்‌)

30-நிஸ்தரந்தி மநீஷிண–ஜிதந்தே (1-4).

31-ந ஹி மே ஜீவிதேநார்த்தேோ நைவார்த்தைர்‌ ந ச பூஷணை: | வஸந்த்யா ராக்ஷஷீ மத்‌,யே விநா ராமம்‌ மஹாரத,ம்‌ ॥ –ரா ஸு 26-5– ஸீதாவாக்ய[மஹா ரதனான ராமனை விட்டு ராக்ஷ்ஸிகள்‌ நடுவில்‌ வசிக்‌கும்‌ எனக்கு உயிரினால்‌ ப்ரயோஜனமில்லை; பொருள்களினால்‌ ப்ரயோஜனமில்லை; ஆபரணங்களால்‌ ப்ரயோஜன மில்லை)

32-ப்ரஹ்ம விதாப் நோதி பரம் –தை.ஆ 1,-([ப்‌ ரஹ்மத்தை அறிபவன்‌ (தியானிப்பவன்‌)மேலான பலனை (ப்ரஹ்மத்தை) அடைகிறான்‌)

33-ஆத்மாவா அரே த்ரஷ்டவ்யஸ் ஸ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாசிதவ்ய ––ப்ருஹ 6-5-6.([கேட்கத்தக்கதும்‌, நினைக்கத்தக்கதுமான ஆத்மா தியானிக்‌கத்தக்கது; பார்க்கத்தக்கது.])

34-நாயமாத்மா ப்ரவச நேன லப்யோ ந மேதயா ந பஹூ நா ஸருநேன
யமேவைஷ வ்ருணுதே தேன லப்யஸ் தச்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்
—கட, 1-2-23.(இந்தப்‌ பரமாத்மா (பக்தியற்றற ஸ்ரவணத்தினாலும்‌, மனனத்தினாலும்‌, தியானத்தினாலும்‌ அடையத்தக்க வனல்லன்‌. எவனை இப்பரமபுருஷன்‌ வரிக்கிறனோ, அவனாலேயே அடையத்தக்கவன்‌; அவனுக்கு இந்தப்‌ பரமாத்மா தன்னுடைய திவ்ய மங்க,ள விக்ரஹத்தை (ஸ்வரூபத்தை) காட்டுகிறான்‌)

35-பித்யதே ஹ்ருத யக் ரந்திஸ் சித் யந்தே சர்வ சம்சயா
ஷீ யந்தே சாஸ்ய கர்மாணி தஸ்மின் த்ருஷ்டே பராவரே –
முண்ட; 2-9.9,-(மேலானவர்களிலும்‌ மேலானவனான அந்தப்‌ பரமாத்மா பார்க்கப்பட்டவுடன்‌, இவனுடைய (ராகம்‌, த,வேஷம்‌ முதலிய) ஹ்ருதய க்ரந்தி,கள்‌ பிளக்கின்றன; எல்லா ஸம்மயங்களும்‌ சிதறுகின்‌றன; கர்மங்களும்‌ அழிகின்‌றன)

36-பக்த்யா த்வ நன்யா சக்ய அஹம் ஏவம் விதோ அர்ஜுன
ஜ்ஞாதும் த்ரஷ்டும் ச தத்வேன ப்ரவேஷ்டும் ச பரந்தப
-(அர்ஜுனா! எதிரிகளை அழிப்பவனே! ஒரு பலனை எதிர்பாராத பக்தியினாலேயே இம் மாதிரியான நான்‌, உண்மையாக அறிவதற்கும்‌, பார்ப்பதற்கும்‌, நுழைவதற்கும்‌ தக்கவன்‌)ஸ்ரீ கீதை -11-54-

37-சமஸ் சர்வேஷூ பூதேஷு மத் பக்திம் லபதே பராம் -(ஸர்வ ப்ராணிகளிடமும்‌ (பற்றற்றிருக்கும்‌ விஷயத்தில்‌) ஸமமாயிருப்பவன்‌ என்னிடம்‌ மேலான பக்தியை அடை கிறான்‌)ஸ்ரீ கீதை -18-54-

38-யோ ப்‌,ரஹ்மாணம்‌ வித,த,ாதி பூர்வம்‌ யோவை வேதாம்ஸ்ச ப்ரஹிணோதி தஸ்மை | தம்‌ ஹ தேவமாத்மபு,த்‌,தி,ப்ரஸாத,ம்‌ முமுஷூர் வை ஸரணமஹம்‌ ப்ரபத்‌,யே ॥| -ஸ்வே 6-18.[எவன்‌ பிரமனை முன்‌ படைத்தானோ, எவன்‌ வேத,ங்களை யும்‌ அவனுக்கு உபதேஹித்தானோ, அப்படிப்பட்ட தேவனும்‌, தன்‌ விஷயமான ஞானத்தை ப்ரகாசிப்பிப்பவனுமான பரமபுருஷனே, மோக்ஷமடைய விரும்பும்‌ நான்‌ ஸரண மடைகிறேன்‌.])

39–ந்யாச மாஹூர் மநீஷிணோ ப்ரஹ்மாணம்—தை-நர-49,-(பெரியோர்கள்‌ பரமாத்மாவை ந்யாஸமென்று சொல்லு கிருர்கள்‌)

40-ந்யாச இதி ப்ரஹ்மா -தை-நர-49,-(ந்யாஸமென்பது ப்‌,ரஹ்மம்‌)

41-தஸ்மான் ந்யாச மேஷாம் தபஸா மதிரிக்த மாஹூ—தை*நாஃ50,-(ஆகையால்‌ ந்யாஸத்தை (ஸரணாக,தியை) இந்தத்‌ தபஸ்‌ ஸுக்களுள்‌ மேலானதாகச்‌ சொல்லுகிறார்கள்‌

42-தேவா வை யஜ்ஞாத்‌ ருத்ரமந்தராயந்‌ | ஸ ஆதித்யா நந்வாக்ரமத | தே த்‌,விதைவத்யாந்‌ ப்ராபத்‌,யந்த | தாந்‌ ந ப்ரதிப்ராயச்ச,ந்‌। தஸ்மாத;பி வத்யம்‌ ப்ரபந்நம்‌ ந ப்ரதிப்ரயச்ச,ந்தி ||[தேவர்கள்‌ யஜ்ஞத்தில்‌ ருத்ரனுக்கு ஹவிர்ப்பாகம்‌ கொடுக்க மறுத்தார்கள்‌; ருத்ரன்‌ தேவர்களைக்‌ கொல்லத்‌ தொடங்கினான்‌; அவர்கள்‌ அஸ்விநீ தேவதைகளை ஸரணம்‌ புகுந்தார்கள்‌; அஸ்விநீ தேவர்கள்‌ அவர்களைக்‌ காட்டிக்‌ கொடுக்கவில்லை; ஆகையால்‌ ஸரணமடைந்தவன்‌ கொல்லத்‌ தகுந்தவனாயிருந்தாலும்‌ அவனைக்‌ காட்டிக் கொடுப்பதில்லை)தேவா வை த்வஷ்டாரமஜிகாம்ஸந்‌ ! ஸ பத்நீ: ப்ராபத்யத। தம்‌ ந ப்ரதி ப்ராயச்ச,ந்‌। தஸ்மாதபி வத்யம்‌ ப்ரபந்நம்‌ ந ப்ரதப்ரயச்ச,ந்தி || –யஜுஃகாண்டம்‌ 6-5–[தேவர்கள்‌ (ஹவிர்ப் பாகம்‌ கேட்ட) த்வஷ்டாவைக்‌ கொல்ல விரும்பினார்கள்‌; அவன்‌ தேவ பத்னிகளை ஸரண மடைந்தான்‌; அவர்கள்‌ அவனைக்‌ காட்டிக் கொடுக்க வில்லை; ஆகையால்‌ ஸரணமடைந்தவன்‌ கொல்லத் தகுந்தவனாயினும்‌ அவனைக்‌ காட்டிக் கொடுப்பதில்லை –

43-(ஸ ப்ராதும்‌ சரணென காட்‌ நிபீட்‌ய ரகு,நந்த;ந:। ஸீதாமுவாசாதியமா ராக,வஞ்ச மஹா வ்ரதம்‌ ॥ ரா-அ 31-2,-[ரகு,குலத்தை உகப்பிப்பவனும்‌, மிகுந்த கீர்த்தியை உடைய வனுமான அந்த லக்ஷ்மணன்‌, தமையனின்‌ திருவடிகளை நன்றாகப்‌ பிடித்துக் கொண்டு ஸீதையையும்‌, (ஆஸ்ரித ஸம்‌ ரக்ஷணமான) பெரிய விரதத்தை யுடைய ராகவனையும்‌ பார்த்துச்‌ சொன்னான்‌.)

44-ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே |அபயம்‌ ஸர்வபூ,தேப்‌,யோ ததாம் யேதத்‌, வ்ரதம்‌ மம।| -யு 18-33.[ஒரு தடவை ஸரணமடைந்தவன்‌ பொருட்டும்‌, “உனக்கு அடியேனாகிறேன்‌” என்று பிரார்த்திப்பவன்‌ பொருட்டும்‌, எல்லா ப்ராணிகளிடத்தினின்றும்‌ அபயமளிக்கிறேன்‌. இது எனக்கு விரதம்‌.])

45-ஸோ$ஹம்‌ த்வாம்‌ ஸரணமபாரமப்ரமேயம்‌ ஸம்ப்ராப்த: பரமபதஹ்‌ யதோ ந கிஞ்சித்‌ –வி பு 5-23-47,[எவனைக்‌ காட்டிலும்‌ மேலான ப்ராப்ய மில்லையோ அப்படிப்‌ பட்டவனும்‌, எல்லை யற்றவனும்‌, அளவிட முடியாதவனுமான உன்னை, இப்படிப்பட்ட நான்‌ ஸரணமடைந்தேன்‌

46-தேவர்ஷி பூ,தாப்தந்ருணாம்‌ பித்ரூணாம்‌ ந கிங்கரோ நாயம்‌ ருணீ ச ராஜந்‌। ஸர்வாத்மநா யமஸ் ஸரணம்‌ ஸரண்யம்‌ நாராயணம்‌ லோக கு,ரும்‌ ப்ரபந்ந: ॥1 –பாகவதம்‌ 11-5-41.[அரசனே! எவனொருவன்‌, ஸரணமடையத்‌ தகுந்தவனும்‌, லோக கு,ருவுமான நாராயணனை எல்லா வித,த்திலும்‌ ஸ்ரண மடைந்தானோ, அவன்‌ தேவர்களுக்கும்‌, ரிஷிகளுக்கும்‌, பூதங்களுக்கும்‌, பந்துக்களுக்கும்‌, பித்ருக்களுக்கும்‌ அடிமை யல்லன்‌; கடன் பட்டவனுமல்லன்‌

47-மாமேவ யே ப்ரபத்‌,யந்தே மாயாமேதாம்‌ தரந்தி தே -7-14-[எவர்கள்‌ என்னையே ஸரணமடைகிறார்களோ அவர்கள்‌ இந்த ப்ரக்ருதியைத்‌ தாண்டுகிறார்கள்‌

48-தமேவ மாரணம்‌ கச்சு, ஸர்வ பாவேந பாரத -18-62-[பரத குலத்துதித்தவனே | எல்லா விதத்திலும்‌ அந்த பகவானையே ஸ்ரணமடை

49-ஸர்வதர்மாந்‌ பரித்யஜ்ம மாமேகம்‌ ரணம்‌ வ்ரஜ | அஹம்‌ த்வா ஸர்வபாபேப்‌,யோ மோக்ஷமிஷ்யாமி மா ஸூ௪:॥ [–18-66-(பலஸாதனமான) எல்லா தர்மங்களையும்‌, வாஸனையுடன்‌ விட்டு, என்னை ஒருவனையே உபாயமாக அடை; நான்‌ உன்னை எல்லாப்‌ பாபங்களினின்றும்‌ விடுவிக்கிறேன்‌; துக்கிக்காதே)

50-தாவதார்த்திஸ்‌ தத; வாஞ்சா தாவந் மோஹஸ்‌ ததா அஸூகம்‌ ! யாவந்ந யாதி ஸரணம்‌ த்வாமஸேஷாக,நாஸநம்‌ i –வி.பு 1.9-73-[எல்லாப்‌ பாபங்களையும்‌ போக்கடிக்கும்‌ உன்னை எதுவரையில்‌ ஸரணமடையவில்லையோ, அதுவரையிலேயே (செல்வத்தை இழந்ததினாலேற்படும்‌) வருத்தம்‌; அதுவரையிலேயே (செல்வம்‌ வேண்டுமென்னும்‌) ஆசை; அதுவரை யிலேயே (ஆத்ம ப்ராப்தியின்‌மையினாலேற்படும்‌) மோஹம்‌; அதுவரையிலேயே (பகவானை அடையாததினாலேற்படும்‌) துன்பம்‌. (ஆர்த்தன்‌, அர்த்தரர்த்தி,த கைவல்ய நிஷ்டன்‌ , பகவத் ப்ராப்தி காமன்‌ என்னும்‌ நான்கு விதமான அதிகாரிகளுக்கும்‌ ப்ரபத்தியே பல ஸாதனம்‌ என்று தாத்பர்யம்

51-கர்ணே ஸ்ப்ருஷ்டே கடிம்‌ சாலயதி[காதைத்‌ தொட்டால்‌ இடுப்பை” ௮சைக்கிறான்)

52-ஆசார்ய தேவோ பவ –-தை-சீஷா-11(ஆசார்யனை தெய்வமாக உடையவனாக ஆவாயாக)

53-நம ருஷிப்யோ மந்திர க்ருத்ப்ய –-யஜு-ஆர. ப்ர-4.=(மந்த்ரத்தை ஸாக்ஷாத்கரித்த ரிஷிகளுக்கு நமஸ்காரம்)

54-ச ஹி வித்யா தஸ்தம் ஜநயதி தச் ஸ்ரேஷ்டம் ஜன்ம –ஆப-ஸு- 1-1-6,-(ஆசாரியனன்றோ வித்‌யையினால்‌ சிஷ்யனைப்‌ பிறப்பிக்‌கிறான்‌; அது மேலான ஜன்மம்‌)

55-மந்த்ரே தத்‌தேவதாயாஞ்ச தத மந்த்ரப்ரதே, கு;ரெள। த்ரிஷு ப,க்திஸ்‌ ஸத்‌ கார்யா ஸா ஹி ப்ரதம ஸாத,நம்‌ ॥ –விஷ்ணு தத்வம்‌ [மந்திரம்‌, அதில்‌ சொல்லப்படும்‌ தேவதை, மந்த்ரோபஸதேம்‌ செய்த ஆசாரியன்‌ இம் மூவரிடத்திலும்‌ எப்‌போதும்‌ பக்தி செய்யவேண்டும்‌ ; அதுவன்றோ (பல ஸித்தி,க்கு) முதல்‌ உபாயம்‌.)

56-அபிவந்த்ய குளுநாதென்‌ ஙிஷ்யதயத்‌மிநீரவீந்‌ [சிஷ்யர்களுடைய புத்தியாகிய தாமரைக்கு ஸூர்யன்‌ போன்‌றவர்களான ஆசாரியர்களை முதலில்‌ நமஸ்கரித்து)இது மீமாம்ச காரிகை

57-யதா கருந்‌ க.நித்ரேண நரோ வார்யதி,க,ச்ச,தி | ததர குருக;தாம்‌ வித்‌,யாம்‌ மாம்ரூஷாரதி கச்ச; தி ॥ மனு 2-218.[மனிதன்‌ எப்படி மண்வெட்டியால்‌ (பூமியை) வெட்டித்‌ தண்ணீரை அடைகிறானோ, அப்படியே கு,ருவிடமிருக்கும்‌ வித்யையை குருஸேவை செய்பவன்‌ அடைகிறான்

58-நமோ பகவதே தஸ்மை வ்யாஸாயாமிததேஜஸே | யஸ்ய ப்ரஸாத;த்‌ வக்ஷ்யாமி நாராயணகதரமிமாம்‌ || –பார-ஆதி, 1-27.[எவருடைய அருளினால்‌ இந்த நாராயண கதையைச்‌ சொல்லுகிறேனோ, அளவற்ற தேஜஸ்ஸை யுடைய அந்த பகவான்‌ வியாஸருக்கு நமஸ்காரம்‌)-

59-லெளகிகம்‌ வைதிகம்‌ வா அபி ததாத்‌,யாத்மிகமேவ ச 1 ஆததீத யதோ ஜ்ஞாநம்‌ தம்‌ பூர்வமபி,வாதயேத்‌ || –மனு 2-117,-(உலக விஷயங்களைப் பற்றியாவது, வேதத்தைப் பற்றியாவது, ப்‌ரஹ்ம விஷயமாகவாவது எவரிடமிரு்நு ஞானத்‌தை அடைந்தானோ, அவரை முதலில்‌ நமஸ்கரிக்க வேண்டும்)-

60-ப்ரதமமபி குரும் நாத மீடே –-ஸஹஸ்ரநாம பாஷ்யம்-(முதல்‌ குருவான நாதமுனியையும்‌ துதிக்கிறேன்)

61-அஹம் அபி ந மம பகவத ஏவ அஹம் அஸ்மீத் ஏவம் அமமதாம் யோஜயத்யதோ நம இதி -(நான்‌ எனக்குமுரியேனல்லேன்‌; ப,கவானுக்கு அடியேனா கிறேன்‌’” என்று இம்மாதிரியாக மமகார மில்லாமையைத்‌ தருவதால்‌ நம: எனப்படுகிறது)

62-ஓம் நமோ விஷ்ணவே (ஷடத் அக்ஷரீ )

63-முக்தாநாம்‌ லக்ஷணம்‌ ஹ்யேதத்‌ யச்ச்‌,வேதத்‌,வீபவாஹிநாம்‌। நித்யாஞ்ஜலிபுடா ஹ்ருஷ்டா நம இத்யேவ வாதி,ந: ॥ –பார-சாந்தி 344-45-[ஸ்வேதத்‌,வீபவாஸிகளுக்கு எது லக்ஷ்ணமோ, அதுவே முக்தர்களுக்கும்‌ லக்ஷணமாகும்‌; அதாவது: எப்போதும்‌ அஞ்ஜலி செய்து கொண்டிருப்பார்கள்‌ ; (அதனால்‌) ஆநந்திப்பார்கள்‌; வாயால்‌ *நம:” என்றே சொல்லும்‌ தன்மை யுடையவர்களா யிருப்பார்)

64-தஸ்ய யஜ்ஞ வராஹஸ்ய விஷ்ணோரமித தேஜஸ: |ப்ரணாமம்‌ யே$பி குர்வந்தி தேஷாமபி நமோ நம:॥ –விஷ்ணுதர்மம்‌-90; யமவசனம் [யஜ்ஞ வராஹராகியவரும்‌, அளவற்ற தேஜஸ்ஸை உடைய வருமான அந்த விஷ்ணுவுக்கு எவர்கள்‌ ஒரு நமஸ்காரம்‌ செய்கிறார்களோ, அவர்களுக்குப்‌ பலகால்‌ நமஸ்காரம்‌

65-தேஷாம்‌ ஸததயுக்தாநாம்‌ ப,ஜதாம்‌ ப்ரீதிபூர்வகம்‌ | ததாமி புத்‌தி,யோகம்‌ தம்‌ யேந மாமுபயாந்தி தே॥| -கீதை 10-10.[என்னிடத்தில்‌ எப்போதும்‌ சேர்ந்திருப்பதை விரும்புபவர்‌களும்‌, என்னை ப.ஜிப்பவர்களுமான அவர்களுக்கு, என்னை அடைவதற்கு ஸாதனமான அந்த புத்தி யோகத்தை அன்புடன்‌ ௮ளிக்கிறேன்‌)

66-ஸம்ஜ்ஞாயதே யேந ததஸ்த தோஷம்‌ ஸூத்தம்‌ பரம்‌ நிர்மலமேகரூபம்‌ | ஸந்த்‌,ருஸ்யதே வாப்யதி,கம்யதே வா தத்‌ ஜ்ஞாநமஜ்ஞாநமதோந்யது,க்தம்‌ ॥| -விஷ்ணு பு. 6 -5-87.[எந்த அறிவினால்‌, தோஷமற்றதும்‌, ஸூத்‌தமானதும்‌, மிகவும்‌ மலமற்றதும்‌, ஒப்புயர்வற்றதுமான அந்தப்‌ பரவஸ்து அறியப்படுகிறதோ, பார்க்கப்படுகிறதோ, அடையப்படுகிறதோ, அதுவே ஜ்ஞானம்‌; அதைக் காட்டிலும்‌ வேறானது அஜ்ஞானம்‌)

67-தத்‌ கர்ம யந்ந பூந்தாய ஸா வித்யா யா விமுக்தயே | ஆயாஸாயாபரம்‌ கர்ம வித்‌,யாந்யா ஸில்பநைபுணம்‌ || –வி.பு 1-19-41,-[எந்தக்‌ கர்மம்‌ பந்தத்திற்குக்‌ காரணமல்லவோ அதுவே கர்மம்‌; எது முக்திக்குக்‌ காரணமோ அதுவே வித்யை, மற்ற கர்மம்‌ ஸ்ரமத்திற்கே. மற்ற வித்‌,யை செருப்புக்குத்தக்‌ கற்றது போன்றது.)

68-(பிதரம்‌ மாதரம்‌ தாராந்‌ புத்ராந்‌ பந்தூந்‌ ஸகீந்‌ குரூந்‌। ரத்நாநி தந தாந்யாநி க்ஷேத்ராணி ச க்‌,ருஹாணி ச ॥ ஸர்வத,ர்மாம்ஸ்ச ஸந்த்யஜ்ய ஸர்வ காமாம்ஸ் ச ஸாக்ஷராந்‌ | லோக விக்ராந்த சரணெள ஸரணம்‌ தே$வ்ரஜம்‌ விபோ ॥–விஹகேஹ்வர ஸம்ஹிதை [பூத;வானே ! தந்தையையும்‌, தாயையும்‌, மனைவியையும்‌, பிள்ளைகளையும்‌, உறவினரையும்‌, நண்பர்களையும்‌, ஆசாரியர்களையும்‌, ரத்னங்களையும்‌, தனதான்யங்களையும்‌, வயல்‌ களையும்‌, வீடுகளையும்‌, எல்லா உபாயங்களையும்‌, கைவல்ய முள்ளிட்ட எல்லா ஆசைகளையும்‌, வாஸனையுடன்‌ விட்டு, திருவுலகளந்தருளின உன்‌ திருவடிகளை ஸரணமடை கிறேன்‌.]

69-ஏநம்‌ ஸர்வம்‌ தத;பி,ஸமேதி யத்கஞ்சித்‌ ப்ரஜாஸ்‌ ஸாது, குர்வந்தி யஸ்தத்‌ வேத, யத்ஸ வேத, ஸ மயை தது,க்த இதி –சாந்தோக்யம்‌ 4-1-4-[மனிதர்கள்‌ எந்தெந்த நல்ல காரியங்கள்‌ செய்கிறார்களோ, அவை யெல்லாம்‌ ரைக்வரிடம்‌ பொருந்தி யிருக்கின்‌ றன. எதை அவர்‌ (ரைக்வர்‌) அறிந்திருக்கிறரோ அதையே எவனும்‌ அறிகிறான்‌. அப்படிப்பட்ட ரைக்வர்‌ என்னால்‌ இபபோது சொல்லப்பட்டார்‌)

70-யத் கிஞ்சித் சாத்வ நுஷ்டிதம் கர்ம யச்ச சர்வ சேதன கதம் விஜ்ஞானம் ததுபயம் யதி யஜ்ஞான கர்மாந்தர்கதம் ச ரைக்வ -இதி –-ஸ்ரீபாஷ்யம்‌ 1-3-33-([உலகத்தில்‌ அனுஷ்டி,க்கப்படும்‌ எந்த நற்கருமமும்‌, எல்லாச்‌ சேதனர்களுடைய அறிவுமாகிய இவ்விரண்டும்‌ எவருடைய ஜ்ஞானத்திலும்‌, கர்மத்திலும்‌ அடங்கியிருக்கின்‌ றனவோ அவரே ரைக்வர்‌ என்று (ஹம்ஸம்) சொல்லிற்று)

71-(ஸ த்வாஸக்தமதி: க்ருஷ்ணே தஸ்யமாநோ மஹோரகை;:। ந விவேதராத்மநோ காத்ரம்‌ தத் ஸ்ம்ருத்யஹலாத,ஸுஸ்தி,த: ॥ -வி பு 1-17-99.[மஹா நாகங்களினால்‌ கடிக்கப்படுபவனும்‌, க்ருஷ்ணனிடத்‌ தில்‌ புததியைச்‌ செலுத்தினவனுமான அந்த ப்ரஹ்லாதன்‌, பகவானை நினைக்கையினாலுண்டான ஆனந்தத்தி னால்‌ நிலை நின்‌றவனாய்‌, தன்னுடைய ‘உடம்பை அறிய வில்லை)

72-பஸ்யந்நபி ந த்ருஷ்ட்வான் -([பார்த்துக்கொண்டிருந்த போதும்‌ பார்க்க வில்லை)என்கிறபடியே-தேய வஸ்துவை சர்வதா சாஷாத் கரிக்கை

73-ஸ்நேஹபூர்வமநுத்‌,யாநம்‌ ப,க்திரித்யபி,த,யதே | பூஜ இத்யேஷ தாதுர்வை ஸேவாயாம்‌ பரிகீர்த்தித: ॥ தஸ்மாத்‌ ஸேவா புதை; ப்ரோக்தா ப,க்கி ஸப்‌,தே.ந பூயஷீ ॥ –லைங்க;புராணம்‌ உத்தர பாகம்‌.[ஸ்நேஹத்தை முன்னிட்ட தியானம்‌ பக்தியெனப்படுகிறது. ‘ப.ஜ’ என்கிற தாது (ஸேவை! என்னும்‌ அர்த்தத்தில்‌ சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையால்‌ மேலான ஸேவையே பெரியோர்களால்‌ பத்தி ஸப்‌,த,த்தினால்‌ சொல்‌லப்படுகிறது.])

74-ஸ்வாமிநி தாசச்ய சிநேக மயீ ஸ்திதி -([ஸ்வாமியிடத்தில்‌ தாஸனுடைய ஸ்நேஹம்‌ நிறைந்திறாக்‌ கும்‌ நிலைமை.])

75-வாஸூ தேவோ அஸி பூர்ண – (ஆறு குணங்களாலும்‌ பூர்ணனான வாஸுதேவனாயிருக்‌ கிறாய்‌)என்று ஷாட் குணிய பூர்ணனாய் இறே இருப்பது-

76-நமஸ் தஸ்மை நமஸ் தஸ்மை நமஸ் தஸ்மை மஹாத்மநே—விஃபு 1-19.79. ப்ரஹ்லாத வாக்ய-என்றும் ([மஹாத்மாவான அவனுக்கு நமஸ்காரம்‌; அவனுக்கு நமஸ்‌ காரம்‌; அவனுக்கு நமஸ்காரம்‌)

77-நமோ நமஸ்தேஸ்து ஸஹஸ்ர க்ருத்வ:புநஸ்ச பூூயோபி நமோ நமஸ்தே |நம: புரஸ்தாத;த, ப்ருஷ்ட்டதஸ்தே நமோஸ்து தே ஸர்வத ஏவ ஸர்வ॥ கீதை 11.99,[உனக்கு ஆயிரந்தடவை நமஸ்காரம்‌; மறுபடியும்‌ மறுபடியும்‌ உனக்கு நமஸ்காரம்‌; எல்லாமாயிருப்பவனே! உனக்கு முன்னும்‌ பின்னும்‌ நமஸ்காரம்‌; உனக்கு எல்லாவிடத்திலும்‌ நமஸ்காரம்‌.]

78-அஹமஸ்யாவரோ ப்‌,ராதா குணைர்‌ தாஸ்யமுபாக,த: –ரா-கி 4-12, லக்ஷ்மண வாக்யம் [நான்‌ இவருடைய நினைவினால்‌ (இவருக்குத்‌) தம்பி; (உண்மையில்‌) இவருடைய குணங்களால்‌ (இவருக்கு) அடிமைப்‌ பட்டவன்‌.]

79-ஜன்ம கர்ம ஸ மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்த்வத த்யக்த்வா தேகம் புநர் ஜன்ம நைதி மாமேதி ஸோ அர்ஜுன -ஸ்ரீ கீதை -4-9-([அர்ஜுனா! என்னுடைய அப்ராக்ருதமான பிறப்பையும்‌, சேஷ்டிதங்களையும்‌ எவன்‌ இப்படி உண்மையாக அறிகிறானோ, அவன்‌ தேஹத்தை விட்டு மறு ஜன்மம்‌ அடையான்‌; என்னை அடைகிறான்‌)

80-அஜாயமாநோ ப,ஹாதா விஜாயதே | தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநி –புருஷஸூக்தம்‌ உத்தரானு -[பிறப்பற்றவனா யிருந்தும்‌ பலபடியாகப்‌ பிறக்கிறான்‌ (பரம புருஷன்‌). அவனுடைய அவதாரத்தை தீரர்களே (அறிவில்‌ மிக்கோரே) நன்கு அறிகிறார்கள்)

81-அஹத்வா ராவணம்‌ ஸங்க்‌,யே ஸ புத்ர பல பாந்த,வம்‌ | அயோத்‌,யாம்‌ ந ப்ரவேக்ஷ்யாமி த்ரிபி,ஸ்தைர்‌ ப்‌,ராத்ருபிஸ் ஸயே || -ராயு 19-21,-[பிள்ளைகளுடனும்‌, ஸேனையுடனும்‌, பந்துக்களுடனும்‌ கூடிய ராவணனைச்‌ சண்டையில்‌ கொல்லாமல்‌ அயோத்‌தியில்‌ ப்ரவேசிக்கமாட்டேன்‌. மூன்று தம்பிகளின்‌ மீதும்‌ ஆணையிடுகிறேன்)

82-யத் விநா பரதம் த்வாஞ்ச சத்ருக் நஞ்சாபி மாந்த பவேன் மம ஸூகம் கிஞ்சித் பஸ்மாசாத் குருதாம் சிகி -ரா-அ 97.8,=([பெருமையைத்‌ தருபவனே! பரதனையும்‌, உன்னையும்‌, ஸத்ருக்னனை யுமில்லாமல்‌ ஏதாவது எனக்கு ஸுக,முண்‌ டாகுமானால்‌, அதை அக்னி சாம்பலாக்கட்டும்‌ என்று அருளிச் செய்தான் இறே சக்கரவர்த்தி திருமகன்

83-அப்யஹம்‌ ஜீவிதம்‌ ஜஹ்யாம்‌ த்வாம்‌ வா ஷீதே ஸ லக்ஷ்மணம்‌ | ந து ப்ரதிஜ்ஞாம்‌ ஸம்ஸ்ருத்ய ப்‌,ராஹ்மணேப்‌,யோ விஸேஷத: || -ரா.ஆ 10-19.-[நான்‌ உயிரையும்‌, லக்ஷ்மணனோடு கூட உன்னையும்‌ விடுவேனே யொழிய செய்த ப்ரதிஜ்ஞையை விட மாட்டேன்‌) அதிலும்‌, விஸேஷமாக ப்‌,ராஹ்மணர்களுக்குக்‌ கொடுதத ப்ரதிஜ்ஞையை விடேன்‌])

84-(ப,ரதஸ்ய வச: குர்வந்‌ யாசமாநஸ்ய ராக,வ। ஆத்மாநம்‌ நாதிவர்த்தேதா: ஸத்ய த,ர்ம பராக்ரம ॥ ரா-அ 111-7. வஸிஷ்ட வாக்ய[ராக,வனே | ஸத்யமான தர்மத்தையும்‌, பராக்ரமத்தையும்‌ உடையவனே ! யாசிக்கும்‌ பரதனுடைய வார்த்தையைச் செய்வதன்‌ மூலம்‌, உன்னுடைய ஸ்வரூபத்தை (ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை) மீறாமலிருப்பாயாக)

85- 209-ஐ பார்க்கவும்

86-(அவிஸ்தரமஸந்தி,க்‌,த,மவிலம்பி,தமத்‌,ருதம்‌ | உரஸ்ஸ்தஹ்‌ கண்டஆஹ்‌ வாக்யம்‌ வர்த்ததே மத்யமே ஸ்வரே ॥ [–ராகி 3-31-( இந்த ஹனுமானுடைய ) மார்பிலிருந்தும்‌, தொண்டை யிலிருந்தும்‌ வரும்‌ வாக்யம்‌ மத்‌,யம ஸ்வரத்திலும்‌, விஸ்தார மின்றியும்‌, ஸந்தேஹமின்‌ றியும்‌, காலதாமத மில்லாமலும்‌, வேகமில்லாமலுமிருக்கிறது)

87-சைஷா பார்க்கவீ வாருணீ வித்யா பரமே வ்யோமன் ப்ரதிஷ்ட்டிதா —தை-ப்‌,ருகு,வல்லீ-9-(இது ப்‌,ருகு,விற்கு வருணனால்‌ சொல்லப்பட்ட வித்யை; பரமபதத்தில்‌ நிலை நிற்பது (இது)என்று பரம பதத்தில் பரிமாறக் கடவ பக்தியை

88-ச ஹோவாச வியாச பாராசர்ய -தைத்திரீய ஆரண்யகம்‌ ப்ரஸ்நம்‌ 1, அனு-(பராஸரரின்‌ புத்திரரான அப்படிப்பட்ட வியாஸரன்றோ சொன்னார்)

89-ஆத்மா ஸூ ததோ அஷரஸ் சாந்தோ நிர்க்குண ப்ரக்ருதே பர ப்ரவ்ருத்த்ய பசயௌ நாஸ்ய சைகஸ் யாகில ஜந்துஷூ -([ஆத்மாவானவன்‌, கர்மம்‌ முதலிய அஸாுத்‌,த,மற்றவன்‌ விநாஸமற்றவன்‌ ; பசி, தாஹம்‌ முதலியவையற்றவன்‌ ; ஸத்வ ரஜஸ் தமோ கு,ணங்களற்றவன்‌; ப்ரக்ருதியைக்‌ காட்டி லும்‌ மேலானவன்‌ ; எல்லாப்‌ பிராணிகளிலும்‌, ஒரே மாதிரி (ஜ்ஞாநைகாகாரனாக) இருக்கும்‌ இவனுக்கு அதிகமாவதும்‌, குறைவதும்‌ கிடையாது.])ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-13-71

90-91-வித்‌,யா விநய ஸம்பந்நே ப்‌,ராஹ்மணே க,வி ஹஸ்திநி | மாநி சைவ ஸ்வபாகே ௪ பண்டி,தாஸ்‌ ஸம தர்ஸ்ரிந: || இஹைவ தைர்ஜிதஸ் ஸர்க்கேரா யேஷாம்‌ ஸாம்யே ஸ்திதம்‌ மந:। நிர்ததோஷம்‌ ஹி ஸமம்‌ ப்‌,ரஹ்ம தஸ்மாத்‌ ப்‌ரஹ்மணி தே ஸ்தி,தா: ॥[–கீதை 5-18& 19,-வித்‌,யை, அடக்கம்‌ முதலியவைகளுடன்‌ கூடிய ப்ராஹ்‌ மணனிடமும்‌, கேவல ப்‌ ராஹ்மணனிடமும்‌, பசுவிடமும்‌, யானையிடமும்‌, நாயிடமும்‌, சண்டாளனிடமும்‌, ஆத்மாவை உண்மையாய்‌ அறிந்தவர்கள்‌ ஸமதர்ஸிகளாக இருப்பார்‌கள்‌. எவர்களுடைய மனமானது (இம்மாதிரியான) ஸம நிலைமையிலிருக்கிறதோ, அவர்களால்‌ இங்கேயே ஸம்‌ ஸாரம்‌ ஜயிக்கப்பட்டது. ப்ரகருதி ஸம்ஸர்க்க,மற்றதும்‌, ஸமமானதுமான ஆத்மவஸ்து வன்றோ ப்ரஹ்மம்‌ (ப்‌,ரஹ்மத்‌ திற்கு ஸமானமானது). ஆகையால்‌ அவர்கள்‌ ப்ரஹ்மத்‌ திலேயே நிலை நிற்கிறார்கள்‌)

92-விகார ஜநநீமஜ்ஞாம்‌ அஷ்டரூபாமஜாம்‌ த்‌.ருவாம்‌ [–மந்த்ரிகோபனிஷ-(பதினாறு) விகாரங்களை உண்டாக்குவதும்‌, (ப்ரக்ருதி, மஹான்‌, அஹங்காரம்‌ ஐந்து தன்மாத்ரைகள்‌ என்னும்‌) எட்டு ரூபத்தை உடையதும்‌, ஞானமற்றதும்‌, பிறப்‌ பற்றதும்‌, நிலையானதுமான ப்ரக்ருதியை)-

93-அக்ஷய்மம்‌ நாந்யதாதா ரமமேயமஜரம்‌ த்‌,ருவம்‌| ஸப்‌,த;ஸ்பர்ஸ விஹீநம்‌ தத்‌ ரூபாதி,பி,ரஸம்ஹிதம்‌ || த்ரிகுணம்‌ தஜ்ஜக,த்‌,யோநிரநாதி,ப்ரப, வாப்யயம்‌ ||–வி-பு 1-2-20 & 21,-[(ப்ரக்ருதியானது) க்ஷயமற்றது; மற்றொரு அசித்தை ஆதாரமாகக் கொண்டிராதது; (தேஸகாலாதி,களால்‌) அளவற்றது;குறைவற்றது; நிலையானது; ஸப்‌த,ஸ்பர்ஸங்களற்றது; ரூபம்‌ முதலியவை யற்றது ; ஸத்வ ரஜஸ் தமோ கு,ணங்களை உடையது ; தனக்குக்‌ காரணத்தையும்‌, பிறப்பையும்‌, முடிவையுமற்ற அதுவே உலகிற்குக்‌ காரணம்‌.])

94-பரமாத்மா ச சர்வேஷாம் ஆதார பரமேஸ்வர விஷ்ணு நாமா ச வேதேஷூ வேதாந்தேஷூ ச கீயதே –வி.பு 6-4.40-([பரமாத்மாவே எல்லோருக்கும்‌ ஆதாரமாகவும்‌, மேலான ஈஸ்வரனாகவுமிருப்பவன்‌. அவன்‌ வேதங்களிலும்‌, வேதாந்தங்களிலும்‌ விஷ்ணுவென்‌ ற பெயரை யுடையவனாகக்‌ கீர்த்திக்கப் படுகிறான்)

95-பர பராணாம் பரம பரமாத்மாத்ம சம்ஸ்தித ரூப வரணாதி நிர்தேச விசேஷண விவர்ஜித சர்வத்ரா சௌ சமஸ்தஞ்ச வசத் யத்ரேதி வை யத ததஸ் ச வாஸூ தேவாதி வித்வத்பி பரிபட்யதே -வி-பு 1-2.10 & 12,-(மேலானவர்களைக் காட்டிலும்‌ மேலானவனும்‌, தன்னைக் காட்‌டிலும்‌ உயர்ந்தவனற்‌றவனும்‌, தனக்குத் தானே ஆதாரமாக இருப்பவனுமான பரமாதமா–ரூபம்‌,நிறம்‌ முதலியவை,காமம்‌ எனப்படும்‌ (ப்ராக்ருதமான) விசேஷணங்களற்றவன்‌.இவன்‌ அறிஞர்களால்‌ வாஸுஃதேவனென்று படிக்கப்படுகிறான்‌)

96-ப்ரதாநஞ்ச புமாம்ச்சைவ சர்வ பூதாத்மா பூதா விஷ்ணு சக்த்யா மகா புத்தே வருதௌ சம்ச்ரய தரமிநௌ—விபு 2-7-29..(மஹா புத்‌,தியை யுடையவரே ! ஒன்றோடு ஓன்று சேர்ந்‌ திருக்கும்‌ ஸ்வபாவத்தை யுடைய ப்ரக்ருதியும்‌, புருஷனும்‌, எல்லா பூதங்களுக்கும்‌ ஆத்மாவான விஷ்ணு ஸக்தியினால்‌ வியாபிக்கப்பட்டிருக்கின்றன)

97-தத்ராபி ஸ –-யோகி நாமம்ருதம் ஸ்தாநம் ஸ்வாத்ம சந்தோஷ காரிணாம் –வி-பு1:6-38.(ஆத்மமாத்ரானுப,வரிஷ்டரான யோகிகளுக்கு அழிவற்ற ஸ்தானம்‌]

98-(ஸர்க்கஸ்ச ப்ரதிஸர்க்கஸ்ச வம்ஸ மந்வந்தராணி ச।வம்ஸாநுசரிதம்‌ சைவ புராணம்‌ பஞ்ச லக்ஷணம்‌ ॥! -நரஸிம்ஹ புராணம்‌ 3-33-[ஸ்ருஷ்டி, ப்ரளயம்‌, வம்ஸம்‌, மன்வந்தரம்‌, வம்ஸ சரித்ரம்‌ ஆகிய இவ் வைந்து லக்ஷணங்களை யுமுடையது புராணமாகும்‌.)

99-தபந பவநயோர்‌ ய: ப்ராப்தவாந்‌ புத்ரப,ாவம்‌ ஸதமக,க்குதபாலிர்‌ வித்‌,யயா ஐந்மநா வா। -. போஜசம்பு-கிஷ்‌-10-[இந்திரனால்‌ அடையாளம்‌ செய்யப்பட்டவனும்‌, ஸூர்யனுக்‌கும்‌, வாயுவுக்கும்‌, வித்‌,யையினாலும்‌, ஜன்மத்தினாலும்‌ புத்ரனா யிருக்கும்‌ தன்மையை அடைந்தவனுமான ஹனுமான்‌…])

100-அப்ர வீச்ச ததா வாக்யம் ஜாதக்ரோதா விபீஷண அந்தரி ஷகதஸ் ஸ்ரீமான் ப்ராதரம் ராஷஸாதிபம் –யுத்த -16-17-([ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீயையுடைய விபீஷணன்‌ அப்போது மிகவும்‌ கோபங்கொண்டவனாய்‌, ஆகாயத்தில்‌ கிளம்பி, ராக்ஷ்ஸர்களுக்கு அதியதியான தன்‌ தமையனைக்‌ குறித்துச்‌ சில வார்த்தைகள்‌ சொன்னான்‌)

101-பரமாபதமா பன்னோ மனஸா சிந்தயத் ஹரிம் ஸ து நாக வர ஸ்ரீ மான் நாராயண பராயண -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -69-47-(ஸ்லாக்‌,யமான ஆபத்தை அடைந்தவனும்‌, கைங்கர்ய ஸ்ரீயை உடையவனும்‌, நாராயணனையே மேலான கதியாகக் கொண்டவனுமான அந்த கஜேந்திராழ்வான்‌ மனத்தி னாலே ஹரியை நினைத்தான்)

102-சர்வ பரியகரஸ் தஸ்ய ராம ஸ்யாபி சரீரத-லஷ்மனோ லஷ்மி சம்பன்னோ பஹி ப்ராண இவாபர -பால -18-28-(கைங்கர்ய லக்ஷ்மியை உடைய லக்ஷ்மணன்‌, ராமனுக்கு ஸரீரத்தைக் காட்டிலும்‌ எல்லாப்‌ பிரியத்தையும்‌ செய்பவனாகவும்‌, வெளியிலிருக்கும்‌ மற்றொரு ப்ராணன் போலவும்‌ விளங்கினான்)

103-ஸ்லோக ரத்னம்‌– ஸ்லோகம் -60-

104-ஜிதந்தே ஸ்தோத்ரம் -1

105-ஏவமுக்த்வா5ர்ஜுநஸ்‌ ஸங்க்‌,யே ரதேராபஸ்த, உபாவிஸத்‌। விஸ்ருஜ்ய ஸஸரம்‌ சாபம்‌ ஸோக ஸம்விக்‌,நமாநஸ: ॥| -கீதை 1-47.[அர்ஜுனன்‌, இம் மாதிரி சொல்லி விட்டு, சோகத்தினால்‌ பீடிக்கப்பட்ட மனத்தை உடையவனாய்‌, அம்புடன்‌ கூடிய வில்லைக்‌ கைவிட்டு, யுத்‌,த, களத்திலேயே ரத,த்தின் மேல்‌ உட்கார்ந்தான்‌.])

106-யத; ரத்நாநி ஜலதேர ஸங்க்‌,யேயாநி புத்ரக | ததா குணா ஹ்யநந்தஸ்ய அஸங்க்‌,யேயா மஹாத்மந: ॥’ –மாத்ஸ்ய புராணம்‌. வராஹ புராணம்‌ 74–40-[குழந்தாய்‌ | எப்படி ஸமுத்‌ரத்திலுள்ள ரத்னங்கள்‌ கணக்ற்றவையோ, அம் மாதிரியே மஹாத்மாவான அநந்தனுடைய குணங்களும்‌ அளவற்றவை.]

107-ஆரோக்யம்‌ பராஸ்கராதி,ச்சே,த்‌ த,நமிச்சே,த்‌ ஹுதாமநாத்‌ | ஈஸ்வராத்‌ ஜ்ஞாநமந்விச்சே,த்‌ மோக்ஷமிச்சே,ஜ்ஜநார்த்த, நாத்‌ ॥| –மாத்ஸ்ய புராணம்‌ 67-41-[ஸுர்யனிடமிருநங்து ஆரோக்யத்தை விரும்பக் கடவன்‌ ; அக்னியிடமிருந்து பொருளை விரும்ப வேண்டும்‌ ; சிவனிட மிருந்து அறிவை விரும்பக் கடவன்‌. நாராயணனிடமிருந்து மோக்ஷத்தை விரும்பக் கடவன்‌

108-இஷுக்ஷயாந் நிவர்த்தந்தே நாந்தரிக்ஷக்ஷி திஷயாத்‌ | மதிக்ஷயாந் நிவர்த்தந்தே ந கோவிந்த,குணக்ஷயாத்‌ |[பாணங்களில்லாமல்‌ திரும்புகிருர்களே யொழிய, பூமியும்‌ ஆகாயமும்‌ அழிந்துவிட்டதாலல்ல. ( ௮ம் மாதிரியே ). பு,த்திக் குறைவினால்‌ திரும்பு)அளவுடையாரும் தாம் தாம் ஜ்ஞான சக்த்யாதிகள் அளவும் புகழ்ந்தார்கள் அத்தனை – உமக்கும் அவ்வளவு புகழ்கைக்கு விரோதம் இல்லை

109-ஸா ஜிஹ்வா யா ஹரிம்‌ ஸ்தெளதி தச் சித்தம்‌ யத்தத,ர்ப்பிதம்‌ | தாவேவ ச கரெள ஸ்லாக்‌,யெள யெள தத் பூஜாகரெள கரெள ॥ –விஷ்ணுதர்ம-1-[எது ஹரியைத் துதிக்கிறதோ, அதுவே நாக்கு, எது அவனிடம்‌ ஸமர்ப்பிக்கப் பட்டதோ அதுவே நெஞ்சு. எவை அவனுக்குப்‌ பூஜை செய்கின்றனவோ அக் கைகளே ஸ்லாக்‌,யமானவை

110-நஷ்டோ மோஹ: ஸ்ம்ருதிர்‌ லப்‌,த, த்வத் ப்ரஸாதாந்‌ மயாச்யுத | ஸ்திதோ5ஸ்மி க,தஸந்தே,ஹ: கரிஷ்யே வசநம்‌ தவ॥ –கீதை 18-73,-[அச்சுதனே | (விபரீத ஜ்ஞானமாகிய) மோஹம்‌ நசித்தது. உன்னருளால்‌ உண்மை அறிவு என்னால்‌ அடையப்‌ பட்டது. ஸந்தேஹம்‌ நஸிக்கப் பெற்றவனாயிருக்கிறேன்‌. உன்‌ வசனத்தின்படியே (யுத்‌,த,ம்‌) செய்கிறேன்‌)

111-யந்நாயம்‌ ப,க,வாந்‌ ப்‌,ரஹ்மா ஜாநாதி பரமம்‌ பத;ம்‌ | தந்நதா: ஸ்ம ஜகத்‌,தாம தவ ஸர்வகதாச்யுத ॥ -வி பு 1-9-59,[அச்யுதனே ! ஸர்வ வ்யாபியே | மேலான ப்ராப்யமான எதை பகுவானான பிரமனும்‌ அறியானோ, உலகிற்‌ கெல்லாம்‌ இருப்பிடமான அந்த உன்னுடைய ஸ்வரூபத்தை வணங்குகிறோம்‌)

112-தவாந்தராத்மா மம ௪ யே சாந்யே தேஹி ஸம்ஜ்ஞிதா: | ஸர்வேஷாம்‌ ஸாஷி பூதோ3ஸெள ந க்‌,ராஹ்ய: கேநசிந்‌ க்சித்‌ ॥ [–பாரதம்‌ – மோக்ஷ தர்மம்‌ 179-4( பிரமனாகிய ) எனக்கும்‌, ( ருத்‌ரனாகிய ) உனக்கும்‌, ( தேஹத்தை உடைத்தாயிருப்பதால்‌ ) *தேஹீ’ என்ற பெயரையுடைய மற்றவர்களுக்கும்‌ அந்தராத்மா நாராயணனே. எல்லாருக்கும்‌ ஸாஷியாயிருக்கிறார்‌ அவர்‌, எவராலும்‌ எக்காலத்தீலும்‌ அறியத்தக்கவரல்லர்‌ அவர் )

113-தத்‌, விஷ்ணோ: பரமம்‌ பதம்‌ ஸதா பஸ்யந்தி ஸூரய: । திவீவ சக்ஷுராததம்‌ | தத்‌ விப்ராஸோ விபந்யவோ ஜாக்‌ருவாம்ஸஸ்‌ ஸமிந்ததே | விஷ்ணோர் யத்‌ பரமம்‌ பதம்॥–ருக்‌ வேதம்‌ அஷ்டக 1-2-7, ஸாமவேதம்‌ 3-18-2-4--[விஷ்ணுவினுடைய அந்தப்‌ பரமபத,த்தை நித்ய ஸுரிகள்‌ எப்போதும்‌ பார்க்கிறார்கள்‌. அப் பரமபத,ம்‌, எல்லாவற்றையும்‌ பிரகாசிப்பிப்பவனும்‌, ஆகாயத்திலிருப்பவனும்‌ உலகிற்‌ கெல்லாம்‌ கண்ணாயிருப்பவனுமான ஸுர்யன் போல்‌ ப்ராகாஸமுள்ளது. விஷ்ணுவினுடைய யாதொரு பரமபத, மிருக்கிறதோ, அதில்‌ மேதாவிகளும்‌, துதிப்பதையே ஸ்வப,௱வமாக உடையவர்களும்‌, ஜாக ரூகர்களாயிருப்பவர்‌களுமான நித்யஸுரிகள்‌ பிரகாஸிக்கின்‌றனர் –

114–தேவ! ப்ரபந்நார்த்தி ஹர! ப்ரஸாதம்‌ குரு கேஸவ! | அவலோகநததாநேந பூயோ மாம்‌ பாலயாச்யுத! ||–வி-பு 1-20-16. ப்ரஹ்லாதவாக்ய [தேவனே ! ஸரணமடைந்தவர்களின்‌ துக்கத்தைப்‌ போக்கடிப்பவனே ! கேஸவனே ! அருள் புரிவாயாக, அச்‌சுதனே! மறுபடியும்‌ கடாக்ஷிப்பதன் மூலம்‌ என்னைக்‌ காப்‌ பாற்றுவாயாக –

115-(ததைகத பஹு ஸ்யாம்‌ ப்ரஜாயேயேதி தத்தேஜோ$ஸ்ருஜத | –சாந் 6-2-3,[அந்தப்‌ பரப்ரஹ்மம்‌ (நானே) பலவாக ஆகக்கடவேன்‌” என்று ஸங்கல்பித்தது; அது தேஜஸ்ஸை ஸ்ருஷ்டி செய்தது)

116-(ரஸோ வை ஸ:। ரஸம்‌ ஹ்யேவாயம்‌ லப்‌,த்‌,வாநந்த, பவதி। கோ ஹ்யேவாந்யாத்‌ க:. ப்ராண்யாத்‌| யதே;ஷ ஆகாம ஆநந்தே ந ஸ்யாத்‌ ஏஷ ஹ்யேவாநந்த –தைத்திரியம்‌ ஆதந்த வல்லி–7–ரஸ (ஆநந்த) ஸ்வரூபனன்றோ அந்தப்‌ பரம புருஷன்‌. ரஸ ஸ்வரூபனான அவனை அடைந்து (இந்த ஜீவன்‌ ) ஆநந்த,த்‌தை உடையவனாகிறான்‌. பிரகாசிப்பவனும்‌, ஆநந்த,ஸ்வரூபனுமான இப் பரம புருஷன்‌ இல்லாவிடில்‌ எவன்‌ இவ்வுலகிலுள்ள ஸுகத்தையோ, மோக்ஷ ஸுகத்‌தையோ அடைய முடியும்‌ ? (ஆகையால்‌) இவனே (ஜீவனை) ஆநந்தி,ப்பிக்கிறான் )என்னக் கடவது இறே

117-ந ததஹஸ்தி விநா யத்‌ ஸ்மாந்மயா பூ,தம்‌ சராசரம்‌ –கீதை 10-39,[அசையக்கூடியவையும்‌, அசையக் கூடாதவையுமான வஸ்‌துக்களில்‌, நானில்லாமல்‌ இருக்கக்கூடிய வஸ்து கிடையாது

118-ஸ ஏகாகீ ந ரமேத —மஹோபனிஷ-([(ப்ரளய காலத்தில்‌) ஒருவராயிருந்த அந்த நாராயணன்‌ ஆனந்தத்தை அடையவில்லை)

119-உபாத,த்தே ஸத்தாஸ்தி,திநியமநாத்‌,யைஸ்‌ சித,சிதெள ஸ்வமுத்‌,இஸ்ய ஸரீமாநிதி வததி வாகெ,ளபநிஷதீ, | உபாயோபேயத்வே ததி, தவ தத்த்வம்‌ ந து கரணெள அதஸ்த்வாம்‌ ஸ்ீரங்கேஸய ஸரணமவ்யாஜமப,லம்‌ || –ஸ்ரீரங்கராஜஸ்தவம்‌ 2:-88-[ஹே ஸ்ரீரங்கநாதனே ! “ஸ்ரீமந்நாராயணன்‌ ஸ்ருஷ்டி, ஸ்தி,தி, நியமனம்‌ முதலிய காரியங்களால்‌ சேதனாசேதனங்களைத்‌ தனக்காக ஸ்வீகரிக்கிறான்‌” என்று உபனிஷத்‌, வாக்யமானது சொல்லுகிறது. ஆகையால்‌, இவ்விஷயத்‌தில்‌ உபாயத்வமும்‌ உபேயத்வமும்‌ உனக்கு இயல்வு; செயற்கையல்ல. ஆகையால்‌ உன்னை நிர்வ்யாஜமான உபாயமாக அடைந்தேன்‌

120-கிமத்ர சித்ரம்‌ த.ர்மஜ்ஞ! லோகநாத, ! ஸுகாவஹ !| யத்‌ த்வமார்யம்‌ ப்ரபாஷேதரா: ஸத்த்வவாந்‌ ஸத்பதே, ஸ்தி,த: ॥--0. ரா யு 18-36-தர்மங்களை அறிந்தவரே | லோக நாதரே |! ஸாுகத்தைத்‌ தருபவரே |. ஸத்வ கு,ணத்தை யுடையவரும்‌, நல்ல மார்க்‌ கத்தில்‌ நிற்பவருமான நீர்‌ அழகிய சொல்லைச்‌ சொன்னீர்‌ என்பதில்‌ என்ன ஆச்சரியம்‌)

121-காரணம் து த்யேய–அதர்வஸிகை-(காரண வஸ்துவே தியானிக்கத்தக்கது)என்கையாலே சர்வ சமாஸ்ரயணீயன்

122-ஸ ஸ்வராட் பவதி -சாந்தோக்யம்‌ 7-25-2-(அந்த முக்தாத்மா கர்மத்திற்கு வசப்படாதவனாக ஆகிறான்

123-ய ஆத்மா ௮பஹத பாப்மா விஜரோ விம்ருத்யுர்‌ விஸோகோ விஜிக,த்ஸோ$பிபாஸஸ்‌ ஸத்யகாமஸ்‌ ஸத்யஸங்கல்பஸ்‌ ஸோ$ந்வேஷ்டவ்ய:–சாந்தோக்யம்‌ 8-7-1,[எந்த ஆத்மாவானவன்‌, பாபமற்றவனாகவும்‌, கிழத்தனமற்றவனாகவும்‌, ம்ருத்யுவற்றவனாகவும்‌, மோகமற்றவனாகவும்‌, பசியற்றவனாகவும்‌, தாகமற்றவனாகவும்‌, வீண்போகாத இஷ்டத்தையும்‌, ஸங்கல்பத்தையும்‌ உடையவனாகவுமிருக்கிறானோ அவன்‌ தேடத்தக்கவன்‌.)

124-(ய: புத்ர: பிதரம்‌ த்‌,வேஷ்டி தம்‌ வித்‌,யாத,ந்யரேதஸம்‌ | யோ விஷ்ணும்‌ ஸததம்‌ த்‌,வேஷ்டி தம்‌வித்‌,யாதந்த்யரேதஸம்‌ ॥| -ப்ஏஹ்மாண்ட, புராணம்-[எந்தப்‌ புத்திரன்‌ பிதாவை துவேஷிக்கிறானோ அவனை மற்றொருவனுடைய ரேதஸ்ஸுக்குப்‌ பிறந்தவனாக அறியலாம்‌; எவனொருவன்‌ விஷ்ணுவை எப்போதும்‌ த்‌வேஷிக்‌ கிறானோ அவனைச்‌ சண்டாளனுக்குப்‌ பிறந்தவனாக அறியலாம்‌)

125-விஷ்ணு ப,க்தி விஹீநோ யஸ் ஸர்வ ஸாஸ்த்ரார்த்த,வேத்‌யபி। ப்‌,ராஹ்மண்யம்‌ தஸ்ய ந ப,வேத்‌ தஸ்யோத்பத்திர்‌ நிரூப்யதாம்‌ || — பாத்ம புராணம்-எல்லா ஸாஸ்த்ரங்களின்‌ அர்த்தத்தை அறிந்தவனான போதிலும்‌ எவன்‌ விஷ்ணுப,க்தி யில்லாதவனோ அவனுக்கு ப்‌.ராஹ்மண்யம்‌ கிடையாது. அவனுடைய உத்பத்தியை நிரூபிக்கலாம்‌)

126-ஹிரண்ய கர்ப்பச் சம வர்த்த தாக்ரே பூ தஸ்ய ஜாத பதி ரேக ஆஸீத்—-தைத்திரிய ஸம்ஹிதை 4-2-8-முதலில்‌ பூ,தங்களுக்கெல்லாம்‌ ஒரே பதியான ஹிரண்ய கர்ப்பன்‌ (ஜீவாத்ம ஸமூஹத்தைத்‌ தன்னுட் கொண்ட பகவான்‌) இருந்தான்‌

127-ஏகோ ஹி ருத்ரோ ந த்விதீயாய தஸ்து –ஸ்வேதாஸ்வதரம்‌-3-2-[ருத்‌ரன்‌ ஒருவனே; இரண்டாவதாக (ஸஹாயமாக) ஒருவருமில்லை.-

128-ந கிரிந்த்‌,ர த்வது,த்தரோ ந ஜ்யாயோ ௮ஸ்தி வ்ருத்ரஹந்‌ [–ருக்‌ அஷ்டகம்‌-3.6-19–இந்திரனே | உன்னைக் காட்டிலும்‌ மேலானவனில்லை ; வ்ருத்ரனைக்‌ கொன்‌றவனே (உன்னைக் காட்டிலும்‌) பெரிய வனில்லை.]

129-தஸ்ய மத்‌,யே வஹ்நிஸிகர அணியோர்த்‌,வா வ்யவஸ்தி,த:। நீலதோயதமமத்‌,யஸ்த;ா வித்‌,யுல்லேகேவ பாஸ்வரா | நீவார ஸூகவத்‌ தந்வீ பீதாபாஸ்யாத்‌ தநூபமா| தஸ்யாஸ்‌ ஸிகராயா மத்‌,யே பரமாத்மா வ்யவஸ்து,த: | ஸ ப்ரஹ்மா ஸ ஸிவஸ்ஸேந்த்‌,ரஸ்‌ ஸோக்ஷர:பரமஸ்‌ ஸ்வராட்‌ ॥|[அந்த இருதய கமலத்தின்‌ நடுவில்‌, சிறியதும்‌ மேல்‌ நோக்கினதுமான அக்னி ஸிகை, –தைத்‌-நாராயண வல்லி-11-(பரமாத்மாவின்‌ திவ்ய மங்கள விக்‌,ரஹம்‌) இருக்கிறது. ( அது) நீலமேகத்தை உட்கொண்ட மின்னல் போல்‌ பிரகாஸமுள்ளதாகவும்‌, நெல்‌ நுனிபோல்‌ சிறிதாகவும்‌, மஞ்சள்‌ நிறமுள்ளதாகவும்‌, ஒப்பற்றதாகவும்‌ இருக்கிறது. அந்த ஸிகையின்‌ நடுவில்‌ பரமாத்மா விளங்குகிறான்‌. அவனே பிரமனுக்கும்‌ அந்தர்யாமி; அவனே ஸிவனுக்கும்‌ அந்தர்யாமி; அவனே இந்திரனுக்கும்‌ அந்தர்யாமி; (பிரமன்‌ முதலியவர்களைக் காட்டிலும்‌) மேலானவனும்‌, கர்மத்திற்கு வசப்படாதவனும்‌, அழிவற்‌றவனுமான முக்தாத்மாவுக்கும்‌ அவனே அந்தர்யாமி)முக்தர்கள் கர்ம வஸ்யர்கள் என்றதே-நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி –

130-(நாராயண பரா வேதா தேவா நாராயணாங்க,ஜா: | நாராயணபரா லோகா நாராயணபரா மகா: ॥ -பாகவதம்‌ 2-5-15.[வேதங்கள்‌ நாராயணனைச்‌ சொல்லுபவை ; தேவர்கள்‌ நாராயணனுடைய அங்க,த்திலிருந்து உண்டானவர்கள்‌ ; நாராயணனைப்‌ பற்றியிருப்பவை உலகங்கள்‌ ; யாகங்கள்‌ நாராயணனை ஆராதி,ப்பவை)

131-க,ந்த,த்‌,வாராம்‌ து,ராத,ர்ஷாம்‌ நித்யபுஷ்டாம்‌ கரீஷிணீம்‌। ஈஸ்வரீம்‌ ஸர்வபூ,தாநாம்‌ தாமீஹோபஹ்வயே ஸ்ரியம்‌ ॥ -ஸ்ரீஸூக்தம்‌-9-[கீர்த்தியைத்‌ தருபவளும்‌, ( து;ஷ்டர்களால்‌ ) அடைய முடியாதவளும்‌, எப்போ தும்‌ ஸம்ருத்‌,தி,யை. உடையவளும்‌, எல்லா ஸம்பத்துகளையும்‌ உடையவளும்‌, எல்லா பூ,தங்‌ களுக்கும்‌ ஈங்வரியுமான ஸ்ரீதேவியை இங்கு அழைக்‌ கிறேன்‌.])

132-அஸ்ய ஈசானா ஜகதோ விஷ்ணு பத்நீ –-நீனா ஸூக்தம்‌ தைத்திரீய ஸம்ஹிதை 4 -4-12-திருவுக்கும் திருவாகிய செல்வா –பெரிய திருமொழி -7-7-1- ([இந்த உலகிற்கெல்லாம்‌ ஸ்வாமினியாகவும்‌, விஷ்ணுவுக்குப்‌ பத்னியாகவும்‌ இருப்பவளும்‌,)

133-மகான் ப்ரபுர்வை புருஷ சத்த்வஸ் யைஷ ப்ரவர்த்தக – ஆதித்ய வர்ணம் தம்ஸ பரஸ்தாத் –க புண்டரீக நயன -ஸ்வே. உப. -3-12-([மஹாபுருஷனே ! (மோக்ஷ) பலத்தைக்‌ கொடுக்கக்கூடியவன்‌. இவனே ஸூத்‌த,ஸத்வத்திற்கு ப்ரவர்த்தகன்‌-

134-வேதாஹமேதம்‌ புருஷம்‌ மஹாந்தம்‌ ஆதி,த்யவர்ணம்‌ தமஸ; பரஸ்தாத்‌। தமேவம்‌ வித்‌,வாநம்ருத இஹ பவதி -… நாந்ய: பந்தள வித்‌ மதே5யநாய ॥ [–புருஷஸூக்தம்‌ உத்தரானுவாகம்‌(வேத,புருஷனாகிய) நான்‌ (ஸ்வரூப ரூப கு,ண விபூ,திகளில்‌) பெரியவனும்‌, ஸுர்யன் போல்‌ ப்ரகாஸிப்பவனும்‌, ப்ரக்‌ ருதிக்கு அப்பாற்பட்டவனுமான இந்தப்‌ புருஷனை அறிகிறேன்‌. அவனை இம் மாதிரி அறிபவன்‌ இங்கேயே முக்தனக ஆகிறான்‌. மோக்ஷத்திற்கு ( அவனைத் தவிர ) வேறு வழி கிடையாது )

135-ய ஏஷோ$ந்தராதி,த்யே ஹிரண்மய: புருஷோ த்‌,ருஸ்யதே ஹிரண்யஸ் மஸ்ருர்‌ ஹிரண்யகேஸ ஆப்ரணகராத்‌ ஸர்வ ஏவ ஸுவர்ண: | தஸ்ய யத கப்யாஸம்‌ புண்ட, ரீகமேவமக்ஷிணீ॥–சாந்தோக்யம் 1-6 & 7-।[ஸுர்யனுக்கு நடுவில்‌ தங்கம் போல்‌ அழகிய உருவை யுடைய எந்த இந்தப்‌ பரம புருஷன்‌ காணப்படுகிறானோ, அவன்‌ ஸுவர்ணம் போன்று அழகான மீசையையும்‌, கேஸங்களையும்‌, எல்லா அவயவங்களையும்‌ உடையவன்‌. அவனுக்கு ஸுர்யனால்‌ மலரும்‌ தாமரை போன்‌ற இரு கண்கள்‌ உள.])

136-ததஸ் ஸமுத் க்ஷிப்ய தராம்‌ ஸ்வத;ம்ஷ்ட்ரயா மஹா வராஹ: ஸ்புட பத்‌மலோசந: |ரஸாதலாதுத் பல பத்ர ஸந்நிப,: ஸமுத்ததோ நீல இவாசலோ மஹாந்‌ ॥ –விபு 1-4-26,[மலர்ந்த தாமரை போன்‌ற திருக் கண்களை உடையவரும்‌, நீலோத்பலமலரின்‌ இதழ் போன்ற நிறத்தை யுடையவருமான மஹா வராஹ ஸ்வரூபியான பகவான்‌ தன்னுடைய தந்தத்தால்‌ பூதேவியை ரஸாதலத்திலிருந்து எடுத்துக்‌ கொண்டு பெரிய நீல மலை போல்‌ கிளம்பினார்) –

137-யஸ்மாத் ஷரமதீ தோஹம்-இத்ராப்ய-அதோ அஸ்மி லோகே வேதே ச பிரதித புருஷோத்தமா -ஸ்ரீ கீதை -15-38-(நான்‌ ஞானத்தில்‌ ஏற்றக் குறைவுகளுள்ள ஸம்ஸாரி புருஷனை அதிக்ரமித்திருப்பதாலும்‌, ஞானத்தில்‌ ஏற்றக்‌ குறைவுகளற்ற . முக்த புருஷனைக் காட்டிலும்‌ மேலானவனா யிருப்பதாலும்‌, ஸ்ருதியிலும்‌, ஸ்ம்ருதியிலும்‌ புருஷோத்தம னென்று பிரஸித்‌தி,பெற்றிருக்கிறேன்)

138-ஏதாவாநஸ்ய மஹிமா அதோ ஜ்யாயாம்ஸ்ச பூருஷ: |பாதேரஸ்ய விஸ்வா பூ,தாநி த்ரிபாதஃஸ்யாம்ருதம்‌ திவி ॥ –புருஷஸூக்த-13–[இவனுடைய மஹிமை இப்படிப்பட்டது. பரமபுருஷன்‌ இதைக்காட்டிலும்‌ மேலானவன்‌, எல்லா உலகங்களும்‌ இவனுடைய ((விபூ,தியில்‌) கால்‌ பாகம்‌; பரமபதத்தில்‌ இவனுடைய (விபூ,தியில்‌) அழிவற்றதான முக்கால்‌ பாக, மிருக்கிறது)

139-யஸ்யாயுதாயுதாம்‌மாம்மே விஸ்வமுக்திரியம்‌ ஸ்தி,தா |பரப்‌,ரஹ்ம ஸ்வரூபஸ்ய ப்ரணமாமஸ்தமவ்யயம்‌ || -வி-பு 1-9:53–[பரப்‌,ரஹ்ம ஸ்வரூபியான எவனுடைய பல்லாயிரத்தில்‌ ஒரு பாகத்தில்‌ உலகமாகிற ஸக்தி நிலைகிற்கிறதோ, குறை வற்றவனான அவனை வணங்குகிறோம்‌-

140-மேரோரிவாணுர்‌ யஸ்யை தத்‌ ப்‌,ரஹ்‌:மாண்ட,மக,லம்‌ முநே [முனிவரே ! இந்த ப்ரஹ்மாண்ட,ம்‌ முழுவதும்‌ எவனுக்கு, மேருவுக்கு அணுவைப் போலாகிறதோ)இத்யாதி பிரமாணங்கள்-அவனே சர்வ வியாபகன்-ப்ரஹ்மாதிகள் இவனுடைய ஏகதேசத்தில் அடங்கி உள்ளார்கள் என்பதை பறை சாற்றும்

141-ஸ்ரீ கீதையில் விஸ்வரூப அத்தியாயத்தில் (விஷ்டப்‌ யாஹமித,ம்‌ க்ருத்ஸ்நமேகாம்மேநஸ்தி,தோ ஜகத்‌[நான்‌ இவ்வுலகையெல்லாம்‌ (எனது) ஒரு அம்ஸத்தினால்‌ தரித்துக் கொண்டிருக்கிறேன்)அர்ஜுனன் வியந்து நின்றானே

142-ததோ ஹ்ருதேஷூ வேதேஷூ ப்ரஹ்மாணம் காசமஅவிசத் – ததோ வசனமீஸாநம் ப்ராஹ வேதைர் விநாக்ருத ப்ரஹ்மா வேதா மே பரமம் சஷூ வேதா மே பரமம் தனம் வேதா மே பரமம் தாம வேதா மே ப்ரஹ்ம சோத்தமம் மம வேதா ஹ்ருதாஸ் சர்வே தானவாப்யாம் பலாதித்த அந்த காரா இமே ஜாதா லோகா வேதைர் விவர்ஜிதா வேதா த்ருதே ஹி கிம் குர்யாம் லோகன் வை ஸ்ரஷ்டுமுத்யத
அஹோ பத மஹத் துக்கம் வேத நாச நஜம் மம ப்ராப்தம் து நோதி ஹ்ருதயம் மாம் து சோகாமயஸ் த்வயம்-ஜக்ராஹ வேதா ந கிலான் ரஸா தல கதான் ஹரி ப்ராதாச்ச ப்ரஹ்மனே ராஜன் ததாஸ் ஸ்வாம் ப்ரக்ருதிம் யயௌ ததஸ் தயோர் வதே நாஸூ வேதோ பஹரனேந ச- சோகாப நயனம் சக்ரே ப்ரஹ்மன புருஷோத்தம
—பார. ஸாந்தி 357-31.-இத்யாதி([பிறகு, வேதங்கள்‌ அபஹரிக்கப்பட்டவுடன்‌, பிரமனை அஜ்ஞானம்‌ பீடித்தது. அதன்‌ பின்‌ வேதங்களை இழந்த அவன ஈசனைக்‌ குறித்துப்‌ (பின்வருமாறு) பேசினான்‌. பிரமன்‌; *வேத,ங்களே எனக்கு உயர்ந்த கண்‌; வேதங்‌ களே எனக்கு மேலான தனம்‌; மறைகளே எனக்கு மேலான தேஜஸ்‌; வேதங்களே எனக்கு உயர்ந்த ப்ரஹ்மம்‌. அஸாுரர்களுடைய பலத்தினால்‌ இங்கிருந்து என்னுடைய எல்லா வேத,ங்களும்‌ அபஹரிக்கப்‌ பட்டன. வேத,ங்களற்ற இவ்வுலகங்களெல்லாம்‌ இரு ளடைந்தன. லோகங்களை ஸ்ருஷ்டிக்க ஆரம்பித்த நான்‌ வேத,மில்லாமல்‌ என்‌ செய்வேன்‌ ? ஐயோ ! வேதங்கள்‌ நஸித்ததினால்‌ எனக்குப்‌ பெரிய துக்கும்‌ வந்து சேர்ந்தது; என்னை அடைந்த இந்த மோக மாகிய வியாதி (என்‌) மனத்தைத்‌ துன்புறுத்துகிறது”…… ஹரியானவர்‌ ரஸாதலத்திலிருந்த எல்லா வேதங்களையும்‌ எடுத்துப்‌ பிரமனிடம்‌ கொடுத்தார்‌. அரசனே! பிறகு (அப்பிரமன்‌) தன்‌ இயற்கை நிலையை அடைந்தனன்‌. இப்படி (மது,கைடப,ர்களென்னும்‌) அவ் விருவரையும்‌ கொன்றதாலும்‌, வேதத்தை மீட்டுக் கொணர்ந்ததாலும்‌, புருஷோத்தமன்‌ பிரமனுடைய ஸோகத்தைப்‌ போக்கடித்‌ தான்‌.])

143-ஸ்ரீ  மாத்ச்யே-தேவீம் ப்ரதி ருத்ர -தத கரோத பரீதேன சம்ரக்தனய நேன ச வாமாங்குட்ட நாகாக் ரேன சின்னம் தஸ்ய சிரோ மயா–ப்ரஹ்மா -யசமாத நபரா தஸ்ய சின்னம் த்வயா மம தஸ்மாச்சா பசமா விஸ்ட கபாலீ தவம் பவிஷ்யசி ருத்ர -ப்ரஹ்ம ஹாஸ் ஸ் குலிதோ பூத்வா சரண தீர்த்தானி பூதலே
ததோ அஹம் கதவான் தேவி ஹிமவந்தம் சிலோச்ச்சயம்-தத்ர நாராயணஸ் ஸ்ரீ மான் மயா பிஷாம் பிரயாசித்த ததச்தேன ஸ்வகம் பார்ச்வம் நகாக்ரேன விதாரிதம் மஹதீ ஸ்ரவதீ தாரா தஸ்ய ரக்தச்ய நிஸ் ஸ்ருதா விஷ்ணு பிரசாதாத் ஸூ ஸ்ரோணி கபாலம் தத் சஹஸ்ரதா ஸ் புடிதம் பஹூதா யாதம் ஸ்வப்ன லப்தம் யதா
–மாத்ஸ்யபுராணம்‌-182–இத்யாதி-([தேவியைக்‌ குறித்து ருத்ரன்‌: “பிறகு கோபத்தை யுடையவனும்‌, சிவந்த கண்களை உடையவனுமான என்‌னால்‌, அப்பிரமனுடைய தலை இடதுகைக்‌ கட்டைவிரல்‌ நகத்தின்‌ நுனியால்‌ கிள்ளப்பட்டது’. பிரமன்‌:– “அபராத, மற்ற என்னுடைய தலை, உன்னால்‌ அறுக்கப்பட்டபடியால்‌ நீ பாபத்தை அடைந்து கபாலியாக (கபாலத்துடன்‌ கூடிய வனாக) ஆவாய்‌.” ருத்ஜன்‌:- தேவி! ப்‌,ரஹ்மஹத்தி செய்த வனாயும்‌ கலங்கினவனாகவும்‌ பூமியில்‌ தீர்த்தங்களைச்‌ சுற்‌றிக் கொண்டிருந்த நான்‌ அதற்குப் பின்‌ ஹிமாசல மலைக்குச்‌ சென்றேன்‌. அங்கு ஸ்ரீமந் நாராயணன்‌ என்னால்‌ பிச்சைக்‌காக யாசிக்கப்பட்டான்‌. அதன்‌ பின்‌ அவனால்‌ தன்‌ (தே,ஹத்தில்‌) ஒரு பாகம்‌ நகத்தின்‌ நுனியால்‌ கீறப்‌ பட்டது. அதிலிருந்து பெரிதாக வெள்ளமிடும்‌ ரத்த தாரை பெருகியது. …… அழகிற்‌ சிறந்தவளே! விஷ்ணுவினுடைய அருளினால்‌ அக் கபாலம்‌ ஆயிரக் கணக்கான பல துண்டுகளாக வெடித்து, கனவில்‌ கிடைத்த பணம்போல்‌ போயிற்று)

144-யுக கோடி சஹஸ்ராணி விஷ்ணும் ஆராத்ய பத்மபூ புநஸ் த்ரை லோகய தாத்ருத்வம் ப்ராப்தவாநிதி ஸூ ச்ரும—ஸப_பர்வம்‌ 14.8-([தாமரையில்‌ பிறந்த நான்முகன்‌ ஆயிரங்கோடி யுகங்கள்‌ விஷ்ணுவை ஆராதித்து மறுபடியும்‌ மூவுலகிற்கும்‌ பதியா யிருக்கும்‌ தன்மையை அடைந்தானென்று கேள்விப்படு கிறோம்‌)

145-ப்ரஹ்மா தயஸ் ஸூ ராஸ் சர்வே விஷ்ணும் ஆராத்ய தே புரா ஸ்வம் ஸ்வம் பதம் அநு ப்ராப்தா கேசவச்ய பிரசாத்த –(-நரரஸிம்ஹ புராண-[பிரமன்‌ முதலிய எல்லா தேவர்களும்‌ முன்‌ விஷ்ணுவை ஆராதித்து, தங்கள்‌ தங்கள்‌ பதவிகளைக்‌ கேஸவனுடைய அருளாலே பெற்றார்கள்‌.]

146-ஏவமேஷாஸ் ஸூ ராணாம் ச ஸூ ராணாஞ்சாபி சர்வச பயா பயங்கர கிருஷ்ணஸ் சர்வ லோகேஸ்வரபிரபு –ஸபா பர்வம்‌.([இம் மாதிரியாக (நமக்கு) ஸ்வாமியும்‌, எல்லா உலகங்‌ களுக்கும்‌ ஈஸ்வரனுமான இந்த க்ருஷ்ணன்‌ அஸூரர்‌களுக்கும்‌ தேவர்களுக்கும்‌ எக் காலத்திலும்‌ (முறையே) பயத்தையும்‌, அபயத்தையும்‌ அளிப்பவன்‌ .)

147-த்ரவீபூ தஸ் ததா தரமோ ஹரி பக்த்யா மஹா முனே
க்ருஹீத்வா தர்ம பாநீயம் பதம் நாதஸ்ய துஷ்டயே
ஷாளிதம் பரா பக்த்யா பாத் யார்க்யாதி பிரர்ச்சிதம்
ததம்பு பதிதம் த்ருஷ்ட்வா ததார சிரஸா ஹர
பாவ நாரத்தம் ஜடா மத்யே யோகயோ அஸ்மீத்யவ தாரணாத்
வர்ஷா யுதாந்யத பஹூன் ந முமோச ததா ஹர
—ஈஸ்வர ஸம்ஹிதை; பிரமன்‌ வாக்யம்‌.-([ரிஷி ஸ்ரேஷ்ட,ரே! (பகவான்‌ திருவுகைளந்தருளின) அச்சமயம்‌, ஹரியினிடம்‌ பக்தியினால்‌ தர்மம்‌ ஜலமாயிற்று. தர்மமாகிய அந்த ஜலத்தை எடுத்து, ஜகந்நாத,னுடைய ஸந்தோஷத்திற்காக (அவனுடைய) திருவடி யானது (என்னால்‌) மேலான பத்தியுடன்‌ விளக்கப்பட்டது; பாத்யம்‌, அர்க்‌,யம்‌ முதலியவைகளாலும்‌ பூஜிக்கப்பட்டது. விழுந்த அந்த ஜலத்தைப்‌ பார்த்து, நான்‌ (பரிஸூத்தப்‌ படுத்தத்‌) தகுந்தவனாயிருக்கிறேன்‌’ என்று நிஸ்சயித்து, சிவன்‌ தன்னைப்‌ பரிஸூத்‌,தப்படுத்திக் கொள்வதற்காக ஜடையின்‌ நடுவில்‌ தலையால்‌ தாங்கினான்‌. பிறகு, பல பதினாயிரக்கணக்கான வருஷங்கள்‌, உருத்திரன்‌ அப்படியே(அதை) விடவில்லை)

148-ஸ தேவ சோமயே தமக்ர ஆஸீத் -ஏகமேவ அத்விதீயம் –சரந்‌-உப. 6.2.1-(குழக்தாய்‌! (நாம ரூபங்களுடன்‌ காணப்படும்‌) இந்த உலகம்‌ ப்ரளயகாலத்தில்‌ (நாம ரூபங்களில்லாமையால்‌) ஒன்றாகவும்‌, (தன்னைப் போல்‌ வேறொன்றில்லாததால்‌) இரண்டற்றதாகவுமிருந்த “ஸத்‌” எனப்படும்‌ ப்‌,ரஹ்மமாகவே இருந்தது)

149-தம பரே தேவ -ஏகி பவதி –-ஸுபாலோபனிஷத்‌-2-([“தமஸ்‌” எனப்படும்‌ மூல ப்ரக்ருதி பரமாத்மாவுடன்‌ ஒடுங்குகிறது.])

150-ப்ரஹ்மாதி ஷூ ப்ரலீநேஷூ நஷ்டே லோகே சராசரே ஆபூத சம்ப்லவே ப்ராப்நே ப்ரலீநே ப்ரக்ருதௌ மஹான் ஏகஸ் திஷ்டதி விஸ்வாத்மா ஸ து நாராயண பிரபு –ஸாந்திபர்வம்‌. 210-24,-([பிரமன்‌ .’முதலியவர்களெல்லாம்‌ லயமடைந்து, சராசரமான “உலகெல்லாம்‌ நஸித்து, பஞ்ச பூதங்களும்‌ லயமடைந்து, மஹத் தத்வமானது மூல ப்ரக்ருதியிஸ்‌ லயமடை யும்போது ஸர்வாந்தர்யாமியான ஒருவனே இருக்கிறான்‌. அவனே ஸர்வ ஸ்வாமியான நாராயணன்‌)

151--ந ஹி பாலான சாமர்த்தியம் ருதே சர்வேஸ்வரம் ஹரிம் ஸ்தி தௌ ஸ்திதம் மகாப்ராஜ்ஞ பவத் யன்யச்ய கஸ்யசித் –([மஹாபு,த்‌,திமானே! ரக்ஷ்ணத்தில்‌ நிலைநிற்கும்‌ ஸர்வேஸ்‌வரனான ஹரியைத்‌ தவிர வேறு எவனுக்கும்‌ ரக்ஷிக்க ஸாமர்த்யம்‌ கிடையாதன்றோ)ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-21

152-ந ஸம்பதாம்‌ ஸமாஹாரே விபதாம்‌ விநிவர்த்தநே | ஸமர்த்தேரா த்‌ருஸ்யதே கஸ்சித்‌ தம்‌ விநா புருஷோத்தமம்‌ ॥|-பரம ஸம்ஹிதை [செல்வங்களைச்‌ சேர்த்துக் கொடுப்பதிலும்‌, ஆபத்துக்களை அடியோடு போக்குவதிலும்‌ மைர்த்தனாயிருப்பவன்‌ அந்தப்‌ புருஷோத்தமனைத்‌ தவிர வேறொருவனும்‌ காணப்படுகிறதில்லை)

153-154—மஹா பாராதே மார்க்கண்டேய சமாக்யானே-ஸ்ருஜதஸ் தஸ்ய தேவஸ்ய பத்மம் ஸூரிய சமப்ரதம் நா பேர் வினிஸ் ஸ்ருதம் தஸ்ய தத் ரோத் பன்ன பிதா மஹா ஸூ பர்ண வைகுண்ட சமவாதே-யத் தத் பத்ம பூத் பூர்வம் தத்ர ப்ரஹ்மா வ்யாஜாயத ப்ரஹ்மனாஸ் சாபி சம்பூதஸ் சிவா இதய வதார்ய தாம் சிவாத் ஸ்கந்தாஸ் சம்பபூவா ஏதத் சிருஷ்டி சதுஷ்டயம் –மஹாபாரத-([அந்த தேவன்‌ ஸ்ருஷ்டிக்கும் போது, ஸூர்யனை ஒத்த ஒளியை உடைய ஒரு தாமரை அவனுடைய உந்தியிலிருந்து வெளிப்பட்டது; அதில்‌ நான்முகன்‌ உண்டானான்‌–பகவானுடைய உந்தியிலிருந்து) யாதொரு தாமரை முன்‌ உண்டாயிற்றோ அதில்‌ பிரமன்‌ பிறந்தான்‌. பிரமனிடமிருந்தே சிவன்‌ பிறந்தானென்று அறியத்தக்கது)

155-ஸங்கைஸ்‌ ஸுராணாம்‌ திவி பூ,தலஸ்தைஸ்‌ ததா மநுஷ்யைர்‌ ககநே ச கே,சரை: | ஸ்துத: க்ரமாந்‌ ய: ப்ரககார ஸர்வதா மமாஸ்து மாங்கஃல்ய விவ்ருத்‌த,யே ஹரி: || -விஷ்ணுதர்மம்‌ ,-மங்கள்ய ஸ்தவம்-[ஸ்வர்க்க,த்தில்‌ தேவ ஸமூஹங்களாலும்‌, அப்படியே பூ,மி ப்ர தேஸ்த்திலிருக்கும்‌ மனுஷ்யர்களாலும்‌, ஆகாயத்தில்‌ ஆகாம ஸஞ்சாரிகளாலும்‌ துதிக்கப்பட்டவனாய்‌, எந்த பகவான்‌ திருவடிகளை வைத்தருளினானோ, (திரிவிக்ரமாவ தாரம்‌ செய்த) அந்த ஹரி எனக்கு எப்போதும்‌ மங்களங்‌களின்‌ வ்ருத்‌தியின் பொருட்டு ஆகட்டும்)

156-சந்திக்தே கலு நியாய ப்ரவர்த்ததே –-([ஸந்தே,ஹத்திற்கு இடமுள்ள விஷயத்திலன்றோ ந்யாயம்‌ ப்ரவர்த்திக்கும்‌ (செல்லுபடி யாகும்‌)

157-ஆஸுரீம்‌ யோநிமாபந்நா மூடா ஐந்மநி ஐந்மநி। மாமப்ராப்யைவ கெளந்தேய ததோ யாந்த்யத,மாம்‌ க,திம்‌॥ [அர்ஜுனா ஆஸாுரஸ்வபாவமுள்ள ஜன்மத்தை அடைந்து, ஜன்மந் தோறும்‌ மூடரர்களாய்‌, என்னை அடையாமலே, அதிலும்‌ கீழான கதிக்குப்‌ போகிறார்கள்‌.])ஸ்ரீ கீதை -16-20-

158-ந பூ,த ஸங்க,ஸம்ஸ்தாநோ தே,ஹோஃஸ்ய பரமாத்மந: | [இந்தப்‌ பரமாத்மாவினுடைய திருமேனி பஞ்ச பூ,தங்களு டைய சேர்க்கையால்‌ உண்டானதன்று-

159-ந தஸ்ய ப்ராக்ருதா மூர்த்திர்‌ மாம்ஸ மஜ்ஜாஸ்த்தி, ஸம்ப,வா | -வராஹபுராணம்‌ 14-41-[அவனுக்கு, மாம்ஸம்‌, மஜ்ஜை, எலும்பு இவைகளாலுண்‌டான ப்ரக்ருதி ஸம்பந்த முள்ள உடம்பு கிடையாது)

160-தம்‌ த்வா க்‌,ருணாமி தவஸ மதவீயாந்‌ ச ஷயந்தமஸ்ய ரஜஸ: பராகே [-ருக்‌-அஷ்டக 5-6-24-12-இந்த ரஜோ குணத்தை யுடைய மூலப்ரக்ருதிக்கு மேலான பரமபத,த்தில்‌ எழுந்தருளியிருக்கும்‌ தனி வீரரான அப்‌ படிப்பட்ட உம்மை ஸக்தியற்ற அடியேன்‌ துதிக்கிறேன்‌-

161-ஸ்வஸத்தா தாரகம்‌ ஸத்த்வம்‌ மிஸ்ர ஸத்த்வாத்‌ விலக்ஷணம்‌ –பாஞ்சராத்ர-[தன்னுடைய ஸத்தையினாலேயே (பிறருக்கு) தாரகமானதும்‌, ரஜஸ் தமோ குணங்களோடு சேர்ந்திருக்கும்‌ ஸத்வத்‌தைக் காட்டிலும்‌ வேறுப்பட்டதுமான ஸத்வம்‌)

162-(௮க்‌நே: ஸிவஸ்ய மாஹாத்ம்யம்‌ தாமஸேஷ” ப்ரகீர்த்யதே। ராஜஸேஷ ச மாஹாத்ம்யமதிகம்‌ ப்‌,ரஹ்மணோ விது; |! ஸாத்த்விகேஷ்வத, கல்பேஷு மாஹாத்ம்யமதிகம்‌ ஹரே: | தேஷ்வேவ யோக,ஸம்ஷித்‌,த. க,மிஷ்யந்தி பராங்கதிம்‌ ॥–மாத்ஸ்ய புராணம்‌ 53-63-[அக்னியினுடையவும்‌, சிவனுடையவும்‌ பெருமை தாமஸ கல்பங்களில்‌ சொல்லப்படுகிறது. ராஜஸ கல்பங்களில்‌ பிரமனுடைய பெருமை அதிகமாகச்‌ (சொல்லப்படுவதாக) அறிகிறார்கள்‌. ஸாத்விக கல்பங்களில்‌ ஹரியின்‌ பெருமை அதிகமாகச்‌ சொல்லப்படுகிறது, அவைகளிலேயே யோக; ஸித்‌,தி, அடைந்தவர்கள்‌ மேலான கதியை அடைகிறார்‌கள்‌-(கல்பம்‌–பிரமனுடைய தினம்‌)

163-மஹாத்மா நஸ்து மாம் பார்த தைவீம் ப்ரக்ருதிமாஸ்ரிதா: பஜந்த்யநந்யமநஸோ ஜ்ஞாத்வா பூதாதிமவ்யயம்-ஸ்ரீ பகவத்கீதை-9-13-(அர்ஜுனா! தேவ ஸ்வபாவத்துடன்‌ கூடிய மஹாத்மாக்‌களோவெனில்‌, ஸகல பூ,தங்களுக்கும்‌ காரணனாகவும்‌, குறைவற்றவனாகவுமிருக்கும்‌ என்னை அறிந்து வேறெதிலும்‌ மனம்‌ செலுத்தாதவர்களாய்‌, (என்னை) உபாஸிக்கிறார்கள்)

164-(அப்‌,ரவீத்‌ த்ரித,ஸஸ்ரேஷ்ட்டாந்‌ ராமோ தர்ம ப்‌ருதாம்‌ வர: | ஆத்மாநம்‌ மாநுஷம்‌ மந்யே ராமம்‌ தஸரதரத்மஜம்‌ ॥ –ரா யு 120-11.[நான்‌ என்னை மனுஷ்யனாகவும்‌, தயரதன்‌ பிள்ளை ராமனாகவும்‌ நினைக்கிறேன்‌”

165-நாஹம்‌ தே,வோ ந க,ந்த,ர்வோ ந யக்ஷோ நச தராநவ:।அஹம்‌ வோ பாந்த,வோ ஜாதோ நைதச்சிந்த்யமிதோ$ந்யதரா ॥[நான்‌ தே,வனல்லன்‌; க;ந்தருவனல்லன்‌; யக்ஷ்னல்லன்‌; அஸுரனுமல்லன்‌; நான்‌ உங்களுக்கு உறவினனாகப்‌ பிறந்‌ திருக்கிறேன்‌. என்‌ பிறப்பு இதைத் தவிர வேறுவிதமாக (உங்களால்‌) நினைக்கத் தக்கதல்ல)

166-அண்டாநாந்து ஸஹஸ்ராணாம்‌ ஸஹஸ்ராண்யயுதாநி ச। ஈத்‌ருஸாநாம்‌ ததர தத்ர கோடிகோடியதாநி ச ॥[*-வி-பு 2-7-27.அந்த ப்ரக்ருதியில்‌ இம் மாதிரியான பல கோடி நூறாயிரம்‌ அண்டங்கள்‌ இருக்கின்‌றன என்பது ஸாரார்த்தம்

167-(ஹிரண்மயே பரே லோகே விரஜம்‌ ப்‌,ரஹ்ம நிஷ்களம்‌ | தச்சு ப்ரம்‌ ஜ்யோதிஷாம்‌ ஜ்யோதிஸ் தத், யதாத்ம விதோவிது: ॥ –முண்ட;கோபனிஷத்‌ 2-2-10-[பொன் மயமான மேலான உலகத்தில்‌, ரஜோ குணமற்றதும்‌ அவயவங்களில்லாததுமான ப்ரஹ்மமிருக்கிறது. அது பரிஸூத்‌த,மானது. சோதிகளுக்கெல்லாம்‌ சோதியா யிருக்கும்‌ அதைப்‌ பரமாத்மஜ்ஞானிகள்‌ ௮றிகிறார்கள்)

168-யோ அ௮ஸ்யாத்‌ யக்ஷ: பரமே வ்யோமந்‌ |ஸோ அங்க, வேத, யதி, வா ந வேத,-தைத்திரீயப்‌,ராஹ்மணம்‌ 2-8-9-6- [எவனொருவன்‌ இவ் வுலகத்திற்கு அதிபதியாய்‌, பரமபத,த்‌ தில்‌ (எழுந்தருளி யிருக்கிறானோ), அவனே (தன்‌ பெருமையை) அறிவானோ, அறியானோ)

169-தே ஹ நாகம்‌ மஹிமாநஸ்‌ ஸ சந்தே யத்ர பூர்வே ஸாத்‌,யாஸ்‌ ஸந்தி தேவா:–69. புருஷஸூக்தம்‌- 1-18-[யாதொரு பரம பத,த்தில்‌ ஸாத்‌,யர்கள்‌ எனப்படும்‌ தேவர்‌கள்‌ இருக்கிறார்களோ, அந்தப்‌ பரமபத,த்தை அவர்கள்‌ மஹிமை யுடையவர்களாய்‌ அடைகிறார்கள்‌

170-அத்யர்க்காநல$,ப்தம்‌ தத்‌ ஸ்தாநம்‌ விஷ்ணோர்‌ மஹாத்மந: | ஸ்வயைவ ப்ரப,யா ராஜந்‌! துஷ்ப்ரேக்ஷம்‌ தே,வதாநவை: |… தத்ர கத்வா புநர் நேமம்‌ லோகமாயாந்தி பாரத॥–ஆரண்யபர்வம்‌ 136-18 & 23 [மஹாத்மாவான விஷ்ணுவினுடைய அந்த ஸ்தானம்‌ ஸுர்யனுடையவும்‌, அக்னியுடையவும்‌ ஒளியை விஞ்சியது. அரசனே! அது தன்னுடைய ஒளியினாலேயே தேவர்களாலும்‌, அஸாரர்களாலும்‌ காண அரியது. பரதவம்மத்தில்‌ உதித்தவனே ! அங்கு போய்‌ மறுபடியும்‌ இவ்வுலகுக்குத திரும்பி வருவதில்லை)

171-ஸ பரஸ்‌ ஸர்வ ஸக்தீநாம்‌ ப்‌,ரஹ்மணஸ்‌ ஸமநந்தரம்‌ | மூர்த்தம்‌ ப்‌,ரஹ்ம மஹா பாக, ஸர்வ ப்‌,ரஹ்ம மயோ ஹரி: ॥|[–விஃபு 1-22.63–பகவான்‌ (இவனுடைய உருவமான ஸம்ஸாரி ஜீவன்‌, முக்தன்‌, திவ்யமங்கள விக்ரஹம்‌ எனப்படும்‌) எல்லா ஸக்திகளைக் காட்டிலும்‌ மேலானவன்‌. “ப்ரஹ்மம்‌” என்று சொல்லப்படும்‌ ப,க,வானுடைய திருமேனி விஷ்ணுவுக்கு அந்தரங்கமானது. மஹா பாக்‌,யவானே! ப்ரஹ்மமென்று சொல்லப்படும்‌ எல்லாவற்றிற்கும்‌ அந்தர்யாமியாயிருப்பவன்‌ ஹரி.]

172-சாந்தாநந்தமஹாவிபூ,தி பரமம்‌ யத்‌ ப்‌,ரஹ்ம ரூபம்‌ ஹரே: மூர்த்தம்‌ ப்‌,ரஹ்ம ததோ 5பி தத்ப்ரியதரம்‌ ரூபம்‌ யத,த்யத்ஃபு,தம்‌ | யாந்யந்யாநி யதா ஸூக,ம்‌ விஹரதோ ரூபாணி ஸர்வாணி தாந்யாஹு: ஸ்வைரநுரூபரூபவிப,வைர்‌ காடோபகூடடாநி தே॥–சது:ல்லோகி-4- [தோஷங்களற்றதும்‌, அளவற்றதும்‌, பெரிதான உபய விபூ,திகளை உடையதும்‌, மேலானதும்‌, ப்ரஹ்ம ஸப்‌,த,த்தி னால்‌ சொல்லப்படுவதுமான ஹரியினுடைய ஸ்வரூபம்‌ யாதொன்று உண்டோ, அந்த ஸ்வரூபத்தையும் விட அவனுக்கு மிகவும்‌ பிரியமானதும்‌, மிகவும்‌ அற்புதமான தும்‌, “உருவமுள்ள ப்‌,ரஹ்மம்‌’என்று சொல்லப்படுவதுமான, எம்‌ பெருமானுடைய திஃவ்ய மங்கள விக்ரஹம்‌ யாதொன்று உண்டோ, திருவுள்ளமுகந்தபடி விளையாடுகிற அந்த ஸர்வேஸ்வரனுடைய மற்ற திருவுருவங்கள்‌ யாவையோ, அவை எல்லாவற்றையும்‌ உமக்கே அஸாதாரணமானவையும்‌, தகுந்தவையுமான ஸ்வரூப ரூப விஸேஷங்களாலே நன்றாக அணைக்கப் பட்டிருப்பவையாகச்‌ சொல்லுகிறாள்)

173-ப்‌.ரஹ்மா தக்ஷாதவ: காலஸ்‌ ததை,வாகி,லஜந்தலவ: | விபூ,தயோ ஹரேரேதா ஜக,தஸ்‌ ஸ்ருஷ்டி ஹேதவ: ॥ -வி-பு 1-22.31.[பிரமனும்‌, தக்ஷன்‌ முதலிய ப்ரஜாபதிகளும்‌, காலமும்‌, அம் மாதிரியே எல்லா ஜந்துக்களும்‌ உலகை ஸ்ருஷ்டிப்ப தற்குக்‌ காரணமாயிருக்கும்‌ ஹரியின்‌ ஸரீரங்கள்

174-யத்ஞ்சித்‌ ஸ்ருஜ்யதே யேந ஸத்த்வ ஜாதேந வை த்ஸிஜ। தஸ்ய ஸ்ருஜ்யஸ்ய ஸம்பூ,தெள தத்‌ ஸர்வம்‌ வை ஹரேஸ் தநு: ॥ -வி-பு 1-22-38.[ப்ராஹ்மண | ஒரு ப்ராணியால்‌ யாதொன்று ஸ்ருஷ்டிக்கப்‌ படுகிறதோ, ஸ்ருஷ்டிக்கப்படும்‌ அதை ஸ்ருஷ்டிக்கும்‌ விஷயத்தில்‌ (ஸ்ருஷ்டி செய்யும்‌) அவை யெல்லாம்‌ ஹரியினுடைய ஸரீரமாகின்‌ றன)

175-ஸர்வஸ்ய வஸீ ஸர்வஸ்யேசாநஸ்‌ ஸர்வஸ்யாது, பதி: ‘–ப்ருஹதாரண்யகம்‌ 6-4-22, [எல்லாவற்றையும்‌ தன்‌ வத்தில்‌ நடத்துபவன்‌; எல்லாருக்கும்‌ ஈஸ்வரன்‌; எல்லாருக்கும்‌ அதி,பதி.]

176-ஸஸுராஸுரக,ந்த,ர்வம்‌ ஸயக்ஷோரக,ராக்ஷ்ஸம்‌ |ஜகத்‌ வஸே வர்த்ததேத,ம்‌ க்ருஷ்ணஸ்ய ஸசராசரம்‌ || [–ஸஹஸ்ரநாமாத்யாய-தேவர்‌, அஸுரர்‌, கூந்த ர்வர்களோடு கூடியதும்‌, யக்ஷர்‌, நாகர்‌, ராக்ஷ்ஸர்களுடன்‌ சேர்ந்ததும்‌, அசையக் கூடியதும்‌, அசையக் கூடாததும்‌ சேர்ந்ததுமான இந்த உலகம்‌ கிருஷ்ணனுடைய வஸத்திலிருக்கிறது)

177-(இமெள ஸ்ம முநிஸார்தூ,ல! கிங்கரெள ஸமுபஸ்தி,தெள।| ஆஜ்ஞாபய யதேஷ்டம்‌ வை ஸமாஸநம்‌ கரவாவ இம்‌ | [-ரா-பா- 31-4,முநி ஸ்ரேஷ்ட,ரே ! நாங்களிருவரும்‌ ( தேவாீருக்குக்‌ ) கைங்கர்யம்‌ செய்பவர்களாக அருகில்‌ இருக்கிறோம்‌, (தேவரீருடைய) இஷ்டப்படி கட்டளை யிட வேண்டும்‌; (தேவரீருடைய) எந்தக் கட்டளையை நாங்கள்‌ செய்யவேண்டும்‌)

178-ஆஜ்ஞாபய மஹா பாஹோ! ப்ரூஹி யத்தே விவக்ஷிதம்‌ | கரிஷ்யாமி ஹி தத்‌ ஸர்வம்‌ யத்த்வம்‌ வக்ஷ்யஸி பாரத ॥–பாரதம்‌-|நீண்ட கைகளை உடையவனே | நீ சொல்ல விரும்பியதைச்‌ சொல்‌; கட்டளையிடு. தர்ம புத்தீரனே! நீ சொல்லுவது எதுவோ அது முழுவதும்‌ நான்‌ செய்கிறேன்‌

179-ஸ்வயமேவ ஹரிர்‌ வவரே விபர பாதாவநே ஜநம்‌-பாரதம்‌-[ஹரியானவர்‌, ப்‌ராஹ்மணர்களுடைய திருவடியை விளக்குவதைத்‌ தாமாகவே ஸ்வீகரித்தார்‌)

180-அநந்யாத,நத்வம்‌ தவ கில ஜகுர்‌ வைதிக: பராத,நம்‌ த்வாம்‌ து ப்ரணத பரதந்த்ரம்‌ மநுமஹே।| உபாலம்போ அயம்‌ போ ஸ்ரயதி ப,த ஸார்வஜ்ஞ்யமபி தே யதோ தோஷம்‌ ப,க்தேஷ்விஹ வரத, நைவாகலயஸி॥ –வரதராஜஸ்தவம்‌-20-[வரதனே! வேத,வாக்கியங்கள்‌ உனக்குப்‌ பிறர்க்கு வஸப்‌ பட்டிராமையாகிய ஸ்வாதந்த்ரியத்தைப்‌ பேசியுள்ளன; நாங்களோ வெனில்‌ அடியவர்களுக்கு ஆட்பட்டவனான.. உன்னைப்‌ பரதந்த்ரனாகவே நினைக்கிறோம்‌. இம் மாதிரியான நிந்தை, உன்னுடைய ஸர்வஜ்ஞத்வத்தையும்‌ பற்றுகிறது; ஆஸ்சர்யம்‌ ! ஏனெனில்‌; இவ் வுலகிலுள்ள பக்தர்களிடத்‌ தில்‌ நீ குற்றத்தைச்‌ சிறிதும்‌ பார்க்கிறா யில்லை யன்றோ)-

181-ப்ரியவாக்‌, தராநமீலஸ்ச வதாந்ய: பரிரேத்தித: [இனிமையாகப்‌ பேசுபவனும்‌, கொடையாளியும்‌ “வதாந்யன்‌’ என்று சொல்லப்படுகிறான்‌

182-ய ஆத்மதா பலதா:-யஜு-காடகம்‌ 7-5-36. [எந்தப்‌ பரமபுருஷன்‌, தன்னையும்‌ கொடுத்துத்‌ தன்னை அனுபவிக்கத்தகுந்த மநோ பலத்தையும்‌ கொடுக்கிறான்‌)

183-அத; மத்‌ யமகக்ஷ்யாயாம்‌ ஸமாக,ச்சத்‌ ஸுஹ்ருஜ் ஜநை: | ஸ ஸர்வாநர்த்திநோ த்‌,ருஷ்ட்வா ஸமேத்ய ப்ரதிநந்த்‌,ய ச ॥-ரா-௮ 16-27. [அந்த ஸ்ரீராமன்‌ யாசிப்பவர்களைக்‌ கண்டு, (அவர்களை) எதிர் கொண்டு ஆநந்தப் படுத்திப்‌ பிறகு நடுக்கட்டில்‌ நண்பர்களுடன்‌ சேர்ந்தார்‌

184-(உதாராஸ்‌ ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம்‌-கீதை 7-18.[இவர்கள்‌ எல்லாரும்‌ உதாரமானவர்களே; ஜ்ஞாநியோ எனக்கே ஆத்மா (தாரகன்‌) என்று என்‌ ஸித்‌,தாந்தம்‌)

185-ஜிதந்தே ஸ்தோத்ரம்‌ (1-5)-

186-187-(கோந்வஸ்மிந்‌ ஸாம்ப்ரதம்‌ லோகே குணவாந்‌ கஸ்ச வீர்யவாந்‌।… நாரத;– ..இக்ஷ்வாகு வம்ஸ ப்ரப,வோ ராமோ நாம குணாகர: |[வால்மிகி:– “இப்போது இவ்வுலகில்‌ எவன்‌ குணவானா யிருக்கிறான்‌? எவன்‌ வீர்யவானாயிருக்கிறான்‌?…… ”நாரதரர்‌: இக்ஷ்வாகு வம்ஸத்தில்‌ பிறந்தவனான ராமனென்பவன்‌ குணங்களுக்கெல்லாம்‌ இருப்பிடமா யிருப்பவன்)(பபூவ குணவத்தர:, ஸ ஹி தேவைருதீர்ணஸ்ய ராவணஸ்ம வதார்த்தி,பி; | அர்த்திதோ மாநுஷே லோகே ஜஜ்ஜே விஷ்ணுஸ்‌ ஸநாதந: ||[-ரா-பரா 1-2 & 8,-கொழுத்தவனான ராவணனுடைய வதத்தை விரும்பும்‌ தேவர்களால்‌ பிரார்த்திக்கப்பட்டவனும்‌, பழமையானவனுமான விஷ்ணு மனுஷ்ய லோகத்தில்‌ பிறந்தான்‌; (அப்படி அவதாரம்‌ செய்த) அந்த: ராம பிரானே (தன்‌ பராவஸ்தை,யைக் காட்டிலும்‌) குணத்தில்‌ சிறந்தவனானான்‌)

188-(யஜ்ஜாதயோ யாத்‌,ருமோ யத் ஸ்வvவ: பாதச்சாயாம்‌ ஸம்ஸ்ரீதோ யோ$பி கோஅபி । தஜ்ஜாதீயஸ்‌ தாத்‌,ருஸஸ்‌ தத்ஸ்வபாவ: ஸ்லிஷ்யத் யேநம்‌ ஸுந்த,ரோ வத்ஸலத்வாத்--ஸுந்தர பாஹுஸ்தவம்‌-30-[தன்‌ திருவடி நிழலில்‌ ஒதுங்கினவன்‌ எவனாயிருந்தாலும்‌, அவன்‌ எந்த ஜாதியை உடையவனாயிருக்கிறானோ, எந்த ஆசாரத்தை உடையவனோ, எந்த குணங்களை உடையவனோ, அந்த ஜாதியையும்‌, அந்த ஆசாரத்தையும்‌, அந்த குணங்களையும்‌ உடையவனாய்‌, அவனிடம்‌ வாத்ஸல்யத்தினால்‌ அவனுடன்‌ ஸுந்தரராஜனாகிய பகவான்‌ சேருகிறார்‌.]

189-(தத்‌,வை ததாஸ்து கதமோ5யமஹோ ஸ்வபாவோ யாவாந்‌ யதாவித கு,ணோ பஜதே பவந்தம்‌। தாவாம்ஸ்தத;வித,குணஸ்‌ தததீந வ்ருத்தி: ஸம்ஸ்லிஷ்யஹி த்வமிஹ தேந ஸமாந த,ர்மா।॥ ஸ்ரீவைகுண்ட ஸ்த–66-[முன்‌ சொன்னது அப்படியே இருக்கட்டும்‌, இந்த ஸ்வ பாவம்‌ எவ்வளவு ஆஸ்சர்யமானது | (அதாவது:–) தேவரிரை எவனொருவன்‌ எம்மாதிரியான ஸ்வரூபத்தையும்‌, குணத்தையும்‌ உடையவனாய்‌ உம்மிடம்‌ பத்தி செய்கிறானோ, அவனோடு அம் மாதிரியான ஸ்‌வரூபத்தையும்‌,குணங்‌களையும்‌ உடையவனாயும்‌, அவனுக்கு வஸப்பட்ட எல்லா வ்யாபாரங்களையும்‌ உடையவனாகவும்‌, அவனோடொத்த ஆசாரத்தை உடையவனாகவும்‌ இங்கேயே நீ சேர்கிறாய்)

190-ஸர்வேஷாமேவ மெளசாநாம்‌ அர்த்த மெளசம்‌ பரம்‌ ஸ்ம்ருதம்‌ | யோரர்த்தே, ஸூசிஸ்‌ ஸ ஹி ஸூதிர்‌ ந ம்ருத்‌வாரி ஸூசி: ஸூசி: || 1மநுஸ்-5-106-[எல்லா ஸூத்திகளுக்குள்ளும்‌, பொருள்‌ விஷயத்தில்‌ ஸூத்‌,தனாயிருக்கையே மேலானதாக எண்ணப்படுகிறது; பொருள்‌ விஷயத்தில்‌ எவன்‌ ஸூத்‌,த,னாயிருக்கிறானோ, அவனே ஸாத்‌,தன்‌. மண்ணாலும்‌, தண்ணீராலும்‌ மட்டும்‌ ஸூத்தி செய்து கொள்ளுபவன்‌ ஸூத்‌தனல்லன்‌)

191-பாவநஸ்‌ ஸர்வலோகாநாம்‌ த்வமேவ ரகு,நந்த;ந -ரா.உத்‌. 82-9-[ரகுநந்தனா! நீயே எல்லா உலகங்களையும்‌ பரிஸூத்‌,த,ப்‌ படுத்துபவன்‌)

192-(ப.க்திரஷ்டவிதரா ஹ்யேஷா யஸ்மிந்‌ ம்லேச்சே,5பி வர்த்ததே | ஸ விப்ரேந்த்‌,ரோ முநி: ஸ்ரீமாந்‌ ஸ யதிஸ்‌ ஸ ச பண்டி,த:।| மயா பூஜ்யஸ்‌ ஸதா சாஸெள மத்‌,ப,க்த: ஸம்வபசோ$பி ய:। தஸ்மை தேயம்‌ ததோ க்‌,ராஹ்யம்‌ ஸ ச பூஜ்யோ யதா ஹ்யஹம்‌ ॥ காருட புராணம்‌ 219-6-9-[இம் மாதிரியான எட்டு விதமான பக்தியானது எந்த மிலேச்சனிடமும்‌ இருக்கிறதோ, அவனே (பகவானை) மனனம்‌ செய்யும்‌ பிராஹ்மண ஸ்ரேஷ்டடன்‌; அவனே கைங்கர்ய லக்ஷ்மியை உடையவன்‌; அவனே ஸந்யாஸி; அவனே பண்டிதன்‌; சண்டராளனா யிருந்த போதிலும்‌ எவனொருவன்‌ என்‌ ப,க்தனோ அவன்‌ என்னுடன்‌ எப்போதும்‌ பூஜிக்கத் தக்கவன்‌. அவனுக்கு (ஜ்ஞானத்தைக்‌) கொடுக்கலாம்‌; அவனிடமிருந்து (ஜ்ஞானத்தைக்‌) கொள்ளலாம்‌; என்னைப் போல்‌ அவனும்‌ பூஜிக்கத்தக்கவன்)

193-நைவ தம்ஸாந்‌ ந மஸகாந்‌ ந கீடாந்‌ ந ஸரீஸ்ருபாந்‌ | ராகவோஃபநயேத்‌ காத்ராத்‌ த்வத்‌, க,தே நாந்தராத்மநா ॥ -ரா-ஸு 96-42,[உன்னிடம்‌ மனம்‌ லயித்திருப்பதால்‌, ராக,வன்‌ ஈக்களையும்‌, கொசுக்களையும்‌, புழுக்களையும்‌, பாம்புகளையுங் கூட உடம்பிலிருந்து தள்ளுவதில்லை)

194-(சிரம்‌ ஜீவதி வைதே,ஹீ யதி, மாஸம்‌ த,ரிஷ்யதி। ந ஜீவேயம்‌ க்ஷணமபி விநா தாமஸி தேக்ஷணாம்‌ | -ராஸு 66.10,[ஸீதை ஒரு மாதம்‌ தரித்திருப்பாளாகில்‌, வெகுகாலம்‌ * பிழைத்திருந்தவளாகிறாள்‌. கறுத்த கண்ணை உடைய அவளை விட்டு ஒரு க்ஷண நேரமும்‌ நான்‌ பிழைத்திருக்க மாட்டேன்‌.])

195-அவக்‌ராஹ்யார்ணவம்‌ ஸ்வப்ஸ்யே ஸெளமித்ரே ! ப,வதா விநா | கத,ஞ்சித்‌ ப்ரஜ்வலந்‌ காம: …’ ஸ மாம்‌ ஸுப்தம்‌ ஜலே த,ஹேத்‌॥ -ரா-யு 5-9.[லக்ஷ்மணா! (உன்னைப்‌ பார்ப்பதால்‌ ஸீதையின்‌ நினைவு வருகிறபடியால்‌) உன்னை விட்டுவிட்டு ஸமுத்ரத்தில்‌ இறங்கித்‌ தூங்கப் போகிறேன்‌. மிகவும்‌ ஜ்வலிக்கும்‌ அந்தக்‌ காமாக்னியானது ஜலத்தில்‌ தூங்கும்‌ என்னைக்‌ கஷ்டப்‌ பட்டே தஹிக்கும்)

196-வ்யசநேஷூ மனுஷ்யாணாம்ப்‌ருஸம்‌ பவதி துக்கத: | உத்ஸவேஷு-ச ஸர்வேஷு பிதேவ பரிதுஷ்யதி | [-ரா-அ 2-40.-(ராமன்‌) மனுஷ்யர்களுடைய துக்கங்களில்‌, (அவர்களைக்‌ காட்டிலும) அதி,கமாக துன்புறுகிறான்‌. (அவர்களுடைய) எல்லா உத்ஸவங்களிலும தந்‌தையைப் போல்‌ ஆனந்தப்‌ படுகிறான்‌)

197-(தேஷாம்‌ ஜ்ஞாநீ நித்ய யுக்த: ஏக ப,க்திர்‌ விஸிஷ்யதே | ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோ$த்யர்த்த,மஹம்‌ ஸ ச மம ப்ரிய:।| -கீதை 1-17.-[(என்னுடன்‌) எப்போதும்‌ சேர்ந்திருப்பவனும்‌, என்னிடம்‌ மட்டும்‌ அன்பு. செய்பவனுமான ஜ்ஞானி அந்த நால்வருள்‌ மேலானவன்‌, நான்‌ ஜ்ஞானிக்கு மிகவும்‌ பிரியனன்றோ. (அப்படியே) அவனும்‌ எனக்குப்‌ பிரியமானவன்‌.)

198-(இயம்‌ ஸா யத்க்ருதே ராமஸ் சதுர்ப்பி,: பரிதப்யதே। காருண்யே நாந்ரு ஸம்ஸ்யேந ஸோகேந மத,நேந ச॥ ஸ்த்ரீ ப்ரணஷ்டேதி காருண்யா தாஸ்ரிதேத்‌. யாந்ரும்ஸ்யத: | பத்நீ நஷ்டேதி ஸோகேந ப்ரியேதி மத,நேந ச-–ரா-ஸு 15.49 & 50. ஹநுமான்‌ வாக்யம்‌-[எவளுக்காக ஸ்ரீராமபிரான்‌ கருணை, இரக்கம்‌, சோகம்‌, காமம்‌ என்னும்‌ நான்கினாலும்‌ வருந்துகிறாரோ, அந்த ஸீதை இவளே. (ஸ்ரீராமபிரான்‌) *ஒரு பெண் பிள்ளை அபஹரிக்கப்‌ பட்டாளே’ என்னும்‌ கருணையினாலும்‌, * நம்மைச்‌ சேர்ந்தவள்‌ (அபஹரிக்கப்பட்டாளே) என்னும்‌ இரக்கத்தினாலும்‌, நம்முடைய மனைவி நஷ்டமாயினளே” என்னும்‌ மோகத்‌தினாலும்‌, ‘ நமக்கு இனியவள்‌ (அபஹரிக்கப்பட்டனளே): எனனும்‌ காமத்தினாலும்‌ (வருந்துகிறார்)

199-(ஸ பித்ரா ச பரித்யக்தஸ்‌ ஸுரைஸ்ச ஸ மஹர்ஷிபி;: | த்ரீந்‌ லோகாந்‌ ஸம்பரிக்ரம்ய தமேவ ஸரணம்‌ ௧,த: || ஸ தம்‌ நிபதிதம்‌ பூமவ் ஸரண்ய; ஸரணாக,தம்‌ | வதார்ஹமபி காகுத்ஸ்த;: க்ருபயா பர்யபாலயத்‌ ॥ ரா-ஸு 38-34 & 35 [அந்தக்‌ காகாஸுரன்‌, தந்தையினாலும்‌, ( தாயினாலும்‌, ) மஹர்ஷிகளுடன்‌ கூடிய தேவர்களாலும்‌ கைவிடப்பட்ட வனாய்‌, மூன்று உலகங்களையும்‌ சுற்றித் திரிந்து அந்த ராமனையே ஸரணமடைந்தான்‌. ஸரணமடைந்தவனும்‌, பூமியில்‌ விழுந்தவனுமான அவனை, கொல்லத் தகுந்தவனா யிருந்த போதிலும்‌, ஸரணமடையத் தகுந்தவனான ஸ்ரீ ராம பிரான்‌ (தன்‌) அருளாலே காப்பாற்றினார்)

200-(மித்ர பாவேந ஸம்ப்ராப்தம்‌ ந த்யஜேயம்‌ கதஞ்சந | தோஷோ யத்‌,யபி தஸ்ய ஸ்யாத்‌ ஸதா மேதத கர்ஹிதம்‌ ॥ -ராஃயு 18-9.[நண்பனுடைய பாவத்தோடு நெருங்கின இவ் விபீ,ஷணனை ஒரு பொழுதும்‌ கைவிட மாட்டேன்‌. அவனிடம்‌ தோஷமிருந்தாலும்‌ இருக்கட்டுமே. நல்லோர்களுக்கு இவனை ஸ்வீகரிப்‌பது நிந்திக்கத் தக்கதல்ல)

201- 44-வது எண்ணைப்‌ பார்க்கவும்

202-ஸமோஹம்‌ ஸர்வபூ,தேஷு ந மே த்‌,வேஷ்யோ $ஸ்தி கஸ்சந–கீதை 9-29,-என்னை ஆஸ்ரயிக்கும்‌ விஷயத்தில்‌) நான்‌ எல்லா பூ,தங்‌ களுக்கும்‌ ஸமமாயிருப்பவன்‌; எனக்கு ஒருவனும்‌ வெறுக்‌கத் தக்கவனல்லன்‌)

203-(அபி,ஷிச்ய ச் லங்காயாம்‌ ராக்ஷஸேந்த்‌,ரம்‌ விபீ,ஷணம்‌ | க்ருதக்ருத்யஸ் தத,” ராமோ விஜ்வர: ப்ரமுமோத, ஹ॥[லங்கையில்‌ ராக்ஷஸ ஸ்ரேஷ்டனான விபீஷணனை அபி,ஷேகம்‌ செய்து தன்‌ காரியத்தைச்‌ செய்து முடித்தவனான ராமன்‌, கவலை நீங்கப் பெற்று ஸந்தோஷித்தான்)நன்றி புரியுபவனாய் –தனக்கு செய்ய வேண்டிய க்ருத்யம் ஒன்றும் இல்லாதவனாய்-ஆஸ்ரித ரக்ஷணமே விரதமாகக் கொண்டவன்

204-குருஷ்வ மாமநுசரம்‌ வைதர்ம்யம்‌ நேஹ வித்‌,யதே । க்ருதார்த்தே 5ஹம்‌ ப,விஷ்யாமி தவ சார்த்த; ப்ரகல்பதே॥ -ரா-அ 31-24, லக்ஷ்மண வாக்யம்‌[என்னைக்‌ கைங்கர்ய பரனாக வைத்துக் கொள்ளும்‌. இதில்‌ தவறொன்றுமில்லை. ( இதனால்‌ ) நானும்‌ தன்‌யனாவேன்‌. உம்முடைய காரியமும்‌ நடைபெறும்‌.])

205-அவிஜ்ஞாதா சஹஸ்ராம் ஸூ – ஸஹஸ்ர நாம-(அடியார்களின்‌ தேரஷங்களைக்‌ காண்பதில்‌) ஞானமற்றவனாயிருப்பவன்‌ ; (அடியார்களின்‌ நன்மைகளைக்‌ காண்பதில்‌) அளவற்ற ஞானமுடையவனாயிருப்பவன்‌)

206-(கோவிந்தே,தி யதா க்ரந்த;த்‌. க்ருஷ்ணா மாம்‌ தூர வாஸிநம்‌ | ருணம்‌ ப்ரவ்ருத்‌,த,மிவ மே.ஹ்ருதயாந்நாபஸர்ப்பது || -பாரதம்‌ உத்யோக பர்வம்‌ 47-22[திரெளபதி,யானவள்‌ வெகு தூரத்திலிரு்த என்னைக்‌ குறித்து ‘கோவிந்தா ! என்று கூக்குரலிட்டது ( வட்டியினால்‌ ) வ்ருத்‌தி யடைந்த கடனைப் போல்‌ என்னுடைய ஹ்ருத்‌யத்திலிருக்து அகலுகிறதில்லை)

207-தம்‌ து மே ப்‌,ராதரம்‌ த்‌,ரஷ்டும்‌ பரதம்‌ த்வரதே மந: | மாம்‌ நிவர்த்தயிதும்‌ யோ5ஸெள சித்ரகூடமுபாக;த: ॥ ஸிரஸா யாசதஸ்தஸ்ய வசநம்‌ ந க்ருதம்‌ மயா॥-ரா-யு 124-19.[என்னைத்‌ திருப்பி யழைத்துச் செல்ல எவனொருவன்‌ சித்ர கூடத்திற்கு வந்தானோ, அந்த என்னுடைய தம்பியாகிய பரதனைப்‌ பார்க்க என் மனம்‌ விரைகிறது. தலையாலே யாசித்த அவனுடைய வார்த்தை என்னால்‌ செய்யப்பட வில்லை)

208-(நாம ரூபஞ்ச பூ,தாநாம்‌ க்ருத்யாநாஞ்ச ப்ரபஞ்சநம்‌ | வேத,ஸப்‌,தே,ப்‌,ய ஏவாதெ,ள தேவா$,நாம்‌ சகார ஸ: ॥| –வி-பு 1-5-63.[தே,வர்கள்‌ முதலிய ஜீவ ராசிகளுடைய பெயரையும்‌, உருவத்தையும்‌, வைதிக க்ரியைகளுடைய விவரணத்தையும்‌ ஆதியில்‌ பிரமன்‌ வேத,ஸப்‌,த,ங்களிலிருந்து (அறிந்தே) செய்தான்‌.])

209-(ஸைஷாநந்த,ஸ்ய மீமாம்ஸா ப,வதி–௮ந்த இந்த ப்‌, ரஹ்‌ மானந்த,த்தினுடைப விசாரம்‌ செய்யப்படுகிறது; யுவா ஸ்யாத்‌ ஸாது, யுவாத்யாயக;। ஆஸிஷ்டோ த்ரடிஷ்டோ ப,லிஷ்ட,;--யெளவனமுள்ளவனாகவும்‌, (தன்போல்‌) நல்ல யெளவனமுடையவர்களுக்கு ௮த்‌,யயனம்‌ செய்விப்பவனாக வும்‌, ஸக்தியுள்ளவனாகவும்‌, வீர்யமுள்ளவனாகவும்‌, பல முள்ளவனாகவும்‌ (ஒரு மனிதன்‌) இருக்கட்டும்‌. தஸ்யேயம்‌ ப்ருதி,வீ ஸர்வா வித்தஸ்ய பூர்ணா ஸ்யாத்‌–ஸர்வைஸ்வர்யமும்‌ நிரம்பிய பூமி முழுவதும்‌ அவனுக்கு வமப்பட்டதாக இருக்கட்டும்‌. ஸ ஏகோ மாநுஷ ஆநந்த: இது ஒரு மனுஷ்யனுடைய ஆனந்தம்‌, ஸ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய--ப்‌,ரஹ்ம நிஷ்ட,னும்‌, ஸம்ஸாரத்தில்‌ ஆசையற்ற வனுமான முக்தனுக்கும்‌ (இந்த ஆனந்த,ம்‌ உண்டு,) தேயே ஸதம்‌ மாநுஷா ஆநந்தா:। ஸ ஏகோ மநுஷ்ய கந்தர்வாணாமாநந்த;:– அப்படிப்பட்ட நூறு மனுஷ்யர்‌ களுடைய ஆனந்த,ங்கள்‌ ஒரு மனுஷ்ய கந்தர்வனுடைய ஆனந்த,மாகிறது …… தே யே மதம்‌ ப்ரஜாபதேராநந்தா: | ஸ ஏகோ ப்‌,ரஹ்மண ஆநந்த;:-—தைத்திரீயம்‌ ஆனந்த,வல்லி-8-அப்படிப்பட்ட நூறு ப்ரஜாபதியின்‌ ஆனந்த,ங்கள்‌ ஒரு ப்ரஹ்மானந்த,மாகும்)

210-(த்ரய்யுத்‌, யதா தவ யுவத்வ முகைர்‌ குணெளகை : ஆநந்த,மேது, தமியாநிதி ஸந்நியந்தும்‌ | தே யே ஸதந்த்விதி பரம்பரயா ப்ரவ்ருத்தா நைவைஷ வாங் மநஸகேரசர இத்யுதாஹ ॥ ஸ்ரீவைகுண்ட ஸ்தவம்‌-51-[யெளவனம்‌ முதலிய கு,ண க,ணங்களால்‌ வ்ருத்‌,தி,யடைந்த உன்னுடைய ஆநந்த,த்தை “இவ்வளவு! என்று அளவிடு வதற்கு ஆரம்பித்து *தே யே ஸதம்‌” என்று படிப்படியாகப்‌ படித்த வேதம்‌, (அதற்குப்‌ பின்‌) *இவன்‌ வாக்குக்கும்‌ மனத்துக்கும்‌ எட்டாதவன்‌’ என்று உரக்கக்‌ கூவிற்று)

211-“அஸ்மிந்நஸ்ய ச தத்யோகம் ஶாஸ்தி”-1-1-20-(வேதம் ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஆனந்தமாகக் கூடியிருக்கும் ஆனந்தத்தை விளக்குகிறது)

212-(ஸங்கல்பாதே;வ தச்ச்‌,ருதே:–ப்ர-ஸூ 4-4-8, [ஸங்கல்பத்தாலேயே (முக்தன்‌ ஸ்ருஷ்டிக்கிறான்‌),

213-(ஸ யதி, பித்ரு லோக காமோ ப,லதி। ஸங்கல்பா தேவாஸ்ய பிதரஸ் ஸமுத்திஷ்ட,ந்தி |[-சாந்‌-உ -3-2-1.அந்த முக்தன்‌ (தன்‌ பழைய பிறப்புகளிலிருந்து) பித்ரு வர்க்கங்களைக்‌ காண விரும்பினானாகில்‌ அந்தப்‌ பித்ரு வர்க்‌கங்கள்‌ இவனுடைய ஸங்கல்பத்தாலேயே கிளம்பி வருகின்றன.])

214-ஜகத் வியாபார வர்ஜம் ப்ரகரணாத சன்னிஹி தத்வாச்ச -ப்ரஹ்ம சூத்ரம் -4-4-17-(முக்தனுடைய ஐஸ்வர்யம்‌) ஜகத்‌ வ்யாபார மில்லாத (ப்ரஹ்மானுபவ மாத்ரமே ) ; ப்ரஹ்மத்தைக்‌ குறித்தே ஐகத்‌, வ்யாபாரம்‌ சொல்லப்படுவதால்‌ ; (ஜகத்‌,வ்யாபாரத்‌தில்‌ முக்தனுக்கு) ஸந்நிதானம்‌ இல்லாததாலும்)-

215-போக மாத்ர சாம்ய லிங்காச்ச -ப்ரஹ்ம சூத்ரம் -4-4-21-(ப்‌ரஹ்மானுப,வமாகிற) போகத்தில்‌ மட்டும்‌ ஸாம்யத்‌தைச்‌ சொல்லும்‌ அடையாளத்தினாலும்‌ ( முக்தனுக்கு ) ஜகத் வ்யாபார மில்லை)

216-இதம் குரு இதம் மா கார்ஷீ -([இதைச்‌ செய்‌; இதைச்‌ செய்யாதே)

217-ப்‌,ரஹ்மவாதி,நோ வத,ந்தி –ஸ்வேதாம்வதரோபனி-1-1-[ப்‌,ரஹ்மவாதி,கள்‌ சொல்லுகிறார்கள்)

218-(அத; யதி, தே கர்ம விசிகித்ஸா வா வ்ருத்த விசிகித்ஸா வா ஸ்யாத்‌ |. யே தத்ர ப்‌,ராஹ்மணாஸ்‌ ஸம்மர்ஸிந:| யுக்தா ஆயுக்தா:। அலூக்ஷா தர்ம காமா: ஸ்யு:। யதா தே தத்ர வர்த்தேரந்‌। ததா தத்ர வர்த்தேதா:।[–தைத்‌ 1-11–உனக்குக்‌ கர்மத்திலேயோ, ஆசாரத்திலேயோ ஸந்‌தேஹம்‌ ஏற்பட்டதாகில்‌, விசாரம்‌ செய்வதில்‌ நிபுணர்‌களாகவும்‌, வேத,ஸாஸ்த்ரங்களில்‌ ஈடுபட்டவர்களாகவும்‌, எல்லா விஷயங்களிலும்‌ ஸமர்த்த,ர்களாகவும்‌, காம க்ரோ தாதிகள்‌ அற்றவர்களாகவும்‌, தர்மத்தில்‌ விருப்பமுள்ள வர்களாவுமிருக்கும்‌ ப்‌ ராஹ்மணர்கள்‌ அவ் விஷயத்தில்‌ எப்படி நடக்கிறார்களோ, அப்படியே நீயும்‌ அவ் விஷயத்தில்‌ நடப்பாயாக.

219– 33-வது ப்ரமாணத்தைப்‌ பார்க்கவும்

220-தமேவ தீரோ விஜ்ஞாய ப்ரஜ்ஞாம்‌ குர்வீத ப்‌,ராஹ்மண-ப்;ரூுஹதராரண்யகம்‌-6-4-21-ஜ்ஞான முடையவனான ப்ராஹ்மணன்‌ அந்தப்‌ பரமாத்‌மாவை (ஸ்ரவண மனனங்களாலே அறிந்து த்யானம்‌ செய்யக் கடவன்)

221-ஓமித்யேவ த்‌,யாய தாத்மாநம்‌-முண்டகோபனிஷத்‌ 2-2-6- [பரமாத்மாவை *ஓம்‌’ என்றே த்யானம்‌ செய்யுங்கள்‌.

222-(ஸ்ருதி: ஸ்ம்ருதிர்‌ மமைவாஜ்ஞா யஸ்தாமுல்லங்க்‌ய வர்த்ததே | ஆஜ்ஞாச்சேதீ, மம த்‌ரோஹீ மத்‌,ப,க்தோ5பி ந வைஷ்ணவ: || விஷ்ணு தர்மம்‌-6-31-[வேத,மும்‌,ஸ்ம்ருதியும்‌ என்னுடைய ஆஜ்ஞையே, எவனொருவன்‌ அதை மீறி நடக்கிருனோ, அவன்‌ என்‌ ஆஜ்ஞையை மீறினவன்‌; எனக்கு த்‌,ரோஹம்‌ செய்தவன்‌; என்னுடைய ப,த்தனாயிருந்த போதிலும்‌ (அவன்‌) வைஷ்ணவனல்லன்0

223-அநாத்மந்யாத்மபு,த்‌,திர்யா சாஸ்வே ஸ்வமிதி யா மதி:| ஸம்ஸார தரு ஸம்பூதி பீஜமேதத்‌ த்‌,விதா ஸ்திதம்‌ | -விபு 6-7-11,[ஆத்மா வல்லாத தே,ஹத்தில்‌ ஆத்மா என்னும்‌ புத்தியும்‌, தனதல்லாத பொருளில்‌ தன்னுடையது என்னும்‌ புத்தி,யும்‌, ஸம்ஸாரமாகிய வ்ருக்ஷத்தின்‌ விருத்திக்கு இருவகை யாயிருக்கும்‌ விதையாகும்)

224-(த்வ்யக்ஷரஸ்து பவேந்ம்ருத்யுஸ்‌ த்ர்யக்ஷரம்‌ ப்‌.ரஹ்மண: பதம்‌!மமேதி த்‌வ்யக்ஷரோ ம்ருத்யுர்‌ ந மமேதி ச ஸாஸ்வதம்‌ ॥ -பாரதம்‌, ஸாந்தி -13-4-[இரண்டு அக்ஷரத்தை யுடையது ஸம்ஸாரமடையக்‌ காரண மாகிறது.மூன்‌றக்ஷரங்களை யுடையது ப்‌,ரஹ்மத்தை யடையக்‌ காரணமாகிறது. இரண்டெழுத்துச்‌ சொல்லான*மம”என்பது ஸம்ஸாரத்திற்குக்‌ காரணம்‌. மூன்றெழுத்துச்‌ சொல்லான ந மம” என்பது நிலையான மோக்ஷத்திற்குக்‌ காரணம்-

225-(ஸக்ருத்தே ௮க்‌நே நம:। த்‌விஸ்தே நம:। த்ரிஸ்தே நம:। சதுஸ்தே நம:। பஞ்ச க்ருத்வஸ்தே நம:। தஹுக்ருத்வஸ்தே நம: | மத க்ருத்வஸ்தே நம: | ஆஸஹஸ்ர க்ருத்வஸ்தே நம: | அபரிமித க்ருத்வஸ்தே நம: || தை-ஆர-ப்ர--4-[அக்னியே! உனக்கு ஒருகால்‌ நமஸ்காரம்‌; இருமுறை நமஸ்காரம்‌; மும்முறை நமஸ்காரம்‌; நாலு தரம்‌ நமஸ்காரம்‌; ஐந்து முறை நமஸ்காரம்‌; பத்து தரம்‌ நமஸ்காரம்‌; நூறு முறை நமஸ்காரம்‌) ஆயிரம்‌ தரம்‌ வரை நமஸ்காரம்‌; கணக்‌கற்றமுறை நமஸ்காரம்‌)

226-(ப,வந்தி பாவா பூ,தாநாம்‌ மத்த ஏவ ப்ருத,க் விதா: [ஜீவராசிகளுடைய (ஞானம்‌ முதலிய) பலவகையான மநோ பாவங்கள்‌ என்னுடைய ஸங்கல்பத்தாலேயே ஏற்‌படுகின்‌றன)ஸ்ரீ கீதை -10-5-

227-(தாம்நா சைவோத,ரே படத்‌,த்‌,வா ப்ரத்யப,த்‌ நாது,லூக,லே | க்ருஷ்ண மக்லிஷ்ட கர்மாணமாஹ சேத,மமர்ஷிதா || யதி, ஸக்நோஷி கச்ச, த்வமதி சஞ்சல சேஷ்டித || -விபு 5-6.14[(யசோதையானவள்‌) குறும்புச்‌ செயல்களை வெகு ஸுலப,மாகச்‌ செய்யும்‌ அந்த க்ருஷ்ணனைத்‌ தாம்புக் கயிற்றினால்‌ வயிற்றில்‌ பிணைத்து ஒரு உரலில்‌ கட்டினாள்‌, கோபங்‌ கொண்டவளாய்‌ இப்படிச்‌ சொன்னாள்‌:– “மிகவும்‌ சஞ்சல மான செயல்களை உடையவனே! முடியுமாகில்‌ இப்போது போ.”])என்று

228-(பஹுூநாம்‌ ஜந்மநாமந்தே ஜ்ஞாநவாந்‌ மாம்‌ ப்ரபத்யதே வாஸுதேவஸ்‌ ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப,: || கீதை 7-19.[பல ஜன்மங்களுக்குப்‌ பின்‌ ஜ்ஞானியானவன்‌ **வாஸு தேவனே (எனக்கு)எல்லாம்‌” என்‌று என்னை உபாஸிக்கிறான்‌. அப்படிப்பட்ட மஹாத்மா மிகவும்‌ கிடைத்தற்கரியவன்‌)

229-(உபாயே க்‌,ருஹ ரக்ஷித்ரோஸ்‌ ஸப்‌தஸ்‌ ஸரணமித்ய்யம்‌ |வர்த்ததே ஸாம்ப்ரதம்‌ சைஷ உபாயார்த்தை,கவாசக: ॥ அஹிர்புத்ன்யை ஸம்ஹிதை-[ஸரணம்‌ என்னும்‌ இந்த வார்த்தை–உபாயம்‌, வீடு, காப்பாற்றுபவன்‌ என்னும்‌ அர்த்தங்களில்‌ வழங்கப்‌ படுகிறது. இப்போது இது “உபாயம்‌” என்னும்‌ அர்த்‌தத்தையே சொல்லுவதா யிருக்கிறது)

230-அஹமஸ்ம் யபராதாநாமாலயோ அகிஞ்சநோ5க,த: ॥ த்வமேவோபாயபூ,தோ மே ப,வேதி ப்ரார்த்தநாமத: ॥ ஸரணாக,திரித்யுக்தா ஸா தேவே ஜஸ்மிந்‌ ப்ரயுஜ்யதாம்‌ || -அஹிர்புத்ன்யை ஸம்ஹிதை-[நான்‌ குற்றங்களுக்கு ஓர்‌ இருப்பிடமாயிருக்கிறேன்‌.(என்னை ரக்ஷித்துக் கொள்ள) ஒரு உபாயமுமற்றவனாயிருக்‌கிறேன்‌. உன்னை யொழிய வேறு கதியில்லாதவனா யிருக்‌கிறேன்‌. நீயே எனக்கு உபாயமாக ஆவாயாக” என்று ப்ரார்த்திக்கும்‌ புத்தியே ஸரணாகதியெனப்படுகிறது. அது இந்த பகவான்‌ விஷயத்தில்‌ செய்யப்படட்டும்‌-

231-(து.ராசாரோ$பி ஸ்வாமீ க்ருதக்‌நோ நாஸ்திக; புரா।| ஸமாஸ்ரயேதராதி,தே;வம்‌ ஸ்ரத்‌,தயா ஸ்ரணம்‌ யதி, ॥ நிர்தோஷம்‌ வித்‌தி, தம்‌ ஐந்தும்‌ ப்ரபாவாத்‌ பரமாத்மந:।!–ஸாத்வத ஸம்ஹிதை-[அநாதிகாலமாக ஒருவன்‌ கெட்ட ஒழுக்கமுள்ள வனாகவும்‌, எதையும்‌ சாப்பிடுபவனாகவும்‌, செய்ந்நன்‌றி மறந்தவனாகவும்‌, நாஸ்திகனாகவும்‌ இருந்த போதிலும்‌, ஆதிதேவனாகிற பகவானை ஸ்ரத்தையுடன்‌ ஸரணமடைவானாகில்‌, அந்த மனிதனை, பரமாத்மாவினுடைய மஹிமையினாலே தோஷமற்றவனாக அறிவாயாக.)

232-தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் வதார்ஹமபி காகுத்ச்த க்ருபயா பர்யா பாலயத்

233-தஸ்மாதபி வத்யம் பிரபன்னம் ந ப்ரதி ப்ரயச் சந்தி

234-அஹிர் புத்ன்ய சம்ஹிதாயாம் அநேநைவ ப்ரபன்னச்ய பகவந்தம் ஸ நாதனம் தஸ்யா நுபந்தா பாபமா நஸ் சர்வே நச்யந்தி தத் ஷணாத் கரு தான்ய நேன சர்வாணி தபாம் சி தபதாம் வர சர்வே தீர்த்தாஸ் சர்வ யஜ்ஞ்ஞாஸ் சர்வ தாநானி தத் ஷணாத் க்ருதாந்யே தேன மோஷச்ச தஸ்ய ஹஸ்தே ந சம்சய-([இந்த மந்த்ரத்தால்‌ பழைமையான அந்த பகவானை ஸரணமடைந்தவனுக்கு, அவனை ஒட்டியிருக்கும்‌ எல்லாப்‌ பாபங்களும்‌ அந்த க்ஷணத்திலேயே நஸிக்கின்‌றன. முனி ஸ்ரேஷ்ட,ரே ! இவனால்‌ எல்லாத்‌ தவங்களும்‌ செய்யப்‌ பட்டன. எல்லாத்‌ தீர்த்தங்களும்‌, எல்லா யஜ்ஞங்களும்‌, எல்லா தானங்களும்‌ அந்த க்ஷணத்திலேயே இவனால்‌ செய்யப்பட்டன. மோக்ஷ்மும்‌ இவனுடைய கையிலிருக்‌கிறது. (இதைப் பற்றி) ஸந்தேஹமில்லை)

235-ப்ரஸீதந்து பவந்தோ மே ஹ்ரீரேஷா ஹி மமாதுலா | யதீத்‌,ருஸைரஹம்‌ விப்ரை ருபஸ்தேயை ருபஸ்தி,த: ||ரா -ஆ -10-9- ராம வாக்யம் (முனிவர்களே!) நீங்கள்‌ உகந்தருளுவீர்களாக, வந்து அடையத் தகுந்த பெரியோர்களான உங்களால்‌ (நான்‌) அடையப் பட்டபடியால்‌, எனக்கு இப்போதிருக்கும்‌ லஜ்ஜை மிக அதிகமா யிருக்கிறது-

236-ஸரைஸ்து ஸங்குலாம்‌ க்ருத்வா லங்காம்‌ பரபலார்த;ந; | மாம்‌ நயேத்‌ யதி, காகுத்ஸ்தஸ்‌ தத்‌ தஸ்ய ஸத்‌ருஸம்‌ பவேத்‌ || ரா ஸூ -39-30-[ஸத்ருக்களின்‌ பலத்தை ஒழிப்பவரான ஸ்ரீ ராம பிரான்‌ லங்கையை பாணங்களாலே கலங்கச் செய்து என்னை அழைத்துப்‌ போவாராகில்‌, அப்படிச்‌ செய்வது அவருக்கே தகுந்ததாகும்‌.]

237-ஈஸ்வரஸ்‌ ஸர்வ பூதாநாம்‌ ஹ்ருத்‌,தேஸே அர்ஜுந! திஷ்டதி। ப்‌ராமயந்‌ ஸர்வ பூதாநி யந்த்ரா ரூடாநி மாயயா॥கீதை -18-61-[ஸர்வேஸ்வரனாகிய வாஸுதேவன்‌ ( ப்ரக்ருதி யாகிய ) யந்திரத்தில்‌ ஏறி நிற்கும்‌ எல்லா ஜீவ ராசிகளையும்‌, (ஸத்வ ரஜஸ் தமோ குண மயமான) மாயையினால்‌ சுழற்றிக்‌ கொண்டிருக்கிறான் –

238-போக்தாரம்‌ யஜ்ஞதபஸாம்‌ ஸர்வ லோக மஹேஸ்வரம்‌ | ஸுஹ்ருதம்‌ ஸர்வ பூதாநாம்‌ ஜ்ஞாத்வா மாம்‌ ஸாந்திம்‌ ருச்சதி || கீதை -5-29-[யஜ்ஞங்களையும்‌, தவங்களையும்‌ புஜிப்பவனும்‌, எல்லா உலகங்களுக்கும்‌ மஹேஸ்வரனும்‌, எல்லா ஜீவ ராசிகளுக்‌கும்‌ நண்பனுமான என்னை அறிந்து சாந்தியை அடைகிறான் –

239-ஸர்வேஷாமேவ லோகாநாம்‌ பிதா மாதா ச மாதவ:। கச்சத்‌வமேநம்‌ ஸரணம்‌ ஸரண்யம்‌ புருஷர்ஷபா: ||-பாரதம்‌, ஆரண்ய பர்வம்‌ 192-56 [புருஷ ஸ்ரேஷ்டர்களே ! எல்லா உலகங்களுக்கும்‌ தந்தையும்‌, தாயும்‌ லக்ஷ்மீ நாதனே; ஸரணமடையத் தகுந்த இவனை ஸரண மடையுங்கள்‌.]

240-ததஸ்ய ப்ரியமபி, பாதோ ௮ஸ்யாம்‌।நரோ யத்ர தேவயவோ மத;ந்தி உருக்ரமஸ்ம ஸ ஹி ப,ந்துரித்தா ।விஷ்ணோ: பதே, பரமே மத்‌வ உத்ஸ: |-யஜுர் வேதம்‌, 2-4-6-(எந்த கங்கா தீர்த்த விஷயத்தில்‌, தேவத்வத்தை விரும்பும்‌ மனிதர்கள்‌ ஸக்தோஷிக்கிறார்களோ, இனியதாக விருக்கும்‌ இந்த பகவானுடைய அந்த ஸ்ரீபாத தீர்த்தத்தை ஆதரவுடன்‌ பானம்‌ செய்வேனாக. அப்படிக்‌ குடிப்பவன்‌ திரி விக்ரமனுக்கு பந்துவாவான்‌. இம் மாதிரியாக விஷ்ணு வினுடைய மேலான திருவடியில்‌ அம்ருதத்தினுடைய ப்ரவாஹம்‌ உண்டாகிறது]

241-மய்யாஸக்தமநா: பார்த்த,! யோகம்‌ யுஞ்ஜந்‌ மதாஸ்ரய: |அஸம்ஸயம்‌ ஸமக்‌,ரம்‌ மாம்‌ யதா ஜ்ஞாஸ்யஸி தச் ச்‌ருணு! -கீதை -7-1-[அர்ஜுனா | என்னிடம்‌ ஈடுபட்ட மனத்தை யுடையவனாய்‌, என்னையே ஆதாரமாகக்‌ கொண்டவனாய்‌, என் விஷயத்‌தில்‌ யோகத்தை ஆரம்பித்தவன்‌, ஸந்தேஹமில்லால் என்னை எந்த ஜ்ஞானத்தினால்‌ பூர்ணமாக அறிவானோ அந்த ஜ்ஞானத்தைக்‌ கேட்பாயாக-

242-பத்‌தாஞ்ஜலி புடம்‌ தீநம்‌ யாசந்தம்‌ ஸரணாக;தம்‌ | ந ஹந்யாதாந் ருஸம்ஸ்யார்த்தமபி ஸத்ரும்‌ பரந்தப ||ரா யு -18-27-(ஸத்ருக்களைத்‌ துன்புறுத்துபவனே | இருப்பிடத்துக்கு வருதல்‌, கை குவித்தல்‌ என்னும்‌ காயிக ப்ரபத்தியை யாவது, மனத்திலே தைர்யமாகிற மானஸ ப்ரபத்தியை யாவது, வாயாலே ப்ரார்த்திப் பதாகிற வாசிக ப்ரபத்தியை யாவது செய்தவனை, ஸத்ருவா யிருந்த போதிலும்‌, “இவன்‌ இரக்க மற்றவன்‌” என்னும்‌ அபவாதம்‌ வாராமைக்காக ஹிம்‌ஸிக்கக் கூடாது –

243-௮ஞ்ஜலி: பரமா முத்ரா க்ஷிப்ரம்‌ தேவ ப்ரஸாதிநீ -பரத்‌வாஜ ஸம்ஹிதை [வெகு சீக்கிரமாக பகவானை உகப்பிக்கும்‌ அஞ்ஜலி மேலான அடையாளமா யிருக்கிறது-

244-ராஜ வித்வா ராஜ குஹ்யம்‌ பவித்ரமிதமுத்தமம்‌ | ப்ரத்யக்ஷாவகஹம்‌ தர்ம்யம்‌ ஸுஸுகம்‌ கர்த்துமவ்யயம்‌ || கீதை -9-2-[வித்‌யைகளுக்குள்ளும்‌, ரஹஸ்யங்களுக்குள்ளும்‌ மேலானது இது. இது பாபங்களைப்‌ போக்கடிப்பவற்றில்‌ உயர்ந்தது. என்னை நேரில்‌ காட்டுவது, என்னை அடைவதற்கு ஸாதனமாயிருப்பது, செய்வதற்கு வெகு ஸுகமானது. (பலத்தைக்‌ கொடுத்த பின்பும்‌) அழியாதது –

245-அஸந்நேவ ஸ பவதி| அஸத்‌ ப்‌ரஹ்மேதி வேத சேத்‌ | அஸ்தி ப்ரஹ்மேதி சேத்‌ வேத; | ஸந்தமேநம்‌ ததோ விது,:॥தைத்திரியம்‌ – ஆனந்த,வல்லி-6-[ப்ரஹ்மம்‌ இல்லை யென்று அறிந்தானாகில்‌, அவன்‌ இல்லாதவனாகவே ஆகிறான்‌. ப்‌ரஹ்மம்‌ இருக்கிற தென்று அறிந்தானாகில்‌ ௮க் காரணத்தினாலேயே இவனை இருக்கிறவனாக அறிகிறார்கள் –

246-யதா ; ஹ்யேவைஷ ஏதஸ்மிந் நத்‌ருஸ்யே அநாத்ம்யே அநிருக்தே அநிலயநே அபயம்‌ ப்ரதிஷ்டாம்‌ விந்ததே। அத, ஸோ அபயங்கதோ பவதி। -தை -ஆனந்த -7-[காண முடியாதவனும்‌, (ப்ராக்ருத) ஸரீரமற்றவனும்‌, (தேவன்‌, மனுஷ்யன்‌ முதலிய) வார்த்தைகளால்‌ சொல்லத்‌ தகாதவனும்‌, (தனக்கு ஒரு) ஆதார மற்றவனுமான இந்தப்‌ பரமாத்மாவிடம்‌ ஸம்ஸார பயமில்லாமைக்காக பக்தி யோகத்தை எப்போது அடைகிறானோ, அப்போது அவன்‌ (ஸம்ஸார) பயமற்றவனாக ஆகிறான்‌-

247-தத்‌, யதே;ஷீக தூல மக்‌நெள ப்ரோதம்‌ ப்ரதூயேத | ஏவம்‌ ஹாஸ்ய ஸர்வே பாப்மாந: ப்ரதூயந்தே ॥ -சாந்தோக்டியம்‌ 5-24-3-[நெருப்பிலிட்ட இஷீகப் புல்லின்‌ பஞ்சு எப்படிக்‌ கொளுத்‌தப் படுகிறதோ, அப்படியே இவனுடைய எல்லாப்‌ புண்ய பாபங்களும்‌ கொளுத்தப் படுகின்றன-

248-இதம்‌ ஜ்ஞாந முபாஸ்ரித்ய மம ஸாதர்ம்ய மாகதா: | ஸர்க்கே அபி நோபஜாயந்தே ப்ரளயே ந வ்யதந்தி ச॥கீதை -14-2-[இந்த ஜ்ஞானத்தை அடைந்து, என்னைப் போல்‌ ஆனவர்கள்‌,ஸ்ருஷ்டி காலத்திலும்‌ பிறப்பதில்லை; ப்ரளய காலத்திலும்‌ அழிவதில்லை –

249-வைகுண்டே, து பரே லோகே ஸ்ரீயா ஸார்த்த,ம்‌ ஜகத்பதி:। ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர்‌ பாகவதைஸ்‌ ஸஹ॥-சைவ புராணம் -[மேலான உலகமான வைகுண்டத்தில்‌ ஜகத் பதியும் நினைக்க வொண்ணாத ஸ்வரூபத்தை உடையவருமான விஷ்ணு, பக்தர்களுடனும்‌, பாகவதர்களுடனும்‌ கூடியவராய்‌, ஸ்ரீதேவியுடன்‌ கூட எழுந்தருளி யிருக்கிறார் –

250-மாஹா ரஜநம்‌ வாஸ:–ப்‌ருஹ 4-3-6.-பரமாத்மாவுக்கு) ஆடை பீதாம்பரம் –

251-அதஸீ புஷ்ப ஸங்காஸம்‌ பீத வாவாஸ ஸமச்யுதம்‌ |யே நமஸ்யந்தி கேரவிந்தம்‌ ந தேஷாம்‌ வித்‌யதே ப,யம்‌। -பார-சாந்தி 46-118-பீஷ்ம வாக்யம் [அடியவர்களை நழுவ விடாதவனும்‌, காயாம் பூவைப் போன்‌றவனும்‌, பீதாம்பரத்தை யுடையவனுமான கோவிந்தனை எவர்கள்‌ நமஸ்கரிக்கிறார்களோ அவர்களுக்கு பயமில்லை –

252-ஆவர்த்த இவ கங்காயா: [கங்கையின்‌ சுழல்‌ போன்‌றிருக்கும்‌ (திரு நாபி )

253-ப்ருந்ததா வநம்‌ பகவதா க்ருஷ்ணே நாக்லிஷ்ட கர்மணா |-ஸூபேந மநஸா த்‌யாதம்‌ கவாம்‌ வ்ருத்‌தி மபீப்ஸதா।॥! -விபு -5-6-28-[கல்யாண குணங்கள்‌ நிறைந்தவனும்‌, பெருங்காரியங்களையும்‌ எளிதாகச்‌ செய்பவனும்‌, பசுக்களின்‌ வ்ருத்‌தியை விரும்புபவனுமான க்ருஷ்ணனால்‌ ப்‌ருந்தாவனமானது, ஸூபமான மனத்தினால்‌ நினைக்கப் பட்டது –

254-ஸயநே சோத்த மாங்கேந ஸீதாயா: ஸோபிதம்‌ புரா। ரா யு 1-5-[படுக்கையில்‌ ஸீதா பிராட்டியின்‌ தலையாலே முன்னெல்‌லாம்‌ பிரகாஸியா நின்‌றதான திருக்கையை –

255-ரேகா த்ரயாங்கிதா க்ரீவா கம்பு க்ரீவேதி கத்யதே | [மூன்று ரேகைகளால்‌ அடையாளம்‌ செய்யப்பட்ட கழுத்து ‘கம்பு க்ரீவா” என்று சொல்லப்படுகிறது

256-ஸக்‌ய: பஸ்யத க்ருஷ்ணஸ்ய முக மத்யருணே க்ஷணம்‌|.,. விகாஸி ஸார தாம்போஜமவஸ்யாய ஜலோக்ஷிதம்‌ | பரிபூய ஸ்திதம்‌ ஜந்ம ஸபலம்‌ க்ரியதாம்‌ த்‌ருஸ : ॥ வி பு -5-20-25-[ஸகி,களே | மிகவும்‌ சிவந்த திருக் கண்களை உடையதும்‌ பனி ஜலத்தினால்‌ தெளிக்கப் பட்டிருக்கும்‌ மலர்ந்த ஸரத்‌ காலத்‌ தாமரையை வெற்றி கொண்டிருப்பதுமான கிருஷ்ணனுடைய முகத்தைப்‌ பாருங்கள்‌. கண்களைப்‌ பெற்றிருப்‌பதை ப்ரயோஜன முள்ளதாகச்‌ செய்யுங்கோள் –

257-பாபம்‌ ஹரதி யத்‌ பும்ஸாம்‌ ஸ்ம்ருதம்‌ ஸங்கல்பநாமயம்‌ | தத்‌ புண்டரிக நயநம்‌ விஷ்ணோர்‌ த்‌ரக்ஷயாம்யஹம்‌ முகம்‌॥! -வி பு -5-17-4-[எந்தத்‌ திருமுக மண்டலமானது நினைக்கப் பட்டவுடன்‌, மனிதர்களின்‌ பாபத்தைப்‌ போக்கடிக்கிறதோ, ஆஸ்ரிதர்‌களுடைய ஸங்கல்பத்தின் படியே அமைந்திருப்பதும்‌, தாமரை போன்‌ற திருக் கண்களை உடையதுமான விஷ்ணுவினுடைய அத்திருமுக மண்டலத்தை நான்‌ பார்க்கப்‌ போகிறேன் –

258-அபரிமித திவ்ய பூஷண ! -கத்ய த்ரயம் [கணக்கற்ற தி,வ்யாப,ரணங்களை உடையவனே-

259-ஸ்ரக்‌,வஸ்த்ராபரணைர்‌ யுக்தம்‌ ஸ்வாநுரூபைரநூபமை: | சிந்மயை: ஸ்வப்ரகாஸைஸ்ச அந்யோந்ய ருசிரஞ்ஜகை: || -பெவ்ஷ்கர ஸம்ஹிதை -[தனக்குத்‌ தகுந்தவையும்‌, ஒப்பற்றவையும்‌, ஞான மயமாயிருப்பவையும்‌, ஸ்வயம்‌ ப்ரகாஸமானவையும்‌, ஒன்றுக்‌ கொன்று (சேர்த்தியினா லுண்டான) காந்தியினால்‌ அழகா யிருப்பவையுமான மாலைகளினாலும்‌, வஸ்த்ரங்களினாலும்‌, ஆபரணங்களினாலும்‌ கூடியிருப்பது பர ப்ரஹ்மம் –

260-கா த்வந்யா த்வாம்ருதே தேவி ஸர்வ யஜ்ஞமயம்‌ வபு: | அத்யாஸ்தே தேவ தேவஸ்ய யோகி; சிந்த்யம்‌ கதாப்‌ருத:।0, வி.பு 1-9-122--[ஹே தேவி! கதையை தரித்தவனும்‌, தேவ தேவனுமான: எம்பெருமானுடைய, யோகிகளால்‌ நினைக்கத் தக்கதும்‌, ஸர்வ யஜ்ஞ மயமுமான ஸரீரத்தில்‌ உன்னைத்‌ தவிர வேறு எவள்‌ இருக்கிறாள் –

261-திவ்ய மால் யாம்பரதரா ஸ்நாதா பூஷண பூஷிதா। பஸ்யதாம்‌ ஸர்வ தேவாநாம்‌ யவவ் வக்ஷ:ஸ்தலம்‌ ஹரே –1. வி பு 1-91-05-அப்ராக்ருதமான மாலையையும்‌, வஸ்த்ரத்தையும்‌ தரித்‌திருப்பவளும்‌, ஸ்நானம்‌ செய்தவளும்‌, பூ,ஷணங்களால்‌ அலங்கரிக்கப் பட்டவளுமான ஸ்ரீதே,வி எல்லா தேவர்களும்‌ பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஹரியினுடைய திரு மார்பை அடைந்தாள் –

262-ப்‌ருகோ க்‌யாத்யாம்‌ ஸமுத்பந்நா ஸ்ரீ: பூர்வமுததே; புந:। தேவதா நவயத்நேந ப்ரஸூதா அம்ருதமந்தநே ॥ -வி.பு 1-9-141.[முதலில்‌, ப்‌ருகு,மஹர்ஷிக்கு: (அவர்‌ பத்னியான) க்யாதி யிடம்‌ ஸ்ரீதேவி உண்டானாள்‌; மறுபடியும்‌ அம்ருதமதன காலத்தில்‌ தேவாஸுரர்களுடைய யத்னத்தினால்‌ கடலி லிருந்து உண்டானாள்‌

263-நேதாநீம்‌ த்வத்‌ருதே ஸீதே ஸ்வர்க்கோ ,அபி மம ரோசதே! -ரா-அ 30-42.[ஸீதே! இப்பொழுது நீயில்லாமல்‌ ஸ்வர்க்கமும்‌ எனக்கு ருசிக்காது.]

264-த்வம்‌ மாதா ஸர்வ லோகாநாம்‌ தேவதேவோ ஹரி; பிதா।த்வயைதத்‌ விஷ்ணுநா சாம்ப, ஐகத்‌ வ்யாப்தம்‌ சராசரம்‌ ||வி-பு 1-9.126, [எல்லா உலகங்களுக்கும்‌ நீ தாய்‌; தேவதேவனான ஹரி தந்தை. தாயே ! அசைபவையும்‌, அசையாதவையு மடங்கிய இந்த உலகம்‌ உன்னாலும்‌, விஷ்ணுவாலும்‌ வியாபிக்கப்‌ பட்டிருக்கிறது-

265-ஏஷ ஸேதுர்‌ மயா பத்‌தஸ்‌ ஸாகரே ஸலிலார்ணவே |தவ ஹேதோர்‌ விஸாலாக்ஷி ! நளஸேதுஸ்‌ ஸுது,ஷ்கர: | ரா.யு 126-12.[அகன்ற கண்களை உடையவளே | நீர்‌ நிறைந்த கடலில்‌, நள ஸேது என்ற பெயர் பெற்றதும்‌, மிகவும்‌ கட்டுவதற்கு அரிதுமான இந்த அணை உனக்காக என்னால்‌ கட்டப்‌ பட்டது.]

266-பரி ஸ்ரமாத்‌ ப்ரஸுப்தா ச ராக,வாங்கே அப்யஹம்‌ சிரம்‌ |பர்யாயேண ப்ரஸுப்தஸ்ச மமாங்கே பரதாக்‌ரஜ: ||ரா ஸூந் 38-21. [ராகவனுடைய திருத் தொடையில்‌, நான்‌ களைப்பினால்‌ வெகு நேரம்‌ தூங்கினேன்‌. பரதனுடைய தமையனாரான அவரும்‌ என்‌ தொடையில்‌ தூங்கினார் –

267-ஸ ஏகதா பவதி த்ரிதா பவதி பஞ்சதா। ஸப்ததா நவதா சைவ புநஸ்‌ சைகாத ஸ ; ஸ்ம்ருத: | ஸதஞ்ச தா சைகஞ்ச ஸஹஸ்ராணி ச விம்ஸத; ॥–சாந்தோ 7-26-2, [“முக்தாத்மா பல ஸரீரங்களை உடையவனாகிறான்‌” என்று தாத்பர்யம்‌.

268-துல்ய ஸீல வயோ வ்ருத்தாம்‌ துல்யாபி ஐந லக்ஷணாம்‌ |ராகவோஃ5ர்ஹதி வைதேஹீம்‌ தம்‌ சேயமஸி தேக்ஷணா ॥ ரா-ஸு 16-5-[ஒரே விதமான குணங்கள்‌, வயது, நடத்தை இவைகளை உடையவளும்‌, ஸமானமான குலத்தையும்‌, லக்ஷணங்‌களையும்‌ உடையவளுமான வைதேஹிக்கு ராகவனே தகுந்‌தவர்‌; கறுத்த கண்களை உடைய இவளும்‌ அவருக்கே தகுந்தவள்‌

269-நித்யைவைஷா ஜகந்மாதா விஷ்ணோ: ஸ்ரீரநபாமிநீ |யதா ஸர்வகதோ விஷ்ணுஸ்‌ ததைவேயம்‌ த்‌விஜோத்தமா –விபு 1-8 -17-[உலகிற்கெல்லாம்‌ தாயும்‌. அழிவற்‌றவளும்‌ விஷ்ணுவினுடை யவளுமான இந்த ஸ்ரீ தேவி நித்யமானவளே. ப்ராஹ்மண ஸ்ரேஷ்ட,ரே! ஸர்வ வ்யாபியான விஷ்ணு எப்படிப்பட்டவரோ அப்படிப்பட்டவளே இவளும்

270-கந்தர்வாப் ஸரஸஸ்‌ ஸித்‌தாஸ்‌ ஸ கிந்நர மஹோரக ॥ நாந்தம்‌ குணாநாம்‌. கச்சந்தி தேநா நந்தோ அயமுச்யதே ॥ [கந்தர்வர்களும்‌, அப்ஸரஸ்ஸுகளும்‌, கின்னரர்களுடனும்‌, மஹா நாகங்களுடனும்‌ கூடிய ஸித்‌தர்களும்‌, (இவனுடைய) குணங்களின்‌ எல்லையை அடைவதில்லை; ஆகையால்‌ இவன்‌ அநந்தனென்று சொல்லப்படுகிறான் –

271-உபமாநமஸேஷாணாம்‌ ஸாதூநாம்‌ யஸ்ஸதா அபவத்‌ | -வி 1.15.157-[எந்த ப்ரஹ்லாதாழ்வான்‌, எப்போதும்‌ எல்லா ஸாதுக்‌களுக்கும்‌ உபமானமாக ஆயினனோ…]

272-கிம்‌ சைநாம்‌ ப்ரதி வக்ஷ்மாமி க்ருத்வா விப்ரியமீத்‌ருஸம்‌ | யதா யதா ஹி கெளஸல்யா தாஸீ வச்ச ஸகீ வ ச ॥ பார்யாவத்‌ பகிநீவச் ச மாத்ருவச்சோபதிஷ்டதி ||-ரா-அ 12.68 தஸரத வாக்யம் [கெளஸல்யை தாஸியைப் போலும்‌, ஸகியைப் போலும்‌,மனைவியைப் போலும்‌, ஸஹோதரியைப் போலும்‌, தாயைப்‌போலும்‌ ஸூஸ்ரூஷை செய்யும் போதெல்லாம்‌, இப்படிப்‌ பட்ட அநிஷ்டமான காரியத்தைச்‌ செய்து விட்டு அவளுக்கு என்ன பதில்‌ சொல்லுவேன்‌ ]

273-பரகத அதிஸய ஆதா நேச்ச, யோபாதே,யத்வமேவ யஸ்ய ஸ்வரூபம்‌ ஸ ஸேஷ: । பரஸ் ஸேஷீ॥-வேதார்த்த ஸங்க்ரஹம் [மற்றொருவனிடத்திலிருக்கும்‌ ஒரு மேன்மையை உண்டு பண்ண வேண்டு மென்னும்‌ எண்ணத்துடன்‌ அங்கீகரிக்கப்‌ படுகையே எவனுக்கு ஸ்வரூபமோ அவன்‌ ஸேஷன்‌; மற்றவன்‌ ஸேஷி-

274-பாரதந்த்ர்யம்‌ பரே பும்ஸி ப்ராப்ய நிர்க்கத பந்தந: |
ஸ்வாதந்த்ர்ய மதுலம்‌ ப்ராப்ய தேநைவ ஸஹ மோததே॥ -விஷ்ணு தத்வம்
-[கர்ம பந்தத்திலிருந்து விடுபட்டவனான முக்தன்‌, பரம புருஷனிடத்தில்‌ பாரதந்த்ரியத்தை அடைந்து, ஒப்பற்ற ஸ்வாதந்த்ரியத்தையும்‌ அடைந்து, அவனுடன்‌ கூடவே ஆரந்தப் படுகிறான்‌-

275-கருடஞ்ச ததர்ஸோச் சைரந்தர்த்தாநக,தம்‌ தவிஜ। க்ருதச்சாயம்‌ ஹரேர்‌ மூர்த்‌நி பக்ஷாப்‌யாம்‌ பக்ஷி புங்கவம்‌॥ -வி-பு 5-12-4 [முனிவரே! சிறகுகளால்‌ ஹரியின்‌ தலையில்‌ நிழலை உண்டு பண்ணிக் கொண்டிருப்பவனும்‌, பறவைகளுக்குத்‌ தலைவனும்‌, மறைந்திருப்பவனுமான கருடனையும்‌ அந்த இந்திரன்‌ ஆகாயத்தில்‌ பார்த்தான்‌.

276-ஸுபர்ணோ அஸி கரூத்மாந்‌। த்ரிவ்ருத்‌ தே ஸிர: | காயத்ரம்‌ சக்ஷுஸ் : |.தைத்திரிய யஜுஸ் ஸம்ஹிதை . [நல்ல சிறகுகளை யுடையவனாயும்‌, கருத்மான்‌ என்னும்‌ திருநாமத்தை உடையவனா யுமிருக்கிறாய்‌; த்ரிவ்ருத்‌ உன்னு டைய தலை; காயத்ரம்‌ கண்‌…]

277-யது,ச்சிஷ்டமபோஜ்யம்‌, யத்‌, வா துஸ் சரிதம்‌ மம, ஸர்வம்‌ புநந்து மாமாப: –தை-நா- 38.[உண்ணத் தகாத உச்சிஷ்டம்‌ யாதொன்று என்னால்‌ உண்‌ணப்பட்டதோ, என்னுடைய கெட்ட காரியம்‌ யாதொன்று உண்டோ, “ஆப: எனப்படும்‌ எம்பெருமான்‌ என்னை அவைகளெல்லா வற்றிலிருந்தும்‌ பரி ஸூத்‌தப்படுத்தட்டும்

278-ரஸாந்‌ பக்தஸ்ய ஜிஹ்வாயாம்‌ க்‌ருஹ்ணாமி கமலோத்‌ப,வ!-பாஞ்சராத்ர- [தாமரையில்‌ பிறந்த பிரமனே ! இனிய சுவைகளை பக்தனுடைய நாக்கிலிருந்து அறிகிறேன்‌

279-௮வித்‌யாஸ்மிதாபி,நிவேஸ ராக த்‌வேஷா: பஞ்ச க்லேஸா :। -பாதஞ்ஜல ஸூத்ரம் [அவித்‌யை, அஹங்காரம்‌, பேராசை, விருப்பம்‌, கோபம்‌ இவ் வைந்தும்‌ க்லேஸங்கள்‌.]

280-யேந மாத்வதி –-எதனாலே மதமடைகிறானோ

281-யஸ்‌ த்வயா ஸஹ ஸ ஸ்வர்க்கோ நரகோ யஸ்‌ த்வயா விநா। இதி ஜாநந்‌ பராம்‌ ப்ரீதிம்‌ ௧ச்ச, ராம மயா ஸஹ॥ ரா.௮ 90-18-[ராகவரே ! உம்முடன்‌ கூடியிருக்கும்‌ இருப்பே (எனக்கு) ஸ்வர்க்கம்‌; உம்மைப்‌ பிரிந்திருக்கு மிருப்பு நரகம்‌” என்பதை அறிந்து, என்னுடன்‌ கூடவே மேலான ஆநந்தத்தை அடைவீராக.]

282-த்வயா ச ஸஹ கந்தவ்யம்‌ மயா குருஜநாஜ்ஞயா।த்வத்‌, வியோகேந மே ராம! த்யக்தவ்யமிஹ ஜீவிதம்‌ ॥ ரா-அ 29-5- [ராகவரே! பெரியோர்களின்‌ கட்டளைப்படி நான்‌ உம்முடன்‌ கூடவே போக வேண்டும்‌; உம்மைப்‌ பிரிந்தால்‌ இங்கேயே உயிரை விட வேண்டும்‌

283-ஸர்வதா , தேந ஹீநாயா ராமேண விதி,தாத்மநா । தீக்ஷணம்‌ விஷமிவாஸ்வாத்‌ய துர்லபம்‌ மம ஜீவிதம்‌ ॥-ரா-ஸு 25.17. [நெஞ்சிலுள்ளதை அறிபவனான ராம பிரானை விட்டுப்‌ பிரிந்த எனக்கு, கொடுமையான விஷத்தைக்‌ குடித்ததைப்‌ போல்‌, ‘ உயிர் தரிப்பது எல்லா விதத்திலும்‌ துர்லபம் ]

284-யுவா$குமார:-ருக்‌; வே-அஷ்‌ 2-8-25- [யெளவனத்தை உடையவனாகவும்‌, சிறிது பாலனாகவு மிருப்பவன்‌.]

285-தருணெள ரூப ஸம்பந்நெள ஸுகுமாரெள மஹா பலெள| புண்டரீக விஸாலாக்ஷெள சீர க்ருஷ்ணாஜிநாம்ப,ரெள ॥| : ரா-ஆ 19-14 சூர்ப்பணகை வார்த்தை [(ராம லக்ஷ்மணர்கள்‌) வாலிபமானவர்கள்‌; அழகு நிறைந்தவர்கள்‌; ஸெளகுமார்யத்தை உடையவர்கள்‌; அதிகமான பலமுள்ளவர்கள்‌. தாமரை போன்ற அகன்ற கண்களை உடையவர்கள்‌ ; மரவுரியையும்‌, மான்‌ தோலையும்‌ உடுத்‌தவர்கள்‌.]

286-ஸமுத்‌ரம்‌ ராகவோ ராஜா ஸரணம்‌’ ௧ந்துமர்ஹதி | ‘காநிதஸ்‌ ஸகரேணாயம ப்ரமேயோ மஹோததி,: ॥ ரா யு -19-31-[அரசரான ராகவர்‌ ஸமுத்ரத்தை ஸரணமடையத்‌ தகுந்தவர்‌. அளவற்றதான இப் பெருங் கடல்‌ ஸகரரால்‌ வெட்டு விக்கப் பட்டதன்‌றோ

287-த்‌விஷதந்நம்‌ ந போக்தவ்யம்‌ த்‌விஷந்தம்‌ நைவ போஜயேத்‌ | பாண்டவாந்‌ த்‌விஷஸே ராஜந்‌ !மம ப்ராணா ஹி பாண்டவா: || பார-உத்‌, 74-27,[த்வேஷிப்பவனின்‌ அன்னம்‌ புஜிக்கத் தக்கதன்று ; த்வேஷிப்பவனை புஜிப்பிக்கவும்‌ கூடாது, அரசனே | நீ பாண்டவர்களை த்‌வேஷிக்கிறாய்‌. பாண்டவர்கள்‌ எனக்கு ப்ராணனன்றோ

288-289- ஏதமாநந்த, மயமாத்மாந முபஸங்க்ரம்ய |இமாந்‌ லோகாந்‌ காமாந் நீ காமரூப் யநுஸஞ்சரந்‌ | ஏதத்‌ ஸாம காயந் நாஸ்தே। ஹாவு ஹாவு ஹாவு || தை-ப்ரு 10-5 [ஆனந்த,மயனான இந்தப்‌ பரமாத்மாவை அணுகி, இஷ்டப்‌ பட்ட உருவங்களை உடையவனாய்‌, இந்தக்‌ காமங்களிலும்‌, லோகங்களிலும்‌ (பரமாத்மாவைப்‌) பின் தொடர்ந்து கொண்டு இந்த ஸாமத்தைப்‌ பாடிக் கொண்டிருக்கிறான்‌: ஹாவு ஹாவு ஹாவு]

290-ஜிதந்தே (1-8)

291-ஸோ அஹம்‌ தே தேவதே,வேஸ ! நார்ச்சநாதெ,ள ஸ்துதெள ந ச ॥ ஸாமார்த்‌,யவாந்‌ க்ருபா மாத்ர மநோ வ்ருத்தி: ப்ரஸீத, மே॥ வி.பு 57-70, காளிய ஸ்தோரம் -[தேவர்களுக்கும்‌ தேவர்களான நித்ய ஸூரிகளுக்கும்‌’ தலைவனே | இப்படிப்பட்ட நான்‌ உன்னுடைய ஸ்துதியிலும்‌, அர்ச்சனை முதலியவற்றிலும்‌ ஸாமர்த்தியம்‌ உடையவனல்‌லேன்‌. அருள்‌ கூர்ந்த திருவுள்ளத்துடன்‌ கூடியவனாய்‌ எனக்கு தயை புரிய வேண்டும் –

292-ஜாயமாநம்‌ ஹி புருஷம்‌ யம்‌ பஸ்யேந்‌ மது,ஸூதந: | ஸாத்விகஸ்‌ ஸ து விஜ்ஞஜேயஸ்‌ ஸ வை மோக்ஷார்த்த, சிந்தக: ॥| பார -சாந்தி 358.78.[பிறந்து கொண்டிருக்கும் போது எந்தப்‌ புருஷனை மது, ஸுூதனன்‌ பார்க்கிறானோ அவனே ஸத்வ குணமுடையவனென்று அறியத் தக்கவன்‌. அவனே மோக்ஷ பலத்தை நினைப்பவன்‌ –

293-இச்சாத ஏவ தவ விஸ்வ பதார்த்த ஸத்தா நித்யம்‌ ப்ரியாஸ்‌ தவ து கேசந தே அபி நித்யா: ! நித்யம்‌ த்வதே,பரதந்த்ரநிஜ ஸ்வரூபா; பாவத்க மங்கள குணா ஹி நிதர்ஸநம்‌ ந: -வைகுண்ட ஸ்தவம்‌ -96-[எல்லாப்‌ பொருள்களின்‌ இருப்பும்‌ உன்னுடைய விருப்பத்‌தாலேயே ஏற்படுகிறது. உனக்குச்‌ சில வஸ்துக்கள்‌ எப்போதும்‌ பிரியமானவை; அவை நித்யமாக விளங்குகின்றன. எப்பொழுதும்‌ உனக்கே பரதந்திரமான ஸ்வ ரூபத்தை யுடைய உன்னுடைய கல்யாண குணங்கள்‌ (இவ் விஷயத்தில்‌) எங்களுக்கு த்‌ருஷ்டாந்தம் –

294-யோ அஹமஸ்மி ஸ ஸந்‌ யஜே-யஜார் ப்‌ராஹ்மணம் [நான்‌ எப்படிப் பட்டவனா யிருக்கிறேனோ, அப்படிப்பட்ட வனாகவே இருந்து கொண்டு, (ஆத்ம ஸமர்ப்பணமாகிற) யாகத்தைச்‌ செய்கிறேன்‌.

295-யஸ்யாஸ்மி ந தமந்தரேமி -யஜார் ப்‌ராஹ்மணம் -எவனுக்கு நான்‌ தாஸனா யிருக்கிறேனோ, அவனை விட்டு வேறொருவனிடம்‌ செல்ல மாட்டேன்‌ –

296-ஆத்மா ராஜ்யம்‌ தநம்‌ மித்ரம்‌ களத்ரம்‌ வாஹநாநி ச।
ஏதத்‌ பகவதே ஸர்வமிதி தத் ப்ரேக்ஷிதம்‌ ஸதா ॥ சாந்தி 343-24
[‘ஆத்மா, ராஜ்யம்‌, பொருள்‌, நண்பர்கள்‌, மனைவி, வாஹனங்கள்‌ இவை யெல்லாம்‌ பகவானுக்கு” என்று உபரிசர வஸுவினால்‌ எப்போதும்‌ நினைக்கப்பட்டது –

297-கதம்‌ தஸரதாஜ் ஜாதோ பவேத்‌; ராஜ்யாபஹாரக: |
ராஜ்யம்‌ சாஹஞ்ச ராமஸ்ய தர்மம்‌ வக்து மிஹார் ஹஸி ॥ ரா அ -82-12-
[தஸரதனிடமிருந்து பிறந்தவன்‌ எப்படி ராஜ்யத்தை அபஹரிப்பவனாவான்‌? ராஜ்யமும்‌, நானும்‌ ராமனுடையவை. நீர்‌ இவ் விஷயத்தில்‌ தர்மத்தைச்‌ சொல்ல வேண்டும்

298-ஸ்வத்வமாத்மநி ஸஞ்ஜாதம்‌ ஸ்வாமித்வம்‌ ப்ரஹ்மணி ஸ்நி,தம்‌ |
உப,யோரேஷ ஸம்பந்தோ ந பரோ அபிமதோ மம॥-விஷ்ணு தத்வம்
[உடைமையா யிருக்கும்‌ தன்மை ஆத்மாவினிடத்தில்‌ உள்‌ளது; உடையவனா யிருக்கும்‌ தன்மை ப்ரரஹ்மத்தினிடமுள்ளது; இருவருக்கும்‌ இதுவே ஸம்பந்தம்‌; வேறு ஸம்பந்‌தம்‌ எனக்கு இஷ்டமன்‌று]

299-300-விஷ்ணு ஸம்ஸ்மரணாத்‌ க்ஷீண ஸமஸ்த க்லேஸ ஸஞ்சய:। முக்திம்‌ ப்ரயாதி ஸ்வர்க்கராப்திஸ்‌ தஸ்ய விக்‌நோ அநுமீயதே ॥| வாஸுதேவே மநோ யஸ்ய ஐபஹோமார்ச்சந। இஷ தஸ்யாந்தராயோ மைத்ரேய தேவேந்த்‌,ரத்வாதிகம்‌ பலம்‌॥ -விஷ்ணு புராணம் -2-6-40-41-விஷ்ணுவை நினைப்பதினால்‌ துக்க ஸமூஹங்களெல்லாம்‌ நீங்கப் பெற்றவனாய்‌, அவன்‌ மோக்ஷத்தை அடைகிறான் -ஸ்வர்க்கத்தை அடைதல் அவனால் தனக்கு இடையூறாக நினைக்கப் படுகிறது. மைத்ரேயனே! ஜபம்‌, ஹோமம்‌, அர்ச்‌சனம்‌ முதலியவைகளில்‌ எவனுடைய மனம்‌ வாஸுதேவனிடம்‌ லயித்திருக்கிறதோ , அவனுக்கு தேவேந்திரனா யிருக்கை முதலிய பலங்கள்‌ இடையூறாகவே ஆகின்‌றன.].

301- வாஸுதேவஸ்ய யே பக்தா: சாந்தாஸ்‌ தத்‌கத மாநஸா:। தேஷாம்‌ தாஸஸ்ய தாஸோஹம்‌ பவேஜ்ஜந்மநி ஜந்மநி॥| (தேஷாஞ்ச தாதா தாஸ்யம்‌ மே… என்றும்‌ பாடம்‌: காண்கிறது.) [ஸாந்தர்களாயும்‌ பகவானிடத்திலேயே மனத்தைச்‌ செலுத்‌தி யவர்களாயுமிருக்கும்‌, வாஸுதேவ பக்தர்கள்‌ எவர்களுளரோ, இந்த ஆத்ம வஸ்துவானது, அவர்களுடைய தாஸனுக்கும்‌ தாஸனாக, ஜன்மந் தோறும்‌ ஆகக் கடவது –

302-பஸ்யேம ஸரதஸ் ஸதம்‌ । -மாத்‌யாஹ்னிக மந்த்ரம் [நூறு வருஷங்கள்‌ (உன்னைப்‌) பார்க்கக் கடஸ்

303-ஸோ அப்யேநம்‌ த்‌வஜ வஜ்ராப்‌,ஜக்ருத சிஹ்நேந பாணிநா । ஸம்ஸ்ப்ருஸ் யாக்ருஷ்ய ச ப்ரீத்யா ஸுகாட,ம்‌ பரிஷஸ்வஜே!॥ .வி-பு 5.18.2--[அந்தக் க்ருஷ்ண பகவானும்‌, இந்த அக்ரூரனை, கொடி, வஜ்ரம்‌, தாமரை இவைகளால்‌ அடையாளம்‌ செய்யப்‌ பட்ட திருக்கையால்‌ தொட்டு இழுத்து, அன்புடன்‌ நன்‌ராகத்‌ தழுவிக் கொண்டான் –

304-அலமத்ய ஹி புக்தைர்‌ ந: பரமார்த்தைரலஞ்ச ந:! யத; பஸ்யேம நிர்யாந்தம்‌ ராமம்‌ ராஜ்யே ப்ரதிஷ்டிதம்‌ ॥ ததோ ஹி ந: ப்ரிய தரம்‌ நாந்யத்‌ கிஞ்சித்‌ பவிஷ்யதி || ரா -அ -17-10-[உண்பது முதலிய இவ்வுலக போகங்களும்‌ வேண்டிய தில்லை; மோக்ஷம்‌ முதலிய மேலான போகங்களும்‌ வேண்‌ டியதில்லை, ராஜ்யத்தில்‌ அபிஷேகம்‌ செய்யப் பட்டவரும் ஊர்வலம்‌ வருகின்‌றவருமான ராமனைக்‌ காண்பதைக் காட்டி லும்‌ மேலான ப்ரியம்‌ நமக்கு வேறொன்றும்‌ இல்லை –

305-த்வமிந்த்‌ரஸ்‌ ஸத்யமேவைதத்‌ தேவஸ்‌ த்ரிபுவநேஸ்வர: | த்வயா $பி ப்ராப்தமைஸ்வர்யம்‌ யதஸ்தம்‌ தோஷயாம் யஹம்‌॥ -விஷ்ணுதர்மம்‌ 2-14-[நீ இந்திரனே; இது உண்மையே; நீ தேவன் தான்‌; மூவுலகங்களுக்கும்‌ ஈஸ்வரன் தான்‌. (ஆனால்‌) உன்னாலும்‌ எவனிடமிருந்து செல்வம்‌ அடையப்பட்டதோ, அவனையே நான்‌ ஆராதிக்கிறேன்‌-

306-ஏதே வை நிரயாஸ்தாத! ஸ்தாநஸ்ய பரமாத்மந: –சாந்தி -195-6-குழந்தாய்‌! பரமாத்மாவினுடைய இருப்பிடத்திற்கு ஒப்‌பிடும் போது இந்த ஸ்வர்க்கம்‌ முதலியவை யெல்லாம்‌ நரகங்களாகின்‌ றன.]

307-ஸம்ஸ்மராம்யஸ்ய வாக்யாநி ப்ரியாணி மதுராணி ச। ஹ்ருத்‌யாந் யம்ருத கல்பாநி மந:ப்ரஹ்லாதநாநி ச ॥ ரா -ஆ -16-39-[பிரியமாயும்‌, இனியவையாயும்‌, ஹ்ருதயத்திலிருந்து வெளி வருபவையாயும்‌, அம்ருதம்‌ போன்‌றவையாயும்‌, மனத்தை உகப்பிப்பவையா யுமுள்ள அந்த பரதனுடைய வாக்கியங்‌களை நினைக்கிறேன்‌-

308-த்வயி கிஞ்சித்‌ ஸமாபந்நே கிம்‌ கார்யம்‌ ஸீதயா மம। பரதேந மஹாபாஹோ! லக்ஷமணேந யவீயஸா। ஸத்ருக்‌நேந ச ஸத்ருக்‌,ந! ஸ்வ ஸரீரேண வா புந:॥-ரா -யு -41-4-[நீண்ட கைகளை யுடைய ஸுக்ரீவனே! உனக்கு ஏதாவது அவமானம்‌ கேர்ந்ததாகில்‌ ஸீதையால்‌ எனக்கு என்ன ப்ரயோஜனம்‌? பரதனாலும்‌, இளையவனான லக்ஷ்மணனாலும்‌, சத்ருக்னனாலும்‌ என்ன ப்ரயோஜனம்‌ ?: சத்துருக்களை அழிப்பவனே | என்னுடைய ஸரீரத்தினால் தான்‌ என்ன ப்ரயோஜனம்‌]

309-ந தேவலோகா க்ரமணம்‌ நாமரத்வமஹம்‌ வ்ருணே | ஐஸ்வர்யம்‌ வா5பி லோகாநாம்‌ காமயே ந த்வயா விநா॥ ரா -அ -31-5-[நித்ய ஸூரிகள்‌ வாழும்‌ உலகான ஸ்ரீவைகுண்ட,த்தில்‌ வாழ்ச்சியையும்‌, கைவல்யத்தையும்‌, உலகங்களிலுள்ள ஐஸ்வர்யத்தையும்‌ உன்னைப்‌ பிரிந்த நான்‌ விரும்ப மாட்டேன்

310-யத்‌ ப்‌ரஹ்ம கல்ப நியுதாநுபவே அப்யநாஸ்யம்‌
தத்‌ கில்பி,ஷம்‌ ஸ்ருஜதி ஜந்துரிஹ க்ஷணார்த்தே, । வைகுண்ட ஸ்தவம் -60-
[யாதொரு பாபம்‌, பல்லாயிரம்‌ ப்‌ரஹ்ம கல்பங்கள்‌ அனுபவித்தாலும்‌ நஸிக்காதோ, அந்தப்‌ பாபததை இந்த ஜந்து (ஜீவன்‌) இங்கு அரை க்ஷண நேரத்தில்‌ செய்கிறான் –

311-ஆஹார நித்ரா பயமைதுநாநி துல்யாநி கூல்வத்ர ஸமஸ்த ஜந்தோ: |
ஜ்ஞாநாத்‌, விஸிஷ்டோ ஹி நர: பரேப்‌யோ ஜ்ஞாநேந ஹீந: பஸுபிஸ்‌ ஸமாந: ॥| நரஸிம்ஹபுராணம்‌ 16-13-[
ஆஹாரம்‌, நித்திரை, பயம்‌, ஸ்த்ரீ புருஷ ஸங்கமம்‌ என்பவை இங்கு எல்லா ஜந்துக்களுக்கும்‌ ஸமானம்‌. மற்றவைகளைக்‌ காடடிலும்‌ மனிதன்‌ அறிவினால்‌ மேலானவனாயிருக்கிறான்‌. ஞான மற்றவன்‌ பசுக்களுக்கு ஸமானமானவன்‌.

312-ஆநயைநம்‌ ஹரிஸ்ரேஷ்ட, தத்தமஸ்யாபயம்‌ மயா। விபீஷணோ வா ஸுக்ரீவ! யதி, வா ராவண: ஸ்வயம்‌ ॥ ரா-யு 18-34-[வானரர்களுள்‌ சிறந்தவனான ஸுக்ரீவனே! இவனை அழைத்துவா; விபீஷணனாயிருந்தாலும்‌, ராவணன்‌ தானே யாயிருந்தாலும்‌, இவனுக்கு என்னால்‌ அப,யமளிக்கப் பட்டது –

313-கச்சாநுஜாநாமி ரணார்த்தி,தஸ்‌ த்வம்‌ ப்ரவிஸ்ய ராத்ரிஞ்சரராஜ லங்காம் -ஆஸ்வாஸ்ய நிர்யாஹி ரதீ ச தந்வீ ததா பலம்‌ த்ரஷ்யஸி மே ரதஸ்த; ॥|-ராயு 59-144, * [ராக்ஷ்ஸ ராஜனே! நீ யுத்‌தத்தில்‌ களைப்படைந்து விட்டாய்‌; திரும்பிப் போ நானே அணுமதிக்கிறேன்‌. லங்கையில்‌ நுழைந்து, களைப்பாற்றிக் கொண்டு, ரதத்தையுடையவனாக வும்‌, வில்லையுடையவனாகவும்‌ திரும்பி வா. ரதத்திலிருந்து கொண்டு அப்போது என்னுடைய பலத்தைப்‌ பார்ப்பாய் —

314-விஸ்ருஷ்டம்‌. பகதத்தேந தத,ஸ்த்ரம்‌ ஸர்வகாதுகம்‌ !
உரஸா தாரயாமாஸ பார்த்தம்‌ ஸஞ்சாத்வ மாதவ:॥ -பார.தி–33:18,[
பகதத்தனாலே விடப்பட்டதும்‌, எல்லாவற்றையும்‌ ஸம்‌ ஹரிப்பதுமான அந்த பாணத்தை, அர்ஜுனனை மறைத்து, மாதவன்‌ மார்பினாலே தரித்தான்‌ –

315-விதிதஸ்‌ ஸ ஹி தர்மஜ்ஞம்‌ ஸரணாகத வத்ஸல: | தேந மைத்ரீ பவது தே யதி, ஜீவிதுமிச்சஹி ||-ரா-ஸு 21-20. ஸீதா வாக்யம் [(ராவணா!) ஸ்ரீராமபிரான்‌ தர்மத்தை அறிந்தவராகவும்‌, ஸரணமடைந்தவரிடம்‌ வாத்ஸல்ய முடையவராகவும்‌ பிரஸித்‌த மானவர்‌. நீ உயிர்‌ வாழ விரும்பினாயாகில்‌ அவருடன்‌ உனக்கு நட்பு உண்டாகட்டும்‌.

316-ஸகே,! ராகவ! தர்மஜ்ஞ! ரிபூணாமபி வத்ஸல ! | அப்‌யநுஜ்ஞாது மிச்சாமி கமிஷ்யாமி யதாக,தம்‌ ||-ரா-யு 50-56, கருட வாக்யம்‌, [நண்பரே! ரகு குலத்தில்‌ உதித்தவரே! தர்மத்தை அறிந்தவரே ! சத்துருக்களுக்கும்‌ வாத்ஸல்யத்தை உடையவரே! விடை பெற்றுக் கொள்ள விரும்புகிறேன்‌. வந்தவாறே போய் விடுகிறேன்‌ –

317-தாதூநாமிவ ஸைலேந்த்‌ரோ குணா நாமாகரோ மஹாந் –ரா-கி 15-21, தாரா வாக்யம் –[ஒரு சிறந்த மலை. தாதுக்களுக் கெல்லாம்‌ இருப்பிடமா யிருப்பது போல்‌, ஸ்ரீராமபிரானும்‌ குணங்களுக் கெல்லாம்‌ பெரியதோர்‌ இருப்பிடமாவர்‌ –

318-சதுர்முகராயுர்‌ யதி, கோடி வக்த்ரோ பவேந்நர: க்வாபி விஸாுத்‌,த,சேதா: | ஸ தே குணா நாம யுதைகதேஸம்‌ வதேந்ந வா தேவவர ப்ரஸீத, ॥வராஹ புராணம்‌ 78-9[பல ப்ரஹ்மாக்களின்‌ ஆயுளை உடையவனாய்‌, கோடிக்‌ கணக்கான முகங்களை உடையவனாய்‌, மிகவும்‌ ஸூத்தமான மனத்தை யுடையவனான ஒரு மனிதன்‌ இருப்பானே யாகில்‌, அவன்‌ உன்னுடைய குணங்களில்‌ பதினாயிரத்தில்‌ ஒரு பங்கைச்‌ சொல்லுவானோ மாட்டானோ அறியோம்‌. தேவர்களில்‌ சிறந்தவனே | அருள்‌ புரிய வேண்டும் –

319-யாதாதத்‌,யேந வர்ணிதம்‌[உண்மையாக வர்ணிக்கப் பட்டது.]

320-பிதா அஹமஸ்ய ஜகதோ மாதா தாதா பிதாமஹ: | [நான்‌ இவ் வுலகிற்குத்‌ தந்தையாகவும்‌, தாயாகவும்‌, தாரகனாகவும்‌, பிதா மஹனாகவும்‌ இருக்கிறேன்

321-பவித்ராணாம்‌ பவித்ரம்‌ யோ மங்களாநாஞ்ச மங்களம்‌ |
தைவதம்‌ தேவதாநாஞ்ச பூதாநாம்‌ யோவ்யய: பிதா ॥ ஸஹஸ்ர நாமாத்யாயம்
[எந்த பகவான்‌ பவித்திரங்களுள்‌ பவித்திரனா யிருக்கிறானோ, மங்களங்களுள்‌ மங்களமா யிருக்கிறானோ, தேவதைகளுக்‌கும்‌ தேவதையாயிருக்கிறானோ, எவனொருவன்‌ ஜீவ ராசிகளுக்கெல்லாம்‌ அழிவற்ற தந்தையாயிருக்கிறானோ —

322- மந்மநா பவ மத்‌ ப,க்தோ மத்‌,யாஜீ மாம்‌ நமஸ் குரு |
மாமேவைஷ்யஷி ஸத்யம்‌ தே ப்ரதிஜாநே ப்ரியோ$ஸி மே -கீதை 18.65-
[என்னிடத்தில்‌ மனத்தை வைத்தவனாகவும்‌, என்னுடைய பக்தனாகவும்‌, என்னை ஆராதிப்பவனாகவும்‌ ஆவாயாக, என்னை நமஸ்கரிப்பாயாக, என்னையே அடைவாய்‌; இது ஸத்யம்‌. உனக்கு ப்ரதிஜ்ஞை செய்கிறேன்‌. எனக்குப்‌ பிரியனன்றோ நீ.]

323-ஸ்வோஜ்ஜீவநேச்சா யதி, தே ஸ்வ ஸத்தாயாம்‌ ஸ்ப்ருஹா யதி, |
ஆத்ம தாஸ்யம்‌ ஹரே: ஸ்வாம்யம்‌ ஸ்வபாவஞ்ச ஸதா ஸ்மர॥-விஷ்ணு தத்வம் –
[உன்னுடைய உஜ்ஜீவனத்தில்‌ உனக்கு விருப்ப மிருக்குமாகில்‌, உன்‌ இருப்பில்‌ ஆசை யிருக்குமாகில்‌, ஆத்மாவினுடைய தாஸனா யிருக்கும்‌ தன்மையையும்‌, ஹரியினுடைய ஸ்வாமியா யிருக்கும்‌ தன்மையையும்‌, (இவைகள்‌) இயல்வானவை யென்பதையும்‌ எப்போதும்‌ நினைப்பாயாக

324-அத,வா யோகி,நாமேவ குலே ப,வதி தீ மதாம்‌ |ஏதத்‌தி , துர்லபதரம்‌ லோகே ஜந்ம யதீத்‌ருஸம்‌ || கிதை 6-42,[அல்லது, புத்தி, மான்களான யோகிகளின்‌ குலத்திலேயே (யோகத்திலிருக்து நழுவினவன்‌) பிறக்கிறான்‌. இம் மாதிரியான பிறப்பு உலகத்தில்‌ மிகவும்‌ துர்லபமன்றோ –

325-ப்ராய ஸ : பாபகாரித்வாந்‌ ம்ருத்யோருத்‌,விஜதே ஐந:। க்ருதக்ருத்யா: ப்ரதீ க்ஷந்தே ம்ருத்யும்‌ ப்ரியமிவாதிதிம்‌ ॥ -இதிஹாஸ ஸமுச்சயம் [பெரும்பாலும்‌, பாபம்‌ செய்பவனா யிருப்பதாலேயே மனிதன்‌ மரணத்தைக்‌ கண்டு பயப்படுகிறான்‌. செய்ய வேண்டியதைச்‌ செய்தவர்கள்‌ மரணத்தைப்‌ பிரியனான விருந்தாளியைப் போலே எதிர் பார்க்கிறார்கள் –

326-கோக்‌நே சைவ ஸுராபே ச சோரே பக்ந வ்ரதே ததர! நிஷ்க்ருதிர்‌ விஹிதா ஸத்‌பி க்ருதக்‌நே நாஸ்தி நிஷ்க்ருதி –. ரா-கி 34-12-பசுவைக்‌ கொன்றவன்‌, ஸுரா பானம்‌ செய்தவன்‌, வ்ரத பங்கம்‌ செய்தவன்‌, இவர்கள்‌ விஷயத்தில்‌ பெரியோர்களால்‌ ப்ராயஸ் சித்தம்‌ விதிக்கப்பட்டிருக்கிறது. செய்ந்நன்‌றி மறந்தவன்‌ விஷயத்தில்‌ ப்ராயஸ் சித்தமில்லை –

327-ஈஸ்வரோ$ஹமஹம்‌ போகீ , ஸித்‌தோஹம்‌ பலவாந்‌ ஸுகீ –கீதை 16.14– | [நானே ஈஸ்வரன்‌. நானே போகத்தை அடைபவன்‌. நான்‌ இயற்கையாகவே ஸித்‌தனா யிருப்பவன்‌; பலவானாகவும்‌ ஸுகமுடையவனாகவு மிருப்பவன்‌ நானே –

328–ராவணோ நாம துர் வ்ருத்தோ ராக்ஷஸோ ராக்ஷஸேஸ்வர: | தஸ்யா ஹமநுஜோ ப்‌ராதா விபிஷண இதி ஸ்ருத: ॥ ரா யு 17.12,[கெட்ட நடத்தை யுள்ளவனாகவும்‌, ராக்ஷஸர்களுக்கு அதிபதியாக வுமிருப்பவன்‌ ராவணன்‌ என்னும்‌ ராக்ஷஸன்‌. அவனுக்கு நான்‌ இளைய ஸஹோதரன்‌; விபீஷணன்‌ என்று பிரஸித்‌தி பெற்றவன் –

329-பிதா யஸ்ய புரா ஹ்யாஸீச்‌ சரண்யோ தர்ம வத்ஸல: | தஸ்ய புத்ர: ஸரண்யஸ்ச ஸுக்‌ரீவம்‌ ஸரணம்‌ க,த:।! ரா -கிஷ் 4-19,[தர்மத்தில்‌ பிரியமுள்ளவரான எவருடைய தந்தை முன்னொரு காலத்தில்‌ சரணமடையத் தகுந்தவரா யிருந்‌தாரோ, அவருடைய புத்திரரும்‌ சரண்யருமான ராகவர்‌ ஸூக்ரீவனை ஸரணமடைந்தார்‌ –

330-தாநஹம்‌ த்‌விஷத: க்ரூராந்‌ ஸம்ஸாரேஷு நராதமாந்‌ | ஷிபாம் யஜஸ்ரம ஸூபாநா ஸுரீஷ்வேவ யோநிஷு ||-கீதை -16-19–என்னைத்‌ த்வேஷிப் பவர்களும்‌, கொடூரமான வர்களும்‌,மனிதர்களுள்‌ கீழ்மையான வர்களும்‌, ஸூபமற்றவர் களுமான அவர்களை ஸம்ஸாரத்தில்‌, அதிலும்‌ ௮ஸுர யோனிகளில்‌ எப்போதும்‌ தள்ளுகிறேன்‌.

331-மத் பக்தம்‌ ஸ்வபசம்‌ வா$பி நிந்தாம்‌ குர்வந்தி யே நரா: பத்‌,ம கோடி ஸ்தேநாபி ந க்ஷமாமி வஸுந்த ரே ॥--வராஹ புராணம்‌-பூதேவி! சண்டராளனா யிருந்த போதிலும்‌, என்னுடைய பக்தனை : எந்த ஜனங்கள்‌ நிந்தை; செய்கிறார்களோ, அவர்களை கோடிக் கணக்கான பத்ம காலங்களானாலும்‌ பொறுக்கமாட்டேன்

332, ப்ரயத்நாத்‌ யதமாநஸ்து யோகீ, ஸம் ஸூத்‌த,கில்பி,ஷ: | அநேக ஜந்ம ஸம் ஷித்‌தஸ்‌ ததோ யாதி பராம்‌ ௧,திம்‌ ॥ -கீதை 6.45,-[ஆகையால்‌, அநேக ஜனமங்களில்‌ ஸித்‌;தி,யடைந்தவனும்‌, பாபங்கள்‌ நீங்கப் பெற்றவனுமான யோகி, முயற்சியுடன்‌ யத்னம்‌ செய்வானாகில்‌ மேலான கதியை அடைவான்‌

333-ஸாயுஜ்யம்‌ ப்ரதிபந்நா யே தீவ்ர ப,க்தாஸ்‌ தபஸ்விந: | கிங்கரா மம தே நித்யம்‌ ப,வந்தி நிருபத்‌,ரவா: || -பரம ஸம்ஹிதை-[எவர்கள்‌ மேலான ப,க்தியை உடையவர்களோ, எவர்கள்‌ ப்ரபத்தியாகிற தபஸ்ஸைச்‌ செய்தவரோ, அவர்களே என்னுடன்‌ ஸாயுஜ்யத்தை அடைந்து, ஸம்ஸாரமாகிற உபத்‌ரவம்‌ நீங்கப் பெற்றவர்களாய்‌, எப்போதும்‌ எனக்குக்‌ கைங்கர்யம்‌ செய்பவர்களாகிறார்கள்-

334, தத்‌ ப்‌ரூஹி வசநம்‌ தே,வி ! ராஜ்ஞோ யத,பி காங்க்ஷிதம்‌ | கரிஷ்யே ப்ரதிஜாநே ச ராமோ த்‌,விர்‌ நாபியாஷதே ॥ -ரா-அயோ 18-90,-[அம்மா। அரசர்‌ விரும்பிய தான அந்த வசனத்தைச்‌ சொல்லுவாயாக, அப்படியே செய்கிறேன்‌; ப்ரதிஜ்ஞையும்‌ செய்கிறேன்‌. ராமன்‌ இரண்டுவித,மாகப்‌ பேசமாட்டா

———————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்- வியாக்யான தொகுப்புக்கள்–ஸ்லோகங்கள் -31-65-

August 28, 2026

யத் பதாம் போருஹத் யாநவித் வஸ்தா சேஷ கல்மஷ
வஸ்து தாமுபயாதோ அஹம் யாமுநேயம் நமாமி தம்
-எவர் உடைய திருவடித் தாமரையை தியானிப்பதால் எல்லா பாபங்களும் அழியப் பெற்று அடியேன் ஒரு பொருள் ஆனேனோ அத்தகைய யாமுனாசார்யரை வணங்குகிறேன் –

ஸ்வாதயன் நிஹா சர்வேஷாம் த்ரய்யந் தார்த்தம் ஸூ துர் க்ரஹம்
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்திர தம் வந்தே யாமுநாஹ் வயம்-

ஸ்வாதயன்-அனுபவத்திக் கொண்டே –
யன் ப்ரத்யயம் -அனுபவிப்பித்து-
இஹ -இந்த காலத்தில் -இத்தைச் சொல்லும் பொழுது -இதில் –
சர்வேஷாம்-சர்வாதிகாரம் இந்த ஸ்தோத்ரம் -ஸ்ரத்தையே வேண்டுவது
ஸூ துர்க் ரஹம்–த்ரய்யந் தார்த்தம்-அறிவரிய வேதாந்தார்த்தங்களை
ஸ்தோத்ர யாமாஸ-ஸ்தோத்ர ரூபமாக வெளியிட்டு அருளினாரோ
யோகீந்திர-எந்த யோகி ஸ்ரேஷ்டர்–எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவனான ஆளவந்தார் –

இந்த ஸ்தோத்ர ரத்னத்தின் ஒவ் ஒரு ஸ்லோகமும் வேதாந்தப் பொருளைகளையே விளக்கி அருளும் பண்டிதரோடு பாமரர்களோடு வாசியற மதுரமாக -போக்யமாக -உபநிஷத்துக்கள் பொருள்களை அருளிச் செய்த எதிகட்க்கு இறைவன் யமுனைத் துறைவனை வணங்குகிறேன்-யோகிகளுக்குள் சிறந்தவரும், புரிந்து கொள்ள அரிதான வேதாந்த அர்த்தங்களை எல்லோரும் புரிந்து கொள்ளும்படி ஸ்தோத்ரங்களாக அருளிச் செய்தவருமான ஸ்ரீ ஆளவந்தாரை வணங்குகிறேன். என்கிறது இந்த தனியன்

நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம
நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம
–அஷ்டாக்ஷர மந்த்ரம் போல் இதுவே-ஆதார அதிசயத்தாலே ஸ்ரீ ஆளவந்தாருக்கு நமஸ்காரம் என்று பலகாலும் சொல்லி வணங்குவது-ஸ்ரீ ஆளவந்தாரை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன். -என்னால் அவரை வணங்குவதை நிறுத்த முடியவில்லை.-

ஸ்ரீமத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லாபஸ் ஸ்ரீ தர்ஸ்சதா –

அபயப்ரதா நாமா நமஸ் மதகுரு மஹம் பஜே
யத் கடாஷா தயம் ஜந்துர புநர் ஜன்மதாம் கத-

ஸ்லோகம் -31-அவதாரிகை –இதில் – கண்ணால் காணும் அளவும் போறாது-படிக்கு அளவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் -திருவாய் மொழி -9-2-2–என்றும்-கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -திருவாய்மொழி -4-3-6- என்றும் சொல்லுகிறபடியே உன் திருவடிகளாலே என் தலையை அலங்கரிக்க வேண்டும் –என்கிறார் –

கதா புநஸ் சங்க ரதாங்க கல்பக
த்வஜார விந்த அங்குஸ வஜ்ர லாஞ்சநம்
த்ரிவிக்ரம த்வச் சரணாம் புஜத்வயம்
மதிய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி
—31-

த்ரிவிக்ரமனாக அவதரித்த என் ஸ்வாமியே! சங்கம், சக்ரம், கற்பக மரம், கொடி, தாமரை, அங்குசம், வஜ்ராயுதம் ஆகிய அடையாளங்கள் பொருந்திய உன்னுடைய திருவடிகள் எப்பொழுது என்னுடை தலையை அலங்கரிக்கும்.

த்ரிவிக்ரம–மூவடி நிமிர்த்தி மூ வுலகு அளந்த பெருமானே
சங்க ரதாங்க கல்பக த்வஜார விந்த அங்குஸ வஜ்ர லாஞ்சநம்-சங்கு சக்கரம் கற்பக வ்ருக்ஷம் கொடி
தாமரைப்பூ மாவட்டி வஜ்ராயுதம் இவற்றை அடையாளமாக உடைய
த்வச் சரணாம் புஜத்வயம்-உனது திருவடித் தாமரை இணைகள்
மதிய மூர்த்தாநம் -கதா புநஸ் -அலங்கரிஷ்யதி—எனது தலையை எப்போது அலங்கரிக்கப் போகிறது

கதா புநஸ் –-திருவடிகளில் உண்டான பிராப்தியையும் சௌலப்யத்தையும் போக்யதையையும்
அனுசந்தித்து -அத்தாலே வந்த த்வரையாலும் விளம்ப ஹேது இல்லாத உபாயத்தைப் பரிக்ரஹித்தவர் ஆகையாலும் பின்னை எப்போது செய்வது -என்கிறார் –சங்க ரதாங்க கல்பக த்வஜார விந்த அங்குஸ வஜ்ர லாஞ்சநம் –-சர்வேஸ்வரனுடைய ஐஸ்வர்ய ஸூசகமாய் –-என் தலைக்கு ஆபரணமான சங்க சக்ராதி லஷணங்களாலே லிகிதமாய் உள்ளத்தை –-அவனுக்கு ஐஸ்வர்ய ஸூசகமாய் ஆகர்ஷகமுமாய் திருவடிகளோட்டை சம்பந்தத்தாலே இவர் தலைக்கு சேஷத்வ லஷணமுமாய் ஆபரணமுமாய் இறே இருப்பது –-பாத விலச்சினை வைத்தார் -என்னக் கடவது இறே –என் சென்னி -பெரியாழ்வார் திரு மொழி -5-2-8-இத்யாதி –த்ரிவிக்ரம –-குணாகுண நிரூபணம் பண்ணாதே-திருவடிகளில் வை லஷண்யமும் பாராதே எல்லார் தலையிலும் வைக்குமவன் அல்லையோ –தவச் சரணாம் புஜத்வயம் –
இப்படி பிராப்தனுமாய் ஸூலபனுமான உன்னுடைய நிரதிசய போக்யமான திருவடிகளை-மதிய மூர்த்தாநம் -அலங்கரிஷ்யதி-என்னுடையதான ஸிரஸ்ஸிலே எப்போது அலங்கரிக்கப் புகுகிறாய்
என் தலை மேலவே -திரு நெடும் தாண்டகம் -1- என்று-அபகர்ஷம் சொல்லிற்று-நரக ஹேதுவான பதார்த்தங்களின் கால் காண பிரார்த்தித்துப் போந்த என் தலையை -என்னுதல்-இதுக்கு பிராப்தனாய் போந்த என் தலையை -என்னுதல்-பதி வ்ரதைக்கு மங்கள ஸூத்ரம் போலே இறே சேஷ பூதனுக்கு திருவடிகள் –-மே மூர்த்நி பாதி என்று தன் தலையிலே நீர்மைக்கு உடலாக ஸ்வ சம்பந்தம் அத்தலைக்கு ஏற்றமாகச் சொன்னார்-இங்கு தத் சம்பந்தமே இத்தலைக்கு ஏற்றம் -என்கிறார் ஸ்வ சேஷத்வ சித்திக்காக-(நீ ஒரு நாள் படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் –என்றும் –
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -என்றும் –-அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் ஆழி யம் கண்ணா யுன் கோலப் பாதம் -என்றும் – இந்த விபூதியில் பேறு கிடைக்க என்றும் –
திரு நாட்டிலே புகுந்து அப்ராக்ருத தேகத்தை பெற்று பர வாசு தேவனுடைய பாதார விந்தங்களை சிரோ பூஷணமாக பெற த்வரிக்கிறார் -என்றுமாம் -)

கீழே திருவடித் தாமரைகளைக் கண்ணாலே எப்போது காணப் போகிறோம் என்றார் – அவ்வளவில் திருப்தி பெறாதே-நீ ஒரு நாள் படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய்-கோலமாம் என் சென்னிக்கு கமலம் அன்ன குரை கழலே-அடிச்சியாம் தலை மிசை நீ அணியாய் ஆழி யம் கண்ணா உன் கோலப் பாதம்-ஸ்ரீ பரதாழ்வானுக்கு கிட்டிய பேறு பாவியேனுக்கும் கிடைக்க வழி யுண்டோ என்கிறார்-இந்த விபூதியிலேயே பிரார்த்தனை என்றும்-பர வாஸூதேவனுடைய பாதார விந்தங்களை அங்கு ஸீரோ பூஷணமாகப் பெறப் போவது என்றோ என்கிறார் என்றுமாம்-அவனுக்கு ஐஸ்வர்ய ஸூசகமாய் ஆகர்ஷகமுமாய் – திருவடிகளோட்டை சம்பந்தத்தாலே இவர் தலைக்கு சேஷத்வ லஷணமுமாய் ஆபரணமுமாய் இறே இருப்பது 

சங்கு சக்கரத்தினோடு ஸரோருகம் த்வஜம் சார்ந்த
வங்குசம் வயிரம் கற்ப தரு முதலாகும் சின்னம்
தங்கு நின் தாமரைத் தாள் விக்ரம என் சிரத்தைப்
பொங்கும் என் மனம் களிப்பப் புனையும் நாள் எந்த நாளோ
–31-எல்லாருடைய சிரஸ்ஸுக்களிலும் உன் திருவடியை அமர்த்தி அருளிய ஏ த்ரி விக்ரமனே-சங்கம் சக்கரம் பத்மம் த்வஜம் அங்குசம் வஜ்ரம் கற்பம் இவை முதலியவற்றின் உபய விபூதி சாம்ராஜ்யத்தை குறிக்கின்ற திவ்ய ரேகைகளையுடைய உன் திருவடிகள் என் மனம் பொங்கிக் களிக்குமாறு எப்பொழுது என் சிரஸ்ஸை அலங்கரிக்கப் போகின்றவோ –

ஸ்தோத்ரம் -32- அவதாரிகை –இந்த ஸ்லோகம் முதலாக-பவந்தம் -ஸ்லோகம் -46- அளவும்-பர்வ க்ரமத்தாலே-அவயவ-ஆபரண-ஆயுத-மகிஷி-பரிஜன பர்ச்சேதங்களோட்டை சேர்த்தி அழகை அனுபவித்து-அனுபவ ஜனித ப்ரீதி காரிதமான கைங்கர்யத்தாலே உன்னை உகப்பிப்பது எப்போது -என்கிறார் –-இத்தால் தம்முடைய ப்ராப்யத்தை அருளிச் செய்கிறார்-வைகுண்டே து பரே லோகே ஸ்ரீயா ஸார்த்தம் ஜகத் பதி ஆஸ்தே விஷ்ணுர சிந்த்யாத்மா பக்திர் பாகவதைஸ் சஹ – என்று இறே வஸ்து இருப்பது –(வைகுண்டே, து பரே லோகே ஸ்ரீயா ஸார்த்த,ம்‌ ஜக,த்பதி:। ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா ப,க்தைர்‌ பாகவதைஸ்‌ ஸஹ॥ [மேலான உலகமான வைகுண்டத்தில்‌. அதை நினைக்க வொண்ணாத ஸ்வரூபத்தை உடையவருமான விஷ்ணு, ப,க்தர்களுடனும்‌, பாக,வதர்களுடனும்‌ கூடியவராய்‌, ஸ்ரீதேவியுடன்‌ கூட எழுந்தருளியிருக்கிறார்)இதன் மூலம், ஆளவந்தார் பகவானுக்குப் பரமபதத்தில் அடியார்களுடன் கூடி இருந்து கைங்கர்யம் செய்யும் குறிக்கோளை அருளிச் செய்கிறார்.

விராஜமானே உஜ்ஜ்வல பீதவாஸஸம்
ஸ்மித அதஸீ ஸூந அமலச்சவிம்
நிமக்ன நாபிம் தநு மத்யம் உந்நதம்
விஸால வஷச் ஸ்தல ஸோபி லஷணம்
–32-

எம்பெருமான் ஒளிவிடும் திருப் பீதாம்பரத்தை அணிந்துள்ளான்;
மலர்ந்த காயாம்பூவின் நிறத்தைப் போன்ற தோஷமற்ற ஒளியுடையவன்;
ஆழமான திருநாபி மற்றும் மெலிந்த இடைப்பகுதியை உடையவனாகச் சிறந்து விளங்குகிறான்,
ஒளிவிடும் ஸ்ரீவத்ஸம் என்கிற மறுவைத் தன் பரந்த திருமார்பில் உடையவன்-

விராஜமானே உஜ்ஜ்வல பீதவாஸஸம்–விளங்கிக் கொண்டு இருக்கிற மிகவும் பிரகாசமான
பீதாம்பரத்தை யுடையவனாயும்-உடையார்ந்த ஆடை -திருவாய்மொழி -3-7-4-என்று-திருவரை பூத்தால் போலே இருக்கிற திருப் பீதாம்பரம்-விராஜமானே உஜ்ஜ்வல-இரண்டு விசேஷணங்கள்-இயற்கையான சோபா பிரகாசமும் –-நீல நிற திவ்ய மங்கள விக்ரஹ சேர்த்தியால் உண்டான பர பாக சோபையும்
ஸ்மித அதஸீ ஸூந அமலச்சவிம்–மலர்ந்த காயாம்பூப் போன்ற நிர்மலமான ஒளியை உடையவனாயும்
காயம் மலர் நிறவா-பூவைப்பூ வண்ணாநிமக்ன நாபிம் -ஆழ்ந்த திரு நாபியை உடையவனாயும் –
ஸுவ்ந்தர்ய அமுத வெள்ளம் நான்கு புறமும் ஓடி வந்து இங்கு சுழித்துக் கிடக்குமே–தநு மத்யம் -நுட்பமான இடையை உடையவனாயும் அனைத்து உலகுக்கும் இருப்பிடமாய் இருக்கும் உதரம் க்ருசமாய் இருக்கின்றதே என்று ஆச்சர்யப்பட வைக்குமே-உந்நதம்-உயர்ந்தவனையும் –இவ்வடிவாலும்-உடையாலும் அழகாலும்-சர்வாதிகன் என்று தொடரும்படி திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டன்
விஸால வஷச் ஸ்தல ஸோபி லஷணம்–விசாலமான திரு மார்பிலே விளங்குகின்ற ஸ்ரீ வத்சம் என்கிற மறுவை உடையவனாயும் இருக்கிற-திரு மறு மார்பன் – இப்படி உள்ள உன்னை என்று நான் அனுபவிக்கப் போகிறேன் –

விராஜமானே –-திருவடிகளைத் தலையிலே வைக்க அமையுமோ -என்ன-அவ்வளவு போராது -என்று
சாமான்ய ஸோபையை அனுபவிக்கிறார்-விராஜமான திரு நிறத்துக்கு பரபாகமான அழகுஉஜ்ஜ்வல –
மாஹார ரஜனம்
-(மாஹாரஜநம்‌ வாஸ:(பரமாத்மாவுக்கு) ஆடை பீதாம்பரம்)என்கிற ஸ்வரூபத்தாலே வந்த ஔஜ்ஜ்வல்யம்-உடையார்ந்த ஆடை -திருவாய்மொழி -3-7-4-என்று திருவரை பூத்தால் போலே இருக்கிற அழகு –பீத வாஸஸம் –பீதக வாடை யுடையான் -என்று அழகே அன்றிக்கே ஐஸ்வர்ய ஸூசகமமாய் இருக்கை –ஸ்மித அதஸீ –-அலருகிற போதை செவ்வியை உடைத்தான-காயம் பூப் போலே இருக்கை –-அத ஸீ புஷ்ப சங்காஸம் –காயாம்பூ மலர்ப் பிறங்கல் அன்ன மாலை -பெருமாள் திருமொழி -1-2-என்று அபியுக்தர் ஆழம் கால் படும் நிலம் இறே-(அதஸீ புஷ்ப ஸங்காஸம்‌ பீதவாவாஸ ஸமச்யுதம்‌ |யே நமஸ்யந்தி கோவிந்த,ம்‌ ந தேஷாம்‌ வித்‌ வதே ப,யம்‌। [அடியவர்களை நழுவவிடாதவனும்‌, காயாம் பூவைப் போன்‌ றவனும்‌, பீதாம்பரத்தை யுடையவனுமான கோவிந்தனை எவர்கள்‌ நமஸ்கரிக்கிரார்களோ அவர்களுக்கு பயமில்லை)-ஸூந அமலச்சவிம் –-தோஷம் அற்ற காந்தியை உடையவனாயும்-நிமக்ன நாபிம் – ஆவர்த்த இவ கங்காயா -(ஆவர்த்த இவ க,ங்காயா: [கங்கையின்‌ சுழல்‌ போன்‌றிருக்கும்‌ (திரு நாபி)என்கிறபடியே சௌந்தர்ய வெள்ளம் சுழித்தால் போலே இருக்கிற திரு நாபியை உடையவன்-நந்தன் மதலைக்கு நன்றும் அழகிய உந்தி -பெரியாழ்வார் திருமொழி -1-3-8-என்னக் கடவது இறே-தநு மத்யம் –சிற்றிடையும் வடிவும் -திருவாய் மொழி -5-5-8–துடி சேர் இடையும் -திருவாய்மொழி -8-5-3-என்னக் கடவது இறே-உந்நதம்--இவ்வடிவாலும் உடையாலும் அழகாலும் சர்வாதிகனாய் இருக்கிற இருப்பு தோற்றும்படி இருக்கை –விஸால வஷச் ஸ்தல ஸோபி லஷணம் –-விஸ்தருதமான திரு மார்பிலே விளங்கா நிற்பதான ஸ்ரீ வத்ஸ சிஹ்னம் உடைய -உன்னை-

(இது முதல் –14-ஸ்லோகங்களால் விசேஷணங்களை அருளிச் செய்து அனுபவித்து-46-ஸ்லோகத்தில் -க்ரியா பதம் -பவந்தமே வாநுசரன்—-நித்ய கிங்கர ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாத ஜீவித–என்று அணுகி –
கைங்கர்யம் செய்து -உன்னை உகப்பிப்பது என்றைக்கோ -என்கிறார்–இப்படி அனுபவித்துக் கொண்டு கைங்கர்யங்களைச் செய்து உன்னை உகப்பிப்பது என்றைக்கோ – என்று தலைக் கட்டுகிறபடி -இவை குளகம் -என்பர்-விராஜமானே உஜ்ஜ்வல பீதவாஸஸம்-இரண்டு விசேஷணங்கள்–இயற்கையான சோபையையும் திவ்ய மங்கள விக்ரஹத்துடன் சேர்ந்த பரபாக சோபையையும் காட்டும் –-அதஸீ ஸூ நம் -என்றது –காயம் பூ -பூவைப் பூ -–)

விந்தையுடன் திருவரை யது பூத்தது எனச் சுடர் வீசு பொன் அம்பரமும்
அந்தமுடன் அலர் காயாம்பூ நிற வாசறு மேனியும் யுன்னதமும்
சுந்தர வாழி சுழன்றது எனச் சுழற் ஆழ்ந்திடும் உந்தியும் சிற்றிடையும்
சந்தமுடன் தட மார்வம் விளங்குவதாம் மறு ஓன்று தரிப்பவனாய்
–32—திருவரையே பூத்தது என்று சொல்லும்படி வெகு ஆச்சர்யமாயும் அழகாயும் ப்ரகாசிக்கும் பீதாம்பரத்தையும்-அலர்ந்த காயாம்பூவைப் போன்ற நிர்மலமான திரு மேனியையும்-அழகு என்னும் கடலில் சுழல் யுண்டாக்கியது என்னும் படி அழுத்திச் சுழல் கொண்ட திரு நாபி கமலத்தையும்-சிற்று இடையையும் விசால மார்வில் பொலிவுடன் விளங்குகின்ற ஸ்ரீ வத்ஸம் என்னும் ஒரு மறுவையும் தரித்து உன்னதமாய்ப் ப்ரகாசிப்பவனாய் –

ஸ்தோத்ரம் -33- அவதாரிகை –திருத் தோள்களில் சௌர்ய வீர்யாதிகளையும் அழகையும் அனுபவிக்கிறார்-திருப் பீதாம்பரத்தைப் பிடித்து திரு மார்பு அளவும் வந்தார் கீழ் – திரு மார்பில் இருந்து திருத் தோள் அழகில் -ஐஸ்வர்ய வீர்யங்களையும் அழகையும் அனுபவித்துப் பேசுகிறார்-இப்படித் திகழும் உன்னை என்று அனுபவிக்கப் போகிறேன் –

சகாஸதம் ஜ்யாகிண கர்க்கசைஸ் ஸூபைஸ்
சதுர்ப்பிர் ஆஜாநு விளம்பிபிர் புஜை
ப்ரியாவதம் ஸோத் பல கர்ண பூஷண
ஸ்லதாலகா பந்த விமர்த்த ஸம ஸிபி
–33-

வில்லில் நாணேற்றியதால் கடினமாக இருக்கும் நான்கு திருக் கைகளால் ஒளிவிடுகிறான் எம்பெருமான்; மேலும் அவனுடைய திருத்தோள்களில் ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயாரின் காதுகளில் அணிந்திருக்கும் கரிய நிறத்தில் இருக்கும் அல்லிப் பூக்கள், அவளின் காதணிகள் மற்றும் அலையும் கூந்தலின் அடையாளங்கள் தெரிகின்றன –

ஆஜாநு விளம்பிபிர் –திரு முழந்தாள் வரை தொங்குகின்றவைகளாயும்
ஜ்யாகிண கர்க்கசைஸ்–நாண் தழும்பு ஏறிக் கரடுமுரடாய் இருப்பவைகளாயும்-வீரச் செயலின் பெருமையை –தழும்பு இருந்த சார்ங்க நாண் தோய்ந்தவா மங்கை –-விபவத்தில் பெற்ற தழும்புடன் பர வாஸூ தேவன் இடமும் விளங்குவதாக அனுசந்திக்கிறார்-ப்ரியாவதம் ஸோத் பல கர்ண பூஷண ஸ்லதாலகா பந்த விமர்த்த ஸம ஸிபி–பிராட்டிமார்களுக்குக் கரண அலங்காரமான-கரு நெய்தல் மலர் என்ன-கரண பூஷணங்கள் என்ன -அலைந்த திருக்குழல் கற்றை என்ன -ஆகிய இவை-பிராட்டி அணைக்கும் பொழுது அழுந்தி இருக்கிற படியைத் தெரிவிக்கின்றவைகளாயும்-ஆஸ்ரித ரஷணமே யாத்ரையாம்படி சொல்லிற்று -கீழ்-அதுவே பச்சையாக பிராட்டி அணைக்கும் படி சொல்லுகிறது இங்கு
ப்ரணய சிஹனங்களும்-ரஷண சிஹனங்களும் இறே திருத் தோள்களுக்கு மாங்கள்யம்-ஸூபைஸ்-அழகியவைகளாயும் -ஓவ்தார்யம் வீர்யம் ஸுவ்ந்தர்யம்-எல்லாம் அமைந்து உள்ளவை-சகாஸதம் சதுர்ப்பி ராபுஜை–நான்கு புஜங்களோடே பிரகாசியா நிற்கிற பர வாஸூ தேவனுக்கும் சதுர் புஜத்வம் பிராமண சித்தம்

சகாஸதம்-ப்ரகாசிப்பவனாகவும்-ஜாகிண கர்க்கசைஸ் – நாண் தழும்பு ஏறிக் கரடு முரடாய் இருப்பவையும்- தழும்பு இருந்த சாரங்க நாண் தோய்ந்தவா மங்கை -முதல் திருவந்தாதி -23-என்கிறபடியே-ஸ்ரீ சார்ங்கத்தில் நாணித் தழும்பாலே அலங்க்ருதமான திருத் தோள்கள் –
நாணித் தழும்பு எல்லாவற்றிற்கும் உண்டாகையாலே-ஸ்வ்யவாசி -என்கை -இடது கைகளாலும் அம்பு விடுபவன்-ஆஸ்ரித விரோதிகளை அழியச் செய்து-தழும்பை யுடைத்தான திருத் தோள்கள் வீரத் தழும்பு வீர புஜங்களுக்கு அழகு இறே-ஸூபைஸ் ஸூபேந மனஸா த்யாதம் -(ப்‌ருந்தாவநம்‌ ப,க,வதா க்ருஷ்ணேநாக்லிஷ்டகர்மணா |-மே.ந மநஸா த்‌,யாதம்‌ கவாம்‌ வ்ருத்‌தி மபீ,ப்ஸதா।॥! [கல்யாண கு,ணங்கள்‌ நிறைந்தவனும்‌, பெருங்காரியங்களையும்‌ எளிதாகச்‌ செய்பவனும்‌, பசுக்களின்‌ வ்ருத்‌தியை விரும்புபவனுமான க்ருஷ்ணனால்‌ ப்‌ருந்தாவனமானது, ஸூபமான மனத்தினால்‌ நினைக்கப் பட்டது )என்னுமா போலே ஆஸ்ரித சம்ருத்தியே பிரயோஜனமாக வெறும் புறத்திலே உபகரிக்கும் தோள்கள் -என்னுதல் ஆஸ்ரிதர்க்கு ப்ராப்யமான தோள்கள் -என்னுதல் –சதுர்ப்பிர் –கல்பக தரு பணைத்தால் போலே-ஆஸ்ரித ரஷணமே விளை நீராக பணைத்த படி –-ஆஜாநு விலம்பிபிர் –-முழம் தாள்கள் வரை தொங்குகின்றவையும்-ஆஜாநு பாஹூவாய் இருக்கை இறே-புருஷோத்தம லஷணம்–ப்ரியாவதம் ஸோத் பல கர்ண பூஷண-ஸ்லதாலகா பந்த விமர்த்த ஸம ஸிபி –ப்ரிய அவதம்ஸ் உத்பல கர்ண பூஷண ஸ்தல அல்கா பந்த விமர்த்த ஸம்ஸிபி –-ஆஸ்ரித ரஷணமே யாத்ரையாம்படி சொல்லிற்று -கீழ்-அதுவே பச்சையாக பிராட்டி அணைக்கும் படி சொல்லுகிறது இங்கு-பிராட்டி திருச் செவி மலரான உத்பலம் என்ன-கர்ண பூஷணம் என்ன-ஸ்பர்சத்தாலே தத் காலத்தில் கிஞ்சிதா குஞ்சிதமான திருக் குழல் கற்றை என்ன இவற்றின் உடைய ஸ்ம்மர்த்ததைக் கோள் சொல்லுமவையாய் அவற்றாலே விளங்கா நின்று உள்ளவனை
ஸ்யனே சோத்த மாங்கே ந ஸீதாயா ஸோபிதம் புரா -யுத்தம் -21-5-(ஸயநே சோத்தமாங்கே,ந ஸீதாயா: ஸோபி,தம்‌ புரா। [படுக்கையில்‌ ஸீதா பிராட்டியின்‌ தலையாலே முன்னெல்‌லாம்‌ பிரகாஸியா நின்றதான திருக் கையை)என்கிறபடியே வீர புஜத்தை இறே வீர பத்னி அணைவது அல்லாத போது சஜாதீயை யான ஸ்திரீயை அணைத்த வோபாதி இறே ப்ரணய சிஹனங்களும் ரஷண சிஹனங்களும் இறே திருத் தோள்களுக்கு மாங்கள்யம்–சகாஸதம் –-இப்படிப் பட்ட தோள்கள் இறே-நாராயண பிரணயி யானவனுக்கு ஔஜ்ஜ்வல்ய ஹேதுக்கள்-(பரத்வ திசையிலும் அவதார திசையிலும் திவ்ய மங்கள விக்ரஹத்தில் பேதம் இல்லாமல் தழும்புகள் இருக்கும் என்பதே ஆளவந்தார் திரு உள்ளம்-பிராட்டி திருக் கைகளை தலை அணையாக வைத்து கண் வளர்ந்து அருளும் போது திவ்ய ஆபரணங்கள் அழுந்திய தழும்பும் திருக் குழல் கற்றை பரிமளமும் திருத் தோள்களில் ப்ரத்யக்ஷம் ஆகுமே )

பத்த விரோதிகள் பட்டற வேந்து வில் நாணியின் சுவடு படிந்து உளவா
யுத்தம புருட விலக்ஷண முற்று முழந்தளவாய்ச் சுப ஸூசிகையாய்
அத்திருவின் செவி யலர் மலர் உத்பலமும் இழையும் மவிழ் பின்னகமும்
ஒத்தி யுறுத்தியது என்ன ஒளிர் தரு மென்மையில் நான்கு புயத்தவனாய்
–33–ஆஸ்ரித விரோதிகளைக் களையும் பொருட்டு தரித்த சார்ங்கத்தின் நாணினால் யுண்டான தழும்பு படிந்துள்ளவனாய்
உத்தம புருஷ லக்ஷணமாக முழங்கால் வரைக்கும் நீண்டவனாய் பக்தர்களுக்கு மங்கள கரமானவையாய் அந்த மஹா லஷ்மியினுடைய திருச்செவி மலரான உத்பலமும் கரண ஆபரணங்களும் அவிழ்ந்து இருக்கும் திருக் குழல் கற்றையும் ஆகிய இவைகள் உறுத்தினது தோற்றும்படி ப்ரகாசிக்கும் மிருதுவான நான்கு திருத் தோள்களையும் யுடையவனாய்

ஸ்தோத்ரம் -34- அவதாரிகை –திருத் தோள்களுக்கு அனந்தரமான-திருக் கழுத்தையும்
தத் அனந்தரமான திரு முகத்தில் சாமான்ய ஸோபையையும் அனுபவிக்கிறார்-
திருத் தோள்களில் இருந்தும் திருக் கழுத்தைப் பற்றுகிறார்-கழுத்தில் மூன்று ரேகைகள் இருப்பது புருஷோத்தம லக்ஷணம் -எனவே சங்கு உவமை–-சங்குக்கு வட மொழி -சொல் -கம்பு —-கம்பு க்ரீவா -மூன்று ரேகைகள் அமைந்த கழுத்து –

உதக்ர பீன அம்ஸ விலம்பி குண்டல
அலக ஆவளீ பந்துர கம்பு கந்தரம்
முக ஸ்ரீ யா ந்யக்ருத பூர்ண நிர்மலா
அம்ருதாம் ஸூ பிம்பாம்புருஹ உஜ்ஜ்வல ஸ்ரீயம்
–34-

எம்பெருமான் அணிந்திருக்கும் குண்டலங்கள் அவனுடைய உயர்ந்த திரண்டிருக்கும் திருத் தோள்களின் வரை வந்து தொங்குவதாலும்,-அவனுடைய சுருண்ட கூந்தலினாலும், மூன்று வரிகள் இருப்பதாலும் அவனுடைய திருக் கழுத்து அழகாக இருக்கிறது. தன்னுடைய திருமுக மண்டலத்தின் ஒளியால் தோஷமற்ற நிலவு மற்றும் அப்போதலர்ந்த தாமரை மலரை ஜயித்திருக்கிறான் —

உதக்ர பீன அம்ஸ விலம்பி குண்டல-அலக ஆவளீ பந்துர கம்பு கந்தரம்-உயர்ந்தும் பருத்தும் இருக்கிற
திருத் தோள்கள் வரையில் தொங்குகின்ற திருக் குண்டலங்களாலும் திருக் குழல் கற்றைகளாலும்
அழகு பெற்றுச் சங்கு போல் விளங்குகின்ற திருக் கழுத்தை உடையவனாய்
முக ஸ்ரீ யா –திரு முகத்தின் காந்தியினால்
ந்யக்ருத பூர்ண நிர்மலா அம்ருதாம் ஸூ பிம்பாம்புருஹ உஜ்ஜ்வல ஸ்ரீயம்–பூர்ணமாய் நிர்மலமான
சந்த்ர மண்டலத்தையும் அப்போது அலர்ந்த செந்தாமரைப் பூவையையும் திரஸ்கரித்து மிக விளங்கா நிற்கிற –-எத்தனை செய்யிலும் என் மகன் முகம் நேர் ஒவ்வாய் -பெரியாழ்வார் திருமொழி -1-4-3-என்று
அது தன்னைத் தாழ விட்ட இடத்திலே யாயிற்று ஒவ்வாது ஒழிவது

உதக்ர பின அம்ஸ விலம்பி குண்டல அலக ஆவளீ –-ஓங்கித் தசைத்து இருந்துள்ள அம்ஸ்த்திலே வரத் தாழ்ந்த திருக் குண்டலங்கள் -என்ன அவ்வளவு வரத் தாழ்ந்த திருக் குழல்கள் -என்ன இவற்றாலே சுந்தரமாய்-வடிவு தான் ரேகா த்ரயாங்கிதமாய் இருந்துள்ள திருக் கழுத்தை உடையவனை –பந்துர-
சுந்தர ரேகா த்ரயாங்கிதா க்ரீவா கம்பு க்ரீவேதி கத்யதே –-மின்னு மணி மகரக் குண்டலங்கள் வில் வீச -பெரிய திருமடல் -2–மகரம் சேர் குழை இருபாடு இலங்கி யாட -திரு நெடும் தாண்டகம் -21-என்றும்-சொல்லுகிறபடியே (ரேகாத்ரயாங்கதா க்ரீவா கம்பு க்ரீவேதி கத்யதே | [மூன்று ரேகை,களால்‌ அடையாளம்‌ செய்யப்பட்ட கழுத்து ‘கம்புக்ரீவா” என்று சொல்லப்படுகிறது)திருக் கழுத்துக்கு பர பாகமான ஒளியை யுடைத்தாய் இரண்டு ஆதித்யர்கள் ஆபரண வேஷத்தாலே அலங்கரிக்கிறாப் போலே இருக்கை –-கொள்கின்ற கோள் இருளை -திருவாய்மொழி -7-7-9-இத்யாதிப் படியே திருக் குழலாலே அலங்க்ருதமாய் இருக்கிறபடி–முக ஸ்ரீ யா ந்யக்ருத பூர்ண நிர்மலா அம்ருதாம் ஸூ பிம்பாம்புருஹ உஜ்ஜ்வல ஸ்ரீயம் –-அத் திருக் குழலாலே அழகு திரு முகத்திலே மூட்ட அந்த அழகை அனுபவிக்கிறார் –-தன்னுடைய ஜ்யோதிஸ்ஸாலே பூர்ண சந்தரன் உடைய ஒளியையும் அப்போது அலர்ந்த தாமரைப் பூவில் அழகையும் தோற்ப்பிக்கும் திரு முகத்தை உடைய உன்னை –முக ஸ்ரீ யா -முக காந்த்யா ந்யக்ருத -அவன் சம்பூர்ண கலைகளாலும் பூரணமான பௌரணமாவாஸ்யையில் சந்திர மண்டலமாய் மறு கழற்றின அளவிலே யாயிற்று-அஸ்த்ருசமாய் இருப்பது எத்தனை செய்யிலும் என் மகன் முகம் நேர் ஒவ்வாய் -பெரியாழ்வார் திருமொழி -1-4-3-என்று
அது தன்னைத் தாழ விட்ட இடத்திலே யாயிற்று ஒவ்வாது ஒழிவது-தேஜஸ்ஸே யன்றியே சௌகுமார்யத்துக்கும் விகாஸி ஸார தாம்போஜமவஸ் யாய ஜ லோ ஷிதம் –-செவ்விக்கும் தாமரைப் பூவும் ஸ்த்ருஸ்ம் அன்று-பரிபூய ஸ்திதம் -என்னக் கடவது இறே-(திருக் கழுத்துக்கு சங்கு உவமை –கம்பு -சங்குக்கு பெயர் –கம்பு க்ரீவா -மூன்று ரேகைகள் -கொடுக்கல் அமைந்த கழுத்து -)

பருத்து உயர்வான திருப்புய மட்டும் படிந்து இழி குண்டலமும் குழலும்
இருத்தலின் ஓர் எழில் ஏந்து இலங்கும் இடம் புரி போல் ஒளிர் கண்டம் அதும்
தரித்ததுவும் ஓர் அழகோ என நின்மல பூர்ண சந்த்ரனார் ஒளியும்
திருத்துவதா மலர் மரை எழிலும் மிகு திரு முக மண்டல சோதியனாய்
–34–பருத்து உயர்ந்த திருத்தோள்கள் மட்டும் தாழ்ந்து தொங்குகின்ற குண்டலங்களாலும் குழல்களாலும் பொலிந்து விளங்குகின்ற சங்கம் போன்ற அழகான திருக் கழுத்துடன்-தன் காந்தியினாலே கலைகளால் நிறைந்தும் நிர்மலமுமான பூர்ண சந்திரனுடைய ஒளியும்-அப்போது மலர்ந்த தாமரைப் புஷ்பமும் படைத்துள்ள அழகும்-ஒரு அழகோ எனத் தோற்பிக்கும் பேர் அழகு வாய்ந்த திரு முக மண்டலத்துடன் ஜ்வலித்துப் பிரகாசிக்கும் ஒரு ஜோதி யானவனாய் –

ஸ்தோத்ரம் -35-அவதாரிகை –கோள் இழைத் தாமரை -திருவாய்மொழி -7-7-8-என்கிறபடியே
திரு முகத்தில் அவயவ சௌந்தர்யத்தின் உடைய சேர்த்தியை அனுபவிக்கிறார்-ஆழ்வார், திருவாய்மொழி 7.7.8இல் “கோளிழைத் தாமரை”(எம்பெருமானின் திருக்கண்கள் அவற்றின் ஒளியையே ஆபரணமாகக் கொண்டிருக்கின்றன) என்று சொன்னபடி,-ஆளவந்தார் எம்பெருமானின் திரு முக மண்டலத்தை ஒவ்வொரு அவயமாக அனுபவிக்கிறார்.(ஸக்‌,ய: பஸ்யத க்ருஷ்ணஸ்ய முகமத்யருணேக்ஷணம்‌|.,. விகாஸி ஸாரதராம்பே ஜமவஸ்யாய ஜலோக்ஷிதம்‌ | பரிபூய ஸ்திதம்‌ ஜந்ம ஸபலம்‌ க்ரியதாம்‌ த்‌,ருஸ: ॥ [ஸகி,களே | மிகவும்‌ சிவந்த திருக் கண்களை உடையதும்‌ பனி ஜலத்தினால்‌ தெளிக்கப்பட்டிருக்கும்‌ மலர்ந்த ஸரத்‌ ‘ காலத்‌ தாமரையை வெற்றி கொண்டிருப்பதுமான கிருஷ்ணனுடைய முகத்தைப்‌ பாருங்கள்‌. கண்களைப்‌ பெற்றிருப்‌ பதை ப்ரயோஜனமுள்ளதாகச்‌ செய்யுங்கள்)

ப்ரபுத்த முக்தாம்புஜ சாரு லோசனம்
ஸவிப்ரமப் ரூலத முஜ்ஜ்வலாதரம்
ஸூ சிஸ்மிதம் கோமள கண்ட முந்நஸ்ம்
லலாட பர்யந்த விலம்பி தாலகம்
–35-

எம்பெருமான் மலர்ந்த, புதிய தாமரை மலரைப் போன்ற திருக் கண்களையும், கொடி போன்று வளைந்த திருப் புருவங்களையும், மிகவும் ஒளிவிடும் திரு வதரங்களையும், புனிதமான புன்முறுவலையும், அழகிய கன்னங்களையும், நிமிர்ந்த திரு மூக்கையும், திரு நெற்றி வரை படர்ந்திருக்கும் திருக் குழலையும் (கூந்தலையும்) உடையவன் –

ப்ரபுத்த முக்தாம்புஜ சாரு லோசனம்–அப்போது அலர்ந்த தாமரைப் பூ போன்று அழகிய
திருக் கண்களை உடையனாய்
முக்த -அழகிய என்றும் புதிதான என்றும்
ஸவிப்ரம ப்ரூலதம் –விலாசத்தோடு கூடினதாய்-கொடி போன்றதான திருப் புருவங்களை
யுடையனாய்
உஜ்ஜ்வலாதரம்–பிரகாசிக்கின்ற திரு அதரத்தை உடையனாய்
ஸூ சிஸ்மிதம் –கபடம் அற்ற புன் சிரிப்பை உடையனாய்
ஸூசி -வெளுத்த என்றுமாம் –ருஜு வான அபிப்ராயத்துடன் சிரிக்கிறபடி
கோமள கண்டம் -அழகிய கபோலங்களை உடையனாய்
உந்நஸ்ம்–உயர்ந்த திரு மூக்கை உடையனாய்
லலாட பர்யந்த விலம்பித அலகம்—திரு நெற்றி அளவும் தொங்குகின்ற முன்னுச்சி மயிர்களை உடையனாய் இருக்கிற

ப்ரபுத்த – ஆஸ்ரித சம்ச்லேஷத்தாலே விகஸிதமாய் இருக்கை –முக்த-கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே –அங்கண் இரண்டும் கொண்டு –திருப்பாவை -22- என்கிறபடியே அலரத் தொடங்கின அளவாய் இருக்கும் -என்னுதல் –-பேதுறு முகம் செய்து -திருவாய் மொழி -9-10-9-என்னும் படிக்கு ஆஸ்ரிதர் ஓட்டைக் கல்வியால் வந்த ஆனந்தாதிஸயத்தில் விக்ருதியைச் சொல்லுதல் –
அம்புஜ சாரு லோசனம் –-இப்படிப் பட்ட தாமரை த்ருஷ்டாந்தமாகப் போராமையாலே
தார்ஷ்டாந்திகம் தன்னையே சொல்கிறது-தத் புண்டரீக நயனம் விஷ்ணோர் த்ரஷ்யாம் யஹம் முகம் -(பாபம்‌. ஹரதி யத்‌ பும்ஸாம்‌ ஸ்ம்ருதம்‌ ஸங்கல்பநாமயம்‌ | தத்‌ புண்டரிக நயநம்‌ விஷ்ணோர்‌ த்‌ரக்ஷயாம் யஹம்‌ முக,ம்‌॥! [எந்தத்‌ திருமுகமண்டலமானது நினைக்கப்பட்டவுடன்‌, மனிதர்களின்‌ பாபத்தைப்‌ போக்கடிக்கிறதோ, ஆல்ரிதர்‌ களுடைய ஸங்கல்பத்தின்படியே அமைந்திருப்பதும்‌, தாமரை போன்‌ற திருக் கண்களை உடையதுமான விஷ்ணு வினுடைய அத் திருமுக மண்டலத்தை நான்‌ பார்க்கப்‌ போகிறேன்‌)என்று ஆஸ்ரிதர் ஆசைப்படுமது இறே–ஸவிப்ரமப் ரூலதம் – மன்னிய சீர் மதனன் கருப்புச் சிலை கொல்-திருவாய்மொழி -7-7-4- என்கிறபடியே ஆஸ்ருதர் பக்கல் ஆதரம் எல்லாம் தோற்றும்படி நெரித்து இருக்கும் புருவத்தை உடைய உன்னை –-தன் கைச் சார்ங்கம் அதுவே போல் – நாச்சியார் திரு மொழி -14-7-என்று த்ருஷ்டாந்திக்கும் படி இறே–உஜ்ஜ்வலாதரம் –வாலியதோர் கனி கொல் -திருவாய்மொழி -7-7-5- என்றும்-கோலம் திரள் பவளக் கொழும் துண்டம் கொல் -திருவாய்மொழி -7-7-3- என்றும் –நீல நெடு முகில் போல் திரு மேனி யம்மான் தொண்டை வாய் -திருவாய் மொழி -7-7-3- என்றும் –சொல்லுகிறபடியே மிக்க அழகை உடைய திரு அதரத்தை உன்னை –ஸூசி ஸ்மிதம்–பவளச் செந்துவர் வாயினிடைக் கோமள வெள்ளி முளை போல் சில பல்லிலக -பெரியாழ்வார் திருமொழி -1-6-9-என்றும்
என்னாவி யடும் அணி முத்தம் கொல் -திருவாய்மொழி -7-7-5- என்றும் சொல்லுகிற திரு முறுவலை யுடையவனை–கோமள கண்ட– அனுபவிப்பார்க்கு ஆகர்ஷகமாய் ஸூகுமாரமான கண்ட ஸ்தலத்தை யுடைய உன்னை –உநநஸ்ம் –-மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ -திருவாய் மொழி -7-7-2-
என்கிறபடியே நாஸ்லதையை உடைய உன்னை –லலாட பர்யந்த விலம்பி தாலகம்- முன்னமுகத் தணியார் மொய் குழல்கள் -பெரியாழ்வார் திருமொழி -1-5-5- என்றும்-சுருண்டு இருண்ட குழல் தாழ்ந்த முகத்தான் -பெரியாழ்வார் திருமொழி -3-6-9- என்றும் சொல்லுகிற திரு நெற்றியின் எல்லையிலே வர அலை எறிகிற திருக் குழலை உடைய உன்னை பின்பு -அம்ஸ விலம்பி -யாய் முன்பு லலாட பர்யந்தமாய் -இருக்கிறபடி-

(கீழே திரு முக மண்டல சமுதாய சோபை -இங்கு திரு முக அவயவ சோபை அனுபவம்
முக்த -அழகிய புதியதான-சுசி ஸ்மிதம் -வெளுத்த –பரிசுத்த -ருஜுவான -கள்ளம் கபடு அற்ற
கீழே திருக் குழல்கள் திருத் தோள்கள் அளவும் -இங்கு முன் நெற்றியில் தொங்கும் அழகு
களி வண்டு எங்கும் கலந்தால் போலே கமழ் பூம் குழல்கள் தடம் தோள் மேல் மிளிர
நின்று விளையாட
-நாச் -14–8–செங்கமலப் பூவில் தேன் உண்ணும் வண்டே போல் –பங்கிகள் வந்து உன் பவள வாய் மொய்ப்ப –பெரியாழ்வார் -1–8–2—பங்கி -மயிர் )

சீரலர் செவ்விய தாமரை போன்ற திருக் கண் இணைகள் அமர்ந்தவனாய்
நேரியதாம் யடியார்க்கு அருள் தோன்ற நெரித்து உளவாம் புருவத்தனனாய்
ஏர் ஆதரத்துடன் இலகு கபோலமும் இன் முறுவல் உயர் நாசிகையும்
காரின் இருண்டு சுருண்டு நுதல் வரைக் கவினுற வீழ் அளகத்தனனாய்
–35—சிறப்புடன் மலர்ந்த செந்தாமரை மலர் போன்ற சுந்தரமான திருக்கண்களை யுடையவனாய்-ஆஸ்ரிதர் விஷயத்தில் தன் ஆதரவு எல்லாம் தோற்றும்படி நெறித்து இருக்கும் புருவத்தை யுடையவனாய்-அழகான திரு அதரத்துடன் தாவள்யமான திரு முறுவலுடன் கோமளங்களான கபோலங்களுடனும் உயர்ந்த திரு நாசிகை யுடனும் -மேகம் போல் இருண்டு நெற்றி வரையில் தாழ்ந்து சுருண்டு இருக்கும் திருக் குழல்களுடன் விளங்குபவனாய்

ஸ்தோத்ரம் -36- அவதாரிகை-ஆபரண ஆயுதாதிகள் உடைய சேர்த்தி அழகை அனுபவிக்கிறார்

ஸ்புரத் கிரீ டாங்க தா ஹார கண்டிகா
மணீந்த்ர காஞ்சீ குண நூபுராதி பி
ரதாங்க சங்க அஸி கதா த நுர்வரை
லஸ்த் துளஸ்யா வனமாலய உஜ்ஜ்வலம்
–36-

எம்பெருமான் ஒளிவிடும் திருமுடி (கிரீடம்), தோள் காப்புகள், ஹாரம், கழுத்தில் அணியும் சங்கிலி, ஸ்ரீகௌஸ்துப மணி, திவ்ய அரை நாண், திவ்ய சதங்கைகள் முதலிய திவ்ய ஆபரணங்களாலும்,
திருவாழி, திருச்சங்கு, திருநாந்தகம் என்னும் வாள், கௌமோதகீ என்னும் கதை, சார்ங்கம் என்னும் வில் ஆகிய திவ்ய ஆயுதங்களாலும், அவனுடைய திருமேனி ஸம்பந்தத்தால் ஒளி விடும் திருத்துழாய் மற்றும் வனமாலையால் மிகவும் ஜ்வலித்துக் கொண்டிருக்கிறான்.

ஸ்புரத் கிரீ டாங்க தா ஹார கண்டிகாமணீந்த்ர காஞ்சீ குண நூபுராதிபி–விளங்குகின்ற திரு அபிஷேகம் –திருத் தோள் வளை-முக்தாஹாரம் -திருக் கழுத்து அணி -குரு மா மணிப் பூண்-ஸ்ரீ கௌஸ்துபம் -திருவரை நாண் –திருப் பாடகம் முதலிய திரு ஆபரணங்களாலும்
ஆதி -சப்தத்தாலே-பல பலவே ஆபரணம் -என்றும்-அபரிமித திவ்ய பூஷண – (அபரிமிததி,வ்யபூ ஷண ! [கணக்கற்ற தி,வ்யாப,ரணங்களை உடையவனே)என்றும் சொல்லுகிறபடியே அசங்க்யாதம் என்கை –
ரதாங்க சங்க அஸி கதா த நுர்வரை–சக்கரம் சங்கு வாள் கதை சார்ங்கம் என்கிற பஞ்சாயுதங்களாலும்
லஸ்த் துளஸ்யா வனமாலய -ஒளி விடுகின்ற திருத் துழாய் மாலையை உடைய வனமாலையினாலும்
உஜ்ஜ்வலம்–பிரகாசித்துக் கொண்டு இருக்கிற-கதிராயிர மிரவி கலந்து எரித்தால் ஒத்த நீண் முடி -பெரியாழ்வார் திருமொழி -4-1-1-இறே –பொன்னின் மா மணி யார மணியாகத் திலங்கு மால் –பெரியாழ்வார் திருமொழி -8-1-3–என்றும்

ஸ்புரத் கிரீட--உபய விபூதி நாதத்வம் ஆகிற ஐஸ்வர்யத்துக்கு அனுரூபமாய் –-திரு முடியிலே விளங்கா நிற்கிற திரு வபிஷேகம்-கதிராயிர மிரவி கலந்து எரித்தால் ஒத்த நீண் முடி -பெரியாழ்வார் திருமொழி -4-1-1-இறே –அங்கத--சர்வ ஆஸ்ரயமான திருத் தோள்களைப் பற்றி விளங்கா நின்றுள்ள திருத் தோள் வளைகள்-ஹார – பொன்னின் மா மணி யார மணியாகத் திலங்கு மால் –பெரியாழ்வார் திருமொழி -8-1-3–என்றும்-சொல்லுகிறபடியே விளங்கா நின்ற திருவாரம் –கண்டிகா – திருக் கழுத்திலே விளங்கா நின்ற முத்துத் திருக் கட்டு வடம்மணீந்த்ர –அவன் தனக்கும் சதா ஸ்ப்ருஹணீயமான ஸ்ரீ கௌஸ்துபம்காஞ்சீ குண –திருவரையிலே விளங்கா நின்ற அரை நூல் பட்டிகைநூபுர- திருவடிகளைப் பற்றி விளங்கா நின்றுள்ள திருச் சிலம்பு ஆதி –-சப்தத்தாலே-பல பலவே ஆபரணம் -என்றும்-அபரிமித திவ்ய பூஷண – என்றும் சொல்லுகிறபடியே அசங்க்யாதம் என்கை –ரதாங்க -சங்க அஸி கதா தநுர் வரை-இந்த ஆபரணங்களோடு விகல்ப்பிக்கலாம் படி ஸோப அவஹமான திவ்ய ஆயுதங்களின்
சேர்த்தியை அனுபவிக்கிறார் –லஸ்த் துளஸ்யா வனமாலய உஜ்ஜ்வலம்-சர்வ ஐஸ்வர்ய ஸூசகமாய் திருவடிகள் அளவும் தாழ்ந்து-அல்லித் துழாய் அலங்கல் -திருவாய்மொழி -7-9-10- என்கிற வனமாலையால் விளங்கா நின்ற உன்னை ஆபரண ஆயுதாதிகள் தன்னைப் பற்றி விளங்குகையும்
அவற்றாலே தான் விளங்குகையுமாக செல்லுகிறபடி–ஸ்ரக் வஸ்த்ர ஆபரணைர் யுக்தம் ஸ்வரூபைர் அநு பூமி சிந்மயை ஸ்வ பிரகாச சைஸ்ஸ அந்யோந்ய ருசி ரஞ்ஜகை –(ஸ்ரக்‌,வஸ்த்ராப,ரணைர்‌ யுக்தம்‌ ஸ்வாநுரூபைரநூபமை: | 1. சிந்மயை: ஸ்வ ப்ரகாஸைஸ்ச அந்யோந்ய ருசிரஞ்ஜகை: || [தனக்குத்‌ தகுந்தவையும்‌, ஒப்பற்றவையும்‌, ஞான மயமா யிருப்பவையும்‌, ஸ்வயம்‌ ப்ரகாமமானவையும்‌, ஒன்றுக்‌ கொன்று (சேர்த்தியினலுண்டான) காந்தியினால்‌ அழகாயிருப்பவை யுமான மாலைகளினாலும்‌, வஸ்த்ரங்களினாலும்‌, ஆபரணங்களினாலும்‌ கூடியிருப்பது பர ப்ரஹ்மம்)

தேசமரும் திரு முடியனோர் மௌலியும் அங்கத ஆரமும் கண்டிகையும்
காசில் ஒளி தரு கௌத்துவமும் அரை நாணுடன் நூபுரம் முதலியவும்
மாசுகம் ஆர் தனு வாழி வளைக் கதை வாள் முதலாகிய ஆயுதமும்
வாச நறும் துளவத் தழகாம் வன மாலையுடன் விரி தேசனுமாய்
–36—ஜோதி மயமான திருமுடியை அலங்கரிக்கும் கிரீடம் -தோள் வளைகள் -முத்துத் திருக்கட்டு வடம்-மாசு மறு இன்றிப் ப்ரகாசிக்கும் ரத்ன ஸ்ரேஷ்டமான கௌஸ்துபம் அரை நூல் பட்டிகை திருச் சிலம்புகள் முதலான திவ்ய ஆபரணங்களால்
திருவாழி திருச்சங்கு வாள் கதாயுதம் சார்ங்கம் முதலிய திவ்ய ஆயுதங்களாலும் வாசனை வீசும் திருத்துழாயாலே அழகு வாய்ந்த வனமாலையாலும் பிரகாசிப்பவனாய் –

ஸ்தோத்ரம் -37-அவதாரிகை –மேலில் ஸ்லோக த்வயத்தாலே-பிராட்டியோட்டைச் சேர்த்தியை அனுபவிக்கிறார் –-இதில் முதல் ஸ்லோகத்தாலே- பிராட்டி உடைய மேன்மையையும் இவள் பக்கல் ஈஸ்வரனுக்கு உண்டான வ்யாமோஹத்தையும் அருளிச் செய்கிறார் –

சகரத்த யஸ்யா பவனம் புஜாந்தரம்
தவ ப்ரியம் தாம யதி யஜன்மபூ
ஜகத் சமஸ்தம் யத் அபாங்க சம்ச்ராயம்
யதர்த்த மம்போதிர மந்தய பந்தி ச
–37-

எம்பெருமானே! எந்தப் பிராட்டிக்கு இருப்பிடமாக உன்னுடைய திருமார்பை ஆக்கினாயோ,
எந்தப் பிராட்டியின் பிறப்பிடமான திருப்பாற்கடல் உனக்கு விருப்பமான உறைவிடம் ஆனதோ,
எந்தப் பிராட்டியின் கடாக்ஷத்தை நம்பி இவ்வுலகம் இருக்கிறதோ, யாருக்காக நீ கடலைக் கடைந்தாயோ, யாருக்காக நீ கடலில் அணை கட்டினாயோ–

சகரத்த யஸ்யா பவனம் புஜாந்தரம் தவ –-சர்வ யஜ்ஞமயம் வபு -என்கிற-திரு மார்பைப் பிராட்டிக்குக் கோயில் கட்டணமாகப் பண்ணி யருளிற்று–யஸ்யா -என்கிறது இதில் உண்டான பிரமாண பிரசித்தியாலே–சர்வ யஜ்ஞ்மயம் வபுரத் யாஸ்தே – பஸ்யதாம் சர்வதேவா நாம் யயௌ வஷஸ்ஸ்தலம் ஹரே –நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கை – திகழ்கின்ற திரு மார்பில் திரு மங்கை தன்னோடும் திகழ்கின்ற திரு மாலார் -திருவாய் மொழி -10-6-9-என் திருமகள் சேர் மார்பன் -திருவாய் மொழி -7-2-9-
மைய கண்ணாள் மலர் மேல் உறைவாள் உறை மார்பினன் -திருவாய்மொழி -4-5-2–அலர் மேல் மங்கை யுறை மார்பா -திருவாய்மொழி -610-10–மார்வத்து மாலை -திருவாய்மொழி -10-10-2–செய்யாள் திரு மார்பினில் சேர் திருமால் -திருவாய் மொழி -9-4-1-

தவ ப்ரியம் தாம யதி யஜன்மபூ –-யாவள் ஒருத்தி அவதரித்த திருப்பாற்கடல்-அயர்வறும் அமரர்கள் அதிபதியான தேவருக்கு இனிது அமரும் இடம் ஆயிற்று-ஸ்ரீ பூர்வமுத தே –தேவதா நவயத் நேன ப்ரஸூதாம்ருத மந்தனே -என்றும்-நேதா நீம் த்வத் ருதே ஸீதே ஸ்வர்க்க அபி மம ரோசதேஜகத் சமஸ்தம் யத் அபாங்க சம்ச்ராயம் –அஸ்யேசா நா ஜகத – ஈஸ்வரீம் சர்வ பூதா நாம் த்வம் மாதா சர்வ லோகா நாம் -என்கிறபடியே இவ் உபய விபூதியும் யாவள் ஒருத்தி உடைய மந்த கடாஷத்தைப் பற்றி உண்டாய் இருக்கிறது –யதர்த்த மம்போதிர மந்தய பந்தி ச –-விண்ணவர் அமுது உண்ண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமான் -பெரிய திருமொழி -6-1-2- என்கிறபடியே யாவள் ஒருத்தியைப் பெறுகைக்கு கடல் கடைந்து அருளிற்று-அபந்தி ச-யாவள் ஒருத்தி உடைய பிரிவாற்றாமையாலே கடலை அசைத்து அருளிற்று-ஏஷ ஸே துர் மயா பத்தஸ் ஸா கரே ஸ லிலார்ணவே தவ ஹேதோர் விசாலாஷி நள ஸே துஸ் ஸூ துஷ்கார-(விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுதுண்ட எம்பெருமான் –உன்மூல்யாஹர மந்தராத்ரி மஹிநா பலேக்ரஹிர் ஹி கமல ஆலாபேந சரவச்சிரம -)

(கா த்வந்யா த்வாம்ருதே தே,வி ஸர்வ யஜ்ஞமயம்‌ வபு: | அத்யாஸ்தே தேவதேவஸ்ய யோகி; சிந்த்யம்‌ கதா ப்‌ருத:। [ஹே தேவி! கதையை த,ரித்தவனும்‌, தேவ தே,வனுமான: எம்பெருமானுடைய, யோகிகளால்‌ நினைக்கத் தக்கதும்‌, ஸர்வ யஜ்ஞ மயமுமான ஸரீரத்தில்‌ உன்னைத்‌ தவிர வேறு எவள்‌ இருக்கிறாள்)திவ்ய மால்மாம்பரதரா ஸ்நாதா பூஷண பூஷிதா। பஸ்யதாம்‌ ஸர்வ தேவாநாம்‌ யயென வக்ஷ:ஸ்தலம்‌ ஹரே--அப்ராக்ருதமான மாலையையும்‌, வஸ்த்ரத்தையும்‌ தரித்‌திருப்பவளும்‌, ஸ்நானம்‌ செய்தவளும்‌, பூஷணங்களால்‌ அலங்கரிக்கப் பட்டவளுமான ஸ்ரீதேவி எல்லா தேவர்களும்‌ பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஹரியினுடைய திரு மார்பை அடைந்தாள்‌) ப்‌ருகோ: க்‌,யாத்யாம்‌ ஸமுத்பந்நா ஸ்ரீ: பூர்வமுததே; புந:।தே,வதா நவயத்நேந ப்ரஸூதா £ம்ருதமந்த,நே ॥ [முதலில்‌, ப்‌,ருகு,மஹர்ஷிக்கு: (அவர்‌ பத்னியான) க்‌யாதி யிடம்‌ ஸ்ரீதேவி உண்டானாள்‌; மறுபடியும்‌ அம்ருத மத,ன காலத்தில்‌ தே,வாஸுரர்களுடைய யத்னத்தினால்‌ கடலிலிருந்து உண்டானாள்‌)நேதாநீம்‌ த்வத்‌,ருதே ஸீதே ஸ்வர்க்கே,£₹பி மம ரோசதே! [ஸீதே! இப்பொழுது நீயில்லாமல்‌ ஸ்வர்க்கமும்‌ எனக்கு ருசிக்காது.]த்வம்‌ மாதா ஸர்வ லோகாநாம்‌ தேவதே,வோ ஹரி; பிதா।த்வயைதத்‌ விஷ்ணுநா சாம்ப, ஐக,த்‌ வ்யாப்தம்‌ சராசரம்‌ || [எல்லா உலகங்களுக்கும்‌ நீ தாய்‌; தேவதே,வனான ஹரி தந்தை. தாயே ! அசைபவையும்‌, அசையாதவையு மடங்கிய இந்த உலகம்‌ உன்னாலும்‌, விஷ்ணுவாலும்‌ வியாபிக்கப்‌ பட்டிருக்கிறது)ஏஷ ஸேதுர்‌ மயா பத்‌த்ஸ்‌ ஸாகரே ஸலிலார்ணவே | தவ ஹேதோர்‌ விஸாலாக்ஷி ! நள ஸேதுஸ்‌ ஸுது,ஷ்கர: | [அகன்ற கண்களை உடையவளே | நீர்‌ நிறைந்த கடலில்‌, நள ஸேது என்ற பெயர் பெற்றதும்‌, மிகவும்‌ கட்டுவதற்கு அரிதுமான இந்த அணை உனக்காக என்னால்‌ கட்டப்‌ பட்டது.]பரிஸ்ரமாத்‌ ப்ரஸுப்தா ச ராக,வாங்கே $ப்யஹம்‌ சிரம்‌ |பர்யாயேண ப்ரஸுப்தஸ்ச மமாங்கே ப,ரதாக்‌,ரஜ: || [ராக,வனுடைய திருத் தொடையில்‌, நான்‌ களைப்பினால்‌ வெகு நேரம்‌ தூங்கினேன்‌. பரதனுடைய தமையனாரான அவரும்‌ என்‌ தொடையில்‌ தூங்கினார்)

தவ புஜாந்தரம்-உன்னுடைய திரு மார்பை
சகரத்த யஸ்யா பவனம் –யாவள் ஒரு பிராட்டிக்கு இருப்பிடமாக பண்ணி அருளினாயோ
யதிய ஜன்மபூ–யாவள் ஒரு பிராட்டியின் பிறந்தகமான திருப் பாற் கடல்
தவ ப்ரியம தாம–உனக்கு இனிதான இருப்பிடம் ஆயிற்றோ
ஜகத் சமஸ்தம் –உலகம் எல்லாம்
யத் அபாங்க சம்ச்ராயம்–யாவள் ஒரு பிராட்டியின் கடாக்ஷத்தைப் பற்றி இருக்கிறதோ
யதர்த்தம் அம்போதிர் அமந்தி அபந்தி ச–யாவள் ஒரு பிராட்டிக்காக கடலானது கடையவும் அணை கட்டவும் பட்டதோ –

கீழே -திவ்ய அவயவ திவ்ய ஆபரண சோபை எவ்வளவு இருந்தாலும்-திவ்ய பிராட்டி உடன் சேர்த்தி இல்லாத போது நிறம் பெறாதே-இது முதல் மூன்று ஸ்லோகங்களாலும் ஸ்ரீ யபதித்தவம்
யஸ்யா –
என்கிறது இதில் உண்டான பிரமாண பிரசித்தியாலே-
நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கை –
திகழ்கின்ற திரு மார்பில் திரு மங்கை தன்னோடும் திகழ்கின்ற திரு மாலார்
-திருவாய் மொழி -10-6-9
என் திருமகள் சேர் மார்பன் -திருவாய் மொழி -7-2-9-
மைய கண்ணாள் மலர் மேல் உறைவாள் உறை மார்பினன் -திருவாய்மொழி -4-5-2-
அலர் மேல் மங்கை யுறை மார்பா -திருவாய்மொழி -610-10-
மார்வத்து மாலை -திருவாய்மொழி -10-10-2-
செய்யாள் திரு மார்பினில் சேர் திருமால் -திருவாய் மொழி -9-4-1-
விண்ணவர் அமுது உண்ண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமான் -பெரிய திருமொழி -6-1-2-
உன்மூல்யாஹர மந்தராத்ரி மஹிநா பலேக்ரஹிர் ஹி கமல ஆலாபேந சரவச்சிரம -உத்தர சதகம் –

உன் அழகான யுரம் தனை உன் பிரியைக்கு உறை மாளிகையாய் யுதவி
அன்னவனுடன் ஒன்றிய ஆழி யுனக்கு இனிது அமரும் இருப்பிடமாய் அருளி
மன்னும் இவ்வுபய விபூதி யினுள் பவம் ஆர்ந்திடும் அந்த கடாக்ஷம் உறும்
பொன்னை யடை குபு புணரி கடைந்து அணை கட்டி யுகந்து பொலிந்தவனாய்
–37—உன் அழகான திரு மார்பை உன் ப்ரியையான பெரிய பிராட்டியார் உறைவதற்குத் தக்க ஒரு மாளிகையாகக் கொடுத்து
அந்நாள் அவதரித்த ஷீராப்தியை உனக்கு இனிதாக அமரும் இருப்பிடமாய்க் கொண்டு இவ் வுபாய விபூதியும் கடைக்கண் பார்வையாக-கடாக்ஷம் யுடைய அந்தப் பிராட்டியாரைப் பெறுவதற்காக கடலைக் கடைந்தும்-பின்பு ஒரு கால் திரு அணை கட்டியும் உக்காந்து திகழ்ந்து அருளியவனாய் –

ஸ்தோத்ரம் -38-அவதாரிகை –இதில் பிராட்டி உடைய நிரதிசய போக்யதையும்-உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவை -திருவாய்மொழி -10-10-6- என்கிறபடியே அவனுக்கேயாய் இருக்கிற இருப்பையும் -அனுபவிக்கிறார்-

ஸ்வ வைஸ்வ ரூப்யேண் சதா அநு பூதா அப்
யா பூர்வவத் விஸ்மயம் ஆகததாநயா
குணேந ரூபேண விலாஸ சேஷ்டி தைஸ்
சதா தவை வோ சிதயா தவ ஸ்ரீ யா
–38–

ஸ்வ வைஸ்வ ரூப்யேண் சதா அநு பூதா அபி -தனது விஸ்வரூப நிலைமையைக் கொண்டு
எப்போதும் அனுபவிக்கப் பட்டாலும்
அபூர்வவத் –புதிய புதிய வஸ்து போலே
விஸ்மயம் ஆகததாநயா–ஆச்சர்யத்தை விளைவிப்பவளாய்
குணேந ரூபேண விலாஸ சேஷ்டிதைஸ்–குணங்களாலும் வடிவு அழகாலும் விலாச சேஷ்டைகளாலும்
சதா -பரம் வ்யூஹம் முதலிய எல்லா நிலைமைகளிலும்
தவ ஏவ உசிதயா –உனக்கே ஏற்றவளாய்
தவ ஸ்ரீ யா–உனக்கு செல்வமாய் இருப்பவளான

நீ விஶ்வரூபம் எடுத்து முழுவதுமாக அனுபவித்தாலும், பிராட்டி தன்னுடைய குணங்கள், அழகிய திருமேனிகள் மற்றும் செயல்களால் உன்னை ஆச்சர்யம் அடையும்படிச் செய்து, உன்னுடைய பரம், வ்யூஹம், விபவம் முதலிய எல்லா நிலைகளிலும் உனக்குப் புதிதாகத் தோன்றி, உனக்குத் தகுந்தவளாக விளங்கி, உன்னுடைய செல்வமாக இருக்கிறாள்.

ஸ்வ வைஸ்வ ரூப்யேண் சதா அநு பூதா –-சர்வ சக்தியான தேவர்-சர்வ விக்ரஹத்தாலும்
சர்வ காலமும்-சர்வ பிரகாரத்தாலும் அனுபவியா நின்றாலும் பிராட்டியினுடைய போக்யதையைப் பரிச்சேதிக்கப் போகாது – சௌபரியைப் போலே அநேக விக்ரஹத்தைப் பரிக்ரஹித்தாலும் முடியாது –
பர்யாயேண் பிரஸூப்தஸ் ச-என்கிறபடியே பிரகாரங்கள் அநேகம் ஆனாலும் முடியாது-அபூர்வவத் விஸ்மய மாத தா நயா – நித்ய அபூர்வம் போலே ஆச்சர்ய அவஹமாய் இருக்கும்-ஸ ஏகதா பவது த்விதா பவதி -(ஸ ஏகதா பவது த்ரிதா ப,வதி பஞ்சதா। ஸப்ததா நவதா சைவ புநஸ்‌ சைகாதஸ,; ஸ்ம்ருத: | ஸதஞ்ச தஸ சைகஞ்ச ஸஹஸ்ராணி ச விம்மத; ॥ [“முக்தாத்மா பல ஸரீரங்களை உடையவனாகிறான்‌” என்று தாத்பர்யம்‌.)என்று நித்ய ஸூரிகள் தன் திறத்தில் படுவது எல்லாம் பிராட்டியைக் குறித்து தான் படும் -என்கை –பண்டு இவரைக் கண்டு அறிவது எவ் ஊரில் -பெரிய திருமொழி -8-1-9- என்றும்
அப் பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதம் -திருவாய் மொழி -2-6-6- என்றும் ஆழ்வார்களும்
சதா பஸ்யந்தி -என்று நித்ய ஸூரிகளும் நித்ய அபூர்வதையாலே தேவர் திறத்தில் படுமது எல்லாம்
தேவர் படும்படி இறே பிராட்டி போக்யதை இருப்பது –

உகப்பிப்பது எவ்வழியாலே என்னில்–குணேந ரூபேண விலாஸ சேஷ்டி தைஸ் –-வடிவு அழகாலும்
சீலாதி குணங்களாலும்-சக்ருத் த்வதா கார விலோக நாசயா -என்றும்-ஈர்க்கின்ற குணங்களை யுடையாய் -திருவாய் மொழி -8-1-8–இப்படி குணங்களாலும்-உன் செய்கை நைவிக்கும் –5-10-2- என்கிற சேஷ்டிதங்களாலும் அபியுக்தர் ஆழம் கால் படும்படி இருக்கும் இறே அவன்-இப்படி இவள் ஸ்வரூபாதிகளிலே அழுந்துகிறான்-அவன் ஸ்வரூபத்தாலே அபரிச்சின்னன் இவள் போக்யதையாலே அபரிச்சின்னை

சதா தவை வோ சிதயா –-துல்ய சீல வயோ வ்ருத்தாம் -(துல்ய ஸீல வயோ வ்ருத்தாம்‌ துல்யாபி,ஜஐநலக்ஷணாம்‌ |ராக,வோஃ5ர்ஹதி வைதேஹீம்‌ தம்‌ சேயமஸி தேக்ஷண ॥ [ஒரே விதமான குணங்கள்‌, வயது, ந்டத்தை இவைகளை உடையவளும்‌, ஸமானமான குலத்தையும்‌, லக்ஷ்ணங்‌ களையும்‌ உடையவளுமான வைதேஹிக்கு ராகவனே தகுந்‌தவர்‌; கறுத்த கண்களை உடைய இவளும்‌ அவருக்கே தகுந்தவள்‌)என்றும்-உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவை -என்றும் சொல்லுகிறபடியே தேவர் தமக்குத் தகுதியாய் இருக்குமவள் –சதா-என்று பர வ்யூஹ விபவ ரூபேண உண்டான சர்வ அவஸ்தை களிலும் என்கிறது-குனேன ரூபேண விலாஸ சேஷ்டிதைஸ் சதா தவை வோ சிதயா -என்னவுமாம்-தவ ஸ்ரீ யா–விஷ்ணோ ஸ்ரீ –என்றும்–உன் திரு -10-10-2- என்றும்-சொல்லுகிறபடியே அனன்யார்ஹை என்னுதல் தேவர்க்கு சம்பத்தாய் இருக்கும் என்னுதல்-(தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் தாள்கள் ஆயிரத்தாய் –
கொண்டு அனுபவித்தாலும்-அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதாகும் விலக்ஷண வஸ்து –
உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவைக்கு-பாசுரம் படியே — தவைவ உசிதயா -தவச்ரியா
-அநந்யார்ஹத்வம் )

(நித்யைவைஷா ஜக,ந்மாதா விஷ்ணோ: ஸ்ரீரநபாமிநீ | யதா ஸர்வகதோ விஷ்ணுஸ்‌ ததை,வேயம்‌ த்‌,விஜோத்தமா [உலகிற்கெல்லாம்‌ தாயும்‌. அழிவற்‌றவளும்‌ விஷ்ணுவினுடை யவளுமான இந்த ஸ்ரீதே,வி நித்யமானவளே. ப்ராஹ்மண ஸ்ரேஷ்ட,ரே! ஸர்வ வ்யாபியான விஷ்ணு எப்படிப்பட்ட வரோ அப்படிப்பட்டவளே இவளும்‌)க,ந்த,ர்வாப்ஸரஸஸ்‌ ஸித்‌,தாஸ்‌ ॥ நாந்தம்‌ குணாநாம்‌. கச்சந்தி தேநாநந்தோயமுச்யதே ॥கந்த ர்வர்களும்‌, அப்ஸரஸ்ஸுகளும்‌, கின்னரர்களுடனும்‌, மஹா நாகங்களுடனும்‌ கூடிய ஸித்‌,த,ர்களும்‌, (இவனுடைய) குணங்களின்‌ எல்லையை அடைவதில்லை; ஆகையால்‌ இவன்‌ அநந்தனென்று சொல்லப்படுகிறான்)

நின்னிட சேர்த்தி நிரந்தரமாய்ப் பல வடிவிலும் செவ்வி நிலை பெறினும்
அன்ன வணிக்கு ஓர் அபூர்வமாகிய ஆச்சார்யத்தை விளைப்பவளாய்
தன் நிகரில் வடிவாலும் தகைமையினாலும் விலாஸ விதங்களிலும்
உன் ஒருவருக்கே யுரியவளாகும் உன் நித்ய ஸம்பத்து உறுபவனாய்
–38—ஸர்வ சக்தனான உன்னுடைய எல்லா விக்ரகத்தாலும் ஸர்வ காலத்தும் உன்னால் அனுபவிக்கப் பட்டு இருந்தும்
நித்யம் அபூர்வமான ஆச்சர்யத்தை யுனக்கு யுண்டாக்குபவளாய்-நிகரில்லாத உன் வடிவு அழகாலும் சீலாதி குணங்களாலும் திரு விளையாட்டுக்களினாலும்-பர வ்யூஹ விபவ விபவாதி எல்லா அவஸரங்களிலும் உனக்கே உரியவளாய் விளங்கும் அந்த மஹா லஷ்மியை உன் நித்ய சம்பத்தாய்க் கொண்டான் இலங்குபவனாய்-

ஸ்தோத்ரம் -39-அவதாரிகை –பர்யங்க விதையில் சொல்லுகிறபடியே-திரு வநந்த ஆழ்வான் -மடியிலே
பிராட்டியோடே எழுந்து அருளி இருக்கிற சேர்த்தியை -அனுபவிக்கிறார் –அநந்த போகிநி -ஆஸீ நம-
திருவனந்த ஆழ்வான் இடத்தில் எழுந்து அருளி இருக்கின்ற உன்னை எப்போது சேவிக்கப் பெறுவேன் -என்று -46-ஸ்லோகத்தில் சேர்ந்து முடிகிறது

தயா ஸஹா ஸீ நம நந்த போகி நி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞான பலை கதா மநி
பணா மணி வ்ராதம யூக மண்டல
பிரகாஸ மாநோத ரதி வ்யதா மநி
–39-

ஆதிசேஷன் சிறந்த ஞானத்தையும், பலத்தையும் உடையவன், தன்னுடைய பணா மணிகளில் இருக்கும் ரத்னங்களின் ஒளியால் ஒளி விடும் திருமடியில், பெருமாளும் பிராட்டியும் எழுந்தருளி யிருக்கும் திவ்ய அந்தப்புரத்தைக் கொண்டிருக்கிறான்;-இப்படிப்பட்ட திருவனந்தாழானின் திருமேனியில், எம்பெருமான் திவ்யமாக சயனித்திருக்கிறான்–

தயா ஸஹா -அப்படிப்பட்ட பிராட்டியோடே கூட
ப்ரக்ருஷ்ட விஜ்ஞான பலை கதா மநி-சிறந்த ஞான சக்திகளுக்கு முக்கியமான இருப்பிடமானவனும்
பணா மணி வ்ராதம யூக மண்டல பிரகாஸ மாநோதர திவ்ய தாமநி–தனது பண மணிகளின் ஸமூஹங்களினுடைய கிரண ராசிகளாலே பள பள என்று விளங்கா நின்ற மத்ய பிரதேசத்தை எம்பெருமானுக்குத் திருக் கோயிலாக யுடையவனும்-மணி விளக்காம் -முதல் திருவந்தாதி -53 என்கிறபடியே-திவ்ய அந்தப்புரத்துக்கு மங்கள தீபமாய் இறே இருப்பது –

தயா ஸஹா ஸீ நம –-ஸ்ரீ யா ஸார்த்தம் ஜகத் பதி ராஸ்தே -என்கிறபடியே நித்ய விபூதியில் மிதுனமாய் இருந்து இறே அடிமை கொள்வது-அவதாரத்திலும் –பவாம்ஸ்து சஹ வைதேஹ்யா-என்னக் கடவது இறே –அநந்த போகி நி- ஸ்ரீய பதித்வத்தால் வந்த உத்கர்ஷத்தோ பாதி இறே-இவனோட்டைச் சேர்த்தியும் –-கந்தர்வாப்ஸ ரஸ்ஸ் சித்தாஸ் ஸ கின்னர மஹோ ரகா நாந்தம் குணா நாம் கச்சந்தி தேனா நந்தோ அயமுச்யதே--என்கிறபடியே குண அநந்யத்தாலே -அநந்தன்-என்ன கடவது இறே
ஈஸ்வரன் ரஷணத்திலே அசங்க்யாத குணன் – இவன் கைங்கர்யார்த்தமாக அசங்க்யாத குணன் – போகிநி –-மென்மை குளிர்ச்சி நாற்றம் இவற்றை ஸ்வபாவமாக உடைய திரு மேனியிலே –-போகம் -சரீரம் –ப்ரக்ருஷ்ட விஜ்ஞான பலை கதா மநி--இருவருமாய்ப் பரிமாறும் போது அவர்களுக்கும் படியான -ஒப்பான -ஜ்ஞான சக்த்யாதி களுக்கு ஆஸ்ரயமாய் இருக்குமவன் –-ஒருத்தன் என்று அவனுக்குக் கூச வேண்டாதே-துகைத்துப் பரிமாறலாம் படியான தாரண சாமர்த்தியத்துக்கு ஆஸ்ரயமாய் இருக்குமவன்பணா மணி வ்ராதம யூக மண்டலபிரகாஸ மாநோத ரதி வ்யதா மநி- தன்னுடைய பணா மணி சமூஹங்களின் உடைய-ரஸ்மி மண்டலங்களினாலே-பிரகாசியா நின்ற மத்யத்தை யுடைய
திவ்ய அந்தப்புரத்தை உடையவன்-மணி விளக்காம் -முதல் திருவந்தாதி -53 என்கிறபடியே
திவ்ய அந்தப்புரத்துக்கு மங்கள தீபமாய் இறே இருப்பது

உத்தம ஞான பலன்கள் தமக்கு ஒரு உறைவிடமாக நிலைத்து அவனும்
துத்தி யுடைப் பணம் ஏந்தும் ரத்னம் எங்கும் துலங்கும் ஓர் சோதியுடன்
மத்தி யமாம் உதரத்தை ஓர் அத்புத மாளிகையாக வகிப்பவனும்
பத்தனுமான அநந்தன் அணை மிசை பத்தினியோடு உறைகின்றவனாய்
–39–உத்தமமான ஞான சக்திகளுக்கு ஒரு இருப்பிடமாக நிலை பெற்றவனும் பொறிகளை யுடைய படங்களை ஏந்தும்
தன் சிரோ ரத்னங்களின் காந்தியினால் பிரகாசிக்கின்ற தன் உத்தரத்தின் மத்திய பிரதேசத்தை
ஒரு திவ்ய அந்தப்புரமாக வகிப்பவனும் பரம பக்தனுமான திரு அநந்த ஆழ்வான் மடியிலே பத்தினியாக பெரிய பிராட்டியாரோடு வீற்று இருப்பவனாய் –

ஸ்தோத்ரம் -40-அவதாரிகை –திரு வனந்த ஆழ்வான் உடைய வ்ருத்தி விசேஷங்களை
அனுபவிக்கிறார் –-தமக்கு அடிமையில் உண்டான த்வரையாலே-உபமாநம சேஷாணாம் ஸாது நாம் -என்னும் ந்யாயத்தாலே அடிமையில் ருசி யுடையார்க்கு எல்லாம் உதாஹரண பூதமாய் இறே திரு வநந்த ஆழ்வான் உடைய வ்ருத்தி விசேஷங்கள் இருப்பது இவன் உடைய காஷ்டையை அருளிச் செய்கிறார் –கைங்கர்யத்தில் இருக்கும் ஆசையால், ஆளவந்தார் திருவனந்தாழ்வானின் உயர்ந்த லீலைகளை அனுபவிக்கிறார்.-ஸ்ரீவிஷ்ணு புராணம் 1.15.157இல் ““உபமானமஶேஷாணாம் ஸாதூனாம் யஸ் ஸதா’ பவத் |” (எப்படி ப்ரஹ்லாதன் எல்லா நல்லவர்களுக்கும் உதாரணமாக இருக்கிறானோ) உபமாநம ஸேஷாணாம்‌ ஸாதூ,நாம்‌ யஸ்ஸதா ப,வத்‌ | [எந்த ப்ரஹ்லாதாழ்வான்‌, எப்போதும்‌ எல்லா ஸாதுக்‌ களுக்கும்‌ உபமானமாக ஆயினனோ…]சொன்னபடி, கைங்கர்யத்தில் ருசியுடைய அனைவருக்கும் திருவனந்தாழ்வானின் செயல்களே சிறந்த உதாரணம்.-ஆளவந்தார் இப்படிப்பட்ட ஆதிசேஷனின் உயர்ந்த நிலையை அருளிச் செய்கிறார்.

நிவாஸ ஸய்யா ஆஸன பாதுகா அமஸூக
உப தான வர்ஷா தபவாரணாதிபி
சரீர பேதைஸ் தவ சேஷதாம் கதைர்
யதோ சிதம் சேஷ இதீரிதே ஜனை
–40-

நீ திருவனந்தாழ்வானின் திருமேனியிலே திவ்யமாக சயனித்திருக்கிறாய். திருவனந்தாழ்வான் நீ வசிக்கும் திருமாளிகையாகவும், சயனித்துக் கொள்ளும் படுக்கையாகவும், வீற்றிருக்கும் ஸிம்ஹாஸனமாகவும். அணிந்து கொள்ளும் பாதுகையாகவும், உடுத்திக் கொள்ளும் ஆடைகளாகவும், அணைத்துக் கொள்ளும் தலையணையாகவும், வெயில் மற்றும் மழையிலிருந்து காக்கும் குடையாகவும், மேலும் பல வடிவங்களையும் எடுத்துக் கொண்டு உனக்குத் தொண்டு செய்வதால் எல்லோராலும் “சேஷன்” (தொண்டன்) என்றே அழைக்கப்படுகிறான் —

நிவாஸ ஸய்யா ஆஸன பாதுகா அமஸூக உப தான வர்ஷா தபவாரணாதிபி–எம்பெருமானுக்கு எழுந்து அருளி இருக்கிற திரு மாளிகையாகவும் திருக்கண் வளர்ந்து அருளும் இடமாகவும் சிங்காசனமாகவும் பாதுகையாகவும் திருப்பரி யட்டமாயும் அணையாகவும் குடையாகவும் மற்றும் பலவிதமாகவும் ஆவதற்கு உரியவைகளாய்
யதோ சிதம்- தவ சேஷதாம் கதைர்-சரீர பேதைஸ்–உசிதமானபடி உனக்கு அடிமைப்பட்டவைகளான
பல பல வடிவங்களாலே
சேஷ இதீரிதே ஜனை–சேஷன் என்று ஜனங்களால் சொல்லப்படுபவனுமான-பரகத அதிசய அதான இச்சா உபாதேயதவ மேவ யஸ்ய ஸ்வரூபம் ஸ சேஷ -பரஸ் சேஷி –-என்கிற சேஷத்வத்தின் படியே

நிவாஸ –எழுந்து அருளி இருக்கிற திரு மாளிகையாம்–ஸய்யா--கண் வளர்ந்து அருளுகைக்குப் படுக்கையாம்-ஆஸன –-இருந்தால் சிங்காசனமாம் -முதல் திருவந்தாதி -53-பாதுகா – நின்றால் மரவடியாம் –அமஸூக – பும்ஸ்த்வ அவஹமான திருப் பரியட்டமாம் –உப தான புல்கும் அணையாம் வர்ஷா தபவாரணாதிபி –சென்றால் குடையாம் -என்கிறபடியே வர்ஷத்துக்கும் ஆதபத்துக்கும் சத்ரமாம் –ஆதி சப்தத்தாலே-அடிமையில் அபி நிவேச அநு ரூபமாக சரீரத்துக்கு தொகை இல்லை –-ஸ ஏக்தா பவதி -என்று தொடங்கி சஹஸ்ரதா பவதி -என்னக் கடவது இறே –சரீர பேதைஸ் – கைங்கர்ய பேதமே சரீர பேதத்துக்கு ஹேது –தவ சேஷதாம் கதை – தேவரீர் உடைய விக்ரஹங்கள் ரஷண ஹேதுவாய் இருக்கிறாப் போலே இவனுடைய விக்ரஹங்கள் சேஷத்வத்தை அடைந்து இருக்கும் என்கை –
யதோ சிதம் –-யதா யதார் ஹி கௌசல்யா -என்கிறபடியே தத் தத் கால உசிதமாய் இருக்கை-(இம்‌ சைநாம்‌ ப்ரதிவக்ஷ்மாமி க்ருத்வா விப்ரியமீத்‌ருஸம்‌ | யதா யதா ஹி கெளஸல்யா தாஸீவச்ச ஸகீ வச ॥ பார்யாவத்‌ ப.கி.நீவச்ச மாத்ருவச்சோப திஷ்டதி ||[கெளஸல்யை தாஸியைப் போலும்‌, ஸகியைப் போலும்‌, மனைவியைப் போலும்‌, ஸஹோதரியைப் போலும்‌, தாயைப்‌ போலும்‌ ஸூஸ்ரூஷை செய்யும் போதெல்லாம்‌, இப்படிப்‌ பட்ட அநிஷ்டமான காரியத்தைச்‌ செய்துவிட்டு அவளுக்குஎன்ன பதில்‌ சொல்லுவேன்‌ ])

சேஷ இதீரிதே ஜனை –-சிறியார் பெரியார் என்னாதே-சர்வராலும் சேஷம் என்று சொல்லப் படுகை –
சேஷத்வம் தான் ஒரு வடிவு கொண்டாப் போலே இருக்கை-ஜனை-பெருமக்கள் உள்ளவர் -திருவாய் மொழி -3-7-5-என்கிறபடியே-நித்ய சித்தரைச் சொல்லவுமாம்–பரகத அதிசய அதான இச்சா உபாதேயதவ மேவ யஸ்ய ஸ்வரூபம் ஸ சேஷ -பரஸ் சேஷி – (மற்றொருவனிடத்திலிருக்கும்‌ ஒரு மேன்மையை உண்டு பண்ண வேண்டுமென்னும்‌ எண்ணத்துடன்‌ அங்கீ,கரிக்கப்‌ படுகையே எவனுக்கு ஸ்வரூபமோ அவன்‌ ஸேஷன்‌; மற்றவன்‌ ஸேஷி)என்கிற சேஷத்வத்தின் படியே –பாரதந்த்ர்யம் பரே பும்சி -(பாரதந்த்ர்யம்‌ பரே பும்ஸி ப்ராப்ய நிர்க்கத பந்தந: | ஸ்வாதந்த்ர்ய மதுலம்‌ ப்ராப்ய தேநைவ ஸஹ மோததே॥ [கர்ம ப;ந்த,த்திலிருந்து விடுபட்டவனான முக்தன்‌, பரம புருஷனிடத்தில்‌ பாரதந்த்ரியத்தை அடைந்து, ஒப்பற்ற ஸ்வாதந்த்ரியத்தையும்‌ அடைந்து, அவனுடன்‌ கூடவே ஆநந்த,ப்படுகிறான்‌.) இத்யாதி –(மன்னிய பல் பொறி சேர் ஆயிரவாய் வாள் அரவின் சென்னி மணிக் குடுமித் தெய்வச் சுடர் நடுவுள் மன்னிய நாகத்தணை மேல் -ஸ்ரீ பெரிய திருமடல் பாசுரம் படியே – பணா மணிவ்ராத–சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும் புணையாம் அணி விளக்காம் பூம் பட்டாம் புல்கும் அணையாம் திருமாற்கு அரவு -முதல் திருவந்தாதி பாசுரம் அடி ஒற்றியே இந்த ஸ்லோகம் – வர்ஷாத பவாரண–வெய்யில் மழை இரண்டாலும் காக்கும் குடை என்றவாறு –)

வாஸம் யுனக்கு ஒரு மாளிகையும் உபாதானமும் பள்ளியும் அஞ்சுகமும்
ஆசனமும் மணி பாதுகையும் மழை யாதவர்க்கு அரணாதி பல
பேச அரிதாம் உபச்சார விசித்ர பேத சரீர விதங்களினால்
தேசுறும் சான்றவரால் உசிதப்படி சேஷன் எனப்படுவோன் மிசையே
–40—நீ நிவாஸம் பண்ணுவதற்காக ஒரு திரு மாளிகையாயும்-சயனத்திற்காகப் படுக்கையாயும் தலையணை யாகவும்
ஸிம்மாஸனமாகியும் மரவடியாகவும்-மழை வெயில் இத்யாதிகளை போக்க ஒரு குடையாகவும்
இவை முதலாக இன்னும் அநேக கைங்கர்ய பேதங்களுக்குத் தக்கபடி தன் சரீர பேதங்களினால் உன்னுடைய சேஷத்வத்தை அடைந்து இருப்பதனால் உசிதப்படி நித்ய ஸூரிகளால் சேஷன் என்று சொல்லப்படும் அந்த திரு வநந்த ஆழ்வான் மீது வீற்று இருப்பவனுமாய் –

ஸ்தோத்ரம் -41- அவதாரிகை--இதில் வாகனத்வ ஜாதி-சர்வ வ்ருத்திகளையும் உடையவனாய்
ஈஸ்வரனுக்கு -மோம் பழம்-மோந்து கொண்டு இருக்கிற பழம் -போலே-பழுத்த கனியைப் போன்று- சதா விரும்பும்படி அபிமதனாய் இருக்கிற பெரிய திருவடி யோட்டைச் சேர்த்தியை அனுபவிக்கிறார்

தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸனம் த்வஜோ
யஸ்தே விதாநம் வ்யஜனம் த்ரயீமய
உபஸ்திதம் தேன புரோ கருத்மதா
த்வத் அங்க்ரி சம்மர்த்த கிண அங்க ஸோபிநா
–41-

வேதங்களையே அங்கங்களாக உடைய அந்த கருடாழ்வார், உனக்கு அடியவனாகவும், நண்பனாகவும், வாஹனமாகவும், ஆஸனமாகவும், கொடியாகவும், விதானமாகவும், சாமரமாகவும் இருக்கிறார்;
மேலும் உன்னுடைய திருவடிகள் அவருடைய தோள்களில் அழுத்தியதால் ஏற்பட்ட தழும்புகளாலே ஒளி விடுகிறார்; உன்னுடைய ஸன்னிதியில் இப்படிப்பட்ட கருடாழ்வாரால் நீ வணங்கப்படுகிறாய் —

த்ரயீமய யா -வேத மூர்த்தியான யாவன் ஒரு பெரிய திருவடி
தே சாசஸ் ஸகா வாஹநம் ஆஸனம் த்வஜோ விதாநம் வ்யஜனம் –உனக்கு அடியவனாயும் தோழனாயும்
வாஹனமாயும் ஆசனமாயும் கொடியையும் மேற்கட்டியாயும் விசிறியாயும் இருக்கிறானோ
தேன-அப்படிப்பட்ட
த்வத் அங்க்ரி சம்மர்த்த கிண அங்க ஸோபிநா–உன்னுடைய திருவடி நெருக்கின தழும்பை அடையாளமாகக் கொண்டு விளங்குகிற ஈஸ்வரனுக்கு ஸ்ரீ கௌஸ்துபம் லஷணம் ஆனால் போலே
இவனுக்கும் அது தாஸ்ய சிஹ்னமாய் இருக்கும்-
கருத்மதா-பெரிய திருவடியால்
உபஸ்திதம் புரோ –திரு முன்பே சேவிக்கப்பட்டு இருக்கிற

தாஸஸ் –-தன்னுடைய வியாபாரங்கள் அடங்க ஈஸ்வரனுக்கு அதிசயத்தை விளைக்குமவையாய் இருக்கும்-ஸகா – ஜகத் வியாபாரங்களில் ஈஸ்வரன் தன்னோடு உசாவ வேண்டும்படியான
பெருமையை உடையவன்-வாஹநம் – ஆஸ்ரிதர் உடைய ஆபத்துக்களிலே ஈஸ்வரனைக் கொடு வந்து சேர்க்குமவனாய் இருக்கை –ஆஸனம் – ஒரு கார்யம் இல்லாத போது ஸிம்ஹாசனஸ்தனாய் இருந்தாலோபாதி தன் மேன்மைக்கு சத்ருஸ்ம் என்னும்படி சிம்ஹாசனமாய் இருக்கை –த்வஜோ-
ஈஸ்வரன் கிட்டுவதற்கு முன்னே எழுந்து அருளி நின்றான் என்று ஆஸ்ரிதர்க்கு ப்ரீதி ஹேதுவான கொடியானவன் –-அவனுடைய ரஷகத்வத்துக்கு ஹேது வானவன் -என்றுமாம்-பொன் மலையின் மீமிசைக் கார்முகில் போலே -திருவாய் மொழி -9-2-6–என்றும் புள்ளூர் கொடியான் -திருவாய்மொழி -3-8-1-என்றும் உண்டான பிரசித்தியைச் சொல்லுகிறது-யஸ்தே விதாநம் –-வினதை சிறுவன் சிறகு என்னும் மேலாப்பின் கீழ் வருவான் -நாச்சியார் திருமொழி -14-3- என்கிறபடியே ஆதப நிவாரணமாய் இருக்கை
கருடஞ்ச ததர் ஸோச்சைரந்தர்த்தா நக்தம் த்விஜ க்ருதச்சாயம் ஹரேர் மூர்த்னி பஷாப் யாம் பஷி புங்கவம் -(முனிவரே! சிறகுகளால்‌ ஹரியின்‌ தலையில்‌ நிழலை உண்டு பண்ணிக் கொண்டிருப்பவனும்‌, பறவைகளுக்குத்‌ தலைவனும்‌, மறைந்திருப்பவனுமான கருடனையும்‌ அந்த இந்திரன்‌ ஆகாயத்தில்‌ பார்த்தான்‌.)ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-12-4-இதி பராசர –வ்யஜனம் –-தன்னை மேற் கொண்டு போம் போது சாமரங்கள் போலே திருச் சிறகாலே ஆஸ்வாஸ்கனாய் இருக்கை –த்ரயீமய-ஸூபர்னோ அஸீ கருத்மான் த்ரிவ்ருத் தே ஸிர காயத்ரம் சஷூ -(நல்ல சிறகுகளை யுடையவனாயும்‌, க,ருத்மான்‌ என்னும்‌ திருநாமத்தை உடையவனாயுமிருக்கிறாய்‌; த்ரிவ்ருத்‌ உன்னு டைய தலை; காயத்ரம்‌ கண்‌…])என்கிறபடியே வேதங்களை அவயவங்களாக உடையனாய் இருக்கை – அவயவார்த்தே மயட் -ஈஸ்வரன் வேத பிரதிபாத்யன் -இவன் வேத சரீரன்உபஸ்திதம் தேன புரோ கருத்மதா –சர்வேஸ்வரன் தன்னை பிரகாசிப்பிக்கும் நிலைக் கண்ணாடி போலேயும்-மோம் பழம் போலேயும் திரு முன்பே சர்வதா சந்நிஹிதனாய் உள்ளவனை த்வத் அங்க்ரி சம்மர்த்த கிண அங்க ஸோபிநா –தன்னை மேற் கொண்டால் திருவடிகளால் நெருக்கின தழும்பு
தனக்கு போக சிஹ்னம் ஆகையாலே -அத்தாலே விளங்கா நிற்குமவன் –-ஈஸ்வரனுக்கு ஸ்ரீ கௌஸ்துபம் லஷணம் ஆனால் போலே இவனுக்கும் அது தாஸ்ய சிஹ்னமாய் இருக்கும்-(ஸூபர்னோஸி கருத்மான் த்ரி வ்ருத்தே சிர–தைத்ரியம் –வேதாத்மா விஹகேஸ்வர -சதுஸ் ஸ்லோகி
ஹூங்காராஸ் பாலநாங்க்ரி ப்ரஹதிபிரபி தம் தார்ஷ்யமத்யஷி பஸ்த்வம் –தழும்பு அலங்காரம் உண்டே
விதானம் -மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகு என்னும் மேலாப்பின் கீழ் வருவானை -)

நண்ணு நினக்கு ஒரு தாசனும் நண்பனும் வாகனமும் மரி யாசனமும்
திண்ணம் உறத் திகழும் கொடியும் விரி சாரமும் ஓர் விதானமுமாய்
எண்ணின் மறை வடிவானவனாய் அடி இணைகள் இறுத்தும் தழும்பு இலகிய
ஒண்ணும் உனக்கு எதிர் நின்று பணிந்திடும் உத்தமன் கலுழன் உகந்தவனாய்
–41–உனக்கு தாஸனும் தோழனும் வாகனமும் ஸிம்ஹாஸனமும் கொடியும் மேற் கட்டியும்-திருவால வட்டமும் ஆகின்றவனும் உன்னுடைய திருவடிகள் நெருங்குவதால் உண்டாகிய தழும்பின் அடையாளத்தாலே சோபிக்கிறவனும்
வேத ஸ்வரூபியுமான பெரிய திருவடியாலே உன் முன் நிலைக்கண்ணாடி போல் நின்று கொண்டு சேவிக்கப் படுகின்றவனாய் –

ஸ்தோத்ரம் -42-அவதாரிகை –உபய விபூதி விஷயமான தன்னுடைய சர்வ பரத்தையும் இவன் பக்கலிலே வைத்து இவன் இட்ட வழக்காய் இருக்கிற ஸ்ரீ சேநாபதி யாழ்வான் உடைய தாஸ்ய சாம்ராஜ்யத்தை அனுபவிக்கிறார் –

த்வதீய புக்த உஜ்ஜீத சேஷ போஜிநா
த்வயா நிச் ருஷ்டாத்ம பரேண யத் யதா
பிரியேண  சேநாபதிநா ந்யவேதி தத்
ததா அநு ஜாநந்த முதார வீஷணை
–42–

விஷ்வக்ஸேனர் உன்னுடைய ப்ரஸாதத்தையே உண்டு, உன்னுடைய நித்ய மற்றும் லீலா விபூதிகளை நடத்தும் பொறுப்புகளை உன்னிடத்திலிருந்து பெற்றிருக்கிறார்;-எல்லோருக்கும் இனியவரான அவர், உன்னுடைய கண்ணசைவினாலே செய்ய வேண்டிய விஷயங்களுக்கு ஒப்புதல் வாங்கி, அவற்றை நடத்தக் கூடியவர்.

த்வதீய புக்த உஜ்ஜீத சேஷ போஜிநா-உனது போனகம் செய்த சேஷத்தை உண்பவனும்
த்வயா நிச் ருஷ்டாத்ம பரேண -உன்னாலே வைக்கப்பட்ட உபய விபூதி நிர்வாக பாரத்தை உடையவனும்
பிரியேண  சேநாபதிநா-உனக்கு அன்பனுமான சேனாபதி ஆழ்வானாலே-அனைவரும் பிரியமானவர்களே அங்கே -இங்கு விசேஷித்து அருளியது இவருக்கு அசாதாரண பிரியம் –-ஆகவே இத் தத்துவம் சேனாபதி ஆழ்வான் பிரம்பின் கீழே வளருவது என்றார் பட்டர்
யத் யதா–யாதொரு விஷயம் யாது ஒரு படியாக
ந்யவேதி தத்-விண்ணப்பம் செய்யப் பட்டதோ அந்த விஷயத்தை
ததா அநு ஜாநந்த முதார வீஷணை–அப்படியே செய்வது என்று அழகிய கடாக்ஷங்களாலே நியமித்து அருளா நிற்கிற

த்வதீய புக்த உஜ்ஜீத –-தேவர் அமுது செய்து கை வாங்கின ப்ரசாதத்தாலே தரிக்குமவராய் இருக்கை –
த்வதீய -என்கையாலே வகுத்த ஸ்வாமி உடைய சேஷமே போஜ்யம் -என்கிறது –
யதுச் சிஷ்டம் போஜ்யம் -யத் வா துஸ் சரிதம் மம சர்வம் புநந்து மாமாய -(உண்ணத் தகாத உச்சி,ஷ்டம்‌ யாதொன்று என்னால்‌ உண்‌ணப்பட்டதோ, என்னுடைய கெட்ட காரியம்‌ யாதொன்று உண்டோ, “ஆப: எனப்படும்‌ எம்பெருமான்‌ என்னை அவைகளெல்லாவற்றிலிருந்தும்‌ பரிஸூத்‌,த,ப்படுத்த)என்கையாலே அல்லாதார் உடைய உச்சிஷ்டம் அபோஜ்யம் -என்கை –-புக்த உஜ்ஜிதம் -என்கையாலே-கலத்ததுண்டு -திருப் பல்லாண்டு -9- என்கிறபடியே-அமுது செய்து கை வாங்கின பின்பு அற்றையதே போஜ்யம் –-முன்பு பாத்திர சேஷமே அபோஜ்யம் என்கிறது சேஷ போஜிநா – தனக்கு தாரகமாய் இருக்கும் அளவு அன்றிக்கே-ரஸான் பக்தஸ்ய ஜிஹ்வாயாம் -(ரஸாந்‌ ப,க்தஸ்ய ஜிஹ்வாயாம்‌ க்‌,ருஹ்ணாமி கமலோத்‌,ப,வ! [தாமரையில்‌ பிறந்த பிரமனே ! இனிய சுவைகளை ப,க்த னுடைய நாக்கிலிருந்து அறிகிறேன்‌) என்கிறபடியே ஈஸ்வரனுக்கு போக்யமாவதும் ஆழ்வார் அமுது செய்தால் -என்கை –த்வயா நிச் ருஷ்டாத்ம பரேண –-நம்மிலும் பெரியவன்-சமர்த்தன் என்று தேவராலே தன் பக்கலிலே வைக்கப் பட்ட உபய விபூதி ரூபமான பரத்தை உடையவனாலே–பிரியேண –-சர்வ அபிமதன் ஆனவனாலே-சேநாபதிநா –-சர்வ சேநா நிர்வாஹகனாலே –-அசைவில் அமரர் தலைவர் தலைவா -திருவாய் -5-8-9-என்னக் கடவது இறே-யத் யதா ந்யவேதி – யாதொரு கார்யம் யாதொருபடி விண்ணப்பம் செய்யப் பட்டது-இதில் உள்மானம் புறமானம் பார்ப்பது இல்லை –-செய்யும் பிரகாரங்களும் அனுசந்திப்பதும் இல்லை-ஈஸ்வரன் இவன் உக்தியைப் பின் செல்லும் இத்தனை –தத் -ததா அநு ஜாநந்த முதார வீஷணை – அவலோக நாதா நேன பூயோ மாம் பாலயாச்யுத -என்றும்-உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணன் -பெரிய திருமொழி -7-1-9-என்றும் சொல்லுகிறபடியே
அநவதிக தயா சௌஹார்த்த அநு ராக கர்ப்பமான இக் கடாஷங்களாலே யாயிற்று –-இவன் இப்படிச் செய்வது -என்று நினைப்பிடுவது –ததா அநு ஜாநந்தம் –-ஐயராலே யாதொரு விண்ணப்பம் செய்யப் பட்டதோ அது அப்படியே -என்று பாசுரப் பரப்பற நியமித்து அருளுவது –(சேஷாசனர் –இதுவே நிரூபகம் ஸ்ரீ விஷ்வக் சேனர்–பர தத்வம் ஸ்ரீ சேனாபதி ஆழ்வான் பிரம்பின் கீழே வளரும் -விசேஷித்து இங்கு – ப்ரியேண் )

நித்தமும் நீ யமுதுண்ட பின் நின்றதை நிகர் இலதாம் ப்ரஸாதம் எனா
பத்தி மகிழ்ந்து அதை யுண்பவனும் நினது ஆணையினால் செக பாரம் எல்லாம்
சித்திரமாய் சிரம் ஏந்தி நடத்து நின் நண்பனுமாம் சேனா பதியின்
வித்தகமாம் பணிவிடைகள் உகந்து அவன் வேண்டியவாறு பணிப்பவனாய்
–42–பிரதி தினமும் அமுது செய்த பிற்பாடு சேஷமாய் நின்றதை பரம உத்தமமான ப்ரஸாதமாக மதித்து மன மகிழ்ச்சியுடன்
அதைப் புஜிப்பவனும் உன் நியமனப்படி ஜகத்தின் -உபய விபூதியின் -பாரத்தை எல்லாம் தன் சிரஸ்ஸில் வஹித்து விசித்ரமாய் நடத்துபவனும் உனக்கு இஷ்டனுமான ஸேனாபதி ஆழ்வான்
செய்யும் பணிவிடைகளை உகந்து அவன் செய்யும் விண்ணப்பத்திற்கு அநு குணமாகவே அவனுக்கு கட்டளைகள் இடுபவனாய் –

ஸ்தோத்ரம் -43-அவதாரிகை –சதா பஸ்யந்தி ஸூரய-இத்யாதிகளில் சொல்லுகிற நித்ய ஸூரிகளுடைய தாஸ்யைக சம்ருத்தியை அனுபவிக்கிறார் – அடியார்கள் குழாம்களை –உடன் கூடுவது என்று கொலோ –திருவாய் -2-3-10-என்று இறே இவர் பிரார்த்தனை-

ஹத அகில க்லேஸ் மலை ஸ்வ பாவாத
ஸ்தா ஆநு கூல்யை கரசைஸ் தவ உசித
க்ருஹீத தத் தத் பரிசார சாதநை
நிஷேவ்ய மாணம் ஸ சிவைர் யதோ சிதம்
–43-

துன்பங்களும் தோஷங்களும் இல்லாத, எப்பொழுதும் உனக்குத் தொண்டு செய்யும் அனுபவத்தை உடைய, உனக்குப் பொருத்தமாக இருக்கக் கூடியவர்களான, கையில் எப்பொழுதும் கைங்கர்யத்துக்குத் தேவையான மாலை, தூபம், தீபம் முதலியவைகளை ஏந்தி இருப்பவர்களான, உனக்கும் முறையை உணர்த்திக் கைங்கர்யம் செய்யக் கூடியவர்களான, அவர்கள் மற்றும் உன் தன்மைக் கேற்ப உன்னை வணங்கக் கூடிய நித்ய ஸூரிகளால் வணங்கப்படுபவனே!

ஸ்வ பாவாத-இயற்கையாகவே
ஹத அகில க்லேஸ் மலை –வருத்தங்களும் மலர்களும் எல்லாம் அற்ற வர்களாயும்-அவித்யை அஹங்காரம் ராகம் த்வேஷம் அபிநிவேசம் ஐந்து கிலேசங்கள்-பிரகிருதி சம்பந்தமாகிய மலம் -இவை இல்லாதவர்கள் இவற்றை இயற்கையாக உள்ள நித்ய ஸூரிகளைச் சொல்கிறது
தவ ஆநு கூல்ய ஏக ரசைஸ்-உனது கைங்கர்யம் ஒன்றையே போகமாக உடையவர்களாயும்
தவ உசித–உனக்கு ஏற்றவர்களாயும் -ஸ்வரூப ரூப குணங்களால் உன்னோடே ஒத்து இருப்பவர்களாயும்
க்ருஹீத தத் தத் பரிசார சாதநை–அந்த அந்த கைங்கர்யங்களுக்கு உபகரணங்களான-குடை சாமரம் முதலியவற்றை கையிலே ஏந்தி இருப்பவர்களையும் உள்ள
ஸ சிவைர்-மந்திரிகள் போன்ற நித்ய ஸூரி களாலே

ஹத அகில க்லேஸ் மலை –-அவித்யா அஸ்மித அபி நிவேச ராக த்வேஷா பஞ்ச க்லேசா-(அவித்‌யை, அஹங்காரம்‌, பேராசை, விருப்பம்‌, கோபம்‌ இவ் வைந்தும்‌ க்லேஸங்கள்)என்கிறவை க்லேசங்கள் –-அவற்றின் உடைய –ப்ராகபாவம் -முன் எப்பொழுதும் இல்லாது இருத்தல் – உடையவர்கள் -என்கை –-மலம் என்று ப்ரக்ருதியாய் தத் சம்சர்க்க அனர்ஹதயா வந்த ப்ராக பாவத்தை உடையவர்கள் -என்கை இத்தால் பிரபுத்த ஸ்வ பாவ யுக்தரான முக்த வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது –ஸ்வ பாவாத ஸ்தா ஆநு கூல்யை கரசைஸ் – சத்தா பிரயுக்தமாக-தேவர் திருவடிகளில் கைங்கர்யத்தையே போக்யமாக உடையராய் இருக்கை –-இத்தாலும் ஒரு நாள் தொடங்கி அடிமை செய்யத் தொடங்கின முக்த வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது –தவ உசித – ஸ்வரூப ரூப குணங்களாலே தேவருக்கு
சத்ருச லஷண ரானவர்கள் –க்ருஹீத தத் தத் பரிசார சாதநை -நிஷேவ்ய மாணம் – கைங்கர்ய உசித பரிகரங்களை ஆதர அதிசயத்தாலே விட மாட்டாமையாலே-சூட்டு நன் மாலை -திரு விருத்தம் -21-படியே தரித்து இருக்கையாலே தேவர்க்கே சத்ருசர் ஆனவர்களாலே சேவிக்கப் படா நின்று உள்ள உன்னை-ஸ சிவைர் – வாத்சல்யத்தாலே அவன் முறை அழியப் பரிமாற்ற நினைத்தாலும் அவனை முறை உணர்த்தி அடிமை செய்யுமவர்கள்-நீதி வானவர் -அமலனாதி -1- இறே-ஆஸ்ரித ரஷணத்தில் தேவரை பிரேரிக்கும் அவர்கள் இறே-யதோ சிதம் –-ஸ்வரூப அநு ரூபமாக என்னுதல் – அவஸ்ரோசிதமாக-என்னுதல்-(யதோசிதம் நிஷேவ்ய மாணம் –அவரவர்கள் அதிகாரத்துக்கு தக்கபடியும் –-அவன் திரு உள்ளத்துக்கு தக்கபடியும் -சமயங்களுக்கு தக்க படியும் கைங்கர்யம் )

துன்ப மலங்கள் அனைத்தையும் நீத்து நின் தூய மலர்த் திருவடி இணையில்
இன்பம் இயற்கையில் ஊட்டுவதாம் பணிவிடைகளில் போக்யம் உற்றவராய்
யன்புடன் இற்கு உபசாரம் இழைத்திட வாயின ஸாதனம் ஏந்தினராய்ப்
பொன் புரை நித்தியர் நின்னை யதோ உசிதம் போற்ற மகிழ்வுடன் பொலிபவனாய்
–43-துன்பத்தைத் தரக்கூடிய -அவித்யை முதலான குற்றங்கள் ஒன்றும் இல்லாதவராய்-மகா பரிசுத்தமாகிய உன் திருவடிகளில் கைங்கர்யங்களையே இயற்கையாக எக்காலத்தும் போக்யமாக எண்ணுபவராய்
பரம ப்ரேமத்துடன் உனக்கு உபசாரம் செய்யும் பொருட்டு அந்தவந்த கைங்கர்ய உப கரணங்களான சத்ர சாமராதிகளைத் தரித்துக் கொண்டு இருப்பவராய் உள்ள அந்த நித்ய ஸூரிகள் உன்னை ஸ்வரூப அனுரூபமாக சேவிக்க அதனால் மன மகிழ்ச்சி கொண்டு பிரகாசிப்பவனாய்-

ஸ்தோத்ரம் -44-அவதாரிகை –பவாம்ஸ்து சஹ வைதேஹ்யா கிரிசா அநு ஷூ ரம்ஸ்யதே – என்கிறபடியே பிராட்டியை நாநா ரசங்களாலே உகப்பிக்கும் படியை அனுபவிக்க வேண்டும்-என்கிறார்-

அபூர்வ நாநா ரஸபாவ நிர்ப்பர
ப்ரபத்தயா முக்த விதக்த லீலயா
ஷணாணுவத் ஷிப்த பராதி காலயா
ப்ரஹர்ஷ யந்தம் மஹி ஷீம் மஹா புஜம்
–44-

தன்னுடைய அழகான மற்றும் சிறந்ததான லீலைகளால் பிராட்டிக்கு ஆனந்தத்தைக் கொடுப்பவன் எம்பெருமான்;-இப்படிப்பட்ட லீலைகளால் பிராட்டிக்கு ப்ரஹ்மாவின் ஆயுட்காலமும் ஒரு நொடிப் பொழுதில் செல்லும்படி ஒவ்வொரு க்ஷணமும் புதியதாக ரசிக்கும்படியாக இருக்கும்; பிராட்டியைத் தழுவுதற்கு ஏற்ற பெரிய திருக் கைகளை உடையவன்.

அபூர்வ நாநா ரஸ்பாவ நிர்ப்பர ப்ரபத்தயா–விலக்ஷணங்களான பலவகை ரசங்களாலும் பாவங்களாலும் நெருக்குண்டு இடைவிடாது தொடர்ந்து நடப்பதாய்
ஷணாணுவத் ஷிப்த பராதி காலயா–ஒரு க்ஷணப் பொழுதிலே ஏக தேசம் போலே விரைவாகக்
கழிக்கப் பட்ட காலங்களை யுடையதான
முக்த விதக்த லீலயா–மிகவும் அழகிய லீலையினாலே
ப்ரஹர்ஷ யந்தம் மஹி ஷீம் மஹா புஜம் -பெரிய பிராட்டியாரை சந்தோஷப்படுத்தா நிற்கிற
விசாலமான புஜங்களை யுடையனாய் இருக்கிற

அபூர்வ –பிரதி ஷணமும் முன்பு கண்டு அறியாதது போலே இருக்கை –நாநா ரஸபாவ நிர்ப்பர- பஹூ முகமான ரசத்தாலும் பாவத்தாலும் நெருங்கும் படி –ப்ரபத்தயா- ஸ்ம்பத்தயா--ரசமாவது -சேதனர் யாதொன்றை அனுசந்தியா நின்றாலும்-யேன மாத யதி-(எதனாலே மதமடைகிறானோ)என்கிறபடியே மதியா நிற்பார்-அது இறே ரசம்-அதுக்கு அடி பாவம்-மானச விகாசம் –முக்த விதக்த லீலயா –-அவ்வோ தச அநு குணமாய்-முக்தமாயும் விதக்தமாயும் உள்ள லீலையாலே –ஷணாணுவத் ஷிப்த பராதி காலயா –-ஒரு ஷணத்தில் ஏக தேசம் போலே போக்கப் பட்ட பரகாலம் பரார்த்த காலம் இவற்றை உடைத்தாய் இருக்கும் அதனாலே-பரகாலம் ஆகிறது -ப்ரஹ்மா ஆயுஸ்ஸூ-பரார்த்த காலம் ஆகிறது -அதில் சம பாதி-ப்ரஹர்ஷ யந்தம் மஹிஷீம் – யஸ் த்வ்யா சஹ ஸ ஸ்வர்க்கோ நிரயோ யஸ் த்வ்யா விநா -(யஸ்‌ த்வயா ஸஹ ஸ ஸ்வர்க்கேரா நரகோ யஸ்‌ த்வயா விநா। இதி .ஜாநந்‌ பராம்‌ ப்ரீதிம்‌ ௧ச்ச, ராம மயா ஸஹ॥ [ராக,வரே ! உம்முடன்‌ கூடியிருக்கும்‌ இருப்பே (எனக்கு) ஸ்வர்க்கம்‌; உம்மைப்‌ பிரிந்திருக்குமிருப்பு நரகம்‌” என்பதை அறிந்து, என்னுடன்‌ கூடவே மேலான ஆநந்தத்தை அடைவீராக.]) என்றும் –-த்வத் வியோ கே ந மே ராம த்யக்தவ்ய மிஹ ஜீவிதம் –(த்வயா ச ஸஹ கந்தவ்யம்‌ மயா கு,ருஜநாஜ்ஞயா। த்வத்‌, வியோகே,ந மே ராம! த்யக்தவ்யமிஹ ஜீவிதம்‌ ॥| [ராக,வரே! பெரியோர்களின்‌ கட்டளைப்படி நான்‌ உம்முடன்‌ கூடவே போகவேண்டும்‌; உம்மைப்‌ பிரிந்தால்‌ இங்கேயே உயிரை விடவேண்டும்‌.)என்றும் சர்வதா தேன ஹீநாயா ராமேண் விதிதாத்மநா தீ ஷணம் விஷமி வாஸ் வாத்ய துர்லபம் மம ஜீவிதம் -([நெஞ்சிலுள்ளதை அறிபவனான ராம பிரானை விட்டுப்‌ பிரிந்த எனக்கு, கொடுமையான விஷத்தைக்‌ குடித்ததைப்‌ போல்‌, ‘ உயிர் தரிப்பது எல்லா விதத்திலும்‌ துர்லப,ம்.) என்றும்-அகலகில்லேன் இறையும் -என்கிறபடியே வ்யதிரேகத்தில் ஆற்ற முடியாத பிராட்டியை மிகவும் உகப்பியா நின்று உள்ளவனை-ப்ரஹர்ஷ யந்தம் -என்கையாலே-இவ் உகப்பு நித்யம் -என்கை –மஹா புஜம் – கீழ் சொன்ன லீலா ரசத்தாலே உகப்பிக்கும் அவனோபாதி யன்று-அணி மானத் தட வரைத் தோளாலே -திருவாய் -4-8-2- அணைத்து உகப்பிக்கும் என்றும் ஸ்வரூப குணங்களைக் காட்டில் ரூப குணம் இறே இனிதாய் இருப்பது –(கீழே பிராட்டியுடைய சேர்த்தி அழகை அனுபவித்து இதில் பிராட்டியை உகப்பிக்கும் பரிசு —-சமரசனாய் இருக்கும்படியை அருளிச் செய்கிறார் பிரமனுடைய ஆயுள் காலமும் சிறிய நொடிப் பொழுது போலே தோன்றுமே இந்த லீலா ரசத்தால் அவிதித கதயாமா ராத்ரிரேவ வயரம்ஸீத-உத்தர ஸ்ரீ ராமாயணம் -)

கீழே -37-/38-/39–பாசுரங்களில் பிராட்டி சேர்த்தி அழகு அனுபவம் –-இதில் பிராட்டியை உகப்பிக்கும் பரிசு சொல்லுகிறது –-காந்தர்வ வேதத்தில் உள்ள வீரம் சிருங்கார ரசங்களும் உத்ஸாஹம் போன்ற பாவங்களும் புதிது புதிதாக தொடர்ந்து செல்லும் லீலைகளை அனுபவிக்கிறார்-பராதி காலயா -பிரமன் காலம் பரம் -அதில் பாதி பரார்த்தம் -அது கூட க்ஷணம் பொழுதில் அவலீலையாக கழிகின்றனவாம்-

பற்பலவாகும் அபூர்வ பாவ ரசங்கள் பணித்து நிறைப் பதினாறு
கல்பம் அநேகம் அடங்கிய காலம் அதும் கண லேஸம் எனக் கழியப்
பொற்புடன் சாதுரியம் பல பூண்டு விளங்கு விலாஸ வகைகளினால்
அற்புதம் என்று உனது அன்பினள் மெச்சி யணைக்கு மகா புயம் உற்றவனாய்
–44-இதற்கு முன் என்றும் கண்டு அறியாதன போன்று வெகு விதங்களாய் ஸ்ருங்கார உத்ஸஹாதி ரசங்களால் அதிகமாய் விருத்தி அடைந்து இருப்பதால்-பரம்பரார்த்தம் என்னும் கற்பகங்கள் அடங்கிய காலமானது ஒரு க்ஷணம் போலே கழிந்து கொண்டு இருக்க வெகு சாதுர்யம் பூண்டு அழகாய் அமைந்துள்ள லீலைகளினால் பெரிய பிராட்டியார் அற்புதம் என்று மெச்சி அணைத்துக் கொள்ளும் பெரிய திருத் தோள்களை யுடையவனாய்-

ஸ்தோத்ரம் -45-அவதாரிகை –இப்படிப் பிராட்டியை உகப்பிக்கிற ரச பாவங்களுக்கு ஆஸ்ரயமான வடிவையும் குணங்களையும் அனுசந்திக்கிறார்-

அசிந்த்ய திவ்ய அத்புத நித்ய யௌவன
ஸ்வ பாவ லாவண்யமய அம்ருதோதிதம்
ஸ்ரீய ஸ்ரீயம் பக்த ஜனைக ஜீவிதம்
ஸ்மர்த்த மாபத்ஸக மர்த்தி கல்பகம்
-45-

எம்பெருமான் நினைவுக்கு அப்பாற்பட்ட, திவ்யமான, ஆச்சர்யமான, நித்யமான, இயற்கையான இளமையை உடையவன்; அழகுக் கடலாக இருப்பவன்; ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கும் ஸ்ரீயாக (செல்வமாக) இருப்பவன்; தன்னுடைய அடியார்களின் உயிராக இருப்பவன்; அறிவில் குறைந்தவர்களையும் படிப்படியாக உயர்த்தக் கூடியவன், ஆபத்துக் காலத்தில் நண்பனாக இருப்பவன், அவனை விரும்புபவர்களுக்கு கற்பக மரமாக இருப்பவன் –

அசிந்த்ய திவ்ய அத்புத நித்ய யௌவன ஸ்வ பாவ லாவண்யமய அம்ருதோதிதம்–சிந்தைக்கு எட்டாததாய் – ஆச்சர்யமாய் –நித்தியமாய் –இருக்கிற யவ்வனத்தை ஸ்வ பாவமாக யுடைய லாவண்யம் நிறைந்த அமுதக்கடலாய்
ஸ்ரீய ஸ்ரீயம் –திருவுக்கும் திருவாய்
பக்த ஜனைக ஜீவிதம்–பக்த ஜனங்களுக்கு நற் சீவனாய்-உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்று இருப்பார்க்கு-இவன் ஜீவன் –சாத்மிக்க போக ப்ரதன் –-பக்த ஜனங்களையே தனக்கு தாரகமாய் -உயிர் நிலையாக -உடையவன் -என்றுமாம் – மம ப்ராணா ஹி பாண்டவா –ஸ்மர்த்தம்-சர்வ சக்தனாய் –ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மான்
ஆபத் ஸகம் –ஆபத்துக்களிலே வந்து உதவுமவனாய் –-காண வாராய் என்று கண்ணும் வாயும் துவர்ந்த அளவிலே -8-5-2- உதவும் ஸ்வ பாவனான உன்னை –அர்த்தி கல்பகம்-யாசிப்பவர்களுக்கு கற்பக வ்ருக்ஷம் என்னத் தகுந்தவனாய் இருக்கிற-என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -2-7-11- என்கிறபடியே தன்னை ஔதார்யம் பண்ணுமவனை-

அசிந்த்ய –-விக்ரஹ குணங்கள் உடைய அவாங் மனஸ் அகோசரத்வத்தை சொல்லுகிறது-ஸ்வரூபத்தையும் குணத்தையும் பரிச்சேதிக்கிலும் வடிவில் போக்யதை பரிச்சேதிக்க ஒண்ணாது -என்கை-இச்சா க்ருஹீ தாபி மதோரு தேக திவ்ய-ந பூத சங்க சம்ச்தானோ தேஹோச்ய பரமாத்மன -என்கிறபடியே-அப்ராக்ருதமாய் இருக்கை –அத்புத –க்ருஹீ தாமசம் ஆச்சர்யமாய் இருக்கை-முழுசி வண்டாடிய தண் துழாயின் மொய்ம் மலர்க் கண்ணி -என்கிறபடியே இருக்கை –-நித்ய – அகால கால்யத்வத்தைச் சொல்கிறது-யௌவன -ஸ்வ பாவயுவா குமார -(யெளவனத்தை உடையவனாகவும்‌, சிறிது பாலனாகவு மிருப்பவன்‌.])என்கிறபடியே -இருக்கை – தருணெள ரூப சம்மன்ன நௌ -(தருணெள ரூப ஸம்பந்நெள ஸுகுமாரெள மஹாபலெள| புண்டரீக விஸாலாக்ஷெள சீர க்ருஷ்ணாஜிநாம்ப,ரெள ॥| : [(ராமலக்ஷ்மணர்கள்‌) வாலிபமானவர்கள்‌; அழகு நிறைந்தவர்கள்‌; ஸெளகுமார்யத்தை உடையவர்கள்‌; அதிகமான ப,லமுள்ளவர்கள்‌. தாமரை போன்ற அகன்ற கண்களை உடையவர்கள்‌ ; மரவுரியையும்‌, மான்‌ தோலையும்‌ உடுத்‌தவர்கள்‌.])என்கிற படி ஸ்வா பாவிகமான யௌ வனத்தை உடைத்தாய் இருக்கை – லாவண்ய மய –-பிரசுரமான சாமான்ய சோபையை உடைத்தாய் இருக்கை –அம்ருதோதிதம்- சர்வ பிரகார போக்யதையாலே-அப்ரமேயோ மஹோததி -(ஸமுத்‌ரம்‌ ராகவோ ராஜா ஸரணம்‌’ ௧,ந்துமர்ஹதி | ‘காநிதஸ்‌ ஸக,ரேணாய மப்ரமேயோ மஹோத,தி,: ॥ [அரசரான ராகவர்‌ ஸமுத்ரத்தை ஸரணமடையத்‌ தகுந்தவர்‌. அளவற்றதான இப் பெருங்கடல்‌ ஸகரரால்‌ வெட்டு விக்கப்பட்டதன்‌)என்கிறபடியே பரிச்சேதிக்க போகாமைக்கு ஒரு சமுத்ரம் என்கை-

ஸ்ரீய ஸ்ரீயம் –-திருவுக்கும் திருவாகிய செல்வன் -பெரிய திருமொழி -7-7-1- என்கிறபடியே பிராட்டிக்கும் மங்கள அவஹனாய் இருக்குமவனை-பக்த ஜனைக ஜீவிதம் –எல்லாம் கண்ணன் -6-7-1- என்கிறபடியே ஆஸ்ரிதர்க்கு தாரகாராதிகள் தானேயாய் இருக்குமவனை-பக்த ஜனங்களையே தனக்கு தாரகமாய் உடையவன் -என்றுமாம் – மம ப்ராணா ஹி பாண்டவா –(த்‌,விஷத,ந்நம்‌ ந போக்தவ்யம்‌ த்‌, விஷந்தம்‌ நைவ போஜயேத்‌ | பாண்ட, வாந்‌ த்‌,விஷஸே ராஜந்‌ ! மம ப்ராணா ஹி பாண்ட,வா: || [த்,வேஷிப்பவனின்‌ அன்னம்‌ புஜிக்கத் தக்கதன்று ; த்வேஷிப்பவனை பு,ஜிப்பிக்கவும்‌ கூடாது, அரசனே | நீ பாண்டவர்களை த்‌,வேஷிக்கிறாய்‌. பாண்டவர்கள்‌ எனக்கு ப்ராணனன்றோ) ஸ்மர்த்தம் – அளவுடையரான நித்ய சூரிகளை அனுபவிக்குமவனை –-நித்ய சூரிகள் அனுபவிக்கும்படி-ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை -4-5-5- என்கிறபடியே சாத்மிக்க சாத் மிக்க அனுபவிப்பிக்கும் சாமர்த்தியத்தை உடைய உன்னை-ஆபத்ஸகம்-காண வாராய் என்று கண்ணும் வாயும் துவர்ந்த அளவிலே -8-5-2- உதவும் ஸ்வ பாவனான உன்னை – அரத்தி கல்பகம் – என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -2-7-11- என்கிறபடியே தன்னை ஔதார்யம் பண்ணுமவனை-

(கீழே தனித் தனியே பிரஸ்தாபிக்கப் பட்ட திவ்ய மங்கள விக்ரஹ குணம் -திவ்யாத்ம குணம் –
எல்லாவற்றையும் சேர்த்து அனுபவிக்கிறார் இதில் –-திருவுக்கும் திருவாகிய செல்வன் -சகலவித ஜீவனம் -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் –சாத்மிக்க போக ப்ரதன் – அடியேனை அனுபவிக்கப்ப் பண்ணுவது என்றோ –என்று கீழ் உடன் அன்வயம் )

விசேஷண சங்கீர்த்தனம் -32-ஸ்லோகம் தொடங்கி இது வரை தனித்தனியே பிரஸ்தாபிக்கப் பட்ட
திவ்ய மங்கள விக்ரஹ குணம் திவ்ய ஆத்ம குணம் எல்லாவற்றையும் ஓன்று சேர்த்து அனுபவிக்கிறார் இதில்லாவண்யமய அம்ருதோதிதம்-விசேஷமாகக் கொண்டு யௌவன ஸ்வ பாவத்தை அதுக்கு விசேஷணமாக உரைத்து அருளினார் தூப்புல் அம்மான்-லாவண்யம் -சமுதாய சோபை -நீரோட்டம் -மிருதுவாயும் கண்களுக்கு ஆனந்தத்தைக் கொடுக்கும் தேஜஸ்ஸூ-குழுமித் தேவர் குழாங்கள் கை தொழச் சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதோர் உரு அடியேனை அனுபவிக்கப்ப் பண்ணுவது என்றோ -என்று கீழ் உடன் அன்வயம்

நெஞ்சில் நினைக்க அரிதாகிய அற்புத நித்ய யவ்வன நீர்மையனாய்
விஞ்சும் எழில் மயமாய் அமுதக் கடலாய் விமலைக்கும் ஓர் சுப கரனாய்
தஞ்சம் அடைபவர்க்கு ஒரு தாரக போஷக போக்ய சதுரனுமாய்
நஞ்சின் விதத்திலும் நண்பனுமாய் வர நாடுபவர்க்கு ஒரு கற்பகமாய்
–45–மனத்தால் எண்ணுதற்கு அரிதாகி வெகு ஆச்சர்யத்தை உண்டு பண்ணுவதான நித்ய யவ்வனத்தை இயற்கையாக யுடையவனாய்-லாவண்யம் நிறைந்து அமுதக்கடல் போன்றவனாய் -ஸ்ரீ மஹா லஷ்மிக்கும் மங்கள கரனாய்-தன்னை அடையும் ஆஸ்ரிதற்கு தாரக போஷக போக்யனாய்-தன் ஆஸ்ரிதர் அனுபவிக்கும் பொருட்டு தன்னையே கொடுக்க ஸாமர்த்யம் யுடையவனாய்-எந்த ஆபத்தில் நின்றும் ரக்ஷிக்க தோழன் போன்றவனாய்-யாசிப்பவர்க்குக் கொடுக்கும் விஷயத்தில் ஒரு கற்பக வ்ருக்ஷம் போன்றவனாய் –

ஸ்தோத்ரம் -46-அவதாரிகை –கீழ்ச் சொன்ன ஸ்வரூப ரூப குண விபூதிகளாலே பூர்ணனாய்-நித்ய விபூதியிலே குறைவற எழுந்து அருளி இருக்கிற தேவரை பாஹ்ய மநோ ரதங்களைத் தவிர்ந்து
என்னுடைய சத்தையால் உள்ள பிரயோஜனம் பெறும்படி நித்ய கைங்கர்யத்திலே உகப்பிப்பது -என்று – என்கிறார் –

பவந்தமேவா நுசரன் நிரந்தரம்
ப்ரசாந்த நிஸ் சேஷ மநோ ரதாந்த்ர
கதா அஹ மை காந்திக நித்ய கிங்கர
ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாத ஜீவித
–46-

பவந்தமேவ அஹம் அநுசரன் நிரந்தரம்-உன்னையே நான் இடைவிடாமல் பின் தொடர்ந்து கொண்டு
ப்ரசாந்த நிஸ் சேஷ மநோ ரதாந்த்ர–வேறே எவ்விதமான இதர ஆசையும் அற்றவனாய்
ஐகாந்திக நித்ய கிங்கர–நித்ய நியதி கைங்கர்யத்தை யுடையவனாய்
ஸநாத ஜீவித–நாதனோடு கூடிய உயிரை யுடையவனாய்
கதா ப்ரஹர்ஷயிஷ்யாமி –எப்போது திரு உள்ளத்தை உகப்பிக்கப் போகிறேன்

மற்ற எல்லா விஷயங்களிலுமிருக்கும் ஆசையை அடியோடு விட்டு உன்னையே தொடரும்படி இருந்து,
எப்பொழுதும் உனக்கு நித்ய கைங்கர்யம் செய்து உனக்கு ஆனந்தத்தைக் கொடுத்து என் வாழ்கைக்கும் ஒரு பயனைப் பெறுவேன்?

பவந்தம்-ஸ்வரூப ரூப குண விபவை-பரி பூர்ணம்-இன்பம் பயக்க -7-10-1-என்று தொடங்கி-ஆள்கின்ற எங்கள் பிரான் -என்கிற பூர்த்தியைச் சொல்லுகிறது –ஏவ-தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -2-9-4- என்கிறபடியே அநுகூல வருத்தி தேவருக்கே அனுகூலமாய் இருக்கை –அநுசரன்-யேன யேன தாத்தா கச்சதி–ஏதமாநந்த மயமாத்மா நமுப சங்க க்ரமய ––அநு சஞ்சரன் ––குருஷ்வ மாமு நுசரம் -என்கிறபடியே அநு வர்த்தனத்தை யுடையனாய்-நிரந்தரம் – இடைவிடாதே இருக்கை –ப்ரசாந்த நிஸ் சேஷ மநோ ரதாந்த்ர –மற்றை நம் காமங்கள் மாற்று -என்று தேவரை ஒழிந்த விஷயங்களில் மநோ வியாபாரங்களை ஸூ வாசனமாக தவிர்ந்து–கதா –என்று கொள் கண்கள் காண்பது -3-6-10-எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவன் -3-2-1-என்னும்படியே காலத்துக்கு எல்லை அருளிச் செய்ய வேணும் –அஹம் – ருசியேயாய் இத் தலையால் உபாயம் இல்லாத நான் –ஐகாந்திக நித்ய கிங்கர –
ஏக ரூபமாய்-யாவதாத்மபாவியான கைங்கர்யத்தை நிரூபகமாக உடையனாய் –ஸநாத ஜீவித –
சநாதமான சத்தையை உடையனாய்-என் சத்தையை ஸ பிரயோஜனமாக்கி -என்கை –ப்ரஹர்ஷயிஷ்யாமி –-மிகவும் உகப்பிக்கக் கடவேன் –-தன்னுடைய அநு வ்ருத்தியால் ஈஸ்வரனுக்குப்
பிறந்த ப்ரஹர்ஷம் இறே சேதனனுக்கு பிராப்யம் –

(ஏதமாநந்த, மயமாத்மாநமுப ஸங்க்ரம்ய | இமாந்‌ லோகாந்‌ காமாந்நீ காமரூப் யநுஸஞ்சரந்‌ | ஏதத்‌ ஸாம காயந்நாஸ்தே। ஹாவு ஹாவு ஹா வு || [ஆனந்த,மயனான இந்தப்‌ பரமாத்மாவை அணுகி, இஷ்டப்‌ பட்ட உருவங்களை உடையவனாய்‌, இந்தக்‌ காமங்களிலும்‌, லோகங்களிலும்‌ (பரமாத்மாவைப்‌) பின் தொடர்ந்து கொண்டு இந்த ஸாமத்தைப்‌ பாடிக்கொண்டிருக்கிறான்‌: ஹாவு ஹாவு ஹாவு]ஸோ5ஹம்‌ தே தேவதே,வேஸ! நார்ச்சநாதெ,ள ஸ்துதெள ந ச ॥ ஸாமார்த்‌,யவாந்‌ க்ருபா மாத்ர மநோவ்ருத்தி: ப்ரஸீத, மே॥தே,வர்களுக்கும்‌ தேவர்களான நித்யஸூரிகளுக்கும்‌’ தலைவனே | இப்படிப்பட்ட நான்‌ உன்னுடைய ஸ்துதியிலும்‌, அர்ச்சனை முதலியவற்றிலும்‌ ஸாமர்த்தியம்‌ உடையவனல்‌லேன்‌. அருள்‌ கூர்ந்த திருவுள்ளத்துடன்‌ கூடியவனாய்‌ எனக்கு தயை புரிய வேண்டும்‌.] (ஜாயமாநம்‌ ஹி புருஷம்‌ யம்‌ பஸ்‌யேந்‌ மது,ஸூத,ந: | ஸாத்விகஸ்‌ ஸ து விஜ்ஞஜேயஸ்‌ ஸ வை மோக்ஷார்த்த,சிந்தக: ॥| [பிறந்து கொண்டிருக்கும் போது எந்தப்‌ புருஷனை மது, ஸுூதனன்‌ பார்க்கிறானோ அவனே ஸத்வ குணமுடைய வனென்று அறியத் தக்கவன்‌. அவனே மோக்ஷ் பலத்தை நினைப்பவன்‌)(இச்சாத ஏவ தவ விஸ்வ பதரார்த்த ஸத்தா நித்யம்‌ ப்ரியாஸ்‌ தவ து கேசந தே5பி நித்யா: ! நித்யம்‌ த்வதே,பரதந்த்ர நிஜ ஸ்வரூபா; பாவத்க மங்கள குணா ஹி நிதர்மஸம்‌ ந: [எல்லாப்‌ பொருள்களின்‌ இருப்பும்‌ உன்னுடைய விருப்பத்‌ தாலேயே ஏற்படுகிறது. உனக்குச்‌ சில வஸ்துக்கள்‌ எப்போதும்‌ பிரியமானவை; அவை நித்யமாக விளங்கு கின்றன. எப்பொழுதும்‌ உனக்கே பரதந்திரமான ஸ்வ ரூபத்தையுடைய உன்னுடைய கல்யாண குணங்கள்‌ (இவ்விஷயத்தில்‌) எங்களுக்கு த்‌,ருஷ்டாந்தம்‌)(யோ5ஹமஸ்மி ஸ ஸந்‌ யஜே [நான்‌ எப்படிப் பட்டவனா யிருக்கிறேனோ, அப்படிப்பட்ட வனாகவே இருந்து கொண்டு, (ஆத்ம ஸமர்ப்பணமாகிற) யாகத்தைச்‌ செய்கிறேன்‌.)(யஸ்யாஸ்மி ந தமந்தரேமி-[எவனுக்கு கான்‌ தராஸனாயிருக்கிறேனோ, அவனை விட்டு வேறொருவனிடம்‌ செல்லமாட்டேன்‌.]

(நிரந்தரம் அநு சரன் -சென்றால் குடையாம் இத்யாதி சகல வித கைங்கர்யங்களும்
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும்-எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் –மற்றை நம் காமங்கள் மாற்று -ஐகாந்திக நித்ய கிங்கர –-சேதன லாபம் எம்பெருமானுக்கே புருஷார்த்தம் –
ப்ரஹர்ஷயிஷ்யாமி -எப்பொழுது உன்னை ஸந்துஷ்டனாக செய்யப் போகிறேன் என்றபடி -இந் நிலத்திலும் நீயே நாதனாக இருந்தாலும் உபேக்ஷிக்கப்பட்டு அநாதன் போலே தீனனாய் அன்றோ இருக்கின்றேன்-நித்ய கைங்கர்யம் செய்வேனாக என்னை ஆக்கி அருளினால் ஒழிய என்னுடைய சத்தை பயன் பெறாதே என்பதையே சநாத ஜீவித -என்று அருளிச் செய்கிறார்

நின்று நிறை நினையே யனுவர்த்தனம் என்றும் இயற்றி நினை ஒழி மற்று
ஒன்றிலும் இச்சை லேசமும் ஒன்ற விடாமல் ஒழித்து ஒரு நியதம் உடன்
என்றும் உன் நித்ய கைங்கர்யங்களை ஏந்தும் ஓர் சத்துடை வாழ்க்கையனாய்
நன்றென நிற்கு மகிழ்ச்சி விளைப்பதை நானும் வகித்தல் எஞ்ஞான்று கொலோ
–46-இத்யாதி ஸ்வரூப ரூப குண விபவங்களால் நிறைந்த உன்னையே இடைவிடாது என்றும் அனுவர்த்தித்துக் கொண்டு
உன்னைத்தவிர மற்ற விஷயங்களில் மநோ வியாபாரங்களை முற்றவும் தவிர்த்தவனாய்
இந்த ஆத்ம ஸ்வ பாவமுள்ள காலம் அத்தனையும் திடமான மனத்துடன் உனக்கு நித்ய கைங்கர்யங்களையே செய்து கொண்டு சபலமான சத்தை யுடைய வாழ்க்கை யுள்ளவனாய் உன்னை நான் உகப்பிக்கும் நாள் எப்பொழுது வருமோ –

ஸ்தோத்ரம் -47-அவதாரிகை –இதில் பிராப்யனான ஈஸ்வரன் உடைய வைலஷண்யத்தையும்
தம்முடைய பூர்வ வருத்தத்தையும் பார்த்து விதி சிவா சநகாதிகள் உடைய மனஸ்ஸூக்கு
அத்யந்த தூரமாய் அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய சூரிகள் ஆசைப்படுமதான கைங்கர்ய சாம்ராஜ்யத்தை சம்சாரியானவன் ஆசைப்படுவாதாவது -என்–ராஜ அன்னம் விஷ சம்ஸ்ப்ருஷ்டம் ஆவதே -என்று வளவேழுலகில்-1-5- ஆழ்வாரைப் போலே தம்மை நிந்திக்கிறார்

திக ஸூ சிமவி நீதம் நிர்த்தயம் மாமலஜ்ஜம்
பரம புருஷ யோ அஹம் யோகி வர்யாக் ரகண்யை
விதி ஸிவ ஸ்நகாத் யைர் த்யாது மத்யந்த தூரம்
தவ பரி ஜன பாவம் காம்யே காம வ்ருத்த
—47–

புருஷோத்தமனே! என்னுடைய (தவறான) எண்ணப்படி நடக்கும் தன்மையை உடைய காரணத்தால் ப்ரஸித்தமான நான், என்னுடைய புனிதமற்ற தன்மையாலும், சீர் செய்யப்படாத தன்மையாலும், கருணையும், வெட்கமும் இல்லாத தன்மையாலும், ப்ரஹ்மா, சிவன், ஸனகாதி முனிவர்கள் போன்ற உயர்ந்த யோகிகளுக்கும் எட்டாததான உன் கைங்கர்யத்தை ஆசைப்பட்டதை என்னையே நினைத்து நொந்து கொள்ள வேண்டும்.

பரம புருஷ-புருஷோத்தமனே
காம வ்ருத்த —மனம் போகும் படி நடக்கிற
ய அஹம்–யாவன் ஒருவன்
யோகி வர்யாக் ரகண்யை–யோகி ஸ்ரேஷ்டர்களுள் சிரந்தவர்களான
விதி ஸிவ ஸ்நகாத் யைர்-பிரமன் சிவன் சனகர் முதலான வர்களாலும்
த்யாதும் அத்யந்த தூரம்–நெஞ்சால் நினைப்பதற்கும் மிகவும் எட்டாதான
தவ பரி ஜன பாவம் காம்யே –உனது பரிசாரகன் ஆவதற்கு விரும்புகின்றேனோ
தம -அப்படிப்பட்ட
அ ஸூசிம் அ விநீதம் நிர்த்தயம் அலஜ்ஜம்-மாம் திக் -அபரிசுத்தனும் -வணக்கம் அற்றவனும்-இரக்கம் அற்றவனும் வெட்கம் அற்றவனுமான என்னை நிந்திக்க வேணும்

அஸூசிம் –அநாதியான தேக சம்பந்த யுக்தனான என்னை-தேக சம்பந்தா பாவம் சத்தா பிரயுக்தமான
நித்ய சித்தர் இறே நித்ய ஸூத்தர்-அ விநீதம்–இவ்வாத்மாவுக்கு தேக சம்பந்தம் அஸூசி ஹேது என்று
அறிகைக்கு அடியான ஆசார்ய சேவை இல்லாமையாலே-ஸூஷிதன் அல்லாத -என்னை-நிர்த்தயம் –
அம்ருதத்தை விஷத்தாலே தூஷித்தால் போலே விலஷண போக்யமான பகவத் தத்தவத்தை கண்ணற்று தூஷிக்கப் பார்த்த நிர்த்தயனை-அலஜ்ஜம் –கடதாஸி சார்வ பௌமனை மேல் விழுமா போலே – நம்மைப் பாராதே மேல் விழுந்தோம் -இது அபஹாஸ்யம் -என்று லஜ்ஜிக்கவும் அறியாத என்னை –மாம் திக் –இப்படி ஹேய குண பூர்ணனான என்னை-வேண்டேன் என்று தம்மை குத்ஸிக்கிறார் –

பரம புருஷ –சர்வாதிகனான புருஷோத்தமனே –யோ அஹம் – நிஹீ நாக்ர கண்யன் என்று பிரசித்தனான -நான் –யோகி வர்யாக் ரகண்யைவிதி ஸிவ ஸ்நகாத் யைர் த்யாது மத்யந்த தூரம்
யோகி ஸ்ரேஷ்டரில் பிரதமகண்யரான ப்ரஹ்ம ருத்ராதிகள் என்ன –ப்ரஹ்ம பாவ நிஷ்டரான சநகாதிகள் என்ன இவர்களாலே நினைக்கைக்கும் அத்யந்தம் தூரமாய் உள்ளதை –தவ பரி ஜன பாவம் –ஆத்ம ஸ்வாமியாய்-நிரதிசய போக்யரான தேவர் உடைய கைங்கர்ய அம்ருதத்தை சத்தா பிரயுக்தமான ருசியையும் வைலஷண்யத்தையும் உடைய நித்ய ஸூரிகள் ஆதரிக்கும் அத்தை அன்றோ நான் ஆதரித்தது –காம்யே –சங்கத்து அளவிலே நின்றேனோ-பெற்று அல்லது தரியாத தசையைப் பற்றி நின்றேன்-கதா நு சாஷாத் கரவாணி -என்றும்-கதா ப்ரஹர்ஷயிஷ்யாமி -என்றும் -கூப்பிட்டேன்-காம வ்ருத்த –விஷய பிரவணனாய் யுக்த அயுக்தங்கள் பாராதாப் போலே தோற்றிற்றுச் செய்த நான் –-ராகம் ஸ்வ ரூபத்தைப் பார்க்க ஒட்டாதே-

(அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் -யான் யார் –-அசுசிம் -அவிநீதம் –நிர்த்தயம் -அலஜ்ஜம் -நான்கு விசேஷணங்கள்-தம்முடைய புன்மையை அருளிச் செய்கிறார் –நிர்ப்பயம் -பாட பேதம் தேசிகன் காட்டுகிறார் –-திருமாற்கு யாமார் வணக்கமார் ஏ பாவம் நல் நெஞ்சே நாமா மிகவுடையோம் நாழ்-பெரிய திருவந்தாதி -10-)

கீழே பவந்தம் -என்று அனுசந்தித்து –அஹம் -தன்னைப் பார்த்த வாறே-அசுசிம் -அவிநீதம் –நிர்த்தயம் -அலஜ்ஜம் -நான்கு விசேஷணங்கள்-நிர்த்தயம்-அம்ருதத்தை விஷத்தாலே தூஷித்தால் போலே விலஷண போக்யமான பகவத் தத்தவத்தை கண்ணற்று தூஷிக்கப் பார்த்த நிர்த்தயனை
நிர்ப்பயம் -பாட பேதம் தேசிகன் காட்டுகிறார் –-நிரதிசய போக்யரான தேவர் உடைய கைங்கர்ய அம்ருதத்தை சத்தா பிரயுக்தமான ருசியையும் வைலஷண்யத்தையும் உடைய நித்ய ஸூரிகள் ஆதரிக்கும் அத்தை அன்றோ நான் ஆதரித்தது – சங்கத்து அளவிலே நின்றேனோ-பெற்று அல்லது தரியாத தசையைப் பற்றி நின்றேன்-கதா நு சாஷாத் கரவாணி -என்றும் கதா ப்ரஹர்ஷயிஷ்யாமி -என்றும் -கூப்பிட்டேன்-ராஜ அன்னம் விஷ சம்ஸ்ப்ருஷ்டம் ஆவதே -என்று-வளவேழுலகில்-1-5- ஆழ்வாரைப் போலே பெரிய திருவந்தாதி -10-) ஹா ஹா என்ன சகாசமான கார்யம் செய்ய முயன்றோம் என்று தம்மை நிந்திக்கிறார் –

நோக்கி நோக்கி, உன்னைக் காண்பான், யான் எனது ஆவியுள்ளே
நாக்கு நீள்வன், ஞானம் இல்லை; நாள் தோறும் என்னுடைய
ஆக்கை யுள்ளும் ஆவி யுள்ளும் அல்ல புறத்தினுள்ளும்
நீக்கம் இன்றி, எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே- ‘நான் சம்பந்தம் உள்ளவனாய் நீ சம்பந்தம் இல்லாதவனாய் இருக்கிறாய் அல்லை; நான் முற்றறிவினனாய் நீ அறிவு இல்லாதவனாய் இருக்கிறாய் அல்லை; நான் எல்லா ஆற்றலையும் உடையவனாய் நீ ஆற்றல் இல்லாதவனாய் இருக்கிறாய் அல்லை; நான் எங்கும் பரந்திருப்பவனாய் நீ அணுவாய் இருக்கிறாய் அல்லை; இத்தலை நோவு பட விட்டு அருள் அற்றவனாய் இருக்கிறாய் அல்லை; ‘உடையவனாய் வைத்து உடைமை நோவுபட விட்டிருக்கிறது செய்ய நினையாமையே அன்றோ?’ என்று ஆறி இருக்க மாட்டாதொழிகிறது என் அறிவு கேடாமித்தனை அன்றோ?’ என்னுதல். இத்திருவாய்மொழியில் வந்துள்ள ‘நாராயணனே’ என்றதனை நோக்கிச் ‘சம்பந்தமுடையனாவது’ என்றும், ‘ஞானமூர்த்தி’ என்றதனை நோக்கி,‘முற்றறிவினனாவது’ என்றும், ‘துப்பனே’ என்றதனை நோக்கி, ‘ஆற்றலையுடையனாவது’ என்றும், ‘ஞாலமுண்டாய்’ என்றதனை நோக்கி,‘நீர்மையுடையனாவது’ என்றும், ‘நீக்கமின்றி எங்கும் நின்றாய்’ என்றதனை நோக்கி, ‘உடனிருத்தலையுடையனாவது’ என்றும் அருளிச்செய்கிறார். 1-நாராயணா -பிராப்தம் உண்டு 2-ஞான மூர்த்தி -சர்வஜ்ஞ்ஞன் 3-துப்பன் -சர்வசக்தன் 4-ஞாலம் உண்டாய் -இரக்க ஸ்வபாவம் 5-நீக்கம் இன்றி எங்கும் நின்றாய் -சதா சந்நிஹிதன்

பத்துடை யோகிகளுக்குள் முதன்மைப்படும் அயன் அரன் ஸநகாதிகளாலும்
எத்துணை எண்ணுதலுக்கு மிகக்கும் வெகு துலை யுறு நின் பணிவிடை தன்னை
நத்துவன் காம விருத்தி யனேனான் நசை யுறு மசுசியன் விநயம் இலாதேன்
உத்தம புருட விலச்சை யொடச்சம் ஒழித்த வெனக்குறு மிழிவசையாமே
–46—ஏ புருஷோத்தம பரம யோகிகளுக்குள் முதன்மை பட்ட பிரமன் சிவன் ஸநகாதியர் முதலானவர்களாலும் நினைப்பதற்கும் எட்டாத வெகு தூரத்தில் உள்ள உன்னுடைய கைங்கர்யங்களை சரீர சம்பந்தத்தினால் அபரிசுத்தனனும்
ஆச்சார்ய முகமாக சிஷிக்கப்படாதவனும் காம விருத்தியை யுடையவனுமான நான் அபேக்ஷிக்கத் துணிந்தேன் இப்படி பயத்தை ஒழித்து வெட்கத்தை விட்டுத் துணிந்த எனக்கு நிந்தையே தகும்

ஸ்தோத்ரம் -48-அவதாரிகை –தம்முடைய அயோக்யதையை அனுசந்தித்து – அகலப் பார்த்தவர் ருசியின் மிகுதியாலே அகல மாட்டாதே நிற்க இந்த அயோக்யதைக்குப் பரிஹாரமும் நம் கிருபா ஜநிதமான பிரபத்தியே காணும் – என்ன மீண்டாராய்-இந்த அயோக்யதா ஹேது பூத சர்வ அபராதங்களுக்கும்
பரிஹாரம் தன்னுடைய வெறுமையை முன்னிட்டுப் பண்ணும் பிரபத்தியே யாகாதே -என்று-வேதாந்திர ரஹச்யத்தை முன்னிட்டு-கேவல கிருபையாலே தேவர் என் பாபத்தைப் போக்கி விஷயீ கரிக்க வேணும் -என்கிறார் –-அதவா தாம் பிரார்த்தித்த போதே ப்ராப்யம் சித்தி யாமையாலே சம்சாரியான நாம் ஆசைப்படக் கடவோமோ -என்று நிந்தித்துக் கொண்டு – பின்பும் ருசியாலே அகல மாட்டாதே
இப்படி விளம்பிக்கைக்கு ஹேதுவான பாபத்தையும் தேவர் உடைய கேவல கிருபையாலே
போக்கித் தந்து அருள வேணும் -என்கிறார் ஆகவுமாம் –-அத் தலையில் பெருமையின் எல்லையைப் பார்த்து அன்றோ அகன்றார் அங்கு- இங்கு நீர்மையின் எல்லையைப் பார்த்து கிட்டுகிறார் –

அபராத சஹஸ்ர பாஜநம்-
பதிதம் பீம் பவார்ண வோதரே
அகதிம் சரணா கதம் ஹரே
க்ருபயா கேவல மாத்ம ஸாத்குரு
–48–

துன்பங்களைப் போக்கி என்னை ரக்ஷிப்பவனே! கணக்கில்லாத அபராதங்களுக்கு இருப்பிடம் நான்;
இப்பொழுது இந்த ஸம்ஸாரம் என்கிற க்ரூரமான கடலில் முழுகியுள்ளேன்; எனக்கு வேறு புகல் இல்லை; உன்னிடத்திலே சரணடைந்துள்ளேன்; உன்னுடைய கருணையினாலே என்னை உன்னுடையவனாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஹரே-ப்ரணதார்த்தி ஹரனான பெருமானே
அபராத சஹஸ்ர பாஜநம்-பலவகைப்பட்ட அபராதங்களுக்கு கொள்கலமாகவும்
பதிதம் பீம்ப வார்ண வோதரே–பீம பாவ அர்ணவ உதரே பதிதம்–பயங்கரமான சம்சாரக் கடலினுள்ளே விழுந்தவனாயும்-உதரேநின் பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான் –3-2-2- என்கிறபடியே
எடுக்கப் பார்த்தாலும் எட்டாத படியாய் இருக்கை –
அகதிம் –வேறே கதி அற்றவனாயும்
சரணா கதம் -சரணாகத்தான் என்று பேர் இட்டுக் கொண்டவனாயும் இருக்கிற அடியேனை
க்ருபயா கேவல மாத்மஸாத் குரு–உனது திருவருள் ஒன்றையே கொண்டு திருவுள்ளம் பற்றி அருள வேணும் –

அபராத சஹஸ்ர பாஜநம்--தேவர் குணைக பாஜநராப் போலே அஸங்குசிதமான அபராதங்களுக்குக் கொள்கலமான என்னை –-அபராத சப்தத்தாலே சொல்லிற்று-புண்ய பாப ரூபமான பகவன் நிக்ரஹ அனுக்ரஹம் -என்கை-ஆகையால் இந்த வேதார்த்தத்தை வெளி இடுகிறார் –பதிதம் – அந்த பாபத்தை விளைக்கும் சம்சாரத்திலே இருந்து இறே கூப்பிடுகிறது – கொடு வினைத் தூற்றுள் நின்றுபீம் ஜ்ஞானம் பிறந்தார்க்குக் கட்டடங்க-பய அவஹமாய் இருக்கும் -என்கை –-அஹம் பீதோ அஸ்மி தேவேஸ சம்சாரே அஸ்மின் பயாவஹே-பவார்ணவ – பரிச்சேதிக்க அரியதாய்-அத்தாலே துஸ்தரமாய் இருக்கை –சம்சாரம் ஆகிற கடலிலே புக்கார்க்கு-விஷ்ணு போதம் ஒழியத் தம் தாமால் கரை ஏற ஒண்ணாது இருக்கை –வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன் -நாச் திருமொழி -5-4-என்னக் கடவது இறே–உதரே-நின் பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான் -3-2-2- என்கிறபடியே எடுக்கப் பார்த்தாலும் எட்டாத படியாய் இருக்கை –பதிதிம்- கர்மம் புகத்தள்ள விழுந்து கிடக்கிற படி –அகதிம் –
உன்னை ஒழிய வேறு புகல் அற்று இருக்கிற என்னை –சரணா கதம் –சரணா கத சப்த யுக்தனான என்னை –ஹரே –மித்ர பாவமே யடியாக சமஸ்த துக்கங்களையும் போக்குகையே ஸ்வ பாவமாக உடையவனே –க்ருபயா கேவல –ஆர்த்த ப்ரபன்னன் அல்லன் -என்னாதே-க்ருபா மாத்திர மநோ வ்ருத்தி -என்கிறபடியே சஹகாரம் இல்லாத கிருபையினாலே-ஆத்மஸாத் குரு – ஆத்மா ஸாத்தாகப் பண்ணி அருள வேணும் –-நம்முடையவன் என்று விஷயீ கரித்து அருள வேணும் –(இங்கே விசேஷணங்களை மாத்திரம் அருளிச் செய்து –விசேஷயமான தம்மை மாம் -என்று கூட சொல்லிக் கொள்ள திரு உள்ளம் இல்லாமல் – கீழ் அனுசந்தித்த நைச்ய பாவம் தொடர்கிறது- பகவத் சந்நிக்குள் புகும் பொழுது அனுசந்திக்க வேண்டிய ஸ்லோகம் – )

அகலப் பார்த்தார் கீழ் -கைங்கர்ய அபிநிவேசம் மிக்க இருக்க கை வாங்க முடியாதே – இரும்பையும் பொன்னாக்க வல்ல சர்வ சக்தன் அன்றோ – கிருபை ஒன்றையே கொண்டு நித்ய கைங்கர்யத்துக்கு ஆளாக்கிக் கொள்ள வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்

எண்ணிலா அபராதங்கட்க்கு இருப்பிடமாகி நானே
பண்ணிய வினையின் கோரப் பவக்கடல் நடுவில் வீழ்ந்தே
திண்ணமுற்ற கதியேனாய்ச் சேவடி யடைந்த என்னை
கண்ண நின் கருணை ஒன்றே கொண்டு உகந்து அருளுவாயே
–48–எண்ணுக்கு வராத ஆயிரக்கணக்கான அபராதங்களுக்கு இருப்பிடமாகி நான் பண்ணிய பாவத்தின் பலனாக விளைந்த கோரமான ஸம்ஸார சாகரத்தின் நடுவில் விழுந்து தடுமாறி உன்னைத் தவிர வேறு கதி இல்லேனாய் உன்னை உறுதியுடன் சரண் அடைந்த என்னை அருள் நிறைந்த திருக் கண்களை யுடைய நீ கடாக்ஷித்து உன் நிர்ஹேதுக கிருபையாலே உன்னுடையவன் என்று அங்கீ கரித்து அருள வேணும்

ஸ்தோத்ரம் -49-அவதாரிகை –அபராத பஹூளமான பின்பு சாஸ்த்ரீயமான உபாயாந்தரங்களைப் பற்றி போக்குதல்-விட்டுப் பற்றுதல் -செய்கை ஒழிய-கிருபயா கேவல மாத்ம ஸாத் குரு – என்று நம்மை நிர்பந்திக்கிறது என் -என்ன சாஸ்த்ரீய அனுஷ்டானத்துக்கு ஜ்ஞானமே இல்லை-வேறு கதி இல்லாமையாலே விட மாட்டேன் ஆன பின்பு கிருபா கார்யமான விசேஷ கடாஷமே எனக்கு உஜ்ஜீவன சாதனம் -என்கிறார் –

அவிவேகக நாந்த திங்முகே
பஹூதா ஸ்ந்தத துக்க வர்ஷிணி
பகவன் பவது ர்த்தி நே பத
ஸ்கலிதம் மாமவ லோகயாச்யுத
—49-

ஞானம், பலம் முதலிய ஆறு குணங்களால் பூர்த்தியை உடைய பகவானே! உன்னுடைய அடியார்களை நழுவ விடாதவனே! திசைகள் கரிய மேகங்களால் மறைக்கப்பட்டிருக்கும், மழைக்கால இருட்டை உடைய, பெரிய மழை தொடர்ந்து பொழியும் இந்த ஸம்ஸாரத்தில், நல் வழியில் இருந்து நான் நழுவுகிறேன்; உன்னுடைய கருணைக் கடாக்ஷத்தை எனக்கு அருள்.

அவிவேக-க நாந்த திங்முகே –-அதாவது -விவேக அபாவம்-ஜீவ பர விவேக அபாவம் –
தேஹாத்ம விவேக அபாவம்-த்யாஜ்ய உபாதேய விவேக அபாவம்-பந்த விமோசன விவேக அபாவம்
இவை ஆகிற மேக படலங்களாலே திரோஹிதமான மனஸ்சை யுடையவனாகை யாலே உஜ்ஜீவன உபாயத்தில் திங் மாதரமும் தெரியாது இருக்கிறதற்கு மேலே –பஹூதா ஸ்ந்தத துக்க வர்ஷிணி –
பஹூ பிரகாரமாய் இடைவிடாதே யுண்டான துக்க வர்ஷத்தை உடைத்தானதிலே –-அவிவேகம் துக்கத்தை விளைக்கை யாவது –-அஜ்ஞாநத்தாலே கர்மமாய் –-அத்தாலே தேவாதி சரீர பிரவேசமாய்
அத்தாலே தாப த்ரய ரூபமான துக்கமாய் இருக்கும் –-பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் -என்கிறபடியே-பஹூதா –ஆத்யாத் மிகாதி பஹூ பிரகாரமாய் இருக்கை –-பகவன்–இந்த துக்கத்தை பரிஹரிக்கைக்கு இத்தலையில் ஜ்ஞான சக்த்யாத்ய பாவமும் தேவரால் அல்லது பரிஹாரம் இல்லை என்கிற இதுவும் தேவரீர் அறியீரோ -என்கை – இதிலும் தேவரீர் அறியாதது உண்டோ –பவதுர்த்தி நே –சம்சாரம் ஆகிற மழைக் கால விருளிலே- துர்த்திநம் -மேக திமிரம்-பத ஸ்கலிதம் –கொடு வினைத் தூற்றுள் நின்று பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமருகின்றேன்-3-3-9-என்கிறபடியே-மாம் – கர்மாதி யுபாயங்களில் பிரச்யுதனான என்னை – நான் படுகிற பாடு இதுவானால் சாஸ்த்ரீய அனுஷ்டானத்துக்கு நான் ஆர் – தேவரை ஒழிய வேறு உண்டோ -என்று கருத்து -அவலோக்ய-அவலோகனதா நேன பூயோ மாம் பாலய -என்று சொல்லுகிற படியே-சகல கிலேசமும் போம்படி பார்த்து அருள வேணும்-சாதனாந்தர நிஷ்டர்க்கும் தேவர் விசேஷ கடாஷம் உத்தாரகம் இறே –
ஜாயமா நம் ஹி புருஷம் யம் பஸ்யேன்மது ஸூதன -என்று அதிகார சித்தியும் தேவர் கடாஷம் இறே–அச்யுத –அடியரை வல்வினைத் துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடான் -1-7-2-என்கிறபடியே ஆஸ்ரிதரை ஒரு வழியாலும் நசிக்க விட்டுக் கொடாதவர் இறே தேவர் –-அவர் உயிரைச் சோர்ந்தே போகல கொடாச் சுடரை -2-3-6- என்னக் கடவது இறே –

பகவன் அச்யுத—அடியாரைக் கை விடாத எம்பெருமானே
அவிவேகக நாந்த திங்முகே–அவிவிவேகம் ஆகிற மேகங்களினால் இருந்து கிடக்கிற திசைகளை உடையதும்
பஹூதா ஸ்ந்தத துக்க வர்ஷிணி–பலவிதமாக இடைவிடாமல் பெருகுகின்ற துக்கங்களை வர்ஷித்துக் கொண்டு இருப்பதுமான
பவதுர்த்திநே –சம்சாரமாகிற துர் ததிநத்திலே–மழைக் கால விருளிலே—மப்பு மூடின தினத்துக்கு துர்த்தினம்-நண்ணாதார் முறுவலிப்ப நல்ல உற்றார் கரைந்து ஏங்க எண்ணாராத் துயர் விளைக்கும் இவை என்ன உலகு இயற்கை –
பத ஸ்கலிதம் மாமவ லோகயா–கொடு வினைத் தூற்றுள் நின்று பாவியேன் பல காலம்
வழி திகைத்து அலமருகின்றேன்-
3-3-9-என்கிறபடியே-நல் வழியில் நின்றும் தப்பி இருக்கிற அடியேனை கடாக்ஷித்து அருள வேணும்
கிருபயா கேவல மாத்ம ஸாத் குரு – என்று-உனது கடாக்ஷம் அடியேனுக்கு உஜ்ஜீவன ஹேது

அடா விவேக மேகப் படலம் எத்திசையும் மூடி
இடை விடாது இடும்பை மாரி பலவிதம் சொரியும் இந்தப்
படு பவ துர்த்தி நத்தில் பதம் ஒழிந்து ஏங்கி நிற்கும்
கடையனைக் கடைக் கணிப்பாய் அச்யுத பகவானேயோ
–49–துர் தினம் -கொடிய தினம் -ஸூர்ய தர்சனம் இல்லாத தினம்-அவி விவேகம் ஆகிற மேகங்கள் எல்லாத் திக்குகளையும் மூடிக் கொண்டு பலவிதமாக இடைவிடாமல் துக்கங்களை வர்ஷிக்கிற இந்த ஸம்ஸாரம் ஆகிற துற தினத்தில் சரியான வழியின் நின்றும் நழுவி ஏக்கம் கொண்டு நிற்கும் கடையனான என்னை ஏ பகவானே ஆஸ்ரிதரை நழுவ விடாதவனே -கடாக்ஷித்து அருள வேண்டும்

ஸ்தோத்ரம் -50-அவதாரிகை –தேவர் கிருபையால் அல்லது வேறு எனக்கு இல்லாதவோ பாதி தேவர் கிருபைக்கு நான் அல்லது விஷயம் இல்லை – இத்தை இழவாதே கொள்ளீர் – என்கிறார்-

ந ம்ருஷா பரமார்த்த மேவ மே
ஸ்ருணு விஜ்ஞாப நமேக மக்ரத
யதி மே ந தயிஷ்யஸே ததோ
தய நீயஸ் தவ நாத துர்லப
—50-

ஸ்வாமி! முதலில் என்னுடைய ப்ரார்த்தனையைக் கேள்; இது பொய்யல்ல; இது உண்மையே;
உன்னுடைய கருணையை எனக்கு அளிக்காமல் என்னை இழந்து விட்டாய் என்றால், உன்னுடைய கருணையைப் பெற என்னை விடத் தகுந்த எவரையும் நீ பெறமாட்டாய்.

நாத-எம்பெருமானே
ந ம்ருஷா –பொய் அன்றிக்கே
பரமார்த்த மேவ –உண்மையாகவே இருக்கிற
மே ஏக விஜ்ஞாபநம் –அடியேனது ஒரு விண்ணப்பத்தை
ஸ்ருணும் அக்ரத–முந்துற முன்னம் கேட்டு அருள்-இமையோர் தலைவா மெய் நின்று கேட்டு அருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பம் -ஆழ்வார் போலே இங்கு இவரும்
மே ந தயிஷ்யஸே யதி -அடியேனுக்கு அருள் செய்யாயாகில்
தத -அடியேன் கை தப்பிப் போன பின்பு
தய நீயஸ் தவ துர்லப—உனக்கு அருள் செய்யத் தகுந்தவன் கிடைக்க மாட்டான்-கொள்வார் தேட்டமான தேவரீர் கிருபைக்கு என்னைப் பாத்ரமாக்கா விடில் வேறு கிடைப்பது அரிது –-இழக்காதே -என்று சமத்காரமாக அருளிச் செய்கிறார்

ந ம்ருஷா பரமார்த்த மேவ –-இது சம்சாரத்திலே கேட்டு அறிவது ஓன்று அல்லாமையாலே மெய்யாக மாட்டாது -என்று ஈஸ்வர ஹ்ருதயத்தில் பிறந்த அதி சங்கையைத் தவிர்க்கைக்காக அந்வய வ்யதிரேகத்தாலே சத்யம் -என்கிறார் –ந ம்ருஷா- லௌகிகர் பக்கலிலே இரக்கம் பிறக்கைக்காக
அபுத்த்யா சொல்லும் வார்த்தையைப் போலே பொய் அன்று –பரமார்த்த மேவ – நினைவுக்கு வாய்த்தலை இருந்து அறியும் தேவர் திரு முன்பே-விண்ணப்பம் செய்யும் அதுவே உஜ்ஜீவன உபாயம்
என்று இருக்கும் என்னுடைய விண்ணப்பத்தை –மெய் நின்று கேட்டு அருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பம் -என்னக் கடவது இறே-ஏகம் –-அத்விதீயம்-இதுக்கு மேலாக நிஷ்கர்ஷித்துச் சொல்லுவது ஒரு வார்த்தை இல்லை – இதுவே எல்லையான நிஷ்கர்ஷம் –அக்ரத ஸ்ருணு –-மேல் கார்யம் செய்யிலும் செய்யாது ஒழியிலும் முற்படக் கேட்டு அருள வேணும் –-சம்சாரத்தில் பரிமாறாதது ஓன்று என்று அனாதரியாதே அவதானம் பண்ணிக் கேட்டு அருள வேணும் –யதி மே ந தயிஷ்யஸே – தயைக ரஷ்யனான எனக்கு தயை பண்ணி அருளீர் ஆகில் –தத- தேவரீரைக் கிட்டின இவ் வஸ்து தப்பினால் பின்பு-தய நீயஸ் தவ – ரஷ்ய விஷயார்த்தி யாகைக்கு தயையே அன்று -பிராப்தியும் உண்டு -என்கை-துர்லப – தயைக ரஷ்யராய் இருப்பார் துர்லபர்-ஸ மகாத்மா ஸூ துர்லப -என்னும் அவர் இறே தேவர் –(கொள்வார் தேட்டமான தேவரீர் கிருபைக்கு என்னைப் பாத்ரமாக்கா விடில் வேறு கிடைப்பது அரிது –
இழக்காதே -என்று சமத்காரமாக அருளிச் செய்கிறார் )

வஞ்சனை அன்று நாத வாய்மையே யான் வழங்கும்
செஞ்சொலில் இவ்விண்ணப்பம் செவியில் நீ முன்னம் ஏற்பாய்
தஞ்சமாய் அடைந்த என்னைத் தயை யுறாது ஒழிகில் அந்தோ
விஞ்சும் உன் தயைக்குத் தக்க விஷயம் மற்று அரியதாமே
–50-ஏ ஸர்வ சேஷியே -அடியேன் செய்யும் இவ்விண்ணப்பம் பொய்யன்று -உண்மையே ‘-இத்தை முன்னம் நீ திருச்செவி சாய்த்து அருள வேணும்
தஞ்சமாக அடைந்த என்னை நீ தயை பண்ணாது ஒழிவாயாயின் உனக்குத் தயை பண்ணி ரக்ஷிக்கத் தக்க வஸ்து கிடைப்பது துர்லபம்-

ஸ்தோத்ரம் -51-அவதாரிகை –இப்படி தய நீயத யாவான்களான இருவர்க்கும் முக்யமான இஸ் சம்பந்தம் தானும் தேவரீர் உடைய கிருபையாலே யாயிற்று-ஆன பின்பு -இதைக் கை விடாதே ரஷித்து அருள வேணும் என்கிறார்-

தத் அஹம் த்வத் ருதே ந நாதவான்
மத்ருதே த்வம் தயநீயவான் ந ஸ
விதி நிர்மிதமே ததந்வயம்
பகவன் பாலய மா ஸம ஜீஹப
—51-

ஞானம் நிறைந்த ஸ்வாமியே! ஆதலால் உன்னைத் தவிர எனக்கு வேறு ஒரு ஸ்வாமி கிடையாது;
அதே போல உன்னுடைய கருணைக்கும் என்னைத் தவிர வேறு யாரும் சரியான பாத்திரம் கிடையாது.
உன்னுடைய கருணையால் ஏற்படுத்தப் பட்ட இந்த ஸம்பந்தம் காக்கப் பட வேண்டும்; அதை நழுவ விடாதே.

பகவன்-எம்பெருமானே
தத் அஹம் த்வத் ருதே ந நாத வான்–ஆகையினால் அடியேன் உன்னைத் தவிர வேறே ஒருவனை நாதனாக உடையேன் அல்லேன்
மத்ருதே த்வம் தயநீயவான் ந ஸ-நீயும் என்னைத் தவிர வேறு ஒருவனை அருள் கொள்பவனாக உடையை அல்ல
விதி நிர்மிதமே ததந்வயம்–தெய்வ வசத்தால் நேர்ந்த இந்த சம்பந்தத்தை-விதி வாய்க்கின்று காப்பாரார் -5-1-1- என்கிறபடியே –-விதி வசத்தால் வாய்ந்து இருக்கிற ரஷ்ய ரஷக பாவத்தை
ஸூஹ்ருத விசேஷம் அடியாகப் பிறக்கும் பகவத் கிருபையை -நம்மால் பரிஹரிக்க ஒண்ணாததை -விதி என்கிறோம்-உன் தன்னோடு உறவேல் நம்மோடு இங்கு ஒழிக்க ஒழியாதே-அவனாலும் பரிஹரிக்க ஒண்ணாதே —ஏதத் அந்வயம் ஏதம் அந்வயம் -பாட பேதங்கள்-பாலய மா ஸம ஜீஹப —காப்பாற்றிக் கொள் விடுவிக்க வேண்டாம் –-இந்த சம்பந்தத்தை நான் விட நினைத்தாலும் நீ விடுவிக்க ஒண்ணாது தடுக்க வேண்டும் என்றபடி –-இத் தலையில் பூர்வ அபராதத்தைப் பார்த்தாதல்-தேவர் பூர்த்தியைப் பார்த்த்தாதல்-கை விட்டு அருளாது ஒழிய வேண்டும் –

தத் –ஆதலால் தய நீயர் தேவருக்கு துர்லபமான பின்பு –அஹம் – ஸா பதாரனாய் அனுதாபம் பிறந்த நான் –த்வத் ருதே ந நாதவான் –ப்ருஸம் பவதி துக்கித -என்று துக்கியான என்னிலும் என் துக்கத்தைப் பொறுக்க மாட்டாத தேவரை ஒழிய நாதவான் அல்லேன் –-பர துக்க அஸ்ஹிஷ்ணுத்வம் இறே தயைமத்ருதே தவம் தயநீயவான் ந ஸ –தயைக ரஷ்யனான என்னை ஒழிந்தாலும் தேவரீர் உடைய கிருபை குமர் இருந்து போம் இத்தனை –விதி நிர்மிதமே ததந்வயம் –-ஏதத் அநவயம் விதி நிர்மிதம்
ஒருவரை ஒழிய ஒருவருக்குச் செல்லாத -இம் முக்ய சம்பந்தம் தேவரீர் உடைய கிருபையால் வந்தது –
விதி வாய்க்கின்று காப்பாரார் -5-1-1- என்கிறபடியே – இப் பஷத்தில் ததஹம் -என்கிற இடத்தில் தச் சப்தம் மேலுக்கு உடலாக இங்கும் அந்வயிக்கக் கடவது –-அதவா-விதி என்று தைவமாய்-இச்சாத ஏவ தவ விஸ்வ பதார்த்த சத்தா -என்கிறபடியே சத்தா பிரயுக்தமான சம்பந்தத்தைச் சொல்லிற்று -ஆகவுமாம் பகவன் –இவற்றில் தேவருக்கு அறிவிக்க வேண்டியது உண்டோ –பாலய – இதை ரஷித்து அருள வேண்டும் -என்னுதல்-இதி புசித்து அருள வேண்டும் -என்னுதல்–புஜ பால நாப்யவஹாரயோ –மா ஸம ஜீஹப – இத் தலையில் பூர்வ அபராதத்தைப் பார்த்தாதல்-தேவர் பூர்த்தியைப் பார்த்த்தாதல்-கை விட்டு அருளாது ஒழிய வேண்டும் –(விதி -ஸூஹ்ருத விசேஷம் -பகவத் கிருபையே –உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கே ஒழிக்க ஒழியாதே– )

எனக்கும் ஓர் நாதனில்லை நின்னை விட்டு என்னை அன்றி
யுனக்கியல் பாந்தயைக்கும் உரிமை யோர் ஒருவரும் இல்லை
தனித்த நின் தயையினால் எம் இருவர் இனி இவ்விணக்க
மனத்தினில் கொண்டு அருள்வாய் மாதவ கை விடாமே
–51–எனக்கும் உன்னை விட ஒரு நாதனும் இல்லை-இயல்பாக அமைந்து இருக்கும் உன்னுடைய தயைக்கும் என்னை விட உரிமை பூண்டவர் வேறே ஒருவரும் இல்லை-ஆகையால் ஏ மாதவ உன் கிருபையினால் ஏற்பட்டு இருக்கும் இந்த சம்பந்தத்தைத் திரு உள்ளம் கொண்டு-அடியேனைக் கை விடாது ரக்ஷித்து அருள வேண்டும் –

ஸ்தோத்ரம் -52-அவதாரிகை –இதில் ஆத்ம அநு ரூபமாக வன்றோ நம்முடைய ரஷணம் இருப்பது –
தய நீயரான உம்முடைய ஸ்வ ரூபத்தை நிஷ்கர்ஷித்து-நம் பக்கலிலே சமர்ப்பியும் -என்ன
சிறப்பில் வீடு -2-9-5- என்கிற பாட்டின் படி-எனக்கு அதில் நிர்ப்பந்தம் இல்லை-அஹம் புத்தி போத்யமான இவ் வஸ்து தேவர் திருவடிகளிலே என்னாலே சமர்ப்பிதம் – என்கிறார் –

வபுராதி ஷூ யோ அபி கோ அபி வா
குண தோ அஸாநி யதா ததா வித
ததயம் தவ பாத பத்மயோ
அஹமத் யைவ மயா ஸ்மர்ப்பித்த
–52–

வபுராதி ஷூ –சரீரம் முதலியவைக்குள்
யோ அபி கோ அபி வா-ஏதாவது ஒன்றாகவும்
குண தோ அஸாநி யதா ததா வித–குணத்தினால் எனும் ஒருபடிப் பட்டவனாகவும் இருக்கக் கடவேன் –
அவற்றில் ஒரு நிர்பந்தம் இல்லை
ததயம் தவ பாத பத்மயோ அஹம் -ஆகையினால் இந்த ஆத்ம வஸ்துவானது உன்னுடைய திருவடித் தாமரைகளில்
மத் யைவ மயா ஸ்மர்ப்பித்த –இப்பொழுதே என்னால் சமர்ப்பிக்கப் பட்டதாயிற்று

வபுராதி ஷூ யோ அபி கோ அபி வா – தேக இந்த்ரிய மன பிராண புத்திகளைச் சொல்லுகிறது –
இவற்றில் ஒன்றே ஆத்மா என்பாரும்-ப்ரக்ருதே பரமாய்-ஜ்ஞான ஆனந்த லஷணம் என்பாருமாய்
ஸ்வ ரூபத்தில் -விப்ரதிபத்தி -அபிப்ராய பேதம் -உண்டாய் இருக்கும்-இவற்றில் ஏதேனும் ஓன்று ஸ்வ ரூபமாகவும் –குண தோ அஸாநி யதா ததா வித –-ஸ்வ பாவாத –அணுத்வ விபுத்வ சரீர பரிமாணத்வ நித்யத்வ அநித்யத்வ ஜ்ஞாத்ருத் வதாதிகளிலே விப்ரதிபத்தி உண்டாய் இருக்கும்-அதில் ஏதேனும் ஓன்று ஸ்வரூபம் ஆகிலும் அதிலும் எனக்கு ஒரு நிர்பந்தமும் இல்லை –தத் – தஸ்மாத்-கீழ்ச் சொன்ன ஸ்வரூப ஸ்வ பாவங்களிலே நிர்ப்பந்தம் இல்லாமையாலே –அஹம் – பராகர்த்த வ்யாவ்ருத்தனாய்-பிரத்யகர்த்த பூதனாய்-ப்ரத்யஷ பூதனாய்-பிரகாசிக்கிற நான் –தவ பாத பத்மயோ –ரஷகரான தேவரீர் உடைய போக்யமான திருவடிகளிலே –அத்யைவ – ஆத்ம ஷணிகம் ஆகிலும் இந்த ஷணத்திலே சமர்ப்பிதம் -என்கை –மயா ஸ்மர்ப்பித்த –என்னாலே சமர்ப்பிதன் – யோ அஹம் அஸ்மி ஸ சந் யஜே –
யஸ்ய அஸ்மி ந தமந்த ரேமி – ஆத்மா ராஜ்யம் தனம் மித்ரம் களத்ரம் வஹநானி ஸ –இதி தத் ப்ரேஷிதம் சதா – ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய தர்மம் வக்தும் இஹார்ஹசி –
(தேஹ இந்திரிய மன பிராணாதிகளில் விலக்ஷணனாய்- அஹம் புத்தி போத்யனாய் உள்ளவனே ஆத்மா –
சித்தாந்தமும் அருளிச் செய்தார் ஆயிற்று -)

சம்பந்தம் உண்டு என்று ஹ்ருதய விசுவாசம் இல்லாமல் மேல் எழுந்த -பொறி புறம் பூசின பாசுரம் இல்லை-த்வம் மே அஹம் மே -விவாதம் செய்யாமல் ஆத்ம சமர்ப்பணம் பண்ணுகிறார்
ஆத்மா ராஜ்யம் தனம் மித்ரம் களத்ரம் வஹநானி ஸ –இதி தத் ப்ரேஷிதம் சதா – ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய தர்மம் வக்தும் இஹார்ஹசி –(ஆத்மா ராஜ்யம்‌ த,நம்‌ மித்ரம்‌ களத்ரம்‌ வாஹநாநி ச। ஏதத்‌ ப,க,வதே ஸர்வமிதி தத்ப்ரேக்ஷிதம்‌ ஸதா [‘ஆத்மா, ராஜ்யம்‌, பொருள்‌, நண்பர்கள்‌, மனைவி, வாஹனங்கள்‌ இவையெல்லாம்‌ ப,கவானுக்கு” என்று உபரிசர வஸுவினால்‌ எப்போதும்‌ நினைக்கப்பட்ட) (கதம்‌ த,ஸரதராஜ் ஜாதோ ப,வேத்‌; ராஜ்யாபஹாரக: | ராஜ்யம்‌ சாஹஞ்ச ராமஸ்ய தர்மம்‌ வக்துமிஹார்ஹஸஹி ॥ [தஸரதரனிடமிருந்து பிறந்தவன்‌ எப்படி ராஜ்யத்தை அபஹரிப்பவனாவான்‌? ராஜ்யமும்‌, நானும்‌ ராமனுடையவை. நீர்‌ இவ் விஷயத்தில்‌ தர்மத்தைச்‌ சொல்ல வேண்டும்)சித்தி த்ர்யம் அருளிச் செய்த இவரே ஆத்மா தேகமோ இந்த்ரியமோ பிராணனோ எதுவாக இருந்தாலும் ஆத்மா அணுவாகவோ சர்வ வியாபியோ ஏக ரூபனோ பரிணாமம் கொண்டதோ ஞானியா அஞ்ஞானியா – இவற்றை நிஷ்கரிக்கப் போகிறேன் அல்லேன் அதுவாகவே கொண்டு உன்னை ஆராதிப்பேன் என்கிற வேத வாக்கியத்தின் படியே -என்பது சேஷத்வ பிரதானத்தை அருளிச் செய்கிறார்-இங்கு ஆத்மாவை அஹம்-அஹம் – பராகர்த்த வ்யாவ்ருத்தனாய்-பிரத்யகர்த்த பூதனாய் ப்ரத்யஷ பூதனாய் பிரகாசிக்கிற நான் – என்கிறார் ஆகையால்-தேக இந்திரிய மனா பிராணாதி விலக்ஷணனாய் அஹம் புத்தி போத்யனாய் உள்ள ஆத்மா என்கிற சித்தாந்தமும் வெளியிட்டு அருளுகிறார்

ஸ்தோத்ரம் -53-அவதாரிகை –இவரை பிரமத்தோடே விடுகிறது என் -என்று பார்த்து அருளி –
நீர் ஆர் – அத்தை ஆருக்கு சமர்ப்பித்தீர் -என்ன-நிரூபித்த விடத்து-எனதாவியும் நீ –எனதாவி யார் யானார் -2-3-4- என்கிறபடியே உமதை நீரே ஸ்வீகரித்தீர் இத்தனை-ஆத்மா சமர்ப்பணமும் ஆத்மா அபஹாரத்தோ பாதி -என்று பண்ணின ஆத்மா சமர்ப்பணத்தை அனுஸ்யிக்கிறார் –-பகவத் பர தந்த்ரமான ஆத்மாவுக்கு அநாதி அவித்யா சித்தமான ஸ்வா தந்த்ர்யம் அடியாக பகவத் வைமுக்யம் பிறந்து-அத்தாலே ஹதன் என்று பீதி பிறந்த அளவிலே ததீயத்வ அனுசந்தானத்தாலே வந்த
தாதாம்யைக கரண சங்கல்பம் ஆதல் – ராஜ ஆபரணத்தை ரஷித்து வைத்து ப்ராப்த காலங்களிலே கொடுக்குமா போலே ஆத்மாவை ஈஸ்வரன் பக்கலிலே சமர்ப்பிக்கை என்னுதல் –-இவை இரண்டும் அர்த்தம் அன்று என்னும்படி பண்டே அவனதான வஸ்துவை அவனதாக இசையுமது ஒழிய -சமர்ப்பணமும் ஆத்மா அபஹாரத்தோடு ஒக்கும்

மம நாத யதஸ்தி யோஅஸ்ம்யஹம்
சகலம் தத்தி தவைவ மாதவ
நியத ஸ்வ மிதி பரப்புத்ததீ
அதவா கிந்நு சமர்ப்பயாமி தே
–53-

ஸர்வ ஸ்வாமியான எம்பெருமானே! லக்ஷ்மீநாதனே! என்னுடைய எல்லா உடைமைப் பொருள்களும் நானும் எப்பொழுதும் உன்னுடையவையே. இது தெரிந்த நான், உனக்கு எதை ஸமர்ப்பிப்பேன்?

மாதவ நாத-ஸ்ரீ யபதியான பெருமானே
மம யதஸ்தி யோஅஸ்ம்யஹம்—-யத மம அஸ்தி -அஹம் யஸ் அஸ்மி –யாது ஓன்று எனக்கு உரியதாய்
இருக்கின்றதோ -நான் எப்படிப்பட்டவனோ
சகலம் தத்தி தவைவ –நியத ஸ்வ மிதி-அது எல்லாம் உனக்கே எப்போதும் உரிமைப் பட்டது என்று
பரப்புத்ததீ–நன்றாகத் தெரிந்து கொண்ட அடியேன்
அதவா கிந்நு சமர்ப்பயாமி தே–உனக்கு எத்தை சமர்ப்பிப்பேன்-அதவா -கீழில் சமர்ப்பண பஷ வ்யாவ்ருத்தி –

மம நாத யதஸ்தி யோஅஸ்ம்யஹம்-நாத –-அகில ஜகத் ஸ்வாமின்-அவனைத்தான சம்பந்தத்தைச் சொல்லுகிறது –-மம யதஸ்தி யோஅஸ்ம்யஹம் – குணமாயும்-விபூதியாயும் மமதா விஷயமாயும்
உள்ளது யாதொன்று அதுக்கு ஆஸ்ரயமான நான் யாவனொருவன் ஆகிறேன்–தத் சகலம் – ஔ பாதிகமாயும்-ஸ்வா பாவிகமாயும் உள்ளது எல்லாம் –தவைவ மாதவ –-ஸ்ரீ ய பதியாய் -சர்வ சேஷியாய் உள்ள உன்னுடையது அவதாரணத்தால் அந்ய சேஷத்வத்தை வ்யாவர்த்திக்கிறது-ஹி –சர்வேஷா மேவ லோகானாம் பிதா மாதா ஸ மாதவ -இத்யாதி பிரமாண பிரசித்தியைச் சொல்லுகிறது –நாத மாதவ –-சர்வ ஸ்வாமி யாய் -ஸ்ரீயபதியான வஸ்துவுக்கே அனன்யார்ஹ சேஷம் சர்வ பதார்த்தங்களும் -என்கை – யானே நீ என் உடைமையும் நீயே -2-9-9–நியதஸ்வம்--சமர்ப்பணம் மிகையாம்படி ஜ்ஞானம்
பிறந்த காலத்துடன் பிரமித்த காலத்துடன் வாசி அற நியதஸ்வம்-இதி பரப்புத்ததீ – என்று தெரிந்த புத்தியை யுடைய நான் –அதவா – கீழில் சமர்ப்பண பஷ வ்யாவ்ருத்திகிந்நு சமர்ப்பயாமி தே
இத்தை உடைய உனக்கு எதை சமர்ப்பிப்பேன்-சமர்ப்பணீயம் ஏது-சமர்ப்பகர் ஆர் –-சமர்ப்பணீயம் ஆகைக்கு ஸ்வாம்யம் இல்லை –-சமர்ப்பிக்கைக்கு ஸ்வா தந்த்ர்யம் இல்லை –-சம்சார பீதையாலே சமர்ப்பிக்கையும் ஸ்வரூப யாதாம்ய ஜ்ஞானத்தாலே அநு சயிக்கையும் இரண்டும் யாவன் மோஷம் அநு வர்த்திக்கக் கடவது-

(எனது ஆவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது என்பது உண்டே –என்றதுமே –-எனதாவி யாவியும் நீ பொழில் எழும் உண்ட எந்தாய் -எனது யாவி யார் யான் யார் தந்த நீ கொண்டாக்கினையே –
திருக் குருகைப் பிரான் பிள்ளான் –இப்படி எம்பெருமான் உடன் கலந்த கலவையால் உள்ள நிரவதிக ப்ரீதியாலே அறிவு இழந்து இவ்வாத்மா தன்னுடையது அன்று என்று நிரூபிக்க மாட்டாராய் –
அவன் தம்மோடு கலந்த இப்பெரு நல் உதவிக்கு கைம்மாறாக தம்முடைய ஆத்மாவை அவனுக்கு மீளா வடிமையாகக் கொடுத்து – பின்னையும் தம்முடைய ஸ்வரூபத்தை உள்ளபடி விவேகித்து -என்று அருளிச் செய்கிறார் – கர்ம உபாத்திகம் அன்றிக்கே ஞான விபாக கார்யம் -ஆகையால் அடிக் கழஞ்சு பெறுமே)

ஒட்டு உரைத்து இவ் வுலகு உன்னை புகழ்வு எல்லாம் பெரும்பாலும் பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி —இழிவுச் செயல் –என்றவரே கொண்டல் வண்ணா கடல்வண்ணா என்று பலகாலும் அருளிச் செய்கிறார்களே-புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம் -என்று அருளிச் செய்தெ பலவாறு புகழ்கின்றார்களே-பரஸ்பர வ்ருத்தமாக தோற்றினாலும் விருத்தம் இல்லையே

எனது நா என்ப எல்லா மாதவ யேற்று நிற்கும்
உனதலான் மற்று எவர்க்கும் உண்மையில் உரிய தாமோ
தனி முதலாகு நீயே சருவ சேடி எனத் தேர்ந்தே
யினி யுனதடிக்கு எதை நான் இன்புடன் சமர்ப்பிப்பேனே
–53–ஸ்ரீ யபதியே என்னுடைய சகலமும் அவைகளுக்குத் தங்கும் இடமான நானும் ஆகிய எல்லாம் உண்மையில் ஸர்வ சேஷியான உனக்கே சொந்தம் அல்லால் மற்று எவருக்கு ஆயினிமாமோ இப்படி சகலமும் உன்னுடையதே எனத் தெளிந்த உணர்ச்சியை யுடைய நான் முன் செய்த ஆத்ம சமர்ப்பணம் அபராதத்தோடே ஒக்குமாயின் உன் திருவடிகளுக்கு வேறே எதை ஸமர்ப்பிக்கிப் போகின்றேன்-

ஸ்தோத்ரம் -54- அவதாரிகை –ஆத்மா அபஹார பர்யாயமான ஆத்ம சமர்ப்பணத் தளவிலே நான் நில்லாமையாலே – நிர்ஹேதுக கிருபையால் இந்த சேஷத்வத்தை உணர்த்தினாப் போலே இந்த ஜ்ஞானம் புருஷார்த்த உபயோகியாம்படி இந்த கிருபையாலே ஸ்தான த்ரயோதித -பர பக்தியைத் தந்து அருள வேண்டும் என்கிறார் –ஸ்தான த்ரயம் ஆவது-புருஷஸ் ஸ பர பார்த்த பக்த்யா லப்யஸ் த்வ நன்யயா -ஸ்ரீ கீதை -8-22-பக்த்யா த்வ நன்யயா சக்ய -11-54-என்றும்-மத் பக்திம் லபதே பராம் -18-54-ஆளவந்தார் எம்பெருமானிடம் “ஆத்மாவைத் திருடுவதற்கு ஸமமான இந்த ஆத்ம ஸமர்ப்பணத்தை நான் நிறுத்தாததால், உன்னுடைய நிர்ஹேதுக க்ருபையினால் என்னுடைய சேஷத்வத்தை வெளியிட்டதைப் போலே, பரபக்தி, பரஞானம் மற்றும் பரமபக்தி ஆகியவைகளையும் அளித்து,
இந்த ஞானம் உன்னுடைய கைங்கர்யத்துக்கு உதவும்படிச் செய்”
என்கிறார்.

அவபோதி தவா நிமாம் யதா
மயி நித்யாம் பவதீ யதாம் ஸ்வயம்
க்ருபயைதத நனய போக்யதாம்
பகவன் பக்திமபி ப்ரயச்ச மே
—54-

என் ஸ்வாமியே! எப்படி உன்னுடைய நிர்ஹேதுக க்ருபையால் என்னுடைய சேஷத்வத்தை எனக்கு அறிவுறுத்தினாயோ,-அதே போல வேறு எங்கும் கிடைக்காத, உன்னிடத்தில் பக்தி செய்யும் அந்த இனிய அனுபவத்தையும், நீயே அளிக்க வேண்டும்.

பகவன் மயி நித்யாம்–எம்பெருமானே என் பக்கல் சாஸ்வதமாய் உள்ள
இமாம் பவதீ யதாம்–உனக்கே உரிமைப்பட்டு இருக்கிற இந்த சேஷத்வத்தை
யதா ஸ்வயம் அவபோதி த்வாந் -எப்படி நீ தானே அறிவித்தாயோ
ஏதத் அநந்ய போக்யதாம-இது தவிர வேறு ஒன்றில் போக்யதையை உடைத்தது ஆகாதே -பரம போக்யமான
பக்திமபி ப்ரயச்ச மே—பக்தியையும் அடியேனுக்குத் தந்து அருள வேணும்

மயி நித்யாம் பவதீ யதாம் அவபோதி தவாந--என் பக்கலிலே நியதியான-த்வத் விஷய சேஷதையை –
பவதீ யதை -என்கையாலே அந்ய சேஷத்வ வ்யாவ்ருத்தி-மயி நித்யாம் -என்றது இத்தலையில் பகவச் சேஷத்வம் ஸ்வரூபம் -என்கை-ஸ்வ த்வமாத்மனி ஸ்ஞ்ஜாதம் ஸ்வாமி த்வம் ப்ரஹ்மணி ஸ்திதம் –
இமாம்
(ஸ்வத்வமாத்மநி ஸஞ்ஜாதம்‌ ஸ்வாமித்வம்‌ ப்ரஹ்மணி ஸ்நதம்‌ | உப,யோரேஷ ஸம்ப;ந்தோ ந பரோ5பிமதோ மம॥ [உடைமையாயிருக்கும்‌ தன்மை ஆத்மாவினிடத்தில்‌ உள்‌ ளது; உடையவனா யிருக்கும்‌ தன்மை ப்ரரஹ்மத்தினிட முள்ளது; இருவருக்கும்‌ இதுவே ஸம்பந்தம்‌; வேறு ஸம்பந்‌தம்‌ எனக்கு இஷ்டமன்‌.று])என்று சேஷத்வத்தில் இனிமையாலே கொண்டாடுகிறார்–யதா அவபோதி தவாந – யாதொருபடி அறிவிக்கப் பட்டேன் –ஸ்வயம் க்ருபயா –-கேவல கிருபையாலே-ஸ்வயம் -கேவலம் –ஏதத நனய போக்யதாம் –இது ஒழிய வேறு ஒன்றுக்கும் நெஞ்சுக்கு விஷயம் ஆகாதபடி இருக்கும் போக்யதையை உடைத்தான -பக்தியை –பகவன் –ஒன்றை ஒருத்தனுக்கு கொடுப்போம் என்றால் ஒரு தடை இல்லாத ஜ்ஞான சகத்யாதிகளால்-பூரணன் -என்கை –பக்திமபி ப்ரயச்ச-யாதொரு படி ஜ்ஞானத்தைத் தந்தாய்-அப்படியே பக்தியையும் தந்து அருள வேணும் –மே-அஜ்ஞனாய் அசக்தனாய் ருசி மாத்ரமேயாய் இருக்கிற எனக்கு-(சேஷத்வ ஞானம் அருளி ஆத்ம சமர்ப்பணத்துக்கு அனுதபிக்கச் செய்தது போலவே ஸ்வயம் புருஷார்த்தமான பக்தியையும் தந்து அருள வேணும் –-வேறு ஒன்றுக்கும் நெஞ்சுக்கு விஷயமாக்காத படி இருக்கும் போக்யதை யுடைத்தான பக்தியை -என்றபடி – )

ஸ்வயம் புருஷார்த்தமான பக்தியையும் தந்து அருள வேணும்-வேறு ஒன்றில் போக்யதா புத்தியையும் தவிர்த்து அருளி -வேறு ஒன்றுக்கு நெஞ்சுக்கு விஷயம் ஆக்காதபடியான பக்தியைத் தந்து அருள வேணும் – நிர்ஹேதுக கிருபையால்-இந்த சேஷத்வத்தை உணர்த்தினாப் போலே இந்த ஜ்ஞானம் புருஷார்த்த உபயோகியாம்படி-இந்த கிருபையாலே ஸ்தான த்ரயோதித -பர பக்தியைத் தந்து அருள வேண்டும் என்கிறார் –-ஸ்தான த்ரயம் ஆவது-புருஷஸ் ஸ பர பார்த்த பக்த்யா லப்யஸ் த்வ நன்யயா -ஸ்ரீ கீதை -8-22 பக்த்யா த்வ நன்யயா சக்ய -11-54-என்றும் மத் பக்திம் லபதே பராம் -18-54-

என்னிடம் எக்காலத்தும் இசைந்து நின் விஷயமாக
மன்னிய யுரிமை நாத வகை யுடன் அறிவித்தால் போல்
நின்னிடம் அன்றி மற்றோர் நிலையினைப் பற்றாதாகும்
பன்னரும் பக்தி எற்குப் பணித்திடாய் அன்பு கூர்ந்தே
–54–ஏ நாத எக்காலத்தும் என் பக்கலில் இசைந்து நிற்கும் உன் விஷயமான அநந்யார்ஹ சேஷத்வத்தை வகையுடன் தெரிவித்து இருக்கும் வண்ணமே யுன்னை விட்டு வேறே ஒன்றிலும் போக்யதையைப் பெறாது உன்னிடத்தே யுண்டாகும் பரம பக்தியை கேவலம் உன்னுடைய கிருபையாலேயே அடியேனுக்கு உண்டு பண்ண வேணும்

ஸ்தோத்ரம் -55 அவதாரிகை –பகவத் ப்ரசாதத்தாலே லப்தமான பக்தி ப்ராசுர்யத்தாலே-தச் சேஷத்வ அளவில் பர்யவசியாதே ததீய சேஷத்வத்தை பிரார்த்திக்கிறார் –-ஆழ்வார் -கண்கள் சிவந்து -8-8- விலே பகவச் சேஷத்வத்தை அனுபவித்து-கருமாணிக்க மலை -யிலே அனன்யார்ஹ சேஷத்வத்தை
அனுசந்தித்து-அவ்வளவிலும் பர்யவசியாதே-நெடுமாற்கு அடிமை யிலே ததீய சேஷத்வத்தை
அனுசந்தித்தாப் போலேயும் ஸ்ரீ இராமாயண புருஷர்களில் ஸ்ரீ சத்ருகன ஆழ்வானைப் போலேயும்
ததீய சேஷத்வத்தை பிரார்த்திக்கிறார் –

தவ தாஸ்ய ஸூ கைக ஸங்கி நாம்
பவ நேஷ் வஸ்த்வபி கீட ஜன்ம மே
இதரா வஸ தே ஷூ மா ஸம பூத்
அபி மே ஜன்ம சதுர்முகாத்மா நா
—55-

எம்பெருமானுக்குத் தொண்டு செய்வதில் மூழ்கியிருப்பவர்களின் திருமாளிகைகளில் ஒரு புழுவாகவாவது பிறக்க வேண்டும்.மற்ற க்ருஹங்களில் ப்ரஹ்மாவாகப் பிறப்பதும் எனக்கு வேண்டாம்.

தவ தாஸ்ய ஸூ கைக ஸ்ங்கி நாம்–உன்னுடைய அடிமை யாகிற இன்பம் ஒன்றிலேயே
விருப்பம் உள்ள மஹான்களுடைய
பவ நேஷ் வஸ்த்வபி கீட ஜன்ம மே-அஸ்து -திரு மாளிகைகளில் அடியேனுக்குப் புழுவாகப் பிறப்பதுவும் ஆயிடுக
அபி -சப்தம் அவதாரணத்திலே யாய் கீட ஜன்மமே உண்டாக வேண்டும் என்றுமாம் –இதரா வஸ தேஷூ –அடிமைச் சுவடு அறியாத மற்றையோர் வீடுகளில்
மா ஸம பூத்அபி மே ஜன்ம சதுர்முகாத்மா நா–நான்முகனாகப் பிறப்பது தானும் எனக்கு வேண்டா-

தவ தாஸ்ய ஸூக-ஐஸ்வர்ய கைவல்ய ஸூகங்கள் விக்நமாம் படி இறே-தாஸ்ய ஸூகம் இருப்பது –
தஸ்யாந்தராயோ மைத்ரேய தே வேந்த்ரத் வாதிகம் பலம் – ஸ்வர்க்காப் திஸ் தஸ்ய விக்னோ அநு மீ யதே -என்றும்-அற்றது பற்று எனில் உற்றது வீடு உயிர் செற்றது –1-2-5-என்றும்-இறுகல் இறப்பு -4-1-10-என்றும்-இவை தாஸ்யத்துக்கு விரோதியாய் இறே இருப்பது –ஏக ஸங்கி நாம் – நிஸ் தரந்தி மநீ ஷீண -என்றும் –ஸோ த்வன பாரமாப் நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் -என்றும் சம்சார நிவ்ருத்தியால் வந்த ஸூகமும்-பரம பத ப்ராப்தியால் வந்த ஸூகமும்-தாஸ்ய ஸூகத்துக்கு அபாயம் -என்கை –
தஸ்ய யஜ்ஞ் வராஹ்ஸ்ய விஷ்ணோ ரமித தேஜஸ ப்ரணாமம் யே அபி குர்வந்தி தேஷாமபி நமோ நம –
வாஸூ தேவஸ்ய யே பக்தா சாந்தாஸ் தத் கத மானஸா தேஷாம் தாஸ்ஸ்ய தாஸோ அஹம் பவேஜஜன்மநி ஜன்மநி-அடியார் அடியார் அடியார் எம் கோக்கள் அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல
கோட்பாடே –வாய்க்க
-8-10-10-என்னக் கடவது இறே -தாஸ்ய ரசம் ரசித்தால்-தேஷாம் -பவநேஷ் கீடஜன்ம மே வஸ்த்வபி--அவர்கள் திருவடிகளில் அடிமை செய்ய வேண்டா –-அவர்கள் திரு மாளிகையில் ஒரு கீடமாய் ஜனிக்கும் அதாகிலும் உண்டாக வேண்டும்-அபி -சப்தம் அவதாரணத்திலே யாய்-கீட ஜன்மமே உண்டாக வேண்டும் என்றுமாம் – மனுஷ்யாதி ஜன்மங்களில் ஆசைப் படாது ஒழிந்தது தேசாந்தர பிராமண சம்பாவனையாலே உத்பத்தி ஸ்திதி நிலையங்கள் அங்கேயாகக் கிடையாது என்னும் அத்தாலே எல்லாரும் உத்க்ருஷ்ட ஜன்மங்களை அன்றோ ஆசைப் படுவது -என்ன தம் தாம் உகந்த தன்றோ புருஷார்த்தம் என்கிறது எனக்கு இதுவே பெற வேணும் என்கை –இதரா வஸ தே ஷூ
தாஸ்ய ரசம் அறியாதே -எனக்கு என்னும் அவர்கள் இருப்பிடத்திலே-மா ஸம பூத் அபி மே ஜன்ம சதுர்முகாத்மா நா –-சதுர முகாத்மனா ஜன்மாபி மா ஸம பூத்-சதுர்முக ரூபேண வரும் ஜன்மமும் எனக்கு உண்டாமதன்று-சதுர முகாதி ஜன்மம் லௌகிகருக்கு ஸ்லாக்யமானாலும்-தாஸ்ய ருசியை உடைய எனக்கு வேண்டா -என்கிறார் – அன்வயத்திலும் வ்யதிரேகத்திலும் இரண்டிலும் உண்டான நிர்ப்பந்தம் தோற்ற இருக்கலாம் -என்கிறார் –

பாகவத சேஷத்வ பர்யந்தம் போனால் தானே பகவத் சேஷத்வம் ரசிக்கும் -என்கிற சாஸ்த்ரார்த்தம் அருளிச் செய்கிறார் ஜாதியில் ஏற்றத்தாழ்வு உபயோகம் அற்றது பாகவத சேஷத்வமே வாய்க்கும் அத்தனையே வேண்டுவது பகவத் ப்ரசாதத்தாலே லப்தமான பக்தி ப்ராசுர்யத்தாலே தச் சேஷத்வ அளவில் பர்யவசியாதே ததீய சேஷத்வத்தை பிரார்த்திக்கிறார் –

உனது கைங்கர்ய இன்பம் ஒன்றையே நாடுவோர் சீர்
மனையினில் கிருமிச் சென்மம் வாய்க்கினும் மகிழ்வன் நானே
நினதொழி மற்றோர் மார்க்க நேடுவார் தன்னிடத்தில்
இனிமையார் எண் கணார் தம் சென்மமும் இச்சியேனே
–55-உன் கைங்கர்யம் ஒன்றிலேயே விருப்பம் கொள்ளும் பாகவதர்களுடைய திரு மாளிகையில் எனக்கு ஒரு கிருமி புழு ஜென்மம் யுண்டாயினும் அதை நான் மகிழ்ந்து அடைவேன் -அப்படி அன்றி உன் கைங்கர்யங்களை விட்டு மற்ற எந்த மார்க்கத்தை ஏனும் இச்சிப்போருடைய குடி இருப்பில் ப்ரம்மாவினுடைய சென்மம் கிடைத்த போதிலும் அதில் எனக்கு அபேக்ஷை இல்லை –

ஸ்தோத்ரம் -56-அவதாரிகை –ஸ்ரீ வைஷ்ணவ க்ருஹத்தில் பிறக்கும் பிறப்பால் வந்த ஏற்றம் எல்லாம் வேணுமோ – அவர்கள் கண்டால் உபேஷியாதே -நம்முடையவன் -என்று விசேஷ கடாஷம் பண்ணுகைக்கு அர்ஹனாம் படி பண்ணி அருள வேணும் – என்கிறார் –

ஸ்க்ருத் த்வ தாகார விலோக நாஸ்யா
த்ருணீ கருதா நுத்தம புக்தி முக்திபி
மஹாத்மபிர் மாமவ லோக்யதாம் நய
ஷானே அபி தே யத் விரஹொ அதிதுஸ் ஸஹ
–56-

உன்னுடைய பிரிவைத் தாங்க முடியாதவர்களான, எத்தனை இன்பங்களும் மோக்ஷமும் பெற்றிருந்தாலும் உன்னுடைய திருமேனியை ஒரு முறை பார்ப்பதைக் கருதினால், அவற்றைப் புல்லைப் போல மதிப்பவர்களான சிறந்த வைஷ்ணவர்களின் கருணைப் பார்வைக்கு நான் இலக்காகும் தகுதியை எனக்குக் கொடு.

ஸ்க்ருத் த்வ தாகார விலோக நாஸ்யா–ஒரு கால் உனது திரு மேனியை சேவிக்க வேணும் என்கிற விருப்பத்தினால்
த்ருணீ கருதா நுத்தம புக்தி முக்திபி-மிகவும் சிறந்த செல்வத்தையும் மோக்ஷத்தையும் த்ருணமாக வெறுத்து இருக்கிற
மஹாத்மபிர் அவ லோக்யதாம் –மஹானுபவர்களால் கடாக்ஷிக்க உரியனாய் இருக்கையையே
மாம் நய–அடியேனுக்கு அளித்து அருள வேண்டும்-எப்படிப்பட்ட மஹான்களின் கடாக்ஷத்தை விரும்புகிறேன் என்னில்
ஷனே அபி தே யத் விரஹ–எந்த மஹான்களினுடைய பிரிவானது உனக்கு ஒரு நொடிப் பொழுதும்
அதிது ஸ்ஸ்ஹ–மிகவும் பொறுக்க முடியாததோ-தை- மஹாத்மபிர் அவ லோக்யதாம்–என்று கீழோடே அந்வயம்

ஸ்க்ருத் த்வ தாகார விலோக நாஸ்யா – பஸ்யேம சரதஸ் ஸ்தம் – சதா பஸ்யந்தி ஸூராய -என்கிறபடியே
சதா தர்சனம் பண்ண வேண்டி இருக்க -ஸ்க்ருத் -என்றது-சத்தையை தரிப்பைக்கைக்கு-ஒரு கால் அமையும் என்கைக்காக- போக மோஷங்களை உபேஷிக்கைக்கும் ஒரு கால் அமையும் -என்கைக்காக –
ஒரு நாள் காண வாராய் -8-5-1- என்று இறே விடாய்த்தவர் வார்த்தை –நம்மை ஒரு கால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே -பெரிய திருமொழி -4-9-1—த்வ தாகார விலோக ந – ஸ்வரூபத்து அளவிலும்-தத் ஆஸ்ரயமான குணத்தளவிலும் பர்யவசியாதே உபயத்துக்கும் ப்ரகாசகமான விக்ரஹத் தளவிலே வர
அவகாஹித்தவர்கள் –ஆஸ்யா த்ருணீ கருதா நுத்தம புக்தி முக்திபி –-காண வேண்டா காண்-
காண வேணும் என்னும் ஆசை தானே த்ருணீ கரிப்பிக்கும்-அநுத்தம புக்தி -ப்ரஹ்மாதிகள் போகம்
அநுத்தம முக்தி –பரம புருஷார்த்த லஷண மோஷம் – அலமத்ய ஹி புக்திர் ந பரமார்த்தி ரலஞ்ச ந
யதா பஸ்யாம் நிர்யாந்தம் ராமம் ராஜே ப்ரதிஷ்டிதம் த்வயாபி ப்ராப்த மைஸ்வர்யம் – ஏதே வை நிரயாஸ்தாத ஸ்தா நஸய பர மாதமான –
மஹாத்மபிர் – மஹாத்மா நஸ்துமாம் பார்த்த தை வீம் பிரகிருதி மாஸ்ரிதா- ஸ மஹாத்மா ஸூ துர்லப -என்றும்-பேராளன் பேரோதும் பெரியோரை –பெரிய திரு மொழி -7-4-4-என்றும்-ஈஸ்வரன் தானும் ஆழ்வார்களும் கூடக் கவி பாடுகிறவர்களாலே –

மாம் –புருஷார்த்தின் மேல் எல்லையிலே ருசியை உடைய என்னை-அலோக்யதாம் –-அவலோகன விஷயனாம் படி –நய – சர்வ சக்தியான தேவர் நிர்வஹிக்க வேண்டும்-நம் பக்கல் ஒழிய நம்முடையார் பக்கல்-கீட ஜன்ம மே அப் யஸ்து –என்றும்-அவலோக்யதாம் நய -என்றும்-அத்ய ஆதாரத்தைப் பண்ணுகிறது எத்தாலே -என்ன-ஸா பேஷனான நான் ஆதரிக்கைக்கு ஹேதுவைச் சொல்லுகிறேன்
ஸ்வத பூரணரான தேவர்க்கு அவர்கள் உடைய விஸ்லேஷம் அசஹ்யமாய் இருக்கைக்கு ஹேது அருளிச் செய்ய வேணும் –என்கிறார்–ஷானே அபி தே யத் விரஹொ அதிது ஸ்ஸ்ஹ-ஸ்வத பூர்ணனாய் அவாப்த சமஸ்த காமனான தேவருக்கு ஷண மாதரம் துஸ் ஸ்ஹம் அன்று –-அதி துஸ் ஸ்ஹம் -என்கை
சிரம் ஜீவதி வைதே ஹீ யதி மாஸ்ம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷணம் அபி விநா தாமஸி தேஷணம்
யத் விநா பரதம் த்வாஞ்ச ஸ்த்ருக் நஞ்சாபி மா நத – ஸ்ம்ஸ்மராம் யஸ்ய வாக்யாநி ஜ்ஞாநீ த்வாத் மைவ மே மதம்–மம ப்ராணா ஹி பாண்டவா–கிம் கார்யம் ஸீதயா மம

கூராழி வெண் சங்கு ஏந்திக் கொடியின் பால் வாராய் விண்ணும் மண்ணும் மகிழவே -என்று பிரார்த்தித்துஇந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்–எம்மா வீட்டுத் திறமும் செப்பம்
வானாளும் மா மதி போல் வெண் குடைக் கீழ் மன்னவர் தம் கோனாகி வீற்று இருந்து கொண்டாடும் செல்வம் அறியேன்–கம்ப மத யானைக் கழுத்தகத்தின் மேல் இருந்து இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன்
—-ஆழ்வார்கள் கடாக்ஷம் பெற ஆசைப்படுகிறார்-இவர்கள் தானே –அரு மா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே ஒரு மா நொடியும் பிரியான என் ஊழி முதல்வன் ஒருவனே -என்று இருப்பார்கள் அன்றோ –

ஒரு முறை யுன் வடிவு அழகின் நோக்கில் யுறும் ஆசையினால் உயர்ந்து சீர்த்த
வரிய சுக போகமுடன் முத்தியையும் அபதார்த்தம் என நினைப்போர்
பிரிவதினால் ஒரு நொடியும் ஆற்றாமை யுனக் கூட்டும் பேற்றை யுற்றோர்
பரம வர பாகவதர் பார்வைக்குப் பாத்திரனா எனைப் பணிப்பாய்
–56–உன் திவ்ய மங்கள விக்ரகத்தை ஒரு முறை சேவிக்க ஆசை கொண்டு அதினால் அருமையான பிரமாதி போகத்தையும்-அதற்கும் மேலான மோக்ஷத்தையும் கூட ஒரு அபதார்த்தமாக நினைக்கின்றவர்களும்-தாம் ஒரு க்ஷணம் பிரிந்தாலும் அப்பிரிவினால் பொறுக்க முடியாத சங்கடத்தை உனக்கே உண்டு பண்ணுபவருமான அந்த பரம பாகவதர்களுடைய கடாக்ஷத்துக்குத் தக்கவனாக அடியேனைச் செய்து அருள வேண்டும் –

ஸ்தோத்ரம் -57-அவதாரிகை-கீழ் சேஷத்வ காஷ்டை யான ததீய சேஷத்வத்தை அனுசந்தித்தார் – இதில் சேஷத்வத்துக்குப் புறம்பான வற்றில் அருசியைச் சொல்லி -அவற்றைத் தவிர்த்துத் தந்து அருள வேணும்-என்கிறார் –

ந தேஹம் ந ப்ராணான்ந ஸ ஸூ க மேசேஷாபி லஷிதம்
ந சாத்மானம் நாந்யத்  கிமபி தவ சேஷத்வ விபவாத்
பஹிர்ப்பூதம் நாத ஷணம் அபி சஹே யாது ஸததா
விநாஸம் தத் ஸத்யம் மது மதன விஜ்ஞாப நமிதம்
—57-

ஸ்வாமியே! உன் விஷயமான கைங்கர்யச் செல்வத்துக்கு வெளிப்பட்டிருக்கும் என்னுடைய
தேஹம், ப்ராணன், எல்லோராலும் விரும்பப்படும் சுகங்கள், என்னுடைய ஆத்மா ஆகிய எதுவாக இருந்தாலும் அவற்றை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது; இவை எல்லாம் ஒழியட்டும்.
மது என்னும் அரக்கனைக் கொன்ற என் ஸ்வாமியே! இது உண்மை; இதுவே என் ப்ரார்த்தனை.

நாத
தவ சேஷத்வ விபவாத் பஹிர்ப்பூதம்
–உனது சேஷப்பட்டு இருக்கும் செல்வத்துக்குப் புறம்பான -உனக்கு சேஷப்படாத
தேஹம் க்ஷணம் அபி ந –உடம்பை ஒரு க்ஷணமும் பொறுக்க மாட்டேன்
ந ப்ராணான் சஹே –அப்படிப்பட்ட பிராணனையும் பொறுக்க மாட்டேன்
ந ஸ ஸூகம் அசேஷ அபி லஷிதம் சஹே -எல்லாரும் விரும்பக் கூடிய ஸூகத்தையும் ஸஹிக்க மாட்டேன்
ந ச ஆத்மானம் சஹே –ஆத்மாவையும் ஸஹிக்க மாட்டேன்
அந்யத்  கிமபி ந சஹே -சேஷத்வ சூன்யமான வேறே ஒன்றையும் ஸஹிக்க மாட்டேன்
யாது ஸததா விநாஸம் -சேஷத்வ சூன்யமான கீழ்ச் சொன்ன தேஹாதிகள் எல்லாம் உரு மாய்ந்து போகட்டும்
தத் ஸத்யம் மது மதன விஜ்ஞாபநம் இதம் —-இங்கனம் விண்ணப்பம் செய்த இது சத்யம்-இது பொய்யாகச் சொன்னேன் ஆகில் மது பட்டது படுவேன் அத்தனை

ந தேஹம் –-அஹமபிமானத்துக்கு அர்ஹமாம்படி அந்தரங்கமான சரீரத்தையும் –-தேவர் உடைய சேஷத்வத்துக்கு புறம்பாகில் வேண்டேன் -ந ப்ராணான் –-தேகாதிகளுக்கு தாரகமான பிராணங்களையும் சேஷத்வ பஹிர்ப்பூதம் ஆகில் வேண்டேன் –ந ஸ ஸூகம் –-தேஹாதிகளையும்
பிராணங்களையும்-ஆதரிப்பது ஸூகார்த்தமாக இறே –-அந்த ஸூகமும் வேண்டா – ஸூகம் என்ற மோஷ ஸூகத்தைச் சொல்லவுமாம் –அ சேஷாபி லஷிதம் ஸூகம் – எல்லாரும் ஆதரிக்கும் ஸூகம் என்றுமாம் – ஸூகம் என் என்னில் தேவாதி சகல ஜந்துக்களும் ஆதரிக்குமது இறே-ஸூகம் என்று பிரியச் சொன்ன போது அசேஷாபி லஷிதம் நாந்யத் கிமபி -என்று மேல் கூடக் கடவது –-நாந்யத் கிமபி -என்கிறது புத்திர மித்ர களத்ரங்கள் -என்கிறது-ந சாத்மானம் –-கீழ்ச் சொன்ன சகலத்துக்கும் ஆஸ்ரயமாய் ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வ போக்த்ருத்வங்களை உடைய ஆத்மாவை –தவ சேஷத் வவிபவாத் பஹிர்ப் பூதம் – ப்ராப்த விஷயத்தில் சேஷத்வம் ஆகிற பெருமைக்கு புறம்பு ஆனத்தை அந்தர்ப் பூதம் ஆனவன்று எல்லாம் உபாதேயம் -என்கை-

நாத –சேஷத்வத்துக்கு புறம்பானவை-அசஹ்யம் என்கைக்கு அடியான அவர்ஜனீய  -விட ஒண்ணாத -சம்பந்தத்தை சொல்லுகிறது–ஷணம் அபி சஹே – ஷண காலமும் சஹிக்க கில்லேன்-காமினிக்கு பர்த்ரு விரஹத்தில் சந்தன குஸூமாதிகள் அசஹ்யமானாப் போலே–மாறாளன் கவராத மணிமாமை குறைவிலமே -4-8-ந தேவ லோகா க்ரமணம் –-இது இளைய பெருமாள் உடைய -ஏறாளும் இறையோன்
ந ஹி மே ஜீவிதே நாரத்த -இது பிராட்டியினுடைய ஏறாளும் இறையோன்
யாது ஸததா விநாஸ்ம் –
உரு மாய்ந்து போக வேண்டும்-அடிமைக்குப் புறம்பானவை அசஹ்யம் ஆனாலும் போக்குகை
ஈஸ்வர கருத்தியம்-அனுகூலங்கள் ஆதரணீயமானாலும்-உண்டாக்குகை ஈஸ்வர கருத்தியம்
தத் ஸத்யம் – இது லோகத்திலே கேட்டு அறிவது ஓன்று அன்று-மெய்யாகக் கூடுமோ -என்ன-இது அஹ்ருதயமாக சொன்னது அன்று -மெய்–மது மதன- திரு முன்பே பொய் சொன்னேன் ஆகில்
உமக்குப் பொய்யனான மது பட்டது படுகிறேன்-சேஷத்வத்துக்கு புறம்பானவற்றை மதுவைப் போக்கினால் போலே போக்கி அருள வேணும் -என்னவுமாம்–விஜ்ஞாப நமிதம்இதம் விஜ்ஞாபநம் தத் சத்யம்-ப்ராப்ய அபேஷையில் புரை குற்றம் உண்டாகிலும் விரோதி வர்க்கத்தில் அருசியில் பொய்யில்லை –

(கீழே இஷ்ட பிராப்தியை அபேக்ஷித்து இங்கே அநிஷ்ட நிவ்ருத்தியை அபேக்ஷிக்கிறார் –
ஏறாளும் இறையோனும் -திருவாய்மொழி -4–8-அர்த்த ஸ்லோகம் இது-கொள்ளும் பயன் ஓன்று இல்லாத கொங்கை தன்னை கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எரிந்து
எண் அழலை தீர்வேனே போலே –
அழிவில்லா ஆத்ம வஸ்துவையும் உருமாய்ந்து போகட்டும் என்றது
சேஷத்வ ஊற்றத்தைப் பற்ற –-விஞ்ஞாபனம் — விஞ்ஞாபிதம் –பாட பேதங்கள் -)

உன்னுரிமையாம் பெருமை யிற்கு வெளியுள்ள யுடல் வேண்டிலேன் உயிர் வேண்டிலேன்
பின்னும் எவரும் பெற விரும்பும் சுகமானம் முதலான பிறவும் வேண்டிலேன்
என்னுடைய நாத மது ஸூதன சகிக்ககிலன் இந்நொடியில் இவை களுக்கு எலாம்
மன்னிய விநாஸம் பலவகையில் யுற வேண்டுவன் இனி வசனம் அது வாய்மை யதுவே
–57—ஏ ஸ்வாமியே உன்னுடைய சேஷத்வமாகிய பெருமைக்கு வெளிப்பட்டுள்ள சரீரத்தையும் உயிரையும்
எல்லாரும் அடைவதற்கு ஆசைப்படக் கூடிய ஸுகத்தையும் ஆத்மாவையும் இன்னும் இது போன்ற மற்ற எதையும் நான் வேண்டிலேன் –ஏ மது ஸூதன இவைகள் ஒன்றையும் நான் சகிக்க வல்லேன் அல்லேன்
இவ்வஸ்துக்கள் யாவும் பல விதங்களால் இந்த க்ஷணத்தில் நாஸம் அடையட்டும்-இப்படி சொல்லும் அடியேனது விண்ணப்பம் சத்தியமானதே –

ஸ்லோகம் -58-அவதாரிகை –நிக்ரஹ ஹேதுவான பகவத் அபசாராத்ய அஸூபங்கள் சஞ்சரிக்கிற சம்சாரத்திலே -கைங்கர்ய விரோதிகள் அசஹ்யமாம்படி –-அதிலே அருசி பிறந்து –-அத்தைப் போக்கி தந்து அருள வேண்டும் என்று-யோகிகளுக்கு துர்லபமான இதை அபேஷிப்பார் உண்டாவதே -என்ன
அவதி யில்லாத அஸூபங்களையும் போக்க வல்ல தேவர் உடைய அபரிச்சின்ன குணங்களை
நினைத்து இருந்து அபேஷிக்கிறேன் -என்கிறார்-

துரந்தஸ்யா நாதே ரபரிஹரணீ யஸ்ய மஹதோ
நிஹீந ஆசாரோ அஹம் ந்ருபஸூர ஸூபஸ்யாஸ் பதமபி !
தயா ஸிந்தோ ! பந்தோ ! நிரவதிக வாத்ஸல்ய ஜலதே !
தவ ஸ்மாரம் ஸ்மாரம் குணகணமி தீச்சாமி கத பீ
—58-

கருணைக் கடலான ஸ்வாமியே! என்னுடன் எல்லா உறவுகளையும் உடையவனே! வாத்ஸல்யக் கடலாக இருப்பவனே!-நான் மிகப் பெரிய, அநாதி கால, முடிவில்லாத, போக்க முடியாத பாபங்களை உடையவனாக இருந்தாலும், மீண்டும் மீண்டும் உன்னுடைய திருக்கல்யாண குணங்களை நினைப்பதால், பயமில்லாமல் இதை ஆசைப் படுகிறேன்.

தயா ஸிந்தோ ! –கருணைக் கடலே
பந்தோ !–சகலவித பந்துவானவனே
நிரவதிக வாத்ஸல்ய ஜலதே !–எல்லையற்ற வாத்சல்ய சமுத்ரமே
நிஹீந ஆசாரோ அஹம்–இழிவான நடத்தை உள்ள நான்
துரந்தஸ்ய –முடிவு இல்லாததும்
அநாதே-அடி அற்றதும்
அபரிஹரணீ யஸ்ய –பரிஹரிக்க முடியாததும்
மஹதோ–பெரியதுமான
அஸூபஸ்ய–பாபத்திற்கு
ஆஸ்பதமபி !–இருப்பிடமாய் இருந்தாலும்
தவ குணகணம் –உன்னுடைய அளவற்ற குணங்களை
ஸ்மாரம ஸமாரம் –பலகாலும் நினைத்து
கதபீ—அச்சம் கெட்டவனாய்
இதி இச்சாமி –இங்கனே இச்சிக்கின்றேன்-உனது சேஷத்வத்தை ஆசைப் படுகிறேன் என்கை –-பாபங்கள் வலிமை அச்சப்பட வைத்தாலும் திருவருள் முதலிய திருக் கல்யாண குணங்களை அனுசந்திக்க பயங்கள் விலகி கைங்கர்யப் பிரார்த்தனை பண்ணுகிறார்
ந்ருபசு –ம்ருக பிராயன் -வர்ணாஸ்ரம தர்ம அனுஷ்டானங்களை மீறி ஆகார நித்தமும் இன்றி
மனம் போனபடி திரிவதால் –

துரந்தஸ்யா –-முடிவு இன்றிக்கே இருக்கும் அஸூபம்.-பிராயச் சித்தத்தால் ஆதல் –-அனுபவத்தால் ஆதல்-உத்தர கோடி காண ஒண்ணாது இருக்கை–துர் விபாகமாய் இருக்குமது -என்னவுமாம் –-உத்தரத்தில் எதிர் காலத்தில் -நரக கர்ப்ப வாசங்கள் பலிக்கை –அநாதேமுன் செய்த முழு வினை -திருவாய் -1-4-2-என்னக் கடவது -இறே –அபரிஹரணீ யஸ்ய –-சர்வ சக்தியான தேவருக்கும் பிற்காலிக்கும் படி இருக்கை –மஹதோ –-சங்க்யாவதி ரஹீதமாய் இருக்கை –-கால தத்வம் உள்ளது அனையும் அனுபவியா நின்றாலும் அவதி காண ஒண்ணாது இருக்கையும் இப்படிப் பட்ட அஸூபத்திற்குத் தொகை இன்றிக்கே இருக்கையும் –-யத் ப்ரஹ்ம கல்ப நியுத அனுபவ வேபய நாஸ்யம் –அணு பரிமாணனான சேதனன் இவற்றை எல்லாம் செய்தான் என்று விஸ்மயப் படும்படி இருக்கை –
சீலமில்லாச் சிறியன் -திருவாய் -4-7-1–நி ஹீ நா சாரோ அஹம் –அஹம் புத்தி போத்யமான தரமி ஸ்வரூபம் அதர்மாசார நிரூபகமாய் இருக்கை –-ஆசாரம் ஆகிறது -விலஷண தர்மத்திலே இழிகைக்கு
யோக்யதாபாதகம்-தகுதியைக் கொடுப்பது -சந்த்யா வந்த நாதிகள்–பாப அனுஷ்டானத்துக்கு யோக்யன் -என்கை-ந்ருபஸூ – சதுஷ் பாத்துக்களில் காட்டில் த்வி பாதமே விசேஷம் -என்கை –
ஜ்ஞாநேன ஹீன பஸூபிஸ் சமான –-சாஸ்திர வஸ்ய ஜன்மம் ஆகையாலே -பசு -என்ன ஒண்ணாது –
ஆஹார நித்ர அபயமைது நாதி களிலே -நியதி இல்லாமையாலே மனுஷ்யன் என்ன ஒண்ணாது
இரண்டு ஜென்மத்தையும் தப்பினேன் -என்கை –அஸூபஸ்யாஸ் பதமபி !–அஸூபம் ஆகிறது -ஸூப விரோதி-ஸூபம் ஆகிறது புருஷார்த்தம்-தத் விரோதிக்கு எல்லாம் ஆஸ்ரயம் –-அக்ருத்ய கரணம் முதலாக அசஹ்ய அபசாரம் முடிவானவற்றுக்கு ஆகரமாய் இருக்கை –-தேவர் குணாநாம் ஆகரம் ஆனால் போலே – நான் அஸூபாநாம் ஆகரம் -என்கை –

அபி – இப்படிப் பட்டவனாய் இருக்கச் செய்தேயும் ஷணம் அபி சஹே யாது ஸததா விநாசம் -என்று
அபேஷிக்கைக்கும் ஒரு வழி யுண்டு – அது ஏன் என்னில் –தயா ஸிந்தோ ! – கீழ்ச் சொன்ன அஸூப சாகரம் எல்லாம் தேவர் உடைய தயார்ணவத்திலே ஒரு குளப்படியாய் யன்றோ தேவர் உடைய க்ருபா சத்தை –-வதார் ஹம்பி காகுத்ஸ்த க்ருபயா பர்யா பாலயத்—யதி வா ராவண ஸ்வயம் –கச்சா நுஜா நாமி –-பந்தோ ! –-ஆஸ்ரிதர் உடைய இழவு பேறு தன்னதாம் படியான நிருபாதிக சம்பந்தம் சொல்லுகிறது –
அஹம் வோ பாந்தவோ ஜாத-க்ருத்க்ருத்யஸ் ததா ராம –-ருணம் ப்ரவ்ருத்த மிவ மே ––உரஸா தாரயாமாஸ பார்த்தம் ஸ்ஞ்சாத்ய மாதவ ––மம ப்ராணா ஹி பாண்டவநிரவதிக வாத்ஸல்ய ஜலதே !-
வாத்ஸல்யம்
-ஆகிறது–அன்று ஈன்ற கன்றின் பக்கல் தோஷம் தாய்க்கு போக்யமாய் இருக்குமா போலே–ஆஸ்ரித தோஷம் போக்யமாய் இருக்கை –-க்ருபா சமுத்ரத்துக்கு கரை உண்டாகிலும்
வாத்ஸ்ல்ய சாகரத்துக்கு கரை இல்லை
-என்கை–சரணாகத வத்ஸல ––ரிபூணாம்பி வத்ஸல-
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்—த்வயி கிஞ்சித் சமா பன்நே கிம் கார்யம் சீதயா மம –-அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம்
தவ ஸ்மாரம் ஸ்மாரம் குணகணம் –ஸ்ம்ருத்வா ஸ்ம்ருத்வா –-கீழ்ச் சொன்ன குணங்களை உடைய தேவர் உடைய திருக் கல்யாண குண சமூஹத்தை எப்போதும் சிந்தை செய்து
குணா நாமா கரோ–யதா ரத்நாநி ஜலதே–சதுர்முகாயு –இதீச்சாமி கதபீ-–அஸூபாஸ்பதமான என்னை நினைத்து அஞ்சாதே–தேவர் குண கணத்தை நினைத்து-ந தேஹம் ந பிராணான்–என்கிறபடியே
இச்சியா நின்றேன் –(ந்ருபசு -மனுஷ்யனாக பிறந்தும் வர்ணாஸ்ரம தர்ம அனுஷ்டான வரம்பை மீறி
ஆஹார நித்ராதிகளிலே நியதி இன்றி மனம் போன படியே திரியும் பசு பிராயர்)

ஆதியறத் துன்பமுறு மகத்தாய் நின்று யுன் அருள் அதினாலே யன்றி யகற்ற ஒண்ணா
வேதமுறும் பாவத்திற்கு இடமாய் நின்று ஓர் ஈன நடை யுற்று நரப்பசு போன்றேனும்
மாதவ தயோ ததியே பந்துவே ஓர் வரம்பில்லா வாற் சலியக் கடலே நின் தன்
கோதிலவாம் குண கணங்கள் எண்ணி எண்ணிக் கூசாது இங்கனம் இச்சை கொள்ளுவேனே
–58–அநாதி யாய் துன்பங்களை விளைவித்துக் கொண்டு நாளுக்கு நாள் விருத்தி அடைந்து பருத்து நின்று
உன் கிருபை ஒன்றினால் அன்றி மற்று எதினாலும் பரிஹரிக்க முடியாதன வாயுள்ள பாவங்களுக்கு இருப்பிடமாகி-துராசாரம் யுடையவனாய் நர ஜன்மம் எடுத்தும் ஞானம் இல்லா ஒரு பசுவைப் போலே இருந்தேனாயினும்-ஏ மாதவ ஏ தயா சாகரமே ஏ பந்துவே கரை இல்லாத வாத்சல்யக் கடலே உன்னுடைய அநந்த திருக்கல்யாண கூட்டங்களை நினைத்து நினைத்து அஞ்சாமல் இவ்வண்ணம் பரம புருஷார்த்தத்தில் இச்சை கொள்கின்றேன் –

ஸ்தோத்ரம் -59-அவதாரிகை –இச்சாம் –என்கிற இச்சை தான் சத்தியமோ -என்ன-மந்த புத்தியான நான் விஷய அனுரூபமான இச்சை உண்டு என்று திரு முன்பே விண்ணப்பம் செய்யப் போகாது –-இச்சா ஸூ சகமான வசனத்தை அவலம்பித்து மெய்யாம்படி என்னுடைய மனஸ்சை ஸிஷித்து அருள வேண்டும் –
என்கிறார் –

அநிச்சன்நப் யேவம் யதி புநரி தீச்சந்நிவ ரஜஸ்
தமஸ் சந்தஸ் சத்மஸ்துதி வசன பங்கீ மரசயம்
ததா அபித்தம் ரூபம் வசநம வலம்ப்யா அபி க்ருபயா
த்வமேவை வம்பூதம் தரணி தர மே சிஷ்ய மந
–59-

ஹே தரணி தர–சர்வ லோக நிர்வாஹனான எம்பெருமானே
ரஜஸ் தமஸ் சந்தஸ்-அஹம் -ரஜோ குணத்தாலும் தமோ குணத்தாலும் மூடப்பட்டுள்ள அடியேன்
அநிச்சந் அபி ஏவம் -உண்மையாக இப்படி இச்சியாது இருந்த போதிலும்
இச்சந்நிவ–இச்சிப்பவன் போலே அபிநயித்து
சத்மஸ்துதி வசன பங்கீம் -கபடமாக ஸ்தோத்ரம் சொல்லுகிற இத்தை
யதி புநஸ் அரசயம்ந் ததா அபி -செய்தேனேயாகிலும்
இத்தம் ரூபம் வசநம் –இப்படிப்பட்ட கபடமான சொல்லை
அவலம்ப்ய அபி –ஆதாரமாகக் கொண்டாவது-இந்த பொறி தடவின வார்த்தையைவாவது பற்றாசாகக் கொண்டு
க்ருபயா–திருவருளாலே நீ தானே
ஏவம் பூதம் மே மநஸ் சிஷ்ய –இப்படிப்பட்ட எனது மனஸ்ஸைத் திருத்த வேணும்-திருத்திப் பணி கொண்டு அருள வேணும்

அநிச்சன்நப் யேவம் –-யேவம் அநிச்சன்நபி– உக்தமான பிரகாரத்துக்கு அனுரூபமாக இச்சை இன்றிக்கே இருந்த தாகிலும் -நாஸ்திகர் அல்லாமையாலே இச்சை இல்லை -என்ன மாட்டார் –
பேற்றுக்கு அனுரூபமான இச்சை பெறாமையாலே உண்டு -என்ன மாட்டார்-யதி புநரி தீச்சந்நிவ –
புனர் இதீச்சந்நிவ-
-மெய்யான இச்சை உடையார் சொல்லுமா போலே –-சத்மஸ்துதி வசன பங்கீ மரசயம்
-க்ருத்ரிம ஸ்துதி வசனம் மெய் என்று பிரமிக்கும் படி பண்ணினேன் –-வசன பிரகாரத்தைப் பார்த்தால் சர்வஜ்ஞாரான தேவரும் மெய் என்று பிரமிக்கும் படி சொன்னேன் –-பொய்யே கைம்மை சொல்லி -திருவாய் -5-1-1- என்னுமா போலே – ஹேது என் என்ன –ரஜஸ் தமஸ் சந்தஸ் –-அந்யதாஜ்ஞான விபரீதஜ்ஞான ஹேதுவான-ரஜஸ் தமஸ் ஸூக்களாலே மறைக்கப் பட்டவனாய்க் கொண்டு -என்றபடி –
அநாதி காலம் அந்த தேஹம் ஸ்வ ஸ்வரூப பர ஸ்வரூபங்களை மறைத்துப் போந்தது ரஜஸ் தமோ த்வாரத்தாலே இறே –ததா அபி- இப்படி த்யாஜ்யமாக வேண்டும் செயலைச் செய்தேன் ஆகிலும் –
யாதாதத் யேன வர்ணிதம் -என்கிறபடியே-சர்வஜ்ஞ சகாசத்திலே மெய் சொல்லிப் பிழைக்க வேண்டி இருக்க அங்கே பொய் பற்றினால் த்யாஜ்யன் இறே-

இத்தம் ரூபம் வசநம வலம்ப்யா ––ந தேஹம் ந பிராணான்–தயா சிந்தோ பந்தோ ––என்கிற வசன மாதரத்தையே பற்றாசாகக் கொண்டு–மாதவன் என்றதே கொண்டு –திருவாய் -2-7-3-என்றும்
திருமால் இரும் சோலை மலை என்றேன் என்னத் திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -திருவாய் -10-8-1- என்றும்-உக்தி மாத்ரமே ஜீவிக்கையாம் விஷயம் இறே –அபி க்ருபயா –-வதார்ஹம் -என்கிறபடியே தோஷத்தில் அவிஜ்ஞாதா வாயிற்று கிருபா பாரதந்த்ர்யத்தாலே–த்வமேவை வம்பூதம் மே சிஷ்ய மந – ஏவம் பூதம் மே மனஸ் த்வமேவ ஸிஷய – சத்மா ஸ்துதிக்கு உபகரணமான மனஸ் சை
அடிமை கொள்ளக் கடவ தேவரே அதுக்கு உபகரணாம் படி சிஷித்து அருள வேண்டும்-தீ மனம் கெடுத்தாய் -2-7-8–மருவித் தொழும் மனமே தந்தாய் -2-7-7-என்கிறபடியே-பாஹ்யமான மனஸ் ஸைத் தவிர்த்து அடிமைக்கு அனுகூலமான மனஸ் ஸைத் தந்து அருள வேணும்-மனனக மலமறக் கழுவி -1-3-8-என்கிறபடியே மநோ நைர்மல்யம் யோகத்தாலே பிறக்கக் கடவது உபாஸ்கனுக்கு – அந்த யோக ஸ்தானத்திலே பகவத் அனுக்ரஹமாய் இறே இவ்வதிகாரிக்கு இருப்பது –தரணி தர – ரசாதல கதையான பூமியை ஆபத்தே ஹேதுவாக உத்தரித்தவர் அல்லீரோ தேவர் –-ஏனமாய் நிலம் கீண்ட என்னப்பனே –5-7-6-என்றும்-பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான்-பெரிய திருமொழி -1-1-4- என்றும் சம்பந்தமும் சக்தியும் உண்டு இவன் இடத்தில் இனி இச்சையே வேண்டுவது – அதை உண்டாக்கி ரஷித்து அருள வேண்டும் என்கிறார் –

(கையார் சக்கரத்து என் கருமாணிக்கமே என்று என்று பொய்யே கைம்மை சொல்லி புறமே புறமே
யாடி மெய்யே பெற்று ஒழிந்தேன் –
-ஏதேனும் வியாஜ்யத்தை கொண்டு அஸ்மாதாதிகள் அஹ்ருதயமாக சொல்வதையும் கொண்டு கார்யம் செய்ய வல்லவன் அன்றோ – )

நாஸ்திகர் அல்லாமையாலே இச்சை இல்லை -என்ன மாட்டார் –-பேற்றுக்கு அனுரூபமான இச்சை பெறாமையாலே உண்டு -என்ன மாட்டார்-மாதவன் என்றதே கொண்டு –திருவாய் -2-7-3-என்றும்
திருமால் இரும் சோலை மலை என்றேன் என்னத் திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -திருவாய் -10-8-1- என்றும்உக்தி மாத்ரமே ஜீவிக்கையாம் விஷயம் இறே –

ஸ்லோகம் -60-அவதாரிகை –இச்சையும் இன்றிக்கே–உக்தி மாதரத்தைக் கொண்டு–இச்சையையும் உண்டாக்கி–ரஷித்து அருள வேண்டும் -என்கிறது என் என்ன அவர்ஜநீய சம்பந்தத்தைச் சொல்லுகிறார் –

பிதா த்வம் மாதா த்வம் தயித தநயஸ் த்வம் ப்ரிய ஸூஹ்ருத்
த்வமேவ த்வம் மித்ரம் குருரஸி கதிஸ் சாஸி ஜகதாம்
த்வதீ யஸ் த்வத் ப்ருத்யஸ் தவ பரிஜநஸ் த்வத் கதி ரஹம்
பிரபன்னஸ் சைவம் ஸத்யஹம்பி தவை வாஸ்மி ஹி பர
–60-

இவ்வுலகங்களுக்கு நீயே தந்தை; நீயே தாய்; நீயே விரும்பத்தக்க பிள்ளை; நீயே நல்ல உள்ளம் கொண்ட நண்பன்; நீயே நம்பிக்கைக்குப் பாத்திரமான நண்பன்; நீயே குரு; நீயே உபாயம் (வழி) மற்றும் உபேயம் (குறிக்கோள்); நான் உன்னுடையவன்; உன்னுடைய அடிமை; உன்னுடைய தொண்டன்;
உன்னையே சிறந்த உபேயமாகவும், உபாயமாகவும் கொண்டுள்ளவன்; ஆகையால் நான் ஏன் உன்னால் ரக்ஷிக்கப்படக் கூடாது?

ஜகதாம் பிதா த்வம் மாதா த்வம் –உலகங்கட்க்கு எல்லாம் தகப்பனும் நீயே பெற்ற தாயும் நீயே
தயித தநயஸ் த்வம் –அன்பனான மகனும் நீயே
ப்ரிய ஸூஹ்ருத் த்வமேவ –உயிர்த் தோழனும் நீயே
த்வம் மித்ரம் –சர்வ ரஹஸ்யங்களும் சொல்லிக் கொள்ளுதற்குப் பாங்கான மித்ரனும் நீயே
குருரஸி –ஆச்சார்யனும் நீயே
கதிஸ்சாஸி –உபாய உபேயமும் நீயே
அஹம் த்வதீயஸ் –அடியேனோ என்றால் உன்னுடையவன்
த்வத் ப்ருத்யஸ் -உன்னாலே பரிகரிக்கத் தகுந்தவன்
தவ பரிஜநஸ் –உனக்குத் தொண்டன்
த்வத் கதிர் –உன்னையே கதியாகக் கொண்டவன்
பிரபன்னஸ் ச -ப்ரபன்னனுமாயும் இருக்கிறேன்
ஏவம் ஸதி –ஆன பின்பு
அஹம் அபி தவ ஏவ –அடியேனும் உனக்கே
பர அஸ்மி ஹி–ரஷ்யனாக இரா நின்றேன் காண் –

பிதா த்வம்--உத்பாதகராய் ஹித காமராய் இருக்கிறவர் தேவர்–மாதா த்வம் – கர்ப்ப தாரணம் பண்ணி
பிரசவ க்லேசத்தை அனுபவித்து அஸூசி பிரசவங்களையும் மதியாதே இவன் ப்ரிய ஹிதமே அபேஷித்து இருக்கும் தாயைப் போலே பரிவுடையீர் தேவர்-பிதா அஹம் அசய ஜகத –-பூதா நாம் யோ அவ்யய பிதா -(ஸ்ரீ சஹஸ்ர நாமம் -அவ்யய பிதா-அழிவற்ற தந்தை ) தஞ்சமாகிய தந்தை தாய் -திருவாய் -3-6-9–தயித தநயஸ் த்வம் –அபிமதனாய் நிரய நிஸ்தாரகனான புத்ரனைப் போலே நின்று சஹகரிப்பீர் தேவர்-நன் மக்களும் மேலாத் தாய் தந்தையும் அவரே -திருவாய் -5-1-8-ப்ரிய ஸூஹ்ருத் த்வமேவ – அபிமதருமாய் சர்வ காலத்திலும் ஸோபனத்தையே பண்ணும் திரு உள்ளத்தை யுடையராய்
இருப்பீர் தேவரீர் –-அனர்த்தத்தைப் பண்ணி விட்டாலும் விட ஒண்ணாத அபிமதத்வம் அநபிமதன் ஆனாலும் விட ஒண்ணாத ஸூஹ்ருத்த்வம் அவதாரணம் -சர்வத்திலும் அந்வயிக்க கடவது த்வம் மித்ரம் –-அர்ஜுனன் ஸூபத்ரை யுடைய ஸ்வயம்வரத்தை தேவருக்கு அறிவித்து லபித்தால் போலே
அசேஷ ரஹஸ்யங்களையும் அறிவிக்கலாம் படி விஸ்வஸ நீயராய் இருப்பீர் தேவரே –குருரஸி –
மன்மனா பவ மதபக்த
-என்றும்-மாமேகம் சரணம் வ்ரஜ -என்றும் நின்ற நிலைகளிலே ஹித உபதேசம் பண்ணும் ஆசார்யரும் தேவரே –கதிஸ் சாஸி –-புருஷார்த்த உபாய பூதரும் தேவர் -என்னுதல் – கந்தவ்யத்வாதி கதி -என்று பரம ப்ராப்யர் தேவர் -என்னுதல்-ஜகதாம் – இந்த சம்பந்தம் தேவாதி சகல பிராணிகளுக்கும் சாதாரணம்-உபய விபூதிக்கும் சாதாரணம் -என்னவுமாம் –த்வதீ யஸ் – அந்த சாமான்யம் ஒழிய தமக்கு உண்டான விசேஷ பிரதிபத்தியை அருளிச் செய்கிறார் –-யஸ் யாஸ்மி -என்கிறபடியே தேவருக்கு சேஷ பூதன் –த்வத் ப்ருத்யஸ் – தேவருக்கு அதிசயத்தை விளைத்து ஸ்வரூபம் பெரும் சம்பந்தத்தை உடையன் -என்கை அதனால் தேவருக்கு பரணீயன் -என்னுதல்-தவ பரிஜநஸ் –ஆத்ம தாஸ்யம் -(ஸ்ரீ விஷ்ணு தர்மம் )என்கிற நிருபாதிக தாஸ பூதன் -என்னுதல் –-தாஸ பூதாஸ் ஸ்வதஸ் சர்வே ஹ்யாத் மாந பரமாத்மந ––அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று சர்வ கைங்கர்யத்துக்கும் அர்ஹன் –த்வத் கதிர் – தேவரே ப்ராப்ய பூதர் -என்று இருக்கிறேன்-அஹம் பிரபன்னஸ் – ப்ராப்யம் பெறுகைக்கு தேவரையே உபாயமாக அத்யவஸிக்கிறேன்-ஏவம் ஸதி-
தேவர் சர்வ வித பந்துவுமாய் நான் அநந்ய கதியுமான பின்பு –யஹமபி – அஹ்ருத யோக்தன் ஆனாலும்-தவை வாஸ்மி ஹி பர – தவைவ ப்ரோ அஸ்மி –-தேவருக்கே பரனாகிறேன்-ஜ்ஞான சக்த் யாதியாலும் ப்ராப்தி யாலும் என் கார்யம் தேவருக்கே பரம் -என்கை –பரம் ஆகையாவது – சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தை களிலும் சர்வ பிரகார நிர்வாஹ்யனாகை –

(ஒழிக்க ஒழியாத உறவு முறை உள்ளதேசேலேய் கண்ணியரும் பெரும் செல்வனும் நல் மக்களும் மேலாத் தாய் தந்தையும் அவரே இனி யாவரே-என்றும் தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் நீயாய் நீ நின்றவாறு -என்றும் -போலே –ஸூஹ்ருத்-எப்பொழுதும் ஹித விரும்பி–மித்ரன் -சமண வயஷகன் -சகல ரஹஸ்யங்களையும் பகிர்ந்து கொள்ள உரியவன் )

அத்தனும் நீ யன்னையும் நீ செகத்திற்கு எல்லாம் அரு மகவும் மித்ரனும் இதனும் நீயே
வித்தகமாம் குரு நீயே கதியும் நீயே வினையேனும் நின்னடிமை கதி வேறு இல்லேன்
உத்தமமாம் உன் பணிகள் பலவும் செய்ய யுரியேனான் உனை அடைக்கலம் புகுந்தேன்
எத்திறனும் இலனாய் யுன் இணக்கம் கொண்டேன் இனி யான் உனக்கே யாம் பாரம் தானே
–60–இவ்வுபய விபூதிகளுக்குள் அடங்கிய எல்லா செகங்களுக்கும் தந்தை நீயே தாய் நீ அருமையான புத்ரன் நீ -மித்ரன் நீ ஹிதனும் நீ -ஆச்சார்யனும் நீ -அடைய வேண்டிய கதியும் நீயே-அடியேன் உன்னுடைய சேஷ பூதன் -ஊழியன் -உன்னால் போஷிக்கத் தக்கவன் -எத்திறனும் இல்லேனாய் உன்னையே கதியாக அடைந்துள்ளேன்-ஆகையால் என்னை ரக்ஷிக்கும் பாரம் உன்னுடையதே –

ஸ்தோத்ரம் -61- அவதாரிகை –நீர் மஹா வம்ஸ ப்ரஸூதர் அல்லீரோ –-நிராலம்பரைப் போலே இங்கன் சொல்லுகிறது -என் -என்ன இவ் வம்ஸ்த்தில் பிறந்தேனே யாகிலும் பாப ப்ரசுரனாகையாலே சம்சாரத்தில் அழுந்தா நின்றேன் எடுத்து அருள வேண்டும் – என்கிறார் –

ஜநித்வா அஹம் வம்ஸே மஹதி ஜகதி க்யாத யஸஸாம்
ஸூசீ நாம் யுக்தா நாம் குண புருஷ தத்தத்வ ஸ்திதி விதாம்
நிஸர்க்காத் ஏவ த்வச் சரண கமல ஏகாந்த மநஸாம்
அதோ அத பாபாத்மா ஸரணத! நிமஜ்ஜாமி தமஸி
–61-

புகலிடம் கொடுக்கும் ஸ்வாமியே! நான் பரிசுத்தமான, உன்னுடன் எப்பொழுதும் இருக்க விரும்புபவர்களான, சித் மற்றும் அசித் ஆகியவற்றின் ஸ்வரூபத்தையும் தன்மைகளையும் நன்கு உணர்ந்தவர்களான, உன் திருவடிகளிலேயே எப்பொழுதும் தன்கள் மனதை வைத்திருக்கும் சிறந்தவர்களான, ப்ரஸித்தமான புகழை உடைய பெரியோர்கள் அவதரித்த, உயர்ந்த வம்சத்தில் பிறந்திருந்தாலும், பாபமே வடிவெடுத்தவனாகையாலே, இந்த ப்ரக்ருதியில் ஆழமாக மூழ்கிக் கொண்டிருக்கிறேன்.

ஸரணத! –வழி காட்டும் பெருமானே –அவர் அவர்களுக்கு தகுந்த உபாயத்தைக் கொடுத்து அருளுபவனே
அஹம் ஜகதி க்யாத யஸஸாம்–அடியேன் உலகம் எங்கும் பரவின புகழை யுடையவர்களும்
ஸூசீநாம்–பரிசுத்தர்களும்
யுக்தா நாம்–உன்னை விட்டுப் பிரியாதவர்களும்-ஆத்ம சாஷாத்காரமான யோகத்தில் ஊன்றினவர்கள் என்றும் உன்னுடன் நித்ய சம்ச்லேஷத்தை விரும்பி இருப்பவர்கள் என்றும் ஒரு காலும் உன்னை விட்டுப் பிரியாதவர்கள் என்றும் மூன்றுமே உண்டே-மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் -திருவாய் -9-3-7-என்று இருக்கை இளைய பெருமாளைப் போலே தேவரோடே யல்லது
செல்லாதவர்கள் -என்னுதல்
குண புருஷ தத்வ ஸ்திதி விதாம்–-–அசேதன தத்வம் என்ன சேதன தத்வம் என்ன இவற்றின்
ஸ்வரூப ஸ்வ பாவங்களை அறிந்தவர்களும்-குண த்ரயாத்மகமான பிரக்ருதியை குணம் -புருஷன் -ஆத்மா –-தத்வ ஸ்திதி உண்மை நிலையை உணர்ந்தவர்கள் -தத்துவங்களின் ஸ்தியை உணர்ந்தவர்கள் என்றுமாம்
நிஸர்க்காத் ஏவ –த்வச் சரண கமல ஏகாந்த மநஸாம்–பரிமளத்துடனே அங்குரிக்கும் திருத்துழாய் போலவும்-வத்ஸ்ம் ஆனது ஜனித்த போதே தாய் முலையிலே வாய் வைக்குமா போலவும்
இயற்கையாகவே உன்னுடைய திருவடித் தாமரைகளில் ஊன்றின மனமுடையவர்களான மஹான்களினுடைய
ஜநித்வா வம்ஸே மஹதி –சிறந்த குலத்திலே பிறந்து வைத்து
அதோ அத பாபாத்மா தமஸி–பாபிஷ்டனாய்க் கொண்டு இருள்மயமான மூதாவியிலே-அடி காண ஒண்ணாத கீழ் எல்லையில்
நிமஜ்ஜாமி–அழுந்திக் கொண்டே கிடக்கிறேன்-பன்மாமாயப் பல் பிறவியில் படிகின்ற யான் -திருவாய் -3-2-2-என்கிறபடியே-இன்னம் தரை கண்டிலன் -என்கிறார் –-சந்தாநிகர் தேவர் பக்கல் அவகா ஹித்த அளவும் நான் பிரக்ருதியில் உள் புக்கேன் -என்கை –

ஜநித்வா அஹம் வம்ஸே மஹதி –வம்ஸ்த்துக்கு மஹத்தை யாவது –-மஹாத்மாக்கள் வந்து ஜனிக்கை ஏதத்தி துர்லப தரம் லோகே ஜந்ம யதீத் ருஸ்ம் -ஸ்ரீ கீதை -6-42-என்னும் வம்சத்திலே பிறந்து வைத்து அனர்த்தப் படா நின்றேன் -என்கை –ஜகதி க்யாத யஸஸாம் – சதுஸ் ஸாகர பர்யந்தமான பூமி எல்லாம் பிரசித்தமான புகழை உடையவர்கள் –திகழும் தன திருவருள் செய்து உலகத்தார் புகழும் புகழ் தானது காட்டித் தந்து -திருவாய் -8-7-5– என்கிறபடியே பகவத் விஷயீ காரத்தால் வந்த புகழ் –ஸூசீ நாம் –
பகவத் வ்யதிரிக்த விஷயங்களில் போக்யதா கந்த ரஹிதராய் இருக்கை –-ஆந்த்ர பாஹ்யமான உபய ஸூசியைச் சொல்லவுமாம்–இவ்வம்சத்திலே பிறந்து அஸூபாஸ் பதம் என்னக் கடவீரோ –யுக்தாநாம்-
க்ருதக்ருத்யா ப்ரதீ ஷந்தே
-என்கிறபடியே-நித்ய யோகத்தில் ஆகாங்ஷமாணராய் இருக்குமவர்கள் –
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் -திருவாய் -9-3-7-என்று இருக்கை-இளைய பெருமாளைப் போலே தேவரோடே யல்லது செல்லாதவர்கள் -என்னுதல் இப்படிப் பட்ட வம்சத்திலே பிறந்து இச்சை போராது -என்னக் கடவீரோ -என்ன –

குணா புருஷ தத்தத்வ ஸ்திதி விதாம் – சித் அசித் ஈஸ்வரர்களுடைய ஸ்வரூப ஸ்வ பாவ சம்பந்தங்களை அறியுமவர்கள் – குணம் என்று குண ஆஸ்ரயமான பிரக்ருதியைச் சொல்லுகிறது
ஸ்திதி யாவது ஸ்வரூப ஸ்வபாவாதிகள் ––நிஸ்ரக்கா தேவ தவச் சரண கமலை காந்த மநஸாம்
வத்ஸ்ம் ஆனது ஜனித்த போதே தாய் முலையிலே வாய் வைக்குமா போலே-த்வச் சரணார விந்தங்களிலே ஏகாந்தமான மனஸ் சை ஜந்ம ப்ரப்ருதியாக உடையவர்கள் –-கீழ்ச் சொன்ன ஸூஸி யோகாதிகள் நைசர்க்கிகம் -என்கை –பாபாத்மா – பாபம் தான் ஒரு வடிவு கொண்டால் போலே இருக்குமவன் –-ஞானாநந்தம் ஒழிய பாபமே நிரூபகமாய் -இருக்கை –ஸ்ரணத! –-இவ்வளவிலும் உன் பக்கல் அவகாசம் உண்டாம் படி ஆள் பார்த்து உழி தரும் -நான் -திரு -60-தேவரீரே –தமஸி -அதோ அத -நிமஜ்ஜாமி-பிரக்ருதியிலே தேவர் எடுக்க நினைத்தாலும் கைக்கு எட்டாதபடி ஆழ நின்றேன்-பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான் -திருவாய் -3-2-2-என்கிறபடியே இன்னம் தரை கண்டிலன் -என்கிறார் –இத்தால் – சந்தாநிகர் தேவர் பக்கல் அவகா ஹித்த அளவும் நான் பிரக்ருதியில் உள் புக்கேன் –என்கை –

ஜனித்த வம்சம் இது-தேவர் சரண்யர்–நான் படுகிற பாடு இது இறே-அவமஞ்ஜனைப் போலே -வம்ஸ ப்ரபாவமும் ஜீவியாதே–தேவருடைய நீர்மையும் ஜீவியாதே இருக்கிற படி இறே -என்னுடைய பாப ப்ராசுர்யம் என்கிறார் –(யுக்தானாம் -1-ஆத்ம சாஷாத்கார யோகத்தில் ஊன்றியவர்கள்–2-உன்னுடன் நித்ய சம்பந்தத்தை விரும்பி இருப்பவர்கள்-3-ஒருக்காலும் உன்னை விட்டு புரியாதவர்கள் -என்ற மூன்றும் உண்டே-சரணத–தத்வ ஞானம் அறிந்தவர்களுக்கு தகுந்த உபாயத்தை கொடுத்து அருளுபவன் -)

பூ தலம் எங்கும் பரவும் புகழ் பெற்றோராய் புனிதரு நித்ய யோகம் புரிவோர் தாமாய்
கோதில தாய்க் குண புருட தத்துவத்தின் குறிப்பு உணர்ந்து ஜனன முதல் இயற்க்கை கொண்டு
மாதவ நின் மலர் அடி பால் நிலைத்து நின்ற மனமுடையோர் தம் சிறந்த மரபில் தோன்றி
ஏதமுறு இருள் ப்ரக்ருதியில் ஆழ்வேன் எட்டாமே சரணிய மா பாவி நானே
–61-ஜகத் பிரசித்தமான கீர்த்தியை யுடையவர்களாய் மஹா பரி ஸூத்த ஆத்மாக்களாய் உன்னுடன் நித்ய யோகத்தை அபேக்ஷித்தவர்களாய் சித் அசித் ஈஸ்வரர்களுடைய ஸ்வரூப ஸ்வ பாவ ஸம்பந்தங்களை அறிந்தவர்களாய்-ஜனன காலம் தொடங்கி இயற்கையாவே உன் திருவடிட் தாமரைகளில் நிலைத்து நின்ற மனத்தை யுடையவர்களாய்-விளங்கும் உத்தமர்களுடைய திரு வம்சத்திலே ஜனித்து ஆபாஸமான இருள் நிறைந்துள்ள இந்த ப்ரக்ருதியில் நீச்ச நிலை யற்று அமிழ்ந்து கிடக்கின்றேன்
மஹா பாவியேன் -ஏ -சரண்யனே –

ஸ்தோத்ரம் -62-அவதாரிகை –இவ்வம்சத்தில் ஜென்மத்தையும் அசத் சமமாக்க வல்ல பாபம் உமக்கு எது -என்ன பாபாத்மா -என்கிறத்தைப் பரக்க பேசுகிறார்-(கீழே பாபாத்மா -என்றத்தையே பத்து விசேஷங்களால் விரித்து அருளுகிறார் –-நாம் அனுசந்தித்து உஜ்ஜீவிக்க அருளிச் செய்கிறார் -)

அமர்யாத ஷூத்ரஸ் சல மதிர ஸூயாப்ரஸ்வபூ
க்ருதக்நோ துர்மாநீ ஸ்மர ப்ரவஸோ வஞ்சன பர
ந்ரு ஸ்ம்ஸ பாபிஷ்ட கத மஹமிதோ துக்க ஜலதே
அபாராதுத் தீர்ணஸ் தவ பரிசரேயம் சரணயோ
—62-

நான் சாஸ்த்ர மர்யாதைகளை மதிக்காமல் கடந்தவன், தாழ்ந்த விஷயங்களில் ஆசை உள்ளவன்,
நிலை இல்லாத மனதை உடையவன், பொறாமையின் பிறப்பிடம், எனக்கு நன்மை செய்பவர்களுக்கும் தீங்கிழைப்பவன், கைவிடவேண்டிய கர்வத்தை உடையவன், காமத்துக்கு வசப்பட்டவன், ஏமாற்றுபவன், க்ரூரமான செயல்களில் ஈடுபட்டவன் மற்றும் பாபங்களில் மூழ்கியுள்ளவன். நான் எப்படி இந்த எல்லையில்லாத பாபக்கடலின் கரையை அடைந்து உன்னுடைய திருவடிகளுக்குத் தொண்டு செய்வேன்?

1-அமர்யாத –வரம்பு மீறினவனும்
2-ஷூத்ரஸ் –அற்ப விஷயங்களில் சாபல்யம் உள்ளவனும்
3-சலமதிர் -நின்றவா நில்லா நெஞ்சை உடையவனாயும்
4-அஸூயா ப்ரஸ்வபூ–பொறாமைக்குப் பிறப்பிடமானவனும்
5-க்ருதக்நோ -நன்றி கெட்டவனும்
6-துர்மாநீ –துர் அஹங்காரம் உள்ளவனும்
7-ஸ்மர ப்ரவஸோ –காமத்துக்குப் பரவசப் பட்டவனும்
8-வஞ்சன பர–பிறரை வஞ்சிப்பவனும்-சூதனாய்க் கள்வனாகி -திருமாலை -16-சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து -பெரிய திருமொழி -1-6-3-என்று சொல்லுகிறபடியே-
9-ந்ரு ஸ்ம்ஸ –கொடும் தொழில் புரிபவனும்
10-பாபிஷ்ட –மஹா பாபியுமான
பாவமே செய்து பாவியானேன் -பெரிய திரு மொழி -1-9-9-
ஒப்பிலாத் தீ வினையேன் -திருவாய் -7-9-4-
நானே நாநாவித நரகம் புகும் பாவம் செய்தேன் -பெரிய திருமொழி -1-9-2-
அஹம் அஸ்மா அபராதாநாம் ஆலய –
ராவணோ நாம துர்வ்ருத்த
நீசனேன் நிறை வொன்றும் இலேன்
–திருவாய் -3-3-4-என்று அறிவுடையார் தம்தாமை-பேசும்படியான பாபத்திலே நிஷ்டை யுடையவன் –
அஹம் இத அபாராத துக்க ஜலதே-அடியேன் இந்த கங்கு கரை அற்ற துன்பக் கடலில் நின்றும்
உத்தீர்ணஸ் –கரை சேர்ந்தவனாய்
கதம் பரிசரேயம் தவ சரணயோ—உனது திருவடிகளில் எங்கனே கைங்கர்யம் பண்ணப் பெறுவேன் –

அமர்யாத –வேத மரியாதைக்கு பஹிர்ப் பூதன்-ஷூத்ரஸ் –-ஷூத்ரத்வம் ஆவது-நீச விஷயங்களில் அதி சபலன் – உஜ்ஜீவன ஹேதுவான வேத மரியாதையை அனாதரித்து அதுக்கு மேலே விநாச ஹேதுவான
நீச சேவையிலே அதி சபலன்-சல மதிர்- நீச விஷய ப்ராவண்யம் நாச ஹேது-வேத பிரதி பாத்தியா விஷயமே உத்தேச்யம் -என்று-ஒரு ஜ்ஞாநாதிகன் ஹிதம் சொன்னால் அதில் வ்யவஸ்திதன் அல்லேன் –அஸூயா ப்ரஸ்வபூ –பர குணங்களிலே தோஷத்தை உண்டாக்குகைக்கு உத்பத்தி ஸ்தானம் –தனக்கு தோஷம் உண்டாம் அளவன்றிக்கே பிறர் குணங்களிலும் தோஷத்தை உண்டாக்குமவன் -என்கை –க்ருதக்ந – உபகரித்த விஷயத்தில் அபகாரத்தைப் பண்ணுகை–கோக் நே சைவ ஸூ ரா பேச சோரே பக்நவ்ரதே ததா நிஷ்க்ருதிர் விஹிதா ஸத்பி கருதக்நே நாஸ்தி நிஷ்க்ருதி -என்று மாதா பித்ரு சதத்திலும் வத்சல தரமான சாஸ்திரத்திலும் பஹிஷ்க்ருதன் -என்கை-–துர்மாநீ –இப்படி நிக்ருஷ்டனாய் இருக்கச் செய்தேயும் சர்வோத் க்ருஷ்டருக்கு அவ்வருகாகத் தன்னை நினைத்து ஈஸ்வரோஹம் -என்று இருக்குமவன் –ஸ்மர ப்ரவஸோ – தன்னை உத்க்ருஷ்ட ஆத்மாக்களுக்கும் மேலாக நினைத்து இருக்கிற அளவன்றிக்கே விஷய ப்ராவண்ய ஹேதுவான காமனுக்கு பர தந்த்ரனாகவும் பகவத் ப்ராவண்ய ஹேது பூதரானாரைத் தாழ நினைத்தும் அனர்த்தப் பட்டேன் -என்கை –வஞ்சன பர – காம பாரவஸ்யத்தாலே விஷயங்களிலே பிரவணனாய் – அவ்விஷயங்களிலும் த்ரவ்யங்களை வஞ்சித்து -வர்த்திக்குமவன் –-சூதனாய்க் கள்வனாகி -திருமாலை -16-சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து -பெரிய திருமொழி -1-6-3-என்று சொல்லுகிறபடியே-ந்ரு ஸ்ம்ஸ – தான் விரும்பின விஷயங்களில் வஞ்சகனாய் அன்றிக்கே – தன்னை விச்வசித்து இருப்பார் பக்கல் க்ரூர கர்மாவாய் இருக்குமவன் –பாபிஷ்ட- இதுக்கு எல்லாம் அடி பாப ருசியாய் அதிலே வ்யவஸ்திதனாய் இருக்கை –
பாவமே செய்து பாவியானேன் -பெரிய திரு மொழி -1-9-9-
ஒப்பிலாத் தீ வினையேன் -திருவாய் -7-9-4-
நானே நாநாவித நரகம் புகும் பாவம் செய்தேன் -பெரிய திருமொழி -1-9-2-
அஹம் அஸ்மா அபராதாநாம் ஆலய
ராவணோ நாம துர்வ்ருத்த
நீசனேன் நிறை வொன்றும் இலேன் –திருவாய் -3-3-4-என்று-அறிவுடையார் தம்தாமை
பேசும்படியான பாபத்திலே நிஷ்டை யுடையவன் –

அபாராத் துக்க ஜலதே கதம் உத்தீர்ண –ஒரு நாளிலே தொடங்கின துக்கம் -என்னுதல்-மேல் ஒரு நாளிலே முடிவு காணுதல் செய்யுமது அல்லாமையாலே த்ருஷ்டி விஷம் போலே காணவே பயமாய் இருக்கிற துக்க சாகரத்தில் நின்றும் –கதம் உத்தீர்ண – இதில் அழுந்திக் கிடக்கிற நான் கரை ஏற எனபது ஓன்று உண்டோ –-முத்தனார் –திருச்சந்த -115-என்கிறபடியே அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான தேவரே கரை ஏற்ற வேண்டும் -என்கை –தவ சரணயோ -கதம் -பரிசரேயம் – துக்க நிவ்ருத்திக்கும் அஷமனாய் இருக்கிற நான் நித்ய ஸூரிகள் அடிமை செய்கிற தேவர் திருவடிகளிலே எங்கனே பரிசர்யை பண்ணுவன்-துக்க நிவ்ருத்தியும் தேவருக்கே பரம் – அடிமை கொள்ளுகையும் தேவருக்கே பரம் –என்கை —

நீதி நெறி நீத்தவனேன் நீசனானேன் நிலையின் மதியேன் பொறாமைக்கு இடமாய் நின்றேன்
பாதகனேன் இறுமாந்தேன் நன்றி கொன்றேன் படும் காமனுக்குப் பர வசனே யானேன்
கோதுடைய வஞ்சகனேன் குரூர நெஞ்சன் கொடும் பாவியாம் அடியேன் குணிக்க ஒண்ணா
வேத முறு மிக்கேதக் கடல் கடந்தே எங்கன நின்னடி இணையில் பணி செய்வேனே
–62—சந் மார்க்கத்தைத் துறந்தவனாய்-நீசமான விஷயங்களில் சபலம் யுடையேனாய்-நிலையாது எப்பொழுதும் சஞ்சலிக்கும் புத்தி யுடையேனாய்-பொறாமைக்கு உத்பத்தி ஸ்தானமான வனாய்-நன்றி கொன்றவனாய் மஹா பாதகனாய் அஹங்காரியாய் காம வசத்தனாய் வஞ்சகனாய் குரூரம் உள்ளவனாய் பாவத்தில் நிலைத்தவனாய் நின்ற நான் கரை காண முடியாத இந்தத் துன்பக் கடலில் நின்றும் எப்படிக் கரை ஏறி உன் திருவடிகளிலே கைங்கர்யம் பண்ணப் போகின்றேன்-

ஸ்தோத்ரம் -63-அவதாரிகை –புத்தி பூர்வேண பண்ணின ப்ராதி கூல்யங்களைப் போக்கப் போமோ -என்ன காகாபராதத்தையும் ஸிஸூபாலாப ராதத்தையும் பொறுத்து அருளின தேவருக்குப்
பொறுக்க முடியாதது உண்டோ – என்கிறார் –

ரகுவர யத பூ ஸ்தவம் தாத்ரு ஸோ வாயஸ்ஸ்ய
ப்ரணத இதி தயாளூர் யச்ச சைத் யஸ்ய கிருஷ்ண
பிரதிப வமபராத்துர் முக்த சாயுஜ்யதோ அபூ
வத கிமபத மாகஸ் தஸ்ய தி அஸ்தி ஷமாயா
-63-

ரகுகுல திலகமான ஸ்ரீராமராக அவதரித்தவனே! பெரிய தவறைச் செய்த காகாஸுரன் விஷத்தில்,
அவனை ஒரு சரணாகதனாகக் கொண்டு, உன் கருணையைக் காட்டவில்லையோ?-எந்தத் தவறுகளையும் பொருட்படுத்தாத கண்ணனே! சேதி குலத்தைச் சேர்ந்த, பிறவிதோறும் உன்னிடத்தில் அபராதம் செய்த சிசுபாலனுக்கு நீ மோக்ஷத்தையே அளித்தாயே. எந்த பாபம் தேவரீருடைய பொறுமைக்கு விஷயமாகாது? எனக்கு தேவரீர் விளக்கி யருள வேண்டும்.

ஹே ரகுவர –ராகு வம்சத்தில் ஸ்ரீ ராமனாக திரு அவதரித்தவனே
த்வம் -நீ
தாத்ரு ஸோ வாயஸ்ஸ்ய-அப்படிப்பட்ட மஹா அபராதியான காகாஸூரனது விஷயத்திலே
ப்ரணத இதி-இக் காகம் நம்மை வணங்கிற்று என்பதையே கொண்டு
தயாளூர் யத் அபூ –தயை பண்ணினாய் இறே-ஷிபாமி -என்றும் ந ஷமாமி -என்றும் பண்ணி வைத்த பிரதிஜ்ஞை பழியாதே-தேவர் க்ருபா கார்யமே பலித்து விட்டது – பிராட்டி சந்நிதி யாகையால் இறே-முக்த கிருஷ்ண-குற்றம் அறியாத கண்ண பிரானே-கிருஷ்ணனாகி என்றும் கிருஷ்ண என்று சம்போதானமாகவும் –
பிரதிபவம் அபராத்துர்–பிறவி தோறும் அபராதம் பண்ணின
சைதயஸ்ய–சிசுபாலனுக்கு – யது வம்ஸ பூதரில் காட்டில் சேதி குலோத்பவன் என்று தன்னை உத்க்ருஷ்டனாக அபிமானித்து இருக்குமவன் –
சாயுஜ்யதோ அபூச சயத-சாயுஜ்யம் அளித்தவனாயும் ஆனாய் இறே
சேட்பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி தாட்பால் அடைந்த தன்மை –திருவாய் -7-5-3-
தஸ்ய தே ஷமாயா-அப்படி எல்லாம் செய்தவனான உன்னுடைய பொறுமைக்கு
அபதம ஆகஸ் கிம் அஸ்தி -இலக்காகாத குற்றம் என்ன இருக்கிறது
வத –அருளிச் செய்ய வேணும்-உனக்குப் பொறுக்க முடியாதது உண்டோ-சர்வஜ்ஞரான தேவருக்கும் மறு மாற்றம் இல்லை க்ஷமித்து அருளி விஷயீ கரிக்கும் இத்தனை -என்கை –

ரகுவர –சரணாகத ரஷணம் பண்ணிப் போந்த-ரகு ப்ரப்ருதிகள் காதகர் என்னும்படி சரணாகத ரஷணததிலே அதிகரராய் இருக்கை – ரகு ராஷச சம்வாதத்தில் சரணாகத ரஷணம் பண்ணிப் போந்தவர்கள் அன்றிக்கே –ஸூக்ரீவம் சரணம் கத -என்றும் த்வயி கிஞ்சித் சமாபன்நே -என்றும் இறே இவர் படி –தாத்ருஸ –அப்படிப் பட்டவன் என்னுமது ஒழிய அனுபாஷிக்கை தான் அசஹ்யமாம் படி இறே பண்ணின அபராதம் –வாயஸ்ஸ்ய – அபராதம் பண்ணுகைக்காக ப்ராப்தமான தேவத்வத்தை விட்டு
நிஹீனமான திர்யக் த்வத்தைப் பரிக்ரஹித்தான் -என்கை –ப்ரணத இதி –ஸ பித்ரா ஸ பரித்யக்த -என்கிறபடியே இவனைப் பரிக்ரஹிக்கில் நமக்கு அனர்த்தம் என்று சர்வரும் உபேஷிக்க -புகலற்று
ஸ தம் நபதிதம் பூ மௌ-என்கிறபடியே விழுந்தவனை சரணாகதன் என்று பிரதிபத்தி பண்ணி
ருஷி –சரணாகதம் -என்றதும் ராம அபிப்ராயத்தாலே-த்வம் தயாளூரபூ –-ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கு இலக்காம் அளவிலே தேவர்-க்ருபயா பர்யபாலயத் -என்கிறபடியே-தயாளு வானீர் –-ஷிபாமி -என்றும்- ந ஷமாமி -என்றும் பண்ணி வைத்த பிரதிஜ்ஞை பழியாதே தேவர் க்ருபா கார்யமே பலித்து விட்டது –
பிராட்டி சந்நிதி யாகையால் இறே-

யச் ச – ச சப்தத்தாலே-காகாபராதத்தை பொறுத்த அளவேயோ-என்று உதாஹரணாந்தரத்தை சமுச்சயிக்கிறார்-சைத்யஸ்ய –யது வம்ஸ பூதரில் காட்டில் சேதி குலோத்பவன் என்று தன்னை உத்க்ருஷ்டனாக அபிமானித்து இருக்குமவன் –பிரதிப வமபராத்து-காகத்தைப் போலே ஒரு கால் அபராதத்தைப் பண்ணின அளவன்ற்றியே- ஜன்மம் தோறும் பிரதி கூல்யத்திலே வாசனை பண்ணினவனுக்கு –-சாயுஜ்யதோ அபூ –-என்றும்-பஹூ நாம் ஜந்ம நாமந்தே -என்றும்-அநேக ஜந்ம சமசித்த -என்றும் ஜன்மம் தோறும் ஆஸ்ரயித்தார் பெரும் பேற்றை இறே கொடுத்தது –
சாயுஜ்யம் ஆவது -சமான குண யோகம் –-சாயுஜ்யம் ப்ரதிபன்னா யே தீவர பக்தாஸ் தபஸ் விந
கிங்கரா மம தே நித்யம் பவந்தி நிருபத்ரவா
முக்த –ஆயர் குலத் தீற்றிளம் பிள்ளை –திருவாய் -7-6-10-என்கிறபடியே அபராத அநபிஜ்ஞன் இறே கிருஷ்ணன்-(ஸாயுஜ்யம்‌ ப்ரதிபந்நா யே தீவ்ர ப,க்தாஸ்‌ தபஸ்விந: | கிங்கரா மம தே நித்யம்‌ ப,வந்தி நிருபத்‌,ரவா: || [எவர்கள்‌ மேலான ப,க்தியை உடையவர்களோ, எவர்கள்‌ ப்ரபத்தி யாகிற தபஸ்ஸைச்‌ செய்தவரோ, அவர்களே என்னுடன்‌ ஸாயுஜ்யத்தை அடைந்து, ஸம்ஸாரமாகிற உபத்‌ரவம்‌ நீங்கப் பெற்றவர்களாய்‌, எப்போதும்‌ எனக்குக்‌ கைங்கர்யம்‌ செய்பவர்களாகிறார்கள்‌)அதுக்கு மேலே ஒரு பேற்றை முடிக்கிற தசையிலே ஸூக ரூபமான வடிவைக் கண்ணுக்கு இலக்காக்கின ஏற்றம் –தஸ்ய தே ஷமாயா அபத்த மாக கிமஸ்தி--கால பேதத்தாலே தேவர் வேற ஒருவன் ஆகிறீர் அல்லீர்-தேவர் க்ருபைக்கு அவிஷயமான பாபம் உண்டோ-கிம் ஷேப அப்தம் -அஸ்தானம் -அவிஷயம் இத்யர்த்த –
வத சர்வஜ்ஞரான தேவருக்கும் மறு மாற்றம் இல்லை க்ஷமித்து அருளி விஷயீ கரிக்கும் இத்தனை -என்கை –

(ப்ரதிபவம் -காகாசுரன் ஒரு ஜன்மாவில் பண்ணின அபசாரம் -சிசுபாலனோ மூன்று ஜன்மாக்களில் அபராதம் – இருந்தாலும் க்ஷமித்து சாயுஜ்யம் அளித்தாயே- சேட்பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி தாட்பால் அடைந்த தன்மை –திருவாய் -7-5-3-)

அத்தகைய காகனையும் அன்று அளித்தாய் அடி பணிந்தான் என விரகு திலக ராமா
மொய்த்த பவம் தொறும் பிழையே முடித்து வந்த மூர்க்கன் சிசு பாலனுக்கும் கண்ண அந்நாள்
உத்தமமாம் ஓர் பதவி யுதவினாய் ஒப்பிலாதாம் பொறுமைக்கு ஓர் இலக்கு ஆகாத
எத்தகைய அபராதம் எங்கு தானும் இசைந்துளதோ என் நாத இயம்புவாயே
–63-ஏ ரகூத்தமா -அத்தன்மைத்த மஹா அபராதியான காகாசூரன் கீழே விழ-அவனை சரணாகதி பண்ணினவனாகக் கொண்டு ரக்ஷித்தாய்-ஜென்மம் தோறும் அபராதமே செய்து நின்ற அந்த சிசுபாலனுக்கும் ஏ கண்ணபிரானே ஸாயுஜ்ய பதவியைத் தந்து அருளினை-ஆதலால் உன் க்ஷமா குணத்தால் -ஆஸ்ரித அபராதங்களை அறியாதவன் போல் இருக்கும் தன்மையினால் முக்தனானவனே இவ் விதமான உன்னுடைய பொறுமைக்கும் அகப்படாமல் விலக்கான எந்த அபாராதமேனும் எங்காயினும் இருக்கின்றதோ ஏ நாத அருளிச் செய்வாய் –

ஸ்தோத்ரம் -64-அவதாரிகை –ஸ்வ தந்த்ரரான நாம் சிலர் திறத்தில் ஒன்றைச் செய்தோம் -என்னா
இதுவே மரியாதையாகக் கடவதோ –என்ன கடல் கரையிலே ஆஸ்ரித சாமான்யத்திலே-தேவர் பண்ணின பிரதிஜ்ஞை என்னை ஒருவனை ஒழியவோ என்கிறார் –

நநு பிரபன்னஸ் ஸக்ருதேவ நாத
தவாஹ மஸ்மீதி ச யாசமாந
தவா நுகம்ப்ய ஸ்மரத பிரதிஜ்ஞாம்
மதே கவர்ஜம் கிமிதம் வ்ரதம் தே
–64-

ஸ்வாமி! “நான் உன்னிடத்தில் ஒருமுறை சரணடைந்துள்ளேன்” என்றும்-“உனக்கே நான் தொண்டு செய்ய வேண்டும்” என்றும் சொல்லி,-நீ கடற்கரையில் விபீஷணன் சரணடைய வந்த ஸமயத்தில் செய்த சபதத்தை நினைக்கும் நான், உன்னுடைய கருணையைப் பெறத் தகுந்தவன்; தேவரீருடைய சபதம் என் ஒருவனைத் தவிர்த்தோ?

நநு நாத-ஸ்வாமிந்
அஹம் ஸக்ருதேவ பிரபன்னஸ் இதி –நான் ஒரு கால் பிரபத்தி பண்ணினவன் என்றும்
அஹம் தவ அஸ்மி இதி ச -நான் உனக்கே உரிமைப்பட்டு இருக்கிறேன் என்றும் சொல்லிக் கொண்டு
யாசமாநஸ் அஹம் -கைங்கர்ய புருஷார்த்தத்தைப் பிரார்திக்கிற அடியேன்
தவ ஸ்மரத பிரதிஜ்ஞாம்–அன்று நீ கடற்கரையில் ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்குப் பண்ணின ப்ரதிஜ்ஜையைத் திரு உள்ளத்திலே கொண்டு இருக்கிற உனக்கு
அநு கம்ப்ய –அருள் புரிய அறியேன் –
மதேக வர்ஜம் கிம் இதம் வ்ரதம் தே–உன்னுடைய இந்த விரதம் என் ஒருவனைத் தவிர்த்ததோ
சர்வ சாதாரணமான ப்ரதிஜ்ஜை பொய்யோ
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே –ஸக்ருத் பிரபதனம் பண்ணினேன்-கதா அஹம் ஐகாந்திக நித்ய கிங்கர ப்ரஹர்ஷயிஷ்யாமி -என்று-தவாஸ்மீதி யாசநனும் பண்ணினேன் -ப்ராப்ய அபேஷையும் பண்ணினேன் –-அபயம் ததாமி ப்ரதிஜ்ஜை பலிக்க வேண்டியது அன்றோ –

நநநு பிரபன்னஸ் –-ஸ்க்ருதேவ -என்றத்தை ஸ்மரிக்கிறார்–க்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே -அபயம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வ்ரதம் மம ஸக்ருதேவ -என்றது –-சஹசைவஉடனேயே -என்று ஆழ்வான் நிர்வஹிக்கும் –-அநாதி காலம் சம்சரித்துப் போந்த இவன் ஒரு ஜன்மம் எல்லாம் ப்ரபத்தியை அனுசந்தித்தால் தான் -ஸ்க்ருத் -என்கைக்குப் போருமோ -என்பர் எம்பார் –-பகவத் ப்ரபாவத்தைப் பார்த்தால் ஒரு காலுக்கு மேல் மிகை – ப்ராப்ய ருசி ப்ராப்தி அளவும் அனுவர்த்திக்கும் -என்பர் பட்டர் நாத –ஒரு கால் பண்ணின பிரபத்தி அமைகிறது வகுத்த நாதன் ஆகையாலே – ஆபி முக்யம் மாத்ரமே அமைந்து இருக்கிறது – இழவு பேறு தன்னதான குடல் துடக்கு – அசரண்ய விஷயத்தில் ஆர்த்த பிரபத்திக்கும் பலம் பாஷிதம் – வகுத்த விஷயத்தில் த்ருப்த பிரபத்திக்கும் பல வ்யாப்தி யுண்டு – தவாஸ்மீதி ச யாசமாந -அஹம் தவாஸ்மி-பிரத்யக் வஸ்து வானது கிஞ்சித் கரித்துத் தன சத்தையை லபிக்க வேணும் என்று யாசிக்கை – உத்தார்த்த பிரக்ரியையால் -த்வயம் உத்தரார்தம் -கைங்கர்யத்தை பிரார்திக்கை –த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே -என்று என்னுடைய வெறுமையை முன்னிட்டுக் கொண்டு பிரபத்தி பண்ணினேன் –-ஐ காந்திக நித்ய கிங்கர ப்ரஹர்ஷயிஷ்யாமி -என்று ப்ராப்ய அபேஷையும் பண்ணினேன் –இரண்டு பதத்தாலும் பக்தி பிரபத்திகள் இரண்டிலும் அதிகரித்த அதிகாரிகள் இருவரையும் சொல்லுகிறது -என்பாரும் உண்டு-தவா நுகம்ப்ய ஸ்மரத பிரதிஜ்ஞாம் –
ஏதத் வ்ரதம் மம
-என்று கடல் கரையில் பண்ணின பிரதிஜ்ஞையை ஸ்மரியா நின்று கொண்டு
தேவருக்கு அனுக்ராஹ்யன் –மதே கவர்ஜம் கிமிதம் வ்ரதம் தே – சர்வ சாதாரண பூதரான தேவர் உடைய
அசாதாராண இந்த சங்கல்பம் என்னை ஒழிந்து இருக்குமோ –-கிம் ஷேப –-இன்னானை ஒழிய -என்று விசேஷித்த தாகில் அன்றோ-எனக்கு இழக்க வேண்டுவது-தேவர் சத்ய சங்கல்பராகையால் என்னை ரஷித்து அருள வேணும் –என்கை –(தத்‌ ப்‌ ரூஹி வசநம்‌ தே,வி ! ராஜ்ஞோ யத,பி காங்க்ஷிதம்‌ | கரிஷ்யே ப்ரதிஜாநே ச ராமோ த்‌,விர்‌ நாபியாஷதே ॥ [அம்மா। அரசர்‌ விரும்பிய தான அந்த வசனத்தைச்‌ சொல்லுவாயாக, அப்படியே செய்கிறேன்‌; ப்ரதிஜ்ஞையும்‌ செய்கிறேன்‌. ராமன்‌ இரண்டு வித,மாகப்‌ பேசமாட்டான்‌)

ஒரு முறை யுனக்கு அடைக்கலம் புகுந்து எனக்கே யான
யுரிமையை யுடையேனாக வேண்டு நான் சபதம் முன்னி
யருளு நின்னருளுக்கு இலக்கா வாகுவன் நாத னினில்
விரதம் என் ஒருவனைத் தான் விலக்கியே ஒழிக்கும் கொலோ
–64-ஏ நாத ஒரு தரம் உனக்கு அடைக்கலம் புகுந்து உனக்கே சேஷபூதன் ஆகின்றேன் என்று பிரார்த்திக்கும் அடியேன் தென் கடல் கரையில் செய்து அருளிய ப்ரதிஜ்ஜையை நினைத்து உன் கிருபைக்குப் பாத்திரம் ஆகிறேன்-இப்படிப்பட்ட உன் ஸங்கல்பம் அடியேன் ஒருவனை மாத்ரம் விலக்கி ஒழித்து விடுமோ -ஒருக்காலும் ஒழியாது அன்றோ –

ஸ்தோத்ரம் -65-அவதாரிகை –ராமோ த்விர் நாபி பாஷதே-என்கிற சங்கல்பத்தை விட்டீரே யாகிலும்
ஸ்ரீ பெரிய முதலியாரோடு வித்யையாலும் ஜன்மத்தாலும் உண்டான சம்பந்தத்தையே பார்த்து அருளி –
என்னுடைய நன்மை தீமைகளைப் பாராதே விஷயீ கரிக்க வேணும்
-என்ன அதுக்குக் கண்ணழிவு இல்லாமையாலே அப்படிச் செய்கிறோம் -என்று ஈஸ்வரன் அனுமதி பண்ண தாம் அனுமதி பெற்றாராய்
ஸ்தோத்ரம் தலைக் கட்டுகிறது –

அக்ருத்ரிம த்வச் சரணார விந்த
ப்ரேம ப்ரகர்ஷாவதி மாத்மவந்தம்
பிதாமஹம் நாத முநிம் விலோக்ய
ப்ரஸீத மத் வ்ருத்தம சிந்தயித்வா
–65-

எம்பெருமானே! என்னுடைய நடத்தையைக் கருதாமல், உன் திருவடிகளில் இயற்கையான அன்பில் சிறந்தவரான, தன் ஸ்வரூபத்தை உணர்ந்தவரான, என்னுடைய பாட்டனாரான ஸ்ரீமந் நாதமுனிகளைப் பார்த்து என்னை மன்னித்தருள வேண்டும்.

மத் வ்ருத்தம் –என்னுடைய நடவடிக்கையை
அசிந்தயித்வா–கணிசியாமல்
அக்ருத்ரிம த்வச் சரணார விந்த ப்ரேம ப்ரகர்ஷ அவதிதம் -உனது திருவடித் தாமரையில் உண்மையாக
உண்டான பரம பக்திக்கு எல்லை நிலமாய் இருப்பவரும்
ஆத்மவந்தம்–ஆத்ம ஸ்வரூபத்தை உள்ளபடி உணர்ந்தவரும் -ஜிதேந்த்ரியர் -சத்தை பெற்றவர்
பிதாமஹம் நாத முநிம் -எனக்குப் பாட்டனாருமாகிய ஸ்ரீ மந் நாத முனிகளை–-ஸ்ரீ ஈஸ்வர பட்டரது திருக்குமாரர் நம் ஆளவந்தார்
விலோக்ய–கடாக்ஷித்து
ப்ரஸீத –அடியேனை அனுக்ரஹித்து அருளாய்

அக்ருத்ரிம – க்ரியயா நிர்வ்ருத்த க்ருத்ரிம தத் ரஹித அக்ருத்ரிம ஸ்வாபாவிக -இத்யர்த்த –-ஒரு செய்கையால் உண்டாக்கப் பட்டது க்ருத்ரிமம் -செயற்கை அப்படி அற்றது அக்ருத்ரிமம்-இயற்கையானது –-குலம் தானே யோகி குலம் ஆகையாலே நை சர்க்கிகம் -என்கை – மெய்யான ப்ரேமம் -என்னவுமாம் –தவச் –ப்ராப்த சேஷியான உன்னுடைய-சரணார விந்த –ஆஸ்ரிதருக்கு இழியும் துறையை போக்யமான திருவடிகளை –ப்ரேம ப்ரகர்ஷாவதிம்--ப்ரேமாதிஸய ஸீமா பூமி யானவர்
நமக்கு இதர விஷயங்களில் ப்ரேமம் எல்லாம் இவர்க்கு வகுத்த விஷயத்திலே இறே இருப்பது – மாத்மவந்தம் – பகவத் சேஷத்வம் ஸ்வரூமாகவே ஆத்மா யாதாம்ய ஜ்ஞானம் உடையவர் -என்கை –
தநவந்தம் -என்னுமா போலே –பிதாமஹம் நாத முநிம் –-குடல் துடக்கை உடையராய் பகவத் ஜ்ஞான நிதியாய் உள்ளவரை –விலோக்ய – கடாஷித்து-ப்ரஸீத – அபராதங்களைப் பொறுத்து அருள வேணும் – மத் வ்ருத்தம சிந்தயித்வா – அஸ்த் கர்மத்தை விஸ்மரிக்கக் கடவராக வேணும் -என்கை –
மத் வ்ருத்தம் -என்று சத் கர்மத்தை நினைக்கிறது –-வ்ருத்தவான் என்றால் சத் கர்ம யுக்தனை இறே சொல்லுகிறது –-ஸ்வ கதமான வற்றை அநாதரித்து-பெரிய முதலியார் சம்பந்தம் எனக்குத் தஞ்சமாக வேணும் என்று பிரார்த்தித்து ஸ்தோத்ரத்தைத் தலைக் கட்டுகிறார் –(பிதாமஹத்வம் வித்யையாலும் ஜென்மத்தாலும் –ஸ்ரீ ஈஸ்வர பட்டாழ்வார் இவர் திருத் தந்தை – )

(த்வச்சரணாரவிந்த,) இவ்வாத்மாவுக்கு வகுத்த தேவர்‌ திருவடித்தாமரைகளிலே.
(ப்ரேம ப்ரகர்ஷாவதி,ம்‌) பக்த்யுத்‌ கர்ஷத்துக்கு அவதி,யாயுள்ளவரை. பரபக்தியுக்தரா யிருக்கை. அநபாயினியான ப்ரீதி ஸம்ஸாரிகளுக்கு ஸப்‌தாதி,களிலே; இவர்க்கு இவ் விஷயத்திலே யிறே.
(ஆத்ம வந்தம்‌) ப.கவச் சேஷதைக ரஸராயுள்ளவரை.
மேல்‌ ப்ரேம ப்ரகர்ஷத்துக்கு அடியா ன ஆத்ம யாதாத்ம்ய ஜ்ஞான முடையவரென் கை.
(பிதாமஹம்‌) .“*வித்‌,யயா ஜந்மநா ச ”,
(நாதமுநிம்‌
) ஸ்ரீரங்க நாதரென்‌ற திருநாமத்தை உடையவராய்‌, பகவத்‌,ஜ்ஞாந நிதியாயுள்ளவரை.
(விலோக்ய ப்ர ஷீத;) அவரைப்‌ பார்த்து என்‌ அபராதங்களைப்‌ பொறுத்‌தருள வேணும்‌.
(மத்‌,வ்ருத்தமசிந்தமித்வா) அஸத் கர்மத்தை விஸ்மரித்தவோ பாதி ஸத் கர்மத்தையும்‌ சிந்தியாதே, அவரைப்‌ பார்த்து ப்ரஸந்ராக வேணுமென்கை, “மத்‌,வ்ருத்தம்‌”” என்று ஸத் கர்மத்தை நினைக்கிறது. “வ்ருத்த வாந்‌‘ என்றால்‌ ஸத்கர்ம யுக்தனை யிறே சொல்லுகிறது. ஸ்வகதமான வற்றை அநாதரித்து பெரிய முதலியாரோட்டை ஸம்பந்தத்தையே பார்த்து ரக்ஷித்தருள வேணும்

இயற்கையில் இசைந்து இலங்கு நின் மலரடியின் பக்தி
வியப்பினுக்கு எல்லையாம் என் வித்தகப் பாட்டனாராம்
நயப்புறும் ஸ்ரீ மன் நாத முனிகளைக் கடைக் கணித்து என்
கயப்புறும் காதை நோக்காக் கனிவுடன் அருளுவாயே
–65-இயற்கையினாலேயே யுண்டான உன் திருவடிக்கண் உற்ற பக்தியின் விசேஷத்துக்கு எல்லை போன்றவரும்-ஆத்ம ஞானம் யுடையவரும் -ஜென்மத்தாலும் ஞானத்தாலும் எனக்குப் பாட்டனாருமான-ஸ்ரீ மன் நாத முனிகளைக் கடாக்ஷித்து அடியேனுடைய கைப்பு உண்டாக்கும் ஹீன சரித்திரங்களைப் பாராது

ஸ்தோத்ரம் தன்னில்‌ செய்ததாகிறது:– முதலிட்டு அஞ்சு ஸ்லோகத்தாலே பகவத்‌, விஷயத்தில்‌ இழிகைக்கு யோக்யனாக்கின ஆசார்யனை உபகார ஸ்ம்ருதியாலே ஸரணம்‌ புக்கு,
அநந்தரம்‌ நாலு ஸ்லோகத்தாலே பகவத்‌, விஷயத்திலே இழிந்து, தத் ப்ரப௱வத்தாலே ஸ்தோத்ரா க்ஷேப ஸமாதானத்தைப்‌ பண்ணி,
நா வேஷஸே’–தொடங்கி *த்வதராஸ்ரிதாநாம்‌’ அறுதியாக ஸரண்ய ப்ரபாவத்தைச்‌ சொல்லி,
நமோ நம:விலே அந்த ப்ரபாவத்துக்குத்‌ தோற்றுத்‌ திருவடிகளிலே விழுந்து,
ந த,ர்ம நிஷ்டோஸ்மி என்று தொட்ங்கி *தவாம்ருதஸ்யந்திநி’யளவும்‌ வெறு மையை முன்னிட்டு ஸரணம்‌ புக்கு, ஸரணாகதனுக்கு ஸம்பாவிதமான ஸ்வ பாவங்களைச்‌ சொல்லி,
த்வதங்க்ரி தொடங்கி இரண்டு ஸ்லோகத்தாலே, “மநோ வாக் காயங்கள்‌ எல்லாவற்றாலும்‌ ஸரணம்‌ புக வேண்டா; காயிகமாதல்‌ மானஸமாதல்‌ அமையும்‌ அபிமத ஸித்‌திக்கு” என்று சொல்லி,
*விலாஸ தொடங்கி பவந்தம்‌’ முடிவாக ப்ராப்யத்தை ப்ரார்த்தித்து,
தாம்‌ ப்ரார்த்தித்தபோதே ப்ராப்யம்‌ ஸித்தியாமையாலே ஸூரி போக்யமான விஷயத்தை நித்ய ஸம்‌ஸாரியான நான்‌ ஆசைப்படக் கடவேனோ?” என்று தம்மை “திகஸூசிம்‌’ என்று நிந்தித்து,
பின்பு தம்முடைய ருசியாலே, “அயோக்யதாஹேதுவான பாபத்தையும்‌ தேவருடைய க்ருபையாலே போக்கி யருள வேணும்‌’ என்று தாம்‌ பண்ணின ப்ரபத்தியை ஸ்மரிப்பித்து,
“அபராத, ஸஹஸ்ரவிலே அபேஷித்து.
*அவிவேக’ என்‌று தொடங்கி மூன்று ஸ்லோகத்தாலே
“தேவர்‌ க்ருபைக்கும்‌ ஆகாதாருண்டோ?” என்று சொல்லி,
மேல்‌ இரண்டு ஸ்லோகத்‌ தாலே ஸ்வ ஸ்வரூப யாதாத்ம்யத்தையும்‌,
அவபோதி,த” விலே பரபக்தியையும்‌ அபேக்ஷித்து,
மேல்‌ இரண்டு ஸ்லோகத்தாலே அப் புருஷார்த்தத்தில்‌ சரமாவதியான ததீய ஸேஷத்வத்தை ப்ரார்த்தி,த்து,
மேல்‌ ஒரு ஸ்லோகத்‌ தாலே *“ஸேஷத்வ விரோதிகளைப்‌ போக்கித்‌ தந்தருள வேணும்‌ என்று அபேக்ஷித்து,
மேல்‌ மூன்று ஸ்லோகத்‌தாலே “இப்படி இச்சிக்கிற தான்‌ அஸூபாஸ்பதன்‌; இச்சைதானும்‌ போட்கனானாலும்‌ தேவர்‌ க்ருபாதி,குணங்களாலே அஸூபத்தைப்‌ போக்கி, நிருபாதிக ஸம்பந்தாத்‌ தாலே இச்சையையும்‌ பிறப்பிக்கை தேவர்க்கே பரம்‌” என்று, மேல்‌ இரண்டு ஸ்லோகத்தாலே ‘விலக்ஷண ஸந்தானத்தில்‌ ஜன்மமும்‌, பாப ப்ராஸூர்யத்தாலே அகிஞ்சித்கரம்‌” என்று,
மேல்‌ இரண்டு ஸ்லோகத்தாலே,நான்‌ பண்ணின ப்ரபத்தியை நினைத்து, இப் பாபத்தை தேவருடைய க்ஷ்மைக்கு விஷயமாக்கவேணும்‌’ என்று ௮பேக்ஷித்து, “நான்‌ பண்ணின ப்ரபத்தியை அநாதரிக்கிலும்‌, ப்ரபந்ந விஷயமாகப் பண்ணின ப்ரதிஜ்ஞையை அநாதரிக்கிலும்‌, பெரிய முதலியார்‌ பக்கல்‌ தேவர்க்கு உண்டான ராகத்தை விடவொண்ணாதிறே; தத்‌ ஸம்பந்த,த்தைப்‌ பார்த்து, என்னுடைய நன்மை தீமைகளைப்‌ பாராதே ரக்ஷித் தருள வேணும்‌’ என்று முடிக்கிறார் –

———————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்- வியாக்யான தொகுப்புக்கள்–ஸ்லோகங்கள் -1-30-

August 28, 2026

யத் பதாம் போருஹத் யாநவித் வஸ்தா சேஷ கல்மஷ
வஸ்து தாமுபயாதோ அஹம் யாமுநேயம் நமாமி தம்
-எவர் உடைய திருவடித் தாமரையை தியானிப்பதால் எல்லா பாபங்களும் அழியப் பெற்று அடியேன் ஒரு பொருள் ஆனேனோ அத்தகைய யாமுனாசார்யரை வணங்குகிறேன் –

ஸ்வாதயன் நிஹா சர்வேஷாம் த்ரய்யந் தார்த்தம் ஸூ துர் க்ரஹம்
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்திர தம் வந்தே யாமுநாஹ் வயம்-

ஸ்வாதயன்-அனுபவத்திக் கொண்டே –
யன் ப்ரத்யயம் -அனுபவிப்பித்து-
இஹ -இந்த காலத்தில் -இத்தைச் சொல்லும் பொழுது -இதில் –
சர்வேஷாம்-சர்வாதிகாரம் இந்த ஸ்தோத்ரம் -ஸ்ரத்தையே வேண்டுவது
ஸூ துர்க் ரஹம்–த்ரய்யந் தார்த்தம்-அறிவரிய வேதாந்தார்த்தங்களை
ஸ்தோத்ர யாமாஸ-ஸ்தோத்ர ரூபமாக வெளியிட்டு அருளினாரோ
யோகீந்திர-எந்த யோகி ஸ்ரேஷ்டர்–எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவனான ஆளவந்தார் –

இந்த ஸ்தோத்ர ரத்னத்தின் ஒவ் ஒரு ஸ்லோகமும் வேதாந்தப் பொருளைகளையே விளக்கி அருளும் பண்டிதரோடு பாமரர்களோடு வாசியற மதுரமாக -போக்யமாக -உபநிஷத்துக்கள் பொருள்களை அருளிச் செய்த எதிகட்க்கு இறைவன் யமுனைத் துறைவனை வணங்குகிறேன்-யோகிகளுக்குள் சிறந்தவரும், புரிந்து கொள்ள அரிதான வேதாந்த அர்த்தங்களை எல்லோரும் புரிந்து கொள்ளும்படி ஸ்தோத்ரங்களாக அருளிச் செய்தவருமான ஸ்ரீ ஆளவந்தாரை வணங்குகிறேன். என்கிறது இந்த தனியன்

நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம
நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம
–அஷ்டாக்ஷர மந்த்ரம் போல் இதுவே-ஆதார அதிசயத்தாலே ஸ்ரீ ஆளவந்தாருக்கு நமஸ்காரம் என்று பலகாலும் சொல்லி வணங்குவது-ஸ்ரீ ஆளவந்தாரை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன். -என்னால் அவரை வணங்குவதை நிறுத்த முடியவில்லை.-

ஸ்ரீமத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லாபஸ் ஸ்ரீ தர்ஸ்சதா –

அபயப்ரதா நாமா நமஸ் மதகுரு மஹம் பஜே
யத் கடாஷா தயம் ஜந்துர புநர் ஜன்மதாம் கத-

அவதாரிகை –
ஸ்ரீ சர்வேஸ்வரன் ஆழ்வாருக்கு தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை மயர்வற மதிநலம் அருளினான் -என்கிறபடியே நிர்ஹேதுக கிருபையாலே காட்டிக் கொடுக்க –கொடுத்த ஜ்ஞானம் பக்தி ரூபா பன்ன ஜ்ஞானம் ஆகையாலே பரபக்தி யுக்தராய்க் கொண்டு பகவத் குண அனுபவத்தை பண்ணிக் கொண்டு அதினுடைய விபாக தசையான பரஜ்ஞானம் பிறந்து -அதடியாக பரம பக்தி பிறந்து-அத்தாலே – ஏஷ சம்ப்ரசாதே அஸ்மா சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதிரூப சம்பாத்திய ஸ்வேன ரூபேணாபி நிஷ்பத்யதே –(இந்த ஜீவன்‌, இந்த ஸாரீரத்திலிருக்து கிளம்பி, பரஞ்சோதியான நாராயணனை அடைந்து, ஸ்வரூப மலர்ச்சி பெறுகிறான்)என்றும்-ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்ஜன பரமம் சாம்யம் உபைதி –(பரமபுருஷனே ஸாக்ஷாத்கரித்தவுடன்‌ ப்‌ரஹ்மஜ்ஞானி யானவன்‌, புண்ய பாபங்களை விட்டு, ப்ரக்ருதி ஸம்பந்த மற்றவனாய்‌, (புருஷோத்தமனுடன்‌) மேலான ஸாம்யத்தை. அடைகிறான்‌)என்றும்-தம்மையே ஒக்க அருள் செய்வர் -திருவாய் மொழி -11-8-5- என்றும் சொல்லுகிறபடியே ஸ்வ ஸ்வரூபத்தைப் பெற்று –பார்யைக்கு அங்க பூஷணம் போலே-வழு விலா அடிமை செய்ய வேண்டும் –என்றும்-அவா அற்று வீடு பெற்ற -என்றும் சொல்லுகிறபடியே ப்ராப்தி பலமான கைங்கர்யத்தைப் பெற்ற ஸ்ரீ ஆழ்வார் உடைய திராவிட உபநிஷத் ரஹஸ்யத்தை ஸ்ரீ பெரிய முதலியார் ஸ்ரீ ஆழ்வார் உடைய ப்ரசாதத்தாலே லபித்தது

பின்பு ஆச்சார்ய உபதேச க்ரமத்தாலே ஆளவந்தார் அந்த திராவிட உபநிஷத் ரஹச்ய அர்த்தங்களை லபித்து-அத்தை தாம் அனுபவித்து-அவ் வனுபவத்தால் வந்த ப்ரீதி உள் அடங்காமலே பரீவாஹ அபேஷை பிறக்கையாலும்-சம்சாரிகள் துர்க்கதி கண்டு இவர்கள் இத்தை இழக்க ஒண்ணாது என்னும் கிருபையாலும்-சகல உபநிஷத் ரகஸ்யமாய் – துர்ஜ்ஞேய மான அர்த்தத்தை சர்வரும் அறியும்படியாக இவர் ஸ்தோத்ரமாக வெளி இடுகிறார் –

பகவத் வ்யதிரிக்த விஷயங்களில் ஸ்தோத்ரம் ஆவது –ஸ்தோத்ரம் நாம கிமாம நந்தி -என்றும்(ஸ்தோத்ரம் நாம கிம் ஆம நந்தி கவயோ யத்யந்ய தீயாந் குணாந்
அந் யத்ர த்வஸதோதி ரோப்ய பணிதஸ் சா தர்ஹி வந்த்யா த்வயி
சம்யக் சத்ய குணாபி வர்ண நமதோ ப்ரூயுஸ் கதம் தாத்ருசீ
வாக் வாசஸ்பதி நாபி சக்ய ரஸநா த்வத் ஸத் குண அர்ணோ நிதவ்–ஸ்ரீ ஸ்தவம்-3-[ஸ்தோத்ரமென்று கவிகள்‌ எதைச்‌ சொல்லுகிறார்கள்‌ ? ஒருவனுடைய குணங்களை அவைகளில்லாதவனான மற்‌ றொருவனிடம்‌ ஏறிட்டுச் சொல்லுவதே (ஸ்தோத்ரம்‌ எனில்‌,–அம்மாதிரியான ஸ்தோத்ரம்‌ உன்னிடம்‌ முடியாது; உள்ள குணங்களை நன்றாக வர்ணிப்பதே (ஸ்தோத்‌ரம்‌) என்று சொல்லுவார்களாகில்‌-—உன்னுடைய கல்‌யாண குணக்கடல்‌ விஷயத்தில்‌ ப்‌ருஹஸ்பதியாலும்‌ அப்ப டிப்பட்ட ஸ்தோத்ரம்‌ செய்ய எப்படி முடியும்‌?])என்றும்

அந்யத்ராதத் குணோக்தி -(அந் யத்ர அதத் குண யுக்தி பகவதி ந தத் உத்கர்ஷ ஸுவ்ர்யை பரேஷாம்
ஸ்துத் யத்வாத் யாவத் அர்த்தா பணிதி அபி ததா தஸ்ய நிஸ்ஸீமகத்வாத்
ஆம்நாயாநாம் அசீம் நாம் அபி ஹரி விபவே வர்ஷ பிந்தோ இவ அப்தவ்
சம்பந்தாத் ஸ்வாத்ம லாப நது கபளநத ஸ்தோது ஏவம் ந கிம் மே –1-19–[இல்லாத விஷயங்களை ஏறிட்டுச்சொல்லுவது ப,க,வானைத்‌ தவிர மற்றவர்கள்‌ விஷயத்தில்‌; ப,க,வத்‌,விஷயத்திலல்ல; அவனுடைய பெருமைகளைத்‌ திருடி மற்றவர்களைத்‌ துதிக்க வேண்டியிருக்கிறபடியால்‌, உள்ள விஷயங்களைச்‌ சொல்லு வதும்‌ (ப,க,வான்‌ விஷயத்தில்‌) முடியாது; பகவானுடைய பெருமைகள்‌ எல்லையற்றவையாகையா )என்றும் இல்லாதவற்றை ஏறிட்டுச் சொல்லுதல் -உள்ளத்தை அடையச் சொல்லுதலாய் இருக்க –

எதோ வாசோ நிவர்த்தந்தே -(யதோ வாசோ நிவர்த்தந்தே | அப்ராப்ய மநஸா ஸஹ। ஆநந்தம்‌ ப்‌,ரஹ்மணோ வித்‌ வாந்‌। ந பி,பே,தி குதங்சநேதி ॥-எந்த ப்ஏஹ்மத்தினிடமிருந்து, மனத்துடன்‌ கூடிய வாக்‌ குக்கள்‌, (அதை) அளவிட்டறியாமல்‌ திரும்புகின்‌றனவோ, அந்தப்‌ பரமாத்மாவின்‌ ஆநந்த,த்தை அறிந்தவன்‌ எதனிட மும்‌ பயப்படமாட்டா)என்றும்-

அவிஜ்ஞாதம் விஜாநதாம் –(யஸ்யாமதம்‌ தஸ்ய மதம்‌ மதம்‌ யஸ்ய ந வேத, ஸ:। அவிஜ்ஞாதம்‌ விஜாநதாம்‌ விஜ்ஞாதமவிஜாநதாம்‌ ॥ [எவனுக்கு ப்‌,ரஹ்மம்‌ (அளவிட்டு) அறியப்படவில்லையோ, அவனுக்கு (அது) அறியப்பட்டதாகிறது. எவனுக்கு (ப்ரஹ்‌ மம்‌) அறியப்பட்டதாகிறதோ, அவன்‌ (அதை) அறிய வில்லை. (அளவிட்டு) அறிந்தவர்களுக்கு அறியப்படாத தாகவும்‌, (அளவிட்டு) அறியாதவர்களுக்கு அறியப்பட்ட தாகவுமிருக்கிறது (ப்‌,ரஹ்மம்‌)என்றும்

பூதார்த்தே கதமா ஸ்துதி -(உண்மையாக உள்ள விஷயத்தில்‌ ஸ்துதி எப்படி முடியும்‌?)என்றும்-

ந சமர்த்தாஸ் ஸூ ராஸ் ஸ்தோதும் -(ந ஸமர்த்தராஸ்‌ ஸுரா: ஸ்தோதும்‌ த்வாமநந்யப வம்‌ விபு,ம்‌ [ஸர்வ வ்யாபியும்‌, ஒருவரிடத்திலிருந்தும்‌ உண்டாகாதவனுமான உன்னை ஸ்தோத்ரம்‌ செய்ய தேவர்களும்‌ ஸமர்த்த,ரல்லர்‌.)என்றும்-பரிச்சேதித்துப் பேச நிலம் அல்லாத பகவத் விஷயம் ஸ்துதி விஷயமான படி என் -என்னில்–அங்கனே இருந்த தாகிலும்

ஸ்தவயஸ் ஸ்தவ ப்ரிய -([ஸ்தோத்ரம்‌ செய்யத்தக்கவன்‌; ஸ்துதியை விரும்புபவ)என்று ஸ்துதி பிரியன் ஆகையாலும்–

ஏத்த ஏழுலகம் கொண்ட கோலக் கூத்தனை -திருவாய்மொழி -2-2-11- என்றும்-ஏத்த ஏத்த எங்கு எய்தும் -திருவாய்மொழி -4-3-10- என்றும்
ஸ்தோத்ர வ்யவஹாரம் உண்டாய்ப் போருகையாலும் இது ஒழிய வாசக சப்தம் இல்லாமையாலும்
இவ் விஷயத்திலும் ஸ்தோத்ரம் -என்னலாம்

அதவா –
தர்மார்த்த காம மோஷாக்யா புருஷார்த்தா உதாஹ்ருதா இதம் சதுஷ்டயம் -(தர்மார்த்தகாமமோக்ஷாக்யா:புருஷார்த்த உதராஹ்ருதா: இதம்‌ சதுஷ்டயம்‌ யஸ்மாத்‌ தஸ்மாத்‌ 8ம்‌ மிதம்‌ வச: ॥[தரர்மம்‌, அர்த்தம்‌, கர்மம்‌, மோக்ஷ்மென்று புருஷார்த்‌த;ங்கள்‌ சொல்லப்பட்டுள்ளன. இந்த நான்கும்‌ எவனிடத்திலிருந்து அடையப்படுகின்‌ றனவோ, அவனைக் குறித்து“அவனால்‌ என்ன ப்ரயோஜனம்‌?” என்னும்‌ இந்த வார்த்தை ஏன்‌ சொல்லப்படுகிறது)என்றும்
மன்னும் அறம் பொருள் இன்பம் வீடு -பெரிய திருமடல் -11- என்றும் சொல்லுகிறபடியே புருஷார்த்தம் நாலாய்-அவற்றில்-தர்மம் சாதன தயா புருஷார்த்தம் ஆகையாலும்-க்லேச சாத்தியம் ஆகையாலும் –அர்த்தம்-ஸ்வயம் புருஷார்த்தம் ஆனாலும் அஸ்திரிமாய் க்லேச சாத்தியம் ஆகையாலும் –
புருஷார்தங்களுக்கு சாதனம் ஆகையாலும்
காமம்-ஸ்வயம் புருஷார்த்தம் ஆனாலும் அல்ப அஸ்த்ரத்வா அநர்த்த அவஹத்வ பீபத் சாத்திய அநந்த தோஷ துஷ்டம் ஆகையாலும் –மோஷ சாஸ்த்ரத்திலே-மோஷ விரோதித்வேன நிந்திதமாய் இருக்கையாலும்-ஸ்ரீ ஆளவந்தார் அவற்றை விட்டு மோஷத்திலும் ஆத்ம பிராப்தி-துக்கேன சிரகால சாத்தியம் ஆகையாலும்-பகவத் அனுபவத்தைப் பற்ற அல்பம் ஆகையாலும் -அதையும் விட்டு–பகவத் பிராப்திக்கு உக்த தோஷங்கள் இன்றி இருக்கும் அளவு அன்றிக்கே-நிரஸ்தாதி சயாஹ்லாத ஸூக பாவைக லஷணா -என்கிறபடியே நிரதிசய ஸூக ரூபமாய்
ஏஷ ஹேவா நந்தயாதி
-(ததூஸ்ய த்ரிவித,ஸ்யா$பி து;க்கணாதஸ்ய வை மம। கர்ப்ப ஜந்மஜராத்‌,யேஷ- ஸ்தராநேஷு ப்ரப,விஷ்யத: ॥ நிரஸ்தாதிய யாஹ்லாத; ஸுக,ப ஈவைக லக்ஷணு | பேஷஜம்‌ ப,சு,வத் ப்ராப்திரேகாந்தாத்யந்திகீ மதா-[கர்ப்ப,ம்‌, பிறப்பு, கிழத்தனம்‌ முதலிய அவஸ்தை,களில்‌ உழலும்‌ என்னுடைய (ஆத்‌,யாத்மிகம்‌, ஆதி,தைவிகம்‌ ஆதி, பெனதிகம்‌ என்னும்‌) மூன்று விதமான து;க்க ஸமூஹத்‌ திற்கு, தனக்கு மேலில்லாத ஆகந்த,ரூபமான ஸுகமா யிருக்கையே லக்ஷ்ணமாக உடையதும்‌, துன்பமற்றதும்‌, முடிவற்றதுமான ப,கவத் ப்ராப்தியே மருந்தாக எண்ணப்‌ படுகிறது.,])என்றும்-பரமம் சாம்யம் உபைதி -என்றும்-தம்மையே ஒக்க அருள் செய்வர் -பெரிய திருமொழி -11-8-5- என்கிற படியே ஆஸ்ரிதர் தன்னைப் போலே ஆனந்திப்பிக்கக் கடவனாய்
தஸ்யாஹம் ஸூலப -(அநந்யசேதாஸ்‌ ஸததம்‌ யோ மாம்‌ ஸ்மரதி நித்யா:। தஸ்யா5ஹம்‌ ஸுலப,: பார்த்த, ! நித்யயுக்தஸ்ய யோ8,ந: ॥! [அர்ஜுனா! வேறொன்றிலும்‌ மனத்தைச்‌ செலுத்தாதவனாக, எவனொருவன்‌ தினந்தோறும்‌ எப்பொழுதும்‌ என்னை நினைக்‌கிறானோ, என்னுடைய நித்ய யோக,த்தில்‌ விருப்பமுள்ள யோகியாகிய அவனுக்கு நான்‌ ஸுலபனாகிறேன்)என்று அத்யந்த சாத்தியமாய் ப்ராப்த புருஷார்தமுமாய் இருக்கையாலே இதுவே புருஷார்த்தம் என்று அத்யவசித்து

அந்த பகவத் பிராப்தி ஆகிறதும்-ப்ரதான ஷேத்ரஜ்ஞபதிர் குணேச -([ப்ரக்ருதிக்கும்‌ ஜீவனுக்கும்‌ ஸ்வாமி; கல்யாணகுணங்களைஉடையவன்‌.])என்றும்-ஜ்ஞாஜ்ஜௌ தவா வஜா வீஸ நீ சௌ-([(பரமாத்மாவும்‌ ஜீவனும்‌) ஸர்வஜ்ஞனாகவும்‌, அஜ்ஞனாகவுமிருக்கிறார்கள்‌; ஈஸ்வரனாகவும்‌, அநீஸ்வரனாகவும்‌ இருக்‌கிறார்கள்‌)என்றும்-தமீஸ் வராணாம் பரமம் மகேஸ்வரம் ([ஈஸ்வரர்களுக்கும்‌ மேலான மஹேஸ்வரனான அவனை)-என்றும்-தாசோஹம் வாஸூ தேவஸ்ய -(தாஸோஹம்‌ வாஸுதே,வஸ்ய தேவதேவஸ்ய சார்ங்கிண சங்க, சக்ர கதா பாணேஸ்‌ த்ரைலோக்யஸ்யைக சஷுஷ[தேவதேவனும்‌, ஸார்ங்க,மென்னும்‌ வில்லை யுடையவனும்‌, சங்கம்‌, சக்ரம்‌, கதை; இவைகளைக்‌ கையிலே உடையவனும்‌, மூவுலகிற்கும்‌ ஓர்‌ கண்ணா யிருப்பவனுமான ‘ வாஸு தேவனுக்கு நான்‌ அடிமை.])என்றும்-தாச பூதாஸ் ஸ்வதஸ் சர்வே -(தாஸபூ,தாஸ்‌ ஸ்வதஸ்‌ ஸர்வே ஹ்யாத்மாந: பரமாத்மந: | [பரமாத்மாவுக்கு, எல்லா ஆத்மாக்களும்‌ இயற்கையாகவே அடிமைப் பட்டவர்களன்றோ)என்றும்-தாசோஹம் கோஸலேந்த்ரஸய -(தராஸோ5ஹம்‌ கோஸலேந்த்‌,ரஸ்ய ராமஸ்யா$க்லிஷ்டகர்மண: | ஹநுமாந்‌ மத்ருஸைந்யாநாம்‌ நிஹந்தா மாருதாத்மஜ: ॥ [கோஸலதேஸத்துக்கு அதிபதியும்‌, பெருங்காரியங்களையும்‌ எளிதாகச்‌ செய்து முடிப்பவனுமான ராமனுக்கு, ஸத்ரு ஸைன்யங்களை அழிப்பவனும்‌, வாயுவின்‌ புத்ரனும்‌, ஹனுமான்‌ என்னும்‌ பெயரை உடையவனுமான நான்‌ தாஸன்‌)என்றும்-யஸ் யாத்மா சரீரம் -(எந்தப் பரமாத்மாவுக்கு ஆத்மா ஸரீரமோ-யஸ்யாக்ஷரம்‌ ஸரீரம்‌ [எவனுக்கு ஜீவன்‌, ஸரீரமோ)என்றும்-அந்த ப்ரவிஷ்டச் சாஸ்தா ஜ்நாநாம் சர்வாத்மா -(ஸர்வாந்தர்யாமியான புருஷோத்தமன்‌ ஜனங்களை உள்‌ நுழைந்தவனாய்‌ நியமிக்கிறான்)என்றும்-பூ பிராணி நஸ் சர்வ ஏவ குஹா சயசய -(பூ: ப்ராணிநஸ்‌ ஸர்வ ஏவ கு,ஹாஸயஸ்ய அஹந்யமாநஸ்ய விகல்மஷஸ்ய[எல்லாப்‌ பிராணிகளும்‌, ஹ்ருதய குஹையில்‌ ஸயனித்‌திருப்பவனும்‌, அழியாதவனும்‌, தோஷமற்றவனுமான பரமாத்மாவுக்கு இருப்பிடம்‌)என்றும்-தாநி சர்வாணி தத்வபு -(யாநி மூர்த்தாந்யமூர்த்தாநி யாந்யத்ராந்யத்ர வா க்வூத்‌। ஸந்தி வை வஸ்துஜாதாநி தாநி ஸர்வாணி தத்‌,வபு: || [உருவமுள்ளவையாயும்‌, உருவமற்றவையாயும்‌, இங்கும்‌ எங்கும்‌ ஒரு சமயத்திலிருக்கும்‌ வஸ்‌து ஸமூஹங்களெல்லாம்‌அந்தப்‌ பரமாத்மாவுக்கு ஸரீரம்‌.)என்றும் –-ஜீவ பரர்களுக்கு அனன்யார்ஹ சேஷ சேஷி பாவேன சம்பந்தத்தைச் சொல்லி –

ஏன ஏன ததா கச்சதி -(யேந யேந ததா கச்ச,தி தேந தேந ஸஹ கச்சதி। தத்‌ யத; தருணவத்ஸா வத்ஸம்‌ வத்ஸோ வா மாதரம்‌ சராயா வா ஸத்வமநுக,ச்சே,த்‌ ததா ப்ரகாரம்‌ ॥ [இளங் கன்றையுடைய பசு கன்றையும்‌, கன்று பசுவைவும்‌ (அல்லது குழந்தை தாயையும்‌), நிழல்‌ பிராணியையும்‌ எப்படிப்‌ பின் தொடர்கின்றனவோ அப்படியே எப்படி எப்படிப்‌ பரம புருஷன்‌ செல்லுகிறானோ, அப்படி அப்‌படியே: (முக்தனும்‌) கூடப்போகிறா)என்றும்-சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா விபச்சிதா (முக்தன்‌ எல்லாக்‌ கல்யாண குணங்களையும்‌, ஸர்வஜ்ஞனான ப்‌ரஹ்மத்துடன்‌ கூட அனுப,விக்கிறா)-என்றும்
காமயே வைஷ்ணவத்வம் து சர்வ ஜன்ம ஸூ கேவலம் (ஜிதந்தே (1-13).)-என்றும்-ஒழிவில் காலம் எல்லாம் -இத்யாதிகளிலே ஸ்வரூப அனுரூபமான போகத்தை சொல்லுகையாலும்-பதி வ்ரதைக்கு பத்தி ஸூஸ்ருஷண்ம் போலே-சேஷ வஸ்துவுக்கு கைங்கர்யம் என்று அத்யவசித்து –இனி பேஷஜம் பகவத் பிராப்தி –என்று அவனே பிராப்யம் என்னுமதும் கைங்கர்ய பிரதி சம்பந்தி ஆகையாலே-ஸ்வேன ரூபேனே அபிநிஷ்பத்யதே-என்று ஸ்வ ஸ்வரூபத்தை ப்ராப்யம் என்கிறதும் கைங்கர்யத்துக்கு ஆஸ்ரயமாகை ஆகையாலே–சோஸ்த்வன பாரமாப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் -(ப,வாம்ஸ்து ஸஹ வைதே,ஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே ॥ அஹம்‌ ஸர்வம்‌ கரிஷ்யாமி ஜாக்‌ரதஸ்‌ ஸ்வபதஸ்ச தே -[நீர்‌ வைதேஹியுடன்‌ கூட மலைத் தாழ்வரைகளில்‌ விளையாடுவீர்‌; அடியேன்‌ நீர்‌ விழித்துக் கொண்டிருக்கும் போதும்‌, தூங்கும் போதும்‌ உமக்கு எல்லா அடிமைகளையும்‌ செய்‌வேன்‌.]
விஜ்ஞாந ஸாரதிர்‌ யஸ்து மந: ப்ரக்‌ரஹவாந்‌ நர: | ஸோத்‌வந: பாரமாப்நோதி தத்‌, விஷ்ணோ: பரமம்‌ பதம்‌ ॥ [எவனொருவன்‌ நல்ல ஞானத்தை ஸாரதியாகவும்‌, மனத்‌தைக்‌ கடிவாளமாகவும்‌ கொண்டிருக்கிறானோ, அவன்‌ ஸம்‌ஸாரத்திற்கு அக்கரையான விஷ்ணுவினுடைய பரம பதத்தை அடைகிறான்‌) என்று தேச விசேஷத்தை ப்ராப்யம் என்கிறதும் கைங்கர்ய வர்த்தகம் ஆகையாலே-நிஸ்தரந்தி மநீஷின -(ஜிதந்தே (1-4).)என்று சம்சார நிவ்ருத்தியை புருஷார்த்தம் என்கிறதும் கைங்கர்ய விரோதி யாகையாலே –இவை கைங்கர்ய உபயோகி அல்லாத அன்று-ந ஹி மேஜீவிதே நாரத்த (ந ஹி மே ஜீவிதேநார்த்தேோ நைவார்த்தைர்‌ ந ச பூஷணை: | வஸந்த்யா ராக்ஷஷீ மத்‌,யே விநா ராமம்‌ மஹாரத,ம்‌ ॥ [மஹா ரதனான ராமனை விட்டு ராக்ஷ்ஸிகள்‌ நடுவில்‌ வசிக்‌கும்‌ எனக்கு உயிரினால்‌ ப்ரயோஜனமில்லை; பொருள்களினால்‌ ப்ரயோஜனமில்லை; ஆபரணங்களால்‌ ப்ரயோஜன மில்லை)–மணிமாமை குறைவிலம் -உடம்பினால் குறைவிலம் -உயிரினால் குறைவிலம் -என்கையாலே அபுருஷார்த்தம்-

ததீய சேஷத்வத்தை புருஷார்த்தம் என்கிறதும் பதி வ்ரதைக்கு-பதியினுடைய ஆத்மாம்சத்திலும் குணாம்சத்திலும் சௌந்தர்ய விசிஷ்டமான தேகாம்சமே ப்ராப்யமாய் – அத்தாலே பாதி வ்ரதய ஹானி இல்லாதாப் போலே – இப்படி சகல சாஸ்திர தாத்பர்யமான புருஷார்த்தத்தை நிச்சயித்து–இதுக்கு உபாயம் பக்தி ப்ரபத்திகள்–என்று இரண்டாய்
அதில்
பக்தி யாவது -ப்ரஹ்ம விதாப் நோதி பரம்
-([ப்‌ ரஹ்மத்தை அறிபவன்‌ (தியானிப்பவன்‌)மேலான பலனை (ப்ரஹ்மத்தை) அடைகிறான்‌)என்றும்
ஆத்மாவா அரே த்ரஷ்டவ்யஸ் ஸ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாசிதவ்ய –([கேட்கத்தக்கதும்‌, நினைக்கத்தக்கதுமான ஆத்மா தியானிக்‌கத்தக்கது; பார்க்கத்தக்கது.])என்றும்
நாயமாத்மா ப்ரவச நேன லப்யோ ந மேதயா ந பஹூ நா ஸருநேன
யமேவைஷ வ்ருணுதே தேன லப்யஸ் தச்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்
-(இந்தப்‌ பரமாத்மா (பக்தியற்றற ஸ்ரவணத்தினாலும்‌, மனனத்தினாலும்‌, தியானத்தினாலும்‌ அடையத்தக்க வனல்லன்‌. எவனை இப்பரமபுருஷன்‌ வரிக்கிறனோ, அவனாலேயே அடையத்தக்கவன்‌; அவனுக்கு இந்தப்‌ பரமாத்மா தன்னுடைய திவ்ய மங்க,ள விக்ரஹத்தை (ஸ்வரூபத்தை) காட்டுகிறான்‌)என்றும்
பித்யதே ஹ்ருத யக் ரந்திஸ் சித் யந்தே சர்வ சம்சயா
ஷீ யந்தே சாஸ்ய கர்மாணி தஸ்மின் த்ருஷ்டே பராவரே –
(மேலானவர்களிலும்‌ மேலானவனான அந்தப்‌ பரமாத்மா பார்க்கப்பட்டவுடன்‌, இவனுடைய (ராகம்‌, த,வேஷம்‌ முதலிய) ஹ்ருதய க்ரந்தி,கள்‌ பிளக்கின்றன; எல்லா ஸம்மயங்களும்‌ சிதறுகின்‌றன; கர்மங்களும்‌ அழிகின்‌றன)என்றும்
பக்த்யா த்வ நன்யா சக்ய அஹம் ஏவம் விதோ அர்ஜுன
ஜ்ஞாதும் த்ரஷ்டும் ச தத்வேன ப்ரவேஷ்டும் ச பரந்தப
-(அர்ஜுனா! எதிரிகளை அழிப்பவனே! ஒரு பலனை எதிர்பாராத பக்தியினாலேயே இம் மாதிரியான நான்‌, உண்மையாக அறிவதற்கும்‌, பார்ப்பதற்கும்‌, நுழைவதற்கும்‌ தக்கவன்‌)ஸ்ரீ கீதை -11-54- என்றும்
சமஸ் சர்வேஷூ பூதேஷு மத் பக்திம் லபதே பராம் -(ஸர்வ ப்ராணிகளிடமும்‌ (பற்றற்றிருக்கும்‌ விஷயத்தில்‌) ஸமமாயிருப்பவன்‌ என்னிடம்‌ மேலான பக்தியை அடை கிறான்‌)ஸ்ரீ கீதை -18-54- என்றும்
வேதன த்யான உபாசன சப்த வாச்யமாய் பக்தி ரூபா பன்னமாய் தர்சன சமானாகாரமான ஜ்ஞான விசேஷம் பக்தி ஆகிறது –

அக்னி வித்ய அங்கிகையாய் கர்ம ஜ்ஞான சஹ க்ருதையுமாய் ஆகையாலே-அதிக்ருதாதி காரமாய்-விளம்பிய பல பிரதமுமாய்-பிரமாத சம்பாவனையும் உண்டாகையாலே –அவற்றை விட்டு–இந்த தோஷம் ஒன்றும் இன்றிக்கே-முமுஷூர் வை சரணம் அஹம் ப்ரபத்யே -(யோ ப்‌,ரஹ்மாணம்‌ வித,த,ாதி பூர்வம்‌ யோவை வேதாம்ஸ்ச ப்ரஹிணோதி தஸ்மை | தம்‌ ஹ தேவமாத்மபு,த்‌,தி,ப்ரஸாத,ம்‌ முமுஷூர் வை ஸரணமஹம்‌ ப்ரபத்‌,யே ॥| [எவன்‌ பிரமனை முன்‌ படைத்தானோ, எவன்‌ வேத,ங்களை யும்‌ அவனுக்கு உபதேஹித்தானோ, அப்படிப்பட்ட தேவனும்‌, தன்‌ விஷயமான ஞானத்தை ப்ரகாசிப்பிப்பவனுமான பரமபுருஷனே, மோக்ஷமடைய விரும்பும்‌ நான்‌ ஸரண மடைகிறேன்‌.])என்றும்-ந்யாச மாஹூர் மநீஷிணோ ப்ரஹ்மாணம்-(பெரியோர்கள்‌ பரமாத்மாவை ந்யாஸமென்று சொல்லு கிருர்கள்‌)என்றும்-ந்யாச இதி ப்ரஹ்மா -(ந்யாஸமென்பது ப்‌,ரஹ்மம்‌)என்றும் –-தஸ்மான் ந்யாச மேஷாம் தபஸா மதிரிக்த மாஹூ-(ஆகையால்‌ ந்யாஸத்தை (ஸரணாக,தியை) இந்தத்‌ தபஸ்‌ ஸுக்களுள்‌ மேலானதாகச்‌ சொல்லுகிறார்கள்‌)என்றும்-தஸ்மாதபி வத்யம் பிரபன்னம் ந ப்ரதி ப்ரயச்சதி -(தேவா வை யஜ்ஞாத்‌ ருத்ரமந்தராயந்‌ | ஸ ஆதித்யா நந்வாக்ரமத | தே த்‌,விதைவத்யாந்‌ ப்ராபத்‌,யந்த | தாந்‌ ந ப்ரதிப்ராயச்ச,ந்‌। தஸ்மாத;பி வத்யம்‌ ப்ரபந்நம்‌ ந ப்ரதிப்ரயச்ச,ந்தி ||[தேவர்கள்‌ யஜ்ஞத்தில்‌ ருத்ரனுக்கு ஹவிர்ப்பாகம்‌ கொடுக்க மறுத்தார்கள்‌; ருத்ரன்‌ தேவர்களைக்‌ கொல்லத்‌ தொடங்கினான்‌; அவர்கள்‌ அஸ்விநீ தேவதைகளை ஸரணம்‌ புகுந்தார்கள்‌; அஸ்விநீ தேவர்கள்‌ அவர்களைக்‌ காட்டிக்‌ கொடுக்கவில்லை; ஆகையால்‌ ஸரணமடைந்தவன்‌ கொல்லத்‌ தகுந்தவனாயிருந்தாலும்‌ அவனைக்‌ காட்டிக் கொடுப்பதில்லை)என்றும் –ச ப்ராதுஸ் சரனௌ காடம் நிபீட்ய ரகு நந்தன -(ஸ ப்ராதும்‌ சரணென காட்‌ நிபீட்‌ய ரகு,நந்த;ந:। ஸீதாமுவாசாதியமா ராக,வஞ்ச மஹா வ்ரதம்‌ ॥ [ரகு,குலத்தை உகப்பிப்பவனும்‌, மிகுந்த கீர்த்தியை உடைய வனுமான அந்த லக்ஷ்மணன்‌, தமையனின்‌ திருவடிகளை நன்றாகப்‌ பிடித்துக் கொண்டு ஸீதையையும்‌, (ஆஸ்ரித ஸம்‌ ரக்ஷணமான) பெரிய விரதத்தை யுடைய ராகவனையும்‌ பார்த்துச்‌ சொன்னான்‌.)என்றும்-சக்ருதேவ பிரபன்னாய -(ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே |அபயம்‌ ஸர்வபூ,தேப்‌,யோ ததாம் யேதத்‌, வ்ரதம்‌ மம।| [ஒரு தடவை ஸரணமடைந்தவன்‌ பொருட்டும்‌, “உனக்கு அடியேனாகிறேன்‌” என்று பிரார்த்திப்பவன்‌ பொருட்டும்‌, எல்லா ப்ராணிகளிடத்தினின்றும்‌ அபயமளிக்கிறேன்‌. இது எனக்கு விரதம்‌.])என்றும்-சோஹம் த்வாம் சரணமபாரம பிரமேயம் -(ஸோ$ஹம்‌ த்வாம்‌ ஸரணமபாரமப்ரமேயம்‌ ஸம்ப்ராப்த: பரமபதஹ்‌ யதோ ந இஞ்சித்‌ [எவனைக்‌ காட்டிலும்‌ மேலான ப்ராப்ய மில்லையோ அப்படிப்‌ பட்டவனும்‌, எல்லை யற்றவனும்‌, அளவிட முடியாதவனுமான உன்னை, இப்படிப்பட்ட நான்‌ ஸரணமடைந்தேன்‌.)என்றும்-சர்வாத்மனா யஸ் சரணம் சரண்யம் நாராயணம் லோக குரும் ப்ரபன்ன -(தேவர்ஷி பூ,தாப்தந்ருணாம்‌ பித்ரூணாம்‌ ந கிங்கரோ நாயம்‌ ருணீ ச ராஜந்‌। ஸர்வாத்மநா யமஸ் ஸரணம்‌ ஸரண்யம்‌ நாராயணம்‌ லோக கு,ரும்‌ ப்ரபந்ந: ॥1 [அரசனே! எவனொருவன்‌, ஸரணமடையத்‌ தகுந்தவனும்‌, லோக கு,ருவுமான நாராயணனை எல்லா வித,த்திலும்‌ ஸ்ரண மடைந்தானோ, அவன்‌ தேவர்களுக்கும்‌, ரிஷிகளுக்கும்‌, பூதங்களுக்கும்‌, பந்துக்களுக்கும்‌, பித்ருக்களுக்கும்‌ அடிமை யல்லன்‌; கடன் பட்டவனுமல்லன்‌)என்றும்-மாம் ஏவ எ ப்ரபத்யந்தே -(மாமேவ யே ப்ரபத்‌,யந்தே மாயாமேதாம்‌ தரந்தி தே [எவர்கள்‌ என்னையே ஸரணமடைகிறார்களோ அவர்கள்‌ இந்த ப்ரக்ருதியைத்‌ தாண்டுகிறார்க)என்றும்-தமேவ சரணம் கச்ச -(தமேவ மாரணம்‌ கச்சு, ஸர்வப,ாவேந பாரத [பரத குலத்துதித்தவனே | எல்லா விதத்திலும்‌ அந்த பகவானையே ஸ்ரணமடை)என்றும்-சர்வ தரமான் பரித்யஜ்ய -(ஸர்வதர்மாந்‌ பரித்யஜ்ம மாமேகம்‌ ரணம்‌ வ்ரஜ | அஹம்‌ த்வா ஸர்வபாபேப்‌,யோ மோக்ஷமிஷ்யாமி மா ஸூ௪:॥ [(பலஸாதனமான) எல்லா தர்மங்களையும்‌, வாஸனையுடன்‌ விட்டு, என்னை ஒருவனையே உபாயமாக அடை; நான்‌ உன்னை எல்லாப்‌ பாபங்களினின்றும்‌ விடுவிக்கிறேன்‌; துக்கிக்காதே)என்றும்-தாவதார்த்திச் ததா வாஞ்சா -(தாவதார்த்திஸ்‌ தத; வாஞ்சா தாவந் மோஹஸ்‌ ததா அஸூகம்‌ ! யாவந்ந யாதி ஸரணம்‌ த்வாமஸேஷாக,நாஸநம்‌ i [எல்லாப்‌ பாபங்களையும்‌ போக்கடிக்கும்‌ உன்னை எதுவரையில்‌ ஸரணமடையவில்லையோ, அதுவரையிலேயே (செல்வத்தை இழந்ததினாலேற்படும்‌) வருத்தம்‌; அதுவரையிலேயே (செல்வம்‌ வேண்டுமென்னும்‌) ஆசை; அதுவரை யிலேயே (ஆத்ம ப்ராப்தியின்‌மையினாலேற்படும்‌) மோஹம்‌; அதுவரையிலேயே (பகவானை அடையாததினாலேற்படும்‌) துன்பம்‌. (ஆர்த்தன்‌, அர்த்தரர்த்தி,த கைவல்ய நிஷ்டன்‌ , பகவத் ப்ராப்தி காமன்‌ என்னும்‌ நான்கு விதமான அதிகாரிகளுக்கும்‌ ப்ரபத்தியே பல ஸாதனம்‌ என்று தாத்பர்யம் -)என்றும் இத்யாதி–ஸ்ருதி ஸ்ம்ருதி சித்தமாய் ஸூகரமாய் அத்யவசாயாத்மக ஜ்ஞான விசேஷமான ப்ரபத்தியையே உபாயமாக நிச்சயித்து –இப்படி ப்ராப்ய ப்ராபகங்களை நிஷ்கர்ஷித்து இவற்றை ஸ்தோத்ர ரூபத்தாலே ஸ்ரீ சர்வேஸ்வரனை நோக்கி பிரார்த்திக்றார் –என்னவுமாம் –

ஸ்ரீ பகவத் ஸ்தோத்ரம் பண்ணப் புக்கவர் ஆசார்ய ஸ்துதியிலே பார்ப்பான் என் -என்னில்
கர்ணே ஸ்ப்ருஷ்டே கடிம் சாலயதி -(
கர்ணே ஸ்ப்ருஷ்டே கடிம்‌ சாலயதி[காதைத்‌ தொட்டால்‌ இடுப்பை” ௮சைக்கிறான்)போலே அசங்கதம் -என்னில் ஸ்ரீ பகவத் விஷயத்தைத் தமக்கு ஸ்துதி விஷயம் ஆக்கிக் கொடுத்த உபகார ஸ்ம்ருதியாலும் ஸ்தோத்ரம் பண்ணுகைக்கு அடியான ஜ்ஞான வைசத்யார்த்தமாகவும் அவிக்ன பரி சமாப்த் யர்த்தமாகவும் -பண்ணுகிறார் -ஆகையாலே சங்கதம் –

ஆனால் மானசமாக அமையாதோ -என்னில் இப்பிரபந்தத்தை அதிகரிப்பார்க்கு உபகாரம் ஆகையாலே வாசிகம் ஆக்கினதும் யுக்தம் –உபகார ஸ்ம்ருதியாலே வந்த ஆசார்ய அனுவர்த்தனம் பிரமாண பிரசித்தம் –-ஆசார்ய தேவோ பவ –(ஆசார்யனை தெய்வமாக உடையவனாக ஆவாயாக)என்றும்-நம ருஷிப்யோ மந்திர க்ருத்ப்ய –(மந்த்ரத்தை ஸாக்ஷாத்கரித்த ரிஷிகளுக்கு நமஸ்காரம்)என்றும்-ச ஹி வித்யா தஸ்தம் ஜநயதி தச் ஸ்ரேஷ்டம் ஜன்ம -(ஆசாரியனன்றோ வித்‌யையினால்‌ சிஷ்யனைப்‌ பிறப்பிக்‌கிறான்‌; அது மேலான ஜன்மம்‌)என்றும்-மந்த்ரே தத் தேவதா யாஞ்ச ததா மந்திர பிரதே குரௌ -(மந்த்ரே தத்‌தேவதாயாஞ்ச தத மந்த்ரப்ரதே, கு;ரெள। த்ரிஷு ப,க்திஸ்‌ ஸத்‌ கார்யா ஸா ஹி ப்ரதம ஸாத,நம்‌ ॥ [மந்திரம்‌, அதில்‌ சொல்லப்படும்‌ தேவதை, மந்த்ரோபஸதேம்‌ செய்த ஆசாரியன்‌ இம் மூவரிடத்திலும்‌ எப்‌போதும்‌ பக்தி செய்யவேண்டும்‌ ; அதுவன்றோ (பல ஸித்தி,க்கு) முதல்‌ உபாயம்‌.)என்றும்-ஒரு ரத்னத்தை ஒருவன் கொடுத்தால் அதனுடைய மஹார்க்கத்தை அறியக் கொடுத்தவனை ஆதரிக்க பிரமாணம் வேண்டுமோ -ஆகையால் இது உபபன்னம் –

ஜ்ஞான வைசத் யார்த்தமாக ஆசார்ய அனுவர்த்தனம் சிஷ்டாசார ப்ராப்தம் –-அபி வந்தா குரு நாதௌ-சிஷ்யதீ பதமி நீர வீன் –(அபிவந்த்ய குளுநாதென்‌ ஙிஷ்யதயத்‌மிநீரவீந்‌ [சிஷ்யர்களுடைய புத்தியாகிய தாமரைக்கு ஸூர்யன்‌ போன்‌றவர்களான ஆசாரியர்களை முதலில்‌ நமஸ்கரித்து)இது மீமாம்சகா -என்றும்-யதா கனன் கனித்ரேண-இதி மனு -(யதா கருந்‌ க.நித்ரேண நரோ வார்யதி,க,ச்ச,தி | ததர குருக;தாம்‌ வித்‌,யாம்‌ மாம்ரூஷாரதி கச்ச; தி ॥ [மனிதன்‌ எப்படி மண்வெட்டியால்‌ (பூமியை) வெட்டித்‌ தண்ணீரை அடைகிறானோ, அப்படியே கு,ருவிடமிருக்கும்‌ வித்யையை குருஸேவை செய்பவன்‌ அடைகிறான்)என்றும்-யஸ்ய பிரசாதாத் வஷ்யாமி நாராயண கதாமிமாம் -இதி வைசம்பாயன (நமோ பகவதே தஸ்மை வ்யாஸாயாமிததேஜஸே | யஸ்ய ப்ரஸாத;த்‌ வக்ஷ்யாமி நாராயணகதரமிமாம்‌ || [எவருடைய அருளினால்‌ இந்த நாராயண கதையைச்‌ சொல்லுகிறேனோ, அளவற்ற தேஜஸ்ஸை யுடைய அந்த பகவான்‌ வியாஸருக்கு ௩மஸ்காரம்‌)-என்றும் லௌகிகம் வைதிகம் வாபி -இதி மனு (லெளகிகம்‌ வைதிகம்‌ வா அபி ததாத்‌,யாத்மிகமேவ ச 1 ஆததீத யதோ ஜ்ஞாநம்‌ தம்‌ பூர்வமபி,வாதயேத்‌ || (உலக விஷயங்களைப் பற்றியாவது, வேதத்தைப் பற்றியாவது, ப்‌ரஹ்ம விஷயமாகவாவது எவரிடமிரு்நு ஞானத்‌தை அடைந்தானோ, அவரை முதலில்‌ நமஸ்கரிக்க வேண்டும்)-என்றும்

அங்கனே ஆகில்
ஸ்வ ஆசார்யனை விட்டு அவர் குருக்களை பற்றுவான் என் என்னில்-ஆசார்ய ஸ்துதியிலும் ஆசார்ய பிரியம் இறே உத்தேச்யம் –-ஸ்வாஸ்ரயணத்தில் காட்டில் ஸ்ரீ பெரிய முதலியாரை ஆஸ்ரயிக்கும் இடத்தில் ப்ரீதி மிக்கு இருக்கையாலே அதைப் பேசுகிறார் –ஸ்ரீ பெரிய முதலியார் ஸ்ரீ ஆழ்வாருக்கு பகவத் ப்ராவண்யம் அடியாக பிறந்த ஜ்ஞாநத்தை ஸ்ரீ ஆழ்வார் பிரசாதத்தாலே பெற்று -தம் அளவிலே பர்யவசிக்கை அன்றிக்கே பின்பு உள்ளார்க்கும் உபகாரமாம் படி இந்த தர்சன ஸ்தாபகர் ஆனபடியாலும் –ஸ்ரீ மணக்கால் நம்பி –பெரிய முதலியார் உடைய அர்த்தம் இது-உம்முடைய பேற்றுக்கு எல்லாம் அவருடைய திருவடிகளிலே சம்பந்தமே -என்கையாலும்-அவரை ஆஸ்ரயிக்கிறார்–இதை நினைத்து இறே ஸ்ரீ பட்டர் – ப்ரதமமபி குரும் நாத மீடே –(முதல்‌ குருவான நாதமுனியையும்‌ துதிக்கிறேன்)என்றதும் .-வேத காரணமான பிரணவம் வேதாத் யந்தம் களிலே ஆனால் போலே –இங்கும் ஆதி அந்தங்களிலே ஆசார்ய ஸ்துதி யாய் நடுவிலே பகவத் ஸ்தோத்ரம் ஆக இருக்கிறது –

ஸ்வ ஸ்வரூபத்தைப் பெற்று -பார்யைக்கு அங்க பூஷணம் போலே-வழு விலா அடிமை செய்ய வேண்டும் –என்றும்–அவா அற்று வீடு பெற்ற -என்றும் சொல்லுகிறபடியே ப்ராப்தி பலமான கைங்கர்யத்தைப் பெற்ற ஸ்ரீ ஆழ்வார் உடைய திராவிட உபநிஷத் ரஹச்யத்தை ஸ்ரீ பெரிய முதலியார் ஸ்ரீ ஆழ்வார் உடைய ப்ரசாதத்தாலே லபித்து- பின்பு ஆச்சார்ய உபதேச க்ரமத்தாலே ஆளவந்தார் அந்த திராவிட உபநிஷத் ரஹச்ய அர்த்தங்களை லபித்து அத்தை தாம் அனுபவித்து அவ் வனுபவத்தால் வந்த ப்ரீதி உள் அடங்காமலே பரீவாஹ அபேஷை பிறக்கையாலும் -சம்சாரிகள் துர்க்கதி கண்டு இவர்கள் இத்தை இழக்க ஒண்ணாது என்னும் கிருபையாலும் -சகல உபநிஷத் ரகஸ்யமாய் -துர்ஜ்ஞேய மான அர்த்தத்தை சர்வரும் அறியும்படியாக இவர் ஸ்தோத்ரமாக வெளி இடுகிறார் –

சுருதி ஸ்ம்ருதி சித்தமாய் ஸூகரமாய் அத்யவசாயாத்மக ஜ்ஞான விசேஷமான ப்ரபத்தியையே உபாயமாக நிச்சயித்து – இப்படி ப்ராப்ய ப்ராபகங்களை நிஷ்கர்ஷித்து இவற்றை ஸ்தோத்ர ரூபத்தாலே
ஸ்ரீ சர்வேஸ்வரனை நோக்கி பிரார்த்திக்றார் –ஆதி அந்தங்களிலே ஆசார்ய ஸ்துதி யாய்-நடுவிலே பகவத் ஸ்தோத்ரம் ஆக இருக்கிறது – முதல் மூன்று ஸ்லோகத்தாலே ஸ்ரீ பெரிய முதலியாரை நமஸ்கரிக்கிறார் –

இதில் 65 ஸ்லோகங்கள் உள்ளன.-இந்த ஸ்தோத்திரம். 65 என்ற எண் எழுத்துக்களின் கூட்டுத் தொகையாகும்.-மூன்று ரஹஸ்யங்களில் (அஷ்டஅக்ஷரி+த்வயம்+ சரம ஸ்லோகம் ) எனவே, ஸ்தோத்திர ரத்னம் ரஹஸ்ய த்ரயத்தின் சாரம்–ஸ்ரீ த்வயார்த்தங்களை அருளிச் செய்கிறார்
முதல் ஐந்து ஸ்லோகங்களால் ஆச்சார்ய வந்தனம் –
ஸ்ரீ புராண ரத்னம் அருளிச் செய்த ஸ்ரீ பராசரையும் மங்களா சாசனம் அருளிச் செய்கிறார் –
ரத்னம் தானும் பிரகாசித்து ஸ்ரீ எம்பெருமானையும் பிரகாசப்படுத்தி காட்டி அருளும் அன்றோ –

அடுத்து இரண்டு ஸ்லோகங்களால் பரத்வத்தையும்-அடுத்து இரண்டால் ஸுலப்யத்தையும் அருளிச் செய்து-மேல் ஒன்பது ஸ்லோகங்களால் ஸ்ரீ நாராயண சப்தார்த்தம் அருளிச் செய்துந தர்ம நிஷ்ட்டோஸ்மி ந சாத்ம வேதீ ந பக்திமாம் ஸ்தவச சரணாரவிந்தே-அகிஞ்சநோ அநந்ய கதிஸ் சரண்ய த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே–22-th ஸ்லோகத்தால் சரணாகதி செய்து அருளி–அடுத்த நான்கு ஸ்லோகங்களால் சரணாகத அதிகாரிக்கு லக்ஷணங்களையும்-மேல் இரண்டு ஸ்லோகங்களால் சரணாகதியால் வரும் பலன்களையும் அருளிச் செய்து–மேல் –16-ஸ்லோகங்களால் உத்தர காண்ட அர்த்தம் -ஸ்ரீ பரமபத வைபவம் – இவற்றை திரு உள்ளம் பற்றியே ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ வைகுண்ட கத்யம் அருளிச் செய்கிறார்-ஸ்லோகம் 52-மூலம் சேஷத்வமே ஸ்வரூப நிரூபக தர்மம் என்று அருளிச் செய்கிறார் .-அடுத்த ஸ்லோகத்தால் ஸ்ரீ நம்மாழ்வார் அருளிச் செய்த-எனது ஆவி யார் யான் யார் தந்த நீ கொண்டு ஆக்கினையே –திருவாய் -2.3.4-அடுத்த மூன்றால் தேஹ அவசானம் வரை அவன் அனுக்ரஹத்தை பிரார்த்தித்து-அடுத்து பாகவத ஸமோக மஹிமையை அருளிச் செய்து-மேலே அவனது காருணிகத்தவம் வாத்சல்யம் நவவித சம்பந்தம் -சர்வவித பந்துத்வம் போன்றவற்றை அருளிச் செய்து
மேலே நைச்ய அனுசந்தானம் பண்ணி அருளி அவனது ரக்ஷகத்வ விரதத்தை நினைவு படுத்தி
மேலே ஆச்சார்ய சம்பந்த முகேன அனுக்ரஹம் செய்து அருள பிரார்த்தித்து நிகமித்து அருளுகிறார் –

ஸ்தோத்ரம் தன்னில்‌ செய்ததாகிறது:– முதலிட்டு அஞ்சு ஸ்லோகத்தாலே பகவத்‌, விஷயத்தில்‌ இழிகைக்கு யோக்யனாக்கின ஆசார்யனை உபகார ஸ்ம்ருதியாலே ஸரணம்‌ புக்கு,
அநந்தரம்‌ நாலு ஸ்லோகத்தாலே பகவத்‌, விஷயத்திலே இழிந்து, தத் ப்ரப௱வத்தாலே ஸ்தோத்ரா க்ஷேப ஸமாதானத்தைப்‌ பண்ணி,
நா வேஷஸே’–தொடங்கி *த்வதராஸ்ரிதாநாம்‌’ அறுதியாக ஸரண்ய ப்ரபாவத்தைச்‌ சொல்லி,
நமோ நம:விலே அந்த ப்ரபாவத்துக்குத்‌ தோற்றுத்‌ திருவடிகளிலே விழுந்து,
ந த,ர்ம நிஷ்டோஸ்மி என்று தொட்ங்கி *தவாம்ருதஸ்யந்திநி’யளவும்‌ வெறு மையை முன்னிட்டு ஸரணம்‌ புக்கு, ஸரணாகதனுக்கு ஸம்பாவிதமான ஸ்வ பாவங்களைச்‌ சொல்லி,
த்வதங்க்ரி தொடங்கி இரண்டு ஸ்லோகத்தாலே, “மநோ வாக் காயங்கள்‌ எல்லாவற்றாலும்‌ ஸரணம்‌ புக வேண்டா; காயிகமாதல்‌ மானஸமாதல்‌ அமையும்‌ அபிமத ஸித்‌திக்கு” என்று சொல்லி,
*விலாஸ தொடங்கி பவந்தம்‌’ முடிவாக ப்ராப்யத்தை ப்ரார்த்தித்து,
தாம்‌ ப்ரார்த்தித்தபோதே ப்ராப்யம்‌ ஸித்தியாமையாலே ஸூரி போக்யமான விஷயத்தை நித்ய ஸம்‌ஸாரியான நான்‌ ஆசைப்படக் கடவேனோ?” என்று தம்மை “திகஸூசிம்‌’ என்று நிந்தித்து,
பின்பு தம்முடைய ருசியாலே, “அயோக்யதாஹேதுவான பாபத்தையும்‌ தேவருடைய க்ருபையாலே போக்கி யருள வேணும்‌’ என்று தாம்‌ பண்ணின ப்ரபத்தியை ஸ்மரிப்பித்து,
“அபராத, ஸஹஸ்ரவிலே அபேஷித்து.
*அவிவேக’ என்‌று தொடங்கி மூன்று ஸ்லோகத்தாலே
“தேவர்‌ க்ருபைக்கும்‌ ஆகாதாருண்டோ?” என்று சொல்லி,
மேல்‌ இரண்டு ஸ்லோகத்‌ தாலே ஸ்வ ஸ்வரூப யாதாத்ம்யத்தையும்‌,
அவபோதி,த” விலே பரபக்தியையும்‌ அபேக்ஷித்து,
மேல்‌ இரண்டு ஸ்லோகத்தாலே அப் புருஷார்த்தத்தில்‌ சரமாவதியான ததீய ஸேஷத்வத்தை ப்ரார்த்தி,த்து,
மேல்‌ ஒரு ஸ்லோகத்‌ தாலே *“ஸேஷத்வ விரோதிகளைப்‌ போக்கித்‌ தந்தருள வேணும்‌ என்று அபேக்ஷித்து,
மேல்‌ மூன்று ஸ்லோகத்‌தாலே “இப்படி இச்சிக்கிற தான்‌ அஸூபாஸ்பதன்‌; இச்சைதானும்‌ போட்கனானாலும்‌ தேவர்‌ க்ருபாதி,குணங்களாலே அஸூபத்தைப்‌ போக்கி, நிருபாதிக ஸம்பந்தாத்‌ தாலே இச்சையையும்‌ பிறப்பிக்கை தேவர்க்கே பரம்‌” என்று, மேல்‌ இரண்டு ஸ்லோகத்தாலே ‘விலக்ஷண ஸந்தானத்தில்‌ ஜன்மமும்‌, பாப ப்ராஸூர்யத்தாலே அகிஞ்சித்கரம்‌” என்று,
மேல்‌ இரண்டு ஸ்லோகத்தாலே,நான்‌ பண்ணின ப்ரபத்தியை நினைத்து, இப் பாபத்தை தேவருடைய க்ஷ்மைக்கு விஷயமாக்கவேணும்‌’ என்று ௮பேக்ஷித்து, “நான்‌ பண்ணின ப்ரபத்தியை அநாதரிக்கிலும்‌, ப்ரபந்ந விஷயமாகப் பண்ணின ப்ரதிஜ்ஞையை அநாதரிக்கிலும்‌, பெரிய முதலியார்‌ பக்கல்‌ தேவர்க்கு உண்டான ராகத்தை விடவொண்ணாதிறே; தத்‌ ஸம்பந்த,த்தைப்‌ பார்த்து, என்னுடைய நன்மை தீமைகளைப்‌ பாராதே ரக்ஷித் தருள வேணும்‌’ என்று முடிக்கிறார் –

ஸ்லோகம் -1- அவதாரிகை –முதல் ஸ்லோகத்தில் ஒருவனைக் கவி பாடப் புக்கால் அவன் ஐஸ்வர்யத்தைச் சொல்லிக் கவி பாடுமா போலே ஸ்ரீ வைஷ்ணவனுக்கு ஐஸ்வர்யமான ஜ்ஞான வைராக்யங்கள் உடைய பிரகர்ஷத்தை சொல்லி நமஸ்கரிக்கிறார்மனமாசு தீரும் அருவினையும் சாரா
தனமாய தானே கை கூடும் –புனமேய பூந்துழாயான் அடிக்கே போதொடு நீர் ஏந்தி தாம் தொழா நிற்பார் தமர்
-முதல் திருவந்தாதி -43-என்று ஸ்ரீ வைஷ்ணவனுக்கு தனம் பக்த்யாதிகள் என்று சொல்லிற்று இறே –முதல் ச்லோகத்தில், ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீமந்நாதமுனிகளின் உண்மையான செல்வமான
ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் பெருமையை வணங்குகிறார்
.

நமோ அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே
நாதாயா முநயே அகாத பகவத் பக்தி சிந்தவே
–1-

அசிந்த்ய –இப்படிப்பட்டது என்று நினைக்க முடியாததும் –
அத்புத –ஆச்சார்யமானதும்
அக்லிஷ்ட -அவனது நிருஹேதுக கிருபையினால் எளிதாகக் கிடைத்ததுமானஜ்ஞான வைராக்ய ராசயே-ஞானத்தினுடையவும் வைராக்யத்தினுடையவும் திரட்சி போன்றவராயும்
அகாத பகவத் பக்தி சிந்தவே–ஆழ்ந்த பகவத் பக்திக்குக் கடலையும் இருக்கிற
நாதாயா முநயே நம -ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு நமஸ்காரம் செய்கிறேன்-

நினைவுக்கு அப்பாற்பட்ட, உயர்ந்த ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் கூட்டத்தை எம்பெருமானின் கருணையால் ஸ்ரீமந்நாதமுனிகள் எளிதில் அடைந்தார்.-அவர் எப்பொழுதும் பகவானையே த்யானித்தில் கொண்டிருப்பவர்.-பகவத் பக்திக் கடலாக இருப்பவர். இப்படிப்பட்டவரை வணங்குகிறேன்.

நமோ –
அஹம் அபி ந மம பகவத ஏவ அஹம் அஸ்மீத் ஏவம் அமமதாம் யோஜயத்யதோ நம இதி
-(நான்‌ எனக்குமுரியேனல்லேன்‌; ப,கவானுக்கு அடியேனா கிறேன்‌’” என்று இம்மாதிரியாக மமகார மில்லாமையைத்‌ தருவதால்‌ நம: எனப்படுகிறது)என்கிறபடியே எனக்கு உரியேன் அல்லேன் –பெரிய முதலியாருக்கு சேஷம் -என்கிறார் –நமோ விஷ்ணவே -என்கிறாப் போலே – நமோ நாதாயா –என்கிறார் உபகார ஸ்ம்ருதி யாலேஓம் நமோ விஷ்ணவே (ஷடத் அக்ஷரீ )-என்றும்-நம இத்யேவ வாதி ந -(முக்தாநாம்‌ லக்ஷணம்‌ ஹ்யேதத்‌ யச்ச்‌,வேதத்‌,வீபவாஹிநாம்‌। நித்யாஞ்ஜலிபுடா ஹ்ருஷ்டா நம இத்யேவ வாதி,ந: ॥ [ஸ்வேதத்‌,வீபவாஸிகளுக்கு எது லக்ஷ்ணமோ, அதுவே முக்தர்களுக்கும்‌ லக்ஷணமாகும்‌; அதாவது: எப்போதும்‌ அஞ்ஜலி செய்து கொண்டிருப்பார்கள்‌ ; (அதனால்‌) ஆநந்திப்பார்கள்‌; வாயால்‌ *நம:” என்றே சொல்லும்‌ தன்மை யுடையவர்களா யிருப்பார்)என்றும்-நம ரிஷிப்யோ மந்த்ர க்ருத்ப்ய -என்றும்-தேஷாமபி நமோ நம -(தஸ்ய யஜ்ஞ வராஹஸ்ய விஷ்ணோரமித தேஜஸ: |ப்ரணாமம்‌ யே$பி குர்வந்தி தேஷாமபி நமோ நம:॥ [யஜ்ஞ வராஹராகியவரும்‌, அளவற்ற தேஜஸ்ஸை உடைய வருமான அந்த விஷ்ணுவுக்கு எவர்கள்‌ ஒரு நமஸ்காரம்‌ செய்கிறார்களோ, அவர்களுக்குப்‌ பலகால்‌ நமஸ்காரம்‌)என்றும் சொல்லக் கடவது இறே –ஸ்ரீ ஈஸ்வர முனிகள் -ஸ்ரீ ரங்க நாதன் என்று திருநாமம் சாற்றுகையாலே-நாதன் என்று திரு நாமம் ஆகிறது – எப்படிப் பட்டவர் -என்னும் அபேஷையில் சொல்லுகிறது –ஸ்ரீ ரெங்க நாத முனி பூர்ணமான திரு நாமம் –எப்போதும் எம்பெருமானையே மனனம் செய்பவர் என்பதால் முனி 

அசிந்த்ய –
இவருடைய ஜ்ஞானாதிகள் இன்னாருடைய ஜ்ஞானாதிகள் போலே இருக்கும் என்று நினைக்க ஒண்ணாது -என்னுதல்-இவ்வளவு என்று ஜ்ஞானாதி கராலும் -பரிச்சேதிக்க ஒண்ணாது -என்கை-

அத்புத
கீழ் இயத்தா ராஹித்யத்தைச் சொல்லுகையாலே-க்ருஹீதாம்சம் அனுசந்தித்தார்க்கு ஆச்சர்ய அவஹமாய் இருக்கும் -என்கை –அமுதூரும் என்றக்கால் -இத்யாதியில் க்ருஹீதாம்சம் இனிதாய் இருக்கும் என்றது இறே –அத்புதமாவது –அறிய ஒண்ணாமையாக இருந்தாலும் நம் சற்று அறிவுக்கு எட்டிய அளவு ஆச்சர்யமாக இருக்கின்றவே-

அக்லிஷ்ட –
வ்யாசாதிகளைப் போலே ஸ்வ யதன சாத்திய தபஸ்ஸாலே வந்தது அன்றிக்கேததாமி புத்தி யோகம் தம் –(தேஷாம்‌ ஸததயுக்தாநாம்‌ ப,ஜதாம்‌ ப்ரீதிபூர்வகம்‌ | ததாமி புத்‌தி,யோகம்‌ தம்‌ யேந மாமுபயாந்தி தே॥| [என்னிடத்தில்‌ எப்போதும்‌ சேர்ந்திருப்பதை விரும்புபவர்‌களும்‌, என்னை ப.ஜிப்பவர்களுமான அவர்களுக்கு, என்னை அடைவதற்கு ஸாதனமான அந்த புத்தி யோகத்தை அன்புடன்‌ ௮ளிக்கிறேன்‌)என்றும்-மயர்வற மதி நலம் அருளினான் -என்றும் சொல்லுகிறபடியே-பகவத் பிரசாத லப்தம் ஆகையாலே வருத்தம் அற்று இருக்கை-

ஜ்ஞான –
ஜ்ஞானம் ஆவது -சித் அசித் ஈஸ்வர தத்தவங்களை விஷயமாக உடைத்தாய் இருக்கை –-அதாவது –
ஆத்மா ஈஸ்வரனுக்கு அனன்யார்ஹ சேஷம் என்றும்-அசித் ஸ்வரூபம் த்யாஜ்யம் என்றும் –
ஈஸ்வரன் உபயோர் நியந்தா என்றும் -அறிகை –ஜ்ஞானம் என்றால் இவ் விசேஷத்தைக் காட்டுகிறது
தத் ஜ்ஞானம் அஜ்ஞானம் அதோ அந்ய துக்தம்-(ஸம்ஜ்ஞாயதே யேந ததஸ்த தோஷம்‌ ஸூத்தம்‌ பரம்‌ நிர்மலமேகரூபம்‌ | ஸந்த்‌,ருஸ்யதே வாப்யதி,கம்யதே வா தத்‌ ஜ்ஞாநமஜ்ஞாநமதோந்யது,க்தம்‌ ॥| -விஷ்ணு பு. 6 -5-87.[எந்த அறிவினால்‌, தோஷமற்றதும்‌, ஸூத்‌தமானதும்‌, மிகவும்‌ மலமற்றதும்‌, ஒப்புயர்வற்றதுமான அந்தப்‌ பரவஸ்து அறியப்படுகிறதோ, பார்க்கப்படுகிறதோ, அடையப்படுகிறதோ, அதுவே ஜ்ஞானம்‌; அதைக் காட்டிலும்‌ வேறானது அஜ்ஞானம்‌)என்றும்-வித்ய அந்ய அசில் பனை புணம் -(தத்‌ கர்ம யந்ந பூந்தாய ஸா வித்யா யா விமுக்தயே | ஆயாஸாயாபரம்‌ கர்ம வித்‌,யாந்யா ஸில்பநைபுணம்‌ || [எந்தக்‌ கர்மம்‌ பந்தத்திற்குக்‌ காரணமல்லவோ அதுவே கர்மம்‌; எது முக்திக்குக்‌ காரணமோ அதுவே வித்யை, மற்ற கர்மம்‌ ஸ்ரமத்திற்கே. மற்ற வித்‌,யை செருப்புக்குத்தக்‌ கற்றது போன்றது.)என்றும் வ்யதிரிக்த விஷய ஜ்ஞானம் அநர்த்தா வஹம் என்றும் அதி சூத்ரம் என்றும் -சொல்லிற்று இறே –ஞானமாவது தத்வ த்ரய -சித் அசித் ஈஸ்வர தத்தவங்களை விஷயமாக உடைத்தாய் இருக்கை-அர்த்த பஞ்சக ஞானம் என்றுமாம்-

வைராக்ய –
இவ் விலஷண ஜ்ஞானத்தாலே பகவத் வ்யதிரிக்தங்களில்-நிஸ்ப்ருஹராய் இருக்கை –-வேண்டேன் மனை வாழ்க்கையை -பெரிய திருமொழி -6-1-

ராசயே –
ராசி என்று சமூஹம்-ஜ்ஞான இராசே –வைராக்ய ராசயே –-ஜ்ஞான வைராக்யங்கள் ஒன்றாய் இருக்க ராசயே -என்பான் என் -என்னில் –-ஸ்ரீ பகவத் ஸ்வரூபாதிகள் ஜ்ஞான விஷயங்கள் ஆகையாலே பல
பிதரம் மாதரம் -(பிதரம்‌ மாதரம்‌ தாராந்‌ புத்ராந்‌ பந்தூந்‌ ஸகீந்‌ குரூந்‌। ரத்நாநி தந தாந்யாநி க்ஷேத்ராணி ச க்‌,ருஹாணி ச ॥ ஸர்வத,ர்மாம்ஸ்ச ஸந்த்யஜ்ய ஸர்வ காமாம்ஸ் ச ஸாக்ஷராந்‌ | லோக விக்ராந்த சரணெள ஸரணம்‌ தே$வ்ரஜம்‌ விபோ ॥[பூத;வானே ! தந்தையையும்‌, தாயையும்‌, மனைவியையும்‌, பிள்ளைகளையும்‌, உறவினரையும்‌, நண்பர்களையும்‌, ஆசாரியர்களையும்‌, ரத்னங்களையும்‌, தனதான்யங்களையும்‌, வயல்‌ களையும்‌, வீடுகளையும்‌, எல்லா உபாயங்களையும்‌, கைவல்ய முள்ளிட்ட எல்லா ஆசைகளையும்‌, வாஸனையுடன்‌ விட்டு, திருவுலகளந்தருளின உன்‌ திருவடிகளை ஸரணமடை கிறேன்‌.])என்று த்யாஜ்ய விஷயங்களும் பலவாகையாலே சொல்லலாம் –லோகத்தில் விலஷணர் உடைய ஜ்ஞான வைராக்யங்கள் எல்லாம் இவருடைய ஜ்ஞான வைராக்யங்களிலே அந்தர்ப்பூதம் ஆம்படி இருக்கையாலே சொல்லுகிறது -என்றுமாம் –யத் கிஞ்சித் சாது குர்வந்தி யஸ்தத் வேத யத்ச வேத ச மயைத துக்த இதி –(ஏநம்‌ ஸர்வம்‌ தத;பி,ஸமேதி யத்கஞ்சித்‌ ப்ரஜாஸ்‌ ஸாது, குர்வந்தி யஸ்தத்‌ வேத, யத்ஸ வேத, ஸ மயை தது,க்த இதி [மனிதர்கள்‌ எந்தெந்த நல்ல காரியங்கள்‌ செய்கிறார்களோ, அவையெல்லாம்‌ ரைக்வரிடம்‌ பொருந்தியிருக்கின்‌ றன. எதை அவர்‌ (ரைக்வர்‌) அறிந்திருக்கிறரோ அதையே எவனும்‌ அறிகிறான்‌. அப்படிப்பட்ட ரைக்வர்‌ என்னால்‌ இபபோது சொல்லப்பட்டார்‌) யத் கிஞ்சித் சாத்வ நுஷ்டிதம் கர்ம யச்ச சர்வ சேதன கதம் விஜ்ஞானம் ததுபயம் யதி யஜ்ஞான கர்மாந்தர்கதம் ச ரைக்வ -இதி –([உலகத்தில்‌ அனுஷ்டி,க்கப்படும்‌ எந்த நற்கருமமும்‌, எல்லாச்‌ சேதனர்களுடைய அறிவுமாகிய இவ்விரண்டும்‌ எவருடைய ஜ்ஞானத்திலும்‌, கர்மத்திலும்‌ அடங்கியிருக்கின்‌ றனவோ அவரே ரைக்வர்‌ என்று (ஹம்ஸம்) சொல்லிற்று)என்றும்-லோகத்தில் அனுஷ்டிதமான கர்மங்களும் ஞானங்களும் யாவன் ஒருத்தன் உடைய கர்ம ஞானங்களிலே அந்தர்க்கதமாய் இருக்கும் -அவன் தானே கிடீர் ரைக்வன் -என்று பார்த்து சொல்லுமா போலே-

முநயே –
ந விவேதாத்மநோ காத்ரம்
-(ஸ த்வாஸக்தமதி: க்ருஷ்ணே தஸ்யமாநோ மஹோரகை;:। ந விவேதராத்மநோ காத்ரம்‌ தத் ஸ்ம்ருத்யஹலாத,ஸுஸ்தி,த: ॥ [மஹா நாகங்களினால்‌ கடிக்கப்படுபவனும்‌, க்ருஷ்ணனிடத்‌ தில்‌ புததியைச்‌ செலுத்தினவனுமான அந்த ப்ரஹ்லாதன்‌, பகவானை நினைக்கையினாலுண்டான ஆனந்தத்தி னால்‌ நிலை நின்‌றவனாய்‌, தன்னுடைய ‘உடம்பை அறிய வில்லை)என்றும்-பஸ்யந்நபி ந த்ருஷ்ட்வான் -([பார்த்துக்கொண்டிருந்த போதும்‌ பார்க்க வில்லை)என்கிறபடியே-தேய வஸ்துவை சர்வதா சாஷாத் கரிக்கை-ஏது செய்தால் மறக்கேன் மனனே –பெரிய திரு மொழி -9-3-3- என்றும் என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் -திருவாய் மொழி -7-3-6- என்றும்-இவர் கிருஷ்ணனை அனுசந்தித்து இருக்க ராஜாவாலும் சமாதி பங்கம் பண்ணப் போயிற்று இல்லை –-ராம மேவா நுபச்யந்த -என்னுமா போலே –

அகாத பகவத் பக்தி சிந்தவே –
பக்தியாவது ஜ்ஞான விசேஷமாய் இருக்க –பக்தியைப் பிரித்துச் சொல்லிற்று –-அதினுடைய ப்ராசுர்யம் சொல்லுகைக்காகவும் –ப்ரதான்யம் சொல்லுகை தோற்றுகைக்காகவும் –-பக்தி யாகிறது –சிநேக பூர்வம் அனுத்யானம் பக்தி -(ஸ்நேஹபூர்வமநுத்‌,யாநம்‌ ப,க்திரித்யபி,த,யதே | பூஜ இத்யேஷ தாதுர்வை ஸேவாயாம்‌ பரிகீர்த்தித: ॥ தஸ்மாத்‌ ஸேவா புதை; ப்ரோக்தா ப,க்கி ஸப்‌,தே.ந பூயஷீ ॥ [ஸ்நேஹத்தை முன்னிட்ட தியானம்‌ ப,க்தியெனப்படுகிறது. ‘ப.ஜ’ என்கிற தாது (ஸேவை! என்னும்‌ அர்த்தத்தில்‌ சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையால்‌ மேலான ஸேவையே பெரியோர்களால்‌ பத்தி ஸப்‌,த,த்தினால்‌ சொல்‌லப்படுகிறது.])என்றும்-ஸ்வாமிநி தாசச்ய சிநேக மயீ ஸ்திதி -([ஸ்வாமியிடத்தில்‌ தாஸனுடைய ஸ்நேஹம்‌ நிறைந்திறாக்‌ கும்‌ நிலைமை.])என்றும் சொல்லுகிறபடியே- அனுபவ ஆசை -அனுபவிப்பதில் விருப்பம் –பகவச் சப்தத்தாலே பரம பதத்தில் இருப்பைச் சொல்கிறது –வாஸூ தேவோ அஸி பூர்ண – (ஆறு குணங்களாலும்‌ பூர்ணனான வாஸுதேவனாயிருக்‌ கிறாய்‌)என்று ஷாட் குணிய பூர்ணனாய் இறே இருப்பது-அகாதஅஷோப்ய-கலக்க ஒண்ணாத –அர்த்தாந்தரம் -பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கை – ஒருவரால் நிலை கொள்ள ஒண்ணாது இருக்கை சிந்தவே –காதல் கடலின் மிகப் பெரிது –திருவாய்மொழி -7-3-6-என்றும்-ஆசை என்னும் கடல் -பெரிய திருமொழி -4-9-3- என்றும் ஈஸ்வரனுக்கும் நிலை கொள்ள ஒண்ணாதே தாம் அதில் புக்கு அமிழ்ந்தபடியாய் இருக்கை –

அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே
முனயே அகாத பகவத் பக்தி சிந்தவே நாதாய நம
-என்று அந்வயம் –பகவத் பக்தி ரசத்துக்கு -ஆழ்ந்ததோர் கடல் போலே இருப்பாரே -கலக்க முடியாதபடி – பகவத் பக்திக்கு சமுத்திரம் என்றும்
பகவத் பக்தியாகிற சமுத்திரத்தை தம்மிடம் கொண்டவர் என்றுமாம் –

சிந்தையினுக்கு எட்டாமே சிறந்த அருளால் எளிது இலகி
விந்தையுறு மெய்ஞ்ஞான விரக்திக் களஞ்சியமாய்
பைந்துளவ பகவான் மீதுறு பக்திக்கு ஆழ் கடலாம்
அந்தணனாம் அந்நாத முனிகள் அடி பணிவேனே
அந்தணன் -அந்தத்தை அணவுவான் –கிட்டுவான் முனிவன்-மனத்தினால் அளவிடக் கூடாததாய்-அறிந்த மட்டில் ஆச்சர்யத்தை விளைவிப்பதாய்-பகவத் கிருபையால் வந்த காரணத்தால் ஸ்ரமம் அற்று இருப்பதாயுமுள்ள விலக்ஷணமான ஞானமும்-அந்த ஞானத்தால் யுண்டாகும் வைராக்கியமும் ஆகிய இவற்றுக்கு இருப்பிடமானவரும் திருத்துளஸீ தரிக்கும் பகவான் இடத்தில் உண்டாகும் பக்திக்கு நிலைக்காத ஸமுத்ரம் போன்றவரும் முனி ஸ்ரேஷ்டருமுமான அந்த ஸ்ரீ மன் நாதமுனிகளுக்கு நமஸ்காரம் பண்ணுகிறேன்-

ஸ்லோகம் -2- அவதாரிகை
முதல் ஸ்லோகத்தாலே பரத்வ விஷயமான ஜ்ஞானாதிகள் உடைய பிரகர்ஷம் சொல்லிற்று-இந்த ஸ்லோகத்தாலே அவதார விஷயமான ஜ்ஞானாதிகள் ஆகையாலே-அதினுடைய ப்ரக்ருஷ்ட தரத்வம் சொல்லுகிறது-அன்றிக்கே-கீழ் சொன்ன ஜ்ஞானாதிகள் தம்மளவில் பர்யவசியாதே என்னளவும் வர வெள்ளம் கோத்தது – என்னவுமாம் –இதில், பகவத் அவதாரங்களில் ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு இருந்த ஞானம் ஆகியவற்றின் மேலான சிறப்பு விளக்கப்படுகிறது. அல்லது, “(முந்தைய ஶ்லோகத்தில் சொல்லப்பட்ட) ஞானம் முதலியவை அவரிடமே தங்காமல், என்னளவும் பெருகி வருகிறது”
என்று ஆளவந்தார் அருளிச் செய்கிறார்.

தஸ்மை நமோ மது ஜிதங்க்ரி ஸரோஜா தத்தவ
ஜ்ஞான அனுராக மஹிமா அதிசய அந்த ஸீம்நே
நாதாயா நாத முநயே அத்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரனௌ சரணம் மதீயம்-
2-

மது ஜிதங்க்ரி ஸரோஜா -எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளைப் பற்றின
தத்தவ ஜ்ஞான–உண்மை உணர்ச்சி என்ன
அனுராக –ஆசை என்ன
மஹிமா அதிசய அந்த ஸீம்நே–இவற்றின் பெரு மேன்மைக்கு எல்லை நிலமாயும்
நாதாயா-எனக்கு நாதராயும் இருக்கிற
தஸ்மை நாத முநயே நமோ–அந்த நாத முனிகளுக்கு நமஸ்காரம்
அத்ர பரத்ர சாபி-இவ்வுலகத்திலும் மேல் உலகத்திலும்
நித்யம் யதீய சரனௌ-எப்போதும் -எந்த ஸ்ரீமந் நாதமுனிகளுடைய திருவடிகள்-நித்யம் – நித்ய அக்னி ஹோத்ரம் போல் அன்றிக்கே அனவரதம் -என்கை –

மது என்னும் அஸுரனைக் கொன்ற எம்பெருமானின் திருவடிகளில் சிறந்த ஞானம் மற்றும் பக்தியின் வடிவமாக விளங்குபவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவருடைய திருவடிகளே எனக்கு இவ்வுலகிலும் பரமபதத்திலும் புகலாக இருக்கும். அவரே என் தலைவர். இப்படிப்பட்டவரை நான் வணங்குகிறேன்.

தஸ்மை நமோ –
நமஸ் தஸ்மை நமஸ் தஸ்மை
நமஸ் தஸ்மை மஹாத்மநே-என்றும் ([மஹாத்மாவான அவனுக்கு நமஸ்காரம்‌; அவனுக்கு நமஸ்‌ காரம்‌; அவனுக்கு நமஸ்காரம்‌) நமோ நமஸ்தே ஆஸ்து சஹஸ்ர க்ருத்வ–(நமோ நமஸ்தேஸ்து ஸஹஸ்ர க்ருத்வ:புநஸ்ச பூூயோபி நமோ நமஸ்தே |நம: புரஸ்தாத;த, ப்ருஷ்ட்டதஸ்தே நமோஸ்து தே ஸர்வத ஏவ ஸர்வ॥ [உனக்கு ஆயிரந்தடவை நமஸ்காரம்‌; மறுபடியும்‌ மறுபடியும்‌ உனக்கு நமஸ்காரம்‌; எல்லாமாயிருப்பவனே! உனக்கு முன்னும்‌ பின்னும்‌ நமஸ்காரம்‌; உனக்கு எல்லாவிடத்திலும்‌ நமஸ்காரம்‌.]என்றும் சொல்லுகிறபடியே –-இன்னம் அவர்க்கு அடியேன் -என்கிறார் –

மது ஜீத் –
அநிருத்தராய்வந்து அவதரித்து-முதல் களையான மதுவை நிரசித்தால் போலே-பகவத் ப்ராப்தி பந்தகங்களைப் போக்குமவன் -என்கை –

அங்க்ரி
அந்த ஸ்வ பாவத்திலே –குணைர் தாஸ்யம் உபாகத -(அஹமஸ்யாவரோ ப்‌,ராதா குணைர்‌ தாஸ்யமுபாக,த: [நான்‌ இவருடைய நினைவினால்‌ (இவருக்குத்‌) தம்பி; (உண்மையில்‌) இவருடைய குணங்களால்‌ (இவருக்கு) அடிமைப்‌ பட்டவன்‌.])என்று பெரிய முதலியார் தோற்று இருக்கும் படியையும் அவருடைய அனன்யார்ஹ சேஷத்வமும் சொல்லுகிறது –ஸரோஜ – சம்பந்தம் இல்லா விடிலும் விட ஒண்ணாத போக்யதையைச் சொல்லுகிறதுவிகாசம் செவ்வி குளிர்ச்சி பரிமளம் முதலான வற்றுக்குத் தாமரையை ஒரு படிக்குப் போலியாகச் சொல்லலாய் இருக்கை –

தத்தவ ஜ்ஞான –தத்வ ஜ்ஞானம் ஆவது – அவதார விஷய ஜ்ஞானமும்-ஆஸ்ரித பாரதந்த்ர்ய விஷய ஜ்ஞானமும் –-ஜன்ம கர்ம ஸ மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்த்வத த்யக்த்வா தேகம் புநர் ஜன்ம நைதி மாமேதி ஸோ அர்ஜுன -ஸ்ரீ கீதை -4-9-([அர்ஜுனா! என்னுடைய அப்ராக்ருதமான பிறப்பையும்‌, சேஷ்டிதங்களையும்‌ எவன்‌ இப்படி உண்மையாக அறிகிறானோ, அவன்‌ தேஹத்தை விட்டு மறு ஜன்மம்‌ அடையான்‌; என்னை அடைகிறான்‌)என்று தானே அருளிச் செய்தான் இறே –தஸ்ய தீரா பரிஜா நந்தி யோநிம் -(அஜாயமாநோ ப,ஹாதா விஜாயதே | தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநி [பிறப்பற்றவனா யிருந்தும்‌ பலபடியாகப்‌ பிறக்கிறான்‌ (பரம புருஷன்‌). அவனுடைய அவதாரத்தை தீரர்களே (அறிவில்‌ மிக்கோரே) நன்கு அறிகிறார்கள்)என்றும்-அஹத்வா ராவணம் சங்க்யே-(அஹத்வா ராவணம்‌ ஸங்க்‌,யே ஸ புத்ர பல பாந்த,வம்‌ | அயோத்‌,யாம்‌ ந ப்ரவேக்ஷ்யாமி த்ரிபி,ஸ்தைர்‌ ப்‌,ராத்ருபிஸ் ஸயே || [பிள்ளைகளுடனும்‌, ஸேனையுடனும்‌, பந்துக்களுடனும்‌ கூடிய ராவணனைச்‌ சண்டையில்‌ கொல்லாமல்‌ அயோத்‌தியில்‌ ப்ரவேசிக்கமாட்டேன்‌. மூன்று தம்பிகளின்‌ மீதும்‌ ஆணையிடுகிறேன்)என்றும்-யத் விநா பரதம் த்வாஞ்ச சத்ருக் நஞ்சாபி மாந்த பவேன் மம ஸூகம் கிஞ்சித் பஸ்மாசாத் குருதாம் சிகி -([பெருமையைத்‌ தருபவனே! பரதனையும்‌, உன்னையும்‌, ஸத்ருக்னனை யுமில்லாமல்‌ ஏதாவது எனக்கு ஸுக,முண்‌ டாகுமானால்‌, அதை அக்னி சாம்பலாக்கட்டும்‌ என்று அருளிச் செய்தான் இறே சக்கரவர்த்தி திருமகன் –அப்யஹம் ஜீவிதம் ஜ்ஹ்யாம் -(அப்யஹம்‌ ஜீவிதம்‌ ஜஹ்யாம்‌ த்வாம்‌ வா ஷீதே ஸ லக்ஷ்மணம்‌ | ந து ப்ரதிஜ்ஞாம்‌ ஸம்ஸ்ருத்ய ப்‌,ராஹ்மணேப்‌,யோ விமேஷத: || [நான்‌ உயிரையும்‌, லக்ஷ்மணனோடு கூட உன்னையும்‌ விடுவேனே யொழிய செய்த ப்ரதிஜ்ஞையை விட மாட்டேன்‌) அதிலும்‌, விமேஷமாக ப்‌,ராஹ்மணர்களுக்குக்‌ கொடுதத ப்ரதிஜ்ஞையை விடேன்‌])என்றும் ஆத்மாநாம் நாதி வர்த்தேதா -இத்யாதி(ப,ரதஸ்ய வச: குர்வந்‌ யாசமாநஸ்ய ராக,வ। ஆத்மாநம்‌ நாதிவர்த்தேதா: ஸத்ய த,ர்ம பராக்ரம ॥ [ராக,வனே | ஸத்யமான தர்மத்தையும்‌, பராக்ரமத்தையும்‌ உடையவனே ! யாசிக்கும்‌ பரதனுடைய வார்த்தையைச் செய்வதன்‌ மூலம்‌, உன்னுடைய ஸ்வரூபத்தை (ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை) மீறாமலிருப்பாயாக)

அனுராக-
அனுராகம் ஆவது -இவற்றை எல்லாவற்றையும் அனுபவித்தால் அல்லது நிற்க ஒண்ணாத ப்ரேமம் 

மஹிமா அதிசய அந்த ஸீம்நே –ஜ்ஞான அநு ராகங்கள் உடைய மஹத்த்வத்தின் முடிவே எல்லையாய் இருக்குமவர்க்கு-மகிமா -மஹத்த்வம் –மனுஷ்ய ஆனந்தமே தொடங்கி-தே யே சதம் – என்கிற க்ரமத்தாலே ஈஸ்வர ஆனந்தத்திற்கு எல்லையாய் இருக்கும் இருப்பு போலே இவருக்கும் தத் விஷய ப்ரேமத்துக்கு எல்லையாய் இருக்கும் இருப்பு –

நாதாயா –
அஸ்மத் நாதாயா –நாத முநயே –
இத் தர்சனத்துக்கு நாதனே -என்று-மது சூதனை யன்றி மற்று இலேன் -திருவாய்மொழி -2-7-6-என்று இருக்கும் மகாதமாக்களாலே கொண்டாடப் படுவாராய் ஆயிற்று –
தத்வ ஹிதங்களை திரு வுள்ளத்திலே கூடு பூரிக்குமவர் –-தஸ்மை நம –என்று அந்வயம் –

உபகார ஸம்ருதியாலே அவரை ஆதரித்தீர் ஆகில் ஐஹிக ஆமுஷ்மிகங்களுக்கு வேண்டாவோ -என்று பகவத் அபிப்ராயமாக அருளிச் செய்கிறார் –-அத்ர பரத்ர சாபி –-சம்சாரத்திலும் பிராப்யமான நித்ய விபூதியிலும் –நித்யம் –நித்ய அக்னி ஹோத்ரம் போல் அன்றிக்கே-அனவரதம் -என்கை –யதீய சரனௌ –என்னை இவ் வவஸ்தாபன்னனாக்கிய திருவடிகள் –சரணம் –-உபாய உபேயங்கள் இரண்டும்-மதீயம் –
பெரிய முதலியார் திருவடிகள் ஆகில் எனக்கு இரண்டுமாய் இருக்கும் -என்கை –-அதாவது -சம்சார தசையிலே பகவானே உபாயம் என்று உபதேசித்து உபாயாத்யவசாயத்துக்கு அடியான ஸ்வ அனுக்ரஹத்தாலே பகவத் பிராவணயத்தை விளைத்தும் பிராப்ய தேசத்தில் சென்றால் நித்ய ஸூரிகள் கோஷ்டியில் பிரவேசிப்பித்தும் பின்பு நித்ய ஸூரிகளோபாதி உத்தேச்யமாய் இருக்கையாலும் -அப்படிச் சொல்கிறது –அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ —வானவர் நாடு –
ஆச்சார்யர் திருவடிகளே உத்தேச்யம் –சரணம் -உபாயம் உபேயம் இரண்டுமே என்றபடி –

அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரனௌ மதீயம் சரணம் மது ஜிதங்க்ரி சரோஜ தத்தவ ஜ்ஞான அனுராக மஹிம அதிசய அந்த சீம்னே நாதாய தஸ்மை நாத முனயே நம -என்று அந்வயம் –

சரணம் மதீயம்–என்னுடையதான புகல் இடமோ –அந்த நாதமுனிகளுக்கு நமஸ்காரம்-திருவடித் தாமரைகளைப் பற்றின தத்வ ஞானத்தாலும் பரி பூர்ணர் -அன்பினாலும் பரி பூர்ணர் –
அவதார ரஹஸ்யம் வாத்சல்யாதி குணங்கள் -இவற்றின் உண்மையை உள்ளபடி உணர்ந்து ப்ரேமம் கனத்து இருப்பவர்களில் நிகர் அற்றவர்-மது ஜித் தத்வ ஞானம் -என்னாமல் -அங்கிரி -நடுவில் -பாதாரவிந்தமே தாயாரின் ஸ்தநம் போலே -பரம உத்தேச்யம்-பகவத் தத்வ ஞானமும் பகவத் அநு ராகமும் இவர் இடம் சேர்ந்து விசரமித்தன போலும் -ஆகவே இவற்றுக்கு இவரே ஸீமா பூமி –

மதுவை வென்ற நெடிய மாலின் மரை மலர்ப்பதத்தின் கண்
முதிரும் தத்வ ஞான மோக மஹிமை முற்று மோர்ந்துயர்
விதுர நாதனாம் என் நாத முலைகளை வியப்பனே
கதி எனக்கு அவன் கழல்கள் இங்கும் அங்கும் என்றுமே
–2-விதுரன் -அறிஞன் –வியத்தல் -ஸ்துதித்தல்-மது என்னும் அசுரனை ஸம்ஹரித்த -ஆஸ்ரித விரோதி நிவர்த்தகனான -திருமாலின் திருவடித் தாமரைகள் விஷயமாய் முதிர்ந்து இருக்கும் தத்வ ஞானமும் -அதாவது அத்திருவடிகளே மோக்ஷத்திற்கு உபாய உபேயம் என்னும் ஞானமும் அனுபவித்தால் அல்லது தரிக்க ஒண்ணாத ஒரு ப்ரேமமுமாகிய இவற்றின் மஹிமையை முற்றும் உணர்ந்தவரும் மஹா ஞானியாயும் நமக்கு ஸ்வாமியுமான ஸ்ரீ மன் நாத முனிகளை நமஸ்கரிக்கின்றேன்இவருடைய திருவடிகளே இம்மையிலும் மறுமையிலும் எக்காலத்தும் எமக்கு கதியாகும்

ஸ்லோகம் -3- அவதாரிகை –-த்ருஷார்த்தனுக்குத் தண்ணீர் குடிக்கப் பர்யாப்தி பிறவாதாப் போலே
பின்னையும் அவர்க்கு அடியேன் -என்கிறார்-ஆஸ்ரிதரை ஒரு காலும் நழுவ விடாத அச்யுத விஷயத்திலே ஜ்ஞான பக்த்யாதிகள் ஆகையாலே தம்மளவில் பர்யவசியாதே பகவத் விஷயத்துக்கு அபூமியான சம்சாரம் எங்கும் வெள்ளம் இடும்படியான இவர் உடைய ஜ்ஞான பக்திகள் உடைய
பிரக்ருஷ்டதையைச் சொல்லுகிறது –

பூயோ நமோ அபரிமித அச்யுத பக்தி தத்தவ
ஜ்ஞாநாம் ருதாப்தி பரிவாஹ ஸூ பைர் வசோபி
லோகே அவதீர்ண பரமார்த்த சமக்ர பக்தி
யோகாய நாத முநயே யமிநாம் வராய
-3-

அபரிமித அச்யுத பக்தி –அளவில்லாத பகவத் பக்தி என்ன
அபரிமித தத்தவ ஜ்ஞாநம்–அளவில்லாத தத்வ ஞானம் என்ன
அம்ருதாப்தி பரிவாஹ இவை யாகிற அமுதக் கடலின் பரிவாஹம் போன்று
ஸூபைர்வசோபி-பிரசன்ன சீதளங்களான ஸ்ரீ ஸூக்தி களாலே
லோகே -இவ் வுலகத்தில்
அவதீர்ண பரமார்த்த –அவதாரம் செய்து இருக்கிற பரம புருஷார்த்தமாயும்
சமக்ர பக்தி யோகாய –பரி பூர்ணமாயும் இருக்கிற பக்தி யோகத்தை உடையவராய்
யமிநாம் வராய–யோகிகளின் சிறந்தவரான
நாத முநயே -பூயோ நமோ—நாத முனிகளுக்கு மறுபடியும் நமஸ்காரம்–பூயோ நமோ-புனஸ்ஸ நமநமோ நமஸ்தே -என்கிறபடியே-

பகவானிடத்தில் எல்லை இல்லாத பக்திக் கடலில் இருந்து பெருகிய மங்களகரமான வார்த்தைகள் மற்றும் உண்மை ஞானம் வந்து பிறந்ததைப் போலே இருப்பவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவரே சிறந்த குறிக்கோள்.-அவர் பூர்த்தியையும் பக்தி யோகத்தையுமுடையவர். யோகிகளில் சிறந்தவர். அவருக்கு மீண்டும் என் வணக்கங்கள்.

அபரிமித –கிடந்த பாயிலே வெள்ளம் கோத்தால் போலே-இருந்த இடங்களிலே வந்து கிட்டும்படி எல்லை இறந்து இருக்கை –அச்யுத –நியந்த்ருத்வ ஸ்வாமித்வாதி கல்யாண குணங்களாலே குறை வற்று இருக்கை -என்னுதல் –-ஏக ரூபமாய் இருக்கும் –என்னுதல்-என்றும் ஆஸ்ரித அர்த்தமாய் இருக்கும் இருப்பை நழுவ விடாதவன் -என்னுதல் –-ஆர்ந்த புகழ் அச்சுதன் -திருவாய்மொழி -3-5-11- என்றும்
நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன் தன்னை -திருவாய்மொழி -3-6-8-என்கிறபடியே-ஆஸ்ரிதரை தாம்தாம் கையிலும் பிறர் கையிலும் காட்டிக் கொடாதவன் -என்னுதல் –பக்தி தத்தவ ஜ்ஞாநாம் ருதாப்தி பரிவாஹ ஸூபைர் வசோபி –-பக்தி தத்வ ஜ்ஞானங்கள் ஆகிற அம்ருதாப்தி யினுடைய பரிவாஹ ரூபமான ஸூபமான வசஸ் ஸூக்களாலே- உபாயம் ஈஸ்வரன் ஆகையாலே ஜ்ஞான பக்திகள் போக ரூபமாய் அபரிச்சின்னமாய் இருக்கும் -என்கை –பரிவாஹம் ஆவது -அவ்வவ ரஷண அர்த்தமாக
அதிக ஜல நிர்க்க மனஸ் ரோதஸ்ஸூ – வசஸ் ஸூக்களுக்கு ஸூபத்வம் ஆவது –-அவிஸ் தர்ம சந்திக்தம் -இத்யாதிகளை உடைத்தாய் இருக்கை–(அவிஸ்தரமஸந்தி,க்‌,த,மவிலம்பி,தமத்‌,ருதம்‌ | உரஸ்ஸ்தஹ்‌ கண்டஆஹ்‌ வாக்யம்‌ வர்த்ததே மத்யமே ஸ்வரே ॥ [( இந்த ஹனுமானுடைய ) மார்பிலிருந்தும்‌, தொண்டை யிலிருந்தும்‌ வரும்‌ வாக்யம்‌ மத்‌,யம ஸ்வரத்திலும்‌, விஸ்தார மின்றியும்‌, ஸந்தேஹமின்‌ றியும்‌, காலதாமத மில்லாமலும்‌, வேகமில்லாமலுமிருக்கிறது)

லோகே –பகவத் பக்திக்கு மேட்டு மடையான சம்சாரத்திலே-சைஷா பார்க்கவீ வாருணீ வித்யா பரமே வ்யோமன் ப்ரதிஷ்ட்டிதா -(இது ப்‌,ருகு,விற்கு வருணனால்‌ சொல்லப்பட்ட வித்யை; பரமபதத்தில்‌ நிலை நிற்பது (இது)என்று பரம பதத்தில் பரிமாறக் கடவ பக்தியை-நான் முகனார் பெற்ற நாட்டுளே நற்பாலுக்கு உய்த்தனன் -திருவாய்மொழி -7-5-1-என்கிறபடியே சம்சாரத்தில் நடையாடும்படி பண்ணினபடி –அவதீர்ண –ஈஸ்வராவதாரம் போலே இறே ஸ்வயம் பிரயோஜனமான பக்த்யவதாரம் –பரமார்த்த –பரம பிரயோஜன ரூபமாய் இருக்கை –-சமக்ர –-அதனில் பெரிய அவா -என்னும்படி குறைவற்று இருக்கை –பக்தி யோகாய – பக்தியை உடையரான – உக்தமான பக்தி தத்வ ஜ்ஞானங்கள் இரண்டையும் பக்தி சப்தத்தாலே சொல்லிற்று

நாத முநயே யமிநாம் வராய –-முடியானே -திருவாய்மொழி -3-8- யில் சொல்லுகிற படியே
அவனை அல்லது அறியாத கரணங்களை உடையராய் இருப்பார்க்குத் தலைவர் ஆனவருக்கு
வாய் அவனை அல்லது வாழ்த்தாது -முதல் திருவந்தாதி -11-என்று இருக்கும் அவர்களுக்கு வரணீயராய் இருக்குமவர் -என்றுமாம்-(வசோபி – ஸ்ரீ -ந்யாய தத்வம் -கிரந்தம் ஸ்ரீ தேசிகன் போன்றார் காட்டி அருளி உள்ளார்கள்-நித்ய கால ஷேப ஸ்ரீ ஸூக்திகளும் உண்டே-பக்தி யோகம் -ஸ்ரீ -குருகை காவல் அப்பனுக்கு பிரசாதித்து அருளிய யோக சாஸ்திரமும் –-ஸ்ரீ -மணக்கால் நம்பி போல்வாருக்கு சாதித்து அருளிய பிரபத்தி சாஸ்திரமும் –பரமார்த்த -சமக்ர -இரண்டு விசேஷணங்கள்-பரம புருஷார்த்தம் என்றும் –பரி பூர்ணம் -என்றும் –-ஸ்வயம் பிரயோஜனம் என்றதாயிற்று -)

ஸ்ரீ ஸூக்திகளை பக்தி பரிவாஹம் என்றது –சொல்லாவிடில் சரீரம் தரிக்க முடியாது –பக்தி பலாத்காரத்தாலே அவதரித்த சொற்கள்-அம்ருத பரிவாஹம் -பிரசன்னமாயும் மதுரமாயும் சீதளமாயும்
ஸ்ரீ நியாய தத்வம் போன்ற இப்பொழுது லுப்தமான கிரந்தங்களும்-நித்ய காலக்ஷேப ஸ்ரீ ஸூக்திகளும் -இவையே பின்பு ஏடு படுத்தப் பட்டு நம்மளவும் வந்தனவே-யோகம் -குருகைக் காவல் அப்பன் அளவு மட்டுமே –-பக்தி -நெஞ்சு கனிந்து ப்ரீதி ரூபமான த்யானம் -பரமார்த்த சமக்ர -இரண்டு விசேஷங்கள் -ஸ்வயம் பிரயோஜனம் -என்றும் அவனை பிராபிக்க பர்யாபதமான உபகரணம் என்றது ஆயிற்று –

அபரிமித அச்யுத பக்தி தத்வ ஜ்ஞானம்
அம்ருதாப்தி பரிவாஹ ஸூ பைர் வசோபி
லோகே அவதீர்ண பரமார்த்த சமக்ர பக்தி யோகாய
யமிநாம் வராய நாத முனயே பூயோ நம
-என்று அந்வயம்-

அச்சுதற்கு அளப்பில்லாத பக்தி தத்வ ஞானமாம்
அச்சுதைக் கடல் பெருக்கு எனத் தரைச்சுபுச் சொலான்
மெச்சி மெய்ப்பலன் விளைக்கும் பக்தி யோக கர்த்தனை
நச்சு நான் ஸ்துதிப்பன் இன்று நாதனாம் முனீந்த்ரனே
–3–அச்சுதன் -ஆஸ்ரிதர்களை ஒருகாலும் நழுவ விடாதவன்–ஸர்வேஸ்வரன் விஷயத்தில் அளக்க ஒண்ணாத பக்தி தத்வ ஞானம் ஆகிய அந்த அமுதக் கடலானது உள்ளடங்காது மேலே பொங்கியது போலே மதுரமான சொற்களால் பரம ப்ரயோஜன ரூபமாயும் பரிபூர்ணமாமாயும் இருக்கிற பக்தி யோகத்தை அன்பு கூர்ந்து இவ்வுலகத்தில் பிரகாசிக்கும் படி செய்து அருளினவரும் முனிவர்களுக்கும் ஸ்ரேஷ்டருமாய் -அவர்களாலும் பூஜிக்கத் தக்கவராயும்
அந்த நாத முனிகளை மறுபடியும் நான் வணங்குகிறேன் –

ஸ்லோகம் -4- அவதாரிகை –பெரிய முதலியார் ஜ்ஞானத்துக்கு –-லோக பரிக்ரஹம் மாத்ரம் அன்றிக்கே
வேதவிதக்ரேசர பராசரானுமதியாலே ப்ராமாணிகத்வம் உண்டு என்று இவ்வர்த்தத்தின் உடைய ப்ராமாணிகத்வம் சொல்லுகிறது-கிஞ்ச இவர்க்கும் ஸ்ரீ பராசர பகவானுக்கும் ஸ்வபாவ ஐக்கியம் உண்டு-கிருஷ்ண ப்ராவணயமும்-லோகத்துக்கு பண்ணின ஔதார்யமும்-இருவருக்கும் உண்டு
அத்தாலும் அவரை நமஸ்கரிக்கிறார்

தத்த்வேன யஸ் சித் அசித் ஈஸ்வர தத் ஸ்வபாவ
போக அபவர்க்க தத் உபாய கதீ உதார
ஸ்ந்தர்ஸ்யன் நிரமிமீத புராண ரத்னம்
தஸ்மை நமோ முநிவராய பராசராய
–4-

ரிஷிகளில் தலை சிறந்தவரான, உதார குணத்தை உடையவரான பராசர ரிஷிக்கு என் வணக்கங்கள்.
இவரே சித் (ஆத்மாக்கள்), அசித் (அசேதனப் பொருட்கள்), ஈச்வரன், இவர்களுடைய தன்மைகள்,
இவ் வுலக இன்பங்கள், மோக்ஷம், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அடையும் வழி,
ஆத்மாக்களால் அடையப்படும் குறிக்கோள் ஆகியவற்றை உள்ளபடி, புராணங்களில் ரத்னமான
ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவர்.

தத்த்வேன –-ஜ்ஞாதவ் யார்த்தங்களை உள்ள படியே காட்டுகை –-ச ஹோவாச வியாச பாராசர்ய -(பராஸரரின்‌ புத்திரரான அப்படிப்பட்ட வியாஸரன்றோ சொன்னார்)என்கிற பிரமாண பிரசித்தியை பிரகாசிப்பிக்கிறது –சித் –ஆத்மா ஸூ ததோ அஷரஸ் சாந்தோ நிர்க்குண ப்ரக்ருதே பர ப்ரவ்ருத்த்ய பசயௌ நாஸ்ய சைகஸ் யாகில ஜந்துஷூ -([ஆத்மாவானவன்‌, கர்மம்‌ முதலிய அஸாுத்‌,த,மற்றவன்‌ 5 விநாஸமற்றவன்‌ ; பசி, தாஹம்‌ முதலியவையற்றவன்‌ ; ஸத்வ ரஜஸ் தமோ கு,ணங்களற்றவன்‌; ப்ரக்ருதியைக்‌ காட்டி லும்‌ மேலானவன்‌ ; எல்லாப்‌ பிராணிகளிலும்‌, ஒரே மாதிரி (ஜ்ஞாநைகாகாரனாக) இருக்கும்‌ இவனுக்கு அதிகமாவதும்‌, குறைவதும்‌ கிடையாது.])ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-13-71-இத்யாதி –இதில் நிர்க்குணத்வம் ஆவது –சத்வாதி குண ராஹித்யம் .--ஏக ஸ்யாகில ஜந்துஷூ -தேவ திர்யக் மனுஷ்யாக்ய சர்வ ப்ரானிஷூ ஏகஸ்ய -ஜ்ஞானைக ஆகாரத யாசம இத்யர்த்த -என்றும்
நிர்தோஷம் ஹி சமம் ப்ரஹ்ம -என்றும்–பண்டிதாஸ் சம தர்சின -இதி பகவதைவோக்தம்--(வித்‌,யா விநய ஸம்பந்நே ப்‌,ராஹ்மணே க,வி ஹஸ்திநி | மாநி சைவ ஸ்வபாகே ௪ பண்டி,தாஸ்‌ ஸம தர்ஸ்ரிந: || இஹைவ தைர்ஜிதஸ் ஸர்க்கேரா யேஷாம்‌ ஸாம்யே ஸ்திதம்‌ மந:। நிர்ததோஷம்‌ ஹி ஸமம்‌ ப்‌,ரஹ்ம தஸ்மாத்‌ ப்‌ரஹ்மணி தே ஸ்தி,தா: ॥[வித்‌,யை, அடக்கம்‌ முதலியவைகளுடன்‌ கூடிய ப்ராஹ்‌ மணனிடமும்‌, கேவல ப்‌ ராஹ்மணனிடமும்‌, பசுவிடமும்‌, யானையிடமும்‌, நாயிடமும்‌, சண்டாளனிடமும்‌, ஆத்மாவை உண்மையாய்‌ அறிந்தவர்கள்‌ ஸமதர்ஸிகளாக இருப்பார்‌கள்‌. எவர்களுடைய மனமானது (இம்மாதிரியான) ஸம நிலைமையிலிருக்கிறதோ, அவர்களால்‌ இங்கேயே ஸம்‌ ஸாரம்‌ ஜயிக்கப்பட்டது. ப்ரகருதி ஸம்ஸர்க்க,மற்றதும்‌, ஸமமானதுமான ஆத்மவஸ்து வன்றோ ப்ரஹ்மம்‌ (ப்‌,ரஹ்மத்‌ திற்கு ஸமானமானது). ஆகையால்‌ அவர்கள்‌ ப்ரஹ்மத்‌ திலேயே நிலை நிற்கிறார்கள்‌)-அசித்
அசம்ஜ்ஞா வத்தான அசேதனம் –விகார ஜநநீம் அஜ்ஞாம்-இத் யுபநிஷத்(விகார ஜநநீமஜ்ஞாம்‌ அஷ்டரூபாமஜாம்‌ த்‌.ருவாம்‌ [(பதினாறு) விகாரங்களை உண்டாக்குவதும்‌, (ப்ரக்ருதி, மஹான்‌, அஹங்காரம்‌ ஐந்து தன்மாத்ரைகள்‌ என்னும்‌) எட்டு ரூபத்தை உடையதும்‌, ஞானமற்றதும்‌, பிறப்‌ பற்றதும்‌, நிலையானதுமான ப்ரக்ருதியை)-தத்ராபி பராசர – த்ரிகுணம் தஜ் ஜகத் யோனி அநாதி ப்ரபவாப்யயம் அஷய்யம் -இத்யாதி(அக்ஷய்மம்‌ நாந்யதாதா ரமமேயமஜரம்‌ த்‌,ருவம்‌| ஸப்‌,த;ஸ்பர்ஸ விஹீநம்‌ தத்‌ ரூபாதி,பி,ரஸம்ஹிதம்‌ || த்ரிகுணம்‌ தஜ்ஜக,த்‌,யோநிரநாதி,ப்ரப, வாப்யயம்‌ ||[(ப்ரக்ருதியானது) க்ஷயமற்றது; மற்றொரு அசித்தை ஆதாரமாகக் கொண்டிராதது; (தேஸகாலாதி,களால்‌) அளவற்றது;குறைவற்றது; நிலையானது; ஸப்‌த,ஸ்பர்ஸங்களற்றது; ரூபம்‌ முதலியவை யற்றது ; ஸத்வ ரஜஸ் தமோ கு,ணங்களை உடையது ; தனக்குக்‌ காரணத்தையும்‌, பிறப்பையும்‌, முடிவையுமற்ற அதுவே உலகிற்குக்‌ காரணம்‌.])–ஈஸ்வர-உபயோர் நியந்தாவான ஸ்வாமி –

தத்ராபி பராசர – பரமாத்மா ச சர்வேஷாம் ஆதார பரமேஸ்வர விஷ்ணு நாமா ச வேதேஷூ வேதாந்தேஷூ ச கீயதே –([பரமாத்மாவே எல்லோருக்கும்‌ ஆதாரமாகவும்‌, மேலான ஈஸ்வரனாகவுமிருப்பவன்‌. அவன்‌ வேதங்களிலும்‌, வேதாந்தங்களிலும்‌ விஷ்ணுவென்‌ ற பெயரை யுடையவனாகக்‌ கீர்த்திக்கப்படுகிறான்)என்றும்-பர பராணாம் பரம பரமாத்மாத்ம சம்ஸ்தித ரூப வரணாதி நிர்தேச விசேஷண விவர்ஜித சர்வத்ரா சௌ சமஸ்தஞ்ச வசத் யத்ரேதி வை யத ததஸ் ச வாஸூ தேவாதி வித்வத்பி பரிபட்யதே -(மேலானவர்களைக் காட்டிலும்‌ மேலானவனும்‌, தன்னைக் காட்‌டிலும்‌ உயர்ந்தவனற்‌றவனும்‌, தனக்குத் தானே ஆதாரமாக இருப்பவனுமான பரமாதமா–ரூபம்‌,நிறம்‌ முதலியவை,காமம்‌ எனப்படும்‌ (ப்ராக்ருதமான) விசேஷணங்களற்றவன்‌.இவன்‌ அறிஞர்களால்‌ வாஸுஃதேவனென்று படிக்கப்படுகிறான்‌)இத்யாதி –தத் ஸ்வபாவ–தேஷாம் ஸ்வ பாவ தத்ர ஸ ச – ப்ரதாநஞ்ச புமாம்ச்சைவ சர்வ பூதாத்மா பூதா விஷ்ணு சக்த்யா மகா புத்தே வருதௌ சம்ச்ரய தரமிநௌ-(மஹா புத்‌,தியை யுடையவரே ! ஒன்றோடு ஓன்று சேர்ந்‌ திருக்கும்‌ ஸ்வபாவத்தை யுடைய ப்ரக்ருதியும்‌, புருஷனும்‌, எல்லா பூதங்களுக்கும்‌ ஆத்மாவான விஷ்ணு ஸக்தியினால்‌ வியாபிக்கப்பட்டிருக்கின்றன)இத்யாதி–போக – ப்ரஹ்மாதி பிபீலி காந்தமான பத்த சேதன வர்க்கத்துக்குக் கர்ம அனுகுணமாக தாரதம்யேன அனுபாவ்யமான சப்தாதிகள் ––அப வர்க்க –-சப்தாதிகள் உடைய அல்ப அஸ்திரத்வாதி தோஷ தர்சனத்தாலே பீதரான சேதனருக்கு துக்க நிவ்ருத்தி ரூபமான ஆத்மபிராப்தியும் -ஸூகைகதமான பகவத் பிராப்தியும் .-

தத்ராபி ஸ –-யோகி நாமம்ருதம் ஸ்தாநம் ஸ்வாத்ம சந்தோஷ காரிணாம் –(ஆத்மமாத்ரானுப,வரிஷ்டரான யோகிகளுக்கு அழிவற்ற ஸ்தானம்‌]) ததச்ய த்ரிவித ஸ்யாபி துக்க ஜாதஸ்ய -இத்யாரப்ய – நிரஸ்தாதிசய ஆஹ்லாத ஸூ காபாவைக லஷ்ணா பேஷஜம் பகவத் ப்ராப்தி ஏகாந்தாத் யந்திகீ மதா -இத்யாதி –தத் உபாய கதீ –-போக மோஷங்கள் உடைய சாதன பேதங்களை
நித்ய நைமித்திக காம்ய கர்ம அனுஷ்டானம் போகச்ய- சாங்கா நுஷ்டித கர்மசாத் யஜ்ஞானயோகாதி ஆத்மப்ராப்தே ஜ்ஞான கர்மானுக்ருஹீத பக்தி பிரபதிஸ்ஸ பகவத் பிராதே

உதார--சம்சாரிகள் பக்கல் அர்தித்வம் ஆதல் -பிரயோஜனம் ஆதல் -நினையாதே-இவர்கள் அனர்த்த பரிஹாரமே பிரயோஜனமாக உபகரித்து அல்லது நிற்க மாட்டாத மேகம் போலே உபகரித்தவர்ஸந்தர்ஸ்யன் –-சம்சய -விபர்யய -ரஹிதமாக -பிரத்யஷிப்பியா நின்று கொண்டு –நிரமிமீத –
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளை -நான் முகன் திருவந்தாதி -1- என்கிறபடியே
துரவகாஹமான வேதார்த்தத்தை அல்ப க்ரந்தாத்தாலே பண்ணினான் -என்கை –

புராண ரத்னம்–புராணம் ஆவது –சர்க்கச்ச பிரதி சர்க்கச்ச -இத்யாரப்ய-புராணம் பஞ்ச லஷணம் -(ஸர்க்கஸ்ச ப்ரதிஸர்க்கஸ்ச வம்ஸ மந்வந்தராணி ச।வம்ஸாநுசரிதம்‌ சைவ புராணம்‌ பஞ்ச லக்ஷணம்‌ ॥! [ஸ்ருஷ்டி, ப்ரளயம்‌, வம்ஸம்‌, மன்வந்தரம்‌, வம்ஸ சரித்ரம்‌ ஆகிய இவ் வைந்து லக்ஷணங்களை யுமுடையது புராணமாகும்‌.)என்கிற படியே பஞ்ச லஷனோபேதமான கிரந்த சாதம் புராபி நவம் புராணம் -என்றுமாம் –-அதாவது -ஸ்வ ரசத்தை என்றும் ஒக்க ஒருவரால் அழிக்க ஒண்ணாது இருக்கை –
ரத்னம் –அர்த்த பிரகாசகமாய் இருக்கையும் – சங்க்ரஹமாய் இருக்கையும் – ஆபத் ரஷகமாய் இருக்கையும் – இந்தப் புராணாதிகாரிக்கு லோக பரிக்ரஹம் சித்திக்கையும் –(ரத்னத்ரயம் -மந்த்ர ரத்னம் -த்வயம் -ஸ்தோத்ர ரத்னம் -புராண ரத்னம் -ஸ்ரீ விஷ்ணு புராணம்)

தஸ்மை நமோ – முநிவராய – தனக்கு வரம் கொடுத்த வசிஷ்ட புலஸ்த்யர்களுக்கு-முத்ரிதா முத்ரித பிரதி முத்ரிதராய்-அத்தாலே அவர்கள் படியை உடையவன் -என்னுதல் –-முநிநாம் வரணீயாய் – என்கிறபடியே -அவர்களுக்கு ஆதரணீயன் -என்னுதல்-பராசராய —-பரராகிரார் -பாஹ்ய குத்ருஷ்டிகள்-அவரை பிரமாண சரங்களாலே ஹிம்சித்து வைதிக மரியாதையை ஸ்தாபித்தான் -என்னுதல் –-இந்திரிய ஜயத்தாலே ரஜஸ் தமஸ் ஸூக்களை ஜெயித்தான் -என்னுதல்-

யா உதார சித் அசித் ஈஸ்வர-தத் ஸ்வ பாவ போக அபவர்க்க தத் உபாய கதீ-தத்த்வேன சந்தர்சயன்
புராண ரத்னம் நிரமிமீத-முநிவராய பராசராய நம
-என்று அந்வயம்

தத்துவத்தின் சித் அசித்தோடு ஈசன் என்னும் தன்மையும்
முக்தி போக சாதனத்து உபாய மார்க்க முழுமையும்
வித்தரித்த மெய்யுரைப் புராண ரத்ன மீது யரும்
சத்துவப் பராசர முனீந்திரன் முன் தாழ்வனே
–4-பராசரன் –பர சமயங்களை பிராமண சரங்களால் நிரசித்தவன்–சேதனம் அசேதனம் இவற்றின் ஸ்வரூபங்களையும்-இவ் விரண்டு தத்துவங்களுக்கும் ஸ்வாமியான ஈஸ்வர ஸ்வரூபத்தையும்-இம் மூன்றின் தன்மைகளையும் -யாவருக்கும் அனுபாவ்யமான போகங்களையும் மோக்ஷத்தையும் -இவற்றை அடைவதற்கு உரிய உபாய மார்க்கங்களையும்
முழுமையும் உணர்ந்து பிறர்க்கு விசதமாய் விளங்கச் செய்பவராய் பொருளை விளக்குவதிலும் ஆத்ம ரக்ஷணத்திலும் ரத்னம் போன்றதான ஸ்ரீ விஷ்ணு புராணத்தைச் செய்து அருளினவரும் முனி ஸ்ரேஷ்டருமான பராசர முனிவர் முன் வணங்குகின்றேன்

ஸ்லோகம் -5- அவதாரிகை –இந்த ஜ்ஞானம் அதிக்ருதாதிகாரமாய்ப் போகாமே சர்வாதிகாரமாம் படி
த்ராவிடமான ப்ரஹ்ம சம்ஹிதையை-மயர்வற மதி நலம் அருளினான் -என்கிற பக்தியாலே வாசிதமாக்கி மரங்களும் இரங்கும் வகை -திருவாய் மொழி -6-5-9-என்கிற தம்முடைய ஆகர்ஷகமான ஈரச் சொல்லாலே அருளிச் செய்கையாலும் பெரிய முதலியாருக்கு இந்த ஜ்ஞானத்துக்கு உத்பாதகம் ஆழ்வார் திருவடிகள் ஆகையாலும் இவர் திருவடிகளிலே விழுகிறார் –உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு எத்திறம் -திருவாய்மொழி -1-3-1- என்றும்-நெய்யுண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள -திருவாய்மொழி -5-10-3- என்றும்-எல்லாம் கண்ணன் -திருவாய்மொழி -6-7-1- -என்றும் பெரிய முதலியாரையும் ஸ்ரீ பராசர பகவானையும் போலே
கிருஷ்ண குணவித்தராய் இருக்கும் படியையும் நினைத்து ஆழ்வார் திருவடிகளிலே சரணம் புகுகிறார் –

மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதி
சர்வம் யதேவ நியமேன மதநவ்யாநாம்
ஆத்யஸ்ய ந குலபதேர் வகுளாபி ராமம்
ஸ்ரீ மத ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா
–5-

நம்மாழ்வாரின் திருவடிகளே எனக்கும் என் குலத்தவர்களுக்கும், தாய், தந்தை, மனைவி, மக்கள், சிறந்த செல்வம் மற்றும் எல்லாமாகும். -மகிழ மாலையால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும், கைங்கர்யச் செல்வத்தை உடையராயிருக்கும், நம் வைஷ்ணவ குலத்துக்குத் தலைவரான நம்மாழ்வாரின் இரண்டு திருவடிகளில் என் தலையை வைத்து வணங்குகிறேன்.

மாதா –உத்பத்திக்கு முன்னே வரம் கிடந்தது-பெருகைக்கு வருந்தி-பத்து மாசம் கர்ப்ப தாரணம் பண்ணி
பிரசவ வேதனையை அனுபவித்து-அஸூத்திகளையும் மதியாதே-பால்ய தசையிலே ஆதரித்து-பகவான் ஆனாலும் இவன் புருஷ பாஷணம் பண்ணப் பொறுத்து-அகல இசையாதே-அவன் பிரியத்தையே வேண்டும் – மாதாவைப் போலே உபகாரகனாய் இருக்கை –பிதா –-அவள் பாத்ர மாத்ரமாம் என்னும்படி-உத்பாதகனாய் என்றும் ஒக்க ஹித பரனான பிதாவும்கரியான் ப்ரஹ்மத பிதா –யுவதயஸ் – இருவரையும் மறந்து விரும்பும் யுவதிகளைப் போலே நெஞ்சுக்கு இனியராய் இருக்கைதனயா – அவளுடைய யௌவனத்தை அழிய மாறிப் பெற்றவனாய்-பால்யத்தில் ஸூககரனாய்-பக்வ தசையில் ரஷகனாய்-ஆமுஷ்மிகத்தில் நிரய நிஸ்தாரகனான-புத் -என்னும் நரகத்தை -தாண்டுவிப்பவன் –-புத்ரனைப் போல் இருக்கை –விபூதி –விபவம் இல்லாத போது இவை எல்லாம் அசத் சமமாய் இருக்கையாலே இவற்றை நன்றாக்கும் ஐஸ்வர்யம் போலே உத்தேச்யமாய் இருக்கைசர்வம் – அனுக்தமான சர்வ போகங்களுமாய் இருக்கை –யதேவ – அவதாரண்த்தாலே –சேலேய் கண்ணியர்-திருவாய் மொழி -5-1-8- என்று இருக்கும் ஆழ்வார் நினைவு இன்றி இருக்கை –

நியமேன –என்றும் ஒக்க அவருக்கு பிரியம் என்று போமது ஒழிய ப்ராமாதிகமாகவும் புறம்பு போவது அன்றிக்கே இருக்கை –மதநவ்யாநாம்வித்யயா ஜந்ம நா வா -(99, தபந பவநயோர்‌ ய: ப்ராப்தவாந்‌ புத்ரப,ாவம்‌ ஸதமக,க்குதபாலிர்‌ வித்‌,யயா ஐந்மநா வா। [இந்திரனால்‌ அடையாளம்‌ செய்யப்பட்டவனும்‌, ஸூர்யனுக்‌கும்‌, வாயுவுக்கும்‌, வித்‌,யையினாலும்‌, ஜன்மத்தினாலும்‌ புத்ரனா யிருக்கும்‌ தன்மையை அடைந்தவனுமான ஹனுமான்‌…])என்று ஸூர்யன் வாயு இருவருக்கும் வித்யை ஜந்ம புத்திரன் தன்மை அடைந்த ஹனுமான் –உபய சந்தான ஜாதருக்கும்-ஆத்யஸ்ய – வைதிக சந்தானத்துக்கு பிரதம ஆசார்யராய் இருக்கை –ந குலபதேர் –-ஸ்திரீக்கு பர்த்ரு குலம் போலே-கோத்ர ரிஷிகளும் அவரே என்கை –வகுளாபி ராமம் – திரு மகிழ மாலையாலே அலங்க்ருதமாய் உள்ளத்தை –
மகிழ் அலங்காரமான திருவடிகள்-இத்தாலே திருவடிகளில் பரிமளத்தாலே வந்த போக்யதையைச் சொல்லுகிறது –நல்லடி மேல் அணி நறு துழாயை -திருவாய் மொழி -4-2-2-வ்யாவர்த்திக்கிறது –

ஸ்ரீ மத – ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யோடே நித்ய சம்யுக்தமாய் இருக்கை –-அப்ர வீச்ச ததா வாக்யம் ஜாதக்ரோதா விபீஷண அந்தரி ஷகதஸ் ஸ்ரீமான் ப்ராதரம் ராஷஸாதிபம் –யுத்த -16-17-([ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீயையுடைய விபீஷணன்‌ அப்போது மிகவும்‌ கோபங்கொண்டவனாய்‌, ஆகாயத்தில்‌ கிளம்பி, ராக்ஷ்ஸர்களுக்கு அதியதியான தன்‌ தமையனைக்‌ குறித்துச்‌ சில வார்த்தைகள்‌ சொன்னான்‌)
பரமாபதமா பன்னோ மனஸா சிந்தயத் ஹரிம் ஸ து நாக வர ஸ்ரீ மான் நாராயண பராயண -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -69-47-(ஸ்லாக்‌,யமான ஆபத்தை அடைந்தவனும்‌, கைங்கர்ய ஸ்ரீயை உடையவனும்‌, நாராயணனையே மேலான கதியாகக் கொண்டவனுமான அந்த கஜேந்திராழ்வான்‌ மனத்தி னாலே ஹரியை நினைத்தான்)-சர்வ பரியகரஸ் தஸ்ய ராம ஸ்யாபி சரீரத-லஷ்மனோ லஷ்மி சம்பன்னோ பஹி ப்ராண இவாபர -பால -18-28-(கைங்கர்ய லக்ஷ்மியை உடைய லக்ஷ்மணன்‌, ராமனுக்கு ஸரீரத்தைக் காட்டிலும்‌ எல்லாப்‌ பிரியத்தையும்‌ செய்பவனாகவும்‌, வெளியிலிருக்கும்‌ மற்றொரு ப்ராணன் போலவும்‌ விளங்கினான்)என்று பகவத் பிரத்யா சத்தியை ஐஸ்வர்யமாக சொல்லக் கடவது இறே – என்னுடைய சம்பத்துக்கு அடியான ஐஸ்வர்யத்தை உடையார் -என்றுமாம்-

ததங்க்ரி யுகளம் –-அது -என்னும் அத்தனை ஒழிய பேசி முடிக்க ஒண்ணாது -என்கை –யுகளம் – சேர்த்தியால் வந்த அழகை உடைத்தாய் இருக்கை –ப்ரணமாமி மூர்த்நா – ஆழ்வார் உடைய திருவடிகளை நினைத்த வாறே-நம -என்று நிற்க மாட்டாதே-அவர் திருவடிகளிலே தலை சேர்க்கிறார் –கீழ் உபகாரகரை ஆஸ்ரயித்த இத்தால் செய்தது-முமுஷூவுக்கு உபகாரகரே சேஷித்வ பிரதிபத்திக்கு விஷய பூதரும் ஸ்துத்யரும் என்னும் இடம் சொல்லிற்று ஆயிற்று–ஒருவருக்கு சேஷிகள் இருவராம் படி இருக்கை எங்கனே -என்னில்-ஸ்ருதி சேஷித்வம் யாகத்துக்கும் புரோடாசத்துக்கும் உண்டானால் போலே-ஈஸ்வரன் பிரதான சேஷியாய்-ததீயர் த்வார சேஷிகளாம் இடத்தில் விரோதம் இல்லை-அதவா
நிருபாதி சேஷி அவன்-தத் சம்பந்தம் அடியாக வந்தது ஆகையாலே பாகவத சேஷித்வம் சோபாதிகம் என்றுமாம் –

தமக்கு ஸ்தோத்ர ஆரம்ப ஹேதுவான ஜ்ஞான பக்த்யாதிகள் பிதா மஹோபாத்ததனம் -என்கைக்காக-முதல் மூன்று ஸ்லோகத்தாலே பெரிய முதலியார் உடைய ஜ்ஞான பக்த் யாதிக்யம் -சொன்னார்
நாலாம் ஸ்லோகத்தாலே –இவ் வர்த்தம் த்ரைவித்ய வ்ருத்தானுமதம் -அதாவது – வைதிகரும் பெரியோருமான பராசரால் அனுமதிக்கப் பட்டது -என்கிறார் –-ஐஞ்சாம் ஸ்லோகத்தாலே இவருக்கு இந்த ஜ்ஞானம் ஆழ்வாராலே வந்தது -என்கிறார் –

(ஆத்யஸ்ய ந குலபதே-எங்கள் பிரபன்ன குடித் தலைவர் –விப்ரர்க்கு கோத்ர-சரண -ஸூத்ர கூடஸ்தர்
பராசர பாராசார்ய போதாய நாதிகள்–பிரபன்ன ஜன கூடஸ்தர் -பராங்குச பரகால யதிவராதிகள்

ஆத்யஸ்ய ந குலபதே–ஸ்ரீ லஷ்மி நாதனை சொல்லி –ஸ்ரீ மத் அங்க்ரி யுகளம்-ஸ்ரீ சடகோபரை சொல்லிற்று என்றுமாம் –-நம்மாழ்வாரை சொல்லுவதே உசிதம் என்பது பூர்வர்கள் திரு உள்ளம் –
மத் அன்வயாநாம்-இவருக்கு முன்பு உள்ளோர்க்கும் பின்பு உள்ளோர்க்கும் -ஸ்ரீ வைஷ்ணவ சந்தானங்களுக்கு அனைவருக்கும் ஆழ்வார் திருவடிகளே சர்வஸ்வம் –என்றதாயிற்று –வகுளாபி ராமம்–மகிழ் மாலை மார்பினன் -வகுளாபரணர்)

மத் அநவ்யாநாம்–என்னைச் சேர்ந்தவர்களுக்கு-இத்தால் தமது திரு முடி சம்பந்தத்தால் பூர்வர்களுக்கும் திருவடி சம்பந்தத்தால் அஸ்மதாதிகள் பர்யந்தமாக சொன்னவாறு
நியமேன-எப்பொழுதும்
மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதி சர்வம் –தாய் தந்தை மக்கள் செல்வம் மற்றும் உள்ள எல்லாம்
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும் மேலாய்த் தாய் தந்தையும் அவரே இனி யாவரே -5-1-8-என்று ஆழ்வாருக்கு அவன் திருவடிகள் போலே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஆழ்வார் திருவடிகளே சர்வமும் -என்ற திட அத்யவசாயம் அருளிச் செய்கிறார்-விப்ரர்க்கு கோத்ர-சரண -ஸூத்ர கூடஸ்தர் பராசர பாராசார்ய போதாய நாதிகள் –பிரபன்ன ஜன கூடஸ்தர் -பராங்குச பரகால யதிவராதிகள்-
யதேவ –யாதோ ஒரு ஆழ்வார் திருவடியேயோ
ந ஆத்யஸ்ய குலபதேர் –நமக்கு குலகூடஸ்தராகிய ஆழ்வாருடைய-நம்முடைய குலத்தலைவர் -என்று திரு நாமம் சாத்தி அருளுகிறார்
வகுளாபி ராமம்–மகிழ மலர்களினால் அழகாயும்-மகிழ் மாலை மார்பினன் -வகுளா பரணர் –
ஸ்ரீ மத -நித்ய உஜ்வலமாயும் இருக்கிற
ததங்க்ரி யுகளம் –அந்தத் திருவடி இணையை
அன்றிக்கே
ந ஆத்யஸ்ய குலபதேர்–லஷ்மீ நாத சமாரம்பாம் –வந்தே குரு பரம்பராம் –என்பதால் பெரிய பெருமாளைச் சொல்லி-ததங்க்ரி யுகளம்-நம்மாழ்வாரைஸ்ரீ சடகோபன் -அன்றோ -சொல்லிற்று என்றுமாம்-முந்திய அர்த்தமே –ந ஆத்யஸ்ய குலபதேர்-நம்மாழ்வாரை சொல்லுகிறது என்பதே பூர்வார்கள் நிர்வாகம் -மிகவும் பொருந்தும் -இதுவே கொள்ளத் தக்கது
ப்ரணமாமி மூர்த்நா –தலையால் வணங்குகிறேன்-பெரிய முதலியாரையும்-ஸ்ரீ பராசர பகவானையும் போலே-ஸ்ரீ கிருஷ்ண குணவித்தராய் இருக்கும் படியையும் நினைத்து ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளிலே சரணம் புகுகிறார் –

மத் அன்வயாநாம் யதேவ நியமேன
மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ் சர்வம்
ஆத்யஸ்ய ந குலபதே வகுளாபி ராமம்
ஸ்ரீ மத் அங்க்ரி யுகளம் மூர்த்நா ப்ரணமாமி
-என்று அந்வயம் –

என்னிட வம்சத்தார்களுக்கு எக்காலத்திலும் இணை இல்லாத் தமரும்
அன்னையும் அத்தன் தானும் ஓர் இனிய வரிவையும் ஆக்கமும் மகவும்
பின்னும் மேலாய பேறுகள் யாவும் யாகும் எம் குலபதியாம் அம்
மன்னு சீர் மகிழ மாலையார் மாறன் அடியிணைத் தலை வணங்குவனே
–5—எம் வம்சத்தார்களுக்கு எக்காலத்திலும் இணை இல்லாமல் அமர்ந்து பிரியத்தைச் செய்வதில் தாய் போன்றவரும்-ஹிதத்தைச் செய்வதில் தந்தை போன்றவரும்-இன்பம் விளைப்பதில் ஒரு அருமையான ஸ்த்ரீ போன்றவரும்
பாதுகாப்பத்தில் புத்ரனைப் போன்றவரும்-எல்லாவற்றையும் சாதிப்பதில் தனம் போன்றவரும்
இவ்விதம் இன்னம் பலவாய் உத்தமமான சம்பத்து போன்றவரும் எங்கள் குலத்துக்கு பரம ஆச்சார்யராயும் மகிழ மாலை அணிந்து விளங்குபவருமான அந்த நம்மாழ்வாருடைய திருவடி இணையைத் தலையால் வணங்குகின்றேன் –

ஸ்லோகம் -6- அவதாரிகை –அறியாதன அறிவித்த அத்தா நீ செய்தன -திருவாய் மொழி -2-3-2- என்று
உபகாரத்தில் ப்ரதமனாய் இருக்கும் இறே–வைகுந்தனாகப் புகழ் -திருவாய்மொழி -7-9-7-என்கிறபடியே
தன்னுடைய ஸ்துதி ஈஸ்வரனுக்கு அபிமதம் ஆகையாலும்-இது தான் ஆச்சார்யர்களுக்கு ப்ரியம் ஆகையாலும்-ஸ்தோத்ரத்தில் மேல் சொல்லப் புகுகிற உபாய உபேயங்களை சங்க்ரஹித்துக் கொண்டு
உபக்ரமித்த படியே பகவத் ஸ்தோத்ரத்திலே இழிகிறார்
–நமது குலத்துக்கு அழியாத செல்வமான பகவத் பாராத விந்தத்தை ஸ்தோத்ரம் பண்ணப் போவதாக ப்ரதிஜ்ஜை செய்கிறார்-குல தனம் உபாயத்வம்-அயத்ன சித்தமுமாய் ஸ்வத பிராப்தமுமாய் இருக்கை-குல தைவதம் -உபேயத்வம் –-உபாய உபேயங்களை சங்க்ரஹித்துக் கொண்டு உபக்ரமித்தபடியே பகவத் ஸ்தோத்ரத்திலே இழிகிறார் –

யன் மூர்த்நி மே ஸ்ருதி ஸிரஸ்ஸூ ச பாதி
யஸ்மின் அஸ்மன் மநோ ரத பதஸ் சகலஸ் சமேதி
ஸ் தோஷ்யாமி ந குல தனம் குல தைவதம் தத்
பாதார விந்த மரவிந்த விலோச நஸய
–6-

யன் மூர்த்நி மே -யத் மே மூர்த்நி–யாதொரு எம்பெருமானுடைய திருவடியானது -என் தலையிலும்
அடிச்சியாம் தலை மீசை நி அணியாய் ஆழி யம் கண்ணா நின் கோலப் பாதம் -10-3-6–ஸீரோ பூஷணம் –
நாம் தலை மடுத்து வணங்குவதால் திரு முடியில் விளங்கக் குறையில்லையே
ஸ்ருதி ஸிரஸ்ஸூ ச பாதி–வேதாந்தங்களிலும் விளங்கா நின்றதோ -வேதங்களில் விஸ்தரமாக வருணிக்கப் படுமே
யஸ்மின் –யாதொரு திருவடியில்
அஸ்மன் மநோ ரத பதஸ் சகலஸ் –நமது ஆசைப் பெருக்கம் எல்லாம்
சமேத –போய்ச் சேருகின்றதோ-திருவடிகள் கிடைக்கப் பெற்றாலே சர்வமும் கிடைக்கப் பெற்றதாகும்
தத்-அப்படிப்பட்டவராய்
நம் குலதனம்–வம்ச பரம்பரையாய் நமக்குச் சேர்ந்த செல்வமாய்
நம் குல தைவதம் -நம் குலத்துக்கு எல்லாம் ஆதாரமாய் இருக்கிற
அரவிந்த விலோச நஸ்ய- பாதார விந்த -செங்கண் மாலின் திருவடித் தாமரையை
ஸ்தோஷ்யாமி –ஸ்துதிக்கப் போகிறேன்-இப்படி பிராப்யமுமாய் விலஷணமுமாய் உபகாரகமுமான
திருவடிகளிலே வாசிகமான அடிமை செய்கிறேன் –

புண்டரீகாக்ஷனின் (தாமரைக் கண்ணனின்) திவ்ய திருவடிகளைக் கொண்டாடப் போகிறேன்.-இந்த எம்பெருமானே நம் குலத்துக்கு தனமாகவும், தெய்வமாகவும் விளங்குகிறான். நம்முடைய அதிகமான பக்தி எல்லாம் அந்த எம்பெருமானின் திருவடிகளிலே போய்ச் சேரும். அந்த எம்பெருமானின் திருவடிகளே என்னுடைய தலையிலும், வேதாந்தத்திலும் காணப்படுகின்றன.

மே மூர்த்நி -இத்யாதி-தம்முடைய நிஹிநதா அதிசயத்தையும்-சௌந்தர் யாதிகளிலே தோற்று அத்தாலே வந்த சேஷத்வத்தையும் –-அந்த காரத்தில் தீபம் போலே தம்முடைய திரு முடியில் வந்த பின்பு
திருவடிகள் மிகவும் விளங்கின படியையும் சொல்லுகிறது –இத்தால் – அவனுடைய உபாய பாவத்துக்கு ஏகாந்தமான சௌலப்யாதிகளையும்-இத் தலையில் விஷயீ காரம் தன் பேறாக நினைத்து இருக்கும் என்றும் சொல்லுகிறது –தலைக்கு அணியாய் –திருவாய் மொழி -9-2-2-என்று சேஷ பூதர் பிரார்த்திக்கும் அத்தைப் பெற்றேன் -என்கிறார் –சேஷி யாகையாலே-சர்வ விஷயங்களிலும் அவன் இருக்கும் படி இது –க்ருதஜ்ஞர் ஆகையாலே பேசுகிறார்-

ஸ்ருதி ஸிரஸ்ஸூ ச பாதி –-ஸ்ருதி ஸிரஸ்ஸூக்களிலும் விளங்கா நின்றது-இத்தால் ப்ராப்யத்வமும்
சர்வாதிகத்வமும் சர்வ மங்களாகாரத்வமும் அதி துர்லபத்வமும்
சொல்லுகிறது –சகாரத்தாலே-
வேதாந்தங்களிலும் – தம் தலையிலும் ஒக்கத் திருவடிகளைத் தரமிடாதே வைத்த படியாலே தம் பக்கல் அவனுக்கு உண்டான ஆதராதிசயம் சொல்லுகிறார் –ச சப்தம்-அவதாரணத்திலே யாய் தம்முடைய தலையிலே அந்வயித்த சௌலப்யம் திருவடிகளுக்கு ஸ்வரூபம் என்றதாகவுமாம் –-திருப் பாற்கடலே என் தலையே -திருவாய்மொழி -10-7-8- என்னுமா போலே –யஸ்மின் அஸ்மன் மநோ ரத பதஸ் சகலஸ் சமேதி- பிதா த்வம் மாதா த்வம் -இத்யாதிகளான என்னுடைய ஐஹிகாமுஷ்மிக சகல மநோ ரதங்களும் அழகியதாக யாது ஒன்றிலே சேருகிறது –

ஸ்தோஷ்யாமி –இப்படி பிராப்யமுமாய் விலஷணமுமாய் உபகாரகமுமான திருவடிகளிலே வாசிகமான அடிமை செய்கிறேன் –ந குலதனம் –தனம் ஆவது -ஆபத் ரஷகமுமாய் நித்ய போக்யமுமாய் இருக்குமது-குல தனம் என்கையாலே-அயத்ன சித்தமுமாய் ஸ்வத பிராப்தமுமாய் இருக்கை –குல தைவதம்- இத் தனத்தை தருமதாய் ஆஸ்ரயணீயமாய் இருக்குமது –இத்தால் ஸ்தோத்ர ப்ரதிபாத்யமான ப்ராப்ய ப்ராபகங்களைச் சொல்லுகிறது –தத் பாதார விந்தம் –-உக்த ஸ்வபாவமான திருவடித் தாமரைகளை –மரவிந்த விலோச நஸய-ஜிதந்தே புண்டரீ காஷ-என்று ருசி ஜனகமுமாய்-தன் கால் பணிந்த என்பால் எம்பிரான் தடம் கண்கள் -திரு விருத்தம் -42- என்று வாத்சலமுமாய்-தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலை மகனை -திரு வாய் மொழி -2-6-3- என்று ஸூரி போக்யமான திருக் கண்களை உடையவன் உடைய –இத்தால்-இவருடைய உத்யோகத்தைக் கண்ட ப்ரீதி திருக் கண்களிலே தோற்றுகிறது-என்னுதல்-(குல தனம்–உபாயத்வமும் —-குல தைவதம் -உபேயத்வம் —-அடிச்சியாம் தலை மீசை நீ அணியாய் ஆழி யம் கண்ணா உன் கோலப் பாதம் –)

யன் மூர்த்நிமே ஸ்ருதி ஸிரஸ்ஸூ ச பாதி யஸ்மின்
அஸ்மன் மநோ ரத பதஸ் சகலஸ் சமேதி ந
குலதனம் குல தைவதம் அரவிந்த விலோசநஸய
தத் பாதார விந்தம் ஸ்தோஷ்யாமி
-என்று அந்வயம்

இலகும் என் சென்னி மீதும் இன் மறை முடியின் மீது
மலகில் என் மனத்தின் இச்சை அகிலமும் நாடும் எங்கள்
குல தனம் குலத்தின் தெய்வங் கோமளக் கமலக் கண்ணன்
மலரும் அம்மரை மலர்த்தாள் மனம் உறப் புகழ்வன் நன்றே
–6-எந்த புண்டரீகாக்ஷனுடைய திருவடி என் சிரஸ்ஸிலும் வேதாந்தங்களின் மீதும் ஓக்க பிரகாசிக்கின்றதோ-எந்த திருவடியில் என் இச்சையின் வழிகள் யாவும் செவ்வனே சென்று அடைகின்றனவோ-எது என் குலத்துக்குத் தனமாயும் தெய்வமாயும் இருக்கின்றதோ-அந்தத் திருவடியை என் நெஞ்சமார ஸ்தோத்ரம் பண்ணுகிறேன்-

ஸ்லோகம் -7- அவதாரிகை –விதி ஸிவ ஸநகாதிகள் கரை பற்றிலே நின்று அழுந்துகிற விஷயத்தைப் பரிச்சேதித்துப் புகழ இழிந்தேன் -என்று தம்மை ஷேபித்து யுத்தத்திலே உத்யுக்தனான அர்ஜுனன்
விஸ்ருஜ்ய ஸஸ்ரம் சாபம் -என்று நிவ்ருத்தனானால் போலே ஸ்தோத்ரத்தில் நின்றும் நிவ்ருத்தர் ஆகிறார் –
(ஏவமுக்த்வா5ர்ஜுநஸ்‌ ஸங்க்‌,யே ரதேராபஸ்த, உபாவிஸத்‌। விஸ்ருஜ்ய ஸஸரம்‌ சாபம்‌ ஸோக ஸம்விக்‌,நமாநஸ: ॥| [அர்ஜுனன்‌, இம் மாதிரி சொல்லி விட்டு, சோகத்தினால்‌ பீடிக்கப்பட்ட மனத்தை உடையவனாய்‌, அம்புடன்‌ கூடிய வில்லைக்‌ கைவிட்டு, யுத்‌,த, களத்திலேயே ரத,த்தின் மேல்‌ உட்கார்ந்தான்‌.])

தத்த்வேன யஸ்ய மஹிமார்ணவ ஸீ கராணு
சக்யோ ந மாதுமாபி சர்வபிதா மஹாத்யை
கர்த்தும் ததீய மஹி மஸ்துதி முத்யதாய
மஹ்யம் நமோ அஸ்து கவயே நிரபத்ரபாய
–7-

யஸ்ய மஹிம–எந்த எம்பெருமானுடைய பெருமையாகிற
அர்ணவ ஸீகர அணு–கடலிலே ஒரு சிறிய திவலை அளவு கூட
சர்வ பிதாமஹ ஆதயை அபி –சிவன் ப்ரஹ்மா முதலானவர்களாலும்
தத்த்வேன –உள்ள படி
சக்யோ ந மாதும் –அளவிட்டு அறிய முடியாததோ
ததீய மஹிம ஸ்துதிம் -அந்த எம்பெருமானுடைய பெருமையைப் பற்றிய ஸ்தோத்ரத்தை
கர்த்தும் உத்யதாய–செய்வதற்கு ஆரம்பம் செய்தவனாயும்
நிரபத்ரபாய–வெட்கம் கெட்டவனாயும்
கவயே-கவி என்று பேர் சுமப்பனாயும் இருக்கிற
மஹ்யம-எனக்கே
நமோ அஸ்து –நமஸ்காரம் செய்து கொள்ள வேண்டும்-என்னை எல்லாரும் நமஸ்கரிக்கட்டும் என்று தம்மைத் தாமே நிந்தித்துக் கொள்ளுகிற படி உலகில் ஸாஹஸர்களைக் கைகூப்பி வணங்க வேண்டும் என்று சொல்வது உண்டே

எம்பெருமானின் பெருமை என்னும் கடலில் ஒரு திவலையில் இருக்கும் ஒரு அணுவின் அளவு கூட ருத்ரன், ப்ரஹ்மா போன்றவர்களால் அளக்கமுடியாது. கவிஞன் என்று வெட்கமில்லாமல் சொல்லிக் கொண்டு, அப்படிப்பட்ட எம்பெருமானின் பெருமைகளைப் பாடத் தொடங்கியதை நினைத்து (இப்படிப்பட்ட நகைப்பிற்குரிய செயலை நினைத்து) என்னை நானே வணங்கிக் கொள்கிறேன்.

தத்த் வேன –-ஈஸ்வரன் உடைய ஸ்வரூப ரூபாதிகள் இருந்தபடியே –யஸ்ய –யதா ரத் நானி ஜலதே -(யத; ரத்நாநி ஜலதேர ஸங்க்‌,யேயாநி புத்ரக | ததா குணா ஹ்யநந்தஸ்ய அஸங்க்‌,யேயா மஹாத்மந: ॥’ [குழந்தாய்‌ | எப்படி ஸமுத்‌ரத்திலுள்ள ரத்னங்கள்‌ கணக்ற்றவையோ, அம் மாதிரியே மஹாத்மாவான அநந்தனுடைய குணங்களும்‌ அளவற்றவை.])இத்யாதி களாலே அநந்த குணகனாக பிரசித்தனான வனுடைய-மஹிமார்ணவ ஸீ கராணு--குணார்ணவத்தின் உடைய ஸீகராணு வானது – திவலையில் ஸ்பர்ச வேத்யமானது -அத்யல்பமானது –சக்யோ ந மாதும் –மாதும் ந சக்ய –மனஸ்ஸால் பரிச்சேதிக்கவும் சகயம் அன்று –-ஆராலே -என்னும் அபேஷையிலே சொல்லுகிறது –அபி சர்வ பிதா மஹாத்யை –-சர்வ பிதா மஹாத்யை ரபி –-ஈச்வராத் ஜ்ஞானமன்விச்சேத் -(ஆரோக்யம்‌ பராஸ்கராதி,ச்சே,த்‌ த,நமிச்சே,த்‌ ஹுதாமநாத்‌ | ஈஸ்வராத்‌ ஜ்ஞாநமந்விச்சே,த்‌ மோக்ஷமிச்சே,ஜ்ஜநார்த்த, நாத்‌ ॥| [ஸுர்யனிடமிருநங்து ஆரோக்யத்தை விரும்பக் கடவன்‌ ; அக்னியிடமிருந்து பொருளை விரும்ப வேண்டும்‌ ; சிவனிட மிருந்து அறிவை விரும்பக் கடவன்‌. நாராயணனிடமிருந்து மோக்ஷத்தை விரும்பக் கடவன்‌)என்று ஜ்ஞானாதிகனாகவும்–சர்வ சம்ஹர்த்தா என்று சொல்லுகிற ருத்ரனாலும் –அவனை ஒதுவித்தவனுமாய் ஜகத் ஸ்ரஷ்டாவான ப்ரஹ்மாவாலும்-ஆதி –சப்தத்தாலே ப்ரஹ்ம பாவனையேயான சநகாதிகளையும்-சர்வருக்கும் ஹிதானுசானம் பண்ணுகிற வேதத்தையும் நினைக்கிறது –-மேலே சதா ஸ்துவந்த வேதா -என்றும்-விதி சிவா சன காத்யை -என்றும் -சொல்லுகிற படியாலே-

கர்த்தும் ததீய மஹி மஸ்துதி முத்யதாய–ததீய மஹிம ஸ்துதிம் கர்த்தும் உத்யதாய –-அவனுடைய பெருமையை உள்ளளவும் சொல்லி விடுகை அன்றிக்கே இல்லாததையும் சொல்ல உத்யுக்தனாகை –மஹ்யம் நமோ அஸ்து –-இப்படி சாஹசிகனாகையாலே -ஸ்துத்ய விஷயத்தை விட்டு எனக்கு நமஸ்காரம் –கவயே – சர்வ வர்ணன் முகராய்-நிரபத்ரபாய –-நிர் லஜ்ஜனாய் இருக்கிறவனுக்கு –
நாம் புகழ்கை இவனுக்கு நிறக் கேடாம் -என்று லஜ்ஜியாது ஒழிகை –

யஸ்ய மஹிமார்ணவ சீகராணு சர்வ பிதா மஹாத்யை ரபி
தத்த் வேன மாதும் ந சக்யததீய மகிமா ஸ்துதிம் கர்த்தும் உத்யதாய
நிர்பத்ரபாய கவயே மஹ்யம் நமோ அஸ்து
-என்று அந்வயம் – ( மஹ்யம் நமோ அஸ்து –ஸாஹஸ கார்யம் செய்வபர்களுக்கு நமஸ்காரம் என்பர்களே )

அன்னவன் மஹிமை வெள்ளத்து திவலையின் அணுவை யேனும்
இன்னது என்றுள்ளது ஒர விறை சிவாதியர்க்கும் ஒண்ணா
மன்னும் மஹிமை பாட மானம் அற்று எத்தனித்த
என்னையும் வணங்குவேன் நான் இந்த ஸாஹஸத் செயற்கே
–7-ஓர்தல் –ஆராய்தல் தெளிதல்-எந்த சர்வேஸ்வரனுடைய குணக்கடலின் சிறு திவலையில் அணு மாத்ரத்தையும் உள்ளபடி அளந்து அறிவதற்கும் ஞானாதிகனான சிவனாலும் அவனுக்கு உபதேசம் செய்த பிரமனாலும் பிரமனுக்கு சமானமான சனகாதிகளாலும் முடியாதோ அத் தன்மையானுடைய குணங்களை ஸர்வ பிரகாரத்தாலும் ஸ்துதிப்பது என்கிற இந்த ஸாஹஸத்தைச் செய்ய வெட்கம் இல்லாமல் எத்தனித்த எனக்கு நமஸ்காரம்

ஸ்லோகம் -8-அவதாரிகை –இஷூ ஷயான் நிவரத்தந்தே –(-காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய் -திருவாய்மொழி -5-8-2- என்று (இஷுக்ஷயாந் நிவர்த்தந்தே நாந்தரிக்ஷக்ஷி திஷயாத்‌ | மதிக்ஷயாந் நிவர்த்தந்தே ந கேரவிந்த,குணக்ஷயாத்‌ |[பாணங்களில்லாமல்‌ திரும்புகிருர்களே யொழிய, பூமியும்‌ ஆகாயமும்‌ அழிந்துவிட்டதாலல்ல. ( ௮ம் மாதிரியே ). பு,த்திக் குறைவினால்‌ திரும்பு)அளவுடையாரும் தாம் தாம் ஜ்ஞான சக்த்யாதிகள் அளவும் புகழ்ந்தார்கள் அத்தனை – உமக்கும் அவ்வளவு புகழ்கைக்கு விரோதம் இல்லை – ஸா ஜிஹ்வா யா ஹரிம் ஸ்தௌதி –(ஸா ஜிஹ்வா யா ஹரிம்‌ ஸ்தெளதி தச் சித்தம்‌ யத்தத,ர்ப்பிதம்‌ | தாவேவ ச கரெள ஸ்லாக்‌,யெள யெள தத் பூஜாகரெள கரெள ॥ [எது ஹரியைத் துதிக்கிறதோ, அதுவே நாக்கு, எது அவனிடம்‌ ஸமர்ப்பிக்கப் பட்டதோ அதுவே நெஞ்சு. எவை அவனுக்குப்‌ பூஜை செய்கின்றனவோ அக் கைகளே ஸ்லாக்‌,யமானவை)வாய் ஸ்துதிக்க வன்றோ கண்டது –-ஸ்தவ்யஸ் ஸ்தவ ப்ரிய-என்கிறபடியே -ஸ்தோத்ரம் நமக்கு பிரியம் அன்றோ -என்று-யுத்தான் நிவ்ருத்தனான அர்ஜுனனை கரிஷ்யே வசனம் தவ -என்னப் பண்ணினால் போலே ஈஸ்வரன் தானே மூட்ட சமாஹிதர் ஆகிறார்- (நஷ்டோ மோஹ: ஸ்ம்ருதிர்‌ லப்‌,த, த்வத் ப்ரஸாதாந்‌ மயாச்யுத | ஸ்திதோ5ஸ்மி க,தஸந்தே,ஹ: கரிஷ்யே வசநம்‌ தவ॥ [அச்சுதனே | (விபரீத ஜ்ஞானமாகிய) மோஹம்‌ நசித்தது. உன்னருளால்‌ உண்மை அறிவு என்னால்‌ அடையப்‌ பட்டது. ஸந்தேஹம்‌ நஸிக்கப் பெற்றவனாயிருக்கிறேன்‌. உன்‌ வசனத்தின்படியே (யுத்‌,த,ம்‌) செய்கிறேன்‌)ஆளவந்தாரை
வாய் படைத்த பயன் அவனைக் கொண்டாடுவதற்கே; ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் ‘ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய:’(அவன் கொண்டாடத்தகுந்தவன்; அவன் கொண்டாட்டங்களை விரும்புபவன்)” என்று சொல்லும்படி உற்சாகப்படுத்தினான். இதைக் கேட்ட ஆளவந்தார், எம்பெருமானைக் கொண்டாடுவது என்று முடிவெடுத்தார்.

யத்வா ஸ்ரமாவதி யதாமதி வாப்ய சக்த
ஸ்தௌம் யேவமேவ கலு தேஅபி சதா ஸ்துவந்த
வேதாஸ் சதுர்முகாஸ் ச மஹார்ணவாந்த
கோ மஜ்ஜதோரணுகுலா சலயோர் விசேஷ
–8-

யத்வா –அல்லது -ஸ்துதிக்க தொடங்குவதால் யத்வா -என்று உபக்ரமிக்கிறார் இதில்
அசக்த-அஹம் -சக்தியற்ற நான்
ஸ்ரமாவதி –ஸ்ரமம் உண்டாகும் அளவாவது -சக்தி உள்ள அளவாவது என்றபடி
யதாமதி வா–புத்திக்கு எட்டும் அளவாவது
ஸ்தௌமி –ஸ்தோத்ரம் பண்ணுகிறேன்
சதா அபி ஸ்துவந்த-எப்பொழுதும் ஸ்தோத்ரம் பண்ணிக்க கொண்டு இருக்கிற
தேஅபி வேதாஸ்-அந்த வேதங்களும்
சதுர்முக முகாச்ச –ப்ரஹ்மாதிகளும்
யேவமேவ கலு -இப்படி அல்லவோ ஸ்துதிப்பது-என்னைவிட அவர்கள் சிறிது அதிகமாக ஸ்துப்பார்கள் ஆகிலும்
மஹார்ணவாந்த-மஜ்ஜதோ–பெரிய கடலினுள்ளே முழுகிப் போகிற
அணு குலா சலயோர் க விசேஷ –சிறியதொரு வஸ்துவுக்கும் பெரிய குலபர்வதத்துக்கும் என்ன வாசி

அல்லது, சக்தியற்ற நான் சோர்வடையும் வரையிலோ எனக்குத் தெரிந்த அளவிலோ அவனைக் கொண்டாடுவேன்; இவ்வாறே, வேதங்களும், நான்கு முகங்களைக் கொண்ட ப்ரஹ்மா முதலியவர்களும் எம்பெருமானைக் கொண்டாடுகின்றனர்;mகடலுக்குள் மூழ்கி இருக்கும் சிறு கூழாங்கல்லுக்கும் பெரிய மலைக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? (ஒன்றும் இல்லை)

யத்வா-பூர்வ பஷ நிவ்ருத்தி – முன்பு அல்லோம் என்ற இடம் அர்த்தம் அன்று -என்கிறார்-ஸ்ரமாவதி யதாமதி வா – இளைப்பு எல்லையாக வாதல்-ஜ்ஞானம் எல்லையாக வாதல் –-ஜ்ஞான சக்த்யாதிகள் அளவே ஸ்தோத்ரம் பண்ணலாவது -என்கை –அசக்தஸ் தோபிஸ் தௌமி – சர்வ பிரகாரத்தாலும் அசக்தனே யாகிலும் ஸ்துதிக்கிறேன்(யந்நாயம்‌ ப,க,வாந்‌ ப்‌,ரஹ்மா ஜாநாதி பரமம்‌ பத;ம்‌ | தந்நதா: ஸ்ம ஜகத்‌,தாம தவ ஸர்வகதாச்யுத ॥ [அச்யுதனே ! ஸர்வ வ்யாபியே | மேலான ப்ராப்யமான எதை பகுவானான பிரமனும்‌ அறியானோ, உலகிற்‌ கெல்லாம்‌ இருப்பிடமான அந்த உன்னுடைய ஸ்வரூபத்தை வணங்குகிறோம்‌)-யேவமேவ கலு தேஅபி சதா ஸ்துவந்த வேதாஸ் சதுர்முகாஸ் ச
சதா ஸ்துவந்த வேதாஸ் சதுர்முகாஸ் ச யேவமேவ கலு தேஅபி-
-த்யாஜ்ய உபாதேயங்களை பிரிக்கைக்கும்-த்யாஜ்யத்தை விட்டு -உபாதேயத்திலே அவகாஹிக்கைக்கும் அடியான ஜ்ஞான சக்த்யாதிகளால் அதிகரானவர்களும்–சதா ஸ்துவந்த வேதாஸ்--சர்வ கால சம்யோகத்தை உடைத்தான வேதங்களும்–சதுர்முகாஸ் ச--த்விபரார்த்த காலாவதிகரான ப்ரஹ்ம ருத்ரர்களும்-அதிகாராவ ஸானத்தளவும் ஸ்துதிக்கிற ஸ்நகாதிகளும் –

யெவமெவ கலு –-ஜ்ஞான சக்த்யாதிகள் அளவே இறே
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹ –
யன்நாயம் பகவான் ப்ரஹ்மா ஜாநாதி புருஷோத்தமம் –
மா மலரான் வார் சடையான் வல்லரே அல்லரே வாழ்த்து
-நான் முகன் திருவந்தாதி -10-
பேசுவார் எவ்வளவு பேசுவார் அவ்வளவே -மூன்றாம் திருவந்தாதி -21
வல்லதோர் வண்ணம் -திருவாய் மொழி -7-8-10-
ந க்ராஹ்ய கே நசித் க்வசித் – (தவாந்தராத்மா மம ௪ யே சாந்யே தேஹி ஸம்ஜ்ஞிதா: | ஸர்வேஷாம்‌ ஸாஷி பூதோ3ஸெள ந க்‌,ராஹ்ய: கேநசிந்‌ க்சித்‌ ॥ [( பிரமனாகிய ) எனக்கும்‌, ( ருத்‌ரனாகிய ) உனக்கும்‌, ( தேஹத்தை உடைத்தாயிருப்பதால்‌ ) *தேஹீ’ என்ற பெயரையுடைய மற்றவர்களுக்கும்‌ அந்தராத்மா நாராயணனே. எல்லாருக்கும்‌ ஸாஷியாயிருக்கிறார்‌ அவர்‌, எவராலும்‌ எக்காலத்தீலும்‌ அறியத்தக்கவரல்லர்‌ அவர் ) இங்கனே யாகிலும் உமக்கும் அவர்க்கும் நெடு வாசி உண்டே என்னில்
வேதங்களுக்கும் சதுர்முகா திகளுக்கும் வாசி உண்டாய் இருக்கச் செய்தே அவனை உள்ளபடி பேச மாட்டாமை ஒத்தால் போலே எனக்கும் அவர்களுக்கும் வாசி உண்டானாலும் உள்ளபடி பேச மாட்டாமையாலே வாசி இல்லை எது போலே என்னில்

மஹார்ணவாந்த கோ மஜ்ஜதோரணுகுலா சலயோ விசேஷ – மஹார்ணவாந்தர் மஜ்ஜதோரணுகுலா சலயோ கோவிசேஷ–சர்ஷப மஹீ தரங்களுக்கு நெடு வாசி -சர்ஷபம் -கடுகு மஹீ தரம் -மலை-இப்படி வைஷம்யம் உண்டானாலும்-பெரும் கடலிலே புக்கு அமிழ்ந்தும் அளவில்-விசேஷம் இல்லை இறே
அது போலே இறே
(வேதம் உரைத்து இமையோர் வணங்கும் செந்தமிழ் பாடுவார் தாம் வணங்கும் தேவர் – இப்படி தேவர் வைதிகர் வேதங்கள் அல்லும் பகலும் ஸ்துதிக்குக் கொண்டே இருந்தாலும் தலைக் கட்ட ஒண்ணாதே மீளும் படி –அவரவர் தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி – தங்கள் அன்பாரத் தமது சொல் வலத்தால் தலைத் தலைச் சிறந்து பூசிப்ப ச்ரமாவதி-களைத்து போகிற வரையில் தண்ணீர் இறைக்கிறேன் போலே ஸ்துதிக்க இழிகிறார்)

ஆகவே நம்மால் ஆன அளவு ஸ்துதிப்பது தகுதியே என்று திரு உள்ளத்தை சமாதானம் படுத்திக்க கொள்கிறார்-வேதம் உரைத்து இமையோர் வணங்கும் செந்தமிழ் பாடுவார் தாம் வணங்கும் தேவர் –பெரிய திருமொழி -2-8-2என்கிறபடியே தேவர்களும் -வைதிகர்களும் -வேதங்களும் அல்லும் பகலும் ஸ்துதிக்குக் கொண்டே இருந்தாலும் பேசித் தலைக்கட்டி முடியாமல் தங்கள் ஞான சக்திகள் அளவும் ஸ்துக்கிறார்கள்-ஆகவே உள்ளபடி பேச மாட்டாமையில் நானும் அவர்களும் ஒரு வாசி இன்றியே சமமே
அனவதிக அதிசய அஸங்க்யேய பகவத் குண சாகரத்தில் இரண்டுமே முழுகி மறைந்து போகுமே
அவரவர் தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி-தங்கள் அன்பாரத் தமது சொல் வலத்தால் தலைத் தலைச் சிறந்து பூசிப்ப மா மலரான் வார் சடையான் வல்லரே அல்லரே வாழ்த்து
-நான் முகன் திருவந்தாதி -10-
பேசுவார் எவ்வளவு பேசுவார் அவ்வளவே -மூன்றாம் திருவந்தாதி -21
வல்லதோர் வண்ணம் -திருவாய் மொழி -7-8-10-)

சக்தி இலனாகிலும் யான் தளர்ச்சி எய்திச் சகிக்க இனித் தரமில்லேன் என்னும் மட்டும்
புத்தி எனக்கு உற்ற அளவும் போற்றி நிற்பன் புகழ் ஆர்ந்து எக்காலத்தும் பொருந்தி ஏத்தும்
தத்துவத்தை யுணர் மறையும் சதுர் முகத்தோன் சங்கரன் ஆதியர்களும் இங்கனமே யன்றோ
ஒத்திடில் ஓர் பெரும் கடலுள் அமிழ்ந்து மூழ்கும் உயர் மலைக்கும் அணுவிற்கும் வாசி யுண்டோ
–8—உள்ளபடியே உன்னை ஸ்தோத்ரம் செய்ய சக்தி இல்லேனாயினும் என் உணர்ச்சியில் தளர்ச்சி யுண்டாகி இனி என்னால் ஸாத்யம் இல்லை என்னும் மட்டுமாவது என் ஞானத்துக்கு எட்டும் வரையிலுமாவது ஸ்துதி பண்ணுகிறேன்-ஜகத் ப்ரஸித்தமாய் ஆதி காலம் தொட்டு உன்னை ஸ்துதிக்கும் ஸகல தத்துவத்தையும் அறிந்த வேதங்களும்-சதுர் முகன் சங்கரனாதி மற்றவர்களும்
தத்தம் ஞான சக்தி யாதிகள் அளவே யன்றோ ஸ்துதிக்கின்றார்கள் ஸ்துதிக்கின்றார்கள்
ஒரு பெரும் கடலிலே அமிழ்ந்து மூழ்குகின்ற ஒரு பெரிய பர்வதத்துக்கும் ஒரு அணுவிற்கும் என்ன வித்யாஸம் இருக்கிறது – உள்ளபடி யுன்னை ஸ்துதி செய்ய மாட்டாமையில் வேதம் முதலியவைகளும் எனக்கு யாதொரு வாசியும் இல்லை என்பது கருத்து –

ஸ்லோகம் -9 – அவதாரிகை –ப்ரஹ்மாதிகளில் காட்டில் எனக்கு ஸ்தோத்ரத்தில் இழிகைக்கு அதிக ஹேது உண்டு என்கிறார் – பரக்கப் புகழ்கை ஈஸ்வரன் அனுக்ரஹ ஹேது அன்றிக்கே ஸ்துதி க்ருதமான பரிஸ்ரமம் அனுக்ரஹ ஹேதுவாம் படி சீலவான் ஆகையாலே மந்த புத்தியான எனக்கு அந்த ஸ்ரமம் ஸூலபம் ஆகையாலே அவர்களில் காட்டில் நான் ஸ்தோத்ர அதிகாரி -என்கிறார்-

கிஞ்சசைஷ சக்த்யதிச யேன ந தே அனுகம்ப்ய
ஸ்தோதாபி து ஸ்துதி க்ருதேன பரிஸ் ரமேண
தத்ர ஸ்ரமச்து ஸூலபோ மம மந்த புத்தே
இதயத் யமோ அயமுசிதோ மம சாப்ஜ நேத்ர
–9-

ஏஷ ஸ்தோதா-இந்த ஸ்துதிப்பவனான அடியேன்
சக்த்யதிச யேன-எனது சக்தியின் மிகுதியினால்
ந தே அனுகம்ப்ய-உனக்கு இரங்கத் தக்கவன் அல்லேன்
அபி து -பின்னை எக்காரணத்தால் இரங்கத் தக்கவன் என்னில்
கிஞ்சசைஷ ஸ்துதி க்ருதேன பரிஸ் ரமேண–ஸ்துதிப்பதனால் உண்டாகும் பரி ஸ்ரமத்தைப் பார்த்து இரங்கத் தக்கவன்
ஹே அப்ஜ நேத்ர–செங்கண் மாலே-உன் தாமரைக் கண்களால் நோக்காய் –திருவாய் மொழி -9-2-1–என்னுடைய முயற்சி ஈடேறும் படி உனது தாமரைக் கண்களால் நோக்காய்-ஸ்தோத்ரத்தில் நிலை நின்ற படியைக் கண்டு செந்தாமரைக் கண்ணோடு மறப்பற என்னுள்ளே மன்னினான் –திருவாய் மொழி -1-10-10-என்கிறபடியே ப்ரீதியாலே திருக் கண்கள் குளிர்ந்த படியைச் சொல்லுதல் -என்றுமாம் –
தத்ர மந்த புத்தே–ஸ்துதிக்கும் விஷயத்தில் மந்த புத்தியை யுடையனான
மம து ஸ்ரமம் -எனக்கோ என்றால் பரி ஸ்ரமம்
ஸூலபோ -எளிதில் உண்டாகக் கூடியது
இதி மம ச –என்கிற காரணத்தினால் எனக்கே
அயம் உத்யமஸ் -இந்த முயற்சி ஏற்று இருக்கிறது-

மேலும், என்னுடைய கவிதை பாடும் சிறந்த திறமையால், நீ கருணையைப் பொழியும் நிலையில் நான் இல்லை;-ஆனால், உன்னைக் கொண்டாட முயன்று சோர்வடையும் தன்மையை உடையவன் ஆகையால், நீ என் மீது உன் கருணையைப் பொழியலாம்;-எனக்கு மிகவும் குறைந்த ஞானமே உள்ளதால், எளிதில் சோர்வடைந்து விடுவேன்; ஆகையால், உன்னைக் கொண்டாடும் இம்முயற்சி ப்ரஹ்மா முதலியவர்களைக் காட்டிலும், எனக்கே மிகவும் பொருத்தமாக உள்ளது.

கிஞ்ச -மேலும் –கீழ் சொன்ன சாம்யம் ஒழிய-ஸ்தோத்ரத்தில் அவர்களில் காட்டில் எனக்கு அதிகாரம் உண்டு என்கைக்கு ஒரு ஹேது உண்டு -என்கிறார்-ஏஷ -ஸ்தோதா-துதிக்கும் அடியேன் –-பகவத் ஆபி முக்யத்தாலே சம்சாரிகளில் காட்டில் வ்யாவ்ருத்தனாய்-வாய் படைத்த ப்ரயோஜனம் இது -என்று பகவத் ஸ்தோத்ரத்திலே அதிகரித்தவன் –சக்த்யதிச யேன ந தே அனுகம்ப்ய – நம்மை ஸ்தோத்ரம் பண்ண சக்தன் என்று உனக்கு அனுக்ராஹ்யனாகிறேன் அல்லேன் –தே -உனக்கு-யதோ வாசோ நிவர்த்தந்தே –என்றும்-தத் விப்ராசோ விபந்யவ-என்றும் வேதங்களும் நித்ய ஸூரிகளும் புகழ்ந்து எல்லை காண மாட்டாத மகிமையை உடைய உனக்குப் பரக்க ஸ்தோத்ரம் பண்ணுகை தேட்டம் அன்றே -என்னுதல்
சம்சாரிகள் ஆபி முக்கியம் பண்ணுகை தேட்டமான சீலவான் ஆகையாலே இவன் பண்ணும் ஸ்தோத்ரம் மிகையான உனக்கு -என்னுதல் –அபி து-ஆனால் –மற்றப்படி -என்னுதல்-பின்னை எங்கனே -என்று ஸாநு நய பிரஸ்னம் ஆதல் –-ஸ்துதி க்ருதேன பரிஸ் ரமேண-துதிப்பதினால் ஏற்படும் களைப்பினாலேயே உன்னை ஸ்துதிக்கையிலே அத்ய ஆதாரத்தைப் பண்ணி அதுக்கு ஈடான சக்தி இல்லாமையாலே புகழவும் மாட்டாதே படும் இளைப்பாலே இறே நீ இரங்குவது-தத்ர-இப்படி இருக்கும் இடத்தில் அர்த்தம் இப்படியாய் நின்ற இடத்தில்-ஸ்ரமச்து ஸூலபோ மம –-எனக்கு விசேஷித்த ஸ்ரமமானது குறைவற உண்டு -என்றுமாம்-து -அவதாரணமாய்-எனக்கே குறைவற்ற ஸ்ரமம் உள்ளது -என்றுமாம்-மந்த புத்தே -என்று ஸ்ரம ஹேதுவை சொல்லுகிறது –-அல்ப புத்தி -என்கை –இதி –ஆகையால் என்று ஹேதுவை சொல்லுதல்-இப்படி என்னுதல்-யத்யமோ அய அயம் உதயம்-இந்த முயற்சி ஸ்தோஷ்யாமி -என்று கொண்டு உண்டான இந்த உத்யமம்-முசிதோ மம –உசிதோ மம ச –
ச சப்தம் அவதாரணமாய் -எனக்கே உசிதம் என்னுதல்-சமுச்சயமாய் எனக்கும் உசிதம் -என்று கீழ் ஸ்லோகத்தோடு கூட்டுதல் –அப்ஜ நேத்ரசெங்கண் மாலே –-அவலோக நதா நேன பூயோ மாம் –
உன் தாமரைக் கண்களால் நோக்காய்
–திருவாய் மொழி -9-2-1-என்றும் சொல்லுகிறபடியே-அவிக்நேன ஸ்தோத் ரத்தை தலைக் கட்டும்படி அழகிய திருக் கண்களால் நோக்கி அருள வேணும் -என்னுதல்-ஸ்தோத்ரத்தில் நிலை நின்ற படியைக் கண்டு-செந்தாமரைக் கண்ணோடு மறப்பற என்னுள்ளே மன்னினான் –திருவாய் மொழி -1-10-10-என்கிறபடியே ப்ரீதியாலே திருக் கண்கள் குளிர்ந்த படியைச் சொல்லுதல் –(மம ச -அவதாரணம் -எனக்கே -என்றபடி –கீழ் ஸ்தோத்ரம் உடன் சேர்த்து எனக்கும் -என்றுமாம்-இருக்கு வாய் முனிக் கணங்கள் ஏத்த ஈனும் ஏத்தினேன் -என்றால் போலே )

எனவே ப்ரஹ்மாதிகளை விட தனக்கு உண்டான ஏற்றம் -என்னைப் போலே தீனர்கள் அல்லவே –
எனவே சீக்கிரமாக உனது தயை என் மேலே பொழியும் -அவர்கள் ஸ்துதிப்பது வீண் -நான் ஸ்துதிப்பதே தகுதி –

உன்னையே ஸ்துதிப்ப யெய்தும் யுணர்ச்சியின் தளர்ச்சி யன்றி
நின் அருட்க்கு உரியதாமோ நிறை கவித் திரனும் சீரும்
என்னிட மந்த புத்திக்கு எளிது இளைப்பாதல் பற்றி
நன்னல நயனா விந்த முயற்சிக்கு யுரியனானே
–9-நன்னலம் –அழகு–உன்னை ஸ்துதிப்பதில் இச்சை கொண்டும் -அதற்கு வேண்டிய சக்தி இல்லாமையால் புகழவும் தவிர மாட்டாமையாலே ஒருவன் படுகிற இளைப்புக்கு இரங்கி நீ அருள் செய்வதே யன்றி ஸ்தோத்ரம் செய்வதற்கு வேண்டிய பூர்ணமான
ஸாமர்த்ய அதிசயங்களைக் கொண்டு நீ அனுக்ரஹிக்கிறது இல்லை –-இங்கனம் இருக்க அல்ப புத்தியேனான எனக்கு ஸ்ரமம் அதிக சுலபத்தில் உண்டாய் விடுகிறது – ஆகையால் -என் ஸ்தோத்ரத்தைத் தலைக்கட்டும்படி கடாக்ஷிக்க வல்ல அழகிய திருக்கண்களை யுடையவனே
இந்த ஸ்தோத்ரம் செய்ய வேணும் என்னும் முயற்சிக்கு யுரியவன் நானே யாகின்றேன்-எனக்கு அம்முயற்சி தகுந்துள்ளது –

ஸ்தோத்ரம் -10-அவதாரிகை –இப்படி ஸ்தோத்ர ஆஷேப சமாதானத்தைப் பண்ணி ஈஸ்வரன் உடைய சரண்யதைக்கு உறுப்பான பகவத் பரத்வத்தை மேல் அஞ்சு ஸ்லோகத்தாலே அருளிச் செய்கிறார் – இதில் முதல் ஸ்லோகத்தாலே –சத் ப்ரஹ்மாதி சாமான்ய வாசி சப்தங்களாலே-ஜகத் காரணதயா பிரதிபாதிக்கப் படுகிறான் நாராயணன் என்று கதி சாமான்ய ந்யாயத்தாலே காரண வாக்ய விஷயமான பரத்வத்தை அருளிச் செய்கிறார் –ஸ்தோத்ரம் பண்ண உபக்ரமித்தவாறே வாத்சல்ய ஜன்யமான விசேஷ கடாஷத்தைப் பண்ணினான் என்கிற இது பிரளய காலத்திலேயே அசித் கல்பரான சேதனரை தயமானவாய்க் கொண்டு விசேஷ கடாஷத்தைப் பண்ணி உண்டாகி அந்த ஜந்துக்கள் உடைய ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ஹேதுவாய் உபகாரகனான உனக்கு ஸ்ருஷ்டமான ஜந்துக்கள் ஆபிமுக்யம் பண்ண முகம் கொடுத்தாய் என்கிற இது ஆச்சர்யமோ -என்கிறார் -என்றுமாம் –

நா வேஷசே யதி ததோ புவ நான்ய மூநி
நாலாம் ப்ரபோ பவிது மேவ குத ப்ரவ்ருத்தி
ஏவம் நி சரக்க ஸூ ஹ்ருதி த்வயி சர்வ ஜந்தோ
ஸ்வாமின் ந சித்ர மித மாஸ்ரித வத்ஸ்லத்வம்
–10-

ப்ரபோ-பகவானே
ந அவேஷசே யதி –நீ கடாக்ஷித்து அருளா விட்டால்
ததோ புவ நான்ய மூநி நாலாம் -ததஸ் அமூநி புவநாநி பவிதும் ஏவ ந அலம்-அப்போது இவ்வுலகங்கள் உண்டாகவே மாட்டா
குத ப்ரவ்ருத்தி–ஒரு காரியமும் செய்ய மாட்டா என்பதைச் சொல்லவும் வேணுமோ
ஸ்வாமின்-இப்படியே
ஏவம் சர்வ ஜந்தோ-இப்படி எல்லா உயிர்கட்க்கும்
நி சரக்க ஸூ ஹ்ருதி -இயற்கையாகவே ஸூஹ்ருதம்-நன்மை -விரும்புவானான
த்வயி -உன்னிடத்தில்
ந சித்ர மித மாஸ்ரித வத்ஸ்லத்வம்–ஆஸ்ரித வாத்சல்யமான இந்தக் குணமானது ஆச்சர்யமே இல்லையே-

எம்பெருமானே! மஹா ப்ரளயத்துக்குப் பின், நீ உன்னுடைய கருணைக் கடாக்ஷத்தைக் காட்டவில்லை என்றால், இவ்வுலகங்கள் படைக்கப்பட்டிருக்காது; வேறு எந்த நிகழ்வுகளும் நடந்திருக்காது என்பதும் தெளிவு.-எம்பெருமானே! இப்படி நீயே எல்லோருடைய இயற்கையான நண்பனாக இருப்பதால்,
நீ உன்னுடைய அடியார்களிடம் தாயன்பைக் காட்டுவதைப் பார்ப்பதில் ஒரு ஆச்சர்யமும் இல்லை.

நா வேஷசே யதி –ந அவேஷசே யதி –-நீ கடாஷித்து இரா விடில் –ததை ஷத பஹூஸ்யாம் பிரஜாயேயேதி -(ததைகத பஹு ஸ்யாம்‌ ப்ரஜாயேயேதி தத்தேஜோ$ஸ்ருஜத | [அந்தப்‌ பரப்ரஹ்மம்‌ (நானே) பலவாக ஆகக்கடவேன்‌” என்று ஸங்கல்பித்தது; அது தேஜஸ்ஸை ஸ்ருஷ்டி செய்தது)என்று அசத் கல்பரான சேதனரைக் கடாஷித்து இலையாகில் அநாதி காலம் பண்ணிப் போந்த அபராதங்களை பாராதே அவற்றின் உடைய துர்க்கதியைப் பார்த்து-க்ருபா பர தந்த்ரனாய் இறே அப்போதே கடாஷித்தது அல்லது உன்னைக் கடாஷித்திலையே -என்பார் இல்லையே –தத- பிரளயத்துக்கு பின் –பஹூஸ்யாம் -என்கிற சங்கல்பத்துக்கு பின்பு-புவன சிருஷ்டிக்கு முன்பு உண்டான தூரத்தை சொல்லுகிறது –-புவ நான்ய மூநி நாலாம் -பவிது மேவ-அமூநி புவநானி பவிதுமேவ நாலாம் – இவ் உலகங்ககள் உண்டாகவே மாட்டாது –-போக மோஷங்களை சாதித்துக் கொள்ளுகைக்கு ஏகாந்தமான சதுர்தச புவனங்கள் ஆனவை உண்டாகவே மாட்டாது –-வியதிரேக நிர்த்தேசம் அர்த்த ஸ்தைர்யத்துக்காக – கோ ஹ்யேவான் யாத் க ப்ராண்யாத் ந ததஸ்தி விநாயத் ஸ்யான்மயா பூதம் சராசரம்- (ரஸோ வை ஸ:। ரஸம்‌ ஹ்யேவாயம்‌ லப்‌,த்‌,வாநந்த, பவதி। கோ ஹ்யேவாந்யாத்‌ க:. ப்ராண்யாத்‌| யதே;ஷ ஆகாம ஆநந்தே ந ஸ்யாத்‌ ஏஷ ஹ்யேவாநந்த –ரஸ (ஆநந்த) ஸ்வரூபனன்றோ அந்தப்‌ பரம புருஷன்‌. ரஸ ஸ்வரூபனான அவனை அடைந்து (இந்த ஜீவன்‌ ) ஆநந்த,த்‌தை உடையவனாகிறான்‌. பிரகாசிப்பவனும்‌, ஆநந்த,ஸ்வரூபனுமான இப் பரம புருஷன்‌ இல்லாவிடில்‌ எவன்‌ இவ்வுலகிலுள்ள ஸுகத்தையோ, மோக்ஷ ஸுகத்‌தையோ அடைய முடியும்‌ ? (ஆகையால்‌) இவனே (ஜீவனை) ஆநந்தி,ப்பிக்கிறான் )என்னக் கடவது இறே

குத ப்ரவ்ருத்தி –-எக்கார்யம் செய்ய மாட்டாது என்பது சொல்லவும் வேண்டுமோ-உன் சங்கல்பம் ஒழிய உண்டாக மாட்டாத இவை ப்ரவர்த்திப்பது எத்தாலே-சகல உத்பத்தியும் பிரவ்ருத்தி நிவ்ருத்தியும்
உன்னுடைய கடாஷ பலம் அன்றோ –ப்ரபோ
–ஜகத் காரண்த்வ பிரயுக்தமான ஐஸ்வர்யத்தை பிரகாசிப்பிக்கிறது-ஏவம் நி சரக்க ஸூ ஹ்ருதி த்வயி சர்வ ஜந்தோ – (ந ததஹஸ்தி விநா யத்‌ ஸ்மாந்மயா பூ,தம்‌ சராசரம்‌ [அசையக்கூடியவையும்‌, அசையக் கூடாதவையுமான வஸ்‌துக்களில்‌, நானில்லாமல்‌ இருக்கக்கூடிய வஸ்து கிடையாது.])சர்வ ஜந்தோ ரேவம் நி சரக்க ஸூ ஹ்ருதி–நித்ய விபூதி உண்டாய் இருக்க இவற்றை இழக்கையாலே-ஸ ஏகாகீ ந ரமேத -([(ப்ரளய காலத்தில்‌) ஒருவராயிருந்த அந்த நாராயணன்‌ ஆனந்தத்தை அடையவில்லை)என்னும்படி தனிமைப் பாடாய் ப்ரஹ்ம ருத்ராதி ஸ்தாவராந்தமான ஜந்து ஜாதத்துக்கு கரண களேபரங்களை கொடுத்து குறை தீர்ந்தே என்னும்படி அகாரண ஸூஹ்ருத்தான உன் பக்கல்ஸ்வாமின் – இவற்றை உண்டாக்குகிற இது உன் பேறாக வேண்டிற்று இவற்றோடு உண்டான குடல் துவக்கு இறே-ஸ்வ முத்திச்ய –உபாதத்தே –என்று இறே அபிஉக்தர் -ஸ்ரீ பட்டர் -வார்த்தை-(உபாத,த்தே ஸத்தாஸ்தி,திநியமநாத்‌,யைஸ்‌ சித,சிதெள ஸ்வமுத்‌,இஸ்ய ஸரீமாநிதி வததி வாகெ,ளபநிஷதீ, | உபாயோபேயத்வே ததி, தவ தத்த்வம்‌ ந து கரணெள அதஸ்த்வாம்‌ ஸ்ீரங்கேஸய ஸரணமவ்யாஜமப,லம்‌ || [ஹே ஸ்ரீரங்கநாதனே ! “ஸ்ரீமந்நாராயணன்‌ ஸ்ருஷ்டி, ஸ்தி,தி, நியமனம்‌ முதலிய காரியங்களால்‌ சேதனாசேதனங்களைத்‌ தனக்காக ஸ்வீகரிக்கிறான்‌” என்று உபனிஷத்‌, வாக்யமானது சொல்லுகிறது. ஆகையால்‌, இவ்விஷயத்‌தில்‌ உபாயத்வமும்‌ உபேயத்வமும்‌ உனக்கு இயல்வு; செயற்கையல்ல. ஆகையால்‌ உன்னை நிர்வ்யாஜமான உபாயமாக அடைந்தேன்‌)ஸ்வ வ்யதிரிக்த சகல சேதன அசேதனங்களும் உனக்கு அனன்யார்ஹ சேஷமான ஸ்வாமித்வத்தை உடையவனே –

ந சித்ர மித மாஸ்ரித வத்ஸ்லத்வம் – இத ஆஸ்ரித வத்சலத்வம் ந சித்ரம் – சகல வாங் மனஸ் அகோசரமான -த்வத் விஷய ஸ்தோத்ரத்துக்கு யோக்யனாம் படி என் பக்கல் உண்டான வத்சலத்வம் உனக்கு ஆச்சர்யமோ–கிமத்ர சித்ரம் -இத்யாதிஜகத் காரணத் வத்தாலே -சர்வ உத்க்ருஷ்டன் என்றும்-(கிமத்ர சித்ரம்‌ த.ர்மஜ்ஞ! லோகநாத, ! ஸுகாவஹ !| யத்‌ த்வமார்யம்‌ ப்ரபாஷேதரா: ஸத்த்வவாந்‌ ஸத்பதே, ஸ்தி,த: ॥-தர்மங்களை அறிந்தவரே | லோக நாதரே |! ஸாுகத்தைத்‌ தருபவரே |. ஸத்வ கு,ணத்தை யுடையவரும்‌, நல்ல மார்க்‌ கத்தில்‌ நிற்பவருமான நீர்‌ அழகிய சொல்லைச்‌ சொன்னீர்‌ என்பதில்‌ என்ன ஆச்சரியம்‌) காரணம் து த்யேய-(காரண வஸ்துவே தியானிக்கத்தக்கது)என்கையாலே சர்வ சமாஸ்ரயணீயன் என்றும்-ஏஷ ஹ்யேவா நந்தயாதி -என்கையாலே ப்ராப்யன் என்றும்-ஸ்ருஷ்ட்யாதிகளை தன் பேறாகப் பண்ணுகையாலே சர்வ ஸ்வாமி என்றும்-தாம் ஸ்தோத்ரத்தில் மூளும் படி முகம் காட்டுகையாலே ஆஸ்ரித வத்சலத்வமும் – சொல்லிற்று ஆயிற்று –(கீழே அப்ஜ நேத்ரே -என்ற சம்போதம் திரு விழி செவிப் பட்டவாறே தாமரைக் கண்களால் கடாக்ஷித்து அருள –-தத் ஐஷத–பஹுஸ் யாம் பிரஜாயேயேதி -ஸ்ருதி படியே இவரும்-அவேஷஸே-ஈஷணம்-ஸ்வாபாகிக ஸூஹ்ருத கடாக்ஷம் -என்றவாறு-வாத்சல்யம் பிரபாவம் அத்புதம் அன்று இயற்க்கை என்றவாறு )-

ஸ்தோத்ரம் பண்ணுவதற்கு அதிகாரம் உண்டு என்று ஸ்தாபித்த பின்பு ஸ்தோத்ரம் பண்ணத் தொடங்குகிறார் இது முதல்-அப்ஜ நேத்ர-என்று கீழே சம்போதித்த உடனே தண் தாமரைக் கண்களால் கடாக்ஷித்து அருளி அனுக்ரஹித்தான்-தத் ஐஷத பஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி –ஸ்ருதி அடி ஒற்றி இவரும் அவேஷசே -என்று அருளிச் செய்கிறார்-ஈஷணம்-அனுக்ரஹத்தோடு கூடிய சங்கல்பம்
ஸ்வாபாவிக ஸூஹ்ருத்தாய் எல்லார் விஷயத்திலும் இருக்கும் நீ என் விஷயத்திலும் -ப்ரீதி விசேஷமான வாத்சல்யம் காட்டி அருளுவது ஆச்சர்யமே இல்லையே –ஜகத் காரணத் வத்தாலே -சர்வ உத்க்ருஷ்டன் என்றும்-காரணம் து த்யேய-என்கையாலே சர்வ சமாஸ்ரயணீயன் என்றும்-ஏஷ ஹ்யேவா நந்தயாதி -என்கையாலே ப்ராப்யன் என்றும்-ஸ்ருஷ்ட்யாதிகளை தன் பேறாகப் பண்ணுகையாலே சர்வ ஸ்வாமி என்றும் தாம் ஸ்தோத்ரத்தில் மூளும் படி முகம் காட்டுகையாலே ஆஸ்ரித வத்சலத்வமும் –சொல்லிற்று ஆயிற்று –

நாத நின் ஸங்கல்பம் இன்றி யுண்டாய் நன்மை யுறும் இருக்கைக்கும் சமர்த்தம் இல்லா
சாதனமாம் இப்புவனங்கட்க்கும் எங்கன் ஸம்பவிக்கும் ப்ரவ்ருத்தி இவ்விதத்தே
ஏது விலாத எல்லா உயிர்களுக்கும் இதம் புரியும் இயற்கையனாம் ப்ரபோ நின் தன்
பாதம் அணி அன்பர்க்கு இவ்வாற் ஸலீயம் படைத்து உள்ளாய் என்பதிலோர் விந்தை என்னே
-10-பிரபோ ஆதியில் நீ ஸங்கல்பித்து கடாக்ஷித்து இரா விட்டால் இப்பதினான்கு உலகங்களும் உண்டாய் இருப்பதற்கே ப்ரமேயம் இருந்திராது -அப்படி இருக்க அவைகளுக்கு ப்ரவ்ருத்தி எங்கனே யுண்டாகும்
ஏ ஸர்வ சேஷியானவனே பிரமன் முதலிய சகலஜீவன்களுக்கும் கரண களேபரங்களைக் கொடுத்து குறை தீர்த்து அருளிய ஸ்வ பாவமாய் ஸூஹ்ருத்தான உன் விஷயத்தில் ஸ்துதி பண்ண வல்லராம் படி
உன் அன்பரைச் செய்வதற்காக உனக்கு யுண்டான ஆஸ்ரித வத்சலத்வமும் ஓர் ஆச்சர்யம் ஆகுமோ-

ஸ்லோகம் -11-அவதாரிகை–இத்தால் பரத்வ லஷணம் சொல்லுகிறது-கீழ் கதி சாமான்ய ந்யாயத்தாலே நாராயணனே சர்வ ஸ்மாத் பரன் -என்றது இதில் விசேஷ வாசியான சிவா சம்ப்வாதி வாக்யங்களாலும்
பிரதி பாதிக்கப் படுகிறான் நாராயணனே -என்று சர்வ வேதாந்த வ்யாக்யானமாய் அநந்ய பரனான நாராயண அநுவாக சித்தமான பகவத் பரத்வத்தை -அருளிச் செய்கிறார் –

ஸ்வா பாவிக அநவதிக அதிசய ஈசித்ருத்வம்
நாராயண த்வயி ந ம்ருஷ்யதி வைதிக க
ப்ரஹ்மா சிவச் சதமக பரம ஸ்வ ராடித்
யேதே அபி யஸ்ய மஹிமார்ணவ விப்ருஷஸதே
–11-

நாராயண-நாராயணனே
ப்ரஹ்மா சிவச் சதமக பரம ஸ்வராட் -பிரமன் சிவன் இந்திரன் -இவர்களை விட சிறந்த முக்தாத்மா
இதி ஏத அபி -என்கிற இவர்கள் எல்லாரும்
யஸ்ய தே மஹிமார்ணவ விப்ருஷஸதே-யாதொரு உன்னுடைய பெருமையாகிற கடலிலே திவலையாக ஆகின்றனரோ
( தஸ்மிந் ) த்வயி-அப்படிப்பட்ட உன்னிடத்தில்
ஸ்வா பாவிக அநவதிக அதிசய ஈசித்ருத்வம்-இயற்கையான உயர்வற்ற அதிசய ஐஸ்வர்யத்தை
க வைதிக ந ம்ருஷ்யதி –எந்த வைதிகன் ஸஹிக்க மாட்டான் –சஹியாதவன் அவைதிகன் ஆவான் என்கை-

நாராயணனே! உன்னுடைய பெருமைக் கடலில் ஒரு திவலையைப் போன்றவர்களே (கர்மத்துக்கு வசப்பட்ட) ப்ரஹ்மா, சிவன், இந்திரன் ஆகியோரும், இந்த தேவதைகளைவிடச் சிறந்தவர்களான, கர்மத்துக்கு வசப்படாத முக்தாத்மாக்களும்; உன்னுடைய இயற்கையான மற்றும் எல்லை யில்லாத பெருமையை உடைய ஐச்வர்யத்தை (ஆளுமையை) எந்த வைதிகன் பொறுக்க மாட்டான்?

ஸ்வாபாவிக – இத்தால் கர்ம உபாதிகமாய் -அத்தாலே-அநித்யமாய் துக்க மிஸ்ரமான ப்ரஹ்மாதிகள் ஐஸ்வர்யத்தை வ்யாவர்த்திக்கிறது –அநவதிக அதிசய–இத்தால் நித்யரையும் முக்தரையும் வ்யாவர்த்திக்கிறது –-ஸ ஸ்வராட் பவதி -(அந்த முக்தாத்மா கர்மத்திற்கு வ௱ப்படாதவனாக ஆகிறான்)என்றும்-சத்ய காமஸ் சத்ய சங்கல்ப -(ய ஆத்மா ௮பஹத பாப்மா விஜரோ விம்ருத்யுர்‌ விஸோகோ விஜிக,த்ஸோ$பிபாஸஸ்‌ ஸத்யகாமஸ்‌ ஸத்யஸங்கல்பஸ்‌ ஸோ$ந்வேஷ்டவ்ய:[எந்த ஆத்மாவானவன்‌, பாபமற்றவனாகவும்‌, கிழத்தனமற்றவனாகவும்‌, ம்ருத்யுவற்றவனாகவும்‌, மோகமற்றவனாகவும்‌, பசியற்றவனாகவும்‌, தாகமற்றவனாகவும்‌, வீண்போகாத இஷ்டத்தையும்‌, ஸங்கல்பத்தையும்‌ உடையவனாகவுமிருக்கிறானோ அவன்‌ தேடத்தக்கவன்‌.)என்றும் -நித்ய முக்த விஷயமான ஐஸ்வர்யங்களும் பாகவதா யத்தமாய் சாவதிகங்களுமாய் இருக்கையாலே –ஈசித்ருத்வம்
இந்த அசாதாரண ஸ்வரூப நிர்தேசத்தாலே-நிர் விசேஷ சின்மாத்திர வஸ்து -என்ற புத்த கந்திகளான வேதாந்திகளை வ்யாவர்த்திக்கிறது-நாராயண –-சத் ப்ரஹ்மாதி சாமான்ய வாசி சப்தங்களையும்
விசேஷ வாசியான சிவா சம்ப்வாதி சப்தங்களையும்-நாராயணன் பக்கலிலே வ்யவஸ்தாபிக்கிற
நாராயண அனுவாகம் சொல்லுகிற இவ்வர்த்தத்தில் பிரமாணம் ப்ரத்ய பிஜ்ஞை பன்னப் படுகிறது –

த்வயி –சர்வ வேதாந்தங்களிலும் சர்வாதிகனாக பிரதி பாதிக்கப் படுகிறவனாய்-இவ்வாத்மாவுக்கு வகுத்தவனான உன் பக்கலிலே-ந ம்ருஷ்யதி-உக்தமான ஐஸ்வர்யத்தை பொறாதே ஒழிகிறவன்-வைதிக க –அப்ராஹ்மண இத்யர்த்தம் – யோ விஷ்ணும் சத்தம் த்வேஷ்டி விஷ்ணு பக்தி விஹீ நோ யஸ் சர்வ சாஸ்த்ரார்த்த வேத்யபி பிராமண்யம் தஸ்ய ந பவேத் தச்யோத் பத்திர் நிரூப்யதாம் இத்யாதி –(ய: புத்ர: பிதரம்‌ த்‌,வேஷ்டி தம்‌ வித்‌,யாத,ந்யரேதஸம்‌ | யோ விஷ்ணும்‌ ஸததம்‌ த்‌,வேஷ்டி தம்‌வித்‌,யாதந்த்யரேதஸம்‌ ॥| [எந்தப்‌ புத்திரன்‌ பிதாவை துவேஷிக்கிறானோ அவனை மற்றொருவனுடைய ரேதஸ்ஸுக்குப்‌ பிறந்தவனாக அறியலாம்‌; எவனொருவன்‌ விஷ்ணுவை எப்போதும்‌ த்‌வேஷிக்‌ கிறானோ அவனைச்‌ சண்டாளனுக்குப்‌ பிறந்தவனாக அறியலாம்‌)(விஷ்ணு ப,க்தி விஹீநோ யஸ் ஸர்வ ஸாஸ்த்ரார்த்த,வேத்‌யபி। ப்‌,ராஹ்மண்யம்‌ தஸ்ய ந ப,வேத்‌ தஸ்யோத்பத்திர்‌ நிரூப்யதாம்‌ || எல்லா ஸாஸ்த்ரங்களின்‌ அர்த்தத்தை அறிந்தவனான போதிலும்‌ எவன்‌ விஷ்ணுப,க்தி யில்லாதவனோ அவனுக்கு ப்‌.ராஹ்மண்யம்‌ கிடையாது. அவனுடைய உத்பத்தியை நிரூபிக்கலாம்‌)
ஹிரண்ய கர்ப்பச் சம வர்த்த தாக்ரே பூ தஸ்ய ஜாத பதி ரேக ஆஸீத் – கிரிந்த்ர த்வதுத்தர ஏகோ ஹி ருத்ரோ ந த்விதீயாய தஸ்து -([முதலில்‌ பூ,தங்களுக்கெல்லாம்‌ ஒரே பதியான ஹிரண்ய கர்ப்பன்‌ (ஜீவாத்ம ஸமூஹத்தைத்‌ தன்னுட் கொண்ட பகவான்‌) இருந்தான்‌–[ருத்‌ரன்‌ ஒருவனே; இரண்டாவதாக (ஸஹாயமாக) ஒருவருமில்லை.-ந கிரிந்த்‌,ர த்வது,த்தரோ ந ஜ்யாயோ ௮ஸ்தி வ்ருத்ரஹந்‌ [இந்திரனே | உன்னைக் காட்டிலும்‌ மேலானவனில்லை ; வ்ருத்ரனைக்‌ கொன்‌றவனே (உன்னைக் காட்டிலும்‌) பெரிய வனில்லை.]இத்யாதிகளிலே ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு சர்வேஸ்வரத்வம் ஓதா நிற்க-சிவா சம்ப்வாதி சப்தம் நாராயணனை பிரதி பாதிக்கிறது என் என்று இப் பிரமாணங்களில் அபர்ய வசித்தவன் வைதிகன் அல்லன் என்று ஷேபித்த படி -எங்கனே என்னில் –ச ப்ரஹ்மா ச சிவச் சேந்திர -இத்யாதிகளில் பரிஹரித்தது என்கிறது உத்தரார்தம்–ப்ரஹ்ம ருத்ராதிகளோடே சம்ப்ரதிபந்த ஷேத்ரஞ்ஞன் ஆன-நன்கு அறியப் பட்ட ஜீவன் ஆன – இந்த்ரனையும் பாரதந்த்ர்யமே ஸ்வரூபமான முக்தாத்மா ஸ்வரூபத்தையும் –சமபி -வ்யாபஹரிக்கையாலே -கூடப் படிக்கையாலே –-அவர்கள் உடைய அநீஸ்வரத்வம் சம் ப்ரதிபன்னம் -என்கிறது-

யேதே அபி – இந்த லோகத்திலே ஈஸ்வர தயா பிரசித்தரான இவர்களும்-யஸ்ய–நாராயண பரா வேதா -என்று சர்வ வேதாந்த பிரசித்தியை -நினைக்கிறது-மஹிமார்ணவ விப்ருஷஸதே- சர்வேஸ்வர மகிமை யாகிற கடலிலே ஒரு பிந்து மாதரம் என்று நாராயண அனுவாகம் தானே பரிஹரியா நின்றது -என்கிறார் –யஸ்ய தே –என்று ஸ்ருதி பிரசித்தியையும் தமக்கு அவ்வர்த்தத்தில் உண்டான சாஷாத் காரத்தையும் அருளிச் செய்கிறார் –

ஸ்வா பாவிக அநவதிக அதிசய ஈசித்ருத்வம்-இரண்டு விசேஷணங்கள் இவனுக்கே அசாதாரணம் –
ச ப்ரஹ்மா ச சிவஸ் சேந்த்ரஸ் ஸோஷர -பரமஸ் ஸ்வராட்-முக்தருக்கும் ச ஸ்வராட் பவதி -நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி — ஸ்வ தந்திரம் இங்கு முக்தர்களுக்கு தங்கள் நினைத்த படி கைங்கர்யம் செய்ய-அநேக சரீரம் பரிக்ரஹம் கொண்டு –அவனை மகிழ்விக்க என்றபடி-எந்த வைதிகன் உன் ஐஸ்வர்யம் சகிக்க மாட்டான் என்றது-ஸ்ரீ மன் நாராயணனுடைய ஜகத் காரணத்வம் சர்வ ஸ்வாமித்வம் போன்ற ஐஸ்வர்யத்தை பெறாதவர்கள்-வேத பாஹ்யர்கள் -என்றதாம் – )

ஸ்ரீ மன் நாராயணனே சர்வ ஸ்மாத் பரன்-என்பதை ஸ்தாபித்து அருளுகிறார் –-நாராயண அநுவாகத்திலே சொல்லிற்றே–ச ப்ரஹ்மா ச சிவஸ் சேந்தரஸ் ச அக்ஷரஸ் பரம ஸ்வராட் -(தஸ்ய மத்‌,யே வஹ்நிஸிகர அணியோர்த்‌,வா வ்யவஸ்தி,த:। நீலதோயதமமத்‌,யஸ்த;ா வித்‌,யுல்லேகேவ பாஸ்வரா | நீவார ஸூகவத்‌ தந்வீ பீதாபாஸ்யாத்‌ தநூபமா| தஸ்யாஸ்‌ ஸிகராயா மத்‌,யே பரமாத்மா வ்யவஸ்து,த: | ஸ ப்ரஹ்மா ஸ ஸிவஸ்ஸேந்த்‌,ரஸ்‌ ஸோக்ஷர:பரமஸ்‌ ஸ்வராட்‌ ॥|[அந்த இருதய கமலத்தின்‌ நடுவில்‌, சிறியதும்‌ மேல்‌ நோக்கினதுமான அக்னி ஸிகை, (பரமாத்மாவின்‌ திவ்ய மங்கள விக்‌,ரஹம்‌) இருக்கிறது. ( அது) நீலமேகத்தை உட்கொண்ட மின்னல் போல்‌ பிரகாஸமுள்ளதாகவும்‌, நெல்‌ நுனிபோல்‌ சிறிதாகவும்‌, மஞ்சள்‌ நிறமுள்ளதாகவும்‌, ஒப்பற்றதாகவும்‌ இருக்கிறது. அந்த ஸிகையின்‌ நடுவில்‌ பரமாத்மா விளங்குகிறான்‌. அவனே பிரமனுக்கும்‌ அந்தர்யாமி; அவனே ஸிவனுக்கும்‌ அந்தர்யாமி; அவனே இந்திரனுக்கும்‌ அந்தர்யாமி; (பிரமன்‌ முதலியவர்களைக் காட்டிலும்‌) மேலானவனும்‌, கர்மத்திற்கு வசப்படாதவனும்‌, அழிவற்‌றவனுமான முக்தாத்மாவுக்கும்‌ அவனே அந்தர்யாமி)முக்தர்கள் கர்ம வஸ்யர்கள் என்றதே-நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி –ஜகத் வியாபார வர்ஜனம் –அவனுக்கு பரதந்த்ரர்களே-ப்ரஹ்மாதிகளுக்கு சொல்லப்படும் ஏற்றம் எல்லாம் உனது பெருமையின் சிறு திவலையே-அவர்களது ஈஸ்வரத் தன்மை ஸ்வாபாவிகமும் இல்லை -அநவதிக அதிசயமும் இல்லையே –கர்ம வஸ்யர்கள் அன்றோ –ஸ்வாபாவிக –-இத்தால் கர்ம உபாதிகமாய் -அத்தாலே அநித்யமாய் துக்க மிஸ்ரமான ப்ரஹ்மாதிகள் ஐஸ்வர்யத்தை வ்யாவர்த்திக்கிறது –-அநவதிக அதிசய- இத்தால் நித்யரையும் முக்தரையும் வ்யாவர்த்திக்கிறது – ஸ்ரீ மன் நாராயணனுடைய ஜகத் காரணத்வம்-சர்வ ஸ்வாமித்வம் -ஐஸ்வர்யம் பொறாதவர்கள் வேத பாஹ்யர்களே அன்றோ –

விந்தையாய் இயற்கையாம் உன் விதப்புறு நாயகத்தை
எந்த மா வைதிகர் தான் பொறுத்திலார் நாரணா நின்
சிந்துவா மஹிமை தன்னில் சிறு துளி யாவர் யன்றோ
நந்தி நான்முகன் வலாரிமுத்தராம் ஏனையோரும்
–11-விதப்பு –அதிசயம் -மிகுதி-வைதிகர் -வேதாந்த ஸாஸ்த்ரம் உணர்ந்தவர்-நந்தி -சிவன்-வலாரி -இந்த்ரன்-நாராயணா -இயற்கையையும் ஆச்சர்யமாயும் உன்னிடத்து அமைந்துள்ள உனது ஓப்புயர்வு இல்லாத உபய விபூதி ஸாம்ராஜ்யத்தை -வேதாந்த ஸாரத்தை அறிந்த எவர் தான் பொறுக்க மாட்டார் –பிரமன் சிவன் இந்திரன் முக்தர் முதலிய இவர்கள் எல்லோரும் கடல் போன்ற உன் மஹிமையில் ஒரு துளியே ஆகின்றார்கள் அன்றோ –

ஸ்லோகம் -12- அவதாரிகை —இதில் விப்ரதிபத்தி ஷமங்கள் அன்றியிலே-தனித் தனியே பூரணமாய்
வஸ்து சாமர்த்ய அபர நாமங்களான லிங்கங்களாலே பரத்வத்தை
அருளிச் செய்கிறார் –இதில், ஆளவந்தார், ஸந்தேஹத்துக்கு இடமளிக்கும் பொதுப் பெயர்களைச் சொல்லாமல், தன்னடையே முழுமையான மற்றும் எம்பெருமானின் பரத்வத்தை நன்றாக வெளியிடும் திருநாமங்களை அருளிச் செய்கிறார்.(நாராயண பரா வேதா தேவா நாராயணாங்க,ஜா: | நாராயணபரா லோகா நாராயணபரா மகா: ॥ [வேதங்கள்‌ நாராயணனைச்‌ சொல்லுபவை ; தேவர்கள்‌ நாராயணனுடைய அங்க,த்திலிருந்து உண்டானவர்கள்‌ ; நாராயணனைப்‌ பற்றியிருப்பவை உலகங்கள்‌ ; யாகங்கள்‌ நாராயணனை ஆராதி,ப்பவை)

கஸ்ஸ்ரீ ஸ்ரீய பரம சத்த்வ சமாஸ்ரய க
க  புண்டரீக நயன புருஷோத்தம க
கஸ்யா யுத அயுத சதா ஏக கலா அம்சக அம்சே
விச்வம் விசித்திர சித் அசித் ப்ரவிபாக வ்ருத்தம்
—12-

கஸ்ஸ்ரீ ஸ்ரீய -திருவுக்கும் திருவாகிய செல்வன் யார்
பரம சத்த்வ சமாஸ்ரய க-சிறந்த சுத்த சத்வ குணத்துக்கு இருப்பிடம் யார்-பிரமன் ரஜோகுண அதிகன் -ருத்ரன் தமோகுண அதிகன் அன்றோ
க  புண்டரீக நயன -செங்கண் மால் யார்-உயிர்களுக்கு எல்லாம் தாயாய் அளிக்கிற தண் தாமரைக் கண்ணன் யார்தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ
புருஷோத்தம க–புருஷோத்தமன் எனப்படுபவன் யார்
கஸ்யா யுத அயுத சதா ஏக கலா அம்சக அம்சே-எவனுடைய அநேகம் ஆயிரம் கோடி பாகங்களின் ஒரு பகுதியில்
விச்வம் விசித்திர சித் அசித் ப்ரவிபாக வ்ருத்தம்—இப்பிரபஞ்சம் முழுவதும் விசித்திரமான சேதந அசேதன பிரிவுகளை உடையதாக இருக்கின்றது-அவனுடைய ஸ்வரூப ஏக தேசத்தில் சகல கார்ய வர்க்கங்களும் அடங்கும்

ஸ்ரீ: என்று சொல்லப்படும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் செல்வம் யார்? யாரிடத்தில் சுத்த ஸத்வம் உள்ளது?
யார் புண்டரீகாக்ஷன்? யார் புருஷோத்தமன் என்று சொல்லப்படுபவன்? யாருடைய ஸங்கல்பத்தின் ஒரு சிறு பகுதி, பலவகைப்பட்ட சேதனர்கள் மற்றும் அசேதனப் பொருள்களாக விரிந்திருக்கும் இவ் வுலகத்தைத் தாங்குகிறது?

கஸ்ஸ்ரீ ஸ்ரீய –ஈஸ்வர வ்யதிரிக்த சகல சேதனமும் தம் தாமுடைய ஸ்வரூப ரூப ஸ்தித்யாதிகளுக்காக
பற்ற வேண்டும்படியான மேன்மை யுடைத்தான பிராட்டியும்-தன்னுடைய ஸ்வரூப ரூப ஸ்தித் யாதிகளுக்காக பற்ற வேண்டும்படியான மேன்மையை உடையார் உன்னை ஒழிய ஆர் –-கிம் ஷேப ஆர்த்தமாக இல்லை -என்றபடி –ஈஸ்வரீம் சர்வ பூதானாம் -(க,ந்த,த்‌,வாராம்‌ து,ராத,ர்ஷாம்‌ நித்யபுஷ்டாம்‌ கரீஷிணீம்‌। ஈஸ்வரீம்‌ ஸர்வபூ,தாநாம்‌ தாமீஹோபஹ்வயே ஸ்ரியம்‌ ॥ [கீர்த்தியைத்‌ தருபவளும்‌, ( து;ஷ்டர்களால்‌ ) அடைய முடியாதவளும்‌, எப்போ தும்‌ ஸம்ருத்‌,தி,யை. உடையவளும்‌, எல்லா ஸம்பத்துகளையும்‌ உடையவளும்‌, எல்லா பூ,தங்‌ களுக்கும்‌ ஈங்வரியுமான ஸ்ரீதேவியை இங்கு அழைக்‌ கிறேன்‌.])–அஸ்ய ஈசானா ஜகதோ விஷ்ணு பத்நீ – திருவுக்கும் திருவாகிய செல்வா –பெரிய திருமொழி -7-7-1- ([இந்த உலகிற்கெல்லாம்‌ ஸ்வாமினியாகவும்‌, விஷ்ணுவுக்குப்‌ பத்னியாகவும்‌ இருப்பவளும்‌,) என்னக் கடவது இறே-பரம சத்த்வ சமாஸ்ரய க –பரம -சப்தத்தாலே ரஜஸ் தமஸ் ஸூக்களையும் அத்தோடு சமபிவ யாஹ்ருதமான சத்வத்தையும் வ்யாவர்த்திக்கிறது-ஸூத்த சத்வத்துக்கு ஆஸ்ரயமான விக்ரஹாதிகளை உடையவன் ஆர்-மகான் ப்ரபுர்வை புருஷ சத்த்வஸ் யைஷ ப்ரவர்த்தக – ஆதித்ய வர்ணம் தம்ஸ பரஸ்தாத் –க புண்டரீக நயன –([மஹாபுருஷனே ! (மோக்ஷ) பலத்தைக்‌ கொடுக்கக்கூடியவன்‌. இவனே ஸூத்‌த,ஸத்வத்திற்கு ப்ரவர்த்தகன்‌-வேதாஹமேதம்‌ புருஷம்‌ மஹாந்தம்‌ ஆதி,த்யவர்ணம்‌ தமஸ; பரஸ்தாத்‌। தமேவம்‌ வித்‌,வாநம்ருத இஹ பவதி -… நாந்ய: பந்தள வித்‌ மதே5யநாய ॥ [(வேத,புருஷனாகிய) நான்‌ (ஸ்வரூப ரூப கு,ண விபூ,திகளில்‌) பெரியவனும்‌, ஸுர்யன் போல்‌ ப்ரகாஸிப்பவனும்‌, ப்ரக்‌ ருதிக்கு அப்பாற்பட்டவனுமான இந்தப்‌ புருஷனை அறிகிறேன்‌. அவனை இம் மாதிரி அறிபவன்‌ இங்கேயே முக்தனக ஆகிறான்‌. மோக்ஷத்திற்கு ( அவனைத் தவிர ) வேறு வழி கிடையாது )

ஸுவ அனுபவ ஆனந்த த்ருப்தியாலும்-ஆஸ்ரித அர்த்தமான நீர்மைகளுக்கு பிரகாசமாயும் சர்வேஸ்வரத்வ ஸூசகமான திருக் கண்களை உடையவன் ஆர் –தஸ்ய யதா –புண்டரீகம் ஏவம் அஷிணீ –-(ய ஏஷோ$ந்தராதி,த்யே ஹிரண்மய: புருஷோ த்‌,ருஸ்யதே ஹிரண்யஸ் மஸ்ருர்‌ ஹிரண்யகேஸ ஆப்ரணகராத்‌ ஸர்வ ஏவ ஸுவர்ண: | தஸ்ய யத கப்யாஸம்‌ புண்ட, ரீகமேவமக்ஷிணீ॥।[ஸுர்யனுக்கு நடுவில்‌ தங்கம் போல்‌ அழகிய உருவை யுடைய எந்த இந்தப்‌ பரம புருஷன்‌ காணப்படுகிறானோ, அவன்‌ ஸுவர்ணம் போன்று அழகான மீசையையும்‌, கேஸங்களையும்‌, எல்லா அவயவங்களையும்‌ உடையவன்‌. அவனுக்கு ஸுர்யனால்‌ மலரும்‌ தாமரை போன்‌ற இரு கண்கள்‌ உள.])-மஹா வராஹ ஸ்புட பத்ம லோசன-(ததஸ் ஸமுத் க்ஷிப்ய தராம்‌ ஸ்வத;ம்ஷ்ட்ரயா மஹா வராஹ: ஸ்புட பத்‌மலோசந: |ரஸாதலாதுத் பல பத்ர ஸந்நிப,: ஸமுத்ததோ நீல இவாசலோ மஹாந்‌ ॥ [மலர்ந்த தாமரை போன்‌ற திருக் கண்களை உடையவரும்‌, நீலோத்பலமலரின்‌ இதழ் போன்ற நிறத்தை யுடையவருமான மஹா வராஹ ஸ்வரூபியான பகவான்‌ தன்னுடைய தந்தத்தால்‌ பூதேவியை ரஸாதலத்திலிருந்து எடுத்துக்‌ கொண்டு பெரிய நீல மலை போல்‌ கிளம்பினார்) –ஜிதந்தே புண்டரீ காஷ –-தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா -பெரிய திருமொழி -7-7-9–புருஷோத்தம க – உன்னை ஒழிய புருஷாணாம் உத்க்ருஷ்ட தமராய் இருக்கிறார் ஆர் –-யஸ்மாத் ஷரமதீ தோஹம்-இத்ராப்ய-அதோ அஸ்மி லோகே வேதே ச பிரதித புருஷோத்தமா -ஸ்ரீ கீதை -15-38-(நான்‌ ஞானத்தில்‌ ஏற்றக் குறைவுகளுள்ள ஸம்ஸாரி புருஷனை அதிக்ரமித்திருப்பதாலும்‌, ஞானத்தில்‌ ஏற்றக்‌ குறைவுகளற்ற . முக்த புருஷனைக் காட்டிலும்‌ மேலானவனா யிருப்பதாலும்‌, ஸ்ருதியிலும்‌, ஸ்ம்ருதியிலும்‌ புருஷோத்தம னென்று பிரஸித்‌தி,பெற்றிருக்கிறேன்)என்று ஆப்தரான தேவரீரே அருளிச் செய்திலீரோ –

கஸ்யா யுத அயுத சதா ஏக கலா அம்சக அம்சே விச்வம் விசித்திர சித் அசித் ப்ரவிபாக வ்ருத்தம் – விசித்திர சித் அசித் ப்ரவிபாக வ்ருத்தம் -கஸ்ய அயுத அயுத சதா ஏக கலா அம்சக அம்சே –-சித் அசித் விபாகத்தாலும் வர்த்திக்கிற இந்த ஜகத் விசித்ரமாய்க் கொண்டு ஆருடைய சங்கல்ப சதா சஹாஸ்ராயுதைக தேசத்தில் வர்த்திக்கிறது –கர்மத்தால் வந்த சதுர்வித சரீரங்களும்–தத் போக்யாதிகளும்–அம்சம் என்று கலோபாதிகம் –-அல்பார்த்தத்திலே- பாதோ அஸ்ய விஸ்வா பூதானி –யஸ்ய அயுத அயுத அம்ஸ அம்சே – மேரோரிவாணுர் யஸ்யை தத் – இதம் க்ருத்ஸ்நம் ஏகாம்சேன ஸ்திதோ ஜகத் -இத்யாதி-(ஏதாவாநஸ்ய மஹிமா அதோ ஜ்யாயாம்ஸ்ச பூருஷ: |பாதேரஸ்ய விஸ்வா பூ,தாநி த்ரிபாதஃஸ்யாம்ருதம்‌ திவி ॥ [இவனுடைய மஹிமை இப்படிப்பட்டது. பரமபுருஷன்‌ இதைக்காட்டிலும்‌ மேலானவன்‌, எல்லா உலகங்களும்‌ இவனுடைய ((விபூ,தியில்‌) கால்‌ பாகம்‌; பரமபதத்தில்‌ இவனுடைய (விபூ,தியில்‌) அழிவற்றதான முக்கால்‌ பாக, மிருக்கிறது)

(வேதாந்தாஸ் -தத்வ சிந்தாம் முரபிதுரஸி யத் பாத சிஹ்னைஸ் தராந்தி-திருவுக்கும் திருவாகிய செல்வன் – தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அக்ஷணீ –பரத்வ லிங்கங்கள் –க க கஸ்ய கஸ்ய-கேள்விகள்-மேலே -14- த்வத் அந்நிய க –உன்னை தவிர வேறே யார் -என்று எம்பருமானையே நேராக ஸ்பஷ்டமாக –கேட்டு-நீயே பரம்பொருள் என்று விஞ்ஞாபித்த படி )

யஸ்யாயுதா யுதாம் சாம்சே விஸ்வ சக்திரியம் ஸ்திதா மேரோரிவாணுர் யஸ்ய தத் ப்ரஹ்மாண்ட அகிலம் முநே –(யஸ்யாயுதாயுதாம்‌மாம்மே விஸ்வமுக்திரியம்‌ ஸ்தி,தா |பரப்‌,ரஹ்ம ஸ்வரூபஸ்ய ப்ரணமாமஸ்தமவ்யயம்‌ || [பரப்‌,ரஹ்ம ஸ்வரூபியான எவனுடைய பல்லாயிரத்தில்‌ ஒரு பாகத்தில்‌ உலகமாகிற ஸக்தி நிலைகிற்கிறதோ, குறை வற்றவனான அவனை வணங்குகிறோம்‌-மேரோரிவாணுர்‌ யஸ்யை தத்‌ ப்‌,ரஹ்‌:மாண்ட,மக,லம்‌ முநே [முனிவரே ! இந்த ப்ரஹ்மாண்ட,ம்‌ முழுவதும்‌ எவனுக்கு, மேருவுக்கு அணுவைப் போலாகிறதோ)இத்யாதி பிரமாணங்கள்-அவனே சர்வ வியாபகன்-ப்ரஹ்மாதிகள் இவனுடைய ஏகதேசத்தில் அடங்கி உள்ளார்கள் என்பதை பறை சாற்றும்-ஸ்ரீ கீதையில் விஸ்வரூப அத்தியாயத்தில் (விஷ்டப்‌ யாஹமித,ம்‌ க்ருத்ஸ்நமேகாம்மேநஸ்தி,தோ ஜகத்‌[நான்‌ இவ்வுலகையெல்லாம்‌ (எனது) ஒரு அம்ஸத்தினால்‌ தரித்துக் கொண்டிருக்கிறேன்)அர்ஜுனன் வியந்து நின்றானே-அயுதம் -பதினாயிரம் கலா என்றும்-அம்சம் -ஏக தேசம் என்றும் காட்டும் இவனே சர்வ ஸ்மாத் பரன் என்பதை த்ருடப்படுத்தி அருளுகிறார்வேதாந்தாஸ் தத்வ சிந்தாம் முரபிதுரசி யத் பாத சிஹ்னைஸ் தரந்தி–ஸ்ரீ குணரத்னகோசம்-விசித்திரம் –தேவ மனுஷ்யாதி ரூபா பேதம்-போக்ய போக உபகரணங்கள் போக ஸ்தானங்கள் -என்கிற விபாகங்கள்-வ்ருத்தம் -நிலை நிற்கிற படியைச் சொல்லும்-இதிலும் அடுத்த இரண்டு ஸ்லோகங்களிலும் கேள்விகள்-14-ஸ்லோகத்தில் த்வத் அந்ய க –உன்னைத் தவிர வேறே யார் -ஸ்பஷ்டமாக இருக்கும்-ஆகவே நீயே பரம் பொருள் என்று விஞ்ஞாபித்து அருளுகிறார் –

ஆர் திருவுக்கும் திருவாகுபவன் ஆனார் பரம ஸத்வ ஸ்வரூபம் உளனார்
ஆர் மலரும் தாமரையின் கண்ணுடையவன் யாவன் புருஷோத்தமன் எனும் பெயர் உளான்
ஆருடை ஸ்வரூபம் அதில் ஆயிரத்து ஆயிரம் கோடி பதினாயிரம் அதில்
ஆர் கலையினோர் சிறிய பாகம் அதில் அகில பிரபஞ்சமும் அடங்கி உளதே
–12—திருவுக்கும் திருவாகுபவன் யாவன் -ஸ்ரீ மஹா லஷ்மிக்கும் ஒரு சம்பத்தாய் அமைந்துள்ளவன் யாவன்-ஸூத்த ஸத்வ ஸ்வரூபம் யுடையவன் நீ யல்லாமல் வேறே யாவன்-ஸர்வேஸ்வரத்வத்தைக் குறிப்பிக்கும் மலர்ந்த தாமரை போன்ற திருக்கண்களை யுடையவன் வேறு யாவன்-புருஷோத்தமன் என்னும் பெயரை யுடையவன் உன்னிலும் எவன்-சரீர போக்யாதிகளால் அத்யந்தம் வேறு பட்டு இருக்கிற சேதன அசேதன கங்களுடைய வியாபகத்தோடு கூடிய அகில பிரபஞ்சமும் உன்னை விட மற்று எவனுடைய ஸ்வரூபத்தில் பலகோடி நூறு ஆயிரங்களின் ஒரு சிறு பங்கில் அடங்கி இருக்கின்றது –

ஸ்லோகம் -13-அவதாரிகை இதிஹாச புராண ப்ரக்ரியையாலே ப்ரஹ்ம ருத்ராதிகள் உடைய
ஷேத்ரஜ்ஞத்வத்தையும் பகவத் பரத்வத்தையும் அருளிச் செய்கிறார் –
ஆளவந்தார் ப்ரஹ்மா, ருத்ரன் ஆகியோரின் க்ஷேத்ரஜ்ஞத்வத்தையும் (ஜீவாத்மாவாக இருக்கும் தன்மையையும்) பகவானின் பரத்வத்தையும், இதிஹாஸ மற்றும் புராணங்களில் உள்ள சரித்ரங்களைக் கொண்டு அருளிச் செய்கிறார்..

வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாத்
யாபத் விமோசன மஹிஷ்ட்ட பலப்ரதானை
கோ அந்ய ப்ரஜாப ஸூ பதி பரிபாதி கஸ்ய
பாதோ தகேந ச சிவஸ் ஸ்வ சிரோத்ருதேந–
13-

வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாத் யாபத் விமோசன மஹிஷ்ட்ட பலப்ரதானை–இவை போன்ற இவர்கள் ஆபத்துக்களை விடுவிப்பதானாலும்-உயர்ந்த பலன்களை அளித்து அருளுவதாலும்
ஸ்ரீ ஹயக்ரீவ அவதாரம் எடுத்து -மது கைடபர்களை அழித்து வேதங்களை மீட்டு அருளி-சோமுகன் அசுரன் இடம் இருந்து ஸ்ரீ மத்ஸ்ய அவதாரம் எடுத்து அருளிஹம்ஸாவதாரத்தாலும் வேதங்களை அருளி
குரு பாதகம் –குரு விஷயமான மஹா பாதகம்
தைத்ய பீடாத்-தைத்ய பீடை -அந்தகாசுரன் –வ்ருகாசூரன்-ஹிரண்ய ராவணாதிகள்
ஆதி -இவை முதலாக பல ஆபத்துக்களையும் போக்கி ரஷித்து அருளினவன்
ரக்ஷணம் -அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும்
மஹிஷ்ட்ட பலப்ரதானை-சாமான்ய ஜீவர்களை ஈஸ்வரர் என்று கொண்டாடும் படி ஆக்கி அருளினவன்
யுக கோடி சஹஸ்ராணி விஷ்ணும் ஆராத்ய பத்ம பூ -புநஸ் தரை லோக்ய தாத்ருத்வம் ப்ராப்தவா நிதி சுச்ரும -என்றும்
ப்ரஹ்மாதயஸ் ஸூராஸ் சர்வே விஷ்ணும் ஆராத்ய தே புரா ஸ்வம் ஸ்வம் பதம் அநு பிரதா-என்றும்
கேசவஸ்ய ப்ரசாததஸ் –என்றும் பிரமாணங்கள் உண்டே
கோ அந்ய -உன்னைத்தவிர வேறே யார்
ப்ரஜா பஸூ பதி பரிபாதி கஸ்ய-பிரஜாபதியான பிராமனையும் பசுபதியான சிவனையும் ரஷிப்பார் யார்
பாதோ தகேந ச சிவஸ் ஸ்வ சிரோத்ருதேந–அந்த சிவனானவன் தனது தலையிலே தரிக்கப்பட்ட
யாருடைய ஸ்ரீ பாத தீர்த்தத்தால் பரிசுத்தனானான்
சதுமுகன் கையில் சதுப்புயன் தாளில் சங்கரன் சடையினில் தங்கிக் கதிர் முக மணி கொண்டு
இழி புனல் கங்கை
–பெரியாழ்வார்
ததம்பு பரயா பக்த்யா ததார சிரஸா ஹரஸ் பாவனார்த்தம் ஜடா மத்யே –ஈஸ்வர சம்ஹிதை
யஸ் ஸுவ்சனிஸ் ஸ்ருத சரித் ப்ரவரோதகேந தீர்த்தேன மூர்த்நீ விக்ருதேன சிவச் சிவோ பூத்
–ஸ்ரீ மத் பாகவதம்

ப்ரஜாபதி என்று சொல்லப்படும் பிரமனையும், பசுபதி என்று சொல்லப்படும் ருத்ரனையும் மற்றும் இந்திரனையும் முறையே அவர்களுக்கு வந்த ஆபத்தான வேதம் திருடப்பட்டு அதை இழந்ததையும்,
தன்னுடைய தந்தையின் தலையைக் கிள்ளிய பாபத்தையும், அஸுரர்களால் ஏற்பட்ட துன்பத்தையும் போக்கியவன் யார்? யாருடைய ஸ்ரீபாத தீர்த்தத்தைத் தலையில் தாங்கி, ருத்ரன் புனிதத் தன்மையை அடைந்தான்?

வேத அபஹார –
யோ வை வேதாம்ஸ்ச
-என்று ப்ரஹ்மாவுக்கு வேத சஷூஸ்சைக் கொடுக்க -அது அசுரர்களாலே அபஹ்ருதமாக ப்ரஹ்மா வேதத்தை இழந்து துக்காந்தர் நிமக்நனான அளவிலே விரோதிகளை அழியச் செய்து மீட்டுக் கொடுத்த உபகாரத்தைச் சொல்லுகிறது-

ததோ ஹ்ருதேஷூ வேதேஷூ ப்ரஹ்மாணம் காசமஅவிசத் – ததோ வசனமீஸாநம் ப்ராஹ வேதைர் விநாக்ருத ப்ரஹ்மா வேதா மே பரமம் சஷூ வேதா மே பரமம் தனம் வேதா மே பரமம் தாம வேதா மே ப்ரஹ்ம சோத்தமம் மம வேதா ஹ்ருதாஸ் சர்வே தானவாப்யாம் பலாதித்த அந்த காரா இமே ஜாதா லோகா வேதைர் விவர்ஜிதா வேதா த்ருதே ஹி கிம் குர்யாம் லோகன் வை ஸ்ரஷ்டுமுத்யத
அஹோ பத மஹத் துக்கம் வேத நாச நஜம் மம ப்ராப்தம் து நோதி ஹ்ருதயம் மாம் து சோகாமயஸ் த்வயம்-ஜக்ராஹ வேதா ந கிலான் ரஸா தல கதான் ஹரி ப்ராதாச்ச ப்ரஹ்மனே ராஜன் ததாஸ் ஸ்வாம் ப்ரக்ருதிம் யயௌ ததஸ் தயோர் வதே நாஸூ வேதோ பஹரனேந ச- சோகாப நயனம் சக்ரே ப்ரஹ்மன புருஷோத்தம
-இத்யாதி([பிறகு, வேதங்கள்‌ அபஹரிக்கப்பட்டவுடன்‌, பிரமனை அஜ்ஞானம்‌ பீடித்தது. அதன்‌ பின்‌ வேதங்களை இழந்த அவன ஈசனைக்‌ குறித்துப்‌ (பின்வருமாறு) பேசினான்‌. பிரமன்‌; *வேத,ங்களே எனக்கு உயர்ந்த கண்‌; வேதங்‌ களே எனக்கு மேலான தனம்‌; மறைகளே எனக்கு மேலான தேஜஸ்‌; வேதங்களே எனக்கு உயர்ந்த ப்ரஹ்மம்‌. அஸாுரர்களுடைய பலத்தினால்‌ இங்கிருந்து என்னுடைய எல்லா வேத,ங்களும்‌ அபஹரிக்கப்‌ பட்டன. வேத,ங்களற்ற இவ்வுலகங்களெல்லாம்‌ இரு ளடைந்தன. லோகங்களை ஸ்ருஷ்டிக்க ஆரம்பித்த நான்‌ வேத,மில்லாமல்‌ என்‌ செய்வேன்‌ ? ஐயோ ! வேதங்கள்‌ நஸித்ததினால்‌ எனக்குப்‌ பெரிய துக்கும்‌ வந்து சேர்ந்தது; என்னை அடைந்த இந்த மோக மாகிய வியாதி (என்‌) மனத்தைத்‌ துன்புறுத்துகிறது”…… ஹரியானவர்‌ ரஸாதலத்திலிருந்த எல்லா வேதங்களையும்‌ எடுத்துப்‌ பிரமனிடம்‌ கொடுத்தார்‌. அரசனே! பிறகு (அப்பிரமன்‌) தன்‌ இயற்கை நிலையை அடைந்தனன்‌. இப்படி (மது,கைடப,ர்களென்னும்‌) அவ் விருவரையும்‌ கொன்றதாலும்‌, வேதத்தை மீட்டுக் கொணர்ந்ததாலும்‌, புருஷோத்தமன்‌ பிரமனுடைய ஸோகத்தைப்‌ போக்கடித்‌ தான்‌.])

குரு பாதக
ருத்ரன் லோக குருவும் பிதாவுமாய் இருக்கிற ப்ரஹ்மாவை துர்மானமே ஹேதுவாக தலையை அறுத்துப் பாதகியான பாதகத்தையும் போக்கி-தலை அறுப்புண்ட ப்ரஹ்மாவையும் ஜீவிக்கும்படி பண்ணி ரஷித்த படி-

ஸ்ரீ  மாத்ச்யே-தேவீம் ப்ரதி ருத்ர -தத கரோத பரீதேன சம்ரக்தனய நேன ச வாமாங்குட்ட நாகாக் ரேன சின்னம் தஸ்ய சிரோ மயா–ப்ரஹ்மா -யசமாத நபரா தஸ்ய சின்னம் த்வயா மம தஸ்மாச்சா பசமா விஸ்ட கபாலீ தவம் பவிஷ்யசி ருத்ர -ப்ரஹ்ம ஹாஸ் ஸ் குலிதோ பூத்வா சரண தீர்த்தானி பூதலே
ததோ அஹம் கதவான் தேவி ஹிமவந்தம் சிலோச்ச்சயம்-தத்ர நாராயணஸ் ஸ்ரீ மான் மயா பிஷாம் பிரயாசித்த ததச்தேன ஸ்வகம் பார்ச்வம் நகாக்ரேன விதாரிதம் மஹதீ ஸ்ரவதீ தாரா தஸ்ய ரக்தச்ய நிஸ் ஸ்ருதா விஷ்ணு பிரசாதாத் ஸூ ஸ்ரோணி கபாலம் தத் சஹஸ்ரதா ஸ் புடிதம் பஹூதா யாதம் ஸ்வப்ன லப்தம் யதா
-இத்யாதி-([தேவியைக்‌ குறித்து ருத்ரன்‌: “பிறகு கோபத்தை யுடையவனும்‌, சிவந்த கண்களை உடையவனுமான என்‌னால்‌, அப்பிரமனுடைய தலை இடதுகைக்‌ கட்டைவிரல்‌ நகத்தின்‌ நுனியால்‌ கிள்ளப்பட்டது’. பிரமன்‌:– “அபராத, மற்ற என்னுடைய தலை, உன்னால்‌ அறுக்கப்பட்டபடியால்‌ நீ பாபத்தை அடைந்து கபாலியாக (கபாலத்துடன்‌ கூடிய வனாக) ஆவாய்‌.” ருத்ஜன்‌:- தேவி! ப்‌,ரஹ்மஹத்தி செய்த வனாயும்‌ கலங்கினவனாகவும்‌ பூமியில்‌ தீர்த்தங்களைச்‌ சுற்‌றிக் கொண்டிருந்த நான்‌ அதற்குப் பின்‌ ஹிமாசல மலைக்குச்‌ சென்றேன்‌. அங்கு ஸ்ரீமந் நாராயணன்‌ என்னால்‌ பிச்சைக்‌காக யாசிக்கப்பட்டான்‌. அதன்‌ பின்‌ அவனால்‌ தன்‌ (தே,ஹத்தில்‌) ஒரு பாகம்‌ நகத்தின்‌ நுனியால்‌ கீறப்‌ பட்டது. அதிலிருந்து பெரிதாக வெள்ளமிடும்‌ ரத்த தாரை பெருகியது. …… அழகிற்‌ சிறந்தவளே! விஷ்ணுவினுடைய அருளினால்‌ அக் கபாலம்‌ ஆயிரக் கணக்கான பல துண்டுகளாக வெடித்து, கனவில்‌ கிடைத்த பணம்போல்‌ போயிற்று)

தைத்ய பீடாத் யாபத் விமோசன –-ஹிரண்ய ராவணாதிகள் என்ன –-த்ரிபுரத்தில் அசுரர்கள் என்ன-ஆதி சப்தத்தாலே-துரவாசஸ் சாபாதிகளை நினைக்கிறது – இவர்களால் தேவதைகளுக்கு வரும் ஆபத்தைப் போக்கி-மஹிஷ்ட்ட பலப்ரதானை--ஷேத்ரஜ்ஞத் வேன சம்ப்ரதி பன்னரான அவர்களுக்கு-ஸ்வ சமாராதா நத்தாலே-லோகம் அடங்க-ஈஸ்வரன் என்று கொண்டாடும் படியான பதங்களைக் கொடுத்த படியாலே

யுக கோடி சஹஸ்ராணி விஷ்ணும் ஆராத்ய பத்மபூ புநஸ் த்ரை லோகய தாத்ருத்வம் ப்ராப்தவாநிதி ஸூ ச்ரும-([தாமரையில்‌ பிறந்த நான்முகன்‌ ஆயிரங்கோடி யுகங்கள்‌ விஷ்ணுவை ஆராதித்து மறுபடியும்‌ மூவுலகிற்கும்‌ பதியா யிருக்கும்‌ தன்மையை அடைந்தானென்று கேள்விப்படு கிறோம்‌)என்றும்-ப்ரஹ்மா தயஸ் ஸூ ராஸ் சர்வே விஷ்ணும் ஆராத்ய தே புரா ஸ்வம் ஸ்வம் பதம் அநு ப்ராப்தா கேசவச்ய பிரசாத்த –([பிரமன்‌ முதலிய எல்லா தேவர்களும்‌ முன்‌ விஷ்ணுவை ஆராதித்து, தங்கள்‌ தங்கள்‌ பதவிகளைக்‌ கேஸவனுடைய அருளாலே பெற்றார்கள்‌.])என்றும்-ஏவமேஷாஸ் ஸூ ராணாம் ச ஸூ ராணாஞ்சாபி சர்வச பயா பயங்கர கிருஷ்ணஸ் சர்வ லோகேஸ்வரபிரபு -([இம்மாதிரியாக (௩மக்கு) ஸ்வாமியும்‌, எல்லா உலகங்‌ களுக்கும்‌ ஈஸ்வரனுமான இந்த க்ருஷ்ணன்‌ அஸூரர்‌களுக்கும்‌ தேவர்களுக்கும்‌ எக் காலத்திலும்‌ (முறையே) பயத்தையும்‌, அபயத்தையும்‌ அளிப்பவன்‌ .)என்றும்-

கோ அந்ய ப்ரஜாப ஸூ பதி பரிபாதி –பிரஜா பஸூ பதிகளைத் தம் தாமால் வந்த ஆபத்துக்களோடு
பிறரால் வந்த ஆபத்துகளோடு வாசி அற சாகல்யேன ரஷிக்கிறான் மற்று எவன்கஸ்ய பாதோ தகேந ச சிவஸ் ஸ்வ சிரோ த்ருதேந-ஆருடைய திருவடிகளின் நின்றும் விழுந்த ஜலத்தை ஜடையிலே தரிக்கையாலே அந்த ருத்ரன் சிவனாயிற்று -சுத்தனாயிற்று-அவன் அசுத்தியை விளைத்து கொள்ளவும் அவனை சுத்தனாக்கும் பரம பாவனன் உன்னை ஒழிய வேறு ஆர் தான்

த்ரவீபூ தஸ் ததா தரமோ ஹரி பக்த்யா மஹா முனே
க்ருஹீத்வா தர்ம பாநீயம் பதம் நாதஸ்ய துஷ்டயே
ஷாளிதம் பரா பக்த்யா பாத் யார்க்யாதி பிரர்ச்சிதம்
ததம்பு பதிதம் த்ருஷ்ட்வா ததார சிரஸா ஹர
பாவ நாரத்தம் ஜடா மத்யே யோகயோ அஸ்மீத்யவ தாரணாத்
வர்ஷா யுதாந்யத பஹூன் ந முமோச ததா ஹர
-([ரிஷி ஸ்ரேஷ்ட,ரே! (பகவான்‌ திருவுகைளந்தருளின) அச்சமயம்‌, ஹரியினிடம்‌ பக்தியினால்‌ தர்மம்‌ ஜலமாயிற்று. தர்மமாகிய அந்த ஜலத்தை எடுத்து, ஜகந்நாத,னுடைய ஸந்தோஷத்திற்காக (அவனுடைய) திருவடி யானது (என்னால்‌) மேலான பத்தியுடன்‌ விளக்கப்பட்டது; பாத்யம்‌, அர்க்‌,யம்‌ முதலியவைகளாலும்‌ பூஜிக்கப்பட்டது. விழுந்த அந்த ஜலத்தைப்‌ பார்த்து, நான்‌ (பரிஸூத்தப்‌ படுத்தத்‌) தகுந்தவனாயிருக்கிறேன்‌’ என்று நிஸ்சயித்து, சிவன்‌ தன்னைப்‌ பரிஸூத்‌,தப்படுத்திக் கொள்வதற்காக ஜடையின்‌ நடுவில்‌ தலையால்‌ தாங்கினான்‌. பிறகு, பல பதினாயிரக்கணக்கான வருஷங்கள்‌, உருத்திரன்‌ அப்படியே(அதை) விடவில்லை)என்றும்-

சதுர் முகன் கையில் சதுப் புயன் தாளில் சங்கரன் சடையினில் தங்கி
கதிர் முக மணி கொண்டு இழி புனல் கங்கைக் கண்டம் என்னும் கடி நகரே
-பெரியாழ்வார் திரு மொழி -4-7-3-

நலம் திகழ சடையான் முடிக் கொன்றை மலரும் நாரணன் பாதத் துழாயும் கலந்து
இழி புனல்
-பெரியாழ்வார் திரு மொழி -4-7-2-

யுக கோடி சஹஸ்ராணி விஷ்ணும் ஆராத்ய பத்ம பூ –புனஸ் த்ரை லோக்ய தாத்ருத்வம் ப்ராப்தவா நிதி சுச்ரும -என்றும்-ப்ரஹ்மாதயஸ் ஸூராஸ் சர்வே விஷ்ணும் ஆராத்ய தே புரா-ஸ்வம் ஸ்வம் பதம் அநு ப்ராப்தா கேசவஸ்ய ப்ரசாதத-என்றும் ஸ்ருதிகள் உண்டே –

மங்கை பாகன் சடையில் வைத்த கங்கை யார் பாதத்து நீர் -வனச மேவு முனிவனுக்கு மைந்தன் ஆனதில்லையோ
செங்கையால் இரந்தவன் கபாலம் ஆர் அகற்றினார் -செய்ய தாளின் மலரான் சிரததில் ஆனதில்லையோ –
வெம் கண் வேழ மூலம் என்ன வந்தது உங்கள் தேவனோ -வீறு வாணன் அமரில் அன்று விறல் அழிந்தது அல்லையோ –
அம் கண் ஞாலம் உண்ட போது வெள்ளி வெற்பு அகன்றதோ – ஆதலால் அரங்கன் அன்றி வேறு தெய்வம் இல்லையே
–-ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் -)

வேதம் அபகாரம் உறு நாளிலும் குரூர குரு பாதகம் விளை நாளினும்
தீதர அசுரர் செயிட ராதிபல வாப தங்க டீர்த்தருண் மகோத்தம பலன்
போதன் அரனார்க்கு அருள் புரிந்த பரதேவன் எவன் புகலில் யுனை யல்லாது எவன்
பாத மலர் ஆதரவின் பாய் நதி புனல் தன் தலை ஏந்து சிவன் ஏந்து சிவமே
–13–ஆபதம் -ஆபத்து
போதன் -பிரமன்-சிவம் -மங்களம் -நன்மை –வேதமானது மது கைடபர்களால் அபஹரிக்கப் பட்ட காலத்திலும் – தனது பிதாவும் குருவுமான பிரமனுடைய தலையைக் கொய்தலால் யுண்டான குரூரமான குரு பாதகம் சிவனுக்கு நேரிட்ட காலத்திலும்-திரிபுர அசுரர் முதலிய அசுரர்களால் யுண்டான பீடையாதி ஆபத்துக்கள் நேரிட்ட காலத்திலும்-அவைகளின் நின்றும் விடுவித்து தன்னைப் பிரார்த்தித்ததால் லோகத்தில் ஈஸ்வரன் என்று கொண்டாடும் படியான பதவியை பிரம ருத்ராதிகளுக்குக் கொடுத்து அவர்களுக்கு ரக்ஷகனான நீ அன்றி வேறு யார் உள்ளான்
எவனுடைய ஸ்ரீ பாத தீர்த்தத்தைத் தன் தலை மேல் கொண்டதனால் சிவன் மங்களத்தை அடைந்தான் –

ஸ்தோத்ரம் -14- அவதாரிகை –பிரமாண அனுகூலமான தர்க்க ரூப ந்யாயத்தாலே உக்தமான பரத்வத்தை நியமிக்கிறவர் -ஆளவந்தார் எம்பெருமானின் பரத்வத்தை சாஸ்த்ரத்துக்கு அனுகூலமான ந்யாயத்தின் மூலமாக நிரூபித்து, (இந்த ஐந்து பாசுரங்களின் தொடரை) முடிக்கிறார்.

கஸ்யோ தர ரே ஹர விரிஞ்சி முக ப்ரபஞ்ச
கோ ரஷதீ மமஜ நிஷ்ட ச கஸ்ய நாபே
க்ரந்த்வா நிகீர்ய புனருத் கீரதி தவ தன்ய
க கேன வைஷ பரவாநிதி சக்ய சங்க
—14-

யாருடைய வயிற்றில் ருத்ரன், ப்ரஹ்மா முதலியவர்களும் இவ்வுலகமும் அடங்கியது? யார் இந்த உலகத்தைக் காப்பவன்? யாருடைய திருநாபியிலிருந்து இவ்வுலகம் படைக்கப்பட்டது? உன்னைத் தவிர வேறு யாரால் இவ்வுலகம் அளக்கப்பட்டு, விழுங்கப்பட்டு மீண்டும் வெளியே உமிழப்பட்டது? இவ் வுலகத்தின் தலைவன் யார் என்பதில் ஸந்தேஹம் இருக்க முடியுமா?

ஹர விரிஞ்சி முக ப்ரபஞ்ச -சிவன் பிரமன் முதலான உலகம்
கஸ்ய உதரே–யாருடைய வயிற்றில் இருக்கிறது-உதரே–பிரளய காலத்தில் ப்ரஹ்மத்திடம் அனைத்தும் உள்ளனவே-நின்னுள்ளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும் நின்னுள்ளே அடங்குகின்ற -என்பதால்
திரு வயிற்றின் உள்ளே என்றது தன்னுள்ளே என்றபடி-நாராயணே பிரலீ யந்தே-லீயதே பரமாத்மனி
கோ ரஷதீ இமம் –இந்த பிரபஞ்சத்தை யார் காப்பாற்றுகிறார் –-காக்கும் இயல்பினன் கண்ணபிரான் –
(ப்ரபஞ்ச )அஜநிஷ்ட ச கஸ்ய நாபே-எவருடைய உந்தியில் நின்றும் இவ்வுலகம் உண்டாயிற்று-உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றினாய் நான்முகனை-திரு நாபிக் கமலத்திலே நாராயணன் நான்முகனைப் படைக்க -நான்முகனும் சங்கரனைப் படைக்க-திரு நாபிக் கமலம் முதல் கிழங்காம்
த்வத் அந்ய க –உம்மை விட வேறு யார்
(இமம ) க்ரந்த்வா -இவ்வுலகத்தை ஒரு கால் அளந்தும்-க்ரந்த்வா -உள்ளும் புறமும் உறைந்து வியாபித்து நியமிக்கும் படி –சர்வ அந்தர்யாமித்வத்தை சொல்லும் என்றுமாம்
நிகீர்ய –அவாந்தர பிரளயங்களிலே -ஒருகால் விழுங்கியும்
புனருத் கீரதி -மறுபடியும் வெளி நாடு காண உமிழ்கிறான்-பாரை உண்டு பார் உமிழ்ந்து பார் அளந்து பாரை ஆண்ட பேராளன்
கேன வைஷ -இவ்வுலகம் வேறு எவனால்
பரவாநிதி சக்ய சங்க—தலைவனை உடையது என்று சங்கிப்பதற்கும் கூடியது

கஸ்யோ தர ரே ஹர விரிஞ்சி முக ப்ரபஞ்ச
ப்ரஹ்ம ருத்ர முகமான சகல பதார்த்தங்களும் மஹா ப்ரளயத்திலே ஆருடைய பக்கலிலே லயித்து இருக்கிறது –ஸ தேவ சோமயே தமக்ர ஆஸீத் -ஏகமேவ அத்விதீயம் -(குழக்தாய்‌! (நாம ரூபங்களுடன்‌ காணப்படும்‌) இந்த உலகம்‌ ப்ரளயகாலத்தில்‌ (நாம ரூபங்களில்லாமையால்‌) ஒன்றாகவும்‌, (தன்னைப் போல்‌ வேறொன்றில்லாததால்‌) இரண்டற்றதாகவுமிருந்த “ஸத்‌” எனப்படும்‌ ப்‌,ரஹ்மமாகவே இருந்தது)என்கிறபடியே த்வி பரார்த்த காலம் நாம ரூபங்களை இழந்து-தம பர் தேவ -ஏகி பவதி –([“தமஸ்‌” எனப்படும்‌ மூல ப்ரக்ருதி பரமாத்மாவுடன்‌ ஒடுங்குகிறது.])என்கிறபடியே-சர்வேஸ்வரன் பக்கலிலே கிடக்கிற படி- ப்ரஹ்மாதி ஷூ ப்ரலீநேஷூ நஷ்டே லோகே சராசரே ஆபூத சம்ப்லவே ப்ராப்நே ப்ரலீநே ப்ரக்ருதௌ மஹான் ஏகஸ் திஷ்டதி விஸ்வாத்மா ஸ து நாராயண பிரபு -([பிரமன்‌ .’முதலியவர்களெல்லாம்‌ லயமடைந்து, சராசரமான “உலகெல்லாம்‌ நஸித்து, பஞ்ச பூதங்களும்‌ லயமடைந்து, மஹத் தத்வமானது மூல ப்ரக்ருதியிஸ்‌ லயமடை யும்போது ஸர்வாந்தர்யாமியான ஒருவனே இருக்கிறான்‌. அவனே ஸர்வ ஸ்வாமியான நாராயணன்‌)இத்யாதி சம்ஹாராதிகளிலே கர்மீ பவிக்கும் இடத்தில் ப்ரஹ்மாதிகளோடு பிபீலிகாதிகளோடு வாசி இல்லை -என்கை – –

கோ ரஷதீ –
ஹர விரிஞ்சி முகமான பிரபஞ்சத்தை ரஷிக்கிறார் ஆர் –-ந ஹி பாலான சாமர்த்தியம் ருதே சர்வேஸ்வரம் ஹரிம் ஸ்தி தௌ ஸ்திதம் மகாப்ராஜ்ஞ பவத் யன்யச்ய கஸ்யசித் –([மஹாபு,த்‌,திர மானே! ரக்ஷ்ணத்தில்‌ நிலைநிற்கும்‌ ஸர்வேஸ்‌வரனான ஹரியைத்‌ தவிர வேறு எவனுக்கும்‌ ரக்ஷிக்க ஸாமர்த்யம்‌ கிடையாதன்றோ)ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-21 —ந சம்பதாம் சமாஹாரே விபதாம் விநிவர்த்தனேஅஜ நிஷ்ட ச கஸ்ய நாபே – (ந ஸம்பதாம்‌ ஸமாஹாரே விபதாம்‌ விநிவர்த்தநே | ஸமர்த்தேரா த்‌ருஸ்யதே கஸ்சித்‌ தம்‌ விநா புருஷோத்தமம்‌ ॥| [செல்வங்களைச்‌ சேர்த்துக் கொடுப்பதிலும்‌, ஆபத்துக்களை அடியோடு போக்குவதிலும்‌ மைர்த்தனாயிருப்பவன்‌ அந்தப்‌ புருஷோத்தமனைத்‌ தவிர வேறொருவனும்‌ காணப்படுகிறதில்லை)மஹா பிரளயத்திலே அவி பக்தமாய்க் கிடக்கும் பிரபஞ்சம் யாருடைய குஷியினின்றும் உத்பன்னம் ஆயிற்று
மஹா பாராதே மார்க்கண்டேய சமாக்யானே-ஸ்ருஜதஸ் தஸ்ய தேவஸ்ய பத்மம் ஸூரிய சமப்ரதம்
நா பேர் வினிஸ் ஸ்ருதம் தஸ்ய தத் ரோத் பன்ன பிதா மஹா
ஸூ பர்ண வைகுண்ட சமவாதே-
யத் தத் பத்ம பூத் பூர்வம் தத்ர ப்ரஹ்மா வ்யாஜாயத ப்ரஹ்மனாஸ் சாபி சம்பூதஸ் சிவா இதய வதார்ய தாம் சிவாத் ஸ்கந்தாஸ் சம்பபூவா ஏதத் சிருஷ்டி சதுஷ்டயம்
-([அந்த தேவன்‌ ஸ்ருஷ்டிக்கும் போது, ஸூர்யனை ஒத்த ஒளியை உடைய ஒரு தாமரை அவனுடைய உந்தியிலிருந்து வெளிப்பட்டது; அதில்‌ நான்முகன்‌ உண்டானான்‌–பகவானுடைய உந்தியிலிருந்து) யாதொரு தாமரை முன்‌ உண்டாயிற்றோ அதில்‌ பிரமன்‌ பிறந்தான்‌. பிரமனிடமிருந்தே சிவன்‌ பிறந்தானென்று அறியத்தக்கது)இத்யாதி (பஹு முக ஸ்ருஷ்டி -நான்முகன் ஐந்து முக ருத்ரன் ஆறு முக ஸ்கந்தன் )-

க்ரந்த்வா
ப்ரஹ்மாதி ஸ்தாவராந்தகமான எல்லார் தலைகளிலும் திருவடியை வைத்தவன் ஆர்-திருவடியை தலையிலே வைத்தவனோ திருவடியின் கீழே துகை யுண்டவனோ ஈஸ்வரன் -என்கிறார் – சங்கைஸ் ஸூ ராணாம் –(ஸங்கைஸ்‌ ஸுராணாம்‌ திவி பூ,தலஸ்தைஸ்‌ ததா மநுஷ்யைர்‌ ககநே ச கே,சரை: | ஸ்துத: க்ரமாந்‌ ய: ப்ரககார ஸர்வதா மமாஸ்து மாங்கஃல்ய விவ்ருத்‌த,யே ஹரி: || [ஸ்வர்க்க,த்தில்‌ தேவ ஸமூஹங்களாலும்‌, அப்படியே பூ,மி ப்ர தேஸ்த்திலிருக்கும்‌ மனுஷ்யர்களாலும்‌, ஆகாயத்தில்‌ ஆகாம ஸஞ்சாரிகளாலும்‌ துதிக்கப்பட்டவனாய்‌, எந்த பகவான்‌ திருவடிகளை வைத்தருளினானோ, (திரிவிக்ரமாவ தாரம்‌ செய்த) அந்த ஹரி எனக்கு எப்போதும்‌ மங்களங்‌களின்‌ வ்ருத்‌தியின் பொருட்டு ஆகட்டும்)இத்யாஹி-நிகீர்ய புனருத் கீரதி – இப்படி சர்வ பிரகார ரஷகர் உன்னை ஒழிய மற்று ஆர்-தவ தன்ய க கேன வைஷ பரவாநிதி சக்ய சங்க –-இதரராலே பரதந்த்ரம் என்றும் சக்ய சங்கமாய் இருக்கிறதோ –சந்திக்தே கலு நியாய ப்ரவர்த்ததே –-([ஸந்தே,ஹத்திற்கு இடமுள்ள விஷயத்திலன்றோ ந்யாயம்‌ ப்ரவர்த்திக்கும்‌ (செல்லுபடி யாகும்‌)வேறே சிலரை சம்சயிக்கைக்கு சம்பாவனை இல்லை -என்கை –

(அஜன் அதிகன் அயன் அதிகன் உலகு அளந்த அரி அதிகன் -கம்பர் )

ஒருவன் ஜனகனாய் -ஒருவன் ஜன்யனாய்
ஒருவன் சேஷியாய் -ஒருவன் சேஷனாய்
ஒருவன் ஸ்ரீ ய பதியாய் ஒருவன் உமாபதியாய்
ஒருவன் புண்டரீ காஷனாய் ஒருவன் விரூ பாஷனாய்
ஒருவன் கருட வாஹனாய் ஒருவன் வ்ருஷப வாகனனாய்
ஒருவன் பாதகியாய் ஒருவன் சோதகனாய்
ஒருவன் புருஷோத்தமனாய் ஒருவன் புருஷனாய்
ஒருவன் சிரஸ் ஸ்தித பாத பங்கஜனாய்-ஒருவன் பாத பாம்ஸூ மாத்ரமாய்
ஒருவன் ஸூரி த்ருஸ்யனாய் -ஒருவன் வேதாள த்ருஸ்யனாய்–இப்படி தம பரகாசங்கள் போலே
ருத்ரனுக்கும் சர்வேஸ்வரனுக்கும் நெடு வாசி உண்டு ஆகையாலே ருத்ரனுக்கு அஸ்மத் யாதிகளோபதி ஷேத்ரஜ்ஞதையாலே ஈஸ்வரத்வ சங்கை இல்லை-பிரம்மாவுக்கும் சமான ந்யாயத்தாலே ஈஸ்வரத்வ சங்கை இல்லை – என்றது ஆயிற்று –

அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள் ஊர்தி
உரை நூல் மறை உறையும் கோயில் வரை நீர்
கருமம் அழிப்பு அளிப்பு கையது வேல் நேமி
உருவம் எரி கார் மேனி ஒன்று
-பொய்கை ஆழ்வார்-

(அன்று எல்லாரும் அறியாரோ எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர் -உதரே-திரு வயிற்றினுள்ளே -ஒவ்பசாரிக பிரயோகம்-அவன் இடமே லயிக்கும் -என்றவாறு –நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும் நின்னுளே அடங்குகின்ற -என்றபடி-தன்னுள்ளே என்றபடியே இங்கும் –நாராயணே ப்ரலி யந்தே–லீயதே பரமாத்மநி-ஸ்ருதிகள் போலே –இமாம் கோ ரஷதிகாக்கும் இயல்வினன் கண்ணபிரான் –உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றினாய் நான் முகனை
க்ராந்த்வா
பாரை உண்டு பார் உமிழ்ந்து பார் அளந்து பாரை யாண்ட பேராளன் –
சர்வாந்தர்யாமி
என்றுமாம் –உனக்கே பரத்வம் பொலிகின்ற படியால் வேறு ஒரு தெய்வம் இடமும் பரத்வ சங்கை உண்டாவதற்கும் இடம் இல்லையே -என்று சொல்லி நிகமிக்கிறார் )

ராஜஸ தாமச புராணங்களிலும் கூட ப்ரஹ்மாதிகள் ஸ்ருஷ்டிக்கப்படுபவர்கள் என்றும் கர்ம வஸ்யர்கள் என்றும் உள்ளனவே-அன்று எல்லாரும் யார்யாரோ இவர்கள் எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர்கள் என்று சர்வ ஆதார -சர்வ நியாமகன்-சர்வ சேஷி நீ ஒருவனே -உனக்கே பரத்வம் பொலிகிற படியால் வேறே சங்கைக்கும் இடம் இல்லை -என்று நிகமிக்கிறார்

யார் இறையோன் இறை யுப்பட யண்டம் யடங்கலும் தன் உதரத்து யுடையான்
யார் இத்தலைக்கண் நின்று ஆயினவாகும் அண்டம் அனைத்தும் அளித்து அருள்வான்
யார் அகிலத்தை அளந்து விழுங்கி யுமிழ்ந்தவன் இன்னும் அன்னியனே
யார் பரதந்த்ரம் உற்றுளது அகிலமும் நின் அதலாது இதிலையமுமே
–14-இறையோன் -சிவன்
இறை -பிரமன்-இதலை -கொப்பூழ் –உந்தி–எவனுடைய திரு வயிற்றிலே பிரமன் சிவன் ஆதியரான சகலமும் அடங்கிய இந்தப் பிரபஞ்சம் அடங்கி இருந்தது-இப் பிரபஞ்சமானது வேறு எவனுடைய நாபியில் இருந்து உண்டாயிற்று-இப் பிரபஞ்சத்தை நீ அல்லது எவன் ரக்ஷிக்கின்றான்-உன்னை அல்லால் வேறு எவன் இப்பிரபஞ்சத்தை த்ரிவிக்ரமனாக அளந்து பிரளய காலத்தில் விழுங்கி மறுபடியும் உமிழ்கின்றவன்-இப் பிரபஞ்சம் உன்னைத் தவிர வேறே எவனுடைய ஸ்வ அதீனத்தில் அடங்கி உள்ளது –இவைகளைக் குறித்து சந்தேகிக்கவும் கூடுமோ

ஸ்லோகம் -15- அவதாரிகை நாவேஷ ஸே – யில் –10-வேதாந்த பிரதமபாத உக்த காரணத்வம் சொல்லுகிறது –-ஸ்வா பாவிக-த்திலே –11-குண உபசம்ஹார பாதார்த்தம் சொல்லுகிறது-க ஸ்ரீஸ் ஸ்ரீய -வில் -12-த்ரிபாதத்தில் அர்த்தம் சொல்லுகிறது-வேத அபஹார த்தில் –13-உப ப்ரும்ஹணமான அர்த்தம் சொல்லுகிறது – கஸ்யோதர -வில் -14-பிரமாண அனுக்ருஹீத தர்க்க சித்த பரத்வம் சொல்லுகிறது –இனி -இதில் இப்படி-த்ருட பிரமாண சித்தமாய் இருக்க-ஆசூரீம் யோநிமா பன்னா -(ஆஸுரீம்‌ யோநிமாபந்நா மூடா ஐந்மநி ஐந்மநி। மாமப்ராப்யைவ கெளந்தேய ததோ யாந்த்யத,மாம்‌ க,திம்‌॥ [அர்ஜுனா ஆஸாுரஸ்வபாவமுள்ள ஜன்மத்தை அடைந்து, ஜன்மந் தோறும்‌ மூடரர்களாய்‌, என்னை அடையாமலே, அதிலும்‌ கீழான கதிக்குப்‌ போகிறார்கள்‌.])ஸ்ரீ கீதை -16-20-என்கிறபடியே ஆசூர பிரகிருதிகள் அவனை இழப்பதே என்று அவர்கள் இழவுக்கு இன்னா தாகிறார்-அதவா-யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான் -திருவாய் மொழி -1-3-4-என்று துஷ் பிரகிருதிகள் கண் படாது ஒழியப் பெறுவதே இவ் விலஷண விஷயம் -என்றுமாம் –

த்வாம் சீல ரூப சரிதை பரம ப்ரக்ருஷ்ட
சத்த் வேன சாத்த்விக தயா ப்ரபலைச்ச சாஸ்த்ரை
பரக்யா ததைவ பரமார்த்த விதாம் மதைச் ச
ந வ ஆஸூர ப்ரக்ருதய ப்ரபவந்தி போத்தும்
-15-

த்வாம் -இப்படிப்பட்ட உன்னை
சீல ரூப சரிதை –குண ரூப சரிதைகளாலும்
பரம ப்ரக்ருஷ்ட சத்த் வேன –மிகச் சிறந்த சத்வ குணத்தினாலும்
சாத்த்விகதயா ப்ரபலைச்ச சாஸ்த்ரை–சாத்வீகங்கள் என்பதினாலேயே பிரபலமான சாஸ்த்ரங்களினாலும்
பரக்யாத தைவ பரமார்த்த விதாம் மதைச்ச–பிரசித்தர்களாய் தெய்வத்தின் உண்மையை அறிந்த
மஹான்களினுடைய மதங்களினாலும்
நைவாஸூர ப்ரக்ருதய ப்ரபவந்தி போத்தும்-அஸூரத் தன்மை பொருந்திய நீசர்னல் அறிவதற்கு வல்லர் அல்லர்-

[ஐயோ!] எல்லோரையும் விட உயர்ந்தவனான உன்னை அஸுரர்கள் அறிந்து கொள்ள முடியாது.
உன்னை அறிந்து கொள்ளும் வகைகள்:-1-உன்னுடைய சீல (எளிமை) குணம், 2-வேதத்தில் கொண்டாடப்பட்ட ரூபங்கள் =3-மற்றும் திவ்யமான லீலைகள்-4-சுத்த ஸத்வத்தால் நிறைந்திருக்கும் உன்னுடைய பரம பதம்-5-தன்னிடம் இருக்கும் நன்மையினால் திடமாக இருக்கும் சாஸ்த்ரம்
6-உன்னைப் பற்றிய உண்மையை அறிந்தவர்களின் அபிப்ராயத்தின் மூலம்

த்வாம்--சர்வாதிகனாய் -இவ் வாத்மாவுக்கு வகுத்த உன்னை-சீல –மஹததோ மந்தை -நா வேஷ ஸே (10)-([ஸீலம்‌ ஹி நாம மஹதோ மந்தைஸ்‌ ஸஹ நீரந்த்‌ரேண ஸம்ஸ்லேஷ– ஸீலமென்பது, பெரியவன்‌ தாழ்ந்தவர்களோடு நெருங்கிச்‌ சேருதல்‌.])என்கிற ஸ்லோகத்திலே சொல்லுகிற ஸ்வ பாவம் அதாகிறது-சர்வாதிகனாய் இருந்து வைத்து –பஹூஸ்யாம் -என்கிறபடியே இவற்றின் இழவு பேறு தன்னதாய் அபிமானியும் தானேயாய் இருக்கைரூப –க புண்டரீக நயன -என்கிற வடிவு-ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே –தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணீ –-நீல தோ யத மதயஸ்தா –ந பூத சங்க சம்ஸ்தானோ தே ஹோ அஸ்ய பரமாத்மன ந தஸ்ய ப்ராக்ருதா மூர்த்தி மாம் ஸ மஜ்ஜாச்தி சம்பவா -(ந பூ,த ஸங்க,ஸம்ஸ்தாநோ தே,ஹோஃஸ்ய பரமாத்மந: | [இந்தப்‌ பரமாத்மாவினுடைய திருமேனி பஞ்ச பூ,தங்களு டைய சேர்க்கையால்‌ உண்டானதன்று–ந தஸ்ய ப்ராக்ருதா மூர்த்திர்‌ மாம்ஸ மஜ்ஜாஸ்த்தி, ஸம்ப,வா | [அவனுக்கு, மாம்ஸம்‌, மஜ்ஜை, எலும்பு இவைகளாலுண்‌டான ப்ரக்ருதி ஸம்பந்த முள்ள உடம்பு கிடையாது)இத்யாதி–சரிதை –க்ரந்த்வா நிகீர்யா புனருத் கிரதி-என்றும்-வேத அபஹார குரு பாதக என்றும் சொல்லுகிற அதி மானுஷ சேஷ்டிதங்களாலும்பரம ப்ரக்ருஷ்ட சத்த் வேன – பரம சத்த்வ சமாஸ்ரய க -என்று ஸூத்த சத்வ மயமான விபூதி யோகத்தாலும்-ஷயந்த மஸ்ய ரஜஸ பராகே- தம்ஸ பரஸ்தாத் ஸ்வ சத்தா தாரகம் சத்த்வம் மிஸ்ர சத்த்வாத் விலஷணம் -(தம்‌ த்வா க்‌,ருணாமி தவஸ மதவீயாந்‌ ச ஷயந்தமஸ்ய ரஜஸ: பராகே [இந்த ரஜோ குணத்தை யுடைய மூலப்ரக்ருதிக்கு மேலான பரமபத,த்தில்‌ எழுந்தருளியிருக்கும்‌ தனி வீரரான அப்‌ படிப்பட்ட உம்மை ஸக்தியற்ற அடியேன்‌ துதிக்கிறேன்‌–ஸ்வஸத்தா தாரகம்‌ ஸத்த்வம்‌ மிஸ்ர ஸத்த்வாத்‌ விலக்ஷணம்‌ [தன்னுடைய ஸத்தையினாலேயே (பிறருக்கு) தாரகமானதும்‌, ரஜஸ் தமோ குணங்களோடு சேர்ந்திருக்கும்‌ ஸத்வத்‌தைக் காட்டிலும்‌ வேறுப்பட்டதுமான ஸத்வம்‌)இத்யாதி-சாத்த்விக தயா ப்ரபலைச்ச சாஸ்த்ரை –வேதத்தில் சாத்விகருக்கு ஹித அனுசானம் பண்ணும் ஜ்ஞான பாகத்தாலும்-அக்னேஸ் சிவச்ய மகாத்மியம் -இத்யாரப்ய –சாதத் விகேஷ்வத கல்பேஷூ மாஹாத்ம்ய மதிகம் ஹரே -(௮க்‌நே: ஸிவஸ்ய மாஹாத்ம்யம்‌ தாமஸேஷ” ப்ரகீர்த்யதே। ராஜஸேஷ ச மாஹாத்ம்யமதிகம்‌ ப்‌,ரஹ்மணோ விது; |! ஸாத்த்விகேஷ்வத, கல்பேஷு மாஹாத்ம்யமதிகம்‌ ஹரே: | தேஷ்வேவ யோக,ஸம்ஷித்‌,த. க,மிஷ்யந்தி பராங்கதிம்‌ ॥[அக்னியினுடையவும்‌, சிவனுடையவும்‌ பெருமை தாமஸ கல்பங்களில்‌ சொல்லப்படுகிறது. ராஜஸ கல்பங்களில்‌ பிரமனுடைய பெருமை அதிகமாகச்‌ (சொல்லப்படுவதாக) அறிகிறார்கள்‌. ஸாத்விக கல்பங்களில்‌ ஹரியின்‌ பெருமை அதிகமாகச்‌ சொல்லப்படுகிறது, அவைகளிலேயே யோக; ஸித்‌,தி, அடைந்தவர்கள்‌ மேலான கதியை அடைகிறார்‌கள்‌, (கலபம்‌–பிரமனுடைய தினம்‌,)என்று ஸ்ரீ மாத்ச்ய புராணத்திலே சத்வ உத்ரிக்தனான ப்ரஹ்மாவின் வாக்கியம் ஆகையாலே பிரபலமான சாஸ்த்ரங்களாலும்

பரக்யாத தைவ பரமார்த்த விதாம் மதைச்ச –-பிரக்யாதமான தைவத்தின் உடைய யதார்த்த வித்துக்கள் உடைய மதங்களாலும்-சிருஷ்டி வாக்கியம் -நாராயண அனுவாகம் -ஸூபால உபநிஷத்-அந்தர்யாமி ப்ரஹ்மணாதிகளில் சர்வாதிகனாக பிரசித்தனாய் இருக்கை –ஏவம் விசிஷ்டம் -நைவாஸூர ப்ரக்ருதய ப்ரபவந்தி போத்தும் – த்வாம் ஆசூர பிரக்ருதய போத்தும் இவ ந பிரபவந்தி – ஆசூரீம் யோநிமா பன்னா -இத்யாதி–பிரக்யாததைவ பரமார்த்த வித்துக்கள் -என்கிறது-ஸ ஹோவாச வியாச பாராசர்ய -என்கிற பராசர பகவான் யாதவை கிஞ்ச மனுரவதத் தத் பேஷஜம் -என்கிற மனு-வேதாசார்யனான வேத வியாசன்’வாஜசனேய பிரசித்தனான யாஜ்ஞ வல்க்யன்-நமஸ் சௌநகாய -என்று வைதிக அக்ரேசர் சொல்லும் ஸ்ரீ சௌநகன்-ஏவம் பூதனான ஆபஸ்தம்பன் அயோ நிஜனாய் ஸ்ரீ இராமாயண ப்ரவர்த்தகனான வால்மீகிஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோ வை நர ஸூ நவ -இதி வசிஷ்ட புலஸ்திய ருக்மாபம் ஸ்வப்னதீ கம்யம் இதி மனு–ஷேத்ரஜ்ஞ்ஸ் யேச்வர ஜ்ஞாநாத் விஸூத்தி பரமா மதா -இதி யாஜ்ஞ் வல்க்யன்–பூ பிராணி நச் சர்வ ஏவ குஹாச யஸ்ய –இதி ஆபஸ்தம்ப-பவான் நாராயணோ தேவ -இதி வால்மீகி -என்கிற இவர்களை-ஏவம் விசிஷ்டம் -த்வாம் ஆசூர ப்ரக்ருத்ய க்ரூர கர்மக்களான பேர்கள் சர்வாதிகரான தேவரீரைபோத்தும் இவ ந பிரபவந்தி-அறிகைக்கு ஆன சமர்த்தர்கள் அன்று ‘-ஆசூரீம் யோநிமா பன்னா -இத்யாதி-

(வேடன் வேடுவிச்சி குரங்கு இடையன் இடைச்சி -ஒரு நீராக கலந்த சீலம் –-பரக் யாததை வ பரமார்த்த விதாம்–ப்ரக்யாத பதம் தைவத்துக்கு விசேஷணம் என்பர் பெரியவாச்சான் பிள்ளை
தைவ பரமார்த்த நாராயண அநுவாகம்-ஸூபால உபநிஷத் – அந்தர்யாமி ப்ராஹ்மணம் –
இவற்றில் பிரசித்தமான பரம புருஷன் உண்மை நிலையை கண்டு அறிந்த பரமார்த்த வித்துக்கள் -வியாசர் பராசரர் வால்மீகி மனு யாஜ்ஞ வல்க்யர் ஸுநகர் ஆபஸ் தம்பர் ஆழ்வார்கள் போன்றவர்களே என்றவாறு )

எம்பெருமானைப் பற்றி அறியும் வழிகளில் ஐந்து ஆறு இங்கே அருளிச் செய்கிறார்
வேடன் வேடுவிச்சி குரங்கு இடைச்சிக்கள் முதலானோர் ஒரு நீராகக் கலந்த ஸுவ்சீல்யம்
பஹுஸ்யாம்-என்று சங்கல்பித்த சீர்மை
திவ்ய மங்கள விக்ரஹ வை லக்ஷண்யம்
வேத அபஹாராதி நிரசனாதிகள் -க்ரந்தவா நிகிய புனர் உதக்ரதி போன்ற சேஷ்டிதங்கள் –
ஆலிலை துயின்ற மற்றும் பல அதி மானுஷ சேஷ்டிதங்கள்
அப்ராக்ருத சுத்த சத்வமயத்வம் –

பரக்யாத தைவ பரமார்த்த விதாம் மதைச்ச–இதில் பரக்யாத-என்ற விசேஷணம் தைவத்துக்கும்
தைவ பரமார்த்த வித்துக்களுக்கும் –
நாராயண அநு வாகம் -ஸூ பால உபநிஷத் -அந்தர்யாமி பிராமணம் இத்யாதிகளில் பிரசித்தமான தைவத்தை-வியாசர் பராசர வால்மீகி மனு ஆஞ்ஞவல்கர் ஸுவ்நகர் ஆபஸ்தம்பர் ஆழ்வார்கள் போன்றவர்களை பரமார்த்த வித்துக்கள் என்கிறார்பாக்யசாலிகளே நன்கு அறிந்து உஜ்ஜீவிக்கிறார்கள் என்றதாயிற்று–மூடர்கள் இழந்தே போகிறார்களே என்று பரிதவிக்கிறார்-விலக்ஷண பகவத் விஷயம் இவர்கள் கண்ணில் படாமல் போனதே என்று மகிழ்கிறார் என்னவுமாம்-இவர்களைப்போலே நாம் இழந்தே போகாமல் பகவத் பரத்வத்தை அனுபவிக்கப் பெற்றோமே என்ற உகப்பு உள்ளுறைப் பொருளாகும்

உத்தம சீல குணத்தகையால் உருவால் அதி மானுட சரிதைகளால்
சத்துவ சுத்த விபூதியினால் உயர் சாத்து விகத்தினை யுரை மறையால்
தத்துவ மெய்ப்பொருள் யுன்னை யுணர்த்திடு சான்றவர் கொள்ளும் மதங்களினால்
எத்திறன் எனும் உறார் சில தாமஸ இயல்புடையோர் யுனை அறியுமே
–15-உன் உத்தமமான ஸுசீல்ய குணத்தினாலும்-அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரகத்தினாலும்-அதி மானுஷ சரித்ரங்களினாலும்
அத்யந்தம் ஸ்ரேஷ்டமான சுத்த ஸத்வ யோகத்தினாலும் ஸாத்விக கல்பத்தில் சொல்லுகிறபடியால் ப்ரபலங்களான ஸாஸ்த்ரங்களினாலும் ப்ரஸித்தமான தேவதா பாரமார்த்யத்தை அறிந்த பரசாராராதி ஸித்தாந்தங்களினாலும்-உன்னை அறிவதற்கும் கூட ஆஸூர ப்ரப்ருதிகளான சிலருக்கு எவ்வளவேனும் சாத்தியப்படுகிறது இல்லை –

ஸ்லோகம் -16- அவதாரிகை –மஹாத்மா நஸ்து மாம் -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே உன்னைப் பெரும் சத் பிரகிருதிகள் காணப் பெறுவதே -என்றும் –யாரும் ஓர் நிலைமையன் என அறிவு எளிய எம்பெருமான் -என்று அது தன் பேறு என்றும் இருக்கிறார் –மஹாத்மா நஸ்து மாம் பார்த தைவீம் ப்ரக்ருதிமாஸ்ரிதா: பஜந்த்யநந்யமநஸோ ஜ்ஞாத்வா பூதாதிமவ்யயம்-ஸ்ரீ பகவத்கீதை-9-13-(அர்ஜுனா! தேவ ஸ்வபாவத்துடன்‌ கூடிய மஹாத்மாக்‌களோவெனில்‌, ஸகல பூ,தங்களுக்கும்‌ காரணனாகவும்‌, குறைவற்றவனாகவுமிருக்கும்‌ என்னை அறிந்து வேறெதிலும்‌ மனம்‌ செலுத்தாதவர்களாய்‌, (என்னை) உபாஸிக்கிறார்கள்)ஆனால் பார்த்தா,-தெய்விக இயல்பைக் கைக் கொண்ட,:-மகாத்மாக்கள்,-என்னை எல்லா உயிர்களுக்கும் முதல் என்றும், அழிவற்றவன் என்றும் அறிந்து,-வேறு எதிலும் நாட்டமில்லாத மனதுடன்,வழிபடுகிறார்கள்.-பார்த்தா, மகாத்மாக்கள் தெய்விக இயல்பைக் கைக் கொண்டு பூத முதலும் கேடற்றவனுமாகிய என்னை வேறு மனம் இன்றி வழிபடுகிறார்கள்-எம்பெருமானின் எளிமையினால் அவனை அடையும் உயர்ந்த ஆத்மாக்களைப் பற்றி எண்ணிய ஆளவந்தார், அவர்களுக்குக் கிடைத்த பேறு தனக்குக் கிடைத்ததாக நினைக்கிறார்.

உல்லங்கித த்ரிவித சீம சமாதி சாயி
சம்பாவனம் தவ பரிப்ரடிம ஸ்வ பாவம்
மாயா பலே ந பவதா அபி நிகூஹ்ய மாநம்
பஸ்யந்தி கேசித் அநிஸம் த்வத் அநன்ய பாவா
–16-

உன்னுடைய ஸ்வாமித்வத்தை நீ உன்னுடைய ஆச்சர்ய சக்தியினால் மறைத்துக் கொண்டாலும்,
உன்னையே நினைத்துக் கொண்டிருக்கும், மிகவும் உயர்ந்த ஆத்மாக்கள் கால, தேச, வஸ்துக்களுக்கு அப்பாற்பட்ட உன்னுடைய ஸ்வாமித்வத்தை உணர்ந்து, “எம்பெருமானுக்கு ஸமமாகவோ அவனைவிட உயர்ந்தவராகவோ எவரேனும் உண்டோ?” என்று ஸந்தேஹம் கொள்ளாமல் இருப்பார்கள்.

உல்லங்கித த்ரிவித சீம சம அதிசாயி சம்பாவனம் –த்ரிவித அபரிச்சேதனானோ –-ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயவனோ என்று எல்லாம் சங்கிப்பதற்கும் கூடாததுமான-விபுத்வாத் தேச பரிச்சேத ரஹித-நித்யத்வாத் கால பரிச்சேத ரஹித-சர்வ பிரகாரித்வேன ப்ருதக் ஸ்திதி யோக்ய அவஸ்த அந்தராபாவத் வஸ்து பரிச்சேத ரஹித – சீமை -எல்லை –-உல்லங்கித-விசேஷணம் சம அதிசாயி சம்பாவனம் -என்பதிலும் அந்வயிக்கும்-சமம் -துல்யம் அதிசாயி -மேம்பட்ட வஸ்து-தவ பரிப்ரடிம ஸ்வ பாவம்-உன்னுடைய பரத்வமாகிற ஸ்வ பாவத்தை-மாயா பலே ந பவதா அபி நிகூஹ்ய மாநம்–நீ மாயையினால் மறைத்த போதிலும்-மாயா பலம் -குண மயமான பிரகிருதியின் சாமர்த்தியம்-திவ்ய விக்ரஹத்தை இதர சஜாதீயம் ஆக்கும் ஆச்சர்ய சக்தி யோகத்தாலே -என்னுதல்-த்வத் அநன்ய பாவா–உன்னிடத்திலேயே மனம் பொருந்தி உள்ளவர்களான-பஸ்யந்தி கேசித் அநிஸம் –சில மஹான்கள் எப்போதும் சாஷாத்கரிக்கிறார்கள்-அவர்களின் திவ்ய சஷுஸ் களை பிரகிருதி மறைக்க மாட்டாதே
ஸ்ரீ மந் நாராயணனுடைய பரத்வம் சாஸ்த்ரங்களால் மட்டும் அறிந்து கொள்ளலாம் என்று இல்லாமல்
நேராக சாஷாத்கரிக்கும் மகான்களும் உண்டே

உல்லங்கித த்ரிவித சீம சமாதி சாயி சம்பாவனம் தவ பரிப்ரடிம ஸ்வ பாவம் –-த்ரிவித பரிச்சேத ரஹிதமாய்-சமாதிக சம்பாவனையும் கடந்துள்ள உன்னுடைய ப்ரபுத்வத்தை-விபுத்வாத் தேச பரிச்சேத ரஹித-நித்யத்வாத் கால பரிச்சேத ரஹித-சர்வ பிரகாரித்வேன ப்ருதக் ஸ்திதி யோக்ய அவஸ்த அந்தராபாவத் வஸ்து பரிச்சேத ரஹித –-சத்ருக்வச்த் வந்தாரா பாவத் துலயா ப்ரஸ்தாதி நா வா பரிச்சேத ரஹித இதி வா அத ஏவ சமாதி கத ரித்ர-

மாயா பலே ந
பகவத் ஸ்வரூபத்தை மறைக்கும் பிரகிருதி பலத்தாலே -என்னுதல்
திவ்ய விக்ரஹத்தை இதர சஜாதீயம் ஆக்கும் ஆச்சர்ய சக்தி யோகத்தாலே -என்னுதல்
பவதா அபி நிகூஹ்ய மாநம் –
ஆத்மானம் மானுஷம் மன்யே அஹம் வோ பாந்தவோ சாத -(அப்‌,ரவீத்‌ த்ரித,ஸஸ்ரேஷ்ட்டாந்‌ ராமோ தர்ம ப்‌ருதாம்‌ வர: | ஆத்மாநம்‌ மாநுஷம்‌ மந்யே ராமம்‌ தஸரதரத்மஜம்‌ ॥ [நான்‌ என்னை மனுஷ்யனாகவும்‌, தயரதன்‌ பிள்ளை ராமனாகவும்‌ நினைக்கிறேன்‌” என்று–த,ர்மவான்‌௧ளில்‌ மேலான ராமன்‌ தேவ ங்ரேஷட்டர்களைக்‌ குறித்துச்‌ சொன்னான்‌–நாஹம்‌ தே,வோ ந க,ந்த,ர்வோ ந யக்ஷோ நச தராநவ:।அஹம்‌ வோ பாந்த,வோ ஜாதோ நைதச்சிந்த்யமிதோ$ந்யதரா ॥[நான்‌ தே,வனல்லன்‌; க;ந்தருவனல்லன்‌; யக்ஷ்னல்லன்‌; அஸுரனுமல்லன்‌; நான்‌ உங்களுக்கு உறவினனாகப்‌ பிறந்‌ திருக்கிறேன்‌. என்‌ பிறப்பு இதைத் தவிர வேறுவிதமாக (உங்களால்‌) நினைக்கத் தக்கதல்)என்று-ஆள் பார்த்து உழி தரும் -நான்முகன் திருவந்தாதி -60 -உன்னாலே மறைக்கப் பட்டதே யாகிலும்-பஸ்யந்தி கேசித நிஸம் த்வத நன்ய பாவா-சத் பிரக்ருதிகளாய் இருப்பார் சில மகாத்மாக்கள் சர்வ காலமும் உள்ளபடி காணா நின்றார்கள் –த்வத நன்ய பாவா – க்ரியதாம் இதி மாம் வத -என்று உன்னை ஒழிய வேறு நினைவு-விஷயம் – இல்லாதவர்கள் -என்னுதல்-உன்னை ஒழிய உபாயாந்தரம் அறியாதவர்கள் என்னுதல்-உன்னை ஒழிய வேறு பரதவ புத்தி இல்லாதவர்கள் -என்னுதல்-(பஸ்யந்தி -சாஸ்திரம் மூலம் பார்க்கிறார்கள் முதலில் -யோகம் மூலம் சாஷாத்காரிக்கிறார்கள்சரபங்க மகரிஷி -ததிபாண்டாதிகள் விபவத்திலே நேராக கண்டார்கள் அன்றோ )

பஸ்யந்தி-பார்க்கிறார்கள் -முதலில் சாஸ்த்ரத்தால் பார்த்து அறிந்து யோக பலத்தால் சாஷாத்கரிக்கிறார்கள்-சரபங்க மகரிஷி -ததி பாண்டன் போல்வார் அறிந்து கொண்டார்களே அவதார தசையில்-அநிஸம் பஸ்யந்தி என்றும் அநிஸம் த்வத் அநன்ய பாவா -என்றும் கொள்ளலாம்-உன்னை ஒழிய வேறு நினைவு-விஷயம் – இல்லாதவர்கள் -என்னுதல்-அநிஸம்-எப்பொழுதும்-அநன்ய பாவா-உன்னை ஒழிய உபாயாந்தரம் அறியாதவர்கள் என்னுதல் உன்னை ஒழிய வேறு பரதவ புத்தி இல்லாதவர்கள் -என்னுதல்-

வீத மூன்று அளப்பு விஞ்சி ஒப்புயர் விலா துயர்
நாத மாயையோடு நீ யுன்னாகம் மறைக்கினும்
ஓத யுன்னை அன்றி இல்லன் என்னும் ஓர்தலார் சிலர்
வாதமின்றி என்றும் உள்ள வாறு காண வல்லரே
–16—காலத்தாலும் தேசத்தாலும் வஸ்துவினாலும் -ஆகிய மூன்று விதங்களினாலும் இவ்வளவு என்று நிச்சயிக்க முடியாததும் ஒப்பு உயர்வு இல்லாமல் உயர்ந்து இருக்கிற உன் பிரபுத் வத்தை உன் ஆச்சார்ய சக்தி யோகமாகிற மாயையைக் கொண்டு நீ மறைத்த போதிலும் உன்னைத் தவிர வேறே ஒரு சேஷியையும் அறியாத மன நிலையை யுடைய சில மகான்கள் எக் காலத்திலும் அந்தப் பிரபுத்வத்தை உள்ளபடி அறிகின்றார்கள் –

ஸ்லோகம் -17- அவதாரிகை –கீழ் பிரதிபாதித்த சர்வேஸ்வரத்துக்கு பிரதிசம்பந்தி தயா அபேஷிதமான
ஈசித வ்யஜாதத்தை ப்ரபஞ்சீ கரிக்கிரார் –இதில் ஆளவந்தார் பகவானாலே நிர்வஹிக்கப்படும், முன்பு விளக்கப்பட்ட அவனுடைய ஸர்வேச்வரத்வத்துக்கு உட்பட்ட பலவிதமான வஸ்துக்களை அருளிச் செய்கிறார்.–கீழே அருளிச் செய்த சர்வேஸ்வரத்தை த்ருடப்படுத்தி அருளுகிறார் –-அசாதாரண உபய விபூதி உக்தன் அன்றோ

யதண்ட மண்டாந்தர கோ சரஞ்ச யத்
தச உத்தராணி ஆவரணாநி யாநி ஸ
குணா பிரதானம் புருஷ பரம் பதம்
பராத்பரம் ப்ரஹ்ம ச தே விபூ தய
—17-

யத் அண்டம் அண்டாந்தர கோ சரஞ்ச யத்-எந்த ப்ரஹ்மாண்டமோ அண்டங்களுக்குள் இருக்கக் கூடியது எதுவோ
தச உத்தராணி ஆவரணாநி யாநி -ஒன்றுக்கு ஓன்று பத்து மடங்கு மேற்பட்டுச் சொல்லுகின்ற
அண்டங்களின் ஆவரணங்களும் எவையோ-அண்டம் -ஏக வசனமாக இருந்தாலும் சமுதாயத்தைச் சொல்லும்
ஸ குணா –சத்வம் ரஜஸ் தமஸ் என்னும் குணங்களும்
பிரதானம் புருஷ பரம் பதம்-ப்ரக்ருதியும் ஜீவாத்ம வர்க்கமும் ஸ்ரீ வைகுண்டமும்
பராத்பரம் –அசேதனங்களில் காட்டில் சிறந்த சேதன வர்க்கங்களுள் சிறந்த முக்தாத்ம நித்யாத்ம வர்க்கமும்
ப்ரஹ்ம ச –திவ்ய மங்கள விக்ரஹமும்
தே விபூ தய—உமக்கு சேஷப்பட்டவை

1) ப்ரஹ்மாவின் ஆளுகைக்குட்பட்ட, 14 லோகங்கள் கொண்ட ப்ரஹ்மாண்டம்,-2) அந்த அண்டத்துக்குள் இருக்கும் வஸ்துக்கள்,-3) ஒவ்வொரு அண்டத்தை மூடிக் கொண்டிருக்கும், முந்தைய ஆவரணத்தைப் போலே பத்து மடங்கு அளவுள்ள, ஸப்த ஆவரணங்கள்,-4) ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய குணங்கள் 5) மூல ப்ரக்ருதி 6) இவ் வுலகில் இருக்கும் பத்தாத்மாக்கள் (கட்டுப்பட்ட ஆத்மாக்கள்),
7) ஸ்ரீவைகுண்டம் 8) (தேவதைகளை விட உயர்ந்தவர்களான) முக்தாத்மாக்களை விட உயர்ந்தவர்களான நித்ய ஸூரிகள்-9) உன்னுடைய திய்வ மங்கள விக்ரஹங்கள் ஆகிய எல்லாம் உனக்கு சரீரங்களே.

யதண்டம் –
சதுர்தச புவநாத் மகமான அண்டம் ஒன்றாக அண்டா நாந்து சஹஸ்ராணாம் –(அண்டாநாந்து ஸஹஸ்ராணாம்‌ ஸஹஸ்ராண்யயுதாநி ச। ஈத்‌ருஸாநாம்‌ ததர தத்ர கோடிகோடியதாநி ச ॥[*அந்த ப்ரக்ருதியில்‌ இம்மாதிரியான பல கோடி நூறாயிரம்‌ அண்டங்கள்‌ இருக்கின்‌றன என்பது ஸாரார்த்தம்)இத்யாதிகளில் படியே அண்ட சமூஹம் யாதொன்று–அண்டாந்தர கோ சரஞ்ச யத் –-அண்டாதிப த்ரிலோக ஈஸ்வர திக்பால நரபதி ப்ரமுகமாய் – ஸ்தாவர ஜங்கமாத் மகமான அண்டாந்தர் வர்த்தி சமூஹம் யாதொன்று-தச உத்தராணி ஆவரணாநி யாநி ஸ –மேன்மேலும் தச குணிதமான வாரிவஹ்நயா நிலாகாசங்களும்-பூதாதியும் -மகானும் -கார்ய உந்முகமான பிரகிருதி அம்சமான ஆவரணங்கள் யாவை சில–குணா – அது சேதனரை பந்திப்பது குணா த்வாரா வாகையாலே -பந்த காரணமான சத்வாதிகள் –பிரதானம் – அவிக்ருத பிரகிருதி பிரதேசம்-குணா பிரதானம் -என்று குணா குணிகளைப் பிரித்து பேசுகிறது குணங்களை ஜகத் காரணமாகச் சொன்ன சாங்க்ய மதம் அவைதிகம் -என்கைக்காக –புருஷ –பத்தாத்மா சமஷ்டிகார்ய காரண உபய அவஸ்த பிரக்ருத்யாஸ்ரய ஷேத்ரஜ்ஞர் ஷேத்ரஜ்ஞக ஆத்மா புருஷ -என்னக் கடவது இறே–அண்டாந்தர கோசரம் என்று வ்யஷ்டியைச் சொல்லுகையாலே-இது சமஷ்டி விஷயம்

பரம பதம் –-கார்ய காரண உபய அவஸ்த ப்ரக்ருத் யாஸரயாத் ஷேத்திர ஜ்ஞாத் ஆனந்தாத் பரமம் பதம் –
ஹிரண்மயே பரே லோகே இத்ராப்ய ஜ்யோதிஷாம் ஜ்யோதிஸ் தத் யதாத்மா விதோ விது – பரமே வ்யோமன்- ஸோ அஸ்நுதே – த்ரிபாதஸ் ஸ்யாம்ருதம் திவி – யத்ர பூர்வே சாத்யா ஸந்தி தேவா –
அத யர்க்கா நல தீப்தம் தத் ஸ்தானம் விஷ்ணோர் மஹாத்மன-ஸ்வ யைவ ப்ரப யா ராஜன் துஷ் ப்ரேஷம் தேவதாநவை தத்ர கத்வா புநர் நேமம் லோகமா யாந்தி பாரத
-இத்யாதி பி -(ஹிரண்மயே பரே லோகே விரஜம்‌ ப்‌,ரஹ்ம நிஷ்களம்‌ | தச்சு ப்ரம்‌ ஜ்யோதிஷாம்‌ ஜ்யோதிஸ் தத், யதாத்ம விதோவிது: ॥ [பொன் மயமான மேலான உலகத்தில்‌, ரஜோ குணமற்றதும்‌ அவயவங்களில்லாததுமான ப்ரஹ்மமிருக்கிறது. அது பரிஸூத்‌த,மானது. சோதிகளுக்கெல்லாம்‌ சோதியா யிருக்கும்‌ அதைப்‌ பரமாத்மஜ்ஞானிகள்‌ ௮றிகிறார்கள்)(யோ அ௮ஸ்யாத்‌ யக்ஷ: பரமே வ்யோமந்‌ |ஸோ அங்க, வேத, யதி, வா ந வேத, [எவனொருவன்‌ இவ் வுலகத்திற்கு அதிபதியாய்‌, பரமபத,த்‌ தில்‌ (எழுந்தருளி யிருக்கிறானோ), அவனே (தன்‌ பெருமையை) அறிவானோ, அறியானோ)(தே ஹ நாகம்‌ மஹிமாநஸ்‌ ஸ சந்தே யத்ர பூர்வே ஸாத்‌,யாஸ்‌ ஸந்தி தேவா: [யாதொரு பரம பத,த்தில்‌ ஸாத்‌,யர்கள்‌ எனப்படும்‌ தேவர்‌கள்‌ இருக்கிறார்களோ, அந்தப்‌ பரமபத,த்தை அவர்கள்‌ மஹிமை யுடையவர்களாய்‌ அடைகிறார்கள்‌)(அத்யர்க்காநல$,ப்தம்‌ தத்‌ ஸ்தாநம்‌ விஷ்ணோர்‌ மஹாத்மந: | ஸ்வயைவ ப்ரப,யா ராஜந்‌! துஷ்ப்ரேக்ஷம்‌ தே,வதாநவை: |… தத்ர கத்வா புநர் நேமம்‌ லோகமாயாந்தி பாரத॥ [மஹாத்மாவான விஷ்ணுவினுடைய அந்த ஸ்தானம்‌ ஸுர்யனுடையவும்‌, அக்னியுடையவும்‌ ஒளியை விஞ்சியது. அரசனே! அது தன்னுடைய ஒளியினாலேயே தேவர்களாலும்‌, அஸாரர்களாலும்‌ காண அரியது. பரதவம்மத்தில்‌ உதித்தவனே ! அங்கு போய்‌ மறுபடியும்‌ இவ்வுலகுக்குத திரும்பி வருவதில்லை)

க்தா த்ரிபாத் விபூதி –பராத்பரம் –-ப்ரஹ்மாதிகளில் பரர் -முக்தர்-அவர்களில் பரர் நித்ய சித்தர்–ப்ரஹ்ம ச – ஸூ த்த சத்வமாய்-பரஞ்ஜ்யோதிர் மயமாய்-சௌந்தர்ய சௌகுமார்யாதி கல்யாண குணோ பேதமாய் ப்ருஹத் சப்த வாச்யமான திவ்ய விக்ரஹம்-ச பரச சர்வ சக்தி நாம் ப்ரஹ்மணஸ் சமநந்தரம் மூர்த்தம் ப்ரஹ்ம –-சாந்த அனந்த மஹா விபூதி பரமம் யத் ப்ரஹ்ம ரூபம் ஹரேர் மூர்த்தம் ப்ரஹ்ம ததோ அபி தத் ப்ரிய தரம் ரூபம் யத த்யத் புதம் -இத்யாதி –(ஸ பரஸ்‌ ஸர்வ ஸக்தீநாம்‌ ப்‌,ரஹ்மணஸ்‌ ஸமநந்தரம்‌ | மூர்த்தம்‌ ப்‌,ரஹ்ம மஹா பாக, ஸர்வ ப்‌,ரஹ்ம மயோ ஹரி: ॥|[பகவான்‌ (இவனுடைய உருவமான ஸம்ஸாரி ஜீவன்‌, முக்தன்‌, திவ்யமங்கள விக்ரஹம்‌ எனப்படும்‌) எல்லா ஸக்திகளைக் காட்டிலும்‌ மேலானவன்‌. “ப்ரஹ்மம்‌” என்று சொல்லப்படும்‌ ப,க,வானுடைய திருமேனி விஷ்ணுவுக்கு அந்தரங்கமானது. மஹா பாக்‌,யவானே! ப்ரஹ்மமென்று சொல்லப்படும்‌ எல்லாவற்றிற்கும்‌ அந்தர்யாமியாயிருப்பவன்‌ ஹரி.])(சாந்தாநந்தமஹாவிபூ,தி பரமம்‌ யத்‌ ப்‌,ரஹ்ம ரூபம்‌ ஹரே: மூர்த்தம்‌ ப்‌,ரஹ்ம ததோ 5பி தத்ப்ரியதரம்‌ ரூபம்‌ யத,த்யத்ஃபு,தம்‌ | யாந்யந்யாநி யதா ஸூக,ம்‌ விஹரதோ ரூபாணி ஸர்வாணி தாந்யாஹு: ஸ்வைரநுரூபரூபவிப,வைர்‌ காடோபகூடடாநி தே॥ [தோஷங்களற்றதும்‌, அளவற்றதும்‌, பெரிதான உபய விபூ,திகளை உடையதும்‌, மேலானதும்‌, ப்ரஹ்ம ஸப்‌,த,த்தி னால்‌ சொல்லப்படுவதுமான ஹரியினுடைய ஸ்வரூபம்‌ யாதொன்று உண்டோ, அந்த ஸ்வரூபத்தையும் விட அவனுக்கு மிகவும்‌ பிரியமானதும்‌, மிகவும்‌ அற்புதமான தும்‌, “உருவமுள்ள ப்‌,ரஹ்மம்‌’என்று சொல்லப்படுவதுமான, எம்‌ பெருமானுடைய திஃவ்ய மங்கள விக்ரஹம்‌ யாதொன்று உண்டோ, திருவுள்ளமுகந்தபடி விளையாடுகிற அந்த ஸர்வேஸ்வரனுடைய மற்ற திருவுருவங்கள்‌ யாவையோ, அவை எல்லாவற்றையும்‌ உமக்கே அஸாதாரணமானவையும்‌, தகுந்தவையுமான ஸ்வரூப ரூப விஸேஷங்களாலே நன்றாக அணைக்கப் பட்டிருப்பவையாகச்‌ சொல்லுகிறாள்)

(ப்ரஹ்ம சப்தம் -திவ்ய மங்கள விக்ரஹத்தையே குறிக்கும் –-தே விபூதய-இவை எல்லாம் உன்னுடைய விபூதிகள்-உனக்கு ஆதேயங்கள் -நியாம்யங்கள் -சேஷங்கள் என்றவாறு )-தே விபூ தய – விபூதி சரீர சப்தங்கள் பர்யாயம் ஆகையாலே-சரீர தயா சேஷங்கள்-விபூதயோ ஹரே ரேதா ஜகத சிருஷ்டி ஹேதவ யாநி மூர்த்தான்ய மூர்த்தானி யான்ய த்ரான்யத்ர வா க்வசித் ஸந்தி வை வஸ்து ஜாதானி தாநி சர்வாணி தத் வபு தத் சர்வம் வை ஹரேஸ்தநு -இத்யாதிபி (ப்‌. ரஹ்மா தக்ஷாதவ: காலஸ்‌ ததை,வாகி,லஜந்தலவ: | விபூ,தயோ ஹரேரேதா ஜக,தஸ்‌ ஸ்ருஷ்டி ஹேதவ: ॥ [பிரமனும்‌, தக்ஷன்‌ முதலிய ப்ரஜாபதிகளும்‌, காலமும்‌, அம் மாதிரியே எல்லா ஜந்துக்களும்‌ உலகை ஸ்ருஷ்டிப்ப தற்குக்‌ காரணமாயிருக்கும்‌ ஹரியின்‌ ஸரீரங்கள்)(யத்ஞ்சித்‌ ஸ்ருஜ்யதே யேந ஸத்த்வ ஜாதேந வை த்ஸிஜ। தஸ்ய ஸ்ருஜ்யஸ்ய ஸம்பூ,தெள தத்‌ ஸர்வம்‌ வை ஹரேஸ் தநு: ॥ [ப்ராஹ்மண | ஒரு ப்ராணியால்‌ யாதொன்று ஸ்ருஷ்டிக்கப்‌ படுகிறதோ, ஸ்ருஷ்டிக்கப்படும்‌ அதை ஸ்ருஷ்டிக்கும்‌ விஷயத்தில்‌ (ஸ்ருஷ்டி செய்யும்‌) அவை யெல்லாம்‌ ஹரியினுடைய ஸரீரமாகின்‌ றன)– விபூதி சரீர சப்தயோ பர்யா யத்வம் சாஸ்த்ரேஷூ பிரசித்தம்-

ஒவ் ஒரு அண்டத்திலும் அண்டாதிபதி -சர்வ வித ஜந்துக்கள் போக்ய போக உபகரண பதார்த்தங்கள்
எல்லை அற்று இருக்குமே -இவற்றையே அண்டாந்தர கோசாரம் எனப்படுகிறது-அனைத்துக்கும் ஆதாரகன் நியாமகன் சேஷி இவனே-பிரகிருதி த்ரிவித குணங்களும் அவன் இட்ட வழக்கு
பிரதானம் -விகாரம் அற்று இருக்கும் மூலப் பிரக்ருதி–குணங்களைத் தனிப்பட பிரித்து அருளிச் செய்தது ஸாம்யாவஸ்தமான குண த்ரயமே பிரகிருதி–குணங்களை ஜகத் காரணமாகச் சொன்ன என்னும் சாங்க்ய மத நிரசனத்துக்காக–புருஷ -பிரக்ருதியை வியாபித்து இருக்கும் ஷேத்ரஞ்ஞ சமுதாயம்-கோட்டைக்குள் நெருப்பு போலவும் எள்ளுக்குள் எண்ணெய் போலவும் பிரதானத்தில் உறைந்து இருக்குமே-அண்டாந்தர கோசரம் என்று வ்யஷ்டியைச் சொல்லுகையாலே-இது சமஷ்டி விஷயம்ப்ரஹ்ம –ஸ்வரூபத்தை குறிக்கும் யாகிலும் இங்கே அனைத்தும் உன் விபூதிகள் என்று முடிப்பதால் இங்கு திவ்ய மங்கள விக்ரஹமே–இவை அனைத்தும் உனக்கு ஆதேயங்கள் -நியாம்யங்கள் -சேஷங்கள்-என்றபடி –

ஆதி யண்டம் யவ்வண்டம் அடங்கிய அகில வத்தும் ஐ இரண்டள வுயர்
மீது சூழும் ஏழு ஆவரணங்களும் விரி குணங்களும் வேற்றுமை அற்றதும்
வேதகத்திய சேதன வர்க்கமும் மேலதான் வைகுண்டமும் நித்தரும்
சோதி யாகு நின் சுந்தர ரூபமும் சொந்தமாம் உன் விபூதிகளாகுமே
–16-வேதகம் -வேறு படுத்தல்–ஆதி காலத்தில் உண்டான அண்டங்களும்-அவ்வண்டங்களில் அடங்கிய அகில வஸ்துக்களும்-பதின் மடங்கு அதிகமான அண்ட ஆவரணங்களும்-ஸத்வாதி குணங்களும்-விகாரப்படாத ப்ரக்ருதியும்-சேதனர்களும்
உயர்ந்த பரமபதமும்-பத்த முக்தர்களிலும் மேலான நித்யர்களும்-ஸூத்த ஸத்வ தேஜஸ்ஸுடன் விளங்கும் உன் திவ்ய மங்கள விக்கிரகமும் ஆகிய இவை எல்லாம் உனது சேஷ வஸ்துக்கள்

ஸ்லோகம் -18-அவதாரிகை –கீழ் சரண்யன் உடைய உத்கர்ஷம் சொல்லி-இதில் உபய விபூதி நாதனை நம்மால் கிட்டலாமோ -என்று கூசாதபடி ஆஸ்ரிதருக்கு இழியும் துறையான கல்யாண குணங்களிலே பன்னிரண்டு குணங்களை அருளிச் செய்கிறார்–அதவா-கீழ் சர்வேஸ்வரத்வம் சொல்லிற்றே-இனி சொல்ல பிராப்தமான சமஸ்த கல்யாண குணாத் மகதையை அருளிச் செய்கிறார் என்றுமாம் –ஆளவந்தார் முன்பு ஶரண்யனான (புகல்) எம்பெருமானின் பெருமைகளைப் பேசினார்.
இதில் “இப்படிப்பட்ட உபய விபூதி நாதனை நாம் எப்படி அணுகுவது?” என்ற தயக்கத்தைப் போக்க,
அவனுடைய அடியார்கள் ஈடுபடும் பன்னிரண்டு குணங்களை அருளிச் செய்கிறார்.-முன்பு பகவானின் ஸர்வேஶ்வரத்வத்தை அருளிய ஆளவந்தார், இப்பொழுது அவனுடைய பேசத் தகுந்த குணங்களை அருளிச் செய்கிறார்.

வஸீ வதாந்யோ குணவான் ருஜூஸ் ஸூசிர்
ம்ருதுர் தயாளூர் மது ரஸ் ஸ்திரஸ் ஸம
க்ருதீ க்ருதஜ்ஞஸ் த்வமஸி ஸ்வ பாவதஸ்
சமஸ்த கல்யாண குணாம்ருதோ ததி
—18–

நீ இயற்கையாகவே அமுதக் கடல் போன்ற இனிமையான குணங்களை உடையவன். உன் குணங்களாவன
1) உன் அடியார்களுக்கு வசப்பட்டவன்
2) உன்னுடைய அடியார்களுக்கு உன்னையே தரும் குணத்தை உடையவன்
3) எல்லோரிடமும் கலந்து பழகும் ஸௌஶீல்யத்தை உடையவன்
4) உள்ளம் உரை செயல்களில் நேர்மை உடையவன்
5) நிர்ஹேதுகமாக க்ருபை பண்ணும் பரிசுத்தியை உடையவன்
6) அடியார்களின் பிரிவைத் தாங்க முடியாதவன்
7) அடியார்களின் துயரைத் தாங்க முடியாத கருணை உள்ளம் கொண்டவன்
8) இனிமையானவன்
9) அடியார்களைக் காப்பதில் உறுதியாக இருப்பவன்
10) உன்னிடம் சரணடைந்தவர்களிடத்தில் ஸமமாக இருப்பவன்
11) உன் அடியார்களின் செயல்களை உன் செயல்களாக நினைத்துச் செய்பவன்
12) அடியார்களின் சிறு உதவிகளுக்கும் நன்றியுடன் இருப்பவன்.

ஸ்வ பாவதஸ்–இயற்கையாகவே –இது அனைத்துக் குணங்களிலும் அந்வயம்

1-வஸீ –
கீழ் சொன்ன ஈசிதவ்யதையைத் தன் வசத்திலே நடத்தி-வர்த்திக்கும் –என்கை -இத்தாலும் ஸ்வ தந்த்ரன் பக்கலிலே குணம் கிடந்தது பெரு விலையனாம் – என்னும் இடம் சொல்லுகிறது –-சர்வச்ய வஸீ சர்வச்யேசான – ஜகத் வாசே வர்த்ததேதம்–(ஸர்வஸ்ய வஸீ ஸர்வஸ்யேசாநஸ்‌ ஸர்வஸ்யாது, பதி: ‘ [எல்லாவற்றையும்‌ தன்‌ வத்தில்‌ நடத்துபவன்‌; எல்லாருக்கும்‌ ஈஸ்வரன்‌; எல்லாருக்கும்‌ அதி,பதி.])(ஸஸுராஸுரக,ந்த,ர்வம்‌ ஸயக்ஷோரக,ராக்ஷ்ஸம்‌ |ஜகத்‌ வஸே வர்த்ததேத,ம்‌ க்ருஷ்ணஸ்ய ஸசராசரம்‌ || [தேவர்‌, அஸுரர்‌, கூந்த ர்வர்களோடு கூடியதும்‌, யக்ஷர்‌, நாகர்‌, ராக்ஷ்ஸர்களுடன்‌ சேர்ந்ததும்‌, அசையக் கூடியதும்‌, அசையக் கூடாததும்‌ சேர்ந்ததுமான இந்த உலகம்‌ கிருஷ்ணனுடைய வஸத்திலிருக்கிறது)அதவா-தன்னுடைய திருவடிகளில் ஆனுகூல்யம் உடையார் வசத்தில் தாழ நிற்கும் -என்றுமாம் –-இமௌ ஸ்மமுநி சார்தூல கிங்கரௌசமுபஸ்திதௌ ஆஜ்ஞாபயா யதேஷ்டம் வை ஸாசனம் கரவாவ கிம் – ஆஜ்ஞாபய மஹாபாஹோ ப்ரூஹி யத்தே விவஷிதம் – ஸ்வ யமேவ ஹரிர் வவரே விபர பாதாவநே ஜனம் அனந்யாதீ நத்வம் -இத்யாதி –(இமெள ஸ்ம முநிஸார்தூ,ல! கிங்கரெள ஸமுபஸ்தி,தெள।| ஆஜ்ஞாபய யதேஷ்டம்‌ வை ஸமாஸநம்‌ கரவாவ இம்‌ | [முநி ஸ்ரேஷ்ட,ரே ! நாங்களிருவரும்‌ ( தேவாீருக்குக்‌ ) கைங்கர்யம்‌ செய்பவர்களாக அருகில்‌ இருக்கிறோம்‌, (தேவரீருடைய) இஷ்டப்படி கட்டளை யிட வேண்டும்‌; (தேவரீருடைய) எந்தக் கட்டளையை நாங்கள்‌ செய்யவேண்டும்‌)(ஆஜ்ஞாபய மஹா பாஹோ! ப்ரூஹி யத்தே விவக்ஷிதம்‌ | கரிஷ்யாமி ஹி தத்‌ ஸர்வம்‌ யத்த்வம்‌ வக்ஷ்யஸி பாரத ॥|நீண்ட கைகளை உடையவனே | நீ சொல்ல விரும்பியதைச்‌ சொல்‌; கட்டளையிடு. தர்ம புத்தீரனே! நீ சொல்லுவது எதுவோ அது முழுவதும்‌ நான்‌ செய்கிறேன்‌)(ஸ்வயமேவ ஹரிர்‌ வவரே விபர பாதாவநே ஜநம்‌[ஹரியானவர்‌, ப்‌ராஹ்மணர்களுடைய திருவடியை விளக்குவதைத்‌ தாமாகவே ஸ்வீகரித்தார்‌)(அநந்யாத,நத்வம்‌ தவ கில ஜகுர்‌ வைதிக: பராத,நம்‌ த்வாம்‌ து ப்ரணத பரதந்த்ரம்‌ மநுமஹே।| உபாலம்போ அயம்‌ போ ஸ்ரயதி ப,த ஸார்வஜ்ஞ்யமபி தே யதோ தோஷம்‌ ப,க்தேஷ்விஹ வரத, நைவாகலயஸி॥ [வரதனே! வேத,வாக்கியங்கள்‌ உனக்குப்‌ பிறர்க்கு வஸப்‌ பட்டிராமையாகிய ஸ்வாதந்த்ரியத்தைப்‌ பேசியுள்ளன; நாங்களோ வெனில்‌ அடியவர்களுக்கு ஆட்பட்டவனான.. உன்னைப்‌ பரதந்த்ரனாகவே நினைக்கிறோம்‌. இம் மாதிரியான நிந்தை, உன்னுடைய ஸர்வஜ்ஞத்வத்தையும்‌ பற்றுகிறது; ஆஸ்சர்யம்‌ ! ஏனெனில்‌; இவ் வுலகிலுள்ள பக்தர்களிடத்‌ தில்‌ நீ குற்றத்தைச்‌ சிறிதும்‌ பார்க்கிறா யில்லை யன்றோ)-ஆஸ்ரித பர தந்த்ரனாய் இருக்கும் இருப்பு பிறர்க்காக என்றால் நியாமகர் இல்லாமையாலே ஸ்வ தந்திர கார்யமாய் இருக்கும் –

பிரபுவாய் -அல்லது ஆஸ்ரித பரதந்த்ரனாய் -தூது போனமை கட்டுண்ணப் பண்ணிக் கொண்டமை –
ஸ்வ இச்சையால் வந்த பாரதந்தர்யம் -கர்மம் அடியாக இல்லவே -இத்தைக் காட்டவே ஸ்வ பாவதஸ்-விசேஷணம் –

2-வதாந்ய-
இப்படி ஆஸ்ரித பர தந்த்ரனாய் செய்யும் கார்யம் ஏது என்னில்-தன்னையும் தன் உடைமையையும் அவர்களுக்கு கொடுக்கும் ஔதார்யத்தைச் சொல்லுகிறது-ப்ரியவாக்தா ந ஸீ லச்சவ தான்ய பரி கீர்த்தித – ய ஆத்மாதா பலதா-ச சர்வா நர்த்தி நோ த்ருஷ்ட்வா ச மேத்ய ப்ரதி நந்த்ய ச-உதாராஸ் சர்வ ஏவித–ந தே ரூபம்–(ப்ரியவாக்‌, தராநமீலஸ்ச வதாந்ய: பரிரேத்தித: [இனிமையாகப்‌ பேசுபவனும்‌, கொடையாளியும்‌ “வதாந்யன்‌’ என்று சொல்லப்படுகிறான்‌-(ய ஆத்மதா பலதா: [எந்தப்‌ பரமபுருஷன்‌, தன்னையும்‌ கொடுத்துத்‌ தன்னை அனுபவிக்கத்தகுந்த மநோ பலத்தையும்‌ கொடுக்கிறான்‌)(அத; மத்‌ யமகக்ஷ்யாயாம்‌ ஸமாக,ச்சத்‌ ஸுஹ்ருஜ் ஜநை: | ஸ ஸர்வாநர்த்திநோ த்‌,ருஷ்ட்வா ஸமேத்ய ப்ரதிநந்த்‌,ய ச ॥ [அந்த ஸ்ரீராமன்‌ யாசிப்பவர்களைக்‌ கண்டு, (அவர்களை) எதிர் கொண்டு ஆநந்தப் படுத்திப்‌ பிறகு நடுக்கட்டில்‌ நண்பர்களுடன்‌ சேர்ந்தார்‌)(உதாராஸ்‌ ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம்‌[இவர்கள்‌ எல்லாரும்‌ உதாரமானவர்களே; ஜ்ஞாநியோ எனக்கே ஆத்மா (தாரகன்‌) என்று என்‌ ஸித்‌,தாந்தம்‌)

3-குணவான் –
தன்னையும் தன் உடைமையையும் அவர்களுக்குக் கொடுக்கும் இடத்தில் அவர்கள் தன்னையும் தங்கள் சிறுமையையும் பார்த்து பிற்காலியாமே அவர்கள் அளவாகத் தன்னை அமைக்கும் சீலம்-மஹதோ மந்தை – குண பிரகரணம் ஆகையாலே குணவான் -என்கிறது குண சாமான்யத்தைச் சொல்லுகிறது அன்று – குண விசேஷத்தை சொல்லுகிறதுகுண்யத இதி குண -என்கிற படியே அனுசந்தாவுக்கு
எப்போதும் ஒக்க விட ஒண்ணாமை யாலே சீலத்தை குண சப்தத்தாலே சொல்லுகிறது-சால சப்தம் வ்ருஷ சாமான்ய வாசியாய் இருக்கிறது வ்ருஷ விசேஷத்தைக் காட்டுகிறாப் போலே –அஜாயமான கோன்வஸ்மின் சாம்ப்ரதம் லோகே குணவான் -என்று தொடங்கி-இஷ்வாகு வம்ச பிரபவ -பபூவ குணவத்தர ச ஹி தேவைருதீர்ண்ஸ்ய -என்கிறபடியே-சீல கார்யம் அவதாரம் -என்கை-(கோந்வஸ்மிந்‌ ஸாம்ப்ரதம்‌ லோகே குணவாந்‌ கஸ்ச வீர்யவாந்‌।… நாரத;– ..இக்ஷ்வாகு வம்ஸ ப்ரப,வோ ராமோ நாம குணாகர: |[வால்மிகி:– “இப்போது இவ்வுலகில்‌ எவன்‌ குணவானா யிருக்கிறான்‌? எவன்‌ வீர்யவானாயிருக்கிறான்‌?…… ”நாரதரர்‌: இக்ஷ்வாகு வம்ஸத்தில்‌ பிறந்தவனான ராமனென்பவன்‌ குணங்களுக்கெல்லாம்‌ இருப்பிடமா யிருப்பவன்)(பபூவ குணவத்தர:, ஸ ஹி தேவைருதீர்ணஸ்ய ராவணஸ்ம வதார்த்தி,பி; | அர்த்திதோ மாநுஷே லோகே ஜஜ்ஜே விஷ்ணுஸ்‌ ஸநாதந: ||[கொழுத்தவனான ராவணனுடைய வதத்தை விரும்பும்‌ தேவர்களால்‌ பிரார்த்திக்கப்பட்டவனும்‌, பழமையானவனுமான விஷ்ணு மனுஷ்ய லோகத்தில்‌ பிறந்தான்‌; (அப்படி அவதாரம்‌ செய்த) அந்த: ராம பிரானே (தன்‌ பராவஸ்தை,யைக் காட்டிலும்‌) குணத்தில்‌ சிறந்தவனானான்‌)

4-ருஜூஸ்
இப்படித் தன்னை அமைத்துக் கொண்டு பொருந்தும் போது அவர்கள் நாநா ருசிகள் ஆகையாலே
மேட்டிலே விரகாலே நீர் எற்றுமா போலே அவர்கள் செவ்வைக் கேடே செவ்வை யாம்படி செவ்வியனாகை-ஆர்ஜவம் ஆவது -ஆஸ்ரித விஷயத்தில் மநோ வாக் காயங்களால் ஏக ரூபனாகை-
யஜ்ஜாதீயோ யாத்ருசோ யத் ஸ்வ பாவ –தாஜ்ஜாதீய தாத்ருச தத் ஸ்வ பாவ – ததவை ததாஸ்து கதமோ அயமஹோ ஸ்வ பாவோ யாவான் யதாவித குணோ பஜதே பவந்தம் தாவாம்ஸ் ததாவித குணஸ் த்தீன வ்ருத்தி சம்ச்லிஷ்யசி த்வமிஹ தேன சமான தர்மா –(யஜ்ஜாதயோ யாத்‌,ருமோ யத் ஸ்வvவ: பாதச்சாயாம்‌ ஸம்ஸ்ரீதோ யோ$பி கோஅபி । தஜ்ஜாதீயஸ்‌ தாத்‌,ருஸஸ்‌ தத்ஸ்வபாவ: ஸ்லிஷ்யத் யேநம்‌ ஸுந்த,ரோ வத்ஸலத்வாத்-[தன்‌ திருவடி நிழலில்‌ ஒதுங்கினவன்‌ எவனாயிருந்தாலும்‌, அவன்‌ எந்த ஜாதியை உடையவனாயிருக்கிறானோ, எந்த ஆசாரத்தை உடையவனோ, எந்த குணங்களை உடையவனோ, அந்த ஜாதியையும்‌, அந்த ஆசாரத்தையும்‌, அந்த குணங்களையும்‌ உடையவனாய்‌, அவனிடம்‌ வாத்ஸல்யத்தினால்‌ அவனுடன்‌ ஸுந்தரராஜனாகிய பகவான்‌ சேருகிறார்‌.](தத்‌,வை ததாஸ்து கதமோ5யமஹோ ஸ்வபாவோ யாவாந்‌ யதாவித கு,ணோ பஜதே பவந்தம்‌। தாவாம்ஸ்தத;வித,குணஸ்‌ தததீந வ்ருத்தி: ஸம்ஸ்லிஷ்யஹி த்வமிஹ தேந ஸமாந த,ர்மா।॥ [முன்‌ சொன்னது அப்படியே இருக்கட்டும்‌, இந்த ஸ்வ பாவம்‌ எவ்வளவு ஆஸ்சர்யமானது | (அதாவது:–) தேவரிரை எவனொருவன்‌ எம்மாதிரியான ஸ்வரூபத்தையும்‌, குணத்தையும்‌ உடையவனாய்‌ உம்மிடம்‌ பத்தி செய்கிறானோ, அவனோடு அம் மாதிரியான ஸ்‌வரூபத்தையும்‌,குணங்‌களையும்‌ உடையவனாயும்‌, அவனுக்கு வஸப்பட்ட எல்லா வ்யாபாரங்களையும்‌ உடையவனாகவும்‌, அவனோடொத்த ஆசாரத்தை உடையவனாகவும்‌ இங்கேயே நீ சேர்கிறாய்)

ருஜூஸ் –த்ரி கரணங்களினாலும் கபடம் அற்றுச் செவ்வியனாய்-ருஜு புத்திதயா சர்வம் ஆக்யாதும் உபசக்ரமே -வால்மீகி -பெருமாள் சூர்பணை இடம்

5-ஸூசிர்
இப்படி உபகரிக்கும் இடத்தில் ஒரு பிரயோஜனத்தைக் கணிசியாதே-வெறும் புறத்தில் உபகரிக்கும் பாவ ஸூத்தியைச் சொல்கிறது –யோ அர்த்தே ஸூசி ஸ ஹி ஸூ சி –-(ஸர்வேஷாமேவ மெளசாநாம்‌ அர்த்த மெளசம்‌ பரம்‌ ஸ்ம்ருதம்‌ | யோரர்த்தே, ஸூசிஸ்‌ ஸ ஹி ஸூதிர்‌ ந ம்ருத்‌வாரி ஸூசி: ஸூசி: || [எல்லா ஸூத்திகளுக்குள்ளும்‌, பொருள்‌ விஷயத்தில்‌ ஸூத்‌,தனாயிருக்கையே மேலானதாக எண்ணப்படுகிறது; பொருள்‌ விஷயத்தில்‌ எவன்‌ ஸூத்‌,த,னாயிருக்கிறானோ, அவனே ஸாத்‌,தன்‌. மண்ணாலும்‌, தண்ணீராலும்‌ மட்டும்‌ ஸூத்தி செய்து கொள்ளுபவன்‌ ஸூத்‌தனல்லன்‌)நித்ய சம்சாரியை ஸ்வ சம்பந்தமே ஹேதுவாக நித்ய சூரிகளோடு ஒரு கோவை யாக்க வல்ல பாவனத்வத்தைச் சொல்லுகிறது -என்றுமாம் –பாவனா சர்வ லோகாநாம் த்வமேவ ரகு நந்தன –பக்தி ரஷ்டவிதா ஹ்யேஷா யஸ்மின் ம்லேச்சே அபி வர்த்ததே ஸ விப்ரேந்த்ரோ முநிஸ் ஸ்ரீ மான் ஸ யதிச் ஸ ஸ பண்டித மயா பூஜ்ய சதா சா சௌ மதபக்த ஸ்வ ப ஸோ அபி தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் ஸ ஸ பூஜ்யோ யதா ஹ்யஹம்-(பாவநஸ்‌ ஸர்வலோகாநாம்‌ த்வமேவ ரகு,நந்த;ந [ரகுநந்தனா! நீயே எல்லா உலகங்களையும்‌ பரிஸூத்‌,த,ப்‌ படுத்துபவன்‌)(ப.க்திரஷ்டவிதரா ஹ்யேஷா யஸ்மிந்‌ ம்லேச்சே,5பி வர்த்ததே | ஸ விப்ரேந்த்‌,ரோ முநி: ஸ்ரீமாந்‌ ஸ யதிஸ்‌ ஸ ச பண்டி,த:।| மயா பூஜ்யஸ்‌ ஸதா சாஸெள மத்‌,ப,க்த: ஸம்வபசோ$பி ய:। தஸ்மை தேயம்‌ ததோ க்‌,ராஹ்யம்‌ ஸ ச பூஜ்யோ யதா ஹ்யஹம்‌ ॥ [இம் மாதிரியான எட்டு விதமான பக்தியானது எந்த மிலேச்சனிடமும்‌ இருக்கிறதோ, அவனே (பகவானை) மனனம்‌ செய்யும்‌ பிராஹ்மண ஸ்ரேஷ்டடன்‌; அவனே கைங்கர்ய லக்ஷ்மியை உடையவன்‌; அவனே ஸந்யாஸி; அவனே பண்டிதன்‌; சண்டராளனா யிருந்த போதிலும்‌ எவனொருவன்‌ என்‌ ப,க்தனோ அவன்‌ என்னுடன்‌ எப்போதும்‌ பூஜிக்கத் தக்கவன்‌. அவனுக்கு (ஜ்ஞானத்தைக்‌) கொடுக்கலாம்‌; அவனிடமிருந்து (ஜ்ஞானத்தைக்‌) கொள்ளலாம்‌; என்னைப் போல்‌ அவனும்‌ பூஜிக்கத்தக்கவன்)

6-ம்ருதுர் –
சம்ஸ்லேஷத்தில் இப்படி இருக்கிறவன் இவர்கள் விஸ்லேஷத்தில் ஆற்ற மாட்டான் -என்கிறது
ஆத்ம குண பிரகரணம் ஆகையாலே மானச தௌர்பலத்தைச் சொல்லுகிறது –-நைவ தம்சான் ந மசகான் –-ந ஜீவேயம் ஷணம் அபி-அவகாஹ் யார்ணவம் ஸ்வப்ஸ்யே-(நைவ தம்ஸாந்‌ ந மஸகாந்‌ ந கீடாந்‌ ந ஸரீஸ்ருபாந்‌ | ராகவோஃபநயேத்‌ காத்ராத்‌ த்வத்‌, க,தே நாந்தராத்மநா ॥ [உன்னிடம்‌ மனம்‌ லயித்திருப்பதால்‌, ராக,வன்‌ ஈக்களையும்‌, கொசுக்களையும்‌, புழுக்களையும்‌, பாம்புகளையுங் கூட உடம்பிலிருந்து தள்ளுவதில்லை) (சிரம்‌ ஜீவதி வைதே,ஹீ யதி, மாஸம்‌ த,ரிஷ்யதி। ந ஜீவேயம்‌ க்ஷணமபி விநா தாமஸி தேக்ஷணாம்‌ | [ஸீதை ஒரு மாதம்‌ தரித்திருப்பாளாகில்‌, வெகுகாலம்‌ * பிழைத்திருந்தவளாகிறாள்‌. கறுத்த கண்ணை உடைய அவளை விட்டு ஒரு க்ஷண நேரமும்‌ நான்‌ பிழைத்திருக்க மாட்டேன்‌.]) (அவக்‌ராஹ்யார்ணவம்‌ ஸ்வப்ஸ்யே ஸெளமித்ரே ! ப,வதா விநா | கத,ஞ்சித்‌ ப்ரஜ்வலந்‌ காம: …’ ஸ மாம்‌ ஸுப்தம்‌ ஜலே த,ஹேத்‌॥ [லக்ஷ்மணா! (உன்னைப்‌ பார்ப்பதால்‌ ஸீதையின்‌ நினைவு வருகிறபடியால்‌) உன்னை விட்டுவிட்டு ஸமுத்ரத்தில்‌ இறங்கித்‌ தூங்கப் போகிறேன்‌. மிகவும்‌ ஜ்வலிக்கும்‌ அந்தக்‌ காமாக்னியானது ஜலத்தில்‌ தூங்கும்‌ என்னைக்‌ கஷ்டப்‌ பட்டே தஹிக்கும்)ம்ருதுர் -ஸூ குமாரனாய் –திவ்ய மங்கள விக்ரஹ குணமும் ஆத்ம குணமும் – மஹாத்மாக்களை க்ஷணம் நேர விஸ்லேஷம் அஸஹிஷ்ணு -பொறாதவன் இங்கு ஆத்ம குணத்தை குறிப்பதே உசிதம்

7-தயாளூர் –
ஆஸ்ரித விஷய துக்கத்தில் அசஹனாய் இருக்கை-தயை பர துக்க அசஹத்வம்-வ்யசநேஷூ மனுஷ்யாணாம்– (வ்யசநேஷூ மனுஷ்யாணாம்– ப்‌ருஸம்‌ பவதி துக்கத: | உத்ஸவேஷு-ச ஸர்வேஷு பிதேவ பரிதுஷ்யதி | [(ராமன்‌) மனுஷ்யர்களுடைய துக்கங்களில்‌, (அவர்களைக்‌ காட்டிலும) அதி,கமாக துன்புறுகிறான்‌. (அவர்களுடைய) எல்லா உத்ஸவங்களிலும தந்‌தையைப் போல்‌ ஆனந்தப்‌ படுகிறான்‌)இதி சர்வ சாதாரணம் ஆனால் ஆஸ்ரித விஷயத்தில் கிருபை-அவாங் மனஸ் அகோசரம் இறே-ப்ரியோ ஹி ஜ்ஞானி நோ அத்யர்த்தம் -இதி ஸ்திரீ ப்ரணஷ்டேதி காருண்யாத்-
ஸ தம் நிபதிதம் –
இத்யாதி-(தேஷாம்‌ ஜ்ஞாநீ நித்ய யுக்த: ஏக ப,க்திர்‌ விஸிஷ்யதே | ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோ$த்யர்த்த,மஹம்‌ ஸ ச மம ப்ரிய:।| [(என்னுடன்‌) எப்போதும்‌ சேர்ந்திருப்பவனும்‌, என்னிடம்‌ மட்டும்‌ அன்பு. செய்பவனுமான ஜ்ஞானி அந்த நால்வருள்‌ மேலானவன்‌, நான்‌ ஜ்ஞானிக்கு மிகவும்‌ பிரியனன்றோ. (அப்படியே) அவனும்‌ எனக்குப்‌ பிரியமானவன்‌.) (இயம்‌ ஸா யத்க்ருதே ராமஸ் சதுர்ப்பி,: பரிதப்யதே। காருண்யே நாந்ரு ஸம்ஸ்யேந ஸோகேந மத,நேந ச॥ ஸ்த்ரீ ப்ரணஷ்டேதி காருண்யா தாஸ்ரிதேத்‌. யாந்ரும்ஸ்யத: | பத்நீ நஷ்டேதி ஸோகேந ப்ரியேதி மத,நேந ச–[எவளுக்காக ஸ்ரீராமபிரான்‌ கருணை, இரக்கம்‌, சோகம்‌, காமம்‌ என்னும்‌ நான்கினாலும்‌ வருந்துகிறாரோ, அந்த ஸீதை இவளே. (ஸ்ரீராமபிரான்‌) *ஒரு பெண் பிள்ளை அபஹரிக்கப்‌ பட்டாளே’ என்னும்‌ கருணையினாலும்‌, * நம்மைச்‌ சேர்ந்தவள்‌ (அபஹரிக்கப்பட்டாளே) என்னும்‌ இரக்கத்தினாலும்‌, நம்முடைய மனைவி நஷ்டமாயினளே” என்னும்‌ மோகத்‌தினாலும்‌, ‘ நமக்கு இனியவள்‌ (அபஹரிக்கப்பட்டனளே): எனனும்‌ காமத்தினாலும்‌ (வருந்துகிறார்) (ஸ பித்ரா ச பரித்யக்தஸ்‌ ஸுரைஸ்ச ஸ மஹர்ஷிபி;: | த்ரீந்‌ லோகாந்‌ ஸம்பரிக்ரம்ய தமேவ ஸரணம்‌ ௧,த: || ஸ தம்‌ நிபதிதம்‌ பூமவ் ஸரண்ய; ஸரணாக,தம்‌ | வதார்ஹமபி காகுத்ஸ்த;: க்ருபயா பர்யபாலயத்‌ ॥ [அந்தக்‌ காகாஸுரன்‌, தந்தையினாலும்‌, ( தாயினாலும்‌, ) மஹர்ஷிகளுடன்‌ கூடிய தேவர்களாலும்‌ கைவிடப்பட்ட வனாய்‌, மூன்று உலகங்களையும்‌ சுற்றித் திரிந்து அந்த ராமனையே ஸரணமடைந்தான்‌. ஸரணமடைந்தவனும்‌, பூமியில்‌ விழுந்தவனுமான அவனை, கொல்லத் தகுந்தவனா யிருந்த போதிலும்‌, ஸரணமடையத் தகுந்தவனான ஸ்ரீ ராம பிரான்‌ (தன்‌) அருளாலே காப்பாற்றினார்)

தயாளூர் –இரக்கமுடையவனாய்-பிறர் துக்கம் கண்டு தானும் துக்கப்படுபவன்-வ்யசநேஷூ மனுஷ்யாணாம்-அவிகார ஸ்வபாவனாவனுக்கு பிறர் துக்கம் போக்க நினைக்கும் கருணையே என்று ஸ்ரீ தேசிகர் திரு உள்ளம்

8-மதுர-
நிர்தயனானாலும் விட ஒண்ணாத சாரச்யத்தைச் சொல்லுகிறது –-நாநா வித ருசிகளான ஜந்துக்களுக்கு அவ்வவர் நிலைகளிலே இனியனாய் இருக்கை –-ரசோ வை ஸ-ஏஷ ஹேவா நந்த யாதி
ரசம் ஹ்யேவாயம் லப்த்வா நந்தி பவதி -இத்யாதய-

மது ரஸ் –ச ரசனாய் -மதுரமான வாக் சாமர்த்தியம் -என்றும்-எனக்கு தேனே பாலே கன்னலே அமுதே திருமாலிருஞ்சோலைக் கோனே -என்னும்படி திவ்ய மங்கள விக்ரஹம் என்றுமாம் –ரஸோ வை ச –சர்வ ரஸா –

9-ஸ்திர-
இப்படி சர்வ ரசிகனாய் இருக்கிறவன் பக்கலிலே அல்ப அனுகூல்யம் பண்ணினார்க்கு-தனக்கு அந்தரங்கரானார் விரோதிகள் ஆனாலும் அவர்களால் அப்ரகம்யனாய் இருக்கை –-ந த்யஜேயம் கதஞ்சன – அபயம் சர்வ பூதேப்ய-என்னடியார் அது செய்யார்-ஸ்திர –-ஆஸ்ரிதர் உடைய பராதி கூல்யங்களாலும் அவிக்ருதனாய் இருக்கும் என்றுமாம் —(மித்ர பாவேந ஸம்ப்ராப்தம்‌ ந த்யஜேயம்‌ கதஞ்சந | தோஷோ யத்‌,யபி தஸ்ய ஸ்யாத்‌ ஸதா மேதத கர்ஹிதம்‌ ॥ [நண்பனுடைய பாவத்தோடு நெருங்கின இவ் விபீ,ஷணனை ஒரு பொழுதும்‌ கைவிட மாட்டேன்‌. அவனிடம்‌ தோஷமிருந்தாலும்‌ இருக்கட்டுமே. நல்லோர்களுக்கு இவனை ஸ்வீகரிப்‌பது நிந்திக்கத் தக்கதல்ல)

ஸ்திரஸ் –ஒருவராலும் அசைக்க முடியாதவனாய் –ஆஸ்ரிதர் அபராதங்களைக் கண்டு திரு உள்ளம் சீறிக் கை விடாதவன்-தன் அடியார் திறத்தகத்து தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல் என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்றே செய்தார் என்னுமவன்

10-ஸம--ஆஸ்ரயிக்கும் இடத்தில் ஜ்ஞான வ்ருத்தாதிகளில் குறைந்து இருந்தார்களே யாகிலும்
ஆஸ்ரயணீயத்வே சமனாகை –-ஸமோஹம் சர்வ பூதேஷு-ஈடும் எடுப்புமில் ஈசன் –திருவாய் மொழி -1-6-3–கொள்கை கொளாமை இலாதான் -திருவாய் மொழி -1-6-5-(ஸமோஹம்‌ ஸர்வபூ,தேஷு ந மே த்‌,வேஷ்யோ $ஸ்தி கஸ்சந–என்னை ஆஸ்ரயிக்கும்‌ விஷயத்தில்‌) நான்‌ எல்லா பூ,தங்‌ களுக்கும்‌ ஸமமாயிருப்பவன்‌; எனக்கு ஒருவனும்‌ வெறுக்‌கத் தக்கவனல்லன்‌)

ஸம-அனைவருடன் வாசி இன்றி ஒத்துப் பரிமாறுபவனாய் -பரம பவித்ரன் என்றவாறு-ஜாதி குண வ்ருத்தங்களைப் பாராதவன் –சமோஹம் சர்வ பூதானாம் -விஷம ஸ்ருஷ்ட்டி கர்மங்கள் அடியாகவே –

11-க்ருதீ –
கர்த்தும் உத் யுக்தவான்-இப்படி ஆஸ்ரயித்தால்-அவருடைய கர்த்தவ்ய அம்சம் எல்லாம்
தனக்கே அனுஷ்டேயம் என்று இருக்கும்-ஆதி கர்மணி க்த-ந ஸ்மரத்யப காராணாம் ஸ்தமப்யாத் மவத்தயா-கதஞ்சிதுப காரேண க்ருதே நை கேன துஷ்யதி-உச்யமா நோ அபி பருஷம் நோத்தரம் ப்ரதி பத்யதே-ஆஸ்ரிதர் தன்னை லபித்தால் இழந்தவர்கள் பெற்றாராய் இருக்குமது அன்றிக்கே –தன் பேறாய் இருக்கை –-அபி ஷிச்ய ஸ தவ சார்த்த ப்ரகல்பதே-(அபி,ஷிச்ய ச் லங்காயாம்‌ ராக்ஷஸேந்த்‌,ரம்‌ விபீ,ஷணம்‌ | க்ருதக்ருத்யஸ் தத,” ராமோ விஜ்வர: ப்ரமுமோத, ஹ॥[லங்கையில்‌ ராக்ஷஸ ஸ்ரேஷ்டனான விபீஷணனை அபி,ஷேகம்‌ செய்து தன்‌ காரியத்தைச்‌ செய்து முடித்தவனான ராமன்‌, கவலை நீங்கப் பெற்று ஸந்தோஷித்தான்)நன்றி புரியுபவனாய் –தனக்கு செய்ய வேண்டிய க்ருத்யம் ஒன்றும் இல்லாதவனாய்-ஆஸ்ரித ரக்ஷணமே விரதமாகக் கொண்டவன்-(குருஷ்வ மாமநுசரம்‌ வைதர்ம்யம்‌ நேஹ வித்‌,யதே । க்ருதார்த்தே 5ஹம்‌ ப,விஷ்யாமி தவ சார்த்த; ப்ரகல்பதே॥ [என்னைக்‌ கைங்கர்ய பரனாக வைத்துக் கொள்ளும்‌. இதில்‌ தவறொன்றுமில்லை. ( இதனால்‌ ) நானும்‌ தன்‌யனாவேன்‌. உம்முடைய காரியமும்‌ நடைபெறும்‌.])

12-க்ருதஜ்ஞஸ் –
இப்படித் தான் அவர்களுக்கு எல்லா உபகாரங்களைப் பண்ணினாலும் அவர்கள் அடியில் பண்ணின அல்ப அனுகூல்யத்தைக் குவாலாக -பெரியதாக -நினைத்து இருக்கும் –-அவர்கள் பண்ணும் அபகாரமும் அறியான் –அவிஜ்ஞாதா சஹஸ்ராம் ஸூ – (அடியார்களின்‌ தேரஷங்களைக்‌ காண்பதில்‌) ஞானமற்றவனாயிருப்பவன்‌ ; (அடியார்களின்‌ நன்மைகளைக்‌ காண்பதில்‌) அளவற்ற ஞானமுடையவனாயிருப்பவன்‌)தான் பண்ணின உபகாரமும் அறியான் –-ருணம் ப்ரவ்ருத்த மிவ மே ஹ்ருதயானநாப ஸ்ர்ப்பத்தி -(கேரவிந்தே,தி யதா க்ரந்த;த்‌. க்ருஷ்ணா மாம்‌ தூர வாஸிநம்‌ | ருணம்‌ ப்ரவ்ருத்‌,த,மிவ மே.ஹ்ருதயாந்நாபஸர்ப்பது || [திரெளபதி,யானவள்‌ வெகு தூரத்திலிரு்த என்னைக்‌ குறித்து ‘கோவிந்தா ! என்று கூக்குரலிட்டது ( வட்டியினால்‌ ) வ்ருத்‌தி யடைந்த கடனைப் போல்‌ என்னுடைய ஹ்ருத்‌யத்திலிருக்து அகலுகிறதில்லை)என்று இருக்குமவன் –சிரஸா யாசத்-(தம்‌ து மே ப்‌,ராதரம்‌ த்‌,ரஷ்டும்‌ பரதம்‌ த்வரதே மந: | மாம்‌ நிவர்த்தயிதும்‌ யோ5ஸெள சித்ரகூடமுபாக;த: ॥ ஸிரஸா யாசதஸ்தஸ்ய வசநம்‌ ந க்ருதம்‌ மயா॥[என்னைத்‌ திருப்பி யழைத்துச் செல்ல எவனொருவன்‌ சித்ர கூடத்திற்கு வந்தானோ, அந்த என்னுடைய தம்பியாகிய பரதனைப்‌ பார்க்க என் மனம்‌ விரைகிறது. தலையாலே யாசித்த அவனுடைய வார்த்தை என்னால்‌ செய்யப்பட வில்லை)

ஆஸ்ரிதர் செய்யும் ஸ்வல்ப அனுகூல்யத்தையும் பெருக்க மதிப்பவனாய்-என் ஊரைச் சொன்னாய் –இத்யாதிகளால் மடி மாங்காய் இட்டு ஸூஹ்ருதங்களை ஓன்று பத்தாக்கிக் கொண்டு போருபவன்
ருணம் ப்ரவ்ருத்த மிவ மே ஹ்ருதயானநாப ஸ்ர்ப்பத்தி
-என்று இருக்குமவன் –சிரஸா யாசத்
அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி

த்வமஸி – ஆஸ்ரயத்தில் நலங்கள் குணம் பெறாத படி இருக்கும் -என்னுதல் –-இக் குணங்களும் தன்னைப் பற்றி நிறம் பெறும்படி ஸ்பருஹணீயமாய் இருக்கும் -என்னுதல் –ஸ்வ பாவதஸ் –-இக் குணங்கள் ஆவித்யகம் அன்று-ஆவித்யகம் -அவித்யா கல்பிதம் –-ஔபாதிகம் என்னலாகாத படி -நை சர்க்கிகம் -இயற்க்கை யானது -என்னுதல்–சமஸ்த கல்யாண குணாம்ருதோ ததி – எல்லா குணங்களும் கல்யாணமே நிரதிசய போக்யங்களுமாய் அனுபவிக்க இழிந்தார்க்கு கரை காண ஒண்ணாமைக்கு
ஒரு கடல் என்னும் அத்தனை -என்கிறார்-மதிஷாயான்நிவர்த்தந்தே ந கோவிந்த குண ஷயாத்-(ஸ்வபாவத-என்பதை ஒவ் ஒன்றிலும் அன்வயித்து -சிலவற்றை அருளிச் செய்து-ஸமஸ்த கல்யாண குண அமுதக் கடல் -என்று நிகமிக்கிறார் -)

த்வம் சமஸ்த கல்யாண குணாம்ருதோ ததி–அஸி -நீ கல்யாண குணங்கள் எல்லாவற்றுக்கும் அமுதக் கடலாய் இராநின்றாய் அனைத்தையும் சொல்ல சந்தஸிசில் இடம் இல்லாமையால் ஒரு பன்னிரண்டு குணங்களை எடுத்துக் காட்டி அனுபவிக்கிறார்

மன்னு மிரு வச முகந்து வண்மை வீசி வாய்மையுடன் தூய்மையினை வகித்து அன்பர்க்கே
இன்னமுதாய் ஏனையோருக்கும் சமனாய் என்றும் இளகிய நெஞ்சுடன் அளி கூர்ந்து அவர் தம் வேட்கை
யுன்னி முடித்து அன்னவர் செய் நன்றி நாடி யுகந்து யுதவி யரும் சீல குணவானா நீ
நின்னியல்வாம் கல்யாண குணங்கட்க்கு எல்லா நிகர் அற்ற சுதை யாழி என நின்றாயே
–18—எல்லாவற்றையும் தன் வசமாக்கி நடத்துவதோடு ஆஸ்ரிதர்களுக்குத் தானே வசமாகி நடப்பவனும்
இனிய வசனங்களோடு தன் ஆஸ்ரிதற்குத் தன்னையும் தன்னுடைமையையும் கொடுக்கும் தன்மையை யுடையவனும்-ஆஸ்ரித ரக்ஷணத்தில் அவரது அபராதத்தால் மாறுபாடு இல்லாமல் ஒரே நிலையில் நின்று தான் வாக்கு அளித்தபடி ரக்ஷிப்பவனும்-நித்ய ஸம்ஸாரிகளை தன் ஸம்பந்தத்தினால் நித்ய ஸூரிகளோடே சேர்க்க வல்ல பரி ஸூத்தன் ஆனவனும்-அவர்கள் அனுபவிக்கத் தக்க போக்யனானவனும்-தன் பெருமையைக் கருதாது தன்னை அடைபவரை சாதி பேதம் பாராட்டாமல் கூடி உறவாடி அவர்களுக்கு சமானமாய் இருப்பவனும்-அவரது பிரிவையும் அவர் படும் துன்பத்தையும் சகியாத இளம் நெஞ்சை யுடையவனும்-கைம்மாறு கருதாமல் அவர்களுக்கு உபகரிக்குமவனும்
அவரது இச்சையை தன் திரு உள்ளத்தில் கொண்டு அதற்குத் தக்கபடி தான் அடைந்து அவர் கார்யத்தைத் தானே அடைபவனும்-அவர்களுக்குத் தான் செய்த பேர் உபகாரத்திற்காக அவர் செய்யும் அல்ப உபகாரத்தையும் பெரிதாக நினைப்பவனுமாகிய நீ-உனக்கு இயற்கையாகவே அமைந்துள்ள சகல கல்யாண குணங்களுக்கும் இணை இல்லாததான ஓர் அம்ருத சாகரம் போலே -கரை இல்லாமலும் பரம போக்யமாகவும் ஆகின்றாய் –

ஸ்லோகம் -19- அவதாரிகை –இக் குணங்களுக்கு சங்க்யை இல்லாதோபாதி ஒரோ குணங்களுக்கு அவதி இல்லை என்கிறார் –

உபர்யுபர்யப் ஜபு வோ அபி பூருஷான்
பிரகல்ப்ய தே யே சதா மித்ய நுக்ரமாத்
கிரஸ் த்வதே கைக குணாவதீ ப்ஸயா
ஸதா ஸ்திதா நோத் யமதோ அதி ஸேரதே
–19-

கிரஸ்-வேத வாக்யங்களானவை
உபர்யுபர் -மேன்மேலும்
யப்ஜபு வோ அபி பூருஷான் பிரகல்ப்ய –ப்ரஹ்மாக்களையும் மநுஷ்யர்களாகக் கற்பனை செய்து
தே யே சதா மித்ய நுக்ரமாத்-தே யே சதம் தே யே சதம் என்று ஓயாமல் சொல்லிக் கொண்டே போவதானால்
த்வத் ஏகைக குண அவதீ ப்ஸயா-உன்னுடைய ஒவ் ஒரு குணத்தின் எல்லையைக் கண்டு பிடிக்க வேண்டும் என்கிற விருப்பத்தோடு
ஸதா ஸ்திதா –எப்போதும் இருக்கின்றன -ஆகையினால்
நோத் யமதோ அதி ஸேரதே—ஆரம்ப தசையைக் கடந்து அப்பால் சொல்லவில்லையே

வேத வாக்யங்கள் “தேயே சதம்” (இது போன்ற நூறு) என்று மீண்டும் மீண்டும் புதிய ப்ரஹ்மாக்களை கற்பனை செய்து, உன்னுடைய ஒரு (ஆனந்தம் என்னும்) குணத்தின் எல்லையைக் காண முயன்று,
சிறிதளவும் முன்னேறாமல், ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றன,

உபர்யுபர்யப் ஜபு வோ அபி பூருஷான் பிரகல்ப்ய தே யே சதா மித்ய நுக்ரமாத் –-அப்ஜ புவ உபர்யு பரி தே யே ஸதா மித்ய நுக்ரமாத் பூருஷான் பிரகல்ப்ய –-திரு நாபீ கமலத்திலே அவ்யவதானே பிறந்து அவனோடு ஓதின சதுர் முகனுக்கு மேலே அவனை மனுஷ்யர் கோடியிலே நிறுத்தி-தே யே சத -க்ரமத்தாலே மனுஷ்ய கந்தர்வாதி ப்ரஹ்மாந்தமாக – அநந்த அவதி சித்த்யர்த்தமாக ப்ரஹ்மாக்களை கற்பித்து –-கிரஸ் த்வதே கைக குணாவதீ ப்ஸயா -ஸதா ஸ்திதா –-ஆனந்த குணம் ஒன்றையும் எல்லை காண்கையிலே-இச்சையாலே உத்யோகித்து-சர்வ காலமும் ஸ்திதைகளான வைதிககீர்கள் ஆனவை –
யெகைக-என்கையாலே ஜ்ஞான ஆனந்த அவஹமான யுவத வாதிகளை நினைக்கிறது –

சதா ஸ்திதா கிர -என்று நித்யத்வ அபௌருஷேயத்வங்களை சொல்லிற்று ஆகவுமாம் – வேத அஷர ராசி என்னாதே-கீர்கள் -என்கிறது-வேத சப்தேபய ஏவாதௌ -(நாம ரூபஞ்ச பூ,தாநாம்‌ க்ருத்யாநாஞ்ச ப்ரபஞ்சநம்‌ | வேத,ஸப்‌,தே,ப்‌,ய ஏவாதெ,ள தேவா$,நாம்‌ சகார ஸ: ॥| [தே,வர்கள்‌ முதலிய ஜீவ ராசிகளுடைய பெயரையும்‌, உருவத்தையும்‌, வைதிக க்ரியைகளுடைய விவரணத்தையும்‌ ஆதியில்‌ பிரமன்‌ வேத,ஸப்‌,த,ங்களிலிருந்து (அறிந்தே) செய்தான்‌.])-என்கிறபடியாலே லௌகிக சப்தங்களும் வைதிக சப்தங்கள் ஆகையாலே சொல்லுகிறது-அவை அந்த குணங்களைக் கண்டபடி யென் -என்னில்-நோத் யமதோ அதி ஸேரதே– உத்தியோக தசையான இது ஒழிய மேல் கால் வாங்கிற்றன வில்லை –
சைஷா நந்தச்ய மீமாம்ஸா பவதி -இத்ராப்ய–ஸ ஏகோ ப்ரஹ்மண ஆனந்த -இதி-யுவா ஸ்யாத்-ஸ்வரூப ரூப குணங்களுக்கும் உப லஷணம் ஆதல்யுவத வைத்தால் வந்த தேஜஸ்சை சொல்லுதல்(ஸைஷாநந்த,ஸ்ய மீமாம்ஸா ப,வதி–௮ந்த இந்த ப்‌, ரஹ்‌ மானந்த,த்தினுடைப விசாரம்‌ செய்யப்படுகிறது; யுவா ஸ்யாத்‌ ஸாது, யுவாத்யாயக;। ஆஸிஷ்டோ த்ரடிஷ்டோ ப,லிஷ்ட,;–யெளவனமுள்ளவனாகவும்‌, (தன்போல்‌) நல்ல யெளவனமுடையவர்களுக்கு ௮த்‌,யயனம்‌ செய்விப்பவனாக வும்‌, ஸக்தியுள்ளவனாகவும்‌, வீர்யமுள்ளவனாகவும்‌, பல முள்ளவனாகவும்‌ (ஒரு மனிதன்‌) இருக்கட்டும்‌. தஸ்யேயம்‌ ப்ருதி,வீ ஸர்வா வித்தஸ்ய பூர்ணா ஸ்யாத்‌–ஸர்வைஸ்வர்யமும்‌ நிரம்பிய பூமி முழுவதும்‌ அவனுக்கு வமப்பட்டதாக இருக்கட்டும்‌. ஸ ஏகோ மாநுஷ ஆநந்த: இது ஒரு மனுஷ்யனுடைய ஆனந்தம்‌, ஸ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய–ப்‌,ரஹ்ம நிஷ்ட,னும்‌, ஸம்ஸாரத்தில்‌ ஆசையற்ற வனுமான முக்தனுக்கும்‌ (இந்த ஆனந்த,ம்‌ உண்டு,) தேயே ஸதம்‌ மாநுஷா ஆநந்தா:। ஸ ஏகோ மநுஷ்ய கந்தர்வாணாமாநந்த;:– அப்படிப்பட்ட நூறு மனுஷ்யர்‌ களுடைய ஆனந்த,ங்கள்‌ ஒரு மனுஷ்ய கந்தர்வனுடைய ஆனந்த,மாகிறது …… தே யே மதம்‌ ப்ரஜாபதேராநந்தா: | ஸ ஏகோ ப்‌,ரஹ்மண ஆநந்த;:-—அப்படிப்பட்ட நூறு ப்ரஜாபதியின்‌ ஆனந்த,ங்கள்‌ ஒரு ப்ரஹ்மானந்த,மாகும்)

அத்யாயக இதி ஜ்ஞானம்-ஆசிஷ்ட்ட இதி சக்தி-த்ரடிஷ்ட்ட இதி வீர்யம்-பலிஷ்ட்ட இதி பலம்
தஸ்யேயம் -இதி ஐஸ்வர்யம்-த்ரய்யு யதா தவ யுவத்வ முகைர் குனௌ கை இத்யாதய
உத்யமத –-உத்யோகாத்-நாதி சேரதே அதிக்ரமண சமர்த்தா ந பவந்தி-
(அப்ஜபுவ உபர்யுபரி –(த்ரய்யுத்‌, யதா தவ யுவத்வ முகைர்‌ குணெளகை : ஆநந்த,மேது, தமியாநிதி ஸந்நியந்தும்‌ | தே யே ஸதந்த்விதி பரம்பரயா ப்ரவ்ருத்தா நைவைஷ வாங் மநஸகேரசர இத்யுதாஹ ॥ [யெளவனம்‌ முதலிய கு,ண க,ணங்களால்‌ வ்ருத்‌,தி,யடைந்த உன்னுடைய ஆநந்த,த்தை “இவ்வளவு! என்று அளவிடு வதற்கு ஆரம்பித்து *தே யே ஸதம்‌” என்று படிப்படியாகப்‌ படித்த வேதம்‌, (அதற்குப்‌ பின்‌) *இவன்‌ வாக்குக்கும்‌ மனத்துக்கும்‌ எட்டாதவன்‌’ என்று உரக்கக்‌ கூவிற்று) அப்ஜபுவ பூருஷான் ப்ரகல்ப்ய ப்ரஹ்மாக்களை மநுஷ்யர்களாக கல்பித்து -சதம் சதம் நூறு நூறாக – ஆனந்தவல்லி -சொல்லுமா போலே-சொல்லலாமது ஒழிய –உபர்யுபரி ப்ரகல்ப்ய-என்று கல்பித்தததே மேலும் மேலும் செல்லும் -முடிந்தபடி இல்லை –தே யே சதம் தே யே சதம் தே யே சதம் -என்று அநு க்ரமம்-ஒன்றின் பின் ஒன்றாக -கிர-வேத வாக்கியம் செல்லும் என்றவாறு –-ஆனந்த வல்லீ தவ குண நிவஹம் யவ்வன ஆனந்த பூர்வம் -நான்மறைகள் தேடி என்றும் காண மாட்டாச் செல்வன் –ஆழ்வார் போலே உயர்வற உயர்நலம் உடையவன் என்று பேசி விடாமல் ஏதோ பேசத் தொடங்கி பரிபவப் பட்டனவே வேதங்கள் –அருமையான வேதாந்த விழுப் பொருளை அருளிச் செய்கிறார் இத்தால் -)

குணங்கள் கணக்கில்லாதவை என்பது மட்டும் இல்லை –-ஒவ் ஒரு குணமும் எல்லை காண ஒண்ணாத படி அநவதிகமாய் இருக்குமே –-ஆனந்த வல்லீ -நூறு நூறு என்று திரும்பிக் கொண்டே இருக்குமா -வர்த்தமான பிரயோகம் – ப்ரஹ்ம ஆநந்தத்தின் அத்யந்த அபரிச்சேத் யத்தை சொன்னவாறு
ப்ரஹ்மாக்களை மனுஷ்ய ஸ்தானத்தில் வைத்து வைத்து மேலே மேலே ஓயாமல் கற்பனைகள்
நிகழ்நின்றனவே ஒழிய முடிந்த பாடு இல்லையே-அநுக்ரமம்–ஒன்றின் பின் ஒன்றாக சொல்லிக் கொண்டே போகை-கிர-வாக்குகள் அர்த்தமானாலும் இங்கு வேத வாக்குகள் –சதா ஸ்திதா -எப்பொழுதும் உள்ள வேத வாக்குகள் என்றும் கொள்ளலாம்யுவா ஸ்வாத் என்று உபக்ரமித்து யவ்வனம் உபதேசிகத்வம் ஆசிஷ்டத்வம் த்ரடிஷ்டத்வம் பலிஷ்டத்வம் சர்வ பிருத்வீ பதித்வம் குணங்களும் கூறப்பட்டமையால் இவற்றின் எல்லை இல்லாதத் தன்மைகளையும் சொன்னவாறு
ஆனந்த வல்லீ தவ குண நிவஹம் யவ்வன ஆனந்த பூர்வம்
-ஸ்ரீ பட்டர்

கீதம் கிளத்திடும் தேயேசதம் எனும் கிரமத்தில்
போதனின் மென் மேற் புருடர் விதித்து உன் குணம் ஒன்றின்
ஏதமில் எல்லை காணிய விச்சித்து என்றும் உறை
வேத முயற்சி தசையினை யின்னும் விட்டிலதே
–19-வேதத்தில் கூறிய -தே யே சதம் -என்னும் ஒரு கிரமத்தை அனுசந்தித்து உன் அநந்த குணங்களில் ஆனந்த குணமாகிய ஒன்றினுடைய
எல்லையைக் காணும் பொருட்டு வேதங்கள் பிரம்மாவை மனுஷ்ய கோடிகளில் ஒன்றாய் நிறுத்தி அவனுக்கு மேன்மேல் ப்ரம்மா வரையில் புருஷர்களைக் கற்பித்து அதில் ஒவ்வொருவருடைய ஆனந்த குணமும் நூறு நூறு மடங்கு அதிகம் எனக் கணக்கிட்டுச் சொல்லியும் கடைசியில் அந்த உன் ஆனந்த குணத்தின் எல்லையைக் காண மாட்டாமல் இன்றும் காணும் ப்ரயத்னத்தில் நின்றும் மீள வில்லையே-

ஸ்லோகம் -20- அவதாரிகை –கீழ்ச் சொன்ன குணங்களுக்கு போக்தாவான ஆஸ்ரிதர் பெருமையை அருளிச் செய்கிறார்-அஸ்மின் நஸய ஸ தத் யோகம் சாஸ்தி -ப்ரஹ்ம சூத்ரம் -1-1-20-(அஸ்மிந்நஸ்ய ச தத்‌,யோக,ம்‌ மாஸ்து [(ஆநந்த மயனான) இந்த ப்ரஹ்மத்தினிடத்தில்‌, இந்த ஜீவாத்மாவுக்கு ஆநந்தச் சேர்க்கையை (‘ரஸம்‌ ஹ்யேவாயம்‌ லப்டத்‌,வாநந்தீ, ப,வதி’ என்ற ஸ்ருதி) சொல்லுகிற)-இந்த ஆனந்த சேர்க்கையை ஸ்ருதி –ரசம் ஹ்யேவாயம் லப்த் வா நந்தீ பவதி – -என்று இவனாலே வந்த பெருமையை உடையவர்கள் அளவு இதுவானால்-அவன் பெருமை பரிச்சேதிக்க ஒண்ணாது என்னும் இடம்
கிம்புநர் நியாய சித்தம் அன்றோ
-என்கிறார்-என்றுமாம் –ஆளவந்தார் முன்பு அருளிச் செய்த பகவத் குணங்களை அனுபவிக்கும் அடியார்களின் பெருமையை அருளிச் செய்கிறார்.-அல்லது –
ப்ரஹ்ம ஸூத்ரம் 1.1.20இல் “அஸ்மிந்நஸ்ய ச தத்யோகம் ஶாஸ்தி”(வேதம் ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஆனந்தமாகக் கூடியிருக்கும் ஆனந்தத்தை விளக்குகிறது) என்று சொன்னபடி-பகவானிடத்திலிருந்து அடைந்த பெருமையை உடைய அடியார்களின் பெருமையே மிகப் பெரியது என்றால், அந்த பகவானின் பெருமை அளவிட முடியாதது என்பது தெளிவு என்கிறார்.

த்வத் ஆஸ்ரிதா நாம் ஜகத் உத்பப ஸ்திதி
பிரணாச சம்சார விமோசன ஆதய
பவந்தி லீலா வித யஸ்ஸ வைதிகாஸ்
த்வதீய கம்பீர மநோ நுசாரிண
–20-

த்வத் ஆஸ்ரிதா நாம் ஜகத் உத்பப ஸ்திதி பிரணாச சம்சார விமோசன ஆதயபவந்தி லீலா –உலகத்தைப் படைப்பது காப்பது அழிப்பது மோக்ஷம் அளிப்பது-முதலிய விளையாடல்கள் உனது அடியவர்களுக்காக ஆகின்றன
வித யஸ்ஸ வைதிகாஸ்த்வதீய கம்பீர மநோ நுசாரிண–வேத விதிகளும் உன்னுடைய பக்தர்களின் கம்பீரமான திரு உள்ளத்தைப் பின் செல்பவைகளாக இருக்கின்றன-காட்டில் எரியும் நிலா போலே இல்லாமல் உன்னுடைய அபரிமித குண மகிமைகளை அனுபவிக்க பலரும் உண்டே –-குண விபூதிகள் லீலைக்கு மட்டும் அல்ல -ஆஸ்ரிதர் ஆனந்தத்துக்காகவே

ப்ரஹ்மா முதலான உன் அடியார்களுக்கு இவ் வுலகைப் படைப்பது, காப்பது, அழிப்பது மற்றும் இந்த ஸம்ஸாரத்தை கடக்க உதவுவது ஆகியவை எளிய விளையாட்டாக இருக்கும்; வேதத்தின் விதிகளும் கூட உன்னுடைய அடியார்களின் ஆழமான நெஞ்சங்களையே தொடரும்.

த்வத் ஆஸ்ரிதா நாம் –ப்ரஹ்ம ருத்ராதி நாம் -ஸநாகாதி நாம் -ஸ-தேவரை தூர நின்று ஆஸ்ரயிக்கிற ப்ரஹ்மாதிகள் சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்களை உபதேச க்ரமத்தாலே பெற்று- சம்சார விமோசநத்தையும் பண்ண சக்தரான பின்பு அநந்ய பிரயோஜனராய் ஆஸ்ரயிக்கும் அவர்கள்
அவற்றைச் செய்யப் பார்த்தால் – லீலையாகா நின்றது –முக்தர் தேவரோடு லீலா ரசம் அனுபவிக்கும் போது சங்கல்ப்பத்தாலே ஜ்ஞாத்யாதிகளை சிருஷ்டித்தே அனுபவிப்பது – சங்கல்பா தேவ தச்சருதே -ப்ரஹ்ம சூத்ரம் -4-4-8-ஸ யதி பித்ரு லோக காமோ பவதி சங்கல்பா தே வாஸ்ய பிதரஸ் ஸ முத்திஷ் டந்தி -சாந்தோக்யம் –(ஸங்கல்பாதே;வ தச்ச்‌,ருதே: [ஸங்கல்பத்தாலேயே (முக்தன்‌ ஸ்ருஷ்டிக்கிறான்‌), (ஸ யதி, பித்ரு லோக காமோ ப,லதி। ஸங்கல்பா தேவாஸ்ய பிதரஸ் ஸமுத்திஷ்ட,ந்தி |[அந்த முக்தன்‌ (தன்‌ பழைய பிறப்புகளிலிருந்து) பித்ரு வர்க்கங்களைக்‌ காண விரும்பினானாகில்‌ அந்தப்‌ பித்ரு வர்க்‌கங்கள்‌ இவனுடைய ஸங்கல்பத்தாலேயே கிளம்பி வருகின்றன.])அப்படி ஸ்ருதியிருப்பதனால்)-ஜகத் ஸ்ருஷ்ட்யாதி யில் ப்ராப்தி இல்லாமை போக்கி சக்தி இல்லாமையாலே தவிருகிரார் அல்லர் –ஆதி சப்தத்தாலே-அநேக சரீர அந்த பிரவேச நியமங்களை நினைக்கிறது –-ஜகத் வியாபார வர்ஜம் ப்ரகரணாத சன்னிஹி தத்வாச்ச -ப்ரஹ்ம சூத்ரம் -4-4-17-(முக்தனுடைய ஐஸ்வர்யம்‌) ஜகத்‌ வ்யாபார மில்லாத (ப்ரஹ்மானுப,வ மாத்ரமே ) ; ப்ரஹ்மத்தைக்‌ குறித்தே ஐகத்‌, வ்யாபாரம்‌ சொல்லப்படுவதால்‌ ; (ஜகத்‌,வ்யாபாரத்‌ தில்‌ முக்தனுக்கு) ஸந்நிதானம்‌ இல்லாததாலும்)–போக மாத்ர சாம்ய லிங்காச்ச -ப்ரஹ்ம சூத்ரம் -4-4-21-(ப்‌ரஹ்மானுப,வமாகிற) போகத்தில்‌ மட்டும்‌ ஸாம்யத்‌தைச்‌ சொல்லும்‌ அடையாளத்தினாலும்‌ ( முக்தனுக்கு ) ஜகத்வ்யா பாரமில்லை)

அதவா-ஜகத் உத்பப ஸ்திதி பிரணாச சம்சார விமோசன ஆதய பவந்தி லீலா -த்வத் ஆஸ்ரிநாம் –
முமுஷூ சிஸ் ருஷையா விறே ஸ்ருஷ்டியாதிகள்
– நிரதிசய போகயதையே ஸ்வரூபமாய் இருக்க
சம்சார விமோசகர் என்கிறது ஆஸ்ரித அர்த்தமாக விறே –-ஆதி சப்தத்தாலே-ததர்த்தமான அநேக அவதாரங்கள் – திருக் குரவையிலே அநேக விக்ரஹ பரிக்ரகாதிகள்

வித யஸ்ஸ வைதிகாஸ்-
இதம் குரு இதம் மா கார்ஷீ
-([இதைச்‌ செய்‌; இதைச்‌ செய்யாதே)என்று ஸ்வ தந்த்ரமான வைதிக விதிகளும்-த்வதீய கம்பீர மநோ நுசாரிண-அநந்ய ப்ரயோஜனராய்-ஆஸ்ரயித்த வர்களுடைய கம்பீரமான மனஸ்சைப் பின் செல்லா நின்றன –மனஸ்ஸூக்கு கம்பீரத்வம் ஆவது -ஷூத்ரமான ஐஸ்வர்யாதிகளிலே கால் தாழாதே அநந்ய பிரயோஜனமாகை-ப்ரஹ்ம வாதி நோ வதந்தி ஸ ஹோவாச வியாச பாராசர்ய யே தத்ர ப்ராஹ்மாணாஸ் சம்மர்சின –இத்ராப்ய-யதா தே தத்ர வர்த்தே ரன் ததா தத்ர வரத்தே தா – நினை தொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும் -திருவாய் மொழி -9-6-2- (ப்‌,ரஹ்மவாதி,நோ வத,ந்தி [ப்‌,ரஹ்மவாதி,கள்‌ சொல்லுகிறார்கள்) (அத; யதி, தே கர்ம விசிகித்ஸா வா வ்ருத்த விசிகித்ஸா வா ஸ்யாத்‌ |. யே தத்ர ப்‌,ராஹ்மணாஸ்‌ ஸம்மர்ஸிந:| யுக்தா ஆயுக்தா:। அலூக்ஷா தர்ம காமா: ஸ்யு:। யதா தே தத்ர வர்த்தேரந்‌। ததா தத்ர வர்த்தேதா:।[உனக்குக்‌ கர்மத்திலேயோ, ஆசாரத்திலேயோ ஸந்‌தேஹம்‌ ஏற்பட்டதாகில்‌, விசாரம்‌ செய்வதில்‌ நிபுணர்‌களாகவும்‌, வேத,ஸாஸ்த்ரங்களில்‌ ஈடுபட்டவர்களாகவும்‌, எல்லா விஷயங்களிலும்‌ ஸமர்த்த,ர்களாகவும்‌, காம க்ரோ தாதிகள்‌ அற்றவர்களாகவும்‌, தர்மத்தில்‌ விருப்பமுள்ள வர்களாவுமிருக்கும்‌ ப்‌ ராஹ்மணர்கள்‌ அவ் விஷயத்தில்‌ எப்படி நடக்கிறார்களோ, அப்படியே நீயும்‌ அவ் விஷயத்தில்‌ நடப்பாயாக.)என்று பகவத் விஷயத்தில் இவ்வளவு அவகாஹி யாதார்க்கு-நிதித்யாசி தவ்ய விஜ்ஞாய ப்ரஜ்ஞாம் குர்வீத ஆத்மானம் த்யாயீத -(தமேவ தீரோ விஜ்ஞாய ப்ரஜ்ஞாம்‌ குர்வீத ப்‌,ராஹ்மண-ஜ்ஞான முடையவனான ப்ராஹ்மணன்‌ அந்தப்‌ பரமாத்‌மாவை (ஸ்ரவண மனனங்களாலே அறிந்து த்யானம்‌ செய்யக் கடவன்) (ஓமித்யேவ த்‌,யாய தாத்மாநம்‌ [பரமாத்மாவை *ஓம்‌’ என்றே த்யானம்‌ செய்யுங்கள்‌.)என்று விதிக்கிறது இறே –த்வதீயமான கம்பீர மனஸ்சை அனுசரியா நின்றன -என்றுமாம் –ஸ்ருதி ஸ்ம்ருதிர் மமை வாஜ்ஞா –(ஸ்ருதி: ஸ்ம்ருதிர்‌ மமைவாஜ்ஞா யஸ்தாமுல்லங்க்‌ய வர்த்ததே | ஆஜ்ஞாச்சேதீ, மம த்‌ரோஹீ மத்‌,ப,க்தோ5பி ந வைஷ்ணவ: || [வேத,மும்‌,ஸ்ம்ருதியும்‌ என்னுடைய ஆஜ்ஞையே, எவனொருவன்‌ அதை மீறி நடக்கிருனோ, அவன்‌ என்‌ ஆஜ்ஞையை மீறினவன்‌; எனக்கு த்‌,ரோஹம்‌ செய்தவன்‌; என்னுடைய ப,த்தனாயிருந்த போதிலும்‌ (அவன்‌) வைஷ்ணவனல்லன்0

(நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய் சென்று சென்று ஆகிலும் கண்டு
ஜன்மம் களிப்பான் எண்ணி ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான்
–அடுத்து அடுத்து உபகார பரம்பரைகளை செய்து அருளி -ஒருவராவது அகப்படுவாரோ என்ற நப்பாசையாலே -என்றபடி –
த்ரிபி பிரஜாபதேர் பக்தா சப்தபிச் சங்கரஸ்ய து விம்சத்யா அக்னி இந்திரா ஸூர்யாதே விஷ்ணு பக்த ப்ரஜாயதே )

ஜகத் உத்பப ஸ்திதி பிரணாச சம்சார விமோசன ஆதய -தவ -லீலா –த்வதீய கம்பீர மநோ நுசாரிண-
தவ வைதிகாஸ்-வித யஸ்ஸ -த்வத் ஆஸ்ரிதா நாம்-பவந்தி
-என்று அந்வயித்து-படைத்தல் அளித்தல் அழித்தல் மோக்ஷம் அளித்தல்-மற்றும் உனது லீலைகளை -பரமைகாந்திகளின் திரு உள்ளத்தைப் பின் செல்லும்-ஸாஸ்த்ர விதிகளும் -எல்லாமே உன்னுடைய ஆஸ்ரிதர்களுக்கு ஆகவே ஆகின்றன
அவாப்த ஸமஸ்த காமன்-நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய்ச் சென்று சென்று ஆகிலும் ஜன்மம் கழிப்பான் எண்ணி ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் –-அனைத்தும் ஒரு சேதனன் நமக்கு அகப்படுவான் என்ற திரு உள்ளத்தால் அன்றோ

ஜகத் உத்பப ஸ்திதி பிரணாச சம்சார விமோசன ஆதய–த்வத் ஆஸ்ரிதா நாம்-லீலா — வைதிகாஸ்-வித யஸ்ஸ- த்வதீய கம்பீர மநோ நுசாரிண–பவந்தி -என்றும் அன்வயித்து-உனது அடியவர்களான ப்ரஹ்மாதிகளுக்கு விளையாட்டாய் -உன்னுடைய கிருபாதிகளால் அவலீலையாகச் செய்யும் படி இருக்கும்-அப்படியே ஸாஸ்த்ர விதிகளும் உன்னை அடி பணிந்தவர்களுடைய ஆழ்ந்த திரு உள்ளத்தை அனுசரிக்கின்றன-சிஷ்டாசாரத்தை முதன்மையான பிரதானமாகச் சொல்லி அதற்கு பிந்தின பிரமாணமாக வேதங்களைச் சொல்ல வேணும்-உனது ஆஸ்ரிதர்களின் பெருமை அப்படியானால் உனது பெருமையின் அளவை எண்ணவும் முடியுமோ –என்றவாறு-ப்ரஹ்ம வாதினோ வதந்தி -மனு மகரிஷி சொன்னது எல்லாம் மருந்து –

உனை யடுப்போர்க்கு உண்டாக்கல் உலகம் எல்லாம் அளித்து ஒழித்தல்
வினை யுறும் ஸம்ஸாரத்தின் விமோசனம் அடைதல் என்னும்
அனையவும் லீலையாகும் அன்னவர் தம் கம்பீர
மனதினை அநுசரிக்கும் மா மறை விதி கண் மாதோ
–20-இவ் வுலகங்களை எல்லாம் உண்டாக்குதல்
ரஷித்தல் -அழித்தல் -முதலான தொழில்களும் ஸம்ஸார விமோசனம் அடைதல் முதலிய மற்ற சகலமும்
உன் ஆஸ்ரிதர் விஷயத்தில் லீலைகளாக்கி அவர் நிமித்தமாகவே உண்டாய் இருக்கின்றன-வேதங்களில் சொல்லப்பட்ட விதிகளும் உன்னை ஆஸ்ரயித்த அநந்ய ப்ரயோஜனருடைய கம்பீரமான மனஸ்ஸை அனுசரிக்கின்றன –

ஸ்லோகம் -21-அவதாரிகை –இதுக்கு கீழ்-ஈஸ்வரன் உடைய ஸ்வரூபத்தால் வந்த உத்கர்ஷத்துக்கும் –
உபய விபூதி யோகத்தால் வந்த ஐஸ்வர்யத்துக்கும் – குண உத்கர்ஷத்தால் வந்த நீர்மைக்கும் – தோற்று
ஜிதந்தே -என்னும் ஸ்வேத த்வீப வாசிகளைப் போலேயும்-நம புரஸ்தா தத ப்ருஷ்ட்ட தஸ்தே -என்ற அர்ஜுனன் போலேயும் –யாருமோர் நிலைமையன் -என்ற ஆழ்வாரைப் போலேயும் சரண்யன் உடைய பெருமையை அனுசந்திக்கிறார் –இதுக்கு முன்பு-பிராப்ய ஸ்வரூபம் சொல்லிற்றே-இதில் ப்ராப்தாவின் ஸ்வரூபம் சொல்லுகிறது -என்றுமாம்-கீழ் சரண்ய ஸ்வரூபம் சொல்லிற்றாய்-மேல் சொல்லப் படுகிற சரணாகதியை -இதில் ப்ரஸ்தாபிக்கிறார் –என்றுமாம் –ஶரண்யனான எம்பெருமானின் பெருமைகளை த்யானிக்கிறார். அல்லது – முன்பு உபேயத்தை (குறிக்கோளை) விளக்கினார், இங்கே அதை அடைய விரும்புபவரின் தன்மையை விளக்குகிறார்.-மற்றொரு விளக்கம் –-முன்பு ஶரண்யனான பகவானின் தன்மையை விளக்கிய ஆளவந்தார், இங்கே மேலே விளக்கப்படும் சரணாகதியின் தன்மையை வெளியிடுகிறார்.

நமோ நமோ வாங் மனஸாதி பூமயே
நமோ நமோ வாங் மனசைக பூமயே
நமோ நமோ அநந்த மஹா விபூதயே
நமோ நமோ அநந்த தயைக சிந்தவே
—-21-

வாங் மனஸாதி பூமயே-ஸ்வ தந்த்ரர்களுடைய வாக்குக்கும் மனஸுக்கும் எட்டாதவனான உன் பொருட்டு
நமோ நமோ –நமஸ்காரம் -நமஸ்காரம்
வாங் மனசைக பூமயே-தன்னுடைய நிர்ஹேதுக விஷயீ காரத்துக்கு பாத்திரமாய் இருக்கிற-அந்தரங்கர்களுடைய வாக்குக்கும் மனஸுக்குமே விஷயமாய் இருக்கிற உன் பொருட்டு
நமோ நமோ -நமஸ்காரம் -நமஸ்காரம் –
அநந்த மஹா விபூதயே– வேத வேதாந்தங்களிலும் எல்லை யில்லாத பெரிய ஐஸ்வர்யங்களை உடைய உனக்கு
நமோ நமோ -நமஸ்காரம் -நமஸ்காரம் –
அநந்த தயைக சிந்தவே—எல்லை யில்லாத கருணைக்கே கடலாய் இருக்கின்ற உனக்கு-தயை -என்றது வாத்சல்யம் ஸுவ்சீல்யம் ஸுவ்லப்யம் -போன்ற பல கல்யாண குணங்களுக்கும் உப லக்ஷணம்
நமோ நமோ -நமஸ்காரம் -நமஸ்காரம் —-எம்பெருமானுடைய பெருமையை பரக்கப் பேசின பின்பு அந்தப் பெருமைக்குத் தோற்றுத் தொழுகின்றார் –

தன் முயற்சியால் அறிய முயல்பவர்களின் வாக்குக்கும் மனதுக்கும் எட்டாத உனக்கு என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்;-உன்னுடைய கருணையால் உன்னை அறிந்தவர்களின் வாக்குக்கும் மனதுக்கும் எட்டுபவனான உனக்கு என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்; எல்லை யில்லாத ஐச்வர்யத்தை உடைய உனக்கு என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்; கருணைக் கடலான உனக்கு என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்.

நமோ நமோ வாங் மனஸாதி பூமயே-வாங் மனஸாதி பூமயே-நமோ நம- எத்தனை யேனும் ஜ்ஞாநாதி கரும் ஸ்வ யத்னத்தால் அறியப் புக்கால் அவர்களுக்கு வாங் மனஸஸூக்களுக்கு அபூமியாய் இருக்கிற உனக்கு எதோ வாசோ நிவர்த்தந்தே –யன்நாயம் பகவான் ப்ரஹ்மா ஜாநாதி புருஷோத்தமம் –நம
என்று அஹங்காரம் இல்லாத ஸ்வரூபத்தை சொல்லுகிறது –-அநாத்மன் யாத்ம புத்தி – அஹமபி ந மம -இத்யாரப்ய(அநாத்மந்யாத்மபு,த்‌,திர்யா சாஸ்வே ஸ்வமிதி யா மதி:| ஸம்ஸார தரு ஸம்பூதி பீஜமேதத்‌ த்‌,விதா ஸ்திதம்‌ | [ஆத்மா வல்லாத தே,ஹத்தில்‌ ஆத்மா என்னும்‌ புத்தியும்‌, தனதல்லாத பொருளில்‌ தன்னுடையது என்னும்‌ புத்தி,யும்‌, ஸம்ஸாரமாகிய வ்ருக்ஷத்தின்‌ விருத்திக்கு இருவகை யாயிருக்கும்‌ விதையாகும்)–இத்யேவ மமமதாம் யோஜயதயதோ நம இதி – த்வய ஷரஸ்து பவேன் ம்ருத்யுஸ் த்ரய ஷரம் ப்ரஹ்மண பதம் -இத்யாதி(த்வ்யக்ஷரஸ்து பவேந்ம்ருத்யுஸ்‌ த்ர்யக்ஷரம்‌ ப்‌.ரஹ்மண: பதம்‌!மமேதி த்‌வ்யக்ஷரோ ம்ருத்யுர்‌ ந மமேதி ச ஸாஸ்வதம்‌ ॥ [இரண்டு அக்ஷரத்தை யுடையது ஸம்ஸாரமடையக்‌ காரண மாகிறது.மூன்‌றக்ஷரங்களை யுடையது ப்‌,ரஹ்மத்தை யடையக்‌ காரணமாகிறது. இரண்டெழுத்துச்‌ சொல்லான*மம”என்பது ஸம்ஸாரத்திற்குக்‌ காரணம்‌. மூன்றெழுத்துச்‌ சொல்லான ந மம” என்பது நிலையான மோக்ஷத்திற்குக்‌ காரணம்)–நமஸ் சப்தம் பர்யாயம் ஆகையாலே சரணாகதியை பிரஸ்தாபிக்கிறது ஆகவுமாம்-வீப்சையாலே அந்த ஸ்வ பாவத்துக்குத் தோற்று அருளிச் செய்கிறார் –சக்ருத்தே நம த்விச்தே நம இத்யாராப்ய சஹச்ரக்ருத் வஸதே நம அபரிமிதக்ருத் வஸதே நம இத்யாதி-(ஸக்ருத்தே ௮க்‌நே நம:। த்‌விஸ்தே நம:। த்ரிஸ்தே நம:। சதுஸ்தே நம:। பஞ்ச க்ருத்வஸ்தே நம:। தஹுக்ருத்வஸ்தே நம: | மத க்ருத்வஸ்தே நம: | ஆஸஹஸ்ர க்ருத்வஸ்தே நம: | அபரிமித க்ருத்வஸ்தே நம: ||[அக்னியே! உனக்கு ஒருகால்‌ நமஸ்காரம்‌; இருமுறை நமஸ்காரம்‌; மும்முறை நமஸ்காரம்‌; நாலு தரம்‌ நமஸ்காரம்‌; ஐந்து முறை நமஸ்காரம்‌; பத்து தரம்‌ நமஸ்காரம்‌; நூறு முறை நமஸ்காரம்‌) ஆயிரம்‌ தரம்‌ வரை நமஸ்காரம்‌; கணக்‌கற்றமுறை நமஸ்காரம்‌)

நமோ நமோ வாங் மனசைக பூமயே–வாங் மனசைக பூமயே -நமோ நம – நீ காட்டக் காண்பார் உடைய வாங் மனஸ் ஸூக்களுக்கு நிலமாய் இருக்கிற உனக்கு –-பவந்தி பாவா பூதா நாம் மத்த ஏவ ப்ருத கவிதா -(ப,வந்தி பாவா பூ,தாநாம்‌ மத்த ஏவ ப்ருத,க் விதா: [ஜீவராசிகளுடைய (ஞானம்‌ முதலிய) பலவகையான மநோ பாவங்கள்‌ என்னுடைய ஸங்கல்பத்தாலேயே ஏற்‌படுகின்‌ றன)ஸ்ரீ கீதை -10-5- -இத்யாதி-

நமோ நமோ அநந்த மஹா விபூதயே –அநந்த மஹா விபூதயே -நமோ நம —-அபரிச்சேத்ய உபய மஹா விபூதிகனாய் இருக்கிற உனக்கு வாங் மனஸ் ஸூக்களுக்கு அபூமியாகைக்கு அடி அபரிச்சேத்ய மஹா விபூதிமானாய் இருக்கை

நமோ நமோ அநந்த தயைக சிந்தவே – அநந்த தயைக சிந்தவே -நமோ நம — உன்னை வாங் மனஸ் ஸூக்களுக்கு ஏக பூமியாம் படி பண்ணும் அபரிச்சேத்ய தயைக்கு ஒரு சிந்துவாய் இருக்கிற உனக்கு –
யதி சகநோஷி கச்ச தவம்
-(தாம்நா சைவோத,ரே படத்‌,த்‌,வா ப்ரத்யப,த்‌ நாது,லூக,லே | க்ருஷ்ண மக்லிஷ்ட கர்மாணமாஹ சேத,மமர்ஷிதா || யதி, ஸக்நோஷி கச்ச, த்வமதி சஞ்சல சேஷ்டித || [(யசோதையானவள்‌) குறும்புச்‌ செயல்களை வெகு ஸுலப,மாகச்‌ செய்யும்‌ அந்த க்ருஷ்ணனைத்‌ தாம்புக் கயிற்றினால்‌ வயிற்றில்‌ பிணைத்து ஒரு உரலில்‌ கட்டினாள்‌, கோபங்‌ கொண்டவளாய்‌ இப்படிச்‌ சொன்னாள்‌:– “மிகவும்‌ சஞ்சல மான செயல்களை உடையவனே! முடியுமாகில்‌ இப்போது போ.”])என்று சர்வ சக்தியை ஓர் இடைச்சி பரிச்சேதிக்கலாம் படி இறே கிருபையினுடைய நிரவதிகத்வம் –

(தயா -என்றது வாத்சல்யம் -ஸுசீல்யம் -ஸுலப்யம் -இத்யாதிகளுக்கும் உப லக்ஷணம் –
ஏக கிருஷ்ண நமஸ்காரோ முக்தி தீரஸ்ய தேசிக -ஒரு முறை நமஸ்கரித்தாலே முக்தி கிட்டும் –
பராசம்சாயாம் ப்ரதிஞ்ஞாயாம் ப்ரலாபே தர்ஜ நேபிச பயேச விஜயே சைவ பவ்நம் புன்யம் அலங்க்ருதி -என்றபடி-அச்சம் தோற்ற மீண்டும் மீண்டும் நமஸ்காரம் -பாம்பு பாம்பு பாம்பு என்று ஒரே பாம்பை கண்டு சொல்வது போலே-தண்டவத் நிபபாத -தண்டம் விழுந்தால் தானே எழாதே – கணக்கு எண்ணி சேவிப்பதை விட்டு -பக்தி பாரவசயத்தாலே –மெய் மறந்து விழுவது எழுவதாக அத்யந்த பக்தி யுக்தானாம் ந சாஸ்திரம் நைவ ச க்ரம–)

ஏக கிருஷ்ணோ நமஸ்கார முக்தி தீரஸ்ய தேசிக -ஸக்ருத் நமஸ்காரம் – ப்ரஸம்சாயம் ப்ரதிஞ்ஞாயம் ப்ரலாபே தர்ஜ நேபிச பயேச விஜயே சைவ பவ்ந புந்யம் அலங்க்ருதி -என்று பிரதிஜ்ஜை செய்யும் பொழுதும் -அழும் பொழுதும் -வெருட்டும் பொழுதும் -அச்சம் தோற்றச் சொல்லும் பொழுதும்
வெற்றி தோற்றச் சொல்லும் பொழுதும் ஒரு சொல்லையே அடுத்து அடுத்துச் சொல்வதானது அலங்காரம் ஆகும்-பாம்பு பாம்பு பாம்பு என்று அஞ்சிச் சொல்வது உண்டே-தண்டவத் நிபபாத -தண்டனை சமர்ப்பித்தல் -வேர் அற்ற மரம் போலே விழுந்து இருக்க-ஸக்ருத் நமஸ்காரத்துக்கு மேல் வேண்டாமே-ஸ்ரீ வைகுண்ட கத்யம் -பிரணம்ய உத்தாய உத்தாய புந புந பிரணம்ய-என்றது எம்பெருமானைக் கிட்டும் அளவும் காலால் நடந்து செல்லாமல் தண்டனை இட்டுக் கொண்டு செல்வதையே அருளிச் செய்கிறார்-கணக்கு எண்ணி சேவிப்பதை விட பக்தி பாரவஸ்யத்தாலே மெய் மறந்து – அத்யந்த பக்தி யுக்தா நாம் ந ஸாஸ்த்ரம் நைவ ச க்ரம

நெஞ்சுடன் வாக்கினை மீறியதாகு நினைப் பணிவேன் பணிவேன்
நெஞ்சுடன் வாக்கு அதினுக்கு இடமாகு நினைப் பணிவேன் பணிவேன்
விஞ்சும் அநந்த விபூதியனாகு நினைப் பணிவேன் பணிவேன்
விஞ்சு மஹா தயை வேலையனாகு நினைப் பணிவேன் பணிவேன்
–21–ஞானத்தில் மிக்கோர் ஆயினும் தம்முடைய பிரயத்தனத்தால் அறிய நினைக்கில் – அவரது வாக்குக்கும் மனதுக்கும் எட்டாதவனான உன்னைப் பன்முறை நமஸ்கரிக்கிறேன் உன் கிருபையால் நீ காட்டி அருள -அந்தக் காரணத்தால் உன்னைக் காண்பவருடைய வாக்கிற்கும் மனதுக்கும் விஷயமான வுன்னைப் பன் முறை நமஸ்கரிக்கிறேன்-அநேகங்களான மகத்தான உபய விபூதியை யுடையனான யுன்னைப் பன் முறை நமஸ்கரிக்கிறேன்-வாக்கினுக்கும் மனசுக்கும் விஷயமாகிய பரம தயா சக்கரமான உன்னைப் பன் முறை நமஸ்கரிக்கிறேன்-

ஸ்லோகம் -22-அவதாரிகை –தம்முடைய அதிகாரத்தைச் சொல்லிக் கொண்டு பிரஸ்துதமான ப்ரபத்தியை ப்ரயோகிக்கிறார்--கீழ்ச் சொன்ன உபேய அனுகூலமான உபாயத்தை அனுஷ்டிக்கிறது -என்றுமாம் – கீழ் –த்வாம் சீல -உல்லன்கித -என்கிற இடத்தில் துஷ் பிரகிருதிகள் உன் பெருமையை அறியார்கள் சத் பிரகிருதிகள் அறிவார்கள் -என்றார் —நமோ நம -என்கிற ஸ்லோகத்திலே ஸ்வரூபத்தைப் பர தந்தரமாக உணர்ந்தவனுக்கே இவ்விஷயம் ப்ராப்யம் ஆவது ஸ்வ தந்த்ரனுக்கு பிராப்யம் அன்று -என்கிறது –ஆஸ்ரயிக்கும் இடத்தில் ஸ்வ சக்தி கொண்டு விஷயம் அன்று
தன்னுடைய ஆகிஞ்சன்யத்தை முன்னிட்டுக் கொண்டு ஆஸ்ரயிக்கும் விஷயம்
-என்கிறார் –ஆளவந்தார் தன்னுடைய தகுதியைச் சொல்லி, முன் பாசுரத்தில் சொல்லப்பட்ட சரணாகதியைச் செய்கிறார்.-அல்லது –முன்பு சொன்ன குறிக்கோளுக்குத் தகுந்த வழியை அனுஷ்டிப்பதை அருளிச் செய்கிறார் என்றும் சொல்லலாம்.

ந தர்ம நிஷ்ட்டோஸ்மி ந சாத்ம வேதீ
ந பக்திமாம் ஸ்தவச சரணாரவிந்தே
அகிஞ்சநோ அநந்ய கதிஸ் சரண்ய
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே
–22-

சரண்ய-சர்வ ரக்ஷகனே
ந தர்ம நிஷ்ட்டோஸ்மி -அடியேன் கர்ம யோகத்தில் நிலை நின்றவன் அல்லேன்
ந சாத்ம வேதீ அஸ்மி –ஆத்ம ஞானமும் உடையேன் அல்லேன்
ந பக்திமாம் ஸ்தவச சரணாரவிந்தே-உனது திருவடித் தாமரைகளில் பக்தியையும் உடையேன் அல்லேன்
அகிஞ்சநோ அநந்ய கதிஸ் -ஒரு சாதனமும் இல்லாதவனாய் வேறு புகல் அற்றவனுமான அடியேன்
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே–உனது திருவடித் தாமரையை சரணமாக அடைகிறேன்

சரணடையத் தகுந்த ஸ்வாமியே! நான் கர்ம யோகத்தில் நிலையாக இல்லை; என்னிடத்தில் ஆத்ம ஞானமும் இல்லை;-என்னிடத்தில் உன் திருவடிகள் விஷயமான பக்தியும் இல்லை; இப்படி வேறு உபாயமும் புகலும் இல்லாத நான், உன் திருவடிகளையே உபாயமாக உறுதியாக ஏற்றுக் கொள்கிறேன்.

ந தர்ம நிஷ்ட்டோஸ்மி
தார்மிகனாக என்கிறேன் அல்லேன்-தர்மத்தில் நிஷ்ட்டை உடையேன் அல்லேன்-சிலர் -தார்மிகன் -என்று நினைக்கைக்கும்-நானும் -எனக்கு நன்மை யுண்டு -என்று பிரமிக்கைக்கும்-தானே சில ப்ரவர்த்தியா நின்றான் ஆகில்-தானே செய்திடுக -என்று நீ கை விடுகைக்கும் வேண்டுவது உண்டு இத்தனை –-உன் திருவடிகளை ப்ராபிக்கைக்கு ஹேதுவாக வேண்டும்படியான ப்ரவ்ருத்தியில் நிஷ்டை இல்லை -என்கை –

ந சாத்ம வேதீ-
ஆத்ம தர்சனம் பண்ணிப் போருமவர்களைப் போலே சொல்லி நிர்ப்பந்திகிறேன் அல்லேன் –
கர்ம யோகாநுஷ்டாநத்தாலே ஷீண பாபனானவனுக்கு ஆத்மயாதாத்ம்ய தர்சனமாய் இருக்க
அது இல்லை என்ற போதே தத் சாத்தியமான ஜ்ஞானம் இல்லாமை அர்த்த சித்தமாய் இருக்க -ஜ்ஞானம் இல்லை -என்கிறது – பஹூ நாம் ஜன்ம நாமந்தே ஜ்ஞான வான் – என்று
ஜன்மாந்தர சம்ஸ் காரத்தாலே ஜ்ஞானம் பிறக்கலாம் இறே என்னில் -அதுவும் இல்லை
-என்கிறார் –(பஹுூநாம்‌ ஜந்மநாமந்தே ஜ்ஞாநவாந்‌ மாம்‌ ப்ரபத்யதே வாஸுதேவஸ்‌ ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப,: || [பல ஜன்மங்களுக்குப்‌ பின்‌ ஜ்ஞானியானவன்‌ **வாஸு தேவனே (எனக்கு)எல்லாம்‌”என்‌று என்னை உபாஸிக்கிறான்‌. அப்படிப்பட்ட மஹாத்மா மிகவும்‌ கிடைத்தற்கரியவன்‌)

நபக்திமாம் ஸ்தவச சரணாரவிந்தே
இவ்வாத்மாவுக்கு நாதனாய் இருந்துள்ள உன்னுடைய நிரதிசய போக்யமான திருவடிகளில்
அனவரத பக்தியை உடையேன் அல்லேன் –கர்ம ஜ்ஞானங்களை அங்கமாக வுடைத்தான பக்தி
அங்கம் தான் இல்லை -என்ற போதே இதுவும் இல்லை அன்றோ -என்னில் பூர்வோக்த பிரகாரத்திலே ஜன்மாந்தர சம்ஸ்காரம் உதவி உண்டாகலாம் இறே-குளித்து மூன்று அனலை -திரு மாலை -15
நோற்ற நோன்பு -திருவாய் மொழி -5-7-1–கறவைகள் பின் சென்று -திருப்பாவை -28-என்று-

அகிஞ்சநோ –என்று அனுதாபம் -என்ன-இவை உண்டாகைக்கு உறுப்பான ஆத்ம குணம் என்ன
அதிகாரி சக்தி வாஞ்சாதிகள்-என்ன இவற்றை உடையேன் அல்லேன் –அநந்ய கதிஸ்
–இப்படி நம்மைக் கிட்டுககைக்கு கைம்முதல் இல்லை யாகில் புறம்பே ரஷகராய் இருப்பார் பக்கலிலே போனாலோ -என்னில்-புறம்பு ஒரு புகல் இல்லை -என்னுதல் –-உன்னை விட்டு ஒன்றும் ஆற்ற கிற்கின்றிலேன் -திருவாய்மொழி -5-7-1-என்கிறபடியே உன்னை ஒழியச் செல்லாது -என்னுதல்

சரண்ய
தன் பக்கல் முதல் இல்லாதார்க்கு-சரண வரண அர்ஹன் இறே-நிருபாதிக சரண்யர் ஆகையாலே ருசியே வேண்டுவது-தேவரைப் பெறுகைக்கு ஒரு கைம் முதல் வேண்டா விறே –

த்வத் பாத மூலம் –
தேவர் திருவடிகளை –-மூலம் என்றது சௌலப்யாதி குணங்களையும் இதர அவயவங்களையும் ஒழிய
திருவடித் தாமரைகளை நினைக்கிறது

சரணம் ப்ரபத்யே
விரோதி நிவ்ருத்தி பூர்வகமான-கைங்கர்ய சித்திக்கு உபாயமாக அத்யவசிக்கிறேன் –-மாம் ஏகம் சரணம் வ்ரஜ –என்ற தேவரீர் திருவடிகளே மூலம் –உபாயே கருக ரஷித்ரோ- (உபாயே க்‌,ருஹ ரக்ஷித்ரோஸ்‌ ஸப்‌தஸ்‌ ஸரணமித்ய்யம்‌ |வர்த்ததே ஸாம்ப்ரதம்‌ சைஷ உபாயார்த்தை,கவாசக: ॥ [ஸரணம்‌ என்னும்‌ இந்த வார்த்தை–உபாயம்‌, வீடு, காப்பாற்றுபவன்‌ என்னும்‌ அர்த்தங்களில்‌ வழங்கப்‌ படுகிறது. இப்போது இது “உபாயம்‌” என்னும்‌ அர்த்‌தத்தையே சொல்லுவதா யிருக்கிறது)அஹிர்புத்ன்ய சம்ஹிதையிலே இதினுடைய ஸ்வரூபம் சொல்லுகிறது-அஹம் அஸ்ம் அபராதா நாம் ஆலய-ஸ்வ தாஸ்வதரே-யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்-(அஹமஸ்ம் யபராதாநாமாலயோ அகிஞ்சநோ5க,த: ॥ த்வமேவோபாயபூ,தோ மே ப,வேதி ப்ரார்த்தநாமத: ॥ ஸரணாக,திரித்யுக்தா ஸா தேவே ஜஸ்மிந்‌ ப்ரயுஜ்யதாம்‌ || [நான்‌ குற்றங்களுக்கு ஓர்‌ இருப்பிடமாயிருக்கிறேன்‌.(என்னை ரக்ஷித்துக் கொள்ள) ஒரு உபாயமுமற்றவனாயிருக்‌கிறேன்‌. உன்னை யொழிய வேறு கதியில்லாதவனா யிருக்‌கிறேன்‌. நீயே எனக்கு உபாயமாக ஆவாயாக” என்று ப்ரார்த்திக்கும்‌ புத்தியே ஸரணாகதியெனப்படுகிறது. அது இந்த பகவான்‌ விஷயத்தில்‌ செய்யப்படட்டும்‌-

இந்த ஸ்லோகத்தாலே-அதிகாரி ஸ்வரூபமும்-சரணாகதி பிரயோகமும் சொல்லிற்று –(நோற்ற நோன்பிலேன் நுண் அறிவிலேன்-குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள் அந்தணமை தன்னை ஒளித்திட்டேன் என் கண் இல்லை-நின் காணும் பக்தனும் அல்லேன் புகல் ஒன்றும் இல்லா அடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே-இந்த ஸ்லோகம் -இவற்றை அனுசந்தித்திக் கொண்டே பகவத் சந்நிதிகளில் நாம் சேவிக்க வேண்டும் -)

நிலை பெறக் கரும நிடடை நின்றிலேன் ஞானம் இல்லேன்
மலரடி இணையைப் பற்றும் அன்பினை வகித்தேன் அல்லேன்
இலை சரண்யனும் வேறு சாதனமும் ஒன்றும் இல்லேன்
தலைவ நின் பாத மூலம் சரண் எனப் பற்றுவேனே
–22—உன் திருவடிகளை அடைந்து நிலை பெறுவதற்கு அவஸ்யமான கர்ம யோகத்தில் நிஷ்டை யுடையேன் அல்லேன்-ஞான யோகமும் யுடையேன் அல்லேன்-உன் திருவடித் தாமரைகளில் பக்தி யுடையவனும் அல்லேன்-இவைகள் இல்லை என்று அனுதாபம் யுண்டாவதற்கு ஏற்ற ஆத்ம குணம் யுடையேனும் அல்லேன்-ஏ ஸர்வ சரண்யனான ஸ்வாமியே -விரோதி நிவர்த்தக பூர்வகமாக கைங்கர்ய ப்ராப்திக்கு உபாயமாக உன் திருவடிகளையே சரணமாகப் பற்றுகிறேன் –

ஸ்லோகம் -23- அவதாரிகை –அனுகூலங்கள் இல்லை என்று வெறுக்க வேண்டா-உண்டான யோக்யதையையும் அழிக்க வற்றான-நிஷித்த அனுஷ்டானங்கள் இல்லை யாகில்-நன்மைகளை உண்டாக்கிப் புருஷார்த்தத்தையும் தருகிறோம் -என்று பகவத் அபிப்ராயமாக பிரதிகூலங்களாலே பூரணன்-என்கிறார்-எம்பெருமான் “உம்மிடத்தில் நன்மைகள் இல்லை என்றாலும் சரி; ஆனால் உம்முடைய தகுதியைக் குலைக்கும் தடை செய்யப்பட்ட விஷயங்களில் ஈடுபாடு இல்லாமல் இருந்தாலே, நானே உமக்கு நன்மைகளை உண்டாக்கி பேற்றையும் கொடுப்பேன்” என்று சொல்லுவதாக எண்ணி “நான் தீமைகளின் முழுமையான வடிவமாக இருக்கிறேன்” என்கிறார் ஆளவந்தார் .

ந நிந்திதம் கர்ம ததஸ்தி லோகே
சஹஸ்ரசோ யன்ன மயா வ்யதாயி
ஸோ அஹம் விபாகா வஸ்ரே முகுந்த
க்ரந்தாமி ஸம்ப்ரத்ய கதிஸ் தவாக்ரே
—23-

முகுந்த–பகவானே
யத் நிந்திதம் கர்ம –யாதொரு சாஸ்த்ரங்களாலும் சிஷ்டர்களாலும் நிந்திக்கப்பட்ட பாப க்ருத்யமானது
மயா சஹஸ்ரச–அடியேனால் பல்லாயிரம் தடவை
ந வ்யதாயி– செய்யப்பட வில்லையோ
தத் லோகே நாஸ்தி -அப்படிப்பட்ட தீவினை உலகத்திலேயே இல்லையே
ஸோ அஹம் –அப்படிப்பட்ட கடு வினைகளைச் செய்தவனான அடியேன்
விபாகா வஸ்ரே ஸம்ப்ரத்ய-அக் கடு வினைகள் பலன் கொடுக்கும் தருணமாகிய இப்போது
அகதிஸ்–வேறு கதி அற்றவனாய்
க்ரந்தாமி தவாக்ரே —உன் முன்னிலையில் காத்திருக்கின்றேன்

மோக்ஷத்தைக் கொடுக்கும் ஸ்வாமியே! பல்லாயிரம் முறை என்னால் செய்யப்படாத நிந்திக்கப்பட்ட கர்மங்கள் சாஸ்த்ரங்களிலேயே இல்லை; இப்பொழுது, என்னுடைய பாபங்கள் பலன் கொடுக்கும் சமயத்தில், வேறு புகல் இல்லாததால், நான் தேவரீர் திருமுன்பே நின்று கதறுகிறேன்.

ந நிந்திதம் கர்ம ததஸ்தி லோகே சஹஸ்ரசோ யன்ன மயா வயதாயி சஹஸ்ரசோ யன்ன மயா வயதாயி நிந்திதம் கர்ம-தத் லோகே நாஸ்தி-ஆயிரம் மடங்கு என்னால் பண்ணப் படாதது-யாதொரு நிந்தித்த கர்மம் உண்டு-அதி பாதக மஹா பாதகாதிகள்-அது சாஸ்த்ரத்தில் இல்லை-அனுஷ்டாதாக்கள் பக்கல் இல்லாத நிஷித்தங்களும் சாஸ்த்ரத்திலே காணலாம் இறே–ஸோ அஹம் –-நிஷித்தங்களை அனுஷ்டித்து பிராயச் சித்தங்களிலும் இழியாதே தப்பச் செய்தோம் என்கிற அனுதாபமும் இன்றிக்கே
இருக்கிற நான்-விபாகா வஸ்ரே –அவை பக்வமாய் அனுபவத்தை ஒழியப் போக்கிடம் இல்லாத
அவஸ்தையிலே-முகுந்த-முக்தி பூமி பரத-இத் துர்தசையை ப்ராப்தனானவனுக்கும்-தேவரே உஜ்ஜீவன ஹேது என்னும்-இத்தையே புத்தி பண்ணி-துரா சாரோ அபி சர்வாசீ கருதக் நோ நாஸ்திக –
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் வதார்ஹமபி காகுத்ச்த க்ருபயா பர்யா பாலயத் தஸ்மாதபி வத்யம் பிரபன்னம் ந ப்ரதி ப்ரயச் சந்தி அஹிர் புத்ன்ய சம்ஹிதாயாம் அநேநைவ ப்ரபன்னச்ய பகவந்தம் ஸ நாதனம் தஸ்யா நுபந்தா பாபமா நஸ் சர்வே நச்யந்தி தத் ஷணாத் கரு தான்ய நேன சர்வாணி தபாம் சி தபதாம் வர சர்வே தீர்த்தாஸ் சர்வ யஜ்ஞ்ஞாஸ் சர்வ தாநானி தத் ஷணாத் க்ருதாந்யே தேன மோஷச்ச தஸ்ய ஹஸ்தே ந சம்சய
-(து.ராசாரோ$பி ஸ்வாமீ க்ருதக்‌நோ நாஸ்திக; புரா।| ஸமாஸ்ரயேதராதி,தே;வம்‌ ஸ்ரத்‌,தயா ஸ்ரணம்‌ யதி, ॥ நிர்தோஷம்‌ வித்‌தி, தம்‌ ஐந்தும்‌ ப்ரபாவாத்‌ பரமாத்மந:।![அநாதிகாலமாக ஒருவன்‌ கெட்ட ஒழுக்கமுள்ள வனாகவும்‌, எதையும்‌ சாப்பிடுபவனாகவும்‌, செய்ந்நன்‌றி மறந்தவனாகவும்‌, நாஸ்திகனாகவும்‌ இருந்த போதிலும்‌, ஆதிதேவனாகிற பகவானை ஸ்ரத்தையுடன்‌ ஸரணமடைவானாகில்‌, அந்த மனிதனை, பரமாத்மாவினுடைய மஹிமையினாலே தோஷமற்றவனாக அறிவாயாக.)([இந்த மந்த்ரத்தால்‌ பழைமையான அந்த பகவானை ஸரணமடைந்தவனுக்கு, அவனை ஒட்டியிருக்கும்‌ எல்லாப்‌ பாபங்களும்‌ அந்த க்ஷணத்திலேயே நஸிக்கின்‌ றன. முனி ஸ்ரேஷ்ட,ரே ! இவனால்‌ எல்லாத்‌ தவங்களும்‌ செய்யப்‌ பட்டன. எல்லாத்‌ தீர்த்தங்களும்‌, எல்லா யஜ்ஞங்களும்‌, எல்லா தானங்களும்‌ அந்த க்ஷணத்திலேயே இவனால்‌ செய்யப்பட்டன. மோக்ஷ்மும்‌ இவனுடைய கையிலிருக்‌ கிறது. (இதைப் பற்றி) ஸந்தேஹமில்லை)

அகதி-தேவரீர் உடைய நீர்மையே அன்றியே-என்னுடைய கதி ஸூந்யதையே ஹேதுவாக-க்ரந்தாமி ஸம்ப்ரததி – ஸம்ப்ரததி -க்ரந்தாமி-க்ரந்தாமி -கதறுகிறேன்-தேவரீருக்கு பரிஹரிக்க ஒண்ணாத தசையிலே-தேவர் பக்கல்-குண ஹானியை சம்சிக்கும் படி-சாதனா அனுஷ்டானம் பண்ணிப் பலம் பெறாதாரைப் போலே கூப்பிடா நின்றேன்-தவாக்ரே –-தவ அக்ரே-ஹரீரேஷா ஹி மமாதுலா -(ப்ரஸீத,ந்து ப,வந்தோ மே ஹ்ரீரேஷா ஹி மமாதுலா | யதீத்‌ரு ஸைரஹம்‌ விப்ரைருபஸ்தேயை ருபஸ்தி,த: || [(முனிவர்களே!) நீங்கள்‌ உகந்தருளுவீர்களாக, வந்து அடையத் தகுந்த பெரியோர்களான உங்களால்‌ (நான்‌) அடையப்பட்டபடியால்‌, எனக்கு இப்போதிருக்கும்‌ லஜ்ஜை மிக அதிகமாயிருக்கிற) என்கிற தேவர் திரு முன்பே

(லோக சப்தம் -சாஸ்த்ரத்திலே -என்றவாறு-காரொளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன் யாருளர் களைகண் அம்மா அரங்க மா நகருளானே –பாசுரம் தழுவிய ஸ்லோகம்-தவ அக்ரே க்ரந்தாமி-ருணம்-என்று திரௌபதி கோவிந்தா கதறலுக்கு உதவவில்லையே என்ற புண் பட்ட தேவரீர் முன்னே அன்றோ கதறுகின்றேன் -)

பிரதிபந்தக சாமாக்ரிகள் என்னிடத்தில் அளவற்றவை உண்டு என்கிறார்-நான் செய்யாத இழி தொழிலே உலகிலே இல்லையே –ஒப்பற்ற பாபாத்மா-லோகே -சாஸ்திரத்தில் -என்பதே மிக பொருந்தும்
ஆயிரம் மடங்கு என்னால் பண்ணப் படாதது யாதொரு நிந்தித்த கர்மம் உண்டு-அதி பாதக மஹா பாதகாதிகள் அது சாஸ்த்ரத்தில் இல்லை -அனுஷ்டாதாக்கள் பக்கல் இல்லாத நிஷித்தங்களும்
சாஸ்த்ரத்திலே காணலாம் இறே- இது ஒரு சமத்காரச் சொல்லாகும்-பாபங்களை அதிகமாகச் செய்தாலும் பின்பு அஞ்சி அனுதாபமோ வெட்கமோ படாமலும்-பிராயச்சித்தமோ செய்யாமல் துன்பங்களை அனுபவிக்க முடியாமல் கதறுகின்றேன்முகுந்த-முக்தி பூமி பரத-இத் துர்தசையை ப்ராப்தனானவனுக்கும் தேவரே உஜ்ஜீவன ஹேது என்னும்-இத்தையே புத்தி பண்ணி கதறுகின்றேன்
கார் ஒளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன் ஆர் உளர் களை கண் அம்மா-அரங்க மா நகர் உளானே –திருமாலை -போலே-கோவிந்தா என்று திரௌபதி கதறினது உன் திரு உள்ளத்தை புண் படுத்திற்றே-இப்பொழுது என் கதறுதலுக்கு பரிஹாரம் செய்யா விடில் அது வெளி வேஷம் என்று
நிச்சயிக்கலாமே என்பது உள்ளுறைப் பொருள் –

பலமுறை யான் இயற்றா பாதக் கணங்கள் தம்முள்
உலகினில் ஒன்றும் இல்லை யுறு பலன் எனை வதைப்ப
நிலை குலைந்து ஏங்கி வேறு கதியிலேனாகி நின் முன்
கலியுடன் முகுந்த வின்றுக் கதறியே கரைகின்றேனே
–23—பலதடவைகளில் என்னால் பண்ணப்படாத மஹா பாதகக் கணங்களுள் ஒன்றேனும் இவ்வுலகின் கண் இல்லை-ஏ முகுந்த அப்பாவங்கள் பக்வ தசையை அடைந்து பலத்தை எனக்கு விளைவிக்க-இதை அனுபவித்து உழன்று நிலை குலைந்து ஏங்கி வேறே கதி ஒன்றும் இலேயேனாய் உன் முன்பு இப்பொழுது கதறிக் கரைகின்றேன் –

ஸ்லோகம் -24-அவதாரிகை –உம்முடைய பூர்வ வ்ருத்தி இதுவாய் இருக்க –க்ரந்தாமி -என்று நம் குற்றம் போலே கூப்பிடுவது எத்தாலே -என்ன –சம்சார ஆர்ணவத்திலே அழுந்துகிற எனக்கு-நிர்ஹேதுக கிருபையாலே உன் வாசியை அறிவித்தாய் –-கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்தந்தந்தோ -திருவாய் மொழி -10-10-2- என்கிற ப்ராங் ந்யாயத்தாலே உன் திருவடிகளை ப்ராபிக்கைக்கும் அந்த கிருபையே ஹேது என்று தயைக ரஷ்யத் வத்தாலே கூப்பிடுகிறேன் -என்கிறார் –எனக்கு தேவரை லபிக்கை பெறாப் பேறு ஆனாப் போலே இறே தேவருடைய கிருபைக்கும் என்னுடைய லாபம் -என்கிறார் –ஆளவந்தார் எம்பெருமானை அழைத்து “உன்னுடைய கருணையே எனக்கிருக்கும் ஒரே புகல்” என்கிறார்;-ஆளவந்தார் “உன்னை அடைவது எனக்கு எப்படி ஒரு பாக்யமோ, உன்னுடைய கருணைக்கும் நானே தகுதியான பேறு” என்கிறார்.

நி மஜ்ஜதோ அநந்த பவ அர்ணவ அந்தஸ்
சிராய மே கூலம் இவ அஸி லப்த
த்வயாபி லப்தம் பகவந் நிதா நீம்
அநுத்தமம் பாத்ரம் இதம் தயாயா
—24-

தேச கால வஸ்துக்களினால் எல்லையிலாத ஸ்வாமியே! இந்த ஸம்ஸாரக் கடலில் பல காலமாக மூழ்கியிருக்கும் எனக்கு நீ கரையைப் போலே வந்தாய்; பகவானே! உன்னுடைய கருணைக்கு நானே தகுந்த பாத்திரம்.

ஹே அநந்த-எல்லை அற்ற குண விபூதியை உடைய பெருமானே
பவ அர்ணவ அந்தஸ்-சம்சாரமாகிற கடலினுள்ளே
அநந்த பவ அர்ணவ அந்தஸ்-சேர்த்தும் -கரை காண ஒண்ணாத சம்சாரக் கடலினுள்ளே என்றுமாம்
நி மஜ்ஜதோ மே -மூழ்கிக் கொண்டே இருக்கிற அடியேனுக்கு
சிராய கூலம் இவ அஸி லப்த–நெடு நாள் களித்து கரை போலே நீ கிடைத்தாய்-ஆவாரார் துணை என்று அலை நீர் கடலுள் அழுந்தும் நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்க-என்பதை அடி ஒற்றி அருளிச் செய்தபடி சனகாதிகளைப் போலே கண் பற்றிலே இருந்தேனோ –த்வயாபி பகவந் –பகவானே உன்னாலும்-தயாயா- அநுத்தமம் பாத்ரம் இதம் இதா நீம் லப்தம்-உனது அருளுக்கு சிறந்த பாத்ரமாகிய
இந்த வஸ்து-நான் -அடையப் பெற்றது –-எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய -உன்னுடைய கிருஷியும் பலித்ததே-என்பதை நீ நோக்கி அருள வேணும்

நி மஜ்ஜதோ அநந்த பவ அர்ணவ அந்தஸ்-அநந்த பவ அர்ணவ அந்தஸ் நி மஜ்ஜதோ-த்ரிவித பரிச்சேத ரஹித என்னுடைய சம்சாரத்தைப் பரிச்சேதிக்கிலும் தேவருடைய பிரபாவத்தை பரிச்சேதிக்க ஒண்ணாது -என்கை –பவார்ணவ விசேஷணமாய்-கரை காண ஒண்ணாத சம்சார அர்ணவத்திலே
ஆவாரார் துணை என்று அலை நீர்க் கடலுள் அழுந்தும்
-திருவாய்மொழி -5-1-9- என்கிறபடியே
அழுந்துகிற எனக்கு -என்னவுமாம் –சனகாதிகளைப் போலே கண் பற்றிலே இருந்தேனோ –சிராய-மே
அநாதி காலம் எல்லாம் அழுந்து இருக்கும் எனக்கு –அழுந்துகை ஒழிய பரிஹாரம் பார்க்க அறியாத எனக்கு-கூலம் இவ அஸி லப்த-உன் பேர் அருளால் இக்கரை ஏறி -பெரியாழ்வார் திருமொழி -5-3-7-என்னும்படி அழுந்துகிற இடத்தில் கரை கிட்டினால் போலே லப்தனாகா நின்றாய்–த்வயாபி லப்தம் –
தேவராலும் லபிக்கப் பட்டது –-எனக்கு தேவர் பெறாப் பேறு ஆனாப் போலே இறே-எதிர் சூழல் புக்குத் -திருவாய் மொழி -2-7-6- திரிந்த தேவர்க்கும் இவ் வஸ்து –பகவந் –ஜ்ஞானாதி குண பூரணரான-தேவருடைய பேறு என்னும் இடம் நான் சொல்ல வேண்டுமோ -என்கை–இதா நீம்--தேவரும் நம்மை அற்று விடும்படியான துர் தசையிலே–அநுத்தமம் பாத்ரம் – உத்தமோத்தமான பாத்ரம்-இதம் –
ரஷக அபேஷைக்கு இனி இல்லை என்னும் இவ் வஸ்து-தயாயா--ரஷ்ய விஷயம் உண்டாகில் தான்
உண்டாம் தேவர் தயைக்கு –

(அநந்த-விசேஷணம் ஸ்வரூப குண விபூதிகளுக்கும் -எல்லை அற்ற இவை –பாவார்ணவம் -எல்லை அற்ற –தூராக் குழி -கரை காண ஒண்ணாத சம்சார கடலுக்கும் –ஆவாரார் துணை என்று அலை நீர் கடலுள் அழுந்தும் நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்க – சேதன லாபம் அவனுக்கே -எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய – நிர்ஹேதுக கிருபையினால் கைக் கொண்டே தீர வேண்டிய நிலைமை யுண்டே என்று விஞ்ஞாபனம் – -)

ஆகவே ரஷ்யனான எனக்கும் ரக்ஷகனான உனக்கும் லாபம் கிடைக்க நேர்ந்த இப்பொழுது இழக்கலாமா என்று அற்றோ கதறுகின்றேன்-என்னிடத்தில் யோக்யதைக் கண்டு நீ கைக் கொள்ள விஷயம் இல்லாவிடினும்-உன்னுடைய நிருஹேதுக கிருபையினால் கைக் கொண்டே தீர வேண்டிய நிலை யுண்டே என்று விஞ்ஞாபித்தபடி-உன் பேர் அருளால் இக்கரை ஏறி –பெரியாழ்வார் திருமொழி -5-3-7-என்னும்படி அழுந்துகிற இடத்தில் கரை கிட்டினால் போலே லப்தனாகா நின்றாய்–அநுத்தமம்-ந வித்யதே உத்தமம் யஸ்மாத் தத் -வ்யுத்பத்தி — இதற்கு மேல் சிறந்தது இல்லை என்னும்படி லோக உத்தமமானது என்றபடி –

பவம் என்னும் பரவை தன்னுள் பகவ நீடு ஊழியாகக்
கவலையோடே அழுந்தும் எற்கு ஓர் கரையென யகப்பட்டாய் காண்
உவமையில் யுன் தயைக்கோர் யுத்தமே யுரிமை பூண்ட
வவலமார் இதுவும் உன்னால் அடை தலைப் பெற்றது இன்றே
–24–அநேக ஊழிகளாக ஸம்ஸாரம் என்னும் பெரும் கடலில் கவலையோடு கூடி அழுந்தி-வேறு பரிகாரம் அறியாத எனக்கு ஒரு கரை போலே நீ அகப்பட்டாய்-இது எங்கனம் இருக்க -ஏ ஸ்வாமியே-உன்னுடைய இணை இல்லாத தயைக்கு உத்தம உத்தமமான ஒரு விஷயமாக இந்த அவல வஸ்துவும் உன்னால் இப்பொழுது அடையப் பெற்றது

ஸ்லோகம் -25- அவதாரிகை –நம் பக்கல் ந்யஸ்த பரராய் இருக்கிற உமக்கு-தத் தஸ்ய சத்ருசம் பவேத் -(ஸரைஸ்து ஸங்குலாம்‌ க்ருத்வா லங்காம்‌ பரப,லார்த;ந; | மாம்‌ நயேத்‌ யதி, காகுத்ஸ்த,ஸ்‌ தத்‌ தஸ்ய ஸத்‌,ருஸம்‌ ப,வேத்‌ || [ஸத்ருக்களின்‌ பலத்தை ஒழிப்பவரான ஸ்ரீராம பிரான்‌ லங்கையை பாணங்களாலே கலங்கச் செய்து என்னை அழைத்துப்‌ போவாராகில்‌, அப்படிச்‌ செய்வது அவருக்கே தகுந்ததாகும்‌)என்கிறபடியே கண்டிருக்கை ஸ்வரூபமாய் இருக்க இங்கனே நிர்பந்திக்கக் கடவீரோ -என்ன-என்னுடைய அனர்த்தத்தை பரிஹரிக்கச் சொல்லுகிறேன் அல்லேன் –ஆஸ்ரிதர்க்கு விஷயங்களால் வரும் பரிபவம் ரஷகரான தேவருக்கு தேஜோ ஹாநி -என்று அத்தைப் பரிஹரிக்கச் சொல்லுகிறேன் என்கிறார்-எம்பெருமான் “உம்முடைய பாரத்தை முழுவதுமாக என்னிடம் வைத்த பின்பு, நீர் ஸ்ரீராமாயணம் ஸுந்தர காண்டம் 9.30இல் ‘தத் தஸ்ய ஸத்ருஶம் பவேத்’ (ஸ்ரீராமனே லங்கையை அழித்து என்னை ரக்ஷிப்பதே அவன் தன்மைக்குச் சேர்ந்தது – ஆகையால் நான் அவர் வரும் வரை காத்திருப்பேன்) என்றபடி இருக்க வேண்டாமோ? எதற்காக உடனே நான் உமக்கு உதவ வேண்டும் என்று நிர்பந்தம் செய்கிறீர்?” என்று கேட்க,-ஆளவந்தார் “என்னுடைய துயரத்தைப் போக்கும்படி நான் கேட்க வில்லை; உன்னுடைய அடியார்கள் இவ்வுலகில் துன்பப்பட்டால்-அது உன்னுடைய பெருமைக்குத் தானே அவப் பெயர்; அதைப் போக்கிக் கொள்ளும்படி ப்ரார்த்திக்கிறேன்” என்கிறார்.

அபூத பூர்வம் மம பாவி கிம் வா
சர்வம் சஹே மே சஹஜம் ஹி துக்கம்
கிந்து த்வதக்ரே சரணாக தா நாம்
பராபவோ நாத ந தே அநுரூப
—–25-

ஸ்வாமியே! இதுவரை அனுபவிக்காத எந்தப் புதிய துன்பம் எனக்கு ஏற்படப்போகிறது இப்போது?
இந்தத் துன்பங்களை நான் பொறுத்துக்கொள்கிறேன்; இவை என்னுடன் பிறந்தவை;-ஆனால் உன்னிடம் சரணடைந்தவர்களுக்கு தேவரீரின் திருமுன்பே ஒரு அவமானம் ஏற்பட்டது என்றால்,
அது தேவரீருடைய பெருமைக்குச் சேராது.

ஹே நாத-
அபூத பூர்வம் மம -அடியேனுக்கு இதற்கு முன்பு உண்டாகாத
கிம் வா துக்கம்-பாவி –என்ன துக்கம் புதிதாக உண்டாகப் போகிறது -ஒன்றுமே இல்லையே
துக்கம் மே சஹஜம் ஹி -துக்கம் என்பது என்னுடன் கூடவே பிறந்தது அன்றோ
சர்வம் சஹே -எல்லாத் துயரங்களையும் பொறுத்துக் கொண்டே இருக்கிறேன்-தனது காய்களைப் பொறாத கொம்பு உலகில் உண்டோ
கிந்து -ஆனால்-த்வதக்ரே சரண ஆகதாநாம்–உன் எதிரிலே வந்து சரணம் புகுந்தவர்களுக்கு
பராபவோ ந தே அநுரூப—-ஒரு அவமானம் உண்டாவது உனக்குத் தகுதி அல்லவே-சர்வ ரக்ஷகன் சர்வ சக்தன் சரணாகத ரக்ஷகன் என்று எல்லாம் சொல்லப்படும் பேற்றை அன்றோ நீ இழக்க இருக்கிறாய்
நமது ஸ்வாமிக்கு அபவாதம் ஏற்படுகிறதே என்கிற பெரிய துக்கத்தைப் பொறுக்க ஒண்ணாதே
இதற்காக அன்றோ இப்பொழுது கதறுகின்றேன்எங்கனம் தேறுவர் உமர் –திருவாய் மொழி -8-1-3-என்கிறபடியே-உனக்குக் கை புகுந்தவர்களும் உன்னுடைய ரஷணத்தில் அதி சங்கை பண்ணுவார்கள் -என்கை –-ஆஸ்ரிதர்க்கு விஷயங்களால் வரும் பரிபவம் ரஷகரான தேவருக்கு தேஜோ ஹாநி –என்று
அத்தைப் பரிஹரிக்கச் சொல்லுகிறேன் என்கிறார்–என்னத் தவறாமல் ரஷித்தே தீர வேண்டும் -என்கிற பிராத்தனையில் விசித்திரமான முறை அன்றோ இது

அபூத பூர்வம் மம பாவி கிம் வா – நரக கர்ப்ப வாச ஜனன மரண க்லேசாதிகளே யாத்ரையாய்ப் போந்த எனக்கு-முன்பு அநு பூதம் அன்றிக்கே-இனி அநு பாவ்யமாய் இருப்பதொரு துக்கம் உண்டோ –-கிம் ஷேபே –சர்வம் சஹே –ஆதி வாதிகள் பர பரிபவம் சீதோஷ்ணாதிகள்-தத் விஸ்லேஷ ஜனித்த துக்கம்
இவற்றை இவர் சஹிக்க வல்லராய்ச் சொல்லுகிறார் அல்லர் –ஆத்மா நித்யன்-காலம் அநாதி
இவற்றைப் பொறுத்து உட்கொதி போலே நசியாதே கிடந்த ஆச்சர்யத்தைக் கண்டு சொல்லுகிறார்
மே சஹஜம் ஹி துக்கம் – அநாதி காலம் கர்மமே நிரூபகமாகப் போந்த எனக்கு – அதின் பலமான துக்கமும் சஹஜம் அன்றோ –கிந்து –-பொறுக்க ஒண்ணாதது ஓன்று உண்டு –த்வதக்ரே –-சர்வ சேஷியாய்-சர்வத்ர சந்நிஹிதரான தேவர் முன்பே-சரணாக தா நாம் பராபவோ –-உன் பக்கல் ந்யச்த பரராய் இருக்கும் அவர்களுக்கு-சப்தாதி விஷய ப்ராவண்யத்தால் வந்த எளிவரவு–பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ – திருவாய் மொழி -6-9-9–கிறி செய்து என்னைப் புறத்து இட்டு இன்னம் கெடுப்பாயோ -திருவாய் மொழி -6-9-8-என்று விஷய சந்நிதியே தொடங்கி எளிவரவாய் இறே அநந்ய ப்ரயோஜனர் இருப்பது–பஹூ வசனத்தாலெ சொல்லுகிறது –-ஒருத்தனுடைய எளிவரவு சஜாதீயர்க்காக வந்தது என்கை –-எங்கனம் தேறுவர் உமர் -திருவாய் மொழி -8-1-3-என்கிறபடியே
உனக்குக் கை புகுந்தவர்களும் உன்னுடைய ரஷணத்தில் அதி சங்கை பண்ணுவார்கள் -என்கை –நாத – இது தன்னரசு நாடாகில் தேவருக்கு வருவது உண்டோ உடைமை நோவுபடுகிறது உடையவனுக்கு எளிவரவு அன்றோ-ந தே அநுரூப-தே நா நுரூப-சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-என்று தேவருக்கு அநு ரூபம் அன்று-அது தனக்கு அசஹ்யம் -என்கை —

இதுவரை யான் படாத இடர் எனக்கு இனி ஓன்று உண்டோ
எதையும் நான் சகிப்பன் துக்கம் இயற்கையே எனக்கானால் யுன்
பதமுறச் சரண் அடைந்தோர் பரிபவப் படில் யுன் முன்னர்
அது உனக்கு இணக்கம் அன்றே நாத எவ்விதத்தும் அந்தோ
-25-இதுவரையும் நான் அனுபவியாத சங்கடங்களில் இனி நான் அனுபவிக்கும்படி நேரிடக்கூடிய சங்கடம் ஓன்று யுண்டோ-எதையும் நான் சகிப்பன்-காமியான எனக்கு கர்ம பலமான துக்கங்கள் ஸஹஜமே-ஆனால் ஓன்று யுண்டு -ஏ ஸர்வேஸ்வரனே உன் முன்பே உன் திருவடிகளிலே சரணம் அடைந்தோர் பரிபவப் பட்டால் அப்பரிபவம் உனக்கு எவ்விதத்திலும் தகுதி அன்று –

ஸ்லோகம் -26- அவதாரிகை –தேவர் உடைய ரஷண அபாவத்தால் வந்த தேஜோ ஹாநியையும் பாராதே
என்னைக் கைவிடும் அன்றும் நான் விடப் பார்க்கிறிலேன் -என்று தம்முடைய அகதிவத்தாலே தம்முடைய மகா விஸ்வாசத்தை ஆவீஷ்கரிக்கிறார்-ஆளவந்தார் “நீ உன்னுடைய பெருமைக்கு ஏற்படும் தோஷத்தையும் பார்க்காமல் என்னைக் கை விட்டாலும், நான் உன்னை விடமாட்டேன்” என்று தன்னுடைய அகதித்வத்தினாலே (வேறு புகலில்லாத நிலையினாலே) உண்டான மஹா விஶ்வாஸத்தை வெளியிடுகிறார்.

நிராஸ கஸ்ய அபி ந தவ உத்ஸஹே
மஹேஸ ஹாதும் தவ பாத பங்கஜம்
ருஷா நிரஸ்தோ அபி ஸிஸூ ஸ்தநந்தயோ
ந ஜாது மாதுஸ் சரனௌ ஜிஹாஸதி
——–26–

ஸர்வேஶ்வரனே! நீ என்னைத் தள்ளினாலும், நான் உன்னுடைய திருவடித் தாமரைகளை விடத் துணிய மாட்டேன்; பால் குடிக்கும் குழந்தையைத் தாயானவள் கோபத்தில் தள்ளினாலும், அக்குழந்தை தாயின் காலை விடாமல் இருக்குமா போலே.

மஹேஸ-ஸர்வேஸ்வரனே
நிராஸ கஸ்ய அபி – என்னை நீ துரத்தித் தள்ளினாலும்
தவ பாத பங்கஜம் ஹாதும் -உன்னுடைய திருவடித் தாமரையை விடுவதற்கு
ந உத்ஸஹே தாவத் –அடியேன் துணிய மாட்டேன் காண்
ஸ்தநந்தயோ ஸிஸூ–முலைப்பால் குடிக்கும் பருவமுள்ள குழந்தை
ருஷா நிரஸ்தோ அபி –கோபத்தினால் தள்ளப்பட்டாலும்-கையாலே தள்ளுகை அன்றிக்கே-காலாலே தள்ளிலும் அந்தக் காலைக் கட்டிக் கொள்ளும் அத்தனை ஒழிய புறம்பு போகப் பாராதாப் போலே-
மாதுஸ் சரனௌ -ஜாது -ந ஜிஹாஸதி—தாயாருடைய கால்களை ஒரு போதும் விடுவதற்கு விரும்ப மாட்டாது அன்றோ

நிராஸ கஸ்ய அபி –-ரஷகத்வம் ஸ்வரூபமாய் இருக்கிற தேவர்-நிராஸகராக பிரசங்கம் இல்லை – இப்படிப் பட்ட தேவர் நிஷ் கருணராய் -நிராஸகரானாலும்-தவ பாத பங்கஜம் -தாவத் -ஹாதும் -நோத்ஸஹே--ரஷகமுமாய்-ப்ராப்தமமுமாய் போக்யமுமான திருவடிகளை முந்துற முன்னம் விட்டு ஜீவிக்க ஸ்ரத்தை பண்ணு கிறிலேன்-கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும்
கொண்டானை அல்லால் அறியாக் குலமகள் போல்
-என்று தேவர் ரஷகர் அன்றியிலே ஒழிந்தாலும்
புறம்பு போக்கில்லை -என்கை –மஹேஸ – தமீஸ் வராணாம் பரமம் மகேஸ்வரம் -என்றும்-ஈச்வரஸ் சர்வ பூதா நாம் -என்றும் -சொல்லுகிறபடியே நிருபாதிக நிர்வாஹகனானவனே–(ஈஸ்வரஸ்‌ ஸர்வ பூ,தாநாம்‌ ஹ்ருத்‌,தே,ஸே 5ர்ஜுந! திஷ்ட தி। ப்‌,ராமயந்‌ ஸர்வ பூ,தாநி யந்த்ராரூடாநி மாயயா॥[ஸர்வேஸ்‌வரனாகிய வாஸுதேவன்‌ ( ப்ரக்ருதியாகிய ) யந்திரத்தில்‌ ஏறி நிற்கும்‌ எல்லா ஜீவ ராசிகளையும்‌, (ஸத்வ ரஜஸ் தமோ கு,ண மயமான) மாயையினால்‌ சுழற்றிக்‌ கொண்டிருக்கிறா)

சம்சாரத்தில் பந்தங்களைப் போலே கர்மோ பாதிகமாய் புறம்பே போய் உஜஜீவிக்கிறேனோ-ஸூஹ்ருதம் சர்வ பூதா நாம் சர்வேஷா மேவ லோகா நாம் பிதா மாதா ஸ மாதவ -(போக்தாரம்‌ யஜ்ஞ தபஸாம்‌ ஸர்வ லோக மஹேஸ்வரம்‌ | ஸுஹ்ருதஃம்‌ ஸர்வ பூ,தாநாம்‌ ஜ்ஞாத்வா மாம்‌ ஸாந்திம்‌ ருச்சதி || [யஜ்ஞங்களையும்‌, தவங்களையும்‌ புஜிப்பவனும்‌, எல்லா உலகங்களுக்கும்‌ மஹேஸ்வரனும்‌, எல்லா ஜீவராசிகளுக்‌கும்‌ நண்பனுமான என்னை அறிந்து சாந்தியை அடைகிறான்)என்னும் நிருபாதிகமான பரிவும் சம்பந்தமும் புறம்பே யுண்டாய் தேவரை விட்டுப் போய் உஜ்ஜீவிக்கவோ –ருஷா நிரஸ்தோ அபி ஸி ஸூ ஸ்தநந்தயோ – ஸ்தந்யமே தாரகமான சிசுவானது ஜனநியாலே குரோதம் அடியாக விடப் பட்டாலும்-ஸ்வ ரஷணத்தில் சக்தி இன்றிக்கே தத் ஏக ரஷ்யமான தசையைச் சொல்லுகிறது –இவ் வ்வாத்ம வஸ்து ஈஸ்வர ஏக ரஷ்யமாய் நித்ய ஸ்தனந்த்யமாய் இறே இருப்பது-அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள் தன அருள் நினைந்தே அழும் குழவி – ஈன்ற தாய் -என்றும் -அரி சினம் -என்றும் விருத்த தர்மம் – ஏக ஆஸ்ரயத்தில் சம்பவியாது என்கை-பிதாவுக்கு ஹிதார்த்தமாக குரோதம் சம்பவித்தாலும் மாத்ரு விஷயத்தில் சம்பாவனை இல்லை இறே –ஜாது- க்ருதையான போதொடு ஆதரித்த போதொடு வாசி அற-ந மாதுஸ் சரனௌ ஜிஹாஸதி –கையாலே தள்ளுகை அன்றிக்கே காலாலே தள்ளிலும் அந்தக் காலைக் கட்டிக் கொள்ளும் அத்தனை ஒழிய புறம்பு போகப் பாராதாப் போலே-(தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை — அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள் தன் அருள் நினைந்ததே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே –பாசுரம் தழுவிய ஸ்லோகம் -)(ஸர்வேஷாமேவ லோகாநாம்‌ பிதா மாதா ச மாத,வ:। கச்ச த்‌வமேநம்‌ ஸரணம்‌ ஸரண்யம்‌ புருஷர்ஷபா: || [புருஷ ஸ்ரேஷ்டர்களே ! எல்லா உலகங்களுக்கும்‌ தந்தையும்‌, தாயும்‌ லக்ஷ்மீ நாதனே; ஸரணமடையத் தகுந்த இவனை ஸரணமடையுங்கள்‌.)

ரஷகமுமாய் ப்ராப்தமமுமாய் போக்யமுமான திருவடிகளை முந்துற முன்னம் விட்டு ஜீவிக்க ஸ்ரத்தை பண்ணு கிறிலேன்–கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும் கொண்டானை அல்லால் அறியாக் குலமகள் போல் -என்று தேவர் ரஷகர் அன்றியிலே ஒழிந்தாலும் புறம்பு போக்கில்லை -என்கை – இவ்வ்வாத்ம வஸ்து ஈஸ்வர ஏக ரஷ்யமாய் நித்ய ஸ்தனந்த்யமாய் இறே இருப்பது
தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை –அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள் தன் அருள் நினைந்ததே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே -பாசுரம் தழுவிய ஸ்லோகம்-ஈன்ற தாய் -என்றும் -அரி சினம் -என்றும் விருத்த தர்மம் – ஏக ஆஸ்ரயத்தில் சம்பவியாது என்கை-பிதாவுக்கு ஹிதார்த்தமாக குரோதம் சம்பவித்தாலும் மாத்ரு விஷயத்தில் சம்பாவனை இல்லை இறே –-நீ நெறி காட்டி நீக்கப் பார்த்தாலும் நான் உன்னுடைய தின் கழலை விட்டு நீங்குவேன் அல்லேன் -என்கிற திட அத்யாவசாயத்தை வெளியிட்டு அருளுகிறார்

என்னை நீ நூக்கினாலும் ஈசனே கமலம் அன்ன
யுன்னடி ஒருக்கணத்து நீத்து நான் உய்ய மாட்டேன்
என்னையே முனிந்து நூக்கின் அவள் முலைப்பால் என்றும்
மன்னியா யடியைப் பற்றா ததை விட மனமுறாதே
–26-ஆஸ்ரித ரக்ஷணத்தையே ஸ்வரூபகமாக உடைய நீ என்னை கிருபை பண்ணாமல் தள்ளிவிட்ட போதிலும் உன் திருவடிகளை ஒரு க்ஷணமேனும் விட்டு விட்டு உஜ்ஜீவிக்க சமர்த்தன் அல்லேன்-ஏ ஸர்வேஸ்வரனே ஸ்தன்யமே தாரகமாக யுடைய ஒரு சிசுவானது கோபம் கொண்ட தன் மாதாவால் தள்ளப்பட்ட போதிலும் தன்னை ஆதரித்த காலத்தில் போலே அவளைக் காலைக் கட்டிக் கொள்ளுமே அன்றி அதை விட்டுவிட விரும்பாதது அன்றோ –

ஸ்லோகம் -27-அவதாரிகை –என்னுடைய அநந்ய கதித்வத்தாலே விட மாட்டாத அளவேயோ–தேவர் போக்யதையிலே அழுந்தின மனஸ்ஸூம் வேறு ஒன்றில் போக மாட்டாது – என்கிறார் –ஆளவந்தார் “அநந்ய கதித்வத்தினால் மட்டுமா நான் உன்னைப் பிரியாமல் இருக்கிறேன்? உன்னுடைய போக்யமான தன்மையில் என் மனம் மூழ்கியிருப்பதால், நான் வேறு விஷயங்களை விரும்ப மாட்டேன்” என்கிறார்.

தவாம்ருதஸ் யந்தி நி பாத பங்கஜே
நிவேஸி தாத்மா கத மந்யதிச் சதி
ஸ்திதே அரவிந்தே மகரந்த நிர்ப்பரே
மது வ்ரதோ நே ஷூ ரகம் ஹி வீஷதே
–27-

அம்ருதஸ் யந்திநி –அம்ருதத்தைப் பெருக்குகின்ற -மோக்ஷத்தை அளிக்கின்ற
தவ பாத பங்கஜே–உன்னுடைய திருவடித் தாமரையில்
நிவேஸி தாத்மா –வைக்கப்பட்ட மனமானது
கதம் அந்யத் இச்சதி-வேறு ஒன்றை எப்படி விரும்பும்
மகரந்த நிர்ப்பரே-அரவிந்தே -ஸ்திதே -சதி–தேன் நிறைந்த தாமரைப் பூவானது இருக்கும் பொழுது
மது வ்ரதோ இஷூரகம் ந வீஷதே–ஹி–வந்து முள்ளிப் பூவைக் கண் எடுத்தும் பார்க்க மாட்டாது அன்றோ-இஷூரகம் -முள்ளிப் பூவை-உனது திருவடித் தாமரையின் போக்யதையை நோக்கும் இடத்தில் வேறு ஒன்றினில் நெஞ்சு செல்லுமோ-ஹி-இது உபதேசிக்க வேண்டுமோ — தேவருக்கு சம்ப்ரதிபன்னம் அன்றோ-எங்குப் போய் உய்கேன் உன் இணை யடியே யடையல் அல்லால் –பெருமாள் திருமொழி -5-5-என்று இராதோ-

அதிகமான தேனைப் பெருக்கும் உன்னுடைய திருவடிகளில், உன்னுடைய க்ருபையினால் பதிந்திருக்கும் என் மனம், வேறு விஷயங்களை எப்படி ஆசைப்படும்? தேன் நிறைந்த சிவந்த தாமரை இருக்கும்பொழுது, ஒரு வண்டானது முள்ளிப்பூவை விரும்பாதன்றோ?

தவாம் ருதஸ் யந்தி நி பாத பங்கஜே –-ப்ராப்தமுமாய்-போக்யமுமான தேவர் திருவடிகளிலே-விஷ்ணோ பதே பரமே மதவ உத்ஸ – ரசோ வை ஸ –-தேனே மலரும் திருப் பாதம் -என்று (தத,ஸ்ய ப்ரியமபி, பாதோ ௮ஸ்யாம்‌। நரோ யத்ர தே,வயவோ மத;ந்தி | உருக்ரமஸ்ம ஸ ஹி பந்துரித்தரா। விஷ்ணோ: பதே, பரமே மத்‌வ உத்ஸ: | (எந்த கங்கா தீர்த்த விஷயத்தில்‌, தேவத்வத்தை விரும்பும்‌ மனிதர்கள்‌ சந்தோஷிக்கிறார்களோ, இனியதாக விருக்கும்‌ இந்த பகவானுடைய அந்த ஸ்ரீபாத தீர்த்தத்தை ஆதரவுடன்‌ பானம்‌ செய்வேனாக. அப்படிக்‌ குடிப்பவன்‌ திரி விக்ரமனுக்கு பந்து,வாவான்‌. இம் மாதிரியாக விஷ்ணுவினுடைய மேலான திருவடியில்‌ அம்ருதத்தினுடைய ப்ரவாஹம்‌ உண்டாகிறது) ஸ்ருதி சித்தம் இறே போக்யதை –நிவேஸி தாத்மா – தேவர் உடைய நிர்ஹேதுகமான ப்ரசாதத்தாலே நிவேசிக்கப் பட்ட மனஸ் ஸானது-அபோக்யமுமாய் அப்ராப்தமுமான ஹேய விஷயங்களிலே-பழகிப் போந்த மனஸ்ஸூ-ஸூரி போக்யமான தேவர் திருவடிகளிலே-அவகாஹிக்கும் போது -தேவர் ப்ரசாதமே வேண்டாவோ –கத மந்யதிச் சதி – மய்யா ஸகதம நா -(மய்யா ஸக்தமநா: பார்த்த,! யோகம்‌ யுஞ்ஜந்‌ மதராஸ்ரய: | அஸம்மயம்‌ ஸமக்‌ரம்‌ மாம்‌ யதா ஜ்ஞாஸ்யஹி தச்ச்‌ருணு! [அர்ஜுனா | என்னிடம்‌ ஈடுபட்ட மனத்தை யுடையவனாய்‌, என்னையே ஆதாரமாகக்‌ கொண்டவனாய்‌, என் விஷயத்‌தில்‌ யோகத்தை ஆரம்பித்தவன்‌, ஸந்தேஹமில்லாமல்‌ என்னை எந்த ஜ்ஞானத்தினால்‌ பூர்ணமாக அறிவானோ அந்த ஜ்ஞானத்தைக்‌ கேட்பாயாக)என்கிறபடியே-தேவர் திருவடிகளில் சக்தமான மனஸ்ஸூ தத் வ்யதிரிக்த விஷயங்களில் ஸ்ரத்தை பண்ணும்படி எங்கனே-உன் வாசியையும் அறிந்து வைத்து சைதன்ய பிரசார த்வாரமான இது-விஷயாந்தரங்களை விரும்பும்படி எங்கனே –ஸ்திதே அரவிந்தே மகரந்த நிர்ப்பரே –ஸூக ஸ்பர்சமாய்-மதுவாலே பூரணமான செந்தாமரை யானது-போக்தாக்களைக் குறித்து அவசர ப்ரதீஷமாய் இருக்க –மது வ்ரதோ –மதுவே ஜீவனமான பதார்த்தம் -என்னுதல்–மது சம்ருத்தமாய் இருக்கிற இடத்திலே பருகக் கடவோம்-என்கிற சங்கல்பத்தை உடைய பதார்த்தம் -என்னுதல்-நே ஷூ ரகம் ஹி வீஷதே-கிட்டுகையே அரிதாய் -கிட்டினாலும் நாக்கு நனையப் போராதே இருக்கிற முள்ளிப் பூவிலே சென்று பணியாது ஒழிகை அன்றிக்கே-கடாஷிப்பதும் செய்யாது –ஹி-இது உபதேசிக்க வேண்டுமோ தேவருக்கு சம்ப்ரதிபன்னம் அன்றோ-எங்குப் போய் உய்கேன் உன் இணை யடியே யடையல் அல்லால் –பெருமாள் திருமொழி -5-5-என்று இராதோ-

(அம்ருதஸ்யந்தி நி பாத பங்கஜே-அம்ருதத்தை பெருக்கும் -மோக்ஷத்தை அளிக்கும் –-உன்னுடைய திருவடித் தாமரையில் –உன் தேனே மலரும் திருப் பாதம் –இஷூரகம் -முள்ளிப் பூவை-நிவேஸி தாத்மா தேவர் உடைய நிர்ஹேதுகமான ப்ரசாதத்தாலே-நிவேசிக்கப் பட்ட மனஸானது-என்பதே சிறந்த அர்த்தம்-ஸ்தாபிக்கப் பட்ட மனம் உடையவன் -என்ற அர்த்தம் சிறப்புடையது இல்லை )

உன் தேனே மலரும் திருப்பாதம்-அம்ருதம் -தேன் என்றும் மோக்ஷம் என்றும் –-சப்த சக்தியால் மோக்ஷ பிரதத்வத்தையும் கொள்ளலாம் என்று ஸ்ரீ தேசிகர் திரு உள்ளம்நிவேஸி தாத்மா-தேவர் உடைய நிர்ஹேதுகமான ப்ரசாதத்தாலே நிவேசிக்கப் பட்ட மனஸ் ஸானது-அபோக்யமுமாய் அப்ராப்தமுமான ஹேய விஷயங்களிலே பழகிப் போந்த மனஸ்ஸூ ஸூரி போக்யமான தேவர் திருவடிகளிலே அவகாஹிக்கும் போது தேவர் ப்ரசாதமே வேண்டாவோ –-நிவேசித ஆத்மா யஸ்ய ச -பஹு வ்ரீஹி சமாசம் -ஸ்தாபிக்கப்பட்ட மனம் -என்பது-ஸ்ரீ தேசிகர் ஸ்ரீ ஸூக்தி விருத்தமாகும் -அஸ்வரஸமும் ஆகும் –

நின்னருள் தன்னால் அமுதினைப் பொழியும் அம்புயத்தாள் களின் நிலையாய்
மன்னிய மனதும் உன்னையே யன்றி மற்றதை நாடல் எங்கனமாம்
தன்னுயிர்க்கு அரிய மதுவினை நிரம்பத் தாமரை கொண்டு அலர்ந்திருப்பப்
பின்னும் உள்ளியினைப் பிரமரம் கண்ணால் நோக்கவும் நோக்கிடாது அன்றோ
-27-உனது தேனே மலர்ந்த திருவடித்தாமரைகளில் உன் நிர்ஹேதுக கிருபையாலே நிலையாகச் செலுத்தப்பட்ட
மனஸ்ஸானது உன்னைத் தவிர வேறு விஷயத்தை எப்படி இச்சிக்கக் கூடும்-தேனை நிரம்பக் கொண்டு தாமரைப் புஷ்பமானது மலர்ந்து இருப்ப தேனையே யுண்டு ஜீவிக்கும் வண்டானது அதை விட்டு விட்டு நெருங்கிச் செல்லவே ஸ்ரமமாயும் ஸ்ரமப்பட்டு நெருங்கினும் அற்பமான தேனை யுடையதுமான
முள்ளிப் பூவைக் கண் எடுத்தும் பாராது அன்றோ –

ஸ்தோத்ரம் -28-அவதாரிகை –ந தர்ம நிஷ்ட்டோஸ்மி-யிலே தேவர் திருவடிகளை லபிக்கைக்கு அனுகூலங்கள் ஒன்றும் இல்லை -என்றார்-அவ்வளவே அன்று -பிரதிகூலங்களால் பூரணன் -என்றார்
இப்படிப் பட்ட எனக்கும் பேற்றில் வந்தால் தேவர் கிருபையே பயாப்தம் என்றார்
இப்படி ந்யஸ்த பரனான என் பக்கலிலே விரோதி மேலிடுகை தேவர்க்கு தேஜோ ஹாநி -என்றார்
அத்தை பாராதே தேவர் கை விட்ட அன்றும் புறம்பு போக்கில்லை -என்றார்-இனி மேல்
த்வத் பாத மூலம் சரணம் பரபத்யே -என்று பண்ணின பிரபத்தி ஒன்றும் அமையுமோ-விரோதி நிவ்ருத்திக்கும் அபிமத சித்திக்கும் –என்ன–மநோ வாக் காயங்கள் மூன்றாலும் பண்ணின பிரபத்தி எல்லாம் வேண்டுமோ –-பத்தாஞ்சலி புடம் தீநம் யாசந்தம் சரணாகதம் -(பத்‌தாஞ்ஜலிபுடம்‌ தீநம்‌ யாசந்தம்‌ ஸ்ரணாக;தம்‌ | ந ஹந்யாதரந்ருமம்ஸ் யார்த்தமபி மத்ரும்‌ பரந்தப ||(ஸத்ருக்களைத்‌ துன்புறுத்துபவனே | இருப்பிடத்துக்கு வருதல்‌, கை குவித்தல்‌ என்னும்‌ காயிக ப்ரபத்தியை யாவது, மனத்திலே தைர்யமாகிற மானஸ ப்ரபத்தியை யாவது, வாயாலே ப்ரார்த்திப்பதாகிற வாசிகப்ரபத்தியையாவது செய்தவனை, ஸத்ருவாயிருந்தபோதிலும்‌, “இவன்‌ இரக்க மற்றவன்‌” என்னும்‌ அபவாதம்‌ வாராமைக்காக ஹிம்‌ஸிக்கக்கூடா து)என்கிற காயிகமான அஞ்சலி ஒன்றுமே அமையாதோ -என்கிறார் இதில்-ஆளவந்தார் “எனக்கு நீ உதவுவதற்கு நான் ஒரு முறை அஞ்சலி (கை கூப்புதல்) செய்வது அமையாதோ?” என்று அருளிச் செய்கிறார்..

த்வத் அங்க்ரிம் உத்திஸ்ய கதா அபி கேநசித்
யதா ததா வா அபி சத்ருக் ருத்தோ அஞ்ஜலி
ததைவ முஷ்ணாத்ய ஸூ பான்யசேஷ தஸ்
ஸூ பானி புஷ்ணாதி ந ஜாது ஹீயதே
—28-

காயிக சரணாகதியைக் குறிக்கும் ஒரு அஞ்சலியை யார் எச் சமயத்தில் எவ்வாறு செய்தாலும், அது எல்லாப் பாபங்களையும் அடியோடு உடனே போக்கி விடும்; மங்களங்களை வளர்க்கும்; அந்த மங்களங்கள் அழியாமல் இருக்கும்.

த்வத் அங்க்ரிம் உத்திஸ்ய -உனது திருவடியை நோக்கி -பிராப்யமுமாய் -பிராபகமுமாய் –ப்ராப்தமுமாய் இருக்கிறபடியைச் சொல்லுகிறது
கதா அபி கேநசித்–எப்பொழுதாவது -எவனாலாவது –
யதா ததா வா அபி –எவ்விதமாகவாவது
சத்ருக் ருத்தோ அஞ்ஜலி–ஒரு தடவை பண்ணப்பட்ட கை கூப்புதலானது
ததைவ முஷ்ணாத்ய அஸூபாந அசேஷ தஸ்-அப்பொழுதே பாபங்களை மிகுதி இல்லாமல் போக்கி விடுகின்றது
ஸூ பானி புஷ்ணாதி –நன்மைகளை வளரச் செய்கின்றது-விரோதியைப் போக்கி விடும் அளவு அன்றிக்கே அபிமதங்களாலே பூர்ணமாக்கும் –-பஹூ வசனத்தாலே-பர பக்தி பரஜ்ஞானம் பரம பக்தி
தேச விசேஷ பிராப்தி பகவல் லாபம் ,ப்ராப்தி பலமான கைங்கர்யம் -இவற்றைச் சொல்லுகிறது

இத்தால் ஸ்வர்க்காதி களான ஒரோ பலங்களிலே நியதமான கர்மங்களில் வ்யாவருத்தி-ந ஜாது ஹீயதே—ஒரு போதும் குறைவது இல்லையே-அஞ்சலி வைபவம் அருளிச் செய்கிறார்

த்வத் அங்க்ரிம் – நிருபாதிக சேஷியான உன்னுடைய நிரதிசய போக்யமுமாய் சர்வ ஸூலபமுமான திருவடிகளை –இத்தால் – பிராப்யமுமாய் – பிராபகமுமாய் — ப்ராப்தமுமாய் – இருக்கிறபடியைச் சொல்லுகிறது-உத்திஸ்ய--இத்தையே பரம ப்ராப்யமாக நினைத்து-இத்தால் பிரயோஜநாந்தர வ்யாவ்ருத்தி சொல்லுகிறது –கதா அபி –இச்சை பிறந்த போது காலம் -என்கை –-இத்தால்-வசந்த க்ரீஷ்மாதி ஸூக்ல கிருஷ்ண பஷா பூர்வ ஆஹ்ணா பராஹ்னாதி கால நியதியை உடைய
ஜ்யோதிஷ்டோமாதிகளில் இதுக்கு உண்டான வ்யாவ்ருத்தி-(வசந்தே வசந்தே ஜ்யோதிஷா யஜேத் –) கேநசித் –-இத்தால்-த்ரை வர்ணிககத்வ க்ருஹ மேதித்வ கிருஷ்ண கேசத்வ வேத வேதாங்க வித்யாதிகாரி நியமம் உடைய கர்மங்களில் வ்யாவ்ருத்தி – ஆகையால் சர்வ அதிகாரம் –என்கை –(ஜாத புத்ர கிருஷ்ண கேசோ அக்னி நாத தீத –) யதா ததா– பிரகார நியதி இல்லை -என்கிறது-இத்தால் –
சாஸ்த்ரங்களில் பிரகார விசேஷ நியமம் உண்டான கர்மங்களில் வ்யாவ்ருத்திவா அபி –-என்று விகல்ப சமுச்சய ஸூ சகமான அவ்யயங்கள் இரண்டாலும் ஒன்றிலே நியதமான கர்மங்களில் இதுக்கு உண்டான வ்யாவ்ருத்தி சொல்கிறதுசத்ருக் க்ருத – என்று யாவ ஜ்ஜீவாதி காரமான-நித்ய கர்ம வ்யாவ்ருத்தி சொல்லுகிறது –

தோ அஞ்ஜலி –-ஜாயாதி சஹகாரி ஸாபேஷமான-அச்வமேதாதி களில் காட்டில்-இதுக்கு உண்டான ஸூகரத்வம் சொல்லுகிறது-அயஜ்ஞோ வா ஏஷ யோ அபத் நீகததைவ –-தேசாந்த்ரே காலாந்த்ரே தேஹாந்த்ரே -பல பிரதமான கர்மங்களில் வ்யாவ்ருத்தி சொல்லுகிறது –முஷ்ணாத்ய அஸூபான் யசேஷதஸ் – சர்வ பாபங்களும் மறுவல் இடாத படி போகை–சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி
இத்தால் ஒரு பாபத்துக்கு ஒரு பிராயச்சித்தமான த்வாதச வார்ஷிக சம்வத்சர சாந்தராயன கருச்ச ராதிகளில் வ்யாவ்ருத்திமுஷ்ணாதி- முஷ -ச்தேய – வஞ்சித்து –முற்றம் தவிர்ந்த -திருவாய்மொழி -8-10-1- சும்மனாதே கை விட்டோடி -பெரியாழ்வார் திருமொழி -5-4-3-என்று போன பிரகாரம் தெரியாது ஒழிகை –ஸூ பானி புஷ்ணாதி –விரோதியைப் போக்கி விடும் அளவு அன்றிக்கே அபிமதங்களாலே பூர்ணமாக்கும் – பஹூ வசனத்தாலே-பர பக்தி பரஜ்ஞானம் பரம பக்தி தேச விசேஷ பிராப்தி பகவல் லாபம் ,ப்ராப்தி பலமான கைங்கர்யம் -இவற்றைச் சொல்லுகிறது-இத்தால் ஸ்வர்க்காதி களான ஒரோ பலங்களிலே நியதமான கர்மங்களில் வ்யாவருத்திந ஜாது ஹீயதே –-இத்தனையும் கொடுத்தாலும் தான் குறையாது இருக்கை –-இத்தால் பல பிரதானத்து அளவிலே ஷீண சக்திகமான கர்மங்களில் வ்யாவ்ருத்தி-அஞ்சலி பரமா முத்ரா ஷிப்ரம் தேவ பிரசாதி நீ ஸூ ஸூ கம் கர்த்தும் அவ்யயம் –(௮ஞ்ஜலி: பரமா முத்ரா க்ஷிப்ரம்‌ தே,வப்ரஸாதி,நீ [வெகு சீக்கிரமாக ப.க,வானை உகப்பிக்கும்‌ அஞ்ஜலி மேலான அடையாளமாயிருக்கிறது) (ராஜ வித்வா ராஜ கு,ஹ்யம்‌ பவித்ரமித,முத்தமம்‌ | ப்ரத்யக்ஷாவகஹம்‌ தர்ம்யம்‌ ஸுஸுகம்‌ கர்த்துமவ்யயம்‌ || [வித்‌யைகளுக்குள்ளும்‌, ரஹஸ்யங்களுக்குள்ளும்‌ மேலானது இது. இது பாபங்களைப்‌ போக்கடிப்பவற்றில்‌ உயர்ந்தது. என்னை நேரில்‌ காட்டுவது, என்னை அடைவதற்கு ஸாதனமாயிருப்பது, செய்வதற்கு வெகு ஸுக, மானது. (பலத்தைக்‌ கொடுத்த பின்பும்‌) அழியாதது)க்ரியா ரூபமான அஞ்சலி குறையாது இருக்கை யாவது என் -என்னில் அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு பண்ணின அஞ்சலி ஆகையாலே பிரசன்னனான ஈஸ்வரன் எல்லாம் செய்தாலும் ஒன்றும் செய்யாதானாய் இருக்கையாலேருணம் ப்ரவ்ருத்தம் இவ மே ஹ்ருதயான் நாப சர்ப்பதிஉன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ -பெரிய திருவந்தாதி -58-என்னக் கடவது இறே-(அஞ்சலி -அம் ஜலயதி ந ஜாது ஹீயதே –பலன்களை வர்த்தித்து கொண்டே இருக்கும் – பலன் கை புகுந்த பின்பும் அஞ்சலி தானே போது போக்காய் இருக்குமே )

கீழ் இரண்டு ஸ்லோகங்களையும் சேர்த்து –வேறு புகல் இல்லாமை -போக்யதையின் மிகுதி –
உபாயத்தின் ஸுவ்கர்யம்-மூன்றாலும் உன்னை விட முடியாது
என்கிறார்-கதா அபி கேநசித் யதா ததா வா அபி சத்ருக் –நான்காலும் –கால நியமன இல்லை -அதிகாரி நியமம் இல்லை –-கோணலாக கூப்பினாலும் -வாயினால் மொழிந்தாலும் நெஞ்சால் நினைத்தாலும் போதும் என்கிறது
அஞ்சலி -அம் ஜலயத்தி -அவனை நீர்ப்பண்டமாக உருக்குமே-அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு பண்ணின அஞ்சலி ஆகையாலே பிரசன்னனான ஈஸ்வரன் எல்லாம் செய்தாலும் ஒன்றும் செய்யாதானாய் இருக்கையாலே-ருணம் ப்ரவ்ருத்தம் இவ மே ஹ்ருதயான் நாப சர்ப்பதி
உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ
-பெரிய திருவந்தாதி -58-என்னக் கடவது இறே-

ந ஜாது ஹீயதே-அஞ்சலி செய்த பின்பு அனுக்ரஹம் அவனைச் சேர்ந்தவர்களுக்கும் செல்லும் என்றுமாம்0எப்போதும் அனுவர்த்தித்திக் கொண்டே இருக்கும்-பலன் கை புகுந்த பின்பும் அஞ்சலியை போது போக்காய் இருக்குமே-மநோ வாக் காயங்கள் மூன்றாலும் பண்ணின பிரபத்தி எல்லாம் வேண்டுமோ –-பத்தாஞ்சலி புடம் தீநம் யாசந்தம் சரணாகதம் -என்கிற காயிகமான அஞ்சலி ஒன்றுமே அமையாதோ -என்கிறார் இதில்–

ஸ்ரீ ஈட்டு ஸ்ரீ ஸூ க்திகள் –1-6-பரிவதில் ஈசனை பிரவேசம் -உன்னுடைய திருவடிகளைக் குறித்து ஒரு காலத்தில் ஒருவன் எவ்விதத்திலாயினும் ஒரு முறை அஞ்சலி செய்ய முயற்சி செய்வானேயாயின், செய்யப்படும் அவ்வஞ்சலியினால், அப்பொழுதே பாவங்கள் அனைத்தும் அடியோடே ஓடிவிடுகின்றன;
மேலும், அவ்வஞ்சலியானது, புண்ணியங்களைக் கொடுத்துப் போஷித்துத் தானும் அழியாமல் இருக்கின்றது,’
என்பது ஸ்தோத்திர ரத்தினம்.–த்வத் அங்கரி முத்திச்ச்ய – உன்னுடைய திருவடிகள்’ என்றதனால், மற்றைத் தேவர்களைக் காட்டிலும் இறைவனுக்கு உண்டான வ்யாவ்ருத்தியும் வேற்றுமையும்,0இறைவனிடத்தில் அடியார்கள் இழியுந்துறை திருவடிகள் என்னுமிடமும் அருளிச் செய்தாராவார்.-மேலும், கதா அபி ‘ஒரு காலத்தில்’ என்றதனால்,-இன்ன காலத்தில் இன்ன காரியங்களைச் செய்யவேண்டும் என்று விதிக்கிற விதியினின்று வேறுபடுத்தியும்,
கேநசித் ‘ஒருவன்’ என்றதனால், இந்தத் தகுதிகளையுடையவனே இக்காரியத்தை மேற்கோடல் வேண்டும் என்று விதிக்கிற விதியினின்று வேறுபடுத்தியும்,யதா ததா–‘எவ்விதத்தாலாயினும்’ என்றதனால், இன்ன முறையில் இக்காரியத்தைச் செய்தல் வேண்டும் என்று விதிக்கிற விதியினின்று வேறு படுத்தியும்,ஸக்ருத் ‘ஒரு முறை’ என்றதனால், பல வருடங்கள் செய்ய வேண்டும் என்று விதிக்கிற தீர்க்க சத்திரம் முதலான யாகங்களினின்று வேறுபடுத்தியும்,‘அஞ்சலி’என்றதனால், மிக்க பொருட் செலவினாலும் சரீரத்தின் பிரயாசை முதலியவற்றாலும் செய்யப்படுகின்ற அஸ்வமேத யாகம் முதலியவற்றினின்று வேறுபடுத்தியும்,-அசுபானி ‘பாவங்கள்’ என்ற பன்மையால், ஒரு தர்மம் ஒரு பாவத்தையே போக்கும் என்று கூறப்படுகிற தர்மங்களினின்று வேறுபடுத்தியும்,அசேஷத ‘அடியோடே’ என்றதனால், வாசனை கிடக்கப்போக்கும் கர்மங்களினின்று வேறுபடுத்தியும்,-சுபானி புண்ணியங்களை’ என்ற பன்மையால் ஒரு தர்மம் ஒரு பலனையே கொடுக்கும் என்று கூறப்படுகிற
தர்மங்களினின்று வேறுபடுத்தியும்,-நஜாது ஹீயதே ‘அழியாமலிருக்கின்றது’என்றதனால், பலன்களைக் கொடுத்துத் தாம் அழிந்து போகிற தர்மங்களினின்று வேறுபடுத்தியும் அருளிச் செய்திருத்தல் நோக்கல் தகும்.-மற்றும்,முஷ்ணாதி ‘ஓடிவிடுகின்றன’ என்றதனால், சும் எனாதே கைவிட்டு ஓடித் தூறுகள் பாய்ந்தனவே’ என்கிறபடியே,-பாவங்கள், இவன் தான் தொடர்ந்து பிடிப்பான் என்று நினைத்து இவனை அறியாமலே போய் விடும் என்பதனையும்,-புஷ்ணாதி ‘கொடுத்துப் போஷிக்கிறது’ என்றதனால், தீவினைகளைப் போக்குதலேயன்றி, அது போன இடம் எங்கும் நன்மையினையே நிறையச் செய்யும் என்பதனையும் தெரிவித்தவராவர்-பத்ரம் புஷ்பம் இத்யாதி -பச்சிலை மலர் பழம் நீர் ஆகிய இவற்றை எவன் ஒருவன் அன்போடு கொடுக்கின்றானோ,
தூய மனத்தினனான அவனால் பத்தியோடு கொடுக்கப்பட்ட அவற்றை நான் உண்கிறேன்,’ என்பது ஸ்ரீ கீதை.-இதனால், பொருள்களின் உயர்வு தாழ்வு பார்க்கின்றான் இல்லை; இடுகிறவன் நெஞ்சில் ஈரமே பார்க்கிறான்;-அஸ்னாமி– இப்படித் தரப்பட்டவற்றை மனோரத பதத்துக்கும் அவ்வருகானவை கைப்புகுந்தாற்போன்று நினைக்கிறான்;-அல்லது, அவன் அன்பினால் கலங்கித் தருமாறு போன்று, இறைவனும் கலங்கி அடைவு கெட விநியோகம் கொள்ளுகிறான் என்பன விளங்குதல் காண்க.-அந்யாத் பூர்ணாதபாம் கும்பாத் இத்யாதி ‘ஸ்ரீகிருஷ்ணனானவன், பூர்ண கும்பத்தைக் காட்டிலும் வேறு ஒன்றையும் விரும்பான்;-அவனுடைய திருவடிகளைக் கழுவுதலே சாலும்; அதனைத் தவிர வேறு ஒன்றனையும் விரும்பான்,’ என்பது மகாபாரதத்தில் சஞ்சயன் கூற்று.-நச்சேதி– இதனால், ஒருவன் இறைவனை ஆராதனை புரிதல் வேண்டும் என்று முயன்ற அளவிலேயே அவனுக்கு வயிறு நிறையும் என்பது பெறுதும்.-ஏகாந்தகத புத்திபி ‘இறைவனாகிய தன்னை அன்றி வேறு ஒரு பலனையும் விரும்பாத பெரியோர்களால் தூய்மையான மனத்துடன் செய்யப்படும் காரியங்கள் எல்லாவற்றையும்,
சிரஸா பிரதி க்ருஹ்ணாதி-தேவ தேவனாகிய பகவான் தானே தலையால் ஏற்றுக் கொள்ளுகிறான்,’ என்பது மோக்ஷ தர்மம்.-இதனால், தூய்மையான மனம் ஒன்றுமே வேண்டுவது என்பதும், அவன் செய்யும் காரியங்கள் அனைத்தும் யா க்ரியாஸ் ஸம்ப்ரயுக்தாஸ் ஸ்யு -அபிமத விஷயத்தின் பரிமாற்றம் போலே உத்தேஸ்யமாய்த் தோற்றும் என்பதும்,-அவற்றில் ஒன்றையும் விடான் என்பதும், எல்லாருடைய தொழில்களையும் காலாலே கொள்ளப் பிறந்தவன், இவன் காலாலே போகட்டவற்றையும் அவன் தலையாலே சுமப்பான் என்பதும்,-ஸ்வயம் -செவ்வக் கிடப்பு உண்டாயினும் மஹிஷீ ஸ்வேதத்துக்கு ஆள் இட ஒண்ணாதது போன்று, அவ் வேலைகளைத் தானே செய்வான் என்பதும் போதருதல் காண்க.-இவற்றால், இறைவனை அடைதல் எளிது என்பது போதரும்.ஆக, இப்படிகளாலே, இறைவன் எளிதில் ஆராதிக்கத் தக்கவன் என்பதனை அருளிச் செய்கிறார் இத்திருவாய்மொழியில்.

ஒருமுறை யுனது திருவடி இணையை யுன்னியே எப்பொழுதேனும்
இரு கரம் கூப்பி எத்திறத்தவர் தாமேனும் எவ்விதமாயேனும்
புரியும் அஞ்சலி அப்பொழுது இனித் தானே இடர் எல்லாம் மாயமாய்ப் போக்கித்
தரும் அரும் சுபர்கள் சகலமும் என்றும் தான் குறை ஒன்றும் இல்லாதே
–28–ஸர்வ ஸுலபமானதும் -அதி போக்யமானதுமான யுன் திருவடிகளை உத்தேசித்து எப்பொழுதாவது இச்சை பிறந்த போது -ஜாதியாதி நியமம் இல்லாமல் எவரேனும் -முறை யாவது -நியமமாவது -பல அபேக்ஷையாவது -யாது ஒன்றும் இல்லாமல் எவ்விதமாயாவது-எந்நாளும் செய்ய வேண்டியது இல்லாமல் ஏதோ ஒரு தடவை இரு கரம் கூப்பிச் செய்யும் அஞ்சலியானது-அப்பொழுதே எல்லாப் பாவங்களையும் ஒரு குவியலாகக் களவு போனது போலே சென்ற வழி தெரியா வண்ணம் மாயமாய்ப் போக்கி-இவ்வளவு செய்தும் என்றும் தனக்கு ஒரு குறைவும் இல்லாமல் பிரபத்தி ஞானம் முதலிய ஸகல சம்பத்துக்களையும் விருத்தி பண்ணித் தரும் 

ஸ்லோகம் -29-அவதாரிகை –ஆயாஸாத்மகமான அஞ்சலி தான் வேண்டுமோ-சிந்திப்பே அமையும் -திருவாய் மொழி -9-1-7-என்கிறபடியே-மானசமாக அமையாதோ – விரோதி பூர்வகமான பரம பதத்தைத் தர -என்கிறார்-இத்தால் –தீனம் -என்கிற மானச பிரபத்தியைச் சொல்லுகிறது-ந தர்ம நிஷ்ட்டோஸ்மி -என்கிற இது வாசிக ப்ரபத்தியாய்-த்வத் அங்க்ரி உத்திஸ்ய -என்றது காயிக ப்ரபத்தியாய்-இதில் மானசமான பிரபத்தி -என்னவுமாம்-அதவா-த்வத் அங்க்ரிம் –உதீர்ண –என்கிற ஸ்லோக த்வயத்தாலே
பிரபத்தி பலமான பர பக்தியைச் சொல்லுகிறது
-என்னவுமாம்-

உதீர்ண சம்சார தவ ஆஸூஸூ ஷணிம்
ஷாணோத நிர்வாப்ய பராம் ஸ நிர்வ்ருதிம்
ப்ரயச்சதி தவச் சரணா ருணாம் புஜ
த்வய அநு ராக அம்ருத ஸிந்து ஸீகர
–29-

தவச் சரணா ருணாம் புஜ த்வய அநு ராக அம்ருத ஸிந்து ஸீகர–உனது செந்தாமரை திருவடியை இணையைப் பற்றின அன்பாகிய அமுதக்கடலின் ஒரு திவலையானது
உதீர்ண சம்சார தவ ஆஸூஸூ ஷணிம்–மேன்மேலும் ஜ்வலிக்கின்ற சம்சாரம் ஆகிய காட்டுத்தீயை
ஷாணோத நிர்வாப்ய –ஒரே நொடிப் பொழுதில் தனித்து விட்டு
பராம் ஸ நிர்வ்ருதிம் ப்ரயச்சதி –மேலான இன்பத்தையும் தருகின்றது-அநுராக- திருவடிகளில் அத்யவஸா யாத்மகமான ருசி -என்னுதல் பிரபத்தி பலமாய் கைங்கர்ய உபகரணமான பக்தி -என்னுதல்
ப்ரீதி காரிதம் இறே கைங்கர்யம்உன்னுடைய சிவந்த திருவடித் தாமரைகளில் கொள்ளும் அன்புக் கடலில் ஒரு சிறு துளியே மிகவும் உக்ரமாக எரியும் காட்டுத் தீ போன்ற ஸம்ஸாரத்தை ஒரு க்ஷணத்திலே போக்கி, உயர்ந்த ஆனந்தத்தையும் கொடுக்கும்.

உதீர்ண சம்சார தவ ஆஸூஸூ ஷணிம்--கிளர்ந்து எரிகிற காட்டுத் தீயை –-சம்சாரத்தை காட்டுத் தீயாகச் சொல்லுகிறது -தாஹ்யமான காட்டில்-அக்னியை அவிக்க ஒண்ணாதாப் போலே அவித்யாதி களுக்கு இலக்காம் இத்தனை ஒழிய பரிஹரிக்க ஒண்ணாது -என்கைக்காக-ஆத்மா அதாஹ்யம் -என்கிறது -லௌகிக அக்னியில் இறே –-அசந்நேவ-என்கிறபடியே தக்த படம் போலே ஆக்கும் இறேஷாணோத நிர்வாப்ய –-அத ஸோ அபயங்கத-(அஸந்நேவ ஸ ப.வதி| அஸத்‌ ப்‌ரஹ்மேதி வேத, சேத்‌ | அஸ்தி ப்ரஹ்மேதி சேத்‌ வேத; | ஸந்தமேநம்‌ ததோ விது,:॥ [ப்ரஹ்மம்‌ இல்லை யென்று அறிந்தானாகில்‌, அவன்‌ இல்லாதவனாகவே ஆகிறான்‌. ப்‌,ரஹ்மம்‌ இருக்கிறதென்று அறிந்தானாகில்‌ ௮க் காரணத்தினாலேயே இவனை இருக்கிறவனாக அறிகிறார்கள்) (யத; ஹ்யேவைஷ ஏதஸ்மிந் நத்‌ஸ்யே$நாத்ம்மே நிருக்தே $நிலயநே$ப,யம்‌ ப்ரதிஷ்டாம்‌ விந்ததே। அத, ஸோ$ப,யங்க,தோ ப,வதி। [காண முடியாதவனும்‌, (ப்ராக்ருத) ஸரீரமற்றவனும்‌, (தே,வன்‌, மனுஷ்யன்‌ முதலிய) வார்த்தைகளால்‌ சொல்லத்‌ தகாதவனும்‌, (தனக்கு ஒரு) ஆதாரமற்றவனுமான இந்தப்‌ பரமாத்மாவிடம்‌ ஸம்ஸார ப,யமில்லாமைக்காக பக்தி யோகத்தை எப்போது அடைகிறானோ, அப்போது அவன்‌ (ஸம்ஸார) ப,யமற்றவனாக ஆகிறான்‌)என்கிறபடியே -அப்போதே அவித்து-ததைவ முஷ்ணாதி -ஷனே ந நிர்வாப்ய -என்று சொல்லுகையாலே-அவ் வதிகாரிக்கு பலத்துக்கு விளம்பம் இல்லை என்கிறார்-யதே ஷீகதூல மக்நௌ ப்ரோதம் ப்ரதூயேத -(தத்‌, யதே;ஷீகதூல மக்‌,நெள ப்ரோதம்‌ ப்ரதூ,யேத | ஏவம்‌ ஹாஸ்ய ஸர்வே பாப்மாந: ப்ரதாவந்தே ॥ [நெருப்பிலிட்ட இஷீகப் புல்லின்‌ பஞ்சு எப்படிக்‌ கொளுத்‌தப் படுகிறதோ, அப்படியே இவனுடைய எல்லாப்‌ புண்ய பாபங்களும்‌ கொளுத்தப் படுகின்‌றன) என்கிறபடியே-இவன் பட்ட நோவை இவன் விரோதி வர்க்கத்தோடு போக்கும் ஈஸ்வரன் -என்கை-பராம்ஸ நிர்வ்ருதிம் ப்ரயச்சதி –-ஒரு தேச விசேஷத்திலே-ஆனந்த நிர்ப்பரனாய் இருக்கும் இருப்புத் தரா நிற்கும்–நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி-மம சாதர்ம்யம் ஆகாதா ஸ ஸ்வராட் பவதி –(இதம்‌ ஜ்ஞாநமுமாஸ்ரித்ய மம ஸாத,ர்ம்யமாக,தா: | ஸர்க்கே,$பி நோபஜாயந்தே ப்ரளயே ந வ்யத,ந்தி ச॥[இந்த ஜ்ஞானத்தை அடைந்து, என்னைப் போல்‌ ஆனவர்கள்‌,ஸ்ருஷ்டி காலத்திலும்‌ பிறப்பதில்லை; ப்ரளய காலத்திலும்‌ அழிவதில்லை)என்னும் ஸூகம் இறே-தவச் சரணா ருணாம் புஜத்வய அநு ராக அம்ருத ஸிந்து ஸீகர –ப்ராப்தனாய் ஸூலபனான உன்னுடைய நிரதிசய போக்யமான திருவடிகளில் அனுராகம் ஆகிற அம்ருத சாகரத்திலே ஒரு திவலை அருண பதத்தாலே பரபாக ரசம் சொல்லுகிறது–அம்புஜ பதத்தாலே-மென்மை குளிர்ச்சி நாற்றங்களால் வந்த ரசம்-த்வயம்-அந்யோந்ய சத்ருசமான சேர்த்தி அழகாலே வந்த சாரஸ்யம்-இத்தால் அநுராக ஜனகமான திருவடிகள் -என்கை-அநுராக-திருவடிகளில் அத்யவஸா யாத்மகமான ருசி -என்னுதல்-பிரபத்தி பலமாய் கைங்கர்ய உபகரணமான பக்தி -என்னுதல் –ப்ரீதி காரிதம் இறே கைங்கர்யம்அம்ருத –-ஸ்மர்த்தவ்ய விஷய ஸாரஸ்யத்தாலே ஸ்வயம் பிரயோஜனமாய் இருக்கை அன்றியே பத்யமுமாய் இருக்கை-ஸிந்து ஸீ கர –-அதனில் பெரிய அவா -திருவாய்மொழி -10-10-10-என்கிற விஷய அநு ரூபமான ப்ரேமம் எல்லாம் வேண்டா அபிமத ஸித்திக்கு -என்கை-(பிரபத்தி தான் வேணுமோ -அஞ்சலியை போதாதோ என்றவர் இதில்-அஞ்சலி தான் வேணுமோ சிறிது ஆசை கிடந்தால் போதாதோ என்கிறார் –-பாதாரவிந்த ப்ரீதி விஷய அமுதக் கடலில் ஒரு திவலையே சம்சார காட்டுத் தீயை அணைத்து முக்தர்கள் உடன் ஓக்க பரம ஆனந்தத்தையும் அளிக்க நல்லதே – ஆஸூஸூஷணி- என்று அக்னிக்கும் பெயர் -)

தீயை அணைக்கத் தண்ணீர் வேண்டுமே – சம்சார காட்டுத்தீயை ஒரு நொடிப்பொழுதில் அணைக்க அம்ருத சாகர திவலையே போதும் என்கிறார் அவ்வதிகாரிக்கு பலத்துக்கு விளம்பம் இல்லை என்கிறார்-ஆஸூஸூ ஷணி-என்று அக்னிக்குப் பெயர் அநந்ய ப்ரயோஜன பக்தி லேசம் உண்டானால் -அது பரம பக்தி தசையை அடைந்து – சம்சார விமோசனத்தைப் பிறப்பித்து நித்ய கைங்கர்யச் செல்வத்தையும் அளித்திடும் –

செந்தழல் இட்டுச் சீறும் பவம் என்னும் காட்டுத் தீயை
முந்தியோர் கணத்து அவித்து முடிவிலா அநந்த மீயும்
சந்தமார் யுனது செந்தாமரை இணைத் தாளின் அன்பாம்
அந்தமா அமுத வாரித் திவலையில் ஓன்று தானே
–29—உன்னுடைய அழகான செந்தாமரைத் திருவடிகளின் மீது வைத்துள்ள கைங்கர்ய உபகரணமான பக்தியாகிற அந்த அமுதக் கடலின் ஒரு திவலை யானது செந்தழல் இட்டு மேலே கிளம்பிச் சீறி எரிகிற ஸம்ஸாரம் ஆகிற காட்டுத்தீயை ஒரு ஷணத்திலே அவித்து அத்யுன்னதமான மோக்ஷ அனுபவ ஆனந்தத்தையும் கொடுக்கிறது –

ஸ்லோகம் -30-அவதாரிகை –இப்படி விளம்ப ஹேது இல்லாத ஸித்த உபாயத்தைப் பரிக்ரஹித்தவர் -ஆகையாலே க்ரம ப்ராப்தி பற்றாதே-த்வரை பிரேரிக்க-கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -திருவாய் மொழி -6-9-9-என்கிறார்-பிரபத்தி பலமான பர பக்தியாலே-கனை கழல் காண்பது என்று கொல் கண்கள் -திருவாய்மொழி -6-3-10 -என்றும்-காணக் கருதும் என் கண்ணே -திருவாய் மொழி -9-5-1-என்றும் சொல்லுகிறபடியே-கண்ணாலே காண்பது என்று -என்கிறார் -என்றுமாம் –

விலாஸ விக்ராந்த பர அவர ஆலயம்
நமஸ் யதார்த்தி ஷபணே க்ருத ஷணம்
தனம் மதீயம் தவ பாத பங்கஜம்
கதா நு சாஷாத் கரவாணி சஷூஷா
—30-

விலாஸ விக்ராந்த பர அவர ஆலயம்–விளையாட்டாகவே அளக்கப்பட்ட மேல் உலகங்களையும்
கீழ் உலகங்களையும் உடையதும்-பரர் ஆலயம் -ப்ரஹ்மாதிகள் லோகம் -மேல் லோகம் –அவர லோகம் -மனுஷ்ய லோகம் -கீழ் உலகம்
நமஸ் யதார்த்தி ஷபணே-சேவிப்பவர்களின் துன்பங்களைத் தொலைப்பதில்
க்ருத ஷணம்-போது போக்கு உடையதும்-ஆஸ்ரித ரக்ஷணத்துக்காகவே கை ஒழிந்து இருக்கும் திருவடிகள் அன்றோ-தனம் மதீயம் தவ பாத பங்கஜம்-எனது செல்வமுமாய் உள்ள உனது திருவடித் தாமரையை-வைத்த மா நிதி -திருவாய் மொழி -6-7-11-என்கிறபடியே-எனக்கு ப்ராப்யமுமாய் பிராபகமுமாய் உள்ளத்தை-சர்வ ஸூ லபமுமாய் ஆஸ்ரித வத்ஸ்லமுமாய்-நிரதிசய போக்யமுமான திருவடிகளை
கதா நு சாஷாத் கரவாணி சஷூஷா–எப்பொழுது கண்ணால் சேவிக்கப் போகிறேன்-சஷூஷா-திருநாட்டில் சதா பஸ்யந்தி சொல்லுகிறார் இல்லை –-திவ்ய சஷூஸ் -அர்ஜுனனுக்குத் தந்து அருளினது போலே தமக்கும் வேண்டும் என்கிறார்-நெஞ்சு என்னும் உள் கண்ணால் காண விரும்புகிறார்-பரமபத பிராப்தியும் சொல்லுகிறார் என்னவுமாம்

என்னுடைய கண்கள் என்னுடைய தனமும், உயர்ந்த தேவர்கள் மற்றும் தாழ்ந்த மனிதர்களின் இருப்பிடங்களை விளையாட்டாக அளந்து தன்னதாகக் கொண்டு இருக்கும், வணங்குபவர்களின் துன்பத்தைப் போக்கும் உன்னுடைய திருவடியை எப்பொழுது காணும்?

விலாஸ –-லீலையாக ஆக்கிரமிக்கப் பட்ட உத்க்ருஷ்டரான தேவதைகள் உடைய இருப்புக்களையும்
மரண தர்மாக்களான மனுஷ்யாதி களுடைய இருப்புக்களையும் உடைத்தாய் உள்ளத்தை விமுகர் உடைய தலையிலே அநாயாசேன சென்று இருந்த திருவடிகளுக்கு ருசியை யுடையார் தலையிலே இருக்கை பணி யுண்டோ –விக்ராந்த –அந்ய பரரானார் பக்கலிலேயோ மேல் விழல் ஆவது-அநந்ய ப்ரயோஜனர் பக்கலிலே மேல் விழல் ஆகாதோ-பர அவர ஆலயம் –-வசிஷ்ட சண்டாள விபாகம் இன்றிக்கே தூளி தானம் பண்ணின திருவடிகள்-அத்தை ஒழியச் செல்லாத எனக்கு அரிதாவதே-
சங்கைஸ் ஸூராணாம்-என்கிற கர்ம பாவந நிஷ்டரும்-தவம் செய்து நான்முகன் பெற்றான் –இரண்டாம் திருவந்தாதி -78-என்கிறபடியே உபய பாவ நிஷ்டரும் பெற்ற பேறு எனக்கு அரிதாவதே நமஸ் யதார்த்தி ஷபணே க்ருத ஷணம்-ப்ராசங்கிகமாகப் பிறந்த அபதானம் -முன் நடந்த வ்ருத்தாந்தம் -கிடக்க கிடீர் –
திருவடிகளிலே தலை சாய்த்தார் உடைய ஆர்த்திகளைப் போக்குகையிலே க்ருத அவசரமாய் உள்ளத்தை ஆஸ்ரித ரஷணத்திலே அவசர ப்ரதீஷமான காலத்தை எதிர்பார்த்து – இருக்கிற திருவடிகளைக் காண்கைக்கு – கதா நு சாஷாத் கரவாணி சஷூஷா -என்று கூப்பிட வேண்டுவதே –(ஆஸ்ரித ஆர்த்தியை அடியோடு அகற்ற வியாபாரிக்கும் -பரம புருஷார்த்தமாயும் இருக்கும் திருவடிகள் அன்றோ)

தனம் மதீயம்-வைத்த மா நிதி -திருவாய் மொழி -6-7-11-என்கிறபடியே-எனக்கு ப்ராப்யமுமாய் பிராபகமுமாய் உள்ளத்தை–தவ பாத பங்கஜம் –-சர்வ ஸூ லபமுமாய் ஆஸ்ரித வத்ஸ்லமுமாய்
நிரதிசய போக்யமுமான திருவடிகளை –கதா நு சாஷாத் கரவாணி சஷூஷா – த்ரிவிக்ரமா பதாந தூளி தானத்திலும் காணப் பெறாத நான் என்று காண இருக்கிறேன்-விஷயங்களிலே மண்டிக் கிடக்கிற சம்சாரிகள் நடுவே இருக்கிற உமக்கு நம்மை ஒழியச் செல்லாதபடி புகுர நிருத்தினோமாகில் ஒன்றும் செய்யாதாரைப் போலே கூப்பிடுகிறது என் -என்ன கண்ணாலே கண்டு விடாய் தீர இருக்கிற எனக்கு
சம்சாரிகளில் காட்டில் ஒரு வ்யாவ்ருத்தி பண்ணித் தர அமையுமோ
சஷூஷா- ஒரு தேச விசேஷத்திலே
சதா தர்சனம் பண்ணப் பெறாதே காண விடாய்த்த எனக்கு கண்ணாலே காண வேணும் .

(இது வரை த்வய பூர்வார்த்தம் அருளிச் செய்து மேலே உத்தரார்த்தம் -கைங்கர்ய பிரார்த்தனை
இது முதல் அவன் வை லக்ஷண்யத்தை பரக்க-17-ஸ்லோகங்களால் அருளிச் செய்கிறார் –
அதில் முதலில் இதிலும் அடுத்த ஸ்லோகத்திலும் பரம புருஷார்த்தமான திருவடிகளை கண்டு களிப்பது என்றோ என்று அலமருகிறார்-தாவி வையம் கொண்ட தடம் தாமரை கட்கே கோவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ-என்றும்-அன்று தேர் கடாவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொலோ கண்களே –என்றும் சாஷாத்காரம் பெற பதறி அருளிச் செய்கிறார் –-சஷூஷா—திவ்ய சஷூஸ் ஸூக்களை கொடுத்து அருளினாய் அதே போலே பாவியேனுக்கும் அருள வேணும் –
நெஞ்சு என்னும் உட் கண்ணால் காண விரும்புகிறார் –பரமபத பிராப்தியை அபேக்ஷிக்கிறார் என்றுமாம் – )

விண்ணவராதி மண்ணோர் யுலகெலாமே அளந்து
நண்ணு நரார்த்தியாவு நசித்தலே தொழிலாய் நின்றேன்
எண்ணரும் தனமாம் யுன் தன் அம்புயத்தாளை இந்தக்
கண்ணினால் கண்டு நானே களிக்கும் நாள் என்னாளோ
— 30—திரி விக்ரம அவதாரத்தில் ஸர்வ லோகங்களையும் அளந்ததும்-ஆஸ்ரிதர்களுடைய ஸ்ரமங்களைப் போக்குவதில் தாமே மேல் விழுந்து ஸமயம் பார்த்துக் கொண்டு இருப்பதும்-எனக்கு எண்ணுதற்கு அரிதான ஒரு நிதியாயும் உள்ள உன் திருவடித் தாமரைகளை-என் கண்களால் கண்டு நான் களிக்கும் நாள் எந்த நாளோ-எப்போது கண்டு களிக்கப் போகின்றேனோ –

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஸ்தாபநீய உபநிஷத்

August 19, 2026

ஓம்! ஓ தேவர்களே, மங்களகரமானதை எங்கள் காதுகளால் கேட்கவும், மங்களகரமானதை
எங்கள் கண்களால் காணவும் நாங்கள் அருள் புரியட்டும்! வழிபாட்டிற்குரியவர்களே!
தேவர்களால் அருளப்பட்ட ஆயுட்காலத்தை,
எங்கள் உடலும் அங்கங்களும் நிலைபெற்ற நிலையில் அவர்களைப் புகழ்ந்து நாங்கள் அனுபவிக்க அருள் புரியட்டும்!
மகிமைமிக்க இந்திரன் எங்களை ஆசீர்வதிக்கட்டும்!
எல்லாம் அறிந்த சூரியன் எங்களை ஆசீர்வதிக்கட்டும்!
தீமையின் வஜ்ராயுதமான கருடன் எங்களை ஆசீர்வதிக்கட்டும்!
பிருகஸ்பதி எங்களுக்கு நல்வாழ்வை அருளட்டும்!
ஓம்! எனக்குள் சாந்தி நிலவட்டும்!
என் சூழலில் சாந்தி நிலவட்டும்!
என்மீது செயல்படும் சக்திகளில் சாந்தி நிலவட்டும்!

முதல் உபநிடதத்தில்

, பாதி மனிதனாகவும் பாதி சிங்கமாகவும் விளங்கும் பகவான் நரசிம்மர், ரூதம் (புலப்படும் உலகின் கட்டுப்பாடு) மற்றும் சத்தியம் (அடிப்படை உண்மை) ஆகியவற்றுடன் பரபிரம்மமாக ஜொலிக்கிறார். அவர் கருப்பு மற்றும் பொன் சிவப்பு ஆகிய இரண்டு வண்ணங்களில் தோன்றுகிறார். மேலே செல்வதே அவரது இயல்பு. அவருக்கு மிகவும் பயங்கரமான, அச்சுறுத்தும் பார்வை உண்டு. ஆனாலும், அவர் மக்களுக்கு நன்மை செய்யும் ஒரு “சங்கரர்”. அவரது கழுத்து கருப்பாகவும், அதன் மேற்பகுதி சிவப்பாகவும் இருப்பதால், அவர் “நீல லோஹிதர் (சிவப்பும் கருப்பும் உடையவர்)” என்று அழைக்கப்படுகிறார். அவரது மற்றொரு அம்சத்தில், அவர் உமாபதி (உமாவின் கணவர்) மற்றும் பசுபதி (அனைத்து உயிர்களுக்கும் அதிபதி) ஆவார். அவர் “பினாகம்” எனப்படும் வில்லை ஏந்தியிருக்கிறார், மேலும் மிகுந்த ஒளிர்வு கொண்டவர். அவர் அனைத்து ஞானத்திற்கும் கடவுள். அவர் அனைத்து உயிர்களுக்கும் கடவுள். அவர் அனைத்து வேதங்களுக்கும் அதிபதி. அவர் பிரம்மாவின் தலைவர், மேலும் யஜுர் வேதத்தால் போற்றப்படுகிறார். அவரைப் பற்றிய சாம வேதத்தின் புகழை ஒருவர் அறிந்திருக்க வேண்டும். அதை அறிந்தவர்கள் மரணமற்ற நிலையை அடைவார்கள்.

இரண்டாம் உபநிடத

தேவர்கள் மரணம், பாவங்கள் மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு அஞ்சினர். அவர்கள் பிரஜாபதியை அணுகினர். அனுஷ்டுப் சந்தத்தில் எழுதப்பட்ட “அனைத்து மந்திரங்களுக்கும் அரசன்” என்று அழைக்கப்படும் நரசிம்ம மந்திரத்தைப் பற்றி அவர் அவர்களிடம் கூறினார். இதன் காரணமாக, அவர்கள் மரணத்தை வென்றனர். அவர்கள் எல்லாப் பாவங்களையும் வென்றதோடு, குடும்ப வாழ்க்கைப் பிரச்சினைகளையும் அழித்தனர். எனவே, மரணம், பாவங்கள் மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு அஞ்சுபவர்கள், ‘மந்திரங்களின் அரசன்’ என்று அழைக்கப்படும் மற்றும் அனுஷ்டுப் சந்தத்தில் எழுதப்பட்ட ‘நரசிம்ம மந்திரத்தை’ கற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் அனைவரும் மரணத்தையும், பாவத்தையும், குடும்ப வாழ்க்கையால் ஏற்படும் பிரச்சினைகளையும் வெல்வார்கள்.

மந்திரங்களின் அரசன்:
[பின்வருவது நரசிம்மப் பெருமானின் மந்திரங்களின் அரசனின் எளிய மொழிபெயர்ப்பு மற்றும் அதைத் தொடர்ந்து ஒவ்வொரு விளக்கத்திற்குமான விளக்கம் மற்றும் நியாயப்படுத்தல் ஆகும்.]

உக்கிரமானவரும்,வீரமிக்கவரும்,மகா விஷ்ணுவுமாகியவரும்,சுடர்விடும் ஆன்மாவும்,எங்கும் முகமுடையவரும்,பாதி சிங்கம் பாதி மனிதருமானவரும்,அச்சமூட்டும் ஆன்மாவும்,பாதுகாப்பானவரும்,மரணமும் மரணமற்ற தன்மையுமாகியவருமான அந்த நரசிம்மருக்கு என் வணக்கங்கள் .

அவர் “ உக்கிரமானவர் ” என்று அழைக்கப்படுகிறார் , ஏனெனில் அவர் தனது சக்தியால் இடைவிடாமல் படைக்கிறார், பாதுகாக்கிறார், அழிக்கிறார், உயர்த்துகிறார், மேலும் அனைத்து தேவர்களையும், அனைத்து உயிர்களையும், அனைத்து பூதங்களையும் ஈர்க்கிறார். ஏ நரசிம்மப் பெருமானே, என்னால் போற்றப்படுபவரே, நிலையற்ற இந்த உடலில் நான் இருக்கும் வரையிலும் எனக்கு நிலையான மகிழ்ச்சியைத் தாரும். உமது வீரர்கள் என்னிடமிருந்து வேறுபட்ட என் எதிரிகள் அனைவரையும் கொல்லட்டும். 1 அவர் “ வீரமானவர்

” என்று அழைக்கப்படுகிறார், ஏனெனில் அவர் தனது சக்தியால் அனைத்து உலகங்களையும், அனைத்து தேவர்களையும், அனைத்து உயிர்களையும், அனைத்து பூதங்களையும் விளையாட வைக்கிறார், அவற்றை ஓய்வெடுக்க அனுமதிக்கிறார், மேலும் இடைவிடாமல் இந்த உலகங்களையும், தேவர்களையும், உயிர்களையும், பூதங்களையும் படைத்து, வளர உதவுகிறார், ஈர்க்கிறார். அவர் ஒவ்வொரு செயலுக்கும் பின்னணியில் இருக்கிறார், மிகவும் ஆற்றல் வாய்ந்தவர், மலை போன்றவர் மற்றும் தேவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவர். 2 அவர் “ மகா விஷ்ணு ”, ஏனெனில் அவர் எல்லா உலகங்களிலும் வியாபித்திருக்கிறார், மேலும் எல்லா உலகங்களையும் வியாபிக்கச் செய்கிறார், எல்லா இறைச்சியிலும் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்திற்கும், மறுபக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கும் பரவும் கொழுப்புப் பிசினைப் போல. உலகில் அவரைத் தவிர வேறொன்றும் இல்லை. அவர் உலகில் உள்ள அனைத்துப் பொருட்களிலும் வியாபித்திருக்கிறார். அவரே அனைத்து ஆன்மாக்களுக்கும் தலைவர். ஆன்மாக்களை வழிபடுவதே அவரை வழிபடுவதாகும். சந்திரன், சூரியன் மற்றும் நெருப்பு ஆகிய மூன்று ஒளி வீசும் பொருட்களிலும் அவர் இருக்கிறார். அவர் ” ஜ்வலந்தம் [எரியும் ]” என்று அழைக்கப்படுகிறார் , ஏனெனில் அவர் தனது ஒளியால் அனைத்து தேவர்கள், அனைத்து உயிர்கள் மற்றும் அனைத்து பூதங்கள் உட்பட முழு உலகத்தையும் ஒளிரச் செய்கிறார், மேலும் அவற்றுக்குள் பிரகாசித்து, அவற்றைச் சுடர்களை வெளியிடச் செய்கிறார். அவரே உலகத்தைப் படைத்து, அதை வேகமாகப் பெருகச் செய்பவர். அவரே தனது சொந்த ஒளியால் பிரகாசிப்பவர், மற்றவர்களையும் பிரகாசிக்கச் செய்பவர். அவர் உலகம் முழுவதும் வெப்பத்தைப் பரப்பி, உலகத்தை புழுங்க வைக்கிறார். அவர் தனது கதிர்களை எல்லா இடங்களிலும் பரப்பி, அவற்றையும் கதிர்களை வெளியிடச் செய்கிறார். அவர் நன்மையை மட்டுமே விளைவிக்கும் ஆளுமை கொண்டவர். அவர் நன்மையை மட்டுமே கொடுக்கிறார், மேலும் அவரே நல்லவர். 4 அவர் “ சர்வத்தோ முகம் [எங்கும் முகமுடையவர்]” என்று அழைக்கப்படுகிறார் . ஏனெனில், அவருக்கு உறுப்புகள் ஏதுமின்றி எங்கும் காண்கிறார், எல்லாவற்றையும் கேட்கிறார், எங்கும் செல்கிறார், எல்லாவற்றையும் ஈர்க்கிறார், மேலும் அவர் எங்கும் பரவி எங்கும் இருக்கிறார். தொடக்கத்தில் அவர் தனித்திருந்தார், இப்போது இவை அனைத்தாகவும் ஆகியுள்ளார். உலகை ஆள்பவர்கள் அவரிடமிருந்து வந்தனர். இறுதியில் எல்லாம் அவரிடமே திரும்பிச் சென்று அவரில் கலந்துவிடுகிறது. எங்கும் முகமுடையவரை நான் வணங்குகிறேன். 5 எல்லா விலங்குகளிலும் மிகவும் அச்சமூட்டக்கூடியதும், மிகவும் சிறப்பானதும் சிங்கம். அதனால்தான் பிரபஞ்சத்தின் கடவுள் நரசிம்மராகப் பிறந்தார். அந்த மரணமற்ற வடிவம், முழு உலகிற்கும் நன்மை செய்யும் ஒன்றாக மாறியது. அதனால்தான் அவர் “ நரசிம்மம் [பாதி மனிதன் மற்றும் பாதி சிங்கம்]” என்று அழைக்கப்படுகிறார். இந்த அச்சமூட்டும் வடிவத்தைக் கொண்ட அந்த மகா விஷ்ணு, தனது பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதில்லை. அவர்கள் அவரை வணங்கிப் புகழ்கிறார்கள். அவரே பூமி முழுவதும் பயணிப்பவர், மேலும் மலை உச்சியில் வசிப்பவரும் ஆவார். தனது திரிவிக்ரம ரூபத்தில், அவர் எல்லா உலகங்களையும் மூன்று படிகளில் அளந்தார். 6

தேவர்கள், மனிதர்கள், பூதங்கள் என அனைத்துக் கூட்டங்களும், உலகங்கள் அனைத்தும் அவருக்கு அஞ்சி ஓடுவதால், அவர் ‘ பீஷணர் ‘ என்று அழைக்கப்படுகிறார் ; ஆனால் அவரோ எதற்கும் அஞ்சுவதில்லை. காற்று அவருக்கு அஞ்சியே வீசுகிறது. சூரியன் அவருக்கு அஞ்சியே மேலே உதிக்கிறது. அவருக்குள்ள அச்சத்தினாலேயே அக்னிதேவன், இந்திரன் மற்றும் எமதேவன் ஆகியோர் தங்கள் செயல்களைச் செய்கிறார்கள். 7 அவர் ‘ பத்ரம்

[பாதுகாப்பானவர்]’ என்று அழைக்கப்படுகிறார் , ஏனெனில் அவர் நன்மைகளின் உருவமாக இருக்கிறார், ஏனெனில் அவர் எப்போதும் நன்மைகளை வழங்கி பிரகாசிக்கிறார், ஏனெனில் அவர் மற்றவர்களைப் பிரகாசிக்கச் செய்கிறார், ஏனெனில் அவர் உயர்ந்தவர் மற்றும் அவர் மிகவும் நல்ல செயல்களைச் செய்கிறார். ஏ தேவர்களே, இந்த ‘பத்ரமைப்’ பற்றி நாம் நம் காதுகளால் கேட்க வேண்டும். ஏ, வழிபடத் தகுதியானவர்களே, அந்த ‘பத்ரமை’ நாம் நம் கண்களால் காண வேண்டும். தேவர்கள் ஆரோக்கியமான உறுப்புகளுடனும் ஆரோக்கியமான உடல்களுடனும் வாழ்வது போல, நாமும் அவரைப் புகழ்ந்து பாடி வாழ்வோம். 8 அவர் ‘ மிருத்யு-மிருத்யும் [மரணம் மற்றும் மரணமின்மை]’ என்று அழைக்கப்படுகிறார், ஏனெனில் அவருடைய பக்தர்களின் வெறும் எண்ணத்தால், அவர் அவர்களுக்கு மரணத்தையும் அகால மரணத்தையும் அழிக்கிறார். அவர் ஆன்மாவின் அறிவைக் கொடுப்பவர் மற்றும் வலிமையைக் கொடுப்பவர். எல்லா தேவர்களும் அவருக்கு முன்பாக தலைவணங்கி அவரைப் புகழ்கிறார்கள். அக்னி யாகத்தின் மூலம் அவருக்கு ‘ஹவிஸ்-உணவை’ அளித்து அவரைத் திருப்திப்படுத்துவோம், ஏனெனில் அவருடைய நிழல் கூட அமிர்தம் மற்றும் அவர் மரணத்தை அழிக்கும் மரணம். 9 ‘ நாமமி [நான்]’ என்று உச்சரிப்பதன் மூலம் அவர் வழிபடப்படுகிறார். அவரை வணங்குங்கள்”, ஏனெனில் அவர் எல்லா தேவர்களாலும், தனது உலகத்தைத் துறந்தவர்களாலும், பிரம்மத்தின் மீது சத்தியம் செய்தவர்களாலும் வணங்கப்படுகிறார், மேலும் வேதங்களின் அதிபதி இந்த வார்த்தைகளைக் கூறி அவரை வணங்குவதாலும் கூட. இந்திரன், மித்திரன் (சூரியன்), அர்யமன் மற்றும் பிற எல்லா தேவர்களும் அவரில் உள்ளனர். 10 அழகும் ஒழுங்கும் நிறைந்த இந்த உலகத்திற்கு முன்பே நான் பிறந்தேன். தேவர்களுக்கு முன்பே நான் இருந்தேன். அழியாத ஒன்றின் மைய சக்தி நானே. என்னை (மக்களுக்கு உணவாக) தானமாகக் கொடுப்பவர், ஆன்மாவைக் காப்பவராக ஆகிறார். இதை உணராமல் கொடுத்தால், உணவாகிய நான், உண்பவரையே உண்பேன். நானே உலகம் முழுவதாய் ஆகி அதை அழிப்பவன். என் ஒளி, தனித்து நின்று உலகம் முழுவதற்கும் ஒளி தரும் சூரியனைப் போன்றது. இதை உணர்பவன் முக்தி அடைகிறான் என்று இந்த உபநிடதம் கூறுகிறது. 11 மூன்றாவது உபநிடதம்: தேவர்கள் பிரம்மனிடம் அனுஷ்டுப் மந்திரத்தின் சக்தியைத் தங்களுக்குக் கற்பிக்குமாறு வேண்டினர் . ராஜா (மந்திரங்களின் அரசன்) அனுஷ்டுப் மீட்டர்) மற்றும் அதன் மூலமும். பிரம்மா அவர்களிடம் கூறினார்:

நரசிம்மனின் (ஈம் எனும்) சக்தியாகிய இந்த மாயையே எல்லாவற்றையும் படைத்து, பாதுகாத்து, அழிக்கிறது. எனவே, இந்த மாயையே சக்தி என்பதை நீங்கள் உணர வேண்டும். இந்த மாயையின் சக்தியைப் புரிந்துகொள்பவர், எல்லாப் பாவங்களையும் கடந்து, மரணமில்லா நிலையையும் அடைகிறார். அவர் புகழுடன் கூடிய செல்வத்தை அனுபவிக்கிறார். பிரம்மத்தில் உள்ள வல்லுநர்கள், இது குறுகியதா, நீண்டதா அல்லது மிக நீண்டதா (உச்சரிப்பு?) என்று தங்களுக்குள் விவாதித்துக் கொள்கிறார்கள். இதை குறுகிய முடிவுடன் உச்சரிப்பவர், எல்லாப் பாவங்களையும் எரித்து, மரணமில்லா நிலையை அடைவார். இதை நீண்ட முடிவுடன் உச்சரிப்பவர், புகழுடன் கூடிய செல்வத்தைப் பெற்று, மரணமில்லா நிலையையும் அடைவார். இதை மிக நீண்ட முடிவுடன் உச்சரிப்பவர், தெய்வீக ஞானத்தையும் மரணமில்லா நிலையையும் அடைவார். பின்வருவது முனிவர்கள் அளித்த விளக்கம்:

“மாயையின் சக்தியின் உருவமான ஈம்-க்குப் பின்னால் உள்ள சக்தியே, தயவுசெய்து எங்களைக் காக்கவும். பிறப்பு-இறப்பு எனும் இந்தக் கடலை நாங்கள் எளிதாகவும் நேராகவும் கடந்து செல்ல எங்களுக்கு அருள்புரியுங்கள். உன்னை அறிந்தவர்கள், உன்னை ஸ்ரீதேவி, லட்சுமி, பார்வதி, பூதேவி (பூமியின் தேவி), சஷ்டி தேவி, ஸ்ரீ வித்யா மற்றும் இந்திரசேனா என்றும் அழைக்கிறார்கள். எனக்கு நீண்ட ஆயுளைத் தருமாறு வேண்டிக்கொண்டு, எல்லா வேதங்களுக்கும் தாயான உன்னிடம் என்னைச் சமர்ப்பிக்கிறேன்.

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் பொருட்களும் ஆகாயத்திலிருந்து (ஆகாயம்) தோன்றின. அனைத்து உயிரினங்களும் ஆகாயத்திலிருந்து உருவாக்கப்பட்டன. அவை ஆகாயத்தில் வாழ்கின்றன. அவை ஆகாயத்தை நோக்கிச் சென்று, அங்கே நுழைந்து மறைகின்றன. எனவே, ஆகாயமே மூலம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் (ஆகாயத்திற்கான மூல வார்த்தை ‘ஹம்’).”

முனிவர்கள் அளித்த விளக்கம் பின்வருமாறு:
“‘ஹம்’ என்ற அந்த மூலச்சொல், தூய ஆகாயத்தில் பயணிக்கும் சூரியக் கடவுள்; வளிமண்டலத்தில் ‘காற்றில்’, யாகங்களில் ‘நெருப்பில்’, மற்றும் வீடுகளில் ‘விருந்தினர்களாக’ இருக்கிறார். அது மட்டுமே தேவர்களுடனும் மனிதர்களுடனும் இருக்கும் ஒரே பொருளாகும். அதுவே உண்மை. அதுவே ஆகாயம், நீர், பூமி, யாக நெருப்பு மற்றும் மலைகளிலிருந்து பிறந்த பொருளாகும். இதுவே பெரும் உண்மை. ‘இதை அறிந்தவன் மட்டுமே மந்திரத்தின் இரகசிய உட்பொருளை அறிவான்’ என்று உபநிடதம் கூறுகிறது.”

நான்காவது உபநிடதம்.

தேவர்கள் பிரம்மாவை அணுகி, நரசிம்ம மந்திர ராஜாவின் கிளை (பகுதி) மந்திரங்களைப் பற்றி தங்களுக்குக் கற்பிக்குமாறு கேட்டனர். பிரணவம், சாவித்திரி, யஜுர் லட்சுமி மற்றும் நரசிம்ம காயத்ரி ஆகியவை நரசிம்ம மந்திரத்தின் நான்கு பகுதிகள் (கிளைகள்) என்பதையும், இதை அறிந்த எவரும் மரணமற்ற நிலையை அடைகிறார் என்பதையும் அவர்கள் அறிய வேண்டும் என்று பிரம்மா அவர்களிடம் கூறினார்.

1. பிரணவம் என்பது வேறொன்றுமில்லை, 1. “ஓம்”

2. உச்சரிப்பவர்களைப் பாதுகாக்கும் சாவித்திரி மந்திரம் யஜுர் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. அது உலகம் முழுவதும் பரவியுள்ளது. சாவித்திரி அஷ்டாக்ஷரம் (எட்டு எழுத்துக்கள்) என்பது ‘க்ருணி’ என்ற இரண்டு எழுத்துக்கள், ‘சூர்யா’ என்ற மூன்று எழுத்துக்கள் மற்றும் ‘ஆதித்யா’ என்ற மூன்று எழுத்துக்களைக் கொண்டது. இது உங்கள் அந்தஸ்தையும் செல்வத்தையும் அதிகரிக்கும் ஒரு மந்திரமாகும். இதை அறிந்த ஒருவரைத் தேடி பெரும் செல்வம் வரும்.

3. யஜுர் மகாலட்சுமி மந்திரம் என்பது “ஓம் பூர் லட்சுமி, புவர் லட்சுமி, சுவா கால கர்ணி, தன்னோ லட்சுமி ப்ரசோதயாத்” என்பதாகும். இதில் 24 எழுத்துக்கள் உள்ளன. இந்த பிரபஞ்சம் முழுவதும் இந்த காயத்ரியின் வடிவத்தில் உள்ளது. எனவே, இந்த யஜுர் மகாலட்சுமி மந்திரத்தை அறிந்தவர், மிகுந்த புகழுடன் பெரும் செல்வத்தை அனுபவிப்பார்.

4. நரசிம்ம காயத்ரி என்பது, “ ஓம் நிருசிம்மய வித்மஹே வஜ்ர நக்ய தீமஹி. தன்னஹ சிம்ஹ ப்ரசோதயாத் ” என்பதாகும். இந்த மந்திரத்தில்தான் அனைத்து வேதங்களும் தேவர்களும் வசிக்கின்றனர். இதை அறிந்தவருடன் தேவர்களும் வேதங்களும் என்றென்றும் வாழ்வார்கள். தேவர்கள் பிரம்மாவை அணுகி, “எந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம், இறைவன் எங்கள் மீது மிகுந்த கருணை காட்டி, அவருடைய வடிவத்தைக் காண எங்களுக்குக் காட்சியளிப்பார்? தயவுசெய்து அதைப் பற்றி எங்களுக்குக் கூறுங்கள்”

என்று கேட்டனர் . பின்னர் பிரம்மா அவர்களிடம் பின்வருமாறு கூறினார்: “ஓம், உம், ஓம். யோ வை நிருசிம்ஹோ தேவோ பகவான் யச்ச ப்ரஹ்ம தஸ்மை வோ நமோ நமஹ். ஓம் க்ரம் ஓம். யோ வை ந்ருசிம்ஹோ தேவோ பகவான் யச்ச விஷ்ணு தஸ்மை வை நமோ நம. ஓம் வீம் ஓம். யோ வை ந்ருசிம்ஹோ த்வமோ த்வமோ தேவா நமேஸ்வரா நமேஸ்வரா [  உம், க்ரம், வீம், ராம், மாம், ஹாம், வீம், ஷ்ணம், ஜ்வம், லாம், தம், சம், வம், தோம், மம், கம், ந்ரூம், சிம், ஹாம், பீம், சம், டி, எம்.டி.எம்., , ம்ரும் , த்யும் , நாம் , மாம் , ம்யம் , ஹம் இவை பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வர புருஷ, ஈஸ்வர, சரஸ்வதி, ஸ்ரீ கௌரி, ப்ரகுதி, வித்யா, ஓம்கார, அர்த்த மாத்ர, வேதா, பஞ்சக்யா, சப்த வ்யாஹ்ருதய, லோக பலா, வஸவ, ருத்ர, மஹா ருத்ரா காலா, மனு, ம்ருத்யு, யம, கந்தக, பரண, சூர்ய, சோம, விராட் புருஷ, ஜீவா மற்றும் இறுதியில் “ஓம் ஹம், ஓம், யோ வை ந்ருசிம்ஹோ தேவோ பகவான் யச்ச சர்வம் தஸ்மை வை நமோ நம.”) அனுஷ்டுப் மந்திரம்.

ஓம் உம் ஓம், யோ வை ந்ருசிம்ஹோ தேவோ பகவான் , யச்ச ப்ரஹ்ம தஸ்மை வை நமோ நம்; ஓம் க்ரம் ஓம், யோ வை ந்ருசிம்ஹோ தேவோ பகவான் , யச்ச விஷ்ணு தஸ்மை வை நமோ நம்; … ஓம் ஹம் ஓம், யோ வை ந்ருசிம்ஹோ தேவோ பகவான் , யச்ச சர்வம் தஸ்மை வை நமோ நம்

பிரம்மா கூறினார், “இந்த 32 மந்திரங்களைப் பயன்படுத்தி தினமும் இறைவனைப் பிரார்த்திப்பவருக்கு, இறைவன் மிகவும் மகிழ்ந்து நேரில் தோன்றுவார். அதுபோலவே, இந்த மந்திரங்களைப் பயன்படுத்தி பகவான் நரசிம்மரைப் பிரார்த்திக்கும் எவருக்கும், அவர் நேரில் தோன்றுவார். அந்த பக்தர் எல்லாவற்றையும் காண்பார் மற்றும் மரணமில்லா நிலையை அடைவார். இவ்வாறு மகா உபநிடதம் கூறுகிறது.”

ஐந்தாம் உபநிடதம்: தேவர்கள் பிரம்மாவை அணுகி அவரிடம் வேண்டினர், “பகவானே, மகா சக்கரம் எனப்படும் புகழ்பெற்ற சக்கரத்தைப் பற்றி எங்களுக்குக் கூறுங்கள். ‘அது எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றும் என்றும், முக்திக்கு வாசல் என்றும் முனிவர்கள் கூறுகிறார்கள்’.” பிரம்மதேவன்

அவர்களிடம் கூறினார்:
“சுதர்சனம் (விஷ்ணுவின் புனித சக்கரம்) தான் அந்த மகா சக்கரம்.” அதன் நடுவில் தாரக மந்திரமும் (ஓம்) நரசிம்மரின் ஒற்றை எழுத்தும் (க்ஷ்ரௌம்) எழுதப்பட்டுள்ளன; அதன் ஆறு இதழ்களில் சுதர்சனத்தின் ஆறு எழுத்துக்கள் (சஹஸ்ரார ஹும் பட்) எழுதப்பட்டுள்ளன; அதன் எட்டு இதழ்களில் எட்டு எழுத்துக்கள் (ஓம் நமோ நாராயணாய) எழுதப்பட்டுள்ளன; அதன் பன்னிரண்டு இதழ்களில் பன்னிரண்டு புனித எழுத்துக்கள் (ஓம் நமோ வாசுதேவாய) எழுதப்பட்டுள்ளன; அதன் பதினாறு இதழ்களில், அவற்றின் வேர்களுடன் கூடிய மாத்ருக (மாதிரி) பதினாறு எழுத்துக்கள் (ஆம் ஆம், எம், ஈம்…. அஹ) எழுதப்பட்டுள்ளன; மற்றும் அதன் 32 இதழ்களில் “நரசிம்ம அனுஷ்டுப் மந்திர ராஜா”வின் எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளன. இதுவே சுதர்சன சக்கரம். இது ஒருவரின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவதோடு, முக்தியின் நுழைவாயிலாகவும் விளங்குகிறது. இது யஜுர் வேதம், ரிக் வேதம், சாம வேதம், பிரம்மம் மற்றும் அமிர்தம் (அமிர்தம்) ஆகியவற்றின் ஒரு வடிவமாகும்.

தினமும் இந்த “நரசிம்ம அனுஷ்டுப் மந்திர ராஜா”வை உச்சரிப்பவரால் நெருப்பைக் கட்டுப்படுத்தவும், காற்றைக் கட்டுப்படுத்தவும், சூரியனைக் கட்டுப்படுத்தவும், சந்திரனைக் கட்டுப்படுத்தவும், நீரைக் கட்டுப்படுத்தவும், எல்லா தேவர்களையும் கட்டுப்படுத்தவும், எல்லா கிரகங்களையும் கட்டுப்படுத்தவும், விஷத்தைக் கட்டுப்படுத்தவும் முடியும்.

ரிக் வேதம் இதைப் பற்றி நமக்குச் சொல்கிறது, “இதைப் பயிற்சி செய்யும் பக்தர்கள், ஒரு சாதாரண மனிதன் வானத்தில் சூரியனைக் காண்பது போல, ஆகாயத்தில் விஷ்ணு பகவானைக் காண முடியும். பிராமண பக்தர்கள் ஒளிமயமான விஷ்ணுவின் வடிவத்தைப் புகழ முடியும். எந்தவித ஆசையுமின்றி வழிபடுபவரால் மட்டுமே இது அடையப்படும் என்று உபநிடதங்கள் கூறுகின்றன.”

ஓம்! ஓ தேவர்களே, மங்களகரமானதை எங்கள் காதுகளால் கேட்கவும்;
மங்களகரமானதை எங்கள் கண்களால் காணவும் அருள்புரியுங்கள், ஓ வழிபாட்டிற்குரியவர்களே!
தேவர்களால் நிர்ணயிக்கப்பட்ட ஆயுட்காலத்தை,
எங்கள் உடலும் அங்கங்களும் நிலைபெற்ற நிலையில் அவர்களைப் புகழ்ந்து நாங்கள் அனுபவிக்க அருள்புரியுங்கள்!
மகிமைமிக்க இந்திரன் எங்களை ஆசீர்வதிக்கட்டும்!
எல்லாம் அறிந்த சூரியன் எங்களை ஆசீர்வதிக்கட்டும்!
தீமையின் வஜ்ராயுதமான கருடன் நம்மை ஆசீர்வதிக்கட்டும்!
பிருகஸ்பதி நமக்கு நல்வாழ்வை அருளட்டும்!
ஓம்! எனக்குள் சாந்தி நிலவட்டும்!
என் சூழலில் சாந்தி நிலவட்டும்!
என் மீது செயல்படும் சக்திகளில் சாந்தி நிலவட்டும்!

அதர்வ வேதத்தில் உள்ள நரசிம்ம பூர்வ தபனீய உபநிஷத் இத்துடன் முடிவடைகிறது.

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அவ்யக்த உபநிஷத்((ஸாமவேதீ³யா))

August 19, 2026

ஸ்வாஜ்ஞாநாஸுரராட்³க்³ராஸஸ்வஜ்ஞாநநரகேஸரீ ।
ப்ரதியோகி³விநிர்முக்தம் ப்³ரஹ்மமாத்ரம் கரோது மாம் ॥
ௐ ஆப்யாயந்து மமாங்கா³நி வாக்ப்ராணஶ்சக்ஷு: ஶ்ரோத்ரமதோ²
ப³லமிந்த்³ரியாணி ச ॥ ஸர்வாணி ஸர்வம் ப்³ரஹ்மோபநிஷத³ம் மாஹம்
ப்³ரஹ்ம நிராகுர்யாம் மா மா ப்³ரஹ்ம நிராகரோத³நிராகரணமஸ்த்வநிராகரணம் மேஸ்து ததா³த்மநி நிரதே ய உபநிஷத்ஸு த⁴ர்மாஸ்தே
மயி ஸந்து தே மயி ஸந்து ॥
ௐ ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: ॥
(ஸ்ரு’ஷ்டே: புரா நிர்விஶேஷப்³ரஹ்மஸ்தி²தி:)
ஹரி: ௐ । புரா கிலேத³ம் ந கிஞ்சந்நாஸீந்ந த்³யௌர்நாந்தரிக்ஷம்
ந ப்ரு’தி²வீ கேவலம் ஜ்யோதீரூபமநாத்³யநந்தமநண்வஸ்தூ²லரூபமரூபம்
ரூபவத³விஜ்ஞேயம் ஜ்ஞாநரூபமாநந்த³மயமாஸீத் ।
(பரமேஷ்டி²ப்ராது³ப⁴வி:)
தத³நந்யத்தத்³த்³வேதா⁴பூ⁴த்³த⁴ரிதமேகம் ரக்தமபரம் ।
தத்ர யத்³ரக்தம் தத்பும்ஸோ ரூபமபூ⁴த் । யத்³த⁴ரிதம் தந்மாயாயா: ।
தௌ ஸமக³ச்ச²த: । தயோர்வீர்யமேவமநந்த³த் । தத³வர்த⁴த ।
தத³ண்ட³மபூ⁴தை⁴மம் । தத்பரிணமமாநமபூ⁴த் । தத:
பரமேஷ்டீ² வ்யஜாயத ।
(பரமேஷ்டி²ந: ஸ்வக்ரு’த்யஜிஜ்ஞாஸா)
ஸோऽபி⁴ஜிஜ்ஞாஸத கிம் மே குலம் கிம் மே
க்ரு’த்யமிதி । தம் ஹ வாக³த்³ரு’ஶ்யமாநாப்⁴யுவாச போ⁴போ⁴ ப்ரஜாபதே

த்வமவ்யக்தாது³த்பந்நோऽஸி வ்யக்தம் தே க்ரு’த்யமிதி । கிமவ்யக்தம்
யஸ்மாத³ஹமாஸிஷம் । கிம் தத்³வ்யக்தம் யந்மே க்ரு’த்யமிதி ।
ஸாப்³ரவீத³விஜ்ஞேயம் ஹி தத்ஸௌம்ய தேஜ: । யத³விஜ்ஞேயம் தத³வ்யக்தம் ।
தச்சேஜ்ஜிஜ்ஞாஸஸி மாவக³ச்சே²தி । ஸ ஹோவாச கைஷா த்வம்
ப்³ரஹ்மவாக்³யத³ஸி ஶம்ஸாத்மாநமிதி । ஸா த்வப்³ரவீத்தபஸா மாம்
விஜிஜ்ஞாஸஸ்வேதி । ஸ ஹ ஸஹஸ்ரம் ஸமா ப்³ரஹ்மசர்யமத்⁴யுவாஸாத்⁴யுவாஸ ॥
1॥
த்³விதீய: க²ண்ட:³
(பரமேஷ்டி²ந: ஆநுஷ்டு²பீ⁴வித்³யாத³ர்ஶநம்)
அதா²பஶ்யத்³ரு’சமாநுஷ்டுபீ⁴ம் பரமாம் வித்³யாம்
யஸ்யாங்கா³ந்யந்யே மந்த்ரா: । யத்ர ப்³ரஹ்ம ப்ரதிஷ்டி²தம் ।
விஶ்வேதே³வா: ப்ரதிஷ்டி²தா: । யஸ்தாம் ந வேத³ கிமந்யைர்வேதை:³
கரிஷ்யதி ।
(ஆநுஷ்டுபீ⁴வித்³யயா ந்ரு’ஸிம்ஹத³ர்ஶநம்)
தாம் விதி³த்வா ஸ ச ரக்தம் ஜிஜ்ஞாஸயாமாஸ ।
தாமேவமநூசாநாம் கா³யந்நாஸிஷ்ட । ஸஹஸ்ரம் ஸமா
ஆத்³யந்தநிஹிதோங்காரேண பதா³ந்யகா³யத் । ஸஹஸ்ரம்
ஸமாஸ்ததை²வாக்ஷரஶ: । ததோऽபஶ்யஜ்ஜ்யோதிர்மயம்
ஶ்ரியாலிங்கி³தம் ஸுபர்ணரத²ம் ஶேஷப²ணாச்ச²தி³தமௌலிம்
ம்ரு’க³முக²ம் நரவபுஷம் ஶஶிஸூர்யஹவ்யவாஹநாத்மகநயநத்ரயம் ।
(ந்ரு’ஸிம்ஹஸ்துதி:)
தத: ப்ரஜாபதி: ப்ரணிபபாத நமோநம இதி । ததை²வர்சாத² தமஸ்தௌத் ।
உக்³ரமித்யாஹ உக்³ர: க²லு வா ஏஷ ம்ரு’க³ரூபத்வாத் । வீரமித்யாஹ
வீரோ வா ஏஷ வீர்யவத்த்வாத் । மஹாவிஷ்ணுமித்யாஹ மஹதாம் வா அயம்
மஹாந்ரோத³ஸீ வ்யாப்ய ஸ்தி²த: । ஜ்வலந்தமித்யாஹ ஜ்வலந்நிவ க²ல்வஸாவவஸ்தி²த:

ஸர்வதோமுக²மித்யாஹ ஸர்வத: க²ல்வயம் முக²வாந்விஶ்வரூபத்வாத் ।
ந்ரு’ஸிம்ஹமித்யாஹ யதா² யஜுரேவைதத் । பீ⁴ஷணமித்யாஹ பீ⁴ஷா வா
அஸ்மாதா³தி³த்ய உதே³தி பீ⁴தஶ்சந்த்³ரமா பீ⁴தோ வாயுர்வாதி பீ⁴தோऽக்³நிர்த³ஹதி
பீ⁴த: பர்ஜந்யோ வர்ஷதி । ப⁴த்³ரமித்யாஹ ப⁴த்³ர: க²ல்வயம் ஶ்ரியா ஜுஷ்ட: ।

ம்ரு’த்யோர்ம்ரு’த்யுமித்யாஹ ம்ரு’த்யோர்வா அயம் ம்ரு’த்யுரம்ரு’தத்வம் ப்ரஜாநாமந்நாதா³நாம்

நமாமீத்யாஹ யதா² யஜுரேவைதத் । அஹமித்யாஹ யதா² யஜுரேவைதத் ॥ 2॥
(உக்³ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதேஜஸம் ।
ந்ரு’ஸிம்ஹம் பீ⁴ஷணம் ப⁴த்³ரம் ம்ரு’த்யும்ரு’த்யும் நமாம்யஹம் ॥)
த்ரு’தீய க²ண்ட:³
(வ்யக்தஸ்வரூபம்)

அத² ப⁴க³வாம்ஸ்தமப்³ரவீத்ப்ரஜாபதே ப்ரீதோऽஹம் கிம் தவேப்ஸிதம்
ததா³ஶம்ஸேதி । ஸ ஹோவாச ப⁴க³வந்நவ்யக்தாது³த்பந்நோऽஸ்மி
வ்யக்தம் மம க்ரு’த்யமிதி புராஶ்ராவி । தத்ராவ்யக்தம் ப⁴வாநித்யஜ்ஞாயி
வ்யக்தம் மே கத²யேதி । வ்யக்தம் வை விஶ்வம் சராசராத்மகம் ।
யத்³வ்யஜ்யதே தத்³வ்யக்தஸ்ய வ்யக்தத்வமிதி ।
(ஜக³த்ஸ்ரு’ஷ்ட்யுபாயோ த்⁴யாநயஜ்ஞ:)
ஸ ஹோவாச ந ஶக்நோமி ஜக³த்ஸ்ரஷ்டுமுபாயம் மே கத²யேதி ।
தமுவாச புருஷ: ப்ரஜாபதே ஶ்ரு’ணு
ஸ்ரு’ஷ்டேருபாயம் பரமம் யம் விதி³த்வா ஸர்வம் ஜ்ஞாஸ்யஸி ।
ஸர்வத்ர ஶக்ஷ்யஸி ஸர்வம் கரிஷ்யஸி । மய்யக்³நௌ ஸ்வாத்மாநம்
ஹவிர்த்⁴யாயேத்தயைவாநுஷ்டுப⁴ர்சா । த்⁴யாநயஜ்ஞோऽயமேவ ।
(த்⁴யாநயஜ்ஞமஹிமா)
ஏதத்³வை மஹோபநிஷத்³தே³வாநாம் கு³ஹ்யம் । ந ஹ வா ஏதஸ்ய ஸாம்நா
நர்சா ந யஜுஷார்தோ² நு வித்³யதே । ய இமா வேத³ ஸ ஸர்வாந்காமாநவாப்ய
ஸர்வாம்ல்லோகாஞ்ஜித்வா மாமேவாப்⁴யுபைதி ந ஸ புநராவர்ததே ய ஏவம் வேதே³தி
॥ 3॥
சதுர்த:² க²ண்ட:³
(த்⁴யாநயஜ்ஞேந பரமேஷ்டி²ந: ஸர்வஜ்ஞத்வாதி³லாப:⁴)
ப்ரஜாபதிஸ்தம் யஜ்ஞாயம் வஸீயாம்ஸமாத்மாநம் மந்யமாநோ
மநோயஜ்ஞேநேஜே । ஸப்ரணவயா தயைவர்சா ஹவிர்த்⁴யாத்வாத்மாநமாத்மந்யக்³நௌ ஜுஹுயாத் । ஸர்வமஜாநாத்ஸர்வத்ராஶகத்ஸர்வமகரோத் ।

(அந்யஸ்யாபி த்⁴யாநயஜ்ஞேந ஸர்வஜ்ஞத்வாதி³லாப:⁴)
ய ஏவம் வித்³வாநிமம் த்⁴யாநயஜ்ஞமநுதிஷ்டே²த்ஸ ஸர்வஜ்ஞோऽநந்தஶக்தி:
ஸர்வகர்தா ப⁴வதி । ஸ ஸர்வாம்ॅல்லோகாஞ்ஜித்வா ப்³ரஹ்ம பரம் ப்ராப்நோதி ॥ 4॥
பஞ்சம: க²ண்ட:³
ஈ(லோகத்ரயாதி³ஸ்ரு’ஷ்டி:)
அத² ப்ரஜாபதிர்லோகாந்ஸிஸ்ரு’க்ஷமாணஸ்தஸ்யா ஏவ வித்³யாயா யாநி
த்ரிம்ஶத³க்ஷராணி தேப்⁴யஸ்த்ரீம்ॅல்லோகாந் । அத² த்³வே த்³வே அக்ஷரே
தாப்⁴யாமுப⁴யதோ த³தா⁴ர । தஸ்யா ஏவர்சோ த்³வாத்ரிம்ஶத்³பி⁴ரக்ஷரைஸ்தாந்தே³வாந்நிர்மமே । ஸர்வைரேவ ஸ இந்த்³ரோऽப⁴வத் । தஸ்மாதி³ந்த்³ரோ
தே³வாநாமதி⁴கோऽப⁴வத் । ய ஏவம் வேத³ ஸமாநாநாமதி⁴கோ ப⁴வேத் ।
(வஸுருத்³ராதி³த்யஸ்ருஷ்டி:)
தஸ்யா ஏகாத³ஶபி:⁴ பாதை³ரேகாத³ஶ ருத்³ராந்நிர்மமே । தஸ்யா
ஏகாத³ஶபி⁴ரேகாத³ஶாதி³த்யாந்நிர்மமே । ஸர்வைரேவ ஸ விஷ்ணுரப⁴வத் ।
தஸ்மாத்³விஷ்ணுராதி³த்யாநாமதி⁴கோऽப⁴வத் । ய ஏவம் வேத³ ஸமாநாநாமதி⁴கோ
ப⁴வேத் । ஸ சதுர்பி⁴ஶ்சதுர்பி⁴ரக்ஷரைரஷ்டௌ வஸூநஜநயத் ।
ஸ தஸ்யா ஆத்³யைர்த்³வாத³ஶபி⁴ரக்ஷரைர்ப்³ராஹ்மணமஜநயத் ।
த³ஶபி⁴ர்த³ஶபி⁴ர்விட்க்ஷத்ரே । தஸ்மாத்³ப்³ராஹ்மணோ முக்²யோ ப⁴வதி ।
ஏவம் தந்முக்²யோ ப⁴வதி ய ஏவம் வேத³ ।
தூஷ்ணீம் ஶூத்³ரமஜநயத்தஸ்மாச்சூ²த்³ரோ நிர்வித்³யோऽப⁴வத் ।
(அஹோராத்ரஸ்ரு’ஷ்டி:)
ந வேத³ம் இவா ந நக்தமாஸீத³வ்யாவ்ரு’தம் ।
ஸ ப்ரஜாபதிராநுஷ்டுபா⁴ப்⁴யாமர்த⁴ர்சாப்⁴யாமஹோராத்ராவகல்பயத் ।
(வேத³ச²ந்த³ஸ்ஸ்ரு’ஷ்டி:)
ததோ வ்யைச்ச²த் வ்யேவாஸ்மா உச்ச²தி । அதோ² தம ஏவாபஹதே ।
ரு’க்³வேத³மஸ்யா ஆத்³யாத்பாதா³த³கல்பயத் । யஜுர்த்³விதீயாத் ।
ஸாம த்ரு’தீயாத் । அத²ர்வாங்கி³ரஸஶ்சதுர்தா²த் யத³ஷ்டாக்ஷரபதா³
தேந கா³யத்ரீ । யதே³காத³ஶபதா³ தேந த்ரிஷ்டுப் ।
யச்சதுஷ்பதா³ தேந ஜக³தீ யத்³த்³வாத்ரிம்ஶத³க்ஷரா தேநாநுஷ்டுப் ।
ஸா வா ஏஷா ஸர்வாணி ச²ந்தா³ம்ஸி । ய இமாம் ஸர்வாணி ச²ந்தா³ம்ஸி வேத³ ।

ஸர்வம் ஜக³தா³நுஷ்டுப⁴ ஏவோத்பந்நமநுஷ்டுப்ப்ரதிஷ்டி²தம்
ப்ரதிதிஷ்ட²தி யஶ்சைவம் வேத³ ॥ 5॥
ஷஷ்ட:² க²ண்ட:³
(ஸ்த்ரீபுருஷமிது²நஸ்ரு’ஷ்டி:)
அத² யதா³ ப்ரஜா: ஸ்ரு’ஷ்டா ந ஜாயந்தே ப்ரஜாபதி: கத²ம்
ந்விமா: ப்ரஜா: ஸ்ரு’ஜேயமிதி சிந்தயந்நுக்³ரமிதீமாம்ரு’சம்
கா³துமுபாக்ராமத் । தத: ப்ரத²மபாதா³து³க்³ரரூபோ தே³வ:
ப்ராது³ரபூ⁴த் ஏக: ஶ்யாம: புரதோ ரக்த: பிநாகீ ஸ்த்ரீபும்ஸரூபஸ்தம்
விப⁴ஜ்ய ஸ்த்ரீஷு தஸ்ய ஸ்த்ரீரூபம் பும்ஸி ச பும்ரூபம் வ்யதா⁴த் ।
உபா⁴ப்⁴யாநம்ஶாப்⁴யாம் ஸர்வமாதி³ஷ்ட: । தத: ப்ரஜா: ப்ரஜாயந்தே ।
ய ஏவம் வேத³ ப்ரஜாபதே: ஸோऽபி த்ர்யம்ப³க இமாம்ரு’சமுத்³கா³யந்நுத்³க்³ரதி²தஜடாகலாப: ப்ரத்யோ அக்³ஜ்யோதிஷ்யாத்மந்யேவ ரந்தாரமிதி ।
(இந்த்³ராக்²யாயிகா)
இந்த்³ரோ வை கில தே³வாநாமநுஜாவர ஆஸீத் । தம் ப்ரஜாபதிரப்³ரவீத்³க³ச்ச²
தே³வாநாமதி⁴பதிர்ப⁴வேதி । ஸோऽக³ச்ச²த் । தம் தே³வா ஊசுரநுஜாவரோऽஸி
த்வமஸ்மாகம் குதஸ்த்வாதி⁴பத்யமிதி । ஸ ப்ரஜாபதிமப்⁴யேத்யோவாசைவம்
தே³வா ஊசுரநுஜாவரஸ்ய குதஸ்தவாதி⁴பத்யமிதி । தம் ப்ரஜாபதிரிந்த்³ரம்
த்ரிகலஶைரம்ரு’தபூர்ணைராநுஷ்டுபா⁴பி⁴மந்த்ரிதைரபி⁴ஷிச்ய தம்
ஸுத³ர்ஶநேந த³க்ஷிணதோ ரரக்ஷ பாஞ்சஜந்யேந வாமதோ த்³வயேநைவ
ஸுரக்ஷிதோऽப⁴வத் । ரௌக்மே ப²லகே ஸூர்யவர்சஸி மந்த்ரமாநுஷ்டுப⁴ம்
விந்யஸ்ய தத³ஸ்ய கண்டே² ப்ரத்யமுஞ்சத் । தத: ஸுது³ர்நிரீக்ஷோऽப⁴வத் ।
தஸ்மை வித்³யாமாநுஷ்டுபீ⁴ம் ப்ராதா³த் । ததோ தே³வாஸ்தமாதி⁴பத்யாயாநுமேநிரே

ஸ ஸ்வராட³பூ⁴த் । ய ஏவம் வேத³ ஸ்வராட்³ ப⁴வேத் । ஸோऽமந்யத ப்ரு’தி²வீமபி
கத²மபாம் ஜயேயமிதி । ஸ ப்ரஜாபதிமுபாதா⁴வத் ।
தஸ்மாத்ப்ரஜாபதி: கமடா²காரமிந்த்³ரநாக³பு⁴ஜகே³ந்த்³ராதா⁴ரம்
ப⁴த்³ராஸநம் ப்ராதா³த் । ஸ ப்ரு’தி²வீமப்⁴யஜயத் । தத: ஸ
உப⁴யோர்லோகயோரதி⁴பதிரபூ⁴த் । ய ஏவம் வேதோ³ப⁴யோர்லோகயோரதி⁴பதிர்ப⁴வதி ।
ஸ ப்ரு’தி²வீம் ஜயதி ।
(பரமாத்மப்ரதிஷ்டா²ஸாத⁴நம்)

யோ வா அப்ரதிஷ்டி²தம் ஶிதி²லம் ப்⁴ராத்ரு’வேப்⁴யோ
வஸீயாந்ப⁴வதி யஶ்சைவம் வேத³ யஶ்சைவம் வேத³ ॥ 6॥
ஸப்தம: க²ண்ட:³
(ஏதத்³வித்³யாऽத்⁴யயநப²லம்)
ய இமாம் வித்³யாமதீ⁴தே ஸ ஸர்வாந்வேதா³நதீ⁴தே । ஸ ஸர்வை: க்ரதுபி⁴ர்யஜதே ।
ஸ ஸர்வதீர்தே²ஷு ஸ்நாதி । ஸ மஹாபாதகோபபாதகை: ப்ரமுச்யதே । ஸ
ப்³ரஹ்மவர்சஸம் மஹதா³ப்நுயாத் । ஆப்³ரஹ்மண: பூர்வாநாகல்பாऽஶ்சோத்தராம்ஶ்ச
வம்ஶாந்புநீதே । நைநமபஸ்மாராத³யோ ரோகா³ ஆதி³தே⁴யு: । ஸயக்ஷா:
ஸப்ரேதபிஶாசா அப்யேநம் ஸ்ப்ரு’ஷ்ட்வா த்³ரு’ஷ்ட்வா ஶ்ருத்வா வா
பாபிந: புண்யாம்ॅல்லோகாநவாப்நுயு: । சிந்திதமாத்ராத³ஸ்ய ஸர்வேऽர்தா:²
ஸித்³த்⁴யேயு: । பிதரமிவைநம் ஸர்வே மந்யந்தே । ராஜாநஶ்சாஸ்யாதே³ஶகாரிணோ
ப⁴வந்தி । ந சாசார்யவ்யதிரிக்தம் ஶ்ரேயாம்ஸம் த்³ரு’ஷ்ட்வா நமஸ்குர்யாத் ।
ந சாஸ்மாது³பாவரோஹேத் । ஜீவந்முக்தஶ்ச ப⁴வதி । தே³ஹாந்தே தமஸ: பரம்
தா⁴ம ப்ராப்நுயாத் । யத்ர விராண் ந்ரு’ஸிம்ஹோऽவபா⁴ஸதே தத்ர க²லூபாஸதே ।
தத்ஸ்வரூபத்⁴யாநபரா முநய ஆகல்பாந்தே தஸ்மிந்நேவாத்மநி லீயந்தே । ந ச
புநராவர்தந்தே ।
(ஏதத்³வித்³யாஸம்ப்ரதா³நவிதி:⁴)
ந சேமாம் வித்³யாமஶ்ரத்³த³தா⁴நாய ப்³ரூயாந்நாஸூயாவதே
நாநூசாநாய நாவிஷ்ணுப⁴க்தாய நாந்ரு’திநே நாதபஸே நாதா³ந்தாய
நாஶாந்தாய நாதீ³க்ஷிதாய நாத⁴ர்மஶீலாய ந ஹிம்ஸகாய நாப்³ரஹ்மசாரிண
இத்யேஷோபநிஷத் ॥
ௐ ஆப்யாயந்து மமாங்கா³நி வாக்ப்ராணஶ்சக்ஷு: ஶ்ரோத்ரமதோ²
ப³லமிந்த்³ரியாணி ச ॥ ஸர்வாணி ஸர்வம் ப்³ரஹ்மோபநிஷத³ம் மாஹம்
ப்³ரஹ்ம நிராகுர்யாம் மா மா ப்³ரஹ்ம நிராகரோத³நிராகரணமஸ்த்வநிராகரணம் மேஸ்து ததா³த்மநி நிரதே ய உபநிஷத்ஸு த⁴ர்மாஸ்தே
மயி ஸந்து தே மயி ஸந்து ॥
ௐ ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: ॥
ஹரி: ௐ தத்ஸத் ॥
இத்யவ்யக்தோபநிஷத்ஸமாப்தா ॥

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திவ்ய தேச பொய்கைகள் தடாகங்கள் மாடங்கள் திரு நாமங்கள் —

August 18, 2026

எம்பெருமான் திருநாமங்கள் மாத்திரமன்று;
திருமோகூரில் தடாகத்தைத் தாளதாமரை யென்றும்,
வானமாமலையில் தடாகத்தைச் சேற்றுத் தாமரை யென்றும்,
அவ்விடத்துச் சோலையொன்றைப் தேனமாம்பொழி லென்றும்,
திருக்குடத்தையில் புஷ்கரிணியைப் பொற்றாமரை யென்றும்,
திருக்குறுங்குடியில் புஷ்கரிணியைக் கரண்டமாடு பொய்கை யென்றும்
இங்ஙனேயுள்ள பல வழக்குகளிலும் இந்த ஆராய்ச்சி ஒக்கும்.
ஆழ்வார் திருவாக்குக்களை மூலமாகக் கொண்டே இவ்வழக்குகள் தோன்றின வென்னலாம்.

தாள தாமரைத் தட மணி வயல் திருமோகூர்
நாளும் மேவி நன் கமர்ந்து நின்றசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்
காள மேகத்தை யன்றி மற்றொன்றிலம் கதியே.–10-1-1-

இப்பெருமாளையே மேலே எட்டாம் பாட்டில் தயரதன் பெற்ற மரதக மணித்தட மென்று
திவ்ய தடாகமாகவும் அநுஸந்திக்கையாலே தாபம் அகற்றும் பெருமாளேயிவர்;
இவரையொழிய மற்றொன்று கதியிலம்…..
வேறுதுணையுடையோமல்லோ மென்று அப் பெருமாளைப் பற்றுகிறார்.

துயர் கெடும் கடி தடைந்து வன் தடியவர் தொழுமின்
உயர்கொள் சோலை யொண் தடமணி யொளி திரு மோகூர்
பெயர்கள் ஆயிர முடைய வல் லரக்கர் புக் கழுந்த
தயரதன் பெற்ற மரதக மணித் தடத் தினையே.–10-1-8-

வெளியே தாளதாமரைத் தடாகமுடைய திருமோகூர்லே ஸன்னிதிககுள்ளேயும் ஒரு தடாகம் திகழ்கின்றது;
அந்தத் தடாகத்தை அடியவர்களே! வந்து தொழுமின் என்றழைக்கிறார்.
ஸன்னிதிக்குளளே திகழும் தடாக மெதுவென்னில்; தயரதன் பெற்ற மரகதமணித் தடம்;-……..
தசரத சக்ரவர்த்தி இராமனைப் பெற்றானல்லன்;
ஒரு மரகதத் தடாகத்தையாயிற்று பெற்றான்;
தடாகத்திற்கும் எம்பெருமாளுக்குமுள்ள பொருத்தங்கள் கீழே
(8…5…1) *’ மாயக் கூத்தாவாமனா!* என்கிற பாட்டில்
“ கண் கைகால் தூய செய்ய மலர்களா சோதிச் செவ்வாய் முகிழதா சாயல் சாமத்திருமேனி
தண்பாசடையா தாமரை நீள்வாசத் தடம் போல் வருவானே’’ என்று காட்டப்பட்ன்.
*கரசரணஸரோஜே காந்தி மந்தேத்ர மீநே ச்ரமமுஷி புஜவீசிவ்யாகுலே அகாதமார்க்கே, ஹர்ஸரஸி * என்ற
முகுந்தமாலை ஸ்லோகத்திலும் இப் பொருத்தம் நிரூபிக்கப்பட்டது.

கரசரண—ஸரோஜே காந்தி மந் —நேத்ரமீநே
ஸ்ரமமுஷி புஜவீசி –வ்யாகுலே காதமார்க்கே |
ஹரி ஸரஸி விகாஹ்யா பீய தேஜோஜலௌகம்
பவமரு –பரிகிந்ந : கேதமத்ய த்யஜாமி ||–9-

பகவானது திருமேனி தேஜஸ் என்கிற தீர்த்தத்தைப் பருகி, தாகத்தைப் போக்கிக்கொள்கிறேன் என்கிறார்.
அந்தத் தீர்த்தம் தடாகத்தில் இருக்கிறது; அது ஹரி என்னும் தடாகம்; அந்த ஹரியின் , திருக்கைகளும், திருவடிகளும் தாமரைகள் ;
அவை நிறைந்த தடாகம்; அவரது ஒளி வீசுகிற திருக்கண்கள் ,மீன்கள் அவை நிறைந்த தடாகம்;
அவரது திருப்புஜங்களே ச்ரமங்களை அகற்றிப் புயல் போல இருக்கும் தடாக அலைகள்;இந்தத் தடாகம் மிக ஆழமானது;
சம்சாரமாகிய பாலைவனத்தில் வருந்திய அடியேன் ,
இந்த ஹரி என்கிற தடாகத்தில் மூழ்கி, அவரது தேஜஸ் என்கிற ஜலத்தைப் பானம் செய்து,
அத்ய கேதம் த்யஜாமி—–இப்போது கஷ்டங்களை எல்லாம் விட்டு விடுகிறேன்
( பாலைவனத்தில் நீருக்காக அலைந்த நான், பகவானின் தேஜஸ் என்கிற ஜலத்தைப் பருகினேன் ,தாகம் தீர்ந்தது ,என்கிறார் )

பட்டரும் ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில்
* உத்புல்லபங்கஜ தடாகமிவ*
பீப நயந புரஸ்தே* என்கிற இரண்டு லோகங்களினால் இப் பொருத்தத்தை நிரூபித்தருளினார்.

உத்ப் புல்ல பங்கஜ தடாகம் இவ உபயாநி ஸ்ரீ ரெங்க ராஜம் இஹ தக்ஷிண சவ்ய ஸீம்நோ
லஷ்மீம் விஹார ரசிகாம் இவ ராஜ ஹம்ஸீம் ச்சாயாம் இவ அப்யுதயிநீம் அவநீம் ச தஸ்யா –1-63-

இஹ –இந்த கர்ப்ப க்ருஹத்தில்

உத்ப் புல்ல பங்கஜ தடாகம் இவ ஸ்திதம்–மலர்ந்த தாமரைகளை யுடைய பொய்கை போன்றுள்ள

உபயாநி ஸ்ரீ ரெங்கராஜம்–ஸ்ரீ ரெங்க நாதனை ஆஸ்ரயிக்கக் கடவேன்-
தயரதன் பெற்ற மரகத மணித் தடம்

கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே –

மாயக் கூத்தா வாமனா வினையேன் கண்ணா கண் கை கால்
தூய செய்ய மலர்களா சோதித் செவ்வாய் முகிழதா
சாயல் சாமத் திருமேனி தண் பாசடையா தாமரை நீள்
வாசத் தடம் போல் வருவானே ஒரு நாள் காண வாராயே—8-5-1-

தாமரைப் பொய்கையில் அன்னப் பேடை விளையாடும் -அது மேலே –
இஹ தக்ஷிண சவ்ய ஸீம்நோ –வலவருகிலும் இடவருகிலும்

விஹார ரசிகாம் இவ ராஜ ஹம்ஸீம்-லஷ்மீம்–விளையாட வல்ல அன்னப் பேடை போன்றுள்ள திரு மகளையும்

ச்சாயாம் இவ அப்யுதயிநீம் அவநீம் ச தஸ்யா –அவளுடைய மேன்மேலும் வளர்த்தியை யுடைத்தான நிழல் போன்ற
ஸ்ரீ பூமிப் பிராட்டியையும் அடையக் கடவேன் –

சர்வ காலமும் அனுபவிக்கும் படியாய் உள்ள அர்ச்சாவதார ஏற்றத்தால்-
தேங்கின மடுக்கள் போலே – தடாகமாக உருவகம்

பிப நயன புர தே ரங்க துர்ய அபி தாநம் ஸ்த்திதம் இஹ பரி புல்லத் புண்டரீகம் தடாகம்
ஸ்ரியம் அபி விஹரந்தீம் ராஜ ஹம்ஸீம் இவ அஸ்மிந் பிரதி பலநம் இவ அஸ்யா பஸ்ய விஸ்வம் பராம் ச –1-64-

ஹே நயன–வாராய் கண்ணே

இஹ-இந்த கர்ப்ப க்ருஹத்தில்

புர தே ஸ்த்திதம்–உன் எதிரிலே நிற்பதாய்

பரி புல்லத் புண்டரீகம்–மலர்ந்த தாமரைப் பூக்களை யுடையதாய்

ரங்க துர்ய அபி தாநம் தடாகம்–ஸ்ரீ ரெங்கநாதன் என்னும் திரு நாமம் யுடைய பொய்கையை

பிப -பானம் பண்ணு

அஸ்மிந் விஹரந்தீம் ராஜ ஹம்ஸீம் இவ–இப்பொய்கையில் விளையாடுகின்ற அன்னப் பேடை போன்றுள்ள

ஸ்ரியம் அபி–ஸ்ரீ மஹா லஷ்மியையும்

பிரதி பலநம் இவ அஸ்யா ஸ்திதம் -இந்தத் திரு மகளுடைய பிரதிபிம்பம் போன்றுள்ள
கீழே சாயை என்றார் -இங்கோ பிரதி பலநம்-என்கிறார் –

பஸ்ய விஸ்வம் பராம் ச –ஸ்ரீ நில மகளையும் சேவிப்பாய்

கீழே உபயாநி என்று அருகே செல்வத்தையும்
இங்கு பிப நயன புரஸ் தே -அவகாஹ நாதிகளைச் சொன்ன படி

அணி அரங்கன் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -என்றபடி
கண்களால் ஆரப் பருகுவதைச் சொன்னபடி –

உலகில் காணும் பொய்கையை தரையில் பரந்து இருக்கும் –
இங்கேயோ –ரங்க துர்ய அபி தாநம் ஸ்த்திதம் -புருஷ ரூபியாய் நின்று கொண்டு இருக்கிறது

உலகில் பொய்கையில் தாமரை மலர்கள் மலர்வதும் மூடுவதும் வாடுவதுமாய் இருக்கும்
இங்கேயோ –பரி புல்லத் புண்டரீகம் -மலர்ந்தே அன்றோ இருக்கிறது

இவற்றில் விட்டுப் போன ஒரு பொருத்தம் இப்பாட்டில் காட்டப்படுகிறது.
அதாவதென்னெனில்;
உலகில் ஒரு தடாகம் வெட்டப்பட்டிருந்தால் அதில் பலரும் நீராடுதல் தீர்த்தம் பருகுதல் அனுட்டானம் செய்தல் முதலியன செய்து களிக்குமா போலே
சிலர் தாமாகவே கழுத்தில் கல்லைக் கடடிக் கொண்டு அக்குளத்தில் வீழ்ந்து மடிந்து போவதையுங் காணா நின்றோமே;
இத்தன்மை தயரதன் பெற்ற மரகத மணித் தடாகத்திற்கு முண்டென்று காட்டியருளுகிறார்
வல்லரக்கர் புக்கழுந்தத் தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே என்று.
இத்தால் அரக்கர்களைப் பெருமாள் தாமாகக் கொன்று முடித்தாரல்லர்;
விட்டில்கள் விளக்கிலே தாமாக விழுந்து முடிந்து போவது போல
அரக்கர் தாங்களாகவே எதிரிட்டு மடிந்து முடிந்து போனார்களத்தனையென்னுமிடம் தெரிவிக்கப்பட்டதாம்.

————

நடை அழகு அரங்கனுக்கு
குடை அழகு வரதனுக்கு
தொடை அழகு மன்னனுக்கு
கிடை அழகு ஆராவமுதனுக்கு
முடி அழகு திரு நாராயணனுக்கு
வடிவு அழகு திருவேங்கட அப்பனுக்கு
உடை அழகு பார்த்த சாரதி
படை அழகு அழகருக்கு

—————

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானைப் புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையை
தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே–8-9-4-
உத்சவர் பக்த வத்சலன் -பக்தர்களுக்கு தக்க கிருபை பொழிபவன்
அம்ருத தீர்த்தம் பாண்டவ தீர்த்தம் தக்கான் குளம்
அம்ருத பல வல்லி மாய்ச்சியார் -லஷ்மீ தீர்த்த கரை
ஸிம்ஹ விமானம் -ஹேம கோடி விமானம்
தக்கான் குளம் -கயா போக வேண்டாம் -அதே மஹிமை 
வரதராஜர் சந்நிதியும் உண்டே -கருட வாஹனத்துடன் இங்கே சேவை உண்டே

தக்கானைக்-
பரம தார்மிகனை –
(கிருபை -தகவு -ஆன்ரு ஸம்சயம் பரோ தர்மம் – கிருபையே தர்மம் -கிருபாவானே தார்மிகன் என்றபடி )

கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த அக்காரக் கனியை –
திருக் கடிகை யாகிற திருமலையின் மேலே
அக்காரம் போலேயும்
கனி போலேயும்
நிரதிசய போக்யனாய் இருக்கிறவனை –

அடைந்து உய்ந்து போனேனே  –

------------
தொடரடைவுகள் (முனைவர்.ப.பாண்டியராஜா) எழுதப்பட்ட கணினி நிரல்களின் மூலம் 
(http://tamilconcordance.in) தளத்தில் இருந்து எடுக்கப் பட்டவை

பொய்கை (26)
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நல் பொய்கை புக்கு – நாலாயி:99/2
தடம் படு தாமரை பொய்கை கலக்கி – நாலாயி:215/1
தாழை தண் ஆம்பல் தடம் பெரும் பொய்கை வாய் வாழும் முதலை வலைப்பட்டு வாதிப்பு உண் – நாலாயி:220/1,2
அம் சுடர் ஆழி உன் கையகத்து ஏந்தும் அழகா நீ பொய்கை புக்கு – நாலாயி:249/1
நல்லது ஓர் தாமரை பொய்கை நாள்மலர் மேல் பனி சோர – நாலாயி:297/1
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நல் பொய்கை புக்கு – நாலாயி:311/2
காளியன் பொய்கை கலங்க பாய்ந்திட்டு அவன் – நாலாயி:313/1
ஒரு வாரணம் பணிகொண்டவன் பொய்கையில் கஞ்சன்-தன் – நாலாயி:342/1
ஏழைமை ஆற்றவும் பட்டோம் இனி என்றும் பொய்கைக்கு வாரோம் – நாலாயி:524/3
இது என் புகுந்தது இங்கு அந்தோ இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய் – நாலாயி:525/1
தடத்து அவிழ் தாமரை பொய்கை தாள்கள் எம் காலை கதுவ – நாலாயி:529/1
போர்க்களமாக நிருத்தம் செய்த பொய்கை கரைக்கு என்னை உய்த்திடு-மின் – நாலாயி:621/4
கடம் கலந்த வன் கரி மருப்பு ஒசித்து ஒர் பொய்கைவாய் விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே – நாலாயி:789/1,2
கரண்டம் ஆடு பொய்கையுள் கரும் பனை பெரும் பழம் – நாலாயி:813/1
சாடு சாடு பாதனே சலம் கலந்த பொய்கைவாய் ஆடு அராவின் வன் பிடர் நடம் பயின்ற நாதனே – நாலாயி:837/1,2
மீன் அமர் பொய்கை நாள்மலர் கொய்வான் வேட்கையினோடு சென்று இழிந்த – நாலாயி:1076/1
பூம் புனல் பொய்கை புக்கான் அவனுக்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1132/2
கொழுந்து அலரும் மலர் சோலை குழாம்கொள் பொய்கை கோள் முதலை வாள் எயிற்று கொண்டற்கு எள்கி – நாலாயி:1140/1
தளைத்து அவிழ் தாமரை பொய்கை தண் தடம் புக்கு அண்டர் காண – நாலாயி:1171/2
தழை வாட வன் தாள் குருந்தம் ஒசித்து தடம் தாமரை பொய்கை புக்கான் இடம் தான் – நாலாயி:1222/2
தளை கட்டு அவிழ் தாமரை வைகு பொய்கை தடம் புக்கு அடங்கா விடம் கால் அரவம் – நாலாயி:1224/1
தா அளந்து உலகம் முற்றும் தட மலர் பொய்கை புக்கு – நாலாயி:1298/1
சீர் மலி பொய்கை சென்று அணைகின்ற திருவெள்ளியங்குடி அதுவே – நாலாயி:1342/4
தெய்வம் நாறும் ஒண் பொய்கைகள் சூழ் திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1370/4
கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம் – நாலாயி:1420/1
தடம் தாமரை நீர் பொய்கை புக்கு மிக்க தாள் ஆளன் – நாலாயி:1539/2
குல தலைய மத வேழம் பொய்கை புக்கு கோள் முதலை பிடிக்க அதற்கு அனுங்கி நின்று – நாலாயி:1620/1
கவள மா கதத்த கரி உய்ய பொய்கை கராம் கொள கலங்கி உள் நினைந்து – நாலாயி:1749/1
நச்சு அழல் பொய்கையில் நாகத்தினோடு பிணங்கி நீ வந்தாய் போலும் – நாலாயி:1919/4
புலம் பரந்து பொன் விளைக்கும் பொய்கை வேலி பூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே – நாலாயி:2057/4
அல்லி அம் பூ மலர் பொய்கை பழன வேலி அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான் என்றும் – நாலாயி:2066/2
இலை ஆர் மலர் பூம் பொய்கை வாய் முதலை தன்னால் அடர்ப்புண்டு – நாலாயி:1704/1
போர் ஆனை பொய்கை வாய் கோட்பட்டு நின்று அலறி – நாலாயி:2694/2
வருத்தும் புற இருள் மாற்ற எம் பொய்கை பிரான் மறையின் – நாலாயி:2798/1
பூம் தண் புனல் பொய்கை யானை இடர் கடிந்த – நாலாயி:3089/3
மொய்ம் மாம் பூம் பொழில் பொய்கை முதலை சிறைப்பட்டு நின்ற – நாலாயி:3165/1
உரவு நீர் பொய்கை நாகம் காய்ந்ததும் உட்பட மற்றும் பல – நாலாயி:3484/2
அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று அகல் இரும் பொய்கையின் வாய் நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சு இடர் தீர்த்த பிரான் – நாலாயி:3667/1,2

பொய்கைக்கு (2)
ஏழைமை ஆற்றவும் பட்டோம் இனி என்றும் பொய்கைக்கு வாரோம் – நாலாயி:524/3
இது என் புகுந்தது இங்கு அந்தோ இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய் – நாலாயி:525/1

பொய்கைகள் (1)
தெய்வம் நாறும் ஒண் பொய்கைகள் சூழ் திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1370/4

பொய்கையில் (2)
ஒரு வாரணம் பணிகொண்டவன் பொய்கையில் கஞ்சன்-தன் – நாலாயி:342/1
நச்சு அழல் பொய்கையில் நாகத்தினோடு பிணங்கி நீ வந்தாய் போலும் – நாலாயி:1919/4

பொய்கையின் வாய் (1)
அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று அகல் இரும் பொய்கையின் வாய்
நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சு இடர் தீர்த்த பிரான் – நாலாயி:3667/1,2

பொய்கையுள் (1)
– நாலாயி:813/1
பொய்கை வாய் (5)
தாழை தண் ஆம்பல் தடம் பெரும் பொய்கைவாய்
வாழும் முதலை வலைப்பட்டு வாதிப்பு உண் – நாலாயி:220/1,2
கடம் கலந்த வன் கரி மருப்பு ஒசித்து ஒர் பொய்கைவாய்
விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே – நாலாயி:789/1,2
சாடு சாடு பாதனே சலம் கலந்த பொய்கைவாய்
ஆடு அராவின் வன் பிடர் நடம் பயின்ற நாதனே – நாலாயி:837/1,2
இலை ஆர் மலர் பூம் பொய்கைவாய் முதலை தன்னால் அடர்ப்புண்டு – நாலாயி:1704/1
போர் ஆனை பொய்கைவாய் கோட்பட்டு நின்று அலறி – நாலாயி:2694/2

தடங்கள் (2)
சந்தொடு கார் அகிலும் சுமந்து தடங்கள் பொருது – நாலாயி:596/1
நீல தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள் போல பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் பொங்கு முந்நீர் – நாலாயி:2516/1,2
தடங்கள்-தொறும் (1)
தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர் தாமரைகள் தடங்கள்-தொறும் இடங்கள்-தொறும் திகழ – நாலாயி:1238/3
தடத்த (3)
முலை தடத்த நஞ்சு உண்டு துஞ்ச பேய்ச்சி முது துவரை குலபதியாய் காலி பின்னே – நாலாயி:1504/1
இலை தடத்த குழல் ஊதி ஆயர் மாதர் இன வளை கொண்டான் அடி கீழ் எய்தகிற்பீர் – நாலாயி:1504/2
மலை தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய வளம் கொடுக்கும் வரு புனல் அம் பொன்னி நாடன் – நாலாயி:1504/3
தடத்திடை (1)
மையின் ஆர்தரு வரால் இனம் பாய வண் தடத்திடை கமலங்கள் – நாலாயி:1370/3
தடத்தினுள் (1)
மன்னும் அழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும் – நாலாயி:2718/1
தடத்தினையே (1)
தயரதன் பெற்ற மரகத மணி தடத்தினையே – நாலாயி:3898/4
தடத்து (7)
தடத்து அவிழ் தாமரை பொய்கை தாள்கள் எம் காலை கதுவ – நாலாயி:529/1
போலும் நீர்மை பொற்பு உடை தடத்து வண்டு விண்டு உலாம் – நாலாயி:795/2
கண் ஆர் கரும்பின் கழை தின்று வைகி கழுநீரில் மூழ்கி செழு நீர் தடத்து மண் ஏந்து இள மேதிகள் வைகும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1223/3,4
படையோடு சங்கு ஒன்று உடையாய் என நின்று இமையோர் பரவும் இடம் பைம் தடத்து பெடையோடு செம் கால அன்னம் துகைப்ப தொகை புண்டரீகத்திடை செங்கழுநீர் – நாலாயி:1226/2,3
செழு நீர் தடத்து கயல் மிளிர்ந்தால் ஒப்ப சே அரி கண் – நாலாயி:2479/1
கவள மா களிற்றின் இடர் கெட தடத்து காய் சின பறவை ஊர்ந்தானே – நாலாயி:3796/4
மணி தடத்து அடி மலர் கண்கள் பவள செ வாய் – நாலாயி:3899/1
தடத்துள் (1)
ஓத நெடும் தடத்துள் உயர் தாமரை செங்கழுநீர் – நாலாயி:3435/2
தடத்தை (1)
கடு விடம் உடைய காளியன் தடத்தை கலக்கி முன் அலக்கழித்து அவன்-தன் – நாலாயி:1340/1
தடம் (164)
மை தடம் கண்ணி யசோதை வளர்க்கின்ற – நாலாயி:34/1
செய்ய தடம் கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும் – நாலாயி:52/2
சக்கர கையன் தடம் கண்ணால் மலர விழித்து – நாலாயி:57/1
தாழியில் வெண்ணெய் தடம் கை ஆர விழுங்கிய – நாலாயி:62/1
மை தடம் கண்ணி யசோதை-தன் மகனுக்கு இவை – நாலாயி:63/1
தடம் தாள் இணை கொண்டு சார்ங்கபாணி தளர் நடை நடவானோ – நாலாயி:86/4
தடம் தாளினை கொண்டு சார்ங்கபாணி தளர் நடை நடவானோ – நாலாயி:92/4
வேய் தடம் தோளி சொல் விட்டுசித்தன் மகிழ்ந்து – நாலாயி:117/2
வேய் தடம் தோளார் விரும்பும் கரும் குழல் விட்டுவே நீ இங்கே வாராய் – நாலாயி:143/4
தாலி கொழுந்தை தடம் கழுத்தில் பூண்டு – நாலாயி:172/2
தடம் படு தாமரை பொய்கை கலக்கி – நாலாயி:215/1
தான் எறிந்திட்ட தடம் பெரும் தோளினால் – நாலாயி:216/2
வேய் தடம் தோளினார் வெண்ணெய் கொள் மாட்டாது அங்கு – நாலாயி:217/3
தாழை தண் ஆம்பல் தடம் பெரும் பொய்கைவாய் – நாலாயி:220/1
தொத்தார் பூம் குழல் கன்னி ஒருத்தியை சோலை தடம் கொண்டு புக்கு – நாலாயி:232/1
வட்ட தடம் கண் மட மான் கன்றினை வலைவாய் பற்றிக்கொண்டு குறமகளிர் – நாலாயி:264/3
அம்மை தடம் கண் மட ஆய்ச்சியரும் ஆன் ஆயரும் ஆநிரையும் அலறி – நாலாயி:266/1
தடம் கை விரல் ஐந்தும் மலர வைத்து தாமோதரன் தாங்கு தட வரைதான் – நாலாயி:270/2
செம் பெரும் தடம் கண்ணன் திரள் தோளன் தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம் – நாலாயி:280/1
நேமி சேர் தடம் கையினானை நினைப்பு இலா வலி நெஞ்சு உடை – நாலாயி:364/3
கான் தடம் பொழில் சூழ் கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே – நாலாயி:400/4
மை தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை – நாலாயி:492/5
கொத்து அலர் காவில் மணி தடம் கண்படை கொள்ளும் இளம் குயிலே என் – நாலாயி:550/3
களி வண்டு எங்கும் கலந்தால் போல் கமழ் பூம் குழல்கள் தடம் தோள் மேல் – நாலாயி:644/3
ஆலை நீள் கரும்பு அன்னவன் தாலோ அம்புய தடம் கண்ணினன் தாலோ – நாலாயி:708/1
தளிர் மலர் கரும் குழல் பிறை-அதுவும் தடம் கொள் தாமரை கண்களும் பொலிந்த – நாலாயி:711/2
தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடம் கடல் – நாலாயி:761/1
தங்குகின்ற தன்மையாய் தடம் கடல் பணத்தலை – நாலாயி:766/2
சாலி வேலி தண் வயல் தடம் கிடங்கு பூம் பொழில் – நாலாயி:810/1
செழும் தடம் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே – நாலாயி:811/4
பண் உலாவு மென் மொழி படை தடம் கணாள் பொருட்டு – நாலாயி:842/1
ஏலம் நாறு தண் தடம் பொழில் இடம்பெற இருந்த நல் இமயத்துள் – நாலாயி:958/2
பீலி மா மயில் நடம் செயும் தடம் சுனை பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:958/4
ஏர் கொள் பூம் சுனை தடம் படிந்து இன மலர் எட்டும் இட்டு இமையோர்கள் – நாலாயி:964/3
வாளை பாயும் தண் தடம் சூழ் வதரி வணங்குதுமே – நாலாயி:971/4
தானவன் ஆகம் தரணியில் புரள தடம் சிலை குனித்த என் தலைவன் – நாலாயி:978/2
தடம் சூழ்ந்து எங்கும் அழகு ஆய சாளக்கிராமம் அடை நெஞ்சே – நாலாயி:989/4
தடுத்தான் தடம் சூழ்ந்து அழகு ஆய சாளக்கிராமம் அடை நெஞ்சே – நாலாயி:992/4
சங்கு தங்கு தடம் கடல் துயில் கொண்ட தாமரை கண்ணினன் – நாலாயி:1018/2
தீர்த்த நீர் தடம் சோலை சூழ் திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1021/4
நன்று ஆய புனல் நறையூர் திருவாலி குடந்தை தடம் திகழ் கோவல்நகர் – நாலாயி:1078/3
தடம் பருகு கரு முகிலை தஞ்சை கோயில் தவ நெறிக்கு ஓர் பெரு நெறியை வையம் காக்கும் – நாலாயி:1090/3
கிடந்தானை தடம் கடலுள் பணங்கள் மேவி கிளர் பொறிய மறி திரிய அதனின் பின்னே – நாலாயி:1093/1
தடம் ஆர்ந்த கடல்மல்லை தலசயனத்து தாமரை-கண் துயில் அமர்ந்த தலைவன்-தன்னை – நாலாயி:1097/2
தன் குடிக்கு ஏதும் தக்கவா நினையாள் தடம் கடல் நுடங்கு எயில் இலங்கை – நாலாயி:1113/1
நல் அரன் நாரணன் நான்முகனுக்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1128/2
தார் மன்னு தாமரை_கண்ணன் இடம் தடம் மா மதிள் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1129/2
பூம் புனல் பொய்கை புக்கான் அவனுக்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1132/2
சலமொடு மாநிலம் கொண்டவனுக்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1134/2
மறை உடை மால் விடை ஏழ் அடர்த்தாற்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1136/2
தறி ஆர்ந்த கரும் களிறே போல நின்று தடம் கண்கள் பனி மல்கும் தன்மையானை – நாலாயி:1143/2
நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன் நிலவிய இடம் தடம் ஆர் – நாலாயி:1155/2
தளைத்து அவிழ் தாமரை பொய்கை தண் தடம் புக்கு அண்டர் காண – நாலாயி:1171/2
கறை தங்கு வேல் தடம் கண் திருவை மார்பில் கலந்தவன் தாள் அணைகிற்பீர் கழுநீர் கூடி – நாலாயி:1186/2
சங்க முக தமிழ் மாலை பத்தும் வல்லார் தடம் கடல் சூழ் உலகுக்கு தலைவர் தாமே – நாலாயி:1187/4
சங்கு தங்கு தடம் கடல் கடல் மல்லையுள் கிடந்தாய் அருள்புரிந்து – நாலாயி:1195/1
மாதவன் தன் துணையா நடந்தாள் தடம் சூழ் புறவில் – நாலாயி:1211/3
தாய் எனை என்று இரங்காள் தடம் தோளி தனக்கு அமைந்த – நாலாயி:1212/1
தழை வாட வன் தாள் குருந்தம் ஒசித்து தடம் தாமரை பொய்கை புக்கான் இடம் தான் – நாலாயி:1222/2
தளை கட்டு அவிழ் தாமரை வைகு பொய்கை தடம் புக்கு அடங்கா விடம் கால் அரவம் – நாலாயி:1224/1
சலம் கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு தடம் கடலை கடைந்து அமுதம் கொண்டு உகந்த காளை – நாலாயி:1228/1
தலையில் அம் கை வைத்து மலை இலங்கை புக செய்த தடம் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1231/2
தன் நிகர்_இல் சிலை வளைத்து அன்று இலங்கை பொடிசெய்த தடம் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1232/2
வங்கம் மலி தடம் கடலுள் வானவர்களோடு மா முனிவர் பலர் கூடி மா மலர்கள் தூவி – நாலாயி:1236/1
தாள் நெடும் திண் சிலை வளைத்த தயரதன் சேய் என்தன் தனி சரண் வானவர்க்கு அரசு கருதும் இடம் தடம் ஆர் – நாலாயி:1243/2
வாளை ஆர் தடம் கண் உமை பங்கன் வன் சாபம் மற்று அது நீங்க – நாலாயி:1265/1
வாளை பாய் தடம் சூழ்தரு நாங்கூர் வண்புருடோத்தமமே – நாலாயி:1265/4
மை ஆர் தடம் கண் கரும் கூந்தல் ஆய்ச்சி மறைய வைத்த தயிர் – நாலாயி:1352/1
மின்னின் அன்ன நுண் மருங்குல் வேய் ஏய் தடம் தோள் மெல்லியற்கா – நாலாயி:1353/1
சடையான் ஓட அடல் வாணன் தடம் தோள் துணித்த தலைவன் இடம் – நாலாயி:1354/2
வளர்ந்தவனை தடம் கடலுள் வலி உருவில் திரி சகடம் – நாலாயி:1401/1
சாந்து ஏந்து மென் முலையார் தடம் தோள் புணர் இன்ப வெள்ளத்து – நாலாயி:1471/1
தார் ஆர் மலர் கமல தடம் சூழ்ந்த தண் புறவில் – நாலாயி:1477/1
தலை ஆர்ந்த இளம் கமுகின் தடம் சோலை திருநறையூர் – நாலாயி:1535/2
தடம் தாமரை நீர் பொய்கை புக்கு மிக்க தாள் ஆளன் – நாலாயி:1539/2
வாவி தடம் சூழ் மணி முத்து ஆற்று நறையூர் நெடுமாலை – நாலாயி:1547/1
காவி தடம் கண் மடவார் கேள்வன் கலியன் ஒலி மாலை – நாலாயி:1547/3
வங்கம் மலி தடம் கடலுள் அநந்தன் என்னும் வரி அரவின்_அணை துயின்ற மாயோன் காண்-மின் – நாலாயி:1618/2
வடி தடம் கண் மலரவளோ வரை ஆகத்துள் இருப்பாள் என்கின்றாளால் – நாலாயி:1652/3
வங்கம் மலி தடம் கடலுள் வரி அரவின்_அணை துயின்ற – நாலாயி:1675/3
வார் கொள் மென் முலை மடந்தையர் தடம் கடல்_வண்ணனை தாள் நயந்து – நாலாயி:1697/1
விலங்கல் திரிய தடம் கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை – நாலாயி:1719/3
தக்கானை கடிகை தடம் குன்றின் மிசை இருந்த – நாலாயி:1731/3

தாது மல்கு தடம் சூழ் பொழில் தாழ்வர் தொடர்ந்து பின் – நாலாயி:1770/2
செழும் தடம் பூஞ்சோலை சூழ் புல்லாணி கைதொழுதேன் – நாலாயி:1783/3
தடம் கடல் முகந்து விசும்பிடை பிளிற தட வரை களிறு என்று முனிந்து – நாலாயி:1823/3
தான் உகந்து எறிந்த தடம் கடல்_வண்ணர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில் – நாலாயி:1824/2
அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை நாங்கள் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1858/4
அத்த எம் பெருமான் எம்மை கொல்லேல் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1859/4
அண்டவாணர் உகப்பதே செய்தாய் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1860/4
அஞ்சு_அல்_ஓதியை கொண்டு நட-மின் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1861/4
அம்பினால் எம்மை கொன்றிடுகின்றது அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1862/4
ஆதர் நின்று படுகின்றது அந்தோ அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1863/4
சூழுமா நினை மா மணி_வண்ணா சொல்லினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1864/4
அனங்கன் அன்ன திண் தோள் எம் இராமற்கு அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1865/4
குரங்குகட்கு அரசே எம்மை கொல்லேல் கூறினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1866/4
தங்கும் ஊர் அண்டமே கண்டு கொள்-மின் சாற்றினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1867/4
சாற்றி ஓர் ஆயிரம் சப்பாணி தடம் கைகளால் கொட்டாய் சப்பாணி – நாலாயி:1892/4
பெரும் தடம் கண்ணி சுரும்புறு கோதை பெருமையை நினைந்திலை பேசில் – நாலாயி:1939/3
தற்பு என்னை தான் அறியானேலும் தடம் கடலை – நாலாயி:2458/1
பனி புயல் சோரும் தடம் கண்ணி மாமை திறத்து-கொலாம் – நாலாயி:2482/3
தடம் ஆயின புக்கு நீர் நிலைநின்ற தவம் இது-கொல் – நாலாயி:2515/2
மென் கால் கமல தடம் போல் பொலிந்தன மண்ணும் விண்ணும் – நாலாயி:2519/2
தன் கால் பணிந்த என்-பால் எம்பிரான் தடம் கண்களே – நாலாயி:2519/4
தண் மென் கமல தடம் போல் பொலிந்தன தாம் இவையோ – நாலாயி:2540/2
தடம் போது ஒடுங்க மெல் ஆம்பல் அலர்விக்கும் வெண் திங்களே – நாலாயி:2553/4
தடம் கடலை மேயார் தமக்கு – நாலாயி:2615/4
தார் ஆர் தடம் தோள்கள் உள் அளவும் கைம் நீட்டி – நாலாயி:2685/11
ஏர் ஆர் தடம் தோள் இராவணனை ஈரைந்து – நாலாயி:2690/3
தார் ஆர் தடம் தோள் தளை காலன் பின் போனாள் – நாலாயி:2705/2
மன்னிய மா மயில் போல் கூந்தல் மழை தடம் கண் – நாலாயி:2724/7
இன்ன உருவின் இமையா தடம் கண்ணார் – நாலாயி:2730/1
பூ இயல் நால் தடம் தோளன் பொரு படை ஆழி சங்கு ஏந்தும் – நாலாயி:2994/3
செந்தாமரை தடம் கண் செம் கனி வாய் எம் பெருமான் – நாலாயி:3017/3
செந்தாமரை தடம் கண் செம் கனி வாய் செங்கமலம் – நாலாயி:3053/3
பொன் முடி அம் போர் ஏற்றை எம்மானை நால் தடம் தோள் – நாலாயி:3060/1
கண்ணி தண் அம் துழாய் முடி கமல தடம் பெரும் கண்ணனை புகழ் – நாலாயி:3074/1
தடம் பெரும் தோள் ஆர தழுவும் பார் என்னும் – நாலாயி:3094/3
சய புகழார் பலர் வாழும் தடம் குருகூர் சடகோபன் – நாலாயி:3131/2
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே – நாலாயி:3149/4
மொய்த்த சோலை மொய் பூம் தடம் தாழ்வரே – நாலாயி:3152/4
தனியன் பிறப்பிலி தன்னை தடம் கடல் சேர்ந்த பிரானை – நாலாயி:3170/2
சாவம் உள்ளன நீக்குவானை தடம் கடல் கிடந்தான்-தன்னை – நாலாயி:3177/2
பாவ நாசனை பங்கய தடம் கண்ணனை பரவு-மினோ – நாலாயி:3177/4
குறைவு இல் தடம் கடல் கோள் அரவு ஏறி தன் கோல செந்தாமரை கண் – நாலாயி:3221/1
ஓதுமால் ஊழ்வினையேன் தடம் தோளியே – நாலாயி:3245/4
தடம் கொள் தார் மார்பினில் வைத்தவர் தாளின் மேல் – நாலாயி:3248/2
செய்ய கோல தடம் கண்ணன் விண்ணோர் பெருமான்-தன்னை – நாலாயி:3276/2
பெரிய கோல தடம் கண்ணன் விண்ணோர் பெருமான்-தன்னை – நாலாயி:3280/2
குவளை தடம் கண்ணும் கோவை செ வாயும் பயந்தனள் – நாலாயி:3290/2
தடம் புனல சடைமுடியன் தனி ஒரு கூறு அமர்ந்து உறையும் – நாலாயி:3317/3
தயிர் வெண்ணெய் உண்டானை தடம் குருகூர் சடகோபன் – நாலாயி:3318/2
கொக்கு அலர் தடம் தாழை வேலி திருக்குருகூர்-அதனுள் – நாலாயி:3337/3
நிறம் உடை நால் தடம் தோள் செய்ய வாய் செய்ய தாமரை கண் – நாலாயி:3346/3
கார்_வண்ணன் கண்ணபிரான் கமல தடம்_கண்ணன்-தன்னை – நாலாயி:3351/1
தடம் கடல் பள்ளி பெருமான்-தன்னுடை பூதங்களே ஆய் – நாலாயி:3355/2
மாடு உறு பூம் தடம் சேர் வயல் சூழ் தண் திருவல்லவாழ் – நாலாயி:3436/3
பெரும் தண் தாமரை கண் பெரு நீள் முடி நால் தடம் தோள் – நாலாயி:3458/3
வேய் இரும் தடம் தோளினார் இ திருவருள் பெறுவார் எவர்-கொல் – நாலாயி:3464/3
வேலின் நேர் தடம் கண்ணினார் விளையாடு சூழலை சூழவே நின்று – நாலாயி:3465/3
உகவையால் நெஞ்சம் உள் உருகி உன் தாமரை தடம் கண் விழிகளின் – நாலாயி:3470/1
தவள ஒண் சங்கு சக்கரம் என்றும் தாமரை தடம் கண் என்றும் – நாலாயி:3495/3
கரும் தடம் கண்ணி கைதொழுத அ நாள் தொடங்கி இ நாள்-தொறும் – நாலாயி:3502/3
தாவி வையம் கொண்ட தடம் தாமரை கட்கே – நாலாயி:3547/3
செழும் தடம் புனல் சூழ் திருவரங்கத்தாய் என் செய்கேன் என் திருமகட்கே – நாலாயி:3579/4
சேண் மன்னு நால் தடம் தோள் பெருமான் தன் திருநுதலே – நாலாயி:3633/3
வெள்ள தடம் கடலுள் விட நாகு_அணை மேல் மருவி – நாலாயி:3641/3
தனக்கும் தன் தன்மை அறிவு அரியானை தடம் கடல் பள்ளி அம்மானை – நாலாயி:3709/2
வாச தடம் போல் வருவானே ஒரு நாள் காண வாராயே – நாலாயி:3715/4
கருமாணிக்க மலை மேல் மணி தடம் தாமரை காடுகள் போல் – நாலாயி:3759/1
சுனையினுள் தடம் தாமரை மலரும் தண் திருப்புலியூர் – நாலாயி:3763/3
தடம் கொள் தாமரை கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும் – நாலாயி:3794/3
தண் பெரு நீர் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும் – நாலாயி:3833/3
சீர் எழில் நால் தடம் தோள் தெய்வ வாரிக்கே – நாலாயி:3844/4
தக்கிலமே கேளீர்கள் தடம் புனல் வாய் இரை தேரும் – நாலாயி:3849/1
தகவு அன்று என்று உரையீர்கள் தடம் புனல்வாய் இரை தேர்ந்து – நாலாயி:3856/1
வடி வேல் தடம் கண் மட பின்னை மணாளன் – நாலாயி:3859/2
வாள் ஏய் தடம் கண் மட பின்னை மணாளா – நாலாயி:3861/4
தாள தாமரை தடம் அணி வயல் திருமோகூர் – நாலாயி:3891/1
நலம் கழல் அவன் அடி நிழல் தடம் அன்றி யாமே – நாலாயி:3892/4
உயர் கொள் சோலை ஒண் தடம் அணி ஒளி திருமோகூர் – நாலாயி:3898/2
அணி கொள் நால் தடம் தோள் தெய்வம் அசுரரை என்றும் – நாலாயி:3899/2
தடம் உடை வயல் அனந்தபுரநகர் புகுதும் இன்றே – நாலாயி:3902/4
வடி தடம் கண் இணை நீரும் நில்லா மனமும் நில்லா எமக்கு அது தன்னாலே – நாலாயி:3918/3
தடம்-தன்னை (1)
வந்து என் முலை தடம்-தன்னை வாங்கி நின் வாயில் மடுத்து – நாலாயி:1878/2
தடம்-தொறும் (1)
கரவு ஆர் தடம்-தொறும் தாமரை கயம் தீவிகை நின்று அலரும் – நாலாயி:3767/3
தடம்_கண்ணன்-தன்னை (1)
கார்_வண்ணன் கண்ணபிரான் கமல தடம்_கண்ணன்-தன்னை ஏர் வள ஒண் கழனி குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3351/1,2
தடமும் (2)
வட தடமும் வைகுந்தமும் மதில் துவராபதியும் – நாலாயி:472/3
பூ இயல் பொழிலும் தடமும் அவன் கோயிலும் கண்டு – நாலாயி:3521/3

மாட (57)
மச்சு அணி மாட புதுவை_கோன் பட்டன் சொல் – நாலாயி:107/3
மஞ்சு தவழ் மணி மாட மதில் திருவெள்ளறை நின்றாய் – நாலாயி:197/3
பொன் திகழ் மாட புதுவையர்_கோன் பட்டன் சொல் – நாலாயி:243/3
மாட மாளிகை சூழ் மதுரை பதி – நாலாயி:538/1
மச்சு அணி மாட மதில் அரங்கர் வாமனனார் – நாலாயி:610/1
மணி மாட மாளிகைகள் மல்கு செல்வ மதில் அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் – நாலாயி:651/3
அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி அரசு எய்தி அகத்தியன்வாய் தான் முன் கொன்றான் – நாலாயி:748/1
வள எழும் தவள மாட மதுரை மாநகரம் தன்னுள் – நாலாயி:916/1
செம்பொன் மாட திருக்குருகூர் நம்பிக்கு – நாலாயி:941/3
குன்ற மாட திருக்குருகூர் நம்பி – நாலாயி:942/3
மாதர்கள் வாழும் மாட மா மயிலை திருவல்லிக்கேணி கண்டேனே – நாலாயி:1069/4
தேன் அமர் சோலை மாட மா மயிலை திருவல்லிக்கேணி கண்டேனே – நாலாயி:1076/4
மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும் மாட மாளிகையும் மண்டபமும் – நாலாயி:1077/1
கன்னி நல் மாட மங்கையர்_தலைவன் காமரு சீர் கலிகன்றி – நாலாயி:1077/3
மன்னு மா மாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன் வாய் ஒலிகள் – நாலாயி:1117/3
தேன் ஆட மாட கொடி ஆடு தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1158/4
பதலை கபோதத்து ஒளி மாட நெற்றி பவள கொழும் கால பைம் கால் புறவம் – நாலாயி:1219/3
மங்குல் மதி அகடு உரிஞ்சும் மணி மாட நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1236/4
மாட மாளிகை சூழ்தரு நாங்கூர் வண்புருடோத்தமமே – நாலாயி:1262/4
சீர் அணி மாட நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலின் உள்ளே – நாலாயி:1268/3
மலை இலங்கு நிரை சந்தி மாட வீதி ஆடவரை மட மொழியார் முகத்து இரண்டு – நாலாயி:1282/3
கூர் அணிந்த வேல் வலவன் ஆலி நாடன் கொடி மாட மங்கையர்_கோன் குறையல் ஆளி – நாலாயி:1287/2
திங்கள் தோய் மாட நாங்கூர் திருமணிக்கூடத்தானை – நாலாயி:1297/1
தட வரை தங்கு மாட தகு புகழ் நாங்கை மேய – நாலாயி:1302/3
செறி மணி மாட கொடி கதிர் அணவும் திருவெள்ளியங்குடி அதுவே – நாலாயி:1341/4
மன்னு மா மாட மங்கையர்_தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள் – நாலாயி:1417/3
மாட மாளிகை சூழ் திருமங்கை_மன்னன் ஒன்னலர்-தங்களை வெல்லும் – நாலாயி:1427/1
கொண்டு உறைகின்ற மாலை கொடி மதிள் மாட மங்கை – நாலாயி:1437/2
நீடு மாட தனி சூலம் போழ கொண்டல் துளி தூவ – நாலாயி:1593/3
தேன் அமரும் பொழில் தழுவும் எழில் கொள் வீதி செழு மாட மாளிகைகள் கூடம்-தோறும் – நாலாயி:1623/3
தெரிவு அரிய மணி மாட திருக்கண்ணபுரத்து உறையும் – நாலாயி:1669/2
துங்க மா மணி மாட நெடு முகட்டின் சூலிகை போம் – நாலாயி:1670/1
கரு மா முகில் தோய் நெடு மாட கண்ணபுரத்து எம் அடிகளை – நாலாயி:1707/1
சென்று சேர் சென்னி சிகர நல் மாட திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1751/4
செழுமை ஆர் பொழில்கள் தழுவும் நல் மாட திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1753/4
மலை குலாம் மாட மங்கையர்_தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள் – நாலாயி:1757/3
புனை ஆர் மணி மாட புல்லாணி கைதொழுதேன் – நாலாயி:1784/3
மாட கொடி மதிள் சூழ் மங்கையார் கலிகன்றி சொன்ன – நாலாயி:1837/3
மங்குல் தோய் மணி மாட வெண் கொடி மாகம் மீது உயர்ந்து ஏறி வான் உயர் – நாலாயி:1842/3
கலி கெழு மாட வீதி வயல் மங்கை மன்னு கலிகன்றி சொன்ன பனுவல் – நாலாயி:1991/3
மன்னு மா மணி மாட மங்கை_வேந்தன் மான வேல் பரகாலன் கலியன் சொன்ன – நாலாயி:2081/3
மண் நகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த – நாலாயி:2343/2
பொன் இயலும் மாட கவாடம் கடந்து புக்கு – நாலாயி:2753/3
குழுவு மாட தென் குருகூர் மாறன் சடகோபன் சொல் – நாலாயி:3307/2
மாட மாளிகை சூழ்ந்து அழகு ஆய திருக்குருகூர்-அதனை – நாலாயி:3331/3
குன்ற மாட திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் – நாலாயி:3387/2
மை கொள் மாட திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் – நாலாயி:3392/2
மன்னு மாட திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் – நாலாயி:3393/2
மாட கொடி மதிள் தென் குளந்தை வண் குட-பால் நின்ற மாய கூத்தன் – நாலாயி:3685/3
கொடியார் மாட கோளூர் அகத்தும் புளியங்குடியும் – நாலாயி:3697/1
நல்ல நீள் மாட திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு எனக்கு நல் அரணே – நாலாயி:3708/4
கனக்கொள் திண் மாட திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அதனுள் கண்டேனே – நாலாயி:3709/4
குன்ற மா மணி மாட மாளிகை கோல குழாங்கள் மல்கி – நாலாயி:3768/2
மா துகிலின் கொடி கொள் மாட வடமதுரை பிறந்த – நாலாயி:3789/3
திங்கள் சேர் மாட திருப்புளிங்குடியாய் திருவைகுந்தத்துள்ளாய் தேவா – நாலாயி:3799/3
வண்ணம் மணி மாட நல் நாவாய் உள்ளானை – நாலாயி:3868/1
வரை குழுவு மணி மாட வாட்டாற்றான் மலர் அடி மேல் – நாலாயி:3952/3

மாடங்கள் (18)
வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர் – நாலாயி:13/1
பொன் இயல் மாடங்கள் சூழ்ந்த புதுவையர்_கோன் பட்டன் கோதை – நாலாயி:533/2
சூட்டு உயர் மாடங்கள் சூழ்ந்து தோன்றும் துவராபதிக்கு என்னை உய்த்திடு-மின் – நாலாயி:625/4
திண் ஆர் மாடங்கள் சூழ் திருமங்கையர்_கோன் கலியன் – நாலாயி:1037/3
வரம் தரு மா மணி_வண்ணன் இடம் மணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1130/2
உண்டவன் எந்தை பிரானது இடம் ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1131/2
புண் பட போழ்ந்த பிரானது இடம் பொரு மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி – நாலாயி:1133/2
அடைத்தவன் எந்தை பிரானது இடம் அணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1135/2
செம்பொன் மணி மாடங்கள் சூழ்ந்த தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1160/4
மஞ்சு உலாம் மணி மாடங்கள் சூழ் திருவெள்ளறை-அதன் மேய – நாலாயி:1377/1
மச்சு அணி மாடங்கள் மீது அணவும் தண் திருவல்லவாழ் – நாலாயி:3432/3
சிகர மாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் – நாலாயி:3475/3
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் – நாலாயி:3476/3
மாகம் திகழ் கொடி மாடங்கள் நீடு மதிள் திருவாறன்விளை – நாலாயி:3661/3
மலரின் மணி நெடு மாடங்கள் நீடு மதிள் திருவாறன்விளை – நாலாயி:3664/3
கொடி கோபுர மாடங்கள் சூழ் திருப்பேரான் – நாலாயி:3970/3
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப்பேரான் – நாலாயி:3975/3
குன்று என்ன திகழ் மாடங்கள் சூழ் திருப்பேரான் – நாலாயி:3976/3

மாடத்து (5)
தூமணி மாடத்து சுற்றும் விளக்கு எரிய – நாலாயி:482/1
சிலை இலங்கு மணி மாடத்து உச்சி மிசை சூலம் செழும் கொண்டல் அகடு இரிய சொரிந்த செழு முத்தம் – நாலாயி:1231/3
படியிடை மாடத்து அடியிடை தூணில் பதித்த பல் மணிகளின் ஒளியால் – நாலாயி:1345/3
வேலை கடல் போல் நெடு வீதி விண் தோய் சுதை வெண் மணி மாடத்து ஆலை புகையால் அழல் கதிரை மறைக்கும் வீதி அழுந்தூரே – நாலாயி:1594/3,4
மலை மாடத்து அரவு_அணை மேல் வாட்டாற்றான் மதம் மிக்க – நாலாயி:3951/3

மாடம் (32)
பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புதுவை_கோன் விட்டுசித்தன் – நாலாயி:462/3
பொருப்பு அன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் கோதை – நாலாயி:513/3
பொன் இயல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் கோதை – நாலாயி:626/3
கோல மாடம் நீடு தண் குடந்தை மேய கோவலா – நாலாயி:810/2
குன்று இருந்த மாடம் நீடு பாடகத்தும் ஊரகத்தும் – நாலாயி:814/3
புறம் சுவர் ஓட்டை மாடம் புரளும்-போது அறிய மாட்டீர் – நாலாயி:877/2
செறி ஆர்ந்த மணி மாடம் திகழ்ந்து தோன்றும் திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1143/4
குழை ஆட வல்லி குலம் ஆட மாடே குயில் கூவ நீடு கொடி மாடம் மல்கு – நாலாயி:1222/3
சீர் ஆரும் மணி மாடம் திகழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1281/4
சேழ் உயர்ந்த மணி மாடம் திகழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1286/4
சீர் அணிந்த மணி மாடம் திகழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலை – நாலாயி:1287/1
தவள மாடம் நீடு நாங்கை தாமரையாள்_கேள்வன் என்றும் – நாலாயி:1318/3
நெருக்கும் மாடம் நீடு நாங்கை நின்மலன் தான் என்றுஎன்று ஓதி – நாலாயி:1322/3
திண்ண மாடம் நீடு நாங்கை தேவதேவன் என்றுஎன்று ஓதி – நாலாயி:1326/3
பொற்பு ஆர் மாடம் எழில் ஆரும் புள்ளம்பூதங்குடி தானே – நாலாயி:1351/4
திங்கள் தோய் சென்னி மாடம் சென்று அணை திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1373/4
இருக்கு இலங்கு திருமொழி வாய் எண் தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட – நாலாயி:1505/3
மலை ஆர்ந்த கோலம் சேர் மணி மாடம் மிக மன்னி – நாலாயி:1535/3
விண் சேரும் இளம் திங்கள் அகடு உரிஞ்சு மணி மாடம் மல்கு செல்வ – நாலாயி:1578/3
கூன் நீர் மதியை மாடம் தீண்டும் குறுங்குடியே – நாலாயி:1803/4
தவள மாடம் நீடு அயோத்தி காவலன்-தன் சிறுவன் – நாலாயி:1875/3
குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே – நாலாயி:2513/4
குன்றம் போல் மணி மாடம் நீடு திருக்குருகூர்-அதனுள் – நாலாயி:3330/3
திங்கள் சேர் மணி மாடம் நீடு சிரீவரமங்கல நகர் உறை – நாலாயி:3408/3
பகல் கதிர் மணி மாடம் நீடு சிரீவரமங்கை_வாணனே என்றும் – நாலாயி:3414/3
துவள் இல் மா மணி மாடம் ஓங்கு தொலைவில்லிமங்கலம் தொழும் – நாலாயி:3495/1
சிகர மணி நெடு மாடம் நீடு தென் திருப்பேரெயில் வீற்றிருந்த – நாலாயி:3592/2
வரை ஆர் மாடம் மன்னு குருகூர் சடகோபன் – நாலாயி:3703/2
போர் கடா அரசர் புறக்கிட மாடம் மீமிசை கஞ்சனை தகர்த்த – நாலாயி:3704/3
திகழும் மணி நெடு மாடம் நீடு திருப்புலியூர் வளமே – நாலாயி:3761/4
மாடம் நீடு குருகூர் சடகோபன் சொல் – நாலாயி:3890/2
குன்று நேர் மாடம் மாடே குருந்து சேர் செருந்தி புன்னை – நாலாயி:3903/2

மாடம்-தோறும் (1)
மறை வளர புகழ் வளர மாடம்-தோறும் மண்டபம் ஒண் தொளி அனைத்தும் வாரம் ஓத – நாலாயி:1142/3

மாடமும் (1)
மன்றமும் வயலும் காவும் மாடமும் மணம் கொண்டு எங்கும் – நாலாயி:1294/3

------------
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ அருளிச் செயல்களில் -திவ்ய தேச பொய்கைகள் – திரு நாமங்கள்-வியாக்யான ஸ்ரீ ஸூக்திகள் –

August 18, 2026

ஸ்ரீ எம்பெருமான் திருநாமங்கள் மாத்திரமன்று;ஸ்ரீ திருமோகூரில் தடாகத்தைத் தாள தாமரை யென்றும்- ஸ்ரீ வானமாமலையில் தடாகத்தைச் சேற்றுத் தாமரை யென்றும், அவ்விடத்துச் சோலை யொன்றைப் தேனமாம்பொழிலென்றும், ஸ்ரீ திருக்குடத்தையில் புஷ்கரிணியைப் பொற்றாமரை யென்றும், ஸ்ரீ திருக்குறுங்குடியில் புஷ்கரிணியைக் கரண்டமாடு பொய்கை யென்றும் இங்ஙனே யுள்ள பல வழக்குகளிலும் இந்த ஆராய்ச்சி ஒக்கும்.-ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திகளை மூலமாகக் கொண்டே இவ் வழக்குகள் தோன்றின வென்னலாம்-

தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர்
நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்
காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே-10-1-1–தாள தாமரைத் –-தாளையுடைய தாமரை -மலையைச் சுமந்தால் போலே பூவின் பெருமையைப் பொறுக்க வல்ல தாளையுடைய தாமரை – உரத்த தாளையுடைய தாமரை –உரம் பெற்ற மலர்க்கமலம் உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட-என்னக் கடவது இறே –-தட மணி வயல் -பூவாலே அலங்கரிக்கப் பட்ட தடாகங்களை யுடைய வயல்-திரு மோகூர்-ஊரில் போக்யதை வயலின் நலத்திலே காணும் இத்தனை –

துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின்
உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே–10-1-8-சக்கரவர்த்தி பெற்ற நீல மணி போலே இருக்கிற தடாகத்தினை -அடைந்து வந்து அடியவர் தொழுமின்-பதி தரு மருவாபீ வாரிவத் சர்வ போக்யம் -என்கிற படி அனுகூலர்களுக்கு ரக்ஷகமாய் –காகுத்ஸத்த பாதால முகே புதன்ச -என்கிறபடியே உகவாதற்கு நாசகமாய் இறே இருப்பது –மயா த்வம் சம நுஜ்ஜஞாதோ கச்ச லோகான் அநுத்தமான் -என்று பக்ஷியைப் போக விட்டார் இறே –வெளியே தாளதாமரைத் தடாகமுடைய திருமோகூர்லே ஸன்னிதிககுள்ளேயும் ஒரு தடாகம் திகழ்கின்றது

மாயக் கூத்தா வாமனா வினையேன் கண்ணா கண் கை கால்
தூய செய்ய மலர்களா சோதித் செவ்வாய் முகிழதா
சாயல் சாமத் திருமேனி தண் பாசடையா தாமரை நீள்
வாசத்தடம் போல் வருவானே
ஒரு நாள் காண வாராயே-8-5-1—பரப்பு மாற தாமரை அலர்ந்து இருப்பதாய் ஏகார்ணவத்தை ஒரு தாமரை தடாகம் ஆக்கினால் போலே பரந்து இருப்பதாய் -அப்பரப்பு அடங்க பரிமளம் நிரம்பி இருபத்தொரு தடாகம் நடந்து வருமா போலே யாயிற்று -பரிமளம் முன்பே அலை எறிய வரும் போது இருப்பது –சர்வ கந்த என்ன கடவது இறே –

கர சரண ஸரோஜே காந்திமந் நேத்ர மீநே
ஶ்ரம முஷி பு⁴ஜ வீசி வ்யாகுலேঽகா³த⁴மார்கே³ ।
ஹரி ஸரஸி விகா³ஹ்யா பீய தேஜோஜலௌக⁴ம்
ப⁴வ மரு பரிகி²ந்ந: க்லேஶ மத்³ய த்யஜாமி
–முகுந்தமாலை॥ 9॥–திருக்கைகள் திருவடிகளாகிற தாமரைகளை யுடையதாய், அழகிய திருக் கண்களாகிற கயல்களை யுடையதாய், – விடாயைத் தீர்க்குமதாய், – திருத்தோள்களாகிற அலைகளால் நிறைந்ததாய், – மிகவும் ஆழமான, எம்பெருமானாகிற தடாகத்தில், குடைந்து நீராடி, – (திருமேனியில் விளங்குகின்ற) தேஜஸ்ஸாகிற ஜல ஸமூஹத்தை, பாநம் பண்ணி, ஸம்ஸாரமாகிற பாலை நிலத்திலே மிகவும் வருந்திக் கிடந்த அடியேன், அந்த ஸாம்ஸாரிக துக்கத்தை, இப்போது, விடுகின்றேன்.

பாரினை யுண்டு பாரினை யுமிழ்ந்து பாரதம் கை எறிந்து ஒரு கால்
தேரினை  யூர்ந்து  தேரினைத் துரந்த செங்கண் மால் சென்றுறை கோயில்
ஏர் நிறை வயலுள் வாளைகள் மறுகி எமக்கு இடம் அன்று இது என்று எண்ணிச்
சீர்மலி பொய்கை சென்று அணைகின்ற திருவெள்ளியங்குடி யதுவே
 —4-10-5–சம்சாரம் அநித்தியம் துக்கம் -என்று அத்தை விட்டு விரஜையைச் சென்று பற்றுவாரைப் போலே – (ப்ரஹ்மாதிகள் காளைகள்
உழவன் அவன்-ஏர் கர்ம பாசங்கள்-லீலா விபூதியை விட்டு -ஜனன மரண விட்டு பகவத் கிருபா ஜலஜம் பிறந்த பாகவதர்கள் விரஜைக்கு போவது போல் )

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானைப் புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையை
தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை
அடைந்து உய்ந்து போனேனே–8-9-4–தக்கானைக்–பரம தார்மிகனை –(கிருபை -தகவு –ஆன்ரு ஸம்சயம் பரோ தர்மம் – கிருபையே தர்மம் -கிருபாவானே தார்மிகன் என்றபடி )தக்கான் குளம்-பக்தர்களுக்கு உசிதனான -தக்க அவனுக்கு -தக்க குளம்-

முற்றாரா வன முலையாள் பாவை மாயன் மொய்யகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும்
அற்றாள் தன் நிறைவு இழந்தாள் ஆவிக்கின்றாள் அணி யரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும்
பெற்றேன் வாய் சொல் இறையும் பேசக் கேளாள் பேர் பாடித் தண் குடந்தை நகரும் பாடிப்
பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் பொருவற்றாள் என் மகள் உம் பொன்னும் அஃதே -19-பொற்றாமரைக் கயம் என்கிற விசேஷணங்களால் அனுபாவ்ய விஷய ஸ்வபாவத்தை சொல்லுகிறது –மகள் -அணி அரங்கம் ஆடுதுமோ -என்று ஊரைச் சொன்னாள் – தான் –பொற்றாமரைக் கயம் -என்று பெரிய பெருமாளை சொல்லுகிறாள் –தயரதன் பெற்ற மரகத மணித்தடம் -என்றும்-வாசத் தடம் போலே வருவானே -என்றும் தடாகமாக சொல்லக் கடவது இறே –பொற்றாமரைக்கயம் நீராடப்போனாள் =
கீழே திருக்குடந்தை ப்ரஸ்துதமாகையாலே அத்தலத்தில் புண்ணிய தீர்த்தமாக வழங்கி வருகின்ற பொற்றாமரை என்னும் புஷ்கரிணியிலே நீராடப்போனாள் என்று பொருள் கொள்ளப் பொருந்துமாயினும் எம்பெருமான் றன்னையே பொற்றாமரைக் கயமாகப் பேசுகிறாரென்றலும் பொருந்தும். தமிழர், ஸம்ச்லேஷத்தைச் சுனையாடலென்றும் நீராட்டமென்றும் சொல்லுவார்கள்.
எம்பெருமானோடு கலவி செய்ய விரும்புவதையே இங்குப் பொற்றாமரைக் கயம் நீராடப்போவதாகச் சொல்லிற்றென்க.

பஞ்சவர் தூதனாய் பாரதம் கை செய்து
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நல் பொய்கை புக்கு
அஞ்ச பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த
அஞ்சன வண்ணனே அச்சோ அச்சோ ஆயர் பெருமானே அச்சோ அச்சோ – 1-8 3- –விஷத்தை உமிழா நின்ற காளியனாகிற சர்ப்பம் கிடந்த கொடிய பொய்கையிலே –-அத்தை மதியாமல் சென்று புக்கு –நல் பொய்கை என்றது – விபரீத லஷணையாய்-காளிய விஷ தூஷிதம் ஆகையாலே க்ரூரமான பொய்கை என்றபடி –

தடம்படு தாமரைப் பொய்கை கலக்கி
விடம்படு நாகத்தை வால் பற்றி ஈர்த்து
படம்படு பைம்தலை மேல் எழப் பாய்ந்திட்ட
உடம்பை அசைத்தானால் இன்று முற்றும்
உச்சியில் நின்றானால் இன்று முற்றும் -2-10 3-இடமுடைத்தான தாமரைப் பொய்கை என்று இறே பிரசித்தி காளியன் புகுவதற்கு முன்பு-பின்பு இறே நச்சு அழல் பொய்கையாயிற்று-இப்படிப் பட்ட பொய்கையை –நிபபாத  ஹ்ரதே தத்ர   சர்ப்ப ராஜச்ய வேகத தேந அதிபததா தத்ர ஷோபித ச மகாக்ரத -என்கிறபடியே பெரிய விசையோடு உள்ளே  குதித்து கலங்க பண்ணி-

தாழை தண் ஆம்பல் தடம் பெரும் பொய்கை வாய்
வாழு முதலை வலைப்பட்டு வாதிப்புண்
வேழம் துயர் கெட
விண்ணோர் பெருமானாய்
ஆழி பணி கொண்டானால் இன்று முற்றும்
அதற்கு அருள் செய்தானால் இன்று முற்றும் -2 10-8 –கரையிலே தாழைகளையும் -உள்ளே குளிர்ந்த ஆம்பல்களையும் உடைத்தாய் – மிகவும் பெரிதாய் இருந்துள்ள பொய்கை யிடத்திலே-தாழை -கரையில் உண்டான சோலைக்கு உப லஷணம்-மொய்ம்மாம் பூம் பொழில் பொய்கை -(3-5-)-என்றார் ஆழ்வார்
ஆம்பல் -உள்ளுண்டான புஷ்பங்களுக்கு எல்லாம் உப லஷணம்-வைகு தாமரை வாங்கிய வேழம் – என்கிறபடியே தாமரை நெருங்கி பூத்துக் கிடக்கிறது கண்டு அது பரிக்கைக்கா இறே-உள்ளே துஷ்டச்தவம் கிடக்கிறது என்று அறியாதே ஸ்ரீ கஜேந்த்திரன் தான் இப்பொய்கையிலே – அத்ய ஆதரத்தோடே சென்று இழிந்தது-

அம் சுடர் ஆழி உன் கையகத்து ஏந்தும் அழகா நீ  பொய்கை புக்கு
நஞ்சு உமிழ் நாகத்தினோடு பிணங்கவும்
நான் உயிர் வாழ்ந்து இருந்தேன்
என் செய்ய என்னை வயிறு மறுக்கினாய் ஏதுமோர் அச்சம் இல்லை
கஞ்சன் மனத்துக்கு உகப்பனவே செய்தாய் காயாம்பூ வண்ணம் கொண்டாய் -3- 3-6 –கருதும் இடம் பொருது கை நிற்கும் பரிகரம் உண்டாய் இருக்க -இயற்றி இல்லாதாரைப் போலே நீ உன்னுடைய மார்த்தவத்தைப் பாராமல் நச்சுப் பொய்கையிலே போய் புக்கு –

நல்லதோர் தாமரைப் பொய்கை நாள் மலர் மேல் பனி சோர
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகு அழிந்தால் ஒத்தது ஆலோ
இல்லம் வெறி ஓடிற்று ஆலோ என் மகளை எங்கும் காணேன்
மல்லரை அட்டவன் பின் போய் மதுரைப் புறம் புக்காள் கொலோ -3- 8-1 –பரப்பு மாற தாமரை பூத்துக் கிடக்கையாலே –அழகியதாய் –-அத்விதீயமான பொய்கை யானது-

பஞ்சவர் தூதனாய் பாரதம் கை செய்து
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு
அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த
அஞ்சன வண்ணனைப் பாடிப் பற
வசோதை தன் சிங்கத்தைப் பாடிப் பற – 3-9- 5-அருகு அணைந்த வர்ஷங்கள் பஷிகள் எல்லாம் பட்டு விழும்படி -விஷத்தை உமிழா நின்ற காளியன் ஆகிற சர்ப்பம் கிடந்த-நற் பொய்கை-என்றது நல்ல பாம்பு நல்ல நெருப்பு போலே விபரீத லஷணை-அதவா-காளியன் பிரவேசிப்பதற்கு முன்புத்தை படியை  இட்டு சொல்லுகிறது என்னவுமாம்-

காளியன் பொய்கை கலங்க பாய்ந்திட்டவன்
நீள் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து
மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன்
தோள் வலி வீரமே பாடிப் பற
தூ மணி வண்ணனைப் பாடிப் பற – 3-9- 7-வெறும் புறத்திலே-காளியன் பொய்கை -என்ன அமையும் காணும் அதின் க்ரௌர்யத்துக்கு-பாம்புப் பாழி -என்னுமா போலே-அணுகின ஸ்தாவர ஜங்கமாதிகள் எல்லாம் அழலாலே  பட்டு  விழும் படி இறே பொய்கையிலே-விஷத்தினுடைய க்ரௌர்யம் இருப்பது –
ஆயிர வாய் நச்சு அழல் பொய்கை -என்னக் கடவது இறே-(ஐந்து தலைகள் என்றும் -101 தலைகள் என்றும் – புராணாந்தரங்கள் உண்டு க்ரூரத்தால் ஒன்றைப் பத்தாக்கி ஆயிரம் இங்கு )-காளியன் தடத்தை கலக்கி -என்கிறபடியே பொய்கை கலங்கும் படி ஓடிச் சென்று குதித்து-

அலம்பா வெருட்டா கொன்று திரியும் அரக்கரை
குலம் பாழ் படுத்து குல விளக்காய் நின்ற கோன் மலை
சிலம்பு ஆர்க்க வந்து தெய்வ மகளிர் ஆடும் சீர்
சிலம்பாறு பாயும் தென் திரு மால் இரும் சோலையே -4 2-1 –இப்படி இருந்துள்ள கௌரவத்தை உடைய -திருச் சிலம்பாறானது-அவிச்சின்ன ஸ்ரோதா ரூபேண ப்ரவஹியா நிற்கும் –-க்வசித் த்வரித காமிநி க்வச நமந்  தமந்தாலச -என்று தொடங்கி ஒரு ஸ்லோகத்தாலே திருச் சிலம்பாற்றின் உடைய கதியை வர்ணித்து அருளி செய்தார் இறே -ஆழ்வானும்

ஒரு வாரணம் பணி கொண்டவன் பொய்கையில் கஞ்சன் தன்
ஒரு வாரணம் உயிர் உண்டவன் சென்று உறையும் மலை
கரு வாரணம் தன் பிடி துறந்து ஓடக் கடல் வண்ணன்
திரு ஆணை கூறத் திரியும் தண் மால் இரும் சோலையே – 4-2- 5-சாபத்தாலே கஜ யோனியில் பிறந்து இருக்க செய்தேயும்-பூர்வ ஜன்ம ஸ்ம்ருதி குலையாமையாலே -மிகவும் பகவத் பத்தியை உடைத்தாய்
திருப் படித் தாமம் -திருத் துழாய் -பறித்து இட்டுத் திரியா நிற்க-ஜகத்திலே ஒரு பூ  மலர் கிடையாதபடி –
வர்ஷ அபாவமாய் வரண்ட அளவிலே – எங்கே ஒரு பூ காணலாம் -என்று தேடித் திரியச் செய்தே –மொய்ம் மாம் பூம் பொழில் பொய்கை -என்கிறபடியே தூரத்திலே ஒரு குளிர்ந்த சோலையும் பூத்த பொய்கையுமாய் தோற்றக் கண்டு ஓடிச் சென்று -ஒரு துஷ்ட சத்த்வம் கிடக்கிறது  -என்று அறியாமல் இழிந்து-காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம் ( 5-8 )-என்கிறபடியே தன் அபி நிவேச அனுகுணமாக பூவை வாரிப் பறித்து கரையிலே ஏறுவதற்கு முன்னே-

கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம்
ஆழியம் செல்வன் எழுந்தான் அரவணை மேல் பள்ளி கொண்டாய்
ஏழைமை ஆற்றவும் பட்டோம் இனி என்றும் பொய்கைக்கு வாரோம்
தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்து அருளாயே—3-1–ஊரில் தான் பெண்கள் கிடாய் -கிருஷ்ணன் கிடாய் -என்று நியமிக்கையாலே உனக்குத் தோற்றிற்று செய்ய ஒண்ணாது –-பொய்கையில் தானே வாரோம் -இத்தனை யன்றோ என்கிறார்கள் –வாரோம் என்று சொல்லி யன்றோ நீங்கள் வருவது -என்றான் –அத்தைக் கேட்டு என்றும் வாரோம் -என்கிறார்கள் –என்றும் வாரோம் என்று சொல்லி யன்றோ என்றும் வருவது -என்றான் –இனி –என்றும் பொய்கைக்கு வாரோம் –

இது என் புகுந்தது இங்கு அந்தோ இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்
மதுவின் துழாய் முடி மாலே மாயனே எங்கள் அமுதே
விதி இன்மையால் அது மாட்டோம் வித்தகப் பிள்ளாய் விரையேல்
குதி கொண்டு அரவில் நடித்தாய் குருந்திடைக் கூறை பணியாய்-3-2-இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய் –நீயும் நாங்களுமாய் ஜல கிரீடை பண்ணிப் போரும் பொய்கையோ இது –இது அறிந்து நீ வந்தபடி எங்கனே – நாங்கள் உன்னைக் கூடக் கொண்டு போந்திலோம்- இட்ட அடியையும் அழித்து அன்றோ நாங்கள் போந்தது -நீ இங்கு வந்த வழி என் –ஆனை நின்ற பொய்கையாய் வந்தாய் அல்லை ஆர்த்த நாதம் வழி காட்ட வந்தாய் அல்லை –எவ்வாறு வந்தாய் –காளியன் நின்ற பொய்கையாய் வந்தாய் அல்லை –-அநு கூலன் கிடந்த பொய்கையாய் வந்தாய் அல்லை – பிரதிகூலன் கிடந்த பொய்கையாய் வந்தாய் அல்லை நீ வந்த வழி என் –

தடத்தவிழ் தாமரைப் பொய்கைத் தாள்கள் எம் காலைக் கதுவ
விடத்தேள் எறிந்தாலே போலே வேதனை யாற்றவும் பட்டோம்
குடத்தை எடுத்து ஏறவிட்டுக் கூத்தாட வல்ல வெங்கோவே
படிற்றை எல்லாம் தவிர்ந்து எங்கள் பட்டைப் பணித்து அருளாயே-–3-6-பொய்கையில் உண்டான ஜலசர சத்வங்கள் பாதகம் ஆகா நின்றது என்றால் –துணுக்  என்னுமோ பாதி – தாமரைப் பொய்கையிலே  தண்டுகளும் பாதகமாகா நின்றது கிடாய் என்றால் கூடுமோ என்று பார்த்து அத்தை ஸ்மரிக்கிறார்கள்-பொய்கையில் தாமரைத் தண்டுகள் எங்களை நலியா நின்றது என்ன — ஆகில் கரையிலே போந்து ஏறும் கோள்-என்றான் கரையிலேயோ தான் தாமரை இன்றிக்கே இருக்கிறது –செக்கமலத்து அலர் போலும் கண் கை கால் செங்கனி வாய்அக்கமலத்து இலை போலும் திருமேனி யடிகளுக்கே – திருவாய்மொழி -9-7-3-தடம் –கரை -பரப்பு /பெருமை -பெரிய பொய்கை -இறே-கண்ணா கண் கை கால் தூய செய்ய மலர்களாய்ச் சோதிச் செவ்வாய் முகிழதா-சாயல் சாமத் திரு மேனி தண் பாசடையா-
தாமரை நீள் வாசத் தடம் போல் வருவானே
 -திருவாய்மொழி -8-5-1— தாமரைத் தடாகம் போல் இருப்பவன் அன்றோ அவன் –கீழே இந்த தாமரைப் பொய்கை துன்புறுத்த மேலே அந்த தாமரைப் பொய்கை துன்புறுத்துகிறதே –

ஆர்க்கும் என் நோய் இது அறியல் ஆகாது அம்மனைமீர் துழிதிப் படாதே
கார்க்கடல் வண்ணன் என்பான் ஒருவன் கைக் கண்ட யோகம் தடவத் தீரும்
நீர்க்கரை நின்ற கடம்பை ஏறிக் காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து
போர்க்களமாக நிருத்தம் செய்த பொய்கைக் கரைக்கு என்னை யுய்த்திடுமின்–12-5-இதுக்கு  பட்டர்  அருளிச் செய்ய நான்-நம்பிள்ளை – கேட்டேன் -என்று அருளிச் செய்வர்–காளியன் தலையிலே கிருஷ்ணன் பாய்ந்தான் -என்று கேட்டார் கேட்ட இடங்களிலே ஆழ விழுந்ததாய்த்து-பொய்கை அளவும் கால் நடை தந்து போய் புக வல்லார் இல்லையாய்த்து இறே-அனந்தாழ்வான் எம்பெருமானாரைக் காண வேணும் என்று வாரா நிற்கச் செய்தே – வடகரை அளவிலே வந்தவாறே -திரு நாட்டுக்கு எழுந்து அருளினார் -என்று சில ஏகாங்கிகள் தலைகளையும் சிரித்து ஏறினார்கள்-அவர்களைக் கண்டு -அனந்தாழ்வான் உடன் வந்த ஸ்ரீ நம்பி குஹ தாசர் -மரத்திலே ஏறி விழுவதாக ஏறினாராய்- தெளிந்து ஏறின நீ சாவ மாட்டாய் காண் போந்திழி -என்றானாம் –பொய்கைக் கரைக்கு என்னை யுய்த்திடுமின்–
இங்கே தெளிவாக இருந்து கிலேசப்படாதே-மோஹித்து கிடக்கலாம் தேசத்திலே பொகடுங்கோள் –

கடம் கலந்த வன் கரி மருப்பு ஒசித்து ஓர் பொய்கை வாய்
விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே
குடம் கலந்த கூத்தனாய கொண்டல் வண்ண தண் துழாய்
வடம் கலந்த மாலை மார்ப காலநேமி காலனே –38-வாதாஹதாம் புவி ஷேப ஸ்பர்ச தக்தவிஹங்கம் -என்கிறபடியே-அதி பீஷணம் ஆகையாலே அத்விதீயமான பொய்கையிலே –-முதலை கிடந்த பொய்கையும் இதுக்கு ஸத்ர்சமன் அன்று என்கை –

கரண்ட மாடு பொய்கையுள் கரும் பனைப் பெரும் பழம்
புரண்டு வீழ வாளை பாய் குறுங்குடி நெடும் தகாய்
திரண்ட தோள் இரணியன் சினம் கொள் ஆகம் ஒன்றையும்
இரண்டு கூறு செய்து உகந்த சிங்கம் என்பது உன்னையே –-62–நீர்க் காக்கை சஞ்சரிக்கும் பொய்கையிலே -பனையினுடைய கறுத்த பெரிய பழம்-அதினின்றும் விழுந்து -புரண்டு நீரிலே விழ -அவற்றை நீர்க் காக்கையாக கருதி-வாளைகள் அஞ்சிப் பாயா நின்ற திருக் குருங்குடியிலே –அழகும் சௌகுமார்யமும் சீலமும் மேன்மையும் -ஆகிற இஸ் ஸ்வபாவங்கள் குறைவற்று இருக்கிற மஹா ப்ரபாவனே-கரண்டம் -நீர்க் காக்கை-ஆடுகை -நடையாடுதல் -என்னுதல் -முழுகுதல் -என்னுதல்-தகை -இயல்வு-போலியைக் கண்டு வாளையானது அதி சங்கை பண்ணுகிற இது அத் தேசத்தின் பதார்த்தங்கள் நம்பி பக்கல் அஸ்தாநே பய சங்கை பண்ணுகிறபடிக்கு ஸூசகமாய் இருக்கிறது-

சாடு சாடு பாதனே சலங்கலந்த பொய்கைவாய்
ஆடரவின் வன் பிடர் நடம் பயின்ற நாதனே
கோடு நீடு கைய செய்ய பாத நாளும் உள்ளினால்
வீடனாக மெய் செயாத வண்ணம் என் கொல் கண்ணனே –86-சலங்கலந்த பொய்கைவாய் – விஷமே ப்ரசுரமாய் -அத்தோடே யமுநா ஜலமும் மிச்ரமாய் இருந்துள்ள பொய்கையிலே –தஸ்யாச்வாஸ மஹா பீமம் விஷான் நிஸ்ஸ்ர் தவாரிணம் ஹ்ர்தம் காளிய நாகஸ்ய தத்ர் சேதி விபீஷணம் –என்னக் கடவது இறே-ஆடரவின் வன் பிடர் நடம் பயின்ற –-அப் பொய்கையிலே வர்த்திக்கிற காளியனுடைய திண்ணிய பிடரியிலே நின்று சஞ்சரிக்கிற சஞ்சாரம் வல்லார் ஆடினாப் போலே இருக்கை-

மீனமர் பொய்கை நாண் மலர் கொய்வான் வேட்கையினோடு சென்று இழிந்த
கானமர் வேழம் கை எடுத்து அலறக் கரா வதன் காலினைக் கதுவ
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை
தேனமர் சோலை மாட மா மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே-2-3-9–நெடுநாள் பூத் தேடி பெறாமையாலே இடர் பட்டுத் திரிந்த விது – பூத்த தடாகத்தைக் கண்டு – ஷூத்ர மத்ஸ்யத்துக்கு மேற்பட துஷ்ட தத்வம் உண்டு என்று மதியாதே வந்து செவ்விப் பூவைப் பறிக்கைகாக பெரிய அபிநிவேசத்தோடே வந்து இழிந்த –

தூம்புடைத் திண் கைவன்தாள் களிற்றின் துயர் தீர்த்து அரவம் வெருவ முன நாள்
பூம்புனல் பொய்கை புக்கனவனுக்கு இடந்தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி
தேம் பொழில் குன்றெயில்  தென்னவனைத் திசைப்பச் செருமேல் வியந்து அன்று சென்ற
பாம்புடைப் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே–2-9-5–காளியனானவன் ஒரு தடாகத்தை விஷத்தால் தூஷிக்க அவன் அஞ்சி ஒடும்படியாக தான் அதிலே போய்ப் புக்கான் ஆயிற்று

கொழுந்தலரும் மலர்ச்சோலைக் குழாங்கொள் பொய்கைக் கோள் முதலை வாள் எயிற்றுக் கொண்டற்கு எள்கி
அழுந்திய மா களிற்றுனுக்கு அன்று ஆழி ஏந்தி அந்தரம் ஏவரத் தோன்றி அருள் செய்தானை
எழுந்த மலர்க் கருநீலம் இருந்தில் காட்ட இரும்புன்ன முத்தரும்பிச் செம்பொன் காட்ட
செழுந்தட நீர்க்கமலம் தீவிகை போல் காட்டும் திருக் கோவலூர் அதனுள் கண்டேனே–2-10-3—கொழுந்தையும் அலருகிற மலரையும் உடைய சோலை சூழ்ந்த பொய்கையிலே-ம்ருத்யு போலே இத்தை அடைய முடிக்க வந்த முதலை வாள் போலே இருக்கிற எயிற்றாலே-இத்தை கிரஹித்ததாய் ஆயிற்று -அதுக்கு எள்கி -ஈடுபட்டு-

வளைக்கை நெடும் கண் மடவார் ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப
தளைத்தவிழ் தாமரைப் பொய்கைத் தண் தடம் புக்கு அண்டர் காண
முளைத்த எயிற்று அழல் நாகத்து உச்சியில் நின்று அது வாட
திளைத்தமர் செய்து வருவான் சித்திர கூடததுள்ளானே–3-3-4-வளையாலே அலங்க்ருதமான கையையும் பீதைகளாய் பார்க்கும் நோக்கையும் உடைய இடைப் பெண்கள் அஞ்சிக் கூப்பிட
கட்டவிழ்ந்து அலர்ந்த தாமரைப் பொய்கையினுடைய ஸ்ரமஹரமான கரையிலே சென்று இடையர் காண முளைத்த எயிற்றை உடைய பாம்பின் உடைய உச்சியிலே புக்கு நின்று அது வாடும்படி கூட விளையாடி அமர் செய்து வருமவன்-

இழையோடு கொங்கைத் தலை நஞ்சம் உண்டிட்டு இளங்கன்று கொண்டு விளங்காய் எறிந்து
தழை வாடவன் தாள் குருந்தம் ஒசித்துத் தடந்தாமரைப் பொய்கை புக்கான் இடந்தான்
குழை யாட வல்லிக் குலமாட மாடே குயில் கூவ நீடு கொடி மாடம் மல்கு
மழை யாடு சோலை மயிலாலு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-5-தாமரைப் பொய்கை புக்கான்-தனக்கும் பெண்களுக்கும் ஜலக் கிரீடை பண்ணுகைக்கு யோக்யமான இடத்தை
காளியன் புக்கு தூஷித்து கிடக்க அங்கே போய் புக்கான் ஆயிற்று-மேலே பாசுரத்தில் எதற்க்காகப் புக்கான் ஜல க்ரீடை-வஸ்திர அபஹரணம்-காளியன் புக்கு தூஷித்து கிடக்க- இத்யாதி உண்டே-பிரதி கூல வர்க்கத்தைப் போக்கி இடைப் பெண்களோடு சம்ஸ்லேஷித்தவன் திரு மணி மாடக் கோயிலிலே நின்று அருளினவன்-நெஞ்சே அத் தேசத்தை ஆஸ்ரயி-என்கிறார்-

தளைக் கட்டவிழ் தாமரை வைகு பொய்கைத் தடம் புக்கு அடங்கா விடங்கால் அரவம்
இளைக்கத் திளைத்திட்டு அதனுச்சி தன் மேல் அடி வைத்த அம்மானிடம் மா மதியம்
திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில் செழு முத்து வெண் நெற்கு எனச் சென்று முன்றில்
வளைக்கை நுளைப் பாவையர் மாறு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-7-தளைத் தாமரையும் -கட்டவிழ் தாமரையும் –மொட்டுத் தாமரையும் அலர்ந்த தாமரையும்-தங்குகிற பொய்கைக் கரையிலே புக்கு -என்னுதல் -பொய்கையின் உள்ளே புக்கு என்னுதல் –

தா வளந்துலகம் முற்றும் தட மலர்ப் பொய்கை புக்கு
நா வள நவின்று அங்கே ஏத்த நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்
மா வளம் பெருகி  மன்னு மறையவர் வாழும்  நாங்கைக்
கா வளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே -4-6-1-இது தன்னையும் ஆனை தனக்கே யாக்கி
ஓர் இடத்தில் ஒரு பூ மலர் காணாமையாலே பூமிப் பரப்பு அடங்கலும் தாவித் திரிந்தது -என்னவுமாம்
அன்றிக்கே-திரு உலகளந்து அருளின படியை யாக்கி பூமிப் பரப்பு அடங்கலும் அநாயாசேன அளந்து கொண்டான் -என்னுதல்-நீ பூமி அளந்து கொள்ளுகைக்கு அந்த பூமியில் உள்ளார் தாங்கள் ஏதேனும் யத்நிதித்தது உண்டோ ஒரு பூ மலர் காணலாமோ என்னும் ஆசையாலே பூமிப் பரப்பு அடங்கலும் தட்டித் திரிந்து பின்பு ஒரு பிரதேசத்திலே பெரிய மலரை உடைத்தாய் இருப்பதொரு பொய்கைகைக் கண்டு -அதிலே முதலை உண்டு என்று அறியாதே போய்ப் புக்கு அதின் வாயிலே அகப்பட்டு ஒரு போக்கடி அறியாதே தடுமாறி-தான் அகப்பட்ட பொய்கையிலே நின்று திரு நாமத்தைச் சொல்லுகிற ஆனையினுடைய அச்சத்தை போக்கினவனே ஆனை தான் தனக்கு உதவுதல் முதலை உதவுதல் செய்ததோ நீயே அன்றோ மடுவின் கரையிலே அரை குலைய தலை குலைய வந்து உதவினாய்-

பாரினை யுண்டு பாரினை யுமிழ்ந்து பாரதம் கை எறிந்து ஒரு கால்
தேரினை  யூர்ந்து  தேரினைத் துரந்த செங்கண் மால் சென்றுறை கோயில்
ஏர் நிறை வயலுள் வாளைகள் மறுகி எமக்கு இடம் அன்று இது என்று எண்ணிச்
சீர்மலி பொய்கை சென்று அணைகின்ற திருவெள்ளியங்குடி யதுவே
 —4-10-5–சம்சாரம் அநித்தியம் துக்கம் -என்று அத்தை விட்டு விரஜையைச் சென்று பற்றுவாரைப் போலே – (ப்ரஹ்மாதிகள் காளைகள்
உழவன் அவன்-ஏர் கர்ம பாசங்கள்-லீலா விபூதியை விட்டு -ஜனன மரண விட்டு பகவத் கிருபா ஜலஜம் பிறந்த பாகவதர்கள் விரஜைக்கு போவது போல் )

வெய்யனாய் உலகு ஏழு உடன் நலிந்தவன் உடலகம் இரு பிளவாகக்
கையில் நீள் உகிர் படையது வாய்த்தவனே எனக்கு அருள் புரியே
மையினார் தரு வரால் இனம் பாய வண் தடத்திடைக் கமலங்கள்
தெய்வம் நாறும் ஒண் பொய்கைகள் சூழ் திரு வெள்ளறை நின்றானே
 –5-3-3-கருப்பு மிக்கு இருந்துள்ள வரால் இனம் உண்டு இவற்றின் உடைய திரள்கள் ஆனவை பூக்களைக் கிழித்துக் கொண்டு அழகிய தடாகங்களில் பாய-ஸ்லாக்கியமான – அக் கமலங்கள் மணம் நாறா நின்றுள்ள பொய்கைகள் சூழ்ந்த
திரு வெள்ளறை நின்றானே –

கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம்
முடியும் வண்ணமோர் முழு வலி முதலை பற்ற மற்றது நின் சரண் நினைப்பக்
கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக் கொண்ட சீற்றம் ஓன்று உண்டு உளது அறிந்து உன்
அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத்து அம்மானே–5-8-3–பொய்கை வைகு தாமரை -என்ன அமையும் இறே இவன் அதிகரித்த கார்யத்துக்கு பொழிலையும்  பொய்கையும் வர்ணனை செய்வதற்கு கருத்து என் என்னில்-அநாவ்ருஷ்டியாலே ஜகத் எல்லாம் நோவு பட்டு ஓர் இடத்திலும் ஒரு புஷ்பமும் இன்றிக்கே தட்டித் திரியா நிற்க இவனுக்கு முற்பட கண்ணிலே படுமது இறே சோலை-அந்த சோலை தான் தளிரும் முறியும் செருந்துமாய் நிற்கையாலே கீழே ஒரு பொய்கை உண்டு என்று தோற்றிற்று-பரிமள பிரசுரமாய் பூவை உடைத்தான பொழில் அச் சோலையை நோக்கிப் போக -என்று புக்கவாறே பரிமளம் வந்து பிராண விஷயமாய் அங்கே புஷ்பம் உண்டு என்று தோற்றிற்று    –ஆகர்ஷகமான பொய்கை-ஆகர்ஷகமாக இருக்கை யாவது அகாதமாய் துஷ்ட சத்வங்களும் உண்டாய் இருக்குமோ -என்று விவேகியாதே மேல் விழும்படியாய் இருக்கை –வைகு தாமரை –அநாவ்ருஷ்டியாலே தாமரைப் பூக்கள் எங்கும் ஒக்க-

விடந்தான் உடைய வரவம் வெருவச் செருவில் முன நாள் முன்
தடந்தாமரை நீர்ப் பொய்கை புக்கு மிக்க தாடாளன்

இடந்தான் வையம் கேழல் ஆகி யுலகை ஈரடியால்
நடந்தான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே  –6-10-2-விஷத்தை உடைய காளியன் அஞ்சும்படியாக யுத்தத்தில் முன்பு ஒரு நாள் தன்னேராயிரம் பிள்ளைகளுக்கு முன்னே பரப்பு மாறாப் பூத்த தாமரைகளையும் நினைத்த வகைகள் எல்லாம் விநியோகம் கொள்ளலாம் படியான ஜல சம்ருத்தியையும் உடைய பொய்கையிலே போய்ப் புக்கு-அவனைத் துரத்தின ஏற்றத்தை உடையவன் –தாடாளன்–திருவடிகளை உடையவன் –-நாட்டியம் ஆடிய தாள் அன்றோ -காளியன் பெற்ற பேறு விஷ துஷ்டமான ப்ரக்ருதி ஒட்டி –

குலத்தலைய மத வேழம் பொய்கை புக்குக் கோள் முதலை பிடிக்க வதற்கு அனுங்கி நின்று
நிலத்திகழும் மலர்ச் சுடரேய் சோதி யென்ன நெஞ்சிடர் தீர்த்து அருளிய வென் நிமலன் காண்மின்
மலைத் திகழ்  சந்தகில் கனக மணியும் கொண்டு வந்துந்தி வயல்கள் தோறும் மடைகள் பாய
அலைத்து  வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே—7-8-3-நல்ல ஆகரத்திலே பிறந்து -தான் ஆனைகளுக்கு எல்லாம் பிரதானமாய்- மதமுதிதமாய் – மூலையடியே திரிகிற யானை  விழுக்காடு அறியாதே தன்னிலம் அல்லாத வேற்று நிலத்திலே புக்கு கொடிதான முதலையின் கையிலே அகப்பட்ட தாய்த்து –

இலை யார் மலர்ப் பூம் பொய்கை வாய் முதலை தன்னால் அடர்ப்புண்டு
கொலை யார் வேழம் நடுக்குற்றுக் குலைய வதனுக்கு அருள் புரிந்தான்
அலை நீர் இலங்கைத் தசக்ரீவற்கு இளையோருக்கு அரசை அருளி முன்
கலை மாச் சிலையால் எய்தானூர்  கண்ண புரம் நாம் தொழுதுமே —-8-6-7-இலைகளால் மிக்கு இருப்பதாய் பரப்பு மாறப் பூத்து தர்ச  நீயமான பொய்கையிலே போய் புக்கு ஒரு ஜல சரசத்வத்தாலே நெருக்குண்டு –

கவள மா கதத்த கரி உய்யப் பொய்கை காரம் கொளக் கலங்கி யுள் நினைந்து
துவள மேல் வந்து தோன்றி வன் முதலை துணி படச்   சுடு படை துரந்தோன்
குவளை நீள் முளரிக் குமுத மொண் கழுநீர் கொய் மலர் நெய்தல் ஒண் கழனித்
திவளும் மாளிகை சூழ் செழு மணிப் புரிசைத் திரு கண்ணங்குடி யுள் நின்றானே —9-1-2–கவளம் கொண்டு இருப்பதாய் மிக்க மதத்தை உடைத்தாய் இருக்கிற ஆனையானது தன் செருக்காலே தன் நிலம் அல்லாத பொய்கையிலே புக்கு தன் நிலம் ஆகையாலே நினைத்த படி வியாபாரிக்க வல்ல
முதலையின் வாயலிலே அகப்பட்டு –-காரம் -முதலை –தன்னால் பரிஹரித்து கொள்ள ஒண்ணாமையாலே கலங்கி –(பரமாபத ஆபன்ன ) மனஸா சிந்த யத்தரிம் – என்கிறபடியே நெஞ்சால் நினைக்க-

அலம் புரிந்த நெடும் தடக்கை யமரர் வேந்தன் அஞ்சிறைப் புள் தனிப் பாகன் அவுணர்க்கு என்றும்
சலம் புரிந்து அங்கு அருள் இல்லா தன்மையாளன் தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி
நிலம் பரந்து வரும் கலுழிப் பெண்ணை யீர்த்த நெடு வேய்கள் படு முத்தம் உந்த வுந்திப்
புலம் பரந்து பொன் விளைக்கும் பொய்கை வேலிப் பூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே –6-பொய்கை வேலி- இப்படிப் பட்ட வயல்களையும் தடாகங்களையும் சுற்றிலே உடைத்தாய் இருக்கை –
நதீஸ் தடா காநி ச பூரயித்வா -என்கிறபடியே-வர்ஷம் நிறைக்கை அன்றிக்கே ஆறு நிறைக்கக் கடவதான பொய்கைகள் இறே –

கல்லுயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய களிறு என்றும் கடல் கிடந்த கனியே என்றும்
அல்லி யம் பூ மலர்ப் பொய்கை பழன வேலி அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான் என்றும்
சொல்லுயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கித் தூ முறுவல் நகை யிறையே தோன்றநக்கு
மெல்விரல்கள் சிவப்பெய்தத் தடவியாங்கே மென் கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே–15-தாது மிக்கு பரிமிளிதமாய் தர்ச நீயமாய் இருந்துள்ள புஷ்பங்களை உடைத்தான தடாகங்களையும் நீர் நிலங்களையும் வேலியாக உடைய தேசம்-பிரதி கூலர்க்கு துஷ் ப்ராபமாய்-அநு கூலர்க்கு ஸ்ரமஹரமாய்-இருந்துள்ள தேசம் -என்கை

தடமால் வரை போலும் போரானை பொய்கை வாய் கோட்பாட்டு நின்று நீரார் மலர்க் கமலம் கொண்டு ஓர் நெடும் கையால்–மிகப்பெரிய மலைபோன்ற மத்தகஜமானது-நீர்நிலத்திலே முதலையின் வாயிலகப்பட்டு நின்று வருந்தி-நீண்ட ஒரு துதிக்கையினால் அப்போதலர்ந்த தாமரைப் பூக்களை எடுத்துக்கொண்டு-

வருத்தும் புற இருள் மாற்ற எம் பொய்கைப் பிரான் மறையின்
குருத்தின் பொருளையும் செம்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத்
திரித்து அன்று எரித்த திரு விளக்கைத் தன் திரு உள்ளத்தே
யிருத்தும் பரமன் இராமானுசன் எம் இறையவனே -8 –பொற் கால் இட்ட ஆழ்வார் அன்றோ பொய்கை ஆழ்வார்-

நீந்தும் துயர்ப்பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
நீந்தும் துயரில்லா வீடு முதலாம்
பூந்தண் புனல் பொய்கை யானை யிடர் கடிந்த
பூந்தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே –2-8-2-இது த்ருஷ்டாந்தம் – பரப்பு மாறப்பூத்து குளிர்ந்த நீரை உடைய பொய்கையில் முதலையாலே நலிவு பட்ட யானை இடரைப் போக்கின-செவ்வியை உடைத்தாய் குளிர்ந்த திருத்த துழாயாலே அலங்க்ருதனான அத்விதீய நாயகன் – இது திருத் துழாயின் குளிர் வாசனையால் யாயிற்று யானையை ஆசுவாசிப்பித்தது- ஆனைக்கு உதவினதும் தமக்கு உதவிற்றாக நினைத்து இருக்கிறார்-

மொய்ம்மாம் பூம்பொழிற் பொய்கை முதலைச் சிறைப்பட்டு நின்ற
கைம்மாவுக்கு அருள் செய்த கார்முகில் போல்வண்ணன் கண்ணன்
எம்மானைச் சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார்
தம்மால் கருமம் என்? சொல்லீர், தண் கடல் வட்டத்து உள்ளீரே!–3-5-1-செறிந்து பரந்து தர்ச நீயமான பொழில் என்னுதல் -செறிந்து பூத்த மாம் பொழில் என்னுதல்-மா பொழில் -மொய் பூம் பொய்கை-
மாம் பொழிலையும் செறிந்த பூவையும் உடைய பொய்கை என்னுதல் –-நெடு நாள் பூத் தேடி விடாய்த்த ஆனைக்கு விடாய் கெடுகைக்கு உடல் ஆகையால் பொய்கையோபாதி சோலையும் உத்தேசியமாய் இருக்கிறது இவருக்கு-

குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம்ஒன்று ஏந்தியதும்
உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும்பல
அரவில் பள்ளிப் பிரான்தன் மாய வினைகளையே அலற்றி
இரவும் நன்பகலும் தவிர்கிலன் என்ன குறைவு எனக்கே.–6-4-1-வலியை யுடைத்தான நீர் -விஷத்தால் பாதகமான வலி யாதல் -முது நீர் ஆகையால் வலிய நீர் ஆதல் —உரவு-விஷம் என்னுதல் -வலிய என்னுதல் –-நாகங் காய்ந்ததும் -பெண்களோட்டை ஜலக் க்ரீடைக்கு விரோதி என்று காளியனை ஓட்டினதுவும் –-உள்பட மற்றும்பல-இவை முதலான சேஷ்டிதங்களுக்கு தொகை இல்லை-பிறந்த வாற்றில் பல ஹானியால் சொல்ல மாட்டிற்று இலர்-இங்கு ப்ரீதி பிரகர்ஷத்தாலே தரித்து சொல்ல மாட்டாது ஒழிகிறார்-

அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று அகலிரும் பொய்கையின் வாய்
நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான்
சென்று அங்கு இனி துறைகின்ற செழும் பொழில் சூழ் திரு வாறன்விளை
ஒன்றி வலஞ்செய ஒன்றுமோ? தீவினை உள்ளத்தின் சார்வல்லவே.–7-10-8-கஜ ஆகர்ஷதே என்கிற ஸ்வ சாமர்த்தியம் கார்யகரம் ஆகாத அளவிலே உன் திருவடிகளை ஒழிய வேறு பற்று உடையேன் அல்லேன் என்கிறாள் –-அகலிரும் பொய்கையின் வாய்-அகன்று ஆழ்ந்து இருந்துள்ள பொய்கையை வாயிலே -இப்போது அகலமும் ஆழமும் சொல்லுகிறது -அவன் ஏற விடுதல் -தானேயேற பார்க்கில் முடித்தல் செய்யும் படியாய் இருக்கை –-நின்று-ஸ்வ சாமர்த்தியம் ஓவிச் செயல் அற்று நின்று-தன் நீள் கழல் -செயல் அற்றார் இருந்த இடமே எல்லையாக வளரும் திருவடிகள் -நினைத்த அளவிலே நபி பேதி குதச்சந -என்னப் பண்ணுகிற திருவடிகளிலே-ஏத்திய-முள் பாய்ந்தால் அம்மே என்பாரைப் போலே ப்ராப்தியையும் ஸுலப்யத்தையும் நினைத்து நாராயணா என்று ஏத்தினான்-ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான்-துதிக்கையும் பூவும் ஒழிய அழுந்தின அழுந்தின அளவிலே -பூவில் செவ்வி அழிவதற்கு முன்பே திருவடிகளில் சாத்தப் பெற்றிலேன் என்கிற இடரைத் தீர்த்த உபகாரகன்

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ அருளிச் செயல்களில்-தாமரை-பத பிரயோகங்களும் வியாக்யான ஸ்ரீ ஸூக்திகளும்–

August 18, 2026

(கூரத்தாழ்வான் தாமும் வரதராஜஸ்தவத்தில் “அப்ஜபாணிபதம் அம்புஜநேத்ரம்“ என்றும்
ஸுந்தரபாஹுஸ்தவத்தில் “அப்ஜபாத மரவிந்தலோசநம் பத்மபாணிதலம்“ என்றும் இங்ஙனே பேசி யநுபவிக்கிறார்.
பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் “கமலபதகராக்ஷம்“ என்று சேரப் பேசியநுபவித்ததுமுண்டு.
உபமாந வ்யக்தி ஒன்றேயா யிருக்கச்செய்தேயும் தத்பர்யாயமான பல சொற்களையிட்டு
(தாமரை, கமலம், அரவிந்தம் என்றாற்போல)ச் சொல்லுதல்-வாக்ய பேதம் பண்ணுதலும்-அநுஸந்தாக போக்யதா ப்ரகர்ஷ ஸூசகமத்தனை.)

ஆக –
ஒருவாறு ஒப்புமை சொல்லவும்
படைத்ததை காட்டவும்
பெருமை சொல்லவும்
புண்டரீகனே -அவனை நேராகச் சொல்லவும்
அரவிந்தப்பாவை -அவளை நேராகச் சொல்லவும்
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்து -என்று அநந்யார்ஹத்வம் சொல்லவும்
எளிதில் குனிந்து பறித்து அர்ச்சிக்கும் படி அன்றோ தாமரை -ஸுலப்யம் காட்டவும்
பொற்றாமரைக் கயம் நீராடப் போவோம்

முற்றாரா வன முலையாள் பாவை மாயன் மொய்யகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும்
அற்றாள் தன் நிறைவு இழந்தாள் ஆவிக்கின்றாள் அணி யரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும்
பெற்றேன் வாய் சொல் இறையும் பேசக் கேளாள் பேர் பாடித் தண் குடந்தை நகரும் பாடிப்
பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் பொருவற்றாள் என் மகள் உம் பொன்னும் அஃதே -19-பொற்றாமரைக் கயம் என்கிற விசேஷணங்களால் அனுபாவ்ய விஷய ஸ்வபாவத்தை சொல்லுகிறது –மகள் -அணி அரங்கம் ஆடுதுமோ -என்று ஊரைச் சொன்னாள் – தான் –பொற்றாமரைக் கயம் -என்று பெரிய பெருமாளை சொல்லுகிறாள் –தயரதன் பெற்ற மரகத மணித்தடம் -என்றும்-வாசத் தடம் போலே வருவானே -என்றும் தடாகமாக சொல்லக் கடவது இறே –பொற்றாமரைக்கயம் நீராடப்போனாள் =
கீழே திருக்குடந்தை ப்ரஸ்துதமாகையாலே அத்தலத்தில் புண்ணிய தீர்த்தமாக வழங்கி வருகின்ற பொற்றாமரை என்னும் புஷ்கரிணியிலே நீராடப்போனாள் என்று பொருள் கொள்ளப் பொருந்துமாயினும் எம்பெருமான் றன்னையே பொற்றாமரைக் கயமாகப் பேசுகிறாரென்றலும் பொருந்தும். தமிழர், ஸம்ச்லேஷத்தைச் சுனையாடலென்றும் நீராட்டமென்றும் சொல்லுவார்கள்.
எம்பெருமானோடு கலவி செய்ய விரும்புவதையே இங்குப் பொற்றாமரைக் கயம் நீராடப்போவதாகச் சொல்லிற்றென்க.

தடத்தவிழ் தாமரைப் பொய்கைத் தாள்கள் எம் காலைக் கதுவ
விடத்தேள் எறிந்தாலே போலே வேதனை யாற்றவும் பட்டோம்
குடத்தை எடுத்து ஏறவிட்டுக் கூத்தாட வல்ல வெங்கோவே
படிற்றை எல்லாம் தவிர்ந்து எங்கள் பட்டைப் பணித்து அருளாயே-–3-6-(529)-பொய்கையில் உண்டான ஜலசர சத்வங்கள் பாதகம் ஆகா நின்றது என்றால் –துணுக்  என்னுமோ பாதி –-தாமரைப் பொய்கையிலே தண்டுகளும் பாதகமாகா நின்றது கிடாய் என்றால்-கூடுமோ என்று பார்த்து அத்தை ஸ்மரிக்கிறார்கள்-பொய்கையில் தாமரைத் தண்டுகள் எங்களை நலியா நின்றது என்ன —ஆகில் கரையிலே போந்து ஏறும் கோள்-என்றான்-கரையிலேயோ தான் தாமரை இன்றிக்கே இருக்கிறது –செக்கமலத்து அலர் போலும் கண் கை கால் செங்கனி வாய் அக்கமலத்து இலை போலும் திருமேனி யடிகளுக்கே -திருவாய்மொழி -9-7-3–தடம் –கரை -பரப்பு /பெருமை -பெரிய பொய்கை -இறே
கண்ணா கண் கை கால் தூய செய்ய மலர்களாய்ச் சோதிச் செவ்வாய் முகிழதா சாயல் சாமத் திரு மேனி தண் பாசடையா- தாமரை நீள் வாசத் தடம் போல் வருவானே -திருவாய்மொழி -8-5-1— தாமரைத் தடாகம் போல் இருப்பவன் அன்றோ அவன் –கீழே இந்த தாமரைப் பொய்கை துன்புறுத்த மேலே அந்த தாமரைப் பொய்கை துன்புறுத்துகிறதே –

கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை யொவ்வா
சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது
ஒட்டுரைத்து இவ்வுலகு உன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி –3-1-2-(1149)-சொல்லில் -கட்டுரை என்று முழுச் சொல்லாய் -சொல்லில் என்றபடி -நெஞ்சாலும் பரிச்சேதிக்க ஒண்ணாதாய் இருக்க பாசுரம் இட்டுச் சொல்லப் போகாது-தாமரை –தாமரை ஜாதியாக ஓர் அவயவத்துக்காக ஒப்பாக மாட்டாது என்கை –
நின் கண் பாதம் கை யொவ்வா-முதல் உறவு பண்ணும் கண் -அதுக்கு தோற்று ஜிதந்தே என்று விழும் திருவடிகள் -அவ் விழுக் காட்டுக்கு தோற்று அவன் தான் ஜிதந்தே என்று அணைக்கும் கை
நின் கண் -என்கையாலே –உனது முகச் சோதி -என்றத்தை நினைக்கிறது –-பாதம் -என்றது அடிச் சோதி என்றத்தை நினைக்கிறது-கை -என்று நடுவு தாம் அனுபவித்த அழகுக்கு உப லக்ஷணம்-சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது-பொன்னை உபமானமாக போராது என்கைக்காக சிக்ஷிக்கிறார் -காய்ச்சி உரைத்த வி லக்ஷணமான நன் பொன்-ருக்மஅபாம் -என்னக் கடவது இறே
உன் திருமேனி ஒளி ஒவ்வாது-பரஞ்சோதி ரூப சம்பத்ய–ஏஷ ஸர்வஸ்ய பூதஸ்து பரிஷ் வங்கோ ஹா நூ மத -என்று தான் மதித்து இருக்கும் வடிவு

பரஞ்சோதி நீ பரமாய் நின்னிகழ்ந்து பின் மற்றோர்
பரஞ்சோதி யின்மையில் படியோவி நிழல்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த எம்
பரஞ்சோதி கோவிந்தா பண்புரைக்க மாட்டேனே –3-1-3-தாமரை அரவிந்தம் பங்கயம் கமலம் பத்மம் பலவாறு ஒப்பிட்டும் பின்னையும் —

தக்கிலமே கேளீர்கள் தடம் புனல் வாய் இரை தேரும்
கொக்கினங்காள் குருகினங்காள் குளிர் மூழிக் களத்து உறையும்
செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக்கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே
–9-7-3-(3849)-இக் குளிர்த்திக்கு அடியான அகவாயில் வாசத்தடம் இருக்கிற படி -சிவந்து அலர்ந்த தாமரை போலே இருக்கிற கண் முதலான திவ்ய அவயவங்களை யுடையவன் –முதல் உறவு பண்ணும் கண் -அந்நோக்குக்குத் தோற்றாரை அணைக்கும் கை -ஸ்பர்சத்துக்கு தோற்றார் விழும் திருவடிகள் -திருவடிகளில் விழுந்தாரை சாந்த்வனம் பண்ணி தரிப்பிக்கும் முறுவல் –அக் கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே––அவர்களுக்கு உஜ்ஜீவனமான வடிவு -அவயவங்களை பரபாகமான செந்தாமரை இலை போலே யாய்த்து திரு மேனி -வெண்டாமரை என்னில் விஜாதீயம் என்று –அக் கமலம் -என்கிறது —அடிகளுக்கு –வடிவு அழகையும் அவயவ சோபையையும் காட்டி எழுதிக் கொண்டவர்க்கு இவ் வடிவுக்குத் தோற்று வைவர்ணயத்தை தரித்து இருப்பார் யோக்யர் அல்லரோ என்று கேட்டுப் பாருங்கோள் –

என் தம்பிரானார் எழில் திரு மார்வற்கு
சந்தம் அழகிய தாமரை தாளர்க்கு
இந்திரன் தானும் எழிலுடை கிண் கிணி
தந்து உவனாய் நின்றான் தாலேலோ தாமரை கண்ணனே தாலேலோ -1-3 3- (43)–சிகப்பாலும் விகாசாதிகளாலும் நிறம் அழகிய தாமரைப் பூ போலே இருக்கிற திருவடிகளை உடையவனுக்கு –கிஞ்சித் கரித்தவர்களைக் குளிரக் கடாஷிக்கும் தாமரை போன்ற திருக் கண்களை உடையவனே -தாலேலோ –

தடம்படு தாமரைப் பொய்கை கலக்கி
விடம்படு நாகத்தை வால் பற்றி ஈர்த்து
படம்படு பைம்தலை மேல் எழப் பாய்ந்திட்ட
உடம்பை அசைத்தானால் இன்று முற்றும்
உச்சியில் நின்றானால் இன்று முற்றும் -2-10 3- (215)இடமுடைத்தான தாமரைப் பொய்கை என்று இறே பிரசித்தி காளியன் புகுவதற்கு முன்பு பின்பு இறே நச்சு அழல் பொய்கையாயிற்று-இப்படிப் பட்ட பொய்கையை – நிபபாத  ஹ்ரதே தத்ர   சர்ப்ப ராஜச்ய வேகத தேந அதிபததா தத்ர ஷோபித ச மகாக்ரத -என்கிறபடியே பெரிய விசையோடு உள்ளே  குதித்து கலங்க பண்ணி

நம்பி பிம்பி என்று நாட்டு மானிடப் பேர் இட்டால் 
நம்பும் பிம்பும் எல்லா நாலு நாளில் அழுங்கிப் போம் 
செம் பெரும் தாமரைக் கண்ணன் பேரிட்டு அழைத்தக்கால் 
நம்பிகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – 4-6- 8-(388)–சிவந்த பெருத்த தாமரை போலே இருக்கிற திருக் கண்களை உடையவனுடைய  திரு நாமத்தை இட்டு அழைத்தக்கால் -அதாவது 
திரு நாமம் சொன்னவர்களுக்கு சகல சம்பத்துக்களும் உண்டாம்படி கடாஷிக்கும்  திருக் கண்களை உடையவன் திரு நாமத்தை – உங்கள் பிள்ளைக்கு இட்டு ஆதரம் தோற்ற – அழைத்தக்கால் -என்கை 

தன்னடியார் திறத்தகத்து தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல்
என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும்
மன்னுடைய விபீடணர்க்காய் மதிள் இலங்கை திசை நோக்கி மலர் கண் வைத்த
என்னுடைய திருவரங்கர்க்கு அன்றியும் மற்று ஒருவர்க்கு ஆளாவரே   – 4-9 -2-(413)-குணத்தை தோஷமாக பிரமித்தாயோ -என்று இறே அவன் பாசுரம்-ஸ்ரீ பெரிய பெருமாளுடைய ஆஸ்ரித பஷ பாத அதிசயம் சொல்லுகிறது-இருவரும் -இசலி -ஸ்பர்த்தித்து -( பொய்ச் சண்டை இட்டு )-ஆஸ்ரிதரை நோக்கும்படி சொல்லுகிறது –-என் அடியார் அது செய்யார் -என்பதிலும் -சிதகுரைக்கும் -என்கிறது இறே உத்தேச்யம்-கைக் கொள்ளுகைக்கு சொல்லும் வார்த்தை போல் அன்றிக்கே கை விடாமைக்கு சொல்லும் வார்த்தை-அடியார் -என்று ஸ்வா தந்த்ரய நிவர்த்தி-தன்னடியார் -என்று அந்ய சேஷ நிவர்த்தி-திரு நாரணன் தொண்டர் -என்று இறே இவர்களுக்கு நிரூபகம்-ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஆகிலும்-அபி சப்தம் –-ஆஸ்ரித விச்லேஷம் பொறுக்க மாட்டாத மார்த்த்வ பரம்

நல்லதோர் தாமரைப் பொய்கை நாள் மலர் மேல் பனி சோர
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகு அழிந்தால் ஒத்தது ஆலோ
இல்லம் வெறி ஓடிற்று ஆலோ என் மகளை எங்கும் காணேன்
மல்லரை அட்டவன் பின் போய் மதுரைப் புறம் புக்காள் கொலோ -3- 8-1 –(297)-பரப்பு மாற தாமரை பூத்துக் கிடக்கையாலே – அழகியதாய் – அத்விதீயமான பொய்கை யானது-சிகப்பு -விகாசம்-குளிர்த்தி -பரிமளம்-மார்த்தவம் – இவற்றை உடைத்தான நாள் பூவிலே அதற்கு வ்ருத்தமான பனியானது சொரிய-அத்தாலே அல்லியும் தாதும் -செவ்வி கெட்டு தீர்ந்து – அலங்காரமான பூ அழிகையாலே தான் அழகு அழிந்தால் போலே இரா நின்றது-ஸ்தாவர ஜாதிக்கு எல்லாம் உபகாரமாய் இருந்ததே ஆகிலும்
தாமரைக்கு பாதகமாகை நியத ஸ்வாபம் இறே பனிக்கு -அப்படி பனி ஏறுண்ட தமரையோடை போலே ஆய்த்து இத் திரு மாளிகை கிடக்கிறது-

வெள் நிறத் தோய் தயிர் தன்னை வெள் வரைப்பின் முன் எழுந்து
கண் உறங்காதே இருந்து கடையவும் தான் வல்லள்  கொலோ
ஒண் நிறத் தாமரை செம் கண் உலகு அளந்தான் என் மகளைப்
பண்ணறையாப் பணி கொண்டு பரிசற வாண்டிடும் கொலோ -3-8-9-(305)-அலர்ந்த போதை அழகிய நிறத்தை உடைத்தான தாமரை போலே சிவந்த திருக் கண்களை உடையவனாய் – சமஸ்த லோகங்களையும் தன் திருவடிக் கீழ்  ஆக்கிக் கொண்டவன் –இத்தால்-தன் கண் அழகாலே இவளை அனந்யார்ஹை ஆக்கி தன் கால் கீழ் இட்டுக் கொண்டவன் -என்கை –

நம்பி பிம்பி என்று நாட்டு மானிடப் பேர் இட்டால் 
நம்பும் பிம்பும் எல்லா நாலு நாளில் அழுங்கிப் போம் 
செம் பெரும் தாமரைக் கண்ணன் பேரிட்டு அழைத்தக்கால் 
நம்பிகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – 4-6- 8-(388)-சிவந்த பெருத்த தாமரை போலே இருக்கிற திருக் கண்களை உடையவனுடைய  திரு நாமத்தை இட்டு அழைத்தக்கால் -அதாவது  திரு நாமம் சொன்னவர்களுக்கு சகல சம்பத்துக்களும் உண்டாம்படி கடாஷிக்கும்  திருக் கண்களை உடையவன் திரு நாமத்தை – உங்கள் பிள்ளைக்கு இட்டு ஆதரம் தோற்ற – அழைத்தக்கால் -என்கை –

அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டில் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் (எம் கண்)மேல் நோக்குதியேல்
எங்கள்  மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்–(495)-ஆதித்யனைக் கண்டால் அலரக் கடவ தாமரைப் பூ போலே எங்கள் ஆற்றாமைக்கு அலருமவை இறே இவை – அர்த்திகளைக் கண்டால் அலருமவை இறே
இந்தத் தாமரைப் பூ –அலரவும் மாட்டாதே மொட்டிக்கவும் மாட்டாதே திருக் கண்கள் இருந்த படிக்கு
த்ருஷ்டாந்தம் சொல்லுகிறார்கள் –ஸ்வாதந்தர்யம் செம்பிளிப்பியா நின்றது – நப்பின்னை பிராட்டையோட்டை ஸ்பர்சம் அலரப் பண்ணா நின்றது –

பெய்யு மா முகில் போல் வண்ணா உன்தன் பேச்சும் செய்கையும் எங்களை
மையல் ஏற்றி மயக்க உன்முகம் மாய மந்திரம் தான் கொலோ
நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு உன்னை நோவ நாங்கள் உரைக்கிலோம்
செய்ய தாமரைக் கண்ணினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே--2-4-(517)-பின்னையும் அழிப்பதாக ஒருப்பட்டது மாறாதே இருக்கச் செய்தேயும் சாதரமாகப் பார்த்தான் – செய்ய தாமரைக் கண்ணினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே- கண்ணாலே எங்கள் அபிசந்தியைக் குலையாதே கொள் –-அபிசந்தி -அந்ய பரதை காலாலே எங்கள் சிற்றிலை அழியாதே கொள் -என்கிறார்கள்-

தடத்தவிழ் தாமரைப் பொய்கைத் தாள்கள் எம் காலைக் கதுவ
விடத்தேள் எறிந்தாலே போலே வேதனை யாற்றவும் பட்டோம்
குடத்தை எடுத்து ஏறவிட்டுக் கூத்தாட வல்ல வெங்கோவே
படிற்றை எல்லாம் தவிர்ந்து எங்கள் பட்டைப் பணித்து அருளாயே-–3-6-(529)-பொய்கையில் உண்டான ஜலசர சத்வங்கள் பாதகம் ஆகா நின்றது என்றால் –துணுக்  என்னுமோ பாதி –-தாமரைப் பொய்கையிலே தண்டுகளும் பாதகமாகா நின்றது கிடாய் என்றால்-கூடுமோ என்று பார்த்து அத்தை ஸ்மரிக்கிறார்கள்-பொய்கையில் தாமரைத் தண்டுகள் எங்களை நலியா நின்றது என்ன —ஆகில் கரையிலே போந்து ஏறும் கோள்-என்றான்-கரையிலேயோ தான் தாமரை இன்றிக்கே இருக்கிறது –செக்கமலத்து அலர் போலும் கண் கை கால் செங்கனி வாய் அக்கமலத்து இலை போலும் திருமேனி யடிகளுக்கே -திருவாய்மொழி -9-7-3–தடம் –கரை -பரப்பு /பெருமை -பெரிய பொய்கை -இறே
கண்ணா கண் கை கால் தூய செய்ய மலர்களாய்ச் சோதிச் செவ்வாய் முகிழதா சாயல் சாமத் திரு மேனி தண் பாசடையா- தாமரை நீள் வாசத் தடம் போல் வருவானே -திருவாய்மொழி -8-5-1— தாமரைத் தடாகம் போல் இருப்பவன் அன்றோ அவன் –கீழே இந்த தாமரைப் பொய்கை துன்புறுத்த மேலே அந்த தாமரைப் பொய்கை துன்புறுத்துகிறதே –

தீதில் நல் நெறி நிற்க அல்லாது செய்
நீதி யாரொடும் கூடுவதில்லை யான்
ஆதி ஆயன் அரங்கன் அம் தாமரை
பேதை மா மணவாளன் தன் பித்தனே
– 3-5-(672)-அழகிய தாமரைப் பூவைத் தனக்கு இருப்பிடமாக உடைய ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபர் ஆனவருக்கு பித்தனானேன் நான் ஓரடி இவன் புகுரா நின்றால்-அத்தைக் குவாலாக்கி -அவன் நெஞ்சிலே புண்படும்படி இவன் பண்ணின அபராதத்தை அவன் காணாத படி இருக்கிற புருஷகார பூதை-அப்ரமேயம் ஹி தத்தேஜ-இவளுக்கு வல்லபனாகையாலே வந்த பெருமை உடையவன்-பித்தன் நான் –

களி நிலா எழில் மதி புரைமுகமும் கண்ணனே ! திண் கை மார்வும் திண் தோளும்
தளி மலர் கரும் குழல் பிறை யதுவும் தடம் கொள் தாமரை கண்களும் பொலிந்த
இளமை இன்பத்தை இன்று என் தன் கண்ணால் பருவேற்க்கு இவள் தாய் என நினைந்த
அளவில் பிள்ளைமை இன்பத்தை இழந்த பாவியேன் எனது ஆவி நில்லாதே– 7-4-(711)–ஒரு தாமரைப் பூவே தடாகம் எல்லாம் விழுங்கும் படி அலர்ந்தாப் போலே-திரு மேனி எல்லாம் பரப்பு மாறும் படி அலர்ந்த திருக் கண்களும்-

தண் தாமரை கண்ணனே! கண்ணா ! தவழ்ந்து எழுந்து தளர்ந்த்ததோர் நடையால்
மண்ணில் செம் பொடி ஆடி வந்து என் தன் மார்வில் மன்னிடப் பெற்றிலேன் அந்தோ !
வண்ண செஞ்சிறு கை விரல் அனைத்தும் வாரி வாய் கொண்ட அடிசிலின் மிச்சில்
உண்ண பெற்றிலேன் ஓ! கொடு வினையேன் என்னை என் செய்ய பெற்றது எம்மோயே –7-6-(713)-குளிர்ந்து அழகிதான தாமரைப் பூப் போலே அலர்ந்த திருக்கண்களை யுடைய ஸ்ரீ கிருஷ்ணனே-

முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும் முகிழ் இளம் சிறு தாமரைக் கையும்
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையும் வெண் தயிர் தோய்ந்த செவ் வாயும்
அழுகையும் அஞ்சி நோக்கும் அந் நோக்கும் அணி கொள் செஞ்சிறு வாய் நெளிப்பதுவும்
தொழுகையும் இவை கண்ட வசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே– 7-8-(715)-இளம் தளிர் போலேயும் நிறத்துக்கு -விகாசம் -செவ்விக்கு தாமரைப் பூ போலே இருக்கிற திருக் கைகளும் –

தாமரை மேல் அயன் அவனை படைத்தவனே! தயரதன் தன்
மா முதலாய்! மைதிலி தன் மணவாளா வண்டினங்கள்
காமரங்கள் இசை பாடும் கண புரத்து என் கருமணியே!
ஏமருவும் வெம் சிலை வலவா! ராகவனே! தாலேலோ– 8-4–(722)-(திருநாபிக்) கமலத்திலே-பிரமனை உண்டாக்கினவனே!-

இனித் திரைத்  திவலை மோத வெறியும் தண் பரவை மீதே
தனிக் கிடந்து அரசு செய்யும் தாமரைக் கண்ணன் எம்மான்
கனி இருந்தனைய செவ்வாய்க் கண்ணனைக் கண்ட கண்கள்
பனி யரும்பு திரு மாலோ  என் செய்கேன் பாவியேனே-18-(889)-தாமரைக் கண்ணன்--கையிலே ப்ரஹ்மாஸ்திரம் இருக்க வெல்ல ஒண்ணாத இடம் இல்லை இறே –-அங்கு உள்ளாரை வென்ற பரிகரத்தைக் கொண்டாய்த்து இங்கு உள்ளாரையும் வென்றது-தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலை மகனை -என்னக் கடவது இறே –அவர்களுக்கு போக உபகரணமான இத்தைக் கொண்டு கிடீர் இவர்களுடைய விரோதியைப் போக்குவது –(“அரசு செய்யுந் தாமரைக் கண்ணன் “என்ற சொற்போக்கால் எம்பெருமான் தனது திருக் கண்ணழகால் அனைவரையும் அகப்படுத்திக் கொள்ளுகிறான் என் விளங்கும்.)இப் ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கு அகப்பாட்டார் யார் என்னில் – எம்மான் –
நான் தோற்று என்னை எழுதிக் கொடுத்தேன் –சம்சாரிகளுக்கும் இவ்வருகான என்னைத் தோற்பித்த
கண்களுக்கு இனி வெல்ல ஒண்ணாத நிலம் உண்டோ –

பாயு நீர் அரங்கம் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட
மாயனார் திரு நன் மார்பும் மரகத வுருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும் துவர் இதழ் பவள வாயும்
ஆய சீர் முடியும் தேசும் அடியரோர்க்கு அகலலாமே–20-(891)-பிராட்டியோடு ஹிரண்யாதிகளோடு வாசி அற குளிர நோக்குகிற திருக் கண்களும் –நோக்குத் தூய்மை யாவது – நிர்ஹேதுகமாக கடாஷிக்கை –ஸூஹ்ருதம் சர்வ பூதானாம் -என்கிறபடியே – அனுகூல பிரதி கூல விபாக ரஹீதமாய்த்து சௌஹார்த்தம் இருப்பது –தேவாநாம் தாநவா நாஞ்ச சாமான்ய மதி தைவதம் -என்கிறபடியே
சம்பந்தம் ஒத்ததாய்த்து இருப்பது –இப்படி இருக்க சில பதார்த்தங்களுக்கு கடாஷம் அநர்த்த ஹேது வாகிறது -பிரகிருதி தோஷத்தாலே – சர்வ அனுகூலமான தென்றல் ஆனது ஒரு பதார்த்ததில் வந்தால் சோஷகம் ஆகாது நின்றது இறே –மென்மை குளிர்த்தி நாற்றம் இவற்றுக்கு தாமரை ஒரு போலியாம் இத்தனை -போக்கி அகவாயில் தண்ணளிக்கு த்ர்ஷ்டாந்தம் ஆக மாட்டாதே

தொண்டாம் இனமும் இமையோரும் துணை நூல் மார்பில் அந்தணரும்
அண்டா வெமக்கே யருளாய் என்று அணையும் கோயிலருகெல்லாம்
வந்தார் பொழிலின் பழனத்து வயலினயலே கயல் பாய
தண்டாமரைகள் முக மலர்த்தும் சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-9–(996)–கூத்தாடுமவர்கள் அடி இட்டால் ததஸ்த்ரராய் -சதஸ்ஸிலே- இருப்பார் தம் முக விகாசத்தாலே கொண்டாடுமா போலே
தாமரைகள் முகம் மலர்த்தும் ஆயிற்று –

திருமடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ தீ வினைகள் போயகல அடியவர்கட்கு என்றும்
அருள் நடந்து இவ் ஏழ் உலகத்தவர் பணிய வானோர் அமர்ந்து ஏத்த இருந்த இடம் பெரும் புகழ் வேதியர் வாழ்
தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர் தாமரைகள் தடங்கள் தொறும் இடங்கள் தொறும் திகழ
அருவிடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-10-1-(1238)–இடங்கள் தொறும் திகழ அருவிடங்கள் பொழில் தழுவி எழில் திகழும்- மலர்கள் மிகு கைதைகள் தொடக்கமான வற்றை உடைத்தாய் இருக்கிற திரு நாங்கூர் என்னுதல்-வாழ் தரும் இடங்களிலே உண்டாய் அவர்களுக்கு உறுப்பாய்-சமாராதனத்துக்கு ஸாமக்ரியையாக – இருக்கிற மலர்கள் மிகு கைதைகள் தொடக்கமான வற்றை உடைத்தாய் இருக்கிற திரு நாங்கூர் என்னுதல்-பூக்கள் மிக்கு இருந்துள்ள தாழைகள்-செங்கழுநீர் -தாமரைகள் – இவை பரந்த பொய்கைகள் தோறும்
அவகாசங்கள் தோறும் விளங்க இங்கு இடம் இல்லாமையாலே சோலையானது ஆகாசத்தில் பரப்படைய இடம் அடைத்துக் கொண்டு ஓங்கி அழகு விளங்கா நின்றுள்ள அருமிடம் என்று ஸூஷ்மதையைப் பற்ற ஆகாசத்தை சொல்லுகிறது

கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த கோவலன் எம்பிரான்
சங்கு தங்கு தடம் கடல் துயில் கொண்ட தாமரைக் கண்ணினன்
பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணர் தம்மிடம் பொங்கு நீர்ச்
செங்கயல் திளைக்கும் சுனைத் திரு வேம்கடம் அடை நெஞ்சே–1-8-1-(1018)-இவ் வதாரத்துக்கு அடியாக திருப் பாற் கடலிலே வந்து சந்நிதி பண்ணின படியைச் சொல்லுகிறது –-சங்கு என்று பேர் பெற்றவை அடைய சேரா நிற்பதாய் கண் வளர்ந்து அருளுகைக்கு ஈடான பரப்பை உடைத்தான திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினவன் –

நின்ற மா மருது இற்று வீழ நடந்த நின்மலன் நேமியான்
என்றும் வானவர் கை தொழும் இணைத் தாமரை யடி எம்பிரான்
கன்றி மாரி பொழிந்திடக் கடிதாநிரைக் கிடர் நீக்குவான்
சென்று குன்றம் எடுத்தவன் திருவேம்கடம் அடை நெஞ்சே -1-8-3-(1020)-நித்ய ஸூரிகள் ஒரு நாடாக பரிய இருக்குமவன் கிடீர் தனியே புகுந்து அகப்பட்டான் –

கூடி யாடி யுரைத்ததே யுரைத்தாய் என்னெஞ்சம் என்பாய் துணிந்து கேள்
பாடி யாடிப் பலரும் பணிந்து ஏத்திக் காண்கிலா
ஆடு தாமரை யோனும் ஈசனும் அமரர் கோனும் நின்றேதும் வேங்கடத்து
ஆடு கூத்தனுக்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-9-(1056)-1-ஆடு –என்று பெருமையாய் -அலர்ந்த தாமரை என்னுதல் –-அன்றிக்கே-2-ஆடுகை -நடையாடுகையாய்-அதிலே வர்த்திக்கிற -என்னுதல் –அன்றிக்கே –3-ஆடுகை உண்டாகையாய் –திரு நாபீ கமலத்தை உத்பத்தி ஸ்தானமாக உடையவன் -என்னுதல்-அன்றிக்கே-4-ஆடு –வெற்றியாய் – வெற்றியை உடையவன் -என்னுதல்-

பாலனாகி ஞாலமேழும் உண்டு பண்டாலிலை மேல்
சால நாளும் பள்ளி கொள்ளும் தாமரைக் கண்ணன் எண்ணில்
நீல மார் வண்டுண்டு வாழும் நெய்தலந்தண் கழனி
ஏல நாறும் பைம் புறவில் எவ்வுள் கிடந்தானே—2-2-5-(1062)-தனக்கு ஒரு பரிவர் இல்லாத
பிரளய காலத்திலே-ஒரு ஆலந்தளிரிலே – பிள்ளை அகாலத்திலே உறங்கா நின்றான்
என் செய்தான் என்று எழுப்புகைக்கு ஒரு யசோதாதிகளும் இல்லையே –

பட நாகத்தணைக் கிடந்து அன்று அவுணர் கோவை பட வெகுண்டு மருதிடை போய்ப் பழன வேலி
தடமார்ந்த கடல் மல்லை  தல சயனத்துத் தாமரைக் கண் துயில் அமர்ந்த தலைவர் தம்மை
கடமாரும் கருங்களிறு வல்லான் வெல் போர்க் கலி கன்றி யொலி செய்த வின்பப் பாடல்
திடமாக விவை யைந்தும் ஐந்தும் வல்லார் தீவினையை முதலறிய வல்லார் தாமே –2-5-10–(1097)-நீர் நிலங்களால் சூழப் பட்டு அழகிய தடாகங்கள் உடைத்தான திருக் கடல் மல்லை தல சயனத்திலே –யஞ்ஞே சோயஞ்ஞ புருஷ –என்கிறபடியே சர்வாதிகனான புண்டரீகாஷன் என்று தோற்றும் படி
கண் வளர்ந்து அருளினவனை ஆயிற்று கவி பாடிற்று – (ஸ்ரீ விஷ்ணு தர்மம் யஜ்ஜ ஈசன் யஜ்ஜ பிரபு புண்டரீ காஷன் விஷ்ணு மோக்ஷ ப்ரதன் )

முழுசி வண்டாடிய தண் துழாயின் மொய்ம் மலர்க் கண்ணியும் மேனி யஞ்சாந்து
இழுசிய கோலம் இருந்தவாறும் எங்கனம் சொல்லுகேன் ஓவி நல்லார்
எழுதிய தாமரை யன்ன கண்ணும் ஏந்து எழில் ஆகமும் தோளும் வாயும்
அழகியதாம் இவரார் கொல் என்ன அட்ட புயகரத்தேன் என்றாரே–2-8-7-(1124)–சித்ரம் எழுதுகையில் குசலராய் இருக்குமவர்கள் எழுதின தாமரைப் பூ போலே இருக்கிற கண்களும்-அதாகிறது-கண்ட பின்பு இமையாதே இருந்தபடி – (பரகால நாயகியைக் கண்டபின்பு இமைக்க மாட்டானே )

கார் மன்னு நீள் விசும்பும் கடலும் சுடரும் நிலனும் மலையும் தன் உந்தித்
தார் மன்னு தாமரைக் கண்ணனிடம் தட மா மதிள் சூழ்ந்து அழகாய கச்சி
தேர் மன்னு தென்னவனை முனையில் செருவில் திரள் வாட்டிய திண் சிலையோன்
பார் மன்னு பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே–2-9-2-(1129)-இவை அடைய திரு நாபீ கமலத்திலே உண்டாம்படி இருக்கிற புண்டரீகாஷனுக்கு வாச்ஸ்தானம் –

கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை யொவ்வா
சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது
ஒட்டுரைத்து இவ்வுலகு உன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி –3-1-2-(1149)-சொல்லில் -கட்டுரை என்று முழுச் சொல்லாய் -சொல்லில் என்றபடி -நெஞ்சாலும் பரிச்சேதிக்க ஒண்ணாதாய் இருக்க பாசுரம் இட்டுச் சொல்லப் போகாது-தாமரை –தாமரை ஜாதியாக ஓர் அவயவத்துக்காக ஒப்பாக மாட்டாது என்கை –
நின் கண் பாதம் கை யொவ்வா-முதல் உறவு பண்ணும் கண் -அதுக்கு தோற்று ஜிதந்தே என்று விழும் திருவடிகள் -அவ் விழுக் காட்டுக்கு தோற்று அவன் தான் ஜிதந்தே என்று அணைக்கும் கை
நின் கண் -என்கையாலே –உனது முகச் சோதி -என்றத்தை நினைக்கிறது –-பாதம் -என்றது அடிச் சோதி என்றத்தை நினைக்கிறது-கை -என்று நடுவு தாம் அனுபவித்த அழகுக்கு உப லக்ஷணம்-சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது-பொன்னை உபமானமாக போராது என்கைக்காக சிக்ஷிக்கிறார் -காய்ச்சி உரைத்த வி லக்ஷணமான நன் பொன்-ருக்மஅபாம் -என்னக் கடவது இறே
உன் திருமேனி ஒளி ஒவ்வாது-பரஞ்சோதி ரூப சம்பத்ய–ஏஷ ஸர்வஸ்ய பூதஸ்து பரிஷ் வங்கோ ஹா நூ மத -என்று தான் மதித்து இருக்கும் வடிவு

வையம் ஏழும் உண்டு ஆலிலை வைகிய மாயவன் அடியவர்க்கு
மெய்யனாகிய தெய்வ நாயகனிடம் மெய் தகு வரைச் சாரல்
மொய்கொள் மாதவி செண்பகம் முயங்கிய முல்லை யம் கொடி யாட
செய்ய தாமரைச் செழும் பணை திகழ் தரு திருவயிந்திரபுரமே–3-1-3-(1150)–சிவந்த தாமரையை உடைத்தான நீர் நிலங்களிலே உஜ்ஜ்வலமாக நின்றுள்ள திருவயிந்திரபுரமே –அகடிகடதங்களை கடிப்பித்தும் அவன் ஆஸ்ரித ரஷணம் பண்ணுமா போலே விருத்தமான தேசத்தில் அவை இரண்டையும் சம காலத்தில் கிட்டி அனுபவிக்கலாம் தேசம் ஆயிற்று-குறிஞ்சி நிலமான மலை சாரலிலே முல்லை நிலமும் மருத நிலமும் இருந்தது போலே-(மெய்த்து திருமேனி மார்த்வம்-முல்லை நிலம் -நிர்ஜலப் பிரதேசம் -முல்லைக்கொடி ஆட-செழும் பணை -நீர் நிலத்தில் தாமரை மலர -மருத நிலம்-மலைச்சாரல் குறிஞ்சி நிலம்-இப்படி அனைத்தும் சேர இருக்கும் தேசம் )

வளைக்கை நெடும் கண் மடவார் ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப
தளைத்தவிழ் தாமரைப் பொய்கைத் தண் தடம் புக்கு அண்டர் காண
முளைத்த எயிற்று அழல் நாகத்து உச்சியில் நின்று அது வாட
திளைத்தமர் செய்து வருவான் சித்திர கூடததுள்ளானே–3-3-4-(1171)-கட்டவிழ்ந்து அலர்ந்த தாமரைப் பொய்கையினுடைய ஸ்ரமஹரமான கரையிலே சென்று இடையர் காண முளைத்த எயிற்றை உடைய பாம்பின் உடைய உச்சியிலே புக்கு நின்று அது வாடும்படி கூட விளையாடி அமர் செய்து வருமவன்-

உலவு திரைக் கடல் பள்ளி கொண்டு வந்து உன்னடியேன் மனம் புகுந்த அப்
புலவ புண்ணியனே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்
நிலவு மலர்ப் புன்னை நாழல் நீழல் தண் தாமரை மலரின் மிசை மலி
அலவன் கண் படுக்கும் அணியாலி யம்மானே–3-5-7-(1194)–நித்தியமான மலரை உடைத்தாய் இருக்கிற புன்னை நாழல் இவற்றின் உடைய நிழலிலே பரந்த தாமரைகளின் மேலே அலவன் கண் படுக்கும் –
அப்பரப்புக்கு எல்லாம் போரும்படி பெரிய வடிவை உடைய ஆண் நண்டானது மற்று ஒரு நியமத்தை அறியாதே படுக்கை வாய்ப்பாலே கிடந்தது உறங்கா நிற்கும் ஆயிற்று –வயலாலி மணாளன் உடைய வியாபாரத்தோடு அங்கு உண்டான திர்யக்குகள் உடைய வியாபாரத்தோடு வாசி அற்று இருக்கிறதாயிற்று இவர்க்கு அந்நிலத்தில் உள்ள ஆசையாலே –

இழையோடு கொங்கைத் தலை நஞ்சம் உண்டிட்டு இளங்கன்று கொண்டு விளங்காய் எறிந்து
தழை வாடவன் தாள் குருந்தம் ஒசித்துத் தடந்தாமரைப் பொய்கை புக்கான் இடந்தான்
குழை யாட வல்லிக் குலமாட மாடே குயில் கூவ நீடு கொடி மாடம் மல்கு
மழை யாடு சோலை மயிலாலு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-5-(1222)-தனக்கும் பெண்களுக்கும் ஜலக் கிரீடை பண்ணுகைக்கு யோக்யமான இடத்தை-காளியன் புக்கு தூஷித்து கிடக்க அங்கே போய் புக்கான் ஆயிற்று-பெண்கள் நீராடப் புக்க இடத்தையும் உடைத்தாய்
தாமரையையும் உடைய பொய்கையிலே புக்கு அவர்கள் துகிலை வாங்கின படி ஆகவுமாம் –

தளைக் கட்டவிழ் தாமரை வைகு பொய்கைத் தடம் புக்கு அடங்கா விடங்கால் அரவம்
இளைக்கத் திளைத்திட்டு அதனுச்சி தன் மேல் அடி வைத்த அம்மானிடம் மா மதியம்
திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில் செழு முத்து வெண் நெற்கு எனச் சென்று முன்றில்
வளைக்கை நுளைப் பாவையர் மாறு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-7-(1224)-தளைத் தாமரையும் -கட்டவிழ் தாமரையும் –-மொட்டுத் தாமரையும் அலர்ந்த தாமரையும்-தங்குகிற பொய்கைக் கரையிலே புக்கு -என்னுதல் பொய்கையின் உள்ளே புக்கு என்னுதல் –

சங்கு மலி தண்டு முதல் சக்கரம் முன் ஏந்தும் தாமரைக் கண் நெடிய பிரான் தான் அமரும் கோயில்
வங்கமலி கடலுலகில் மலி வெய்து நாங்கூர் வைகுந்த விண்ணகர் மேல் வண்டறையும் பொழில் சூழ்
மங்கையர் தம் தலைவன் மருவலர் தம் உடல் துணிய வாள் வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன
சங்க மலி தமிழ் மாலை பத்து இவை வல்லார்கள் தரணியோடும் விசும்பாளும் தன்மை பெறுவாரே–3-9-10-(1237) ஆஸ்ரித அர்த்தமாக ஸ்ரீ பஞ்ச ஆயுதங்களையும் தரித்துக் கொண்டு இருக்கிற புண்டரீ காஷனான சர்வேஸ்வரன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம்

கவள யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் காமரு சீர்க்
குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும்
தவள மாட நீடு நாங்கைத் தாமரையாள்  கேள்வன் என்றும்
பவள வாயாள் என் மடந்தை   பார்த்தன் பள்ளி பாடுவாளே –4-8-1-(1318)-மாடங்கள் எப்பொழுதும் ஓக்க சாந்து பூசியே-தளம், வெண்மை ஓக்கமான மாடங்கள் நித்ய ஸந்நிஹிதனான ஸ்ரீ யபதி

கற்றா மறித்துக் காளியன் தன் சென்னி நடுங்க நடம் பயின்ற
பொற்றாமரையாள் தன் கேள்வன் புள்ளம் பூதங்குடி தன் மேல்
கற்றார் பரவும் மங்கையர் கோன் காரார் புயல் கைக் கலிகன்றி
சொல் தான் ஈரைந்து இவை பாடச் சோரா நில்லா துயர் தானே –5-1-10-(1357)-தன்னைப் பாராதே யாய்த்து அழிவுக்கு இட்டது ஸ்ரீ யபதியான தன் சௌகுமார்யத்துக்குச் சேராது இறே-இஸ் சாஹசம் –

ஆறினோடு ஒரு நான்குடை நெடு முடி யரக்கன் தன் சிரம் எல்லாம்
வேறு வேறு உக வில்லது வளைத்தவனே எனக்கு அருள் புரியே
மாறில் சோதிய மரகதப் பாசடைத் தாமரை மலர் வார்ந்த
தேறல் மாந்தி வண்டு இன்னிசை முரல்
திரு வெள்ளறை நின்றானே –5-3-7-(1374)-ஒப்பிலாத புகரை உடைய வாய் மரகதம் போலே இருந்துள்ள பச்சை இலையை உடைத்தான தாமரை மலரில் நின்றும் –ஒழுகா நின்றுள்ள தேனைப் பருகி வண்டுகள் ஆனவை இனிய இசையைப் பாடா நின்றுள்ள தேசம் –

கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம்
முடியும் வண்ணமோர் முழு வலி முதலை பற்ற மற்றது நின் சரண் நினைப்பக்
கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக் கொண்ட சீற்றம் ஓன்று உண்டு உளது அறிந்து உன்
அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத்து அம்மானே–5-8-3-(1420)-பொய்கை வைகு தாமரை -என்ன அமையும் இறே இவன் அதிகரித்த கார்யத்துக்கு பொழிலையும்  பொய்கையும் வர்ணனை செய்வதற்கு கருத்து என் என்னில்-அநாவ்ருஷ்டியாலே ஜகத் எல்லாம் நோவு பட்டு ஓர் இடத்திலும் ஒரு புஷ்பமும் இன்றிக்கே தட்டித் திரியா நிற்க இவனுக்கு முற்பட கண்ணிலே படுமது இறே சோலை-அந்த சோலை தான் தளிரும் முறியும் செருந்துமாய் நிற்கையாலே-கீழே ஒரு பொய்கை உண்டு என்று தோற்றிற்று-பரிமள பிரசுரமாய் பூவை உடைத்தான பொழில்-அச் சோலையை நோக்கிப் போக -என்று புக்கவாறே பரிமளம் வந்து பிராண விஷயமாய் அங்கே புஷ்பம் உண்டு என்று தோற்றிற்று    –ஆகர்ஷகமான பொய்கை-ஆகர்ஷகமாக இருக்கை யாவது-அகாதமாய்துஷ்ட சத்வங்களும் உண்டாய் இருக்குமோ -என்று விவேகியாதே மேல் விழும்படியாய் இருக்கை –அநாவ்ருஷ்டியாலே தாமரைப் பூக்கள் எங்கும் ஒக்க-இவ்வாதரத்தோடே புக்கு தாமரைப் பூவை பறித்த அளவிலே ஓர் ஆனைக் கால் காண வல்லோமே -என்று பார்த்துக் கொடு கிடக்கிற முதலை ஆனைக் கால் பற்றிற்று

போதார் தாமரையாள் புலவிக் குல வானவர் தம்
கோதா கோதில் செங்கோல் குடை மன்னரிடை நடந்த
தூதா தூ மொழியாய் சுடர் போல் என் மனத்து இருந்த
வேதா நின்னடைந்தேன் திரு விண்ணகரம் மேயவனே —6-2-9-(1466)-காலத்திலே அலர்ந்த செவ்விப் பூவை இருப்பிடமாக உடையவள் -என்னுதல்-அன்றிக்கே –-செவ்விப் பூவை உடைத்தான தாமரையை வாசஸ் ஸ்தானமாக உடையவள் -என்னுதல் –-போது என்று காலம் ஆதல் புஷ்பம் சொல்லிற்று ஆதல்-
(போது எல்லாம் போது கொண்டு உன் பொன் அடி புனைய மாட்டேன் )புலவி–ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு திரு நாமம் ஆகவுமாம் –-அன்றிக்கே-போதார் தாமரையாள் புலவி இடத்தில் குல வானவர் தம் கோதா -என்றுமாம்

விடந்தான் உடைய வரவம் வெருவச் செருவில் முன நாள் முன்
தடந்தாமரை நீர்ப் பொய்கை புக்கு மிக்க தாடாளன்
இடந்தான் வையம் கேழல் ஆகி யுலகை ஈரடியால்
நடந்தான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே  –6-10-2-(1539)–விஷத்தை உடைய காளியன் அஞ்சும்படியாக யுத்தத்தில் முன்பு ஒரு நாள் தன்னேராயிரம் பிள்ளைகளுக்கு முன்னே பரப்பு மாறாப் பூத்த தாமரைகளையும் நினைத்த வகைகள் எல்லாம் விநியோகம் கொள்ளலாம் படியான ஜல சம்ருத்தியையும் உடைய பொய்கையிலே போய்ப் புக்கு

தூயாய் சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம்
தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா
ஆயா அலை நீர் உலகு ஏழும் முன்னுண்ட
வாயா உன்னை எங்கனம் நான் மறக்கேனோ  –7-1-9(1556)சகல தாபங்களும் ஆறும்படி ஸீதமான கிரணங்களை உடைய பூர்ண சந்தரனைப் போலே -சர்வ பிராணிகளையும் தாயாய் கொண்டு அளிக்கின்ற குளிர்ந்த திருக் கண்களை உடையவனே -என்று திருக் கண்களுக்கு விசேஷணம் ஆதல் –)

உரங்களால் இயன்ற மன்னர் மாளப் பாரதத்து ஒரு தேரை ஐவர்க்காய்ச் சென்று
இரங்கி யூர்ந்தவர்க்கு இன்னருள் செய்யும் எம்பிரானை வம்பார் புனல் காவிரி
அரங்கமாளி என்னாளி விண்ணாளி ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று
சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே –7-3-4(1571)-கடல் சூழ்ந்த அரணை உடைத்தாய் இருக்கிற இலங்கை ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படியாக எடுத்து விட்டு  அம்புகளை நடத்தின புண்டரீ காஷனான சர்வேஸ்வரனுக்கு அல்லது -ஆஸ்ரிதர்க்காக சாரத்தியம் பண்ணியும் மார்விலே அம்பு ஏற்றும் உபகரிக்கும் அவனுக்கு அல்லது வேறு சிலர் விஷயமாக என்னுடைய ஹிருதயத்தில் தாழ்ச்சி பிறவாது –

ஆங்கு வென்னரகத்து அழுந்தும் போது அஞ்சேல்  என்று அடியேனை அங்கே வந்து
தாங்கு தாமரை யன்ன பொன்னாரடி எம்பிரானை யும்பர்க்கு அணியாய் நின்ற
வேங்கடத் தரியை பரி கீறியை வெண்ணெய் உண்டு  உரலினிடை ஆப் புண்ட
தீங் கரும்பினைத் தேனை நன் பாலினை யன்றி என் மனம் சிந்தை செய்யாதே –7-3-5-(1572)ரஷிக்குமது செவ்வித் தாமரைப் பூ போலே ஸ்ப்ருஹணீயமான திருவடிகளை கொண்டாய்த்து – விகாசம் செவ்வி குளிர்த்தி நாற்றம் -இவற்றுக்கு தாமரையை ஒரு போலியாகச் சொல்லலாம் படியாய் அவ்வளவு அல்லாத படி அதி ஸூகுமாரமாய் -ஸ்ப்ருஹணீயமான திருவடிகளை-உடைய என் ஆயனே –

ஏடிலங்கு தாமரை போல் செவ்வாய் முறுவல் செய்தருளி
மாடு வந்து என் மனம் புகுந்து நின்றார் நின்ற ஊர் போலும்
நீடு மாடத் தனிச் சூலம் போழ்கக் கொண்டல் துளி தூவ
ஆடல் அரவத் தார்ப் போவா அணியார் வீதி அழுந்தூரே–7-5-6-(1593)இதழ் விளங்கா நின்றுள்ள தாமரை போலே ஸ்மிதம் பண்ணி அருளி – என்னைப் பெறுகையால் வந்த அலாப்ய லாபம் தன்னது என்னும் இடம்  தோற்ற ஸ்மிதம் பண்ணி – அத்தாலே தான் செய்தது விலக்காத படியான தசையை எனக்கு பிறப்பித்து என் அருகே வந்து நின்று அது சாத்மித்தவாறே ஹிருதயத்திலே வந்து புகுந்து இனி இவருக்கு ஒரு போக்கு இல்லை என்று தோற்ற நிற்கிறவர் கண்ணுக்கு இலக்காகும்படி வந்து நிற்கிற தேசம் போலும் –

நந்தா நெடு நரகத்திடை நணுகா வகை நாளும்
எந்தாய் என இமையோர் தொழுது ஏத்தும் இடம் எறிநீர்ச்
செந்தாமரை மலரும் சிறு புலியூர்ச் சலசயனத்து
அந்தாமரை யடியாய் உனதடியேற்கு அருள் புரியே
—7-9-5-(1632)மிக்க ஜலத்தை உடைத்தான பொய்கைகளிலே அந்த நீர்ச் செறிவாலே தாமரைகள் போய் அலறுகிற  சிறு புலியூர்ச் சலசயனத்திலே –(சேஷ புஷ்கரணி -அநந்த சரஸ் இங்கு )செவ்விப் பூ போலே இருக்கிற திருவடிகளை உடையவனே –அல்லாதார் செய்தபடி செய்ய அநந்ய கதியான என் பக்கலிலே உன்னுடைய கண் அழிவற்ற கிருபையைப் பண்ணி அருள வேணும் –

அடித் தலமும் தாமரையே அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால்
முடித் தலமும் பொற் பூணும்  என் நெஞ்சத்து உள்ளகலாது என்கின்றாளால்
வடித் தடங் கண் மலரவளோ வரையாகத் துள்ளிருப்பாள்  என்கின்றாளால்
கடிக் கமலம் கள்ளுகுக்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ —8-1-5-(1652)–அடித் தலமும் தாமரையே –நம்முடைய உத்தேச்யமும் நிரதிசய போக்யமாய் இரா நின்றது-அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால் –அத் திருவடிகளிலே தோற்று விழுந்தவர்களை எடுத்து அணைக்கும் கைகளும் தாமரை போலே இரா நின்றது -என்னா நின்றாள் –கடிக்கமலம் கள்ளுகுக்கும் – பரிமள பிரசுரமாய் இருந்துள்ள புஷ்பமானது மதுவை பிரவஹியா நிற்கும் ஆயிற்று –மது பானம் பண்ண விருந்த வண்டுகளுக்கு பிரயோஜனம் இல்லாத படியாகவும்-ஆஸ்ரயம் பொறாத படியாலும்-மதுவை உகா நிற்கும் –அவ் ஊரில் தாமரையில் படிந்த வண்டுகளால் அதில் மது வற்றப் பருகப் போகாது -என்கை –

வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலி யுருவில்
மீனாய் வந்து வியந்துய்யக் கொண்ட தண் தாமரைக் கண்ணன்
ஆனா வுருவிலானா யவனை யம்மா விளை வயலுள்
கானார் புறவில் கண்ண புரத்தடியேன் கண்டு கொண்டேனே —8-8-1-(1718)-வியந்துய்யக் கொண்ட –
நாம் ரஷகமாக விட்ட கடல் தானே பாதகம் ஆவதே-இருந்த படி என் விஸ்மயப்பட்டு -என்னுதல் –
அன்றிக்கே-வேறுபட்டு ஜகத் காரண பூதனான தான் ப்ரஹ்மாதி அளவிலே தன்னை அமைய விட்டால்
தான் நின்ற நிலைக்கு இது சேராதாய் இருக்கும் இறே –(இணைவனாம் -ஸஜாதீயனாக -ஸூலபனாய்
சர்வ பிரகாரியாய் சர்வ சரீரீயாய் இருந்தும் எந்நின்ற யோனியுமாய் பிறந்து ) அங்கனும் அன்றிக்கே –
விஜா தீயமான வடிவை உடையவன் ஆகையாலே வந்த நெடு வாசியைச் சொல்லிற்று ஆகவுமாம் –மத்ஸ்ய கமல லோசன -என்னக் கடவது இறே –

கண்ணார் கண்ண புரம் கடிகை கடி கமழும்
தண்ணார் தாமரை சூழ் தலைச் சங்க மேல் திசையுள்
விண்ணோர் நாண் மதியை  விரிகின்ற வெஞ்சுடரை
கண்ணாரக் கண்டு கொண்டு களிக்கின்றது இங்கு என்று கொலோ —8-9-9-(1736)-பரிமளத்தை புறப்படவிடா நிற்பதாய் ஸ்ரமஹரமான தாமரைகளாலே சூழப் பட்ட தலைச் சங்க காட்டில் மேல் பார்ஸ்வத்தில் –

வேயிரும்   சோலை விலங்கல் சூழ்ந்த மெய்ய மணாளர் இவ் வையம் எல்லாம்
தாயின நாயகராவர் தோழீ தாமரைக் கண்கள் இருந்தவாறு

சேயிரும் குன்றம் திகழ்ந்தது ஒப்பச் செவ்வியவாகி மலர்ந்த சோதி
ஆயிரம் தோளோடு  இலங்கு பூணும் அச்சோ ஒருவர் அழகிய வா —9-2-3-(1760)-பூமிப் பரப்பை அடைய அநாயாசேன அளந்து கொண்ட ஸ்வாமிகள் என்னலாய் இரா நின்றார்-நீர்மை பார்த்த வாறே –புண்டரீகஷனாய் இரா நின்றார் என்று சொல்லலாய் இரா நின்றார் –

வெஞ்சின வேழம் மருப்பொசித்த வேந்தர் கொல் ஏந்திழையார் மனத்தை
தஞ்சுடையாளர் கொல் யான் அறியேன்  தாமரைக் கண்கள் இருந்தவாறு
கஞ்சனை யஞ்ச முன் கால் விசித்த காளையராவர் கண்டார் வணங்கும்
அஞ்சன மா மலையேயும்  ஒப்பர் அச்சோ ஒருவர் அழகிய வா –9-2-6-(1763)தாமரைக் கண்கள் இருந்தவாறு –-அது தன்னை நோக்காலே தெரிவியா நின்றார் –-நானும் என்னுடைமையும் நீ இட்ட வழக்கு அன்றோ என்றாப் போலே இரா நின்றது -நோக்கிப் பார்த்த வாறே – (நயன பாஷை -கண்ணால் பேசியது இது )

பிணியவிழ் தாமரை மொட்டலர்த்தும் பேரருளாளர் கொல் யான் அறியேன்
பணியும் என்னெஞ்சம் இது என் கொல் தோழி  பண்டிவர் தம்மையும் கண்டறியோம்
அணி கெழு தாமரை யன்ன கண்ணும் அங்கையும் பங்கயம் மேனி வானத்து
அணி கெழு மா முகிலேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகிய வா —9-2-7-(1764)-ஆதித்யன் தன்னுடைய உஷ்ண கிரணங்களாலேதாமரைகளில் உண்டான பூவை அலர்த்தக் கடவனாய் இருக்கும் இறே
அங்கன் அன்றிக்கே-ஷீண  பாபரானவர்கள் உடைய ஹிருதய கமலத்துக்கு விகாசத்தை பண்ணி
பண்ணிக் கொடுக்கும் பெரிய கருணை உடையராய் இரா நின்றார் –திரளச் செறியப் பூத்த தாமரை என்னலாய் இருக்கிறது –திருக் கண்களும் அணைக்கக் கணிசிக்கிற கைகளும் –(பக்தர்களாகிய தாமரையை அலர்த்தும் ஸூர்யனைப் போல் மட்டும் இல்லாமல் பக்தனான ஸூர்யனைக் கண்டு அலரும் தாமரைக் கண்கள் அன்றோ இவையும் )

எண்டிசையும் எறி நீர்க் கடலும் ஏழுலகும் உடனே விழுங்கி
மண்டியோர்  ஆலிலைப் பள்ளி கொள்ளும் ஆயர் கொல் மாயம் அறிய மாட்டேன்
கொண்டல் நன்மால் வரையேயும் ஒப்பர் கொங்கலர் தாமரைக் கண்ணும் வாயும்
அண்டத்தமரர் பணிய நின்றார் அச்சோ ஒருவர் அழகிய வா
—-9-2-9-(1766)–பரிமளத்தை புறப்பட விடா நின்றுள்ள தாமரை போலே இரா நின்றது திருக் கண்களும் திரு அதரமும் –மேன்மையைப் பார்த்த வாறே நித்ய ஸூரிகளும் வந்து ஆஸ்ரயிக்கும் படி இரா நின்றார்-மேன்மையை உடையார் கிட்டுகிற விஷயம்  என்று நமக்கு கை வாங்கலாய் இருக்கிறது இல்லை வடிவு அழகைப் பார்த்தவாறே –

இலங்கு முத்தும் பவளக் கொழுந்தும் எழில் தாமரைப்
புலங்கள் முற்றும் பொழில் சூழ்ந்து அழகிய புல்லாணி மேல்

கலங்கல் இல்லாப் புகழான் கலியன் ஒலி மாலை
வலம் கொள் தொண்டர்க்கு இடமாவது பாடில் வைகுந்தமே –9-3-10-(1777)-இந்த தேச வை லஷண்யம் ஆயிற்று இவர் தம்மை இங்கன் கவி பாடுவித்தது –-உஜ்ஜ்வலமாகா நின்றுள்ள முத்தும்-அழகிய பவளக் கொழுந்தும் தன் பரப்பு மாறச் செவ்வி பெற அலர்ந்த தாமரைப் பொய்கைகளையும் உடைத்தான
சோலைகளாலே சூழப் பட்ட திருப் புல்லாணி மேலே யாயிற்று கவி பாடிற்று –

தாம் மோர் உருட்டித் தயிர் நெய் விழுங்கிட்டுத்
தாமோ தவழ்வர் என்று ஆய்ச்சியர் தாம்பினால்
தாம் மோதரக் கையால்  ஆர்க்கத் தழும்பு இருந்த
தாமோதரா கொட்டாய் சப்பாணி தாமரைக் கண்ணனே சப்பாணி —10-5-3-(1890)-உடம்பிலே தழும்பு கிடைக்கையாலே-தாமோதரன் என்னும் திரு நாமத்தை உடையவனே –-எனக்கு கட்டலாம்படி பவ்யனான நீ இத்தையும் செய்யப் பாராய் –

தூங்கார் பிறவிக்கள் இன்னம் புகப் பெய்து
வாங்காய் என்று சிந்தித்து நான் அதற்கு அஞ்சிப்
பாம்போடு ஒரு கூரையிலே  பயின்றாப் போலே
தாங்காது உள்ளம் தள்ளும் என் தாமரைக் கண்ணா -11-8-3-(2024)தரியாதே ஹிருதயமானாது தடுமாறா நின்றது –அதற்கு நான் செய்ய வேண்டுவது என் என்ன –-என் தாமரைக் கண்ணா –-ஆஜகாம -என்று இலங்கையில் பொருந்தாதே போனவன் தானே-பெருமாளாதானவாறே–விபீஷண விதேயம் ஹி -என்னலாம் படி அங்கே பொருந்தினான் இறே –அப்படியே நீயே உன் திருக் கண்களால் நோக்கப் பெறில் நான் இது தன்னிலும் இருக்க வல்லேன் –ஸ்வம் சம்பந்தத்தாலே பார்த்த அன்று இறே  இவ்விடம் த்யாஜ்யம் ஆவது-அவன் சம்பந்தத்தை இட்டு பார்த்த போது இது தானே உத்தேச்யமாய் இருக்கும் இறே –இதில் அரை ஷணம் பொருந்தாத படியாய் இருக்கிற இவர் பாசுரத்துக்கும்-இது ஒழியச் செல்லாத படியாய் இருக்கிற நம் பாசுரத்துக்கும் வாசி அறியாதான் ஒருவன்
சரண்யனாகப் பெறில் நமக்கு அப் பேறு பெறலாவது-என்று அருளிச் செய்த தாமே-அநந்தரம் – மித்ர பாவேன சம்ப்ராப்தம் -என்கிறபடியே இத் தலையில் உள்ளது போட்கன் ஆனாலும் நான் அவனை விடேன் -என்று அருளிச் செய்த படியால் நமக்குப் பெறுகைக்கு தட்டில்லை -என்று அருளிச் செய்து அருளினார் நஞ்சீயர் –இது மெய்யாதல் -இல்லை யாகில்-பரிஹாரம் இன்றிக்கே போதல் -செய்யும் அத்தனை-இது பொய்யாகிலும் நமக்கு அஞ்ச வேண்டா –-இத்தால்  பொய்யாகாது என்ற படி –-இது பொய்யாகில்-நரகாத்ய அனுபவங்களை  சொல்லுகிறவையோ மெய்யாகப் புகுகிறது  –

நந்தா நரகத்து அழுந்தா வகை நாளும்
எந்தாய் தொண்டர் ஆனவருக்கு இன்னருள் செய்வாய்
சந்தோகா தலைவனே தாமரைக் கண்ணா
அந்தோ அடியேற்கு அருளாய் யுன்னருளே —11-8-9-(2030)-தலைமை பெற்று உபாஸ்யன் ஆனவனுக்கு லஷணம் என் என்ன –தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீக மேவ மஷிணீ-என்று சொல்லிற்று இறே –

முற்றாரா வன முலையாள் பாவை மாயன் மொய்யகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும்
அற்றாள் தன் நிறைவு இழந்தாள் ஆவிக்கின்றாள் அணி யரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும்
பெற்றேன் வாய் சொல் இறையும் பேசக் கேளாள் பேர் பாடித் தண் குடந்தை நகரும் பாடிப்
பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் பொருவற்றாள் என் மகள் உம் பொன்னும் அஃதே -19-பொற்றாமரைக் கயம் என்கிற விசேஷணங்களால் அனுபாவ்ய விஷய ஸ்வபாவத்தை சொல்லுகிறது –மகள் -அணி அரங்கம் ஆடுதுமோ -என்று ஊரைச் சொன்னாள் – தான் –பொற்றாமரைக் கயம் -என்று பெரிய பெருமாளை சொல்லுகிறாள் –தயரதன் பெற்ற மரகத மணித்தடம் -என்றும்-வாசத் தடம் போலே வருவானே -என்றும் தடாகமாக சொல்லக் கடவது இறே –பொற்றாமரைக்கயம் நீராடப்போனாள் =
கீழே திருக்குடந்தை ப்ரஸ்துதமாகையாலே அத்தலத்தில் புண்ணிய தீர்த்தமாக வழங்கி வருகின்ற பொற்றாமரை என்னும் புஷ்கரிணியிலே நீராடப்போனாள் என்று பொருள் கொள்ளப் பொருந்துமாயினும் எம்பெருமான் றன்னையே பொற்றாமரைக் கயமாகப் பேசுகிறாரென்றலும் பொருந்தும். தமிழர், ஸம்ச்லேஷத்தைச் சுனையாடலென்றும் நீராட்டமென்றும் சொல்லுவார்கள்.
எம்பெருமானோடு கலவி செய்ய விரும்புவதையே இங்குப் பொற்றாமரைக் கயம் நீராடப்போவதாகச் சொல்லிற்றென்க.

மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை யிருபாடு இலங்கியாட
எய்வண்ண வெஞ்சிலையே துணையாய் இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண்ணினையும் அரவிந்தம் அடியும் அக்தே
அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே–21(2072)-அந்த சௌந்த்ர்ய சாகரத்தில் தான் அகப்பட்ட சுழிகளைச் சொல்லுகிறாள் – பாதாதி கேசாந்தமாகச் சொல்லுதல் -கேசாதி பாதாந்தமாக சொல்லுதல் செய்யாது ஒழிந்தது–தான் அனுபவித்த பிரகாரம் இதுவாகையாலே-கை வண்ணம் தாமரை —-1-பிரதமத்தில் தன்னை மேல் விழுந்து பாணி க்ரஹணம் பண்ணின கையைச் சொல்லுகிறாள் –2-வாய் கமலம் போலும் – கையைப் பிடித்து தன் செல்லாமை தோன்ற –இது ஒரு வடிவு அழகு இருந்தபடி என்-இது ஒரு முலை அழகு இருந்த படி என்-இது ஒரு கண் அழகு இருந்தபடி என் -என்று இவன் சொல்லுச் சொன்ன திரு வதரம் இருந்தபடி –3-கண் இணையும் அரவிந்தம்- இவன் சொல்லுச் சொல்லத் தொடங்கி அனுகூல தர்சனத்தாலே விக்கினால்
குறையும் தலைக் கட்டும் கண் –
இவன் சொல்லுச் சொல்லத் தொடங்கி குறையும் தலைக் கட்ட மாட்டாதே இடையிலே விக்கி குறையும் கண்ணாலே தலைக் கட்டின படி ஆதர ஸூசகம் இறே  இவன் சொல்லு – அவ்வாதரம் இத்தனையும் கண்ணிலே பிரகாசிக்கும்படி நின்றார் -என்கை –4-அடியும் அக்தே -அந் நோக்குக்குத் தோற்று – கண்ணும் வாயும் கைத்தலமும் அடி இணையும் கமல வண்ணம் -என்று கீழ் சொன்னால் போலே இங்கும் சொல்ல அமைந்து இருக்க -போக்யதா அதிசயத்திலே அவயவங்கள் தோறும் தனித்தனியே தாமரையை த்ருஷ்டாந்தமாக  சொல்கிறாள் –அடியும் தாமரை -என்னாதே-
அடியும் அக்தே
 -என்றது-உபேஷா வசனத்தாலே கீழ் சொன்னவையும் சத்ர்சமான த்ருஷ்டாந்தம் அன்று என்னும் இடம் ஸூசகம் –

படை நின்ற பைம் தாமரையோடு அணி நீலம் -பெரிய திருமடல்    -(2027)

சரணா மறை பயந்த தாமரை யானோடு
மரணாய மன்னுயிர் கட்கெல்லாம் அரணாய
பேராழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது
ஓராழி சூழ்ந்த வுலகு —60–(2141)-அபிமத சித்திகளுக்கு அடைத்த உபாயங்களை உபபாதிக்கிற
வேதத்தை ஜகத்துக்கு அறிவித்ததாலே-ப்ரஹ்மா ப்ரஹ்ம விதாம் வர -என்கிற ப்ரஹ்மா
மந்திர க்ருதப்யோ  நம
-என்று தன்னைச் சால ஜ்ஞானாதிகனாக அபிமானித்து இருக்கிற ப்ரஹ்மாவோடே கூட –

பெயரும் கருங்கடல் நோக்கும் ஆறு ஒண் பூ
உயரும் கதிரவன் நோக்கும் –உயிரும்
தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு
–67-(2148)–அப்படியே அறிவாகில் ஸ்ரீ யபதியைப் பற்றி யல்லது இராது-இவ் வாத்மா வாகிற தாமரைக்கு ஞானமாகிய விகாஸம் பிறக்கைக்கு-பாஸ்கரனும்
பிரபையும் இறே-ஒண் தாமரையாளும் கேள்வனும்
ஒருவனையே என்கிற அவதாரணைக்கு
வ்யாவ்ருத்தம் தான் அத்தலையாலே தோற்றும் தான் ஒழிய தனித் தோற்றம் தான் இன்றிக்கே இருக்கை

கொண்டது உலகம் குறள் உருவாய் கோளரியாய்
ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது -உண்டதுவும்
தான் கடந்த ஏழ் உலகே தாமரைக் கண் மால் ஒரு நாள்
வான் கடந்தான் செய்த வழக்கு–18-(2199)–தாமரைக்கண் மால் –புண்டரீ காஷனான சர்வேஸ்வரன் –அனைத்துலகும் உடைய அரவிந்த லோசன்னை -திருவாய் -6-5-10-

தாமுளரே தம் உள்ளம் உள் உளதே தாமரையின்
பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே -வாமன்
திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே
அரு நரகம் சேர்வது அரிது—————–21–(2202)-தாமரை புறம்பே யுண்டே – அல்லோம் என்று இவன் போகிலும்-புறம்பே போக ஒண்ணாத படி பண்டே அவை யுண்டாய்த்தே –ஆகிறது -தான் புறம்பே போய் தேடுமதான புஷ்பமும் -தனக்கே தேட வேண்டாத படி -அவன் குறைவறுத்து வைத்தானே – இவனுடைய விபூதிக்கும் புறம்பு அன்றே பூ –

வந்துதித்த வெண் திரைகள் செம்பவள வெண் முத்தம்
அந்தி விளக்காம் மணி விளக்காம் –எந்தை
ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்

திருவல்லிக் கேணியான் சென்று   —-16–(2297)–நிரதிசய போக்யையான பெரிய பிராட்டியாரானவள்-ஒரின்னிள  வஞ்சிக் கொடி-பெரிய திருமடல் -என்னுமா போலே-கொள் கொம்போடு சேர்ந்தால் அல்லது தரிக்க மாட்டாமை-அவன் புருஷோத்தமன் ஆனாப் போலே இவள் நாரீணாம்   உத்தமை –மலர்மகள் விரும்புகையாலே சர்வாதிகத்வம் ஆகை-பஸ்யதாம் வரவா தேவா நாம் யயௌ வஷ ஸ்தலம் ஹரே  -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-105-அநாதரே சஷ்டி – பிரஜைகள் பார்த்து இருக்க-பர்த்தாவின் படுக்கையைக் கணிசித்து ஏறும் தாயைப் போலே-தேவர்கள் பார்த்து கிடக்கத் திரு மார்விலே ஏறினாள்

அடி வண்ணம் தாமரை அன்றுலகம் தாயோன்
படி வண்ணம் பார்க்கடல் நீர் வண்ணன் முடி வண்ணம்
ஓராழி வெய்யோன் ஒளியும் அக்தே அன்றே
ஆராழி கொண்டார்க்கு அழகு —-5–(2286)-திருவடிகள் உடைய படி தாமரை –

படிவட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று
அடிவட்டத்தால் அளப்ப நீண்ட -முடிவட்டம்
ஆகாயமூடறுத்து அண்டம் போய் நீண்டதே
மாகாயமாய் நின்ற மாற்கு ——–13-(2294)-பூ வலயம் -என்னக் கடவது இறே –-பத்மாகார சமுத்பூதா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-12-37-என்னக் கடவது இறே –-சர்வேஸ்வரன் சேஷ்டிதத்தைத் தாம் கண்டு அனுபவிக்கும் படியை அருளிச் செய்கிறார் –படிவட்டத் தாமரை –-திருவடிகள் பிரவேசிக்கப் பெறுகையாலே வந்த ஸ்லாக்யதை-பண்டுலகம் நீரேற்று – படிவட்டத் தாமரை யாகிற லோகத்தை முன்பு நீரேற்று –

பாற் கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும்
நூற் கடலும் நுண்ணூல தாமரை மேல் -பாற் பட்டு
இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்
குருந்து ஒசித்த கோபாலகன் ——-32-(2313)-பத்ம கோச ப்ரதீகாசம் ஹ்ருதயஞ்சாப் யதோ முகம் -என்று
சாஸ்த்ரைக சமதி கம்யமான ஹ்ருதயக் கமலத்திலே அவனுக்கு இருப்பாக அனுசந்தித்து இருக்கும் அவர்கள் உடைய மனசும்-சாஸ்த்ரங்களிலே ஹ்ருதய கமலம் என்று சொல்லப் பட்ட-அதின் மேலே வைக்கப்பட்ட இந்த்ரியங்களை யுடையரான யோகிகள் உடைய மனசும் –

உளனாய நான் மறையினுள் பொருளை உள்ளத்து
உளனாகத் தேர்ந்து உணர்வரேலும் உளனாய
வண்டாமரை நெடுங்கண்  மாயவனை யாவரே
கண்டாருகப்பர் கவி
———–84-(2365)–ஆஸ்ரிதர்க்கு அனுபவ யோக்யமான விக்ரஹத்தை யுடைய
ஆச்சர்ய சக்தி யுக்தனை-யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணீ-என்று சுருதி பிரசித்தமான கண் அழகை யுடையவனை தமக்குக் காட்டின  வடிவு –

வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம்
தாழ்த்தி வணங்கத் தழும்பாமே -கேழ்ந்த
அடித் தாமரை மலர் மேல் மங்கை  மணாளன்
அடித் தாமரை யாமலர்
–96-(2377)–இவர்கள் மகுடம் தாழ்த்தி வணங்குவது பொறாமல் தழும்பாம்
ப்ரஹ்மாதிகள் ஐஸ்வர்ய ஸூசகமான அபிஷேக யுக்தமான தலைகளைத் தாழ்த்தி ஆஸ்ரயிக்கத் தழும்பாய் இருக்கும் –-கேழ்ந்த அடித்தாமரை மலர் மேல் – கிளர்ந்த வடித் தாமரை –பருத்த தாளை யுடைய தாமரை –இத்தால் பெரிய பிராட்டியார் எழுந்து அருளி இருக்கத் தாமரை பொறுக்கை – எழுச்சியையும் அழகையும் யுடைத்தான தாமரை -என்றுமாம் –ஸ்ரமஹரமாய்ச் சிவந்த நிறத்தை யுடைத்தான தாமரை–என்றுமாம் –இப்படிப் பட்ட தாமரைப் பூவிலே எழுந்து அருளி இருப்பதும் செய்து
நித்ய யௌவனத்தை யுடையளான பெரிய பிராட்டியாருக்கு –மணாளன் – அவளுக்கு போக்தாவானவன் –மணாளன் அடித் தாமரை –-அவளுடைய திருக் கைகளாலே தொடும் போதும்
கூசித் தொடும் படியான ஸ்ரீ யபதியினுடைய திருவடிகளை-இத்தால் நித்ய ஸூரிகளுக்கும்
ப்ரஹ்மாதிகளுக்கும்-உபாஸ்யம் ஒரு மிதுனம் -என்றபடி –அடித் தாமரை யாமலர் –-திருவடித் தாமரை யாகிற அலர் தழும்பாம் பூத் தழும்பு ஆகாதோ –

சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுழாய்த்
தார் வாழ் வரை மார்வன் தான் முயங்கும் -காரார்ந்த
வானமரு மின்னிமைக்கும் வண்டாமரை நெடுங்கண்
தேனமரும் பூ மேல் திரு
——100-(2081)-ஆஸ்ரிதரை சஹ்ருதயமாகக் குளிர நோக்கா நின்ற
உதாரமான தாமரை போலே இருக்கிற ஒழுகு நீண்ட கண்ணை யுடையவள் –பஸ்யதாம் சர்வதேவானாம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-105–அநாதரே ஷஷ்டி –தயா விலோகிதா தேவா ஹரி வஷச்தலஸ் தயா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-106-மார்விலே இருந்து அவர்கள் புறங்கால் வீக்கம் தீரக்
குளிர நோக்கினாள்-தேன் செறிந்து இருந்துள்ள பூவின் மேலே இருக்கிற பெரிய பிராட்டியார்-நிரதிசய போக்யையான பெரிய பிராட்டியார் –- நமக்கு எல்லாக் காலத்துக்கும் அபாஸ்ரயம் –

மங்குல் தோய் சென்னி வட வேங்கடத்தானை
கங்குல் புகுந்தார்கள் காப்பணிவான் -திங்கள்
சடை ஏற வைத்தானும் தாமரை மேலானும்
குடை ஏறத் தாங்குவித்துக் கொண்டு-43-(2424)-மேக பதத்தளவும் உயர்ந்த சிகரங்களை யுடைத்தான-
வடக்கில் திருமலையிலே நின்று அருளினவனை- ராத்ரியிலே காப்பிடுகைக்காக புகுந்தார்கள்
சந்த்ரனை ஜடையிலே வைத்த ருத்ரனும்–திரு நாபி கமலத்திலே பிறந்த ப்ரஹ்மாவும்-பக்தி பாரவச்யத்தாலே திரு முத்தின் குடை தொடக்கமான சமாராதன உபகரணங்களைக் கொண்டு
தத் சர்வம் தர்ம வீர்யேண  யதாவத் சப்ரச்பச்யாதி -பால -3-4-என்னும்படி திருமலையிலே-வ்ருத்தாந்தத்தை அனுசந்தித்து சந்த்யா காலத்திலே ப்ரஹ்மாதிகள் பணி கண்டு அருளுகைக்கு-
சத்ராத் யுபகரணங்களைக்  குடையாகப் பிடித்துக் கொண்டு திரு வந்திக் காப்பு அணிகைக்குப்   புகா நிற்பார்கள் -என்கிறார் –

கழல் தலம் ஒன்றே நில முழு தாயிற்று ஒரு கழல் போய்
நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட வண்டத்து
உழறலர் ஞான சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லா
அழறலர் தாமரைக் கண்ணன் என்னோ விங்களக்கின்றதே
 – 58-(2535)—பங்கஜம் -சேற்றுத் தாமரை -நீர் நிலையிலே இருந்து அலர்ந்து செவ்வி குன்றாத இருக்கும் தாமரை போன்ற திருக் கண்கள்–அழற்றிலே  நின்று அலர்ந்த தாமரைப் பூ போலே இருந்த உள்ள திருக் கண்களை உடையவன் –-தச்யதா கப்யாசம் புண்டரீகம் மேவ அஷணீ -என்னக் கடவது இறே

இடம் போய் விரிந்து இவ் உலகளந்தான் எழிலார் தண் துழாய்
வடம் போதினையும் மட நெஞ்சமே நங்கள் வெள் வளைக்கே
விடம் போல் விரிதல் இது வியப்பே வியன் தாமரையின்
தடம் போதொடுங்க மெல் ஆம்பல் அலர்விக்கும் வெண் திங்களே 
– -76 (2553)-விஸ்மயநீயமான தாமரையினுடைய பெருத்த பூவானது ஒடுங்கவும் – ஷூத்ரமுமாய் புல்லிதமுமான ஆம்பல் அலரும்படியாகவும் பண்ணுமதான வெண் திங்கள்-சந்திரன் தாமரையை வருத்தி மூடச் செய்து ஆம்பலை அலர்த்துவது போலே -தாமரைக்கு தலைவன் ஸூரியன் மறைந்த இடத்தில் தலைவனை பிரிந்த என்னை வருத்தி கை வளைகள் கழல பண்ணுவதில் ஆச்சர்யம் இல்லையே-

தமராவர் யாவர்க்கும் தாமரை மேலார்க்கும்
அமரர்க்கும் ஆடு அரவத் தார்க்கும் -அமரர்கள்
தாள் தாமரை மலர்கள் இட்டு இறைஞ்சி மால் வண்ணன்
தாள் தாமரை அடைவோம் என்று-91-(2472)–தாளையுடைய தாமரைப் பூக்களை திருவடிகளிலே இட்டு வணங்கி சர்வேஸ்வரனுடைய திருவடித் தாமரைகளை அடைவோம் என்று-தாள் தாமரை அடைவோம் என்று தமராவார் தாமரை மேலாற்கும்  அமரர்க்கும் ஆடரவத்தாற்கும்-அச்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூ ரிகளுக்கும் மற்றும் எல்லாருக்கும் நிர்வாஹகரான தேவர்களாம் படி யான பெருமையை யுடையவர்கள் என்றுமாம்-மாமேகம் சரணம் வ்ரஜ -என்கிறபடியே கறுத்த  நிறத்தை யுடையனான கிருஷ்ணனுடைய திருவடித் தாமரைகளிலே செவ்விப் பூக்களைப் பணி மாறித் தங்கள் தலைச் சுமையை அங்கே வைத்து ஆஸ்ரயித்து அவன் திருவடிகளை அடைவோம் என்னுமவர்கள் என்றுமாம்
தாள் தாமரை அடைவோம் -என்று தமராவார் தாமரை மேலாற்கும் ஆடரவத்தாற்கும் அமரர்க்கும் இத் யந்வய –

கழல் தலம் ஒன்றே நில முழு தாயிற்று ஒரு கழல் போய்
நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட வண்டத்து
உழறலர் ஞான சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லா
அழறலர் தாமரைக் கண்ணன் என்னோ விங்களக்கின்றதே
 – 58-(2535)-அழற்றிலே  நின்று அலர்ந்த தாமரைப் பூ போலே இருந்த உள்ள திருக் கண்களை உடையவன் –-தச்யதா கப்யாசம் புண்டரீகம் மேவ அஷணீ -என்னக் கடவது இறே–

செக்கர் மா முகில் உடுத்து மிக்க செம் சுடர் பரிதி சூடி அம் சுடர் மதியம் பூண்டு
பல சுடர் புனைந்த பவள செவ்வாய் திகழ பசும் சோதி மரகத குன்றம்
கடலோன் கை மிசை கண் வளர்வது போல் பீதக ஆடை முடி பூண் முதலா
மேதகு பல் கலன் அணிந்து சோதி வாயவும் கண்ணவும் சிவப்ப மீது இட்டு
பச்சை மேனி மிக பகைப்ப நச்சு வினை கவர் தலை அரவின் அமளி ஏறி
எறி கடல் நடுவுள் அறி துயில் அமர்ந்து சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர்
தெய்வ குழாங்கள் கை தொழ கிடந்த தாமரை வுந்தி தனி பெரு நாயக மூ வுலகு அளந்த சேவடியோயே –1–(2578)–சகல ஜகத் உத்பத்தி காரணமான திரு நாபி கமலத்தை உடையவனாய் இப்படி இருப்பார் அவ்வருகு யாரேனும் உண்டோ என்ன-இத்தால் அவ்வருகு இல்லை என்னும் இடத்தைச் சொல்லுகிறது
அவ்வருகு இல்லையாகில் தன்னோடு ஓக்க சொல்லலாவார் உண்டோ என்னில்-தனி அத்விதீய நாயகன் – புறம்பேயும் சிலரை நாயகராகச் சொல்லுவது ஓவ்பசாரிகம் ருத்ரம் ஸமாச்ரிதா தேவா ருத்ரோ ப்ராஹ்மணம் ஆஸ்ரித- ப்ரஹ்மாம் மாம் ஆஸ்ரிதோ ராஜன் நாஹம் கஞ்சித் உபாஸ்ரித-பாரதம் -ஆஸ் –118-37-தாமரை யுந்தி -தனி பெரும் -இவற்றால் –-நிமித்த -உபாதான -ஸஹகாரிகளும் தானே என்கை –சேவடியோயே – இழந்த இழவை மீட்டு ரஷியாதே காதுகனனே யானாலும் விட ஒண்ணாதபடியே யாயிற்று திருவடிகளின் போக்யதை இருக்கிறபடி-கண்ணழிவற்ற அழகையும் குணங்களையும் அனுபவித்தார் –

உலகு படைத்து உண்ட எந்தை அறை கழல் சுடர் பூம் தாமரை சூடுதற்கு அவாவு ஆர்
உயிர் உருகி யுக்க நேரிய காதல் அன்பில் இன்பீன் தேறல் அமுத வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு ஒரு பொருள்க்கு அசைவோர் அசைக திரு வோடு மருவிய இயற்க்கை மாயாப் பெரு விறல் உலகம்
மூன்றினோடு நல் வீடு பெறினும் கொள்வது எண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே ?-2–(2579)–தாமரை போலே இருக்கிற திருவடிகளை என்றவாறே-கதா புந சங்க ரதாங்க கல்பக த்வஜ அரவிந்த அங்குச வஜ்ர லாஞ்சனம்-த்ரிவிக்ரம த்வத் சரணம் புஜ த்வயம் மதீய மூர்த்தாநாம் அலங்க்ருஷ்யதி –ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -31- (திரிவிக்ரமனே சங்கு சக்கரம் கல்பக வ்ருக்ஷம் கொடி தாமரை அங்குசம் வஜ்ராயுதம் இவைகளை அடையாளமாக யுடைய திருவடித் தாமரை இணை என் தலையை எப்போது தான் அலங்கரிக்கப் போகிறதோ )–என்ன வேண்டி இருக்கும் இறே-

மா முதல் அடி போது ஓன்று கவிழ்த்து அலர்த்தி மண் முழுதும் அகப்படுத்து ஒண் சுடர் அடி போது
ஓன்று விண் செலீ இ நான் முகப் புத்தேள் நாடு வியந்து உவப்ப வானவர் முறை முறை
வழி பட நெறீ இ தாமரை காடு மலர்க் கண்ணொடு கனி வாய் உடையது
மாய் இரு நாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன கற்பகக காவு பற்பல வன்ன
முடி தோள் ஆயிரம் தழைத்த நெடியோய் கல்லது அடியதோ வுலகே ?-5-(2582)–பரம காரணமானவனுடைய திருவடி என்னுதல் -திருவடி தனக்கேயாய் சேஷ பூதர் அடைய வந்து சேருவது திருவடிகளில் ஆகையால் அவர்களுக்குப் பரம ப்ராப்யமான திருவடி என்னுதல்-அடி யாகிற செவ்விப் பூ -என்றபடி –அடியாகிய அன்று அலர்ந்த செவ்விப்பூ -என்றபடி-அடி -திருவடி -திருவடி யாகிற செவ்விப் பூவை-ஒரு செவ்வித் தாமரைப் பூவை கவிழ்த்து அலர்த்தினால் அதினுள் அல்லிக்கு உள்ள நெருக்கு இறே-திருவடியின் கீழ்ப் பட்ட பதார்த்தங்கள் உள்ளது-ஆரேனுமாகத் தன திருவடிகளைத் தலையிலே வைத்தால் ஆதித்ய சந்நிதியில் தாமரை போலே திருக்கண் செவ்வி பெறுமாயிற்று–தாமரைக் காடு அலர்ந்தால் போலே இருக்கிற திருக் கண்ணோடே கனிந்த வாயையும் யுடைத்தாய் இருப்பதுமாய் –

முதலாம் திருவுருவம் மூன்று என்பர் ஒன்றே
முதலாகும் மூன்றுக்கும் என்பர் முதல்வா
நிகரிலகு காருருவா நின்னகத்தன்றே
புகரிலகு தாமரையின் பூ –
72-(2656)-ப்ரஹ்மாவுக்கு உத்பத்தி ஸ்தானமான தாமரைப்பூ உன் திரு நாபியதன்றோ-இத்தால் ப்ரஹ்ம ருத்ராதிகள் இவனுக்கு ஸமர் அல்லர் என்னும் இடமும் அவர்களில் ஒருவன் ஜகத்துக்குக் காரணம் என்னும் இடமும் மூவரையும் ஒழிய-மூவரில் பிரதானராய் இருக்கிற விஷ்ணுவையும் ஒழிய – வேறே ஓன்று ஜகத்துக்குக் காரணம் அன்று என்னும் இடமும் சொல்லுகிறது

தாரானை தாமரை போல் கண்ணானை எண் அரும் சீர்–சிறியதிருமடல் -5-(2708)-தன்னை முன நாள் அளவிட்ட தாமரை போல்-2(713)-மன்னிய தாமரை மா மலர் பூத்து அம் மலர் மேல்(2715)

தன் உலகம் ஆக்குவித்த தாளனை தாமரை மேல் (2771)-பெரிய திருமடல்-

சார்ந்த தென் சிந்தை வுன் தாளிணைக் கீழ் அன்பு தான் மிகவும்
கூர்ந்த தத் தாமரைத் தாள்களுக்கு
உன்தன் குணங்களுக்கே
தீர்ந்த தென் செய்கை முன் செய்வினை நீ செய்வினையதனால்
பேர்ந்தது வண்மை யிராமானுசா ! எம் பெரும்தகையே !–71-(2861)-அன்பு தான் –தாமரைத் தாள்களுக்கு –
உன் தாளிணை-என்று சம்பந்தம் உள்ளமையின் சிந்தை சார்ந்தமை கூறினார் முன்பு .-இப்பொழுது சம்பந்தம் இல்லா விடினும் -விட ஒண்ணாத இனிமை-போக்யதை –கூறுகிறார் .-தாமரைத் தாள்கள் ஆதலின் -இனிமையை நுகர்ந்து -பக்தி தானே மிகவும் வளர்ந்து விட்டது -என்க –-சார்ந்து இனிமையை நுகர விசேஷ கடாஷம் ஹேது-அன்பு மிகவும் கூர்தல் -தானாக வந்தது -என்று அறிக-

தன்னை வுற்றாட் செய்யும் தன்மையினோர் மன்னு தாமரைத் தாள்
தன்னை வுற்றாட் செய்ய என்னை வுற்றானின்று தன் தகவால்
தன்னை வுற்றாரன்றித் தன்மை வுற்றாரில்லை என்றறிந்து
தன்னை உற்றாரை இராமானுசன் குணம் சாற்றிடுமே – – -97 –(2887)-மன்னு தாமரைத்தாள் தன்னை உற்றாள் செய்ய என்னை உற்றான் இன்று – த்ர்ணீ கர்த விரிஞ்சாதி நிரந்குச விபூதய -ராமானுஜ பதாம் போஜ சமாச்ரயண சாலி ந-என்றும் – ஸ்ரீ ராமாநுஜார்ய சரண த்வந்த்வ கைங்கர்ய வ்ர்த்தய-சர்வாவச்தாஸூ சர்வ ரஸூ -தாரக போஷகாஸ் சமே –என்றும் சொல்லுகிறபடி – இப்படி சர்வ பிரகாரத்தாலும் ஸ்லாக நீயராய் இருக்குமவர்கள் –-உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் ஸ்ரீ கண்ணன் எம்பெருமான் –என்று ஸ்ரீ ஆழ்வார் அத்யவசித்தால் போலே
தமக்கு தாரகாதிகளாக அத்யவசித்து –-கம்பீராம்பஸ் சமுத்பூதமாய் -செவ்வி பெற்று இருக்கிற செந்தாமாரை போலே-அதி ஸூ குமாரங்களாய் -ஒன்றுக்கு ஓன்று போலியாய் -பொலிந்து என்றும் –
மன்னு தாமரை தாள்கள் அன்றோ-அத்யந்த போக்யங்களாய் இருக்கிற அவர்களுடைய திருவடிகளை –

என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள் நீரலிரே
முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே
 –1-4-2-(2933)-விஸ்லேஷ தசையிலே தான் வரும் தனையும் இவள் தரித்து இருக்கைக்காக -ஆத்மாத்யீங்கள் எங்கேனும் கிடக்கிலும்-உன்னது அன்றோ என்கிற வார்த்தையாலே என்னுடையவர் என்கிறாள்-ஐஸ்வர்யத்தாலும் வாத்சல்யத்தாலும் கலவியாலும் சிவந்த திருக் கண்களை யுடையவர்-இவை எல்லாம் இவள் அனுபவித்தவை இறே
முதல் திருவாய் மொழியிலே ஐஸ்வர்யமும் -மூன்றாம் திருவாய் மொழியிலே வாத்சல்யமும் இத் திருவாய் மொழியிலே கலவியும் –

எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனை
கொம்பராவு நுண்ணேரிடை மார்பனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே –1-10-3-(3000)–தம் அளவேயாய் அடி அற்று இருக்கை அன்றிக்கே-என் குடி நாயன் -என்கிறார்-சமாசத்ரிய ஜெகந்நாதம் மமபூர்வேபிதா மஹா விபஷாபஹ்ருதம் ராஜ்ய மவாபு புருஷோத்தமம்-தண் தாமரைக் கண்ணனை-பிரயோஜன நிரபேஷமாக புகழுகிறார் -என்று உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணாலே குளிர நோக்கினான்-இந்நோக்குக்கு அடி சொல்லுகிறது மேல்-கொம்பராவு நுண்ணேரிடை மார்பனை-

தகும் சீர்த் தனி முதலினுள்ளே
மிகும் தேவும் எப்பொருளும் படைக்க
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்
மிகும் சோதி மேலறிவார் யவரே –2-2-5-(3024)–தகும் என்னும் இடத்தை ஸ்பஷ்டம் ஆக்குவதாய் -ரக்ஷகத்வம் இல்லையே யானாலும் விடப் போகாதபடி தர்ச நீயமான-அக் கண் அழகாலே என்னை ஜிதம் என்னப் பண்ணினவன் –யதா கப்யாசம் புண்டரீக ஏவம் அஷிணி-ராம கமல பத்ராஷ

எப்பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும்
அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம் கை கமலம்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி ஊழி தொறும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே –2-5-4-(3056)-முன்பு சொன்ன சாமான்யம் ஒப்பாக மாட்டாது -அப்போது அலர்ந்தது ஆனால் யாயிற்று ஒப்பாவது-கண் பாதம் கை கமலம்–கண் -பந்தத்தை விளைக்கும் கண்-பாதம் -பந்தம் பிறந்தால் அனுபவிக்க இழியும் துறை –-கை கமலம் -தம்மோட்டை ஸ்பர்சத்தாலே செவ்வி பெற்ற படி-

சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற் பின்
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் துளக்கற்ற அமுதமாய் எங்கும்
பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே –
2-6-2-(3065)-பிராட்டி பின்னே வந்து அணைத்தாலும் விலங்கப் பார்க்கிறிலன் –-இங்கே ஆளவந்தாருக்கு குருகைக் காவல் அப்பன் அருளிச் செய்த வார்த்தை-என் பைந்தாமரைக் கண்ணனே–ஆடியாடியிலே ஆற்றாமையால் வந்த தாபம் தீர்ந்து திருக் கண்களும் குளிர்ந்த படி –

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை துழாய் விரைப்
பூ மருவி கண்ணி எம்பிரானைப் பொன் மலையை
நாம் மருவி நன்கேத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட நா வலர்
பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே –2-6-3-(3066)-ஒரு கால் நோக்கினால் நித்ய ஸூரிகள் ஜ்வர சந்நிபதரைப் போலே அடைவு கெடக் கூப்பிடுவார்கள் ஆயிற்று-தலைமகனை – இப்படிக் கூப்பிடா நின்றாலும் –நிரவத்ய பர ப்ராப்தே-என்கிறபடியே அவ்வருகாய் இருக்கும்

விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு
விட்டிலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி
விட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே –2-7-5-(3079)-விட்டு விளங்கா நின்றுள்ள சிவந்த தேஜஸை உடைத்தான தாமரைப் பூ போலே தலையிலே வைக்கப் புகுகிற திருவடிகளும் அணைக்கப் புகுகிற கைகளும் குளிர நோக்குகிற கண்களும்

சிரீ இதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்
வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து
மரீ இய தீ வினை மாள இன்பம் வளர வைகல் வைகல்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை யென்னிருடீ கேசனே –2-7-9-(3079)–நீர் பாய்ந்த பயிர் போலே -அவள் சந்நிதியாலே குளிர்ந்த திருக் கண்களை உடையவன்-வக்ஷஸ்தலேந ச்ரியம் உத்வஹம் விபு -விஸ்தாரி பத்மோத்பல பத்ர லோசன–மைய கண்ணாள் –என்று இறே அவனை அனுபவிக்கிறவள் கண் இருப்பது

வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே –2-7-8-(3082)-ஸுலப்யத்தையும்-ஸ்ரமஹரமான வடிவு அழகையும் -அதுக்கு பரபாகமாய் தன் பேறாக நோக்கின கண் அழகையும் உடையவன்-

சிரீ இதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்
வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து
மரீ இய தீ வினை மாள இன்பம் வளர வைகல் வைகல்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை யென்னிருடீ கேசனே –2-7-9-(3083)-ச்ரியா சார்த்தம் ஜகத் பத்தி ஆஸ்தே -என்று நித்ய ஸூ ரிகள் ஓலக்கத்திலே-பிராட்டியும் தானும் சேர இருக்கும்-இருப்பில் யாயிற்று இவர் ஊனில் வாழும் உயிரிலே ஆசைப்பட்டது –-செய்ய தாமரைக் கண்ணன்–நீர் பாய்ந்த பயிர் போலே -அவள் சந்நிதியாலே குளிர்ந்த திருக் கண்களை உடையவன்-வக்ஷஸ்தலேந ச்ரியம் உத்வஹம் விபு -விஸ்தாரி பத்மோத்பல பத்ர லோசன–மைய கண்ணாள் -என்று இறே அவனை அனுபவிக்கிறவள் கண் இருப்பது

முடிச் சோதி யாயுனது முகச் சோதி மலர்ந்ததுவோ
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் யலர்ந்ததுவோ
படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே –3-1-1-திரு முகத்தின் அழகு நிலை கொள்ள ஒண்ணாமையாலே திருவடிகளில் வர வீசிற்று-அங்கண் அல்லது அழகுக்கு ஆவது உண்டாயாயாதல் ஆசைக்கு அவதி உண்டாயாயாதல் அன்றே -திருவடிகளின் அழகு ஆசன பத்மமாய்க் கொண்டு விகசிதமாயிற்றோ-நீ நின்ற தாமரை அடிச்ச சோதியாய் அலர்ந்ததுவோ-திரு அபிஷேகத்தின் சம்சயம் இங்கே தீர வந்தார் -இங்கும் சம்சயமாய் இருந்தது

கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை யொவ்வா
சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது
ஒட்டுரைத்து இவ்வுலகு உன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி –3-1-2-(3122)-சொல்லில் -கட்டுரை என்று முழுச் சொல்லாய் -சொல்லில் என்றபடி -நெஞ்சாலும் பரிச்சேதிக்க ஒண்ணாதாய் இருக்க பாசுரம் இட்டுச் சொல்லப் போகாது-தாமரை –-தாமரை ஜாதியாக ஓர் அவயவத்துக்காக ஒப்பாக மாட்டாது என்கை –
நின் கண் பாதம் கை யொவ்வா-முதல் உறவு பண்ணும் கண் -அதுக்கு தோற்று ஜிதந்தே என்று விழும் திருவடிகள் -அவ் விழுக் காட்டுக்கு தோற்று அவன் தான் ஜிதந்தே என்று அணைக்கும் கை
நின் கண் -என்கையாலே –உனது முகச் சோதி -என்றத்தை நினைக்கிறது –பாதம் -என்றது அடிச் சோதி என்றத்தை நினைக்கிறது-கை -என்று நடுவு தாம் அனுபவித்த அழகுக்கு உப லக்ஷணம்

ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி
வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து
ஆயன் நாள்மலராம் அடித் தாமரை
வாயுளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே.–
3-3-9-(3151)-துக்க நிவ்ருத்திக்காக திருமலையில் வந்து நின்ற ஸூ லபன் ஆனவன்-நிரதிசய போக்யமான திருவடிகளை மநோ வாக் காயங்களால் அனுபவிக்கப் பார்ப்பார்க்க-இது இறே துக்க நிவ்ருத்திக்கு குடிக்கிற வேப்பங்குடி நீர் 

செய்ய தாமரைக் கண்ணனாய் உலகு ஏழும் உண்ட அவன் கண்டீர்
வையம் வானம் மனிசர் தெய்வம் மற்று மற்றும் மற்றும் முற்றுமாய்
செய்ய சூழ் சுடர் ஞானமாய் வெளிப்பட்டு இவை படைத்தான் பின்னும்
மொய்கொள் சோதியோடு ஆயினான் ஒரு மூவர் ஆகிய மூர்த்தியே.–3-6-1-(3176)–தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ-என்றும்-யஞ்ஜேசோ யஞ்ஞ புருஷ புண்டரீகாக்ஷ சம்ஞ்சித -என்றும் ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் சொல்லுகிறபடியே செவ்வியை உடைத்தாய் சிவந்த தாமரைப் பூ போலே இருக்கிற கண் அழகை உடையனாய்-பிரளய ஆர்ணவத்திலே அந்தர படாத படி ஜகத்தை திரு வயிற்றில் வைத்தவன் கிடீர் –வடிவு அழகில் புண்டரீகாக்ஷத்வம் போலே குணங்களில் பிரளய ஆபத் ஸகத்வமும்

திரியும் காற்றோடு அகல் விசும்பு திணிந்த மண் கிடந்த கடல்
எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம் மற்றும் மற்றும் முற்றுமாய்
கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன் கண்ணன் விண்ணோர் இறை
சுரியும் பல் கருங்குறிஞ்சி எங்கள் சுடர் முடி யண்ணல் தோற்றமே –3-6-5-(3180)-கரிய மேனியன்
அசாதாரண விக்கிரஹத்தை சொல்லுகிறது-செய்ய தாமரைக் கண்ணன்-வாத்சல்ய ஸூ சகமான கண் அழகை உடையவன்-கண்ணன்-சர்வ ஸமாச்ரயணீயன் ஆகைக்காக ஸூ லபன் ஆனவன்-விண்ணோர் இறை-அந்நிலையில் நித்ய ஸூ ரிகளும் வந்து ஆஸ்ரயிக்கலாம் படி பரத்வத்தை உடையவன்

கோலமே! தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன நீலமே! நின்று எனது ஆவியை ஈர்கின்ற
சீலமே! சென்று செல்லாதன முன் நிலாம் காலமே! உன்னை எந்நாள் கண்டு கொள்வனே?–3-8-8-(3205)-அழகு என்றும் தாதாஸ்ரயம் என்றும் இரண்டு அன்றிக்கே அழகு தானே ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கை-ஞான ஸ்வரூபன் என்றும் ஞான குணகன் என்றும் சொல்லக் கடவது இறே ஞாதாவை
தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன நீலமே!-தாமரையை ஒரு போலியாகச் சொல்லலாம் படி யான திருக் கண்களை உடையையாய் அதுக்கு பரபாகமாய் சிரமஹரமான வடிவை உடையவனே-அஞ்சனம் என்றும் நீலம் என்றும் சொல்லுகையாலே ஓன்று ஒப்பாக மாட்டாமையாலே கதிர் பொறுக்குகிறார்
நீலம் தன்னை வடிவாக வகுத்தால் போலே இருக்கை –

உய்வு உபாயம் மற்று இன்மை தேறி, கண்ணன் ஒண் கழல் மேல்
செய்ய தாமரைப் பழனம் தென்னன் குருகூர்ச் சடகோபன்
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே.–4-3-11-(3263)-ஆழ்வார் பிரணயித்வ குண அனுசந்தானத்தாலே தரித்தவாறே ஊரும் தளிரும் முறியுமாயிற்று –அகாலப்பலிநோ வ்ருஷா
சிவந்த தாமரையை உடைய பழனங்களை உடைத்தாய் தெற்குத் திக்குக்கு ஸ்லாக்யமான திரு நகரியை உடைய ஆழ்வார்-ந தே வாக ந்ருதா காவ்யே காசிதத்ர பவிஷ்யதி -என்கிறபடியே திருவாய் மொழி எல்லாவற்றுக்கும் ஆதல்-அவாப்த ஸமஸ்த காமன் ஒரு சம்சாரியினுடைய சத்தாதிகளே தனக்கு போக உபகரணமாக இருந்தான் -என்கிற பிரணயித்வத்தில் ஒரு பொய் இன்றிக்கே இருக்கிற பத்து என்னுதல் –

நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானைத் தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொல்மாலைகள் சொல்லுமாறு

அமைக்க வல்லேற்கு இனியாவர் நிகர் அகல் வானத்தே?–4-5-8-(3282)-குளிர்ந்த ஆசன பத்மத்தாலே தரிக்கப் பட்ட திருவடிகளை உடைய சர்வேஸ்வரனை-திருவடிகளில் மென்மை குளிர்த்தி நாற்றம் தொடக்கமான போக்யதைக்கு தோற்று சுமக்கிற படி-ஆசன பத்மத்தால் அல்லது தனக்கு ஸ்திதி இல்லாதா போலே என் கவி அல்லாது தரிக்க மாட்டாது இருக்கை

காண வந்து,என் கண் முகப்பே தாமரைக் கண் பிறழ,
ஆணிச் செம்பொன் மேனி எந்தாய்! நின்று அருளாய் என்று என்று,
நாணம் இல்லாச் சிறு தகையேன் நான் இங்கு அலற்றுவது என்
பேணி வானோர் காண மாட்டாப் பீடுடை அப்பனையே?–4-7-4-(3300)0மானஸ அனுபவம் மாத்திரம் அன்றிக்கே கண் எதிரே காணும் படி வந்து காணும் படி வர வேண்டும் என்றுமாம் –தாமரைக் கண் பிறழ,
தாமரை போன்ற திருக் கண்கள் கடல் கிடந்தால் போலே மிளிர –பிறழ,-விளங்க என்றுமாம் 

தழுவி நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன்றனைக்
குழுவு மாடம் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல்
வழு விலாத ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இப்பத்தும்
தழுவப் பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே.–4-7-11-(3307)–நான் விடுவேன் என்னிலும் விட ஒண்ணாத உடன் வந்தியான-அதிமாத்ர ப்ரேமத்தாலே-தாமரைக் கண்ணன்றனைக் –இக் காதலுக்கு கிருஷி பண்ணினாராய்ச் சொல்லுகிறார்-கண்ணாலே குளிர நோக்கி யாயிற்று -இவருக்கும் காதலை விளைவித்தது –செந்தாமரைக் கண்ணோடு மறப்பற என்னுள்ளே மன்னினான் -என்னக் கடவது இறே -இது இறே மதி நலம் அருளின படி

புறமறக் கட்டிக் கொண்டு இருவல் வினையார் குமைக்கும்
முறை முறை யாக்கை புகல் ஒழியக் கண்டு கொண் டொழிந்தேன்
நிறமுடை நால் தடந்தோள் செய்ய வாய் செய்ய தாமரைக் கண்
அறமுயல் ஆழி அங்கைக் கருமேனி அம்மான் தன்னையே
–5-1-6-(3346)-நிறமுடை நால் தடந்தோள் செய்ய வாய் செய்ய தாமரைக் கண்-வைத்த கண் வாங்க ஒண்ணாத படி அழகிய நிறத்தை உடைத்தாய் -சர்வ பூஷண பூஷார்ஹங்களாய் -கற்பக தரு பணித்தாள் போலே நாலாய்-பாஹுச்சாயாம் அவஷ்டப்த -என்று சகல லோக ஆபாஸ்ரயமான தோள் —செய்ய வாய் -சவிலாசஸ்ஸ்மிதாதாரம் பிப்ராணம் முக பங்கஜம் என்று முகமாகிறது முறுவல் எடுத்து வைக்க கொள் காலம் ஆயிற்று-செய்ய வாய் -தோளை அண்டை கொண்டார்க்கு -அபாயம் சர்வ பூதோப் யோ தாதாமி -என்னும் வாய்-செய்ய தாமரைக் கண் -ராம கமலா பத்ராஷ -என்கிறபடி இதுக்கு அடியான பிராப்தி எல்லாம் தோற்றும் படி விசேஷ கடாக்ஷம் பண்ணும் கண் – அறமுயல் ஆழி அங்கைக் – லஷ்மணஸ்ய தீமத-என்கிறபடி ரக்ஷகனான ஈஸ்வரனைக் காட்டிலும் ஆஸ்ரித ரக்ஷண தர்மத்தில் உத்யுக்தமான திரு வாழியைக் கையிலே உடையவன்-

என் செய்யும் ஊரவர் கவ்வை? தோழீ! இனி நம்மை
என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறைகொண்டான்
முன் செய்ய மாமை இழந்து மேனி மெலி வெய்தி
என் செய்ய வாயும் கருங்கண்ணும் பயப்பூர்ந்தவே.–5-3-2-(3364)-கண்ணாலே தவாஸ்மி-என்று என்னை சொல்லி என்னை சர்வ ஸ்வபஹாரம் பண்ணினான் -கிட்டினால் என்னுடையவன் என்னும் படி இறே இருப்பது -வாத்சல்யத்தாலே குதறிச் சிவந்த கண்ணாலே -ஆத்மாத்மீயங்கள் நீ இட்ட வழக்கு அன்றோ -என்று சொல்லி என்னை உரி சூறை கொண்டான் –தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசி -என்னக் கடவது இறே -சொலவு ஒன்றும் செயல் ஒன்றும் ஆயிற்று -அவனுக்கு புண்டரீகாக்ஷத்வம் போலே இவளுக்கு ஸ்த்ரீத்வம் –என்னை நிறைகொண்டான்-என்று வாய் விடப் பண்ணுகை -இழந்தவை இன்னவை என்கிறாள் -மேல

வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்
அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.–5-4-9–(3382)-இத்தசையில் புண்டரீ காஷனான ஸ்ரீயபதியும் வருகிறிலன் -சிவந்த ஒளியை யுடைய தாமரைப் பூ போல் இருக்கிற திருக் கண்களை யுடைய ஸ்ரீ யபதியும் வருகிறிலன் -இந்த துர்த்தசையிலே குளிர நோக்கிக் கொண்டு இருவருமாய் வர ப்ராப்தமாய் இருக்க அது கிட்டிற்று இல்லை -ஆதித்யன் உதித்தாலும் ராத்திரி வர சம்பாவனை யுண்டு -அஸ்தமியாத ஆதித்யன் வருகிறிலன் –பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -என்னக் கடவது இறே

எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்!
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என்நெஞ்சமே.–5-5-1-(3385)ஒரு கலத்தில் உண்பாரைப் போலே வாகாம்ருத சாரஸ்யத்தை அறியும் ஸ்ரீ பாஞ்ச கண்ட பின் -மீட்கப் பார்க்கில் ஒக்கவே துடக்க வேண்டாவோ-சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்ஜன்யத்தோடு சாம்யம் உண்டே -ஸ்யாமளமான வடிவுக்கு பரபாகமான ஆழ்வார்களோடே யுண்டான சேர்த்தியோடும் -இரண்டிலும் வந்து அலை எறிகிற திருக் கண்களோடும் -விகாசம் செவ்வி குளிர்த்தி நாற்றம் என்கிற இவை யுண்டாய் இருக்கை

பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
தொக்க சோதித் தொண்டை வாயும் நீண்ட புருவங்களும்
தக்க தாமரைக் கண்ணும் பாவியேன் ஆவியின் மேலனவே.–5-5-5-(3389)–அப்புருவத்துக்குத் தகுதியாக தாமரைப் பூ போலே இருக்கிற திருக் கண்களும்-பாவியேன் -அவன் அழகை அனுசந்தித்தால் பிரியப்படுகை யன்றிக்கே நோவு படும் படியான பாபத்தை பண்ணினேன்-ஆவியின் மேலனவே-தோல் புரையிலே போகை யன்றிக்கே -உயிர் நிலையிலே நின்று நலியா நின்றது -உள்ளு வெளிச்சு இருக்கிறாப் போலே புறம்பும் ஆகப் -பெற்றோம் ஆகிறிலோம்-

மேலும் வன்பழி நங்குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்
சோலை சூழ் தண் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
கோல நீள்கொடி மூக்கும் தாமரைக் கண்ணும் கனிவாயும்
நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே.–5-5-6-(3390)-அழகு மிக்க கொடி போலே இருக்கிற மூக்கும் -அழகு கொழுந்து விட்ட தொரு கொடி போலே இருக்கை-அக் கொடி பூத்தால் போலே யாய் -தாமரைப் பூப் போலே இருக்கிற திருக் கண்களும் -அது ஒரு பலத்தை உண்டாக்கினால் போலே கனி போலே இருக்கிற திருவதரமும்-நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே.
இவற்றுக்கு பரபாகமாய் -தாமரை இலை போலே இருக்கிற திரு மேனியும் –-கற்பக தரு பணைத்தால் போலே மநோ ஹரமாய்-அவ் வழகைக் காத்தூட்ட கடவ தோள்களும்-என் நெஞ்சம் நிறைந்தனவே.–ஹித வசனம் கேட்க்கைக்கு நெஞ்சில் இடம் இல்லை –

கையுள் நன்முகம் வைக்கும் நையும்என்று அன்னையரும் முனிதிர்
மைகொள் மாடத் திருக்கு றுங்குடி நம்பியை நான் கண்டபின்
செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும்
மொய்ய நீள்குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன்னிற்குமே.–5-5-8-(3392)-அநந்யார்ஹம் ஆக்கும் கண்ணும் -அதுக்குத் தோற்றார் இளைப்பாறும் அல்குலும் -கீழையும் மேலையும் கொண்டு எறி யும் படி உன்நேயமான இடையும் -இவற்றுக்கு ஆச்ரயமான வடிவும்-

நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்று
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே.—5-7-1-(3407)-வரள் தாமரை யுண்டாகையாலே -சேற்றுத் தாமரை என்று விசேஷிக்கிறார் -செந்நெல்களூடே அலர்ந்த தாமரைகள் செந்நெலுக்கும் கூட நிழல் செய்யா நிற்கும் என்கை -வான மா மலைக்கு சத்ருசமாய் இருந்துள்ள போக்யதையைச் சொல்லுகிறது-பரமபதத்தில் காட்டில் தனக்கு நகரமாக விரும்பி வர்த்திக்கிற தேசம் -சம்சாரிகளுடைய ரக்ஷணத்துக்காக நித்ய வாசம் பண்ணுகிற தேசம்

காண்ப தெஞ்ஞான்று கொலோ? வினையேன் கனிவாய் மடவீர்!
பாண் குரல் வண்டினொடு பசுந் தென்றலுமாகி எங்கும்
சேண் சினை ஓங்கு மரச் செழுங்கானல் திரு வல்லவாழ்
மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே.–5-9-6-(3434)-தன்னுடைமை பெறுகைக்கு தான் அர்த்தியாய் -வடிவை குறுக விட்டு மிக்க அழகை யுடையவனாய் -ஸுலப்யத்தையும் அழகையும் திரு வல்ல வாழிலே ஆஸ்ரிதரை அனுபவிப்பித்துக் கொண்டு நிற்கிறவனுடைய நிரதிசய போக்யமான திருவடிகளை காண்பது எஞ்ஞான்று கொலோ-மலர்த்தாமரை -அப்போது அலர்ந்த தாமரை –

பாதங்கள் மேலணி பூந்தொழக் கூடுங்கொல்? பாவை நல்லீர்!
ஓத நெடுந் தடத்துள் உயர் தாமரை செங்கழுநீர்
மாதர்கள் வாண் முகமும் கண்ணும் ஏந்தும் திருவல்லவாழ்
நாதன் இஞ்ஞால முண்ட நம்பிரான் தன்னை நாடொறுமே.–5-9-7-(3435)-கடல் போலே பெருத்த பொய்கை களிலே யடி உயரத்தால் உயர்ந்த தாமரைகளும் செங்கழு நீரும் -ஸ்த்ரீகளுடைய ஒளியை யுடைத்தான முகத்தையும் கண்ணையும்-

பெய்யும் பூங்குழல் பேய் முலை யுண்ட பிள்ளைத் தேற்றமும் பேர்ந்தொர் சாடிறச்
செய்ய பாதமொன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்
நெய் யுண் வார்த்தை யுள் அன்னை கோல் கொள நீயுன் தாமரைக் கண்கள் நீர்மல்கப்
பையவே நிலையும்வந்து என்நெஞ்சை உருக்குங்களே.–5-10-3-(3442)-நெய்யைக் களவு கண்டான் என்னும் வார்த்தா பிரஸ்தாவத்திலே ஸ்நேஹ அதிசயத்தாலே தாயார் கையில் கோலை எடுத்தாள்-எதிரிகள் அஞ்சும் படி கோல் கொள்ளுமவன் கிடீர் இவள் கையில் கோலுக்கு அஞ்சுகிறான் -சத்ருக்களை அஞ்சப் பண்ணும் -ஆஸ்ரிதற்கு தான் அஞ்சும் -தாய் எடுத்த சிறு கோலுக்கு -என்ன கடவது இறே-நீ -வெறும் புறத்தில் ஆலத்தி வழிக்க வேண்டும் அழகை யுடைய நீ -சர்வ சக்தியான நீ என்றுமாம்-உனக்குத் தகுதியான கண்கள் –கண்ணில் பரப்பு அடங்க நீரிலே நிறையும் படி

திருந்தக் கண்டு எனக்கு ஒன்றுரையாய்; ஒண் சிறு பூவாய!
செருத்தி ஞாழல் மகிழ் புன்னை சூழ் தண் திரு வண் வண்டூர்
பெருந் தண் தாமரைக் கண் பெரு நீண் முடி நாற்றடந்தோள்
கருந் திண் மா முகில் போல் திருமேனி அடிகளையே.–6-1-8-(3458)-அவனுடைய போக்யத்தையே அன்றிக்கே போக ஸ்தானமே அமைந்து இருக்கை -போக்தாக்கள் அளவன்றிக்கே பெருத்து சிரமஹரமாய விகாசம் செவ்வி குளிர்த்தி இவற்றையும் யுடைத்தான திருக் கண்கள் –

போகு நம்பீ! உன் தாமரை புரை கண்ணிணையும் செவ்வாய் முறுவலும்
ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோமே யாம்;
தோகை மா மயிலார்கள் நின்னருள் சூடுவார் செவி ஓசை வைத்தெழ
ஆகள் போகவிட்டுக் குழலூது போயிருந்தே.–6-2-2-(3463)-இவளுடைய அம்ருத உபமானமான நிஷேத வசனம் கேட்ட வாறே ஓர் நீர்ச்சாவியிலே ஒரு பாட்டம் மழை விழுந்தால் போலே அவயவங்கள் விக்ருதமாயிற்றன-ச மஹாத்மா ஸூ துர்லப-என்று கிட்ட உபேக்ஷிக்க கிடையாத சம்சாரத்தில் இவ்வளவு அவகாஹித்து -பிரளய ரோஷத்தால் போ என்பாரைப் பெற்றால் விக்ருதனாகச் சொல்ல வேணுமோ – தாமரை புரை கண்ணிணையும் –விகாசம் செவ்வி குளிர்த்தி பரிமளம் இவற்றை உடைத்தாகை-செவ்வாய் முறுவலும்-ஹர்ஷத்துக்கு போக்கு விட்டு அதரத்தில் பழுப்பு எறித்து தோற்ற ஸ்மிதம் பண்ணி நின்ற நிலை-

உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம்கண் விழிகளின்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–6-2-9-(3470)-பிரிந்து நெஞ்சை புண் படுத்துகையால் வந்த உருகுதல் ஒழிய -எங்கள் உகவையால் நெஞ்சம் உள்ளுருகி-உன் தாமரைத் தடம்கண் விழிகளின்-அகவலைப் படுப்பான் –-தாமரைத் தடாகம் போலே மநோ ஹரமான உன்னுடைய கண்ணிலே நோக்கு ஆகிற வலையுள்ளே அகப்படுத்துகைக்காக -த்ருஷ்ட்டி பந்தத்தாலே இறே அநந்யார்ஹம் ஆக்குவது –

துவளில்மா மணி மாடமோங்கு தொலைவில்லி மங்கலம்தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்! உமக்காசை இல்லை விடுமினோ;
தவள ஒண்சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண்மலர்க் கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறுமே.–6-5-1-(3495)–தாமரையை ஒரு வகைக்கு ஒப்பாகச் சொல்லலாய்-போக்தாக்கள் அளவன்றிக்கே இரண்டு ஆழ்வார்கள் அளவும் அலை எறிகிற திருக் கண்கள்-என்றும் என்றும் என்கையாலே துர்பலன் மலையை எடுத்தால் போலே இருக்கிற படி-3499)

குழையும் வாண்முகத் தேழையைத் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
இழைகொள் சோதிச் செந்தாமரைக்கண் பிரான் இருந்தமை காட்டினீர்
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடன்று தொட்டுமை யாந்திவள்
நுழையுஞ் சிந்தையள் அன்னைமீர்தொழும் அத்திசை உற்று நோக்கியே.–6-5-5-(3499)இழைகொள் சோதிச் செந்தாமரைக்கண் பிரான் இருந்தமை காட்டினீர் ஆபரணங்களினுடைய ஒளியை யுடைத்தாய் இருக்கை என்னுதல் -வேறு ஆபரணம் வேண்டாதே தானே ஆபரணமான தேஜஸ் என்னுதல் -ஆபரண ஓளி தன்னுள்ளே அடங்கும்படி இருக்கும் இருக்கும் சோதி என்னுதல்-செந்தாமரைக்கண் -விகாசம் செவ்வி குளிர்த்தி நாற்றம் இவற்றால் தாமரையை ஒப்பாகச் சொல்லலாய் இருக்கும் திருக் கண் -அகவாயில் தண்ணளிக்கு பிரகாசகமான கண்கள்-பிரான் -பக்தானாம் என்கிற வடிவு-இருந்தமை காட்டினீர்-கிடையை காட்டுதல் -நின்றமையைக் காட்டுதல் -அன்றிக்கே இருந்தபடியை காட்டினி கோள் -கிடந்தான் ஆகில் -கிடந்ததோர் கிடக்கை -என்பார்கள் -நின்றான் ஆகில் நிலையாரே நின்றான் -என்பார்கள் -இருந்தான் ஆகில் பிரான் இருந்தமை காட்டினீர் என்பார்கள் -இருந்தபடியே உத்தேசியமாம் இத்தனை காட்டினீர் -தானே கண்டு மீள மாட்டாதே -நோக்கி இருந்த படி கண்டாயே -முறுவல் இருந்தபடி கண்டாயே -என்று காட்டிக் கொடுத்து கெடுத்தி கோளே

சங்குவில் வாள்தண்டு சக்கரக் கையற்கு
செங்கனி வாய்ச்செய்ய தாமரைக் கண்ணற்கு
கொங்கலர் தண்ணந் துழாய் முடி யானுக்குஎன்
மங்கை இழந்தது மாமை நிறமே.–6-6-2-(3507)-ஸ்ரீ பஞ்சாயுதங்களின் சேர்த்தி அழகிலே யாயிற்று இவள் ஈடுபட்டது –இவளுடைய நிறம் கொள்ளுகைக்கு எத்தனை ஆபரணம் வேணும் -ஸ்மிதமும் நோக்கும் போலே ஆயுதச் சேர்த்தியும் தகுதியாய் இருக்கிற படி-

கற்பகக் காவன நற்பல தேளாற்கு
பொற்சுடர்க் குன்றன்ன பூத்தண் முடியற்கு
நற்பல தாமரை நாண்மலர்க் கையற்கு என்
விற்புரு வக்கொடி தோற்றது மெய்யே.–6-6-6-(3511)-நன்றாய் பலவாய் செவ்வித் தாமரை பூ போலே இருக்கிற திருக் கையை உடையவனுக்கு –

ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?
தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ.–6-9-9-(3547)-வரையாதே எல்லார்க்கும் கொடுக்கும் நிரதிசய போக்யமான திருவடிகளில் -அழைத்துக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ –விஷயாந்தர தர்சன மாத்திரத்திலே முடியும் படி யானாலும் அணித்தாகாதோ -தாவி வையம் கொண்ட -என்கிறது உபாய அம்சம் –தடந்தா மரை கள் -என்கிறது உபேய அம்சம் –கூவிக் கொள்ளும் காலம்-என்று தாம் சென்று காண்கை அன்றிக்கே தானே அழைத்துக் காட்டுகை முறையாகையாலே கிட்டும் பிரகாரம் சொல்லுகிறது-

கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல்லசுரர் குலமெல்லாம்
சீறா எரியும் திருநேமி வலவா! தெய்வக் கோமானே!
சேறார் சுனைத்தா மரை செந்தீ மலரும் திருவேங் கடத்தானே!
ஆறா அன்பில் அடியேன்உன்னடி சேர் வண்ணம் அருளாயே.–6-10-2-(3551)-அறாக்கயமான சுனைகளிலே அக்னி ஜ்வலிக்கிறால் போலே தாமரை பரப்பு மாற பூக்கையாலே நிரதிசய போக்யமான திருமலையில் நித்ய வாசம் பண்ணுகிறவனே-

எந்நாளே நாம் மண்ணளந்த இணைத்தாமரைகள் காண்பதற்கென்று
எந்நாளும் நின் றிமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனமினமாய்
மெய்ந்நா மனத்தால் வழிபாடு செய்யும் திரு வேங்கடத்தானே!
மெய்ந்நான் எய்தி எந்நாள் உன்னடிகள் அடியேன் மேவுவதே?–6-10-6-(3555)--நித்ய ஸூரிகள் பாசுரம் இருக்கிற படி -பரம பதத்தில் மேன்மையை அனுசந்திக்கிற நாம் சர்வ ஸூலபமான திருவடிகளைக் கிட்டுவது என்றோ -என்று -இங்குள்ளார் அங்குப் போவது மேன்மையை அனுபவிக்க -அங்குள்ளார் இங்கு வருவது சீல குண அனுபவம் பண்ண -விஷயம் உண்டாகையாலே வ்யக்தமாக அனுபவிக்க லாவது இங்கே -சங்கோசம் அற்றவர்களுக்கும்-எந்நாள் என்னும் படி இறே சீல குணத்தில் ஏற்றம்

என் பரஞ்சுடரே! என்று உன்னை அலற்றி உன் இணைத் தாமரைகட்கு
அன்புருகி நிற்குமது நிற்கச் சுமடு தந்தாய்
வன் பரங்கள் எடுத்து ஐவர் திசை வலித்து எற்று கின்றனர்
முன் பரவை கடைந்த அமுதம் கொண்ட மூர்த்தியோ–7-1-10-!–(3570) எனக்கு நிரதிசய போக்யனானவனே-அந்யோன்யம் ஒப்பாய் ஸ்ப்ருஹணீயமான உன்திருவடிகளில் உண்டான ப்ராவண்யத்தால் சிதிலனாய் நிற்கும் அந்த புருஷார்த்தத்தை ஒழிய-

கங்குலும் பகலும் கண்துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்; ‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்; இரு நிலம் கைதுழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-(3572)-இரண்டு ஆழ்வார்கள் அளவும் வந்து அலை ஏறி கிற கண்களின் அழகை இடைவிடாதே சொல்ல நினைத்து தளரா நின்றாள் –தாமரைக் கண்களால் நோக்காய் -என்கிறபடியே திருக் கண்களால் நோக்கி அருள வேணும் -என்று உபக்ரமித்து -ஹஸ்த சேஷ்டையாலும் தலைக் கட்ட மாட்டாதே தளரா நின்றாள் –ராமம் ரக்தாந்த நயன மபஸ்யந்தீ ஸூ துக்கிதா -இங்கனம் தளரலாமோ-தத் தஸ்ய என்று இருக்க வேண்டாவோ என்ன –‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்;-பர வ்யூஹ வைபவங்களில் ஆசைப்பட்டேனோ தூரஸ்தன் என்று ஆறி இருக்க ?-அவதாரங்களில் ஆசைப் பட்டேனோ சமகாலம் அன்று என்று ஆறி இருக்க ?உன்னை -என்கிறது வடிவு அழகையும் சீலாதிகளையும் -இவளை அறியாது ஒழிந்தால் உம்மையும் அறியாது ஒழிய வேணுமோ -உம்மைக் கண்ணாடி புறத்திலும் கண்டு அறியீரோ -அநந்தரம் வரக் காணாமையாலே

என் செய்கின் றாய்? என் தாமரைக் கண்ணா! என்னும் கண்ணீர் மல்க இருக்கும்
என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய்! என்னும் வெவ் வுயிர்த் துயிர்த் துருகும்
முன் செய்த வினையே முகப்படாய் என்னும் முகில்வண்ணா! தகுவதோ என்னும்
முன் செய்திவ் வுலகம் உண்டு மிழ்ந் தளந்தாய்! என் கொலோ முடிகின்றது இவட்கே?–7-2-2-(3573) தாமரைக் கண் என்றே தளரும் -என்று தளர்த்திக்கு உடலானது இப்போது தாரகமாகச் செல்லுகிறது -நீர் ஏறுண்டார்க்கு அந் நீரைத் தெளித்து ஆஸ்வசிப்பிக்குமா போலே -எனக்கு ஆற்றாமையை விளைத்த கண்களாலே என் ஆர்த்தி தீர்க்கப் பார்த்தாயோ இல்லையோ -கண்களால் பிறர்க்கு ஆகாதபடி பண்ண அமையுமோ -சதா தரிசனத்தையும் பண்ண வேண்டாவோ -முதலிலே நானும் என் உடைமையும் நீ இட்ட வழக்கு அன்றோ -என்று கண்ணாலே சொன்ன வார்த்தை ப்ரதிஜ்ஜா மாத்ரமாய் அமையுமோ -அது அர்த்தகிரியாகாரியாக வேண்டாவோ

வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்! என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்!
வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த வேத ஒலியும் விழாவொலியும்
பிள்ளைக் குழா விளையாட்டொலியும் அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானே- .–7-3-1-(3583)-ஸ்யாமமான வடிவுக்கு பரபாகமான வெண்மையையும் சுரியையும் யுடைய ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் -மற்றைக் கைக்கு ஆபரணமான திரு வாழி -இரண்டு ஆழ்வார்கள் அளவும் வந்து அலை எறிகிற கண்கள் -சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் தாமரைக் கண் என்றே தளரும் -என்று கீழ் வாசிதமானது பிரகாசிக்கிற படி –ஜிதந்தே என்னப் பண்ணுகைக்கு திருக் கண்களோடு திவ்யாயுதங்களோடு வாசி இல்லை

செங்கனி வாயின் திறத்ததாயும் செஞ்சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும்
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்
திங்களும் நாளும் விழா வறாத தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ! நாணும் நிறையும் இழந்ததுவே.–7-3-3-(3585)ஆயுதமும் ஆபரணமு மாய் இருக்கிற ஆழ்வார்களுடைய சேர்த்தியைக் கண்டு உகந்தும்- தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்-தன்னோட்டை சம்பந்தம் எல்லாம் தோற்றும் படி நோக்கின கண் அழகிலே அநந்யார்ஹ சேஷமாயும்

பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!
பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ!
தாமரைக் கண்ணாவோ!தனியேன் தனி ஆளாவோ!
தாமரைக் கையாவோ! உன்னை என்று கொல் சேர்வதுவே?–7-6-1-(3616)–இத்தை உண்டாக்கி நோக்கின அளவேயோ –போக்யத்தை இல்லை என்று தான் ஆறி இருக்கிறேனோ -உமக்கு வேண்டுவது என் -என்ன –அவலோகந தாநேந பூயோ மாம் பாலய -என்கிறபடியே அழகிய திருக் கண்களால் நோக்கி அருள வேணும் –தாமரைக் கையாவோ! –ஸோ அப்யேநம் -என்றும் அப்யேஷ ப்ருஷ்ட்ட்டே மம ஹஸ்த பத்மம் கரிஷ்யதி என்றும் சொல்லுகிற படியே திருக் கையில் அடையாளங்கள் என் உடம்பிலே இலச்சினை பட திருக் கைகளால் ஸ்பர்சிக்கவும் பெற்றிலேன் –அக்ரூரனோ பாதியும் போரேனோ நான் -கரேணம் ருது நா தேவ பாபாந்நிர் மோசயன் ஹரிஉன்னை என்று கொல் சேர்வதுவே?பூர்ணே சதுர்தசே வர்ஷே ப்ஞ்சம்யாம் -என்று நாள் இட்டு கொடுக்கலாவது தம்பி மார்க்கோ -அடியார்க்குச் செய்யலாகாது –

ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங் கொலோ அறியேன்
ஆழியங் கண்ண பிரான் திருக்கண்கள் கொலோ அறியேன்
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றுங் கண்டீர்
தோழியர் காள்!அன்னைமீர்!என் செய்கேன் துயராட்டியேனே.–7-7-1-(3627)பார்த்த பார்த்த இடம் எல்லாம் அதுவேயாய் இறாய்க்க பார்த்த இடத்தே வந்து நிற்கும் -நாண் மலர் என்று சம்ச்லேஷ தசையில் செவ்வியை சொல்லுகிறாள் –நைவ தம்சான் நமஸகான் -என்று பிரிந்த பின்பு அத்தலையில் உள்ளது எல்லாம் அறியாளே-வந்து தோன்றுங் உருவு வெளிப்பட்டால் வந்தது என்று இருக்கிறாள் அல்லள் -அத் தலையாலே வந்தது என்று இருக்கிறாள் –

கோளிழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்
கோளிழைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோளிழை யாவுடைய கொழுஞ்சோதி வட்டங்கொல்? கண்ணன்
கோளிழை வாண் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே.–7-7-8-(3634)-கோளிழைத் தாமரையும்-முடிக்கையில் ஒருப்படுகிற தாமரை என்னுதல் -தன் ஒளியே தனக்கு ஆபரணமான தாமரை என்னுதல் -இழையைக் கொள்ளப் பட்ட தாமரை என்னுதல் –பொற்காற்றாமரை-நூற்காற்றாமரை -என்று சில பேதம் உண்டு -அந்த நூற்காற்றாமரைச் சொல்லுகிறது –

கள்ளவிழ் தாமரைக் கண் கண்ணனே!எனக்கு ஒன்று அருளாய்
உள்ளதும் இல்லதுமாய் உலப்பில்லனவாய் வியவாய்
வெள்ளத் தடங்கடலுள் விட நாகணை மேன் மருவி
உள்ளப் பல்யோகு செய்தி இவை என்ன உபாயங்களே!–7-8-4-(3641)அப்போது அலர்ந்த தாமரைப் பூ போலே இருக்கிற திருக் கண்களை யுடையனாய் –பவ்யனாய் இருக்கிறவனே -அவனுடைய திருக் கண்கள் போலே யாயிற்று இவருக்கு விபூதியும் ஆகர்ஷகமாய் இருக்கிறபடி -கீழில் திருவாய் மொழியில் –தாமரை நாண் மலர் போல் -என்று பாதகமானது தானே இறே இப்போது அனுகூலமாய் இருக்கிறது

வேண்டிச் சென்று ஓன்று பெறுகிற்பாரில் என்னுடைத் தோழியர் நுங்கட்கேலும்
ஈண்டு இது உரைக்கும்படியை அந்தோ காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்
காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன் விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால்
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான் எத்தனை காலம் இளைக்கின்றேனே ?–8-2-2-(3683)-காணத்தக்கு இருந்துள்ள கண்களை யுடையவன் -சதா தர்சன யோக்கியமான கண்கள் -விகாசம் செவ்வி குளிர்த்தி நாற்றம் இவற்றால் பங்கஜ சத்ருசமாய் இருக்கை –-கள்வன்-நானும் என் உடைமையும் உன்னதன்றோ என்று ஒரு கால் தன் செல்லாமையை ஆவிஷ்கரித்து ஆத்மாத்மீயங்களை அபஹரித்தவன்-

மாயக் கூத்தா வாமனா வினையேன் கண்ணா கண் கை கால்
தூய செய்ய மலர்களா சோதித் செவ்வாய் முகிழதா
சாயல் சாமத் திருமேனி தண் பாசடையா தாமரை நீள்
வாசத்தடம் போல் வருவானே ஒரு நாள் காண வாராயே
-8-5-1-(3715)-ஒளியை யுடைத்தாய் ஸ்யாமமான திருமேனி குளிர்ந்த பச்சிலையாக -புருஷ புண்டரீகாப -அக்கமலத்து இலை போலும் திரு மேனி -என்ன கடவது இறே-தாமரை நீள்-வாசத்தடம் போல் வருவானே-பரப்பு மாற தாமரை அலர்ந்து இருப்பதாய் ஏகார்ணவத்தை ஒரு தாமரை தடாகம் ஆக்கினால் போலே பரந்து இருப்பதாய் -அப்பரப்பு அடங்க பரிமளம் நிரம்பி இருபத்தொரு தடாகம் நடந்து வருமா போலே யாயிற்று -பரிமளம் முன்பே அலை எறிய வரும் போது இருப்பது -சர்வ கந்த என்ன கடவது இறே –வருவானே-வரும் ஸ்வ பாவனே-முன்பு தம் பக்கல் வரும்படியை யுபகார ஸ்ம்ருதியாலே சொல்லுகிறார்-

கொண்மின் இடர்கெட உள்ளத்துக் கோவிந்தன்
மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை
மண்ணவர் தாம் தொழ வானவர் தாம் வந்து
நண்ணு திருக் கடித் தான நகரே-8-6-7-(3732)–சர்வ ஸூலபனானவனுடைய -சகல லோகங்களையும் அளந்த –ஒண் தாமரை-ஒரு செவ்விப் பூவைக் கொண்டாயிற்று அளந்தது-மண்ணவர் தாம் தொழ -ஸுலபயத்தையும் போக்யதையும் அறிய மாட்டாத அஞ்ஞர் தொழ-தாம் வந்து-பரமபதம் நித்ய ஸூரிகளுக்கே யாய் இருக்குமா போலே -உகந்து அருளின தேசம் சம்சாரிகளுக்கேயாய் இருக்கை -அந்தர்க்கு வைத்த இறையிலியில் கண்ணுடையார்க்குப்பிராப்தி இல்லை இறே

பொருள் மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் சீர்க்கத்
தருமேல் பின்னை யார்க்கவன் தன்னைக் கொடுக்கும்
கரு மாணிக்கக் குன்றத்துத் தாமரை போல்
திரு மார்வு கால் கண் கை செவ்வாய் யுந்தியானே–
8-7-6-(3742)-கரு மாணிக்கக் குன்றத்துத் -ஆச்சர்யத்துக்கு துருதாந்தம் –-தாமரை போல்-அவயவ சோபைக்கு திருஷ்டாந்தம் –
திரு மார்வு -புருஷகாரமான பிராட்டி இருக்கிற திரு மார்வு-கால் -அச்சேர்த்திக்கு தோற்று விழும் திருவடிகள்-கண் -திருவடிகளிலே விழுந்தாரை குளிர நோக்கும் திருக் கண்கள்-கை -அவர்களை எடுத்து அணைக்கும் கை-செவ்வாய் -இந்த சொல்லுச் சொல்லும் திருவதரம்-யுந்தியானே–அவர்களுக்கு அனுபாவ்யமான திரு உந்தி –உந்தி மேலதன்றோ-என்ன கடவது இறே-

கருமாணிக்க மலை மேல் மணித் தடந்தாமரைக் காடுகள் போல்
திரு மார்பு வாய் கண் கை உந்தி காலுடை யாடைகள் செய்ய பிரான்
திருமால் எம்மான் செழு நீர் வயல் குட்ட நாட்டுத் திருப் புலியூர்
அருமாயன் பேரன்றிப் பேச்சிலள் அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ–8-9-1-(3759)-குளிர்ந்து பிரகாசகமாய் -நிரதிசய போக்யமாய் இருக்கும் வடிவு -அனுபவிப்பாருடைய மனஸ்ஸூக்கு தாப ஹரமாய் -பிரகாசகமுமாய் -அபரிச்சின்ன போக்யமுமாய்-இருக்கை -கறுத்த இருள் நீக்குவதொரு மலை -என்றுமாம் –மணித் தடந் தாமரைக் காடுகள் போல்-தெளிந்த தடாகத்தில் பரப்பு மாற பூத்தால் போலே யாயிற்று -திவ்யயவங்களும் வடிவும் இருப்பது –-திரு மார்பு-திருமார்வுக்குச் சிவப்பு பிராட்டி சந்நிதானத்தாலே-வாய்-அவள் வழி யாலே உறவு பண்ணினார்க்கு அனுகூல பாஷணம் பண்ணும் திருவதரம்-கண் -இன் சொல்லு சொல்லப் புக்கு தடுமாறினால் குறையும் தலைக் கட்டிக் கொடுக்கும் கண் –-கை-அந்த நோக்குக்குத் தோற்றாராய் அணைக்கும் கை-உந்தி-உத்தேச்ய பூமியிலே விழா நின்றால்-நடுவே கால் கட்ட வற்றான யுந்தி –-கால் -இவை இத்தனைக்கும் தொற்று விழும் திருவடிகள்
உடை யாடைகள் -அங்கே கிடந்து அனுபவிக்கும் திருப் பீதாம்பரம் –திருக் கமல பாதம் -என்னா -சிவந்தவாடை -என்ன கடவது இறே –-செய்ய பிரான்-இவ்வவயவ சோபை யுடைய பக்தா நாம் -என்று இருக்குமவன் –-திருமால்-அழகே யன்று -இவளுக்கு ஈடான மேன்மையும் உண்டு –யஸ்ய சா ஜனகாத் மஜா –அப்ரமேயம் ஹி தத் தேஜஎம்மான் -இவளுக்கு இவன் போருமோ என்னாத படி வி லஷணனாய் பெற்ற ப்ரீதியாலே என்னாயன் என்கிறார்

புனையிழைகள் அணிவும் ஆடையுடையும் புது கணிப்பும்
நினையும் நீர்மையதன்று இவட்கிது நின்று நினைக்கப் புக்கால்
சுனையினுள் தடந்தாமரை மலரும் தண் திருப் புலியூர்
முனைவன் மூவுலகாளி அப்பன் திருவருள் மூழ்கினளே–8-9-5-(3763)–பொய்கைகளிலே தாமரை மலரும் -பொய்கைகளில் தாமரை கண் செறி இட்டால் போலே பூத்து மலர்ந்து நிற்கும் வூர் -அவ் வூரில் பதார்த்தங்கள் பிறர்க்கு இடம் கூடாது என்கிறாள் –-தண் திருப் புலியூர்-முனைவன் மூவுலகாளி-அவ் வூருக்கு பிரதானம் -அவ்வளவு அன்றிக்கே ஸமஸ்த லோகங்களுக்கும் நிர்வாஹகன்-அப்பன் – ஐஸ்வர்யத்தாலும் குறைவறப் பெற்றேன் -என் தன் ப்ரீதியால் சொல்லுகிறாள் -அவனுடைய
திருவருள் மூழ்கினளே––கடல் கொண்ட வஸ்துவை யன்றோ நீங்கள் மீட்கப் பார்க்கிறது

பரவாள் இவள் நின்று இராப்பகல் பனி நீர் நிறக் கண்ணபிரான்
விரவாரிசை மறை வேதியரொலி வேலையின் நின்று ஒலிப்ப
கரவார் தடந்தொறும் தாமரைக்கயம் தீவிகை நின்றலரும்
புரவார் கழனிகள் சூழ் திருப் புலியூர்ப் புகழ் அன்றி மற்றே–8-9-9-(3767)-முதலை மிக்கு இருந்துள்ள தடாகம் தோறும் —கரவு -முதலை /-தாமரைக் கயம் -தாமரை பெருமை –தாமரைத் திரள் -தடவும் கயவும் நளியும் பெருமை -என்ன கடவது இறே / தீவிகை நின்றலரும்-– நிலை விளக்கு எரியுமா போலே அலரா நின்றன –

பண்டை நாளாலே நின் திரு வருளும் பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால் குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1-(3792)-அடிமை செய்கிற அடியோங்கள் பக்கலிலே கிருபை பண்ணி-சோதி வாய் திறந்து -பூ அலருமா போலே யாயிற்று வாய் திறந்து அருளிச் செய்யும் போது திருமுகத்தில் பிறக்கும் செவ்வி -மாமக்ரூரேதி வஹ்யதி என்று வார்த்தை அளவிலே யாயிற்று அக்ரூரன் அனுபவித்தது -தத் காலத்திலே திரு முகத்தில் செவ்வியும் உத்தேச்யமாய் இருக்கிறதாயிற்று இவர்க்கு –-உன்-தாமரைக் கண்களால் நோக்காய்--வார்த்தை யில் தோற்றாத பந்தமும் நோக்கிலே அனுபவிக்கும் படி குளிர நோக்கி யருள வேணும் –அவலோக நதா நேந பூயோ மாம்பால யாவ்யய

கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி உன் திரு வுடம்பு அசைய
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி
தடம் கொள் தாமரைக் கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ வுலகும் தொழ விருந்து அருளாய் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-3-(3794)-வழி வரும் தொண்டரோர்க்கு அருளி-நெறி தப்பாதே வருகிற அடியோங்களுக்கு கிருபை பண்ணி – இம் மூன்று பாட்டிலும் தம்முடைய யோக்யதையைச் சொன்னால் போலே இருக்கும் -அது அன்று சொல்கிறது -ஒருவருக்கே சேஷமாய் இருப்பாரை வேறு முகம் பார்ப்பார் யுண்டோ என்று தம்முடைய அநந்ய கதித்வத்தை சொல்கிறார்-தடம் கொள் தாமரைக் கண் விழித்து-பொய்கையை விழுங்கின தாமரை போலே இடமுடைத்தான திருக் கண்களாலே குளிர நோக்கி-நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்-நீ எழுந்து அருளி இருந்து -உணர்ந்து அருளும் போதை செவ்வியை அனுபவிக்க வேணும் –மாரி முலை முழைஞ்சில் -என்கிறபடியே –உன் தாமரை மங்கையும் நீயும் -பிராட்டியும் தேவரும் சேர இருந்து -எனக்கு காட்டித் தர வேணும் –பங்கயத்தாள் திருவருளும் -என்று ஆஸ்ரயண தசையாகையாலே புருஷகார பாவத்தை சொல்லிற்று கீழ் -அடிமை செய்யும் இடத்திலும் இருவரும் சேர்ந்த சேர்த்தியிலே அடிமை செய்யக் கடவது -என்னுமத்தை பற்றச் சொல்லுகிறது இங்கு

பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வந்து நின் பல் நிலா முத்தம்
தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக் கண் தாமரை தயங்க நின்று அருளாய்
பவள நன் படர்க் கீழ் சங்கு உறை பொருநல் தண் திருப் புளிங்குடி கிடந்தாய்
கவள மாக் களிற்றின் இடர் கெடத் தடத்துக் காய்சினப் பறவை ஊர்ந்தானே–9-2-5-(3796)கதிர் தவழும் படி -கதிர் புறப்படும் படி -முறுவல் செய்து-நின் திருக் கண்தாமரை தயங்க நின்று அருளாய்-திருக் கண்கள் ஆகிற தாமரை விளங்க நாலடி வந்து -முடிய வர மாட்டாதே ஸ்தப்தனாய் நிற்கும் நிலையைக் காண வேணும் -கண்ணினுடைய ஸ்மிதம் இருக்கும் படி –தயங்குகை -தத் காலத்தில் ஒளி யாதல் -கடல் சலித்தால் போலே அசைந்து வருகிறபடி யாதல் –

எம்மிடர் கடிந்து இங்கு என்னை யாள்வானே இமையவர் தமக்கும் ஆங்கனையாய்
செம்மடல் மலரும் தாமரைப் பழனத் தண் திருப் புளிங்குடிக் கிடந்தாய்

நம்முடை யடியார் கவ்வை கண்டுகந்து நாம் களித்துள நலம் கூர
இம்மட வுலகர் காண நீ யொரு நாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே–9-2-7-(3798)-எங்களுடைய சாம்சாரிக சகல துக்கங்களையும் போக்கி –-இங்கு – என்னை யாள்வானே-பகவத் ஞானத்துக்கு அடைவு இல்லாத இஹ லோகத்தில் அடிமை கொள்ளுகிறவனே –-இமையவர் தமக்கும் ஆங்கனையாய்-–அகிஞ்சனரான எங்களுக்கே அன்றிக்கே –ஈஸ்வரோஹம் -என்று இருக்கிற ப்ரஹ்மாதிகளுக்கும் அங்கு அப்படி நிர்வாஹகன் ஆனவனே –செம்மடல் மலரும் தாமரைப் பழனத்-தண் திருப் புளிங்குடிக் கிடந்தாய்-சிவந்த மடல் -மலரா நின்றுள்ள தாமரையை யுடைய நீர் நிலங்களை யுடைத்தாய் ஸ்ரமஹரமான திருப் புளிங்குடியிலே கண் வளர்ந்து அருளுகிறவனே –

தாள தாமரையான் உனதுந்தியான்
வாள் கொள் நீள் மழு வாளி உன்னாகத்தான்
ஆளராய்த் தொழுவாரும் அமரர்கள்
நாளும் என் புகழ் கோ உனசீலமே–9-3-10-(3812)–தாமரைப் பூவை உத்பத்தி ஸ்தானமாக யுடைய ப்ரஹ்மா உன் திரு நாபியைப் பற்றி வர்த்தியா நின்றான் -கமல யோனித்துவத்தாலே வந்த துர்மானத்தை யுடையவனுக்கு இறே உடம்பு கொடுத்தது-

கூட்டுண்டு நீங்கிய கோலத் தாமரைக் கண் செவ்வாய்
வாட்டமில் என் கரு மாணிக்கம் கண்ணன் மாயன் போல்
கோட்டிய வில்லோடு மின்னும் மேகக் குழாங்கள் காள்
காட்டேன்மின் நும் உரு என் உயிர்க்கு அது காலனே–9-5-7-(3831)-ஏக தத்வம் என்னும் படி கலந்து பிரிந்த பின்பு அவனுடைய அவயவ சோபை இருந்த படி என்னுதல் -இவளோடு கலக்கையால் வந்த சோபை என்னுதல் – கோலத் தாமரைக் கண் செவ்வாய்–தர்ச நீயமான தாமரை போலே இருக்கிற கண்ணையும் சிவந்த வாயையும் உடையவனாய் – வாட்டமில் என் கரு மாணிக்கம்-பிரிந்த பின்பும் மறக்க ஒண்ணாத படி ஸ்மாரகமாய் நலிகிற நீல ரத்னம் போலே இருக்கிற நிறத்தை யுடையனாய் –கலந்த போதை வடிவில் பிரிந்த செவ்வி பிரிந்த பின்பும் அப்படியே இருக்கிற படியைச் சொல்லிற்று ஆகவுமாம் –
இத்தலையை வெறும் தரை ஆக்கின பின்பு நிறம் இரட்டித்த படி –நைவ தம்சான் ந மசகான்-என்று அவன் இருக்க அரை க்ஷணம் தாழ்த்தான் என்னா இவ்வார்த்தையைச் சொல்லுகிறாள் இறே
கண்ணன் மாயன் போல்-ஆச்சர்ய பூதனான கிருஷ்ணனைப் போலே -கலந்த போது காலைக் கையைப் பிடித்து பரிமாறி பவ்யனாய் இருந்த படி-

பண்புடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேன்மின்
புண்புரை வேல்கொடு குத்தால் ஒக்கும் நும் இன்குரல்
தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும்
கண் பெரும் கண்ணன் நம் ஆவி உண்டு எழ நண்ணினான்-
9-5-9-(3833)குளிர்ந்த பெரிய நீரை யுடைய பொய்கையிலே தாமரைப் பூ அலர்ந்தால் போலே யாய் அவ்வளவு இன்றிக்கே பெரிய கண்களை யுடைய கிருஷ்ணன்-நம் ஆவி உண்டு எழ நண்ணினான்–அவ் அழகைக் காட்டி என்னை முடித்துப் பிரிந்து போனான் –

ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது
பேர் இதழ்த் தாமரைக் கண் கனிவாயது ஓர்
கார் எழில் மேகம் தென் காட் கரை கோயில் கொள்
சீர் எழில் நால் தடம் தோள் தெய்வ வாரிக்கே–9-6-9-(3844)-தம்மை நோவு படுத்தின வற்றை சொல்லுகிறார் -பெரிய இதழை யுடைய தாமரை போலே இருந்துள்ள கண்ணையையும் சிவந்த வாயையும் யுடையனாய் –-கார் எழில் மேகம் தென் காட் கரை கோயில் கொள்--கறுத்த எழிலை யுடைத்தான மேகம் போலே வடிவை யுடையனாய் -திருக் காட்கரையை கோயிலாக யுடையனாய்

தக்கிலமே கேளீர்கள் தடம் புனல் வாய் இரை தேரும்
கொக்கினங்காள் குருகினங்காள் குளிர் மூழிக் களத்து உறையும்
செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக்கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே
–9-7-3-(3849)-இக் குளிர்த்திக்கு அடியான அகவாயில் வாசத்தடம் இருக்கிற படி -சிவந்து அலர்ந்த தாமரை போலே இருக்கிற கண் முதலான திவ்ய அவயவங்களை யுடையவன் –முதல் உறவு பண்ணும் கண் -அந்நோக்குக்குத் தோற்றாரை அணைக்கும் கை -ஸ்பர்சத்துக்கு தோற்றார் விழும் திருவடிகள் -திருவடிகளில் விழுந்தாரை சாந்த்வனம் பண்ணி தரிப்பிக்கும் முறுவல் –அக் கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே––அவர்களுக்கு உஜ்ஜீவனமான வடிவு -அவயவங்களை பரபாகமான செந்தாமரை இலை போலே யாய்த்து திரு மேனி -வெண்டாமரை என்னில் விஜாதீயம் என்று –அக் கமலம் -என்கிறது —அடிகளுக்கு –வடிவு அழகையும் அவயவ சோபையையும் காட்டி எழுதிக் கொண்டவர்க்கு இவ் வடிவுக்குத் தோற்று வைவர்ணயத்தை தரித்து இருப்பார் யோக்யர் அல்லரோ என்று கேட்டுப் பாருங்கோள் –

மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ வண் குறிஞ்சி இசை தவரும் ஆலோ
செல்கதிர் மாலையும் மயக்கும் ஆலோ செக்கர் நன் மேகங்கள் சிதைக்கும் ஆலோ
அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ –9-9-1-(3869)-அல்லி யம் தாமரைக் கண்ணன் -அல்லியை யுடைத்தான அழகிதான தாமரை போலே இருந்த திருக் கண்களை யுடையவன் -முதல் உறவு பண்ணுவது கண்ணாலே இ றே -த்ருஷ்ட்டி பந்தம் பிறந்தால் இறே சம்ச்லேஷம் யுண்டாவது -எம்மான் -அவ் வழகாலே என்னை அநன்யார்ஹை யாக்கினவன்
ஆயர்கள் ஏறு -அவ் வழ காலே இடையரைத் தோற்பித்தால் போலே -தன்னோடு ஒத்த ஆண்களை தோற்பிக்குமவன் -பெண் பிறந்தாரை நோவு படுத்தச் சொல்ல வேண்டாம் இ றே -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணம்-என்கிறபடியே-அரி ஏறு எம் மாயோன்-என்னை அநன்யார்ஹை யாக்கி-என்னோடே கலந்து அத்தாலே பெறாப் பேறு பெற்றானாய் மேநாணிப்பு தோற்ற இருக்கிற படி -ஸிம்ஹ ஸ்ரேஷ்டம் –எம் மாயோன் -சம்ச்லேஷ தசையில் காலைக் கையைப் பிடித்து தாழ நின்று பரிமாறினவன் -பேர நின்ற அநந்தரம் தரிப்பு அரிதாம் படி யாயிற்று பரிமாறிற்று –

இனி இருந்து என் உயிர் காக்குமாறு என் இணை முலை நமுக நுண்ணிடை நுடங்க
துனியிரும் கலவி செய்து ஆகம் தோய்ந்து துறந்து எம்மை விட்டு அகல் கண்ணன் கள்வன்
தனி இளம் சிங்கம் எம்மாயன் வாரான் தாமரைக் கண்ணும் செவ்வாயும் நீலப்
பனி இரும் குழல்களும் நான்கு தோளும் பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ–9-9-3-(3871)-வன் கண்ணுக்கு விஷயம் ஆகாது ஒழிந்தால் -இவை நெஞ்சுக்கு விஷயம் ஆகாது ஒழிந்தால் ஆகாதோ -தான் போகா நின்றால் -இவற்றை வைத்து போக வேணுமோ -கலந்த போது தன் பேறு என்று தோற்றும் படியான ஹர்ஷம் அடங்க கண்ணிலே தோற்றும் படியான திருக் கண்களை யுடையவன் என்னுதல் –பிரிவை நினைத்து வாய் விட மாட்டாதே ஆற்றாமை அடங்கலும் நோக்கிலே நின்ற நிலை என்னுதல் –செவ்வாயும் -பிரிவை பிரசங்கித்து முடியச் சொல்ல மாட்டாதே போதைச் சிவந்த அதரமும் –நீலப்-பணி இரும் குழல்களும்–கலவியாலே குலைந்து பிரிவை நினைத்து பேண மாட்டாதே போதை -கறுத்துக் குளிர்ந்த பெரிய திருக் குழல்களும் –

தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர்
நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்
காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே-10-1-1-(3891)தாள தாமரைத் –-தாளையுடைய தாமரை -மலையைச் சுமந்தால் போலே பூவின் பெருமையைப் பொறுக்க வல்ல தாளையுடைய தாமரை -சென்டரின் நன்மையாலே உரத்த தாளையுடைய தாமரை -உரம் பெற்ற மலர்க்கமலம் உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட -என்ன கடவது இறே –-தட மணி வயல் -பூவாலே அலங்கரிக்கப் பட்ட தடாகங்களை யுடைய வயல்-திரு மோகூர்-ஊரில் போக்யதை வயலின் நலத்திலே காணும் இத்தனை –

கூத்தன் கோவலன் குதற்று வல்லசுரர்கள் கூற்றம்
ஏத்தும் நம் கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
வாய்த்த தண் பணை வளவயல் சூழ் திரு மோகூர் ஆத்தன்
தாமரை யடி யன்றி மற்று இலம் அரணே–
10-1-6-(3896)–பரம பந்து -தான் தனக்கு அல்லாத மரண சமயத்தில் -அஹம் ஸ் மராமி மத்பக்தம் நயம்மி -என்னும் பரம ஆப்த தமன் –தன்னை அஞ்சின போது அவன் பக்கலிலே ந்யஸ்த பரனாம் படி யான ஆப்த தமன் –-தாமரை யடி யன்றி-அநாப்தன் ஆகிலும் விட ஒண்ணாத படி யாய்த்து -திருவடிகளில் போக்யத்தை –மற்று இலம் அரணே–வேறு சிலரை ரக்ஷகமாக யுடையோம் அல்லோம் -போக்யதை இல்லை யாகிலும் -அநாப்தன் ஆகிலும் புறம்பு புகல் இல்லை என்கை –

மாய்ந்து அறும் வினைகள் தாமே மாவதா வென்ன நாளும்
ஏய்ந்த பொன் மதிள் அனந்த புர நகர் எந்தைக்கு என்று
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல
ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே
–10-2-10-(3911)-அங்குத்தைக்கு தகுதியான
மதிலை யுடைய திருவனந்த புரத்திலே வர்த்திக்கிற என் ஸ்வாமிக்கு என்று புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்க வல்லார்-அந்தமில் புகழினாரே–அமரர் ஆவார் என்கிற அளவன்றிக்கே -விண்ணுளாரிலும் சீரியர் ஆவார் –

வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்காக்
காமரு குயில்களும் கூவும் ஆலோ கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ தகவிலை தகவிலையே நீ கண்ணா–10-3-1-(3913)-நாம் பிரிந்திலோம் –பிரிய நினைத்திலோம் –இப்படி இருக்க போனோமுமாய் -போனால் நலியக் கடவ பதார்த்தங்களும் நலிந்ததாய் இருக்கிற இது ஒரு ப்ரேம ஸ்வபாவம் இருக்கும் படியே -என்று சாதரமாகப் பார்க்க –அழகிய திருக் கண்களால் நோக்கி -நோவு படுத்தா நின்றாய் என்கிறாள் -இந்நோக்கில் காட்டில் நீ பசு மேய்க்கப் போகை யமையும் என்கை முன்புத்தை நோக்கு -ஸ்ம்ருதி விஷயமாக சொல்லுகிறாள் என்பாரும் உண்டு –-ஈர்தி -என்கையாலே -இப்போது பார்த்தானாக வேணும் -இப்படி சொன்ன இடத்திலும் நோக்கை மாற வைத்திலன்–தகவிலை தகவிலையே நீ கண்ணா–தகவிலை-நீ இருந்த லோகத்தில் கிருபை இல்லை -கண்ணா நீ தகவிலை -ஜகத்தில் யுண்டாகிலும் கிருஷ்ணனே உன் பக்கல் கிருபை இல்லை என்னுதல் –வீப்சையாலே-உனக்கு கிருபை இல்லை என்று நான் கொடி எடுக்கிறேன் என்னுதல் —சீதா விவாஸ நபடோ கருணாகுதஸ்தே –சத்யம் சத்யம் புனஸ் சத்யம் உத்தருத்ய புஜமுச்யதே –விலக்காத அளவைக் கொண்டு பிறரை இன்னாதாகிறது என் –உன் பக்கல் கிருபை இல்லை –ஏவமார்த்தா ஸூ யோஜித் ஸூ க்ருபா கஸ்ய நஜாயதே —

பணி மொழி நினைதொறும் ஆவி வேமால் பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா
பிணியவிழ்மல்லிகை வாடை தூவப் பெரு மத மாலையும் வந்தன்றாலோ
மணி மிகு மார்வினின் முல்லைப் போது என் வன முலை கமழ்வித் துன் வாயமுதம் தந்து
அணி மிகு தாமரைக் கையை யந்தோ அடிச்சியோம் தலை மிசை யணியாய்-10-3-5-(3917)-ஆபரண பிரசுரமாய் -அது தான் மிகையாம் படி தனக்குத் தானே ஆபரணமான கையை –அந்தோ -சேர்ந்து குளிர்ந்து விடாயார்க்கு சமைத்து வைத்த தண்ணீரை வார்க்கச் சொல்ல வேண்டுவதே -என் ஆற்றாமையை நான் உனக்கு அறிவிக்க வேண்டும்படி யாவதே –

அசுரர்கள் தலைப்பெய்யில் எவன் கொல் ஆங்கு என்று ஆழும் என்னார் உயிர் ஆன் பின் போகல்
கசிகையும் வேட்கையும் உள் கலந்து கலவியும் நலியும் என் கை கழியேல்
வசி செய் உன் தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக வுடையும் காட்டி
ஓசி செய் நுண்ணிடை இள வாய்ச்சியர் நீ யுகக்கும் நல்லவரோடும் உழி தராயே-10-3-8-(3920)-இனிப் பொருந்தோம் என்று பெண்கள் நெஞ்சில் பிறந்த மறம் எல்லாம் தீரும்படி வசீகரிக்க வல்ல கண்ணும் –
வாயும்-கண்ணாலே நினைத்ததை ஆவிஷ் கரிக்கிற வாயும் – கைகளும்-அந்நோக்குக்கும் ஸ்மித்துக்கும் தோற்ற அளவில் அனுவர்த்தித்து அணைக்கிற கைகளும்-பீதக வுடையும்-அவற்றுக்குத் தோற்று விழும் போது நடுவே தொகையும் திருப் பீதாம்பரமும் –பீதாம்பர தர ஸ்ரக்வீ –-காட்டி--உனக்கு அவர்களை அழைக்கைக்கு பணி யுண்டோ -வடிவைக் காட்ட அமையாதோ-

தலை மேலே தாளிணைகள் தாமரைக் கண் என் அம்மான்
நிலை பேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம்பெருமான்
மலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான் மதம் மிக்க
கொலையானை மருப்பு ஒசித்தான் குரை கழல்கள் குறுகினமே–10-6-6-(3951)-திருவடிகளாலே என் தலையை அலங்கரியா நின்றான் –-தாமரைக் கண் என் அம்மான்–என் முன்னே நின்று கண் அழகைக் காட்டி ஜிதம் எண்ணப் பண்ணா நின்றான்-நிலை பேரான் என் நெஞ்சத்து -ஹிருதயத்தின் நின்றும் கால் வாங்கு கிறிலன்-

முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1-(3990)-இதுவும் ஒரு வியாவ்ருத்தி இருக்கிற படி -முறுவலும் கண்ணுமாய் இருபத்தொரு மாணிக்க மலை போலே யாய்த்து வடிவு இருப்பது -முறுவலையும் தப்பினாரையும் -அகப்படுத்த வற்றான கண் –-என் கள்வா-நான் அறியாமே இவ் வழகைக் காட்டி வஞ்சித்து என்னை அடிமை கொண்டவனே -உன்னதமான ஆத்ம வஸ்துவை அபஹரித்துக் கொண்டு இருக்கிற என்னை விஷயீ கரிப்பதே -நான் அபஹரிக்கைக்கு அடி -கர்மம் -நீ அபஹரிக்கைக்கு அடி வடிவு அழகு –உடையவன் உடைமை பெற்றாலும் அபகாரம் என்னும் படி யாய்த்து ஸ்வாதந்தர்யம் வயிரம் பற்றின படி -நிர்ஹேதுகமாக உன் வடிவு அழகைக் காட்டி என்னை விஷயீ கரித்தவனே -என்று ஆழ்வான் நிர்வாஹம் –

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –