ஸ்ரீ புருஷ ஸூக்தம்–

September 12, 2026

ஸஹஸ்ர சீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்‌ ஸ பூ,மிம்‌ விஸ்வதோ வ்ருத்வா. அத்யதிஷ்டத்‌ தசாங்குலம்‌–1-

புருஷ ஏவேதம் ஸர்வம்‌, யத்‌, பூ,தம்‌. யச்ச பவ்யம்‌ உதாம்ருதத் வஸ்யேசாந:, யத,ந்நேநாதி ரோஹதி-2-

ஏதாவாந் ௮ஸ்‌ய மஹிமா, அதோ ஜ்யாயாம்ச்ச பூருஷ:
பாதோஸ்ய விஸ்வா பூ,தாநி ,த்ரிபாத,ஸ்யாம்ருதம்‌ திவி.–3-

த்‌ரிபாதூர்த்‌வ உதைத்‌ புருஷ; பாதோஸ்யே ஹா பவாத்புந :
ததோ விஷ்வங்‌ வ்யக்ராமத்‌ ஸாசநா நசநே அபி..| -4-

தஸ்மாத்‌, விராட, ஜாயத விராஜோ ௮தி பூருஷ:
ஸ ஜாதோ அத்யரிச்யத பச்சாத்‌ பூ,மிமதோ புர:–5-

யத் புருஷேணே ஹவிஷா, தே,வா யஜ்ஞமதந்வத
வஸந்தோஸ்யா ஸீதஜ்யம்‌, க்ரீஷ்ம இத்‌மச்‌ஸ்ரத்‌தவி:–6-

ஸப்தாஸ்யாஸந்‌ பரித,ய:, த்ரிஸ் ஸப்த ஸமித,: க்ருதா:
தே,வா யத்‌;யஜ்ஞம்‌ தந் வாநா :; அபத்நந்‌ புருஷம்‌ பசும்‌.-7-

தம்‌ யஜ்ஞம்‌ ப,ர்ஹிஷி ப்ரெளக்ஷந்‌, புருஷம்‌ ஜாதம் அக்ரத :
தேந தே,வா அயஜந்த, ஸாத்‌,யா ருஷயச்ச யே. –8-

தஸ்மாத்‌, யஜ்ஞாத்‌ ஸர்வஹுத:, ஸம்ப்‌,ருதம்‌ ப்ருஷதாஜ்யம்‌
பசூம்ஸ்தாம்ஸ் சக்ரே வாயவ்யாந்‌, ஆரண்யாந் க்‌,ராம் யாச்சயே–9-

தஸ்மாத்‌, யஜ்ஞாத்‌ ஸர்வஹுத: ருசஸ்‌ ஸாமாறி ஜஜ்ஞிரே
சந்தராம்ஸி ஜஜ்ஞிரே தஸ்மாத்‌, யஜுஸ்‌ தஸ்மாத, ஜாயத,–10-

தஸ்மாத,ச்வா அஜாயந்த ஏகேசோப,யாத,த:
காவோ ஹ ஐஜ்ஜிரே தஸ்மாத்‌ தஸ்மாத்‌ ஜாதா அஜா வய:–11-

யத்‌ புருஷம்‌ வ்யத,து,: கதிதா வ்யகல்பயந்‌
முக,ம்‌ கிமஸ்ய கெள பராஹ, காவூரு பாதர வுச்யேதே-12-

ப்‌ராஹ்மணோஸ்ய முக,மாஸீத்‌ பாஹூ ராஜந்ய: க்ருத;
ஊரூ ததஸ்ய யத்‌,வைச்ய: பத்‌,ப்‌,யாம்‌ சூத்‌ரோ அஜாயத.–13-

நாப்‌,யா ஆஸீ த,ந்தரிக்ஷம்‌, சீர்ஷ்ணோ த்‌,யெளஸ்‌ ஸம வர்த்தத
பத்ப்‌,யாம்‌ பூ,மிர்‌ தி,சச்‌ ச்ரோத்ராத்‌, ததர லோகாந்‌ அகல்பயந்-15-

நாப்‌,யா ஆஸீ த,ந்தரிக்ஷம்‌, சீர்ஷ்ணோ த்‌,யெளஸ்‌ ஸம வர்த்தத
பத்ப்‌,யாம்‌ பூ,மிர்‌ தி,சச்‌ ச்ரோத்ராத்‌, ததர லோகாந்‌ அகல்பயந்-15-

வேதாஹ மேதம்‌ புருஷம்‌ மஹாந்தம்‌
ஆதித்ய வர்ணம்‌ தமஸஸ்து பாரே
ஸர்வாணி ரூபாணி விசித்ய தீர:
நாமாநி க்ருத்வாபி,வதந்‌ யதாஸ்தே–16-

தாதா புரஸ்தாத்‌, யமுதாஜஹார சக்ர: ப்ரவித்‌,வாந்‌ பரதி ,சச்சதஸ்ர:
தமேவம்‌ வித்‌,வாந்‌ ௮ம்ருத இஹப,வதி நாந்ய: பந்தா: அயநாய வித்‌யதே.-17-

யஜ்ஞேந யஜ்ஞமயஜந்த தே,வா: தாநி தர்மாணி ப்ரதமா ந்யாஸந்
தே ஹ நாகம்‌ மஹிமாநஸ்‌ ஸசந்தே யத்ர பூர்வே ஸாத்‌யாஸ்‌ ஸந்தி தேவா–18

உத்தரானுவாகம்‌.
1-அத்ப்‌யஸ்‌ ஸம்பூத: ப்ருதிவ்யை ரஸாச்ச விஸ்வ கர்மணஸ்‌ ஸம வர்த்ததாது,
தஸ்ய த்வஷ்டா விததத்‌, ரூபமேதி தத் புருஷஸ்ய விஸ்வமாஜா நமக்‌ரே.
-1-

வேதாஹமேதம்‌ புருஷம்‌ மஹாந்தம்‌, ஆதித்ய வர்ணம்‌ தமஸ: பரஸ்தாத்‌
தமேவம்‌ வித்‌வாந்‌ அம்ருத இஹ ப,வதி, நாந்ய: பந்தா வித்‌யதேயநாய–2-

ப்ரஜாபதிச்‌ சரதி கர்ப்பே, அந்த:, அஜாயமாநோ பஹுதா விஜாயதே
தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம்‌, மரீசீகாம்‌ பதமிச்சந்தி வேத,ஸ:3-

யோ தே,வேப்‌,ய ஆதபதி, யோ தே,வாநாம்‌ புரோ ஹித:.
பூர்வா யோ தே வேப்‌யோ ஜாத:, நமோ ருசாய ப்‌ராஹ்மயே–4-

தஸ்மாத்‌, விராட, ஜாயத விராஜோ ௮தி பூருஷ:
ஸ ஜாதோ அத்யரிச்யத பச்சாத்‌ பூ,மிமதோ புர:–5-

ருசம்‌ ப்‌ராஹ்மம்‌ ஜநயந்த: தேவா அக்‌ரே தத;ப்‌ருவந்‌
யஸ்த்வைவம்‌ ப்‌ராஹ்மணோ வித்‌யாத்‌ தஸ்ய தே,வா அஸந்‌ வசே.–5

ஹ்ரீச்ச தே லக்ஷ்மீச்ச பத்ந்யெள, அஹோராத்ரே பார்ஸ்வே நக்ஷத்ராணி ரூபம்‌ அஸ்விநெள வ்யாத்தம்‌ இஷ்டம்‌ மநிஷாண அமும்‌ மநிஷாண ஸர்வம்‌ மநிஷாண,-6-

ஸஹஸ்ர சீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்‌ ஸ பூ,மிம்‌ விஸ்வதோ வ்ருத்வா. அத்யதிஷ்டத்‌ தசாங்குலம்‌–1-
[புருஷனென்று சொல்லப்படும்‌ நாராயணன்‌ அநந்தமான தலைகளையும்‌, எண்ண முடியாத கண்களையும்‌, அநேகம்‌ கால்களையும்‌ உடையவர்‌. அவர்‌ பூமியை நான்கு புறத்திலும்‌ வியாபித்து அநந்த யோஜன ப்ரமாணமான ப்ரம்ஹாண்டத்தை ஆக்ரமித்தார்‌.

“ஸஹஸ்ர சீர்ஷா இத்யத்ர ஸஹஸ்ர அநந்த வாசக:-அநந்த யோஜநம்‌ ப்ராஹத,சாங்குலவசஸ்‌ ததா தஸ்ய ப்ரதமயா விஷ்ணோர்‌ தே சதோ வ்யாப்திருஸ்யதே”
[“ஸஹஸ்ர சீர்ஷா””
 என்னுமிடத்தில்‌ ஸஹஸ்ர சப்தம்‌ அநந்தம்‌ என்னும்‌ அர்த்தத்தைச்‌ சொல்லுகிறது. தசாங்குல பதம்‌ அநந்த யோஜனையைச்‌ சொல்லுகிறது. புருஷ ஸூக்தத்தின்‌ முதல்‌ மந்திரத்‌தினால்‌ விஷ்ணுவினுடைய ஸர்வ தேச வ்யாப்தி சொல்லப்படுகிறது] என்று புருஷ ஸம்ஹிதையில்‌ இந்த முதல்‌ மந்திரத்தின்‌ அர்த்தம்‌ சொல்லப்பட்டது.

(ஸஹஸ்ரசீர்ஷா)கணக்கற்ற தலைகளை உடையவன்‌, இங்கு தலை என்பது எல்லா அங்கங்களையும்‌ காட்டுகிறது. மெய்‌, வாய்‌, கண்‌, மூக்கு, செவி என்னும்‌ ஜ்ஞானேந்த்ரியங்கள்‌ ஐந்தையும்‌ உடைத்தாயிருப்பதால்‌ தலை முதலில்‌ எடுக்கப்படுகிறது. இங்கு சீர்ஷ சப்தம்‌ ஜ்ஞானேந்த்ரியங்களால்‌ உண்டாகும்‌ ஜ்ஞானத்தைக்‌ குறிக்கிறது.
ப்ராம்ஹணத்தில்‌ போத,ந மநந ஸ்ரவண ஸ்பர்சந தரர்சந ரஸந க்ராண ஜ்ஞாநாநி ஸ்ருதாநி ப,வந்தீத்யத: சிரஸ் ‘” .[அறிதல்‌, நினைத்‌தல்‌,கேட்பது, ஸ்பர்சம்‌, பார்ப்பது, ரசிப்பது, முகர்வது என்னும்‌ ஞானங்கள்‌ இதனால்‌ அறியப்படுவதால்‌ இது சிரஸ்‌ என்று சொல்லப்‌ படுகிறது] என்று “சிரஸ்‌’ என்னும்‌ சப்தத்தின்‌ பொருள்‌ சொல்லப்‌ பட்டிருக்கிறதன்றோ. இதனால்‌ அபரிமிதமான ‘அறிவை யுடையவன்‌ அநந்தன்‌ என்று அறிவிக்கப்பட்டதாயிற்று. இதையே (ஸஹஸ்‌ராக்ஷ:) என்று விவரித்திருக்கிறது வேதம்‌. ‘“ஸர்வேந்த்‌ரியாணாம்‌ நயதம்‌ ப்ரதாதம்‌’” என்பதினால்‌ கண்‌ எடுக்கப்பட்டது. இவ்விடக்‌ தில்‌ கண்‌” என்னும்‌ பதம்‌ ஐந்து ஜ்ஞானேந்த்ரியங்களையும் காட்டி புருஷோத்தமன்‌ அநந்தமான ஜ்ஞானத்தை யுடையவன்‌ என்று விளக்குகிறது. (ஸஹஸ்ரபாத்‌) அளவற்ற திருவடிகளை உடையவன்‌. இங்கு ‘பாத்‌’ என்னும்‌ சப்தம்‌ ஐந்து கர்மேந்த்ரியங்களையும்‌ காட்டுவதன் மூலம்‌ அளவற்ற சக்தியை யுடையவன்‌ என்று அச்யுதன்‌ அறிவிக்கிறது. இவ் விரண்டு பதங்களாலும்‌ அளவற்ற ஞான சக்திகளை யுடையவன்‌ பகவான்‌ என்று உரைக்கப்பட்டது.“பராஸ்ய சக்திர்‌ விவிதை,வ ஸ்ரூயதே ‘ஸ்வாபவிகீ ஜ்ஞாந ப,ல க்ரியா ச -ஸர்வேஸ்வரேஸ்வரனுடைய சக்தியும்‌, ஜ்ஞானமும்‌, பலமும்‌, செய்கைகளும்‌, ஸ்வாபாவிகமானதாகவும்‌, பலபடிப் பட்டதாகவும்‌, மேலானதாகவும்‌ சொல்லப் படுகிறது.] என்றல்லவோ உபனிஷத்‌ உத்கோஷித்தது.

(ஸஹஸ்ரசீர்ஷா): இதற்கு வேறு வகையாகவும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. ஸகல ப்ராணிகளடங்கிய ப்ரம்மாண்ட்ம்‌ – நாராயணனுக்கு சரீரமானதினால்‌ இதற்குள்‌ளடங்கிய பிராணிகளுடைய தலை,கண்‌, கால்‌ முதலியவை இவனுடையவையே என்னத்‌ தட்டில்லை.
இவ் விடத்தில்‌ வித்யாரண்ய பாஷ்யத்திலும்‌ ஸர்வ ப்ராணிகளும்‌ இவருடைய சரீரத்தில்‌ அடங்கினபடியால்‌ அந்த அவயவங்களெல்‌லாம்‌ இவருடைய அவயவங்களாகும்‌ என்று காணப்படுகிறது ஸகல ப்ராணிகளுடைய அவயவங்களையும்‌ தனக்கு சேஷமாக உடையவன்‌ பகவான்‌ எனப்படுகிறது. அதனாலேயே அவன்‌ ஹ்ருஷீகேசன்‌
(இந்த்ரியங்களை நியமிப்பவன்‌) எனப்படுகிறான்‌. தலையால்‌ வணங்‌கப் படவேண்டியவன்‌ அவனே. வாயினால்‌ பேசத் தக்கவனும்‌ அவனே. புத்தியினால்‌ அறியப்பட வேண்‌டியவன்‌ ஹரியே: .கண்‌ களால்‌ பார்க்கத் தக்கவனும்‌ அவனே. செவிகளால்‌ கேட்க வேண்டியது அவனுடைய கீர்த்திகளையே. (ஸஹஸ்ரபாத்‌) என்று நம்முடைய கர்மேந்த்ரியங்களும்‌ அவனுடைய கைங்கர்யம்‌ செய்ய ஏற்பட்டவைகள்‌ என்று உணர்த்தப்படுகிறது. இவ்விடத்தில்‌,
வாய்‌ அவனை யல்லது வாழ்த்தாது கை உலகம்‌
தாயவனை யல்லது தாம்‌ தொழா–பேய்முலை நஞ்சு
ஊணாக உண்டான்‌ உருவோடு பேரல்லால்‌
காணா கண்‌ கேளா செவி,-
என்ற பாசுரம்‌ அனுஸந்திக்கத்தக்கது. (ஸஹஸ்ரசீர்ஷா) முதலிய
பதங்கள்‌ அர்ஜுனனுக்கு விஸ்வரூப தர்ஸசனத்தின் போது காட்டப்‌ பட்டது போன்ற அஸாதாரணமான விக்ரஹத்தை வர்ணிக்கின்றனஎன்றும்‌ கொள்ளலாம்‌. ஆழ்வாரும்‌ இதையே, “தோள்களாயிரத்தாய்‌! முடிகளாயிரத்தாய்‌! துணை மலர்க்‌ கண்களாயிரத்தாய்‌! தாள்களாயிரத்தாய்‌!” என்று வர்ணித்தாரன்றோ.

(புருஷ:) இதில்‌ சொல்லப்படும்‌ புருஷன்‌ யார்‌? இது எந்த தெய்வத்தையும்‌ குறிக்கலாமே. புருஷ: என்பது ஸாமாந்ய சப்தமல்லவா? என்று சிலர்‌ கேட்கிறார்கள்‌.
“ப,கவாநிதி சப்தோயம்‌ ததா புருஷ இத்யபி | நிருபாதீ, ச வர்த்தேதே வாஸு தே,வே ஸ. நாதநே ||
ஸ ஏவ வாஸு தே,வோஸெள ஸாக்ஷாத்‌ புருஷ உச்யதே | ஸ்த்ரீ ப்ராயமிதரத்‌ ஸர்வம்‌ ஐகத்‌ ப்‌,ரஹ்ம புரஸ் ஸரரம்‌ |

[பகவான்‌, புருஷன்‌ என்னும்‌ இத்த இரு சப்தங்களும்‌ இயற்கையாகவே ஸநாதனனான வாஸுதேவனைக்‌ குறிக்கின்றன. அந்த வாஸு தேவனே ஸாக்ஷாத்‌ புருஷனாகச்‌ சொல்லப் படுகிறான்‌. பிரம்‌மாவை முன்னிட்ட மற்ற ஸகல ப்ராணிகளும்‌ ஸ்த்ரி ப்ராயர்களே.] என்று பாத்ம புராணத்தில்‌ பேசப் பட்டிருக்கிறது. பகவான்‌, புருஷன்‌ என்னும்‌ இவ்விரு பதங்களும்‌ முக்யமாக நாராயணனையே குறிக்கும்‌. அவன்‌ ஓருவனே புருஷன்‌. மற்றவர்கள்‌ ஸ்த்ரீ ப்ராயர்‌களே. ஸ்த்ரீ புருஷனை விட்டால்‌ ஜார ஸ்த்ரீயாவது போல்‌ இதர தெய்வங்களைத்‌ தொழும்‌ ஜீவனும்‌ அப்படியே கருதப் படுகிறான்‌.-புருஷன்‌ என்றால்‌ ஸகல சேதந அசேதநங்களிலும்‌ வியாபித்து நிறைந்து நிற்பவன்‌ என்று பொருள்‌. இது நாராயணனுக்கே அஸாதாரணமான குணம்‌. ஸுபாலோபநிஷத்தில்‌ “ஸஹஸ்ர சீர்ஷா…” என்னும்‌ மந்த்ரத்தைப்‌ பரம புருஷனைக்‌ குறித்து ப்ரயோகம்‌ செய்து அவனே ஸர்வ பூதாந்தராத்மாவான நாராயணன்‌ என்று நிர்ணயம்‌ செய்திருப்பதால்‌ இந்தப்‌ புருஷ சப்தம்‌ நாராயணனையே குறிக்கிறது என்பது ஸர்வ வேதாந்த ப்ரத்யய ந்யாயப்படி ஸித்திக்கிறது. கீதாசார்யனும்‌,
“யஸ்மாத்‌ க்ஷரமதீதோஹம்‌ அக்ஷராத,பி சோத்தம: |
தஸ்மாத்‌ வேதே; ச லோகே ச ப்ரதி,த: புருஷோத்தம: ||’”

[ஞானத்தில்‌ ஏற்றத் தாழ்வுகளுள்ள ஸம்ஸாரி புருஷனை அதி க்ரமித்தவனாகவும்‌, ஜ்ஞானத்தில்‌ ஸங்கோச விகாஸமற்றவனான முக்‌தனைக் காட்டிலும்‌ மேலானவனாகவும்‌ நான்‌ இருப்பதால்‌ லோகத்‌திலும்‌, வேதத்திலும்‌ புருஷோத்தமன்‌ என்று பிரஸித்தி பெற்றிருக்‌கிறேன்‌] என்று கீதையில்‌ அருளிச் செய்திருக்கிறார்‌.

(ஸ:) இப்படி வேதத்தில்‌ ப்ரஸித்தி பெற்றவரான அந்த நாராயணன்‌.
(பூமிம்‌) “பூ,மிர்‌ பூ,ம்நா * என்று பூஸூக்தத்தில்‌ சொல்லியபடி பரப்பை உடைத்தாயிருப்பதால்‌ பூமி எனப்படுகிறது. இங்கு பூமி என்பதினால்‌ பதினாலு புவனங்களும்‌ சொல்லப்படுகின்றன. (விஸ்வதோ வ்ருத்வா…) இப்படிப்பட்ட கீழேழு மேலேழு லோகங்‌களையும்‌ நான்கு புறமும்‌ வியாபித்து, அவருடைய அங்குலத்தில்‌ பத்து அங்குலம்‌ ப்ரமாணமுள்ள ப்ரஹ்மாண்டத்தை ஆக்ரமித்தார்‌. இந்த ப்ரஹ்மாண்டம்‌ அவருடைய ஸ்வரூபத்தில்‌ ஒரு மூலையில்‌ அடங்கி விட்டது என்று பொருள்‌.

(தசாங்குலம்‌) என்பதற்கு விஷ்ணு சித்தாசாரியர்‌ தசகுணம்‌” என்று பொருள் கூறி மஹா ப்ரமாணமான இந்த அண்டம்‌ என்று விளக்கி யிருக்கிறார்‌. புருஷ ஸம்ஹிதையிலும்‌ இந்த அர்த்தமே ஆதரிக்கப்பட்டது. மாத்வர்‌ பிரஹ்மா முதலிய ஜீவர்‌களுடைய பத்தங்குலம்‌ அளவுடைய ஹ்ருதய கமலத்தில்‌ அந்தர்‌யாமி யாயிருக்கிறார்‌ என்று அர்த்தம்‌ செய்தார்‌. நாபிக்கு மேல்‌ பத்தங்‌குலத்திற்கு மேற்பட்டிருக்கிற ஹ்ருதயத்தில்‌ வஸிக்கிறார்‌ என்றார்‌ மஹீ தரர்‌. வித்யாரண்யர்‌ பத்து என்பதற்கு அநேகம்‌ என்று பொருள் கொண்டு அண்டத்திற்கு வெளியிலும்‌ வியாபித்திருந்தார்‌ என்று சொல்லி யிருக்கிறார்‌.

இதனால்‌ பரம புருஷனுக்கு தேச பரிச்சேதம்‌ (தேசத்தினால்‌ அளவு பட்டிருத்தல்‌) இல்லை என்று சொல்லப்பட்டது. அங்கும்‌ இங்கும்‌ எங்கும்‌ பரந்துளான்‌ புருஷோத்தமன்‌. இங்கு ஸர்வ வ்யாபகத்‌வத்தைக் கொண்டு இவன்‌ விஷ்ணுவே என்று காட்டப்பட்டது. ““விசதீதி விஷ்ணு:’” என்று எங்கும்‌ நுழைந்திருப்பதால்‌ விஷ்ணு எனப்படுகிறானன்றோ. இவ் விடத்தில்‌ பகவான்‌ ஜ்ஞானம்‌, சக்தி முதலிய கல்யாண குணங்களை உடையவனென்றும்‌, ஸகல லோகங்‌களையும்‌ வியாபித்து அவைகளை சரீரமாகக் கொண்டிருக்கிறான்‌ என்றும்‌, அஸாதாரணமான அப்ராக்ருத சரீரத்தை உடையவனென்‌ றும்‌ தெளிவாகச்‌ சொல்லப் பட்டிருக்கிறபடியால்‌, பூமி பொய்‌” என்‌றும்‌, **குணமில்லை ரூபமில்லை’” என்றும்‌ சொல்லும்‌ அத்வைத வாதங்‌கள்‌ அடியோடு அகற்றப் பட்டன.

———-

2-புருஷ ஏவேதம் ஸர்வம்‌, யத்‌, பூ,தம்‌. யச்ச பவ்யம்‌ உதாம்ருதத் வஸ்யேசாந:, யத,ந்நேநாதி ரோஹதி,[எந்த ஐகத்தானது முன்‌ கல்பத்திலிருந்ததோ, எந்த ஜகத்தானது பின் வரும்‌ கல்பத்தில்‌ உண்டாகப் போகிறதோ, எது இந்தக்‌ கல்பத்‌திலிருக்கிறதோ, எந்த ஜகத்தானது அந்நத்தினால்‌ மறையாமலிருக்‌கிறதோ இந்த ஸமஸ்தமான ஜகத்தும்‌ புருஷனாகிற நாராயணனே. மேலும்‌, மோஷாத்துக்கு ப்ரபுவும்‌ ஸ்ரீமந்‌ நாராயணனே.]“தீவிதீயயா சாஸ்ய விஷ்ணோ: கால தோ வ்யாப்தி ருஸ்யதே”” –[இரண்டாவது மந்த்ரத்தினால்‌ இந்த விஷ்ணுவுக்கு ஸர்வ காலத்‌திலும்‌ வ்யாப்தி சொல்லப்பட்டது. | என்று இந்த ருக்கின்‌ அர்த்தம்‌ புருஷ ஸம்ஹிதையில்‌ ஸங்க்ரஹிக்கப்பட்டது.

(புருஷ…… ) ‘போகின்ற காலங்கள்‌ போய காலங்கள்‌ போகு காலங்கள்‌” எனப்படும்‌ மூன்று காலங்களிலும்‌: இருக்கும்‌ வஸ்துக்களெல்லாம்‌ புருஷனே என்று சொல்லப் படுகிறது. :முன்‌ மந்த்ரத்‌தில்‌ பரம புருஷன்‌ எங்கும்‌ வியாபித்திருக்கிறான் என்று சொல்லப்‌பட்டது. ஆகாசம் போல்‌ வியாபித்திருப்பது மட்டுமல்ல; எல்லா வற்றையும்‌ சரீரமாகவும்‌ கொண்டிருக்கிறான்‌ பரமாத்மா என்பதை இது காட்டுகிறது.” என்று விஷ்ணுசித்தர்‌ வியாக்யானம்‌ செய்தார்‌.
“இதம்‌ ஸர்வம்‌” என்றதினால்‌ புருஷோத்தமனுக்கு வஸ்து பரிச்சேதம்‌ (வஸ்துவினால்‌ அளவு பட்டிருத்தல்‌) இல்லை என்று காட்டப்பட்டது. அவனில்லாத வஸ்துவே இல்லை யன்றோ. 

“யத்‌.பூ,தம்‌…ப,வ்யம்‌’” என்‌பதினால்‌ கால பரிச்சேதமில்லாதவன கேசவன்‌ என்று காட்டப்பட்டது.-ஆதி மத்‌,யாந்த ரஹிதனன்றோ அநந்தன்‌. “முன்‌ காலத்திலிருந்தான்‌; இப்பொழுதில்லை.” முதலிய குறைகள்‌ அவனைப் பற்றிச்‌ சொல்ல முடியாது. எல்லாம்‌ அவன்‌’ என்பதினால்‌ ஸர்வம்‌ விஷ்ணு மயம்‌ ஜகத்‌” என்று தெரிவிக்கப் படுகிறது.-அதனால்‌ மற்றவைகளில்லை என்று ஏற்படாது. மற்றவைகள்‌ அவனுக்கு சரீரமென்றும்‌, அவைகளுக்கு அவன்‌ அந்தர்யாமி என்றுமே ஏற்படும்‌. சரீரத்திற்குப்‌ பெயரான கிருஷ்ணன்‌, ஸ்ரீநிவாஸன்‌ முதலியவைகள்‌ ஆத்மாவையும்‌ குறிக்கின்றன. அம் மாதிரியே இவ் வுலகத்தை யெல்லாம்‌ சரீரமாகக்‌ கொண்ட புருஷனை ‘எல்லாம்‌ அவனே” என்று சொல்வது பொருந்‌ தும்‌. *இந்தக்‌ குடம்‌ கருப்பு” ‘என்று சொன்னால்‌ :குடம்‌” என்று சொல்லப்படும்‌ வஸ்துவும்‌ “கருப்பு என்று சொல்லப்படும்‌ வஸ்துவும்‌ ஓன்றாகி விடுமோ? கருப்பு நிறமானது பிரிக்க முடியாதபடி குடத்‌தில்‌ ஒன்றி நிற்கிறது என்றே ஏற்படும்‌. அம் மாதிரியே *புருஷனே இவ் வுலகம்‌” என்று சொன்னால்‌ இவ் வுலகமானது பரமாத்மாவை விட்டுப்‌ பிரிக்க முடியாதபடி ‘ அவனுடன்‌ ஒடுங்கி நிற்கிறது என்றே பொருள்படும்‌. இவ் விஷயத்தை ::அந்பச்ச ராஜந்‌ ஸ பர: ததராந்ய:பஞ்ச விம்சக: தத்ஸ்த,த்வாதநு பஸ்யந்தி ஹ்யேக்‌ ஏவேதி . ஸாத,வ[ராஜனே! பரமாத்மா வேறானவன்‌. இருபத்தைந்தாவது தத்வமான ஜீவன்‌ வேறானவன்‌. அவனுக்குள்‌ அந்தர்யாமியாக இருப்பதால்‌, ஸாதுக்கள்‌ ஓருவனென்றே நினைக்கிறார்கள்‌-] என்று வ்யாஸரால்‌ மோஷ தர்மத்தில்‌ சொல்லப்பட்டது. கீதையில்‌ அர்‌ ஜுனனும்‌ “ஸர்வம்‌ ஸமாப்நோஷி ததோஸி ஸர்வ:”” [நீ எல்லாவற்றினுள்ளும்‌ நிறைந்திருப்பதால்‌ எல்லாமாக இருக்கிறாய்‌-] என்று கண்ணனைத்‌ துதித்தான்‌. இங்கும்‌ புருஷோத்தமன்‌ எங்கும்‌ வியாபித்திருக்கிறான்‌ என்று சொன்ன பின்பல்லவோ புருஷனே எல்லாம்‌” என்று சொல்லப்பட்டிருக்கிறது.ஆழ்வாரும்‌ :’அவனே மற்றெல்லாமும்‌ அறிந்தனமே’‘ என்றும்‌, “வருங்காலம்‌ நிகழ் காலம்‌ கழி காலமாய்‌ உலகை ஒருங்காக அளிப்பாய்‌” என்றும்‌ பாடி யிருக்கிறார்‌.

(யத்‌ அந்நேந .அதி ரோஹதி) எந்த உலஃமானது அந்நத்தினால்‌ நசிக்காம லிருக்கிறதோ” என்று அர்த்தம்‌.-உலகத்திற்கு ஆஹாரத்தை அளித்து அவைகளை அழியாமல்‌ காக்கும்‌ இயல்வினன்‌ கண்ண பெருமான்‌‘. இங்கு அந்நம்‌’ என்பது . இந்திரியங்களால்‌ அனுபவிக்கப்படும்‌ விஷயங்களைக்‌ குறிக்கும்‌. தர்மார்த்த காமங்களாகிற இஹ லோக புருஷார்த்தங்களாக்‌ கொடுப்பவன்‌ பகவான்‌ என்று சொல்லப்படுகிறது. (உதாம்ருதத்வஸ்ய ஈசாந:) மோக்ஷ புரு ஷார்த்தத்தையும்‌ கொடுப்பவன்‌ பகவானே என்று சொல்லப்படுகிறது. இது பகவானுடைய அஸாதாரணமான லக்ஷணம்‌. இதர புருஷார்த்தங்களைக்‌ கொடுப்பதற்குப்‌ பல தேவதைகளை நாட்டி வைத்‌திருக்கிறான்‌ நாராயணன்‌. ஆனால்‌ மோக்ஷத்தையும்‌ கொடுப்பவன்‌ முகுந்தனே. “அம்ருதத்வம்‌ அஸ்நுதே‘ என்று வேதங்களில்‌ கோஷிக்கப்‌ பட்ட மோக்ஷத்திற்கு ப்ரபு நாராயணனே. வித்யாரண்யர்‌ ‘முக்காலங்‌களிலும்‌ உள்ள ஜகத்‌ எல்லாம்‌ விராட் புருஷனே. . எல்லாக் காலங்‌களிலுமுள்ள ஸஃல ப்ராணிகளுடைய தேஹங்களும்‌ விராட் புருஷனுடைய அவயவங்களே. ப்ரஹ்மா, இந்திரன்‌ முதலியவர்களும்‌ அவரை ஆஸ்ரயித்தே தங்களுடைய ஸ்தானங்களை யடைகிறார்கள்‌”* என்று அர்த்தம்‌ செய்தார்‌. மேலும்‌, “தங்கக் கட்டி, குண்டலம்‌ முதலிய ஆபரணமாக ஆனாலும்‌, அந்தக்‌ குண்டலம்‌ முதலியவை உண்டாவதற்கு முன்னும்‌ அழிந்ததற்குப் பின்னும்‌ காணாப் படாமையால்‌ வாஸ்தவமாகாது. தங்கம்‌ எப்போதும்‌ காணப் படுவதால்‌ உண்மையானதாகக்‌ கொள்கிறோம்‌. அதுபோல்‌ இந்த உலகமும்‌ முன்‌ இல்லாமலிருந்து இப்போது தோன்றி சில நாளைக்குப் பின்‌ அழித்து போகிற படியால்‌ உண்மை யல்ல. விராட் புருஷனுடைய (ஸ்வரூபம்‌ எப்போதுமிருப்பதால்‌ உண்மையானது. அவரே, ஜீவாத்மாக்களுடைய புண்ய பாபங்களுக்குத்‌ தகுந்தபடி அவர்களுக்குப்‌ பலன்‌ கொடுப்பதற்காகத்‌ தன்னுடைய நிஜ ஸ்வரூபத்தை ‘விட்டு இந்த ஜகத் ரூபமாய்‌ ஆகி யிருக்கிறார்‌.” என்றும்‌ சொல்லி இருக்கிறார்‌. இது சரியன்று. உண்டாவதற்கு முன்னும்‌ அழிந்ததற்குப்‌ பின்னும்‌ காணப் படாததால்‌ உலகம்‌” மாறுபாட்டை யுடையது என்றும்‌,அநித்யமானது (நிலை யற்றது) என்றும்‌ ஏற்படுமே யொழியப்‌ பொய்யானது என்று ஏற்படாது.

இந்த ருக்கில்‌ இதம்‌” என்று சேதனாசேதனங்களடங்கிய ஜகத்தைக் காட்டுகிறது. புருஷனென்று
பரமாத்மா சொல்லப்படுகிறான்‌. ஜகத்‌ பொய்யான வஸ்துவானால்‌ பொய்யான வஸ்துவைப்‌ புருஷன்‌ என்று சொல்லுவது அர்த்தமற்ற பேச்சு. *இதம்‌’ என்றும்‌, ‘புருஷ:” என்றும்‌ தனித் தனியாக எடுக்கப்‌ பட்ட இரண்டும்‌ ஸத்யமானது என்றே ஏற்படும்‌. யத்‌ பூதம்‌…… ்‌என்று மூன்று காலங்களும்‌ குறிக்கப்படுவதால்‌ காலம்‌ என்னும்‌ தத்வமும்‌ உண்மை யானது என்று உணர்த்தப் படுகிறது. அம்ரு தத்வமென்றும்‌ அதற்கு ஈசனனென்றும்‌ இரண்டு சொல்லப்படுகின்றன. அம்ருதத்வம்‌ (மோக்ஷம்‌) என்று ஒன்றிருந்தால்‌ அதை அடைகிற வஸ்துவும்‌ இருந்தேயாக வேண்டும்‌. ஜகத்‌ பொய்யானால்‌“அது அந்நத்தினால்‌ நாசமடையாம லிருக்கிறது” என்பது அஸம்பாவிதம்‌. ஆகையால்‌ இங்கு அத்வைத வாதத்திற்கு அணு வளவும்‌ அவகாசமில்லை- இந்த மந்த்ரத்தின்‌ அர்த்தம்‌
புருஷோ நாராயண: பூ,தம்‌ ப,வ்யம்‌ ப,விஷ்யச்ச ஆஸீத்‌
ஸ ஏஷ ஸர்வேஷாம்‌ மோக்ஷத,ச்ச ஆஸீத்‌”?

[புருஷனாகிற நாராயணன்‌ சென்றவைகளும்‌, வருமவைகளும்‌, இருப்பவைகளுமாக ஆனார்‌. அவர்‌ எல்லோருக்கும்‌ மோக்ஷத்தைக்‌ கொடுப்பவராகவும்‌. ஆனார்‌.] என்று முத்‌கலோபனிஷத்தில்‌ சொல்லப் பட்டது.

———-

ஏதாவாந் ௮ஸ்‌ய மஹிமா, அதோ ஜ்யாயாம்ச்ச பூருஷ:
பாதோஸ்ய விஸ்வா பூ,தாநி ,த்ரிபாத,ஸ்யாம்ருதம்‌ திவி.–
3-
[இந்தப்‌ புருஷனுடைய பெருமை இப் பேர்ப்பட்டது. ஆகையால்‌ புருஷோத்தமன்‌ மேலானவன்‌. எல்லா பூதங்களும்‌ இவனுடைய ஒரு பாகம்‌. போக்யமாயிருப்பதான மூன்று பாகம்‌ இவனுடைய பரம பதத்திலிருக்கிறது.]
ஏதாவாநிதி மந்த்ரேண வைப,வம்‌ கதி,தம்‌ ஹரே:’” [ஏதாவாந்‌……..” என்னும்‌ மந்த்ரத்தினல்‌ ஹரியினுடைய பெருமை பேசப்பட்டது] என்று புருஷ ஸம்ஹிதையில்‌ சொல்லப் பட்டிருக்கிறது.-

(ஏதாவாந்‌……) இந்தப்‌ புருஷோத்தமன்‌ தேசத்தினாலும்‌,காலத்தினாலும்‌, வஸ்துவினாலும்‌ அளவிட முடியாதவன்‌. போக மோக்ஷங்களைத்‌ தருபவன்‌ முகுந்தன்‌. இப்படிப்பட்டது அவனுடைய மஹிமை. ஆகையால்‌ அவனே மேலானவன்‌. (ஏதாவாந்‌ அஸ்ய மஹிமா?…) என்று வைத்துக் கொண்டு““இவ்வளவு தானே அவன்‌ மஹிமை? இதைக் காட்டிலும்‌ மேலானவனன்றோ புருஷன்‌”” என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌. “ஸோ அங்க; வேத; யதி;வா ந வேத ” [தன்‌ பெருமையை, அவனே அறிவனோ? அறியானோ?] என்றது வேதம்‌.“தனக்கும்‌ தன்‌ தன்மை அறிவரியானை”:- நம்மாழ்வார்‌.
**யஸ்யாமதம்‌ தஸ்ய மதம்‌” [எவன்‌ பரமாத்மாவை அளவிட்டு அறிய முடியாத வனென்று நினைக்கிருனோ அவனே அறிந்தவனாகிறான்‌.] என்று மறைகள்‌ முறை யிட்டன. ஆயிரம்‌ நாவு படைத்த ஆதி சேஷனாலும்‌, ‘ஸஹஸ்ர சீர்ஷா’ வான எம்பெருமானாலும்‌ அப்‌ பெருமையைப்‌ பேச முடியாது. எவ்வளவு வர்ணித்தாலும்‌ அதற்கும்‌ மேலானவனாகவே இருப்பான்‌ அநந்தன்‌.

(பாதோஸ்ய…… ) இவ் வுலகிலிருப்பவை களெல்லாம்‌ இவனுடைய ஏக தேசத்தில்‌ அடங்கி விடுகின்‌றன.*“யஸ்யா யுதாயுதாம்சாம்சே விஸ்வ சக்திரியம்‌ ஸ்திதா’ (எந்தப்‌ பரமாத்மாவினுடைய பல்லாயிரத்தில்‌ ஒரு பாகத்தில்‌ இந்த லீலா விபூதியானது அடங்கி விடுகிறதோ………] என்று பராசரர்‌ விஷ்ணு புராணத்தில்‌ விளக்கினார்‌… (த்ரிபாத்‌) அளவற்றதான இந்த லீலா விபூதியைக் காட்டிலும்‌ பன்‌ மடங்கு அளவற்றது நித்ய விபூதி.-இங்கு “மூன்று என்பது “அநந்தம்‌” என்பதைக்‌ குறிக்கும்‌.-இதனாலேயே பரம பதத்தை “த்ரிபாத் விபூதி” என்கிறோம்‌. (அம்ருதம்‌) அழியாதது. ::நச புநராவர்த்ததே’” [மோக்ஷமடைந்தவன்‌ மறுபடி திரும்பி வருவதில்லை.]என்று வேதம்‌ கோஷித்தது.-புணைக்‌ கொடுக்‌கிலும்‌ போக லொட்டான்‌” என்றார்‌ ஆழ்வார்‌. ஏற விட்டு ஏணி வாங்குபவனன்றோ எம்பெருமான்‌. இந்தப்‌ பரம பதத்திற்கும்‌ அதி லுள்ளார்க்கும்‌ அழிவு கிடையாது.-‘ இனிமையானது”என்றும் பொருள்‌ கொள்ளலாம்‌. கனியைக்‌ கரும்பினின்‌ சாற்றைக்‌ கட்டியைத்‌ தேனை அமுதை” எனப்படும்‌ ஆராவமுதாகிய அச்யுதனை அனுபவிக்கும்‌ ப்ரதேசமாகையால்‌  “:அம்ருதம்‌’” எனப்படுகிறது. “ஸோஸ்நுதே ஸர்வாந் காமாந்‌’” என்கிறபடி பகவத் குணங்களை அனுபவித்து “ப்ரஹ்மானந்தமடையும்‌ இடமன்றோ அது. (திவி) ப்ரகாசிக்கும்படியான பரம பதத்தில்‌ இருக்கிறது.

அத்யர்காநல தீப்தம்‌ தத்‌ ஸ்தராநம்‌ விஷ்ணோர்‌ மஹாத்மந :”[மஹாத்மாவான விஷ்ணுவினுடைய ஸ்தாநமானது ஸூர்யன்‌, அக்னி முதலியவர்களின்‌ ஓளியை அதிக்ரமித்த தேஜஸ்ஸை உடை யது.] என்றல்லவோ பாரதத்தில்‌ சொல்லப் பட்டிருக்கிறது.-வித்யாரண்யர்‌ இதற்கு பாஷ்யம்‌ செய்யும் போது மஹிமை என்றால்‌ ஸாமர்த்யம்‌ என்றும்‌ ஆகையால்‌ இது வாஸ்தவமன்று என்றும்‌ சொல்லியிருக்கிறார்‌. அப்படி யென்றால்‌ இது இந்த்ரஜாலமென்றே ஏற்படும்‌. இது ஸாஹஸமே யொழிய வேறல்ல. “மஹிமை” என்பது பெருமையைக்‌ காட்டுகிறது. ந தத் ஸமச்ச அப்‌,யதி,கச்ச த்‌ருச்யதே”” என்கிறபடி ஓப்பாரும்‌ மிக்காரு மற்றவன்‌ மாதவன்‌ என்றே பொருள்படும்‌..அவனை விடத்‌ தாழ்ந்த வஸ்துக்களில்லா விடில்‌ பெருமையே ஏற்படாது. பெருமை யென்று சொன்னாலும்‌ கேலிக்‌கூத்தாகும்‌. பெருமையும்‌ சிறுமையும்‌ ஒன்றை யொன்று அபேக்ஷித்‌திருக்கும்‌ வார்த்தைகளன்றோ. மேலும்‌, பகவான்‌ உபய விபூதி நாயகன்‌ என்று சொல்லப் பட்டபடியால்‌ அத்வைத வாதத்திற்குச்‌ சிறிதும்‌ இங்கு இடமில்லை.
ஸச ஸர்வஸ்மாந் மஹிம்நோ ஜ்யாயாந்‌, தஸ்மாந் ந கோபி ஜ்யாயாந்‌”
[அவன்‌ எல்லா மஹிமைகளைக் காட்டிலும்‌ உயர்ந்தவன்‌. அவனைக்‌ காட்டிலும்‌ உயர்‌ந்தவனில்லை.] என்று முத்கலோபநிஷத்தில் இந்த மந்திரத்தின்‌ பொருள்‌ உரைக்கப்பட்டது.

————-

த்‌ரிபாதூர்த்‌வ உதைத்‌ புருஷ; பாதோஸ்யே ஹா பவாத்புந :
ததோ விஷ்வங்‌ வ்யக்ராமத்‌ ஸாசநா நசநே அபி
..| -4-பரம பதத்திலிருக்கும்‌ பரம புருஷன்‌ மூன்று அவதாரத்தை உடையவனாகி ஸங்கல்பித்தார்‌. இவருடைய ஒரு அவதாரமான (அநிருத்தன்‌) இவ் வுலகத்தில்‌ அவதரித்தார்‌. அதற்குப் பின்‌ எல்லாப் பக்கத்திலும்‌ ஜீவன்‌ ஜடம்‌ இவர்களைக்‌ குறித்து (அவதாரம்‌ செய்வதன்‌ மூலம்‌)வியாபித்தார்‌.]
த்ரிபாதி,த்யநயா ப்ரோக்தம்‌ அநிருத்‌தஸ்ய வைப,வம்‌”[“த்ரிபாத்‌…” என்னும்‌ மந்த்ரத்தில்‌ அநிருத்த நாராயணனுடைய வைபவம்‌ விளக்கப் படுகிறது.] என்று புருஷ ஸம்ஹிதை சொல்லிற்று.

(த்ரிபாத்‌……) பரம பதத்திலிருக்கும்‌ பர வாஸுதேவன்‌ ஸங்கர்‌ஷணன்‌, அநிருத்தன்‌, ப்ரத்யும்நன்‌ என்னும்‌ மூன்று வ்யூஹங்களை உடையவரா யிருக்கிறார்‌. இந்த வ்யூஹங்களைப் பற்றிப்‌ பாஞ்சராத்‌ரத்தில்‌ அஹிர் புத்ந்ய ஸம்ஹிதையில்‌ விசேஷமாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது.
(உதைத்‌) “இவ் வுலகை யெல்லாம்‌ ரக்ஷிக்கக் கடவேன்‌” என்று ஸங்கல்பித்தார்‌.
(அஸ்ய பாத:) இவருடைய ஒரு அவதாரமான அநிருத்தன்‌.
(இஹ அபவாத்புந:) மறுபடியும்‌ இங்கு விஷ்ணுவாகத்‌ திருப் பாற்கடலில்‌ அவதரித்தார்‌.
(ததோ…வ்யக்ராமத்‌) அதன்‌ பிறகு அயோத்தி த்வாரகை முதலிய திவ்ய நகரங்களில்‌ ராமக்ருஷ்‌ணாதிகளாக அவதரித்தார்‌. அவைகளுக்கும்‌ பிற்பாடரானவர்களை உய்விப்பதற்காகத்‌ திருவரங்கம்‌, திருப்பதி முதலிய திவ்ய தேசங்‌ களிலும்‌, கிராமங்கள் தோறும்‌, பக்தர்களுடைய கிருஹங்கள் தோறும்‌ அர்ச்சா மூர்த்தியாக அவதரித்தார்‌. ‘விஷ்வக்‌’ என்றதால்‌ எண்ணிறந்த இடங்களில்‌ அவதாரம்‌ செய்திருப்பது தோற்றுகிறது–ஸ்வரூபவ்யாப்தி முதல்‌ மந்த்ரத்திலேயே சொல்லப்பட்டதால்‌ இங்கு “வ்யக்ராமத்‌” என்பதற்கு அவதாரம் செய்து வியாபித்தார்‌ என்றே பொருள் கொள்ளவேண்டும்‌. இவர்‌ எதற்காக இப்படி அவதாரம்‌ செய்ய வேண்டும்‌ எனில்‌: (ஸாசநாநசநே அபி) உணவருந்துபவர்‌களான தேவர்‌, மனுஷ்யர்‌ முதலியவர்களையும்‌, உணவருந்தாமல்‌ பாறை முதலியவையாய்க் கிடக்கும்‌ சேதனர்களையும்‌ உய்விப்ப்தற்கே–இப்படிப்‌ படாதன படுகிறான்‌ பரமபுருஷன்‌ என்று சொல்லப்படு கிறது. “உயிரளிப்பான்‌ எந் நின்ற யோனியுமாய்ப்‌ பிறந்தாய்‌! இமை யோர்‌ தலைவா!” என்றார்‌ ஆழ்வார்‌. “*அஜாயமாநோ பஹுதா விஜாயதே”” [பிறப்பிவியான பகவான்‌ பல தடவை பிறக்கிறான்‌] என்றது வேதம் –புற்பா முதலாப்‌ புல்லெறும்பாதி ஓன்றின்றியே்‌ நல்ல கதிக்கு அழைத்துச்‌ செல்ல வன்றோ அவதாரம்‌ செய்கிறான்‌ அச்யுதன்‌.-சேதநாசேதநங்களெல்லாம்‌ அவனுடைய உடைமைகளாயிற்றே.-உடைமையைப் பற்றிய கவலை உடையவனுக் கல்லவோ உண்டு.-விபவாவதாரங்களைப் பற்றி ராமாயணம்‌, பாரதம்‌, பாகவதம்‌ முதலியவைகளில்‌ விஸ்தாரமாக வர்ணிக்கப் பட்டிருக்கிறது.

அர்ச்சாவ தாரமாஹாத்ம்யங்கள்‌ பாஞ்சராத்ர வைகானஸ’ ஸம்ஹிதைகளிலும்‌,-வாராஹம்‌, ப்ரஹ்மாண்டம்‌ முதலிய புராணங்களிலும்‌ கீர்த்திக்கப்‌ பட்டிருக்கின்றன. ஆழ்வார்கள்‌ அருளிச் செயல்களிலும்‌ அனுபவிக்கிறோம்‌-இப்படி அவதாரம்‌ செய்தது ஸ்ரீமந்‌ நாராயணனே. வேறு தெய்வங்களல்ல,. பரித்ராணாய ஸாதூநாம்‌’”’ என்கிறபடி லோக ஸம் ரக்ஷணத்திற்காகப்‌ பல பிறப்புகளெடுத் திருக்கிறான்‌ பரந்தாமன்‌. உலகத்தைக்‌ காப்பதற்காக மற்ற தெய்வங்கள்‌ அவதாரம்‌ செய்ததில்லை. அவர்கள்‌ அவதாரம்‌ செய்ததாகச்‌ சொல்லுவதும்‌ அல்ப காரியங்களுக்கே. தாயில்லாப் பெண்‌ ப்ரசவ வேதனைப்படும் போது தாயும்‌ ஆகி ‘தாயுமானவர்‌’ என்று பெயர்‌ பெற்றதாகச்‌ சொல்லுகிறார்கள்‌. இப்படிச்‌ சில விருத்தாந்தங்கள்‌ சொல்லப்படுகின்றன–அவதாரங்கள்‌ செய்து மஹத்தான கீர்த்திய டைந்தவன்‌ மாதவனே.-வியூஹங்கள்‌ தேவர்களுக்குக்‌ கூப்பீடு கேட்குமிடங்கள்‌. நம்மால்‌ அணுக முடியாதவை.-விபவாவதாரங்களோ அக்காலத்திலிருந்த பாக்யவான்களுக்கே. ‘புல்லாய்ச்‌ சிலையாய்க்‌ கிடந்திலமே கழல்‌ தீண்டுகைக்கே”” என்றே நாம்‌ நினைக்க வேண்டி யிருக்கிறது. அவைகளைப் பற்றி இதிஹாஸ புராணங்களில்‌ கேட்டே ஆநந்தமடைகிறோம்‌. அவை ஒரு காலத்திலோடும்‌ பெருக்காறு போன்றவை.-அவற்றில்‌ தேங்கின மடுப் போலே சொல்லப்பட்ட அர்ச்சாவதாரமும்‌ வற்றி விட்டதோ என்று தோன்றுகிறது. அவைகட்கு யாதொரு தீங்‌கும்‌ ஏற்படாதென்று மநோ ரதித்திருந்தோம்‌. அவைகளும்‌ ஸமாப்தி யடைந்தனவோ என்றேங்கும்படி இருக்கிறது இப்போதிருக்கும்‌ நிலைமை. கூரத்தாழ்வாணையும்‌ பட்டரையும் போல்‌, கல்கி அவதாரத்தை இப்போதே எடுத்துச்‌ சீர்திருத்தும்படி பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழியில்லை,

————

தஸ்மாத்‌, விராட, ஜாயத விராஜோ ௮தி பூருஷ:
ஸ ஜாதோ அத்யரிச்யத பச்சாத்‌ பூ,மிமதோ புர:
–5-
[அந்த விஷ்ணுவிடமிருந்து ப்ரஹ்மாண்டம்‌ உண்டாயிற்று. ப்ரஹ்‌மாண்டத்தில்‌ பிரமன்‌ உண்டானான்‌. அத்த நான்முகன்‌ பூமியைப்‌ பக்கங்களிலும்‌, கீழும்‌, மேலும்‌ ஆக்ரமித்தனன்‌.]
தஸ்மாத்‌, விராடி,த்யநயா பாத.நாராயணாத்‌ ஹரே:
ப்ரக்ருதே: புருஷஸ்யாபி ஸமுத்பத்தி : ப்ரதர்‌சிதா”
[(“தஸ்மாத்‌ விராட்‌…
” என்னும்‌ மந்த்ரத்தினல்‌ நாராயணனுடைய ஓர்‌ அவதாரமான ஹரியினிடமிருந்து ப்ரக்ருதியினுடையவும்‌, பிரமனுடையவும்‌ உத்பத்தியானது காட்டப்பட்டது.] என்று புருஷ ஸம்‌ஹிதையில்‌ இதன்‌ பொருள்‌ உரைக்கப்பட்டது. (தஸ்மாத்‌…) இப்‌படிப்‌ பலவிதமான அவதாரங்களைச்‌ செய்‌த மஹா விஷ்ணுவிடமிருந்து முட்டை வடிவமான ஒரு அண்டம்‌ உண்டாயிற்று.

அயம்‌ லோகஸ்து வை ஸம்ராட்‌ அந்தரிக்ஷம்‌ விராட்‌ ஸ்ம்ருதம்‌”[இந்த லோகம்‌ ஸம்ராட்‌ என்றும்‌, அந்தரிக்ஷம்‌ விராட்‌ என்றும்‌ சொல்லப் படும்‌.] என்று வாயு புராணத்தில்‌ “ “விராட்‌’ என்பது அந்தரிக்ஷத்தை மட்டும்‌ குறிப்பதாகச்‌ சொல்லப்பட்டாலும்‌ – இங்கு எல்லா லோகங்களுமடங்கிய ப்ரஹ்மாண்டத்தையே குறிப்பதாகக்‌ கொள்ளலாம்‌-(விராஜோ…) அந்த அண்டத்தை ஆஸ்ரயித்து பிரமன்‌ உண்டானான்‌. அண்டத்திற்கு அதிகாரி புருஷனாகிற பிரமன்‌ உண்டானான்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌.-ஸுபாலோபனிஷத்தில்‌ அண்‌டம்‌ ஸமபவத்‌: [அண்டம்‌ உண்டாயிற்று.] என்றும்‌, “மத்‌யே புருஷ:”[மத்தியில்‌ பிரமனாகிற புருஷன்‌ உண்டானான்‌.] என்றும்‌ இவ்‌ விஷயமே சொல்லப் பட்டபடியால்‌ இப்படி ஸ்ருஷ்டித்தவன்‌ நாராயணனே என்று அறிகிறோம்‌-இதிலிருந்து அண்ட ஸ்ருஷ்டி, அனாதிபுருஷனும்‌, அகார வாஸ்யனுமான அநந்தனுடையதே என்று அறிவிக்‌கப் படுகிறது. இப்படி உண்டாக்கப்படும்‌ அண்டங்கள்‌ ஓன்றிரண்டல்ல.-ப்ரஹ்மாக்களும்‌ அப்படியே. இதையே பெரியாழ்வாரும்‌’அண்டக்குலத்துக் கதிபதியாகி’ என்றார்‌. பிரமன்‌ தன்‌னைத் தானே ஸ்ருஷ்டிக்கவுமில்லை. தான்‌ இருக்குமிடத்தை ஸ்ருஷ்டிக்கவுமில்லை.-அண்ட ஸ்ருஷ்டி அவனுடைய சக்திக்கு மீறினது. ப்ரஜா ஸ்ருஷ்டியே அவன்‌ . வல்லமைக்குட்பட்டது- அதுவும்‌ அச்யுதனுடைய அருளினலும்‌, நியமனத்தினாலும்‌ ஏற்படுவது. அப்படி ப்ரஜா ஸ்ருஷ்டி பண்ணின காலத்தில்‌ ப்ரஜைகள்‌ ‘இட்ட கால்‌ இட்ட கைகளாய்‌” “அயம்‌ லோகஸ்து வை ஸம்ராட்‌ அந்தரிக்ஷம்‌ விராட்‌ ஸ்ம்ருதம்‌”.

அப்படி ப்ரஜா ஸ்ருஷ்டி பண்ணின காலத்தில்‌ ப்ரஜைகள்‌ ‘இட்ட கால்‌ இட்ட கைகளாய்‌”செயலற்று இருந்தன. பிறகு பிரமன்‌ மாதவனிடம்‌ முறையிட்டதாகவும்‌, அவன்‌ ஸர்வேந்த்ரியங்களிலும்‌ வியாபித்து அவைகளுக்குக்‌ கார்யம்‌ செய்ய சக்தி கொடுத்ததாகவும்‌ அறிகிறோம்‌-முற் கூறிய பல உபனிஷத்துக்களலும்‌ சொல்லப்பட்ட நாராயணனே இப்படி ஸர்வ விதத்திலும்‌ ஸ்ருஷ்டி செய்கிறான்‌ என்று ஏற்படுகிறது.(ஸ ஜாதோ…) அந்தப்‌ பிரமன்‌ பூமியை, நான்கு பக்கங்களிலும்‌, கீழும்‌, மேலும்‌ வியாபித்ததாகச்‌ சொல்லப் படுகிறது.-*பச்சாத்‌” என்‌றதனால்‌ எல்லா த்வீபங்களிலும்‌, “அத; என்பதால்‌ பாதாளத்திலும்‌, புர: என்பதினால்‌ ஸ்வர்க்கம்‌ முதலியவைகளிலும்‌ வியாபித்தான்‌ என்று ஏற்படுகிறது.-பிரமனுடைய ஸ்வரூபம்‌ அணுவான படியால்‌ ஸ்வரூபத்தினால் இவைகளை வியாபிக்க. மூடியாது. ஆகையால்‌ ஞானம்‌, சக்தி முதலிய குணங்களால்‌ வியாபித்ததாகவே கொள்ள வேண்டும்‌. தன்னுடைய ஞானத்தினால்‌ பதினாலு உலகங்களிலும்‌ நடக்க வேண்டியவைகளை அறிந்து, சக்தியினால்‌ ஸ்ருஷ்டி செய்வதால்‌ இவ் வண்டத்திலுள்ள உலகங்களிலும்‌ ஞானத்தினாலும்‌ சக்தியினாலும் வியாபித்தான் என்றே கொள்ள வேண்டும்‌.-ஸ்ரீவிஷ்ணுசித்தர்‌ “தன்னுடைய பிரஜைகள்‌ மூலமாக வியாபித்தான்‌” என்றும்‌ பொருள் கொண்டார்‌. பெரிய சரீரத்தினால்‌ வியாபித்ததாகவும்‌ சொல்லலாம்‌.“ஸ ச பாத,நாராயண: ஐகத்‌ ஸ்ரஷ்டும்‌ ப்ரக்ருதிம்‌ அஜாயத்‌”[ நாராயணனின்‌ அவதாரமாகிய அந்த விஷ்ணு உலகை ஸ்ருஷ்டிப்‌பதற்காகப்‌ பிரமனை ஸ்ருஷ்டித்தார்‌.] என்று இத்த மந்திரத்தின்‌ பொருள்‌ முத்கலோபனிஷத்தில்‌ உரைக்கப்பட்டது. இங்கு “ப்ரக்ருதி”சப்தம்‌ ப்ரஜைகளுக்குக்‌ காரண பூதனான: பிரமனைக்‌ குறிக்கிறது.

——————

யத் புருஷேணே ஹவிஷா, தே,வா யஜ்ஞமதந்வத
வஸந்தோஸ்யா ஸீதஜ்யம்‌, க்ரீஷ்ம இத்‌மச்‌ஸ்ரத்‌தவி:–6-
[தேவர்கள்‌ (நித்ய ஸூரிகள்‌) சதுர்முகனாகிற ஹவிஸ்ஸினால்‌ ஸ்ருஷ்டியைக் குறித்துச்‌ செய்த (தியான ரூபமான ) யாகத்திற்கு வஸந்த ருது நெய்யாகவும்‌, க்ரீஷ்ம ருது ஸமித்தாகவும்‌, சரத் ருது புரோடாசமென்னும்‌ ஹவிஸ்ஸாகவும்‌ ஆயிற்று.]
“யத்‌ புருஷேணேத்யநயா ஸ்ருஷ்டி யஜ்ஞ்ஸ்‌ ஸமீரித:”
[யத்‌ புருஷேண’ என்னும்‌ மந்த்ரத்தினால்‌ ஸ்ருஷ்டிக்காகச்‌ செய்யப்பட்ட யஜ்ஞம்‌ சொல்லப் பட்டது.] என்று புருஷ ஸம்‌ஹிதை சொல்லிற்று-இந்த மந்த்ரத்திலிருந்து ஸ்ருஷ்டியைக்‌ குறித்து யஜ்ஞம்‌ செய்யப்‌பட்ட விஷயம்‌ விவரிக்கப்படுகிறது.

பிரமனுக்குப்‌ பிறந்த போதே ஸ்ருஷ்டி சக்தி யில்லை என்பது இதிலிருந்து ஏற்படுகிறது. நான்‌ முகனுக்குப்‌ படைக்கும்‌ சக்தி உண்டாவதற்காக எம்பெருமானணைக்‌ குறித்து யஜ்ஞம்‌ செய்தார்கள்‌ என்றும்‌ ஏற்படுகிறது. (யத்‌ புருஷேண…) இந்தப்‌ பிரமனாகிற புருஷனை அந்த யஜ்ஞத்தில்‌ ஹோமம்‌ செய்யப்படும்‌ பசுவாகக்‌ (ஹவிஸ்ஸாக) கல்பித்தனர்‌ என்று ஏற்படு கிறது. யார்‌ கல்பித்தார்கள்‌? (தேவா?) தேவர்கள்‌. யார்‌ அந்த தேவதைகள்‌? என்னும்‌ விசாரணை உண்டாகிறது.-இந்த்ராதி தேவர்‌ களோவெனில்‌ ஸ்ருஷ்டி சக்தியை அடைந்த பின்பு பிரமனால்‌ படைக்‌கப்பட்ட கச்யப ப்ரஜாபதிக்கு அதிதியிடம்‌ பிறந்த புத்திரர்கள்‌. ஆகையால்‌ இங்கு சொல்லப்பட்ட தேவர்கள்‌ அவர்களாக இருக்க முடியாது.-ஆகையால்‌ பிரகாசிக்கும்படி யானதும்‌ பரமாகாசமென்று புகழ்‌ பெற்‌றதுமான ஸ்ரீவைகுண்டத்திலிருக்கும்‌ நித்ய ஸூரிகளே இங்கு சொல்‌லப்படும்‌ தேவர்கள்‌ என்று கொள்ள வேண்டும்‌. 

(யத்‌ யஜ்ஞம்‌ அதந்வத அஸ்ய) பிரமனைப்‌ பசுவாகக் கொண்டு எந்த தியான ரூபமான
யஜ்ஞத்தைச்‌ செய்தார்களோ அந்த யஜ்ஞத்திற்கு. (வஸந்த: ஆஜ்‌யம்‌ ஆஸீத்‌…) வஸந்த ருதுவானது நெய்யாகவும்‌, க்ரீஷ்ம ருது ஸமித்‌தாகவும்‌, சரத் ருது புரோடாசம்‌ எனப்படும்‌ ஹவிஸ்ஸாகவும்‌. ஆயிற்று.
இந்த யஜ்ஞம்‌ பரம புருஷனைக்‌ குறித்து ஸ்ருஷ்டிக்காகச்‌ செய்யப்பட்ட தியான ரூபமான யஜ்ஞமாகும்‌. ஸ்ருஷ்டிக்குக்‌ காலம்‌ அவசியமாக வேண்டியபடியால்‌ அது இம் மாதிரி உபகரணங்களாகச்‌ சொல்லப்‌ பட்டிருக்கிறது. ‘புருஷேணா ஹவிஷா” என்கிற இடத்தில்‌ பிரமன்‌ யாக பசுவாகிற ஹவிஸ்‌ ஆகிறான்‌ என்று சொல்லப்பட்டது. “சரத்‌ஹவி:’ என்ற இடத்தில்‌ சரத்காலம்‌ புரோடாசம்‌. எனப்படும்‌ ஹவிஸ்‌ ஆகிறது என்று சொல்லப்படுகிறது. அரிசியின்‌ மாவினால்‌ செய்யப்‌ பட்டு ஹோமம்‌ பண்ணப்படுகிற அடை புரோடாசம்‌ எனப்படும்‌.-நித்ய ஸரிகள்‌ பிரஹ்மாவை ஸ்ருஷ்டிக்கு. முக்யமான உபகரணமாகவும்‌ காலத்தை ஸஹ காரியாகவும் கொண்டு ப்ரஜா ஸ்ருஷ்டிக்காக பகவானை தியானித்தார்கள்‌ என்று இதன்‌ பொருள்‌. அப்படி அவர்‌கள்‌ செய்ததற்குக்‌ காரணம்‌ பகவந் நியமனமே என்று நாம்‌ ஊஹிக்க வேண்டியிருக்கிறது-

இங்கு சொல்லப்பட்டிருக்கிற ஸ்ருஷ்டி “பஹுஸ்யாம்‌ ப்ரஜாயேய”[நான்‌ பலவாக ஆகக் கடவேன்‌.] என்ற ஸங்கல்பத்துடன்‌ நிமித்தோபாதான காரணமான நாராயணனால்‌ செய்யப்படும்‌ ஸமஷ்டி ஸ்ருஷ்டி யல்ல. இது வ்யஷ்டி ஸ்ருஷ்டி எனப்படும்‌ ப்ரஜா ஸ்ருஷ்டியே. இம் மாதிரியான சக்தி நித்யர்களுக்கு உண்டென்பதற்குப்‌ பல ஆதாரங்களிருக்கின்‌றன. விஷ்வக்ஸேனருடைய மந்த்ரத்தில்‌ “விஸ்வ ஸ்ருஜே ” | உலகத்தை ஸ்ருஷ்டிப்பவருக்கு]’ என்‌று சொல்லப்பட்‌டிருக்கிறது. நாரதீயமென்று ப்ரஸித்தமான ஹரி பக்தி ஸுதோதயத்‌தில்‌ ஐந்தாவது அத்யாயத்தில்‌’தே ஹி குர்யுர்‌ யதீச்சந்தி ஐகத் ஸர்க்க லயெள ஸ்வயம்‌”” [நித்ய ஸூரிகள்‌ விரும்பினார்களாகில்‌ ஜகத் ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களைத்‌ தாமே செய்வார்கள்‌.] என்று சொல்லப்பட்டிருக்‌ கிறது. ஆளவந்தார்‌ “த்வயா நிஸ்ருஷ்டாத்மப,ரேண”’| உன்னால்‌ வைக்கப்‌பட்ட உபய விபூதி நிர்வாஹ பாரத்தை யுடைய (விஷ்வக்ஸேனரால்‌)]
என்று பகவானை ஸ்தோத்ரம்‌ செய்திருக்கிறார்‌. ஸ்ரீராமாநுஜர்‌,
ஸ்வ ஸங்கல்ப மாத்ரா வக்லுப்த ஐகஜ் ஜென்ம ஸ்திதி த்‌வம்ஸா திகே
ஸ்ரீமதி விஷ்வக்ஸேநே ந்யஸ்த ஸமஸ்‌ தாத்மைஸ்வர்யம்‌”[தன்னுடைய ஸங்கல்பத்தால்‌ கொடுக்கப்பட்ட ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களை யுடைய ஸ்ரீவிஷ்வக்ஸேனரிடம்‌ – வைக்கப்பட்ட தன்‌னுடைய எல்லா ஐஸ்வர்யங்களையும்‌ உடையவனை] என்று ஸ்ரீவைகுண்ட கத்யத்தில்‌ அருளிச் செய்திருக்கிறார்‌.-பிரமனாகிற ஜீவனுக்கு இச் சக்தி யிருக்கும் போது அவரைக் காட்டிலும்‌ பல்லாயிரம்‌ மடங்கு பெரியவர்களான நித்யர்களுக்கு இச் சக்தி யிருப்பது அதிசயமல்ல. இந்த யாகத்தினால்‌ பிரமனுக்கு ஸ்ருஷ்டி செய்யும்‌ சக்தி கிடைக்கிறதென்றும்‌, அந்தப் பிரமனை நிமித்த மாத்ரமாகக் கொண்டு அவர்‌ மூலமாக நித்ய ஸூரிகள்‌ ஸ்ருஷ்டி செய்விக்கிறார்களென்றும்‌ ஏற்படுகிறது.

முத்கலோபனிஷத்தில்‌ இதன்‌ பொருள்‌ வேறுவகையாகச்‌ சொல்லப்பட்டிருக்கிறது.
ஸ ஸம்ருத்‌த,காயஸ்‌ ஸந் ஸ்ருஷ்டி கர்ம ந ஜஜ்ஞிவாந்‌,ஸ: அநிருத்‌த,
நாராயண: தஸ்மை ஸ்ருஷ்டிம்‌ உபாதி;சத்‌:-*ப்‌ரஹ்மந்‌ தவ இந்த்‌ரியாணி
யாஜகாநி த்‌,யாத்வா கோச பூ,தம்‌ த்‌ருட க்‌ரந்திரம்‌ கலேவரம்‌ ஹவிர்‌ த்‌யாத்வாமாம்‌ ஹவிர் புஐம்‌ த்‌யாத்வா வஸந்த காலம்‌ ஆஜ்யம்‌ த்‌யாத்வா க்‌ரீஷ்மம்‌ இத்‌ஃமம்‌ த்‌,யாத்வா சரத்‌,ருதும்‌ ரஸம்‌ த்‌,யாத்வா ஏவம்‌ அக்‌;கெள ஹுத்வா அங்கஃ ஸ்பர்சாத்‌ கலேவர: வஜ்ரம்‌ ஹீஷ்யதே, தத: ஸ்வ கார்யாந் ஸர்வ ப்ராணி ஜீவாந்‌ ஸ்ருஷ்ட்வா பச்வாத்‌யா: ப்ரா துர்ப,விஷ்‌பந்தி, தத:
ஸ்தாவர ஜங்க மாத்மகம்‌ ஜகத்‌ ப,விஷ்‌பதி””
[பெரிய தேகத்தை உடையவரான அப் பிரமன்‌ ஸ்ருஷ்டியை அறியவில்லை. அந்த அநிருத்த நாராயணன்‌ அவருக்கு ஸ்ருஷ்டியை உபதேசித்தார்‌:– *பிரமனே! உன்னுடைய இந்திரியங்களை யாகம்‌ செய்பவர்களாகவும்‌, சரீரத்தை ஹவிஸ்ஸாகவும்‌, என்னை அந்த ஹவிஸ்ஸை உண்பவனாகவும்‌, வஸந்த காலத்தை நெய்யாகவும்‌, க்ரீஷ்ம ருதுவை ஸமித்தாகவும்‌, சரத் ருதுவை(ஹோமம்‌ செய்யப்படும்‌)ஷட் ரஸமாகவும்‌ தியானித்து, இம் மாதிரியாக அக்னியில்‌ ஹோமம்‌ செய்து, அதன்‌ ஸ்பர்சத்தினால்‌ (உன்னுடைய) சரீரம்‌ வஜ்ரம் போல்‌(ஸ்ருஷ்டி செய்ய ஸமர்த்தமானதாக) ஆகி விடும்‌. பிறகு தங்களிடமிருந்து உண்டாகும்‌ ஸா்வ ப்ராணிகளையும்‌ உண்டாக்கிக் கொண்டு பசு முதலியவை. உண்டாகப் போகின்றன. அதன்‌ பிறகு ஸ்தாவர ஜங்கமங்களடங்கிய ஜகத்‌ உண்டாகும்‌’”] இதிலிருந்து பிரமன்‌ ஸ்ருஷ்டி செய்ய ஞானமும்‌, சக்தியுமில்லாமல்‌ திகைத்ததாகவும்‌ பகவான்‌ ஸ்ருஷ்டி செய்ய வழியை உபதேசித்ததாகவும்‌ அறிகிறோம்‌.
“*மஹாதே,வஸ்‌ ஸர்வமேதே, மஹாத்மா ஹுத்வாத்மாநம்‌ தேவதேவோ
பபூவ” [மஹாத்மாவான மஹா தேவர்‌ (சிவன்‌) ஸா்‌வமேத யாகத்தில்‌தன்னை ஹோமம்‌ செய்து தேவர்களுக்கெல்லாம்‌ தேவரானார்‌.]என்பது போல்‌ பிரமனும்‌ பகவானைக் குறித்து ஆத்ம ஸமர்ப்பணமாகிற யாகத்‌தைச்‌ செய்து ஸ்ருஷ்டி சக்தியை அடைந்தார்‌ என்று ஏற்படுகிறது.

————

ஸப்தாஸ்யாஸந்‌ பரித,ய:, த்ரிஸ் ஸப்த ஸமித,: க்ருதா:
தே,வா யத்‌;யஜ்ஞம்‌ தந் வாநா :; அபத்நந்‌ புருஷம்‌ பசும்‌.
இந்த யஜ்ஞத்துக்கு ஏழு வஸ்துக்கள்‌ பரிதிகளாக ஆயின. இருபத்‌தொரு வஸ்துக்கள்‌ ஸமித்துக்களாகச்‌ செய்யப்பட்டன. யஜ்ஞத்தைச்‌ செய்யும்‌ தேவர்கள்‌ நான்முகனாகிற. புருஷ (ஹோமம்‌ செய்யப்‌ படும்‌) பசுவாகக்‌ கட்டினார்கள்‌. -யாகம்‌ செய்யும்‌ போது அக்னிக்குத்‌ தெற்கு, மேற்கு, வடக்கு திக்குகளிலும்‌, உத்தர வேதிக்குத்‌ தெற்கு, மேற்கு, வடக்கு திக்குகளலும்‌ ஆறு தண்டங்‌கள்‌ (பலாசம்‌ முதலிய மரங்களின்‌ கொம்புகள்‌) வைக்கப்படுகின்றன. கிழக்கு திக்கில்‌ ஸூர்யனைச்‌ சேர்த்து ஏழு பரிதிகளாகக்‌ கணக்கிடப்‌படுகின்றன.

இந்த ஸ்ருஷ்டி யஜ்ஞத்திலும்‌ ஏழு பரிதிகள்‌ ஏற்பட்டன என்று சொல்லப்படுகிறது. அவையாவன:.ப்ருதிவீ, ஜலம்‌, அக்னி, வாயு, ஆகாசம்‌ எனப்படும்‌ ஐந்து பூதங்களும்‌, அஹங்காரமும்‌ மஹானும்‌(த்ரிஸ்‌…க்ருதா🙂 இங்கு இருபத்தொரு ஸமித்துக்கள்‌ அக்னியில்‌ ஹோமம்‌. செய்வதற்காகக்‌ கல்பிக்கப்பட்டன. அவையாவன–ப்ருதிவீ முதலிய ஐந்து பூதங்கள்‌; இவைகளுக்கு முறையே காரணமான கந்த தன்மாத்ரை, ரஸ தன்மாத்ரை, ரூப தன்மாத்ரை, ஸ்பர்ஸ தன்மாத்ரை, சப்த தன்மாத்ரை எனப்படும்‌ ஐந்து தன்மாத்ரைகள்‌; கண்‌, காது, நாக்கு, மூக்கு, தோல்‌ எனப்படும்‌ ஐந்து ஞானேந்‌திரியங்கள்‌. வாய்‌, கால்‌, கை, ஆண்‌ பெண்‌ குறிகள்‌, ஆஸனவாய்‌ எனப்படும்‌ ஐந்து கர்மேந்திரியங்கள்‌; மனஸ்‌. ஆக இந்த இருபத்‌தொரு தத்வங்களும்‌ ஸமித்துக்களாகக்‌ கல்பிக்கப்பட்டன. ப்ரஜைகளை ஸ்ருஷ்டிப்பதற்கு இவைகள்‌ உபகரணங்களாகையால்‌ ஸ்ருஷ்டி யஜ்ஞத்திற்கு ஸாம க்ரிகளாகச்‌. சொல்லப்படுகின்றன.-

 (தேவா… பசும்‌) “இப்படி யஜ்ஞம்‌ செய்பவர்களான நித்ய ஸூரிகள்‌ யஜ்ஞத்‌தில்‌ ஹோமம்‌ செய்யப்படும்‌ பசுவான பிரமனை ப்ரக்ருதியாகிய யூப ஸ்தம்பத்தில்‌ கட்டினார்கள்‌. அடுத்த மந்தர த்தில்‌ “படர்ஹிஷி :பஜ்ஞம்‌ ப்ரெளக்ஷந்‌” [மூல ப்ரக்ருதியிலுள்ள பிரமனை ப்ரோக்ஷித்தார்கள்‌ ] என்று வருவதால்‌ இங்கு மூல ப்ரக்ருதியாகிய யூப ஸ்தம்பத்தில்‌ கட்டினார்கள்‌ என்றே கொள்ள வேண்டும்‌.

தம்‌ யஜ்ஞம்‌ ப,ர்ஹிஷி ப்ரெளக்ஷந்‌, புருஷம்‌ ஜாதம் அக்ரத :
தேந தே,வா அயஜந்த, ஸாத்‌,யா ருஷயச்ச யே. –8-
[முதலில்‌ உண்டானவனும்‌ யஜ்ஞத்தில்‌ ஹோமம்‌. செய்யப் படுபவனும்‌,மூல ப்ரக்ருதியில்‌ உட்ப்பட்டவனுமான பிரமனாகிற புருஷனை ப்ரோக்ஷித்தார்கள்‌. ஸாத்யர்களென்று சொல்லப்படும்‌ நித்யஸூரிகளும்‌, ரிஷிகளும்‌ (முக்தர்களும்‌) அப்பசுவைக் கொண்டு யஜ்ஞம்‌ செய்‌தனர்‌.] (தம்‌ யஜ்ஞம்‌) யஜ்ஞநத்தில்‌ ஹோமம்‌ செய்யப்படுபவனான அப்‌ பிரமனை. (பர்ஹிஷி) ‘பர்ஹி:‘ என்னும்‌ பெயரை யுடைய மூல ப்ரக்ருதியில்‌ முன் சொன்னபடி கட்டி. (ப்ரெளக்ஷந்‌) ப்ரோக்ஷணம்‌ என்னும்‌ ஸம்ஸ்காரத்தைச்‌ செய்தார்கள்‌.

(புருஷம்‌ ஜாதம்‌ அக்ரத:) முன்னால்‌ பிறந்தவனான அந்தப்‌ பிரமனாகிற புருஷனை ப்ரோக்ஷித்தார்கள்‌. “ப்‌, ரஹ்மா: தேஃவாநாம்‌ ப்ரதமஸ்‌ ஸம்பஃபூ,வ”” [பிரமன்‌ தேவர்களுள்‌ முதலில்‌ உண்டானான்‌] என்று முண்டக உபனிஷத்தில்‌ சொல் லியிருக்‌கிறபடியால்‌ இங்கு சொல்லப்படும்‌ ‘புருஷன்‌’ பிரமனே என்று நிச்ச யிக்கப்படுகிறது. (தேந அயஜந்த) அப் பிரமனைப்‌ பசுவாகக் கொண்டு யாகம்‌ செய்தார்கள்‌. ஒரு த்ரவ்யத்தை ஓரு தேவதையை உத்தேசித்‌துக்‌ கொடுப்பது யாகமெனப்படுகிறது. இங்கு நான்முகனாகிய ஹவிஸ்ஸை அநிருத்த நாராயணனகிய அக்நியில்‌ ஹோமம் செய்வதாகிய யஜ்ஞத்தைச்‌ செய்தார்கள்‌ என்று தாத்பர்யம்‌.

எவர்‌ இம்‌ மாதிரி யாகம்‌ செய்தார்களெனில்‌: (ஸாத்யா தேவா;) ஸாத்யர்களென்று ப்ரஸித்தரான நித்யஸூரிகளே இப்படி யாகம்‌ செய்தவர்‌ என்று சொல்லப்படுகிறது. இப்புருஷஸூக்தத்தின்‌ பூர்வானுவாகத்தில்‌ கடைசி மந்திரத்தில்‌ “யத்ர. பூர்வே ஸாத்‌,யாஸ்‌ ஸந்திதேஃவா:”” [எந்தப்‌ பரமபதத்தில்‌ பழைமையானவர்களும்‌ ஸாத்யர்கள்‌என்று சொல்லப்படுபவர்களுமான தேவர்கள்‌ இருக்கிறார்களோ… ]என்று சொல்லப்பட்டதால்‌ இங்கு சொல்லப்படும்‌ தேவர்கள்‌ பிறப்‌பற்றவர்களான நித்ய ஸூரிகளே என்று நிஸ் ஸந்தேஹமாக நிர்ணயிக்கப்படுகிறது. (ருஷயச்சயே) முக்தர்களும்‌ இந்த யஜ்ஞத்தில்‌ கலந்து கொண்டார்கள்‌ என்று சொல்லப்படுகிறது. பிரமனுக்கு ஸ்ருஷ்டி சக்தி கிடைத்த பின்பு ஸ்ருஷ்டிக்கப் பட்டவர்களான அத்ரி, பிருகு, வஸிஷ்டர்‌ முதலிய ரிஷிகள்‌ இங்கு சொல்லப்படும்‌ ரிஷிகளாக ஆக முடியாது. ஆகையால்‌ முக்தர்களே இங்கு சொல்லப்படுபவர்‌கள்‌. புஷோத்தமனை த்யானம்‌ பண்ணுவதையே தங்களுக்கு உண்‌ணும்‌ சோறும்‌, பருகும்‌ நீரும்‌, தின்னும்‌ வெற்றிலை யுமாகக்‌ கொண்‌டிருக்கும்‌ முக்தர்களை ரிஷிகள்‌ என்று சொல்லத் தட்டில்லை.

———–

தஸ்மாத்‌, யஜ்ஞாத்‌ ஸர்வஹுத:, ஸம்ப்‌,ருதம்‌ ப்ருஷதாஜ்யம்‌
பசூம்ஸ்தாம்ஸ் சக்ரே வாயவ்யாந்‌, ஆரண்யாந் க்‌,ராம் யாச்சயே–9-
[ எல்லாவற்றையும்‌ ஹோமம்‌ செய்யப்பட்ட அப் பிரமனிடமிருந்து, தயிருடன்‌ கூடிய நெய்‌ (ஜகத் காரண பூதமான வீர்யம்‌) உண்டாயிற்று. அந்த நான்முகன்‌ வாயு மார்க்கத்தில்‌ ஸஞ்சரிக்கும்‌ பக்ஷி களையும்‌, காட்டில்‌ ஸஞ்சரிக்கும்‌ ம்ருகங்களையும்‌, கிராமத்திலிருக்கிற மிருகங்களையும்‌ படைத்தனன்‌.] “தஸ்மாதி,தி ச மந்த்ரேண ஜகத் ஸ்ருஷ்டிஸ்‌ ஸமீரிதா”'[*தஸ்மாத்‌…” என்னும்‌ மந்த்ரத்தினால்‌ ஜகத் ஸ்ருஷ்டியானது சொல்‌லப்பட்டது.|] என்று புருஷ ஸம்ஹிதையில்‌ சொல்லப்பட்டது.

ச’காரத்தினால்‌ இது முதல்‌ ஏழு மந்த்ரங்களில்‌ ஜகத் ஸ்ருஷ்டி சொல்‌லப் படுகிறதென்று அறியப்படுகிறது. (ஸர்வஹுத: தஸ்மாத் யஜ்‌ஞாத்‌) தன்னை யுள்ளிட்ட எல்லாவற்றையும்‌ ஹோமம்‌ செய்விக்கப்‌பட்ட அப் பிரமனிடமிருந்து. நித்ய ஸூரிகளால்‌ பகவானிடம்‌ ஆத்ம ஸமர்ப்பணம்‌ செய்விக்கப்பட்ட அந்த நான்முகனிடமிருந்து.(ப்ருஷதாஜ்யம்‌ ஸ்ம்ப்‌ருதம்‌) தயிருடன்‌ கூடிய நெய்‌ உண்டாயிற்று.-இங்கு ‘ப்ருஷதாஜ்யம்‌’ என்று ஜகத்‌ ஸ்ருஷ்டிக்குக்‌ காரணமான வீர்யம்‌ சொல்லப்படுகிறது, (பரூம்ஸ்தாந்‌…) வாயு ஸஞ்சரிக்கும்‌படியான ஆகாசத்தில்‌ பறக்கும்‌ பக்ஷிகளையும்‌, காட்டில்‌ ஸஞ்சரிக்கும்‌ புலி, கரடி முதலிய ப்ராணிகளையும்‌, கிராமங்களில்‌ திரியும்‌ பூனை முதலிய ப்ராணிகளையும்‌ அந்த நான்முகன்‌ ஸ்ருஷ்டித்தார்‌.

————

தஸ்மாத்‌, யஜ்ஞாத்‌ ஸர்வஹுத: ருசஸ்‌ ஸாமாறி ஜஜ்ஞிரே
சந்தராம்ஸி ஜஜ்ஞிரே தஸ்மாத்‌, யஜுஸ்‌ தஸ்மாத, ஜாயத,–10-
[எல்லாவற்றையும்‌ ஹோமம்‌ செய்யப்பட்ட அப் பிரமனிடமிருந்து ருக் வேதங்களும்‌, ஸாம வேதங்களும்‌ உண்டாயின. அந்த நான்முகனிடமிருந்து சந்தஸ்ஸுக்கள்‌ உண்டாயின; யஜுர் வேதமும்‌ அவனிடமிருந்து உண்டாயிற்று.] ்‌
பிரமனுடமிருந்து ருக் யஜுஸ் ஸாம வேதங்களும்‌, க௱யத்ரி முதலிய சந்தஸ்ஸுக்களும்‌ உண்டாயின வென்று சொல்லப்படுகிறது.
யோ ப்‌,ரஹ்மாணம்‌ விததாதி பூர்வம்‌ யோ வை வேதாம்ச்ச ப்‌ரஹிணோதி தஸ்மை”[எந்தப்‌ பரமாத்மாவானவர்‌ ஸ்ருஷ்டி காலத்தில்‌ பிரமனைப்‌ படைத்துஅவனுக்கு வேதங்களை உபதேசிக்கிறாரோ…] என்று சொல்லப்‌ பட்டிருக்கிறபடியால்‌ பரம புருஷனிடமிருந்து உபதேதசம் பெற்று வேதங்களை வேதன்‌ (பிரமன்‌) வெளிப்படுத்தினா்‌ என்றே கொள்ள வேண்டும்‌. “தஸ்ய ஹ வா ஏதஸ்ய மஹதோ பூ,தஸ்ய நிச்வஸிதம்‌ ஏதத்‌, ருக்‌, வேதோ யஜுர்வேதஸ்‌ ஸாமவேதே…”” (ருக்‌ யஜுஸ்‌ ஸாமம்‌ முதலிய வேதங்களெல்லாம்‌ பரமாத்மாவினுடைய மூச்சுக் காற்றுகள்‌.] என்று மஹா புருஷனுடைய மூச்சுக் காற்றாகச்‌ சொல்லப்பட்ட அபெளருஷேயமான வேதங்களைப்‌ பிரமன்‌ பிரகாசப் படுத்தினான்‌ என்று ஏற்படுகிறது.

———–

தஸ்மாத,ச்வா அஜாயந்த ஏகேசோப,யாத,த:
காவோ ஹ ஐஜ்ஜிரே தஸ்மாத்‌ தஸ்மாத்‌ ஜாதா அஜா வய:--11-
[அந்த நான்முகனிடமிருந்து குதிரைகளும்‌, ஒரு பக்கத்தில்‌ பற்களையுடைய எருமை முதலிய ப்ராணிகளும்‌. இரண்டு பக்கத்தில்‌ பற்களை யுடைய கழுதை முதலியவைகளும்‌ உண்டாயின.-அவரிடமிருந்து பசுக்களும்‌ உண்டாயீன.] (காவோ ஹ…) ஒரு பக்கத்தில்‌ பற்களை யுடைய ம்ருகங்களில்‌ பசுக்களும்‌ அடங்கின போதிலும்‌ அவைகளின்‌ மேன்மையை முன்‌னிட்டு அவை தனியாகச்‌ சொல்லப்படுகின்றன என்று விஷ்ணு சித்தாசாரியர்‌ வியாக்யானம்‌ செய்தார்‌. புருஷோத்தமனுடைய ‘ ஆராதனமாகிய யஜ்ஞத்திற்கு உபயோகப்படும்‌ பால்‌, தயிர்‌, நெப்‌ முதலியவை பசுக்களிடமிருந் தல்லவோ கிடைக்கிறது.

யத்‌ புருஷம்‌ வ்யத,து,: கதிதா வ்யகல்பயந்‌
முக,ம்‌ கிமஸ்ய கெள பராஹ, காவூரு பாதர வுச்யேதே.[பிரமனாகிய புருஷனைப்‌ (பசுவாகச்‌) செய்த போது, எவ்வளவு விதமாகக்‌ கல்பித்தார்கள்‌? இந்த ப்ரஹ்மாவினுடைய முகம்‌ எதுவாக ஆயிற்று? கைகள்‌ எவர்களாக ஆயின?துடைகளும்‌ திருவடிகளும்‌ எவர்களாகச்‌ சொல்லப்படுகின்‌றன?] யஜ்ஞத்தைச்‌ செய்பவர்களான ப்ராஹ்மணர்‌ முதலியவர்களின்‌ ஸ்ருஷ்டியை இம் மந்த்ரமும்‌ அடுத்த மந்த்ரமும்‌ சொல்லுகின்‌றன. இந்த ருக்‌ கேள்வியாகவும்‌ அடுத்த ருக்‌- பதிலாகவும்‌ இருக்கின்றன. நித்ய ஸூரிகள்‌ பிரமளைப்‌ பசுவாகக்‌ கல்பித்த போது அவருடைய அவயவங்கள்‌ எத்தனை விதமாகக்‌ கல்பிக்கப்பட்டன வென்றும்‌ எத்‌ தெந்த அவயவங்களினின்றும்‌ எந்தெந்தப்‌ பதார்த்தங்கள்‌ படைக்கப்‌பட்டன வென்றும்‌ கேட்கப் படுகிறது. விசேஷமாக முகம்‌, கைகள்‌, துடைகள்‌, பாதங்கள்‌ இவைகளிலிருந்து எவர்‌ உண்டானார்கள்‌ என்றும்‌ கேட்கப் படுகிறது.

ப்‌ராஹ்மணோஸ்ய முக,மாஸீத்‌ பாஹூ ராஜந்ய: க்ருத;
ஊரூ ததஸ்ய யத்‌,வைச்ய: பத்‌,ப்‌,யாம்‌ சூத்‌ரோ அஜாயத.–13-ப்ராஹ்மணன்‌ இவருடைய முகமானான்‌. கைகள்‌ க்ஷத்ரியனாகச்‌ செய்யப்பட்டன. அப்பொழுது துடைகள்‌ வைச்யனாக ஆயின.-திருவடிகளிலிருந்து சூத்ரன்‌’ உண்டானான்‌. முகம்‌ ப்ராஹ்மணனாக ஆயிற்று என்று சொல்லப் படுகிறது. பாதங்களிலிருந்து சூத்ரன்‌ உண்டானான்‌” என்று கடைசியில்‌ சொல்லப் படுகிறபடியால்‌ இங்கும்‌ முகத்திலிருந்து ப்ராஹ்மணன்‌ உண்டானான்‌ என்றே தாத்பர்யம்‌. ப்ராஹ்மணன்‌ அதிகமான ஞானத்‌தை உடையவனாதலால்‌ ஞானேந்த்ரியங்களெல்லா வற்றையும்‌ உடையதான முகத்தினின்றும்‌ அவனைப்‌ படைத்‌தார்

(பாஹூ…க்ருத:) கைகளிலிருந்து க்ஷத்ரியன்‌ உண்டானான்‌.-யுத்தம்‌ செய்வதைத்‌ தொழிலாக உடைய க்ஷத்ரியனுக்குத்‌ தோள்‌ வலிமையும்‌ கை வன்மையும்‌ அவச்யமாதலால்‌ -ப்ரஹ்ம தேவன்‌ அவனைத்‌ தன்‌ கைகளிலிருந்து ஸ்ருஷ்டித்தார்‌. -(ஊரூ…வைச்ய) உழுதலையும்‌ வியாபாரத்தையும்‌ தொழிலாக வுடைய வைச்யனுக்குத்‌ துடை பலம்‌ முக்யமாதலால்‌ நான்முகன்‌ அவளைத்‌ தன்‌ துடைகளிலிருந்து படைத்தார்‌.-(பத்ப்யாம்‌.. ) பாதங்களினின்றும்‌ நான்காவது வர்ணத்தைச்‌ சேர்ந்த சூத்ரன்‌ உண்டானான்‌. முதல்‌ மூன்று வர்‌ணத்தவர்களுடைய ஏவல்களைச்‌ செய்வதே ஸ்வ தர்மமாக வுடைய சூத்ரனுக்குக்‌ கால் வன்மை அவச்யமாதலால்‌ பிர்மன்‌ தன் கால்களிலிருந்து அவனைப்‌ படைத்தார்‌.

இதிஹாஸ புராணங்களில்‌ பலவிடங்களில்‌ நாராயணனுடைய முகம்‌, கைகள்‌, துடை, திருவடி முதலியவைகளிலிருந்து நான்கு வர்ணத்தவர்களும்‌ உண்டானதாகச்‌ சொல்லப்பட்டிருக்க – இங்கு நான்முகனின்‌ அவயவங்களிலிருந்து அவர்கள்‌ உண்டானதாகச்‌ சொல்லுவது எப்படிப்‌ பொருந்தும்‌? என்ற ஸந்தேஹம்‌ ஏற்படுகிறது.-பிரமனை சரீரமாகக் கொண்ட புருஷோத்தமனே இப்படிப்‌ படைப்ப தாலும்‌, நான்முகனுடைய அவயவங்கள்‌ நாராயுணனுடைய அவ யவங்களே யாகையாலும்‌ இதில்‌ ஒரு’ விரோதமுமில்லை.-இந்தப்‌ புருஷ ஸூக்தம்‌ முழுவதும்‌, தைத்திரீய ஆரண்யகத்தில் மூன்றாவது ப்ரச்நத்தில்‌ படிக்கப் பட்டிருக்கிறது. ஆகையால்‌ நான்கு ஜாதிகளும்‌ ஸ்ருஷ்டி காலத்திலேயே தனித் தனியாகப்‌ படைக்கப்பட்‌டனவென்று வேதத்திலிருந்தே அறிகிறோம்‌. நவீன காலத்தில்‌ சிலர்‌ வேதங்களில்‌ ஜாதி சொல்லப் படவில்லை யென்றும்‌,. புராணாங்களிலேயே ஜாதிப் பிரிவினை சொல்லப் பட்டிருக்கிறதென்றும்‌ கட்டுரைகள்‌ எழுதுவது இதனால்‌ நிராகரிக்கப்பட்ட.து. கீதையிலும்‌ பகவான்‌, “சாதுர் வர்ண்யம்‌ மயா ஸ்ருஷ்டம்‌ குண கர்ம விபாக,ச:’ [குணம்‌, தொழில்‌ முதலியவைகளில்‌ பேதங்களுடன்‌ கூடிய நான்கு வர்ணங்களும்‌ என்னால்‌ ஸ்ருஷ்டிக்கப்பட்டன.] என்று அருளிச்‌ செய்திருக்கிறார்‌.-

ஜன ஸமூஹத்தினுடைய முக ஸ்தானமாயிருக்கும்‌ ப்ராஹ்மண ஜாதி பிரமனுடைய முகத்தினின்றும்‌ உண்டாயிற்று. முகத்தில்‌ ஞானேந்த்ரியங்களான கண்‌, மூக்கு, நாக்கு, செவி, மெய்‌ (தோல்‌) என்னும்‌ ஐந்தும்‌ இருக்கின்றன. ‘ஸர்வேந்த்‌ரியாணாம்‌ நயநம்‌ ப்ரதாநம்‌” என்று எல்லா இந்த்ரியங்களிலும்‌ முக்கியமானதாகச்‌ சொல்‌லப்படும்‌ கண்ணினாலேயே படைக்கப்பட்ட எல்லாப்‌ பொருள்களையும்‌ பார்க்கிறோம்‌.-கண்ணால்‌ பார்க்கப்பட்டதே ப்ரத்யக்ஷ ப்ரமாணமாகிறது, படைக்கப்பட்ட பொருள்‌களைப்‌ பார்ப்பதிலிருந்து அவைகளை நியமிக்கும்‌ ஜீவனையும்‌, படைப்பவனான ஈஸ்வரளையும்‌ அறி கிறோம்‌. அம் மாதிரியே ப்ராஹ்மணார்களும்‌ திர்க்க தர்சிகளாகவும்‌,ஜீவாத்ம பரமாத்ம தத்வ ஜ்ஞானிகளாகவும உலகத்திற்குக்‌ கண்‌ போன்றும்‌ விளங்குகிருர்கள்‌. கண்ணிற்கு அடுத்த படியான மேன்மை வாய்ந்தது காது. சப்த ராசியான வேதமும்‌ கர்ண பரம்பரையாகவே வந்தது. ‘பஹுநா ஸ்ருதேந ” என்கிறபடி பலரிடம்‌ கேட்டுப்‌ பரமாத்ம ஜ்ஞானத்தை அடைவதற்கு ஸாதனமாயிருப்பது இது.-ரஸனேந்திரியம்‌ ருசிப்பதாகிற ஞானத்தை அறிகிறது. ஞானத்திற்கு ஆதாரமான தேஹத்தைப்‌ போஷிப்பதற்கும்‌ ரஸனேந்திரியம்‌ அவச்‌ யம்‌..

ஸ்வ தேஹம்‌ ஆத்ஃயம்‌ க,லு தர்ம ஸாதநம்‌”” [ தன்னுடைய தேஹ மல்லவோ தர்மத்திற்கு முதன்மையான ஸாதனம்‌. |என்று சொல்லப்‌ பட்டிருக்கிறது. அச்யுதனுக்கு அளிக்கப்பட்ட ப்ரஸாதங்களை ருசிப்‌பதற்கே ஏற்பட்டது நாக்கு. க்ராணேந்திரியம்‌ (மூக்கு) புருஷோத்தமனுக்கு ஸமர்ப்பிக்கப்பட்ட புஷ்பம்‌, சந்தனம்‌ முதலியவைகளை முகர்வதற்கு ஸாதனமானது. ஸ்வாஸம்‌ விடுவதற்கும்‌ மூக்கு உபயோகமாயிருக்கிறது. தொடுவதினால்‌ ஏற்படும்‌ உணர்ச்சியை அறிவிப்பது த்வக்‌ (தோல்‌) என்னும்‌ இந்த்ரியம்‌,-““உடுத்துக் களைந்த நின்‌ பீதக வாடை உடுத்துக்‌ கலத்ததுண்டு தொடுத்த துழாய்‌ மலர்‌ சூடிக்‌ களைந்தன சூடும்‌ இத் தொண்டர்களோம்‌’என்பது போல்‌ தம்முடைய ஞானேந்த்ரியங்களையெல்லாம்‌ புரு ஷோத்தமன்‌ விஷயத்தில்‌ ஈடுபடுத்துபவர் களாகையால்‌ ப்ராஹ்‌மணர்கள்‌ முகத்தினின்றும்‌ உண்டானார்கள்‌. கர்மேந்த்ரியங்களில்‌ ப்ரதானமான வாயும்‌ முகத்திலிருக்கிறது. இது ப்ராம்ஹணர்களின்‌ வாக்கு வன்மையையும்‌ சாபானுக்ரஹ ஸாமர்த்யத்தையும்‌ காட்டுகிறது. வாயினால்‌ “கடல்‌ சூழ்ந்த மண்ணுலகம்‌ வாழ”’ என்றும்‌, “ஸர்வே ஜநா: ஸுகிநோ ப,வந்து’” என்றும்‌ அச்யுதனால்‌ படைக்கப்பட்ட அவனியிலுள்ளோர்‌ எல்லோரும்‌ ஸுகமாயிருக்க வேண்டுமென்று வாழ்த்துவது ப்ராஹ்மணானுடைய தொழில்‌ என்று உணர்த்தப்படுகிறது.-வேதாத்யயனத்திற்கும்‌ வேதத்தை ஓதுவிப்பதற்கும்‌ யஜ்ஞம்‌ முதலியவைகளைப்‌ பண்ணி வைப்பதற்கும்‌, வாய்‌ உபயோகப்படுவ தாகையால்‌ இவைகள்‌ அவனுடைய தொழில்கள்‌ என்றும்‌ தெரிவிக்‌ கப்படுகின்றன. முகம்‌ புத்தி (மூளை)யையும்‌ தேஜஸ்ஸையும்‌ உடைய தாதலால்‌ ப்ராஹ்மணான்‌ புத்திமானாகவும்‌, ப்ரஹ்ம தேஜஸ்ஸை உடையவனாஃவும்‌ இருப்பான்‌ என்று தெரிவிக்கப்படுகிறது. ப்ரஹ்ம ஜ்ஞானியாகையால்‌ ப்ராஹ்மணான்‌ எனப்படுகிறான்‌. ராஜாக்‌களுக்கு மந்தரியாகவும்‌ ஆசார்யனாகவும்‌ இருந்து புத்திமதியும்‌ உபதேசமும்‌ செய்பவன்‌ ப்ராஹ்மணன்‌. இவ்வளவு கார்யங்களையும்‌ செய்வதற்கேற்பட்ட ப்ராஹ்மணன்‌ பிரமனின்‌ முகத்திலிருந்து உண்டானான்‌.

ப்ராஹ்மணர்களுடைய தேஹ குடும்ப ஸம்ரக்ஷணங்‌கள்‌ ராஜாக்களால்‌ நன்கு கவனிக்கப்பட்டு வந்ததால்‌ முன் காலத்தில்‌ அவர்கள்‌ தங்கள்‌ தொழிலை சரியாகச் செய்துவந்தார்கள்‌. ஆசார்‌யர்கள்‌ காலத்தில்‌, ராஜாங்கம்‌ பரதேசிகள்‌ கையில்‌ அகப்பட்ட போதிலும்‌, ப்ராஹ்மணார்கள்‌ உஞ்ச வ்ருத்தி செய்தாவது தங்கள்‌ தொழிலைச்‌ செய்து வந்தார்கள்‌. கவியின்‌ கோலாஹலத்தினாலும்‌, பலவித அஸெளகர்யங்களாலும்‌, இப்போது ப்ராஹ்மணார்கள்‌ தங்கள்‌ தொழிலை விட்டுப்‌ பல தொழில்களிலும்‌ புகும்படி தேரிட்டிருக்கிறது.-சில பாக்யவான்கள்‌ இக் காலத்திலும்‌ வைதிக மார்க்கத்திலிருந்துகொண்டு பணப் பேயாட்படாமல்‌ முறை தவராமல்‌ இருந்து கொண்டு வருகிறார்கள்‌-கர்மேந்த்ரியங்களுள்‌ வலிமை வாய்ந்ததான கையிலிருந்து தோளாண்மை யுடைய க்ஷத்ரியன்‌ பிறந்தான்‌. தேஹம்‌ கையினுடைய பலத்தினாலேயே ரக்ஷிக்கப்படுவது போல்‌ ஜன ஸமூஹமும்‌ க்ஷத்ரியனுடைய தோள்வலியினால்‌ ரஷிக்கப் படுகிறது. ராஜாக்களில்லாவிடில்‌உலகம்‌ அராஜமாகி அழிந்துவிடும்‌. அதனாலேயே அரசனுக்குத்‌ திருமாலின்‌ அம்சம்‌ உள்ளதாகக்‌ கூறப்படுகிறது.

எல்லாரும்‌ உண்டு ஜிவிப்பதற்கு அவச்யமான உணவுப்‌ பொருள்களை உண்டாக்குவதையும்‌ பலருக்கு வினியோகிப்பதையும்‌ தொழிலாக வுடைய வைச்யன்‌ துடையிலிருந்து உண்டாக்கப்பட்‌டான்‌. வைஸ்யனுடைய தாளாண்மையினாலேயே வேளாண்மை நடக்கிறதன்றோ. எல்லாருடைய தேஹத்தையும்‌ போஷிப்பது வைஸ்யனுடைய தொழில்‌.

இம் மூவர்ணத்தார்க்கும்‌ வேண்டிய உபகரணங்களை ஸம்‌பாதித்துக்‌ கொடுப்பதற்காக ஆடி ஓடித்‌ திரிந்து நடந்து கார்யம்‌ செய்பவனாகையால்‌ சூத்ரன்‌ காலிலிருந்து படைக்கப்பட்டான்‌. கால்‌கள்‌ சரீரத்தைத்‌ தாங்குவது போல்‌ அவன்‌ இம் மூவர்ணத்தாரையும்‌ தாங்குகிறான்‌. காலிலிருத்து உண்டானதால்‌ ஒருவிதமான தாழ்வும்‌ கிடையாது. எம்பெருமானுடைய திருவடிகளே எல்லோருக்கும்‌ வணங்கும்‌ துறையாகும்‌. மற்ற வர்ணத்தார்க்குள்ள நியம நிஷ்டை கள்‌, ஆசார வ்யவஹாரங்கள்‌ முதலிய கஷ்டங்கள்‌ இவர்களுக்குக்‌ கிடையாது. சொன்னதைச்‌ செய்வதில்‌ பாபமும்‌ கிடையாது; பொறுப்‌பும்‌ கிடையாது. அவர்களுக்கு நற்கதியடைவது மிகவும்‌ ஸுலபமாகும்‌, பிறப்பினலேயே அவர்களுக்கு நைச்யமும்‌, அஹங்கார மமகாரமில்லாமையும்‌ ஏற்பட்டிருக்கின்றன. ஆசார்யர்களும்‌ உயர்ந்த வர்ணத்தார்க்குப்‌ பிறப்பினாலேற்படும்‌ அஹங்கார மமகாரங்கள்‌ அழிய வேண்டுமென்று உபதேசித்திருக்கிறார்கள்‌. “தொழுமினீர்‌ கொடுமின்‌ கொண்மின்‌” என்று அவர்களிடமிருந்து ஞானத்தைப்‌ பெற்றுக் கொள்வதிலும்‌, அவர்களுக்கு ஞானத்தைக்‌ கொடுப்பதிலும்‌ தடையில்லை என்று தொண்டரடிப் பொடி யாழ்வாரும்‌ அருளி யிருக்கிறார்‌.

போதனம்‌, ரக்ஷணம்‌, போஷணம்‌, ஸேவகம்‌ என்பவை முறையே நான்கு வர்ணத்தாருக்கும்‌ தொழிலாகும்‌. ஓவ்‌வொருவரும்‌ மற்ற வர்ணத்தார்க்காக உழைக்கிறார்கள்‌. நால்வரும்‌ பகவானுடைய அவயவங்களே. அவர்களுக்குள்‌ ஏற்றத் தாழ்வு கிடையாது. அவர்கள்‌ ஓருவர்க்கொருவர்‌ சண்டையிடுவது சரீரத்தின்‌ அவயவங்கள்‌ ஒன்றுக்கொன்று சண்டையிடுவதை யொக்கும்‌, வயிறுடன்‌ மத்த அவயவங்கள்‌ சண்டையிட்ட கதை எல்லோரும் அறிந்ததே -நமது ஸநாதன வைதிக தர்மமாகிற மண்டபத்தைத்‌ தாங்கும்‌ தூண்கள்‌ ஐந்து. நடுத்தூண்‌ ஸ்ருதி ஸ்ம்ருதீதிஹாஸ புராணங்கள்‌ மூதலியவையும்‌ அவைகளில்‌ சொல்லப்பட்டிருக்கும்‌ தெய்வங்களின்‌ கோவில்களுமேயாகும்‌. ஜாதி, ஸ்த்ரீகள்‌, சொத்து, சுதந்திரம்‌ ஆகிய நான்கும்‌ மற்ற தூண்களாகும்‌. இவைகளைக்‌ காப்பாற்றுவதே அரசர்களின்‌ கடமை யென்று பாரதத்தில்‌ ராஜ தர்மத்தில்‌ பரக்கப்‌ பேசப் பட்டிருக்கிறது. ஸ்ருதி ஸ்ம்ருதிகளில்‌ இவைகளைப் பற்றி ஏற்‌ பட்டிருக்கும்‌ சட்ட திட்டங்களை மாற்ற அரசனுக்காவது, அவனுடைய மந்த்ரிகளுக்காவது, ஜன ப்ரதிநிதி ஸபைக்காவது அதிகாரம்‌ கிடையாதென்பது ஸர்வ ஸித்தமாக ஏற்பட்டிருந்தது. இதை மாற்ற ப்ரயத்னம் செய்த வேன மஹாராஜன்‌ அடைந்த கதியை ஹரி வம்சம்‌ முதலியவைகளில்‌ நன்கு காணலாம்‌. இக்காலத்தில்‌ அந்த நியமத்திற்கு ஏட்டிக்குப்‌ போட்டியாக” மாற்ற முடியாதது ஓன்றும்‌ கிடையாது என்ற கொள்கையைக்‌ கொண்டிருக்கிறார்கள்‌.-முன்பு நியமிக்கப்பட்டதெல்லாம்‌ பிசகென்று கொண்டு அவைகளுக்கு தேர்‌ மாறாக ஆக்க வேண்டுமென்று சட்டம்‌ செய்கிறார்கள்‌. கோயில்களேற்பட்ட தத்வத்திற்கு விரோதமாகச்‌ சட்டங்களேற்படுத்தி தெய்வ ஸாந்தநித்யத்தைச்‌ சிதைத்தது தேசமெங்குமறிந்ததே.

பிறப்பையும்‌ புத்தியிருப்பதையுமே குற்றமாகக் கொண்டு உத்யோகங்களுக்கு உள்ளே விடாமலும்‌, பாடசாலைகளில்‌ படிக்கவிடாமலும்‌ ப்ராஹ்‌மணர்களை த்வேஷிப்பது எல்லோரும்‌ அறிந்ததே. ப்ராஹ்மணர்‌கள்‌ க்ருஷ்ணணையே கதியாகக்‌ கொண்டவர்கள்‌. க்ருஷ்ணனும்‌ ப்‌ராஹ்மணோ மம தே;வதா””[ப்ராஹ்மணன்‌ என்னுடைய தேவதை]என்று அருளிச் செய்தார்‌. ஆகையால்‌ ப்ராஹ்மண த்வேஷமானது தெய்வ த்வேஷத்திலேயே முடியுமென்று எல்லோரும்‌ பயந்துகொண்டிருந்தோம்‌. அம்மாதிரியே ப்ராஹ்மண த்வேஷத்தில்‌ ஆரம்பித்த ஒரு சாரார்‌ தெய்வ த்வேஷத்திற்குக்‌ கொடி கட்டிக் கொண்டு கதறுகிறார்கள்‌. ஜாதியென்பது அவரவர்‌ கர்மானுகுணமாக பகவந்‌ நியமனப்படி ஏற்பட்டது. சொத்து அவரவர்‌ பண்ணிய புண்யபாபத்தின்‌ பலனேயாகும்‌. :மேலைத் தவத்தளவே யாகுமாம்‌ தான்பெற்ற செல்வம்‌ குலத்தளவே யாகும்‌ குணம்‌’” என்றல்லவோ சொல்லப்பட்‌டிருக்கிறது. ஆங்கிலேயர்களும்‌ பணத்தினாலும்‌ அந்தஸ்தினாலும்‌ பேதம்‌ ஏற்படுத்தி யிருக்கிறார்கள்‌. சமதர்மக் கொள்கை பேசும்‌ ருஷ்ய தேசத்திலும்‌ அதிகாரப் பதவியினால்‌ வித்தியாசங்களிருக்கின்றன. அம்மாதிரியான . வித்தியாசங்கள்‌ இங்கு கிடையா. பேதமென்பது இயற்கையின்‌ சட்டமாகும்‌. அதை ஓழிப்பதென்பது மனிதனால்‌ முடியாத முயற்சியே. ஒரு விதமாக ஓழிக்கப் பார்த்தால்‌. மற்றொரு விதமாக முளைக்கும்‌. பழைய -பேதத்திற்குப்‌ பழகி யிருக்கிறோம்‌.
‘அபேதம்‌” என்பதினாலேற்படும்‌ புது பேதங்கள்‌ படு விஷத்தைக்‌ கக்குமே யொழிய வேறொரு குணமும்‌ காணக் கிடைக்காது. ஸ்த்ரீகள்‌ மனுஷ்ய வர்க்கத்திற்கே தாயாயிருக்கும்‌ தனிப் பெருமையுடையவர்கள்‌; அவர்கள்‌ அதற்காகவே பிறப்பிக்கப்பட்டவர்கள்‌. அதற்கனுகுணமாகவே அவர்களுடைய கல்வியோ, குணமோ, செயலோ இருக்க வேண்டும்‌. அவைகளை அழிக்க முயன்றால்‌ மானிட ஸமூஹமே
முறை கெட்டு நிலை கலங்கி அழிந்து விடும்‌. குடும்பமென்பது இடும்பையாய் விடும்‌, கிருஹமென்பது குட்டிச் சுவராய் விடும்‌. கற்பு நிலையென்பது அழிந்து, கல்யாணமென்பது ஓழிந்து உயிர்வாழ்வகுற்கோர்‌ நோக்கமுமில்லாமல்‌ உலகம்‌ சுடுகாடாய் விடும்‌, ஆண்‌ வார்சு க்ரமம்‌ மாறிப்‌ பெண்மலையாளமாகிவிடும்‌.-சொத்து விஷயத்தைப் பற்றிச்‌ சில உண்மைகள்‌ உரைக்க வேண்டி யிருக்கிறது.உழைப்பின்‌ கூலியில்‌ செலவழித்தது போக மிகுந்ததைச்‌ சேர்த்து வைத்ததே சொத்தாகும்‌. அதை அழிக்க முயற்சித்தார்களாகில்‌ உழைப்பதற்குத்‌ தூண்டுகோலே இல்லாமல்‌ போய்விடும்‌. எல்லோரும்‌ சோம்பேறிகளாகத்‌ திரிவார்கள்‌. சொத்தை அபஹரிக்கச்‌ சட்டம்‌ செய்வது பகல் கொள்ளைக்கு ஸமானமாகும்‌. ஏழைகளுக்கு என்னகதி? என்று நினைக்கலாம்‌. அவர்களுக்கு உழைக்க வேலையும்‌, உண்ண உணவும்‌, உடுக்க. ஆடையும்‌ கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டியது முற்காலத்திலும்‌ ராஜ தர்மமாகச்‌ சொல்லப்பட்டிருக்‌கிறது. செய்வதற்கு. வழிகளும்‌ சொல்லப்பட்டிருக்கின்‌றன. சொத்து என்னும்‌ தத்வமழிந்தால்‌, கணவன்‌, மனைவி என்னும்‌ ஸம்பந்தமும்‌, தாய்‌, தகப்பன்‌, பின்ளை, பெண்‌ என்னும்‌ ஸம்பந்தமும்‌ அழிந்துவிடும்‌. குடும்பமென்பது உடும்பு பிடித்தவன்‌ கைபோலாகி விடும்‌.-இவைகளெல்லாம்‌. போனால்‌ சுதந்திரமும்‌ பெரும்பாலும்‌ தானாகவே போய்விடும்‌. பேச்சு சுதந்திரம்‌, கார்ய சுதந்திரம்‌, முன்னோர்‌ மொழிந்த முறைப்படி வாழும்‌ சுதந்திரம்‌, மத சுதந்திரம்‌ முதவியவைகளை இழப்போமாகில்‌ நாம்‌ நடை பிணமாகவே கருதப் படுவோம்‌.-உயிர்‌ வாழ்வதற்கு ஓர்‌ நோக்கமும பலனும்‌ இல்லாமல்‌ போய்விடும்‌.-ஆகையினால்‌ சீர்திருத்தக்காரர்கள்‌ முன்‌ இருப்பதை மாற்றுவதற்கு முன்‌ பின்‌ வரும்‌ கெடுதல்களைப் பற்றி தீர்க்காலோசனை செய்ய வேண்டும்‌.

————-

சந்த்‌ரமா மநஸோ ஜாத:, சக்ஷாஸ்‌. ஸர்யோ அஜாயத
முகாதிந்த்‌ரச்‌ சாக்‌,நிச்ச, ப்ராணாத்‌, வாயுர ஜாயத–14-
[மனத்தில்‌ நின்றும்‌ சந்திரன்‌ ‘உண்டானான்‌. கண்ணிலிருந்து ஸூர்யன்‌ உண்டானான்‌. முகத்திலிருந்து இந்த்ரனும்‌, அக்னியும்‌ ஜனித்தார்கள்‌. ‘ ப்ராணனிலிருந்து வாயு உண்டானான்‌.]-இந்த மந்த்ரத்தில்‌ ஸர்வ லோகோபகாரகமான ஸ்ருஷ்டியைச்‌ சொல்லுகிறது. 

(சந்த்ரமா…ஜாத:) சந்திரன்‌ மனத்திலிருந்து உண்‌ டானான்‌. ஏன்‌ மனஸ்ஸிலிருந்து சந்திரன்‌ உண்டாக வேணும்‌? மற்ற அங்கங்களிலிருந்து ஏன்‌ உண்டாகக் கூடாது? பிரமனை சரீரமாகக்‌ கொண்ட பகவானுடைய மனஸ்ஸிற்கும்‌, சந்திரனுக்கும்‌ எவ்விதமான ஓற்றுமை இருக்கிறது? உலகிலிருப்பவர்களுடைய மனஸ்ஸிற்கு- ஸந்தோஷத்தைத்‌ தருபவனாதலால்‌ சந்திரன்‌ மனஸ்ஸிலிருந்து படைக்கப்பட்டான்‌. அவன்‌ உலகத்திலுள்ள உயிர்களுக்கும்‌, பயிர்‌களுக்கும்‌ குளிர்ச்சியையும்‌ ஸந்தோஷத்தையும்‌ உண்டாக்குபவன்‌-அவனுடைய கிரணங்களே பயிர்களுக்கு உயிர் கொடுப்பவை. சந்‌திரனில்லா விடில்‌ உலகம்‌ காய்ந்து தீய்ந்து விடும்‌. கேசவனும்‌ குளிர்ந்த சுபமான மனத்தை யுடையவன்‌.-அப்படிப்பட்ட மனத்தினால்‌ எல்லோரும்‌ வாழ்வதற்கு ஸங்கல்பித்து, அத்வேஷத்தை உண்‌டாக்கி, ஆபிமுக்யத்தை வளர்த்து ஞானப் பயிரை விருத்தி செய்கிறான்‌.-மேலும்‌ சந்திரன்‌ மனத்திற்கு அதி தேவதையாகவும்‌ இருக்கிறான்‌.-இக் காரணங்களால்‌ சந்திரன்‌ புருஷோத்தமனுடைய மனத்திலிருந்து உண்டானான்‌.

(சக்ஷோஸ்‌…)உலகத்திற்குக்‌ கண்ணாயிருப்பவனும்‌, வெளி யிருளை விரட்டுபவனுமான ஸுர்யன்‌ அஞ்ஞானமாகிய இருளைப் போக்குகிற, மண்ணுக்கும்‌ விண்ணுக்கும்‌ கண்ணாகிய கண்ணனுடைய கண்ணிலிருந்து உண்டானான்‌. உலகத்தைப்‌ பார்க்‌கும்படி செய்வது கண்‌. ஸுூர்யனும்‌ பார்ப்பதற்கு ஸாதனமாயிருக்‌கிறான்‌., ஸூர்யன்‌ கண்ணுக்கு அதி தேவதை. கண்ணின்‌ ரோகங்‌கள்‌ ஸூர்ய நமஸ்காரம்‌ செய்வதினால்‌ போக்கப்படுவதாகச்‌ சொல்‌லப்படுகிறது. ஸூர்ய நமஸ்காரம்‌ வேதத்திலும்‌ உரைக்கப்படுகிறது. ஸூர்ய நமஸ்காரத்திலும்‌ ‘த்‌,யேயஸ் ஸதா ஸவித்ரு மண்‌டல மத்‌,யவர்த்தீ நாராயண:”” என்று சொல்லப்பட்ட, தாமரைக் கண்ணனான நாராயணனே நமஸ்கரிக்கப்படுபவன்‌. ஸூர்யன்‌ தன்‌ கிரணங்‌களால்‌ பாஹ்யாந்தகாரத்தைப்‌ போக்கடித்து, ப்ராணிகளுக்கு உஷ்ணத்தைக் கொடுத்து ஜீவிக்கும்படி செய்கிறான்‌. கேசவனுடைய கண்ணிலிருந்து உண்டாகும்‌ கடாஷத்தினால்‌, ஜிவர்கள்‌ அஜ்ஞானம்‌ நசிக்கப் பெற்று ஞான மடைந்து மோக்ஷம்‌ பெறுகிறார்கள்‌. ஆதித்‌யன்‌ தேஜோ மயமானவன்‌. அச்யுதனும்‌ தேஜோ மயமான தாமரை போன்ற கண்ணை யுடையவன்‌. ”தஸ்ய யதா கப்யாஸம்‌ புண்ட,ரீகமேவ மக்ஷிணீ” [அந்தப்‌ பரமபுருஷனுக்கு ஸூர்யனால்‌ மலரும்‌ தாமரை போன்ற இரு கண்களிருக்கின்றன.] என்றல்லவோ பர ப்ரஹ்ம லக்ஷணம்‌ சொல்லப் பட்டிருக்கிறது. இக் காரணங்களால்‌ பரந் தாமனுடைய கண்களிலிருந்து பாஸ்கரன்‌ உண்டானான்‌.-

(முகாத்‌…)முகம்‌ ஆதிபத்யத்தையும்‌ தேஜஸ்ஸையும்‌ காட்டுகிறது. ஆகையால்‌ தேவர்களுக்கு அதிபதியானவனும்‌, தேஜோவானுமாயிருக்கும்‌ இந்‌திரன்‌ முகத்திலிருந்து உண்டானான்‌. .-தேஜோ மயமான அக்னியும்‌ முகத்திலிருந்து உண்டானான்‌. “அக்‌நி முகா வை தேஃவதா:”” [தேவதைகள்‌ அக்னியை முகமாக உடையவர்கள்‌.] என்கிறபடி தேவர்களுக்கு முகமாயிருக்கும்‌ அக்னி முகத்திலிருந்து உண்டாவது நியாயமே.

(ப்ராணாத்‌ வாயுரஜாயத) ப்ராணனிலிருந்து வாயு உண்டானான்‌. ப்ராணன்‌ ஒரு வாயு விசேஷமே. அதிலிருந்து வாயு உண்டாயிற்று.-எல்லோருக்கும்‌ ப்ராணனாயிருக்கும்‌ வாயு ப்ராணனிலிருந்து உண்‌டாவது பொருத்த முடையது. வாயுவில்லாவிடில்‌ ஜீவிக்க முடியாது.-அனுமான்‌ வஜ்ராயுதத்தினால்‌ அடிபட்டபோது வாயு ஸ்தம்பித்ததும்‌ உலகமெல்லாம்‌ திண்டாடினது எல்லோரும்‌ அறிந்ததே. இம்மாதிரியாக உலகத்திற்கு உபகாரகமான வஸ்துக்கள்‌ உண்டாக்கப்பட்டன.

———-

நாப்‌,யா ஆஸீ த,ந்தரிக்ஷம்‌, சீர்ஷ்ணோ த்‌,யெளஸ்‌ ஸம வர்த்தத
பத்ப்‌,யாம்‌ பூ,மிர்‌ தி,சச்‌ ச்ரோத்ராத்‌, ததர லோகாந்‌ அகல்பயந்-
15-
[நாபியிலிருந்து ௮ந்‌தரிக்ஷம்‌ உண்டாயிற்று. தலையிலிருந்து ஸ்வர்க்கம்‌ உண்டாயிற்று. பாதங்களினின்றும்‌ பூமி உண்டாயிற்று. திக்குகள்‌ காதிலிருந்து உண்டாயின. அப்படியே லோகங்களை யெல்லாம்‌ பிரமன்‌ படைத்தான்‌.] இதில்‌ உலகங்களுடைய ஸ்ரூஷ்டி சொல்லப்படுகிறது)

தேஹத்தின்‌ நடுவிலிருக்கும்‌ நாபியிலிருந்து பூமிக்கும்‌ மேலுலகங்களுக்கும்‌ நடுவிலிருக்கும்‌ அந்தரிக்ஷம்‌ உண்டாயிற்று.(சீர்ஷ்ணோ…) மேலேயிருக்கும்‌ தலையிலிருந்து மேலேழுலோகங்‌களும்‌ உண்டாயின. இங்கு “த்‌யெள:” என்னும் பதம்‌ மேலேழு உலகங்களையும்‌ உணர்த்துகிறது. (பத்ப்யாம்‌ பூமி🙂 பாதங்களி லிருந்து பூமி உண்டாயிற்று. திருவடிகளிலிருந்து: பிறந்ததா லன்றோ ‘பொருவில்‌ சீர்ப்பூமி” என்று ஆழ்வாரும்‌ புகழ்‌ந்திருக்கிறார்‌. தேஹத்தைத்‌ தாங்குவது திருவடி. எல்லோரையும்‌ தாங்குவதால்‌ தரணியென்று பெயர் பெற்றது பூமி. கேசவ நம்பியைக்‌ கால் பிடிக்‌கும்‌ பேற்றுக்குப் பிறந்தவள்‌ பூமி தேவி.“இடந்திருந்து நின்றனந்து கேழலாய்க்‌ கீழ்ப்புக்கு இடந்திடும்‌ தன்னுள்‌ கரக்கும்‌ உமிழும்‌ தடம்‌ பெரும்‌ தோளாரத்தழுவும்‌ பாரென்னும்‌ மால்‌ செய்கின்ற மால்‌ ஆர்‌ காண்பாரே”[கேழல்‌-வராஹம்‌. இடந்திடும்‌-கு த்தி எடுக்கும்‌. தன்னுள்‌ கரக்கும்‌- ‘தன்‌ வயிற்றினுள்ளே மறைத்து வைக்கும்‌. பார்‌-பூமி. மால்‌-திருமால்‌-அன்பு.] என்று நம்மாழ்வாரும்‌,“அரவாகிச்‌ சுமத்தியால்‌ அயிலெயிற்றின்‌ ஏந்துதியால்‌ ஒரு வாயின்‌ விழுங்குதியால்‌ ஓரடியால்‌ ஒளித்தியால்‌ திருவான நிலமகளை”?என்று கம்ப நாட்டாழ்வாரும்‌ அருளிச் செய்தபடி பகவானுடைய ஸர்வாவயவங்களாலும்‌, விசேஷமாகத்‌ திருவடியினாலும்‌ தீண்டப் பெற்ற வளன்றோ தரணி. இக் காரணங்களாலும்‌, மண்ணுலகில்‌ மாந்தர்கள்‌ உய்வதற்கு உபாயம்‌ நாராயணனுடைய திருவடிகளே என்று காட்டுவதற்கும்‌ பூமி திருவடிகளிலிருந்து படைக்கப்பட்டது. இங்கு பூமி கீழிருக்கும்‌ ஏழுலோகங்களையும்‌ காட்டும்‌. கீழேழுலோகங்களும்‌ திருவடிகளிலிருந்து படைக்கப்பட்டன என்று கொள்ள வேண்டும்‌-(திசச்‌ ச்ரோத்ராத்‌) காதுகளினின்றும்‌ திக்குகள்‌ படைக்கப்பட்டன. சப்தத்திற்கு ஆதாரமான திக்குகள்‌ சப்தத்தைக்‌ கேட்கும்‌ இந்த்ரியமான காதிலிருந்து படைக்கப்பட்டன. (தத…) அப்படியே இவ்‌ வண்டத்திலுள்ள மற்ற உலகங்களையும்‌ பரந்தாமனை அந்தர்யாமியாகக் கொண்ட பிரமன்‌ படைத்தான்‌.” அகல்பயந்‌ என்று பன்மை யாகச்‌ சொல்லியிருப்பது சாந்தஸம்‌ என்று கொள்ள வேண்டும்‌; அல்லது பிரமணை உபகரணமாகக் கொண்ட நித்ய ஸூரிகள் படைத்தனர்‌ என்றும்‌ கொள்ளலாம்‌.

———–

வேதாஹ மேதம்‌ புருஷம்‌ மஹாந்தம்‌
ஆதித்ய வர்ணம்‌ தமஸஸ்து பாரே
ஸர்வாணி ரூபாணி விசித்ய தீர:
நாமாநி க்ருத்வாபி,வதந்‌ யதாஸ்தே–
16-
[எல்லா சரீரங்களையும்‌ உண்டு பண்ணி, பெயர்களைக்‌ கொடுத்து அவைகளை உச்சரிததுக்‌ கொண்டிருப்பவரும்‌, ‘விகாரமற்றவரும்‌, ஸூர்யன் போன்‌ற வர்ணத்தை யுடையவரும்‌,ப்ரக்ருதி மண்டலத்திற்கு அப்பாலிருப்பவரும்‌, (எல்லா விதத்திலும்‌) பெரியவருமான இந்தப்‌ புருஷ, (வேத புருஷனாகிய) நான்‌ அறிகிறேன்‌.
வேத ஹமிதி மந்த்ராப்‌,யாம்‌ வைப,வம்‌ கதிதம்‌ ஹரே:” [“வேதாஹம்‌…” என்னும்‌ இரண்டு மந்த்ரங்களாலும்‌ ஹரியினுடைய வைபவம்‌ வெளியிடப்பட்டது.] என்று புருஷ ஸம்ஹிதையில்‌ இந்த மந்த்ரமும்‌, அடுத்த ருக்கும்‌, ஹரியின்‌ வைபவத்தைச்‌ சொல்லுகின்றனவென்று உரைக்கப்பட்டது. வேத புருஷன்‌ மஹா புருஷனின்‌ மஹிமையை மகிழ்ந்துரைக்கும்‌ பாசுரங்களிவை.

இந்த மந்திரத்தின்‌ முதலடி ஸ்ரீராமாயணத்தில்‌ **அஹம்வேத்‌மி மஹாத்மாநம்‌ ராமம்‌ ஸத்ய பராக்ரமம்‌” [நான்‌ உண்மையான பராக்ரமத்தை யுடையவனும்‌, மஹாத்மாவுமான ராமனை அறிவேன்‌.] என்ற விச்வாமித்ர வாக்யத்‌தினால்‌ உப ப்ரும்ஹணம்‌ செய்யப்பட்டது என்‌று பெரியவாச்சான்‌ பிள்ளை அருளிச் செய்திருக்கிறார்‌. பரமகாருணிகரான பெரியவாச்சான்‌ பிள்ளையின்‌ வியாக்யானத்தை அனுசரித்து நாம்‌ இங்கு விவரிக்‌கிறோம்‌. ராமாயணத்தில்‌ உப ப்ரும்ஹணம்‌ செய்யப்பட்டதால்‌ இந்த ஸ்ருதி ராமனாய்‌ அவதாரம் செய்த நாராயணனையே குறிக்கிறது என்‌பது தெளிவாகிறது. இந்த மந்த்ரத்தின்‌ முற்பாதி ஸ்வேதாஸ்வதரத்தி லும்‌ சிறிது வித்தியாசத்துடன்‌ படிக்கப்படுகிறது. இதிலிருந்து ஸர்வ வேதாந்த ப்ரத்யய ந்யாயப்படி, ஸ்வேதாஸ்வதரத்தில்‌ சொல்லப்படுபவனும்‌, இங்கு சொல்லப்படுபவனும்‌ ஸ்ரீமந்நாராயணனே என்று ஸித்திக்கிறது. அங்கு வியாக்யானம்‌ செய்த ரங்கராமாநுஜ முனியும்‌,“ப்ரக்ருதே: பரஸ்தாத்‌ ஜ்யோதி: மஹா புருஷம்‌ தமேவ நாராயணம்‌ விதி,த்வா ம்ருத்யு சப்‌,தி,தம்‌ ஸம்ஸாரம்‌ அதிக்ராமதி”‘[ப்ரக்ருதிக்கு மேற்பட்டவனும்‌, ஜ்யோதிர் மயமானவனும்‌, மஹா புருஷனுமான நாராயணனையே அறிந்து “ம்ருத்யு என்று சொல்லப்படும்‌ ஸம்ஸாரத்தைத்‌ தாண்டுகிறான்‌.] என்று பொருளுரைத்திருக்கிறார்‌.

(அஹம்‌ வேத) நான்‌ அறிகிறேன்‌. இங்கு நான்‌” என்று சொல்லுபவன்‌ வேதபுருஷன்‌. பரமாத்மாவை அறிவதினாலும்‌, பிறரை அறியச் செய்வதினாலும்‌ வேதமென்றே பெயரும்‌ புகழும்‌ பெற்ற நான்‌ அறிகிறேன்‌. நித்யனான நான்‌ அறிகிறேன்‌. அபெளருஷேயனான நான்‌ அறிகிறேன்‌. ப்ரமம்‌ (தவறாக நினைத்தல்‌), விப்ரலம்பம்‌ (வஞ்‌சனை) முதலிய குறைகளில்லாத நான்‌ அறிகிறேன்‌. *வேதநம்‌”- உபா ஸநம்‌” என்னும்‌ சப்தங்களால்‌ சொல்லப்படுவதும்‌,தைல தாரயைப் போல்‌ இடைவிடாததும்‌ பார்ப்பதற்கு ஸமானமானதுமான பக்தி ரூபமான ஞானமே இங்கு *வேத;” என்று சொல்லப்படுகிறது. வாக்‌யத்தினல்‌ ஏற்படும்‌ அர்த ஜ்ஞானம்‌ மட்டுமல்ல. (வேத) அறிகிறேன்‌. . **ந சஷுஷா க்ருஹ்யதே‘” [பரமாத்மா கண்ணால்‌ காணப்‌படாதவன்‌.] என்றும்‌, **மநஸா து விசுத்‌தேந ”” [சுத்தமான மனத்தாலேயே அறியத் தக்கவன்‌)] என்றும்‌, “என்றேனும்‌ கட் கண்ணால்‌ காணாத அவ் வுருவை நெஞ்சென்னும்‌ உட் கண்ணால்‌ காணும்‌ உணர்ந்து”” என்றும்‌ சொல்லுகிறபடி வேத புருஷன்‌ தன்னுடைய ஞானக் கண்‌ணால்‌ கண்டு சொல்லுகிறான்‌. “நேதி நேதி ”[பரமாத்மா இப்படிப்‌பட்டவன்‌ அல்லன்‌; இப்படிப்பட்டவன்‌ ஓருவனுமில்லை.] என்றும்‌,““க இத்தா வேத; யத்ர ஸ:”” [பரமாத்மா இப்படிப் பட்டவன்‌ என்று யார்‌ அறிவார்‌?] என்றும்‌ ப்ரமாண பூதமான வேதத்திலும்‌ பரம புருஷன்‌ அறிய முடியாதவன்‌ என்று கீர்த்திக்கப் பட்டிருக்கிறது.“ப்‌ரஹ்ம ருத்‌,ரேந்த்‌ர பூதா நாம்‌ மநஸா மப்ய கோசரம்‌”[ப்ரஹ்மா, ருத்ரன்‌, இந்திரன்‌, என்னும்‌ இவர்களுடைய மனத்திற்‌கும்‌ எட்டாதவன்‌ ] என்றும்‌, “நான்முகன்‌ செஞ்சடையான்‌ என்றிவர்கள்‌ எம்பெருமான்‌ தன்மையை யாரறிகிற்பார்‌?”” என்றும்‌ ப்ரமாதாக்களான (அறிவுடையவர்களான) ப்ரஹ்ம ருத்ராதிகளாலும்‌ அச்யுதனை அறிய முடியாதென்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. “ஸோ அங்க; வேத; யதி,வா ந வேத”: [(தன்‌ பெருமையை) அவனே அறிவனோ?அறியானோ?]என்றும்‌, “தனக்கும்‌ தன்‌ தன்மை அறிவரியானை’” என்றும்‌ புருஷோத்தமன்‌ தானும்‌ தன்‌ பெருமையை அறிய மாட்டான்‌ என்று சொல்லப்‌ பட்டிருக்கிறது. அளவுபட்ட ஞானத்தை யுடைய ப்ரஹ்ம ருத்ராதிகள்‌ அறியாதது நியாயமே. *யஸ் ஸர்வஜ்ஞ: ஸர்வவித்‌’” “ஸ்வாபாவிகீ ஜ்ஞாந பல க்ரியா ச ‘” என்னும்‌ ப்ரமாணங்களை நம்பி ஸார்ஜ்ஞ்யம்‌ கொண்டாடி ஒரு ஆசாரியன் பக்கல்‌ அடி பணிந்து அறியாமையால்‌ அவனும்‌ அறியான்‌. வேதம்‌ அறிந்தபடி எப்படி என்னில்‌: (மஹாந்தம்‌) அளவிட முடியாதவனென்றே அறிந்தது. “அறிந்தன வேதவரும்‌பொருள்‌ நூல்கள்‌ அறிந்தன கொள்க அரும் பொருளாதல்‌’” என்றும்‌, “யஸ்யாமதம்‌ தஸ்ய மதம்‌” [எவனுக்கு பரமபுருஷனை (அளவிட்டு) அறிய முடியவில்லையோ அவனே அறிந்தவனாகிறான்‌.] என்றும்‌ சொல்லியபடி அளவிட முடியாதவன்‌ என்று அறிகையே உள்ளபடி அறிவது. “வேதாஹம்‌’”’ என்பதை ராமாயணத்தில்‌ *அஹம்‌ வேத்மி”என்பது விவரிக்கிறது.-இங்கு ‘வேத’ என்பது அங்கு *வேத்மி‘ என்றும்‌,இங்கு “அஹம்‌’ என்பது அங்கு “அஹம்‌” என்றும்‌ சொல்லப்படுகிறது,(ஏதம்‌ வேத;) இப்படி ப்ரஸித்தமானவனை -அறிகிறேன்‌. ஸர்வ காரண புருஷனாயிருந்தும்‌, மனிசர்க்காகப்‌ படாதன பட்டு என் நின்ற யோனியுமாய்ப்‌ பிறந்த இவனை அறிகிறேன்‌- அவதார ஸெளலப்‌யத்தைக்‌ காட்டுவது இந்த ஏதச் சப்தம்‌. இங்கு “ஏதம்‌” என்பதை அங்கு :ராமம்‌” என்று அவதார நிர்தேசம்‌: செய்கிறது. (புருஷம்‌)அவன்‌ ஓருவனே புருஷன்‌ எனத் தகுந்தவன்‌. மற்றவர்கள்‌ ஸ்த்ரீ ப்ராயர்களே. ஸகல கல்யாண குணங்களாலும்‌ பூர்ணமானவன்‌ புருஷன்‌. இங்கு சொல்லப்படும்‌ செளர்ய வீர்யாதி குணங்கள்‌ ராமாயணத்தில்‌ “ஸத்ய பராக்ரமம்‌” என்று பேசப்படுகின்றன. புரி சேதே”என்ற வ்யுத்பத்தியின்படி வைகுண்டத்தில்‌ ஆதிசேஷன் மேல்‌ பள்ளி கொண்ட புருஷன்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌.-(ஏதம்‌ புருஷம்‌)-அங்குஷ்ட்ட மாத்ர: புருஷோந்தராத்மா ஸதா ஜநாநாம்‌ ஹ்ருதயே ஸந்நிவிஷ்ட:’” [கட்டை விரல்‌ பரிமாணாமுள்ளவனும்‌, அந்தர்யாமியுமான புருஷன்‌ ஜனங்களுடைய ஹ்ருதயத்தில்‌ எப்பொழுதும்‌ இருக்கிறான்‌. ]என்று சொல்லுகிறபடி எல்லா ஜனங்களுடைய ஹ்ருதய புரத்திலும்‌ வசிப்பவன்‌ புருஷன்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌. தேசாந்தரத்‌தில்‌ எட்டியிராமல்‌ அருகில்‌ அந்தர்யாமியாயிருப்பதால்‌ “இந்தப்‌ புருஷன்‌’ என்று சொல்லப்படுகிறான்‌. அவன்‌ பரவஸ்து வாயிற்றே யென்று நாம்‌ பயப்படவேண்டியதில்லை.-அருவருக்கும்படியான தோஷங்களுக்கு இவர்கள்‌ ஓரு கொள்கலமாயிற்றே என்று அவன்‌ அகல நிற்க மாட்டான்‌. அவனிடம்‌ நாம்‌ முறையிடும்போது முன் வருவதற்காக அருகிலேயே அமர்ந்திருப்பவன்‌.-

மஹாந்தம்‌) இதை அனுஸரித்து ஸ்ரீராமாயணத்தில்‌ ‘மஹாத்மானம்‌‘ எனப்படுகிறது.-மிகவும்‌ பெரியவனென்று அறிவேன்‌. *“ஸ உ ச்ரேயாந்‌ ப,வதி ஜாயமாந ”” [அந்தப்‌ புருஷோத்தமன்‌ பிறந்த பின்பே பெரியவனாகிறான்‌.] என்று தாழ்ந்தார்க்கு முகங்கொடுக்கைக்காகப்‌ பல அவதாரங்‌கள்‌ செய்த பின்பு அவனைப்‌ பெரியவனென்று அறிகிறேன்‌. எல்லா விதத்திலும்‌ பெரியவன்‌ பரம புருஷன்‌.-(மஹாந்தம்‌) ஸ்வரூபத்தில்‌ பெரியவன்‌ இவன்‌ ஓருவனே. எங்கும்‌ பரந்துளன்‌. (மஹாந்தம்‌) குணங்களில்‌ பெரியவன்‌. கணக்கற்ற கல்யாண குணங்களை யுடையவன்‌. ஓவ்வொரு குணமும்‌ அளவிட முடியாதது. ஆனந்த குணம்‌ ஓன்றை மட்டும்‌ அளவிடப் பார்த்த வேதம்‌ யதோ வாசோ நிவர்த்‌தந்தே” என்று கை விட்டுத்‌ திரும்‌பி வந்ததல்லவோ? எல்லையில்‌ ஞானத்தன்‌’ என்று-ஆழ்வார்‌ அருளிச்‌ செய்தபடி அளவற்ற ஞானத்தை யுடையவன்‌; பலத்தில்‌ பெரியவன்‌; ஐஸ்வர்யத்தில்‌ பெரியவன்‌: வீர்யத்தில்‌ விஞ்சியன்‌; சக்தியில்‌ சிறந்தவன்‌; தேஜஸ்ஸில்‌ மிக்கவன்‌: பிறருடைய துக்கத்தைக் கண்டு ஐயோ வென்று இரங்கும்‌ தயையை யுடையவன்‌. அடியார்களின்‌ தோஷத்தை அறியாதவன்‌-தன்னடியார்களின்‌ தோஷங்களை குணங்களாகக்‌. கொள்ளும்படியான வாத்ஸல்யத்தையுடையவன்‌. “செய்தாரேல்‌ நன்று செய்தார்‌” என்றும் அல்லவோ அவன் வார்த்தை-அபயம்‌ ஸர்வ பூதேப்‌யோத,நாம்யே தத்‌ வ்ரதம்‌ மம” [(என்னை சரணமடைந்தவனுக்கு) எல்லா பூதங்களிடமிருந்தும்‌ அபயமளிக்கிறேன்‌. இதுவே என்னுடைய” விரதம்‌.]என்று சொல்லி ஆபத்தில்‌ அகப்பட்டவர்களை ௮ஞ்சலென்று அளிக்கும்‌ அரிய பெரிய ஸ்வபாவத்தை யுடையவன்‌. பெரிய விரோதிகளையும்‌ புழுப் பூச்சிகளை நசுக்குவது போல்‌ நசுக்க வல்ல பராக்ரமத்தை யுடையவர் ஜயிப்பரோ? தோற்பரோ?” என்னும்‌ ஸந்தேஹம்‌ இவருடைய பராக்ரம விஷயத்தில்‌ கிடையாது. “நாவிஜித்ய நிவர்த்ததே’ என்றும்‌ “சென்று கொன்று வென்றி கொண்ட”” என்றும்‌ சொல்லுகிற படி புறப்பட்டால்‌ ப்ரபல விரோதிகளையும்‌ பராஜயப் படுத்தித்‌ தலையறுத்தல்லது மீளார்‌. (மஹாந்தம்‌) பெருமை யுள்ள சரீரத்தை யுடையவன்‌. “மாசூணாச்‌ சடருடம்பாய்‌’* என்றும்‌, “ந தஸ்ய பராக்ருதா மூர்த்தி: மாம்ஸமே தோஸ்தி,ஸம்பவா”” அந்த மஹா புருஷனுக்கு மாம்‌ஸங்களாலும்‌, கொழுப்பினாலும்‌, எலும்புகளாலுமான ப்ராக்ருத சரீரம்‌ கிடையாது. என்றும்‌, “*நித்யம்‌ நித்யாக்ருதிதரம்‌”” [ நித்யமானவனும்‌,நித்யமான திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவனும்‌] என்றும்‌ சொல்‌லப்பட்ட நித்ய நிரவத்ய நிரதிசய ஓளஜ்வல்யமுடைய (என்றும்‌”குற்றமற்றதும்‌ ஓப்பற்ற ஓளியை யுடையதுமான) சரீரத்தையுடையவன்‌. எல்லா அண்டங்களிலுமுள்ள ஸகல சேதனாசேதனங்களையும்‌ சரீரமாக உடையவனாதலால்‌ பெரிய சரீரத்தை யுடையவன்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌. (மஹாந்தம்‌) பரமாத்மாவாயிருப்பவன்‌. *யஸ்‌மாத்‌ பரம்‌ நாபரமஸ்தி கிஞ்சித்‌‘ [எவனைக் காட்டிலும்‌ பெரிய வஸ்து வேறொன்றும்‌ கிடையாதோ.] என்றும்‌, “ந தத் ஸமச்ச அப்‌,யதி,கச்ச த்ருஸ்யதே” | அவனுக்கு ஸமானமானவனும்‌, மேலானவனும்‌ காணப்‌ படவில்லை.] என்றும்‌, தமீஸ்வராணாம்‌ பரமம்‌ மஹேஸ்வரம்‌, தம்‌ தேவதா நாம்‌ பரமம்‌ ச தைவதம்‌’” [ஈஸ்வரர்களுக்கும்‌ மேலான ஈஸ்வரனும்‌, தேவதைகளுக்கும்‌ மேலான தேவதையுமான அவனை] என்றும்‌, “ஒத்தார்‌ மிக்காரை இலையாப மாமாயா!’ என்றும்‌ சொல்லுகிறபடி தேவாதி தேவனாய்‌, ஆதி மூலமாய்‌, அந்தர்யாமி யாயிருப்பவன்‌.(ஆதித்யவர்ணம்‌) ஸூர்யனைப் போன்ற ஓளியை யுடையவன்‌.-கோடி ஸூர்ய ப்ரகாசத்தையுடைய பரஞ் சோதிக்கு அல்ப ப்ரகாசத்தை யுடைய ஆதித்யனை உபமானமாகச்‌ சொல்லலாமோ? எனில்‌: நாம்‌ கண்ணால்‌ காணும்‌ ஜ்யோதிஸ் ஸுகளுக்குள்‌ ஸூர்யனே மிகுந்த ஓளி யுடையவனாகக்‌ காணப்படுவதால்‌ அவனே உபமானமாகச்‌ சொல்லப் பட்டான்‌. ‘ய ஏஷ அந்தராதித்யே ஹிரண் மய: புருஷ:’” [ஸூர்யனுக்கு நடுவில்‌ ஸுவர்ணம்‌ போன்ற ஓளியை யுடையபுருஷன்‌ ] என்று பரம புருஷன்‌ வர்ணிக்கப்பட்டானன்றோ.-இந்த மஹா புருஷணையே “ஸவிதுர்‌ வரேண்யம்‌’” என்று காயத்ரியில்‌ அனு சந்திக்கிறோம்‌. :மலர் கதிரின்‌ சுடருடம்பாய்‌’” என்று ஆழ்வாரும்‌ அருளினார்‌. வேதங்களும்‌, வைதிக புருஷர்களும்‌ இவனைப் பேசப்‌ புக்கால்‌ ஸூர்யனுக்கு ஓப்பான ஒனியை யுடையவன்‌ என்றே பாசுரமிடுகிறார்கள்‌. (தமஸஸ்து பாரே) தமஸுக்கு அக்கரை யிலிருப்பவன்‌-தமஸ;: பரமோ தாதா சங்க,சக்ர கதா தர’”’ என்று மண்டோதரியால்‌ சொல்லப்பட்ட சக்ர பாணியே இவன்‌. *தம:” என்பது மூலப்ரக்ருதியைக்‌ குறிக்கிறது. ப்ரக்ருதி மண்டலத்திற்கு அப்பாலிருப்பவன்‌ என்று பொருள்‌. *தம:’ என்பது அஜ்ஞானத்தையும்‌ ஸம்ஸாரத்‌ தையும்‌ குறிக்கும்‌. “ஸோத்‌,வந: பாரமாப்நோதி தத்‌ விஷ்ணோ: பரமம்‌ பதம்‌” [அவன்‌ ஸம்ஸாரத்திற்கு அக் கரையை அடைகிறான்‌. அதுவே விஷ்ணுவினுடைய பரம பதம்‌] என்று கடோபனிஷத்தில்‌ சொல்லப்‌ பட்டிருப்பதிலிருந்து இங்கு சொல்லப்பட்டதும்‌ விஷ்ணுவினுடைய பரமபதமே என்று நிஸ் ஸந்தேஹமாக நிச்சயிக்கப்படுகிறது.(ஸர்வாணி…) சேதனர்கள்‌ “லூந பக்ஷ இவாண்ட ஐ:’* என்று சிறகொடிந்த பக்ஷி போல்‌ அசித் ஸமராய்‌, கரண களேபரமற்று போக மோக்ஷ சூந்யராய்‌ இருக்கும்படியான எளிவரவைக் கண்டு தயையுடைய மனஸ்ஸை யுடையவனாய்‌ அவர்கள்‌ தன்னை அடைவதற்காக சரீரங்களைக்‌ கொடுத்து நாம ரூபங்களை ஏற்படுத்தினான்‌. (ஸர்வாணி ரூபாணி விசித்ய) தேவர்‌, மனுஷ்யர்‌, திர்யக்‌ (ஊர்வன) ஸ்தாவரம்‌ எனப்படும்‌ நான்கு விதமான சரீரங்களையும்‌ ஏற்படுத்தி. (நாமாநி க்ருத்வா…) அவர்களுக்கு நாமங்களைக் கொடுத்து அவற்றை உச்சரித்துக் கொண்டு எந்தப் பரமாத்மா இருக்கிறாரோ அவரை அறிவேன்‌. “*அநு ப்ரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி””[இவற்றைவியாபித்து நாம ரூபங்களைக்‌ கொடுக்கக் கடவேன்‌] என்று பரமபுருஷன்‌ ஸங்கல்பிப்பதாகச்‌ சொல்லப்பட்டிருக்கிறதன்றோ. (தீர)இம் மாதிரியாக இவற்றை வியாபித்து இவற்றுக்கு நாம ரூபங்களைக்‌ கொடுத்த போதிலும்‌ அவற்றின்‌ விகாரங்கள்‌ தன் மேல்‌ படாதபடி இருப்பதால்‌ புருஷோத்தமன்‌ தீர-என்று சொல்லப்படுகிறான்‌.-புத்தியை ரமிக்கச் செய்பவன்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.-யத்‌” என்கிற விடத்தில்‌ நபும்ஸகலிங்கம்‌ சாந்தஸம்‌.-இதிலிருந்து உண்மையான தத்வமான வேதம்‌ ஒன்றிருக்கிற தென்று அறிகிறோம்‌. “புருஷம்‌” என்பதிலிருந்து ‘ ப்ரமாத்மாவுக்கு குணங்களிருக்கின்‌றனவென்று. ஏற்படுகிறது. *மஹாந்தம்‌’ என்பதிலிருந்து அவனுக்குக்‌ கீழ்ப்பட்டவர்கள்‌ உளர்‌ என்று உணர்த்தப்‌படுகிறது. “ஆதித்ய வர்ணம்‌” என்பதிலிருந்து அஸாதாரணமான திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவன்‌ என்றும்‌ தெரிவிக்கப்படுகிறது. ‘*தமஸஸ்து பாரே”” என்று அப்ராக்ருதமான திவ்ய தேசத்தில்‌ திகழ்கின்றான்‌ தாமோதரன்‌ என்றும்‌ ஏற்படுகிறது.” அநேக சேதனர்கள்‌ உண்மையாக இருக்கின்றனரென்றும்‌-அவர்களுக்கு நாம ரூபங்களைக்‌ கொடுத்தான்‌ என்பதும்‌ அறியப்படுகிறது.-இவைகளை ஓப்புக் கொண்டால்‌ அத்வைதம்‌ அழிந்து விடும்‌ என்னும்‌ பயத்தினால்‌ வேதம்‌ வாஸ்தவமல்ல வென்றும்‌, புருஷோத்தமனுக்கு ரூபமில்லை, குணமில்லை, ஸ்தானமில்லை என்றும்‌ சேதனாசேதநங்கள்‌ உண்மையல்ல வென்றும்‌, மாயையினால்‌ ஏற்படும்‌ தோற்றமே யென்றும்‌ சொல்லும்‌ மாயா வாதிகளின்‌ மதம்‌ முழுவதும்‌ இங்கு மறுக்கப்பட்டது.

————-

தாதா புரஸ்தாத்‌, யமுதாஜஹார சக்ர: ப்ரவித்‌,வாந்‌ பரதி ,சச்சதஸ்ர:
தமேவம்‌ வித்‌,வாந்‌ ௮ம்ருத இஹப,வதி நாந்ய: பந்தா: அயநாய வித்‌யதே.-17-
[எவரை முன்‌ பிரம தேவர்‌ தியானித்தாரோ, பரமாத்ம ஜ்ஞானியான இந்திரன்‌ எவரை உபாஸித்தானோ, எட்டு திக் பாலகர்களும்‌ (ருஷிகளும்‌) எவரை தியானம்‌ செய்தனரோ அந்தப் பரம புருஷனை இம் மாதிரியாக அறிபவன்‌ இந்த ஜன்மத்திலேயே முக்தி யடைகிறான்‌. மோக்ஷத்திற்கு வேறு வழியில்லை.] வேத புருஷன்‌ தன்னைத் தவிர மற்றும்‌ சிலரும்‌ இந்த மஹா புருஷனை அறிந்துள்ளார்களென்று வெளியிட்டு அவனை இம் மாதிரி அறிவதே மோக்ஷோபாயம்‌ என்று நிர்ணயிக்கிறான்‌. (ததா…) முதலில்‌ ஸ்ருஷ்டிக்கப்பட்ட பிரமன்‌ மஹா புருஷனை தியானித்தார்‌ என்று சொல்லப்படுகிறது. ஸ்ருஷ்டிக்கு முன்‌ ஸ்ருஷ்டி செய்ய வழி தெரியாத நான்முகன்‌ பகவானை நோக்கி தியானம்‌ செய்தாரென்று இதிலிருந்து ஏற்படுகிறது.

“யுக கோடி ஸஹஸ்ராணி விஷ்ணுமாராத்‌ய பத்‌ம பூ , புநஸ்‌ த்ரைலோக்ய தாத்ருத்வம்‌ ப்ராப்தவாநிதி சுச்ரும:”[பிரமன்‌ ஆயிரங் கோடி யுகங்கள்‌ விஷ்ணுவை ஆராதித்து, அடுத்த கல்பத்திலும்‌ ப்ரஹ்ம பட்டத்தை அடைந்தான்‌ என்று கேள்விப் படுகிறோம்‌.] என்று சொல்லப்பட்டபடி தன்‌ பதவிக்காகச்‌ சென்ற கல்பத்தில்‌ பிரமன்‌ புருஷோத்தமனைத்‌ தியானித்தார்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌. (சக்ர:…) நூறு அச்வமேத யாகங்கள்‌ செய்து பகவானை ஆராதித்து இந்திரப் பதவியை அடைந்தான்‌ இந்திரன்‌-அடுத்த மன்வந்தரத்தில்‌ இந்திரப் பதவியை அடையப் போகும்‌ மஹா பலியும்‌ அம்மாதிரியே பகவானை உபாஸித்திருக்கிறார்‌. (ப்ரதிச:…) ‘சதஸ்ர:’ என்று கிழக்கு முதலிய நான்கு திக்குகளும்‌ ப்ர திச:என்று தென் கிழக்கு முதலிய விதிக்குகளும்‌ சொல்லப்படுகின்‌றன. இந்த எட்டுத்‌ திக்குகளுக்கும்‌ பாலகர்களும்‌, இந்த திக்குகளிலுள்‌ள ரிஷிகளும்‌ இப் பதங்களால்‌ உணர்த்தப்படுகின்றனர்‌.-அவர்களும்‌ புருஷோத்தமனை உபாஸிக்கிறார்களென்று ஏற்படுகிறது. ஈசான்ய திக்கிற்கு அதிபதியும்‌ அங்கு வாஸம்‌ செய்பவருமான சிவனும்‌ இந்தப்‌ பரம புருஷணையே உபாஸனை செய்கிறார்‌ என்றும்‌ ஏற்படுகிறது.

நம்மாழ்வாரும்‌ இதையே, “கள்வா! எம்மையும்‌ ஏழுலகும்‌ நின்‌ உள்ளே தோற்றிய இறைவ! என்று வெள்ளேறன்‌ நான்முகன்‌ இந்திரன்‌ வானவர்‌ புள்ளூர்தி கழல்‌ பணிந்து ஏத்துவரே”-[வெள்ளேறன்‌–வெளுத்த காளையை வாஹனமாகவுடைய சிவன்‌.-புள்ளூர்தி–கருட வாஹனன்‌.] என்று அருளிச் செய்தார்‌. அத்ரி, ப்ருகு, காச்யபர்‌, கர்தமர்‌, தக்ஷர்‌, வஸிஷ்டர்‌, நாரதர்‌, வால்மீகி, பராசரர்‌, வியாஸர்‌, சுகர்‌, செளநகர்‌, யாஜ்ஞவல்க்யர்‌ முதலிய ரிஷிகளும்‌ இந்த இருடீகேசனையே ஏத்துகிறார்கள்‌ என்றும்‌ சொல்லப்படுகிறது. (தம்‌) இப்படிப்பட்ட ப்ரஸித்தமான பரமாத்மாவான நாராயணனை. (ஏவம்‌ வித்வாந்‌) இம் மாதிரியாக அறிபவன்‌. ஸர்வ காரண பூத னென்றும்‌, ஸர்வ ரக்ஷகனென்றும்‌, ஸமஸ்த கல்யாண குணாத்மகனென்றும்‌, ஸ்ரீவைகுண்ட வாஸனென்றும்‌, அஸாதாரணமான திவ்ய மங்கள விக்ரஹ முடையவனென்றும்‌, சேதனர்களுக்கு நாம ரூபங்‌களையும்‌, கரண களேபரங்களையும்‌ கொடுப்பவனென்றும்‌, பிரமன்‌, ருத்ரன்‌, இந்திரன்‌, முதலியவர்களால்‌ பூஜிக்கப் படுபவனென்றும்‌ அறிபவன்‌. இங்கு ‘அறிவு’ என்பது தியான ரூபமான அறிவையே காட்டுகிறது. (அம்ருத…) * இந்த ஜன்மத்திலேயே பிறப்பிறப்பாகிற ஸம்ஸார ஸாகரத்தைத்‌ தாண்டுகிறான்‌. இந்த உலகத்திலேயே முக்தனுக்கு ஸமானமாக ஆகிறான்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌. (ப்ராரப்த கர்மம்‌ எந்த ஜன்மத்தில்‌ முடிகிறதோ, அந்த ஜன்‌ மத்திலேயே மோக்ஷம்‌. என்பது சாஸ்திரார்த்தமாயிருக்க, “இந்த ஜன்மத்திலேயே’ என்ற்து. எப்படியெனில்‌: ‘ஏதம்‌ புருஷம்‌* என்று அவதாரத்தைக் காட்டுகையால்‌, அவதார ரஹஸ்ய ஜ்ஞாநத்தோடு கூடிய பக்தியாலே இந்த : ஜன்மத்திலேயே மோக்ஷமடைகிறான்‌ என்பது “புநர் ஜந்ம நைதி’” [கீதை] முதலான ப்ரமாணங்களில்‌. உணர்த்தப் பட்டதாகையாலே விரோதமில்லை.)

நம்‌மாழ்வாரும்‌, “பிடித்தேன்‌ பிறவி கெடுத்தேன்‌ பிணி சாரேன்‌”” என்று பரந்தாமனின்‌ பாதங்களைப்‌ பிடித்தவுடன்‌ பிறப்பு இறப்பு முதலிய ஸகல துக்கங்களும்‌ நீங்குகின்றன என்றல்லவோ அருளினார்‌. நாராயணனை அடி பணிந்து, பல்லாண்டு பாடி, ஆனந்த ஸாகரத்தில்‌ அமிழ்ந்து “அச் சுவை பெறினும்‌ வேண்டேன்‌” என்று சொல்லுபவர்‌களை முக்தர்கள்‌ என்று சொல்லத்‌ தட்டில்லை.-அவர்கள்‌ கலி தன்னைக்‌ கடக்கப்‌ பாய்ந்தவர்களே. (நாந்ய:..) மோக்ஷமடைவதற்கு வேறொரு மார்க்கமும்‌ கிடையாது. “அயநாய* என்றவிடத்தில்‌ பரம பதமடைவதற்கு’ என்று ஸ்வேதாஸ்வதரோபதிஷத் பாஷ்யத்தில்‌ சங்கரர்‌ வியாக்யானம்‌ செய்தார்‌.-இவ் விடத்தில்‌,“நாயமாத்மா ப்ரவசநேஈ லப்‌ய: ந மேதயா ந ப,ஹுநா ஸ்ருதேந யமேவைஷ வ்ருணுதே தே லப்‌,ய: தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம்‌ ஸ்வாம்‌”[| இந்தப்‌ பரமாத்மா (பக்தி யில்லா) ஸ்ரவண மனன தியானங்களால்‌ அடையத் தக்கவனல்லன்‌: எவனை இப் பரம புருஷன்‌ வரிக்கிறானோ அவனுக்கே தன்‌ ஸ்வரூபத்தைக்‌ காட்டுகிறான்‌.]“ந கர்மணா ந ப்ரஜயா த,நேந த்யாகே,ந ஏகேந அம்ருதத்வ மாநசு:’?[கர்மத்தினாலும்‌, ப்ரஜையினாலும்‌, தனத்தினாலும்‌, மோக்ஷமடைய முடியாது. நீயாஸ வித்யை (சரணாகதி) யினாலேயே (பலர்‌) மோக்ஷ
மடை ந்தனர்‌] என்னும்‌ ஸ்ருதி வாக்யங்கள்‌ அனுஸந்திக்கத் தக்கன. கீதாசார்யனும்‌,
நாஹம் வேதைர் ந தபஸா ந தாநேந ந சேஜ்யயா
சக்ய ஏவம் விதே த்‌ரஷ்டும்‌ த்‌ருஷ்டவாநஸி மாம்‌ யதா
ப,க்த்யா த்வத் அந்யயா சக்ய: அஹமேவம்‌ விதோர்‌ஜுந”[அர்ஜுனா! (என்னிடத்தில்‌ பக்தி யற்ற) வேதாத்யயனத்தாலும்‌, தபஸ்ஸுகளாலும்‌, தானத்தினாலும்‌, யாகத்தினாலும்‌, நீ என்னைக்‌கண்டது போல்‌, நான்‌ (எவராலும்‌) காணத் தக்கவனல்லன்‌. அனன்ய ப்ரயோஜனமான பக்தியினாலேயே காணத் தக்கவன்‌.] என்று அருளிச் செய்தாரன்றோ. இந்த மந்த்ரத்தில்‌, பிரமன்‌, இந்திரன்‌ முதலிய பலர்‌ பரமாத்‌மாவை உபாஸிப்பதாகச்‌ சொல்லப் படுவதிலிருந்து ஜீவாத்மாக்கள்‌ பலருண்டென்பது ஸித்திக்கிறது. *தம்‌ ஏவம்‌ வித்‌வாந்‌ என்பதிலிருந்து அறியப் படுபவன்‌, அறிவு, அறிகிறவன்‌ என்னும்‌ மூன்றும்‌ உண்டென்று உணர்த்தப்படுகிறது. “ஏவம்‌” என்பதிலிருந்து மேலே சொன்னபடி ஸமஸ்த கல்யாண குண ஸம்பன்னனென்றும்‌, விக்ரஹ விபூதி விசிஷ்டனென்றும்‌ அறிய வேண்டும்‌ என்று அறிவிக்கப்படுகிறது. ‘விக்ரஹமில்லை; விபூதியில்லை: குணமில்லை’ என்பவருடைய பிடரியைப்‌ பிடித்துப்‌ புறக்கணிக்கிறது இவ்வாக்கியம்‌. “ஏவம்‌ வித்‌வாந் -என்பதை கீதாசார்யன்‌ *ஏவம் விதோ த்ரஷ்டும்‌* [இம் மாதிரி காண்பதற்கு] என்றும்‌, ‘பக்த்யா” என்றும்‌ விவரித்த படியால்‌ இங்கு சொல்லப்படும்‌ அறிவு காண்பதற்கு ஸமானமான பக்தியே என்று ஏற்படுகிறது. ஆகையால்‌ வாக்யார்த்த ஜ்ஞானத்தினால்‌ மோக்ஷமடைய முடியாதென்றும்‌ ஸித்திக்கிறது. “அம்ருதோ பவதி‘ என்பதிலிருந்து ஸம்ஸாரி, முக்தன்‌ என்னும்‌ பேதமுண்டென்றும்‌ தெரிவிக்கப்படுகிறது.

—————–

யஜ்ஞேந யஜ்ஞமயஜந்த தே,வா: தாநி தர்மாணி ப்ரதமா ந்யாஸந்
தே ஹ நாகம்‌ மஹிமாநஸ்‌ ஸசந்தே யத்ர பூர்வே ஸாத்‌யாஸ்‌ ஸந்தி தேவா–18- [நித்ய ஸூரிகள்‌ பிரமனை உபகரணமாகக் கொண்டு ஸ்ருஷ்டி ரூபமான யஜ்ஞத்தைச்‌ செய்தார்கள்‌. அந்த யஜ்ஞம்‌ முதலிய்‌ தர்மங்‌கள்‌ முக்யங்களாக ஆயின.-இவ் விதமாக அறிபவர்கள்‌ மஹிமை யுடையவர்களாய்‌ பழைமை யானவர்களான நித்ய ஸூ9ரிகள்‌ வாஸம்‌ செய்யும்‌ பரம பதத்தை அடைகிறார்கள்‌.] இந்த மந்த்ரத்தின்‌ பூர்வார்த்தத்தில்‌ இந்த அனுவாகத்தில்‌ சொல்லப்பட்ட ஸ்ருஷ்டி ப்ரகாரமும்‌ பின்‌ பாதியில்‌ *வேதாஹம்‌”
என்னும்‌ இரண்டு மந்த்ரங்களினால்‌ சொல்லப்பட்ட பகவதுபாஸனமும்‌ அதின்‌ பலமும்‌ சொல்லப் படுகின்‌றன வென்று வித்யாரண்யர்‌.“நாராயணம்‌” என்று ப்ரஸித்தமான புருஷ ஸூக்தத்தின்‌ பூர்வானுவாகம்‌ இந்த ருக்குடன்‌ முடிவடைகிறது.

(யஜ்ஜஞேந ..) யஜ்ஞத்‌திற்கு முக்ய ஸாதனமான பிரமனைக் கொண்டு நித்ய ஸூரிகள்‌ ஸ்ருஷ்டி ரூபமான யஜ்ஞத்தைச்‌ செய்தனர்‌. (தாநி…) அது முதல்‌ அந்த யஜ்ஞம்‌ தானம்‌ முதலிய தர்மங்கள்‌ முக்யமானவையாக ஆயின-தர்மார்த்த காம மோக்ஷம்‌ எனப்படும்‌ நான்கு புருஷார்த்‌தங்களுக்கும்‌ ஸாதனமாயிருக்கின்றன. கீதையில்‌,
ஸஹ யஜ்ஷஞை: ப்ரஜாஸ்‌ ஸ்ருஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி:
அநேந ப்ரஸவிஷ்யத்‌வம்‌ ஏஷ வோஸ் த்விஷ்ட காம துக்‌”(யஜ்ஞங்களுடன்‌ கூட, ப்ரஜைகளை முன்‌ ஸ்ருஷ்டித்து, பகவான்‌ பின் வருமாறு சொன்னார்‌:–இந்த யஜ்ஞத்தைக் கொண்டு வ்ருத்தி யடையுங்கள்‌. இது நீங்கள்‌ விரும்பியதை யெல்லாம்‌ கொடுக்கக்‌ கடவது.] என்று சொல்லப்பட்டது இங்கு அனுஸந்திக்கத்தக்கது.(தேஹ…) இந்த ஸ்ருஷ்டி ரூபமான யஜ்ஞத்தை அறிந்து அர்தத்‌துடன்‌ அனுஸந்திப்பவர்கள்‌, ஸனாதனிகரான ஸாத்யர்களென்னும்‌ பெயரை யுடைய நித்ய ஸூரிகள்‌ வாழும்‌ ஸ்ரீ வைகுண்டத்தை மஹிமை யுடையவர்களாய்‌ அடைகிறார்கள்‌. (நாகம்‌) *நாகஸ்ய ப்ருஷ்டே,” என்று நாராயண வல்லியில்‌ சொல்லப்பட்ட ஸ்ரீ வைகுண்டமே இங்கு சொல்லப்படுகிறது. (மஹிமான….) ஜ்ஞான ஸங்கோச மில்லாதவர்‌களாக அனந்த கருட விஷ்வக்ஸேனாதி களிருக்கும்‌ பரமபதத்தை அடைகிறார்கள்‌.
ஒளிக் கொண்ட சோதியமாய்‌ உடன்‌ கூடுவதென்று கொலோ..? அளிக்கின்ற மாயப் பிரான்‌ அடியார்கள்‌ குழாங்களையே” என்று ஆழ்வாரால்‌ பிரார்த்திக்கப்பட்ட பலத்தைப்‌ பெறுவார்கள்‌. இதிலிருந்து ஸாத்ய தேவர்களென்று சிலர்‌ இருக்கிறார்களென்றும்‌ அவர்கள் இருக்குமிடத்தை யடைவதே மோக்ஷ மென்றும்‌ ஏற்படுகிறது. ஸாத்யர்‌-ப்ராப்யா்‌.

————

உத்தரானுவாகம்‌.
1-அத்ப்‌யஸ்‌ ஸம்பூத: ப்ருதிவ்யை ரஸாச்ச விஸ்வ கர்மணஸ்‌ ஸம வர்த்ததாது,
தஸ்ய த்வஷ்டா விததத்‌, ரூபமேதி தத் புருஷஸ்ய விஸ்வமாஜா நமக்‌ரே.[உலகம்‌ ஐலத்தினின்றும்‌ உண்டாயிற்று. பூமியிலுள்ள அன்ன ரஸத்தினால்‌ விருத்தி யடைந்தது. பரம புருஷனிடத்திலிருந்து உண்‌டாயிற்று. புருஷோத்தமன்‌ அதை தரித்துக் கொண்டு வியாபிக்கிறான்‌. ஆகையால்‌ இவ் வுலகமெல்லாம்‌ மஹா புருஷனுக்கு சேஷமாயிருப்பது என்று முன்னமே அறிந்தேன்‌.]-

(அத்ப்யஸ்‌ ஸம்பூத:) உலகம்‌ நீரிலிருந்து உண்டாயிற்று என்று சொல்லப்படுகிறது. மஹோபனிஷத்தில்‌,
அத; புநரேவ நாராயணஸ்‌ ஸோந்யம்‌ காமம்‌ மநஸா த்‌யாயீத
தஸ்ய த்‌யாநாந்தஸ் தஸ்ய லலாடாத்‌ ஸ்வேதோபதத்‌ தா இமாஆப: தத்‌ ஹிரண்மய மண்டம பவத்‌”[பிறகு, நாராயணன்‌ மற்றொரு ஸங்கல்பத்தை மனத்தினால்‌ செய்தார்‌:ஸங்கல்பம்‌ செய்தவுடன்‌ அவருடைய நெற்றியிலிருந்து வேர்வை விழுந்தது. அதுவே இங்கு காணப்படும்‌ தண்ணீர்‌. அதில்‌ ஹிரண்‌ மயமான அண்டம்‌ உண்டாயிற்று.] என்று சொல்லப்பட்டது இங்கு உணர்த்தப்படுகிறது. இதுவே அப ஏவ ஸஸர்ஜாதெள…ததண்ட,மபவத்‌ ஹைமம்‌’ [நாராயணன்‌ தண்ணீரை முதலில்‌ படைத்தான்‌. அதில்‌ பொன்மயமான அண்ட முண்டாயிற்று.] என்று மனு ஸ்ம்ருதியிலும்‌ உரைக்கப்பட்டது. ஆழ்வாரும்‌ ‘“தானோர்‌ பெருநீர்‌ தன்னுள்ளே தோற்றி’” என்று அருளிச் செய்தார்‌. 

(ப்ருதிவ்யை ரஸாச்ச ஸம்பூத:) பூமியிலிருந்து உண்டான அன்ன ரஸங்களினால்‌ வ்ருத்தி யடைந்தது.(விஸ்வ கர்மண:…) பரமாத்மாவினிடமிருந்து இவை உண்டாயின.ஜலத்திலிருந்தும்‌ பூமியிலிருந்தும்‌ தானாகவே உண்டாக வில்லை என்று உணர்த்துவதற்காக உலகத்தை உண்டாக்கிய உத்தமனால்‌ கர்மானுகுணமாக உயர்வு தாழ்வுகளுடன்‌ உண்டாக்கப்பட்டன வென்று உரைக்கப்படுகிறது. மஹோபனிஷத்தை அனுஸரித்து, இங்கு சொல்லப்படும்‌

(தஸ்ய…) ஸர்வேஸ்வரன்‌ அந்த உலகத்தை தரித்துக் கொண்டு வியாபிக்கிறான்‌. தாதா நாராயண:’ என்றல்லவோ ஸுபாலோபனிஷத்தில்‌ இம் மஹாபுருஷன்‌ கீர்த்திக்கப் பட்டான்‌. (தத் புருஷஸ்ய விச்வம்‌) ஆகையினால்‌ இவ்வுலகம்‌ புருஷனுடையதே. உலகம்‌ உடமை. உடையவன்‌ புருஷோத்‌தமன்‌. ‘க்ருஷ்ணஸ்ய ஹி க்ருதே பூதமிதம்‌ விஸ்வம்‌ சராசரம்‌” [சராசரமான ஜீவராசிகளெல்லாம்‌ க்ருஷ்ணனுடையதன்றோ?] என்னும்‌ ஸ்ம்ருதி வசனம்‌ இந்த ஸ்ருதியை விவரிக்கிறது. (ஆஜாநம்‌ அக்ரே) “பகவானுக்கு சேஷ பூதமானது இவ் வுலகம்‌ என்பதை நான்‌ முன்‌னமே அறிந்தேன்‌’ என்று வேத புருஷன்‌ வெளியிடுகிறான்‌. பகவான்‌ உலகத்தை உண்டாக்கி, தரித்து, வியாபிப்பதாகச்‌ சொல்லுகிற படியாலும்‌ உலகத்தை உடையவன்‌ என்று உரைக்கிறபடியாலும்‌ விசிஷ்டாத்வைத வேதாந்தமே வேதத்தின்‌ உட்பொருள்‌ என்பது நன்கு விளங்குகிறது.

——–

வேதாஹமேதம்‌ புருஷம்‌ மஹாந்தம்‌, ஆதித்ய வர்ணம்‌ தமஸ: பரஸ்தாத்‌
தமேவம்‌ வித்‌வாந்‌ அம்ருத இஹ ப,வதி, நாந்ய: பந்தா வித்‌யதேயநாய–2-
“அண்டக்குலத்துக்கதிபதியாகி, அண்டத்திற்கு அப் புறத்திலுள்ள சுத்த சத்வ மயமான ஸ்ரீவைகுண்டத்தில்‌ கோடி ஸூர்ய ப்ரகாசத்துடன்‌ எழுந்தருளி யிருக்கும்‌ இந்த மஹாபுருஷனை நான்‌ அறிகிறேன்‌? அவனே உபாயமும்‌, உபேயமும்‌ என்று அறிபவன்‌ இந்த ஜன்மத்திலேயே மோக்ஷமடைகிறான்‌. மோக்ஷத்திற்கு வேறு மார்க்கமில்லை’ என்னும்‌ இந்த ரஹஸ்யார்த்தத்தை வேதம்‌ ஆதராதி சயத்தினால்‌ மறுபடியும்‌ உத்கோஷிக்கிறது. இதன்‌ பொருள்‌ பூர்வானுவாகத்தில்‌ விசேஷமாக விவரிக்கப்பட்டது. பூர்வானுவாகத்தில்‌-16-வது மந்த்ரத்தின்‌ முற்பாதியும்‌, 17-வது மந்த்ரத்தின்‌ பிற்‌பாதியும்‌ காண்க.

———-

ப்ரஜாபதிச்‌ சரதி கர்ப்பே, அந்த:, அஜாயமாநோ பஹுதா விஜாயதே
தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம்‌, மரீசீகாம்‌ பதமிச்சந்தி வேத,ஸ:3-(பரம புருஷன்‌ ஹ்ருதயத்தில்‌ அந்தர்யாமியாய்‌ ஸஞ்சரிக்கிறான்‌. உத்‌பத்தி யில்லாத புருஷோத்தமன்‌ பலபடியாகப்‌ பிறக்கிறான்‌. அவனுடைய அவதாரங்களை தீரர்களே அறிகிறார்கள்‌. (அவர்கள்‌) பரம புருஷன்‌ வாழும்‌ நித்ய ஸூரிகளின்‌ நாட்டை விரும்புகிறார்கள்‌.]**ததோ விஷ்வங்‌ வ்யக்ராமத்‌ ஸாசநா நசநே அபி,” என்று பூர்‌வானுவாகத்தில்‌ சொல்லப்பட்ட அவதார வைபவம்‌ இங்கு அனுபவிக்கப் படுகிறது.-“விஷயஸ்‌-பாதி பூமித்வாத்‌ ஜ்ஞாந தெ,ஃளஷ்கர்ய சங்கிநாம்‌ அவதாரேண ஸெளலப்யம்‌ த்ரிஷ்டு போக்தம்‌ த்ருதீயயா”[ பகவத் ஸ்வரூபமானது அறிவிற் கெட்டாத படியால்‌, அவளை அறிய முடியாது என்று ஸந்தேஹிப்பவர்களுக்கு, மூன்றாவது மந்திரத்தில்‌ அவ்தார ஸெளலப்யம்‌ சொல்லப்பட்டது.] என்று மணவாள மா முனிகளின்‌ ப்ரமாணத்திரட்டில்‌ எடுக்கப்பட்டிருக்கும்‌ “நாராயண முனி”
என்பவரின்‌ வியாக்யானத்தில்‌ இந்த மந்த்ரார்த்தம்‌ ஸங்க்ரஹிக்கப்‌ பட்டிருக்கிறது. முத்தின மந்த்ரத்தில்‌ ப்ரஹ்மத்தை அறிவதினலேயே மோக்ஷம்‌ என்று சொல்லப்பட்டது. இங்கு அவதாரங்கள்‌ பல செய்திருக்கும்‌ ௮ச்யுதனை அறிவது எளிது என்று காட்டப்படுகிறது.

(ப்ரஜாபதி:…௮ந்த:) ப்ரஜைகளைக்‌ காப்பாற்றுபவனுன ஸர்வேஸ்வரன்‌ ஹ்ருதயத்தில்‌ அந்தர்யாமியாக ஸஞ்சரிக்கிறான்‌. இந்த வாக்யம்‌ நாராயணவல்லியிலும்‌ காணப் படுகிறது. அதனால்‌ நாராயணனே இங்கு ப்ரஜாபதி சப்தத்தினால்‌ சொல்லப் படுகிறான்‌ என்று நிர்ணயிக்கிறோம்‌. மேலும்‌, ஸர்வ ஜீவர்களையும்‌ காப்பது விஷ்ணுவுக்கே அஸாதாரணமானது. பதிம்‌ விச்வஸ்ய என்று சொல்லப்பட்ட அவனே உலகிற்கெல்லாம்‌ ஸ்வாமியாவான்‌.-ஆத்மாவிற்கு நிலைநின்ற புருஷார்த்தமாகிற மோக்ஷத்தை மற்றவர்களால்‌ கொடுக்க இயலாது. நசிக்கக் கூடிய சிற்றின்பப்‌ பலன்களாகிய, அர்த்த காமங்‌களையும்‌, பகவானிடமிருந்து வரம் பெற்றே கொடுக்கிறார்கள்‌-மஹாபாரதத்தில்‌,
ராஜாதி,ராஜஸ்‌ ஸர்வேஷாம்‌ விஷ்ணுர்‌ ப்‌,ரஹ்ம மயோ மஹாஙந்‌ ஈஸ்வரம்‌ தம்‌ விஜாநீம: ஸ பிதா ஸ ப்ரஜாபதி:”'[எல்லா அரசர்களுக்கும்‌ மேலான அரசராயிருப்பவரும்‌, பெரியவரும்‌, ப்ரஹ்ம ஸ்வரூபியுமானவர்‌ விஷ்ணு. அவரை ஈஸ்வரரென்று அறிகிறோம்‌. அவரே (எல்லோருக்கும்‌) தந்‌தை . அவரே ப்ரஜாபதி.]என்று சொல்லப் பட்டபடியால்‌ ப்ரஜாபதி சப்தத்தினால்‌ குறிக்கப்‌ படுபவன்‌ கேசவனே.-:அஸத்‌(இல்லாதவை)திலிருந்து வேறுபட்ட எல்லா வஸ்துக்களுக்கும்‌ ஸ்வாமியாகவும்‌, ரக்ஷகராகவும்‌ இருப்பவர்‌ ப்ரஜாபதி” என்று நாராயணயதி வியாக்யானம்‌ செய்தார்‌.

(கர்ப்பே அந்த:சரதி) ஹ்ருதயத்தில்‌ அந்தர்யாமி யாயிருக்கிறான்‌. இப்படி அந்தர்யாமி யாயிருப்பதற்குக்‌ காரண மென்ன?ப்ரயோஜனமென்ன? துஷ்ட நிக்ரஹ சிஷ்டபரிபாலனங்கள்‌ காரணமல்ல. இவனுக்குத்‌ தன்னிடம்‌ அத்வேஷத்தை உண்டாக்கி, ஆபிமுக்யத்தை வளர்ப்ப,தற்காக அந்தர்யாமி யாமிருக்கிறான்‌ அநந்தன்‌. யோக ஸாக்ஷாத்‌ காரம்‌ கை வந்தவர்களுக்கு ஹ்ருதய கமலத்தில்‌ ஸேவை ஸாதிக்கிறான்‌. தினந்தோறும்‌ உறங்கும் போது ஜீவர்களை ஆலிங்கனம் செய்து கொண்டு ஸகல ஸ்ரமங்களையும்‌ போக்குகிறான்‌. ஜன்மம்‌ கழியும்போது மரணாவஸ்தையின்‌ ஸ்ரமத்தைக்‌ குறைக்கிறான்‌. மோக்ஷமடைபவர்‌களான ஜீவாத்மாக்களுக்கு ஸுஷும்னா நாடியைத்‌ தெரியும்படி செய்து அதன் வழியே ப்ரஹ்ம ரந்த்ரத்தை பேதித்துக் கொண்டு போக அனுக்ரஹம்‌ செய்கிறான்‌.-அந்தர்யாமியை அறிவது மிகவும்‌ கடினம்‌. பூகத (பூமிக்குள்‌ இருக்கும்‌) ஜலத்திற்கு ஸமானமானது அந்தர்யாம்யவஸ்தை என்று ஆசாரியர்கள்‌ அருளி யிருக்கிறார்கள்‌. மண்ணைத்‌ தோண்டி யெடுத்து அவசியமானால்‌ பாறையையும்‌ உடைத்து பூமியிலிருக்கும்‌ ஐலத்தைத்‌ தேடிக்‌ கண்டுபிடிக்குமாப் போலே மாம்ஸ சரீரமாகிற மண்ணினால்‌ மறைக்கப்பட்டதும்‌, நெஞ்சாகிற பாறையினால்‌ மூடப்பட்டதுமான அந்தர்யாமியை அறிய முடியாதென்றே பூகத ஜலத்தை உவமை யிட்டார்கள்‌. அம்மாதிரியான அருமை யில்லாமல்‌, எல்லாருடைய ஊனக் கண்ணுக்கும்‌ இலக்காகும்படியான அவதாரங்களை அடுத்த படியாக அறிவிக்கிறது. அப்படி அவதாரம்‌ செய்வதற்குக்‌ கர்மம்‌ காரணமன்று. அனுக்ரஹமே காரணம்‌. கிணற்றில்‌ விழுந்த குழந்தையை எடுப்பதற்குத்‌ தாயும்‌ கூடக் குதிக்குமாப் போல்‌ ஸம்‌ஸார ஸாகரத்தில்‌ அமிழ்ந்து அவஸ்தைப்படும்‌ சேதனர்களை அக்‌ கடலினின்றும்‌ கறை யேற்றுவதற்காக நாட்டில்‌ பிறந்து மனிசர்க்‌காகப்‌ படாதனபடுகிறான்‌ நாராயணன்‌.-துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம்‌ செய்வதற்காகப்‌ பிறக்கிறான்‌ பர வாஸுதேவன்‌, இந்திரியங்களுக்கு எட்டாத தன்னை ஸம்ஸாரிகள்‌ கண்ணுக்குத்‌ தோன்றும்‌ படி செய்கிறான்‌. வேண்டினவற்றை யெல்லாம்‌ தன்னடியார்களுக்குத்‌ தருகிறான்‌. குளிரக் கடாக்ஷிப்பது, பேசுவது, கேட்பது, சிரிப்பது. ஆலிங்கனம் செய்வது, இப்படிப்‌ பலவிதமாக அவர்‌களை ஆட்‌ கொள்ளுகிறான்‌. “*ஹஸிதம்‌ பாஷிதம்‌ சைவ” [சிரிப்பதையும்‌, பேசுவதையும்‌] என்றார்‌ வால்மீகி. ராமனுடைய ஆலிங்கனத்தை அனுமானும்‌ ““பாவோ நாந்யத்ர கச்சதி”” [என்‌ நினைவு வேறெங்கும்‌ செல்லாது.] என்றார்‌. ‘“ஸம்ஸ்ப்ருச்யாக்ருஷ்ப ச ப்ரீத்யா ஸூ காடம் பரிஷஸ்வஜே’”[க்ருஷ்ணன்‌ அக்ரூரனைத் தொட்டு, இழுத்து, ப்ரீதியுடன்‌ நன்கு தழுவிக் கொண்டார்‌.] என்றதும்‌ இங்கு நினைக்கத் தக்கது. விபவாவதார காலங்களில்லாமல்‌ இழந்தவர்க்கும்‌ அவ் விழவு தீருவதற்காக எடுக்கப்படும்‌ அர்ச்சாவதாரமும்‌ இங்கு சொல்லப்‌ படுவதாகக்‌ கொள்ளலாம்‌. ஒரு காலத்திலோடும்‌ க௱ட்டாறு போன்றது விபவாவதாரம்‌. அதில்‌ தேங்கின மடுப் போன்றது அர்ச்சாவதாரம்‌. பாஞ்சராத்ர வைகானஸ ஆகமங்களில்‌ சொன்ன படி ஸுதை, சிலை முதலியவைகளால்‌ செய்யப்பட்ட ரூபங்களில்‌ ஆவாஹனம்‌ செய்யப்பட்டு சாஸ்த்ர வஸ்யனாயும்‌ அர்ச்சக பராதினனாயும்‌ இருக்கிறான்‌ இருடீகேசன்‌. எல்லா ஜனங்களுடைய ஊனக்‌ கண்ணுக்கும்‌ தன்னை விஷயமாக்கிக் கொண்டு ஸ்ர்வாபேக்ஷிதங்‌களையும்‌ கொடுக்கிறான்‌.

(அஜாயமாநோ பஹுதா விஜயாதே) *பிறப்பில்லாதவனாயிருந்‌தும்‌ பலவிதமாகப்‌ பிறக்கிறான்‌” என்கிற து வேதம்‌. ** அஜோபி ஸந்‌-ஸம்பவாமி’” [பிறப்பற்றவனாயிருந்தும்‌ பிறக்கிறேன்‌.] என்று க்ருஷ்ண பகவான்‌ கீதையில்‌ அருளினான்‌. “பிறப்பில்‌ பல் பிறவிப்‌ பெருமான்‌” என்றார்‌ வேதம்‌ தமிழ்‌ செய்த மாறன்‌. (அஜாயமாந:) “ஜநிஜராதி; ஸகலதுரித தூ;ர:” [பாப பலமான ஜன்மம்‌, கிழத்தனம்‌ முதலியவைகள ற்றவன்‌.] என்று வியாக்யானம்‌ செய்தார்‌ நாராயணயதி. இங்கு “பிறப்பு என்பது, கிழத்தனம்‌, இறப்பு முதலிய ஆறு விகாரங்களையும்‌ காட்டுகிறது. (பஹுதா விஜாயதே)எந்நின்ற யோனியுமாய்ப்‌ பிறந்தான்‌. “ப;ஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி””[எனக்குப்‌ பல பிறப்புகள்‌ கடந்து விட்டன.] என்று தன்‌ ஜன்மத்‌தைத்‌ தானே சொன்ன அவனும்‌ தெஞ்சு உளுக்கியிறே இருப்பது.-ஆழ்வாரும்‌ “சன்மம்‌ பலபல செய்து” என்றார்‌. (பஹுதா) தேவர்‌, திர்யக்‌, மனுஷ்யர்‌, ஸ்தாவரம்‌ என்று சொல்லப்படும்‌ எல்லா யோனிகளிலும்‌ பிறந்தான்‌. வ்யூஹம்‌, விபவம்‌, அர்ச்சை எனப்படும்‌ எல்லா அவஸ்தைகளிலும்‌ ஆவிர்ப்பவித்தான்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. பிறக்கைக்கு ஹேதுவான கர்மம்‌ இல்லாமலிருந்தும்‌ கர்ம வஸ்யரும்‌ பிறவாத ஜன்மங்களிலும்‌ பிறந்தான்‌. கர்ம வஸ்யன்‌ பிறவிக்கு எல்லை காண்கிறோம்‌. அகர்ம வஸ்யன்‌ (கர்மத்திற்கு வசப்‌ படாதவன்‌) பிறவிக்கு எல்லை காணவில்லை. கர்மத்திற்கு எல்லையுண்டு. அனுக்ரஹத்துக்கு எல்லை யில்லை. (விஜாயதே) “பலவிதமாகப்‌ பிறக்கிறான்‌’ என்றும்‌, ‘விசேஷமாகப்‌ பிறக்கிறான்‌. என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. “தேவர்‌ முதலிய ஓவ்வொரு ஜாதியிலும்‌ பலவிதமாகப்‌ பிறக்கிறான்‌ என்று நாராயண முனி. (விசேஷேண ஜாயதே) விசேஷமாகப்‌ பிறக்கிறான்‌. அப்ராக்ருத சரீரத்தை இதர ஸஜாதீயமாக்கிப்‌ பிறக்கிறான்‌. “சங்கொடு சக்கரம்‌ வில்‌ ஓண்மையுடைய உலக்கை ஓள் வாள்‌ தண்டு கொண்டு” பிறக்கிறான்‌. தன்‌ ஐஸ்வர்ய சக்திகளில்‌ ஓன்றும்‌ குறையாமல்‌ பிறக்கிறான்‌. அவதார ரஹஸ்யத்தை அறிந்து அனுஸந்தித்தவர்கள்‌ ஜன்மம்‌ அறும்படி பிறக்கிறான்‌. பிறந்த பின்பே மேன்மை யடைகிறான்‌. வேதத்திலும்‌-யுவா ஸுவாஸா: பரிவீத ஆகத்‌ ஸ உ ஸ்ரேயாந்‌ ப,வதி ஜாயமாந: தம்‌ தீராஸ: கவய உந்நயந்தி’” [யெளவனத்தை யுடையவனாகவும்‌, அழகிய பீதாம்பரத்தை தரித்தவனாகவும்‌, நித்ய ஸூரிகளால்‌ சூழப்பட்டவனாகவும்‌ புருஷோத்தமன்‌ பிறக்கிறான்‌. அவன்‌ பிறந்த பின்பே மேன்மை யுடையவனாகிறான்‌. அவளை தீரர்களான கவிகள்‌ தியானிக்‌கிறார்கள்‌] என்றல்லவோ சொல்லப்பட்டது.(விஜாயதே) கர்ம வஸ்யர்களைப் போன்ற சரீரத்துடன்‌ பிறக்கிறான்‌. அவர்கள்‌ பத்து மாதம்‌ வயிற்றிலிருந்து பிறந்தால்‌ இவன்‌ பன்னிரண்டு மாதம்‌ கர்ப்ப வாஸம்‌ செய்து பிறக்கிறான்‌. “ததச்ச த்‌வாதசே மாஸே” [பன்னிரண்டாவது மாதத்தில்‌] என்றும்‌, ‘பன்னிரு திங்கள்‌ வயிற்றிற்‌ கொண்ட” என்றுமல்லவோ சொல்லப் பட்டிருக்கிறது. அவர்களுக்கு ஆபத்தேற்படும்‌ காலத்தையே தனக்குப்‌ பிறக்கைக்குக்‌ காலமாகக்‌ கொண்டு பிறக்கிறான்‌. அவர்களுடைய ஸம் ரக்ஷணத்தையே. ப்ரயோஜனமாகக் கொண்டு பிறக்கிறான்‌. ஆவிர்பூ,தம்‌ மஹாத்மநா:”[மஹாத்மாவான நாராயணன்‌ ஆவிர்பவித்தான்‌.] என்ற வால்மீகி மஹரிஷி அவதரித்ததினால்‌ தோஷமில்லை என்பதைக்‌ காட்டுவதற்காக
*ஆவிர்ப்பவித்தான்‌” என்று உரைத்தார்‌. ஆஸ்ரிதர்க்காக கர்ப்ப வாஸம்‌ பண்ணின மஹா குணத்தை இழக்கலாகாது என்று வேதம்‌“பிறந்தான்‌” .என்கிறது. ஆழ்வாரும்‌ *தோன்றினவாறும்‌* என்று சொல்லாதே *பிறந்தவாறும்‌” என்ற்ல்லவோ பாடினர்‌. ஸம்ஸாரிகளுக்குப்‌ பிறக்கப்‌ பிறக்க ஞானம்‌ மழுங்கும்‌.. ரத்னத்தைத்‌ தேய்க்கத்‌ தேய்க்க ஒளி அதிகமாமாப் போலே அவதாரம்‌ செய்யச்‌செய்ய இவனுடைய மஹா குணங்கள்‌ பிரகாசிக்கும்‌. ராமாவதாரத்‌தைக்‌ காட்டிலும்‌ க்ருஷ்ணாவதாரத்தில்‌, பாண்டவ தூதனாயும்‌,பார்த்த ஸாரதியாயு மிருந்து தன்‌ பெருங் குணங்களை வெளியிட்டானன்றோ? தானே சொல்லும்போதும்‌ “ஜென்ம கர்ம ச மே திவ்யம்‌”[என்னுடைய ஜன்மங்களும்‌, சேஷ்டிதங்களும்‌ அப்ராக்ருதமானவை] என்று மதிப்புடனன்றோ சொன்னான்‌.

(தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம்‌) அவனுடைய அவதார ரஹஸ்யத்தை தீரர்களே அறிகிறார்கள்‌. (தீரா:)புத்திமான்கள்‌. “தீரர்களான கவிகள்‌” என்று மற்றொரு ஸ்ருதியில்‌ சொல்லப்பட்ட வர்கள்‌. – பராங்குச பட்டநாத பரகாலாதிகளே இவன்‌ பிறப்பின்‌ பெருமையை அறிவார்கள்‌. (தீரா:) கலங்காதவர்கள்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌. ஸ்ருதிகளை அறியாதவர்கள்‌ புருஷோத்தமனுடைய அவதார மஹிமையை அறியாமல்‌, “பர ப்ரஹ்மத்திற்கு ஜன்மமுண்டோ’ என்று ஸந்தேஹப்பட்டுக் கொண்டு இவன்‌ மனுஷ்‌யனோ?” என்று கலங்குவார்கள்‌.-அம் மாதிரியான கலக்கமில்லாதவர்கள்‌. “பிதா புத்ரேண பித்ருமாந்‌ யோநி யோநவ் நாவேத,விந் மநுதே தம்‌ ப்‌ருஹந்தம்‌’ [ஒவ்வொரு அவதாரத்திலும்‌ ஸர்வலோக பிதாவான நாராயணன்‌ தன்னால்‌ உண்டாக்கப்பட்ட ஒருவனைத்‌ தனக்குத்‌ தகப்பனாகக் கொண்டு பிறக்கிறான்‌. வேதத்தை அறியாதவன்‌ அவனே ‘பரமாத்மா வென்று அறிய மாட்டான்‌. ] என்றல்லவோ மறைகள்‌ முறையிட்டன. (தஸ்ய யோநிம்‌ பரிஜாநந்தி) அவனுடைய:அவதாரத்தை நன்கு அறிகிறார்கள்‌. (பரிஜாநந்தி). திரும்பத் திரும்ப அறிகிறார்கள்‌.-ஸகல சேஷ்டிதங்களையும்‌ அறிகிறார்கள்‌. அதை விட்டுப்‌ பரத்வத்‌திலும்‌ மனம்‌ செலுத்தமாட்டார்கள்‌. *பாவோ: நாந்யத்ர கச்சதி”-என்பார்கள்‌. *அச்சுவை பெறினும்‌ வேண்டேன்‌”” என்று இருப்பார்கள்‌. நம்மாழ்வார்‌; ஸர்வேச்வரன்‌ யசோதையால்‌ உரலில்‌ கட்டுண்டு ஏங்கிய எளிவை அனுஸந்தித்தவுடன்‌ எத்திறம்‌!’” என்று ஆறு மாதம்‌: மோஹித்துக்‌ கிடந்தாரன்றோ. மறுபடியும்‌ ‘”பிறந்தவாறும்‌’என்று பரம புருஷனுடைய பிறப்பை அனுஸந்தித்து ஆறு மாதம்‌ மோஹித்துக்‌ கிடந்தார்‌ என்று நம்‌ ஆசார்யர்கள்‌ அருளிச் செய்வர்‌கள்‌. அவனுடைய பிறப்பின்‌ பெருமையை அநிந்தவர்களை தீரர்‌கள்‌” என்றது வேதம்‌; அறியாதவர்களை :மூடர்கள்‌” என்றான்‌ கண்ணன்‌. *யோநிம்‌” என்றது ஸ்ருதி; *மாநுஷீம்‌ தநும்‌ ஆஸ்ரிதம்‌” என்‌றான்‌ மாதவன்‌. . அறிந்தவர்களை “பரிஜாநந்தி’ என்றது மறை; அறியாதவர்களை *அவஜாநந்தி’ என்றான்‌ அச்யுதன்‌.

எதற்காக இந்த அவதார ரஹஸ்யத்தை அறிகிறார்கள்‌? எனில்‌:(மரீசீநாம்‌ பதமிச்சந்தி வேதஸ:) சோதி மயமான நித்ய ஸூரிகளுடைய பரம பதத்தை அடைவதற்காக என்று சொல்லப்படுகிறது.(மாரீசீநாம்பதம்‌… வேதஸ:)’ நித்ய ஸூரிகளின்‌ நாடு: என்று சொன்ன
பின்‌ அப்ரதானமாக. ,புரம புருஷனுடைய தேசம்‌ என்றும்‌ சொல்லப்படுகிறது.-நம்மாழ்வாரும்‌ “வானவர்‌ நாடு” என்றல்லவோ அருளிச் செய்தார்‌. , அவர்களிட்ட வழக்காயிருப்பதால்‌” அவர்‌களுடைய பரம பதம்‌ என்று உரைக்கப்படுகிறது. * வானவர்‌ நாட்டையும்‌” என்னுமிடத்தில்‌ வியாக்யானத்தில்‌ நம்‌ ஆசார்யர்கள்‌ “குடியிருப்பாரோ பாதியாயிற்று பரம பதத்தில்‌ ஸ்ரீவைகுண்ட நாதனுக்கு(இருப்பு). ப்ராப்தி தேசம்‌ நித்ய ஸூரிகள்‌ இட்ட வழக்காயிருக்கும்‌.”‘என்று அருளிச் செய்தது இங்கு அனுஸந்திக்கத் தக்கது. அவதார
ரஹஸ்யத்தை அறிவதால் மோஷம் அடைவார்கள் என்பதை “ஜந்ம கர்ம ச மே திவ்யம்‌ ஏவம்‌ யோ வேத்தி. தத்த்வத; த்யக்த்வா தேஹம்‌ புநர்‌ ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜூநா ”[அர்ஜுனா! என்னுடைய அப்ராக்ருதமான ஜன்மத்தையும்‌ ‘சேஷ்டிதங்களையும்‌ இம் மாதிரியாக எவன்‌ உண்மையாக அறிகிறானோ அவன்‌ தேஹத்தை விட்டு மறு ஜன்மத்தை யடைவதில்லை.-என்னையே-அடைகிறான்‌.] என்று கீதாசார்யனால்‌.சொல்லப் பட்டது;-இம்மாதிரியான அவதார வைபவம்‌ மற்ற தேவதைகளுக்குக்‌ கிடையாது-

———–

யோ தே,வேப்‌,ய ஆதபதி, யோ தே,வாநாம்‌ புரோ ஹித:.
பூர்வா யோ தே வேப்‌யோ ஜாத:, நமோ ருசாய ப்‌ராஹ்மயே
–4-
[எந்தப் பரம புருஷன்‌ நித்ய ஸூரிகளுக்காகப்‌’ பிரகாசிக்கிராரோ. எவர்‌ நித்ய ஸூரிகளுக்கு அநாதி காலமாக ஹிதத்தைக்‌ கொடுப்‌பவரோ, எவர்‌ நித்ய ஸூரிகளுக்கும்‌ முதல்‌வரா யிருக்கிறாரோ. பிரகாசிப்பவரும்‌, பர ப்ரம்ஹ ஸ்வரூபியுமான அவருக்கு நமஸ்காரம்‌.]இந்த மந்திரத்தில்‌ புருஷோத்தமன்‌ நித்ய ஸூரி நிர்வாஹகன்‌ என்னும்‌ விஷயம்‌ சொல்லப்படுகிறது.-இதையே வேதம்‌ தமிழ்‌ செய்த மாறனும்‌,
வானவராதியென்கோ? வானவர்‌ தெய்வமென்கோ?
வானவர்‌ போகமென்கோ? வானவர்‌ முற்றுமென்கோ?
‘” என்று திருவாய்மொழியில்‌ ‘ திருவாய் மலர்‌ந்தருளினார்‌.

(யோ தேவேப்ய ஆதபதி) எந்தப்‌ பரம புருஷன்‌ நித்ய ஸூரி களுக்காக ஆதியஞ்சோதி யுருவுடனும்‌, ஸமஸ்த கல்யாண குணங்களுடனும்‌ பிரகாசிக்கிறாரோ என்று சொல்லப்படுகிறது. ஜிதந்தே ஸ்தோத்ரத்திலும்‌, ‘பக்தாநாம்‌ த்வம்‌ ப்ரகாசஸே”” [பக்தர்களுக்காகவே நீ பிரகாசிக்கிறாய்‌] என்றல்லவோ சொல்லப் பட்டது. நம்மாழ்வார்‌-இதை வானவர்‌ தெய்வமென்கோ?” என்றார்‌. (யோ தேவாநாம்‌ புரோஹித:). எந்தப்‌ பரமாத்மா நித்ய ஸூரிகளுக்காக அநாதி காலமாக ஹிதத்தைக்‌ கொடுக்கிறாரோ-அவர்களுக்கு உண்ணும்‌ சோறு பருகு நீர்‌ தின்னும்‌ வெற்றிலையுமான பகவத் கைங்கர்யத்தைக்‌ கொடுக்கிறார்‌ என்று தாத்பர்யம்‌- “தத்‌; விப்ராஸோ விபந்யவோ” என்று சொல்லுகிறபடி பகவானைச்‌ சூழ்‌ந்திருந்தேத்துவதாகிற ப்ரஹ்‌மானந்தத்தை அவர்கள்‌ அநாதி காலமாக அனுபவிக்கிறார்கள்‌ -கைங்‌கர்யமே உண்மையான ஹிதம்‌; “இவ்வுலகிலுள்ள ஐஸ்வர்யங்களும்‌ ஹிதமல்ல. கைவல்ய நிஷ்டர்களுடைய ஆத்மாநுபவமும்‌ உண்மையான ஹிதமல்ல.. ப்ரகாரத்தளவில்‌ நிற்கும்‌ ஆத்மானுபவ மாத்ரத்திலன்றிக்கே ப்ரகாரியளவும்‌ செல்லும்‌ பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷமே ஹிதமெனத் தகுந்தது, சடகோபன்‌ இதை “வானவர்‌,போக மென்கோா? வானவர்‌ முற்றுமென்கோ?” என்று அருளினார்‌.

(பூர்வோ…ஜாத:). எவர்‌ . நித்ய ஸூரிகளுக்கு முதல்வரா யிருக்‌கின்றாரோ. ‘வானவராதியென்கோ?” என்றார்‌ நம்மாழ்வார்‌. நித்ய ஸூரிகளுக்கு. நிர்வாஹகன்‌-அவர்களுடைய ஸத்தைக்கு (இருப்‌புக்கு) காரணமாயிருப்பவன்‌-அவர்கள்‌ நித்யராயிருக்கும் போது ஸத்தா ஹேதுவென்று எப்படிச்‌ சொல்லமுடியும்‌? அவர்‌களுடைய நித்யத்வம்‌ அவனுடைய நித்யேச்சையாலே இருக்கிற படியால்‌ அவர்களுக்கு ஸத்தா ஹேது வென்று சொல்லலாம்‌. இந்த இச்சை அழிந்தால்‌ நித்யத்வமும்‌ மாள வேண்டிவருமன்றோ?-(ருசாய) திவ்ய மங்கள விக்ரஹத்துடன்‌ ப்ரகாசித்துக் கொண்டிருக்கும்படியான பரம புருஷ்னுக்கு. “ ஒளி மணி வண்ணன்‌ என்று சொல்லப்பட்ட அவனுடைய சோதி வடிவு இங்கு உணர்த்தப்படுகிறது.(ப்ராஹ்மயே நம🙂 பர ப்ரஹ்மமா யிருக்கும்‌ ஸ்ரீமந் நாராயணனுக்கு நமஸ்காரம்‌.-நாராயணாய நம:‘ என்று த்‌வயத்தில்‌ சொல்லப்பட்டது இங்கு உணர்த்தப் படுகிறது. ப்ராஹ்மயே’ என்னுமிடத்தில்‌ நான்காம்‌ வேற்றுமையால்‌ கைங்கர்யம்‌ பிரார்த்திக்கப் படுகிறதென்றும்‌, “நம: என்று “அந்தக்‌ கைங்கர்யத்தினால்‌ வரும்‌ ஆனந்தமும்‌ என்னுடையதல்ல; பகவானுடையதே’ என்று சொல்லப் படுகிறதென்றும்‌ கொள்ள வேண்டும்‌. இந்த மந்திரத்திலுள்ள தேவ சப்தங்களை ப்ரஹ்மாதி தேவ பரமாகவும்‌ ஆசாரியர்கள்‌ பொருள் கொண்டுள்ளனர்‌-

———–

ருசம்‌ ப்‌ராஹ்மம்‌ ஜநயந்த: தேவா அக்‌ரே தத;ப்‌ருவந்‌
யஸ்த்வைவம்‌ ப்‌ராஹ்மணோ வித்‌யாத்‌ தஸ்ய தே,வா அஸந்‌ வசே.–5

[பர ப்ரஹ்மத்தினுடைய ப்ரீதியை உண்டு பண்ணும்‌ நித்ய ஸூரிகள்‌ புருஷோத்தமனுக்கெதிரில்‌ நம.” என்னும்‌ அச் சொல்லை உரைத்தனர்‌-ப்ரஹ்ம ஜ்ஞானியான ஓருவன்‌ உம்மை இப்படி அறிந்தானாகில்‌, அவனுக்கு ப்ரஹ்மாதி தேவர்கள்‌ வசத்திலிருப்பார்கள்‌.](ருசம்‌ ப்ராஹ்மம்‌ ஜநயந்த: தேவா…) புருஷோத்தமனுடைய ப்ரீதியை உண்டு பண்ணும்‌ தேவர்களான நித்ய ஸூரிகள்‌, அவ னுக்கு எதிரில்‌ “நம:* என்னும்‌ சொல்லைக்‌ கூறுகின்றனர்‌. இதிலிருந்து பகவானுடைய முகோல்லாஸத்திற்காகக்‌ கைங்கர்யம்‌ செய்‌யப்படுகிறதே யொழிய, நம்முடைய ஆனந்தத்திற்காக வல்ல என்று உணர்த்தப் படுகிறது. அவனுகக்கிறான் என்பதற்காக நாமுகந்து செய்ய வேண்டுமே யொழிய நம்‌ உகப்புக்காகக்‌ கைங்கர்யம்‌ செய்யலாகாது, நம:’ என்னும்‌ பதம்‌ “அஹமபி நமம பகவத ஏவாஹமஸ்மி””-[நானும்‌ எனக்குரியேனல்லேன்‌. பகவானுக்கே நான்‌ உரியவன்‌.] என்னும்‌ பொருளை யுடையதன்றோ. :நம இத்யேவ ‘வாதி,ந:”* [நம:”என்றே சொல்லுபவர்கள்‌ நித்ய ஸூரிகள்‌.] என்றல்லவோ சொல்லப்‌ பட்டிருக்கிறது. “பூயிஷ்டராம்‌ தே நம உக்திம்‌”” என்கிறபடி “நம:என்னும்‌ சொல்லை மிகப் பெரிதாக வன்றோ நினைத்து உகக்கிறான்‌ மாதவன்‌.-

(யஸ்த்வைவம்‌…) எவன்‌ இம் மாதிரி பகவத் கைங்கர்யமே பரம புருஷார்‌த்தமென்‌ றிருக்கிறானோ அவனுக்கு ப்ரஹ்மாதி தேவர்கள்‌ வசத்திலிருக்கிறார்கள்‌. ஸ்ரீ விஷ்ணு புராணத்தில்‌,-“ஸ்வ பருஷமபி,வீக்ஷய பாச ஹஸ்தம்‌ வததி பம: கில’தஸ்ய கர்ண மூலே -பரிஹர மதுஸூதந ப்ரபந்நாரந் ப்ரபு,ரஹமந்‌ய ந்ருணாம்‌ ந வைஷ்ணவாநாம்‌””[யமன்‌ பாசத்தைக்‌ கையில் கொண்ட தன்‌ தூதனைப் பார்த்து, அவன்‌ காதினுள்‌ பின் வருமாறு சொல்லுகிறான் :-‘மதுஸூதனனை சரணமடைந்தவர்களை அணுகாதே. நான்‌ மற்றவர்களுக்கே பிரபு: வைஷ்ணவர்களுக்கல்ல.] என்றல்லவோ யமன்‌ கூறியதாகச்‌ சொல்லப்பட்டது.-திருமழிசையாழ்வாரும்‌,
திறம்‌ பேன்மின்‌ கண்டீர்‌ திருவடி தன்‌ நாமம்‌ மறந்தும்‌ புறந்தொழா மாந்தர்‌–இறைஞ்சியும்‌ சாதுவராய்ப்‌ போதுமின்களென்றான்‌ நமனும்‌ தன்‌ தூதுவரைக்‌ கூவிச்‌ செவிக்கு.-என்று இதையே அருளிச் செய்தார்‌.-தொண்டரடிப்பொடியாழ்வார்‌
“*நாவலிட்டுழி தருகின்றோம்‌ நமன்‌ தமர்‌ தலைகள்‌ மீதே” என்று அருளிச்‌ செய்தார்‌. ‘-திருமங்கை யாழ்வாரும்‌ “வள்ளலே! உன்‌ தமர்க்‌ கென்றும்‌ நமன்‌ தமர்‌ கள்ளர் போல்‌” என்று அருளினார்‌. “என்‌ தமர்‌ நமன்‌ தமரால்‌ ஆராயப்படார் காண்‌”” என்றும்‌, **நமன்‌ தமர்‌ என்‌ தமரை வினவப்‌. பெறுவாரலர்‌” என்றும்‌ அபயமளித்தான்‌ அச்யுதன்‌. பகவானைப்‌ பற்றினவுடன்‌ எத் தேவர்‌ வாலாட்டும்‌ ஓழியும்‌. “பிஞ்ஞகன்‌ தன்னோடும்‌ எதிர்‌வன்‌ அவன்‌ எனக்கு நேரான்‌’” [பிஞ்ஞகன்‌-சிவன்‌]என்றல்லவோ திருமழிசைப் பிரான்‌ அருளிச் செய்தார்‌.

————–

ஹ்ரீச்ச தே லக்ஷ்மீச்ச பத்ந்யெள, அஹோராத்ரே பார்ஸ்வே நக்ஷத்ராணி ரூபம்‌ அஸ்விநெள வ்யாத்தம்‌ இஷ்டம்‌ மநிஷாண அமும்‌ மநிஷாண ஸர்வம்‌ மநிஷாண,-6-[உனக்கு பூமி தேவியும்‌, ஸ்ரீ தேவியும்‌ பத்நிகள்‌. பகலுமிரவும்‌ பக்கத்திலிருக்கிறார்கள்‌. உன்‌ உருவம்‌ -நக்ஷத்திரங்கள் போல்‌(ஒளியுள்ள தாய்‌) இருக்கிறது. அச்விநீ தேவர்கள் போல்‌(உம்முடைய திரு முகம்‌) அழகாயிருக்கிறது. இஷ்டத்தைக் கொடுக்கும்‌. இந்தக்‌ கைங்கர்யத்தைக்‌ கொடுக்கும்‌. எல்லாவற்றையும்‌ கொடுக்கும்‌.]முன்‌ இரண்டு மந்த்ரங்களிதும்‌ சொல்லப்பட்ட கைங்கர்யம்‌ எம்பெருமானும்‌ பிராட்டியுமான சேர்த்தியிலேயே செய்யப்பட வேண்டும்‌ என்று கோஷிக்கிறது இந்த ருக்‌. இது வரையில்‌, விக்ரஹத்தாலும்‌, குணங்களாலும்‌, பரிகரங்களாலும்‌ பரம புருஷன்‌ நிர்ணயிக்கப் பட்டான்‌. புருஷ ஸூக்தத்தின்‌ கடைசி மந்த்ரமான இதில்‌ அவனுக்கே அஸாதாரணமான பிராட்டிகளைக் கொண்டு நிச்சயிக்கப்‌ படுகிறான்‌. பட்டரும்‌,“வேதாந்தா: தத்வ சிந்தாம்‌ முரபிதுராஸி யத் பாத,சிந்ஹைஸ் தரந்தி””[வேதாந்தங்கள்‌, முராரியின்‌ மார்பில்‌ எந்தப்‌ பிராட்டியின்‌ திருவடி யடையாளத்தைக் கொண்டே, பர தத்வ விசாரத்தை முடிக்கின்றனவோ] என்று இவ் விஷயத்தை அழகாக அருளிச்‌ செய்தார்‌-மேலும்‌,“ஈஷ்டே கச்சித்‌ ஜகத இதிய: பெளருஷே ஸுூக்த உக்த:தம்‌ ச த்‌வத்கம்‌ பதிமதி ஜகாவுத் தரச்சாநுவாக:’”[புருஷ ஸூக்தத்தில்‌ உலகத்திற்கெல்லாம்‌ நாயகனாகச்‌ சொல்லப்‌ பட்டவனை, உன்னுடைய (லக்ஷ்மியினுடைய) பதி யென்று உத்தரானுவாகம்‌ உத்கோஷித்தது.] என்றும்‌ அருளிச் செய்தார்‌. திருவின்‌ நாயகன்‌, நிலமகள்‌ நண்பன்‌, ஆயர் மடமகள்‌அன்பன்‌, அச்யுதனே இங்கு அறிவிக்கப் படுகிறான்‌, நமக்கு உபாயோபேயங்கள்‌ ஸ்ரீய:பதியே ஓழிய. ப்ரஹ்மசாரி நாராயணனல்ல என்னும்‌ ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தம்‌ இங்கு வெளியிடப்படுகிறது-

(தே): உமக்கு.-

  1. தலைகளாயிரம்‌, கண்களாயிரம்‌, தாளன்களாயிரமுடைய உமக்கு.
  2. ஸகல சராசரங்களையும்‌ வியாபித்திருக்கும்‌ உமக்கு.
  3. “ஸர்வம்‌ விஷ்ணு மயம்‌ ஜகத்‌” எனப்படும்‌ உமக்கு.
  4. தேச கால வஸ்து பரிச்சேதமில்லாத உமக்கு.
  5. மோக்ஷத்திற்கு ப்ரபுவான உமக்கு.
  6. ஸ்ரீவைகுண்ட வாஸியான உமக்கு.
  7. அண்‌டத்தை உண்டாக்கின உமக்கு.
  8. நான்முகனைப்‌ படைத்த நாராயணனான உமக்கு.
  9. ப்ரக்ருதி மண்டலத்திற் கப்பால்‌ சோதி யுருவா யிருக்கும்‌ உமக்கு.
  10. நாம ரூபங்களைக்‌ கொடுத்தருளிய உமக்கு.
  11. ப்ரஹ்ம ருத்ரேந்த்ர்களால்‌ தியானிக்கப்படும்‌ உமக்கு.
  12. “உம்மை உபாஸிப்பதைத் தவிர வேறு மோக்ஷோபாயமில்லை” என்னும்‌ கீர்த்தி பெற்ற உமக்கு.
  13. பாற் கடலில்‌ பள்ளி கொண்ட பரமனாய்‌ அந்தர்யாமி யாயிருக்கு முமக்கு.
    14. பிறப்பில்‌ பல் பிறவிப்‌ பெருமானா யிருக்கு முமக்கு.
  14. அவதார ரஹஸ்யத்தை அறிந்தவர்‌களால்‌ அடையப்படும்‌ உமக்கு. 16. ‘நித்ய ஸூரிகளுக்கு: நாதனாயும்‌,அவர்களால்‌ வணங்கப் படுபவனாயு மிருக்கும்‌ உமக்கு-இங்‌கு சொன்ன ஏற்றங்களுக்கெல்லாம்‌ மேலான ஏற்றத்தை அடுத்தபடியாகச்‌ சொல்லுகிறது. (ஹ்ரீச்ச லக்ஷ்மீச்ச பத்ந்யெள) பூ தேவியும்‌,ஸ்ரீ தேவியும்‌ உமக்குப்‌ பத்னிகள்‌.-இரண்டாவது ‘சகார”த்தினால்‌ நீளா தேவியும்‌ உணர்த்தப் படுகிறாள்‌. ஆழ்வாரும்‌ ‘குழற் கோவலர்‌ மடப் பாவையும்‌ மண் மகளும்‌ திருவும்‌” என்று அருளினார்‌. ஆஸ்ரிதர்‌ குற்றத்தைப்‌ பொறுப்பிக்கும்‌ பிராட்டி; “குற்றம்‌ காண்பானென்‌? பொறுப்பானென்‌?” என்றிருக்கும்‌ ஸ்ரீ பூமிப் பிராட்டி; நப்பின்னைப்‌ பிராட்டி க்ஷ்மை தான்‌ ஒரு வடிவாயிருக்கும்‌-பெரிய பிராட்டியார்‌ இவனுக்கு ஸம்பத்தாயிருக்கும்‌; அது விளையும்‌ தரை (பூமி); அதனை அனுபவிக்கும்‌ போக்தாவாயிருக்கும்‌ நப்பின்னை;’? என்ற பெரிய வாச்சான் பிள்ளையின்‌ ஸ்ரீஸூக்தி இங்கு அனுஸந்திக்கத் தக்கது. :நகச்சிந்‌ நாபராத்‌,யதி’* [குற்றம்‌ செய்யாதவர்கள்‌ ‘ஒருவருமில்லையே. ]என்பாள்‌ ஸ்ரீதேவி. *குற்றமே இல்லையே’ என்று காணாக் கண்ணிட்‌டிருப்பாள்‌ பூமி தேவி. ‘“க்ஷமயா ப்ருதிவீ ஸம:’” [(ஸ்ரீராமன்‌) பொறுமையில்‌ பூமிக்கு ஸமானமானவன்‌.] என்றல்லவோ சொல்லப் பட்டது.-பூமிப் பிராட்டிக்கு நாம்‌ செய்யும்‌ குற்றங்களுக்கோர்‌ கணக்கில்லை.-அவள்‌ நமக்குச்‌ செய்யும்‌ நன்மைகளுக்கோ எல்லையில்லை. ‘ நாம்‌ உண்டாவதற்கு உதவுகிறாள்‌. நாம்‌ நடக்கும் போதும்‌ கிடக்கும்‌ போதும்‌ நம்மைத்‌ தாங்குகிறாள்‌. தாம்‌ உயிருடனிருப்பதற்கு வேண்டியவைகளைக்‌ கொடுத்துக்‌ காப்பாற்றுகிறாள்‌. நாம்‌ அதற்குப்‌ பதில்‌ அவளை வெட்டுகிறோம்‌; கூரிய ஆயுதங்களினால்‌ குத்திக்‌ கீறிக்‌ கிழிக்‌கிறோம்‌; மல ஜலாதிகளை விட்டு அசுத்தம்‌ செய்கிறோம்‌. பூமியின்‌ புத்ரர்களான நாம்‌ ஒருவர்க்கொருவர்‌ த்வேஷிப்பதன்‌ மூலமும்‌, தூஷிப்பதன்‌ மூலமும்‌ முக் கரணங்களாலும்‌ முடிவில்லாத துன்பங்கள்‌ செய்வதன்‌ மூலமும்‌ நம்‌ தாயாகிய பூமியைத்‌ துன்புறுத்துகிறோம்‌.-பொறுமையாகிய பாலை நமக்கு ஊட்டின தாயின்‌ வழி நாம்‌ நடக்க வேண்டாமா? பொறையின்‌ மக்கள்‌ குறை கூறலாமோ? பொறுமையில்‌ மிக்கவளாகையாலும்‌, பூமியில்‌ பிறந்து வளர்ந்த நமக்கு இஹ பர புருஷார்த்தங்களை அடையச்‌ செய்பவள்‌ இவளே யாகையாலும்‌ முதலில்‌ “ஹ்ரீ:’ என்று பூமி தேவி சொல்லப் பட்டாள்‌. தேச பக்தி யென்‌பது தாயிடம்‌ அன்பே. ஆனால்‌ அந்த மாதவியோ மாதவனுடையவள்‌-அவளிடம்‌ பத்தி யென்று பெயர் பூண்டு அவனியாள்‌ நாதனின்‌ ஆஜ்ஞைகளை மீறுகிறார்கள்‌ சிலர்‌. பூமி தேவி அவர்களைப்‌ பொறுக்‌காமல்‌ பாரமாகவே கருதுவாள்‌. புருஷோத்தமனிடமிருந்து பூமியைப்‌ பிரிப்பவர்கள்‌ தகப்பனை விட்டுத் தாயைப்‌ பிரிப்பவர்களாகக்‌ கருதப்‌ படுவார்கள்‌. பிராட்டியை பகவானை விட்டுப்‌ பிரித்த ராவணன்‌ தலை யறுப்புண்டான்‌; பிரிக்கப் பார்த்த : சூர்ப்பணகை மூக்கறுப்புண்‌டாள்‌” என்று நம்‌ ஆசார்யர்கள்‌ அருளிச் செய்திருப்பது இங்கு அனுஸந்திக்கத் தக்கது.

(லக்ஷ்மீ:) திவ்ய லக்ஷணங்கள்‌ பொருந்தியவளாதலால்‌ :லக்ஷ்மி” என்று கீர்த்தி பெற்றிருக்கிறார்‌ பெரிய பிராட்டியார்‌- தேவர்‌,” மனுஷ்‌யர்‌ முதலிய எல்லாராலும்‌ பிரார்த்திக்கப் படுபவளாதலால்‌ ‘லக்ஷ்மி’ என்றுரைக்கப்படுவதாகவும்‌ கொள்ளலாம்‌.-பகவானுக்கு ஜ்ஞானனந்தாதி குணங்களைப் போல்‌ ஸவரூப நிரூபக பூதையா யிருப்பவள்‌.-மற்ற எல்லா மஹிஷிகளுக்கும்‌ தலைவியா யிருப்பவள்‌. ஜீவர்களுககெல்லாம்‌ புருஷகாரமா யிருப்பவள்‌. உலகிலுள்ள ஐஸ்வர்யங்களை யெல்லாம்‌ கொடுப்பவள்‌ ஸ்ரீதேவி. ஐஸ்வர்யங்கள்‌ எட்டு வகைப்‌ படும்‌:- 1-தங்கம்‌, வெள்ளி முதலியவைகள்‌ (தன லக்ஷ்மி). 2. தான்‌யங்கள்‌ (தான்ய லக்ஷ்மி). 3-புத்ர பெளத்ராதிகள்‌(ஸந்தான லக்ஷ்மி),4, ரத கஜ துரக பதாதிகளை யுடைய ராஜ்ய லக்ஷ்மி-5-வீர்ய (பராக்ரம) லக்ஷ்மி, 6. விஜய லக்ஷ்மி. 7. துஷ்டி, புஷ்டி முதலியவற்றைத் தரும்‌ ஸெளபாக்ய லக்ஷ்மி. 8, மோக்ஷ லக்ஷ்மி. இவற்றை யெல்லாம்‌ கொடுப்பவள்‌ ஸ்ரீ தேவி.

(ஹ்ரீச்ச லக்ஷ்மீச்ச) ஸம்பத்தாயிருப்பவள்‌ ஸ்ரீதேவி; ஸர்வ ஸம்பத்துகளுக்கும்‌ விளை நிலமாயிருப்பவள்‌ நிலமகள்‌. பெருமை யுடையவள்‌ பூமகள்‌; பொறுமை யுடையவள்‌ பூ தேவி. குணமுடையவள்‌ ஸ்ரீதேவி;மணமுடையவள்‌ மண்‌ மடந்தை. கோஷிப்பிப்பவள்‌ ஸ்ரீதேவி; போஷிப்பவள்‌ பூமி தேவி. அழகுடையாள்‌ இலக்குமி; புகழமுடையாள்‌ பூ தேவி. ஆதரமுடையவள்‌ அலர் மேல் மங்கை; ஆதாரமானவள்‌ அவனியாள்‌.

(பத்ந்யெள) இப்படிப்பட்ட கீர்த்தியை யுடைய இவர்கள்‌ .பரம புருஷனுக்குப்‌ பத்னிகள்‌ என்று உரைக்கப்படுகிறது. “பதிம் நயதி “என்னும்‌ வ்யுத்பத்தியின்படி ஸர்வேஸ்வரனைக்‌ கண் காட்டிய இடத்‌தில்‌ காரியம்‌ செய்யச் செய்பவள்‌ என்று பொருள் கொள்ளலாம்‌.
**யஸ்யாவீக்ஷ்ய முகம்‌ ததிங்கித பராதீநோ விதத்தேகி,லம்‌” [எந்தப்‌ பிராட்டியின்‌ முகத்தைப்‌ பார்த்து அவளுடைய முக பாவத்திற்கு வசப்‌பட்டு ஸர்வேஸ்வரன்‌ எல்லாவற்றையும்‌ செய்கிறானோ…]என்றல்‌லவோ ஆழ்வான்‌ அருளினார்‌. ‘ப்ரஜைகளை பகவானிடத்தில்‌ அழைத்‌துச்‌ செல்லுபவள்‌’ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌-இதனால்‌ இவ்‌விருவரும்‌ புருஷகாரமா யிருக்கிறார்களென்று அறிவிக்கப் படுகிறது.

“லஷ்மீ: புருஷகாரத்வே நிர்தி,ஷ்டா பரமர்ஷிபி,:’”? [லக்ஷ்மி புருஷகாரம்‌ (சிபார்சு) செய்பவள்‌ என்று பரம ரிஷிகளால்‌ நிர்ண யிக்கப்பட்டிருக்கிறாள்‌.] என்ற பாஞ்சராத்ர வசனம்‌ இங்கு அனு ஸந்திக்கத் தக்கது; பூதேவியும்‌ புருஷகாரத்வத்தை உடையவளென்‌பது * விஷ்ணுக்ராந்தே வஸுந்தரா…தயா ஹதேந பாபேந கச்சாமி பரமாம்‌ கதிம்‌” [விஷ்ணுவினால்‌ (திரிவிக்ரமாவதாரத்தில்‌) அளக்கப்‌ பட்ட பூமியே… அவளால்‌ பாபம்‌ நீங்கினவனாகி பரம பதத்தை அடைகிறேன்‌.] என்று வேதத்தில்‌ சொல்லப்பட்டது. “*பத்யுர்‌ நோ யஜ்ஞ ஸம்யோகே” என்கிற பாணினி ஸூத்ரத்தின்படி ஆஸ்ரிதர்களை
ரக்ஷிப்பதாகிற யஜ்ஞத்தில்‌ ஸஹ தர்ம சாரிணியா யிருப்பவள்‌ என்றும்‌ பத்னீ சப்தத்திற்குப்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. ஹ்ரீ:” என்‌ று லஜ்ஜைக்கு அபிமானி தேவதை; :லக்ஷ்மீ:” என்று ஐஸ்வர்யத்துக்கு அபிமானி தேவதை’” என்றார்‌ வித்யாரண்யர்‌.

எவ்வுலகத்திலி ருப்பவரும்‌, எம்மதத்திலி ருப்பவரும்‌ விரும்பும்‌ இஹ புருஷார்த்தங்கள்‌ தனம்‌, தான்யம்‌, ஸெளக்யம்‌ என்பவையே யாம்‌. இவைகளைக்‌ கொடுப்பவர்கள்‌ ஸ்ரீபூமி நீளா தேவிகளே. இவர்கள்‌ மூவருக்கே :ஸ்ரீஸூக்தம்‌” *பூஸூக்தம்‌” ‘நீளா ஸூக்தம் ’ என்று மூன்று ஸூக்தங்கள்‌ வேதத்தில்‌ படிக்கப் பட்டிருக்கின்‌றன. இவைகள்‌ நாராயண ஸூக்தத்திற்குப்‌ பின்‌ விவரிக்கப்படும்‌, ஸ்ரீஸூக்தம்‌ லக்ஷ்மியைச்‌ சொல்லுவதென்பதை சைவர்களுட்பட எல்லோரும்‌ ஓப்புக் கொள்ளுகிறுர்கள்‌. ஸ்ரீதேவியினால்‌ கொடுக்கப்‌ படும்‌ ஐஸ்வர்யங்களும்‌, பூமியில்‌ விளையும்‌ நவதான்யங்களும்‌, காய்‌ கனிகளும்‌, அதிலிருக்கும்‌ மண்‌, நீர்‌, அக்னி, வாயு, ஆகாசம்‌ எனும்‌ பஞ்ச பூதங்களுமில்லாமல்‌ மனிதர்களோ மற்ற பிராணிகளோ உயிருடனிருக்க முடியுமோ? இஹ லோக ஸுக ஸாதனங்களான நெய்‌, பால்‌, தயிர்‌, உண்ணும்‌ சோறு, பருகுநீர்‌, தின்னும்‌ வெற்றிலை முதலிய பதார்த்தங்களை விரும்பாதார்‌ யாவரே இவ் வுலகிலுள்ளார்‌?இந்த ஸ்ரீஸூக்த, பூஸூக்த, நீளா ஸூக்தங்களைப்‌ படிப்பதனால்‌ இஹ லோக புருஷார்த்தங்களெல்லாவற்றையும்‌ அடையலாம்‌. இவற்றைத்‌ தருவதுடன்‌ நில்லாமல்‌ பரம புருஷார்த்தமாகிய பகவத்‌ கைங்கர்யத்தையும்‌ பரந்தாமனுடைய பத்னிகள்‌ கொடுக்கிறார்கள்‌-புருஷோத்தமன்‌ தன்‌ பத்னிகள்‌ மூலமாக இவற்றைத்‌ தருகிறான்‌.

(அஹோராத்ரே பார்ஸ்வே) ‘பகலுமிரவும்‌ பரந்தாமன்‌ பக்கத்‌தில்‌ இப் பத்னிகளிருக்கிறார்கள்‌. அகலகில்லேன்‌ இறையும்‌ என்றிருக்‌கிறார்கள்‌. நம்மாழ்வாரும்‌, உடனமர்‌ காதல்‌ மகளிர்‌ திருமகள்‌ மண்‌மகள்‌ ஆயர்‌ மடமகள்‌ என்றிவர்‌ மூவர்‌‘” என்றும்‌, “நிழல்‌ போல்வனர்‌”‘ என்றும்‌ அருளிச்செய்தார்‌. எதற்காக இப்படி இருக்கிறார்களென்றுல்‌:
“சஞ்சலம்‌ ஹி மந:’* [மனது சஞ்சலமானது.] என்றும்‌, “நின்றவா நில்லா நெஞ்சு” என்றும்‌ சொல்லுகிறபடியே சேதனர்கள்‌ மிகவும்‌ நிலை யற்ற நெஞ்சை யுடையவர்களாதலால்‌, அவர்களுக்கு பகவத்‌ விஷயத்தில்‌ ருசி ஏற்பட்டவுடன்‌ அவர்களை பகவானிடம்‌ சேர்த்து
விட வேண்டும்‌ என்றே அச்யுதனின்‌ அருகிலிருக்கிறார்கள்‌. மேலும்‌, இருவருமான சேர்த்தியே உத்தேச்யம்‌. *தேவிமாராவர்‌ திருமகள்‌ பூமி ஏவ மற்றமரர்‌ ஆட் செய்வார்‌’” என்று நித்யஸூரிகளும்‌ இவர்களுடைய சேர்த்தியில்‌ ஏவினதை எடுத்துக்‌ கை நீட்டுபவர்களென்று சொல்லப்‌ பட்டிருக்கிறது. அவர்கள்‌ ஏவலைக் கேட்பதே பரமானந்தமாகும்‌.-சேஷனான இளைய பெருமாள்‌ :க்ரியதாமிதி மாம்‌ வத;’”[செய்யப்படட்டும்‌ என்று என்னை ஆஜ்ஞாபிப்பாயாக.] என்று இதையே விரும்பினர்‌.““ரமமாணா வநே த்ரய:‘”[மூவரும்‌ வனத்தில்‌ ரமித்தார்கள்‌,] என்று சொல்லப்பட்டபடி ஜீவன்‌, எம்பெருமான்‌, பிராட்டி என்னும்‌ மூவர்‌களுடைய சேர்த்தியே பரஸ்பரம்‌ ஆனந்தத்தைத்‌ தருவதாகும்‌.-ஸீதா ராமர்களுக்குப்‌ பரஸ்பர ஸம்ஸ்லேஷத்தினா லேற்படும்‌ ஸந்‌ தோஷம்‌, இளைய பெருமாளுக்கு (லக்ஷ்மணனுக்கு) இருவருமான சேர்த்தியை ஸேவிப்பதனால்‌ ஏற்பட்டதன்றோ. இங்கு பிராட்டிகளும்‌ பகவானும்‌ வெவ்வேறு தத்வங்கள்‌ என்பதும்‌ காட்டப்படுகிறது.

“ராமஸ்ய தக்ஷிணே பார்ஸ்வே பத்‌மா ஸ்ரீஸ்ஸம வஸ்த்திதா- ஸவ்யே து ஹ்ரீர்‌ விசாலாக்ஷ”[ராமனுடைய வலது புறத்தில்‌ தாமரையாளாகிற ஸ்ரீதேவி இருந்‌
தாள்‌; இடது புறத்தில்‌ விசாலமான கண்களை யுடைய பூதேவி இருந்தாள்‌.] என்னும்‌ ஸ்ரீராமாயண வசனத்தாலும்‌“தரணீ தேவீ தஷிணேதரகா ததா [பூமிதேவி இடது புறத்திலிருப்பவள்‌.| என்‌னும்‌ பாத்ம புராண வசனத்தினாலும்‌ இந்த மந்திரம்‌ . விவரிக்கப்‌ பட்டது. இத்தால்‌ ‘திருவில்லாத்‌ தேவரைத்‌ தேறேன்மின்தேவு”” என்று திருமழிசை யாழ்வாரால்‌ சொல்லப்பட்டபடி, மற்ற தெய்வங்களிற்‌ காட்டிலும்‌, மாதவனின்‌ மேன்மை உரைக்கப்பட்டது. மற்றிருந்தீர்‌ கட்கறியலாகா மாதவனென்பதோர்‌ அன்பனாகிய அச்யுதனுக்கு “தே,வ்யா காருண்ய ரூபயா”” என்று ப்ரஸித்தமடைந்த வேரி(வாஸனை) மாறாத பூமேலிருப்பவளான ஸ்ரீதேவியும்‌, மாதவியாகிய பூதேவியும்‌ பத்னிகளாயிருந்து கொண்டு சேதனர்களை ஸ்ருஷ்டிக்கும்படியும்‌,மோக்ஷத்தை அடையும்படியும்‌ செய்கிறார்கள்‌. இம் மூவரும்‌ சேர்ந்து கொண்டு ஒருவர்க்கொருவர்‌ சேதனரிடம்‌ அன்பு காட்டுவதில்‌ போட்டி போடுகிறார்கள்‌, “தன்னடியார்‌ திறத்தகத்துத்‌ தாமரையாளாகிலும்‌ சிதகுரைக்குமேல்‌ என்னடியார்‌ அதுசெய்‌யார்‌ செய்தாரேல்‌ நன்று செய்தார்‌ என்பர் போலும்‌
என்று அருளிச் செய்தார்‌ பெரியாழ்வாரும் -இம் மாதிரியாக பரனுக்கே ஸ்ரீ, பூமி, நீளா என்று மூன்று பத்னிகள்‌ பரத்வாவஸ்தையிலும்‌ இருப்பதாகச்‌ சொல்லப்பட்டது.-அவர்‌ புத்ரனான பிரமனுக்கும்‌ ஸரஸ்வதி, காயத்ரி, ஸாவித்ரி என்று மூன்று பத்னிகளிருப்பதாக அறிகிறோம்‌. அவருடைய பேரனாகிய ஸுப்ரஹ்மண்யனுக்கும்‌ வள்ளி, தேவ ஸேனை என்று இரு பத்னிகளிருப்பதாகப்‌ புராணங்களில்‌ பேசப்பட்டிருக்கிறது.-புருஷோத்தமனுடைய விபவாவதாரங்களிலும்‌ க்ருஷ்ணாவதாரத்தில்‌ அஷ்ட மஹிஷி களுடனிருந்தது எல்லோரும்‌ அறிந்ததே.-யாஜ்ஞ வல்க்யர்‌ இரண்டு பத்னிகளை யுடைவரென்பது வேத ப்ரஸித்தம்‌. வைஷ்ணவ ஆசார்ய ஸ்ரேஷ்‌டர்களான பட்டர்‌, நஞ்சியர்‌, நம்பிள்ளை என்னும்‌ இம் மூவரும்‌ இரண்டு பத்னிகளை உடையவர்களென்று படித்திருக்கிறோம்‌.இப்படி புண்ய பூமியாகிய பாரத தேசத்தில்‌ நாம்‌ வணங்கும்‌ தெய்வமும்‌; ரிஷிகளும்‌, ஆசார்யர்களும்‌ அனேக பத்னிகளை உடையவர்களாக இருந்திருக்‌கிறார்கள்‌. ஸ்ம்ருதிகளிலும்‌ பல தாரங்களை மணம்‌ செய்து கொள்ளப்‌ புருஷர்களுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது. பல கோடிக்‌ கணக்‌
கான வருஷங்களாக இருந்து வரும்‌ இவ் வழக்கத்தை கிறிஸ்தவ மதக்‌ கொள்கையைக்‌ காரணமாகக் கொண்ட ஐரோப்பியரின்‌ அனுஷ்‌டானத்தைக் கொண்டு மாற்ற சட்டம்‌ ஏற்படுத்தப்‌ பார்க்கிறார்கள்‌-அப்படிச்‌ செய்வது நமது நாட்டுக்கும்‌ அதன்‌ மக்களுக்கும்‌ அதில்‌ வழங்கி வரும்‌ மதங்களுக்கும்‌ பெருத்த தீங்காகும்‌.

(நக்ஷத்ராணி ரூபம்‌) உம்முடைய .. திரு வுருவம்‌ நக்ஷத்ரங்கள்‌ போல்‌ அழகா யிருக்கிறது. ஆதித்யனைப் போன்ற ஒளியை யுடையவன்‌ என்று முன்‌ சொன்னதில்‌ த்ருப்தி யில்லாமல்‌ கணக்கற்ற நக்ஷத்‌ரங்களைப் போல்‌ அழகியதா யிருக்கிறது உன்‌ சோதி யுருவம்‌ என்று சொல்லப்படுகிறது. சங்க சக்ரங்கள்‌, திவ்யாபரணங்கள்‌, ஹிரண்யவர்ணையான பிராட்டி பீதாம்‌பரம்‌ முதலியவைகளுடன்‌- கூடிய திவ்ய மங்கள விக்ரஹம்‌ நக்ஷத்ரங்களுடன்‌ கூடிய நீல மேகம் போல்‌ விளங்குகிறதன்றோ-“தாரா ரூபாணி த்‌ருஸ்யந்தே யாந்யேதாநி நபஸ் ஸ்தலே மம ரூபாணி தாந்யேவ”[ஆகாயத்தில்‌ காணப்படும்‌ நக்ஷத்ர ரூபங்களெல்லாம்‌ என்னுடைய உருவங்களே.] என்று மஹா பாரதத்தில்‌, ஆரண்ய பர்வத்தில்‌ பகவான்‌ மார்க்கண்டேயரைக்‌ குறித்துச்‌ சொன்ன வசனத்தை அனுஸரித்து நக்ஷத்ரங்கள்‌ பகவானுடைய சரீரங்களே என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. (அச்விநெள வ்யாத்தம்‌) அழகில்‌ மிக்க உம்முடைய திருமுக மண்டலம்‌ அச்வினீ தேவர்கள் போல்‌ விளங்குகிறது. “அழகனே! காப்பிட வாராய்‌”” என்றார்‌ பெரியாழ்வார்‌. கண்டவர்‌ தம்‌ மனம்‌ வழங்கும்‌ அழகுடையவனன்றோ இவன்‌. அச்வினீ தேவர்‌களைக் காட்டிலும்‌ அழகிய உருவமுடையவர்‌ லீலா விபூதியில்‌ இல்‌லாமையால்‌ இவர்கள்‌ உபமானமாகச்‌ சொல்லப் பட்டனர்‌. இவர்‌களும்‌ பகவானுடைய திருமுக மண்டலத்திற்கு ஓப்பாகார்கள்‌.

பட்டரும்‌-ஸ்ரீரங்கராஜ ஸ்தவத்தில்‌ ““விஹரது மயி ரங்கிரணச் சூலிகா ப்‌ரமரக திலகோர்த்‌வ புண்ட்‌ரோஜ்ஜ்வலம்‌ முகம ம்ருத தடாக சந்த்‌ராம்பு,ஜஸ்மர ஹரசுசி முக்‌த,மந்த;ஸ்மிதம்‌’”-[திருமுடி, திரு நெற்றியில்‌ அலையும்‌ திருக் குழல்‌, திலகம்‌, திருமண்‌காப்பு, இவற்றால்‌ பிரகாசிப்பதும்‌, அம்ருத தடாகம்‌, சந்திரன்‌,தாமரைப் பூ, இவற்றின்‌ கர்வத்தைப்‌ போக்கடிப்பதும்‌, வெண்மையான, அழகிய புன் முறுவலை உடையதுமான ஸ்ரீரங்கநாதனுடைய முகம்‌ என்னிடம்‌ விஹாரம்‌ செய்யக் கடவது என்று பகவானுடைய திரு முகத்தை ஓப்பற்றதாக வன்றோ பேசினார் -இதற்கு மேல்‌ வேத புருஷன்‌, இப் புருஷ ஸூக்தத்தை அனுஸந்‌தித்தவர்களுக்கு இஹ லோக புருஷார்த்தங்களையும்‌, பகவத் கைங்கா்‌யத்தையும்‌ கொடுக்கும்படி புருஷோத்தமனைப்‌ பிரார்த்திக்கிறான்‌.-இங்கு கைங்கர்ய ப்ரார்த்தனை செய்யப் படுகிறதென்பது கருணைக் கடலான பெரியவாச்சான் பிள்ளையால்‌ பரந்த ரஹஸ்யத்தில்‌ அருளிச் செய்‌யப்பட்டது.

(இஷ்டம்‌ மநிஷாண) இவர்கள்‌ விரும்பின எல்லாப்‌ புருஷார்த்தங்களையும்‌ கொடும்‌. இதனால்‌ ப்ரயோஜனாந்தர பரராக மாட்டார்களோ என்ற ஸந்தேஹம்‌ எழுகிறது. புருஷோத்தமனிடம்‌ மற்ற பலன்களை நமக்காக விரும்பினால்‌ ப்ரயோஜனாந்தர பரராவோம்‌. ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு இவ் வுலகிலுள்ள எல்லா ஸம்ருத்திகளும்‌ உண்டாக வேண்டும்‌ என்று பிரார்த்திப்பது தோஷ மன்று. ஆழ்வார்‌களும்‌ ‘நன் மக்களைப்‌ பெற்று மகிழ்வரே” என்றும்‌, “நல்ல பதத்தால்‌ மனை வாழ்வர்‌ கொண்ட பெண்டிர்‌ மக்களே’” என்றும்‌, “விடுமால்‌ வினை வேண்டிடில்‌ மேலுலகும்‌ எளிதாயிடும்‌ அன்றி இலங்கொளி சேர்‌ கொடு மா கடல்‌ வையகம்‌ ஆண்டு மதிக்குடை மன்னவராய்‌ அடி கூடுவரே’” என்றும்‌ அருளிச் செய்தனரன்றோ.(அமும்‌ மநிஷாண) முன்‌ மந்திரங்களில்‌ சொல்லப்பட்ட கைங்‌கர்யம்‌ ‘அமும்‌’ என்று காட்டப்படுகிறது. நித்யஸூரிகள்‌ செய்யும்‌ கைங்கர்யத்தையும்‌ கொடும்‌; பரம புருஷார்த்தமாகிற பகவதநுபவத்தைக்‌ கொடுப்பீராக. பிராட்டியும்‌ நீருமாயிருக்கிற சேர்த்தியில்‌ அடிமையை அருளுவீராக. (ஸர்வம்‌ மநிஷாண) எல்லாவற்றையும்‌ கொடும்‌. வேண்டிற்றெல்லாம்‌ தருபவனன்றோ தாமோதரன்‌-“சாய் கொண்ட இம்மையும்‌ சாதித்து வானவர்‌ நாட்டையும்‌ நீ கண்டு கொள்ளென்று வீடும்‌ தரும்‌ நின்று நின்றே”என்றார்‌ நம்மாழ்வார்‌.

இந்த ருக்கில்‌ அச்யுதனுடைய அன்பெனும்‌ அவியா விளக்கை ஸ்ரீ பூமிகள்‌ தூண்டுகிறார்களென்றும்‌, புருஷோத்தமன்‌ அன்பு மயமானவனென்றும்‌, சோதி வடிவானவனென்றும்‌; அழகமா் சூழொளிய னென்றும்‌ சொல்லப் பட்டது-“ஸர்வம்‌ ஐகந் மம பவேதிதி ஸஞ் சிந்தயந்‌ முநி: த்‌யாயேத்‌ புருஷ ஸூக்தேந ப்ரதி பாத்‌,ய ஜநார்த்தநம்‌ விஷ்ணு: புருஷ ஸூக்தார்த்த, இதீயம்‌ வைதிகீ ஸ்ருதி: புருஷஸ்ய ஹரேஸ்‌ ஸூக்தம்‌ ஸர்‌வ பாப ப்ரணாசநம்‌”[“இவ் வுலகெல்லாம்‌ எனக்காகட்டும்‌” என்று நினைத்துக் கொண்டு, முனியானவன்‌, புருஷ ஸூக்தத்தினால்‌ ஜனார்த்தனனைச்‌ சொல்லி, தியானிக்கக் கடவன்‌.-விஷ்ணுவே புருஷ ஸுூக்தத்தினால்‌ சொல்லப்‌ படுபவனென்று வேதத்தில்‌ உரைக்கப் பட்டது. ஹரியாகிற புருஷ, னுடைய ஸூக்தம்‌ எல்லாப்‌ பாபங்களையும்‌ போக்கடிப்பது.] என்று கார்க்க செளநக மஹ ரிஷிகளால்‌ புருஷ ஸூக்தம்‌ நாராயணனைச்‌ சொல்லுவதென்று உரைக்கப் பட்டது. போதாயனரும்‌,““அதைநம்‌ ருக்‌,யஜுஸ் ஸாமபி,ஸ்‌ ஸ்துவந்தி த்‌ருவ ஸூக்தம்‌ ஜபித்வா புருஷ ஸூத்தம்‌ ச அந்யாம்ச்ச வைஷ்ணவாந் மந்த்ராந்‌”*(இத்த நாராயணனை, த்ருவ ஸூக்தத்தையும்‌, புருஷ ஸூக்தத்தையும்‌ மற்ற வைஷ்ணவ மந்திரங்களையும்‌ ஜபித்து, ருக் யஜுஸ் ஸாம வேதங்‌களால்‌ ஸ்தோத்ரம்‌ செய்கிறார்கள்‌.] என்று விஷ்ணுவினுடைய ஆராதனத்தில்‌ புருஷ ஸூக்த ஜபம்‌ செய்ய விதித்திருக்கிறார்‌.“ஏஷா வைஷ்ணவீ நாம ஸம்ஹிதா, ஏதாம்‌ ப்ரயுஞ்ஜந்‌ விஷ்ணும்‌ ப்ரீணாதி”[இது விஷ்ணுவினுடைய நாம ஸம்ஹிதை; இதை ப்ரயோகிப்பவன்‌
விஷ்ணுவை ப்ரீதி யடையச்‌ செய்கிறான்‌.] என்று ஸாம விதி ப்ராஹ்மணத்தில்‌ சொல்லப் பட்டது. ஆதர்வணத்திலும்‌, கோ பத ப்ராஹமணத்தில்‌, ‘“வைஷ்ணவ்யா புருஷ ஸூக்தம்‌’” என்று உரைக்கப்பட்டது.

புருஷஸ்ய ஹரேஸ் ஸூக்தம்‌ ஸ்வர்க்‌யம்‌ தந்யம்‌ யசஸ்கரம்‌…ஸ்ருதிஷு ப்ரப,லா மந்த்ராஸ்‌ தேஷ்வப்யத்‌,யாத்ம வாதி: தத்ராபி பெளருஷம்‌ ஸூக்தம்‌ ந தஸ்மாத்‌, வித்‌யதே பரம்‌”[புருஷனாகிய ஹரியின்‌ ஸூக்தம்‌ ஸ்வர்க்கத்தைத்‌ தருவது; மேலானது; கீர்த்தியைக்‌ கொடுப்பது. வேதங்களில்‌ மந்த்ரங்கள்‌ மேலானவை? அவைகளிலும்‌ பரமாத்மாவைச்‌ சொல்லுபவை சிறந்‌தவை. அவற்நிலும்‌ புருஷ ஸூக்தம்‌ பெருமை வாய்ந்தது. அதைக்‌ காட்டிலும்‌ மேலானதில்லை.] என்று செளநக ஸ்ம்ருதியில்‌ புருஷ ஸூக்தத்தின்‌ பெருமை பேசப்பட்டது. வியாஸ ஸ்ம்ருதியிலும்‌,“ந விஷ்ண்வாராத நாத்‌ புண்யம்‌ வித்‌யதே கர்ம வைதிகம்‌ . தஸ்மாத,நாதி, மத்‌,யாந்தம்‌ நித்யமாராத,யேத்‌ ஹரிம்‌ தத்‌; விஷ்ணோரிதி மந்த்ரேண ஸுக்தேந பெளருஷேண ச நைதஸ்ய ஸத்‌,ருசோ மந்த்ர: வேதே,ஷூக்தச்‌ சதுர்ஷ்வபி”[விஷ்ணுவை ஆராதிப்பதைக் காட்டிலும்‌ புண்யமான வைதிக கர்மம்‌
கிடையாது. ஆகையால்‌ :*தத்‌; விஷ்ணோ: பரமம்‌ பத;ம்‌’” என்னும்‌ மந்‌திரத்தாலும்‌, புருஷஸூக்தத்தாலும்‌, ஆதி மத்யாந்தமில்லாத ஹரியை தினந்தோறும்‌ ஆராதிக்கக் கடவன்‌. இதற்கு ஸமானமான மந்திரம்‌ நான்கு வேதங்களிலும்‌ சொல்லப் படவில்லை.] என்று உத்கோஷிக்‌ கப்பட்டது. விஷ்ணு ஸ்ம்ருதியிலும்‌, “வாஸுதேவம்‌ ஸமர்ச்சயேத்‌::…[வாஸு தேவனை அர்ச்சனை செய்ய வேண்டியது. ] என்று ஆரம்பித்து“ஏவமப்‌யர்ச்ய து ஜபேத்‌ ஸூக்தம்‌ வை பெள்ருஷம்‌ தத:””[இம்மாதிரி ஆராதித்து புருஷ் ஸூக்தத்தை ஜபிக்க வேண்டியது.] என்று சொல்‌லப்பட்டது. வாதூல ஸூூத்ரத்தில்‌. “யத்ர யத்ர கர்ம ப்ரேஷோ ஜாயதே தத்ர தத்ர புருஷம்‌ த்‌யாயந் புருஷ ஸூக்தம்‌ ஜபே தர்ச்சயேத்‌ பூர்ணத்வாத்‌ புருஷ:”” [கர்ம ப்ரம்சம்‌ உண்டாகும் போது, புருஷனை தியானித்து,புருஷ் ஸூக்தத்தை ஜபித்து ஆராதிக்க வேண்டியது; . பூர்ணானாகை’யால்‌ புருஷனெனப்படுகிறான்‌.] என்று.புருஷ ஸூக்தத்தின்‌ சிறப்பு சொல்லப் பட்டது. இம் மாதிரியாகப்‌ பல்லாயிரக்கணக்கான இடங்‌ களில்‌ புருஷ ஸூக்தத்தில்‌ ப்ரதிபாதிக்கப் படுமவன்‌ நாராயணனே என்று சொல்லப் பட்டிருக்கிறது.

இதிஹாஸ புராணங்களிலும்‌ பல பல விடங்களில்‌. இது பகவத் பரமென்று பேசப் பட்டிருக்கிறது.’ ஸாரமான சிலவற்றை எடுத்துக்‌ காட்டுவோம்‌. : மஹாபாரதத்தில்‌,மோக்ஷதா்மத்தில்‌,“ப;ஹவ: புருஷா ராஜந்‌ உதாஹோ ஏக ஏவது।கோஹ் யத்ர புருஷ: ச்ரேஷ்ட்ட,: கோ வா யோநிரிஹோச்யதே॥”[ப்ராஹ்மணரே! புருஷர்கள்‌ பலரா? அல்லது ஒருவனா?(பலரானால்‌)இவர்களுள்‌ எந்தப்‌ புருஷன்‌ மேலானவன்‌? எவன்‌ மற்றவர்களுக்கு காரணமாயிருப்பவன்‌?] என்று ஜனமேஜயர்‌ வைசம்பாயனரை வினவினார்‌.-வைசம்பாயனரும்‌ தாம்‌ சொல்லப் போகும்‌ விஷயம்‌ அதி ரஹஸ்யமானதாகையால்‌ தன்‌ குருவான வியாஸரை நமஸ்கரித்து,“ப,ஹவ: புருஷா ராஜ்‌ ஸாங்க்‌,ய யோக,விசாரிணாம்‌.। நைத திச்ச,ந்தி புருஷம்‌ ஏகம்‌ குரு குலோத்‌,வஹ।’ பாஹுநாம் புருஷாணாஞ்ச யதை,கோ யோ நிருச்யதே |ததா தம்‌ புருஷ வ்யாக்‌,ரம்‌ வ்யாக்‌,யாஸ்யாமி கு.ணாதி,கம்‌ ॥ இத,ம்‌ புருஷ ஸுக்தம்‌ ஹி ஸர்வ வேதே,ஷு பார்த்திவ | ருதம்‌ ஸத்யம்‌ ச விக்‌,யாதம்‌ ருஷி ஸிம்ஹேந சிந்திதம்‌ |”-(குருகுல ச்ரேஷ்ட்டனான அரசனே! ஞானிகளும்‌. யோகிகளும்‌ புருஷர்‌கள்‌ பலரென்ற நிர்ணயித்திருக்கிறார்கள்‌. ஒரு புருஷன்‌ என்பதை அவர்கள்‌ அங்கீகரிக்க மாட்டார்கள்‌. பல புருஷா்களுக்கும்‌ காரண மானவனும்‌, குணங்களில்‌ சிறந்தவனுமான புருஷ ச்ரேஷ்டனைச்‌ சொல்லுகிறேன்‌. ரிஷி ச்ரேஷ்ட்டரால்‌ ஸாஷாத் கரிக்கப்பட்ட இந்தப்‌ புருஷஸூக்தம்‌ எல்லா வேதங்களாலும்‌ உண்மையை உணர்த்துவது என்று கீர்த்தி பெற்றிருக்கிறது- என்று அத்வைத நிரஸனம்‌ செய்து புருஷ் ஸூக்தமே காரண புருஷனைக்‌ கூறுகிறது என்று உரைத்து,புருஷோத்தமன்‌ யாரென்பதை நிர்ணயம்‌ செய்ய ப்ரஹ்மாவுக்கும்‌ ருத்ரனுக்கும்‌ நடந்ததான பின் வரும்‌ ஸம்பாஷணையைச்‌ சொன்னார்‌:-

முன்‌ ஒரு காலத்தில்‌, பாற்கடலின்‌ நடுவிலுள்ள வைஜயந்த மென்னும்‌ பர்வதத்தில்‌ பிரமன்‌ தவம்‌ செய்து கொண்டிருக்கும்‌ போது, சிவபிரான்‌, ‘தன்‌ தகப்பனான பிரமனை அடி பணிந்து பல புருஷர்களை ஸ்ருஷ்டி செய்யும்‌ நீர்‌ எந்தப் புருஷனை தியானிக்கிறீர்‌? என்று கேட்டார்‌. அதற்கு பிரமன்‌’ஸ்ருணு புத்ர யதரா ஹ்யேஷ புருஷ: சாஸ்வதோவ்யய:…ந ஸ ஸக்யஸ்‌ த்வயா த்‌,ரஷ்டும்‌ மயாந்யைர் வாபி ஸத்தம…மமாந்தராத்மா தவ ச யே சாந்யே தேஹி ஸம்ஜ்ஜிதா:…விஸ்வ மூர்த்த, விஸ்வ பு,ஜ: விஸ்வ பாதாஷி நாஸிக:…மஹா புருஷ சப்‌தம்‌ ஸ பிபர்த்யேகஸ்‌ ஸநாதந:…ஸஹி நாராயணோ ஜ்ஜேய: ஸர்வாத்மா புருஷோ ஹி ஸ.””[குழத்தாய்‌! நித்யனானவனும்‌, அழிவற்றவனுமான புருஷனைப் பற்றிக்‌ , கேட்பாயாக.-அவனை உன்னாலும்‌, என்னாலும்‌, எவராலும்‌ காண முடியாது. அவன்‌ உனக்கும்‌ எனக்கும்‌, எல்லோருக்கும்‌ அந்தர்‌யாமி, அவன்‌ முடிகளாயிரம்‌, அடிகளாயிரம்‌, கைகளாயிரம்‌, கண்‌களாயிரமுடையவன்‌. பழைமையான அவனே மஹா புருஷ சப்தத்தை வஹிக்கிறான்‌. அவனை நாராயணனென்று அறிவாயாக;-ஸர்வாந்தர்‌யாமியான அவனன்றோ புருஷன்‌.] என்று புருஷ ஸூக்தத்தால்‌ சொல்லப் படுபவன்‌ பரமாத்மாவான நாராயணனே என்று தெளிவாகத்‌ தெரிவித்தார்‌. விஷ்ணு புராணத்தில்‌ துருவன்‌ இவ் விஷயத்தை விளக்கினான்‌. மேலும்‌, ஹரி வம்சத்தில்‌ கைலாஸ யாத்ரையின் போது ருத்ரன்‌, உமையுடன்‌ கூடி யிருந்து கை கூப்பி, பகவானைக் குறித்து,-ஸஹஸ்ர சீர்ஷா புருஷஸ்‌ ஸஹஸ்ராக்ஷஸ்‌ ஸஹஸ்ர பாத்‌ ஸஹஸ்ரோதர பாஹுச்ச ஸஹஸ்ராத்மா திவஸ்பதி:….”முதலிய ஸ்லோகங்களால்‌ ஸ்தோத்ரம்‌ செய்ததாலும்‌ புருஷ ஸூக்தம்‌ பேச நின்ற சிவனுக்கு நாயகனான நாராயணனையே சொல்லுகிறதென்று ஸித்திக்கிறது. மோக்ஷதர்மத்தில்‌ முப்பத்து மூன்றாவது’ அத்யாயத்தில்‌ பீஷ்மரை யுதிஷ்டிரன்‌ .-நாராயணம்‌ ஹ்ருஷீகேசம்‌ கோவிந்தம் அபராஜிதம்‌ தத்‌வேந பரத ஸ்ரேஷ்ட்ட, ஸ்ரோதுமிச்ச,ரமி கேஸவம்‌”[பரத குலத்தில்‌ பிறந்தவருள்‌ சிறந்தவரே! ஐயிக்கப்படாதவனும்‌, கோவிந்தன்‌, ஹ்ருஷீகேசன்‌, கேசவன்‌ என்னும்‌ பெயர்களை யுடையவனுமான நாராயணனை உண்மையாக அறிய விரும்புகிறேன்‌-என்று கேட்க,கேசவோ பரத ஸ்ரேஷ்ட்ட, பகவாநீஸ்வர: ப்ரபு: புருஷஸ்‌ ஸர்வமித்யேவ ஸ்ரூயதே பஹுதா விபு : ப்‌ராஹ்மணாநாம்‌ சதம்‌ ஜ்யேஷ்ட,ம்‌ முகாதஸ்யாஸ்‌ ருஜத் ப்ரபு,:”[பரத ஸ்ரேஷ்ட்டனே! ப்ரபுவும்‌, பகவானுமான கேசவனே ஸர்வேசஸ்வரன்‌, ஸர்வ வ்யாபியான அந்தப்‌ புருஷனே எல்லாமென்று பலவிதமாகச்‌ சொல்லப் படுகிறான்‌. ப்ரபுவான இவனே முகத்திலிருந்து உயர்ந்தவர்களான நூறு ப்ராஹ்மணார்களை ஸ்ருஷ்டித்தான்‌.] முதலிய ஸ்லோகங்களாலும்‌ இவ் விஷயம்‌ நன்கு விளக்கப்பட்டது.-ராமாயணத்திலும்‌, பாகவதத்திலும்‌, கீதையிலும்‌, மற்ற புராணங்‌களிலும்‌ புருஷ ஸூக்தம்‌ நாராயணனையே பரமாத்மா வென்று உத்‌கோஷிக்கிற தென்பது சொல்லப்பட்டது. இதைப்‌ பன்னியுரைக்குங்‌கால்‌ பாரதமாம்‌. ஆதலால்‌ இத்துடன்‌ நிறுத்திக் கொள்கிறோம்‌.

கூரத்தாழ்வான்‌ ஸ்ரீவைகுண்ட ஸ்தவத்தில்‌-*யம்‌ பூத பவ்ய பவதீ சமநீ சமாஹு: அந்தஸ் ஸமுத்‌ர நிலயம்‌ யமநந்தரூபம்‌ யஸ்ய த்ரிலோக ஜநநீ மஹிஷீ ச லக்ஷ்மீ: ஸாக்ஷாத்‌ ஸ ஏவ புருஷோஸி ஸஹஸ்ர மூர்த்தா ஸர்வ ஸ்ருதிஷ்வநுக;தம்‌ ஸ்திரம ப்ரகம்ப்பம்‌ நாராயணாஹ் வயத,ரம்‌ த்‌வமிவாந வத்‌யம்‌ ஸூக்தம்‌ து பெளருஷ மசேஷ ஜகத் பவித்ரம்‌ த்வாமுத்தமம்‌ புருஷமீச முதாஜஹார”[முக் காலங்களிலுள்ள வற்றிற்கு ஈசனென்றும்‌, தனக்கொரு ஈசன் இல்லாதவனென்றும்‌, பாற் கடலில்‌ பள்ளி கொண்டவனென்றும்‌,அபரிமிதமான அவதார ரூபங்களை யுடையவனென்றும்‌, மூவுலகிற்கும்‌ தாயாகிய லக்ஷ்மியைப்‌ பத்னியாக வுடையவனென்றும்‌ சொல்லப்‌ பட்ட நீயே ஆயிரம்‌ தலையை யுடைய புருஷனாகிறாய்‌. உன்னைப்‌ போல்‌, எல்லா ஸ்ருதிகளிலும்‌ உத்கோஷிக்கப் பட்டதும்‌, நிலையானதும்‌, அசைக்க முடியாததும்‌, ‘நாராயணம்‌’ என்ற பெயரை யுடையதும்‌, குற்றமற்றதும்‌, உலகை யெல்லாம்‌ புனிதமடையச் செய்வதுமான புருஷ ஸூக்தம்‌, உன்னையே மேலான புருஷனாகவும்‌, ஈஸ்வரனாகவும்‌ சொல்லிற்று.] எனறு புருஷ ஸூக்தத்தின்‌ பெருமையையயும்‌, பொருளையும்‌ ஸங்க்ரஹித்தார்‌.-பெரியவாச்சான்பிள்ளையும்‌ திருவாய்‌ மொழி வியாக்யானத்தின்‌ கடைசியில்‌ ”ஸ்ரீமானான நாராயணானே ப்ராப்யமும்‌ ப்ராபகமும்‌ என்று இவர்க்குப்‌ பஷமென்னுமிடம்‌ தோற்றிற்று. இவ்வர்த்தம்‌ உபநிஷத்‌ ப்ரஸித்தமும்‌;-அநந்ய பரமான நாராயண அநுவாகத்திலே, நாராயண சப்தத்தாலே ஸர்வாதிகனைச் சொல்லி, ‘ஹ்ரீச்ச தே லக்ஷமீச்ச பத்ந்யெள’*? என்று உத்தர நாராயணத்தே சொல்லிற்று” என்று அருளிச் செய்தார்‌.

இந்தப்‌ புருஷ ஸூக்தத்தில்‌, ஸ்ரீ பூமி நாதனான நாராயணனே பராத் பரனென்றும்‌, அவனே நான்முகளைப்‌ படைத்தானென்றும்‌,அவனே ஸர்வ காரண பூதனென்றும்‌, ஸர்வாந்தர்யாமி யென்றும்‌, லோக ஸம்ரக்ஷணார்த்தம்‌ பல அவதாரங்களைச்‌ செய்தானென்றும்‌, நித்ய விபூதி நாயகனென்றும்‌ நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. புருஷ ஸூக்தம்‌ என்னும்‌ பெயரிலிருந்தே ஸ்தோதாவாகிய ஜிவாத்மா உண்டென்றும்‌, ஸ்தவ ப்ரியனாகிய மஹா புருஷன்‌ உண்டென்றும்‌, ஸ்தோத்ரமும்‌ உண்‌மை யென்றும்‌ உணர்த்தப்படுகிறது. ஜ்ஞாதா, ஜ்ஜேயம்‌, ஜ்ஞானம்‌ என்னும்‌ மூன்று இல்லை என்று சொல்லும்‌ அத்வைத வாதம்‌ இங்கு ஓப்புக் கொள்ளப் படவில்லை. உலகம்‌ பொய்‌ யென்கிற ப்ரம வாதத்திற்கு, இங்கு விவரமாகச்‌ சொல்லப்பட்ட ஸ்ருஷ்டி க்ரமத்தில்‌ இடமுண்டோ? பரம புருஷனுக்கு ஆயிரம்‌ கண்‌கள்‌, ஆயிரம்‌ தலைகள்‌ என்றும்‌, ஆதித்ய வர்ணமானவனென்றும்‌, நக்ஷத்ரங்கள் போல்‌ உருவமுடையவனென்றும்‌, அச்வினீ தேவர்கள்‌ போல்‌ அழகானவனென்றும்‌ சொல்லப்பட்டதால்‌ ரூபமில்லை என்னும்‌ வாதம்‌ வீண் வாதமென்று விளங்குகிறது. “சேதனர்கள்‌, நித்யர்‌,முக்தர்‌, பத்தர்‌ என்று மூன்று விதமானவர்களென்றும்‌, மோக்ஷத்தைக்‌ கொடுப்பவன்‌ முகுந்தவனே என்றும்‌ காட்டப்படுகிறது. காலமும்‌ வருங்காலம்‌, நிகழ்காலம்‌, கழிகாலம்‌ என்னும்‌ மூன்று பேதத்தை உடையதென்று தெரிகிறது. புருஷோத்தமனுடைய மஹிமை வாக்குக்‌கும்‌ மனத்திற்கும்‌ எட்டாததென்று அறிவிக்கப்படுகிறது. புருஷோத்தமன்‌ ஸமஸ்த கல்யாண குணங்கள்‌ நிறைந்தவனென்றும்‌, ஹேய குணம்‌ சிறிதும்‌ இல்லாதவனென்றும்‌, ஸுலபமாக ஆராதிக்கத்‌ தக்கவனென்றும்‌ உத்கோஷிக்கப்பட்ட திலிருந்து குண மில்லை என்‌னும்‌ கட்சிக்குக்‌ கொஞ்சமும்‌ இடமில்லை. ப்ரக்ருதிக்கு அப்பாற்‌ பட்டதும்‌, “விஷ்ணோர்‌ யத்‌ பரமம்‌ பதம்‌” என்றும் சொல்லப்பட்டதுமான ஸ்தான விசேஷம்‌ இருக்கிறதென்றும்‌, அதை அடைவதே மோக்ஷமென்றும்‌ விரித்துரைக்கப் பட்டிருக்கிறது. பகவத்‌ கைங்கர்‌யமே பரம புருஷார்த்தமென்றும்‌ அதுவும்‌ இருவருமான சேர்த்தியில்‌ செய்யப் படவேண்டும்‌ என்றும்‌ சொல்லும்‌ ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்‌தம்‌ ஓப்புக் கொள்ளப் பட்டிருக்கிறது. விசிஷ்டாத்வைதமே, வேதாந்‌தத்தின்‌ விழுப்பொருள்‌ என்னும்‌ ஸித்தாந்தம்‌ ஸ்தாபிக்கப்பட்டது.

———————

வேதேஷீ புருஷ ஸூ க்தம். தர்ம ஸாஸ்திரேஷு மாணவம். பாரதே பகவத்கீதா புராணே ஷீ வைஷ்ணவம். பூர்வ அனுபாகம் உத்திர அனுபாகம் என இருபாகங்கள் கொண்டது புருஷ ஸூக்தம் ச்ருத்வா தர்மாத சேஷேண பாவ நா நிச ஸர்வ ச: யுதிஷ்டிர: சாந்த நவம் புநரேவாப்ப பாஷத !! என விஷ்ணு ஸஹஸ்ரநாமம் கூறுவது சிறந்த தர்மம், பல கேள்விக் கணைகளை யுதிஷ்டிரர் தொடுக்க பீஷ்மர் பதிலளிக்கிறார். ஹரி ப்ரபு கேசவன் யார? ஈஸ்வரன் யார் ? என்றால் பகவான் ஈஸ்வரன் ப்ரபு புருஷன் சப்தத்தின் விளக்கம் என்றால் அது நாராயணன் என்ற ஒரு வ்யக்தியையே குறிக்கும்.

கேசவன் என்றால் ஒரு தனி மனிதனை குறிக்கும். புருஷ ஸர்வ வக்தேவ : ஒளபசாரிகம் என்பது உபச்சார வார்த்தை அது ப- ஞான பல, க. ஐஸ்வர்ய வீர்ய, க – சக்தி தேஜஸ் (பகவான்) இந்த 6குணங்களில் ஒன்று இருந்தாலும் அது வால்மீகிக்கு இருந்தால் வால்மீகி பகவான் என்றும் வ்யாசருக்கு இருந்தால் ல்யாச பகவான் என்றும் உபச்சாரமாய் சொல்வது வழக்கம் என்பதை லெளி கீ க திருஷ்டாந் தத்துடன் அழகாய் விளக்கினார். புருஷ: ஈஸ்வர: என்பது நியமன சாமர்த்தியம் உள்ளவர். நாராயண பரப்ரஹ்ம : தத்வம் நாராயண பர: நாராயண பரஞ்ஜோதி ஆத்ம நாராயணோ பர: என்றால் தன்னைக் காட்டிலும் சமமானவரோ மேம்பட்டவரோ கிடையாது என்று அர்த்தம். எந்த வேதாந்தியைக் கேட்டாலும் புருஷ : என்ற சபதம் ஒருவர் மட்டுமே குறிக்கும் என்பர். அது புருஷோத்தமனான ஸ்ரீமன் நாராயணன் ஒருவரே. ஏனையவர்கள் அனைவரும் பெண்களே .

பெண்கள் ஆழ்வார்களில் ஆண்டாள் போல் பெண் உடுப்பு உடுத்தி ஸ்தீரித்தவத்துடன் இருப்பர். ஆண்கள் – ஆண் வேடம் கொண்ட அவர்களும் பெண்களே . பெருமான் ஒருவரே புருஷோத்தமன். புரு பஹீ சமமா இதி புருஷ: கையேநீண்டு போகும் அளவிற்கு நிறைய கொடுக்கிறார் வாங்குபவர்களுக்கு பெற்று பெற்று கைவலிக்கும். புருஷர்களில் பக்தாத்மா , முக்தாத்மா நித்யாத்மா என மூன்று வகையினர். புருஷோத்தமர் இவர்கள் அனைவரையும் விட உயர்ந்தவர். போக மோக்ஷ ப்ரதானமாய் இருப்பர். இவ்வுலக போகத்தையும் அவ்வுலக வைகுண்டத்தில் மோக்ஷத்தையும் கொடுக்க வல்லவராய் மோக்ஷ பிரதாரராய் இருப்பர். இந்த லீலா விபூதியில் எல்லா லீலைகளையும் விளையாட்டாய் செய்பவர், நித்ய வீபூதியான வைகுண்டத்தில் நாம் நித்ய கைங்கர்யம் அவருக்கு செய்வோம். புருஷ ஸூக்தம் ஜபித்தால் அந்த ஜனார்த்தனனான நாராயணன் மோக்ஷம் கொடுப்பார். புருஷஸூக்தம் எந்த ஒரு நிமித்தத்திற்கும் சொல்லலாம். அதற்கு உண்டான பலனைக் கொடுக்கும். புருஷ ஸூக்தம் ஸர்வ பாப விநாசனம். தேவதாந்திரங்களை ப்ரதக்ஷணம் செய்தால் அந்தந்த பலனை சுலபத்தில் கொடுத்து விடுவார்கள். ஆனால் நாராயணனை ப்ரதக்ஷணம் செய்தால் சுலபத்தில் மோக்ஷத்தை கொடுக்க மாட்டார், நமக்கு அதற்காத தகுதி இருக்கிறதா என்பதை பார்த்து கொடுப்பார். ஸர்வ பல ப்ரயோகி விஷ்ணு: ஒருவன் காசுக்கு ஆசைப்பட்டு ஒரு ப்ராமணனை அடித்து கொன்றால் கூட அவன் புருஷ ஸூக்தம் கூறினால் அந்த பாபத்திலிருந்து விடுதலை பெற்றவனாகிறான். ஹரிஹரிதி பாபானி ஹரி என்ற திருநாமமே பாபத்தை போக்கவல்லது. இதன் அடியாய் கண்ணன் வெண்ணெய் திருடும் போது அந்தந்த ஆயர் பெண்கள் உள்ளத்தையும் திருடுவதாக அந்த பெண்களின் தாயார் கண்ணன் மேல் புகார் கூற கண்ணன் அந்த ஆயர் பெண்கள் வீட்டுப் பக்கம் கூட தலைவைத்து படுக்காமல் இருக்க திரும்ப அந்த பெண்களின் தாயார் யசோதையிடம் கண்ணன் வந்து விட்டு போகட்டும் என்று கூறினாள். அவர் வெண்ணெயை திருடும் போது நம் பாபங்களையும் சேர்த்து திருடிக் கொண்டு போவார். குருவிடமோ குருபத்தினியிடமோ அப்ச்சாரம் பட்டால் கூட புருஷ ஸூக்தம் கூறினால் அந்த பாபம் நீங்கும். தினம் ஒரு ப்ரச்சனம் பஞ்சாதி வேதத்திலிருந்து சொல்வது பாபம் தீரும். பஞ்ச மஹா யக்ஞங்கள் செய்தாலும் நம் பாபங்கள் நீங்கும்

அம்ருதம் என்று சொல்லும் ஸ்ரீவைகுண்டத்தில் ஈஸ்வரனாய் இருக்கிறார். ஸ்லோகம் தொடர்கிறது. அன்னத்தால் மறைக்கப்படவில்லை. அன்னம் இல்லாமல் ப்ரஹ்மா இருக்க மாட்டார். மழை இருந்தால் தான் அன்னமே வளரும். நாம் அன்னத்தை அளவோடு சாப்பிடனும். இல்லை என்றால் அன்னம் நம்மை சாப்பிட்டு விடும். சாத்வீகமான உணவை வாழ்வதற்காக சாப்பிடனும். அன்னத்தை நிறைய விளைவிக்கனும். அன்னத்தை பரிசேஷனம் பண்ணி எல்லோருக்கும் கொடுக்கனும். ஏதாவா நஸ்ய மஹிமா | எல்லா காலத்திலும் எல்லா இடங்களிலும் எல்லா பொருட்களிலும் (ஸர்வதேச ஸர்வகால ஸர்வவஸ்து) வியாபிக்கிறார். பூத பவ்ய பவது ப்ரபு: முக்காலத்திலும் இருக்கும் அனைவருக்கும் அவரே ப்ரபு. ப்ரஹ்ம ஸ்வரூபம் என்றாலே விபு நீக்கமற எங்கும் நிறைந்திருக்கார் . ஏதாவா நஸ்ய மஹிமா ! அனைத்திலும் இவர் மஹிமை. அனந்தம் -என்று எப்படி அடையாளம் சொல்வது. எதுவுமே தெரியாததிலிருந்து தெரியாததை கழித்தால் எப்படி தெரிந்த ஒரு எண்ணிக்கை வரும்? இந்த கணக்குக்கே இப்படி என்றால் அவர் பரப்ருஹ்மம் எவ்வளவு பெரியவராக அளவிட முடியாதபடி இருப்பார்? எல்லாவற்றைக் காட்டிலும் ஜ்யாயா புருஷ: உயர்ந்தவர். தனக்கு ஒக்கார் மிக்கார் இல்லாத மாமாயா என ஒப்பில்லாத அப்பனாய் உப்பிலி அப்பனாய் கும்பகோணம் அருகே தரிசனம் கொடுக்கிறார். ஸர்வக்ஞன். அவர் பெருமை என எது உள்ளதோ அதை தெரிந்து கொள்பவனே ஞானி. இல்லாததை யாரும் அறிய முடியாது. ஆகாயதாமரை குதிரை கொம்பு போன்ற இல்லாததை ஒருவன் அறிந்தேன் என்றால் அவன் மூடன். தெரியாததை தெரியாது என்று சொன்னால் தான் ஞானி பெருமான் வைபவத்திற்கு எல்லை உண்டா? அவர் ஸர்வக்ஞத்திற்கு எந்த குறையும் இல்லை

பாதோஸ்ய விஸ்வா பதா நி | திருப்பாதம் என்றால் முதல் 2 வரி அர்த்தம். பின் கால்கள் பிரிந்து 2 பாதம் ஆகிறது. இது போல் 3 மடங்கு பெரிதாக இருப்பது வைகுண்டம். 1/4 பங்கு பூமி என்றால் 3/4 பங்கு வைகுண்டம். அமிர்த – ம்ருதம் மரணம் இல்லை. எது மரணத்திற்கு நேர் எதிரோ அதுவே அ மிர்தம் . இச்சுவை தவிர யான் போய் அச்சுவை பெரிதும் வேண்டேன் என தொண்டரடி பொடி ஆழ்வார் கூறியது போல். கனி கட்டி கரும்பு தேன் அமுதம் எல்லாம் பரப்ருஹ்மேதான். அயுத அம்சே. 1000 ல் ஒரு மடங்கு. அதை 1000 ஆக பிரித்தால் அதி ல்ஒருமடங்கு . அதில் ஒரு பங்கு விஸ்வசக்தி முழுவதும் . விஸ்வத்தையே ஒரு மயிர் கல்லால் நான் தாங்குகிறேன் அர்ஜுனா என்கிறார். அங்கு வைகுண்டம் போனவன் திரும்பி வருவதில்லை.

வாஸூ தேவனான எம்பெருமான் 3 ஆக தன்னை ஆக்கிக் கொள்கிறார். சங்கர்ஷண ப்ரத்யும்னன் அநிருத்தன 3 ஆக பிரிந்து ஒவ்வொருவரும் முறையே ஞான பல , ஐஸ்வர்ய வீர்ய, சக்தி தேஜஸ் என்ற கல்யாண குணங்கள் கொண்டவர். பின் அநிருத்த நாராயணன் பிறக்கிறான். அநிருத்தன் இடத்திலிருந்து எல்லா அவதாரங்களும் உண்டாகிறது . ஹிரண்ய கசிபுவை அழிக்க நரசிம்மனாக ஹிரண்யாக்ஷகளை அழிக்க வராஹ அவதாரம் . இங்கனம் 4 பக்கங்களிலும் எல்லா இடத்திலும் பரவின. ராமராய் த்ரேதாயுகத்தில் அவதரித்தவர் அர்ச்சாமூர்த்தி ராம விக்ரஹமாய் கலியுகத்தில் அவதரித்தார். கண்ணனாய் த்வாபரயுகத்தில் அவதரித்தவர். கண்ணன் விக்ரஹமாய் அர்ச்சாவதாரத்தில் அவதரிக்கிறார். ஸாது பரித்ராணம். துஷ்ட விநாசனம். சாப்பிடக்கூடியது. சாப்பிட முடியாத பதார்த்தங்கள். எல்லாவற்றையும் ரக்ஷிக்க தான் பிறந்தார். பெரிய அண்ட கடாகம் படைக்கிறார். ஒவ்வொன்றுக்குள்ளும் நான்முக ப்ரஹ்மாவை படைக்கிறார். ப்ரஹ்மாவை படைக்கும் பூவில் நான்முகனை படைத்த தேவன் ஒன்று சமஷ்டி சிருஷ்டி வரை பரப்ருஹ்மம் படைக்கிறார். . அதாவது மூலப்ரக்ருதி தொடங்கி அகங்காரம் உருவாகி, கர் மேந்திரியங்கள் , ஞானேந்திரியங்கள் அண்டம் வரை உருவாக்குதல். அதன் பின் வ்யக்தி சிருஷ்டி நான்முக ப்ரஹ்மா படைக்கிறார். விராம அண்டம் பிறந்து அதற்குள் சதுர்முக ப்ரஹ்மா இருக்கிறார். 4 புறமும் வியாபிக்க ஆரம்பிக்கிறார்.

பஹுஸ்யாம் ப்ரஜாயேனை நான் பல படிகளாக ஆகக் கட வேன் என பரப்ருஹ்மம் சங்கல்பிக்கிறார். ப்ரஹ்மம் தான் தன் திருமேனியை மாறுதலுக்கு உட்படுத்துகிறார். நான் முக ப்ரஹ்மாவை படைத்து இனிநீ பார்த்துக் கொள் . வேதத்திற்கும் ஒரு சம்பந்தமான எது அறிவது எனில் வேத புத்தகம், சப்தம், ஆனுகுலி மட்டும் மாறாது. உச்சாரணம் அணு உச்சாரணம் பிரஹ்மாவிற்கு சொல்லிக் கொடுக்கிறார். ஞானம் சக்தி 4 புறமும் பரவி நான் எல்லாமுமாக ஆகப்போகிறேன் என ப் ரஹ்மம் சங்கல்பம் எடுத்துக் கொள்கிறார். அதற்கிடையில் சதுர்முக ப்ரஹ்மாவை படைக்கிறார். எல்லா நித்யர்களும் சேர்ந்து ஒரு யாகம் பாண்ணுவார்கள். ஹோம குண்டம், நெய், அவிஸ் இருக்காது. நெருப்பு சமித்து உண்டு. 4 முக ப்ரஹ்மாவையே அவிஸ்ஸாக வைத்து ஹோமம் செய்கிறார். யூபஸ்தம்பம் – ப்ரக்ருதி இதை வைத்து ஜகத்தை படைத்தாகனும். அந்த ப்ரக்ருதியிலே நான்முக ப்ரஹ்மாவை கட்டி வைத்தார்கள். அவரை வைத்துக் கொண்ட மேற்கொண்டு சிருஷ்டி ஆரம்பிக்கும். அந்த நித்யசூரிகள் யக்ஞம் பண்ண ஆரம்பித்தார்கள். இந்த யாகத்திற்கு நெய் – வசந்தருது. கிரீஷ்ம ருது – இக்மம் சமித்து ஆயிற்று. சரத் ஹவி: ப்ரோமாசமாய் கொண்டார்கள். அதோடு பரிதி என 7 பரிதிகள் – முன்னாடி ஹோமம், நெய் சேர்க்கும் பாத்திரம், நாம் பார்ப்பது கிழக்கு பக்கத்தில், அதற்கு முன் அக்னி ஹோமகுண்டம் வைக்கனும். ஆக இவனுக்கு புரியாது. ஆஸப்யாம் என்றால் ஆசமனம் பாராயணம் பண்ணனும் 3 பக்கம் முன்னாடி அக்னி குண்டம் இருக்கு. தெற்கு மேற்கு வடக்கு நெய் பாத்திரம் சூரியன் எப்போதும் கிழக்கு சூரியன் ஒன்று சேர்த்தால் சப்த 7 பகுதிகள். அதற்குரிய சமித்து சேர்த்து கொடுத்தால் பஞ்சபூதங்கள் – 5. பஞ்ச தன்மாத்திரம் – கண்காது மூக்கு நாக்கு போன்ற பஞ்சகர்மேந்திரியங்கள் பஞ்ச ஞானேந்திரியங்கள மனஸ் – 1 இதையே சமித்து. அப்போதுதான் சிருஷ்டியே வரும்.

அந்த 7 சக்திக்கு இந்த 3 பக்கம். அங்கு நித்ய ஸூரிகள் எல்லாம் யக்ஞம் பண்ணுவார்கள். 1000 யுக் கோடி ஸஹஸ்ராணி 1000 தடவை ப்ரஹ்மாவும் ஜீவாத்மா. பிறவி எடுத்திருக்கிறார். ந கிம் அவிஸ் சொல்லப்பட்டதே உலகத்தில் தலைவர். இனி முதல் பிறந்தவராவர். பசூ குஸ் தாகுச்சக்ரே வாயவ்யாந்! தேவர்கள் நித்ய ஸூரிகள் ரிஷிகள் முக்தாத்மாக்கள் நமக்கு முக்தி அடைந்து வைகுண்டம் போனால் நமக்கும் படைக்கும் சக்தி உள்ளதாம். அங்கு போனால் உறவே நினைவிற்கு வராது. ஒருவேளை என் தாத்தா யாரோ ஒருத்தர் மோக்ஷம் போகலை என்றால் நான் அவரை பார்க்கனும் என்று ஆசைப்பட்டாலும் சங்கல்ப சக்தியாலே பார்க்க முடியும்.

நித்ய ஸூரிக்கும் முக்தாத்மாவிற்கும் படைக்கும் சக்தி உள்ளது. வியாசர் கூறுகிறார் சக்தி உண்டு. ஜகத் வ்யாபார வஜ்யம். ஸதா பஸ்யந்தி ஸூர: என ப்ரஹ்மத்தையே அனுபவிப்பர். தேவதேவர்கள் யக்ஞம் பண்ணுகிறார்கள். இப்படி எல்லாம் ஆக்ருதியாய் ஒன்றுக்கொன்று யக்ஞம் நடக்கிறது. தயிரும் நெய்யும் சேர்ந்து உருவாகிறது. சிருஷ்டிக்கு வேண்டிய வீர்ய சக்தி உருவாகிறது. ப்ரக்ருதி பரமாத்மா அதற்கு வேண்டிய வீர்யசக்தி உருவாகும். விலங்கினங்கள் காட்டில் இருப்பது நாட்டில் இருப்பது என பகுதிவாரியாய் படைக்கிறார். அசைவ உணவு கூடாது . வரும்போது விமானநிலையத்தில் இங்கு புகைபிடிக்கலாம் என்ற ஒரு இடத்தை ஒதுக்கியிருக்கிறார்கள். மாவால் செய்யப்பட்ட பசுதான் ஆகிருதிக்கு உகந்தது. ஆரண்ய க்ரமம். காட்டு நாட்டு மக்களை படைத்தல். ரிக், சாமவேதம் பிறந்தது. காயத்ரி முதலான மந்திரங்கள் பிறந்தது. குதிரைகள் படைக்கப்பட்டன. ஏகேச உபாயாத: ஒரு பக்கம் மட்டும் பல் இருப்பது – பசு. 2 பக்கமும் பல் இருப்பது கழுதை இதன் கழுத்து அசைபோடுவதே வித்யாசமாய் தெரியும். பசுமாடு கோமாதா இதில் வெண்ணெய், நெய் பகவான் பூஜைக்கு உகந்தது. அந்த பசுமாட்டிற்கு ஆராதனைக்கு வேண்டிய பொருட்கள் பிறந்தன. மனிதர்களை ஒரே மாதிரி படைத்தல்.

ப்ரஹ்மத்தின் முகத்திலிருந்து ப்ராமணர் தோன்றினார். அவரின் தோள்களில் இருந்து ஷத்ரியர். அவர் தொடையிலிருந்து வைச்யன் பிறக்கிறான். காலால் நடந்து நடந்து போவது 4வது வர்ணத்தவர்கள். , முகத்தில் பிறந்த பிராமணர்கள் வேதம் ஓதுவார்கள். தோளில் பிறந்த ஷத்ரியர்கள் வில் வித்தை புரியும் வலிமை கொண்டவர்கள். வைசியன் தொடையில் வலிமை அமர்ந்து அமர்ந்து வியாபாரம் செய்வான். ஓடி ஓடி காலால் நடந்து உழைப்பது 4 வது வர்ணத்தவர்கள். சந்திரமா மனசோ ஜாயத: சந்திரன் போன்ற குளிர்ச்சி உடைய மனசை படைக்கிறார். நாள் முழுக்க வெப்பம் இருந்தாலும் சந்திரனை பார்த்தால் குளிர்ந்து விடும். ப்ரஹ்மாவின் மனதிலிருந்தே சந்திரன் பிறந்தான். பௌர்ணமி அன்று கடல் ஆர்ப்பரிக்கும். மனசும் பௌர்ணமி என்று ஆர்ப்பரிக்கும். சூரியன் பிறந்தார் என்றால் வெளிச்சம். வெளிச்சம் என்றால் ஞானம்

எம்பெருமான் கண்ணிலிருந்து சூரியன் பிறந்தார். பெருமான் வாயிலிருந்து இந்திரனும் அக்னியும் பிறந்தார்கள். ப்ராணத்திலிருந்து விமான, உதான அபான போன்ற 5 வாயுக்கள் பிறந்தன. நாப்பியா ஆஸீ தந்தரிக்ஷம் சீர்ஷ்ணோத்தெள ஸமவர்த்தத ! தலையிலிருந்து ஸ்வர்க்கம் பிறந்தது. பக்த்யாமி பூமி: பத்ப்யாம் பூமிர்திச : ச்ரோத்ராத் ! காதுகளிலிருந்து திக்கு கேட்கும். ததாலோகாகும் அகல் பயந் !! இப்படி உலகம் படைத்ததின் மேலே ஏழுலோகம் கீழே ஏழு லோகம், அவர் அவர்களை அந்தந்த லோகத்திற்கு அனுப்பினர். வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ! இந்த ராமலக்ஷ்மணரை கூட்டிக் கொண்டு போக விஸ்வாமித்திரர் வரும் போது தசரதன் அனுப்ப மாட்டேன் என்கிறார். நீ பொய் சத்யம் போட்டு இருக்கிறாய். நீ நன்றாக இரு என விஷமத்துடன் கூறினார் விசுவாமித்திரர். பின் வசிஷ்டர் தசரதனை தேற்றி சீதா கல்யாணம் பண்ணி வைக்க உன் பிள்ளை போகனும். உன் பிள்ளையின் நலனுக்குத்தான் கூட்டிக் கொண்டு போகிறார் என சமாதானம் சொன்னபின் சம்மதித்தார். அஹம் வேத்மி மஹாத்மானம் ஸத்ய பராக்ரம : இதையே வால்மீகி ராமாயணத்தில் வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே | வேத: ப் ராசேதஸா தாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா!! அந்த வேதமே ராமாயணமாய் வடிவெடுத்தது. ஸத்ய பராக்ரம: மஹா பெருமை வாய்ந்தவர். விப்ரலோகம்

இதுவோ அதுவோ சந்தேகித்தால் அது ஐயம். தப்பாக முடிவு பண்ணினால் திரிபு. இந்த ஐயம் திரிபு இரண்டும் வேதத்திற்கு கிடையாது. ஒரு புருஷன் வாக்கில் வேதம் வரவில்லை. வேதம் அபௌருஷ்யம். அநாதி. சூர்ய மண்டல மத்யவர்த்தி நாராயணன். ஒரு கோடி சூரியனை எரித்தாலும் ப்ரஹ்மம் முன் அது இருட்டி விடும். தமஸ: பரஸ்தாத் தமஸீ சொல்லப்படும் மூல ப்ரக்ரு தியை தாண்டி நிற்கும். . வேதத்தில் எளிமை சொல்லப்படுகிறது. இந்த ப்ரஹ்மத்தை கையால் காலால் தெரிந்து கொள்ள முடியாது. ஸூத்தமன ஸால் தான் தெரிந்து கொள்ள முடியும். ஆதித்யவர்ணம் தமஸஸ்து பாரே! ராவணன் மாண்டபின் மந்தோதரி ராமனைப் பார்த்து சொல்கிறாள். தமஸ்ஸை காட்டிலும் உயர்ந்தவராய் சங்கு சக்ரம் பிடித்துக் கொண்டு இருக்கிறார் என்றாள். மொத்தத்தையும் தாங்குகிறார். தாண்டுகிறார். எல்லாவற்றிற்கும் பெயர் கொடுக்கிறார். அந்த பொருள் அவர் உச்சரித்தால் தான் அந்த பொருள் அந்த பொருளாய் விளங்கும். வேதத்திலிருந்து வந்தது வைதீக சொல். நாமா கிருத்வா அபவதந் யதாஸ்தே!! எல்லாவற்றையும் படைத்து அதன் உள் புகுந்தார். நான். ப்ரஹ்மத்தை தெரிந்தேன் என்றால் ஐயத்திற்கும் திரிவு ற்கும் வாய்ப்பே இருக்காது. இது இது இந்த சொல் இந்தப் பொருளை குறிக்கும். அப்படி இல்லையென்றால் சிறகு ஓடிந்த பறவை போல் கிடந்து இருப்போம். கட்கண்ணால் காண முடியாததை ஞானக்கண்ணால் தான் பார்க்க முடியும். மொத்தம் 8 திக்கு கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு, வடகிழக்கு தென்கிழக்கு வடமேற்கு தென்மேற்கு .8 திக்பாலர்களும் தியானிப்பார்கள் எல்லாவற்றையும் படைத்து படைத்தற்குள் தானே புகுகிறார். இவர் அருமை பெருமை ஸர்வவியாபகர். ஸர்வ அந்தராத்மா .தமேவம் வித்வா – இதை அறிபவன் இந்த பிறவியில் கடைசியிலே முக்தி பெற்று விடுவான். ஞானம் கலந்த பக்தியை தவிர். ஞானம் அன்பு கலந்தால் உபாசனம். ஆகிவிடும். யக்கம் தானம் பட்டினி கிடந்து போகலாமா என்றால் ஒன்றுமே முடியாது .

வேதத்தை அதன் அங்கமாய் உப அங்கமாய் சொல்லும் பெருமை வாய்ந்தது இந்த புருஷ ஸூக்தம். இந்த புருஷஸூக்தத்தை கூறியவுடன் கை மேல் பலன் கிட்டும். ஸப்தத்தின் படி பாரத்தோமானால் நாராயணன் பெருமை இனிமை. பிராயச்சித்த மாய் சொன்னால் தீமை விலகுகிறது. ஸூக்தம் – புருஷ ஸூக்தம் நன்றாக சொல்லப்பட்டு ஸத்தாய் நன்றாக ஸ்தோத்திரம் பண்ணப்பட்டது. உண்மையை உள்ளது உள்ளபடியே சொல்லும் ஸ்தோத்திரம். பெருமானுக்கு , இல்லாதது என்று ஒன்று இல்லை. அவருக்கு இருப்பதை சொல்ல நமக்கு நாக்கு பத்தாது. வேதத்தின் சாரமே நன்கு சொல்லப்பட்டதால் புருஷஸூக்தத்தை சொன்னால் பெருமாள் கொடுத்துக் கொண்டே இருப்பார்.

பு – புரம் – பட்டணம் ஆத்மா பரமாத்மா ஹ்ருதயம் என புரத்தில் படுத்துக் கொண்டு இருக்கிற படியால் புருஷன். பெருமாள் தான் உள்ளிருந்து மனசாட்சி போல் பேசுகிறார். ஜீவாத்மா வழிகாட்ட உள்ளேயே உட்கார்ந்து இருக்கிறார். உயிர்பிரியும் தருவாயில் மோக்ஷம்கிட்ட 101 வது நாடியான ஸீ ஷூம்னா நாடி வழியாக போகனும். அந்த இருட்டறைக்குள் பெருமான் ப்ரகாசிக்க அந்த ஒளியில் அந்த 101 வது நாடி கண்ணிற்கு தெரிந்து அதன் மூலம் போவோம். ஆக அந்த திருமேனி வெளிச்சத்தில் 101 நாடி தெரிந்து போவோம். அத்ய திஷ்டத் தசாங்குலம்!! எம்பெருமான் ஸர்வ வியாபி எல்லா இடத்திலும் எங்கும் வியாபித்து இருக்கிறார் என என்னும் போதே நகர்வது செல்வது இல்லை என ஆயிற்று . ஆயிரம் ஆயிரம் கண்கள் ஆயிரம் ஆயிரம் சதுர்புஜம் எண்ணிறந்த தோள்கள். இதுதான் விஸ்வரூபத்தின் போது 11வது அத்யாயத்தில் தத்ரை கஸ்தம் ஜகத்ருத்ஸ்தம் …..என்ற ஸ்லோகப்படி ஜகத் அனைத்தும் ஒரே இடத்தில் இருப்பதைக் கண்டான். 1000 தலை என்றால் அதற்கு தகுந்த திருமேனி . கண்காது மூக்கு நாக்கு எல்லாம் ஞானத்திற்கு துவாரம். நினைவிற்கு வேண்டிய ஊற்றுவாய் ஹ்ருதயத்திற்குள் இருக்கிறது.

அறிவு என்றாலே ப்ரத்யக்ஷ ஞானம் தானே ஞானத்திற்கு வேண்டிய இருதயத்தை சொல்லி ஸர்வக்ஞன். ஸர்வவிது. ஸர்வஸக்தி படைத்தவன். எதைப் பற்றியும் விஸ்தாரமாகவும் ஆழமாகவும் தெரிந்து வைத்திருப்பவர். ஆயிரம் ஆயிரம் திருவடிகள் கொண்டவர் என்றால் கர்மேந்திரியங்களால் காலால் நடக்கனும். கையால் தூக்கனும். பாணி பாத வாயு உபஸ்தம். இது எல்லாம் கர்மம். அதன் செயல் ஸர்வசக்தி உள்ளவர்.எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருப்பது வ்யாபகம். எது நிறையப்பட்டு இருக்கிறதோ அது வ்யாப்யம் என்பதை லௌகீக திருஷ்டாந்தத்துடன் அழகாய் விளக்கினார். விஷ்ணு என்றாலே எல்லா இடத்திலும் வியாபித்தவர். அத்ய திஷ்டத் தசாங்குலம் – 10 அங்குலம் தாண்டி நிற்கிறார் என்றால் எங்கும் வியாபித்து ஸர்வகதன் விஷ்ணு: அவர் இருந்தால் தான் ஒரு வஸ்து சத்தை பெறுகிறது. அதற்கு சத்பாவம் கிட்டும். ஒரு ஜீவனுக்குள் அனுப்ரவேசம் (உட்புகுந்து) பண்ணுகிறார் என்றால் அந்த பொருள் சத்தை பெற்றதாய் அர்த்தம். ப்ரஹ்மம் உள்ளே இருந்தால் தான் சத்பாவமே. அதீத ஞானம் அதீத சக்தி உடையவர். ரொம்ப பெரியவர் . நம் சக்திக்கு அப்பாற்பட்டவர். புருஷம் ஏவே தகும் ஸர்வம்… யத்பூதம் யச்ச பவ்யம் | . முதலில் சொன்னது ஸர்வதேச வ்யாப்தி அடுத்து இப்போது ஸர்வகால வ்யாப்தி. எப்போதும் எங்கும் நிறைந்திருக்கும் பூதம் இறந்த காலத்தில் பவ்யம் வரும் காலத்தில் அந்த புருஷன் நாராயண பரமாத்மாவே இதம் ஸர்வம் எல்லா வற்றிலும் அவர் தான் காரணமாய் வியாபித்து இருக்கிறார். காரணப்பெயர் பொருளைக் கொண்டே காரிய பொருளை பார்க்கலாம். இதற்கு சான்றாய் நூல் வேஷ்டி தங்க செயின். போன்றவை. இது எல்லாவற்றிலும் ப்ரஹ்மம் காரணமாய் இருக்க அனைத்தும் அவர் காரியமாய் இருக்கிறது. யத்பூதம் யச்ச பவ்யம். வருங்காலம் பூதகாலம் எனக் கூறும் போதே நிகழ்காலம் – வர்த்தமான காலம் என்பது தானே வருகிறது. எல்லா காலத்திலும் வியாபித்து இருக்கிறார்.

எந்த முயற்சி எடுத்தாலும் நாம் ப்ரஹ்மத்தை தெரிந்து கொள்ள முடியாது அவரே தன்னை கருணனையுடன் காட்டினால் ஒழிய தெரிந்து கொள்ள முடியாது. அவருடைய ரூபம் அவருக்காக அல்ல. நமக்காக . சந்யாஸ ஸ்வாமிக்கு பூரண கும்பம் கொடுப்போம். இவை அனைத்தையும் விட்டு அவர் திருவடிகளை பற்றுவதே ஒரே வழி இந்த உண்மை ஞானத்தை யார் உணர்கிறாரோ அவர் ஸ்ரீவைகுண்டத்தை அடைந்து விடுகிறார். முதலில் தண்ணீரை படைத்து அதிலேயே படுத்துக் கொள்கிறார் பெரிய நீர் படைத்து அதை உடைத்து பாற்கடல் கடைந்து கடலை அடைத்து அணைத்து விடுகிறார். உடைத்தது தனுஷ்கோடி தன் வில்லின் ஒரு முறையால் மூடி போக்குவரத்திற்கு பயன்படாதபடி பண்ணி விடுகிறார். அவர் எல்லாவற்றையும் தரித்து விட்டு பின் வியாபிக்கிறார். படைக்கப்பட்ட வஸ்துக்கள் சேஷன். யாருக்கு அடிமைப் படனும். உள்ளும் புறமும் நிறைந்திருக்க படியால் அவர் தான் எனக்கு சேக்ஷி நான் உனக்கு பழவடியேன். படைத்து வியாபித்து அனைத்தையும் தாங்குகிறார். மோக்ஷம் போக வழியை மீண்டும் ஒரு முறை சொல்லிற்று எந்த பொருளை உற்பத்தி பண்ணினாலும் உற்பத்தி பண்ணியவர் கூடவே வந்தால் கஷ்டம். ஆனால் பகவான் எல்லாவற்றிலும் உறைகிறார். நமக்குள்ளேயும் வியாபிக்கிறார்.

அஜாயமாநோ பஹீதா விஜாயதே பிறப்பே இல்லாதவர் பல பிறவிகள் எடுக்கிறார். நம்மைப் போல் கர்மத்தால் பிறவி எடுப்பதில்லை. அவர் தன் இச்சையால் சங்கல்பத்தால் க்ருபையால் கருணையால் பிறவி எடுக்கிறார். வானவர் போகம் வானவர் நாடு ஆதலால் கொண்டாடுகிறோம். ஆதித்ய சூரியனாய் ப்ரகாசிக்கிறார். நம்முன்னால் அமர்ந்து ஹிதத்தை சொல்லிக் கொண்டு இருக்கிறார். நித்யசூரிகளுக்கு புரோகிதர். அறிவியலில் நீருபித்தால் நம்புவார்கள். ஆன்மீகத்தில் நம்பிக்கை அடிப்படையில் நீருபிப்போம். யோ தேவா நாம புரோஹித;! அப்படி ப்ரகாசிப்பவர் ப்ருஹ்ம ஸ்வருபமாய் இருக்கிறார். அவரே படைத்து காத்து வியாபிக்கும் புருஷோத்தமன். உண்மை நிலை புரிந்த மனிதருக்கு ப்ரஹ்மாதி தேவர்கள் வசப்படுவார்கள், அவர் ஸ்ரிய பதி . லகஷ்மிநாதன் என்பதே இன்றியமையாத அடையாளம் ஸ்வரூப நீரூபக தர்மமாய் நிலை நிற்கிறார். ஹ்ரீச்ச தே லகஷ்மீச்ச பதந்யெ ள! ஸ்ரீ தேவியும் பூதேவியுமாய் இரண்டு பத்தினிகள். ஸ்ரீதேவி கருணையே உருவானவள். பூ மாதேவி பொறுமையின் சிகரமாய் இருப்பவள். இவர்களுடன் கறுத்த மேகம் போல் பெருமாள் விளங்க மின்னல் வெட்டினார் போல் பிராட்டி. அதன் பின்னால் பளிச்சென்று ஒளிரும் திருமேனி. பகலும் இரவும் போல் இருபுறமும் இருக்கிறார்கள். கைங்கர்யத்தை கொடுப்பார். அடியார்க்கு வேண்டியதை கொடுப்பார். உத்தர அனுவாகம் புருஷ ஸூக்தம் நிறைவுற்றது

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் தனியன்களும் வாழித் திருநாமங்களும்–

September 11, 2026

வாக்ய குருபரம்பரையில் முதல் மூன்று வாக்யங்கள் வேதவாக்யங்கள். மற்றவை ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச்செய்தது ஆகும்
அஸ்மத் குருப்யோ நம:
-எனக்கு பஞ்ச ஸம்ஸ்காரங்களைச் செய்து வைஷ்ணவனாக்கிய எனது ஆசார்யனை வணங்குகிறேன்
அஸ்மத் பரமகுருப்யோ நம:-எனது ஆச்சார்யனின் ஆசார்யனையும் அவர் சம காலத்து ஆச்சார்யர்களையும் வணங்குகிறேன்
அஸ்மத் ஸர்வ குருப்யோ நம:-எனது எல்லா ஆச்சார்யர்களையும் வணங்குகிறேன்
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயையும் திருவரங்கச் செல்வத்தையுமுடைய எம்பெருமானாரை வணங்குகிறேன்
ஸ்ரீ பராங்குச தாஸாய நம:-ஆச்சார்ய அபிமானம் ஆகிற செல்வமுடைய பெரிய நம்பியை வணங்குகிறேன்
ஸ்ரீமத் யாமுந முநயே நம:-வேதாந்த சித்தாந்தமாகிற செல்வமுடைய ஆளவந்தாரை வணங்குகிறேன்
ஸ்ரீ ராமமிஸ்ராய நம:-ஆச்சார்ய கைங்கர்யம் ஆகிற செல்வரான மணக்கால் நம்பியை வணங்குகிறேன்
ஸ்ரீ புண்டரீகாக்ஷாய நம:-ஆச்சார்ய அனுக்ரஹம் ஆகிற செல்வமுடைய உய்யக்கொண்டாரை வணங்குகிறேன்
ஸ்ரீமந் நாதமுநயே நம:ஸ்ரீவைஷ்ணவ குலபதியும், ப்ரபந்ந குலத்துக்கு முதல்வரும், பரமாச்சார்யரான நம்மாழ்வாரிடம் அருளிச் செயல் செல்வம் பெற்றவரான ஸ்ரீமந் நாதமுநிகளை வணங்குகிறேன்
ஸ்ரீமதே சடகோபாய நம:-மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயை உடையவரான நம்மாழ்வாரை வணங்குகிறேன்
ஸ்ரீமதே விஷ்வக்ஸேநாய நம:-பெரிய பிராட்டியாரிடம் ரஹஸ்யத்ரய உபதேசம் பெற்ற மிக்க செல்வரான சேனை முதலியாரை(முதல்வர்) வணங்குகிறேன்
ஸ்ரீயை நம:-தேவதேவ திவ்ய மஹிஷியாய் எம்பெருமானுக்கு வல்லபையாய் புருஷகாரம் மிக்க செல்வமுடையவளை வணங்குகிறேன்
ஸ்ரீதராய நம:-திருவுக்கும் திருவாகிய செல்வனான எம்பெருமானை வணங்குகிறேன்.

ஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமி அருளிச் செய்த ஸ்லோக குருபரம்பரை ஸ்லோகம் –
அஸ்மத் தேசிகம்-அஸ்மதீய பரமாச்சார்யான் -அஸேஷாந் குரூந்:-ஸ்ரீமல் லக்ஷ்மண யோகி புங்கவ:மஹாபூர்ண :யாமுநம் முநிம்:ராமம்-பத்ம விலோசனம்: நாதம் முநிவரம் -ஸடத்வேஷிணம்: ஸேநேஸம்: ஸ்ரியம் இந்திரா ஸஹசரம்:நாராயணம்:ஸம்ஸ்ரயே:

அஸ்மத் தேசிகம் : நம் ஆசார்யனையும்
அஸ்மதீய பரமாச்சார்யான் : ஆச்சார்யனுக்கும் ஆச்சார்யரான பரமாச்சார்யர்களையும்
அஸேஷாந் குரூந்:-ஸ்வாமி மணவாளமாமுனிகள் வரை உள்ள மற்றுமுள்ள எல்லா ஆச்சார்யர்களையும்
ஸ்ரீமல் லக்ஷ்மண யோகி புங்கவ:-யதிராஜரான எம்பெருமானாரையும்
மஹாபூர்ண : பெரிய நம்பியையும்
யாமுநம் முநிம்: ஸ்ரீ ஆளவந்தாரையும்
ராமம் : மணக்கால்நம்பியையும்
பத்ம விலோசனம்: உய்யக் கொண்டாரையும்
நாதம் முநிவரம் : ஸ்ரீமந் நாதமுனிகளையும்
ஸடத்வேஷிணம்: நம்மாழ்வாரையும்
ஸேநேஸம்: சேனைமுதலியாரையும்
ஸ்ரியம் இந்திராஸஹசரம்: பெரிய பிராட்டியையும், திருமகள் கேள்வனான
நாராயணம்: நாராயணனையும்
ஸம்ஸ்ரயே: ஆஸ்ரயிக்கிறேன்(தஞ்சமாகப் பற்றுகிறேன்)

ஜ்யேஷ்டாமாஸே த்வநூராதே ஜாதம் நாதமுநிம் பஜே|
ய: ஸ்ரீஸடாரே: ஸ்ருதவாந் ப்ரபந்த மகிலம் குரோ:-
-ஆனி அனுஷத்தில் அவதரித்தவராய், ஆசார்யரான நம்மாழ்வாரிடமிருந்து எல்லா திவ்யப்ரபந்தங்களையும் கேட்டவரான நாதாமுனிகளிடம் பக்தி செய்கிறேன்.
ஆசாரியர்களில் முதல்வரான ஸ்ரீமந்நாதமுனிகள் ஸேனைமுதலியாருடைய முக்கியமான படைத்தலைவரான கஜாநநர் என்னும் யானை முகமுடைய நித்யஸுரியினுடைய அம்ஸமாய், சோழ தேசத்தில் உள்ள வீரநாராயணபுரம் என்னும் காட்டுமன்னார்கோவிலில் கிபி 823 ஆம் ஆண்டு ஆனி மாதம் 7ஆம் தேதி புதன்கிழமை பௌர்ணமி திதி அநுராதா நக்ஷத்ரத்தில் அவதரித்தார். ஸ்ரீரங்கநாதன் என்பது அவர் திருநாமம். அவர் யோகத்திலே வல்லவராய் இருந்தபடியால் முனி என்கிற சப்தம் சேர்ந்து ஸ்ரீரங்கநாதமுனி என்று வழங்கப்பட்டார்.
இவருடைய திருவடிகளில் ஆஸ்ரயித்த சிஷ்யர்கள் எண்மர்.-உய்யக்கொண்டார்,-குருகைக்காவலப்பன்,நம்பி கருணாகர தாஸர், ஏறுதிருவுடையார், திருக்கண்ணமங்கையாண்டான், வானமாமலைத்தேவியாண்டான்,உருப்பட்டூர் ஆச்சான்பிள்ளை மற்றும்சோகத்தூர் ஆழ்வான் ஆகியோர் ஆவர்.

ஒருநாள் சோழராஜன் ஸபரிவாரனாய் வேட்டையாட வந்து திரும்பிப்போகையில், இவருடைய பெண்பிள்ளைகள் வந்து “நம் அகத்திலே ஒரு குரங்கும் இரண்டு வில்லிகளும் ஒரு பெண்பிள்ளையுமாக வந்து நாதமுனிகள் எங்கே என்று தேடிப்போனார்கள்” என்று தெரிவிக்க, அது கேட்ட நாதமுனிகள் பெருமாளும், பிராட்டியும், இளையபெருமாளும் சிறியதிருவடியுமாக இந்நால்வர் வந்திருக்கக் கூடும் என்று எண்ணி, அவர்களை பின் தொடர்ந்து சென்ற நாதாமுனிகள் எதிரே வந்தவர்களிடம் இப்படி யாரையேனும் பார்த்தீர்களா என்று கேட்டுக்கொண்டே கங்கைகொண்டசோழபுரத்திற்கு முன்பு அமைந்துள்ள செம்போடை என்னும் சொர்க்கப்பள்ளம் என்ற சிற்றூர் வரை சென்று அங்கு இருந்தவர்களிடம் விசாரிக்க, அவர்கள் நாங்கள் பார்க்கவில்லை என்று தெரிவித்தார்கள். நாதமுனிகளும் ஏங்கி விழுந்து மோஹித்து அங்கேயே திருநாடு அலங்கரித்தார். இதுவே நாதமுனிகளின் திருவரசு அமைந்துள்ள இடம் ஆகும்.

ஆனிதனில் அனுட்டத்தில் அவதரித்தான் வாழியே
ஆளவந்தாருக்கு உபதேசம் அருளிவைத்தான் வாழியே
பானுதெற்கிற் கண்டவன் சொல் பல உரைத்தோன் வாழியே
பராங்குசனார் சொற்பிரபந்தம் பரிந்து கற்றான் வாழியே
கானமுறத்தாளத்திற் கண்டு இசைத்தான் வாழியே
கருணையினால் உபதேசக் கதியளித்தான் வாழியே
நானிலத்திற் குருவரையை நாட்டினான் வாழியே
நலந்திகழ் நாதமுனி நற்பதங்கள் வாழியே

புண்டரீகாக்ஷர் என்னும் திருநாமமுடையவருமான ஸ்ரீ உய்யக்கொண்டாரின் திருநக்ஷத்ரம்.-சித்திரை கார்த்திகை 

மேஷமாஸே ஸரோஜாக்ஷம் க்ருத்திகா ஜாதமாஸ்ரயே
நாதயோகி பதாம்போஜ த்வந்த்வ ப்ரணவ மாநஸம்
நம: பங்கஜ நேத்ராய நாத ஸ்ரீபாத பங்கஜே
ந்யஸ்த ஸர்வபராயாஸ்மத் குலநாதாய தீமதே

நமஸ்யாம்யரவிந்தாக்ஷம் நாத பாவே வ்யவஸ்த்திதம்
சுத்த ஸத்வ மயம் சௌரே: அவதாரம் இவாபரம்

நாதமுனிகள் அவதரித்து 63 வருடங்கள் கழித்து பராபவ வருடத்தில் (கிபி 886) சித்திரை மாதம் கார்த்திகை நக்ஷத்ரம் அன்று ஜயத்ஸேநர் என்னும் நித்யஸுரியின் அம்சமாக திருவெள்ளறை என்னும் திவ்யதேசத்திலே பூர்வஸிக ஸ்ரீவைஷ்ணவ ப்ராஹ்மண குலத்திலே அவதரித்தார்.-மற்ற திருநாமங்கள் – புண்டரீகாக்ஷர், பத்மாக்ஷர் மற்றும் அரவிந்தாக்ஷர்.
ஆசார்யன் – ஸ்ரீமந் நாதமுனிகள்.-நாதமுனிகள் புண்டரீகாக்ஷரிடமும், நீரும் யோகத்தைப் பெற்றுப் போகிறீரா என்று வினவ, பிணங்கிடக்க மணம் புணர்வருண்டோ? என்று பதிலுரைத்தாராம்.
சிஷ்யர்கள் – மணக்கால் நம்பி, திருவல்லிக்கேணிப் பாண் பெருமாள் அரையர், சேட்டலூர் செண்டலங்கார தாஸர், ஸ்ரீ புண்டரீக தாசர், கோமடம் திருவிண்ணகர் அப்பன் மற்றும் உலகப் பெருமாள் நங்கை ஆகியோர் ஆவர். இவர் நூற்று ஐந்து திருநக்ஷத்ரங்கள் (105 வயது) எழுந்தருளியிருந்தார் என்பது பெரிய திருமுடி அடைவு என்கிற கிரந்தம் கொண்டு அறிந்து கொள்ள முடிகிறது.

வாலவெய்யோன் தனை வென்ற வடிவழகன் வாழியே
மால் மணக்கால் நம்பி தொழும் மலர்ப்பதத்தோன் வாழியே
சீலமிகு நாதமுனி சீருரைப்போன் வாழியே
சித்திரையில் கார்த்திகை நாள் சிறக்க வந்தோன் வாழியே
நாவிரண்டும் ஐயைந்தும் நமக்குரைத்தான் வாழியே
நாலெட்டின் உப்பொருளை நடத்தினான் வாழியே
மாலரங்க மணவாளர் வளமுரைப்போன் வாழியே
வையம் உய்யக்கொண்டவர் தாள் வையகத்தில் வாழியே

—————–

வைஸாக ரோஹிண்யுதிதம் கோஷ்டீ பூர்ணம் ஸமாஸ்ரயே|
சரமஸ்லோக தாத்பர்யம் யதிராஜாய யோவதத்||
ஸ்ரீ வல்லப பதாம்போஜ தீபக்த்யம்ருத ஸாகரம் |
ஸ்ரீமத் கோஷ்டீபுரீ பூர்ணம் தேஸிகேந்த்ரம் பஜாமஹே ||-
-ஸ்ரீ திருக்கோட்டியூர் நம்பிகள் தனியன் -ஸ்ரீய:பதியின் திருவடித் தாமரையில் ஞானமும் பக்தியுமாகிற அமுதங்களுக்குக் கடல் போன்றவரும், திருக்கோட்டியூர் நம்பியென்னும் பெயருடையவருமான ஆசார்ய உத்தமரை ஆஸ்ரயிக்கிறோம்.
பரமாசார்யரான ஆளவந்தார் அவதரித்தப் பதினோரு வருடங்கள் கழிந்த பின் ஸர்வஜித் வருடம், வைகாசி மாதம் ரோஹிணி நக்ஷத்ரம் காஸ்யப கோத்ரத்தில் பெரியாழ்வாருக்கு பரம ஆப்தரான செல்வநம்பியின் திருவம்சத்தில் ஸ்ரீ புண்டரீகர் என்னும் நித்யஸூரியின் அம்ஸமாய் பூர்வஸிக ஸ்ரீவைஷ்ணவ ப்ராஹ்மண குலத்திலே குருகேசர் (திருக்குருகைப்பிரான்) என்னும் திருநாமம் உடையவராய் அவதரித்தவர் ஸ்ரீ திருக்கோட்டியூர் நம்பி.நாதமுனிகளிடமிருந்து உய்யக்கொண்டார் மணக்கால்நம்பி மூலம் கிடைத்த பவிஷ்யத் ஆசார்ய விக்ரஹத்தை ஆளவந்தார் தம் சரமதஸையிலே இவரிடம் ப்ரஸாதித்து, அது வந்த வழியையும் அருளிச்செய்து, ரஹஸ்ய அர்த்தங்கள் அனைத்தையும் ஸ்ரீ ராமாநுஜருக்கு உபதேசிக்கும்படியும் நம் தரிசனத்தை அவர் திருநாமத்தாலே விளங்கவைக்கும்படியும் நியமித்துச் சென்றார்.ஸ்ரீ ராமாநுஜருக்கு திருமந்திரம் மற்றும் சரம ஸ்லோகத்தின் அர்த்தத்தை உபதேசித்தார்.-கருணைக்கடலான ஸ்ரீ ராமாநுஜருக்கு எம்பெருமானார் என்று திருநாமம் சாற்றியாருளியவர் ஸ்ரீ திருக்கோட்டியூர் நம்பி.-ஸ்வாமி திருமாலையாண்டானிடம் திருவாய்மொழிக்கு அர்த்தம் கேளுமென்று ஸ்ரீ ராமானுஜருக்கு நியமித்தார்.-ஸ்ரீ ராமாநுஜருக்கு தளிகை பண்ணி ப்ராஸாதிக்கும் படி கிடாம்பியாச்சானை நியமித்தவர் ஸ்ரீ திருக்கோட்டியூர் நம்பி.

மன்னியசீர் ஆளவந்தார் மலர்ப்பதத்தோன் வாழியே
வைகாசி ரோஹிணி நாள் வந்துதித்தோன் வாழியே
இன்னிள வஞ்சிக்கு இனிதுரைத்தான் வாழியே
எம்பெருமானார் எனும் பேர் இயம்புமவன் வாழியே
தென்னணியாம் காசிப கோத்திரத்து உதித்தான் வாழியே
திருக்குருகைப்பிரான் எனும் பேர் திகழ வந்தோன் வாழியே
முன்னர் அரும் பெரும்பூதூர் முனிக்கு உரைத்தோன் வாழியே
மொழிந்த திருக்கோட்டிநம்பி மூதுலகில் வாழியே

காசிபன் தன் கோத்திரத்தைக் கருதிவந்தோன் வாழியே
கலை அனைத்தால் முன்னவர்க்குக் கதியளித்தோன் வாழியே
மாசற மெய்ப்பொருள் எதிக்கு வழங்குமவன் வாழியே
வையகம் உன் தரிசனத்தால் வாழும் என்றான் வாழியே
ஏசறவே உகந்து எதியை எடுத்து அணைத்தான் வாழியே
எம்பெருமானார் எனும் பேர் இயம்புமவன் வாழியே
தேசுபுகழ்ச்செல்வன் மொழி தேர்ந்து உரைப்போன் வாழியே
திருக்கோட்டியூர் நம்பி சகதலத்தில் வாழியே

ஈரேழு மூன்று ஒன்றில் இதம் உரைத்தான் வாழியே
ஏற்றமாம் ஆளவந்தார் இணையடியோன் வாழியே
ஈர் எழுவருக்கும் பதம் ஈயுமவன் வாழியே
எம்பெருமானார் எனும் பேர் இயம்புமவன் வாழியே
நாலேழில் நாலாநாள் நாடி வந்தோன் வாழியே
நம் மதுரகவி நிலையை நண்ணினான் வாழியே
நாலேழுநாலெழுத்தை நன்குரைத்தான் வாழியே
நங்கள் திருக்கோட்டியூர் நம்பி நற்பதங்கள் வாழியே

அல்பகலும் ஆளவந்தார் அடிநினைவோன் வாழியே
அனவரதம் தெற்க்காழ்வார்க்கு ஆட்செய்வோன் வாழியே
வெல்பொருள் வெளியிட எதியை வெறுத்துகந்தான் வாழியே
மேதிநியோர் உய்வரென்று மெச்சினான் வாழியே
உள் மந்திரம் எதிராசர்க்கு ஒளித்து உரைத்தான் வாழியே
உந்துமதத்தெதியை உகந்தணைத்தான் வாழியே
செல்வநம்பிகுலம் தழைக்க செகத்து உதித்தான் வாழியே
திருக்கோட்டியூர் நம்பி சகதலத்தில் வாழியே

பிதாமஹஸ்யாபி பிதாமஹாய ப்ராசேதஸாதேஸபலப்ரதாய|
ஸ்ரீபாஷ்யகார உத்தம தேஸிகாய ஸ்ரீசைல பூர்ணாய நமோ நமஸ்தாத்||-ஸ்ரீ பெரிய திருமலை நம்பி ஸ்வாமிகள் தனியன்
-பிரமன்னுக்குத் தந்தையான திருவேங்கடமுடையானாலே அப்பா என்று கூப்பிடப் பெருகையாலே உலகிற்குப் பாட்டனான பிரமனுக்கும் பாட்டனாராய், ஸ்ரீபாஷ்யகாரருக்குச் சிறந்த ஆசார்யராய் அவருக்கு வால்மீகியின் வாக்காகிற ஸ்ரீராமாயணத்தின் பொருளை உபதேசித்தவரான பெரிய திருமலைநம்பிக்குப் பலகால் வணக்கம்.
ஸ்ரீமல் லக்ஷ்மண யோகீந்த்ர ஸ்ரீராமாயண தேஸிகம்
ஸ்ரீசைலபூர்ணம் வ்ருஷப ஸ்வாதி ஸஞ்ஜா தமாச்ரயே
-எம்பெருமானாருக்கு ஸ்ரீராமாயணத்தை உபதேசித்த ஆசாரியரும் வைகாசி ஸ்வாதியில் திருவவதரித்தவருமான திருமலை நம்பியை அஸ்ரயிக்கிறேன்.
வைகாசிச் சோதிநாள் வந்து உதித்தான் வாழியே
வண் திருவேங்கடமுடையான் வரபுத்திரன் வாழியே
அய்யன் ஸ்ரீ ஆளவந்தார் அடிதொழுவோன் வாழியே
அனவரதம் மலைகுனியர்க்கு அடிமை செய்வோன் வாழியே
மெய்யன் இராமாநுசாரியன் விரும்புமவன் வாழியே
மிக்க திருமலையார்க்கு எல்லாம் மேலாவான் வாழியே
செய்யதமிழ் வேதத்தின் சிறப்பு அறிந்தோன் வாழியே
திருமலைநம்பிகள் உபயதிருவடிகள் வாழியே

ஸுமுகர் என்னும் நித்யசூரியின் அம்ஸமாகச் சித்திரை ஸ்வாதியில் திருமலையில் அவதரித்தவர். எம்பெருமானாருக்கு மாதுலர்(தாய்மாமா). இவர் ஸ்வாமி எம்பெருமானாருக்குக் கீழ்த்திருப்பதியில் ஒருவருஷகாலம் ஸ்ரீராமாயணத்தைக் காலக்ஷேபம் சாதித்தார். உள்ளங்கைகொணர்ந்த நாயனார் என்னும் திருநாமாத்துடன் சைவராக மாறி காளஹஸ்தியில் வாழ்ந்து கொண்டிருந்த தமது மருமகனான கோவிந்தரை மறுபடியும் ஸ்ரீவைஷ்ணவராகத் திருத்திப்பணிகொண்டார். தமது குமாரர்கள் பிள்ளை திருமலை நம்பியையும், பிள்ளானையும் மற்றும் இருகுமாரத்திகளையும் உத்தாரகரான எம்பெருமானார் திருவடிகளில் ஆஸ்ரயிக்கச்செய்தார்.மற்றொரு திருநாமம் – ஸ்ரீசைலபூர்ணர்-திருவாராதனம் – மலைகுனியநின்ற பெருமாள்-வெண்ணைக்காடும் பிள்ளை-அமலனாதிபிரான் தனியன் பெரிய திருமலை நம்பி அருளியது.

ஸ்ரீராமமிஸ்ர பதபங்கஜ சஞ்சரீகம் ஸ்ரீயாமுநார்யவரபுத்ரமஹம் குணாட்யம்|
ஸ்ரீரங்கராஜகருணா பரிணாம தத்தம் ஸ்ரீபாஷ்யகார சரணம் வரரங்கமீடே ||-ஸ்ரீ ஆழ்வார் திருவரங்கப்பெருமாள் அரையர் ஸ்வாமிகள்
-பிங்கள வர்ஷம் வைகாசி கேட்டை –ஸங்கு கர்ணர் என்னும் நித்ய ஸூரியின் அம்ஸம்-ஸ்ரீராமமிஸ்ரராம் மணக்கால் நம்பியின் திருவடித் தாமரையில் வண்டாய் இருப்பவரும், ஸ்ரீ யாமுநாசார்யாருடைய சிறந்த புத்திரரும், குணத்தில் மிக்கவரும், ஸ்ரீரங்கராஜ கருணையினாலே அளிக்கப்பெற்றவரும், ஸ்ரீபாஷ்யகாரரை சிஷ்யராகக் கொண்டவருமான திருவரங்கப்பெருமாள் அரையரைத் துதிக்கிறேன்.
நாதமுனி குலம்திகழ நன்கு உதித்தோன் வாழியே
நற்றமிழின் மறைக்கு இசையை நவின்று உரைப்போன் வாழியே
காதல் அரங்கேசர் இருகழல் பணிவோன் வாழியே
கானவர நயவிசையால் களிப்பிப்போன் வாழியே
ஏதமில் வண்கச்சிப்பயனை ஏத்திசைப்போன் வாழியே
எதிபதியைப் பரிசாக ஏற்று வந்தோன் வாழியே
தீதில் யமுனைத்துறைவன் சேவடியோன் வாழியே
திருவரங்கப் பெருமாள் அரையர் திருவடிகள் வாழியே

ஸ்ரீ விஷ்ணுசித்த பதபங்கஜ ஸங்கமாய
சேதோ மம ஸ்ப்ருஹயதே கிமத: பரேண|
நோசேந் மமாபி யதிஸேகரபாரதீநாம்
பாவ: கதம் பவிதுமர்ஹதி வாக்விதேய: ||ஸ்ரீ எங்களாழ்வான் தனியன்

திருவெள்ளறையில் பூர்வசிக ஸ்ரீவைஷ்ணவ ப்ராஹ்மண குலத்தில் ஸ்ரீ விஷ்ணுசித்தர் என்னும் திருநாமாத்துடன் சித்திரை மாதம் ரோஹிணி நக்ஷத்ரத்தில் அவதரித்தவர். ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமி தம் கண்களை இழந்துவிட்ட காரணத்தினால், மேல் நாட்டிலிருந்து திரும்பிய யதிராஜர் ஸ்ரீ பாஷ்யத்தில் எஞ்சிய பகுதியைக் கூரத்தாழ்வானுக்கு பதிலாக இவரை உசாத்துணையாகக் கொண்டு எழுதுவித்தார் என்றும், அப்படி எழுதும் போது, ஆழ்வானுக்குத் துல்யமாயிருந்த இவருடைய மேதா விலாசத்தைக்கண்டு “எங்கள் ஆழ்வானோ” என்று எம்பெருமானார் அபிமானித்தாரம். அன்று முதல் இவர் எங்களாழ்வான் என்றே அழைக்கப்படுகிறார்.சிஷ்யர் – ஸ்ரீபாஷ்ய ஸிம்ஹாஸநாதிபதிகளில் ஒருவரான ஸ்ரீ நடாதூராழ்வானின் பேரரான “வாத்ஸ்யவராதாச்சார்யார்” என்னும் ஸ்ரீ நடாதூரம்மாள்.பிதாமஹர் ஸ்ரீ நடாதூராழ்வான் நியமித்தபடி திருவெள்ளறையில் எழுந்தருளியிருந்த எங்களாழ்வான் ஸ்வாமியிடம் ஸ்ரீ பாஷ்யார்த்தம் அனைத்தையும் கசடறக் கற்றார் ஸ்ரீ நடாதூர் அம்மாள். இப்படி அம்மாளுக்கு ஆசார்யரானமையாலே “அம்மாள் ஆசார்யர்” என்று அழைக்கப் பெற்றார் எங்களாழ்வான்.74 ஸிம்ஹாஸநாதிபதிகளில் ஒருவரான இவர் ஸ்ரீ விஷ்ணு புராணத்திற்கு ஸ்ரீ விஷ்ணு சித்தீயம் என்னும் வ்யாக்யானத்தையும், ஸித்தாந்த ப்ரமேயங்களைச் சுருக்கி
“ப்ரமேயஸங்க்ரஹம்” என்னும் க்ரந்தத்தையும், ப்ரஹ்மஸுத்ரத்தின் அதிகரணங்களின் சங்கதியை விளக்கி “ஸங்கதிமாலா” என்னும் க்ரந்தத்தையும், கத்ய வ்யாக்யானம் மற்றும் “ஸாரார்த்த சதுஷ்டயம்” ஆகிய க்ரந்தங்களை அருளிச்செய்துள்ளார்.
சீராரும் வெள்ளறையில் சிறந்துதித்தோன் வாழியே
சித்திரை உரோகிணி நாள் சிறக்க வந்தோன் வாழியே
பார்புகழும் எதிராசன் பதம் பணிந்தோன் வாழியே
பங்கயச் செல்வியின் பதங்கள் பரவுமவன் வாழியே
திருக்குருகைப் பிரான் பிள்ளான் திருவருளோன் வாழியே
தீதிலா பாடியத்தைத் தேர்ந்துரைப்போன் வாழியே
தாரணியில் விண்டுமதம் தழைக்க வந்தோன் வாழியே
தண்ணளியோன் எங்களாழ்வான் தாளிணைகள் வாழியே-

ஸ்வாமி பெரியதிருமலைநம்பி–சித்திரை ஸ்வாதி–ஸுமுகர் என்னும் நித்யசூரியின் அம்ஸம் -திருவாராதனம் – மலைகுனியநின்ற பெருமாள்/வெண்ணைக்காடும் பிள்ளை-அமலனாதிபிரான் தனியன் பெரிய திருமலை நம்பி அருளியது

பிதாமஹஸ்யாபி பிதாமஹாய ப்ராசேதஸாதேஸபலப்ரதாய|

ஸ்ரீபாஷ்யகார உத்தம தேஸிகாய ஸ்ரீசைல பூர்ணாய நமோ நமஸ்தாத்||

பிரமன்னுக்குத் தந்தையான திருவேங்கடமுடையானாலே அப்பா என்று கூப்பிடப் பெருகையாலே உலகிற்குப் பாட்டனான பிரமனுக்கும் பாட்டனாராய், ஸ்ரீபாஷ்யகாரருக்குச் சிறந்த ஆசார்யராய் அவருக்கு வால்மீகியின் வாக்காகிற ஸ்ரீராமாயணத்தின் பொருளை உபதேசித்தவரான பெரிய திருமலைநம்பிக்குப் பலகால் வணக்கம்.

ஸ்ரீமல் லக்ஷ்மண யோகீந்த்ர ஸ்ரீராமாயண தேஸிகம்

ஸ்ரீசைலபூர்ணம் வ்ருஷப ஸ்வாதி ஸஞ்ஜா தமாச்ரயே

எம்பெருமானாருக்கு ஸ்ரீராமாயணத்தை உபதேசித்த ஆசாரியரும் வைகாசி ஸ்வாதியில் திருவவதரித்தவருமான திருமலை நம்பியை அஸ்ரயிக்கிறேன்.

வைகாசிச் சோதிநாள் வந்து உதித்தான் வாழியே

வண் திருவேங்கடமுடையான் வரபுத்திரன் வாழியே

அய்யன் ஸ்ரீ ஆளவந்தார் அடிதொழுவோன் வாழியே

அனவரதம் மலைகுனியர்க்கு அடிமை செய்வோன் வாழியே

மெய்யன் இராமாநுசாரியன் விரும்புமவன் வாழியே

மிக்க திருமலையார்க்கு எல்லாம் மேலாவான் வாழியே

செய்யதமிழ் வேதத்தின் சிறப்பு அறிந்தோன் வாழியே

திருமலைநம்பிகள் உபயதிருவடிகள் வாழியே

பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா|
தஸ்ய தாஸரதே: பாதௌ ஸிரஸா தாரயாம்யஹம் ||ஸ்ரீ முதலியாண்டான் தனியன்
–யதிராஜருடைய பாதுகைகள் எவருடைய பெயராலே (முதலியாண்டான் என்று) வழங்கப்படுகின்றனவோ, தாஸரதி எனும் திருநாமமுடைய அந்த முதலியாண்டானின் திருவடிகளை யான் தலையாலே தரிக்கிறேன்.
கிபி 1027) பிரபவ வருடத்தில் பச்சைப் பெருமாள் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் புருஷமங்கலத்தில்/வரதராஜபுரத்தில் சித்திரை மாதம் புனர்வஸு நக்ஷத்திரத்தில் ஆபஸ்தம்ப ஸூத்ரம் வாதூல கோத்ரத்தில் எம்பெருமானாருக்கு மருமகனாகவும், பரதனின் அம்சமாகவும் “தாசரதி” என்னும் திருநாமத்தோடு அவதரித்தவர் ஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமி.-எம்பெருமானாருடைய சிஷ்யர்கள் அனைவருக்கும் நிர்வாஹகராக இருந்தமையால் “முதலியாண்டான்” என்று அழைக்கப்பெற்றார்.-எம்பெருமானாருடைய திருவடி ஸ்தானமாயிருந்து அவருக்கு அந்தரங்க கைங்கர்யங்கள் செய்தமையால் எம்பெருமானாருடைய திருவடி நிலை இன்றளவும் “முதலியாண்டான்” என்றே அழைக்கப்படுகிறது.எம்பெருமானார் இவரைத் தமது த்ரிதண்டமாக அபிமானித்தார்.முதல் திருவந்தாதி ப்ரபந்தத்துக்கு தனியன் அருளிச்செய்தார் ஸ்வாமி முதலியாண்டான்.
ய: பூர்வம் பரதார்த்தித: பிரதிநிதிம் ஸ்ரீ பாதுகாமாத்மந:
ராஜ்யாய ப்ரததௌ ஸ ஏவ ஹி குரு: ஸ்ரீ தாஸரத்யாஹ்வய:
பூத்வா லக்ஷ்மண பாதுகாந்திமயுகே ஸர்வாத்மநாம் ஸ்ரேயஸே
ஸாம்ராஜ்யம் ஸ்வயமத்ர நிர்வஹநி நோ தைவம் குலஸ்யோத்தமம்–
முக்த ஸ்லோகம்:-எவனொருவன் முற்காலத்தில் பரதனால் ப்ரார்திக்கப் பட்டு அரசாளுவதற்குத் திருப்பாதுகையைத் தனக்கு ப்ரதிநிதியாகக் கொடுத்தானோ, அந்த ராமனே தாசரதி (முதலியாண்டான்) என்ற திருநாமமுள்ள ஆசார்யனாய், கலி காலத்தில் நம் குலத்திற்கு உத்தம தெய்வமான ஸ்ரீ ராமானுஜ பாதுகையாகி அனைத்து ஆத்மாக்களும் உஜ்ஜீவிக்கும் படி ஸ்ரீவைஷ்ணவ ஸாம்ராஜ்யத்தைத் தானே இங்கு நடத்திக்கொண்டிருக்கிறான்.
ஸ்ரீவைஷ்ணவ ஸிரோபூஷோ ஸ்ரீ ராமானுஜ பாதுகா|
ஸ்ரீ வாதூல குலோத்தம்ஸ: ஸ்ரீ தாசரதி ரேததாம்||-ஸ்ரீவைஷ்ணவர்களின்
தலைக்கு அலங்காரமாயிருக்கும் ஸ்ரீ ராமானுஜரின் பாதுகையாய், வாதூல குலத்திற்குச் சிறந்த அலங்காரமான ஸ்ரீ தாசரதியெனும் முதலியாண்டான் வெற்றி பெருவாராக என்பதாக அமைந்த ஸ்லோகம்.
ஸ்ரீ ராமாம்ஸ ஸமாஸ்லிஷ்டம் பாஞ்சஜன்யாம்ஸ ஸம்பவம்|
பஞ்ச நாராயணஸ்தாந ஸ்தாபகம் குருமாஸ்ரயே||-
ஸ்ரீராமனின் அம்ஸத்தோடு கூடியவராய், பாஞ்சஜன்ய அம்ஸமாக அவதரித்தவராய், ஐந்து நாராயண ஸ்தலங்களை ஸ்தாபித்தவரான முதலியாண்டானை ஆஸ்ரயிக்கிறேன்.
யஸ்சக்ரே பக்தநகரே தாடீபஞ்சக முத்தமம்
ராமனுஜார்ய ஸச்சாத்ரம் வந்தே தாசரதிம் குரும்-
பக்த நகரத்தில் எவரொருவர் சிறந்த தாடீபஞ்சக ஸ்தோத்திரத்தை இயற்றினாரோ, ராமானுஜாச்சார்யரின் ஸத் சிஷ்யரான ஸ்ரீ முதலியாண்டானை வணங்குகிறேன்
வித்யா விமுக்திஜநநீ விநயாதி கத்வம்
ஆசாரஸம்பத் அநுவேலவிகாஸசீலம்
ஸ்ரீ லக்ஷ்மணார்ய கருணா விஷயீ க்ருதாநாம்
சித்ரம் ந தாசரதி வம்ஸ ஸமுத்பவாநாம்||-ஸ்ரீ முதலியாண்டான் திருவம்ஸ ப்ரபாவ ஸ்லோகம்-
மோகஷத்திற்கு உறுப்பான ஜ்ஞானம், சிறந்த அடக்கம், அநுஷ்டானச் செல்வம், சிறந்த குணம், ஆகியவை எம்பெருமானாருடைய கருணைக்கு இலக்கான முதலியாண்டான் வம்சத்தினற்கு வாய்துள்ளதில் வியப்பில்லை என்பதாக அமைந்த ஸ்லோகம்.

———

சித்திரை அஸ்வினி -ஸ்வாமி வடுக நம்பியின் திருநக்ஷத்ரம்-மற்றொரு திருநாமம் – ஆந்த்ர பூர்ணர்-

சைத்ரே த்வச்விநிஸஞ்ஜாதம் ஸம்ஸாரார்ணவ தாரகம்
ராமாநுஜார்ய ஸச்சிஷ்யம் ஆந்த்ர பூர்ண அஹம் பஜே

ராமாநுஜார்ய ஸச்சிஷ்யம் ஸாலக்ராம நிவாஸிநம்
பஞ்சமோபாய ஸம்பந்நம் ஆந்த்ர பூர்ணமஹம் பஜே

ராமாநுஜார்ய சரண ப்ரவணம் பரதேவவத்
வடுபூர்ணமஹம் வந்தே பரஜ்ஞாந பயோ நிதிம்

யதிராஜ வைபவம் என்ற நூலை அருளிச்செய்தார். 114 ஸ்லோகங்கள் கொண்ட அழகிய நூல்.-வடுக நம்பி, இது தான் பெற்ற பேறு என்று தாம் அருளிச்செய்த யதிராஜ வைபவம் என்னும் நூலில் 113வது ஸ்லோகத்தில் அருளிச்செய்துள்ளார்.

113 வது ஸ்லோகத்தின் விளக்கம்:
தன்னுடைய அந்தரங்க ஸிஷ்யர்களில் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு கைங்கர்யத்தில் நியமித்து அருளிய ஸ்ரீ யதிராஜர், மிகவும் தகுதியற்ற என்னையும் தமக்குப் பால் காய்ச்சும் கைங்கர்யத்தில் நியமித்து அருளினார். அத்துடன் தன் அடியார்க்கு அடியார்க்கு அடியார்க்கு அடியவனாகவும், மிகுந்த அன்புடையவனாகவும் தனக்கு நல்லது செய்பவனாகவும் கொண்டு என்னையும் ரக்ஷிக்கிறவரான அவர் பல்லாண்டு வாழ்க! என்பது 113வது ஸ்லோகத்தின் அர்த்தம்.

ஸ்வாமி வடுக நம்பி உடையவருக்கு செய்தருளிய கைங்கர்யத்தைப் பற்றி திருக்கோளூர் பெண் பிள்ளை தாம் அருளிச்செய்த கிரந்தத்தில் 56 ஆம் வார்த்தையாக இங்கு பால் பொங்கும் என்றேனோ வடுகநம்பியைப் போலே என்று தெரிவிக்கிறார்.-நிகழ்வு – ஒரு நாள் எம்பெருமான் திருவீதி புறப்பாடு கண்டருளியபோது ஸ்வாமி எம்பெருமானார் பெருமாள் சேவிக்க வாரும் என்று வடுக நம்பியை அழைக்க, அப்போது உடையவருக்கு பால் காய்ச்சி கொண்டு இருந்த வடுக நம்பி, “உம்முடைய பெருமாளை சேவிக்க வந்தால், என்னுடைய பெருமாளுக்கு பால் பொங்கிப்போமே” என்று அருளினாராம்.-ஸ்வாமி வடுக நம்பி அருளிச் செய்த வார்த்தைகளைப் பற்றி திருவல்லிக்கேணி அம்மாள் தாம் அருளிச் செய்த கிரந்தத்தில் “இருகரையர் என்றேனோ வடுகரைப் போலே” என்றும் “நாவகாரியம் ஆக்கினேனோ வடுகரைப் போலே” என்றும் குறிப்பிடுகிறார்.-இருகரையர் என்று வடுகநம்பி குறிப்பிட்டது ஆழ்வானையும் ஆண்டானையும் ஆகும். இந்த விஷயத்தை ஸ்ரீ பிள்ளைலோகாசார்யார் தாம் அருளிச்செய்த ஸ்ரீ வசனபூஷன திவ்ய சாஸ்திரத்தில் “வடுக நம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் இருகரையர் என்பர்” என்று அருளிச்செய்துள்ளார். இருகரையர் என்பதற்கு வடுகநம்பியைப் போன்று அல்லாமல் ப்ரதமபர்வம் சரமபர்வம் இரண்டிலும் கால்வைத்து நிற்குமிவர்கள் என்று பொருள். அதாவது பிரதமபர்வமான எம்பெருமான் ஒரு கரை; சரமபர்வமான ஆசார்யன் மற்றொரு கரை – இரண்டு கரையிலும் கால் வைத்திருப்பவர் என்று பொருள்.ஒரு ஸ்ரீவைஷ்ணவர் இவர் காதருகே திருமந்த்ரதை உச்சரிக்க இவர் நாவகாரியம் என்று சொல்லி, ராமாநுஜா என்ற திருநாமமே நாவுக்குத்தக்கது என்றாராம் வடுக நம்பி. அப்படி இருந்தது இவருடைய ஆசார்ய நிஷ்டை.மேலும் ராமானுஜ அவயவ ப்ரபாவம் என்னும் நூலில் வடுக நம்பியை ராமாநுஜர் திருமேனியில் காஷயமாக பாவித்து “ஆந்த்ரபூர்ணஸ்ச காஷாய: என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

——————–

ஈயுண்ணி மாதவப் பெருமாள் –
கார்த்திகே பரணி ஜாதம் ஸ்ரீ லோகார்ய பதாஸ்ரிதம்
வேதாந்த த்வய சம்பந்நம் மாதவார்யம் அஹம் பஜே
–கார்த்திகையில் பரணியில் அவதரித்தவராய் நம்பிள்ளை திருவடிகளை அடைந்தவராய் உபய வேதாந்தச் செல்வரான மாதவப் பெருமாளை வணங்குகிறேன்.
லோகாசார்ய பதாம்போஜ ஸம்ஸ்ரயம் கருணாம்புதிம்
வேதாந்த த்வய சம்பந்நம் மாதவார்யம் அஹம் பஜே
-உலகாரியரான நம்பிள்ளையின் திருவடித்தாமரையைப் பற்றியவராய் கருணைக்கடலாய் உபய வேதாந்தச் செல்வமுடையவரான மாதவாச்சார்யரை ஆஸ்ரயிக்கிறேன்.
சீரார் வடக்கு திருவீதிப் பிள்ளை* எழு
தேரார் தமிழ்வேதத்து ஈடுதனைத் – தாருமென
வாங்கி முன் நம்பிள்ளை ஈயுண்ணி மாதவர்க்குத்
தான்கொடுத்தார் பின் அதனைத்தான்
ஆங்கு அவர்பால்பெற்ற சிறியாழ்வான் அப்பிள்ளை
தாம் கொடுத்தார் தம்மகனார் தம் கையில்-பாங்குடனே
நாலூர் பிள்ளைக்கு அவர்தாம் நல்ல மகனார்க்கு அவர்தாம்
மேலோர்க்கு ஈந்தார் அவரே மிக்கு.

பெரிய பெருமாள் நியமனமின்றி நம்பிள்ளை இந்த ஸ்ரீகோசத்தை தந்தருளமாட்டார் என்பதை நன்கறிந்த ஈயுண்ணி மாதவப் பெருமாள் என்ற ஸ்வாமி, பெரிய பெருமாளிடம் ப்ரார்திக்க, பெரிய பெருமாளும் திருவுள்ளம் உவந்து இரங்கி நம்பிள்ளைக்கு நியமித்தருள, பின்பு அந்த ஸ்ரீகோசத்தை நம்பிள்ளை ஈயுண்ணி மாதவப் பெருமாளுக்கு தந்தருளினாராம். அப்படியாக ஸ்வாமி நம்பிள்ளையிடம் ஸ்ரீகோசத்தைப் பெற்றுக்கொண்ட சிறியாழ்வான் அப்பிள்ளை(ஈயுண்ணி மாதவப் பெருமாளுடைய மற்றொரு திருநாமம்) தம்முடைய திருக்குமாரரான பத்மநாபப் பெருமாளிடம் அந்த ஈட்டை ப்ரசாதித்து அருளினார். பத்மநாபப் பெருமாள் தம் சிஷ்யரான நாலூர்ப் பிள்ளைக்கு ப்ரசாதித்து அருளினார். அந்த நாலூர்ப் பிள்ளை தம்முடைய திருக்குமாரரான நாலூராச்சான் பிள்ளைக்கு ப்ரசாதித்து அருளினார். அந்த நாலூராச்சான் பிள்ளையே மேலுள்ளவர்களுக்கு கொடுத்து உபகரித்து அருளினாராம். நாலூராச்சான் ஸ்வாமியின் சிஷ்யர்கள் திருநாராயணபுரத்து ஆயி, ஸ்ரீசைலேசர் என்னும் திருநாமமுடைய திருவாய்மொழிப்பிள்ளை மற்றும் ஈயுண்ணி தேவப்பெருமாள் ஆகியோர் ஆவர்.

மிதுநே ஸ்வாதிஸம்பூதம் கலிவைரிபதாஸ்ரீதம்|
உதக்ப்ரதோளீ நிலயம் க்ருஷ்ணபாதம் அஹம் பஜே||-
ஆனி ஸ்வாதியில் அவதரித்தவராய் நம்பிள்ளையின் திருவடிகளை ஆஸ்ரயித்தவரான வடக்குத் திருவீதிப்பிள்ளையை வணங்குகிறேன்.
ஸ்ரீ க்ருஷ்ணபாத பாதாப்ஜே நமாமி ஸிரஸா ஸதா |
யத்ப்ரஸாதப்ரபாவேந ஸர்வஸித்திரபூந்மம||
-எவருடைய அருளின் பெருமையால் எனக்கு ஜ்ஞான பக்தி வைராக்யங்களாகிற எல்லா ஸித்திகளும் கிடைத்தனவோ, அத்தகைய ஸ்ரீக்ருஷ்ணர் என்னும் வடக்குத்திருவீதிப்பிள்ளையின் திருவடித் தாமரைகளைத் தலையால் எப்போதும் வணங்குகிறேன்.

ஆனி மாதத்தில் பெரியாழ்வாருடைய திருவவதார நன்னாளாகிய ஸ்வாதி நக்ஷத்ரத்தில், முடும்பைக் குடியில் ஸ்ரீவத்ஸ கோத்ரத்தில் யஜுஸ்ஸாகை ஆபஸ்தம்பஸுத்ரத்தில் ஸ்ரீக்ருஷ்ணபாதர் என்னும் வடக்குத்திருவீதிப்பிள்ளை அவதரித்தார்.அஷ்டாதச ரஹஸ்யங்களை அருளிச்செய்த பிள்ளைலோகாசாரியர்க்கும், ஆசார்ய ஹ்ருதயம் அருளிச்செய்த அழகிய மணவாளப்பெருமாள் நாயனாருக்கும் திருத்தந்தையார் இவர்.இவருடைய இயற்பெயர் ஸ்ரீகிருஷ்ண மஹாகுரு.

ஆனிதனில் சோதி நாள் அவதரித்தான் வாழியே
ஆழ்வார்கள் கலைப்பொருளை ஆய்ந்து உரைப்போன் வாழியே
தான் உகந்த நம்பிள்ளை தாள் தொழுவோன் வாழியே
சடகோபன் தமிழ்க்கு ஈடு சாற்றினான் வாழியே
நானிலத்தில் பாடியத்தை நடத்தினான் வாழியே
நல்ல உலகாரியனை நமக்கு அளித்தான் வாழியே
ஈனமற எமையாளும் இறைவனார் வாழியே
எங்கள் வடவீதிப்பிள்ளை இணையடிகள் வாழியே

ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை வைபவம்
அவதார ஸ்தலம்
– திருவெள்ளியங்குடிக்கு அருகிலே உள்ள சங்கநல்லூர் என்னும் சிற்றூர்
திருவவதாரம் – சர்வஜித் வருஷம், ஆவணி மாதம் ரோஹிணி நக்ஷத்ரம் (கண்ணன் எம்பெருமான் திருவவதரித்த நன்னாளிலே அவதரித்தவர் – ஸ்ரீஜயந்தி)
திருதகப்பனார் திருநாமம் – ஸ்ரீ யாமுனதேசிகர்
திருத்தாயார் – நாச்சியாரம்மாள்
பெற்றோர் இட்ட திருநாமம் – க்ருஷ்ணர்
திருவாராதனப் பெருமாள் – க்ருஷ்ண விக்ரஹம்
திருக்குமாரர் – ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை
மற்ற திருநாமங்கள் – அபயப்ரதராஜர், வ்யாக்யான சக்ரவர்த்தி, க்ருஷ்ணஸூரி, பரம காருணிகர், அபார கருணாம்ருத சாகரர் ஆகியவை ஆகும்.
ஆசார்யன் – ஸ்ரீ நம்பிள்ளை
வ்யாக்யான சக்ரவர்த்தியான ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளைக்கு நான்கு திக்குகளிலும் நான்கு ஸிம்ஹாஸனங்கள் உண்டு என்பது ஸ்ரீவைஷ்ணவ பெரியோர்களின் திருவாக்கு.
முதல் ஸிம்ஹாஸனம் – நாலாயிர திவ்யப்ரபந்த பாசுரங்களுக்கு ஸ்வாமி அருளிச் செய்த திவ்ய வ்யாக்யானங்களே முதலாவதும் முக்கியமானதுமான ஸிம்ஹாஸனம் ஆகும். அவைகள் இல்லாவிடில் ஸ்ரீவைஷ்ணவ உலகமே ஞான சூன்யமாய் இருளடைந்து பாழாகி யிருக்கும். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு திருப்பல்லாண்டு முதலான நாலாயிர திவ்ய ப்ரபந்தங்களை யொழிய பகவானை அறிவதற்கு வேறு வழியில்லை. திவ்ய ப்ரபந்தங்களிலே இருக்கக் கூடிய ஆழ்ந்த அர்த்தங்களை அறிவதற்கு பூர்வாசார்ய பரம்பரையாகவும், ஆசார்ய நியமனப்படியும், ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளையால் அருளிச் செய்யப்பட்ட வ்யாக்யானங்களைத் தவிர வேறு புகல் இல்லை.
இரண்டாவது ஸிம்ஹாஸனம் – இதிஹாஸ ஸ்ரேஷ்டமான ஸ்ரீ இராமாயணத்தில் அமைந்துள்ள மிகச் சிறந்த ஸ்லோகங்கள் பலவற்றில் இருக்கக்கூடிய ரஹஸ்ய அர்த்தங்களை விவரித்து அருளிச் செய்த ஸ்ரீராமாயண தனிஸ்லோகம், ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளையின் இரண்டாவது ஸிம்ஹாஸனமாகும்.
மூன்றாவது ஸிம்ஹாஸனம் – ரஹஸ்ய த்ரயங்களையும் மற்றும் ஸ்ரீவைஷ்ணவர்கள் அவஸ்யம் தெரிந்து கொள்ள வேண்டிய மற்ற ரஹஸ்யார்த்தங்களையும் விவரித்து ஸ்வாமி அருளிச்செய்த பரந்த ரஹஸ்யம், மாணிக்க மாலை, ஸகல ப்ராமண தாத்பர்யம், ரஹஸ்யத்ரய தீபிகை, ரஹஸ்யத்ரய விவரணம் மற்றும் நிகமனப்படி முதலானவை மூன்றாவது ஸிம்ஹாஸனம்.
நான்காவது ஸிம்ஹாஸனம் – பரமாசார்யரான ஸ்ரீ ஆளவந்தாரும் ஜகதாசார்யரான ஸ்வாமி எம்பெருமானாரும் அருளிச்செய்த ஸ்தோத்ரரத்னம், சதுஸ்லோகி, கத்யத்ரயம் முதலான ஸ்தோத்ரங்களுக்கு ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்த திவ்ய வ்யாக்யானங்களும் மற்றும் ஜிதந்தே ஸ்தோத்ர வ்யாக்யானமும், வ்யாக்யான சக்ரவர்த்தியான ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளையின் நான்காவது ஸிம்ஹாஸனம் ஆகும்.

ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளையின் கோஷ்டியிலே எழுந்தருளியிருந்த சிலர் “எங்களுக்கு தஞ்சமாய் இருபத்தொரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் என்று ப்ரார்திக்க” அதற்கு ஸ்வாமி, கலங்குகிறவனும், கலக்குகிறதும், கலங்கிக் கிடக்கிறவர்களும், தெளிவிக்கிறவனும், தெளிகிறவனும், தெளிந்திருப்பவனுமாயிறே இருப்பது என்று பதிலுரைத்தாராம்
கலங்குகிறவன் – ஜீவாத்மா
கலக்குகிறது – பகவானையும் ஆத்மாவையும் அறியவிடாமல் மறைத்துத் தன் விஷயத்திலே மூளும்படி பண்ணுகிற அசித்து.
கலங்கிக்கிடக்கிறவர்கள் – தேஹமே ஆத்மா என்று கிடக்கும் சம்சாரிகள்
தெளிவிக்கிறவன் – ஆசார்யன்
தெளிகிறவன் – சேதனன்(ஞானவானான ஜீவாத்மா)
தெளிந்திருக்கிறவன் – ஈஸ்வரன்
ஆகையாலே கலங்குகிற தன்னையும், கலக்குகிற ப்ரக்ருதியையும், கலங்கிக்கிடக்கிற சம்சாரிகளையும் தஞ்சம் அன்று என்று கைவிட்டு, தெளிவிக்கிற ஆசார்யனையும், தெளிந்திருக்கும் ஈஸ்வரனையும் பற்றுகையே, ஆசார்யனாலே தெளிந்த இவ்வாத்மாவுக்கு ஸ்வரூபம் என்று அருளினார் ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை.

ஸ்ருத்யர்த்த ஸாரஜநகம் ஸ்ம்ருதிபாலமித்ரம்
பத்மோல்லஸத் பகவதங்க்ரி புராண பந்தும்|
ஜ்ஞாநாதிராஜம் அபயப்ரதராஜபுத்ரம்
அஸ்மத்குரும் பரமகாருணிகம் நமாமி ||

வேதப்பொருள்களின் ஸாரத்தைக் கடைந்து எடுப்பவராய், ஸ்ம்ருதிகளாகிற தாமரைகளுக்கு இளஞ்சூரியனாய், ஸ்ரீய:பதியின் திருவடிகளுக்குப் பழைய உறவினராய், ஞானங்களுக்குப் பேரரசராய், அபயப்ரதராஜரின் பிள்ளையாய், பரமகாருணிகரான நாயனார் ஆச்சான் பிள்ளையை வணங்குகிறேன்.
மற்ற திருநாமங்கள்-ஸுந்தரவரராஜாசார்யர்-சௌம்யவரேஸ்வரர்

அருளிச்செய்தவை
1-சதுஸ்லோகி வ்யாக்யானம் – இந்த க்ரந்ததில் பிராட்டி பற்றிய பூர்வாசார்ய நிர்ணயத்தை மிக விரிவாக விளக்கியுள்ளார்.
2-தத்வ ஸங்க்ரஹம் – பிராட்டி விஷயமாக மற்றொரு க்ரந்தம்
3-சரம உபாய நிர்ணயம் – எம்பெருமானாரே உத்தாரக ஆசார்யர் என்னும் பரம ரஹஸ்யத்தை விளக்கும் க்ரந்தம்
4-முக்தபோகாவலீ
5-ஜ்ஞாநார்ணவம்
6-தத்வத்ரய விவரணம்
7-அணுத்வபுருஷகாரத்வஸமர்த்தனம்
8-சரமரஹஸ்யத்ரயம்-
ஆகியவை ஆகும்

ஸ்வாமி எங்களாழ்வான் திருநக்ஷத்ரம்-சித்திரை ரோஹிணி

ஸ்ரீ விஷ்ணுசித்த பதபங்கஜ ஸங்கமாய
சேதோ மம ஸ்ப்ருஹயதே கிமத: பரேண|
நோசேந் மமாபி யதிஸேகரபாரதீநாம்
பாவ: கதம் பவிதுமர்ஹதி வாக்விதேய: ||

ஸ்ரீபாஷ்ய ஸிம்ஹாஸநாதிபதிகளில் ஒருவரான ஸ்ரீ நடாதூராழ்வானின் பேரரான “வாத்ஸ்யவராதாச்சார்யார்” என்னும் ஸ்ரீ நடாதூரம்மாள்-அம்மாளுக்கு ஆசார்யரானமையாலே “அம்மாள் ஆசார்யர்” என்று அழைக்கப் பெற்றார் – இவர் ஸ்ரீ விஷ்ணு புராணத்திற்கு ஸ்ரீ விஷ்ணு சித்தீயம் என்னும் வ்யாக்யானத்தையும், ஸித்தாந்த ப்ரமேயங்களைச் சுருக்கி “ப்ரமேயஸங்க்ரஹம்” என்னும் க்ரந்தத்தையும், ப்ரஹ்மஸுத்ரத்தின் அதிகரணங்களின் சங்கதியை விளக்கி “ஸங்கதிமாலா” என்னும் க்ரந்தத்தையும், கத்ய வ்யாக்யானம் மற்றும் “ஸாரார்த்த சதுஷ்டயம்” ஆகிய க்ரந்தங்களை அருளிச்செய்துள்ளார்.

சீராரும் வெள்ளறையில் சிறந்துதித்தோன் வாழியே
சித்திரை உரோகிணி நாள் சிறக்க வந்தோன் வாழியே
பார்புகழும் எதிராசன் பதம் பணிந்தோன் வாழியே
பங்கயச் செல்வியின் பதங்கள் பரவுமவன் வாழியே
திருக்குருகைப் பிரான் பிள்ளான் திருவருளோன் வாழியே
தீதிலா பாடியத்தைத் தேர்ந்துரைப்போன் வாழியே
தாரணியில் விண்டுமதம் தழைக்க வந்தோன் வாழியே
தண்ணளியோன் எங்களாழ்வான் தாளிணைகள் வாழியே

ஒன்றான ஸ்ரீ எம்பார் ஜீயர் ஸ்வாமியின் திருநக்ஷத்ரம்-ஆவணி ரோஹிணி-ஆசார்யன் – சோளசிம்மபுரம் ரங்காசார்ய தொட்டையாசார்ய ஸ்வாமி

ஸ்ரீ வாதூல ரமாப்ரவாள ருசிர ஸ்ரக்ஸைந்ய நாதாம்சஜ
ஸ்ரீ குர்விந்த்ர மஹார்ய லப்த நிஜஸத்ஸத்தம் ச்ரிதா பீஷ்டம்|
ஸ்ரீ ராமாநுஜ முக்ய தேசிக லஸத் கைங்கர்ய ஸம்ஸ்தாபகம்
ஸ்ரீமத் வேங்கட லக்ஷ்மணார்ய யமிநம் தம் ஸத்குணம் பாவயே ||

ஸ்ரீ வாதூல தயாபாத்ரம் ஜ்ஞானவைராக்ய வாரிதிம் |
யதீந்த்ர ப்ரவணம் வந்தே கோவிந்தம் பக்திம் முநிம் ||

அக்ஷயாப்தே ஸிம்ம க்ருஷ்ண ரோஹிண்யாம் கலிதோதயம் |
ராமாநுஜ பதச்சாயாம் வந்தே வேங்கட லக்ஷ்மணம் ||

அக்ஷயாத்ரே ஸிம்ம க்ருஷ்ண ரோஹிண்யாம் ஜாதமாச்ரயே |
ஸ்ரீ ப்ரவாள குரோர் சிஷ்யம் முநிம் வேங்கட லக்ஷ்மணம் ||

ஜீயர் ஸ்வாமி அருளிச்செய்த நூல்கள்

ஸித்தோபாய ஸுதர்சனம்
ஸத்தர்சன ஸுதர்சனம்
துத்தர்சன கரிசனம்
விப்ரதிபத்தி நிரஸனம்
ஸ்ரீ வசனபூஷண அரும்பதம்
ஸ்ருதப்ரகாசிகா விவரணம்
பூகோள நிர்ணயம்
ஸ்ரீ ராமாநுஜ அஷ்டபதி
ஸித்த உபாய மங்கள தீபிகை
தர்மஜ்ஞ ப்ராமண்ய ப்ராகாசிகை
ஸித்தாந்த பரிபாஷை
கைவல்ய சததூஷணி
கீதார்த்தடிப்பணி
செத்தத்தின் என்கிற ஸ்ரீசுக்தி வ்யாக்யானம்
சரணாகதிக்கு அதிகாரி விசேஷணத்வ ஸமர்த்தனம்
ஜோதிஷ புராணங்களுக்கு ஐககண்ட்ய ஸமர்த்தனம்
துர் உபதேச திக்காரம்
சரண சப்தார்த்த விசாரம்
முக்திபதசக்தி வாதம்
ப்ரஹ்மபதசக்திவாதம்
ஸித்ததாத்பர்ய டிப்பணி
ஸாரநிஷ்கர்ஷ டிப்பணி
உடையவர் வடிவழகில் அடியார்கள் ஈடுபாடு
திருமஞ்சனக்கட்டியம்
த்யாக சப்தார்த்த டிப்பணி
ஸித்தாந்த தூலிகை
அஷ்டாக்ஷர ஸர்வாதிகார ஸமர்த்தனம்
பிரபத்தி அநுபாயத்வ விசாரம்
பிரமாண்ட க்ரஹண வரைபடம்

சீர் பெரும்பூதூரைச் செழுப்பித்தோன் வாழியே
திருப்பாவை சீயர் உளம் தேர்ந்து உணர்ந்தோன் வாழியே
பார்மேவும் பரசமயப் பற்று அறுத்தோன் வாழியே
பாடியத்தின் உட்பொருளைப் பகருமவன் வாழியே
காரிசுதன் தமிழ்மறைக்குக் கருத்து உரைப்போன் வாழியே
கருணையினால் அடியேற்குக் கழல் அளித்தோன் வாழியே
ஏராரு முனிதிலகம் என வந்தோன் வாழியே
எங்கள் எம்பார் சீயர் தமது இணையடிகள் வாழியே

————

ஸ்ரீ கோயில் கந்தாடை இளையவில்லி பாலதந்வி வரதாச்சார்யார் ஸ்வாமி-சித்திரை ரோஹிணி –ஸ்வாமி ராமானுஜரால் நியமிக்கப்பட்ட 74 சிம்மாசனாதிபதிகளுள் 72 ஆம் ஸிம்ஹாசனாதிபதியாக நியமிக்கப்பட்ட ஸ்ரீ கோயில் கந்தாடை குமாண்டூர் இளையவில்லியாச்சான் ஸ்வாமி திருவம்சத்தில் அவதரித்து திருமாளிகையின் ஸமாஸ்ரயண குருபரம்பரையின் வர்த்தமான ஸ்வாமியாக எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கோயில் கந்தாடை இளையவில்லி பாலதந்வி வரதாச்சார்யார் ஸ்வாமி

ஸ்ரீமத் கௌஸிக வார்தீந்தும் ஸீலாதி குணஸாகரம்|

ஸ்ரீமத்கநார்ய ஸத்புத்ரம் வரதார்யம் அஹம் பஜே||

வாழி இளையவில்லி ஆச்சான்

மாதகவால் வாழும் பாலதந்வி வரதாசிரியன்

வாழியவன் ஸரணாகதி மொழிப்பொருளை

சிச்சனவன் உய்யும்படி உரைக்கும் சீர்

கௌசிகர் தம் குலத்து உதித்த குணக்கடலோன் வாழியே

தொல் புகழ் சீர் தொட்டையாரியன் தனயனவன் வாழியே

சித்திரையில் உரோகிணி நாள் உதித்த செல்வன் வாழியே

திருவரங்கன் பெரிய கோயில் போற்றுமவன் வாழியே

திருகடிகைத் தக்கானைத் தினம் தொழுவோன் வாழியே

காரேய் கருணையிராமாநுசன் கழல் பணிவோன் வாழியே

பதின்மர் தம் பாசுரத்தில் பற்றுடையோன் வாழியே

நம் பாலதந்வி வரதாரியன் பொற்பதங்கள் வாழியே

சீராரும் இளையவில்லி இணையடிகள் வாழியே

பன்னிருசீர் திருநாமம் அணிந்த எழில் வாழியே

பன்னிருவர் பாடல்கள் பயில் பவளம் வாழியே

திருமலைமால் திருக்கோஷ்டித் தழைக்க வந்தான் வாழியே

திருமுகமும் கருணைமிகுக் கண்ணிணைகள் வாழியே

திருமுடியிற் திகழ்வழகுக் குழலொழுங்கும் வாழியே

தாள் பணிவோர் ஆருரைப் பேணுமவன் வாழியே

கௌஸிகர் தம் குலமகனார் வாழி என்றும் வாழியே

மாலடியார்வாழ மாநகர் அரங்கம் வாழ* பெரும்பூதூர்

மாமுனி தன் மன்னுபுகழ் வாழ* ஆழிசூழ்

அனைத்துலகும் தாம் வாழ* நன்னெறி சேர் ஆத்திகர் புகழ்

இளையவில்லி வரதாரியனே இன்னுமொரு நூற்றாண்டு இ

ஸ்ரீ விளாஞ்சோலைப்பிள்ளை -திருநக்ஷத்ரம் – ஐப்பசி உத்திரட்டாதி
திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ள ஆறநூர் என்னும் கிராமத்தில் அவதரித்தவர்.
ஆசார்யன் – ஸ்ரீ பிள்ளைலோகாசார்யார்
வேறு திருநாமம் – நலந்திகழ் நாராயண தாஸர்
துலாஹிர்புத்ந்ய ஸம்பூதம் ஸ்ரீ லோகார்ய பதாஸ்ரிதம்
ஸப்தகாதா ப்ரவக்தாரம் நாராயணமஹம் பஜே-
-தனியன்-ஐப்பசி உத்திரட்டாதியில் அவதரித்தவரும் பிள்ளை லோகாசார்யரின் திருவடிகளைப் பற்றியவரும் ஸப்தகாதை அருளிச் செய்தவரும் “நலந்திகழ் நாராயண தாஸர் என்ற விளாஞ்சோலைப் பிள்ளையை வழிபடுகிறேன்.
ஸ்ரீ லோகார்ய பதாரவிந்த மகிலம் ஸ்ருத்யர்த்த கோசாம் ஸ்ததா
கோஷ்டீஞ்சாபி ததேக லீநமநஸா ஸஞ்சிந்தயந்தம் முதா
ஸ்ரீ நாராயண தாஸமார்யமமலம் சேவே ஸதாம் ஸேவிதம்
ஸ்ரீ வாக்பூஷண கடபாவ விவ்ருதிம் யஸ்ஸப்த காதாம் வ்யதாத்-
-மற்றொரு தனியன்-ஸ்ரீ பிள்ளை லோகாசார்யருடைய பாதார விந்தங்களில் மறைப் பொருள் அனைத்தையும் பெற்றவரும் அவருடைய கோஷ்டியை எப்போதும் நினைத்துக் கொண்டு இருப்பவரும், ஸ்ரீ வசனபூஷணத்தின் உட்பொருள்களை ஸப்தகாதை என்ற நூலால் வெளியிட்டவரும் ஸ்ரீ நாராயண தாஸர் என்ற திருநாமமுடையவரான உயர்ந்தவரை எப்போதும் சேவிக்கிறேன்.
ஸ்ரீ பிள்ளை உறங்காவில்லிதாஸர் ஸ்வாமி எம்பெருமானாருக்கு அந்தரங்கராய் இருந்தது போல், ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார் ஸ்வாமியினிடத்திலே, அந்தரங்க சிஷ்யராய் இருந்து ஸகல சாஸ்திர அர்த்தங்களையும் கேட்டவர் ஸ்ரீ விளாஞ்சோலைப்பிள்ளை.-இவர் ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார் திருவாய் மலர்ந்தருளிய ஸ்ரீ வசனபூஷண திவ்ய சாஸ்த்ரத்தில் ஊன்றினவராயும் அதிலுள்ள அர்த்த விசேஷங்களை அனுபவிப்பதைத் தவிர வேறொன்று அறியாதவராயும் வாழ்ந்து வந்தவர்.-ஸ்ரீமத் பகவத் கீதையில் அமைந்துள்ள ஸ்லோகங்களுள் சரம ஸ்லோகம் சிறப்பெய்தினது போல, ஸ்ரீ வசனபூஷணத்தில் அமைந்துள்ள ப்ரகரணங்களுள் சரம பர்வ நிஷ்டா ப்ரகரணம் சிறப்புற்றது. ஆகையால் இந்த ப்ரகரணத்தில் அருளிச் செய்யப்பட்ட அர்த்த விசேஷங்களை எல்லாம் திரட்டி ஒரு பிரபந்தம் அருளிச் செய்ய திருவுள்ளம் கொண்டு திருவாசிரியம் போலே ஏழு பாசுரம் கொண்ட ஸப்தகாதை என்னும் நூலை அருளிச்செய்தார் ஸ்ரீ விளாஞ்சோலைப்பிள்ளை என்று பெரியோர் பணிப்பர்.-ஸ்ரீ வசனபூஷண ரஹஸ்ய அர்த்தத்தை ஸ்வாமி திருவாய்மொழிப் பிள்ளைக்கு உபதேசித்தார். இவருடைய திருவரசு திருவனந்தபுரம் எம்பெருமானின் கர்பக்ரஹம் (அநந்த பத்மநாப பெருமாள் திருவடி).

நம: ஸ்ரீசைலநாதாய குந்தீநகர ஜந்மநே|
ப்ராஸத லப்த பரமப்ராப்ய கைங்கர்ய ஸாலிநே||ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை தனியன்
-குந்தீ நகரத்தில் உதித்தவராய், ஆசார்யன் அருளாலே அடையப்பெற்ற பரமப்ராப்யமான கைங்கர்யத்தை உடையயவரான திருமலையாழ்வாருக்கு வணக்கம்.
ஸ்ரீசைலேஸ குரும் லோக தேசிகாங்க்ரி ஸமாஸ்ரிதம்
வ்ருஷே விசாக ஸம்பூதம் வந்தே வரகுணாகரம்
–வைகாசி விசாகத்தில் அவதரித்தவரும் பிள்ளைலோகாசார்யாரை ஆஸ்ரயித்தவரும் உயர்ந்த குணங்களுக்கு இருப்பிடமானவருமான திருமலையாழ்வார் ஆகிற திருவாய்மொழிப்பிள்ளையை வணங்குகிறேன்
வையகம் எண் சடகோபன் மறைவளர்த்தோன் வாழியே
வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே
ஐயன்அருள்மாரிகலை ஆய்ந்து உரைப்போன் வாழியே
அழகாரும் எதிராசர் அடிபணிந்தோன் வாழியே
துய்யஉலகாரியன் தன்துணைப் பதத்தோன் வாழியே
தொல் குருகாபுரி அதனைத் துலக்கினான் வாழியே
தெய்வநகர் குந்தி தன்னில் சிறக்க வந்தோன் வாழியே
திருவாய்மொழிப்பிள்ளை திருவடிகள் வாழியே
“காடுவெட்டிக் கண்டேனோ திருமலை யாழ்வார் போலே என்று திருவல்லிக்கேணிப் பெண்பிள்ளை அருளிச் செய்துள்ளார்


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ மாமுனிகள்‌ சிஷ்யரான ஸ்ரீ கோயில்‌ கந்தாடை யண்ணன் திருக் குமாரரான ஸ்ரீ கந்தாடை நாயன் அருளிய -ஸ்ரீ பெரிய திருமுடி யடைவு –

September 10, 2026

https://archive.org/stream/ptma-kn-ao/Periya-Thirumudi-Adaivu_djvu.txt

அநந்த கோடி ப்ரஹ்மாண்ட, நாயகனாய்‌, ஆதி மத்‌யாந்த மதிந்யனாய்‌, , ஸமாநாதிக ரஹிதனாய்‌, வேதாந்த வேத்யனாய்‌, அவாப்த ஸமஸ்த காமனாய்‌, அநந்த கல்யாண குணங்களுடையனா யிருக்கிற ஸ்ரீமந் நாராயணன்‌ உகந்‌ தருளி யிருக்கிற ஸ்தலங்கள்‌ :- பரம்‌, வ்யூஹம்‌, விபவம்‌, அந்தர்யாமி, அர்ச்சாவதாரம்‌ என்று ஐந்து.

அதில்‌ பரமாவது- அநந்த கோடி ப்ரஹ்மாண்டங்களுக்கும்‌ புறம்பாய்‌, விரஜைக் கப்புறமாய்‌, பரிணமாதி, ரஹிதமாய்‌, குண்டேரா நாஸ்தீதி வைகுண்ட ” என்று சொல்லுகிற படியே நாஸ ரஹிதமாய்‌, நாநா ரத்ன ஸ்வர்ண மயமாய்‌, அநந்த விவித, விசித்ர கோபுர மண்டப ப்ராஸாதராதி, பரிஸோபிதமாய்‌, நிரதிசயானந்த; ஸுக வஹமாய்‌, பஞ்சோபநிஷண் மயமாய்‌, ஸகல வஸ்து பரிபூரிதமாய்‌, ஸகல ஸாம்ராஜ்ய லக்ஷ்மீ கரமான ஸ்ரீ வைகுண்ட மென்கிற பரம பதத்தில்‌, லஷ்மீ பூமி நீளா நாயகனாய்‌, அநந்த கருட விஷ்வக்ஸேனாதி, நித்ய முக்த ஸஹிதனாய்‌,ஸ்புரத்ரிடாங்குத; ஹாரகண்டுகா * என்றும்‌-“ஸ்வோசித விவித, விசித்ராநந்தாஸ்சர்ய”” என்றும்‌ சொல்லுகிறபடியே திவ்யாம்பர, திவ்யாபரண, திவ்யமால்ய திவ்யாயுதாதி;, ஸர்வாலங்கார பூரி நிதனாய்‌, அநந்த கோடி ஸூர்ய ப்ரகாஸயனா யெழுந்தருளி யிருக்கிறது.

வ்யூஹமாவது :– திருப்பாற்கடலிலே ப்ரஹ்ம ருத்‌ர தேவேந்தராதி; தேவதைகளுக்கு ஸேவ்யனாய்‌, அநந்தாவதாரங்களுக்கும்‌ முதலாய்‌, ‘ உத்பத்தி ஸ்திதி லயங்களுக்குக்‌ கர்த்தாவா யெழுந்தருளி யிருக்கிறது.-விபவமாவது * பரித்ராணாய ஸாதூநாம்‌”‘ என்கிறபடியே துஷ்ட நிக்ரஹ தர்ம ஸம்ஸ்தாபநாதிகள்‌ பண்ணக்‌ கடவதான ராம கிருஷ்ணாதி யவதாரங்கள்‌-அந்தர்யாமித்‌வமாவது “அந்தர்‌ பஹிஸ்ச தத்‌ ஸர்வம்‌ வ்யாப்ய நாராயண: ஸ்தித:” என்றும்‌, **அந்தர் பஹிஸ்‌ ஸகல வஸ்துஷு ஸந்தமீரம்‌” என்றும்‌ சொல்லுகிறபடியே வ்யாப்யவ்யாபகனாய்‌; ஆப்ரஹ்ம பிபீலிகாதி; ஸகல சேதநா சேதனங்களுக்கும்‌ அந்தர்யாமியாய்‌, ஸர்வ கதனாய்‌, பரி பூர்‌ணனா யெழுந்தருளி யிருக்கிறது.அர்ச்சாவதாரமாவது:-ஸர்வ ஸுலபமாய்‌, சேதனர்க்கு அபிமதமான த்ரவ்யத்திலே விக்‌ரஹமாய்‌, ஸகல மோஹனமாய்‌, கோயில்களிலும்‌, கிருஹாதிகளிலும் எழுந்தருளி யிருக்கிறது.

அதில்‌ ஆழ்வார்‌ பாடின திருப்பதிகள்‌ நூற்றெட்டு; அதில்‌ முக்யமான திருப்பதிகள்‌:– 6. *!ஸ்ரீரங்க மங்களமணிம்‌ கருணா நிவாஸம்‌ ஸ்ரீவேங்கடாத்‌ரி நிகராலய கான மேகம்‌ | ஸ்ரீ ஹஸ்தி சைல சிகரோஜ்ஜ்வல பாரிஜாதம்‌ ஸ்ரீம்‌ நமாமி ஸிரஸா யது ஸைல தீபம்‌ || *’ என்று சொல்லுகிறபடியே புஷ்ப த்யாக; போக, ஜ்ஞான மண்டபங்கள்‌. அதிலும்‌ ப்ரதானமானது ஸாக்ஷாத்‌ பரம பதமான
நம் பெருமாள் கோயில்‌. எங்ஙனே என்னில்‌ **காவேரீ விரஜா ஸேயம்‌ வைகுண்டம்‌ ரங்க மந்திரம்‌। ஸ வாஸு தேவோ ரங்கேஸ : ப்ரத் யக்ஷம்‌ பரமம்‌ பதம்‌ || ‘
‘ என்று சொல்லுகிறபடியே. இப்படி ஸாக்ஷாத்‌ பரம பதமான நம்‌ பெருமாள்‌ கோயிலுக்கு ராஜாவானவர்‌ பரமபதநாதர்‌,-ஸ்ரீ ரங்கராஜர்‌. இப்படி ஸ்ரீரங்கராஜரான பெரிய பெருமாளுக்குத் திருநக்ஷத்ரம்‌ பங்குனியில்‌ ரேவதி; திருநாமங்கள்‌
ஸ்ரீரங்கராஜர்‌ நம்பெருமாள்‌. அழகிய மணவாளப் பெருமாள்‌, தகட்ட பெருமாள்‌. ஆபரணத்துக்கு அழகு கொடுக்கும் பெருமாள்‌ i மந்தா சங்கு மறையும்‌ பெருமாள்‌, தேவசிகாமணிப்பெருமாள்‌;
சிஷ்யைகள்‌ ஸ்ரீ பூமி நிளாதிகளான நாச்சிமார்கள்‌.

தனியன்கள் திருவவதார ஸ்தலங்களும் அருளிச் செய்துள்ளார்

நாதமுனிகளின் சிஷ்யர்‌ -உய்யக் கொண்டார்‌, குருகைக் காவலப்பன்‌, பிள்ளை கருணாகர தாஸர்‌, நம்பி கருணாகர தாஸர்‌, ஏறு திருவுடையார்‌ திருக் கண்ண மங்கை யாண்டான்‌, வானமாமலை தெய்வ நாயக
ஆண்டான்‌, உருப்புட்டூராச்சான் பிள்ளை, சோகத்தூராழ்‌வான்‌, கீழையகத் தாழ்வான்‌, மேலையகத் தாழ்வான்‌, ஆக சிஷ்யர்‌ பதினொரு பேர்களும்–உய்யக்கொண்டாரின் சிஷ்யர்‌கள் மணக்கால் நம்பி,
திருவல்லிக்கேணி பாண் பெருமாள்‌ அரையர்‌, சேட்டலூர்‌ செண்டலங்கார தாஸர்‌, ஸ்ரீபுண்டரீக தாஸர்‌, கோமடம்‌ திருவிண்ணகரப்பன்‌, உலக பெருமாள்‌ நங்கை முதலானோர்-மணக்கால் நம்பியின் சிஷ்யர்‌கள் -ஆளவந்தார்‌ திருவரங்கப் பெருமாளரையர்‌, தெய்வத்துக்கரசு நம்பி, பிள்ளை யரசு நம்பி, சிறுபுள்ளூருடையார் பிள்ளை, திருமாலிருஞ்‌ சோலை தாஸர்‌, ‘ வங்கிபுரத்தாச்சி முதலானோர்-

ஆளவந்தாருடைய சிஷ்யர்கள் பெரியநம்பி, பெரியதிருமலைநம்பி, திருக்‌ கோட்டியூர்‌ நம்பி, திருமாலையாண்டான்‌, தெய்வ வாரியாண்‌ டான்‌, வானமாமலை யாண்டான்‌, ஈஸ்வராண்டான்‌, ஜீய
ராண்டான்‌. ஆளவந்தாராழ்வான்‌, திரு மோகூரப்பன்‌, திருமோகூர்‌ நின்றார்‌, தேவப் பெருமாள்‌ மாறனேர் நம்பி, திருக்கச்சி நம்பி, திருவரங்கப் பெுமாளரையர்‌, திருக்‌ குருகூர்‌ தாஸர்‌, வகுளாபரண ஸோமயாஜியார்‌, அம்மங்கி, ஆள் கொண்டி, வடமதுரையில்‌ பிறந்த கோவிந்த தாஸர்‌, ராஜ புரோஹிதரான நாதமுனிதாஸர்‌, ரங்க சோழாவின்‌ ராஜ பத்நியான திருவரங்கத்தம்மன்‌ ஆக சிஷ்யர்‌களில் ப்ரதானரானவர்‌ இருபத்திருவர்‌.-பெரிய நம்பியின் சிஷ்யர்‌கள் திருக்கச்சிநம்பி, எம்பெருமானார்‌. மலை குனிய நின்றார்‌, ஆரியூரில்‌ ஸ்ரீசடகோபmதாஸர்‌, அணியரங்கத் தமுதனார்‌ பிள்ளை, திருவாய்க் குலமுடையார்‌ பட்டர்‌ முதலானவர்கள்‌

இளையாழ்வாருக்குயதிராஜருக்கு தேவப் பெருமாள்‌ யதிராஜரென்னும்‌ திருநாமஞ்‌ சாத்தியருளினார்‌-நம்பெருமாள்‌ உபய விபூதிகளுக்கும்‌ யதிராஜரைப்‌ பட்டங் கட்டி உடையவரென்று திருநாமம்‌ சாத்தி யருளினார்‌. திருவரங்கப்பெருமாளரையர்‌ இவருடைய கைங்கர்யத்‌துக்குத்‌ திருவுள்ளமுகந்து, த்வயார்த்தம்‌ ஸாதித்தருளி லக்ஷ்மண முனி என்கிற திருநாமமும்‌ சாத்தி அருளினார் –திருக்கோட்டியூர்‌ நம்பி திருமந்த்ரார்த்தமும்‌ எம்பெருமானார்‌ என்கிற திருநாமமும்‌ சரம ஸ்லோ கார்த்தமும்‌ ஸாதித்தருளினார் –திருமாலை ஆண்டான் திருவாய்மொழி முத லான நாலாயித்துக்கும்‌ வ்யாக்யானஙகள்‌ ஸாதித்தருளி –சடகோபன்‌ பொன்னடி என்கிற திருநாமம்‌ சாத்தி, தம்முடைய குமாரரான சுந்தரத் தோளுடையாரை இவர்‌ திருவடி களிலே ஆஸ்ரயிப்பித்தருளினார்‌-பெரியதிருமலைநம்பி ஸ்ரீமத்‌, ராமாயண வ்யாக்‌யானம்‌ சாதித்தருளி, கோயிலண்ணனென்‌கிற திருநாமம்‌ சாத்தி அருளினார் -ஆதி கேசவப் பெருமாள்‌ சாத்தின திருநாமம்‌ பூத புரீஸர்‌. திருவேங்கடமுடையான்‌ சாத்தின திருநாமம்‌ தேஸிகேந்த்ரர்‌-சரஸ்வதி தேவி சாத்தி அருளின திருநாம ஸ்ரீ பாஷ்யகாரர்-பின்னும்‌ விஸேஷ திரு நாமங்கள்‌ – யதீந்த்ரர்‌, யதி குலதுர்யர்‌, யதி ஸார்வ
பெவ்மர்‌, யதிசக்ரவர்த்தி, யதிபதி,யதி நாதர்‌,யோகிந்த்ரர்‌, க்ருபா மாத்ர ப்ரஸரந்நாசார்யர்‌

நடாதூரம்மாள்‌ ஸ்ரீபாதத்திலே ஸ்ருத ப்ரகாஸிகாரும்‌ கிடாம்பி அப்பிள்ளானும் – அப்பிள்ளான்‌ ஸ்ரீபாதத்திலே தூப்பில் பிள்ளை என்னும்‌ வேதாந்தாசார்யர்‌. இவருக்குத்‌ திருவவதார ஸ்தலம்‌ பெருமாள்‌ கோயில்‌. திருநக்ஷத்ரம்‌ புரட்டாசி மாஸம்‌ திருவோணம்‌- திருத்தகப்‌பனார்‌ அநந்த ஸூரிகள்‌ -குடி தூப்பில்‌. குலம்‌ வடமாள்‌, விஸ்வாமித்ர கோத்ரம்‌. திருநாமங்கள்‌ தூப்பில்‌ பிள்ளை, வேங்கடாசார்யர்‌-வேதாந்தாசார்யர்‌. திருவாராதனம்‌ திருவேங்கடமுடையான்‌, திருப்‌பாணாழ்வார்‌. ஹயக்ரீவோபாஸ்தி. ஆசார்யர்‌ கிடாம்பி அப்பி(பு?)ள்ளான்‌, சிஷ்யர்‌ குமாரரான நயினாராசார்யரும்‌,
ப்ரஹ்ம தந்த்ர ஸ்வதந்த்ர ஜீயரும்‌.–ப்ரஹ்ம தந்த்ர ஸ்வதந்த்ர ஜீயர்‌ ஸ்ரீ பாதத்திலே கிடாம்பி திருமலை ஐயங்கார்‌ ஆஸ்ரயித்தார்‌. அவர்‌ சிஷ்யர்‌ திரு நாராயணபுரத்தாய்‌ ஸ்வாமிகள்

ப்ரமாணத் திரட்டுக்கள்
(பிரகாசிக்கிற கிரீடம்‌, தோள் வளைகள்‌, ஹாரம்‌, பதத கழுத்தணி ஸ்ரீகெளஸ்துபம் , திருவரை நாண் , திருச்சிலம்பு முதலிய திருவாபூரணங்கள் – சங்கு , சக்கரம்‌, வில்‌ போன்ற ஆயுதங்களாலும்‌ (உன்‌ சேர்த்தி யாலே) பிரகாசிக்கும்‌ திருத் துழுாயை உடைய வனமாலையாலும்‌ பிரகாசிப்பவனை ]

[தனக்குத் தக்கவையாய்‌, பலளிதமானவையாய்‌, விசித்ரமானவையாய்‌, எல்லையற்ற ஆஸ்சர்யத்தை உடையவையாய்‌, நித்யமானவைமாய்‌, குற்றமற்றவையாய்‌ , மிகச் சிறந்த நறுமணமுடையவையாய்‌, மிகச் சிறந்த மென்மை உடையவையாய்‌, மிகச் சிறந்த ஒளியையும் வுடையவையான கிரீடம்‌, மகுடம்‌, திருச் சுட்டி, திருச் செவி மலர்‌, மகர குண்டலங்கள்‌, திருக் கழுத்தணி, ஹாரம்‌, திருத் தோள்வளை, முன் கை வளை, ஸ்ரீவத்ஸமென்னும்‌ திருமறு, ஸ்ரீ கெளஸ்துபம்‌, திரு முத்து வடங்கள்‌, திரு உ.தரபந்தனம்‌, பீதாம்பரம்‌, அரை நூல்‌ பட்டிகை, திருச் சிலம்பு முதலான எண்ணிறந்த திவ்யாபரணங்கள உடையவனே

ஸ்ரீரங்கத்திற்கு மங்கள மணி போன்றிருக்கும்‌ ஸ்ரீரங்க நாதனயும்‌, கருணை நீர்க்கு இருப்பிடமாய்‌, திரு
வேங்கடமலையின்‌ உச்சியிலிருக்கு கார் மேகம்‌ போன்ற திருவேங்கட முடையானையும்‌, அத்திகிரிரின்‌ உச்சியில்‌ விளங்கும்‌ பாரிஜாதம்‌ போன்‌றவனாய்‌, பெருந்தேவியின்‌ கணவனுமான பேரருளாளனையும்‌, யதுகிரிக் குன்‌றிலிட்ட விளக்‌குப்‌ போன்ற திரு நாரணனையும்‌ தலையால்‌ வணங்குகிறேன்‌.

பரமபதத்தில்‌ உள்ள அந்த விரஜா நதியே இங்கு காவேரி நதியாய்‌ உள்ளது. வைகுண்டமே திருவரங்கம்‌
பெரிய கோயிலாய்‌ உள்ளது. அந்தப்‌ பரவாஸுதேவனே ரங்கநாதனாக இருக்கிறான்‌. இவ் வண்ணமாக ஸ்ரீரங்கம்‌ நேரே காணும்‌ பரம பதமாய்‌ உள்ளது.

லக்ஷ்மி தேவியாகிற கற்பகக்‌ கொடியின்‌ உயர்ந்த ஸ்தனங்களாகிற பூங்கொத்துக்களில்‌ ஸஞ்சரிக்கும்‌ ஸ்ரீரங்கராஜனாகிற வண்டு என்‌ மனத் தாமரையில்‌ விளையாடக்‌ கடவது

எவருடைய புருவ நெரிப்பின்‌ தார தம்யத்தாலே ஒரு வன்‌ அடிமையாகவும்‌, மற்றொருவன்‌ ஆண்டானாகவும்‌ வேறுபட்டு இருக்கை யாகிற மேடு பள்ளமுடையதாக இவ்‌ வுலகம்‌ விளங்குகிறதோ, அத்தகைய ஸ்ரீரங்கநாச்சியாருக்கு நமஸ்காரம்‌.

ஸ்ரீரங்க சந்திரனைப்‌ பெரிய பிராட்டியாரோடு விளையாட விட்டு விட்டு, எல்லாச்‌ சேதநாசேதனங்களையும்‌ நியமிக்கும்‌ அதிகாரத்‌தைத்‌ தம்‌ அங்குளி முத்ரையாலேயே எவர்‌ நிர்வஹிக்கிறாரோ, அந்த ஸேனை முதலியாரை வேறு புகலற்றவர்களாய்‌ அடி பணிந்தோம்‌.

அரசரால்‌ கல்பிக்கப்பட்ட பொற்கிழியைக்‌ கைப்‌ பற்றுவதற்காக குருமுகமாக ஒதாமலே எல்லா வேதங்களையும்‌ முழங்கியவராய்‌. ரங்கநாதனுக்கு நேரே மாமனாராய்‌, அந்தணர்‌ தலைவரான அந்தப்‌ பெரியாழ்வாரை வணங்குகிறேன்‌.

நீளாதேவியின்‌ உயர்ந்த திருமுலைத் தடங்களாகிற மலையில்‌ உறங்கும்‌ கண்ணனே உணர்த்தி, கணக்கற்ற வேத வாக்யங்களினின்றும்‌ தேறும்‌ தன்‌ பாரதந்த்ரியத்தை அவனுக்கு ஒதுவித்தவளாய்‌, தான்‌ சூடிக் களைந்த மாலையால்‌ கட்டப்பட்ட அவனை வலியச் சென்று அனுபவித்தவளான அந்த கோதா தேவிக்கு மறுபடியும்‌ மறுபடியும்‌ நமஸ்காரம்‌.

அரசனைப் போல்‌ உபசரிக்கத் தக்க ரங்க நாதனையே அந்தப்‌ பரவாஸுதேவனாக எண்ணித்‌ திருப் பள்ளியெழுச்சி யாகிற திவ்ய ப்ரபந்தத்தைப்‌ பாடி யருளிய தொண்டரடிப்‌ பொடிகளைத்‌ துதிக்கிறேன்‌

இரண்டு காவேரிகளுக்கும்‌ நடுவில்‌ திருவரங்கத்தில்‌ சயனித்திருக்கும்‌ அரங்கனை அனுபவித்துப்‌ பேரானந்த மடைந்த நெஞ்சை யுடையவராய்‌, வேறு எந்த விஷயத்தையும்‌ தன்‌ கண்கள்‌ காண மாட்டா என எவர்‌ அறுதியிட்‌டாரோ, அத்தகைய முனி வாஹனரை மனனம்‌ செய்கிறோம்‌.

எவருடைய ஒளி மிக்க வாக்குகளாகிற கிரணங்‌களாலே அஜ்ஞானத்தினால்‌ ஏற்படும்‌ உள்ளிருள்‌ அழிந்ததோ, அத்தகைய கவிலோக ஸுர்யனான கலிகன்றியை தியானிக்கிறேன்‌.

இப்படிப் பட்டதென்று நினைக்க முடியாததும்‌, ஆஸ்‌சர்யமானதும்‌, (பகவானுடைய அருளாலே) எளிதாகக்‌
கிடைத்ததுமான ஞானத்தினுடையவும, வைராக்யத்தினுடையவும்‌, குவியல்‌ போன்றவராகவும்‌, பகவானை மனனம்‌ செய்பவராகவும் ஆழ்ந்த பகவத்‌ பக்திக்குக் கடலாகவுமிருக்‌கிற நாதமுனிகளுக்கு நமஸ்காரம்‌ செய்கிறேன்‌.

நாதமுனிகளின்‌ நினைவில்‌ நிலை நிற்பவரும்‌, ஸூத்த; ஸத்வ மயராயிருப்பவரும்‌, பகவானுடைய மற்றொரு அவதாரம்‌ போன்றுள்ளவருமான புண்டரீகாக்ஷரை (உய்யக்‌ கொண்டாரை ) வணங்குகிறேன்‌.

நாத முனிகளுடைய திருவடியில்‌ ஈடுபட்டவராய்‌, ஜ்ஞான யோக பக்தி யோகச்‌ செல்வங்களை உடையவரான குருகைக் காவலப்பன்‌ என்னும்‌ யோகி, ஸ்ரேஷ்டரை எப்‌ போதும்‌ தலையால்‌ வணங்குகிறேன்

‌(பரசு ராமனைப் போல்‌) பொறுமையை (பூமியை) விடாதவராய்‌, (ராமனைப்‌ போல) புண்ய ஜனங்களை (ராக்ஷஸர்‌களை) பாதிக்காதவராய்‌, (பலராமனைப் போல்‌)மதுவான மதம்‌ இல்லாதவரான நாலாவது ராமனை (மணக்கால் நம்பியை) உபாஸிக்கிறோம்‌.பகவத்‌ பக்தியாகிற பாற்கடலில்‌ குடைந்தாடப்‌ பெற்றவராய்‌, (அதனால்‌) ஆதியாத்மிகம்‌, ஆதி தைவிகம்‌, ஆதிபெனதிகம்‌ என்னும்‌ மூன்று தாபங்களும்‌ ஆறப்‌ பெற்றவரான ஸ்ரீராமன்‌ என்னும்‌ மணக்கால்‌ நம்பியை ஆஸ்ரயிக்கிறேன்‌ .

ஸ்ரீராம மிஸ்ரராம்‌ மணக்கால்‌ நம்பியின்‌ திருவடித்‌ தாமரையில்‌ வண்டாயிருப்பவரும்‌, ஸ்ரீயாமுநாசார்யருடைய சிறந்த புத்திரரும்‌, குணத்தில்‌ மிக்கவரும்‌, ஸ்ரீரங்கராஜ கருணையினாலே அளிக்கப் பெற்றவரும்‌, ஸ்ரீபாஷ்யகாரரை சிஷ்யராகச்‌ கொண்டவருமான திருவரங்கப் பெருமாளரையரைத்‌ துதிக்கிறேன்‌.

ஒன்றியொன்றி உலகம்‌ படைத்த விஷ்ணுவின்‌ (சேதந லாப,) மநோரதம்‌ எவராலே நிறைவேற்றி வைக்கப்‌ பட்டதோ, கருணை நிரம்பியவரும்‌, யதிராஜருடைய ஆச்சார்யருமான அத் தகைய பெரிய நம்பிகளை ஆஸ்ரயிக்கிறேன்‌-

(பிரமனுக்குத்‌ தந்தையான திருவேங்கடமுடை யானாலேயே அப்பா” என்று கூப்பிடப் பெறுகையாலே) உலகிற்குப்‌ பாட்டனான பிரமனுக்கும்‌ பாட்டனாராய்‌, ஸ்ரீ பாஷ்யகாரருக்குச்‌ சிறந்த ஆசார்யராய்‌, அவருக்கு வால்மீகியின்‌ வாக்காகிற ஸ்ரீராமாயணத்தின்‌ பொருளை உபதேசித்தவரான பெரிய திருமலை நம்பிக்குப்‌ பலகால்‌ வணக்கம்‌.

பக்தர்களுக்கு அமுதம்‌ போன்றவராய்‌, கேட்‌பார்ககுக்‌ கேட்டதைக்‌ கொடுக்கும்‌ கற்பக வ்ருக்ஷமாய்‌,
யாமுநாசார்யரின்‌ திருவடியில்‌ அன்பு கொண்டவராய்‌, ஸ்ரீபாஷ்யகாரருக்குத்‌ திருவாய்மொழியின்‌ பொருளாகிற பரம ஹிதத்தை உயதேசித்தவராய்‌, நல்லறிவு மிக்கவரான திருமாலை யாண்டானைத்‌ தலையாலே வணங்குகிறேன்‌-

யாமுநாசார்யருடைய நல்ல சீடரும்‌, திருவரங்கம்‌ பெரிய கோயிலில் வாழ்பவரும்‌, ஞானம்‌, பக்தி முதலான வற்றுக்குக்‌ கடலா யிருப்பவருமான மாறனேரி தம்பியை பஜனம்‌ செய்கிறேன்‌

ஸ்ரீவரதராஜனின்‌ கருணைக்கு இருப்பிடமாய்‌, மிகச்‌ சிறந்த ராமாநுஜ முனிக்கும் மதிக்கத் தக்கவராய்‌,
நல்லோர்கள்‌ சென்று சேருமிடமான திருக்கச்சி நம்பியை வணங்குகிறேன்‌

கண்ணனின்‌ அவதாரத்தால்‌ மதுரையைப் போலவும்‌, ராமனின்‌ அவதாரத்தால்‌ அயோத்தியைப் போலவும்‌, கருணைக்கோர்‌ இருப்பிடமான யதிராஜருடைய அவதாரத்‌தால்‌ ஸ்ரீ பெரும்பூதூர்‌ மிகப்‌ புண்ணியமான நகரமாயிற்று

திருக் கோட்டியூர்‌ நம்பியின்‌ நல்ல பிள்ளையாய்‌, யதிராஜரின்‌ திருவடிகளை அடைந்தவராய்‌, காஸ்யப கோத்‌ரத்தில்‌ உதித்தவரான நாராயணன்‌ என்னும்‌ திருநாமமுள்ள தெற்காழ்வானை ஆஸ்ரயிக்கிறேன்‌-

பெரிய திருமலை நம்பியின்‌ நல்ல பிள்ளையாய்‌, இளையாழ்வாரான உடையவரின்‌ திருவடிகளை ஆஸ்ரயித்தவராய்‌, திருமலைக்‌ குடியில்‌ அவதரித்தவரான பிள்ளை திருமலை நம்பியை ஆஸ்ரயிக்கிறேன்‌.

பாரத்வாஜ குலத்‌துதித்தவராய்‌, ராமாதுஜ முனிவரின்‌ திருவடிகளை ஆஸ்ரயித்தவராய்‌, கருணைக்கோர்‌ இருப்பிடமான வங்கி புரத்து தம்பியை வணங்குகிறேன்‌.

எம்பெருமானாருடைய நல்ல சீடராய்‌, ஸாளக்ராமம்‌ என்னும்‌ ஊரில்‌ வாழ்ந்தவராய்‌, ஐந்தாம்‌ உபாயமான ஆசார்ய நிஷ்டை கை வரப் பெற்றவரான ஸாளக்ராம ஐயன்‌ எனப்படும்‌ வடுக நம்பியை ஆஸ்ரயிக்கிறேன்‌.

பாரத்வாஜ குலத்தில்‌ உதித்தவராய்‌, பெரிய நம்பிகளின்‌ திருக் குமாரராய்‌, எம்பெருமானாரை ஆஸ்ரயித்தவரான ஸ்ரீ புண்டரீகாக்ஷரை வணங்குகிறேன்‌.

திராவிட வேதத்தின்‌ ஸாரத்தை அறிந்தவராய்‌, எம்பெருமானாரின்‌ திருவடிகளை ஆஸ்ரயித்தவராய்‌, பேரறிவாளரான திருக் குருகைப்‌ பிரான்‌ பிள்ளானைத்‌ தினந்தோறும்‌ தலையால்‌ வணங்குகிறேன்‌.

திருமாலை யாண்டானின்‌ திருக் குமாரராய்‌, எம்பெருமானாரின்‌ நல்ல சீடராய்‌, சிறந்த கருணைக்கு இருப்பிடமான சுந்தரத் தோளுடையார்‌ என்னும்‌ ஆசார்யனை வணங்குகிறேன்

ஸ்ரீ பாஷ்யகாரருக்கு நல்ல சீடராய்‌, கமல நயன பட்டருடைய குமாராய்‌, எம்பாரின்‌ தம்பியாய்‌, கருணைக்கு இருப்பிடமான சிறிய கோவிந்தப்‌ பெருமாளை வணங்குகிறேன்‌.

ஸ்ரீரங்கத்தில்‌ பங்குனி ஹஸ்தத்தில்‌ அவதரித்தவராய்‌, அணி யரங்கத் தமுதனாரின்‌ குமாரராய்‌, எம்பெருமானாரின்‌ திருவடியைப்‌ பற்றியவரான திருவரங்கத்தமுதனாரை ஆஸ்ரயிக்கிறேன்‌.

எம்பெருமானாருடைய நல்ல சீடராய்‌, வேத ஸாஸ்த்ரார்த்தால்‌ பொருள்களைச்‌ செல்வமாக உடையவராய்‌, ஸந்யாஸ ஆஸ்ரமத்தை உடையவரான தேவராஜ முனிவர்‌ என்னும்‌ அருளாளப்‌ பெருமாள்‌ எம்பெருமானாரை ஆஸ்ரயிக்கிறேன்‌

ஜ்ஞாந வைராக்யம்‌ நிறைந்தவராய்‌, எம்பெருமானாரின்‌ திருவடிகளைப்‌ பற்றியவராய்‌, நாலாவது ஆஸ்ரம மாகிய ஸந்யாஸத்தை ஏற்றுக் கொண்டவரான முனிவர்‌ தலைவராம்‌ ஆட் கொண்ட வில்லி ஜீயரை வணங்குகிறேன்‌-

(எதிரிடும்‌) கவிகளுக்கும்‌, தார்க்கிகர்களுக்கும்‌ சிங்கம்‌ போன்றவராய்‌, (ஜஞாநம்‌, பக்தி, வைராக்யம்‌ முதலான) செல்வங்கள்‌ நிறைந்தவராய்‌, “வேங்கட நாதன்‌ ” என்னும்‌ திருநாமமுடையவரான ஸ்ரீ வேதாந்த தேசிகர்‌ என்‌ நெஞ்சில்‌ எப்போதும்‌ வாழ்வாராக.

கூரத்தாழ்வானுக்குப்‌ பிள்ளையாய்‌, ஸ்ரீபராஸர பட்டருக்குத்‌ தம்பியான ஸ்ரீராம பிள்ளயை ஆஸ்ரயிக்கிறேன்‌.

ஸ்ரீபராசர பட்டருடைய கருணையினால்‌ சமஸ்த உண்மை யறிவையும் வுடையவராய்‌, ஸம்ப்ரதாய ப்ரவர்த்தராய்‌, ஸ்ரீராமப் பிள்ளயின்‌ குமாரரான வாக்கினால்‌ வென்றார்‌ பட்டருக்கு அடிமை செய்கிறேன்‌.

கூர குலத்திற்குத்‌ தலைவராய்‌, மிகச் சிறந்தவராம்‌, எம்பெருமானார்‌ அருளிய ஸ்ரீபாஷ்யத்தின்‌ பொருள்களை (ஸ்ருத ப்ரகாசிகையால்‌) விரித்துக் காட்டியவரான ஸதாம்‌ பட்டரை வணங்குகிறேன்‌.

ஸ்ரீபராசர பட்டரின்‌ சீடராய்‌, திருவரங்கம்‌ பெரிய கோயிலை ரக்ஷிப்பவராய்‌, ஞானம்‌ முதலான குணங்களுக்குக்‌ கடலா யிருப்பவரான நலந் திகழ்‌ நாராயண ஜீயரை வணங்குகிறேன்‌

வேதாந்தி தஞ்சீயராகிற அமுதக்‌ கடலினின்றும்‌ மிகச்‌ சிறந்ததான வேதப் பொருளமுதப்‌ [பெருக்கைப் பருகிப்‌ பொழிபவராய்‌, கருணை (நீர்‌) நிறைந்த (மேகம்‌ போன்றவரான திருக்கலிகன்‌றி தாஸராம்‌ நம்பிள்ளையைச்‌ சரணடைகிறேன்‌.

ராமாநுஜர்‌” என்னும்‌ திருநாமமுள்ள கந்தாடை யாண்டானின்‌ நல்ல பிள்ளையாய்‌, உலகாசிரியரான நம்‌பிள்ளையின்‌ கருணைக்குப்‌ பாத்திரராய்‌, நற்குணக்கடலான வாரணாதீஸரை (கந்தாடை தோழப்பரை) வணங்குகிறேன்‌-

வாதூல குலத்தில்‌ உதித்தவராய்‌, பச்சை வாரணப்‌ பெருமாளின்‌ பிள்ளையாய்‌, கந்தாடை யாண்டானின்‌ பேரனை ஈயான்‌ எனப்படும்‌ ராமாநுஜாசார்யரை வணங்குகிறேன்‌ –

வாதூல குலத்துக்கு ‘ஆபரணமா யிருப்பவராய்‌, ஈயானின்‌ குமாரராய்‌,ஜ்ஞாந வைராக்யங்கள்‌ நிறைந்தவரான திருக் கோபுரத்து நாயனாரை வணங்குகிறேன்‌-

வாதூல குலக் கொழுந்தாய்‌, திருக் கோபுரத்து நாயனாரின்‌ குமாரராய்‌, உபய வேதாந்தச்‌ செல்வமுடையவரான தெய்வப் பெருமாள்‌ தோழப்பரை வணங்குகிறேன்‌-

வாதூல குல விளக்காய்‌, தெய்வப் பெருமாள்‌ தோழப்‌பருடைய நல்ல குமாரராய்‌, ஞானம்‌ முதலான குணங்களுக்குக்‌ கடலான தேவராஜ தோழப்பரை வணங்குகிறேன்‌.

உலகாரியரான நம்பிள்ளையின்‌ திருவடிகளில்‌ ஈடுபட்டவராய்‌, நடுவில்‌ திருவீதியில்‌ வாழ்பவராய்‌, கூரத்தாழ்‌வானுடைய குலமாகிய கடலுக்குச்‌ சந்திரன்‌ போன்‌றவரான நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டரை ஆஸ்ரயிக்கிறேன்‌-

ஞானமும்‌, வைராக்யமும்‌ நிறைந்தவராய்‌, திராவிட வேதமான திருவாய்மொழியின்‌ பாஷ்யத்தை அளித்தவராய்‌, என்‌ ஆசார்யரான பின்பழகிய பெருமாள்‌ ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்‌.

உலகாரியரான நம்பிள்ளையின்‌ திருவடித் தாமரையைப்‌ பற்றியவராய்‌, கருணைக் கடலாய்‌, உபய வேதாந்தச்‌ செல்வ முடையவரான (ஈயுண்ணி) மாதவாசார்யரை ஆஸ்ரயிக்கிறேன்‌ –

(ஈயுண்ணி) மாதவரின்‌ நல்ல குமாரராய்‌, அவருடைய திருவடித் தாமரையில்‌ ஆஸ்ரயித்தவராய்‌, வாத்‌ஸல்யம்‌ முதலான குணங்களை யுடையவரான (ஈயுண்ணி) பத்மநாபாசார்யரை ஆஸ்ரயிக்கிறேன்‌.

நாலூரானின்‌ வம்ஸத்தில்‌ உதித்தவராய்‌, (எம்‌பெருமானாரின்‌ சீடரான) எச்சான்‌ எனப்படும்‌ யறிஜ்ஜோரின்‌ குலத்திற்குத்‌ திலகமாய்‌, திராவிட வேதப் பொருளை அறிந்தவரான ஸ்ரீவராஹர்‌ எனப்படும்‌ நாலூர்ப் பிள்ளையை ஆஸ்ரயிக்கிறேன்‌

நாலூரில்‌ வாழ்பவரும்‌, ராமாநுஜார்யர்‌ எனப்படும்‌ நாலூர்ப்‌ பிள்ளையின்‌ குமாரரும்‌, குணமுடையவருமான தேவராஜர்‌ எனப்படும்‌ நாலூராச்சான்‌ பிள்ளைக்கு வணக்கம்‌.

ஆசார்ய ஹ்குதயத்தின்‌ பொருள்களை வியாக்கியான மிட்டுக் காட்டியவராய்‌, ஸ்ரீய:பதியின்‌ தாஸராய்‌, குற்றமற்றவரான தேவராஜ ரெனப்படும்‌ திருநாராயணபுரத் தாயியை ஆஸ்ரயிக்கிறேன்‌-

ஸ்ரீமத்‌ வேத மஹாசார்யரின்‌ திருவடித் தாமரையில்‌ பிரியாதே யிருப்பவராய்‌, தமிழ்‌ வேதாந்த தேசிகரான இளரிசைப் பிள்ளை நூறாண்டு வாழ்வாராக.

ஸ்ரீரங்காசார்யரின்‌ நல்ல குமாரராய்‌, ஞானம்‌ ஸமதமங்கள்‌ முதலான குணங்களுக்குக்‌ கடலாய்‌, திராவிட வேதாந்தத்திற்கு ஆசார்யரான ஸ்ரீ கேசவாசார்யரை வணங்குகிறேன்‌.

ஸ்ரீமத்‌ கேசவாசார்யரின்‌ திருவடித்‌ தாமரையில்‌ வண்டா யிருப்பவராய்‌, நல்ல திருவடிகளை (சீடர்களை) உடையவராய்‌, தாயின்‌ அடிமையைத்‌ தகர்த்தெறிந்த கருடனின்‌ திரு நாமத்தை உடையவரான கருடாசார்யரை வணங்குகிறேன்‌-

கேசவாசார்யரின்‌ நல்ல பிள்ளையாய்‌, அவருடைய திருவடித்‌ தாமரையை ஆஸ்ரயித்தவராய்‌, தமிழ்‌ வேதத்‌திற்கு ஆசார்யரான ஸ்ரீ நிவாஸாசார்யரை வணங்குகிறேன்‌-

குற்றமற்ற குணச்‌ செல்வங்களுக்குக்‌ கடைவீதியுமாயிருப்பவரும்‌, ஸம்ஸாரத்தைக்‌ கண்டு பயந்தவர்களுக்‌குப்‌ புகலா யிருப்பவருமான (ஆதி) வண் சடகோப ஜீயரை ஸரணடைகிறேன்‌-

வண் சடகோப ஜீயரின்‌ திருவடியைப்‌ பற்றியவராய்‌, கருணைக்கோர்‌ இருப்பிடமாய்‌, (குணச்‌) செல்வமுடையவரான ஸ்ரீமந் நாராயண ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்‌-

எவருடைய கடாக்ஷத்திற்கு இலக்கானவர்களுக்கு தான்‌ எப்போதும்‌ கிடைத்தற்கெளியவனோ, அத்தகையவராய்‌, யாமுநாசார்யரின்‌ பிள்ளையாய்‌, ஸ்ரீமத் க்ருஷ்ணர்‌ என்னும்‌ பெயரை யுடையவரான பெரிய வாச்சான் பிள்ளைக்கு வணக்கம்‌.

பெரியவாச்சான் பின்ளையின்‌ திருவடித் தாமரையில்‌ ஈடுபட்டவராய்‌. நற்குணக் கடலாய்‌, தமிழ் வேதத்துக்கு ஆசார்யரான ஸ்ரீரங்காசார்யரை வணங்குகிறேன்‌-

பர கால தாஸரெனும்‌ ரங்கராஜரால்‌, அறிந்த படியும்‌ கேட்ட படியும்‌ ஆசார்ய ஹ்ருதயத்தின்‌ பொருள்கள்‌ காட்டப் பட்டன-

ஸம்ஸாரக் கடலில்‌ அமிழ்ந்த சந்துக்களைத்‌ தாண்டுவிக்கும்‌ ஓடம்‌ போன்றதான (வாதிகேஸரி) அழகிய மணவாள ஜீயரின்‌ திருவடித் தாமரையை ஸராணடைகிறேன் –

எவருடைய அருளின்‌ பெருமையால்‌ எனக்கு எல்லா ஸித்திகளும்‌ கிடைத்தனவோ, அத்தகைய
ஸ்ரீ க்ருஷ்ணரெனும்‌ வடக்குத் திருவீதிப் பிள்ளையின்‌ திருவடித்‌ தாமரைகளைத்‌ தலையால்‌ எப்போதும்‌ வணங்குகிறேன்‌ –

ஸம்‌ஸாரமாகிற பாம்பினால்‌ கடிக்கப்பட்ட ஜீவனுக்கு உயிர் தரும்‌ மருந்தா யிருப்பவராய்‌, வடக்குத் திருவீதிப் பிள்ளையின்‌ குமாரரான பிள்ளை யுலகாசிரியராம்‌ ஆசார்யருக்கு வணக்கம்‌-

ஆசார்ய பரம்பரா ப்ராப்தமான திராவிட வேத ஹ்ருதயம்‌ வடக்குத்‌ திருவீதிப் பிள்ளையின்‌ குமாரரான
அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனாரால்‌ காட்டப்பட்டது,

திருமலை யாழ்வாராகிய திருவாய் மொழிப்பிள்ளைக்‌குத்‌ தாமே வலியச் சென்‌றழைத்து நற் பொருள்களை உப தேசிக்கையாலே *உதாரர்‌” என்னும்‌ அடைமொழி பெற்றவரான கூர குலோத்தமரை ஆஸ்ரயிக்கிறேன்‌

பிள்ளை யுலகாசிரியரின்‌ கிருபைக்குப்‌ பாத்திரரும்‌, கெளண்டின்ய குலத்திற்கு அலங்காரமா யிருப்பவரும்‌, எல்லா ஆத்ம குணங்களுக்கும்‌ இருப்பிடமானவருமான கூர குலோத்தம தாஸரை வணங்குகிறேன்‌.-

குந்தீ நகரத்தில்‌ பிறந்தவராய்‌,(ஆசார்யனுடைய) அருளாலே கிடைக்கப் பெற்ற பரம ப்ராப்யமான கைங்கர்‌யத்தை உடையவரான திருமலை யாழ்வாரெனும்‌ திருவாய்‌ மொழிப் பிள்ளைக்கு வணக்கம்‌.

ஸ்ரீ மானான மணவாளமாமுனிகள்‌ பாஷ்யகாரரேயாக விளங்குபவர்‌. அவர்‌ பாஷ்யத்தை விவரிக்கும் போது கேட்கும்‌ பேறு பெற்றவன்‌ அடியேன்‌.

திருமலை யாழ்வாராம்‌ திருவாய்மொழிப் பிள்ளயின்‌ தயைக்குப்‌ பாத்திரராய்‌, ஞானம்‌, பக்தி முதலான குணங்‌களுக்குக்‌ கடலாய்‌, எம்பெருமானாரிடம்‌ ஈடுபட்டவரான மணவாள மாமுனிகளை வணங்குகிறேன்‌

மணவாள மாமுனிகளின்‌ பாத ரேகை போன்‌றிருப்‌பவராய்‌, எப்போதும்‌ அவராலே தம் ஸ்வருப ஸ்‌திதி ப்ரவ்ருத்திகளாம்படி யிருப்பவரான வானமாமலை ஜீயரை ஆஸ்ரயிக்‌கிறேன்‌.

மணவாளமாமுனிகளின்‌ பாத கைங்கர்யத்தையே தாரகமாகக்‌ கொண்டவராய்‌, வாத்ஸல்யம்‌ முதலான குணங்களுக்குக்‌ கடலாயிருப்பவரான பட்ட நாத முனிவரை வணங்குகிறேன்‌.

எல்லா வேதாந்த ஸாரப் பொருள்களும்‌ நிறைந்த திருவுள்ளத்தை உடையவரும்‌, பெரிதான வாதூல கோத்‌ரத்தில்‌ உதித்தவர்களுக்குள்‌ சிறந்தவரும்‌, மணவாள மா முனிகளின்‌ திருவடிகளை ஆஸ்ரயித்தவரும்‌, என்‌ ஆசாரயருமான வரத நாராயணனை (கோயில்‌ கந்தாடை அண்ணனை) ஆஸ்ரயிக்கிறேன்‌ –

வேதாந்த தேசிகரின்‌ கடாக்ஷத்தாலே விரிவடைந்த அறிவை யுடையவராய்‌, மணவாள மாமுனிகளின்‌
கருணைக்கு ஒரே பாத்திரமா யிருப்பவராய்‌, ஸ்ரீ வத்ஸ கோத்திரத்தி லுதித்தவராய்‌, குற்றமற்ற குணங்களை யுடையவரான ப்ரதிவாதி பயங்கரம்‌ அண்ணாவை பக்தி யுடன்‌ ஆஸ்ரயிக்கிறேன்‌-

மணவான மாமுனிகளின்‌ திருவடித் தாமரைகளில்‌ வண்டா யிருப்பவராய்‌, திவ்ய ஜ்ஞானமளிப்பவராய்‌, மங்களமானவரான தேவராஜரெனும்‌ எறும்பி யப்பாவை வணங்குகிறேன்‌–

மணவாள மாமுனிகளின்‌ திருவடித் தாமரைகளில்‌ வண்டா யிருப்பவராய்‌, ஸ்ரீவத்‌ஸ கோத்ரத்தில் உதித்தவரான ப்ரணதார்த்தி ஹரர்‌ எனும்‌ அப்பிள்ளயை வணங்குகிறேன்‌-

மணவாள மாமுனிகளுடைய எல்லாக்‌ கைங்கர்ய பாரங்களையும்‌ தாமொருவரே வஹிப்பவராய்‌, அவரையே தெய்வமாகக்‌ கொண்டவரான ராமானுஜூரெனும்‌ அப்பிள்ளானை ஆஸ்ரயிக்கிறேன்‌-

சமம்‌, தமம்‌ முதலான குணங்களுக்கு ஒரே இருப்‌பிடமாய்‌, சரம பர்வமான ஆசார்யனிடம் நிறைய ஈடுபாட்டை யுடையவராய்‌, யதிராஜரின திருவடித் தாமரையில்‌ வண்டா யிருப்பவரான கந்தாடை போரேற்று நாயனார்‌ எனும்‌ நல்லாசிரியரை ஆஸ்ரயிக்கிறேன்‌-

மணவாள மாமுனிகளின்‌ திருவடித் தாமரையை ஆஸ்ரயித்தவராய்‌, நற் குணக் கடலான ஹீணைல் நாணிம்‌ ஹாசார்யரை வணங்குகிறேன்‌-

நம்மிடம்‌ வாத்ஸல்யத்தாலும்‌, கருணையாலும்‌ மணவாள மா முனிகள்‌ தாமே விரும்பி மறுபடி அவதரித்‌தாரோ என்னலாம்படி யிருப்பவரும்‌, அம் மா முனிகளின்‌ திருப் பேரனாராம்‌, பரம கருணை யுடையவருமான அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனார்‌ எனும்‌ என்‌ ஆசார்யரை ஆஸ்ரயிக்கிறேன்‌.

வரத நாராயண குருவென்னும்‌ கோயில்‌ கந்தாடை யண்ணனின்‌ திருவடிகளையே உபாயமாகக் கொண்டவரும்‌, மணவாள மா முனிகளின்‌ பெருங்‌ கருணைக்குப்‌ பாத்திரமா யிருப்பவரும்‌, சிறந்த குணங்களாகிற ரத்னங்கள்‌ நிறைந்த கடலா யிருப்பவருமான ஸ்ரீ நிவாஸாசார்யரென்னும்‌ கோயில்‌
கந்தாடை அப்பனை வணங்குகிறேன்‌

வானமாமலை (ஆதி) ராமானுஜ ஜீயருக்கு இனியவரும்‌, எல்லாமறிந்தவரும்‌, ஸ்ரீவத்ஸ கோத்ரத்தை அலங்‌கரிப்பவருமான ஆத்தான்‌ ராமாநுஜன்‌ பிள்ளையை வணங்குகிறேன்‌.

பட்டர்பிரான்‌ ஜீயருடைய விளங்கும்‌ கருணைக்குப்‌ பாத்திரமா யிருப்பவரும்‌, மிகவும்‌ சாந்தியையும் யுடையவரும்‌, பெருத்த ஞானம்‌, பக்தி, வைராக்யம்‌ முதலான குணங்‌களால்‌ மிகச் சிறந்து விளங்குபவரும்‌, எப்போதும்‌ எம்பெருமானைப்‌ பெற வேணும்‌ என்னும்‌ ஆர்த்தி நிறைந்து விளங்கு பவருமான பரவஸ்து அழகிய மணவாள ஜீயரை பஜிக்கிறோம்‌.

ஸ்ரீ மத் வாதூல கோத்ரத்திலுதித்த வரத நாராயண குருவாகிற கோயில்‌ கந்தாடை யண்ணனின்‌ பிள்ளையாயும்‌, எல்லா மறிந்தவரும்‌, எல்லார்க்கும் எளியவருமான ஸ்ரீநிவாஸாசார்ய ரென்னும்‌ கோயில்‌ கந்தாடை நாயனை பஜிக்கிறேன்‌

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கந்தாடை நாயன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பராங்குசரும் ஸ்ரீ பரகாலனும்–

September 9, 2026

வேத சதுஷ்ட (த்தயத்துக்கு-இங்கும் லுப்தம் ) அங்க உபாங்கங்கள் போலே இந் நாலுக்கும்
இரும் தமிழ் நூல் புலவர் பனுவல் ஆறும் மற்றை எண்மர் நன் மாலைகளும்- (இருமை -பெருமை -)-சூரணை-43-

அதாவது
ருகாதி வேத சதுஷ்டயத்துக்கும்-சீஷா வியாகரண நிருக்த சந்த கல்ப ஜோதிஷங்கள் ஆகிற ஆறு அங்கங்களும் மீமாம்ச நியாய புராண தர்ம சாஸ்த்ராத் உப அங்கங்கள் எட்டுமாய் இருந்துள்ள பதினாலும் போலே-(ஆதி -ஆயுர்வேதம் காந்தர்வ வேதம் அர்த்த வேதம் தனுர் வேதம் )-இந்த திராவிட வேத சதுஷ்டயதுக்கும்-இரும் தமிழ் நூல் புலவன் நங்கை யாளன்–பெரிய திருமொழி -1-7-10- -என்று
ஒருவரால் கரை காண ஒண்ணாத படி இருக்கிற திராவிட வேத சாஸ்த்ரத்தை கரை கண்ட ஞான ஆதிக்கத்தை உடையரான திரு மங்கை ஆழ்வார் உடைய-கலியன் வாயொலி செய்த பனுவல் -பெரிய திருமொழி -1-4-10–என்று சாஸ்திர ரூபங்களான பிரபந்தங்கள் ஆறும்–மற்றை ஆழ்வார்கள் எண்மர் உடையவும் விலஷணமான பிர பந்தங்களும் என்கை ..-நன் மாலைகள் என்றது –நய நின்ற நன் மாலை -முதல் திருவந்தாதி -57–என்று முதல் ஆழ்வார் பிரபந்தத்தில் அருளிச் செய்தது எல்லா பிரபந்ததுக்கும் ஒக்கும் என்று நினைத்து .

1-பொய் நின்ற ஞானமும் -திருவிருத்தம் -1––இத்யாதியாலே ஸ்வரூப விரோதியாய் வந்தேறி யான தோஷங்களை முதல் அடியிலே பேசினால் போலே பிரதமத்திலே -வாடினேன் வாடி-பெரிய திருமொழி -1-1-1- -இத்யாதியாலே ஸ்வ ரூபத்துக்கு வந்தேறியான தோஷங்களை கண்டு நொந்து பேசுகையும்

2-பகவத் ப்ராவண்ய ப்ராசுர்யமும்-பத்துடை அடியவர்க்கு எளியவன் –எத்திறம் ப்ராவண்ய ப்ராஸூர்யம் உருகுமால் நெஞ்சம் கார் ஒக்கும் காட்கரை அப்பன் –முலையோ முழு முற்றும் போந்தில பால்யாத் ப்ராவண்யம் –கணபுரம் கை தொழும் பிள்ளையை -பிறர் சொல்ல கேட்டு கை தொழும் இவள் -அருவி சோர் வேங்கடம் நீர் மலை உருகினாள் உள் மெலிந்தாள்

3-அதில் அர்ச்சாவதாரத்தில் ஊற்றமும்-செய்ய பரத்துவுமாய் –எய்துபவர்க்கு அர்ச்சாவதார எளிது -அவனாகும் நீள் கடல் வண்ணனே –-அன்று தேர் கடாவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொலோ-ஸ்ரீ கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் – விபவம் பாடப் பிறந்தவர் அர்ச்சையை பாடுவது ஏற்றம் –
காரார் திருவேங்கடம் காணும் அளவும் போய்–ஆராமம் சூழ் -மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யலாமே–ஏரார் முயல் வீட்டுக் காக்கை பின் போவதே

4-கலவியும் பிரிவும் மாறி மாறி வருகையும்அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மான் -ஆடி ஆடி அகம் கரைந்து –வாடி வாடி இவ்வாணுதலே –கோவை வாயாள் பொருட்டு–பூசும் சாந்து என் நெஞ்சமே -ஹர்ஷம் மிக்கு -மண்ணை இருந்து துழாவி —-ஏறிய பித்தினோடு -மாயன் திறத்தனள் இத்திரு தேறியும் தேறாமல் –யானும் ஏத்தி –ஏத்த ஏத்த எங்கு எய்தும் /ஒரு நாள் காண வாராயே–வருத்தம் -8-5-எல்லியும் காலையும் திருக்கடித்தானாம் தாயப்பத்தி விட்டு -ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்காமல் சன்னிஹிதன் -மைந்தனும் வந்திலன் என் செய்கேன் -திருக்கண்ணபுர பாசுரம் -வருத்தம் சொல்லி ஆழ்வார் –8-5-வருந்தாது இரு மட நெஞ்சே ஆறாம் பத்தில் நம் மேல் வினைகள் வாரா -சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸூ ச – நேரான மொழி பெயர்ப்பு-சோகப்படாதே முதலில் சொல்லி –

5–அந்ய உபதேச பேச்சும்–ஆறு கிண்ணகம்-தாய் மகள் தோழி

6-அது தன்னில் ராத்ரி வ்யசனமும்-மடல் எடுக்க ஒட்டாமல் -ஊரெல்லாம் துஞ்சி பெண் பிறந்தார் பெரும் துயர் காண மாட்டாமல் -கண்ணனும் வாரானால் -காகுத்தனும் வாரானால் -காப்பார் யார் -நங்கள் அடிகள்-தோழியும் நானும் ஒழிய -வியக்தமாக தோழி பாசுரம் இல்லை ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் அருளிச் செயலில் -கோழியும் கூவுகின்றதில்லையே -கூர் இருள் ஆயிற்றே

7-தூத ப்ரேஷணமும்-நான்கு தூது பதிகம் -அவ்வளவு தெம்பு இல்லையே ஸ்ரீ திருமங்கை ஆழ்வாருக்கு -நான்கு பாசுரங்களுக்கு பின்பே நேராக-ஓ மண் அளந்த தாடாளா -வரை எடுத்த தோளாளா –தண் குடந்தை நகராளா–மலையாள ஊட்டு இல்லையே

8-அநுகாரம்-கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் -பதிகம் -ஜெகதாகாரம் –வடவரை நின்றும் வந்து இன்று கணபுரம் இட வகை கொள்வது யான் என்று பேசினாள்

9–மடல் எடுக்கை-மாசறு சோதி பதிகம் –/ஸ்ரீ சிறிய திருமடல் ஸ்ரீ பெரிய திரு மடல் -ஸ்ரீ திரு நறையூர் நம்பி மேல் –

10/11/12-தோழி தாய் மகள் என்னும் அவஸ்தை த்ர்யாபத்திகளும்-சாழல் பதிகம் அவ்யக்தம் தோழி பதிகம்-இவள் திறத்து இருவரும் –2-7-/-7-2-திருத்தாயார் பதிகங்கள் -திண்ணம் என் இள மான் புகுமூர் திருக்கோளூரே-உண்ணும் சோறு / கள்வன் கொல்-அவனூர் வினவி சென்றாள்-கரியான் ஒரு காளை வந்து–அணி யாலி புகுவார் கொலோ -கள்வன் கொல் பிராட்டி திருக்கோலம் இன்றும் சேவை உண்டே -பொன்னிவர் மேனி -நாள் வேதம் ஓதும் -அவர் நாகரீகர் செல்வர் பெரியர்-என்னையும் நோக்கி
அன்னையும் நோக்கும் என்று அஞ்சுகிறேன் –அச்சோ ஒருவர் அழகியவா -ஸுந்தர்யம் இங்கு -எங்கனே நீ லாவண்யம் அங்கு-இரண்டும் மகள் பாசுரங்கள்
1

3-இந்திரிய பய குரோசம் -ஐவர் திசை திசை எற்றி-

14-ஈஸ்வர ஸ்வாதந்த்ர்ய பயம் ,-அரவணை மேல் பள்ளி கொள்ளும் முகில் வண்ணனே அறையோ முறையோ ஸ்ரீ திருவிருத்தம் —தடுப்பார் இல்லாத நிரங்குச ஸ்வாதந்தர்யம் /-தெள்ளியீர்-கை வளை கொள்வது தக்கதோ -ஸ்ரீ நீல மேக பெருமாள் -நீணிலா முற்றத்து நின்று இவள் நோக்கினாள்

15-அசக்ருத் பிரபத்தி கரணம்-ஐந்து தடவை-நோற்ற நாலும்–உலகுண்ட பெரு வாயா ஸ்ரீ நம்மாழ்வார் –பத்து தடவை இவர்–ஸ்ரீ நைமிசாரண்யம் -ஸ்ரீ திருவேங்கடமுடையான் -ஸ்ரீ அண்ணன் கோயில் -ஸ்ரீ திருவரங்கம் -ஸ்ரீ திரு விண்ணகர்–திரு நறையூர் இடர் கெடுத்த திருவாளர் –6-9-பாட்டு தோறும் திருப்பாத பிரஸ்தாபம் இங்கும் உலகுண்ட பெரு வாயா போலே–தேரெழுந்தூர் -திருக்குறுங்குடி மகள் பாவனையில் -9-5-/ 5-9 மானே நோக்கு அங்கு நாயகா பாவம் /

16-ஆர்த்தியின் உடைய கரை புரட்சிகளும்–மாலுக்கு ஏரார் விசும்பில் இருப்பு அரிதாம் படி அங்கு -ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சி இவர் –

17-பர துக்க அசஹிஷ்ணுதையாலே பல காலும் ஹிதம் சொல்லுகையும்–தொடக்கமான கட்டளையாலே மற்றை ஸ்ரீ ஆழ்வார் பிர பந்தங்களைக் காட்டிலும் ,இப் பிரபந்த சதுஷ்டியார்த்த ஜ்ஞாபகமாய் இருக்கையாலே ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் பிரபந்தங்களையே இதுக்கு அங்கங்கள் என்கிறது ..-

மற்றை ஸ்ரீ ஆழ்வார் பிரபந்தங்கங்களும் எதார்த்த அனுசாரிகளாய் , இதில் அர்த்த நிர்ணயத்துக்கு உறுப்பு ஆகையாலே .இதுக்கு உப அங்கங்கள் என்கிறது ..ஆக –சீஷாயாம் வர்ண சிஷா பத சமதிகமோ வ்யாக்ரியா நிர்வசோப்யாம் சந்தஸ் சந்தச் சிதவ் ஸ்யாத் கமயதி சமயம் ஜ்யோதிஷம் ரெங்கநாத ,கல்ப அனுஷ்டான முக்தம் ஹ்யுசித கமிதயோர் நியாய மீமாம்ச யோஸ் ஸ்யாத் அர்த்த வ்யக்தி
புராண ஸ்ம்ருதிஷூ ததனுகாஸ் த்வாம் விசின் வந்தி வேதா -ஸ்ரீ ரெங்கராஜ உத்தர ஸ்தவம்-18-
–என்கிற படியே அவை அந்த வேத சதுஷ்டயத்துக்கும் உபகார அங்கங்களாய் இருக்குமா போலே இவையும் கீழ் சொன்ன படியே இத வேத சதுஷ்டயத்துக்கும் உப அங்கங்களாய் இருக்கும் என்றது ஆய்த்து —

““அங்காநி வேதாஸ் சத்வாரோ மீமாம்ஸா ந்யாய விஸ்தர? ! புராணம்‌ த,ர்ம ஸாஸ்த்ரஞ்ச வித்‌,யா ஹ்யேதாஸ் சதுர்தஸ -என்கிறபடியே சதுர்தஸ வித்‌யாஸ்தாந வேதம் போல்‌ இங்கும்‌ இவருடைய ப்ரபந்தங்கள்‌ நாலும்‌ நாலு வேதத்தினுடைய ஸ்தாநேயாய்‌, “இருந் தமிழ் நூற் புலவன் மங்கை யாளன்‌?” (திருமொழி 1 – 7 – 10) என்றும்‌, ““கலியன் வாயொலி செய்த பனுவல்‌ ” (திருமொழி 1 – 4 – 10) என்றும்‌ சொல்லுகிற திருமங்கை யாழ்வாருடைய ப்ரபந்தங்களாறும்‌, அங்கங்களினுடைய ஸ்தாநத்திலேயாய்‌, மற்றை எட்டு ஆழ்வார்களுடைய ப்ரபந்தங்களும்‌ உபாங்கங்களா யிருக்கும் –

செங்கணாளி யிட்டிறைஞ்சும் சிங்க வேள் குன்றுடைய
எங்கள் ஈசன் எம்பிரானை இரும் தமிழ் நூல் புலவன்
மங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார்க் கலியன்
செங்கை யாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே-1-7-10–ஒருவரால் கரை காண ஒண்ணாத படி இருக்கிற தமிழ் சாஸ்திர உக்தமான படியைக் கரை கண்ட ஜ்ஞான ஆதிக்யத்தை உடையவர் –

வரும் திரை மணி நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானை
கரும் கடல் முந்நீர் வண்ணனை எண்ணிக் கலியன் வாயொலி செய்த பனுவல்
வரம் செய்த வைந்தும் ஐந்தும் வல்லார்கள் வானவர் உலகுடன் மருவி
இரும் கடல் உலகம் ஆண்டு வெண் குடைக் கீழ் இமையவராகுவர் தாமே —1-4-10-

அயல் நின்ற வல் வினையை அஞ்சினேன் அஞ்சி
உய நின் திருவடியே சேர்வான் நய நின்ற
நன் மாலை கொண்டு நமோ நாரணா வென்னும்
சொன் மாலை கற்றேன் தொழுது —
—57-நிர் வசன ரூபமாக நின்ற நல்ல மாலை கொண்டு-நயம் நின்ற நன் மாலை -நயம் -அன்பும் மகிழ்ச்சியும் -திருமந்த்ரார்த்தை நயப்பிக்கையில் ஈடுபட்ட திவ்ய பிரபந்தம் என்றுமாம்-ஸாஸ்த்ர ரூபமாய் இருக்கும் விலக்ஷணமான மாலையைக் கொண்டு என்றுமாம்-நயப்புடைத்தாய் –அதி விலக்ஷணமான சப்தங்களாலே தொடுக்கப் பட்ட இப் பிரபந்த ரூபமான மாலையைக் கொண்டு உன்னை ஆஸ்ரயித்து உனக்கு வாசகமாய் திரு மந்திரம் என்று பிரசித்தமான சொல் தொடை

கலியுகத்தில், தமிழகத்தில் உள்ள ஆற்றங்கரையோரங்களில் ஆழ்வார்கள் அவதரிக்கப் போகிறார்கள் என்று துவாபர யுகத்திலேயே ஸ்ரீமத் பாகவதத்தில் வேதவியாசர் கூறியுள்ளார்.-அந்தச் சமஸ்கிருத ஸ்லோகம்:
“கலௌ கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா: | க்வசித் க்வசிந் மஹாபாகா
த்ரமிடேஷுச பூரிச: | தாம்ரபர்ணி நதியத்ர
க்ருத மாலா பயஸ்விநீ | காவிரீ ச மஹாபாகா ப்ராதீசீச மாஹாநதீ ||”.

இதன் பொருள்: கிருதயுகம் முதலியவற்றில் வாழ்ந்த ரிஷிகள் கலியுகத்தில் பிறக்க வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். ஏனென்றால், நாராயணனே அடையத்தக்கவன் என்று பறைசாற்றும் சான்றோர்கள் கலியுகத்தில் திராவிட தேசத்தில் தோன்றுவார்கள். எங்கு தாமிரபரணி, கிருதமாலா (வைகை), பயஸ்வதி (பாலாறு), பெருமை மிகுந்த காவிரி, மேற்குக்கடலில் சென்று கலக்கும் பெரியாறு ஆகிய நதிக்கரையில் அவர்கள் தோன்றுவார்கள் என்று வேதவியாசர் கூறினார். அப்படியே பன்னிரு ஆழ்வார்கள் அவதரித்து, சரணாகதி தர்மத்தை நிலைநாட்டினர்.

——–

கஜ ஸிம்ஹ -கதி விசார ஸதஸ் -வேழம் -வலிமிக்க சீயம் ராமானுஜன் –

விரிவு நம்மாழ்வார் -சுருக்கம் திருமங்கை ஆழ்வார் -தூது -நான்கு பதிகம்-இவர் 3 -6 வயலாலி மணவாளனுக்கு வண்டு தூது -வேதம் வல்லார் மூலம் பற்ற என் நிலைமை உரையாய் — –
நரஸ்துதி தவிர்தல் – 3-10-திருவாய் மொழி -சொன்னால் விரோதம் -1-1-7-கண்டவா தொண்டரைப் பாடாமல் திருக்குடந்தை வம்மின் –
அனுகரித்துத் தரித்தல்-5-6-கடல் ஞாலம் –8-2-6-வடவரை நின்றும் வந்து இன்று கணபுரம் இடவகை கொண்டது யான் -ஒரே பாசுரம்

நம்மாழ்வார் சுருக்கமாக -இவர் விரித்து பாடியவை
பிரளயம் -திருவாசிரியம் -7 பாசுரம் -ஒரே -11-6-பதிகம் முழுவதும் –

வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி வேற் கணார் கல்வியே கருதி
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன் என் செய்கேன் நெடு விசும்பு அணவும்
பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே
நன்று நான் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —4–

ஊர்வசீ ஸ லோக்யத்துக்கு லோகம் அடங்க சாதன அநுஷ்டானம் பண்ணா நிற்க
நேர் கொடு நேர் அவள் தான் நடந்து உபஸ்தானம் பண்ணி முன்னே நிற்க
அர்ஜுனன் நமஸ்கரித்து நின்றான் நின்றான் இறே விரக்தியாலே –
இப்படிப் பட்டவன்-தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோரி வஸூ துஷ்கரம் -என்று பிரதிகூல வாயுவை பிடித்துக் கூடு கட்டிலும் என் நெஞ்சைப் பிடிக்க போகாது காண்–என்றான் இறே-(சஞ்சலம் ஹி மனஸ் கிருஷ்ண என்றானே)-ஒரு விஷயங்களிலே அரை ஷணம் கால் தாளாத (தங்கி நிற்காத) நெஞ்சை உடையேனான நான்-இந் நெஞ்சை பரிகரமாகக் கொண்டு உன்னை பெறுகைக்கு ஈடான உபாய அனுஷ்டானம் பண்ண என்பது ஓன்று உண்டோ – உன்னை இழக்கைக்கு உறுப்பாம் இத்தனை-என் செய்கேன்
அர்ஜுனனுக்கு பதினெட்டு ஒத்திலும் சோகத்தை உத்பாதித்தாற் போலே -கண்டது எல்லாம் இவருக்கு பய வாஹமாய் இருக்கிறபடி-நீர் இப்படி இருந்தீர் ஆகில் உமக்கு பேற்றுக்கு அடி எத்தாலே என்று இருந்தீர் என்ன பிரளயம் கொண்ட  பூமி தன்னுடைய ரஷணத்தில் அசர்த்தமாய் அத்தை ரஷித்தான் யாவன் ஒருவன் அவனாலே என்கிறார்-

மடலூர்தல் -5-3- ஒரே பாசுரம் -தேவப்பிரான் தன்னை –மடலூர்துமே -சிறிய திரு மடல் -155 வரிகள் 297 வரிகள் பெரிய திரு மடல் -அரங்கனுக்கு மதிள் நறையூர்நம்பிக்கு மடல் ஆச்சார்யன் -என்பதால் –
யானையுடன் ஒப்புமை -திருவேங்கடத்து என் யானை -சொன்னால் விரோதம் ஒரே பாசுரம் -நம்மாழ்வார் -தென்னானாய் வடவானாய் குடபாலானாய் குணபால மத யானாய் –

சமமாக பாடியவை
பாகவத சேஷத்வம் -இரண்டு பதிகங்கள் இருவரும் -பயிலும் சுடரொளி 3-7/நெடுமாற்க்கு அடிமை -8-10-/கடல்மல்லை 2-6-/திருச்சேறை -7-4/
தாய் பாசுரம்–கங்குலும் பகலும் -7-2/திருவிடவெந்தை -2-7-
பிரேமத்தில் பெண் பேச்சு -27 பதிகங்கள் இருவரும் இவள் திறத்து என் செய்கின்றாய் -உன் மனத்தால் என் நினைத்திருந்தாய் –
சரணாகதி -நோற்ற நாலும் -திருவேங்கடத்திலும் 6-10–இவர் பத்து இடங்களிலே –1-6நைமிசாரண்யம் -1-9-திருவேங்கடம் /4-6 காவளம்பாடி /4-7 திருவெள்ளக்குளம் /5-8 திருவரங்கம் /6-2-ஒப்பிலியப்பன் /6-9- நாச்சியார் கோயில் /7-7 தேரெழுந்தூர் -திருஎழுகூற்றிருக்கை திருக்குடந்தை

சிறப்பித்து பாடியவை
குறி சொல்வது -கட்டுவிச்சி -4-6-தீர்ப்பாரை -ஸ்ரீ வைஷ்ணவ கட்டுவிச்சி இவளுக்கு -தெய்வ நல் நோய் இது –
உண்ணும் சோறு -திண்ணம் இள மான் புகுவது திருக்கோளூரே -3-7-1கள்வன் கொல் – அணியாலி புகுவர் கொலோ -ஆளவந்தார் நிர்வாகம் –
கேசவன் தமர் -2-7- திரு நாமங்கள் பதிகம் -பன்னிரு நாமப்பாட்டு -நாராயணன் -ஒன்றே -20 தடவை -1-1 வாடினேன் உப கிரமத்திலும் பின்பு நறையூர் -6-10 கிடந்த நம்பி -நாமம் சொல்லில் நமோ நாராயணமே

இருவரும் -6-3 ஒப்பிலியப்பனுக்கு

———

வார்த்தை -435-
நம் ஆழ்வார் அறிவு கலங்கின போதோடு –
அறிவு நடையாடின போதோடு –
சாத்விக அஹங்காரம் தலை மண்டி இட்ட போதோடே அநுவர்த்தநத்தோடு -வாசியற
மிதுனம் அல்லது வாய் திறக்க அறியார் -எங்கனே என்னில் –

அறிவு கலங்கின போது
சிந்தை கலங்கித் திருமால் என்று அழைப்பன் -திருவாய்மொழி -9-8-10-என்பர் –

அறிவு நடை யாடின போது –
திருமால் நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம்பெருமான்
தன்மையை யார் அறிகிற்பார் -திருவாய்மொழி -8-3-9- என்பர் –

அஹங்காரம் தலை மண்டை இட்ட போது –
திருமால் தலைக் கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீவினை -திருவிருத்தம் -87-என்பர் –

அநுவர்த்தநத்தில் –
அடிமை செய்வர் திருமாலுக்கே -திருவாய்மொழி -6-5-11- என்பர் –

——————————————————-

வார்த்தை -436-

திருமங்கை ஆழ்வாரை  ஈஸ்வரன் ஆக்கலாம் விரகு ஏது என்று பார்த்த இடத்து –
இவர் விஷயாந்தர பிரவணர் ஆகையாலே இவர் பக்கல் சாஸ்திரம் ஜீவியாதாய் இருந்தது –
இவர் விஷயாந்தரங்களிலே வந்தால் –
இது விலஷணம் -இது அவிலஷணம் -என்று அறிகிற உள்மானம் புறமானம் அறிவார் ஒருத்தராய்  இருந்தார்-என்கிற இதுவே பற்றாசாக
நம்மை விஷயம் ஆக்கினால் மீட்கக் கூடும் -என்று தன் வடிவைக் காட்ட
அதிலே அதி பிரவணராய் –
அர்ச்சாவதாரத்துக்கு அவ்வருகு ஒன்றும் அறியாதபடி யானார் –

————————————————————

வார்த்தை -437-

நம் ஆழ்வாரை ஈஸ்வரன் ஸ்வரூபத்தைக் காட்டி அங்கீகரித்தான் –
அவருக்கு எல்லாம் பரத்வத்திலேயாய் இருக்கும் –
இவருக்கு எல்லாம் அர்ச்சாவதாரத்திலேயாய் இருக்கும் -எங்கனே என்னில்

அவர் தொழுவது -கண்ணன் விண்ணோரை -திருவிருத்தம் -47
இவர் தொழுவது -கண்ணபுரம் தொழுதாள் -என்றும் -பெரிய திருமொழி -8-2-1-

(அன்று தேர் கடாவிய பெருமாள் கழல் காண்பது என்றோ -அர்ச்சாவதார மஹிமை பேசிய செந்தாமரைக்கண்ண பதிகம் நிகமனம் பாசுரம்)

அவர் தூது விடுவது -வீசும் சிறகால் பறத்தீர் விண்ணாடு நுங்கட்கு எளிது -திரு விருத்தம் -54 என்றும் –
இவர் தூது விடுவது -செங்கால மட நாராய் இன்றே சென்று திருக்கண்ணபுரம் புக்கு -திரு நெடும் தாண்டகம் -27-என்றும் –

அவர் மடல் எடுப்பது -சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான் தன்னை –குதிரியாய் மடலூர்தும் -திருவாய்மொழி -5-3-9- என்றும் –
இவர் மடல் எடுப்பது -சீரார் கணபுரம் –ஊராய வெல்லாம் ஒழியாமே –ஊராது ஒழியேன் – சிறிய திருமடல் -72-77- என்றும் –

அவர் வளை இழப்பது -விண்ணூர்  தொழவே சரிகின்றது சங்கம் -திருவிருத்தம் -47 என்றும் 
இவர் வளை இழப்பது -திருக் கண்ணபுரத்து உறையும் வரை எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரி வளை -பெரிய திருமொழி -8-3-1- என்றும் –

அவர் எண்ணுவது -மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் -திருவாய்மொழி -9-3-7- என்றும் –
இவர் எண்ணுவது -கண்ணபுரம் தொழும் கார்க்கடல் வண்ணர் மேல் எண்ணம் -பெரிய திருமொழி -8-2-4- என்றும் –

அவர் -விரும்புவது அந்தமில் பேர் இன்பத்து அடியோரோடு இருந்தமை -திருவாய்மொழி -10-9-11-என்றும்
இவர் -அந்தரங்கம் -காட்டினாய் கண்ண புரத்துறை யம்மானே -பெரிய திருமொழி -8-10-9- என்றும்

அவருக்கு ஜ்ஞானப் ப்ரதன் -ஏனத்துருவாய் இடந்த பிரான் -திருவிருத்தம் -99-
இவருக்கு ஜ்ஞானப் ப்ரதன் -வயலாலி மண வாளன் –

அவருக்கு சேஷி -ஒரு மா தெய்வம் மற்றுடையமோ யாமே -திருவாசிரியம் -7 -என்கிற ஜகத் காரண வஸ்து
இவருக்கு சேஷி -அரங்க நகரப்பா துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு -பெரிய திருமொழி -11-8-8- என்றும் –

அவருக்கு உபாயம் -அந்நலன் உடை ஒருவனை நணுகினம் நாமே -திருவாய்மொழி -1-1-3 -என்றும்
இவருக்கு உபாயம் குருங்குடிக்கே என்னை உய்த்திடுமின் -பெரிய திருமொழி -9-5-என்றும் –

——————————————————————————————–————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

கண்டேன் ஸ்ரீ ராமனை-ஸ்ரீ உ .வே.வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள்-

September 9, 2026

த்யானஸ்லோகங்கள் – கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம்! ஆருஹ்ய கவிதா ஸாகாம் வந்தே வால்மீகி கோகிலம்!! வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே ! வேத ப்ராசேதஸா தாஸீத் ஸாக்ஷாத் ராமாயணத்மநா!! யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருத மஸ்தகாஞ்சலீம் ! பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம் ! மாருதிம் நமத ராக்ஷ ஸாந்தகம்!! ஆபதாம் அபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வ ஸம்பதாம் ! லோகாபி ராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்!! ஸ்ரீராமராம ராமேதி ரமே ராமே மனோரமே ! ஸஹஸ்ர நாம தத் துல்யம் ராம நாம வரானனே!!

ஸ்ரீய பதியான ஸர்வேஸ்வரன் ஸ்ரீமன் நாராயணன் சேதனர்கள் உஜ்ஜீவனத்திற்காக எத்தனையோ அவதாரங்கள் செய்திருக்கிறார் – அதில் ப்ரதானமாய் ராம க்ருஷ்ண அவதாரங்கள் அகிலத்தாலும் போற்றக் கூடியது. இந்த பூலோகத்தில் அவதரித்து நம்மை எல்லாம் நேராக வந்து ரக்ஷித்து பின் திரும்ப வைகுண்டம் சென்றடைந்தார். உபநிஷத் வாக்யமான “யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ: “என்கிறபடியே வாக்கிற்கும் மனதிற்கும் அப்பாற்பட்டவர் ஸர்வேஸ்வரன் எவராலும் அளவீட்டு கூற முடியாத அளவிற்கு அளப்பறியர் ராமன். ஆழ்வார் தன் பாசுரத்தில் மனன கமலமற மலர்மிசை எழுதரும் மனனுணர் வளவிலன் பொறி யுணர் வவை யிலன் இனனுனர் முழுநலம் எதிர் நிகழ் கழிவினும் இனனில னெனனுயிர் மிகுநரையிலனே என்ற பாசுரத்தை அர்த்தத்துடன் விசேஷித்தார். யாரோ ஒருத்தருக்கு ராமன் தன்னை காட்டவே மற்றவர்களுக்கும் ராமனை காண வேண்டும் என்ற ஆவல் உந்துகிறது. நாம் காண ஆசைப்பட்டாலும் அவராகவே தன்னை கருணையுடன் வெளிக் காட்டிக் கொண்டால் தான் காண முடியும். கண்டவர் விண்டிலர். விண்டிலர். கண்டலர். வாயு வேகம் மன வேகம் காற்று போவதை விட மனம் வேகமாக செல்லும் இந்த உட் கண்ணால் பெருமானை காண முடியாது. ஞானக் கண்ணால் தான் தரிசிக்க முடியும் என்பர் சான்றோர்கள். ஆகாய தாமரை குதிரை கொம்பு என்று ஒன்று இல்லை. ஆதலால் யாரும் பார்த்திருக்க சாத்யமில்லை. ஆனால் பெருமான் ராமன் குலசேகர ஆழ்வார் போன்ற ஆழ்வார்களுக்கு காட்சி கொடுத்து இருக்கார். யாரோ ஒருவர் கண்டேன் ராமனை என்று கூறியதால் நமக்கும் ராமனை பார்க்க ஒரு துடிப்பு உள்ளது. ஸதா பஸ்யந்தி ஸூரய: நித்ய ஸூரிகள் பெருமானை சேவித்துக் கொண்டே இருக்கும் பாக்யம் பெற்றவர்கள். ஏக தேவ அமிர்தம் திருஷ்ட்வா . ஒரு தடவை பார்த்து திருப்தி ஏற்பட முடியாத திருமுகம் . தெய்வத்தை அபரிமித ஆசையுடன். பார்ப்பதற்கு உந்துதல் இருந்து கொண்டே இருக்கும். ஆதித்ய குலத்தில் சித்திரை மாதம் புனர்வஸு நக்ஷத்திரத்தில் நவமி திதியில் மாதா கெளசல்யைக்கு திருக் குமாரனாய் உலகமே மெச்சும்படி அவதரித்து ப்ரதானமாய் ராமசந்திரன் என்ற பெயருடன் விளங்கினார்.

ஸூரிய குலத்தில் அவதரித்தால் பிறர் உதவியை நாடாமல் ஸ்வயம் ப்ரகாசமாய் ப்ரகாசிக்கலாம் என்ற காரணம் தான், விளக்குக்கு இருக்கும் பெருமை அது தன்னைத் தானே ப்ரகாசித்துக் கொண்டு சுற்றி உள்ளதையும் ப்ரகாசப்படுத்தி காட்டும் தன்மை . ராமரை வைகுண்டத்தில் காண்பதை விட இந்த பூலோகத்தில் காண அவா. அது அர்ச்சாவதார திவ்ய தேசத்தில் தான் சாத்யம். எங்கனம் ஆச்சார்யன் நம் மேல் வைக்கும் அபிமானம் தான் நாம் அவர்மேல் வைக்கும் அபிமானம் விட பெரியது. அது போல் நாம் பெருமானை பார்ப்பதை விட பெருமான் நம்மை கடாக்ஷிப்பதே ஏற்றம். பெருமான் அருள் இருந்தால் தான் மோக்ஷம் கிட்டும். அவர் அடியேனை கடாக்ஷப்பதே அவர் அருள் இருந்தால் மட்டுமே சாத்யம். உலக விஷயமான அப்ராப்த விஷயத்தில் ஒரு விஷயம் கிட்டா விடில் பரவாயில்லை ஆனால் ப்ராப்த விஷயமான பகவத் விஷயத்தில் அது கிட்டியே தீர வேண்டும். கைகேயி தசரதனிடம் கேட்ட 2 வரம் அது அனர்த்தம் என்று தசரதன் கருத்து தெரிவித்து அதனால் ராமன் ஊரை விட்டு சென்றால் எனக்கு வயதாகிவிடும். ராமன் என்னுடனே இருந்தால் ராமா வா என்று சொல்லி வரும் போது எனக்கு 100 வயசு கம்மியாகும். ராமா போ என்று சொல்லும் போது இன்னொரு 100 வயசு கம்மியாகும். இங்கே தொடர்ந்து 6௦௦௦௦ வயது இளமை திரும்பி யுவா ஆகிவிடுவேன் என்பது தசரதன் கருத்து எந்த மனைவிக்குத் தான் தன் கணவன் இளமையுடன் இருப்பது பிடிக்காது? ஆனால் மந்திரா கைகேயி மனதை முழுவதுமாய் மாற்றி விட்டாள். தசரதனின் கண்கள் ராமன் என்ற குணக் கடல் அழகுக் கடல் வீரக் கடல் பின்னே சென்று விட்டதால் கெளசல்யை நீ என்னை தொடு அப்போது தான் இருப்பதே உணர்வேன் என்று தசரதன் கூறுகிறார். கடல் கொண்ட வஸ்துவை திரும்ப கிடைப்பது என்பது துர்லபம். திரும்பி வராது. இது தசரதனின் எண்ணம். பரதனோ 14 வருஷம் ராமன் காட்டிலிருந்து பின் 15வது வருஷம் முதல் நாள் ராமன் அயோத்தியில் இல்லை என்றால் தான் அக்கினிக்கு இரையாகுவதாக சபதம் செய்தான். ஆக ராமன் வீபீஷணனிடம் 14 வருஷம் கழித்து நான் ஸ்நானம் செய்வது கூட பரதன் இருக்கும் அயோத்தியில் தான் விபீஷணா என்று ராமன் அறுதியிட்டதோடு

புஷ்பக விமானம் நற் காரியத்திற்கு முதன்முதலில் பயன்படப் போகிறது என்று விபீஷணன் ராமனை அதில் ஏறச் சொல்ல சீதா லஷ்மணருடன் ராமன் அதில் ஏற சுக்ரீவன் தானும் கூட வந்து பட்டாபிஷேகத்தை காண ஆசைப்படுவதாய் தெரிவிக்க சுக்ரிவன் மற்றும் ஏனைய வானரங்களும் தம் தம் மனைவிமார்களுடன் புஷ்பக விமானத்தில் பயணிக்க பரத்வாஜ முனிவர் .ஆச்ரமத்திற்கு ராமன் முதலில் வந்து சேர அந்த பரத்வாஜர் கேட்டுக் கொண்டதின் பேரில் என்று ஒரு நாள் ராத்திரி எங்கு தங்கி விட்டு போக, ராமன் முடிவெடுத்து ஹனுமனையும் குகளையும் முன்னால் அனுப்பி நடந்த விஷயத்தை கூற கோர , அதற்குள் பரதன் அக்னியை மூட்டி ப்ரதக்ஷணம் பண்ணி குதிக்க சித்தமாகும் போது ஹனுமன் மறுபடியும் ராமாயண கதையை முதலிலிருந்து தொடங்கி கூற ராமநாமம் ம்ருத்யு சஞ்சீவினி போகும் உயிரை காப்பாற்றும் என்பதால் பரதன் தீயில் விழுவதிலிருந்து தடுத்தப் பட்டான். ஹனுமன் தன் வாயால் ஊதியே அந்த அக்னியை அனைத்தார் என்பது சரித்ரம் . கம்பன் இதை பாட்டாய் வடிவெடுத்து பக்தர் பித்தன் பேதையர் பேசியது என்று அதை கூறிவிட்டார். ராமனை பற்றி பாட இவ்வளவு தான் இயலும் என்பது போல், சத்யப்ரக்ஞன் திடவரதன் ராமர் வந்ததும் பரதன் அனைத்தும் மறந்து விட்டு ராமனை தரிசிப்பதில் லயித்து போனான். இந்தக் காட்சிக்காக ஏங்கியது எத்தனை வருஷங்கள் இங்கு பேசாமல் இருப்பதே உசிதம் பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ என கம்பரும் எந்த கவியும் இயற்றவில்லை. ப்ரிய தர்சன: வால்மீகி 16 கேள்விகள் கேட்கிறார். திருட வ்ரத: ஸர்வ பூதேஷு கோயித ஆத்மானன் போன்ற 16 கேள்விகள் ராமனின் கல்யாண குணங்களை பற்றி கேட்க அனைத்தும் ஒரு சேர ராமனிடத்தல் குடியிருக்கிறது எனபதல சந்திரனுக்கு 16 கலைகள் போல 16 கேள்விகள் . ராமன் யாரைப் பார்த்தாலும் ஆனந்தமாய் பார்ப்பார். ரூப ஒனதார்ய குணைகி. பும்ஸாம் த்ருஷ்டி ஸித்தாம். அபஹாரிணம். கண் போகிறது என்றால் மனமும் அவர் பின்னே செல்கிறது. ராம தர்சனத்தை மட்டும் கண்டேன். அவரால் தான் அனைத்தும் படைக்கப்பட்டிருக்கு .உம்மை வணங்க வைத்த கரணம் என ஸ்வாமி ராமானுஜர் கூறியபடி கண் இருப்பது ராமனின் சௌந்தரியத்தை காண, காது படைத்த பயன் அவர் நாமங்களை கேட்க, மூக்கு இருக்கும் பயன் அவர் பாத துளஸியை முகர்வதற்கு, இங்கனம் ஒவ்வொரு கரணமும் இருப்பது ராம கைங்கரியத்திற்கு. இதையே முகுந்த மாலையில் ஜிஹ்வே கேசவம் …என துவங்கும் ஸ்லோகத்தை கூறி அதன் அர்த்தத்தை விளக்கினார். அந்த ராமனை பத்மதள பத்ராக்ஷம் மலர்ந்த தாமரைகளை ஒத்த ராமரின் திருக்கண்கள் . கண்கள் பாக்கியசாலிகள். மாதா சீதா ஆசைப்படுகிறாள். எல்லா வானர சைன்யத்தையும் ஒட்டி விட்டார். யாரெல்லாம் மம நாதனை . சேவிக்கிறார்களோ அவர்கள் தன்யர்கள் என சீதா மாதா கூறினாள். ஹனுமனை பார்த்து சீதை இந்த உலகுக்கே நாதன் எனக்காக ஒரு தடவை திரும்பிப் போய் நான் வணங்குவதாக சொல்லி நீ வணங்கி வா என்று அழுத்தம் திருத்தமாக கூறி

சந்திரகுலத்தில் பிறந்த கண்ணனுக்கு அந்த பெயர் இல்லை. இந்த ராமரை தரிசிப்பதே ஆஹ்லாதகரமாய் குளிர்ச்சியாய் இருக்கும். அங்க ணெடு மதின் புடைசூழ் அயோத்தி யென்னும் அணிநகரத்து லகனைத்தும் விளக்கும் சோதி….. தில்லைநகர் திருச்சித்திர கூடந்தன்னுள் எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை என்று கொலோ ? கண் குளிரக் காணும் நாளே. எனகுலசேகர பெருமான் ராமனை தரிசித்த அனுபவத்தை பாசுரமாய் வடித்துள்ளார். அவருக்கு ராமன் காட்சி கொடுத்திருக்கார். 11000. வருஷங்கள் இந்த பூவுலகத்தில் இருந்து பின் வைகுண்டம் சென்றடைந்தார். இவர் அவதரித்த அயோத்தி நகரம் அபராஜிதா என்ற வைகுண்டத்திற்கு ஒரு பெயர் போல் அயோத்திக்கும் உண்டு. யாரும் சண்டையிட்டு ஜெயிக்க முடியாத ஊர் அயோத்தி வேதவதி வேதக மறை என்று தமிழில் மறைத்து சொல்லும்.. த்ருஷ்ட்வா திருந்த பந்தி பார்த்து பார்த்து திருப்தி ஏற்படா அளவு பேரழகு. ரம இத்தீ ராம: ராமன் பிறந்தவுடன் ராமன் என்ற பெயரை வைக்க அவர் பேரழகே தூண்டித்தாம். திரும்ப திரும்ப தரிசிக்க தூண்டும் திருமுக ப்ரபாவம். குலசேகர ஆழ்வார் 105 பாசுரங்கள் ராமனை போற்றி பாடியுள்ளார். ராமன் ஆராதித்த அரங்கன் இஷ்வாகு குலம் கொண்டாடிய அரங்கனாய் ஆராதிக்கப்பட்டவராய் இருப்பதால் தான் அவதரிக்க இஷ்வாகு வம்சத்தை ராமன் தேர்ந்தெடுத்தார். சரயு நதியின் தெற்கு கரையில் மனுவால் ஸ்தாபிக்கப்பட்ட அயோத்தி அவரை அர்ச்சிக்கிறோம் அவரே அர்ச்சனாகவும் இருக்கனும். இன்று ஸ்ரீரங்கத்தில் சயனிக்கும் பெருமாள் தான் அங்கு இருக்கும் பெருமாள். வெண்கதிரோன் குலத்திற்கு விளக்காய் திகழ்ந்தார். எங்கனம் நன்கு உண்டு திருப்தியஸ்ய போஜனம் செய்து ஏப்பம் விட்டவனை திரும்ப சாப்பிட கூப்பிட முடியாத அதுபோல்பகலை ப்ரகாசப்படுத்த விளக்கு வேண்டாம். சூரிய குலத்தில் பிறந்த ராமன் ஸ்வயம் ப்ரகாசமாய் திகழ்ந்தார்

சீதை ஹனுமனிடம் நான் சொன்னதாக எனக்காக ஒரு முறை சேவித்து நான் கேட்டேன் என்று குசல ப்ரசனம் பண்ணும்படி கூறினாள். அவள் தேவதேவ திவ்ய மஹிஷி என்று ஹனுமனும் சீதை கூறியதைக் அப்படியே கேட்டுக் கொண்டார். கெளசல்யை தசரதன் கொடுத்த பாயசத்தில் அரை பாகம் குடித்து இந்த லோகமே நன்றாய் இருக்க லோகத்தை ரக்ஷிக்க ஒரு பிள்ளையை லோகார்த்தமாய் வேண்டினாள். மேலும் சீதை இதையே தன் பிரார்த்தனையாய் வைத்து மாதா கெளசல்யை பிரார்த்தித்த லோகத்தில் நானும் ஒருத்திதானே என்னை ரக்ஷிக்காமல் இருக்கிறாயே என்ற பொருள்பட கூறியது ஹனுமன் அறியாமல் இருந்தாலும் ராமனுக்கு விளங்கிவிட்டது. மேலும் தன் தாயார் பெயர் போக ராமன் ஒரு நாளும் அனுமதிக்க மாட்டார் என்பது நன்கு சீதை அறிந்து வைத்திருந்தாள். நல்கித்தான் எனதுவங்கும் ஆழ்வார் பாசுரத்தை அனுசந்தித்து பின் அஞ்சன மடவாராய்! அளியத்தாய்! நீயும் நின் அஞ்சிறை சேவலுமாய் ஆவா! என்று எனக்கருளி வெஞ்சிறைப் புள்ளுயர்த்தார்க்கு என் விடு தூதாய் சென்றக்கால் வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ? என பெருமான் மீது உள்ள ப்ரேமத்தால் நாரையை தூதுவிட்டார் ஆழ்வார். பறவை எங்கே போகனும் என்ன சொல்லனும் என்று கேட்க நாரணன் என்ற பெயர் நிலைத்து இருக்க வேண்டுமானால் தாழ்ந்தவர்களிலும் தாழ்ந்தவனான அடியேனை ரக்ஷிக்க வேண்டும் என்று சொல் என நாரையிடம் ஆழ்வார் கூறியது போல் சீதையும் ஹனுமனிடம் கூறினாள். சீதை அருகில் இருந்ததால் காகாசுரன் ரக்ஷிக்கப்பட்டான் சீதை அருகில் இல்லாததால் ராவணன் மாண்டான். ஜனஸ்தானத்தில் 14000 ராக்ஷஸர்களை வேதாந்த தேசிகர் கூறியது போல் அசகாயசூரனாய் அநபாய சாகஸனாய் கொன்று வீழ்த்தினார். ஜெய ஜெய மஹாவீர என்னும் படிக்கு ஒருத்தரையும் மிச்சம் வைக்காமல் ராமன் கொன்றார். மஹாலஷ்மி தன் திருமேனியிலேயே சந்தான கரணி ஒரு மூலிகை விஷகரணி ஒரு மூலிகை கொண்டுள்ளதால் அவள் ராமனை ஆலிங்கனம் – ஆரத்தழுவிக் கொள்ள ராமன் திருமேனியில் வழிந்த ரத்தத்திற்கு மருந்தாகி இருந்ததாம். கெட்டது கூடாது என்பதற்காக பூமாதேவி மறைத்து வைக்க வேணன் வேண்டுகோளுக்கினாங்கி தான் காமதேனுவாய் மாற ராஜா அனைத்து செல்வத்தையும் அதிலிருந்து கறந்தான். தம் திருஷ்வா… ராமன் தன்னை காட்டனும் என்று முடிவெடுத்தால் தான் காண முடியும். அவர் அவராகவே அவரை பார்த்துக் கொள்வார் என்பது ராமனிடத்தில் மட்டும் தான் சாத்யம் . அவரே காட்சியாகவும் இருந்து அவரைக் கொண்டே தான் நாம் அவரை அவர் அனுக்ரஹத்தால் அறிந்துமுடி வில் அவரை அடையவும் முடியும். வாலியின் பத்தினி தாரை இதை நன்கு அறிந்து வைத்திருந்தாள். வைய வந்த வாயால் ராமனை வாழ்த்தி விட்டு போனாள்.

திவம் அப்ரமேயச்ச துராதஹஸ்ய…. குரங்கினமான தாரை ராமனை பார்த்து நீ என்று சொன்னாள். அப்ரமேயன் புத்திக்கு அப்பாற்பட்டவன். என்னால் ப்ரத்யக்ஷமாய் கண்ணால் பார்க்க முடியவில்லை. ஆனால் மனதால் புத்தியால் அனுபவிக்கிறேன். ராமன் உடன்பிறந்தவர்கள் கண்களால் ராமனைப் பார்த்தாலும் புத்தியால் மனதால் அனுபவிக்கவில்லை. ராமனுக்கும் சுக்ரீவனுக்கும் ஸக்யம் ஆயிற்று. ஸா கேத் என்ற இடத்தில் ஜடாயுக்கு மோக்ஷம் கொடுத்தார். ரிஷ்யமுக பர்வதத்திற்கு வடமேற்கில் இந்த ஸாகேத் இடம் உள்ளது. சீதைக்கு வியப்பு. நரத்துவமும் வாரைத்துவமும் எப்படி தோழமை கொண்டது என்று. ராவணன் சீதையை அபஹரித்து ஆகாய விமானத்தில் சென்ற போது சீதை தன் ஆபரணங்கள கழட்டி ஒரு மூட்டையாய் கட்டி வீச அதை சுக்ரீவாதிகள் கண்டார்கள். வானரர்கள் அப்போதே பிராட்டியின் கடாக்ஷத்தை பெற்றார்கள். சீதை 10 மாதங்கள் சிறை இருந்த போதே வீ பீஷணன் சீதையின் கடாக்ஷத்தை பெற்றதால் தான் ராமனை சரணாகதி பண்ண முடிந்தது. இருந்தும் வியந்து… எனத்துவங்கும் ஆழ்வார் பாசுரம். இதன் அடியாய் நம்பிள்ளை ஈடு காலக்ஷேபத்தில் வானரர்களையே ராமன் சந்தித்தபோது எங்கள் ஆழ்வாரை சந்திக்க கசக்குமா என்று குறிப்பிட்டு உள்ளார். அதேபரமாத்மாவான ராமன் ஆழ்வாரையும் கடாக்ஷித்துக் கொண்டே இருக்கார். கண்டேன் ராமனை என்ற இடத்தில் தான் இரண்டும் கூடுகிறது. ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதஸே. ரகுநாதாய நாதாய சீதாயா பதயே நம: ஸ்ரிய காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்திதாம். ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீனிவாசாய மங்களம். நல்ல கோட்பாட்டுலங்கள் மூன்றினுள்ளும் தான் நிறைந்த அல்லிக் கமலக்கண்ணனை அந்தண் குரு கூர் சடகோபன் சொல்லப்பட்ட ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள். நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே என ஆழ்வார் பாசுரத்துடன் இத்தொடரை அருமையாய் நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு எனப் ப்ரார்த்திக்கிறேன் . எடுத்துக் கொண்ட தலைப்பை உபநிஷத்து மூலமும் ஆழ்வார் பாசுரங்கள் வாயிலாகவும் அடிகோடிட்டு அற்புதமாய் நிறைவு செய்தார்.

ஸ்ரீ அருளிச் செயல்களில் ஒருமைப்பாடு -பேசிற்றே பேசும் ஏக கண்டர்கள்–

September 9, 2026

நான்கு பாதங்களும் ஒன்றானவை

கடைநின்றமரர் கழல்தொழுது* நாளும்
இடைநின்ற இன்பத்தராவர் – புடைநின்ற
நீரோத மேனி நெடுமாலே! நின்னடியை
யாரோத வல்லாரவர்
…. இரண்டாம் திருவந்தாதி 11

கடைநின்றமரர் கழல்தொழுது நாளும்
இடைநின்ற இன்பத்தராவர் – புடைநின்ற
நீரோத மேனி நெடுமாலே! நின்னடியை
யாரோத வல்லாரவர்
…. நான்முகன் திருவந்தாதி 55

———

3,4 பாதங்கள் ஒன்றானவை

விரும்பி நின்று ஏத்த மாட்டேன் விதியிலேன் மதி யொன்று இல்லை
இரும்பு போல் வலிய நெஞ்சம் இறை இறை உருகும் வண்ணம்
சுரும்பமர் சோலை சூழ்ந்த வரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்ட என் கண்ணினை களிக்குமாறே –திருமாலை–17

இரும்பு அனன்று உண்ட நீரும் போதரும் கொள்க என் தன்
அரும் பிணி பாவம் எல்லாம் அகன்றன என்னை விட்டுச்
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டு என் கண்ணினை களிக்குமாறே
–திருக் குறும் தாண்டகம்-13

அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய எம்மாயனே! அருளாய்
என்னும் இன்தொண்டர்க்கு இன்னருள் புரியும் இடவெந்தை எந்தை பிரானை
மன்னுமாமாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன்வாயொலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழவினை பற்றறுப்பாரே
….பெரிய திருமொழி 2-7-10

பொன்னுமாமணியும் முத்தமும் சுமந்து பொருதிரை மாநதி புடைசூழ்ந்து
அன்னமாடுலவும் அலைபுனல் சூழ்ந்த அரங்கமாநகரமர்ந்தானை
மன்னுமாமாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன் வாயொலிகள்
பன்னிய பனுவல் பாடுவார்நாளும் பழவினை பற்றறுப்பாரே…
.பெரிய திருமொழி 5-7-10

வண்டுணு நறுமலரிண்டை கொண்டு பண்டைநம் வினைகெடவென்று* அடிமேல்
தொண்டரும் அமரரும் பணியநின்று அங்கண்டமொடகலிடமளந்தவனே
ஆண்டாயுன்னைக் காண்பதோர் அருளெனக்கருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே…
.பெரிய திருமொழி 6-1-1
6-1-1 முதல் ஒன்பது பாசுரங்கள் ஒரே பின்னடியில் அமைந்தவை.

—————–

சிறு மாறுதலுடன் 3,4பாதங்கள் ஒன்றானவை

தானே தனக்குவமன் தன்னுருவே எவ்வுருவும்
தானே தவவுருவும் தாரகையும் – தானே
எரிசுடரும் மால்வரையும் எண்டிசையும்* அண்டத்து
இருசுடருமாய இறை…
. மூன்றாம் திருவந்தாதி 38

நீயே உலகெல்லாம் நின்னருளே நிற்பனவும்
நீயே தவத்தேவ தேவனும் – நீயே
எரிசுடரும் மால்வரையும் எண்டிசையும்” அண்டத்து
இருசுடருமாய இவை
…. நான்முகன்திருவந்தாதி 20

————

மூன்றாம் பாதம் ஒன்றானவை

மின்னனைய நுண்மருங்குல்
மன்னுமுதுநீர் அரவிந்தமலர்மேல் வரிவண்டிசை பாட
புன்னை பொன்னேய்தாதுதிர்க்கும் புள்ளம்பூதங்குடிதானே
என்னைம்புலனும் எழிலும் கொண்டு
….பெரிய திருமொழி 5-1-6

மன்னுமுதுநீர் அரவிந்தமலர்மேல் வரிவண்டிசை பாட
அன்னம் பெடையோடுடனாடும் அணியார் வயல்சூழ் அழுந்தூரே
-..பெரிய திருமொழி 7-5-9

கொல்லையென்பர் கொலோ?
செல்வம்மல்கி அவன்கிடந்த திருக்கோளூர்க்கே
மெல்லிடை நடங்க இளமான் செல்ல மேவினளே
….. திருவாய்மொழி 6-7-4

மல்குநீர்க்கண்ணொடு …..
செல்வம்மல்கி அவன்கிடந்த திருக்கோளூர்க்கே
ஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகுங்கொல் ஒசிந்தே
…..திருவாய்மொழி 6-7-7

சீர்கண்டுகொண்டு …
ஏர்விலா என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
பார்பரவின்கவி பாடும் பரமரே
-திருவாய்மொழி 7-9-5

ஆர்வனோ? ஆழியங்கை
ஏர்விலா என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
சீர்பெற இன்கவி சொன்ன திறத்துக்கே
…. திருவாய்மொழி 7-9-8

கோதில வண்புகழ்…….
பாதங்கள் மேலணி பைம்பொன் துழாயென்றே
ஒதுமால் ஊழ்வினையேன் தடந்தோளியே
…. திருவாய்மொழி 4-2-4


மாதர் மாமண்மடந்தை ……..
பாதங்கள் மேலணி பைம்பொன் துழாயென்றே
ஓதுமால் எய்தினள் என்தன் மடந்தையே
…. திருவாய்மொழி 4-2-6

————–

மூன்றாம் பாதம் சிறுமாறுதலுடன் ஒன்றானவை

குடையா விலங்கல் கொண்டேந்தி
குடியாவண்டு கள்ளுண்ணக் கோலநீலம் மட்டுகுக்கும்
புடையார் கழனி எழிலாரும் புள்ளம் பூதங்குடிதானே-பெரிய திருமொழி 5-1-7

வடிவாய் மழுவே படையாக….
குடியாவண்டு கொண்டுண்ணக் கோலநீலம் மட்டுகுக்கும் அடியேன் கண்டு கடியார் புறவிற் கண்ணபுரத்து கொண்டேனே….பெரிய திருமொழி 8-8-6

————

நான்காம் பாதம் ஒன்றானவை

மாடமாளிகைசூழ் திருமங்கை
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாவே
….பெரிய திருமொழி 5-8-10

தோடு விண்டலர் பூம்பொழில் மங்கையர்
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாவே
….பெரிய திருமொழி 7-3-10

———-

தொடக்கம் ஒன்றானவை

அண்டத்தமரர்கள் சூழ அத்தாணியுள்ளங்கிருந்தாய் தொண்டர்கள் பூச்சூட்டவாராய்….பெரியாழ்வார் திருமொழி 2-7-9

அண்டத்தமரர் பெருமான் ஆழியான்…. வைக்குங் கொலோ….பெரியாழ்வார் திருமொழி 3-8-7

அண்டமும் இவ் வலை கடலும் அவனிகளுமெல்லாம் அமுது செய்த வணங்கு மடநெஞ்சே…. பெரிய திருமொழி 3-9-2

அண்டமும் இவ் வலைகடலும் அவனிகளும் குலவரையும் உண்டபிரான் திருத்தேவனார் தொகையே…. பெரிய திருமொழி 4-1-5

அருளாதொழியுமே ஆலிலைமேல் * அன்று தெருளாத நிற்பார்க்கு முன்… மூன்றாம் திருவந்தாதி 19அருளாதொழிவாய் அருள் செய்து……. தென்திருநாவாய் என்தேவே … திருவாய்மொழி 9-8-8

அவரிவரென்றில்லை அரவணையான் பாதம் எவர்வணங்கி .. நாளும்தொடர்ந்து… இரண்டாம் திருவந்தாதி 2அவரிவரென்றில்லை அனங்கவேள் தாதைக்கு எவரும் எதிரில்லை…. தோற்றான் ஒருங்கு
நான்முகன் திருவந்தாதி 56

அழைப்பன் திருமாலை ஆங்கவர்கள் சொன்ன பிழைப்பில் ….. என்று மதித்து-இரண்டாம் திருவந்தாதி 50அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண இழைப்பன் .. வெற்பு… நான்முகன் திருவந்தாதி 39

அறிந்தறிந்து வாமனன் அடியிணை வணங்கினால் செறிந்தெழுந்த … .பற்றறுதல் பான்மையே… திருச்சந்தவிருத்தம் 74அறிந்தறிந்து தேறித்தேறி யான் எனதாவியுள்ளே நிறைந்த ஞான ……கண்டுகொண்டே-திருவாய்மொழி 4-7-7

அன்றிவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி சென்றங்கு எம்பாவாய்… திருப்பாவை 24அன்றிவ்வுலகம் அளந்த அசைவேகொல் நின்றிருந்து நெஞ்சமே காண்… நான்முகன் திருவந்தாதி 34

அன்றுலகமளந்தானையுகந்து …….நின்றும் துரப்பன்… நாச்சியார் திருமொழி 5-10
அன்றுலக மூன்றினையும் அளந்து வேறோர் அரியுருவாய் ….. மணிமாடம் சேர்மின்களே
…. பெரிய திருமொழி 6-6-5

ஆங்குமாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடமளந்து… திருவயிந்திரபுரமே.. பெரிய திருமொழி 3-1-5
ஆங்குமாவலி வேள்வியில் இரந்துசென்று அகலிடம் முழுதினையும்
பாங்கினால் கொண்ட பரம! திருவெள்ளறை நின்றானே
…. பெரிய திருமொழி 5-3-9

இரும்பனன்றுண்ட நீர்போல் எம்பெருமானுக்கு * என்தன் அரும்பெறலன்பு ….பருகினேற்கு இனியவாறே…. திருக்குறுந்தாண்டகம் 7–இரும்பனன்றுண்ட நீரும் போதரும் கொள்க* என்தன் அரும்பிணி பாவமெல்லாம் களிக்குமாறே …. திருக்குறுந்தாண்டகம் 13

உண்ணாது உறங்காது ஒலிகடலை ஊடறுத்து பெண்ணாக்கை … எண்ணுவரே…. நாச்சியார் திருமொழி 11-7-உண்ணாது உறங்காது உணர்வுறும்……உயிராயின காவிகளே-…திருவிருத்தம் 66

உருப்பிணி நங்கையைத் தேரேற்றிக் கொண்டு விருப்புற்றங்கேக பாடிப்பற-பெரியாழ்வார் திருமொழி 3-9-3–உருப்பிணி நங்கை தன்னை மீட்பான்…….. மாலிருஞ் சோலையதே…. பெரியாழ்வார் திருமொழி 4-3-1

உலவு திரையும் குலவரையும்…….… சாளக்கிராமம் அடைநெஞ்சே…. பெரிய திருமொழி 1-5-3
உலவு திரைக்கடல் பள்ளி கொண்டுவந்து………அணியாலியம்மானே…. பெரிய திருமொழி 3-5-7

உளன்கண்டாய் நன்னெஞ்சே! உத்தமனென்றும் உளன்கண்டாய் உள்ளுவாருள்ளத்து – உளன்கண்டாய் வெள்ளத்தினுள்ளானும் வேங்கடத்து மேயானும் உள்ளத்தினுள்ளானென்றோர் முதல் திருவந்தாதி 99–உளன்கண்டாய் நன்னெஞ்சே! உத்தமனென்றும் உளன்கண்டாய் உள்ளுவாருள்ளத்து – உளன்கண்டாய் விண்ணொடுங்கக் கோடுயரும் வீங்கருவி வேங்கடத்தான் மண்ணொடுங்கத் தானளந்த. மன்--மூன்றாம் திருவந்தாதி 40-உளன்கண்டாய் நன்னெஞ்சே! உத்தமனென்றும்
உளன்கண்டாய் உள்ளுவாருள்ளத்து – உளன்கண்டாய் தன்னொப்பான் தானாய் உளன்காண் தமியேற்கும் என்னொப்பார்க் கீசனிமை|-
… நான்முகன் திருவந்தாதி 86

ஊழிதோறூழி ஒவாது * வாழிய வென்றே.. மாமுதலடியே—திருவாசிரியம் 4
ஊழிதோறூழி உலகுக்கு நீர் கொண்டு தோழியரும் …… நைவாயே ….திருவாய்மொழி 2-1-5-ஊழிதோறூழி உருவும் பேரும் செய்கையும் ஆழியாரே…. திருவாய்மொழி 7-3-11

எந்தை தந்தைதந்தை தந்தைதம்……….…..பல்லாண்டு பாடுதுமே-திருப்பல்லாண்டு 6
எந்தை தந்தை தம்மான் என்றென்று …..இந்தளூரீரே…. …. பெரிய திருமொழி 4-9-9
எந்தை தந்தைதந்தை தந்தை தந்தைக்கும் முந்தை….காரெழிலண்ணலே …. திருவாய்மொழி 3-3-2

எனக்காவார் ஆரொருவரே! எம்பெருமான்
தனக்காவான் தானேமற்றல்லால் – புனக்காயாம்
பூமேனி காணப் பொதியவிழும் பூவைப்பூ
மாமேனி காட்டும் வரம்
.-முதல் திருவந்தாதி 89

எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்று அல்லால் -புனக்காயா
வண்ணனே யுன்னைப் பிறர் அறியார் என் மதிக்கு
விண்ணெல்லாம் உண்டோ விலை –நான்முகன் திருவந்தாதி -51-

என்றும் மறந்தறியேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்
நின்று நினைப்பொழியா. … காண்.
இரண்டாம் திருவந்தாதி 55
என்றும் மறந்தறியேன் என்னெஞ்சத்தே வைத்து
நின்றும் இருந்தும். காப்பு
-நான்முகன் திருவந்தாதி 92

ஏழை பேதை ஓர்பாலகன் வந்து என்|-மூதுரையுமிலளே… பெரியாழ்வார்திருமொழி 3-7-4 ஏழை பேதை இராப்பகல் * தன|கேழில்……வாட்டேன்மினே. திருவாய்மொழி 2-4-10

ஓதியாயிர நாமங்கள் உணர்ந்தவர்க்கு…பிரிதி சென்றடைநெஞ்சே…. பெரிய திருமொழி 1-2-9
ஓதியாயிர நாமம் பணிந்தேத்தி ……..அணியாலியம்மானே. பெரிய திருமொழி 3-5-9

கண்டு கொண்டு என்னைக்….…..சடகோபனருளையே-.கண்ணிநுண் சிறுத்தாம்பு 7
கண்டு கொண்டு என் கைகளார ……..வந்திடகில்லாயே. திருவாய்மொழி 4-7-8
கண்டு கொண்டு என் கண்ணிணையாரக்….அடியேனே. திருவாய்மொழி 9-4-9

கண்ணார் கடல் சூழ் இலங்கைக்கு…அடியேனிடரைக் களையாயே… பெரிய திருமொழி 1-10-1 கண்ணார் கடல் போல் திருமேனி கரியாய் நண்ணார்முனை…..களையாயே-. பெரிய திருமொழி 4-7-1

கலையிலங்கும் அகலல்குல் அரக்கர்……..வணங்கு மடநெஞ்சே…. பெரிய திருமொழி 3-9-4
கலையிலங்கும் அகலல்குல் கமலப்பாவைகதிர்முத்த……என் செங்கண்மாலே– பெரிய திருமொழி 4-4-5

கல்லார் மதிள்சூழ் கடியிலங்கைக் காரரக்கன்வல்லாகம்…………….நறையூரில் கண்டேனே. பெரிய திருமொழி 6-8-8
கல்லார் மதிள்சூழ் கச்சிநகருள் நச்சி .நமோநாராயணமே-. பெரிய திருமொழி 6-10-5

கற்றினம் மேய்த்துக் கனிக்கொரு கன்றினை பற்றியெறிந்த .அக்காக்காய். பெரியாழ்வார் திருமொழி 2-5-5
கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான் காடுவாழ்– என்னை உய்த்திடுமின். நாச்சியார் திருமொழி 12-8

கன்னிநன் மாமதிள் சூழ்தரு என்குட்டனே முத்தம் தா…. பெரியாழ்வார் திருமொழி 3-3-2
கன்னிநன் மாமதிள் புடைசூழ் …….பாங்காய பக்தர்களே.. பெருமாள் திருமொழி 8-11

காண்கின்றனகளும் கேட்கின்றனகளும் கற்ற திண்ணனவே. திருவிருத்தம் 8-காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும் காண்கின்ற. செய்கின்றவே-திருவாய்மொழி5-6-3

காரிகையார்க்கும் உனக்கும்……இருடீகேசா என்தன் கண்ணே. பெரியாழ்வார் திருமொழி 2-3-10
காரிகையார் நிறைகாப்பவர் ……..என் சின்மொழிக்கே.. திருவிருத்தம் 19

கார்த்தண் கமலக் கண்ணென்னும்…..….விருந்தாவனத்தே கண்டோமே-. நாச்சியார் திருமொழி 14-4
கார்த்தண் முகிலும் கருவிளையும் ….பக்தலிலோசனத்துய்த்திடுமின். நாச்சியார் திருமொழி 12-6

காலையெழுந்து கடைந்த இம்மோர்…..….என்செய்கேனோ..பெரியாழ்வார் திருமொழி 10-7-2
காலையெழுந்திருந்து கரிய குருவிக்….வார்த்தையுரைக்கின்றவே…. நாச்சியார் திருமொழி 9-8
காலையெழுந்து உலகம் கற்பனவும் …..பெயர் குரைகழல்கள் நீட்டி மண்கொண்ட…….
என்னதாவி மேலதே
…. முதல் திருவந்தாதி 66

குரைகழல்கள் நீட்டி மண்கொண்ட…என்னதாவி மேலதே-திருவாய்மொழி 4-3-7 குரைகழல்கள் குறுகினம் நம் ……மெய்ந்நின்று கமழுமே…. திருவாய்மொழி 10-6-7

குன்றமெடுத்தபிரான் அடியாரொடும் ஒன்றிநின்ற ………கற்பார்க்கே-. திருவாய்மொழி 7-4-11
குன்றமெடுத்து ஆநிரை காத்தவன் தன்னை மன்றில்புகழ் .சாரகில்லாவே – பெரிய திருமொழி 11-8-10
குன்றமெடுத்து மழைதடுத்து இளையாரொடும் மன்றில் குரவை .. …..ஆர்கொலோ–. பெரிய திருமொழி 11-2-1

குன்றால் மாரி தடுத்தவனைக் ……நிறைந்தேனே…. பெரிய திருமொழி 7-6-4
குன்றால் மாரி பழுதாக்கிக் …..கண்ணபுரம் நாம் தொழுதுமே ……. பெரிய திருமொழி 8-6-9 குன்றெடுத்து ஆநிரை காத்த பிரான் என்வசமல்லவே…. பெரியாழ்வார் திருமொழி 3-4-4
குன்றெடுத்து ஆநிரை காத்த ஆயா! ……அரங்கத்தரவணைப் பள்ளியானே-. பெரியாழ்வார் திருமொழி 4-10-9

கொங்குமலி கருங் குழலாள்கௌசலை …..தாலேலோ…. பெருமாள் திருமொழி 8-31
கொங்குமலி கருங் குவளை கண்ணாக……..செறி வளையே…. பெரிய திருமொழி 8-3-8

கொண்டல் வண்ணனைக்கோவலனாய்—.காணாவே–. அமலனாதிபிரான் 10 கொண்டல் வண்ணா! இங்கே போதராயே! கோயிற்பிள்ளாய். .கலவிதானே. –பெரியாழ்வார் திருமொழி 2-9-4
கொண்டல் வண்ணா! குடக்கூத்தா! ஒருநாள் வந்து தோன்றாயே— திருவாய்மொழி 8-5-6

சலங்கொண்ட இரணியனது…….வணங்கு மடநெஞ்சே…. பெரிய திருமொழி 3-9-1 சலங்கொண்டு கிளர்ந்தெழுந்த …….நடலை நோய் செப்புமினே…. நாச்சியார் திருமொழி 8-6-

செய்கின்றது என் கண்ணுக்கொன்றே ……ஊழி பெயர்த்திடும்கொன்றே-. திருவாய்மொழி 5-2-5
செய்கின்ற கிதியெல்லாம் யானே யென்றும் செய்வானின்றனகளும்…………..திறத்தே…. திருவாய்மொழி 5-6-4

சேயன்அணியன் என சிந்தையுள் நின்ற மாயன் ..மற்றறியேனே–. பெரிய திருமொழி 1-10-8
சேயன் அணியன் சிறியன் பெரியன்……..தொழில் பூண்டாயே-. பெரிய திருமொழி 2-1-8
சேயன் அணியன் சிறியன் மிகப்பெரியன் ஆயன் துவரை…. மெய்ஞ்ஞானமில்-நான்முகன் திருவந்தாதி 71

சோத்தென நின்று தொழவிரங்காள்..–என்னை உய்த்திடுமின்…. பெரிய திருமொழி 9-5-9 சோத்தென நின்னைத் தொழுவன் வரம்தர பேய்ச்சி .கொட்டாய் சப்பாணி …. பெரிய திருமொழி 10-5-5-

ஞாலமுற்றும் உண்டு ஆலிலைத்துயில் …..…. இல்லை வருதுயரே-. பெரியாழ்வார் திருமொழி 3-7-11
ஞாலமுற்றும் உண்டுமிழ்ந்த நாதன்…..பார்த்தன் பள்ளி பாடுவாளே-. பெரிய திருமொழி 4-8-6=

தவம் செய்து நான்முகனால் பெற்ற வரத்தை அவம் செய்த .எவ்வுயிர்க்கும் நீ-. நான்முகன் திருவந்தாதி 19
தவம் செய்து நான்முகனே பெற்றான் * தரணி நிவந்தளப்ப………. பேர்மொழிந்து பின்…. இரண்டாம் திருவந்தாதி 78

தளர்ந்தும் முறிந்தும் வருதிரைப்…..வந்துலாகின்றதே--. திருவிருத்தம் 74
தளர்ந்தும் முறிந்தும் சகடவசுரர்…..விண்மீதே …. திருவாய்மொழி 6-9-4

தாங்கரும் சினத்துவன் தாள்……திருமணிக்கூடத்தானே…. பெரிய திருமொழி 4-5-4
தாங்கரும் போர் மாலி படப்….. கண்டேன் நானே…. பெரிய திருமொழி 2-10-4-

தாராய தணதுள் போரானைக்.. ….கவர்வானோ… பெரிய திருமொழி 3-6-6
தாராய தண்துளவ வண்டுழுத…கண்டாள் கொலோ. பெரிய திருமொழி 8-1-4-

திடவிசும்பெரிநீர் திங்களும் சுடரும்….கண்டுகொண்டுய்ந்தொழிந்தேனே…. பெரிய திருமொழி 4-3-3
திடவிசும்பெரிவளி நீர்நிலம் இவைமிசை படர்பொருள் ……சுரனே…. திருவாய்மொழி 1-1-7-

திருமாலிருஞ் சோலையானேயாகிச் அருளையீந்த அம்மானே— திருவாய்மொழி 10-7-6- திருமாலிருஞ் சோலை மலையே……….முதல்வன் ஒருவனே— திருவாய்மொழி 10-7-8-
திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்ன திருமால் வந்து —-தென்திருப்பேரே–. திருவாய்மொழி 10-8-1

தேமருவு பொழிலிடத்து மலர்ந்த போதைத் தேனதனை …………….இயம்பிக் காணே-.. திருநெடுந்தாண்டகம் 26
தேமருவு பொழில்புடைசூழ் ……வினையாய நண்ணாவே…. பெரிய திருமொழி 8-3-10

தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை…….ஒருகாலும் பிரிகிலேனே…. பெரிய திருமொழி 7-4-4-தேராளும் வாளரக்கன் செல்வம்…..என்றல்லால் பேசலாமே…. திருநெடுந்தாண்டகம் 20

தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே! யாவரும் .இராகவனேதாலேலோ
…. பெருமாள் திருமொழி 8-10
தேவரையும் அசுரரையும் திசைகளையும் கடல்களையும்….பொலிவர் தாமே.– பெரிய திருமொழி 11-6-10-

தொண்டெல்லாம் நின்னடியே தொழுதுய்யுமா கண்டு தான் ….தக்கதே–. பெரிய திருமொழி 8-2-8-தொண்டெல்லாம் பரவி நின்னைத் தொழுதடி…..….பரவுவேனே…. திருக்குறுந்தாண்டகம் 11-

நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய் நிகரில் சூழ் .புண்ணியமே – திருவாய்மொழி 6-3-3 நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்….….எனை யூழியானே…. திருவாய்மொழி 7-3-10

நந்தன் மதலையைக் காகுத்தனை நவின்று உந்தி பறந்த ………….. அல்லலில்லையே-பெரியாழ்வார் திருமொழி 3-9-11-
நந்தன் மதலை நிலமங்கை நல் துணைவன் அந்த முதல்வன் கோல்தும் !…. பெரிய திருமொழி 8-4-9-

நீலத்தடவரை மாமணிநிகழக் …….அணியாலி யம்மானே…. பெரிய திருமொழி 3-5-2-நீலத்தடவரைமேல் புண்டரீக நெடுந்தடங்கள் போல பொலிந்து ….. .கோலங்களே-திருவிருத்தம் 39

பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து நஞ்சுமிழ் நாகம் கிடந்த நற்பொய்கைபுக்கு
அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட்டு அருள்செய்த அஞ்சன வண்ணனே அச்சோவச்சோ
ஆயர்பெருமானே அச்சோவச்சோ
…. பெரியாழ்வார் திருமொழி 1-8-3-பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து நஞ்சுமிழ் நாகம் கிடந்த நற்பொய்கைபுக்கு அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட்டு அருள்செய்த அஞ்சன வண்ணனைப் பாடிப்பற அசோதைதன் சிங்கத்தைப் பாடிப்பற…. பெரியாழ்வார் திருமொழி 3-9-5-

பண்டை நாளாலே நின்திருவருளும் ….திருப்புளிங்குடிக்கிடந்தானே…. திருவாய்மொழி 9-2-1
பண்டை நான்மறையும் வேள்வியும்…….அரங்கமாநகரமர்ந்தானே…. பெரிய திருமொழி 5-7-1

பதினாறாமாயிரவர் தேவிமார் பணிசெய்ய…….புனலரங்கமே…. பெரியாழ்வார் திருமொழி 4-9-4
பதினாறாமாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப மதுவாயில் செல்வப் பெருஞ்சங்கே…. நாச்சியார் திருமொழி 7-9-

பந்தணைந்த மெல் விரலாள் பாவைதன் ….. எவ்வுள் கிடந்தானே…. பெரிய திருமொழி 2-2-4
பந்தணைந்த மெல் விரலாள் சீதைக்காகி………அமரர் கோவே… பெரிய திருமொழி 7-8-7-

புள்ளினை வாய் பிளந்திட்டாய் பொரு கரியின் …செங்கழுநீர் சூட்டவாராய்…. பெரியாழ்வார் திருமொழி 2-7-5
புள்ளினை வாய் பிளந்து பொருமாகரி ….வல்லள் கொலோ…. பெரிய திருமொழி 9-9-7
புள்ளினை வாய் பிளந்து பூங்குருந்தம் சாய்த்து துள்ளி விளையாடி சப்பாணி
…. பெரிய திருமொழி 10-5-7

புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தானை. . எம்பாவாய்…. திருப்பாவை 13-புள்ளின்வாய் பிளந்தாய்! மருதிடை …….. உய்யுமாறு எனக்கே…. திருவாய்மொழி 5-7-9

பூங்குருந்தொசித்து ஆனை காய்ந்து அரிமாச் செகுத்து அடியேனை யாளுகந்து………..திருக்கோட்டியூரானே ….பெரிய திருமொழி 9-10-8
பூங்குருந்தொசித்து ஆனை காய்ந்து அரிமாச் செகுத்து ஆங்கு வேழத்தின் இளமையே … பெரிய திருமொழி 11-2-2-

பெற்றார் தளை கழலப் பேர்ந்தங் கயலிடத்து உற்றாரொருவரும்…… ..சப்பாணி…. பெரிய திருமொழி 10-5-4
பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய் செற்றார் படிகடந்த ..நின்று
…. முதல் திருவந்தாதி 20-

பேரானைக் குறுங்குடியெம்பெருமானை * திருத்தண்கால் ஊரானைக் .தென்னரங்கத்தே
…. பெரிய திருமொழி 5-6-2-பேரானைக் குடந்தைப் பெருமானை இலங்கொளி சொ
வாரார் .கண்டு கொண்டு களித்தேனே-….பெரியதிருமொழி 7-6-9

மண்ணும் மலையும் கடலும் உலகேழும் உண்ணும். .வந்து காணீரே-.பெரியாழ்வார் திருமொழி 1-2-18
மண்ணும் மலையும் மறிகடல்களும் மற்றும்…..…மணந்தானைக் கண்டாருளர்
….பெரியாழ்வார் திருமொழி 4-1-9
மண்ணும் மலையும் மறிகடலும்மாருதமும் விண்ணும்……………உண்டோவுன்வாய் –முதல் திருவந்தாதி 10

மற்றுமோர் தெய்வமுண்டே மதியிலா…..பணிமின் நீரே--திருமாலை 9
மற்றுமோர் தெய்வம் உளதென்று …….கண்ணபுரத்துறையம்மானே-பெரிய திருமொழி 8-10-3

மனத்துள்ளான் வேங்கடத்தான்………பிளந்த மகன்-…. இரண்டாம் திருவந்தாதி 28
…. திருமாலை 9-மனத்துள்ளான்மாகடல் நீருள்ளான்…மருந்து…. மூன்றாம் திருவந்தாதி 4
…. பெரிய திருமொழி 8-10-3
மாடமாளிகை சூழ் மதுரைப் பதி நாடி….. .கூடிடு கூடலே-நாச்சியார் திருமொழி 4-5-மாட மாளிகை சூழ் திருமங்கை மன்னன் ஒன்னலர்…….-.பாவம் நில்லாவே…. பெரிய திருமொழி 5-8-10

மானேய் நோக்கியர் தம் வயிற்றுக் குழியிலுழைக்கும் ஊனே யாக்கை ……திருவிண்ணகர் மேயவனே…. பெரிய திருமொழி 6-2-3
மானேய் நோக்கு நல்லார் மதிபோல் முகத்துலவும் ஊனேய் கண் …..திருவிண்ணகரானே
….பெரிய திருமொழி 6-3-3
மானேய் நோக்கி மடவாளை மார்பில் கொண்டாய்! மாதவா!கூனே சிதைய .சேருமாறு வினையேனே…. திருவாய்மொழி 1-5-5

மின்னனைய நுண்ணிடையார் விரி குழல் மேல் …..முலை யுணாயே -.பெரியாழ்வார்திருமொழி 2-2-6-மின்னனைய நுண்ணிடையார் உருப்பசியும் ……
..அருந் தவத்தனாவேனே
….பெருமாள் திருமொழி 4-6
மின்னனைய நுண் மருங்குல்…. வணங்கு மடநெஞ்சே--.பெரிய திருமொழி 3-9-5

மின்னொத்த நுண்ணிடையாய்! …..ஓர் அடையாளம்….பெரியாழ்வார் திருமொழி 3-9-5
மின்னொத்த நுண்ணிடையாளைக்.மட நம்பி! நீயே….பெருமாள் திருமொழி 6-5-

மைத்தடங் கண்ணி யசோதை வளர்க்கின்ற செய்த்தலை .வந்து காணீரே….பெரியாழ்வார் திருமொழி 1-2-12
மைத்தடங் கண்ணி யசோதை தன் மகனுக்கு…. இடரில்லையே….பெரியாழ்வார் திருமொழி 1-4-10-

வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலை யுண்ட–அஞ்சன. இல்லை இடர் தானே
….பெரியாழ்வார் திருமொழி 1-3-10 –-வஞ்சனையால் வந்தவள் தன் உயிருண்டு வாய்த்த வணங்கு மட நெஞ்சே….பெரிய திருமொழி 3-10-9

வண்டமரும் வனமாலை மணிமுடிமேல் ….….கண்டாள் கொலோ….பெரிய திருமொழி 8-1-9
வண்டமரும் மலர்ப்புன்னை வரி ழல்………என்ஒளிவளையே….பெரிய திருமொழி 8-3-7-வண்டமரும் சோலை வயலாலி…..கோல்தும்பீ….பெரிய திருமொழி 8-4-10

வண்டார் பொழில் சூழ்ந்து அழகாய…….விரும்புவரே–….பெரிய திருமொழி 3-8-10
வண்டார் பொழில் சூழ் நறையூர்…… இல்லை துயரே–….பெரிய திருமொழி 7-4-10

வண்ணக் கருங்குழல் மாதர்வந்து …..எல்லே பாவமே….பெரியாழ்வார் திருமொழி 3-2-4
வண்ணக் கருங்குழல் ஆய்ச்சியால் ….சாழலே….பெரிய திருமொழி 11-5-5

வந்தாய் என்மனத்தே வந்து நீ ….மறவாமை பெற்றேனே….பெரிய திருமொழி 8-9-5-….வந்தாய் என் மனம் புகுந்தாய் .என்றும் விடேனே….பெரிய திருமொழி 1-10-9-

வந்தாய் போலே வந்தும் என் …. அணுகிற்பனே… திருவாய்மொழி 3-2-5
வந்தாய் போலே வாராதாய் ……அகலகில்லேன் இறையுமே–… திருவாய்மொழி 6-10-9

வம்பவிழும் துழாய் மாலை ……ஒருவர் அழகியவா….பெரிய திருமொழி 9-2-4-வம்பவிழ் வானவர் வாயுறை –பள்ளி எழுந்தருளாயே –திருப்பள்ளியெழுச்சி -8-
வம்பவிழ் கோதை பொருட்டா –சாது சனங்களினிடையே –-திருவடி –3-5-4-

வம்புலாம் கூந்தல் மனைவியை –நைமிசாரண்யத்துள் எந்தாய் –பெரிய திருமொழி -1-6-4-
வம்புலாம் கூந்தல் மண்டோதரி –தென்னரங்கமே –பெரிய திருமொழி -5-4-5-

வாரணிந்த கொங்கை யாய்ச்சி —பெறுவர் தாமே –பெரியாழ்வார் –2-2-11-
வாரணிந்த முலை மடவாய் –ஓரடையாளம் –பெரியாழ்வார் –3-10-4-

வாராரும் முலை மடமாள் வைதேவி –இமையவரோடு இருப்பாரே -பெரியாழ்வார் -3-10-10-
வாராரும் முலை மடமாள் பின்னைக்காகி –என் செங்கண் மாலே -பெரியாழ்வார்-4-4-4-
வாராரும் இளங்கொங்கை மைதிலியை —திருத்தேவனார் தொகையே –பெரிய திருமொழி –4-1-8-

வாராளும் இளம்கொங்கை வண்ணம் ….. எங்ஙனம் நான்செப்புகேனே….பெரிய திருமொழி 5-5-7-வாராளும் இளம்கொங்கை……… இழந்தேன் என் பெய்வளையே….பெரிய திருமொழி 8-3-9-

வாழ்த்தி அவனடியைப் பூப் புனைந்து………..தங்கு–….பெரிய திருவந்தாதி 84
வாழ்த்திய வாயராய் வானோர் ….…தாமரையாமலர்….மூன்றாம் திருவந்தாதி 96

வெஞ்சினக் களிறும் வில்லொடு அல்லல் தீர்ந்தேனே…. பெரிய திருமொழி 4-3-7
வெஞ்சினக் களிற்றை விளங்காய் ………கண்டு கொண்டேனே….பெரிய திருமொழி 7-10-8

வெந்திறல் களிறும் வேலைவாய் ….வதரியாச்சிராமத்துள்ளானே--….பெரிய திருமொழி 1-4-7
வெந்திறல் வாணன் வேள்வியிட…….நம்மையாளுமரசே….பெரிய திருமொழி 11-4-5-

வெள்ளை நுண் மணற் கொண்டு…….. என்னை எய்கிற்றியே….நாச்சியார் திருமொழி 1-2
வெள்ளை நுண் மணற் கொண்டு…..…… உன்முகத்தன கண்களல்லவே–.நாச்சியார் -2-5-திருமொழி 2-5

வெள்ளை விளிசங்கு வெஞ்சுடர்த் ……….கைசெய்யக் கண்டாருளர்….பெரியாழ்வார் திருமொழி 4-1-7–வெள்ளைவிளிசங்கு இடங்கையில்…… என் வேங்கடவன் வரக்கூவாய்-.நாச்சியார் திருமொழி 5-2

வெற்பென்று வேங்கடம் பாடும்……புகும்--….மூன்றாம் திருவந்தாதி 69
வெற்பென்று வேங்கடம் பாடினேன்… காண்….நான்முகன் திருவந்தாதி 40-

வையமெல்லாம் பெறும் வார்கடல் வாழும்…….மாதவனே! இங்கே வாராய்….பெரியாழ்வார் திருமொழி 2-3-3
வையமெல்லாம் உடன்வணங்க வணங்கா….கண்டுகொண்டேனே….பெரிய திருமொழி 8-8-7

————————

முடிவு ஒன்றான பாசுரங்கள்

இல்லை பாவமேசெந் நெலார் வயல் சூழ் –இம் மன்னுபாடல் வல்லார்க்கு இல்லை பாவமே …. பெரியாழ்வார் திருமொழி 1-1-10 ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை… பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லைபாவமே —நாச்சியார் திருமொழி-4-11-

இடரில்லையே
1) மைத்தடங்கண்ணி யசோதை சொல்ல வல்லவர்க்கு இடரில்லையே.. பெரியாழ்வார் திருமொழி 1-4-10
z) என்றும் எனக்கினியானை என்………. மாலைகள் வல்லவர்க்கு இடரில்லையே… பெரியாழ்வார் திருமொழி 3-2-10-

வினைபோமே
1) ஆட் கொள்ளத் தோன்றிய ஆயர்தங்…..சொல்லுவார் வினை போமே--. பெரியாழ்வார் திருமொழி 1-6-11
2) போதமர் செல்வக் கொழுந்து ………பத்தருள்ளார் வினை போமே... பெரியாழ்வார் திருமொழி 2-8-10

மக்களைப் பெற்று மகிழ்வரே
1) ஆய்ச்சியன்றாழிப்பிரான் நன்மக்களைப் பெற்று மகிழ்வரே…பெரியாழ்வார் திருமொழி 1-9-10
2) ஆயனுக்காகத் தான்கண்ட கனாவினை…… வாயும் நன்மக்களைப் பெற்று மகிழ்வரே
…. நாச்சியார் திருமொழி 6-11

கழலிணை காண்பர்களே
1) புற்றரவல்குல் அசோதை நல்லாய்ச்சி……..கடல் வண்ணன் கழலிணை காண்பர்களே
…. பெரியாழ்வார் திருமொழி 3-3-10—2)மருதப் பொழிலணி மாலிருஞ–கண்ணன் கழலிணை காண்பர்களே.... பெரியாழ்வார் திருமொழி 4-2-11-

பரமான வைகுந்தம் நண்ணுவரே
1) விண்ணின் மீது அமரர்கள் விரும்பித்…….பண்ணின்பம் வரப்பாடும் பத்தருள்ளார்
பரமான வைகுந்தம் நண்ணுவரே… பெரியாழ்வார் திருமொழி 3-4-10
2) அரவில் பள்ளி கொண்டுஅரவம் ……..பரவுமன நன்குடைப் பத்தருள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே.... பெரியாழ்வார் திருமொழி 3-5-11-

தூமணி வண்ணனுக்கு ஆளரே
1) மாயவன்பின் வழிசென்று ……. தூமணி வண்ணனுக்குஆளரே-. பெரியாழ்வார் திருமொழி 3-8-10
2) மாயவனை மதுசூதனனைமாதவனை …. தூமணி வண்ணனுக்கு ஆளரே--… பெரியாழ்வார் திருமொழி 4-10-10

8. அல்லலில்லையே-நந்தன் மதலையைக் காகுத்தனை நவின்று…… ஐந்தினோடைந்தும் வல்லார்க்கு அல்லலில்லையே... பெரியாழ்வார் திருமொழி 3-9-11
2) அன்று பாரதத்து ஐவர் தூதனாய் சென்ற மாயனைச் செங்கண் மாலினை மன்றிலார் புகழ் மங்கை வாட்கலி கன்றி* சொல் வல்லார்க்கு அல்லலில்லையே... பெரிய திருமொழி 10-1-10
3) பாதம் நாளும் பணியத் தணியும் பிணி… ஆதியானை அடைந்தார்க்கு அல்லலில்லையே
…. திருவாய்மொழி 9-10-9-

நண்ணுவாரொல்லை நாரணனுலகே- காமர்தாதை கருதலர்சிங்கம் .. நாமமென்று நவின்றுரைப்பார்கள் நண்ணுவாரொல்லை நாரணனுலகே... பெரியாழ்வார் திருமொழி 5-1-10
2) மல்லை மாநகர்க்கிறையவன் தன்னை….. நல்லிசைத் தமிழ் மாலை வல்லார்கள்
நண்ணுவாரொல்லை நாரணனுலகே-.… பெருமாள் திருமொழி 7-11

10. அணுக்கர்களே / அணுக்கரே-வேயர் தங்கள் குலத்துதித்த விட்டு சித்தன் மனத்தே…..
சாயை போலப் பாடவல்லார் தாமும் அணுக்கர்களே.. பெரியாழ்வார் திருமொழி 5-4-11-பாஞ்ச சன்னியத்தைப் பற்ப நாபனோடும்..ஆய்ந்தேத்த வல்லாரவரும் அணுக்கரே.. நாச்சியார் திருமொழி 7-10

நலந்திகழ் நாரணனடிக்கீழ் நண்ணுவாரே
1) திடர்விளங்கு கரைப் பொன்னி நடுவு பாட்டுத் நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார் நலந் திகழ் நாரணனடிக் கீழ் நண்ணுவாரே… பெருமாள் திருமொழி 1-11
2) தில்லை நகர்த் திருச் சித்திர கூடந்தன்னுள் நல்லியலின் தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலந்திகழ் நாரணனடிக் கீழ் நண்ணுவாரே… பெருமாள் திருமொழி 10-11-

பாங்காய பத்தர்களே
1) மன்னிய தண்சாரல் வடவேங்கடத்தான் தன் ……  பன்னியநூல் தமிழ் வல்லார் பாங்காய பத்தர்களே… பெருமாள் திருமொழி 4-11
2) கன்னிநன் மாமதிள் புடைசூழ் கணபுரத்தென் பன்னியநூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே... பெருமாள் திருமொழி 8-11

பயில்வார்க்கு இல்லை பாவங்களே
1) கண்ணாய் ஏழுலகுக்குஉயிராய எங்கார் வண்ணனை….. பண்ணார் பாடல்பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே... பெரிய திருமொழி 1-9-10
2) தேடற்கரியவனை திருமாலிருஞ்சோலை நின்ற…..பாடல் பனுவல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே… பெரிய திருமொழி 9-9-10-

வானவராகுவர் தாமே / வானவர் தாமே
1) வில்லார்மலி வேங்கடமாமலை மேய … வல்லாரவர் வானவராகுவர் தாமே… பெரிய திருமொழி 1-10-10- நல்லனபுடை வேதியர் மன்னிய நாங்கூர் …வல்லரென வல்லவர் வானவர் தாமே–…. பெரிய திருமொழி 4-7-1

15. இடமாகும் வானுலகே–.மின்னுமாமுகில்மேவு தண்திருவேங்கட மலை………
மன்னுபாடல் வல்லார்க்கு இடமாகும் வானுலகே... பெரிய திருமொழி 2-1-10
2) ஆலுமாவலவன் கலிகன்றி மங்கையர் தலைவன்….நாலுமாறும் வல்லார்க்கு இடமாகும் வானுலகே.. பெரிய திருமொழி 9-10-10

நாளும் பழவினை பற்றறுப்பாரே
1) அன்னமும் மீனும் ஆமையும் அரியும் பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழவினை பற்றறுப்பாரே.… பெரிய திருமொழி 2-7-10
2) பொன்னும் மாமணியும் முத்தமும் சுமந்து……. பன்னிய பனுவல் பாடுவார் நாளும்
பழவினை பற்றறுப்பாரே... பெரிய திருமொழி 5-7-10

இமையவரோடும் கூடுவரே
1) மன்னுளார்புகழ் வேதியர் நாங்கூர் எண்ணிலாத பேரின்பமுற்று இமையவரோடும் கூடுவரே... பெரிய திருமொழி 3-2-10
2) வார்கொள் மென்முலை மடந்தையர்……. ஏர்கொள் வைகுந்தமாநகர்புக்கு இமையவரோடும் கூடுவரே--…. பெரிய திருமொழி 8-5-10

18. பாவம் நில்லாவே-மாடமாளிகைசூழ் திருமங்கைமன்னன் ……..பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர்பாட நும்மிடைப் பாவம் நில்லாவே… பெரிய திருமொழி 5-8-10-தோடுவிண்டலர் பூம்பொழில் மங்கையர் …..பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாவே.… பெரிய திருமொழி 7-3-10
3) மீனோடு ஆமை கேழல் அரிகுறளாய்……தேனாரின்சொல் தமிழ்மாலைசெப்பப் பாவம் நில்லாவே... பெரிய திருமொழி 8-8-10
4) சிலையால் இலங்கை செற்றான் நிலையார் பாடல் பாடப் பாவம் நில்லாவே... பெரிய திருமொழி 9-6-10-

இவை பாடி ஆடுமினே
1) செருநீர வேல்வலவன் கலிகன்றி மங்கையர்கோன்…. வருநீர் வையமுய்ய இவை பாடி ஆடுமினே-… பெரிய திருமொழி8-9-10
2) மெய்ந்நின்ற பாவமகல ஐயொன்றுமைந்தும் இவை பாடி ஆடுமினே-…. பெரிய திருமொழி 11-7-10

20. நல்குரவே–கலையுலாவல்குல் காரிகை திறத்துக் உலவ சொல்மாலை வான்றும் வல்லவர்க்கில்லை நல்குரவே... பெரிய திருமொழி 9-1-10
2) ஆய்ச்சியாகிய அன்னையால் நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல்குரவே-…. திருவாய்மொழி 6-2-11

21. பாவம் பயிலாவே-மூவராகிய ஒருவனை மூவுலகுண்டுஉமிழ்ந்தளந்தானை ….. பாவுதண்டமிழ்ப் பத்திவை பாடிடப் பாவங்கள் பயிலாவே… பெரிய திருமொழி 3-1-10
2) சீரார்நெடுமறுகில் சிறுபுலியூர்ச் சலசயனத்து ….பாரார் இவை பரவித்தொழப் பாவம் பயிலாவே… பெரிய திருமொழி 7-9-10-

22. செந்தமிழ்ப் பத்தும் வல்லார்
1) சந்தொடு காரகிலும் சுமந்து தடங்கள் பொருது…… . செந்தமிழ்ப்பத்தும் வல்லார் திருமாலடி சேர்வர்களே... நாச்சியார் திருமொழி 9-10
2) சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும்…..செந்தமிழ்ப்பத்தும் வல்லார் அடிமைசெய்வார் திருமாலுக்கே... திருவாய்மொழி 6-5-11

—————-

கவலை தரும் பகுதிகள்

உழந்தாள்  நறு நெய் ஒரோ தடா உண்ண
இழந்தாள் எரிவினால் ஈர்த்து எழில் மத்தின்
பழம் தாம்பால் ஒச்ச பயத்தால் தவழ்ந்தான்
முழம் தாள் இருந்தவா காணீரே முகிழ் முலையீர் வந்து காணீரே- 1-2-4-

மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை
சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில்
அத்ததின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன்
முத்தம் இருந்தவா காணீரே முகிழ் நகையீர் வந்து காணீரே -1-2-6-

வந்த முதலை குழாத்தை வலி செய்து
தந்த களிறு போல் தானே விளையாடும்
நந்தன் மதலைக்கு நன்றும் அழகிய
உந்தி இருந்தவா காணீரே ஒளி இழையீர் வந்து காணீரே -1-2-8-

அதிரும் கடல் நிற வண்ணனை ஆச்சி
மதுர முலை ஊட்டி வஞ்சித்து வைத்து
பதரப் படாமே பழம் தாம்பால் ஆர்த்த
உதரம் இருந்தவா காணீரே ஒளி வளையீர் வந்து காணீரே -1-2-9-

மைத்தடம் கண்ணி யசோதை வளர்க்கின்ற
செய்த்தலை நீல நிறத்துச் சிறுப் பிள்ளை
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய
கைத் தலங்கள் வந்து காணீரே கனம் குழையீர் வந்து காணீரே -1-2-12-

விண் கொள் அமரர்கள் வேதனை தீர
மண் கொள் வசுதேவன் தம் மகனாய் வந்து
திண் கொள் அசுரரை தேய வளர்கின்றான்
கண்கள் இருந்தவா காணீரே கன வளையீர் வந்து காணீரே -1-2-16-

சுருப்பார் குழலி யசோதை முன் சொன்ன
திருப் பாத கேசத்தை தென் புதுவை பட்டன்
விருப்பால் உரைத்த இருபதோடு  ஒன்றும்
உரைப்பார் போய் வைகுந்தத்து ஒன்றுவர் தாமே -1-2-21-

வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலை உண்ட
அஞ்சன வண்ணனை யாய்ச்சி தாலாட்டிய
செம் சொல் மறையவர் சேர் புதுவை பட்டன் சொல்
எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர் தானே-1 3-10

மைத் தடம் கண்ணி யசோதை தன் மகனுக்கு இவை-
ஒத்தன சொல்லி உரைத்த மாற்றம் ஒளி புத்தூர்
வித்தகன் விட்டு சித்தன் விரித்த தமிழ் இவை
எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு இடரில்லையே -1-4 10-

துப்புடை யாயர்கள் தம் சொல் வழுவா தொரு கால் தூய கரும் குழல் நல்  தோகை மயிலனைய
நப்பினை தன் திறமா நல் விடை யேழ் அவிய நல்ல திறல் உடைய நாதனும் ஆனவனே
தப்பின பிள்ளைகளைத் தன மிகு சோதி புகத் தனி யொரு தேர் கடவித் தாயொடு கூட்டிய என்
அப்ப எனக்கு ஒரு கால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே -1 5-7 –

ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சன வண்ணன் தன்னை
தாயர் மகிழ ஒன்னார் தளரத் தொடர் நடை நடந்ததனை
வேயர் புகழ் விட்டு சித்தன் தன் சீரால் விரித்தன உரைக்க வல்லார்
மாயன் மணி வண்ணன் தாள் பணியும் மக்களைப் பெறுவர்களே – 1-7 11- –

கத்தக் கதித்து கிடந்த பெரும் செல்வம்
ஒத்து பொதிந்து கொண்டு உண்ணாது மண் ஆள்வான்
கொத்து தலைவன் குடி கெடத் தோன்றிய
அத்தன் வந்து என்னைப் புறம் புல்குவான் ஆயர்கள் ஏறு என்னைப் புறம் புல்குவான் -1 9-3 –

பொத்த உரலைக் கவிழ்த்து அதன் மேல் ஏறித்
தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்
மெத்த திரு வயிறு ஆர விழுங்கிய
அத்தன் வந்து என்னைப் புறம் புல்குவான் ஆழியான் என்னைப் புறம் புல்குவான் -1-9 7- –

வல் ஆள் இலங்கை மலங்க சரம் துரந்த
வில் ஆளானை விட்டு சித்தன் விரித்த
சொல் ஆர்ந்த அப் பூச்சி பாடல் இவை பத்தும்
வல்லார் போய் வைகுந்தம் மன்னி இருப்பரே -2- 1-10 – –

பெண்டிர் வாழ்வார் நின் ஒப்பாரை பெறுதும் என்னும் ஆசையாலே
கண்டவர்கள் போக்கு ஒழிந்தார் கண் இணையால் கலக்க நோக்கி
வண்டுலாம் பூம் குழலினார் உன் வாய் அமுதம் உண்ண வேண்டி
கொண்டு போவான் வந்து நின்றார் கோவிந்தா முலை உணாயே -2-2 -7- –

ஓட ஓட கிண் கிணிகள் ஒலிக்கும் ஓசை பாணியாலே
பாடிப் பாடி வருகின்றாயை பற்ப நாபன் என்று இருந்தேன்
ஆடி ஆடி அசைந்து அசைந்து இட்டு அதனுக்கு ஏற்ற கூத்தை யாடி
ஓடி ஓடி போய் விடாதே உத்தமா நீ முலை உணாதே -2 2-10 – –

வண நன்றுடைய வைரக் கடிப்பு இட்டு வார் காது தாழப் பெருக்கி
குண நன்றுடைய இக் கோபால பிள்ளைகள் கோவிந்தா நீ சொல்லுக் கொள்ளாய்
இணை நன்று அழகிய இக்கடிப்பு இட்டால் இனிய பலாப் பழம் தந்து
சுண நன்று அணி முலை உண்ணத் தருவன் நான் சோத்தம்பிரான் இங்கே வாராய் -2 3-4 – –

சோத்தம்பிரான் என்று இரந்தாலும் கொள்ளாய் சுரி குழலாரோடு நீ போய்
கோத்து குரவை பிணைந்து இங்கு வந்தால் குணம் கொண்டு இடிவனோ நம்பீ
பேர்த்தும் பெரியன  அப்பம் தருவன் பிரானே திரி இட ஓட்டில்
வேய்த் தடம் தோளார் விரும்பு கரும் குழல் விட்டுவே நீ இங்கே வாராய் -2 3-5 –

என் குற்றமே என்று சொலவும் வேண்டா காண் என்னை நான் மண் உண்டேனாக
அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டி இற்றிலையே
வன் புற்றரவின் பகைக் கொடி வாமன நம்பீ உன் காதுகள் தூரும்–
துன்புற்றன எல்லாம் தீர்ப்பாய் பிரானே திரி இட்டு சொல்லுகேன் மெய்யே -2 3-8 – –

மெய்யென்று சொல்லுவார் சொல்லைக்  கருதி தொடுப்புண்டாய் வெண்ணெயை என்று
கையைப் பிடித்துக் கரை உரலோடு என்னைக் காணவே கட்டிற்று இலையே
செய்தன சொல்லி சிரித்து அங்கு இருக்கில் சிரீதரா உன் காது தூரும்
கையில் திரியை இடு கிடாய் இந்நின்ற காரிகையார் சிரியாமே -2 3-9 – –

கன்றுகளோடச் செவியில் கட்டெறும்பு பிடித்திட்டால்
தென்றிக் கெடுமாகில் வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்
நின்ற மராமரம் சாய்த்தாய் நீ பிறந்த திருவோணம்
இன்று நீ நீராட வேண்டும் எம்பிரானே ஓடாதே வாராய் -2 4-2 – –

கன்றினை வாலோலை கட்டி கனிகள் உதிர எறிந்து
பின் தொடர்ந்தோடி ஓர் பாம்பை பிடித்துக் கொண்டாடினாய் போலும்
நின் திறத்தேன் அல்லேன் நம்பி நீ பிறந்த நல் திரு நாள்
நன்று நீ நீராட வேண்டும் நாரணா நீராட வாராய் -2 4-8 – –

பின்னை மணாளனை பேரில் கிடந்தானை
முன்னை அமரர் முதல் தனி வித்தினை
என்னையும் எங்கள் குடி முழுது  ஆள் கொண்ட
மன்னனை வந்து குழல் வாராய் அக்காக்காய்
மாதவன் தன் குழல் வாராய் அக்காக்காய் -2 5-1 – –

பிண்டத் திரளையும் பேய்க்கிட்ட நீர் சோறும்
உண்டற்கு வேண்டி நீ ஓடித் திரியாதே
அண்டத்த அமரர் பெருமான் அழகமர்
வண்டு ஒத்து  இருண்ட  குழல் வாராய் அக்காக்காய்
மாயவன்தன் குழல் வாராய் அக்காக்காய் -2 5-7 – –

கறுத்து எதிரிட்டு நின்ற கஞ்சனை கொன்றான்
பொறுத்திட்டு எதிர் வந்த புள்ளின் வாய் கீண்டான்
நெறித்த குழல்களை நீங்க முன்னோடி
சிறுக்கன்று மேய்ப்பாற்க்கு ஓர் கோல் கொண்டு வா
தேவ பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா – 2-6-3-

தென் இலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து
மின் இலங்கு பூண் விபீடணன் நம்பிக்கு
என் இலங்கு   நாமத்து அளவும் அரசு என்ற
மின் இலங்கு ஆரற்க்கு  ஓர் கோல் கொண்டு வா
வேம்கட வாணற்க்கு   ஓர் கோல் கொண்டு வா -2 -6-9 –

தெருவின் கண் நின்று இள ஆய்ச்சிமார்களை தீமை செய்யாதே
மருவும் தமநகமும் சீர் மாலை மணம் கமழ்கின்ற
புருவம் கரும் குழல் நெற்றி பொலிந்த முகில் கன்று போலே
உருவம் அழகிய நம்பி உகந்து இவை சூட்ட நீ வாராய் -2 7-4 –

மாவலி வேள்வியின் மாண் உருவாய் சென்று
மூவடி தா என்று இரந்த இம் மண்ணினை
ஓரடி இட்டு இரண்டாம் அடி தன்னிலே
தாவடி இட்டானால் இன்று முற்றும்
தரணி அளந்தானால் இன்று முற்றும் 2-10-7 – –

வானத்து எழுந்த மழை முகில் போல் எங்கும்
கானத்து மேய்ந்து களித்து விளையாடி
ஏனத் துருவாய்  இடந்த இம் மண்ணினை
தானத்தே வைத்தானால் இன்று முற்றும்
தரணி இடந்தானால் இன்று முற்றும் -2 10-9 –

குடையும் செருப்பும் கொடாதே தாமோதரனை நான்
உடையும் கடியன ஊன்று வெம் பரற்களுடைக்
கடிய வெம் கானிடைக் காலடி நோவக் கன்றின் பின்
கொடியனேன் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே -3 -2-9 –

கடியார் பொழில் அணி வேம்கடவா கரும் போரேறே நீ உகக்கும்
குடையும் செருப்பும் குழலும் தருவிக்க கொள்ளாதே போனாய் மாலே
கடிய வெம் காநிடை  கன்றின் பின் போன சிருக் குட்ட செம் கமல
வடியும் வெதும்பி உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான் -3 3-4 –

பற்றார் நடுங்க முன் பாஞ்ச சனியத்தை வாய் வைத்த போரேறே என்
சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா சிறுக்குட்டச் செம் கண் மாலே
சிற்றாடையும் சிறுப் பத்திரமும்  இவை கட்டிலின் மேல் வைத்து போய்க்
கற்றாயரோடு நீ கன்றுகள் மேய்த்து கலந்து உடன் வந்தாய் போலும் -3 3-5 –

புற்று அரவு அல்குல் யசோதை நல் ஆய்ச்சி தன் புத்திரன் கோவிந்தனை
கற்றினம் மேய்த்து வரக் கண்டு  உகந்தவள் கற்பித்த மாற்றம் எல்லாம்
செற்றம் இலாதவர் வாழ்தரு தென் புதுவை விட்டு சித்தன் சொல்
கற்று இவை பாட வல்லார் கடல் வண்ணன் கழல் இணை காண்பர்களே
-3 3-10 –

சிந்தூரம் இலங்க தன் திரு நெற்றி மேல் திருத்திய கோறம்பும் திருக் குழலும்
அந்தரம் முழவத் தண் தழை காவின் கீழ் வரும் ஆயரோடு உடன் -வளை கோல் வீச
அந்தம் ஒன்றில்லாத ஆய்ப் பிள்ளை அறிந்து அறிந்து இவ்வீதி போதுமாகில்
பந்து கொண்டான் என்று வளைத்து வைத்து பவள வாய் முறுவலும் காண்போம் தோழி 3-4-6- –

சிந்துரப் பொடி கொண்டு சென்னி யப்பிப் திருநாமம் இட்டு அங்கு ஓர் இலை அம் தன்னால்
அந்தரம் இன்றி தன்னெறி பங்கியை யழகிய நேத்திரத்தால் அணிந்து
இந்திரன் போல் வரும் ஆயப் பிள்ளை எதிர் நின்று அங்கு இனவளை இழவேல் என்னச்
சந்தியின் நின்று  கண்டீர் நங்கை தன் துகிலொடு சரி வளை கழல் கின்றதே – 3-4-8-

விண்ணின் மீது அமரர்கள் விரும்பி தொழ மிறைத்து ஆயர்பாடியிலே வீதி யூடே
கண்ணன் காலிப் பின்னே எழுந்து அருள கண்டு இள ஆய்க் கன்னிமார் காமுற்ற
வண்ண வண்டு அமர் பொழில் புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்
பண்ணின்பம் வரப் பாடும் பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே -3- 4-10 – 

அரவில் பள்ளி கொண்டு அரவம் துரந்திட்டு அரவப் பகை ஊர்தி அவனுடைய
குரவில் கொடி முல்லைகள் நின்று உறங்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடை மேல்
திருவில் பொலி மறை வாணர் புத்தூர் திகழ பட்டார் பிரான் சொன்ன மாலை பத்தும்
பரவும் மனம் நன்குடை பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே -3- 5-11 –

மாயவன் பின் வழி சென்று வழி இடை மாற்றங்கள் கேட்டு
ஆயர்கள் சேரியிலும் புக்கு அங்குத்தை மாற்றம் எல்லாம்
தாயவள் சொல்லிய சொல்லை தண் புதுவை பட்டன் சொன்ன
தூய தமிழ் பத்தும் வல்லார் தூ மணி வண்ணனுக்கு ஆளரே  – 3-8 -10-

முடி ஒன்றி மூ உலகங்களும் ஆண்டு உன்
அடியேற்கு அருள் என்று அவன் பின் தொடர்ந்த
படியில் குணத்து பரத நம்பிக்கு அன்று
அடி நிலை ஈர்ந்தானைப் பாடிப் பற
அயோத்தியர் கோமானைப் பாடிப் பற -3- 9-6 –

தார்க்கு இள தம்பிக்கு அரசு ஈந்து தண்டக
நூற்றவள் சொல் கொண்டு போகி நுடங்கிடை
சூர்பணகாவை செவியோடு மூக்கவள்
ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற
அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற -3 -9-8 –

காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு
ஓராதான் பொன் முடி ஒன்பதோடு ஒன்றையும்
நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த
ஆராவமுதனைப் பாடிப் பற
அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற – 3-9- 10-

கரிய முகல் புரை மேனி மாயனை கண்ட சுவடு உரைத்து 
புரவி முகம் செய்து செந்நெல் ஓங்கி விளை கழனி புதுவை 
திருவில் பொலி மறை வாணன் பட்டர் பிரான் சொன்ன மாலை பத்தும் 
பரவு மனம் உடை பத்தர் உள்ளார் பரமன் அடி சேர்வார்களே -4- 1-10 –

தக்கார் மிக்கார்களை சஞ்சலம் செய்யும் சலவரை
தெக்கா நெறியே  போக்குவிக்கும் செல்வன் பொன் மலை
எக் காலமும் சென்று சேவித்து இருக்கும் அடியரை
அக் கான் நெறியை மாற்றும் தண் மால் இரும் சோலையே – 4-2- 3-

ஒரு வாரணம் பணி கொண்டவன் பொய்கையில் கஞ்சன் தன்
ஒரு வாரணம் உயிர் உண்டவன் சென்று உறையும் மலை
கரு வாரணம் தன் பிடி துறந்து ஓடக் கடல் வண்ணன்
திரு ஆணை கூறத் திரியும் தண் மால் இரும் சோலையே – 4-2- 5-

மருதப் பொழில் அணி மால் இரும் சோலை மலை தன்னை
கருதி உறைகின்ற கார்க்கடல் வண்ணன் அம்மான் தன்னை
விரதம் கொண்டு ஏத்தும் வில்லிபுத்தூர் விட்டு சித்தன் சொல்
கருதி உரைப்பவர் கண்ணன் கழலினை காண்பரே – 4-2 -11-

பூதம் ஐந்தோடு வேள்வி ஐந்து புலன்கள் ஐந்து பொறிகளால்
ஏதம் ஒன்றும் இலாத வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர்
நாதனை நரசிங்கனை நவின்று எத்துவாரகள் உழக்கிய
பாத தூளி படுதலால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே – 4-4-6-

கொம்பினார் பொழில் வாய் குயில் இனம் கோவிந்தன்  குணம் பாடு சீர்
செம்பொனார் மதிள் சூழ் செழும் கழனி வுடைத் திரு கோட்டியூர்
நம்பனை நரசிங்கனை நவின்று  ஏத்துவார்களைக் கண்டக்கால்
எம்பிரான் தன் சின்னங்கள் இவர் இவர் என்று ஆசைகள் தீர்வேனே – 4-4- 9-

பெருவரங்கள் அவை பற்றி பிழக்கு உடை இராவணனை 
உருவரங்க  பொருது அழித்து இவ்வுலகினை கண் பெறுத்தானூர்  
குருவு அரும்ப கொங்கு அலர குயில் கூவும் குளிர் பொழில் சூழ் 
திருவரங்கம் என்பதுவே  என் திரு மால் சேர்விடமே – 4-8 5- –

பருவரங்கள் அவை பற்றி படை யாலித்து எழுந்தானை
செருவரங்க பொருது அழித்த திருவாளன் திருப்பதி மேல் 
திருவரங்க தமிழ்மாலை விட்டு சித்தன் விரித்தன கொண்டு 
இருவரங்கம் எரித்தானை ஏத்த வல்லார் அடியோமே -4 -8-10 –

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய துவரை என்னும்
அதில் நாயகராகி வீற்று இருந்த மணவாளர் மன்னு கோயில்
புது நாள் மலர்க் கமலம் எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான்
பொது நாயகம் பாவித்து இறுமாந்து பொன் சாய்க்கும் புனல் அரங்கமே – 4-9 4-

சாமிடத்து என்னை குறிக்கொள் கண்டாய் சங்கோடு சக்கரம்  ஏந்தினானே
நாமடித்து என்னை யனேக தண்டம் செய்வதா நிற்பர் நமன் தமர்கள்
போமிடத் துன்றிறத்தனையும் புகா வண்ணம் நிற்பதோர் மாயை வல்லை
ஆமிடத்தே உன்னை சொல்லி வைத்தேன் அரங்கத்து அரவணைப் பள்ளியானே -4- 10-2 –

மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும்
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத்து அரவணைப் பள்ளியானே
வேயர் புகழ் வில்லி புத்தூர் மன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்
தூய மனத்தனராகி வல்லார் தூ மணி வண்ணனுக்கு ஆளர் தாமே  – 4-10 -10-

சழக்கு நாக்கொடு புன்  கவி சொன்னேன் சங்கு சக்கரம் ஏந்து கையனே
பிழைப்பர் ஆகிலும் தம் அடியார் சொல் பொறுப்பது பெரியோர் கடன் அன்றே
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்று அல்லால் வேறு ஒருவரோடு என் மனம் பற்றாது
உழைக்கோர் புள்ளி மிகை யன்று கண்டாய் ஊழி  ஏழு உலகு உண்டு உமிழ்ந்தானே -5- 1-2 –

நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால்
புன்மையால் உன்னை புள்ளுவம் பேசி புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே
உன்னும் ஆறு உன்னை ஒன்றும் அறியேன் ஓவாதே நமோ நாரணா என்பன்
வன்மை யாவது உன் கோயிலில் வாழும் வைட்டணவன் என்னும் வன்மை கண்டாய் -5- 1-3 –

நம்பனே நவின்று ஏத்த வல்லார்கள் நாதனே நரசிங்கமதானாய்
உம்பர் கோன் உலகு ஏழும் அளந்தாய் ஊழி யாயினாய் ஆழி முன்னேந்தி
கம்ப மா கரி கோள் விடுத்தானே காரணா கடலைக் கடைந்தானே
எம்பிரான் என்னை ஆளுடைத் தேனே ஏழையேன் இடரைக் களையாயே – 5-1 -9-

சென்று உலகம் குடைந்தாடும் சுனை திரு மால் இரும் சோலை தன்னுள்
நின்ற பிரான் அடி மேல் அடிமைத் திறம் நேர்பட விண்ணப்பம் செய்
பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும்  புதுவைக் கோன் விட்டு சித்தன்
ஒன்றினோடு ஒன்பதும் பாட வல்லார் உலகம் அளந்தான் தமரே– 5-3- 10- –

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை…..தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது-5-நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய…. தூயோமாய் வந்தோம்- துயிலெழப் பாடுவான்–16-

நாச்சியார் திருமொழி
வெள்ளை நுண்மணற் கொண்டு தெருவணிந்து வெள்வரைப்பதன் முன்னம் துறைபடிந்து-1-2-
வெள்ளை நுண்மணற்கொண்டு சிற்றில்விசித்திரப்பட * வீதிவாய்த்-2-5-

தெள்ளியார் பலர் கைந்தொழும் தேவனார்
வள்ளல் மாலிரும் சோலை மணாளனார்
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட
கொள்ளுமாகில் நீ கூடிடு கூடிலே–4-1-

காட்டில் வேங்கடம் கண்ணபுரநகர்
வாட்டமின்றி மகிழ்ந்துறை வாமனன்
ஓட்டரா வந்து என் கைப்பற்றி தன்னோடும்
கூட்டுமாகில் நீ கூடிடு கூடலே-–4-2-

மாட மாளிகை சூழ் மதுரைப் பதி
நாடி நந்தெருவின் நடுவே வந்திட்டு
ஓடை மா மதயானை யுதைத்தவன்
கூடுமாகில் நீ கூடிடு கூடலே—4-5-

வெள்ளை விளி சங்கு இடம் கையில் கொண்ட விமலன் எனக்கு உருக் காட்டான்
உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும் உயிர்ப் பெய்து கூத்தாட்டுக் காணும்
கள்ள விழ் செண்பகப் பூ மலர்க் கோதிக் களித்து இசை பாடும் குயிலே
மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது என் வேங்கடவன் வரக் கூவாய்–5-2-

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
மது வாயில் கொண்டால் போலே மாதவன் தன் வாயமுதம்
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ யுண்டக்கால்
சிதையாரோ வுன்னோடு செல்வப் பெரும் சங்கே–7-9-

சந்தொடு கார் அகிலும் சுமந்து தடங்கள் பொருது
வந்திழியும் சிலம்பாறுடை மாலிருஞ்சோலை நின்ற
சுந்தரனை சுரும்பார் குழல் கோதை தொகுத்து உரைத்த
செந்தமிழ் பத்தும் வல்லார் திருமாலடி சேர்வர்களே –9-10-

மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பதோர் அன்பு தன்னை
உற்று இருந்தேனுக்கு உரைப்பது எல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை
பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப் பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி
மல் பொருந்தா மற்களம் அடைந்த மதுரைப் புறத்து என்னை யுய்த்திடுமின்–12-1-

ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில் ஆய்ப்பாடிக்கே என்னை யுய்த்திடுமின்--12-2-

நந்த கோபாலன் கடைத் தலைக்கே நள்ளிருட்கண் என்னை யுய்த்திடுமின்–12-3-

இங்குத்தை வாழ்வை ஒழியவே போய் யமுனைக் கரைக்கு என்னை யுய்த்திடுமின்--12-4-

போர்க்களமாக நிருத்தம் செய்த பொய்கைக் கரைக்கு என்னை யுய்த்திடுமின்–12-5-

பார்த்திருந்து நெடு நோக்குக் கொள்ளும் பத்த விலோசனத்து உய்த்திடுமின் –12-6-

பண்ணழியப் பலதேவன் வென்ற பாண்டி வடத்து என்னை யுய்த்திடுமின்–12-7-

கொற்றக் குடையாக வேந்தி நின்ற கோவர்த்தனத்து என்னை யுய்த்திடுமின்–12-8-

சூட்டுயர் மாடங்கள் தோன்றும் துவாராபதிக்கு என்னை யுய்த்திடுமின்–12-9-

பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவற்கோர் கீழ்க் கன்றாய்
இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே
இட்டமான பசுக்களை யினிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே –14-1-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .












ஸ்ரீ வாழி திருநாம பாசுரங்கள்-

September 8, 2026

திருமகளும்‌ மண்களும்‌ சிறக்க வந்தோன்‌ வாழியே
செய்யவிடைத்‌ தாய்மகளார்‌ சேவிப்போன்‌ வாழியே
இருவிசும்பில்‌ வீற்றிருக்கும்‌ இமையவர் கோன்‌ வாழியே
இடர்கடியப்‌ பாற்கடலை எய்தினான்‌ வாழியே
அரிய தயரதன்‌ மகனாய்‌ அவதரித்தான்‌ வாழியே
அந்தர்யாமித்துவமும்‌ ஆயினான்‌ வாழியே
பெருகிவரும்‌ பொன்னி நடுப்‌ பின்‌ துயின்றான்‌ வாழியே
பெரியபெருமாள்‌ எங்கள்‌ பிரான்‌ அடிகள்‌ வாழியே-

திருமகளும்‌ – பெரிய பிராட்டியாரும்‌,
மண்மகளும்‌ பூமிப்‌ பிராட்டியாரும்‌,
சிறக்க வந்தோன்‌ – மேன்மை அடையும்படி வந்த நம்பெருமாள்‌,
வாழியே – வாழ வேண்டும்‌;
செய்ய இடைத்தாய்மகளார்‌ – செப்பமான நேர்மையான இடையர்‌ குலத்தில்‌ பிறந்த ஸ்ரீ கும்பன்‌ மகளான நப்பின்னையால்‌,
சேவிப்போன்‌ – சேவிக்கப்‌ படுமவன்‌;
இரு விசும்பில்‌ – பெருமை பொருந்திய பரம பதத்தில்‌, –
வீற்றிருக்கும்‌,
இமையவர் கோன்‌ – இமை கொட்டாதவர்களான நித்ய ஸூரிகளுக்குத்‌ தலைவனானவன்‌;
இடர்கடிய- துன்பங்கள்‌ அகல,
பாற்கடலை – திருப் பாற்கடலை,
எய்தினான்‌ – அடைந்தவன்‌;
அரிய – அருமையான
தயரதன்‌ – தசரதன்‌ என்னும்‌ அரசன்‌,
மகனாய்‌ -மகனான இராமனாய்‌,
அவதரித்தான்‌ – அவதரித்தவன்‌;
அந்தர்யாமித்வமும்‌ ஆயினான்‌ – எல்லார்‌ மனத்திலும்‌ உறையும்‌ தன்மையும்‌ உடைவனானவன்‌;
பெருகி வரும்‌ – வற்றாது ஆற்றொழுக்காகப் பொங்கி வரும்‌,
பொன்னி – பொன்னி என்னும்‌ காவிரி ஆற்றின்‌,
நடுப்பின்‌ – நடுவில்‌,
துயின்றான்‌ – பள்ளி கொண்டவன்‌;
பெரிய பெருமாள்‌ கோயிலில்‌ உள்ள பெருமை மிக்க மூலமூர்த்தியான பெரிய பெருமாள்‌,
எங்கள்‌ பிரான்‌ – எங்களுக்கு உதவி செய்த பிரானானவன்‌,
அடிகள்‌ – திருவடிகள்‌ வாழி-வாழியவே

(திருமகளும்‌ மண்மகளும்‌ சிறக்க வந்தோன்‌)
திருவாகிய மகள்‌ திருமகள்‌. தேவர்களுக்கும்‌ அசுரர்‌களுக்கும்‌ நடந்த யுத்தத்தில்‌ திருப்பாற்கடலை எம்பெருமான்‌ கடைந்தான்‌. கடைந்த போது தோன்றியவள்‌ தாமரை மலரில்‌ வாழ்கின்ற பெரிய பிராட்டியாரான திருமகள்‌. பாற்கடலைக்‌ கடையும்‌ எம்பெருமானுக்கு சிரமம்‌ நீங்குவதற்காக, புன் சிரிப்பு, கருணை இவைகளாகிற அமுதங்களாலே நனைத்துக் கொண்டு சந்திரனுடைய நிலவு போலே சுழன்று வருகின்ற அமுத அலைச்‌ சுழல்களிலிருந்து பிராட்டி தோன்றினாள்‌ என்று கூறும்‌ ஸ்ரீ குணரத்னகோசம்‌ (49).

ஸ்கலித கடக மால்யை: தோர்பி: அப்திம் முராரே:
பகவதி ததிமாதம் மத்நத: ச்ராந்தி சாந்த்யை
ப்ரமத் அம்ருத தரங்க வர்த்தத: ப்ராதுராஸீ:
ஸ்மித நயந ஸுதாபி: ஸஞ்சதீ சந்த்ரிகேவ–49-விண்ணவர் அமுது உண்ண வமுதில் வரும் பெண் அமுது உண்ட எம்பெருமானே
–-கடல் கடைந்த ஸ்ரமம் தீர்க்கவே திரு மார்பிலே அணைந்தது –பகவானுக்கு ஏற்றவளே! ஸ்ரீரங்கநாயகீ! தேவர்களுக்காகத் திருப்பாற்கடலைக் கடைந்த போது எம்பெருமானின் திருக்கரங்களில் இருந்த ஆபரணங்கள் நழுவின; அவனது மாலைகள் நழுவின.-இப்படிப்பட்ட திருக்கைகளை உடைய அவன், தயிர் கடைவது போன்று திருப்பாற்கடலைக் கடைந்தான்.-இப்படியாகச் சோர்ந்த அவனது களைப்பு நீங்கும்படியாக எழில் வீசும் புன்னகையும் கனிவான பார்வையும் கொண்டபடி நீ தோன்றினாய். இப்படியாக அமிர்தமாகிய அலைகள் வீசும் அந்தத் திருப்பாறகடலில் இருந்து, வெண்மையான குளிர்ந்த நிலவு போல நீ தோன்றினாய் அல்லவா?“உனக்கு ஏற்கும் கோலமலர்ப்பாவை” என்பது போன்று, அவனுக்கு ஏற்றவளாக இவள் வந்தாள்.-இவ்விதம் அவதரித்த இவளைக் கண்டவுடன் அவன் களைப்பு பறந்தது.-உத்தர சதகத்தில் -உந்மூல் யாஹர மந்தராத்ரி மஹிநா பலேக்ரஹிர் ஹி கமலா லாபேந சர்வஸ் ஸ்ரம –என்று-ஸ்ரீ ரெங்க நாதனை நோக்கி அருளிச் செய்தது போலவே இங்கும் –


அரங்கனுக்கு திருமகளும்‌ மண்மகளும்‌ பத்னிகள்‌ என்று புருஷஸுக்தம்‌ (2-5) கூறும்‌. திருமகளுக்கும்‌ மண்‌ மகளுக்கும்‌ சிறப்பாவது நம்மாழ்வார்‌ “என்‌ திருமகள்‌ சேர்‌ மார்பன்‌” என்றும்‌, “நின்‌ திருவெயிற்றால்‌ இடந்து நீ கொண்ட நிலமகள்‌ கேள்வன்‌” என்றும்‌ அருளியது காண்க. இது தன்னையே திருமழிசை யாழ்வாரும்‌ “மன்னு மாமலர்க் கிழத்தி வைய மங்கை மைந்தனாய்‌” என்று திருச்சந்த விருத்தத்தில்‌ (55) அருளியபடியே சிறந்த தாமரைப்பூவில்‌ பிறந்த பிராட்டிக்‌கும்‌ மண்மகளுக்கும்‌ வல்லபனானவன்‌ அரங்கன்‌ என்று அருளுவர்‌. நம்பெருமாளுக்கு வலது பக்கத்திலும்‌ இடதுபக்கத்திலும்‌ விளையாடவல்ல அன்ன பேடை போன்‌றுள்ள திருமகளும்‌, மேன்மேலும்‌ வளர்த்தியை உடைய நிழல்‌ போன்றவளான மண்களும்‌ திகழ்வதை பட்டர்‌ ஸ்ரீ ரங்கராஜ பூர்வ சதகத்தில்‌ (63) அருளியதும்‌, “கமலயா ஷமயா ச ஸிம்ஹாஸநே நிஷண்ணம்‌” (66) என்கிறபடியே திருமகளோடும்‌ நிலமகளோடும்‌ சிங்காசனத்தில்‌ அரங்கனை எப்போதும் விட்டப்பிரியாது வீற்று இருப்பதை அருளியதும்‌ அநுபவிக்கத்‌ தக்கவை.

திருமகளுக்குச் சிறப்பாவது – திருவாகிய பெரிய பிராட்டியாரை திவ்ய மஹிஷியாக பெரிய பெருமாள்‌ கொண்டமை. இது பற்றியே பெரியாழ்வார்‌ “திருவாளன்‌” என்கிறார்‌. மேலும்‌, ஏழு உலகங்களையும்‌ படைத்தவுடன்‌ தளிர்‌ விடுவதாகவும்‌, அவற்றின்‌ நிர்வாகத்தினால்‌ மொட்டு விடுவதுமாகிற கடைக்கண்‌ பார்வை உடையவளும்‌, திருவரங்க மாளிகைக்கு ஒரு மங்கள தீபக்கொழுந்து போலிருப்பவளுமான ஸ்ரீரங்கராஜனுடைய திவ்ய மஹிஷீயுமானவள்‌ என்று பட்டர்‌ ஸ்ரீ குணரத்னகோசத்தில்‌ உரைப்பர்‌. அரங்கனுடைய கருணைக்கோர்‌ இருப்பிடமானவளாய்‌, ஞானம்‌, சக்தி முதலான ஆறு குணங்கள்‌ நிரம்பப் பெற்ற வளாய்‌, மேலான பிரிகிருதியாகச்‌ சொல்லப்படுமவளான திருமகள்‌ எம்பெருமானுடைய மேலான ஒரு சக்தியாவாள்‌ என்று ஸநத் குமார ஸம்ஹிதை கூறும்‌. திருமங்கையாழ்வாரும்‌ ‘“ஒலிதிரை நீர்ப்பெளவம்‌ கொண்ட திருவாளன்‌” என்பதற்குச் சேர ஒலிக்கின்ற அலைகளோடு கூடிய ஜலத்தையுடைய கடலிலே பிறப்பையுடையவளான பெரிய பிராட்டியாரான திருவுக்கு வல்லபனானவன்‌ என்கிறார்‌. எல்லாவற்றாலும்‌ உயர்ந்தவனாய்‌ பரமபுருஷனான எம்பெருமான்‌, மங்களத்தை உண்டு பண்ணுபவளான இவளுக்கு அநுரூபமான பதி ஆவான்‌. “உனக்கு ஏற்கும்‌” என்று ஆழ்வார்‌ அருளியபடியே இவள்‌ அவனுக்கு ஒப்பாய்‌ இருக்குமாபோலே எம்பெருமானும்‌ திருத்தக்கச்‌ செல்வனாய்‌ இருப்பவன்‌ என்பர்‌. பிராட்டியின்‌ வால்லப்யத்தாலே அவன்‌ திருமகள்‌ கேள்வனானான்‌. ஸ்ரீ ய:பதி என்பர்‌. இங்ஙனே பல உள.

மண்மகளுக்கு சிறப்பாவது –-திருமதிள்கள்‌, திருமண்டபங்கள்‌, இடைகழி முதலான தன்‌ பரிவாரங்களோடு கூடிய ஸ்ரீ ரங்கவிமானத்தை சேவிப்பதற்காகவே பூமிப்பிராட்டி இங்கு வந்து சேர்ந்ததுபோல இருக்கிறது என்று பட்டர்‌ ஸ்ரீரங்கராஜ பூர்வ சதகத்தில்‌ (35) அநுபவிப்பர்‌. பிரளயம்‌ கொண்ட காலத்திலே பாசி பற்றிக் கிடந்த மண் மகளை உத்தரிப்பதற்காக வராக அவதாரம்‌ செய்து, அதனால்‌ வந்த ஒளியுடையவனாய்‌ திருவரங்கத்தில்‌ பள்ளி கொண்டான்‌ என்பதற்குச் சேர ஆண்டாள்‌ “பாசி தூர்த்துக்‌ கிடந்த பார்மகட்கு… திருவரங்கச்‌ செல்வனார்‌” (நாச்‌.திரு. 11-8) என்று அருளியது காண்க. இதனால்‌ மண்மகள்‌ சிறப்பு சொல்லப்பட்டதாயிற்று-

(செய்ய விடைத்‌ தாய்மகளார்‌ சேவிப்போன்‌) – செய்ய – நேர்மையான, இடைத்‌ தாய்மகள்‌ – இடையர்‌ குலத்தில்‌ ஸ்ரீ கும்பனுக்கு பிறந்த நப்பின்னை. இடையரால்‌ பெற்று வளர்க்‌கப்பட்ட மகளாக- அன்பிற்குரிய தேவி நப்பின்னை என்னும்‌ நீளா தேவி. இவளுக்கு மணவாளர்‌ நம்பெருமாள்‌. அவளால்‌ சேவிக்கப்படுபவன்‌ நம்பெருமாள்‌. நம்மாழ்வார்‌ அருளியபடியே ‘“அன்று உருவு ஏழும்‌ தழுவி நீ கொண்ட ஆய்மகள்‌ அன்பன்‌” என்று கண்ணனாய்‌ ஏழு எருதுகளை அடக்கி தாய்மகளான நப்பின்னைப்‌ பிராட்டிக்கு அன்பன்‌ என்று அவளால்‌தொழப்பட்டவன்‌ இன்று அரங்கனாய்‌ இருக்கிறான்‌ என்றபடி. பின்னும்‌ “ஆயர்‌ பின்னை தோள்‌ மணம்‌ புணர்ந்து” என்கிற படியே கோபாலரான ஸ்ரீ கும்பனுடைய மகளான நப்பின்னைப் பிராட்டியினுடைய தோளோடே கலந்தவன்‌ அரங்கன்‌ என்று சுவை பட திருமழிசையாழ்வார்‌ (திருச்‌. வி.55) அநுபவிப்பர்‌. பின்னைக்கு இனிய பெருமாள்‌ அரங்கர்‌ என்றும்‌ திருவரங்‌ கத்து மாலையில்‌ (21) அருளியது காண்க.

(இருவிசும்பில்‌ வீற்றிருக்கும்‌ இமையவர் கோன்‌) “அமரர்க்கும்‌ பிரானாரைக்‌ கண்டது தென்னரங்கத்தே” என்று திருமங்கையாழ்வார்‌ அருளியதற்கு ஏற்ப நித்ய ஸுரிகளுக்கும்‌ தலைவனானவன்‌ அரங்கன்‌ என்கிறார்‌. மேலும்‌ பிறவியின்‌ தொடுதலாகிற வாசனை இல்லாத நித்ய ஸுரிகளுக்கு தலைவனான அரங்கன்‌ பள்ளி கொண்ட இடம்‌ தென்னரங்கம்‌ என்பதற்குச் சேர இமையோர்கள்‌ தாதைக்கு இடம்‌” என்று பாடுகிறார்‌ திருமங்கையாழ்வார்‌. “அமரரேறே என்று தொண்டரடிப்பொடிகளும்‌, “விண்ணோர்‌ முதல்‌ என்னும்‌” என்று நம்மாழ்வாரும்‌, “விண்ணவர்‌ கோன்‌” என்று திருப்பாணாழ்வாரும்‌ அனுபவித்தனர்

(இடர் கடியப்‌ பாற்கடலை எய்தினான்‌) எம்பெருமான்‌ எழுந்தருளிய நிலைகளில்‌ திருப்பாற்கடலில்‌ பள்ளிகொண்ட நிலை வியூகம்‌ எனப்‌படும்‌. வியூகமாவது படைப்பு, காப்பு, அழிவு முதலானவற்றுக்குக்‌ கடவனாய்‌, ஸம்ஸாரிகளின்‌ இடர்களைப்‌ போக்கி விருப்பத்தைக்‌ கொடுப்பவனாய்‌ திருப்பாற்கடலில்‌ பள்ளிகொண்ட நிலை. பாற்கடல் போலே வியூகம்‌ என்பர்‌ பிள்ளைலோகாசார்யர்‌. “ஆயிரம்‌ பெயரால்‌ அமரர்‌ சென்றி றைஞ்ச அறிதுயில்‌ அலைகடல்‌ நடுவே ஆயிரம்‌ சுடர்வாய்‌ அரவணைத்‌ துயின்றான்‌ அரங்கமாநகருளானே”‘ என்று திருமங்கையாழ்வார்‌ அருளியபடியே, தேவர்கள்‌ எல்லாரும்‌ தங்களுக்கு ஏற்பட்ட இடரைப்‌ போக்க அவர்கள்‌ கூக்குரலைக் கேட்க பாற்கடலில்‌ பள்ளி கொண்டவன்‌ இன்று அரங்கத்தில்‌ துயிலுகிறான்‌ என்று உரைப்பர்‌ -பெரியாழ்வாரும்-பையரவினணைப்‌ பாற்கடலுள்‌ பள்ளி கொள்கின்ற பரம் மூர்த்தி” என்று கூறுவர்‌. இதற்கு உரையிட்ட மணவாள மாமுனிகள்‌, திருப்பாற்கடலிலே தன்‌ தொடுதலாலே விரிந்ததான பணங்களை யுடையவனாய்‌, மென்மை, குளிர்த்தி, நாற்றங்களைத்‌ தன்மையாகவுடைய திருவனந்தாழ்வானாகிற படுக்கையின்‌ மேலே ஸம்ஸாரிகளான ஆத்மாக்களை உய்விக்கும்‌ பொருட்டு பல உபாயங்‌களை மனத்திலே சிந்தித்துக் கொண்டு படுத்திருப்பதாக அநுபவிப்பர்‌. நம்மாழ்வாரும்‌ “கடலிடம்‌ கொண்ட கடல்‌ வண்ணா” என்று அநுபவிப்பர்‌. திருப்பாற்கடலானது முப்பத்திரண்டு லக்ஷம்‌ யோசனை யுள்ளது. அதன்‌ நடுவே உள்ள திருவனந்தாழ்வானுடைய உடலானது மூன்று லக்ஷம்‌ யோசனை, அவன்‌ மேலே யோக நித்ரை செய்யும்‌ திருவரங்கனின்‌ திருமேனியானது இரண்டரை லக்ஷம்‌ யோசனை (யோசனை என்பது 7, 8 மைல்‌) என்று அஷ்ட ப்ரபந்த நூலில்‌ திருவரங்கத்து மாலையில் அருளிச் செய்துள்ளார் –

(அந்தர்யாமித்துவமும்‌ ஆயினான்‌) – அந்தர்யாமித்வம்‌ – உள்ளே உறையும்‌ தன்மை. எம்பெருமானின்‌ பரம்‌, வியூகம்‌, விபவம்‌, அந்தர்யாமி, அர்ச்சை ஆகிய ஐந்து நிலைகளில்‌ அந்தர்யாமி என்பது ஒவ்வொரு வஸ்துவிலும்‌ எம்பெருமான்‌ உள்ளே உறையும்‌ நிலை.-“பூதத ஜலம்‌ போலே அந்தர்யாமித்வம்‌”” என்பர்‌ பிள்ளை லோகாசார்யர்‌. பிரம்மாண்ட புராணத்தில்‌ (5வது அத்யா. 4-5 சுலோகம்‌) சொல்லியபடியே பெரியபெருமாள்‌ தெய்வீகத் தன்மை கொண்டு திருமேனியுடன்‌ எங்கும்‌ வியாபித்துள்ளான் என்றும் எங்கும்‌ பரந்துள்ள எம்பெருமான்‌ அடியார்கள்‌ பொருட்டு ஆசை கொண்டவனாக அர்ச்சாமூர்த்தியாக திருவரங்கத்தில்‌ எழுந்தருளி யிருக்கிறான்‌ என்றதும்‌ காண்க, பூதத்தாழ்வார்‌ நல்லவர்கள்‌ உள்ளத்தில்‌ இருக்கும்‌ எம்பெருமான்களைச்‌ சொல்லும்‌ வரிசையில்‌ “தலை அரங்கம்‌” என்று திருப்பதிகளில்‌ ப்ரதானமான கோயில்‌ என்று உரைப்பர்‌. தொண்டரடிப்‌ பொடியாழ்வாரும்‌ தம்‌ நெஞ்சைப் பார்த்து “மாசற்‌றார்‌ மனத்துளானை வணங்கி நாம்‌ இருப்பதல்லால்‌ பேசத்‌ தானாவதுண்டோ பேதை நெஞ்சே நீ சொல்லாய்‌” என்று மாசற்ற மனத்தில்‌ அரங்கன்‌ இருப்பைத்‌ தெரிவிக்‌கிறார்‌. திருப்பாணாழ்வாரும்‌ “என்னைத் தன்‌ வாரமாக்கி வைத்‌ தான்‌ வைத்ததன்றி என்னுள்‌ புகுந்தான்‌” என்று அரங்கன்‌ அந்தர்யாமியாய்‌ இருப்பதை அநுபவிக்‌கிறார்‌. நம்மாழ்‌ வாரும்‌ தாம்‌ அருளிய திருவாய்மொழியில்‌,“மூவுல காளியே என்னும்‌”, கடிகமழ்‌ கன்றைச்‌ சடையனே-என்னும்‌, “நான்முகக்கடவுளே என்னும்‌” என்று இந்திரன்‌, சிவன்‌, நான்முகன்‌ ஆகியோர்க்கு அந்தர்யாமியாய்‌ இருக்கிறான்‌ திருவரங்கன்‌ என்றதும்‌ காணலாம் –

(அரிய தயரதன்‌ மகனாய்‌ அவதரித்தான்‌) அருமையான தசரதனுக்கு மகனாகப்‌ பிறந்தான்‌. “மயா | ராகவேரூபேண”: என்று ஸ்ரீரங்க மஹாத்மியத்திலும்‌ | (அத்யாய. 8-30 சுலோகம்‌) எம்பெருமான்‌ தான்‌ இராமனாக அவதரிப்பேன்‌ என்றது காண்க. தொண்டரடிப்‌ பொடியாழ்வாரும்‌ தாம்‌ அருளிய திருப்பள்ளியெழுச்‌ சியில்‌ “அயோத்தி எம்‌ அரசே அரங்கத்தம்மா”” என்கிறார்‌. அதாவது சக்கரவர்த்தி திருமகனாய்‌ அவதரித்தவன்‌ இந்த அரங்கனே என்றபடி. இராமனாய்‌ அவதரித்து இராவணனைக்‌ கொன்று தேவர்கள்‌ ரிஷிகள்‌ முதலானோர்‌ கார்யம்‌ நிறைவேற்றிய பின்பும்‌, அந்த அவதாரத்‌ துக்குப்‌ பிற்பட்டவர்களுக்கும்‌ உதவுவதற்காக திருவரங்‌கத்தில்‌ படுத்துள்ளான்‌ என்பர்‌. திருவரங்கப்பதிகத்தை (4-9) அநுபவிக்கும்போது “மூவுருவில்‌ இராமனாய்‌” என்று அருளியதற்கு ஏற்ப, இராவணன்‌ பொருட்டு தசரதாத்மஜ ராமாவதாரம்‌ செய்தான்‌ என்று மணவாள மாமுனிகள்‌ உரையிடுவர்‌.நம்மாழ்வாரும்‌ நாயகி பாவத்தில்‌ தாய்ப்‌ பாசுரமாகச்‌ சொல்லும்போது அரங்கனை “காகுத்தா” என்று சொல்‌லிக்‌ கொண்டிருப்பதைக்‌ காணலாம்‌. பராசர பட்டரும்‌ ஸ்ரீ ரங்கராஜஸ்தவ உத்தர சதகத்தில்‌ (70) “ஹே நாத மநுஜஸமயம்‌ க்ருத்வா பத்மயா லஹ” என்று அரங்கனே இராமனாய்‌ அவதரித்தான்‌ என்றது காண்க –

(பெருகிவரும்‌ பொன்னி நடுப்பின்‌ துயின்‌றான்‌) – பொன்னி என்பது காவிரி நதியின்‌ மறு பெயராகும்‌. மிகப்‌ பழமையான காவிரி பாய்ந்து வளம்‌ சிறக்‌கும்‌ நாடுகளிலெல்லாம்‌ பொன்‌ கொழிக்கும்‌. இது பற்றியே காவிரிக்குப்‌ பொன்னி என்ற பெயரும்‌ உண்டு. காவிரித்‌ தாயும்‌ அரங்கன்‌ வருவதற்கு முன்னமேயே அவனுக்கு தன்னையே ஒரு மாலை போல்‌ இட்டு ஒரு மணல்‌ திட்டை ஏற்படுத்தியவள்‌. இதன்‌ நடுவில்‌ அரங்கன்‌ துயின்ற வரலாறு பின்வருமாறு–விந்திய மலையின்‌ அடிவாரத்தில்‌ எல்லா களும்‌ சேருகின்ற இடம்‌ ஒன்று முன்பு இருந்தது. விச்‌வாவசு என்ற கந்தர்வன்‌ ஒரு நாள்‌ வந்தான்‌. அவன்‌ வந்தவுடன்‌ தென்‌ திசையைப் பார்த்துக்‌ கைகூப்பி அத் திசையை நோக்கிச் சென்றான்‌. அப்போது அந்த நதிகளுக்கு இடையே விவாதம்‌ வந்தது. ஒவ்வொரு நதியும்‌ தனக்கே அந்த கந்தர்வன்‌ வணக்கம்‌ செலுத்தினான்‌ என்று போட்டி யிட்டன. தெற்கு நோக்கிச்‌ சென்ற அந்த கந்தர்வன்‌ தெற்கில்‌ உள்ள கடல்‌ வரை சென்‌றான்‌. அங்கு பற்பநாபன்‌ தனது உறக்கம்‌ நீங்கி எழுந்த தைக்‌ கண்டான்‌. அப்போது உத்தராயண காலம்‌ தொடங்கியது. கந்தர்வன்‌ வடக்கு நோக்கிச்‌ சென்றான்‌. அங்கு சென்ற போது மீண்டும்‌ அந்த நதிகளைக் கண்டு வணங்கினான்‌. அந்த நதிகள்‌ நீர்‌ யாரை வணங்கினீர்‌? என்று கேட்டன-

அதற்கு அவன் உங்களில் உயர்ந்தவர் யாரோ அவரை வணங்கினேன்‌” என்றான் உடனே அந்த நதிகளுக்கு நடுவில்‌ யார்‌ உயர்ந்தவர்‌ என்ற போட்டி ஏற்‌பட்டது. ஆனால்‌ சில நிமிடங்களில்‌ அந்த நதிகள்‌ தாங்‌கள்‌ உயர்ந்தவர்கள்‌ அல்லர்‌ என்று முடிவுக்கு வந்து அமைதியாயின. ஆனால்‌, கங்கையும்‌ காவிரியும்‌ தங்களுக்குள்‌ தானே உயர்ந்தவள்‌ என்று பல காரணங்‌களைக்‌ காட்டியபடி இருந்தன. அந்த இரு நதிகளும்‌ நான்முகனிடம்‌ சென்று கேட்டன. அவரும்‌ “கங்கையே உயர்ந்தவள்‌ அதில்‌ எந்த சந்தேகமும்‌ இல்லை” என்று சொன்னார்‌. இதைக்கேட்ட காவிரி துக்கப்பட்டு நான்‌முகனைக்‌ குறித்து, தான்‌ கங்கைக்குச்‌ சமமாக ஆக வேண்டும்‌ என்று தவம்‌ இருந்தாள்‌. நான்முகனும்‌ “கங்கைக்கு நிகராக காவிரி இருப்பாள்‌” என்று வரம்‌ தந்தான்‌, ஆனால்‌ கங்கையைக் காட்டிலும்‌ காவிரி உயர்ந்தவள்‌ என்று வரம்‌ தர மறுத்தான்‌. அப்போது காவிரி ஸ்ரீ ரங்கநாதன்‌ விக்ரகத்தை திருச் சேறையில்‌
பிரதிஷ்டை செய்தாள்‌. நீண்ட காலம்‌ வழிபட்டதன்‌ பொருட்டு அரங்கன்‌ அவளை வரம்‌ கேட்கச்‌ சொன்னார்‌. காவிரியும்‌ கங்கையைக் காட்டிலும்‌ உயர்ந்தவளாக விரும்‌பினாள்‌. உடனே எம்பெருமான்‌ தன்‌ ஸம்பந்தம்‌ மூலமாக கங்கை அடைந்த உயர்வை யாரும்‌ அடைய முடியாது என்றும்‌, ஆனால்‌ தன்‌ கருணை மூலமாக காவிரி கங்கையைக்‌ காட்டிலும்‌ மேன்மை அடைவாள்‌ என்றான்‌. அரங்கன்‌ காவிரியை பார்த்து “ஸ்ரீரங்க விமானம்‌ உன்‌ நடுவே வந்து அமையும்‌ அங்கு வந்து நான்‌ வசிப்பேன்‌” என்று கூறினார்‌.
-மேலும் நான் உன் நடுவிலே வசித்து வருவதால் நீ எப்போதும் என் சம்பந்தம் பெற்று கங்கையைக் காட்டிலும் உயர்ந்தவளாவாய் என்றான் -ப்ரஹ்மாண்ட புராணம் ஸ்ரீ ரெங்க மஹாத்ம்யம் -9-22-38-ஸ்லோகங்கள்

இது பற்றியே தொண்டரடிப் பொடி யாழ்வாரும்‌ தாம்‌ அருளிய திருமாலை என்னும்‌ பிரபந்தத்தில்‌ “கங்கையில்‌ புனிதமாய காவிரி நடுவுபாட்டு ” என்றும்‌, “வெள்ளநீர்‌ பரந்து பாயும்‌ விரிபொழில்‌ அரங்கம்‌ தன்னுள்‌ கள்வனார்‌ கிடந்தவாறும்‌” என்றும்‌ பாடினார்‌. மேலும்‌ குலசேகராழ்வாரும்‌ “திருவரங்கப்பெருநகருள்‌ தெண்ணீர்ப்பொன்னி திரைக்‌ கையால்‌ அடி வருட” என்று அருளியதற்கு ஏற்ப திருவரங்க மாநகரத்திலே தெளிந்த நீரையுடைய காவிரி திரைகளாகிற கைகளாலே அரங்கன்‌ திருவடிகளை வருட பள்ளி கொண்‌டுள்ளான்‌ என்பர்‌. இவ் வாழ்வாரே அரங்கன்‌ காவிரியின்‌ நடுவே பள்ளி கொண்டதை “திடர்‌ விளங்கு கரைப் பொன்னி நடுவு பாட்டு” என்கிறார்‌. அதாவது திட்டுக்கள்‌ விளங்கும்படியான கரையை யுடைய காவிரியின்‌ நடுவே எம்பெருமான்‌ பள்ளி கொண்டபடி-திருமழிசை ஆழ்வாரும் பரந்து பொன் நிரந்து நுந்தி வந்தலைக்கும்‌ வார் புனல்‌” என்பதற்குச் சேர காவிரியானவள்‌ அரங்கனிடம்‌ தனக்குள்ள பெரிய அபிமாநத்தாலே இருபுறமும்‌ சுற்றிலும்‌ பரந்து நின்று என்றும்‌ -ஊற்று மாறாமல்‌ பெருகி வருகிறாள்‌ என்று அநுபவிப்பர்‌ – பெரியவாச்சான் பிள்ளை. மேலும்‌, பெருகி வரும்‌ காவிரி யைப்‌ பற்றிச்‌ சொல்லும் போது இவ்வாழ்வாரே – குலைத் தலைத்து இறுத்தெறிந்த குங்குமக் கழம்பினொடு அலைத் தொழுகு காவேரி என்கிறார்‌, அதாவது -குங்குமப் படர் கொடியை நீர்‌ வந்து குலைத்துச்‌ சுற்றும்‌ அலைத்து முறித்‌ தெறிந்த குங்குமத் துகள்களைக் குழம்பாக்கி அத்தோடு கூட அலைத்துக் கொண்டு பெருகி வருகிறாள்‌ என்றபடி – இவ்வாறு மற்ற ஆழ்வார்களும்‌ தாங்கள்‌ அருளிய பிரபந்தங்களிலே பொன்னி என்றும் காவேரி பெருகி வரும் தன்மையைப் போற்றி உள்ளனர் –

( பெரியபெருமாள்‌ எங்கள்‌ பிரான்‌ அடிகள்‌) பெரிய பெருமாள்‌- மூலவர்‌. நம்பெருமாள்‌- அழகிய மணவாளன்‌ – உற்சவர்‌. ஆழ்வார்கள்‌ பதின்மராலும்‌, ஆண்டாளாலும்‌ 247 பாசுரங்களால்‌ மங்களா சாசனம்‌ செய்யப் பெற்ற திவ்யதேசம்‌ ஸ்ரீ ரங்கமாகும்‌. ஸ்ரீரங்கத்தில்‌ கோயில்‌ பெரிய கோயில்‌, மதிள்‌ பெரிய மதிள்‌, பிராட்டியார்‌ பெரிய பிராட்டியார்‌. பெண்‌ கொடுத்த ஆழ்வார்‌ பெரியாழ்வார்‌, மண்டபம்‌ பெரிய திருமண்டபம்‌ திருநாள்‌,-பெரிய திருநாள் -திருப்பாவடை – பெரிய திருப்பாவாடை, , ஆசார்யர்‌ -பெரிய மணவாளமாமுனிகளான பெரிய ஜீயர்‌, எனவே பெருமாள்‌ பெரிய பெருமாளானார்‌.
இந்த திவ்யதேச எம்பெருமானான பெரிய பெருமாள்‌ வைபவம்‌ புராணங்களில்‌ பேசப்பட்டுள்‌ளன. ஸூர்ய வம்சத்தில்‌ அயோத்யையை ஆண்டு வந்த இக்ஷ்வாகு மன்னன்‌, நான்முகனால்‌ சத்ய லோகத்தில்‌ திருவாராதனம்‌ செய்து வந்த ஸ்ரீரங்க விமானத்தைப்‌ பெற்றுக்‌ கொண்டான்‌. அயோத்திக்கு வந்தான்‌. அயோத்யையின்‌ வடகரையில்‌ சுமார்‌ 3500 அடி தூரத்தில்‌ ஸரயூ மற்றும்‌ தபஸா நதிகளின்‌ நடுவில்‌ அயோத்யை நகரத்தைப்‌ பார்க்கும்‌ விதமாக சுப நேரத்தில்‌ சாஸ்த்ரங்களில்‌ கூறியபடி பிரதிஷ்டை செய்தான்‌. பங்குனி மாதம்‌ ரோகிணி நக்ஷத்ரத்தில்‌ பிரம்மோத்ஸவத்தை மிகவும்‌ நேர்த்தியாகத்‌ தன்‌ புத்ரர்கள்‌ பேரன்கள்‌ புடை சூழ நடத்தினான்‌ என்று பிரம்மாண்ட புராணத்தில்‌ ஸ்ரீரங்க மஹாத்மியத்தில்‌ எட்டாவது அத்யாயத்தில்‌ (3-7 ஸ்லோகங்கள்‌) கூறப்‌ பட்டுள்ளது. இதனை அறியும்‌ வகையில்‌ இன்றும்‌ திருவரங்கத்தில்‌ பங்குனி ரோகிணி அன்று ஆதி பிரம்மோற்சவம்‌ ஆரம்பமாகிக்‌ கொண்டாடப்படுகிறது அறியலாம்‌. உற்சவர்‌ நம்பெருமாள்‌ அழகிய மணவாளன்‌. “சைத்ரே ரேவதி ஸஞ்ஜாதம்‌ ஸெளம்ய ஜாமாதரம்‌ ப்ரபும்‌” என்கிறபடியே சித்திரை ரேவதியில்‌ அவதரித்தவர்‌ நம்பெருமாள்‌ என்னும்‌ அழகிய மணவாளர்‌ ஆவர்‌. அவ்வாறே தர்மவர்மன்‌ அரசனாய்‌ இருந்த போது விபீஷணனால்‌ கொண்டு வரப்பட்ட ஸ்ரீரங்க நாதனோடு கூடிய ஸ்ரீ ரங்கவிமானம்‌ பங்குனி மாதம்‌, சுக்ல பக்ஷம்‌, ரோகிணி நக்ஷத்ரம்‌ ஞாயிற்றுக் கிழமை அன்று சுபமான லக்னத்தில்‌ காவிரிக்‌ கரையில்‌ பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பதையும்‌ அதே அத்யாயத்தில்‌ (ஸ்லோகம்‌ 60) கூறப்பட்டுள்ளது அறியலாம்‌. கலி யுகத்தில்‌, பல நூற்றாண்டுகளுக்குப்‌ பிறகு காவிரி வெள்ளப் பெருக்கால்‌ மணலில்‌ புதை யுண்ட ஸ்ரீ ரங்க விமானத்தை கிளிச் சோழன்‌ என்னும்‌ அரசன்‌ மீண்டும்‌ மேலே கொண்டு வந்து பல மண்டபங்கள்‌ எழுப்புதல்‌ முதலான கைங்கர்யம்‌ செய்தான்‌. இதனை அறியும்‌ வகையில்‌ இன்றும்‌ சித்திரையில்‌ விருப்பன்‌ திரு நாளாக பிரம்மோத்ஸவம்‌ துவஜாரோஹணம்‌ தொடங்கி ரேவதியில்‌ ரதோற்சவம்‌ காணும்‌ வகையில்‌ கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படி பெரிய பெருமாளும்‌, உபய நாச்சிமார்களுடன்‌ நம்பெருமாளும்‌ அர்ச்சா மூர்த்தி யாய்‌ எல்லாரும்‌ உய்யும்‌ பொருட்டு எழுந்தருளி இருக்கிறார்கள்‌. இப்படி அடியார்கள்‌ சேவிப்பதற்‌காக வந்து உதவி செய்தது பற்றி“பிரான்‌” என்கிறார்‌.

(எங்கள்‌ பிரான்‌ அடிகள்‌) இப்படிப்பட்ட பிரானான திருவரங்கன்‌ திருவடிகளைச்‌ சரணமாகப்‌ பற்றும்‌ போது, திருமங்கையாழ்வரர்‌, “ஆழி வண்ண நின்டியிணை அடைந்தேன்‌”, “எனக்கும்‌ ஆதல்‌ வேண்டும்‌ என்று அடியிணை அடைந்தேன்‌”, “உன்‌ அடியனேனும்‌ வந்து அடியிணை அடைந்தேன்‌, அஞ்சி வந்து நின்‌ அடியிணை அடைந்தேன்‌”, “எனக்கும்‌ ஆக வேண்டும்‌ என்று அடியிணை அடைந்தேன்‌”, “அன்னமதாகும்‌ என்று அடியிணை அடைந்தேன்‌”, “ஆதலால்‌ வந்து உன்னடியிணை அடைந்தேன்‌”, “உலகமளந்த பொன்னடியே அடைந்து வந்தேன்‌” (பெரிய திருமொழி 5-8) என்று ஒருகால்‌ மட்டுமின்றி ஒன்பதின் கால்‌ திருவடிகளை வேண்டியது காணலாம்‌.
நம்மாழ்வாரும்‌ பெரிய பெருமாளை “முகில்‌ வண்ணன்‌ அடியை அடைந்து அருள்‌ சூடி உய்ந்தவன்‌’‘ என்று அருளியது காண்க. திருவரங்கப்‌ பெருமாள்‌ அரையர்‌ என்னும்‌ ஆசார்யர்‌ திருமாலைக்கு அருளிய தனியனில்‌ -“கற்றினம்‌ மேய்த்த கழலிணை” என்கிற படியை, அடியாரைக்‌ காப்பதற்கு உறுப்பாக மிகவும்‌ எளிமையான திருவடிகள்‌ என்றும்‌ அந்தத்‌ திருவடிகளுக்கு திருமாலை என்னும்‌ பிரபந்தத்தை தொண்டரடிப்பொடியாழ்‌வார்‌ பாடி திருவடிகளிலே சூட்டினார்‌ என்றும்‌ உரைப்பர்‌ பிள்ளைலோகம்‌ சீயர்‌. இவ்வாழ்வார்‌ அருளியபடியே “குணதிசை பாதம்‌ நீட்டி” என்பதற்குச்‌ சேர எல்லா உலகங்களும்‌ வாழ்ச்சி பெறுவதற்கு இழியும்‌ துறையான திருவடிகளைக்‌ கிழக்கு திக்கு வாழும்படியாக நீட்டி உள்ளான்‌ என்பர்‌ திருப்‌ பாணாழ்வாரும்‌. “திருக்கமலபாதம்‌” என்பதற்குச்‌ சேர பிராட்டிமார்‌ திருமுலைத்‌ தடங்களிலும்‌ திருக்கண்களிலும்‌ ஒற்றிக்கொள்ளும்‌ திருவடிகள்‌ என்பர்‌ பெரிய வாச்சான் பிள்ளை. அழகிய மணவாளப்பெருமாள்‌ நாயனாரும்‌ இந்தத்‌ தொடருக்குப் பெரிய பெருமாள் திருவடியானது பெரும் காற்றிலே இழிவார் தெப்பம்‌ கொண்டு இழியுமாபோலே, செவ்வி, குளிர்த்தி, மணம்‌, விகாஸம்‌ இவை அமைந்த ஒரு தாமரைப்‌ பூவைப் போலே இருக்கும்‌ திருவடிகள்‌ என்கிறார்‌.
அந்தத்‌ தாமரையானது சூரிய ஒளி பட்டு மலரும்‌. பெரிய பெருமாள்‌ திருவடியானது அடியார்‌ ஸந்நிதியிலே அலரும்‌ தாமரை யாய்த்து என்று சுவைபட உரைப்பர்‌. வேதாந்த தேசிகரும்‌ தாம்‌ அருளிய முனி வாகன போகத்தில்‌ நீர்மைக்கும்‌ மேன்மைக்கும்‌ எல்லையானவனான அரங்கன்‌ திருவடியானது உபாயம்‌ உபேயம்‌ ஆகியவற்றில்‌ உரைப்புண்டானவை என்று அநுபவிப்பர்‌. திருவுக்கு லீலா கமலம்‌ போலே இருக்கிற பாதம்‌ என்றும்‌ உரைப்பர்‌. மேலும்‌, “தமுப்பரிய சந்தனங்கள்‌ தடவரை வாயீர்த்துக்கொண்டூ தெழிப்புடைய காவிரி வந்து அடி தொழும்‌”: என்று பெரியாழ்வார்‌ அருளியதற்கு ஏற்ப, பெரிய மலையிடத்திலே வளர்ந்து, ஒருவரிருவரால்‌ தழுவ அரிதாம்படி இருக்கிற சந்தன மரங்களை வேரோடே அகழ்ந்து இழுத்துக்கொண்டு “இத்தைக்‌ கைக்‌ கொண்டருள வேணும்‌” என்னுமாபோலே இருக்கிற முழங்கின ஒலியை யுடைய காவிரியானவள்‌ ஆதரத்தோடே வந்து, தான்‌ கொண்டு வந்த சாத்துப்படியையும்‌ பெரிய பெருமாளுக்கு சமர்ப்‌ பித்துத்‌ திருவடிகளை தொழுகிறாள்‌ என்று சுவை யாக உரைப்பர்‌ மாமுனிகள்‌. இப்படி பிரானாய்‌ உதவி செய்யும்‌ பெரிய பெருமாள்‌ திருவடிகளைப்‌ “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம்‌ மல்லாண்ட திண்தோள்‌ மணி வண்ணா உன்‌ சேவடி செவ்வி திருக்காப்பு” என்று வாழ்த்துவோமாக.

பங்கயப்‌ பூவில்‌ பிறந்த பாவை நல்லாள்‌ வாழியே
பங்குனியில்‌ உத்திர நாள்‌ பாருதித்தாள்‌ வாழியே
மங்கையர்கள்‌ திலதமென வந்த செல்வி வாழியே
மாலரங்கர்‌ மணி மார்பை மன்னுமவள்‌ வாழியே
எங்கள்‌ எழில்‌ சேனை மன்னர்க்கு இதமுரைத்தாள்‌ வாழியே
இருபத்தஞ்சு பொருள்‌ மால்‌ இயம்புமவள்‌ வாழியே
செங்கமலச்செய்ய அரங்கம்‌ செழிக்க வந்தாள்‌ வாழியே
சீரங்க நாயகியார்‌ திருவடிகள்‌ வாழியே

பங்கயப்பூவில்‌ தாமரைப்பூவில்‌,
பிறந்த- அவதரித்த,
பாவை நல்லாள்‌ – சிறந்த பெண்ணான
பெரிய பிராட்டியார்‌ வாழியே – வாழ வேண்டும்‌.
பங்குனியில்‌ – பங்குனி மாதத்தில்‌,
உத்திர நாள்‌ – உத்திர நக்ஷத்ரத்தில்‌,
பாருதித்தாள்‌ – இவ்‌ வுலகில்‌ அவதரித்தாள்‌;
மங்கையர்கள்‌ – பெண்களுக்குள்‌,
திலதமென – திலகம்‌ என்று சிறப்பாகக்‌ கொண்‌டாடப்பட்டு,
வந்த செல்வி – தோன்றின பிராட்டி;
மால்‌ அரங்கர்‌ – பெருமை பொருந்திய திருவரங்கர்‌,
மணி மார்பை – அழகான மார்பை,
மன்னுமவள்‌ – பொருந்தி இருப்பவள்‌;
எங்கள்‌ எழில்‌ – எங்கள்‌ அழகான,
மன்னர்‌ – தலைவரான,
சேனை மன்னர்க்கு- சேனை முதலியாருக்கு,
இதம்‌-நன்மை,
உரைத்தாள்‌ – சொன்னவள்‌;
இருபத்தஞ்சு பொருள் — இருபத்தி ஐந்து எழுத்து கொண்ட துவயப்‌ பொருளை,
மால்‌ – பெருமையுடன்‌,
இயம்புமவள்‌ உபதேசம்‌ செய்தவள்‌;
செங்கமலம்‌ – சிவந்த தாமரை போன்ற,
செய்ய அரங்கம்‌ – அழகான திருவரங்கம்‌,
செழிக்க வந்தாள்‌ – வளர்ச்சி பெற வந்தவள்‌;
சீ ரங்க நாயகியார்‌ – திருவரங்கத்துத்‌ தலைவியான ஸ்ரீரங்க நாச்சியார்‌, திருவடிகள்‌ – அழகான திருவடிகள்‌,
வாழியே – பல்லாண்டு வாழ வேண்டும்‌

(பங்கயப்பூவில்‌ பிறந்த பாவை நல்லாள்‌) பங்கயம்‌ – “பங்கஜம்‌” என்ற வடசொல்‌ “பங்கயம்‌” ஆயிற்று. “பங்க” வடமொழியில்‌ சேறு என்று பொருள்‌. சேற்றில்‌ தோன்றுவது – தாமரைப்‌ பூ. பங்கயப்பூ – தாமரைப்பூ. பாவை – பதுமை, அழகிய உருவம்‌. கருவிழி, பெண்‌, நல்லாள்‌ குணத்தில்‌ சிறந்த பெண்‌. தக்கவள்‌. பனி மலராள்‌ குளிர்ந்த தாமரைப்‌ பூவை பிறப்பிடமாக உடையவள் -பாவை- நாணம்‌, மடம்‌ அச்சம்‌ பயிர்ப்பு என்னும்‌ பெண்மை குணங்கள்‌ நிறைந்த பெரிய பிராட்டியார்‌. “அரவிந்தப்‌ பாவை” (பெரியா. திரு.5-2-10) என்று பெரியாழ்வார்‌ அருளியதற்கு ஏற்ப செந்தாமரை மலரைப்‌ பிறப்பிடமாக உடைய பிராட்டி என்றும்‌, எல்லையற்ற அழகை யுடையவளாய்‌ இயற்கையான பெண்மையை உடையவள்‌ என்‌றும்‌ உரைப்பர்‌ மாமுனிகள்‌. “பாவை பனி மலராள்‌’ (பெரிய. திரு.2.2.9) என்று திருமங்கையாழ்வார்‌ அருளியது காண்க.

(பங்குனியில்‌ உத்திர நாள்‌ பாருதித்தாள்‌) – பங்குனி தமிழ்‌ மாதங்களில்‌ 12 வது மாதம்‌. உத்திரம்‌ – 12 வது நக்ஷத்ரம்‌. “பால்கு நோத்தர பல்குந்யாம்‌ ஸம்‌ பூதாம்‌ ஸ்ரியமாஸ்ரயே] விஷ்ணோர்‌ திவ்ய பதாம்போஜ கடகாம்‌ தத்‌ பதாஸ்ரிதாம்‌।।” என்கிற தனியன் படியே ஸ்ரீ ரங்க நாச்சியாரான பெரிய பிராட்டியார்‌ பங்குனி மாதம்‌ உத்திர நக்ஷத்திரத்தில்‌ அவதரித்தாள்‌ என்றும்‌, அவள்‌ எம்பெருமானுடைய திருவடியில்‌ சேதனர்களைச்‌ சேர்த்து வைப்பவள்‌ என்றும்‌ அறியப்படுகிறது. ஸ்ரீ ப்ரஸ்ன ஸம்ஹிதையில்‌ பெரிய பிராட்டியார்‌ அவதாரம்‌ பற்றி சொல்லும்‌ போது “பால்குனே மாஸி நக்ஷத்ரே உத்தரே பூர்ணிமாதிதெள” (33) என்கிற படியே திருப்பாற்கடல்‌ கடையும் போது கடலரசன்‌ கன்னியான பிராட்டியார்‌ பங்குனி மாதம்‌ உத்திர நக்ஷத்ரம்‌ பெளர்ணமி அன்று தோன்றினாள்‌ என்றது காண்க. பார்‌ பூமி. ஸ்ரீரங்க நாச்சியாரான பெரிய பிராட்டியார்‌ பங்குனி மாதம்‌ உத்திர நக்ஷத்ரத்தில்‌ இப்பூமியில்‌ அவதரித்தாள்‌. பங்குனி உத்திர நாளுக்குச் சிறப்பாவது – தர்ம சாஸ்த்ரத்‌தில்‌ ஒரு மஹாராணி பிறந்தநாளன்று வரம்‌ வேண்டி வந்தவர்களுக்கு அவர்கள்‌ கேட்பதைத்‌ தப்பாமல்‌ அவள்‌ கொடுப்பாளாம்‌. அந்த வகையில்‌ எம்பெருமானார் இந்த உலக மக்கள்‌ பிறவித்‌ துயர்‌ அகல ஸ்ரீரங்க மஹிஷியான பெரிய பிராட்டியை வேண்டினார்‌. அதாவது பிராட்டி பிறந்த நாளான பங்குனி உத்திரத்தன்று பிரதி வருடமும்‌ ஸ்ரீரங்கநாதன்‌ ஸ்ரீரங்க நாச்சியார்‌ சேர்த்தி உண்டு. ஒரு (பங்குனி) உத்திரத்‌ திருநாளிலே, பெருமாளும்‌ நாச்சியாருமாகப்‌ புறப்பட்டு ஒரே ஸிம்மாஸனத்தில்‌ எழுந்தருளி இருக்கும் போது எம்பெருமானார்‌ அந்த திவ்ய தம்பதியைத்‌ திருவடி தொழ எழுந்தருளினார்‌. அந்த சமயத்தில்‌ மனத்தில்‌ ஸம்ஸார மண்‌டல வாழ்க்கையில்‌ பயம்‌ விளைந்து திருவடிகளில்‌ சரணம்‌ புகுந்து மூன்று கத்யங்களை விண்‌ணப்பித்தார்‌ என்று பெரியவாச்சான்‌ பிள்ளை கத்யத்ரய வ்யாக்யான அவதாரிகையில்‌ அருளியது காண்க. சரணாகதி கத்யத்தில்‌ முதல்‌ சூர்ணையில்‌ பிராட்டி திருவடிகளிலே சரணம்‌ புகுகிறார்‌ எம்பெருமானார்‌. இதனால்‌ பங்குனி உத்திர திருநாள்‌ சிறப்புற்றது. அன்று இருவருமான சேர்த்தியிலே பெரிய பெருமாள்‌ வாழித்‌ திருநாமமும்‌ பெரிய பிராட்டியார்‌ வாழித்‌ திருநாமமும்‌ சேவிப்பது வழக்கம்‌.

(மாலரங்கர்‌ மணிமார்பை மன்னுமவள்‌) : “மால்‌”- மையல்‌, கருமை, பெருமை இத் தன்மைகள்‌ அனைத்தையும்‌ அடியார்களிடம்‌ காட்டும வன்‌ அரங்கன்‌. இது பற்றியே “மாலரங்கர்‌” என்ற படி. “மணி” – ஸ்ரீ கெளஸ்துபம்‌. அரங்கன்‌ திருவரங்கத்திற்கு வரும்‌ முன்னமேயே ஸ்ரீரங்க நாயகித்‌ தாயார்‌ எழுந்தருளி அரங்கன்‌ அமர்ந்த பின்‌ வெளிப்பட்டவள்‌. “மார்பை மன்னுமவள்‌–காசாந்யா த்வாம்‌ ருதே தேவி” என்ற விஷ்ணு புராண ஸ்லோகத்தில்‌ (1-9-122) இந்திர துதியில்‌, “பிராட்டியைத்‌ தவிர வேறு யாராலும்‌ எம்பெருமான்‌ திருமேனியில்‌ இருக்க முடியாது” அந்த வகையில்‌ ஸ்ரீ ரங்க மஹாத்மியத்தில்‌ பிரமன்‌ ஸ்ரீரங்க விமானத்தைச்‌ சேவிக்கும்‌ போது ஸ்ரீ ரங்கநாதனுடைய பரந்த திருமார்பில்‌ கருணையே வடிவான ஸ்ரீ ரங்க நாச்சியாருக்கான இருப்பிடம்‌ காணப்பட்டது (ஸ்ரீ ர. மஹா.4-15) என்றும்‌ பிரமன்‌ துதிப்பதும்‌ காண்க.

இந்திராயா:'(ஸ்ரீ குணரத்ந) என்று பட்டர்‌ அருளியபடியே “இந்ததீதி இந்திரா’‘ என்று
கொண்டு எம்பெருமானுக்கும்‌ ஈஸ்வரியாக அவனது மார்பில்‌ ஏறியிருக்கையே பிராட்டியின்‌ கண்‌ உள்ள சிறந்த ஐஸ்வர்யம்‌ என்பர்‌. நம்மாழ்வாரும்‌ பிராட்டி எம்பெருமான்‌ மார்பில்‌ மன்னி இருப்‌பதைக்‌ கண்டு “உன்‌ திருமார்‌ வத்து மாலை நங்கை” என்கிறார்‌. இதற்குச்‌ சேர வாதிகேசரி சீயரும்‌ பிராட்டி ஆனவள்‌ “அகலகில்லேன்‌” என்று விரும்பும்படியான திருமார்புக்குப்‌ பரபாகமாக இருப்பவள்‌ என்கிறார்‌.-திருமார்புக்கு அலங்காரமான மாலையாயிருப்பவள்‌ எம்பெருமான்‌ என்பர்‌ நஞ்சீயர்‌. கேவலம்‌ ஸம்பத்தி யாயிருக்கை யன்றிக்கே திருமார்புக்கு அலங்காரமுமா யிருக்கை என்றும்‌ மார்வுக்கு அலங்காரம்‌ அவள்‌. அவளுக்கு அலங்காரம்‌ மார்வு என்றும்‌ நம்பிள்ளை சுவை பட உரைப்பர்‌. “அல்லி மாதரமரும்‌ திருமார்பன்‌ அரங்கன்‌” (பெரிய திரு 5.4.10) என்பர்‌ திருமங்கையாழ்வார்‌. மேலும்‌, “மின்‌ னொத்த நுண் மருங்குல்‌ மெல்லியலைத்‌ திரு மார்பில்‌ மன்னத்தான்‌ வைத்து உகந்தான்‌” (பெரிய திரு. 6.9.6) என்பதற்குச்‌ சேர மின்னோடு ஒப்பானதாய்‌ மிக நுண்ணியதான இடையை உடையவளாய்‌ ஸெளகுமார்யத்தை ஸ்வபாவ பெரிய பிராட்டியை அழகிய திருமார்பில்‌ பொருந்தும்‌ படி வைத்து உகந்தவன்‌ என்று உரைப்பர்‌. ஸ்ரீ துதியில்‌ வஷ பீடீம் மதுவிஜயிநோ பூஷயந்தீம்‌ ஸ்வகாந்த்யா”(1) என்கிறபடியே தன்‌ காந்தியினால்‌ ஸ்ரீ ரங்கராஜனுடைய திருமார்பை அலங்‌கரித்துக்‌ கொண்டிருப்பவள்‌ என்பர்‌. பட்டர்‌ ஸ்ரீ ரங்கராஜ பூர்வ சதகத்தில்‌, “அநந்தபோகிந: உத்வாந்தம்‌ சிந்தாமணி இவ” (8)என்கிறபடியே ஆதிசேஷனு டைய மடியிலே கோக்கப்பட்ட சிந்தா மணி போன்றது போல இருப்பவர் என்றும்‌, இந்த மணியானது பெரிய பிராட்டியாருடைய மார்பில்‌ ஆபரணமாயிருக்கும்‌.
மேலும்‌, அவள்‌ திருமுலைத்‌ தடத்திலே அழிந்தின மணியாக இருக்கும்‌ என்பர்‌. அப்படிப்பட்ட மணி மார்பை உடைய பெரிய பெருமாளுக்குப்‌ பொருந்தினவள்‌ என்றபடி.
வேதாந்த தேசிகரும்‌ பகவத்‌ த்யான ஸோபானத்தில்‌ “ஸ்ரீ பதந்‌ யாஸ தந்யம்‌… ஸ்ரீரங்கதாம்ந” (6) என்று பிராட்டி திருவடியால்‌ தீண்டும்படியான பாக்கியம்‌ பெற்றது ஸ்ரீரங்க ராஜனுடைய திரு மார்பு என்கிறார்
தேன்‌ பூத்த தாமரையாள்‌ மார்பில்‌ ஆட ” என்று அஷ்ட ப்ரபந்தத்தில்‌ ஸ்ரீ ரங்கநாயகர்‌ ஊசலில்‌ (8) அருளியபடியே தேன்‌ நிறைந்த செந்தாமரை மலரில்‌ வாழ்கின்ற பெரிய பிராட்டியார்‌ அரங்கன்‌ மார்பில்‌ அசையாது நிற்கிறாள்‌ என்பர் –திருமால்‌ திருவுள்ளம்‌ உவந்து வந்து எழுந்தருளிய இடமானது பற்றி “ரங்கம்‌” என்று அந்த விமானத்துக்குப்‌ பெயர்‌. “ரங்கம்‌” என்னும்‌ வடசொல்‌ “அகரம்‌” மொழி முதலாக வரப் பெற்று “அரங்கம்‌” என்றாயிற்று. விமானத்தின்‌ பெயரான இது ஆகு பெயராய்‌ “திருவரங்கம்‌” என்று ஊருக்கு ஆயிற்று. திருமகளார்‌ திருநர்த்தனம்‌ செய்யும்‌ இடமாயிருந்ததாலும் இப்பெயர் பெற்றது எனலாம்

(மங்கையர்கள்‌ திலதமென வந்த செல்வி) திலதம்‌ – திலகம்‌ – நெற்றிப் பொட்டு, ஆபரணம்‌. மங்கையர்களுக்கு ஆபரணம்‌ என்று சிறப்பாகத்‌ தோன்ற வந்த லக்ஷ்மி. செல்வி – தலைவி, லக்ஷ்மி, செல்வ முள்ளவள்‌, புதல்வி. திலகம்‌ – சிறந்தது என்ற பொருளில்‌ பிராட்டியானவள்‌ கருணைக்கோர்‌ இருப்பிடமானவள்‌. ஞானம்‌ முதலான ஆறு குணங்கள்‌ நிரம்பப் பெற்றவள்‌, மேலான பிரகிருதி யாகச்‌ சொல்லப்படுபவள்‌ மற்றும்‌ எம்பெருமானின்‌ மேலான ஒரு சக்தி என்று ஸநத்குமார ஸம்ஹிதை எண்‌ 109 அருளுவது காணலாம்‌.

(எங்கள்‌ எழில்‌ சேனை மன்னர்க்கு இதமுரைத்‌தாள்‌) எல்லா உலகங்களையும்‌ நெறிபட நிர்வகிக்கும்‌ கடமை எம்பெருமானுடையதானாலும்‌ அதனை சேனை முதலியார்‌ ஏற்றுக் கொண்டு தமது திருவிரல்‌ முத்திரையினாலேயே உலகங்களை அடக்கி ஆளுபவராகையாலே “எழில்‌ சேனை மன்னர்‌” என்றபடி. திருவிரல்‌ முத்திரையை இன்றும்‌ திருவரங்கத்தில்‌ சேனை மன்னர்‌ திருக் கோலங்களில்‌ காணலாம்‌. பிரம்மோற்சவ திருநாள்களில்‌, திருமுளையின்‌ போது தாயார்‌ ஸந்நிதிக்கு சேனை முதலியார்‌ மண்‌ எடுக்க எழுந்தருளுவர்‌.
“வானவர்‌ வானவர்‌ கோன்‌”
(திருவா. 3.3.2) என்று ஆழ்வார்‌ அருளியதற்கு ஏற்ப பரமபத வாஸிகளுக்குத்‌ தலைவர்‌ என்பர்‌ வாதி கேசரி சீயர்‌. “ஹிதம்‌” தமிழில்‌ “இதம்‌” ஆயிற்று. நன்மை என்று பொருள்‌. நன்மை யாவது எம்பெருமானே உபாயம்‌. இதனை துவய மந்திரத்தின்‌ முதல்‌ வாக்யம்‌ உணர்த்துகிறது. குருபரம்பரா விவரணத்தில்‌ அருளியபடியே ஹரிக்கு எப்போதும்‌ இனியவரான சேனை மன்னருக்குத்‌ தாபம்‌ புண்ட்ரம்‌ முதலான ஸம்ஸ்காரங்களை முன்‌னிட்டுக்‌ கொண்டு மூல மந்த்ரம்‌, துவயம்‌ முதலான இதத்தைப்‌ பெரிய பிராட்டியார்‌ உரைத்தது காணலாம்‌.

மேலும்‌, “லக்ஷ்மீ நாத ஸமாரம்பாம்‌’‘ என்ற தனியனுக்கு உரை வழங்கிய பிள்ளை லோகம்‌ ஜீயர்‌, “ஸமாரம்பாம்‌”” என்று இவர்கள்‌ தொடக்கமாக குரு பரம்பரையைச்‌ சொல்லுகையாலே, ஸ்ரீவிஷ்வக்‌சேந ஸம்ஹிதையிலே பகவானாலே ப்ரபத்தி உபதேசம்‌ பண்ணப்பட்டதாகச்‌ சொல்லப்படுமவர்‌ என்றும்‌, பூவளரும்‌ திருமகளாலே அருள்‌ பெற்று அத்தாலே “ஸ்ரீமதி விஷ்வக்ஸேநே” என்னும்படி கைங்கர்யமுயையுடைய சேனை முதலியார்‌ என்பர்‌. எனவே சேனை முதலியாருக்கு இதம்‌ உரைத்தவள்‌ பெரிய பிராட்டியார்‌ என்றதாயிற்று.

இருபத்தஞ்சுட்பொருள்‌ மால்‌ இயம்புமவள்‌) மூன்று ரகசியங்களுள்‌ துவயம்‌ என்பது (ஸ்ரீமந்‌ நாராயண சரணெள சரணம்‌ ப்ரபத்யே| ஸ்ரீமதே நாராயணாய நம:।। என்று இரண்டு வாக்யமாய்‌, இருபத்தைந்து எழுத்துக்கள்‌ கொண்டதாகும்‌. அதன்‌ உட்பொருளாவது “திருமகளோடு கூடிய நாராயண னுடைய திருவடிகளைச்‌ சரணமாகப்‌ பற்றுகிறேன்‌” என்ற முதல்‌ வாக்ய பொருளுக்குச்‌ சேர ஸ்ரீமந்‌ நாராயணனே உபாயமாவான்‌ என்பதாகும்‌. இதனை சேனை முதலியாருக்கு பெருமையுடன்‌ உபதேசம்‌ செய்தாள்‌ என்றபடி. மால்‌ – இங்கு பெருமை என்று பொருள்‌.

(செங்கமலச்செய்ய அரங்கம்‌ செழிக்க வந்தாள்‌) செங்கமலம்‌ – செந்தாமரை, செய்ய – சிவப்பு. தாமரைக்கு சிவப்பானது “திருமுகமாய்ச்‌ செங்கமலம்‌” (பெரியா. திரு.4.8.3) என்று பெரியாழ்வார்‌ அருளி யதற்கு ஏற்ப பெரிய பெருமாளுடைய திருமுகத்‌துக்குப்‌ போலியாய்‌ இருக்கிறது என்று மாமுனிகள்‌ மேலும்‌ புது நாண் மலர்க்‌ கமல எம்பெருமான்‌” (பெரியா.திரு.4.9.4) என்பதற்கு ஏற்ப அப்போது அலர்ந்த செவ்வித்‌ தாமரைப் பூவானது உலகுக்குக்‌ காரணமான ஸர்வேஸ்வரனுடைய விரும்பத் தக்கதான திரு வயிற்றில்‌ உள்ள தாமரைக்கு ஒப்பானது என்பர்‌ மாமுனிகள்‌. திருவரங்கமானது “ஓரம்‌ பெற்ற மலர்க் கமலம்‌ உலகளந்த சேவடி போல்‌ உயர்ந்து காட்ட” (பெரிய.திரு.4.9.8) என்பதற்குச்‌ சேர சேற்று வாய்ப்பாலே உரம்‌ பெற்றிருக்கிற தாமரைப்‌ பூவானது திரு வுலகளந்தருளின போது மேலே எடுத்த திருவடிகளைப்‌ போலே கிளர வளர்ந்து பிரகாசிக்‌கிறது என்று மாமுனிகள்‌ சுவைபட உரைப்பர்‌. அது மட்டுமின்றி அன்னமானது புருஷ அன்னத்தோடே சிவந்த தாமரைப்‌ பூவின்‌ மேலே ஏறி இருந்து அசைத்து ஊசலாடுகின்றன என்பதற்குச்‌ சேர “சேவலொடு பெடை அன்னம்‌ செம்கமலமலர்‌ ஏறி ஊசல்‌ ஆடி” (பெரியா.திரு.4.9.9) என்கிறார்‌ பெரியாழ்வார்‌. இத்தகைய செழுமை தங்கிய அரங்கத்தில்‌ செரு வாளும்‌ புள்ளாளனாய்‌, மண்ணாளனாய்‌, கொற்ற வாளை யுடையவனாய்‌, நான்கு வேதங்களையும் ஆளுமவனாய்‌, கொடையாளனாய்‌, இரவு பகலாகிய காலங்களுக்குத்‌ தலைவனாய்‌ இருக்கும்‌ பெரிய பெருமாள்‌ பெரிய பிராட்டியாரை திவ்ய மஹிஷி யாக உடையவர்‌ என்றபடி.

மேலும்‌, பட்டர்‌ “ஸ்ரீரங்க மங்கள விஜ்ரும்பண வைஜயந்தி” (ஸ்ரீ குண. ர.33) என்று அருளுபவர்‌. அதாவது ஸ்ரீ ரங்கத்‌தில்‌ நன்மைகளை செழிப்புறச் செய்யும்‌ கொடி போன்றவள்‌ பிராட்டி என்றபடி.-(அரங்கம்‌ செழிக்க வந்தாள்‌) பட்டர்‌ ஸ்ரீ குணரத்ன கோசத்தில்‌ (23) ஸ்ரீ ரங்கேஸ்வர கேஹ லக்ஷ்மி’” என்று அருளியதற்கு ஏற்ப பிராட்டியானவள்‌ ஸ்ரீ ரங்கநாதன்‌ கோயிலை அழகு படுத்துபவள்‌ என்றது காண்க. இல்லாள்‌ இன்றேல்‌ இல்லம்‌ வெறியாடுமாதலின்‌ “கேஹ லக்ஷ்மி” என்று விளித்ததாகக்‌ கூறுவர்‌ உரையாசிரியர்‌.

(ஸ்ரீ ரங்க நாயகியார்‌ திருவடிகள்‌) பட்டர்‌ ஸ்ரீ குணரத்ன கோசத்தில்‌ பிராட்டியின்‌ திருவடிகளைப்‌ பல ஸ்லோகங்களில்‌ பல படியாக அநுபவிக்கிறார்‌ – “மாலதீம்ருதுபதம்‌” (53) என்கிறபடியே ஜாதிப்பூ போல மெல்லிய திருவடி என்றும்‌, வேதாந்‌தங்கள்‌ பேசும்‌ சிறப்பை உடையது பிராட்டியின்‌ திருவடிகள்‌ என்றும்‌ உரைப்பர்‌. மேலும்‌, பிராட்டி திருவடிகள்‌ துகைத்தாலும்‌ எம்பெருமான்‌ வைஜயந்தி என்னும்‌ வனமாலை வாடுவதில்லையாம்‌. அப்படிப்‌ பட்ட திருவடிகள்‌. அடிக்கடி பனிநீர்‌ தெளித்தாற் போலே தேனே மலரும்‌ திருப் பாதத்தால்‌ துகைக்கத்‌ துகைக்கப்‌ புதுமை பெற்று மேலும்‌ சோபிக்கின்றனவாம்‌ என்றும்‌ சுவைபட உரைப்பர்‌.தாமரையில்‌ இருப்பவளாகையால்‌ அதன்‌ துகள்‌ பாதத்தின்‌ அடித் தலத்தை உறுத்தக்‌ கூடியதாகவே இருக்கும்‌ தாமரை இதழின்‌ ப்ரகாரம்‌ மணம்‌ மென்மை முதலியன.-அவற்றைப்‌ பிராட்டியின்‌ இணை அடிகள்‌ உடையனவா யிருக்‌கின்றன. தாமரை இதழை ஒத்த இணை யடி என்றவாறு. சேர்த்தி அழகு கருதி “பாத யுக்மம்‌” என்கிறார்‌. பிராட்டி திருவடியின்‌ இருப்பைச்‌ சொல்லும் போது “ஏகம்‌ பாதாம்புஜம்‌ ந்யஞ்ச்ய பரம்‌ ஆகுஞ்ச்ய” என்று பட்டர்‌ ஸ்ரீ குணரத்ன கோசத்தில்‌ (38) அருளிய படியே வலது திருவடியை தொங்க விட்டும்‌, இடது திருவடியை மடித்தும்‌ வைத்து வீற்றிருக்கிறாள்‌.-தாம்‌ வணங்குவதற்கே பிராட்டி இவ்வாறு வீற்றிருக்கிறாள்‌ என்பதற்குச்‌ சேர “மம நதிகூஷமம்‌” என்று பட்டர்‌ அருளியது காண்க.-இப்படிப்பட்ட பெருமைகளை யுடைய பெரிய பிராட்டியாரைத்‌ தினந்தோறும்‌ ஸ்ரீ வைஷ்ணவர்கள்‌ அனுஸந்திக்கும்‌ குரு பரம்பரையில்‌ ஆரோஹண க்ரமத்தில்‌ பெரிய பெருமாளுக்கு அடுத்ததாக “ஸ்ரீயை நம:”’ என்று அருளுவது வழக்கம்‌. அத்தகைய பெரிய பிராட்டியாரான ஸ்ரீ ரங்கநாச்சியார்‌ திருவடிகளுக்கு பல்லாண்டு பாடுவோமாக.

ஓங்கு துலாப் பூராடத்து உதித்த செல்வன்‌ வாழியே
ஒண்டொடியாள்‌ சூத்திரவதி உறை மார்பன்‌ வாழியே
ஈங்கு உலகில்‌ சடகோபற்கு இதமுரைத்தான்‌ வாழியே
எழிற்‌ பிரம்பின்‌ செங்கோலை ஏந்துமவன்‌ வாழியே
பாங்குடன்‌ முப்பத்து மூவர்‌ பணியுமவன்‌ வாழியே
பங்கயத்தாள்‌ திருவடியைப்‌ பற்றினான்‌ வாழியே
தேங்கு புகழ்‌ அரங்கனையே சிந்தை செய்வோன்‌ வாழியே
சேனையர்கோன்‌ செங்கமலத்‌ திருவடிகள்‌ வாழியே
–ஜப்பசி பூராடத்தில்‌ திருவவதாரம் –

ஓங்கு துலா – உயர்ந்த துலா மாதத்தில்‌,
பூராடத்து – பூராட நக்ஷத்திரத்தில்‌,
உதித்த அவதரித்த,
செல்வன்‌ – கைங்கர்யமாகிற செல்வத்தைப்‌ பெற்ற சேனை முதலியார்‌,
வாழியே வாழ வேண்டும்‌;
ஒண்தொடியாள்‌ – முன்‌ கைவளை கழலா இருக்குமவளான,
சூத்திரவதி – சூத்திரவதி என்னும்‌ பத்னியை,
உறை மார்பன்‌ – நெஞ்சில்‌ இருப்பிடமாகக்‌ கொண்டவர்‌;
ஈங்கு – இங்கு,
உலகில்‌ – உலகத்தில்‌,
சடகோபற்கு – நம்மாழ்வாருக்கு,
இதம்‌ – நன்மையை,
உரைத்தான்‌ – உபதேசித்தவர்‌;
எழில்‌ அழகான,
பிரம்பின்‌ – பிரம்பினாலான,
செங்கோலை – அரசாட்சி சின்னமாகிய நேர்கோலை,
ஏந்துமவன்‌ கையிலே வைத்திருப்பவர்‌; பாங்குடன்‌ – அழகுடன்‌,
முப்பத்து மூவர்‌ – முப்பத்து மூன்று தேவர்களால்‌,
பணியுமவன்‌ – வணங்கப்படுபவர்‌; பங்கயத்தாள்‌ தாமரைப்பூவில்‌ பிறந்த பெரிய பிராட்டியார்‌,
திருவடியை – திருவடிகளை,
பற்றினான்‌ – பற்றுபவர்‌;
தேங்கு புகழ்‌ – நிறைந்த புகழை யுடைய
அரங்கனையே – ரங்கநாதனையே,
சிந்தை செய்வோன்‌ – மனத்தில்‌ எண்ணுமவர்‌;
சேனையர்‌ கோன்‌ – சேனையர்களுக்குத்‌ தலைவனானவர்‌,
செங்கமலம்‌ – சிவந்ததாமரை போன்ற, திருவடிகள்‌ -திருவடிகள்‌,
வாழியே – வாழ வேண்டும்‌

ஓங்கு துலாப்பூராடத்து உதித்த செல்வன்‌” ஓங்கு துலா – உயர்ந்த துலா மாதம்‌. துலா மாதத்துக்கு உயர்வாவது – அசுவனி நக்ஷத்ரமும்‌ பெளர்ணமியும்‌ கூடிய நாள்‌ துலா மாதப்‌ பிறப்பாகும்‌. ஆஸ்வயுஜ மாதமாகும்‌. அத்தகைய மாதத்தில்‌ ஸ்ரீ வைஷ்ணவ குரு பரம்பரைக்கு ப்ரதானரான சேனை முதலியார்‌ பூராட நக்ஷத்ரத்தில்‌ அவதரித்தார்‌. அதனால்‌ “ஓங்கு துலா பூராடம்‌” என்று கொண்டாடப்‌ படுகிறது. மேலும்‌ இம் மாதம்‌ முதலாழ்வார்கள்‌ மூவரும்‌ அடுத்தடுத்த நக்ஷத்ரத்தில்‌ தோன்றிய பெருமை யுடையதாகும்‌. ஆசார்யர்களில்‌ பிள்ளை லோகாசார்யர்‌, மணவாளமாமுனிகள்‌ ஆகியோர்‌ அவதரித்த உயர்வாகும்‌. சேனை முதலியாருக்குச்‌ செல்வமாவது – எம்பெருமானுடைய அமுது செய்து மிகுந்த மிச்சத்தை உண்பதாகும்‌. இது இவருக்கு தாரகம்‌. எல்லாருக்கும்‌ அன்பன்‌. இது பற்றியே ஆளவந்தார்‌ “த்வதீய… ப்ரியேண ஸேநாபதி” என்று ஸ்லோகமிடுகிறார்‌ (ஸ்தோ.ர.42). இராமாநுசர்‌ ஸ்ரீ வைகுண்ட கத்யத்தில்‌ “ஸ்ரீமதி விஷ்வக்ஸேநே ந்யஸ்த ஸமஸ்த ஆத்மைஸ்வர்யம்‌” என்று அருளிய படியே கைங்கர்யச்‌ செல்வத்திற்கு இட்டுப்‌ பிறந்த சேனை முதலியாரிடத்தில்‌ எம்பெருமான்‌ தம்முடைய எல்லா நியமனச்‌ செல்வத்தையும்‌ வைத்திருப்பவர்‌ என்று அருளியது காண்க. மேலும்‌, மற்றுமுள்ள திருவனந்தாழ்வான்‌, கருடன்‌ போலே நியமமில்லாமல்‌, ஸர்வேஸ்வரன்‌ அமுது செய்த மிச்சம்‌ ஒழிய அமுது செய்யாத நியமத்தைக்‌ குறித்து சேஷாசனர்‌ என்று சேனை முதலியாரை நிரூபிக்கிறது என்று தத்வ த்ரய வியாக்யானத்தில்‌ (சூ.45) உரைப்பர்‌ மாமுனிகள்‌.- கூரத்தாழ்வான்‌ ஸுந்தரபாஹு ஸ்தவத்தில்‌ (72) “வந்த்நிநாதஸ்ய ஸுஸுந்தரஸ்ய ப்ரபுக்த சிஷ்டாசீ ஸந்‌’” என்று அருளியதற்கு ஏற்ப அர்ச்சாவதாரத்தில்‌ திருமாலிருஞ்சோலை அழகருடைய போனகத்தின்‌ மிகுந்த மிச்சத்தை உண்பாராய்‌ சேனை முதலியாருக்கு சேஷாசநன்‌ என்றே திருநாமமாயிற்று என்பர்‌.

(ஒண்டொடியாள்‌ ஸூத்ரவதி ௨றை மார்பன்‌) ஒண்டொடியாள்‌ – தொடி என்பது முன்‌ கை வளை. அதுக்கு ஒண்மையாவது – கையிலிருந்து கழலாதிருக்கை. ஒண்மை – அழகு. அழகிய கை வளையை உடையவள்‌. மேலும்‌ பட்டர்‌ ஸ்ரீரங்க ராஜஸ்தவ பூர்வ சதகத்தில்‌ (54) சூத்ரவதியானவள்‌ பெரிய பிராட்டி யாருடைய திருவடியிலே இட்ட செம்பஞ்சுக்‌ குழம்பினால்‌ அடையாளம்‌ இடப்‌ பெற்றதாய்‌, கைங்‌கர்ய உபயோகியான திருவொற்று ஆடையினால்‌ விளங்குமதான கொடி போன்ற அழகை யுடையவள்‌ என்றும்‌, சேனை முதலியாரின்‌ பிரிய பத்தினியுமாக இருப்பவள்‌ என்றும்‌ உரைப்பர்‌. அப்படிப்பட்டவளை நெஞ்சில்‌ இருப்பிடமாக உடையவர்‌ சேனை முதலியார்‌ என்றபடி. மார்பு – நெஞ்சு, உறை இருப்பிடம்‌.

வேதாந்த தேசிகரும்‌ யதிராஜ சப்ததியில்‌ (3) “வைகுண்ட ஸேநாந்யம்‌ தேவம்‌ ஸூத்ரவதீ ஸகம்‌” என்கிறபடியே ஸுத்ரவத துணைவனான வைகுண்ட ஸேநாதிபதி என்பர்‌. திருமாலிருஞ்‌ சோலையில்‌ ஸுத்ரவதியோடு சேனை முதலியார்‌ அர்ச்சா விக்ரகமாய்‌ எழுந்தருளி சேவை சாதிப்பது குறிப்பிடத்தக்கதாகும்‌

(ஈங்கு உலகில்‌ சடகோபர்க்கு இதமுரைத்தான்‌) – ஈங்கு – இங்கு, இவ்விடம்‌. இந்த உலகில்‌ “ஸேநேச கருணா லப்த திவ்ய மந்த்ர த்வய முதா” என்று குருபரம்பரா ப்ரபாவத்தில்‌ அருளியபடியே நம்மாழ்வாரான சடகோபருக்கு சேனை முதலியார்‌ கருணையினால்‌ துவயம்‌ என்னும்‌ திவ்ய மந்த்ரத்தை உபதேசித்தவராவர்‌. மேலும்‌ பரமபதநாதனுடைய நியமனத்தால்‌ சேனை முதலியார்‌ வந்து மந்த்ரம்‌. மந்த்ரத்தின்‌ பொருள்‌, எல்லா புருஷார்த்தங்கள்‌, திராவிட வேதங்கள்‌ முதலானவற்றை பிறர்‌ காதில்‌ படாதபடி உபதேசித்து திவ்விய ஞான ஸம்பந்தராக்கினார்‌ என்றும்‌ கூறும்

ஆனிதனில்‌ அனுடத்தில்‌ அவதரித்தான்‌ வாழியே
ஆளவந்தார்க்கு உபதேசம்‌ அருளி வைத்தான்‌ வாழியே
பானு தெற்கில்‌ கண்டவன்‌ சொல்‌ பல உரைத்தான்‌ வாழியே
பராங்குசனார்‌ சொல்‌ பிரபந்தம்‌ பரிந்து கற்றான்‌ வாழியே
கானமுறத்‌ தாளத்தில்‌ கண்டு இசைத்தான்‌ வாழியே
கருணையினால்‌ உபதேசக்‌ கதி அளித்தான்‌ வாழியே
நானிலத்தில்‌ குருவரையை நாட்டினான்‌ வாழியே
நலந்திகமும்‌ நாதமுனி நற்பதங்கள்‌ வாழி
–ஸ்ரீமந்நாதமுனிகள்‌ ஆனி மாதம்‌ அனுஷ நஷத்ரத்தில்‌ காட்டுமன்னார் கோயிலில்‌ அவதரித்தார்‌. இவர்‌ சேனை முதலியாருடைய முக்கியமான படைத் தலைவரான கஜானரநர்‌ என்னும்‌ யானை முகமுடைய நித்ய ஸூரிகள்‌ அம்சர்‌ என்பர்-

ஆனிதனில்‌ – ஆனி மாதத்தில்‌,
அனுடத்தில்‌ – அனுஷ நக்ஷத்ரத்தில்‌,
அவதரித்தான்‌ – தோன்றினவர்‌,
வாழியே வாழ வேண்டும்‌.
ஆளவந்தார்க்கு – தன்‌ பேரனான ஆளவந்தார்‌ என்னும்‌ ஆசார்யருக்கு,
உபதேசம்‌ – நல்‌ வார்த்தைகளை,
அருளி வைத்தான்‌ – சொல்லி வைத்தவர்‌,
பானு – பாஸ்கரரான நம்மாழ்வாரை,
தெற்கில்‌ கண்டவன்‌ தெற்குத்திக்கிலே கண்ட மதுரகவியாழ்வார்‌,
சொல்‌ – சொல்‌ லான கண்ணிநுண்‌ சிறுத்தாம்பை,
பல உரைத்தான்‌ பன்னிரண்டாயிரம்‌ தடவை சொன்னவர்‌.
பராங்குசனார்‌ – பரரான பிற மதங்களுக்கு அங்குசம்‌ போன்றவரான நம்மாழ்வாருடைய,
சொல்‌ பிரபந்தம்‌ வாய்மொழியான பிரபந்தங்கள்‌,
பரிந்து கற்றான்‌ நம்மாழ்வார்‌ மூன்று நாள்‌ கனவில்‌ சொல்ல கற்றுக்‌ கொண்டவர்‌.
கானமுற – தேவ கானம்‌ நிலைக்க,
தாளத்தில்‌ – தாளத்தில்‌ கண்டு
இசைத்தான்‌ இடுவித்தவர்‌.
கருணையினால்‌ – தன்‌ மிக்க கருணையினால்‌,
உபதேசக்‌ கதி – உபதேசமாக பரம்பரையை,
அளித்தான்‌ – கொடுத்தவர்‌.
நானிலத்தில்‌ நல்ல இந்த உலகில்‌,
குருவரையை – குருவை நிர்ணயித்து,
நாட்டினான்‌ – நிலை நிறுத்தியவர்‌.
நலம்‌ திகழும்‌-நன்மை விளங்குகிற,
நாதமுனி – ஸ்ரீமந்நாதமுனிகள்‌,
நற்பதங்கள்‌ – நன்மை தரும்‌ திருவடிகள்‌,
வாழியே – வாழ வேண்டும்‌.

(ஆனிதனில்‌ அனுடத்தித்தில்‌ அவதரித்தான்‌) பன்னிரண்டு மாதங்களில்‌ மூன்றாவது மாதம்‌ ஆனி மாதமாகும்‌. வடமொழியில்‌ ஜ்யேஷ்டா எனப்படும்‌. நக்ஷத்ர வரிசையில்‌ அனுஷம் பதினேழாவதாகும்‌. இதற்கு வடமொழியில்‌ அநுராதா என்று பெயர்‌. “அநுராதா நக்ஷத்ரம்‌ மித்ரோ தேவதா” என்று வேதம்‌ கூறும்‌.ஆழ்வார்கள்‌ காலத்துக்குப்‌ பிறகு அவர்கள்‌ அருளிய நாலாயிரத்‌ திவ்வியப்‌ பிரபந்தங்கள்‌ மேல்‌ பக்தி, நம்பிக்கை இல்லாமல்‌ தீய சக்திகளின்‌ மேலீட்டால்‌ அவை இருந்த இடம்‌ தெரியாமல்‌ போய் விட்டன. அந்த சமயத்தில்‌ பொதிய மலையில்‌ கும்ப ஸம்பவர்‌, ஆங்கீரஸர்‌ முதலான முனிவர்கள்‌ திருமலைக்குச்‌ சென்று திருவேங்கடவனைத்‌ தொழுது ஆழ்வார்களின்‌ அருளிச்‌ செயல்களின்‌ நிலையை மீட்டு உருவாக்கம்‌ செய்து உலகை வாழ்விக்க வேண்டினர்‌. திருவேங்கடவனும் வீரநாராயணபுரத்தில்‌ மன்னனார்‌ ஸந்நிதியில்‌ நித்ய வாஸம்‌ செய்யும்‌ ஈஸ்வர பட்டாழ்வானுக்கு கஜானனர்‌ அம்சமாக நாத முனிகள்‌ என்பவராக அவதரித்து திராவிட வேதத்தை கொடுத்தருளுவர்‌ என்று அருளியதற்கு ஏற்ப, முனிவர்கள்‌ வீர நாராயணபுரம்‌ சென்று ஈஸ்வர பட்டராழ்வாரை ஸேவித்து திருவேங்கடவன்‌ அருளியதை விண்ணப்பித்தனர்‌.அவ்வாறே கலியுகத்தில்‌ 3224 வருடங்கள்‌ கழித்த பிறகு சோபக்ருது வருடம்‌ ஆனி மாதம்‌ பெளர்ணமி அன்று அனுஷ நக்ஷத்ரத்தில்‌ புதன்கிழமையில்‌ சேனை முதலியாரின்‌ மந்திரியான கஜானனருடைய அம்சமாக ஈஸ்வர பட்டர்‌ என்னும்‌ அந்தணருக்கு பிறந்தவராவர்‌ என்று ப்ரபந்நாம்ருதம்‌ கூறும்‌.

(ஆளவந்தார்க்கு உபதேசம்‌ அருளி வைத்தான்‌) ஸ்ரீ மந்‌ நாதமுனிகளின்‌ குமாரரான ஈஸ்வரமுனிக்குப்‌ பிறந்தவர்‌ யமுனைத்‌ துறைவராவர்‌. இவர்‌ ஆக்கியாழ்வான்‌ என்னும்‌ வித்வானோடு வாதப்‌ போர்‌ செய்து, அதனைக்‌ கண்ட அந்த தேசத்து ராஜ மஹிஷி “என்னை ஆளவந்தீரோ” என்று அழைத்ததனால்‌ ஆளவந்தார்‌ என்ற பெயர்‌ கொண்டார்‌.-ஸ்ரீமந்நாதமுனிகள்‌ தம்‌ குமாரரான ஈஸ்வர முனியிடம்‌, அவருக்கு ஒரு பிள்ளை பிறக்க இருப்பதாகவும்‌ அவருக்கு யமுனைத்‌ துறைவர்‌ என்ற பெயரும்‌ இடச்‌ சொன்னார்‌. மேலும்‌ ஸ்ரீமந்நாதமுனிகள்‌ தம்‌ சீடர்களான உய்யக்கொண்டாரிடம்‌ தாம்‌ அருளிய தர்சன தாத்பர்யங்களையும்‌, குருகை காவலப்பனிடம்‌ தாம்‌ அருளிய யோக ரகஸ்‌யங்களின்‌ பொருள்‌ விசேஷத்தையும்‌ யமுனைத்‌ துறைவனுக்கு உபதேசிக்கச்‌ சொன்னார்‌. இது பற்றியே “அருளி வைத்தான்‌” என்றபடி.

(பானு தெற்கில்‌ கண்டு அவன்‌ சொல்‌ பல உரைத்தான்‌) பானு- சூரியன்‌. மதுரகவிகள்‌ வடதேச யாத்ரையின்‌ போது அயோத்யையிலிருந்து வகுள பூஷண பாஸ்கரரான நம்மாழ்வாரை ஒரு திவ்ய ஒளியாகக்‌ கண்டவர்‌. எனவே “பானு தெற்கில்‌ கண்டவன்‌” என்றபடி. அந்த மதுரகவிகள்‌ அந்த திவ்ய ஒளியைக்‌ கண்டு ஏதேனும்‌ கிராமமோ நகரமோ வேகிறதோ, காட்டுத்தீயோ என்று சந்தேகித்து இரண்டு மூன்று நாள்‌ அப்படியே கண்டு, பகலில்‌ தூங்கி இரவில்‌ அந்த ஒளி வரும்‌ திக்கை நோக்கி நடந்து வழியில்‌ வரும்‌ திருத் தலங்க ளெல்லாம்‌ ஆராய, இறுதியில்‌ திருக்குருகூரில்‌ வந்து அங்கு உறங்காப்புளி நிழலிலே நம்மாழ்வாரைக்‌ கண்டு அவரைப்‌ பேச வைத்து, அவர்‌ அருள்‌ பெற்று, அவரைப்‌ பற்றி “கண்ணிநுண்‌ சிறுத்தாம்பு” என்னும்‌ பிரபந்தமருளினது பற்றி “அவன்‌ சொல்‌” என்றபடி –ஸ்ரீ மந்‌ நாதமுனிகள்‌ ஆழ்வார்‌ திருநகரியில்‌ பராங்குச தாஸரிடம்‌ இருந்து மதுரகவிகள்‌ சொல்லான கண்ணி நுண்‌ சிறுத்தாம்பைப்‌ பெற்று பன்னீராயிரம்‌ தடவை அநுஸந்தித்ததனால்‌ “சொல்‌ பல உரைத்தான்‌” என்றவாறு-

(பராங்குசனார்‌ சொல்‌ பிரபந்தம்‌ பரிந்து கற்றான்‌) பராங்குசன்‌ – நம்மாழ்வார்‌ திருநாமம்‌. தடை யற்ற சுதந்த்ரனான எம்பெருமானை தம்முடைய பாசுரங்களாலே வஸீகரிக்க வல்லவர்‌. கல்வி, செல்வம்‌, குடிப்பிறப்பு ஆகிய வற்றால்‌ உண்டான மும்மதச்‌ செருக்கால்‌ திரியுமவர்கள்‌ தலை வணங்கும்படி உபதேசமாகிற அங்குசத்தை இட்டவர்‌ என்பர்‌. பராங்குசனார்‌ சொன்ன பிரபந்தமாவது திருவாய்‌ மொழியும்‌ மற்ற மூவாயிரமுமாகும்‌. இவற்றைப்‌ பரிந்து கற்கையாவது – ஒரு சமயம்‌ மேல்‌ நாட்டிலிருந்து சில ஸ்ரீ வைஷ்ணவர்கள்‌ வீரநாராயணபுரத்தில்‌ மன்னனாரைச்‌ சேவிக்கும்‌ போது “ஆராவமுதே” (5-8) என்கிற திருவாய்‌ மொழியை அநுளந்தித்தார்கள்‌.-அதனைக்‌ கேட்ட ஸ்ரீமந்‌ நாதமுனிகள்‌ மிகவும்‌ சந்தோஷ மடைந்தவராய்‌ அவர்களிடம்‌ “ஆயிரத்துள்‌ இப்பத்தும்‌” என்று சேவித்தர்களே, இப்பிரபந்தம்‌ முழுவதும்‌ தெரியுமா உங்களுக்கு” என்றார்‌. அவர்கள்‌ “இப்பத்துப்‌ பாட்டு மட்டுமே தெரியும்‌” என்றனர்‌. உடனே அவர்களுக்கு தீர்த்த ப்ரஸாதம்‌ கொடுத்து அனுப்பினார்‌. இந்த பிரபந்தம்‌ சடகோபர்‌ அவதரித்த திருக்குருகூர்‌ என்னும்‌ ஆழ்வார்‌ திருநகரி திவ்ய தேசத்திலே இருக்க வேண்டும்‌ என்று நினைத்து ஆழ்வார்‌ திருநகரிக்குச்‌ சென்றார்‌. ஆழ்வாரையும்‌ பொலிந்து நின்ற பிரானையும்‌ சேவித்தார்‌.அங்கே மதுரகவிகளின்‌ சீடரான ஸ்ரீபராங்குச தாஸரை சேவித்து, “இவ்விடத்தில்‌ திருவாய்மொழி ஓதினவர்கள்‌ உண்டோ? ஸ்ரீ கோசங்கள்‌ உண்டோ?” என்று கேட்டார்‌. அவரும்‌ “அவையெல்லாம்‌ மறைந்து போயிற்று. இப்போது மதுரகவிகள்‌ அருளிய கண்ணி நுண்‌ சிறுத்தாம்பு என்ற திவ்ய பிரபந்தம்‌ உள்ளது. இதனை பன்னீராயிரம்‌ தடவை ஏக சிந்தையராய்‌ ஆழ்வார்‌ திருவடிகளை தியானித்து அநுஸந்தித்தால்‌, ஆழ்வார்‌ மனக் கண்ணிலே தென்படுவார் என்று அருளினார்‌. ஸ்ரீமந்‌ நாதமுனிகளும்‌ இப்படி நம்மாழ்வார்‌ விஷயமாக மதுரகவிகள்‌ அருளிய கண்ணி நுண்‌ சிறுத்தாம்பை பன்னீராயிரம்‌ உரு சொல்லவே, நம்மாழ்வாரும்‌ ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு அறியாமையைப்‌ போக்கி பக்தியையும்‌ ஞானத்தையும்‌ அருளி, திவ்யமான கண்ணைக்‌ கொடுத்து, மூன்று இரகசியங்களையும்‌, திருவாய்மொழியையும்‌, மற்றுமுள்ள மூவாயிரப்‌ பிரபந்தங்களையும்‌, எல்லா தர்சன கருத்துக்களையும்‌ அஷ்‌டாங்க யோக ரகசியத்தையும்‌ உபதேசித்தார் -என்று குரு பரம்பரா ப்ரபாவம்‌ கூறுவது அறியற்பாலதாகும்‌. மேலும்‌ இவருடைய தனியனில்‌ “ய: ஸ்ரீசடாரே: ஸ்ருதவாந்‌ ப்ரபந்தம்‌ அகிலம்‌ குரோ:”‘ என்று அருளியதற்கு ஏற்ப நம்மாழ்வாரை ஆசார்யராகப்‌ பற்றி திவ்ய பிரபந்தம்‌ முழுவதையும்‌ கேட்டவர்‌ என்று அருளியது காண்க. இதற்குச்‌ சேர, தமிழ்க்‌ கண்ணி நுண்‌ சிறுத்‌ தாம்பைப்‌ பண்டை உருவால்‌ பன்னீராயிரம்‌ உரு உரை செய்ய, ஒண்‌ தமிழ்‌ மாறன்‌ திருவுள்ளமுகந்து திவ்ய ஞானம்‌ நாதமுனிக்கு நயந்தருள்‌ புரிந்தாரன்றோ” என்று உரைப்பர்‌ பிள்ளைலோகம்‌ சீயர்‌. இவற்றை விரும்பி ஸ்ரீமந்‌ நாதமுனிகள்‌ கற்றதனால்‌ “பரிந்து கற்றான்‌” என்றபடி.

(கானமுறத் தாளத்தில்‌ கண்டு இசைத்தான்‌) கானம்‌ உற – கானம்‌ நிலைக்க, தாளம்‌ – கைத்தாளக்‌ ஸ்ரீமந்நாதமுனிகள்‌ தம்முடைய திவ்ய ஸ்தலமான வீரநாராயணபுரத்துக்கு வந்து, அங்கு எழுந்தருளியிருக்கும்‌ எம்பெருமானான மன்னனாரிடம்‌ தமக்கு திவ்ய பிரபந்தங்களை அருளினதைச்‌ சொன்னார் -மன்னனாரும்‌ மிக்க உகப்புடனே இவர்‌ கனவில்‌ வந்து இந்த திவ்வியப்‌ பிரபந்தங்களை ஒருரு நாதமுனிகளுடன்‌ அருளிச்‌ செய்து, “இவ்வுலக மக்களைத்‌ திருத்த நீர்‌ இந்த பிரபந்தங்களை இயலும்‌ இசையுமாக்கும்‌” என்று அர்ச்சகர்‌ வாயிலாக நியமித்தார்‌. தம்முடைய மருமக்களான கீழை அகத்தாழ்வாரையும்‌ மேலை அகத்தாழ்வாரையும்‌ கூட்டிக் கொண்டு இத் திவ்வியப்‌ பிரபந்தங்களை, வேத வியாஸர்‌ வேதங்களை நான்கு ஸ்வரங்களோடு உச்சரிப்பது போல, ஸ்ரீமந்நாதமுனிகளும்‌ இவற்றை திவ்ய தேவ கானத்திலே சேர்த்து நன்கு இசைக்கும்படி செய்வித்தார்‌.பின்னர்‌ இருவரும்‌ இனிய குரலை யுடையவர்களாய்‌, முற்காலத்‌திலே குசலவர்கள்‌ இராமனுக்கு முன்னால்‌ ஸ்ரீராமாயணத்தைப்‌ பாடியது போல, வீரநாராயணபுரம்‌ ஸ்ரீராஜகோபாலன்‌ ஸந்நதியில்‌ திவ்ய பிரபந்தங்களை ஆர்வத்துடன்‌ பாடினார்கள்‌.

தாளத்தில்‌ கண்டு இசைத்தலாவது -ஸ்ரீ மந்நாதமுனிகள்‌ காலத்தில்‌ சோழ ராஜாவின்‌ அரண்மனை வாசலிலே தேவ கானம்‌ பாடுவாள்‌ ஒருத்தியும்‌, மனுஷ்ய கானம்‌ பாடுவாள்‌ ஒருத்தியும்‌ சேர்ந்து தங்கள் தேவ கானமே உயர்ந்தது என்று ஒருத்தி சொல்ல மற்றொருத்தி மனுஷ்ய கானமே உயர்ந்தது என்று சொல்ல, இதனால்‌ வாதம்‌ முற்றி ராஜாவிடம்‌ அறிவிக்க, அவனும்‌ வித்வான்‌௧ளைத்‌ திரட்டி இவ்விருவரையும்‌ பாடுவித்து, மனுஷ்ய கானம்‌ செய்தவளை பாராட்டி வெகுமதி அளித்தான்‌.-தேவகானம்‌ பாடுபவள்‌ மிகவும்‌ மனம்‌ நொந்து இந்த கானத்தை தேவர்களே அறிவர்‌. மனிதர்கள்‌ அறியார்‌ என்று எண்ணி, கோயில்‌ தோறும்‌ சென்று பாடி, இறுதியில்‌ மன்னனார்‌ கோயிலிலே பெருமாள்‌ முன்‌ பாடினாள்‌-மன்னனார்‌ கோயிலிலே பெருமாள்‌ முன்‌ தேவகானம்‌ பாடுவதைக்‌ கேட்ட ஸ்ரீ மந்நாதமுனிகள்‌ அவளுக்கு மன்னனார்‌ தீர்த்த பிரசாதம்‌ முதலான வற்றைக்‌ கொடுத்து கெளரவித்தார்‌. அவளும்‌ இவரை வணங்கி அரசனிடம்‌ சென்று தாம்‌ பாடுகிற தேவ கானத்தை அறிந்த ஒருவர்‌ வீரநாராயணபுர மன்னனார்‌ கோயிலில்‌ இருக்கும்‌ ஸ்ரீ மந்நாதமுனிகள்‌ என்கிற பெரியவர் தான்‌. அவரைத்‌ தவிர உலகில்‌ வேறு யாரும்‌ இல்லை என்று சொன்னாள்‌. உடனே அரசனும்‌ ஸ்ரீ மந்நாதமுனிகளை வரவழைத்து, அவரை உபசரித்து தேவ கானத்தை அறிந்தபடியை விளக்கிச்‌ சொல்லச்‌ சொன்னார்‌. ஸ்ரீமந்நாதமுனிகள்‌ நாற்பது நூறு தாளத்தைக்‌ கொண்டு வரச்‌ சொன்னார்‌.அவற்றைச்‌ சேர ஒத்தச்‌ சொன்னார்‌. அந்த ஓசையைக்‌ கேட்டு இது இவ்வளவு எடை, இது இவ்‌ வளவு எடை உள்ளது என்று ஒவ்வொன்றினுடைய அளவையும்‌ சொன்னார்‌. அரசனும்‌ தனித் தனியே அவற்றை சோதித்து நிறுத்து, அவற்றில்‌ முந்திரி அளவாவது ஏற்றம்‌ குறைவில்லாமல்‌ இருப்பதைக்‌ கண்டு வியப்படைந்தான்‌. அரசனை ஆசிர்வதித்து மன்னனார்‌ கோயில்‌ வந்தார்‌. பின்னர்‌, ஸ்ரீமந்நாத முனிகள்‌ நியமனத்தாலே ஸ்ரீரங்கத்தில்‌ மிகச்‌ சிறந்ததான அரையர்‌ சேவை என்ற பெயரில்‌ இந்த திவ்ய கானம்‌ தடையின்றி அரையர்களால்‌ அபிநயனத்துடன்‌ அத்யயன உற்சவங்களில்‌ இன்றளவும்‌ பாடப்படுகிறது.-திருப்பல்லாண்டு தொடக்கமாக திருநெடுந் தாண்டகம்‌ வரை பகல்‌ பத்து நாட்களிலும்‌, திருவாய்‌ மொழியை இராப்பத்து நாட்களிலும்‌ சேவிப்பர் -இயற்பாவை இயலாக சேவிப்பது ஸ்ரீமந்நாதமுனிகள்‌ ஏற்படுத்திய முறையாகும்‌. இந்த அரையர்‌ சேவை ஆழ்வார்‌ திருநகரி, ஸ்ரீ வில்லிபுத்தூர்‌ மற்றும்‌ மேலக்‌ கோட்டை ஆகிய திவ்ய தேசங்களில்‌ இன்றும்‌ பிரசித்‌தமாக நடந்து வருகிறது. இது பற்றியே தாளமுடன்‌ இசைத்தவர்‌ ஸ்ரீமந்நாதமுனிகள்‌ என்றபடி-

(கருணையினால்‌ உபதேசக்‌ கதி அளித்தான்‌) கதி- வழி, புகலிடம்‌. உபதேசமாவது தாம்‌ நம்மாழ்வாரிடம்‌ இருந்து பெற்ற ரகஸ்ய தாத்பர்யங்களும்‌ திவ்வியப்‌ பிரபந்தங்களும்‌ மற்றும்‌ அஷ்டாங்க யோக ரகஸ்யமுமாகும்‌. இவற்றை தம்‌ கருணையினால்‌ உய்யக்‌ கொண்டார்‌, குருகை காவலப்பன்‌, நம்பி கருணாகர தாஸர்‌, ஏறு திருவுடையார்‌, திருக் கண்ண மங்கை ஆண்டான்‌, வானமாமலை தேவியாண்டான்‌, உருப்பட்டூர்‌ ஆச்சான்‌ பிள்ளை மற்றும்‌ சோகத்‌ தூராழ்வான்‌ ஆகிய எண்மருக்கு உபதேசித்ததாகக்‌ குருபரம்பரா ப்ரபாவம்‌ கூறும்‌.மேலும்‌ கருணைக்கு எடுத்துக்காட்டாக குருகை காவலப்பனுக்கு அஷ்டாங்க யோக க்ரமத்தை உபதேசித்தார்‌. உய்யக் கொண்டாருக்கு சாஸ்த்ரங்‌களையும்‌ திருவாய்மொழி முதலான திவ்வியப்‌ பிரபந்தங்களையும்‌ உபதேசித்து அவற்றை வளர்க்கச்‌ சொன்னார்‌. தம்‌ குமாரரான ஈஸ்வர முனிக்குப்‌ பிறக்கும்‌ குமாரருக்கு யமுனைத் துறைவர்‌ என்று பெயரிடச்‌ சொன்னார்‌. உய்யக்கொண்டாரையும்‌ குருகை காவலப்பனையும்‌ பார்த்து அவர்களுக்கு உபதேசித்தவற்றை யமுனைத்‌ துறைவருக்கு உபதேசிக்கச்‌ சொல்லி வழி காட்டினார்‌ ஸ்ரீமந்‌ நாதமுனிகள்‌. இது பற்றியே உபதேச கதி அளித்தவன்‌-என்றபடி-

(நானிலத்தில்‌ குரு வரையை நாட்டினான்‌) நானிலமாவது குறிஞ்சி, முல்லை, மருதம்‌, நெய்தல்‌ என்னும்‌ நால்வகைப் பட்ட இந்த பூமி. குரு வரையை நாட்டுதலாவது – நானிலமாகிய இந்த உலகில்‌ குரு பரம்பரையை நிர்ணயித்தல்‌, முதன் முதலாக கூரத்தாழ்வான்‌ அனைவருக்கும்‌ குருபரம்பரை அநுஸந்தாநத்தின்‌ மூலம்‌ உய்வு பெற அருளிய தனியன்‌ லக்ஷ்மீநாத ஸமாரம்பாம்‌ நாதயாமுநமத்‌ யமாம்‌” என்பதாகும்‌. இந்தத்‌ தனியனில்‌ திருமகள்‌ கேள்வனான எம்பெருமானுக்கு அடுத்ததாக நாதமுனிகளை அருளியுள்ளார்‌.-மதுரகவிகளினுடைய திவ்ய ப்ரபந்தத்தை நாத முனிகள்‌ தான்‌ அநுஸந்தித்து நம்மாழ்வாருடைய அருள்‌ பெற்ற நாதமுனியானார்‌. அந்த ஸ்ரீமந்‌ நாதமுனிகள்‌ அருளாலே அவர்‌ திருப் பேரனான யமுனைத்‌ துறைவர்‌ நம்‌ தர்சனத்தை ஆள வந்தது. இந்த தனியனில்‌ நாதமுனிகளை நடுவில்‌ சொன்னது. இராமாநுசருக்கும்‌ உபலக்ஷணமாகும்‌ என்பர்‌. ஏனெனில்‌ உடையவர்‌ தாம்‌ குருபரம்பரைக்கு நடு நாயகமாகத்‌ திகழ்பவர்‌. வியாசர்‌ முதலானவர்கள்‌ மூலமாக பகவத்‌ ப்ரஸாதம்‌ காரணமாக வளர்ந்து வந்த சாஸ்த்‌ரங்களைக்‌ காட்டில்‌, நேராக பகவத்‌ ப்ரஸாதம்‌ காரணமாக ஆழ்வாராலே அவதரிக்க ஏற்றத்தை உடைய திருவாய்மொழியை அவர்‌ க்ருபையாலே பெற்ற ஏற்றத்தைச்‌ சொல்லுகிறது.-சாஸ்த்ரம்‌ பரப்புவதற்கு காரணம்‌ வியாஸர்‌ கருணையாகையாலே வேதம்‌ மூலமிருக்கும்‌ அது. அதன்‌ கருத்தான இதுக்கு “நாதம்‌ பங்கஜ நேத்ர…” என்று மாமுனிகள்‌ அருளியபடி ஸ்ரீமந்‌ நாதமுனிகள்‌ தொடக்கமாக நடந்து செல்லுகிற ஆசார்ய பதத்தில்‌ இருப்பவராய்‌, அருளிச்‌ செயலை விரும்பி வளர்த்துக்‌ கொண்டு வருமவர்கள் தான்‌. மேலும்‌ ஸ்ரீமந்‌ நாத முனிகள்‌, உய்யக்கொண்டார்‌ என்று தொடங்கி தேவராஜர்‌ என்னுமளவிலும்‌ காட்டப்பட்ட ஆசார்யர்கள்‌ என்றும்‌ “திருவருள்மால்‌… அருள்‌ பெற்ற நாதமுனி முதலாம்‌ நம்‌ தேசிகர்‌” என்று ஆசார்யர்கள்‌ பரம்பரையை அருளியது காணலாம்‌. மேலும்‌ “சேனைநாதன்‌ அருள்‌ மாறன்‌ நாதமுனி தாமரைக்‌ கண்ணி ராமர்‌ வா…” என்ற தனியன்‌ மூலமாகவும்‌ அறியலாகும்‌.

(நலந்திகழும்‌ நாதமுனிநற்பதங்கள்‌ வாழியே) நலமாவது நன்மை. திகழ்வதாவது – விளங்குவது -நாத முனிகளுக்கு நன்மையாவது -ஆளவந்தார்‌ தாம்‌ அருளிய ஸ்தோத்ர ரத்னத்தில்‌ “நமோ… ஸிந்தவே” என்கிறபடியே நாதமுனிகளுடைய ஞான, வைராக்ய பக்திகளினுடைய உயர்வைச்‌ சொல்லுகிறார்‌.-இவருடைய ஞானம்‌ முதலானவை இன்னாருடையது என்று நினைக்க முடியாது. இவ்வளவு என்று அறிவிற் சிறந்தவராலும்‌ அளவிட முடியாது என்கிறார்‌. மேலும்‌ உண்மை அறிவினுடையவும்‌ அன்பினுடையவும்‌ பெரு மேன்மையின்‌ முடிவே எல்லையா யிருப்பவருமானவர்‌ என்பர்‌. அளவற்ற பகவத்‌ பக்தி என்ன, உண்மை அறிவு என்ன, பக்தியின்‌ பரம பர்யோஜனமாயும்‌ இருப்பவர்‌ என்கிறார்‌.

முநி: – பகவானை நினைக்கிலுண்டான ஆனந்‌தத்தினால்‌ நிலை நின்றவர்‌. அதாவது தியானிக்கத்‌ தக்க வஸ்துவான எம்பெருமானை எப்போதும்‌ மனக் கண்ணாலே காண்கை. சலங்கொள்‌ நாதமுனி. நாதன்‌ அருளுருவானவ ராகையாலே இவருக்கு நாதமுனிகள்‌ என்று பெயர்‌. ஸ்ரீரங்கநாதர்‌ என்னும்‌ திருநாமத்தை உடையவர்‌. நம்மாழ்வாரை நாதராக உடையவராய்‌, அந்த ஆழ்வாருடைய அருள்‌ பெற்ற நாதமுனி என்பர்‌. அருள்‌ பெற்ற நாதமுனி – அருள்‌ மாறன்‌ அருளைப்‌ பெற்றவர்‌. அல்லது ஆழ்வார்‌ அருளையாவது அதற்குக்‌ காரணமான மன்னனாருடைய அருளையாவது பெற்றவர்‌ என்பர்‌ பிள்ளை லோகம்‌ சீயர்‌.
வேதாந்த தேசிகர்‌ அருளிய ஸம்ப்ரதாய பரி ஸூத்தி என்னும்‌ ரஹஸ்யத்திலே வேதாந்த ஸம்ப்ர தாயத்துக்கு இந்த யுக ஆரம்பத்திலே பிரம்மநந்தி முதலானோர்க்குப்‌ பிறகு நம்மாழ்வார்‌ ப்ரவர்த்த கரானார்‌ என்றும்‌ குருபரம்பராஸாரத்திலும்‌ இவ்‌ வாசார்யர்களில்‌ ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு மதுரகவிகள்‌ முதலாக உண்டான ஸம்ப்ரதாய பரம்பரையாலும்‌ திருவாய்மொழி முகத்தாலும்‌ யோக தசையிலே ஸாக்ஷாத்‌ க்ருதராயும்‌ நம்மாழ்வார்‌ ஆசார்யரானார்‌ என்றும்‌ உள்ளமை காண்க.ஸ்ரீ மந்நாதமுனிகள்‌ திருவடியானது “நாதஸ்ரீபாத பங்கஜே” என்கிறபடியே தம்‌ ஸர்வ பாரங்களையும்‌ வைத்து அவர்தம்‌ சீடரான உய்யக்கொண்டார்‌ வணங்‌குவதாகக்‌ கூறுவர்‌. அவ்வாறே நாமும்‌ அவர் தம்‌ திருவடிகளை வணங்குவோமாக. வாழி

வாலவெய்யோன்தனை வென்ற வடிவழகன்‌ வாழியே
மால்‌ மணக்கால்‌ நம்பி தொழு மலர்ப்‌ பதத்தோன்‌ வாழியே
சீலமிகு நாதமுனி சீருரைப்போன்‌ வாழியே
சித்திரையில்‌ கார்த்திகை நாள்‌ சிறக்க வந்தோன்‌ வாழியே
நாலிரண்டும்‌ ஐயைந்தும்‌ நமக்குரைத்தான்‌ வாழியே
நாலெட்டின்‌ உட்பொருளை நடத்தினான்‌ வாழியே
மாலரங்க மணவாளர்‌ வளமுரைப்போன்‌ வாழியே
வையமுய்யக்‌ கொண்டவர் தாள்‌ வையகத்தில்‌ வாழியே–
பராபவ வருடம்‌ (886) சித்திரை மாதத்தில்‌ வெள்ளிக்கிழமை, பெளர்ணமி அன்று கார்த்திகை நட்சத்திரத்தில்‌ அவதரித்தவர்‌ உய்யக்‌ கொண்டார்‌ என்னும்‌ ஆசார்யர்‌. இவர்‌ திருவரங்கத்துக்கு வடக்கே உள்ள திருவெள்ளறையில்‌ பூர்வசிகை ஸ்ரீவைஷ்ணவ ப்ராஹ்மண குலத்தில்‌ அவதரித்தவர்‌. இவருக்கு புண்டரீகாக்ஷர்‌, பத்மாக்ஷர்‌, ராஜீவாக்ஷர்‌, அரவிந்தாக்ஷர்‌ என்று பல திருநாமங்கள்‌. இவருடைய சீடர்கள்‌ ஸ்ரீராமன்‌ என்னும்‌ மணக்கால்‌ நம்பி, திருவல்லிக்கேணி பாண்பெருமாள்‌ அரையர்‌, சேட்டலூர்‌ செண்டலங்காரதாஸர்‌, ஸ்ரீபுண்டரீகதாஸர்‌, கோமடம்‌ திரு விண்ணகரப்பன்‌ மற்றும்‌ உலக பெருமாள்‌ நங்கை ஆகியோராவர்‌. இவர்‌ ஆண்டாள்‌ அருளிய திருப்‌ பாவைக்குத்‌ தமிழில்‌ இரண்டு தனியன்கள்‌ அருளியுள்ளார்

வாலவெய்யோன்தனை – உதய கால சூரியனை,
வென்ற வடிவழகன்‌ – வென்ற திருமேனி அழகையுடையவர்‌,
வாழியே – வாழ வேண்டும்‌;
மால்‌ – பெருமை பொருந்திய, –
மணக்கால்‌ நம்பி, தொழும்‌ வணங்கும்‌,
மலர்ப் பதத்தோன்‌ – மலர் தலை யுடைய திருவடிகளை உடையவர்‌;
சீலமிகு – நல்ல குணம்‌ மிக்க,
நாதமுனி – ஸ்ரீமந் நாதமுனிகள்‌
சீர்‌ – குணங்‌களை,
உரைப்போன்‌ – சொல்லுபவர்‌;
சித்திரையில்‌ சித்திரை மாதத்தில்‌,
கார்த்திகை நாள்‌ – கார்த்திகை நட்சத்திரத்தில்‌,
சிறக்க வந்தோன்‌ – பெருமை பெற தோன்றியவர்‌;
நாலிரண்டும்‌ – எட்டு எழுத்து மந்திர மான திருமந்திரத்தையும்‌,
ஐயைந்தும்‌ – இருபத்து ஐந்து எழுத்தான துவய மந்திரத்தையும்‌,
நமக்கு உரைத்தான்‌ – நமக்காக வழிவழியாகப்‌ பரம்பரை யாக வரும்படி செய்தவர்‌;
நாலெட்டின்‌ – முப்பத்து இரண்டு எழுத்தான சரம ச்லோகத்தின்‌,
உட்‌ பொருளை – ஆழ்ந்த பொருளை,
நடத்தினான்‌ – வழி வழியாக உபதேசித்தவர்‌;
மால்‌ – பெருமை தங்கிய,
அரங்க மணவாளர்‌ – திருவரங்கனான நம்பெருமாள்‌,
வளம்‌ – அழகை,
உரைப்போன்‌ – உரைப்பவர்‌;
வையம்‌ – உலகம்‌,
உய்யக்‌ கொண்டவர்‌ – உயர்ந்த ஜீவனம்‌ பெற விரும்பியவர்‌,
தாள்‌ – திருவடிகள்‌,
வையகத்தில்‌ – இவ் வுலகில்‌ வாழ பல்லாண்டு பாடு வோமாக.

வால வெய்யோன் தனை வென்ற வடிவழகன்‌) வால வெய்யோன்‌ – உதய கால சூரியன்‌. தன்னை என்பது தனை ஆயிற்று. உதயகால சூரியனையும்‌ வென்ற வடிவழகை உடையவர்‌ உய்யக்கொண்டார்‌ என்றபடி. **ஸுத்தஸத்த்வமயம்‌ செளரேரவதார மிவாபரம்‌” என்று வேதாந்த தேசிகர்‌ யதிராஜ சப்ததி யில்‌ (6) அருளியதற்கு ஏற்ப உய்யக்‌ கொண்டார்‌ சுத்த ஸத்வ மயமாயும்‌ எம்பெருமானுடைய திவ்ய அவதாரங்கள்‌ போல்‌ சுத்த ஸத்வ குணமயமாக விளங்கி இருப்பவர்‌ என்பதனால்‌ உதயகால சூரியனைக்‌ காட்டிலும்‌ வடிவழகன்‌ என்றபடி.-இந்த சுலோகம்‌ பெரிய திருமுடி அடைவிலும்‌, யதிராஜ ஸப்ததியிலும்‌ காணலாம்‌. பெற்றோர்கள்‌ அவருடைய தூய ஸத்வ மயமான திருமேனியையும்‌ தாமரை போன்ற திருக் கண்களையும்‌ கண்டு திருவெள்ளறை எம்பெருமானான அப் புண்டர்‌ காக்ஷணே அவதரித்துள்ளான்‌ போலும்‌ என்று எண்ணி புண்டரீகாக்ஷர்‌ என்று பெயரிட்டனர்‌.“அவர்‌ தாம்‌ புண்டரீகாக்ஷரன்றோ. “புண்டரீக த்ருசே நம!:”’ என்றாயிற்று என்பர்‌ பிள்ளைலோகம்‌ சீயர்‌. இது பற்றியே ஒன்றான எம்பார்‌ ஜீயர்‌ ஸ்வாமி, எம்பெருமானார்‌ அவயவ சுலோகத்தில்‌ புண்டரீகாக்ஷ ரான இவரை “நேத்ரயுக்மம்‌ ஸரோஜாச்ஷ:”’ என்கிற படியே எம்பெருமானாருக்கு இரு கண்களாகத்‌ திகழ்பவர்‌ உய்யக்‌ கொண்டார்‌ என்று உரைப்பர்‌.-

(மால்‌ மணக்கால்‌ நம்பி தொழும்‌ மலர்ப்‌ பதத்‌தோன்‌)-மால்‌- பெருமை. மணக்கால்‌ நம்பி- உய்யக்‌ கொண்டாரின்‌ சீடர்‌. மணக்கால்‌ நம்பிக்கு பெருமை யாவது பன்னிரெண்டு வருடம்‌ தம்‌ ஆசார்யரான உய்யக் கொண்டார்‌ திருவடிகளில்‌ எல்லா வித கைங்கர்யங்களையும்‌ செய்தவர்‌. ஒரு நாள்‌ உய்யக்கொண்டார்‌ தேவிகளான ஆண்டாளம்மா பரமபதிக்க, திருமாளிகை கைங்கர்யமெல்லாம்‌ மணக்கால்‌ நம்பி தமக்கே பரமாய்‌ நடத்திக்‌ கொண்டு வரும்போது, தம்‌ ஆசார்யரின்‌ பெண்‌ பிள்ளைகள்‌ இருவரையும்‌ நீராட்டி அழைத்து வரும்‌ வழியிலே வாய்க்கால்‌ சேறாயிருக்கக்‌ கண்டு அவர்கள்‌ திகைக்க, நம்பிகள்‌ படியாய்க்‌ கிடந்து அவர்களைத்‌ தம்‌ முதுகிலே அடியிட்டு அழைத்துக்‌ கொண்டு போனார்‌.-உய்யக்‌ கொண்டாரும்‌ இந்த விஷயத்தைக்‌ கேட்டு “இப்படி செய்வதே” என்று மிகவும்‌ ப்ரீதி அடைந்தவராய்‌, நம்பிகள்‌ தலையை தம்‌ திருவடித்‌ தாமரைகளாலே அலங்கரித்தார்‌. பொன்னடிப்பூ முடிசூட்டி “உமக்கு நாம்‌ செய்ய வேண்டுவது என்ன” என்று கேட்க, நம்பியும்‌ “உற்றேன்‌ உகந்து பணி செய்து உனபாதம்‌ பெற்றேன்‌” என்றார்‌.-மேலும்‌ இரண்டாவது தடவை துவய மந்த்ரத்தை உபதேசித்தார்‌. ஆசார்ய பெண்‌ பிள்ளைகளின்‌ மணக்கால்‌ பொலிய நின்ற திருமேனியை உடையவராய்‌ இருந்ததால்‌ அன்று முதல்‌ “ராம மிச்ரர்‌” என்ற இயற்‌ பெயரையுடையரான இவருக்கு “மணக்கால்‌ நம்பி” என்ற திருநாமம்‌ உடையவரானார்‌. அவர்‌ தலையில்‌ உய்யக்கொண்டார்‌ திருவடிகள்‌ அலங்கரிக்கப்‌ பட்டது பற்றி “நம்பி தொழும்‌ மலர்ப்‌ பதத்தோன்‌” என்றபடி-

(சீலமிகு நாதமுனி சீருரைப்போன்‌) சீலமாவது நல்ல குணம்‌. அதை மிகுதியாக உடையவர்‌ ஸ்ரீமந்நாத முனிகள்‌. சீராவது பெருமை. ஸ்ரீமந்நாதமுனிகளுக்குப்‌ பெருமையாவது உய்யக்‌ கொண்டாரைக்‌ கொண்டு திவ்வியப்பிரபந்தத்தை உலகம்‌ முழுவதும்‌ பரவச்‌ செய்ததாகும்‌. மேலும்‌ “குளப்படியிலே தேங்கினால்‌ குருவி குடித்துப் போம்‌, வீராணத்து ஏரியிலே தேங்கினால்‌ நாடு விளையும்‌” என்று ஸ்ரீமந்நாதமுனிகளும்‌ தம்‌ சீ லகுணத்தால்‌ உய்யக் கொண்டாருக்கு திவ்வியப்‌ பிரபந்தத்தை அருளிச்‌ செய்தார்‌.-அதாவது ஒரு மாட்டின்‌ குளம்பின்‌ அடியிலே மழைநீர்‌ தேங்கும்‌ போது சில குருவிகள்‌ குடிக்க உதவும்‌. அதே மழைநீர்‌ வீரநாராயணபுரத்து ஏரியில்‌ தேங்கினால்‌ அந்நாட்டிலுள்ள வயலெல்லாம்‌ விளைந்து நாடே வாழும்‌.-எம்பெருமானாருடைய சீடரான எம்பார்‌ அருளிய “லக்ஷ்மீ நாதாக்ய ஸிந்தெள” என்ற ஸ்லோகத்தில்‌ லக்ஷ்மீநாதனாகிற பெருங்கடலில்‌ சடகோபராகிய மேகம்‌, கருணை நீரைப்‌ பருகி ஸ்ரீமந்நாதமுனிகளாகிற மலையில்‌ பொழிந்து, அந்நீர்‌ புண்டரீகாக்ஷர்‌ என்னும்‌ உய்யக்கொண்டார்‌, ராம மிச்ரர்‌ என்னும்‌ மணக்கால்‌ நம்பி ஆகிய இரு அருவி களின்‌ மூலம்‌ மேலும்‌ பாய்ந்து கொண்டு வந்தது என்று அருளியது காணலாம்-

ஸ்ரீ லக்ஷ்மி நாதாக்ய சிந்தௌ சடாரிபு ஜலதஹா ப்ராப்ய காருண்ய நீரம்!
நாதா த்ரவப் க்ஷிஞ்சன் ததானு ரகுவரம் போஜ ஷக்சுர் ஜலாப்யம்!!
கத்வதாம் யாமுநாக்யம் சரிதாமத் யதீந்த்ராக்ய பாத்மாகாரேந்திரம்!
ஸம்பூர்ய ப்ராணி சாஸ்யே ப்ரவஹத பஹூதா தேசிகேந்த்ர பிரமேகைஹி.”!!

ஸ்ரீ லட்சுமி நாதன் ஒரு பெரிய கடல்.  நம்மாழ்வார் ஒரு மேகம்.
இந்த கருமேகம் ஆழ்வார் கடலில் இருந்து தண்ணீரை (ஞானம்/அறிவு) எடுத்து மலைகளில் மழையாக (பாசுரங்கள்) பொழிந்தார்.
மலை என்பது ஸ்வாமி நாதமுனிகல் என்று குறிப்பிடப்படுகிறது.
இரண்டு நீர்வீழ்ச்சிகளாக நீர் விழுகிறது,
இந்த நீர் வீழ்ச்சி ஸ்வாமி உய்யக்கொண்டார் மற்றும் ஸ்வாமி மணக்கால் நம்பி என்று குறிப்பிடப்படுகிறது,
இந்த நீர் அருவி ஸ்ரீ ஆளவந்தார் என்ற பெரிய ஆற்றை அடைந்தது.
அப்போது ஏரியில் தண்ணீர் தேங்கியது.
இந்த ஏரி ஸ்வாமி ராமானுஜரால் குறிப்பிடப்படுகிறது.
ஏரியில் இருந்து 74 கால்வாய்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

லக்ஷ்மீ நாதாக்ய ஸிந்தௌ சடரிபு வஹநாத்போத வாஹைர் விபக்தோநாதேநாரோபிதோ ய: ப்ரணதி குணவசாத் யாமுநா க்யேந பூய:தேநாம்போதேந முக்தோ அம்ருதமிவ பவபாகே குலோத்பாஸி பூய:தஸ்மை நமோ அஸ்து ராமாய மஹா முநயே…
லக்ஷ்மீ நாதாக்ய ஸிந்தௌ: ஸ்ரீமன் நாராயணன் (லக்ஷ்மி நாதன்) என்னும் பிரம்மாண்டமான கருணைக்கடலில் இருந்து,சடரிபு வஹநாத்: நம்மாழ்வார் (சடகோபன்) என்னும் மேகம் ஞானமாகிய நீரை முகந்து கொள்கிறது.நாதேநாரோபிதோ: நாதமுனிகள் அந்த ஞானத்தை உலகிற்கு மழையாகப் பொழிகிறார்.யாமுநா க்யேந: ஆளவந்தார் (யாமுனாசாரியர்) அதை ஒழுங்குபடுத்தி கால்வாயாக மாற்றுகிறார்.ராமாநுஜர்: இந்த ஞானாமிர்தத்தை உலக மக்கள் அனைவரும் பருகும்படிச் செய்து, சம்சாரக் கடலில் தவிப்பவர்களின் துயரத்தைத் துடைக்கிறார்.

(சித்திரையில்‌ கார்த்திகை நாள்‌ சிறக்க வந்தோன்‌) தமிழ்‌ மாதங்களில்‌ சித்திரை மாதம்‌ முதன்மையானதாகும்‌. “சைத்ர ஸ்ரீமாந்‌ அயம்‌ மாஸ”. (அ.கா.3-3) என்று இராமாயணத்தில்‌ சித்திரை மாதத்தைக்‌ கொண்டாடியபடியே இந்தச்‌ சித்திரை மாதமானது மிகச்சிறந்ததாகும்‌. இந்த மாதத்தில்‌ கார்த்திகை நக்ஷத்ரத்துக்கு சிறப்பாவது நித்ய ஸுரிகளில்‌ ஜயத்ஸேநர்‌ என்பவரின்‌ அம்சமாக உய்யக்கொண்டார்‌ அவதரித்த சிறப்பாகும்‌. இவர்‌ அவதரித்தது பராபவ வருஷம்‌ சித்திரை மாதம்‌ வெள்ளிக்கழமை பெளர்ணமி கார்த்திகை நக்ஷத்திரமாகும்‌.

(நாலிரண்டும்‌ ஐயைந்தும்‌ நமக்குரைத்தான்‌) நாலிரண்டு – எட்டு எழுத்து மந்திரமான “ஓம்‌ நமோ நாராயணாய” என்ற திருமந்திரம்‌ ஆகும்‌. இதனை பதரிகாச்ரமத்தில்‌ நரனுக்கு நாராயணன்‌ உபதேசித்‌தான்‌. ஐயைந்தாவது – இருபத்து ஐந்து எழுத்து கொண்ட “ஸ்ரீமந்நாராயண சரணெள சரணம்‌ ப்ரபத்யே, ஸ்ரீமதே நாராயணாய நம:” என்ற துவய மந்திரமாகும்‌. இதனை ஸ்ரீவிஷ்ணு லோகத்தில்‌ விஷ்ணுவானவர்‌ பெரிய பிராட்டிக்கு உபதேசித்தார்‌. இவ்விரண்டு மந்திரங்களையும்‌ சீடர்களான மணக்கால்‌ நம்பி, திருவல்லிக்கேணி பாண்‌ பெருமாள்‌ அரையர்‌, ஸ்ரீ புண்டரீகதாஸர்‌ முதலான சீடர்கள்‌ மூலமாக நம்‌ ஆசார்யர்‌ வரை வாழையடி வாழையாக சொல்லும்படி உரைத்தார்‌ உய்யக்‌ கொண்டார்‌. எட்டு எழுத்தான திருமந்திரத்தின்‌ பொருளாவது “எம்பெருமானுக்கே உரியேனான நான்‌ எனக்கு உரியன்‌ அன்றிக்கே ஒழிய வேணும்‌. எல்லோரையும் காட்டிலும்‌ தலைவனான நாராயணனுக்கே எல்லா அடிமைகளும்‌ செய்யப் பெறுவேனாக வேணும்‌” என்பதாகும்‌. இருபத்து ஐந்து எழுத்தாய்‌ இரண்டு வாக்யமாக அமைந்த துவயத்தின்‌ பொருளாவது “பிராட்டியோடு கூடிய ஸ்ரீமந்நாராயணனுடைய திருவடிகளையே தஞ்சமாகப்‌ பற்றுகிறேன்‌. பிராட்டியோடு கூடிய நாராயணனுக்கே எல்லா அடிமைகளும்‌ இருவருமான சேர்த்தியிலேயே ஆக வேணும்‌” என்பதாகும்‌. மந்த்ர ரத்னமான துவய மந்த்ரமானது வீர்யம்‌, பலம்‌, மங்களத்தை அளிப்பது, வேத ஸாரமாயிருப்பது, பழையதாயிருப்பது. மேலும்‌ துவயத்தின்‌ பெருமையைப்‌ பற்றிச்‌ சொல்லும் போது “ப்ரமாண ஸாரமாகையாலே துவயம்‌ ப்ரமாணம்‌ அதற்கு விஷயம்‌ ஆகையாலே அதுவே உண்மையாய்‌ அறியத் தக்கது துவயத்தின்‌ அறிந்து உபதேசிப்பவன்‌ ஆசார்யனாகையாலே அவனே என்றும்‌, அர்ச்சாவதாரம்‌ என்றும்‌ பொருளை ஞானமுள்ளவர்‌” என்றும்‌ வார்த்தா மலையில்‌ (136) உய்யக் கொண்டார்‌ அருளியது காண்க.

(நாலெட்டின்‌ உட்பொருளை நடத்தி னான்‌) நாலெட்டாவது-முப்பத்திரண்டு எழுத்துக்கள்‌ கொண்ட சரம சுலோகமாகும்‌. ஸர்வ தர்மாந்‌ பரித்பஜ்ய மாமேகம்‌ சரணம்‌ வ்ரஜ -அஹம்‌ த்வா ஸர்வ பாபேப்யோ மோக் ஷயிஷ்யாமி மாசுச:” என்று “எல்லா தருமங்களையும்‌ விட்டு என்னை ஒருவனையே தஞ்சமாகப்‌ பற்று. நான்‌, உன்‌ எல்லா பாபங்களையும்‌ போக்கி மோக்ஷத்தைக்‌ கொடுக்கிறேன்‌”. இதனை கண்ணன்‌ அர்ச்சுனனுக்கு திருத் தேர்த் தட்டில்‌ நின்றும்‌ உபதேசித்த பகவத்‌ கீதையில்‌ பதினெட்டாம்‌ அத்யாயத்தில்‌ வரும்‌ 66வது சுலோகமாகும்‌. சரம ச்லோகத்தின்‌ உட்பொருளாவது எல்லா தருமங்களையும்‌ (உபாயமாக நினையாமல்‌) விட்டு எம்பெருமான்‌ ஒருவனையே உபாயமாகப்‌ பற்றுவதாகும்‌.

(மாலரங்க மணவாளர்‌ வளமுரைப்போன்‌) மால்‌- பெருமை. மால்‌ அரங்க மணவாளர்‌- பெருமை பொருந்திய அரங்கத்தில்‌ உள்ள பெரிய பெருமாள்‌. வளம்‌ – வண்‌மை – செழுமை. வளம்‌ – நன்மை. மணவாளனுக்கு நன்மையாவது – ஆண்டாள்‌ அருளிய திருப்பாவைக்கு அமைந்த இரு தனியனில்‌, உய்யக்கொண்டார்‌, “அன்ன வயல்‌ புதுவை ஆண்டாள்‌ அரங்கற்குப்‌ பன்னு திருப்பாவைப்‌ பல் பதியம்‌” என்று ஆண்டாள்‌ அரங்கனுக்கு திருப்பாவை பாடினாள்‌ என்கிறார்‌. அதாவது ஆண்டாள்‌ திருப்பாவை என்னும்‌ பிரபந்தம்‌ மூலமாக பாட்டுக்களை இனிய இசையுடன்‌ பாடி அவற்றை ஸ்ரீ ரங்கநாதனுக்கு விலக்ஷணமான பாமாலையாக ஸமர்ப்பித்தாள்‌ என்று வாசிக கைங்கர்யம்‌ செய்தபடி. இதற்கு உரையிட்ட பிள்ளைலோகம்‌ சீயர்‌, “பூமிப் பிராட்டியாரான ஆண்டாள்‌ விரும்பும் ஸ்ரீவராக நாயனார்‌ தன்மையும்‌, ஆண்டாள்‌ அநுகாரத்தாலே விரும்புகிற கோபாலர்‌ தன்மையும்‌ பண்பின்‌ ஒன்றாம்‌ தன்மையாலும்‌ அடியாரிடம்‌ மையல்‌ குணத்தாலும் பெரிய பெருமாளிடத்திலே காணலாயிருக்கும்‌” என்றும்‌ அருளியது காண்க.

(வையமுய்யக்‌ கொண்டவர் தாள்‌ வையகத்தில்‌ வாழியே) வையம்‌ – உலகம்‌. பிறவித்‌ துயரிலிருந்து உய்யும்‌ பொருட்டு ஸ்ரீமந்‌ நாதமுனிகளிடம்‌ இருந்து திவ்வியப்‌ பிரபந்தத்தைப்‌ பெற்று உலகுய்யக்‌ கொண்டவனார்‌ உய்யக்‌ கொண்டார்‌. அதாவது ஸ்ரீமந்நாதமுனிகளிடம்‌ இரு நிதிகள்‌ இருந்தன. ஒன்று எம்பெருமானை அடைவதற்கு பக்தி யோகம் -மற்றொன்று எம்பெருமானுடைய ஸ்வரூபம்‌, ரூபம்‌, குணம்‌, உறுப்பான யோகம்‌. செல்வங்கள்‌ ஆகியன பற்றிப்‌ பேசும்‌ ஆழ்வார்கள்‌ அருளிய நாலாயிரத்‌ திவ்வியப்‌ பிரபந்தமாகும்‌. சரீரம்‌, பொருள்‌, அறிவு, வசிக்கும்‌ இடம்‌, செயல்கள்‌, குணங்கள்‌, பிராணன்கள்‌ ஆகியவற்றை ஆசாரியனுக்காக எவன்‌ தரிக்கிறானோ அவனே சிஷ்யன்‌ ஆவான்‌ என்பதற்கு ஏற்ப இருந்த சிஷ்யர்களில்‌ ஒருவரான உய்யக் கொண்டாரைப்‌ பார்த்து ஸ்ரீமந்நாதமுனிகள்‌, “நீரும்‌ குருகைக்‌ காவலப்பன்‌ விரும்பினாற் போல பக்தி யோகத்தைப்‌ பெற்றுப்‌ போகிறீரா” என்று கேட்க, அவரும்‌ “பிணம்‌ கிடக்க மணம்‌ புணர்வார்‌ உண்டோ? என்கிறபடியே “உலகம்‌ ஆத்ம நாசம்‌ அடைந்து பிணக்காடாய்‌ இருக்கும்‌ போது அடியேன்‌ ஒருவன்‌ மட்டும்‌ எம்பெருமானோடு ஆத்ம விவாகம்‌ செய்து கொண்டு மோக்ஷமடைவது சரியாகுமோ” என்கிறார்‌.
ஆதலால்‌ “அடியேன்‌ எப்படியானாலும்‌ பரவா யில்லை. உலகம்‌ உய்யும்படி திவ்வியப்‌ பிரபந்தங்‌களை உபதேசிக்க வேணும்‌” என்று ப்ரார்த்தித்தார்‌. இதனைக்‌ கேட்ட ஸ்ரீமந் நாதமுனிகள்‌ அவரை வாரி அணைத்து, “நீரே உலகையும்‌, உலகைப்‌ படைத்த நாராயணனையும்‌, அவனைச்‌ சொல்லும்‌ திவ்வியப்‌ பிரபந்தங்களையும்‌, அதனைப் பெற்ற என்னையும்‌ உய்யக் கொண்டவர்‌. உம்மாலன்றோ நாம்‌ மிகவும்‌ அரும்பாடுபட்டு மாறன்‌ அருள் பெற்று, பெற்ற அருளிச்‌ செயல்கள்‌ உலகெங்கும்‌ பரவி அனைவரையும்‌ உய்விக்கப்‌ போகின்றன. எனவே நீர்‌ உய்யக் கொண்டார்‌ என்னும்‌ பெயராலே கொண்டாடப்படுவீர்‌” என்று அருளி, திவ்வியப்‌ பிரபந்தங்களை உபதேசித்தார் -ஒரு முறை ஸ்ரீமந்நாதமுனிகளின்‌ மாமனார்‌ வங்கிபுரத்து தம்‌ மகளான ஸ்ரீமந்நாதமுனிகளின்‌ தர்மபத்னியான அரவிந்தப்பாவையைத்‌ தம்‌ இல்லத்துக்கு சில நாள்‌ அனுப்பி வைக்க வேண்டினார்‌. ஸ்ரீமந்நாதமுனிகளும்‌ இசைந்து வழித் துணையாக புண்டரீகாக்ஷரை அனுப்பி வைத்தார்‌. ஸ்ரீமந்நாதமுனிகளுடைய தர்ம பத்னியை விட்டு விட்டு திரும்பி வந்த அவரை அங்கு நடந்ததை வினவினபோது அவரை உணவு வகையில்‌ உபசரித்த தம்‌ மாமனார்‌ திருமாளிகையில்‌ உள்ளவர்களின்‌ அச்ரத்தையை புரிந்து கொண்டார்‌.“நீர்‌ எப்படி இதனை பொறுத்திருந்தர்‌” என்று கேட்க, “போனகம்‌ செய்த சேடம்‌ தருவரேல்‌ புனிதமன்றே” (திருமாலை 41) என்று தொண்டரடிப்‌ பொடியாழ்வார்‌ பாசுரத்தைச்‌ சுட்டிக் காட்டினார்‌. இதற்கு மகிழ்ச்சி அடைந்த ஸ்ரீமந்நாதமுனிகள்‌ அவரைத்‌ தழுவிக்‌ கொண்டு “நீரன்றோ எம்மை உய்யக் கொண்டீர்‌” என்று கொண்டாடினார்‌. அதனால்‌ உய்யக்கொண்டார்‌ என்ற திருநாமம்‌ ஏற்பட்டது. இவ்வாறு ஆட்கொண்டவில்லி கோவிந்த ஆசார்யர்‌ இயற்றிய நூலில்‌ அமைந்தது காணலாம்‌. உய்யக் கொண்டாருடைய சுயநலம்‌ பேணாத பரந்த மனப்பான்மையாலே இன்று நாம்‌ அருளிச்‌ செயல்களாலே உய்ந்து போகிறோம்‌.
ஸ்ரீமந் நாத முனிகளின்‌ சீடர்களில்‌ குருகைக்‌ காவலப்பன்‌ ஸமாதி நிலையில்‌ ஆழ்ந்து விட்ட படியால்‌ உய்யக்கொண்டார்‌ ஸ்ரீமந்நாதமுனிகளிடம்‌ பெற்ற அர்த்தங்களைப்‌ பிரசாரம்‌ செய்தார்‌ என்று திவ்ய ஸுரி சரிதம்‌ கூறும்‌. இதனாலேயே ஸ்ரீ வைஷ்ணவ சமூகம்‌ முழுவதற்கும்‌ இவர்‌ பரமாசார்யராய்‌ வாக்ய குருபரம்பரையிலும்‌ ச்லோக குருபரம்பரையிலும்‌ ஸ்ரீமந்நாத முனிகளுக்கு முன்‌ அநுஸந்திக்கப்படுகிறார்‌. மேலும்‌ ஈடு முப்பத்தாறு ஆயிரப்படியின்‌ ஸம்ப்ரதாய தனியன்களில்‌ திருவாய்மொழிப்‌ பிள்ளை “பங்கஜநேத்ர” என்றும்‌, மணவாள மாமுனிகள்‌ “சீர்‌ உய்யக்‌ கொண்டார்‌” என்றும்‌ நாதமுனிகளுக்கு அடுத்தவராகக்‌ காட்டுவது அறியற்பாலதாகும்‌. பராசரபட்டரும்‌ தாம்‌ அருளிய ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யத்தில்‌ குருபரம்பரை வணக்க ச்லோகத்தில்‌ “பத்மாக்ஷம்‌ ப்ரேக்ஷிஷீய” என்கிற படியே “புண்டரீகாக்ஷரான உய்யக்‌ கொண்டாரைப்‌ பார்க்கக்‌ கடவேன்‌” என்கிறார்‌. இப்படிப்பட்ட ஆசார்யர்‌ திருவடிகள்‌ வையகத்தில்‌ வாழ பல்லாண்டு பாடுவோமாக –

மகரமதில்‌ விசாகம் நாள்‌ வந்துதித்தான்‌ வாழியே
மாறன் தாள்‌ நாதமுனி மலரடியோன்‌ வாழியே
நிகரில்‌ நன் ஞான யோகம்‌ நீண்டு செய்வோன்‌ வாழியே
நிர்ணயமாய்‌ ஐந்து பொருள்‌ நிலை யறிவோன்‌ வாழியே
அகமறுக்கும்‌ இராமர் பதம்‌ ஆசை யுள்ளோன்‌ வாழியே
ஆழ்வார்கள்‌ மறையதனை ஆய்ந்துரைப்போன்‌ வாழியே
செகதலத்தில்‌ குருகூரில்‌ செனித்த வள்ளல்‌ வாழியே
செய்‌(ய) குருகைக்‌ காவலப்பன்‌ திருவடிகள்‌ வாழியே-
-பாண்டிய தேசத்தில்‌ ஆழ்வார்‌ திருநகரியில்‌ தை மாதம்‌ விசாக நக்ஷத்ரத்தில்‌ அவதரித்தவர்‌ குருகைக்‌ காவலப்பன்‌. இவர்‌ இருப்பிடம்‌ ஸ்ரீமந்நாத முனிகளுடைய திருப்பள்ளி. அது அன்றைய சோழ தேசத்தில்‌ திருக்‌ காவேரிக் கரையில்‌ கங்கை கொண்ட சோழ புரம்‌ அருகில்‌ குருகைக் காவலப்பன்‌ கோயில்‌ அமைந்துள்ளது. இந்த ஆசாரியார்‌ ஸ்ரீமந்நாதமுனிகளிடம்‌ அடி பணிந்து ஞானம்‌ யோகம்‌ முதலான செல்வங்களைப்‌ பெற்றவர்‌. இவருக்கு கல்வி அஷ்டாங்க யோகம்‌. இவர்‌ நூற்றைம்பத்தொரு ஆண்டுகள்‌ எழுந்தருளி இருந்தார்‌ என்று பெரியதிருமுடி அடைவு கூறும்

மகரமதில்‌ – மகர மாதமான தை மாதத்தில்‌,
விசாகநாள்‌ – விசாக நக்ஷத்ரத்தில்‌,
வந்து உதித்தான்‌ வந்து அவதரித்தவர்‌,
வாழியே – வாழ வேண்டும்‌.
மாறன் தாள்‌ – நம்மாழ்வாரின்‌ திருவடியைப் பற்றின,
நாதமுனி – ஸ்ரீமந்நாதமுனிகள்‌,
மலரடியோன்‌ – மலர்ந்த திருவடிகளைப்‌ பற்றியவர்‌,
நிகரில்‌ – ஒப்பில்லாத,
நன் ஞான யோகம்‌ – பகவத் விஷயமாகிற நல்ல ஞான யோகத்தை,
நீண்டு செய்வோன்‌ – நீண்ட கால அனு பவத்தில்‌ கொண்டவர்‌,
நிர்ணயமாய்‌ – நிர்ணயிக்கப்‌ பட்டதாய்‌,
ஜந்து பொருள்‌ – அர்த்த பஞ்சகத்தின்‌,
நிலை அறிவோன்‌ – நிலைமையை அறிந்தவர்‌.
அக மறுக்கும்‌ – அகங்காரத்தை அறுக்கும்‌,
இராம பதம்‌ – இராமபிரான்‌ திருவடிகளில்‌,
ஆசையுள்‌ ளோன்‌ – ஆசை உடையவர்‌.
செகதலத்தில்‌ இவ்வுலகில்‌,
குருகூரில்‌ – ஆழ்வார்‌ திருநகரியில்‌ அப்பன்‌ கோயில்‌ என்ற தேசத்தில்‌,
செனித்த வள்ளல்‌ – அவதரித்த வள்ளல்‌.
செய்ய குருகைக்‌ காவலப்பன்‌ திருவடிகள்‌ – நேர்மை யான குருகைக்‌ காவலப்பன்‌ திருவடிகள்‌,
வாழியே – வாழ வேண்டும்

(மகரமதில்‌ நாள்‌ வந்துதித்தான்‌) குருகைக் காவலப்பன்‌ “ம்ருகே விசாக ஸம்பூதம்‌” என்று தனியனில்‌ அருளியபடி-பெளர்ணமியும்‌ மிருகசீரிஷ நக்ஷத்ரமும்‌ கூடிய மகர மாதத்தில்‌ விசாக நக்ஷத்ரத்தில்‌ அவதரித்‌தார்‌. இந்த மாதத்தில்‌ மக நக்ஷத்ரத்தில்‌ திருமழிசை ஆழ்வாரும்‌, வைசாகி விசாக நக்ஷத்ரத்தில்‌ நம்மாழ்வாரும்‌ அவதரித்த பெருமை யுடையதாகும்‌. இந்த ஆசார்யருக்கு திருமழிசை ஆழ்வார்‌ பிறந்த மாதத்திலும்‌, நம்மாழ்வார்‌ அவதரித்த நக்ஷத்ரத்திலும்‌ அவதரித்த பெருமை ஒரு சேரப் பெற்றது காணலாம்‌.

(மாறன் தாள்‌ நாத முனி மலரடியோன்‌) மலரடி- தாமரை போன்ற திருவடி “நாதமெளநி பதாச்ரிதம்‌” என்ற தனியனில்‌ அருளியபடியே ஸ்ரீமந் நாத முனிகளுடைய திருவடியில் ஈடுபட்டவர்‌ குருகைக் காவலப்பன்‌. ஸ்ரீமந்‌ நாதமுனிகளும்‌ மாறனான நம்மாழ்வாரிடம்‌ உபதேசம்‌ பெற்று நாலாயிரத்‌ திவ்ய பிரபந்தத்தைப்‌ பெற்று, பவிஷ்ய தாசார்யரான எம்பெருமானாரை ஆழ்வார்‌ திருவடிகளிலே தண்டம்‌ ஸமர்ப்பித்துப்‌ பெற்றதனாலும்‌, குருபரம்பராநு ஸந்தானத்திலே “ஸுமதே பராங்குசாய நம:” என்பதற்கு பிறகு ஸ்ரீமந்நாதமுநயே நம என்பதாலும்‌ மாறன்‌ தாளாக நாதமுனிகள்‌ திகழ்கிறார்‌ என்பது பொருத்த முடையதாகும்‌–அத்தகைய நாத முனிகள்‌ மலரடியை வணங்குபவர்‌ அப்பன்‌ ஆதலால்‌ “மலரடியோன்‌” என்றபடி. மேலும்‌ அஷ்டாங்க யோகத்தில்‌ ஈடுபட்டவரான குருகைக் காவலப்பன்‌ யோகிகளில்‌ சிறந்தவராய்‌, பெரும்‌ புகழாளராய்‌ ஸ்ரீமந் நாதமுனிகள்‌ வாழ்ந்த வீர நாராயண புரத்திலேயே ஆசார்ய கைங்கரியம்‌ செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்‌ என்றும்‌ பிரபந்நாம்ருதம்‌ கூறுவதால்‌ “நாதமுனி மலரடியோன்‌” என்று கொண்டாடத் தக்கதாகும்‌.

(நிகரில்‌ நன் ஞான யோகம்‌ நீண்டு செய்வோன்‌) நன் ஞானம்‌ – பகவத்‌ விஷயமாகிய விலக்ஷணமான ஞானம்‌. யோகம்‌ – ஸம்பந்தம்‌. திருவிருத்தத்தில்‌ (பாடல்‌-93) “நன் ஞானத்து” என்பதற்குச்‌ சேர பெரியவாச்சான் பிள்ளை, “ஞான மாகில்‌ பகவத்‌ விஷயத்தைக்‌ குறித்தன்று வேறு இராது” என்றும்‌, “ஒண் தாமரையாள்‌ கேள்வன்‌ ஒருவனையே நோக்கும்‌ உணர்வு என்று முதலாழ்‌ வாரும்‌ அருளியது காண்க. திருவாய்மொழியில்‌ (13-10) “துயக்கறு மதியில்‌ நன் ஞானத்துள்‌” என்று அருளியதற்கு ஏற்ப நன் ஞானமாவது நன்றான ஞானம்‌ என்பர்‌ நம்பிள்ளை. அதாவது, ஆத்ம யாதாத்ம ஞானம்‌. பரமாத்ம ஞானம்‌ என்றபடி. அத்தகைய ஞான யோகம்‌ கைவந்தவர்‌ அப்பன்‌ என்றபடி. மேலும்‌ ஸ்ரீமந் நாத முனிகளிடம்‌ ஒப்பற்ற நன்மை தரும்‌ அஷ்‌டாங்க யோகத்தை உபதேசமாகப்‌ பெற்று, அவரிடம்‌ பக்தியை காட்டும்‌ வகையில்‌ அவர்‌ பரமபதித்த இடத்திலேயே ஆயுள்‌ உள்ள வரையில்‌ தம்‌ ஆசார்ய திருவடியைத்‌ தியானம்‌ செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்‌ என்றும்‌ பிரபந்நாம்ருதம்‌ கூறுவதனாலும்‌ “நீண்டு செய்வான்‌” என்றபடி.

(நிர்ணயமாய்‌ ஐந்துபொருள்‌ யறியோன்‌) மோக்ஷத்திலே இச்சை உடையவர்களுக்கு அறிய வேண்டிய ரகசியம்‌ மூன்று என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது முதல்‌ ரகசியமான திருமந்திரத்தில்‌ ஐந்து பொருட்கள்‌ அறிய வேண்டி யவை. அவை யாவன, இறை இயல்பு, ஆத்மாவின்‌ இயல்பு, ஆத்மா இறையைப்‌ பற்ற உபாய இயல்பு, அந்த உபாயத்துக்கு வரும்‌ தடையான விரோதி இயல்பு, அந்த விரோதி நீங்கி பெறும்‌ பேற்றின்‌ இயல்பு என ஐந்து நிலைகளாகும்‌. இதனை அப்பன்‌ தன்‌ ஆசார்யரான ஸ்ரீமந் நாதமுனிகளிடமிருந்து அறிந்தவர்‌ ஆகையாலே ஐந்து பொருள்‌ நிலை அறிவோன்‌ என்றபடி –

(அகமறுக்கும்‌ இராமர் பதம்‌ ஆசை உள்‌ ளோன்‌ ) குருகைக் காவலப்பனுடைய திருவாரதனப்‌ பெருமாள்‌ சக்ரவர்த்தி திருமகன்‌. இராமர்‌ அருளிய சரம ஸ்லோகங்கள்‌ இரண்டு. அதில்‌ சக்ரவர்த்தி திருமகனான “மித்ரபாவநே ஸம்ப்ராப்‌தம்‌” (யு.கா.183) என்ற ஸ்லோகத்தின்‌ படியே அகங்காரமுடையவன்‌ ஆயினும்‌ பகையின்மை அநுகூலமாயிருக்கை ஆகியவற்றால்‌ நெருங்கி வந்தவனை ஒரு படியாலும்‌ என்‌ பிராணனுக்குக்‌ கேடு வருவதாயிருந்தாலும்‌ அவனை விடமாட்டேன்‌ என்று விரதம்‌ பூண்ட இராம பிரானுடைய திருவடிகளில்‌ அப்பன்‌ ஆசை உடையவரான படியால்‌ அகமறுக்கும்‌ இராமர் பதம்‌ எனப்பட்டது காணலாம்‌.

(ஆழ்வார்கள்‌ மறையதனை ஆய்ந்து உரைப்போன்‌) நம்மாழ்வார்‌ அருளிய திருவிருத்‌தத்தில்‌ (38) “கடமாயினகள்‌ கழித்து” என்ற பாடலில்‌ குருகைக் காவலப்பன்‌ ஆய்ந்துரைத்த ஒரு ஐதிகத்தை நம்பிள்ளை காட்டி உரைப்பர்‌. ஒருவன்‌ உலகுக்கும்‌ ஈஸ்வரனுக்கும்‌ உள்ள ஸம்பந்தம்‌ எப்படிபட்டது என்று கேட்டான்‌. அதற்கு அப்பன்‌ இந்த உலகுக்கும்‌ ஈஸ்வரனுக்கும்‌ உள்ள தொடர்பை நீயா கேட்பது என்றார்‌. அதாவது “ஈஸ்வரனான இந்த ஜீவாத்மா பிறக்‌கும்‌ போது எந்த உடலைப்‌ பெற்று மரணத்தின் போது எந்த ஒரு உடலிலிருந்து கிளம்புகிறதோ” என்று பகவத்‌ கீதையில்‌ (15-8) கூறியபடி உறுப்புக்களோடு கூடியிருக்கும்‌ இந்த உடலாகிற இந்த உலகுக்கு ஜீவாத்மாவை ஈஸ்வரனாகச்‌ சொல்லிற்று.இந்த உடலுக்கும்‌ இதற்கு ஜீவாத்மாவுக்கும்‌ உள்ள தொடர்பாகிற உடல்‌ உயிர் தன்மையே உலகுக்கும்‌ ஈஸ்வரனுக்கும்‌ உள்ள தொன்‌றாகும்‌ என்பர்‌. மேலும்‌ அந்த மனிதன்‌ அப்பனைப்‌ பார்த்து “எம்பெருமானை எப்போதும்‌ நினத்துக்‌ கொண்டிருக்கும்‌ நீர்‌, அவனை நினைக்க எனக்கு ஒரு வழி சொல்ல வேண்டும்‌” என்றான்‌. உடனே அப்பன்‌ “நான்‌ உனக்கு எம்பெருமானை நினைக்க வழி சொல்கிறேன்‌. நீ அவனை மறக்க ஒரு வழி சொல்வாயாக” என்றார்‌.-அதாவது ஒரு பொருளானது பொருளாயிருப்‌பதும்‌ அதற்கு ஒரு பெயர்‌ உண்டாவதும்‌ எம்பெருமான்‌ அதன்‌ உள்ளே உறைதலாலேயே ஆகும்‌. அவ்வாறு இருக்கும்‌ போது அவன்‌ உள்‌ளுறை நிலையாய்‌ அடைமொழியாய்‌ எந்தப்‌ பொருளைப் பார்த்தாலும்‌ உடலாய்‌ அடை கொளியான எம்பெருமானுடைய நினைவும்‌ வந்தே தரும்‌. எனவே நினைக்க ஒரு வழி சொல்ல வேண்டுமோ என்றபடி.
மேலும்‌ திருவாய்மொழியில்‌ “சிக்கெனச்‌ சிறிதோரிடமும்‌” (2-6-2) என்ற பாசுரத்தில்‌ “எங்கும்‌ பக்கம்‌ நோக்கி அறியான்‌” என்பதற்குச் சேர ஆழ்வார்‌ பக்கல்‌ எம்பெருமானுக்கு உண்டான மிக்க அன்பைத்‌ தவிர்க்க வேணும்‌ என்ற நாச்சிமார்‌ திருமுலைத்‌ தடத்தாலே நெருக்கிலும்‌ அவர்கள்‌ பக்கல்‌ கண்‌ வைக்க வில்லை என்பர்‌.-இந்த இடத்தில்‌ ஆளவந்தாருக்குக்‌ குருகைக்‌ காவலப்பன்‌ அருளிச்‌ செய்ததைக்‌ காட்டி உரைப்பர்‌. ஆளவந்தாரின்‌ ஆசார்யரான மணக்கால்‌ நம்பி அருளியபடியே குருகைக் காவலப்பனிடத்தில்‌ ஒரு ரகசிய விசேஷம்‌ அறியவேண்டி , ஆளவந்தார்‌ அதனை அறிய கங்கைகொண்ட சோழபுரம்‌ சென்றார்‌. அங்கே குருகைக் காவலப்பன்‌ ஒரு குட்டிச்‌சுவரில்‌ யோகத்தில்‌ எழுந்தருளி யிருந்தார்‌. இவரை இப்போது தடங்கல்‌ செய்யக்கூடாது என்றெண்ணி ஆளவந்தார்‌ சுவருக்கு பின்பு நின்றார்‌. அப்போது குருகைக் காவலப்பனும்‌ திரும்பிப்‌ பார்த்து சொட்டைக்‌ குலத்தில்‌ ஆரேனும்‌ வந்தாருண்டோ? என்று கேட்டார்‌.-ஆச்சரியப்பட்ட ஆளவந்தார்‌ அடியேன்‌ பின்னே இருப்பது எப்படி தெரிந்தது என்று கேட்க, அப்பனும்‌ “நானும்‌ எம்பெருமானுமாக அனுபவித்திருந்தால்‌ பெரிய பிராட்டி திருமுலைத்‌ தடத்தாலும்‌ நெருக்கி அணைத்தாலும்‌ அவள்‌ முகம்‌ கூடப்பாராத எம்பெருமான்‌, என்‌ கழுத்தை அமுக்கி நாலு மூன்று தடவை அங்கே எட்டிப் பார்த்தான்‌. இப்படி அவன்‌ பார்த்த போது தான்‌ நான்‌ சொட்டைக்‌ குலத்தில்‌ சிலர்‌ வந்திருக்க வேணும்‌” என்று அறிந்தேன்‌ என்றாராம்‌.-இதனால்‌ அப்பன்‌ ஆழ்வார் பால்‌ கொண்ட பக்தியின்‌ பெருக்கால்‌ ஆழ்வார்‌ சொன்ன பாசுரத்திற்கு ஏற்ப, ஆய்ந்து சொல்லும்‌ அநுபவம்‌ அறியலாகும்‌. இதுபற்றியே “ஆய்ந்துரைப்போன்‌” என்று அருளியது காணலாம்‌. பேயாழ்வாரிடம்‌ பக்தி கொண்டவராய் அவர்‌ அருளிய மூன்றாம்‌ திருவந்தாதிக்கு ஆழ்வார்‌ திருவடிகளைப்‌ போற்றி “சீரான்‌ கழலே உரைக்‌ கண்டாய்‌ நெஞ்சே உரை” என்று நெஞ்சைப்‌ பார்த்து அருளுவது காணலாம்‌.

செக தலத்தில்‌ குருகூரில்‌ செனித்த வள்ளல்‌) செக தலம்‌ – உலகம்‌. பாண்டியநாட்டில்‌ தாமிரபரணி என்ற பொருநை யாற்றங்கரையில்‌ அமைந்த திருக்‌ குருகூர்‌ நம்மாழ்வாரால்‌ பாடப்பெற்ற திவ்ய தேசங்களில்‌ ஒன்று. அந்த நாட்டைத்‌ தலைநகராகக்‌ கொண்டு குருகன்‌ என்னும்‌ அரசன்‌ நீதி தவறாமல்‌ ஆண்டு வந்ததால்‌ திருக்குருகூர்‌ என்று அழைக்கப்‌ பட்டது. வள்ளலான நம்மாழ்வார்‌ அவதரித்த அந்த குருகூருக்கு உட்பட்ட தேசமான அப்பன்‌ கோவிலில்‌ இந்த ஆசார்யார்‌ அவதரித்ததனால்‌ இவரும்‌ வள்ளல்‌ என்று கொண்டாடப்படுவர்‌.

செய்ய குருகைக் காவலப்பன்‌ திருவடிகள்‌)– குருகை – பிரம்மன்‌ தவம்‌ செய்து எம்பெருமானை வேண்ட தாமிரபரணி தென் கரையிலுள்ள ஆதி க்ஷேத்திரத்தைக்‌ காட்டிக்‌ கொடுத்து “குரு ச அத்ர மதர்சனம்‌” என்கிறபடியே “ஆதிநாதனான எனக்கு இங்கு அர்ச்சனை செய்‌” என்று நாராயணன்‌ அருளியதால்‌ பிரமனும்‌ பெருமானை நோக்கி-குருக அத்ர மதர்சனம்‌” என்கிறபடியே தங்களுக்கு தரிசனம்‌ கொடுத்த அந்த ஆதி க்ஷேத்ரத்துக்கு குருகபுரி என்று மற்றொரு பெயர்‌ வைக்க விரும்பினான்‌. எம்பெருமானும்‌ இசைந்ததால்‌ அது குருகை ஆயிற்று. இதில்‌ அவதரித்தவர்‌ குருகைக் காவலப்பன்‌ ஆவார்‌. இத்தகைய பெருமைப்‌ பெற்ற குருகைக்‌ காவலப்பன் திருவடிகளுக்கு பல்லாண்டு பாடுவோமாக-

அன்புடனே நாதமுனி அடி பணிந்தோன்‌ வாழியே
ஆனி தனில்‌ திருவோணத்தில்‌ அவதரித்தான் வாழியே
இன்பமுடன்‌ கண்ண மங்கை வந்து உதித்தான்‌ வாழியே
எழிலுடனே நாதனாக ஆட்சி செய்தான்‌ வாழியே
துன்பமென தன் முயற்சி நீத்த செல்வன்‌ வாழியே
தூமணி வண்ணன்‌ தாள்‌ கதி என்றான்‌ வாழியே
அன்பால்‌ உலகாரியனார்‌ போற்ற நின்றான் வாழியே
அழகாரும் திருக்கண்ணமங்கை யாண்டான் வாழியே –

திருக்கண்ணமங்கையாண்டான்‌ என்னும்‌ ஆசார்யர்‌ பத்தாம்‌ நூற்றாண்டில்‌ ஆனி மாதம்‌ திருவோணம்‌ நக்ஷத்‌ரத்தில்‌ தமிழ்‌ நாட்டில்‌ கொடை வாசல்‌ அருகிலுள்ள திருக்‌ கண்ண மங்கை என்னும்‌ திவ்ய தேசத்தில்‌ அவதரித்தவர்‌. ஸ்ரீ க்ருஷ்ண லக்ஷ்மி நாதாசார்யர்‌ என்ற இயற்பெயர்‌ கொண்ட இவ்வாசாரியர்‌, ஸ்ரீமந்நாதமுனிகளின்‌ தேக ஸம்பந்தம்‌ பெற்றவராய்‌, அவருடைய எட்டு சீடர்களில்‌ ஒருவருமாவார் –

அன்புடனே-அன்போடு,
நாதமுனி-ஸ்ரீமந்நாத முனிகளின்‌,
அடி பணிந்தோன்‌-திருவடிகளைப்‌ பற்றினவர்‌,
வாழியே-வாழ வேண்டும்‌.
ஆனி தனில்‌-ஆனிமாதத்தில்‌,
திருவோணத்தில்‌-திருவோண நக்ஷத்திரத்தில்‌,
அவதரித்தவர்‌-தோன்றியவர்‌.
இன்பமுடன்‌ மகிழ்ச்சியுடன்‌,
திருக்கண்ண மங்கை -திருக் கண்ணமங்கை என்னும்‌ திவ்ய தேசத்தில்‌, வந்து உதித்தான்‌-வந்து தோன்றியவர்‌. எழிலுடனே-அழகுடனே,
நாதனாக-தலைவராக
ஆட்சி செய்தான்‌-கைங்கர்யம்‌ செய்தவர்‌.
துன்பமென- இந்தப்பிறவித்‌ துன்பம்‌ என்று,
தன்முயற்சி-தான்‌ முயல்வதை,
நீத்த-விட்ட,
செல்வன்‌-சிறப்புடையவர்‌.
தூமணி வண்ணன்‌ தூய மணி போன்ற பெருமாள்‌,
தாள்‌-திருவடி,
கதி-புகல்‌,
என்றான்‌-என்று இருந்தவர்‌.
அன்பால்‌-அன்புடனே,
உலகாரியனார்‌-பிள்ளை லோகாசார்யரால்‌,
போற்ற நின்றான்‌-புகழும்படி இருந்தவர்‌. அழகாரும்‌-அழகு நிறைந்த திருக்‌ கண்ண மங்கையாண்டான்‌,
வாழியே- பல்லாண்டு வாழ வேண்டும்-

(அன்புடனே நாதமுனி அடி பணிந்தோம்‌) ஸ்ரீ மந்நாதமுனிகளின்‌ சீடர்களில்‌ ஒருவர்‌ திருக்கண்ண மங்கையாண்டான்‌ ஆவர்‌. சீடருக்கு உரிய குண நிறைவை உடையவர்‌. தம்‌ ஆசார்யரிடம்‌ அன்பு கொண்டதால்‌, அவ்வாசிரியரும்‌ இவருக்கு துவய மந்திர உபதேசம்‌ செய்தார்‌. மேலும்‌ திருவாய்மொழி முதலான திவ்ய பிரபந்தங்களை கற்பித்தார்‌. திருவாய்மொழியில்‌ ஐந்தாம்‌ பத்தில்‌ “பொலிக பொலிக” என்ற பதிகத்தை உபதேசிக்கும்‌ போது ஸ்ரீமந்நாதமுனிகள்‌ ஆழ்வார்‌ தமக்குக்‌ கனவில்‌ அருளிய திவ்ய ஸுக்திகளையும்‌ தாம்‌ உடனே கனவில்‌ நேராகக்‌ கண்ட தேவரீரோடே கண்ட கனவு பற்றியும்‌ அருளினார்‌. திருக்கண்ணமங்கை யாண்டானும்‌ வ்யக்தியை ஸம்பந்தம்‌ உள்ள அடியேனுக்கு ஒரு குறைகளும்‌ இல்லை” என்று பெருமிதமடைந்தார்‌. ஸ்ரீமந்நாத முனிகள்‌ சம்பந்தத்தால்‌ வேதாந்தங்கள்‌ அனைத்தும்‌ கற்ற திருமழிசையாழ்வாரைப்‌ போல குற்றமற்றவர்‌. வேதார்த்தங்களை நிர்ணயிப்பதிலும்‌ பேச்சு வன்மையிலும்‌ பிரஹஸ்பதியைப்‌ போன்றவர்‌. பிரகலாதனைப்‌ போல பக்தி மிகுந்தவர்‌. நாதமுனிகள்‌ போல எம்பெருமானுடைய திருநாமங்களை ஸங்கர்த்‌தனம்‌ செய்பவர்‌. உபய வேதாந்த ஸாரத்தை அறிந்தவர்‌. இதுபற்றியே “அன்புடனே நாதமுனி அடி பணிந்தவன்‌” என்றது காண்க –

(ஆனி தனில்‌ திருவோணத்தில்‌ அவதரித்‌ தான்‌) ஆனி-வடமொழியில்‌ ஜ்யேஷ்ட மாதம்‌ எனப்படும்‌. திருவோணம்‌-விஷ்ணு நக்ஷத்திரம்‌. இத் திருவோணம்தான்‌ நக்ஷத்ர பெருமையில்‌ மீன்‌, ஆமை, வராகம்‌ ஆகிய அவதாரங்களைச்‌ செய்த விஷ்ணுவானவர்‌ ஐப்பசி மாதம்‌ அவதரித்ததாக பாஞ்சராத்ர ஆகமம்‌ கூறும்‌. இப்படிபட்ட பெருமை கொண்ட திருவோணத்தில்‌ ஆனி மாதம்‌ கிருஷ்ண பக்ஷத்தில்‌ அவதரித்தவர்‌ திருக்கண்ண மங்கை யாண்டான்‌ ஆவார்‌. இவர்‌ பராத்ரர்‌ என்ற நித்ய ஸுரியின்‌ அம்சமாவார்‌.

இன்பமுடன்‌ கண்ண மங்கை வந்துதித்‌தான்‌) ஆழ்வார்களால்‌ பாடப்பெற்ற 108 திவ்ய தேசங்களில்‌ சோழநாட்டு திருப்பதியில்‌ ஒன்றானது திருக்கண்ணமங்கை என்னும்‌ திவ்ய தேசமாகும்‌. திருமங்கையாழ்வாரால்‌ இன்பம்‌ பயக்க 14 பாசுரங்‌ களால்‌ பாடப்பெற்ற திருத்தலமாகும்‌. கண்ண மங்கைக்கு “கழுநீர்‌ மலரும்‌ வயல்‌” (பெரி.திரு.7-10-6) என்றும்‌, “களிவண்டறையும்‌ பொழில்‌” (பெரி.திரு.710-7) என்றும்‌, “கருநெல்‌ சூழ்‌” (பெரி.திரு.10-1-1) என்றும்‌, “கன்னமதில்‌ சூழ்‌” (பெரி.மடல்‌ 116) என்றும்‌ திருமங்கையாழ்வாரால்‌ பாடப் பெற்றது.மேலும்‌, அங்கு நின்ற கோலத்தில்‌ எழுந்தருளியிருக்கும்‌ எம்பெருமானை, “பெரும்புறக்கடலை”, “அடலேற் றினை” , “இன்சுவைக்‌ கரும்பினை” என்று பலபடியாக பெரியதிருமொழி ஏழாம்‌ பத்து, பத்தாம்‌ பதிகத்தில்‌ 97 திருநாமங்களைக்‌ கொண்டு ஆழ்வார்‌ அழைக்கும்‌ அழகு, இன்பம்‌ பயப்பதாகுவது பற்றி “இன்பமுடன்‌ கண்ணமங்கை” என்றபடி. இத்தகைய திருத்தலத்தில்‌ உதித்தவர்‌ ஆண்டான்‌ ஆவார்‌. உதித்தலாவது சூரியன்‌ உதிக்கும்‌ போது ஒளி அமைந்தது போல ஆண்டானும்‌ அந்தணர்‌ தலைவராக அவதரித்து தந்தையால்‌ உபநயனம்‌ செய்விக்கப் பெற்று ஒரு விஜாய மாத்ரத்தினால்‌ ஆசார்யருடைய திருமுகத்தில்‌ இருந்து எல்லா வேதங்களையும்‌ அத்யயனம்‌ செய்தவராவார்‌. இதுவன்றோ உதித்ததின்‌ பெருமை-

எழிலுடன் நாதனாக ஆட்சி செய்தான் எழில்‌- அழகு, நாதன்‌ – தலைவன்‌ என்று சொல்லுகிறபடியே நம்‌ வைணவ தர்சனத்‌துக்குத்‌ தலைவராவார்‌. ஸ்ரீ பாகவத புராணம்‌ பன்னிரண்டாம்‌ ஸ்கந்தத்தில்‌, பன்னிரண்டாம்‌ அத்தியாயத்‌தில்‌, பதினாறு நாதர்களுடைய விஷயம்‌ சொல்லப்‌ பட்டுள்ளது காணலாம்‌. தலைமையாம்‌ தன்மைக்‌ கேற்ப தம்‌ ஆசார்யரான ஸ்ரீமந்நாதமுனிகளைப்‌ போல ஞானம்‌, பக்தி,வைராக்கியம்‌ முதலான நற் குணங்களுக்கு ஓர்‌ கொள்கலமானவர் –ஐந்தாவது உபாயமான ஆசார்யனே உபாயம்‌ என்ற ஊற்றத்தை உடையவர்‌. தமிழ்‌ வேதம்‌ வட மொழி வேதம்‌ ஆகியவற்றின்‌ ஸாரத்தை அறிந்தவர்‌. ஆட்சியாவது எம்பெருமானுக்குக்‌ கைங்கர்யம்‌. கைங்கர்யமாவது ஸ்ரீமந்நாதமுனிகள்‌ நியமனத்தினால்‌ திருக்கண்ணமங்கை திவ்ய தேசத்தை அடைந்து ஊக்கத்துடன்‌ ஸ்ரீ கிருஷ்ண துளசி மாலைகளை ஸமர்ப்பிக்கும்‌ கைங்கர்யத்தில்‌ ஈடுபடுத்திக்‌ கொண்டதாகும்‌. மேலும்‌ ஆழ்வார்களைப்‌ போல பகவத்‌ கைங்கர்யமாகிற சுவையை பருகுபவராய்‌ இருந்தார்‌-கண்ணமங்கையில்‌ துளசி தோட்டத்தை உண்டாக்க, தினமும்‌ துளசி இதழ்களைத்‌ தொடுத்து, மாலையாக்கி, பக்தியுடன்‌ கண்ணமங்கை பக்தவத்ஸலப்‌ பெருமாள்‌ உகப்புக்கு ஏற்ப ஸமர்ப்பித்து வந்தவர்‌. ஆண்டாளிடமும்‌, அவள்‌ அருளிய நாச்சியார்‌ திருமொழியிலும்‌ மிக்க பக்தி உடையவராகையாலே வாசிக கைங்கர்யமாக “அல்லி நாள்‌…” என்ற ஒரு தனியன்‌ மூலம்‌ அப்போது அலர்ந்த தாமரைப் பூவில்‌ பொருந்தி இருக்கும்‌ தெய்வப்‌ பெண்ணான பெரிய பிராட்டியாருக்கு இனிமையான துணைவி என்றும்‌, மல்லிநாட்டை தன்‌ குணத்தாலே ஈடுபடுத்தி ஆண்ட அழகிய மயில்‌ போன்றவள்‌ என்றும்‌, மென்மைத்‌ தன்மையுடையவளான ஆண்டாள்‌ கண்ணன்‌ திருமேனியில்‌ பொருத்த முடையள்‌ என்றும்‌, அழகிய ஸ்ரீவில்லிபுத்தூரில்‌ வேயர்‌ குலத்தில்‌ பெரியாழ்வாராலே பெறப்பட்ட விளக்கு என்றும்‌ அருளியது காணலாம்‌. இதனால்‌ காயிக வாசிக கைங்கர்யமாகிற ஆட்சி நடத்தினபடி-

துன்பமென தன் முயற்சி நீத்த செல்வன்‌ –-கைம்மாறு கருதாது பெருமாளுக்குக்‌ கைங்கர்யம்‌ செய்து வரும்‌ ஆண்டாள்‌ ஒருநாள்‌ இரண்டு சேவகர்கள்‌ கையில்‌ கத்தியை ஏந்தியவர்களாய்‌, செருப்பு அணிந்துக்‌ கொண்டு நாயை ஒவ்வொருவரும்‌ அழைத்துக்‌ கொண்டு வந்தனர்‌. பெருமாள்‌ பெருமையைக்‌ கேட்டு அவர்கள்‌ இருவரும்‌ பெருமாளை சேவிக்க கோயிலுக்குள்‌ சென்றனர்‌. தங்கள்‌ செருப்புக்களை கோயில்‌ வாசலில்‌ விட்டு, அவற்றை பாதுகாக்க தங்கள்‌ நாயை காவலாக வைத்துச்‌ சென்றனர்‌. அதற்குள்‌ ஒரு நாய்‌ மற்றொரு சேவகன்‌ செருப்பை கவ்வவே நாய்கள்‌ சண்டையிட்டன.-ஒரு சேவகனுடைய நாயை ஒரு சேவகன்‌ அடிக்க, அவன்‌ அதை பொறுக்காது அடித்தவனோடு எதிர்த்த பொழுது அவனையும்‌ கொன்று தானும்‌ குத்திக்‌ கொண்டு இறப்பதைக்‌ கண்டார்‌ ஆண்டான்‌.-உடனே ஒரு தாழ்ந்த சேதனன்‌ தன்‌ அபிமானத்திலே நாய்‌ ஒதுங்கினது என்னும்‌ இவ்வளவுக்காகத்‌ தன்னை அழிய மாறினபடியைக்‌ கண்டால்‌, பரம சேதனான பெருமாள்‌ அபிமானத்‌ திலே ஒதுங்கினால்‌ அவன்‌என்படுமோ? என்று தன்‌ முயற்சிகளை முழுவதும்‌ விட்டு, அந்த நாயைப் போல தம்மை நினைத்துக் கொண்டு திருக்கண்ண மங்கையில்‌ அப்போதே வாசல்படியின்‌ மேல்‌ கட்டையிலிருந்து குதித்து பத்தராவிப்‌ பெருமாள்‌ கோபுர வாசலுள்‌ உள்ளிருக்கிற ஒட்டுத்திண்ணையில்‌ இருந்து வாழ் நாளைக்‌ கழித்தார்‌.-பகவத்‌ பக்தராய்‌ தனது பொறுப்பு முழுவதையும்‌ ஸ்ரீய:பதியான பக்தவத்ஸல பெருமாளிடம்‌ ஒப்படைத்தார்‌. தனக்காக தான்‌ முயல்வதை விட்டு எல்லா நித்ய நைமித்திக கர்மாநுட்டானங்களையும்‌ விட்டு நாயைப்‌ போல இரண்டு கைகளையும்‌ கால்களாக்கிக்‌ கொண்டு நான்கு கால்களாலே திரியலானார்‌. பெருமாள்‌ கோயிலில்‌ ஒரு மகிழ மரத்தடியில்‌ மெளனமாக இருப்பவராய்‌, பெருமாள்‌ பிரசாதத்தை உண்டு வாழ்ந்தார்‌. இது கொண்டு திருக்கண்ண மங்கையில்‌ “தன்‌ முயற்சி நீத்த செல்வன்‌” என்று சொல்லப்பட்டது. இதுபற்றியே ஸ்ரீ வசனபூஷணத்தில்‌ (82) பிள்ளை லோகாசார்யார்‌–திருக்கண்ணமங்கை ஆண்டான்‌ ஸ்வ வ்யாபாரத்தை விட்டான்‌ என்று அருளினார்‌. ஸ்வவ்யாபாரமாவது – தன்‌ முயற்சி யால்‌ தன்னைக்‌ காத்துக்‌ கொள்ளுதல்‌. இதனால்‌ ஆண்டானுடைய அரிய விச்வாஸம்‌ சொல்லப்‌ பட்டது. பெரியவாச்சான்‌ பிள்ளையும்‌ தாம்‌ அருளிய மாணிக்க மாலையில்‌ “…… திருக்கண்ண மங்கை யாண்டானைப்‌ போல பரபரப்பற்று வகுத்தவன் எம்பெருமான்‌ வாசலிலே தன்னைப்‌ பேணாது ஒதுங்கும்‌” என்று உரைப்பார்‌-மேலும்‌ தொண்டரடிப்‌ பொடியாழ்வார்‌ அருளிய திருமாலையில்‌ முப்பத்து எட்டாவது பாசுரத்தில்‌ “உன்‌ கடைத்தலை இருந்து” என்ற தொடருக்குச்‌ சேர திருக்கண்ண மங்கையாண்டான்‌ எம்பெருமான்‌ திருவாசலைப்‌ பற்றிக்‌ இடந்ததை எடுத்து உரைப்பர்‌. இந்த விச்வாஸத்தினால்‌ தூமணி வண்ணனான பத்தராவிப்‌ பெருமாளையே கதியாகப்‌ பற்றினார் என்க –

(அன்பால்‌ உலகாரியனார்‌ போற்ற நின்றான்‌) உலகாரியான்‌ – வடக்குத்‌ திருவீதிப்‌ பிள்ளையின்‌ குமாரருக்கு நம்பிள்ளை இட்டபெயர்‌ பிள்ளை லோகாசார்யார்‌ என்பதாகும்‌. இவர்‌ அருளிய ஸ்ரீ வசன பூஷணம்‌ என்னும்‌ நூலில்‌ மூன்றாம்‌ பிரகணத்தில்‌ (80) ஆண்டானிடம்‌ அன்பு கொண்டு “உபாயத்‌ துக்கு…. திருக்கண்ணமங்கை ஆண்டானைப்‌ போல இருக்க வேணும்‌” என்று ஸூத்திரமிடுகிறார்‌. இதற்கு மாமுனிகளும்‌ அற்புதமான வியாக்கியானம்‌ வழங்கியுள்ளார்‌. இதனால்‌ இவருக்கு ஆண்டான்‌ பால்‌ கொண்ட அன்பின்‌ வெளிப்பாடாக போற்றுவது காணலாம்‌-

(அழகாரும்‌ திருக்கண்ணமங்கை யாண்டான்‌)அழகு- அவயவ அழகு, பராத்பரர்‌ என்ற நித்யஸுரி அம்சமாகப்‌ பிறந்தவராதலால்‌ அழகு மிக்கிருந்தவர்‌. இதனால்‌ கல்வி, ஒழுக்கம்‌, நிரம்பப்‌ பெற்றவரானார்‌. அதாவது தந்தையால்‌ உபநயனம்‌ செய்வித்த பிறகு பிரம்மசரிய விரதத்தில்‌ ஊன்றியவர்‌; ஆசாரியனிடத்தில்‌ வேதங்களையும்‌ எல்லா அத்யயனம்‌ செய்தவர்‌. விடியற்காலையில்‌ நீராடி சாஸ்த்ரங்களில்‌ விதிக்கப்பட்ட கர்மங்களை செய்தவர்‌. வைதக ஆசாரங்களோடு கூடியவர்‌. பஞ்ச மஹா வேள்வி களைச்‌ செய்பவர்‌. வேத வேதாந்தங்களை அர்த்தத்‌துடன்‌ கற்றவர்‌. நல்லோர்களின்‌ ஒழுக்கத்தைக்‌ கடைபிடிப்பவர்‌. ஸ்ரீமந்நாதமுனிகளிடம்‌ பஞ்ச ஸம்ஸ்காரம்‌ செய்யப்‌ பெற்றவர்‌. ஸ்ரீ வைஷ்ணவர்‌களில்‌ சிறந்தவர்‌. அறிவாளி. பெரும்‌ புகழாளராய்‌ விளங்கினார்‌. இத்தகைய பெருமைப்‌ பெற்ற திருக்கண்ணமங்கை ஆண்டானுக்கு பல்லாண்டு பாடுவோமாக

தேசம்‌ உய்யக்கொண்டவர் தாள்‌ சென்னி வைப்போன்‌ வாழியே
தென்னரங்கர்‌ சீர்‌ அருளைச்‌ சேர்ந்திருப்போன்‌ வாழியே
தாசரதி திருநாமம்‌ தழைக்க வந்தோன்‌ வாழியே
தமிழ்‌ நாதமுனி உகப்பைத்‌ தாபித்தான்‌ வாழியே
நேசமுடன்‌ ஆரியனை நியமித்தான்‌ வாழியே
நீணிலத்தில்‌ பதின்மர்கலை நிறுத்தினான்‌ வாழியே
மாசி மகந்தனில்‌ விளங்க வந்துதித்தான்‌ வாழியே
மால்‌ மணக்கால்‌ நம்பி பதம்‌ வையகத்தில்‌ வாழியே-
மணக்கால்‌ நம்பி என்னும்‌ ஆசார்யர்‌ சோழ தேசத்தில்‌ திருக்காவேரி தீரத்தில்‌ கோயில்‌ பிரதேசம்‌ மணக்கால்‌ என்னும்‌ கிராமத்தில்‌ விரோதிக்ருத்‌ வருடம்‌ மாசி மாதம்‌ மக நக்ஷத்ரத்தில்‌ அவதரித்தார்‌. இவர்‌ குமுதாக்ஷர்‌ அம்ஸராய்‌, ராமமிச்ரர்‌ என்ற இயற்பெயரைக்‌ கொண்டவர்‌. ஆளவந்தார்‌, திருவரங்கப்பெருமாள்‌ அரையர்‌, தெய்வத்துக்கரசு நம்பி, பிள்ளையரசு நம்பி, சிறுபுள்ளூருடையார்‌ பிள்ளை, திருமாலிருஞ்சோலை, வங்கிபுரத்து ஆச்சி ஆகியோர்‌ சீடர்கள்‌ ஆவர்-

தேசம்‌ – ஒளியுடைய,
உய்யக் கொண்டவர் தாள்‌ – உய்யக் கொண்டார்‌ என்னும்‌ ஆசார்யர்‌ திருவடியில்‌,
சென்னி வைப்போன்‌ – தலையை வைத்து வணங்கும்‌
மணக்கால்‌ நம்பி, வாழியே-வாழ வேண்டும்‌.
தென்னரங்கர்‌ – தெற்குத்‌ திக்கிலுள்ள திருவரங்கர்‌,
சீர்‌-சீரியதான,
அருளை – அருளை,
சேர்ந்திருப்‌ போன்‌ – பெற்றவர்‌.
தாசரதி – தசரதன்‌ மகனான இராமன்‌,
திருநாமம்‌ – பெயரை யுடைய ராம மிஸ்ரர் –
தழைக்க வந்தோன்‌ – சிறப்பாக வாழ்ந்தவர்‌.
தமிழ்‌ நாதமுனி – தமிழ்‌ பிரபந்தத்தை வளர்த்த,
நாதமுனி ஸ்ரீமந்நாதமுனிகள்‌ என்னும்‌ ஆசார்யர்‌,
உகப்பை மகிழ்ச்சியை,
தாபித்தான்‌ – நிலை நிறுத்தியவர்‌.
நேசமுடன்‌ – அன்புடன்‌,
ஆரியனை – ஆசார்யரான ஆளவந்தாரை,
நியமித்தான்‌ – தன்‌ சொல்படி கேட்கச்‌ செய்தவர்‌.
நீணிலத்தில்‌ – பெருமை பொருந்திய உலகில்‌,
பதின்மர்‌ – பத்து ஆழ்வார்களின்‌,
கலை அருளிச்‌ செயலை,
நிறுத்தினான்‌ – நிலை பெறச்‌ செய்தவர்‌.
மாசி மகந்தனில்‌ – மாசி மாதம்‌ மகம்‌ நக்ஷத்ரத்தில்‌,
விளங்க – பிரகாசிக்க,
வந்துதித்தான்‌ வந்து அவதரித்தவர்‌.
மால்‌ – பெருமை பொருந்திய
மணக்கால்‌ நம்பி, பதம்‌ – திருவடிகள்‌,
வையகத்தில்‌ உலகில்‌,
வாழியே – வாழ வேண்டும் –

(தேசம்‌ உய்யக் கொண்டவர் தாள்‌ சென்னி வைப்போன்‌) “தேசு” என்ற வடசொல்‌, தேசம்‌ என்றாயிற்று. “தேசம்‌ உடையாய்‌” (திருப்பாவை 7) என்று ஆண்டாள்‌ திருப்பாவையில்‌ அருளியது காண்க. தேசு – ஒளி, ஞானம்‌, பெருமை என்று பல பொருள்‌. ஸ்ரீமந்நாதமுனிகள்‌ அருளைப்‌ பெற்றதனால்‌ உய்யக் கொண்டார்‌ தேசுடையவரானார்‌.-மேலும்‌, ஸ்ரீமந்நாத முனிகளிடம்‌ தமிழ்‌ ஞானமாகிற திவ்ய ப்ரபந்தத்தைப்‌ பெற்றதனால்‌ தேசமுடையவரானார்‌. அவற்றை மணக்கால்‌ நம்பி உள்ளிட்ட தம்‌ சீடர்களுக்கு அருளியதால்‌ பெருமை படைத்து தேசமுடையவரானார்‌.அத்தகைய பெருமை படைத்த உய்யக் கொண்டார்‌ திருவடிகளைத்‌ தம்‌ தலையில்‌ சேர்த்துக்‌ கொண்டவர்‌ மணக்கால் நம்பி -எங்ஙனே என்னில்‌ – பன்னிரண்டு வருடம்‌ தம்‌ ஆசார்யரான உய்யக் கொண்டார்‌ திருவடிகளிலே இளைய பெருமாளைப்‌ போலே எல்லாவித கைங்கர்‌யங்களையும்‌ செய்தவர்‌. ஆசார்யருடைய தேவிகள்‌ பரமபதித்த பிறகு, திருமாளிகை கைங்கர்யமெல்லாம்‌ தமக்கே பொறுப்பாய்‌ நடத்தி வந்தவர்‌ நம்பி. ஒரு சமயம்‌ தம்‌ ஆசார்யர்‌ புத்ரிகளை நீராட்டி அழைத்துக்‌ கொண்டு வருகிற வழியிலே வாய்க்கால்‌ சேறா யிருக்கக்‌ கண்டு, தாம்‌ குறுக்கே பாலமாகப்‌ படுத்துக்‌ கொண்டு படியாய்க்‌ கிடந்து அவர்களைத்‌ தம்‌ முதுகிலே அடி இட்டு அழைத்துக்‌ கொண்டு போனார் -உய்யக்கொண்டார்‌ இந்த விஷயம்‌ அறிந்து “இவர்‌ இப்படிச்‌ செய்யாதே” என்று மிகவும்‌ அன்புடை யவராய்‌, நம்பி சென்னியைத்‌ தம்‌ திருவடித்‌ தாமரை களாலே அலங்கரித்தார்‌. ப்ரமேய ரத்னம்‌ என்னும்‌ நூலில்‌ மூன்றாவது பிரகரணத்தில்‌ “ஆசார்ய கைங்‌ கர்யத்துக்குப்‌ படிமா வடுகநம்பியோடு மணக்கால்‌ நம்பி” என்றது காண்க. இதுபற்றியே “(ஆசார்யர்‌) தாள்‌ சென்னி வைப்போன்‌” என்று அருளியபடி –

(தென்னரங்கர்‌ சீர்‌ அருளைச்‌ சேர்ந்திருப்போன்‌)-ஸ்ரீமந்நாதமுனிகளின்‌ திருப்பேரரான ஆளவந்தார்‌ ராஜ போகத்தில்‌ சுகமாக இருந்த போது மணக்கால்‌ நம்பி அவருக்கு விருப்பமான தூதுளை கீரையை தினமும்‌ திருமடப்‌ பள்ளிக்குக்‌ கொடுத்து வந்தார்‌. ஆளவந்தாரும்‌ அதனை அமுது செய்து வந்தார்‌. அவர்‌ இதனை விசாரியாமல்‌ இருக்கவே, நம்பி நான்கு நாளைக்குத்‌ தூதுளைக்‌ கொடுப்பதை தவிர்த்தார்‌. ஆளவந்தாரும்‌ தூதுளை இன்றியே இருக்கவே, அதனைக்‌ கொடுப்பவரைத்‌ தாம்‌ காண நினைத்து, மறுநாள்‌ வந்த போது அவரை ஆளவந்‌தாரிடம்‌ அழைத்துச்‌ சென்றனர்‌.“தூதுளை கொடுப்பதின்‌ நோக்கம்‌ என்ன?” என்று கேட்க, நம்பியும்‌ “அவரைக் காண இது தான்‌ வழி” என்று சொன்னார்‌. மேலும்‌, அவருடைய பாட்டனாரான ஸ்ரீமந்நாதமுனிகள்‌ தேடி வைத்த பொருளும்‌, அந்நிதி கிடக்கிற இடமும்‌ அதனை ஸமர்ப்பிக்கவும்‌ தான்‌ வந்ததாகக்‌ கூறுவர்‌. ஆளவந்தாரும்‌ மிக்க ஆர்வத்துடன்‌ அப்பொருளைச்‌ சொல்லும்படி கேட்க, நம்பிகளும்‌ அன்று முதல்‌ கதையின்‌ செம்மைப்‌ பொருள்‌ தெரியும்படி பதினெட்டு அத்தியாயத்தையும்‌ அருளிச்‌ செய்தார்‌.-நெல்லுக்குப்‌ பால்‌ கட்டக்‌ கட்டத்‌ தலை வணங்குமா போலே, ஆளவந்தாருக்கும்‌ கொஞ்சம்‌ கொஞ்சமாக ஸம்ஸாரத்தில்‌ ருசி யில்லாமை பிறந்தது. நம்பிகளும்‌ ஆளவந்தாரைக்‌ கூட்டிக்‌ கொண்டு திருவரங்கம்‌ சென்று அழியாத மகா நிதியான பெரிய பெருமாளுடைய முடிவில்லாத எழிலைக்‌ காணச்‌ செய்தார்‌. ஸ்ரீமந்நாதமுனிகள்‌ காட்டிக்‌ கொடுத்த அர்த்தங்கள்‌ எல்லாம்‌ திருவரங்‌கனின்‌ சீர்‌ அருளால்‌ ஆளவந்தாருக்கு மணக்கால்‌ நம்பி அருளாலே சேர்ந்தது. இதனால்‌ “சீர்‌ அருளைச்‌ சேர்ந்து இருப்போன்‌” என்றபடி.

தாசரதி திருநாமம்‌ தழைக்க வந்தோன் –அயோத்தி மன்னனான தசரத சக்கரவர்த்தி திருமகன்‌ இராமன்‌ தாசரதி என்று அழைக்கப்பட்டார்‌. நம்பிகளுக்கு அமைந்த தனியனில்‌, “பரசு ராமனைப்‌ போல பொறுமையை (பூமியை) விடாதவராய்‌, இராமனைப்‌ போல புண்ய ஜனங்களை (ராக்ஷஸர்‌ களை) பாதிக்காதவராய்‌, பலராமனைப்‌ போல மது பான மதம்‌ இல்லாதவரான நாலாவது இராமனான மணக்கால்‌ நம்பியை உபாஸிக்கிறோம்‌” என்று அருளியதற்கு ஏற்ப, தாசரதி திருநாமம்‌ தழைத்தபடி.-வேதாந்த தேசிகரும்‌ யதிராஜ ஸப்ததியில்‌ (7) “அநுஜ்ஜித க்ஷமா” என்ற சுலோகத்தின்‌ மூலம்‌ மணக்கால்‌ நம்பியை மறக்காமல்‌ இருப்போம்‌ என்‌ றது காண்க. மேலும்‌ “பகவத்‌ பக்தியாகிற பாற்கடலில்‌ குடைந்தாடப்‌ பெற்றவராய்‌, அதனால்‌ தாப த்ரயம்‌ என்று சொல்லப்படும்‌ ஆத்மாவைப்‌ பற்றி வருவது ஜுரம்‌, தலைவலி, மனக்கஷ்டம்‌ முதலானவை. காற்று, மழை, இடி, மின்னல்‌ முதலானவற்றால்‌ வரும்‌ துன்பம்‌, பசு, பறவை முதலானவற்றால்‌ வரும்‌ துன்பம்‌ என்னும்‌ மூன்று தாபங்களும்‌ நீங்கப்‌ பெற்றவரான ஸ்ரீராமன்‌ என்னும்‌ மணக்கால்‌ நம்பியைப்‌ பற்றுகிறேன்‌” என்ற தனியன்‌ மூலமும்‌ தாசரதி என்ற திருநாமம்‌ தழைத்தபடியாகும் –

தமிழ்‌ நாதமுனி உகப்பைத்‌ (ஸ்)தாபித்தான்‌) தமிழ்‌ நாதமுனி – சேதநரோடு செறிந்து ஆராயப்‌ படுமதான த்ராவிடமான தமிழையே அடையாளமாக உடையவர்‌ நம்மாழ்வார்‌ என்று பிள்ளை லோகம்‌ சீயர்‌ திருவாய்மொழி நூற்றந்தாதியில்‌ 26 “பன்னுதமிழ்‌ மாறன்‌” என்பதற்குச்‌ சேர உரைப்பர்‌. அந்த தமிழ்‌ மாறன்‌ அருளால்‌ ஸ்ரீமந்நாதமுனிகள்‌ நாலாயிர திவ்விய ப்ரபந்தத்தைப்‌ பெற்றார்‌. அதனால்‌ தமிழ்‌ நாதமுனியானார்‌ என்றபடி. அவர்‌ அருளால்‌ ஆசார்யரான உய்யக்‌ கொண்டார்‌ பரமபதித்த பின்பு, அவர்‌ சொல்லியபடியே சொட்டைக்‌ குலத்தினவரான ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு திருப்பேரனார்‌ அவதரித்து, அவருக்கு யமுனைத்‌ துறைவர்‌ என்று திருநாமமிட்டு நம்‌ தர்சனம்‌ வளரச்‌ செய்யும்படி எல்லா தர்சன ரகசியங்களையும்‌ உபதேசித்தருளினார்‌. அதுவரை மணக்கால்நம்பி தர்சனத்தை நிர்வகித்து வந்தார்‌. ஆர்வத்தோடு ஸ்ரீமந்நாத முனிகள்‌ நியமனத்தை தம்‌ ஆசார்யரான உய்யக்‌ கொண்டார்‌ சொல்லியபடி, ஆளவந்தாரை நம்‌ தர்சன ஆசார்யனாக ஆக்கி ீஸ்ரீமந்நாதமுனிகள்‌ உகப்பை நிலை நிறுத்தியதால்‌ (ஸ்தாபித்ததால்‌) ஆசார்ய ஞான பரிபாலனம்‌ மிகவும்‌ செய்யத்தக்கது என்றபடி.

(நேசமுடன்‌ ஆரியனை நியமித்தான்‌) நேசம்‌ அன்பு. ஆரியன்‌ – ஆர்ய: என்ற வடசொல்‌ தமிழில்‌ ஆர்யன்‌ ஆயிற்று. பல பொருள்களில்‌ ஒன்றான வித்வான்‌ என்று பொருள்‌. திருவாய்மொழியை ஓதுவித்தல்‌, அதனுடைய அர்த்தத்தை அருளிச்‌ செய்தல்‌ ஆகிய இரண்டையும்‌ வளர்த்தவர்‌ நம்பி.
ஆதலால்‌ இவரை ஆசார்ய பதம்‌ ஏறிப்‌ போந்தவர்‌ என்று ப்ரமேய ரத்னம்‌ இரண்டாம்‌ பிரகரணத்தில்‌ கூறியது காண்க. அத்தகைய ஆசார்ய பதத்தை மணக்கால்‌ நம்பி தம்‌ இறுதிக்‌ காலத்தில்‌ ஸ்ரீமந்நாதமுனிகளின்‌ திருப்பேரனாரான ஆளவந்தாரைப்‌ பார்த்து “ஸ்ரீமந்நாதமுனிகளோடு ஞானம்‌ மற்றும்‌ வம்ச ஸம்பந்தமுடையவரான “நீர்‌ அவர்‌ திருவடிகளே தஞ்சமாக எண்ணி இரும்‌” என்றும்‌ கூறியதற்கு ஏற்ப “இரந்து சொல்லுகைக்கு மணக்கால்‌ நம்பியோடு ஒப்பர்‌” என்று பகவத்‌ விஷயத்தில்‌ 9-3-5 யில்‌ அருளியது காண்க. திருவாய் மொழி அதன்‌ பொருள்‌ ஆகியவற்றை உபதேசித்து நம்‌ தரிசனத்துக்கு ஆசார்ய பதமான ஆரியனாக நியமித்தார்‌ என்பர்-

(நீணிலத்தில்‌ பதின்மர் கலை நிறுத்தினான் நீள்‌ * நிலம்‌ – நீளுதல்‌ – பெருமையாதல்‌. பெருமை பொருந்திய இடம்‌ – ஸ்ரீ ரங்கம்‌. ஸ்ரீ ரங்கத்தில்‌ பதின்மர்‌ கலையான திவ்ய ப்ரபந்தத்தை தன்‌ சீடர்களான ஆளவந்தார்‌, தெய்வத்துக்கரசு நம்பி, கோமடத்துத்‌ திருவிண்ணகரப்பன்‌, சிறுப்புள்ளுடைப்‌ பிள்ளை, வங்கிபுரத்து ஆச்சி ஆகியோர்க்கு பதின்மர்‌ கலை யில்‌ அமைந்த தர்சன தாத்பர்ய விசேஷங்களைக்‌ கற்பித்ததனால்‌ “பதின்மர்கலை நிறுத்தினான்‌” என்றபடி.
வேதாந்த தேசிகர்‌ அருளிய குருபரம்பரா ஸாரத்தில்‌ மணக்கால்‌ நம்பி சீடர்கள்‌ ஐவர்‌ என்றது காண்க. அதுமட்டுமன்றி, “திருவாய்மொழி துவய மந்த்ரத்தின்‌ விரிவாக்கமாதலால்‌, ஸம்ஸாரமாகிற விஷம்‌ தீண்டப்‌ பெற்றவனுக்கு துவயம்‌ விஷம்‌ தீர்க்கும்‌ மருந்தாய்‌ இருக்கும்‌” என்பர்‌ நம்பி. மேலும்‌ பத்து ஆழ்வார்கள்‌ அருளிச்‌ செயலில்‌ ஆழ்ந்த ஞானம்‌ கொண்டு திருவாய்மொழி ஈடு என்னும்‌ வியாக்யானத்தில்‌ நம்பிள்ளை என்னும்‌ ஆசார்யர்‌ நம்பியின்‌ ஐதிகங்களையும்‌ நிர்வாகத்தையும்‌ காட்டி உரைப்பர்‌. நம்பியின்‌ நிர்வாகத்‌ திறனை திருமாலை 37ஆம்‌ பாட்டு, திருவாய்மொழி 2-6-2, 6-5-5, 6-6-1, 6-8-1, 9-3-5 ஆகிய இடங்களில்‌ காணலாம்‌. இதனால் நம்பிகள்‌ பதின்மர்‌ கலையைப்‌ பரப்பினபடி.

மாசி மகந்தணில்‌ விளங்க வந்துதித்தான் ) தமிழ்‌ மாதங்களில்‌ பதினோறாவது மாதம்‌ மாசி மாதமாகும்‌. இம் மாதமானது பிரிதொன்றுக்கில்லாத சிறப்புடையதாய்‌ கொள்ளத் தக்கதானது என்பர்‌. மாசி மகம்‌ சேர்ந்த பெளர்ணமி முழுமை பெற்ற தாகும்‌. வருடத்தில்‌ இந்த மாசி மக பெளர்ணமி சிறப்புடையதாகும்‌. பெருமாள்‌ கோயில்களில்‌, மாசி மகம்‌ என்பது மாசி மாத பெளர்ணமியுடன்‌ கூடி வரும்‌ மக நட்சத்திர நாளில்‌ பெருமாளை கருட வாகனத்தில்‌ கடற்கரைக்கு எழுந்தருளப்‌ பண்ணி தீர்த்தவாரி கண்டருளுவது காணலாம்‌. மாசி மகத்தைக்‌ “கடலாடும்‌ நாள்‌” என்றும்‌, “தீர்த்தமாடும்‌ நாள்‌” என்றும்‌ அழைப்பர்‌. ஆண்டாளும்‌ தைமாதம் முழுவதும்‌ காமன்‌ வரும்‌ இடத்தை அலங்கரிப்பதைச்‌ சொல்லும்போது “தையொரு திங்களும்‌ தரை மண்டலமிட்டு மாசி முன்னாள்‌ ஐய நுண்‌ மணல்‌ கண்டு தெருவணிந்து அழகினக்கு அலங்கரித்து அணங்க தேவா” (நாச்‌.திரு.1-1) என்கிறாள்‌. “மாசி முன்னாள்‌” என்றால்‌ மாசியில்‌ பூர்வ சுக்ல பக்ஷமாகிற முதல்‌ பதினைந்து நாள்‌. அத்தகைய சிறப்பு பெற்ற மாசி மாதத்தில்‌ சுக்ல பக்ஷ சதுர்தசியோடு கூடிய மக நக்ஷத்ரத்தில்‌, அந்த நக்ஷத்ரம்‌ புகழ்‌ பெற, புதன்‌ கிழமையில்‌ உதித்தவர்‌ மணக்கால்‌ நம்பி ஆவர்‌

மால்‌ மணக்கால்‌ நம்பி பதம்‌ வையகத்தில்‌ வாழியே மால்‌ – மையல்‌, பெருமை, கருமை என்று பல பொருள்‌. பெருமை என்பதற்குச்‌ சேர நித்ய ஸுரிகளில்‌ ஒருவரான குமுதாக்ஷரின்‌ அம்சமாக அவதரித்தவர்‌. இங்கு மணக்கால்‌ நம்பியின்‌ மையலானது தம்‌ ஆசார்யரான உய்யக்‌ கொண்டார்‌ திருமாளிகையில் 12 ஆண்டு சேவை பண்ணிப்‌ படியாய்க்‌ கிடந்து மணக்கால்‌ நம்பி என்னும்‌ திருநாமம்‌ பெற்றதாகும்‌. மேலும்‌ நம்பிக்குப்‌ பெருமையாவது எம்பார்‌ என்னும்‌ ஆசார்யர்‌ அருளியபடியே லக்ஷ்மி நாதனாகிற பெருங்கடலில்‌, நம்மாழ்வாராகிய மேகம்‌, கருணை என்னும்‌ நீரைப் பருகி, ஸ்ரீமந்நாதமுனிகளாகிற மலையிலே பொழிந்தது.அந்நீர்‌ உய்யக்கொண்டார்‌, மணக்கால்‌ நம்பி ஆகிய இரு அருவிகள்‌ மூலம்‌ ஆளவந்தாராகிய பெரிய ஆற்றை அடைந்து மேலும்‌ சென்றதை அருளுவர்‌. அவ்வாறே பகவத்‌ ராமாநுஜ அவயவ பிரபாவத்தில்‌ இராமாநுசருக்கு “ராகவ கபோலெள” என்கிறபடியே ஸ்ரீராமமிச்ரர்‌ என்னும்‌ மணக்கால்‌ நம்பிகள்‌ இரண்டு கன்னங்களாகத்‌ திகழ்கிறார்‌ என்று கூறுவர்‌. அப்படிப்பட்ட பெருமையுடைய மணக்கால்‌ நம்பி பதமான திருவடிகள்‌ இவ்வுலகத்தில்‌ வாழ வேண்டும் –

மச்சணியும்‌ மதிளரங்கம்‌ வாழ்வித்தான்‌ வாழியே
மறை நான்கும்‌ ஒருருவில்‌ மகிழ்ந்து கற்றான்‌ வாழியே
பச்சையிட்ட ராமர்பதம்‌ பகருமவன்‌ வாழியே
பாடியத்தோன்‌ ஈடேறப்‌ பார்வை செய்தோன்‌ வாழியே
கச்சிநகர்‌ மாயன்‌ இருகழல்‌ பணிந்தோன்‌ வாழியே
கடக உத்திராடத்துக்‌ காலுதித்தான்‌ வாழியே
அச்சமற மனமகிழ்ச்சி அணைந்திட்டான்‌ வாழியே
ஆளவந்தார்‌ தாளிணைகள்‌ அனவரதம்‌ வாழியே
–சேனை முதலியாருடைய கணங்களில்‌ ஒருவரான ஸிம்ஹாந்நர்‌ என்ற நித்ய ஸுரியின்‌ அம்சமாக அவதரித்தவர்‌ ஆளவந்தாராவர்‌. இவர்‌ திருவவதார ஸ்தலம்‌ சோழ தேசத்தில்‌ திருக்காவேரி தீரத்தில்‌ வீரநாராயணபரம்‌. திருநக்ஷத்ரம்‌ கலியுகம்‌ 3077க்கு மேல்‌ தாது வருடம்‌, ஆடி மாதம்‌ பெளர்ணமி வெள்ளிக்கிழமை, உத்தராடம்‌ விஷ்கம்பம்‌ பவ கரணம்‌. திருத்தகப்பனார்‌ ஈஸ்வர முனிகள்‌. திருப்‌ பாட்டனார்‌ ஸ்ரீமந்நாதமுனிகள்‌. இவருக்கு ஸ்ரீமந்நாத முனிகள்‌ இட்ட திருநாமம்‌ யமுனைத்‌ துறைவர்‌. இவர்‌ அருளிய நூல்கள்‌ எட்டு – 1. ஆத்ம ஸித்தி, 2. ஸம்வித்ஸித்தி, 3.ஈச்வர ஸித்தி என்னும்‌ ஸித்தி த்ரயம்‌, 4. கதார்த்த ஸங்க்ரஹம்‌, 5. ஆகம ப்ராமாண்‌ யம்‌, 6. மஹாபுருஷ நிர்ணயம்‌, 7.ஸ்தோத்ர ரத்னம்‌, 8. சதுஸ்லோகி .

வாழ் வித்தான் -சுகமாக இருக்கும்படி செய்தவர்‌,
வாழியே வாழ வேண்டும்‌;
மறைநான்கும்‌- ருக்‌, யஜுர்‌, ஸாம, அதர்வண ஆகிய நான்கு வேதத்தை,
ஒருருவில்‌ ஒரு தடவை சொன்னபோதே,
மகிழ்ந்து கற்றான்‌ சந்தோஷத்துடன்‌ கற்றவர்‌;
பச்சையிட்ட – தூதுவளை கீரை அளித்து உபகரித்த,
ராமர்‌ பதம்‌ – இராமன்‌ என்னும்‌ மணக்கால்‌ நம்பி திருவடிகளை,
பகருமவன்‌ – சொல்லுபவர்‌;
பாடியத்தோன்‌ – ஸ்ரீ பாஷ்யத்தை அருளிய ராமாநுஜர்‌,
ஈடேற – உய்வு பெற,
பார்வை செய்தோன்‌ – கடாக்ஷித்தவர்‌,
கச்சிநகர்‌ – காஞ்சிமா நகரம்‌,
மாயன்‌ – வியப்பான வரதராஜப்‌ பெருமாள்‌,
இருகழல்‌ – பெருமை பொருந்திய திருவடிகள்‌,
பணிந்தோன்‌ சேவித்தவர்‌;
கடக உத்திராடத்து கால்‌ -கடக மாதமான ஆடியில்‌ உத்திராட நக்ஷத்ர முதல்‌ பாதத்தில்‌,
உதித்தான்‌ – தோன்றியவர்‌;
அச்சமற பயமின்றி,
மனமகிழ்ச்சி – (ராமாநுஜரைக்‌ கொண்டு தர்சனம்‌ வளரச்‌ செய்தமையால்‌) மனம்‌ மகிழ்ச்சி கொண்டு,
அணைந்‌ திட்டான்‌ – அடைந்தவராவர்‌;
ஆளவந்தார்‌ – ஆளவந்தார்‌,
தாளிணைகள்‌ – இரு திருவடிகள்‌,
அனவரதம்‌ – எப்போதும்‌,
வாழியே வாழ வேண்டும்‌.

(மச்சணியும்‌ மதிளரங்கம்‌ வாழ்வித்தான்‌)“மச்சணி மாட மதிளரங்கர்‌” (11-4 நா.தி) என்று ஆண்டாள்‌ அருளியபடியே மச்சணி – மேல்‌ தளங்களாலே அலங்கரிக்கப் பெற்ற மாட மாளிகைகளையும்‌ விரோதிகள்‌ நுழையாதபடி அரணாயிருக்கும்‌ மதிள்களையும்‌ உடையது திருவரங்கம் -திருப்பாணாழ்வார்‌ “நீள் மதிள்‌ அரங்கத்து” என்பதற்குச்‌ சேர திருவரங்கத்தைக்‌ காப்பதையே நோக்‌காகக்‌ கொண்டு மதிள்‌ விளங்குகிறது என்பர்‌. மதிள்‌ அரங்கம்‌ என்பதனால்‌ ஏழு மதிள்களால்‌ சூழப்பட்ட தாகும்‌. “மதிள்‌ திருவரங்கம்‌” என்பதற்கு ராம அவதாரம்‌ போலே இங்கும்‌ சில ஆபத்து விளையுமோ என்று அஞ்சித்‌ திருமங்கையழ்வார்‌ போல்‌வார்‌ காப்பாக இட்ட மதிளையுடையது திருவரங்கம்‌ என்பர்‌. “மதிள்‌ திருவரங்கத்தானே” (திருமாலை 42) என்று தொண்டரடிப்பொடியாழ்வார்‌ மதிளே அரணாகக்‌ கொண்டிருக்கும்‌ திருவரங்கன்‌ என்றது காண்க.-திருமங்கையாழ்வாரும்‌ “செம்பொனாரும்‌ மதிள்‌ சூழ்ந்த தென்னரங்கம்‌” என்று அருளியதற்கு ஏற்ப தேவர்களுக்குத்‌ தலைவனான பிரமனும்‌ அவனாலே படைக்கப்பட்ட உலகிலுள்ளாரும்‌ திரண்டு பற்றும்படியாய்‌, அழகியதாய்‌, உள்ளே சாய்ந்திருக்கும்‌ அரங்கனுக்கு அரணாகத்‌ தகும்படி யான மதிள்‌ என்பர்‌ பெரியவாச்சான்‌ பிள்ளை. மற்றும்‌ கல்லின்‌ மன்னு மதிள்‌” (பெரி.திரு.5.5.10) என்கிறார்‌ ஆழ்வார்‌. அதாவது கல்லாலே கட்டப்பட்ட திண்ணியதான ப்ராகாரம்‌ என்றபடி. இப்படிப்பட்ட பெருமையுடைய அரங்கத்தை வாழ்வித்தவர்‌ ஆளவந்தார்‌. எங்ஙனேயென்னில்‌ – யமுனைத்‌ துறைவர்‌ ராஜ புரோகிதனான வாதத்திலே ஆக்கியாழ்வான்‌ வாயை அடக்குகையாலே ஆளவந்தார்‌ என்ற திருநாமத்தை உடையவர்‌ ஆனார்‌. நம்‌ தரிசனத்தை ஆளவந்தவராய்‌ இருக்கை யாலே, மணக்கால்நம்பி இத்தைக்‌ கேள்விப்பட்டு இவரைத்‌ திருத்தி ஸ்ரீமந்நாதமுனிகள்‌ கொடுத்த நிதியை இவருக்குக்‌ காட்ட எண்ணி, இவர்‌ பக்கல்‌ பல தடவை தூதுவளை கீரையைக்‌ கொடுத்து உபகரித்து இவரை திருவரங்கம்‌ அழைத்துச்‌ சென்று பச்சை மாமலைபோல்‌ திருமேனியையுடைய அரங்கனிடம்‌ உண்டு இதனால்‌ ஆளவந்தார்‌ பெருமாள்‌ கடாக்ஷத்தாலே பரம விரக்தராய்‌ ஐச்வர்யம்‌ முதலானவற்றை விட்டுவிட்டு ஸந்யாஸ ஆச்ரம ஸ்வீகாரம்‌ பண்ணி பெரிய பெருமாள்‌ ஸாம்ராஜ்யத்துள்‌ புகுந்து, ஸ்ரீ கார்யம்‌ நிர்வஹித்து வந்தார்‌. அந்தக்‌ காலத்திலே “ஆகம ப்ராமாண்யம்‌” என்ற நூலை எழுதி பிற மதத்தவர்‌களைத்‌ தோற்கடித்து திருவரங்கம்‌ திருப்பதியிலே அவர்கள்‌ இருப்பையும்‌ போக்கினார்‌. பின்னர்‌, பல க்ரந்தங்கள்‌ வாயிலாக தர்சன நிர்வாகம்‌ செய்தருளினார்‌ என்று கோயில்‌ ஒழுகு கூறும்‌. பராசர பட்டர்‌ தாம்‌ அருளிய ஸ்ரீரங்கராஜ ஸ்தவ பூர்வ சதகத்தில்‌ (4) “விதாய வைதிகம்‌ … யாமுநம்‌ மநவாமஹை” என்ற ஸ்லோகம்‌ மூலமாக ஆளவந்தார்‌ அவதரிப்பதற்கு முன்‌ வைதிக மார்க்க மானது தவறான வாதங்கள்‌ என்னும்‌ முள்செடிகள்‌ நிறைந்திருந்தது. அந்த வழியிலுள்ள முள்‌ செடி களை நீக்கி, பகவத்‌ பக்தியை ஸ்ரீரங்கத்தில்‌ நன்கு வளரச்‌ செய்தவர்‌ ஆளவந்தார்‌ என்கிறார்‌. இது பற்றியே “மதிளரங்கம்‌ வாழ்வித்தான்‌” என்றபடி

மறை நான்கும்‌ ஓருருவில்‌ மகிழ்ந்து கற்றான்‌) உபநயனம்‌ செய்விக்கப்பட்ட பிறகு, ஆளவந்தார்‌ வேதமோதும்‌ அந்தணரான ஆசார்யரிடம்‌ வேதங்‌ களை ஓதினார்‌. இவர்‌ செய்த வேதாத்யயனம்‌ மிகவும்‌ வியப்பை விளைவித்தது. ஆசார்யரிடம்‌ ஓதியது அனைத்தும்‌ ஒரு முறை கேட்டதனாலேயே கற்றுக்‌ கொண்டார்‌. வேதமோதும்‌ ஆசார்யரும்‌ இவரை அழைத்து “நீர்‌ இன்று ஏன்‌ வேத அத்யயனத்துக்கு வரவில்லை” என்று கேட்டார்‌.-ஆசார்யருடைய அந்த வார்த்தையைக்‌ கேட்டு, “ஐயா தேவரீர்‌ நேற்று வேதத்தின்‌ எந்த வாக்கியங்‌ களை ஓதச்‌ சொன்னீரோ அந்த வாக்கியங்களையே முன்பு போலவே இன்றும்‌ ஓதச்‌ சொல்லுகிறீர்‌ அரைத்த மாவையே அரைப்பது போல சொன்னதை சொல்லும்‌ இதனால்‌ பயனில்லை என்று நான்‌ வரவில்லை என்றார்‌. இதனைக்‌ கேட்ட ஆசார்யர்‌ மிகவும்‌ வியப்புற்றவராய்‌, அவரை அணைத்துக்‌ கொண்டு கொண்டாடினார்‌. சிம்ஹாநனர்‌ என்னும்‌ நித்யஸுரிகள்‌ அம்சமான இவர்‌ சிறுமாமனிசராய்‌ பதம்‌, ஜடை, வர்ண க்ரமம்‌, கனம்‌ ஆகியவற்றோடு கூடிய எல்லா வேதங்களையும்‌ ஆறு வேதாங்கங்‌ களையும்‌ ஆர்வமுடன்‌ கற்றார்‌ என்று பிரபந்நாம்‌ ருதம்‌ கூறும்‌. இதுபற்றியே “ஓருருவில்‌ மறை அனைத்தும்‌ மகிழ்ந்து கற்றான்‌” என்றபடி.

(பச்சையிட்ட ராமர்‌ பதம்‌ பகரும வன்‌) பச்சை – பச்சை இலை, தூது வளை கீரை. பச்சை – உதவி. தூது வளை கீரையை இட்டு யாமுனாசார்‌யரான ஆளவந்தாரைத்‌ திருத்தினவர்‌ ராமர்‌ என்ற பெயருடைய மணக்கால்‌ நம்பி ஆவர்‌. அதாவது ஆளவந்தார்‌ ராஜ புரோகிதனான ஆக்கியாழ்வானோடு வாதப்போர்‌ செய்து வெற்றி கொண்டதை அறிந்த மணக்கால்‌ நம்பி ஆளவந்தாரைக்‌ காண ஆசைப்பட்டார்‌.-அரண்மனையில்‌ கட்டும்‌ காவலு மாய்‌ இருப்பதைக்‌ கண்டு நம்பி திருமடப்பள்ளில்‌ புகுந்தார்‌. ஆளவந்தாருக்கு உணவு செய்பவர்‌ களைக்‌ கண்டு, “ஆளவந்தார்‌ விரும்பி உண்ணும்‌ கறியமுது எது?” என்று கேட்டார்‌. அவர்களும்‌ அவர்‌ விரும்புவது “தூதுவளை” என்று சொன்னார்கள்‌. உடனே நம்பியும்‌ அன்று முதல்‌ ஆறு மாத காலம்‌ மடைப்பள்ளிக்குத்‌ தூதுவளை (கீரை வகை) இட்டு வந்தார்‌.-மேலும்‌, இவருக்கு புருஷார்த்தங்களும்‌, பகவத்‌ விஷயமும்‌, நாலாயிரமும்‌, நான்காவது ஆச்ரம ஸ்வீகாரம்‌ முதலான அர்த்த விசேஷங்கள்‌ எல்லாம்‌ அருளினவர்‌ ஸ்ரீராம மிச்ரர்‌ என்னும்‌ மணக்கால்‌ நம்பியாவார்‌. இது பற்றியே “பச்சை இட்ட ராமர்‌ பதம்‌” என்று மணக்கால்‌ நம்பியைக்‌ கொண்டாடுகிறார் –

பாடியத்தோன்‌ ஈடேறப்‌ பார்வை செய்தோன்‌) “பாஷ்யம்‌” என்ற சொல்‌ தமிழில்‌ பாடியம்‌ என்று ஆயிற்று. பாஷ்யமாவது விரிவாய்ப்‌ பொருள்‌ விளக்கம்‌ செய்யும்‌ உரை நூலாகும்‌. ப்ரஹ்ம ஸுத்ரத்துக்கு ஸ்ரீ பாஷ்யம்‌ என்னும்‌ உரை எழுதியவர்‌ இராமாநுசராவர்‌. அவரே பாஷ்யகாரர்‌ ஆவர்‌.-அந்த பாஷ்யகாரர்‌ உய்வு பெற ஆளவந்தார்‌ அவரைப்‌ பார்வை செய்தார்‌. எங்ஙனேயென்னில்‌- காஞ்சியிலுள்ள இராமாநு சருடைய பெருமையை இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள்‌ வாயிலாகக்‌ கேட்ட ஆளவந்தார்‌, உடனே அவரைக்‌ காண வேண்டும்‌ என்று எண்ணி திருவரங்கத்தில்‌ இருந்து காஞ்சி புரத்துக்கு வந்தார்‌.-அவர்‌ சீடரான திருக்கச்சி நம்பி மூலமாக பேரருளாளன்‌ பெருந்தேவித்‌ தாயாரைத்‌ திருவடி தொழுதார்‌. பிரதக்ஷிணமாக வரும்‌ போது பாடசாலை குருவான யாதவப்ரகாசன்‌ என்பவர்‌ தம்‌ சீடர்களோடு பேரருளாளனைச்‌ சேவித்து வலம்‌ வந்து கொண்டிருந்‌தார்‌. அப்போது ஆளவந்தாரும்‌ “இவர்களிலே இளையாழ்வாரான இராமாநுஜர்‌ யார்‌?” என்று திருக்கச்சி நம்பிகளைக்‌ கேட்க, நம்பியும்‌, “சிவந்து நெடுகி வலியராய்‌ நீண்ட வாயும்‌, உருண்டிருப்பவையும்‌, இரும்பு உலக்கை போல்‌ விளங்குபவையும்‌, எல்லா ஆபரணங்களையும்‌ அலங்கரிக்கத்‌ தக்கவையுமான ஸ்ரீராமனுடைய திருக்கைகள்‌ போல்‌ ஆஜாநுபாஹுவாய்‌ நடுவே வருகிறவர்‌” தான்‌ இராமாநுஜர்‌ என்று சுட்டிக்‌ காட்டினார்‌. ஆளவந்தாரும்‌ அவரைத்‌ தமது மலர்ந்த மதுரமான கம்பீர கண்களாலே செவ்வரியோடப்‌ பார்த்‌தார்‌.-தம்மிடமுள்ள பவிஷ்யதாசார்ய விக்ரஹத்துக்‌கும்‌ இவருக்கும்‌ அவயவங்கள்‌ எல்லாம்‌ ஒரு அச்சில்‌ வார்த்தது போல இருக்கக்‌ கண்டு “ஆம்‌ முதல்வன்‌ இவன்‌” என்று நம்மாழ்வார்‌ அருளியதை நினைவில்‌ கொண்டு விசேஷ பார்வை செய்தார்‌. இதைக்‌ குறித்தே இராமாநுஜரும்‌ ஆளவந்தார்‌ விஷயமாக தாம்‌ அருளிய“யத் பதாம்போருஹ த்யான…” என்னும்‌ தனியனில்‌ உபகார ஸ்மிருதியாக தம்மை பார்வை செய்து வஸ்து வாக்கியமைக்கு வணங்குகிறார்‌. இது பற்றியே “பாடியத்தோன்‌ ஈடேறப்‌ பார்வை செய்தோன்‌” என்றபடி.இதற்கு ஏற்ப இராமாநுஜரின்‌ அவயவங்களின்‌ அம்சமாக உள்ள ஆசார்யர்களைச்‌ சொல்லும் போது ஒன்றான எம்பார்‌ ஜீயர்‌ ஸ்வாமிகள்‌ “வக்ஷஸ்தலம்‌ யாமுநார்ய:” என்று இராமாநுஜரின்‌ திருமார்பாக ஆளவந்தாரைக்‌ குறிப்பர்‌. இதனால்‌ இராமாநுஜர்‌ மனத்தில்‌ ஆளவந்தார்‌ நீங்காத இடம்‌ பெற்றுள்ளார்‌ என்று சொன்னபடி.

(கச்சிநகர்‌ மாயன்‌ இருகழல்‌ பணிந்தோன்‌) கச்சி-முக்தி தரும்‌ ஏழு நகரங்களுள்‌ ஒன்று காஞ்சிபுரம்‌. தொண்டை நாட்டுத்‌ திருப்பதிகளில்‌ ஒன்று. மாயன்‌ வியப்பான குணம்‌. திருவிளையாடல்களை உடைய வன்‌. இராமாநுசரைக்‌ கண்ட ஆளவந்தார்‌ காஞ்சியில்‌ பெருமாளை நோக்கி, “எந்த மாயனான பேரருளாளனுடைய அருளால்‌ செவிடன்‌ கேட்கும்‌ சக்தி உடையவன்‌ ஆகிறானோ, காலில்லாதவன்‌ வேகமாக நடக்க வல்லவனாகிறானோ, ஊமை பேச வல்லவனாகிறானோ, குருடன்‌ காண வல்லவன்‌ ஆகிறானோ, மலடியும்‌ பிள்ளை பெறுகிறாளோ, அந்த தேவப்‌ பெருமாளான வரதராஜனை சரணமடைகிறேன்‌” என்று நம்‌ தர்சனம்‌ வளர ஆளவந்தார்‌ மாயன்‌ இரு கழல்‌ பணிந்தார்‌. “தாம்‌ வேண்டும்‌ காமமே காட்டும் கடிது” என்கிற படியே தேவப் பெருமாள்‌ அவ்வவர்‌களுடைய விருப்பங்களைத்‌ தந்தருளுகிறவர்‌. ஆகையாலே ஆளவந்தாரும்‌ இராமாநுசன்‌ ஆகிற மகாநுபாவரை நம்‌ தரிசனம்‌ வளர விசேஷ அருள்‌ புரிய சரணமடைவதாகச்‌ சொன்ன படியால்‌ “மாயன்‌ இருகழல்‌ பணிந்தோன்‌” என்றவாறு-

(கடக உத்திராடத்துக்‌ காலுதித்தான்‌) கடகம்‌ ஆடி மாதம்‌. உத்திராட நக்ஷத்ரத்தில்‌ அவதரித்தவர்‌ ஆளவந்தார்‌. கால்‌ – முதல்‌ பாதம்‌. அதாவது உத்திராட நக்ஷத்ரத்தில்‌ முதல்‌ பாதத்தில்‌ அவதரித்தவராவர்‌. “உத்திராடம்‌ முதல்‌ பாதத்தில்‌ ஒரு பிள்ளையும்‌ ஊர்‌ கோழியில்‌ ஒரு நிலமும்‌ இருந்தால்‌ உயர்வானது” என்பது முதியோர்‌ வாக்கு. அதற்கு ஏற்ப ஆளவந்தார்‌ தனுர்‌ ராசியில்‌ உத்திராடம்‌ முதல்‌ பாதத்தில்‌ அவதரித்தார்‌. அதனால்‌ இராமாநுசருக்கு மானஸ ஆசார்யரான உயர்வைப்‌ பெற்றார்‌. ஆளவந்தாருடைய முக்கியமான ஐந்து சீடர்கள்‌ இராமாநுசருக்கு ஆசார்யரானார்கள்‌. இவரை பரமாசார்யர்‌ என்று கொண்டாடுவர்‌. இவர்‌ சேனை முதலியார்‌ அம்சம்‌ என்று குரு பரம்பரா ப்ரபாவம்‌ கூறும்‌. இது பற்றியே “கடக உத்திராடத்துக்‌ கால்‌ உதித்தான்‌” என்றபடி.

(அச்சமற மன மகிழ்ச்சி அணைந்திட்டான்‌) அணைதல்‌ – அடைதல்‌, பொருந்துதல்‌ ஆளவந்தாருக்கு அச்சமாவது – திருவரங்கத்தில்‌ தாமும்‌ தம்‌ சீடர்களுமாக இருந்து தர்சனத்தை நடத்தி வந்த போது “இனி மேல்‌ நம்‌ தர்சனத்தை வளர்ப்பவர்‌ யார்‌?” என்று விசாரம்‌ உண்டாய்‌, ஒருவரையும்‌ காணாமல்‌ முசித்துச்‌ சிந்தித்திருந்தாராம்‌. சில நாள்‌ கழித்து இராமாநுசரின்‌ பெருமை அறிந்து அவரைக் காண காஞ்சி வந்து திருக்கச்சி நம்பிகளின்‌ மூலமாக இராமாநுசரை யாதவ பிரகாசன்‌ திரளில்‌ கண்டு மகிழ்ச்சி அடைந்து “ஆம்‌ முதல்வன்‌ இவன்‌” என்று விசேஷ அருள்‌ புரிந்து தேவப் பெருமாளிடம்‌ சரணாகதி செய்து திருவரங்கம்‌ வந்து சேர்ந்தார்‌. பின்னர்‌ திருவரங்கத்தில்‌ ஒருநாள்‌ கால க்ஷேபம்‌ செய்யும் போது “இலிங்கத்திட்ட புராணத்தீரும்‌”” என்ற திருவாய்மொழி (4.10.3) பாசுரத்திற்கு பொருள்‌ சொல்லும் போது “நமக்குப்‌ பின்பு இந்த தர்சனம்‌ நிர்வகிக்க ஒருவரையும்‌ காணப் பெற்றிலோமே” என்கிற விசாரத்தாலே “முன்பு காஞ்சியில்‌ கண்ட இராமாநுஜரை நினைவில்‌ கொண்டு அவரை யாதவப்‌ பிரகாசனோடு உறவறுத்து நம்‌ பக்கல்‌ சேர்க்கும்‌ உபாயம்‌ உண்டோ” என்று எண்ணி தேவப்‌ பெருமாளிடம்‌ “முன்பு செய்த சரணாகதியை பயனுடையதாக்க வேணும்‌” என்று வேண்டினார்‌. இப்படி இராமாநுசனை நம்‌ தர்சனத்தை நிர்வகிக்க வேண்டினது பற்றி “மன மகிழ்ச்சி அணைந்திட்டான்‌” என்றவாறு.

(ஆளவந்தார்‌ தாளிணைகள்‌ அனவரதம்‌) ராஜ புரோகிதனான ஆக்கி யாழ்வானோடு வாதப்‌ போர்‌ செய்து ஆக்கி யாழ்வான்‌ வாயை அடக்குகையாலே “ஆளவந்தார்‌” என்ற திரு நாமத்தை உடையவராய்‌ தர்சனத்தை ஆளவந்தார்‌ என்பர்‌. அனவரதம்‌ – இடை வீடின்றி எப்போதும்‌. ஆளவந்தார்‌ தாளிணையின்‌ பெருமை அவர் தம்‌ சீடர்கள்‌ தொடங்கி இன்று வரை விளங்கி வருவது காணலாம்‌.ஆளவந்தார்‌ இறுதிக்‌ காலத்தில்‌ அவர்தம்‌ சீடர்களான பெரிய நம்பியும்‌ திருக் கோட்டியூர்‌ நம்பியும்‌ ஆளவந்தாருடைய திருவடிகளைச்‌ சேவித்து தங்களுக்குத்‌ தஞ்சமான வார்த்தை அருள வேண்டினர்‌. அவரும்‌ “கோயிலாழ்வாரே உங்களுக்கு உயிர்‌ நிலை” என்றும்‌, “பெரிய பெருமாள்‌ திருவடிகளின்‌ கீழே வீணையும்‌ கையுமாய்‌ ஸேவித்திருக்கும்‌ திருப்பாணாழ்வார்‌ திரு மேனியை பாதாதி கேசமாக ஸேவித்துக்‌ கொண்டிருங்கோள்‌” என்றும்‌ காட்டிக்‌ கொடுத்தார்‌. இது பற்றியே பெரிய நம்பிகளை “ஆளவந்தார்‌ தாளிணையை அடைந்து உய்ந்தோன்‌” என்று போற்றுவது காணலாம்‌. பெரிய திருமலை நம்பிகளை “அய்யன்‌ ஸ்ரீ ஆளவந்தார்‌ அடி தொழுவோன்‌” என்றும்‌, திருக்‌ கோட்டியூர்‌ நம்பியை “ஏற்றமாம்‌ ஆளவந்தார்‌ இணை யடியோன்‌” என்றும்‌, “அல் பகலும்‌ ஆளவந்தார்‌ அடி நினைவோன்‌ ” என்றும்‌, “ஏராரும்‌ ஆளவந்தார்‌ இணை யடியோன்‌” என்றும்‌, “ஏராரும்‌ ஆளவந்தார்‌ இணை யடிகள்‌ மறவாத எங்கள்‌ திருக்கோட்டியூர்‌ நம்பி” என்றும்‌ அருளுவது காண்க. மேலும்‌ திருக்கோட்டியூர்‌ நம்பியும்‌ பெரிய நம்பியும்‌ ஆளவந்தார்‌ திருவடிகளைத்‌ தியானித்துக்‌ கொண்டு திருநாட்டுக்கு எழுந்தருளினர்‌ என்று குருபரம்பரா ப்ரபாவம்‌ கூறும்‌. திருவரங்கப்‌ பெருமாள்‌ அரையரும்‌ திருவடிகளை வணங்கிப்‌ பேறு பெற்றார்‌. இது பற்றியே “தீதில்‌ யமுனைத்‌ துறைவன்‌ சேவடியோன்‌” என்று புகழ்ந்தது காணலாம்‌.
திருமாலை யாண்டானையும்‌ ““அம்புவியி ஆளவந்தார்‌ அடியிணையோன்‌”” என்று போற்றுவது காணலாம்‌. மாறனேரி நம்பிகளையும்‌ “ஆளவந்தார்‌ திருவடிகள்‌ ஆஸ்ரயித்தான்‌ வாழியே” என்று வாழ்த்தியது காணலாம்‌.
திருக்கச்சி நம்பிகளை “தெருளாரும்‌ ஆளவந்தார்‌ திருவடியோன்‌” என்பர்‌.
இராமாநுசரையும்‌ “எதிகட்கிறைவன்‌ யமுனைத்‌ துறைவன்‌ இணையடியாம்‌ கதி பெற்றுடைய இராமாநுசன்‌” என்று திருவரங்கத்தமுதனார்‌ அருளியபடி இராமாநுசருக்கு நேரே ஆசார்யர்‌ ஆளவந்தாராவர்‌. வேதாந்த தேசிகர்‌ குரு பரம்பரா ஸாரத்தில்‌ “என்‌ உயிர்‌ தந்து” என்ற பாட்டில்‌ “ஆளவந்தார்‌ என்று இவரை முன்னிட்டு எம்பெருமான்‌ திருவடிகள்‌ அடைகின்றேனே” என்று அருளியது காண்க. மேலும்‌, யதிராஜ ஸப்ததியில்‌ (8) “விகாஹே யாமுநம்‌ தீர்த்தம்‌” என்கிற படியே தீதில்லாது நல்லோர்‌ திரளைக்‌ காக்கும்‌ பணியில்‌ பிருந்தாவனம்‌ ஸம்பந்தம்‌ உடையவராய்‌, காளியன்‌ முதலான பாம்புகள்‌ தொடர்பில்லாதவராய்‌, கண்ணன்‌ அருளுக்கு இலக்கானவரான யமுனையின்‌ துறை போலுள்ள யமுனைத்‌ துறைவனான ஆளவந்தாரை அடைந்து களிப்போம்‌ என்றதும்‌ காண்க. மணவாளமாமுனிகள்‌ தாம்‌ அருளிய யதிராஜ விம்சதியில்‌ (15) “சுத்தாம யாமுந…’” என்று ஆத்மாவுக்கு சுத்தியாவது தாம்தாம்‌ தம்தம்‌ நூல்‌களில்‌ (அதாவது ஆளவந்தார்‌ தமது ஸ்தோத்ர ரத்‌னத்தில்‌ (62) கூறிய குற்றங்கள்‌ தம்மிடம்‌ உள்ளதாகக்‌ கூறுவர்‌) தம்மிடமுள்ளனவாகக்‌ கூறிக்‌ கொண்ட குற்றங்களில்‌ ஒன்றுகூட ஆளவந்தாரிடம்‌ இல்லாமை யாகும்‌. அப்படிப்பட்ட சுத்தாத்மாவான ஆளவந்தார்‌ திருவடிகளை அனவரதம்‌ வாழ்த்துவோமாக –

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதயம் -பிரமாணத் திரட்டுக்கள்–

September 4, 2026

1-அசித விசேஷிதாந்‌ – அழிவு காலத்தின்‌ முடிவிலே அறிவில்‌ பொருள்களுக்குச்‌ சமானமாகத்‌ திரிகின்ற இவ் வாத்மாக்களை இந்த்ரியங்களொடும்‌ சரீரங்களோடும்‌ சேர்ப்பிப்பதற்காக இரங்கின மனத்தினை யுடையவனாய்‌” – ஸ்ரீ ரங்கராஜஸ்தவம்‌, உத்‌, 41.

2-“மாநம் ப்ரதீபமிவ – அருட் கடலான இறைவன்‌ பெரிய விளக்குப்‌ போன்ற ப்ரமாணமான சாஸ்த்ரத்தைக்‌ கொடுக்கிறான்‌” – ஸ்ரீரங்கராஜ ஸ்தவம் -2-1-

3-“ஆமுதல்வன்‌” – திருவாய்மொழி, 7:9:3.

4-“மாறி மாறி” – திருவாய்மொழி, 2:6:8.

5-“மாநிஷாத ப்ரதிஷ்டாம் த்வம்‌ அகம: ஸாஸ்வதீஸ் ஸமா: யத் க்ரெளஞ்ச மிதுநாதேகம்‌ அவதி: காம மோஹிதம்‌” – ஸ்ரீராமா, பால, 2:15 “ஓ வேடனே! நீ யாதொரு காரணத்தினால்‌ சேர்ந்திருக்கிற இரண்டு அன்றில்‌ பறவைகளீல்‌ காமத்தால்‌ மோகத்தை அடைந்திருக்கிற ஆண்‌ பறவையாகிற ஒன்றனைக்‌ கொன்றாயோ (அதனால்‌) நிலைத்திருக்கின்ற உன்‌ ஆயுட் காலத்தின்‌ இருப்பை நீ அடைய மாட்டாய்‌” என்பது இதன்‌ பொருள்‌. “ஓ ஸ்ரீநிவாசனே! தேவரீர்‌ யாதொரு காரணத்தால்‌, இராக்கதர்களான இராவணன்‌ மண்டோதரி என்ற இருவரில்‌, மன்மதனால்‌ பீடிக்கப்பட்ட ஒருவனான இராவணனைக்‌ கொன்றாயோ (அதனால்‌) நிலைத்திருக்கின்ற ஆண்டுகளின்‌ இருப்பை நீர்‌ அடைவீர்‌” என்பது இஸ் ஸ்லோகத்தின்‌ உள்ளுறை–

6-“ஆத்யஸ்ய ந: குல பதே: – நம்முடைய முன்னோரும்‌ குல நாதருமான ஆழ்வாருடைய” -ஸ்தோத்ர ரத்நம்‌, 5.

7-திருவாய்மொழி, 1:1:1.

8-“ஹர்த்தும்‌ – அருட் கடலாயும்‌, மூவுலகங்கட்கும்‌ இறைவனாயும்‌ உள்ள ஸர்வேஸ்வரன்‌ அறிவின்மையாகிய இருளைப்‌ போக்குதற்கும்‌ நலம்‌ தீங்கு ஆகியவற்றை அறிகைக்கும்‌ பெரிய விளக்குப் போன்ற பிரமாணமான சாஸ்த்ரத்தைக்‌ கொடுக்கிறான்‌.” – ஸ்ரீரங்கராஜ ஸ்தவம்‌, உத்‌, 1.

9-“க்ருபாயோகாச்ச – நித்யமான அருளோடு கூடி யிருத்தலாலும்‌” – லக்ஷ்மீ தந்த்ரம்‌.

10-“ஈசேசிதவ்ய – ஏவுகிறவன்‌ , ஏவப் படுகிறவன்‌ (பரமாத்மா, ஜீவாத்மா) என்னுமிவர்களுடைய உடையவன்‌ , உடைமை என்னும்‌ பழமையான ஸம்பந்தத்தாலும்‌” – லஷ்மீ தந்த்ரம்‌.

11-“அறிவிலா மனிசர்‌” – திருமாலை, 13.

12-“அந்தம்‌ தம – அறிவின்மை பொருள்களை மறைக்கும்‌ இருளினைப்‌ போன்றது” ஸ்ரீவிஷ்ணு புராணம்‌, 6-5:62.

13-“ஹர்த்தும்‌” – 8.

14-“உணர்வெனும்‌” – மூன்றாம்‌ திருவந்தாதி, 94.

15-ஞானச்சுடர்‌” – இரண்டாந்‌ திருவந்தாதி, 1.

16-“பிறங்கிருள்‌” – பெரிய திருமொழி, 5:7:3.

17-“பின்னிவ்வுலகினில்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 1:8:10

18-“வேதாந்த” – பெரியாழ்வார்‌ திருமொழி, 4:3:1

19-நந்தா” – பெரிய திருமொழி, 3:8:1.

20-“வேத” – திருவாய் மொழி, 4:7:10.

21-“என்‌ தக்க ஞான” – திருவாய்மொழி, 4:7:10.

22-“இவையன்றே” – பெரிய திருவந்தாதி, 3.

23-“ஸதஸதீ – நல்லதையும்‌ தீயதையும்‌ அறிகைக்கும்‌” – ஸ்ரீரங்கராஜ ஸ்தவம்‌,உத்‌ ,1.

24-“மறையாய்‌” – பெரிய திருமொழி, 8:9:4-

25-“துளக்கமில்‌” – திருச்சந்த விருத்தம்‌, 4.

26-“அகாரோ – அகாரமானது எல்லா வேதங்களாகவும்‌ விரிந்தது”

27-“மாநம்‌ – பெரிய விளக்குப்‌ போன்ற ப்ரமாணமான சாஸ்த்ரத்தை” ஸ்ரீரங்கராஜ ஸ்தவம்‌, உத்‌, 1. 1.

28-“பன்னு கலை” – பெரிய திருமொழி, 7:8:2.

29-“கலைகளும்‌”– பெரிய திருமொழி, 2:8:5

30-“அ இதி ப்ரஹ்ம – அகாரம்‌ என்பது பரம் பொருள்‌”

ஸுூத்ரம்‌-2
31-“வீடுமின்‌”
– திருவாய்மொழி, 1:2:1.
32-“அற்றிறை பற்றே” – திருவாய்மொழி, 1:2:5.

ஸூத்ரம்‌-3
33-“ஸுகீ பவேயம்‌
– ஸுக முடையவனாவேன்‌, துக்க முடையவனாவே னல்லன்‌”

ஸூத்ரம்‌- 4
34-“இன்புதுன்பளி”
– திருவாசிரியம்‌, 6.
35-“இன்னமுது” – திருவாய்மொழி, 7:1:8.
36-“அழுந்துமா”
37-“ஸம்ஸார ஸாகரம்‌ கோரம்‌ அநந்த க்லேச பாஜநம்‌” –
38-“களிப்பும்‌”
– ஞான ஸாரம்‌, 17.
39-“அந்தமில்‌” – திருவாய்மொழி, 10:9:11. 40-“சுழிபட்டோடும்‌” – திருவாய்மொழி, 8:10:5.

ஸுூத்ரம்‌-5
41-“ஸம்ஸார ஸாகரம்‌ கோரம்‌ அநந்த க்லேச பாஜநம்‌”
42-“மறந்தேன்‌”
– பெரிய திருமொழி, 6:2:2.
43-“என்னை” – திருவாய்மொழி, 2:9:9.
44-ஓடியுமுழன்றும்‌” – பெரிய திருமொழி, 1:6:6.
45-பிறவி நோய்‌” – பெரிய திருமொழி, 1:6:1.
46-ஆழியங்கை -பெரிய திருவந்தாதி, 82.
47-“நிரஸ்த – பிரமன்‌ முதலானோர்களுடைய உலகங்களின்‌ இன்பங்களையும்‌ தள்ளத் தக்கதான மேன்மையை யுடைய ஆனந்தமே வடிவமான சுகம்‌ ஒன்றையே வடிவாக உடையது” – ஸ்ரீவிஷ்ணுபுரா, 6:5:59.
48-“நின்னை” – பெரிய திருமொழி, 6:3:6.
49-“நின்ற” – திருவாய்மொழி, 8:8:4.
50-“அகற்ற” – திருவாய்மொழி, 5:7:8.
51-“அவனதருளால்‌” – திருவாய்மொழி, 8:8:2.
52- “ஆம் பரிசு” – திருமாலை, 38.
53-“ப்ராப்யஸ்ய – அடையத் தக்க பரமாத்மாவின் ஸ்வரூபத்தையும்‌, அடைகின்ற ஜீவாத்மாவின் ஸ்வரூபத்தையும்‌, அடைவதற்குரிய வழியையும்‌, அடைவதால்‌ உளதாம்‌ பயனையும்‌, அடைவதற்குத்‌ தடையாக உள்ளனவற்றையும்‌ இதிகாச புராணங்களுடன்‌ கூடின எல்லா வேதங்களும்‌ சொல்லுகின்றன. வேதங்களையும்‌,வேதங்களின்‌ பொருள்களையும்‌ அறிந்த மஹாத்மாக்களும்‌ முனிவர்களும்‌ சொல்லுகிறார்கள்‌” – ஹாரீத ஸம்ஹிதை, 9

ஸுூத்ரம்‌-6
54-“முத்திறத்து”
– திருச்சந்த விருத்தம்‌, 68.
55-“முக் குணத்து” – திருவெழு கூற்றிருக்கை, 17.

ஸூத்ரம்‌-7
56-“இருள் தரு மா ஞாலம்‌” –
திருவாய்மொழி, 10:6:1.
57-“ஜாயமாநம்‌ – இவ் வுலகத்தில்‌ பிறக்கும் போது எந்தப் புருஷன்‌ மது ஸுூதனனாகிய பகவானால்‌ கடாக்ஷிக்கப் படுகின்றானோ அவனே ஸத்வ குணத்தை யுடையனாக அறியத் தக்கவன்‌; அவனே மோக்ஷத்தை அடைவதற்குரிய மனத்தை யுடையவன்‌” பாரதம்‌, மோக்ஷ தர்மம்‌.
58-“அவன்‌ கண்களாலே” – திருவாய்மொழி, 1:9:9.-

ஸுூத்ரம்‌-8
59-“சார்ந்த விரு வல் வினை”
– திருவாய்மொழி, 1:5:10.
60-“தொல் லருள்‌ நல் வினை” – திருவாய்மொழி, 5:9:10.

ஸூத்ரம்‌-9
61-“பொய் நின்ற”
– திருவிருத்தம்‌, 1.
62-“அருள் புரிந்த சிந்தை” – இரண்டாந்‌ திருவந்தாதி, 59.
63-“ஈஸ்வரஸ்ய ஸெளஹார்த்தம்‌ – ஸர்வேஸ்வரனுடைய ஸ்நேஹமும்‌”

ஸுூத்ரம்‌-10
64-“மூதாவியில்‌”
– திருவிருத்தம்‌, 95.
65-“அடியேன்‌ அடைந்தேன்‌” – திருவாய்மொழி, 2:3:6.
66-“அஜ்ஞாநாத்‌ ஸம்ஸார: – அறிவின்மையாலே இவ் வுலகத்திலே உழலுகிறான்‌”
67-“ஜஞாநாந்‌ மோக்ஷ: – ஞானத்தாலே மோக்ஷம்‌ உண்டாம்‌”

ஸுூத்ரம்‌-11
68-“அந் நலத் தொண் பொருள்‌
” – திருவாய்மொழி, 1:2:10.
69-“இல்லது” – திருவாய்மொழி, 1:2:4.
70-“யந் நாஸ்தி – யாதொரு அசித்துப் பொருள்‌ இல்லை என்ற சொல்லால்‌ சொல்லப் படுகிறதோ” -ஸ்ரீவிஷ்ணு புராணம்‌, 2:12:37.
71-“நானிலாத” – திருச்சந்த விருத்தம்‌, 65.
72-“அந்தமும்‌ வாழ்வும்‌” – பெரிய திருமொழி, 5:7:2.
73-“அஸந்நேவ ஸ பவதி – பரம் பொருளை அறியும்‌ ஞானம்‌ ஒருவனுக்கு இல்லை யாகில்‌ அவன்‌ இருந்தும்‌ இல்லாதவன்‌ ஆகிறான்‌” – தைத்திரீய உபநிஷத்‌.
74-“கீட: பேச க்ருதா – குளவியினால்‌ கொண்டு வரப்பட்ட புழுவானது சுவர்‌ நடுவில்‌ இருப்பதைப்‌ பாராமல்‌, பரபரப்பு அச்சம்‌ முதலியவற்றின்‌ ஸம்பந்தத்தால்‌ அந்தக்‌ குளவியின்‌ உருவத்தை அடைகிறது”
75-“பொருளல்லாதவென்னை” – திருவாய்மொழி, 5:7:3.
76-“பரமம்‌ – பரம் பொருளோடு பூரணமான ஸாம்யத்தை அடைகிறான்‌”-முண்டகோபநிஷத்‌, 3:1:3.
77-“உள்ளவுலகளவும்‌” – பெரிய திருவந்தாதி, 76.
78-“ஸந்தமே – பரம் பொருளை அறியும்‌ ஞானம்‌ ஒருவனுக்கு இருக்குமே யாகில்‌ அவனை உள்ளவனாக அறிகிறார்கள்‌” – தைத்திரீய உபநிஷத்‌, ஆனந்த வல்லி.

ஸூத்ரம்‌-12
79-“பெருந்துயர்‌”
– பெரிய திருமொழி, 1:1:1.
80-“வினை பற்றறுக்கும்‌” – பெரிய திருமொழி, 11:4:9.
81-“அடைந்த வருவினை” – முதல்‌ திருவந்தாதி, 59.
82-“திருமாலே” – திருப் பல்லாண்டு, 11.
83-“உறவேல்‌ நமக்கு” – திருப்பாவை, 28.

ஸுூத்ரம்‌-13
84-“த்ரை குண்ய –
வேதங்கள்‌ ஸத்வம்‌, ரஜஸ்‌, தமஸ்‌ என்னும்‌ முக் குணங்களுடைய மனிதர்களை இலக்காக உடையன” – ஸ்ரீகீதை, 2:45.

ஸூத்ரம்‌-14
85-“எவ் வுயிர்க்கும்‌ தாயோன்‌” – திருவாய்மொழி, 1:5:3.
86-“தாயிருக்கும்‌ வண்ணமே” – பெரிய திருமொழி, 11:6:6.

ஸூத்ரம்‌-15
87-“ஸ்யேநேநாபிசரந்‌ யஜேத
– பகைவரைக்‌ கொல்ல விரும்புகிறவன் -ஸ்யேநம்‌ என்னும்‌ பெயரை யுடைய வேள்வியாலே தனது விருப்பத்தைச்‌ சாதித்துக்‌ கொள்ளக்‌ கடவன்‌” – ஆபஸ்தம்ப ஸுத்ரம்‌.
88-“ஜ்யோதிஷ்டோமேந -ஸ்வர்க்க இன்பத்தை விரும்புகிறவன் ஜ்யோதிஷ்டோமம்‌ என்னும்‌ யாகத்தினாலே தனது விருப்பத்தை முடித்துக்‌ கொள்ளக்‌ கடவன்‌.”

ஸுூத்ரம்‌-16
89-“ஆர்த்தோ ஜிஜ்ஞாஸுூ
– இழந்த செல்வத்தை மீண்டும்‌ அடைவதற்கு விருபும்‌ ஆர்த்தனும்‌, புதிய செல்வத்தை விரும்பும்‌ அர்த்தார்த்தியும்‌, ஆத்ம இன்பத்தை விரும்பும்‌ கேவலனும்‌, பகவானை அடைய விரும்பும்‌ பகவத் ப்ராப்தி காமனும்‌” ஸ்ரீகீதை, 7:16.
90-“க்ருதயுகத்தில் த்யானம்‌ செய்தும்‌,த்ரேதா யுகத்தில்‌ யாகம்‌ செய்தும்‌,த்வாபர யுகத்தில்‌ அர்ச்சனை செய்தும்‌ எது அடையப்படுகிறதோ அது கலி யுகத்தில்‌ கேசவனைத்‌ ஸ்துதிப்பதாலேயே அடையப்படுகிறது.” – ஸ்ரீ விஷ்ணு புராணம்‌, 6:2:16.
91-“பாலின்‌ நீர்மை” – திருச்சந்த விருத்தம்‌, 44.
92-“பாட்டும்‌ முறையும்‌” – நான்முகன்‌ திருவந்தாதி, 76.
93-“நாவலம்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 3:6:1.
94-“தேவர்கள்‌ மேலே கண்டவாறு பாட்டுக்களைப்‌ பாடுகிறார்கள்‌ ;ஸ்வர்க்கம்‌ மோக்ஷம்‌ ஆகிற பேறுகளை அடைவதற்கு வழியாக இருக்கிற பரத கண்டத்திலே தெய்வத் தன்மையை அடைந்து அது முடிந்தவுடன்‌ மீண்டும்‌ மனிதர்களாக எவர்கள்‌ பிறக்கிறார்களோ அவர்கள்‌ சிறந்தவர்கள்‌.” – ஸ்ரீவிஷ்ணு புராணம்‌, 2:3:24.
95-“பல சரீரங்களைப்‌ பெறுகிற ஆத்மாக்களுக்கு நொடிப் பொழுதில்‌ அழிந்து போகிற மனித சரீரம்‌ கிடைத்தல்‌ அரிது” – ஸ்ரீபாகவதம்‌, 11:2:21.
96-“உத்தமரான ஓ மைத்ரேயரே! ஓர்‌ ஆத்மாவானது இப் பரத கண்டத்திலே புண்ணியத்தின்‌ மிகுதியால்‌ ஆயிரமாயிரம்‌ பிறவிகளுக்குப்‌ பின்னர்‌ மனிதப்‌ பிறவியை அடைகிறது” –ஸ்ரீவிஷ்ணு புராணம்‌, 2:3:24.
97-“மானிடப்‌ பிறவி யந்தோ” – திருக்குறுந்தாண்டகம்‌, 8.

98-“பல சரீரங்களைப்‌ பெறுகின்ற இவ்வான்மாக்களுக்கு மிக அரிதாகக்‌ கிடைக்கின்ற மனித சரீரம்‌ நொடிப் பொழுதில்‌ அழிந்து விடுகிறது” – ஸ்ரீபாகவதம்‌, 11:2:21.
99-“மின்னின்‌ நிலையில” – திருவாய்மொழி, 1:2:2.
100-“குலங்களாய ஈரிரண்டில்‌” – திருச்சந்த விருத்தம்‌, 90.
101-“ஆகையால்‌ ஞானமுள்ள ஒருவன்‌ எப்போதும்‌ இளமையிலேயே புகழுக்குரிய காரியங்களைச்‌ செய்ய முயற்சி செய்யக்‌ கடவன்‌.” – ஸ்ரீவிஷ்ணு புராணம்‌,1:17:75.
102-“கிளரொளி இளமை” – திருவாய்மொழி, 2:10:1.
103-“யானும்‌ என்‌ நெஞ்சும்‌” – பெரிய திருவந்தாதி, 26.
104-“வேதநூற்பிராயம்‌” – திருமாலை, 3.
105-“சதாயுர்வை – மனிதன்‌ நூறு வயதினை யுடையவன்‌”
106-“அநந்த பாரம்‌ – எல்லை யில்லாத கரையை யுடைய சாஸ்த்ரங்கள்‌ பல அறியத் தக்கனவாக இருக்கின்றன. காலமோ அல்பம்‌, வருகின்ற தடைகளோ அளவில்லாதவைகள்‌” – உத்தர கீதை, 7:10.
107-“ச்ரேயாம்ஸி – மஹான்கள்‌ செய்யும்‌ காரியங்களுக்குங் கூட தடைகள்‌ பலவருகின்றன”
108-“நின்றவா நில்லா” – பெரிய திருமொழி, 1:1:4.
109-“சஞ்சலம்‌ ஹி –க்ருஷ்ணனே! அலைந்து திரியும்‌ தன்மையுடைய மனமானது எந்தக்‌ காரணத்தால்‌ வலிமை உள்ளதோ அதனால்‌ அது யாரையும்‌ கலங்கும்படி செய்யும்‌; இது உறுதி.” – ஸ்ரீகீதை, 6:34.
110-“கலை யறக்‌ கற்ற மாந்தர்‌” – திருமாலை, 7.
111-“ஆமாறறிவுடையார்‌” – பெரிய திருவந்தாதி, 37.
112-“அஸாரமல்பஸாரஞ்ச – ஸாரமில்லாத புறம்பான சாஸ்த்ரங்களையும்‌, அல்ப ஸாரமான நாராயண அநுவாகத்தையும்‌ விட வேண்டும்‌; கடலிலே அமுதம்‌ போன்று ஸார தமமான விஷ்ணு காயத்ரியை எடுத்துக் கொள்ள வேண்டும்‌” வைகுண்ட தீக்ஷிதீயம்‌.
113-“நாராயணாய வித்மஹே – நாராயணனை உபாசிக்கிறோம்‌” – புருஷ ஸுத்தம்‌.
114-“ஓத்தின்‌ பொருள்‌ முடிவும்‌” – இரண்டாந்‌ திருவந்தாதி, 39.
115-“ருசோ யஜும்ஷி – ரிக்‌ வேதம்‌, யஜுர்‌ வேதம்‌, ஸாம வேதம்‌ அப்படியே அதர்வண வேதம்‌ மற்றுமுண்டான இதிஹாஸம்‌ முதலானவைகளைல்லாம்‌ திருவெட்டெழுத்தினுள்‌ பொதிந்து கிடக்கின்றன.” – பாஞ்சராத்ரம்‌.
116-“தேனும்‌ பாலும்‌” – பெரிய திருமொழி, 6:10:6.
117-“தூவியம்‌ புள்ளுடைத்‌ தெய்வ வண்டு” – திருவாய்மொழி, 9:9:4
118-“அன்னமாய்‌” – பெரிய திருமொழி, 5:7:3.
119-“நானும்‌ சொன்னேன்‌” – பெரிய திருமொழி, 6:10:6.
120-“ஓதும் போல்‌” – திருவாய்மொழி, 1:8:10.
121-“அமுதம்‌ கொண்ட பெருமான்‌” – பெரிய திருமொழி, 6:10:3.
122-“நால் வேதக்‌ கடல்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 4:31:11.
123-“அமரர்‌ பெரு விசும்பு” – பெரிய திருமொழி, 1:4:4.
124-“நர நாரணனாய்‌!” – பெரிய திருமொழி, 10:6:1.

ஸுூத்ரம்‌-17
125-“இருள்கள்‌ கடியும்‌”
– திருவாய்மொழி, 10:7:7.
126-“க்ருஷ்ண த்வைபாயணம்‌ -க்ருஷ்ண த்வைபாயனர்‌ என்ற பெயருள்ள வ்யாஸ முனிவரை இறைவனான நாராயணனாக அறிவாயாக. செந்தாமரக் கண்ணனான அவ் விறைவனைத்‌ தவிர மற்றையோர்‌ எவர் தாம்‌ மஹா பாரதத்தைச்‌ செய்தவராக ஆவார்‌.” – ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌, 3:4:5.
127-“வதரியாச்சிராமத்துள்ளானை” – பெரிய திருமொழி, 1:4:10.

ஸுூத்ரம்‌-18
128-“பழுதிலா ஒழுகலாற்று”
– திருமாலை, 42.
129-“கண்ணன்‌ கழலினை” – திருவாய்மொழி, 10:5:1.
130-“ஸ்ரத்தைவ – ஆடவர்களுக்குத்‌ திருவெட்டெழுத்தினைக்‌ கற்பதற்கும் ஸ்ரத்தையே காரணம்‌.” – பாஞ்சராத்ரம்‌.
131-“நானும்‌ சொன்னேன்‌” – பெரிய திருமொழி, 6:10:6.

ஸுூத்ரம்‌-19
132-“ஆத்மா வா –
ஏ மைத்ரேயி! பரம் பொருள்‌ கேட்கத் தக்கவன்‌, மனனம்‌ செய்யத் தக்கவன்‌ ,த்யானம்‌ செய்யத் தக்கவன்‌, நேரே பார்க்கத் தக்கவன்‌” -ப்ருஹ, உபநி.
133-“ஆத்மா இதி ஏவ – ஆத்மா என்றே வாழ்த்தி வணங்க வேண்டும்‌” -ப்ருஹ உபநி.
134-“ஓம்‌ இதி – ஆத்மாவை ஓம்‌ என்று த்யானம்‌ செய்ய வேண்டும்‌” -முண்டோக உபநிஷத்‌.
135-“அம்ருதஸ்ய – இந்தப்‌ பரம் பொருளே மோக்ஷத்திற்குக்‌ காரணன்‌” -முண்டோக உபநிஷத்‌..
136-“பலமத உப பத்தே: – எல்லாப்‌ பலன்களும்‌ இந்தப்‌ பரம் பொருளிடமிருந்து தான்‌ கிடைக்கின்றன. அது யுக்திக்குப்‌ பொருந்தியது” – உத்தர, மீமாம்சை, 3:2:8.
137-“பிறவிக் கடல்‌“- திருவாய்மொழி, 2:8:1.
138-” விஷ்ணு போதம்‌ – பிறவிப்‌ பெருங்கடலில்‌ மூழ்கிக்‌ கிடக்கிற இம் மக்களுக்கு எங்கும்‌ பரந்துறையும்‌ விஷ்ணுவாகிற ஓடத்தைத்‌ தவிர வேறு ஒரு ஸாதனம்‌ இல்லை” – விஷ்ணு தர்மம்‌.
139-“வைகுந்தன்‌” – நாச்சியார்‌ திருமொழி, 5:4.
140-“கூவிக்‌ கொள்ளும்‌ காலம்‌ இன்னம்‌ குறுகாதோ” – திருவாய்மொழி, 6:9:9.
141-“ஆக்கை விடும் பொழுதெண்ணே” – திருவாய்மொழி, 1:2:9.

ஸூத்ரம்‌-20
142-“உணர்ந்துணர்ந்து”
– திருவாய்மொழி, 1:3:6.
143-“உணர்வு முயிரு முடம்பும்‌” – திருவாய்மொழி, 8:8:3.
144-“மெய்ம்மையை” – திருமாலை, 38.

ஸூத்ரம்‌- 21
145-“பதிம்‌ விஸ்வஸ்ய
– உலகத்திற்குத்‌ தலைவன்‌ இறைவன்‌ “- புருஷ ஸூக்தம்‌.
146-“யஸ்யாஸமி – இறைவனுக்கு அடியவனாக இருக்கிறேன்‌”- அச்சித்ரம்‌.
147-“நஹி விஜ்ஞாதுர்‌ – ஞானத்திற்கு இருப்பிடமான இவ் வுயிரினுடைய ஞானத்திற்கு அழிவில்லை”-ப்ருஹ, உபநி, 6:3:10.
148-“ஜாநாத்யேவாயம்‌ புருஷ: – உயிர்‌ அறியும்‌ பொருள்‌” -ப்ருஹ, உபநி.
149-“ஸோஸ்நுதே ஸர்வாந்‌ – அந்தப் பரம் பொருளோடு கூட எல்லா இன்பங்களையும்‌ இவ் வுயிர்‌ நுகர்கின்றது” – தைத்திரியம்‌.-

ஸூத்ரம்‌-23
150-“முளைத்தெழுந்த திங்கள்‌ தானாய்‌
” – திருநெடுந்தாண்டகம்‌, 1.
151-“யதா ஸுர்ய: – எப்படிச்‌ ஸூர்யனோ அப்படி ஞானம்‌” – ஸ்ரீவிஷ்ணு புராணம்‌,6:5:62.
152-“விதியில்‌ காண்பார்‌” – திருக் குறுந் தாண்டகம்‌, 18.

ஸூத்ரம்‌-25
153-“செயல்‌ தீர”
– நான்முகன்‌ திருவந்தாதி, 88.
154-‘பரகதாதிசயாதாநேச்சயா – மற்றொன்றுக்கு அதிசயத்தை உண்டு பண்ண வேணு மென்ற விருப்பத்தால்‌ கொள்ளப்படும்‌ தன்மை எதற்கு வடிவாக அமைந்துள்ளதோ அது அடிமைப் பட்டது.” – ஸ்ரீபாஷ்யம்‌.
155-“ஆநந்தம்‌ அவன் ப்ரீதியைத்‌ துளிரெழுப்ப” – நம்பிள்ளை ஸ்ரீஸுத்தி.

ஸுூத்ரம்‌- 27
156-“யஜேத
– வேள்வியைச்‌ செய்யக் கடவன்‌” – யஜுர்‌ வேதம்‌.
157-“ஜுஹுயாத்‌ – அவியை இடக் கடவன்‌” – கர்ம மீமாம்சை.
158-“உகந்து பணி செய்து” – திருவாய்மொழி, 10:8:10.

ஸூத்ரம்‌- 28
159-“கண்டியூரரங்கம்‌
” – திருக் குறுந் தாண்டகம்‌, 19.
160-“விளக்கினை” – திருக்குறுந்தாண்டகம்‌, 18.
161-“மற்றையார்‌” – திருக்குறுந்தாண்டகம்‌, 19.

ஸூத்ரம்‌- 29
162-“எத்தவம்‌”
– நான்முகன்‌ திருவந்தாதி, 2. 163-“தனமூர்த்தி” – திருவாய்மொழி, 5:2:8. 164-“அவரவர்‌” – திருவாய்மொழி, 1:1:5.
165-“நல்லதோரருள்‌” – திருமாலை, 10.
166-“கருத்துக்கு” – திருவாய்மொழி, 3:6:11.
167) “ஸ்வ கர்ம -ப்ராஹ்மணன்‌ தான்‌ செய்ய வேண்டிய செயல்களாவன; வேதம்‌ ஓதல்‌ ஓதுவித்தல்‌, யாகம்‌ செய்தல்‌ செய்வித்தல்‌, தானம்‌ கொடுத்தல்‌ வாங்குதல்‌, தாய பாகத்தால்‌ கிடைத்த செல்வம்‌, கதிர் நெல்‌ பொறுக்குவது, வேறு ஒருவராலும்‌ எடுத்துக் கொள்ளப்படாக பழங்களையும்‌ கிழங்குகளையும்‌ விரும்புதல்‌ இவையாம்‌. மேற் கூறிய ஆறு தொழில்களில்‌ வேதம்‌ ஓதுவித்தல்‌, யாகம்‌ செய்வித்தல்‌, தானம்‌ வாங்குதல்‌ என்னும்‌ இம்மூன்றூம்‌ நீங்கலாக உள்ள மற்றைய மூன்றும்‌ க்ஷத்திரியனுக்கும்‌ உரியனவாம்‌; இவற்றோடு தண்டித்தல்‌, போர்‌ செய்தல்‌ என்னுமிவை க்ஷத்திரியன்னுக்கே உரியனவாம்‌. வைசியனுக்கு க்ஷத்திரியனுக்குக்‌ கூறப்பட்டனவற்றுள்‌ தண்டித்தல்‌, போர்‌ செய்தல்‌ என்னுமிரண்டும்‌ நீங்கலாக உள்ள மற்றைய தொழில்கள்‌ மூன்றும்‌ உரியனவாம்‌; அவற்றோடு பயிரிடுதல்‌, பசுக்களைக்‌ காத்தல்‌, வியாபாரம்‌ செய்தல்‌ என்னுமிவை வைசியனுக்கே உரியனவாம்‌.” – ஆபஸ்தம்ப ஸூத்ரம்‌.
168-“சுச்ரூஷா – மற்றைச்‌ சாதியினர்கள்‌ மேற் கூறிய காரியங்களைச்‌ செய்யும் போது அவர்கட்கு உதவி புரிதல்‌ நான்காம்‌ வருணத்தவர்க்கு உரிய தொழிலாம்‌.” ஆபஸ்தம்ப ஸூத்ரம்‌.
169-“ஸந்த்யஜ்ய –க்ராமத்தில்‌ உள்ள எல்லா விதமான உணவுகளையும்‌ ஆடை ஆபரணங்கள்‌ முதலானவற்றையும்‌ விட்டு” – மநு ஸ்ம்ருதி.
170-“வஸீத – தோலை யாவது மரவுரியை யாவது உடுத்திக் கொள்ள வேண்டும்‌.” மநு ஸ்ம்ருதி.
171-“அநக்நி – நெருப்பு இல்லாதவனாயும்‌ வீடு இல்லாதவனாயும்‌ இருக்க வேண்டும்‌.” – மநு ஸ்ம்ருதி.
172-“அத்தாணிச்‌ சேவகம்‌” – திருப்பல்லாண்டு, 8.
173-“யதிஹ்யஹம்‌ – ஏ பார்த்தனே! நான்‌ என்னுடைய குலத்துக்குரிய தர்மங்களை எப்போதும்‌ செய்து கொண்டே இருப்பேனே யானால்‌ என்னுடைய வழியை மனிதர்கள்‌ எல்லா வகையாலும்‌ பின்பற்றுவார்கள்‌; நான்‌ என்னுடைய கர்மங்களைச்‌ செய்யாமற் போவேனே யானால்‌ இந்த மனிதர்கள்‌ கெட்டுப்‌ போவார்கள்‌; கலப்புச்‌ சாதிகளையும்‌ உண்டு பண்ணினவன்‌ ஆவேன்‌; இம் மனிதர்களைக்‌ கொன்றவனாகவும்‌ ஆவேன்‌.” – ஸ்ரீகீதை, 3:23-24.

ஸூத்ரம்‌- 32
174-“ஓ! ப்ராஹ்மணர்களே! நாங்கள்‌ வைஷ்ணவர்கள்‌; விஷ்ணுவிற்கு அடிமை செய்கிறவர்கள்‌; நீங்கள் ப்ராஹ்மணர்கள்‌; சாதிக்கு ஏற்பட்ட தர்மங்களைச்‌ செய்பவர்கள்‌; கைங்கர்யத்தைச்‌ செய்து போருகின்ற எங்களுக்கும்‌ சாதிக்குரிய தர்மங்களைச்‌ செய்து போருகின்ற உங்களுக்கும்‌ ஒரு சேர்க்கை இல்லை.” வில்லிபுத்தூர்‌ பகவர்‌ வார்த்தை.
175-“யேச வேத விதோ விப்ரா
: – எந்த அந்தணர்கள்‌ வேதத்தின்‌ முன்‌ பாகத்தை அறிந்தவர்களோ” – பாரதம்‌.
176-“காயத்ரீம்ச் சந்தஸாம்‌ மாதா – சந்தஸ்ஸுகளுக்கெல்லாம்‌ தாய்‌ காயத்திரீ” தைத்திரீயம்‌.
177-“யேசாத் யாத்ம விதோ ஜநா: – எந்த மக்கள்‌ வேதாந்தம்‌ அறிந்தவர்களோ” பாரதம்‌.
178-“ருசோ யஜும்ஷி – ரிக்‌ வேதங்கள்‌ யஜுர்‌ வேதங்கள்‌ ஸாம வேதங்கள்‌ அப்படியே அதர்வண வேதங்கள்‌ மற்றுமுண்டான இதிஹாஸ புராணங்களெல்லாம்‌ திருவெட்டெழுத்தினுள்‌ பொதிந்து கிடக்கின்றன.” – பாஞ்சராத்ரம்‌.
179-“பெற்ற தாயினுமாயின செய்யும்‌ – பெரிய திருமொழி, 1:1:9.
180-“ஸஹி வித்யாதஸ்‌ – ஆசார்யன்‌ ஞானத்தினால்‌ அவனைப்‌ பிறப்பிக்கிறான்‌; அந்த ஞானத்தால் அடையும்‌ பிறவியே ஒருவனுக்கு உயர்ந்த பிறவியாகும்‌.” – ஆபஸ்தம்ப ஸூத்ரம்‌.

ஸூத்ரம்‌- 34
181-“சாதி யந்தணர்‌”
– திருமாலை, 43.
182-துணை நூல்‌ மார்வில்‌ அந்தணர்‌” – பெரிய திருமொழி, 1:5:9.
183-தீ ஓம்பு கை மறையோர்‌” – பெரிய திருமொழி, 7:9:7.
184-“நந்தா வண் கை மறையோர்‌” – பெரிய திருமொழி, 6:7:8.
185-“திருமாலடியார்‌” – திருவாய்மொழி, 5:6:11.
186-அணி யரங்கன்‌ திருமுற்றத் தடியார்‌” – பெருமாள்‌ திருமொழி, 1:10.
187-திருமாலுக்குரிய தொண்டர்‌” – திருவாய்மொழி, 6:9:14.
188-திரு நாரணன்‌ தொண்டர்‌” – திருவாய்மொழி, 3:7:4.

ஸுூத்ரம்‌-35
189-“குலந்தரும்‌”
– பெரிய திருமொழி, 1:1:9. 190-“மாசில்‌ குடி” – மூன்றாந்திருவந்தாதி, 10.
191-“வேங்‌கடத்தைப்‌ பதியாக வாழ்வீர்காள்‌” – நாச்சியார்‌ திருமொழி, 8:9.
192-“கோயிலில்‌ வாழும்‌ வைட்டணவன்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 5:1:3.
193-“ஏகாந்தீவயபதேஷ்டவ்யோ – பரம ஞானியானவன்‌ கிராமம்‌ குலம்‌ இவை முதலியனவற்றைக்‌ கொண்டு சொல்லத் தக்கவன்‌ அல்லன்‌; பகவானுடைய ஸம்பந்தத்தை யிட்டுச்‌ சொல்லத் தக்கவன்‌. அந்தப்‌ பரம ஞானிக்கு எல்லாம்‌ அவனே யல்லவா?” – பரமை காந்தி தர்மம்‌-
194-“ஸந்ததிர்‌ கோத்ர – சந்ததி, கோத்ரம்‌, ஜநநம்‌, குலம்‌, அபிஜநம்‌, அந்வயம்‌ என்பன ஒரு பொருட் சொற்கள்‌.” – அமரம்‌.
195-“சரண சப்த: – சரண என்ற சொல்‌ காடகம்‌, கலாபம்‌ முதலிய வேத சாகைகளில்‌ முக்கியப்‌ பொருளை யுடையது; அந்தந்த வேத சாகைகளை யோதுகிற புருஷா்களிடத்தில்‌ முக்கிய மில்லாத பொருளை யுடையது”
196-“சீஷாயாம்‌ வர்ண சிக்ஷா – சிகை யென்னும்‌ வேதாங்கத்தில்‌ எழுத்துக்கள்‌ ஒலிக்கிற முறை சொல்லப் படுகிறது” – ஸ்ரீரங்கராஜ ஸ்தவம்‌, உத்தர சதகம்‌, 18. 197-“கல்பேநுஷ்டாநம்‌ உக்கும்‌ – கல்ப ஸுூத்ரத்தில்‌ கர்மாநுஷ்டான முறை சொல்லப் படுகிறது” – ஸ்ரீரங்கராஜஸ்தவம்‌, உத்தர சதகம்‌, 18.
198-“பத்யு:ஸ்ரிய: – திருமாலின்‌ திருவருளால்‌ கிடைத்த முற்றுணர்வாகிற செல்வத்தை யுடையவரும்‌,ப்ரபந்ந ஜநங்களுக்கு மூல புருஷருமான நம்மாழ்வாரைச்‌ சரணடைகிறேன்‌.” – பராங்குசாஷ்டகம்‌, 4.

ஸூத்ரம்‌-37
199-“ஸ்வாத்யாயோத்யேதவ்ய
: – வேதமானது கற்கத் தக்கது” – ஆரணம்‌.
200-“சந்தங்களாயிரம்‌” – திருவாய்மொழி, 10:9:14.
201-“அறியக் கற்று” – திருவாய்மொழி, 5:5:11.
202-“அத்யேதவ்யம்‌ – வேத ரூபமாகச்‌ செய்யப்பட்ட இத்திருவாய்மொழி அந்தணர்களால்‌ அத்யயனம்‌ செய்யத்தக்கது”-

ஸுூத்ரம்‌- 38
203-“மிக்க வேதியர்‌”
– கண்ணி நுண்‌சிறுத் தாம்பு, 9.
204-“கற்றுணர்ந்த” – முதல்‌ திருவந்ததாதி, 66.
205-“அயல் சதுப் பேதிமார்‌” – திருமாலை, 39.
206-“விஷ்ணு பக்தி – எவனொருவன்‌ எல்லா வேத சாஸ்த்ரங்களையும்‌ அறிந்தவனாக இருந்தும்‌ விஷ்ணுவினிடத்தில்‌ பக்தி யில்லாமல்‌ இருக்கின்றானோ அவனுக்கு ப்ராஹ்மணனாம்‌ தன்மை சித்தியாது; அவனுடைய பிறவி ஆராயத் தக்கதாகும்‌” – பாத்மபுராணம்‌.
207-“ய: புத்ர: பிதரம்‌ – எந்தப்‌ புத்திரன்‌ தந்தையை வெறுக்கிறானோ அந்தப்‌ புத்திரனை வேறு ஒருவனுக்குப்‌ பிறந்தவனாக அறிதல்‌ வேண்டும்‌; எவன்‌ விஷ்ணுவை வெறுக்கிறனோ அவனைச்‌ சண்டாளனுக்குப்‌ பிறந்தவை அறிதல்‌ வேண்டும்‌”
“நலத்தின் கண்‌ நாரின்மை தோன்றின்‌ அவனைக்‌
குலத்தின்‌ ௧ண்‌ ஐயப்‌ படும்‌.
” – குறள்‌-

ஸுூத்ரம்‌-39
208-“சந்தங்களாயிரம்‌”
– திருவாய்மொழி, 10:9:11.
209-“ஓதுவாரோத்தெல்லாம்‌” – திருவாய்மொழி, 3:1:6.

ஸூத்ரம்‌- 41
210-“செந்திறத்த தமிழ்‌”
– திருநெடுந்தாண்டகம்‌, 4.-

ஸூத்ரம்‌- 42-
211-“வடமொழி மறை”
– திருவாய்மொழி, 8:9:8.-

ஸுூத்ரம்‌-43
212-“இருந்தமிழ்‌ நூற்‌ புலவன்‌
” – பெரிய திருமொழி, 1:7:10.
213-“கலியன்வாயொலி பெரிய திருமொழி, 1:4:10.
214-“நயநின்ற நன்மாலை” – முதல்‌ திருவந்தாதி, 57.
215-“பொய்நின்ற ஞானமும்‌” – திருவிருத்தம்‌, 1.
216-“வாடினேன்‌ வாடி” – பெரிய திருமொழி, 1:1:1.
217-“சீ க்ஷாயாம்‌ – ஸ்ரீரங்கநாதனே! சிகை என்னும்‌ வேதாங்கத்தில்‌ எழுத்துக்களை உச்சரிக்கும்‌ முறையும்‌,வ்யாகரணத்தாலும்‌, நிருக்தத்தாலும்‌ பதங்களின்‌ அறிவும்‌, சந்தஸ்‌ என்னும்‌ வேதாங்கத்தில்‌ காயத்ரி முதலான சந்தஸ்ஸுக்களின்‌ இலக்கணமும்‌,ஜ்யோதிஷத்தில்‌ கர்மங்களைச்‌ செய்ய வேண்டிய காலமும்‌, கல்ப கத்ரத்தில்‌ கர்மாநுஷ்டானமும்‌, தர்க்க சாஸ்த்ரத்திலும்‌ மீமாம்ஸையிலும்‌ , தெளிவான பொருள்களும்‌, புராணங்களிலும் ஸ்ம்ருதிகளிலும்‌ கருத்துப்‌ பொருள்களும்‌ சொல்லப் படுகின்றன; இந்த வேதாங்கங்களோடு கூடின வேதங்கள்‌ தேவரீரைத்‌ தேடுகின்றன” – ஸ்ரீரங்கராஜஸ்தவம்‌, உத்தர, 18.-

ஸூத்ரம்‌-44
218-“அங்காநி –
ஆறு அங்கங்கள்‌, நான்கு வேதங்கள்‌, மீமாம்ஸா ஸாஸ்த்ரம்‌, தர்க்க ஸாஸ்த்ரம்‌, புராணம்‌, தர்ம ஸாஸ்த்ரம்‌ என்னுமிவைகள்‌ பதினான்கு கலைகள்‌.” ஸ்ம்ருதி –

ஸுூத்ரம்‌-45
219-“வேதநூல்‌”
– திருமாலை, 3.
220-“இருந் தமிழ்‌ நூல்‌” – பெரிய திருமொழி, 1:7:10-
221-ஸ்ருதிஸ் ஸ்ம்ருதிர்‌ மமைவாஜ்ஞா – ஸ்ருதிகளும் ஸ்ம்ருதிகளும்‌ என்னுடைய ஆணை ” – பாஞ்ச ராத்ரம்‌.
222–“ஆணை யாயிரம்‌” – திருவாய்மொழி, 6:3:11.
223-“வசையில்‌ நான்மறை” – பெரிய திருமொழி, 5:3:2.
224-“ஏதமில்‌ ஆயிரம்‌” – திருவாய்மொழி, 1:6:11.
225–“சுடர்மிகு சுருதி” – திருவாய்மொழி, 1:1:7. )
226-“ஸ்ரூயதே இதி ஸ்ருதி: – கேட்கப்பட்டு வருகின்ற காரணத்தால் ஸ்ருதி என்று பெயர்‌.”
227-“செவிக்கினிய செஞ்சொல்லே” – திருவாய்மொழி, 10:6:11.
228-“வேதநூலோதுகின்றதுண்மை” – திருச்சந்த விருத்தம்‌, 72.
229-“பொய்யில்‌ பாடல்‌” – திருவாய்மொழி, 4:3:11.
230–பண்டை நான்மறை” – பெரிய திருமொழி, 5:7:1.
231-“நிற்கும்‌ நான்மறை” – திருவாய்மொழி, 6:5:4.
232-“முந்தையாயிரம்‌” – திருவாய்மொழி, 6:5:11.
233-“அழிவில்லாவாயிரம்‌” – திருவாய்மொழி, 9:7:11.

ஸுூத்ரம்‌-46
234-“அநாதி நிதநா
– தோற்றக் கேடு இல்லாததாய்‌ இருக்கிற இந்த வேத வாக்கானது பிரமனாலே உண்டாக்கப் பட்டது” -ஸ்ம்ருதி.
235-“முன்னம்‌ திசை முகனை” – பெரிய திருமடல்‌, 10.

ஸூத்ரம்‌-47
236-“நால்வேதங்கண்டானே
” – பெரிய திருமொழி, 8:10:1.
237-“அஷ்டாதசபுராணாநாம்‌ – சத்யவதியின்‌ பிள்ளையான வியாச முனிவர்‌ பதினெட்டுப்‌ புராணங்களையும்‌ செய்தவர்‌.”
238- “ஸங்கீர்ணபுத்தயோ – கலங்கின அறிவினை யுடைய பிரமன்‌, சிவன்‌ முதலான தேவர்கள்‌, எல்லா வுயிர்கட்கும்‌ புகலிடமானவனும்‌ ஒருவித குற்றமும்‌ இல்லாதவனுமான நாராயணனைச்‌ சரணமாக அடைந்தார்கள்‌; அவர்களால்‌ கூறப்பட்ட விண்ணப்பத்தைக்‌ கேட்ட புருஷோத்தமனோ வென்னில்‌; பராசர முனிவருக்குச்‌ சத்தியவதியினிடத்தில்‌ மஹா யோகியாக அவதரித்தார்‌.”
239- “க்ருஷ்ணத்வைபாயநம்‌ -க்ருஷ்ண த்வைபாயநர்‌ என்ற பெயருள்ள வியாச முனிவரை, இறைவனான நாராயணனாக அறியக் கடவாய்‌.”
240-“தார்ச்சநாத்‌ ருஷி: – பார்ப்பதனாலே ரிஷி” “மநநசீலோ முநி: – மனன சீலத்தை யுடையவனாகையாலே முநி “”கவி;க்ராந்ததர்ச்சீ – கவி, நுல்களைப்‌ பார்ப்பவன்‌-
241-“ஸ்ரூதயாம்‌ – ஜநமேஜயனே! அறத்திலும்‌, பொருளிலும்‌, காமத்திலும்‌, மோக்ஷத்திலும்‌ மஹாத்மாவாகிய அந்த வ்யாஸ ரிஷியினுடைய சிங்க நாதம்‌ போன்ற இது கேட்கப்படட்டும்‌.” – பாரதம்‌.
242-“ஏவம்விதம்‌ – எந்த மஹாத்மாவால்‌ இவ்விதமான பாரதம்‌ சொல்லப்பட்டதோ அந்த வ்யாசராகிய மஹா முனிவர்‌”- பாரதம்‌.
243-“ஸாக்ஷாத்‌ லோகாந்‌ – உலகங்களைத்‌ தூய்மை செய்கிற கவிகளுக்குள்‌ முதன்மை பெற்றவர் வ்யாஸார்‌”- பாரதம்‌. 244-“நம ரு௬ுஷிப்யோ – மந்திரங்களைக்‌ கூறிய ரிஷிகளுக்கு வணக்கம்‌”
245–“பகவாந்‌ செளநகமுநி: – பகவானாகிய செளனக முனி”
246-“ருஷிம்‌ ஜுஷா மஹே – பரம்பொருள்‌ விஷயமாய்த்‌ தமிழிலே உள்ள ஆயிரம்‌ பாசுரங்களுடைய திருவாய்மொழி என்னும்‌ உபநிஷத்தை எவர்‌ அறிந்தாரோ, அப்படிப்பட்டவராய்‌, இவ்வுலகத்தில்‌ அவதரித்த க்ருஷ்ணபகவான்‌ விஷயத்தில்‌ உண்டான ஆசையின்‌ உருவம் போல்‌ இருக்கிற ரிஷியாகிய நம்மாழ்வாரை வணங்குகிறோம்‌” – ஸ்ரீரங்கராஜஸ்தவம்‌, பூர்வ, 6

ஸுூத்ரம்‌-48
247-“உலகம்‌ படைத்தான்‌ கவி”
– திருவாய்மொழி, 3:9:10.
248-“யதா பூர்வ – பிரமன்‌, ஸூரியனையும்‌ சந்திரனையும்‌ முன்‌ கல்பத்தில்‌ இருந்தது போலவே படைத்தார்‌.” – தைத்திரியோபநிஷத் .

ஸுூத்ரம்‌-49
249–“உன்னியயோகத்துறக்கம்‌”
– பெரிய திருமடல்‌, 8.
250-“உணர்ந்தாய்‌” – இரண்டாந்‌ திருவந்தாதி, 48.
251-“திசைமுகனார்‌” – பெரிய திருமொழி, 2:2:7.
252-“யோ வை வேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை – எந்தப்‌ பரம புருஷன் அந்தப்‌ பிரமனுக்கு நான்கு வேதங்களையும்‌ உபதேசிக்கின்றானோ” -ஸ்வேதாஸ்வர உபநிஷத்‌.
253-“சந்தச்‌ சதுமுகன்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 2:5:8.
254-“சுலங்கலந்த செஞ்சடை” – திருச்சந்த விருத்தம்‌, 113.
255-“வெண்புரிநூல்‌ மார்வன்‌” – முதல்‌ திருவந்தாதி, 46.
256–“மானுரியதளுமுடையவர்‌” – பெரிய திருமொழி, 10:9:4.
257-“பிறர்‌ மனை திரிதந்துண்ணும்‌” – திருக்குறுந்தாண்டகம்‌, 19.
258-“காமனுடல்‌ கொண்ட தவத்தார்‌” – நான்முகன்‌ திருவந்தாதி, 78.
259–“இருக்கிலங்கு திருமொழிவா யெண்‌ தோள் ஈஸர்‌” – பெரிய திருமொழி, 6:6:8. ) 260-“ப்ரஹ்மண: புத்ராய ஜ்யேஷ்ட்டாய – பிரமனுடைய முதல்‌ புதல்வனானவனுக்கு” 261) “சரணா மறை பயந்த” – முதல்‌ திருவந்தாதி, 60.
262) “ஆதுமில்காலத் தெந்தை” – திருவாய்மொழி, 3:4:4.
263-“ஒன்றும்‌ தேவும்‌” – திருவாய்மொழி, 4:10:1.
264-“வாய் முதலப்பன்‌” – திருவாய்மொழி, 7:9:3.
265-“பீதக வாடைப் பிரானார்‌ பிரம குருவாகி” – பெரியாழ்வார்‌ திருமொழி, 5:2:8.
266-“இராப் பகலோதுவித்து” – பெரியாழ்வார்‌ திருமொழி, 5:2:3.
267-“என்‌ முன்‌ சொல்லும்‌” – திருவாய்மொழி, 7:9:2.
268–“திருநாமச் சொல்‌ கற்றனமே” – திருவிருத்தம்‌, 64.
269-“நாவினால்‌ நவிற்றின்பமெய்தினேன்‌” – கண்ணிநுண்சிறுத்தாம்பு, 2.
270-“குருகூர் நம்பி பாவினின்னிசை பாடித் திரிவன்‌”– கண்ணிநருண்சிறுத்தாம்பு,2.
271-“நன்மையால்‌ மிக்க நான்மறை யாளர்கள்‌“- கண்ணிநுண்‌சிறுத்தாம்பு, 5. 272-“அன்னையாயத்தனாய்‌”– கண்ணிநுண்‌சிறுத்தாம்பு, 5.
273-“ஓதவல்ல பிராக்கள்‌” – திருவாய்மொழி, 9:1:11.
274-கன்மின்கள்‌ என்றும்மை யான்‌” – திருவாய்மொழி, 6:8:6.
275-“சொல்‌ பயிற்றிய” – திருவாய்மொழி, 9:5:8.
276-“ஓதுவாரோத்து” – திருவாய்மொழி, 3:1:6.
277-“சடகோபன்சொல்‌” – திருவாய்மொழி, 1:2:11.

ஸூத்ரம்‌-50
278-“பண்ணார்‌ பாடல்‌”
– திருவாய்மொழி, 10:7:5.
279-“பண்புரை வேதம்‌” – திருவாய்மொழி, 6:6:5.
280-“இசை கொள் வேதம்‌” – பெரிய திருமொழி, 5:3:2.

ஸூத்ரம்‌- 51
281-“ருசஸ்‌ ஸாமரஸ:
– ருக்குக்கு ஸாமம்‌ ரஸமாகும்‌.” – சாந்தோக்ய உபநிஷத்‌.
282-“சொல்லார்‌ தொடையல்‌” – திருவிருத்தம்‌, 100.
283-“இசை கூட்டி” – திருவாய்மொழி, 2:4:11.
284-“அமர்சுவை யாயிரம்‌” – திருவாய்மொழி, 1:3:11.-

ஸூத்ரம்‌- 52
285–“சாமவேதக தனாய”
– திருச்சந்த விருத்தம்‌, 14.
286-“சாமியப்பன்‌” – பெரிய திருமொழி, 2:2:7.
287-“ஸாமவேதோஸ்மி – வேதங்களில்‌ நான்‌ ஸமமாகிறேன்‌” – ஸ்ரீகீதை,10:22.
288-ஸாந்தோகன்‌ பெளழியன்‌” – பெரிய திருமொழி, 5:5:9.
289-யாழ்‌ பயில்‌” – திருவாய்மொழி, 2:3:7.
290-“யாழ்‌ நரம்பில்‌ பெற்ற பாலையாகி” – பெரிய திருமொழி, 7:3:7.
291-“ஸாம்ந உத்கீதோ ரஸ: – ஸாமத்துக்கு உத்கீதம்‌ சுவையாக இருப்பது”-292–“ஓமித்யேததக்ஷாமுத்கீதமுபாஸீத – உத்கீதம்‌ என்ற பாகத்துக்கு உறுப்பான ஓம்‌ என்னும்‌ இந்த எழுத்தினைத்‌ தியானம்‌ செய்யக் கடவன்‌” – சாந்தோக்யம்‌.
293-“உயர்ந்தே” – திருவாய்மொழி, 10:10:11.
294-“சூழ்விசும்பணிமுகில்‌” – திருவாய்மொழி, 10:9:1.
295-“ஏதத்‌ ஸாம காயந் நாஸ்தே – அந்த ஸாமத்தைக்‌ கானம்‌ செய்து கொண்டிருக்கிறான்‌” – தைத்திரீயம்‌. 296–“அஹமந்நாத: – நான பரமாத்மா வாகிற இனிய பொருளை அனுபவிக்கிறவன்‌.” தைத்திரீயம்‌.
297–“தொண்டர்க்கமுதுண்ண” – திருவாய்மொழி, 9:4:9.
298-“ஸர்வேப்யொபி – எல்லா வேதங்களைக்‌ காட்டிலும்‌ ஸாம வேதத்தின்‌ ஒலியானது பெரியதாக ஆயிற்று; அந்த ஸாம வேதத்தின்‌ ஒலியாலே பிரமாண்டமாகிய மண்டபமானது மிகவும்‌ எதிரொலி செய்தது”
299-“பாடுநல்வேதவொலி” – திருவாய்மொழி, 5:9:3.

ஸூத்ரம்‌-53
300-“காரார்ப் புரவி யேழ்‌ பூண்ட”
– சிறிய திருமடல்‌.
301-“ஒரு காலுடைய தேர்‌” – பெரிய திருமொழி, 5:7:8.
302-“ஸப்த யுஞ்ஜந்தி ரத மேக சக்ரம்‌ – ஒரு சக்கரத்தினை யுடைய தேரினை ஏழு குதிரைகள்‌ தாங்குகின்றன” – ஆரணம்‌.
303-“ஹயாச்ச ஸப்த சந்தரம்ஸி – குதிரைகளோ வென்றால்‌ ஏழு சந்தஸ்ஸுக்கள்‌ ; அவற்றின்‌ பெயர்களை என்னிடமிருந்து கேள்‌; காயத்ரீ,ப்ருஹதீ , உஷ்ணிக்‌, ஜகதீ, திரிஷ்டுப்‌, அநுஷ்டுப்‌, பங்க்தி: என்று கூறப்படுகின்ற சந்தஸ்ஸுக்கள்‌; இவை ஸூரியனுக்குக்‌ குதிரைகள்‌.”
304-“ஏகோ அஸ்வோ வஹதி – ஏழு பெயர்கள்‌ உள்ள குதிரை ஸூரியன்‌ தேரினைத்‌ தாங்குகின்றது” – ஆரணம்‌.
305-“த்ரிநாபிமதி பஞ்சாரே ஷண்ணேமிந்யக்ஷயாத்மகே – நந் நான்கு மாதங்களாகப்‌ பிரிக்கப்பட்ட மூன்று பாகங்களோடு கூடின நாபியை உடையதாய்‌, ஸம்வத்சரம்‌ பரிவத்சரம்‌, இதாவத்சரம்‌, அநுவத்சரம்‌, இத்வத்சரம்‌ என்று சொல்லப்பட்ட ஐந்து ஆண்டுகளையும்‌ அரங்களாக உடையதாய்‌, இளவேனில்‌ முதுவேனில்‌ கார்‌ கூர்‌ முன்பனி பின்பனி என்னும்‌ ஆறு பெரும்‌ பொழுதினையும்‌ நேமியாக உடையதாய்‌, இடையறாது ஒழுகும்‌ பெருவெள்ளம்‌ போன்று அழிவற்றதான கால சக்கரத்திலே, எல்லாம்‌ அடங்கி யிருக்கின்றன.” – ஸ்ரீவிஷ்ணு புராணம்‌,2:8:3.
306-“அம் மேருவில்‌ செஞ்சுடரோன்‌” – திருவிருத்தம்‌, 88.
307-“திருச் சக்கரத்தால்‌ அகல்‌ விசும்பும்‌ நிலனும்‌” – திருவிருத்தம்‌, 33.
308-“கால சக்கரத்தாய்‌” – திருவாய்மொழி, 7:2:7.
309-“தனி வளர்‌ செங்கோல்‌ நடாவு” – திருவிருத்தம்‌, 13.
310-“சுடரொளி பரந்தன” – திருப்பள்ளியெழுச்சி, 3.
311-“துன்னிய தாரகை“- திருப்பள்ளியெழுச்சி, 3.
312) “அக்நிம்‌ வாவாதித்ய: – சூரியன்‌ மாலை நேரத்தில்‌ நெருப்பினுள்‌ புகுகிறான்‌; ஆகையால்‌ நெருப்பு தூரத்திலே இரவிலே காணப்படுகிறது; இந்த இரண்டு ஒளிகளும்‌ சேர்கின்றன.” – அஷ்டகம்‌, 2.
313-“ப்ரபா விவஸ்வதோ ராத்ரெள – சூரியன்‌ மறையும்‌ காலத்தில்‌ குரியனுடைய ஒளியானது நெருப்பில்‌ புகுகின்றது; ஆதலால்‌, இரவில்‌ நெருப்பானது தூரத்திலே பிரகாசிக்கின்றது.” -ஸ்ரீவிஷ்ணு புராணம்‌,2:8:20.
314-“க்ஷ்ணம்‌ பீதம்‌ ஸுரைஸ்‌ ஸோமம்‌ – ஓ மைத்ரேயரே! தேவர்களால்‌ அம்ருதத்தைப்‌ புசிக்கப்பட்டவனும்‌ அதனால்‌ கலைகள்‌ குறைந்தவனும்‌ ஒரு கலை மாத்திரமுள்ளவனுமான சந்திரனை ஒளியுள்ள ஸூரியன்‌ ஸுஷும்நை என்னுமொரு கிரணத்தாலே வளரும்படி செய்கிறான்‌; தேவர்களால்‌ எம்முறையில்‌ இந்தச்‌ சந்திரன்‌ புசிக்கப்பட்டானோ அம் முறையிலேயே ஸூரியனால்‌ ஒவ்வொரு நாளும்‌ வளர்க்கப்படுகிறான்‌” – ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌,2:12:3.
315- “மீண்டவற்று ளெரிகொள்‌” – திருவிருத்தம்‌, 82.
316-“தானவனாகம்‌ தரணியில்‌” – பெரிய திருமொழி, 1:4:1–317-“தானவன்‌ வாளரக்கன்‌” – பெரிய திருமொழி, 2:2:2.
318-“ததுஹ வா ஏதே – ஆகையாலே தான்‌ இந்த வேதாத்யயனம்‌ செய்தவர்கள்‌ சந்த்யா காலத்திலே கிழக்கு முகமாக இருந்து கொண்டு காயத்திரியினால்‌ மந்த்ரிக்கப்பட்ட தண்ணீரை மேல் தூக்கி எறிகிறார்கள்‌.” – ஆரணம்‌.
319-“ஸந்த்யா காலே து ஸம் ப்ராப்தே – பயங்கரமும்‌ மிகக் கொடுமையும்‌ வாய்ந்த சந்த்யா காலம்‌ வந்த போது கொடியவர்களான மந்தேஹர்‌ என்ற ராக்ஷஸர்கள்‌ ஸூரியனைக்‌ கொல்ல விரும்புகின்றனர்‌; மைத்ரேய முனிவரே! சரீரத்துக்குக்‌ குறை யில்லாத தன்மையும்‌ நாடோறும்‌ மரணமும்‌ பிரமனால்‌ அவர்களுக்குக்‌ கொடுக்கப்பட்ட சாபமாகும்‌; அதனால்‌, ஸூரியனுக்கும்‌ அந்த ராக்ஷஸர்களுக்கும்‌ மிக்க பயங்கரமான போர்‌ உண்டாயிற்று; மஹா முனிவரான மைத்ரேயரே! அதற்காகப்‌ பிராமணோத்தமர்கள்‌ ஓங்காரத்துடன்‌ கூடின காயத்ரியினால்‌ மந்திரிக்கப்பட்ட தண்ணீரை மேல்‌ தூக்கி விடுகிறார்கள்‌ ; வச்சிரமாக மாறுகின்ற அந்தத்‌ தண்ணீரால்‌ அந்தப்‌ பாவிகள்‌ கொல்லப்படுகிறார்கள்‌.” – ஸ்ரீவிஷ்ணு புராணம்‌, 2:8:48.
320–“அர்ச்சிஷமேவாபிஸம்பவந்தி – அக்நியையே அடைகிறார்கள்‌”
321-“பித்வா ஸூர்யஸ்ய மண்டலம்‌ – ஸூரியனுடைய மண்டலத்தைப்‌ பிளந்து கொண்டு”
322–“தேரார்‌ நிறை கதிரோன்‌ மண்டலத்தைக்‌ கீண்டு புக்கு” – சிறிய திருமடல்‌.
323-“வெங் கதிர்ப் பரிதி வட்டத்தூடு போய்‌” – பெரிய திருமொழி, 4:5:10.
324–“கண்ணாவானென்றும்‌ மண்ணோர்‌ விண்ணோர்க்கு” – திருவாய்மொழி,1:8:3.
325–“சஷுர்‌ தேவாநாமுதமர்த்யாநாம்‌ – விண்ணோர்க்கும்‌ மண்ணோர்க்கும்‌ கண்ணாவான்‌” – யஜுர்‌ வேதம்‌.
326--“சகோஸ்‌ ஸூர்யோ அஜாயத – பகவானுடைய கண்ணிலிருந்து ஸூரியன்‌ உண்டானான்‌” – புருஷ ஸூக்தம்‌.
327-“ஜகதேக சக்ஷுஷே – உலகத்திற்கெல்லாம்‌ கண்ணாக இருப்பவன்‌”
328–“த்ரயீ மயாய – வேதமயமான”
329–“த்யேய: ஸதா ஸவித்ரு மண்டல மத்ய வர்த்தி நாராயண! – தாமரை யாசனத்தில்‌
வீற்றிருப்பவனும்‌ தோள்வளைகளை யுடையவனும்‌ மகர குண்டலங்களை யுடையவனும்‌ கிரீடமுடையவனும்‌ ஆரத்தைத்‌ தரித்திருப்பவனும்‌ பொன் மயமான திருமேனியை யுடையவனும்‌ திருவாழி திருச்சங்குகளைத்‌ தாங்கி யிருப்பவனும்‌ ஆன நாராயணன்‌ எப்பொழுதும்‌ ஸூரிய மண்டலத்தின்‌ நடுவில்‌ இருப்பவனாகத்‌ தியானம்‌ செய்யத் தக்கவன்‌”- சாந்தோக்யம்‌.
330-“தண்டாமரை சுமக்கும்‌ பாதப் பெருமான்‌” – திருவாய்மொழி, 4:5:8.
331–“ஆரமும்‌ படையும்‌ திகழ” – திருவாய்மொழி, 8:4:7.
332-“பொன்மேனி கண்‌டேன் -மூன்றாம் -1-
333-“ய ஏஷோந்தராதித்யே – ஸூரியன்‌ நடுவில்‌ எந்தப் புருஷன் யோகிகளால்‌ காணப் படுகிறானோ அவன்‌ பொன் மயமான மீசையை யுடையவனாயும் திருக்குழலை யுடையவனாயும் இருக்கிறான் -அவனுடைய நகம்‌ முதலிய எல்லா உறுப்புக்களும்‌ பொன் மயமானவையே” – சாந்தோக்யம்‌.
334-“ஹிரண்மய வபு: – பொன் மயமான திருமேனி” – சாந்தோக்யம்‌.
335–“அஞ்சுடர்‌ வெய்யோனணி” – திருவாய்மொழி, 5:4:9.
336–“செஞ்சுடர்த்‌ தாமரைக்கண்‌ ” – திருவாய்மொழி, 5:4:9.-337–“தஸ்ய யதா கப்யாஸம்‌ புண்டரீகமேவ மக்ஷிணீ – காலையில்‌ கதிரவனுடைய ஒளியால்‌ மலர்ந்த தாமரை எங்ஙனம்‌ விளங்குமோ, பரம்பொருளான அந்த நாராயணனுடைய திருக்கண்களும்‌ அங்ஙனமே இருக்கின்றன” – சாந்தோக்யம்‌.
338–“திருக் கண்டேன்‌” – மூன்றாந்திருவந்தாதி, 1.
339-“ருக்மாபம்‌ – பொன் போன்ற வடிவை
340-“செய்யதோர்‌ ஞாயிற்றைக்‌ காட்டி” – திருவாய்மொழி, 4:4:2.
341-“ஹிரண்ய வர்ணாம்‌ – பொன்னிறமான நிறமுடையவளை” – ஸ்ரீஸுூக்தம்‌.
342-“கமல மலர் மேல்‌ செய்யாள்‌” – திருவாய்மொழி, 9: 4:1.
343-“ வித்யாஸஹாய மாதித்ய--வித்யை என்று சொல்லப்பட்ட பிராட்டியுடன்‌ கூடியவனும்‌ வித்‌யயைக்‌ கொடுப்பவனும்‌ ஸுூரியனிடம்‌ இருப்பவனுமான பகவானை” –
344-“வித்யாஸஹாயவந்தம்‌ – பிராட்டியைத்‌ துணையாக வுடையவனும்‌ ஸூரியனிடமிருப்பவனும்‌ என்றும்‌
345–“வானிடை யருக்கன்‌ மேவி நிற்பாற்கு” – பெரிய திருமொழி, 2:1:7.
346–“ய ஏஷோந்த ராதித்யே! யோகிகளால்‌ காணப்படுகிறானோ”
347–“த்யேயஸ்ஸதா: – சூரிய மண்டலத்தின்‌ நடுவில்‌ இருப்பவனாக எப்பொழுதும் த்யானம்‌ செய்யத் தக்கவன்‌” – சாந்தோக்யம்‌.
348-“ஹீரண்மயச்‌ சகு நிர் ப்‌ரஹ்ம நாம -ப்ரஹ்மம்‌ என்ற பெயருள்ள பறவை பொன்னிறமுள்ளது; எந்த ஒளியால்‌ குரியன்‌ பிரகாசிக்கப் பட்டவனாய்க்‌ கொண்டு விளங்குகிறானோ
349-“தத்‌ ஸவிதுர்‌ வரேண்யம்‌ பர்க்க: – ஜகத் காரணனான பகவானுடைய உபாசிக்கத்தக்க அந்த ஒளியைத்‌ தியானம்‌ செய்கிறோம்‌”- காயத்ரி.
350-“தேஜ: பரம்‌ தத்‌ ஸவிதுர் வ்ரேண்யம்‌ தாம் நா – வேதங்களிலே சொல்லப் பட்டதாயும்‌ சிறந்ததாயும்‌ உபாஸிக்கத் தக்கதாயும்‌ உள்ள ஸூரியன்‌ ஸம்பந்தப்பட்ட ஒளியாக வேதங்கள்‌ சொல்லுகின்றன; உயர்ந்த ஓளியாலே விரல்‌ நுனி வரையிலும்‌ பொன்னாகவும்‌ தாமரைக் கண்ணனாகவும்‌ சொல்லுகின்றன” ஸ்ரீரங்கராஜஸ்தவம்‌, உத்தர, சதகம்‌, 79.
351-“ஸாம்ந உத்கீதோ ரஸ: – ஸாமத்துக்கு உத்கீதம்‌ ரஸமாகும்‌” – சாந்தோக்யம்‌.
352-“தஸ்ய உதிதி நாம – அந்த சந்தோக ஸாமத்தில்‌ சொல்லப்பட்ட உத்‌ என்ற இந்தத்‌ திரு நாமம்‌”
353–“உயர்வு”, – திருவாய்மொழி, 1:1:1.
354-“உயர்ந்தே“- திருவாய்மொழி, 10:10:11.
355-“ஓராயிரமாயுலகேழளிக்கும்‌” – திருவாய்மொழி, 9:3:4.
356-“ஆயிரமுகத்தினாலருளி” – பெரிய திருமொழி, 1:4:7.
357-“தீர்த்தங்களாயிரம்‌” – திருவாய்மொழி, 7:10:11.-

ஸூத்ரம்‌-54
358-“யத்த தத்ரேச்ய
-ஜ்ஞானேந்த்ரியங்களுக்கு அப்பாற்பட்டது, கை முதலிய உறுப்புக்களால்‌ அறியத் தகாதது, கோத்திரம்‌ இல்லாதது, பிராமணன்‌ முதலிய சாதி யில்லாதது, கண்‌ காது முதலிய ஞானேந்திரியங்கள்‌ இல்லாதது, கை கால்‌ முதலிய கர்மேந்திரியங்கள்‌ இல்லாதது, என்றுமுள்ளது, எல்லா விடத்திலும்‌ பரந்துள்ளது, எல்லாப்‌ பொருட்களினுள்ளும் ப்ரவேசித்திருப்பது, மிக நுட்பமானது, இப்படிப்பட்டது எதுவோ அது வக்ஷரம்‌ என்ற சொல்லால்‌ சொல்லப்பட்டது,ப்ரஹ்ம ஜ்ஞானமுடையவர்கள்‌ யாதொரு அக்ஷரத்தை உலகத்திற்குக்‌ காரணமாகப்‌ பார்க்கிறார்களோ” – முண்டகோபநிஷத் .
359-“ஸத்யம் ஜ்ஞாநமநந்தம் ப்ரஹ்ம -ப்ரஹ்மமானது என்றும்‌ நிலைத்துள்ளது,ஜ்ஞான மயமானது, தேச காலம்‌ முதலியவைகளால்‌ அளவிடப் படாதது” – தைத்திரீயோபநிஷத்‌.
360-“நிஷ் கலம்‌ நிஷ் க்ரியம்‌ – ஒருவிதச்‌ செயலும்‌ இல்லாதது, பசி முதலானவை இல்லாதது, பழிக்கப் படாதது, குற்ற மில்லாதது” -ஸ்வேதாஸ்வரம்‌.
361-“நிர் குணம்‌ – தீயகுணங்களில்லாதது”
362-“யஸ்‌ ஸர்வஜ்ஞ்ஸ்‌ ஸர்வ வித்‌ – எந்த அக்ஷர ப்ரஹ்மம்‌ எல்லாவற்றையும்‌ அறிந்ததோ, எல்லாப்‌ பொருட்களின்‌ வகைகளையும்‌ அறிந்ததோ” முண்டகோபநிஷத்‌.
363-“பராஸ்ய சக்தி: – இந்தப்‌ பரமாத்மாவினுடைய பல விதமான சக்தியும்‌ ஞானம்‌ பலம்‌ நியமனம்‌ என்னும்‌ இவைகளும்‌ உயர்ந்தவைகளாகவும்‌ இயற்கையிலே அமைந்தவையாகவும்‌ கேட்கப் படுகின்றன” -ஸ்வேதஸ்வரம்‌.
364-“ஸத்ய காமஸ்‌ ஸத்ய ஸங்கல்பக: – நித்யமான விருப்பங்களை யுடையவன்‌ ,நித்யமான ஸங்கல்பத்தை யுடையவன்‌” – சாந்தோக்யோபநிஷத்‌.
365-“ச்ருணு தத்‌ பரமம்‌ – உயர்ந்த அந்தப்‌ பரம் பொருளின் ஸ்வரூபத்தை என்னிடமிருந்து கேள்‌; ஸூக்ஷ்மமானது, எல்லாமறிந்தது, அப்படியே எல்லாவற்றையும்‌ தாங்குகிறது, ஞானமே ஸ்வரூபமானது, முதலும்‌ முடிவும்‌ இல்லாதது, விவகார மில்லாதது, தூக்கமில்லாதது, கண்‌ காது இல்லாதது, ஊறு(ஸ்பர்ஸம்‌) இல்லாதது, என்றுமுள்ளது, பெயர்‌ சாதி முதலியவைகள்‌ இல்லாதது, வர்ணமில்லாதது, முக்குணமில்லாதது, எல்லாவற்றையும்‌ காதாகவுடையது ,
எல்லாவற்றையும்‌ கண்ணாகவுடையது, எல்லாவற்றையும்‌ கைகளாகவும்‌
கால்களாகவும்‌ உடையது, பற்றற்றது, சஞ்சாரமில்லாதது, சாந்தமானது,
தானேப்ரகாசமாக இருப்பது, ஒப்பில்லாதது, சேய்மையில்‌ உள்ளது, அருகில்‌ இருப்பது, ஞானத்தால்‌ அடையத் தக்கது, குற்றமில்லாதது, பூதங்களைத்‌ தாங்குவது, எல்லாரிடமும்‌ ஸமமானது, ஒளி மயமான பொருள்களுக்கெல்லாம்‌ ஒளியாகவிருப்பது, பிரகிருதி மண்டலத்துக்கு மேற்பட்டது, அழிவில்லாதது,எல்லாப் பொருள்களிடத்துமிருப்பது, அந்த விஷ்ணுவினுடைய உயர்ந்த ஸ்வரூபம்‌.” 366-“அப்ராக்ருத குண ஸ்பர்ச்சாத்‌ – குற்றமில்லாதவரே! நாரகரே!ப்ரக்ருதி ஸம்பந்தமான குணம்‌ இல்லாமையால்‌ பரம் பொருள்‌ ‘நிர்குணம்‌-குணமில்லாதது’ என்று சொல்லப்ப்டுகிறது. என்னால்‌ சொல்லப்படுகிற ஆறு குணங்களையும்‌ கேள்‌. பரம் பொருளினுடைய கல்யாண குணங்களைத்‌ தியானிக்கிற பெரியோர்கள்‌ ,அறிவுடையதும்‌ தானே பிரகாசித்துக்‌ கொண்டிருப்பதும்‌ எல்லாப்‌ பொருள்களையும்‌ பற்றியதும்‌ எப்பொழுதும்‌ பிரகாசித்துக்‌ கொண்டிருக்கச்‌ செய்வதுமான ஞானம்‌ என்கிற குணத்தை முதலாவதாகச்‌ சொல்கிறார்கள்‌; அந்த ஞானமும்‌ பரம் பொருளுக்கு ஸ்வரூபமாகவும்‌ குணமாகவும்‌ சொல்லப்படுகிறது; உலகத்திற்கு முதற் காரணமாக இருப்பது யாதொன்று உண்டோ அது, ஸக்தி என்று சொல்லப்பட்டது; அந்தப்‌ பரம் பொருளுக்கு ஸ்வாதந்த்யத்தோடு கூடிய கர்த்தாவாக இருக்கும்‌ தன்மை என்பது யாதொன்று உண்டோ அது, குணங்களின்‌ உண்மைப்‌ பொருளைத்‌ தியானம்‌ செய்யுமவர்களால்‌ ஐஸ்வர்யம்‌ என்று சொல்லப்பட்டது; எப்பொழுதும்‌ உலகத்தைப்‌ படைக்கிற அவனுக்குச்‌ சிரமமில்லாமை என்பது யாதொன்று உண்டோ அது, குணத்தினைத்‌ தியானம்‌ செய்யுமவர்களல்‌ அப் பரம் பொருளுக்குப்‌ பலம்‌ என்ற குணமாகச்‌ சொல்லப்பட்டது;அச்யுதன்‌ என்ற மறு பெயரை யுடைய அப்பரம் பொருள்‌ உலகத்திற்கு முதற் காரணமாக இருந்தாலும்‌ விகாரமில்லாதிருத்தல்‌ என்பது யாதொன்றுண்டோ அது, வீர்யம்‌ என்ற குணமாகும்‌. உதவியைத்‌ தேடாதது என்பது யாதோ அது, தேஜஸ்ஸு என்று சொல்லப்பட்டது” – அஹிர்புதந்ய ஸம்ஹிதை.
367-“யதோ வா இமாநி – எதனிடமிருந்து இந்தப்‌ பூதங்கள்‌ உண்டாகின்றனவோ , பிறந்தன எல்லாம்‌ எதனால்‌ உயிர்‌ வாழ்கின்றனவோ, பிரளயத்தைச்‌ சார்ந்தவைகளாய்‌ எதனுள்‌ புகுந்து அடங்குகின்றனவோ அதனை நீ அறிய வேண்டும்‌; அது ப்ரஹ்மம்‌” – தைத்திரீயோபநிஷத்‌.
368-“ப்ராஹ்மணோஸ்ய முகமாஸீத்‌ – அந்தப்‌ பரம புருஷனுடைய முகத்திலிருந்து பிராமணன்‌ உண்டானான்‌; க்ஷத்ரியன்‌ தோளிலிருந்து உண்டானான்‌; வைஸ்யன் துடையிலிருந்து உண்டானான்‌; ஸூத்ரன கால்களிலிருந்து உண்டானான்‌” புருஷ ஸூக்தம்‌.
369-“அந்தப் ப்ரவிஷ்டச்‌ சாஸ்தா ஜநாநாம்‌ – எல்லாப்‌ பிராணிகளுடைய உள்ளே ப்ரவேசித்து ஏவுகிறான்‌” – ஆரணம்‌.
370-“பாதோஸ்ய விச்வா பூதாநி – அந்தப்‌ பரம புருஷனுக்கு எல்லாப்‌ பிராணிகளும்‌ ஒரு பாதம்‌. (கால் கூறு என்பது பொருள்‌.)” – புருஷ ஸுூக்தம்‌.
371-“ஸ ஹோவாச – அந்த யாஜ்ஞ வல்கியர்‌ பதில்‌ சொன்னார்‌; இந்த முப்பத்து மூவர்‌ என்றால்‌, வசுக்கள்‌ எண்மர்‌, உருத்திரர்‌ பதினொருவர்‌, ஸூரியர்‌ பன்னிருவர்‌, ஆக இவர்கள்‌ முப்பத்தொருவர்‌; இந்திரனையும்‌ பிரமனையும்‌ சேர்க்க முப்பத்து மூவர்‌ ஆவர்‌.”
372-“பெளதிமாஷ்யோ – பெளதிமாஷ்யர்‌ என்பவர்‌ கெளபவநரிடமிருந்து கல்வியைப்‌ பெற்றார்‌; கெளபவநர்‌ கெளசிகரிடமிருந்து கல்வியைப்‌ பெற்றார்‌; கெளசிகர்‌
கெளண்டிந்யரிடமிருந்து கல்வியைப்‌ பெற்றார்‌; கெளண்டிந்யா் ச்ணாண்டில்யரிடமிருந்து கல்வியைப்‌ பெற்றார்‌; சாண்டில்யர்‌,கெளசிகர்‌ கெளதமர்‌ என்னுமிருவரிடமிருந்தும்‌ கல்வியைப்‌ பெற்றார்‌; கெளதமர்‌ ஆக்நிவைச்யரிடமிருந்து கல்வியைப்‌ பெற்றார்‌; சாண்டில்யரிடமிருந்து ஆக்நிவைச்யர்‌ கல்வியைப்‌ பெற்றார்‌”
373-“ஸர்க்கச்ச – படைத்தல்‌, அழித்தல்‌, வம்சம்‌, மந்வந்தரங்கள்‌ , வம்சத்தைப்‌ பின்பற்றி வருகிற சரிதங்கள்‌ என்னும்‌ ஐந்தனையும்‌ பற்றி கூறுகின்ற தன்மை யுடையது புராணம்‌” – அமரம்‌.
374-“உத்தர்த்தாஸி வராஹேண – ஏ பூமியே! வராக அவதாரம்‌ எடுத்த பகவானால்‌ செய்யப்பட்ட பெரிய முயற்சியால்‌ உயர எடுக்கப்பட்டாய்‌” – தைத்திரியோபநிஷக்‌.
375-“இதும்‌ விஷ்ணுர்‌ விசக்ரமேத்ரேதா நிததே பதம்‌ – பகவான்‌ இந்த உலகினை அளந்தார்‌, மூன்று விதமாக அடியை வைத்தார்‌” – விஷ்ணு ஸூக்தம்‌.
376-“ராமாயணம்‌ நாராயண கதாம்‌ – இராமாயணம்‌ நாராயணனுடைய கதை”
377-“அத விஷ்ணுர்‌ மஹா தேஜா – பிறகு மிகப்‌ பெரிய ஆற்றலை யுடைய விஷ்ணு அதிதியினிடத்தில்‌ அவதரித்தார்‌, வாமந சரீரத்தை மேற் கொண்டு விரோசனன்‌ புதல்வனான பலியின்‌ அருகில்‌ சென்றார்‌, உலகத்துக்கெல்லாம்‌ ஒருயிராய்‌ எல்லாருடைய நலத்திலும்‌ பற்றுள்ளவரான பகவான்‌ பிறகு செருக்கு இல்லாதவராய்‌ மூன்று அடிகளை இரந்து பெற்று உலகங்களைத்‌ தனக்கு ஆக்கிக் கொண்டு பராக்கிரமத்தால்‌ பலியை அடக்கி விட்டு இந்திரனுக்கு மீண்டும்‌ ராஜ்ஜியத்தைக்‌ கொடுத்தார்‌.” – ஸ்ரீராமா, பால, 29:19.
378-“நாரதேநைவ முக்தஸ்துப்ரத்யுவாச ஜநார்த்தந: – நாரதரால்‌ இப்படிச்‌ சொல்லப்பட்ட பகவான்‌ பதில்‌ சொல்லலானான்‌” – பாரதம்‌,சாந்தி பர்வம்‌,348:3-4.
379-“பூர்வம்‌ மத்ஸ்யோ – முதலில்‌ மீனாக ஆகப் போகிறேன்‌, பூமியை நிலை நிறுத்தப்‌ போகிறேன , பெரிய கடலில்‌ அழுந்திக்‌ கிடக்கிற வேதங்களையும்‌ மேலே எடுக்கப்‌ போகிறேன்‌; ப்ராஹ்மணோத்தாரான நாரதரே! கூர்ம அவதாரம்‌ எடுத்து ஏம கூடம்‌ என்ற மலைக்கு ஒப்பான ஒளியை யுடைய மந்தர மலையை அமுகத்துக்காகத்‌ தரிக்கப்‌ போகிறேன்‌; இது இரண்டாவது அவதாரம்‌.”- பாரதம்‌, சாந்தி பர்வம்‌, 348:3-4.
380-“நீலதோயத மத்த்யஸ்தா – கறுத்த மேகத்தின்‌ நடுவில்‌ இருக்கின்ற மின்னற் கொடி போல்‌ ஒளியுடன்‌ கூடிய” – நாராயணாநுவாகம்‌.
381-“மநோ மய:ப்ராண சரீரோ பாரூப: – பரிசுத்தமான மனத்தினால்‌ அறியத் தக்கவன்‌ , பிராணனைச்‌ சரீரமாக வுடையவன்‌, பிரகாசிக்கின்ற திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவன்‌” – முண்டகோபநிஷத்‌, 2:2:7.
382-“தெரியச்‌ சொன்ன” – திருவாய்மொழி, 6:9:11.
383-“முழு நீர்‌ முகில்‌ வண்ணன்‌” – திருவிருத்தம்‌, 2.
384-“மைப்படி மேனியும்‌ செந்தாமரைக் கண்ணும்‌” – திருவிருத்தம்‌, 94.
385-“மீதிட்டுப்‌ பச்சைமேனி’ – திருவாசிரியம்‌, 1.
386-“தாமரைக் காடு மலர்க் கண்ணோடு ” – திருவாசிரியம்‌, 5.
387-“நற் பூவைப் பூ ஈன்ற வண்ணன்‌” – பெரிய திருவந்தாதி, 1.
388-“கார் கலந்த மேனியான்‌” – பெரிய திருவந்தாதி, 86.
389-“துயரறு சுடரடி” – திருவாய்மொழி, 1:1:1.
390-“புனக்காயா நிறத்த புண்டரீகக்கண்‌ செங்கனிவாய்‌” – திருவாய்மொழி,10:10:

ஸுூத்ரம்‌-55
391-“யஸ்மிந்‌ கல்பே –
முன்பு பிரமனாலே எந்தக்‌ கல்பத்தில்‌ (நாளில்‌) எது சொல்லப்பட்டதோ அதனுடைய பெருமை அந்தத்‌ தன்மையாகவே பேசப் படுகிறது” – மாத்ஸ்ய புராணம்‌.
392-“ஸங்கீர்ணாஸ்‌ – முக் குணங்களும்‌ கலந்துள்ளனவாகவும்‌ ஸாத்விகங்களாகவும்‌ ராஜஸங்களாகவும்‌ தாமஸங்களாகவும்‌” – மாத்ஸ்ய புராணம்‌.
393-“அக்நேச்‌ சிவஸ்ய மாஹாத்ம்யம்‌ – தாமஸ குணம்‌ பொருந்திய நாள்களிலே அக்நி, சிவன்‌ என்னும்‌ இவர்களுடைய பெருமை பரக்கச்‌ சொல்லப்படுகிறது;-ராஜஸ குணம்‌ கலந்துள்ள நாள்களிலே பிரமனுடைய பெருமை அதிகமென்று
அறிகிறார்கள்‌; ஸத்வ குணம்‌ கலந்துள்ள நாள்களிலே ஹரியினுடைய பெருமை அதிகமாகச்‌ சொல்லப்படுகிறது; அந்த நாள்களிலேயே யோக ஸித்தி யுடையவர்கள்‌ மோக்ஷமாகிற உயர்ந்த கதியை அடையப்‌ போகிறார்கள்‌ ;
முக் குணங்களும்‌ கலந்திருக்கும்‌ நாள்களிலே ஸரஸ்வதி, பித்ருக்கள்‌ என்னுமிவர்களுடைய பெருமை சொல்லப் படுகிறது” – மாத்ஸ்யபுராணம்‌.
394-“மச்சந்தாதேவ – ஓப்ராஹ்மணரான வால்மீகியே! இந்த வாக்கியமானது என்னுடைய நினைவாலே உம்மிடம்‌ வந்தது” – ஸ்ரீராமா, பால, 2:30.
395-“அந்யம்‌ தேஹி வரம்‌ தேவ – தேவனே! கேசவனே! தேவர்களுக்கெல்லாம்‌ தலைவனே! நீயே மனிதனாக வந்து என்னை ஆராதிக்க வேண்டும்‌; என்னைத்‌ தலைவனாகக்‌ கொள்ள வேண்டும்‌; என்னிடமிருந்து வரங்களைப்‌ பெற்றுக் கொள்ள வேண்டும்‌; எந்த வரத்தினாலே, எல்லா உயிர்களுக்குள்ளே பூஜைக்குரியவர்களை விட மேம்பட்ட பூஜைக்குரியவனாக ஆவேனோ, அத்தகைய வேறு வரத்தை எனக்குக்‌ கொடுத்தருள வேண்டும்‌”.
396) “த்வஞ்ச ருத்ர! – பெரிய தோள்களை யுடைய சிவனே! மோஹ சாஸ்த்ரத்தைச்‌ செய்வாயாக!–397-“பிணங்களிடு காடதனுள்‌ நடமாடு பிஞ்ஞகன்‌” – பெரிய திருமொழி,2:6:9.
398-“சுடலையில்‌ சுடு நீறன்‌” – பெரிய திருமொழி, 10:1:5.
399-“வெந்தாரென்பும்‌ சுடு நீறும்‌ மெய்யிற்பூசி” – பெரிய திருமொழி, 1:5:8.
400-“அக்கும்‌ புலியினதளுமுடையார்‌” – பெரிய திருமொழி, 9:6:1.
401-“ஆறும்‌ பிறையு மரவமு மடம்பும்‌ சடைமேலணிந்து” – பெரிய திருமொழி, 6:7:9.
402-“ஏறேறி” – இரண்டாந்‌ திருவந்தாதி, 63.
403-“சுழன்றாடும்‌ கொன்னவிலும்‌ மூவிலைவேல்‌ கூத்தன்‌ “-பெரிய திருமடல்‌,70.
404-“ஆலமமர்‌ கண்டத்தரண்‌” – முதல்‌ திருவந்தாதி, 4.
405-“உந்மத்தவதநுந்மத்த: – ஓ ஈச்வரனே! பைத்தியத் தன்மை இல்லாதவரும்‌ பிரபுக்களுக்கெல்லாம்‌ பிரபுவானவருமான நீர்‌ பைத்தியம்‌ பிடித்தவர்ப் போல்‌ இரவில்‌ இடுகாட்டில்‌ அலைந்து திரிகின்றீர்‌; உமக்கு இது வரக்‌ காரணம்‌ யாது?”
406-“ஆல்மேல்‌ வளர்ந்தானைத்‌ தான்‌ வணங்குமாறு” – நான்முகன்‌ திருவந்தாதி, -17-
407-“புராண ஸம்ஹிதாகர்த்தா பவாந்‌ – குழந்தாய்‌! (பராசரரே!) நீர்‌ புராண ஸம்ஹிதைகளைச்‌ செய்பவராக ஆகப் போகிறீர்‌; நீர்‌ பரம்பொருளின்‌ உண்மையையும்‌ உள்ளபடி அறியப்‌ போகிறீர்‌.” – ஸ்ரீவிஷ்ணு புராணம்‌, 1:1:25-

ஸுூத்ரம்‌-56
408-“உள்ளியுரைத்த”
– திருவாய்மொழி, 1:3:5.
409-“பரம ஸத்வ ஸமாச்ரய – எவன்‌ தனக்கு மேளில்லை யென்னும்படி ஸத்வ குணத்துக்கு நிலமாக இருப்பவனே ” -ஸ்தோத்ர ரத்நம்‌, 12.
410-“நெறி யுள்ளி யுரைத்த“- திருவாய்மொழி, 1:3:5.
411-‘நிறைஞானத்தொரு மூர்த்தி” – திருவாய்மொழி, 4:8:6.
412–“அயனாம்‌ சிவனாம்‌ திருமாலால்‌” – திருவாய்மொழி, 8:8:11.
413-“அருளப்பட்ட சடகோபன்‌” – திருவாய்மொழி, 8:8:11.
414-“அருள்‌ கொண்டாயிர மின் தமிழ் பாடினான்‌” – கண்ணி நுண் சிறுத்தாம்பு, 8

ஸுூத்ரம்‌-57
415-“மச்சந்தாதேவ –
ஓப்ராஹ்மணரான வால்மீகியே! இந்த வாக்கியமானது என்னுடைய நினைவாலே உம்மிடம்‌ வந்தது” – ஸ்ரீராமா, பால, 2:30.
416-“புராண ஸம்ஹிதா கர்த்தா பவாந்‌ – குழந்தாய்‌! (பராசரரே!) நீர்‌ புராண ஸம்ஹிதைகளைச்‌ செய்பவராக ஆகப் போகிறீர்‌; நீர்‌ பரம்பொருளின்‌ உண்மையையும்‌ உள்ளபடி அறியப்‌ போகிறீர்‌.” – ஸ்ரீவிஷ்ணு புராணம்‌, 1:1:2-
417) “ஸ்ருஷ்டிம்‌ தத: – ஓ பிரமனே! உனக்குள்‌ அந்தர்யாமியாக இருந்துகொண்டு உலகத்தைப்‌ படைக்கப்போகிறேன்‌” – விஷ்ணுதாமம்‌, 69:50.
418-“விஷ்ணுராத்மா – அளவில்லாத ஒளியை யுடையவனும்‌ பகவானுமான சிவனுக்கு அந்தராத்மாவாக இருக்கிறார்‌” – பாரதம்‌, கர்ணபர்வம்‌.
410-“திசைமுகன்‌ கருவுள்‌ வீற்றிருந்து” – திருவாய்மொழி, 5:10:8.
420-“வெள்ளைநீர்ச்சுடையானும்‌” – திருவாய்மொழி, 5:10:4.
421-“அரனயனென'”‘ – திருவாய்மொழி, திருவாய்மொழி, 1:1:8.
422-“மூவுருவா முதல்வனே” – திருவாய்மொழி, 7:9:2.
423-“திறத்துக்கே துப்பரவாம்‌” – திருவாய்மொழி, 7:9:9.
424-“இன்கவிபாடும்‌ பரமகவிகளால்‌” – திருவாய்மொழி, 7:9:6.
425-“செந்தமிழ்‌ பாடுவார்‌”
426-“நேர்ப்படயான்‌ சொல்லும்‌ நீர்மையிலாமையில்‌, ஏர்விலா என்னைத்‌ தன்னாக்கி “-திருவாய்மொழி, 7:9:5.
427-“என நா முதல்‌ வந்து புகுந்து” – திருவாய்மொழி, 7:9:3.
428-“என்னாகியே தப்புதலின்றி” – திருவாய்மொழி, 7:9:4.
429-“தனனை வைகுந்தனாகப்‌ புகழ” – திருவாய்மொழி, 7:9:7.
430-“தன்‌ சொல்லால்‌ தான்‌ தன்னைக்‌ கீர்த்தித்த” – திருவாய்மொழி, 7:9:2.
431-“தன்னைத் தானே துதித்து” – திருவாய்மொழி, 10:7:2.
432-“வலக்கையாழி யிடக்கைச்‌ சங்கம்‌” – திருவாய்மொழி, 6:4:9.
433-“நாவியலாலிசை மாலைகளைத்தி” – திருவாய்மொழி, 4:5:4.
434-“சடகோபன்‌ சொல்‌” – திருவாய்மொழி, 2:2:11.
435-“மொய்ய சொல்லாலிசை” – திருவாய்மொழி, 4:5:2.
436-“வானக்‌ கோனைக்‌ கவி சொல்ல வல்லேற்கு” – திருவாய்மொழி, 4:5:9. )
437-“என்‌ சொல்லால்‌ யான்‌ சொன்ன வின்கவி” – திருவாய்மொழி, 7:9:2.

ஸுூத்ரம்‌-58-
438-“ஹஸிதம்‌ பாஷிதம்‌
– ஸ்ரீராமபிரானுடைய புன்முறுவல்‌ வார்த்தைகள்‌ என்னுமிவற்றையும்‌ சஞ்சாரத்தையும்‌ செயல்களையும்‌ மற்றும்‌ எல்லாவற்றையும்‌ பிரமனுடைய வர பலத்தால்‌ உள்ளபடியே நன்கறிகின்றார்‌” – ஸ்ரீராமா, பால, 3:4.
439-“கண்டும்‌ தெளிந்தும்‌”
– திருவாய்மொழி, 7:5:7.
440-“ந போதாத்‌ அபரம்‌ ஸுகம்‌ – ஞானத்தைத்‌ தவிர வேறு இன்பம்‌ இல்லை”
441-“மயர்வற மதிநல மருளினன்‌” – திருவாய்மொழி, 1:1:1
442-“மதியெல்லாமுள்கலங்கி”
– திருவாய்மொழி, 1:4:3.
443-“எத்திறம்‌” – திருவாய்மொழி, 1:3:1.
444-“பிறந்தவாறும்‌” – திருவாய்மொழி, 5:10:1.
445-“மாயக்‌ கூத்தா” – திருவாய்மொழி, 8:5:1.
446-“கண்கள்‌ சிவந்து” – திருவாய்மொழி, 8:8:1.
447-“வருந்தி நான்‌ வாசக மாலை கொண்டு” – திருவாய்மொழி, 3:8:10-
448-“என்றென்றேங்கி யழுதக்கால்‌” – திருவாய்மொழி, 8:5:3.
449-“அங்கே தாழ்ந்த சொற்களால்‌” – திருவாய்மொழி, 8:5:11.
450-“எங்கே காண்கேன்‌” – திருவாய்மொழி,
451-“வண்டமிழ்‌ நூற்க நோற்றேன்‌” – திருவாய்மொழி, 4:5:10.

ஸுூத்ரம்‌-59-
452-“ஸ்வாத்யாயாத்‌ யோகமாஸீத யோகாத்‌
– வேதத்தாலே பொருளை அறிந்து அஷ்டாங்க யோகத்தை அடையக் கடவன்‌; யோகத்தாலே வேதத்தை மீண்டும்‌ சொல்லக்‌ கடவன்‌; வேதம்‌ யோகம்‌ இவ் விரண்டின்‌ நிறைவினால்‌ பரம்பொருள்‌ பிரகாசிக்கிறான்‌; அந்தப்‌ பரம்பொருளைப்‌ பார்ப்பதற்கு வேதம்‌ ஒரு கண்‌; அப்படியே யோகம்‌ சிறந்த கண்‌; பரம் பொருளாகிய அவன்‌ ஊனக்‌ கண்களால்‌ பார்ப்பதற்கு முடியாதவன்‌.” – ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌, 6.6:2,3.
453-“ஓதி யுணர்ந்தவர்‌” – திருவாய்மொழி, 3:5:5.
454-“ஆசாபாச சதைர்‌ பத்தா: – ஆசைகளாகிற பலவகைப் பட்ட தளைகளால்‌ கட்டுண்டு இருப்பர்கள்‌” – ஸ்ரீகீதை, 16:12.
455-“திவ்யம்‌ ததாமி தே சக்ஷு: – உனக்குத்‌ தெய்வத் தன்மை பொருந்திய கண்ணைக்‌ (ஞானக்கண்‌) கொடுக்கிறேன்‌” – ஸ்ரீ கீதை, 11:8.
456-“நேரே கடிக்கமலத்துள்ளிருந்தும்‌ காண்கிலான்‌” – முதல்‌ திருவந்தாதி,56.
457-“கார்‌ செறிந்த” – நான்முகன்‌ திருவந்தாதி, 73.
458-“நீறாடி தான்‌ காணமாட்டாத” – நான்முகன்‌ திருவந்தாதி, 27.
459-“கட்கரிய பிரமன்‌ சிவனிந்திரனென்றிவர்க்கும்‌ கட்கரிய கண்ணன்‌” திருவாய்மொழி, 7:7:11.
460-“தாமோதரனைத்‌ தனி முதல்வனை” – திருவாய்மொழி, 2:7:12
461-“அறிந்தனவேதவரும்‌ பொருள்‌ நூல்கள்‌” – திருவாய்மொழி, 9:3:3.
462-“யஸ்யா மதம்‌ தஸ்ய மதம்‌ – எவன பரம் பொருளை அளவிடப்பட்டதாக எண்ண வில்லையோ அவன்‌ பரம் பொருளை அறிகிறான்‌” – கேநோபநிஷத்‌.
463-“கேட்பார்க்கரும்பொருளாய்‌ நின்ற” – நான்முகன்‌ திருவந்தாதி, 60.
464-“நாயமாத்மாப்ரவசநேந லப்யோ – இந்தப்‌ பரம்பொருள்‌ மனனத்தாலும்‌ அடையத் தக்கவனல்லன்‌ ,த்யானத்தாலும்‌ அடையத் தக்கவன்‌ அல்லன்‌, கேள்வியாலும்‌ அடையத் தக்கவன்‌ அல்லன்‌” – கடோபநிஷத்‌.
465-“கண்டேன்‌ கமல மலர்ப்பாதம்‌” – திருவாய்மொழி, 10:4:9.
466-“பொய் நின்ற ஞானமும்‌” – திருவிருத்தம்‌, 1.
467-“இந்நின்ற நீர்மை இனியாமுறாமை” – திருவிருத்தம்‌-1-.
468-“மற்ற வன் பாசங்கள்‌” – திருவாய்மொழி, 8:2:11.
469-“பாசங்கள்‌ நீக்கி” – திருவாய்மொழி, 8:2:11.-470–“காயோடு நடு” – பெரிய திருமொழி, 3:2:2. 471) “வீழ்கனியு மூழிலையும்‌” – பெரிய திருமடல்‌, 12. 472) “ருஷிம்‌ ஜுஷாமஹே – ரிஷியாகிற நம்மாழ்வாரை வணங்குகிறேன்‌” -பராங்குஸா ஷ்டகம்‌.-472-“உண்ணுஞ்சோறு பருகு நீர்‌ தின்னும்‌ வெற்றிலையுமெல்லாம்‌ கண்ணன்‌” திருவாய்மொழி, 6:7:1.

ஸூத்ரம் -61-
474-“சேயரிக்கண்‌”
– திருவிருத்தம்‌, 2.
475-“கடலும்‌ மழையும்‌ விசும்பும்‌ துழாய்‌” – திருவாய்மொழி, 2:1:4.
476-“சிந்தை கலங்கித்‌ திருமால்‌ என்றழைப்பன்‌” – திருவாய்மொழி, 9:8:10.
477-“எங்கே காண்கேனீன்‌ துழாயம்மான்‌ தன்னை” – திருவாய்மொழி, 8:5:11.
478-“உன்னைக்‌ காண்பான்‌ நான்‌ அலப்பாய்‌” – திருவாய்மொழி, 5:8:4.
479-“ஸ மேரு கூடாதாத்மாநம்‌ – அந்தப்‌ பகவானான வசிஷ்ட முனிவர்‌ மேரு மலையின்‌ சிகரத்திலிருந்து விழுந்தார்‌; அவருடைய தலை கல்லில்‌ பஞ்சுக்‌ குவியலில்‌ விழுவதுபோல்‌ விழுந்தது; அப்போது அந்த முனிவர்‌ தலைவன்‌ அப்படி விழுந்ததனால்‌ இறந்தார்‌ இலர்‌; ஏ முனிவரே! அந்த வசிஷ்ட பகவான்‌ அப்படியே நெருப்பை மூட்டி அதிலே புகுந்தார்‌; நெருப்பு மிக்க ஆற்றல்‌ வாய்ந்ததாயினும்‌ அப்போது அந்த நெருப்பு எரிந்து கொண்டிருந்தாலும்‌ அவரை எரிக்கவில்லை ;சோகத்தினால்‌ பீடிக்கப்பட்டிருக்கும்‌ அந்த வசிஷ்ட முனிவர்‌ கடலை அடைந்து பெரிய கல்லினைக்‌ கழுத்தில்‌ கட்டிக் கொண்டு அந்தக்‌ கடலில்‌ விழுந்தார்‌.”
480-“த்வைபாயநோ விரஹகாதா” -வ்யாசர்‌ புத்திரரான சுகரைப்‌ பிரிந்த பிரிவிற்கு அஞ்சினவராய்ப்‌ புத்திரனே! என்று கூப்பிட்டார்‌” – ஸ்ரீ பாகவதம்‌,1.2:2.

ஸுூத்ரம்‌-62
481-“நிரஸ்தாதிஸயாஹ்லாதஸுக பாவைகலக்ஷணா
– தனக்கு மேல்‌ ஒன்றும்‌ இல்லாததான ஆனந்த ரூபமான ஸுகம்‌ ஒன்றையே வடிவாக வுடையதும்‌ துக்கம்‌ இல்லாததும்‌ மீண்டு வருதல்‌ இல்லாததுமான பகவானை அடையும்‌ பேறானது, ஸம்ஸார துக்கத்துக்கு மருந்தாக இருக்கும்‌; ஆகையால்‌ பண்டிதர்களான மனிதர்கள்‌ அந்த எம்பெருமானை அடைவதற்கு முயற்சி செய்யக்‌ கடவர்‌; மைத்ரேய முனிவரே! ஞானமும்‌ கர்மமும்‌ அவனை அடைவதற்கு உபாயமாகச்‌ சொல்லப்பட்டன” – ஸ்ரீவிஷ்ணு புராணம்‌, 6.5:59,60.
482-“தனக்கேயாக வெனைக்‌ கொள்ளுமீதே” – திருவாய்மொழி, 2:9:4.
483-“வழுவிலா வடிமை செய்ய வேண்டும்‌ நாம்‌” – திருவாய்மொழி, 3:3:1.
484-“நாகணை மிசை நம்பிரான்‌ சரணே சரண்‌” – திருவாய்மொழி, 5:10:11.
485-“அடிக் கீழமர்ந்து புகுந்தேனே” – திருவாய்மொழி, 6:10:10.
486-“மற்றொரு தெய்வம்‌ தொழாள்‌” – திருவாய்மொழி, 4:6:10.

ஸூத்ரம்‌-63
487-“காவ்யம்‌ ராமாயணம்‌
– இராமாயண காவியம்‌ முழுதும்‌ இத்தகைய ஸ்லோகங்களால்‌ நான்‌ செய்கிறேன்‌” – ஸ்ரீராமா, பால, 2:42.
488-“நாராயண கதாமிமாம்‌ – நாராயணனுடைய இந்தக்‌ கதையைச்‌ சொல்லப்‌ போகிறேன்‌” – பாரதம்‌, ஆதி பர்வம்‌.
489-“அசத் கீர்த்தந காந்தார – பொருளல்லாதவற்றைப்‌ பேசுதலாகிற காட்டிலே சுற்றியதால்‌ புழுதி அடைந்த வாக்கினைக்‌ கண்ணபிரானுடைய சரிதையைச்‌ சொல்லுதலாகிற கங்கை நீராலே தூய்மை ஆக்குகிறேன்‌” – ஹரிவம்சம்‌.
490-“திருமாலவன்‌ கவியாது கற்றேன்‌” – திருவிருத்தம்‌ 48.
491-“மாற்றங்களாய்ந்து கொண்டு” – திருவாய்மொழி, 6:8:11.
492-“உரிய சொல்லாலிசை மாலைகளேத்தி” – திருவாய்மொழி, 4:5:6.
493-“வாய்த்தவாயிரம்‌” – திருவாய்மொழி, 2:2:11.
494-“வேதேஷு பெளருஷம்‌ – வேதங்களுக்குள்‌ புருஷ ஸுக்கமும்‌, தர்ம சாஸ்த்ரங்களுக்குள்‌ மநு தர்மமும்‌, பாரதத்தில்‌ பகவத்‌ கீதையும்‌, புராணங்களில்‌ ஸ்ரீவிஷ்ணு புராணமும்‌ உயர்ந்தவைகளாம்‌”
495-“தீதிலந்தாதி” – திருவாய்மொழி, 8:2:11.

ஸுூத்ரம்‌-64
496–“ஸம்பத்தேரிதி ஜைமிநி:
-ப்ராணாஹுதி ஹோமங்களை அக்நி ஹோத்ர ஹோமங்களாகச்‌ செய்வதற்காக உபாசகனுடைய மார்பு முதலான உறுப்புக்களை நெருப்புக்களாகக்‌ கூறியுள்ளது என்று ஜைமிநி சொன்னார்‌” -ப்ரஹ்ம ஸூத்ரம்‌, 1.2:32.
497-“அந்யார்த்தம்‌ து ஜைமிநி: – வேறு பயனுக்காகவே இங்கு ஜீவனைச்‌ சொல்லுகிறது என்று ஜைமிநி சொல்லுகிறார்‌” -ப்ரஹ்ம ஸூத்ரம்‌, 1.4:18.
498-“பரம்‌ ஜைமிநிர்‌ முக்யத்வாத்‌ – பரப்ரஹ்மத்தை உபாசிக்கின்றவர்களையே ஆதிவாஹிகர்கள்‌ அழைத்துக்கொண்டு போகிறார்கள்‌ என்று ஜைமிநி எண்ணுகிறார்‌. ‘ப்ரஹ்ம கமயதி’ என்ற இடத்திலுள்ள ப்ரஹ்ம ஸப்தம் ப்ரஹ்மத்திடமே முக்யமாக இருப்பதால்‌” -ப்ரஹ்ம ஸூத்ரம்‌, 4.3:11.
499-“ப்ராஹ்மணே ஜைமிநி: -ப்ரஹ்ம ஸம்பந்தியான அபஹத பாப்மத்வம்‌ முதலான குணங்களோடு முக்தன்‌ தோன்றுகிறான்‌ என்று ஜைமிநி சொல்லுகிறார்‌” -ப்ரஹ்ம ஸூத்ரம்‌, 4.4:5.
500-“நஹி நிந்த்யா நிந்த்யம்‌ நிந்திதும் ப்ரவர்த்ததே, நிந்திதாத்‌ இதரத் ப்ரஸம்ஸிதும்‌ நிந்தையானது, நிந்திக்கும்‌ பொருளை நிந்திப்பதற்கு வரவில்லை; நிந்திக்கும்‌ பொருளைக்‌ காட்டிலும்‌ வேறானதொரு பொருளைத்‌ துதிப்பதற்காக வந்தது-
501-“செஞ்சொற்கவிகாள்‌” – திருவாய்மொழி, 10:7:1.
502-“செந்தமிழ்‌ பாடுவார்‌” – பெரிய திருமொழி, 2:8:2.
503-“இன்கவிபாடும்‌ பரமகவிகள்‌” – திருவாய்மொழி, 7:9:6.
504-“பதியே பவத்தொழும்‌ தொண்டர்‌” – பெரிய திருமொழி, 7:1:7.
505-“அரங்காவோ வென்றழைக்கும்‌ தொண்டர்‌” – பெருமாள்‌ திருமொழி, 2:2.
506-“பேசிற்றே பேசலல்லால்‌” – திருமாலை, 22.
507-“என்னில்‌ மிகுபுகழார்‌ யாவர்‌” – பெரிய திருவந்தாதி, 4.
508-“உரைகொளின்‌ மொழி” – திருவாய்மொழி, 6:5:3.
509-“வலங்கொண்ட வாயிரம்‌” – திருவாய்மொழி, 3:8:11.
510-“மந்வர்த்த விபரீதா – எந்த ஸ்ம்ருதியானது மநுவினால்‌ சொல்லப்பட்ட பொருளுக்கு மாறுபட்டிருக்கிறதோ அது, புகழப்படுவதில்லை-

ஸூத்ரம்‌-66
511-“விதயச்ச வைதிகாஸ் த்வதீய கம்பீர மநோநு ஸாரிண:
– வேதத்தில்‌ சொல்லப்படுகின்ற விதிகள்‌, தேவரீரைச்‌ சரணமாகப்‌ பற்றி யிருக்கின்ற பெரியோர்களுடைய கம்பீரமான மனத்தினை அநுசரித்தவைகளாக ஆகின்றன” ஸ்தோத்ர ரத்னம்‌, 20

ஸுூத்ரம்‌-67
512-“உளன்‌ சுடர்மிகு சுருதியுள்‌
” – திருவாய்மொழி, 1:1:7.
513–“மார்க்கண்டேயனும்‌ கரியே” – திருவாய்மொழி, 5:2:7.
514–“பார்த்தன்‌ தெளிந்தொழிந்த” – திருவாய்மொழி, 2:8:6.
515–“ஸு ஹோவாசவ்யாஸ: பாராசர்ய – பராசர முனிவருடைய புதல்வரான அந்த வ்யாசர்‌ சொன்னார்‌” – ஆரணம்‌.
516-“யத்‌ வை கிஞ்ச – எது ஒன்றை மநுவானவர்‌ சொன்னாரோ அது மருந்து” – யஜுர்‌ வேதம்‌.
517–“ப்ரஹ்மவாதிநோ வதந்தி -ப்ரஹ்மத்தை அறிந்தவர்கள்‌ சொல்லுகிறார்கள்‌” யஜுர்‌ வேதம்‌.

ஸுூத்ரம்‌-68
518-வேதரூபமிதம் க்ருதம்‌
– வேத ரூபமாகச்‌ செய்யப்பட்டது இத் திருவாய்மொழி”
519-“த்ராவிடீம் ப்ரஹ்ம ஸம்ஹிதாம்‌ – தமிழ்‌ மொழியான,ப்ரஹ்ம விஷயமான திருவாய்மொழி என்னுமுபநிஷத்தை” – ஸ்ரீரங்கராஜஸ்தவம்‌, பூர்வ, 6.
520-“த்ராவிட வேத ஸுக்தை: – தமிழ்‌ ரூபமான வேத ஸுூக்தங்களாலே” ஸ்ரீரங்கராஜஸ்தவம்‌, பூர்வ, 16.
521–“வேதாநத்யாபயாமாஸ மஹாபாரத பஞ்சமாந்‌ – மஹாபாரத மென்கிற ஐந்தாவது வேதங்களை அத்யயனம்‌ செய்வித்தார்‌” – ஸ்ரீவிஷ்ணு புராணம்‌.
522–“பகவத்‌ கீதாஸுபநிஷத்ஸு – பகவத்கீதை யாகிற உபநிடதங்களில்‌”

ஸூத்ரம்‌-69
523–“கஜகர்ணச்‌ சோரகதிர்‌ – கஜகர்ணம்‌, சோரகதி, மகரத்வஜ:, லக்ஷ்மீ கீர்த்தி:, பாணி, பாதம்‌, கெளரீ, பஞ்சானனம்‌, சதுராம்‌ நாயம்‌, கருடத்வஜம்‌ என்னுமிவைகள்‌ சங்கீதம்‌ அறிந்தவர்களால்‌ தாளங்களாகச்‌ சொல்லப்பட்டன.”
524--“இப் பத்தும்‌” – திருவாய்மொழி, 9:4:11.
525-“இவை பத்தும்‌” – திருவாய்மொழி, 5:5:11.
526– “நூறே சொன்ன” – திருவாய்மொழி, 9:4:11.
527–“பத்து நூற்றுள்‌” – திருவாய்மொழி, 6:7:11.
528–“சுதுர்விம்சத் ஸஹஸ்ராணி ஸ்லோகாநாம்‌ – வால்மீகி முனிவர்‌ இருபத்து நாலாயிரம் ஸ்லோகங்களைக்‌ கூறினார்‌” – ஸ்ரீராமா, பால, 4:2.
529-“செய்கோலத்தாயிரம்‌” – திருவாய்மொழி, 4:1:11. ஸூத்ரம்‌-70
530-“வேத வேத்யே – வேதங்களால்‌ அறியப்படும்‌ பரம புருஷனானவன்‌ சக்கரவர்த்தித்‌ திருமகனாக அவதரித்தவாறே அந்த வேதங்களும்‌ பிரசேதஸ்ஸின்‌ புதல்வரான வால்மீகி பகவானைட மிருந்து ஸ்ரீராமாயணமாகப்‌ பிறந்தது.” – ஸ்ரீராமா, பால.
531-“க்ஷயந்தமஸ்ய ரஜஸ்‌: பராகே – இந்த ராஜஸ தாமச குணங்களின்‌ மயமான இப் பிரக்ருதி மண்டலத்தின் மேல்‌ (பரம பதத்தில்‌) எழுந்தருளி யிருப்பவரான” தைத்திரீய உபநிஷத்‌.
532-“ஆதித்ய வர்ணம்‌ தமஸு:பரஸ்தாத்‌ – ஸுர்யனுடைய வர்ணம்‌ போன்ற வர்ணத்தை யுடைய இந்தப்‌ பரம புருஷனை நான் அறிவேன்‌; அவன்‌ தமஸ்ஸாகிற பிரகிருதி மண்டலத்திற்கு அப்பால்‌ (பரம பதத்தில்‌) இருக்கின்றான்‌” – புருஷ ஸுக்தம்‌.
533-“தத்‌ விஷ்ணோ: பரமம்‌ பதம்‌ ஸதா பஸ்யந்தி ஸுரய: – விஷ்ணுவினுடைய அந்த உயர்ந்த இடத்தை (பரம பதத்தை) நித்ய ஸூரிகள்‌ எப்பொழுதும்‌ பார்க்துக் கொண்டிருக்கிறார்கள்‌” – யஜுர்வேதம்‌.
534-“யோ வேத நிஹிதம்‌ – ஹிருதய குகையில்‌ வைக்கப் பட்டிருக்கிற இந்தப் ப்ரஹ்மத்தை எவன்‌ வழிபடுகிறானோ அவன் ப்ரக்ருதி ஸம்பந்தம்‌ இல்லாதது என்று சொல்லப்படும்‌ பரம பதத்தில்‌ அந்தப் ப்ரஹ்மத்துடன் கூட எல்லாக்‌ கல்யாண குணங்களையும்‌ அனுபவிக்கிறான்‌” – தைத்திரீய உபநிஷத்‌.
535-“முது வேதம்‌” – திருவாய்மொழி, 1:6:2.
536) “ஷாட் குண்யாத்‌ வாஸுதேவ: – தேவரீர்‌ பர வாசுதேவ விக்ரஹத்தோடு கூடினவராய்‌ ஆறு குணங்களால்‌ முக்தர்களுக்கு இனியராகா நின்றீர்‌” ஸ்ரீரங்கராஜஸ்தவம்‌, உத்தர, 39.
537-‘பலாட்யாத்‌ போதாத்‌ – வலிமையோடு கூடின ஜ்ஞானத்தாலே ஸங்கர்ஷணராகிற நீர்‌ அழித்தலைச்‌ செய்கிறீர்‌, ஸாஸ்த்ரங்களையும்‌ நன்றாக விரிவு படுத்துகிறீர்‌ ;ப்ரத்யும்நராய்‌ ஐஸ்வர்யத்தாலும்‌ வீர்யத்தாலும்‌ படைத்தலைச்‌ செய்கின்றீர்‌, தர்மத்தையும்‌ பரப்புகின்றீர்‌; அப்படியே அநிருத்தராய்‌ சக்தியையும்‌ ஒளியையும்‌ தரித்துக் கொண்டு காப்பாற்றுகின்றீர்‌ , தத்துவத்தையும்‌ பரப்புகின்றீர்‌.” ஸ்ரீரங்கராஜஸ்தவம்‌, உத்தர, 39.
538-“ஸங்கர்ஷணாதி ஸத் பாவம்‌ – உலகத்துக்கு நலம்‌ செய்ய வேண்டு மென்னுமிச்சையால்‌ ஸங்கர்ஷணன்‌ முதலான வ்யூக நிலைகளை அடைகிறேன்‌; முறையாக அழித்தல்‌ படைத்தல்‌ அளித்தல்‌ என்னுமிவைகளால்‌ உயிர்களுக்கு அநுக்ரஹம்‌ ஏற்படுகின்றது; பின்னும்‌ ஸாஸ்த்ரம்‌, ஸாஸ்த்ரங்களின்‌ பொருளான தர்மம்‌, அவற்றாலாய தத்‌வ ஜ்ஞானம்‌ முதலான பயன்களும்‌ இருக்கின்றன; நான்கு வ்யூகங்களிலும்‌ துரீயம்‌ ஸுஷுப்தி இவை முதலான நிலைகளையும்‌ அறீந்து கோடல்‌ வேண்டும்‌.” – விஷ்வக்ஸேன ஸம்ஹிதை.
539-“தத்ரஜ்ஞாந – அந்த வ்யூகத்தில் ஜ்ஞாநம்‌, பலம்‌ என்னும்‌ குணங்களின்‌ சேர்க்கையால்‌ விஷ்ணுவினுடைய ஸங்கர்ஷண உருவம்‌ உண்டாகின்றது; ஐஸ்வர்யம்‌, வீர்யம்‌ என்னுமிவைகளின்‌ சேர்க்கையால் ப்ரத்யும்நனுடைய திருமேனி உண்டாகின்றது; விஷ்ணுவுக்கு சக்தி, ஒளி என்னுமிவைகளின சேர்க்கையால்‌ அநிருத்தருடைய திருமேனி உண்டாகின்றது; இந்த சக்தி மயங்களான வ்யூகங்கள்‌ குணங்களின் ப்ரகாசங்களுக்கு இலக்கணங்கள்‌.”- விஷ்வக்ஸேன ஸம்ஹிதை.
540-“பஞ்ச ராத்ரஸ்ய – எல்லாப்‌ பாஞ்சராத்ரங்களையும்‌ சொன்னவன்‌ நாராயணனே! பாரதம்‌.
54-“ஓதினாய்‌ நீதி” – இரண்டாந்‌ திருவந்தாதி, 48.
542-“ஆபோ நாரா இதி – தண்ணீரானது நரன்‌ என்று சொல்லப்படுகிற பரமாத்மாவினிடமிருந்து தோன்றியது; ஆதலால்‌, தண்ணீர்‌ நாரம்‌ என்று சொல்லப்படுகிறது. முன்பு யாது காரணத்தால்‌ அந்த நீரானது இந்தப்‌ பரமாத்மாவிற்குச்‌ சாரீரமா யிருந்ததோ அதனால்‌ நாராயணன்‌ என்று எண்ணப் படுகிறான்‌.” – மநு ஸ்ம்ருதி, 1:19.
543–“ப்ரசாஸிதாரம்‌ – பரம புருஷனை , எல்லாவற்றையும்‌ நியமிப்பவனாகவும்‌
ஸுூக்ஷுமமானதைக்‌ காட்டிலும்‌ ஸூஷ்மமானவனாயும்‌ ஓட வைத்த பொன்னிற முடையவனாகவும்‌ கனவிலுள்ள புத்தி போன்ற யோகத்தால்‌ அடையத்‌ தக்கவனாகவும்‌ அறிதல்‌ வேண்டும்‌.” – மநு ஸ்ம்ருதி, 12:122.
544-“ரஷ ஸர்வாணி பூதாநி – இவன் , எல்லா உயிர்களையும்‌, மண்‌ முதலிய ஐந்து பூதங்களாலான சரீரங்களால்‌ பரந்து பிறத்தல்‌, வளர்த்தல்‌, இறத்தல்‌ என்னுமிவைகளால்‌ எப்பொழுதும்‌ சக்கரம்‌ போன்று சுழலும்படி செய்கிறான்‌” –மநுஸ்ம்ருதி, 12:124.
545–“ஸ ஆத்மா, அங்காந்யந்யா தேவதா: – ‘ஸ ஆத்மா’ என்ற சொற்களால்‌ சொல்லப்பட்டவனே பரமாத்மா, மற்றைத்‌ தேவர்கள்‌ அவனுக்குச்‌ சரீரங்கள்‌” தைத்திரீய உபநிஷத்‌.
546-“கேட்ட மனு” – நான்முகன்‌ திருவந்தாதி, 76.
547–‘படுகதையும்‌” – நான்முகன்‌ திருவந்தாதி, 76.
548-“ஆக மூர்த்தியாய வண்ண மென்கொல்‌” – திருச்சந்த விருத்தம்‌, 17.
549-“தமருகந்த தெவ்வுருவம்‌” – முதல்‌ திருவந்தாதி, 44.
550-“சடகோபன்‌ பண்ணிய தமிழ்‌” – திருவாய்மொழி, 2:7:13.
551-“எய்தற்கரிய மறைகளை” – இராமாநுச நூற்றந்தாதி, 18.

ஸுூத்ரம்‌-71
552-தோதவத்தித் தூய் மறையூர் துறை
-பெரியாழ்வார் -4-8-1-
553-பொருநல் சங்கணித்துறை -திருவாய் -10-3-11
554-“துகில்வண்ணத்தூநர்‌” – திருவாய்மொழி, 7:2:11.
555-“பிபேத் யல்ப ச்ருதாத்‌ வேதோ – வேதமானது சிறிது கற்றவனிடம்‌, இவன்‌ என்னை ஏமாற்றி விடுவான்‌ என்று அஞ்சுகிறது” – பார்ஹஸ்பத்ய ஸ்மிருதி.
557--“நன்ஞானத்துறை” – திருவிருத்தம்‌, 93.
558-“தெளிவுற்றவாயிரம்‌” – திருவாய்மொழி, 7:5:14.
559-“அறிவித்தேன்‌ ஆழ் பொருளைச்‌ சிந்தாமற்‌ கொண்மின்‌” நான்முகன் திருவந்தாதி,1.

ஸூத்ரம்‌-72
560-“ஸ்ராவணயாம் ப்ரெளஷ்ட்டபத்யாம்‌
– ப்ராஹ்மணன்‌ ஆவணி மாதத்திலாவது புரட்டாசி மாதத்திலாவது சாஸ்த்ரத்தில்‌ சொல்லியபடி உபகர்மங்களைச்‌ செய்து நியமத்துடன்‌ கூடினவனாய்‌ நாலரை மாதங்களில்‌ வேதங்களை அத்யயனம்‌ செய்யக் கடவன்‌; இதற்குப்‌ பிறகு நியமத்துடன் கூடினவனாய்‌ சுக்ல பக்ஷத்தில்‌ வேதங்களை ஓதக் கடவன்‌; வேதாங்கங்களையும்‌ உபநிடதங்களையும் க்ருஷ்ண பக்ஷத்தில்‌ நன்றாக அத்யயனம்‌ செய்யக் கடவன்‌.” மநுஸ்ம்ருதி, 4:95.
561-“நூற்கடல்‌” – மூன்றாம்‌ திருவந்தாதி, 32.
562-“இவள்‌ வாயனகள்‌ திருந்த” – திருவாய்மொழி, 6:5:7.
563-“அத்யேதவ்யம்‌ – வேத ரூபமாகச்‌ செய்யப்பட்ட இத் திருவாய்மொழி ப்ராஹ்மணோத்தமர்களாலும்‌ பெண்களாலும்‌ நான்காம்‌ வர்ணத்தவர்களாலும்‌ அத்யயனம்‌ செய்யத் தக்கது; இதனை அத்யயனம்‌ செய்யு மவர்களுக்கு மோக்ஷம்‌ கையில்‌ இருக்கிறது” – பாஞ்சராத்ரம்‌.
564-“பெரும்புறக்கடலை” – பெரிய திருமொழி, 7:10:1.
565-“யமாத்மா ந வேத – எந்தப்‌ பரம் பொருளை ஆத்மா அறிய வில்லையோ” ப்ருஹதாரண்யம்‌, 5:7:22.
566-“கட்கிலீ” – திருவாய்மொழி, 7:2:3.
567-“மாநுஷே லோகே – மனித லோகத்தில்‌ நித்யரான விஷ்ணுவானவர்‌ பிறந்தார்‌” ஸ்ரீராமா, அயோத்யா, 1:7.
568-“யஸ்யாம்‌ ஜாதோ – உலக நாதனாய்‌ நித்யனான விஷ்ணுவானவர்‌ எவ்விடத்தில்‌ அவதரித்தாரோ”
569-“நாக பர்யங்க முத்ஸ்ருஜய – திருவனந்தாழ்வானாகிற படுக்கையைத்‌ தனக்கு முன்னே அவதரிக்கும்படி போக விட்டு மதுரை என்ற நகரத்திற்கு எழுந்தருளினாரன்றோ” – ஹரிவம்சம்‌, 113:62.
570-“விஷ்ணுர்‌ மாநுஷ ரூபேண – விஷ்ணுவானவர்‌ மனித உருவத்தோடு பூ லோகத்தில்‌ சஞ்சரித்தார்‌”
571-“ஞாலத்தூடே நடந்து”– திருவாய்மொழி, 6:9:3.
572-“அதிலே தேங்கின மடுக்கள்‌ போலே” – ஸ்ரீவசந பூஷணம்‌, ஸூ-39.
573-“மதிமந்தாந – எந்த வ்யாஸ பகவானால்‌ வேதமாகிற கடலில்‌ நின்றும்‌ ஞானமாகிற மத்தை யிட்டுக்‌ கடைந்து”-

ஸுூத்ரம்‌-75
574-“கனிவார்‌ வீட்டின்பம்‌”
– திருவாய்மொழி, 2:3:5.
575-“அந்தமிழின்பப்பா” – பெருமாள்‌ திருமொழி, 1:4.
576-“அடியார்க்கின்ப மாரி” – திருவாய்மொழி, 4:5:10.
577-“விஷ்ணோரர்ச்சாவதாரேஷு – எவன்‌ விஷ்ணுவின்‌ அர்ச்சாவதாரங்களில்‌ உலோகம்‌ என்ற புத்தியைச்‌ செய்கிறானோ, எவன்‌ குருவினிடத்தில்‌ மனிதன்‌ என்ற எண்ணத்தைச்‌ செய்கிறானோ, அவ்விருவர்களும்‌ நரகத்தில்‌ விழுமவர்களாவர்‌” ப்ரம்மாண்ட புராணம்‌.
578-“யோ விஷ்ணெள ப்ரதிமாகாரே – எவன்‌ விக்ரஹமாய்‌ எழுந்தருளி யிருக்கும்‌ பகவானிடத்தில்‌ உலோகம்‌ என்ற புத்தியைச்‌ செய்கிறானோ, எவன்‌ குருவினிடத்தில்‌ மனித புத்தியைச்‌ செய்கிறானோ, அவ்விருவரும்‌ நரகத்தில்‌ விழுமவர்கள்‌”
579-“அர்ச்சாவதாரோபாதனம்‌ வைஷ்ணவோத்பத்தி சிந்தநம்‌, மாத்ருயோநி பரீக்ஷ்யாஸ்‌ துல்யமாஹுர்‌ மநீஷிண: – ஞானிகள்‌, அர்ச்சாவதாரத்தில்‌ முதற்‌ காரணத்தை நினைப்பதும்‌ ஸ்ரீவைஷ்ணவர்களுடைய பிறப்பினை நினைப்பதும்‌ தாயின்‌ யோநி பரீகைக்கு ஒப்பாம்‌ என்று சொல்லுகிறார்கள்‌”
580-“ஹரிகீர்த்திம்‌ விநைவாந்யத்‌ – அரசனே!ப்ராஹ்மணன்‌ விஷ்ணுவினுடைய புகழைத்‌ தவிர வேறான தமிழ்ச்‌ செய்யுட்கள்‌ பாடலாகாது; ஆனதால்‌, (நீ தமிழில்‌ பாடினார்‌ என்று நாட்டினை விட்டுத்‌ துரத்தின காரணத்தால்‌) உன்னால்‌ பாப காரியம்‌ செய்யப்பட்டது” – மாத்ஸபுராணம்‌.
581-“கிமப்யத்ராபிஜாயந்தே யோகிநஸ்‌ – யோகிகள்‌ இந்தப்‌ பூமியில்‌ எல்லாப்‌ பிறவிகளிலும்‌ பிறக்கிறார்கள்‌; ஜீவாத்மாவிற்குத்‌ தலைவனான பரமாத்மாவை நேரே கண்டறிந்த இந்த யோகிகளுடைய குலம்‌ தொழில்‌ முதலியன சிறிதும்‌ நினைக்கத் தக்கனவல்ல.” – பவிஷ்யோத்தரம்‌.
582-“சூத்ரம்‌ வா பகவத்‌ பக்தம்‌ – பகவத்‌ பக்தனான நான்காம்‌ வருணத்தானையாவது, வேடுவனையாவது, நாய்‌ இறைச்சியைத்‌ தின்னும்‌ நீசனையாவது அந்தந்த சாதியைக்‌ கொண்டு எவன்‌ பார்க்கிறானோ அவன்‌ நரகத்தினை அடைவான்‌”
583-“அவஜாநந்தி மாம்‌ மூடா – மனித சரீரத்தை எடுத்திருக்கிற அறப் பெரியனான என்னை அறிவில்லாத மாக்கள்‌ (என்‌ தன்மையை அறியாமல்‌) அவமதிக்கிறார்கள்‌” ஸ்ரீகீதை, 9:11.
584-“பச்யந்தி கேசிதநிசம்‌ – எல்லோரையும்‌ விட மேம்பட்டவராயிருக்கும்‌ தேவரீரது தன்மையை, தேவரீரைத்‌ தவிர வேறு பொருட்களில்‌ எண்ணத்தைச்‌ செலுத்தாத ஒரு சிலர்‌ எப்போதும்‌ பார்க்கிறார்கள்‌” -ஸ்தோத்ரரத்நம்‌, 16.-

ஸூத்ரம்‌-76
585-“வெள்ளியார்‌ பிண்டியார்‌”
– பெரிய திருமொழி, 9:7:9.
586-“பொய்ந்நூலை” – பெரிய திருமொழி, 2:5:2.-

ஸுூத்ரம்‌-77
587-“ஒருத்தி மகனாய்ப்‌ பிறந்து”
– திருப்பாவை, 25.
588-“கண்ணன்‌ நீண்‌ மலர்ப்பாதம்‌” – திருவிருத்தம்‌, 37
589-“க்ருஷ்ணத்ருஷ்ணா தத்வமிவோதிதம்‌ – கிருஷ்ணன்னிடத்தில்‌ வைத்த ஆசையே ஒரு வடிவுகொண்டாற்‌ போன்றவரான நம்மாழ்வார்‌” – ஸ்ரீரங்கராஜஸ்தவம்‌ பூர்வசத, 6. ஸூத்ரம்‌-78
590-“திருவின்‌ வடிவொக்கும்‌ தேவகி பெற்ற” – பெரியாழ்வார்‌ திருமொழி ,1:2:17.
591-“திருவிலேனொன்றும்‌ பெற்றிலேன்‌” – பெருமாள்‌ திருமொழி, 7:5.
592-“த்வீபே பதரிகாமிச்ரே – இலந்தைக்‌ காடு கலந்த காட்டில்‌ சத்யவதி யென்பவள்‌ பராசரரிடமிருந்து, பகைவனைத்‌ தபிக்கச்‌ செய்யும்‌ விஷ்ணுவின்‌ அம்சமானவயாச முனிவரைப்‌ பிள்ளையாக அடைந்தாள்‌” – பாரதம்‌.
593-“புந: கந்யா பவிஷ்யதி – மீளவும்‌ கன்னியாகக்‌ கடவாய்‌”
594-“எல்லாம்‌ தெய்வநங்கை யசோதை பெற்றாளே” – பெருமாள்‌ திருமொழி,7:5.
595-“தத்துக்‌ கொண்டாள்கொலோ” – பெரியாழ்வார்‌ திருமொழி, 2:1:7.
596–“இம்மாயம்‌ வல்ல பிள்ளை நம்பி யுன்னை” – பெரியாழ்வார்‌ திருமொழி,3:1:3.
597-“நெடுங் காலமும்‌ கண்ணன்‌ நீண்‌ மலர்ப் பாதம்‌ பரவிப்‌ பெற்ற” – திருவிருத்தம்‌, 37.
598-“நங்கைமீர்‌ நீருமோர்‌ பெண்பெற்று நல்கினீர்‌” – திருவாய்மொழி, 4:2:9.

ஸூத்ரம்‌-79
599-“வெறிகொள்‌ துழாய்மலர்‌ நாறும்‌”
– திருவாய்மொழி, 4:4:3.
600-“இவளந்தண்டுழாய்‌ கமழ்தல்‌” – திருவாய்மொழி, 8:9:10.

ஸூத்ரம்‌-80
601-“அறிவொன்றுமில்லாத வாய்க்குலம்‌”
– திருப்பாவை, 28.
602-“பவள நன்படர்க்கீழ்ச்‌ சங்குறை பொருநல்‌” – திருவாய்மொழி, 9:2:5.
603-*”பொருநல்‌ சங்கணி துறை” – திருவாய்மொழி, 10:3:11.
604-“நல்லார்‌ நவில்‌ குருகூர்‌” – திருவிருத்தம்‌, 100.
605-சயப் புழார்‌ பலர் வாழும்‌ தடங்குருகூர்‌” – திருவாய்மொழி, 3:1:11.
606-“நல்லார்‌ பலர் வாழ்‌ குருகூர்‌” – திருவாய்மொழி, 10:8:11.-

ஸூத்ரம்‌- 81
607-“பவாந்‌ நாரயணோ தேவ
: – தேவரீரி நாராயணன்‌ என்ற தெய்வம்‌” – ஸ்ரீராமா, யுத்‌, 120:13.
608-“ஆத்மாநம்‌ மாநுஷம்‌ மந்யே ராமம்‌ தசரதாத்மஜம்‌ – என்னை மனிதனாகவும்‌ இராமன்‌ என்னும்‌ பெயரினாகவும்‌ தசரத சக்ரவர்த்திக்குப்‌ புத்ரனாகவும்‌ எண்ணுகிறேன்‌” – ஸ்ரீராமா, யுத்‌, 120:11.
609-“பாலத்வஞ்சாதி வீர்யஞ்ச – இளமையும்‌, மிகுந்த வீர்யமும்‌ எங்களிடத்தில்‌ தோன்றிய நன்மையற்ற பிறவியும்‌ நினைக்கும் போது ஐயம்‌ உண்டாகிறது; தேவரீர்‌ தேவனா? அசுரனா? இயக்கனா? கந்தர்வனா?” – ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌, 5:13:7.
610-“க்ஷணம்‌ பூத்வாத்வஸெள – இந்தக்‌ கிருஷ்ணன்‌ சிறிது போழ்து ப்ரணய கோபமுள்ளவனாய்க்‌ கண நேரம்‌ வாய் திறவாமலிருந்து” – ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌ , 5:13:9.
611-“நாஹம்‌ தேவோ – நான தேவனல்லன்‌, கந்தர்வனுமல்லன்‌ , இயக்கனுமல்லன்‌ , அசுரனுமல்லன்‌. நான்‌ உங்களுக்கு உறவினனாகத்‌ தோன்றினேன்‌; ஆதலால்‌, வேறுவிதமாக இது நினைக்கத்‌ தக்கதன்று” – ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌, 5:13:12.
612-“ஸு உஸ்ரேயாந்‌ பவதி ஜாயமாந: – அந்தப்‌ பரம புருஷன்‌ பிறந்ததனாலே ஒளியுடையவனானான்‌” – யஜுர்வேதம்‌, 3:6:3.
613-“பலபிறப்பா யொளி வரு முழு நலம்‌” – திருவாய்மொழி, 1:3:2.–614-“மாஸ்ம பூதபிமே ஜந்ம சதுர்முகாத்மநா – எனக்குப்‌ பிரமனாகவும்‌ பிறவி வேண்டா” -ஸ்தோத்ர ரத்நம்‌, 55.
615-“பண்டை நாள்‌” – திருவாய்மொழி, 9:2:1.
616-“ஆழியங்கைப்‌ பேராயற்காளாம்‌ பிறப்பு” – பெரிய திருவந்தாதி, 79.

ஸூத்ரம்‌-82
617-“ஜநகாநாம்‌ குலே –
என புத்திரியான பிராட்டி, சக்ரவர்த்தித்‌ திருமகனான ஸ்ரீராம பிரானைக்‌ கணவனாக அடைந்து ஜனகர்களுடைய குலத்துக்குக்‌ கீர்த்தியை உண்டாக்கப்‌ போகிறாள்‌” – ஸ்ரீராமா, பால, 67:21.
618-“ராஜ்யஞ்சாஹஞ்ச ராமஸ்ய தர்மம்‌ – ராஜ்யமும்‌ நானும்‌ ஸ்ரீராமபிரானுடைய செல்வம்‌; இந்த விஷயத்தில்‌ தர்மத்தைச்‌ சொல்லக் கடவீர்‌; தசரதனுக்கு மகனாகப்‌ பிறந்தவன்‌ எப்படி ராஜ்யத்தை அபஹரிப்பவனாக எப்படி ஆகக்கூடும்‌?” ஸ்ரீராமா, அயோத்யா, 82:12.
619-“ஜடிலம்‌ சீரவஸநம்‌ – சடையை உடையவனும்‌ மரவுரியை உடுத்துக்‌ கொண்டிருப்பவனும்‌ கைகூப்பி வணங்கினவனாய்ப்‌ பூமியில்‌ விழுந்தவனுமான ஸ்ரீபரதனைப்‌ பார்த்தார்‌.” – ஸ்ரீராமா, அயோத்யா, 100:1.
620-“பங்கதிக்தஸ்து ஜடிலோ பரதஸ்‌ – பரதனோ சடைமுடியுடையவனாய்ச்‌ சரீரம்‌ எங்கும்‌ அழுக்கடைந்தவனாய்த்‌ தேவரீருடைய வருகையை எதிபார்த்துக் கொண்டிருக்கிறான்‌” – ஸ்ரீராமா, யுத்‌, 127:5.
621-“மக்களறுவரைக்‌ கல்லிடை மோதவிழந்தவள்‌ தன்‌ வயிற்றில்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 5:3:1.
622-“தந்தை காலில்‌ பெரு விலங்கு தாளவிழ” – பெரிய திருமொழி, 7:5:1.
623--“மலிபுகழ்‌ வண்குருகூர்‌” – திருவாய்மொழி, 4:2:11.
624-“குடிக்கிடந்தாக்கம்‌ செய்து” – திருவாய்மொழி, 9:2:2.
625-“காண வாராய்‌” – திருவாய்மொழி, 8:5:2.
626–“கண்ண நீர்‌ கைகளாலிறைத்து” – திருவாய்மொழி, 7:2:1.
627-“இட்டகாலிட்ட கையர்‌” – திருவாய்மொழி, 7:2:4.
628–“அறுவர்‌ தம்‌ பிறவியஞ்சிறையே” – திருவாய்மொழி, 1:3:11.

ஸூத்ரம்‌-83
629-“கதிரவன்‌ குணதிசை”
– திருப்பள்ளியெழுச்சி, 1.
630-“தமோ பாஹ்யம்‌ – நெருப்பு குரியன்‌ என்னுமிவர்கள்‌ முன்னிலையில்‌ புறவிருள்‌
நாசமடையும்‌; விஷ்ணு பக்தனாகிற ஸூரியன்‌ முன்னிலையில்‌ புறவிருளோடு உள்ளிருளும்‌ நாசமடையும்‌”
631-“சரஜாலம்சுமாந்‌ சூர – ஏ அநும! அம்புக் கூட்டங்களகிற கிரணங்களை யுடைய வீரனான இராம திவாகரன்‌, பகைவர்களகிற இராக்கதக் கடலை வற்றும்படி செய்யப் போகிறார்‌” – ஸ்ரீராமா,சுந்தர,37:1
632-“பிறவியென்னுங்‌ கடல்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 5:4:2.
633-“ததோகில ஜகத்பத்ம – தேவகிப்‌ பிராட்டி கருத்தரித்த பின்பு அனைத்துலகங்களகிற தாமரையை மலர்த்துவதற்காகத்‌ தேவகியாகிற கிழக்குத்‌ திக்கில்‌ ஒளியுடைய கிருஷ்ணனாகிற அச்யுத பாநு தோன்றினான்‌” – ஸ்ரீவிஷ்ணு புராணம்‌, 5:3:2.
634-“போதில்‌ கமலவன்னெஞ்சம்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 5:2:8.
635-“யத்கோ ஸஹஸ்ரம்‌ – எவருடைய திருவாய்மொழியின்‌ திருப்பாசுரங்களாகிற ஆயிரம்‌ கிரணங்கள்‌ மனிதர்களுடைய அறிவின்மையாகிற இருளைப்‌ போக்கடிக்கின்றனவோ, திருவாழி திருச்சங்குகளைத்‌ தரித்த ஸ்ரீமந்நாராயணன்‌ எவரிடத்தில்‌ வசிக்கின்றாரோ, காதுகளை அடைந்திருக்கின்ற எந்தத்‌ தேசத்தை பிராமணர்கள்‌ வணங்குகின்றார்களோ, அந்த ஆழ்வாராகிற வகுளபூஷண பாஸ்கரருக்கு வணக்கம்‌.” – பராங்குஸாஷ்டகம்‌.
636-“கண்கள்‌ சிவந்து” – திருவாய்மொழி, 8:8:1.
637-“ஊரும்‌ நாடும்‌” – திருவாய்மொழி, 6:7:2.

ஸூத்ரம்‌-84
638-“யயாதி சாபாத்‌ வம்சோயம்‌ –
இந்த வம்சம்‌ யயாதியினுடைய சாபத்தால்‌ ராஜ்யத்தை யாள்வதற்குத்‌ தகுதியற்றது” – ஸ்ரீவிஷ்ணு புராணம்‌, 5:21:12.
639-“அயம்‌ ஸ கத்த்யதே – புராணங்களின்‌ பொருளை அறிந்த பெரியோர்களால்‌, அத்தகைய இந்தக்‌ கிருஷ்ணன்‌ மூழ்கிக்‌ கிடந்த யதுவின்‌ வம்சத்தை மேல்‌ நிலைக்குக்‌ கொண்டுவரப்போகிறார்‌ என்று சொல்லப்படுகிறது.” – ஸ்ரீவிஷ்ணு புராணம்‌, 5:20:49.
640-“அங்கோராய்க்குலம்‌ புக்கதும்‌” – திருவாய்மொழி, 6:4:5.
641-“உத்த்ருதாஸி வராஹேண – ஏ பூமியே! வராஹ அவதாரம்‌ எடுத்த பகவானுடைய முயற்சியாலே மேலே எடுக்கப்பட்டாய்‌” – தைத்திரீய உபநிஷத்‌.
642-“நமஸ்தஸ்மை வராஹாய – விளையாட்டாக பூமியை மேலே எடுத்த வராஹ நயினாருக்கு வணக்கம்‌ ” – ஸ்ரீவராஹ புராணம்‌.
643-“கேழலாய்க்‌ கீழ்ப்புக்கு இடந்திடும்‌” – திருவாய்மொழி, 2:8:7.
644-“அபிமானதுங்கன்‌” – திருப்பல்லாண்டு, 11.

ஸூத்ரம்‌-85
646-‘மத் பக்த ஜந வாத்ஸல்யம்‌
– என்னுடைய வடியார்‌ பக்கல்‌ அன்பும்‌, என்னை யாராதிப்பதில்‌ உகப்பும்‌, தன்னை வாராதிக்கையும்‌, என்னிடத்தில்‌ ஆடம்பரமின்றி யிருத்தலும்‌, என்‌ கதையைக்‌ கேட்குமிடத்தில்‌ பக்தியும்‌, பக்தியின்‌ காரியமான குரல்‌ தழுதழுத்தலும்‌, கண்ண நீர்‌ சொரிதலும்‌, மயிர்க் கூச்செரிதலும்‌,, எப்பொழுதும்‌ மென்னை நினைப்பதும்‌, என்னிடமிருந்து வேறு பயன்களைக் கொள்ளா திருத்தலுமாகிய எட்டு விதமான பக்தியானது எந்தக்‌ கீழ்க் குலத்தானிடமு மிருக்கிறதோ” – பகவச்சாஸ்த்ரம்‌.
646-“ஸு விப்ரேந்த்ரோ முநி: – எட்டு விதமான பக்தியை யுடைய அவன்‌ கீழ்க் குலத்தானாயினும்‌ அவனே ப்ராஹ்மணோத்தமன்‌; அவனே முனிவன்‌; அவனே செல்வத்தை யுடையவன்‌; அவனே துறவி; அவனே பண்டிதன்‌; அவனுக்கு ஞானத்தைக்‌ கொடுக்கக்‌ கடவன்‌; அவனிடமிருந்து ஞானத்தைப்‌ பெற்றுக் கொள்ளக்‌ கடவன்‌.” – பகவச்சாஸ்த்ரம்‌.
647- ‘பழுதிலாவொழுகலாற்றுப்‌ பல சதுப்பேதிமார்கள்‌” – திருமாலை, 42.
648-“ஸச பூஜ்யோ யதாஹ்யஹம்‌ – நான்‌ பூஜிக்கப்படுவது போன்று அவனும்‌ பூஜிக்கத்‌ தக்கவன்‌”
649-“நினனொடுமொக்க வழிபட” – திருமாலை, 42.
650-“மம நாதம்‌ மம குலதைவதம்‌ – என்னுடைய நாதனும்‌, என்னுடைய குலதெய்வமுமான ஸ்ரீரங்கநாதன்‌” – கத்யத்ரயம்‌.
651-“அவரெங்கள்‌ குலதெய்வம்‌” – பெரிய திருமொழி, 2:6:4.
652-“தத்பாதாம்ப்வதுலம்‌ – அவன்‌ திருவடி விளக்கின நீர்‌ ஒப்பில்லாத தீர்த்தம்‌, அவனுண்டு கழித்த சேஷம்‌ மிக்க தூய்மை யுடையது” – பகவச்சாஸ்த்ரம்‌.
653-“கெளசல்யாஸுப்ரஜா – கெளசல்யையின்‌ சிறந்த புதல்வனான ஸ்ரீராமனே! மனிதர்களில்‌ உயர்ந்தவனே! வைகறைப்‌ பொழுது வருகிறது; துயிலெழுவாய்‌; தேவர்கள்‌ ஸம்பந்தமான காலைக் கடன்கள்‌ செய்யத் தக்கன” – ஸ்ரீராமா, பால, 23:2.
654-“அரவணை யாயாயரேறே” – பெரியாழ்வார்‌ திருமொழி, 2:2:1.
655-“அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே” – திருப்பள்ளியெழுச்சி.
656-“துளபத்‌ தொண்டாய” – திருமாலை, 45.
657-“வலந்தாங்கு சக்கரத்தண்ணல்‌” – திருவாய்மொழி, 3:7:9.
658-“எந்தொழுகுலம்‌” – திருவாய்மொழி, 3:7:8.
659-“த்வம்வை கீதப்ரபாவேந – நீ உனது பண்ணின்‌ மஹிமையால்‌ இப் பாவத்தினின்றும்‌ (என்னை) கரை யேற்றுவதற்குத்‌ தகுந்தவன்‌, என்று இப்படிச்‌ சொல்லி, இராக்ஷ்ஸன்‌ சண்டாள வம்சத்திற்‌ பிறந்த நம்பாடுவானைச்‌ சரணமடைந்தான்‌” – கைசிகமாஹாத்ம்யம்‌.
660-“யந்மயா பய்சிமம்‌ – உயர்ந்த ஸ்வரமான யாதொரு கைசிகம்‌ என்னும்‌ பண்‌ என்னால்‌ ஈற்றில்‌ கானம்‌ பண்ணப்பட்டதோ,, அந்தப்‌ பண்ணின்‌ பலத்தால்‌ இந்தப்‌ பாபத்திலிருந்து விடுவிக்கிறேன்‌; உனக்கு நன்மை யுண்டாகட்டும்‌.” கைசிக மாஹாத்ம்யம்‌.
661″நிலையார்‌ பாடல்‌” – பெரிய திருமொழி, 9:6:10.
662-“ஏவம்‌ தத்ர வரம்‌ -ப்ரஹ்மராக்ஷ்ஸன்‌ அங்கு இவ்விதம்‌ வரத்தைப்‌ பெற்று, பெரிய கீர்த்தியை யுடைய ஸோமசர்மாவானவன்‌ வேள்வி சாபத்தினின்றும்‌ விடுபட்டான்‌.”- கைசிக மாஹாத்ம்யம்‌.
663-“ஏழையேதலன்‌ கீழ்மகன்‌” – பெரிய திருமொழி, 5:8:1.
664-“வானோர்‌ தலைமகன்‌” -665-“உகந்து தோழன்‌ நீ” – பெரிய திருமொழி, 5:8:1.
666-“உம்பியெம்பி” – பெரிய திருமொழி, 5:8:1.
667-“கூரணிந்த வேல்வலவன்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 3:10:4.
668-“ததஸ்த்வஹஞ்சாத்தம – அதற்குப்‌ பின்னர்‌ நான்‌ உயர்ந்த வில்லையும்‌ அம்பையுமுடையவனாய்‌ எங்கு அந்த லக்ஷ்மணன்‌ இருந்தானோ அங்கு இருந்தேன்‌.” – ஸ்ரீராமா, அயோத்‌, 87:23.
669-“ஆச்சகேத ஸத்பாவம்‌ – பிறகு காட்டினையே இருப்பிடமாகக்‌ கொண்ட குகப்பெருமாள்‌ அறியமுடியாத நிலைமையிலுள்ள பரதனுக்கு இலக்குமணனுடைய நல்ல தன்மையைச்‌ சிறிது சொன்னார்‌.” – ஸ்ரீராமா, அயோத்‌, 86:1.
670-“பால்யாத்ப்ரப்ருதி ஸுஸ்நிக்த – இளமைப்‌ பருவம்‌ தொடங்கி ஸ்ரீராமபிரானிடத்தில்‌ லக்ஷ்மணனன்‌ மிக்க பக்தியுள்ளவனாக ரியுந்தான்‌.” ஸ்ரீராமா, பால, 18:27.
671-“பரவாநஸ்மி – ககுத்ஸ்த வம்சத்தில்‌ பிறந்தவரே! உமக்கு நான்‌ பரதந்த்ரனாக இருக்கிறேன்‌” – சரிராமா, ஆரண்‌, 15:7.
672-“முன்னோர்‌ தூது” – பெரிய திருமொழி, 2:2:3.
673-“ஸபர்யா பூஜிதஸ்‌ – சக்ரவர்த்தித்‌ திருமகனான ஸ்ரீராமபிரான்‌ ஸபரியினால்‌ நன்றாகப்‌ பூஜிக்கப்பட்டார்‌” – ஸ்ரீராமா, பால, 1:57.
674-“குடைமனனரிடை நடந்ததூதா” – பெரிய திருமொழி, 6:2:9.
675-“விதுராந்நாநி – தூய்மையுடையனவும்‌ குணமுடையனவுமான விதுரருடைய அன்னங்களை யுண்டார்‌” – பாரதம்‌, உத்யோகபர்வம்‌.
676-“தூதுவந்த குரங்கு” – பெரிய திருமொழி, 10:2:6.
677-“த்ருஷ்டா ஸீதா – ஸ்ரீராமா, பால, 1:78.
678-“உபகாராய ஸுத்ரீவோ – ஸ்ரீராமபிரான்‌ செய்த உபகாரத்துக்காகச்‌ சுக்ரீவன்‌ கைங்கர்யம்‌ செய்தவன்‌; விபீஷணன்‌ இராஜ்யத்தை விரும்பினவன்‌; ஒன்றையும்‌ விரும்பாமல்‌ திருவடி பெருமாளுக்குக்‌ கைங்கர்யம்‌ செய்தான்‌; ஆதலால்‌, உடனுண்பது அதற்குத்‌ தகுந்தது” – பாத்மோத்தர புராணம்‌.
679″கோதில் வாய்மையினாயொடு முடனேயுண்பன்‌ நான்‌” – பெரிய திருமொழி,5:8:2.
680-“ஸெளமித்ரே ஹர காஷ்டாநி – லக்ஷ்மணா! விறகுகளைக்‌ கொண்டு வா, நெருப்பினைக்‌ கடைகிறேன்‌, என்‌ பொருட்டு மரணமடைந்த ஜடாயுவைச்‌ சுட விரும்புகிறேன்‌” – ஸ்ரீராமா, ஆரண்‌, 68:27.
681-“ரவமுக்த்வா – இவ்விதம்‌ சொல்லிப்‌ பறவைகட்கு அரசனான ஜடாயுவை எரிகின்ற சிதையில்‌ ஏற்றித்‌ தர்மாத்மாவான ஸ்ரீராமபிரான்‌ துக்கம்‌ அடைந்தவராய்த்‌ தம்‌ உறவினர்களை எரித்தார்ப்போன்று முறையாக எரித்தார்‌.” ஸ்ரீராமா, ஆரண்ய, 68:31.
682-“சிந்து பூமகிழும்‌ திருவேங்கடம்‌” – திருவாய்மொழி, 3:3:2.
683-“துளங்குநீண்முடியரசர்த்தம்குரிசில்‌” – பெரிய திருமொழி, 5:8:9.
684-“வேகவத்யுத்தரெ – வேகவதியின்‌ வடகரையில்‌ புண்யகோடி விமானத்தில்‌ விஷ்ணுவானவர்‌ எல்லா உயிர்களுக்கும்‌ வரம்‌ கொடுக்கும்‌ பெருமானாய்‌ இன்றும்‌ எல்லாராலும்‌ காணப்படுகிறார்‌.” – ஸ்ரீகாஞ்சீ மாஹாத்ம்யம்‌.–685-“தெண்ணீர்ப்‌ பொன்னி திரைக்கையாலடி வருடப்‌ பள்ளி கொள்ளும்‌” – பெருமாள்‌ திருமொழி, 1:1. 686-“யஜ-தேவபூஜாயாம்‌ – யாகம்‌ என்னும்‌ சொல்லுக்குப்‌ பொருள்‌ திருவாராதனம்‌”

ஸூத்ரம்‌-86
687-“சுதுர்வேததரோ விப்ரோ
– எந்தப்ப்ராஹ்மணன்‌ நான்கு வேதங்களையும்‌ அறிந்தவனாயினும்‌ எங்கும்‌ பரந்திருக்கிற வாசுதேவனை அறியாமல்‌ இருக்கின்றானோ அவன்‌, வேதங்களாகிற பாரத்தைச்‌ சுமந்து கொண்டிருக்கிற ப்ராஹ்மணக்கமுதை”
688-“ஸர்வே வேதா – யாதொரு பரம்பொருளை எல்லா வேதங்களும்‌ சொல்லுகின்றனவோ” – கடவல்லி.
689-“வேதையச ஸர்வை: அஹமேவவேத்ய: – எல்லா வேதங்களலும்‌ அறியத்தக்கவன்‌ நானே” – ஸ்ரீகீதை, 15:15.
690-“ச்வசோபி மஹீபால – ஓ அரசனே! விஷ்ணுவிடம்‌ பக்தியுள்ளவன்‌ நாய்‌ இறைச்சி தின்பவனாயினும் ப்ராஹ்மணனைக்‌ காட்டிலும்‌ மேலானவன்‌; விஷ்ணுபக்தியில்லாத ஸந்யாஸியோ நாய்‌ இறைச்சி தின்பவனைக்‌ காட்டிலும்‌ தாழ்ந்தவன்‌.”
691-“தத்‌ கர்ம யந்ந – யாதொரு செயலானது ஸம்ஸார பந்தத்தின்‌ பொருட்டு இல்லையோ அதுதான்‌ நல்ல செயல்‌; எந்தக்‌ கல்வியானது மோக்ஷத்திற்குப்‌ பயன்படுகிறதோ அதுதான்‌ சிறன்ந்த கல்வியாம்‌; பொருளின்பங்களின்‌ பொருட்டுச்‌ செய்யப்படும்‌ வாணிகமானது சிரமத்திற்குக்‌ காரணமாகிறது; மற்றைய கல்வியானது செருப்புக்‌ குத்துக்‌ கற்ற கல்விக்குச்‌ சமமாகும்‌.” ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌, 1.19:41.
692- “ஆம்நாயாப்யஸநாந்யரண்ய ருதிதம்‌ – ஸ்ரீமந்நாராயணனுடைய திருவடித்‌ தாமரைகளில்‌ பக்தியில்லாமல்‌ செய்யப்படும்‌ வேதாத்யயனமானது காட்டிலிருந்து அழுவதுபோல பயனற்றது; வேதத்தில்‌ சொல்லப்பட்ட விரதங்களை நாள்தோறும்‌ அநுஷ்டிப்பதும்‌ சரீரம்‌ இளைத்தலையே பயனாகவுடையது; குளம்‌ வெட்டுதல்‌ முதலான தர்மங்களும்‌ சாம்பலில்‌ பண்ணப்பட்ட ஆஹுாதிபோல்‌
பயனற்றவையேயாம்‌. கங்கை முதலிய நதிகளில்‌ நீராடுவதும்‌ யானை முழுகுவதுபோல்‌ பயனற்றதேயாம்‌. இப்படிப்பட்டவனாக அந்த தேவன்‌ ஸ்ரீமந்நாராயணன்‌ விளங்குகிறான்‌.” – முகுந்தமாலை, 25.
693-“யஸ்யாகிலாமீவஹப-எல்லாருடைய பாவங்களைப்‌ போக்குவனவும்‌ மங்களங்களைக்‌ கொடுப்பனவாவுமான க்ருஷ்ணனுடைய குணங்களோடும்‌ செயல்களோடும்‌ அவதாரங்களோடும்‌ சேர்ந்திருக்கின்ற வாக்குகள்‌ உலகத்தினை வாழச்‌ செய்கின்றன, விளங்கச்‌ செய்கின்றன, பரிசுத்தத்தைச்‌ செய்கின்றன; அவை நீங்கின வாக்குகள்‌ எவையோ அவை பிணத்துக்குச்‌ செய்ய்பட்ட அலங்காரங்களென்று பெரியோர்களால்‌ சொல்லப்பட்டன” – ஸ்ரீமத்பாகவதம்‌, 10.18:12.-
694-“விஷ்ணு பக்திவிஹீநஸ்ய – விஷ்டைக்தியில்லாதவனுடைய வேதாத்யயனம்‌, ஜபம்‌, தபம்‌ என்னுமிவைகள்‌ உயிரில்லாத சரீரத்துக்கு, உலகத்தாருகப்பதற்குச்‌ செய்கின்ற வலங்காரம்‌ போன்றவை”
695-“ப்ராதுர்ப்பாவைஸ்‌ ஸுரநரஸமோ – ஸர்வேண்வரன்‌, அவதாரங்களால்‌ தேவர்‌, மனிதர்‌ இவர்களினத்தவனாகிறான்‌; பாகவதர்களும்‌ சாதியினாலும்‌, ஒழுக்கத்தாலும்‌, குணங்களாலும்‌ அப்படியே ஆகின்றார்கள்‌; இதிலொரு குற்றமில்லை; அவை மிகவுயர்ந்தவையாம்‌; அடியாரல்லாதவரிடத்து உளவாய கல்வியாலும்‌, ஒழுக்கத்தாலும்‌ ஆய மேன்மையானது விதவைக்குச்‌ செய்த அலங்காரம்‌ போல்‌ பழிப்புக்கு இடமாகிறது.”

ஸுூத்ரம்‌-87
696-“அணைவது அரவணை மேல்‌”
– திருவாய்மொழி, 2:8:1.
697-“ஊரும்புள்‌” – திருவாய்மொழி, 10:2:3.
698-“தோளிணை மேலும்‌” – திருவாய்மொழி, 1:9:7.
699-“பெருமக்களுள்ளவர்‌” – திருவாய்மொழி, 3:7:5.
700–“அஸந்நேவ – பரம்பொருளை யுளனென்‌றறிகிறானில்லை யாகில வனில்லாதவனாகிறான்‌.” – தைத்திரியம்‌.
701-“பரம் பொருளுளனென்‌ றறிகிறானாகி லிவனையுள்ளவனாகப்‌ பெரியோர்கள்‌ அறிகிறார்கள்‌.” – தைத்திரியம்‌.
702-“பத்யு:
– பிரமனுடைய செல்வத்தையும்‌ சிவனுடைய செல்வத்தையும்‌ நான்‌ ஆசைப்படவில்லை; யமுனை யாற்றங்கரையில்‌ கடம்பமரமாகவாவது குருந்த மரமாகவாவது இருக்கப்‌ பெறுவேனாக” )
703-“பூத்த நீள்‌ கடம்பேறி” – நாய்ச்சியார்‌ திருமொழி, 4:4.
704-“பூங்குருந்தேறி யிருத்தி” – நாய்ச்சியார்‌ திருமொழி, 3:3.
705-“ஆஸாமஹோ – யாவர்‌ பெண்கள்‌ சிலர்‌ விடமுடியாத தங்கள்‌ உறவினர்களையும்‌
பெரியோர்கள்‌ சென்ற வழியையும்‌ விட்டு, வேதங்களால்‌ தேடப்படுகின்ற க்ருஷ்ணன்‌ சென்ற வழியைப்‌ பினதொடர்ந்தார்களோ அந்தப்‌ பெண்களுடைய பாதத்துகள்‌ சேர்ந்த பிருந்தாவனத்தில்‌ உள்ள சிறுசெடிகள்‌, கொடிகள்‌, ஓஷதிகள்‌ என்னுமிவற்றில்‌ யாதேனுமொன்றாக நான்‌ ஆகக்கடவேன்‌.” ஸ்ரீபாகவதம்‌, 10:48:61.
706-“கோனேரி வாழும்‌” – பெருமாள்‌ திருமொழி, 4:1.
707-“மீனாய்ப்‌ பிறக்கும்‌” – பெருமாள்‌ திருமொழி, 4:2.
708-“செண்பகமாய்‌ நிற்கும்‌” – பெருமாள்‌ திருமொழி, 4:4.
709-“தம்பகமாய்‌ நிற்கும்‌” – பெருமாள்‌ திருமொழி, 4:5.
710-“எம்பெருமான்‌ பொன்மலை” – பெருமாள்‌ திருமொழி, 4:10.
711-“தவ தாஸ்ய – தேவரீருடைய கைங்கர்யத்தினால்‌ உளதாகும்‌ இன்பம்‌ ஒன்றிலேயே ஆசையுடையவர்களுடைய திருமாளிகைகளில்‌ எனக்குப்‌ புழுவாகிய பிறவியும்‌ இருக்கட்டும்‌; மற்றையோர்‌ வீடுகளில்‌ பிரமனாகவும்‌ பிறவியுண்டாக வேண்டா.” ஸ்தோத்ர ரத்னம்‌, 55.
712-“பேராளன்‌ பேரோதும்‌” – பெரிய திருமொழி, 7:4:4.
713-“வாசிகை: பக்ஷி – சொற்களால்‌ ஏற்பட்ட வினைக்குற்றங்களால்‌ பறவைகளின்‌ தன்மையும்‌, விலங்குகளின்‌ தன்மையும்‌, மனத்தால்‌ ஏற்பட்ட வினைக்குற்றங்களால்‌
சண்டாளத்‌ தன்மையும்‌, சரீரத்தால்‌ உண்டான வினைக்‌ குற்றங்களால்‌ ஸ்தாவரங்களின்‌ தன்மையும்‌ ஜீவன்‌ அடைகிறான்‌.” – மநுஸ்ம்ருதி, 12:9.
714-“ந தேஹம்‌ நப்ராணாந்‌ – தேவரீருடைய அடிமையின்‌ பெருமைக்குப்‌ புறம்பாகவுள்ள சரீரத்தையும்‌ கண நேரமும்‌ விரும்பேன்‌, பிராணனையும்‌ விரும்பேன்‌, எல்லோரும்‌ விரும்புகிற சுகத்தையும்‌ விரும்பேன்‌, ஆத்மாவையும்‌ விரும்பேன்‌, பின்‌ வேறொன்றையும்‌ விரும்பேன்‌, நாத! அவை நூறு தூள்களாக அழியக்கடவன ; மதுகுதனனே! இந்த விண்ணப்பம்‌ மனத்தோடு படாததன்று; இது சத்தியம்‌.” ஸ்தோத்ரரத்நம்‌, 56.
715-“ஜ்ஞாநாநந்தமயஸ்த்வாத்மா – ஆத்மாஜ்ஞான வடிவமானது, ஆனந்த வடிவமானது.”

ஸூத்ரம்‌-89
716-“மந்திரங்கொள்‌ மறை முனிவன்‌”
– பெருமாள்‌ திருமொழி, 10:2. ஸூத்ரம்‌-90
717-“எம்மா வுருவும்‌ வேண்டுமாற்றாலாவாய்‌” – திருவாய்மொழி, 5:8:2.
718-“யதாஹி சோரஸ்‌ ஸ ததாஹி புத்த: – கள்ளனைப் போல்‌, வேதத்திற்குப்‌ புறத்தனான புத்தனும்‌ தள்ளத் தக்கவன்‌” – ஸ்ரீராமா, அயோத்‌, 109:33.
719-“கள்ள வேடத்தைக்‌ கொண்டு” – திருவாய்மொழி, 5:10:4.
720-“நஸ்மர்த்தவ்யோ – வேதமந்திரமாயினும்‌ விஷ்ணு ஸம்பந்தமில்லாத மந்த்ரம்‌ விஷேஷமாக நினைக்கத்‌ தக்கதன்று.”
721-“மானிடம்‌ பாட லென்னாவது” – திருவாய்மொழி, 3:9:3.
722-“நகுத்ரா பகவத்பக்தா விப்ரா பாகவதாஸ்ஸ்ருதா: – பகவானுடைய பக்தர்களானவர்கள்‌ ஸூத்ரர்களல்லர்‌; ப்ராஹ்மணர்களோடொத்தவர்கள்‌ என்றும்‌ பாகவதர்களேன்றும்‌ சொல்லப்பட்டார்கள்‌; எல்லாச்‌ சாதிகளிலும்‌ எவர்கள்‌ பகவானிடத்தில்‌ பக்தியில்லாதவர்களோ அவர்களே ஸூத்ரர்கள்‌” – பாரதம்‌, ஆச்வ, 118:32.
723-“காடு வாழ்‌ சாதியுமாகப்‌ பெற்றான்‌” – நாய்ச்சியார்‌ திருமொழி, 12:8.
724-“காலிப்பினனே வருகின்ற” – பெரியாழ்வார்‌ திருமொழி, 3:3:1.
725-“தென்னுரையில்‌ கேட்டறிவதுண்டு” – பெரிய திருமடல்‌, 6.
726-“ஹரி கீர்த்திம்‌ விநைவாந்யத்‌ – ஓ அரசனே! விஷ்ணூவினுடைய புகழைப்‌ பற்றிய பாக்களைத்‌ தவிர வேறான பாக்களைப்ப்ராஹ்மணன்‌ பாடலாகாது” – மாத்ஸ்ய புராணம்‌.
727-“ச்வபசோபி மஹீபால – ஓ அரசனே! நாயிறைச்சி தின்னும்‌ கீழ்ப்பிறப்பினனும்‌ விஷ்ணூவிடம்‌ பக்தியுள்ளவன் ப்ராஹ்மணனைக்‌ காட்டிலும்‌ மேலானவன்‌”
728-“பெறற்கரிய நின்னபாத பத்தியான” – திருச்சந்த விருத்தம்‌, 100.
729-“ஆராரமரர்‌” – திருவாய்மொழி, 10:5:8.
730-“இலங்குவான்‌ யாவருமேறுவர்‌” – திருவாய்மொழி, 3:8:11.
731-“அமரவோரங்கமாறும்‌” – திருமாலை, 43.
732-“அநாசாராந்‌ துராசாராந்‌ – ஆசாரத்தை விட்டவர்களும்‌, கெட்ட ஆசாரத்தை யுடையவர்களும்‌ ஞானமில்லாதவர்களும்‌, தாந்த சாதியில்‌ பிறந்தவர்களுமான என்‌ பக்தர்களைப்ராஹ்மணோத்தமன்‌ இகழ்வானாகில்‌ உடனே அவன்‌ சண்டாளத்‌ தன்மையை அடைவான்‌.” -ப்ரஹ்மாண்ட புராணம்‌.-

ஸூத்ரம்‌-91
733-“தக்ஷிணா திக் க்ருதா
– நற்காரியங்களையே செய்கின்ற எந்த அகத்தியரால்‌ தென்‌ திசையானது புகலிடமாகச்‌ செய்யப்பட்டதோ” – குருகாமாஹாத்ம்யம்‌.
734-“வண்‌ தமிழ்‌ மாமுனி” –
735-“க்ருதாதிஷு நரா ராஜந்‌ – ஓ அரசனே! கிருதயுகம்‌ முதலான யுகங்களிலுள்ள மக்கள்‌ கலியுகத்தில்‌ பிறக்கும்‌ பிறப்பினை விரும்புகிறார்கள்‌; அரசனே! கலியுகத்திலே நாராயணனே அடையத்தக்க பரம்பொருள்‌ என்றெண்ணூகின்ற பெரியோர்கள்‌ அங்குமிங்கும்‌ பிறப்பார்கள்‌ ; தமிழ்த் தேசத்திலோ அதிகமாகப்‌ பிறப்பார்கள்‌; எவ்விடத்தில்‌ தாமிரபரணி, கிருதமாலா, பாலாறு, மிகுந்த பெருமை யுடைய காவேரி, மேலைக்‌ கடலில்‌ சென்று விழுகின்ற பேரியாறு என்னுமிவ்வாறுகள்‌ ஓடுகின்றனவோ அங்குப்‌ பிறப்பார்கள்‌; அரசனே! எந்த மனிதர்கள்‌ அந்த நதிகளின்‌ தண்ணீரைக்‌ குடிக்கின்றர்களோ அவர்களுக்கு நாராயணனிடத்தில்‌, துன்பம்‌ என்பது சிறிதுமில்லாமல்‌ மிகுந்த பக்தி யுண்டாகின்றது.” – ஸ்ரீபாகவதம்‌, 11.5:38-39.
736-“கலியும்‌ கெடும்‌” – திருவாய்மொழி, 5:2:1.
737-“க்ரூரே கலியுகே – நாஸ்திகர்களால்‌ கலங்கும்படி செய்யப்பட்ட கொடிய கலியுகம்‌ வந்தபோது, விஷ்னுவினுடைய அம்ஸத்துக்கு அம்ஸமமாகப்‌ பிறந்தவரும்‌ வேதம்‌ வேதாந்தங்கள்‌ இவற்றின்‌ உண்மையை அறிந்தவரும்‌ தத்‌ வஜ்ஞானிகளுள்‌ சிறந்தவருமான நம்மாழ்வார்‌ தமிழ்‌ மொழியாலே வேதத்தினுருவமான துதிகளைச்‌ செய்வதற்கு, உலகத்திற்கு நலத்தைச்‌ செய்யும்‌ எண்ணத்தோடு உண்டாகப்‌ போகிறார்‌” – குருகாமாஹாத்ம்யம்‌.-

ஸுூத்ரம்‌-92
738-“க்ருஷி கோரக்ஷவாணிஜ்யம்‌ வைய்யம்‌
– பயிர்ச் செய்தல்‌, பசுக்களைக்‌ காத்தல்‌, வாணிகம்‌ செய்தல்‌ எனனுமிவை வைஸ்யனுக்கு இயல்வான தொழில்கள்‌.” ஸ்ரீகீதை, 18:44.
739-“கலெளபுந: பாபரதாபிபூதே – உலகத்தாரைக்‌ காட்டிலும்‌ மேம்பட்டவரும்‌ உலகமே வுருவானவருமான அந்த விஷ்ணு வானவர்‌, பாபத்தில்‌ பற்றுடையவர்களால்‌ சூழப்பட்ட இக் கலியுகத்தில்‌ எல்லா மக்களையும்‌ நன்கு பாதுகாப்பதற்காக, அடியார்களிடத்தில்‌ அன்புள்ளவனாதலால்‌ ஒருபக்தனாக அவதரித்தார்‌.”
740-“க்ருஷ்ண த்வைபாயநம் வியாஸம்‌ -க்ருஷ்ண த்வைபாயநர்‌ என்னும்‌ பெயரையுடைய வ்யாஸரை இறைவனான நாராயணனாக நீ அறிக” – ஸ்ரீவிஷ்ணு புராணம்‌, 3:4:5.
741-“ஸோயம்‌ நாராயணஸ்‌ ஸாக்ஷாத்‌ – அந்தத்‌ தன்மையுடைய இந்த வ்யாஸ முனிவர்‌ அந்த நாராயணனே” – பாரதம்‌.
742-“விண்ணாட்டவர்‌ மூதுவர்‌” – திருவிருத்தம்‌, 2.
743-“கரை கண்டோர்‌” – திருவாய்மொழி, 8:3:10.
744-“முக்தாநாம்‌ லக்ஷணம்ஹ்யேதத்‌ -ச்வேதத்‌ தீவினில்‌ வசிப்பவர்களாய்‌, முக்தர்களைப்‌ போன்றவர்களுக்கும்‌ இது இலக்கணமாம்‌” – பாரதம்‌, சாந்தி பர்வம்‌.
745-“பாற்கடல்‌ பாம்பணைமேல்‌ பள்ளிகொண்டருளும்‌” – திருவிருத்தம்‌, 79.
746-“பின்னைகொல்‌ நிலமாமகள் கொல்‌” – திருவாய்மொழி, 6:5:10.
747-“முன்னம்‌ நோற்றவிதிகொலோ” – திருவாய்மொழி, 6:5:7.
748-“அநந்தன்‌ மேல்கிடந்த வெம்புண்ணியா” – திருச்சந்த விருத்தம்‌, 45.

ஸுூத்ரம்‌-93
749-“புவியுமிருவிசும்பும்‌”
– பெரிய திருவந்தாதி, 75.
750-“யாவர்‌ நிகரகல்‌ வானத்தே” – திருவாய்மொழி, 4:5:8.
751-“மாறுளதோ விம்மண்ணின்‌ மிசையே” – திருவாய்மொழி, 6:4:9.
752-“வைகுந்தமோ வையமோ நும்நிலையிடம்‌” – திருவிருத்தம்‌, 75.
753-“தெய்வத்தினமோரனையீர்களாய்‌” – திருவிருத்தம்‌, 23.
754-“வானோரினத்தலைவன்‌” – பெரிய திருவந்தாதி, 25.
755-“அந்தாமத்தன்பு செய்து” – திருவாய்மொழி, 2:5:1.
756-“திருவருள்களும்‌ சேர்ந்தமைக்‌ கடையாளம்‌” – திருவாய்மொழி, 8:9:6.
757-“உகந்துகந்துள்‌ மகிழ்ந்து குழையும்‌” – திருவாய்மொழி, 6:5:4.
758-“திமிரக்கொண்டா லொத்து நிற்கும்‌” – திருவாய்மொழி, 6:5:2.
759-“ஸ்தப்தோஸ்யுத – திமிர்க் கொண்டவனைப்‌ போன்றிருக்கின்றாய்‌, அந்தப்‌ பரம் பொருளைக்‌ கேட்டறிந்தனையோ” – சாந்தோக்யம்‌.
760-“நாட்டாரோடியல்வொழிந்து” – திருவாய்மொழி, 10:6:2.
761-“உண்டியே உடையே யுகந்தோடி” – பெருமாள்‌ திருமொழி, 3:4.
762-“யானே யென்றனதே” – திருவாய்மொழி, 2:9:9.
763-“வேதமராஸத்ராவிரோதிநா – வேதமாஸ்த்ரத்துக்கு மாறுபாடில்லாத” – மநுதர்மணாஸ்த்ரம்‌, 12:106.
764-“வித்யாமதோ தநமத – கல்வியால்‌ உண்டாய களிப்பு, செல்வத்தாலாய களிப்பு, மூன்றாவது குடிப்பிறப்பாலாய களிப்பு என்னுமிவை, செருக்குக்‌ கொண்டவர்களுக்கு மதத்தை யுண்டாக்குகின்றன.”
765-“ஆவவலிப்பு” – திருமாலை, 1. (ஆவலிப்தர்‌ – செருக்குற்றோர்‌.)
766-“பறவையின்‌ பாகன்‌ மதன செங்கோல்‌ நடாவிய கூற்றம்‌” – திருவிருத்தம்‌, 5.
767-“நின்கண்வேட்கை யெழுவிப்பன்‌” – திருவிருத்தம்‌, 96.
768-“கொன்றுயி ௬ண்ணும்‌” – திருவாய்மொழி, 5:2:6.
769-“வன்துயரை மருங்கு கண்டிலமால்‌” – பெரிய திருவந்தாதி, 54.
770-“திரியும்‌ கலியுகம்‌ நீங்கி” – திருவாய்மொழி, 5:2:3.
771-“பவிஷ்யத்யதரோத்தரம்‌ – பொருள்களின்‌ தன்மைகள்‌ தலைகீழாக மாறப்போகின்றன” – பாரதம்‌.
772-“கலெளஜகத்பதிம்‌ – மைத்ரேயரே! கலியுகத்தில்‌, உலகத்துக்குத்‌ தலைவனும்‌ எங்கும்‌ பரந்துள்ளவனும்‌ எல்லாப்‌ பொருள்களையும்‌ படைப்பவனும்‌ எல்லாரையும்‌ நியமிப்பவனுமான எம்பெருமானை, பாவங்களால்‌ கெடுக்கப்பட்ட மக்கள்‌ வணங்கமாட்டார்கள்‌” – ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌, 6:1:50.
773-“பெரிய கிதயுகம்‌ பற்றி” – திருவாய்மொழி, 5:2:3.
774-‘பட்டபோதெழு போதறியாள்‌” – திருவாய்மொழி, 2:4:9.
775-“நந்தந்த்யுத – ஸுர்யன்‌ உதயமானவுடன்‌ பொருளீட்டுவதற்குரிய காலம்‌ வந்ததென்று மகிழ்வார்கள்‌; ஸுர்யன்‌ மறைந்தவுடனே மனைவியோடு இன்பம்‌ நுகர்த்தற்குரிய காலம்‌ வந்ததென்று மகிழ்வார்கள்‌” – ஸ்ரீராமா, அயோத்யா, 105:24.
776-“ப்ராதர்‌ மூத்ர – மக்கள்‌ காலையில்‌ மூத்ரம்‌, மலம்‌ இவற்றினாலும்‌, நடுப்பகலில்‌ பசியினாலும்‌ தாகத்தாலும்‌, மாலையில்‌ காமத்தாலும்‌, இரவில்‌ தூக்கத்தாலும்‌ துன்புறுத்தப்படுகிறார்கள்‌” – ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌, 1:17:62.-

ஸுூத்ரம்‌-94
777-“ஊழிதொறும்‌ தன்னுள்ளே படைத்து
” – திருவாய்மொழி, 10:7:9.
778-“சோம்பாதிப்பல்லுருவை” – பெரிய திருவந்தாதி, 18.
779-(ஒன்றியொன்றி யுலகம்‌ படைத்தான்‌ – திருவாய்மொழி, 3:9:10.) )
780-(பொருளென்றிவவுலகம்‌ படைத்தவன்‌ – திருவாய்மொழி, 2:10:11)
781-(அளிமகிழ்ந்து உலகமெல்லாம்‌ படைத்து – திருவாய்மொழி, 3:4:8.) 782) “நிலநீரெரிகால்‌” – திருவாய்மொழி, 7:6:2.
783-“தத்ஸ்ருஷ்ட்வா, ததேவாநுப்ராவிசத்‌
– அத்தகைய வெல்லாப்‌ பொருட்களையும்‌ படைத்து அவற்றினுள்‌ அருப்ரவேசித்தான்‌” – தைத்திரியோபநிஷத்‌. 784) “அன்னமதாயிருந்தங்கற” – பெரிய திருமொழி, 11:4:8.
785-“குறைவில்‌ தடங்கடல்‌ கோளரவேறித்தன்‌ கோலச்‌ செந்தாமரைக்கண்‌ ,உறைபவன்‌ போலவோர்‌ யோகுபுணர்ந்த வொளிமணிவண்ணன்‌” – திருவாய்மொழி, 3:10:2.
786-“துயரில்மலியும்‌ மனிசர்ப்பிறவியில்‌ தோன்றிக்‌ கண்காணவந்து” திருவாய்மொழி, 3:10:6.
787-“நசக்ஷுஷா பச்யதி கச்சுநைநம்‌ – ஒருவனும்‌ இந்தப்‌ பரமபுருஷன ஊனக்கண்களாலே பார்ப்பதற்கில்லை” – கடோபநிஷத்‌.
788-“நமாம்ச்ஸசக்ஷுரபிவீக்ஷதே தம்‌ – ஊனக்கண்களையுடையவன்‌ அந்தப்‌ பரமபுருஷனைக்‌ காண்கிறானில்லை”
789-“கட் கண்ணால்‌ காணாதவவ்வுரு” – பெரிய திருவந்தாதி, 28.
790-“ஆள்பார்த்‌ துழி தருவாய்‌” – நான்முகன்‌ திருவந்தாதி, 60.
791-“ஓ ஓ உலகினதியல்வே” – திருவாசிரியம்‌, 6.
792-“பெற்றதாயிருக்க” – பெரிய திருமொழி, 11:6:6.
793-“யாதானும்பற்றி நீங்கும்‌ விரதத்தை நல்வீடுசெய்யும்‌” – திருவிருத்தம்‌, 95.
794-“கழறலம்‌” – திருவிருத்தம்‌, 58.
795-“அழறலர்‌ தாமரை” – திருவிருத்தம்‌, 58.
796-“பெருங்கண்மலர்‌” – திருவிருத்தம்‌, 45.
797-“அன்பொடு தென்திசை நோக்கிப்‌ பள்ளிகொள்ளும்‌” – பெருமாள்‌ திருமொழி, 1:10.
798-“யாதானுமோராக்கையில்‌ புக்கு” – திருவிருத்தம்‌, 95.
799-“ஆக்கையின்‌ வழியுழல்வேன்‌” – திருவாய்மொழி, 3:2:1.
800-“மாறிமாறி பலபிறப்பும்‌ பிறந்து” – திருவாய்மொழி, 2:6:8.
801-“பல்பிறவியில்‌ படிகின்ற யான்‌” – திருவாய்மொழி, 3:2:2.
802-“பிறவிக்கடலுள்‌ நின்றுநான்‌ துளங்க” – திருவாய்மொழி, 5:1:9.
803-“நம்மேலொருங்கே பிறழவைத்தார்‌” – திருவிருத்தம்‌, 45.
804-“பக்கநோக்கறியான்‌” – திருவாய்மொழி, 2:6:2.
805-“நாஸெள புருஷகாரேண – இந்த பகவானாகிய யான்‌ புருஷகாரத்தாலும்‌ வேறு ஸாதனங்களாலும்‌ ஒருவனைக்‌ கடாக்ஷிக்கிறே னல்லேன்‌, என்னிச்சையாலே ஒருவனை ஒருகால்‌ கடாக்ஷிக்கிறேன்‌” – பாஞ்சராத்ரம்‌.
806-“நிரஹேதுக கடாகேண – சிறந்த அறிவுடையோனே! என்னுடைய நிர்ஹேதுக கடாக்ஷத்தாலுண்டான ஆசார்யனுடைய அங்கீகாரத்தால்‌ உயர்ந்த பேற்றினை யடைகிறார்கள்‌” – பாஞ்சராத்ரம்‌.
807-“அனந்தன்மேல்‌” – திருச்சந்த விருத்தம்‌, 45.-

ஸுூத்ரம்‌-95
808-“ச்ரமணீம்‌ தர்மநிபுணா மபிகச்ச
– விருந்தினரை உபசரிக்கும்‌ ஆற்றலை யுடையவளும்‌ ஸந்யாசினியுமான சபரியை அடைவாயாக” – ஸ்ரீராமா, பால, 1:57.
809-“ஸோப்யகச்சந்‌ மஹாதேஜாச்‌ சபரீம்‌ – மிகப்பெரிய வொளியையுடையவரான அந்த இராமபிரான்‌ சபரியிடம்‌ சென்றார்‌” – ஸ்ரீராம, பால, 1:57.
810-“சக்ஷாஷா தவ ஸெளம்யேந – இரகு வம்சத்தில்‌ அவதரித்தவரே உன்னுடைய குளிர்ந்த திருக்கண்களால்‌ தூயவளாக வாயினேன்‌; பகைவர்களைக்‌ கொல்லுகிறவனே! உன்னுடைய அருளால்‌ மீண்டு வருதலில்லாத உலகத்தை யடையப்‌ போகிறேன்‌” – ஸ்ரீராமா, ஆரண்ய, 74:12.
811-“நிவாஸ யயெளவேச்ம – மஹாத்மாவான விதுரருடைய வீட்டிற்குத்‌ தங்கியிருப்பதற்குச்‌ சென்றார்‌” – பாரதம்‌, உத்யோகபர்வம்‌.
812-“விதுராந்நி புபுஜே -ப்ரயோஜனத்தை எதிர்ப்பாராதனவாய்‌ குணமுடையவனுமான விதுரருடைய அன்னங்களை உண்டார்‌” – பாரதம்‌ உத்யோகபர்வம்‌.
813-“பீஷ்மத்ரோணாவதிக்ரம்ய – மதுகுதனனே! தாமரைக் கண்ணனே! பீஷ்மரையும்‌, துரோணரையும்‌, என்னையும்‌ கடந்து சென்று ஸுத்ரரான விதுரருடைய அன்னத்தை யெதற்காக வுட்கொண்டாய்‌” – பாரதம்‌, உத்யோகபர்வம்‌.
814-“புண்டரீகாக்ஷ – தாமரைக்கண்ணனே!! – பாரதம்‌, உத்யோகபர்வம்‌.
815-“வேர்த்துப்‌ பசித்து வயிறசைந்து வேண்டடிசிலுண்ணும்போது” – நாய்ச்சியார்‌ திருமொழி, 12:6.
816-“தத்ரைகா வித்ருதா – அங்கொருத்தி கணவனால்‌ தடுக்கப்பட்டவளாய்த்‌ தன்‌ கேட்டிருந்தபடியே கண்ணபிரானை மனத்தால்‌ கட்டிக்கொண்டு கர்மத்தாலுண்டான சரீரத்தை விட்டள்‌” – ஸ்ரீபாகவதம்‌, 10.23:34.
817-“அங்கணிரண்டுங்க்‌ கொண்டெங்கல்மெள்‌ நோக்குதியேல்‌” – திருப்பாவை, 22.
818-“அமலங்களாக” – திருவாய்மொழி, 1:9:9.-

ஸுூத்ரம்‌-96
819-“திவத்திலும்‌ பசுநிரை மேய்ப்புவத்தி
” – திருவாய்மொழி, 10:3:10.
820-“ப்ருந்தாவனம்‌ பகவதா -ஜ்ஞானம்‌ முதலான 6 குணங்களை யுடையவனும்‌ வருத்தமில்லாமல்‌ காரியத்தைச்‌ செய்பவனும்‌ பசுக்களின்‌ நலத்தை விரும்புகின்றவனுமான கண்ண பிரானால்‌ நல்ல மனத்தால்‌ நெருஞ்சிற் காடு புல் தரையாகுமாறு நினைக்கப்பட்டது” – ஸ்ரீவிஷ்ணு புராணம்‌, 5:6:28.
821-“உத்பந்ந நவசஷ்பாட்யா – மனத்தினைக்‌ கவரக் கூடியதும்‌ புதியதுமான புற்களால்‌ நிறைந்ததாக வாயிற்று.” – ஸ்ரீவிஷ்ணு புராணம்‌, 5:6:37.
822-“நமோ ப்ரஹ்மண்ய -ப்ராஹ்மணர்களுக்குத்‌ தேவனும்‌ பசுக்களும்‌,ப்ராஹ்மணர்களுக்கு நலத்தைச்‌ செய்பவனுமான பகவானுக்கு வணக்கம்‌; உலகத்துக்கு நலத்தைச்‌ செய்பவனும்‌ கோவிந்தனுமான க்ருஷ்ணனுக்கு வணக்கம்‌ வணக்கம்‌” – பாரதம்‌.
823-“எனைத்தோர்‌ பிறப்பும்‌-எதிர் குழல்‌ புக்கு” – திருவாய்மொழி, 5:7:6.
824-“நல்ல வருள்கள்‌ நமக்கே தந்தருள்‌ செய்வான்‌” – திருவாய்மொழி, 8:6:1.
825-“ஸுஹ்ருதம்‌ ஸர்வ பூதாநாம்‌ – “எல்லா உயிர்களுடைய நலத்தை எண்ணுகிற வென்னை” – ஸ்ரீகீதை, 5:29.
826-“என்னைத்‌ தன்னாக்கி” – திருவாய்மொழி, 7:9:1.
827-“ஊரும்‌ நாடுமுலகமும்‌” – திருவாய்மொழி, 6:7:2.

ஸுூத்ரம்‌-97
828-“மயர்வற மதிநலம்‌
” – திருவாய்மொழி, 1:1:1.-

ஸுூத்ரம்‌-98
829-“இருள்‌ தருமா ஞாலம்‌
” – திருவாய்மொழி, 10:6:1.
830-“இருள்‌ தீர்ந்திவ்வையம்‌ மகிழ” – பெரிய திருமொழி, 11:4:8.
831-“துயக்கன்‌ மயக்கன்‌” – திருவாய்மொழி, 1:9:6.
832-“ஸ்தாணுர்வா புருஷோவா – குற்றிகொல்‌? மகன்கொல்‌?” (தூணா? அல்லது மனிதனா?)
833- “மனனகமலமற மலர்மிசை யெழுதரும்‌” – திருவாய்மொழி, 1:1:2.
834- “தாமரையாள்‌ கேள்வனொருவனையே நோக்கு முணர்வு” – முதல்‌ திருவந்தாதி, 67.
835-“உளப்பெருங்‌ காதல்‌” – திருவிருத்தம்‌, 59.
836-“நேரிய காதல்‌” – திருவாசிரியம்‌, 2.
837-“காணக்கழி காதல்‌” – இரண்டாந்‌ திருவந்தாதி, 56.
838-“கழியமிக்கதோர்‌ காதல்‌” – திருவாய்மொழி, 5:5:10.
839-“காதல்‌ கடல்புரைய” – திருவாய்மொழி, 5:3:4.
840-“காதல்‌ கடலின்‌ மிகப்பெரிதால்‌” – திருவாய்மொழி, 7:3:6.
841-“காதலுரைக்கில்‌ – நீள்விசும்பும்‌ கழியப்‌ பெரிதால்‌” – திருவாய்மொழி, 7:3:8.
842-“மெய்யமர்‌ காதல்‌” – திருவாய்மொழி, 6:8:2.
843-“அன்புகட்டிய” – திருவிருத்தம்‌, 2.
844-“அன்பிலின்பு” – திருவாசிரியம்‌, 2.
845-“அன்பே பெருகும்மிக” – பெரிய திருவந்தாதி, 8.
846-“ஆராவன்பு” – திருவாய்மொழி, 6:10:2.
847-“வேவாராவேட்கை நோய்‌” – திருவாய்மொழி, 2:1:10.
848-“பெருகுமால்‌ வேட்கையும்‌” – திருவாய்மொழி, 9:6:1.
849-“ஆவியின்‌ பரமல்லவேட்கை” – திருவாய்மொழி, 10:3:2.
850-“அவா வொருக்கா வினையொடும்‌’” – திருவிருத்தம்‌, 64.
851-“காண்பானவாவுவன்‌” – திருவிருத்தம்‌, 84.
852-“சுடுதற்கவா” – திருவாசிரியம்‌, 5.
853- “அதனில்‌ பெரிய வென்னவா” – திருவாய்மொழி, 10:10:10.
854- “ஸங்காத்‌ ஸஞ்ஜாயதே காம: – ஸங்கத்தினின்றும்‌ காமம்‌ உண்டாகிறது” ஸ்ரீகீதை, 2:62.

ஸுூத்ரம்‌-99
855-“ஜன்மாந்தர ஸஹஸ்‌ரேஷு
– ஆயிரக் கணக்கான பிறவிகளிலே செய்த கர்ம ஜ்ஞான பக்திகளால்‌ அழிந்த பாவங்களை யுடைய மக்களுக்குக்‌ கண்ண பிரான் இத்தில்‌ பக்தி யுண்டாகின்றது.” -ஸம்ருதி.
856-“ஒன்றி நின்று நற்றவம்‌” – திருச்சந்த விருத்தம்‌, 75.-857-“சுசீநாம்‌ ஸ்ரீமதாம்‌ கேஹே – யோகத்தின்‌ ஆரம்ப காலத்தில்‌ யோகத்தினின்றும்‌ நழுவினவன்‌ பரிசுத்தர்களும்‌ ஸ்ரீமாந்களுமானவர்களுடைய குலத்திலே பிறக்கிறான்‌; அன்றிக்கே, யோகம்‌ செய்கின்றவர்களும்‌ சிறந்த ஜ்ஞானியுமானவர்களுடைய பெரிய குலத்திலே பிறக்கிறான்‌.” – ஸ்ரீகீதை, 6:41.
858–“ஜநித்வாஹம்‌ வம்சே மஹதி – நான்‌, உலகில் ப்ரசித்தமான கீர்த்தியை யுடையவர்களும்‌, பரிசுத்தர்களும்‌, யோகம்‌ செய்து கொண்டிருப்பவர்களும்‌, குண மயமான ப்ரக்ருதி, உயிர்‌ இவற்றின்‌ உண்மை நிலையை அறிந்தவர்களும்‌ ஆனவர்களுடைய குலத்தில்‌ பிறந்து” -ஸ்தோத்ர ரத்நம்‌, 61.
859-“தெரித்தெழுதி வாசித்தும்‌ கேட்டும்‌” – நான்முகன்‌ திருவந்தாதி, 63.
860-“குளித்து மூன்றனலை யோம்பும்‌” – திருமாலை, 25.
861-“ஓதியுருவெண்ணுமந்தி” – முதல்‌ திருவந்தாதி, 38.
862-“ஐவேள்வி” – பெரிய திருமொழி, 3:8:4.
863-“அறுதொழில்‌” – திருவெழுகூற்றிருக்கை.
864-ஊன்வாட வுண்ணாதுயிர்‌ காவலிட்டு” – பெரிய திருமொழி, 3:2:1.
865-“பொருப்பிடையே நின்றும்‌” – மூன்றாந்‌ திருவந்தாதி, 76.
866-‘வீழ்கனியு மூழிலையு மென்னுமிவையே நுகர்ந்துடலம்‌ தாம்‌ வருந்தி” – பெரிய திருமடல்‌, 12.
867- “மேவு துன்பவினைகளை விடுத்து” – திருவாய்மொழி, 3:2:8.
868- “தர்மேண பாபமபநுததி – நாடுறும்‌ செய்யவேண்டிய கர்மங்களைச்‌ செய்கையாலே பாவங்களைப்‌ போக்குகிறான்‌” – தைத்திரியோபநிஷத்‌.
869-“சுமதமநியதாத்மா ஸர்வபூதாநுகம்பீ – மனத்தினை யடக்குவது, புறவிந்திரியங்களை யடக்குவது என்னுமிவற்றில்‌ நியமத்துடன்‌ கூடிய மனத்தையுடையவன்‌ எல்லா வுயிர்களிடத்திலும்‌ அருள்‌ பொருந்தியவன்‌”
870- “ஜாத்யாச்ரய நிமித்தாதுஷ்டாதந்நாத்‌ காயசுத்திர்‌ விவேக: – ஜாதி, ஆச்ரயம்‌, நிமித்தம்‌ என்னு மிம்மூவகையான குற்றங்களில்லாத அன்னத்தால்‌ உண்டாகும்‌ காய சுத்தி விவேகம்‌” – போதாயநவருத்தி.-871-“ஆஹார சுத்தெள ஸத்வ சுத்தி: – ஸத்வ குணத்திற்குரிய உணவினை யுண்பவர்களுக்கு ஸத்வம்‌ தூய்மை யடைகிறது” – சாந்தோக்ய உபநிஷத்‌.
872-“அபயம்‌ ஸத்வ ஸம் சுத்தி: – ஸத்வத்திற்குத்‌ தூய்மை பயமற்றிருத்தல்‌” ஸ்ரீகீதை, 16:1.
873-“ஸத்வாநுரூபா ஸர்வஸ்யச்ரத்தா பவதி – எல்லோருக்கும் ஸ்ரத்தையானது ஸத்வத்திற்குத்‌ தகுதியாக வுண்டாகிறது” – ஸ்ரீகீதை, 17:3.
874-“விமொக: காமாநபிஷ்வங்க:” – போதாய நவ்ருத்தி.
875-“காமாத்க்ரொதோபிஜாயதே – காமத்தாலே க்ரோதம்‌ உண்டாகிறது” – ஸ்ரீகீதை, 2:62.
876-“ஆரம்பணஸம்சீலநம்‌ புந:புநரப்யாஸ:” – போதாயந வ்ருத்தி.
877-“பஞ்சமஹாயஜ்ஞாத்யநுஷ்டாநம்‌ சக்தித:க்ரியா – ஐவேள்வி முதலானவற்றைத்‌ தன்‌ சக்திக்குத்‌ தகுந்தவாறு செய்தல் க்ரியை” – போதாயந விருத்தி.-878-“ஸத்யார்ஜவ தயா – ஸத்யம்‌, ஆர்ஜவம்‌, தயை, தானம்‌, அஹிம்சை ,அநபித்யை என்னுமிவை கல்யாணம்‌ எனப்படும்‌” – போதாயந விருத்தி.
879-“தேச கால வைகுண்யாத்‌” – போதாயந வ்ருத்தி.
880-“தத்விபர்ய யஜா துஷ்டிருத்தர்ஷ: – போதாயந வருத்தி. தேச காலங்களினுடைய அநுகூலத்தாலும்‌, பிரியமான உண்டான மகிழ்ச்சி; இவை உத்தர்ஷம்‌. அநுத்தர்ஷமாவது உத்தர்ஷமில்லாமை.பொருட்களில்‌ வைத்த இடையறாத நினைவினாலும்‌
881-“சமச்‌ சித்தப்ரசாந்திஸ்‌ – சமமாவது மனத்தினை அடக்குதல்‌; தமமாவது-இந்திரியங்களை யடக்குதல்‌”
882-“க்ஷமா ஸத்யம்‌ தமச்‌ சம:”
883-“தமோ பாஹ்ய கரணாநாமநர்த்த
– தமமாவது புறக் கரணங்களை ஐம்புலங்களில்‌ செல்லாதபடி யடக்குதல்‌; சமமாவது அந்தக் கரணத்தை அப்படியே யடக்குதல்‌”
884-“சாந்தோ தாந்த – மனத்தினை யடக்கினவனும்‌, புற விந்திரியங்களை யடக்கினவனும்‌, காம்ய கர்மங்களில்‌ ஆசை யில்லாதவனும்‌,பொறுமை யுள்ளவனும்‌, சமாதானம்‌ அடைந்த மனத்தினை யுடையவனுமாகி, இந்த இந்த உயிரினிடத்திலேயே பரம் பொருளைப்‌ பார்க்கக்‌ கடவன்‌.” -ப்ருஹதாரண்ய உபநிஷத்‌.
885-“ஈனமாய வெட்டு நீக்கி – திருச்சந்தவிருத்த, 114.
886-“இனமலரெட்டுமிட்டு” – பெரிய திருமொழி, 1:2:7.
887-தமாமலரெட்டுமிட்டு” – பெரிய திருமொழி, 3:5:6.
888- அவன்‌ பெயரெட்டெழுத்து மோதுவார்கள்‌” – திருச்சந்த விருத்தம்‌,77.
889-“ஆர்வமோடிறைஞ்சி நின்றவன்‌ பெயர்‌” – திருச்சந்த விருத்தம்‌,78.
890-“அஹிம்ஸா ப்ரதமம்‌ புஷ்பம்‌ – பிற வுயிர்களுக்குத்‌ துன்பம்‌ செய்யாதிருப்பது
முதல்‌ புஷ்பம்‌, இந்த்ரியங்களை யடக்குவது இரண்டாம்‌ புஷ்பம்‌, எல்லா புஷ்ப வுயிர்களிடத்தும்‌ அருளுள்ளவனாக இருப்பது மூன்றாவது புஷ்பம்‌, பொறுமை நான்காவது புஷ்பம்‌-இது சிறந்தெள;ஜ்ஞானம்‌ ஐந்தாவது புஷ்பம்‌, தவம்‌ ஆறாவது புஷ்பம்‌,-அப்படியே த்யானம்‌ ஏழாவது புஷ்பம்‌, ஸத்யம்‌ எட்டாவது புஷ்பம்‌, இப்படி எட்டு விதமான இந்த மலர்கள்‌ விஷ்ணுவிற்குப் ப்ரீதியைச்‌ செய்கின்றவை யாகின்றன.”
891-“எட்டினய பேதமோடிறைஞ்சி” – திருச்சந்த விருத்தம்‌, 77.
892-“மநோ புத்த் யபிமாநேந ஸஹ – மனம்‌ புத்தி செருக்கு என்னுமிவைகளோடு,இரண்டு கைகளையும்‌, இரண்டு கால்களையும்‌ அங்கேயே தலையையும்‌ ஐந்தாவதாக பூமியில்‌ வைத்து”
893-“பூவில்‌ புகையும்‌ விளக்கும்‌ சாந்தமும்‌ நீரும்‌ மலிந்து” – திருவாய்மொழி, 5:2:9.
894-“சாந்தொடு விளக்க தூபம்‌ தாமரை” – திருவாய்மொழி, 10:2:10.
895-“தேவகாரியம்‌ செய்து” – பெரியாழ்வார்‌ திருமொழி, 4:4:1
896-“ஒன்றி நின்று நற்றவம்‌ செய்து” – திருச்சந்த விருத்தம்‌, 75.
897-“கஷாயே கர்மபி: – கர்மங்களைச்‌ செய்வதனால்‌ பாவம்‌ அழிந்தவளவில்‌ பின்னர் ஜ்ஞானம்‌ தோன்றுகிறது.”

898-“ப்ரகீர்ணே விஷயாரண்யே – பரந்திருக்கிற விஷயமாகிற காட்டிலே ஓடிக் கொண்டிருப்பதும்‌ அகப்பட்டாரைக்‌ கொல்லுவதுமான இந்த்ரியங்களாகிற யானையை, தள்ளத் தக்கனவற்றையும்‌ கொள்ளத் தக்கனவற்றையும்‌ பகுத்தறியும்‌ ஞானமாகிற அங்குசத்தாலே தன்‌ வசப்படுத்த வேண்டும்‌.”
899-“வாரிசுருக்கி மதக்களிறைந்தினையும்‌” – முதல்‌ திருவந்தாதி, 47.
900-“புன்புல வழியடைத்தரக்கிலச்சினை” – திருச்சந்த விருத்தம்‌, 76.
901-“ஐம்புலனகத்தினுள்‌ செறுத்து” – திருவெழுகூற்றிருக்கை.
902-“இளப்பினை யியக்கம்‌ நீக்கி” – திருக்குறுந்தாண்டகம்‌, 18.
903- “அவித்யாஸ்மிதாராகத்வேஷாபி – அறியாமை, செருக்கு, ஆசை ,த்வேஷம்‌, அபிமாநம்‌ என்னுமிவை ஐந்து க்லேசங்கள்‌ எனப்படுகின்றன.” – யோகஸுத்ரம்‌.
904-“நாத்யுச்ச்ரிதம்‌ நாதிநீசம்‌ – அதிக உயரமும்‌, அதிக தாழ்வுமில்லாத ஆசனம்‌.”-ஸ்ரீ கீதை, 6:11.
905–“ஸம்ப்ரேக்ஷய நாஸிகாக்ரம்‌ – தன்னுடைய மூக்கின்‌ நுனியை நன்றாகப்‌ பார்த்துக் கொண்டு திசைகளையும்‌ பார்க்காதவனாய்‌” – ஸ்ரீகீதை, 6:13.
906-“விதியில்‌ காணும்ப்ரதம மத்யம தசைகளை” – ஸுத்ரம்‌, 23.
907-“விளக்கினை விதியில்‌ காண்பார்‌” – திருக்குறுந்தாண்டகம்‌, 18.
908-“யோகநீதி நண்ணுவார்கள்‌” – திருச்சந்த விருத்தம்‌, 63.
909-“மறந்திகழு மனமொழித்து வஞ்சமாற்றி” – பெருமாள்‌ திருமொழி, 1:7. 910-“பாரமாய பழவினை” – அமலனாதிபிரான்‌, 5.
911-“மறையோர்‌ மனந்தன்னுள்‌” – பெரிய திருமொழி, 7:3:7.
912–“மாதவமானவர்‌ தங்கள்‌” – பெரிய திருமொழி, 2:1:1.
913-“ஆரமார்வனரங்கனென்னும்‌” – பெருமாள்‌ திருமொழி, 2:7.
914-“கண்கள்‌ சிவந்து” – திருவாய்மொழி, 8:8:1.
915-“கற்றவர்‌ தந்தம்‌ மனவுட்கொண்டு” – பெரிய திருமொழி, 7:3:1.
916-“நிரந்தரம்‌ நினைப்பதாக” – திருச்சந்த விருத்தம்‌, 101.
917-“மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாய்‌” – பெரிய திருமொழி, 3:5:4.
918-“சோர்விலாக காதலால்‌ துடக்கறாமனத்தராய்‌” – திருச்சந்த விருத்தம்‌, 78.
919-“ஸத்வ ஸுத்தெளத்ருவாஸ்ம்ருதி – அந்தக் கரணம்‌ தூய்மை யடைந்தால்‌ இடையறாத த்யானம்‌ உண்டாகிறது.” – சாந்தோக்ய உபநிஷத்‌.
920-“கனவில்‌ மிகக்‌ கண்டேன்‌” – இரண்டாந்‌ திருவந்தாதி, 81.
921-“ஸா சஸம்ருதிர்‌ தர்ச்சந ஸமாநாகாரா – அந்த நினைவு தானும்‌ நேரே கண் கூடாகக்‌ காண்பது போல்‌ இருப்பது” – ஸ்ரீபாஷ்யம்‌, லகு ஸித்தாந்தம்‌.
922-“நாடோறும்‌ ஞானத்தாலாகத் தணைப்பார்க்கு” – திருவாய்மொழி, 10:4:6.
923-“ஆகத்தணைப்பாரணைவரே” – முதல்‌ திருவந்தாதி, 32.
924-“எல்லையிலந்நலம்‌ புல்கு” – திருவாய்மொழி, 1:2:4.
925-“ஆர்வம்‌ புரிய பரிசினால்‌ புல்கில்‌” – முதல்‌ திருவந்தாதி, 50.
926- “ப்ரியோஹிஜ்ஞாநிநோத்யர்த்தமஹம்‌ – நான் ஜ்ஞானியர்க்குச்‌ சொல்ல வொண்ணாத ப்ரியமானவன்‌.” – ஸ்ரீகீதை, 7:17.
927-“நின் புகழில்‌ வைகும்‌ தம்‌” – பெரிய திருவந்தாதி, 53.
928-“அமுத வெள்ளத்தானாம்‌ சிறப்பு விட்டு” – திருவாசிரியம்‌, 2.
929-“உனது பாலே போல்‌ சீரில்‌” – பெரிய திருவந்தாதி, 58.
930-“உபயபரிகர்மிதஸ்வாந்தஸ்ய” – கர்மம்‌,ஜ்ஞானம்‌ என்னுமிரண்டாலும்‌ அலங்கரிக்கப்பட்ட அந்தக் கரணத்தை யுடையவனுக்கு” – ஆத்ம சித்தி.-

ஸுூத்ரம்‌-100
931-“த்வத் பாத மூலம்‌ சரணம் ப்ரபத்யே
– தேவரீருடைய திருவடிகளைப்‌ புகலாக அடைகிறேன்‌ ” -ஸ்தோத்ர ரத்நம்‌, 22.
932-“த்வத் பாதாரவிந்த யுகளம்‌ சரண மஹம் ப்ரபத்யே – தேவரீருடைய இரண்டு திருவடித் தாமரைகளையே புகலாக நான்‌ அடைகிறேன்‌.” – சரணாகதி கத்யம்‌.
933-“பகவந்‌ பக்திமபிப்ரயச்சமே – பகவானே! அடியேனுக்குப்‌ பக்தியையும்‌ கொடுத்தருள வேண்டும்‌.” -ஸ்தோத்ரரத்நம்‌, 54.
934-“ஸ்தாநத்ரயோதித பரபக்தி யுக்தம்‌ மாம்‌ கு ருஷ்வ, பரபக்தி பரஜ்ஞாந பரமபக்த் யேக ஸ்வபாவம்‌ மாம்‌ குருஷ்வ – மூன்று விடங்களில்‌ சொல்லப்பட்ட பரபக்தி யுடையவனாக அடியேனைச்‌ செய்தருள வேண்டும்‌. பரபக்தி, பரஜ்ஞாந,பரமபக்தி என்னுமிவைகளையே தன்மையாக வுடையவனாக அடியேனைச்‌ செய்தருள வேண்டும்‌.” – சரணாகதி கத்யம்‌.
935-“இமாம் ப்ரக்ருதிம் ஸ்தூல ஸுூஷ்ம ரூபாம்‌ -ஸ்தூலமாயும்‌, ஸூக்ஷ்மமாயும்‌ இருந்துள்ள இந்தச்‌ சரீரத்தை விட்டு விட்டு அப்போதே” – சரணாகதி கத்யம்‌.

ஸுூத்ரம்‌-101
936-“அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண்‌”
– திருவாய்மொழி, 2:3:3. 937-‘பால்யாத் ப்ரப்ருதி ஸுஸ்நிக்த: – இளைய பெருமாள்‌ சக்ரவர்த்தித்‌ திருமகனிடம்‌ தொட்டில்‌ பருவமே தொடங்கி எப்பொழுதும்‌ பக்தி மிக்கவராக விருந்தார்‌.” -ஸ்ரீராமாயணம்‌, பால, 18:27.
938-“தழுவி நின்ற காதல்‌” – திருவாய்மொழி, 4:7:11.
939-“கட்டமே காதலென்று” – திருவாய்மொழி, 7:2:4.
940-“வேட்கைநோய்‌ கூர” – திருவாய்மொழி, 9:6:7.
941-“வேவாரா வேட்கைநோய்‌ மெல்லாவியுள்ளுலர்த்த” – திருவாய்மொழி, 2:1:10.
942-“உன்னைக் காணுமவாவில்‌ வீழ்ந்து” – திருவாய்மொழி, 5:7:2.
943-“உன்னைக்காண்பான்‌ நான்‌ அலப்பாய்‌” – திருவாய்மொழி, 5:8:4.
944-“உன்னாலல்லால்‌ யாவராலும்‌” – திருவாய்மொழி, 5:8:3.
945-“குதிரியாய்‌ மடலூர்த்தும்‌” – திருவாய்மொழி, 5:3:9.
946-“யாமடலூர்ந்து மெம்மாழி” – திருவாய்மொழி, 5:3:10.
947-“ஆறெனக்கு நின்பாதமே” – திருவாய்மொழி, 5:7:10.
948-“கழல்களவையே சரணாகக்‌ கொண்ட” – திருவாய்மொழி, 5:8:11.
949- “அடிமேல்‌ சேமங் கொள்‌” – திருவாய்மொழி, 5:9:11.
950-“நாகணைமிசை நம்பிரான்‌” – திருவாய்மொழி, 5:10:11.
951-“அடிக்கீழமர்ந்து புகுந்தேனே” – திருவாய்மொழி, 6:10:10.
952-“ஸக்ருதேவஹி சாஸ்த்ரார்த்த: – சாஸ்த்ரப் பொருளான இந்தப் ப்ரபத்தி ஒரு முறையே செய்யப்பட வேண்டியதாய்‌, மனிதனைப்‌ பிறவியினின்றும்‌ தாண்டச்‌ செய்யும்‌.” – லக்ஷ்மீ தந்த்ரம்‌.
953-“ஸக்ருதேவ ப்ரபந்நாய – ஒரே முறை ப்ரபத்தி செய்தவன்‌ பொருட்டும்‌, நான்‌ உனக்காக விருக்கிறேன்‌ என்று இரூக்கின்றவன்‌ பொருட்டும்‌, எல்லா உயிர்களிடமிருந்தும்‌ அச்சமின்மையைக்‌ (அபயங்க்‌) கொடுக்கிறேன்‌; இது என்னுடைய விரதம்‌” – ஸ்ரீராமா, யுத்த, 18:33.
954-“எல்லாம்‌ கண்ணன்‌” – திருவாய்மொழி, 6:7:1.
955-“வழுவிலாவடிமை செய்யவேண்டும்‌ நாம்‌” – திருவாய்மொழி, 3:3:1.
956-“நாகிஞ்சித்குர்வதச்‌ சேஷத்வம்‌ – தொண்டு செய்யாத வுயிர்க்கு அடிமையாந்‌ தன்மை யில்லை.”
957-“தனக்கேயாக” – திருவாய்மொழி, 2:9:4.
958-“உன்றன்‌ திருவுள்ளமிடர்‌ கெடுந்தோறும்‌” – திருவாய்மொழி, 10:3:9.
959-“கதாப்ரஹர்ஷயிஷ்யாமி – நான்‌ தேவரீரை எப்பொழுது சந்தோஷப் படுத்தப் போகிறேன்‌” -ஸ்தோத்ர ரத்நம்‌, 46.-

ஸுூத்ரம்‌-102
960-“இடகிலேன்‌
” – திருவாய்மொழி, 4:7:9.
961-“யஜ்ஞோ தாநம்‌ தப: கர்ம – வேள்வி, தானம்‌, தவம்‌ முதலியவை முன் செய்த பாவங்களைப்‌ போக்குவன” – ஸ்ரீகீதை, 18:5.
962-“நோற்ற நோன்பிலேன்‌ நுண்ணறிவிலேன்‌” – திருவாய் , 5:7:1.
963-“கிற்பன்‌ கில்லே னென்றிலன்‌ முன நாளால்‌” – திருவாய்மொழி, 3:2:6.
964-“குர்யாத்‌ – செய்யத் தகும்‌”
965-“ந குர்யாத்‌ – செய்யத்தகாது”
966-“தெரிந்துணர் வொன்றின்மையால்‌ தீ வினையேன்‌” – பெரிய திருவந்தாதி, 82.

ஸுூத்ரம்‌-103
967-“குறிக்கொள்ஞானங்களாலெனையூழி”
– திருவாய்மொழி, 2:3:8.
968-“இப்பிறப்பே” , “சிலநாளில்‌” – பெரிய திருவந்தாதி, 82.

ஸுத்ரம்‌-104
969-“முடிவில்‌ பெரும்பாழ்‌
” – திருவாய்மொழி, 10:10:10.
970-“நெஞ்சப்‌ பெருஞ்சய்‌” – திருவாய்மொழி, 5:3:4.
971-“ஏவினார்‌ கலியார்‌” – பெரிய திருமொழி, 1:6:8.
972-“மனமாளுமோரைவர்‌ வன்குறும்பர்‌” – பெரிய திருவந்தாதி, 51.
973-“கோவைவாயைவரென்‌ மெய்குடியேறி” – பெரிய திருமொழி, 7:7:9.
974-“ஐம்புலன்‌ கருதும்‌” – பெரிய திருமொழி, 1:1:8.
975-“புலன்‌ படிந்துண்ணும்‌ போகம்‌” – பெரிய திருமொழி, 1:6:2.
976-“தூராக்குழி” – திருவாய்மொழி, 5:8:6.
977-“பொறுத்துக்கொண்டிருந்தால்‌” – பெரிய திருமொழி, 7:7:7.
978-“கடியார்‌ காளையரைவர்‌” – பெரிய திருமொழி, 7:7:8.
979- “கூறைசோறிவை தாவென்று குமைத்துப்போகார்‌” – பெரிய திருமொழி, 7:7:9.
980- “செக்கிலிட்டுத்‌ திரிக்குமைவர்‌” – திருவாய்மொழி, 7:1:5.
981-“கொடு வன்‌ குழியினில்‌ வீழ்க்குமைவர்‌” – திருவாய்மொழி, 7:1:9.
982- “ஐவர்‌ திசைதிசை வலித்தெற்றுகின்றனர்‌” – திருவாய்மொழி, 7:1:10.
983- “ஐவர்‌ அருவித்‌ தின்றிட” – பெரிய திருமொழி, 7:7:1.
984- “ஐவர்‌ அறுத்துத்‌ தின்றிட” – பெரிய திருமொழி, 7:7:7.
985- “பொருளின்பமென விரண்டுமிறுத்தேன்‌ ஐம்புலன்கட்‌ கடனாயின” – பெரிய திருமொழி, 6:2:1.
986- “வாழ்த்தி யவனடியைப்‌ பூப் புனைந்து நின் தலையைத்‌ தாழ்த்து இரு கை கூப்பென்றால்‌ கூப்பாத பாழ்த்த விதி” – பெரிய திருவந்தாதி, 84.
987-“தன்பால்‌ மனம்வைக்கத்‌ திருத்தி” – திருவாய்மொழி, 1:5:10.
988- “எனதேழை நெஞ்சாளும்‌ திருந்தாதவோரைவரைத்‌ தேய்ந்தற மன்னி யிருந்தான்‌” – திருவாய்மொழி, 8:7:2.
989- “நீபணித்தவருளென்னு மொள்வாளுருவி” – பெரிய திருமொழி, 6:2:4.
990- “மாமேகம்‌ சரணம்வரஜ – என்னையே சரணமாகப்‌ பற்று” – ஸ்ரீகீதை, 18:73.
991– “ஸ்திதோஸ்மி கதஸந்தேஹ: – ஐயம்‌ நீங்கினவனாய்‌ நிலைத்து நிற்கிறேன்‌” ஸ்ரீகீதை, 18:66.
992- “ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி – உன்னை எல்லாப்‌ பாபங்களினின்றும்‌ விடுவிக்கிறேன்‌” – ஸ்ரீகீதை, 18:73.
993- “கொடுவினைத்தூறு” – திருவாய்மொழி, 3:2:9.
994- “வினைகளைவேரற” – திருவாய்மொழி, 3:2:1.
995- “வல்வினைத்தொடர்களை முதலரிந்து” – திருவாய்மொழி, 3:2:2.
996- “இறவுசெய்யும்‌ பாவக்காடு தீக்கொளீஎ வேகின்றதால்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 5:4:2.
997- “யதேஷிகதூல மக்தெள ப்ரோதம் ப்தூதேய: ஏவம்‌ – நெருப்பில்‌ போடப்பட்‌। நாணற்பஞ்சு எப்படியுடனே கொளுத்தப் படுகிறதோ அப்படியே இந்த உபாஸகனுடைய எல்லாப்‌ பாவங்களும்‌ கொளுத்தப்படுகின்றன” – சாந்தோக்ய உபநிஷத்‌, 5.24:3.
998-“ஊரவர்க்கவ்வை யெருவிட்டு” – திருவாய்மொழி, 5:3:4.
999-“அறிவையென்னு மமுதவாறுதலைப்பற்றி வாய்க்கொண்டது” – பெரியாழ்வார்‌ திருமொழி, 5:4:2. 1000-“கண்ணனுக்கென்று ஈரியாயிருப்பாள்‌” – திருவாய்மொழி, 6:7:9.

1001-“கசிந்த நெஞ்சினளாய்‌” – திருவாய்மொழி, 6:7:8.
1002-“செய்த்தலையெழுநாற்று” – பெரியாழ்வார்‌ திருமொழி, 3:7:9.
1003- “வன்புலச்சேவை அதக்கி” – பெரியாழ்வார்‌ திருமொழி, 5:2:3
1004-“நீர்நுமதென்றிவை வேர்முதல்மாய்த்து” – திருவாய்மொழி, 1:2:3.
1005-“விளைந்ததானியமு மிராக்கதர்‌ மீது கொள்ள கிலார்கள்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 4:4:8.
1006-“அரக்கரசுரர்‌ பிறந்தீருள்ளீரேல்‌” – திருவாய்மொழி, 5:2:5.
1007-“பள்ளியறை குறிக்கொள்மின்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 5:3:9.
1008-“காதல்‌ கடல்புரைய விளை வித்த காரமர் மேனி” – திருவாய்மொழி, 5:3:4.
1009-“வரம்புற்ற கதிர்ச் செந்நெல்‌ தாள் சாய்த்துத்‌ தலை வணக்கும்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 4:9:8.
1010-“நாலு நாள்‌ வந்தென்னை முற்றவும்‌ தானுண்டான்‌” – திருவாய்மொழி, 9:6:8.
1011-“கோட்குறைபட்ட தென்னாருயிர்‌” – திருவாய்மொழி, 9:6:7.
1012-“நின்றாரறியா வண்‌ணம்‌ எனனெஞ்சு முயிருமவை யுண்டு” – திருவாய்மொழி 10:7:1.
1013-“மனக்காராமை மன்னி யுண்டிட்டாய்‌” – திருவாய்மொழி, 10:10:6.
1014-“காலக்கழிவு செய்யேல்‌” – திருவாய்மொழி, 2:9:2.
1015-“மன்னும்‌ வறுநிலத்து வாளாங்குகுத்ததுபோல்‌” – பெரிய திருமடல்‌, 89.
1016) “வினை பற்றறுக்கும்‌” – பெரிய திருமொழி, 11:4:9.
1017-“அருளென்னும்‌ தண்டாலடித்து” – பெரிய திருவந்தாதி, 26.
1018-“போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை பேர்த்து” திருவாய்மொழி, 7: 5:10.
1019-“தத்தோயஸ்பர்ச்சமாத்ரேண – அந்த விரஜையின்‌ தண்ணீரைத்‌ தொட்ட அளவினாலே”
1020-“சீரார்‌ தயிர்க் கடைந்து வெண்ணை திரண்டதனை வேரார் நுதல்‌ மடவாள்‌ வேரோர்க் கலத்திட்டு” – சிறிய திருமடல்‌, 30.
1021-“அணைவர்‌ போயமருலகில்‌ பைந்தொடி மடந்தையர்த்தம்‌ வேய்மருதோளிணை ” – திருவாய்மொழி, 10-2:11.
1022-“தம்‌ பஞ்சசதாந்யப்ஸரஸாம்‌” , “தம்ப்ரஹ்மாலங்காரேணாலங்குர்வந்தி” – அந்த முக்தனை ஐந்நூறு தேவமாதர்கள்‌ எதிர்க் கொள்ளுகிறார்கள்‌ , நூறு பெண்கள்‌ மாலைகளைக்‌ கையில்‌ ஏந்தினவர்களாய்‌, நூறு பெண்கள்‌ அஞ்சனத்தைக்‌ கையில்‌ ஏந்தினவர்களாய்‌, நூறு பெண்கள்‌ ஸ்ரீசூர்ணம்‌ ஏந்தினவர்களாய்‌, நூறு பெண்கள்‌ வஸ்திரங்களைக்‌ கையில்‌ ஏந்தினவர்‌களாய் நூறு பெண்கள்‌ திருவாபரணங்களைக்‌ கையில்‌ ஏந்தினவர்களாய்‌, அந்த முக்தனை பிரம்மாலங்காரத்தால்‌ அலங்கரிக்கிறார்கள்‌” – கெளஷீதக, 1:35.
1023-“ஸ்வேந ரூபேணாபி நிஷ்பத்யதே – தன்னுடைய ஸ்வரூபத்தோடு தோன்றுகிறான்‌” -சாந்தோக்ய உபநிஷத்‌.
1024-“அஹமந்நம்‌ – நான்‌ பரமாத்மாவுக்கு இன்பத்தைத்‌ தருகின்றவன்‌.” தைத்திரீயோபநிஷத்‌.

1025-“வானோர்க்காராவமுதே” – திருவாய்மொழி, 5:7:11.
1026-“வைகுந்தன்‌ தமரெமரெமதிடம்‌ புகுது” – திருவாய்மொழி, 10:9:9.
1027-“விதிவகை புகுந்தனர்‌” – திருவாய்மொழி, 10:9:10.
1028-“பதியினில்‌ பாங்கினில்‌” – திருவாய்மொழி, 10:9:10.
1029-“என்னை முற்றுமுயிருண்டு” – திருவாய்மொழி, 10:7:3.
1030-“என்னில்‌ முன்னம்‌ பாரித்து” – திருவாய்மொழி, 9:6:10.
1031-“உழுவதோர்‌ படையும்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 4:7:5.
1032-“ஒற்றைக்குழையும்‌ நாஞ்சிலும்‌” – பெரிய திருமொழி, 8:8:8.
1033-“அரியதெளிதாகுமாற்றால்‌ மாற்றிப்பெருக முயல்வாரைப்‌ பெற்றால்‌” – இரண்டாந்‌ திருவந்தாதி, 22.
1034-“பத்தியுழவன” – நான்முகன்‌ திருவந்தாதி, 23.

ஸுூத்ரம்‌-105
1035-“த்வாமாமநந்தி கவய
: – அருளாகிய அமுதக் கடலே! புலவர்கள்‌, தேவரீரை ஞான யோகம்‌ கர்ம யோகம் பக்தி யோகம்‌ எனனுமிவைகளால்‌ அடையத்‌ தகுந்தவனாகவும்‌ மற்றைய வழிகளால்‌ அடைய முடியாதவனாகவும்‌ சொல்லுகிறார்கள்‌; வரதனே! உத்தர கோசல தேசத்தில்‌ உள்ள உயிர்கள்‌ புற்களோடு கூட மேற்கூறிய உபாயங்களுள்‌ எந்த உபாயத்தினால்‌ தேவரீரை அடைந்தன?” – வரதராஜஸ்தவம்‌, 69.
1036-“அயோத்தியில்‌ வாழும்‌ சராசரம்‌ முற்றவும்‌” – திருவாய்மொழி, 7:5:1.
1037-“ராமோ ராமோ ராம இதி – இராமபிரான்‌ அரசாளும்‌ காலத்தில்‌ மக்களுக்கு ராமன்‌ ராமன்‌ ராமன்‌ என்பதாகவே எல்லா வார்த்தைப்பாடுகளும்‌ உண்டாயின; உலகமும்‌ ராமனுடைய ஸ்வரூபமாகவே வாயிற்று” – ஸ்ரீராமா, யுத்த, 131:96.
1038-“அபிவருக்ஷா: பரிம்லாநாஸ்‌ ஸபுஷ்பாங்குரகோரகா: – சக்ரவர்த்தியே! உம்முடைய தேசத்தில்‌ மரங்களும்‌ ராம பிரானைப்‌ பிரிந்த துக்கத்தினால்‌ மலர்‌ அரும்பு மொட்டு இவைகளோடு கூட மிக வாடி வதங்கிக்‌ கருகி உலர்ந்தன” ஸ்ரீராமா, அயோத்‌, 59:4:5.
1039-“அகால பலிநோ விருக்ஷா: – எல்லா மரங்களும்‌ காலமல்லாத காலத்திலும்‌ பழங்களை யுடையனவாகவும்‌, பெருக்கெடுக்கின்ற தேன்களை யுடையனவாகவும்‌” ஸ்ரீராமா, யுத்த, 127:17. 1040) “அவனொருவன்‌ குழலூதினபோது” – பெரியாழ்வார்‌ திருமொழி, 3:6:10.
1041-“மருண்டு மான்‌ கணங்கள்‌ மேய்கை மறந்து” – பெரியாழ்வார்‌ திருமொழி, 3:6:9.
1042-“பறவையின்‌ கணங்கள்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 3:6:8.
1043-“கோவலர்‌ சிறுமியரிளங்கொங்கை குதுகலிப்ப” – பெரியாழ்வார்‌ திருமொழி, 3:6:1.
1044- “நங்கைமீர்களிதோரற்புதம்‌ கேளீர்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 3:6:1.
1045-“ஸ்வாதந்த்ய மவர – இறைவன்‌ ஈஸ்வரனாக விருப்பதால்‌ அவன் ஸ்வாதந்தர்யம்‌ ‘இதனை ஏன்‌ செய்தாய்‌, இதனை ஏன்‌ செய்ய வில்லை’ என்று ஒருவராலும்‌ கேட்கத்‌ தகுந்ததன்று.” – ஸ்ரீவைகுண்ட ஸ்தவம்‌ ,55.
1046-“பவ மோக்ஷ்ணயோஸ்த்வயைவ – ஸ்ரீரங்கநாதனே! ஒருவன்‌ தேவரீராலேயே பிறவிக்கும்‌ மோக்ஷத்திற்கும்‌ உரியவனாகச்‌ செய்யப்படுகிறான்‌ ; தேவரீரே காத்தருள வேண்டும்‌” – ஸ்ரீரங்கராஜஸ்தவம்‌, உத்தர, 88.-

ஸுூத்ரம்‌-107
1047-“முந்நீர்ஞாலம்‌ படைத்த”
– திருவாய்மொழி, 3:2:1.
1048-“விசித்ரா தேஹ ஸம்பத்தி – ஸர்வேஸ்வரனை வணங்கும்‌ பொருட்டுக்‌ கைகால்‌ முதலிய உறுப்புக்களுடன்‌ கூடின இச்சரீரம்‌ முற்காலத்தில்‌ நமக்குக்‌ கொடுக்கப்பட்டது” – விஷ்ணுகுத்வம்‌.
1049-“வாழ்ந்தார்கள்‌” – திருவாய்மொழி, 4:1:6.
1050-“சூட்டு நன்மாலைகள்‌” – திருவிருத்தம்‌, 21.
1051-“கோவை வாயாள் பொருட்டு” – திருவாய்மொழி, 4:3:1.
1052-“ஆழியெழ” – திருவாய்மொழி, 7:4:1.

ஸுூத்ரம்‌-108
1053- “வாட்டாற்றாற் கெந்நன்றி செய்தேனோ வென்னெஞ்சில்‌ திகழ்வதுவே
” திருவாய்மொழி, 10:6:8.
1054-“என்னைத்‌ தீ மனங்‌ கெடுத்தாய்‌” – திருவாய்மொழி, 2:7:8.
1055-“மருவித்‌ தொழும்‌ மனமே தந்தாய்‌” – திருவாய்மொழி, 2:7:7.

ஸுூத்ரம்‌-109
1056-“எண்ணிலும்‌ வருமென்னினி வேண்டுவம்‌”
– திருவாய்மொழி, 1:10:2. 1057-“நெஞ்சே கருமங்கள்‌ வாய்க்கின்று ஓரெண்டானு மின்றியே வந்தியலுமாறு கண்டாயே” – திருவாய்மொழி, 1:10:5.

ஸுூத்ரம்‌-110
1058-“வைத்தேன்‌ மதியால்‌ எனதுள்ளத்தகத்தே”
– திருவாய்மொழி, 8:7:10.
1059-“யானுமெனனெஞ்சுமிசைந்‌ தொழிந்தோம்‌” – பெரிய திருவந்தாதி, 26. 1060-“யானொட்டி யென்னுள்ளிருத்துவ மென்றிலன” – திருவாய்மொழி, 1:7:7.
1061-“இசைவித்தென்னை” – திருவாய்மொழி, 5:8:9.
1062-“என்னிசைவினை” – திருவாய்மொழி, 1:7:4.

ஸுூத்ரம்‌-111
1063-“மாதவன்‌ என்றதே கொண்டு
” – திருவாய்மொழி, 2:7:3.
1064-“திருமாலிருஞ்சோ லைமலை என்றேன்‌ என்ன” – திருவாய்மொழி,10:8:1.

ஸுூத்ரம்‌-112
1065-“நடுவே வந்துய்யக்‌ கொள்கின்ற நாதன்‌” –
திருவாய்மொழி, 1:7:5.
1066-“அடியானிவனென்றனக்‌ காரருள்‌ செய்யும்‌” – திருவாய்மொழி, 9:4:10.
1067-“த்வம்மே, அஹம்மே – நீ எனக்கு அடியவன்‌, நான்‌ எனக்கே உரியவன்‌” ஸ்ரீபட்டர்‌ ஸ்ரீஸுத்தி.
1068-“பதிம்‌ விஸ்வஸ்ய – உலகத்துக்குத்‌ தலைவன்‌ இறைவன்‌” – புருஷ ஸூக்தம்‌.
1069-“ப்ரதாந ஷேத்ரஜ்ஞபதி -ப்ரக்ருதி உயிர்கள்‌ என்னுமிவற்றுக்குத்‌ தலைவன்‌ இறைவன்‌” -ஸ்வேதாஸ்வர உபநிஷத்‌.
1070-“க்ஷராத்மாநாவீசதே தேவ ஏக: – ஸர்வேஸ்வரன்‌ ஒருவனே ப்ரக்ருதியையும்‌ உயிர்களையும்‌ ஏவுகிறான்‌” -ஸ்வேதாஸ்வர உபநிஷத்‌.
1071-“ஸுதிஸ்ஸ்யாத்‌ – இதற்கு வேதம் ப்ரமாணமாகையாலே”
1072-“த்வத்பக்ஷ பாதஸ்‌: – அவன்‌ உன்னுடைய பக்ஷ பாதி”
1073-“வன் கள்வன்‌” – திருவாய்மொழி, 5:1:4.
1074-“அஹம்‌ மம – நான்‌ எனக்குரியவன்‌”
1075-“இந்திர ஞாலங்கள்‌ காட்டி யிவ் வேழுலகுங்கொண்ட ” – திருவாய்மொழி, 9:5:5.
1076-“விதி வாய்க்கின்று காப்பாரார்‌” – திருவாய்மொழி, 5:1:1.
1077-“எனைத்தோர்‌ பிறப்பும்‌ – எதிர்ச் சூழல் புக்கு எனக்கே யருள்கள்‌ செய்ய” – அம்மான்‌ திரி விக்கிரமனை – விதி சூழ்ந்தது – திருவாய்மொழி, 2:7:6.

ஸுூத்ரம்‌-113
1078-“வரவாறொன்றில்லையால்‌ வாழ்வினிதால்‌
” – பெரிய திருவந்தாதி, 56. 1079-“வெறிதேயருள்‌ செய்வர்‌ செய்வார்கட்கு” – திருவாய்மொழி, 8:7:8.
1080-“தனியேன்‌ வாழ்முதலே” – திருவாய்மொழி, 2:3:5.
1081- “எந்நன்றி செய்தேனோ” – திருவாய்மொழி, 10:6:8.

ஸூத்ரம்‌-114
1082-“மயர்வறமதிநல மருளினன்‌”
– திருவாய்மொழி, 1:1:1.
1083-“என்கொலம்மான்‌ திருவருள்கள்‌” – திருவாய்மொழி, 10:7:4.
1084-“மாலருளால்‌ மன்னுகுருகூர்ச்‌ சடகோபன்‌” – திருவாய்மொழி, 1:51:11.
1085-“ஆராவன்பிலடியேனுன்னடிசேர்‌ வண்ணமருளாய்‌” – திருவாய்மொழி, 6:10:2-

ஸூத்ரம்‌-115
1086-“இந்நின்றநீர்மையினியாமுறாமை”
– திருவிருத்தம்‌, 1.
1087-‘புணர்த்தொறும்‌ புணர்ச்சிக்காரா” – திருவாய்மொழி, 10:3:2.
1088-“ஆற்றநல்லவகைகாட்டுமம்மான்‌” – திருவாய்மொழி, 4:5:5.
1089-“எம்மாவீடு” – திருவாய்மொழி, 2:9:1.
1090-“கட்டெழில்‌ வானவர்போகம்‌” – திருவாய்மொழி, 6:6:14.

ஸூத்ரம்‌-116
1091-“முனியே நான்முகனே
” – திருவாய்மொழி, 10:10:1.
1092-“கருத்துக்கு நன்றுமெளியனாய்‌” – திருவாய்மொழி, 3:6:11.
1093-“நிற்குமுன்னே வந்து” – திருவாய்மொழி, 7:3:6.
1094-“கண்கள்‌ காண்டற்கரியனாய்‌” – திருவாய்மொழி, 3:6:11.
1095-“கைக்கு மெய்தான்‌” – திருவாய்மொழி, 7:3:6.
1096-“கண்கட்குத்‌ திண்கொள்ள வொருநாளருளாயுன்‌ திருவுரு” – திருவாய்மொழி, 5:10:7.

ஸுூத்ரம்‌-117
1097-“புண்ணியம்‌ பாவம்‌ புணர்ச்சி பிரிவென்றீவையாய்‌
” – திருவாய்மொழி, 6:3:4.
1098-“சார்ந்தவிருவல்வினைகளும்‌ சரித்து” – திருவாய்மொழி, 1:5:10.
1099-“திலதைலவத்‌ தாருவஹ்நிவத்‌ – எள்ளில்‌ எண்ணெய்‌ போலவும்‌ மரத்தில்‌ நெருப்புப்‌ போலவும்‌ ” – கத்யத்ரயம்‌.
1100-“துளக்கற்றமுதமாயெங்கும்‌” – திருவாய்மொழி, 2:6:2.
1101-“விஜ்வரா: – ஸ்ரீராமபிரான்‌ ஸ்ரீவிபீஷணாழ்வானுக்கு முடி சூட்டிய பின்னர்‌ செய்ய வேண்டிய காரியங்களை யெல்லாம்‌ செய்து முடித்தவராய்‌ நடுக்க மற்றவராய்‌ மகிழ்ந்தார்‌” – ஸ்ரீராமா, பால, 1:85.
1102-“தழை நல்ல வின்பம்‌ தலைப் பெய்தெங்கும்‌ தழைக்க” – திருவாய்மொழி, 9:5:10.

ஸூத்ரம்‌-119
1103-“தேறும்‌ கைகூப்பும்‌
” – திருவாய்மொழி, 7:2:5.
1104-“கலங்கிக்‌ கைதொழும்‌” – திருவாய்மொழி, 2:4:4.
1105-“தேறியும்‌ தேறாதும்‌ மாயோன்‌ திறத்தனளே இத்திருவே” – திருவாய்மொழி, 4:4:7

ஸுத்ரம்‌-120
1106-“அடியோம்‌ போற்றியோவாதே”
– திருவாய்மொழி, 9:2:9.
1107-“தொடர்ந்து குற்றேவல்செய்து” – திருவாய்மொழி, 9:2:3.
1108-“அடிச்சியோம்‌ தலைமிசை நீ யணியாய்‌” – திருவாய்மொழி, 10:3:6.
1109-“திருவடிக்கீழ்‌ குற்றேவல்முன்செய்ய” – திருவாய்மொழி, 1:4:2

ஸுூத்ரம்‌-121
1110-“ஸஹி வித்யாதஸ்‌ தம்‌ ஜநயதி
– அந்த ஆசார்யன்‌ அவனைக்‌ கல்வியால்‌ பிறக்கச்‌ செய்கிறான்‌; அந்தப்‌ பிறவி உயர்ந்தது” – ஆபஸ்தம்ப ஸூத்ரம்‌, 16:17.
1111-“தேனும்‌ பாலுமமுதுமாய திருமால்‌ திருநாமம்‌” – பெரிய திருமொழி, 6:10:6. 1112-“திருமகள்போல வளர்த்தேன்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 3:8:4.
1113-“ஸ பித்ரா ௪ – அந்தக்‌ காகாசுரன்‌ தந்தையாலும்‌ தாயாலும்‌ மஹரிஷிகளுடன்‌ கூடின தேவர்களாலும்‌ கைவிடப்பட்ட வனாய்‌ மூன்று உலகங்களிலும்‌ நன்றாகத்‌
திரிந்து மீண்டு வந்து அப்பெருமானையே சரணமடைந்தான்‌.” – ஸ்ரீராமா, சுந்த, 38:32. 1112-‘பூதாநாம்‌ யோவ்யய: பிதா – எல்லா வுயிர்களுக்கும்‌ அழிவில்லாத தந்தை எவனோ” – ஸஹஸ்ர நாமம்‌.
1115-“பவமோக்ஷ்ணயோஸ்த்வயைவ ஜந்து:க்ரியதே – திருவரங்கநாதனே! தேவரீராலேயே ஒருவன்‌ பிறவிக்கும்‌ மோக்ஷத்திற்கும்‌ உரியவனாகச்‌ செய்யப்படுகிறான்‌” – ஸ்ரீரங்கராஜஸ்தவம்‌, உத்தர, 88.
1116-“மற்றொருவர்க்கு என்னைப்‌ பேசலொட்டேன்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 3:4:5.
1117-“மானிடவர்க்கென்று பேச்சுப்படில்‌” – நாச்சியார்‌ திருமொழி, 1:5.
1118-“பதிம்‌ விற்வஸ்ய – உலகத்திற்குப்‌ பதி” – புருஷ ஸாக்கும்‌.
1119-‘கெளஸல்யா லோகபர்த்தாரம்‌ – பரந்த மனத்தையுடைய கெளசல்யாதேவியார்‌
உலகங்கட்கெல்லாம்‌ கணவனான எவரைப்‌ பெற்றாரோ” – ஸ்ரீராமா, சுந்தர, 38:55.
1120-“பணவாளரவனை” – நாச்சியார்‌ திருமொழி, 10:6.
1121-“எட்டிழையாய்‌ மூன்று சரடாய்‌” – முமுக்ஷுப்படி.
1122-“பாணிம்க்ருஷ்ணீ ஷ்வ பாணிநா – தேவரீர்‌ திருக்கரத்தால்‌ இவளுடைய திருக்கரத்தைப்‌ பிடித்துக்கொள்ளும்‌.” – ஸ்ரீராமா, பால, 73:26.
1123-“பரம் புருடா நீ என்னைக்‌ கைக் கொண்ட பின்‌” – பெரியாழ்வாற்‌ திருமொழி, 5:4:2.
1124-“நண்ணியும்‌ நண்ணகில்லேன்‌ நடுவேயோருடம்பிலிட்டு” – திருவாய்மொழி, 5:1:5.
1125-“நாள்‌ கடலைக்‌ கழிமின்‌” – திருவாய்மொழி, 1:6:7.
1126-“முற்றிலும்‌ பைங்கிளியும்‌ பந்துமூசலும்‌ பேசுகின்ற சிற்றில மென்பூவையும்‌ விட்டகன்ற செழுங்கோதை” – பெரிய திருமொழி, 3:7:8. 1127-“அன்று நான்‌ பிறந்திலேன்‌” – திருச்சந்த விருத்தம்‌, 64.
1128-“சூழ்விசும்பு” – திருவாய்மொழி, 10:9:1. 1129-“அங்கவனோடுமுடன்‌ சென்று” – நாச்சியார் திருமொழி, 6:10.
1130-“நயாமி – கொண்டு செல்கிறேன்‌” – ஸ்ரீவராகசரமம்‌.
1131-“‘குள்ளக்குளிரக்குடைந்து நீராடி” – திருப்பாவை, 13.
1132-“வியன்துழாய்‌ கற்பென்று சூடும்‌” – மூன்றாந்‌ திருவந்தாதி, 69.
1133-“ஆராரயிர்வேற்கணஞ்சனத்தின்‌ நீறணிந்து” – சிறிய திருமடல்‌, 10.
1134-“மெய்திமிருநானப்பொடி” – பெரியாழ்வாற்‌ திருமொழி, 1:4:9.
1135-“உடுத்துக்களைந்தநின்‌ பீதகவாடை” – திருப்பல்லாண்டு, 9.
1136-“பல்கலணும்‌ யாமனிவோம்‌” – திருப்பாவை, 27.
1137-“தம்‌ பஞ்சசதாந்யப்ரஸரஸாம்‌ – அந்த முக்தனை நூறு தெய்வப்‌ பெண்கள்‌ எதிர்க் கொள்ளுகிறார்கள்‌; நூறு பெண்கள்‌ மாலைகளைக்‌ கையில்‌ ஏந்தினவர்களாய்‌, நூறு பெண்கள்‌ அஞ்சனத்தைக்‌ கையில்‌ ஏந்தினவர்களாய்‌, நூறு பெண்கள்‌ ஸ்ரீசூர்ணத்தைக்‌ கையில்‌ ஏந்தினவர்களாய்‌, நூறு பெண்கள்‌ வஸ்திரத்தைக்‌ கையில்‌ ஏந்தினவர்களாய்‌, நூறு பெண்கள்‌ திருவாபரணத்தைக்‌ கையில்‌ ஏந்தினவர்களாய்‌” – கெளஷீதகி.
1138-“மானேய்‌ நோக்கி” – திருவாய்மொழி, 5:8:11.
1139-“தம் ப்ரஹ்மாலங்காரேணா லங்குர்வந்தி” – அவனைப் ப்ரஹ்மாலங்காரத்தால்‌ அலங்கரிக்கின்றார்கள்‌” – கெளஷீதகி.
1140-“தொக்குப்‌ பல்லாண்டிசைத்துக்‌ கவரி செய்வரேழையரே” – திருவாய்மொழி, 7:6:11.
1141-“நிதியும்‌ நற்சுண்ணமும்‌ நிறைகுடவிளக்கமும்‌ மதிமுகமடந்தையரேந்தினர்‌” திருவாய்மொழி, 10:9:10.
1142-“சதிரிளமங்கையர்‌ தாம்‌ வந்தெதிர்க்கொள்ள” – திருவாய்மொழி, 10:9:10.
1143-“மன்னிய மாதவனோடு வைகுந்தம்‌ புக்கிருப்பார்‌” – நாச்சியார்‌ திருமொழி, 3:10.
1144-அடியார்கள்‌ குழாங்கள்‌” – திருவாய்மொழி, 2:3:10.
1145-அடியேன்‌ வாய்மடுத்துப்‌ பருகிக்‌ களித்தேன்‌” – திருவாய்மொழி, 2:3:9.
1146-“கட்டெழில்‌ வானவர்போக முண்பாரே” – திருவாய்மொழி, 6:6:11.
1147-“ஸோச்நுதே ஸர்வாந்‌ காமாந்‌ – இவன்‌ எல்லாக்‌ குணங்களையும்‌ அந்தப்‌ பரமாத்மாவோடு அநுபவிக்கிறான்‌.” – தைத்திரியோபநிஷத்‌.
1148-“கோப்புடைய சீரிய சிங்காசனம்‌” – திருப்பாவை, 23.
1149-“கோட்டுக்காற்கட்டில்‌” – திருப்பாவை, 19.
1150-“தமேவம்வித்‌ பாதேநாத்யாரோஹதி – அவனை இப்படி அறிந்தவன்‌ தனது காலால்‌ அவனுடைய கட்டிலிலே ஏறுகிறான்‌” – கெளஷீதகி, 1:5.
1151-“தம்‌ ஸமுதாப்ய – காகுத்தன்‌, தலையால்‌ முன்னால்‌ விழுந்துள்ள அந்தப்‌ பரதனை நன்கு எடுத்துத்‌ துடைமீது வைத்து மகிழ்ந்தவராய்‌ நன்றாகத்‌ தழுவினார்‌.” ஸ்ரீராமா, யுத்த, 130:39.
1152-“ஸோப்யேநம் த்வஜவஜராப் ஜக்ருதசிஹ்நேந பாணிநா – அந்தக்‌ கிருஷ்ணனும்த்வஜம்‌, வஜ்ரம்‌, தாமரை என்னும்‌ ரேகைகளுடைய தமது கைகளால்‌ நன்றாகத்‌ தொட்டும்‌ இழுத்தும்‌ அன்பாலே மிகவும்‌ கெட்டியாக அக்ரூரனை ஆலிங்கனம்‌ செய்து கொண்டார்‌” – ஸ்ரீவிஷ்ணு புராணம்‌, 5:13:5.
1153-“ரஷ ஸர்வஸ்வபூதஸ்து – இரண்டு சரீரத்தை உதவிய மஹாத்மாவான அந்த அநுமானுக்கு, தடுக்காத சமயம்‌ பார்த்து என்னால்‌ கொடுக்கப்பட்ட இந்த ஆலிங்கனமானது எல்லாக்‌ கொடைகளுக்கும்‌ ஒப்பாகக்கடவது.” – ஸ்ரீராமா, யுத்த, 1:13.
1154-“மணிமிகுமார்பு” – திருவாய்மொழி, 10:3:5.
1155-“குருமாமணிப்பூண்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 1:3:10.
1156-“வண்பூமணிவல்லி” – திருவிருத்தம்‌, 9.-

ஸுூத்ரம்‌-122
1157-“நாரீணாமுத்தமை
– பெண்களுள்‌ உயர்ந்தவள்‌”
1158-“நமக்கும்‌ பூவினமிசைநங்கைக்கு மின்பனை” – திருவாய்மொழி, 4:5:8.
1159-“கோலமலர்ப்பாவைக்கன்பாகிய வென்னன்பே” – திருவாய்மொழி, 10:10:7.
1160- “கடிமாமலர்ப்பாவை யொப்பாள்‌” – பெரிய திருமொழி, 3:7:9.

ஸுூத்ரம்‌-123
1161-“உண்ணாதுறங்காது ஒலிகடலை யூடறுத்துப்‌ பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்ற பேதெல்லாம்‌”
– நாச்சியார்‌ திருமொழி, 11:7.
1162-“நாமாம்ஸம்‌ ராகவோ புங்க்தே – இராகவண்‌ மாம்ஸத்தை யுண்ணவில்லை” ஸ்ரீராமா, சுந்தர, 35:42.
1163-“அந்த்ரஸ்‌ ஸததம்‌ ராம: – ஸ்ரீராமபிரான்‌ எப்பொழுதும்‌ உறக்கமில்லாதவராக காணப்பட்டார்‌” – ஸ்ரீராமா, சுந்‌, 36:44.
1164-“நைவ தம்சாந்‌ ந மசகாந்‌ – காட்டு ஈக்களையும்‌, கொசுக்களையும்‌ சரீரத்திலிருந்து ஓட்ட மாட்டார்‌.” – ஸ்ரீராமா, சுந்‌, 36:42.
1165-“கிடந்திருந்து நின்றளந்து” – திருவாய்மொழி, 2:8:7.
1166-“ஓர்‌ மாயையினால்‌” –
1167-“மாயோன்‌ திறத்தனளே இத்திரு” – திருவாய்மொழி, 4:4:7.
1168-“அநந்யா ராகவேணாஹம்‌ – சூரியனோடுள்ள ஒளியைப்‌ போன்று இராகவனோடு நான்‌ வேறுபட்டவள்‌ அல்லாள்‌.” – ஸ்ரீராமா, சுந்‌, 21:15.
1169-“மண்ணேரனன வொண்ணுதல்‌” – திருவிருத்தம்‌, 49.
1170-“பின்னைகொல்‌ நிலமாமகள் கொல்‌ திருமகள்கொல்‌” – திருவாய்மொழி, 6:5:10.
1171-“தெனபாலிலங்கை வெங்களம்‌ செய்த நம்‌ விண்ணோர்ப்பிரானார்த்துழாய்‌ துணையாநங்களை மாமைகொள்வான்‌ வந்து தோன்றி நலிகின்றதே” – திருவிருத்தம்‌, 77.
1172-“வழாநெடும்‌ துன்பத்தளென்றிரங்காரம்மனோ இலங்கைக்‌ குழாநெடுமாட மிடித்தபிரானார்‌ கொடுமைகளே” – திருவிருத்தம்‌, 36.
1173-“காயும்‌ கடுஞ்சிலையென்காகுத்தன்‌ வாரானால்‌” – திருவாய்மொழி, 5:4:
1174-“இலங்கை நகர்‌ அம்பெரி யுய்த்தவர்த்தாளினை மேலணி வம்பவிழ்‌ தண்ணந்துழாய்‌ மலர்க்கே இவள்‌ நம்பும்‌” – திருவாய்மொழி, 4:2:8.
1175-“தீமுற்றத்‌ தென்னிலங்கை பூட்டினான்‌ தாள்நயந்த யாமுற்றதுற்றயோ” திருவாய்மொழி, 2:1:3.
1176-“மாறில்‌ போரரக்கன்‌ மதிள்நீறேழச்‌ செற்றுகந்த ஏறுசேவகளார்க்‌ கென்னை யுளளென்மின்௧ளே” – திருவாய்மொழி, 6:1:10.
1177-“கிளரரக்கன நகரெரித்த களீ மலர்த் துழாயலங்கல்‌ கமழ்முடியன்‌ கவராத வறிவினால்‌ குறைவிலம்‌” – திருவாய் மொழி, 4:8:5.
1178-“‘காண்பெருந்தோற்றத்‌ தென்காகுத்த நம்பிக்கு என்பூனைமென்முலை தோற்றது பொற்பே” – திருவாய்மொழி, 6:6:9.
1179-“என்னாருயிர்‌ காகுத்தன்‌ நின்‌ செய்யவாயொக்கும்‌ வாயன்‌ கண்ணன்‌ கைகாலினன்‌ நின்பசுஞ்சாமநிறத்தன்‌ கூட்டுண்டு நீங்கினான்‌ – சிறூ கிளிப்பைதலே இன்குரல்‌ நீ மிழற்றேல்‌” – திருவாய்மொழி, 9:5:6.
1180-“ஆதியங்காலத்தகலிடம்‌ கீண்டவர்‌ பாதங்கள்மேலணி பைம்பொற்றுழாயன்றே யோதுமாலெய்தினள்‌” – – திருவாய்மொழி, 4:2:6.
1181-‘மண்புரைவையமிடந்தவராகற்கு – என்கண்புனைகோதை இழந்தது கற்பே” திருவாய்மொழி, 6:6:5.
1182-“ஞாலப்பொன்மாதின்மணாளன துழாய்நங்கள்‌ கழ்குழற்கே ஏலப்புனைந்தென்னைமாரெம்மை நோக்குவதென்றுகொல்‌” – திருவிருத்தம்‌, 40.
1183-“ஏனமொன்றாய்‌ மண்துகளாடி வைகுந்த மன்னான்‌ குழல்வாய்‌ விரைபோல்‌ விண்டு கள்வாரும்‌ மலருளவோ நும்‌ வியலிடத்தே” – திருவிருத்தம்‌, 55.
1184-“எருதேழ்தழீஇக்கோளியார்‌ கோவலனார்‌ குடக்கூத்தனார்‌ தாளிணை மேலணி தண்ணந்துழாயென்றே நாளு நாள்‌ நைகின்றது” – திருவாய்மொழி, 4:2:5. 1185-“கறையினார்‌ துவருடுக்கை கடையாவின்‌ கழிகொற்கைச்சறையினார்‌ கவராத தளிர் நிறத்தால்‌ குறைவிலம்‌” – திருவாய்மொழி, 4:8:4.

ஸுூத்ரம்‌-124
1186-‘தேடித்திருமாமகள்‌ மண்மகள்‌ நிற்க
” – பெரிய திருமொழி, 10:8:9.
1187-‘இப்பொய்கைக்‌ கெவ்வாறு வந்தாய்‌” – நாச்சியார்‌ திருமொழி, 3:2.
1188–“முதுமணற்குனறேறி” – பெரியாழ்வார்‌ திருமொழி, 1:10:9.
1189-“முல்லையின்‌ பந்தர்நீழல்‌ மன்னியவளைப்‌ புணரப்புக்கு” – பெருமாள்‌ திருமொழி, 6:8.
1190-“முற்றத்தூடு புகுந்து” – நாச்சியார்‌ திருமொழி, 2:9.
1191-“மச்சொடு மாளிகையேறி” – பெரியாழ்வார்‌ திருமொழி, 2:7:3.
1192-“அவ்வவ்விடம்புக்கு அவ்வாயர்‌ பெண்டிர்க்கணுக்கனாய்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 3:2:5.
1193-“துகில்வாரியும்‌ சிற்றில்‌ சிதைத்தும்‌” – பெரிய திருமொழி, 3:8:8.

1194-“பந்துபறித்துத்துகில்பற்றி” – பெரிய திருமொழி, 10:7:5.
1195-“கச்சொடு பட்டைக்கிழித்து” – பெரியாழ்வார்‌ திருமொழி, 2:7:3.
1196-“இட்டமா விளையாடு” – நாச்சியார்‌ திருமொழி, 14:1, 14:4
1197-“கோயினமை செய்து கன்மமொன்றில்லை” – திருவாய்மொழி, 6:2:6.
1198-“குறும்புசெய்வானோர்‌ மகனைப்‌ பெற்ற” – நாச்சியார்‌ திருமொழி, 12:3.
1199-“அல்லல்விளைத்த பெருமான்‌” – நாச்சியார்‌ திருமொழி, 13:10.
1200-“ஆயர்ப்பாடி கவர்ந்துண்ணும்‌” – நாச்சியார்‌ திருமொழி, 14:2.
1201- “நீயுகக்குநல்லவர்‌” – திருவாய்மொழி, 10:3:8.
1202-“துஷ்டகாளிய திஷ்டாச்ரக்ருஷ்ணொஹ்மிதி சாபரா – ஏ துஷ்ட காளியனே! ஈங்கு நில்‌; நான்‌ கிருஷ்ணன்‌ என்று மற்றவள்‌ சொன்னாள்‌” – ஸ்ரீவிஷ்ணு புராணம்‌, 5:13:27.
1203-“க்ருஷ்ணோஹ மேஷ லலிதம்வரஜாம்‌ யாலோக்யதாம்‌ கதி: – நான்‌ கிருஷ்ணன்‌; இத்தகைய நான அழகாக நடக்கப்‌ போகிறேன்‌; அந்த நடை உங்களால்‌ காணத் தக்கது” – ஸ்ரீவிஷ்ணு புராணம்‌, 5:13:27.
1204-“கடல்ஞாலம்‌” – திருவாய்மொழி, 5:6:1. 1205-“மின்னிடைமடவார்‌” – திருவாய்மொழி, 6:2:1.
1206-“மல்லிகைகமழ்‌ தென்றல்‌” – திருவாய்மொழி, 9:9:1.
1207-“வேய்மருதோளிணை” – திருவாய்மொழி, 10:3:1.
1208-“பேய்முலையுண்டு” – திருவாய்மொழி, 10:3:8.
1209-“முனிந்துசகடமுதைத்து” – திருவாய்மொழி, 7:3:5.
1210-“முழுசிவண்டாடிய” – பெரிய திருமொழி, 2:8:7.
1211-“ஆவரிவைசெய்தறிவார்‌” – பெரிய திருமொழி, 3:3:7.
1212-“ஸக்க்ய: பச்யதக்ருஷ்ணஸ்ய முகமத்யருணேக்ஷணம்‌, கஜயுத்த க்ருதாயாஸ ஸ்வேதாம்புகணிகாசிதம்‌ – தோழிகளே! மிகச்‌ சிவந்த திருக்கண்களை யுடையதும்‌ யானையோடு போர்‌ செய்ததால்‌ உண்டான வருத்தத்தால்‌ வியர்வைத்‌ துளிகள்‌ நிரம்பியதுமான கிருஷ்ணன்‌ முகத்தைப்‌ பாருங்கள்‌.” – ஸ்ரீவிஷ்ணு புராணம்‌, 5:20:53.
1213-“மழறு தேன்மொழி” – திருவாய்மொழி, 6:2:5.
1214-“மதுராம்ப்ராப்ய கோவிந்த: – மதுரையம்பதியை அடைந்து அந்நகரத்துப்‌ பெண்களுடைய இனிமை பொருந்திய வார்த்தைகளாகிய தேனைக்‌ காதுகுவளினாலே பருகுகின்ற கண்ணன் இனி எப்படிக்‌ கோகுலத்திற்கு வருவார்‌?” – ஸ்ரீவிஷ்ணு புராணம்‌, 5:18:13.
1215-“மற்பொரு தோளுடை மாயப் பிரானுக்கு என்கற்புடை யாட்டி யிழந்தது கட்டே” திருவாய்மொழி, 6:6:10.
1216-“விறல்கஞ்சனை வஞ்சனை செய்தீர்‌ உம்மைத்‌ தஞ்சமென்றிவள்‌ பட்டனவே” திருவாய்மொழி, 2:4:8.
1217-‘நரகனைத்தொலைத்த கரதலத்த” – பெரிய திருமொழி, 10:9:4.
1218-“நரகன்றன்னைச்‌ கழ்போகிவளைத்தெறிந்து கன்னிமகளிர்‌ தம்மைக்கவர்ந்த” பெரியாழ்வார்‌ திருமொழி, 4:3:3.

1219-‘பதினாறாமாயிரவர்‌ தேவிமார்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 4:9:4.
1220-“பல்லாயிரம்‌ பெருந்தேவிமார்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 4:1:6.
1221-“எண்ணிறந்த பெருந்தேவிமார்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 4:2:10.
1222-“ஷோடசஸ்த்ரீஸஹஸ்ராணி – பதினாறாயிரம்‌ பெண்கள்‌.” – ஸ்ரீவிஷ்ணு புராணம்‌, 5:31:18.
1223-“நூற்றுவரையன்று மங்கநூற்ற நிகரில்‌ முகில்வண்ணன்‌ நேமியான்‌ என்னெஞ்சம்‌ கவர்ந்தெனை யூழியான்‌” – திருவாய்மொழி, 7:3:10.
1224-“குரரி! விலபஸித்வம்‌ – ஓ அன்றிலே! இரவிலே இறைவனாலே மறைக்கப்பட்ட அறிவையுடைய உலகமானது உறங்கும்போது ந உறக்கமற்றதாகக்‌ கதறுகிறாய்‌, படுக்கையில்‌ படுக்கிறாயில்லை; தாமரை போன்ற திருக்கண்‌களையும்‌ புன்முறுவலையும்‌ கம்பீரமான செயல்களையும்‌ சிறந்த பார்வையையுமுடைய கிருஷ்ணனாலே எங்களைப் போன்று நீயும்‌ மிக மிகப்‌ புண்பட்ட மனத்தை யுடையையானாயோ” – ஸ்ரீபாகவதம்‌, 10.90:15.
1225-“வாயுந்திரையுகள்‌” – திருவாய்மொழி, 2:1:1.
1226-“தேர்ப்பாகனார்க்கு இவள்‌ சிந்தைதுழாய்‌ திசைக்கின்றதே” – திருவாய்மொழி, 4:6:1.
1227-“வண்டுவராபதிமன்னனை யேத்துமினேத்துதலும்‌ தொழுதாடுமே” திருவாய்மொழி, 4:6:10.

ஸுூத்ரம்‌-125
1228-“நச ஸீதா
– இராகவனே! உம்மால்‌ விலக்கப்பட்ட ஸீதாபிராட்டி உயிர்‌ வாழார்‌; நானும்‌ உயிர்‌ வாழேன்‌; உயிர்‌ வாழ்வோமானால்‌ தண்ணீரின்றும்‌ எடுக்கப்பட்ட மீன்கள்‌ போன்று ஒரு கணநேரமே வாழ்வோம்‌” – ஸ்ரீராமா, அயோத்‌, 53:31.
1229-“மநஸ்வீ தத்கத: – பெரிய மனம்‌ படைத்தவன்‌, பிராட்டியை அடைந்தவன்‌” ஸ்ரீராமா, பால, 77:25.
1230-“உண்ணாதுறங்காதொலிகட லை யூடறுத்து” – நாச்சியார்‌ திருமொழி, 11:7.
1231-“தனிச்சிறையில்‌ விளப்புற்ற” – திருவாய்மொழி, 4:8:5.
1232-“மராமரமெய்த மாயவனென்னுளிரானெனில்‌ பின்னையானொட்டுவேனோ” திருவாய்மொழி, 1:7:6.
1233-“இலங்கை செற்றாய்‌ உன்னையென்னுள்ளே குழைத்தவெம்மைந்தா” திருவாய்மொழி, 2:6:9.
1234-“வன்சிறையிலவன்‌ வைக்கில்‌” – திருவாய்மொழி, 1:4:1.
1235-“விதிதஸ்‌ ஸஹி தர்மஜ்ஞ: – ஸ்ரீராமபிரான்‌ நியாயம்‌ அறிந்தவர்‌; சரணம்‌ புகுந்தவர்களிடத்தில்‌ அன்புடையவர்‌ என்று எல்லோராலும்‌ அறியப்பட்டவர்‌; ஆதலால்‌, உயிர்‌ வாழ்வதற்கு ஆசைப்படுவாயேயானால்‌ நீ அவரோடு சிநேகம்‌ செய்துகொள்‌” – ஸ்ரீராமா, சுந்தர, 21:20.
1236-‘புணைவன்‌ பிறவிக்கடல்‌ நீந்துவார்க்கே” – திருவாய்மொழி, 2:8:1.
1237-“நஹி மே ஜீவிதேநார்த்தோ – மஹாரதனான ஸ்ரீராமபிரானைப்‌ பிரிந்து அரக்கியர்‌ நடுவில்‌ இருக்கின்ற எனக்கு உயிரினால்‌ பயனில்லை, செல்வங்களால்‌ பயனில்லை, ஆபரணங்களாலும்‌ ஒரு பயனில்லை.” ஸ்ரீராமா, சுந்தர, 26:5.
1238-“மாறாளன்‌ கவராத மணிமாமை குறைவிலம்‌” – திருவாய்மொழி, 4:8:1.
1239-“விஷஸ்ய தாதா ந ஹி மேஸ்தி – அரக்கனாகிய இராவனனுடைய வீட்டில்‌ எனக்கு விஷத்தையோ அல்லது வாள்‌ முதலிய கருவிகளையோ கொடுப்பவர்‌ ஒருவரும்‌ இலர்‌.” – ஸ்ரீராமா, சுந்தர, 28:16.
1240-“மாயும்‌ வகையறியேன்‌” – திருவாய்மொழி, 5:4:3.
1241-“ஹாராம – ஸ்ரீராமா, சுந்‌, 28:8.
1242-“புணராநின்ற மரமேழன்றெய்தவொரு வில்வலவா வோ” – திருவாய்மொழி, 6:10:5.
1243-“க்யாத:ப்ராஜ்ஞ: – ஸ்ரீராமபிரான்‌ குற்றமுடையவர்கள்‌ பக்கலிலும்‌ குணத்தைக்‌ கொள்ளுகின்றவர்‌, செய்ந்நன்றி அறிகின்றவர்‌; அருளோடு கூடியவர்‌; நல்லொழுக்கமுடையவர்‌ என்று மக்களால்‌ சொல்லப்படுகின்றவராயினும்‌ எண்ணது புண்ணியக்குறைவால்‌ அருளில்லாதவராய்‌ இருக்கிறார்‌ என்று ஐயப்படுகிறேன்‌” – ஸ்ரீராமா. சுந்‌, 26:13.
1244-“இரக்கமெழீர்‌” – திருவாய்மொழி, 2:4:3.
1245-“வழாநெடுந்துன்பத்த ளென்றிரங்காரம்மனோ!” – திருவிருத்தம்‌, 36.
1246-“அறிவொன்றும்‌ சங்கிப்பன்‌” – திருவாய்மொழி, 8:1:7.
1247-“ஜீவந்தீம்‌ மாம்‌ யதா ராமஸ்‌ – ஏ அநுமன்‌! கீர்த்தியையுடைய அந்த இராமபிரான்‌ நான்‌ உயிர்‌ வாழ்ந்திருப்பவளாக என்னை எப்படி நினைப்பரோ அப்படியே உம்மால்‌ வார்த்தை சொல்லத்தக்கவர்‌; இத்தகைய வார்த்தைகளைச்‌ சொல்லி வாக்கின்‌ தர்மத்தை அடையக்‌ கடவீர்‌” – ஸ்ரீராமா. சுந்‌, 39:10.
1248-“ஏறு சேவகனார்க் கென்னையு முளளென்மின்௧ளே” – திருவாய்மொழி, 6:1:10.
1249-“அநந்யா ராகவேணாஹம்‌ பாஸ்கரேணப்ரபா யதா – ஸூரியனோடுள்ள ஒளியைப்‌ போன்று நான்‌ ஸ்ரீராமபிரானை விட்டுப்‌ பிரிக்கப்‌ படாதவள்‌.” – ஸ்ரீராமா, சுந்‌, 21:15.
1250-“அரக்கியை மூக்கீர்ந்தாயை” – திருவாய்மொழி, 2:3:6.
1251-“அகலகில்லேனிறையு மென்றலர்மேல்மங்கையுறைமார்பா” – திருவாய்மொழி, 6:10:10
1252-“அடியேனுனபாதமகலகில்லே னிறையும்‌” – திருவாய்மொழி, 6:10:9.
1253-“பெருமகள்‌ பேதைமங்கை” – பெரிய திருமொழி, 4:5:5.

ஸுூத்ரம்‌-126
1254-“நின்னலால்‌ இலேன்காண்‌”
– திருவாய்மொழி, 2:3:7.
1255-“நேரிழையுமிளங்கோவும்‌ பின்புபோக” – பெருமாள்‌ திருமொழி, 9:2.
1256-“நச ஸீதாத்வயா – இரகு வம்சத்தில்‌ அவதரித்தவரே! உம்மால்‌ விலக்கப்படுகின்ற பிராட்டியார்‌ உயிர்‌ வாழார்‌; நானும்‌ உயிர்‌ வாழேன்‌; உயிர்‌ வாழ்வோமானால்‌ தண்ணீரின்றும்‌ எடுக்கப்பட்ட மீன்கள்‌ போன்றும்‌ ஒரு கணமே உயிர்‌ வாழ்வோம்‌” – ஸ்ரீராமா, அயோத்‌, 53:31.-

ஸூத்ரம்‌-127
1257-“பால்யாத்ப்ரப்ருதி ஸுஸ்நிக்த:
– பெரியதமையனாரான சக்ரவர்த்தித்‌ திருமகனிடத்தில்‌ தொட்டில்‌ பருவமே தொடங்கி மிகவும்‌ பக்தியுள்ளவராக விருந்தார்‌.” – ஸ்ரீராமா, பால, 18:27.
1258-“பாஷ்பபர்யாகுலமுக: – ஸ்ரீராமா. அயோத்‌, 31:1.
1259-“ப்ரஹ்வாஞ்சலிபுடம்ஸ்திதம்‌ – வணங்கினவரும்‌ அஞ்சலி செய்யும்‌ கைகளை யுடையவரும்‌” – ஸ்ரீராமா, அயோத்‌, 16:26.
1260-“ஸ்வயந்து ௬சிரே தேசேக்ரியதாமிதி மாம்‌ வத – திருவுள்ளத்திற்குப்‌ பாங்கான விடத்திலே இங்ஙனம்‌ கட்டுவாயென்று தேவரீரே நியமித்தருள வேண்டும்‌” ஸ்ரீராமா, ஆரண்‌, 15:7.
1261-“பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே – பிராட்டியோடு கூட மலைத்தாழ்வரைகளில்‌ இன்பத்தை நூகர்வீராகல்‌ நான்‌ பகலிரவு எந் நேரத்திலும்‌ தங்களுக்கு எல்லா அடிமைகளையும்‌ செய்வேன்‌.” – ஸ்ரீராமா, அயோத்‌, 31:25.
1262-“குருஷ்வ மாமநுசரம்‌ – அடியவனான என்னைத்‌ தேவரீரோடு கூடவே சஞ்சரிக்கும்படியாகச்‌ செய்தருள வேண்டும்‌.” – ஸ்ரீராமா, அயோத்‌, 31:23. 1263-“ஸப்ராதுச்சரணெள காடம்‌ நிபீட்ய ரகுநந்தந: – மிக்க கீர்த்தியையுடைய லக்ஷ்மணன்‌ தன்‌ தமையனாருடைய இரண்டு திருவடிகளையும்‌ உறுதியாகப்‌ பிடித்துக்கொண்டு பிராட்டியைப்‌ பார்த்துச்‌ சொன்னார்‌; ஸ்ரீராமபிரானையும்‌ பார்த்துச்‌
சொன்னார்‌.” – ஸ்ரீராமா, அயோத்‌, 31:2.
1264-“அக்ரத:ப்ரயயெள ராம: – ஸ்ரீராமபிரான்‌ முன்னே சென்றார்‌; அழகிய
இடையை யுடைய பிராட்டி நடுவில்‌ (சென்றார்‌), லக்ஷமணன்‌ வில்லும்‌ கையுமாய்ப்‌ பின்னே தொடர்ந்து சென்றார்‌.” – ஸ்ரீராமா,அயோத்‌,31:2.
1265-“ப்ராதா பர்த்தாச பந்துச்ச பிதா ச மம ராகவ: – உடன்‌ பிறந்தவரான ஸ்ரீராமபிரானே தமப்பன்‌,ஸ்வாமியும்‌ அவரே; எல்லாவிதமான உறவினர்களும்‌ அவரே.” – ஸ்ரீராமா, அயோத்‌, 58:31.
1266-“அறியாக்காலத்துள்ளே அடிமைக்கணன்பு செய்வித்து” – திருவாய்மொழி, 2:3:3.
1267-“அழும்தொழும்‌” – திருவாய்மொழி, 7:2:8.
1268-“ஒழிவில்‌ காலமெல்லாம்‌” – திருவாய்மொழி, 3:3:1.
1269-“மொய்த்த சோலையும்‌ மொய்பூந்தடந்‌ தாவரை” – திருவாய்மொழி, 3:3:10.
1270-“அலர்மேல்மங்கையுறை மார்பா” – திருவாய்மொழி, 6:10:10.
1271-“முகப்பே கூவிப்பணிகொள்ளாய்‌” – திருவாய்மொழி, 8:5:7.
1272-“பிரியாவடிமை” – திருவாய்மொழி, 5:8:7.
1273-“நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்‌ நமக்கு” – திருவாய்மொழி, 5:10:11.
1274-“வாளும்‌ வில்லுங்கொண்டு பின்செல்வார்‌ மற்றில்லை” – திருவாய்மொழி, 8:3:3.

1275-“சேலேய் கண்ணியரும்‌ பெருஞ்செல்வமும்‌ நன் மக்களும் மேலாத்‌ தாய் தந்தையுமவரே” – திருவாய்மொழி, 5:1:8.
1276-“ஹந்யாமஹாமீமாம்‌ – நான்‌ தீய செயலையுடைய மகாபாவியாகிய இந்தக்‌
கைகேசியைக்‌ கொன்றுவிடுவேன்‌.” -ஸ்ரீராமா, அயோத்‌, 78:22.
1277-“ராஜ்யஞ்சாஹஞ்ச ராமஸ்ய – இந்‌த ராஜ்யமும்‌ யானும்‌ ஸ்ரீராமபிரானுடைய
உடைமை.” – ஸ்ரீராமா, அயோத்‌, 82:12.
1278-“ம்ருதே து தஸ்மிந்‌ – அந்தத்‌ தசரத சக்ரவர்த்தி இறந்த போது, ராஜ்யத்தைப்‌ பரிபாலனம்‌ செய்யத் தக்க ஆற்றலை யுடைய பரதன்‌, வஸிஷ்டர்‌ முதலான அந்தணர்களால்‌ அரசினை நடத்துவதற்கு நியமிக்கப்பட்டவனாயினும்‌ அரசனாக இருத்தற்கு விரும்பவில்லை.” – ஸ்ரீராமா, பால, 1:33.
1279-“இஷ்வாகூணாமியம்‌ – மலை, சிறியகாடு, பெரியகாடு இவைகளோடு கூடின இந்தப்‌ பூமி இஷ்வாகு குலத்து அரசர்களுக்கு உரியது.” – ஸ்ரீராமா, கிஷ்‌, 18:6.
1280-“ஏபிச்ச ஸசிவைஸ்ஸார்த்தம்‌ – நான்‌ இந்த மந்திரிமார்களோடு கூட தேவரீரைத்‌ தலையாலே இரக்கிறேன்‌.”- ஸ்ரீராமா, அயோத்‌, 104:12.
1281-“அயாசத்ப்ராதரம்‌ ராமம்‌ – தமையனாரான ஸ்ரீராமபிரானைப்‌ பரதன்‌ வேண்டிக்‌ கொண்டான்‌.” – ஸ்ரீராமா, பால, 1:35.
1282-“பாதுகே சாஸ்ய ராஜ்யாய – இராமபிரான்‌ இந்தப் ப்ரதனுக்கு ராஜ்யத்தை ஆள்வதற்குத்‌ திருவடி நிலைகளைப்‌ பிரதிநிதியாகக்‌ கொடுத்து மீண்டும்‌ மீண்டும்‌ சொந்நற்‌.” – ஸ்ரீராமா, பால, 1:37.
1283-“ததஸ்து சிரஸாக்ருத்வா பாதுகே பரதஸ்ததா – பிறகு ஸ்ரீபரதாழ்வான்‌ திருவடி நிலைகளைத்‌ தலையில்‌ வைத்துக் கொண்டு அப்பொழுது ஆனந்தம்‌ அடைந்தவராய்ச்‌ சத்ருக்கனுழ்வானோடு கூடினவராய்த்‌ தேரில்‌ ஏறினார்‌.” –ஸ்ரீராமா, அயோத்‌, 113:1.
1284-“சிரஸா யாசதஸ்தஸ்ய – தலையால்‌ வணங்கி இரந்த அந்தப்‌ பரதாழ்வானுடைய
வேண்டுகோள்‌ என்னால்‌ முடிக்கப் படவில்லையே.” – ஸ்ரீராமா, யுத்த, 124:19.
1285-“நமேஸ்நாநம்‌ – கைகேசியின்‌ புத்திரனும்‌, தர்மத்தைச்‌ செய்கின்றவனுமான அந்தப்‌ பரதனை விட்டு நான்‌ நீராடுதலை விரும்பவில்லை; அதன்‌ பின்‌ வரும்‌ ஆடைகளையும்‌ ஆபரணங்களையும்‌ விரும்பவில்லை; இந்த வழியாலே அயோத்யா நகரத்தைக்‌ குறித்து விரைவில்‌ செல்‌லுகிறேன் ; ( இந்தவழி அயோத்தியை அடைந்திருக்கிறது-இந்த வழி நீண்‌ட தூரமிருப்பதால்‌) விரைவில்‌ அடைய முடியாதது.” – ஸ்ரீராமா, யுத்‌, -124:6.5, 7.5.
1286-“பங்கதிக்தஸ்து ஜடிலோ பரத: – பரதன்‌ சடை முடியை யுடையவனாய்‌ சரீர முழுதும்‌ அழுக்கடைந்தவனாய்‌” – ஸ்ரீராமா, யுத்‌, 127:4.
1287-“ஸ காம மநவாப்யைவ – அந்த பரதன்‌ தனக்கு விருப்பமாஇராம கைங்கர்யத்தை அடையாமலே” – ஸ்ரீராமா, பால, 1:38.
1288-“அன்னை யென் செய்யிலென்‌” – திருவாய்மொழி, 5:3:6.
1289-“யானே யென்றனதே” – திருவாய்மொழி, 2:9:9.
1290-“யானே நீ யென்னுடைமையும்‌ நீயே–திருவாய்மொழி, 2:9:9.
1291-“கொள்ளென்று கிளர்ந்தெழுந்த பெருஞ்செல்வம்‌ நெருப்பு” – திருவாய்மொழி, 4:9:4.
1292-“வேங்கட வாணனை வேண்டிச்‌ சென்று” – திருவாய்மொழி, 8:2:1.
1293-“திருவடியே சுமந்துழலக்‌ கூட்டரிய திருவடிக்கள்‌ கூட்டினை” – திருவாய்மொழி, 4:9:9.
1294-“கண்ணநீர்‌ கைகளாலிரைக்கும்‌ – இருநிலம்‌ கைதுழாவிருக்கும்‌” திருவாய்மொழி, 7:2:1.
1295-“குடிக்கிடந்தாக்கம்‌ செய்து” – திருவாய்மொழி, 9:2:2.
1296-“காமுற்றகையறவோடு” – திருவாய்மொழி, 2:1:3.
1297-“கச்சுதா மாதுலகுலம்‌ பரதேந ததாநக: – குற்றமில்லாதவராயும்‌, ஐம்பொறிகளையும்‌ அடக்கினவராயும்‌ இருக்கிற சத்ருக்கனாழ்வான்‌, அன்பினாலே முன்னே தூண்டப்பட்டவராய்‌ மாமன்‌ யுதாஜித்தினுடைய வீட்டிற்கு அப்போது செல்கின்ற பரதாழ்வானாலே அழைத்துச்‌ செல்லப்பட்டார்‌.” – ஸ்ரீராமா, அயோத்‌, 1:1.
1298-‘பும்ஸாம்த்ருஷ்டிசித்தாபஹாரிணம்‌ – தன்னுடைய குணங்களாலே ஆடவர்களுடைய கண்களையும்‌ மனத்தையும்‌ கவர்கின்றவரான ஸ்ரீராமபிரான்‌” ஸ்ரீராமா, அயோத்‌, 3:28.
1299-“விசிந்தயந்‌ – விசேடமாக மனத்திலே கொண்டிருப்பவன்‌” – ஸ்ரீராமா, அயோத்‌, 89:3.
1300-“கோதிலடியார்‌” – திருவாய்மொழி, 8:10:9.
1301-“கோதிலடிமை” – திருவாய்மொழி, 8:10:9.
1302-“அவனடியார்‌ சிறுமாமனிசராயென்னை யாண்டார்‌” – திருவாய்மொழி, 8:10:3.
1303-“திரி தந்தாகில்‌” – கண்ணிநுண்‌சிறுத்தாம்பு, 3.
1304-“புலன் கொள் வடி வென் மனத்ததாய்‌” – திருவாய்மொழி, 8:10:4.
1305-“ந ததர்ப்ப ஸமாயாந்தம்‌ பச்யமாநோ நராதிப – வருகின்ற ஸ்ரீராமபிரானைப்‌ பார்த்துக்‌ கொண்டிருக்கிற சக்ரவர்த்தியின்‌ மனம்‌ நிறைவு பெறவில்லை.” – ஸ்ரீராமா, அயோத்‌, 3:29.
1306- “எப்பொழுதும்‌ நாள்திங்களாண்டு” – எப்பொழுதும்‌ நாள்‌ திங்கள்‌ ஆண்டு” திருவாய்மொழி, 2:5:4.
1307-“அப்பொழுதைக்‌கப் பொழு தென்னாராவமுதம்‌” – திருவாய்மொழி, 2:5:4.

ஸுூத்ரம்‌-128
1308-“குழற்கோவலர்‌” – திருவிருத்தம்‌, 3. 1309-“அருகலிலாய” – திருவாய்மொழி, 1:9:3.

ஸுூத்ரம்‌-129
1310-“எற்றைக்கு மேழேழ்‌ பிறவிக்கு முனறனனோடுற்றோமே யாவோ முனக்கே நாமாட்செய்வோம்‌” –
திருப்பாவை, 29.
1311-“தேவத்வே தேவ தேஹேயம்‌ – அவன்‌ தேவனாகப்‌ பிறக்கும்போது இந்தப்பிராட்டி தேவசரீரத்தைக்‌ கொண்டும்‌, மனிதனாகப்‌ பிறக்கும்போது தான்‌ மனித சரீரத்தைக்‌ கொண்டும்‌, இறைவனுடைய சரீரத்திற்குத்‌ தகுதியாக இந்தப்‌ பிராட்டி தன்‌ சரீரத்தை அமைத்துக்‌ கொள்ளுகிறாள்‌.” – ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌, 1:9:145.
1312-“ராகவத்வேபவத்‌ ஸீதா – இறைவன்‌ ஸ்ரீராமபிரானாக அவதரித்தபோது இறைவி சீதையாக அவதரித்தாள்‌.” – ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌, 1:9:144.
1313-“வராஹருதிராபேந சுசிநா ஸுகந்திநா – பன்றி இரத்தம்‌ போன்று செந்நிறம்‌ பொருந்தியதும்‌ பிராட்டியின்‌ ஸம்பந்தத்தால்‌ தூய்மையுடையதும்‌ நல்லவாச?னையுள்ளதும்‌ சிறந்ததுமான சந்தனத்தைப்‌ பிராட்டியாரால்‌ பூசப்பட்டவரும்‌ பகைவரைக்‌ கொளுத்துபவருமான ஸ்ரீராமபிரானை” – ஸ்ரீராமா, அயோத்‌, 16:9.
1314-“ஸ்திதயா பார்ச்வதச்சாபி – பின்னரும்‌ பக்கத்தில்‌ நின்றுகொண்டிருப்பவளும்‌ , சாமரத்தைக்‌ கையில்‌ ஏந்தினவளுமான பிராட்டியால்‌ சித்திரை மாதத்துச்‌ சித்திரை நக்ஷத்திரத்தால்‌ கூடப்பட்ட சந்திரனைப்‌ போன்று ஆலிங்கனம்‌ பண்ணிக்கொள்ளப்பட்டவரான ஸ்ரீராமபிரான்‌” – ஸ்ரீராமா, அயோத்‌, 16:10.
1315-“பதிஸம்மாநிதா ஸீதா – ஸ்ரீராமபிரானால்‌ கெளரவிக்கப்பட்டவளும்‌ கறுத்த திருக்கண்களையுடையவளுமான பிராட்டி மங்களங்களைச்‌ சொல்லிக்கொண்டு வாசற்படியளவும்‌ ஸ்ரீராமபிரானை ஸ்ரீராமபிரான்பின்‌ சென்றாள்‌.” – ஸ்ரீராமா, அபயோத்‌, 16:21.
1316-“பூர்வாம்திமமம்‌ – இந்திரன்‌ தேவரீருடைய கிழக்குத்‌ திக்கினைப்‌ பாதுகாக்க, இந்திரன்‌ தேவரீருடைய கிழக்குத்‌ திக்கினைப்‌ பாதுகாக்க, இயமன்‌ தெற்குத்‌ திக்கினை பாதுகாக்க, வருணன்‌ மேற்குத்திக்கையும்‌ குபேரன்‌ வடக்குத்‌ திக்கையும்‌ பாதுகாக்க” – ஸ்ரீராமா, அயோத்‌, 16:24.
1317- “அக்ரதஸ்தே கமிஷ்யாமி – தருப்பைக்கட்டைகளையும்‌, முட்களையும்‌ அழித்துக்கொண்டு உமக்கு முன்னே நான்‌ செல்வேன்‌.” – ஸ்ரீராமா, அயோத்‌, 27:6.
1318-“நஹி மே ரோசதே – ஓ வீரரே! தண்டகாரண்யத்தைக்‌ குறித்துச்‌ செல்வது எனக்குப்‌ பிடிக்கவில்லை, அதற்குக்‌ காரணம்‌ சொல்லுகிறேன்‌, என்னுடைய வார்த்தையைக்‌ கேட்க வேண்டும்‌; தேவரீர்‌ அம்புகளுடன்கூடிய வில்லைக்‌ கையில்‌ ஏந்தினவராய்த்‌ தம்பியுடன்‌ காட்டினை அடைந்திருக்கிறீர்‌; காட்டில்‌ வசிக்கும்‌ பொருள்களைப்‌ பார்த்து அவற்றின்மேல்‌ ஒருவேளை அம்புகளை விடுவீர்‌; அரசர்களுக்கு அருகிலிருக்கும்‌ வில்லானது ஒளியாகிய வலிமையை மிக மிக அதிகரிக்கச்‌ செய்கிறது; நெருப்பிற்கு அருகிலிருக்கும்‌ விறகு ஒளியை அதிகரிக்கச்‌ செய்யும்‌.” – ஸ்ரீராமா, ஆரண்ய, 9, 13-15.
1319-“தர்மாதர்த்த:ப்ரபவதே – தருமத்தால்‌ பொருள்‌ உண்டாகிறது; தருமத்தால்‌ இன்பம்‌ உண்டாகிறது.” – ஸ்ரீராமா, ஆரண்ய, 9:30.
1320-“அஹம்‌ சிஷ்யாச தாஸீச -ப்ரபுவே! மாதவனே! நான்‌ தேவரீரிடத்தில்‌ மாணவியாகவும்‌, வேலைக்காரியாகவும்‌, பக்தியுடையவளாகவும்‌ இருக்கிறேன்‌; எனக்காக எல்லா உயிர்களுக்கும்‌ எளிதான உபாயத்தை அருளிச்செய்ய வேண்டும்‌” – கைசிக புராணம்‌.
1321- “உன்றன்னைப்‌ பாடி” – திருப்பாவை, 27.
1322- “திருமகளும்‌ புவியும்‌ செம்பொற்றிருவடியினைவருட” – பெரிய திருமொழி, 7:8:1.
1323-“இன்று வந்தித்தனையுமமுது செய்திடப்‌ பெரில்‌” – நாச்சியார்‌ திருமொழி, 9:7.
1324-“சென்றால்‌ குடையாம்‌” – முதல்‌ திருவந்தாதி, 53.
1325-“நிவாஸ சய்யா – இருப்பிடம்‌, படுக்கை, உட்காரும்‌ ஆசனம்‌, பாதுகை, திருப்பரியட்டம்‌, தலையணை, மழை வெயிலிவற்றைத்‌ தடுக்கும்‌ குடை முதலிய வெவ்வேறு வடிவங்களால்‌ அவர்‌ செய்யும்‌ கைங்கர்யத்துக்குத்‌ தக்கபடி மக்களால்‌ சேஷனென்று சொல்லப்படுகிற திருவனந்தாழ்வான்‌” -ஸ்தோத்ரரத்நம்‌, 40.
1326-“ஊரும்‌ புட்கொடியுமஃதே” – திருவாய்மொழி, 10:2:3.
1327-“தாஸஸ்ஸகா – வேதங்களை உறுப்புக்களாகவுடைய பெரிய திருவடியானவர்‌ தேவரீருக்கு அடியவனாயும்ஸ்நேகிதனாயும்‌ வாகனமாயும்‌ சிங்காதனமாயும்‌ கொடியாகவும்‌ மேற்கட்டியாகவும்‌ விசிறி போன்று சிறகுகளால்‌ சிரம பரிஹாரம்‌ செய்விக்குமவனாயுமிருக்கிற” -ஸ்தோத்ரரத்நம்‌, 41.
1328-“பிறந்திட்டாள்‌” – திருவாய்மொழி, 6:5:10.
1329-“ஒழிவில்காலமெல்லாமுடனாய்‌ மன்னி வழுவிலா அடிமை செய்யவேண்டும்‌ நாம்‌” – திருவாய்மொழி, 3:3:1.-

ஸுூத்ரம்‌-130
1330-“சோதிவெள்ளத்தினுள்ளே யெழுவதோருரு
” – திருவாய்மொழி, 5:5:10.
1331-‘பும்ஸாம்த்ருஷ்டி சித்தாபஹாரிணம்‌ – ஆடவர்களுடைய கண்களையும்‌ மனத்தையும்‌ கவர்கின்றவனை” – ஸ்ரீராமா, அயோத்‌, 3:28.
1332-“வழுவிலா வடிமை செய்ய” – திருவாய்மொழி, 3:3:1.
1333-“பாஞ்சால்யா: பத்மபத்ராக்ஷயா: – தாமரையிதழ்‌ போன்ற கண்களை யுடையவளாய்‌ நீராடுகின்ற திரெளபதியினுடைய கடிதடத்தைக்‌ கண்ட பெண்கள்‌ ஆண்களின்‌ தன்மையை மனத்தால்‌ அடைந்தார்கள்‌.” – ஸ்ரீபாரதம்‌.
1334-“யதாயதா ஹி கெளஸல்யா – கெளசல்யையானவள்‌ காலம்தோறும்‌ வேலையாள்‌ போன்றும்‌ தோழி போன்றும்‌ மனைவி போன்றும்‌ தங்கைபோன்றும்‌ தாய்‌ போன்றும்‌ வேண்டிய காரியங்களைச்‌ செய்து வந்தாள்‌.” – ஸ்ரீராமா, அயோத்‌, 12:68.-

ஸுத்ரம்‌-131
1335-“பெயருங்‌ கருங்கடலே நோக்குமாறு
” – முதல்‌ திருவந்தாதி, 67.
1336-“நெக்கொசிந்து கரையும்‌” – திருவாய்மொழி, 6:5:2.
1337-“நீராயலைந்து” – திருவாய்மொழி, 5:8:1.
1338-“நெஞ்சிடிந்து” – திருவாய்மொழி, 9:6:2.
1339-“என்மனமுடைவது மவர்க்கே” – திருவாய்மொழி, 9:3:6.
1340-“பெருகுமால்‌ வேட்கை” – திருவாய்மொழி, 9:6:1.
1341-“கழியமிக்கதோர்‌ காதல்‌” – திருவாய்மொழி, 5:5:10.
1342-“கடலிடங்கொண்ட கடல்வண்ணா” – திருவாய்மொழி, 7:2:7.

ஸுூத்ரம்‌-132
1343-“அச்சேத்யோய மதாஹ்யோய
– இந்த ஆத்மா வெட்டத்தகாதவன்‌ , கொளுத்தப்படாதவன்‌ , நனைக்கப்படாதவன்‌ , உலர்த்தப்படாதவன்‌.” – ஸ்ரீகீதை, 2:24.
1344-“சிவனோடு பிரமன்‌ வண்திருமடந்தை சேர்த்திருவாக மெம்மாவீரும்‌” திருவாய்மொழி, 9:9:6.
1345-“வேமெமதுயிரழல்‌ மெழுகிலுக்கு” – திருவாய்மொழி, 10:3:7.
1346-“கண்ணனுக்கென்று ஈரியாய்‌” – திருவாய்மொழி, 6:7:9.
1347-“வேட்கை நோய்‌ மெல்லாவியுள்ளுலர்த்த” – திருவாய்மொழி, 2:1:10.
1348-“என்னெஞ்சென்னை நின்னிடையே னல்லேனென்று நீங்கி” – திருவாய்மொழி, 8:2:10.
1349-“ஸந்ந்யஸ்தம்‌ மயா – என்னால்‌ நன்றாக விடப்பட்டது.”
1350-“முடியானே” – திருவாய்மொழி, 3:8:1.
1351-“உடலம்‌ நின்பாலன்பாயே நீராயலைந்து கரைய” – திருவாய்மொழி, 5:8:1.
1352-“கடலும்‌ மலையும்‌” – திருவாய்மொழி, 2:1:4.
1353- “இருளின்‌ திணிவண்ணம்‌” – திருவாய்மொழி, 2:1:8.
1354-“எம்மாற்றாமை சொல்லியழமுவோமை” – திருவாய்மொழி, 2:1:7.
1355-“அலர்‌ தூற்றிற்றது முதலாக்‌ கொண்டவென்‌ காதல்‌” – திருவாய்மொழி, 7:3:8.
1356-“மயல்‌ பெருங்காதல்‌” – திருவாய்மொழி, 4:4:10.
1357-“ந சாஸ்த்ரம்‌ நைவ ௪ கர்ம: – மிகுந்த பக்தியை யுடையவனுக்கு சாஸ்த்ரமுமில்லை, முறையுமில்லை.”
1358- “பத்திமைக்கன்புடையேனாவதே” – திருக்குறுந்தாண்டகம்‌, 10.
1359- “நிதித்யாஸிதவம: – பரமாத்மா, கேட்கத்தக்கவன்‌, மனனம்‌ செய்யத்தக்கவன்‌ ,தியானம்‌ செய்யத்தக்கவன்‌ , பார்க்கத்தக்கவன்‌.” – உபநிஷத் –

ஸுூத்ரம்‌-133
1360-“ப்ரஜ்ஞாத்ரைகாலிகி மதா
– மூன்று காலத்தையும்‌ அறியும்‌ அறிவு பிரஜ்ஞை என்று சொல்லப் படுகிறது.”
1361-“அங்கோர்‌ கள்ளுமிறைச்சியும்‌ தூவேன்மின்‌” – திருவாய்மொழி, 4:6:3.
1362-“உணங்கல்‌ கெடக்‌ கழுதை யுதடாட்டம்‌ கண்டென்‌ பயன்‌” – திருவாய்மொழி, 4:6:7.
1363-“தர்மேணபாபமபநுததி – பலத்தில்‌ விருப்பம்‌ இல்லாமலே கர்மங்களைச்‌ செய்வதனால்‌ பாபத்தைப்‌ போக்கடிக்கிறான்‌.” – தைத்திரீயோபநிஷத்‌.
1364-“தீர்ப்பாரையாமினி” – திருவாய்மொழி, 4:6:1.
1365-“இவளைநீரினியன்னைமீர்‌ உமக்காசையில்லை” – திருவாய்மொழி, 6: 5:1.
1366-‘துவளில்‌ மாமணி” – திருவாய்மொழி, 6:5:1.
1367-“மானிடவர்க்கென்று பேச்சுப்படில்‌” – நாச்சியார்‌ திருமொழி, 1:5.
1368-“கருமாணிக்கமலை” – திருவாய்மொழி, 8:9:1.

தீர்ப்பாரையாமினி பதிகம்‌ – வெறி விலக்குதல்‌ துவளில் மா மணி மாடம்‌ பதிகம்‌ – ஆசை யறுத்தல்‌-கருமாணிக்கமலைமேல்‌ பதிகம்‌ – அறத்தொடு நிற்றல்‌. இவை அந்ந்யார்ஹசேஷத்வம்‌ – தோழி.
1369-“ஆடியாடி”, “வாடிவாடும்‌”
– திருவாய்மொழி, 2: 4:1.
1370-“அடியார்கள்‌ குழாங்களையுடன்‌” -, 1371) “பாலனாயேழுலகில்‌” – திருவாய்மொழி, 4:2:1.
1372-“கண்ணன்‌ கழல் துழாய்‌ பொன் செய் பூண் மென்முலைக்கென்று மெலியும்‌” திருவாய்மொழி, 4:2:10.
1373-“மண்ணையிருந்து துழாவி” – திருவாய்மொழி, 4:4:4.
1374-“என்பெண்கொடியேறிய பித்தே” – திருவாய்மொழி, 4:4:6.
1375- “கடல்‌ ஞாலம்‌”, “ஈசன்‌ வந்தேறக்கொளோ” – திருவாய்மொழி, 5:6:1.
1376-“மாலுக்கு வையம்‌” – திருவாய்மொழி, 6:6:1.
1377-“கற்புடையாட்டியிழந்தது கட்டே” – திருவாய்மொழி, 6:6:10.
1378-“உண்ணுஞ்சோறு” – திருவாய்மொழி, 6:7:1.
1379- “ன்‌றெனக்குதவாதகன்ற” – திருவாய்மொழி, 6:7:6.
1380-“கங்குலும்‌ பகல்‌” – திருவாய்மொழி, 7: 2:1.
1381-“சந்தித்துன்‌ சரணம்‌ சார்வதே வலித்த தையல்‌” – திருவாய்மொழி, 7:2:5.
1382-“முறையோ வரவணைமேல்‌ பள்ளிகொண்ட முகில்‌ வண்ணனே” – திருவிருத்தம்‌, 62.

தாய்‌ – “ஆடியாடி”, “பாலனாயேழுலகு”, “மண்ணை யிருந்து” , “கடல் ஞாலம்‌” , “மாலுக்கு”, “உண்ணுஞ் சோறு” , “கங்குலும்‌ பகலும்‌” – ஏழு திருப் பதிகங்கள்‌.

1383-“அஞ்சிறையமடநாரை” – திருவாய்மொழி, 1:4:1.
1384-“வைகல்பூங்கழி” – திருவாய்மொழி, 6:1:1.
1385- “பொன்னுலகாளீர்‌” – திருவாய்மொழி, 6:8:1.

1386-“எங்கானல்‌” – திருவாய்மொழி, 9:7:1.
1387-“வாயுந்திரையுகள்‌” – திருவாய்மொழி, 2:1:1.
1388-“ஆற்றாமைசொல்லியமுவோமை” – திருவாய்மொழி, 2:1:7.
1389-“ஏறாளுமிறையோன்‌” “மாறாளன்‌ கவராத மணிமாமைகுறைவிலம்‌” திருவாய்மொழி, 4:8:1.
1390–“மாசறுசோதி” – திருவாய்மொழி, 5:3:1.
1391-“நாடுமிரைக்கவே – திருவாய்மொழி, 5:3:10.
1392-“ஊரெல்லாம்‌ துஞ்சி” – திருவாய்மொழி, 5:4:1.
1393-“பின்னின்ற காதல்நோய்‌ நெஞ்சம்‌ பெரிதடுமால்‌ முன்னின்றிராவூழி கண்புதைய மூடிற்றால்‌” – திருவாய்மொழி, 5:4:6.
1394-“எங்ஙனேயோ” – திருவாய்மொழி, 5:5:1.
1395-“சோதி வெள்ளத்தினுள்ளே யெழுவதோருரு வென்னெஞ்சுள்ளெழும்‌” திருவாய்மொழி, 5:5:10.
1396-“மானேய்நோக்கி” – “திருவல்லவாழுறையும்‌ கோனாரை அடியேனடிகூடுவதென்று கொல்‌” – திருவாய்மொழி, 5:9:1.
1397- “மின்னிடை மடவார்‌” – “போகு நம்பீ” – திருவாய்மொழி, 6:2:1.
1398- “வெள்ளைச்‌ சுரிசங்கு” – திருவாய்மொழி, 7:3:1.
1399- “என்னெஞ்சினாருமங்கே யொழிந்தார்‌ – இனியாரைக் கொண்டென்னுசாகோ” திருவாய்மொழி, 7:3:4.
1400–“ஏழையராவி” – திருவாய்மொழி, 7:7:1.
1401-“கண்ணன் கோளிழை வாண் முகமாய்க்‌ கொடியேனுயிர்‌ கொள்கின்றவே” திருவாய்மொழி, 7:7:8.
1402-“நங்கள்‌ வரிவளை” – திருவாய்மொழி, 8:2:1.
1403-“காலம்பலசென்றும்‌ காண்பதானையுங்களோடெங்களிடையில்லை” திருவாய்மொழி, 8:2:7.
1404-“இன்னுயிர்ச்‌ சேவல்‌” – திருவாய்மொழி, 9:5:1.
1405-“இழை நல்ல வாக்கையும்‌ பையவே புயக்கற்றது” – திருவாய்மொழி, 9:5:10.
1406-“மல்லிகைகமழ்‌ தென்றல்‌” – திருவாய்மொழி, 9:9:1.
1407-“வேய்மருதோளிணை” – திருவாய்மொழி, 10:3:1.

மகள்‌ – பதினேழு திருப்பதிகங்கள்‌.
“அஞ்சிறையமடநாரை” , “வைகல்பூங்கழி” , “பொன்னுலகாளீர்‌” , “எங்கானல்‌” ,
“வாயுந்திரையுகள்‌ “, “ஏறாளுமிறையோன்‌”, “மாசறுசோதி”, “ஊரெல்லாம்‌ துஞ்சி”, “எங்ஙனேயோ”, “மானேய்நோக்கி”, “மின்னிடை மடவார்‌”, “வெள்ளைச்‌ சுரிசங்கு” , “ஏழையராவி”, “நங்கள்‌ வரிவளை”, “இன்னுயிர்ச்‌ சேவல்‌”, “மல்லிகைகமழ்‌ தென்றல்‌”, “வேய்மருதோளிணை

ஸுூத்ரம்‌-135
1408-“தோழிமார்களு மன்னையரும்‌”
– திருவாய்மொழி, 5:5:9.
1409-“அன்னையரும்‌ தோழியரும்‌” – திருவாய்மொழி, 5:4:5.
1410-“தோழிமார் விளையாடப் போதுமினென்ன” – திருவாய்மொழி, 6:3:8. 1411-‘அன்னையர்நாண” – திருவாய்மொழி, 5:3:8.
1412-“ஊரென்சொல்லிலென்தோழிமீர்‌” – திருவாய்மொழி, 5:3:6.
1413-“எங்ஙனேயோவன்னைமீர்காள்‌” – திருவாய்மொழி, 5:5:1.
1414-“புத்திர்மநீஷா திஷணாத:ப்ரஜ்ஞா சேமுஷீ மதி: – புத்தி முதலான சொற்கள் ஜ்ஞானம்‌ என்ற பொருளைக்‌ காட்டும்‌.” – அமரம்‌.

ஸுூத்ரம்‌-137
1415–“தோகைமாமயிலார்கள்‌
” – திருவாய்மொழி, 6:2:2.
1416-“பிறையுடைவாணுதல்‌” – பெரிய திருமொழி, 2:9:9.
1417-“விற்புருவக்கொடி” – திருவாய்மொழி, 6:6:6.
1418-“அம்பன்ன கண்ணாள்‌” – பெரிய திருமொழி, 6:8:6.
1419-“தாமரையாள்‌ கேள்வனொருவனையே நோக்குமுணர்வு” – முதல்‌ திருவந்தாதி, 67.
1420-“முத்தன்ன வெண் முறுவல்‌” – நாச்சியார்‌ திருமொழி, 5:6.
1421-“முத்ப்ரீதி:ப்ரமதோ ஹர்ஷ: – முத்‌ என்பது ப்ரீதி என்றும்‌,ப்ரமத: என்பது ஆனந்தம்‌ என்றும்‌ கூறப்படும்‌, ” – அமரம்‌.
1422-“பவள வாயாள்‌” – பெரிய திருமொழி, 4:8:1.
1423–“செப்பென்ன மென் முலை” – திருப்பாவை, 20.
1424-“மின்னனையநுண்மருங்குல்‌” – பெரிய திருமொழி, 3:9:5.
1425-“தேரணங்கல்குல்‌” – பெரிய திருமொழி, 1:4:6.
1426-“தேனும் பாலும்‌ கன்னலு மமுதுமாகித் தித்தித்து” – திருவாய்மொழி, 4:3:10.
1427-“அன்னமன்னநடையாள்‌” – பெரிய திருமொழி, 3:7:9.
1428-“தெய்வவுரு” – திருவாய்மொழி, 4:4:2. 1429-“அகமெனி” – திருவாய்மொழி, 9:7:10.

ஸுூத்ரம்‌-138
1430-“தோழிமார்‌ பலர்க் கொண்டு போய்ச்‌ செய்த சூழ்ச்சியை யார்க்குரைக்கேன்‌
” பெரியாழ்வார்‌ திருமொழி, 3:7:4.
1431-“துலை வில்லி மங்கலம்‌ கொண்டு புக்கு அமுத மென் மொழியாளை நீருமக்காசை யின்றி யகற்றினீர்‌” – திருவாய்மொழி, 6:5:2.
1432-“இணக்கியெம்மையெம்தோழிமார்‌ விளையாடப்‌ போதுமினென்னப் போந்தோமை” திருவாய்மொழி, 6:2:8.
1433-“எங்ஙனேயோவன்னைமீர்காள்‌ என்னை முனிவது நீர்‌” – திருவாய்மொழி, 5:5
1434-“முன்னின்றா யென்று தோழிமார்களு மன்னையரும்‌ முநிதிர்‌” – திருவாய்மொழி, 9:5:9.
1435-“இவளை நீரினி யன்னைமீருமக் காசை யில்லை விடுமினோ” – திருவாய்மொழி, 6: 5:1.
1436-“அன்னையரும்‌ தோழியரும்‌ நீரென்னே யென்னாதே நீளிரவும்‌ துஞ்சுவரால்‌” திருவாய்மொழி, 5:4:5.
1437-“அன்னைமீர்காளென்னுடைத்‌ தோழியர்காளென்செய்கேன்‌” – திருவாய்மொழி, 8:2:7.
1438- “உங்களோடெங்களிடையில்லை” – திருவாய்மொழி, 8:2:7.
1439-“இருந்திருந் தரவிந்த லோசன வென்றென்றே நைந்திரங்கும்‌” – திருவாய்மொழி, 6:5:8.
1440-“திருக்கோளூர்க்கே நேரிழை நடந்தாள்‌” – திருவாய்மொழி, 6:7:9.
1441-“அகிஞ்சித்கரஸ்ய போஷத்வாநுப பத்தி: – கைங்கர்யம்‌ செய்யாதவனுக்கு அடிமைத்‌ தன்மை ஸித்தியாது”

ஸுூத்ரம்‌-139
1442-“ஏதலர்‌ முன்னாவென்‌ நினைத்திருந்தாய்‌
” – பெரிய திருமொழி, 2:7:5.
1443-“உற்றீர்கட்கென்‌ சொலிச்‌ சொல்லுகேன் யான்‌” – திருவாய்மொழி, 5:6:7.
1444-“நம்முடையேதலர்‌ முன்பு நாணி” – திருவாய்மொழி, 8: 2:1. )
1445-“யாமுடைத்துணயெனனும்‌ தோழிமார்‌” – திருவாய்மொழி, 9:9:5.

ஸுூத்ரம்‌-140
1446-“நாலயலாரும்‌ அறிந்தொழிந்தார்‌”
– நாய்ச்சியார்‌ திருமொழி, 12:2.
1447-“நானக்கருங்குழல்‌ தோழிமீர்காள்‌ அன்னையர்காள்‌ அயற்சேரியீர்காள்‌” திருவாய்மொழி, 7:3:2.

ஸுூத்ரம்‌-141
1448-“கீழையகத்துத்‌ தயிர்கடைய”
– பெருமாள்‌ திருமொழி, 6:2.
1449-“மேலையகத்து நங்காய்‌ வந்து காண்மின்கள்‌” – பெரிய திருமொழி,10:7:2.
1450-“வடக்கிலகம்‌ புக்கிருந்து மின்போல்‌ நுண்ணிடையாளொரு கன்னியை வேற்றுருவம்‌ செய்து வைத்த” – பெரியாழ்வார்‌ திருமொழி, 3:1:2.

ஸூத்ரம்‌-142
1451-“ஊராரிகழிலும்‌”
– சிறிய திருமடல்‌, 77.
1452-‘ஊரவர்க்கவ்வை” – திருவாய்மொழி, 5:3:4.
1453-“நாட்டாரோடியல்வொழிந்து” – திருவாய்மொழி, 10:6:2.
1453-“எங்கள்‌ கண் முகப்பே யுலகர்களெல்லாம்‌” – திருவாய்மொழி, 9:2:8.
1455-“இம்மடவுலகர்‌” – திருவாய்மொழி, 9:2:7.
1456-“ஊரும்‌ நாடுமுலகமும்‌” – திருவாய்மொழி, 6:7:2.

ஸுூத்ரம்‌-143
1457-‘இறுகலிறப்பு
” -த்ரியுவாய்மொழி, 4:1:10.
1458-“ஜராமரணமோக்ஷாய – முதுமை, மரணம்‌ முதலியவற்றினின்றும்‌ விடுபடும்பொருட்டு என்னை அடைந்து யாவர்‌ சிலர்‌ முயற்சிசெய்கிறார்களோ” ஸ்ரீகீதை, 7:29.
1459-“யோகிநாமம்ருதம்ஸ்தாநம்ஸ்வாத்ம ஸந்தோஷகாரிணாம்‌ – ஜனகன்‌ முதலான யோகிகளுக்கு அம்ருதமென்று சொல்லப்பட்ட இடமெதுவோ அந்த இடமே, தன்‌ ஆத்மாநுபவத்தை ஆசைப்பட்டு அதற்கு வேண்டிய உபாயத்தைச்‌ செய்கின்றவர்களுக்குமிடம்‌.” – ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌,1:6:38.
1460- “இறந்தால்‌ தங்குமூரண்டமே” – பெரிய திருமொழி, 10:2:10.

ஸூத்ரம்‌-144
1461-“சிறுசுளகுமணலுங்கொண்டு
” – நாச்சியார்‌ திருமொழி, 2:8.
1462-“சீரார்‌ சுளகில்‌ சிலநெல்‌ பிடித்தறியா” – சிறிய திருமடல்‌, 21.
1463-“பேராயிரமுடையானென்றாள்‌” – சிறிய திருமடல்‌, 21.

ஸூத்ரம்‌-145
1464-“செங்களம்பற்றி நினறெள்கு புன்மாலை”
– திருவிருத்தம்‌, 77.
1465-“செல்கதிர்மாலை” – திருவாய்மொழி, 9:9:1.
1466-“தழ்கின்றகங்குல்‌” – திருவிருத்தம்‌, 72. 1467-“செல்கின்ற கங்குல்‌” – திருவாய்மொழி, 5:4:10.
1468-“கங்குல்‌ நாழிகை” – பெரிய திருமொழி, 9:5:3.
1469-“காலை யெழுந்திருந்து” – நாய்ச்சியார்‌ திருமொழி, 9:8.
1470-“காலை நன்ஞானத்‌ துறைபடிந்து” – திருவிருத்தம்‌, 93.
1471-“பகல்‌ கண்டேன்‌”, “நாரணனைக்‌ கண்டேன்‌” – இரண்டாந்‌ திருவந்தாதி, 81.

ஸுத்ரம்‌-146
1472-“நீணிலாமுற்றத்து நின்றிவள்‌ நோக்கினாள்‌”
– பெரிய திருமொழி,8:2:2.
1473-“ப்ரஜ்ஞாப்ரஸாதமாருஹ்ய – திருமந்த்ரத்தினுடைய உயர்ந்த ஜ்ஞான மாகிற மாடியிலேறி, தன்னைப்‌ பற்றிய வருத்தம்‌ தீர்ந்த ஜ்ஞானியானவன்‌, அறிவில்லாமல் வருத்தப்படுகிற இவ்வுலகமக்களை மலைமேலிருப்பவன்‌ பூமியிலிருப்பவர்களைப்‌ பார்ப்பது போன்று பார்க்கிறான்‌.” – பாரதம்‌, சாந்தி பர்வம்‌, 150:11.
1474-“காணுமோகண்ணபுரமென்று காட்டினாள்‌” – பெரிய திருமொழி, 8:2:2.

ஸுூத்ரம்‌-147
1475-“கைவளையும்‌ மேகலையும்‌ காணேன்‌”
– திருநெடுந்தாண்டகம்‌, 22.
1476- ‘கலையாளா வகலல்குல் கனவளையும்‌ கையாளா” – பெரிய திருமொழி, 5:5:2.
1477-“கழல் வளை பூரிப்ப யாங்கண்டு கைதொழக் கூடுங்கொலோ” – திருவாய்மொழி, 5:9:9.
1478-“ஈண்டிய சங்கும்‌ நிறையும்‌ கொள்வான்‌” – திருவாய்மொழி, 8:2:2.
1479-“தூதுரைத்தல்‌ செப்புதிரேல்‌ சுடர்வளையும்‌ கலையும்‌” – திருவாய்மொழி, 9:7:6.
1480- “ஸேஷோஹம்‌ – நான்‌ அடியவன்‌” 1481-“என்னுடைய திருவரங்கர்‌

ஸுூத்ரம்‌-148
1482-“பட்டங்கட்டிப்‌ பொற்றோடுபெய்து இவள்‌ பாடகமும்‌ சிலம்பும்‌ இட்டமாக வளர்த்தெடுத்தேனுக்கு” –
பெரியாழ்வார்‌ திருமொழி, 3:7:6.
1483-“தடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே, பாடகமே யென்றணையபல்கலனும்‌ யாமணிவோம்‌” – திருப்பாவை, 27.
1484-“க்ருஷ்ணாங்கரிதுளஸீமெளலி – கண்ணபிரான்‌ திருவடிகளில்‌ அணிந்த திருத்துழாய்‌ – கிரீடம்‌, அவனைச்‌ சேவிப்பது – பட்டாடை, அவன்‌ சரித்திரங்களைக்‌ கேட்பது – குண்டலங்கள்‌ , அவனைக்‌ கைகூப்பி வணங்குவது – கைகளுக்கு வளையல்‌.”

ஸுூத்ரம்‌-149
1485-“பந்தும்‌ கழலும்‌ தந்து போகு நம்பீ”
– திருவாய்மொழி, 6:2:1.
1486-“கன்ம மன்றெங்கள்‌ கையில்‌ பாவை பறிப்பது” – திருவாய்மொழி, 6:2:7.
1487-“குழகி யெங்கள்‌ குழமணன் கொண்டு” – திருவாய்மொழி, 6:2:6.
1488-“யாழ்‌ நரம்பு” – திருவாய்மொழி, 9:9:7.
1489-“தை வந்த தண் தென்றல்‌” – திருவாய்மொழி, 5:4:8.
1490-“மேவு தண்‌ மதியம்‌” – திருவாய்மொழி, 9:9:4.
1491-“இன்னடிசிலொடு பாலமுதூட்டி” – நாய்ச்சியார்‌ திருமொழி, 5:5.
1492-“சாந்தமும்‌ பூணும்‌” – பெரிய திருமொழி, 2:7:3.
1493-“சீருற்றவகில்புகை” – திருவாய்மொழி, 9:9:7.
1494-“எங்கள்‌ சிற்றிலும்‌” – திருவாய்மொழி, 6:2:9.
1495- “வட்டவாய்ச்சிறுதூதை” – நாய்ச்சியார்‌ திருமொழி, 2:8.

1531-“அன்ன நடைய வணங்கு” – பெரிய திருமடல்‌, 7.
1532-“அன்னமென்கமலத்தணிமலர்ப்பீடத்து அலைபுனலிலைக்குடை நீழல்‌ வீற்றிருக்கும்‌” – பெரிய திருமொழி, 9:1:5.
1533-“செந்நெலொண்கவரியசைய வீற்றிருக்கும்‌” – பெரிய திருமொழி, 9:1:5.
1534-“சங்கமவை முரலச்‌ செங்கமல மலரையேறி
” – பெரிய திருமொழி, 7:8:2.
1535-“வரிவண்டிசை பாட அன்னம்‌ பெடையோடுடன்நாடும்‌” – பெரிய திருமொழி, 7:5:9.
1536- “மன்னுமுது நீர்‌ அரவிந்த மலர்மேல்‌” – பெரிய திருமொழி.
1537-“அக்கமலத்திலை போலும்‌ திருமேனியடிகள்‌” – திருவாய்மொழி, 9:7:3.
1538-“அஹமந்நம்‌ – நான்‌ இனியன்‌ (அன்னமாகிறேன்‌) – தைத்திரீயம்‌.
1539-“குருபாதாம்புஜம்த்யாயேத்‌ – ஆசார்யனுடைய திருவடித்‌ தாமரைகளைத் த்யானிக்க வேண்டும்‌.”
1540-“போதிற்கமல வன்னெஞ்சம்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 5:2:8.
1541-“விதியினால்‌ பெடைமணக்கும்‌” – திருவாய்மொழி, 1:4:3.
1542- “இடரில்‌ போகம்‌ மூழ்கி” – திருவாய்மொழி, 6:1:4.
1543-“அந்தரமொன்றுமினறி” – திருவாய்மொழி, 6:8:1
1544-“மிகவின்பம்‌ படமேவும்‌” – திருவாய்மொழி, 9:7:10.
1545-“குடிச்சீர்மையிலன்னங்கள்‌” – திருவிருத்தம்‌, 29.
1546-“நளிர்ந்த சீலன்‌ நயாசலன்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 4:4:8.
1547-“மெய்ந்நாவன்‌ மெய்யடியான்‌ விட்டுசித்தன்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 4:9:11.
1548-“பற்றற்றார்கள்‌” – பெருமாள்‌ திருமொழி, 1:4.
1549) “சிற்றெயிற்று முற்றல்‌ மூங்கில்‌ மூன்று தண்டரொன்றினர்‌ அற்ற பற்றர்‌” திருச்சந்த விருத்தம்‌, 52.

ஸுூத்ரம்‌-152
1550-“ஏரார்‌ மலரெல்லாமூதி நீயென்பெறுதி
” – பெரிய திருமொழி, 8:4:5.
1551-“உளம்‌ கனிந்திருக்குமடியவர்‌ தங்களுள்ளத்துளூறிய தேனை” – பெரிய திருமொழி, 4:3:9.
1552-“தவாம்ருதஸ்யந்திநி – தேனேயே உணவாகவுடைய வண்டு, தென்‌ நீறைந்த தாமரைமலர்‌ இருந்துகொண்டிருக்க, அதனை விட்டு, அடைவதற்கே அரியதாய்‌, அடைந்தாலும்‌ நாவினை நனைப்பதற்கும்‌ போராதே யிருக்கிற தேனையுடைய
முள்ளிப் பூவைக்‌ கண்ணாலும்‌ பாராததைப்‌ போன்று, தேவரீருடைய தேனே மலரும்‌
திருவடித்‌ தாமரைகளினுடைய இனிமையில்‌ மனம்‌ அழுந்தின ஒருவன்‌ மற்றொரு அற்பமான இன்பத்தை விரும்பமாட்டான்‌.” -ஸ்தோத்ரரத்நம்‌, 27.
1553-“தடியதண்டுளபமுண்ட தூமதுவாய்கள்‌ கொண்டு”
1554- “என்‌ குழல்மேல்‌ ஒளிமாமல ரூதீரோ” – திருவாய்மொழி, 6:8:3.
1555-“நாட்கமழ்‌ மகிழ்மாலை மார்ப – திருவாய்மொழி, 4:10:11.
1556-“வைகுந்தமனனாள்‌ குழல்வாய்‌ விரைபோல்விண்டு கள்வாரும்மலருளவோ நும்வியலிடத்தே” – திருவிருத்தம்‌, 55.
1557-“ஒளிமாமலர்‌” – திருவாய்மொழி, 6:8:3.
1558-“வரிவண்டு தேதெனவென்றிசை பாடும்‌” – பெரிய திருமொழி, 4:1:1.
1559- “யாழினிசை வண்டினங்கள்‌ ஆளம்‌ வைக்கும்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 4:8:6.
1560- “அறுகால்வரி வண்டுகள்‌ ஆயிரநாமம்‌ சொல்லிச்‌ சிறுகாலைப்‌ பாடும்‌” பெரியாழ்வார்‌ திருமொழி, 4:2:8.
1561- “எல்லியம்போது இருஞ்சிறைவண்டு எம்பெருமான்‌ குணம்பாடி” – பெரியாழ்வார்‌ திருமொழி, 4:8:8.
1562- “வண்டு குறிஞ்சி மருளிசை பாடும்‌” – பெரிய திருமொழி, 2:1:2.
1563- “வண்டினங்கள்‌ காமரங்களிசைபாடும்‌” – பெருமாள்‌ திருமொழி, 8:4.
1564-“கந்தாரமந்தேனிசைபாட” – பெரிய திருமொழி, 3:8:1.
1565-“பண்கள்‌ தலைக்கொள்ளப்பாடி” – திருவாய்மொழி, 3:5:2.
1566- “பின்னிட்ட சடையானும்‌ பிரமனு மிந்திரனும்‌ துனனிட்டுப்‌ புகலரிய” – பெருமாள்‌ திருமொழி, 4:3.
1567-“சுந்தரர்‌ நெருக்க” – திருப்பள்ளியெழுச்சி, 7.
1568-“நேசுநிலைக்கதவம்‌ நீக்கு” – திருப்பாவை, 16.
1569- “பொன்னியலு மாடக்கவாடம்‌ கடந்து புக்கு” – பெரிய திருமடல்‌, 73.
1570-“வண்டொத்திருண்ட குழல்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 2:5:7.
1571- ‘நீமருவியஞ்சாதே நின்று” – திருநெடுந்தாண்டகம்‌, 26.
1572- “அருளாத நீரருளி” – திருவாய்மொழி, 1:4:6.
1573- “யாமிதுவோ தக்கவாறு” – திருவாய்மொழி, 6:8:4.
1574- “ஓடிவந்து என்‌ குழல்மேல்‌ ஒளிமாமலரூதீரோ” – திருவாய்மொழி, 6:8:3.
1575- “பூந்துளவின்‌ வாசமே வண்டு கொண்டுவந்து ஊதுமாகில்‌” – பெரிய திருமொழி, 11:1:9.
1576- “கொங்குண்‌ வண்டே கரியாக வந்தான்‌” – பெரிய திருமொழி, 9:3:4.
1577-“தூவியம்‌ புள்ளுடைத்‌ தெய்வவண்டு” – திருவாய்மொழி, 9:9: 4. )
1578-“சேமமுடை நாரதன்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 4:9:5.
1579-“வண்டினங்காள்‌ தும்பிகாள்‌” – திருவாய்மொழி, 9:7:8.

ஸுத்ரம்‌-153
1580-“மாதரார்‌ கயற்கணென்னும்‌ வலையுள்பட்டு” – திருமாலை, 16.
1581-“தாமரைத்‌ தடங்கண்விழிகளின்‌ அகவலைப்படுப்பான்‌” – திருவாய்மொழி, 6:2:9.
1582-“வளர்த்ததனால்‌ பயன்பெற்றேன்‌” – திருநெடுந்தாண்டகம்‌, 14.
1583-எடுத்த வென் கோலக்‌ கிளியை” – நாய்ச்சியார்‌ திருமொழி, 5:5.
1584-“மங்கைமார்முன்பு என்‌ கையிருந்து” – திருவாய்மொழி, 6:8:2
1585-“தயிர்ப் பழஞ்‌ சோற்றொடு பாலடிசிலும்‌ தந்து” – திருவாய்மொழி, 9:5:8.
1586-“நெய்யமர்‌ இன்னடிசில்‌ நிச்சல்‌ பாலொடு மேவீரோ” – திருவாய்மொழி, 6:8:2.
1587- “இன்னடிசிலொடு பாலமுதூட்டி” – நாய்ச்சியார்‌ திருமொழி, 5:5.
1588- “உபதேக்ஷ்யந்தி தேஜ்ஞானம்‌ -ஜ்ஞானிகள்‌ உனக்கு ஆத்ம விஷயமான உபதேசம்‌ செய்வார்கள்‌.” – ஸ்ரீகீதை, 4:34.
1589-“போற்றியானிரந்தேன்‌ புன்னைமேலுறை பூங்குயில்காள்‌” – திருவாய்மொழி, 6:1:6.
1590- “ஒருவண்ணம்‌ சென்று புக்கெனக்கொன்றுரை யொண்கிளியே” – திருவாய்மொழி, 6:12.
1591- “திருந்தக்கண்டெனக்‌ கொன்றுரையாய்‌ ஒண்‌ சிறுபூவாய்‌” – திருவாய்மொழி, 6:1:8.
1592- “நோயெனது நுவல்‌” – திருவாய்மொழி, 1:4:8.
1593- “என்‌ பிழைக்குமிளங்கிளியே யான்‌ வளர்த்த நீயலையே!” – திருவாய்மொழி, 1:4:7.
1594-“நீயலையே சிறு பூவாய்‌ – நுவலாதே யிருந்தொழிந்தாய்‌” – திருவாய்மொழி, 1:4:8.
1595-“சொல் பயிற்றிய நல்வளமூட்டினீர்‌ பண்புடையீரே” – திருவாய்மொழி, 9:5:8.
1596-“இன்று நாராயணனை வரக்கூவாயேல்‌ இங்குத்து நின்றும்‌ துரப்பன்‌” – நாய்ச்சியார்‌ திருமொழி, 5:10.
1597- “சொல்லெடுத்துத்‌ தன்கிளையைச்‌ சொல்லேயென்று துணை முலைமேல்‌ துளிசோரச்‌ சோர்கின்றாளே” – திருநெடுந்தாண்டகம்‌, 13.
1598- “கன்மின்களென்றும்மை யான்‌ கற்பியா வைத்த மாற்றம்‌” – திருவாய்மொழி, 6:8:6.
1599- “திருமாலைப்‌ பாடக்கேட்டு வளர்த்ததனால்‌ பயன்பெற்றேன்‌ வருகவென்று மடக்கிளியைக்‌ கைகூப்பி வணங்கினாளே!” – திருநெடுந்தாண்டகம்‌, 14.
1600-“ஆலியாவழையாவரங்காவென்று” – பெருமாள்‌ திருமொழி, 3:2.
1601-“தேவுமற்றறியேன்‌” – கண்ணிநுண்சிறுத்தாம்பு, 2.
1602- “தென்குருகூர்நகர்‌ நம்பிக்கன்பன்‌” – கண்ணிநுண்‌சிறுத்தாம்பு, 11.
1603- “நாவலிட்டுழிதருகின்றோம்‌ நமன்தமர்‌ தலைகள்‌ மீதே” – திருமாலை,1. 1604-“யான்வளர்த்த கிளிகாள்‌ பூவைகள்காள்‌ குயில்காள்‌ மயில்காள்‌” திருவாய்மொழி, 8:2:8.

ஸுூத்ரம்‌-154
1605-“ஆசறுதூவிவெள்ளைக்குருகே” – திருவாய்மொழி, 6:8:8.
1606-“ய:ஸ்மரேத்‌ புண்டரீகாக்ஷம்‌ ஸ பாஹ்யாப்யந்தரச்‌ சுசி: – எவன்‌ செந்தாமரைக்‌ கண்ணனான எம்பெருமானைத்‌ தியானம்‌ செய்கிறானோ அவன்‌ உள்ளும்‌ புறம்பும்‌ தூயன்‌”
1607-“வாயுந்திரையுகளும்‌ கானல்‌ மடநாராய்‌” – திருவாய்மொழி, 2:1:1.
1608-“கிரயோ வர்ஷதாராபிர்‌ – பகவானை மனத்திலுடையவர்கள்‌ துக்கங்களாலே மூடப்பட்டவர்களாக விருந்தாலும்‌ எப்படி வருந்த மாட்டார்களோ அப்படியே மலைகள்‌ மழையின்‌ தாரைகளாலே நன்றாக அடிபட்டும்‌ சலிக்கின்றன யில்லை.” ஸ்ரீமத்‌ பாகவதம்‌.
1609-“தாய்வாயில்‌ கொக்கின்‌ பிள்ளை வெள்ளிறவுண்ணும்‌” – பெரிய திருமொழி, 9:6:1.
1610- “பழனக்‌ கழனியதனுள்‌ போய்ப்‌ புள்ளுப்பிள்‌ளைக்‌ கிரைதேடும்‌” – பெரிய
திருமொழி, 5:1:2.
1611-“வைகல்‌ பூங்கழிவாய்‌ வந்து மேயும்‌ குருகினங்காள்‌” – திருவாய்மொழி, 6:1:1.
1612- “காதல்‌ மென்பெடையோடுடன்‌ மேயும்‌ கருநாராய்‌” – திருவாய்மொழி, 6:1:2.
1613- “நுங்கால்களென்‌ தலைமேல்‌ கெழுமீரோ” – திருவாய்மொழி, 9:7:1.
1614- “பைங்கான மீதெல்லா முனதேயாகப்‌ பழனமீன்‌ கவர்ந்துண்ணத்‌ தருவன்‌” திருநெடுந்தாண்டகம்‌, 27.
1615- “சரீரமர்த்தம்ப்ராணஞ்ச ஸத்குருப்யோ நிவேதயேத்‌ – தன்‌ சரீரத்தையும்‌ பொருளையும்‌ உயிரையும்‌ ஆசாரியனுக்குக்‌ கொடுக்க வேண்டும்‌.”
1616- “நல்ல பதத்தால்‌ மனைவாழ்வர்‌” – திருவாய்மொழி, 8:10:11.
1617- “இனபமரும்‌ செல்வமும்‌ இவ்வரசும்‌ யான் வேண்டேன்‌” – பெருமாள்‌ திருமொழி, 4:5.
1618- “அங்கையாழி யரங்கனடியினை தங்கு சிந்தைத்‌ தனிப்‌ பெரும்பித்தன்‌” – பெருமாள்‌ திருமொழி, 4:5.
1619- “நன்னீலமகன்றில்காள்‌” – திருவாய்மொழி, 1:4:4.

ஸுூத்ரம்‌-155
1620-“நீண்டதோள்‌ மால்கிடந்த நீள்கடல்‌ நீராடுவான்‌ பூண்ட நாளெல்லாம்‌ புகும்‌” மூன்றாந்திருவந்தாதி, 69.
1621-“திருமால்‌ சீர்க்கடலை யுட்பொதிந்த சிந்தனையேன்‌” – பெரிய திருவந்தாதி, 69.
1622- “மனவுள்‌ கொண்டு” –
1623- “திருமால்‌ திருமேனியொக்கும்‌” – திருவிருத்தம்‌, 32.
1624- “கண்ணன்பால்‌ நன்னிறங்கொள்கார்‌” – பெரிய திருவந்தாதி, 85.
1625-“உயிரளிப்பான்‌ மாகங்களெல்லாம்‌ திரிந்து” – திருவிருத்தம்‌, 32.
1626- “தீர்த்தகரராமின்‌ திரிந்து” – இரண்டாந்‌ திருவந்தாதி, 14.
1627- “தீதில்‌ நன்னெறிகாட்டி யெங்கும்‌ திரிந்து” – பெருமாள்‌ திருமொழி, 2:6.
1628- ‘ஜ்ஞாநஹ்ரதேத்யாநஜலே ராகத்வேஷமலா -ஜ்ஞானமாகிற மடுவிநையுடையதும்‌ தியானமாகிற நீரையுடையதும்‌ ஆசை துவேஷம்‌ என்னும்‌
அழுக்கைப்‌ போக்குவதும்‌ மனதில்‌ உளவாகிய தீர்த்தத்தில்‌ எவன்‌ நீராடுகிறானா அவன்‌ உயர்ந்த கதியை அடைகிறான்‌.”
1629-“தீங்கின்றி நாடெல்லாம்‌ திங்கள்‌ மும்மாரி பெய்து” – திருப்பாவை, 3.
1630- “வாழவுலகினில்‌ பெய்திடாய்‌” – திருப்பாவை, 4.
1631- “மாமுத்த நிதிசொரியும்‌” – நாய்ச்சியார்‌ திருமொழி, 8:2.
1632- “ஆங்கரும்பிக்‌ கண்ணீர்‌ சோர்ந்தன்பு கூரு மடியவர்‌” – பெரிய திருமொழி, 2:10:4.
1633- “காரார்‌ புயற்கைக்கலிகன்றி” – பெரிய திருமொழி, 3:2:10.
1634-“அருள்மாரி” – பெரிய திருமொழி, 3:4:10.
1635-“குணந்திகழ்கொண்டல்‌” – இராமாநுச நூற்றந்தாதி, 60.

ஸுூத்ரம்‌-156
1636″அஞ்சிறைய மடநாராஇ” – திருவாய்மொழி, 1:4:1.
1637-“என்‌ பிழையே நினைந்தருளி” – திருவாய்மொழி, 1:4:7.
1638-“என்‌ பிழைத்தாள்‌ திருவடியின்‌ தகவினுக்கு” – திருவாய்மொழி, 1:4:7.
1639-“கடலாழி நீர்த்தோற்றியதனுள்ளே கண்வளரும்‌ அடலாழியம்மானைக்‌ கண்டக்கால்‌ இதுசொல்லி” – திருவாய்மொழி, 1:4:10.
1640-“விசித்ரா தேஹஸம்பந்தி ஈச்வராய நிவேதிதும்‌ – எம்பெருமானைப்‌ பூசித்து வணங்கும்பொருட்டுக்‌ கைகால்‌ முதலிய உறுப்புக்களுடன்‌ கூடின ஆச்சரியமான இச்சரீரமானது ஆதிகாலத்தில்‌ உண்டாக்கப்பட்டது.” – ஸ்ரீவிஷ்ணுகர்மம்‌.
1641- “வைகல்‌ பூங்கழிவாய்‌” – திருவாய்மொழி, 6:1:1.
1642- “சிறந்த செல்வம்‌ மல்கு திருவண்வண்டுருறையும்‌” – திருவாய்மொழி, 6:1:3.
1643-“புணர்த்த பூந்தண்டுழாய்‌ முடி நம்‌ பெருமானைக்‌ கண்டு” – திருவாய்மொழி, 6:1:5.
1644- “மாறில்‌ போரரக்கன்‌ மதிள்‌ நீறெழச்‌ செற்றுகந்த ஏறு சேவகளார்க்கு என்னையுமுளளென்மின்கள்‌” – திருவாய்மொழி, 6:1:10.
1645- “பொன்னுளகாளீரோ” – திருவாய்மொழி, 6:8:1.
1646- “முனனுலகங்களெல்லாம்‌ படைத்த முகில்வண்ணன்‌ கண்ணன்‌ என்னலங்க்‌
கொண்டபிரான்‌ தனக்கு” – திரு வாய்மொழி, 6:8:1.
1647-“தன்மன்னு நீள்கழல்மேல்‌ தண்டுழாய்‌ நமக்கன்றி நல்கான்‌” – திருவாய்மொழி, 6:8:6.
1648- “வானவர்‌ கோனைக்‌ கண்டு யாமிதுவோதக்கவாறு என்னவேண்டும்‌” திருவாய்மொழி, 6:8:4.
“எங்குச்‌ சென்றாகிலுங்கண்டிதுவோ தக்கவாறென்மின்‌” – திருவாய்மொழி, 6:8:5.
1650-“எங்கானல்‌” – திருவாய்மொழி, 9:7:1.
1651-“தமரோடங்குறைவார்க்கு” – திருவாய்மொழி, 9:7:2.
1652- “செக்கமலத்தலர்‌ போலும்கண்‌ கைகால்‌ செங்கனிவாய்‌ அக்கமலத்திலை போலும்‌ திருமேனியடிகளுக்கு – தக்கிலமே கேளீர்கள்‌” – திருவாய்மொழி, 9:7:3.
1653- ‘பூந்துழாய்‌ முடியார்க்கு” – திருவாய்மொழி, 9:7:9.
1654- “தாம்‌ தம்மைக்‌ கொண்டகல்தல்‌ தகவன்று” – திருவாய்மொழி, 9:7:9.
1655- “திருமூழிக்களத்தாருக்கு” – திருவாய்மொழி, 9:7:9.-

ஸுூத்ரம்‌-157

  1. ‘பொங்கோதம்‌ கழ்ந்த புவனியும்‌ விண்ணுலகும்‌ அங்காதும்‌ சோராமேயாள்கின்ற வெம்பெருமான்‌ செங்கோலுடைய திருவரங்கச்‌ செல்வனார்‌” – நாய்ச்சியார்‌ திருமொழி, 11:3.
  2. “அருளார்‌ திருச்சக்கரத்தால்‌ அகல்‌ விசும்பும்‌ நிலனும்‌ இருளார்‌ வினைகெடச்‌ செங்கோல்‌ நடாவுதிர்‌” – திருவிருத்தம்‌, 33.
  3. “பாரளந்த பேரரசே எம்விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்தோரரசே” திருவிருத்தம்‌, 80.
  4. “வானிளவரசு” –
  5. “விண்மீதிருப்பாய்‌” – திருவாய்மொழி, 6:9:5.
  6. “வைகுண்டேது பரெலோகே – நினைவிற்கெட்டாதஸ்வரூபத்தையுடைய,

உலகங்கட்கெல்லாம்‌ தலைவரான விஷ்ணுவானவர்‌ நித்யமுக்தர்களோடும்‌ பிராட்டியோடும்‌ கூட வைகுண்டம்‌ என்கிற மேளான உலகத்திலே எழுந்தருளியிருக்கிறார்‌.”

  1. “பகல்‌ கண்டேன்‌” – இரண்டாந்‌ திருவந்தாதி, 81.
  2. “ஒண்டொடியாள்‌ திருமகளும்‌” – திருவாய்மொழி, 4:9:10.

) 1664) “இவற்றுளெங்கும்‌ மறைந்துறைவாய்‌” – திருவாய்மொழி, 6:9:5. 1665) “யமாத்மா நவேத – எந்தப்‌ பரம்பொருளை இந்த உயிர்‌ அறியவில்லையோ” உபநிஷத்‌. 1666) “உள்ளுவாருள்ளிற்றெல்லாம்‌” – திருமாலை, 34.

1668

)

  1. “கடல்‌ சேர்ப்பாய்‌” – திருவாய்மொழி, 6:9:5. ) “பாற்கடல்‌ யோகநித்திரை” – திருவாய்மொழி, 2:6:5. )
  2. “மண்மீதுழல்வாய்‌” – திருவாய்மொழி, 6:9:5.
  3. “களிறும்‌ புள்ளுமுடன்மடிய வேட்டையாடி வருவான்‌” – நாய்ச்சியார்‌ திருமொழி, 14:9.
  4. “மலைமேல்‌ நிற்பாய்‌” – திருவாய்மொழி, 6:9:5.
  5. “ஆராமம்‌ சூழ்ந்த” – சிறிய திருமடல்‌, 71.

ஸுூத்ரம்‌-158

  1. “தமருகந்த தெவ்வுரு வமவ்வுருவந்தானே தமருகந்த தெப்பேர்‌ மற்றப்பேர்‌” முதல்‌ திருவந்தாதி, 44.
  2. “அடியோமுக்கே யெம்பெருமானல்லீரோ நீரிந்தளுூரிறெ” – பெரிய திருமொழி, 4:9:5.
  3. “பின்னானார்‌ வணங்கும்‌ சோதி” – திருநெடுந்தாண்டகம்‌, 10.
  4. “ஸர்வம்‌ பூர்ணம்‌ ஸஹோம்‌ – காக்கும்‌ பொருளான இறைவன்‌ மாட்டு எல்லாம்‌-கூடி நிறைந்துள்ளது -உபநிஷத்-

ஸுூத்ரம்‌-159
1677-“வன்பெருவானகமுய்ய வமரருய்ய மண்ணுய்ய மண்ணுலகில்‌ மனிசருய்ய” பெருமாள்‌ திருமொழி, 1:10.
1678-“திருவாளனிதாகத்‌ திருக்கண்கள்‌ வளர்கின்ற திருவரங்கம்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 4:9:10.
1679- “திருவாளன்‌ திருப்பதி” – பெரியாழ்வார்‌ திருமொழி, 4:8:10.
1680- “வடிவுடை வானோர்‌ தலைவனே” – திருவாய்மொழி, 7:2:10.
1681- “கடலிடங்கொண்ட கடல்வண்ணா” – திருவாய்மொழி, 7:2:7.
1682- “கட்கிலீ” – திருவாய்மொழி, 7:2:3.
1683-“காகுத்தா” – திருவாய்மொழி, 7:2:3.
1684- “இவள்‌ திறத்தென்‌ சிந்தித்தாய்‌” – திருவாய்மொழி, 7:2:4.
1685-“என்கொலோ முடிகின்றதிவட்கே” – திருவாய்மொழி, 7:2:2.
1686-“பாற் கடல்‌ யோக நித்திரை” – திருவாய்மொழி, 2:6:5.

ஸுூத்ரம்‌-160
1687-“கண்ணாவானென்றும்‌ மண்ணோர்‌ விண்ணோர்க்கு” – திருவாய்மொழி, 1:8:3.
1688-“தண்ணருவி வேங்கடமே வானோர்க்கும்‌ மண்ணோர்க்கும்‌ வைப்பு” – நான்முகன்‌ திருவந்தாதி, 45.
1689- “போகின்ற காலங்கள்‌ போயகாலங்கள்‌ போகுகாலங்கள்‌ தாய்தந்தையுயிராகின்றாய்‌” – திருவாய்மொழி, 2:6:10.
1690- “கண்ணாயேழுலகுக்கு உயிராய வெங்கார்‌ வண்ணனை” – பெரிய திருமொழி, 1:9:10.
1691- “என்கண்‌ பாசம்‌ வைத்த” – திருவாய்மொழி, 3:3:4.
1692- “நிகரில்‌ புகழாய்‌” – திருவாய்மொழி, 6:10:10.
1693- “பரஞ்‌ சுடர்ச்சோதி” – திருவாய்மொழி, 3:3:4.
1694-“ஒழிவில்‌ காலம்‌” – திருவாய்மொழி, 3:3:1.
1695-“உலகமுண்ட பெருவாயன்‌” – திருவாய்மொழி, 6:10:1.
1696-“கிளரொளியிளமை'” – திருவாய்மொழி, 2:10:1.
1697) “செஞ்சொற்கவி” – திருவாய்மொழி, 10:7:1.

ஸுூத்ரம்‌-161
1698-“ஓமித்யாத்மாநம்‌ யுஞ்சீத – ஓம்‌ என்று சொல்லி, ஆத்மாவினைத்‌ தியானம்‌ செய்யக் கடவன்‌”
1699-“ஓங்காரோ பகவாந்‌ விஷ்ணு: – ஓம்‌ என்பது பகவானாகிய விஷ்ணு”
1700- “அவன்‌ மேவியுறைகோயில்‌” – திருவாய்மொழி, 4:10:2.
1701-“எத்தேவுமெவ்வுலகங்களும்‌ மற்றும்‌ தன்பால்‌ மறுவில்‌ மூர்த்தியோடொத்து இத்தனையும்‌ நின்றவண்ணம்‌ நிற்கவே – திருகுருகூரதனுள்குறிய மாணுருவாகிய நீள்குடக்கூத்தன்‌” – திருவாய்மொழி, 4:10:10.
1702- “திருக்குருகூரதனுள்‌ பரன்‌” – திருவாய்மொழி, 4:10:3.
1703- “திருக்குருகூரகனுள்‌ ஈசன்‌” – திருவாய்மொழி, 4:10:4.
1704- “பொலிந்துநின்ற பிரான்‌” – திருவாய்மொழி, 4:10:5

ஸுூத்ரம்‌-162
1705-“எங்ங்னெயோ” – திருவாய்மொழி, 5:5:1.
1706-“அறியக்கற்று வல்லார்‌ வட்டணவர்‌” – திருவாய்மொழி, 5: 5:11.
1707- “நிறைந்தசோதிவெள்ளனஞ்‌ குழ்ந்த நீண்டபொன்மேனியொடும்‌ நிறைந்தென்னுள்ளே நின்றொழிந்தான்‌” – திருவாய்மொழி, 5:5:7.
1708- “நீலமேனியும்‌ நான்குதோளும்‌ என்னெஞ்சம்‌ நிறந்தனவே” – திருவாய்மொழி, 5:5:6.
1709- “செல்கின்ற தென்னெஞ்சம்‌” – திருவாய்மொழி, 5:5:1.
1710- “ரூபவாந்ஸுபக ஸ்ரீமாந்‌ – ரூபத்தையுடையவன்‌, அழகுள்ளவன்‌, ஒளியையுடையவன்‌” – ஸ்ரீராமா, சுன்த, 34:30.
1711- “ரூபஸம்ஹநநம்‌ லக்ஷ்மீம்‌ – ஸ்ரீராமபிரானுடைய உருவத்தின்‌ அமைப்பையும்‌ அழகையும்‌ மிருதுத்தன்மையையும்‌ பார்த்தார்கள்‌.” – ஸ்ரீராமா, ஆரண்ய, 1:13.
1712- “நிறைந்த சோதுிவெள்ளஞ்கழ்ந்த” – திருவாய்மொழி, 5:5:7.

ஸுூத்ரம்‌-163
1713-” ஆறெனக்கு நின்பாதமே சரணாகத்‌ தந்தொழிந்தாய்‌” – திருவாய்மொழி, 5:7:10.
1714-“கார்முகில்வண்ணன்‌” – திருவாய்மொழி, 5:7:3.
1715-“சிரீவரமங்கலத்தவர்க்கைதொழவுறை வானமாமலை” – திருவாய்மொழி, 5:7:6.
1716-“வந்தருளி யென்னெஞ்சிடங்கொண்ட வானவர்‌ கொழுந்தே” – திருவாய்மொழி, 5:7.7.

ஸூத்ரம்‌-164
1717-“களைவாய்‌ துன்பம்‌ களையாதொழிவாய்‌ களைகண்‌ மற்றிலேன்‌” – திருவாய்மொழி, 5:8:8.
1718-“நீராயலைந்துகரைய வுருக்குகின்ற” – திருவாய்மொழி, 5:8:1.
1719- “குடமூக்கு” – இரண்டாந்‌ திருவந்தாதி, 97.

ஸூத்ரம் -165-
1720-“வைகலும்‌ வினையேன்‌ மெலிய” – திருவாய்மொழி, 5:9:1.
1721-“அடிமேல்‌ சேமங்கொள்‌ தென்குருகூர்ச்‌ சடகோபன்‌” – திருவாய்மொழி, 5:9:11.
1722-“பெருமானது தொல்லருளே” – திருவாய்மொழி, 5:9:9.
1723- “திருவல்லவாழ்‌” – திருவாய்மொழி, 5:9:11.

ஸுூத்ரம்‌-166
1724-“ராமஸ்யவ்யவஸாயஜ்ஞா – ஸ்ரீராமபிரானுடையவும்‌, லக்ஷமணனுடையவும்‌ எண்ணங்களின்‌ உறுதியை அறிந்த பிராட்டியானவள்‌ , மழைக்காலத்தில்‌ கங்கையைப்‌ போன்று, அதிகமாகக்‌ கலங்கவில்லை.” – ஸ்ரீராமா, சுந்தர, 16:4.
1725-“ஏறு சேவகனார்க்கு எனனையுமுளளென்மின்கள்‌” – திருவாய்மொழி, 6:1:10.
1726- “நத்யஜேயம்‌ – வெறுப்பில்லாதவனாய்‌ என்னையடைந்த இவனை விடமாட்டேன்‌.” ஸ்ரீராமா, யுத்த, 18:3.
1727-“ஏதத்வ்ரதம்‌ மம – காப்பாற்றுதல்‌ எனக்கு விரதம்‌.” – ஸ்ரீராமா, யுத்த, 18:33.
1728- “தேறுநீர்பபம்பை வடபாலைத்‌ திருவண்வண்டூர்‌” – திருவாய்மொழி, 6:1:10.

ஸுூத்ரம்‌-167
1729-“போகு நம்பீ” – திருவாய்மொழி, 6:2:1.
1730-“கழகமேறேல்‌ நம்பீ” – திருவாய்மொழி, 6:2:6.
1731-“அழித்தாயுன்‌ திருவடியால்‌” – திருவாய்மொழி, 6:2:9.
1732-“நல்குரவும்‌ செல்வும்‌” – திருவாய்மொழி, 6:3:1.
1733-“திருவிண்ணகர்‌ நன்னகரே” – திருவாய்மொழி, 6:3:2.
1734- “பல்வகையும்‌ பரந்த” – திருவாய்மொழி, 6:3:1.

ஸுூத்ரம்‌-168
1735-“பிரானிருந்தமை காட்டினீர்‌” – திருவாய்மொழி, 6:5:5.
1736-“இவளை நீரினியன்னைமீருமக்காசையில்லை விடுமினோ” – திருவாய்மொழி, 6:5:1.
1737-“தேவபிரானையே தந்தைதாய்‌” – திருவாய்மொழி, 6:5:11.
1738- “அவ்வூர்த்திருநாமம்‌ கேட்பது” – திருவாய்மொழி, 6:5:10.

ஸுூத்ரம்‌-169
1739-“ஏலக்குழலியிழந்தது சங்கே” – திருவாய்மொழி, 6:6:1.
1740-“கற்புடையாட்டி யிழந்தது கட்டே” – திருவாய்மொழி, 6:6:10.
1741-“உண்ணுஞ்சோறு பருகு நீர்‌ தின்னும்‌ வெற்றிலையுமெல்லாம்‌ கண்ணன்‌” திருவாய்மொழி, 6:7:1.
1742- “வைத்தமாநிதி” – திருவாய்மொழி, 6:7:11.

1743-“திண்ணமென்னிளமான்‌ புகுமூர்‌ திருக்கோளூரே” – திருவாய்மொழி, 6:7:1. 1744-“செல்வம்‌ மல்கியவன்‌ கிடந்த” – திருவாய்மொழி, 6:7:4.

ஸுூத்ரம்‌-170
1745-“தெனதிருப்பேரெயில்‌ சேர்வன்‌ சென்றே” – திருவாய்மொழி, 7:3:8.
1746-“என்னெஞ்சினாருமங்கே யொழிந்தார்‌ உழந்தினி யாரைக்‌ கொண்டெனனுசாகோ” – திருவாய்மொழி, 7:3:4.
1747- “செங்கனிவாயின்‌ திறத்ததாயும்‌” – திருவாய்மொழி, 7:3:3.
1748- “தென்திருப்பேரெயில்‌ மாநகர்‌” – திருவாய்மொழி, 7:3:9. 1749) “எழுந்த நல்வேதத்தொலி நின்றோங்கு” – திருவாய்மொழி, 7:3:4.

ஸுூத்ரம்‌-171
1750-தீவினையுள்ளத்தின்‌ சார்வல்லவாகித்‌ தெளிவிசும்பேறலுற்றால்‌ திருவாறன்விளையதனைமேவி வலஞ்செய்து கைதொழக்கூடுங்கொலென்னுமென்‌ சிந்தனை” – திருவாய்மொழி, 7:10:9.
1751- “சிந்தை மற்றொன்றின்‌ திறத்ததல்லாத்‌ தன்மை” – திருவாய்மொழி, 7:10:10.
1752- “இன்பம்‌ பயக்க வெழில்மலர்‌ மாதரும்‌ தானுமிவவேழுலகையின்பம்‌ பயக்க
வினிதுடன்‌ வீற்றிருந்து” – திருவாய்மொழி, 7:10:1.
1753-“திருவாறன்விளையென்னும்‌ நணகரமதுவே” – திருவாய்மொழி, 7:10:6

ஸூத்ரம்‌-172
1754-“ஆழிவலவனை யாதரித்து – கூடச் சென்றேன்‌” – திருவாய்மொழி, 8:2:4.
1755-“பல்வளையார்முன்‌ பரிசழிந்தேன்‌” – திருவாய்மொழி, 8:2:4.
1756- “மாயக்கூத்தன்‌” – திருவாய்மொழி, 8:2:4.
1757-“மாடக்கொடிமதிள்‌ தென்குளந்தை” – திருவாய்மொழி, 8:2:4.

ஸுூத்ரம்‌-173
1758-“பணியாவமரர்‌” – திருவாய்மொழி, 8:3:6.
1759-“அடியாரல்லல்‌” – திருவாய்மொழி, 8:3:5.
1760-“படிதான்‌ நீண்டு” –
1761- “ஆழியும்‌ சங்கும்‌ சுமப்பார்த்தாம்‌” – திருவாய்மொழி, 8:3:3.
1762- “உருவார்‌ சக்கரம்‌ சங்கு சுமந்திங்கும்மோ டொருபாடுழல்வான் அடியானுமுளனென்று – வண்பரிசாரத்‌ திருந்த வென்‌ திருவாழ்‌ மார்வற்‌ கென்திறஞ்‌ சொல்லர்‌” – திருவாய்மொழி, 8:3:7.

ஸுூத்ரம்‌-174
1763-“ஸம்ஸ்ருசந்நாஸநம்‌ செளரே: விதுரஸ்ஸ மஹாமதி: – ஸ்ரீகண்ண பிரானுடைய படுக்கையை மஹாபுத்தி மானான ஸ்ரீவிதுரர்‌ நன்றாகத்‌ தடவிப்‌ பார்த்தார்‌.” – பாரதம்‌, உத்யோகபர்வம்‌.
1764-“எங்கள்‌ செல்சார்வு” – திருவாய்மொழி, 8:4:1.
1765- “திருச்சிற்றற்றங்கரையானை – முக்கணம்மானை நான்முகனை யமர்ந்தேன்‌” திருவாய்மொழி, 8:4:10.
1766-“வார்க்கடாவருவி” – திருவாய்மொழி, 8:4:1.

ஸுூத்ரம்‌-175
1767-“திருக்கடித்தானமு மென்னுடைச்‌ சிந்தையு மொருக்கடுத்துள்ளே யுறையும்பிரான்‌” – திருவாய்மொழி, 8:6:2.
1768-“திருக்கடித்தான நகரும்‌ தன தாயப்பதி” – திருவாய்மொழி, 8:6:8.

ஸூத்ரம்‌-176
1769-“அப்பன்‌ திருவருள்‌ மூழ்கினள்‌” – திருவாய்மொழி, 8:9:5.
1770-“அருமாயன்‌ பேரன்றிப்‌ பேச்சிலள்‌” – திருவாய்மொழி, 8:9:1.
1771-“திருப்புலியூர்ப்‌ புகழன்றி மற்று – பரவாளிவள்‌ நின்றிராப்பகல்‌” – திருவாய்மொழி, 8:9:9.
1772- “திருப்புலியூர்‌ நின்ற மாயப்பிரான திருவருளாமிவள்‌ நேர்ப்பட்டது” திருவாய்மொழி, 8:9:10.
1773- “கருமாணிக்க மலைமேல்‌ மணித்தடந்தாமரைக்‌ காடுகள்‌ போல்‌” திருவாய்மொழி, 8:9:1.
“துன்னுகுழ்சுடர்‌ நாயிறுமன்றியும்‌ பல்சு
டர்களும்போல்‌” – திருவாய்மொழி, 8:9:2.
1775-“திருப்புலியூர்‌ வளம்‌ – புகழும்‌” – திருவாய்மொழி, 8:9:3.

ஸுூத்ரம்‌-176
1776-“அப்பன்‌ திருவருள்‌ மூழ்கினள்‌” – திருவாய்மொழி, 8:9:5.
1777-“அருமாயன பேரன்றிப்‌ பேச்சிலள்‌” – திருவாய்மொழி, 8:9:1.
1778-“திருப்புலியூர்‌ புகழன்றி மற்று – பரவாளிவள்‌ நின்றிராப்பகல்‌” – திருவாய்மொழி, 8:9:9.
1779- “திருப்புலியூர்‌ நினற மாயப்பிரான திருவருளாமிவள்‌ நேர்ப்பட்டது” திருவாய்மொழி, 8:9:10.
1800- “கருமாணிக்க மலைமேல்‌ மணித்தடந்தாமரைக்‌ காடுகள்‌ போல்‌” திருவாய்மொழி, 8:9:1.
1781-“துன்னுகுழ்சுடர்‌ நாயிறுமன்றியும்‌ பல்சுடர்களும்போல்‌” – திருவாய்மொழி, 8:9:2.
1782-“திருப்புலியூர்‌ வளம்‌ – புகழும்‌” – திருவாய்மொழி, 8:9:3.

ஸுூத்ரம்‌-17 7
1783-“தெளிந்த வென்சிந்தை” – திருவாய்மொழி, 9:2:4.
1784–“புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கையிருந்து வைகுந்தத்துள்‌ நின்று” திருவாய்மொழி, 9:2:4.

ஸுூத்ரம்‌-178
1785-“ஆட்கொள்வானெொத்து என்னுயிருண்ட மாயன்‌” – திருவாய்மொழி, 9:6:7.
1786-“ஆருயிர்‌ பட்டதெனதுயிர்‌ பட்டது” – திருவாய்மொழி, 9:6:9.
1787- “திருக்காட்கரை மருவிய மாயன்றன்‌ மாயம்‌ நினைதொறு” – திருவாய்மொழி, 9:6:1.

ஸுூத்ரம்‌-179
1788-“தமரோடங்குறைவார்க்கு” – திருவாய்மொழி, 9:7:2.
1789-“ஸக்ருத்த்வதாகார விலோகநாசயாத்ருணீக்ருதாருத்தமபுக்திமுக்திபி, மஹாத்மபிர்‌ மாமவலோக்யதாம்‌ நய க்ஷணேபி தே யத்விரஹோதிதுஸ்ஸஹ: ஒருமுறை உன்னுடைய திவ்யமங்கள விக்ரஹத்தைக்‌ காணவேண்டும்‌ என்னுமாசையாலே, மிக மேலானதான பிரமன்‌ முதலான உலகங்களின்‌ இன்பத்தையும்‌ மோக்ஷ்த்தையும்‌ துரும்பாக நினைக்கிற மஹாத்மாக்களான பாகவதர்களால்‌ நான்‌ கடாக்ஷிக்கப்பட்டவனாம்படி , ஸர்வசக்தியுடைய நீ என்னைக்‌ கடாக்ஷிக்க வேண்டும்‌; எந்தப்‌ பாகவதர்களுடைய பிரிவு உனக்கும்‌ கணப்பொழுதும்‌ பொறுக்கமுடியாததாக விருக்கும்‌” -ஸ்தோத்ரரத்நம்‌, 55.
1790- “மூழிக்களத்துளவத்தினை” – பெரிய திருமடல்‌, 129

ஸுூத்ரம்‌-180
1791-“அன்புடையாரைப்‌ பிரிவுறு நோய்‌” – நாய்ச்சியார்‌ திருமொழி, 5:4.
1792-“துன்பக்கடல்‌ புக்கு” – நாய்ச்சியார்‌ திருமொழி, 5:4.
1793-“எமராலும்‌ பழிப்புண்டு அணிமூழிக்களத்துறையும்‌ – தம்மாலிழிப்‌ புண்டு இங்கென்‌” – திருவாய்மொழி, 9:7:2.
1794- “தாந்தம்மைக்‌ கொண்டகல்தல்‌ தகவன்றென்றுரையீர்‌” – திருவாய்மொழி, 9:7:9.
1795- “மிகமேனி மெலிவெய்தி மேகலையுமீடழிந்‌ தென்னகமேனி யொழியாமே திருமூழிக்களத்தார்க்கு தகவன்றென்றுரையீர்‌” – திருவாய்மொழி, 9:7:10.
1796-“விஷ்ணுபோதம்‌ விநாநாந்யத்‌ கிஞ்சிதஸ்தி பராயணம்‌ – விஷ்ணூவாகிற ஓடத்தைத்‌ தவிர வேறு ஒரு சாதனம்‌ இல்லை.” – விஷ்ணு கர்மம்‌.
1797- “ஆவாவடியானிவனென்றருளாய்‌” – திருவாய்மொழி, 9:8:7.
1798- “நாவாயுறைகின்ற” – திருவாய்மொழி, 9:8:7.
1799- “காருண்யே தாத்ருசம்ஸ்யேந – கருணையாலும்‌ அடியார்கள்‌ விஷயத்தில்‌ செய்யும்‌ அருளாலும்‌” – ஸ்ரீராமா, சுந்த, 15:49.
1800- “ஸ்த்ரீப்ரருஷ்டேதி காருண்யம்‌ ஆச்ரிதேத்யந்ருசம்ஸதா – பெண்‌ காப்பாற்றப்படவில்லையே என்ற கருணையாலும்‌ நம்மை அடைந்தவர்களைக்‌ காப்பாற்றவில்லையே என்ற ஆந்ருசம்ஸ்யத்தாலும்‌ ஸ்ரீராமபிரான்‌ வருந்தினார்‌” ஸ்ரீராமா, சுந்தர, 15:50.

ஸுூத்ரம்‌-181
1801-“சரணமாகுந்‌ தனதாளடைந்தார்க்கெல்லாம்‌ மரணமானால்‌ வைகுந்தம்‌ கொடுக்கும்‌ பிரான்‌” – திருவாய்மொழி, 9:10:5.
1802-“உத்பலாவதகே திவயே விமாநே புஷ்கரேக்ஷணம்‌ – உத்பலாவதகம்‌ என்ற திவ்ய விமானத்திலே தாமரைக்கண்ணனும்‌ எப்போதும்‌ சர்வாங்க சுந்தரனுமான செளரிராஜனை சேவிக்கிறேன்‌.” – புரானம்‌.
1803- “தேஷாம்‌ மமாவதோ வாஸ முத்பலாவதகம்‌ விது: – அவர்களை, அதாவது மாம்சம்‌ இல்லாத சரீரத்தையுடைய முமுக்ஷாக்களைக்‌ காப்பாற்றுகின்ற என்னுடைய இருப்பிடத்தை உத்பலாவதகம்‌ என்று சொல்லுகிறார்கள்‌.”

ஸுூத்ரம்‌-182
1804-“காளமேகத்தையன்றி மற்றொன்றிலம்‌ கதி” – திருவாய்மொழி, 10:1:1.
1805-“ஆத்தன்‌ தாமரையடியன்றி மற்றொனறிலமரனே” – திருவாய்மொழி, 10:1:6.
1806-“சுரிகுழல்‌ கமலக்கட்கனிவாய்க்‌ காளமேகம்‌” – திருவாய்மொழி, 10:1:1. ) )
1807- “அவனடி நிழல்தடம்‌” – திருவாய்மொழி, 10:1:2. 1808) “மரகத மணித்தடம்‌” – திருவாய்மொழி, 10:1:8

ஸூத்ரம்‌-183
1809-“அமரர்க்கோனர்ச்சிக்கின்று அங்ககப்பணிசெய்வர்‌ விண்ணோர்‌” திருவாய்மொழி, 10:2:6.
1810-“யத்ர பூர்வே ஸாத்யா – அநாதிகாலமாக இருந்துவரும்‌ நித்யர்கள்‌ என்று சொல்லப்படும்‌ குரிகள்‌ எவ்விடத்தில்‌ இருக்கிறார்களோ” – புருஷ ஸுத்தம்‌.
1811- “அமரராய்த்‌ திரிகின்றார்கட்காதி” – திருவாய்மொழி, 10:2:6.
1812-“படமுடையரவில்‌ பள்ளிபயின்றவன்‌ பாதம்காண நடமினோ நமர்களுள்ளீர்‌” திருவாய்மொழி, 10:2:8.

ஸுூத்ரம்‌-184
1813-“அருள்தருவானமைகின்றானது நமது விதிவகை” – திருவாய்மொழி, 10:6:1.
1814-“விண்ணுலகம்‌ தருவானாய்‌ விரைகின்றான்‌ விதிவகையே” – திருவாய்மொழி, 10:6:3.
1815-வளம்மிக்க வாட்டாற்றான்‌” – திருவாய்மொழி, 10:6:3.

ஸூத்ரம்‌-185
1816-“வஞ்சக்கள்வனாய்‌ நெஞ்சு முயிருமுள்‌ கலந்து – திருவாய்மொழி, 10:7:1.
1817-‘மாயவாக்கையிதனுட்புக்கு” – திருவாய்மொழி, 10:7:3.
1818- “திருமாலிருஞ்சோலை மலையே” – திருவாய்மொழி, 10:7:8.
1819- “மங்கவொட்டு” – திருவாய்மொழி, 10:7:10.
1820- “மருள்கள்‌ கடியும்‌ மணிமலை” – திருவாய்மொழி, 10:7:7.
1821- “மயல்மிகு பொழில்கழ்‌ மாலிருஞ்சோலை” – திருவாய்மொழி, 2:10:3.

ஸுூத்ரம்‌-186
1822-“திருமாலிருஞ் சோலைமலை யென்றேனென்னத்‌ திருமால்‌ வந்தென்னெஞ்சு நிறையப்‌ புகுந்தான்‌” – திருவாய்மொழி, 10:8:1.
1823-“பெருநகரரவணை மேல்‌” – பெரிய திருமொழி, 5:9:3.

ஸுூத்ரம்‌-187
1824-“முலையோ முழுமுற்றும்‌ போந்தில – பெருமான்‌ மலையோ திருவேங்கடமென்று கற்கின்ற வாசகம்‌ இவள்‌ பரமே” – திருவிருத்தம்‌, 60.
1825-“க்ருஷ்ணபகேமரைச்‌ சச்வத்‌ பீயதே வை ஸுதாமய: – கிருஷ்ணபக்ஷத்தில்‌ அமுதமயமான சந்திரன்‌ தேவர்களால்‌ அடிக்கடி உண்ணப்படுகிறாந்‌” – ஸ்ரீவிஷ்ணூ புராணம்‌, 2:11:22.
1826- “என்னாவிலின்கவி” – திருவாய்மொழி, 3:9:1.
1827- “பாலேய்‌ தமிழரிசைகாரர்‌ பத்தர்‌ பரவுமாயிரம்‌” – திருவாய்மொழி, 1:5:11.
1828- “தூமுதல்‌ பத்தர்க்கு” – திருவாய்மொழி, 7:9:3.
1829- “கேட்டாரார்‌ வானவர்கள்‌” – திருவாய்மொழி, 10:6:11.
1830- “தென்னாவென்னு மென்னம்மான்‌” – திருவாய்மொழி, 10:7:5.
1831- “பார்ப்பரவின்கவி” – திருவாய்மொழி, 7:9:5.
1832- “பாலோடமுதன்னவாயிரம்‌” – திருவாய்மொழி, 8:6:14.
1833-“அமுதமெனமொழி” – திருவாய்மொழி, 6:5:2.

ஸுூத்ரம்‌-188
1834-“மயர்வறமதிநலமருளினன்‌” – திருவாய்மொழி, 1:1:1.
1835-“அச்யுத பக்தி தத்வஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹ சுபைர்‌ வசோபி – பகவத்‌ பக்தியெந்ந்ன , உண்மையான ஜ்ஞானமென்ன, இவைகளாகிற அமுதக்கடலின்‌ வெள்ளம்போலே மங்களமான திருவாக்குகளால்‌” -ஸ்தோத்ரரத்னம்‌, 3.
1836-“நிமியும்வாய்‌” – திருவாய்மொழி, 6:5:2.
1837- “மிடைந்த சொல்‌” – திருவாய்மொழி, 1:7:11.
1838- “மொழிபட்டோடும்‌” – திருவாய்மொழி, 8:10:5.
1839-“அவாவிலந்தாதிகளா லிவையாயிரமும்‌” – திருவாய்மொழி, 10:10:11.

ஸுூத்ரம்‌-189
1840- “எல்லாப்‌ பொருள்களுக்கும்‌ வித்தாய்‌ முதலில்‌ சிதையாமே மனஞ்செய்‌ ஞானத்துன்‌ பெருமை” – திருவாய்மொழி, 1:5:2.
1841-“எல்லையில்‌ ஞானத்தன்‌” – திருவாய்மொழி, 3:10:8.
1842- “கழ்ந்ததனில்‌ பெரிய சுடர்‌ ஞான வின்பம்‌” – திருவாய்மொழி, 10:10:10.
1843- “எனதாவியுள்ளே நிறைந்த ஞானமூர்த்தியாயை நின்மலமாக வைத்து” திருவாய்மொழி, 4:7:7.
1844- “இருங்கற்பகஞ்சேர்‌ வானத்தவர்க்கு மல்லாதவர்க்கும்‌ மற்றெல்லாயவர்க்கும்‌ எறிதிரைவையம்‌ முற்று மேனத்துருவாயிடந்த – ஞானப்பிரானை யல்லாலில்லை நான்‌ கண்ட நல்லது” – திருவிருத்தம்‌, 99.
1845- “திருக்குருகூரதனையுளங்கொள்‌ ஞானத்துவைம்மினும்மையுய்யக்‌ கொண்டு போகுறில்‌” – திருவாய்மொழி, 4:10:9.
1846- “அஸ்த்தாநஸ்நேஹ காருண்ய தா்மாதர்மதியாகுலம்‌, பார்த்தம்ப்ரபந்நமுத்திச்ய சஸ்த்ராவதரணம்க்ருதம்‌ – தகுதியில்லாத விடத்தில்‌ உண்டான பந்துஸ்நேஹம்‌ கருணை ஆகியவற்றாலும்‌ தன்‌ தர்மத்தில்‌ அதர்மபுத்தியாலும்‌ கலங்கித்‌ தன்னைச்‌ சரணம்‌ அடைந்த அர்ஜுனனுக்காக ஸ்ரீகீதா சாஸ்த்ரம்‌ செய்யப்பட்டது” – ஸ்ரீ
கீதார்த்தம்‌ ஸங்க்ரஹம்‌, 5.
1847-“நயோத்ஸ்யாம்‌ி – போர்‌ புரியமாட்டேன்‌” – ஸ்ரீகீதை, 2:6.
1848- “யச்ச்ரேயஸ்ஸ்யாந்‌ நிச்சிதப்ரூஹி தந்மே சிஷ்யஸ்தேஹம்‌ சாதி மாம்த்வாம்ப்ரபந்நம்‌ – எனக்கு எது நல்லது என்று தங்களால்‌ நிச்சயிக்கப்பட்டிருக்கிறதோ அதனைச்‌ சொல்லவேண்டும்‌; நான்‌ தங்களுக்கு சிஷ்யன்‌; சரணம்‌ அடிந்த என்னை நியமிக்கவேண்டும்‌” – ஸ்ரீகீதை, 2:7.
1849- “அறிவினால்‌ குறைவில்லா அகல்‌ ஞானத்தவரறிய” – திருவாய்மொழி, 4:8:6.
1850- “நத்வே வாஹம்‌ ஜாது நாஸம்‌ நத்வம்‌ நேமே ஜநாதிபா: நசைவ நபவிஷ்யாம:
ஸர்வே வயமத: பரம்‌ – நான்‌ முன்‌ சென்ற காலத்தில்‌ இல்லை என்கிறதில்லை , இருந்தேன்‌; நீயும்‌ இல்லை என்கிறதில்லை, இருந்தாய்‌; இங்கு வந்திருக்கிற அரசர்களும்‌ இல்லை என்கிறதில்லை, இருந்தார்கள்‌; நானும்‌ நீயும் அரசர்களுமாகிற எல்லோரும்‌ இனி வரும்‌ காலத்தில்‌ இல்லையாவோம்‌ என்பதில்லை, இருப்போம்‌.” – ஸ்ரீகீதை, 2:12.
1851-“தேஹிநோஸ்மிந்‌ யதா தேஹே கெளமாரம்‌ யெளவநம்‌ ஜரா, ததா தேஹாந்தரப்ராப்தி: தீரஸ்‌ தத்ர நமுஹ்யதி – ஒரு சரீரத்திலிருக்கிற ஆத்மாவிற்கு அந்தச்‌ சரீரத்தில்‌ வருகிற இளமையும்‌ யெளவனமும்‌ முதுமையும்‌ பற்றி எப்படி வருத்தமில்லையோ அப்படியே வேறு சரீரத்தை அடைகிறதும்‌ வருத்தமில்லை; அந்த விஷயத்தில்‌ தைரியமுள்ளவன்‌ மயக்கத்தை அடையமாட்டான்‌.” – ஸ்ரீகீதை, 2:13.
1852- “அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தாச்‌ சரீரிண:, அநாசிநோப்ரமேயஸ்ய தஸ்மாத்‌ யுத்யஸ்வ பாரத – நித்யனாயும்‌ அழிவில்லாதவனாயும்‌ அறிகின்றவனாயும்‌ இருக்கிற ஆத்மாவினுடைய இந்தச்‌ சரீரங்கள்‌ அழியக்கூடியவைகளாகச்‌ சொல்லப்படுகின்றன; ஆகையால்‌ பரத குலத்தில்‌ பிறந்தவனே! போரினைச்‌ செய்வாய்‌” – ஸ்ரீகீதை, 2:18.
1853- “நஜாயதேம்ரியதே வா கதாசித்‌ நாயம்‌ பூத்வா பவிதாவா நபூய:, அஜோ நித்ய: சாச்வதோயம்‌ புராணோ நஹந்யதே ஹந்யமாநே சரீரே – இவ்வாத்மா ஒருகால்‌
பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை; இவ்வாத்மா கல்பாதியில்‌ தோன்றி மீண்டும்‌ கற்பத்தின்‌ முடிவில்‌ இல்லாமல்‌ போகிறான்‌ என்பதுமில்லை; இவ்வாத்மா பிறப்பில்லாதவன்‌; என்றுமுள்ளவன்‌; ஒரு நீலையாயிருப்பவன்‌; முன்புமிருக்கிறவன்‌; ஆதலால்‌ சரீரம்‌ கொல்லப்பட்டாலும்‌ ஆத்மா கொல்லப்படமாட்டான்‌” – ஸ்ரீகீதை, 2:20.

1854-“வாஸாம்ஸி ஜீர்ணாநியதா விஹாய நவாநி – மனிதன்‌ எப்படி கிழிந்துபோன உடைகளை விட்டு நீக்கி வேறான புதிய உடைகளை எடுத்துக்கொள்ளுகிறானோ அப்படியே ஆத்மாவும்‌ பழையதான சரீரத்தை விட்டுவிட்டுப்‌ புதியதாயும்‌ வேறாயுமிருக்கிற சரீரத்தை அடைகிறது” – ஸ்ரீகீதை, 2:22.
1855- “பூமிராபோநலோ வாயு: கம்‌ மநோ புத்தி ரேவச – பூமி தண்ணீர்‌ தீ காற்று ஆகாயம்‌ மனம்‌ புத்தி அஹங்காரம்‌ என எட்டு வகையாக வேறுபட்டிருக்கிற இந்த மூலப்பகுதி என்னுடையதென்று அறிவாயாக; தோள்வலி பொருந்திய அர்ஜுனா! இம்மாயை தாழ்ந்தது; இதைக்காட்டிலும்‌ வேறானதும்‌ எதண்ணால்‌ இந்த உலகம்‌ தரிக்கப்படுகிறதோ அப்படிப்பட்டதுமான என்னுடைய ஆத்மஸ்வரூபமான சரீரம்‌ இதனிலும்‌ சிறப்புடையது என்று அறிந்துகொள்‌” – ஸ்ரீகீதை, 7:4,5.
1856- “ஸர்வஸய சாகம்ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ மத்தஸ்ம்ருதி: ஞாநம்‌ போஹநஞ்ச எல்லாப்‌ பொருள்களினுடைய உள்ளத்தில்‌ நான்‌ இருக்கிறேன்‌; என்னிடத்திலிருந்தே நினைவும்‌ அறிவும்‌ அறிவின்மையும்‌ உண்டாகின்றன” ஸ்ரீகீதை, 15:15.
1857- “ஈச்வரஸ்‌ ஸர்வபூதாநாம்ஹ்ருத்தேச – தன்னால்‌ உண்டாக்கப்பட்டதாயும்‌ மூலப்பகுதி என்ற பெயருடையதாயும்‌ இருக்கிற இந்தச்‌ சரீரத்திலிருக்கிற எல்லா உயிர்களையும்‌ மாயையாலே கர்மங்கட்குத்‌ தகுதியான காரியங்களைச்‌ செய்வித்துக்கொண்டு ஸர்வேச்வரன்‌ எல்லா உயிர்களுடைய மனங்களில்‌ இருக்கிறான்‌.” – ஸ்ரீகீதை, 18:61.

1858-“தஸ்யாஹம்‌ ஸுலப: பார்த்த நித்யயுக்கஸ்ய யோகிந: – எப்போதும்‌ என்னிடம்‌ இருக்கவேண்டும்‌ என்று ஆசை கொண்டிருக்கிற அந்த ஞானிக்கு நான்‌ எளிமையாய்‌ அடையத்தக்கவன்‌.” – ஸ்ரீகீதை, 8:14.
1859- “பரித்ராணாய ஸாதூநாம்‌ விநாசாயச துஷ்க்ருதாம்‌, தர்மஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகேயுகே – நல்லோரை நலம்‌ புரிந்து காத்தற்கும்‌ தீயோரைப்பொன்று நெறி போக்கற்கும்‌ எல்லாம்‌ முந்தை அறத்தை நிலை நிறுத்துவதற்கும்‌ யுகந்தோறும்‌ இசைந்து நான்‌ பிறப்பன்‌.” – ஸ்ரீகீதை, 4:8.
1860- “ஸ்மோஹம்‌ ஸர்வபூதேஷு நமேத்வேஷ்யோஸ்தி நப்ரிய: – நான்‌ எல்லா உயிர்களிடத்தும்‌ ஸமனாய்‌ இருக்கிறேன்‌, எனக்குப்‌ பகைவனும்‌ இல்லை, நட்டோனும்‌ இல்லை, பக்தியோடு யாவர்‌ என்னை வணங்குகிறார்களோ அவர்கள்‌ என்னிடத்தில்‌ இருக்கிறார்கள்‌, நானும்‌ அவர்களிடத்தில்‌ இருக்கிறேன்‌.” ஸ்ரீகீதை, 9:29.
1861- “அஹங்கார விமூடாத்மா கர்த்தாஹமிதி மந்யதே – மூலப்பகுதிதியினுடைய மூன்று குணங்களால்‌ பலவகையாகச்‌ செய்யப்படுகின்ற காரியங்களை அறிவில்லாத இந்தச்‌ சீவன்‌ அஹங்காரத்தால்‌ ‘நான்‌ செய்கிறேன்‌” என்று நினைக்கிறான்‌.” – ஸ்ரீகீதை, 3:27.
1862- “பததோஹ்யபி கெளந்தேய புருஷ்ஸ்ய விபச்சித: , இந்த்ரியாணிப்ரமாதீநி ஹரந்திப்ரஸபம்‌ மன்ன: – மனத்தினை வெல்ல வேண்டும்‌ என்று முயற்சி செய்கின்ற ஒரு மனிதனுடைய மனத்தினை, கலங்கச்‌ செய்கின்ற இந்திரியங்கள்‌ வலியனவாய்‌ இழுத்துக்கொண்டு போகின்றன.” – ஸ்ரீகீதை, 2:60.
1863- “சஞ்சலம்‌ ஹி மநக்ருஷ்ண – காற்றினைப்‌ போன்று அந்த மனத்தை அடக்குதலும்‌ செய்யமுடியாத காரியம்‌ என்று நினைக்கிறேன்‌” – ஸ்ரீகீதை, 6:34.
1864- “அஸம்சயம்‌ மஹாபாஹோ மநோ – அர்ஜுனா! மனத்தினை அடக்குதல்‌ மிக அரிது, சஞ்சலம்‌ உள்ளது என்பதில்‌ ஐயமில்லை, அப்படியிருப்பினும்‌ பயிற்சியாலும்‌ வைராக்கியத்தாலும்‌ அடக்கப்படுகிறது.” – ஸ்ரீகீதை, 6:35.
1865- “தாநி ஸர்வாணி ஸம்யம்ய – அத்தகைய எல்லா இந்திரியங்களையும்‌ அடக்கி என்னுடைய திருமேனியில்‌ மனத்தினை நிறுத்தி நிதானமாக என்னையே நினைத்துக்கொண்டிருக்கக்‌ கடவன்‌; எவனுக்கு இந்திரியங்கள்‌ தன்வசத்தில்‌ இருக்கின்றனவோ அவனுக்குப்‌ புத்தியானது ஒரே நிலையில்‌ நிலைத்திருக்கிறது.” ஸ்ரீகீதை, 2:61.
1866- “ஸார்‌வத்வாராணி ஸம்யம்ய மநோஹ்ருதி நிருத்யச -ஜ்ஞானத்திற்கு வழியான எல்லா இந்திரியங்களையும்‌ விஷயங்களில்‌ போகாமல்‌ அடக்கி மனத்தினை இதயத்தில்‌ நிறுத்தியும்‌” – ஸ்ரீகீதை, 8:12.
1867- “சதுர்விதா பஜந்தே மாம்‌ ஜநாஸ்‌ ஸுக்ருதிநோர்ஜுந – ஏ அர்ஜுனா! தன்னின்றும்‌ நீங்கிய செல்வத்தை மீண்டு விரும்புகிறவனும்‌, கைவல்யத்தை விரும்புகிறவனும்‌,, வறியனாக விருந்து செல்வத்தை விரும்புகிறவனும்‌, பகவானை அடைய விருப்பமுள்ளவனும்‌ ஆன நால்வகைப்பட்ட நல்வினையையுடைய மக்கள்‌ என்னை வணங்குகிறார்கள்‌.” – ஸ்ரீகீதை, 7:16.
1868-“த்வெள பூதஸர்க்கெளலோகேஸ்மிந்‌ தைவ ஆஸுரஏவச. தைவீ ஸம்பத்‌ விமோக்ஷாய நிபந்தாயாஸுரீமதா – இவ்வுலகத்தில்‌ தெய்வம்‌ என்றும்‌ ஆசுரம்‌ என்றும்‌ கர்மங்களைச்‌ செய்யும்‌ மக்களுடைய பிறப்பு இரண்டு வகை.” – ஸ்ரீகீதை, 16:6.
1869- “ஹந்த தே கதயிஷ்‌ யாமி விபூதீராத்மநச்சுபா: – குருகுலத்தில்‌ பிறந்தவனே! என்னுடைய நல்லவையும்‌ தீயவையுமான செல்வங்களைச்‌ சொல்லுகிறேன்‌; அந்தோ! என்னுடைய செல்வத்தின்‌ முடிவிற்கு எல்லையில்லை.” – ஸ்ரீகீதை, 10:9.
1870-“பச்யாமி தேவாம்ஸ்வ தேவ தேஹே ஸர்வாம்ஸ்ததா பூதவிசேஷஸங்காந்‌ – ஓ
தேவனே! உலகமே உருவமான உன்னுடைய சரீரத்தில்‌ எல்லாவிதமான
தேவர்களையும்‌ அப்படியே பிராணி விசேஷங்களின்‌ கூட்டங்களையும்‌ பிரமனையும்‌ பிரமனுடைய அதீனத்திலிருக்கிற சிவனையும்‌ தெய்வலோகத்திலுள்ள எல்லா
இருடிகளையும்‌ பாம்புகளையும்‌ பார்க்கிறேன்‌.” – ஸ்ரீகீதை, 11:15.
1871-“மந்மநாபவ மத்பக்தோ மத்யாஜீ மாம்‌ நமஸ்குரு, மாமேவைஷ்யஸி யுக்த்வைவமாத்மாநம்‌ மத்பராயண: – என்னிடத்தில்‌ மனத்தினை வைத்தவனாயும்‌என்னிடத்தில்‌ பத்தியையுடையவனாயும்‌ என்னை ஆராதிக்கிறவனாயும்‌ என்னை நமஸ்காரம்‌ செய்கிறவனாயும்‌ என்னைச்‌ சரணம்‌ அடைந்தவனாயும்‌ இவ்விதமான மனத்தையுடையவனாய்‌ என்னையே அடைவாய்‌.” – ஸ்ரீகீதை, 9:34.
1872- “தைவீஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா, மாமேவ யேப்ரபத்யந்தே மாயாமேதாம்‌ தரந்தி தே – எந்தக்‌ காரணத்தால்‌ என்னுடைய இந்த மாயையானது,படைத்தல்‌ முதலிய காரியங்களை விளையாட்டாகச்‌ செய்கிற என்னால்‌ செய்யப்பட்டதோ (அதனால்‌) தாண்ட முடியாதது; என்னையே எவர்கள்‌ சரணம்‌ அடைகிறார்களோ அவர்கள்‌ இந்த மாயையைத்‌ தாண்டுகிறார்கள்‌.” – ஸ்ரீகீதை, 7:14.
1873- “தமேவ சரணம்‌ கச்ச ஸர்வபாவேந பாரத – எல்லா வுலகங்களையும்‌ ஏவுகின்றவனாயும்‌ அடியார்கள்‌ பக்கல்‌ வைத்த அன்பினால்‌ உனக்குச்‌ சாரதியாயும்‌ முன்னே நின்று உன்னை ஏவுகின்றவனாயும்‌ இருக்கிற அவனையே எல்லாவகையாலும்‌ சரணமாக அடைவாய்‌.” – ஸ்ரீகீதை, 18:62.
1874- “ஸர்வகர்மாந்‌ பரித்யஜ்ய – எல்லாத்‌ கர்மங்களையும்‌ விட்டு என்னையே சரணமாக அடைவாய்‌.” – ஸ்ரீகீதை, 18:66.
1875-“அடியேனுள்ளான்‌” – திருவாய்மொழி, 8:8:2.
1876- “சென்று சென்று பரம்பரமாய்‌” – திருவாய்மொழி, 8:8:5.
1877- “மின்னின்னிலையில மன்னுயிராக்கைகள்‌” – திருவாய்மொழி, 1:2:2.
1878-“உள்ளது மில்லதும்‌” – திருவாய்மொழி, 1:2:8.
1879-“உடல்மிசையுயிரெனக்‌ கரந்தெங்கும்‌ பரந்து” – திருவாய்மொழி, 1:1:7.
1880-“கரந்த சிலிடந்தொறு மிடந்திகழ்‌ பொருடொறும்‌ கரந்தெங்கும்‌ பரந்து” திருவாய்மொழி, 1:1:10.
1881-“நின்றனர்‌” – திருவாய்மொழி, 1:1:6.
1882-“பத்துடையடியவர்க்கெளியவன்‌” – திருவாய்மொழி, 1:3:1.
1883- “பல பிறப்பாய்‌ – எளிவருமியல்வினன்‌” – திருவாய்மொழி, 1:3:2.

1884-“முற்றவும்‌ நின்றனன்‌” – திருவாய்மொழி, 1:2:6.
1885-“நீர்நும தென்றிவை வேர்‌ முதல்மாய்த்து” – திருவாய்மொழி, 1:2:3.
1886-“விண்ணுளார்‌ பெருமாற்கடிமை செய்வாரையஞ்‌ செறுமைம்புலன்‌” திருவாய்மொழி, 7:1:6.
1887- “மனத்தை வலித்து” – திருவாய்மொழி, 5:1:4.
1888- “உள்ளமுரை செயலுள்ள விம்மூன்றையு முள்ளிக்கெடுத்து” – திருவாய்மொழி, 1:2:8.
1889- “பெருநாடுகானவிம்மையிலே பிச்சை தாங்கொள்வர்‌” – திருவாய்மொழி, 4:1:1.
1890- “இறுகலிறப்பென்னும்‌” – திருவாய்மொழி, 4:1:10.
1891- “குணங்கொள்‌ நிறைபுகழ்‌ மன்னர்‌” – திருவாய்மொழி, 4:1:8.
1892- “திருநாரணன்தாள்‌ காலம்‌ பெறச்‌ சிந்தித்துய்ம்மின்‌” – திருவாய்மொழி, 4:1:1.
1893- “அரக்கரசுரர்‌ பிறந்திருள்ளீரேல்‌” – திருவாய்மொழி, 5:2:5.
1894- “நண்ணாவசுரர்‌ – நல்லவமரர்‌” – திருவாய்மொழி, 10:7:5.
1895-“புகழுநல்லொருவன்‌” – திருவாய்மொழி, 3:4:1.
1896- “நல்குரவும்‌” – திருவாய்மொழி, 6:3:1.
1897-“மாயாவாமனன்‌” – திருவாய்மொழி, 7:8:1.
1898-“நீராய்‌ நிலனாய்த்‌ தீயாய்க்‌ காலாய்‌ நெடுவானாய்‌ சீரார்‌ சுடர்களிரண்டாய்ச்‌
சிவனாயயனானாய்‌” – திருவாய்மொழி, 6:9:1.
1899-“வணக்குடைத்தவ நெறிவழி நின்று புறநெறி களைகட்டுணக்குமின்‌ பசையற” திருவாய்மொழி, 1:3:5.
1900- “மேவித்தொழுதுய்ம்மினீர்கள்‌ வேதப்புனிதவிருக்கை நாவிற்‌ கொண்டச்சுதன்தன்னை ஞானவிதி பிழையாமே” – திருவாய்மொழி, 5:2:9.
1901- “மாலைநண்ணி – காலை மாலை கமல மலரிட்டு – தொழு தெழுமினோ” திருவாய்மொழி, 9:10:1.
1902- “அவனுடையுணர்வு கொண்டுணர்ந்து” – திருவாய்மொழி, 1:3:5. 1903- “மற்றொன்றில்லை” – திருவாய்மொழி, 9:1:7.
1904-“சரணமாகும்‌” – திருவாய்மொழி, 9:10:5.
1905-“மாயனனறோதியவாக்கு” – நான்முகன்‌ திருவந்தாதி, 71.
1906- “ஜந்ம கர்மசமே திவ்ய மேவம்‌ யோவேத்தி தத்‌ வத:,த்யக்த்வா தேஹம்‌ புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜுந” – அர்ஜுனா! என்னுடைய அவதாரமும்‌ அவதாரங்களில்‌ செய்யப்படும்‌ செயல்களும்‌ தெய்வத்தன்மை வாய்ந்தவை என்று எவனொருவன்‌ இந்த விதமாக உண்மையாக அறிகிறானோே அவன்‌ இப்பொழுது இருக்கும்‌ சரீரத்தை விடல்‌ மீண்டும்‌ வேறு பிறவியை அடைகிறான்‌ இல்லை; என்னையே அடைகிறான்‌.” ஸ்ரீகீதை, 4:9.
1907- “இவை பத்தும்‌ வல்லாரமரரோடுயர்விற்சென்றறுவர்‌ தம்‌ பிறவியஞ்சிறை” திருவாய்மொழி, 1:3:14.
1908- “பத்ரம்‌ புஷ்பம்‌ பலம்‌ தோயம்‌ – எல்லோருக்கும்‌ எளிதில்‌ கிடைக்கக்‌ கூடிய
இலையோ மலரோ பழமோ தண்ணீரோ என்னுமிவற்றை எவன்‌ பக்தியுடன்‌ எனக்குக்‌ கொடுக்கிறானோ, தூய்மையான மனத்தையுடைய அவனால்‌ பக்தியுடன்‌ உபகாரமாகக்‌ கொடுக்கப்பட்ட அவற்றை நான்‌ உண்ணுகிறேன்‌.” – ஸ்ரீகீதை, 9:26.
1909-“பிரிவகையின்றி நன்னீர்‌ தூய்ப்புரிவதுவும்‌ புகைபூ” – திருவாய்மொழி, 1:6:1

ஸுூத்ரம்‌-190
1910-“தத்வம்‌ ஜிஜ்ஞாஸமாநாநாம்‌ ஹேதுபிஸ்ஸர்வதோமுகை: , தத்வமேகோ மஹாயோக ஹரிர்‌ நாராயண: பர: – பல முகங்களான காரணங்களால்‌ உண்மையான பரம்பொருளை அறிய விரும்பின மஹரிஷிகளுக்கு, பெரிய யோகியும்‌ பாபங்களைப்‌ போக்குபவருமான நாராயணன்‌ ஒருவனே பரம்பொருள்‌ என்று ஏற்பட்டது” – பாரதம்‌, சாந்தி பர்வம்‌, 347:83.
1911- “தத்‌ வித்திப்ரணிபாதேந பரிப்ரச்நேந ஸேவயா , உபதேக்ஷ்யந்தி தேஜ்ஞாநம்ஜ்ஞாநிநஸ்‌ தத்வதர்ச்சிந: – ஆத்ம விஷயமானஜஞானத்தை நமஸ்காரத்தாலும்‌ கேள்வியாலும்‌ தொண்டினாலும்ஜ்ஞானிகளிடமிருந்து அறிந்துகொள்‌; பரம்பொருளைப்‌ பார்க்கின்றவர்களானஜ்ஞானிகள்‌ உனக்கு ஆத்மவிஷயமான ஜ்ஞானத்தை உபதேசம்‌ செய்வார்கள்‌.” – ஸ்ரீமத்‌ பகவத்‌ கீதை, 4:34. 1912-“அஹம்க்ருத்ஸ்நஸ்ய ஜகத:ப்ரபவ:ப்ரளயஸ்‌ ததா – எல்லா உலகங்கட்கும்‌ காரணம்‌ நானே, எல்லா உலகங்கள்‌ லயப்படுவதும்‌ என்னிடத்திலேயே, சேஷியும்‌ நான்தான்‌, ஆதலால்‌ நானே பரம்பொருள்‌, என்னைக்‌ காட்டிலும்‌ வேறான பரம்பொருள்‌ ஒன்றுமில்லை” – ஸ்ரீமத்‌ பகவத்‌ கீதை, 7:6. 1913-“மாமேகம்‌ சரணம்வரஜ” – என்னையே சரணமாகப்‌ பற்று” – ஸ்ரீமத்‌ பகவத்‌ கீதை, 18:66.
1914-“மண்ணும்‌ விண்ணுமெல்லா முடனுண்ட நங்கண்ணன்‌ கண்ணல்லதில்லையோர்‌ கண்ணே” – திருவாய்மொழி, 2:2:1.
1915-“கறுத்த மனமொன்றும்‌ வேண்டா கண்ணனல்லால்‌ தெய்வமில்லை” திருவாய்மொழி, 5:2:7.
1916- “கண்ணனல்லாலில்லை கண்டீர்‌ சரண்‌ – திண்ணமா நும்முடைமையுண்டேலவனடி சேர்த்துய்ம்மினோ” – திருவாய்மொழி, 9:1:10.

ஸுூத்ரம்‌-191
1917-“அன்றைவரை வெல்வித்த” – திருவாய்மொழி, 4:6:1.
1918-“த்ரெளபத்யா ஸஹிதாஸ்‌ ஸர்வே நமச்சக்ருர்‌ ஜநார்த்தநம்‌ – பாண்டவர்கள்‌ ஐவரும்‌ திரெளபதியுடன்‌ கூடி ஸ்ரீகிருஷ்ணனை வணங்கினார்கள்‌.” – பாரதம்‌, ஆரண்யபர்வம்‌, 192:56.
1919- “ந காங்க்கே விஜயம்க்ருஷ்ண -க்ருஷ்ணா! வெற்றியை நான்‌ விரும்பவில்லை” ஸ்ரீகீதை, 1:32.
1920- “கரிஷ்யே வசநம்‌ தவ – உன்‌ வார்த்தையின்படி செய்கிறேன்‌.” – ஸ்ரீகீதை, 18:73.
1921- “பதிற்றைந்திரட்டிப்‌ படைவேந்தர்பட” – பெரிய திருமொழி, 2:4:4.

1922-“தோற்றோம்‌ மடநெஞ்சமெம்பெருமான்‌ நாரணற்கு” – திருவாய்மொழி, 2:1:7.
1923-“முடிப்பான்‌ சொன்னவாயிரம்‌” – திருவாய்மொழி, 8:7:11.
1924-“பொங்கைம்புலனும்‌” – திருவாய்மொழி, 10:7:10.

ஸூத்ரம்‌ – 192
1925-“நாந்தகமேந்திய” – பெரியாழ்வார்‌ திருமொழி, 1.9.4
1926-“சிஷ்யஸ்தேஹம்‌ – நான தேவரீருக்குச்‌ சிஷ்யன்‌, தேவரீரைச்‌ சரணமடைந்த என்னை நியமிக்க வேண்டும்‌” – ஸ்ரீகீதை, 2:7.
1927- “நாநமச்ரத்தாநோஸி – அருச்சுனா! நிச்சயம்‌ சிரத்தையில்லாதவனா யிருக்கிறாய்‌, கெட்டபுத்தியுதையவனாயு மிருக்கிறாய்‌; எக்காரணத்தால்‌ அறிவின்மையால்‌ அறியவில்லையோ அது எனக்குப்‌ பெரிதும்‌ விருப்பமில்லாத தாகும்‌” – அநுகீதை.
1928- “ஏ பாவம்‌ பரமே” – திருவாய்மொழி, 2:2:2.
1929- “பொலிக பொலிக” – திருவாய்மொழி, 5:2:1.
1930- “உகந்து பணி செய்து” – திருவாய்மொழி, 10:8:10.

ஸூத்ரம்‌ – 193
1931-“மாமேகம்‌ சரணம்‌ வ்ரஜ – என்னையே சரணமாகப்‌ பற்று” – ஸ்ரீகீதை, 18:66
1932-“திருநாரணன்‌ தாள்‌ காலம்‌ பெறச்‌ சிந்தித்துய்ம்மினோ” – திருவாய்மொழி, 4:1:1
1933-“அடிக்கழமர்ந்து புகுந்தேன்‌” – திருவாய்மொழி, 6:10:10

ஸூத்ரம்‌ – 194
1934-“அம்பகவன்‌ வணக்குடைத்‌ தவநெறிவழி நின்று” – திருவாய்மொழி, 1:3:5
1935-“ஞானவிதி பிழையாமே” – திருவாய்மொழி, 5:2:9
1936- “பண்டேபரமன பணித்த பணிவகையே கண்டேன்‌ கமலமலர்ப்பாதம்‌” திருவாய்மொழி, 10:4:9.
1937- “இதி மோஹநவர்ஷ்மணா த்வயாபி க்ரதிதம்‌ பாஹ்யமதம்‌ த்ருணாய மந்யே இப்படி பிறரை மயங்கச்செய்கின்ற, தேவரீராலேயே செய்யப்பட்ட வேதங்கட்குப்‌
புறம்பான மதங்களைப்‌ புல்லுக்குச்‌ சமமாக நினைக்கிறேன்‌” – ஸ்ரீரங்கராஜஸ்தவம்‌.

ஸூத்ரம்‌ – 195
1938-“வேதவேத்யே பரே பும்ஸி – வேதங்களால்‌ அறியப்படும்‌ பரமபுருஷன்‌ ” -ஸ்காந்தம்‌.
1939-“யேசவேதவிதோவிப்ரா யேசாத்யாத்மவிதோ ஜநாஃ – எந்த அந்தணர்கள்‌ வேத்த்தின்‌ பூர்வபாகத்தை அறிந்தவர்களோ, எவர்கள்‌ வேதாந்தம்‌ அறிந்தவர்களோ ”
1940- “ஆவித்ய ப்ராக்ருத ப்ரோக்த – தத்வம்‌ ஹிதம்‌ புருஷார்த்தம்‌ என்னுமவற்றின்‌ ஞானமில்லாமையாகிற அறியாமையோடு கூடிய இவ்வுலக மனிதன்‌ ஆவித்யன்‌ என்று சொல்லப்பதுகிறான்‌” –
1941- “நைவ கிஞ்சித்‌ பரோக்ஷம்‌ தே – உனக்குக்‌ காணப்படாத பொருள்‌ ஒன்றுமில்லை”
1942- “யோ வேத்தி யுகபத்‌ ஸர்வம்‌ – யாவன்‌ ஒருபொழுதில்‌ எல்லாவறையும்‌ அறிகிறான்

‌–

ஸூத்ரம்‌ – 196
1943- “செங்கணெடியானைச்‌ சிந்தித்தறியாதார்‌ என்றுமறியாதார்‌ ” – பெரிய திருமொழி, 11.7.8.
1944- “அஃதே யுய்யப் புகுமாறு” – திருவாய்மொழி, 4.1.11.
1945- “திருநாரணன்தாள்‌” – திருவாய்மொழி, 4.1.1.
1946- “அக்கரையெனனு மனத்தக்கடலுளழுந்தியுன்‌ பேரருளாலிக்கரையேறி யிளைத்திருந்தேனை” – பெரியாழ்வார்‌ திருமொழி, 5.3.7.
1947- “முகில்வண்ண வானத்திமையவர்‌ கழவிருப்பர்‌ பேரின்பவெள்ளத்தே” திருவாய்மொழி, 7.2.11
1948- “செஞ்சொற்கவிகாளுயிர்‌ காத்தாட்செய்ம்மின்‌” – திருவாய்மொழி, 10.7.1
1949- “ஸம்ஸாரஸாகரம்‌ – வித்வான்‌௧ள்‌ , கொடியதும்‌ எல்லையில்லாத துக்கத்திற்கு நிலைக்களமானதுமான பிறவிப்‌ பெருங்கடலை, தேவரீரையே சரணமடைந்துதாண்டுகிறார்கள்‌ ”
1950-“பொங்கைம்புலன்‌ ” – திருவாய்மொழி, 10.7.10

ஸூத்ரம்‌ – 197
1951-“க்ஷிபாமி – தள்ளுகிறேன்‌ ”
1952-நக்ஷமாமி – பொறுக்க மாட்டேன்‌” 1953-“ஞானப்பிரானை யல்லாலில்லை நான்‌ கண்ட நல்லது” – திருவிருத்தம்‌, 99.
1954-எங்ஙனேயோ வன்னைமீர்காளென்னை முனிவது நீர்‌” – திருவாய்மொழி, 5:5:1.
1955-“என்னெஞ்சினால்‌ நோக்கிக்‌ காணீர்‌” – திருவாய்மொழி, 5:5:2.
1956-“செஞ்சொற்கவிகாளுயிர்‌ காத்தாட்‌ செய்மின்‌” – திருவாய்மொழி, 10:7:1.
1957-“மங்கவொட்டுன்‌ மாமாயை” – திருவாய்மொழி, 10:7:10.

ஸூத்ரம்‌ – 198-
1958-“வீடுமின்‌ முற்றவும்‌” – திருவாய்மொழி, 1.2.1.
1959-“சுனைநன்மலரிட்டு நினைமின்‌ நெடியானே” – திருவாய்மொழி, 10.5.10. 1960-“உன்னை நான்‌ பிடித்தேன்கொள்‌ சிக்கெனவே” – திருவாய்மொழி, 2.6.1.
1961-“உன்னை நானடைந்தேன்‌ விடுவேனோ” – திருவாய்மொழி, 2.6.10.
1962- “மாசுச: – வருந்தாதே” – ஸ்ரீமத்கீதை, 18.
1963- “தோகை மாமயிலார்கள்‌-செவியோசை வைத்தெழ ஆகள்‌ போகவிட்டுக்‌ குழலூது” – திருவாய்மொழி, 6.2.2.
1964-“மழறு தேன்மொழியார்கள்‌ நின்னருள்‌ குடுவார்‌ மனம்‌ வாடி நிற்க எம்‌ குழறு பூவையோடும்‌ கிளியோடும்‌ குழகேல்‌” – திருவாய்மொழி, 6.2.5.
1965-கன்மமன்றெங்கள்‌ கையில்‌ பாவை பறிப்பது” – திருவாய்மொழி, 6.2.8.
1966-ஆன்பின்‌ போகேல்‌” – திருவாய்மொழி, 10.3.8.
1967-என்கை கழியேல்‌” – திருவாய்மொழி, 10.3.8.
1968-நீயுகக்கு நல்லவரொடு முழிதராய்‌” – திருவாய்மொழி, 10.3.8.
1969-அவத்தங்கள்‌ விளையுமென்‌ சொற்கொள்‌ ” – திருவாய்மொழி, 10.3.10.
1970-கண்ணன்‌ கழலினை” – திருவாய்மொழி, 10.5.1.
1971-“ஆழுமென்னாருயிரான்‌ பின்போகேல்‌” – திருவாய்மொழி, 10.3.8.
1972-“கலவியும்‌ நலியுமென்‌ கைகழியேல்‌” – திருவாய்மொழி, 10.3.8.
1973-“வசிசெயுன்‌ தாமரைக்கண்ணும்‌ வாயும்‌ கைகளும்‌ பீதகவுடையுங்‌ காட்டி” திருவாய்மொழி, 10.3.8.

ஸூத்ரம்‌ – 199
1974-“பிணக்கி யாவையும்‌ யாவரும்‌ பிழையாமல்‌ பேதித்தும்‌ பேதியாததோர்‌ கணக்கில்‌ கீர்த்தி வெள்ளக்கதிர்‌ ஞானமூர்த்தியினாய்‌” – திருவாய்மொழி, 6.2.8.
1975- “உணக்கொன்றுணர்த்துவன்‌ ” – திருவாய்மொழி, 6.2.5.
1976- “கொள்ளென்று கிளர்ந்தெழுந்த பெருஞ்செல்வம்‌ நெருப்பாகக்‌ கொள்ளென்று தமமூடும்‌” – திருவாய்மொழி, 4.9.4.
1977- “நின்கண்‌ வேட்கையெழுவிப்பன்‌ ” – திருவிருத்தம்‌, 96.

ஸூத்ரம்‌ – 200
1978-“கொண்டாட்டும்‌ குலம்‌ புனைவும்‌” – திருவாய்மொழி, 4.9.3.
1979-“உயிர்‌ மாய்தல்‌ கண்டாற்றேன்‌” – திருவாய்மொழி, 4.9.3.
1980-“அசுரர்கள்‌ தலைப்பெய்யில்‌ யவங்கொலாங்கென்றாமுமென்னாருயிர்‌” திருவாய்மொழி, 10.3.8.

ஸூத்ரம்‌ – 201
1981-“என்னதுன்னதாவியும்‌” – திருவாய்மொழி, 4.3.8.
1982-“அறிவாருயிரானாய்‌” – திருவாய்மொழி, 6.9.8.
1983-“ஜ்ஞாநீத்வாத்மைவமேமதம்‌” – ஸ்ரீகீதை, 7.18.

ஸூத்ரம்‌ – 202
1984-“சரீரமர்த்தம்‌ ப்ராணஞ்ச ஸத்குரூப்யோ நிவேதயேத்‌ – தன்‌ சரீரத்தையும்‌ பொருளையும்‌ உயிரையும்‌ நல்ல ஆசாரியர்களுக்குக்‌ கொடுக்க வேண்டும்‌” விஹகேச்வரஸம்ஹிதை.
1985-“க்ருத்ஸ்நாம்‌ வா ப்ருதிவீம்‌ தத்யாத்‌ ந தத்துல்யம்‌ கதஞ்சந – நிறைந்த பூமியைக்‌ கொடுத்தாலும்‌ ஆசாரியன்‌ செய்த உபகாரத்துக்கு ஈடாகமாட்டாது”.
1986- “இருத்தும்‌ வியந்தென்னைத்‌ தன்‌ பொன்னடிக்கீழ்‌” – திருவாய்மொழி, 8.7.1.
1987-என்னெண்டானானான்‌” – திருவாய்மொழி, 1.8.7.
1988-“பொய்கலவாதென்மெய்‌ கலந்தான்‌” – திருவாய்மொழி, 1.8.5.
1989-“அந்தாமத்தன்பு செய்து” – திருவாய்மொழி, 2.5.1.
1990-“பற்றிலனீ சனும்‌” – திருவாய்மொழி, 1.2.6.
1991- “இருந்தான்‌ கண்டுகொண்டு” – திருவாய்மொழி, 9.6.8.
1992-“என்னை முற்றவும்‌ தானுண்டான்‌” – திருவாய்மொழி, 9.6.8.
1993- “தானென்னை முற்றப்பருகினான்‌” – திருவாய்மொழி, 9.6.10.
1994- “பரிஜநபரிபர்ஹா பூஷணாந்யாயுதாநி – வரதனே! பரிஜனங்களும்‌ சாமரம்‌ முதலியவைகளும்‌ திருவாபரணங்களும்‌ திவ்யாயுதங்களும்‌ தேவரீருடைய ஞானம்‌
சக்தி முதலிய குணங்களும்‌ ஸ்ரீவைகுண்டமும்‌ மற்றைய வண்டங்களும்‌ தேவரீருடைய திருமேனியும்‌ அப்படியே தேவரீருமாகிய எல்லாப் பொருட்களும்‌ அடியார்களுக்காகவே விருக்கின்றன ” – வரதராஜஸ்தவம்‌,
1995-“எனக்கே தனனைத்தந்த கற்பகம்‌” – திருவாய்மொழி, 2.7.11.
1996-“உன்னடியார்க்கென்‌ செய்வனென்றேயிருத்தி” – பெரிய திருவந்தாதி 53.
1997- “வேங்கடத்துறைவார்க்கு நமவென்னலாம்‌ கடமை யது சுமந்தார்கட்கு” திருவாய்மொழி, 3.3.6.
1998- “பூயிஷ்ட்டாம்‌ – நம என்னும்‌ சொல்லை மிகப்‌ பெரியதாக நினைத்திருக்கும்‌ கருத்தாலே உமக்குச்‌ சொல்லுகிறோம்‌” – யஜுர்வேதம்‌.
1999- “அல்லுநன்‌ பகலுமிடைவீடின்றி நல்கியென்னை விடான்‌” – திருவாய்மொழி, 1.10.8.
2000- “போகு நம்பீ” – திருவாய்மொழி, 6.2.2.
2001-“அகல்வானு மல்லனினி” – திருவாய்மொழி, 2.6.7.
2002- “ஆன்பின்‌ போகேல்‌” – திருவாய்மொழி, 10.3.8.
2003- “திவத்திலும்‌ பசுநிரை மேய்ப்புவத்தி” – திருவாய்மொழி, 10.3.10.
2004-“அருள்தருவானமைகின்றானது நமது விதிவகையே” – திருவாய்மொழி ,10.6.1.

ஸூத்ரம்‌ – 203
2005-நண்ணாதார்‌ முறுவலிப்ப” – திருவாய்மொழி, 4.9.1.
2006-“மெய்யில்‌ வாழ்க்கை” – பெருமாள்‌ திருமொழி, 3.1.
2007-“ஊனேறு செல்வத்து” – பெருமாள்‌ திருமொழி, 4.1.
2008-ஆசைவாய்ச்‌ சென்ற சிந்தை” – பெரியாழ்வார்‌ திருமொழி, 4.5.1.
2009-“பரீக்ஷய லோகாந்‌ – செய்யும்‌ செயல்களால்‌ ஈட்டப்படும்‌ பலன்களை ஆராய்ந்த ப்ராஹ்மணன்‌, செய்யும்‌ செயல்களால்‌ பரம்பொருள்‌ அடையப்படுகிறானில்லை என்று வெறுப்பை யடைவான்‌” – முண்டகோபநிஷத்‌, 2.11.
2010- “ஆஸ்திகோ தர்மசீலச்ச – சாஸ்திரங்களில்‌ நம்பிக்கையுள்ளவனும்‌
தர்மங்களைச்‌ செய்யவேண்டும்‌ என்ற தன்மையுடையவனும்‌ ஒழுக்கமுடையவனும்‌
விஷ்ணுபக்தியுடையவனும்‌ தூயதன்மையுடையவனும்‌ காம்பீர்யத்தையுடையவனும்‌
சாதுர்யத்தையுடையவனும்‌ தைரியமுடையவனுமான ஒருவன்‌ சிஷ்யன்‌ என்று சொல்லப்படுகிறான்‌ ”
2011- “அமாநித்வ மதம்பித்வ மஹிம்ஸா – உயர்ந்தவர்களை அலக்ஷியம்‌
செய்யாமலிருப்பது, கர்மானுஷ்டானங்களைப்‌ பெருமைக்காகச்‌ செய்யாமலிருப்பது ,முக்கரணங்களாலும்‌ பிறர்க்குத்‌ துன்பம்‌ செய்யாமலிருப்பது ,
பொறுமையோடிருப்பது, எல்லாரிடத்திலும்‌ சமமாக விருப்பது, ஆசாரியனை வணங்குவது, சாஸ்த்ரங்களில்‌ சொல்லியவைகளில்‌ உறுதியுடனிருப்பது ,
ஆன்மாவிலேயே மனத்தினை வைப்பது” –
ஸ்ரீகீதை, 13.7.
2012“ப்ரணிபத்யாபி – கைகூப்பி வணங்கியும்‌ அபிவாதநம்‌ செய்தும்‌” ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌, 1.1.1.

2013-“தத்‌ வித்தி – ஆத்ம விஷயமான ஞானத்தை நமஸ்காரத்தாலும்‌, கேட்பதாலும்‌, தொண்டு செய்வதனாலும்‌ ஞானிகளிடமிருந்து அறிந்து கொள்‌” ஸ்ரீகீதை, 4.34.
2014-“உளங்கொள்‌ ஞானத்து வைம்மின்‌” – திருவாய்மொழி, 4.10.9.
2015- “பேசுமளவன்றிது வம்மின்‌ நமர்‌! பிறர்‌ கேட்பதன்‌ முன்‌” – பெரிய திருமொழி, 2.4.9.
2016- “வம்மின்‌ புலவீர்‌” – திருவாய்மொழி, 3.9.6.
2017- “சொன்னால்‌ விரோதமிது ஆகிலும்‌ சொல்லுவன்‌ கேன்மினோ” – திருவாய்மொழி, 3.9.1.
2018- “ஈனச்சொல்லாயினுமாக ” – திருவிருத்தம்‌, 99.
2019- “மற்றொன்றில்லை சுருங்கச்‌ சொன்னோம்‌ மாநிலத்தெவ்வுயிர்க்கும்‌” திருவாய்மொழி, 9.1.7.
2020- “திண்ண நாமறியச்‌ சொன்னோம்‌” – திருவாய்மொழி ,10. 2.5.
2021- “இதம்‌ தே நாதபஸ்காய – இந்தக்‌ கீதையின்‌ தத்துவப்பொருள்‌ தவமில்லாதவனுக்கு ஒருபோதும்‌ உன்னால்‌ சொல்லத்தக்கதன்று, பக்தியில்லாதவனுக்கும்‌ சொல்லத்தக்கதன்று, தவம்‌ பக்தி இவையிருந்தாலும்‌ ஆசாரியனுக்குப்‌ பணிவிடை செய்யாதவனுக்குச்‌ சொல்லத்தக்கதன்று, என்னை நிந்திப்பவனுக்கும்‌ சொல்லத்தக்கதன்று” – ஸ்ரீகீதை, 18.67.
2022- “ஞாலத்தார்‌ தமக்கும்‌ வானத்தவர்க்கும்‌ பெருமான்‌” – திருவாய்மொழி, 4.5.8.
2023- “கண்டாற்றேனுலகியற்கை ” – திருவாய்மொழி, 4.9.3.
2024-“அருள்‌ கண்டீரிவ்வுலகினில்‌ மிக்து” – கண்ணிநுன்சிறுத்தாம்பு, 8. )
2025- “க்ஷிபாம்‌, நக்ஷமாமி – தள்ளுகிறேன்‌, பொறுக்கமாட்டேன்‌ ”.

ஸூத்ரம்‌ – 204
2026- “மித்ரமெளபயிகம்‌ கர்த்தும்‌ – புருஷரேஷ்டரான இந்த ஸ்ரீராமபிரான்‌, இராஜ்ஜியத்தை இச்சிக்கிறவனாயும்‌ கொடிய கொலையை விரும்பாதவனாயுமிருக்கிற உன்னால்‌ சினேகம்‌ செய்துகொள்ளப்படுதற்குத்‌ தகுந்தவர்‌” – ஸ்ரீராமா, சுந்தர, 21.19.
2027- “விதிதஸ்ஸஹிதர்மஜ்ஞ – ஸ்ரீராமபிரான்‌ நியாயமறிந்தவர்‌, சரணம்‌ புகுந்தவர்களிடத்தில்‌ அன்புடையவர்‌ , எல்லாராலும்‌ அறியப்பட்டவர்‌, ஆகையால்‌
உய்ந்து போவதற்கு விரும்புவாயேயாகில்‌ உனக்கு அவரோடு சிநேகம்‌ உண்டாகட்டும்‌” – ஸ்ரீராமா, சுந்தர, 21.20.
2028- “நித்யைவைஷா ஜகந்மாதா – இந்த இலக்ஷ்மியானவள்‌ எப்போதும்‌ இருப்பவள்‌ , உலகங்கட்கெல்லாம்‌ தாய்‌, ஒருபோதும்‌ விஷ்ணுவை விட்டுப்‌ பிரியாதவள்‌” – ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌, 1.8.17.
2029- “ஸர்வபூதாத்மகே தாத ஜகந்நாதே ஜகந்மயே – தந்தையே! எல்லாவுயிர்களையும்‌ சரீரமாகவுடையுவனும்‌ , உலகநாதனும்‌, பரமாத்மாவுமான கோவிந்தன்‌ உலகவுருவமாகவிருக்க, பகைவன்‌ நட்டோன்‌ என்கிற கதை யெங்கிருந்து வுண்டாகும்‌.” – ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌, 1.19.37.
2030- “உர்வ்யாமஸ்தி – பூமியில்‌ இருக்கிறான்‌; எங்குமிருக்கிறான்‌ ”
2031- “அபார ஸம்ஸாரவிவர்த்தநேஷு மாயாத தோஷம்‌ – அசுர்ர்களே! சாரமில்லாத இவ்வுலக வாழ்விலுள்ள, சுழல்‌ போன்று வருகின்ற தேவ, மனித, திர்யக்‌ பிறவிகளில்‌ மகிழ்ச்சியை அடையாதீர்கள்‌. உறுதியாகச்‌ சொல்லுகிறேன்‌; எங்கும்‌ ஒரே தன்மையாயிருப்பதை அடையுங்கள்‌. ஒரே தன்மையாகவிருப்பதானது இறைவனுக்குப்‌ பிரீதியை யுண்டு பண்ணும்‌” – ஸ்ரீவிஷ்ணு புராணம்‌, 1.17.89. 2032-“மீளவவன்‌ மகனை” – பெரியாழ்வார்‌ திருமொழி, 1.6.2.
2033- “யாவந்ந லங்காம்‌ ஸமபித்ரவந்தி – மலைச்சிகரம்‌ போன்ற அளவுள்ளவைகளும்‌, தெத்துப்பற்களை ஆயுதங்களாக வுடையவைகளும்‌ நகங்களை ஆயுதங்களாக வுடையவைகளுமான குரங்குகள்‌ இலங்கையை வந்து அடைவதற்குள்‌ சீதாப்பிராட்டி இராமனிடத்தில்‌ கொடுக்கப்பட வேண்டும்‌” ஸ்ரீராமா, யுத்த, 14.3.
2034- “யாவந்‌ நக்ருஹ்ணந்தி – ஸ்ரீராமபிரானால்‌ விடப்பட்டனவும்‌ வச்சிரத்துக்குச்‌ சம்மானவைகளும்‌ காற்றினையொத்த வேகத்தையுடையவையான அம்புகள்‌ உயரமான அரக்கர்களுடைய தலைகளை யறுப்பதற்கு முன்பு சீதாப்பிராட்டி- ஸ்ரீராமா, யுத்த, 14.4.
2035-“த்வாம்‌ து திக்‌ குலபாம்ஸநம்‌ – அரக்கர்‌ குலத்துக்குக்‌ கெடுதியைச்‌ செய்கிற இராமனிடத்தில்‌ கொடுக்கப்பட வேண்டும்‌.வுன்னைப்‌ பழிக்க வேண்டும்‌.” – ஸ்ரீராமா, யுத்த, 16.15.
2036-“ஸுலபா: புருஷா ராஜந்‌ – அரசனே! எப்போதும்‌ பிரியத்தைச்‌ சொல்லும்‌ புருஷர்கள்‌ எளிதில்‌ கிடைப்பார்கள்‌; பிரியயில்லாத நன்மையைச்‌ சொல்பவனும்‌ கேட்பவனும்‌ கிடைப்பதரிது. அருளின்றி எல்லா வுயிர்களையும்‌ கவர்கின்ற யமனுடைய பாசத்தால்‌ கட்டுண்டவனும்‌ நாசமடைகின்றவனுமான உன்னைப்‌ பற்றி, எரிகின்ற வீட்டினேப்‌ போன்று வெறுக்க மாட்டேன்‌” – ஸ்ரீராமா, யுத்த, 16.20-21.
2037-“அவன்‌ தம்பிக்கே” – திருவாய்மொழி, 7.6.9.
2038- “வீடுமின்‌ முற்றவும்‌” – திருவாய்மொழி, 1.2.1.
2039- “வ்ருதைவ பவதோ யாதா – உனக்குத்‌ தொடர்ந்து வருகிற பல பிறவிகள்‌ பயனற்றுப்‌ போயின; அவற்றுள்‌ இது ஒரு பிறவி என்று நினைத்து இறைவனைச்‌
சரணமடை வாய்‌.” – சாண்டில்யஸ்மிருதி.
2040-“பாமன்னு மாறனடி பணிந்துய்தவன்‌” – இராமானச நூற்றந்தாதி, 1.

ஸூத்ரம்‌ – 205
2041-“நீசனேன்‌ நிறை வொன்றுமிலேன்‌” – திருவாய்மொழி, 3.3.4
2042-“கொள்ளென்று கிளர்ந்தெழுந்த பெருஞ்‌ செல்வம்‌ நெருப்பாக” திருவாய்மொழி, 4.9.4.
2043“தொண்டர்‌ தொண்டர்‌ தொண்டர்‌ தொண்டன்‌ சடகோபன்‌” – திருவாய்மொழி, 8.9.11.
2044-“ஓதவல்லபிராக்கள்‌ நம்மையாளுடையார்கள்‌ பண்டே” – திருவாய்மொழி, 91-11.
2045- “நறிய நன்மலர்நாடி” – திருவாய்மொழி, 5.5.11.
2046- “ஆட்செய்தாழிப்பிரானைச்‌ சேர்ந்தவன்‌” – திருவாய்மொழி, 4.10.11.
2047- “ உம்மையுய்யக்கொண்டு போகுறில்‌” – திருவாய்மொழி, 4.10.9.
1048- “ஆரைக்கொண்‌ டென்னுசாகோ” – திருவாய்மொழி, 7.3.4.
2049- “வாளும்‌ வில்லும்‌ கொண்டு பின்‌ செல்வார்‌ மற்றில்லை” – திருவாய்மொழி, 8.3.3.
2050- “நாடாத மலர்‌ நாடி நாள்தோறும்‌ நாரணன்தன்‌ வாடாத மலரடிக்கீழ்‌ வைக்க” – திருவாய்மொழி, 1.4.9.

ஸூத்ரம்‌ – 206
2051-“பரீக்ஷய லோகாந்‌ – கர்மங்களைச்‌ செய்யப்படுவதனால்‌ ஈட்டப்படும்‌ பலன்கள்‌
சிறியவை நிலைநில்லாதவை என்றறிந்து இறைவன்‌, கர்மங்களைச்‌ செய்வதனால்‌ பெறத்தக்கவனல்லன்‌ என்றறிந்த ப்ராஹ்மணன்‌ வெறுப்புக்‌ கொள்வான்‌” முண்டகோபநிஷத்‌, 2.11.
2052-“நாஸம்வத்ஸர வாஸிநே ப்ரப்ரூயாத்‌ – ஒரு வருடம்‌ குருகுலவாஸம்‌ செய்யாதவனுக்குச்‌ சொல்லக்கூடாது” 2053-“ஏபாவம்‌ பரமே!” – திருவாய்மொழி, 2.2.2.
2054-“ஓபாவம்‌! எனக்கிது பரமாவதே” – திருவிருத்தம்‌?
2055- “பயனன்றாகிலும்‌ பாங்கல்லராகிலும்‌ செயல்‌ நன்றாகத்‌ திருத்திப்‌ பணிகொள்வான்‌” – கண்ணி நுண்சிறுத்தாம்பு, 10.

ஸூத்ரம்‌ – 207
2056-“மெய்ந்நின்று கேட்டருளாயடியேன்‌ செய்யும்‌ விண்ணப்பம்‌” – திருவிருத்தம்‌, 1.
2057-“மங்கவொட்டுன்‌ மாமாயை” – திருவாய்மொழி, 10.7.10. ஸூத்ரம்‌ – 208
2058-“ஸர்வமஷ்டாக்ஷராந்தஸ்ஸ்த்தம்‌ – வேதங்கள்‌ முதலியனவெல்லாம்‌ திருவஷ்டாக்ஷரத்தினுள்‌ இருக்கின்றன.” – ஸ்ரீபாஞ்சராத்ரம்‌.

ஸூத்ரம்‌ – 209
2059-“உயிரளிப்பான்‌ ” , “அடியேன்‌” – திருவிருத்தம்‌, 1.
2060-“ப்ரஹ்மணேத்வா த்வா மஹஸ – மஹானும்‌ ப்ரஹ்மனுமாகிய தேவரீரை அடைவதற்கு ஓம்‌ என்ற ப்ரணவத்தால்‌ ஆத்மாவை ஸமர்ப்பிக்கக்கடவன்‌.” தைத்திரிய உபநிஷத்‌.
2061- “அடியேனாவியடைக்கலம்‌” – திருவிருத்தம்‌, 85.
2062- “திருமால்‌ திருப்பேர்‌ வல்லாரடிக்கண்ணி குடிய மாறன்‌” – திருவிருத்தம்‌, 100.
2063- “பொய்ந்நின்ற ஞானமும்‌ பொல்லாவொழுக்கு மழுக்குடம்பும்‌” – திருவிருத்தம்‌, 1.
2064- “யாதானு மோராக்கையில்‌ புக்கங்காப்புண்டு மாப்பவிழ்ந்தும்‌” – திருவிருத்தம்‌, 95.
2065- “வன்சேற்றள்ளல்‌ டொய்ந்நிலத்து அழுந்தார்‌” – திருவிருத்தம்‌, 100.
2066- “தாமரையுந்தித்‌ தனிப்பெருநாயக” – திருவாசிரியம்‌, 4.
2067-“எம்பெருமாமாயன்‌ ” – திருவாசிரியம்‌, 7.
2068- “தனிமாத்தெய்வத்தடியவர்க்கினி நாமாளாகவேயிசையுங்கொல்‌” திருவாசிரியம்‌, 3.
2069- “ஊழிதோறூழியோவாது வாழியவென்று யாந்தொழ விசையுங்கொல்‌” திருவாசிரியம்‌, 4.
2070- “நெறிகாட்டி நீக்குதியோ” – பெரிய திருவந்தாதி, 6.
2071- “ஸர்வதர்மாந்‌ பரித்யஜ்ய – எல்லாத்‌ தர்மங்களையும்‌ முற்றவும்‌ விட்டு” ஸ்ரீகீதை, 18:66.
2072- “வெங்கோட்டேறேழுடனே கொன்றானையே மனத்துக்கொண்டு” – பெரிய திருவந்தாதி, 48.
2073-“மாமேகம்‌ சரணம்‌ வரஜ – என்னையே சரணமாகப்‌ பற்று.” – ஸ்ரீகீதை, 18:66.
2074- “சீரார்‌ மனத்தலை வன்துன்பத்தை மாற்றினேன்‌ வானோரினத்தலைவன்‌ கண்ணனால்யான்‌” – பெரிய திருவந்தாதி, 25.
2075-“எம்மிறையார்‌ தந்தவருளென்னும்‌ தண்டாலடித்து வல்வினையைக்‌ கானும்‌ மலையும்‌ புகக்கடிவான்‌” – பெரிய திருவந்தாதி, 26.
2076-“அஹம்‌ த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி – நானுன்னை யெல்லாப்‌ பாவங்களிலிருந்தும்‌ விடுவிக்கிறேன்‌.” – ஸ்ரீகீதை, 18:66.
2077- “வாநோ மறிகடலோ வன்துயரை – மருங்கு – கண்டிலமால்‌” – பெரிய திருவந்தாதி, 54.
2078-“அடர்பொன்‌ முடியானை” “யாதாகில்‌ யாதே இனி” – பெரிய திருவந்தாதி, 70.
2079-“மாசுச – துக்கப்படாதே” – ஸ்ரீகீதை, 18:66.

ஸூத்ரம்‌ – 210 முதற்பத்து
2080-“மலர்மகள்‌ விரும்பும்‌ நமரும்பெறலடிகள்‌ ” , திருவாய்மொழி, 1.3.1.
2081-“மலராள்‌ மைந்தன்‌” – திருவாய்மொழி, 1.5.9.
2082- “திருமகளார்‌ தனிக்கேள்வன ” – திருவாய்மொழி, 1.6.9.
2083-“திருவின்‌ மணாளன்‌” – திருவாய்மொழி, 1.9.1.
2084- “பூமகளார்‌ தனிக்கேள்வன்‌ ” – திருவாய்மொழி, 1.9.3.
2085- “மைந்தனை மலராள்‌ மணவாளனை” – திருவாய்மொழி, 1.10.4.

இரண்டாம்‌ பத்து
2086-“எம்பெருமான்‌ நாரணற்கு” – திருவாய்மொழி, 2.1.7.
2087-“எம்பிரானெம்மான்‌ நாராயணனாலே” – திருவாய்மொழி, 2.7.1.
2088-“நாரணன்‌ முழுவேழுலகுக்கும்‌ நாதன்‌” – திருவாய்மொழி, 2.7.2

மூன்றாம்‌ பத்து
2089-“நாண்மலராமடித்‌ தாமரை” – திருவாய்மொழி, 3.3.9.
2090-“அங்கதிரடியன்‌” – திருவாய்மொழி, 3.4.3.
2091-“அவன்‌ பாதபங்கயம்‌” – திருவாய்மொழி, 3.6.4.
2092- “அன்று தேர்கடாவிய பெருமான்‌ கனைகழல்‌” – திருவாய்மொழி, 3.6.10.
2093- “மூவுலகும்‌ தொழுதேத்தும்‌ சீரடியான்‌” – திருவாய்மொழி, 3.8.1.

நாலாம்பத்து-
2094-“இலங்கைநகர்‌ அம்பெரியுய்த்தவர்‌” – திருவாய்மொழி, 4.2.8.
2095-“வல்வினை தீர்க்கும்‌ கண்ணனை” – திருவாய்மொழி, 4.4.11.
2096-“தொல்வினை தீர” – திருவாய்மொழி, 4.4.11.
2097-“வெய்ய நோய்கள்‌ முழுதும்‌ வியன்‌ ஞாலத்து வீயவே” – திருவாய்மொழி, 4.5.2.
2098-“மேவி நின்று தொழுவார்‌ வினைபோக” – திருவாய்மொழி, 4.5.4.
2099-“பிறந்தும்‌ செத்தும்‌ நின்றிடறும்‌ பேதைமை தீர்ந்தொழிந்தேன்‌ ” திருவாய்மொழி, 4.7.7.
2100- “நோயே மூப்பிறப்‌ பிறப்புப்‌ பிணியே யென்றிவையொழிய” – திருவாய்மொழி, 4.9.7.
2101-“வேட்கையெல்லாம்‌ விடுத்து – கூட்டரிய திருவடிக்கண்‌ கூட்டினே” திருவாய்மொழி, 4.9.9.
2102- “அஃதே யுய்யப்புகுமாறு” – திருவாய்மொழி, 4.1.11.
2103- “உய்வுபாயம்‌ மற்றின்மைதேறி” – திருவாய்மொழி, 4.3.11.

அஞ்சாம்பத்து-
2104-“தமியேனுக்கருளாய்‌” – திருவாய்மொழி, 5.7.2.
2105-“ஆறெனக்கு நின்பாதமே சரணாக” – திருவாய்மொழி, 5.7.10.
2106-உன்னாலல்லால்‌” – திருவாய்மொழி, 5.8.3.
2107-கழல்களவையே சரணாகக்‌ கொண்ட” – திருவாய்மொழி, 5.8.11.
2108-“நம்பெருமானடிமேல்‌ சேமங்கொள்‌ தென்குருகூர்ச்‌ சடகோபன்‌” திருவாய்மொழி, 5.9.11.
2109-“நாகணைமிசை நம்பிரான்‌ சரணேசரண்‌ நமக்கென்று நாடொறு மேகசிந்தையனாய்‌” – திருவாய்மொழி, 5.10.11.

ஆறாம்பத்து-
2110-“திருமாமகளிருந்தாம்‌ மலிந்திருந்து” – திருவாய்மொழி, 6.5.8.
2111-“அடிமை செய்வார்‌ திருமாலுக்கே” – திருவாய்மொழி, 6.5.11.
2112-“ஒசிந்த ஒண்மலராள்‌ கொழுநன்‌” – திருவாய்மொழி, 6.7.8.
2113-“என்‌ திருமார்வற்கு” – திருவாய்மொழி, 6.8.10.
2114-“கோலத்திருமா மகளோடுன்னை” – திருவாய்மொழி, 6.9.3. ஏழாம்பத்து –
2115-கன்னலேயமுதே” – திருவாய்மொழி, 7.1.2.
2116- “கொடியேன்‌ பருகின்னமுதே” – திருவாய்மொழி, 7.1.7.
2117- “அலைகடல்‌ கடைந்தவாரமுதே” – திருவாய்மொழி, 7.2.5.
2118- “திருமாலின்சீர்‌ இறப்பெதிர்காலம்‌ பருகிலுமார்வனோ” – திருவாய்மொழி, 7.9.9.
2119-“இவ்வேழுலகை யின்பம்‌ பயக்க” – திருவாய்மொழி, 7.10.1.

எட்டாம்பத்து –
2120-“அடியனேன்‌ பெரியவம்மானே” – திருவாய்மொழி, 8.1.3.
2121-“விண்ணவர்கோன்‌ நாங்கள்கோனை” – திருவாய்மொழி, 8.2.2.
2122-“அமர்ந்த நாதனை” – திருவாய்மொழி, 8.4.10.
2123-“மூவுலகாளி” – திருவாய்மொழி, 8.9.5.
2124-“நேர்பட்டநிறை மூவுலகுக்கும்‌ நாயகன்‌” – திருவாய்மொழி, 8.9.11-

ஒன்பதாம்பத்து-
2125-“பண்டைநாளாலே நின்திருவருளும்‌ பங்கயத்தால்‌ திருவருளும்‌ கொண்டு நின்கோயில்‌ சீய்த்து” – திருவாய்மொழி, 9.2.1.
2126- “நின்தீர்த்த வடிமைக்‌ குற்றேவல்‌” – திருவாய்மொழி, 9.2.2.
2127-“தொடர்ந்து குற்றேவல்‌ செய்து” – திருவாய்மொழி, 9.2.3.
2128-“கொடுவினையேனும்‌ பிடிக்க” – திருவாய்மொழி, 9.2.10.
2129-“உறுவதிதுவென்‌ றுனக்காட்பட்டு” – திருவாய்மொழி, 9.4.4.
2130-ஆட்கொள்வானொத்து” – திருவாய்மொழி, 9.6.7.
2131-“நானும்‌ மீளாவடிமைப்‌ பணி செய்யப்புகுந்தேன்‌ ” – திருவாய்மொழி, 9.8.4.-

பத்தாம்பத்து-
2132-“துயர்‌ கெடும்‌ கடிது” – திருவாய்மொழி, 10.1.8.
2133-“கெடுமிடராய” – திருவாய்மொழி, 10.2.1.
2134-“எழுமையும்மேதம்‌ சாரா” – திருவாய்மொழி, 10.2.2.
2135-“தீரும்நோய்‌ வினைகளெல்லாம்‌” – திருவாய்மொழி, 10.2.3.
2136- “ இப்பிறப்பறுக்கும்‌” – திருவாய்மொழி, 10.2.5.
2137- “உன்றன்‌ திருவுள்ளமிடர்‌ கெடுந்தோறும்‌ நாங்கள்‌ வியக்க வின்புறுதும்‌ எம்பெண்மையாற்றோம்‌” – திருவாய்மொழி, 10.3.9.
2138- “பிணியொன்றும்‌ சாரா பிறவிகெடுத்தாளும்‌” – திருவாய்மொழி, 10.4.7.
2139- “பிறவித்துயர்‌ கடிந்தோம்‌” – திருவாய்மொழி, 10.4.3.
2140- “விண்டேயொழிந்த வினையாயினவெல்லாம்‌” – திருவாய்மொழி, 10.4.9.
2141- “அமரா வினைகளே” – திருவாய்மொழி, 10.5.9.
2142- “கடுநரகம்‌ புகலொழித்த” – திருவாய்மொழி, 10.6.11.
2143- “பிறவி கெடுத்தேன்‌” – திருவாய்மொழி, 10.8.3.
2144- “தடுமாற்ற வினைகள்‌ தவிர்த்தான்‌” – திருவாய்மொழி, 10.8.5.
2145- “அந்தி தொழுஞ்‌ சொல்லு” – திருவாய்மொழி, 10.8.7.
2146- “அவாவற்று வீடுபெற்ற” – திருவாய்மொழி, 10.10.11.

ஸூத்ரம்‌ – 211
2147-“உயர்வறவுயர்நலம்‌” – திருவாய்மொழி, 1.1.1.
2148-“திண்ணன்வீடு” – திருவாய்மொழி, 2.2.1.
2149-“ அணைவதரவணை ” – திருவாய்மொழி, 2.8.1.
2150- “ஒன்றுந்தேவு” – திருவாய்மொழி, 4.10.1.
2151- “பயிலுஞ்சுடரொளி” – திருவாய்மொழி, 3.7.1.
2152- “ஏறாளுமிறையோன்‌” – திருவாய்மொழி, 4.8.1
2153-கண்கள் சிவந்து” – திருவாய்மொழி, 8.8.1
2154-“கருமாணிக்க மலை” – திருவாய்மொழி, 8.9.1.
2155-“வீடுமின்‌ முற்றவும்‌” -1-2-1-
2156-“சொன்னால்‌ விரோதம் -3-9-1-
2157-“ஒரு நாயகம்‌” -4-1-1-
2158-“கொண்ட பெண்டிர்‌” -9-1-1-
2159-“நோற்ற நோன்பிலேன்‌ ”-5-7-1-
2160-“ஆறெனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் -5-7-10-
2161-“களைவாய்‌ துன்பம்‌ களையாதொழி 5.8.8.
2162-கழல்களவையே சரணாகக்‌ கொண்ட”-5-8-11-
2163-“ஆராவமுதே”-5-8-1-
2164-“மானேய்நோக்குநல்லீர்‌ வைகலும்‌ வினையேன்‌ மெலிய”-5-9-1-
2165-“நம்‌பெருமானடிமேல்‌ சேமங்கொள்‌ தென்குருகூர்ச்‌ சடகோபன்‌” திருவாய்மொழி, 5.9.11.
2166-“எனதாவியை நின்று நின்றுருக்கியுண்கின்ற” – திருவாய்மொழி, 5.10.1.
2167- “நாகணைமிசை நம்பிரான்‌ சரணேசரண்‌ நாடொறு மேகசிந்தையனாய்‌” -திருவாய்மொழி, 5.10.11.
2168- “பிறந்‌தவாறும்‌” – திருவாய்மொழி, 5.10.1.
2169- “தனக்கேயாக” – திருவாய்மொழி, 2.9.4.
2170-“எம்மாவீடு” – திருவாய்மொழி, 2.9.1. 2171-“ஒழிவில்காலம்‌” – திருவாய்மொழி, 3.3.1.
2172-“நெடுமாற்கடிமை” – திருவாய்மொழி, 8.10.1.
2173-“வேய்மருதோளிணை” – திருவாய்மொழி, 10.3.1.
2174-மயர்வறமதிநலமருளினன்‌ ” – திருவாய்மொழி, 1.1.1.
2175-“அவாவற்று வீடுபெற்ற” – திருவாய்மொழி, 10.10.11.
2176-“தொழுதெழன்‌ மனனே” – திருவாய்மொழி, 1.1.1.
2177-“விருப்பே பெற்றமுதமுண்டு களித்தேன்‌” – திருவாய்மொழி, 10.8.6.
2178-“மேலைத்தொண்டுகளித்து அந்திதொழுஞ்‌ சொல்லுப்பெற்றேன்‌” –
திருவாய்மொழி, 10.8.7.
2179-“பத்தாஞ்சலிபுட – எப்பொழுதும்‌ கையைக்கூப்பிக்கொண்டே யிருத்தல்‌”
2180- “நம இத்யேவ வாதிந: – நம: என்று சொல்லிக்கொண்டே யிருத்தல்‌”
2181- “விபந்யவ: – துதித்தலையே தன்மையாகக்‌ கொண்டவர்கள்‌ ”
2182-“சொற்பணி செயாயிரம்‌” – திருவாய்மொழி, 1.10.11.

ஸூத்ரம்‌ -212
2183-“ஓரெழுத்தோருரு” – பெரிய திருமொழி, 6.1.5.
2184-“ஓமித்யேகாக்ஷரம்‌ – ஓம்‌ எனனுமிது ஓரெழுத்து”
2185-“தஸ்ய ப்ரக்ருதி லீநஸ்ய – எல்லா ஒலிகட்கும்‌ அந்த ப்ரணவத்திற்கும்‌ மூலமாக விருக்கின்ற அகாரம்‌ போலேயும்‌
2186-“இமையோர்‌ தலைவா” – திருவிருத்தம்‌, 1.
2187-“அயர்வறுமமரர்களதிபதி” – திருவாய்மொழி, 1.1.1.
2188-“இமையோர்‌ தலைவா அடியேன்‌” – திருவிருத்தம்‌, 1.
2189-“தொழுதெழென்‌ மனனே” – திருவாய்மொழி, 1.1.1.
2190-“பொய்ந்நின்ற ஞானமும்‌ பொல்லாவொழுக்கு மழுக்குடம்பும்‌” – திருவிருத்தம்‌,
2191- “மயர்வற மதிநலமருளினன்‌ ” – திருவாய்மொழி, 1.1.1.
2192-உயிர் அளிப்பான் எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய்
2193-செய்யும் விண்ணப்பம் 2194-“இனியாமுறாமை” – திருவிருத்தம்‌, 1. 2195-அதிபதி – அடிதொழுது” – திருவாய்மொழி, 1.1.1.2196-“உயர்வறவுயர்நலம்‌ – துயர்று சுடரடி” – திருவாய்மொழி, 1.1.1.
2197-“நின்று கேட்டருளாய்‌” – திருவிருத்தம்‌, 1.

ஸூத்ரம்‌ – 213
2198-“துயரறு சுடரடி தொழுதெழு” – திருவாய்மொழி, 1.1.1.

ஸூத்ரம்‌ – 214
2199- “சாது சனத்தை நலியும்‌ கஞ்சனைச்‌ சாதிப்பதற்கு” – திருவாய்மொழி, 3.5.5. 2200-“பரித்ராணாய – நல்லார்கள்‌ தம்மை நலம்‌ புரிந்து காத்தற்கும்‌ பொல்லாரைப்‌ பொன்றி நெறி போக்கற்கு மிந்த யுகந்தோறு மிசைந்து நான்‌ பிறப்பன்‌” – ஸ்ரீகீதை, 4.8.
2201-“நண்ணாவசுரர்‌ நலிவெய்த நல்ல வமரர்‌ பொலிவெய்த” – திருவாய்மொழி, 10.7.5.
2202–“மயர்வற மதிநலமருளினன்‌” – திருவாய்மொழி, 1.1.1.
2203-“ஒலிபுகழாயிரத்திப்பத்து உள்ளத்தை மாசறுக்கும்‌” – திருவாய்மொழி,5.2.11.
2204-“தெருள்கொள்ளச்‌ சொன்ன வோராயிரம்‌” – திருவாய்மொழி, 2.10.11. 2205-“தூயவாயிரத்திப்பத்தால்‌ பத்தராவர்‌” – திருவாய்மொழி, 6.4.11.
2206-“அடிமையறக்கொண்டாய்‌” – திருவாய்மொழி, 4.9.6.
2207-“உரிய தொண்டராக்குமுலகமுண்டாற்கே” – திருவாய்மொழி, 6.9.11.
2208-“நோய்களறுக்கும்‌ மருந்தே” – திருவாய்மொழி, 9.3.3-2209-உடைந்து நோய்களை ஒடு விக்குமே -1-7-11-
2210-“ஏற்றரும்‌ வைகுந்தத்தை யருளும்‌ நமக்கு” – திருவாய்மொழி, 7.6.10.
2211-“தன்தாளின்கீழ்ச்‌ சேர்த்து” – திருவாய்மொழி, 7.5.10.
2212-“வானின்‌ மீதேற்றியருள்‌ செய்து” – திருவாய்மொழி, 8.4.11. 2213-“அருளியடிக்கீழிருத்தும்‌” – திருவாய்மொழி, 8.8.11.
2214-“இன்பக்கதி செய்யும்‌” – திருவாய்மொழி, 7.5.11.
2215- “எங்ஙனே சொல்லினுமின்பம்‌ பயக்கும்‌” – திருவாய்மொழி, 7.9.11.
2216-“ஊடுபுக்கெனதாவியையுருக்கியுண்டிடுகின்ற நின்றன்னை” – திருவாய்மொழி, 5.10.10.
2217- “ஒன்பதோடொன்றுக்கும்‌ மூவுலகுமுருகும்‌” – திருவாய்மொழி, 9.5.11.
2218- “ஊற்றின்கநுண்‌ மணல்போ லுருகாநிற்பர்‌ நீராய்‌” – திருவாய்மொழி, 6. 8.11.
2219- “பத்தியை தோற்றம்‌” – திருச்சந்த விருத்தம்‌, 79.
2200- “தோற்றங்களாயிரம்‌” – திருவாய்மொழி, 6.8.11.

ஸூத்ரம்‌ – 215
2221-“ஐந்தினோேடைந்தும்‌ வல்லார்‌” – திருவாய்மொழி, 10.2.11.
2222-“ஒன்பதோடொன்றுக்கும்‌” – திருவாய்மொழி, 9.5.11.
2223-“பாடலோராயிரத்துள்‌ இவையுமொருபத்து” – திருவாய்மொழி, 3.4.11.
2224-“நூறே சொன்ன வோராயிரம்‌” – திருவாய்மொழி, 9.4.11.
2225-“பத்து நூற்றுளிப்பத்து” – திருவாய்மொழி, 6.7.11.
2226-“தெரியச்சொன்ன வோராயிரம்‌” – திருவாய்மொழி, 6.9.11.
2227-“மிக்கவோராயிரம்‌” – திருவாய்மொழி, 7.6.11.
2228-“அவாவிலந்தாதிகளாலிவையாயிரமும்‌” – திருவாய்மொழி, 10.10.11.

ஸூத்ரம்‌ – 216
2229-“பிணங்கியமரர்‌ பிதற்றும்‌” – திருவாய்மொழி, 1.6.4.
2230-“அடியார்கள்‌ குழாங்களையுடன்‌ கூடுவதென்றுகொலோ?” – திருவாய்மொழி, 2.3.10.

ஸூத்ரம்‌ – 217
2231-“பயிலுஞ்சுடரொளி” – திருவாய்மொழி, 3.7.1.
2232-“ஜ்யோதிஷ்டோமேன ஸ்வர்க்க்காமோ யஜேத – ஸ்வர்க்கத்தை விரும்புகிறவன்‌ ஜ்யோதிஷ்டோமம்‌ என்ற யாகத்தைச்‌ செய்யக்கடவன்‌” – ஆபஸ்தம்ப, சிரெள, 8.2.
2233-“திருநாரணன்தாள்‌ காலம்பெறச்‌ சிந்தித்துயம்மினோ” – திருவாய்மொழி, 4.1.1.
2234- “நலமந்தமில்லதோர்‌ நாடுபுகுவீர்‌ பலமுந்துசீரில்‌ படிமினோவாதே” திருவாய்மொழி, 2.8.4.

ஸூத்ரம்‌ – 218
2235-“மயர்வற மதிநலமருளினன்‌” – திருவாய்மொழி, 1.1.1.
2236-“மறப்பனோவினி யானென்மணியை” – திருவாய்மொழி, 1.10.10.
2237-“நினசெம்மாபாத பற்புத்தலை சேர்த்து” – திருவாய்மொழி, 2.9.1.
2238-“வழுவிலாவடிமை செய்யவேண்டு நாம்‌” – திருவாய்மொழி, 3.3.1.
2239-“ஐங்கருவி கண்டவின்பம்‌ – சிற்றின்பம்‌ – ஒழிந்தேன்‌” – திருவாய்மொழி,4.9.10.
2240-“கழிய மிக்கதோர்‌ காதல்‌” – திருவாய்மொழி, 5.5.10.
2241“அலர்மேல்மங்கையுறைமார்பா உன்னடிக்‌ கழமர்ந்து புகுந்தேன்‌” திருவாய்மொழி, 6.10.10.
2242-“உதவிக்கைம்மாறென்னுயிர்‌ ” – திருவாய்மொழி, 7.9.10.
2243- “அதுவுமற்றாங்கவன்றன்னது – எதுவுமொன்றுமில்லை செய்வதிங்குமங்கே” திருவாய்மொழி, 7.9.10.
2244-“தோள்களையாரத்‌ தழுவி யென்னுயிரை அறவிலை செய்தனன்‌” திருவாய்மொழி, 8.1.10.
2245-“நின்ற வொன்றையுணர்ந்தேன்‌” – திருவாய்மொழி, 8.8.4.
2246-மரணமானால்‌ வைகுந்தம்‌ கொடுக்கும்‌” – திருவாய்மொழி, 9.10.5.
2247-“நாளிட்டு” – நாச்சியார்‌ திருமொழி, 6.2.
2248-“காளமேகத்தையன்றி மற்றொன்றிலங்கதி” – திருவாய்மொழி, 10.1.1.
2249-“ஆத்தன்‌ தாமரையடியன்றி மற்றிலரணே” – திருவாய்மொழி, 10.1.6.

நான்காம்‌ பரகரணம்‌
ஸூத்ரம்‌ – 219
2250-“வரன்‌ முதலாயவை முழுதுண்ட பரபரன்‌” – திருவாய்மொழி, 1.1.8.
2251-“ஆய்‌ நின்ற பரன்‌” – திருவாய்மொழி, 1.1.11.
2252-“வளவேழுலகின்‌ முதலாய வானோரிறை” – திருவாய்மொழி, 1.5.1.
2253- “வைப்பாம்‌ மருந்தாம்‌ – நலத்தாலுயர்ந்துயர்ந்தப்பாலவன்‌” – திருவாய்மொழி, 1.7.2.
2254- “அவையுள்‌ தனிமுதல்‌” – திருவாய்மொழி, 1.9.1.
2255- “உம்பர்வானவராதியஞ்சோதி” – திருவாய்மொழி, 1.10.9.
2256- “மயர்வற மதிநலமருளினன்‌” “அயர்வறு மமரர்களதிபதி” – திருவாய்மொழி, 1.1.1.
2257- “மயர்வற வென்மனத்தே மன்னினான்‌” – திருவாய்மொழி, 1.7.4.
2258- “சார்ந்த விருவல்வினைகளும்‌ சரித்து மாயப்பற்றறுத்துத்‌ தீர்ந்து தன்பால்மனம்‌ வைக்கத்திருத்தி” – திருவாய்மொழி, 1.5.10.
2259- “மறக்குமென்று செந்தாமரைக்கண்ணொடு” – திருவாய்மொழி, 1.10.10.
2260- “நல்கியென்னைவிடான்‌” – திருவாய்மொழி, 1.10.8.
2261- “மறப்பற வென்னுள்ளேமன்னினான்‌” – திருவாய்மொழி, 1.10.10.
2262- “பெருநிலம்‌ கடந்த நல்லடிப்போது அயர்ப்பிலன்‌ ” – திருவாய்மொழி, 1.3.10.
2263- “தூயவமுதைப்‌ பருகிப்‌ பருகி யென்‌ மாயப்பிறவி மயர்வறுத்தென்‌” திருவாய்மொழி, 1.7.3.
2264-“எம்பிரானையென்‌ சொல்லி மறப்பனோ” – திருவாய்மொழி, 1.10.9.
2265-“சுடரடி தொழுதெழன்மன்னே” – திருவாய்மொழி, 1.1.1.
2266-“எம்பிரானைத்‌ தொழாய்‌ மடநெஞ்சமே” – திருவாய்மொழி, 1.10.3.
2267- “நெஞ்சமே நல்லை நல்லை – மலராள்‌ மணவாளனைத்‌ துஞ்சும்போதும்‌ விடாது
தொடர் கண்டாய்‌” – திருவாய்மொழி, 1.10.4.
2268-“கண்டாயே நெஞ்சே கருமங்கள்‌ வாய்க்கின்று” – திருவாய்மொழி,1.10.5.
2269- “நீயும்‌ நானுமிந்நேர்‌ நிற்கில்‌ மேல்‌ மற்றோர்‌ நோயும்‌ சார்கொடான்‌ நெஞ்சமே சொன்னேன்‌” – திருவாய்மொழி, 1.10.6.
2270- “ஏகஸ்‌ ஸ்வாது நபுஞ்சீத – இனியபொருளை ஒருவன்‌ தனியே விருந்து உண்ணலாகாது”
2271-“வீடுமின்‌ முற்றவும்‌” “வீடுடையான்‌ – வீடுசெய்ம்மின்‌” – திருவாய்மொழி, 1.2.1.
2272- “மின்னின்னிலையில மன்னுயிராக்கைகள்‌ ” – திருவாய்மொழி, 1.2.2.
2273- “நீர்நுமதென்றிவை வேர்முதல்‌ மாய்த்து” – திருவாய்மொழி, 1.2.3.
2274- “எல்லையிலந்நலம்‌” – திருவாய்மொழி, 1.2.4.
2275- “இறை சேர்மின்‌” – திருவாய்மொழி, 1.2.3.
2276-“இறை பற்று” – திருவாய்மொழி, 1.2.5.
2277-வண்புகழ்‌ நாரணன்‌” “திண்கழல்‌ சேர்‌” – திருவாய்மொழி, 1.2.10.
2278-“பலபிறப்பாய்‌ – எளிவருமியல்வினன்‌” – திருவாய்மொழி, 1.3.2.
2279-“என்பிழைத்தாள்‌ திருவடியின்‌ தகவினுக்கு” – திருவாய்மொழி, 1.4.7.
2280- “திசைகளெல்லாம்‌ திருவடியால்‌ தாயோன்‌ தானோருருவனே” திருவாய்மொழி, 1.5.3.
2281- “புரிவதுவும்‌ புகைபூவே” – திருவாய்மொழி, 1.6.1.
2282- “தூயவமுதைப்‌ பருகிப்பருகி யென்மாயப்பிறவி மயர்வறுத்தேன்‌” திருவாய்மொழி, 1.7.3.
2283- “நீர்புரைவண்ணன்‌”- திருவாய்மொழி, 1.8.11.
2284- “என்னுடைச்‌ குழலுளான்‌” – திருவாய்மொழி, 1.9.1.
2285-“உச்சியுளானே” – திருவாய்மொழி, 1.9.10.
2286-கண்ணுள்ளே நிற்கும்‌ காதன்மையால்‌ தொழில்‌ எண்ணிலும்‌ வரும்‌” -திருவாய்மொழி, 1.10.2.
2287-“பத்துடையடியவர்க்கெளியவன்‌ ” – திருவாய்மொழி, 1.3.1.
2288-“அமுதிலுமாற்றவினியன்‌ ” – திருவாய்மொழி, 1.6.6.
2289- “அவனைத்‌ தொழுதால்‌ வழிநின்ற வல்வினைமாள்வித்‌ தழிவின்றியாக்கம்‌ தரும்‌” – திருவாய்மொழி, 1.6.8.
2290- “தருமவரும்‌ பயனாய” – திருவாய்மொழி, 1.6.9.
2291- “நாளுநின்றடுநமபழமையங்‌ கொடுவினையுடனே மாளும்‌” – திருவாய்மொழி,1.3.8.
2292-“பிணக்கற” “அம்பகவன்‌ வணக்குடைத்தவநெறி வழிநின்று” திருவாய்மொழி,-1.3.5.
2293-“பக்த்யா த்வநந்ய்யா சக்ய: – என்னிடத்தில்‌ வைக்கப்பட்ட பக்தியினாலேயே உண்மையாக வறிதற்கும்‌ பார்ப்பதற்கும்‌ என்னை அடைவதற்கும்‌ தகுந்தவனாக விருக்கிறேன்‌.” – ஸ்ரீகீதை, 11.54.
2294- “மந்மநா பவ மத்பக்த: மத்யாஜீ மாம்‌ நமஸ்குரு, மாமேவைஷ்யஸி யுக்த்வைவமாத்மாநம்‌ மத்பராயண: – என்னிடத்தில்‌ மனத்தை வைத்தவனாயும்‌
என்னிடத்தில்‌ பத்தியை யுடையவனாயும்‌ என்னையே வாராதிக்கிறவனாயும்‌ ஆக்க்கடவாய்‌; என்னை நமஸ்காரம்‌ செய்‌; என்னையே சரணமடைந்தவனாய்‌, இவ்விதமான மனத்தை யடைந்தால்‌ என்னையே அடைவாய்‌.” – ஸ்ரீகீதை, 9:34.
2295-“நும்மிருபசையறுத்து” – திருவாய்மொழி, 1.3.7.
2296-“மனனகமலமறக்‌ கழுவி” – திருவாய்மொழி, 1.3.8.
2297-“அவனுடையுணர்வு கொண்டு” – திருவாய்மொழி, 1.3.5.
2298-நன்றென நலஞ்செய்வது” – திருவாய்மொழி, 1.3.7.

ஸூத்ரம்‌ – 220
2299-“சோராத வெப்பொருட்கு மாதியாஞ்சோதி” – திருவாய்மொழி, 2.1.11.
2300-“மூவாத்தனிமுதலாய்‌” – திருவாய்மொழி, 2.8.5.
2301-“எப்பொருட்கும்‌ வேர்‌ முதலாய்‌ வித்தாய்‌” – திருவாய்மொழி, 2.8.10.
2302-“பொருளென்றிவ்வுலகம்‌ படைத்தவன்‌” – திருவாய்மொழி, 2.10.11.
2303-“அறியாதன அறிவித்த” – திருவாய்மொழி, 2.3.2.
2304-“அடியை யடைந்துள்ளந்தேறி” – திருவாய்மொழி, 2.6.8.
2305-“தூமனத்தனனாய்‌” – திருவாய்மொழி, 2.7.8.
2306-“மருளில்‌ வண்குருகூர்‌ வண்சடகோபன்‌” – திருவாய்மொழி, 2.10.11. 2307-“களிப்பும்‌ கவர்வுமற்றுப்‌ பிறப்புப்பிணி மூப்பிறப்பற்று ஒளிக்கொண்ட சோதியுமாய்‌ – அடியார்கள் குழாங்களை – உடன் கூடுவதென்று கொலோ?” திருவாய்மொழி, 2.3.10.
2308-“வாடி வாடும்‌” – திருவாய்மொழி, 2.4.1. 2309-“உள்ளுளாவியுலர்ந்துலர்ந்து” – திருவாய்மொழி, 2.4.7.
2310-“அந்தாமத்தன்பு செய்து என்னாவிசேரம்மானுக்கு” – திருவாய்மொழி,2.5.1.
2311-“சிறிதோரிடமும்‌ புறப்படாத்‌ தன்னுள்ளே உலகுகளொக்கவே விழுங்கி –
சிக்கென – புகுந்தான்‌” – திருவாய்மொழி, 2.6.2.
2312-“எமர்கீழ்மேலெழு பிறப்பும்‌ விடியாவெந்நரகத்‌ தென்றும்‌ சேர்தல்‌ மாறினர்‌” திருவாய்மொழி, 2.6.7.
2313-“எமரேழெழு பிறப்பும்‌ – கேசவன்தமர்‌ – மாசரிது பெற்று நம்முடை வாழ்வு
வாய்க்கின்றவா” – திருவாய்மொழி, 2.7.1. 2314- “நீந்துந்‌ துயரில்லா வீடு” – திருவாய்மொழி, 2.8.2.
2315-“கெடலில்‌ வீடு” – திருவாய்மொழி, 2.9.11.
2316-“எம்மா வீடு” – திருவாய்மொழி, 2.9.1. 2317-“நின்செம்மாபாதபற்புத்‌ தலைசேர்த்தொல்லை – அம்மா அடியேன்‌ வேண்டுவதீதே” – திருவாய்மொழி, 2.9.1. 2318-“தனக்கேயாகவெனைக்கொள்ளுமீதே” – திருவாய்மொழி, 2.9.4.
2319-“திண்ணன்‌ வீடுமுதல்‌ முழுதுமாய்‌” – திருவாய்மொழி, 2.2.1.
2320-“தேவு மெல்லாப்பொருளும்‌-கருத்தில்‌-வருத்தித்த மாயப்பிரான்‌” திருவாய்மொழி, 2.2.8.
2321-“ஆக்கினான்‌ தெய்வவுலகுகள்‌ ” – திருவாய்மொழி, 2.2.9.
2322-“ஆழியம்பள்ளியாரே” – திருவாய்மொழி, 2.2.6.
2323-“பூமகள்‌ தன்னை வேறின்றி விண்தொழத்‌ தன்னுள்‌ வைத்து” – திருவாய்மொழி, 2.2.3.
2324- “கண்ணன்‌ கண்‌” – திருவாய்மொழி, 2.2.1.
2325- “கோபால கோளரியேறு” – திருவாய்மொழி, 2.2.2.
2326- “தகுங்கோலத்‌ தாமரைகண்ணன்‌” – திருவாய்மொழி, 2.2.5.
2327- “ஏழுலகுங்‌ கொள்ளும்‌ வள்ளல்‌ வல்வயிற்றுப்‌ பெருமான்‌ ”” திருவாய்மொழி,-2.2.7.
2328-“ அணைவதரவணைமேல்‌ பூம்பாவையாகம்‌ புணர்வது இருவரவர்‌ முதலும்தானே” – திருவாய்மொழி, 2.8.1.
2329-“ இணைவனாமெப்பொருட்கும்‌ வீடுமுதலாம்‌” – திருவாய்மொழி, 2.8.1.
2330- “புணைவன்‌ பிறவிக்கடல்‌ நீந்துவார்க்கு”” – திருவாய்மொழி, 2.8.1.
2331-“ஆனையிடர்‌ கடிந்த” – திருவாய்மொழி, 2.8.2.
2332-மூவுலகும்‌ காவலோன்‌ ” – திருவாய்மொழி, 2.8.5.
2333-“வீடுமுதல்‌ முழுதுமாய்‌” – திருவாய்மொழி, 2.2.1.
2334-“மிகுந்தேவு மெப்பொருளும்‌ படைக்க” – திருவாய்மொழி, 2.2.5.
2335-“கருத்தில்‌ தேவுமெல்லாப்பொருளும்‌ வருத்தித்த” – திருவாய்மொழி,2.2.8.
2336-“தன்னுந்தியுள்ளே வாய்த்ததிசைமுகனிந்திரன்‌ வானவராக்கினான்‌” திருவாய்மொழி,2.2.9.
2337- “நலமந்தமில்லதோர்‌ நாடுபுகுவீர்‌ – பலமுந்துசீரில்‌ படிமின்‌” திருவாய்மொழி, 2.8.4.
2338- “கள்வா” – திருவாய்மொழி, 2.2.10.
2339- “தீர்த்தனுலகளந்த” – திருவாய்மொழி, 2.8.6.
2340- “பார்த்தோ விஜேதா மதுஸுதனஸ்ய – வெற்றி வீரனான அர்ஜுனன்‌ ஸ்ரீகிருஷ்ணனுடைய திருவடித்தாமரைகளில்‌ அணிந்த அழகிய அம்மலரை சிவன்‌ முடியின்‌ நடுவில்‌ கண்டான்‌. வீரனாகிய அர்ஜுனன்‌, நிச்சயிக்கப்பட்ட அர்த்தத்தை யுடையவனானான்‌. ”
2341-“ஸது பார்த்தோ மஹாமநா: – பெரிய மனத்தையுடைய அந்த அர்ஜுனன்‌” ஸ்ரீகீதாபாஷ்யம்‌.
2342- “புலனைந்து மேயும்‌ பொறியைந்து நீங்கி நலமந்தமில்லதோர்‌ நாடுபுகுவீர்‌” திருவாய்மொழி, 2.8.4.
2343- “ஸாுஸாகம்‌ கர்த்தும்‌ – செய்வதற்குச்‌ சுகமாக விருக்கும்‌” – ஸ்ரீகீதை,9.2.
2344- “தஸ்மிந்‌ யதந்தஸ்‌ ததுபாஸிதவ்யம்‌ – அந்தப்‌ பரம்பொருளிடத்தில்‌ எந்தக்‌ குணம்‌ உள்ளிருக்கின்றதோ அது உபாஸிக்கத்தக்கதாம்‌” – தைத்திரிய உபநிஷத்‌.
2345- “சதிரிளமடவார்‌ தாழ்ச்சியை” – திருவாய்மொழி, 2.10.2.
2346-“திறமுடைவலத்தால்‌ தீவினை” – திருவாய்மொழி, 2.10.5.
2347-“வல்வினை மூழ்கி” – திருவாய்மொழி, 2.10.9.
2348- “நரகழுந்தாதே” – திருவாய்மொழி, 2.10.7.
2349- “கீழ்மை செய்‌” – திருவாய்மொழி, 2.10.6.
2350- “வலங்கழி” – திருவாய்மொழி, 2.10.8.
2351- “சூதென்று களவும்‌ சூதும்‌” – திருவாய்மொழி, 2.10.10.
2352- “கிளரொளியிளமை கெடுவதன்‌ முன்னம்‌” – திருவாய்மொழி, 2.10.1.
2353- “பால்ய ஏவ சரேத்‌ தர்மம்‌ – இளமையிலே தருமத்தைச்‌ செய்ய வேண்டும்‌”.
2354-“தஸ்மாத்‌ பால்யே விவேகாத்மா யதேத ச்ரேயஸே ஸதா – ஆகையால்‌ அறிவு பொருந்திய மனத்தையுடையவன்‌ எப்பொழுதும்‌ இளமையிலேயே சீர்த்திக்காக முயற்சி செய்யக்கடவன்‌.” – ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌, 1.17.75.
2355-“பதியது வேத்தி” – திருவாய்மொழி, 2.10.2.
2356-“மாலிருஞ்சோலை – சார்வது சதிரே” – திருவாய்மொழி, 2.10.1.
2359-போதவிழ்மலையே புகுவது பொருளே” – திருவாய்மொழி, 2.10.10.
2358- “தொழக்கருதுவதே” – திருவாய்மொழி, 2.10.9.
2359- “வலஞ்‌ செய்து நாளும்‌ மருவுதல்‌ வழக்கே” – திருவாய்மொழி, 2.10.8.2360-“நெறிபடவதுவே நினைவது நலமே” – திருவாய்மொழி, 2.10.6

ஸூத்ரம்‌ – 221
2361-“தத்‌ ஸ்ருஷ்ட்வா ததேவாநு ப்ராவிசத்‌ – எல்லாப்‌ பொருட்களையும்‌ படைத்து அவற்றிற்குள்ளே அநுப்ரவேசித்தான்‌” – தைத்திரியோபநிஷத்‌.
2362- “முழுதுமாய்‌ முழுதியன்றாய்‌” – திருவாய்மொழி, 3.1.8.
2363-“ஏழ்ச்சிக்கேடின்றி யெங்கணும்‌ நீறைந்த வெந்தாய்‌” – திருவாய்மொழி, 3.2.4.
2364- “எஞ்ஞான்றுமெங்கு மொழிவற நிறைந்து நின்ற” – திருவாய்மொழி, 3.2.7.
2365-“அளவுடையைம்புலன்களறியாவகையாலருவாகி நிற்கும்‌” – திருவாய்மொழி, 3.10.10.
2366- “யாவையும்‌ யவரும்‌ தானாயவரவர்‌ சமயந்தோறும்‌ தோய்விலன்‌” திருவாய்மொழி, 3.4.10.
2367- “அநச்நந்தந்யோ அபிசாகசீதி – இவனின்‌ வேறான விறைவன்‌ கர்மங்களின்‌ பல யநுபவியாமல்‌ மிக பதக பிரகாசிக்கிறான்‌.”” – கடோபனிஷத்‌.
2368- “தீர்ந்த அடியவர்தம்மை” – திருவாய்மொழி, 3.5.11.
2369- “சன்ம சன்மாந்தரங் காத்தடியார்களைக்‌ கொண்டுபோய்த்‌ தன்மை பெறுத்தித்‌ தன்‌ தாளிணைக்கீழ்க்கொள்ளுமப்பன்‌ ” – திருவாய்மொழி, 3.7.7.
2370- “அந்நாள்‌ நீதந்த வாக்கையின்‌ வழியுழல்வேன்‌” – திருவாய்மொழி, 3.2.1. 2371-“பல்மாமாயப்‌ பல்பிறவியில்‌ படிகின்றயான்‌” – திருவாய்மொழி, 3.2.2.
2372- “பொல்லாவாக்கையின்‌ புணர்வினை” – திருவாய்மொழி, 3.2.3.
2373- “வினையியல்‌ பிறப்பழுந்தி” – திருவாய்மொழி, 3.2.7.
2374-“கொடுவினைத்தூற்றுள்‌ நின்று பாவியேன்‌ பலகாலம்‌ வழி திகைத்தல மருகின்றேன்‌ ” – திருவாய்மொழி, 3.2.9. 2375-“வினைகளை வேரறப்‌ பாய்ந்து” – திருவாய்மொழி, 3.2.1.
2376- “தொன்மாவல்வினைத்‌ தொடர்களை முதலரிந்து” – திருவாய்மொழி, 3.2.2.
2377-“எந்நாள்‌ யானுன்னையினி வந்து கூடுவன்‌” – திருவாய்மொழி, 3.2.1.
2378-“எங்கு வந்தணுகிற்பன்‌” – திருவாய்மொழி, 3.2.5.
2379- “எங்கினித்‌ தலைப்‌ பெய்வன்‌” – திருவாய்மொழி, 3.2.9.
2380-“காயங்கழித்தவன்‌ தாளிணைக்கழ்ப்‌ புகுங்காதல்‌” – திருவாய்மொழி, 3.9.8.
2381-“வானவர்‌ நாட்டையும்‌ நீ கண்டு கொள்‌” – திருவாய்மொழி, 3.9.9.
2382- “ஊனமில்‌ மோக்கமென்கோ?” – திருவாய்மொழி, 3.4.7.
2383- முடிச்சோதி – திருவாய்மொழி, 3.1.1.
2384-“பெற்றது நீடுயிரே” – திருவாய்மொழி, 3.2.10.
2385- கல்‌ காலமெல்லா முடனாய்‌ மன்னி வழுவிலா வடிமை செய்யவேண்டும்‌ நாம்‌” – திருவாய்மொழி, 3.3.1.
2386-“புகழுநல்லொருவன்‌ ” – திருவாய்மொழி, 3.4.1.
2387-“எம்மானைச்‌ சொல்லிப்பாடி” – திருவாய்மொழி, 3.5.1.
2388- “பண்கள்‌ தலைக்கொள்ளப்பாடி” – திருவாய்மொழி, 3.5.2.
2389-“முனிவின்றியேத்தி” – திருவாய்மொழி, 3.5.6.
2390-“பேர்பல சொல்லிப்‌ பிதற்றி” – திருவாய்மொழி, 3.5.8.
2391-“எழுந்தும்‌ பறந்தும்‌ துள்ளாதார்‌” – திருவாய்மொழி, 3.5.1.
2392- “ஏத்திக்‌ குனிப்பார்‌” – திருவாய்மொழி, 3.5.6.
2393-“தடுகுட்டமாய்‌” – திருவாய்மொழி, 3.5.3.
2394- “கும்பிடு நட்டமிட்டாடி” – திருவாய்மொழி, 3.5.4.
2395- “உலோகர்‌ சிரிக்க நின்றாடி” – திருவாய்மொழி, 3.5.8.
2396- “நெஞ்சங்‌ குழைந்து நையாதே” – திருவாய்மொழி, 3.5.7.
2397- “தம்மடியாரடியார்‌ தமக்கடியாரடியார்‌ தம்மடியாரடியோங்களே ” – திருவாய்மொழி, 3.7.10.
2398-“அடியார்கள்‌ குழாங்களையுடன்‌ கூடுவதென்றுகொலோ ” – திருவாய்மொழி, 2.3.10.
2399-“பைகொள்‌ பாம்பேறி யுறைபரனே” – திருவாய்மொழி, 3.8.4.
2400- “சக்ஷுஸ் ஸ்ரவா – கண்களைக்‌ காதுகளாக வுடையவன்‌ ”
2401-“நெஞ்சமே நீணகராகவிருந்த வென்தஞ்சனே” – திருவாய்மொழி, 3.8.2.
2402- “வாசகமே யேத்தவருள்‌ செய்யும்‌ வானவர்தம்‌ நாயகனே” – திருவாய்மொழி, 3.8.3.
2403- “கைகளாலாரத்தொழுது தொழுதுன்னை” – திருவாய்மொழி, 3.8.4.
2404- “கண்களால்‌ காணவருங்கொல்‌” – திருவாய்மொழி, 3.8.5.
2405- “வாய்கொண்டு மானிடம்பாட வந்த கவியேனல்லேன்‌” – திருவாய்மொழி, 3.9.9.
2406- “ஒன்றியொன்றியுலகம்‌ படைத்தான்‌ கவியாயினேற்கு” – திருவாய்மொழி, 3.9.10.
2407- “அஹம்‌ ஸ்லோக்க்ருத்‌ அஹம்‌ ஸ்லோக்க்ருத்‌ – நான்‌ கவிபாடுகிறவன்‌, நான்‌ கவிபாடுகிறவன்‌ ”
2408-“சன்மம்‌ பலபல” – திருவாய்மொழி, 3.10.1.
2409- “செய்ய தாமரைக்கண்ணனாய” – திருவாய்மொழி, 3.6.1.
2410- “எஞ்சலிலமரர்குல முதல்‌ மூவர்தமுள்ளுமாதியையஞ்சி நருலகத்துள்ளீர்கள்‌” – திருவாய்மொழி, 3.6.9.
2411- “எளிவருமியல்வினன்‌” – திருவாய்மொழி, 1.3.2.
2412-இணைவனாமெப்பொருட்கும்‌” – திருவாய்மொழி, 2.8.1.-“
2413-பத்துடையடியவர்‌” – திருவாய்மொழி, 1.3.1.
2414-அணைவதரவணை ” – திருவாய்மொழி, 2.8.1.
2415-“நெஞ்சினால்‌ நினைப்பான்‌ யவனவனாகும்‌ நீள்கடல்‌ வண்ணனே” -திருவாய்மொழி, 3.6.9.
2416) “யே யதா மாம்‌ ப்ரபத்யந்தே தாம்ஸ்த்தைவ பஜாம்யஹம்‌ – எவர்கள்‌ எவ்விதமாயென்னை வணங்குகிறார்களோ, நான்‌ அவர்களை அவ்விதமாகவே அடைகிறேன்‌.” – ஸ்ரீ கீதை, 4.11.
2417-“அர்ச்சயஸ்ஸர்வஸஹிஷ்ணுஃ அர்ச்சக பராதீன அகிலாத்மஸ்திதிஃ ஆராதிக்கத்‌ தகுந்தவராய்‌, எல்லாக்‌ குற்றங்களையும்‌ பொறுக்குமவராய்த்‌ தனது நிலைகளெல்லாம்‌ அர்ச்சகன்‌ இட்ட வழக்காம்படி யிருப்பவராய்‌” ஸ்ரீரங்கராஜஸ்தவம்‌, 74.
2418-“ஒழிவொன்றில்லாத” – திருவாய்மொழி, 3.9.3.
2419-“இழியக்கருதியோர்‌ மானிடம்‌ பாடலென்னாவதே” – திருவாய்மொழி, 3.9.3.
2420-“ஸகல பலப்ரதோஹி விஷ்ணு: – எல்லாப்‌ பலன்களையும்‌ கொடுப்பவர்‌ விஷ்ணு” விஷ்ணுதர்மம்‌,
2421-“பரமம்‌ ஸாம்யமுபைதி – பூர்ணமான ஒப்புமையை அடைகிறான்‌” -முண்டகோபனிஷத்‌.
2422- “வழியைத்தரும்‌ நங்கள்‌ வானவாரீசனைநிற்க” – திருவாய்மொழி, 3.9.3.
2423-“தன்னாகவே கொண்டு” – திருவாய்மொழி, 3.9.4.
2424-“ஸேவா ச்வவீருத்தி ராக்யாதா – பிறரிடம்‌ சேவை செய்வது இழிந்த செயலாகச்‌ சொல்லப்பட்டது, ஆதலால்‌ அதை விட்டுவிடவேண்டும்‌.” மநுஸ்மிருதி.
2425- “சாயாவா ஸத்வமநுகச்சேத்‌ – நிழல் போன்று அவனை விடாது தொடர்க” மூலஸம்ஹிதை.
2426-“ஸா கிமர்த்தம்‌ ந ஸேவ்யதே – வாசுதேவனாகிற மரத்தின்‌ நிழலானது ஏன்‌ அடையப்படவில்லை” – விஹகேச்வரஸம்ஹிதை, 24.14.
2427- “புகழுநல்லொருவன்‌ ” – திருவாய்மொழி, 3.4.1.

ஸூத்ரம்‌ – 222
2428-“அந்த: ப்ரவிஷ்ட: சாஸ்தா ஜநாநாம்‌ – ஆத்மாக்கள்‌ அனைத்தினுடைய உள்ளும்‌ பிரவேசித்து அவற்றை நியமனம்‌ செய்கிறான்‌.” – ஆரணம்‌, 3.20.
2429-“ய ஆத்மாநமந்தரோ யமயதி – ஜீவாத்மாவிற்குள்‌ இருந்துகொண்டு நியமிக்கிறான்‌.” – பிருஹதாரண்யக உபநிஷத்‌.
2430-“சாஸ்தா விஷ்ணு: அசேஷஸ்ய ஜகத: – எல்லா உலகங்களையும்‌ நியமிக்கிறவன்‌ விஷ்ணுவே” – ஸ்ரீவிஷ்ணு புராணம்‌, 1.17.20.
2431-“சாஸ்தா சராசரஸ்யைக: – சராசரங்களோடு கூடின இவ்வுலகங்களை
யெல்லாம்‌ ஒருவனான விஷ்ணுவே நியமன்‌ செய்கின்றவன்‌.”
2432-“ஒழிவில்‌ காலம்‌” – திருவாய்மொழி, 3.3.1.
2433- “வைகுண்டேது பரேலோகே – உலகங்கட்கெல்லாம்‌ தலைவரான விஷ்ணுவானவர்‌ பிராட்டியோடு கூட எல்லாவுலகங்கட்கும்‌ மேலே விருக்கின்ற பரமபதத்தில்‌ எழுந்தருளியிருக்கின்றார்‌.”
2434- “மறுகலிலீசனை” – திருவாய்மொழி, 4.1.10.
2435- “ஈசன்‌ ஞாலமுண்டுமிழ்ந்த” – திருவாய்மொழி, 4.3.2.
2436- “ஈசன்‌ பாலோரவம்‌ பறைதல்‌” – திருவாய்மொழி, 4.10.4.
2437-“ஏர்கொளேழுலகமும்‌ துன்னி முற்றுமாகி நின்ற சோதிஞான மூர்த்தியாய்‌” திருவாய்மொழி, 4.3.8.
2438-“வானத்தும்‌ வானத்துள்ளும்பரும்‌ மண்ணுள்ளும்‌ மண்ணின்‌ கீழ்த்தானத்து மெண்டிசையும்‌ தவிராது நின்றான்‌” – திருவாய்மொழி, 4.5.9.
2439- “ஆயேயிவ்வுலகத்து நிற்பனவும்‌ திரிவனவும்‌ நீயே” – திருவாய்மொழி, 4.9.7.
2440- “வீற்றிருந்தேழுலகும்‌ தனிக்கோல்‌ செல்ல” – திருவாய்மொழி, 4.5.1.
2441- “ஒழிவில்‌ காலமெல்லா முடனாய்‌ மன்னி” – திருவாய்மொழி, 3.3.1.
2442- “பாலனாயேழுலகுண்டு” – திருவாய்மொழி, 4.2.1.
2443- “ஆதியங்காலத்தகலிடங்கீண்டவர்‌ பாதங்கள்‌ மேலணி பைம்பொற்றுழாயென்றே ஓதுமாலெய்தினள்‌” – திருவாய்மொழி, 4.2.6.
2444- “பூவைவீயா நீர்தூவிப்‌ போதால்‌ வணங்கேனேலும்‌ நின்‌ பூவை வீயா மேனிக்குப்‌ பூசும்‌ சாந்தென்னெஞ்சமே” – திருவாய்மொழி, 4.3.1.
2445- “ஏகமூர்த்திக்கே – பூத்தண்மாலை கொண்டுன்னைப்‌ போதால்‌ வணங்கேனேலும்‌ நின்பூத்தண்மாலை நெடுமுடிக்குப்‌ புனையுங்கண்ணி யெனதுயிரே” – திருவாய்மொழி, 4:52:49.
2446- “காதல்மையலேறினேன்‌ ” – திருவாய்மொழி, 4.3.9.
2447- “பேய்ச்சி முலை சுவைத்தாற்கென்‌ பெண்கொடி யேறியபித்தே” திருவாய்மொழி, 4.4.6.
2448- “கோலமேனி காணவாராய்‌ கூவியுங்‌ கொள்ளாயே” – திருவாய்மொழி, 4.7.1.
2449- “ஒண்டொடியாள்‌ திருமகளும்‌ நீயுமே நிலாநிற்பக்‌ கண்டசதிர்‌ கண்டு” திருவாய்மொழி, 4.9.10.
2450- “வீவிலின்பம்‌ மிகவெல்லை நிகழ்ந்தனன்மேவியே” – திருவாய்மொழி, 4.5.3.
2451- “கூட்டரிய திருவடிக்கள்‌ கூட்டினை நான்கண்டேனே” – திருவாய்மொழி, 4.9.8.
2452- “உன்னித்து மற்றொரு தெய்வம்‌ தொழாள்‌ ” – திருவாய்மொழி, 4.6.10.
2453-“உயிரினால்‌ குறைவிலமே” – திருவாய்மொழி, 4.8.10.
2454-உடம்பினால்‌ குறைவிலமே” – திருவாய்மொழி, 4.8.9.
2455-“கொடுவுலகம்‌ காட்டேலே” – திருவாய்மொழி, 4.9.7.
2456-“வேட்கையெல்லாம்‌ விடுத்து” – திருவாய்மொழி, 4.9.9.
2457-ஐங்கருவி கண்டவின்ப மொழிந்தேன்‌” – திருவாய்மொழி, 4.9.10
2458-ஒருநாயகமாயோடவுலகுடனாண்டவர்‌ பெருநாடுகாண விம்மையிலே பிச்சை தாங்கொள்வர்‌” – திருவாய்மொழி, 4.1.1. 2459-“ராஜ்யம்‌ நாம மஹாவயாதி ரசிகித்ஸ்யோ விநாசந: ப்ராதரம்‌ வா ஸுகம்‌ வாபி த்யஜந்தி கலு பூமிபா – இராச்சியமென்பது மருத்துவம்‌ செய்ய முடியாததும்‌ நாசம்‌ உண்டுபண்ணத்தக்கதுமான ஒரு பெருநோய்‌. அதற்காக அரசர்கள்‌ உடன்‌
பிறந்தவர்களையும்‌ பிள்ளைகளையும்‌ விடுகிறார்கள்‌.
2460-“குடிமன்னுமின்‌ சுவர்க்கமெய்தியும்‌ மீள்வர்கள்‌ ” – திருவாய்மொழி, 4.1.9.
2461- “தே தம்‌ புக்த்வா ஸ்வர்க்கலோகம்‌ விசாலம்‌ க்ஷ்ணே புண்யே மர்த்த்யலோகம்‌ விசந்தி – அவர்கள்‌ பரந்த அந்தச்‌ சுவர்க்கலோக வின்பத்தை யநுபவித்துப்‌ புண்ணியம்‌ குறைந்தவுடன்‌ பூலோகத்தை அடைகிறார்கள்‌” – ஸ்ரீகீதை, 9.21.
2462- “இறுகலிறப்பு” – திருவாய்மொழி, 4.1.10.
2463-“த்ரவ்யம்‌ நிந்த்ய ஸுராதி தைவதமதிக்ஷுத்ரஞ்சு பாஹ்யாகமோ த்ருஷ்டிர்‌ தேவலகாச்ச தேசிகஜநா திக்‌ திக்‌ திகேஷாம்‌ க்ரமம்‌ – பூஜைக்குரிய பொருள்‌ உலகத்தாரால்‌ பழிக்கப்படுகின்ற கள்‌ முதலியன, தெய்வமோ மிகத்‌ தாழ்ந்த தெய்வம்‌, சாஸ்திரம்‌ வேதங்கட்குப்‌ புறம்பான காமிகம்‌ முதலான ஆகமங்கள்‌ ,
ஆசிரியர்களோ பூசாரிகள்‌, இப்படிப்பட்டவர்களுடைய முறை மிகவும்‌
பழிக்கத்தக்கது”.
2464-“அங்கோராடுங்கள்ளும்‌” – திருவாய்மொழி, 4.6.7.
2465- “அங்கோர்கள்ளுமிறைச்சியும்‌” – திருவாய்மொழி, 4.6.3.
2466- “கருஞ்சோறும்‌ மற்றைச்‌ செஞ்சோறும்‌” – திருவாய்மொழி, 4.6.4.
2467- “நீரணங்காடு மிளந்தெய்வம்‌” – திருவாய்மொழி, 4.6.2.
2468- “களனிழைத்து” – திருவாய்மொழி, 4.6.4.
2469- “நீரணங்காடுதல்‌ கீழ்மை” – திருவாய்மொழி, 4.6.8.
2470- “ததக்ரோதபரீதேந ஸம்ரக்கநயநேநச – பின்பு சீற்றம்‌ கொண்டவனாயும்‌ சிவந்த கண்களையுடையவனாயு மிருக்கிற வென்னுடைய இடது கை கட்டவிரலின்‌
நுனியால்‌ அந்தப்‌ பிரமனுடைய தலையானது கிள்ளப்பட்டது.” – மாத்சபுராணம்‌.
2471-“யஸ்மாதநபராதஸ்ய – ஒரு குற்றமும்‌ செய்யாத வென்னுடைய கலையானது எந்தக்‌ காரணத்தால்‌ உன்னால்‌ அறுக்கப்பட்டதோ அந்தக்‌ காரணத்தால்‌ நீ சாபத்துடன்‌ கூடினவனாய்‌ மண்டை யோட்டினைக்‌ கையில்‌ ஏந்தினவவனாக ஆவாய்‌.”- மாத்ஸபுராணம்‌.
2472-“தத்ர நாராயண: – அங்குப்‌ பிராட்டியோடு கூடின நாராயணன்‌ என்னால்‌ பிச்சை யாசிக்கப்பட்டான்‌” – மாத்ஸபுராணம்‌..
2473- “விஷ்ணு ப்ரஸாதாத்‌ – அழகிய பார்வதியே! திருமாலின்‌ அருளால்‌ அந்த மண்டையோடானது ஆயிரம்‌ துண்டுகளாக வெடித்தது; கனவில்‌ கண்ட செல்வம்‌ போன்று பலவகையாகச்‌ சென்றது.” – மாத்ஸபுராணம்‌.
2474- “பேசநின்ற சிவனுக்கும்‌ பிரமன்‌ தனக்கும்‌ நாயகனவனே கபால
நன்மோக்கத்துக்‌ கண்டு கொண்மின்‌” – திருவாய்மொழி, 4.10.4.
2475-“இலிங்கத்திட்ட” – திருவாய்மொழி, 4.10.5.
2476-“விளம்புமாறு சமயமும்‌” – திருவாய்மொழி, 4.10.9.
2477- “யந்மயம்‌ ச ஜகத்‌ ஸர்வம்‌ – பராசர முனிவரே! இந்த வுலகம்‌ எதனை ஆத்மாவாக வுடையது?” – ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌, 1.1.5.
2478- “விஷ்ணோஸ்‌ ஸகாசாதுத்பூதம்‌ – இந்த வுலகங்க ளெல்லாம்‌ மஹாவிஷ்ணுவிடமிருந்து வுண்டாயின. அந்த விஷ்ணுவிடத்தினிலேயே லயப்பட்டு இருக்கின்றன.” – ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌, 1.1.41.
2479- “யா வேதபாஹ்யாஸ்‌ ஸ்ம்ருதய: – வேதங்கட்குப்‌ புறம்பான ஸ்மிருதிகள்‌ எவையோ, குத்ருஷ்டிகளான மதங்களெவையோ , அவைகள்‌ எல்லாம்‌ மறுமையில்‌ பலன்களைக்‌ கொடுப்பன வல்ல; அவைகள்‌ தாமஸ நிலைகளாக வுள்ளன என்று சொல்லப்பட்டன.” – மநுஸ்மிருதி,12.95.
2480-“ஓடியோடி – வழியேறிக்‌ கண்டீர்‌” – திருவாய்மொழி, 4.10.7.
2481-“கதாகதம்‌ காமகாமா லபந்தே – ஸ்வர்க்கம்‌ முதலான உலகங்களில்‌ விருப்பமுள்ளவர்கள்‌ போவதையும்‌ வருவதையும்‌ அடைகிறார்கள்‌.” – ஸ்ரீகீதை, 9.21.
2482- “மம மாயா துரத்யயா – என்னுடைய மாயையானது ஒருவராலும்‌ தாண்டமுடியாதது.” – ஸ்ரீகீதை, 7.14.
2483- “மாமேவ யே ப்ரபத்யந்தே – எவர்கள்‌ என்னையே சரணடைகிறார்களோ அவர்கள்‌ இந்த மாயையினைத்‌ தாண்டுகிறார்கள்‌.” – ஸ்ரீகீதை, 7.14.
2484-“நீள்‌ குடக்கூத்தனுக்காட்செய்வதே உறுவதாவது” – திருவாய்மொழி, 4.10.10

ஸூத்ரம்‌ – 223
2485-“ஆவாவென்றருள்‌ செய்து” – திருவாய்மொழி, 5.1.9.
2486-“தானேயின்னருள்‌ செய்து” – திருவாய்மொழி, 5.1.10.
2487-“கலியுகமொன்றுமின்றிக்கே தன்னடியார்க்கருள்‌ செய்யும்‌” – திருவாய்மொழி, 5.2.11.
2488- “பெருமானது தொல்லருளே ” – திருவாய்மொழி, 5.9.9.
2489-“அம்மானாழிப்பிரானவனெவ்விடத்தான்‌ யானார்‌ எம்மாபாவியர்க்கும்‌ விதிவாய்க்கின்று வாய்க்கும்‌ கண்டீர்‌” – திருவாய்மொழி, 5.1.7.
2490- “பொய்யே கைம்மை சொல்லி” – திருவாய்மொழி, 5.1.1.
2491- “உன்னையும்‌ வஞ்சிக்கும்‌ கள்ளமனந்தவிர்ந்தே” – திருவாய்மொழி 5.1.3.
2492- “என்னை முற்றவுந்‌ தானானான்‌” – திருவாய்மொழி, 5.1.10.
2493-“இனியுன்‌னை விட்டென்‌ கொள்வனே” – திருவாய்மொழி, 5.1.3.
2494- “கண்ட சதிர்‌ கண்டொழிந்தேன்‌” – திருவாய்மொழி, 4.9.10.
2495- “பரமாத்மநி யோ ரக்த: – எவன்‌ பரம்பொருளிடத்தில்‌ மிக்க பக்தியையுடையனாய்‌” – பார்ஹஸ்பத்ய ஸ்மிருதி.
2496- “பேரமர்‌ காதல்‌” – திருவாய்மொழி, 5.3.4.
2497- “பின்னின்ற காதல்‌ நோய்‌ நெஞ்சம்‌ பெரிதடும்‌” – திருவாய்மொழி, 5.4.6.
2498- “கழியமிக்கதோர்‌ காதல்‌” – திருவாய்மொழி, 5.5.10.
2499-கடல்ஞாலம்‌ செய்தேனும்‌ யானே” – திருவாய்மொழி, 5.6.1.
2500-வாய்ந்த வழுதிவளநாடன்‌ ” – திருவாய்மொழி, திருவாய்மொழி, 5.6.11.
2501-“உன்னை விட்டொன்று மாற்றகிற்கின்றிலேன்‌ ” – திருவாய்மொழி, 5.6.1.
2502-“ஆராவமுதே யடியேனுடலம்‌ நின்பாலன்பாயே நீராய்‌” – திருவாய்மொழி, 5.8.1.
2503- “வைகலும்‌ வினையேன்‌ மெலிய” – திருவாய்மொழி, 5.9.1.
2504- “நிறந்தனூடுபுக்கென தாவியை நின்று நின்றுருக்கியுண்கின்ற” திருவாய்மொழி, 5.10.1.
2505- “ஸம்ஸாரவிஷவருக்ஷஸ்ய – இவ்வுலக வாழ்வாகிற நச்சு மரத்திற்கு அம்ருதத்திற்கொப்பான இரண்டு கனிகள்‌ உண்டு. அவை எவையெனில்‌, ஒரேகாலத்தில்‌ கேசவனிடத்தில்‌ பக்தியும்‌, அவனடியார்களோடே கூடியிருத்தலுமே யாம்‌.”
2506- “ஒன்றுந்தேவு – மற்றெத்தெய்வம்‌ நாடுதிர்‌”” – திருவாய்மொழி, 4.10.1.
2507-“பாடியாடிப்‌ பரவிச்செனமின்கள்‌ ” – திருவாய்மொழி, 4.10.2.
2508-“தெய்வம்‌ மற்றில்லை” – திருவாய்மொழி, 4.10.3.
2509-“நாயகனவனே” – திருவாய்மொழி, 4.10.4.
2510-“ஒன்றும்‌ பொய்யில்லை போற்றுமினே” – திருவாய்மொழி, 4.10.5. 2511-“அறிந்தோடுமின்‌” – திருவாய்மொழி, 4.10.6.
2512-“ஆதிமூர்த்திக்கடிமை புகுவதுவே” – திருவாய்மொழி, 4.10.7.
2513-“மற்றைத்‌ தெய்வம்‌ விளம்புதிர்‌” – திருவாய்மொழி, 4.10.8.
2514-உளங்கொள்‌ ஞானத்து வைம்மின்‌” – திருவாய்மொழி, 4.10.9.
2515-“ஆட்செய்வதே உறுவதாவது” – திருவாய்மொழி, 4.10.10.
2516-ஆட்செய்தாழிப்‌ பிரானைச்‌ சேர்ந்தவன்‌” – திருவாய்மொழி, 4.10.11.
2517-வைகுந்தன்‌ பூதங்களேயாய்‌” – திருவாய்மொழி, 5.2-5
2518-“தடங்கடல்‌ பள்ளிப்‌ பெருமான்‌ தன்னுடைப்‌ பூதங்களேயாய்‌” – திருவாய்மொழி, 5.2.4.
2519- “தேவர்கள்‌ தாமும்‌ புகுந்து” – திருவாய்மொழி, 5.2.3.
2520- “நேமிப்பிரான்தமர்‌ போந்தார்‌” – திருவாய்மொழி, 5.2.6.
2521- “கண்டோம்‌ கண்டோம்‌” – திருவாய்மொழி, 5.2.2.
2522- “பொலிக பொலிக” – திருவாய்மொழி, 5.2.1.
2523- “த்வய்யஸ்தி மய்யஸ்திச” – உன்னிடத்திலு மிருக்கிறான்‌, என்னிடத்திலுமிருக்கிறான்‌
2524-“ப்ரதியதாம்‌ தாசரதாய மைதிலீ” – ஸ்ரீராமபிரானிடத்தில்‌ சீதாபிராட்டியை ஒப்புவித்திடுக” – ஸ்ரீராமா, யுத்த, 14.34.
2525- “அரக்கரசுரர்‌ பிறந்தீருள்ளீரேல்‌” – திருவாய்மொழி, 5.2.5.
2526- “கொன்றுயிருண்ணும்‌ விசாதி பகைபசிதீயனவெல்லாம்‌. நின்றிவ்வுலகில்‌ கடிவான்‌ நேமிப்பிரான்தமர்‌ போந்தார்‌” – திருவாய்மொழி, 5.2.6.
2527- “திரியும்‌ கலியுகம்‌ நீங்கித்‌ தேவர்கள்‌ தாமும்‌ புகுந்து” – திருவாய்மொழி, 5.2.3.
2528- “பவிஷ்யத்யதரோத்தரம்‌ –
2529- “ இரியப்புகுந்திசை பாடியெங்கு மிடங்கொண்டன ” – திருவாய்மொழி, 5.2.3.
2530- “மேவித்தொழுதுய்ம்மினீர்கள்‌ ” – திருவாய்மொழி, 5.2.9.
2531- “நிறுத்தி நும்முள்ளத்துக்‌ கொள்ளும்‌ தெய்வங்கள்‌” – திருவாய்மொழி, 5.2.7
2532-“நிறுத்தினான்‌ தெய்வங்களாக அத்தெய்வநாயகன்தானே” – திருவாய்மொழி,5.2.8.
2533-“நக்கபிரானோடயனு மிந்திரனும்‌ முதலாகத்‌ தொக்க வமரர்குழாங்கள்‌ கண்ணன்‌ திருமூர்த்தியை – மேவி – மிக்கவுலகுகள்‌ தோறும்‌ – எங்கும்‌ பரந்தன ஒக்கத்தொழகிற்றிராகில்‌ கலியுகமொன்றுமில்லை” – திருவாய்மொழி, 5.2.10.
2534-“விஷ்ணுபக்திபரோ தேவ:”
2535- “அரக்கரசுரர்‌” – திருவாய்மொழி, 5.2.5.
2536-“கண்ணுக்கினியன கண்டோம்‌ தொண்டீரெல்லீரும்‌ வாரீர்‌” – திருவாய்மொழி-5-2-2-

2537-“என்‌ னெஞ்சினால்‌ நோக்கிக்காணீரென்னை முனியாதே” – திருவாய்மொழி-5-5-2
2538-“மநஸி விலஸதாக்ஷணா பக்திஸித்தாஞ்ஜநேந – பக்தியாகிற ஸித்தாஞ்சனத்தையுடைய மனதில்‌ விளங்குகிற யோகக்கண்ணால்‌ வேதாந்தத்தில்‌ மறைந்திருக்கிற நிதிபோன்ற உன்னுடைய பெருமையைப்‌ பார்ப்பவர்கள்‌” -ஸ்ரீகுணரத்னகோசம்‌, 12.

ஸூத்ரம்‌ – 224
2539-“பத்துடையடியவர்‌” – திருவாய்மொழி, 1.3.1.
2540-“ஏறு சேவகனார்க்‌ கென்னையுமுளளெனமின்களே ” – திருவாய்மொழி, 6.1.10.
2541- “திருவிண்ணகர்ச்‌ சேர்ந்தபிரான்‌ வரங்கொள்‌ பாதமல்லாலில்லை யாவர்க்கும்‌ வன்‌ சரணே” – திருவாய்மொழி, 6.3.7.
2542- “வன்சரண்‌ சுரர்க்காய்‌” – திருவாய்மொழி, 6.3.8.
2453- “அடிக்கீழமர்ந்து புகுந்தடியீர்‌ வாழ்மினென்றென்றருள்‌ கொடுக்கும்‌” திருவாய்மொழி, 6.10.11.
2544- “ஸர்வலோக சரண்யாய ராகவாய மஹாத்மநே, நிவேதய மாம்‌ க்ஷிப்ரம்‌ விபீஷண முபஸ்திதம்‌ – எல்லா வுலகங்கட்கும்‌ புகலிடமாக வுள்ளவரும்‌ மகாத்மாவுமான ஸ்ரீராமபிரான்‌ முன்னிலையில்‌, அருகில்‌ வந்து நிற்கிற விபீஷணனாகிய என்னை விரைவில்‌ சென்று தெரிவியுங்கோள்‌ ” – ஸ்ரீராமா, யுத்‌, 17.14.
2545- “ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதிச யாசதே, அபயம்‌ ஸர்வபூதேப்ய: ததாம்யேதத்‌ வரதம்‌ மம: – ஒரு முறை பிரபத்தி செய்தவன்‌ பொருட்டும்‌, நான்‌ உனக்காக விருக்கிறேன்‌ என்று யாசிக்கிறவனுக்கும்‌, எல்லா வுயிர்களிடமிருந்தும்‌ அச்சமின்மையைக்‌ கொடுக்கிறேன்‌. இது என்னுடைய விரதம்‌. எந்நிலையிலும்‌ விடக்கூடாதது”, ஸ்ரீராமா, யுத்‌,18.33.
2546- “வானவர்‌ கோணொடும்‌ நமன்றெழுந்திருவேங்கடம்‌” – திருவாய்மொழி, 3.3.7.
2547- “எழுவார்‌ விடைகொள்வாரீன்துழாயானை வழுவாவகை நினைந்து வைகல்‌ தொழுவார்‌ வினைச்சுடரை நந்துவிக்கும்‌ வேங்கடம்‌” – முதல்‌ திருவந்தாதி, 26.
2548- “போதறிந்து வானரங்கள்‌” – இரண்டாந்‌ திருவந்தாதி, 72.
2549- “கண்டு வணங்கும்‌ களிறு” – மூன்றாந்‌ திருவந்தாதி, 70.
2550- “அவித்யாதோ தேவே பரிப்ருடதயா வா விதிதயா – அஞ்ஞானத்தாலாவது,
அளவிட்டறிய வொண்ணாதவன்‌ என்ற இறைவன்‌ மாட்டு ஞானத்தாலாவது, தன்‌ பக்தியினுடைய மேன்மையாலாவது, இவ்வுலகில்‌ பகவானைத்‌ தவிர வேறு உபாயமுண்டு என்றறியாதவர்களுக்கு இந்தப்‌ பகவான்‌ பேறாகவும்‌ பேற்றினை
யடைதற்குரிய வழியாகவுமாகிறான்‌ என்று, பகவானாகிய செளநகமகரிஷியானவர்‌ ஜிதந்தை என்ற பெயரையுடைய மந்திரத்தின்‌ உட்பொருளை விரித்துரைத்தார்‌.” -பட்டர்‌.
2551-“உன்னாலல்லால்‌ யாவராலுமொன்றும்‌ குறை வேண்டேன்‌” – திருவாய்மொழி, 5.8.3.
2552-“அங்குற்றேனல்லேனிங்குற்றேனல்லேனுன்னைக்‌ காணுமவாவில்‌ வீழ்ந்து நானெங்குற்றேனுமல்லேன்‌” – திருவாய்மொழி, 5.7.2.
2553- “என்னான்‌ செய்கேன்‌” – திருவாய்மொழி, 5.8.3.
2554- “பூவார்கழல்களருவினையேன்‌ பொருந்துமாறு புணராய்‌” – திருவாய்மொழி, 6.10.4.
2555- மெய்யமர் காதல் – திருவாய்மொழி, 6.8.2.
2556-“களைகண்‌ மற்றிலேன்‌” – திருவாய்மொழி, 5.8.8.
2557-ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத்‌ தந்தொழிந்தாய் – திருவாய்மொழி, 5.7.10.
2558-“கழல்களவையே சரணாகக்‌ கொண்ட” – திருவாய்மொழி, 5.8.11.
2559-“அடிமேல்‌ சேமங்கொள்‌ தென்குருகூர்ச்‌ சடகோபன்‌” – திருவாய்மொழி 5.9.11.
2560-“நாகணை மிசை நம்பிரான்‌ சரணே சரண்‌ நமக்கென்று நாடோறுமேகசிந்தையனாய்‌” – திருவாய்மொழி, 5.10.11.
2561-“வைகல்பூங்கழிவாய்‌ வந்து மேயுங்குருகினங்காள்‌ கனிவாய்ப்பெருமானைக்கண்டு வினையாட்டியேன்‌ காதன்மை – கைகள்‌ கூப்பிச்சொல்லீர்‌” – திருவாய்மொழி, 6.1.1.
2562- “ஏறு சேவகனார்க் கென்னையுமுளளென்மின்கள்‌ ” – திருவாய்மொழி, 6.1.10.
2563-“உபாப்யாமேவ பக்ஷாப்யாம்‌ – எப்படி இரண்டு சிறகுகளாலே பறவைகள்‌ ஆகாயத்தில்‌ பறக்கின்றவோ, அப்படியே ஞானம்‌, கர்மம்‌ எனனுமிந்த இரண்டாலும்‌ புருஷோத்தமனான இறைவன்‌ அடையப்படுகிறான்‌. ”
2564- “போகுநம்பி” – திருவாய்மொழி, 6.2.2.
2565-“கழகமேறேல்‌ நம்பி” – திருவாய்மொழி, 6.2.6.
2566- “அழித்தாயுன்‌ திருவடியால்‌” – திருவாய்மொழி, 6.2.9.
2567-“பிறந்தவாறு” – திருவாய்மொழி, 5.10.1.
2568- “நிறந்தனூடுபுக்கெனதாவியை நின்று நின்றுருக்கியுண்கின்ற” – திருவாய்மொழி, 5.10.1.
2569- “பையவேநிலையும்‌ வந்தென்‌ நெஞ்சையுருக்குங்கள்‌ ” – திருவாய்மொழி, 5.10.3.
2570-“உள்ளமுள்குடைந்தென்னுயிரை யுருக்கியுண்ணும்‌” – திருவாய்மொழி 5.10.4. 2571- “ஊடுபுக்கென தாவியை யுருக்கியுண்டிடுகின்ற” – திருவாய்மொழி, 5.10.10.
2572-“குரவையாய்ச்சியர்‌ ” – திருவாய்மொழி, 6.4.1.
2573-“எனன குறைவெனக்கு” – திருவாய்மொழி, 6.4.1.
2574- “நண்ணிநான்‌ வணங்கப்பெற்றே னெனக்கார்‌ பிறர்‌ நாயகர்‌” – திருவாய்மொழி, 6.4.10.
2575- “ஸக்ருதேவ – ஒரே முறை”
2576-“பிதரம்‌ மாதரம்‌ தாராந்‌ புத்ராந்‌ பந்தூந்‌ ஸகீந்‌ குருந்‌, ரத்நாநி தநதாந்யாநி க்ஷேத்ராணி ௪ க்ருஹாணிச, ஸர்வதர்மாம்ச்ச ஸந்த்யஜய ஸர்வகாமாம்ச்ச ஸாக்ஷ்ராந்‌ , லோகவிக்ராந்த சரணெளசரணம்‌ தேவரஜம்‌ விபோ – தந்தையையும்‌ தாயையும்‌ மனைவியையும்‌ பிள்ளைகளையும்‌ பந்துக்களையும்‌ தோழர்களையும்‌ ஆசிரியர்களையும்‌ இரத்தினங்களையும்‌ செல்வங்களையும்‌ தானியங்களையும்‌ வயல்களையும்‌ வீடுகளையும்‌ எல்லாத் தருமங்களையும்‌ கைவல்யமுட்பட விரும்பப்படும்‌ எல்லாப்பயன்களையும்‌ முற்றத்துறந்து, ஓ பிரபுவே! உன்னுடைய உலகத்தையளந்த திருவடிகளைச்‌ சரணமாக அடைந்தேன்‌.”
2577-“ஆக்நேயமஷ்டமஞ்சைவ – ஆக்நேயம்‌ எட்டாவதாகும்‌; பவிஷ்யத்‌ புராணம்‌ ஒன்பதாவது புராணமாக நினைக்கத்தக்கது. ”
2578- “மாத்ருதேவோ பவ பித்ருதேவோ பவ – தாயைத்‌ தெய்வமாக உடையை ஆவாய்‌; தந்தையை தெய்வமாக உடையை ஆவாய்‌.” – கைத்திரியோபநிஷத்‌.
2579- “புந்நாம்நோ நரகாத்‌ த்ராயத இதி புத்ர: – புத்‌ என்னும்‌ நரகத்தினின்றும்‌ காப்பாற்றுகிறான்‌; ஆதலால்‌, புத்திரன்‌ என்று பெயர்‌.”
2580- “நம்மைக்‌ கைவலிந்து” – திருவாய்மொழி, 6.5.7.
2581- “இழந்தது சங்கே” – திருவாய்மொழி, 6.6.1.
2582- “இதெல்லாம்‌ கிடக்கவினிப்போய்‌” – திருவாய்மொழி, 6.7.9.
2583- “எம்மையொன்றும்‌ நினைத்திலளே” – திருவாய்மொழி, 6.7.9.
2584-“இன்றெனக்குதவாதகன்ற” – திருவாய்மொழி, 6.7.6.
2585- “ஸர்வாந்‌ போகாந்‌ பரித்யஜ்ய – எல்லா போகங்களையும்‌ முற்றத்‌ துறந்து” சரணாகதி கத்யம்‌.
2586- “பொன்னுலகாளீரோ புவனிமுழுதாளீரோ” – திருவாய்மொழி, 6.8.1.
2587- “நெய்யமரின்னடிசில்‌ நிச்சல்‌ பாலொடு மேவீரோ” – திருவாய்மொழி, 6.8.2.
2588-“ஓடி வந்தென குழல்மேலொளி மாமலரூதீரோ” – திருவாய்மொழி, 6.8.3. 2589-“என்னைப்‌ புறத்திட்டின்னம்‌ கெடுப்பாயோ” – திருவாய்மொழி, 6.9.8.
2590-பலநீ காட்டிப்‌ படுப்பாயோ” – திருவாய்மொழி, 6.9.9.
2591-“த்வமேவ மாதாச பிதா த்வமேவ ஸர்வம்‌ மம தேவதேவ – தேவதேவனே!
எனக்கு தாயும்‌ நீயே, தந்தையும்‌ நீயே, உறவும்‌ நீயே, ஆசாரியனும்‌ நீயே, கல்வியும்‌ நீயே, செல்வமும்‌ நீயே, நீயே எல்லாமும்‌.” – கத்யத்ரயம்‌.
2592-“தேவபிரானையே தந்தை தாயென்றடைந்த” – திருவாய்மொழி, 6.5.11.
2593- “உண்ணுஞ்சோறு பருகுநீர்‌ தின்னும்‌ வெற்றிலையுமெல்லாம்‌ கண்ணன்‌ ”திருவாய்மொழி, 6.7.1. 2594) “வைத்தமாநிதியாம்‌ மதுததனையே” – திருவாய்மொழி, 6.7.11.
2595- “பூவைபைங்கிளிகள்‌ பந்து தூதை பூம்புட்டில்கள்‌ யாவையும்‌ திருமால்‌ திருநாமங்களே கூவியெழும்‌” – திருவாய்மொழி, 6.7.3.
2596-“கோலத் திருமாமகளோடுன்னைக் கூடாதே சாலப்பலநாளடியேனின்னம்‌ தளர்வேனோ” – திருவாய்மொழி, 6.9.1.
2597- “தீயோடுடன்‌ சேர்‌ மெழுகாயுலகில்‌ திரிவேனோ” – திருவாய்மொழி, 6.9.6.
2598- “கூவிக்கொள்ளுங்காலமின்னம்‌ குறுகாதோ” – திருவாய்மொழி, 6.9.9.
2599- “புணரேய்‌ நின்றமரமிரண்டின்‌ நடுவே போன முதல்வாவோ” – திருவாய்மொழி, 6.10.5.
2600- “ச்ரியா ஸார்த்தம்‌ –
2601- “லோகவிக்ராந்த சரணெள சரணம்‌ தேவரஜம்‌ விபோ – உலகங்களை யளந்த வுன்னுடைய திருவடிகளை இறைவா! சரணமடைந்தேன ”
2602- “தெய்வநாயகன்‌ நாரணன்‌ திரிவிக்கிரமன்‌” – திருவாய்மொழி, 5.7.11.
2603-“மாண்குறள்‌ கோலப்பிரான்‌” – திருவாய்மொழி, 5.9.6.
2604-“அடியை மூன்றையிரந்தவாறும்‌” – திருவாய்மொழி, 5.10.9.
2605- “மின்கொள் சேர்‌ புரிநூல்‌ குறளாயகல்‌ ஞாலங்கொண்ட வன்கள்வன்‌” திருவாய்மொழி, 6.1.11.
2606- “மூன்றடி” – திருவாய்மொழி,
2607–“காண்மின்களுலகீரென்று கண்முகப்பே நிமிர்ந்த” – திருவாய்மொழி, 6.3.11.
2608-“அகல்கொள்‌ வையமளந்த மாயன்‌” – திருவாய்மொழி, 6.4.6.
2609-“திசைஞாலந்தாவியளந்த்தும்‌” – திருவாய்மொழி, 6.5.3.
2610- “வையமளந்த மணாளன்‌” – திருவாய்மொழி, 6.6.1.
2611- “மண்ணும்‌ விண்ணுங்கொண்ட மாயவம்மான்‌” – திருவாய்மொழி, 6.9.2.
2612- “ஓரடியாலெவ்வுலகும்‌ தடவந்த” – திருவாய்மொழி, 6.9.6.
2613- “தாவிவையங்‌ கொண்ட தடந்தாமரைகள்‌” – திருவாய்மொழி, 6.9.9.
2614- “எந்நாளே நாம்‌ மண்ணளந்த விணைத்தாமரைகள்‌ காண்பதற்கென்று” திருவாய்மொழி, 6.10.6.
2615- “அன்று ஞாலமளந்தபிரான்‌ பரன்சென்று சேர்திருவேங்கடமாமலை” திருவாய்மொழி, 3.3.8.
2616- “திலதமுலகுக்காய்‌ நின்ற திருவேங்கடம்‌” – திருவாய்மொழி, 6.10.1.
2617-“அகலகில்லேனிறையுமென்றலர்மேல்‌ மங்கையுறை மார்பா” – திருவாய்மொழி, 6.10.1 0.
2618-“நிகரில்புகழாய்‌” – திருவாய்மொழி, 6.10.10.
2619- “திருவேங்கடத்தானே ” – திருவாய்மொழி, 6.10.2.
2620- “புகலொன்றில்லா அடியேன்‌ உன்னடிக்கீழ்‌ அமர்ந்து புகுந்தேன்‌” திருவாய்மொழி, 6.10.10.
2621- “சரணெள சரணம்‌ ப்ரபத்யே” – த்வயம்‌.
2622- “பத்துடையடியவர்‌” – திருவாய்மொழி, 1.3.1.
2623- “பிணக்கறவறுவகைச்‌ சமயமும்‌” – திருவாய்மொழி, 1.3.5.
2624- “வணக்குடைத்தவநெறி வழிநின்று” – திருவாய்மொழி, 1.3.5.
2625-“வேதப்புனித விருக்கை நாவில்‌ கொண்டு – ஞானவிதி பிழையாமே – அச்சுதன்‌ தன்னை மேவித்‌ தொழுதுய்ம்மினீர்கள்‌ ” – திருவாய்மொழி, 5.2.9.
2626- “எய்தக்கூவுதலாவதேயெனக்கு” – திருவாய்மொழி, 5.7.5.
2627- “என்னான்‌ செய்கேன்‌” – திருவாய்மொழி, 5.8.3.
2628- “தந்தனன்‌ தனதாள்‌ நிழல்‌” – திருவாய்மொழி, 6.3.9.
2629- “திருவிண்னகர்‌ மன்னுபிரான்‌ கழல்களன்றி மற்றோர்‌ களைகணிலங் காண்மின்களே ” – திருவாய்மொழி, 6.3.10.

ஸூத்ரம்‌ – 225
2630-“எண்ணிலாப்‌ பெருமாயனே” – திருவாய்மொழி, 7.1.1.
2631-குணங்கள்‌ கொண்ட மூர்த்தியோர்‌ மூவராய்ப்‌ படைத்தளித்துக்‌ கெடுக்கும்‌” திருவாய்மொழி, 7.1.11.
2632-பால துன்பங்களின்பங்கள்‌ படைத்தாய்‌”-7-2-7-
2633-“ஊழி தோறூழி -7-3-11-
2634-“மாயா வாமனனே -7-8-7-
2635-“உள்ளப்‌ பல் யோகு செய்து –7-8-4-
2636-“தெளிவுற்றுவீவின்றி – திருவாய்மொழி, 7.6.10.
2637-“ஏற்றரும்‌ வைகுந்தத்தை யருளும்‌” -7-6-1
2638-“புற்பா முதலாப்‌ புல்லெறும்பாதி யொன்றின்றியே நற்பாலுக்குய்த்தனன்‌ ” திருவாய்மொழி, 7.5.1.
2639-நாட்டையளித்துய்யச்‌ செய்து”-திருவாய்மொழி, 7.8.7.
2640-“சேட்பால்‌ பழம்‌ பகைவன்‌ சிசுபாலன்‌ திருவடிதாட்பாலடைந்த” -7-5-3-
2641-அடியேனுனபாதமகலகில்லேனிறையும்‌” -6-10-10-
2642-அடிக்கழமர்ந்து புகுந்தேன்‌” -6-10-10-
2643-அகற்ற நீவைத்த மாயவல்லைம்புலன்களாமவை” – 5-7-8-
2644-நலிவானின்ன மெண்ணுகின்றாய்‌” – திருவாய்மொழி, 7.1.1.
2645-அன்புருகி நீற்குமது நிற்கச்‌ சுமடுதந்தாய்‌” – திருவாய்மொழி, 7.1.10. –
2646-“விண்ணுளார்‌ பெருமானேயோ -7-1-5-
2647-முன்பரவைகடைந்தமுதங்‌ கொண்ட மூர்த்தீயோ”-7-1-10-
2648-கலங்காப்‌ பெருநகரம்‌”- மூன்றாந்‌ திருவந்தாதி-5-
2649-“கங்குலும்‌ பகலும்‌ கண்துயிலறியாள்‌-7-2-1-
2650-இட்டகாலிட்டகையளாயிருக்கும்‌”-7-2-4-
2651-“சிந்திக்கும்‌ திசைக்கும்‌” -7-2-5-
2652-ஆசா சிந்தா ஸ்ம்ருதி: – ஆசை, சிந்தை,நினைவு, பேசுதல்‌, அழுதல்‌,
பித்துப் பிடித்தது போன்றிருத்தல்‌, மயக்கம்‌, மோஹம்‌, வியாதி, சாதல்‌ என்று
சொல்லப்படும்‌ இப் பத்தும்‌ காமத்தால்‌ உண்டாகும்‌ விகாரங்கள்‌ ”
2653-திருவரங்கத்தாய்‌ இவள்‌ திறத்தென்செய்கின்றாய் –
2654-“என்செய்திட்டாய்‌” -7-2-3-
2655-என்‌ சிந்தித்தாய்‌” –7-2-4-
2656-என்செய்கேனென்திருமகட்கு” – திருவாய்மொழி, 7.2.8.
2657-அன்னையர்காளென்னைத்‌ தேற்ற வேண்டா-7-3-9-
2658-கண்ணபிரானுக்கென்‌ பெண்மை தோற்றேன்‌” -7-3-5-
2659-குன்றமெடுத்த பிரானடியாரொடு மொன்‌றி நின்ற சடகோபன்‌” -திருவாய்மொழி, 7.4.11.
2660-கற்பாரிராமபிரானை யல்லால்‌ மற்றுங்கற்பரோ”-7-5-1-
2661-பாமருவுமூவுலகும்‌ படைத்த பற்பநாபாவோ” – திருவாய்மொழி, 7.6.1.
2662-தனியேன்‌ தனியாளாவோ?” -7-6-1-

2663-“உண்ணிலாவிய” – திருவாய்மொழி, 7.1.1.
2664-“சூழவும்‌ தாமரை நாண்மலர்போல்‌ வந்துதோன்றும்‌ இணைக்கூற்றங்கொலோ வறியேன்‌” – திருவாய்மொழி, 7.7.1.
2665-“கண்ணன்‌ கோளிழை வாண்முகமாய்க்‌ கொடியேனுயிர்‌ கொள்கின்றதே” திருவாய்மொழி, 7.7.8.
2666- “பாசங்கள்‌ நீக்கி” – திருவாய்மொழி, 7.7.5.
2667- “மாயங்கள்‌ செய்து வைத்தி” – திருவாய்மொழி, 7.7.5.
2668-“உறப்‌ பலவின்‌ கவி” – திருவாய்மொழி, 7.9.9.
2669-“என்‌ சொல்லி நிற்பனோ” – திருவாய்மொழி, 7.9.1.
2670-“எந்நாள்‌ சிந்தித்தார்வனோ” – திருவாய்மொழி, 7.9.7.
2671- “பார்விண்ணீர்‌ முற்றுங்கலந்து பருகிலுமார்வனோ” – திருவாய்மொழி, 7.9.8.
2672-“இறப்பெதிர்காலம்‌ பருகிலுமார்வனோ” – திருவாய்மொழி, 7.9.9.
2673-உதவிக் கைம்மாறு” – திருவாய்மொழி, 7.9.10.
2674-“எதுவுமொன்றுமில்லை செய்வதிங்குமங்கே” – திருவாய்மொழி 7.9.10.
2675- “செம்பவளத்திரள்வாய்‌ தன்‌ சரிதைகேட்டான்‌” – பெருமாள்‌ திருமொழி ,10.8. )
2676- “இன்பம்‌ பயக்க வெழில்மலர்‌ மாதருந்தானு மிவ்வேழுலகை யின்பம்‌ பயக்க இனிதுடன்‌ வீற்றிருந்து” – திருவாய்மொழி, 7.10.1.
2677- “நிலத்தேவர்‌ குழு வணங்கும்‌ சிந்தைமகிழ்‌ திருவாறன்‌ விளை” திருவாய்மொழி, 7.10.10.
2678- “திருவாறன்விளையுறை தீர்த்தனுக்கற்றபின்‌ – சிந்தை மற்றொன்றின்‌ திறத்த்தல்லாத்‌ தன்மை தேவபிரானறியும்‌” – திருவாய்மொழி, 7.10.10.
2679- “ஹாவுஹாவுஹாவு – ஸாமகானம்‌.
2680- “நீணகரமதுவே மலர்ச்சோலைகள்‌ சூழ்‌ திருவாறன்விளை வாணனையாயிரந்தோள்‌ துணித்தான்‌ சரணன்றி மற்றொன்றிலம்‌” – திருவாய்மொழி, 7.10.7.
2681-“உள்ளித்தொழுமின்‌ தொண்டீர்‌” – திருவாய்மொழி, 7.10.6.

ஸூத்ரம்‌ – 226
2682-“தேவிமாராவார்‌ திருமகள்‌ பூமி யேவமற்றமரராட்செய்வார்‌ மேவியவுலகம்‌ மூன்றவையாட்சி” – திருவாய்மொழி, 8.1.1.
2683-“பணியாவமரர்‌ பணிவும்‌ பண்பும்‌ தாமேயாம்‌” – திருவாய்மொழி,8.3.6.
2684- “நேர்பட்டநிறை மூவுலகுக்கும்‌ நாயகன்‌” – திருவாய்மொழி,8.9.11.
2685- “நல்லகோட்‌ பாட்டுலகங்கள்‌ மூன்றினுள்ளும்‌ தான்நிறைந்த” -திருவாய்மொழி, 8.10.11.
2686-“காணுமாறருளாயென்றென்றே கலங்கி” – திருவாய்மொழி, 8.1.2. 2687-“உமருகந்துகந்த” – திருவாய்மொழி, 8.1.4.
2688-“அறிவொன்றும்‌ சங்கிப்பன்‌” – திருவாய்மொழி, 8.1.7.
2689-“இறந்ததும்‌ நீயே” – திருவாய்மொழி, 8.1.7.
2690-“நன்றுமஞ்சுவன்‌ நரகம்‌ நானடைதல்‌” – திருவாய்மொழி, 8.1.9.

2691-“தாள்களை யெனக்கே தலைத்தலைச் சிறப்பத் தந்த” – திருவாய்மொழி, 8.1.10. 2692-“மலரடிப்போதுகளென்னெஞ்சத்தெப்பொழுதுமிருத்தி வணங்கப்‌ பலரடியார்‌ முன்பருளிய” – திருவாய்மொழி, 7.10.5. 2693-“உதவிக் கைம்மாறென் னுயிரென்ன வுற்றெண்ணில்‌ அதுவுமற்றாங்கவன் தன்னது” திருவாய்மொழி, 7.9.10.
2694-“வேந்தர்‌ தலைவன்‌ சனகராசன்‌ ” – பெரியாழ்வார்‌ திருமொழி, 4.1.2.
2695- “விஷ்ணோச்‌ ஸ்ரீரநபாயிநீ – விஷ்ணுவை விட்டு ஒருபோதும்‌ பிரியாதவள்‌” ஸ்ரீ விஷ்ணுபுராணம்‌, 1.8.17.
2696- “ராகவத்வேபவத்‌ ஸீதா – இறைவன்‌ இராமபிரானாக அவதரித்தபோது பிராட்டி சீதையாக அவதரித்தாள்‌” – ஸ்ரீ விஷ்ணு புராணம்‌, 1.9.144.
2697- “இயம்‌ ஸீதா மம ஸுதா ஸஹதர்மசரீதவ, ப்ரதீச்சு சைநாம்‌ பத்ரம்‌ தே பாணிம்‌ க்ருஹ்ணீஷ்வ பாணிநா – என்னுடைய மகளான இந்தச்‌ சீதை உம்முடன்‌ கூடவிருந்து தர்மானுஷ்டானங்களைச்‌ செய்யத்‌ தகுந்தவள்‌; இவளை அங்கீகரித்துக்‌ கொள்ளும்‌; உமக்கு மங்களம்‌ உண்டாக்க்‌ கடவது; உம்முடைய கையினால்‌ இவளுடைய கையினைப்‌ பிடித்துக்கொள்ளும்‌.” – ஸ்ரீராமா, பால.
2698- “பேருதவிக்கைம்மாறாத்‌ தோள்களையாரத்தழுவி யென்னுயிரை யறவிலை செய்தனன்‌” – திருவாய்மொழி,
2699- “அதீவ ராமச்‌ சுசுபே – இராமன்‌ மிகவும்‌ விளங்கினான்‌” – ஸ்ரீராமாயணம்‌.
2700– “அப்ரமேயம்‌ ஹி தத்‌ தேஜோ யஸ்ய ஸா ஜநகாத்மஜா – அந்தச்‌ சீதாப்பிராட்டி எவருக்கு மனைவியாக விருக்கிறுளோ அவருடைய பராக்கிரமம்‌ அளவிடமுடியாதது” –
2701-“சோதி” – திருவாய்மொழி, 8.1.10.
2702- “தோள்களாயிரத்தாய்‌” – திருவாய்மொழி, 8.1.10.
2703- “பாதமடைவதன்‌ பாசத்தாலே மற்ற வன்பாசங்கள்‌ முற்றவிட்டு” திருவாய்மொழி, 8.2.11.
2704- “ஆத்வாரமநுவவராஜ மங்களாந்யபிதந்யுஷீ – கருத்த திருக்கண்களையுடையவளான பிராட்டி மங்களங்களைச்‌ சொல்லிக்‌ கொண்டு வாசற்படியளவும்‌ பெருமாளைப்‌ பின்தொடர்ந்து சென்றாள்‌” – ஸ்ரீராமாயணம்‌, அமோகத்‌, 16.21.
2705- “ஆளுமாளாராழியுஞ்‌ சங்கும்‌ சுமப்பார்தாம்‌” – திருவாய்மொழி,8.3.3.
2706- “துல்யசீல – தகுந்த சீலத்தையும்‌, வயதினையும்‌, நடத்தையினையும்‌, ஒத்த குலத்தினையும்‌, அரச இலக்கணங்களையும்‌ உடையவளான பிராட்டிக்குப்‌ பெருமாள்‌ தகுந்தவர்‌; பெருமாளுக்குக்‌ கருத்த கண்களையுடையவளான பிராட்டியும்‌ தகுந்தவள்‌.” – ஸ்ரீராமா, சுந்‌, 16.5.
2707- “வார்கடாவருவி” – திருவாய்மொழி, 8.4.1.
2708- “அமர்ந்த மாயோனை முக்கணம்மானை நான்முகனை யமர்ந்தேனே” திருவாய்மொழி, 8.4.4.
2709- “ஹிமஹதநலிநீவ – பனியால்‌ தாக்கப்பெற்ற தாமரைப்‌ பொய்கையைப்‌ போன்று அழகினை யிழந்தவளாய்‌, மிக்க துக்கத்தாலே பீடிக்கப்பட்டவளாய்‌, துணையைப்‌ பிரிந்த பெண்சக்கரவாகப்‌ பறவையைப்‌ போன்று வருந்தத்தக்க நிலைமையை அடைந்திருக்கிறாள்‌” – ஸ்ரீராமா,சுந்‌,16.30.
2710- “காணவாராயென்றென்று கண்ணும்‌ வாயும்‌ துவர்ந்து” – திருவாய்மொழி, 8.5.2.
2711- “குணாத்‌ ரூபகுணாச்சாபி – தன்னுடைய தந்தையாரால்‌ திருமணம்‌ செய்விக்கப்பட்ட மனைவி என்ற காரணத்தால்‌, சீதாப்பிராட்டி பெருமாளுடைய விருப்பத்திற்கு உரியவளானாள்‌. உத்தம குணங்களாலும்‌ திருமேனியின்‌ அழகு நற்குடிப்பிறப்பு இவைகளாலும்‌ அந்த அன்பானது மேலும்‌ மேலும்‌ வளர்ந்தோங்கியது.” – ஸ்ரீராமா,பால,77.25.
2712- “தஸ்யா நித்யம்‌ ஹ்ருதி ஸமர்ப்பித: – சீதாப்பிராட்டியின்‌ நெஞ்சில்‌ எப்போதும்‌ தங்கியிருப்பவன்‌ ஸ்ரீராமன்‌.” – ஸ்ரீராமா,பால,77.25.
2713- “உள்ளுந்தோறும்‌ தித்திப்பான்‌” – திருவாய்மொழி, 8.6.3.
2714- “ஒருக்கடுத்துள்ளேயுறையும்‌ பிரான்‌ கண்டீர்‌” – திருவாய்மொழி, 8.6.2.
2715- “இருந்தான்‌ கண்டு கொண்டு” – திருவாய்மொழி, 8.7.2.
2716-“ஸமா த்வாதச தத்ராஹம்‌ – “நான்‌ அயோத்யையில்‌ ஸ்ரீராமபிரானுடைய
திருமாளிகையில்‌ பன்னிரண்டு ஆண்டுகள்‌ முடிய மனிதர்களுக்கு உரித்தல்லாத
தேவபோகத்தை அநுபவித்தவளாய்‌ எல்லா விருப்பமும்‌ நிறையப்பெற்றவளாய்‌ இருந்தேன்‌.” – ஸ்ரீராமா,சுந்‌,33.17. 2717) “தருந்தானருள்தானினி யானறியேன்‌” – திருவாய்மொழி, 8.7.2.
2718-“செவ்வாய்முறுவலோடெனதுள்ளத்திருந்த அவ்வாயன்றி யானறியேன்‌ மற்றருளே” – திருவாய்மொழி, 8.7.7.
2719- “மருள்தானீதோ” – திருவாய்மொழி, 8.7.3.
2720- “பின்னையார்க்கவன்‌ தன்னைக்‌ கொடுக்கும்‌” – திருவாய்மொழி, 8.7.6.
2721- “அருள்தானினி யானறியேன்‌” – திருவாய்மொழி, 8.7.3.
2722- “சிறியேனுடைச்சிந்தையுள்‌ – நின்றொழிந்தார்‌” – திருவாய்மொழி, 8.7.8.
2723- “வளவேழுலகில்‌ – களவேழ்‌ வெண்ணெய்தொடுவுண்ட கள்வா வென்பன்‌ அருவினையேன்‌” – திருவாய்மொழி, 1.5.1.
2724- “வணங்கினாலுன்பெருமை மாதணாதோ” – திருவாய்மொழி,1.5.2.
2725- “அடியேன்‌ காண்பானலற்றுவனிதனில்‌ மிக்கோரயர்வுண்டே” – திருவாய்மொழி, 1.5.7.
2726- “பொருமாநீள்படை” – திருவாய்மொழி, 1.10.1.
2727- “சிந்தையுள்வைப்பன சொல்லுவன்‌ பாவியேன்‌” – திருவாய்மொழி,1.7.1.
2728- “அந்தாமத்தன்பு” – திருவாய்மொழி, 2.5.1.
2729-“அல்லாவியுள்‌ கலந்த” – திருவாய்மொழி, 2.5.5.
2730-“என் முடிவு காணாதே என்னுள்கலந்தானை” – திருவாய்மொழி, 2.5.8.
2731- “யானுந்தானாயொழிந்தான்‌ – தேனும்‌ பாலும்‌ கன்னலும்முதுமாகித்தித்தித்து” திருவாய்மொழி, 8.8.4.
2732- “சென்று சென்று பரம்பரமாய்‌” – திருவாய்மொழி, 8.8.5.
2733- “நினையும்‌ நீர்மையதன்றிவட்கிது நின்று நினைக்கப்புக்கால்‌” – திருவாய்மொழி, 8.9.5.

2734-“அருமாயன்‌ பேரன்றிப்‌ பேச்சிலள்‌” – திருவாய்மொழி, 8.9.1.
2735-“அன்றி மற்றோருபாயமென்‌ ” – திருவாய்மொழி, 8.9.10.
2736-“மாகாயாம்‌ பூக்கொள்மேனி நான்குதோள்‌ பொன்னாழிக்கை யென்னம்மான்‌ நீக்கமில்லா வடியார்தம்மடியாரடியாரடியா ரெங்கோக்களவர்க்கே குடிகளாய்ச்‌ செல்லும்‌ நல்லகோட்பாடே – ஊழிதோறூழி – வாய்க்கதமியேற்கு” திருவாய்மொழி, 8.10.10.
2737- “திருக்கடித்தானத்தை ஏத்தநில்லா குறிக்கொள்மினிடரே” – திருவாய்மொழி, 8.6.6.
2738- “கோவிந்தன்‌ மண்விண்‌ முழுதுமளந்த வொண்டாமரை மண்ணவர்‌ தாம்‌ தொழ வானவர்‌ தாம்‌ வந்து நண்ணுதிருக்கடித்தானநகரே – இடர்கெடவுள்ளத்துக்‌ கொள்மின்‌” – திருவாய்மொழி, 8.6.7.

ஸூத்ரம்‌ – 227
2739-“எண்டிசையும்‌ கீழும்‌ மேலும்‌ முற்றவுமுண்டபிரான்‌” – திருவாய்மொழி, 9.1.1.
2740- “அவனே யகல்‌ ஞாலம்‌ படைத்திடந்தான்‌ அவனே அஃதுண்டுமிழ்ந்தானளந்தான்‌” – திருவாய்மொழி, 9.3.2.
2741- “அகலிடம்‌ படைத்திடந்துண்டுமிழ்ந்தளந்தெங்குமளிக்கின்ற வாயன்‌” திருவாய்மொழி, 9.9.2.
2742- “ஆலின்‌ மேலாலமர்ந்தான்‌ ” – திருவாய்மொழி, 9.10.1.
2743- “பாதோஸ்ய விச்வாபூதாநி, த்ரிபாதஸ்யாம்ருதம்‌ திவி – இந்தப்‌ பரமபுருஷனுக்கு எல்லாச்‌ சராசரங்களும்‌ ஒரு பாதம்‌; (கால்‌ பாகம்‌) பரமபதத்தில்‌ நித்யமானது மூன்று பாதம்‌ (முக்கால்‌ பாகம்‌)” – புருஷ ஸுத்தம்‌.
2744- “இருத்தும்‌ வியந்து” – திருவாய்மொழி, 8.7.1.
2745- “ஆருயிர்‌ பட்டதெனதுயிர்‌ பட்டது” – திருவாய்மொழி, 9.6.9.
2746- “சோதி வாய்‌ திறந்துன்‌ தாமரைக்‌ கண்களால்‌ நோக்காய்‌” – திருவாய்மொழி, 9.2.1.
2747- “பாத பங்கயமே தலைக்கணியாய்‌” – திருவாய்மொழி, 9.2.2.
2748- “உன்‌ தாமரை மங்கையும்‌ நீயு மிடங்கொள்மூவுலகுந்‌ தொழவிருந்தருளாய்‌” திருவாய்மொழி, 9.2.3.
2749- “கனிவாய்சிவப்ப நீ காணவாராய்‌” – திருவாய்மொழி, 9.2.4.
2750) “நின்பன்னிலா முத்தம்‌ தவழ்கதிர்‌ முறுவல்‌ செய்து நின்‌ திருக்கண்தாமரை தயங்க நின்றருளாய்‌” – திருவாய்மொழி, 9.2.5.
2751- “கூவுதல்‌ வருதல்‌ செய்யாய்‌” – திருவாய்மொழி, 9.2.10.
2752- “மாக வைகுந்தம்‌ காண்பதற்கென்‌ மனமேகமெண்ணு மிராப்‌ பகலின்றியே” திருவாய்மொழி, 9.2.7.
2753- “காணக்கருது மென்கண்ணே” – திருவாய்மொழி, 9.4.1.
2754- “எழ நண்ணி நாமும்‌ நம்வானநாடனோடொன்றினோம்‌” – திருவாய்மொழி, 9.5.10.
2755-“திருக்காட்கரை மருவியமாயன்தன்‌ மாயம்‌ நினைதொறு – நெஞ்சம்‌ உருகுமால்‌” – திருவாய்மொழி, 9.6.1.
2756- “தமரோடங்‌ குறைவார்க்குத்‌ தக்கிலமே கேளீரே” – திருவாய்மொழி,9.7.2.
2757- “கிளிமொழியாளலற்றியசொல்‌” – திருவாய்மொழி, 9.7.11.
2758- “கவையில்‌ மனமின்றிக்‌ கண்ணீர்கள்‌ கலுழ்வன்‌” – திருவாய்மொழி,9.8.3.
2759- “பூர்ணே சதுர்த்தசே வர்ஷே – பதினான்கு ஆண்டுகள்‌ நிறைந்தபோது” ஸ்ரீராமா, யுத்‌, 127.1.
2760- “மாஸாதூர்த்வம்‌ ந ஜீவிஷ்யே – ஒரு மாதத்திற்கு மேல்‌ நான்‌ பிழைத்திருக்க மாட்டேன்‌.” – ஸ்ரீராமா, சுந்‌, 40.10.
2761- “அவனை விட்டகல்வதற்கே யிரங்கி” – திருவாய்மொழி,
2762- “நயநப்ரீதி: – முதலில்‌ பார்த்தலால்‌ உண்டாகும்‌ ப்ரீதி, பின்‌ அதிக நினைவு,உறக்கமின்மை, இளைத்தல்‌, மற்றைப்‌ பொருள்களில்‌ வெறுப்பு, நாணமின்மை, பித்துப்பிடித்த்துபோல்‌ இருத்தல்‌, மூர்ச்சை, சாக்காடு என்னுமிவை மன்மதனுடைய பத்து நிலைகள்‌.”
2763- “ப்ரதமஸ்‌ த்வபிலாஷ: – முதலில்‌ ஆசை யுண்டாகும்‌, இரண்டாவது சிந்தை யுண்டாகும்‌, மூன்றாவது அதே நினைவு உண்டாகும்‌, நான்காவது அவள்‌ குணங்கள்‌ சொல்லுவது, ஐந்தாவது முயற்சி, ஆறாவது பிதறுதல்‌, ஏழாவது பைத்தியம்‌, எட்டாவது நோய்‌, ஒன்பதாவது செயலற்றிருக்கை, அவ்வாறே பத்தாவது சாக்காடு.”
2764- “நாட்கடலைக்‌ கழிமினே” – திருவாய்மொழி, 1.6.7.
2765- “பூர்ணே சதுர்த்தசே வர்ஷே – பதினான்கு ஆண்டுகள்‌ நிறைவில்‌” – ஸ்ரீராமா, யுத்‌, 127.1.
2766- “நாளை வதுவை மணமென்று நாளிட்டு” – நாய்ச்சியார்‌ திருமொழி, 6.2.
2767-மரணமானால்‌” – திருவாய்மொழி, 9.10.5.
2768- “இம்மடவுலகர்‌” – திருவாய்மொழி, 9.2.7.
2769-“கொண்ட பெண்டிர்‌” – திருவாய்மொழி, 9.1.1.
2770-“துணையும்‌ சார்வும்‌” – திருவாய்மொழி, 9.1.2.
2771 “பொருள்கையுண்டாய்‌” – திருவாய்மொழி, 9.1.3.
2772- “அரணமாவர்‌” – திருவாய்மொழி, 9.1.4.
2773- “சதிரமென்று தம்மைத்‌ தாமே சம்மதித்து” – திருவாய்மொழி, 9.1.5.
2774- “இல்லை கண்டீரின்பம்‌” – திருவாய்மொழி, 9.1.5.
2775-“யாதுமில்லை மிக்கதனில்‌” – திருவாய்மொழி, 9.1.9.
2776-“மற்றொன்றில்லை சுருங்கச்‌ சொன்னோம்‌ மாநிலத்தெவ்வுயிர்க்கும்‌ சிற்றவேண்டா சிந்திப்பேயமையும்‌ கண்டீர்கள்‌” – திருவாய்மொழி, 9.1.7.
2777- “கண்ணலல்லாலில்லை கண்டீர்‌ சரண்‌” – திருவாய்மொழி, 9.1.9.
2778- “மாமேகம்‌ சரணம்‌ வ்ரஜ – என்னையே சரணமாகப்‌ பற்று” – ஸ்ரீகீதை,18.66. 2779) 2779-“வடமதுரைப்‌ பிறந்தான்‌ குற்றமில்‌ சீர்கற்று வைகல்‌ வாழ்தல்‌” திருவாய்மொழி, 9.1.7.

2780-“ஸக்ருதேவ ஹி சாஸ்த்ரார்த்த: – இந்தச்‌ சாஸ்த்ரத்தின்‌ உட்பொருளான பிரபத்தி ஒரு முறையே செய்யத்தக்கதாய்‌, செய்யும்‌ மனிதனை இந்த ஸம்ஸாரத்தினின்றும்‌ தாண்டச்‌ செய்யும்‌; மனிதர்களுக்குப்‌ புத்தியில்‌ திடமின்மையாலே இதனையொழிந்த ஸாதனம்‌ விரும்பப்படுகின்றது.”
2781-“மாலை நண்ணித்‌ தொழுதெழுமினோ – காலை மாலை கமல மலரிட்டு நீர்‌” திருவாய்மொழி, 9.10.1.
2782-“விண்டு வாடா மலரித்து நீரிறைஞ்சுமின்‌” – திருவாய்மொழி, 9.10.3. 2783-“தேனைவாடா மலரிட்டு நீரிறைஞ்சுமின்‌” – திருவாய்மொழி, 9.10.4.
2784-“தனதன்பர்க்கு” – திருவாய்மொழி, 9.10.5. )
2785-“சரணமாகும்‌ தனதாளடைந்தார்க் கெல்லாம்‌ மரணமானால்‌ வைகுந்தங்‌கொடுக்கும்‌” – திருவாய்மொழி, 9.10.5.
2786- “திருக்கண்ணபுரம்‌ சொல்ல நாளுந்துயர்‌ பாடு சாராவே” – திருவாய்மொழி, 9.10.10.
2787- “இப் பத்தும்‌ பாடியாடிப்‌ பணிமினவன்‌ தாள்களையே” – திருவாய்மொழி, 9.10.11.
2788- “நெறியெல்லா மெடுத்துரைத்த” – திருவாய்மொழி, 4.8.6.

ஸூத்ரம்‌ – 228
2789-“சுரிகுழற்கமலக்கட்‌ கனிவாய்‌” – திருவாய்மொழி, 10.1.1.
2790-“அஞ்சுனமேனி” – திருவாய்மொழி, 10.3.3.
2791-“புனல்மைந்நின்றவரை போலும்‌ திருவுருவம்‌” – திருவாய்மொழி ,10. 6.8. 2792-“பொல்லாக்‌ கனிவாய்த்‌ தாமரைக்கண்‌ கருமாணிக்கம்‌” திருவாய்மொழி ,10.10.1.
2793-“புனக்காயாநிறத்த புண்டரீகக்‌ கட்செங்கனிவாய்‌” – திருவாய்மொழி ,10.10. 6.
2794- “காமரூபங்‌ கொண்டெழுந்தளிப்பான ” – திருவாய்மொழி, 10.1.10.
2795-அவனுடையருள்‌ பெறும்‌ போதரிதால்‌” – திருவாய்மொழி, 9.9.6.
2796-“அவனருள்பெறு மளவாவிநில்லாது” – திருவாய்மொழி, 9.9.6.
2797-“மரணமானால்‌” – திருவாய்மொழி, 9.10.5.
2798- “வானேற வழிதந்த” – திருவாய்மொழி, 10.6.5.
2799-“அண்டமூவுலகளந்தவன்‌ ” – திருவாய்மொழி, 10.1.5.
2800-“அவனடி நிழல்தடம்‌” – திருவாய்மொழி, 10.1.2.
2801- “பாதேயம்‌ புண்டரீகாக்ஷ நாமஸங்கீர்த்தநாம்ருதம்‌ – தாமரைக்கண்ணனாகிற எம்பெருமானுடைய திருநாமசங்கீர்த்தனம்‌ என்ற அமுதம்‌ வழியில்‌ உண்ணும்‌ உணவு” – காருடம்‌.
2802- “தயரதன்‌ பெற்ற மரதகமணித்தடம்‌” – திருவாய்மொழி, 10.1.8.
2803- “கூத்தன்‌ கோவலன்‌” – திருவாய்மொழி, 10.1.6.
2804- “குஹமாஸாத்ய தர்மாத்மா நிஷாதாதிபதிம்‌ ப்ரியம்‌ – தர்மாத்மாவான ஸ்ரீராமபிரான்‌, அன்பிற்குரியவனும்‌ வேடர்களுக்குத்‌ தலைவனுமான குகனையடைந்து” – ஸ்ரீராமா, பால, 1:29.
2805- “மாழைமான்‌ மடநோக்கி உன்‌ தோழியும்பியெம்பி” – பெரிய திருமொழி, 5.8.1.

2806-“உகந்த தோழன்‌ நீ” – பெரிய திருமொழி, 5.8.1.
2807-“ஸோப்யகச்சந்‌ மஹாதேஜாச்‌ சபரீம்‌ – பேரொளியுடைய ஸ்ரீராமபிரான்‌ அந்தச்‌ சபரியிடம்‌ சென்றார்‌” – ஸ்ரீராமா, பால, 1.58.
2808-“சக்ஷுஷா தவ ஸெளம்யேந பூதாஸ்மி ரகுநந்தந – ஏ ரகுநந்தனா! தேவரீருடைய அழகிய திருக்கண்களால்‌ தூய்மை செய்யப்பட்டவளாக ஆனேன்‌” – ஸ்ரீராமா, ஆரண்ய, 74.14.
2809- “யா கதிர்‌ யஜ்ஞசீலாநாம்‌ – வேள்வி செய்தலையே தன்மையாக வுடையவர்களுக்கு அடையும்‌ உலகம்‌ எதுவோ, பஞ்சாக்கினியின்‌ மத்தியில்‌ நின்று தவம்‌ செய்கிறவர்களுக்கு அடையும்‌ உலகம்‌ எதுவோ, என்னால்‌ கட்டளை யிடப்பட்டவனான நீ மிகச்‌ சிறந்த அந்த உலகத்தை அடைக.” – ஸ்ரீராமா, ஆரண்‌, 68:29, 30.
2810- “ஸுக்ரீவம்‌ நாதமிச்சதி – உலகநாதனான ஸ்ரீராமபிரான்‌ ஸுக்ரீவனை நாதனாக விரும்புகிறார்‌” – ஸ்ரீராமா, கிஷ்‌, 4:18.
2811- “ஒன்றின்றியே நற்பாலுக்குய்த்தனன்‌” – திருவாய்மொழி, 7:5:1.
2812- “அயோத்தியில்‌ வாழும்‌ சராசரம்‌” – திருவாய்மொழி, 7.5.1.
2813 “சிந்தயந்தீ ஜகத்ஸூதிம்‌ – பரம்பொருளும்‌ உலக்காரணனுமான கண்ணபிரானைத்‌ தியானம்‌ செய்துகொண்டு மூச்சு இல்லாமல்‌ மற்றொரு கோபகன்னியானவள்‌ மோக்ஷத்தை அடைந்தாள்‌” – ஸ்ரீவிஷ்ணு புராணம்‌, 5.10.22. 2814) “ஸுகந்தமேதத்‌ ராஜார்ஹம்‌ – அழகிய முகமுடையவளே! இது வாசனை கலந்தது, இது அரசனுக்குத்‌ தகுந்த்து, இது மனோகரமாக விருப்பது, எங்கள்‌ இருவருடைய சரீரத்துக்குத்‌ தகுதியான சந்தனத்தைக்‌ கொடு” ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌, 5.20.6.
2815-“தந்யோகமர்ச்சயிஷ்யாமி – திருவருள்‌ புரிதலையே இயல்பாகவுடைய கிருஷ்ண
பலராமர்கள்‌ இருவரும்‌ என்‌ வீட்டிற்கு வந்தார்கள்‌; ஆதலால்‌ நான்‌ பேறு
பெற்றவன்‌ ஆனேன்‌; கைங்கர்ய ரூபமான பூசையைச்‌ செய்யப்போகிறேன்‌.” –
ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌, 5.19.21.
2816-“தர்மே மநச்ச – மங்களம்‌ உள்ளவனே! உன்னுடைய மனம்‌ எல்லாக்‌ காலத்திலும்‌ தர்மத்திலேயே நிலைத்திருக்கப்‌ போகிறது, உன்‌ வம்சத்தில்‌ பிறந்தவர்கள்‌ நீண்ட ஆயுளைப்‌ பெறுவார்கள்‌.” – ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌,5.9.26.
2817- “நவம்‌ சவமிதம்‌ – இது புதிய பிணம்‌, புண்ணியமானது, வேத்த்தின்‌ கரை கண்டது, வேள்வி செய்தலையே இயல்பாகவுடைய பெரிய ஞானியான பிராமணன்‌, உத்தமமான பிணம்‌.” – ஹரிவம்சம்‌.
2818- “யதந்ந: புருஷோ பவதி – எந்த வுணவை ஒருவன்‌ கொள்ளுகிறானோ அந்த வுணவை அவனுடைய தெய்வங்களும்‌ கொள்ளுகின்றன.” – ஸ்ரீராமா, அயோத்‌, 102.30.
2819- “வேண்டடிசிலுண்ணும்போதீதென்று பார்த்திருந்து நெடுநோக்குக்கொள்ளும்‌ பத்தவிலோசனத்து” – திருவாய்மொழி, நாய்ச்சியார்‌ திருமொழி, 12.6.
2820- “மீள வவன்‌ மகனை” – பெரியாழ்வார்‌ திருமொழி,1.5.2.
2821- “அவன்‌ தம்பிக்கு” – பெருமாள்‌ திருமொழி, 10.7.

  1. “அநுஜோ ராவணஸ்யாஹம்‌ – நான் இராவணன்‌ தம்பி; அவனாலே அவமானப்படுத்தப்பட்டேன்‌.”- ஸ்ரீராமா, யுத்த, 19.4.
    2823-ராகவம்‌ சரணம்‌ கத: – இராகவனைச்‌ சரணமாக வடைந்தேன்‌.யுத்த, 17.14.
    2824- “பரமாபதமாபந்நோ – பெரிய ஆபத்தினை யடைந்தவனாய்‌ நாராயணனையே தியானம்‌ செய்து கொண்டிருந்த அந்தக் கஜேந்திர ஆழ்வான்
    எம்பெருமானை நினைத்தான்‌.”-விஷ்ணு தர்மம்
    2825-“நஞ்சு சோர்வதோர் வெஞ்சின அரவம் -திருமொழி, 5.8.4.
    2826- “மாக மா நிலம் முழுவதும் வந்திறைஞ்சும் -பெரிய திருமொழி, 5.8.5. 2827- “மாமுனி பெற்ற மைந்தன்‌ ” -5-8-6-
    2828-“திருமோகூர் ஆத்தன் -10-1-6-
  2. “காள மேகத்தை அன்றி -10-1-1-
  3. “நாமுமக்கு அறியச்சொன்ன -10-2-9-
  4. “நாளேலறியேன்‌” –9-8-4
  5. “மரணமானால்‌” -9-10-5-
  6. “ஸுப்ரபாதாசமே நிசா – இரவும் நல்ல விடிவையுடையதாக எனக்கு ஆகப் போகிறது.” – ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌, 5.17.3.
    2835-“துணிபிரிந்தார்‌ துயரமும்‌ நினைகிலை” -10-3-4-
    2836-“பசுமேய்க்கப்‌ போகேல்‌” – 10-3-9
    2837-“என் கை கழியேல்‌” – திருவாய்மொழி, 10.3.8.
    2838-“அவன்‌ பசுநிரை மேய்ப் பொழிப்பான் உரைத்தன -10-311-
    2839-“மீள்கின்றதில்லைப்‌ பிறவித்‌ துயர் கடிந்தோம்‌”-104-3-
    2840 “நிலைபேர்க்கலாகாமை நிச்சித்திருந்தேன்‌ ”-10-4-4-
    2841-“நபிபேதி குதச்சந – ஆனந்தம் அச்சம்‌ கொள்ளுகிறானில்லை.” – தைத்திரீய உபனிஷத்‌.
    2842-“தொழுதெழென்‌ மனனே”-1-1-1-
    2843-“முந்துற்ற நெஞ்சே” – பெரிய திருவந்தாதி, 1.
    2844- “பணி நெஞ்சே நாளும்‌ பரமபரம்பரனை ”-10-4-7-
    2845- “வாழி யென்னெஞ்சே மறவாது வாழ் கண்டாய்‌” -10-4-8-
    2846-மருள் ஒழி நீ மடநெஞ்சே” -10-6-1-
    2847-நரகத்தை நகு நெஞ்சே”-10-6-5
    2848- வாழி மனமே கைவிடேல்‌”-10-7-9
    2849-திருவாறன்விளை எத்தனை மேவி வலம் செய்து கை தொழக்கூடுங்கொல்
    திருவாய்மொழி, 7.10.9.

2850-“தொண்டீர்‌ வம்மின்‌” – திருவாய்மொழி, 10.1.4.
2851-“கொண்ட கோயிலை வலஞ்செய்திங்காடுதும்‌ கூத்தே” – திருவாய்மொழி, 10.1.5.
2852-எண்ணுமினெந்தை நாமம்‌” – திருவாய்மொழி, 10.2.5.
2853-“பேசுமின்‌ கூசமின்றி” – திருவாய்மொழி, 10.2.4.
2854-“நமர்களோ சொல்லக்கேண்மின்‌” – திருவாய்மொழி, 10.2.8.
2855-“படமுடையரவில்‌ பள்ளி பயின்றவன்‌ பாதங்காண நடமினோ” -திருவாய்மொழி, 10.2.1.
285-“அனந்தபுரநகர்‌ புகுதுமின்றே” – திருவாய்மொழி, 10.2.1.
2857–“பிணக்கற” – திருவாய்மொழி, 1.3.5.
2858-“வணக்குடைத்‌ தவநெறி” – திருவாய்மொழி, 1.3.5.
2859-“சார்வே தவநெறிக்குத்‌ தாமோதரன்‌ தாள்கள்‌” – திருவாய்மொழி,10.4.1.
2860-“வீடுமின்‌ முற்றம்‌”- திருவாய்மொழி, 1.2.1.
2861-“பத்துடையடியவர்‌” – திருவாய்மொழி, 1.3.1.
2862-“தவநெறிக்குப்‌ பரமன்‌ பணித்த” – பட்டோலை.
2863-“பண்டே பரமன்‌ பணித்த பணிவகையே கண்டேன்‌ கமலமலர்ப்பாதம்‌” திருவாய்மொழி, 10.4.1.
2864- “வீடுமின்‌ என்று த்யாஜ்யோபாதேய தோஷ குண பரித்யாக ஸமர்ப்பண க்ரமத்தை ஸாலம்பநமந்த்ரமாக உபதேசித்து” –

ஸூத்ரம்‌, 219
2865-“அவனுரைத்த மார்க்கத்தே நின்று இருபசை மலமறவுணர்வுகொண்டு நலஞ்செய்வது”

ஸூத்ரம்‌, 219
2866-“பிணக்கறத்‌ தொடங்கி வேதப்புனித விறுதிசொன்ன ” – ஸூத்ரம்‌, 224.
2867-“எண்பெருக்கந்நலத்தொண்பொருளீறில வண்புகழ்‌ நாரணன்‌” திருவாய்மொழி, 1.2.10.
2868-“எண்ணும்‌ திருநாமம்‌” – திருவாய்மொழி, 10.5.1.
2869-“நாரணனெம்மான்‌” – திருவாய்மொழி, 10.5.2.
2870- “மாதவனென்றோதவல்லீரேல்‌” – திருவாய்மொழி, 10.5.7.
2871- “தாள்வாய்‌ மலரிட்டு நாள்வாய்‌ நாடீர்‌” – திருவாய்மொழி, 10.5.4.
2872-பாடீரவன்‌ நாமம்‌” – திருவாய்மொழி, 10.5.5.
2873-“சுனைநன்‌ மலரிட்டு நினைமின்‌ நெடியானே” – திருவாய்மொழி ,10.5.10.
2874-“செஞ்சொற்கவிகாளுயிர்காத்‌ தாட்செய்மின்‌” – திருவாய்மொழி, 10.7.1.
2875-தன்பால்‌ மனம் வைக்கத் திருத்தி” – திருவாய்மொழி, 1.5.10.
2876-“வளவேழுலகு” – திருவாய்மொழி, 1.5.1.
2877-“வீடுதிருத்துவான்‌” – திருவாய்மொழி, 1.5.10.
2878-“ஊரும்‌ நாடுமுலகமும்‌ தன்னைப்போல்‌” – திருவாய்மொழி, 6.7.2.
2879- “இன்று விண்ணுலகம்‌ தருவானாய்‌ விரைகின்றான்‌” – திருவாய்மொழி, 10.6.3. 2880-“கோவிந்தன்‌ குடிகொண்டான்‌” – திருவாய்மொழி, 10.6.7.
2881-“என்மாயவாக்கை யிதனுள்‌ புக்கு” – திருவாய்மொழி, 10.7.3.
2882-“திருமாலிருஞ்சோலைமலையே” – திருவாய்மொழி, 10.7.8.
2883- “தானநகர்கள்‌” – திருவாய்மொழி, 8.6.8.

  1. “அங்கநாமங்கநாமந்தரே மாதவோ மாதவம்‌ மாதவஞ்‌ சாந்தரேணாங்கநா ஒவ்வொரு பெண்ணிற்கு நடுவே கண்ணன்‌, ஒவ்வொரு கண்ணனுக்கும்‌ நடுவே ஒவ்வொரு பெண்‌” – கர்ணாம்ருதம்‌.
    2885-“ஏகஸ்மிந்நேவ கோவிந்த: – ஓ முனிவரே! கிருஷ்ணன்‌ ஒரே காலத்தில்‌ வெவ்வேறு வீடுகளில்‌ இருந்துகொண்டு சாஸ்திரங்களில்‌ கூறிய தருமத்தின்படி அவர்களைத்‌ திருமணம்‌ செய்துகொண்டார்‌.” – ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌, 5.31.17.
    2886- “உவாஸ விப்ரஸர்வாஸம்‌ – இரவில்‌ அவர்கள்‌ வீடுகளில்‌ கண்ணன்‌ பல சரீரங்களை எடுத்துக்கொண்டு வசித்தார்‌.” – ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌,3.31.20.
    2887- “பொங்கைம்புலனும்‌ பொறியைந்தும்‌ கருமேந்திரியமைம்பூதம்‌ இங்கிவ்வுயிரேய்‌ பிரகிருதி மானாங்கார மனங்கள்‌” – திருவாய்மொழி,10.8.10.
    2888- “உன்‌ மாமாயை – மங்கவொட்டு” – திருவாய்மொழி, 10.8.10.
    2889- “மடித்தேன்‌ மனை வாழ்க்கையுள்‌ நிற்பதோர்‌ மாயையை” – திருவாய்மொழி, 10.8.3.
    2890- “வானே தருவானெனக்காய்‌” – திருவாய்மொழி, 10.8.5.
    2891- “கருத்தின்‌ கட்பெரியன்‌” – திருவாய்மொழி, 10.8.8.
    2892- “இன்றென்னைப்‌ பொருளாக்கி” – திருவாய்மொழி, 10.8.9.
    2893- “யூயமிந்த்ரிய கிங்கரா: – நீங்கள்‌ இந்திரியங்களுக்கு வேலை செய்கின்றவர்கள்‌” – வில்லிபுத்தூர்‌ பகவர்‌ வார்த்தை.
    2894- “தூராக்குழி தூர்த்தெனெநாளகன்றிருப்பன்‌” – திருவாய்மொழி, 5.8.6.
    2895-“அற்பசாரங்களவை சுவைத்தகனரெழிந்தேன்‌ ” – திருவாய்மொழி, 3.2.6.
    2896-“ஓரைவர்‌ யாவரையும்‌ மயக்க நீ வைத்த” – திருவாய்மொழி, 7.1.8.
    2897- “அகற்ற நீ வைத்த மாயவல்லைம்புலன்கள்‌ ” – திருவாய்மொழி, 5.7.8.
    2898- “அந்நாள்‌ நீ தந்த வாக்கை” – திருவாய்மொழி, 3.2.1.
    2899- “அது நிற்கச்சுமடு தந்தாய்‌” – திருவாய்மொழி, 7.1.10.
    2900- “முன்‌ செய்த முழுவினை” – திருவாய்மொழி, 1.4.2.
    2901- “துயரமேதரு துன்பவின்ப வினைகளாய்‌” – திருவாய்மொழி, 3.6.8.
    2902- “உற்றவிருவினையாய்‌” – திருவாய்மொழி, 10.10.8.
    2903- “ஈவிலாத தீவினைகளெத்தனை செய்தனன்்‌கொல்‌” – திருவாய்மொழி 4.7.3. 2904- “மதியிலேன்‌ வல்வினையே மாளாதோ” – திருவாய்மொழி, 1.4.3.
    2905-“தானாங்காரமாய்ப்புக்குத்‌ தானே தானே யானான்‌” – திருவாய்மொழி ,10.7.11
    2906-“செய்கைப்பயனுண்பேனும்‌ யானே” – திருவாய்மொழி, 5.6.4.
    2907-“கருமமும்‌ கருமபலனுமாகிய” – திருவாய்மொழி, 3.5.10.
    2908- “யானே யென்னை யறியகிலாதே யானே யென்தனதே யென்றிருந்தேன்‌” திருவாய்மொழி, 2.9.9.
    2909- “எஞ்ஞான்றும்‌” – திருவாய்மொழி, 3.2.7.
    2910- “மெய்ஞ்ஞானம் இன்றி வினை இயல் பிறப்பழுந்தி -3-2-7-
    2911- அயர்ப்பாய் தேற்றமாய் -7-8-6-
    2912-மாட்டாத பல சமய மதி கொடுத்தாய் -3-1-4-

2913-“உள்ளம்‌ பேதஞ்‌ செய்திட்டு உயிருண்ட வுபாயங்களும்‌” – திருவாய்மொழி, 5.10.4.
2914-யாதானுமோராக்கையில்‌ புக்கு” – திருவிருத்தம்‌, 95
2915-யாதானும்‌ பற்றி நீங்கும்‌ விரதம்‌” – திருவிருத்தம்‌, 95
2916-“ அகமேனியொழியாமே” – திருவாய்மொழி, 9.7.10.
2917-உயிர்களின்‌ உருவமான சரீரமானது சிறந்தது என்று அறிந்துகொள்‌.” – ஸ்ரீகீதை, 7.5.
2918-“நல்கித்தான்‌ காத்தளிக்கும்‌ பொழிலேழும்‌ வினையேற்கே , நல்கத்தானாகாதோ நாரணனைக்‌ கண்டக்கால்‌” – திருவாய்மொழி, 1.4.5.
2919-“தனிமாப்‌ புகழே எஞ்ஞான்றும்‌ நிற்கும்படியாய்த்தான்‌ தோன்றி” திருவாய்மொழி, 8.10.7.
2920- “பிணக்கியாவையும்‌ யாவரும்‌ பிழையாமல்‌ பேதித்தும்‌ பேதியாததோர்‌
கணக்கில்‌ வெள்ளக்கதிர்‌ ஞான மூர்த்தியினாய்‌” – திருவாய்மொழி, 6.2.8. 2921-“ஏகமூர்த்தி” – திருவாய்மொழி, 4.3.3. 2922-“பூசும்‌ சாந்து” – திருவாய்மொழி, 4.3.2. 2923-“தனி நின்ற சார்விலாமூர்த்தி” – பெரிய திருவந்தாதி, 71.
2924-“ருத்ரம்‌ ஸமாச்ரிதோ தேவா – தேவர்கள்‌ சிவனை அடைகிறார்கள்‌; சிவன்‌
பிரமனை அடைகிறான்‌; பிரமன்‌ என்னை அடைகிறான்‌; நான்‌ ஒருவரையும்‌ அடைவதில்லை.” – பாரதம்‌, ஆச்‌, 118.37. 2925-“அவனே அகல்ஞாலம்‌ படைத்திடந்தான்‌” – திருவாய்மொழி, 9.3.2. 2926-“அவனே மற்றெல்லாமுமறிந்தனமே” – திருவாய்மொழி, 9.3.2.
2927-“நெறிகாட்டி நீக்குதியோ” – பெரிய திருவந்தாதி, 6.
2928-“அருகும்‌ சுவடும்‌ தெரிவுணரோம்‌” – பெரிய திருவந்தாதி, 8.
2929-“நானேறப்பெறுகின்றேன்‌” – திருவாய்மொழி, 10.6.5.
2930- “சழ்விசும்பணிமுகில்‌ தூரிய முழக்கின ஆழ்கடலலைதிரை கையெடுத்தாடின ” – திருவாய்மொழி, 10.9.1.
2931- “கீதங்கள்‌ பாடினர்‌ கின்னரர்‌ கருடர்கள்‌” – திருவாய்மொழி, 10.9.5.
2932-காளங்கள்‌ வலம்புரி கலந்தெங்குமிசைத்தனர்‌ ” – திருவாய்மொழி,10.9.6.
2933- “வாளொண்கண்‌ மடந்தையர்‌ வாழ்த்தினர்‌” – திருவாய்மொழி, 10.9.6. 2934-“தொடர்ந்தெங்கும்‌ தோத்திரம்‌ சொல்லினர்‌” – திருவாய்மொழி, 10.9.7.
2935- “தலைமிசையாய்‌ வந்திட்டினி நான்போகலொட்டேன்‌” – திருவாய்மொழி, 10.10.1.
2936-“தலைமேல்‌ புனைந்தேன்‌ சரணங்கள்‌” – திருவாய்மொழி, 10.4.4.
2937- “தலைமேல தாளிணைகள்‌ ” – திருவாய்மொழி, 10.6.6.
2938- “திருவாணை நின்னாணைகண்டாய்‌” – திருவாய்மொழி, 10.10.2.
2939-கூசஞ்செய்யாது கொண்டாய்‌” – திருவாய்மொழி ,10.10.2.
2940-ஆவிக்கோர்‌ பற்றுக்கொம்பு நின்னலாலறிகின்றிலேன்யான்‌” – திருவாய்மொழி-10-10-3-

2941-“எம்பரஞ்சாதிக்கலுற்றென்னைப்‌ போரவிட்டிட்டாய்‌” – திருவாய்மொழி,10.10.4.
2942-“போரவிட்டிட்டென்னை நீ புறம்போக்கலுற்றால்‌ பின்னையானாரைக்‌
கொண்டெத்தையந்தோ எனதென்பதென்‌ யானென்பதென்‌ ” – திருவாய்மொழி, 10.10.5.
2943-“எனதாவியையின்னுயிரை மனக்காராமை மன்னியுண்டிட்டா யினியுண்டொழியாய்‌” – திருவாய்மொழி, 10.10.6.
2944- “கோலமலர்ப்பாவைக்கன்பாகிய வென்னன்பேயோ ” – திருவாய்மொழி ,10.10.7.
2945- “பெற்றினிப்போக்குவனோ உன்னையென்‌ தனிப்பேருயிரை” – திருவாய்மொழி, 10.10.8.
2946-“முதல்தனிவித்து” – திருவாய்மொழி, 10.10.9.
2947-“அதனில்‌ பெரிய வென்னவா ” – திருவாய்மொழி, 10.10.10.
2948- “என்னவாவறச்‌ சூழ்ந்தாயே” – திருவாய்மொழி, 10.10.10.
2949- “அங்கே பரதமாரோப்ய முதித: பரிஷஸ்வஜே – சந்தோஷம்‌ அடைந்த பெருமாள்‌ பரதாழ்வானைத்‌ தம்முடைய மடியின்மேல்‌ வைத்துக்கொண்டு தழுவினார்‌.” – ஸ்ரீராமா, யுத்‌, 134.39.
2950-“அவாவற்று வீடு பெற்ற குருகூர்ச்சடகோபன்‌” – திருவாய்மொழி ,10.10.11.
2951- “அவாவறச்‌ குழரியை” – திருவாய்மொழி, 10.10.11.

ஸூத்ரம்‌ – 229
2952-“பொய்ந்நின்ற ஞானமும்‌ பொல்லாவொழுக்கு மழுக்குடம்புமிநின்ற நீர்மையினியாமுறாமை” – திருவிருத்தம்‌, 1
2953-“உற்றேனுகந்து பணிசெய்து உனபாதம்‌ பெற்றேன்‌” – திருவாய்மொழி,10.8.10.
2954- “ஊரும்நாடுமுலகமும்‌ தன்னைப்போல்‌” – திருவாய்மொழி, 6.7.2.
2955- “இனிவளை காப்பாரார்‌” – திருவிருத்தம்‌, 13.
2956- “இனியுன்திருவருளாலன்றிக்‌ காப்பரிதால்‌” – திருவிருத்தம்‌, 62.
2957- “இனியவர்கண்‌ தங்காது” – திருவாய்மொழி, 1.4.4.
2958- “இனியுனது வாயலகிலின்னடிசில்‌ வைப்பாரை நாடாயே” – திருவாய்மொழி, 1.4.8.
2959- “இனியம்மைச்‌ சோரேலே” – திருவாய்மொழி, 2.1.10.
2960- “எந்நாள்‌ யானுன்னையினிவந்து கூடுவனே” – திருவாய்மொழி, 3.2.1.
2961-“எங்கினித்‌ தலைப்பெய்வனே” – திருவாய்மொழி, 3.2.9.
2962-“இனியென்னாரமுதே கூயருளாயே” – திருவாய்மொழி, 4.9.6.
2963- “ஆவிகாப்பாரினியார்‌” – திருவாய்மொழி, 5.4.2.
2964- “நெஞ்சிடர்‌ தீர்ப்பாரினியார்‌” – திருவாய்மொழி, 5.4.9.
2965- “இனி யுன்னை விட்டொன்று மாற்றகிற்கின்றிலேன்‌ ” – திருவாய்மொழி,5.7.1.
2966- “தரியேனினி” – திருவாய்மொழி, 5.8.7.
2967) “இனியாரைக்கொண்டென்னு சாகோ” – திருவாய்மொழி, 7.3.4.
2968- “அத்தனையாமினி யென்னுயிரவன்கையதே” – திருவாய்மொழி,9.5.
2969-“நாரைக்குழாங்கள்காள்‌ பயின்றென்னினி” – திருவாய்மொழி, 9.5.10.
2970-“இனியிருந்தென்னுயிர்‌ காக்குமாறென்‌” – திருவாய்மொழி, 9.9.2.
2971- “இனி நான்‌ போகலொட்டேன்‌” – திருவாய்மொழி, 10.10.1.
2972- “உண்டிட்டாயினியுண்டொழியாய்‌” – திருவாய்மொழி, 10.10.6.
2973- “உன்னைப் பெற்றினிப் போக்குவனோ” – திருவாய்மொழி, 10.10.7.

ஸூத்ரம்‌ – 230
2974-“கமலக்கண்ணனென்‌ கண்ணினுள்ளான்‌” – திருவாய்மொழி, 1.9.9.
2975-“கண்ணுள்‌ நின்றகலான்‌” – திருவாய்மொழி, 10.8.8.
2976- “என்‌ கண்ணனை நான்‌ கண்டேனே” – திருவாய்மொழி, 2.8.10.
2977- “கலைப்பல்‌ ஞானத்தென்‌ கண்ணனைக்‌ கண்டுகொண்டு” – திருவாய்மொழி, 3.2.10.
2978- “நறுந்துழாயின்‌ கண்ணியம்மா நானுன்னைக்‌ கண்டுகொண்டே” திருவாய்மொழி, 4.7.7.
2979- “கைதொழவிருந்தாயது நானுங்‌ கண்டேனே” – திருவாய்மொழி, 5.7.5.
2980 “ஏரார்‌ கோலந்திகழக்கிடந்தாய்‌ கண்டேனெம்மானே” – திருவாய்மொழி, 5.8.1.
2981- “திருவிண்ணகர்க்‌ கண்டேனே” – திருவாய்மொழி, 6.3.1.
2982- “தேவர்கட்கெல்லாம்‌ கருவாகிய கண்ணனைக்‌ கண்டுகொண்டேனே” திருவாய்மொழி, 9.4.8.
2983- “கண்டேன்‌ கமலமலர்ப்பாதம்‌” – திருவாய்மொழி, 10.4.9.
2984- “நெஞ்சென்னும்‌ உட்கண்‌” – பெரிய திருவந்தாதி, 28
2985- “கையபொன்னாழி வெண்சங்கொடுங்காண்பான்‌ அவாவுவன்‌ நான்‌” திருவிருத்தம்‌, 84.
2986- “அடியேன்‌ காண்பானலற்றுவன்‌ ” – திருவாய்மொழி, 1.5.7.
2987- “உம்மைக்காணுமாசையுள்‌ நைகின்றாள்‌” – திருவாய்மொழி, 2.4.2.
2988-“கூவுகின்றேன்காண்பான்‌” – திருவாய்மொழி, 3.2.8.
2989-“மெய்கொள்ளக்காண விரும்புமென்கண்களே” – திருவாய்மொழி, 3.8.4.
2990-கூவியுங்காணப்பெறேனுன கோலமே” – திருவாய்மொழி, 3.8.7.
2991-“உன்னை யெந்நாள்‌ கண்டு கொள்வனே” – திருவாய்மொழி, 3.8.8.
2992- “கோலமேனி காணவாராய்‌” – திருவாய்மொழி, 4.7.
2993- “தடவுகின்றேனெங்குக்காண்பன்‌” – திருவாய்மொழி, 4.7.9.
2994-“பாவியேன்‌ காண்கின்றிலேன்‌” – திருவாய்மொழி, 4.7.10.
2995-“உன்னைக்காண்பான்‌ நானலப்பாய்‌” – திருவாய்மொழி, 5.8.4.
2996-“உலகம்‌ பரவக்கிடந்தாய்‌ காணவாராயே” – திருவாய்மொழி, 5.8.9. ) )
2997- “என்றுகொல்‌ கண்கள்‌ காண்பதுவே” – திருவாய்மொழி, 5.9.5.
2998- “விளங்க ஒருநாள்‌ காணவாராய்‌” – திருவாய்மொழி, 6.9.4.
2999-உன்னைக்காண்பான்‌ வருந்தியெனைநாளும்‌” – திருவாய்மொழி, 6.9.6.
3000-அலைகடல்‌ கடைந்தவப்பனே காணுமாறருளாய்‌” – திருவாய்மொ
3001-“ஒருநாள்‌ காணவாராய்‌” – திருவாய்மொழி, 8.5.1.
3002-“தொண்டனேனுன்கழல்‌ காணவொருநாள்வந்து தோன்றாயே” – திருவாய்மொழி, 8.5.6.
3003- “உன்னையெங்கே காண்கேனே” – திருவாய்மொழி, 8.5.10.
3004- “உன்னைக்காணக்‌ கருதுமென்கண்ணே” – திருவாய்மொழி, 9.4.1.
3005- “கண்டுகளிப்பக்‌ கண்ணுள்நின்றகலான்‌ ” – திருவாய்மொழி, 10.8.7.

ஸூத்ரம்‌ – 231
3006-“அந்தமில்‌ பேரின்பத்‌ தடியரோடிருந்தமை” – திருவாய்மொழி, 10.9.11.
3007-“அடியார்கள்‌ குழாங்களை – உடன்‌ கூடுவதென்று கொலோ?” – திருவாய்மொழி, 2.3.10.
3008- “கழ்விசும்பணிமுகில்‌” – திருவாய்மொழி, 10.9.1.

ஸூத்ரம்‌ – 232
3009-“முடிந்தவவாவிலந்தாதி யிப்பத்து” – திருவாய்மொழி, 10.10.11
3010-“முனியே நான்முகனே” – திருவாய்மொழி, 10.10.1.

ஸூத்ரம்‌ – 233
3011-“பக்த்யா த்வநந்யா சக்ய: அஹமேவம்விதோர்ஜுந, ஜஞாதும்‌ த்ரஷ்டுஞ்ச குத்வேந ப்ரவேஷ்டுஞ்ச பரந்தப – அர்ஜுனா! இந்த உலகமே உருவமாக விருக்கின்ற நான்‌ என்னிடத்திலேயே வைக்கப்பட்ட பக்தியினாலேயே உண்மையாக அறிகிறதற்கும்‌ பார்ப்பதற்கும்‌ என்னை அடைவதற்கும்‌ தகுந்தவனாக விருக்கிறேன்‌.” – ஸ்ரீகீதை, 11.54.
3012- “பரபக்தி பரஜ்ஞாந பரமபக்த்யேக ஸ்வபாவம்‌ மாம்‌ குருஷ்வ – பரபக்தி, பரஜ்ஞான, பரமபக்தி என்னுமிவைகளையே நான்‌ மேற்கொண்டிருக்கும்படி என்னைச்‌ செய்தருளவேண்டும்‌.” – கத்யத்ரயம்‌.
3013- “மத்ஜ்ஞாந தர்சந ப்ராப்திஷு நிஸ்ஸம்சுயஸ்ஸுகமாஸ்வ – என்‌ விஷயமான ஞானம்‌, என்னைப்‌ பார்ப்பது, என்னை அடைவது என்னுமிவைகளில்‌ ஒரு
ஐயமுமில்லாமல்‌ சுகமாகவிரு.” – கத்யத்ரயம்‌.

ஸூத்ரம்‌ – 234
3014-“ஓராயிரம்‌” – திருவாய்மொழி, 2.1.11. 3015-“மயர்வற மதிநலமருளினன்‌” – திருவாய்மொழி, 1.1.1.
3016-“அவாவற்று வீடுபெற்ற” – திருவாய்மொழி, 10.10.11.

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் —ஸ்ரீ வேதாந்த தேசிகன் பாஷ்யம்–

August 29, 2026

இதில் 65 ஸ்லோகங்கள் உள்ளன.-இந்த ஸ்தோத்திரம். 65 என்ற எண் எழுத்துக்களின் கூட்டுத் தொகையாகும்.-மூன்று ரஹஸ்யங்களில் (அஷ்டஅக்ஷரி+த்வயம்+ சரம ஸ்லோகம் ) எனவே, ஸ்தோத்திர ரத்னம் ரஹஸ்ய த்ரயத்தின் சாரம்

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்-தனியன்கள்-

ஸ்வாதயந்நிஹ ஸர்வேஷாம் த்ரய்யந்தார்த்தம் ஸுதுர்க்ரஹம் |
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்த்ர: தம் வந்தே யாமுநாஹ்வயம் ||

யோகிகளுக்குள் சிறந்தவரும், புரிந்து கொள்ள அரிதான வேதாந்த அர்த்தங்களை எல்லோரும்
புரிந்து கொள்ளும்படி ஸ்தோத்ரங்களாக அருளிச்செய்தவருமான ஆளவந்தாரை வணங்குகிறேன்.

ஸ்வாதயன்-அனுபவத்திக் கொண்டே –
யன் ப்ரத்யயம் -அனுபவிப்பித்து-
இஹ -இந்த காலத்தில் -இத்தைச் சொல்லும் பொழுது -இதில் –
சர்வேஷாம்-சர்வாதிகாரம் இந்த ஸ்தோத்ரம் -ஸ்ரத்தையே வேண்டுவது
ஸூ துர்க் ரஹம்–த்ரய்யந் தார்த்தம்-அறிவரிய வேதாந்தார்த்தங்களை
ஸ்தோத்ர யாமாஸ-ஸ்தோத்ர ரூபமாக வெளியிட்டு அருளினாரோ
யோகீந்திர-எந்த யோகி ஸ்ரேஷ்டர்–எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவனான ஆளவந்தார் –

———-

நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம: |
நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம: ||-அஷ்டாக்ஷர மந்த்ரம் போல் இதுவே-

ஆளவந்தாரை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன். என்னால் அவரை வணங்குவதை நிறுத்த முடியவில்லை.

————-

ஸ்ரீ மத யமுனா முனே நாத ஸஹாயேந -நாத முனி என்றும் பெருமாளே என்றும் -கூடியவராக -உள்ள ஆளவந்தரால்
அஹம் நாதம் உடையவராய் ஆனேன் -தேசிகன்
யஸ்ய வதன சந்த்ர உத்பன்ன புவன போக்கிய அம்ருதம்
அம்ருத கிரணங்கள் உடைய சந்திரன் -சகோர பஷி இத்தையே தாரகமாக கொள்ளுமே
ஸூ மனஸா-ஸ்ரீ வைஷ்ணவாம் போக்யம் -அமரர்கள் -பூ ஸூ ரர்களுக்கும் –

ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்னம் நாலாம் ச்லோகத்தின் பொருள் விரிக்கையில் ஸ்ரீ தேசிகன்
“மாதா பிதா”வுக்கு விளக்கம் அருள்வது காணீர் –
”அத பராசர ப்ரபந்தாதபி வேதாந்த ரஹஸ்ய வைசாத்யாதிசய ஹேதுபூதை: சாத்ய பரமாத்மனி சித்த ரஞ்சக தமை:
ஸர்வோபஜீவ்யை: மதுரகவி ப்ரப்ருதி ஸம்ப்ரதாய பரம்பரயா நாதமுநேரபி உபகர்த்தாரம் காலவிப்ரகர்ஷேபி
பரமபுருஷ ஸங்கல்பாத் கதாசித் ப்ராதுர்பூய ஸாக்ஷாதபி ஸார்வோபநிஷத் ஸாரோபதேசதரம் பராங்குசமுநிம் “
மாதா பிதா ப்ராதேத்யாதி உபநிஷத் ப்ரசித்த பகவத் ஸ்வபாவ த்ருஷ்ட்யா ப்ரணமதி மாதேதி”.

இங்கு ஸ்ரீ தேசிகன் வேத விஷயங்களை
ஆழ்வார் பராசராதி ரிஷிகளையுங்காட்டில் வெகு நன்றாக விளக்குவதாகக் காட்டியருளுகிறார்.
மேலும் ஆழ்வார் பாசுரங்கள் எல்லார்க்கும் ஏற்புடையனவாயும். ரசகனமாயும் உள்ளன.
ஆகவே எம்பெருமானைப் போன்றே ஆழ்வாரும் தாய், தந்தை என எல்லா உறவு முறையிலும் கொண்டாடப் படுகிறார்.

—————-

ஶ்லோகம் 1 –
முதல் ஶ்லோகத்தில், ஆளவந்தார் ஸ்ரீமந்நாதமுனிகளின் உண்மையான செல்வமான
ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் பெருமையை வணங்குகிறார்.

நமோ’சிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராஶயே |
நாதாய முநயே’காத பகவத் பக்தி ஸிந்தவே ||

நினைவுக்கு அப்பாற்பட்ட, உயர்ந்த ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் கூட்டத்தை
எம்பெருமானின் கருணையால் ஸ்ரீமந்நாதமுனிகள் எளிதில் அடைந்தார்.
அவர் எப்பொழுதும் பகவானையே த்யானித்தில் கொண்டிருப்பவர். பகவத் பக்திக் கடலாக இருப்பவர்.
இப்படிப்பட்டவரை வணங்குகிறேன்.

————-

ஶ்லோகம் 2 –
இதில், பகவத் அவதாரங்களில் ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு இருந்த ஞானம் ஆகியவற்றின் மேலான சிறப்பு விளக்கப்படுகிறது.
அல்லது, “(முந்தைய ஶ்லோகத்தில் சொல்லப்பட்ட) ஞானம் முதலியவை அவரிடமே தங்காமல், என்னளவும் பெருகி வருகிறது”
என்று ஆளவந்தார் அருளிச் செய்கிறார்.

தஸ்மை நமோ மதுஜிதங்க்ரி ஸரோஜ தத்வ
ஜ்ஞாநாநுராக மஹிமாதிஶயாந்தஸீம்நே |
நாதாய நாத முநயே’த்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம் ||

மது என்னும் அஸுரனைக் கொன்ற எம்பெருமானின் திருவடிகளில் சிறந்த ஞானம் மற்றும் பக்தியின் வடிவமாக
விளங்குபவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவருடைய திருவடிகளே எனக்கு இவ்வுலகிலும் பரமபதத்திலும் புகலாக இருக்கும்.
அவரே என் தலைவர். இப்படிப்பட்டவரை நான் வணங்குகிறேன்.

————

ஶ்லோகம் 3 –
தாகம் உள்ள ஒருவன் நீரை மேலும் மேலும் பருகியும் தாகம் தீராமல் இருப்பதைப் போலே,
ஆளவந்தார் “மீண்டும் மீண்டும் நான் ஸ்ரீமந் நாதமுனிகளின் தொண்டன்” என்று அருளிச் செய்கிறார்.

பூயோ நமோ’பரிமிதாச்யுத பக்தி தத்வ
ஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹ ஶுபைர் வசோபி: |
லோகே’வதீர்ண பரமார்த்த ஸமக்ர பக்தி
யோகாய நாதமுநயே யமிநாம் வராய ||

பகவானிடத்தில் எல்லை இல்லாத பக்திக் கடலில் இருந்து பெருகிய மங்களகரமான வார்த்தைகள் மற்றும்
உண்மை ஞானம் வந்து பிறந்ததைப் போலே இருப்பவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவரே சிறந்த குறிக்கோள்.
அவர் பூர்த்தியையும் பக்தி யோகத்தையுமுடையவர். யோகிகளில் சிறந்தவர். அவருக்கு மீண்டும் என் வணக்கங்கள்.

—————

ஶ்லோகம் 4 –
ஸ்ரீவிஷ்ணு புராணத்தை அளித்து உபகாரம் செய்த ஸ்ரீ பராசர பகவானை ஆளவந்தார் வணங்குகிறார்.

தத்வேந யஶ்சிதசிதீஶ்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க்க ததுபாய கதீருதார: |
ஸந்தர்ஶயந் நிரமிமீத புராண ரத்நம்
தஸ்மை நமோ முநிவராய பராஶராய ||

ரிஷிகளில் தலை சிறந்தவரான, உதார குணத்தை உடையவரான பராசர ரிஷிக்கு என் வணக்கங்கள்.
இவரே சித் (ஆத்மாக்கள்), அசித் (அசேதனப் பொருட்கள்), ஈச்வரன், இவர்களுடைய தன்மைகள்,
இவ்வுலக இன்பங்கள், மோக்ஷம், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அடையும் வழி,
ஆத்மாக்களால் அடையப்படும் குறிக்கோள் ஆகியவற்றை உள்ளபடி, புராணங்களில் ரத்னமான
ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவர்.

————-

ஶ்லோகம் 5 –
ஆளவந்தார் நம்மாழ்வார் திருவடிகளில் விழுந்து அவரிடத்தில் சரணடைகிறார்.

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

நம்மாழ்வாரின் திருவடிகளே எனக்கும் என் குலத்தவர்களுக்கும், தாய், தந்தை, மனைவி, மக்கள், சிறந்த செல்வம் மற்றும் எல்லாமாகும்.
மகிழ மாலையால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும், கைங்கர்யச் செல்வத்தை உடையராயிருக்கும், நம் வைஷ்ணவ குலத்துக்குத்
தலைவரான நம்மாழ்வாரின் இரண்டு திருவடிகளில் என் தலையை வைத்து வணங்குகிறேன்.

ஆளவந்தார்  ஸ்தோத்ர ரத்னம் நாலாம் ச்லோகத்தின் பொருள் விரிக்கையில் ஸ்ரீ தேசிகன் “மாதா பிதா”வுக்கு விளக்கம் அருள்வது காணீர் – ”அத பராசர ப்ரபந்தாதபி வேதாந்த ரஹஸ்ய வைசாத்யாதிசய  ஹேதுபூதை: சாத்ய பரமாத்மனி சித்த ரஞ்சக தமை: ஸர்வோபஜீவ்யை: மதுரகவி ப்ரப்ருதி ஸம்ப்ரதாய பரம்பரயா நாதமுநேரபி உபகர்த்தாரம் காலவிப்ரகர்ஷேபி பரமபுருஷ ஸங்கல்பாத் கதாசித் ப்ராதுர்பூய ஸாக்ஷாதபி ஸார்வோபநிஷத் ஸாரோபதேசதரம் பராங்குசமுநிம் “மாதா பிதா ப்ராதேத்யாதி உபநிஷத் ப்ரசித்த பகவத் ஸ்வபாவ த்ருஷ்ட்யா ப்ரணமதி மாதேதி”.

இங்கு ஸ்ரீ தேசிகன் வேத விஷயங்களை ஆழ்வார் பராசராதி ரிஷிகளையுங்காட்டில் வெகு நன்றாக விளக்குவதாகக் காட்டியருளுகிறார். மேலும் ஆழ்வார் பாசுரங்கள் எல்லார்க்கும் ஏற்புடையனவாயும். ரசகனமாயும் உள்ளன. ஆகவே எம்பெருமானைப் போன்றே ஆழ்வாரும் தாய், தந்தை என எல்லா உறவு முறையிலும் கொண்டாடப் படுகிறார்.

—————–

ஶ்லோகம் 6 –
திருவாய்மொழி 7.9.7இல் “வைகுந்தனாகப் புகழ” (ஆழ்வார் “ஸ்ரீவைகுண்டநாதன்” என்று எம்பெருமானைப் புகழும்படி
எம்பெருமான் செய்தான்) என்று சொன்னபடி, எம்பெருமானுக்குக் கொண்டாட்டங்கள் விருப்பம் என்பதாலும்,
எம்பெருமானைக் கொண்டாடுவது ஆசார்யர்களுக்கும் விருப்பம் என்பதாலும், எம்பெருமானைக் கொண்டாடும் எண்ணத்துடன்,
எம்பெருமானே உபாயம் (வழி) மற்றும் உபேயம் (குறிக்கோள்) என்று சுருக்கமாகச் சொல்லி,
எம்பெருமானைக் கொண்டாடத் தொடங்குகிறார் ஆளவந்தார்.

யந் மூர்த்நி மே ஶ்ருதி ஶிரஸ்ஸு ச பாதி யஸ்மிந்
அஸ்மந் மநோரத பதஸ் ஸகலஸ்ஸமேதி |
ஸ்தோஷ்யாமி ந: குல தநம் குல தைவதம் தத்
பாதாரவிந்தம் அரவிந்த விலோசநஸ்ய ||

புண்டரீகாக்ஷனின் (தாமரைக் கண்ணனின்) திவ்ய திருவடிகளைக் கொண்டாடப் போகிறேன்.
இந்த எம்பெருமானே நம் குலத்துக்கு தனமாகவும், தெய்வமாகவும் விளங்குகிறான்.
நம்முடைய அதிகமான பக்தி எல்லாம் அந்த எம்பெருமானின் திருவடிகளிலே போய்ச் சேரும்.
அந்த எம்பெருமானின் திருவடிகளே என்னுடைய தலையிலும், வேதாந்தத்திலும் காணப்படுகின்றன.

—————

ஶ்லோகம் 7 –
ஸ்ரீ கீதை 1.47இல் “விஸ்ருஜ்ய ஸசரம் சாபம்” (வில்லையும் அம்புகளையும் கீழே நழுவவிட்டான்) என்று சொன்னபடி
அர்ஜுனன் எப்படி யுத்தத்திலிருந்து பின் வாங்கினானோ, ஆளவந்தாரும் தன் முயற்சியில் இருந்து பின்வாங்குகிறார்.

தத்வேந யஸ்ய மஹிமார்ணவ ஶீகராணு:
ஶக்யோ ந மாதுமபி ஶர்வ பிதா மஹாத்யை: |
கர்த்தும் ததீய மஹிம ஸ்துதி முத்யதாய
மஹ்யம் நமோ’ஸ்து கவயே நிரபத்ரபாய ||

எம்பெருமானின் பெருமை என்னும் கடலில் ஒரு திவலையில் இருக்கும் ஒரு அணுவின் அளவு கூட ருத்ரன், ப்ரஹ்மா
போன்றவர்களால் அளக்கமுடியாது. கவிஞன் என்று வெட்கமில்லாமல் சொல்லிக் கொண்டு, அப்படிப்பட்ட
எம்பெருமானின் பெருமைகளைப் பாடத் தொடங்கியதை நினைத்து (இப்படிப்பட்ட நகைப்பிற்குரிய செயலை நினைத்து)
என்னை நானே வணங்கிக் கொள்கிறேன்.

—————–

ஶ்லோகம் 8 –
யுத்தத்திலிருந்து பின்வாங்கிய அர்ஜுனனை ஸ்ரீ கீதை 18.73இல் “கரிஷ்யே வசனம் தவ” (நீ சொல்லும்படி நான் யுத்தம் செய்கிறேன்)
என்று சொல்லும்படி உற்சாகப்படுத்திய எம்பெருமான், ஆளவந்தாரை
“வாய் படைத்த பயன் அவனைக் கொண்டாடுவதற்கே; ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் ‘ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய:’
(அவன் கொண்டாடத்தகுந்தவன்; அவன் கொண்டாட்டங்களை விரும்புபவன்)” என்று சொல்லும்படி உற்சாகப்படுத்தினான்.
இதைக் கேட்ட ஆளவந்தார், எம்பெருமானைக் கொண்டாடுவது என்று முடிவெடுத்தார்.

யத்வா ஶ்ரமாவதி யதாமதி வாப்ய ஶக்த:
ஸ்தௌம்யேவமேவ கலு தே’பி ஸதா ஸ்துவந்த: |
வேதாஶ் சதுர்முக முகாஶ்ச மஹார்ணவாந்த:
கோ மஜ்ஜதோர் அணுகுலாசலயோர் விஶேஷ: ||

அல்லது, சக்தியற்ற நான் சோர்வடையும் வரையிலோ எனக்குத் தெரிந்த அளவிலோ அவனைக் கொண்டாடுவேன்;
இவ்வாறே, வேதங்களும், நான்கு முகங்களைக் கொண்ட ப்ரஹ்மா முதலியவர்களும் எம்பெருமானைக் கொண்டாடுகின்றனர்;
கடலுக்குள் மூழ்கி இருக்கும் சிறு கூழாங்கல்லுக்கும் பெரிய மலைக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? (ஒன்றும் இல்லை)

—————–

ஶ்லோகம் 9 –
இதில், ஆளவந்தார் தான் ப்ரஹ்மா முதலியவர்களை விட எம்பெருமானைக் கொண்டாடுவதற்குத்
தகுதி படைத்தவர் என்று அருளிச் செய்கிறார்.

கிஞ்சைஷ ஶக்த்யதிஶயேந ந தே’நுகம்ப்ய:
ஸ்தோதாபி து ஸ்துதி க்ருதேந பரிஶ்ரமேண |
தத்ர ஶ்ரமஸ்து ஸுலபோ மம மந்த புத்தே:
இத் யுத்யமோ’யமுசிதோ மம சாப்ஜ நேத்ர ||

மேலும், என்னுடைய கவிதை பாடும் சிறந்த திறமையால், நீ கருணையைப் பொழியும் நிலையில் நான் இல்லை;
ஆனால், உன்னைக் கொண்டாட முயன்று சோர்வடையும் தன்மையை உடையவன் ஆகையால், நீ என் மீது உன் கருணையைப் பொழியலாம்;
எனக்கு மிகவும் குறைந்த ஞானமே உள்ளதால், எளிதில் சோர்வடைந்து விடுவேன்;
ஆகையால், உன்னைக் கொண்டாடும் இம்முயற்சி ப்ரஹ்மா முதலியவர்களைக் காட்டிலும், எனக்கே மிகவும் பொருத்தமாக உள்ளது.

—————-

ஶ்லோகம் 10 –
எம்பெருமானைக் கொண்டாடுவதிலிருந்து பின் வாங்கி, பிறகு எம்பெருமானால் ஸமாதானம் செய்யப்பட்ட ஆளவந்தார்,
எம்பெருமானைப் புகலாக ஆக்கும் அவனுடைய பரத்வத்தை, இனி வரும் ஐந்து ச்லோகங்களில் அருளிச்செய்கிறார்.
அதில், இந்த முதல் ச்லோகத்தில்,
ஆளவந்தார் சாஸ்த்ரத்தில் இருக்கும் காரண வாக்யங்களைக் கொண்டு (எம்பெருமானிலிருந்தே எல்லாம் உருவாகின்றன என்று சொல்பவை)
எம்பெருமானின் பரத்வத்தை அருளிச் செய்கிறார்.

ஆஸ்ரித வாத்சல்யத்தால் தாம் கவி பாடுவது பொருத்தமே என்றார் கீழ்
இந்த ஆஸ்ரித வாத்சல்யம் பகவான் இடத்தில் இருப்பது ஆச்சார்யம் அன்று என்று
கை முதிக நியாயத்தால் நிரூபிக்கிறார் இந்த ஸ்லோகத்தால்
இது முதல் 12 ஸ்லோகங்களால் நாராயண ஸப்த வாஸ்யனான அவனுக்கே
ஸர்வ ஸ்மாத் பரத்வமும் ஸுலப்யமும் உண்டு பிரபஞ்சித்துக் கொண்டு நமஸ்கரிக்கிறார் -என்பர் தேசிகர்

நாவேக்ஷஸே யதி ததோ புவநாந்யமூநி
நாலம் ப்ரபோ பவிதுமேவ குத: ப்ரவ்ருத்தி: |
ஏவம் நிஸர்க்க ஸுஹ்ருதி த்வயி ஸர்வ ஜந்தோ:
ஸ்வாமிந் நசித்ரமிதமாஶ்ரித வத்ஸலத்வம் ||

எம்பெருமானே! மஹா ப்ரளயத்துக்குப் பின், நீ உன்னுடைய கருணைக் கடாக்ஷத்தைக் காட்டவில்லை என்றால்,
இவ்வுலகங்கள் படைக்கப்பட்டிருக்காது; வேறு எந்த நிகழ்வுகளும் நடந்திருக்காது என்பதும் தெளிவு.
எம்பெருமானே! இப்படி நீயே எல்லோருடைய இயற்கையான நண்பனாக இருப்பதால்,
நீ உன்னுடைய அடியார்களிடம் தாயன்பைக் காட்டுவதைப் பார்ப்பதில் ஒரு ஆச்சர்யமும் இல்லை.

ஹே ப்ரபோ -உம்முடைய சங்கல்பம் இல்லா விட்டால் விசித்ரமாகத் தென்படும் இப்பிரபஞ்சம் முழுவதும்
உண்டாக்குவதற்காகவது சத்தை யுடன் கூடி இருக்கிறதற்காகவாவது ஸமர்த்தம் அன்று
அப்படி இருக்கவே சமர்த்தமாகி இல்லையாகில் ப்ரவ்ருத்தி என்பது அதற்கு எவ்விதம் ஸம்பவிக்கும்
ஹே ஸ்வாமிந் இப்படி ஸர்வருக்கும் ஸூ ஹ்ருத்தாய் இருக்கும் உம்மிடம் ஆஸ்ரித வாத்சல்யம் இருப்பதில் என்ன வியப்பு

இந்த பிரபஞ்சத்தை உண்டாக்கி
அதற்கு சத்தையைக் கொடுத்து அதை இருக்கும்படி செய்து
அதில் உள்ள ஜீவ கோடிகளுக்கு போக மோக்ஷங்களையும் குறித்து
ப்ரவர்த்திப்பதற்கு ஈடாக கரண களேபரங்களையும் கொடுத்து அருளி
இவ்வாறு ஸர்வ வித உபகார பரம்பரைகளையும் செய்து அருளும் உனக்கு
ஆஸ்ரித வாத்சல்யம் இல்லா விட்டால் பிறகு யாருக்குத் தான் ஸம்வவிக்கக் கூடும்

ஸங்கல்ப லேசத்தாலே ஜகத்தின் உபாதானத்தைச் செய்கிறீர்
அதற்குச் சத்தையைக் கொடுக்கிறீர்
ப்ரவ்ருத்தியையும் உண்டு பண்ணுகிறீர் -என்பதால்
சர்வத்துக்கும் ஸர்வ காரண கர்த்தா இவனே
நிகில காரணனாவான் ஆஸ்ரித வத்சலனான் ஆனவன்-

ஆக இந்த ஸ்லோகத்தால்
காரணத்வம்
நியந்த்ருத்வம்
ஸூ ஹ்ருத்வம்
ஸ் வாமித்வம்
வாத்சல்யம்
ஆக ஐந்து வித கல்யாண குணங்களும் பிரகாசமாகச் சொல்லப்படுகின்றன
அவேஷணம் -என்றது ஸங்கல்பத்தைச் சொன்னவாறு
இதுவும் அனுக்ரஹத்தை முன்னிட்டே செய்யப்படுகின்றது –

பிரபு என்று சொல்வதனால்
சகலமும் பகவானுக்கு ஸ்வ ஆதீனம் என்கிறார்
இச்சிக்கிறபடி செய்ய சமர்த்தன் என்கிறார்

இப்படி தான் ஸர்வ ஸக்தனாய் இருக்கையாலும்
ஸர்வ விதத்திலும் அஸக்தராய் இருக்கும் நம்மிடத்தில் அவன் வாத்சல்யம் பாராட்டுவது
அவன் ஸுலப்யத்தைக் காட்டி அருளும் படி –

இருப்பு என்றது உத்பத்தியையும் காட்டும்
ஸ்திதிக்கு மட்டும் காரணன் அல்லன் -ஸ்ருஷ்டிக்கும் இவனே காரணன்
இருப்பதற்குக் கூட ஸங்கல்பம் தேவையோ என்ற சங்கைக்கு ஸ்ருதி வாக்கியங்கள் பலவும் உண்டே

ஸ்வ பாவிக ஸூ ஹ்ருத் -இவனே
பூர்வ உபகாரமோ பிரதி உபகாரமோ எதிர்பார்க்காமல்
நிர் ஹேதுக கிருபாவான்
ஞான பலாதிகள் ஸ்வ பாவிகம் ஆமாம் போலே
ரக்ஷணமும் ஸ்வ பாவிம் –
காக்கும் இயல்பினன் கண்ணன் அன்றோ

கீழ் ஸ்லோகத்தில் பிரஸ்தாபிப்பிக்கப் பட்ட வாத்சல்யம்
அல்ப சக்தியை யுடையவர்கள் செய்யும் ஸ்துதியின் ந்யூன தயைக் கவனியாமல்
அவனுக்கு அநு கம்பை செய்து அநு க்ரஹிக்கும் ஸ்வ பாவம்
தன்னிடம் த்வேஷம் செய்பவர்கள் இடமும் அவன் வாத்சல்யம் காட்டி அருளுகிறான்

கடவல்லியில்
சர்வருக்கும் ஈஸ்வரனான பகவான் அங்குஷ்டம் அளவு ஆகாரம் யுடையவனாக நம் சரீரத்துள் எப்போதுமே வசிக்கிறான்
ஸர்வ அஸூசிக்கும் நிதானமாகிய இந்த சரீரத்தின் நடுவில் இருப்பதில் அவனுக்கு எவ்வித ஜூகுப்ஸியையும் ஜனிக்கிறது இல்லை
அவ்வளவு வாத்சல்யம் உள்ளவன் –

மழலைச் சொல் பேசும் குழவி இடம் தாய் தந்தையருக்கு கௌதூ ஹலம் உண்டாவது போல்
என்னுடைய இந்த அச்மக்ரமான ஸ்துதியைக் கேட்பதில் அவனுக்கு கௌதூ ஹலம் உண்டாவதே –

—————-

ஶ்லோகம் 11 –
இதில், எம்பெருமானின் பரத்வ லக்ஷணம் (அடையாளம்) விளக்கப்படுகிறது.

தம்முடைய ஸங்கல்பத்தாலே ஸர்வ ஜகத்தையும் உத்பாதனம் செய்து
அதற்கு ஸ்திதி ப்ரவ்ருத்தி முதலியவற்றை அளிக்கிற படியால்
பகவானுக்கு ஜகத் காரணத்வம் உண்டு என்பதையும்
அதனால் ஸர்வ குணங்களும் ஸ்வ பாவிகம் என்பதையும்
கீழே சொல்லி
அந்த ஈஸி த்ருத்வம் -காரணத்வம் -ஸ்வாமித்வம் -எப்படிப்பட்டது என்பதை
இந்த ஸ்லோகத்தால் அருளிச் செய்கிறார்

ஸ்வாபாவிகாநவதிகாதிஶயேஶித்ருத்வம்
நாராயண த்வயி ந ம்ருஷ்யதி வைதிக: க: |
ப்ரஹ்மா ஶிவஶ் ஶதமக: பரம: ஸ்வராடிதி
ஏதே’பி யஸ்ய மஹிமார்ணவ விப்ருஷஸ்தே ||

நாராயணனே! உன்னுடைய பெருமைக் கடலில் ஒரு திவலையைப் போன்றவர்களே (கர்மத்துக்கு வசப்பட்ட)
ப்ரஹ்மா, சிவன், இந்திரன் ஆகியோரும், இந்த தேவதைகளைவிடச் சிறந்தவர்களான, கர்மத்துக்கு வசப்படாத முக்தாத்மாக்களும்;
உன்னுடைய இயற்கையான மற்றும் எல்லை யில்லாத பெருமையை உடைய ஐச்வர்யத்தை (ஆளுமையை) எந்த வைதிகன் பொறுக்க மாட்டான்?

அநந்ய அதீனம் அபரிமிதம் இவனது ஈஸித் ருத்வம்
மற்றவர்களது -ப்ரஹ்மாதிகளுக்கு
கர்மாதீனம் துக்க மிஸ்ரம் அநித்யம்
முக்தர்களுக்கு பரம அதீனம் -பரிச்சின்னம்
இவனே ஸர்வ அந்தராத்மா -ப்ரவர்த்தகன் -ஸர்வ ஸாக்ஷி -அனைத்துக்கும் ஆஸ்ரயம்

ஹே நாராயணா
வேதங்களைப் பிரமாணமாக ஒத்துக் கொள்பவர்களில் எவர் தான் ஸ்வ பாவிக ஸித்தமாயும்
அளவற்ற மகிமையும் உள்ளதான உம்மிடத்தில் ஈஸித்ருத்வத்தை ஸஹிக்க மாட்டார்
நித்ய முக்தர்கள் -ப்ரஹ்மாதிகள் எல்லாம் ஸமுத்ர திவலை ஸ்தானீயர்களே

ப்ரஹ்மாதிகளின் மஹத்வமும் உனது அதீனமே
உமது மஹிமையோ அபரிச்சின்னமாயும் உனது அதீனமாயுமே இருக்குமே

இதனால் பரம புருஷனாகிற நாராயணனுடைய ஈஸித்ருத்வம்
அந்யாதீநம்
அபரிமிதம் என்றும்
இவற்றுக்கு பிரமாணம் வேதங்களே -என்றும் அருளிச் செய்கிறார்

ப்ரஹ்மன் எல்லாவற்றுக்கும் முந்தியே இருந்தவன்
முதலில் சத்தும் இல்லை அசத்தும் இல்லை சிவன் ஒருவனே ஒருந்தான்
இந்திரனுக்கு விசித்திர சக்தி உண்டு -பல ரூபங்களை உண்டு
இத்யாதி பிரமாணங்கள் லோக நாதர் இவர்கள் என்று சொல்லும்
முக்தர்களும் தங்கள் சங்கல்பத்தால் இச்சிப்பதை எல்லாம் உண்டாக்குகிறார்கள் என்று முக்த ஐஸ்வர்யமும் சொல்லும்
ஆனால் ப்ரஹ்மாதிகள் விஷயத்தில் கர்மாதீனம் துக்க மிஸ்ரம் அநித்யம் அல்பம்
முக்தர்கள் விஷயத்தில் பரம புருஷ அதீனம் பரிமிதம்

நாராயணனே
சர்வ காரணன்
சர்வ ஸ்வாமி
ஸர்வ ப்ரவர்த்தகன்
ஸர்வ ஸாக்ஷி -என்று ப்ரஸித்தன்
நாரங்களான ஜீவ சமூகங்களுக்கு அயனம் ஆத்மா
ஜீவர்களுக்கு ஸ்ருஷ்ட்டி கார்த்த ப்ரவர்த்தகன்
அகில லோக ஸாக்ஷி -ஜீவா சமூகத்தை அறிபவன்
நார -அப்புவை ஸ்ருஷ்டித்து பிரபஞ்சம் அனைத்துக்கும் ஆஸ்ரயம்
ஸ்ரீ மத் பாகவதம் 10 ஸ்கந்தம் ப்ரம்ம ஸ்துதி இவற்றைச் சொல்லும்
மனு ஸ்ம்ருதியும் சொல்லும்
சர்வ ரக்ஷகனான நாராயணனையே எப்பொழுதும் தியானிக்க வேண்டும்

வேதத்தை பிரமாணமாக ஒத்துக் கொண்டவன் -ஸநாதன் ஆகிற பகவான் வேதத்தாலே அறியத் தக்கவன்
வேதங்கள் அவனையே பரமாத்மாவாகவே சொல்லும்
இப்படி வேதம் சொல்வதில் விசுவாசம் கொண்டவனே வைதிகம் ஆவான்
ஜீவனத்துக்காக தானே கிருஷி பண்ணி வேதத்தில் நம்பிக்கை இன்றி வைதிக வேஷம் மாத்திரம் பூண்டு
பிறருடைய சிரமத்தால் ஜீவனம் செய்து வருமவனை
அவைதிகன் என்றே சொல்ல வேண்டும்
வேத ப்ரமாணகத்வமே வைதிக லக்ஷணம் ஆகும்
பகவானுக்கு சரீரமாக இருக்கும் ஆத்ம வர்க்கம் -நித்யரும் முக்தருகளுமே -பகவத் பரதந்த்ரர்களே

நாராயணனுடைய ஐஸ்வர்யத்தை ஸஹிக்காதவன் வைதிகம் ஆக மாட்டான்
முக்தன் ஸ்வராட் என்றது கர்ம வஸ்யன் அல்லன் என்று சொல்ல வந்ததே
ஸ்ருதிகளால் யதோ வாஸோ நிவ்ருத்தந்தே -அஸ்ருயன் -அக்ராஹ்யன் –
பக்தர்களுக்கோ அவனே தன்னைக்காட்டி அருளும் எளியவன்
நாராயணன் மகிமையும் விபூதியும் சமுத்திரம் போல் அபரிச்சேதயம்
மற்றவர்கள் யாவரும் திவலை போன்றவர்களே
ஆளவந்தார் ஸம்வித் சித்தியிலும் இதே கருத்தை அருளிச் செய்கிறார் –

——————-

ஶ்லோகம் 12 –
இதில், ஆளவந்தார், ஸந்தேஹத்துக்கு இடமளிக்கும் பொதுப் பெயர்களைச் சொல்லாமல்,
தன்னடையே முழுமையான மற்றும் எம்பெருமானின் பரத்வத்தை நன்றாக வெளியிடும் திருநாமங்களை அருளிச்செய்கிறார்.

கஶ்ஶ்ரீ: ஶ்ரிய: பரமஸத்வ ஸமாஶ்ரய: க:
க: புண்டரீகநயந: புருஷோத்தம: க: |
கஸ்யாயுதாயுத ஶதைக கலாம்ஶகாம்ஶே
விஶ்வம் விசித்ர சிதசித் ப்ரவிபாக வ்ருத்தம்||

ஸ்ரீ: என்று சொல்லப்படும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் செல்வம் யார்? யாரிடத்தில் சுத்த ஸத்வம் உள்ளது?
யார் புண்டரீகாக்ஷன்? யார் புருஷோத்தமன் என்று சொல்லப்படுபவன்? யாருடைய ஸங்கல்பத்தின் ஒரு சிறு பகுதி,
பலவகைப்பட்ட சேதனர்கள் மற்றும் அசேதனப்பொருள்களாக விரிந்திருக்கும் இவ்வுலகத்தைத் தாங்குகிறது?

—————–

ஶ்லோகம் 13 –
ஆளவந்தார் ப்ரஹ்மா, ருத்ரன் ஆகியோரின் க்ஷேத்ரஜ்ஞத்வத்தையும் (ஜீவாத்மாவாக இருக்கும் தன்மையையும்)
பகவானின் பரத்வத்தையும், இதிஹாஸ மற்றும் புராணங்களில் உள்ள சரித்ரங்களைக் கொண்டு அருளிச் செய்கிறார்..

வேதாபஹார குருபாதக தைத்யபீடாதி
ஆபத் விமோசந மஹிஷ்ட பல ப்ரதாநை: |
கோ’ந்ய: ப்ரஜா பஶு பதீ பரிபாதி கஸ்ய
பாதோதகேந ஸ ஶிவஸ் ஸ்வ ஶிரோத்ருதேந ||

ப்ரஜாபதி என்று சொல்லப்படும் பிரமனையும், பசுபதி என்று சொல்லப்படும் ருத்ரனையும் மற்றும் இந்திரனையும்
முறையே அவர்களுக்கு வந்த ஆபத்தான வேதம் திருடப்பட்டு அதை இழந்ததையும்,
தன்னுடைய தந்தையின் தலையைக் கிள்ளிய பாபத்தையும், அஸுரர்களால் ஏற்பட்ட துன்பத்தையும் போக்கியவன் யார்?
யாருடைய ஸ்ரீபாத தீர்த்தத்தைத் தலையில் தாங்கி, ருத்ரன் புனிதத் தன்மையை அடைந்தான்?

—————–

ஶ்லோகம் 14 –
ஆளவந்தார் எம்பெருமானின் பரத்வத்தை சாஸ்த்ரத்துக்கு அனுகூலமான ந்யாயத்தின் மூலமாக நிரூபித்து,
(இந்த ஐந்து பாசுரங்களின் தொடரை) முடிக்கிறார்.

கஸ்யோதரே ஹரவிரிஞ்சிமுக: ப்ரபஞ்ச:?
கோ ரக்ஷதீமம் அஜனிஷ்டச கஸ்ய நாபே:?|
க்ராந்த்வா நிகீர்ய புநருத்கிரதி த்வதந்ய:
க:? கேந வைஷ பரவாநிதி ஶக்யஶங்க: ||

யாருடைய வயிற்றில் ருத்ரன், ப்ரஹ்மா முதலியவர்களும் இவ்வுலகமும் அடங்கியது? யார் இந்த உலகத்தைக் காப்பவன்?
யாருடைய திருநாபியிலிருந்து இவ்வுலகம் படைக்கப்பட்டது? உன்னைத் தவிர வேறு யாரால் இவ்வுலகம்
அளக்கப்பட்டு, விழுங்கப்பட்டு மீண்டும் வெளியே உமிழப்பட்டது? இவ்வுலகத்தின் தலைவன் யார் என்பதில் ஸந்தேஹம் இருக்க முடியுமா?

——————–

ஶ்லோகம் 15 –
இதில், சாஸ்த்ரத்தின் மூலம் நன்றாக நிரூபிக்கப்பட்டாலும்,
ஸ்ரீ பகவத் கீதை 16.20இல் “ஆஸுரீம் யோனிமாபன்னா:” (அஸுரப் பிறவியில் பிறந்து) என்று சொன்னபடி,
“ஐயோ! இப்படிப்பட்ட அஸுர குணம் உடையவர்கள் எம்பெருமானை இழக்கிறார்களே” என்று அவர்கள் இழவுக்கு ஆளவந்தார் வருந்துகிறார்.
அல்லது –
ஆளவந்தார், இப்படிப்பட்ட பெருமையையுடைய எம்பெருமானை அஸுரத் தன்மை யுடையவர்கள் பார்க்கக் கூடாது என்று
திருவாய்மொழி 1.3.4இல் “யாருமோர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான்”
(அவனிடத்தில் விரோதம் பாராட்டுபவர்களால் “இவன் இன்ன தன்மையை உடையவன்” என்று புரிந்து கொள்ள முடியாதவன்)
ஆழ்வார் அருளிச்செய்த க்ரமத்தில் அருளிச் செய்கிறார்.

த்வாம் ஶீல ரூப சரிதை: பரம ப்ரக்ருஷ்ட
ஸத்வேந ஸாத்த்விகதயா ப்ரபலைஶ்ச ஶாஸ்த்ரை: |
ப்ரக்யாததைவ பரமார்த்த விதாம் மதைஶ்ச
நைவாஸுர ப்ரக்ருதய: ப்ரபவந்தி போத்தும் ||

[ஐயோ!] எல்லோரையும் விட உயர்ந்தவனான உன்னை அஸுரர்கள் அறிந்து கொள்ள முடியாது.
உன்னை அறிந்து கொள்ளும் வகைகள்:
உன்னுடைய சீல (எளிமை) குணம், வேதத்தில் கொண்டாடப்பட்ட ரூபங்கள் மற்றும் திவ்யமான லீலைகள்
சுத்த ஸத்வத்தால் நிறைந்திருக்கும் உன்னுடைய பரம பதம்
தன்னிடம் இருக்கும் நன்மையினால் திடமாக இருக்கும் சாஸ்த்ரம்
உன்னைப் பற்றிய உண்மையை அறிந்தவர்களின் அபிப்ராயத்தின் மூலம்

—————

ஶ்லோகம் 16 –
எம்பெருமானின் எளிமையினால் அவனை அடையும் உயர்ந்த ஆத்மாக்களைப் பற்றி எண்ணிய ஆளவந்தார்,
அவர்களுக்குக் கிடைத்த பேறு தனக்குக் கிடைத்ததாக நினைக்கிறார்.

உல்லங்கித த்ரிவித ஸீமஸமாதிஶாயி
ஸம்பாவநம் தவ பரிப்ரடிம ஸ்வபாவம் |
மாயாபலேந பவதா’பி நிகூஹ்யமாநம்
பஶ்யந்தி கேசிதநிஶம் த்வதநந்ய பாவா: ||

உன்னுடைய ஸ்வாமித்வத்தை நீ உன்னுடைய ஆச்சர்ய சக்தியினால் மறைத்துக் கொண்டாலும்,
உன்னையே நினைத்துக் கொண்டிருக்கும், மிகவும் உயர்ந்த ஆத்மாக்கள் கால, தேச, வஸ்துக்களுக்கு அப்பாற்பட்ட
உன்னுடைய ஸ்வாமித்வத்தை உணர்ந்து, “எம்பெருமானுக்கு ஸமமாகவோ அவனைவிட உயர்ந்தவராகவோ எவரேனும் உண்டோ?”
என்று ஸந்தேஹம் கொள்ளாமல் இருப்பார்கள்.

———–

ஶ்லோகம் 17 –
இதில் ஆளவந்தார் பகவானாலே நிர்வஹிக்கப்படும், முன்பு விளக்கப்பட்ட அவனுடைய ஸர்வேச்வரத்வத்துக்கு
உட்பட்ட பலவிதமான வஸ்துக்களை அருளிச் செய்கிறார்.

யதண்டம் அண்டாந்தர கோசரம் ச யத்
தஶோத்தராண்யாவரணாநி யாநி ச |
குணா: ப்ரதாநம் புருஷ: பரம் பதம்
பராத்பரம் ப்ரஹ்ம ச தே விபூதய: ||

1) ப்ரஹ்மாவின் ஆளுகைக்குட்பட்ட, 14 லோகங்கள் கொண்ட ப்ரஹ்மாண்டம்,
2) அந்த அண்டத்துக்குள் இருக்கும் வஸ்துக்கள்,
3) ஒவ்வொரு அண்டத்தை மூடிக்கொண்டிருக்கும், முந்தைய ஆவரணத்தைப்போலே பத்து மடங்கு அளவுள்ள, ஸப்த ஆவரணங்கள்,
4) ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய குணங்கள் 5) மூல ப்ரக்ருதி 6) இவ்வுலகில் இருக்கும் பத்தாத்மாக்கள் (கட்டுப்பட்ட ஆத்மாக்கள்),
7) ஸ்ரீவைகுண்டம் 8) (தேவதைகளைவிட உயர்ந்தவர்களான) முக்தாத்மாக்களைவிட உயர்ந்தவர்களான நித்ய ஸூரிகள்
9) உன்னுடைய திய்வ மங்கள விக்ரஹங்கள் ஆகிய எல்லாம் உனக்கு சரீரங்களே.

—————

ஶ்லோகம் 18 –
ஆளவந்தார் முன்பு ஶரண்யனான (புகல்) எம்பெருமானின் பெருமைகளைப் பேசினார்.
இதில் “இப்படிப்பட்ட உபய விபூதி நாதனை நாம் எப்படி அணுகுவது?” என்ற தயக்கத்தைப் போக்க,
அவனுடைய அடியார்கள் ஈடுபடும் பன்னிரண்டு குணங்களை அருளிச் செய்கிறார்.
முன்பு பகவானின் ஸர்வேஶ்வரத்வத்தை அருளிய ஆளவந்தார், இப்பொழுது அவனுடைய பேசத் தகுந்த குணங்களை அருளிச் செய்கிறார்.

வஶீ வதாந்யோ குணவாந் ருஜுஶ் ஶுசிர்
ம்ருதுர் தயாளுர் மதுரஸ் ஸ்திரஸ் ஸம: |
க்ருதீ க்ருதஜ்ஞஸ்த்வமஸி ஸ்வபாவதஸ்
ஸமஸ்த கல்யாண குணாம்ருதோததி:||

நீ இயற்கையாகவே அமுதக் கடல் போன்ற இனிமையான குணங்களை உடையவன். உன் குணங்களாவன
1) உன் அடியார்களுக்கு வசப்பட்டவன்
2) உன்னுடைய அடியார்களுக்கு உன்னையே தரும் குணத்தை உடையவன்
3) எல்லோரிடமும் கலந்து பழகும் ஸௌஶீல்யத்தை உடையவன்
4) உள்ளம் உரை செயல்களில் நேர்மை உடையவன்
5) நிர்ஹேதுகமாக க்ருபை பண்ணும் பரிசுத்தியை உடையவன்
6) அடியார்களின் பிரிவைத் தாங்க முடியாதவன்
7) அடியார்களின் துயரைத் தாங்க முடியாத கருணை உள்ளம் கொண்டவன்
8) இனிமையானவன்
9) அடியார்களைக் காப்பதில் உறுதியாக இருப்பவன்
10) உன்னிடம் சரணடைந்தவர்களிடத்தில் ஸமமாக இருப்பவன்
11) உன் அடியார்களின் செயல்களை உன் செயல்களாக நினைத்துச் செய்பவன்
12) அடியார்களின் சிறு உதவிகளுக்கும் நன்றியுடன் இருப்பவன்.

——————

ஶ்லோகம் 19 –
இதில், எப்படி பகவானின் திருக்கல்யாண குணங்களுக்கு எல்லை இல்லையோ அதேபோல
ஒவ்வொரு குணத்துக்கும் எல்லை இல்லை என்கிறார் ஆளவந்தார் .

உபர்யுபர்யப்ஜ புவோ’பி பூருஷாந்
ப்ரகல்ப்ய தே யே ஶதமித்யநுக்ரமாத் |
கிரஸ் த்வதேகைக குணாவதீப்ஸயா
ஸதா ஸ்திதா நோத்யமதோ’திஶேரதே ||

வேத வாக்யங்கள் “தேயே சதம்” (இது போன்ற நூறு) என்று மீண்டும் மீண்டும் புதிய ப்ரஹ்மாக்களை கற்பனை செய்து,
உன்னுடைய ஒரு (ஆனந்தம் என்னும்) குணத்தின் எல்லையைக் காண முயன்று,
சிறிதளவும் முன்னேறாமல், ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றன,

——————-

ஶ்லோகம் 20 –
ஆளவந்தார் முன்பு அருளிச் செய்த பகவத் குணங்களை அனுபவிக்கும் அடியார்களின் பெருமையை அருளிச் செய்கிறார்.
அல்லது –
ப்ரஹ்ம ஸூத்ரம் 1.1.20இல் “அஸ்மிந்நஸ்ய ச தத்யோகம் ஶாஸ்தி”
(வேதம் ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஆனந்தமாகக் கூடியிருக்கும் ஆனந்தத்தை விளக்குகிறது) என்று சொன்னபடி
பகவானிடத்திலிருந்து அடைந்த பெருமையை உடைய அடியார்களின் பெருமையே மிகப் பெரியது என்றால்,
அந்த பகவானின் பெருமை அளவிட முடியாதது என்பது தெளிவு என்கிறார்.

த்வதாஶ்ரிதாநாம் ஜகதுத்பவ ஸ்திதி
ப்ரணாஶ ஸம்ஸார விமோசநாதய: |
பவந்தி லீலா விதயஶ்ச வைதிகா:
த்வதீய கம்பீர மநோநுஸாரிண: ||

ப்ரஹ்மா முதலான உன் அடியார்களுக்கு இவ்வுலகைப் படைப்பது, காப்பது, அழிப்பது மற்றும் இந்த ஸம்ஸாரத்தை கடக்க உதவுவது
ஆகியவை எளிய விளையாட்டாக இருக்கும்;
வேதத்தின் விதிகளும் கூட உன்னுடைய அடியார்களின் ஆழமான நெஞ்சங்களையே தொடரும்.

————-

ஶ்லோகம் 21 –
ஶரண்யனான எம்பெருமானின் பெருமைகளை த்யானிக்கிறார்.
அல்லது –
முன்பு உபேயத்தை (குறிக்கோளை) விளக்கினார், இங்கே அதை அடைய விரும்புபவரின் தன்மையை விளக்குகிறார்.
மற்றொரு விளக்கம் –
முன்பு ஶரண்யனான பகவானின் தன்மையை விளக்கிய ஆளவந்தார்,
இங்கே மேலே விளக்கப்படும் சரணாகதியின் தன்மையை வெளியிடுகிறார்.

நமோ நமோ வாங்மநஸாதிபூமயே
நமோ நமோ வாங்மநஸைக பூமயே |
நமோ நமோ’நந்த மஹா விபூதயே
நமோ நமோ’நந்த தயைக ஸிந்தவே ||

தன் முயற்சியால் அறிய முயல்பவர்களின் வாக்குக்கும் மனதுக்கும் எட்டாத உனக்கு என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்;
உன்னுடைய கருணையால் உன்னை அறிந்தவர்களின் வாக்குக்கும் மனதுக்கும் எட்டுபவனான உனக்கு
என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்;
எல்லையில்லாத ஐச்வர்யத்தை உடைய உனக்கு என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்;
கருணைக்கடலான உனக்கு என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்.

—————-

ஶ்லோகம் 22 –
ஆளவந்தார் தன்னுடைய தகுதியைச் சொல்லி, முன் பாசுரத்தில் சொல்லப்பட்ட சரணாகதியைச் செய்கிறார்.
அல்லது –
முன்பு சொன்ன குறிக்கோளுக்குத் தகுந்த வழியை அனுஷ்டிப்பதை அருளிச் செய்கிறார் என்றும் சொல்லலாம்.

ந தர்மநிஷ்டோ’ஸ்மி நசாத்மவேதீ
நபக்தி மாம்ஸ்த்வச் சரணாரவிந்தே |
அகிஞ்சநோ’நந்யகதிஶ் ஶரண்ய!
த்வத் பாத மூலம் ஶரணம் ப்ரபத்யே ||

சரணடையத் தகுந்த ஸ்வாமியே! நான் கர்ம யோகத்தில் நிலையாக இல்லை; என்னிடத்தில் ஆத்ம ஞானமும் இல்லை;
என்னிடத்தில் உன் திருவடிகள் விஷயமான பக்தியும் இல்லை; இப்படி வேறு உபாயமும் புகலும் இல்லாத நான்,
உன் திருவடிகளையே உபாயமாக உறுதியாக ஏற்றுக் கொள்கிறேன்.

——————

ஶ்லோகம் 23 –
எம்பெருமான் “உம்மிடத்தில் நன்மைகள் இல்லை என்றாலும் சரி; ஆனால் உம்முடைய தகுதியைக் குலைக்கும்
தடை செய்யப்பட்ட விஷயங்களில் ஈடுபாடு இல்லாமல் இருந்தாலே, நானே உமக்கு நன்மைகளை உண்டாக்கி பேற்றையும் கொடுப்பேன்”
என்று சொல்லுவதாக எண்ணி “நான் தீமைகளின் முழுமையான வடிவமாக இருக்கிறேன்” என்கிறார் ஆளவந்தார் .

ந நிந்திதம் கர்ம ததஸ்தி லோகே
ஸஹஸ்ரஶோ யந்ந மயா வ்யதாயி |
ஸோ’ஹம் விபாகாவஸரே முகுந்த!
க்ரந்தாமி ஸம்ப்ரத்யகதிஸ் தவாக்ரே ||

மோக்ஷத்தைக் கொடுக்கும் ஸ்வாமியே! பல்லாயிரம் முறை என்னால் செய்யப்படாத நிந்திக்கப்பட்ட கர்மங்கள்
சாஸ்த்ரங்களிலேயே இல்லை; இப்பொழுது, என்னுடைய பாபங்கள் பலன் கொடுக்கும் சமயத்தில்,
வேறு புகல் இல்லாததால், நான் தேவரீர் திருமுன்பே நின்று கதறுகிறேன்.

—————-

ஶ்லோகம் 24 –
ஆளவந்தார் எம்பெருமானை அழைத்து “உன்னுடைய கருணையே எனக்கிருக்கும் ஒரே புகல்” என்கிறார்;
ஆளவந்தார் “உன்னை அடைவது எனக்கு எப்படி ஒரு பாக்யமோ, உன்னுடைய கருணைக்கும் நானே தகுதியான பேறு” என்கிறார்.

நிமஜ்ஜதோ’நந்த பவார்ணவாந்த:
சிராய மே கூலமிவாஸி லப்த: |
த்வயாபி லப்தம் பவகவந்நிதாநீம்
அநுத்தமம் பாத்ரமிதம் தயாயா: ||

தேச கால வஸ்துக்களினால் எல்லையிலாத ஸ்வாமியே! இந்த ஸம்ஸாரக் கடலில் பல காலமாக மூழ்கியிருக்கும் எனக்கு
நீ கரையைப் போலே வந்தாய்; பகவானே! உன்னுடைய கருணைக்கு நானே தகுந்த பாத்திரம்.

—————–

ஶ்லோகம் 25 –
எம்பெருமான் “உம்முடைய பாரத்தை முழுவதுமாக என்னிடம் வைத்த பின்பு,
நீர் ஸ்ரீராமாயணம் ஸுந்தர காண்டம் 9.30இல் ‘தத் தஸ்ய ஸத்ருஶம் பவேத்’
(ஸ்ரீராமனே லங்கையை அழித்து என்னை ரக்ஷிப்பதே அவன் தன்மைக்குச் சேர்ந்தது – ஆகையால் நான் அவர் வரும் வரை காத்திருப்பேன்)
என்றபடி இருக்க வேண்டாமோ? எதற்காக உடனே நான் உமக்கு உதவ வேண்டும் என்று நிர்பந்தம் செய்கிறீர்?” என்று கேட்க,
ஆளவந்தார் “என்னுடைய துயரத்தைப் போக்கும்படி நான் கேட்க வில்லை; உன்னுடைய அடியார்கள் இவ்வுலகில் துன்பப்பட்டால்
அது உன்னுடைய பெருமைக்குத் தானே அவப் பெயர்; அதைப் போக்கிக் கொள்ளும்படி ப்ரார்த்திக்கிறேன்” என்கிறார்.

அபூத பூர்வம் மம பாவி கிம்வா
ஸர்வம் ஸஹே மே ஸஹஜம் ஹி து:க்கம் |
கிந்து த்வதக்ரே ஶரணாகதாநாம்
பராபவோ நாத! ந தே’நுரூப: ||

ஸ்வாமியே! இதுவரை அனுபவிக்காத எந்தப் புதிய துன்பம் எனக்கு ஏற்படப்போகிறது இப்போது?
இந்தத் துன்பங்களை நான் பொறுத்துக்கொள்கிறேன்; இவை என்னுடன் பிறந்தவை;
ஆனால் உன்னிடம் சரணடைந்தவர்களுக்கு தேவரீரின் திருமுன்பே ஒரு அவமானம் ஏற்பட்டது என்றால்,
அது தேவரீருடைய பெருமைக்குச் சேராது.

—————

ஶ்லோகம் 26 –
ஆளவந்தார் “நீ உன்னுடைய பெருமைக்கு ஏற்படும் தோஷத்தையும் பார்க்காமல் என்னைக் கை விட்டாலும்,
நான் உன்னை விடமாட்டேன்” என்று தன்னுடைய அகதித்வத்தினாலே (வேறு புகலில்லாத நிலையினாலே)
உண்டான மஹா விஶ்வாஸத்தை வெளியிடுகிறார்.

நிராஸகஸ்யாபி ந தாவதுத்ஸஹே
மஹேஶ! ஹாதும் தவ பாத பங்கஜம் |
ருஷா நிரஸ்தோ’பி ஶிஶு: ஸ்தநந்தயோ
ந ஜாது மாதுஶ் சரணௌ ஜிஹாஸதி ||

ஸர்வேஶ்வரனே! நீ என்னைத் தள்ளினாலும், நான் உன்னுடைய திருவடித் தாமரைகளை விடத் துணிய மாட்டேன்;
பால் குடிக்கும் குழந்தையைத் தாயானவள் கோபத்தில் தள்ளினாலும், அக்குழந்தை தாயின் காலை விடாமல் இருக்குமா போலே.

—————-

ஶ்லோகம் 27 –
ஆளவந்தார் “அநந்ய கதித்வத்தினால் மட்டுமா நான் உன்னைப் பிரியாமல் இருக்கிறேன்?
உன்னுடைய போக்யமான தன்மையில் என் மனம் மூழ்கியிருப்பதால், நான் வேறு விஷயங்களை விரும்ப மாட்டேன்” என்கிறார்.

தவாம்ருதஸ்யந்திநி பாத பங்கஜே
நிவேஶிதாத்மா கதம் அந்யதிச்சதி? |
ஸ்திதே’ரவிந்தே மகரந்தநிர்ப்பரே
மதுவ்ரதோ நேக்ஷுரகம் ஹி வீக்ஷதே ||-

அதிகமான தேனைப் பெருக்கும் உன்னுடைய திருவடிகளில், உன்னுடைய க்ருபையினால் பதிந்திருக்கும் என் மனம்,
வேறு விஷயங்களை எப்படி ஆசைப்படும்?
தேன் நிறைந்த சிவந்த தாமரை இருக்கும்பொழுது, ஒரு வண்டானது முள்ளிப்பூவை விரும்பாதன்றோ?

—————

ஶ்லோகம் 28 –
ஆளவந்தார் “எனக்கு நீ உதவுவதற்கு நான் ஒரு முறை அஞ்சலி (கை கூப்புதல்) செய்வது அமையாதோ?”
என்று அருளிச் செய்கிறார்..

த்வதங்க்ரிம் உத்திஶ்ய கதா’பி கேநசித்
யதா ததா வா’பி ஸக்ருத்க்ருதோ’ஞ்ஜலி |
ததைவ முஷ்ணாத்யஶுபாந்யஶேஷத:
ஶுபாநி புஷ்ணாதி நஜாது ஹீயதே ||

காயிக சரணாகதியைக் குறிக்கும் ஒரு அஞ்சலியை யார் எச் சமயத்தில் எவ்வாறு செய்தாலும், அது எல்லாப் பாபங்களையும்
அடியோடு உடனே போக்கி விடும்; மங்களங்களை வளர்க்கும்; அந்த மங்களங்கள் அழியாமல் இருக்கும்.

—————–

ஶ்லோகம் 29 –
இந்த ச்லோகம் மானஸீக ப்ரபத்தியைக் காட்டும்.
அல்லது –
28 மற்றும் 29ஆம் ச்லோகங்களில் சரணாகதியின் பலனான பர பக்தியை விளக்குவதாக அமைந்திருக்கும்.

உதீர்ண ஸம்ஸார தவாஶுஶுக்ஷணிம்
க்ஷணேந நிர்வாப்ய பராஞ்ச நிர்வ்ருதிம் |
ப்ரயச்சதி த்வச் சரணாருணாம்புஜ
த்வயாநுராகாம்ருத ஸிந்து ஶீகர:||

உன்னுடைய சிவந்த திருவடித் தாமரைகளில் கொள்ளும் அன்புக் கடலில் ஒரு சிறு துளியே மிகவும் உக்ரமாக எரியும்
காட்டுத் தீ போன்ற ஸம்ஸாரத்தை ஒரு க்ஷணத்திலே போக்கி, உயர்ந்த ஆனந்தத்தையும் கொடுக்கும்.

—————-

ஶ்லோகம் 30 –
ஆளவந்தார், பலன் கொடுப்பதில் விளம்பமில்லாத ஸித்தோபாயமான பகவானைப் பற்றியிருப்பதாலும்,
அந்தப் பலனைப் பெறுவதற்குக் காத்திருக்க முடியாததாலும், த்வரையால் தூண்டப்பட்டு
திருவாய்மொழி 6.9.9இல் “கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ”
(என்னை உன்னிடத்தில் அழைத்துக்கொள்ளும் காலம் அருகில் வாராதோ?) என்று ஆழ்வார் கேட்டபடிக் கேட்கிறார்.
அல்லது –
ப்ரபத்தியின் பலனான பரபக்தியினால், ஆளவந்தார்,
திருவாய்மொழி 6.3.10இல் “கனைகழல் காண்பதென்று கொல் கண்கள்”
(என்னுடைய கண்கள் எப்பொழுது எம்பெருமானின் திருவடிகளைக் காணும்) என்றும்
திருவாய்மொழி 9.5.1இல் “காணக் கருதும் என் கண்ணே”
(அவனைக் காண என் கண்கள் ஆசைப்படும்) என்றும் ஆழ்வார் சொன்னபடி எம்பெருமானின் திருவடிகளை
எப்பொழுது காண்பேன் என்று கேட்கிறார்.

விலாஸ விக்ராந்த பராவராலயம்
நமஸ்யதார்த்தி க்ஷபணே க்ருதக்ஷணம் |
தநம் மதீயம் தவ பாத பங்கஜம்
கதாநு ஸாக்ஷாத் கரவாணி சக்ஷுஷா ||

என்னுடைய கண்கள் என்னுடைய தனமும், உயர்ந்த தேவர்கள் மற்றும் தாழ்ந்த மனிதர்களின் இருப்பிடங்களை
விளையாட்டாக அளந்து தன்னதாகக் கொண்டு இருக்கும், வணங்குபவர்களின் துன்பத்தைப் போக்கும்
உன்னுடைய திருவடியை எப்பொழுது காணும்?

———————

ஶ்லோகம் 31 –
இதில், ஆளவந்தார் “உன்னுடைய திருவடிகளைக் கண்டால் போதாது, அவை என்னுடைய தலையை அலங்கரிக்க வேண்டும்”
என்று ஆழ்வார் திருவாய்மொழி 9.2.2இல் “படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கணியாய்”
(இவ்வுலகத்தின் அளவுக்கு நீட்டிய திருவடித் தாமரைகளை என் தலைக்கு அணியாக ஆக்க வேண்டும்) என்றும்
திருவாய்மொழி 4.3.6இல் “கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே”
(என்னுடைய தலைக்கு உன்னுடைய தாமரை போன்ற திருவடிகளே அலங்காரமாகும்) என்றும் கேட்டபடி அருளிச் செய்கிறார்.

கதா புநஶ் ஶங்க ரதாங்க கல்பக
த்வஜாரவிந்தாங்குஶ வஜ்ரலாஞ்சநம் |
த்ரிவிக்ரம! த்வச் சரணாம்புஜ த்வயம்
மதீய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி ||

த்ரிவிக்ரமனாக அவதரித்த என் ஸ்வாமியே! சங்கம், சக்ரம், கற்பக மரம், கொடி, தாமரை, அங்குசம், வஜ்ராயுதம்
ஆகிய அடையாளங்கள் பொருந்திய உன்னுடைய திருவடிகள் எப்பொழுது என்னுடை தலையை அலங்கரிக்கும்.

—————–

ஶ்லோகம் 32 –
இதிலிருந்து 46ஆவது ச்லோகம் வரை ஆளவந்தார் எம்பெருமானுடன் கூடியிருக்கும் அவனுடைய
அழகிய அவயவங்கள், திருவாபரணங்கள், திவ்ய ஆயுதங்கள், திவ்ய மஹிஷிகள், திவ்ய அடியார்கள், செல்வம்
ஆகியவைகளை அனுபவித்து, இப்படிப்பட்ட ஆனந்தமான அனுபவத்தினால் கிடைக்கும் கைங்கர்யம்
தனக்கு எப்பொழுது கிடைக்கும் என்கிறார்.
இதன் மூலம், ஆளவந்தார் பகவானுக்குப் பரமபதத்தில் அடியார்களுடன் கூடி இருந்து கைங்கர்யம் செய்யும் குறிக்கோளை அருளிச் செய்கிறார்.

விராஜ மாநோஜ்ஜ்வல பீத வாஸஸம்
ஸ்மிதாத ஸீஸூந ஸமாமலச்சவிம் |
நிமக்ந நாபிம் தநுமத்யம் உந்நதம்
விஶால வக்ஷஸ்ஸ்தல ஶோபி லக்ஷணம் ||

எம்பெருமான் ஒளிவிடும் திருப் பீதாம்பரத்தை அணிந்துள்ளான்;
மலர்ந்த காயாம்பூவின் நிறத்தைப் போன்ற தோஷமற்ற ஒளியுடையவன்;
ஆழமான திருநாபி மற்றும் மெலிந்த இடைப்பகுதியை உடையவனாகச் சிறந்து விளங்குகிறான்,
ஒளிவிடும் ஸ்ரீவத்ஸம் என்கிற மறுவைத் தன் பரந்த திருமார்பில் உடையவன்-

————

ஶ்லோகம் 33 –
இதில், ஆளவந்தார் எம்பெருமானுடைய வீரம், சௌர்யம் முதலிய குணங்களையும்
எம்பெருமானின் திருத்தோள்களின் அழகையும் அனுபவிக்கிறார்.

சகாஸதம் ஜ்யாகிண கர்க்கஶைஶ் ஶுபை:
சதுர்பிராஜாநு விளம்பிபிர் புஜை: |
ப்ரியாவதம்ஸோத்பல கர்ண பூஷண
ஶ்லதாலகாபந்த விமர்த்த ஶம்ஸிபி: ||

வில்லில் நாணேற்றியதால் கடினமாக இருக்கும் நான்கு திருக் கைகளால் ஒளிவிடுகிறான் எம்பெருமான்;
மேலும் அவனுடைய திருத்தோள்களில் ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயாரின் காதுகளில் அணிந்திருக்கும் கரிய நிறத்தில்
இருக்கும் அல்லிப் பூக்கள், அவளின் காதணிகள் மற்றும் அலையும் கூந்தலின் அடையாளங்கள் தெரிகின்றன –

————-

ஶ்லோகம் 34 –
திருத்தோள்களை அனுபவித்த பிறகு, எம்பெருமானின் திருக்கழுத்தையும் திருமுகமண்டலத்தின் அழகையும்
ஆளவந்தார் அனுபவிக்கிறார்.

உதக்ர பீநாம்ஸ விலம்பி குண்டல
அலகாவளீ பந்துர கம்புகந்தரம் |
முகஶ்ரியா ந்யக்க்ருதபூர்ண நிர்மலா’-
ம்ருதாம்ஶு பிம்பாம்புருஹோஜ்ஜ்வல ஶ்ரியம் ||

எம்பெருமான் அணிந்திருக்கும் குண்டலங்கள் அவனுடைய உயர்ந்த திரண்டிருக்கும் திருத்தோள்களின் வரை வந்து தொங்குவதாலும்,
அவனுடைய சுருண்ட கூந்தலினாலும், மூன்று வரிகள் இருப்பதாலும் அவனுடைய திருக்கழுத்து அழகாக இருக்கிறது.
தன்னுடைய திருமுக மண்டலத்தின் ஒளியால் தோஷமற்ற நிலவு மற்றும் அப்போதலர்ந்த தாமரை மலரை ஜயித்திருக்கிறான் —

————-

ஶ்லோகம் 35 –
ஆழ்வார், திருவாய்மொழி 7.7.8இல் “கோளிழைத் தாமரை”
(எம்பெருமானின் திருக்கண்கள் அவற்றின் ஒளியையே ஆபரணமாகக் கொண்டிருக்கின்றன) என்று சொன்னபடி,
ஆளவந்தார் எம்பெருமானின் திருமுகமண்டலத்தை ஒவ்வொரு அவயமாக அனுபவிக்கிறார்.

ப்ரபுத்த முக்தாம்புஜ சாருலோசநம்
ஸவிப்ரம ப்ரூலதம் உஜ்ஜ்வலாதரம் |
ஶுசிஸ்மிதம் கோமல கண்டம் உந்நஸம்
லலாடபர்யந்த விலம்பிதாலகம் ||

எம்பெருமான் மலர்ந்த, புதிய தாமரை மலரைப் போன்ற திருக்கண்களையும், கொடி போன்று வளைந்த திருப்புருவங்களையும்,
மிகவும் ஒளிவிடும் திருவதரங்களையும், புனிதமான புன்முறுவலையும், அழகிய கன்னங்களையும், நிமிர்ந்த திருமூக்கையும்,
திருநெற்றி வரை படர்ந்திருக்கும் திருக்குழலையும் (கூந்தலையும்) உடையவன் –

——————

ஶ்லோகம் 36 –
ஆளவந்தார் எம்பெருமானின் திருவாபரணங்கள் மற்று திவ்ய ஆயுதங்களின் சேர்த்தியை அனுபவிக்கிறார்.

ஸ்புரத் கிரீடாங்கத ஹாரகண்டிகா
மணீந்த்ர காஞ்சீகுண நூபுராதிபி: |
ரதாங்க ஶங்காஸி கதா தநுர்வரைர்
லஸத் துளஸ்யா வநமாலயோஜ்ஜ்வலம் ||

எம்பெருமான் ஒளிவிடும் திருமுடி (கிரீடம்), தோள் காப்புகள், ஹாரம், கழுத்தில் அணியும் சங்கிலி, ஸ்ரீகௌஸ்துப மணி,
திவ்ய அரை நாண், திவ்ய சதங்கைகள் முதலிய திவ்ய ஆபரணங்களாலும்,
திருவாழி, திருச்சங்கு, திருநாந்தகம் என்னும் வாள், கௌமோதகீ என்னும் கதை, சார்ங்கம் என்னும் வில் ஆகிய திவ்ய ஆயுதங்களாலும்,
அவனுடைய திருமேனி ஸம்பந்தத்தால் ஒளி விடும் திருத்துழாய் மற்றும் வனமாலையால் மிகவும் ஜ்வலித்துக் கொண்டிருக்கிறான்.

—————-

ஶ்லோகம் 37 –
இனி வரும் இரண்டு ஶ்லோகங்களில் எம்பெருமான் பெரிய பிராட்டியுடன் கூடி இருப்பதை அனுபவிக்கிறார்.
இந்த ஶ்லோகத்தில், ஆளவந்தார் பிராட்டியின் பெருமையையும், ஈஶ்வரனுக்கு அவளிடத்தில் இருக்கும் பேரன்பையும் அருளிச் செய்கிறார்.

சகர்த்த யஸ்யா பவநம் புஜாந்தரம்
தவ ப்ரியம் தாம யதீய ஜந்மபூ: |
ஜகத்ஸமஸ்தம் யதபாங்க ஸம்ஶ்ரயம்
யதர்த்தம் அம்போதிரமந்த்ய பந்திச ||

எம்பெருமானே! எந்தப் பிராட்டிக்கு இருப்பிடமாக உன்னுடைய திருமார்பை ஆக்கினாயோ,
எந்தப் பிராட்டியின் பிறப்பிடமான திருப்பாற்கடல் உனக்கு விருப்பமான உறைவிடம் ஆனதோ,
எந்தப் பிராட்டியின் கடாக்ஷத்தை நம்பி இவ்வுலகம் இருக்கிறதோ, யாருக்காக நீ கடலைக் கடைந்தாயோ,
யாருக்காக நீ கடலில் அணை கட்டினாயோ–

————

ஶ்லோகம் 38 –
இதில், ஆளவந்தார் பிராட்டியின் எல்லை இல்லாத இனிமையையும், அவள் எம்பெருமானுக்காகவே இருப்பதையும்,
திருவாய்மொழி 10.10.6இல் “உனக்கேற்கும் கோல மலர்ப் பாவை”
(உனக்குத் தகுந்தவளான, அழகிய தாமரை மலரில் வசிக்கும் ஸ்ரீமஹாலக்ஷ்மி) சொன்னபடி அனுபவிக்கிறார்.

ஸ்வவைஶ்வ ரூப்யேண ஸதா’நு பூதயா’பி
அபூர்வவத் விஸ்மயமாததாநயா |
குணேந ரூபேண விலாஸ சேஷ்டிதை:
ஸதா தவைவோசிதயா தவ ஶ்ரியா ||

நீ விஶ்வரூபம் எடுத்து முழுவதுமாக அனுபவித்தாலும், பிராட்டி தன்னுடைய குணங்கள், அழகிய திருமேனிகள்
மற்றும் செயல்களால் உன்னை ஆச்சர்யம் அடையும்படிச் செய்து, உன்னுடைய பரம், வ்யூஹம், விபவம் முதலிய
எல்லா நிலைகளிலும் உனக்குப் புதிதாகத் தோன்றி, உனக்குத் தகுந்தவளாக விளங்கி, உன்னுடைய செல்வமாக இருக்கிறாள்.

—————-

ஶ்லோகம் 39 –
ஆளவந்தார், திருவனந்தாழ்வானின் திருமடியில் எம்பெருமானும் பிராட்டியும் கூடியிருப்பதைப்
பர்யங்க வித்யையில் காட்டியபடி அனுபவிக்கிறார்.

தயா ஸஹாஸீநம் அநந்தபோகிநி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞாநபலைக தாமநி |
பணாமணி வ்ராத மயூக மண்டல
ப்ரகாஶ மாநோதர திவ்யதாமநி ||

ஆதிசேஷன் சிறந்த ஞானத்தையும், பலத்தையும் உடையவன், தன்னுடைய பணாமணிகளில் இருக்கும் ரத்னங்களின் ஒளியால்
ஒளிவிடும் திருமடியில், பெருமாளும் பிராட்டியும் எழுந்தருளியிருக்கும் திவ்ய அந்தப்புரத்தைக் கொண்டிருக்கிறான்;
இப்படிப்பட்ட திருவனந்தாழானின் திருமேனியில், எம்பெருமான் திவ்யமாக சயனித்திருக்கிறான்–

—————–

ஶ்லோகம் 40 –
கைங்கர்யத்தில் இருக்கும் ஆசையால், ஆளவந்தார் திருவனந்தாழ்வானின் உயர்ந்த லீலைகளை அனுபவிக்கிறார்.
ஸ்ரீவிஷ்ணு புராணம் 1.15.157இல் ““உபமானமஶேஷாணாம் ஸாதூனாம் யஸ்ஸதா’பவத் |”
(எப்படி ப்ரஹ்லாதன் எல்லா நல்லவர்களுக்கும் உதாரணமாக இருக்கிறானோ) சொன்னபடி,
கைங்கர்யத்தில் ருசியுடைய அனைவருக்கும் திருவனந்தாழ்வானின் செயல்களே சிறந்த உதாரணம்.
ஆளவந்தார் இப்படிப்பட்ட ஆதிசேஷனின் உயர்ந்த நிலையை அருளிச் செய்கிறார்.

நிவாஸ ஶய்யாஸந பாதுகாம்ஶுக
உபதாந வர்ஷாதப வாரணாதிபி: |
ஶரீர பேதைஸ் தவ ஶேஷதாம் கதைர்
யதோசிதம் ஶேஷ இதீரிதே ஜநை: ||

நீ திருவனந்தாழ்வானின் திருமேனியிலே திவ்யமாக சயனித்திருக்கிறாய். திருவனந்தாழ்வான் நீ வசிக்கும் திருமாளிகையாகவும்,
சயனித்துக்கொள்ளும் படுக்கையாகவும், வீற்றிருக்கும் ஸிம்ஹாஸனமாகவும். அணிந்துகொள்ளும் பாதுகையாகவும்,
உடுத்திக்கொள்ளும் ஆடைகளாகவும், அணைத்துக்கொள்ளும் தலையணையாகவும்,
வெயில் மற்றும் மழையிலிருந்து காக்கும் குடையாகவும், மேலும் பல வடிவங்களையும் எடுத்துக்கொண்டு
உனக்குத் தொண்டு செய்வதால் எல்லோராலும் “சேஷன்” (தொண்டன்) என்றே அழைக்கப்படுகிறான் —

————-

ஶ்லோகம் 41 –
இதில், ஆளவந்தார் எம்பெருமான் பெரிய திருவடியுடன் (கருடாழ்வார்) கூடியிருப்பதை அனுபவிக்கிறார்.
பெரியதிருவடி, எம்பெருமானுக்குக் கொடியாகவும், மற்றும் எல்லாமாகவும் பழுத்த கனியைப் போன்று
எம்பெருமானுக்கு விரும்பத்தக்கவராக இருக்கிறார்.

தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ
யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய: |
உபஸ்திதம் தேந புரோ கருத்மதா
த்வதங்க்ரி ஸம்மர்த்த கிணாங்கஶோபிநா ||

வேதங்களையே அங்கங்களாக உடைய அந்த கருடாழ்வார், உனக்கு அடியவனாகவும், நண்பனாகவும், வாஹனமாகவும்,
ஆஸனமாகவும், கொடியாகவும், விதானமாகவும், சாமரமாகவும் இருக்கிறார்;
மேலும் உன்னுடைய திருவடிகள் அவருடைய தோள்களில் அழுத்தியதால் ஏற்பட்ட தழும்புகளாலே ஒளிவிடுகிறார்;
உன்னுடைய ஸன்னிதியில் இப்படிப்பட்ட கருடாழ்வாரால் நீ வணங்கப்படுகிறாய் —

————–

ஶ்லோகம் 42 –
ஆளவந்தார் ஸ்ரீ ஸேனாபதி ஆழ்வானின் (விஷ்வக்ஸேனர்) தாஸ்ய ஸாம்ராஜ்யத்தை அனுபவிக்கிறார்;
எம்பெருமான் தன்னுடைய எல்லாப் பொறுப்புகளையும் விஷ்வக்ஸேனரிடம் அளித்துத் தன்னையும் அவர் அதீனத்தில் அமைத்துக் கொள்கிறான்.

த்வதீய புக்தோஜ்ஜித ஶேஷபோஜிநா
த்வயா நிஸ்ருஷ்டாத்ம பரேண யத்யதா |
ப்ரியேண ஸேநாபதிநா ந்யவேதி தத்
ததா’நுஜாநந்தம் உதார வீக்ஷணை: ||

விஷ்வக்ஸேனர் உன்னுடைய ப்ரஸாதத்தையே உண்டு, உன்னுடைய நித்ய மற்றும் லீலா விபூதிகளை நடத்தும்
பொறுப்புகளை உன்னிடத்திலிருந்து பெற்றிருக்கிறார்;
எல்லோருக்கும் இனியவரான அவர், உன்னுடைய கண்ணசைவினாலே செய்ய வேண்டிய விஷயங்களுக்கு ஒப்புதல் வாங்கி,
அவற்றை நடத்தக் கூடியவர்.

—————

ஶ்லோகம் 43 –
விஷ்ணு ஸூக்தத்தில் “ஸதா பஶ்யந்தி ஸூரய:” (நித்யஸூரிகள் எப்பொழுதும் எம்பெருமானைப் பார்த்து அனுபவிக்கிறார்கள்)
என்று சொன்னபடி, எம்பெருமானுக்கு நித்யஸூரிகள் செய்யும் கைங்கர்யத்தை அனுபவிக்கிறார்.
இவருடைய ப்ரார்த்தனை திருவாய்மொழி 2.3.10இல் “அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ?”
(எப்பொழுது நான் நித்யஸூரிகள் கோஷ்டியில் இருப்பேன்?) என்று ஆழ்வார் கேட்டபடி இருக்கும்.

ஹதாகில க்லேஶமலை: ஸ்வபாவத:
*ஸதாநுகூல்யைகரஸைஸ் தவோசிதை: |
க்ருஹீத தத்தத் பரிசார ஸாதநை:
நிஷேவ்யமாணம் ஸசிவைர் யதோசிதம் ||-

* த்வதாநுகூல்யைக என்றும் ஒரு பாடம் உண்டு..

துன்பங்களும் தோஷங்களும் இல்லாத, எப்பொழுதும் உனக்குத் தொண்டு செய்யும் அனுபவத்தை உடைய,
உனக்குப் பொருத்தமாக இருக்கக்கூடியவர்களான, கையில் எப்பொழுதும் கைங்கர்யத்துக்குத் தேவையான
மாலை, தூபம், தீபம் முதலியவைகளை ஏந்தி இருப்பவர்களான, உனக்கும் முறையை உணர்த்திக்
கைங்கர்யம் செய்யக்கூடியவர்களான, அவர்கள் மற்றும் உன் தன்மைக்கேற்ப உன்னை வணங்கக்கூடிய நித்யஸூரிகளால் வணங்கப்படுபவனே!

————–

ஶ்லோகம் 44 – ஸ்ரீ ராமாயணம் அயோத்யா காண்டம் 31.25இல்
இளைய பெருமாள் “பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸானுஷு ரம்ஸ்யதே”
(நீ ஸீதாப்பிராட்டியுடன் மலைத்தாழ்வரைகளில் ரமித்திருக்கும்போது, நான் உங்கள் இருவருக்கும் தொண்டு செய்வேன்)
என்று சொன்னபடி, ஆளவந்தார் எம்பெருமான் பிராட்டிக்கு ஆனந்தம் கொடுப்பதை அனுபவிக்க ஆசைப்படுகிறார்.

அபூர்வ நாநா ரஸ பாவ நிர்பர
ப்ரபுத்தயா முக்த விதக்த லீலயா |
க்ஷணாணுவத் க்ஷிப்தபராதி காலயா
ப்ரஹர்ஷயந்தம் மஹிஷீம் மஹாபுஜம் ||

தன்னுடைய அழகான மற்றும் சிறந்ததான லீலைகளால் பிராட்டிக்கு ஆனந்தத்தைக் கொடுப்பவன் எம்பெருமான்;
இப்படிப்பட்ட லீலைகளால் பிராட்டிக்கு ப்ரஹ்மாவின் ஆயுட்காலமும் ஒரு நொடிப்பொழுதில் செல்லும்படி
ஒவ்வொரு க்ஷணமும் புதியதாக ரசிக்கும்படியாக இருக்கும்; பிராட்டியைத் தழுவுதற்கு ஏற்ற பெரிய திருக்கைகளை உடையவன்.

—————

ஶ்லோகம் 45 –
ஆளவந்தார் பிராட்டிக்கு ஆனந்தத்தைக் கொடுக்கும், ரசிக்கும்படியான விஷயங்களுக்கு இருப்பிடமான
எம்பெருமானின் திருமேனிகள் மற்றும் திருக்கல்யாண குணங்களை அனுபவிக்கிறார்.

அசிந்த்ய திவ்யாத்புத நித்ய யௌவந
ஸ்வபாவ லாவண்யமயாம்ருதோததிம் |
ஶ்ரிய: ஶ்ரியம் பக்த ஜநைக ஜீவிதம்
ஸமர்த்தம் ஆபத்ஸகம் அர்த்தி கல்பகம் ||

எம்பெருமான் நினைவுக்கு அப்பாற்பட்ட, திவ்யமான, ஆச்சர்யமான, நித்யமான, இயற்கையான இளமையை உடையவன்;
அழகுக் கடலாக இருப்பவன்; ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கும் ஸ்ரீயாக (செல்வமாக) இருப்பவன்;
தன்னுடைய அடியார்களின் உயிராக இருப்பவன்; அறிவில் குறைந்தவர்களையும் படிப்படியாக உயர்த்தக்கூடியவன்,
ஆபத்துக் காலத்தில் நண்பனாக இருப்பவன், அவனை விரும்புபவர்களுக்கு கற்பக மரமாக இருப்பவன் –

——————-

ஶ்லோகம் 46 –
ஆளவந்தார் “எப்பொழுது உலக விஷயங்களில் ஆசையைவிட்டு தேவரீருடைய ஆனந்துக்காகவும்
என்னுடைய இருப்பின் பயனாகவும், முன்பு சொன்ன ஸ்வரூபம், ரூபம், குணம், விபூதி ஆகியவைகளில்
பூர்த்தியை உடைய தேவரீருக்குக் கைங்கர்யம் செய்வேன்?” என்று கேட்கிறார்.

பவந்த மேவாநுசரந் நிரந்தரம்
ப்ரஶாந்த நிஶ்ஶேஷ மநோரதாந்தர: |
கதா’ஹம் ஐகாந்திக நித்ய கிங்கர:
ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாதஜீவித: ||

மற்ற எல்லா விஷயங்களிலுமிருக்கும் ஆசையை அடியோடு விட்டு உன்னையே தொடரும்படி இருந்து,
எப்பொழுதும் உனக்கு நித்ய கைங்கர்யம் செய்து உனக்கு ஆனந்தத்தைக் கொடுத்து என் வாழ்கைக்கும் ஒரு பயனைப் பெறுவேன்?

———————

ஶ்லோகம் 47 –
இதில், ஆளவந்தார் ஈஶ்வரனின் அடையத்தக்க உயர்ந்த நிலையையும் தன்னுடைய முந்தைய (தாழ்ந்த) நிலையையும் பார்த்து
“ஸம்ஸாரியான நான் எப்படி ப்ரஹ்மா ருத்ரன் போன்றவர்களின் எண்ணத்துக்கும் அப்பாற்பட்ட, இவ்வுலக விஷயங்களால்
தீண்டப்படாத நித்யஸூரிகள் ஆசைப்படும் கைங்கர்யத்தை ஆசைப்படலாம்?
எப்படி உயர்ந்த உணவானது விஷத்தால் தீண்டப்படலாம்?” என்று நினைத்து,
நம்மாழ்வார் “வளவேழுலகில்” செய்ததைப்போலே தன்னைத் தானே கடிந்து கொள்கிறார்.

திகஶுசிம் அவிநீதம் நிர்த்தயம் மாமலஜ்ஜம்
பரம புருஷ! யோ’ஹம் யோகிவர்யாக்ரகண்யை: |
விதிஶிவ ஸநகாத்யைர் த்யாதும் அத்யந்த தூரம்
தவ பரிஜநபாவம் காமயே காமவ்ருத்த: ||

புருஷோத்தமனே! என்னுடைய (தவறான) எண்ணப்படி நடக்கும் தன்மையை உடைய காரணத்தால் ப்ரஸித்தமான நான்,
என்னுடைய புனிதமற்ற தன்மையாலும், சீர் செய்யப்படாத தன்மையாலும், கருணையும், வெட்கமும் இல்லாத தன்மையாலும்,
ப்ரஹ்மா, சிவன், ஸனகாதி முனிவர்கள் போன்ற உயர்ந்த யோகிகளுக்கும் எட்டாததான
உன் கைங்கர்யத்தை ஆசைப்பட்டதை என்னையே நினைத்து நொந்துகொள்ள வேண்டும்.

——————

ஶ்லோகம் 48 –
ஆளவந்தார் எம்பெருமானிடத்தில் “உன்னுடைய கருணையால், என்னுடைய பாபங்களைப் போக்கி
என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று ப்ரார்த்திக்கிறார்.
அல்லது –
ஆளவந்தார் எம்பெருமானிடத்தில் “என்னுடைய குறிக்கோளை அடைவதற்குத் தடையாக இருக்கும்
பாபங்களை நீயே போக்க வேண்டும்” என்று ப்ரார்த்திக்கிறார்.
முன்பு, எம்பெருமானின் மேன்மையின் உச்சக்கட்ட நிலையைப் பார்த்து விலகினார்;
இப்பொழுது எம்பெருமானின் எளிமையின் உச்சக் கட்ட நிலையை நினைத்து அவனை அணுகுகிறார்.

அபராத ஸஹஸ்ர பாஜநம்
பதிதம் பீமபவார்ணவோதரே |
அகதிம் ஶரணாகதம் ஹரே!
க்ருபயா கேவலமாத்ஸமாத் குரு ||

துன்பங்களைப் போக்கி என்னை ரக்ஷிப்பவனே! கணக்கில்லாத அபராதங்களுக்கு இருப்பிடம் நான்;
இப்பொழுது இந்த ஸம்ஸாரம் என்கிற க்ரூரமான கடலில் முழுகியுள்ளேன்; எனக்கு வேறு புகல் இல்லை;
உன்னிடத்திலே சரணடைந்துள்ளேன்; உன்னுடைய கருணையினாலே என்னை உன்னுடையவனாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

————–

ஶ்லோகம் 49 –
எம்பெருமான் ஆளவந்தாரைப் பார்த்து “இத்தனை தோஷங்களை உடைய நீர், வேறு உபாயங்களைக் கொண்டோ
அல்லது மற்றவைகளை விட்டு என்னையே பிடித்துக் கொண்டோ அவற்றைப் போக்கிக்கொள்ளாமல்,
என்னை ‘க்ருபயா கேவலம் ஆத்மஸாத் குரு’
(உன்னிடைய கருணையாலே, என்னை உன்னுடையவனாக ஏற்றுக் கொள் என்று ஏன் நிர்பந்திக்கிறீர்?” என்று கேட்க,
அதற்கு ஆளவந்தார்
“சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்ட அனுஷ்டானங்களில் ஈடுபட எனக்கு ஞானம் இல்லை,
ஆகையால் மற்ற உபாயங்களில் ஈடுபட வழியில்லை; எனக்கு வேறு புகல் இல்லாததால்,
இருப்பவற்றைக் கைவிடவும் முடியாது. ஆகையால் உன்னுடைய பெரிய கருணையினால்,
உன்னுடைய கடாக்ஷமே எனக்கு உஜ்ஜீவனத்துக்கு வழி” என்கிறார்.

அவிவேக கநாந்த திங்முகே
பஹுதா ஸந்தத து:க்கவர்ஷிணி |
பகவந்! பவதுர்திநே பத:
ஸ்கலிதம் மாம் அவலோகயாச்யுத ||

ஞானம், பலம் முதலிய ஆறு குணங்களால் பூர்த்தியை உடைய பகவானே! உன்னுடைய அடியார்களை நழுவ விடாதவனே!
திசைகள் கரிய மேகங்களால் மறைக்கப்பட்டிருக்கும், மழைக்கால இருட்டை உடைய, பெரிய மழை தொடர்ந்து பொழியும்
இந்த ஸம்ஸாரத்தில், நல்வழியில் இருந்து நான் நழுவுகிறேன்; உன்னுடைய கருணைக் கடாக்ஷத்தை எனக்கு அருள்.

—————–

ஶ்லோகம் 50 –
ஆளவந்தார் “எனக்கு உன்னுடைய கருணையைத் தவிர வேறு புகல் இல்லாததால், உன்னுடைய கருணைக்கும்
என்னை விட சிறந்த பாத்திரம் கிடையாது; ஆகையால் இந்த வாய்ப்பை நழுவ விடாதே” என்கிறார்.

ந ம்ருஷா பரமார்த்தமேவ மே
ஶ்ருணு விஜ்ஞாபநம் ஏகமக்ரத: |
யதி மே ந தயிஷ்யஸே ததோ
தயநீயஸ் தவ நாத துர்லப: ||

ஸ்வாமி! முதலில் என்னுடைய ப்ரார்த்தனையைக் கேள்; இது பொய்யல்ல; இது உண்மையே;
உன்னுடைய கருணையை எனக்கு அளிக்காமல் என்னை இழந்து விட்டாய் என்றால்,
உன்னுடைய கருணையைப் பெற என்னைவிடத் தகுந்த எவரையும் நீ பெறமாட்டாய்.

——————

ஶ்லோகம் 51 –
ஆளவந்தார் “உன்னுடைய அருளை வேண்டும் எனக்கும் அருளை உடைய உனக்கும் உள்ள இந்த ஸம்பந்தம்,
தேவரீருடைய கருணையினாலே ஏற்பட்டது; ஆகையால் இதைக் கைவிடாமல் நீ காக்க வேண்டும்” என்கிறார்.

ததஹம் த்வத்ருதே ந நாதவாந்
மத்ருதே த்வம் தயநீயவாந் ந ச |
விதி நிர்மிதம் ஏததந்வயம்
பகவந்! பாலய மா ஸ்ம ஜீஹப: ||

ஞானம் நிறைந்த ஸ்வாமியே! ஆதலால் உன்னைத் தவிர எனக்கு வேறு ஒரு ஸ்வாமி கிடையாது;
அதே போல உன்னுடைய கருணைக்கும் என்னைத் தவிர வேறு யாரும் சரியான பாத்திரம் கிடையாது.
உன்னுடைய கருணையால் ஏற்படுத்தப்பட்ட இந்த ஸம்பந்தம் காக்கப்பட வேண்டும்; அதை நழுவ விடாதே.

—————–

ஶ்லோகம் 52 –
எம்பெருமான் “என்னுடைய ரக்ஷணம் ஆத்மாவின் ஸ்வரூபத்தின்படி இருக்கும்; உம்முடைய ஸ்வரூபத்தை ஆராய்ந்து,
என்னிடத்தில் உம்மை ஸமர்ப்பியும்” என்று சொல்ல,
ஆளவந்தாரும் ஆழ்வார் திருவாய்மொழி 2.9.6இல் “சிறப்பில் வீடு” என்று செய்தபடி,
“எனக்கு எந்த நிர்பந்தமும் இல்லை; ஆத்மா என்று சொல்லப்படும் இந்த வஸ்து தேவரீரின் திருவடிகளில் என்னால் ஸமர்ப்பிக்கப்பட்டது”

வபுராதிஷு யோ’பி கோ’பி வா
குணதோ’ஸாநி யதா ததாவித: |
ததயம் தவ பாத பத்மயோ:
அஹமத்யைவ மயா ஸமர்ப்பித: ||

நான் சரீரம் முதலான எதுவாகவோ எப்படிப்பட்ட தன்மையை உடையவனாகவும் இருக்கலாம்;
அதைப்பற்றி எனக்கு ஒரு நிர்பந்தமும் இல்லை; நான் என்று சொல்லப்படும் இந்த வஸ்து இப்பொழுது
உன்னுடைய திருவடித் தாமரைகளில் என்னால் ஸமர்ப்பிக்கப் பட்டது.

————–

ஶ்லோகம் 53 –
எம்பெருமான் கருணையுடன் “எப்படி நாம் ஆளவந்தாரைக் கலக்கத்தில் இருக்கும்படி விடுவது?” என்று எண்ணி
“நீர் யார்; நீர் யாரை என்னிடம் ஸமர்ப்பித்தீர்?” என்று கேட்க,
ஆளவந்தார், தன்னுடைய ஸ்வரூபத்தை ஆழ்வார் திருவாய்மொழி 2.3.4இல் “எனதாவி ஆவியும் நீ … எனதாவி யார்? யானார்?”
(நீயே எனக்கு அந்தராத்மா; என்னுடைய ஆத்மா யார்? நான் யார்? எல்லாம் உன்னுடையவையே) என்றபடி
“உன்னுடைய உடைமையை நீயே ஏற்றுக்கொண்டாய்; ஆத்மாவை ஸமர்ப்பிப்பதும் ஆத்மாவைத் திருடுவது போலன்றோ?”
என்று சொல்லி தன்னுடைய ஆத்ம ஸமர்ப்பணச் செயலுக்கு வருந்துகிறார்.

மம நாத ! யதஸ்தி யோ’ஸ்ம்யஹம்
ஸகலம் தத்தி தவைவ மாதவ |
நியதஸ்வம் இதி ப்ரபுத்ததீ:
அதவா கிந்நு ஸமர்ப்பயாமி தே ||

ஸர்வ ஸ்வாமியான எம்பெருமானே! லக்ஷ்மீநாதனே! என்னுடைய எல்லா உடைமைப் பொருள்களும் நானும்
எப்பொழுதும் உன்னுடையவையே. இது தெரிந்த நான், உனக்கு எதை ஸமர்ப்பிப்பேன்?

—————–

ஶ்லோகம் 54 –
ஆளவந்தார் எம்பெருமானிடம் “ஆத்மாவைத் திருடுவதற்கு ஸமமான இந்த ஆத்ம ஸமர்ப்பணத்தை நான் நிறுத்தாததால்,
உன்னுடைய நிர்ஹேதுக க்ருபையினால் என்னுடைய சேஷத்வத்தை வெளியிட்டதைப் போலே,
பரபக்தி, பரஞானம் மற்றும் பரமபக்தி ஆகியவைகளையும் அளித்து,
இந்த ஞானம் உன்னுடைய கைங்கர்யத்துக்கு உதவும்படிச் செய்” என்கிறார்.

அவபோதிதவாநிமாம் யதா
மயி நித்யாம் பவதீயதாம் ஸ்வயம் |
க்ருபயைததநந்ய போக்யதாம்
பகவந்! பக்திம் அபி ப்ரயச்ச மே ||

என் ஸ்வாமியே! எப்படி உன்னுடைய நிர்ஹேதுக க்ருபையால் என்னுடைய சேஷத்வத்தை எனக்கு அறிவுறுத்தினாயோ,
அதேபோல வேறு எங்கும் கிடைக்காத, உன்னிடத்தில் பக்தி செய்யும் அந்த இனிய அனுபவத்தையும், நீயே அளிக்க வேண்டும்.

—————–

ஶ்லோகம் 55 –
ஆளவந்தார் பகவானிடத்தில் அதிகமான பக்தியைப் பெற்றபின், பகவானிடத்தில் அடிமைத்தனத்துடன் நிறுத்தாமல்,
அவனுடைய அடியார்களுக்கு அடிமையாக இருப்பதை ப்ரார்த்திக்கிறார்.

தவ தாஸ்ய ஸுகைக ஸங்கிநாம்
பவநேஷ்வஸ் த்வபி கீடஜந்ம மே |
இதராவஸதேஷு மா ஸ்ம பூத்
அபி மே ஜந்ம சதுர் முகாத்மநா ||

எம்பெருமானுக்குத் தொண்டு செய்வதில் மூழ்கியிருப்பவர்களின் திருமாளிகைகளில் ஒரு புழுவாகவாவது பிறக்க வேண்டும்.
மற்ற க்ருஹங்களில் ப்ரஹ்மாவாகப் பிறப்பதும் எனக்கு வேண்டாம்.

—————–

ஶ்லோகம் 56 –
ஆளவந்தார் “எனக்கு ஒரு வைஷ்ணவரின் திருமாளிகையில் பிறக்கும் பெருமை தான் வேண்டுமோ?
அவர்கள் என்னைக் கண்டால், என்னைத் தள்ளி விடாமல், “இவன் நம்மவன்” என்று கருதித் தங்கள் விசேஷமான
கருணையை எனக்கு அளிக்க வேண்டும்படி நீ செய்ய வேண்டும்” என்கிறார்.

ஸக்ருத் த்வதாகார விலோகநாஶயா
த்ருணீ க்ருதாந் உத்தம புக்தி முக்திபி: |
மஹாத்மபிர் மாம் அவலோக்யதாம் நய
க்ஷணே’பி தே யத்விரஹோ’திதுஸ்ஸஹ: ||

உன்னுடைய பிரிவைத் தாங்க முடியாதவர்களான, எத்தனை இன்பங்களும் மோக்ஷமும் பெற்றிருந்தாலும்
உன்னுடைய திருமேனியை ஒரு முறை பார்ப்பதைக் கருதினால், அவற்றைப் புல்லைப் போல மதிப்பவர்களான
சிறந்த வைஷ்ணவர்களின் கருணைப் பார்வைக்கு நான் இலக்காகும் தகுதியை எனக்குக் கொடு.

—————–

ஶ்லோகம் 57 –
முன் ஶ்லோகத்தில், ஆளவந்தார் ஶேஷத்வத்தின் உயர்ந்த நிலையான அடியார்களுக்கு அடிமைப்பட்டிருப்பதை அனுபவித்தார்.
இங்கே ஶேஷத்வத்துக்கு வெளிப்பட்டிருக்கும் விஷயங்களில் தனக்கு இருக்கும் வெறுப்பைச் சொல்லி,
எம்பெருமானிடத்தில் “அவற்றை நீக்க வேண்டும்” என்று ப்ரார்த்திக்கிறார்.

ந தேஹம் ந ப்ராணாந்ந ச ஸுகம் அஶேஷாபிலஷிதம்
ந சாத்மாநம் நாந்யத் கிமபி தவ ஶேஷத்வ விபவாத் |
பஹிர்பூதம் நாத! க்ஷணமபி ஸஹே யாது ஶததா
விநாஶம் தத்ஸத்யம் மதுமதந! விஜ்ஞாபனம் இதம் ||

ஸ்வாமியே! உன் விஷயமான கைங்கர்யச் செல்வத்துக்கு வெளிப்பட்டிருக்கும் என்னுடைய
தேஹம், ப்ராணன், எல்லோராலும் விரும்பப்படும் சுகங்கள், என்னுடைய ஆத்மா ஆகிய எதுவாக இருந்தாலும்
அவற்றை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது; இவை எல்லாம் ஒழியட்டும்.
மது என்னும் அரக்கனைக் கொன்ற என் ஸ்வாமியே! இது உண்மை; இதுவே என் ப்ரார்த்தனை.

—————–

ஶ்லோகம் 58 –
எம்பெருமான் “இந்த ஸம்ஸாரத்தில் என்னுடைய கோபத்துக் காரணமான பகவத் அபசாரம் முதலிய எத்தனையோ விஷயங்கள் இருக்க,
கைங்கர்யத்துக்கு விரோதியான இவற்றில் வெறுப்பு ஏற்பட்டு, யோகிகளுக்கும் அரிதான இந்நிலையை ப்ரார்த்திப்பவரும் உளரே!”
என்று ஆச்சர்யப்பட,
ஆளவந்தார் “இந்த தோஷங்களை நீக்கக்கூடிய தேவரீரின் எல்லையில்லாத திருக்கல்யாண குணங்களை
நினைத்து இதை ஆசைப்பட்டேன்” என்கிறார்.

துரந்தஸ்யானாதேர் அபரிஹரணீயஸ்ய மஹதோ
நிஹீநாசாரோ’ஹம் ந்ருபஶுரஶுபஸ்யாஸ் பதம் அபி |
தயாஸிந்தோ! பந்தோ! நிரவதிக வாத்ஸல்யஜலதே
தவ ஸ்மாரம் ஸ்மாரம் குணகணம் இதீச்சாமி கதபீ: ||

கருணைக் கடலான ஸ்வாமியே! என்னுடன் எல்லா உறவுகளையும் உடையவனே! வாத்ஸல்யக் கடலாக இருப்பவனே!
நான் மிகப் பெரிய, அநாதி கால, முடிவில்லாத, போக்க முடியாத பாபங்களை உடையவனாக இருந்தாலும்,
மீண்டும் மீண்டும் உன்னுடைய திருக்கல்யாண குணங்களை நினைப்பதால், பயமில்லாமல் இதை ஆசைப் படுகிறேன்.

—————-

ஶ்லோகம் 59 – எம்பெருமான் “நீர் இச்சாமி என்று முன் ச்லோகத்தில் கூறியபடி உண்மையிலே
என் விஷயத்தில் ஆசை கொண்டுள்ளீரா?” என்று கேட்க
“நான் மந்த மனதை உடையவன் ஆகையால் தேவரீருடைய திருமுன்பே, தேவரீரின் பெருமைக்குத் தகுந்த
என் ஆசையை வெளியிட முடியவில்லை. என்னுடைய ஆசையைக் காட்டும் வார்த்தைகளைக் கொண்டு மனதைத் திருத்தி,
இந்நிலை எனக்கு உண்மையில் ஏற்படும்படிச் செய்ய வேண்டும்” என்கிறார்.

அநிச்சந்நப்யேவம் யதி புநரிதீச்சந்நிவ ரஜஸ்-
தமஶ் சன்னஶ்சத்மஸ்துதி வசன பங்கீமரசயம் |
ததா’பீத்தம் ரூபம் வசனம் அவலம்ப்யா’பி க்ருபயா
த்வமேவைவம் பூதம் தரணிதர! மே ஶிக்ஷய மந: ||

பூமியை எடுத்த எம்பெருமானே! இந்த அடியவன் ரஜோ மற்றும் தமோ குணங்களால் மூடப்பட்டிருந்தாலும்,
என்னிடத்தில் உண்மையான ஆசை இல்லாமல் இருந்தாலும், உண்மையான ஆசை உடையவர்களைப் போலே
உன்னை மயக்கும் வார்த்தைகளை நான் சொன்னாலும், அதையே காரணமாகக் கொண்டு,
உன்னுடைய கருணையால் என்னுடைய மனதைத் திருத்தி யருள வேண்டும்.

——————-

ஶ்லோகம் 60 –
எம்பெருமான் “உம்மிடத்தில் ஆசையும் இல்லாதபோதும், நானே உம்மிடத்தில் ஆசையை உண்டாக்கி
உம்மைக் காக்கவும் செய்ய வேண்டும் என்கிறீரே – இவற்றை நான் ஏன் செய்ய வேண்டும்” என்று கேட்க
ஆளவந்தார் தனக்கும் அவனுக்கும் உள்ள ஒழிக்க ஒழியாத உறவைக் காட்டுகிறார்.

பிதா த்வம் மாதா த்வம் தயித தநயஸ்த்வம் ப்ரிய ஸுஹ்ருத்
த்வமேவ த்வம் மித்ரம் குருரஸி கதிஶ்சாஸி ஜகதாம் |
த்வதீயஸ் த்வத்ப்ருத்யஸ் தவ பரிஜநஸ் த்வத்கதிரஹம்
ப்ரபந்நஶ் சைவம் ஸத்யஹமபி தவைவாஸ்மி ஹி பர: ||

இவ்வுலகங்களுக்கு நீயே தந்தை; நீயே தாய்; நீயே விரும்பத்தக்க பிள்ளை; நீயே நல்ல உள்ளம் கொண்ட நண்பன்;
நீயே நம்பிக்கைக்குப் பாத்திரமான நண்பன்; நீயே குரு; நீயே உபாயம் (வழி) மற்றும் உபேயம் (குறிக்கோள்);
நான் உன்னுடையவன்; உன்னுடைய அடிமை; உன்னுடைய தொண்டன்;
உன்னையே சிறந்த உபேயமாகவும், உபாயமாகவும் கொண்டுள்ளவன்; ஆகையால் நான் ஏன் உன்னால் ரக்ஷிக்கப்படக் கூடாது?

—————–

ஶ்லோகம் 61 –
எம்பெருமான் ஆளவந்தாரிடம்
“நீர் உயர்ந்த வம்சத்தில் பிறந்துள்ளீரே. ஏன் எப்படி உதவியற்றவரைப் போல் பேசுகிறீர்?” என்று கேட்க,
ஆளவந்தார்
“நான் உயர்ந்த வம்சத்தில் பிறந்திருந்தாலும், என்னுடைய பெரிய பாபங்களினாலே, ஸம்ஸாரத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறேன்;
என்னை நீயே இதிலிருந்து எடுத்தருள வேண்டும்” என்கிறார்.

ஜநித்வா’ஹம் வம்ஶே மஹதி ஜகதி க்யாதயஶஸாம்
ஶுசீநாம் யுக்தாநாம் குணபுருஷ தத்த்வ ஸ்திதி விதாம் |
நிஸர்கா தேவ த்வச்சரண கமலைகாந்த மநஸாம்
அதோ’த: பாபாத்மா ஶரணத! நிமஜ்ஜாமி தமஸி ||

புகலிடம் கொடுக்கும் ஸ்வாமியே! நான் பரிசுத்தமான, உன்னுடன் எப்பொழுதும் இருக்க விரும்புபவர்களான,
சித் மற்றும் அசித் ஆகியவற்றின் ஸ்வரூபத்தையும் தன்மைகளையும் நன்கு உணர்ந்தவர்களான,
உன் திருவடிகளிலேயே எப்பொழுதும் தன்கள் மனதை வைத்திருக்கும் சிறந்தவர்களான, ப்ரஸித்தமான புகழை உடைய
பெரியோர்கள் அவதரித்த, உயர்ந்த வம்சத்தில் பிறந்திருந்தாலும், பாபமே வடிவெடுத்தவனாகையாலே,
இந்த ப்ரக்ருதியில் ஆழமாக மூழ்கிக் கொண்டிருக்கிறேன்.

—————-

ஶ்லோகம் 62 –
எம்பெருமான் “உயர்ந்த வம்சத்தில் பிறந்தும் அது ப்ரயோஜனப்படாமல் போகும் அளவிற்கு உம்மிடத்திலே
என்ன பாபங்கள் உள்ளன?” என்று கேட்க,
ஆளவந்தார் சென்ற ஶ்லோகத்தில் பாபாத்மா என்று சொன்னதை விளக்கி அருளுகிறார்.

அமர்யாத: க்ஷுத்ரஶ் சலமதிர் அஸூயா ப்ரஸவபூ:
க்ருதக்நோ துர்மாநீ ஸ்மரபரவஶோ வஞ்சநபர: |
ந்ருஶம்ஸ: பாபிஷ்ட: கதம் அஹமிதோ து:க்க ஜலதே:
அபாராதுத்தீர்ணஸ் தவ பரிசரேயம் சரணயோ: ||

நான் சாஸ்த்ர மர்யாதைகளை மதிக்காமல் கடந்தவன், தாழ்ந்த விஷயங்களில் ஆசை உள்ளவன்,
நிலை இல்லாத மனதை உடையவன், பொறாமையின் பிறப்பிடம், எனக்கு நன்மை செய்பவர்களுக்கும் தீங்கிழைப்பவன்,
கைவிடவேண்டிய கர்வத்தை உடையவன், காமத்துக்கு வசப்பட்டவன், ஏமாற்றுபவன், க்ரூரமான செயல்களில் ஈடுபட்டவன்
மற்றும் பாபங்களில் மூழ்கியுள்ளவன். நான் எப்படி இந்த எல்லையில்லாத பாபக்கடலின் கரையை அடைந்து
உன்னுடைய திருவடிகளுக்குத் தொண்டு செய்வேன்?

—————–

ஶ்லோகம் 63 –
எம்பெருமான் “நீர் தெரிந்தே செய்த தவறுகளை நான் எப்படிப் போக்க முடியும்?” என்று கேட்க,
ஆளவந்தார் “காகாஸுரன் மற்று சிசுபாலன் ஆகியோர் செய்த அபராதங்களைப் பொறுத்த தேவரீரால்,
என்னுடைய தவறுகளைப் பொறுக்க முடியாதோ?” என்கிறார்.

ரகுவர! யதபூஸ்த்வம் தாத்ருஶோ வாயஸஸ்ய
ப்ரணத இதி தயாளுர் யச்ச சைத்யஸ்ய க்ருஷ்ண! |
ப்ரதிபவம் அபராத்துர் முக்த! ஸாயுஜ்யதோ’பூ:
வத கிமபதமாகஸ்தஸ்ய தே’ஸ்தி க்ஷமாயா: ||

ரகுகுல திலகமான ஸ்ரீராமராக அவதரித்தவனே! பெரிய தவறைச் செய்த காகாஸுரன் விஷத்தில்,
அவனை ஒரு சரணாகதனாகக் கொண்டு, உன் கருணையைக் காட்டவில்லையோ?
எந்தத் தவறுகளையும் பொருட்படுத்தாத கண்ணனே! சேதி குலத்தைச் சேர்ந்த, பிறவிதோறும் உன்னிடத்தில் அபராதம் செய்த
சிசுபாலனுக்கு நீ மோக்ஷத்தையே அளித்தாயே. எந்த பாபம் தேவரீருடைய பொறுமைக்கு விஷயமாகாது? எனக்கு தேவரீர் விளக்கியருள வேண்டும்.

————

ஶ்லோகம் 64 –
எம்பெருமான் “ஸ்வதந்த்ரனான நான் சிலருக்கு சில விசேஷ காரணங்களுக்காக உஜ்ஜீவனத்தைச் செய்து கொடுத்தால்,
அதுவே என்னுடைய பொதுவான நடத்தையாகக் கருதமுடியுமோ?” என்று கேட்க,
ஆளவந்தார் “கடற்கரையில், நீ உன்னிடத்தில் சரணடைவர்களை ரக்ஷிப்பேன் என்று சபதம் எடுத்தபோது,
அதில் என்னைத் தவிர என்று சபதம் செய்தாயோ?” என்கிறார்.

நநு ப்ரபந்நஸ் ஸக்ருதேவ நாத!
தவாஹம் அஸ்மீதி ச யாசமாந: |
தவாநுகம்ப்ய: ஸ்மரத: ப்ரதிஜ்ஞாம்
மதேகவர்ஜம் கிமிதம் வ்ரதம் தே ||

ஸ்வாமி! “நான் உன்னிடத்தில் ஒருமுறை சரணடைந்துள்ளேன்” என்றும்
“உனக்கே நான் தொண்டு செய்ய வேண்டும்” என்றும் சொல்லி,
நீ கடற்கரையில் விபீஷணன் சரணடைய வந்த ஸமயத்தில் செய்த சபதத்தை நினைக்கும் நான்,
உன்னுடைய கருணையைப் பெறத் தகுந்தவன்; தேவரீருடைய சபதம் என் ஒருவனைத் தவிர்த்தோ?

—————–

ஶ்லோகம் 65 –
ஆளவந்தார் “நீ ஸ்ரீராமாயணம் அயோத்யா காண்டம் 18.30இல் ‘ராமோ த்விர் நாபிபாஷதே’
(ஸ்ரீராமர் இரண்டு விதமாகப் பேச மாட்டார்) என்ற சபதத்தைக் கை விட்டாலும்,
என்னுடைய புண்ய பாபங்களைக் கருதாமல், பெரிய முதலியாரான ஸ்ரீமந்நாதமுனிகளுடன் எனக்கு இருக்கும்
ஞானத்தால் மற்றும் பிறப்பால் இருக்கும் ஸம்பந்தத்தைக் கருத்தில் கொண்டு, என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கேட்க,
எம்பெருமானும் “இந்த வழியில் எந்தக் குறையும் இல்லை; இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று சொல்லி
இந்த வரத்தை ஆளவந்தாருக்கு அளித்தான்.
ஆளவந்தாரும், த்ருப்தியடைந்தவராய், ஸ்தோத்ரத்தை முடிக்கிறார்.

அக்ருத்ரிம த்வச்சரணாரவிந்த
ப்ரேம ப்ரகர்ஷாவதிம் ஆத்மவந்தம் |
பிதாமஹம் நாதமுநிம் விலோக்ய
ப்ரஸீத மத்வ்ருத்தம் அசிந்தயித்வா ||

எம்பெருமானே! என்னுடைய நடத்தையைக் கருதாமல், உன் திருவடிகளில் இயற்கையான அன்பில் சிறந்தவரான,
தன் ஸ்வரூபத்தை உணர்ந்தவரான, என்னுடைய பாட்டனாரான ஸ்ரீமந் நாதமுனிகளைப் பார்த்து என்னை மன்னித்தருள வேண்டும்.

————-——————————————————————-——————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்ரீ
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ லஷ்மி நரஸிம்ஹர் திருக்கோயில் பெலகோலா-

August 28, 2026

ஸ்ரீரங்கப்பட்டணாவிலிருந்து 11 கிமீ தொலைவிலும், மைசூரில் இருந்து 15 கிமீ தொலைவிலும், பெங்களூரிலிருந்து 140 கிமீ தொலைவிலும் உள்ளது. இக்கோயில் சமீபத்தில் கட்டப்பட்டது – சுமார் 15 ஆண்டுகள் பழமையானது.-இவ்விடம் “சிம்ம கிரி” என்றும் அழைக்கப்படுகிறது. பகவான் தனது ஆழ்ந்த தியானத்தில் இருந்தபோது, ​​ஒரு இளம் துறவி, லட்சுமிநரசிம்மரின் அற்புதமான சிலையை, அப்போது மைசூரில் வசித்து வந்த, பகவானின் பக்தியும் கல்வியும் மிக்க பக்தரான திரு. யு. வே. வீரராகவாச்சாரியாரிடம் ஒப்படைத்தார். இவ்வாறு, 2003-ஆம் ஆண்டு மே 9-ஆம் தேதி, ஒரு வெள்ளிக்கிழமையன்று, அனைவரின் வியப்பிற்கும் மத்தியில் பகவான் அந்த பக்தரின் இல்லத்திற்கு வருகை தந்தார். நரசிம்மப் பெருமானின் வருகை, அவரைச் சுற்றியுள்ள செயல்பாடுகளில் ஒரு எழுச்சியை ஏற்படுத்தியதுடன், வேத மற்றும் பாரம்பரியக் கல்விக்கான ஒரு குருகுலத்தை நிறுவுவதற்கும் வழிவகுத்தது.-மாதாந்திர சுவதி நட்சத்திர யாகம் 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. அனைவரின் நலனுக்காகவும் துறவிகளில் ஒருவர் தினமும் செய்யும் நித்ய யாகம், 2005 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டு முதல், லட்சுமி நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு ஆண்டுதோறும் 11 நாட்கள் நடைபெறும் நிகழ்வு குருகுலத்தில் கொண்டாடப்படுகிறது.-இறைவனின் உள்ளுணர்வால் தூண்டப்பட்டு, நீதியுள்ள மற்றும் பக்தியுள்ள தம்பதிகளான ஸ்ரீமான் நடத்தூர் சீனிவாச ராகவன் (என்.எஸ்.ராகவன், இன்ஃபோசிஸின் இணை நிறுவனர்) மற்றும் திருமதி. ஜமுனா ராகவன் ஆகியோர் நிலத்தை வாங்கி கோவிலைக் கட்ட முன்வந்தனர். கோவிலின் பூமி பூஜை 2009 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி நடைபெற்றது. இக்கோவில் முற்றிலும் கருங்கற்களால் கட்டப்பட்ட ஒரு நவீன கால அதிசயமாகும். கோவிலைக் கட்டுவதற்கு எஃகு எதுவும் பயன்படுத்தப்படவில்லை, மேலும் இது பஞ்சராத்திர ஆகம நூல்களுக்கு ஏற்பவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

கர்ப்பகிருகத்தின் முதல் கட்டம், முகமண்டபம், கருட சன்னதி ஆகியவை கட்டி முடிக்கப்பட்டு, 2012 ஜூன் 1 ஆம் தேதி, ஒரு வெள்ளிக்கிழமை அன்று, மங்களகரமான சித்திரை நட்சத்திர நாளில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தற்போது, ​​மகாமண்டபம், பிரகாரம் மற்றும் ராஜகோபுரம் ஆகியவை கட்டுமானத்தில் உள்ளன. சுமார் 6 அடி உயரமுள்ள ஆஞ்சநேய சுவாமி சிலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.உலக அமைதிக்கான ஹோமமான நித்ய யக்ஞம் தினமும் நடத்தப்படுகிறது. உலக நலனுக்கான ஹோமமான சுவாதி யக்ஞம் மாதந்தோறும் நடத்தப்படுகிறது. மேலும், மாதந்தோறும் நடைபெறும் 5 நாள் பிரார்த்தனை நிகழ்ச்சியான மாசோத்சவமும் இந்த வளாகத்தில் நடத்தப்படுகிறது.

இக்கோயிலில் வேதங்களைக் கற்பதற்காக ஒரு கோசாலையும் குருகுலமும் உள்ளன. கோயில் நேரம்: காலை 7 மணி முதல் 12:30 மணி வரை, மாலை 5:30 மணி முதல் 7:30 மணி வரை. தொடர்பு தொலைபேசி எண்கள்: +91-9343 1294 90, +91-9343 1294 93, +91-9343 1294 95

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-