ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -97-எழுவதுவும் மீண்டு படுவதும் பட்டு –பரிவதில் ஈசனை -1-6-

April 4, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

கழிய மிக்கதோர் காதல் -வளர்ந்த அவஸ்தை கால பரம் ஸம்ஸார பரம் இரண்டும் -எழுவதும் மீண்டே படுவதும் படு எனை யூழிகள் போய்க் கழிவதும்- கல்ப காலம் ஆயிரம் சதுர்யுகம் பிரம்மா இருந்தும் வீண் அன்றோ -இவற்றைக் கண்டும் -எள்ளி நகையாடாமல் இருக்கப் போமோ -கால கோலம் கண்டும் இருக்கப் போமோ –உலக விஷயம் பார் அதில் புத்தி செலுத்தி பொழுது போக்கலாம் என்ன
கண்டு கண்டு என்கிறாள் -கண்டேன் -இவற்றின் நிலையைக் கண்டு சமாதானம் ஆக மாட்டேன் என்கிறாள்-பண்டைய திருமாலைக் கண்டு -காதல் பிறந்து -வளர்ந்து – இருக்குமே-பகவான் ஸ்வாராதன்-பரிவதில் ஈசனை -1-6—ஈடும் யெடுப்புமிலீசன் -மாடு விடாது என் மனனே-பாடும் என் நா அவன் பாடல் ஆடும் என் அங்கம் அணங்கே –1-6-3-மனம் விடாது -கண்கள் அவனையே காணும் அங்கு உண்டே

அவதாரிகை–பெரும் கிறியானை அல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே –என்றும் –நின் கண் வேட்கை எழுவிப்பனே -என்றும் –இவ் விஷயத்திலே இங்கனே கிடந்தது அலமாவா நின்றீர் –
இவ் விஷயத்தில் கை வைக்கில் உமக்காகவும் பிறர்க்காகவும் கிலேசந் தவிராதாய் இரா நின்றது –
அல்லாதார் கண்டீரே – புறம்புள்ள விஷயங்களிலே நெஞ்சை வைத்து –அவற்றாலே உண்டு உடுப்பது-கண் உறங்குவதாய் கொண்டு போது போக்குகிறபடி –அப்படியே நீரும் நம் பக்கலிலே நின்றும்-நெஞ்சை புறம்பே மாற்றி போது போக்க வல்லீரே என்ன – அவர்கள் உன்னை-அறியாமையாலே -என்கிறார் –

நின் கண் வேட்கை எழுவிப்பனே -என்று ஜகத்தைத் திருத்துகையிலே இவர் ஒருப்பட்ட பிரகாரத்தைக் கண்ட பார்ஸ்வஸ்த்தர் இவர் பகவத் அனுபவம் பண்ணப் பரகு பரகு என்னாதே ஜகத்திலே கண் வைக்கப் பெற்றோம் இறே என்று ஸந்துஷ்டாராக-அத்தைக் கண்டவர் அஸ்திரமான ஸம்ஸாரத்தை அகலத் தேடுமது ஒழிய அநுபவத்திலே ப்ராவண்யம் உடையோருக்கு அனுபாவ்ய விஷய பிரகாசம் ஸங்கோசிக்குமோ என்று அருளிச் செய்கிறார் –(எம்பார் -இருளே காண வில்லையே என்றார் அன்றோ)

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-அவதாரிகை-எஞ்ஞான்று தலைப்பெய்வன் என்பது தவிர்ந்து
ஸூக ஸூபத்தராய் இரீர் என்று பகவத் அபிப்ராயமாக தெளி விசும்பில் உள்ள இமையோர்கட்க்கு எல்லாம் இதுவே ஸ்வ பாவமாய் இருக்க அவர்களில் ஒருவரான எனக்கு அது உண்டோ என்கிற
அபிப்ராயத்தால் இவ்வர்த்தத்தை ஸ்வ ஸித்தாந்தஸ்த்தரிலும் அறிய அருளிச் செய்கிறார் இதில்

எழுவதும் மீண்டே படுவதும் படு எனை யூழிகள் போய்க்
கழிவதும் கண்டு கண்டு எள்கல் அல்லால் இமையோர்கள் குழாம்
தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு
கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே –
– 97-தலைவனைப் பிரிந்து தூக்கம் இல்லாமல் தலைவி வருந்துதல் –

எழுவதும்–ஸூர்யன் உதிப்பதையும்
மீண்டே படுவதும்–மறுபடி அஸ்தமிப்பதையும்.
பட்டு–இங்ஙனம் நிகழ்ந்து
எனை ஊழிகள்–எத்தனையோ காலங்கள்
போய் கழிதலும்–சென்று கழிவதையும்
கண்டு கண்டு–பார்த்துப் பார்த்து
எள் கல் அல்லால்–வருந்துதலே யல்லாமல்
இமையோர்க்கள் குழாம்-தேவர்கள் கூட்டம்–தொழுவதும் வணங்குவதையும்–சூழ்வதும் -(பரிவாரமாகச், சூழ்ந்து கொள்வதையும்.
செய்–செய்யப் பெற்று
தொல்லை மாலை–ஆதியந்த மில்லாதவனான திருமாலை
கண் ஆர கண்டு–கண்கள் த்ருப்தி யடைய ஸேவித்து
கழிவது ஓர் காதல் உற்றார்க்கும்–(அவன் பக்கல்) மிக்க தொரு வேட்கையைப் பொருந்தினவர்க்கும்-உம்மைத் தொகை -தோழி சொல்ல இவள் பதில் என்பது தேறும்
கண்கள் துஞ்சுதல்–கண்ணுறக்கம் கொள்ளுதல்
உண்டோ–உள்ளதோ? (இல்லை என்ற படி.)

பரிவதில் ஈசன் படியைப் பண்புடனே பேசி
அரியனலன் ஆராதனைக்கு என்று -உரிமையுடன்
ஓதி யருள் மாறன் ஒழிவித்தான் இவ்வுலகில்
பேதையர்கள் தங்கள் பிறப்பு——6–சீலவானே யாகிலும் ஸ்ரீ யபதியான பரி  பூர்ணனானவன் பெருமைக்கு ஈடாக ஷூத்ரனாய் ஷூத்ர உபகரணான இவனால் பச்சை இட்டு ஆஸ்ரயிக்கப் போகுமோ ஸ்ரீ யபதித்வம் -இத்தலையில் குற்றம் பாராமல் அங்கீ கரிக்கும் நீர்மைக்கு உடலாகையாலும்
பரிபூர்ணத்வம் -இத்தலையில் குற்றம் பாராமல் பெற்றது கொண்டு சந்தோஷிக்கைக்கு உடலாகையாலும் ஆஸ்ரியிப்பார்க்கு பத்ர புஷ்பாதிகளால் ஸ்வ ஆராதன் என்கிற பரிவதில் ஈசனனில் அர்த்தத்தை –பரிவதில் ஈசன் படியை -இத்யாதியால் அருளிச் செய்கிறார் –இப்படி உபதேசிக்கையாலே
இந்த லோகத்தில் அறிவிலிகள் ஆனவர்கள்-பிறவியை அகற்றுவித்தார் –-இஜ் ஜகத்தில் அஞ்ஞர் உடைய ஜன்ம சம்பந்தத்தை ஸுவ ஸூக்தியாலே நிவர்த்திப்பித்தார் – ஏதமில் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாரே – என்றத்தை பின் சென்ற படி –

எழுவதும் -இத்யாதி –இதுக்கு இரண்டு படி–(சம்சாரி பரமாகவும் கால பரமாகவும் ) உத்பன்னமாவதும் -அனந்தரத்திலே நசிப்பதும் –-உத்பன்னமாய் சில நாள் கடுக ஜீவித்து -பின்னை நசிப்பதுமாய் இறே இருப்பது —ஜாயஸ்வ ம்ரியஸ்வ -என்கிறபடியே-உத்பத்தி ஷணமே விநாச லஷணமாய் இருப்பன சிலவும் –கல்பாதியிலே உண்டாய் கல்ப அந்தத்திலே விநாசமாய் இருப்பார் சிலருமாய் இறே இருப்பது அவை எல்லாம் ஒரு போகியாக தோற்றுகிறது  ஆயிற்று இவர்க்கு –கண்டு கண்டு எள்கல் அல்லால்-
இப்படி இருக்கிற இவற்றினுடைய அஸ்தைர்யாதிகளைக் கண்டால்-இகழலாய்  இருக்கும் – உன் பக்கலில் கை வைத்தார்க்கும் விடப் போமோ –எள்கை யாவது-இகழுகை–அவற்றில் விரக்தர் ஆகலாம் இறே அவற்றின் தோஷ தர்சனம்-பண்ணினவாறே –எழுவதும் இத்யாதி –உதிப்பது அஸ்தமிப்பது –இப்படி அநேக நாள் சென்று கழிய காணா நின்றாலும்-எள்கல் அல்லால் -ஈடுபடுத்தும் இத்தனை போக்கி-நாள் சென்றது என்றால் நெஞ்சை வாங்கலாயோ -உன் படி இருப்பது –இப்போது எள்கையாவது -இரங்குகை  -அதாவது ஈடுபடுகை -(கீழே இகழ்வது அர்த்தம் -இங்கு இரங்குதல் ஈடுபடுதல் )-இவை சதோஷமாய் இருக்கையாலே விடலாம் –விலஷண விஷயமுமாய்-அதிலே பாவ பந்தம்-உண்டானால் ஆறி இருக்கப் போமோ –எப்பொழுதும் நாள் திங்கள் –திருவாய் மொழி – 2-5 4- – இத்யாதி –இமையோர் இத்யாதி –உன்னை ஒழிய வேறு ஒன்றில் நெஞ்சு வைக்கக் கடவர் அன்றிக்கே இருந்துள்ள நித்ய ஸூரிகள் உடைய திரளானது – நித்ய அஞ்சலி புடா ஹ்ர்ஷ்டா -என்கிறபடியே-தொழுது –நம புரஸ்தாத் அ தப்ருஷ்ட தஸ்தே (ஸ்ரீ கீதை 11-அத்யாயம்)-என்கிறபடியே முன்னே வருவது பின்னே வருவதாய்–மொய்த்து –இப்படி செய்து போகையே யாத்ரை யாம்படி பழைய னான சர்வேஸ்வரனை –கண்ணாரக் கண்டு – காத்ரைஸ் சோகாபி கர்சிதை ஸம்ஸ் ப்ருசேயம் (ஸூந்தர-40)  -என்கிறபடியே காண-வேணும் என்கிற ஆசை கண்டவாறே தீரும் இறே – மேல் வருமது விஷயாதீநமான காதல் இறே –உற்றார்க்கும் –காதல் முருக்கு கொளுந்தினார்க்கும் (திடமாக இருந்தார்க்கும் )-உண்டோ இத்யாதி –ஸ்வ தந்த்ரனான பெருமாள்  உறங்கினார்  என்று  கேட்டோம் இத்தனை போக்கி- அவரை அனுவர்த்தித்துப் போன இளைய பெருமாளுக்கு கண் உறங்கிற்றோ –பகவத் விஷயத்தில் கை வைத்தார் இதுக்கு முன்பு கை உறங்கினார் உண்டு என்று யாரேனும்-கேட்டு அறிவார் உண்டோ –

எம்பெருமானை கண் களிப்பைக் கண்டு முடிக்க வேணும் என்று அன்புற்ற நித்ய ஸூரிகள்-இமைக்க மாட்டார்களே-உலகப் பொருள்களை இகழ்ந்து எம்பெருமானையே சேவித்து காலம் கழியும்படியான ஆசை கொண்டார்க்கு அவனை உபேக்ஷிக்க காரணம் இல்லையே-பூர்ண அனுபவம் செய்யும் ஆழ்வாராதிகளுக்கு ஞானம் குவியாதே-கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே -கண் இமைத்துக் காண்பார் தம் கண் என்ன கண்ணே –-காதல் உற்றார்க்கு எள்கல் அல்லால் –கண் துஞ்சல் உண்டோ -என்று அன்வயம்-ஸ்வ தந்தரரான பெருமாள் உறங்கினார் என்று கேட்க்கும் அத்தனை போக்கி இளைய பெருமாளுக்கு கண் உறங்கிற்றோ-பகவத் விஷயத்தில் கை வைத்தாரில் இதுக்கு முன் கண் உறங்கினார் என்று கேட்டு அறிவார் உண்டோ-கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் -அன்றோ-தொல்லை மால் -சம்ச்லேஷம் பழையது என்றவாறு -அநாதியான வியாமோஹம் கொண்டவன் -என்றும் அனைத்துக்கும் பழைய பெரியவன் என்றுமாம் –பகவத் ஸ்வரூபத்தை முழுவதும் ஸாக்ஷாத்கரிக்க விரும்பித் தொடங்கினார்க்குக் காலம் முடிந்துபோவதேயன்றி
அவ்வநுபவம் முடிந்து கண்வாங்குந் தன்மையில்லையென்று ஆழ்வார் அன்பர்க்கு அருளிச் செய்கிறார்.-ஸூர்யன் உதிப்பதும் மீண்டும் அஸ்தமிப்பதுமாய் இப்படியே நாள் திங்கள் நோக்கி இரங்குதலே யன்றி நித்யஸூரிகள் எப்பொழுதும் கைகூப்பிக்கொண்டு கைங்கர்யம் பண்ம் பொருட்டு சூழப்பெற்ற அநாதியான எம்பெருமானைக் கண் களிப்பக் கண்டு முடிக்க வேணுமென்பதோர் ஒப்பற்ற அன்பைக் கொண்டு நிற்பவர்களுக்கு அவன் பக்கல் வைத்தகண் வாங்கி இமைக்க இடமுண்டோ வென்கிறார்.–இப்பாட்டுக்கு மற்றொருபடியாகவும் பொருளுரைப்பா; எழுவதும்- பிறப்பதும், மீண்டேபடுவதும்- பிறந்தவளவிலே இறப்பதும்,-பட்டு- பிறந்து, எனை ஊகளள் போய்க்கழிவதும்- பலகாலம் கழித்து இறப்பதுமான உலகத்துப் பொருள்களை, கண்டு கண்டு- பாரத்துப் பார்த்து என்கல் அல்லால்- அவற்றை இகழ்வதல்லாமல்… எம்பெருமானைச் சேவித்துக் காலங்கழியும்படியானதோர்
ஆசையில் நின்றார்க்கு அவனை உபேக்ஷிக்கக் காரணமில்லை- என்று. எம்பெருமானைப் பூர்ணாநுபவஞ் செய்யக் கருதி ஆழ்ந்தவர்கட்கு ஞானம் குவியாது என்பதும் தோன்றும்.-வான்களாகி நாள்கள் செல்லும்படியைக் கண்டு ‘ஐயோ! காலமெல்லாம் வீணாய்க் கழிந்து போகிறதே,
பகவத்ஸாக்ஷாத்காரம் நமக்குக் கிடைக்கவில்லையே!’ என்று மனம் நொந்து கொண்டிருக்கலாமேயொழிய. ‘எம்பெருமானைக் கண்ணாரக் கண்டாயிற்று, நமது காதல் தீர்ந்துவிட்டது’ என்று க்ருதக்ருத்யராகப் பெறும் நாள் உண்டாவதரிது என்றதாயிற்று.
கண் ஆர் – கண்படைத்த பயன்பெற. ‘கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே கண்ணிமைத்துக் காண்பார்தங் கண் ணென்னகண்ணே’ (சிலப்பதிகாரம் – ஆய்ச்சியர் குரவை என்றார் பிறரும் )
காதலுற்றார்க்கு என் கலவல்லால் கண் துஞ்சுதலுண்டோ’ என்று அந்வயிப்பது. பகவத் விஷயத்தில் ஆசைவைத்திட்டால் உள்ளதனையும் உருகிக் கிடக்கவேணுமத்தனையன்றி நிர்வ்ருதியாய்க் கண்ணுறங்கப் பெறுவதில்லை காணும்.-இங்கே நம்பிள்ளை யீடுகாண்மின்;- ‘ஸ்வதந்தாரான பெருமாள் உறங்கினாரென்று கேட்குமித்தனை போக்கி அவரை அநுவர்த்தித்துப் போன இளைய பெருமாளுக்குக் கண்ணுறங்கிற்றோ? பகவத் விஷயத்திலே கைஸவத்தாரில் இதுக்கு முன் கண்ணுறங்கினாருண்டென்று கேட்டறியவாருண்டோ?”

கிளவித்துறை வகையில் இப்பாசுரத்தை, நாயகனைப் பிரிந்து துயில் கொள்ளாத நாயகி இரங்கியுரைக்கும் பாசுரமாகக் கொள்க.-திருமாலாகிய நாயகனைக் கண்டு கூடிப்பிரிந்து அந்த விரஹாரத்தில் “கங்குலும் பகலுங் கண்துயிலறியாள்” என்றபடி-அல்லும் பகலும் சிறிதும் தூக்கங்கொள்ளாது வருந்துகிற (பராங்குச) நாயகி தன்னைத்தேற்ற முயல்கிற தோழிக்குக் கூறியது இது என்ற கொள்ளலாம்.-தோழி தேற்றுகிற விதம் யாதெனில்,‘நாயகனைப் பிரிந்த நிலைமையில் இப்படி அலற்றுவாருண்டோ?-பலவகைப்பட்ட உலகப் பொருள்களைக் கண்டுகொண்டு பொழுதுபோக்கி ஒருவாறு ஆறித் துயில்கொள்ளும் நாயகிகள் உலகத்திலில்லையோ?
அவர்களைப் போலே துயிர் கொண்டிருக்கலாமே’ என உலகியல் கூறி ஆற்றலுற்றானி தோழி; அன்னவளை நோக்கி இத் தேவாதிதேவயான புருஷோத்தமன் பக்கல் அன்புவைத்தவர்களும் துயில் கொள்ளக்கூடுமோ வென்று கூறி மறுத்தவாறு-இன்ப நுகர்ச்சிக்கு உரியகாலம் வீணேகழிதலைச் சிந்தித்து சிந்தித்து மனந்தளர்வதல்லாமல் கண்துயில்கொள்ள அவகாசமுண்டோ வென்றவாறு.
‘இமையோர்கள் குழாம் தொழுவதுஞ் சூழ்வதுஞ்செய்’ என்ற விசேஷணத்தினால்- தன்னால் காதலிக்கப்பட்ட நாயகனுடைய சிறப்பு விளக்கப்பட்டதாம். ‘தொல்லைமால்’ என்றதனால் தனக்கும் அந்த நாயகனுக்கும் நேர்ந்த பழக்கம் நெடுநாளையது என்று குறிப்பிடப்பட்டதாம்.
‘தொல்லை மால்’ என்றதற்கு ஜீவாத்மாக்களிடத்தில் அநாதியாகவுள்ள வ்வயாமோஹ முடையானென்றும் எல்லாவற்றுக்கும் பழமையான பெரியோனென்றும் பொருள் கொள்வர்.

எழுவதும்-உத்பன்னமான பிரகாரத்தையும்-மீண்டே படுவதும்-உத்பத்தி தசையிலே மற்றைப்படியே நசிக்கிற பிரகாரத்தையும்-படு எனை யூழிகள் போய்க் கழிவதும்-உத்பன்னமாய் அநேக காலம் சென்று முடிகிற பிரகாரத்தையும்–இங்கு பட்டு என்று-முத்துப் பட்டு என்னுமா போலே உத்பத்தியைச் சொல்லுகிறது–கண்டு கண்டு எள்கல் அல்லால்-இப்படி அல்ப கால உத்பத்தி விநாசத்தையும்
சிர கால உத்பத்தி விநாசத்தையும் பிரதி க்ஷணம் அபரோக்ஷித்து நெகிழுமது ஒழிய–இமையோர்கள் குழாம் தொழுவதும் சூழ்வதும் செய்-அஸ்க்கலித (நழுவாத குறையாத )ஞானரான ஸூரிகளுடைய சங்கமானது-நித்ய அஞ்சலி பந்தத்தையும் கைங்கர்ய பரராய்க் கொண்டு பரிசர ஸேவையையும் பண்ணா நிற்கிற–தொல்லை மாலைக்-இவ் வாத்மாவின் பக்கல் அநாதியான வாத்சல்யத்தை யுடையவனை-மால் என்று-பெரியவனாய் -ஸ்வாமித்வத்தைச் சொல்லிற்று ஆகவுமாம்–கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கும்-கண்கள் நிறையும்படி அனுபவித்துக் காலம் கழியும்படி
அத்விதீயமான ஆசையிலே நின்றவர்களுக்கும்–உண்டோ கண்கள் துஞ்சுதலே – அவன் பக்கல் வைத்த கண்கள் செம்பளிக்கைக்கு விரகுண்டோ–பகவத் அனுபவ அபிநிவிஷ்டரானார்க்கு ஞான ஸங்கோசம் பிறக்க விரகு இல்லை என்று கருத்து –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-கண் உறங்கிற்றோ பகவத் விஷயத்தில் கை வைத்தாரில் இதுக்கு முன் கண் உறங்கினார் உண்டு என்று கேட்டு அறிவார் உண்டோ

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்எழுவதும்-ஆதித்யாதி கிரஹங்கள் உதிப்பதும்–மீண்டே-உதய கார்யம் கழிந்தவாறே–படுவதும் அஸ்தமிப்பதும்-படு எனை யூழிகள் போய்க் கழிவதும்-சதுர் முகர் செத்து அநேக கல்பங்களாகக் காலம் கழிவதும்–கண்டு கண்டு எள்கல் அல்லால் இமையோர்கள் குழாம்ஸதா பஸ்யந்தி ஸூரய-ருக்வேதம் -என்கிறபடியே இதுகளை எல்லாம் அவரோக்ஷித்துக் கண்டு ஐயோ என்ற ஆர்த்த ஹ்ருதயம் ஒழிய நித்ய ஸூரி சங்கத்துக்கு கண் துஞ்சுதல் உண்டோ என்று அந்வயம்–இமையோர்க்கு விசேஷணம் தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கும் -என்பதுதொல்லை மாலை-அநாதியாக த்ரிவித ஆத்ம வர்க்கத்தில்-ஆதேயத்வ சேஷத்வ ஸ்வா யத்த சத்தாஸ்தேம ப்ரயத்ன பலத்வங்களால் ஸ்வ தேஹமாகவே விபூதி த்வயத்திலும் எப்போதும் மால் செய்யுமவனை ஸதா கண்டு கொண்டு ஸ்வா பாவிக ஸர்வ ஸாஷாத் காரம் உள்ளவர்களாய் என்றபடி-கண்ணார-யாவத் தர்மபூத ஞான வியாப்தியும்-திவ்ய விக்ரஹங்களில்-தொழுவதும் -அடிமை செய்வதும்-நம புரஸ்தாதத ப்ருஷ்ட தஸ்தே –ஸ்ரீ கீதை -11-40–சூழ்வதும்-சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே –திருப்பல்லாண்டு -12–யேந யேந ததா கச்சதி தேந தேந ஸஹ கச்சதி -பரம ஸம்ஹிதை -என்றபடி செய்து கொண்டு-கழிவதோர் காதல் உற்றார்க்கு
காலம் கழியக் கழிய அத்விதீயமான அன்பும் ஆர்வமும் வளர்ந்து வருமவர் களானவர்களுக்கு–உண்டோ கண்கள் துஞ்சுதலே –கண்கள் துஞ்சுதல் உண்டோ-அவர்களில் தலைவனான எனக்கு அது இல்லை என்பது கை முத்ய ஸித்தம் என்று அபிப்ரேதம்-

தாத்பர்யம்–இதில் சம்சாரிகள் பகவத் விஷயம் விட்டு சுகமே ஜீவித்து உள்ளார்களே-அதே போல் நீரும் அவனை நினைந்து அடையாமல் வருந்தி இருப்பது தவிர்ந்து ஸம்ஸாரிகளைப் போல் இருக்கலாகாதோ என்ன-சம்சாரம் தான் அஸ்திரமாய் பல தோஷங்களை யுடையதாக அன்றோ காண்கிறோம்-ஆகவே இப்படிச் செய்யப் போகாதே சம்சாரத்தில் பிறந்த உடனே மரிப்பதுமாகவும்
நெடு நாள் இருந்து மரிப்பதாகவும் அன்றோ இருக்கிறது-நிலை நின்ற சுகமே இல்லையே
இப்படி நிலையற்ற -மற்றும் உள்ள தோஷங்கள் பார்த்தால் இப்படி இருக்கப் போமோ-அஸ்ப்ருஷ்ட சம்சார -அசங்குசித ஞானரான நித்ய ஸூரிகளும் -நித்தியமான சகலவித கைங்கர்யங்கள் செய்து கொண்டே இருந்தாலும் கண்ணாரக் கண்டு கொண்டே இருந்தாலும் இப்படியே இவை நிலை பெற்று இருக்க பிரார்த்திக்கும் படி இருக்குமே அன்றோ ஒரு ஷணமும் கண் உறங்காமல் இருக்க அன்றோ அடுக்குமே – நான் எவ்வாறு கண் உறங்குவேன் என்கிறார்

1-6–பரிவதில் ஈசனைப் பாடி பிரவேசம்

முதல் திருவாய்மொழியிலே, அவன் -சர்வ ஸ்மாத் பரனாய் -எல்லாரினும் அறப் பெரியவனாய் இருக்கிறபடியை அனுபவித்தார்;
இரண்டாந் திருவாய்மொழியிலே, ‘இப்படிப் பரனானவனை பஜியுங்கோள் வழிபடுமின்,’ என்றார்,
மூன்றாந்திருவாய்மொழியிலே, அப் பஜனத்துக்கு -அவ்வழிபாட்டிற்கு உறுப்புகளாக அவனுடைய எளிமையையும்,
நான்காந் திருவாய்மொழியிலே, அவனுடைய -அபராத சஹத்வத்தையும் பொறை யுடைமைக் குணத்தையும்,
ஐந்தாந்திருவாய் மொழியிலே, -அதற்கு உறுப்பாக -அவனுடைய சீல குணத்தையும் அருளிச்செய்தார்;
‘இவை எல்லாம் உண்டாயினும், -பரிமாற்றத்தில் அருமை இருக்குமாகில் பசை இல்லை அன்றே?’ என்ன,
‘அது வேண்டா; ஸ்வாராதன் – எளிதில் ஆராதிக்கத்தக்கவன்’ என்கிறார் இத் திருவாய்மொழியில்.திரவிய நியதி இல்லை, கால நியதி இல்லை, அதிகாரி நியதி இல்லை;
இப்படி இருக்கையாலே இறைவனை ஆஸ்ரயணீயம் ஸூகரம் அடைதல் எளிது; ஆதலால்,-ஆஸ்ரயியுங்கோள் – ‘அடைமின்’ என்கிறார்.பொருள்களின் உயர்வு தாழ்வு பார்க்கின்றான் இல்லை; இடுகிறவன் நெஞ்சில் ஈரமே பார்க்கிறான்;தூய்மையான மனம் ஒன்றுமே வேண்டுவது-எல்லாருடைய தொழில்களையும் காலாலே கொள்ளப் பிறந்தவன்,
இவன் காலாலே போகட்டவற்றையும் அவன் தலையாலே சுமப்பான்-செவ்வக் கிடப்பு உண்டாயினும் மஹிஷீ ஸ்வேதத்துக்கு ஆள் இட ஒண்ணாதது போன்று,
அவ் வேலைகளைத் தானே செய்வான்

இப்படி ஸீலவான் ஆகிலும் ஸ்ரீ யபதியாகையாலே அவாப்த ஸமஸ்த காமனான பூர்ணணை ஆராதிக்கும் இடத்தில் தத் அனுரூபமான உபகரணாத்ய பாவத்தாலே துஷ்கரமாகில் செய்வது என் -என்று கூச வேண்டாத படி பூர்த்தி தானே ஆபி முக்கியமே பற்றாசாக அங்கீ கரிக்கைக்கு உறுப்பாகையாலே ஆஸ்ரயணம் ஸூகரம் என்று ப்ரதிபாதிக்கைக்காக–1- ஆராதனை உபகரண ஸுகர்யத்தையும் –2–ஆராதகனுடைய அதிகார ஸுகர்யத்தையும் —3-அதிகாரி விஷயத்தில் ஆராத்யன் தோஷ குணம் பாராமையும் தன் பெருமை பாராதே அங்கீ கரிக்கும் பந்த விசேஷத்தையும்
4–அநந்ய ப்ரயோஜன விஷயத்தில் ஆதார அதிசயத்தையும்–5- அவர்களுக்கு அத்யந்த போக்யனாம் படியையும்—6-அநிஷ்ட நிவர்த்தகனானவனுடைய ஆஸ்ரயணம் காலஷேப பிரகாரம் என்னும் இடத்தையும்-7- அஞ்சலி மாத்திரத்தாலே அநிஷ்ட நிவ்ருத்தியையும் இஷ்ட ப்ராப்தியையும் பண்ணும் என்னும் இடத்தையும்–8-அநிஷ்டத்தை அவிளம்பேந நிவர்த்திப்பிக்கையையும் சொல்லி– ஸ்வ ஆராதையை உபதேசிக்கிறார் –

பரிவதில் ஈசனைப் பாடி –விரிவது மேவலுறுவீர்
பிரிவகையின்றி நன்னீர்த் தூயப் –புரிவதும் புகை பூவே 
–1-6-1-

பரிவது இல் –துக்கம் இல்லாத.–பக்ஷ பாதம் இல்லாத’ –ஹேயப்பிரத்ய நீகன்-உப லக்ஷணத்தால் கல்யாண குண யோகமும் அருளிச் செய்தாராயிற்று.பிரி வகை இன்றி –
பிரிகையாகிற வகை இன்றி; அதாவது, -உன் பெருமை மாசு உணாதோ?’ என்று அகல வகை இட்டுக் கொண்டு அகலாமல் என்றபடி.-

செதுகை யிட்டுப் புகைக்க அமையும்; கண்ட காலி இடவும் அமையும்,’ என்று அருளிச் செய்வர்-ஸ்ரீ பட்டர் –கூடாது என்று சாஸ்த்திரங்கள் விதிக்கின்றனவே!’ என்று ஸ்ரீ நஞ்சீயர் கேட்க,
அவனுக்கு ஆகாது என்கிறது அன்று; பறிக்கிற அடியார் கையில் முள்பாயும் என்பதற்காகத் தவிர்த்தன காணும்!  ‘கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும், முள்ளார் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால்’ என்று இறைவனுக்கே உரிய திருத் துழாயோடு -விசஜாதீயங்களை -அதற்கு வேறுபட்ட பூக்களையும் ஒரு சேர எடுத்துத் ஸ்ரீ திருமங்கை மன்னன் அருளிச் செய்கிறது கண்டீரே! இதனால், இறைவன் பொருளில் ஏற்றத் தாழ்வு -த்ரவ்ய தாரதம்யம் -பார்ப்பது அன்று என்பது விளங்குமே!-அப்ராக்ருத த்ரவ்யம் -பிரகிருதி சம்பந்தம் இல்லாத பொருள்தான் வேண்டும் என்று இருந்தானாகில், ‘புள்ளாய் ஓர் ஏனமாய்’ அவதரிப்பானோ! ஸ்ரீ வைகுண்டத்தில் இரானோ?’ என்று அருளிச் செய்தார்.
பின்னர் ஸ்ரீ ‘நஞ்சீயர்’வராக புராணம் பார்த்துக்கொண்டு வரும்போது  ‘ஸ்ரீ வராக நாயனார்க்கு முத்தக்காசை அமுது செய்விப்பது’ என்று அதில் கூறப் பட்டிருத்தலைக் கண்டதும் ‘இது என்ன மெய்ப்பாடு தான்!’ என்று போர வித்தராய் – மிகவும் ஈடுபட்டவரானார்.

உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாகக் கொள்ளோமே – இப்படி அநுஸந்தியாதாருடைய ஹிருதயத்தை நினைத்திரோம் – நாங்கள் பதின்மரும் என்று தம்மை ஒழிந்த ஆழ்வார்களும் –

———–

மதுவார் தண்ணம் துழாயான் –முது வேத முதல்வனுக்கு
எதுவேது என் பணி என்னாது அதுவே ஆட்செய்யுமீடே
 –1-6-2-

ஆஸ்ரயிக்குமவனுக்கு த்ரவ்யத்தில் குறை பார்த்து அகல வேண்டா -என்றார் முதல் பாட்டில் –நான் அதிகாரி அல்லேன் -என்று அகல வேண்டா -என்கிறார் இதில்-

மது வார் தண் அம் துழாயான்-
‘‘புரிவதுவும் புகை பூவே’ என்றார் கீழே -;
‘மதுவார் தண் அம் துழாயான்’ என்கிறார் இங்கு; இது சேரும்படி என்?’ எனின்,
பூவாகில் மதுவோடே கூடியல்லது இராமையாலே சேரும்’ என்று சொல்லுவர்கள்;
‘வதுவார் தண் அம் துழாயான்’ என்று பாடமான போது சாலப் பொருந்தும்;
வதுவை-மணம்; ஆர்தல் -பூர்ணம் –
வதுவை -வது- என்று கடைக்குறைந்து நறு நாற்றத்தை யுடைய -துழாய் என்றுமாம் –
இது தமிழர் போரச் சேரும் என்பர்-

மதுவார் தண் அம் துழாயான்’என்கையாலே, -சர்வாதிகன் -எல்லாரினும் அறப்பெரியவன் என்பதனைத் தெரிவித்தபடி, 
‘முதுவேத முதல்வன்’ என்கையாலே, பரிபூர்ணன் என்பதனைத் தெரிவித்தபடி.
இவ்விரண்டும் -ஸ்வாராதன் – எளிதில் ஆராதிக்கத் தக்கவன் என்பதற்கு உறுப்புகள்.

இப்படி விலஷணன் ஆனவனுக்கு நான் அடிமை செய்கை அயோக்யன் என்று பாராதே அந்தரங்க வ்ருத்தியோடே பஹிரங்க வ்ருத்தியோடே வாசி இன்றிக்கே-தம் தம்முடைய அநர்ஹத்தையைப் பாராது -எல்லா வ்ருத்தியும் செய்யக் கடவனாகை ஆட்செய்கைக்கு அதிகாரம் –

————–

ஈடும் யெடுப்புமிலீசன் -மாடு விடாது என் மனனே
பாடும் என் நா அவன் பாடல் ஆடும் என் அங்கம் அணங்கே –
1-6-3-

அவனுடைய இஸ் ஸ்வபாவத்தை அனுசந்தித்து -நினைந்து, தாம் அதிகரித்த காரியத்தை பரோபதேசத்தை-மறக்கும்படி தம்முடைய மனம் வாக்குக் காயங்களுக்கு அவன் பக்கல் உண்டான -ப்ராவண்யத்தை -அருளிச் செய்கிறார்-தனித்தனி =என் என் என் -என்று கரண த்ரயத்தாலும் தம்முடைய உகப்பு தோற்றுகிறது –ஏகாரம் -விடாது பாடும் -ஆடும் -என்னும் வினைகளுடன் கூடிக் கிடக்கிறது –

———–

அணங்கு என ஆடும் என் அங்கம் -வணங்கி வழி படும் ஈசன்
பிணங்கி யமரர் பிதற்றும் -குணங்கு எழு கொள்கையினானே 
–1-6-4-

தம்முடைய மனம் வாக்குக் காயங்கட்கு அவன் பக்கல் உண்டான-ப்ராவண்யம் –காதாசித்கமாய் விடுகை இன்றிக்கே – ஒரு காலத்தில் தோன்றி மறைதல் இன்றி,
நித்திய ஸூரிகளைப் போலே யாத்திரையான படியைச் சொல்லுகிறார்.-பிணங்கி அமரர் பிதற்றும் குணம் கெழு கொள்கையினான் – தாம் தாம் அகப்பட்ட குணங்களைச் சொல்லி, ‘நான் முந்துறச் சொல்ல, நான் முந்துறச் சொல்ல’ என்று பிணங்கி நித்திய ஸூரிகள் ஜன்னி சுரம் வந்தவர்களைப் போன்று அடைவு கெடக் கூப்பிடுகிற குணங்கள் வந்து சேருகைக்கு இருப்பிடமானவன்.சர்வேஸ்வரனான எம்பெருமானை நான் அனுபவித்து ப்ரீதி அதிசயத்தாலே தைவா விஷ்டரைப் போலே அக்ரமமாக நின்று ஆடி அவனை வணங்கி அடிமை செய்யும் இதுவே ஸ்வ பாவமாகப் பெற்றேன் -என்கிறார் –

———–

கொள்கை கொளாமை இலாதான் எள்கல் இராகம் இலாதான் –
விள்கை விள்ளாமை விரும்பி –உள் கலந்தார்க்கு ஓர் அமுதே 
—1-6-5-

திரியவும் தாம் அதிகரித்த கார்யத்தே போந்து -அவன் அநந்ய பிரயோஜனருக்கு நிரதிசய போக்யனாம் என்கிறார் –ஈடும் எடுப்பும் இல் ஈசன் -என்ற இடம் ஸ்வீகார சமயத்தில் குறை பாரான் என்றது -இங்கு பரிமாற்றத்தில் தரம் இட்டுக் கொள்ளான்-என்கை –விள்கை -பிரயோஜனங்களைக் கொண்டு விடுகை-விள்ளாமை -அநந்ய பிரயோஜனம் ஆகை
விரும்பி -ஆதரித்து உள் கலந்தார்க்கு-இவனையே பிரயோஜனமாகப் பற்றி இவனுடனே ஒரு நீராக கலந்தவர்களுக்குஓர் அமுதே –அத்விதீயமான அமிர்தமாய் இருக்கும் -ஆராவமுது இறே –

————

அமுதம் அமரர்கட்கு ஈந்த -நிமிர் சுடராழி நெடுமால்
அமுதிலும் ஆற்ற இனியன் நிமிர் திரை நீள் கடலானே 
–1-6-6-

அவன் படி இதுவாக இருக்க, அவனை விட்டு-பிரயோஜனாந்தரத்தை – வேறு பலன்களைக் கொண்டு அகலுவதே!’ என்று-ப்ரயோஜனாந்தர பரரான – வேறு பலன்களை விரும்பிய தேவர்களை நிந்திக்கிறார்.நிமிர் சுடர் ஆழி நெடுமால்-இவருடைய அமிர்தம் இருக்கிறபடி. 
‘நால் தோள் அமுதே’ அன்றோ இவர்க்கு அமுது?  அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்’ என்கிறபடியே, கையுந்திருவாழியுமாய் அன்றோ அவருடைய அமிருதம் இருப்பது?ஸ்ரீ நம்பி திருவழுதி நாடு தாசர், ‘இத்தேவ சாதி வெறும் மரையோ? ‘உப்புச் சாறு கிளருவது எப்போதோ?’ என்று கவிழ்ந்து பார்த்துக் கிடப்பதே இவன் அழகையும் இனிமையையும் விட்டு!’ என்பராம்.‘கடலான்’ -‘தன் வாசி அறியாது இருப்பார்க்கும் எழுப்பிக் காரியங் கொள்ள லாம்படி கண் வளர்ந்தருளுகிறான் என்றபடி. 
தாளும் தோளும் முடிகளும் சமன் இலாத பலபரப்பி’ என்கிறபடியே, கண் வளர்ந்தருளுகைக்குத் தகுதியான பரப்பை யுடைத்தாய், ஸ்வ சந்நிதானத்தாலே – தனது ‘சம்பந்தத்தாலே அலைகள் கொந்தளிக்கிற கடல் என்பார், ‘நிமிர் திரை நீள் கடலான்’என்கிறார். ‘மாலும் கருங்கடலே என் நோற்றாய்?’ என்பது ஸ்ரீ பொய்கையார் திரு வாக்கு.தன்னையே ப்ராப்யமாகப் பற்றி விடாதவர்களுக்குத் தன்னையே போக்யமாகக் கொடுக்கும் –அல்லாதார்க்குத் தன்னை ஒழிய ப்ரயோஜனாந்தரங்களைக் கொடுக்கும் –

————–

நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்-தோள்கள் தலை துணி செய்தான்
தாள்கள் தலையில் வணங்கி நாள் கடலைக் கழிமினே
 –1-6-7-

அவன் போக்யதை நெஞ்சில் பட்டால் -பிராப்தி அளவும் செல்ல சக்கரவர்த்தி திருமகனுடைய வீர சரிதத்தை அனுசந்தித்து காலத்தைப் போக்குங்கோள் என்கிறார்

நாள் கடலைக் கழிமின் – இறைவனுடைய போக்யதை -இனிமை நெஞ்சிலே பட்டால், அவனை அடைவதற்கு முன்பு இடையிலே யுள்ள நாள்கள் ஒரு கடல் போன்று தோன்றும் ஆதலின், ‘நாள் கடல்’ என்கிறார்.
இனி, இதற்குச் ‘சக்கரவர்த்தி திருமகனை அடைந்து -சம்சார துரிதத்தை -பிறவிப் பெருங்கடலைக் கழித்துக் கொள்ளுங்கள்’ என்று கூறலுமாம்.

————-

கழிமின் தொண்டீர்காள் கழித்துத் தொழுமின் அவனைத் தொழுதால்
வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி யாக்கம் தருமே 
–1-6-8-

சக்கரவர்த்தி திருமுகனை ஆஸ்ரயித்து விஷய ப்ராவண்யத்தைத் தவிரவே
ப்ராப்தி பிரதிபந்தகங்களை போக்கி நித்ய கைங்கர்யத்தை தரும் என்கிறார் –

வழி நின்ற வல்வினை மாள்வித்து – இவ் வாத்துமாவுக்குச் ஸ்வரூபத்தோடு கட்டுப்பட்டதோ-ஸ்வரூப அனுபந்தியோ – என்னும்படி பொருந்தி யிருக்கிற கொடிய கர்மங்களை வாசனையோடே போக்கி.
இனி, ‘வழி நின்ற வல்வினை’ என்பதற்கு ‘நடுவே நின்று,-பகவத் பிராப்தியை – பகவானை அடைதலைத் தடை செய்கிற -நிரோதிக்கிற -கர்மங்கள்’என்று பொருள் கூறலுமாம்.

அழிவு இன்றி ஆக்கம் தரும்-ந ச புநரா வர்த்ததே ‘மறுபடியும் மீண்டு வருகின்றான் இலன்’ என்கிறபடியே, மீண்டு வரும் தன்மை இல்லாத மோக்ஷத்தைத் தரும் –கைங்கர்யம் தரும் -இவ்வர்த்தத்தில் சம்சயம் இல்லை –

—————

தரும வரும பயனாய -திருமகளார் தனிக் கேள்வன்
பெருமையுடை பிரானார் -இருமை வினை கடிவாரே–1
-6-9-

தன்னைப் பற்றின மாத்ரத்தில் இது எல்லாம் செய்து அருளக் கூடுமோ -என்னில் தரும வரும பயனாய -திரு-தருமத்தினுடைய-பரம – மேலான பிரயோஜனந்தான் ஒரு வடிவு கொண்டாற் போன்று இருக்கின்ற ஸ்ரீ பெரிய பிராட்டியார்  -ந கச்சின் ந அபராத்யதி -என்னுமவள் அருகே இருந்து தருவிக்கும் என்கிறார் –திருமகள் கேள்வன் ஆகையாலே வரும் ஏற்றம் உள்ளது இவன் ஒருவனுக்குமே ஆதலின், ‘தனிக்கேள்வன்’ என்கிறார்.ஆஸ்ரித அனுக்ரஹமே ஸ்வரூபமாய் உள்ளவர் –

————

கடிவார் தீய வினைகள் -நொடியாரும் அளவைக் கண்
கொடியாவடு புள்ளுயர்த்த-வடிவார் மாதவனாரே
 –1-6-10–

அவள் பொறுப்பிக்க பொறுக்கும் இடத்தில் விளம்பம் இல்லை -அரை ஷணத்தில் பொறுப்பர் -இப்படி அவனும் அவளும் குற்றங்களைப் போக்குவது எத்தனை காலம் கூடி?’ என்னில்,‘தன் திருவடிகளிலே தலை சாய்த்த அளவிலே’ என்கிறார் –மாதவனார்-பிராட்டி அருகே இருந்து போக்குவிக்க ஆயிற்றுப் போக்குவது.-ஒருதலை ஜென்மம் -ஒருதலை மரணம் -நடுவே ஆதி வியாதிகள் -இவை செய்த குற்றங்களைப் பார்க்கக் கடவதோ-
குற்றம் கண்டில் விபூதியாக விட வேண்டாவோ -பொறுத்து அருளீர் என்றால் –
அவளுக்காகப் பொறுத்தோம் -என்னும் அத்தனை –பெரிய திருவடியை விஷயீ கரிக்குமா போலே இன்று ஆஸ்ரயிப்பாரை விஷயீ கரிக்கும் ஸ்வபாவர் –

————-

மாதவன் பால் சடகோபன் தீதவம் இன்றி யுரைத்த
ஏதமில் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாரே 
–1-6-11-

மாத்ரு சம்ரக்ஷணம் அழகிது ‘மாதாவைப் பேணுதல் அழகிது’ என்னுமாறு போன்று,
பகவத் ஸமாச்ரயணம் எளிது – ‘பகவானை அடைதல் எளிது’ என்று உபதேசிக்க வேண்டுகிறது –இத் திருவாய்மொழியைக் கற்க வல்லார்கள் உபதேசம்-நிரபேஷமாக- இல்லாமலே சம்சார சம்பந்தம் அற்றுப் பகவானுடைய அனுபவமே யாத்திரையாம்படி இருக்கிறவர்களோடே கூடி அனுபவிக்கப் பெறுவர்கள் ஆதலின், ‘ஓத வல்லார் பிறவார்’ என்கிறார்-பகவத் அனுபவத்துக்கு மேட்டு மடையான சம்சாரத்தில் பிறவார் 

கவி பாடுகிறவனுக்கும்-கவி பாட்டு உண்கிறவனுக்கும்-கவிக்கும் உள்ள மூன்று குற்றத்தையும் தீதும் -அவமும் -ஏதமும் – என்றும் சொல்லுவர் –ஸ்ரீ பட்டர், ‘ஏதம் இல் ஆயிரம்’ என்று பிரபந்த லக்ஷணம் கூறிய போதே,- த்ரிவித தோஷ ராஹித்யம் – முக்குற்றங்கள் இல்லாமையும் சொல்லியதாம்; இனி, தீதும் அவமும் என்பன செய்வன என்?’ என்னில்,
‘சடகோபன் மாதவன் பால் தீது அவம் இன்றி உரைத்த’ என்று கூட்டிப் பொருள் கொள்க,’ என்று அருளிச் செய்தார்.
அதாவது, தீதாவது, ‘நான்-ஸ்ரீ யப்பதி திருமகள் கேள்வன் அல்லனோ!’ என்று தன் மேன்மையைப் பார்த்துக் கடக்க இருக்குமது.
அவமாவது, ‘ஆஸ்ரயிக்கிறவன் அடைகின்றவன் நித்திய சம்சாரி அல்லனோ!’ என்று இவன் சிறுமையைப் பார்த்துக் கைவிடுமது.
இவை இல்லாமையைச் சொன்ன இப் பத்து என்றபடி.-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -96-வணங்கும் துறைகள் பல பல ஆக்கி –ஒன்றும் தேவும் -4-10-

April 4, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

இணங்கு நின்னோரை இல்லாய் – நிகரானவர் இல்லாதவனே -திரு நாமம் சாத்தி ஸம்போதிக்கிறார்
நின் கண் வேட்கை எழுவிப்பனே –உன்னை விட நான் உயர்ந்தவன் என்று உள்ளுறைப் பொருள்

உன்னுடன் விலக்கி வைத்து -தேவதாந்த்ரங்களை உருவாக்கி –வணங்கும் துறைகள் பல பல வாக்கி மதி விகற்பால்-புத்தி பேதத்தால் -சம்பிரதாயங்கள் பல பல வாக்கினாய் -துறைகள் உபதேசிக்கும் ஆச்சார்யர்கள்-பிணங்கும் சமயம் -சம்ப்ரதாயம்- பல பல வாக்கி அவையவை தோறு அணங்கும் பல பல வாக்கி-தேவதாந்தரங்களும் பல நின் மூர்த்தி-உன்னுடைய திருமேனியை விரித்து –பஹுஸ்யாம் ப்ரஜாயேய -மயில் தோகை -கடல் அலைகள் போல் தன்னுள்ளே திரைத்தெழுந்த இத்யாதி – பரப்பி வைத்தாய்-யாரை வணங்கினாலும் -சரவ்ச தேவ நமஸ்காரம் கேசவ கச்சதி-என்றும் சொல்லி வைத்தாய்-அநாதி கால கர்மம் -ஆகவே யாரையாவது வணங்கலாம் என்னும் புத்தி-இத்தை மாற்றி உன்னையே வணங்கச் செய்வதே நின் கண் வேட்கை எழுவிப்பேன்-முதல் மூன்று வரிகள் அவன் செய்த செயல்கள்-இறுதியில் என்னை அனுப்பிய கார்யம்-உனது பக்தி வளர்க்கவே என்னை பிறப்பித்தாய்-ஆழ்வார் பெருமையை உலகோருக்கு அறிவிக்கவே இந்தச் செயல்கள்-ஆழ்வார் ஜெயித்தால் தான் பெருமாள் ஜெயிப்பதாக ஆவான்–ஒன்றும் தேவும் -4-10-இதன் விவரணம்-தலைவனை முன் நினைந்து -பாவனையால் பேசுகிறாள் உனக்கு சமமானவர் இல்லை என்பதால் –
தனது கற்பு நிலையை வெளியிடுகிறாள் -தலைவி வெறி விலக்குவிக்க நினைதல் -சஹி வெறி விலக்கு இல்லை-

அவதாரிகை –-பேச ஒண்ணாது என்று கை வாங்கவும் மாட்டாதே –-பேசாது இருக்கவும் மாட்டாதபடி யாகவும் – இதர விஷயங்களில் அருசியையும் -பிறப்பித்து – தன் பக்கலிலே ருசியையும் பிறப்பித்த-இந்த மகா உபகாரத்துக்கு சத்ருசமாக பண்ணுவது ஒரு பிரத்யுபகாரம் இல்லை இறே –உன்னதான வஸ்துவையும் உன் பக்கலிலே சமர்ப்பிக்கும் அத்தனை இறே இனி-என்று அத்தைச் செய்தார் –வணங்கும் துறை -லபிக்கும் அம்சம் எல்லாம் இங்கு இல்லை என்கிறார் –நீ கை விட்டால் உன் கார்யம் செய்யப் போந்த நானும் கை விடவோ- லபிக்கும் அம்சம் இங்கு இல்லை என்று பூர்வ அர்த்தத்தை கடாஷித்துக் கொண்டு –நீ இப்படி செய்த பின்பு உன்னை ஆஸ்ரயிக்கும் உபாயம் ஒன்றும் இல்லை
என்று அருளிச் செய்கிறார் –நீ கை விட்டால் உன் கார்யம் செய்ய போந்த நானும் கை விடவோ-என்று
ஸ்வ சரண கமல சமாஸ்ரயணத்துக்கு உறுப்பாக -கரண களேபரங்களைக் கொடுத்து- பிரவ்ருத்தி நிவ்ருத்தி சக்திகளையும் கொடுத்து –ஹிதைஷியாய் இருந்தேன் இத்தனை ஒழிய- கை விட்டேனோ என்று அருளிச் செய்கிறார் –சித் சக்திகளையும் பிரவ்ருத்தி சக்திகளையும் -அடியிலே இவை அசித் கல்பமாய் இருந்த-சமயத்திலே – இவற்றினுடைய தயநீய தசையைக் கண்டு – புருஷார்த்தம் இன்னது என்று அறிந்து – ருசித்து பற்றுகைக்கு ஈடாக கொடுத்து விட —அவை தான் இதர விஷயங்களின் ருசிக்கைக்கும்–அதுக்கு ஈடாக ப்ரவர்த்திக்கைக்கும் பொதுவாய் இருக்கையாலே – இவை சம்சரிக்கைக்கு ஈடாக-ப்ரவர்த்தித்ததாய் நீ என்னலாம்படி விழுந்தது -(ப்ரவர்த்திப்பித்தாய் என்றுமாம் கிணற்றின் கரையில் பிரஜையை வாங்காதே -யாறி இருந்த தாயைத் தானே தள்ளினாள் என்னக் கடவது இறே –

இப்படி
விரோதி நிவர்த்தகத்வத்தையும்
பந்தத்தையும்
புருஷகார யோகத்தையும்
முன்னிட்டுத் தாம் ஆஸ்ரயித்த படியைச் சொல்லக்கேட்ட ஈஸ்வரன்
ஸம்ஸாரிகள் நாநா மத பேதங்களாலே நாநா தேவதைகளை ஆஸ்ரயித்து அநர்த்தப்பட்டுப் போகா நிற்க-நீர் நம்மை உறவு அறிந்து ஆஸ்ரயிக்கப் பெறுவதே-இனி உமக்கு நிரந்தர அனுபவமே க்ருத்யம்
நீர் செய்யப் பார்த்தது என் என்று-இவரைக் கொண்டு ஜகத்தைத் திருத்தப் பார்த்து இருக்கிறவன்
ஸா பிப்ராயமாக இவருக்கு கார்யம் செய்ய உத்யோகிப்பாரைப் போலே அருளிச் செய்ய
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் அவன் மைப்படியே –திரு விருத்தம் -93- என்று
ஸம்ஸாரிகள் இழவுக்கு நொந்தவர் ஆகையாலே நீ ப்ரவர்த்திப்பித்த பாஹ்ய மார்க்கத்தாலே உன் பக்கல் விமுகமான ஜகத்தை உன் பக்கலிலே ப்ராவண்யம் உண்டாம்படி பண்ணக் கடவேன் என்று
ஈஸ்வரன் திரு உள்ளக் கருத்தைத் தாமே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-அவதாரிகை-உம்முடைய மநோ ரதங்கள் எல்லாம் கைபுகுந்து நம் பக்கல் உபகார ஸ்ம்ருதியாலே வணங்கும்படி யானீர் இறே-இனி உமக்கு ஒரு கர்தவ்ய அம்சம் இல்லையே என்ன
எனக்கு ஒரு கர்தவ்யம் உண்டு என்கிறார்-ஸம்ஸாரிகளையும் என் படி ஆக்கி யல்லது நான் ஓர் இடத்தில் இரேன் என்கிறார் நீ கை விட்டால் உன் கார்யம் செய்யப்போந்த நானும் கை விடவோ
சித் சக்தியையும் ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி சக்தியையும் அடியிலே இவை அசித் கல்பமாய்க் கிடக்கிற சமயத்திலே இவற்றினுடைய தய நீய தசையைக் கண்டு புருஷார்த்தத்தை இன்னது என்று அறிந்து
ருசித்துப் பற்றுகைக்கு ஈடாகக் கொடுத்து விட –அவை தான் இதர விஷயங்களை ருசிக்கைக்கும் அதுக்கு ஈடாக ப்ரவர்த்திகைக்கும் பொதுவாகையாலே கர்ம ப்ரவாஹம் அடியாக வந்த இத்தைக் கொண்டு இதர விஷயங்களிலே ஒழுக–நீயும் அனுமதி தானத்தைப் பண்ணி உதாசீனனாய் இருக்கையாலே-இவை ஸம்ஸரிக்கைக்கு ஈடாக ப்ரவர்த்திப்பித்தாய் நீ என்னலாம்படி இருந்தது
பிரஜை கிணற்றில் விழா நின்றால் வாங்காத தாயை தள்ளினாய் என்னக் கடவது இறே –

வணங்கும் துறைகள் பல பல வாக்கி மதி விகற்பால்
பிணங்கும் சமயம் பல பல வாக்கி  அவையவை தோறு
அணங்கும் பல பல வாக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கு நின்னோரை இல்லாய் நின் கண் வேட்கை எழுவிப்பனே
– -96 –தலைவி வெறி விலக்குவிக்க நினைத்தால் –

வணங்கும்–(தெய்வத்தை) வணங்குகிற
துறைகள் பலபல–வகைகள் பற்பலவற்றை-முதலில் மத உபதேஷ்டாக்கள் குருக்கள் -துறை –
ஆக்கி–உண்டாக்கி
மதி விகற்பால்–அறிவின் வேறுபாட்டால்
பிணங்கும்–(ஒன்றொடொன்று) மாறுபடுகிற
சமய பலபல–மதங்கள் பலவற்றையும்
ஆக்கி–உண்டாக்கி
அவை அவை தோறு–அந்தந்த மதங்கள் தோறும்
அணங்கும் பல பல–தெய்வங்கள் பற்பலவற்றையும்.
ஆக்கி–உண்டாக்கி
நின் மூர்த்தி–(இங்ஙனம்) உனது வடிவத்தைப் -சரீரத்தை -பரவச் செய்து வைத்துள்ளாய்-ஜகத் ஸர்வம் சரீரம் தே அங்க -அங்கீ பாவம்
இணங்கும் நின்னோரை இல்லாய்–உன்னோடு இணைத்துச் சொல்லத் தக்க உன் போல்வார் எவரையுமில்லாதவனே!-இணைவனாம் சத்ருஸ்த்தம் தோற்றி -முதல் -வைலக்ஷண்யம்
நின் கண்–உன்னிடத்திலேயே
வேட்கை–பக்தியை
எழுவிப்பன்–வளரச் செய்வேன்-

ஒன்றும் இலைத் தேவு இவ் வுலகம் படைத்த மால்
அன்றி என யாரும் அறியவே -நன்றாக
மூதலித்துப் பேசி யருள் மொய்ம் மகிழோன் தாள் தொழவே
காதலிக்கும் என்னுடைய கை—
—40-நண்ணாதாரில் -ஈஸ்வரனும் கூட -திருத்த ஒண்ணாது -என்று
கை விட்ட சம்சாரிகளைத் திருத்த ஒருப்பட்டு ப்ரமாணாந்தர விலஷணமாய் நித்ய நிர்தோஷமான
வேதாந்த வாக்யங்களாலும் சந்தம்ச நியாயங்களாலும் இதிஹாசாதி சித்திதமான ஜகன் நிதரணாதி திவ்ய சேஷ்டிதங்களாலும் சம்சார பீஜமான தேவதாந்திர பரத்வ பிரதிபத்தியை அடி அறுத்து
ஸ்ரீ யபதியான நாராயணனே ஜகத் காரண பூதன் -என்று த்ருட தரமாக உப பாதித்து இப்படி சர்வ ஸ்மாத் பரனான இவன் அரியன் -என்று கை வாங்க வேண்டாத படி திரு நகரியிலே வந்து சந்நிஹிதன் ஆன பின்பு அவனை ஆஸ்ரயிங்கோள் என்று பரோபதேச பிரவ்ருத்தர் ஆகிற ஒன்றும் தேவில் அர்த்தத்தை
ஒன்றும் இலைத் தேவு -என்று துடங்கி அருளிச் செய்கிறார் –எம் பெருமான் திருவடிகளுக்கு
ஆட் சேர்த்து அருளுகையாலே பகவத் கைங்கர்ய அதி சீதள அம்ருத மய தடாக அவகாஹன
ஸூ பிரசன்ன ஆத்மா ஸ்வரூப காத்ர நிரதிசய ஸூ கந்த விகசத் கேசர மால அலங்க்ருத
வஷஸ் ஸ்தலரான ஆழ்வார் திருவடிகளை – வகுளா பிராமம் ஸ்ரீ மத அங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்த்னா என்று பஜிக்கையிலே பக்தி பண்ணா நின்றன என்னுடைய ஹஸ்தங்கள் ஆனவை –

நாம் இவை சம்சரிக்கைக்கு ஈடாக ப்ரவர்த்திப்பிக்கை யாவது என் என்ன –-வணங்கும் துறை இத்யாதி –
ரஜஸ் தமஸ்க்கள் உடையராய் இறே புருஷர்கள் இருப்பது –அவ்வவ குண அநு குணமாக ருசி பிறந்தால்
அவ்வளவிலே -ராஜசராயும் -தாமசராயும் உள்ள அவ்வவோ தேவதைகளே-ஆஸ்ரயணீய வஸ்துக்கள் என்று உபதேசிக்கைக்கு ஈடாக-உபதேஷ்டாக்களான தீர்த்தர்கள் பலவாயும் உண்டாக்கி வைத்தாய்-துறை என்று-தீர்த்தமாய் -அத்தால் தீர்த்தரை நினைக்கிறது –மதி இத்யாதி – மதி பேதத்தால் -ஒருவன் சித்தாந்தித்து –அது தன்னையே பூர்வ பஷமாக கொள்ளும்-இறே வேறு ஒருவன் – இப்படி பிணங்குகைக்கு  பாசுரமான அவ்வவோ சாஸ்திரங்கள் பலவற்றையும் உண்டாக்கி வைத்தாய் –அவையவை இத்யாதி –அவ்வவோ சாஸ்த்ரங்களில் பிரதிபாதிக்கப் படுகிற தேவதைகள்
பலவற்றையும் உண்டாக்கி வைத்தாய் –நின் மூர்த்தி பரப்பி வைத்தாய் —யோயோயாம்யாம் தநும்பந்த்யா (ஸ்ரீ கீதை 7 அத்யாயம் )-என்கிறபடியே உனக்குத்த அநு பூதர் ஆனவர்களை பலரையும் உண்டாக்கி வைத்தாய் –பைசல் கைசு நோய் முக்தைசு -என்று பண்டே இவற்றினுடைய அறிவு கேட்டுக்கு மேலே ஷுத்திர தேவதைகளை ஆஸ்ரயணீயர்  என்று உபதேசிப்பாரையும் – அவர்களுக்கு உபதேசிக்கைக்கு-பாசுரமான சாஸ்திரங்களையும் – அவ்வவோ தேவதைகளையும் உண்டாக்கி வைத்தாய் –இணங்கு நின்னோரை யில்லாய் –நீ இப்படி பரப்பி வைத்தால் இத்தை வேறு சிலரால் தவிர்க்கலாம்படி இருப்பான் ஒருவன் அல்லை – உன்னோடு ஒக்க நிற்கும்படி – உனக்கு போலி யானாரை-உடையை அல்லை –-இனி நீ செய்யப் பார்த்தது என் என்ன –நின் கண் வேட்கை எழுவிப்பனே –ஸ்வ தந்த்ர்யத்தையும் தவிர்த்து – அவர்கள் தங்கள் அறிவு கெட்டு-இன்பம் அனுபவியாதபடி -பண்ணி – எல்லாரும் என்னைப் போலே உன் பக்கலிலே ஆசை-உடையராம்படி -பண்ணக் கடவேன் –இது சம்சாரத்தில் இருக்கச் செய்தே பகவத் ஜ்ஞானம்-பிறக்கையால் வந்த கர்வோக்தி யிருந்தபடி இறே –நீ கை விட்டாலும் நான் கை விடவோ – அனைவரையும் ஆஸ்ரிதர்-ஆக்குகிறேன் என்று ஈஸ்வரன் இடம் மார் தட்டுகிறார் –

உபாயாந்தரங்களைக் காட்டி வைத்து -ஒன்றே பொருள் எனின் வேறு என்ப வேறு எனின் அன்று என்ப ஆறு சமயத்தார்-பல சமயங்களையும் தேவதைகளையும் நாட்டி வைத்து -அனைத்தும் உன் சரீரமே -உன்னால் அல்லாது வேறு யாராலும் ஒன்றும் செய்ய முடியாதே-இருந்தாலும் ஸ்ரீ வைஷ்ணவ சமயம் ஒன்றே பரவச் செய்வேன் -பிரபத்தி மார்க்கம் ஒன்றையே பரவச் செய்வேன்-ஸ்ரீ மன் நாராயண ரூபியான உன் வடிவத்திலேயே பக்தி செலுத்தும் படி பண்ணுவேன்-குலமகட்க்கு தெய்வம் கொழுநன் -என்றவாறு –ஆழ்வார் எம்பெருமானை நோக்கி ‘ஒப்பற்ற பெருமானே! ஸர்வேச்வரனான நீ ரஜோகுண தமோகுணங்களால் மிக்கவர்-கரும கதியால் உன்பக்கல் வாராதொழியும்படி பலபல தெய்வங்களையும் பலபல மதக்கோட்பாடுகளையும் பலபல உபாஸ்னை விதங்களையும் ஏற்படுத்தி அமைத்து வைத்தாய்; உன்னை நேதராக அடைந்து உஜ்ஜீவிப்பதற்கு இடையூறான
அவ்வெளி வழிகளிலே யான் இறங்கி விலகாதபடி அவற்றிற்கெல்லாம் மூலமான உது ஸ்யரூபத்தை யறிந்த உன்னிடத்திலே அன்பை மிகுதியாகச் செய்வதோடு பிறகும் அங்ஙனஞ்ª சய்யத் தூண்டுவேன்’ என்று இப்பாட்டால் விண்ணப்பஞ் செய்கிறார். -ஆழ்வார் எம்பெருமானது திருவுள்ளத்தின்படி உலகத்தைச் சீர்திருத்தி நல்வழிப்படுத்த அவதரித்தவராதலால் இங்ஙனம் தமது செய்கையைக் கூறுதல் தகும்.–வணங்குந் துறைகள் பலபல வாக்கி= கர்மயோகமென்றும் ஜ்ஞாநயோகமென்றும் பக்தியோகமென்றும் இப்படி பலவகைப்பட்ட உபாயங்களைக் காட்டிவைத்து என்றபடி. மதிவிகற்பில் பிணங்குஞ் சமயம் பலபல வாக்கி‘ஓன்றே பொருளெனின் வேறென்ப்வேறெனின் அன்றென்ப ஆறுசமயபத்தார்” ( திருவள்ளுவமாலை 9. )என்றாற்போல,-ஆம் என்பதை அல்ல என்பதும் அல்ல என்பதை ஆம் என்பதுமான சமயச் சண்டைகள் மதிவிகற்பால் பிணங்குதலாம்.-இப்படி பிணங்குகின்ற மதங்கள் பலவற்றையும் உண்டாக்கி வைத்தவன் எம்பெருமானேயிறே.-அவையவைதோறு வணங்கும் பலவாக்கி = ஒவ்வொரு மதத்திலும் அம்மனென்றும் பிடாரி என்றும் சாத்தனென்றும் கூற்றனென்றும்
பலவகைப்பட்ட தெய்வங்களை ஆராதனைக்கு உரியனவாக நாட்டி என்றபடி, நின்மூர்த்தி பரப்பி வைத்தாய்–அனைத்துக்கும் எம் பெருமானே அந்தராத்மாவாய் அவையெல்லாம் எம்பெருமானுடைய சரீரங்களாயுண்ளள்ளனவாதலால் இங்ஙனஞ் சொல்லப்பட்டது.–இணங்கு நின்னோரையில்லாய் = இங்ஙனே ஜகத்துக்களை நிர்வஹிக்க உன்னாவல்லது வேறொருவரால் முடியுமோ?-சக்தியில் ஒப்பற்றவனன்றோ நீ என்றவாறு.-(நின்கண்வேட்கை யெழுப்பனே) வணங்குந் துறைகள் பலபல ஆக்கியிருந்தாலும் ப்ரபத்தி மார்க்மொன்றையே பரவச் செய்வேன்;-மதிவிகற்பாற் பிணங்குஞ்சமயம் பலபல ஆக்கியிருந்தாலும் ஸ்ரீவைஷ்ணவ சமயமொன்றையே பரவச் செய்வேன்;-அணங்கும் பலபல ஆக்கியிருந்தாலும் ஸ்ரீமந்நாராயண ரூபியான நின் வடிவத்திலேயே பக்தியை நிகழ்த்துவேன் என்பதாகக் கொள்க.

இப்பாட்டுக்கும் கிளவித்துறை வகையில் பொருள் கொள்ள வேண்டில், தலைவி வெறிவிலக்குவிக்க நினைத்தல் இதற்கு துறையாம்.-எம்பெருமானாகிற நாயகனைக் களவொழுக்கத்தாற் கூடி அவனது விரஹத்தில் வருந்தி மெலிகிற (பாசாங்குச ) நாயகி, தன் மெலிவைக்கண்டு கவலைப்பட்ட செவிலித்தாய் கட்டுவிச்சிக்குக் கூறி அவளைக் கொண்டு அவள் மரபின்படி கட்டுவைப்பித்து
நோக்குகையில் முருகக்கடவுள் தோன்றக்கண்டு அதற்கு பரிஹாரமாக ஸ்ரீமந்நாராயணமூர்த்தியின் நிமித்தமாக கொண்ட தன்« நாய் சிறு தெய்வம் பாராட்டலாகிய இவ் வெறியாடடினால் தீருமாயின் தனது கற்புக்குக் குறைவாதலையும் தீராதமாயின்-ஊரலர் மிகுதலையுங் கருதி, கான நாணந்துறந்தாயினும் ரஹஸ்யத்தை வெளியிட்டு வெறிவிலக்குவிக்கத் துணிந்து
பாவநப்ரகர்ஷத்தாலே தலைவனை முன்னிலையாகக் கொண்டு தன்னிலே தான் உரைத்தது இது
“குலமகட்குத் தெய்வம் கொகுகனே” (நீதி நெறிவிளக்கம் 26.)என்றபடி கற்புச்சிறந்த இத்தலைவி தன் தலைவனையே சிறந்த தெய்வமாகவுடையவளாதலால் மற்றைய தெய்வங்களை யெல்லாம் அத் தெய்வத்தின் வடிவங்களாகவே கருதி கூறுகின்றாள்.-வணங்குந் துறைகள் பலபல= கட்டுவைத்தல்,வெறியாடுதல், ஆடுபலி கொடுத்தல், கள்ளும் இறைச்சியும் தூவுதல் முதலியன.
அயலார்க்கு இக்களவொழுக்கம் தெரியவொண்ணாதபடி கட்டுவிச்சியின் நெற்குறியில் முருகக் கடவுளைக் காட்டியவனும்,-வேலன் வழிபாட்டுக்கு வழிமுறையால் உரியனாகுகிறவனும் முதற்பெருந் தெய்வமாகிய நீயேயாயினும் அத்தெய்வத்தினால்-என் நோய் சிதைக்கப்படுதல் முழுமுதற் கடவுளாகிய ஒப்பற்ற உன்னை நேரில் தலைவனாகக் கொண்ட எனது கற்பிற்குக் குறைவாதலின் யான் அதனை உடன்படேன் என்றவாறு.

வணங்கும் துறைகள் பல பல வாக்கி-ஆஸ்ரயிக்கைக்கு இழியும் தீர்த்தங்களை நாநா விதமாக்கி
அதாவது-தத் தத் மத ப்ரவர்த்தக புருஷர்களைச் சொன்னபடி–மதி விகற்பால் பிணங்கும் சமயம் பல பல வாக்கி-பரஸ்பர விருத்தங்கள் ஆகையாலே மதி பேதம் பிறக்கையாலே–அந்யோன்யம் விவாத சீலமான ஸாங்கேதிக ஸித்தாந்தங்களையும் நாநா விதமாக்கி-அவை யவை தோறு அணங்கும் பல பல வாக்கி
அந்த ஸித்தாந்தங்கள் தோறும் ஆஸ்ரயணீயமான தேவதைகளையும் நாநா விதமாக்கி–பல பல என்ற
வீப்சையாலே
அந்த தேவ ஜாதிகளுடைய-ஸ்வரூப பேதத்தையும் அவாந்தர பேதத்தையும் நினைக்கிறது–நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்-உன்னுடைய சரீரமானத்தை விஸ்தீர்ணமாக்கி வைத்தாய்–இணங்கு நின்னோரை இல்லாய்-இத் தேவ ஜாதிகளில் இணைத்துச் சொல்லலாம்படி உன் போல்வாரை உடையான் அல்லாதவனே–நின் கண் வேட்கை எழுவிப்பனே – இப்படி ஸமாப்யதிக தரித்ரனாய்-ஸர்வ சரீரியான உன் பக்கலிலே அபிநிவேசத்தைப் பிறப்பிப்பன் –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்–அணங்கும் பல பல வாக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்-தன் மார்க்க ப்ரவர்த்தந பூஜா தத் விக்ரஹ ஸ்தாபன பஜ நாதிகளையும்-தத் தத் தேவதா விக்ரஹ துல்யத்வாதி பிரம விஷயமாம் படியான உன் திவ்ய மங்கள விக்ரஹங்களையும் எங்கும் வைத்தாய்–இணங்கு நின்னோரை இல்லாய்-உன் போல்வாரையும் உன் ஸமர் அல்லாரையும் இல்லாத-நின் கண் வேட்கை எழுவிப்பனே –-இங்கனே உன் பிரகிருதி பரவசராய் உன் நிக்ரஹத்தால் தானே அந்நிய விஷய ப்ரவணர்க்கு அடியேன் எங்கனே உன்னில் ப்ராவண்யத்தைப் பிறப்பிக்கக் கடவேன்-எங்கனே என்பது இதில் அர்த்த ஸித்தம் –

தாத்பர்யம்-இதில் தம்மைப்போலே எல்லாரையும் எம்பெருமான் திருவடிகளில் ஆஸ்ரயிக்கப் பார்க்க
அவர்கள் விஷயாந்தர ப்ராவண்யத்தில் இருப்பதைக் கண்டு-மோக்ஷ ஹேதுவான சரீரம் கொடுக்காமல் ஸம்ஸாரத்தில் உழலவே அத்தைக் கொடுத்து பொதுவாக பந்த மோக்ஷ ஹேதுக்கள் ஆகின்றது அன்றோ-மோக்ஷ உபயோகி மட்டும் அல்லவே-ஈஸ்வரன் கெடுத்தான் என்று அவனை வெறுத்து -கொடுத்தவனையே கெடுத்தவன் என்று வெறுக்கும் படி அன்றோ உனது செயல்கள்
இவர்களுக்கு எப்படியாகிலும் உன்னையே ஆஸ்ரயிக்கும் படி ப்ரீதியை வளர்த்து-ஊரும் நாடும் உலகும் என்னைப் போலவே ஆக்குவேன் என்று மார் தட்டுகிறார்-ரஜோ தமோ குணம் -சத் சாஸ்திரம் கற்று சத்வ மூர்த்தியான உன்னை விரும்பாமல் பரஸ்பர விருத்தமாய் மதங்ககள் குருக்கள்-ருத்ராதி தேவதைகளையும் உருவாக்கி சேதனர்களுக்கு அறிய வல்ல -செய்ய வல்ல சக்தியையும் கொடுத்து வைத்தாய்-அவற்றைக் கொண்டு அந்த தேவர்களையே தொழுது சம்சாரிகளாகவே திரியா நின்றார்கள்
நீ அவர்களை உபேக்ஷித்தாலும் அவர்களைத் திருத்தி-உன்னிடம் ஆஸ்ரயிக்கும் படி உனது பக்கலிலே ப்ரீதியை எழுவிப்பன்
என்கிறார்

4-10-ஒன்றும் தேவும்-ப்ரவேஸம்-

ஒரு நிலத்திலே ஒரு கூறு உவர்ந்து கிடக்க மற்றைக் கூறு விளைவதும் அறுப்பதுமாய் இருக்குமாறு போலே,
நித்ய விபூதியும் நித்ய ஸூரிகளும் பகவத் அனுபவமே பொழுது போக்காகச், சொல்லா நிற்க, இவ்வுலகமாகிற பாலை நிலத்தில்
உள்ளார் சிற்றின்பங்களிலே ஈடுபாடுடையவர்களாய் இவற்றினுடைய லாபாலாபங்களே பேறும் இழவுமாய்ப் பகவானிடத்தில்
விருப்பு இல்லாதவர்களாய்த் துன்பப்படுகிற படியை நினைத்து, ‘அவர்களைத் திருத்துவோம்’ என்று பார்த்து,
சர்வேசுவரன் உளனாய் இருக்க நாம் இருந்து துன்பப் பட வேண்டுமோ?’ என்று, ‘தேவர் உள்ளீராய் இருக்க,
இவர்கள் இப்படி நோவுபட விட்டிருக்கை போருமோ?’ இவர்களையும் திருத்தி நல் வழி போக்க வேண்டும்.’
என்று அவன் திருவடிகளிலே சரணம் புக,
அவன் இவரை நோக்கி, ‘நம் குறையன்று காணும்; இவர்கள் அறிவில்லாத பொருள்களாயிருக்க நாம் நினைத்தபடி
காரியங்கொள்ளுகிறோம் அல்லோமே? அறிவுடையராய பின்பு இவர்கள் பக்கலிலேயும் ருசி உண்டாக வேண்டுங்காணும்.
உம்மைத்தொகை-தம் பக்கல் ருசி என்றே உண்டே -கிருஷிகன் அவனே –

ருசி உண்டாகவேணுங்காணும்’ என்றது, ‘ருசி முன்னாகப் போகாமையாலே வைதிக புத்திரர்கள் மீண்டார்களே யன்றோ? என்றபடி.
தாளாற் சகங்கொண்ட தாரரங்கா!பண்டு சாந்திபன் சொல் கேளாக் கடல் புக்க சேயினை மீட்டதுங் கேதமுடன்
மாளாப் பதம் புக்க மைந்தாரை மீட்டதும் மாறலவே மீளாப் பதம் புக்க மைந்தரை நீயன்று மீட்டதற்கே?’– என்பது திருவரங்கத்துமாலை.

மீண்டு வருதல் இல்லாத தன்மையையுடைய மோக்ஷத்தைப் பெறும்போது; நாமும் உம்மைப் போன்று
ஆவன எல்லாம் செய்து பார்த்தோம்;
முடியாமையாலே கண்ண நீரோடே காணும் கை வாங்கினோம்,’ என்ன,
(கண்ண நீரோடே மீளாமல் சேர்த்து -பிள்ளை லோகாச்சார்யார் அருளுவார்-மீண்டும் ஸ்ருஷ்ட்டி செய்து அருளுவான் )
இவர்களுக்கும் ருசி இல்லையேயானாலும் பேற்றுக்கு வேண்டுவது இச்சை மாத்திரமே யாயிற்று;
ஆன பின்பு, இந்த இச்சையையும் தேவரீரே பிறப்பித்துக் கொள்ளுமித்தனை அன்றோ?’ என்று,

ஸ்ரீ கிருஷ்ணன், துரியோதனாதியர்களை அழியச் செய்து, வெற்றி கொண்டு நிற்கச் செய்தே,
துரியோதனாதியர்கள் பக்கல் உண்டான அன்பினாலே உதங்கன் வந்து,
உனக்குச் சம்பந்தம் ஒத்திருக்க, பாண்டவர்களிடத்தில் அன்புள்ளவனாய்த் துரியோதனாதியர்களை
அழியச் செய்தாயே?’ என்ன, ‘அவர்களை ஆந்தனையும் பொருந்த விட்டுப் பார்த்தோம்; அவர்கள்
பந்துக்கள் வாழ்ந்தால் நாங்கள் வாழோம்!’ என்ற பின்பன்றோ நாம் அவர்களை அழியச் செய்தது?’ என்ன,
நீ எல்லாப் பொருள்களையும் நியமிக்கின்றவனான பின்பு அவர்களுக்கு இசைவைப் பிறப்பித்துப் பொருந்த விட்டுக் கொள்ளாது
விட்டது என்?’ என்று அவன் நிர்ப்பந்தித்தாற் போலே,
உதங்க ப்ரஸ்னத்துக்கு உத்தரம் இல்லை என்பர் -இவரும் நிர்ப்பந்திக்க,
சேதநரான பின்பு ருசி முன்பாகச் செய்ய வேண்டும் என்று இருந்தோம் இத்தனை காணும்;
அது கிடக்க, உமக்குக் குறை இல்லையே?
உம்மைக் கொடு போய் வைக்கப் புகுகிற தேசத்தைப் பாரீர்,’ என்று பரம பதத்தைக் காட்டிக் கொடுக்க-கண்டு
கிருதார்த்தரானார் மேல் திருவாய்மொழியிலே.

பரம பதத்தைக் காட்டிக் கொடுக்க’ என்றது, மேல் திருவாய் மொழியிலே யுள்ள
ஒண் தொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்பக், கண்ட சதிர்
கண்டொழிந்தேன்’ என்ற பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றி.
பின்னையும் தம் செல்லாமையாலே, சர்வேசுவரன் கை விட்ட இவ் வுலகத்தையும் திருத்தப் பார்க்கிறார்.
பின்னையும் – ஈசுவரன் கை விட்ட பின்பும். ‘அருள் கொண்டாயிரம் இன் தமிழ் பாடினான்,
அருள் கண்டீர் இவ் வுலகினில் மிக்கதே,’ என்றும்,
நின் கண் வேட்கை எழுவிப்பனே’ என்றும் சொல்லுகையாலே ‘தம் செல்லாமையாலே’ என்கிறார்.
ஈசுவரன் கை விட்டிருக்க, இவர் திருத்தினால்
திருந்துவர்களோ?’ என்னில், ‘உபரிசரவசு வினுடைய உபதேச சுத்தியாலே பாதாளத்தை யடைந்தவர்கள்
திருந்தினாற் போன்று,(ஸ்ரீ விஷ்ணு தர்மத்தில் உள்ள வ்ருத்தாந்தம் ) மஹா பாகவதரான
இவருடைய கடாக்ஷ விசேஷத்தாலும் உபதேச சுத்தியாலும் திருந்துவார்கள்,’என்க.

முதல் திருவாய் மொழியிலே, தம்முடைய அனுபவத்திற்கு உறுப்பாக, அவன் காட்டிக் கொடுத்த பரத்வத்தை அநுசந்தித்து,
அது தன்னை ‘உளன் சுடர்மிகு சுருதியுள்’ என்று சுருதிச் சாயையாலே விரித்து அருளிச் செய்தார்,
சுவானுபவந்தான் பிறர்க்கு உறுப்பாய் இருக்கையாலே, அறிவுடையராகில் இவ்வளவு அமையுமே அன்றோ?’ என்று பார்த்து.
பின்னர் இதிகாச புராணக் கூற்றுகளாலே-விபவே – பரத்வத்தை அருளிச்செய்தார், ‘திண்ணன் வீடு’ என்ற திருவாய்மொழியில்.
அதிலும் அவர்கள் திருந்தாமையாலே, ‘அவர்கள் தம்மையே உத்தேசித்தே பகவானுடைய பரத்வத்தை விளக்கி
விரித்துப் பேசுவோம்’ என்று பார்த்து, அதற்கு உறுப்பாக, மற்றைத் தேவர்கள் பக்கல் உண்டான பரத்வ சங்கையை
அறுத்துக் கொண்டு, பகவானுடைய பரத்வத்தை விளக்கி விரித்துப் பேசுகிறார் இத் திருவாய் மொழியில்.

அன்றிக்கே, முதல் திருவாய்மொழியிலே பரத்வத்திலே பரத்துவத்தை அருளிச் செய்தார்;
அது இவ்வுலக மக்களுக்கு எட்டா நிலமாய் இருந்தது.
அதற்காக, அவதாரத்திலே _ பரத்வத்தை அருளிச்செய்தார், ‘திண்ணன் வீடு’ என்ற திருவாய்மொழியில்.
அதுவும் பரத்வத்திலே பரத்துவத்தை ஒத்ததாய்ப் பிற்பாடர்க்கு எட்டிற்று இல்லை.
இரண்டும் தேசத்தாலும் காலத்தாலும் கை கழிந்தன.
அக்குறை ஒன்றும் இன்றிக்கே, ‘பின்னானார் வணங்குஞ்சோதி’ என்கிறபடியே, பிற்பாடர்க்கும் இழக்க வேண்டாத
அர்ச்சாவதாரத்திலே பரத்வத்தை அருளிச்செய்கிறார் இத் திருவாய் மொழியில் என்னுதல்.

எம்பார், ‘சிலர் எல்லா வேத சாஸ்திரங்களும் கை வரப் பெற்று வைத்து, ‘பர தத்வம் இன்னது’ என்று அறுதியிட மாட்டாதே,
சேம்புக்குக் கூராச் சிற்றரிவாள் உண்டோ? நமக்கு வணங்கத் தகுந்தவர் அல்லாதார் உளரோ?’ என்று கண்ட இடம் எங்கும்
புக்குத் தலை சாய்த்துத் தடுமாறி நிற்க, எம்பெருமானார் தரிசனத்தில் எத்தனையேனும் கல்வி இல்லாத பெண்களும்
(திரிபுரா தேவி -அகனங்க ஆழ்வான் திரு பத்னி )
மற்றைத் தெய்வங்களை அடுப்பிடு கல்லைப் போன்று நினைத்திருக்கிறது,
இந்த ‘ஒன்றுந் தேவும்’ என்ற திருவாய்மொழி உண்டாகையினாலே அன்றோ? என்று அருளிச் செய்வர்;
எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளை அடைந்தவர்கள் பிரமன் முதலாயினாருடைய குறைவற்ற செல்வத்தைத்
துரும்புக்குச் சமமாக நினைப்பார்கள்,’ என்னக் கடவது அன்றோ?
பலாப்பழம் -எடுக்க கூளம் பலாப்பிசை/ தேவதாந்த்ர கலந்த கட்டி –
திராச்சா பாகம் -பகவத் பரம் மாத்திரம் -கலக்கம் இருக்காதே –
அதே போலே திருவாய் மொழி ஈஸ்வரனுக்கு மங்களா சாசன பரராக்க உபதேசம் ஆழ்வார் –
வேதம் போலே பலருக்குமாக இல்லையே –

கார்த்த வீரியார்ஜூனன் என்பான் ஒருவன் தான் இராச்சிய பரிபாலனம் செய்கிற காலத்தில் யாரேனும் ஒருவர்
பாப சிந்தனை பண்ணினார் உளராகில் அவர்கள் முன்னே கையும் வில்லுமாய் நின்று அவற்றைத் தவிர்த்துப் போந்தான் என்றால்,
இது பொருந்தக் கூடியதே,’ என்று இருப்பர்கள்; ஒரு அற்ப மனிதனுக்கு ‘இது கூடும்’ என்று இருக்கிறவர்கள்,
சர்வசத்தியாய் ‘சர்வாந்தர்யாமியாய் இருக்கிற சர்வேசுவரன் இப்படிப் பரந்து நின்று நோக்கும்,’ என்றால்,
மக்கள், ‘இது பொருத்தம் அற்றது’ என்று இருப்பர்கள். ‘ஜாதி, பொருள்கள் தோறும் நிறைந்து தங்கியிருக்கும்’ என்றால்,
அசித் பதார்த்தத்திற்கு இது கூடும்’ என்று இருப்பர்கள்;-கோத்வம் பசு முழுவதும் வியாபிப்பதை ஒத்துக் கொள்கிறார்கள்
பரம சேதநனாய் இருப்பான் ஒருவன் பரந்து நிறைந்து தங்கியிருப்பான்,’ என்றால், ‘இது கூடாது’ என்று ஐயப்படா நிற்பார்கள்.
தங்கள் பாப ப்ரஸுர்யத்தாலே –

இனி, ‘இவர் திருத்தப் பார்த்த வழிதான் யாது?’ என்னில், எல்லாரும் ஒரு சேர விரும்புவது சுகங்கள் உண்டாகவும்,
துக்கங்கள் இன்றிக்கே ஒழியவுமாய் இருக்கச் செய்தே, விரும்பிய சமயத்தில் விரும்பப்பட்ட சுகம் வரக் காணாமையாலும்,
விருப்பம் இல்லாத துக்கம் வரக் காண்கையாலும் ‘இவற்றை எல்லாம் நியமிக்கின்றவனாய் நின்று நுகர்விக்கிறான்
ஒருவன் உளன்,’ என்று கொள்ள வேண்டி இருந்தது.
அது என்? சுக துக்கங்களுக்குக் காரணமான புண்ணிய பாவங்கள்
நுகர்விக்கின்றன என்று கொண்டாலோ?’ என்னில்,
அந் நல்வினை தீவினைகளினுடைய தன்மையை ஆராய்ந்தவாறே, அவை, அறிவு அற்றனவாய் இருப்பன
சில கிரியா விசேடங்கள் ஆகையாலே,அப்போதே நசிப்பனவாம்;
இனி ஒரு மரத்தைச் செப்பன் இடுங்காலம் வந்தால், கருத்தாவை ஒழிய வாய்ச்சி முதலானவைகட்கு
ஒரு செயல் கூடாதது போன்று, அந்தக் கிரியைகளுக்கும் ஒரு இறைவனை ஒழியப் பலத்தைக் கொடுக்கும் ஆற்றல் கூடாமையாலே
ஒரு இறைவனைக் கொள்ள வேண்டி வரும்;
இனி, ‘அபூர்வம்’ என்று ஒன்றைக் கற்பித்து
அது அதிருஷ்ட ரூபேண நின்று பலத்தைக் கொடுக்கிறது’ என்பதனைக் காட்டிலும்,
ஒரு பரமசேதநன் நெஞ்சிலே பட்டு அவனுடைய தண்டனை உருவத்தாலும் திருவருள் உருவத்தாலும்
இவை பலிக்கின்றன,’ என்று கூறுதல் நன்றே அன்றோ?
இனி, ‘அந்தப் பரமசேதநன் ஆகிறான் யார்?
அவனுடைய சொரூப சுபாவங்கள் இருக்கும்படி எங்ஙனே? அவனுடைய செயல்கள் இருக்கும்படி எங்ஙனே?’ என்னில்,
அவற்றைப் பிரமாணம் கொண்டு அறியவேண்டும். அவற்றுள், பிரத்தியக்ஷம் முதலான பிரமாணங்கள் இந்திரியத்தாலே
காண முடியாத பொருளைக் காண்பதற்குப் பயன்படாமையாலே அவை பிரமாணம் ஆக மாட்டா;
இனி, ‘ஆகமம் முதலானவைகள் பிரமாணம் ஆனாலோ?’ என்னில், புருஷனுடைய புத்தியால் வருகின்ற வஞ்சகம்
முதலான தோஷங்கள் அவற்றிற்கு உள ஆகையாலே, அவையும் பிரமாணம் ஆக மாட்டா;
இனி, பதினான்கு வகைப்பட்ட வித்தியைகளுள் முக்கியமானதாய், நித்தியமாய், புருஷனாலே செய்யப்படாதது ஆகையாலே
வஞ்சகம் முதலான தோஷங்கள் இல்லாததாய், சாத்துவிக புராணங்களாலே விரித்துரைக்கப்படுகின்ற வேதம் பிரமாணம் ஆக வேண்டும்.

மக்கள் நினைத்தபடி இன்ப துன்பங்கள் வாராமையாலே ஒரு சேதனன் உளன்’ என்று அவன் செய்யும்படியை
அனுமானத்தாலே சாதித்தார் மேல்.
அவனுடைய ஸ்வரூபம் ஸ்வபாவம் முதலானவை இருக்கும்படி எங்ஙனே?’ என்ன,
பிரமாணங்கொண்டு அறிய வேண்டும்’ என்று பிரமாணத்தை அறுதியிடுகிறார்,
அவற்றைப் பிரமாணங்கொண்டு அறியவேணும்’ என்று தொடங்கி.

பிரத்யக்ஷம், அநுமானம், உபமானம், ஆகமம், அர்த்தாபத்தி, அபாவம், சம்பவம், ஐதிஹ்யம் எனப் பிரமாணங்கள் எட்டு வகைப்படும்.
அவற்றுள்,மநுவினாலே அங்கீகரிக்கப்பட்ட பிரமாணங்கள் மூன்று; அவை, பிரத்தியக்ஷம், அநுமானம், ஆகமம் என்பனவாம்.
அவற்றையே, இங்குப் பிரத்தியக்ஷம் முதலான பிரமாணங்கள்’ என்று அருளிச்செய்கிறார். ‘
முதலான’ என்றதனால், அநுமானத்தைக் கொள்க. ‘ஆகமம் முதலானவைகள்’ என்றது, பாசுபத சாங்கிய யோகங்களைக் குறித்தபடி.

வஞ்சகம் முதலான தோஷங்கள்’ என்றது, பிரமம், பிரமாதம், அசக்தி இவைகளை.

பதினான்கு வகைப்பட்ட வித்தியைகள்’ என்றது, இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்னும் வேதங்களையும்;
சிக்ஷை, வியாகரணம், கல்ப சூத்திரம்,நிருத்தம், ஜோதிஷம், சந்தோவிசிதி என்னும் ஆறு அங்கங்களையும்;
நியாயம், மீமாம்சை, புராணம், தர்மசாத்திரம் என்னும் உபாங்கங்கள் -நான்கனையுமாம்.
ஆயுர் வேதம் -அர்த்த சாஸ்திரம் -தனுர் வேதம் -காந்தர்வ வேதம் -சேர்த்தும் சொல்வர் –

சாத்விக புராணங்களாலே விரித்துரைக்கப்படுகின்ற வேதம்’ என்றது, என்னை?
வேதார்த்தத்தை நிர்ணயம் செய்வதற்கு உபப்பிருஹ்மணங்கள் வேண்டுமோ?’ எனின்,
வேதார்த்தத்தை அறுதியிடுவதற்கு, சர்வ சாகைகளிலும் சர்வ வேதாந்த வாக்கியங்களிலும் நிறைந்த அறிவு
படைத்திருத்தல் வேண்டும்; அத்தகைய ஞானம் படைத்தவர்கள் மஹரிஷிகளேயாவர்; ஆதலால், ‘இதிஹாச புராணாப்யாம் வேதம்
ஸம்உபபிரும்ஹயேத்’, ‘பிபேதி அல்ப சுருதாத் வேதோமாமயம் பிரதரிஷ்யதி’ என்கிறபடியே, மஹருஷிகள் வசனங்களாகிய
உபப் பிருஹ்மணங்கள் வேண்டும். ‘
வேதார்த்தம் அறுதியிடுவது ஸ்மிருதி இதிகாச புராணங்களாலே’ என்பது, ஸ்வாமி பிள்ளை லோகாசாரியர் ஸ்ரீ சூக்தி. (ஸ்ரீவசன பூஷணம்)

சாத்விக புராணங்கள்’ என்று விசேடித்துக் கூறுவதற்குக் கருத்து என்?’ என்னில், புராண கர்த்தாக்கள் எல்லாரும் பிரமன் பக்கலிலே
சென்று இவ் விரண்டு காதைகளைக் கேட்டுப் போந்து தாங்கள் தாங்கள் புராணங்கள் செய்தார்கள்;
அந்தப் பிரமனும் ‘ஸ்ரீமந் நாராயணர் உலகங்களைப் படைப்பதற்கு முன்னே பிரமனைப் படைத்தார்;
அந்த நாராயணர் அந்தப் பிரமனுக்கு வேதங்களையும் உபதேசித்தார்,’ என்கிறபடியே, சர்வேசுவரனாலே படைக்கப்பட்டவனாய்
அவனாலே ஞானத்தையடைந்தவனுமாய் இருக்கச் செய்தேயும், ‘முனி புங்கவர்களான தக்ஷர் முதலானவர்களாலே கேட்கப்பட்டவரும்
முக் காலங்களையும் உணர்ந்தவரும் தாமரை மலரில் உதித்தவருமான பிரமாவானவர், ‘உள்ளவாறு சொல்லுகிறேன், என்று சொன்னார்,’
என்கிறபடியே, முனிவர்களைப் பார்த்து உபதேசிக்கிற விடத்திலே, ‘நான் முக் குணங்களுக்கும் வசப்பட்டவனாய் இருப்பேன்;
தமோ குணம் மேலிட்ட போதும் ரஜோகுணம் மேலிட்டபோதும் சொன்னவற்றைப் போகட்டு,
சத்வ குணம் மேலிட்ட சமயத்தில் சொன்னவற்றை எடுத்துக் கொள்ளுங்கோள்,’ என்றானே அன்றோ?

இனி, ‘தாமச கல்பங்களிலே அக்நி சிவன் இவர்களுடைய மாஹாத்மியமானது பரக்கச் சொல்லப்படுகிறது;
இராஜச கல்பங்களிலே பிரமனுடைய மாஹாத்மியம் அதிகமாகச் சொல்லப்படுவதை அறிகிறார்கள்;
சாத்விக கல்பங்களிலே விஷ்ணுவினுடைய மாஹாத்மியம் அதிகமாகச் சொல்லப்படுகிறது’ என்னா நின்றதே அன்றோ? ஆகையாலே
குண பேதங்களாலே புருஷ பேதங்களைக் கொண்டு அவ் வழியாலே புராண பேதம் கொள்ளலாய் இருந்தது.
ஆகையாலே, ‘சாத்விக புராணங்களாலே அறியப்படுகின்ற வேதம்’ என்று விசேடித்துச் சொல்ல வேண்டியிருந்தது.
ஆதலால், சாத்விக புராணங்களாலே விரிக்கப்படுகின்ற வேதமே பிரமாணமாகக் கொள்ளவேண்டி இருந்தது,’ என்க.

அந்த வேதத்துக்கு மூன்று குணங்களால் வருகின்ற குற்றம் இல்லையே யாகிலும்,இரு வகைப்பட்ட உலகங்களோடு கூடின
சர்வேசுவரனை விளக்கிப் பேச வந்ததாகையாலே, ‘மூன்று குணங்களை யுமுடைய மக்களை விஷயமாக உடையன வேதங்கள்.’ என்கிறபடியே,
முக் குணங்களையும் உடையவர்களாய் இருக்கின்ற மக்களை விஷயமாக வுடையதாய் அவர்களுக்கு நலம் சொல்லப் போந்தது ஆகையாலே,
அவர்களுடைய குணங்கட்குத் தகுதியாக நலம் சொல்லுமது உண்டாய் இருக்கும் வேதத்துக்கும்.
அது அங்ஙனம் சொல்லிற்றேயாகிலும், ‘எல்லா இடங்களிலும் நிறைந்த தண்ணீரில் வேட்கை யுடையவனுக்கு எவ்வளவு நீர்
பிரயோஜனப்படுகிறதோ, அறிந்த பிராமணனுக்கு எல்லா வேதங்களிலும் அவ்வளவே பிரயோஜனப் படுகின்றது,’ என்கிறபடியே,
ஆறு பெருகி ஓடாநின்றால், நீர் வேட்கையால் வருந்தின ஒருவன் தன் விடாய் தீருகைக்கு வேண்டுவது எடுத்துக் கொள்வானே அல்லது.
ஆற்று நீரை அடங்கலும் வற்றுவிக்க வேண்டும் என்னும் நிர்ப்பந்தம் இல்லையே யன்றோ அவனுக்கு?
அப்படியே, முமுக்ஷூ வானவன் இந்த வேதத்தில் தனக்குக் கொள்ள வேண்டியதான அமிசத்தை யன்றோ அறிய வேண்டுவது?

இந்த உதரத் தெரிப்பு, த்ரைகுண்ய விஷயமான வற்றுக்குப் பிரகாசகம். வத்சலையான மாதா, பிள்ளை பேழ்கணியாமல் மண் திண்ண
விட்டுப் பிரதி ஒளஷதம் இடுமா போலே, எவ் வுயிர்க்கும் தாய் இருக்கும் வண்ணமான இவனும், ருசிக்கு ஈடாகப் பந்தமும் பந்தம்
அறுப்பதோர் மருந்தும் காட்டுமிறே,’ என்னும் ஆசார்ய ஹிருதய வாக்கியங்கள் (13, 14. சூ.) இங்கு அநுசந்தேயங்கள்.

இனி,அந்த வேதந்தான் ‘பூர்வ பாகம்’ என்றும், ‘உத்தர பாகம்’ என்றும் இரண்டு வழிகளாலே பிரிவுண்ணக் கடவதாய்,
அதில் பூர்வ பாகமானது, ஆராதனத்தில் தன்மையைச் சொல்லியும், சுவர்க்கம் முதலான பேறுகளையும் அவற்றை யடைதற்குரிய
சாதனம் முதலான வற்றையும் சொல்லியும் அவற்றிலே நின்று பரக்குமதாய் இருக்கும்;
இனி, உத்தர பாகமானது, சர்வேசுவரனுடைய சொரூப ரூப குணங்களைப் பரக்க நின்று விளக்கிப் பேசும்.

இனி, பற்றத் தகுந்ததையும், விடத் தக்கவைகளையும் அறுதியிடுவது எது?’ என்ன,
அதற்கு விடை அருளிச் செய்கிறார், ‘இனி, இந்த வேதந்தான்’ என்று தொடங்கி.

ஆதௌ வேதா: பிரமாணம் ஸ்மிருதி: உபகுருதே ஸேதிஹாஸை: புராணை: நியாயை: ஸார்த்தம் த்வத் அர்ச்சாவிதிம் உபரிபரிக்ஷீயதே பூர்வபாக:
ஊர்த்வோபாக: த்வத் ஈகா குண விபவ பரிஜ்ஞாபநை: த்வத் பதாப்தௌ வேத்யோ வேதைச் ச ஸர்வை: அஹம் இதி பகவந்! ஸ்வேந ச வியாச கர்த்த
பகவானே! வேதங்களானவை முதலிலே (வேறொரு பிராமணத்தை விரும்பாமல் தாமாகவே) பிரமாணமாகின்றன;
மநு முதலான ஸ்மிருதிகளானவை, இதிகாசங்களோடு கூடின புராணங்களோடும் பூர்வ உத்தர மீமாம்சை களோடுங்கூடி
(அந்த வேதங்களுக்குப் பொருள் விவரணம் செய்தலாகிற) உபகாரத்தைச் செய்கின்றன;
(அந்த வேதத்தில்) கர்ம காண்டம் எனப்படுகிற பூர்வ பாகமானது, தேவரீருடைய திருவாராதன முறைமையைச்
சொல்லும் வகையில் முடிகின்றது; பிரம காண்டம் எனப்படுகின்ற உபநிடத பாகமானது,
தேவரீருடைய செயல்கள் குணங்கள் விபூதிகள் ஆகிய இவற்றை விளங்கத் தெரிவிப்பதனாலே தேவரீருடைய திருவடிகளைச் சேர்வதில் முடிகின்றது;
எல்லா வேதங்களாலும் அறியக் கூடியவன் நானே,’ என்று
தேவரீர் அருளிச் செய்ததும் உண்டேயன்றோ?’ என்பது ஸ்ரீ ரங்க ராஜஸ்தவம்.

இனி, வணங்குவதற்குரிய பரம்பொருள் யாது?’ என்றால், உலகத்தைப் படைத்தல் முதலிய முத்தொழில்கட்கும் காரணமாய்
இருக்கும் பொருள் எதுவோ, அதுவே, வணங்கத் தக்க பொருள் என்று காரண வாக்கியங்கள் ஒருங்க விட்டு வைத்தன.
எங்ஙனே?’ என்னில்,
எதனிடத்திலிருந்து இந்தப் பொருள்கள் உண்டாகின்றனவோ,எதனால் உண்டான பொருள்கள் பிழைத்திருக்கின்றனவோ,
நாசத்தை யடைந்து எதனிடத்தில் இலயப் படுகின்றனவோ, அதனைத் தியானம் பண்ணுவாயாக;
அது தான் பரம்பொருள்,’ என்று கொண்டு,
மற்றைப் பொருள்கட்குத் தியானம் பண்ணத் தகாததாகுகையை முன்னாக உலகத்திற்குக் காரணமாயுள்ள பொருளுக்குத்
தியானம் பண்ணத் தகுந்ததாகுகையை விதித்துக் கொண்டு நின்றது;
காரணப் பொருளே தியானம் செய்வதற்குரியது,’ என்னக் கடவதன்றோ?

‘யதோவா இமாநி பூதாநி ஜாயந்தே யேந ஜாதாநி ஜீவந்தி யத்பிரயந்தி அபிஸம்விசந்தி
தத்விஜிஜ்ஞாஸஸ்வ தத்பிரஹ்ம’–என்பது, தைத்திரீய. பிருகு. 1.

எல்லா வாக்கியங்களும் ஏவகாரத்தோடு கூடியவை,’ என்கிற நியாயத்தாலே,
இங்கு, ‘தத்விஜிஜ்ஞாஸஸ்வ’ என்ற தொடர்மொழியை ‘ததேவ
விஜிஜ்ஞாஸஸ்வ’ என்று ஏவகாரத்தோடு கூட்டினால், ‘அந்தப் பொருளையே தியானம் பண்ணுவாய்’ என்ற பொருள் போதரும்;
அவ்வாறு போதரவே, மற்றைப் பொருள்கள் தியானம் செய்யத் தக்கவையல்ல’ என்ற பொருளும் கிடைக்குமே யன்றோ?
அதனைத் திருவுள்ளம் பற்றியே, ‘மற்றைப் பொருள்கட்கு’ என்று தொடங்கி அருளிச் செய்கிறார்.

தியானம் செய்தற்குரிய அந்தப் பொருளை,
சோமபானம் செய்வதற்குரிய சுவேத கேதுவே! இந்த உலகமானது படைப்பதற்கு முன்னே
சத்’ என்று சொல்லக் கூடியதாய் இருந்தது,’ என்று ‘சத்’ என்ற சொல்லால் சொல்லி, வேறு சாகைகளிலே நின்று,
இந்த உலகமானது படைப்பதற்கு முன்னே பிரஹ்மம் என்ற ஒன்றேயாய் இருந்தது,’ என்று பிரஹ்ம சப்தத்தாலே சொல்லி,
அந்த பிரஹ்ம சப்தந்தானும் அநேக பொருள்களைக் கூறுமாகையாலே, ‘இந்த உலகமானது படைப்பதற்கு முன்னே
ஆத்மா என்ற ஒன்றேயாய் இருந்தது,’ என்று ஆத்ம சப்தத்தாலே சொல்லி, அந்த ஆத்ம சப்தமும் பல விடங்களிலும்
ஒட்டிக் கொள்ளலா யிருக்கையாலே, ‘நாராயணன் ஒருவனே இருந்தான்,’ என்று
நாராயணன் என்ற சொல்லுக்கு உரிய பொருளாகச் சொல்லி நின்றது.

காரணந்து த்யேய:’ என்பது, அதர்வசிகை.

ஸதேவ ஸோம்யே தமக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம்’– என்பது, சாந்தோக்யம்.

பிரஹ்ம வா இதம் ஏகமேவ அக்ர ஆஸீத்’- என்பது, வாஜஸநேயம்.

அநேக பொருள்களைக் கூறுமாகையாலே’ என்றது, ‘பிரஹ்மம் என்ற சொல் -வேதம் முதலிய
பொருள்களைக் காட்டுமாகையாலே’ என்றபடி.

ஆத்மா வா இதம் ஏக ஏவ அக்ர ஆஸீத்’ என்பது, ஐதரேயம்.

ஆனால், பின்னர் சத்தும் இல்லை; அசத்தும் இல்லை; சிவன் ஒருவனே இருந்தான்,’ என்றும்,
சம்பு: ஆகாஸ மத்யே த்யேய:’ என்றும் காரணனாய் உள்ள தன்மையையும், தியானம் செய்யத் தகுந்தவனாயுள்ள தன்மையையும்
சிவன் முதலானவர்களுக்கு விதியா நின்றதே; அவை செய்வன என்?’ என்னில், அப் பெயர்களால் அவர்கள் உத்தேசியர்களாகச்
சொல்லப்பட்டார்களே யாகிலும், சுத்தி குணத்தை யுடையவன், சுகத்தைக் கொடுக்கிறவன் என்ற காரணங்களால்
அப் பெயர்களும் விசேடியமான நாராயணன் என்ற பெயரால் சொல்லப்படுகிறவன் பக்கலிலே சென்று சேரும்.
சம்பு சிவன் முதலிய பெயர்களை நாராயணன் என்ற பெயரால் சொல்லப் படுகின்றவனுக்கு விசேடணமாக்கிக் கூறியது போன்று,
நாராயணன் என்ற இந்தப் பெயரையும், சம்பு சிவன் முதலிய பெயர்களால் சொல்லப் படுகின்றவனுக்கு விசேடணமாக்கிக் கூறினாலோ?’ என்னில்,
சுத்தி குணத்தை உடையவன், சுகத்தைக் கொடுக்கிறவன் என்ற காரணங்களால் அவற்றை இங்கே சேர்க்கலாம்;
நாராயணன் என்னும் பெயர், காரண இடு குறிப் பெயராகையாலே, வேறு பொருள்கட்குச் சேர்க்க ஒண்ணாது.

ஏகோ ஹவை நாராயண ஆஸீத் நபிரஹ்மா நேஸாநோ நேமே த்யாவா பிருதிவீ ந நக்ஷத்ராணி’–என்பது, மஹோபநிடதம்.
ந சத் நச அசத் சிவ ஏவ கேவல:’– என்பது , ஸ்வேதாஸ்வதரம். ‘சத்’ என்றது, நாம ரூபங்களோடு கூடின சித்தினை.
அசத்’ என்றது, நாம ரூபங்களோடு கூடின அசித்தினை.
சம்பு : ஆகாச மத்யே த்யேய:’- என்பது, ஸ்வேதாஸ்வதரம்.

அவர்கள் உத்தேசியர்களாகச் சொல்லப் பட்டார்களே யாகிலும்’ என்றதனால்
ஸ்வ பக்ஷத்தால் அவர்கள் உத்தேசியராகச் சொல்லக்கூடாது என்கை. யாங்ஙனம்?’ எனின்,
நாராயணாத் பிரஹ்மா ஜாயதே நாராயணாத் ருத்ரோ ஜாயதே’, ‘த்ரயக்ஷ: சூல பாணி: புருஷோ ஜாயதே’ என்பனவற்றால் பிறப்பும்,
‘நபிரஹ்மாநே ஸாநோ’ என்றதனால் அழிவும், சிவனுக்குச் சொல்லுகையாலே ‘சிவ ஏவ கேவலம்’ என்ற காரணத்துவம் கூடாது.
சத பதத்திலே அஷ்ட மூர்த்திப் பிராஹ்மணத்திலே, ‘பூதாநாம்பதி: ஸம்வத்ஸர உஷஸி’ என்பது முதலாகத் தொடங்கப்படும்
வாக்கியங்களால், நான்முகனால் படைக்கப்படுதலும், பாவங்கள் நீக்கப்படுதலும், பெயர் வைக்கப்படுதலும் முதலாயின
சிவனுக்குச் சொல்லப்படுதலால், தியானிக்கப் படுதலும் கூடாது,’ என்றபடி.
ஆயின், ‘பிரஹ்ம விஷ்ணு ருத்ர இந்த்ரா: தே ஸர்வே ஸம்பிரஸூயந்தே’ என்பதனால், விஷ்ணுவுக்கும் பிறப்புச்
சொல்லப்படுகிறதே?’ எனின், அது, அநுவாத ரூபமாகையாலே, ‘அஜாயமாந:’ முதலிய விதி வாக்கியங்களுக்குத் தகுதியாக,
கர்மங்கட்குக் கட்டுப்படாதவனாயும் கர்ம பலன்களை அநுபவிக்காதவனாயும் தன் இச்சையாலே அவதரிக்கின்ற
சர்வேசுவரனுடைய அவதாரங்களைக் குறிக்கின்றது. ‘தஸ்யதீரா: என்பது முதலான சுலோகங்கள் இங்கே அநுசந்தேயங்கள்.
சிவன் முதலியோர்கட்கு இத்தகைய விதி வாக்கியங்கள்
இல்லாமையாலே, பிறப்பு, கர்மங்காரணமாய் வந்தது என்றே கோடல் வேண்டும்,’ என்க.

சுத்தி குணத்தையுடையவன்’ என்று தொடங்கும் வாக்கியத்திற்குக் கருத்து யாது?’ என்னில்,
சிவன், சம்பு முதலிய பெயர்கள், வேறு பொருள்களிலும்
இரு வகை வழக்கிலும் வழங்கி வருகின்றன; ஆதலால், அப்பெயர்களை இங்குச் சேர்க்கலாம்.
நாராயணன்’ என்ற பெயர், வேறு பொருள்களுக்குப்
பெயராக வழங்காமையின், அதனை வேறு பொருளுக்குச் சேர்க்க ஒண்ணாதே!’ என்பது.
இப்பெயர், காரண இடுகுறிப் பெயர் என்க. ‘ஆயின்,
சிவன், சம்பு முதலிய பெயர்களும் காரண இடுகுறிப்பெயர்களேயன்றோ?’ எனின்,
அவை, சாதாரண காரண இடுகுறிப் பெயர்கள்; இது, அசாதாரண காரண இடுகுறிப் பெயர்,’ என்க.
இதனை, ‘அத்யந்த யோகரூடி’ என்பர். ‘மோ, பங்கஜம்’ என்னும் பெயர்களைப் போன்று கொள்க.

நன்று; சிலர்க்கே உரியனவாய் அவர்கட்கே முடிவு செய்யப்பட்டனவாய் உள்ள பெயர்களை வேறு ஒருவர் பக்கலிலே
கொடு போய்ச் சேர்க்கும்படி எங்ஙனே?’ என்னில், இந்திரன், பிராணன், ஆகாசம் என்னும் இப் பெயர்கள்,
அவ் வப் பொருள்கள் அளவில் முடிந்து நில்லாது, அவற்றிற்கு உரிய நேர்ப் பொருள்களில் சென்று முடிந்து நிற்கின்றன அல்லவோ?’
யாங்ஙனம்?’ எனின், ‘இந்திரன் என்றால், இப் பெயர் உண்டாக்கப்பட்ட இந்த இந்திரனைக் காட்டுதலோடு அமையாது,
சர்வேசுவரன் பக்கலிலே சென்று முடிவு பெறுதலைப் போலவும், பிராணன் என்னும் பெயர், ஐவகைப்பட்ட பிராணன்களில்
ஒன்றனைக் காட்டுதலோடு அமையாது, பிராணனாய் இருக்கின்ற சர்வேசுவரன் பக்கலிலே சென்று முடிவுறுதலைப் போலவும்,
ஆகாசம் என்னும் பெயர், ஐம் பெரும் பூதங்களில் ஒன்றான ஆகாசத்தைக் காட்டுதலோடு அமையாது, அவனளவும் காட்டுகிறாப் போலேயும்,
சம்பு சிவன் முதலிய பெயர்களும், சர்வேசுவரன் பக்கலிலே சென்று முடிந்தல்லது நில்லா,’ என்க.
இனித்தான் பிரகாரவாசி சப்தங்கள் பிரகாரி பர்யந்தம் சென்று தத்தம் பொருளைச் சொல்லக் கூடியன ஆகையாலும்,
பிரகாரியான சர்வேசுவரன் பக்கல் சென்று முடிந்தல்லது நில்லா,’ என்க.

‘நன்று; சம்பு சிவன் முதலிய பெயர்கள் காரணத்தை நோக்குமிடத்துப் பகவத் பரம் ஆகலாம்;
உமாபதி’ என்பது போன்ற அசாதாரணமான பெயர்களில் நிர்வாஹம் எப்படி?’ என்ன,
இனித் தான்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச் செய்கிறார். ‘பிரகார வாசி சப்தங்கள்’ என்றது,
விசேஷணம்’ அல்லது,‘சரீரம்’ என்ற பொருளைக் காட்டுகின்ற சொற்கள் என்றபடி. பிரகாரி -விசேடியம்: அல்லது,
சரீரி. சிவன் முதலானோர் சர்வேசுவரனுக்குச் சரீரமாய் உள்ளவர்கள் என்பதனை,
ஸபிரஹ்மா ஸசிவ:’ ‘ஸ: அந்தராத் அந்தரம் பிராவிசத்’,
பிரஹ்ம விஷ்ணு சிவாத்மிகாம்’ என்ற வாக்கியங்களால் உணர்தல் தகும்.

நன்று; இனி, ‘ததோயத் உத்தரதரம்’ என்று கொண்டு சொல்லுகிற இடத்தில் செய்வது என்?’ என்னில்,
மேலே சர்வேசுவரனைப் புருஷன் என்ற பெயர்க்குரிய பொருளாகச் சொல்லி, அதற்கு மேலே ‘உத்தரதரம்’ என்னும் போது
புருஷோத்தமன் என்பதனைத் தெரிவித்ததா மத்தனை.
அங்ஙனங்கோடற்குக் காரணம் என்?’ என்னில், ‘எந்தப் பரம் பொருளுக்கு ஒத்த தாயும் மிக்கதாயுமுள்ள பொருள்
வேறு ஒன்றும் இல்லை,’ என்று கூறி வைத்து, ‘அதற்கு மேலே ஒன்று உண்டு காண்’ என்னும் போது
அறிவில்லாதவனாகச் சொன்னவனா மத்தனை; முதலிலே ஓதாதவன் வார்த்தையா மத்தனை.

தத:’ என்ற சொல். மேலே கூறிய புருஷனைக் காட்டுகிறது என்றும், ‘உத்தரதரம்’ என்றது, அவனுக்கு மேலே யுள்ள
சிவனைக் காட்டுகிறது என்றும் பிற மதத்தினர் பொருள் கூறுவர். ‘தத:’ என்பதற்கு ஹேது பரமாகவும்,
உத்தரதரம்’ என்பதற்கு, சர்வ உத்கிருஷ்ட புருஷ பரமாகவும் பொருள் கூற வேண்டும் என்பது நமது சித்தாந்தம். என்றது,
அந்தக் காரணங்களால், புருஷோத்தமன்’ என்பதனைத் தெரிவித்தபடி என்றவாறு. தத: – ஆகையால்,
இதனையே அருளிச் செய்கிறார், ‘மேலே சர்வேசுவரனை’ என்று தொடங்கி. ‘புருஷன் என்ற பெயர்க்குரிய
பொருளாகச் சொல்லி’ என்றது, ‘வேதாஹ மேதம் புருஷம் மஹாந்தம்’ ‘தேநேதம் பூர்ணம் புருஷேண ஸர்வம்’
என்று வருகின்ற மேல் வாக்கியங்களைத் திருவுள்ளம் பற்றி.

யஸ்மாத் பரம் நா பரம் அஸ்தி கிஞ்சித்’ என்பது சுருதி வாக்கியம்.

ததோயத் உத்தரதரம்’ என்று கூறும் வாக்கியத்திற்குப் பிறர் கூறும் பொருளைத் திருவுள்ளம் பற்றி,
அதற்கு மேலே ஒன்று உண்டு காண் என்னும்போது’ என்று அருளிச் செய்கிறார்.

முதலிலே ஓதாதவன் வார்த்தையாமத்தனை’ என்றது, ‘உஸ்மாத் பரம் நா பரம் அஸ்தி கிஞ்சித்’ என்ற
முன் வாக்கியத்தைப் ‘படிக்காத அறிவில்லாதவனுடைய வார்த்தை,’ என்றபடி.

நன்று; ‘அந்தப் பகவானிடத்தில் உள்ளே இருக்கிற பொருள் உபாசிக்கத் தக்கது,’ என்கிறதோ?’ எனில், அது,
வேறு பொருள் உபாசிக்கத் தக்கது என்கிறது அன்று; அந்தப் பகவானைப் போன்ற அவன் குணங்களும்
தியானிக்கத் தக்கவை என்பதனைக் கூறியதாம்.
இனித் தான், உலகத்திற்குக் காரணப் பொருளாய் இருந்து கொண்டு வணங்கத் தக்கதாய் இருப்பது,
என்றும் ஒக்க இருக்கும் பொருளாக வேண்டுமே அன்றோ?’ அதில் சம்ஹார காலத்தில் ‘நாராயணனே இருந்தான்’ என்று
நாராயணன் என்ற பெயரால் சொல்லப் படுகின்றவன் ஒருவனுமே உளன் என்று சொல்லி,
பிரமனும் இல்லை, சிவனும் இல்லை’ என்று அவர்களை இல்லையாகச் சொல்லிற்றே அன்றோ?’
இனி, ‘மற்றைத் தேவர்களைக் காட்டிலும் அவர்களுக்கு ஓர் உயர்வு உளதோ?’ என்று ஐயப் படாமைக்கு
ஆகாயம் பூமி இல்லை; நக்ஷத்திரங்களும் இல்லை,’ என்று அவற்றோடு ஒக்க,
பிரமன் சிவன் என்னும் இவர்களையும் ஒரு சேரச் சேர்த்துவிடுகிறது.
படைத்தலைக் கூறுமிடத்தும், ‘நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணி’ என்று
ஒரு நீராகப் பொருந்த வைத்தன்றோ கிடக்கின்றது?

தஸ்மிந்யத் அந்த: தத்உபரஸிதவ்யம்’ இங்கு, ‘அந்த:’ என்பதற்கு, ‘உள்ளே இருக்கிற வேறொரு தத்துவம்’
என்று பிற மதத்தினர் பொருள் கூறுவர்.
உள்ளே இருக்கின்ற கல்யாண குணங்கள்’ என்பது நமது சித்தாந்தம்.சாந்தோக்ய உபநிடதமும் இங்ஙனமே கூறா நிற்கும்;
தஹரோஸ்மிந் அந்த:ஆகாஸ: தஸ்மிந்’ என்று தொடங்கி விரிவாகக் கூறிச் செல்லுதலை ஆண்டுக் காணல் தகும்.

மற்றைத் தேவர்கட்கு அபரத்துவ பூர்வமாக எம்பெருமானுடைய பரத்துவத்தைக் காட்டுவதற்கு
மூன்று ஏதுக்களை அருளிச் செய்கிறார்,
இனித்தான்’ என்று தொடங்கி.

ஏகோஹவை நாராயண ஆஸீத் நபிரஹ்மா நேஸாநோ நேமேத்யாவா பிருதிவி ந நக்ஷத்ராணி.’

பிரமனை அசேதனத்தோடு சேர்த்துச் சொல்லலாமோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
படைத்தலைக் கூறுமிடத்தும்’ என்று தொடங்கி. திருவாய். 7. 5 : 4.

ஆக, இத் திருவாய் மொழியில் சொல்லுகிற பரத்துவ நிர்ணயத்துக்கு உபயோகமான பிரமாண உபபத்திகளைத் தெரிவித்த பின்பு,
இத் திருவாய் மொழியிற் சொல்லுகிற பொருளைத் தொகுத்து அருளிச் செய்கிறார், ‘ஆக, இப்படிகளாலே’ என்று தொடங்கி.
இத் திருவாய் மொழியில் வருகின்ற, ‘இலிங்கத் திட்ட புராணத் தீரும்,’ ‘விளம்பும் ஆறு சமயமும்’ என்ற பாசுரங்களைத் திருவுள்ளம் பற்றி
மற்றைத் தேவர்கள் பக்கல் உண்டான பரத்துவ சங்கையை யறுத்து’ என்றும்,
நாயகன் அவனே’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘எல்லாப் பொருள்களைக் காட்டிலும் உயர்ந்தவனாய்,என்றும்,
உலகோடு உயிர் படைத்தான்’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி,‘எல்லாப் பொருள்களையும் படைக்கின்றவனாய்’ என்றும்,
வீடில் சீர்ப்புகழ்’ என்றதனைத் திருவுள்ளம் பற்றிக் ‘கல்யாண குணங்கள் எல்லாவற்றை யுமுடையவனாய்’ என்றும்,
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது?’என்றதனைத் திருவுள்ளம் பற்றி ‘எல்லாப் பொருள்களையும் காப்பாற்று கின்றவனாய்’ என்றும்,
மறுவில் மூர்த்தியோடொத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்க’ என்றதனைக் கடாக்ஷித்து, ‘எல்லாப் பொருள்களுக்கும் அந்தரியாமியாய்’ என்றும்,
நாராயணன் அருளே’ என்றதனைக் கடாக்ஷித்து, ‘நாராயணன் என்ற பெயரால் சொல்லப்படுகின்றவனான’ என்றும்,
இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே’ என்றதனைக் கடாக்ஷித்து, ‘தன் பெருமைகள் எல்லாவற்றோடுங்கூட’ என்றும் அருளிச் செய்கிறார்.

ஆக, இப் படிகளிலே மற்றைத் தேவர்கள் பக்கல் உண்டான பரத்துவ சங்கையை அறுத்து,
எல்லாப் பொருள்களைக் காட்டிலும் உயர்ந்தவனாய்
எல்லாப் பொருள்களையும் படைக்கின்றவனாய்க்
கல்யாண குணங்கள் எல்லாவற்றை யுமுடையவனாய்
எல்லாப் பொருள்களுக்கும் அந்தரியாமியாய்
நாராயணன் என்ற பெயரால் சொல்லப்படுகின்றவனான சர்வேசுவரன்
தன் பெருமைகள் எல்லாவற்றோடுங்கூடக் கண்களுக்குப் புலனாகும்படி திரு நகரியிலே வந்து
அண்மையிலே இருப்பவன் ஆனான்;
அவனை அடைந்து எல்லாரும் பயன் பெற்றவர்களாகப் போமின்,’ என்று அருளிச் செய்கிறார்.

ஒன்றும் தேவும்’ என்ற இத் திருப் பதிகத்தில் திரு மந்திரத்தின் பொருள் சொல்லப்படுகிறது, ‘யாங்ஙனம்? எனின்,
முதல் இரண்டு திருப் பாசுரங்களாலே காரணத்வத்தையும்,
மூன்றாந் திருப் பாசுரத்தாலே இரட்சகத்வத்தையும்,
நான்காந் திருப் பாசுரத்தாலே சேஷித்துவ நிவர்த்தியையும்,
ஐந்தாம் பாசுரத்தாலே அந்நிய சேஷத்துவ நிவர்த்தியையும்,
ஆறாந் திருப் பாசுரத்தாலே நமஸ் சப்தார்த்தமான உபாயத்துவத்தையும்,
ஏழாந் திருப் பாசுரத்தில் ‘ஆடு புட் கொடி யாதி மூர்த்தி’ என்கையாலே நாராயண பதத்திற் சொன்ன உபய விபூதி யோகத்தையும்,
எட்டாந் திருப் பாசுரத்தாலே நாராயண சப்தந்தன்னையும்,
ஒன்பதாந் திருப் பாசுரத்தாலே அவன் அடியார்க்கு அடிமைப் பட்டிருத்தலையும்,
பத்தாந் திருப் பாசுரத்தாலே கைங்கரியத்தையும் அருளிச் செய்திருத்தலால்,’ என்க.

பத்தாம் திருவாய் மொழியில் –
கீழ் -சம்சார தோஷ அனுசந்தான பூர்வகமாக பகவத் பிராப்தியை பிரார்த்தித்தவர் ப்ராப்யமான பர தசையை
அவன் ஆவிஸ்கரிக்கக் கண்டு ஸந்துஷ்டராய்-இப்பரத்வம் அறியாமல் சம்சாரிகள் இழக்க ஒண்ணாது என்று பார்த்து
ப்ராப்யத்வ பர்யந்தமான அவனுடைய பரத்வத்தை உபதேசிப்பதாக உத்தியோகித்து
அதுக்கு உபகாரகமான சர்வ காரணத்வத்தையும்
காரணத்வ அநு குணமான நித்ய கல்யாண குண யோகத்தையும்
கார்ய ரூபமான ஜகத் விஷய ரக்ஷண வியாபாரம் பரத்வாவஹமான படியையும்
சோபா பாதகமான சர்வேஸ்வரத்வத்தையும்
அந்த ஈச்வரத்வ பிரகாசகமான ஸுலப்ய அதிசயத்தையும்
சம்சார நிர்வஹண சாமர்த்யத்தையும்
பரதவ பிரகாசகமான கருட த்வஜத்வத்தையும்
அல்லாத தேவதைகள் பல பிரதத்வத்துக்கும் சக்த்யாதாயகன் அவனே என்னும் இடத்தையும்
அந்நியதுரவ போதனான அவன் வர்த்திக்கிற தேசமே உஜ்ஜீவன அர்த்திகளுக்கு ஞாதவ்யமாம் படியையும்
சர்வ சரீரியான அவன் திருவடிகளில் கைங்கர்யமே உத்தேசியமான படியையும்
உபதேசித்து -இப்படி பரம ப்ராப்ய பூதனான ஈசுவரனுடைய போக்யதா அதிசயத்தாலே
இவ்வாத்மாவினுடைய ததேக பிரியத்வத்தை உபபாதித்துத் தலைக் கட்டுகிறார் –

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர்படைத்தான்
குன்றம் போல் மணிமாடம் நீடு திருக் குருகூரதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!
–4-10-1-

ஒன்றும் இல்லாத அன்று’-காரணனாய் இருக்கிற தன் பக்கலிலே சென்று
ஒன்றுகின்ற அன்று-ஆகிஞ்சன்யம் -ஒன்றையே-பச்சையாகக் கொண்டு ரஷிக்கும் சர்வேஸ்வரன்-நான்முகனைப் படைத்தான்; நான்முகன் ஐம்முகனைப் படைத்தான்: ஐம்முகன் அறுமுகனைப் படைத்தான்;-ஆக இதுதான் பல முகமாயிற்றுக் காணும்.
நாட்டார் சிவனுக்கு உயர்வுகளைச் சொல்லி மயங்கா நிற்கவும், இவர் அவன் பக்கல் ஒன்றும் காணாமையாலே,-திருநாபிக் கமலத்தில் நேரே பிறந்து-அதனாலே உண்டான ஏற்றத்தை யுடையவனாகையாலே, பிரமனை (முதலாக) எடுத்துச் சொல்லி,-சிவனைத் தேவ கூட்டத்திலே சேர்த்துப் பேசுகிறார்.-

சம்ஹாரத்தில் மகத்து முதலானவைகள் அளவும் சொன்னார் படைப்பில் பிரமன் தொடக்கமாகச் சொன்னார்;மகத்து முதலான தத்வங்களிலே பரத்வ சங்கை பண்ணுவார் இலர்; அறிவில்லாத மக்களாய் இருப்பவர்கள் பிரமன் முதலாயினார் பக்கல் பரத்வ சங்கை பண்ணுவார்கள்; அதற்காக அவ்விடமே பிடித்துக் கழிக்கிறார்.

நாம் கொடுத்த கரணங்களைக் கொண்டு ‘நான் வணங்கமாட்டேன்,’ என்னாமல், வணங்குவர்களோ?
அன்றிக்கே,-நாம் வளைந்து கூட்டிக் கொள்ளப் புக்கால், விலக்கா தொழிவர்களோ!’ என்று கொண்டு காலத்தை எதிர் நோக்கினவனாய் நிற்கின்றபடி.-அடியவர்களைப் பெறுகைக்கு இறைவன் நின்ற நிலை.-சேஷ பூதனை லபிக்க சேஷி நிற்கும் நிலை –ஆதிப்பிரான் நிற்க –
இப்படி உங்கள் பக்கல் ஆசையாலே திருநகரியிலே நித்தியவாசம் செய்கிற இவனை விட்டு-நீர் வேட்கையுடைய ஒருவன், கங்கை பெருகி ஓடா நிற்க அதிலே அள்ளிக் குடித்துத் தன் விடாய் தீரமாட்டாதே, அதன் கரையிலே குந்தாலி கொண்டு கிணறு தோண்டித் தன் விடாய்க்கு உதவ நாக்கு நனைக்க இருக்குமாறு போலே,
அடையத் தக்கவனுமாய் எளியனுமாய்-எளிதில் ஆராதிக்கக் கூடியவனுமாய் நல்நெறியை யுடையவனுமான இவனை விட்டு,-அடையத் தகாதவராய் அரியராய் அரிதில்-ஆராதிக்கக் கூடியவராய்த் தீ நெறியை யுடையராய், வருந்தி ஆராதித்தாலும் சேட்டை தன் மடி யகத்துச் செல்வம் பார்த்திருக்குமாறு போலே-பலிப்பதும் ஒன்று இன்றிக்கே இருக்கிற திருவில்லாத் தேவரைத் தேடி அடைவதற்குத் திரிகின்றீர்கோளே!’ என்று நிந்திக்கிறார்.

ஆதிப் பிரான்’ என்றதனை நோக்கி, ‘அடையத் தக்கவனுமாய்’-பிராப்தன்- என்றும்,
திருக் குருகூரதனுள்’ என்றதனை நோக்கி, ‘எளியனுமாய்’ என்றும்,
யாதுமில்லா அன்று உயிர் cடைத்தான்’ என்றதனை நோக்கி, ‘எளிதில் ஆராதிக்கக் கூடியவனுமாய்’ -ஸூ ஆரதன் -என்றும்,
நின்ற’ என்றதனை நோக்கி, ‘நல்ல சுவபாவத்தை யுடையனுமான’ -ஸூலபன்-என்றும் அருளிச் செய்கிறார்.

————

நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்,
மாட மாளிகை சூழ்ந்தழகாய திருக் குருகூரதனைப்
பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே.
–4-10-2-

நீர் நாடி வணங்கும் தெய்வமும் – இயல்பாகவே அமைந்தது ஓர் உயர்வு இல்லாமையாலே அவைதாம் இறாயா நிற்கச்செய்தே. வசன ஆபாசங்களாலும் யுக்தி ஆபாசங்களாலும்
நீங்கள் பொரி புறந்தடவி வருந்திச் சேமம் சார்த்தி வைத்து அடைகின்ற தேவர்களையும்.
கள்ளரைத் தேடிப் பிடிக்குமாறு போலே தேடிப் பிடிக்க வேண்டி இருப்பவர்களாதலின், ‘நாடி’ என்கிறார்.-ஆடு திருடின கள்ளர்களே அன்றோ இவர்கள் தாம்? அணங்குக்கு அரு மருந்து என்று அங்கே ஆடு கட்டினவர்கள் ஆகையாலே, தேடிப் பிடிக்க வேண்டுமே? –நீர்’ என்று, அவர்களோடு தமக்கு ஒட்டு அறச் சொல்லுகிறார் -உங்கள் நினைவு ஒழிய அவர்கள் பக்கல் ஓர் உயிர் இல்லை’-உங்களுக்கு இறைமைத் தன்மை உண்டாகும் அன்றே அன்றோ, அவர்களும் இறையவராவது?’ என்பார்,-உம்மையும் படைத்தான்’ என்கிறார்.

வீடு இல் சீர் –இயல்பாகவே அமைந்துள்ளதான செல்வத்தை யுடையவன்.-நீங்கள் அடைகின்ற தேவர்களுடைய செல்வம் போலே அவதியுடன் கூடியிருப்பது அன்று-அழிவில்லாத கல்யாண குணங்களை யுடையவன்’ -அவனைப் போன்றே
அவன் குணங்களும் உபாசிக்கத் தக்கவை-புகழ் – எல்லாரையும் பாதுகாத்து, அவ்வாறு பாதுகாத்தலால் வந்த புகழையுடையவன்.-பாதுகாப்பதால் வந்த புகழையுடையவன் அன்றோ அடையத் தக்கவன் ஆவான்?-கீர்த்திக்குத் தானே இருப்பிடமாக இருப்பவர்

ஆதிப் பிரான் – பாதுகாத்துப் புகழைப் படையாமல் பழி படைத்தாலும் விட ஒண்ணாத சம்பந்தத்தை ‘ஆதி’ என்கிற பதத்தால் சொல்லுகிறது.-கேவலம் சம்பந்தமே அன்று, உபகாரகன்’ என்பதனைச் சொல்லுகிறது ‘பிரான்’ என்ற சொல்.-காரண வஸ்துவே அன்றோ உபாசிக்கத் தக்கது? 

அவன் மேவி உறை கோயில் – அவன் பரம பதத்திலே உள் வெதுப்போடே -மனஸ் தாபம் -காணும் இருப்பது. இம் மக்கள் படுகிற துக்கத்தை நினைந்து, இவை என் படுகின்றனவோ?’ என்கிற திரு வுள்ளத்தில் வெறுப்போடே ஆயிற்று அங்கு இருப்பது.–ச ஏகாகி ந ரமேத -என்றது,-நித்ய விபூதியும் குணங்களும் உண்டாயிருக்கச் செய்தே அன்றோ?

பரமபதத்திலும் சமுசாரிகள் படுகிற துக்கத்தை நினைத்துத் திருவுள்ளத்தில் வெதுப்போடே யாயிற்று எழுந்தருளி யிருப்பது,’ என்று பட்டர் அருளிச்செய்ய,
பண்டிதர்’ என்கிறவர், ‘ஆச்சானும், பிள்ளை யாழ்வானும் இத்தைக் கேட்டுப் பரம பதத்திலே ஆனந்தத்தால் நிறைந்தவனாய் இருக்கிற இருப்பிலே திருவுள்ளத்திலே ஒரு வியசனத்தோடே இருந்தான் என்கை உசிதமோ என்கிறார்கள்,’ என்று ‘பண்டிதர்’ என்கிறவர், வந்து விண்ணப்பஞ்செய்ய,
மனிதர்களுக்குத் துக்கம் வருகின்ற காலத்தில் தானும் மிகவும் துக்கிக்கின்றான்’ என்றது,
குணப் பிரகரணத்திலேயோ, துக்கப் பிரகரணத்திலேயோ?’ என்று கேட்க மாட்டிற்றிலீரோ?
இது குணமாகில், ‘குணம்’ என்று பேர் பெற்றவற்றில் அங்கு இல்லாதது ஒன்று உண்டோ?’ என்று அருளிச் செய்தார்.

பரமபதத்தில் தன்னில் குறைந்தார் இல்லாமையாலே, அவ் விடத்தை விட்டு, நல்ல படுக்கையையும் போகத்துக்கு ஏகாந்தமானவற்றையும் காற்கடைக் கொண்டு, குழந்தையினுடைய தொட்டிற் காற்கடையிலே கிடக்கும் தாயைப் போலே,
காப்பாற்றுவாரை விரும்புமவர்களான இம் மக்கள் இருக்கிற இடமாகையாலே விரும்பி வசிக்கும் இடம் இவ்விடம் ஆயிற்று-அதனைப்-பாடி ஆடிப் -பரவச் சென்மின்கள்,
நின்ற ஆதிப்பிரான் என்றது மிகையாய் இருக்கை-.-தேசோயம் சர்வ காம துதூத் – என்கிறபடியே, இது தானே பேறு,’–பல்லுலகீர்!-தாந்தனாய் சமித்பாணியாய் வந்தவனுக்கு ஹிதம் சொல்லுகிறார் அன்றேஇவை என்ன உலகியற்கை!’ என்று, உலகம் கிலேசப் படுகிறபடியைக் கண்டு எல்லார்க்கும் சொல்லுகிறாரே அன்றோ?ஆதலால், ‘உலகீர்’ எனப் பொதுவில் அழைக்கிறார்.-

————–

பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக்
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர் அதனுள்
பரன் திறமன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே.
–4-10-3-

அந்தப் பரமாத்மா முன்னே பிரமனைப் படைத்தார்,’ என்கிறபடியே,-படைக்கிற போது முறையாகப் படைத்தான்; ஆபத்து வந்தால், அங்ஙனம் முறை பார்க்க ஒண்ணாதே,
பிரளயாபத்திலே ஒரு காலே வயிற்றில் வைத்து.–இப்படிச் செய்த இவற்றை,-கண்டும் –
இவர்க்குப் பிரத்யக்ஷத்திலும் சாஸ்திரம் விளக்கமாகக் காணப் படுகிறது காணும்.-தெளியகில்லீர் – மக்கள் செயலுக்கு அப்பாற்பட்ட இத்தகைய செயல்களைக்கொண்டே ‘அவனே அடையத் தக்கவன்’ என்று அறியலாய் இருக்க, அறிய மாட்டுகின்றிலீர்கோள். இவர்கள் தெளிவும் தெளியாமையும் ஒழிய, உண்மை நிலையில் மாறாட்டம் அற்று இருக்கிறது ஆதலின், கண்டும் தெளியகில்லீர்’ என்கிறார். ‘உங்கள் கலக்கமும் தெளிவும் ஒழிய, அவனை ஈஸ்வரன் அல்லனாகச் செய்தல்,-இவர்களை ஈஸ்வரர்கள் ஆக்குதல் செய்ய ஒண்ணாதே அன்றோ?’ என்றபடி.

திருக் குருகூர் அதனுள் பரன் – மனித வடிவத்தில் பரத்வத்துக்கும் அவ்வருகே ஒரு பரத்துவமே அன்றோ இது? இவ் வருகே போரப் போர உயர்வு மிகுமத்தனை. குணத்தாலே அன்றோ பொருளுக்கு உயர்வு?-குணங்களுக்குப் பெருமை உள்ளது இங்கேயே யன்றோ?
அவர்கள் இருவரில் சேதனன் கரும பலத்தை இனிமையாக அனுபவிக்கிறான்; மற்றவனான ஈசுவரன் கர்ம பலத்தை அனுபவியாமல் மிகவும் பிரகாசிக்கிறான்!’ என்கிறபடியே, இவ் வுயிர்கள் சரீரத்தோடே கலசக் கலச ஒளி மழுங்கி வாரா நிற்கச் செய்தே,
அவனுக்கு நியமிக்கும் தன்மையால் வந்த புகர் அற விஞ்சி வருமாறு போன்று,
இம் மக்கள் நடுவே போரப் போர ஆயிற்று, முதன்மை – மேன்மை பிரகாசிப்பது.-இதம் பூர்ணம் –சர்வம் பூர்ணம் சஹோம்

தெய்வம் மற்று இல்லை –-சுதந்தரமாய்த் தனக்கு உரித்தாய் இருப்பது ஒரு தெய்வம் இல்லை.-தேவர்களுடைய சொரூபத்தை விலக்குகிறார் அன்று, ‘அவனுக்கு விபூதி வேண்டும்’ என்று இருக்கிறவர் ஆகையாலே;-அவர்களுடைய சுவாதந்தரியத்தை விலக்குகிறார்.பேசுமின் – நான் ‘அவனுக்குச் சரீரமாய் அல்லது சுவதந்தரமாயிருப்பது ஒரு தேவதை இல்லை,’ என்றேன்;-இப்படி வேறு ஒருவருக்கும் வசப்பட்டிராத நியமிக்குந் தன்மையை யுடைய இவனைத் தனக்குச் சரீரமாக வுடையது ஒரு தெய்வம் உண்டு,’ என்று சொல்ல வல்லார் உண்டாகில், வாய் படைத்தார் என் முன்னே நின்று சொல்லிக் காணுங்கோள்,’ என்கிறார்.-

பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின்
தேச மாமதிள் சூழ்ந்து அழகாய திருக்குருகூர் அதனுள்
ஈசன் பால் ஓர் அவம் பறைதல் என்னாவது இலிங்கியர்க்கே?
–4-10-4-

ஈசன், ஈசானன்’ என்கிற பெயர்களால் தோற்றுகிறவர்களும் தலை யறுப்புண்பாரும் தலை யறுத்துப் பாவமுடையராய் நிற்பாருமாய் இராநின்றார்கள்;
இவன் அவர்களுக்குத் துக்கத்தைப் போக்குமவனாய் இரா நின்றான்;
ஆனால், ‘அவர்களைப் ‘பரன்’ என்னவோ, இவனைப் ‘பரன்’ என்னவோ?’ என்ற இலிங்கத்தாலுமாக அநுமானத்தையும் சமாக்யையையும் தள்ளிப் பகவானுடைய பரத்துவத்தை நிலையிடுகிறார்.-சொற்களின் பொருட்டு முட்டுப் பொறாது; பேசுகைக்குப் பற்றுக்கோடு மாத்திரமே உள்ளது’ என்பார், ‘நின்ற’ என்கிறார்.-சிவனுடைய ஈசுவரத்துவம் பகவானுடைய திருவருளாலே வந்தது.-வைஷ்ணவாணாம் அஹம் சம்பு -ஜ்யேஷ்ட விஷ்ணு பக்தன் சிவன்-பிரமன் சிவனை நோக்கி, ‘உனக்கும் எனக்கும் அந்த விஷ்ணு அந்தரியாமியாய் இருக்கிறார்;-மற்றும் எவர்கள் சரீரம் படைத்தவர்கள் என்று பெயர் பெற்றிருக்கிறார்களோ, அவர்கள் எல்லாருக்கும்-அந்த விஷ்ணுவானவர் சாக்ஷியாய் இருக்கிறார்,’ என்றான்-

நாயகன் அவனே – இக் காரியத்திற்குத் தகுதியான காரணத்தைக் கற்பிக்கிலும் அவனையே கொள்ள வேண்டும்.-ஸ்ருதிப் பிரசித்தியை நினைத்து ‘அவனே’ என்கிறார். அநந்ய பரமான நாராயண அநுவாகப் பிரசித்தியையும்-ய: பரஸ்ஸ மஹேஸ்ர:’ என்கிற அகரத்தின் பொருளாய் உள்ள பிரசித்தியையும் நினைக்கிறார்.

கபால நன்மோக்கத்துக் கண்டு கொண்மின்’-என்று கையோடே காட்டிக்கொடுக்கிறார். -கையில் ஓட்டுடன் -காட்டி -உடனே காட்டிக் கொடுக்கிறார்-நீங்கள் இப்படிச் சொன்னால் மறுமாற்றம் சொல்லுகைக்கு இது ஒன்று உண்டாகப் பெற்றோமே!’நீங்கள் ஈசுவரர்களாகச் சந்தேகப்படுவதற்குரியவர்கள் இருவரும் நின்ற நிலை கண்டீர்களே!
ஒருவன் தலை கெட்டு நின்றான்; ஒருவன் ஓடு கொண்டு பிராயஸ்சித்தம் செய்ய வேண்டியவனாய் நின்றான்.
ஓட்டை ஓடத்தோடு ஒழுகல் ஓடமாய் உங்கள் குறை தீரப் பற்றுகிற நீங்கள் உங்களிலும் பெருங்குறைவாளரையோ பற்றுவது!
பாவமுடையவனாய்ப் பிச்சை புக்குத் திரிந்தான்,’ என்று நீங்களே சொல்லி வைத்து, அவனுக்கே பரத்துவத்தைச் சொல்லவோ?’
ஒருவனுடைய ஈசுவரத்துவம் அவன் தலையோடே போயிற்று.
மற்றவனுடைய ஈசுவரத்துவம் அவன் கையோடே காட்டிக் கொடுக்கிறார்;

மஹாபலி, ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான் பக்கலிலே வந்து, ‘ராஜ்யமடைய ஒளி மழுங்கி வாராநின்றது;-என் பலமும் குறைந்து வாராநின்றது; இதற்கு அடி என்?’ என்ன,
நீ சர்வேசுவரன் பக்கல் பண்ணின அபராதத்தாலே காண்,’ என்ன, ‘இந்த விஷ்ணு எவன்?’ என்பது போன்று விருப்பு இல்லாத வார்த்தைகள் சிலவற்றை அவன் பேச,
எனது தலையை அறுப்பதைக் காட்டிலும் பெரிது இந்த வார்த்தை’ என்கிறபடியே,
என் தலையை அறுத்து என் கையிலே தந்தாயாகில் ‘என் பேரன் செய்த உபகாரம்’ என்று இருப்பேன் யான்;-என் முன்பே பகவானை நிந்தை செய்தாய், நீ இராஜ்யப் பிரஷ்டன் ஆவாய்’ என்று சபித்து விட்டான்;
இதனை இப்படியே பட்டர் அருளிச் செய்தவாறே, ‘பிரகிருதி புருஷ விவேகம் பண்ணியிருக்கிற இவன் ஆத்துமாவுக்குக் குறைவு வருவது ஒன்றனைச் சபியாமல், ‘இராச்சியத்திலிருந்து நழுவினவனாய் விழுவாயாக’ என்று சபிப்பான் என்?’ என்று கேட்க, ‘நாயைத் தண்டிக்கையாவது, மலத்தை விலக்குகையே அன்றோ? சாந்தை விலக்குகை அதற்கு விருப்பம் இல்லாதது அன்றே? ஆகையால், இவனுக்கு அநிஷ்டம் செய்கையாவது இதுவே அன்றோ?’ என்று அருளிச் செய்தார்.

இலிங்கியர்க்கு என் ஆவது – அநுமானத்தைப் பிரமாணமாகக் கொண்டவர்க்கு என்ன பிரயோஜனம் உண்டு? என்றது, அந்தத் தேவிற்கு ஓர் உயர்வு பெற்றிகோள் அன்று; அத் தேவினைப் பற்றியதற்கு ஒரு பலம் பெற்றிகோள் அன்று; இதனால், உங்களுக்கு ஓர் உயர்வு பெற்றி கோள் அன்று; என்றிய பட்டிகோள்’ என்கிறார் என்றபடி.-

———–

இலிங்கத் திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்று நும் தெய்வமுமாகி நின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக் குருகூர் அதனுள்
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே
.–4-10-5-

பொலிந்து நின்ற பிரான் கண்டீர் – பரமபதத்தை விட்டு இம்மக்கள் நடுவே வந்து புகுந்த இடத்து அவர்கள் படுகின்ற கிலேசத்தைத் தானும் ஒக்கப்படுகை அன்றிக்கே,
இவ்வருகே போதரப் போதரச் சொரூப ரூப குண விபூதிகள் மேன்மேலென விஞ்சி வாராநின்றன ஆயின.-அன்றிக்கே, ‘சொன்னார் சொன்னவற்றுக்கும் எல்லாம் அவ்வருகாயிருக்கும்,’ என்னுதல்.

ஒன்றும் பொய் இல்லை – மற்றைத் தேவர்கட்குச் சொல்லுகிற உயர்வுகள் ஒன்று ஒழியாமல் பொய்யாய் இருக்குமாறு போலே,-பகவான் சம்பந்தமாகச் சொல்லுமவற்றில் ஒன்றும் பொய்யில்லை.-அவ்வத் தேவர்கட்கு இயல்பிலே உயர்வு இல்லாமையாலே மெய் ஒன்றும் இல்லை; பகவானுடைய உயர்வுக்கு எல்லை இல்லாமையாலே, பொய் சொல்லுகைக்கு இடம் இல்லை.

போற்றுமினே – நீங்கள் விரும்பாதிருக்க, நானே இப்படிச் சொல்லுகிறது, எனக்கு உங்கள் பக்கல் உண்டான அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே,’ என்கிறபடியே, மிக்க அருளாலே அன்றோ? அவ்வருளின் காரியம் பிறக்க வேண்டுமே. ‘கிரமத்திலே செய்கிறோம்’ என்று ஆறியிராமல், சடக்கென அவன் திருவடிகளிலே அடைவதற்குப் பாருங்கோள்.-

———-

போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு, உம்மை இன்னே
தேற்றி வைத்தது, எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே;
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர் அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்தறிந்து ஓடுமினே
.–4-10-6-

ஓட்டை ஓடத்தோடு ஒழுகல் ஓடமான இதர தேவதைகளைப்பற்றி உங்களுக்கு அவர்கள் பக்கலிலே ருசி விசுவாசங்கள் உண்டாம்படி செய்து பாரம் அற்றவர்களாய் இருக்கும்படி வைத்தது,’-பாவம் செய்தவர்கள் அதன் பலத்தினை அனுபவித்தலும், புண்ணியம் செய்தவர்கள் அதன் பலத்தினை அனுபவித்தலும் ஆகிற சாஸ்திர மரியாதை குலையாத படியாகச் செய்து வைத்தான்-ஆற்ற வல்லவன் – மிகவும் வல்லவன். என்றது, ‘சம்பந்தம் ஒத்திருக்கச் செய்தே, புண்ணியம் செய்தார் அதன் பலத்தினை அனுபவிக்கவும்,
பாவம் செய்தார் அதன் பலத்தினை அனுபவிக்கவும் செய்ய வல்லவன்’ —அறிந்து ஓடுமின் –-‘இது அவன் செய்து வைத்ததான பின்பு, அவனை வெல்ல வேண்டில்,
அவனோடு பிரிய நின்று வெல்லப் பாராமல், அவனையே காற்கட்டி இதனைத் தப்பப் பாருங்கோள்,-

———–

ஓடி ஓடிப் பல பிறப்பும் பிறந்து, மற்றோர் தெய்வம்
பாடி ஆடிப் பணிந்து பல்படி கால் வழி ஏறிக் கண்டீர்;
கூடி வானவர் ஏத்த நின்ற திருக் குருகூரதனுள்
ஆடு புட்கொடி ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே.
–4-10-7-

ஒருவன் பகவானைத் தியானம் செய்து கொண்டிருக்கச் செய்தே, ‘இவன் சமாதியிலே நின்ற நிலையை அறிய வேண்டும்’ என்று
பார்த்துச் சர்வேசுவரன் இந்திரன் வேடத்தை மேற்கொண்டு ஐராவதத்திலே ஏறி வந்து முன்னே நின்று,
உனக்கு வேண்டுவது என்?’ என்ன, ‘ஒரு புழுவும் தானுமாய் வந்து நிற்கிறவன் யார்?’ என்றான்;
சர்வேசுவரன் பெரிய திருவடியை மேற்கொண்டு வந்தான்’ என்னுமிடம் அறியானே, கொண்டு வந்த வேடம் இது வாகையாலே?’
வந்தவனைப் பார்த்து, ‘நீ யாவன் ஒருவனை அடைந்து இந்தச் செல்வம் முழுதும் பெற்றாய்? அப்படிப் பட்டவனைக் காண் நான் பற்றுகிறது;
இப்படி வழியிலே போவார்க்கு எல்லாம் பச்சை யிட்டுத் திரியுமவன் அல்லேன் காண்;
இப்போது முகங்காட்டாதே போக வல்லையே பிரானே! உன்னைக் கும்பிடுகிறேன்,’ என்றானே அன்றோ?

பகவானிடத்தில் அடைக்கலம் புகுந்து ஞானாதிகராய் இருப்பார் ஒருவர், இருந்து தம்முடைய வஸ்திரத்தைப் புரையா நின்றாராய்,
அவ்வளவிலே தேவியும் தேவனுமாகப் போகா நிற்க, இவர் அநாதரித்திருந்தாராய், தேவி யானவள்,
நீர் எல்லார்க்கும் பெரியராய் இருக்க, உம்மைக் கண்ட இடத்தில் இவன் அநாதரித்துக் காலை நீட்டிக் கொண்டிருந்தானே!’ என்ன
தேவனும், ‘அவன் பகவத் பத்தன் போலேகாண்,’ என்ன, தேவியும், ‘அதுதான் இருக்கிறபடி அறிவோம்,’ என்ன,
இருவரும் இவர் பக்கலிலே வந்து, ‘நீ என்? தேவர்களை மனிதர்கள் கண்டால் அவர்களிடம் சென்று வேண்டும்
வரங்களும் வேண்டிக் கொள்ளக் கடவர்களாய் இருப்பார்கள்; நீ நம்மைக் கண்ட இடத்தில் நீட்டின காலை முடக்குதல்,
சில உபசாரங்களைச் செய்தல், சிலவற்றை வேண்டிக்கோடல் செய்யாமல் இருந்தாயே?’ என்ன,
அழகிது! அவை யெல்லாம் செய்யக்கடவன், மோக்ஷம் தரலாமோ?’ என்ன ‘அது நம்மாலே செய்யலாமதன்று;
பகவானிடத்தில் சரணாகதி செய்து அவன் திருவருளாலே பெற வேண்டும்,’ என்ன,
ஆகில், இன்று சாவாரை நாளை இறக்கும்படி பண்ணலாமோ?’ என்ன, ‘அதுவும் கர்மங்களுக்குத் தகுதியாக அன்றோ இருப்பது?
நம்மால் செய்யப் போகாது,’ என்ன, ‘ஆகில், நீ செய்யுமது, இந்த ஊசி போகும் வழியே நூலும் போகும்படி
திருவருள் புரிந்து நடக்குமித்தனை,’ என்ன, தேவனும் கோபத்தாலே நெற்றியிற் கண்ணைக் காட்ட,
இவரும் காலிலே பல கண்களை உண்டாக்கிக் காட்டினார்,’ என்ற சரிதம் இங்கு நினைக்கத் தகும்.

கூடி வானவர் ஏத்த நின்ற திருக்குருகூர் அதனுள் – உங்களால் அடையப்படுகின்ற தேவர்கள் இவ்வளவும் உங்களைக் கும்பீடு கொண்டு, இத்தனை போது சென்று அங்கே
வணங்கா நிற்பர்கள்; அவர்கள் செய்கின்றவற்றைக் கண்டாகிலும் நீங்களும் அவனை வணங்கப் பாருங்கோள்
தலை யறுப்பாரும் தலை யறுப்புண்பாருமாய், கிராமணிகளைப் போலே ஒருவரை ஒருவர் வேரோடே அலம்பிப் போகட வேண்டும்படியான விரோதம் செல்லாநிற்கச் செய்தேயும், ஆபத்து எல்லார்க்கும் ஒத்திருக்கையாலே எல்லாரும் ஒரு மிடறாய் ஏத்தா நிற்பர்கள்,
ஒருவர்க்கு ஒருவர் விரோதமும் கிடக்கச்செய்தே, ‘ஊராகக் கூடி வந்தது’ என்பார்களே அன்றோ?

வெற்றிப்புள்ளைக் கொடியாகவுடையவன்; அடியார்களுடைய விரோதிகளை அழிக்கும் விஷயத்தில் சர்வேசுவரன் செய்ய வேண்டுவது ஒன்றும் இன்று; திருவடி திருத்தோளிலே சலியாமல் இருக்குமத்தனையே வேண்டுவது,’ என்பார், ‘ஆடுபுள்’ என்கிறார்.
ஆடுபுள் -வெற்றிப்புள்; ஆடு – வெற்றி. புள் – பறவை.-ஆஸ்ரித ரக்ஷணத்துக்கு கொடி கட்டி ரக்ஷிக்குமவன் என்கை -கருட வாஹனத்வம் பரத்வ லக்ஷணம் இறே –

அவன் இதனை ‘என்னுடைமை’ என்றிருக்க, நீங்களும் ‘என்னுடைமை’ என்றிராமல், ‘அவனது’ என்று இசைய அமையும்,’

யயாதி சரிதத்தைப் பட்டர் வாசித்துப் போந்திருக்கச்செய்தே, பிள்ளை விழுப்பரையரும் ஆப்பான் திருவழுந்தூர் அரையரும்,
வேதத்தின் பொருளை அறிதற்குக் கருவியாய் வெளிப்போந்த பிரபந்தங்களில்
இது எந்தப் பொருளை விரித்துப் பேசுகிறது?’ என்று கேட்க,
புன்சிறு தெய்வங்களை அடைந்து ஒரு பயனைப் பெற்றாலும், பிறர் பக்கல் ஓர் உயர்வு கண்டால்,
அதனை அவர்கள் பொறுக்கமாட்டார்கள்’ என்றும்,
சர்வேசுவரனே ‘பிறர் வாழ்வு நம் வாழ்வு’ என்று நினைத்திருப்பான்’ என்றும் சொல்லி, -அனைவரும் அவன் அங்கமாக இருப்பதால் –
ஆன பின்பு, மற்றைத் தேவர்கள் ஆஸ்ரயணீயர் வணங்கத் தக்கவர் அல்லர்; அவன் ஒருவனுமே வணங்கத் தக்கவன்
என்னும் பொருளைச் சொல்லுகிறது,’ என்று அருளிச் செய்தார்.

முனி புங்கவரே! இதற்கு முன் ஏவிய காரியங்களை எல்லாம் செய்து முடித்தவர்களாய்
வந்து உம்மைச் சார்ந்திருக்கிறோம்,’ என்கிறபடியே,
பெருமாளும் இளைய பெருமாளும் விஸ்வாமித்ரர் இடம் – தாழ நிற்க வல்லான் இவனேயன்றோ?

யாதவர்கள் முடிவிலே வந்தவாறே வாட்கோரையை இட்டு ஒருவரை ஒருவர் எறிந்து முடிந்து போனார்கள்,’ என்று கேட்டவாறே,
கிருஷ்ணன் இவர்கள் விஷயமாகச் சங்கநிதி பதுமநிதி தொடக்கமானவற்றைக் கொடு வந்து கொடுத்துச் செய்யாதன இல்லை;
பின்னையும் முடிவிலே வந்தவாறே இப்படியேயாய் இருந்தது; ‘நாம் பகவானை வணங்குகிற வணக்கத்துக்கும் பலம்
அங்ஙனே ஆகிறதோ?’ என்று அஞ்சி யிருந்தோம்,’ என்ன, ‘அங்ஙன் ஆகாது; அஞ்ச வேண்டா;
அவர்கள் ‘இவன் என் தோழன், மைத்துனன்’ என்று சரீர சம்பந்தத்தைக் கொண்டு விரும்புகையாலே
அவர்களுக்குத் தேகம் எல்லையாய் விட்டது; நாம் சொரூப ஞானத்தாலே, என்றும் உள்ள ஆத்துமாவுக்கு வகுத்த பேறு
பெற வேண்டும் என்று பற்றுகையாலே பேறும் உயிர் உள்ள வரையிலும் இருக்கும்,’ என்று அருளிச் செய்தார்.-

———-

புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை
நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே;
கொக்கு அலர்தடம் தாழை வேலித் திருக்குருகூர் அதனுள்
மிக்க ஆதிப்பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் விளம்புதிரே!–
4-10-8-

‘அவனுக்கு அடிமையாமிடத்தில் உன்னோடு என்னோடு வாசியில்லை’ என்று
ஞானோபதேசத்தைச் செய்து அவன் திருவடிகளிலே காட்டிக் கொடுத்தான் -நானும் உன்னைப் போன்று ஒருவனை ஆஸ்ரயித்துக்காண் இப்பதம் பெற்றது;-அவனைக் கொண்டுபோய்ச் சர்வேசுவரன் பக்கலிலே காட்டிக் கொடுத்தமையைத் தெரிவித்தபடி.அவனுக்குச் சரீரமாய் அல்லது ஒன்றற்கும்
பொருளாகுந் தன்மை இன்றிக்கே யிருக்க, சரீரியாகச் சொல்லிக் கேட்டினை அடைகின்றீர்கோளே கெடுவிகாள்!’ விளம்புதிரே’ என்ற ஏகாரத்தால், ‘எடுத்துப் பேசுவதற்கும் தகுதி இல்லை’ என்று இருக்கிறார் காணும் இவர்.-

விளம்பும் ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும்
வளங் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை
உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக்கொண்டு போகுறிலே.
–4-10-9-

நீங்கள் உய்வு பெறுவதற்கு அவ்வளவும் செல்ல வேண்டுமோ?
அவன் தங்கியிருக்கிற திருநகரியை உங்கள் ஞானத்துக்கு விஷயமாக்க அமையும்,’ என்கிறார்.-இவனுடைய சொரூப ரூப குண விபூதிகள் புறம்பான குத்ருஷ்டிகளால்
அசைக்க முடியாதனவாய் -அவி சால்யமாய் -இருக்கும்,-அதற்கு அடி என்?’ என்றால், ‘ஆதிப் பிரான்’ -என்னுடைய தாய் மலடி என்ன ஒண்ணாதே அன்றோ?’ -ஞானம் உதித்து, புறத்தே யுள்ள இந்திரியங்களாலே புறப் பொருள்களில் செல்வதற்கு முன்னே,
மனக் கண்ணுக்குத் திரு நகரியை விஷயம் ஆக்குங்கோள்-பிரயோஜனம் என் என்னில்
உம்மை உயக்கொண்டு போகுறிலே.--அசன்னேவ என்னும் படி -இருக்கிற உங்களை சந்த மேனம் ததோ விது-என்ன பண்ண வேண்டி இருந்து கோள் ஆகில் -நேய மஸ்தி என்கிறபடி தக்தப்படம் போலே இவற்றின் சத்தை சென்று அற்றது என்று இருக்கிறார் –

———————-

உறுவது ஆவது எத்தேவும் எவ் வுலகங்களும் மற்றும் தன்பால்
மறுவின் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக் குருகூரதனுள்
குறிய மாண் உருவாகிய நீள்குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே
.–4-10-10-

தன் ஐஸ்வரியத்தில் ஒன்றும் குறையாமல் வந்து திருநகரியிலே நின்றருளுகின்ற
பொலிந்து நின்ற பிரானுக்கு அடிமை செய்கையே தக்கது,’ என்கிறார்.

தன்பால் மறு இல் மூர்த்தியோடு ஒத்து –
தன்னிடத்து வந்தால் மறு இல்லாதபடி மூர்த்தியோடு ஒத்து. என்றது,
இவை மூர்த்தியாமிடத்தில் பிரகிருதி சம்பந்தம் இல்லாத விக்கிரஹத்தைப் போன்று குறைவு இன்றிக்கே இருக்கையைத் தெரிவித்தபடி.
மறு ஆகிறது – குற்றம்; அதாவது, குறைவு; இது இன்றிக்கே இருக்கை.
பிரிந்து நிலைத்திருக்கையும் தோன்றுதலும் முதலானவைகள் இன்றிக்கே இருக்கையைத் தெரிவித்தவாறு.
அன்றிக்கே,
மறுவையுடைத்தான விக்கிரகம் – ஸ்ரீவத்சத்தை யுடைத்தான விக்கிரகம்; அதனோடு ஒத்து என்னுதல்;
மறு – ஸ்ரீவத்சம்; இல் – வீடு; இருப்பிடம்.
அன்றிக்கே,
மறு இல்லாத மூர்த்தி உண்டு – குற்றங்கட்கு எதிர்த்தட்டான விக்கிரகம்; அதனோடு ஒத்து’ என்னுதல்;
மறு – குற்றம். ‘இவை சரீரத்தோடு ஒத்திருத்தலாவது என்?’ என்னில்,
1- பிரிந்து நிலைத்திருத்தலுக்குத் தகுதியில்லாத -2-ஆதார ஆதேய பாவ – 3-ஏவுகின்ற ஏவப்படுகின்ற பாவ –4- சேஷி சேஷ பாவமான
சரீர இலக்கணங்கள் நான்கும் இவற்றிற்கு உண்டு ஆகையாலே. மரத்திலே தேவதத்தன் நின்றால் அது அவனுக்குச் சரீரமாகாதே அன்றோ?
இங்கு அங்ஙன் அன்றிக்கே இருக்கையைத் தெரிவித்தபடி.

தாழ நிற்கிற இடத்தில் ஐசுவரியம் தோற்றுமோ?’ எனின், இராஜபுத்திரன் ஓர் ஒலியலை உடுத்துத் தாழ இருந்தாலும் இறைமைத் தன்மையில் குறைந்து தோன்றாதே அன்றோ?நீள் குடக் கூத்தனுக்கு –
குடக் கூத்து ஆடி விட்ட பின்பும், மனத்தைக் கவர்கின்ற அச் செயலைப் பிற்பட்ட காலத்தில் கேட்டார்க்கும் சம காலத்திலே
கண்டாற்போலே பிரீதி பிறக்கும்படி யாயிற்றுக் குடக் கூத்து ஆடிற்று.
மன்றில் இன்றும் அமர்ந்து ஆனந்திக்கும் படி அன்றோ குடக் கூத்து ஆடி மகிழ்ந்தானே

ஆள் செய்வதே 
அச் செயல் தானே அடிமையிலே மூட்டும்; நீங்கள் இசையுமத்தனையே வேண்டுவது.

—————

ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே
.–4-10-11-

அவன் கொடுத்த உறுப்புகளைக் கொண்டு உலக விஷயங்களிலே போகாமல், ‘தந்த நீ கொண்டாக்கினையே’ என்கிறபடியே, வகுத்த விஷயத்துக்கே உரியதாக்கிக் கொண்டு
கிட்டினமையைத் தெரிவித்தபடி.-ஆட் கொள்ளுகைக்கு உபாயம் அவன் கையிலே உண்டு போலே காணும்,-தான் விருத்தவானாய்க் காணும் இவரை விருத்தியிலே சேர்ப்பித்தது.
கையில் திருவாழி சேர்ந்தாற்போலே ஆயிற்று இவரும் சேர்ந்தபடி.-கெடு மரக்கலம் கரை சேர்ந்தாற்போலே இருத்தலின் ‘சேர்ந்த’ என்கிறார்.

ஆட்செய்கையாவது,-அடிமை செய்கை. மனத்தால் செய்தல், வாக்கால் செய்தல், சரீரத்தால் செய்தல் என அவ்வடிமை தான் மூன்று வகைப்படும்.
இவற்றுள், மனத்தாலும் சரீரத்தாலும் செய்யும் அடிமைகட்கு இவர் ஆள் அல்லர். ‘என்?’ என்னில்,
கால் ஆழும் நெஞ்சழியும் கண் சுழலும்’ என்கையாலே. இனி, ‘வாக்கால் செய்யும் அடிமை ஒன்றுமேயானால். வாசிகமாகத் திருவாய்மொழி பாடி அடிமை செய்தார் என்கிறதோ?’ என்னில், அன்று; அப்படியாமன்று இப்பாசுரம்;-முனியே நான்முகனே’ என்ற திருவாய்மொழியிலே ஆக வேண்டும்;
இல்லையாகில், எல்லாவற்றிற்கும் சுருக்கமான முதல் திருவாய்மொழியிலேயாகிலும் ஆக வேண்டும்;-இல்லையாகில், இவர் வாசிகமாக அடிமை செய்த ‘புகழும் நல்லொருவன்’ என்ற
திருவாய்மொழியிலே ஆகப்பெறில் சிறப்புடையதாம்.

ஆனால், மற்றைத் தேவர்கள் பரம்பொருள் அல்லர் என்று மறுத்து அறுதியிட்டுப் பேசுதல் மூலமாகச் சர்வேசுவரனுடைய பரத்துவத்தை அருளிச்செய்கையாலே ஆனாலோ?’ என்னில், அதுவாகில், முதல் திருவாய்மொழியிலேயாக அமையும்.
ஆனால், பரத்துவ நிர்ணயத்திலே பரோபதேசமும் ஆகையாலே ஆனாலோ?’ என்னில்,
அதுவாகில், ‘திண்ணன் வீடு’ என்ற திருவாய்மொழியிலேயாதல், ‘அணைவதரவணை’ என்ற திருவாய்மொழியிலேயாதல் அமையும்.
ஆனால், அர்ச்சாவதாரத்திலே பரத்துவம் அருளிச்செய்கையாலே ஆனாலோ?’ என்னில், அதுவாகில், செய்ய தாமரைக் கண்ணன்’ என்ற திருவாய்மொழியிலேயாதல் அமையும்.
ஆனால், பரோபதேசம் பண்ணுகையாலே சொல்லிற்று ஆனாலோ?’ என்னில், அதுவும் ஒண்ணாது. ‘என்னை?’ எனின் வீடுமின் முற்றவும்’ என்ற திருவாய்மொழி தொடங்கிப் பலவிடங்களிலும் பரோபதேசம் செய்தார்; அவற்றிலும் ஆகப்பெற்றதில்லை.

ஆனால், யாது ஆவது!’ என்னில், இந்த ‘ஒன்றும் தேவும்’ என்ற திருவாய்மொழியிலே,
திருக்குருகூரதனுள் பரன்திறமன்றிப் பல் உலகீர் தெய்வம் மற்று இல்லை பேசுமினே,’ என்று, பொலிந்து நின்ற பிரானே எல்லாப் பொருள்கட்கும் அறப்பெரியவன் என்று இவர் அருளிச்செய்யக் கேட்டு, கபால நன்மோக்கத்துக் கண்டு கொண்மின்’ என்ன, கண்டு, உலகம் எல்லாம் திருந்தி ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆனார்கள்.
இவர்தாம் அவர்களுக்கு மங்களாசாசனம் பண்ணும்படி அன்றோ அவர்கள் தாம் திருந்தினபடி?-பொலிக பொலிக’ என்று இதற்கென்ன ஒரு திருவாய்மொழி நேருகிறாரே அன்றோ? சர்வேசுவரன் அவதரித்துத் திருத்தப் பார்த்த இடத்தும் திருந்தாத சமுசாரத்திலே இவர் திருத்தத் திருந்தினபடி.
இனி, இவர்க்குத் தத்துவ நிர்ணயம் பண்ண வேண்டாதபடி ‘இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலத் தடங்கடற்பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களே’ ஆம்படி திருத்துகையாலே, ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன்’ என்கிறார்.

நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன் – நண்ணாதார் முறுவலிப்ப’ என்ற திருவாய்மொழியிலே இம்மக்கள் படுகிற துன்பத்தை நினைத்து, சாத்தின மாலையும் வாடி இருந்தது முன்பு; இப்போது, பகவானுடைய பரத்துவத்தை விரித்து அருளிச் செய்து,
இனி இவர்களுக்கு ஒரு குறை இல்லை,’ என்று தேறின பின்பு, இட்ட மாலையும் செவ்வி பெற்றதாயிற்று;-ஆதலின், ‘நாள் கமழ் மகிழ் மாலை’ என்கிறது.

மீட்சி இன்றி வைகுந்த மாநகர் வல்லார் கையது – இரண்டும் இவர்கள் கையது. மீண்டு வருதல் இல்லாத பரம பதமானது இவர்கள் கையது.-இந்தப் பத்தும் பத்தாக இவர்கள் கையது பரமபதம். இப் பொருளில் ‘மற்றது’ என்பது இடைச்சொல்.
அன்றிக்கே, ‘மற்றது’ என்பதனை வைகுந்த மாநகருக்கு அடைமொழி யாக்கி, ‘மற்றையதான – அதாவது,-இவ் வுலக வாழ்க்கைக்கு எதிர்த்தட்டான வைகுந்த மாநகரமானது இவர்கள் கையது,’ என்னலுமாம்.
அன்றிக்கே, ‘பகவானுடைய பரத்வ ஞானமே பிரயோஜனம் போரும்;
அதற்குமேல், ஞான பல ரூபமான கைங்கரியத்திற்கு ஏகாந்த தேசமான பரம பதமும் இவர்களுக்கு எளிதாம்,’ என்னலுமாம்.-உபய பிரதானமான பிரணவம் போலே -உறை கோயிலில் -எத்தேவும் என்னும் பரே சத்வம் பொலியும் –இவர் இப் பாட்டில் தம்மை புகழ்ந்தது பர ப்ரதிபாத அர்ஹமாம் படி பரத்வ ஞானம் கை வந்த ஹர்ஷத்தாலே —

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -95-யாதானும் ஒரு ஆக்கையில் புக்கு -திருமாலிருஞ்சோலை -10-8-

April 4, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

அவதாரிகை –-பக்தி பாரவச்யத்தாலே யாதல் –அயோக்யா அனுசந்தானத்திலே யாதல் –ஏதேனும் ஒரு படி-கண் அழிவு சொல்லிக் கை வாங்காதே –தன் பக்கலிலே பிராவண்ய அதிசயத்தை உடையேனாய் –
இதர விஷயங்களிலே அருசியையும் உடையேனாய் –பண்ணின மகோ உபகாரத்தை அனுசந்தித்து –
அவன் திருவடிகளிலே விழுகிறேன் என்கிறார் –இவ்விடத்தில் ஜீயர் குறியாக அருளிச் செய்த ஒரு வார்த்தை உண்டு –திருக் கோட்டியூரிலே பட்டர் எழுந்து அருளி இருக்கச் செய்தே –அங்கே ராமானுஜ தாசர் என்கிற ஸ்ரீ வைஷ்ணவர் –அடியேனுக்கு திரு விருத்தம் அருளிச் செய்ய வேணும் என்ன பெருமாளைப் பிரிந்த சோகத்தாலே நான்-ஒன்றுக்கும் ஷமண் அல்ல –ஜீயரே நீரே அருளிச் செய்யும் என்ன –ஜீயரும் அருளிச் செய்து கொடு போக்கு நிற்கச்-செய்தே –வளவன் பல்லவதரையர் -என்று திருக் கோட்டியூர் நம்பி-ஸ்ரீ பாதத்தை உடையார் ஒருவர் அனுசந்தித்து கொடு போந்தராய் – அவர் இப்பாட்டு-அளவிலே வந்தவாறே -கண்ணும் கண்ணநீருமாய் -புளகித காத்ரராய் -இருக்க –
இத்தைக் கண்டு — பாட்டுகளில் வார்த்தை சொல்லுவது -இனி பிரசங்கித்த மாத்ரத்திலே வித்தர் ஆனீரே என்ன –நம்பி எனக்கு ஹிதம் அருளிச் செய்த அனந்தரத்திலே- எம்பெருமான்-திரு முன்பே இப் பாட்டை நாள் தோறும் விண்ணப்பம் செய் -என்று அருளிச் செய்தார் – அத்தை-இப்போது ஸ்மரித்தேன் என்ன –அவர் இதிலே ஏதேனும் அருளிச் செய்யும் வார்த்தைகளை நினைத்து-இருப்பது உண்டோ -என்ன –அது எனக்கு போகாது –இப் பாசுர மாத்ரத்தை   நினைத்து இருப்பேன் -என்றாராம் –
நம்பி ஆதரித்த பாட்டாகாதே என்று ஐந்தாறு நாழிகை போது இத்தையே கொண்டாடி அருளிச் செய்தார்

ஊரா மிலைக்கக் குருட்டா மிலைக்கும் என்று கண்டவர்கள் சொன்ன பாசுரத்தைச் சொன்னேன் இத்தனை என்கிறீர்-கதாநுகதிகை யன்றி உமக்குத் தஞ்சமாக பகவத் விஷயத்தில் நீர் செய்த அம்சம் ஏது என்ன–அநாதியான சரீர ஸம்பந்தத்தாலே விஸ்லேஷித்துப் போகாத படி என்னை அங்கீ கரித்து அருள வேணும் என்று நிருபாதிக பந்துவான ஸ்ரீ யபதியை ஆஸ்ரயித்து இருப்பன் என்று தம்முடைய பிரபத்தி நிஷ்டையை அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்–அவதாரிகை–முமுஷுக்களான சிலர் சம்சரண நிவர்த்தகன் படியையும்எந்தக் கிரமத்தால் நாம் எத்தைச் செய்ய அவன் தன் நிவர்த்தகனாமது அத்தையும்
நமக்கு அவனோடு உண்டான சம்பந்தத்தையும் அருளிச் செய்யீர் என்ன தாம் தத்வித ஜனதாதா பத்ம்யதா பன்னராய் நான் செய்யுமது இதுவே என்று நம்மையும் இதில் அந்வயிப்பிக்க ஸித்த ஸாத்ய உபாயங்களை க்ரமத்தால் அருளிச் செய்கிறார் இதில் –

யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்
மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே  -அதனால்
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்
மாதாவினைப் பிதுவை திரு மாலை வணங்குவனே –
-95 ––தலைவி அறத்தோடு நிற்கத் துணிதல் –

உயிர்–உயிரானது
முன்னமே–நெடுநாளாகவே
மூது ஆவியில்–பழமையான (பலவகைப்) பிறப்புகளுள்-ஸூஷ்ம சரீரம்
யாது ஆனும் ஓர் ஆக்கையில்–யாதாயினும் ஒரு சரீரத்தில்
புக்கு–பிரவேசித்து
அங்கு அவ்வுடம்பில்–ஆப்புண்டும்-பிராரப்த கர்மத்தால் அதிலே உழன்று -பந்தத்தில் –
கட்டுப்பட்டு நின்றும்–ஆப்பு அவிழ்ந்தும்
(அங்கு நின்று) தொடர்ச்சி நீங்கியும் தடுமாறும்–நிலைமாறி அலையும் தன்மையுடையது ;
அதனால்–ஆதலால்-வாசனையால் -பதிவினால் –
யாது ஆனும் பற்றி–எந்த விதத்தினாலாவது
நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்–(எம்பெருமானை விட்டு) விலகும்படியான கோட்பாட்டை நன்றாக விடுவிக்கக் கடவனான–கைவல்யமும் வீடே -நல் வீடு இல்லையே -பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யம் வேண்டுமே
மாதாவினை–தாய் போன்றவனும்-ப்ரியபரனுமாய் –
பிதுவை–தந்தை போன்றவனுமான-ஹித பரனுமாய் –
திருமாலை–ஸ்ரீமந்நாராயணனை
வணங்குவேன்–கரணமடைந்திருப்பேன்.

திருமால் தன்பால் விருப்பம் செய்கின்ற நேர் கண்டு
அரு மாயத்து அன்று அகல்விப்பான் என் -பெருமால் நீ
இன்று என்பால் செய்வான் என் என்ன இடருற்று நின்றான்
துன்னு புகழ் மாறனைத் தான் சூழ்ந்து
 —98-முதலிலே அத்வேஷத்தைப் பிறப்பித்து-ஆபிமுக்யத்தை யுண்டாக்கி-ஆஸ்ரயண ருசியை விளைத்து தானே யுபாயமாய்-தன் திருவடிகளிலே பிரேமத்தையும்-பரம பக்தி பர்யந்தமாக முற்றுவித்து தன்னால் அல்லாது செல்லாதபடி பண்ணி நாம் சொன்னபடியே செய்வானாக சமைந்து நம்மை இவன் இப்படி தலையாலே-சுமவா நின்றதுக்கு அடி ஏது என்று அவனைக் கேட்க – அவன் நிருத்தரனாய்-கவிழ் தலை இட்டு நிற்க-இது நிர்ஹேதுகமாகாதே -என்று ப்ரீதராய்-தம்மை அவன் அங்கீ கரித்த படியையும் அங்கீகார ஹேதுவானவன் கிருபாதி குணங்களையும்-அனுசந்தித்துது ஒரு நிர்ஹேதுக விஷயீகாரம் இருந்தபடியே-என்று வித்தராகிற திரு மால் இரும் சோலை மலை யில் அர்த்தத்தை திருமால் தம்பால் -இத்யாதியாலே-அருளிச் செய்கிறார் -இது நிர்ஹேதுகமாகாதே -என்று அவன் விஷயீ காரத்திலே விக்ருதராய் அத்தாலே வந்த சம்ருத்தமான யசஸை யுடைய ஸ்ரீ ஆழ்வாரை – அந்த யசஸ் ஸோபாதியாகத் தானும் சூழ்ந்து -இடருற்று நின்றான்-ஸ்ரீ சர்வஞ்ஞனும் நிருத்தனாய் நிற்பதே -என்று இவருக்கு ஈடுபாடாய் இருக்கிறது –

யாதேனும் ஓர் ஆக்கையில் புக்கு –ஏதேனும் ஒரு சரீரத்தில் பிரவேசித்து –அது தண்ணிய ஸூ கர-ஜன்மாவில் (ஸூ கர -பன்றியாய் )ஜனித்தாலும் –மம அயம் தேக -என்று அதிலேயே அபிமானித்து –
அங்கே-உண்டானவத்றோடு சில சம்பந்த விசேஷங்களும் –அவை தன்னை விட மாட்டாமையாலேயாய்-போரா நிற்கும் ஆயிற்று –ஆக்கை -என்கையாலே-உபசயாத்மகம் என்று தோற்றுகிறது-(தேகம் வளர்ந்து -சரீரம் தேய்ந்து )புக்கு –சேதனனுக்கு அசித் சம்சர்க்கம்  ஸ்வதா உள்ளது ஓன்று அன்று –-கர்ம நிபந்தனம் என்கை –அங்கு ஆப்புண்டும் –-கர்ம வாசனையாய்- ருசி வாசனையாய் -அதிலே பத்தனாய் இருக்கும் –இது தண்ணிது என்று ஆசார்ய உபதேசாதிகளாலும் –சாஸ்திர வாசனையாலும் – பிரத்யஷத்தாலும்-அறியா நிற்கச் செய்தே –இத்தை விடில் செய்வது என் என்று துணுக் துணுக் என்னா நிற்கும் –ஆப்புண்டும் –சிநேகத்தைப் பண்ணியும் –ஆப்பு அவிழ்ந்தும் –கர்மம் அடியாக வந்தது என்று அறியாதே –அவன் தான் இதிலே இலை அகலப் படுத்தா-நிற்கும் –கர்ம ஷயம்   வந்தவாறே=அது தான் குலைந்து கொடு நிற்கும் இறே –மூதாவியில் –இத்தால் பழைமையை நினைக்கிறது-ஆவி -என்று பிராணனாய் –அசித் விசேஷமாய் பிராணனாய் இருக்கையாலே-இப்போது ஸூஷ்ம சரீரத்தை ஆவி என்கிறது –இது தன்னை பிரகிருதி கார்யம் என்பாரும் உண்டு –பிரகிருதி அம்சம் என்பாரும் உண்டு –இது தான் மோஷ தசை அளவும் அனுவர்த்திக்குமது —சேதனனுடைய கமந ஆகமநாதிகளுக்கும் உடலாய் இருக்கும் –தடுமாறும் –பஞ்சாக்னி வித்தையில் சொல்லுகிறபடியே மேகங்களில் புக்கு –
வர்ஷ முகத்தாலே-பூமியிலே பதித்து –அந்த முகத்தாலே புருஷன் பக்கலிலே அந்வயித்து –சுக்ல சோணித ரூபத்தாலே -ஸ்த்ரி பக்கலிலே-சங்க்ரமித்து – இப்படி தடுமாற்றமாய் இருப்பது –இச் சேதனனுக்கு புக்க புக்க இடம் எங்கும் தடு மாற்றமே உள்ளது –அத்தை தான் அறிந்த இடமும் அறியாத இடமுமாய் இருக்கும் –உயிர் –ஜ்ஞான ஆனந்த லஷணமாய்- நித்தியமான வஸ்து கிடீர் இப்படி படுகிறது –இப்படி தடுமாறி சம்ஸரிக்கிறது என்று தொடங்கி என்றால் –முன்னமே –அநாதியாய் போருகிறது ஆயிற்று –அதனால் –அந்த வாசனையே உபாத்யாயராக –முன்னமே யாகையாலே –யாதானும் பற்றி –பகவத் வ்யதிரிக்த விஷயம் ஆகையே வேண்டுவது –பற்றுவது ஏதேனும் ஒன்றாக-அமையும் –அவற்றில் குண தோஷங்கள் நிரூபிக்க வேண்டா –நீங்கும்-பகவத் விஷயம் இத்தனையே வேண்டுவது விடுகைக்கு விரதத்தை –நீ பற்றுகிற விஷயங்கள் அடைய ஸ தோஷமாய் இருக்கும் –
பகவத் விஷயமே கிடாய் நல்லது -என்று சிலர் உபதேசித்தாலும் –அது நன்றே ஆகிலும் –நான் அத்தை விடுகையிலே-சங்கல்பித்தேன் என்னும் –சர்வேஸ்வரன்-ஏதத் வ்ரதம் மம -என்று ரஷிக்கைக்கு வ்ரதம் கொண்டு இருக்குமா போலே யாயிற்று-இவன் அவனை விடுகைக்கு வ்ரதம் கொண்டு இருக்கும் படி –த்விதா பஜ்யேய மப்யேவம் ந ந மேயம் -என்கிறபடியே இரண்டாகப் பிளக்கிலும் தலை சாயேன்-என்று ஆயிற்று இருப்பது –நல் வீடு செய்யும் –இப்போது அந்நிலை தவிர்ந்து —இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று கால் கட்டி இத்தை விடுவித்து தர வேணும் -என்னப் பண்ணின — மம மாயா துரத்யயா மாமேவ யே ப்ரபத்யந்தே  -என்கிறபடியே – நீ பிணைத்த பிணையை நீயே அவிழ்க்க வேணும் என்று அபேஷிக்க பண்ணின – தன் பக்கல் ருசி-முன்னாக இத்தை விடுவிக்க வேணும் என்னப் பண்ணின–மாதாவினைப்  பிதுவை –சரீரத்துக்கு உத் பாதகராய் –சம்சார வர்த்தகராய் இறே யல்லாத மாதா பிதாக்கள் இருப்பது – இவன் அதில் நின்றும் விடுவித்து ரஷிக்குமவன் ஆயிற்று –இங்கன் இரண்டு ஆகாரமாய் சொல்ல வேண்டுவான் என் என்னில் –திருமாலை –ஸ்ரீ ய பதி யாகையாலே – பிதா மாதா ச மாதவ –என்னுமா போலே –வணங்குவனே –இதர விஷயங்களில் அருசியைப் பிறப்பித்து –தன் பக்கலில் பிராவண்யத்தைப் பிறப்பித்த -இவ் உபகாரத்துக்கு சத்ருசமாய் இருப்பதொரு பிரத்யு  உபகாரம் நம்மால் பண்ண ஒண்ணாது இறே – அவனதான வஸ்துவை அவன் பக்கலில் சமர்ப்பிக்கும் அத்தனை இறே –அதுவும் அவனது இன்னருள்-இசைவித்து தனது தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான்-(அவனதான வஸ்துவை -அவனது தான் என்று இசைவதே ஆத்ம சமர்ப்பணம்)

சகலவித பந்து -ஆப்த பந்து – -ஸ்ரீ யபதி-சரண் அடைந்து -பிரபத்தி அனுஷ்டானம் -உறுதி நிலையை வெளியிட்டு அருளுகிறார் –யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு-இயற்கை இல்லையே -கர்மா பயனாகவே என்பதால் புக்கு-அங்கு ஆப்புண்டும்-அங்கு அஹங்கார மமகாரங்கள் -அபிமானங்களை விடாமல் இருந்து –-மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே-ஆத்மாவுக்கு சம்சார சம்பந்தமும் அநாதி -எம்பெருமான் சம்பந்தமும் அநாதி -என்பது நூல் கொள்கை-இருந்தாலும் ஆழ்வார்கள் அசித் சம்பந்தம் விட நாராயண சம்பந்தமே பழையது என்பர் -முன்னமே-என்கிறார்-திருவாய்மொழியிலும்-சோர்ந்தே புகல் கொடாச் சுடரை யரக்கியை மூக்கரித்தாயை அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே –என்பார்
ஏதன் நிமித்தம் முன்னமே முதல் முன்னமே யான அசித் அயன அநாதி சம்பந்தங்கள் -ஆச்சார்ய ஹிருதயம் ஸ்ரீ ஸூ க்திகள் –ஒன்றன்பின் ஒன்றாக அநாதியாய் வருகிற சரீர ஸம்பந்தங்கள் காரணமாக- கழித்திடாமல் என்னை அங்கீகரித்தருள வேணுமென்று அடியேன் ஸகலவித பந்துவும் ஆபத்பந்துவுமான எம்பெருமானைச் சரணமடைந்திருப்பேனென்று தமது ப்ரபந்திமார்க்கா நுஷ்டாக வுறுதிநிலையை ஆழ்வார் இப்பாட்டால் வெளியிடுகிறார்.–ஆத்மாவானது அநாதிகாலமாகவே ஊழ்வினைக்கு ஏற்ப யாதாயினும் ஒரு டம்பினுட்புகுந்து அதில் விளைவிலங்காற் கட்டுப்பட்டிருக்கும்
அவ்வுடம்பின் தொடர்ச்சி நீங்கியும் ஸூக்ஷ்ம சரீரத்தில் நின்று ஸ்வர்க்க நாதங்களிற்புக்கு மீண்டு தடுமாற நிற்கும்;-இப்படி ஆத்மாவுக்கு சரீரத்தில் நின்று ஸ்வர்க்க நாங்களிற்புக்கு மீண்டு தடுமாற நிற்கும்; இப்படி ஆத்மாவுக்குச் சரீர ஸம்பந்தம் அநாதியாயிருத்தலால் ப்ராசீக கர்மவாஸநா வசத்தான் ஏதேனுமொரு பொருளினிடத்துப் பற்றச் செய்து எம்பெருமானை விட்டு விலகும்படியான கோட்பாட்டை முற்றும் வேரோடு அற நன்றாக விடுவித்துத் தன்னையே பற்றியிருக்குமாறு செய்விக்கவல்லவனாய், ப்ரியங்களை நடத்துவதில் தாய்போன்றவனாய், ஹிதங்களை நடத்துவதில் தந்தை போன்றவனாய்த்
திருமகள் கணவனான ஸ்ரீமந்நாராயணனைச் சரணமடைந்திருப்பேனென்கிறார். அநாதியாய் வருகிற ஸம்ஸாரத்திலே பற்றில்லையாம்படி சரணமடைந்தாருடைய வினைகளைப் போக்குவிக்கவல்ல எம்பிரானை யான் வணங்குவேனென்றாராயிற்று.–ஆத்மாவுக்கு தேஹஸம்பந்தமானது கரும வசத்தினாலாகிய செயற்கையேயன்றி இயற்கையன்று என்பது தோன்ற‘யாதானு மோராக்கையில் புக்கு” எனப்பட்டது. அங்கு ஆப்புண்ணுத லாவது- ஒவ்வொரு பிறப்பிலும் அஹங்கார மமகாரங்களாகிய அபிமானங்களை விடாமலிருப்பதாம். (மூதாவியில் தடுமாறுமுயிர் முன்னமே) ஆத்மாவுக்கு ஸம்ஸார ஸம்பந்தமும் அநாதி, -எம்பெருமானோடு உண்டான ஸம்பந்தமும் அகாதி என்பது ஓர் கொள்கை, இருந்தாலும் ஆத்மாவுக்கு அசிம்ஸம்பந்தத்தைவிட நாராயண ஸம்பந்தமே மிகப் பழையதென்னுமிடம் ஆழ்வாருளிச் செய்த ஆழ்வார்தாமே திருவாய்மொழியில்
சோர்ந்தே புகல்கொடாச் சுடரை யரக்கியை மூக்கீர்ந்தாயை, அடியேனடைந்தேன் முதல் முன்னமே’ என்றருளிச் செய்கிறார்; அசித் ஸம்பந்தத்தின் அநாதித்வத்தைத் தெரிவிக்கிற அப்பாசுரத்தில் ‘முதல் முன்னமே’ என்றதையும் குறிக்கொள்க.‘எதந்நிமித்தம் முன்னமே முதலமுன்னமேயான அசிதயநாநாதி ஸம்பந்தங்கள்” என்ற ஆசார்ய ஹ்ருதய ஸூக்தியும் ஸ்மரிப்பது.–‘யாக்கை’ ‘யாப்பு’ என்றுஞ் சொற்கள் ‘ஆக்கை’ ‘ஆப்பு’ என மருவி வந்துள்ளன. யாக்கையென்பதற்கு-(உயிரைக்) கட்டுப்படுத்துவதென்று காரணப்பொருள். முதுமை+ ஆவி,மூதாவி, ஆவியென்பது தாளியாகு பெயராய் உடம்பையுணர்த்திற்று.
உயிர் ஒரு ஸ்தூல சரீரத்தை விட்டு மற்றொரு ஸ்தூல சரீரத்திற் சாரும் பொழுதும் ஸ்வர்க்க நகரங்களுக்குச் செல்லும் பொழுதும் ஸூக்ஷ்ம சரீரம் முக்தி நிலையிலே உயிரை விட்டகலும். ஆத்மாவின் ஸ்தானத்தில் அரிசியையும், ஸ்தூல சரீரத்தின் ஸ்தானத்தில் உமியையும் ஸூக்ஷ்ம சரீரத்தின் ஸ்தானத்தில் தவிட்டையும் கொள்க.-அரிசியை விட்டு உமி நீங்குவது இரண்டு உலக்கைளினால் குத்துப்பட்டாதலால். அதுபோல ஜ்ஞாநாநுஷ்டநகங்களால் ஸ்தூல சரீரம் நீங்கும்;
தவிடு நீங்குவது தண்ணீரில் கழுவப்பட்டாதலால், அதுபோல விரஜாநதீஸ்நாநத்தால் ஸூக்ஷமவொட்டு நீங்குமென்று விவேதித்துக்ª காண்க.

இப்பாட்டுக்கும் கிளவித்துறை வகையில் பொருள் சொல்ல வேண்டில், தலைவி அறத்தொடு நிற்கத் துணிதல் இது. திருமாலாகிய தலைமகனைக் களவொழுக்கத்தாற் புணர்ந்து பிரிந்து வருந்துகிற (பராங்குச நாயகியாகிய) தலைமகள்‘இனி என்னுயிர் தரித்து நில்லாதாதலால் யான் விரைவில் இறந்து படுவேன்; அங்ஙனம் இறந்தொழிந்தேனாயினும் மறுபிறப்பில் இத் தலைவனையே கூடத் தோற்றத்து எழுவகைப் பிறப்பேன் என்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதங்கள்
உள்ளனவாதலால் அவற்றில் யான் மானிடமகளாகவே மீண்டும் பிறக்கிறேனென்பது என்ன நிச்சயம்?
ஆதலின் இப்பிறப்பிலேயே இத்தலைவனைப் பிரியாது கூடுமாறு என்னுயிர் இவ்வுடம்பை விட்டு நீங்கு முன்னமே யான் விரைந்து முயல்வேனாவேன்;-அதாவது நான் நாணத்தை விட்டு உடனே என் கருத்தைத் தோழிக்கு வெளிப்படையாகச் சொல்லி அவள் மூலமாக நற்றாய்க்கும்
அவள் மூலமாக தந்தைக்கும் அதனை வெளிப்படுதுதி அவர்கள் எவ்வாறாயினும் இவனையே எனக்கு விவாஹஞ் செய்து வைக்கும்படி செய்து கொள்ளுவேன்: அன்றியும் தோழிமூலமாகத் தலைமகனுக்கு எனது வருத்த மிகுதியைக் கூறி அவன் விரைவில் என்னை வரைந்து கொள்ளுமாறுஞ் செய்வேன் என்று பலவாறு ஆராய்ந்து தோழிக்குத் தன் அறத்தொடு நிற்கத் துணிந்தது இது எனக்கொள்க.–உயிரானது பழமையான பலவகைப் பிறப்புகளுள் யாதாயினும் ஒரு சரீரத்தில் பிரவேகித்து அவ்வுடம்பில் கட்டுப்பட்டு நின்றும் அங்கு நின்ற தொடர்ச்சி நீங்கியும் நிலைமாறி அலையுந்தன்மையுடையது; ஆதலால் எனது உயிர் இவ்வுடலை விட்டு நீங்குதற்கு முன்பகாவே எந்த விதத்தினாலாவது தலைமகன் னஎனைப் பிரிதலாகயி தவறா வொழுக்கத்தை நன்கு விடுவித்தற்கு
(நாயகனை என்னோடு கூட்டுதற்கு) ஏற்ற தாயையும் தந்தையையும் திருமாலாகிய எனது அத் தலைவனையும் வணங்கி வேண்டிக் கொள்வேன் என்று பதப்பொருள் காண்க.–நீங்கும் விரதத்தை நல்வீடு செய்தலாவது- பிரிவு இல்லாமல் வெளிப்படையாகக் கூடியிருக்கும்படி மணஞ்செய்வித்தல்
களவு வழியான புணர்ச்சியில் இயற்கைப் புணர்ச்சி, பாங்கற் கூட்டம், இடர்தலைப்பாடு, பங்கியிற் கூட்டம், பகற்குறி, இரவுக்குறி, ஒருவழித்தணத்தல்,வரைபொருட் பிரிதல் என்ற ஒவ்வொரு வகையிலும் தவறாமற் பிரிவு நேர்தலால் அதனை ‘விரதம்’ என்னும் வடசொல் விரதமென்று கிடக்கிறது தவறாமல் ஏற்றுக்கொண்டு ஒழுகும் ஒழுக்கம் விரதமெனப்படும்.–“யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல்வீடு செய்யும்’ என்றதில் ‘யாதானும் பற்றி’ என்பது ‘வீடு செய்யும்’ என்பதில் அந்வயிக்கும்; ஏதாவதொரு காரணத்தைக் கொண்டு என்னை நாயகனோடு மணம்புரிக்கவல்ல மாதாவினைப்பிதுவை என்றவாறு.
ஒருவனைத் தம் மகளுக்கு மணஞ்செய்விப்பதற்கு அவனது கல்வி, செல்வம், குலம், ஒழுக்கம், அன்பு, வேண்டுகோள், ஆபரணங்கொடுத்தல் முதலாகப் பல காரணங்களுக்குள்ளனவாதலால் அவற்றுள் பொருத்தமான ஏதேனுமொரு காரணத்தைக் கொண்டு விவாஹஞ் செய்து வைக்க வேண்டுமென விரும்பியவாறு.-இனி ‘யாதாலும் பற்றி’ என்பதை ‘நீங்கும்’ என்பதிலும் அந்வயிக்கலாம். தலைவன் தலைவியை விட்டு நீங்குவதற்குப் பல காரணங்களுண்டு; பிறர் அறிந்துவிடுவார்களே யென்கிற பயம், ஊரவர் பழி தூற்றல், விவாஹத்துக்கு வேண்டிய பொருளீட்டி வருதல் முதலிய விசேஷ காரணங்கள் பலவற்றுள் ஏதேனுமொரு காரணம்பற்றி நீங்குகிற என்றவாறு.

யாதானும்-முன்பு பரிக்ரஹித்த சரீரத்துக்கு ஜாதி நியமம் இல்லை-ஆஸ்ரய நியமம் இல்லை
கர்ம அனுரூபமாக உப பன்னமானது -என்கை-ஓர் ஆக்கையில்-பந்தகமாம் இடத்தில் கர்மத்துக்கும் தான் வேண்டும்படி அத்விதீயமாய் இருக்கை–ஆக்கை என்று சரீரத்தைச் சொல்லுகையாலே பந்தகத்வமே ஸ்வரூபமாய் இருக்கும் என்கை--புக்கு-சரீர பிரவேசம் சேதனனுக்கு வந்தேறி என்கிறது-அங்கு ஆப்புண்டும்-அந்த சரீரத்திலே அஹம் அபிமாநாதிகளைப் பண்ணி-போக ஆயதநத் வாதிகளாலே ஸக்தனாயும்–ஆப்பு அவிழ்ந்தும்-இஸ் சங்கம் நடவா நிற்கச் செய்தே பந்தக கர்ம விச்சேதத்தாலே சரீர விஸ்லேஷம் பிறந்தும் –மூதாவியில் தடுமாறும்–இவனை விடாதே பழையதாய்ப் போருகையாலே முதிர்ந்து இருப்பதாய்-ப்ராணஸ் தேஜஸி -சாந்தோக்யம் என்று ப்ராண ஆஸ்ரயம் ஆகையாலே ஆவி என்று சொல்லப்படுவதான ஸூஷ்ம சரீரத்தில் நின்று ஸ்வர்க்க நரகங்களிலே யாத ஆயாதம் பண்ணித் தடுமாறா நிற்கும்உயிர்-ஜீவனானது-முன்னமே –-இப் பிரக்ருதி ஸம்பந்தம் –அநாதி மாயயா ஸூப்த -மாண்டூக்ய காரிகா -என்கிறபடியே அநாதியாய் இருக்கும்-அதனால்-இப்படி இஸ் ஸம்ஸாரி சேதனனுக்கு சரீர ஸம்பந்தம் அநாதி ஆகையாலே–யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை
ப்ரக்ருதி ப்ராக்ருதங்களிலே ஏதேனும் ஒன்றை அவலம்பித்து பகவத் விஷயத்தை விஸ்லேஷித்தே போரும்படியான இஸ் ஸம்ஸாரி சேதனனுடைய ஸங்கல்பத்தை-நல் வீடு செய்யும்-நன்றாக புந ப்ரரோஹம் பிறவாதபடி விடுவிக்கக் கடவனான–மாதாவினைப் பிதுவை-பிரிய பரனுமாய் ஹித பரனுமாய் உள்ளவனை–வத்சலனுமாய் ஸ்வாமியுமாய் யுள்ளவனை என்றுமாம்–திரு மாலை
அந்த வாத்சல்ய ஸ்வாமித்வங்களுக்கு ப்ரகாசகமான ஸ்ரீ யபதித்வத்தை யுடையவை-வாத்ஸாலும்மும் பந்தமும் தோற்றுவது புருஷகார பூதையான ஸ்ரீ லஷ்மீ ஸம்பந்தத்தாலே இறே-பிதா மாதா ச மாதவ -பாரதம் ஆரண்ய -189–மாத்ருத்வ பித்ருத்வங்கள் விஸிஷ்ட விஷயம் என்றுமாம்-அதாவது-ஸ்புரத்தா ஹேதுவான விசேஷண ப்ரதாந் யத்தாலே மாத்ருத்வமும்-சத்தா ஹேதுவான விசேஷ்ய ப்ரதாந் யத்தாலே பித்ருத்வமும் என்றபடி–வணங்குவனே –-ஏவம் பூத விஷயத்தை ஆஸ்ரயித்து இருப்பன் என்று தம்முடைய ஸ்வ பாவ கதநம் பண்ணுகிறார்–கால ஷேப அர்த்தமாகவும் பிரபதனம் ஒழிய ப்ரவ்ருத்தி இல்லை என்று அருளிச் செய்தார் ஆகவுமாம் –(வர்த்தமான பிரயோகம் வணங்கிக் கொண்டே இருக்க வேண்டுமே)

ஜீவ வர்க்கமானது அநாதியான ப்ரக்ருதி ஸம்பந்தத்தாலே யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு-அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும் மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே – ஆப்பு அவிழ்தவன் ஸ்வதித அஹங்கார மமகார னானவன்–அதுக்கும் மேலே மூதாவியில் உயிர் அநாதியாய்ப் பழையதாக ஓட்டின் ப்ராணாதி வாயு ஸம் சக்த ஸூஷ்ம சரீரத்தால் இந்த லியோக -லோகாந்தர -சஞ்சரண துக்க ஸூக அனுபவங்களால் அலைச்சல் படும் ஜீவ வர்க்கமானது எல்லாம்–முன்னமே-யாவதாத்ம உபக்ரமாயே-அதனால்-ஏவம்பூத சக்ர ப்ரவ்ருத்தி மூல காரணமான அநாதி ப்ரக்ருதி சம்பந்தத்தால்–யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்-அப்ராப்த விஷயங்களையும் கர்மங்களையும் அவலம்பித்து
ப்ராப்த விஷய கர்மங்களை விட்டுத் திரியும் விரதம்-நியம பூர்வ ப்ரவ்ருத்தியை விவேக நிர்வேத விரக்தி பீதிகள் உள்ளவரில்–நல் வீடு-நிச்சேஷமாக நிவர்த்திப்பிக்க வல்லளான–மாதாவினைப்
வேரி மாறாத பூ மேல் இருக்கிற-4-5-11
-ஜகன் மாதாவை–வணங்குவனே –பகவத் வசீகரணத்துக்கு முன்பு புருஷகார வசீகரணத்தைச் செய்வேன்–தத் அநந்தரமே–பிதுவை திரு மாலை வணங்குவனே
ஜகத் காரண பூதனான ஜகத் பிதாவை ஆத்ம வித்யா நிவர்த்தகையான தெருவில் மால் செய்யுமவனை
ஆத்ம ராஷா பர ஸமர்ப்பணத்தால் வசீகரிப்பேன் என்று முமுஷு ஜனங்களால் வசீகரிக்க வேண்டிய க்ரமத்தை தத்தாதாத்ம்யா புத்தியால் தாம் அனுஷ்டித்ததாக அருளிச் செய்தார் ஆயிற்று–இத்தால்
திருமாலே ஸித்த உபாயம் என்றும்-தத் வசீகரணமே ஸாத்ய உபாயம் என்றேனும் அருளிச் செய்து
தத் அனுஷ்டான கிரமத்தை அருளிச் செய்தார் –

தாத்பர்யம்–அயோக்யா அனுசந்தானத்தால் அகலப்பார்த்த இடத்திலும் கைவிடாமல் உலக விஷய வைராக்யம் விளைவித்து தனது பக்கம் பிராவண்யம் விளைவித்த பகவானுக்கு -ஸ்ரீயப்பதிக்கு
என்னால் செய்வது ஒன்றுமே இல்லை-ஆகையால் அவன் திருவடிகளில் வணங்குகிறேன்
ஜீவர்கள் தேவ மனுஷ்ய ஸூ கர-போன்ற ஏதாவது ஒரு ஜென்மம் எடுத்து அந்த ஜாதியில் அத்யந்த ப்ரீதி செய்து அழுந்திக் கிடந்தது பிராரப்த கர்மம் அழிந்த பின்பு ஸூஷ்ம சரீரம் எடுத்து மீண்டும் கர்மாதீனமாக ஒரு பிறவி எடுத்து தடுமாறி பிறவிச் சூழலில் உழன்று பகவத் விஷயம் நன்றியாக இருப்பது அறிந்தும் நான் பற்றின விஷயம் ச தோஷமாகிலும் அத்தை விடாமல் இருக்கும்
விரதத்தை மாற்றி உனது திருவடிகளில் பிராவண்யம் உண்டாக்கி ஜென்ம பிரவ்ருத்த -திருத்துழாய் அங்குரிக்கும் போதே பரிமளம் உண்டாய் இருப்பது போல் சஹஜ பக்தி உண்டாக்கி அருளின ஆப்த பந்துவான ஸ்ரீ யபதியை ஆஸ்ரயியா நின்றேன் என்று அருளிச் செய்கிறார் இதில்

10-8-திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன-ப்ரவேஸம்–

அருள் பெறுவார் -என்கிற திருவாய் மொழியிலே-தம்மைக் குறித்து சர்வேஸ்வரனுக்கு உண்டான பாரதந்த்ர்யத்தைப் பேசினார் –
அந்த பார தந்த்ர்யத்தை முடிய நடத்தினபடி சொன்னார் செஞ்சொல் கவிகாள் -என்ற திருவாய் மொழியிலே –
நீர் சொன்னபடி செய்யக் கடவோம் -என்று தலை துலுக்கினான் அன்றோ –
இவரைத் திரு மேனியோடு கொடு போவதாக தேங்கின தேக்கம் அன்றோ நடுவே உள்ள பாசுரங்கள் –
அது ஒழியக் கொடு போவதாக அற்ற அன்றே பதறத் தொடங்கினான்-
சிலரை ஆதி வாஹிக கர்த்தாக்களை வரவிட்டுக் கொடு போம்-
சிலரை பெரிய திருவடியை வரக் காட்டி கொடு போம் –
திருவடி திருத் தோளிலே வந்து தானே கொடு போகத் தக்கவர் அன்றோ -இவர்
மத் பக்தம் நயாமி பரமாம் கதிம்-என்னுடைய அடியவனை இறுதிக் காலத்திலேயே நானே நினைக்கிறேன் -கொண்டு போகிறேன் -என்கிறபடியே-
கள்வன் கொல் -பெரிய திருமொழி -8-7-1-என்ற திருவாய் மொழியில் பிராட்டியை ஆள் இட்டுக் கொண்டு போகும் அன்றே அன்றோ-
இவரையும் ஆள் இட்டுக் கொடு போவது-

நானிலம் வாய்க்கொண்டு நன்னீர் அறம் என்று கோது கொண்ட
வேனிலம் செல்வன் சுவைத்து உமிழ் பாலை கடந்த பொன்னே
கானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெக்கா உது அம்பூந்
தேன் இளம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே -திரு விருத்தம் -26-

மாலை நண்ணி சுருக்கமான பாசுரம் இது –
நானிலம் வாய்க்கொண்டு -நான்கு வித குறிஞ்சி முல்லை மதம் நெய்தல் -உண்ட பின்பு
நன்னீர் அறம் என்று கோது கொண்ட-வேனிலம் செல்வன் -ஆதித்யன் -சுவைத்து உமிழ் பாலை கடந்த பொன்னே
-நாயகியைக் கூப்பிட்டு -மீதி பாலை வானம் தாண்டி போக
தானே சோலை வானம் கூப்பிட்டு போக -சம்சாரம் பாலை வானம் தாண்டி
புணர்ந்து உடன் போக்கு துறை –
ஈஸ்வரன் வைஷ்ணவர் –
கானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெக்கா உது அம்பூந்-இது அது உது -தள்ளி இல்லை கிட்டவும் இல்லை திரு வெக்கா
கால் நிலம் தோய்ந்து -தேவர்கள் காலை வைத்து பற்ற
தேன் இளம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே-எல்லா அவஸ்தைகளிலும் க்ஷேமம் –

இவ் உலக வாழ்க்கையாகிற பாலை நிலத்தைக் கழித்துப் போந்தோம்-
நச புன ஆவர்த்ததே -என்கிற தேசத்திலே புகுந்தோம்-என்று தானே சொல்லித் தேற்றிக் கொண்டே அன்றோ போவது –

முன்னம் ஏழ் புரவியார் இரவிகாய் வெயிலினால்
முத்தரும் பியகிலா முழு மதித் திரு முகத்து
அன்னமே இன்னமோர் காவதம் போது மேல்
அகலும் இப்பாலை அப்பால் அரைக் காவதம்
என்னை யான் உடையவன் துயில் அரா அமளியும்
இலகு பொற் கோயிலும் இந்துவின் பொய்கையும்
புன்னை வாய் நீழலும் புரிசையும் மதுகரப்
பூ விரித் துறையும் அக் காவிரித் துறையுமே -திருவரங்க கலம்பகம்-50-
ஆக
இப்படி தம்மை அவ்வருகே கொடு போகையிலே பதருகிறபடியை அருளிச் செய்தார்-
இவன் இப்படி நம் பக்கலிலே பதருகைக்கு அடி என் என்று பார்த்தார்-
தம்பக்கல் ஒன்றும் கண்டிலர் -என்றது –பலம் கண்டோம் சாதனம் கண்டிலம் –
முதலிலே தம்பக்கலிலே -அத்வேஷம் -வெருப்பின்மையும் பிறப்பித்து-
அது அடியாக -விசேஷ கடாக்ஷம் -விசேடமான திரு வருளைச் செய்து –
நம் மேல் ஒருங்கே பிறழ வைத்தார் -எங்கும் பக்க நோக்கு அறியான் என் பைம் தாமரைக் கண்ணன் –
என்னைத் தீ மனம் கெடுத்தாய்-வெருப்பின்மையும் பிறப்பித்து-
அமலங்களாக விழிக்கும்-விசேடமான திரு வருளைச் செய்து
மருவித் தொழும் மனமே தந்தாய்-தம்பக்கலிலே இச்சையும் பிறப்பித்து-
நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்-தானே உபாயம் என்னும் புத்தியையும் பிறப்பித்து
விண்டே ஒழிந்தன வினையாயின வெல்லாம்-
நின் அலால் இலேன் காண்-தன்னால் அல்லது செல்லாமையைப் பிறப்பித்து-
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றேன்-தானே வந்து அவ்வருகு கொடு போவனாக விரைகிறபடியை
தம்பக்கலிலே இச்சையும் பிறப்பித்து-தானே உபாயம் என்னும் புத்தியையும் பிறப்பித்து-அசஹ்ய அபச்சாரத்திலே மிக்கராய்-
அசஹ்ய அபசாரம் ஆவது -நிர் நிபந்தனமாக பகவத் பாகவத விஷயம் என்றால்-
அசஹமானனாய் இருக்கையும் ஆச்சார்ய அபச்சாரமும்-தத் பக்த அபச்சாரமும் -ஸ்ரீ வசன பூஷணம் -3-305-
இவர் தம்முடைய அபசாரங்கள் அனைத்தையும் பொறுத்து-ஐம்புல இன்பங்களில் ஆசை உடையவராய் போந்த தம்மை-
பல நீ காட்டிப் படுப்பாயோ -என்று தாமே சொல்லும்படி செய்து-
தன்னால் அல்லது செல்லாமையைப் பிறப்பித்து-தானே வந்து அவ்வருகு கொடு போவனாக விரைகிறபடியை நினைத்து –
இன்று இப்படி நம்மை விரும்புகிற இவன் -இன்று என்னைப் பொருளாக்கி –
பலகாலமாக நம்மை விட்டு ஆறி இருந்த படி எங்கனே-இன்று நம்மை விரும்புகைக்கு காரணம் என் -என்று பார்த்தார் –
தம் பக்கல் ஒரு காரணத்தையும் கண்டிலர்-
இப் பேறு – தாம் அடியாக வந்தது ஓன்று அல்லாமையாலே-தம் பக்கல் ஒரு வாசி கண்டிலர்-
முன்புத்தையில் காட்டிலும் இப்போது தமக்கு ஒரு ஏற்றம்-உண்டாக நினைத்து இருக்குமவர் அன்றே –

முன்பே தொடங்கி பல காலம் இவரைப்பெற வேண்டும் என்று இருக்கிறவன்-இப்போது இவர்க்கு ஒன்றனைச் செய்தானாக நினைத்து இரானே-
தாங்களும் அறியாதே சாஸ்திரமும் அறியாதே -ஈஸ்வரன் அறிந்த ஸூ ஹ்ருதம் –
ஊரைச் சொன்னாய் -மடி மாங்காய் இட்டு -தலையில் பொகட்டு ஒன்று பத்தாக்கி நடத்திக் கொண்டு போவான் –

இனி -சர்வஞ்ஞன் ஆகிலும்-இதற்கு ஒரு போக்கு சொல்லுமாகில் அவனைக் கேட்போம் -என்று பார்த்து-
இன்று இப்படி இவனைத் தலையாலே தாங்கும் தேவரீர்-முன்பு பலகாலம் இதனைக் கை விட்டு இருப்பான் என்-
இப்போது இதனை விரும்புவான் என் -என்று கேட்டார்-
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே –உம் பக்கல் உண்டான வெறுப்பின்மை அடியாகச் செய்தோம் என்ன -மாட்டானே-
தான் அறிய அதுவும் தன்னாலே வந்தது ஆகையாலும்-
அது தான் பேற்றுக்கு ஈடான சாதனமாகப் போராமையாலும்-
இனி பாதுகாக்கின்றவனுக்கு பாது காக்கப் படும் பொருள்களை பல காலம் விட்டு இருந்த இதற்கு சொல்லலாவது ஓன்று இல்லையே
ஸ்வதந்த்ரம் அன்றோ இப்படி கெடுத்தது என்று -பிற்பாடன் ஆனதற்கு நாணம் உறுவதற்கு மேற்பட –
ஆகையால் சொல்லலாவது ஒரு மாற்றம் காணாமையாலே கவிழ்ந்து நின்று காலாலே தரையைக் கீறினான் –
ஊர்தல் உற்றேன் -ஒன்பதாவது பாசுரத்துக்கு இறைவன் பதில் இல்லை-
அடுத்து உற்றேன் உகந்து பணி செய்ய -தானே சமாதனம் அடைகிறார்-
ப்ராப்யாந்தகதம் இது வரை பண்ணியவை எல்லாம் –

அறம் கடந்தவர் செயல் இது என்று உலகு எலாம் ஆர்ப்ப
நிறம் கரிந்திட நிலம் விரல் கிளைத்திட நின்றான்
இறங்கு கண்ணினன் எல்லழீ முகத்தனன் தலையன்
வெறுங்கை நாற்றினன் விழுதுடை ஆய் அன்ன மெய்யன் – கம்பர் –

முதலிலே
உலகத்தை படைத்தல் முதலானவைகளைச் செய்து-தன் பக்கலில் இச்சையைப் பிறப்பிக்கைக்கு வழி இட்டு வைத்தான் –
அவ் வழியாலே இச்சையைப் பிறப்பித்தான் –
தன்னிடத்திலே உபாயத் தன்மையை எறட்டுக் கொண்டு-
பொய் நின்ற ஞானம் தொடங்கி-இவ்வளவாகத் தன் பக்கலிலே வர நிறுத்தினான் –
பர பக்தி தொடங்கி பரம பக்தி முடிய உள்ள நிலை விசேடங்களைப் பிறப்பித்தான் –
இதனை முன்பே செய்யா விட்டது என் -என்ன –இதற்கு சொல்லலாவது ஓன்று இல்லாமையாலே-
செயல் அற்றவனாய் நிற்கிறான் இத்தனை-என்று பார்த்து-
இப்படி-என் நெஞ்சு நிறையப் புகுந்தான் –
அவன்தம் பக்கல் செய்த அங்கீகாரத்தையும் –அதற்கு அடியான அவனுடைய கிருபை முதலான குணங்களையும் நினைந்து-
கார் ஏழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகுண்டும் ஆரா வயிற்றானை-
இது நிர் ஹேதுகமாக -ஒரு காரணம் இல்லாமலே-இன்று என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தாரே –
–அங்கீ கரிக்கும் அங்கீ காரம் இருக்கும் படியே -என்று
அதிலே ஆழம் கால் பட்டு -ஆச்சர்யத்தை உடையராய்-அமுதம் உண்டு களித்தேனே –உவகை மீதூர்ந்தவராக களிக்கிறார்-

அப்பால ரெங்கம் -கோயில் அடி -காவேரி தாயார் திருவடி வருட -கல்லணை அருகில்-
உபமன்யு துர்வாசர் சாபம்
ஸ்ரீ வைஷ்ணவ ததீயாராதனம் – நெய் சமர்ப்பித்த அப்பம் -அபி நிவேசத்துடன் குடத்தை கட்டிக் கொண்டு –
மேற்கு நோக்கி திரு கண் வளர்ந்து
ஸ்வாமித்வம் -அங்கீகரிக்க அவகாசம் பார்க்கும் ஸ்வாமித்வம் பெரு நகரிலே பேர் பெற்றது -சூர்ணிகை -186-
ஸ்வாமித்வம் -பெரு நகரிலே பேர் பெற்றது -திரு மங்கை ஆழ்வார் -பெரு நகர் -சப்தம்
பெருவரை மதிள்கள் சூழ்ந்த பெருநகர் அரவணை மேல் கருவரை வண்ணன் தென் பேர் கருதி நான் உய்ந்தவாறே -பெரிய திருமொழி 5-9-3-
-அங்கீ கரிக்க அவகாசம் -மோக்ஷம் கூட்டிப் போக -என்ற அர்த்தம் இல்லை -யாதிருச்சிகமாக -இசைவு பார்த்து -திருத்த சந்தர்ப்பம் பார்த்து மா முனிகள் –
-யுக்தி மாத்ரமாக -பாசுரம் அடி ஒற்றி -வியாஜ்யம் மாத்ரமாக -கொண்டு ஸ்வாமி தானே சொத்தை கொள்ள அவகாசம் பார்த்து இருக்க வேண்டும் –
மலைக் கட்டு பிரதேசம் -மாட விளக்கு -என்பதால் பேர் பெற்றது -ஹர்மீதளம்-

எட்டாம் திருவாய் மொழியில் -கீழே -தாம் அபேக்ஷித்தபடியிலே ஈஸ்வரன் கார்யம் செய்வதாக அறுதியிட்டு படியைக் கண்டு
இப்படி நம் பக்கல் வ்யாமோஹம் பண்ணுகைக்கும் –
நாம் அபேக்ஷித்த கார்யம் செய்யும்படி பரதந்த்ரன் ஆகைக்கும்-
நம் பக்கல் ஒரு ஹேதுவில்லை -நிர்ஹேதுகமாக நம்மை விஷயீ கரித்து
அருளினானாம் அத்தனை என்று அறுதியிட்டு -அதுக்கு அடியான அவனுடைய
யாதிருச்சிக அனுகூல்ய நிபந்தனமான பூர்ண அங்கீ காரத்தையும்
அங்கீகார ஸ்த்தைர்யத்தையும்
ஸூகமத்வ அதிசயத்தையும்
புருஷார்த்த பிரதத்வத்தையும்
பிராப்தி பிரதிபந்தக நிவர்த்தகத்வத்தையும்
போக ரஸ பிரதத்வத்தையும்
நித்ய அனுபாவ்யத்வத்தையும்
நிரவாதிக சர்வ பிரகார போக்யத்வத்தையும்
நிர்ஹேதுக உபகாரகத்வத்தையும்
நித்ய கைங்கர்ய பிரதி சம்பந்தித்வத்தையும்
அனுசந்தித்து ஏவம் பூதனான சர்வேஸ்வரன் நிருபாதிக பூர்ண விஷயீ காரத்தைப் பண்ணி
ஸமஸ்த விரோதியும் நிரஸ்தமாம்படி திருப்பேரிலே ஸந்நிஹிதனாய்
நிரதிசய ஆஹ்லாத காரமான அனுபவத்தைப் பிறப்பித்தான் –
இது ஒரு சீல அதிசயமே என்று மிகவும் ஹ்ருஷ்டராகிறார்-

திருமால்  இரும் சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால்
திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே-10-8-1-

என்ன –மனத்தின் துணையும் இல்லை காண்-வார்த்தை மாத்ரமே என் பக்கலில் உள்ளது-
இவன் அடியவனாய் இருந்தான் ஆகில்-
உபாயம் ஆகும் தன்மை நம் பக்கலிலேயாய் இருந்ததாகில்-
இவனுடைய பேறு நம் பேறாக இருந்ததாகில்-
அறிவுடைய சேதனன் என்கிற வேறு பாட்டுக்கு -வார்த்தை மாத்ரம் உண்டாயிற்றாகில் –
இதற்கு அவ்வருகு கொண்டு கார்யம் என் -என்று இருக்குமவன் அன்றோ-

ராவணன் தம்பிக்கு மித்ர பாவமே அமையும் என்று இருக்கிறவன் -இவருக்கு உக்திக்கு அவ்வருகு ஓன்று வேணும் என்று இருக்குமோ –சேஷத்வம் ஸ்வரூபம் ஆகில் -உபாய பாவம் நம் தலையிலே கிடந்ததாகில் -அத்வேஷம் உண்டாகில் -நம் பேறாக விஷயீ கரிக்கைக்கு உக்திக்கு அவ்வருகு உண்டோ -என்று இரா நின்றான் அவன் –

வாயால் சொன்னதுக்கு அடி நெஞ்சில் உள்ளதா என்று பார்ப்பவன் அல்லன் –
கை விடும் பொழுது – தானே பார்ப்பான் -உளம் தொட்டு -பார்ப்பவன் –

இது தான் ஒரு மலை அன்றோ அவனுக்கு -என்ன ரசோக்தி –வார்த்தையை இல்லை என்ன ஒண்ணாது இறே அவனுக்கு-யுக்தியே பாரமாக நினைப்பவன் –நம வென்னலாம் கடமை அது சுமந்தார்கட்கே –இதற்கு அடி ஆராயுமவன் அல்லனே-

ஆக –இவருக்கு ஓன்று இல்லை என்னவுமாய்-அவனக்கு இது ஓன்று உண்டு என்னவுமாம் படி-இருக்கிறது இது தானே-பலத்துக்கு சத்ருசமாக ஒன்றும் இல்லை என்று இவர் -அவன் யுக்தி என்றாலே மனசால் சொல்லி இருப்பான் என்று எண்ணுபவன் அன்றோ –

மனத்தோடு படாமல் சொன்னது தன்னை-மனத்தோடு பட்டதாக்கிக் கொடுப்பாரும் அருகே உண்டு என்பார் –திருமால் –என்கிறார் –

வந்து –அவன் வருவதே -என்று இவர் ஆச்சர்யப் படுவதாய் நிற்க-நீர் வேட்கை கொண்டவன்-
தண்ணீர் இருந்த இடத்தை வரும் அத்தனை அன்றோ என்றாயிற்று அவன் வார்த்தை-

என் நெஞ்சு நிறையப் புகுந்தான் –நிறைய -ஐம் புல இன்பங்களுக்கு இடம் இல்லாத படி புகுந்தான்-என் நெஞ்சிலே பாழ் தீரப் புகுந்தான் –எல்லாருக்கும் அடையப் படுபவனாக இருப்பவன் காண்-என்னை அடையத் தக்கவனாக கொள்ளுகிறான்-

இரண்டாம் அடியில்- திரு மால் என்றது -புருஷகாரத்தின் தன்மையைச் சொல்லிற்று-
நான்காம் அடியில் –திருமால் -என்றது -த்வயத்தில் பின் வாக்யத்தில் கூறப் பட்ட-திருமகள் சம்பந்தத்தை சொல்லுகிறது –

———-

பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
காரேழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகு உண்டும்
ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே–10-8-2-

தான் சர்வேஸ்வரனாய் வைத்து-என்னோடு கலக்கப் பெறாமையாலே குறைவாளனானவன்-இன்று வந்து-நிர்ஹேதுகமாக என் மனத்தின் கண் புகுந்து-நிறைவாளன் ஆனான்-

பேரேன் என்று –பேரேன் -பேரேன் -என்னா நின்றான் ஆயிற்று
நீ போவுதியோ இருப்புதியோ -என்று கேட்பாரும் இன்றிக்கே-உதாசீனராக – இருக்கச் செய்தே-
இங்கு பிராட்டி தன் விஷயத்தில் -அகலகில்லேன் இறையும் -சொல்லும் வார்த்தையை-என் விஷயத்தில் சொல்லா நின்றான்-
நான் போகேன் போகேன் -என்று சூழ்த்துக் கொடா நின்றான் ஆயிற்று-தன்னை ஐயப் படுவாரும் இன்றிக்கே இருக்க-

அடங்கப் பிடித்தேனே –இப்படி அபி நிவிஷ்டனாய் இருக்கிறவனை பூர்ணன் ஆக்கினேன்-அவனுடைய நிறைந்த அங்கீகாரத்துக்கு பாத்ரம் ஆனேன் –
பிரளயத்தில் அகப்பட்ட உலகத்தை எடுக்கை யாவது-பின்னையும் இவ் உலக வாழ்வினைப் பூண் கட்டுகை அன்றோ-
பரம பதத்தளவும் செல்ல நடத்த பெறாமையாலே குறைப் பட்டு அன்றோ கிடப்பது –
நாம் எல்லாம் செய்தோம் என்று அவன் தெகுட்டும்படி செய்து கொண்டேன் –
அவன் என்னை அவ்வளவும் கொண்டு போம் படி நான் உடன் படுகையாலே-அவனுடைய பெரும் காதல் தீர்ந்ததாயிற்று-

—————

பிடித்தேன்  பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான்
அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே–10-8-3-

பிடித்தேன் –தலை மேலே தாள் இணைகள் -10-6-6-என்று-அவன் திருவடிகளை தலை மேல் கொண்டு வந்து வைக்கையாலே
அவற்றை உரக்கப் பிடித்துக் -கெட்டியாக பிடித்துக்-கொண்டேன் –ஐம்புல இன்பங்களின் கால் கடையிலே துவண்டு போந்தவர்-அவன் திருவடிகளில் கிட்டிக் கொடு-நிற்கக் கண்ட இத்தனை-ஸ்வயம் பிரபா புலத்தில் புக்க முதலிகளைக் கண்ணைச் செம்பளிக்கச் சொல்லி அவன் கரையிலே ஏற விட்டால் போலேயும் -ஸ்ரீ மதுரையில் உறங்கினவர்கள் ஸ்ரீ மத் த்வாரகையிலே விழித்தால் போலேயும் இப்படி திருப்பேரான் அடி சேர்வது எனக்கு எளிது ஆவதே -என்று களிக்கிறார்-

பிறவி கெடுத்தேன் –பிறவியை மறுவல் இடாதபடி போக்கினேன் –ஸ்தூல சரீர விமோசனம்மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை –மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை மடித்தேன் –சூஷ்ம சரீர விமோசனம் 
இவ் உலக வாழ்கையில் நிற்கைக்கு அடியான மாயை உண்டு -மூல பிரகிருதி-அதனைத் திரிய விடுவித்தேன்-நிவர்த்தம் ஆக்கினேன் –
சூஷ்ம சரீரத்தின் நாசம் சொன்னபடி –தொடருகிற பாம்பினைத் திரிய விடுவிப்பாரைப் போலே-
எம்பெருமானார் -உலாவி அருளுகிறவர் முடியப் போகாதே-நடுவே மீண்டு அருள-
எம்பார் கதவினை ஒருச்சரித்து-திருமால் இரும் சோலை ஆகாதே திரு உள்ளத்தில் ஓடுகிறது-என்ன-ஆம் அப்படியே -என்று அருளிச் செய்தார் –

————–

எளிது  ஆயினவாறு என்று என் கண்கள் களிப்பக்
களிது ஆகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப் பேரான்
தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே–10-8-4-

எளிது ஆயினவாறு –அரியது எளிதாகும் ஆற்றலால் மாற்றி
பெருக முயல்வாரைப் பெற்றால் -கரியதோர்
வெண் கோட்டு மால் யானை வென்றி முடித்தது அன்றே
தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து
—- -இரண்டாம் திருவந்தாதி -22-பெறுதற்கு அரியனான பகவானை பெறுதலும் எளிதாகும் –எங்கே கண்டோம் -என்றால்
கரியது ஒரு வெண் கோட்டு மால் யானை வென்றி முடித்தன்றே-தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து –அவன் தானே அரை குலையத் தலை குத்திய-மடுவின் கரையிலே விழ அன்றோ யானை பெற்றது –புண்டரீக மகரிஷி பெற்றார் -கைகளால் கடல் நீரை இரைக்கப் புக்கு-
அரியதான பகவல் லாபம் -சக்தி யோகம் -ஸூ ரக்ஷண அர்த்தமாக இவன் பண்ணும் பிரவர்திகளை மாற்றி-நம்மை பெறுக அவன் முயல்வானாக இருக்க –-எளிது ஆயினவாறு -என்று என் கண்கள் களிப்பக் – காண்பதற்கு அரிய விஷயம் இங்கனே எளிது ஆவதே என்று-காணக் கருதும் என் கண்ணே -9-4-1-என்கிறபடியே விடாய்த்த கண்கள் களிக்கும் படி –

தனக்கு திரு நாட்டுக்கு கொடுப்பானாய் இருக்கிற எம்பெருமானுடைய படியை -நீர்மையை –அனுசந்தித்து -இங்கனே எளிதாவதே -என்று என்னுடைய இந்த்ரியங்களோடே கூடக் களித்த மனசை யுடையேனாய்க் களியா நின்றேன்–கரணங்களும் களிக்க நானும் களியா நின்றேன் – -என்கிறார் -இப்படி திருப்பேரிலே தான் எழுந்து அருளி இருக்கிற இருப்பை எனக்கு காட்டித் தந்து அருளின இவன் இனித் திருநாட்டையும் தந்து அருளும் என்கிறார்–-களிது ஆகிய சிந்தையனாய்க் –களித்த மனத்தினை உடையனாய் -என்றது–நெடியானே என்று கிடக்கும் என் மனம் களிக்கப் பெற்றது-8-8-1- என்றபடி-

களிக்கின்றேன் –கூவியும் காணப் பெற்றேன் -8-8-7-என்று நானும்-களியா நின்றேன்-
உறுப்புகளும் தாமும் ஒக்க விடாய்த்தவர்-உறுப்புகளும் தாமும் ஒக்க களிக்கப் பெற்றார் –முடியானேயில் தாமும் தம்முடைய கரணங்களும் விடாய்த்த படி சொல்லிற்று -இங்கு தாமும் தம்முடைய கரணங்களும் களித்த படி சொல்லுகிறது-

————–

வானே  தருவான் எனக்காய் என்னோடே ஒட்டி
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே–10-8-5-

வானே தருவான் எனக்காய் –எனக்கு வானே தருவானாய் –இங்கே வைத்து கார்யம் கொள்ளும் அதனையும் தவிர்ந்தான் –இன்னம் ஒரு பிரபந்தம் இடுவித்துக் கொள்ளுகையும் தவிர்ந்தான்-
வானே -ஏவகாரம்-பிரமன் முதலாயினோர்கள் குடி இருப்பும்-இவருக்குத் தரம் அன்று -என்று அதனையும் தவிர்ந்தான்-எனக்காய்-இவ் உலகுள் உழன்று திரிகின்ற எனக்கு-நித்ய சூரிகள் இருப்பை தருவானாக –

ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று –ஊனேய் குரம்பை இதனுள் -இன்று -புகுந்து -செஞ்சொல் கவியின் பிரமேயம் -–இவ் உடம்போடு உம்மைக் கொடு போக வேண்டும் -என்று-விளம்பித்தேன் ஆகில் இதனை ஒழியக் கொடு-போகப் பார்த்த பின்பு-ஆறி இருப்பேனோ -என்னா நின்றான்-ஆத்மாவுக்கு இருப்பிடமாய் இருக்கும் சரீரத்தில்-மேல் எழக் கலக்கை அன்றிக்கே-விடாயர் மடுவிலே புகுமாறு போலே புகா நின்றான் –
எனது உடலே அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே-ஒரு மா நொடியும் பிரியாதே இதனுள் புகுந்து நின்றான் 

தானே-கர்மங்களுக்கு கட்டுப் படாதவனான தானே –இவர் பல காலம் தேகத்தினை விரும்பி விட மாட்டாதே போந்தார்-இப்போது இவருக்கு தன் பக்கலில் ருசி பிறந்தவாறே-
இதனோடு தொற்று அல்லாத தானே-இதிலே வந்து புகுரா நின்றான் –
அவனைப் போலே முன்னடி தோற்றாது ஒழியில் அன்றோ இவர்-இச் சரீரத்தின் தண்மையைக் காணாது ஒழிவது-
இதன் தண்மையை நினைந்து –இதனுள் -என்கிறார் –காதல் கண்ணை மறைத்தது அவனுக்கு- இவர் மயர்வற மதி நலம் அருள பெற்றவர் அன்றோ
தானே-
புகுகிற போது தானே யாய்-பின்னர் நானும் அவன் செய்யும் கார்யத்துக்கு அனுகூலமாக இருந்தேனோ –

தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே –தேன் மிக்க பொழிலை உடைத்தான-திருப் பேர் நகரை உடையவன் காண்-என்னுடைய சரீரத்திலே புகுந்து
கண நேரமும் விட மாட்டாதே ஒழிகிறான்-என்ன குறை உண்டாய் இப்படிப் பட்டான் –

——————–

திருப் பேர்  நகரான் திருமால் இரும் சோலைப்
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே –10-8-6-

இன்று வந்து –இவ்வத்மாவுக்கு நேற்று ஒரு நினைவு இன்றிக்கே இருக்க-வந்து கொடு நிற்கக் கண்ட இத்தனை –

அமுதம் உண்டு களித்தேனே –விஷ உணவினை உண்டு நரகத்துக்குப் போகா நிற்க-
நடுவே நின்று களிக்கை அன்றிக்கே -அமுதம் உண்டு களித்தேனே —
அவனுடைய கொண்டாட்டம் ஆகிற அமுதத்தை உண்டு களித்தேனே –என்னுதல் –
ஒரு நாளைக்கு ஒரு நாள் அவனுக்கும் ஸ்ப்ருஹணீயனாய்-அவனுடைய குணங்கள் ஆகிற அமுதத்தை உண்டு களித்தேன்-என்னுதல்-களித்தேனே –
நாவல் இட்டு உழி தருகின்றோம் -என்கிறபடியே-செருக்காலே களிக்கிற களிப்பே அன்றோ இது-நமன் முதலானோர் தலைகளிலே அடி இட்டுக் களிக்கப் பெற்றேன்-ஷிபாமி என்று அவனுடைய அவன் உபேக்ஷைக்கு இலக்காகாதே -அவன் பஹு மானத்துக்கு இலக்கானால் -ப்ரீதி உள் அடங்காது இறே -தனக்கு வர்த்தித்து அருளலாம் கோயில்கள் -அநேகம் யுண்டாய் இருக்க -ஓர் இடம் இல்லாதாரைப் போலே -இருப்பேன் என்று பிரார்த்தித்திக் கொண்டு என்னுடைய ஹிருதயத்திலே நிர்ஹேதுகமாகப் புகுந்தான் என்று ப்ரீதர் ஆகிறார் –

————–

உண்டு  களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே-10-8-7-

தொண்டு உகளித்து –தொண்டாலே உகப்புத் தலை மண்டை இட்டு –

அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்-முடிவிலே -தொழும் சொல்லுப் பெற்றேன் -அனுபவ ப்ரீதி தலை மண்டையிட்டால் -அதன் மேலே நம என்று புத்தி பூர்வகமாக சொல்லும் சொல்லைப் பெற்றேன் -நம இத்யேவ வாதின -இறே -அதாவது ப்ரீதி வழிந்த சொல்லாலே திருவாய் மொழி பாடி அடிமை செய்யப் பெறுகை –

கண்டு களிப்ப –மெய் கொள்ளக் காண விரும்பும் என் கண்கள் என்று விடாய்த்த கண்கள் கண்டு களிக்கும் படியாக –

கண்ணுள் நின்று அகலானே –நான் போகச் சொல்லினும் கண் வட்டத்தில்-நின்றும் அகலுகின்றிலன்-
ஐம் புல இன்பங்களில் ஆசை உள்ளவர்கள் போகச் சொன்னாலும்-தூணைக் கட்டிக் கொண்டு போகாதவாறு போலே –
இப்படி அவனை அனுபவித்து களிக்கப் பெற்ற எனக்கு-மேல் ஒரு குறை உண்டோ –

———-

கண்ணுள்  நின்று அகலான் கருத்தின் கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –10-8-8-

கண்ணுள் நின்று அகலான் –எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருப்பதற்கு விஷயம் ஆகா நின்றான் -என்றது –சதா பஸ்யந்தி -எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருப்பதற்கு-வேறு தனக்கு ஒரு உலகம் உண்டு என்று இருக்கின்றிலன் -என்றபடி –

கருத்தின் கண் பெரியன் –உபய விபூதி நாதனாய் இருத்தலால் வரும்-வேறு ஒன்றிலே நோக்கு உள்ளவனாய் இருத்தல் முழுதும் தீர்ந்து
இவரை அவ்வருகே கொண்டு போகையிலும் -ஆதி வாஹிகரை ஏவுகையிலும்-
வீடு திருத்த -தான் முற்பாடனாய்க் கொண்டு போகையிலும் -பாரியா நின்றான் –
அன்றிக்கே -நம் கார்யத்தில் இவன் விரைகிறபடி நம்மால் எண்ணி முடியும் அளவு அன்று -என்னுதல் -என்றது –இவ்வளவினன் -என்று எண்ண முடியாதவன் -என்றபடி –இது தான்- எவனுக்கு அறியப் படாதது -என்கிற –ஸ்வரூபத்தால் -பொது நோக்கால் அன்று -பின்னர் எதில் எண்ணில்-நம் கார்யத்தில் இங்கனே இருக்கும்--என் மனத்துப் புகுந்தான் -என்றதனோடு சேர வேண்டும் அன்றோ -கருத்தின் கண் பெரியன் -என்கிற இதுவும்

எண்ணில் நுண் பொருள் -தாம் தாமே எண்ண நினைப்பார்க்கு துர்க்க்ரஹமான வஸ்து -ஏழிசையின் சுவை தானே-எண்ணாமல் இருக்க ஒண்ணாத போக்யதையைச் சொல்லுகிறது -சப்த ஸ்வரங்கள் இறே பிரதானம் –

என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –சக்யா லோபயிதம் ந அஹம் ஐஸ்வர்யேண நநேநவா-அனன்யா ராகவேண அஹம் பாஸ்கரேண பிரபா யதா -சுந்தர -21-15- பிராட்டி போலே பிரிக்க ஒண்ணாதபடி புகுந்தான்–எனது ஆவியுள் கலந்த -8-8-4- என்னுமாறு போலே-
அறப் பெரியவன் ஆனவன் இப்படி நம் பக்கல் மேல் விழக் கூடுமோ -என்று தாமும் ஐயம் கொண்டார்- அதற்கு வேறு போக்கடி கண்டிலர்-திண்ணம்-சர்வேஸ்வரன் ஒரு சம்சாரி ஹிருதயத்திலே இப்படி மேல் விழக் கூடுமோ -என்று சங்கிக்க வேண்டாம் -இது த்ருடம் —திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே-இன்றே புகுந்தான் -செறிந்து புகுந்தான் -திண்ணம் புகுந்தான் – நிர்ஹேதுகமாக -நிச்சயமாக திரும்பிப் போகாத படி புகுந்தான் –

————-

இன்று  என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே–10-8-9-

இன்று என்னை அங்கீ கரிக்கைக்கும் முன்பு-என்னை பாராமுகம் செய்தமைக்கும் காரணம் என் என்று கேட்க வேண்டி இருந்தேன் –இது தனக்குத் தானே சிந்தித்தலில் நோக்கு –
அன்றிக்கே
சர்வேஸ்வரன் தன்னை பரமபததுக்கு கொடு போகையில்-விரைகிறபடியைக் கண்டு
இன்று என் அளவு அல்லாதபடி விரைகிற தேவர்-இதற்கு முன்பு பல காலம் விட்டு ஆறி இருந்தமை எங்கனே என்று அவனைக் கேட்கிறார் -என்னவுமாம் –
அன்றிக்கே
மூன்றாவது அவதாரிகை அதி சங்கையிலே நோக்கு – இப்படி விரைகிறமை மெய்யாகில் முன்பு விட்டு ஆறி இருக்கக் கூடாது -என்கிறார்-

ஓன்று எனக்கு அருள் செய்ய –முன்பு கை விட்டதற்கு காரணம் சொல்லவுமாம் –இன்று என்னை அங்கீகரித்ததற்கு காரணம் சொல்லவுமாம்- ஒன்று சொல்ல மற்றவற்றுக்கு விரோதிக்கும் -நிர்ஹேதுக விஷயீ காரத்துக்கு ஹேது பிரஸ்னம் பண்ணில் சர்வஞ்னுக்கும் உத்தரம் இல்லையே –

இன்று என்னைப் பொருள் ஆக்கி –அசேதனத்தைப் போலே இருந்த என்னை-ஒரு பொருளாம் படி செய்து-பொருள் அல்லாத என்னை -5-7-8- என்றாரே” அன்றோ -தன்னை-

தன்னை –
பெரு மக்களால் விரும்பத் தக்கவனான தன்னை –

என்னுள் வைத்தான் –
பிறர்க்கு இடம் இல்லாதபடி தன்னை-முற்றூட்டாக என்னுள்ளே கொடு வந்து வைத்தான் –

அன்று –என்று அவன் திருவருளைப் பெறுவதற்கு-முன்புள்ள நாள்கள் எல்லாவற்றையும் சொல்கிறார் –
இன்று -என்கிறது-மயர்வற மதி நலம் அருளப் பெற்ற அதற்கு பின்புள்ள காலத்தை`

உணர்த்தல் உற்றேன் என்ற இவரே
அடுத்த பாசுரத்தில் உற்றேன் உகந்து பணி செய்து -என்று சமாதானம் அடைகிறார்-
ஆகையால் அவன் விடை கூறாது ஒழிந்தது போதருதலால்-அது தன்னை விரித்து பேசுகிறார்
இது நாம் சொல்ல வேண்டுமோ -நீர் அறியீரோ -என்றான் –
அடியேன் அறியேன் -சர்வஞ்ஞனான நீயே அருள வேண்டும் -என்றார்
ஆனால் நாம் உம்முடைய நெஞ்சில் புகுந்த காலத்தில் உடன் பட்டு இருந்தீர் -அதனாலே காணும் -என்றான்
ஓம் அது தான் உண்டோ –யான் ஒட்டி என்னுள் இருத்துவம் என்றிலன் –1-7-7-என்றார்
அது இல்லை யாகிலும் புகுந்த பின்பு நம்மை விரும்பினீரே -என்றான்
மருவித் தொழும் மனமே தந்தாய் -2-7-7-என்கிறபடியே அதுவும் தேவர் செய்த இத்தனை -என்றார் –
ஓம் காணும் அது இல்லை யாகிலும் நம்மை விரும்பும் போது நம்மோடு கூட வேறு விஷயங்களை விரும்பாது இருந்தீரே -என்றான் –
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -2-7-8-என்கிறபடியே அதுவும் தேவரே அன்றோ செய்தது -என்றார் –
இவை ஓன்று இன்றே யாகிலும் நாம் தந்த மதி நலத்தை வளர்த்துப் போந்தீரே -என்றான்-
காதல் கடல் புரைய விளைவித்த கார் அமர் மேனிக் கண்ணன் -5-3-4-என்கிறபடியே-
அதுவும் தேவர் அன்றோ செய்தது -என்றார்
இப்படி இவர் முடியத் தொடர்ந்தவாறே-பெரும் கடல் மண்டினாரைப் போலே போக்கற்றான் –

இதற்கு ஈஸ்வரன் சொன்ன விடை தான் என்ன-என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க –
இவர் தலையிலே ஒரு பழியினை ஏறட்டு-பல காலம் இழந்து இருந்த நாம் சொல்லுவது என் -என்று நாணம் உற்றவனாய்-காலாலே தரையைக் கீறி நிற்கும் இத்தனை போக்கி-வேறு விடை உண்டோ என்று அருளிச் செய்தார்-
மாமியர் குழுவில் வந்தான் ஆம் என மைந்தன் நிற்ப -கம்பர் -தாரை முன்னால் இளைய பெருமாள் நிலை –

தாமரை வதனம் சாய்த்து, தனுநெடுந் தரையின் ஊன்றி,
மாமியர் குழுவின் வந்தான் ஆம் என, மைந்தன் நிற்ப,
பூமியில் அணங்கு அனார்தம் பொது இடைப் புகுந்து, பொன்தோள்
தூமன நெடுங்கண் தாரை, நடுங்குவாள், இனைய சொன்னாள்.


அதாவது -முன்பு ருசி இல்லாமையாலே -என்ன மாட்டான்-
இப்பொழுது சாதனங்களைச் செய்கையாலே -என்ன மாட்டான்-
ஆனால் பின்னை ஈஸ்வரனுக்கு உயர்வு தாழ்வுகளுடன்-படைத்தல் -அருள் அற்று இருத்தல் முதலிய குற்றங்கள் வருதல்-வைஷம்யம் நைர்கருண்யம் வருமே –
எல்லார்க்கும் மோஷத்தை கொடுக்க வேண்டி வருதல் செய்யாதோ என்னில் -அது செய்யாது-சர்வ முக்தி பிரசங்கம் வருமே –
அடியிலே வெறுப்பின்மையும்-இச்சையும் பிறப்பதற்கு தான் கிருஷி பண்ணி-அது பக்குவமாம் அளவும் பார்த்து இருப்பவன் ஆகையாலே –அதிகாரி விசேஷணம் -ருசி –

கேட்டதற்கு அவன் மறுமாற்றம் சொல்லக் காணாமையாலே-
அறிந்தோம் -இதற்கு காரணம் இங்கனே ஆக வேண்டும் என்று பார்த்தார்-
தன்னுடைய ரஷணம் வெறுப்பிற்கு விஷயமாகி தவிர்ந்து-விலக்காத சமயம் பார்த்திருந்தான் ஆதல்-
தன்னை ஒழிந்த வற்றில் சாதனா புத்தி தவிரும் அளவும் பார்த்து இருந்தான் ஆகில் ஆக அடுக்கும் -என்று பார்த்தார் –
ஆனால் இதனை அவன் உத்தரமாக அருளிச் செய்யாதது என் என்னில்-
அறிவு காரணமாக வருகிற வெறுப்பின்மையை சாதனம் என்ன மாட்டானே-
உபாயமாக இருக்கும் தன்மை தன் தலையிலே ஆயிற்று-
பல காலம் இவர் தலையிலே பழி இட்டு இருந்த நாம் எதனைச் சொல்லுவது-என்று பேசாதே இருந்தான் –
ப்ரசீதந்து பவந்த மே ஹ்ரீ ஏஷா ஹி மமாதுலா-யத் ஈத்ருசை அஹம் விப்ரை உபஸ்தேயை உபஸ்தித -ஆரண்யம் -10-9- என்னால் அடையத் தக்கவர்களான இப்படிப் பட்ட-அந்தணர்களால் நான் அடையப் பட்டேன் என்பது எனக்கு-மிக்க நாணமாய் இருக்கிறது
என்கிறபடியே பிற்பாட்டுக்கு நாணமுற்று நிற்குமவன் அன்றோ-
இவர் தாம் -லஜ்ஜித்த அவனை -எடுத்து வைத்து வார்த்தை சொல்லும்படி ஆயிற்று அவன் நிலை-
அறிவு பற்றி வருகின்ற ருசி தான் ஸ்வரூபத்தின் வேறுபாடு ஆகாதே-
சைத்தன்ய பிரயுக்தமான ருசி -ஸ்வரூபத்துடன் சேர்ந்தது -உபாயம் ஸ்வரூபம் உடன் சேராதே -பற்ற வேண்டுமே –
நீர் பெற வேண்டிய பேற்றினை பெற்றீர் ஆகில் அதுவே அமையாதோ -என்ன-அதுவே அமையும் -என்கிறார்-
தேங்காய்க்கு இளநீர் புக்க வழி ஆராய்ந்தோ-விடாய்த்தவன் இள நீர் குடிப்பது-வரவாறு ஒன்றி இல்லை -வாழ்வு இனிதானதே என்றாரே –

பசியும் ருசியும் உபாயம் ஆகாதே -அனுபவத்துக்கு வேண்டிய அதிகாரி விசேஷணம் தானே-

————

உற்றேன்  உகந்து பணி செய்ய உன பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்
கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–10-8-10-

இவர் கேட்ட இதற்கு காரணம் காணாமையாலே-விடை அளித்தால் அற்றவனாய்-உமக்கு மேல் செய்ய வேண்டுவது என் -என்ன- ப்ரீதி முன்னாக அடிமை செய்யப் பெற்றேன் இதுவே இன்னம் வேண்டுவது -என்கிறார்-கைங்கர்ய பிரதி சம்பந்தியான அவன் திருவடிகளில் அடிமை செய்வதும் -கைங்கர்யம் செய்வதும் பிராப்தம் –

அவன் தானே செய்தான் என்னுமன்று அவனுக்கு வைஷம்ய நைர்க்ருண்யமும் சர்வ முக்தியும்  பிரசங்கியாதோ  -என்னில் -இத்தலையில் ருசியை அபேக்ஷித்துச் செய்கையாலே அவனுக்கு அது தட்டாது -அது ஹேது வென்று ஈஸ்வரனுக்கு உத்தரம் ஆனாலோ என்னில் -அது உபாயமாக மாட்டாது -பல வ்யாப்தமானது இறே உபாயம் ஆவது –இந்த ருசி அதிகார ஸ்வரூபம் ஆகையால் தத் விசேஷணமாம் அத்தனை -உபாயம்  சஹகாரி நிரபேஷம் ஆகையாலும் இந்த ருசி உபாயம் ஆக மாட்டாது –இது உபாயம் அல்லாமையாலே இவர்க்கு இல்லை என்ன-சர்வ முக்தி பிரசங்கம் நீங்குவதற்காக அவனுக்கு உண்டு என்னவுமாம் 

உகந்து பணி செய்ய உன பாதம் பெற்றேன் –ப்ரீதியினால் தூண்டப் பட்டவனாய்க் கொண்டு-திரு வாய் மொழி பாடி-உன் திருவடிகளை அனுபவிக்கப் பெற்றேன்-
உகந்து பணி செய்கை சாதனமாக-மேல் சாதனத்தால் அடையக் கூடிய பேற்றினைச் சொல்லுகிறது அன்று–இரண்டும் ஒரே காலத்திலே உள்ளன ஆகையாலே-

ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய் –இது தானே மாறி மாறி உயிர் உள்ள அளவும் செல்லுகையே அன்றோ வேண்டுவது- மீண்டு வருகை இன்றி ஒழிகை யாவது -மீளாது ஒழிகை-சம்பந்தம் இல்லாததாக இருக்கிறதோ என்னில்-
எந்தாய் –இவ் வநுபவம் ஆத்மாவோடு கூடியது என்கிறது –ஸ்வரூப பிராப்தம் –
இத்தலைக்கு அடிமையும்-தேவர்க்கு ஏவும் தனமையை உடைய தலைமைத் தன்மையும் அன்றோ ஸ்வரூபம்–இவர் விரும்பிய போது அவனும் செய்கிறோம் என்ன-ப்ரீதராய் அருளிச் செய்கிறார் –

———–

நில்லா  அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே–10-8-11-

நல்லார் பலர் வாழ்-திருவாய் மொழி கேட்டு வாழும் -தொழுவதும் எழுவதும் ஒன்றே போலே
திருவாய் மொழி கேட்டு பாடுவதே வாழ்வே-நல்லார் நவில் குருகூர் -திரு விருத்தம் -100-திருச் சங்கணித் துறை சத்வ குணம் உள்ளார் சேரும் திரு நகரி –ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் அனைவரும் சேர்ந்து அருளிய குருகூர் அன்றோ

இத் திருவாய் மொழியினை கற்க வல்லவர்கள்-இட்ட வழக்கு பரம பதம் -என்கிறார் –
இவர்களும் உடையவர் போலே ஆவார்கள் என்றவாறு –வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே-பொன் சூழ் விசும்பு ஹிரண்மயமான விஷ்ணோ பரமம் பதம் -ஆளுவார்கள்-பாகவதர்கள் தாங்களே நிர்வாகராக நடத்துவது பரமபதம்

இவை பத்தும் வல்லார் தொண்டர் – இப்பத்தினை கற்க வல்லவர்கள்-செஞ்சொற் கவிகாள் 10-7-1- -என்கிறபடியே-வாக்காலே அடிமை செய்யும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –

ஆள்வது சூழ் பொன் விசும்பே--எல்லை இல்லாத தேஜோ மயமான பரம பதத்தை-ஆயிற்று ஆளுவது-இஷ்ட பிராப்தி – இத் திருவாய் மொழியைக் கற்றவர்கள் சென்றால்-
ஆண்மின்கள் வானகம் -10-9-8-என்று ஆயிற்று-அங்கு உள்ளார் சொல்லுவது-

ஆர்த்தி ஹரத்வம் -பத்தாம் பத்து – சக்தி பிராப்தி பூர்த்தி -முன் மூன்று பதிகங்களில்

திருப் பேர் –பேரில் மணாளனை ஒரு நாள் சுற்றம் கடைசியில் அங்கும் -திவ்ய தேச பதிகங்கள் முற்றும் இத்துடன் –

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -94-மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும் –இருத்தும் வியந்து -8-7–

April 3, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

வைதிகர்கள் தானே அவனது திவ்ய மங்கள விக்ரஹத்தையும் செந்தாமரைக்கண்ணும் அறிவார்கள்
உள்ளத்தில் இருந்து காட்சி கொடுப்பான்-இருத்தும் வியந்து -8-7–இதன் விவரணம்–தலைவியைக் கண்ட பாங்கன் -மீண்டு -தலைவனைக் யடுத்து வியந்து கூறல் —தோழன் இடம் தலைவியின் ஏற்றம் சொல்லி தேக ஆத்ம குணங்களைக் காணச் சொல்ல-அவன் சென்று மீண்டு வியந்து -வைதிகரான உன்னைப் போல்வார் தானே இவள் அழகைக் காணலாம்-இருவர் பெருமையையும் சொல்லும் பாசுரம் இது -அன்றோ –வைதிகரே-உயர் சிறப்பு ஏவகாரம் -வைதிகர் மட்டுமே அறிய முடியும்–சீதா வைபவம் அறியாத திருவடி –-மோதிரம் கொடுத்து அனுப்பி காண வைக்க-அவளைக் கண்ட பின் துஷ்கரம் க்ருதவான் ராமன்-இவளைப் பிரிந்து இன்னும் உயிர் உடன் உள்ளானே என்று அருளிச் செய்தது போல்
கண்டனன் -மூன்று பண்புகள் சேர்ந்து-கற்பு நற்பிறப்பு இத்யாதிகள் புகழ்ந்து அருளிச் செய்தானே

அவதாரிகை – துர்மானத்தாலே இழப்பாரும் அறிவு கேட்டாலே இழப்பாருமாகா நிற்பர்கள் -என்றார் (கீழ் இரண்டு பாசுரங்களால் -உமக்கு குறை இல்லையே -என்ன –எனக்கும் ஒரு குறை உண்டாக்கி வைத்தாயே –முன்னடி தோற்றாதபடி -மயர்வற மதி நலம் அருளினாயே –பக்தி ரூபாபன்ன ஜ்ஞானத்தை-இறே அருளிற்று –அந்த பக்தி பாரவஸ்யத்தாலே சொல்ல மாட்டுகிறிலேன் என்னுதல் –
வள வேழ் உலகின் படியே ( 1-5 )அயோக்யா அனுசந்தானத்தாலே ஓன்றும் சொல்ல மாட்டுகிறிலேன் என்னுதல் –

தலைவியைக் கண்ட பாங்கன் மீண்டு தலைவனை அடுத்து வியந்து கூறல்

மாலை நல் நாவில் கொள்ளார் -என்று நாட்டாரைப் பழித்தீர் -நீர் தாம் நம்மை யுள்ளபடி அறிந்து சொன்னீரே என்று ஈஸ்வர அபிப்ராயமாக-விலக்ஷணரான வைதிகர் அன்றோ அது செய்ய வல்லார்
நான் அவர்கள் போன வழியே போமவன் அன்றோ -என்று அருளிச் செய்கிறார் –

மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும் வைதிகரே
மெய்ப்படியால் உன் திருவடிச் சூடும் தகைமையினார்
எப்படி யூராமி லைக்கக் குருட்டாமிலைக்கும் என்னும்
அப்படி யானும் சொன்னேன் அடியேன் மற்று யாது என்பனே
— – 94-தலைவியைப் பார்த்த தோழன் தலைவனிடம் வியந்து பேசுதல் –

மை படி மேனியும்–நீல நிறம் செறிந்த திருமேனியையும்
செம் தாமரை கண்ணும்–செந்தாமரை மலர் போன்ற திருக் கண்களையு முடைய
உன்–உனது
திரு அடி–திருவடித் தாமரை மலர்களை
வைதிகரே–வைதிகர்கள் தாமே
மெய் படியால்–உண்மையான நெறியால்
சூடும்–தம் தலைமேற்கொண்டு வணங்கும்படியான
தகைமையினார்–தன்மையுடையவர்கள்;
எப்படி ஊர் ஆ மிலைக்க குருடு ஆ மிலைக்கும் என்னும் அப்படி–எப்படி (வெளியில் மேய்ந்துமீண்டு) ஊர்வந்து சேர்ந்த
(கண்தெரியாத) பசுக்கள் (இடமறிந்து) கனைக்கக் குருட்டுப் பசுவும் கூடக் கனைக்கும்மென்று (உலகம்) சொல்லுமோ, அப்படியே
யானும் சொன்னேன்–யானும் உன்னைத் துதித்தேன்.
அடியேன் மற்று யாது என்பன்–அடியவனான நான் வேறு என்ன வென்று சொல்லுவேன்?

இருந்தவன் தான் வந்து இங்கு இவர் எண்ணம் எல்லாம்
திருந்த விவர் தம் திறத்தே செய்து -பொருந்தக்
கலந்து இனியனாய் இருக்கக் கண்ட சடகோபர்
கலந்த நெறி கட்டுரைத்தார் கண்டு –77–இவர் -வெள்ளக் கேட்டாலே அழியாதபடி ஸ்ரீ திருக் கடித்தானத்தே இருப்பைக் காட்டி சம்ஸ்லேஷ ரசத்தை சாத்மிப்பித்த –அநந்தரம்-ஸ்வ விஷயத்தில் அர்த்தித்வ பிரமுகரான இவர் மநோ ரதத்தை எல்லாம் தான் இவர் பக்கலிலே பண்ணிக் கொண்டு-இவரோடு பூர்ண சம்ஸ்லேஷம் பண்ணி அந்த சம்ச்லேஷ ஜனித ஹர்ஷ பிரகர்ஷத்தாலே புதுக்கணித்த திவ்ய அவயவங்களையும் நீல பர்வதம் போலே ஒளி இருக்கிற வடிவையும் இருக்கிறபடியை மண்டி அனுபவித்து ஹ்ருஷ்டராய் செல்லுகிற -இருத்தும் வியந்தில் அர்த்தத்தை இருந்தவன் தான் வந்து -இத்யாதியால் அருளிச் செய்கிறார்

மைப்படி மேனியும் –அஞ்சனத்தின் படியான திரு மேனியும் –-கண்டார்கள் கண் குளிரும்படியான-வடிவும் –பட்டர் ஒருகால் இவ்விடத்தை அருளிச் செய்யா நிற்க –-பிள்ளை விழுப்பர் அரையரும் -ஆப்பான் திருவழுந்தூர் அரையரும் -இருந்தார்களாய் –-அனுசந்தித்தார் நெஞ்சில் இருள் படியும் படியான-திரு மேனியும் -என்று அருளிச் செய்ய –நஞ்சீயர் –இன்னார் என்று அறியேன்–என்னப் பண்ணுகை யாகாதே -என்று அருளிச் செய்து அருள –(பொன்னார் சார்ங்கம் யுடைய அடிகளை இன்னார் என்று அறியேன் -சார்ங்க பாணி உள்ளத்தில் அமர்ந்து இருட்டாக்கி அருளச் செய்ததற்கு பிரமாணம்)-இவ்வார்த்தை சொன்னார் யார் -என்ன -ஜீயர் -என்று அவர்கள் சொல்ல –நூற்றுப் பதின் காதத்து அவ்வருகே பிறந்து –இவ்வளவும் வந்து –இன்று நமக்கு இத்தை உபகரிப்பதே -என்று கொண்டாடி அருளினாராம் –மைப்படி –காதல் மையலை உண்டாக்கும் படியான திரு மேனி
பொன்னார் சார்ங்கம் உடைய யடிகளை இன்னார் என்று அறியேன் –செந்தாமரை கண்ணும் –
அகவாயில் குண பிரகாசமான திருக் கண்களும் –வைதிகர் இத்யாதி –இப்போது -வைதிகர் என்கிறது –
வேதத்தில் பூர்வ பாக நிஷ்டர் –கேவலம் கிரியா கலாபம்-கொண்டு பெற இருக்குமவர்கள் –
ப்ரஹ்மத்தின்  உடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளுக்கு பிரதிபாதகமான-உபரிதன பாக நிஷ்டர் அன்றிக்கே –கர்ம பாகத்தையே பற்றி நிற்குமவர்கள் –அங்கனன்றிக்கே – நிதித்யாசிதவ்ய -என்று விதேயமாய் வரும் நூல் பிடித்த பக்தியை உடையவர்களைச் சொல்லிற்றாகவுமாம் –அவனுடைய குண அனுசந்தானத்தாலே கலங்கி அடைவு கெடும் அது அன்றிக்கே இருக்குமவர்கள் — இப்படி இருக்குமவர்களே மெய்யான பிரகாரத்தாலே உன் திருவடியை-ஆஸ்ரயிக்கும் ஸ்வபாவத்தை உடையவர் –ஆனால் பின்னை நீர் சொன்னபடி எங்கனே -என்ன –-எப்படி இத்யாதி –ஊரில்  பசுக்கள் வந்து-புகுரப் புக்கால் எப்படி சம் ப்ரமிக்கும் அந்த சம் ப்ரம ஹேது இன்னது என்று அறியாதே –
குருட்டுப்-பசுவும் சம் ப்ரமியா நிற்கும் இறே –அப்படி யானும் சொன்னேன் – அளவுடையார் சொல்லும்-விஷயம் அன்றோ – நாம் என் -என்று பாராதே -நானும் பாசுரத்தை சொன்னேன் அடியேன் மற்று யாது என்பனே –இதுக்கு மேற்பட பர தந்த்ரனுமாய் -பக்தி பரவசுமான நான்-அடைவு பட ஒன்றைச் சொல்லி தலைக்கட்ட வல்லேனோ –அன்றிக்கே அயோக்யா அனுசந்தானம் பண்ணி அகலுகிற நான் அங்குத்தைக்கு சத்ருசமாக ஒன்றைச் சொல்லித் தலைக் கட்ட வல்லேனோ –நெஞ்சு பிச்சேரும்படியான விக்ரக வை லஷண்யம்-அயோக்யா அனுசந்தானமே ஸ்வ ரசமான தாத்பர்யம்–ஊருக்கு வரும் பசு கன்றை நினைத்து கத்துமா போலே குருட்டு பசுவும் கத்துவது போலே நீ அளித்த பக்தியால் உன் ஸ்வரூபாதிகளில் விழித்து மதி மயங்கி கிடக்கிற நான் உன்னை ஸ்மரித்து ஸ்வ தந்த்ரித்து ஒன்றைச் சொல்ல வல்லேன் -என்கிறார்-

விலக்ஷணமான அதிகாரிகள் உன்னை உள்ளபடி அறிந்து பேச -நான் அவர்கள் வழி தொடர்ந்து செல்வேன் –கண் தெரிந்த பசுக்கள் ஊர் புகுந்து சேர -அந்த மகிழ்ச்சிக்கு ஈடாக கனைத்தலும் செய்ய -கண் இல்லாத குருட்டுப் பசுவும் கனைப்பது போலே வேத வைதிக புருஷர்கள் சொன்ன பாசுரங்களைக் கேட்டு நானும் சொன்னேன்-சொல்லுவதற்கு அடியான சம்பந்தம் -பக்தி பாரவஸ்யம் உள்ள நான் ஞானம் சக்தியால் பேசினேன் அல்லேன்-இந்த பாசுரம் ஒட்டியே ஸ்ரீ பட்டரும் ஸ்ரீ குண ரத்ன கோசத்தில்-இத்யுக்தி கைதவச தேன விடம்பயாமிதா நம்ப ஸத்ய வஸஸ புருஷான் புராணான்-யத்வா நமே புஜபலம் தவ பாத பத்ம லாபே-ஸ்லோகம் அருளிச் செய்தார் –

மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும்-என்று அவளுக்கு ஏற்ற வடிவு அழகு உடையாய் நீ என்றும் வைதிகரே-மெய்ப்படியால் உன் திருவடிச் சூடும் தகைமையினார்-அவளைக் கண்டு ஆறி இருந்த நீ வைதிகரால் கொண்டாடப் படுபவன் என்றும் –எப்படி யூராமி லைக்கக் குருட்டாமிலைக்கும் என்னும்-
அப்படி யானும் சொன்னேன் -என்று அவ் வடிவின் சிறப்பையும் உன் திண்மையும் உணராது நாட்டார் போலே முன்பு உன்னை பழித்தேன்-குருட்டுப் பசு கனைப்பது போலே என்றும்-அடியேன் -அந்த பிழையை ஷமிப்பதற்கு ஏற்ற நிலை யுடையேன் நான் என்றும்-மற்று யாது என்பனே –அவள் வடிவு அழகைக் கண்டும் கலக்கம் அடையாது திண்மையாய் இருக்கும் இத்தை பாராட்டிக் கூறும் விதத்தால் அன்றி எங்கனம் வர்ணிப்பேன் -என்றவாறு –கீழ்ப்பாட்டில் ‘மாலை நன்னாவிற்கொள்ளார் நினையாரவன் மைப்படியே’ என்று உலகத்தாரைப் பழித்த ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ‘நீர்தாம் நம்மை உள்ளபடியறிந்து சொல்ல வல்லீரோ?’ என்று திருவுள்ளம் பற்றினதாக ஆழ்வார் கருதி,
‘பிரானே! உலக்ஷணரான வைதிகர்களே உன்னை உள்ளபடியறிந்து செல்லவல்லார்; நான் அவர்கள் போன வழியே போவதற்கு மாத்திரமே உரியன்’ என்று இப்பாட்டால் விண்ணப்பஞ்செய்கிறார்.
-கண்டார் கண்குளிரும்படியான உனது திருமேனியையும் சிவந்த தாமரைமலர் போலேயிருக்கிற திருக்கண்களையுமுடையான உன்னுடைய திருவடித் தாமரை மலர்களை, கேட்டார் வாய்க் கேட்கைன்றியே மெய்யாகக் கண்டு தலைமேற்கொண்டு அநுபவிக்குந் தன்மையுடையவர்கள் யாரென்னில், வேதவேதாந்த ஞானத்திற் சிறந்த மஹான்களேயாவர்,-அறிவாளியான நானும் அவர்களைப் போலே ஏதோ சில சொல்லுகிறேனே. இஃது என்னென்னில்,-நன்றாகக் கண்தெரிந்த பசுக்கள் ஊர்புகுந்து சேர்ந்தவாறே நிலை கண்டு மகிழ்ந்து அந்த மகிழ்ச்சிக்குப் போக்குவீடாகக்
கனைத்தல் செய்ய கண்ணில்லாத குருட்டுப் பசுவும் அதுகேட்டுத் தான் இன்னதென்றறியாமலே ஒக்கக் கனைக்குமென்று உலகம் சொல்லுகிற விதமாகவே வேதகவைதிக புருஷர்கள் சொன்ன பாசுரத்தைக் கேட்டுவைத்து நானுஞ்சொன்னேனத்தனை;-செல்லுதற்கு அடியான் ஸம்பந்தமுடையவனும் பக்தி பரவசப்பட்டவனுமான நான் அப்படியல்லாமல் என் ஞானத்தாலே கண்டு என் சக்தியாலே சொன்னேனென்னவல்லேனோ? என்றாராயிற்று. இப்பாசுரத்தை ஒருபுடை திருவுள்ளம்பற்றி
ஸ்ரீகுணரத்நகோசத்தில் பட்டம் அருளிச்செய்த ‘இத்யுக்திகைதவசதேக விடம்பயாமி தாநம்ப! ஸத்யவசஸ: புருஷாந்புரணார்- யத்வா நமே புஜபலம்தவ பாரதபத்மவாபே’ என்ற ச்லோகம் இங்கு ஸ்மரிக்கத்தாகும்.-(புராண புருஷனே (எம்பெருமானே)! உண்மையான வாக்குடையவனே! உனது பாத கமலங்களைச் சேரும் பாக்கியம் எனக்குக் கிடைக்குமானால், எனது கைகளின் வலிமை (புஜபலம்) உனக்குச் சேவை செய்வதற்கே பயன்படும்” என்பது இதன் பொருளாகும்)

இதி உக்தி கைதவ சதேந விடம்பயாமி
தாந் அம்ப ஸத்ய வசஸ: புருஷாந் புராணாந்
யத்வா ந மே புஜ பலம் தவ பாத பத்ம
லாபே த்வம் ஏவ சரணம் விதித: க்ருதா அஸி–60-

ஹே அம்ப இத்யுக்தி கைத வசதேந –போட்கனான அடியேன் பல பல நைச்ய யுக்திகளை சொல்வதால்
தான் சத்ய வசச  புருஷான் புராணான் விடம்பயாமி—நீசனேன் நிறை ஒன்றும் இலேன் –
நானோ நாநா விதம் நரகம் புகும் பாவம் செய்தேன்–ஈவிலாத தீ வினைகள் எத்தனை செய்தனன் கொல்-என்று அநு சந்திக்கும் –ஸ்ரீ பராங்குச பரகாலாதி ஆழ்வார்களும் ஆளவந்தார் போன்ற பூர்வாச்சார்யர்களையும் அநு கரிக்கிறேன் அத்தனை ஒழிய ச ஹ்ருதயமாக நைச்ய அநு சந்தானம் பண்ணினேன் அல்லேன்
உக்தி கைதவ சதேந –கள்ளத் தனமாக நூற்றுக் கணக்கில் செய்யும் நைய அநு சந்தானங்களால்-
உண்மையில் தம் பக்கல் ஒரு கைம்முதலும் இல்லாதவன் –
அத்தலையில் திருவருளே தஞ்சம் என்றே இருப்பவன் என்கிறார் மேல் –
யத்வா தவ பாத பத்ம லாபே மே புஜ பலம் ந -நைச்ய அனுசந்தான அநு கரணம் அத்தனை போக்கி
என் திறத்தில் ஒரு சாமர்த்தியமும் இல்லையே –
புஜ பலம்-தோள் மிடுக்கு பொருளாயினும் சாமர்த்தியம் என்பதே பொருள் இங்கு –
சர்வாத்மநா அடியேன் அசமர்த்தன் என்றதாயிற்று
விதித த்வமேவ சரணம் க்ருதா அஸி –தேவரீர் நிர்ஹேதுகமாக அருள் செய்ய விதி வாய்த்தது என்கை –

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! இப்படியாக நான் பல விதமான கள்ளத்தனம் நிறைந்து,
நூற்றுக்கணக்கான தவறுகள் உடையவனாக இருக்கிறேன். இருந்தாலும் உனது அருள் பெற்றவர்களும், உண்மையை கூறுபவர்களும் ஆகிய ஆழ்வார்கள் முதலான முன்னோர்கள் கூறியதையே பின்பற்றி நிற்கிறேன்(இப்படிக் கூறுவதும் ஒரு வகையில் பொய் என்கிறார்).
எனக்கு உனது திருவடிகளைப் பிடித்துக் கொள்வதற்கு இதைவிட வேறு எந்த உபாயமும் இல்லை.
வேறு புகலிடம் இல்லாத எனக்கு உனது கருணையால் நீயே புகலிடமாக உள்ளாய்.–இங்கு இவர் கூறுவது என்ன? நான் ஆசார்யர்களின் வாக்குகளைப் பின்பற்றுவதாகக் கூறுவது ஒரு பொய்யே ஆகும். இருந்தாலும் அவர்களை நான் தொழுகிறேன் என்ற காரணத்திற்காகவாவது காப்பாற்ற வேண்டும் என்றார்.–ஆசார்யர்களைத் தொழுகிறேன் என்னும் காரணத்தை முன்னிட்டாவது தன்னைக் காக்க வேண்டும் என்று வேண்டி நிற்கும் ஸ்ரீபராசரபட்டர், திருவரங்கத்தில் உள்ளபடி சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

இப்பாட்டுக்கும் கிளவித்துறை வகையில்பொருள் சொல்ல வேண்டில், ‘தலைவியைக் கண்ட பாங்கன் மீண்டு தலைவனையடுத்து வியந்து கூறல் இது’ என்று கொள்க. அதாவது- இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து பிரிந்த தலைமகன் தான் அத்தலைமகளை மீண்டுஞ் சேரவிரும்பி அவளது அழகு முதலியவற்றைத் தன் உயிர்த் தோழனிடம் பாராட்டிக்கூற, அது கேட்டு‘ஒரு மங்கை காரணமாக நீ இங்ஙனம் மெலிதல் தகாது’ என்று அவனை இடித்துரைத்த தோழன் அவனால் மீண்டும்
அவ்வடியின் சிறப்பை மிக எடுத்துக் கூறிக் கழற்றெதிர் மறுக்கப்படட்பின் அவனைச் சமாதானப்படுத்தி,
அவன் சொன்ன குறிப்பின்படியே தான் சென்று பூஞ்சோலையில் அவளைக் கண்டு அவளது ரூபலாவண்ய ஸௌந்தர்யாதிகளை நேரில் நோக்கி வியந்து ‘இத்தன்மையுடையவளைக் கண்டு பின் காமவேதனையால் மிக வந்தாது சிறிதும், ஆகியிருத்தல் எத்துணைப் பெரியோர்க்கும் ஆகாதே;
இப்படிப்பட்டவர்களைக் கண்டு பிரிந்தும் ஒருவாறு ஆறியிருக்கிறவனை நான் முன்பு ஆராய்ச்சி யின்றி இடித்துரைத்தேனே! என்று நொந்து இகழ்ந்ததற்கு இரங்கி,விரைந்து மீண்டு வந்து தலைவனை நோக்கிக் கூறியது இது.–“மைப்படி மேனியும் செந்தாமரைக்கண்ணும்” என்ற அடைமொழிகளால், அவ்வழகியைச் சேர்தற்கு ஏற்ற வடிவழகுடையாய் நீ யென்றும், ‘வைதிகரே மெய்ப்படியாலுன் திருவடிசூடும் தகைமையினார். என்றதனால், அவ்வழகியாளைக் கண்டும் ஒருவாரு ஆறியிருந்த நீ
ஞானனுட்டானமுடைய வைதிகர்களாலுந் தலைமேற்கொண்டு நன்கு மதித்துக் கொண்டாடத் தக்கவனென்றும்,-‘எப்படி யூராமிலைக்கக் குருட்டாமிலைக்குமென்னும் அப்படி யானுஞ்சொன்னேன்’ என்றனதனால், அவ்வடிவத்தின் சிறப்பையும் உனது மனத்திண்மையையும் நோக்காது உலகத்திற் சாதாரணமான ஒரு தீயொழுக்கத்திலிழிவாரை அவர் நண்பர் கட்டுரைத்து மறுக்கிற வழக்கின்படியே நான் உன்னைமுன்பு இடித்துரைத்தது கண் தெரிகிற பசுக்கள் கனைத்தவாறே குருட்டுப் பசுவும் கனைத்தன்போல-அறியா மரபாற் செய்த தென்றும், ‘அடியேன்’ என்றதனால், அப்பிழையை நீ க்ஷமிப்பதற்கேற்ற நிலையுடையேன் யானென்றும்,‘மற்று யாதென்பனே?’ என்றதனால், அவ்வடிவழகைக் கண்டும் முழுக்கலக்கமடையாது. சிறிது துணிவுற்றிருந்த உனது
திண்மையை இங்ஙனம் பாராட்டிக் கூறும் விதத்தாலன்றி அவ்வடிவத்தின் சிறப்பை யான்
எங்ஙனம் வருணித்துக் கூறவல்லேனென்றுங் கூறினானாயிற்று..

மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும்-அஞ்ஜனத்தின் வடிவு போலே இருக்கிற திருமேனியையும்
அதுக்குப் பரபாகமாய்ச் சிவந்த தாமரை போலே இருக்கிற திருக்கண்களையும்–வைதிகரேநீல தோயத -தைத்ரியம் என்றும்-யதா கப்யாஸம் புண்டரீகம் -சாந்தோக்யம் என்றும் திரு வடிவையும் திருக் கண்ணையும் வேதத்தில் சொல்லுகிறபடி அறியுமவர்களே-மெய்ப்படியால்-கேட்டார் வாய்க் கேட்கை அன்றிக்கே-மெய்யாகக் கண்டபடியாலே-உன் திருவடிச் சூடும் தகைமையினார்-பிராப்தமுமாய்
போக்யமுமான உன்னுடைய திருவடிகளை-சிரஸா வஹித்து அனுபவிக்கும் ஸ்வ பாவத்தை யுடையவர்கள்-எப்படி யூராமி லைக்கக் குருட்டாமிலைக்கும் என்னும் ஊர் அணைந்த ஆக்கள் கன்று நிலை கண்டு கனைக்க–கண்ணில்லாத ஆவும் அது கேட்டு ஒக்கக் கனைக்கும் என்று லோகம் யாதொருபடி சொல்லும்–அப்படி யானும் சொன்னேன்-அந்த ப்ரகாரத்திலே வேத வைதிக புருஷர்கள் சொன்ன பாசுரத்தைக் கேட்டு நானும் சொன்னேன்–அடியேன்-சொல்லுகைக்கு அடியான உறவையுடைய நான்-மற்று யாது என்பனே — அல்லது என் ஞானத்தாலே கண்டு என் சக்தியாலே சொன்னேன் என்ன வல்லேனோ என்றார் ஆயிற்று

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்–குருட்டா மிலைக்கும் என்னும் அப்படி யானும் சொன்னேன்-அடியேன் மற்று யாது என்பனே உனக்கே அடிமைப்பட்ட நான் என்முன் சொல்லிச் சொல்லும் நான் நீ சொல்லுவியாத மற்று எத்தைச் சொல்லுவேன் என்கிறார் –

தாத்பர்யம்–இதில் தேவர்கள் அபிமானத்தாலும் மற்றவர்கள் அஞ்ஞானத்தால் பேச மாட்டாமல் உள்ளது போல் இவரும் பக்தி பாரவசயத்தால் பேச இருப்பதை அருளிச் செய்கிறார்
வேத யுக்தமான உன்னுடைய ஸ்வரூபாதிகளை அறிந்து சாஸ்திரம் விதித்தபடியே த்யானம் செய்த பக்தர்கள் உள்ளம் புகுந்து அஞ்சன மலையுடன் செந்தாமரைக் கண்ணுடன் பரவசம் ஆக்குவான்
ஸ்யாமம் அதி சுந்தரம் உள்ளுள்ள வாத்சல்யம் கண்ணில் வெளியில் கசிந்து பரிவாஹம் ஆகுமே
தியானித்து ப்ராப்யமான உனது திருவடிகளை சிரஸா வகிப்பார் என்னால் முடியாதே யாகிலும்
காலையில் மேய்க்கப் போன பசு கன்றை நினைத்து கனைத்து வருமா போல் அறியாத குருட்டுப்பசு கனைக்குமா போல் நானும் சொன்னேன் இப்படி அல்லது நீ அளித்த பக்தியால் மதி மயங்கி கிடைக்கும் நான் ஸ்வ தந்திரமாக ஒன்றும் சொல்ல வல்லேன் அல்லேன் என்கிறார்

8-7-இருத்தும் வியந்து என்னைத் தன் பொன்னடிக் கீழ் -ப்ரவேஸம் –

கீழ் அடைய இத் திருவாய் மொழியில் பேற்றுக்கு கிருஷி செய்தபடி –மேல் இப் பேற்றுக்கு வேலியாய் இருக்கிறது-மேம் பொருள் போல் ரத்னம்
இத் திருவாய்மொழியில் செய்கிறது என் என்னில் –

தாம் அனாதிகாலம் புத்தி பூர்வகமாக செய்து போந்த பாவங்கள் முழுதுதினையும் மறந்து-
தம்மாட்டு பத்தி பிறந்த பின்பு-
அறியாமலே செய்து போந்த பாவங்களை காணா கண்ணிட்டு-
இவர் தம்முடைய பேற்றுக்கு அவன் தானே முயற்சி செய்து-இவருக்கு பிறந்த விடாய் தீரும்படி கலந்து
இது தான் இவருக்கு உபகரித்தானாய் இருக்கை அன்றிக்கே தன் பேறாய் இருக்கிறபடியை -நினைத்து
தானே அர்த்தியாய் விரும்பினவனாய்-தன் பேறாக வந்து கலந்தவனை-

நாம் இரப்பாளராகக் கூப்பிட்ட இடம்-என் செய்தோம் ஆனோம் என்று நாணம் கொண்டு-
ஒரு சம்சாரி சேதனன் பக்கல் சர்வேஸ்வரன் செய்யும் அங்கீகாரம் இருக்கும்படியே இது -என்று வியப்பு அடைந்தவர் ஆயினார்-

அங்கனம் வியப்பு அடைந்தவராய்-பகவத் அங்கீ காரத்தால் பெற்ற பேற்றுக்கு த்ருஷ்டாந்தம் –
இராகவன் அபயத்தைக் கொடுத்த அளவிலே இராவணன் தம்பியான விபீஷணன் வணங்கினான் -என்றபடியே
ராகவேண அபயம் தத்தே ஸன்னத-(நன்று வணங்கினான்)  ராவணானுஜ விபீஷண மகா ப்ராஞ்ஞா பூமிம் சமவலோகயன் -யுத்தம் -1901-
இராவணன் பின் பிறந்த நாம் இரகு குலத்தில் உள்ளார்க்கு ஆளாக புக நின்றோமே -என்று இருந்தவன்
பெருமாள் பாடு நின்றும் அருள்பாடிட்டு வந்தவாறே-என்னையே இப்படி கைக் கொண்டு அருளுவது –
அவன் பின் பிறந்த தண்மை எங்கே போயிற்று -என்று
வேர் அற்ற மரம் போலே கூட வந்த நால்வரோடும் திருவடிகளிலே வந்து தரைப் பட்டாப் போலேயும்-

இராம குணங்கள் நடையாடாத அசோக வனத்திலே திருவடி சென்று சேர்ந்து கேட்ட போதே-
இனிமையான வார்த்தையை வைதேகிக்கு சொன்னார் -என்றபடியே-
ஏவம் பஹூவிதம் சிந்தாம் சிந்தயித்வா மகாகபி சம்சரவே மதுர வாக்கியம் வைதேஹ்யா வ்யாஜகாரா ஹா -சுந்தர -31-1-
பிராட்டி உள்ளாம்படி இராம நாம சங்கீர்தனத்தை செய்ய –இந்நிலத்தில் இது நடப்பது ஓன்று அன்று –
இது மனத்தின் விகாரத்தால் வந்த மயக்கமோ அன்று
காற்றின் செயலால் வந்த மயக்கமோ – அன்று
இது பிரிந்தாருக்கு வந்த மயக்கமோ – அன்று
அனைவருக்கும் வரும் கானல் நீர் போன்ற மயக்கமோ என்று பல படிகளால் ஐயம் கொண்டு
முன்னே நின்று வார்த்தை சொல்லா நின்றான்-
இது கேட்டு நாம் வேறுபடுகிற தன்மையும் உண்டு – ஆன பின்பு இது மெய்யாம் இத்தனை -என்று-
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள்-தெளிந்து ஹ்ருஷ்டை யானால் ஆனால் போலேயும் –
கிம் து ஸ்யாத் சித்த மோஹ அயம் பவேத் வாத்கதி து இயம் உன்மாதஜ விகாரோவா ஸ்யாத் இயம் ம்ருகத்ருஷ்ணினா -சுந்தர -34-25-

ஆழ்வார் சங்கித்து (மருள் தானீதோ மாய மயக்கு மயக்கே–8-7-3-)அங்கன் அல்ல மெய் தான் ப்ரீதராய்(தூய சுடர்ச் சோதி தனதென்னுள் வைத்தான்
தேசந்திகழும் தன் திருவருள் செய்தே-8-7-4-)
அத்வேஷம் பிறப்பித்து -த்வேஷம் இல்லாமை முதல் படி வெறுப்பு இல்லாமை
ஆவி முக்கியம் உண்டாக்கி –
தன்னால் அல்லாது செல்லாமையை பிறப்பித்து
மேன்மை பாராமல் தாழ நின்று கலந்து
தாழ நின்று பரிமாறும் ஆஸ்ரித பாரதந்த்ர்யம் -ஹ்ருஷ்டர் ஆக பேசுகிறார்

உயர்ந்த திருவாய்மொழி -இது என்பர்–இதுக்கு ஒத்த திருவாய்மொழி இல்லை என்பர்-
நமக்கு ஆசை அதிகம் நினைத்தோம்
எம்பெருமான் தமக்கு செய்யும் உபகாரம் துடிப்பை – சந்தோஷமாக அருளிச் செய்த திருவாய்மொழி-
ரத்னம் போலே இது -மேம் பொருள் போக விட்டு -த்வயார்த்த பிரதி பாதித்த படியால் -மேலே மூடி -கீழே பொட்டி போலே-

ஏழாம் திருவாய் மொழியில் –
திருக் கடித்தானத்திலே எழுந்து அருளி இருந்த சர்வேஸ்வரன் தம்முடைய திரு உள்ளத்திலே ஸமஸ்த விரோதிகளும்
கழியும்படி புகுந்து பரிபூர்ணமாக எழுந்து அருளக் கண்டு
அவன் தானே அர்த்தியாய்ப் புகுந்த படியையும்
அவனுடைய விரோதி நிவர்த்தகத்வத்தையும்
அஞ்ஞான தமோ நிரசனத்தையும்
அதுக்கு அடியான அத்யுஜ்ஜ்வல விக்ரஹ யோகத்தையும்
ஸூஸ்த்திர ஸ்த்திதியையும்
அத்தாலே பிறந்த திவ்ய அவயவ சோபையையும்
அவ் வழகினுடைய அநு பாவ்ய அதிசயத்தையும்
நிர்ஹேதுக உபகாரகத்வத்தையும்
அதிசயித உபகாரகத்தினுடைய அனுசந்தேயத்வத்தையும்
நித்ய அநு பாவ்ய பரத்வத்தையும்
அனுசந்தித்து ஏவம் பூதனான சர்வேஸ்வரன் தன திரு உள்ளத்தில் புகுந்து இருக்கிற அதிசயித
வ்யாமோஹத்திலே விஸ்மிதராய் இது பிரமமோ மாயாதி விகாரமோ என்று சங்கித்து
நம் அளவில் விப்ரலம்பியான் என்று தெளிந்து இது ஒரு உபகார அதிசயமே
என்று அத்யந்தம் ஹ்ருஷ்டராகிறார் –

இருத்தும் வியந்து என்னைத் தன் பொன்னடிக் கீழ் என்று
அருத்தித் தெனைத்தோர் பல நாள் அழைத்தேற்கு
பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து என் தன்
கருத்தை யுற வீற்றிருந்தான் கண்டு கொண்டே-8-7-1-

இத் திருவாய் மொழியிலே தமக்கு உண்டான லாபத்தை-சுருங்க அருளிச் செய்கிறார்

இதனால்-பிராப்ய பிராபகங்களைச் சொல்லுகிறது –யாங்கனம் எனின் –
தன் பொன்னடி -என்று பிராப்ய ஸ்வரூபம் சொல்லிற்று-
இருத்தும் -என்று-பிராபகனும் அவனே என்று சொல்லிற்று-
வியந்து இருத்தும் -என்று தன் பேறாக இருத்தும் –

அருத்தித்து –சேதனனான வாசிக்கு இத்தனையாவது வேண்டும் அன்றோ –அதிகாரி ஸ்வரூபம்

அழைத்தேற்கு–அழைக்கவும் கூட மாட்டாத இவனையே நாம் அழைத்தது –

அழைத்தேற்கு-இவன் காதலை அறியாதே தாழ்த்தான் ஆகவும்-நாம் காதலை உடையோமாகவும்-
நினைத்துக் கூப்பிட்டு என்ன கார்யம் செய்தோம் -என்கிறார் காண் -என்று பிள்ளான் பணிப்பர்
அத்தலையில் காதலை நினைத்தால்-விரும்புதலும் கூட அன்றோ மிகையாய் இருப்பது –

என் தன் கருத்தை யுற –
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -2-9-4-என்னும்-என் நினைவைத் தான் கைக் கொண்டான் –

வீற்றிருந்தான் –இவரைப் பெற்றதால் உண்டான வேறுபாடு வடிவிலே தோற்ற-கிருதக்ருத்தியனாய் இரா நின்றான் –-அபி நிவேசம் மிக்கு -வேறு பாடு தோன்ற பூர்ண அவலோகநம் செய்து இருந்தானே

கண்டு கொண்டே –பெரிய நோய்க்கு தப்பின புத்திரனை-தாய் தந்தையர்கள் பார்த்துக் கொண்டு இருக்குமா போலே
மாயக் கூத்தா -என்ற திருவாய்மொழி யிலே-விடாய்க்கு தப்பினவர் என்று பார்த்துக் கொண்டே இருந்தான் –

——–

இருந்தான் கண்டு கொண்டே எனதேழை நெஞ்சாளும்
திருந்தாத வோரைவரைத் தேய்ந்தற மன்னி
பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்
தருந்தானருள் தான் இனி யானறியேனே-8-7-2-

நான் இந்த்ரியங்களுக்கு கட்டுப்பட்டு இருந்த தன்மையை-தன் அழகாலே தவிர்த்து
என்னை அங்கீகரித்த உபகாரத்துக்கு ஒவ்வாது–ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உடைய ஆபத்தை நீக்கிய தன்மையும்-என்கிறார்–உம்மைத் தொகை –
இந்திரியங்கள் அழகிலே ஈடுபட்டு நலிவதால் அழகைக் கொண்டே விஷயீ கரித்து அருளினான் –

மொத்தமாக ஆழ்வாரை விழுங்கி –அசத் சமமாக திருவடிக்கு கீழ் சேர்த்துக் கொண்டானே —

போதரே என்று சொல்லிப் புந்தியில் புகுந்து தன்பால்-ஆதரம் பெருக வைத்த அழகன் -திருமாலை -16 -அன்றோ-

பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான் தருந்தானருள் தான்-பெருமான் தான் தரும் அருள் தான் –
தரும் என்கிற இது – தந்த -தருகின்ற -தரும் -என-முக்காலத்திலும் சொல்லலாய் இருக்கையாலே-தரும் அருள் -என்கிறார்
அடியாருக்கு செய்ததும் தமக்குச் செய்ததாக அன்றோ இவர் நினைத்து இருப்பது-ஆதலின் -கொடுத்த என்னாது -தரும் -என்கிறார்-

இனி யானறியேனே-எனக்கு உதவின பின்பு-நான் அதனை ஒன்றாக நினைத்து இரேன்
யான் நோவு பட்டது பல ஆண்டுகள்-அகப்பட்ட பொய்கை அளவுக்கு உட்பட்டது
முதலை ஓன்று
காலம் அநாதி
அகப்பட்டது பிறவிப் பெரும்கடல்-குட்டத்து கோள் முதலை அது
முதலை ஐந்து
இதனை மீட்டுக் கொண்ட மகா குணத்துக்கு-ஒரு குணமாய்ற்றதோ
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் பக்கலிலே செய்த அருளை இட்டு-புறம்பு உள்ளாரைப் பிரித்து வேறு படுத்தினார்-
தமக்குச் செய்த அருளை இட்டு அதனையே பிரித்து வேறுபடுத்துகிறார்-

—————

அருள் தான் இனி யான் அறியேன் அவன் என்னுள்
இருள் தானற வீற்றிருந்தான் இதுவல்லால்
பொருள் தான் எனில் மூ வுலகும் பொருள் அல்ல
மருள் தானீதோ மாய மயக்கு மயக்கே–8-7-3-

எல்லாவற்றாலும் நிறைவுற்றவனாக இருக்கின்றவனான சர்வேஸ்வரன்
தம் பக்கல் இப்படி காதலைச் செலுத்துவது கூடாதது ஓன்று என்று-ஐயம் கொண்டு
இவ் வனுபவம் மயக்கம் முதலானவைகளாலே பிறந்ததோ -என்கிறார்-

அவன் என் மனத்திலே அறிவின்மை யாகிற இருள் எல்லாம் புகும்படி-
பெறாப் பேறு பெற்றானாய்-அவ் வேறுபாடு தோற்ற இரா நின்றான்-இனி எனக்கு வேறு ஓன்று தோற்றுமோ-

இதுவல்லால் பொருள் தான் எனில் மூ வுலகும் பொருள் அல்ல –
இதற்கு திருமலை ஆண்டான் பணிக்கும் படி –
உலகத்தார் செல்வங்களில் தலையாக சொல்லுவது-மூன்று உலகத்து செல்வதை அன்றோ –
அதுவும் எனக்கு ஒரு சரக்கு அன்று -என்கிறார் -எனபது-ஆழ்வாருக்கு -என்றவாறு –

அங்கன் அன்றிக்கே
என்னுடைய மனத்திலே புகுந்து எழுந்து அருளி இருக்கிற இருப்பு ஒழிய
வீற்றிருந்து ஏழு உலகும் தனிக் கோல் செல்ல இருக்கும் இருப்பும்
தனக்கு ஒரு ஐஸ்வர்யமாக நினைத்து இருக்குமோ என்று பார்த்தால்
அதுவும் ஒரு சரக்காக நினைத்து இருக்கின்றிலன் எம்பெருமான் –என்று எம்பெருமானார் அருளிச் செய்வர் –
இதுவே -சர்வேஸ்வரனின் காதலின் பெருக்கைக் கூறும் -இடத்துக்கு பொருந்துவது –

இதில் இதுவே தனக்கு பரம புருஷார்த்தம் என்று இருந்தான் –
மூ உலகும் பொருள் அல்ல -ஆழ்வாருக்கும் எம்பெருமானுக்கும் என்று இரண்டு நிர்வாகங்கள்

நெடுநாள் இந்த சரீரத்தைக் கொடுத்து அறிவு கொடுத்தான் –பிராமாயன் சர்வ பூதாநி யந்த்ரா ரூபாயா மாயையா —
இப்போது தன்னுடைய காதலாலே என்னை மயங்கச் செய்தான் –

———

மாய மயக்கு மயக்கான் என்னை வஞ்சித்து
ஆயன் அமரரர்க்கு அரி ஏறு எனதம்மான்
தூய சுடர்ச் சோதி தனதென்னுள் வைத்தான்
தேசந்திகழும் தன் திருவருள் செய்தே-8-7-4-

அவன் என்னை மயங்கச் செய்தான் அல்லன்-என் உள்ளே கலந்து அருளினானே-இதிலே ஓர் ஐயம் இல்லை -என்கிறார்-
வைகலும் வெண்ணெய் கை கலந்து -உண்டு -என் மெய்யுள் கலந்தானே

ஆயன் அமரரர்க்கு அரி ஏறு எனதம்மான் – நித்ய ஸூரிகளுக்கு அவ்வருகான ஏற்றத்தை உடையனாய் வைத்து-கிருஷ்ணனாய் வந்து அவதரித்து
என்னுடைய அடிமையை நிர்வகித்த-பரம ஆப்தன் -என்னை வஞ்சித்து மாய மயக்கு மயக்கான் –திரு மோகூர் ஆப்தன் -வழித் துணை பெருமாள் –

புறம்பு ஒருவருக்கு இன்றிக்கே-தனக்கே உரியதான அருள் ஆதலின்-தன் திரு வருள் -என்கிறார் –

தான் வேறு ஒரு சாதனத்தைக் கொண்டு சாதித்துக் கொள்ளப் படாதவன் –என்னும்படியைக் கொண்டு என் உள்ளே பிரகாசிப்பித்தான்
ஆதலின் –என்னுள் வைத்தான் -என்கிறார்

குற்றங்கட்கு எல்லாம் எதிர்தட்டாய்-வேறுபட்ட சிறப்பினை உடைய ஒளி உருவமாய்-சுத்த சத்வ மயமாய்-தனக்கே உரியதான வடிவை என்னுள் வைத்தான்-

திகழும் தன் திருவருள் செய்து உலகத்தார்
புகழும் புகழ் தானது காட்டித் தந்து என்னுள்
திகழும் மணிக் குன்றம் ஒன்றே ஒத்து நின்றான்
புகழும் புகழ் மற்று எனக்கும் ஓர் பொருளே–8-7-5-

ஒருவர் பெரும் பேறே என்று உலகம் அடங்க கொண்டாடும்படி-என் உள்ளே வந்து நின்று அருளினான்
அதனால் வந்த புகழை அல்லது-இவனுடைய மற்று உள்ள புகழையும் ஒன்றாக மதியேன் -என்கிறார்-

திகழும் தன் திருவருள் செய்து – பிறர் உடைய அளவுக்கு உட்பட்ட அருள் போலே அன்றிக்கே
இரண்டு தலைக்கும் நிறமாம்படியான-தன் திருவருளை என் பக்கலிலே செய்து –
நிர்ஹேதுகம் ஆனதால் அபேஷா நிரபேஷம் அவனுக்கு -அத்யந்த பரதந்த்ரம் சித்திக்கும் இவருக்கு –

———

பொருள் மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் சீர்க்கத்
தருமேல் பின்னை யார்க்கவன் தன்னைக் கொடுக்கும்
கரு மாணிக்கக் குன்றத்துத் தாமரை போல்
திரு மார்வு கால் கண் கை செவ்வாய் யுந்தியானே–8-7-6-

எனக்கு தன்னை ஒழிய வேறு ஒன்றனைத் தந்து விட்டால்-புறம்பு தன்னை வேறு ஒருவர் கொள்வார் இல்லாமை எனக்குத் தந்தானோ-
என் பக்கலிலே காதலால் தந்து அருளினான் -என்கிறார்

கரு மாணிக்கக் குன்றத்துத் தாமரை போல் திரு மார்வு கால் கண் கை செவ்வாய் யுந்தியானே-கரு மாணிக்க குன்றம் -திரு மேனிக்கு திருஷ்டாந்தம்
தாமரை போல் -அவயவ சோபைக்கு திருஷ்டாந்தம்
திரு மார்வு -புருஷகாரமான பிராட்டி எழுந்து அருளி இருக்க்கிற திரு மார்வு
கால் -அச் சேர்த்திக்கு தோற்று விழும் திருவடிகள்
கண் -திருவடிகளில் விழுந்தாரை குளிர நோக்கும் கண்
கை -அவர்களை எடுத்து அணைக்கும் கை
செவ்வாய் -இன்சொற்களைச் சொல்லும் திரு அதரம்
உந்தி -அனுபவிக்கத் தக்க திரு உந்தி –உந்தி மேலதன்றோ –அமலனாதி -3-என்னக் கடவது அன்றோ

——–

செவ்வாய் யுந்தி வெண் பல் சுடர்க் குழை தம்மோடு
எவ்வாய்ச் சுடரும் தம்மில் முன் வளாய்க் கொள்ள
செவ்வாய் முறுவலோடு எனதுள்ளத்திருந்த
அவ்வாயன்றி யானறியேன் மற்றருளே–8-7-7-

அவன் தம்மோடு கலந்த கலவியினாலே உவகையனாய்-அது தன் பேறாக முறுவல் செய்த திருப் பவளத்தை-அனுபவித்துப் ப்ரீதர் ஆகிறார் –

தம்மில் முன் வளாய்க் கொள்ள –
ஒன்றுக்கு ஓன்று நான் நான் என்று-தம்மில் தாம் முற்பட்டு ஆழ்வாரை வளைத்துக் கொள்ள –
அதாவது-நான் நான் என்பதற்காக முற்பட்டு ஆழ்வாரை வளைத்துக் கொள்ள -என்னுதல்-
அன்றிக்கே-முற்பட்டு என்னை வளைத்து கொள்ள -என்னுதல் –

செவ்வாய் முறுவலோடு எனதுள்ளத்திருந்த –
அவாகீ -அநாதர -என்று இருக்கக் கூடிய பரம் பொருள்-இவரைப் பெற்று இது தன் பேறு என்று தோற்ற-முறுவல் செய்தபடி-
பூ அலரும் போது எங்கும் ஒக்க செவ்வி பிறக்குமாறு போலே-திவ்ய அவயவங்கள் தோறும் ஒரு வேறுபாடு பிறக்கும்படி யாயிற்று புன் முறுவல் பூத்தது –

———-

அறியேன் மற்றருள் என்னை யாளும் பிரானார்
வெறிதே யருள் செய்வர் செய்வார்கட்குகந்து
சிறியேனுடைச் சிந்தையுள் மூவுலகும் தன்
நெறியா வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரே–8-7-8–

அவன் தம்மோடு வந்து கலக்கைக்கு அடி-அவனுடைய திருவருள் காரணம்-என்கிறார்

சாதனமாக ஒன்று-ம் எதிர் பார்க்க மாட்டார்அதிகாரி ஸ்வரூபம் வேண்டுமே -பல அனுபவ யோக்யதை -உண்பதற்கு பசி போலே-போஜனத்துக்கு ஷூத்து போலே –நிர்ஹேதுகமாக பிரதம அனுக்ரகம் -ருசி வளர்த்துக் கொள்வது நமது கர்தவ்யம்-ஹேது அவன் உகப்பு -ஆசை அதிகாரி யோக்யதை –
அத்தனை அல்லது-பேற்றுக்கு சாதனமாக சொல்ல ஒண்ணாதே அன்றோ –

பிரியதம ஏவ ஹி வரணீயோ பவதி -ஸ்ரீ பாஷ்யம்-ஜிஜ்ஜாஸூ அதிகரணத்தில் –
அவனே எல்லாமாக நினைத்து வேறு ஒன்றையும் கெடுக்காத அநந்ய பிரயோஜனர் பிரிய தமர் -அவர்களை வரிப்பான் –

அவன் இதுவரை மூவுலகுக்கும் அவ்வருகாகா நினைத்திரா நின்றான்-
இவர் தம்மை மூவுலகுக்கும் இவ்வருகாக நினைத்திரா நின்றார்-

————

வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரும் யவரும்
வயிற்றில் கொண்டு நின்ற ஒரு  மூவுலகும் தம்
வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மாலை
வயிற்றில் கொண்டு மன்ன வைத்தேன் மதியாலே-–8-7-9-

வயிற்றில்
1-தாய் போல் நோக்கி
2-ஸ்வரூப ஏக தேசத்தில்
3-ஸங்கல்ப ஏக தேசத்தில்
4-அகவாயில் -உள்ளத்தில் கொண்டு

சர்வ பிரகார ரக்ஷணத்வம் ஸூ ஸ்திரமாக எனது நெஞ்சிலே -மாறாமல் -வைத்தேன்

வயிற்றில் கொண்டு மன்ன வைத்தேன் மதியாலே-இசைவித்து என்ற அவன் அருளினை மதியால் -அனுமதியாலே புத்தியால்
விலக்காத படி உள்ளத்திலே மன்னும் படிக்கு வைத்தேன் –
அவன் அங்கு இங்கு சலிக்காத படி பேராத படி வைத்தேன்

இப்படி அவன் அங்கீகரித் ததற்கு நீர் செய்தது என் என்னில் –அனுமதி மாத்ரம் செய்தேன் இத்தனை -என்கிறார் —
நிர்ஹேதுகமான விஷயீ காரத்துக்கு -அனுமதி மாத்திரமே வேண்டுவது –
அத்வேஷம் ஒன்றுமே வேண்டுவது இதுவே தானே பத்துடை அடியவர்க்கு எளியவன் பார்த்தோம் –

தம் வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மாலை–தம்முடைய நினைவில் ஆயிரத்தில் ஒரு கூற்றாலே நடத்திக் கொண்டு என்னுதல் –
அன்றிக்கே –
வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரையும் யாவரையும்-தம் வயிற்றில் கொண்டு- நின்ற ஒரு மூவுலகையும் தம் வயிற்றில் கொண்டு –என்று பிரித்துச் சொல்லுதல் –நின்ற வண்ணம் நின்ற மாலை-இவற்றை அடைய தன் வயிற்றில் கொண்ட இடத்திலும் ஒரு விகாரம் இன்றிக்கே நின்ற சர்வேஸ்வரனை –

மன்ன வைத்தேன் மதியாலே –இதற்கு –இவன் படியை அறிந்து கொண்டேன் -என்கிறார் என்று நடாதூர் அம்மாள் பணிப்பர்
நிர்ஹேதுகமாக அருள் செய்வார் -நின்ற வண்ணம் -விகாரம் இல்லாமல் -பிரகாரங்கள் உடன் தான் சேர்ந்து இருந்தான்
சர்வ பிரகார ரக்ஷகன் -என்கிற ஞானத்தால்-இருதயத்தில் வைத்தேன் -என்றபடி –
அன்றிக்கே
மதி -அனுமதி -என்று ஆக்கி–அனுமதி மாத்ரத்திலே -என்பர் பட்டர் –என்றது
அவன் புகுகிற இடத்தில் விலக்கு அற்றிலன் -என்றபடி-அனுமதி அதிகாரி ஸ்வரூபம் –

மதியால் இசைந்தோம் என்னும் அனுமதி இச்சைகள் இருத்துவம் என்னாத என்னை இசைவித்த என் இசைவினது -ஆசார்ய ஹிருதயம் ஸ்ரீ ஸூக்தி-

——-

வைத்தேன் மதியால் எனது உள்ளத்தக்கத்தே
எய்த்தே ஒழிவேன் அல்லேன் என்றும் எப்போதும்
மெய்த்தேய் திரை மோது தண் பாற் கடலுளால்
பைத்தேய் சுடர்ப் பாம்பணை நம் பரனையே –8-7-10-

சர்வ ஸ்மாத் பரன் ஷீராப்தி நாதன் -ஸுஹார்த்தம் –வ்யூஹ ஸுஹார்த்தம் பிரதானம் பாஞ்ச ராத்ரம் -ஸ்ரீ ரெங்கம்
என் நெஞ்சுக்குள் வைத்து இடை விடாமல் அனுபவிப்பேன் –வைத்ததுக்கு பலன்-இந்தப்பாசுரத்தில்
வைத்தேன் மதியால் எனது உள்ளத்தக்கத்தே -மீண்டும் சொல்லி அனுமதி முக்கியம் என்பதை காட்டி –
என் உணர்வில் உள்ளே நிறுத்தினேன் -அதுவும் அவனது இன்னருள் -ராஷா பேஷாம் ப்ரதீக்ஷிதே
எதிர் பார்க்கிறான் -உபாயம் இல்லை –அதிகாரி ஸ்வரூபம்-புருஷ சாபேஷமுமாய் புருஷகார சாபேஷமுமாய் தானே பேறு கிட்டும் 

எம்பெருமான் சபரிகரமாக என்னுள் புகுந்தான் -பாற் கடல் -பாம்பணை –
அவனை நான் இனி ஒரு நாளும் விஸ்லேஷித்து துக்கப் படேன் -மாயக் கூத்தாவில் பெரிய சிரமம் பட்டார் –

பேற்றுக்கு அடி கிருபை -இழவுக்கு அடி கர்மம்–கர்மமும் கிருபையும் அனுபவித்துத் தானே தீர வேண்டும்

பைத்ததேய் சுடர்ப் பாம்பணை நம் பரனையே–நம் பராத் பரனையே மதியால் வைத்தேன்
சுடர் பாம்பணை பள்ளியாக கொண்ட மேன்மை
புண்டரீகாக்ஷத்வம் —சிக்கென செங்கண் மாலே -திருவடியால் அளந்தோமே என்று சேர்த்துக் கொண்டான் –
தாவி –கொண்டோம் – சேவியேன் உன்னை அல்லால் -விட மாட்டேன் என்றதும் பிறந்த செங்கண் மால் -இப்பொழுது மலர்ந்த –
ஸ்ரீ யபதித்தவம் -இத்யாதி எப்பொழுதும் பரத்வம் -இங்கு திரு அநந்த ஆழ்வான் மேலே சயனித்ததால் வந்த பரத்வம்
இத்தை நமக்கு பிரகாசிப்பித்தவன் -பரன் –

வ்யூஹ மூர்த்தி வடிவைக் காட்டி -கண் முன்னே அருளினான் –
அரவித்தமளி -படுக்கை உடன் -அழகிய பாற் கடல் -உடன்அரவிந்த பாவையும் தானும் புகுந்து –

——–

சுடர்ப் பாம்பணை நம் பரனைத் திருமாலை
அடி சேர் வகை வண் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன வாயிரத்து இப் பத்தும் சன்மம்
விட தேய்ந்தற நோக்கும் தன் கண்கள் சிவந்தே–8-7-11-

ஆழ்வார் பாட அவன் பார்த்துக் கொண்டே இருக்க -அவனை பார்த்து ஆழ்வார் பாட -ராகம் -சிவந்து -இந்த காதலே உஜ்ஜீவனம்

நிகமத்தில்-இப் பத்தானது தன்னைக் கற்றவர்கள் உடைய-பிறவிக்கு த்ருஷ்ட்டி விஷம் –
சன்மம் தேய்ந்து அற-கண்கள் சிவந்து நோக்கும் -விடம் நோக்கும் விடம் -த்ருஷ்ட்டி விஷம் —கண்ணில் விடமுடைய தொரு பாம்பு போலே-
திட்டியின்(த்ருஷ்டியின் )விடமன்ன கற்பின் செல்வியை-விட்டிலையோ இது விதியின் வண்ணமே -கம்பர் கும்பகர்ண வதைப் படலம் -60

சன்மம் விட தேய்ந்தற நோக்கும் தன் கண்கள் சிவந்தே–கண் கொத்திப் பாம்பு போலே கண்களில் விஷம் வைத்துக் கொண்டு இந்த திருவாய் மொழி முடிக்கும் –

அடி சேர் வகை வண் குருகூர்ச் சடகோபன் முடிப்பான் சொன்ன வாயிரத்து -அடி சேரும் வகையை முடிப்பதற்காக-சேர்வதில் கால விளம்பம் இல்லாமல்  – ன்றும் சன்மம் முடிப்பான் சொன்ன ஆயிரத்து இப்பத்தும் என்றும் கொண்டு அநிஷ்ட நிவ்ருத்தி
சுடர்ப் பாம்பணை நம் பரனைத் திருமாலை-பரியங்க வித்யை -அநந்த போகிநே ஸ்ரீ சயா ஆஸீனம் -முக்த ப்ராப்ய போகம் இஷ்ட பிராப்தியும் உண்டே

ஞான ஆநந்தங்கள் அன்று இவருக்கு நிரூபகம்-அடிமையே ஆயிற்று-நிரூபகம்
அடிச்சியாம் அடியோம் -சேஷத்வமே ஸ்வரூப நிரூபகம் ஆழ்வாருக்கு -எல்லா அவஸ்தைகளிலும் –என்பரே-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -93-காலை வெய்யோற்கு முன் ஒட்டுக் கொடுத்த-ஒரு நாயகமாய் -4–1-

April 2, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

இருட்டு படுத்தும் பாடு முதலில் சொல்லி -மாறி மாறி அஸ்திரமாக இருப்பதைக் கண்டும் –-ஜலத்துறை -ஆச்சார்ய படித்துறை -பகவத் பக்தியில் ஆழ்ந்து -ப்ரஹ்ம அனுபவமே நீராடல் –போது செய்து -ஈடுபடுத்தி –பொழுது மலர் என்றும் வேறே இடங்களில்-மாலை – நாவில் கொள்ளாமல் நினையாமல் -இழந்து போகிறார்களே ஸம்ஸாரிகள்-கீழ் தேவர்கள் இழவுக்கு-ஒரு நாயகமாய் -4–1-இதன் விவரணம்-ஐஸ்வர்யம் கைவல்யம் த்யாஜ்யம் -விரோதி ஸ்வரூபம்–

தேவர்கள் தானோ ஓர் அபிமான விசேஷத்தாலே (பகவத் விஷயத்தை )தவிருகிறார்கள் –-அல்லாதாரோ தான் பகவத் பஜனம் பண்ணுகிறார்கள் –அவர் இவர் என்று விசேஷிககிறது என் –
எல்லார்க்கும்-புறம்பே அன்றோ போது போக்கு என்கிறார் –இருள் கண்டு அஞ்சுகிற தலைவி தோழி செவிலியரை வெறுத்தல் —

இப்படி ப்ரயோஜனாந்தர பரராய்ப் போருகிற அளவன்றியே ஸம்ஸாரிகள்-அஹோ ராத்ர விபாகத்தாலே காலம் கழிக்கிற படி கண்டு வைத்து பகவத் விஷயத்தில் அந்வயியாதே இருப்பதே -என்று அவர்கள் இழவுக்கு வெறுத்து அருளிச் செய்கிறார் –

காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்
மாலை வெய்யோன் பட வையகம் பரவுவர் அன்ன கண்டும்
காலை நன் ஞானத் துறை படிந்தாடிக் கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் அவன் மைப்படியே –
– -93 –இருளைக் கண்ட தலைவி -தோழி செவிலி தாயாரை வெறுத்தல் —

காலை–உதய காலத்தில்
வெய்யோற்கு முன்–ஸூர்யனாகிய சக்கரவர்த்திக்கு எதிரில்
ஒட்டுக் கொடுத்த–நிற்க மாட்டாமல் புறங்கொடுத்தோடுதலைச் செய்த
கங்குல குறும்பர்–இருளாகிய சிற்றரசர்கள்
மாலை–ஸாயங்காலத்திலே
வெய்யோன்–அந்த ஸூர்யனாகிய பேரரசன்
பட–அழிய-அஸ்தமிக்க
வையகம் பரவுவர்–(தாங்கள்) உலக முழுவம் பரவுவார்கள்;
அன்ன கண்டும்–அப்படிப்பட்ட தன்மையைப் பார்த்திருந்தும்.
காலை–காலத்திற்கு ஏற்றபடி
நல் ஞானம் துறை படிந்து ஆடி–நல்ல ஞானமாகிய துறையிலே இறங்கி மூழ்கி
(ஆச்சார்யர் கீழ் படிந்து -பகவத் பக்தியாகிய வெள்ளத்தில் ஆழ்ந்து ஈடுபட்டு)
கண் போது செய்து–பக்தி பாரவஸ்யத்தாலே கண்களை மூடிக் கொண்டு–(உலக விஷயத்தில் மொட்டு போல் பகவத் விஷயத்தில் மலர்ந்து)
மாலை–எம்பெருமானை
நல் நாவில் கொள்ளார்–(தங்களுடைய) நல்ல நாவினால் பெயர் கூறித் துதியார்;
அவன் மைபடி–அவனது கரிய திருமேனியை
நினையார்–நினைப்பதற்கு செய்யார்.-

ஒரு நாயகமாய் யுலகுக்கு வானோர்
இரு நாட்டில் ஏறி யுய்க்கும் இன்பம் -திறமாகா
மன்னுயிர்ப் போகம் தீது மாலடிமையே யினிதாம்
பன்னியிவை மாறன் உரைப்பால் —-31-சீர் பரவப் பெற்ற நான் -என்று கீழ் பகவத் அனுபவத்தாலே ஹ்ருஷ்டரான ஆழ்வார்-அந்த ஹர்ஷத்தாலே இவ் விஷயத்தை ஒழிய ஐஸ்வர்யாதிகளிலே மண்டி இருக்கிறவர்களைக் குறித்து-மீளவும் இவற்றின் யுடைய அல்ப அஸ்திரத்வாதிகளாகிற தோஷங்களை அறியாதே இவற்றிலே மண்டி இருக்கிறார்கள் என்று இவற்றின் தோஷங்களைப் பரக்க பேசா நின்று கொண்டு பரம புருஷார்த்த பூதனான ஸ்ரீயபதியின் திருவடிகளை ஆஸ்ரயுங்கோள் என்று பிறருக்கு உபதேசித்துச் செல்லுகிற ஒரு நாயகத்தின் அர்த்தத்தை சங்க்ரஹித்து ஒரு நாயகமாய் -இத்யாதியால் அருளிச் செய்கிறார் 

காலை இத்யாதி –உத்பவ அபிபவ ரூபத்தாலே ஆதித்யன் இருளை மேலிடுவது –ராத்திரி ஆதித்யனை- மேலிடுவதாகிற இத்தைக் கண்டு வைத்தும் –நந்தத் யுதித ஆதித்யே-விடிந்த வாறே அபிமத விஷயத்தை சாதிக்கைக்கு த்ரவ்யார்ஜனம்-பண்ணுக்கைக்கு ஈடான காலம் வந்தது என்று உகவா நிற்பர்கள் –நந்தந்த் யஸ்தமிதே ரவவ் –அஸ்தமித்தவாறே இவற்றைக் கொண்டு பிறர் அறியாதவாறே
அவ் விஷயங்களை புஜிக்க-காலம் வந்தது என்று உகவா நிற்பர்கள் –காலை இத்யாதி –பிரபாத சமயத்திலே -வெய்யோன் உண்டு -ஆதித்யன் –அவனுக்கு முன்னோட்டுக் கொடுப்பர்கள் ஆயிற்று-கங்குல்கள் ஆகிற குறும்பர் –அவன் கிரணங்கள் பட- கை விட்டு ஓடா நிற்பர்கள் இறே –மாலையில் பெரிய பிரதாபத்தை உடைய ஆதித்யனை அழித்து-அவன் ஆண்ட பரப்பை அடையக் கைக் கொள்வர்கள் –நித்ரையாலே பூமியாகப் பரவசமாம்படி-பண்ணிக் கொண்டு வரும் இறே–ஆத்மந இத்யாதி-பகல் என்றும் இரவு என்றும் கூறிட்டுக் கொண்டு இங்கனே தந்தமுடைய ஆயுசை ஈர்க்கிறதோர் ஆயுதம்-சாலில் வார்த்த நீர் போல் நம் ஆயுஸ்ஸூ போகிறபடி படி என்று புத்தி பண்ணுகிறவர்கள் அல்லர்-சாவக்கடவராய் இருக்கிறவர்கள்-காலை -ப்ரபாத சமயத்திலே வெய்யோன் உண்டு ஆதித்யன் அவனுக்கு முன்னோட்டுக் கொடுப்பர்கள் ஆயிற்று கங்குல் ஆகிற குறும்பர்
அவன் கிரணங்களைப் பரக்க விட ஓடா நிற்பர்கள் இறே-மாலையிலே பெரிய பிரதாபத்தை யுடைய ஆதித்யனை அழித்து அவன் ஆண்ட பரப்பை அடையக் கைக்கொள்வர்கள்-நித்ரையாலே பூமியாகப் பரவசமாம் படி பண்ணிக்கொடு வரும் இறேஅன்ன கண்டும் –அப் படியைக் கண்டு வைத்தும் –பகவத் விஷயம் பிரத்யஷத்துக்கு அவிஷயம் ஆகையாலே -தான் அறியாது  ஒழிகிறார்கள்-இதனுடைய அஸ்தர்யத்தை பிரத்யஷியா நிற்கச் செய்தேயும்-நெஞ்சில் படாது ஒழிவதே –காலை –சத்வோத்தரமான காலையிலே –நல் ஞானம் –ஞானம் ஆகில்-பகவத் விஷயத்தை பற்றி அன்றி இராது இறே –ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -(முதல் திருவந்தாதி )என்னக் கடவது இறே –தத் ஜ்ஞானம் அஞ்ஞானம் அதோன்யதுக்தம் (பராசர மகரிஷி )- என்றும் –வித்யான் யாசில் பகை புணம் – புறம்பே ஒன்றை அறிந்ததோடு துன்னம் பெய்ய அறிந்ததோடு வாசி இல்லை இறே –துறை படிந்தாடி –ஜ்ஞானம் ஆகிற இத் தீர்த்தத்திலே புக்கு அவஹாகித்து –கண் போது செய்து –போது செய்து என்று மொட்டிக்கைக்கும் பேர் –அலருகைக்கும் பேர் புறம்புத்தை விஷயங்களில் கண் செம்பளித்து என்னுதல் –பகவத் விஷயத்தில் விழித்து என்னுதல் –மாலை –இவன் அனுசந்திக்க என்று உபக்ரமிக்கும் அத்தனை இறே வேண்டுவது –மேல் உள்ளது எல்லாம்-தானே செய்து -கொடு வந்து மேல் விழும்படியான வ்யாமோஹத்தை உடையவனை –நல் நாவில் கொள்ளார்-நல் நா- என்கிறது புறம்புத்தை ஜல்பங்களைத் தவிர்ந்து -பகவத் விஷயத்தை-பேசுவோம் என்றால் – அதுக்கு பாங்கான நாவைப் படைத்து வைத்து -இவர்கள் புறம்பே போகிறது என்-என்கிறார் –சா ஜிஹ்வா -ஹரி -(பேச்சும் நினைவு கைகூப்பும் செய்ய வேண்டுமே )-நினையார் அவன் மைப்படியே –வ்யாமோஹம் பண்ணாதே -த்வேஷத்தைப் பண்ணினாலும் விட ஒண்ணாத வடிவு அழகை நினைப்பார் இல்லை –தருணவ்–த்வேஷத்துக்கு விஷயமாய் மூக்கு அறுப்புண்டவள் இறே – இவ்வார்த்தை சொன்னாள் –தான் பரிபூதையாம்படியை போய் சொல்லுகிற-இடத்திலே இது எதுக்கு உறுப்பாக சொன்னாள் தான் –

உலகில் அநேகர் -வைகலும் வைகல் வரக் கண்டும் அஃது உணரார் -நாலடியார் —-ஆழ்வார்கள் தான் பொழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுவார்கள்-இங்கனம் வாள்களாகி நாள்கள் செல்லுகின்றனவே -பொழுதே பல பகலும் போகின்றனவே-ஊமனார் கண்ட கனவிலும் பழுதா ஒழிகின்றனவே நாள்கள் -என்று கவலைப் படுவார் யாரும் இலை -ஒரு க்ஷணம் பொழுதாகிலும் பகவத் விஷயத்தில் செலுத்துவார் இல்லையே பிறர் இழவுக்கு பரிகிறார் –காலை –சத்வ குண பிரதானம்
நன் ஞானத் துறை படிந்தாடிக் -சிறந்த ஆத்ம ஞானத்துக்கு இறங்கு துறையான ஆச்சார்யரை வணங்கி -அவர் உபதேசங்களில் ஆழ்ந்து-பெருமானை இலக்காகக் கொண்ட ஞானமே நல் ஞானம் –-ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு-கண் போது செய்து-விஷயாந்தரங்களிலே அறிவு செல்லாத படி உள்ளடக்கி-எம்பெருமான் பக்கலிலே-ஞானம் என்னும் உட் கண் மலர்ந்து –போது செய்து என்று மொட்டிகைக்கும் பேர் -அலருகைக்கும் பேர் -புறம்புள்ள விஷயங்களில் கண் செம்பளித்து என்னுதல்-பகவத் விஷயத்திலே விழித்து என்னுதல் –மாலை நல் நாவில் கொள்ளார் -தம் பக்கல் வ்யாமோஹம் கொண்டவனை நாவால் ஸ்துதியாதார் –-நல் நா -எம்பெருமானை ஸ்துதிப்பதற்கு என்றே அமைந்த நா –நாராயணா என்னா நா என்ன நாவே –நினையார் வன்மைப்படியே-அவன் மைப்படி நினையார் -அவனது கரிய திருமேனியை தியானிப்பதும் செய்யார் -லௌகிகரைப் பழித்த படி
பெயரினையே புந்த்தியால் சிந்தியாது ஓதி யுரு என்னும் அந்தியால் ஆம் பலம் எங்கனம் என்பதால்
மாலை நல் நாவில் கொள்ளார் என்று மாத்திரம் சொல்லாமல் மேலே நினையார் வன்மைப்படியே – என்கிறார்
-முந்தின வாக்யத்தால் இருளின் கொடுமையையும் -மேலே அது அவன் திருமேனிக்கு ஸ்மகரமாய் வருத்துகிற படியை தோழிமார் சிந்தியாமையும் -அந்த நோய் தணிக்கும் உபாயத்தையும் செய்யாமையும் பழித்தவாறு –உலகத்தில் அனேகர் “வைகலும் வகைல் வரக்கண்டு மஃதுணரார்” (நாலடியார்- அறன்வலியுறுத்தல் 9) என்றபடி-காலைப்பொழுதும் மாலைப்பொழுதும் மாறிமாறி வந்துகொண்டு காலங்கழிந்துகொண்டே செல்லுகிறபடியை ப்ரத்யக்ஷமாகவே பார்த்துக் கொண்டிருக்கச் செய்தேயும் தங்களுடைய இளமைப் பிராயம் விரைவாகக் கழிந்து போவதில் கருத்தூன்றுதலின்றி-எம்பெருமான் பக்கல் ஈடுபாடு கொள்ளாமல் வீணேயிழந்து பழுதே பலபகலும் போக்குகிறார்களேயென்று ஆழ்வார் வெறுத்து அருளிச் செய்கிறார்.-உலகர்கள் தினப்படி ஸூர்யன் உதிக்கும்போது வேண்டியபடி பொருள்களைத் திரட்டலராமென்று களிக்கிறார்கள்;-பிள்ளை ஸூர்யன் அஸ்தமிக்கும்போது வேண்டிபடி விஷய போகங்களைச் செய்யலாமென்று குதூஹலிக்கிறார்கள்;
இப்படி ஸூர்யனுடைய உயத்தேடு அஸ்தமனத்தோடு வரசிய ஸம்ஸாரிகள் களிப்பதே கருமமாயிருக்கிறார்களே யன்றி,‘இங்ஙனம் வாள்களாகி நாள்கள் செல்லுகினற்னவே, பழுதே பலபலகும் போகின்றனவே!-ஊமனார் கண்ட கனவிலும் பழுதா யொழிகின்றனவே நாள்கள்’ என்று கவலைப்படுவாருமில்லையே!-ஒரு கணப்பொழுதையும் பகவதநுஸந்தாகத்திற் செலுத்துவாரில்லையே! என்று ஸம்ஸாரிகளுக்காக ஆழ்வார் தாம் கவலைப்படுகிறார்.-இவ்வாழ்வார் உலகத்தாரைச் சீர்திருத்தி உஜ்ஜிவிக்கச் செய்யும் பொருட்டுத் திருவவதரித்தவராதலாலும் மிக்க ஜீவ காருண்ய முடையவராதலாலும் பிறரிழவுக்குப் பரிவு கொள்ளக்கடவராவர். முதலிரண்டடிகளால் பகலும் இரவுமாக மாறி மாறி வந்து ஆயுள்நாளைக் கழியச் செய்தலை எடுத்துக்காட்டியபடி, இது செல்வ நிலையாமைக்கும் ஒரு திருஷ்டாந்தமாம்.–பின்னடிகளிரண்டும் நாட்டாரைப் பழிப்பன; காலை- ஸத்வகுண ப்ரதாநமான விடியற்காலத்தில் நல்ஞானத் துறைபடிந்து--சிறந்த ஆத்மஜ்ஞாநத்துக்கு இறங்கு துறையாகிய ஆசார்யனை வணங்கி, ஆடி- அவ்வாசார்யோபவதேசத்திலே ஆழ்ந்து
கண்போதுசெய்து- விஷயாந்தரங்களில் அறிவு செல்லாதபடி அதனை உள்ளடக்கி, மாலை நல்நாவில் கொள்ளார்--தங்கள் பக்கதல் அன்புடைய ஸர்வேச்வரனை நல்ல நாவினால் துதியார்;
அவன் மைப்படி நினையார்- அவனுடைய கரிய திருமேனியை தியானிப்பதுஞ் செய்யார் என்று லௌகிகரைப்பழித்தபடி.-நல்ஞானம்- எம்பெருமானை இலக்காகக்கொண்ட ஞானமே நல்ல ஞானம்; மற்றை விஷயமான ஞானமெல்லாம் அஜ்ஞானமும் விபரீதஜ்ஞானமுமா மென்க.
ஒண் தாமரையான் கேள்வனொருவனையே நோக்குமுணர்வு” (முதல் திருவந்தாதி) என்ற பொய்கையார் பாசுரமறிக.–ஸ்நாநத்துக்கு உரிய காலம் வைகறையாதலால் ‘துறைபடிந்தாடி’ என்பதற்கு ஏற்ப ‘காலை’ எனப்பட்டது.“கண்போதுசெய்து” என்பதற்கு- இரட்டுற மொழிதல் என்னும் உத்தியால் ‘எம்பெருமான் பக்கலிலே ஞானெமன்னும் உட்கண் மலர்ந்து’என்ற பொருளும் கொள்ளத்தகும். இங்கே நம்பின்னை யீடு காண்க:- “போது செய்து என்று மொட்டிக்கைக்கும பேர்,அலருகைக்கும் பேர்; புறம்புற்ற விஷயங்களின் கண் செம்பிளித்து என்னுதல்; பகவத் விஷயத்திலே விழித்து என்னுதல்.” என்று.“பெயரினையே புந்தியாற் சிந்தியாது ஓதியுறு வெண்ணு மந்தியாலாம் பயனங்கென்” (முதல் திருவந்தாதி) என்றபடி மனப் பூர்வமாக தியானித்தலின்றிச் சொல் மாத்திரத்தால் ஓதி யுருவிடுதல் சிறப்பன்றாதலால் “மாலை நன்னாவிற் கொள்ளார்” என்ற மாத்திரத்தோடு நில்லாமல் “நினையாரவன் மைப்படியே” என்றும் அருளிச் செய்தது.

போது- மலரும் பரவத்து அரும்பு; போரும்பு. நல்நா- எம்பெருமானைத் துதிப்பதற்கென்ற அமைந்த நா:
நாராயணா வென்னாநா என்னநாவே” (சிலப்பதிகாரம்- ஆய்ச்சியர் குரவை) என்றார் பிறரும்.–இப்பாட்டுக்குக் கிளவித்துறை கூறவேணுமென்னும் நிர்ப்பந்தமில்லை; அங்ஙனே கிரபபந்தங் கொள்ளில், இருள்கண்டு அஞ்சுகிற தலைவி, தோழியையும் தாயும் வெறுத்தல் இது என்று கொள்ளலாம். நாயகி எம்பெருமானாகிய நாயகனைப் பிரிந்து அப்பிரிவை ஆற்றாது
நிற்கிற நிலையில் ஸூர்யன் அஸ்தமித்துக் காமோத்தீபமான இராப்பொழுது வந்து எங்கும் இருள் பரவி அவ்விருள் எம்பெருமானது கரிய திருமேனியை ஞாபகப்படுத்தி வருத்த, அதற்கு ஆற்றாத அந்த நாயகி “உலகேழு முண்டான சொன்மொழிமாலை அந்தண்ணந்துழய் கொண்டு சூடுமின்” (திருவிருத்தம் 20) என்று சொல்லும்படி தன் நோய்க்குப் பகவந்நாமோச்சாரணமாகிய மந்த்ர பரிஹாரத்தையே உடையவளாதலால், நோய்நிலையும் அதன் பரிஹாரத்தையும் ஆராய்ந்து நடத்தாத தோழியர் செவிலியர் என்பவரைக் குறித்து வெறுத்துக் கூறியது இது என்று கொள்க. முந்தின வாக்கியத்தால், இருளின் கொடுமையை வெளியிட்டாள்; பிந்தினவாக்கியத்தால், அவ்விருள் அவனது திருமேனிக்கு ஸ்மாரகமாய்த் தன்னை வருத்துகிறபடியைத் தேதி முதலியோர் சிந்தியாமையையும், சிந்தித்து அந்நோய் தணிக்கும் உபாயத்தைச் செய்யாமையையும் பழித்தவாறு.வெய்யோன் – உஷ்ணகிரணமுடையவன்; பகைவர்க்குக் கொடிய பராக்ரமசாலி. குறும்பர் – குறுநில மன்னர்.
அன்னகண்டும் = அழியாது பாதுகாக்கிற நீதிமானான செங்கோலரசன் அழிந்ததையும், சமயம் நோக்கி எளியாரை வருத்தும் அநீதியையுடைய கொடுங்கோலரசர் பரவினதையும் ப்ரத்யக்ஷமாகப் பார்த்திருந்தும் என்றபடி.–ஓட்டு- ஓடுதல்; முதனிலைதிரிந்த தொழிற் பெயர்.

காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்-ப்ராத காலத்திலே ஆதித்யன் வருகிறான் என்று அவன் பிரதாபத்துக்கு அஞ்சி ஏலக்கோலி ஓடிப்போன ராத்ரியாகிற குறும்பர்-மாலை வெய்யோன் பட வையகம் பாவுவர்-சாயம் காலத்திலே அந்த பிரதா போத்தரனான ஆதித்யனானவன் அஸ்தமிக்க லோகம் அடங்கப் பரம்பா நிற்பர்கள்-அன்ன கண்டும்–அப்படிக் கால பேதேந ப்ரகாஸ அந்தகாரங்கள் கலசி வருகிறபடி கண்டு இருக்கச் செய்தேயும்–காலை நன் ஞானத் துறை படிந்தாடிக்
ஸத்வ உத்தர காலத்திலே வைதிகமான அத்யாத்ம ஞானத்துக்குத் துறையான ஆச்சார்ய விஷயத்தைப் பிராணாமம் பண்ணி அவன் உபதேசத்தில் அவகாஹித்து–கண் போது செய்து-பாஹ்ய இந்த்ரியத்தைப் புறம்பு போகாதபடி மொட்டுவித்து-மாலை நல் நாவில் கொள்ளார்-ஆஸ்ரித வத்ஸலனான ஸர்வேஸ்வரனை ஸ்தோத்ரம் பண்ண இட்டுப் பிறந்த நாக்கிலே ஸ்வீ கரியார்கள்-நினையார் அவன் மைப்படியே –-அவனுடைய ஸ்யாமளமான திருமேனியை நெஞ்சுக்கு விஷயமன் ஆக்கார்கள்-இப்பொழுதைப் பழுதே போக்குவதே என்று வெறுத்து உரைத்தார் ஆயிற்று

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-நன்மை பெற வல்ல நாக்கால் அனுசந்திப்பதும் செய்யார்கள்
அவன் மை போன்ற திருமேனியை ஸாஸ்த்ரத்தில் பஞ்சத்தாவிபக்த காலங்களில் ஸ்மரியார்கள்
யூகித்தார்த்த விபரீதமாய் நந்தத்த் யுதித ஆதித்யே நந்தத்த் யஸ்தமிதே ரவவ் ஆத்மநோ நாவபுத் வந்தே மனுஷ்யா ஜீவிதா ஷயம் -அயோத்யா -105-24–என்றபடியாய் இரா நின்றார்கள் என்கிறார்

தாத்பர்யம்-இதில் ப்ரஹ்மாதி தேவர்கள் ஈஸ்வரன் என்னும் துர்மானத்தால் நினையாமல் போகிறார்கள்
சம்சாரிகள் இழந்து போவதை நினைத்து இழவுக்கு வருந்தி அருளிச் செய்கிறார்-தினம் தோறும் -இருள் வந்ததால் தூங்கி -ஞானம் அபகரித்து இருள் தீம்பு செய்யுமே-காலையில் உதிக்கும் பொழுது ஓடிப்போய் ஒழியுமே-மாறி மாறி பகலும் இரவும் வர-ஆயுசை கழிக்க -இருந்தும் அறியாமல்
சத்வ உத்தரமான காலையில் -எழுந்து இருந்து சகல இந்திரியங்களை புறம்பே விஷயாந்தரங்களில் மண்டி அவன் திரு நாமம் சொல்லாமல் அஞ்சன திரு மேனியை நினையாமல் கெட்டுப்போகிறார்கள் என்று சோகிக்கிறார்-பர உபதேசம்-ஒரு நாயகமாய் இதனால் தானே

4-1-ஒரு நாயகமாய் ப்ரவேஸம்-

முதற்பத்தால், பகவத் கைங்கர்யம் புருஷார்த்தம் என்று அறுதியிட்டார்;
இரண்டாம் பத்தால், அந்தக் கைங்கர்யத்தில் களை அறுத்தார்;
மூன்றாம் பத்தால், களை அறுக்கப்பட்ட அந்தக் கைங்கர்யமானது பாகவத சேஷத்வ பர்யந்தமான பகவத் கைங்கர்யம் என்றார்;
இப்படிப்பட்ட கைங்கர்யத்திற்கு விரோதிகள் ஐஸ்வர்ய கைவல்யங்கள் என்கிறார் இந்த நான்காம் பத்தால்.

முதல் மூன்று பத்துகளாலும் துவயத்தில் பின் வாக்கியத்தின் பொருளை அருளிச்செய்தார்;
இனி, மேல் வருகின்ற மூன்று பத்துகளாலே அதில் முன் வாக்கியத்தின் பொருளை அருளிச் செய்கிறார்.

மேல் வருகின்ற மூன்று பத்துகளாலே’ என்றது, 4-ஆம் பத்து, 5-ஆம்பத்து, 6-ஆம் பத்துகளைக் குறித்தபடி.
இம்மூன்று பத்துகளாலே ‘ஸ்ரீமந்நாராயண சரணௌ சரணம் பிரபத்யே’ என்ற முன் வாக்கியத்தின் பொருளை அருளிச்செய்கிறார் என்றபடி.
பெரிய பிராட்டியார் புருஷகாரமாக, வாத்சல்யம் ஸ்வாமித்வம் சௌசீல்யம் சௌலப்யம் ஞானம் சத்திகளாகிய குணங்களையுடைய
எம்பெருமானுடைய திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறேன்,’ என்பது இவ்வாக்கியத்தின் பொருள்.
இப்பொருள்தன்னையே 4,5,6-ஆம் பத்துகளில் அருளிச்செய்கிறார் என்பதனைத் தெரிவிக்கின்றார்.
(முதல் பத்து அவதாரிகை – ‘திருமகள்
கேள்வன் இரண்டு’ காண்க.)
“இதில் (துவயத்தில்) முற்கூற்றால், பெரிய பிராட்டியாரை முன்னிட்டு ஈசுவரன் திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறது;
பிற்கூற்றால், அச்சேர்த்தியிலே அடிமை இரக்கிறது,” என்பது ஸ்ரீபிள்ளைலோகாசார்யர் ஸ்ரீசூக்தி.
அக்ரமாக அருளிச் செய்தது -அனுஷ்டான பரம் த்வயம் –சரணாகதி பண்ணினால் பலம் கிடைக்கும் -இங்கு உபதேசம் பலத்தை முதலில் சொல்லி
-பின்பு உபாயம் சொல்ல வேண்டுமே -பிரயோஜனம் இல்லாமல் மந்த மதிகளும் கார்யம் செய்ய மாட்டார்களே –
ஸ்வர்க்க காம-பலம் சொல்லி -ஜ்யோதிஷ்ட ஹோமம் யஜெத -செய்யச் சொல்லிற்றே
பஹூச்யாம் -பிரஜா யேய-சங்கல்பம் -பலத்தை -வியஷ்டி சிருஷ்டி முதலில் சொல்லி -சமஷ்டி சிருஷ்டி பின்பு சொன்னால் போலே

முதல் மூன்று பத்துகளாலும் சொன்ன புருஷார்த்தத்துக்கு உரிய உபாயத்தை அடியிலே அறுதியிடுகிறார்.
‘அடியிலே’ என்றது, சிலேடை : முதல் திருவாய்மொழியிலே என்பதும், திருவடிகளிலே என்பதும் பொருள்.
திருவடிகளிலே என்று பொருள் கொள்ளும்போது ‘உபாயத்தை’ என்பதற்கு உபாயத்தின் தன்மையை என்று பொருள் கொள்க. ‘
சிந்தித்துய்ம்மினோ’ என்பது போன்ற இடங்களில் உபாயத்வம் கூறப்பட்டிருத்தல் தெளிவு.
உபாயத்வம் – உபாயத்தினது தன்மை. உபாயம் – வழி.

இவ்வடி அறியாதாரே அன்றோ வேறு உபாயங்களாகிற விலக்கடிகளில் செல்லுகின்றவர்கள்?

‘அல்லாதார் கர்மம் ஞானம் பத்திகளை உபாயமாகக் கொள்ளாநிற்க, இவர் திருவடிகளை உபாயம் என்கிறது என்?’ என்னும்
வினாவிற்கு விடையாக,‘இவ்வடி அறியாதாரேயன்றோ’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார். அடி – திருவடிகள்.

நிரவதிகப் பிரீதியோடேயன்றோ, மேல், திருவாய்மொழியை இவர் அருளிச்செய்தது?
-நிரவதிகம்– தனக்குமேல் ஒன்று இல்லாதது.
தாமும் குறைவற்று, பற்றினார் குறைகளையும் தீர்க்க வல்லவராம்படி இருந்தார் மேல்.
சமுசாரிகளைப் பார்த்து, ‘நீங்கள் பற்றின விஷயங்கள் தண்ணியவான பின்பு அவற்றைவிட்டுத் திருமகள் கேள்வனைப் பற்றுங்கோள்’ என்று
பரோபதேசத்தில் இழிகிறார் இத்திருவாய்மொழியில்.
ப்ராப்யாந்தர நசை ஒழிந்தே -பரித்யாகம் பூர்வாகமாகவே -உபாயாந்தர பரித்யாகம் -சர்வ தர்மான்-பரித்யஜ்ய என்பதால் சொல்லிற்றே –

‘நன்று; ‘வீடுமின் முற்றவும்’ என்ற திருவாய்மொழியிலும் பரோபதேசம் செய்தார்;
‘சொன்னால் விரோதம்’ என்ற திருவாய்மொழியிலும் பரோபதேசம் செய்தார்;
இந்தத் திருவாய்மொழியும் பரோபதேசமாய் இருக்கின்றது; இவற்றிற்குக் கருத்து என்?’ எனின்,
இவை எல்லாவற்றிலும் எல்லா அர்த்தங்களும் உளவேயாகிலும் ஒவ்வொன்று ஒவ்வோர் அர்த்தத்தில் நோக்காய் இருக்கும்.
‘யாங்ஙனம்?’ எனில்,
‘வீடுமின் முற்றவும்’ என்ற திருவாய்மொழியில் ‘இதர விஷய வைராக்கியம் முன்னாகப் பகவத் பத்தியைச் செய்யுங்கோள்’ என்றார்;
‘சொன்னால் விரோதம்’ என்ற திருவாய்மொழியில் ‘பகவானைத் துதிப்பதற்குத் தக்கனவான உறுப்புகளைக் கொண்டு
பிறரைத் துதி செய்யாமல் சர்வேசுவரனைத் துதி செய்யப் பாருங்கோள்’ என்றார்;
இத்திருவாய்மொழியில் ‘இவர்கள் தாம் பிறரைத் துதி செய்வது சில பிரயோஜனத்திற்காகவே அன்றோ?’ என்று
அவற்றினுடைய–அல்ப அஸ்திரத்வாதி – சிறுமை, நிலையின்மை -அனர்த்தாவகத்வம் -துக்க மிஸ்ரத்வம் முதலிய
தோஷங்களின் மிகுதியை அருளிச்செய்கிறார்.

செல்வம் அற்பமானது, நிலையாதது முதலிய குற்றங்களை யுடையதாகையாலே தண்ணிது;
ஆத்துமலாபமாகிய கைவல்யம் நிலைத்து நிற்பதாயினும், புருஷார்த்தம் அல்லாதது ஆகையாலே, தண்ணிது;
இப்படி ஐஸ்வரிய கைவல்யங்களுக்கு உண்டான தண்மையைச் சொல்லி, ‘சர்வேசுவரன் ஆகிறான் மங்களம் பொருந்திய
எல்லா நற்குணங்களையும் உடையவனாய் விரும்பினவை அனைத்தையும் கொடுக்கக் கூடியவனாய் இருப்பான் ஒருவன்;
ஆனபின்பு அவற்றை விட்டுப் பகவானைத் துதி செய்யப் பாருங்கோள்’ என்று இங்ஙனே பகவானைப் பற்றுவதற்கு உண்டான
நன்மையை விளக்கிப் பேசா நின்று கொண்டு பரோபதேசம் செய்ய இழிகிறார்.
தான் பெற்ற அனுபவம் பேசி அருளிய பின்பு ஆழ்வார் ஐஸ்வர்யம் கைவல்யம் அனுபவிக்கும் சம்சாரிகளைப் பார்த்து
நிலை அற்ற அத்ய அல்பம்விட்டு பகவத் விஷயம் பற்ற அருளுகிறார் இந்த திருவாய்மொழியில்
ப்ராப்யாந்தர பரித்யாகம் முன்னாக பற்ற வேண்டுமே –

இவர் தாம், மக்கள் இந்திரியங்களை வென்றவர்களாய் வந்து நின்றுகொண்டு,
‘எங்களுக்கு நலத்தை உபதேசிக்க வேண்டும்’ என்று கேட்க,
உபதேசிக்கிறார் அன்றே?
பிராட்டியும் ஸ்ரீ விபீஷணாழ்வானும் இராவணனை நோக்கி நலத்தைக் கூறினாற்போன்று இருப்பது ஒன்றேயன்றோ
இவருடைய பரோபதேசம்? ‘எல்லா ஆத்துமாக்களையும் கவரக்கூடியதான காலபாசத்தினால் கட்டு உண்டவனும் நாசத்தை அடைகின்றவனுமான
இராவணனை – பற்றி எரிகின்ற வீட்டினைப் போன்று – உபேக்ஷை செய்யமாட்டேன்’ என்பது ஸ்ரீ விபீஷணாழ்வான் வார்த்தை.
‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின்,
‘வெந்து அற்ற வீட்டிலே ‘ஒரு கம்பாகிலும் கிடைக்குமோ?’ என்று அவிக்கப் பார்ப்பாரைப் போன்று, நானும் நலத்தைக் கூறுவேன்’ என்கிறார் என்பது.

மூன்றாம் பத்தில் –
இப்படி பகவச் சேஷ பூதனான தத் ஏக அனுபவத்தை ப்ரதிபாதித்த அநந்தரம் -தத் ஏக பிரியத்வத்தை நாலாம் பத்திலே ப்ரதிபாதிப்பதாக –
அஸ்திரமாய் -அல்பமான-ஐஸ்வர்ய -கைவல்யங்களில் காட்டில் பகவத் ப்ராப்தியினுடைய உத்கர்ஷ உபதேசத்தாலே சேதனனுடைய அநந்ய போக்யத்வத்தையும் –
அவனுடைய பஹு வித போக்யத்வத்தாலே இவனுக்குப் பிறந்த போக இச்சையையும்
இவனுடைய ஆத்மாத்மீயங்கள் தனக்குப் போக்யமாம் படி ஈஸ்வரன் தான் இவனோடு கலந்த ப்ரணயத்தையும்
அனுபவ அலாபத்தில் துல்ய சம்பந்தி வஸ்து தர்சனத்திலும் ஸ்மாரகத்வேந ஆர்த்தி பிறக்கும் படியையும்
ஆர்த்தி சமிக்கும் படி ஸம்ஸ்லேஷித்த போக்ய விஷயத்தில் ஸ்தோத்ரத்தாலே போத்தாவுக்கு யுண்டான ஹர்ஷ உத்கர்ஷத்தையும்
அவசன்ன தசையிலும் அந்நிய ஸ்பர்சம் பொறாத படியான தத் அனுபந்தமே ஆச்வாஸ கரம் என்னும் இடத்தையும்
போக்ய பூதனுடைய குண அனுபவ இச்சையாலே தீவிர ஸைதில்யம் பிறக்கும் படியையும்
அவன் ஆதரியாத ஆத்மாத்மீயங்கள் அஸஹ்யங்கள் ஆகையாலே அநாதரணீயங்கள் என்னும் இடத்தையும்
அதி துஸ் ஸஹ சம்சார நிவ்ருத்தி பூர்வகமாக ஸ்ரீ யபதி சரணங்கள் அதிசயித புருஷார்த்தம் என்னும் இடத்தையும்
சர்வாதிக சேஷியானவனுடைய கைங்கர்யமே உத்கர்ஷமாய் உசிதமான ப்ராப்யம் என்னும் இடத்தையும்
அருளிச் செய்து சேஷபூதனுடைய தத் ஏக பிரியத்வத்தை உபபாதிக்கிறார் –

அதில் முதல் திருவாய் மொழியில்
சேதனனுடைய அனன்யா போக்யத்வத்தை ப்ரதிபாதிப்பதாக போக்ய பூதனுடைய நிருபாதிக சம்பந்தத்தையும்
சர்வாதிகாத்தவ ஸூ சகமான ஸ்ரீ யபதித்வத்தையும்
போக்யத்வ விசிஷ்டமான ஸுலப்யத்தையும்
போக பிரதிபந்தக விரோதி நிவர்த்தநகத்வத்தையும்
விலக்ஷண விக்ரஹாதி யோகத்தையும்
அவதார போக்யதைக்கு மூலமான அர்ணவ ஸாயித்வத்தையும்
அதுக்கும் அடியான பரத்வ உத்கர்ஷத்தையும்
ஆஸ்ரித சம்ச்லேஷ ஸ்வ பாவத்தையும்
பல பிரதத்வ ஸூ சகமான கருட த்வஜனத்வத்தையும்
நிரவதிக நியந்த்ருத்வத்தையும் அருளிச் செய்து -இப்படி ப்ராப்ய பூதனான ஈஸ்வரனை –
அஸ்திரமாயும் அல்பமாயும் உள்ள ஐஸ்வர்ய கைவல்யங்களில் அகப்படாதே ஆஸ்ரயிங்கோள் என்கிற
உபதேச முகத்தால் ஆத்மாவினுடைய அநந்ய போக்யதையை அருளிச் செய்கிறார் –

ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ.
–4-1-1-

நிலை நில்லாத ஐஸ்வரியத்தைப் பற்றி நீர்க்குமிழி போலே உடைந்து போகின்ற மனிதர்களாதலின், ‘நாயகம் ஆய்’ என்கிறார்.-நிலா நாளிலே இருட்டுப் புரைகளிலும் இருட்டு நாளிலும் ஆயிற்றுப் புறப்படுவது;-இருள் ஓர் இடத்திலே திரண்டாற்போலே கறுத்த நாய்கள் கிடக்கும்; அதனை அறியாதே அவற்றின் வாயிலே காலை இடும்;-அவை கடிக்கும்.
அன்றிக்கே,-கருநாய் என்பதற்கு, கருமை –-கறுமை- சீற்றமாய், வெட்டிய நாய் என்னுதல்.
அன்றிக்கே, கரு நாய் – கருவையுடைத்தான நாய் என்னுதல்;-என்றது, குட்டி இட்ட நாய், என்றும் குட்டியைக் காத்துக்கொண்டு கிடக்குமாகையாலே, ‘அதற்கு ஏதேனும் தீங்கு வருகிறதோ!’ என்று கண்டாரை ஓடிக் கடிக்குமே அன்றோ? அதனைச் சொல்லுகிறது என்றபடி.

காலர் – ‘வீரக் கழல் இட்ட கால்’ என்றே அன்றோ முன்னர்ச் சொல்லிப்போருவது?
இப்போது, ‘நாய் கடித்த காலர்’ என்றாயிற்றுச் சொல்வது என்பார், ‘நாய் கவர்ந்த காலர்’ என்கிறார்.-முன்பு பொற்கலத்திலே உண்டு வாழ்ந்தவனுக்கு இப்போது ஒரு புத்தோடு கிடையாதபடியாயிற்று’ என்பார்,-‘சிதைகிய பானையர்’ என்றும் அருளிச்செய்கிறார்.

முன்பு அரசர்களுக்கு இராச்சியம் வழங்கினானாய் அன்றோ போந்தது? இப்போது ஒரு பிச்சை மாத்திரமேயாயிற்று இவன் விரும்புவது.-முன்பு இராசாக்கள் கொண்டு வந்த பச்சையை, சிலர் இடத் தாம் கொண்டார் என்பது ஆகாமைக்கு ஆள் வைத்தே அன்றோ வாங்குவது? இப்போது தாமே கொள்வர்.
அன்றிக்கே.-இடுகின்றவர்கள் பக்கல் நினைவு இன்றிக்கே, தம் விருப்பம் மாத்திரமே உள்ளது என்பார், தாம் கொள்வர்’ என்கிறார் என்னுதல்.

இராச்சியத் திரு இங்ஙனேயான பின்பு,-திருநாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ –‘ஸ்ரீமானான நாராயணன் திருவடிகளை அடைந்து உய்வு பெற்றுப் போருங்கோள்,’தாள் –‘பிள்ளாய்! உன் உள்வெதுப்பு ஆறுவது எப்போது?’ என்ன,
‘நானும் எனக்கு வகுத்த முடி சூடி அவரும் தமக்கு வகுத்த முடி சூடின அன்றே,’ என்றான் அன்றோ ஸ்ரீ பரதாழ்வான்?-அப்படித் தலையாகப் பிரார்த்திக்கப்பட்ட திருவடிகளை
அடி சூடும் அரசு’ என்னக் கடவது அன்றோ?

‘பேறு எல்லார்க்கும் வேண்டும்’ என்று இருக்கையாலே எல்லார்க்குமாக-‘உய்ம்மின்’ எனப் பன்மையாக அருளிச்செய்கிறார்.-தாள் சிந்தித்து உய்ம்மின் – அடி அற்றால் வாடும் அத்தனையே அன்றோ? -அடி உற்றால் வாழலாம் அடி அற்றால் வாடலாம் –-ஆதலால், அடியைப் பேணி நோக்கி உய்ந்து போருங்கள்.-உபாயமாகவும் ப்ராப்யமாகவும் உய்ம்மினோ –உஜ்ஜீவித்து ஆனந்தம் அடைவோம் –ரக்ஷகன் என்கிற ப்ரபத்தியே அமையும் -ப்ரபத்திக்கும் இதுவே அர்த்தம் என்கிறார் நினைவோடு வ்யாப்தமாயிற்று உஜ்ஜீவனம் இருப்பது-

—————

உய்ம்மின் திறை கொணர்ந்து’ என்று உலகு ஆண்டவர் இம்மையே
தம் மின்சுவை மடவாரைப் பிறர் கொள்ளத் தாம் விட்டு
வெம்மின் ஒளி வெயில் கானகம் போய்க் குமைதின்பர்கள்;
செம்மின் முடித் திரு மாலை விரைந்து அடி சேர்மினோ
. –4-1-2-

அடியிலே நாய் அடி இட்டு நலியத் தொடங்கிற்றே? நாய் முதலிலே காற்கூறு கொண்டது;செம்மின் முடித் திருமாலை விரைந்து அடி சேர்மின் – சிவந்து மின்னுகின்ற முடியையுடைய திருமகள் கேள்வனுடைய திருவடிகளை விரைவில் பற்றுவதற்குப் பாருங்கோள்.-தன்னை அடைந்தார்க்குக் கொடுக்கைக்குத் தலையான முடி உண்டு; கொடுப்பிக்கைக்கு அருகே இருப்பாரும் உண்டு;-‘விரையாமையால் உள்ள இழவே உள்ளது’ ‘அவன் முடியைத் தரினும் நீங்கள் திருவடியைச் சேருங்கோள்’ என்பார், ‘அடி சேர்மினோ’ என்கிறார்.– ‘நீங்கள் உங்கள் அடிவிடாதே கொள்ளுங்கோள்-அடி – திருவடியும் மூலமும்.-தாஸ்யம் விடாதே -அடிப்படைக் கருத்து -சேஷத்வ பாரதந்த்ர்யம் விடாதே கொள்ளுமின் –

அடி சேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ
இடி சேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்
பொடி சேர் துகளாய்ப் போவர்கள் ஆதலில் நொக்கெனக்
கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ
.–4-1-3-

அங்கு நிற்கின்ற தூணைக் காட்டிலும் ஒரு வாசி இல்லை காணும் இவருடைய நினைவால்: ஆதலின், ‘இருந்தவர்’ என்கிறார்.-இப்படி இருந்தவர்கள் என் ஆவர்?’ என்றால், பொடிபடுவர் என்கிறார் மேல் :பொடி சேர் துகளாய்ப் போவர்கள் –கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமின் – முடி கொடுத்தால் மாலையும் கொடுக்க வேண்டுமே! திருமேனியின் பரிசத்தால் நாட்செல்ல நாட்செல்ல வாசனை ஏறி வாரா நின்றுள்ள திருத்துழாய் மாலையைத் திருமுடியிலேயுடையனாய் அடியார்கட்கு எளியவனான கிருஷ்ணன் திருவடிகளை நினைக்கப் பாருங்கோள்.-‘நினைத்தல் மாத்திரம் போதியதாமோ? துதிசெய்தல் வேண்டாவோ?’ எனின், நினைத்த மாத்திரத்தில் கொண்டு முழுகுமே அன்றோ திருவடிகளின் இனிமை?
அன்றிக்கே, ‘இவ்வடியை நினைக்கவே சமுசாரம் அடி அறும்’, என்னுதல்-

——–

நினைப்பான் புகின் கடல் எக்கலின் நுண் மணலிற் பலர்
எனைத்தோர் உகங்களும் இவ்வுலகு ஆண்டு கழிந்தவர்
மனைப்பால் மருங்கு அற மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம்
பனைத்தாள் மத களிறு அட்டவன் பாதம் பணிமினோ
.–4-1-4-

உலகில் கழிந்த பிரமர்கள் கங்கையிலே உள்ள மணல் போலவும் இந்திரனாலே பெய்விக்கப்படுகின்ற மழைத்தாரைகள் போலவும் எண்ணுதற்கு முடியாதவர்கள் ஆவர்,’ எனப்படுதலால். ‘கழிந்தவர் நுண் மணலிற்பலர்’ என்கிறார்.பனைத்தாள் மதகளிறு அட்டவன் பாதம் பணிமின் –‘பனைபோலே இருக்கையாலே அச்சத்தை உண்டாக்குகின்ற காலையுடைத்தான மதயானை உண்டு, குவலயாபீடம்; அதனை முடித்தவன் திருவடிகளைப் பற்றுதற்குப் பாருங்கோள். அவன் உங்களுடைய பிரபலமான தடைகளைப் போக்க, நீங்கள் அவன் காலிலே தலை சாய்க்கப் பாருங்ககோள்,’ என்கிறார்.
மேற்பாசுரத்தில். ‘மாம்’ என்றபதத்தின் பொருள் சொல்லப்பட்டது:
இப்பாசுரத்தில் ‘அஹம்’ என்ற பதத்தின் பொருள் சொல்லப்படுகிறது.
-வலிய பிரதிபந்தகங்களை நிரயத்னமாக தள்ள வல்லவனை ஆஸ்ரயிங்கோள் –

————–

பணிமின் திருவருள் என்னும் அம் சீதப் பைம் பூம் பள்ளி
அணி மென் குழலார் இன்பக் கலவி அமுது உண்டார்
துணி முன்பு நாலப் பல் ஏழையர் தாம் இழிப்பச் செல்வர்
மணி மின்னு மேனி நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ.–4-1-5-

‘பணிமின் திருவருள் என்னும் அணி மென் குழலார்’ என்று முன்புள்ள முதலிகள் நிர்வஹிப்பர்கள்;-இவர்கள் நிர்வாஹத்தில் ‘என்னும்’ என்னும் எச்சம் ‘குழலார்’ என்னும் பெயருக்கு அடைமொழி.
பட்டர், அங்ஙன் அன்றிக்கே,‘திருவருள் பணிமின் என்னும்’ என்னும் இதனை ‘இன்பக் கலவி அமுது உண்டார்’ என்றதனோடே சேர்த்து அருளிச் செய்வர்.பணிமின் திருவருள் என்னும் – தான் இராச்சியத்தை அவர்களுக்குப் படுக்கைப் பற்று ஆக்கி,-அவர்களைப் படுக்கையிலே வைத்துத் தான் தாழ நின்று ‘திருவுள்ளத்தில் கிடக்கிறதை அருளிச் செய்யலாகாதோ?’ என்னும்; தன்னைத் தொழுது வணங்குகின்றவர்கள் புறம்பே உண்டே?
இனி. இன்பச் சுவையாவது, தான் இவர்களுக்குத் தாழ நிற்கையே அன்றோ?
அடி சேர் முடியனராகி இருந்தவன் இவளுக்கு அடிமை என்று தாள நின்று ரசிகத்வம் காட்டுகிறான் என்றவாறு -பட்டர்-

கிருஷ்ண த்ருஷ்ணா வாகக் கூடாதோ –-‘ஆன பின்பு, ‘பக்தாநாம் – ‘பக்தர்களுக்காகவே என்று இருக்கிற உடம்பைப் பற்றப் பாருங்கோள்’ என்கிறார் மேல் :
மணி மின்னு மேனி –-நீலமணி போன்று காந்தியையுடைத்தான திருமேனி;
அன்றிக்கே,-‘நீலமணியைக்காட்டிலும் விஞ்சின அழகையுடைத்தான திருமேனி’ என்னுதல்.

திருமேனியைக் கொடுக்கவே எல்லாம் கொடுத்ததாமிறே; சர்வ அபாஸ்ரயமாயன்றோ திருமேனிதான் இருப்பது!-மற்றுக் கொடுக்குமதிலும் இதுக்கு உண்டான வியாவிருத்தி தோற்றி இருக்கிறது
பரிஷ்வங்கோ ஹநூமத : – அமிருதாசிக்குப் புல்லையிட ஒண்ணாதே!பிறந்தது குரங்கு ஜாதி -நம்மை சேவிக்க அன்றோ பிறந்தான் –-ஸ்ரீ வைகுண்டம் -புல் ஸ்தானம் –
ஸ்நேஹோமே பரம : – (உத்தரராமாயணம்) – என்று இவ்வுடம்பை விரும்பினவனுக்கு இத்தையே கொடுக்கவேணுமே.- மயா காலமிமம் பிராப்ய தத்த: ‘இவன் ஒன்று கொள்வான் ஒருவன் அல்லன்; நாம் இவனுக்கு ஒன்று கொடுக்கப் பெறுவது காண்,’ என்று குறைபட்டிருந்தவர், இவன் விலக்காததொரு சமயம் பெற்று இப்படிக் கொடுத்துக் கொண்டு நின்றார்.
தஸ்ய மஹாத்மந : – ஒரு படி கொடுத்தாராய் ஒன்று செய்த இத்தனை போக்கி, இரண்டு உடம்பு கொடுத்தவனுக்கு ஓர் உடம்பு தரம் அன்றிறே.-வேணி உத்க்ரதனத்திலே பிராட்டி ஒருப்பட்ட அன்று அவளை உளள் ஆக்கினான்;‘அவகாஹ்யார்ணவம் ஸ்வப்ஸ்யே’ (ஸ்ரீராமா. யுத்.) என்ற பெருமாளை மீட்டு அவரை உளராக்கி இப்படி இவர்க்கு இரண்டு உடம்பு
கொடுத்தானிறே அவன். அவன் பல படி உபகரிக்கையாலே இவர் ஒருபடி உபகரித்தார்,’ 

பேர் சொல்லி வாழ்மினோ –-செய்ய வேண்டிய முயற்சி இவ்வளவே; பின்னை வாழ்வோடே தலைக்கட்டும். வாழ்க்கைக்கு ஒரு பேரோ!
‘அச்சுவை பெறினும் வேண்டேன்’ என்னும்படி அன்றோ இது தன்னுடைய இனிமை இருப்பது?-பேரே வாழ்க்கை என்றவாறு -பேர் சொல்வது உபாயம் இல்லையே
கெடும் இடராய –கேசவா என்ன -நாளும் கொடு வினை –தமரும் குறுககில்லார்-

—————

வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை மொக்குளின் மாய்ந்து மாய்ந்து
ஆழ்ந்தார் என்று அல்லால், அன்று முதல் இன்று அறுதியா
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பது இல்லை ; நிற்குறில்
ஆழ்ந்தார் கடற் பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ.
–4-1-6-

‘திருப்பாற்கடலிலே வந்து கண் வளர்ந்தருளுகிறது கர்மத்திற்குக் கட்டுப்பட்டவனாய் அல்லவே?-நம்மால் பற்றப்படுமவன் ஆகைக்காக அன்றோ? ஆன பின்னர், அவன் நினைவோடே சேரச் சொரூபத்திற்குத் தகுதியான பேற்றினைப் பற்றுங்கோள்,’ என்பார், ‘கடற்பள்ளி அண்ணல்’ என்கிறார்.-சர்வ சமாஸ்ரயணீயனாக ஆவதற்கே -இங்கே கிடக்கிறான் –அடியவர் ஆமினோ – அவன் தலைவனாயிற்ற பின்பு நீங்கள் உங்கள் அடிமையை இசையப் பாருங்கோள்.
அன்றிக்கே,-தாச பூதர் -இயற்கையிலே-அடிமை அல்லாதது ஒரு பொருளை இன்று அடிமை ஆக்கிக் கொடுத்ததாக நினைத்திருக்கும் பகவானுடைய அபிப்பிராயத்தாலே சொல்லுகிறார் ஆகவுமாம்.-

—————

ஆமின் சுவை அவை ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்த பின்
தூமென் மொழி மடவார் இரக்கப் பின்னும் துற்றுவர்,
‘ஈமின் எமக்குஒரு துற்று’என்று இடறுவர் ; ஆதலின்,
கோமின் துழாய்முடி ஆதிஅம் சோதி குணங்களே.
–4-1-7-

அன்ன பாநாதி போகங்களும் அநித்தியம் என்கிறார் –-ஆதி அம் சோதி குணங்கள் கோமின் –-எல்லா ஐஸ்வர்யத்திற்கும் அறிகுறியான திருத்துழாய் மாலையைத் திருமுடியிலே உடையனாய், உலக காரணனாய், எல்லை இல்லாத ஒளி உருவமான விக்கிரஹத்தை யுடையவனாய் இருந்துள்ளவனுடைய குணங்களைச் சேர்த்து அனுபவியுங்கோள்
ஆதி-சொரூபத்தைப் பற்றியதாயும்–அம் சோதி– விக்கிரஹத்தைப் பற்றியதாயும் உள்ள கல்யாண குணங்கள்’ என்பார்,-ஆதி அம் சோதி குணங்கள்’ என்கிறார்.

———-

குணங்கொள் நிறை புகழ் மன்னர் கொடைக்கடன் பூண்டிருந்து
இணங்கி உலகு உடன் ஆக்கிலும், ஆங்கு அவனை இல்லார்
மணங்கொண்ட போகத்து மன்னியும் மீள்வர்கள்; மீள்வு இல்லை;
பணங்கொள் அரவணையான் திரு நாமம் படிமினோ
.–4-1-8-

‘இராச்சிய இலக்குமி நிலை நில்லாது ஒழிவது, நாட்டாரோடு பொருந்தி வாழாது ஒழியில் அன்றோ?-அவர்களோடு பொருந்தி வாழவே அது நிலை நிற்குமே?’ என்ன,
1-‘பொருந்தி வாழ்ந்தாலும், எம் பெருமானை அடையாவிடில் கிடையாது;
2-அவனை அடைந்து பெற்றாலும், அதன் தன்மையாலும் நிலை நில்லாது;
3-ஆன பின்பு, அவன் தன்னையே பிரயோஜனமாக அடையுங்கோள்,’ என்கிறார்.

இனி, ‘பலத்தில் நோக்கம் இல்லாதவனாய்த் தான தர்மங்களைச்செய்து எம்பெருமானையே பலமாகப் பற்றாமல், பலத்தில் நோக்கம் உள்ளவனாய்த் தான தர்மங்களைச் செய்து சுவர்க்கம் முதலானஉலகங்களை விரும்பினால் அவை நிலை நில்லா,’
என்று இத்திருப்பாசுரத்திற்குப் பொருள் கூறலுமாம்

யோக ஷேமம் வஹாம் அஹம் -கிடைக்காதது கிட்டும் -கிடைத்தது நிற்கும் அவனைப் பற்றினால் என்றபடி –

பணம் கொள் அரவு அணையான் திருநாமம் படிமின் – தன்னுடைய பரிசத்தாலே விரிந்த படங்களையுடைய திருவனந்தாழ்வானை நிரூபகமாக வுடையவனுடைய திருநாமங்களிலே மூழ்குங்கோள் ‘திருநாமத்திலே மூழ்கினவர்களைத் திருவனந்தாழ்வானைப் போன்று விடான்’ என்பார்.– ‘அரவணையான் திருநாமம் படிமின்’ என்கிறார்.
அன்றிக்கே,
‘இவ்விதமாக அறிந்தவர்கள் பாதங்களால் ஏறுகிறார்கள்,’ என்கிறபடியே, துகைத்து ஏறலாம்படியான படுக்கையையுடையவன்–பஞ்ச சயனத்தின் மேல் ஏறி கோட்டுக் கால் கட்டில் மேல் ஏறி -என்பார்,‘அரவணையான் திருநாமம் படிமின்’ என்று அருளிச்செய்கிறார் என்னுதல்.

———-

படி மன்னும் பல்கலன் பற்றோடு அறுத்து,ஐம் புலன்வென்று,
செடி மன்னு காயம் செற்றார்களும், ஆங்கு அவனை இல்லார்
குடி மன்னும் இன் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள்; மீள்வு இல்லை;
கொடி மன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ.
 –4-1-9-

மேல் எட்டுப் பாசுரங்களால் ‘இவ்வுலக இன்பம் நிலை அற்றது,’ என்றார்;
இப்பாசுரத்தில். ‘உடலை வருத்தும் தன்மையையுடைய தவத்தைச் செய்து அந்தத் தவத்தின் பலம் சுவர்க்கமாகக் கொண்டு ஸ்வர்க்கத்தை அடையும்போது பகவானுடைய திருவருள் வேண்டும்; அவனுடைய திருவருளால் சுவர்க்கத்தை அடைந்தாலும், அதனுடைய இயற்கையாலே நிலை நில்லாது,’ என்கிறார்.

அங்கு அவனை இல்லார் –-அவன் திருவருள் இல்லையாகில் தானே சித்தியாது.
அவன் திருவருளால் பெற்றதாகில், குடி மன்னும் இன்சுவர்க்கம் எய்தியும் – ‘இதற்கும் ஆள் பற்றுவதே!’ என்பர் பட்டர்.

கொடி மன்னு புள்-கொடியாய் மன்னா நின்றுள்ள பறவை. என்றது, தன்னை அடைந்த அடியாரையும் தனக்கு வேறுபடுத்தும் விசேஷணமாகக் கொள்ளுமவன் என்பதனைத் தெரிவித்தபடி. ‘அல்லாதாரைக் காட்டிலும் அவனை வேறுபடுத்தும் விசேஷணமாகக் கொள்ள வேண்டுவான் என்?’ என்னில், அவனுடைய மூக்கு வலியும் அவன் பக்கல் பக்ஷபாதமும் அதற்கு அடி.
புள்ளுடை அண்ணல் –‘திருமகள் கேள்வன்’ என்னுமாறு போலே ஈசுவரனுக்கு நிரூபகமே யன்றோ அவன்? அண்ணல் – தலைவன்.
கழல்கள் குறுகுமின் – உங்கள் பிறவி கழல அவன் கழல்களைக் குறுகுங்கோள்.
‘திருநாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ’ என்றார் முதற்பாசுரத்தில்.
இங்கே, ‘புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ’என்கிறார் காணும், அவளோபாதி இவனும் அங்குத்தைக்கு நிரூபக தர்மம் என்று.

———–

குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம் விட்ட
இறுகல் இறப்பெனும் ஞானிக்கும் அப்பயன் இல்லையேல்,
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்; பின்னும் வீடு இல்லை,
மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில், வீடு அஃதே
.–4-1-10-

திருமகள் கேள்வன் பெரிய திருவடி திருத்தோளிலே தோளும் தோள் மாலையுமாய் வந்து நின்றாலும், சாணகச் சாற்றைப் போன்று-சாணகச்சாறு – பஞ்ச கவ்யம்.– சுத்தி மாத்திரத்தையே பற்றிக்கொண்டு, இனிமையிலே நெஞ்சு செல்லாதபடி அதனையும் விடுவது.-தேவோஹம் – நான் தேவன், மனுஷ்யோகம் – நான் மனிதன்’ என்கைக்கு அடியான தளை ஆதலின்,‘சிறுக நினைவது ஓர் பாசம்’ என்கிறார்.

அண்டாதிபதே -சொல்லி ஐஸ்வர்யம் பெற்று போவான் – அசுத்த சரீரம் -கர்மா தீனம் இல்லாமல் -சுத்தன் என்றே உபாசித்து -கைவல்யம் பெற்று போவான் –
அவன் அழகை அனுசந்தித்து -பகவத் ப்ரீதி காரித கைங்கர்யம் பெற்று போவோம் –அந்திம ஸ்மிருதி இல்லையாகில் ஆதி பரதனைப்போலே மான் ஆதல், மரை ஆதல் ஆமித்தனை.

அஃதே வீடு –‘திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ’ என்று நான் சொல்லுகிற அதுவே புருஷார்த்தம்.
பன்னீராயிரப்படி மட்டும் -அவனைப் பற்றி பிரயோஜ நாந்தரம் பெற்று விடா விடில் -அஃதே வீடு –

—————

அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய்கோலத்து ஆயிரம் சீர்த்தொடைப் பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற் பாலரே.
–4-1-11-

‘காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ’ என்று தாம் சொன்னபடியே உடையவர் ஆவர்

‘கண்ணனைத் தாள் பற்றி’ என்று தாமும் சொல்லி, கண்ணன் கழல்கள் நினைமினோ’ என்று பிறர்க்கும் உபதேசித்து நின்றாரே?-அது தன்னையே அருளிச்செய்கிறார். ‘இப்படி அடியுடையார் புறம்பு இல்லை’ என்றே அன்றோ இவ்வடிகளைத் தாம் பற்றியது?
‘துயர் அறு சுடர்அடி தொழுது எழு’ என்று தம் திருவுள்ளத்திற்கு அருளிச்செய்தார்;
‘வண் புகழ் நாரணன் திண்கழல் சேரே’ என்று பரோபதேசம் செய்தார் அங்கு.
இங்கு, ‘கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடு இலனே,’ என்றார்;
‘கண்ணன் கழல்கள் நினைமினோ,’ என்று பரோபதேசம் செய்தார்.
இது என்ன அடிப்பாடுதான்! ‘கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண்,’
என்றே அன்றோ பரோபதேசம் முடிக்கிறதும்?


——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -92-பேண் நலம் இல்லா அரக்கர் –ஆழி எழ -7–4-

April 2, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

பேறு தப்பாது துணிந்து இருந்தும்-பேற்றுக்குத் த்வரித்தும் இருக்கும் ஆழ்வார் –-பெரும் கிறியானின் ஸுலப்யத்திலே ஆழ்ந்து இருந்தமை கீழ் அருளிச் செய்தார் –-இலங்கைக்கு விசேஷணம் -பாசுரத்தில் முதலில் -அருளிச் செய்து -ரக்ஷகன் -எத்தையும் அழிக்க மாட்டானே-இவர்கள் தண்மையை சொல்லி –
ப்ரயோஜனாந்தர பரர்கள் -தங்கள் அபிமதத்துக்காகவே காலை மாலை -ஸ்தோத்ரம் செய்கிறார்கள் –
தினம் தோறும் -காலையிலும் மாலையிலும் -கார்யம் சித்தி பெறவே –-தோள் கண்டார் தோளே கண்டார் போல்வர் அல்லரே –ஆழ்வார் திரு உள்ளம் அவதாரங்களில் ஈடுபட்டு இதில் இவர்களுக்காக இப்படிச் செய்வதே–ஆழி எழ -7–4-இதன் விவரணம்-இதிலும் அவதாரங்கள் ப்ரயோஜனாந்தர்களுக்காக செய்தமை உண்டே-வேந்தற்கு உற்றுழி பிரிதல் -பிரிவாற்றாமை தாங்காமல் சர்வேஸ்வரன் -தேவேந்திரன் பிரார்த்திக்க -சீதா பிராட்டி பிரிந்து வருந்துவது போல் இங்கும் ஈஸ்வரன் அவதரித்து செய்த ஆனைத் தொழில்கள் எல்லாம் பாகவத் அபசாரம் பொறாமை அன்றோ

அவதாரிகை –பெரும் கிறியானை யல்லால் யடியேன் நெஞ்சம்  பேணலதே -என்றாரே தாம் கீழே –
அளவுடையாராய் அதிகாரி புருஷர்களான தேவர்களுக்கும் இதுவும் அன்றிக்கே  ஒழிவதே -என்கிறார் –
என் தான் அவர்களுக்கு வந்த குறை என் என்னில் –நாம் எல்லாவற்றையும் அழிய மாற பெற இருக்கிற வஸ்துவை அழிவுக்கு இட்டு வேறே சில பிரயோஜனங்களை கொள்ளா நின்றார்களே -என்கிறார் –வேந்தற்கு உற்று உழிப் பிரிவில் தலைவனைக் குறித்துத் தலைவி இரங்குதல்–

இப்படி அனுபவ அர்த்தமாக இவர் ஆதரித்த படியைக் கண்ட ஈஸ்வரன் நம்மை அபேக்ஷித்தாருக்கு முகம் காட்டாது ஒழிவோமோ-தம் தம்முடைய அபிமத ஸித்தி யர்த்தமாக ப்ரயோஜனாந்தர பரரான தேவர்கள் அகப்பட அபேக்ஷிக்க-வந்து பிறந்து கார்யம் செய்து கொடுக்கிலோமோ என்று-தன் திரு உள்ளக் கருத்தை ஆவிஷ்கரிக்க-உன்னுடைய போக்யமான வடிவை அனுபவிக்க ஆசைப்படாதே சத்ரு நிரஸனம் பண்ணித் தர வேணும் என்று அபேக்ஷிப்பதே என்று அவர்களை பழித்து அருளிச் செய்கிறார்-இதுவும் நாயகி வினைத் தொழிலில் பிரியலுற்ற நாயகனைக் குறித்துக் காணலுற்றுக் கவர்ந்து உரைத்தல் ஆகவுமாம் –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்–அவதாரிகை--தன் நெஞ்சு வேறே ஒன்றை ஆதரியாது என்று அருளிச் செய்தார்-விண்ணோரும் என்னைப் போலே யாகாதே விருத்த ஸ்வபாவர் ஆவதே என்று-வெறுத்து அருளிச் செய்கிறார் இதில்

பேண லமில்லா வரக்கர் முந்நீர பெரும் பதிவாய்
நீள் நகர் நீளெரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர்
நாள் நிலந்தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று
காண லுமாங்கொல் என்றே வைகல் மாலையும் காலையுமே
– – 92-தலைவனைக் குறித்து தலைவி இரங்குதல் –

பேண் நலம் இல்லா (உன்னை) விரும்பிப் பக்தி செய்தலாகிய நற்குணமில்லாத
அரக்கர்–ராக்ஷஸர்களுடைய
முந்நீர பெரு பதி வாய்–கடலாகிய பெரு நீரணை யுடைய பெரிய மலையிடத்திலுள்ள
நீள் நகர்–பெரிய லங்காபுரியில்
நீள் எரி வைத்தருளாய்—தீப்த்த அக்னி பானம் -ஆகிற நெருப்பு -பெரிய நெருப்பை வைத்து அளித்தருள வேணும்
என்று–என்று சொல்லிப் பிரார்த்தித்து
நின்னை–உன்னை
விண்ணோர்–தேவர்கள்
வைகல்–நாள்தோறும்
மாலையும் காலையும்–இரண்டு சந்தி களிலும்
தான் நிலம் தோய்ந்து தொழுவர்–தங்கள் கால்கள் தரையிலே படும்படி வந்து வணங்குவர்;
(அவர்கள் அங்ஙனம் வணங்குதல் தங்கள் பகையைப் போக்குவிக்கும் பொருட்டே யன்றி)
நின் மூர்த்தி–உனது வடிவத்தின்
பல் கூற்றில்–பல அம்சங்களுள்
ஒன்று–ஒன்றையேனும்
காணலும் ஆம் கொல் என்றே–பார்க்க வேண்டுமென்றோ (அன்று என்றபடி.)

ஆழி வண்ணன் தன் விசயமானவை முற்றும் காட்டி
வாழிதனால் என்று மகிழ்ந்து நிற்க -ஊழிலவை
தன்னை யின்று போல் கண்டு தானுரைத்த மாறன் சொல்
பன்னுவரே நல்லது கற்பார்
——64-மண்டிணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -என்றும் பக்தி அதிசயத்தாலே அவசன்னரான இவர் தளர்த்தியை மாற்றித் தரிப்பைக்கு-பேர் எயில் சூழ் கடல் தென்னிலங்கை செற்ற பிரான் -என்று பிரஸ்துதமான அவதார சரிதமாய் யுள்ள ஸ்ரீ த்ரி விக்ரமணம் தொடங்கி ஸ்ரீ கோவர்த்தன உத்தாரணம் பர்யந்தமான விஜய பரம்பரைகளை
பத்தும் பத்தாக அவன் காட்டிக் கொடுக்க அத்தை அனுபவித்து ஹ்ருஷ்டராகிற
ஆழி எழ சங்கில் அர்த்தத்தை ஆழி வண்ணன் இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -தங்கள் பிரிய ஹிதங்களுக்கு உறுப்பாக ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம் என்று அறிந்து அனுசந்திக்குமவர்களே எல்லாம் அறிந்து அனுசந்திக்குமவர்கள் -என்றது ஆயிற்று-

பேணலம் இத்யாதி —முந்நீர பெரும் பதியை பேணலம் இல்லா அரக்கர் –கடலால் சூழப்பட்டு பல பகுதிகளை உடைத்தான உன் விபூதியை –நீள் நகர் இத்யாதி –உன் விபூதியில் ஏக தேசத்தை அழித்து தர வேணும் என்று சொல்லா நிற்பர்கள் ஆயிற்று –பர ஹிம்சை என்றால் -திரு உள்ளத்துக்குச் சென்று இராது என்று – இரங்குகைக்காக-சொல்லிக் கொடு-வரும் வார்த்தை யாயிற்று –அவர்கள் ஜீவிக்கில் உன் விபூதி ஜீவியாது -என்னா நிற்பர்கள் -(த்யஜேத் ஏகம் குலம் காக்க ஒருவரை நீக்கலாம் ) தேவர்-குணங்களை ஓர் இடத்தில் மனனம் பண்ணி இருக்கிற ருஷிகளையும் –நீர் விரும்பி நோக்குகிற-தேவர்களையும் நலியா நின்றார்கள் என்பர்கள்–பேண லமில்லா   –பிறரைப் பேணுகை யாயிற்று
அவன் நன்மையாய் நினைத்து இருப்பது –-பிறரும் ஜீவிக்க -நாமும் ஜீவிக்கக் கடவோம் என்று இரார்கள் –பேணலம் இத்யாதி –அவன் விபூதியை பேணுகை யாகிற நன்மை இல்லாத ராஷசர் உடைய –முந்நீர பெரும் பதிவாய் நீள் நகர் –அஞ்சினான் புகலிடமாய் -துர் வர்க்கம் அடங்கலும் புக்கு ஒதுங்கும்-இடம் ஆயிற்று –கடலை அகழாக உடைத்தாய் இருக்கையாலே சிலராலே பிரவேசிக்க அரியதாய் இருக்கை-கடல் சூழ்ந்த (ஜம்போத் த்வீபத்திலே )மகா த்வீபத்திலே உண்டான –நீள் நகர் –தேவர்கள் உடைய வர பலத்தாலே ஒரு நாளும்-அழியாதபடி -பூண் கட்டின இலங்கையிலே –(லங்காம் ராவண பாலிதாம் -திருவடி மதித்த ஐஸ்வர்யம் ) நீள் எரி வைத்து அருளாய் –தேவதைகள் உடைய வரத்தால் உண்டான-சக்தியையும் அழிக்க வற்றான சராக்நியை பிரவேசிப்பிக்க வேணும் -என்பர்களே–இலங்கை  நகர் அம்பு எரி உய்த்தவர்(-4-2) -என்னக் கடவது இறே –ஒரூரைச் சுட்டுத் தர வேணும் என்பர்கள் –நின்னை –
ஜகத் ரஷணத்தில் தீஷித்து இருக்கிற உன்னை –ஒரு விபூதியாக அழியுமாகில் செய்யலாவது இல்லை  இறே -என்று கண்ணும் கண்ண நீருமாய் நின்று இறே-அவர்கள் தன்னையும் அழிய செய்வது –விண்ணோர் –எப்போதும் ஒக்க கண்டு அனுபவிக்கிற  அத் தேசத்திலே-வர்த்திக்கிறவர்களும் அன்றிக்கே –நீ அவதரித்து தாழ நின்ற இடத்தில் -மனிச்சில் உண்டான நீர்மை நடமாடும் இங்கே
வர்த்திக்கிறவர்களும் அன்றிக்கே – பரணிலே இருப்பாரைப் போலே ஸ்வர்க்கத்திலே இருக்கிறவர்கள் இறே –கால் நிலம் தோய்ந்து –நிலத்தில் கால் தோய கடவர் அன்றிக்கே இருக்கிற நிலை அழிந்து –பூமியிலே வந்து கிட்டி –தொழுவர்-ந நமேயம் -என்று ராவணனைப் போலே இருக்கும் நிர்பந்தம்-தவிர்ந்து தொழா நிற்பர்கள் –நின் இத்யாதி –தொழுதார் பெரும் பிரயோஜனத்துக்கு தான் தொழுகிறார்களோ  –தொழுதால் கண்டு அனுபவிக்கும் வடிவைக் காண்கைக்காக அன்று இறே –
உன்னுடைய விக்ரஹத்தில் உண்டான அழகிலே –அநேகம் கூற்றிலே -ஏக தேசமான – ஒரு நாளைப் புறப்பாடு தான் காண்கைக்காகவோ -அன்று இறே –சக்ருத் வதாகார விலோக நாசயா த்ருணீ க்ருதா நுத்தம புத்தி முக்திபி –(ஆளவந்தார் ) வைகல் மாலையும் காலையுமே –அவ் வடிவைக் காண்கைக்கு  அர்த்திப்பார்  நேரும் அளவல்ல வாயிற்று இவர்கள் நேருவது –நாள் தோறும் –அது தன்னிலும் -இடைவிடாது தொழுவார்கள் –இத்தால் அநந்ய ப்ரயோஜனர்க்கு நேர்த்தி அற்பமாய் பலம் அநேகமாய் இருக்கும்- பிரயோஜனாந்தர பரருக்கு மாறி நேர்த்தி அநேகமாய் பலம் அற்பமாய் இருக்குமே –வைகல் மாலையும் காலையும் விண்ணோர் கால் நிலம் தோய்ந்து தொழுவர் – நின் மூர்த்தி-பல் கூற்றில் ஒன்றும் காணலும் ஆம் கொலோ என்று இறே -அன்று இறே –அங்கே நித்ய அஞ்சலி புடா – என்று இருக்கையாலே தொழுதார் தொழுத பிரயோஜனம் –(விபீஷணன் -ராக்ஷஸன் என்பதால் கீழ் கால் பாவாது-பூமியில் பற்றுக் கொம்பு ஆகாது)

பேண லமில்லா வரக்கர் முந்நீர பெரும் பதிவாய் நீள் நகர் நீளெரி வைத்தருளாய் என்று உன் பக்கல் அனுவர்த்தனம் ஆகிற நலம் இல்லாத ராக்ஷஸருடைய சமுத்ரமாகிற நீர் அரண் யுடைத்தான ஸூ வேலமாகிற பெரிய பர்வத ஸ்தானத்திலே பெரிய ஓலக்கத்தை யுடைத்தான லங்கையாகிற படை வீட்டிலே பட்டினி கிடக்கிற அக்னியானவன் பசி தீர்ந்து யுண்டு வளரும்படி ப்ரஷேபிக்க வேணும் என்று அபேக்ஷித்து–நின்னை-நிரதிசய போக்ய பூதனான உன்னை–விண்ணோர்-விலக்ஷண போகம் அறிந்து புஜிக்கிறாராக பாவித்து இருக்கிறவர்கள்–தாள் நிலந்தோய்ந்து தொழுவர்-நிலத்திலே தோய்ந்து தாள் தொழுவர் என்று ப்ரணாமத்தைக் காட்டுகிறது-தேவர்களாய் இருக்கச் செய்தே தங்கள் அர்த்தித்து-அத்தாலே-உத்தரம் தீரமாஸாத்வ -யுத்த -17-10-என்று பூமியிலே கால் பொருந்தித் தொழுவர் என்றுமாம்–நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று காண லுமாங்கொல் என்றே-இப்படி பரம உபாயமான பிரணிபாதாதிகளைப் பண்ணுகிறது நிரதிசய போக்யமாய் ஆஸ்ரித அர்த்தமாக நீ பரிக்ரஹித்த நாநா வான விக்ரஹங்களிலே ஓர் அம்சத்தைக் காணலாம் என்றோ -அன்றிலே என்றபடி –போகத்துக்கு ஆசைப்பட்டுக் காலிலே விழுந்தார்களை அறுக்கை தானே செய்யும் என்று கருத்து-வைகல் மாலையும் காலையுமே –-அஹோ ராத்ர விபாக யுக்தமான காலம் உள்ளதனையும் காணலுமாம் கொல் என்று அந்வயம் –

பேண லமில்லா வரக்கர் முந்நீர பெரும் பதிவாய் நீள் நகர் நீளெரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர் தாள் நிலந்தோய்ந்து தொழுவர்-ஸர்வ பூத ஸூஹ்ருத்தான உன்னையே விண்ணில் உள்ளவரான விலக்ஷண ஞான சக்திகரும்-இந்நிலம் நாம் கால் வைப்பதற்கு யோக்யம் அன்று என்று இருக்குமவராய் ஸ்வ பிரார்த்தனைக்காக இந்நிலத்தில் கால் பதிய வைத்தவர்களாய்–நீணகர்-பஹு காலம் தொடங்கிக் கடல் சூழ்ந்த மஹா த்வீபத்தில் உண்டான இலங்கையில்–நீள் எரி-பஹு நாளாகப் பட்டினி இருக்கிற மஹா அக்னியை சரமுகத்தால் பிரவேசிப்பிக்க அருள் செய்ய வேணும் என்று உன்னை பிரார்த்திப்பதே-வைகலும்-எப்போதும்–தொழுவர்-இதுக்காக உன்னைத் தொழவும் வேணுமே–நீள் நகருக்கு விசேஷணம்-பேணல் இத்யாதி-உன் விபூதியைப் பேணவும்-உன்னை அனுவர்த்திக்கவும் ஆகிற நன்மை இல்லாத ராக்ஷஸருடைய ஸமுத்ரமாகிற முந்நீரை யுடைத்தான ஸூ வேலமாகிற பெரிய பர்வத ஸ்தானத்திலே இருக்கிற என்றபடி -இப்படி பர அநர்த்தத்துக்காக உன்னை விண்ணோர் தொழுவர் அத்தனை போக்கி–நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று காண லுமாங்கொல் என்றே மூர்த்தம் ப்ரஹ்ம ததோ அபி தத் ப்ரிய தரம் ரூபம் யதத்யத்புதம் -(சதுஸ் ஸ்லோஹி-4 ) -என்றபடியே உனக்கு நிரதிசய ப்ரியமாய் எங்களுக்கு த்ருஷ்ட்டி சித்த அபஹாரியான பலவகைப்பட்ட
திவ்ய மங்கள விக்ரஹ பேதங்களில் ஒன்றை யாகிலும் காணலாமோ என்றே அல்லவே-ஊரைச் சுட்டுக் தர வேணும் என்றதற்காக அத்தனை
வைகல் மாலையும் காலையுமே –சாயம் ப்ராதஸ் சமயங்களில் -புன புன தொழுவர் என்றபடி –

தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழல் கமலம் அன்ன தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே -என்று இல்லாமல் பிரயோஜனாந்தர பரர்கள் உன்னை சரண் அடைந்து அவர்கள் கார்யம் செய்ய இரப்பதே-அனன்யா பிரயோஜனரான எங்களுக்கு ஒரு பிரயாசமும் படாமல் சேவை சாதிப்பதை உபேக்ஷித்து அவர்களுக்காக உடம்பு நோவக் கார்யம் செய்வதே–நின்னை விண்ணோர்-காணலுமாங்கொல் என்றே வைகல் மாலையும் காலையுமே-நாள் நிலந்தோய்ந்து தொழுவர் -என்று
தான் நாயகன் மூர்த்தியின் பல கூறுகளையும் ஆசைப் பட்டமையை தெரிவிக்கிறார் –நிலம் தோய்ந்து தாள் தொழுவர் -பூமியில் கால் பட அறுவறுப்பவர்கள் தங்கள் காரியத்துக்காக சாஷ்டாங்க
நமஸ்காராதிகளை ஷீராப்தி நாதனுக்கு செய்வார்கள்-உன்னை நோவு படுத்தி கார்யம் கொண்டு போவார்கள் -அன்றி –இலங்கை பாழாளாகப் படை பொருதானுக்கு பல்லாண்டு கூறுதுமே என்றும்
சென்று அங்கு தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
-என்றும் வாயில் தானும் சொல்லுவார்களோ அப்பாவிகள் –அமிர்தம் கிளர்வதையே கீழ் நோக்கிப் பார்க்கும் அப்பாவிகள் –மந்த்ரம் நாட்டி அன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட சுந்தரத் தோளுடையான்-தோளும் தோள் மாலையுமான அழகை பார்த்திலரே-காணலுமாங்கொல் என்றே -என்று அல்ல என்றபடி –வேந்தற்குற்றுழிப் பிரிவில் நாயகனைக் குறித்து நாயகி யிரங்கல். வேந்தற் குற்றுழிப் பிரிவாவது- ஒரு வேந்தனுக்கு ஒருவேந்தன்
தோற்றுவந்து சரணமடைந்தால் அவனுக்கு உதவி செய்வதற்காகப் பிரிந்து போதல். பாரங்குச நாயகியாகிய தலைவி ஸர்வேச்வரனாகிய தலைவன் தன்னைப் பிரிந்து போனதற்குக் காரணம், ராக்ஷஸர்கட்குத் தோற்றுவந்து சரணமடைந்து வேண்டிய தேவர்களின் பிரார்ததனையாம் என்று கருதி அவர்களை பழிக்கிறான்.-“தோள் கண்டோர் தோளே கண்டார் தொடு கழற் கமலமன்ன தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கைக் கண்டாரு மஃதே”(கம்பராமாயணம், உலாவியற்படலம்) என்றபடி உனது அழகிய திருவடிவத்தில் ஓர் அம்சத்தைக் கண்குளிரக்கண்டு அநுபவிப்பதில் அதிக ஆநந்தமாயிருக்க, தேவர்கள் அதனை ஆசைப்பட்டு வேண்டாமல் உன்காலில் விழுந்து எப்பொழுதும் தங்கள் பகையை
அழித்துத் தரவேண்டுமென்று வேண்டுவதே! என்று அவர்களைப் பழித்து இரங்கினான். அநந்ய ப்ரயோஜநரான எமக்கு ஒரு பிரயாஸமும் படவேண்டாமல் ஸேவை சாதிப்பது மாத்திரமே அருள் செய்யப் போதுமாயிருக்க, எம்மை உபேக்ஷித்து, பிரயோஜநாந்தா பார்க்காக உடம்பு நோவக் காரியஞ்செய்வதே! என்று எம்பெருமானது தன்மைக்கு நொந்துரைத்த் படியுமாம்.
-பேண்நலமில்லாவரக்கர் –தன்னுயிரைப்போலவே பிறவுயிரையுங் கருதி எல்லாப் பிராணிகளும் உய்ந்து வாழ வேண்டுமென்ற எண்ணமில்லாத ராக்ஷஸர். (பிறரை ஹிம்ஸிப்பதே தொழிலாயிருப்பவர்) என்னவுமாம். பதி என்றது இலங்காபுரிக்கு இடமான தவீபத்தை,
பெரும்பதி என்றும், நீணகர் என்றும் கூறியவற்றால், வரபலத்தால் எவராலும் அழித்திட வொண்ணாமை தோன்றும்.-நீளெரி வைத்தருளாய் = இராவணனுக்கு அஞ்சி அகலச் செல்லுந் தன்மையனான அக்நியை அவ்வச்சம் தணிந்து அங்கே அழியாது வளரச் செய்தருளாய் என்று பிரார்த்திக்கிறார்களாம் தேவர்கள்’ இலங்கையை நீறுபடுத்த வேணுமென்கை.
இலங்கையிலுள்ள ராக்ஷஸர்களை வேரோடு அறுத்தொழிக்க வேணுமென்று பிரார்த்தித்தவாறு.” என்றதனால். தான் நாயகனது மூர்த்தியின் பல கூறுகளையுங்காண ஆசைப்பட்டிருக்கின்றமை வெளியிடப்பட்டதாம்.–தாள் நிலந் தோய்ந்து தொழுவர் = பூலோகத்தில் வந்து திருப்பாற்கடலைச் சார்ந்து பரமனைப் பணிந்து வேண்டுவர்.-பூமியில் மநுஷ்ய நாற்றம் நாறுகிறதென்று மூக்கைப் புதைத்துக் கொண்டு மேலே நெடுந்தூரத்தில் நின்றுகொண்டு ஹவிர்ப்பாகங்களைப் பெற்றுப் போகுமயில்வினரான தேவர்கள் தங்களுலகத்தில் இருப்பு குலைந்ததனால் தெய்வத்தன்மை
குலைந்து பூமியிலே கால் தோயவந்து நின்று தொழுவர் என்கிறது. ‘நிலந்தோய்ந்து தாள் தொழுவர்’ என மாற்றி, தரையிலே ஸாஷ்டாங்கமாகப் பணிந்து உன் திருடிகளைச் சேவிப்பவர் என்னவுமாம்.–இப்படி அவர்கள் வைகல் மாலையும் தொழுவது நின் மூர்த்தி பல் கூற்றிலொன்று காலுமாங்கொலென்றே? –உன்னுடைய திருமேனியை நோவுபடுத்திக் காரியங்கொண்டு ஒழிந்து போகப் பார்க்கிறார்களே யன்றி “இலங்கை பாழளாகபவ் படைபெருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே” “சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி” என்று வாயினால் தானும் சொல்வார்களோ அப்பாவிகள். அமுத மெடுத்துக் கொடுக்கக் கடல் கடைந்தருளின காலத்து‘அமுதம் கிளர்வது எப்போதோ’ என்று கீழ்ப்புறமே நோக்கிக் கொண்டிருப்பவர்களேயன்றி ‘மந்தரம் காட்டியன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட சுந்தரத் தோளுடையான்” (நாச்சியார் திருமொழி 9-1) என்னப்பட்ட
அப்பெருமானுடைய தோளுந் தோள்மாலயுமான அழகை ஒரு நொடிப்பொழுதாகிலுங் கண்ணெடுத்துப் பார்த்திலரே பாவிகள்; அன்னவர்க்கேயோ நீ காரியஞ் செய்தருள்வது? ‘நின் பல் மூர்த்தியின் ஒரு கூறும்” என மாறியுரைக்கலாம்.–முந்நீர – குறிப்புப் பெயரெச்சம். ‘என்றே’ என்றவிடத்து ஏகாரம் வினாப்பொருளதாய் எதிர்மறை குறிக்கும். ‘என்று அல்லர்’ என்றபடி.

தாத்பர்யம்--கீழ் அவதார குணங்களை அனுபவித்தார் -இதில் தேவர்கள் பிரார்த்தனையால் அன்றோ
தன் சௌகுமார்யம் பாராமல் இந்த கர்சகமான லோகத்தில் அவதரித்தது என்று அவர்களை வெறுக்கிறார் –இந்த ராவணாதிகள் முந்நீர் அரணாக யுடைய ஒரு தீவில் ஒருவராலும் அணுக ஒண்ணாத இலங்கை என்னும் நகரை நிர்மித்து அதுக்கு ஒருவராலும் அழிய ஓண்ணாமல் வரம் பெற்று –வாசம் செய்து அநேக ஸஜ்ஜனங்களை துன்புறுத்தி அதுக்காக நீ அவதரித்து பானம் கொண்டு அழிக்க உன்னை அனவரதம் பிரார்த்திக்க நீ அவதரித்த இடத்தில் சவுந்தர்யம் அனுபவிக்காமல் இருந்த அவர்களுடைய பாஹ்ய ஹீனைக்கு நான் என் சொல்வேன் என்கிறார் –

7-4-ஆழி எழச் சங்கும் வில்லும் எழ-ப்ரவேஸம்-

மேல் திருவாய்மொழியிலே,(7-3) பகவத் விஷயத்திலே இவர் கவரப்பட்ட மனத்தினை யுடையரானபடி சொல்லிற்று:
மேல் திருவாய்மொழியில் இவர்க்குப் பிறந்த துக்கம், ஒன்றைக் கொடுத்து மாற்றுதல்,
ஒருவராலே நீக்குதல் செய்யுமது ஒன்று அன்றே அன்றோ?
‘இனி இவர்க்குச் செய்யலாவது என்?’ என்று சர்வேஸ்வரன் பார்த்து அருளி ‘ஒன்று கொடுக்கலாவது இதற்கு மேல் இல்லை அன்றோ?
என்று பார்த்துத் தன்னுடைய விஜய பரம்பரைகளைப் பத்தும் பத்தாகக் காட்டிக் கொடுக்கக் கண்டு அனுபவித்து உவகை அடைகிறார்.

நினைத்து அனுபவிக்கவில்லை -கண்டு அன்றோ அனுபவிக்கிறார்-

அவனுக்கு உறுப்பாம் அன்று தம்மையும் வேண்டி. அவனுக்கு உறுப்பு ஆகாத அன்று தம்மையும் வேண்டாத
‘வளவேழ் உலகின்’ என்ற திருவாய்மொழியைப் பாடிய ஆழ்வார் அன்றோ இவர்தாம்!
தம்மை அழிய மாறியும் அத்தலைக்கு நன்மை தேடுமவர் அன்றோ?
இப்படி இவர் தன்மையினை அறியுமவனாகையாலே, தன்னுடைய வெற்றிச் செயல்களைக் காட்டி
இவருடைய இழவு எல்லாம் தீரும்படி சமாதானம் செய்ய அனுபவித்துத் தலைக் கட்டுகிறார்.

இறந்த காலத்தில் உள்ளவை அடங்கலும் சம காலத்திற்போலே கண்கூடாகக் காணலாம்படி செய்து கொடுத்தான்.
அடியிலே இவர்தாம் எல்லாவற்றையும் கண்கூடாகக் காண வல்லராம்படி செய்து கொடுத்தான் அன்றோ?
மயர்வற மதிநலம் அருளின பின்பும் இவ்வளவும் வர வாசனை பண்ணுவித்தானே! ஆகையாலே, இவர்க்கு ஒரு குறையும் இல்லையே!

முதலிலே -திருவடியில் -திரு உலகு அளந்த விருத்தாந்தம் தொடக்கமாக -என்றவாறு

அன்றிக்கே,
மேலே, ‘பேரெயில் சூழ்கடல் தென் இலங்கை செற்றபிரான்’ என்று
இராமாவதாரத்திற்செய்த வெற்றிச்செயல் சொல்லப்பட்டமையாலே,
அவ்வழியாலும் எல்லா அவதாரங்களிலும் உண்டான வெற்றிச் செயல்களை நினைந்து,
இராமாவதாரத்தில் நடத்திய வெற்றிச் செயல்களைக் கண்டு உகக்கும் சக்கரவர்த்தியைப் போலவும்,
கிருஷ்ணாவதாரத்தில் நடத்திய வெற்றிச் செயல்களைக் கண்டு உகக்கும் ஸ்ரீவசுதேவரைப் போலவும்
இவரும் உகந்து பேசுகிறார் என்னுதல்.

‘அஹம் புந;- ‘அஹம்புந: தேவகுமார ரூபம் அலங்க்ருதம் தம் ஸூதம் ஆவ்ரஜந்தம்
நந்தாமி பஸ்யந்நபி தர்ஸநேந பவாமி த்ருஷ்ட்வா ச புநர்யுவேவ’என்பது, ஸ்ரீராமா. அயோத். 12 : 105.
இது, கைகேகியைப் பார்த்துத் தசரத சக்கரவர்த்தி புலம்பிக் கூறுவது.

அஹம் புந–என் தன்மையை அறிந்து என் வழியே போந்த நீ, ‘பெருமாள் காடு ஏறப்போக’ என்றால்
நான் உயிர் வாழ்வேன் என்று சொன்னாயே!
தேவ குமார ரூபம் – அது கிடக்க; இவரையே நீ தான் ‘காடு ஏறப்போக’ என்கிறது?
‘இவர்க்கும் அவ்வளவேயோ?’ என்று சிறியத்தான் கேட்க, ‘கண்ணெச்சில் ஆம்’ என்று
தரம் போராதாரை ஒப்பாகச் சொல்லி இருடி கரி பூசுகிறான் என்றார்.
அலங்க்ருதம் – அதனாலும் வெறும் புறங்காண் ஒரு போலிச் சொல்லலாவது! ஒப்பித்தால் ஒக்கச் சொல்லலாவார் இல்லை.
தம் ஸூதம் – இவனுக்கு இரண்டு படியும் உத்தேசியமாய் இருக்கிறபடி.
ஆ வ்ரஜந்தம் – மலர் மலரும்போது எங்கும் ஒக்கப் பிறக்கும் மலர்ச்சி போலே.
அதுவும் வண்டினை நோக்கி அன்றோ மலர்வது? இவரும் அனுபவிக்கின்றவர்களைக் குறித்தே அன்றோ?
நந்தாமி பஸ்யந்நபி – கண்டபடியே இருக்கச் செய்தே, காணாது கண்டாரைப் போலேயாயிற்று,
நாடோறும் நாடோறும் கணந்தோறும் கணந்தோறும் உகக்கும்படி.
தர்ஸநேந – அணைத்தல், வார்த்தை சொல்லுதல் செய்ய வேண்டா; காட்சியே அமையும்.
கரை புரண்ட அனுபவம் உள்ள இடத்திற்போலே காணும் பிரயோஜனம்,
‘ஸதாபஸ்யந்தி’ அன்றோ?
பவாமி த்ருஷ்ட்வாச புந: யுவேவ-அறுபதினாயிரம் ஆண்டு வயது நிறைந்து கிழவனான சக்கரவர்த்தி,
பெருமாளைக் கண்ட பின்பு, பெருமாளுக்கும் தனக்கும் வாசி தெரியாதபடியானான்.’-
வா போகு–வந்து ஒரு கால் கண்டு அருளி -ஏசல் கண்டு –
‘காமனைப் பயந்த காளை’ என்னுமாறு போலே தன்னை அனுபவிப்பாரையும் தன்னைப் போலே ஆக்கி
உஜ்ஜீவிப்பிக்கும் விஷயம் போலே காணும்.

‘ஸ்ரீவசுதேவர்’ பெரிய திருவிழாவை அடைந்தாற்போலே பிள்ளைகளின் திருமுகங்களைப் பார்ப்பதை அடைந்து,
தமக்கு உண்டாய் இருந்த முதுமை நீங்கி யௌவனம் உடையவரானார்’ என்னும்படி ஆனாரே அன்றோ ஸ்ரீவசுதேவரும்?

‘மஹோத்ஸவமிவ ஆஸாத்ய புத்ராநந விலோகநம்
யுவேவ வஸூதேவ: அபூத் விஹாய அப்யாகதாம் ஜராம்’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 20 : 52.

அன்றிக்கே, (இது மூன்றாவது சங்கதி )
‘மேலே, ‘கண்ணபிரானுக்கு என் பெண்மை தோற்றேன்’ என்று கொண்டு இத்தலையில் தோல்விக்கு
எதிர்த் தலையான அத் தலையில் வெற்றிச் செயல்களை அநுசந்திக்கிறார்’ என்று
பிள்ளை திருநறையூர் அரையர் பணிக்கும்படி-

சூட்டு நான் மாலைகள் தூயன ஏந்தி -கொடுத்துக் கொள்ளாதே கொண்டதுக்கு கைக்கு கூலி கொடுத்து -அமுது செய்திடில் ஒன்றுக்கு
நூறாயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளவும் செய்ய வேண்டுமே -வென்று தரும் மேவி கற்பார்க்கு -இந்த திருவாயமொழி –
ஸமஸ்த சரிதங்களைக் காட்டி -ஆழ்வார் ஸமஸ்த துக்கங்களையும் -மகள் தோழி தாயார் தசை துக்கங்களை -தீர்த்து அருளினான் –
வேண்டிற்று எல்லாம் தரும் கோதில மணி வண்ணன் -கனம் குழை இட காது பெருக்குவாராய்ப் போலே விச்வாஸம் பிறப்பித்து
பைய பைய -சிறுச் சிறிதே விழித்து -கோதில் வாய்மையினான் சாந்தீபன் –

மகா க்ரம -கிரமத்தில் ஏத்தி அருளுவான்
இது ஒரு நேர் முக ஒளி பரப்பு -ஆழ்வார் இருந்த இடத்திலே பத்தும் பத்தாக காட்டி அருளுகிறார்
இதற்கு மங்களா சாசனம் பண்ணாமல் இருக்கக் கூடாதே –

நாலாம் திருவாய் மொழியில் –
விஸ்லேஷ ஜெனிதமான ஆர்த்தியாலே பிராப்தி த்வரையை யுடைய இவர் -தம்முடைய
ஆர்த்தி ஹேதுவான பிரபல பிரதிபந்தகங்களைப் போக்குகைக்கு -சர்வ சக்தியான சர்வேஸ்வரனை ஒழிய சமர்த்தர் இல்லை என்று அறுதியிட்டு
அவனுடைய த்ரைவிக்ரம வியாபாரத்தையும்
அம்ருத மதனத்தையும்
பூமி உத்தரணத்தையும்
ஜெகன் நிகரணத்தையும்
பாரத சமர ப்ரவர்த்தகத்வத்தையும்
ஹிரண்ய வாதத்தையும்
லங்கா பங்கத்தையும்
பாண யுத்தத்தையும்
ஜகத் ஸ்ருஷ்ட்டி பிரகாரத்தையும்
கோவர்த்தன உத்தரணத்தையும்
அனுசந்தித்து -ஏவம்வித விஜய ஆபத்தான விசிஷ்டனான சர்வேஸ்வரனுடைய விரோதி நிரசன சாமர்த்தியத்தை
அனுசந்தித்து அருளுகிறார் –

ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை
வாழி எழத் தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகங் கொண்ட வாறே
.–7-4-1-

ஆழி எழ –‘ஆயிரக் காதம் பறப்பதன் குட்டி ஐந்நூற்றுக் காதம் சிறகு அடிக் கொள்ளும்’ என்னுமாறு போலே முற்கோலி வளர்ந்தபடி.-சிறகடிக் கொள்ளுகையாவது, பின்பு தூரப் பரப்பதற்குத் தகுதியாம்படி இளமையிலே பயிலுதல்.-அச்சங்கொள்ளுதற்கு இடம் அல்லாத இடத்திலும் பயப்படக் கூடியவர்கள்,-அஞ்சத்தக்க இடத்தைக் கண்டால் வாளா இரார்களே அன்றோ?-பய சங்கை இல்லாத இடத்திலும் அஞ்சும்படி செய்கிறது விஷய வைலக்ஷண்யம் அன்றோ?-துரியோதனன் கோட்டியிலே கிருஷ்ணன் எழுந்தருளின போது அவர்கள் செய்த வஞ்சனத்தைக் கண்டு, அச்சங்கொண்டு, தம்முடைய திருமாளிகையில் படுக்கையையும் தடவிப் பார்த்தாரே அன்றோ ஸ்ரீவிதுராழ்வான்?

கடல் கலங்குவது தன்னளவிலே அன்றோ?-பிள்ளை யுறங்கா வில்லிதாசர் ‘மஹாமதி என்றது, மதிகேடர் என்றபடியோ?’ என்றார்,-பிள்ளை தாம், ‘பெருமாள் எழுந்தருளும் போது எங்கேனும் ஒரு சலனம் பிறக்கில் நம் பிராணனை விடுமத்தனை’ என்று
சொட்டையை உருவிப் பிடித்துக் கொண்டு சேவிப்பாராம்.
நம் முதலிகள் அதனைக் கண்டு, இவரை ‘மஹாமதிகள்’ என்று அழைப்பார்கள்.
அறிவு உண்டாகையாவது, பகவத் விஷயத்தில் அறிவு கெடுகை அன்றோ?

ஆழி எழ –இவன் வளர்ந்தருளுகைக்குக் கணிசித்த படியைக் கண்டு,
‘தனியாக ஒண்ணாத’ என்று அஞ்சித் திருவாழி யாழ்வான் ஒரு கையிலே ஏறினார்.

சங்கும் வில்லும் எழ--தூசி ஏறினவர்கள் போரப்-( புகப் )- புக்கவாறே நின்ற இளவணி கலங்கி மேலே நடக்குமாறு போலே,இளவணி-காலாள்.-மற்றை ஆழ்வார்களும் மற்றைக் கைகளிலே ஏறினார்கள்.(ஆழியும் எழ இல்லையே -ஆகவே இவை இளவணி )
அன்றிக்கே, (பரிவால் முதல் அர்த்தம்)-‘இரை பெறாத இடத்தே இருந்து சீறுபாறு என்னக் கூடியவர்கள் இரையுள்ள இடத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடார்கள் அன்றோ?’ என்னுதல்; இனத்திலே ஒருவன் வாழ்வதனைக் கண்டவாறே உறவினர்கள் கூட்டம் வந்து மேல் விழுமாறு போலே, மற்றைத் திவ்விய ஆயுதங்களும் மேல் விழுந்தபடி என்னுதல்-

திசை அளப்பான் பூவார் அடி நிமிர்த்த போது–ஒரு பூவினைக் கொண்டே அன்றோ காடும் ஓடையும் அளந்து.கொண்டது?-பூவை இட்டுப் பூவை கொண்டான் காணும்.
அப் படுக்கையிலே பொருந்தும் சௌகுமார்யத்தை யுடையவன் இக்காடும் ஓடையுமான உலகத்தினை அளக்கப் புக்கால், இவர்களுக்கு இப்படிப்பட வேண்டாவோ?
அவன் இப்படி அளவா நின்றால் இவர்கள் பேசாது இரார்கள் அன்றோ?’

அன்றே பிறந்து அன்றே வளர்ந்தான் ஒருவனுடைய செயல் அன்றோ இவை அடைய?
ஆகையாலே, பரிகைக்குக் காரணம் உண்டு என்றபடி

முடி பாதம் எழ--திருமுடியளவும் திருவடிகள் கிளர.-‘முடி மேலே பாதம் எழ’ என்றும் சொல்லுவர்கள் நிருத்த லக்ஷணத்துக்காக.-அப்பன் ஊழி எழ –-மஹாபலி தகுதி இல்லாமல் அரசு நடத்துகையால் வந்த பொல்லாக் காலமானது போய், நல்லடிக் காலமாயிற்று;
நல்லடிக் காலம் கிளரும் படியாகவும்.-அப்பன் உலகம் கொண்டவாறே –
‘மஹேபகாரகனான சர்வேஸ்வரன் உலகத்தைக் கொண்ட ஆச்சரியம் இருந்தபடி என்?’ என்னுதல்:-அன்றியே, ‘உலகத்தைக் கொண்ட பிரகாரம் இருந்தபடி என்?’ என்னுதல்.
அப்பன் அப்பன் என்று உவகை அடைகிறாராகவுமாம்.-அப்பன் – ‘இந்திரனுக்கு இராயச்சித்தைக் கொடுத்த செயலாலே எனக்கு ஆத்துமாவைத் தந்தான்’ என்கிறாராகவுமாம்.-

———–

ஆறு மலைக்கு எதிர்ந்து ஒடும் ஒலி அர
வூறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல்
மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன்
சாறு பட அமுதம் கொண்ட நான்றே.
–7-4-2-

திருப்பாற் கடலைக் கடைந்த ஆச்சரியமான காரியத்தைச் சொல்லுகிறார்.
அஜிதன் -அமிருத மதன பெருமாள் திருநாமம் -எட்டு உருவங்கள் கொண்டாரே
ஹரி கஜேந்திர மோஷ பெருமாள் திருநாமம்-

ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி- கடலிலே மந்தர மலையை நட்டவாறே கடல் கொந்தளித்து, மலை போய்த் தாழ்ந்து கொடுத்தது; -நீரானது தாழ்ந்த விடத்தே ஓடக் கடவதன்றோ?-ஆறுகளானவை மலையைக் குறித்து எதிரிட்டு ஓடுகிற போதை ஒலியானது இவர்க்குச் செவியிலே படுகிறபடி.-இவர்க்கு முக் காலத்திலும் உள்ளன எல்லாம் தெரியும்படி அன்றோ அவன் வெளிச் சிறப்பித்தது?

அரவு ஊறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி – வாசுகியினுடைய உடலைச் சுற்றிக் கடைகிற போதைச் சரசர வென்கிற ஒலியும். (கீழே சல சல என்ற ஒலி ) ஊறு – உடம்பு. சுலாய் – சுற்றி.

கடல் மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி –மந்தர மலையை கொடு புக்கு நட்டுத் திரித்த போது,-கீழ்க் கடல் மேற் கடலாய்க் கிடாய்ப் பாய்ச்சல் போலே-திரையோடு திரை தாக்கிக் கிளருகிற ஒலியும்,

சாறு பட –கடலிலே நீர் கோதாம்படி பிரயோஜனமான அமிருதம் உண்டாக. என்றது,
‘நீரிலே ரசமான பசை பட’என்றபடி.-அன்றிக்கே, சாறு என்று திருவிழாவாய், ‘தேவ சாதிக்குத் திருவிழா உண்டாம்படியாக’ என்னுதல்; சாறு பட – என்றபடி.-

————-

நான்றில ஏழ் மண்ணுந் தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும்
நான்றில ஏழ்கடல் தானத்தவே அப்பன்
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே
.–7-4-3-

இவன் பெரிய யானைத் தொழிலைச் செய்யா நிற்கச் செய்தேயும், முன்பு போலே ஒரு குறை அற, உண்பார் உடுப்பாராய்ச் செல்லுகிறபடி. ஆதாரமானவன் கூட நிற்கையாலே இவற்றுக்கு ஒரு குறை வாராதே. ஏழு தீவுகளும் சலித்தன இல்லை: தனது தனது இடத்தில் இருந்தன ஆயின.

நீர்ப் பண்டம் அன்றோ தண்ணீர்? அதுவும் தன் இடத்திலே கிடக்கும்படியாக.
அவற்றின் கடினத் தன்மையும் இதனுடைய நெகிழ்ச்சித் தன்மையும் பயன் அற்றவை;
‘அவன் திருவுள்ளக் கருத்து யாது ஒன்று? அதுவே காரியமாக முடிவது,’ என்கை.
புண்ணியம் பாபம் -பேற்றுக்கு சாதனம் இல்லை -இரண்டையும் தொலைத்து –
அவன் நிர்ஹேதுக கிருபையே மோக்ஷ ஹேது போலே –

மாறுபடுருவத் தைக்கும் படியாகக் குத்தி. அண்ட பித்தியினின்றும் ஒட்டு விடிவித்து எடுத்து ஏறட்டு, எயிற்றிலே எற்றிக் கொண்டு (வியாபரித்த போது )செயல் செய்த போது:-அசையாத பொருள்களோடு அசையும் பொருள்களோடு வாசி யறத் தம் தம் இடத்திலே நின்றன-

————

நாளும் எழநிலம் நீரும் எழ விண்ணும்
கோளும் எழ எரி காலும் எழ மலை
தாளும் எழச் சுடர் தானும் எழ அப்பன்
ஊளி எழ உலகம் உண்ட ஊணே
.–7-4-4-

நாளும் எழ –கால நியதி போக.-‘அக்காலத்தில் பகல் இல்லை; இரவு இல்லை; ஆகாயம் இல்லை; பூமி இல்லை; இருள் இல்லை: சூரிய சந்திரர்கள் இல்லை;
வேறு ஒன்றும் இல்லை; பிரஹ்மம் ஒன்றே சமஷ்டி புருஷரூபமாய் இருந்தது,’எழ.-பேர. ஆண்டு என்றும், மாதம் என்றும், நாள் என்றும், கலை என்றும், காஷ்டை என்றும் சொல்லுகிறவை எல்லாம் ஸூரியனுடைய செல்லுதல் வருதலாலே வருகின்றனவை அன்றோ? பாகுபாட்டைச் செய்கிற ஸூரியன் உள்ளே புக்கால் பாகுபடுத்தப் படுகின்ற இவையும் போமித்தனை அன்றோ?

நிலம் நீரும் எழ--காரணங்களோடு காரியங்களோடு வாசி அற உள்ளே புக.
காரியம் உள்ள இடத்தே காரணம் தொடர்ந்து நிற்றலைக் காணா நின்றோம்;

அப்பன் ஊளி எழ--ஒலி உண்டாக. என்றது, ‘ஒவ்வொரு காலத்தில் கலகங்கள் உண்டானால்
நம்முடைய அடைய வளைந்தானுக்குள்ளே புகும் போது திருவாசலில் பிறக்கும் ஆரவாரம் போலே,-திரு வயிற்றிற் புகுகிற போது பிராணிகளுக்கு உண்டான பரபரப்பான ஒலிகள் கிளர’ என்றபடி.-(பசி என்று பன்னீராயிரப்படி )-ஊளி -சப்தம் -உறிஞ்சின ஓசை –எழ -என்றது தோற்ற என்றபடி -லோகத்தை உண்ட படி –
அன்றிக்கே, ‘‘இவற்றை உரிஞ்சுகிற போதை ஒலி காண்!’ என்று நடாதூர் அம்மாள் பணிக்கும்படி’ என்று அருளிச் செய்வர்’-அதனால் நினைக்கிறது, ஈஸ்வரத்வப் பிடரால் அன்றியே பத்தும் பத்தாக அடியார்களைக் காப்பாற்றுதலேயாய் இருக்கிறபடி.-

————-

ஊணுடை மல்லர் ததர்ந்த ஒலி மன்னர்
ஆணுடைச் சேனை நடுங்கும் ஒலி விண்ணள்
ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட ஒலி அப்பன்
காணுடைப் பாரதம் கையறை போழ்தே.
–7-4-5-

பசளைக் கலம் (பச்சைப்பானை )நெரித்தாற்போலே வருத்தம் இன்றியே நெரித்த படியைப் பற்ற.-வலியைப் போரப் பொலியச் சொல்லி வைத்து,‘ததர்ந்த’ என்கிறார் காணும்,

காணுதற்கு இனிய பாரதம். கை அறை போழ்து –-கையும் அணியும் வகுத்து அங்கோடு இங்கோடு உலாவிப் படை பொருத்தி,-நீங்கள் இன்னபடி செய்யக் கடவீர்கோள்! நாங்கள் இன்னபடி செய்யக் கடவோம்’ என்று கை தட்டி விட்ட போது இந்த ஒலி எல்லாம் உண்டாயின.

காணுடைப் பாரதம் கை அறை போழ்தே--கண் முதலான கரணங்களைப் படைத்ததற்குப் பிரயோஜனம் அற்றை நிலையைக் காண்கை அன்றோ?
சேனையின் தூளியும், கையும் உழவு கோலும் சிறு வாய்க் கயிறும், நாற்றின திருவடிகளுமாய் நிற்கிற நிலை அன்றோ அது?
இந் நிலைக்கு உபேயத்துவ மாத்திரமன்றிக்கே, உபாயத்துவமும் உண்டு என்கிறார்,

‘மாம்’ என்று தொடங்கி. ‘கையும் உழவு கோலும், பிடித்த சிறு வாய்க் கயிறும்.
ஸேநா தூளி தூசரிதமான திருக் குழலும், தேருக்குக் கீழே நாற்றின திருவடிகளுமாய் நிற்கிற சாரத்ய வேஷத்தை ‘மாம்’ என்று காட்டுகிறான்’ என்பது, முமுக்ஷூப்படி சரம ஸ்லோக ப்ரகரணம், -ஸூ-. 33.-

——————–

போழ்து மெலிந்த புன் செக்கரில் வான் திசை
சூழும் எழுந்து உதிரப் புனலா மலை
கீழ்து பிளந்த சிங்கம் ஓத்ததால் அப்பன்
ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே
.–7-4-6-

கீழில் பாட்டில் பந்துக்கள் பகையாக வந்து உதவின படி சொல்லிற்று -இதில் ரக்ஷகனான பிதா பகையாக வந்து உதவின்படி சொல்லுகிறது

மலை கீழ்து பிளந்து சிங்கம் ஒத்ததால் –-‘ஒரு மலையைக் கீழே இட்டுக் கொண்டு மேலே இருந்து அதனைப் பிளந்த சிங்கத்தை ஒத்தது’ என்னுதல்.-அன்றிக்கே,-‘கிழித்துப் பிளந்த சிங்கத்தை ஒத்தது’ என்னுதல்.-அன்றிக்கே-‘மகிழ்ந்து பிளந்த சிங்கத்தை ஒத்தது’ -என்னுதல்.-‘இரண்டு கூறு செய்து உகந்த சிங்கம்’ திருச்சந்த விருத். 62.

இத்தாலும் சொல்லிற்றாயிற்று,-ஆபத்துக் கனத்ததனையும் கடுக வந்து இரட்சிக்கும் என்கை.-தமப்பன் பகையாக உதவினவன், அவனில் அண்ணியனான தான் தனக்குப் பகையானால் உதவச் சொல்ல வேணுமோ?-‘தனக்குத் தானே அன்றோ பகைவன்?’ என்கிறபடியே-

————-

மாறு நிரைத்திரைக் குஞ்ச ரங்களின்
நூறு பிணம் மலை போற் புரளக் கடல்
ஆறு மடுத்து உதிரப் புனலா அப்பன்
நீறு பட இலங்கை செற்ற நேரே
.–7-4-7-

மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள் – சாரிகை வந்த சடக்கு, நாலு திசைகளிலும் விட்ட அம்புகள் எதிர் அம்பாய் ஒன்றோடு ஒன்று பொருது-கலார் கலார் என்று ஒலிக்கின்ற ஒலி, கடல் இரைத்தாற்போலே இரா நின்றது.-சாரிகை வந்த சடக்கு, தன்னில் தான் எதிரம்பு கோத்தது காணும். –-அஸ்தரம் –மந்திரித்து –சஸ்திரம் -மந்த்ரம் இல்லா அம்புகள் .

இலங்கை செற்ற நேரே –இலங்கை செற்ற பொழுது. ‘நேர்’ என்பது, ‘நேரம்’ என்று காலத்தைக் காட்டுவதாம்.-‘இலங்கை செற்ற பொழுது மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள்’ என்பது அந்வயம்.-அன்றிக்கே,-இலங்கையைச் செற்ற வாய்ப்பு’ என்னுதல்.-அன்றிக்கே,
‘மாயாப் பிரயோகத்தால் அன்று, செவ்வைப் பூசலிலே நின்று காண் இலங்கையை அழித்தது’ என்னுதல்.-நேர் – நேராக என்றபடி.-அப்போது, ஏகாரம்: தேற்றகாரம். ‘நேர்மையாலே இலங்கை செற்றது’ என்றபடி.-

—————-

நேர் சரிந்தான் கொடிக் கோழி கொண்டான் பின்னும்
நேர் சரிந்தான் எரியும் அனலோன் பின்னும்
நேர் சரிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன்
நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட அன்றே
–7-4-8-

கீழ் அசுரர்களை மார்விலே அம்பேற்று ஜெயித்த படி சொல்லிற்று -அவர்களுக்கு ஆபாஸ்ரயமாக வந்த தேவ ஜாதியையும் ஜெயித்த படி சொல்லிற்று இப்பாட்டில் –

கோழிக் கொடி கொண்டான் நேர் சரிந்தான் – மயிலைக் கொடியிலே யுடையனாய்த் தேவ சேனாதிபதியாய் இளமறியாய்த் தூசித் தலையிலே நின்ற சுப்பிரமணியன்
தோற்றரவிலே கெட்டான். ( இளமறி-குட்டிக் குதிரை -இளம் கன்று பயம் அறியாதே )

பின்னும் நேர் சரிந்தான் எரியும் அனலோன் – அவ்வளவிலே நாற்பத்தொன்பது அக்கினிகளும் பெரிய கிளர்த்தியோடே எரிந்து தோன்றின:-49 மருத் கூட்டங்களும் உண்டே -ஜாடராக்கினி வயிற்றுக்குள் அவையும் எல்லாம் பின்னிட்டன.

பின்னும் நேர் சரிந்தான் முக்கண் மூர்த்தி –-‘மகன் கொடி கட்டிக் கொண்டு சென்று இளிம்பு பட்டான்’ என்று தன் ( எருதுக் )கொடியைப் பொகட்டு வந்து தோற்றின உடனேயே,
கண்ணைப் புதைத்துக் கெட்டு ஓடத் தொடங்கினான்.
அவன் மறைத்துக் கொண்டு போக, இவர், ‘முக்கண் மூர்த்தி கண்டீர்’ என்று கண்ணைக் காட்டிக் கொடுக்கிறார்.-எல்லாம் செய்தாலும் உடம்பில் அடையாளத்தை மறைக்கப் போகாதே அன்றோ?

தன்னோடு ஒக்க ஆறல் பீறலாய் இருப்பது ஒரு தேவதையைப் பற்றி, அரணுக்குள்ளே இருப்பாரைப் போலே திண்ணியனாய் இருந்தானாயிற்று. புருடோத்தமனைப் பற்றி இருப்பாரைப் போலே, கபாலி கந்தரைப் பற்றி நிர்ப்பரனாய் இருந்தான்.
சர்வேஸ்வரனைப் பற்றி ‘எதினின்றும் அஞ்சுகிறான் அல்லன்’ என்று இருப்பாரைப் போன்று எண்ணினான்.

திண் தோள் கொண்ட – ‘உஷை தந்தை அற்றவள் ஆக ஒண்ணாது’ என்று கரத்தைக் கழித்து விட்டான்.-கர பாதை அன்றோ இவனைக் கண்டார் கால்களில் எல்லாம் விழச் செய்தது’ என்று அவனுக்குள்ள கரத்தைக் கழித்து, இறையிலி யாக்கி விட்டான்.-ஆயிரங்கைகளையும் கொண்டு சம்பந்தம் இல்லாத விஷயத்திலே காரியங்கொள்ளுகையாலே அவற்றையே கழித்து விட்டான். அந்தத் தேவதை தானே வந்து, ‘வரம் தந்த நீயே அதனைக் கழிக்கவோ?-(அவரவர் -அந்தராத்மாவாக நின்று அன்றோ நீயே வரம் கொடுத்தாய் )
நீ இவனைக் கொல்லில் என் காலிலே குனிவார் இல்லை இனி’ என்று பல்லைக் காட்டுகையாலே விட்டான்.

இதனால் என் சொல்லியவாறோ?’ எனின், ஈஸ்வரனை ஒழிந்தார் அடங்கலும்,
தாங்கள் உளரான போது காப்பாற்றுகின்றவர்களாகச் செருக்குக் கொண்டு.
ஆபத்து வந்தவாறே இவர்களைக் காட்டிக் கொடுத்துத் தங்கள் தங்களைக் கொண்டு தப்புவர்கள்;
‘எல்லா நிலைகளிலும் தன்னை அழிய மாறியாயினும் அடியார்களைக் காப்பாற்றுவான் சர்வேஸ்வரன் ஆகையாலே, அடையத் தக்கவன் இவனே; அல்லாதார் பற்றத்தக்கவர் அல்லர்,’ என்னும் இடம் சொல்லியபடி.

———–

அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல்
அன்று சுடர் இரண்டும் பிறவும் பின்னும்
அன்று மழை உயிர் தேவும் மற்றும் அப்பன்
அன்று முதல் உலகம் செய்ததுமே.
–7-4-9-

வாணனைத் தண்டித்த அன்று கண்டீர் உலகத்தை உண்டாக்கினான்’ என்று அதனையே பேசுகிறார் என்னுதல்.-பயிர் செய்கையே அன்றே வேண்டுவது? பயிர் அழியாமல் நோக்கின அன்றே அன்றோ – பயிர் செய்ததாவது?

பின்னும் அன்று மழை உயிர் தேவும் மற்றும் – அதற்கு மேலே மழை பெய்யக் கடவதான மேகம்,-மழையாலே உயிர் வாழக் கூடிய ஆத்துமாக்கள்,-மழையைத் தோற்றுவிக்கின்றவர்களான தேவர்கள், மற்றும் உண்டான திரியக்குத் தாவரங்கள் முதலானவைகள்.-அப்பன் –-எல்லாப் பொருள்களையும் தோற்றுவித்தவன்.-

————–

மேய் நிரை கீழ் புக மா புரளச் சுனை
வாய் நிறை நீர் பிளிறிச் சொ ரிய இன
ஆநிரை பாடி அங்கே ஒடுங்க அப்பன்
தீ் மழை காத்துக் குன்றம் எடுத்தானே.
–7-4-10-

தீ மழை காத்து –கேட்டினை விளைக்க வந்த மழையாகையாலே ‘தீ மழை’ என்கிறார்.
ஆயர்களும் பசுக்களும் அன்றிக்கே அன்று தாமே அன்றோ நோவு பட்டார்?-குன்றம் எடுத்தானே –‘மலையை எடுத்துக் காத்த மஹோபகாரகன்’ என்கிறார்.-பசுக்கள் பக்கலிலும் பெண்கள் பக்கலிலும் கிருஷ்ணன் கிருபை பண்ணுகைக்கு ஹேது -அஞ்ஞத்தையும் பாரதந்தர்யமும் –
‘பசியினால் உண்டான கோபம் ஆறுந்தனையும் மழை பெய்து போவானுக்கு’ என்று ஏழு நாள் அன்றோ மலையைத் தரித்துக் கொடு நின்று நோக்கிற்று?-கல் எடுத்து கல் மாரி காத்தாய் -சொல் எடுத்து பாடுவது அரிதானதே –-சொல் எடுத்து தான் கிளியை சொல் என்று துணை மேலை மேல் சோர்கின்றாள்

‘இதனால் என் சொல்லியவாறோ?’ எனின்,-அடியவன் தப்பினாலும் தான் பொறுத்துக் காப்பாற்றுவான் என்பதனைத் தெரிவித்தபடி.-குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
ஊணைப் பறித்தோம் உயிரைப் பரிக்கக் கூடாது என்ற உதார குணத்துக்கு பல்லாண்டு –

————

குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும்
ஒன்றி நின்ற சட கோபன் உரை செயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே
–7-4-11-

குன்றம் எடுத்த பிரான் அடியாரோடும் ஒன்றி நின்ற சடகோபன் உரை செயல் –
கோவர்த்தனத்தை எடுத்துத் தரித்த நீர்மையிலும்-அப்போதை அழகிலும் ஈடுபட்டு இருக்குமவர்களோடே கூடி நின்று-தாமும் பிரீதராய்,-பிரீதிக்குப் போக்கு வீடாகச் சொன்ன பாசுரமாயிற்று.–த்ரிபங்கியாய் நின்ற அழகு –

நன்றி புனைந்து ஓர் ஆயிரம் – சர்வேஸ்வரனுடைய பரத்வ சௌலப்யங்களை வகையிட்டுத் தொடுத்த ஆயிரம் நன்மையாவது,-சம்சாரி சேதனுக்கு, இவனே சர்வ ஸ்மாத் பரன் என்றும், சர்வ சுலபன் என்றும்,-சர்வ சமாஸ்ரயணீயன் என்றும் சொல்லுகை அன்றோ?
அவையே அன்றோ முதல் திருவாய்மொழி தொடங்கி அருளிச் செய்தது?
அன்றிக்கே,-எம்பெருமானுடைய வெற்றிச் செயல்களைத் தொடுத்துச் சொன்ன இப் பத்தும்’ என்னுதல்.

இன்ன வெற்றி விசேஷித்து இல்லாமையால் ஸமஸ்த வெற்றி-
செல்வத்தை விரும்புகிறவனுக்குச் செல்வத்திற்குத் தடையாக வுள்ளனவற்றை-கவனக்குறைவு அசுத்தி பேராசை போன்ற -வென்று கொடுக்கும்;
கேவலனுக்கு -வேறே ப்ரயோஜனமாகிய -விரோதியைப் போக்கிக் கொடுக்கும்;
பகவானைச் சரணம் அடைந்தவர்களில்-உபாசகனுக்கு ஐம்புலன்களையும் வெல்லுதல் முதலியவற்றைச் செய்து கொடுக்கும்;-பிரபந்நனுக்குக் கைங்கரிய விரோதிகளை வென்று கொடுக்கும்.

இது தான் ‘குலந்தரும்’ என்கிறபடியே எல்லா அபேக்ஷிதங்களையும் கொடுக்கும்’;
‘ஐஸ்வர்ய கைவல்ய பகவல் லாபங்களை ஆசைப் பட்டவர்களுக்கு அவற்றைக் கொடுக்கும்’;
‘கர்ம ஞான பத்திகளிலே இழிந்தவர்களுக்கு விரோதியைப் போக்கி அவற்றைத் தலைக் கட்டிக் கொடுக்கும்’;
‘பிரபத்தியிலே இழிந்தவர்களுக்கு ஸ்வரூப ஞானத்தைப் பிறப்பித்துக் கால க்ஷேபத்துக்கும் போகத்துக்கும்
ஹேதுவாயிருக்கும்’ என்ற வாக்கியங்கள் இங்கு அநுசந்தேயங்கள்.(
முமுக்ஷூப்படி. திருமந்திரம். ஸூ18-21.)

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -91-சுருங்கு உறி வெண்ணெய் தொடு உண்ட –வார் கடா அருவி -8–4-

April 2, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

கள்வனை-பெரு வயிற்றாளனை–பெரும்கிறியானை-மூன்றுமே கள்ளத்தனம் தானே நெஞ்சத்தையும் என்னை அறியாமல் கள்ளத்தனமாகத் திருடிய அவனைத் தவிர வேறே ஒருவரையும் பேணாதே-கோபிகள் மனசைத் திருடவே வெண்ணெயைத் திருடினான் அன்றோ–கற்பு நிலை உரைக்கிறாள் -தோழிக்குத் தலைமகள் பாசுரம் –வார் கடா அருவி -8–4-இதன் விவரணம்மஹா மதிகள் அச்சம் கெட்டு அமரும் சௌர்யாதிகள் சிற்றாறிலே கொழிக்கும் –(ஆச்சார்ய ஹிருதயம்-175)–இம் மூன்று இடங்களிலும் காணலாம்-சரீரம் தள்ளி ஆத்மாவை-பிரளயம் -வயிற்றில் வைத்து ரஷித்தே தீருவேன்
இரந்தாலும் ரஷித்தே தீருவேன் –அல்லாதோர் அரணும் அவனில் வேறில்லை அது பொருளாகிலும் அவனை யல்ல தென்னாவி யமர்ந்தணை கில்லாது ஆதலால் அவனுறைகின்ற
நல்ல நான் மறையோர் வேள்வியுள் மடுத்தநறும் புகை விசும்பொளி மறைக்கும்
நல்ல நீள் மாடத் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு எனக்கு நல் அரணே
-8-4-5-

இங்கே கிடந்தது காலம் நெடுகா நின்றது –குறுகா நின்றது என்னா –ஆழங்கால் படா நில்லாதே-நாங்கள் கண்டீரே –புறம்புள்ள விஷயங்களிலே தரித்து -காலம் குறுகுதல் நெடுகுதல் செய்தாலும் ஸூகித்துத் திரிகிறோம் –அப்படியே நீரும் பகவத் விஷயத்திலே நின்றும் நெஞ்சை மாற வைக்கப் பாரத்தாலோ என்ன –ஓம் அப்படி செய்யலாற்றிற்று இறே அதுக்கு ஈடாய் இருப்பதோர் நெஞ்சு பெற்றோம் ஆகில் –என் நெஞ்சு அவனை ஒழிய வேறு ஒன்றை அறியாது என்கிறார் –இந் நெஞ்சு தன்னையும் வைக்கல் ஆயிற்றே-அவன் ஸௌர்யம் பண்ணிற்று இலனாகில் –

இப்படி கால விளம்பம் போறாது ஒழிந்தாலும்-அவன் தானே வந்து முகம் காட்ட வேண்டுகையாலே
பதறினாலும் பிரயோஜனம் இல்லை-அவன் தன் நினைவாலே இருக்கிற உமக்கு அவன் விபூதியைக் கண்டு கால ஷேபம் பண்ணி இருக்கக் குறை என் என்ன–ஆஸ்ரித வ்யாமுக்தனாய்-ஆபத் சகனாய்-ஸர்வஞ்ஞனானவனை ஒழிய என் நெஞ்சு வேறே ஒரு விஷயத்தை ஆதரியாது -என்கிறார் –இப் பாட்டு தோழிக்குத் தலைவி தன் கற்புணர்த்தி அறத்தோடே நின்று உரைத்தல் ஆகவுமாம் –

சுருந்குறி வெண்ணெய் தொடு வுண்ட கள்வனை வையமுற்றும்
ஒருங்குற வுண்ட பெரு வயிற்றாளனை  மாவலி மாட்டு
இருங்குறளாகி  இசையவோர் மூவடி வேண்டிச் சென்ற
பெரும் கிறியானை யல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே – –
-91 –தலைவி தோழியிடம் தன் கற்பு உணர்த்தி அறத்தோடு நிற்றல் –

சுருக்கு உறி வெண்ணெய்–சுருங்கக் கட்டப்பட்டுள்ள உறியிலே சேமித்து வைக்கப்பட்ட வெண்ணெயை
தொடு உண்ட–வஞ்சனையால் எடுத்து அமுது செய்த
கள்வனை–கள்ளத்தனமுடையவனும்
வையம் முற்றும்–உலக முழுவதையும்
இரு குறள் ஆகி–மிக்க வாமன வடிவ முடையனாகி
இசைய–(அவன் தானே தானம் பண்ணுவதற்கு) இசையும்படி
ஓர் மூ அடி வேண்டி–ஒரு மூன்றடி நிலத்தை யாசித்துக் கொண்டு
ஒருங்கு உறு உண்ட–ஒரு சேர விடாமல் உட் கொண்ட
பெரு வயிற்றாளனை–பெரிய திருவயிற்றை யுடையவனும்
மாவலி மாட்டு–மஹாபலி சக்கரவர்த்தியினிடத்தில்
சென்ற–எழுந்தருளின
பெரு கிறியானை அல்லால்–மிக்க தந்திரமுடையவனுமான திருமாலையல்லாமல் (வேறொருத்தனை)
அடியேன் நெஞ்சம் பேணாது–(அவனுக்கே) அடிமையான எனது மனம் விரும்பாது.

வாராமல் அச்சம் இனி மால் தன் வலியினையும்
சீரார் பரிவருடன் சேர்த்தியையும் -பாரும் எனத்
தானுகந்த மாறன் தாள் சார் நெஞ்சே சாராயேல்
மானிடவரைச் சார்ந்து மாய்—74-இன்னமும் இவருக்கு நம் பக்கல் பரிவின் கனத்தாலே பயம் மறுவல் இடக் கூடும் என்று விசாரித்து ப்ரதிகூலர்க்கு கணிசிக்க ஒண்ணாத படி அரண் உடைத்தான ஸ்ரீ திருச் செங்குன்றூரிலே ஸ்ருஷ்டி ஸ்திதியாதிகளை நிர்வஹிக்க வல்ல சக்திமான்களாய்-சாபா நுக்ரஹ ஸ்மர்த்தரான மூவாயிரம் ப்ராஹ்மணர் பரிந்து நோக்க அவர்களும் குழைச் சரக்காம் படி-பிசாசான் தானாவான் அங்குல் யக்ரேணதான் ஹன்யாமிச்சன் ஹரி கணேஸ்வர -என்று சௌர்ய வீர்ய பராக்ரமாதிகளோடே தான் எழுந்து அருளி இருக்கும் நிலையை ஸ்ரீ சர்வேஸ்வரன் காட்டிக் கொடுக்க -அத்தாலே அச்சம் கேட்டு அவன் வடிவு அழகிலே நெஞ்சை வைத்து அனுபவித்து ஹ்ருஷ்டர் ஆகிற -வார்கடாவருயில் அர்த்தத்தை -வாராமல் அச்சம் இனி -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -அவ் அழகை அனுபவித்து ஹ்ருஷ்டரான ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை அபாஸ்ரயமாக ஆஸ்ரயி-நெஞ்சே –ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளில் ஆஸ்ரயணம் உஜ்ஜீவன ஹேது தத் இதர ஆஸ்ரயணம் நாச ஹேது-என்றது ஆயிற்று –

சுருந்குறி வெண்ணெய்--சுருங்கு உறி வெண்ணெய் -கள்ளக் கயிறு வைத்த உறி யாயிற்றே –வெண்ணெய் தொடு உண்ட –வைத்த குறி அழியாமே -வெண்ணெயை  களவு கண்டு அமுது செய்தான் கள்வனை –களவு தன்னை யாயிற்று களவு கண்டது –ஆகையால் -சிலர் இது களவு கண்டல்ல –தெய்வம்-கொண்டதோ -நாம் வைத்திலோமோ  -என்னும்படி யாயிற்று களவு கண்டது –வையம் இத்யாதி –இவ் வெண்ணெயாலே வயிறு நிறைய செய்தேயும் -ஜகத்தாக எடுத்து வைத்தால்-
அரை வயிறு ஆம்படியாய் இற்று இருப்பது –இத்தால் ஆஸ்ரித ஸ்பர்சமுள்ள -த்ரவ்யத்தாலே தரிக்கையும் – ஜகத் ரஷணத்திலே பர்யாப்தம் இன்றிக்கே இருக்கும் படியையும் சொல்லிற்று –மாவலி இத்யாதி –தான் காவலாக இட்டு வைத்த கடல் -இவ் விபூதியை களவு காணும் அன்று-தன் வயிற்றிலே இட்டு வைத்துக் கொண்டு நோக்கும் –நான் என்னது -என்று இருப்பன் ஒருத்தன் இத்தை-அபஹரித்த அன்று அவனோடு இசைய இருந்து சென்று கொள்ளும் –மாவலி மாட்டு – ஆசூர பிரக்ருதி யானவன் பக்கலிலே சென்று கிட்டிற்று – தன்னை ஒழிய வேறு ஒன்றைப் பேணாத-நெஞ்சு உடைய என் பக்கலிலே அன்றோ கிட்ட அடுப்பது –இரும் குறளாகி –பெரிய குறளாகி –அதாவது-லோகத்திலே வாமனர்கள் அடைய வளர்ந்து அருளின இடத்துக்கு ஒப்பாம்படி ஆயிற்று -இவனுடைய சிறுமை –இசைய –இசைவிக்க கிருஷி பண்ணினவன் தானேயாய் –அவன் இசைவும் தன்னதீனமாம் படியாக-உடையனாய் –ஆரேனும் வேண்டா என்னிலும் அவனும் இசைந்து கொடுக்கும் படியும்-ஓர் மூவடி வேண்டிச் சென்ற -இரண்டு அடியை இரந்து – இரண்டு அடியும் அளந்து விடாதே- ஓர் அடிக்கு சிறை இடும்படி மூன்று அடியை இரந்தவனை –வேண்டிச் சென்ற பெரும் கிறியானை யல்லால் – தான் சர்வ நிரபேஷன் என்று தோற்றாதபடி சென்றவன் – நாம் கொடுக்கிற வித்தால் அல்லது தரியான் – என்று தோற்றும்படியாக யாயிற்று சென்றது –தன் ஈஸ்வரத்வத்தைக்  களவு கண்ட படி –அவாப்த சமஸ்த காமன் ஓர் அபேஷை தோற்ற வந்தான் -என்று இத்தனை தோற்றாமை –இரப்பாளனாய் சென்றபடி –
அவன் தயை பிறந்து கொடுக்கும் படியான வடிவைக் கொண்டு –பெரும் கிறியான் –பெரு விரகன் –அடியேன் –மகா பலியைப் போலே ஓன்று கொடுக்க இருக்கிறார் அல்லர் –-இந்த்ரனைப் போலே ஓன்று பெற இருக்கிறார் அல்லர் –-அச் செயலுக்குத் தோற்று எழுதிக் கொடுக்குமவர் இறே இவர் –நெஞ்சம் பேணலதே –பரத்வதையும் கொள்ளாது –பாவோ நான் யத்ர கச்சதிஒருங்கற –பிறி கதிர் படாமே -ஒரு காலே என்றாய் -நிச்சேஷமாக -என்றபடி –யானே என் தனதே என்று இருந்த என் நெஞ்சையும் நான் அறியாதபடி அபஹரித்தான் –

ஸுலப்ய பரத்வ பசும் கூட்டம் அன்றோ அவன் -சுருங்குறி வெண்ணெய் தொடுவுண்ட கள்வன்’ என்பதனால் ஸௌலப்ப குணமும் ‘வையம் முற்றும் ஒருங்குறவுண்ட பெருவயிற்றாளன்’ என்றதனால் பரத்வ குணமும், மாவலி மாட்டிருங்குறளாகி யிசையவோர் மூவடி வேண்டிச்சென்று பெருஙகிறியான்’ என்றதனால் பரத்வ ஸௌலப்யங்களிரண்டுங் கூடின கூட்டாவும் குறிப்பிடப்பட்டன.–-சுருந்குறி-கள்ளக் கயிற்றை உருவி விரல் நுழைக்க ஒண்ணாத படி நெருக்கப் பட்ட உறி-இருங்குறளாகி-மிகக் குறுகிய வடிவம் -பெரிய வடிவத்தை உட்க்கொண்ட சிறிய வடிவம் – மஹிமை யுடைய வடிவம் – கரிய குறள் வடிவம்-பெரும்கிறி யானை–வடிவு அழகு பேச்சின் இனிமையாலே மாயையை மயக்கி -சுக்கிராதிகள் விலக்கினாலும்-உடன் படாதே மூவடி நிலம் பெற்ற சமர்த்தன்-சுருந்குறி வெண்ணெய் தொடு வுண்ட கள்வனை -உடம்பாகிய சிக்கத்திலே கட்டுப் பட்டுள்ள வெண்ணெயின் தன்மையதான முமுஷுவாகிய ஆத்மாவை யாவரும் அறியாத படி விரும்பிக் கைக்கு கொண்டு அனுபவிப்பவன் –-மா வலி மாட்டு -மாடு -பொன் பக்கம் செல்வம் -நிகண்டு –தோழிக்குத் தலைவி தன் கற்பு உணர்ச்சி அறத்தோடு நிற்றல் இது பாரங்குச நாயகியாகிய தலைமகள் களவொழுக்கத்தால்-ஸர்வேச்வரனாகிய தலைமகனைக் கூடி நிற்க, அந்நிலையை யறியாத பெற்றோர் அவளைப் பிறர்க்கு விவாஹஞ் செய்விக்க முயற்சி கொள்ள,
அதனை யறிந்த நாயகி தனது களவைத் தோழிமூலமாக செவிலிக்கும் அவள் மூலமாகத் தந்தைக்கும் மற்றும் பெரியோர்க்குந் தெரிவித்துத் தன்னை அத்திருமாலுக்கே விவாஹஞ் செய்து வைக்கும்படி செய்துகொள்ள விரும்பி அத்தலைமகள் தன் கருத்தை தோழிக்கு வெளிப்படுத்தியது இது’. இங்ஙனம் களவை வெளிப்படுத்தல் ‘அறத்தொடு நிற்றல்’ எனப்படும்.‘சுருங்குறி வெண்ணெய் தொடுவுண்ட கள்வன்’ என்றதனால் இவ்வுடம்பாகிய சிக்கத்திலே கட்டுப்பட்டுள்ள வெண்ணெயின்
தன்மையதான முமுக்ஷுவாகிய ஆத்மாவை எவரும் அறியாதபடி விரும்பிக் கைக்கொண்டு அநுபவிப்பவன் எம்பெருமான் என்பது தோன்றுமென்ப.

சுருந்குறி வெண்ணெய் தொடு வுண்ட கள்வனை-கள்ளக் கயிறு உருவிக் கட்டுகையால் சுருங்கின உறியிலே சேமித்து வைத்த வெண்ணெயைக் களவிலே புக்கு அமுத செய்த க்ருத்ரிமனானவனை-இத்தால்-இச்சரீரமாகிற சிக்கத்திலே கட்டுண்ட நவநீத ப்ராயனான முமுஷு சேதனனைப் பிறர் அறியாதபடி அபி நிவிஷ்டனாய் புஜிக்கும் என்னும் இடம் தோற்றுகிறது –வையமுற்றும் ஒருங்குற வுண்ட பெரு வயிற்றாளனை-இப்படி ஆஸ்ரிதர் உகந்த விஷயத்தை உகக்கும் அளவு அன்றிக்கே
ஸாமான்யமான ஜகத்துக்கு பிரளய ஆபத்து வந்தால் ஒன்றும் பிரி கதிர்ப் படாமல் பசியர் யுண்டால் போலே மேல் விழுந்து திரு வயிற்றிலே வைத்து நோக்கும்படியான ரக்ஷகத்வ சக்தியின் மிகுதியை யுடையவனை –(மஹா மதிகள் அச்சம் கெட்டு அமரும் சௌர்யாதிகள் சிற்றாறிலே கொழிக்கும் –(ஆச்சார்ய ஹிருதயம்-175)மாவலி மாட்டு-இருங்குறளாகி இசைய வோர் மூவடி வேண்டிச் சென்ற பெரும் கிறியானை யல்லால்-மஹா பலி யருகே லோகத்தில் வாமன வேஷம் வளர்ந்து அருளின இடம் என்னும்படி மிக்க வாமனனாய்-அவன் தானே இசையும்படி அத்விதீயமான சிற்றடியாலே மூன்றடி வேண்டி அழகிய நடையிலே மதி மயங்கும்படி சென்ற பெரிய நல் விரகை யுடையவனை ஒழிய–பெரும் கிறியாரை -என்றும் சொல்லுவார்–இத்தால் தன்னுடைய வஸ்து பிறர் கொள்ளாமல் தன்னதே யாக்கிக் கொள்ளும் பேர் அறிவுடையவன் என்கைஅடியேன் நெஞ்சம் பேணலதே –இந்த ஸ்வ பாவங்களால் அவனுக்கே சேஷமான நெஞ்சு வேறே ஒரு விஷயத்தை ஆதரியாது–தொடு உண்ட கள்வன்-என்கையாலே புணர்ச்சி தோற்றிற்று–வையம் இத்யாதியாலே – நீரிடை யுதவி தோற்றிற்று ( புனல் தரு புணர்ச்சி )-மாவலி மாட்டு -இத்யாதிகளாலே ‘தானே குறை நயந்து வரைந்து கொள்ளும் பேர் அறிவுடைமை தோற்றிற்று-

தாத்பர்யம்-இதில் பகவத் அலாபத்தாலே ஆழ்வார் படும் பாட்டைக் கண்ட சம்சாரிகள் நீர் இவ் விஷயத்தை விட்டு எங்களைப் போலே சப்தாதி விஷயங்களிலே ப்ரவணராய் ஸூகித்து இரும் என்று சொல்ல நான் அப்படி செய்யினும் என் மனஸ்ஸூ அவனை விட்டு மற்று ஒன்றையும் விரும்பாதே என்கிறார் –ஆஸ்ரிதர் ஸ்பர்சம் உள்ள வெண்ணெயைத் திருடி கோபிகள் மனம் கவர்ந்த கள்வன் அன்றோ-கள்ளக்கயிற்றை உருவி மோர் விற்கப் போக அந்தக் குறிகள் மாறாதே -அப்படியே தெய்வம் கொண்டு போனது என்று சொல்லும்படி அன்றோ இவனது களவு வியாபாரம்-பிரளய காலத்தில் ஸமஸ்த லோகத்தையும் திருவயிற்றிலே உண்டு -மேலும் இடம் உள்ளபடி-ரக்ஷகத்வ பாரிப்பு மிக்க உபகார ஆபத் சகத் வத்தையும்-மிக குறளாகி -இரண்டு அடி யாசித்தால் சிறை வைக்க உபாயம் இல்லை என்று மூன்று அடி யாசித்து பூமி அந்தரஷிம் இவற்றை எல்லாம் அளந்து மகாபலியை சிறை வைத்த-நடை அழகிலும்-புத்தி சாமர்த்தியத்திலும்-ஈடுபட்ட நெஞ்சு வேறே ஒன்றைப் பேணாதே-பாவோ நான்யத்ர கச்சதி போல்-இவரும் ஸுலப்ய குண அனுசந்தானத்தைத் தாண்டி பரத்வத்துக்கும் போக வல்லார் அல்லரே –

8-4-வார்கடா வருவி யானை மா மலையின்மருப்பிணைக் குவடிறுத்துருட்டி-ப்ரவேஸம்-

வார் கடா அருவி -பிரவேசம்
சர்வேஸ்வரன் சம்சாரிகள் உடைய விருப்பையே பற்றுக் கோடாகக் கொண்டு
சம்சாரத்திலே வந்து அவதரித்து தனியே உலாவா நிற்கும் –
சம்சாரிகளும் தாங்கள் தாங்கள் விரும்பினவற்றை பெறுமதற்கு கிட்டுமது ஒழிய
இவன் வாசி அறிந்து பரியக் கூடிய சம்சாரிகள் இலர் –
என் புகுகிறதோ -என்று அஞ்சின இவர்க்கு அச்சம் தீரும்படி நமக்கு பரிவர் உளர் –
ஒருவர் பரிய வேண்டாதபடியான மிடுக்கும் நமக்கு உண்டு –
என்று தன் படிகளைக் காட்டி சமாதானம் செய்ய-சமாதானத்தை அடைந்தவராய் நின்றார் மேல் –

இத் திருவாய்மொழியில் –
இவர் ஆகிறார் காதலையே இயல்பாக உடையவராய் இருப்பர்-
காதல் மையல் ஏறி கலங்கி-முத்தரும் நித்தியரும் இங்கு இலரே-
சனகன் முதலான முமுஷுக்கள் -நல்ல தவத்தையும் மனனத்தையும் தியானத்தையும் விட மாட்டார்கள்-
கடல் கடைந்தது தெய்வப் பிறப்பில் அன்றோ -என்று கலங்குவர்-

இன்னம் இவருக்கு இது மறுவல் இடக்கூடும் என்று பார்த்து–மறுவல் இடாதபடி தன்னுடைய சூரத்தன்மை-
வீரத் தன்மை முதலான குணங்களையும் -சீர்கொள் சிற்றாயன்-பாசுரத்தில் –
படைத்தல் முதலான ஆச்சர்யமான சேஷ்டிதங்களையும் -படைத்து அளித்து அழிக்கும் –
எதிரிட்ட பகைவர்களை கூட்டத்தோடு வேரோடே வாங்கிப் பொகட வல்ல ஆற்றலையும் காட்டிக் கொடுத்து -கஞ்சனைத் தகர்த்த –
அதுக்கு மேலே
மேம்பட்ட ஞானத்தையும் சக்தியும் உடையவர்களாய்-தனக்கு பரிவராய் இருப்பர் –
வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் -மனக்கொள் சீர் மூவாயிரவர் –
மூவாயிரம் பிராமணர் உளர் -என்று
காட்டிக் கொடுக்கக் கண்டு கிருதார்த்தராய்
அவன் வடிவு அழகிலும்-திருச் செய்ய கமலக் கண்ணனும் –நெஞ்சு சென்று அனுபவித்து இனியர் ஆகிறார்

ஸ்ரீ விபீஷண ஆழ்வான் இராகவனைச் சரணம் அடைந்தவன் ஆகிறேன் -என்று விழுந்த போது
சோஹம் பருஷித தேன தாசவச்ச அவமானித-த்யக்த்வா புத்ராம்ச ஸதாராம்ச ராகவம் சரணம் கத -யுத்த -17-14
மகா ராஜர் பெருமாள் பக்கலில் பிரேமத்தால் கலங்கி துணுக்கு என்று
இவன் கூறிய சொல் பெருமாள் திருச் செவியில் படுமாகில் சாலத் தப்பாம் -என்று

நாயந்தே
ராவணனுடைய தம்பி-ராஷச சாதி–அவன் புகுரக் கடவன் அல்லன் -என்ன

இவர் நம் பக்கல் பரிவாலே சொல்லுகிற வார்த்தை நம் மிடுக்கைக் காட்டவே தெளிவர் என்று பார்த்து –
பிசாசான் தானாவான் யஷான் ப்ருதிவ்யாம் ஸ ஏவ ராஷசான்
அங்குள் அக்ரேன தான் ஹன்யம் இச்சன் ஹரி கணேஸ்வர -யுத்த -18-23
வானரக் கூட்டத்துக்கு அரசனான சுக்ரீவர்
பிசாசர்களாயும் அசுரர்களையும் யஷர்களாயும் பூமியில் இருக்கிற இராக்கதர்களை
விரல் நுனியாலே விரும்பினவனாய்க் கொல்லுவேன் -என்பன போன்ற வார்த்தைகளால்
தன மிடுக்கைக் காட்டக் கண்டு அவர் அச்சம் தீர்ந்து

கிம் அத்ரசித்ரம் தர்மஜ்ஞ லோகநாத ஸூகாவஹா-யத் த்வம் ஆர்யம் பிரபாஷேதா சத்வவான் சத்பதே ஸ்தித -18-36-
தேவரீர் கூறிய வார்த்தையில் என்ன ஆச்சர்யம் -என்று இனியர் ஆனால் போலேயும்

மல் போரில்
பூமிஸ் தஸ்ய ஸ ராமஸ்ய ரதஸ் தஸ்ய ஸ ராஷச-ந சமம் யுத்தம் இத்யாஹூ தேவ கந்தர்வ தானவ -யுத்த 103-5-
தேவர்களும் கந்தர்வர்களும் தானவர்களும் தரையில் இருக்கிற பெருமாளுக்கும்
தேரின் மீதே இருக்கும் அரக்கனுக்கும் நடக்கும் இந்த போரானது ஒத்தது அன்று-என்று கூறினார்கள் -என்றபடியே –
கூறிய பக்கத்தில் உள்ளவர்கள் உடைய அச்சத்தை அவர்கள் முன்னிலையிலே-
மல்லர்களை அழியச் செய்து தீர்த்து அருளினாப் போலேயும்

தம்முடைய அச்சத்தை போக்கி அருள–அதனால் கிருத்தாரத்தராய்-
நம்முடைய உண்ணும் சோறும் பருகும் நீரும் தின்னும் வெற்றிலையும்-எல்லாம் இவன் அல்லது இல்லை -என்று ப்ரீதராய்
முன்பு அழகினைக் கண்டு பரிவாலே அஞ்சினவர்
அழகிலே நெஞ்சு சென்று அனுபவித்து கிருத்தார்தராய்த் தலைக் கட்டுகிறார்-

செங்கணாஞ்சேரி -ஆரம் உளா -ஆறு திவ்ய தேசங்கள் சேர்ந்த இடம் -நவ திருப்பதிகள் சேர்ந்த திரு நகரி போல் -ஸப்த ரிஷிகளுக்கு சேவை திருவாழ் மார்பன்
இமையவர் அப்பன் -தர்ம புத்ரன் –புனர் நிர்வாணம் செய்த திவ்யதேசம் சிற்றாறு –
மஹா மதிகள் அச்சம் கெட்டு அமரும் ஸுர்யாதிகள் சிற்றாற்றிலே கொழிக்கும் -விது ரஸ்ய மஹா மதி —
ஸுர்ய வீர்ய பராக்ரமங்கள் -குணவான் -வீர்யவான் -அடுத்து -பெருமாள் குணங்கள்
எதிரிகள் சேனை கண்டு கலங்காமல் வீரன் –
உள்ளே புகுந்து கலக்குபவன் – ஸூரன்-
தனக்கு விகாரம் இல்லாமல் கலக்குபவன் பராக்ரமன் –

நாலாம் திருவாய் மொழியில் -கீழ் –
அவனுடைய ஸுகுமார்யத்தாலே தனிமைக்கு அஞ்சின இவருடைய பயம் தீரும்படி பரிவரையும் சக்தியையும் காட்டி
ஆஸ்வசிப்பித்த சர்வேஸ்வரன் இவர் இப்படி அஞ்சிற்று விரோதி பூயிஷ்ட தேசம் என்றாய் இருக்கும் –
நம்முடைய விரோதி நிவர்த்தகத்வத்தையும் ஜகத் ஸ்ருஷ்ட்யாதி சக்தியையும் காட்டுவோம் என்று இவர் திரு உள்ளத்திலே பிரகாசிப்பிக்க
அவனுடைய அகில விரோதி நிவர்த்தகத்வத்தையும்
அசேஷ ஜகத் விஷயமான ஸ்ருஷ்ட்யாதி வியாபாரத்தையும்
ஆஸ்ரித ஆபத்சகத்வத்தையும்
ஆஸ்ரித அர்த்தமான அதிசயித வியாபாரத்தையும்
ஆஸ்ரயணீய ஸ்தலாந்தர விலக்ஷணமான தேச விசேஷ ஸ்ததிதியையும்
ஆசிரயணீயதா வை லக்ஷண்யத்துக்கு அடியான சர்வ பிரகார உபகாரகத்வத்தையும்
அநு பாவ்யமான ஆபி ரூப்ய அதிசயத்தையும்
ஜெகஜ் ஜென்மாதி ஹேதுத்துவத்தையும்
ஸ்ரஷ்ட ருஸ் ருஜ்யாதி விபாகம் இல்லாத சர்வாத்ம பாவத்தையும்
சத்தா விபூதி ஹேதுவான நிருபாதிக சேஷித்வத்தையும்
அனுசந்தித்து ஏவம் பூதனான சர்வேஸ்வரன் பரிவரான வைதிக அக்ரேஸருடைய சம்பத்தே தனக்கு சம்பத்தாம் படி
திருச் செங்குன்றூரிலே எழுந்து அருளி நின்ற அதிசயத்தை அனுசந்தித்து ஹ்ருஷ்டராகிறார்-

வார்கடா வருவி யானை மா மலையின்
மருப்பிணைக் குவடிறுத்துருட்டி
ஊர் கொள் திண் பாகனுயிர் செகுத்து
அரங்கின் மல்லரைக் கொன்று சூழ் பரண் மேல்
போர் கடா வரசர் புறக்கிட
மாட மீ மிசைக் கஞ்சனைத் தகர்த்த
சீர் கொள் சிற்றாயன் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு எங்கள் செல் சார்வே–8-4-1-

இராசத துரோகிகளை கொல்லும் போது இராச சின்னங்களை-வாங்கிக் கொல்லுமாறு போலே-
தான் கொடுத்த முடியை வாங்கிக் காண் கொன்றது -என்று-அம்மங்கி அம்மாள் பணிப்பர்-

எங்கள் செல் சார்வே-கேசவன் தர்மருக்கு பின் தமியர் அல்லர் -வம்ச பூமிகளை உத்தரிக்க வராக கோபாலர்

எங்கள் –
மகா ராஜர் -பெரியாழ்வார்- ஸ்ரீ விதுரர் –தாம்-பிள்ளை உறங்கா வல்லி தாசர்–இன்னோர் அன்ன பரிவர்-

செல் சார்வே –அச்சம் இல்லாத இடம் என்று புகும் புகல்-
மேல் இவர்க்கு ஓடின அச்சம் நீங்கிற்று என்னும் இடம் இயல் தழைப்பிலே தெளிந்து இருக்கிறபடி கண்டதே-
இயல் ஓசையிலே தெளிய வேண்டுமே –

எங்கள் செல் சார்வு யாமுடையமுதம்
இமையவரப்பன் என்னப்பன்
பொங்கு மூவுலகும் படைத்து அளித்து அழிக்கும்
பொருந்து மூவுருவன் எம்மருவன்
செங்கயல்களும் தேம் பணை புடை சூழ்
திருச் செங்குன்றூர்த் திருச் சிற்றாறு
அங்கு அமர்கின்ற ஆதியான் அல்லால்
யாவர் மற்றென்னமர் துணையே–8-4-2-

உலகத்தை படைத்தல் முதலாயின வற்றில் வல்லவனாய்–திருச் செங்குன்றூரிலே நின்று அருளினவன்–
அல்லது எனக்கு நல் துணை இல்லை என்கிறார்–

எங்கள் செல் சார்வு –
அனுகூல்யராய் இருப்பார்க்கு எல்லாம் அஞ்ச வேண்டாத புகல்-

யாமுடை யமுதம் –
புகல் மாத்ரமேயாய் இனிய பொருள் வேறே தேட வேண்டாதபடி இருக்கை-அனுபாவ்ய போக்ய வஸ்து -ப்ராப்யமும் ப்ராபகமும் இவனே

எம்மருவன் –
மற்று எல்லார் உடைய காரியமும் நம் புத்தி அதீனமாய் இருக்கும் அல்லது
நம் கார்யம் அல்லாதார் நினைவின் படி அல்ல காணும் இருப்பது-என்று எனக்கு அறிவித்து
என் அச்சத்தை நீக்கி–எனக்கு தாரகன் ஆனவன்-

அல்லால் யாவர் மற்று என் அமர் துணையே –இவனை ஒழிய எனக்கு சேர்ந்த துணை இல்லை-
அல்லாதார் கழுத்து கட்டியாதல்-துணை என்ற பேராய் ஆபத்தில் கூட அழுதல் செய்வர் இத்தனை-

—-

என்னமர் பெருமான் இமையவர் பெருமான்
இருநிலம் இடந்த வெம்பெருமான்
முன்னை வல்வினைகள் முழுதுடன் மாள
என்னை யாள்கின்ற வெம்பெருமான்
தென் திசைக்கணி கொள் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாங்கரைமீ பால்
நின்ற வெம்பெருமான் அடியல்லால் சரண் நினைப்பிலும்
பிறிதில்லை எனக்கே–8-4-3-

வராஹ ரூபி -பிரளய ஆபத்தில் ரஷித்தவன் திருவடிகளே சார்வு -கிருஷ்ணன் -விஷ்ணு -முதல் இரண்டாலும் சொல்லி-ஏனத்துருவாய் கிடந்த பிரான் – ஞானப் பிரானை அல்லால் இல்லை-நான் கண்ட நல்லதுவே-அவன் திருவடிகளை ஒழிய மற்று புகலிடமாய் இருப்பது–ஒரு பொருள் மநோ ரத திசையிலும் எண்ணத்திலும் இல்லை

——–

பிறிதில்லை எனக்குப் பெரிய மூவுலகும் நிறையப்
பேருருவமாய் நிமிர்ந்த
குறிய மாண் எம்மான் குரை கடல் கடைந்த
கோல மாணிக்கம் என்னம்மான்
செறி குலை வாழை கமுகு தெங்கணி சூழ்
திருச் செங்குன்றூர்த் திருச்சிற்றாறு
அறிய மெய்ம்மையே நின்ற வெம்பெருமான்
அடி இணைய யல்லதோர் அரணே-8-4-4-

ஆஸ்ரித அர்த்தமாக -த்ரிவிக்ரம -சமுத்திர மதன ரூபமான –அதிதன்-திருநாமம் –பிறிதில்லை எனக்கு-வேறு ரக்ஷகன் அல்ல

கோல மாணிக்கம் –பெரிய விலையதான இரத்தினம் போலே இருக்கின்ற அழகிய வடிவைக் கொண்டாயிற்று கடலைக் கடைந்தது –

மெய்ம்மையே நின்ற வெம்பெருமான்-நான் என்னை மனிதனாகவே நினைக்கின்றேன் -என்றும்
உங்களுக்கு உறவினனாகவே பிறந்து இருக்கிறேன் -என்றும் மறைக்க வேண்டாதபடி பத்தம் பத்துமாக நின்ற என் ஸ்வாமி-
பத்து அவதானங்கள் பத்து பாசுரங்களில் அருளிச் செய்யும் படி அருளினான் –

——–

அல்லாதோர் அரணும் அவனில் வேறில்லை
அது பொருளாகிலும் அவனை
யல்ல தென்னாவி யமர்ந்தணை கில்லாது
ஆதலால் அவனுறைகின்ற
நல்ல நான் மறையோர் வேள்வியுள் மடுத்த
நறும் புகை விசும்பொளி மறைக்கும்
நல்ல நீள் மாடத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு எனக்கு நல் அரணே–8-4-5-

அர்ச்சா ஸ்தலாந்தரங்களும் -அவனை ஒழிந்து இராது இருக்க -இங்கு நிலை ஒழிய -அடியேனுக்கு பொருந்துகிறது இல்லை

நல்ல நான் மறையோர்-அநந்ய ப்ரயோஜனர் -ப்ரேம பூயிஷ்டர்–எம்பெருமானாரைப் போலே ஆயிற்று அவ் ஊரில் பிராமணர்களும் –

——–

எனக்கு நல்லரணை எனதாருயிரை
இமையவர் தந்தை தாய் தன்னை
தனக்கும் தன் தன்மை யறிவரியானைத்
தடங்கடல் பள்ளி யம்மானை
மனக்கொள் சீர் மூவாயிரவர்
வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் வாழ்
கனக் கொள் திண் மாடத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு அதனுள் கண்டேனே–8-4-6-

சர்வ பிரகார உபகாரகன்- ஷீராப்தி நாதன் -பரிவர் நிறைந்த திவ்ய தேசம் –

வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் வாழ் –
மூவர் செய்யும் கார்யங்களும் ஓர் ஒருவரே செய்ய வல்லராய் இருப்பார்கள் –
அதிகாரி புருஷர்களில் இவர்களுக்கு உண்டான ஏற்றம் –

——

திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு அதனுள் கண்ட
அத் திருவடி என்றும்
திருச் செய்ய கமலக் கண்ணும் செவ்வாயும்
செவ்வடியும் செய்ய கையும்
திருச் செய்ய கமல வுந்தியும் செய்ய கமலை மார்பும்
செய்ய வுடையும்
திருச் செய்ய முடியும் ஆரமும் படையும்
திகழ வென்ன சிந்தை யுளானே–8-4-7-

அதிசயித அவயவ ஆபரண ஆயுத சோபை -உடன் உள்ளத்தில் இருப்பதால் பயம் தீர்ந்தேன் -நித்ய சந்நிஹிதன் ஆகா நின்றான் –

நான்கு செய்ய -இரண்டு செம்மை

திருச் செங்குன்றூரில் நின்று அருளின சீர் கொள் சிற்றாயன்
தன் அழகோடு என் நெஞ்சிலே வந்து புகுந்தான் -என்கிறார்-
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு வந்தான் -முன்பு இங்கு அனைத்துடன் வந்து மறக்க முடியாமல் புகுந்து உள்ளான் –

திருச் செய்ய கமலக் கண்ணும் –
அழகியதாய் சிவந்து இருப்பதாய் மலர்த்தி செவ்வி முதலானவற்றாலே தாமரை போலே இருக்கிற திருக் கண்களும் –
தூது செய் கண்கள் பிரதம கடாக்ஷம் முதல் உறவு பண்ணி அருளும் –

செவ் வாயும் –
நோக்காலே பிறந்த முதல் உறவைக் கிரயம் செலுத்திக் கொடுக்கும் புன்முறுவலும்-

செவ் வடியும் –
புன்முறுவலுக்கு தோற்று விழும் திருவடிகளும் –

செய்ய கையும் –
திருவடிகளிலே விழுந்தாரை எடுத்து அணைக்கும் திருக்கைகளும் –

திருச் செய்ய கமல வுந்தியும் –
அணைத்தார்க்கு எப்பொழுதும் அனுபவிக்கத் தக்கதாய் –
அழகுக்கு எல்லையாய் –
எல்லா பொருள்கட்கும் பிறப்பிடம் என்று தோன்றும் படி இருக்கிற திரு நாபியும் –

செய்ய கமல மார்பும் –
பகவான் உடைய சம்பந்தம் இல்லார்க்கும் -சம்பந்த ஞானம் -இல்லாதார்க்கும் -பற்றாசான-பிராட்டிக்கு இருப்பிடம் ஆகையாலே
சிவந்த திரு மார்பும்
கமலை -என்றுமாம் –நீல மேனி -மாற்றி சிவந்ததாக ஆக்கி அருளும் செய்யாள் இருப்பதால் –

செய்ய வுடையும் –
திருமேனிக்கு பரபாகமான தன்மையைக் குறிப்பதான திருப் பீதாம்பரமும் –

திருச் செய்ய முடியும் –
அப்படி திரு மேனிக்கு பரபாகமாய்-அச்சம் தீரும்படி காப்பதற்கு அறிகுறியான திரு முடியும் –

ஆரமும் –
பெரிய வரை மார்பில் பேராரம் பூண்டு -மூன்றாம் திருவந்தாதி -55 -என்கிறபடியே-திருமார்புக்கு தகுதியான திரு ஆரமும் –

படையும் –
வினைத் தலையில் ஆயுதமாய்– போக நிலையில் ஆபரணமாய்– இருந்துள்ள திவ்ய ஆயுதங்களும் –ஜாதி ஏக வசனம் –

என்றும் வென்ன சிந்தை யுளானே –
அவன் என்றும் ஒக்க என் சிந்தையிலே வசிக்கையாலே-அச்சத்துக்கு ஒதுங்க இடம் இல்லை –
அழகுடன் மறக்க ஒண்ணாத படி நெஞ்சில் புகுந்தான்-ந ச புநரா வ்ருத்தி போல் நித்ய வாஸம் செய்து அருளுகிறான்

திகழ வென் சிந்தையுள் இருந்தானைச்
செழு நிலைத் தேவர் நான்மறையோர்
திசை கை கூப்பி ஏத்தும்
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாற்றங்கரை யானை
புகர் கொள் வானவர்கள் புகலிடம் தன்னை
அசுரர் வன்கையர் வெங்கூற்றை
புகழுமாறு அறியேன் பொருந்து மூ வுலகும்
படைப்பொடு கெடுப்புக் காப்பவனே–8-4-8-

இப்படி நிறைவாக அனுபவித்த சீர் கொள் சிற்றாயன் உடைய– விலஷணமான குணங்களிலும் கீழ்ப் பாசுரத்தில் அருளிச் செய்த அழகிலும் அழுந்தி-
அவனைப் புகழும்படி அறிகின்றிலேன் -புகழாது ஒழியவும் மாட்டுகின்றிலன்-என்கிறார் –

திகழ என் சிந்தையுள் இருந்தானைச்
இதுவும் இவருக்கு ஓர் அச்சம் நீங்குவதற்கு காரணம் –
தம் நெஞ்சிலே இருக்கையாலே ஒரு அரணுக்கு உள்ளே இருக்கிறாப் போலே இருக்கிறது ஆயிற்று –
திகழ சிந்தையுள் இருந்தானை-என்றுஉகவாதார் நெஞ்சிலே இருக்கிற அச்சமும் போயிற்று –என் சிந்தையுள்-என்பதால்
இனிப் போய் பிறர் ஒருவர் வல் நெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன் வளைத்து வைத்தேன் -பெரிய திருமொழி -7-2-7-என்னுமவர்களே அன்றோ

பொருந்து மூ வுலகும் படைப்பொடு கெடுப்புக் காப்பவனே –
தனக்கு வசப் பட்டு இருக்கின்ற எல்லா உலகத்தின் உடைய-படைத்தல் முதலானவற்றை செய்யுமவன்
என்று திரளச் செய்யும் அத்தனை-பொருந்து-அப்ருதக் ஸித்தம் அன்றோ ஸமஸ்தமும் -பிரகாரம் சரீர பூதம் –
பிரித்து வகை இட்டு சொல்லப் புக்கால் சொல்லி முடிக்கப் போகாது -என்றது
சுருங்க சொல்லுதலே சொல்லுவது அத்தனை -என்றபடி-

தென் அரங்கன் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே என்று திரள செல்வத்தைச் சொல்லுமா போலே –
விபூதி அத்யாயம் அருளிச் செய்தால் போலே –
ஏ பாவம் பரமே -தலையில் கை வைத்து -சொல்ல முடியாமல் சங்க்ரஹமாக அருளிச் செய்தானே

ஏ பாவம்! பரமே! ஏழ் உலகும்
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பார்ஆர்?
மா பாவம் விட அரற்குப் பிச்சைபெய்
கோபால கோளரி ஏறு அன்றீயே?–2-2-2-

———-

படைப்பொடு கெடுப்புக் காப்பவன்
பிரம பரம்பரன் சிவப் பிரானவனே
இடைப்பு கோருருவு மொழிவில்லை யவனே
புகழ்வில்லை யாவையும் தானே
கொடைப் பெரும் புகழார் இனையர் தன்னானார்
கூரிய விச்சை யோடு ஒழுக்கம்
நடைப்பலி இயற்கைத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு அமர்ந்த நாதனே-8-4-9-

யாவையும் தானே –
இங்கன் பிரித்து சொல்லுகிறது என் –சேதனம் அசேதனம் என்னும் வேறுபாடு அற அவனுக்கு உரிமை ஆகும் –
சர்வ சப்த வாச்யன் அவனே -சர்வம் கல் இதம் ப்ரஹ்ம -வேதம் தமிழ் செய்த மாறன் -பிரகார பிரகாரி பாவம் —

கொடைப் பெரும் புகழார் –
அவ் ஊரில் உள்ளார் கொடையால் வந்த பெரும் புகழை உடையார் -என்றது –
எதிரிகளையும் கொடையால் வசீகரிக்க வல்லராய் இருக்கையைத் தெரிவித்த படி –
தானமும் சாமம் முதலானவைகளில் ஓன்று அன்றோ –பெரும் புகழாவது-ஞானத்தை கொடுத்ததால் உண்டாகும் புகழ் –

———–

அமர்ந்த நாதனை யவரவராகி
அவரவர்கருளும் அம்மானை
அமர்ந்த தண் பழனத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றறாங்கரையானை
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம் பதி
அவனி தேவர் வாழ்வு
அமர்ந்த மாயோனை முக் கண் அம்மானை
நான்முகனை யமர்ந்தேனே--8-4-10-

சர்வேஸ்வரனாய் வைத்து-எல்லாப் பொருட்கட்கும் பற்றப் படுமவன் ஆகைக்காக-
திருச் செங்குன்றூரில் நின்று அருளினவனை-அனுபவிக்கப் பெற்றேன் -என்கிறார்

நிருபாதிக சேஷி -அவாந்தர சேஷிகள் ப்ரஹ்மாதிகள் -சத்தையும் -தான் இட்ட வழக்கு -தத் பிரயோஜனம் தனக்காம் படி –
அந்தராத்மாவாக இருப்பதும்

அமர்ந்த நாதனை யவரவராகி-பொருத்தமாக ஸ்வாமி -சகல சேதன நிர்வாகம் என்றால் இவனுக்கே பொருந்தும் -நிருபாதிக சேஷி

யவரவராகி
இரவலர் கிட்டினால் அவர்கள் தம் தாமுக்கு நல்லவர் ஆம்போலே அவர்களுக்கும் நல்லனாய் இருக்குமவன் -என்றது
அவர்கள் -இது நமக்கு வேண்டும் -என்று இருக்குமாறு போலே
இவர்களுக்கு இது வேண்டும் -என்று இவன் இருக்கையைத் தெரிவித்தபடி –

அங்கன் அன்றிக்கே –
அவர்களுக்கு பெறுகையிலே விருப்பம்
கொடுக்க கொடுக்க அவர்கள் கொள்ளுகையிலே அர்தித்வம் விருப்பம் இவனுக்கு -என்றது
பெற்றோம் என்ற உவகை அவர்களுக்கு-கொடுக்கப் பெற்றோம் -என்ற உவகை இவனுக்கு -என்றபடி –

அவர்க்கு அருள் அருளும் –
அவர்கள் விரும்பினவற்றைத் தன் பேறாகக் கொடுக்கை
கொள்ளுகிறவனுடைய இரப்பை தான் உடையனாய் கொடுக்கை –

அம்மான் -பூர்த்தி -பகவானுக்கு பூர்த்தி அர்த்தித்தவத்துக்கு ஹேதுவாகும்
அம்மான் -சம்பந்தம் -இழவும் பேறும் தனது பேறாக இருக்குமே

முக்கண் அம்மானை நான்முகனை
பிரமன் சிவன் இவர்களுடைய இருப்பு முதலானவற்றுக்கு நிர்வாஹகன் ஆனவனே-
பிரமன் சிவன் -இவர்களை பலகால் சொல்லுகிறது–
இவனுடைய நிர்வாஹகத் தன்மை தோற்றுகைக்காகவும்
நிர்வஹிக்கப்படும் பொருள்களில் ஒன்றால் நலிவு உண்டாகை கூடாது என்கைக்கும்

அன்றிக்கே
அமர்ந்த மாயோன் -என்று வைத்து இவர்களைச் சொல்லித் தலைக் கட்டுகையாலே
சாமாநாதி கரணத்தைக் காட்டுகிற சொற்கள் விசேடியத்தில் சென்று சேரக் கடவை ஆகையாலே
சரீரியாய் இருக்கிறவனை என்றுமாம் –

——–

தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத்
திருந்துலகுண்ட வம்மானை
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ்
மலர்மிசைப் படைத்த மாயோனை
கோனை வண் குருகூர் சடகோபன்
சொன்ன வாயிரத்துள் இப்பத்தும்
வானின் மீதேற்றி யருள் செய்து முடிக்கும்
பிறவி மா மாயக் கூத்தினையே–8-4-11-

நிகமத்தில்
அராஜகம் ஆனால் அரச புத்திரன் தலையிலே முடியை வைத்து விலங்கு வெட்டி விடுமாறு போலே-இத் திருவாய்மொழியை கற்றவர்கட்கு இது தானே முதலில் பரமபதத்து ஏறக் கொடுபோய்-பின்பு சம்சாரம் ஆகிய மகா நாடகத்தினை அறுக்கும் -என்கிறார்-

தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத் –
இவர் ஐயம் கொண்டு அஞ்சுதற்கு உரிய காரணங்கள் சொல்லப் படுகின்றன-
அவனுடைய இனிமை அன்றோ இவரை அஞ்சப் பண்ணுகிறது –
எனக்கு எல்ல வித இனிய பொருள்களும் ஆனவனே- சர்வ ரச -என்னக் கடவது அன்றோ –
மேலே அச்சம் நீங்குவதற்கு உரிய காரணங்கள் சொல்லப் படுகின்றன –

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -90-தலைப் பெய்து யான் உன் திருவடி –குரவை ஆய்ச்சியர் -6–4–

March 31, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

பிரபத்தி -பக்திக்கு அங்கமாகவும் ஸ்வயம் சாத்யமாகவும் உண்டே-ஸ்வயம் பிரயோஜனமாக பக்தி அதுக்குப் பின்பும் உண்டு-ஸம்ஸார ஸ்வ பாவம் கண்டு அஞ்சி -கால விளம்பம் பொறாமல் ஆற்றாமை துடிக்க – அருளிச் செய்கிறார்-தொல்லை யூழி சுருங்கலதே – காலம் நெடுகிக் கொண்டே போகிறதே –
இம் மாயம் -ஆச்சர்யம் –திருவடியைத் தலையிலே சூட -தலை வேணுமே -அதுக்கு நோன்பு நோற்றுப் பெற வேண்டுமே –சரீரம் இதனால் உபாதேயம் ஆகுமே -ஆக்கைக்கு நோற்றது-சரீரம் நிலையாதே -32-திரு நக்ஷத்ரம் தானே இங்கே இருந்தார் –-பக்தி பெற நோன்பு என்று கொண்டு -தகைமைக்கு நோற்றது -சம்சாரத்தில் பக்தியும் நிலை நில்லாமல் -ரஜோ தமஸ் மூடுமே –முக்குண மய ப்ரக்ருதி அன்றோ –
நிலைப் பெய்யாத -இது ஆக்கைக்கும்-பக்திக்கும் – தன்மைக்கும் -பிரபாக ப்ராப்ய பரமாக இரண்டு நிர்வாஹங்கள்-குரவை ஆய்ச்சியர் -6–4–விவரணம்-குறைவில்லாமல் அருளிச் செய்து-மாய வினைகளையே அலற்றி இரவும் நன் பகலும் தவிராமல் -அங்கும் உண்டே–நண்ணி நான் வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே-6-4-10-மகிழ்ந்து அருளிச் செய்த திருவாய் மொழி அங்கு –

அவதாரிகை –-என் ஞான்று தலைப் பெய்வனே -என்று இறே கீழ் நின்றது –-என்றாகில் என் –
பகவத் ஸ்பர்சம்-பலத்தோடு சந்திப்பித்து விடும் -என்று விஸ்வசித்து இருக்கும் அத்தனை அன்றோ -என்ன –அப்படி செய்யலாய் இற்று இறே -சம்சாரிகளைப் போலே நிரபேஷன் ஆனேன்  ஆகில் எனக்கு உன்னை ஒழிய கால ஷேபம் பண்ணுகை அரிதாக நின்றது என்கிறார் –இப்பாட்டில் சொல்லுகிறது என் என்னில்-உன் திருவடிகளை சமாஸ்ரயிக்கைக்கு ஈடாக-இருப்பதொரு சரீரத்தை பெற்ற படியையும் –
அது தான் அஸ்த்ரமாய் இருக்கிறபடியையும் -அனுசந்திக்கப் புக்கால் –அத்தாலே வந்த ஆற்றாமையாலே -காலம் நெடுகா நின்றது என்னுதல் –
அன்றிக்கே-உன்னை ஒழிய வேறு ஒன்றால் தரியாத படியான ஸ்வபாவத்தை பெற்றான படியையும் –(ஸ்வ பாவம் -பக்தி -இது பெற சரீரம் வேண்டும் இங்கு அது இரண்டாம் பக்ஷம் )இது தான் பிரகிருதியோடு இருக்கச் செய்தே வந்த ஸ்வபாவம் ஆகையாலே –இது தானே ஏக ரூபம்-அன்றிக்கே -இருக்கிற ஆஸ்ரயத்தை அனுசந்திக்கப் புக்கால்
இதுக்கு காலம் போருகிறது இல்லை-என்றது ஆதல் –(மண் பற்று போல் -ஞானியை விக்ரஹத்தோடே ஆதரிக்கும்-மங்க ஒட்டு உன் மா மாயை என்று உபதேசிக்க வேண்டிற்று-இத்தைத் தள்ளியே அழைத்துப் போவார்-விமல சரம திருமேனி -ஸ்ரீ வைகுந்ததில் உள்ளாருக்குக் காட்ட அபிநிவேசம் அவனுக்கு –
விண்ணுளாரிலும் சீரியர் அன்றோ-ஆகவே சரீரத்துக்கு முக்கியம்-ப்ரக்ருதி கார்யமான பிராகிருதம் -அஞ்சு சேர் ஆக்கை-இது தான் -ஸ்வ பாவம் இங்கு -ஏக ரூபமாக இருக்காதே)

இப்படி ஆர்த்தரான இவரை ஆஸ் வஸிப்பிப்பதாக-நம் பக்கலிலே நீர் ஆபி முக்யம் பண்ணி நம்மை ஆஸ்ரயிக்கைக்கு ஹேதுவான-விலக்ஷண சரீரத்தைப் பெற்றீர்-நம் பக்கலிலே நிரதிசய ப்ராவண்யம் உண்டாயிற்று-முக்திஸ் தஸ்ய கரே ஸ்திதா என்று பக்தி யுடையார்க்கு பிராப்தி கைப்பட்டது அன்றோ என்று ஈஸ்வரன் தன் திரு உள்ளக் கருத்தைப் ப்ரகாசிப்பிக்க-இதுக்கு முன்பு நின்ற நிலையை நிரூபித்தால் விளம்பம் பொறுக்கிறது இல்லை என்கிறார்-இதுவும் தலை மகள் ஆற்றாது உரைத்தலாகவுமாம்-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்–அவதாரிகை-இவ்விடம் பொறாமைக்கு மூன்று ஹேது யுண்டு –
இதில் அத்தை அருளிச் செய்கிறார்

தலைப்பெய்து யான் உன் திருவடிச் சூடும் தகைமையினால்
நிலைப்பெய்த வாக்கைக்கு நோற்ற விம்மாயமும் மாயம் செவ்வே
நிலைப் பெய்திலாத நிலைமையும் காண் தோறு அசுரர் குழாம்
தொலைப் பெய்த நேமி எந்தாய் தொல்லை யூழி சுருங்கலதே
– 90–தலைவனைப் பிரிந்த தலைவி ஆற்றாது உரைத்தல் –தலைப் பெய்து யான் உன் திருவடிச் சூடும் தகைமையினால்-பெய்தி பாட பேதம்-

அசுரர் குழாம்–அசுரர் கூட்டத்துக்கு
தொலைபெய்த–அழிவைப் பண்ணின
நேமி–சக்கராயுதத்தை யுடைய
எந்தாய்–எம்பெருமானே!
யான்–நான்
தலைப்பெய்து–(யான் உன்னைச்) சேர்ந்து
நிலைப்பு எய்த–நிலைப்பெற்றிருக்கும்படியாக
ஆக்கைக்கு–இவ்வுடம்பைப் பெறுதற்கு
நோற்ற–தவஞ்செய்த
இ மாயமும்–இந்த ஆச்சர்யத்தையும்
உன் திரு அடி–உனது திருவடித் தாமரை மலர்களை
சூடும்–(எனது) தலைமேற் கொள்ளும்படியான
தகைமையினால்–அடிமைக் குணமாகிய தகுதியினால்
மாயம் செவ்வே நிலைப்பு எய்திலாத நிலைமையும்–இந்த ஆச்சரியம் ஒருபடியாக நிலை
நின்று முடிவு பெற மாட்டாத நிலைமையையும்
காண் தோறு–நோக்கும் போதெல்லாம்
தொல்லை ஊழி சுருங்கலது–பழமையான (அநாதியான காலம் சுருங்குகிறதில்லை)

குரவை முதலாம் கண்ணன் கோலச் செயல்கள்
இரவு பகல் என்னாமல் என்றும் பரவு மனம்
பெற்றேன் என்றே களித்துப் பேசும் பராங்குசன் தன்
சொல் தேனில் நெஞ்சே துவள்
 —54–மாசறு சோதி-5-3–மானேய் நோக்கு -5-9–பிறந்தவாறு–5-10-என்கிற திருவாய் மொழிகளிலே-சேணுயர் வானத்து இருக்கும் –5-3-9- நாராயணன் நாமங்களே தொல் அருள் நல் வினையால் சொலக் கூடும் கொல் –5-9-10–உருக்கி உண்டிடுகின்ற உன் தன்னை நாடும் வண்ணம் சொல்லாய்–-5-10-10-என்று தூரஸ்தன் என்றும்-நா நீர வரத் திரு நாமம் சொல்லக் கூடவற்றே -என்றும்
தரித்து நின்று குண அனுபவம் பண்ண வல்லேனாம் படி பண்ண வேண்டும் என்றும்
தாம் ஆசைப் பட்ட வகைகள் எல்லாம் சித்திக்கும் படி தான் ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து திரு வவதரித்து
செய்து அருளின நிகில சேஷ்டிதங்களையும்-தத் ஹேதுவான திவ்ய குணங்களையும்
அனுபவ விஷயமாக காட்டிக் கொடுக்க-அவற்றைக் கட்டடங்க தரித்து நின்று மண்டி அனுபவித்து
ப்ரீதராய்ச் செல்லுகிற குரவை ஆய்ச்சியில் அர்த்தத்தை குரவை முதலாம் இத்யாதியாலே-அருளிச் செய்கிறார் –அமுத மென் மொழி யாகையாலும்–தேனே இன்னமுதே -5-1-2–என்று பேசப் படுமவன் விஷயம் ஆகையாலும்-தேன் போலே இனிதாய் இறே இத் திருவாய்மொழி தான் இருப்பது

தலைப் பெய்து –உன்னை வந்து கிட்டி –நான் – அறக் கை கழிந்த நான்-உன் திருவடி இத்யாதி –
உன் திருவடிகளை ஆஸ்ரயிக்கை ஆகிற  இஸ் ஸ்வ பாவத்தாலே தரிப்பதான சரீரத்தைப் பெறும்படி –
ஜன்மாந்த்ரத்திலே ஸூஹ்ருதத்தை பண்ணின ஆச்சர்யம் –மாயம் செவ்வே நிலைப்பெய்திலாத நிலைமையும் —மாயம் உண்டு –இப் பிரகிருதி –இது என்றும் ஒக்க ஒரு படிப்பட்டு இராதே இருக்கிற இஸ் ஸ்வபாவத்தையும் காண்டோறும் –அன்றிக்கே –தலைப் பெய்து -இத்யாதி –நான் உன்னை வந்து கிட்டி உன் திருவடிகள் ஒழிய வேறு ஒன்றால்-தரியாத படியான இஸ் ஸ்வ பாவத்தை உடையேனாய் கொண்டு – நான் இதிலே நிலை நின்ற ஆச்சர்யத்தையும்- ஆக்கைக்கு நோன்ற இம் மாயமும் –ஜன்மாந்தர சகஸ்ரேஷூ -என்று நோற்றால் இறே-இஸ் ஸ்வ பாவம்-பிறப்பது –ஒரு சரீர பரிக்ரஹம் பண்ணி இருக்கச் செய்தே -இறே-இஸ் ஸ்வ பாவம்  தான் உண்டாவது –ஆகையால் தாத்ருச சரீர பரிக்ரஹமும் -அந்த பக்திக்கு உறுப்பாம் இறே –இந்த யோஜனையிலும்-க்ரியாகாரக பாவேன அன்வயிக்கும் இடத்தில் –ஆக்கைக்கு நோற்ற -என்கிற இதுவே விசேஷ்யமாய் கொண்டு-பிரதானமாய் -தோற்றிற்றே யாகிலும் –திருவடி சூடும் தகைமையினால் -நிலைப் பெய்க -என்கிற இஸ் ஸ்வபாவ பரமான விசேஷணாம்சத்திலே   வாக்யத்துக்கு தாத்பர்யமாய் – அதுவே பிரதானமாகக் கடவது –மாயம் செவ்வே யித்யாதி –அச்  சரீரம் தான் குண த்ரய உக்தமாய் இருக்கையாலே ரஜஸ் தமஸ்ஸூக்கள் தலை எடுத்த போது –இஸ் ஸ்வ பாவம் (இப்பக்தி- தகைமை )இன்றிக்கே -சத்வம் தலையான போது உண்டாமது ஆகையாலே –என்றும் ஒக்க ஒருபடிப் பட நிலை இல்லாதே இருக்கிற இந்த ஆச்சர்யத்தையும் –காண்டோறு –அனுசந்திக்கும் தோறு எல்லாம் –இத்தையே முடிய அனுசந்தித்துப் போந்தார் என்று-தோற்றுகிறது –அசுரர் இத்யாதி –அசுரர் சமூகத்தை தொலையும்படி பண்ணின திரு ஆழியை உடைய என் ஸ்வாமி யானவனே –இத்தால் –நீ -அசக்தனாய் ஆதல் —அப்ராப்தனாய் ஆதல் —
நாம் செய்தது நாம் பட்டோம் இத்தனை அன்றோ -என்று தான் ஆறி இருக்கிறேனா –தொல்லை இத்யாதி –
பழையதான கல்பம் சுருங்குகிறது இல்லை -நெடிதாக நின்றது –அன்றிக்கே இந்த ஆச்சர்யத்தை அனுசந்திக்கப் புக்கால் –தொல்லை ஊழி யானது சுருங்கலை-உடைத்தாய் இரா நின்றது –காலம் போருகிறது இல்லை –இப்படி சமர்த்தனான நீ ஸ்வாமியாக இருக்க எனக்கு இப்படி வீணாக காலம் கழிவது பொறுக்கப் போகிறது இல்லை -என்று சர்வேஸ்வரனைக் குறித்து முறை இடுகிறார் –

ஆற்றாமையால் காலம் மிக தோன்றுகிறதே –சுருங்கலதே-சுருங்குகிறது இல்லை -இப்படியே என் காலம் கழிந்து விடுகிறதே-நோற்ற விம்மாயமும்-பூர்வ ஜென்ம தவ பலனாகவே நாயகனைப் பெற இயலும் –உன் திருவடிகளில் அடிமையால் அல்லது செல்லாத படியான சரீரத்தைப் பெற்ற படியையும்-அப்படி இருக்கச் செய்தே-அவ்வடிமையை இழந்து இருக்கிற இருப்பையும் அனுசந்திக்கக் காலம் போருகிறது இல்லை -என்கிறார் -அப்பிள்ளை ஸ்ரீ ஸூ க்திகள்-ஆயிரம் ஜென்மங்கள் செய்த நோன்பின் பயனாகவே ஸ்ரீ வைஷ்ணவ ஜென்மம் கிட்டும்-மாயம் செவ்வே-நிலைப் பெய்திலாத நிலைமையும்-இந்த ஆச்சர்யம் ஒரு படியாக நிலை நின்று முடிவு பெற மாட்டாத நிலைமையையும் -அன்றிக்கே-இவ்வுடம்பு நிலை இல்லாது இருக்கும் தன்மை -என்றும் பிரகிருதி சம்பந்தத்தால் இருப்பதால் உண்டான சேஷத்வம் நிலை பெறாமல் சளிக்கக் கூடிய தன்மையையும் என்றுமாம் –
திருவடிச் சூடும்-கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலேஅசுரர் குழாம்-தொலைப் பெய்த நேமி எந்தாய் -என்னுடைய பிராப்தி பிரதிபந்தகங்களைப் பாற்றுதல் உமக்கு ஒரு கார்யமோ –நாயகனைப் பிரிந்த நாயகி பிரிவுக்கு ஆற்றாது உரைக்கும் பாசுரம் இது. நான் உன்னை யணுகி உனது திருவடிகளைத் தலைமேற்கொண்டு வழிபடும்படியான இவ்வுடம்பைப் பெறுதற்கு நல்ல தவஞ் செய்து வைத்திருந்தும் அப்பேறு முட்ட மூடியக்கை கூடாமல் இடையில் நீங்குதலை ஆலோசிக்குமிடத்து ஆற்றாமையாற் காலம் மிக நெடுகித் தோன்றுகிறது-என்பது இப்பாட்டின் தேர்ந்த கருத்து. ‘சுருங்கலது’ என்பதற்கு சுருங்குகிறதில்லை என்று எதிர்மறையாகப் பொருள் கொள்வதன்றியே‘சுருங்குதலை யுடையது’ என உடன்பாடாகப் பொருள் கொள்வதாயின், இப்படியே என் காலங் கழிந்து விடுகிறதேயென்று இரங்கியபடியாம்.-பூர்வ ஜந்மங்களில் மிக்க பெருந்தவஞ் செய்திருந்தாலன்றி, இப்படிப்பட்ட அரிய பெரிய நாயகனைப் பெறுதல் இயலாதாதலால் ‘நோற்ற இம்மாயம்’ என்றது “உள் திருவடிகளில் அடிமையாலல்லது செல்லாதபடியான சரீரத்தைப் பெற்றபடியையும், அப்படியிருக்கச செய்தே அவ்வடிமையை இழந்திருக்கிற இருப்பையும் அநுஸாந்திக்கக் காலம் போருகிறதில்லை யென்கிறார்’ என்பது அப்பிள்ளையுரை.–ஸர்வேச்வரனைச் சரணமடைந்து அவன் திருவடிகளையே வணங்கி அத்திருவடிகளே பேற்றுக்கு உபாயமென்று அத்யவஸாயங் கொள்வதற் குறுப்பான இவ்விலக்ஷண சரீரத்தைப் பெற்றிருப்பதையும் அப்படி பெற்றிருந்தும் பூர்ணாநுபவம் கிடைத்திடாமலிருப்பதையும் நோக்குமிடத்துக் காலதாமதம் பொறுக்க முடியவில்லை யென்று ஆழ்வார் கலங்கியுரைத்தாயிற்று.–‘மாயம் செவ்வே நிலைப்பெய்திலாத நிலைமை’ என்பதற்கு- இவ்வுடம்பு நிலையில்லாத தாயிருக்குந் தன்மையென்றும், ப்ரக்ருதி ஸம்பந்தத்தோடியிருக்கையில் உண்டான அடிமைக்குணம் ரஜோகுண தமோகுண ஸம்பந்தத்தால் நிலைப்படாது சலிக்கக்கூடியதன்மை என்றும் உரைப்பர்.-‘திருவடி’ என்றதற்கு ‘திருவடித் தாமரை மலர்’ எனப் பொருளுரைத்தது ‘சூடும்’ என்றதற்கேற்ப.“கோலமாமென் சென்னிக்கு உன் கமலமன்ன குரைகழலே” என்ற திருவாய் மொழி காண்க.-ஆயிரம் ஜந்மஙக்ளிற் செய்த நோன்பின் பயனாகவே ஒரு ஸ்ரீவைஷ்ணவ ஜன்மம் கிடைப்பதாக ப்ராப்திப்ரதிபந்தகங்களைப் பாற்றுதல் உனக்கொரு பெருங்கார்யமோ? என்பதற்காக ‘அசுரர்குழாந் தொலைப்பெய்தநேமி யெந்தாய்!’ என விளிக்கப்பட்டது.–தலைப்பெய்து + யான், தலைப்பெய்தியான்; “யவ்வரினிய்யாம்” என்பது நன்னூல். தலைப்பெய்தலென்பது ஒரு முழுச்சொல்.

தலைப் பெய்தி (பெய்து) யான் உன் திருவடிச் சூடும் தகைமையினால் நிலைப்பெய்த வாக்கைக்கு நோற்ற விம்மாயமும்-பகவத் அனுபவ ப்ரஸங்கம் அற்று இருக்கிற நான் உன் திருவடிகளை
கோலமாம் என் சென்னிக்கு -(திருவாய் –4-3-6-)என்று சிரஸா வஹிக்கும் படியான சேஷத்வமாகிற ஸ்வபாவத்தாலே கிட்டி திருவடிகளே பிராப்தி ஸாதனம் என்று நிலை பெறுகைக்கு உறுப்பான இந்த சரீரத்தைப் பெறுகைக்கு உன்னுடைய கிருபை யாகிற புண்யத்தை நோற்று வைத்த இந்த ஆச்சர்யத்தையும்-(ஸூ ஹ்ருத தேவர் யார் -முதலிகள் ஐதிகம்-தனக்கும் தெரியாமல் ஸாஸ்த்ரமும் அறியாமல் -எனது அடியாருக்கு ஒதுங்க நிழல் கொடுத்தாய் ஸாஸ்த்ர வேத்யனான புறப்பாடு கண்டு அருளும் அவனே அறிவான்)-மாயம் செவ்வே நிலைப் பெய்திலாத நிலைமையும்-கிருபா லாபம் ஆகிற ஆச்சர்யம் ஒருபடிப்பட நிலை நின்று நடத்தித் தாராதே நிற்கிற படியையும்–காண் தோறு-பார்க்கும் தோறும்–அசுரர் குழாம் தொலைப் பெய்த நேமி எந்தாய்-அஸூர ஸமூஹங்களுக்கு முடிவைப் பண்ணின திருவாழியை யுடைய என் ஸ்வாமி யானவனே–தொல்லை யூழி சுருங்கலதே –விரோதி நிவ்ருத்திக்குக் காலம் பார்க்க வேண்டாமையாலும் பரிகரம் தேட வேண்டாமையாலும் பிராப்தி விளம்பிக்கைக்கு ஹேது இல்லாமையால் முன்பு பழையதாக அகன்று போந்த காலத்தோடு
ஸஜாதீயமான ஆகாமி காலமானது கல்ப ஆகாரமாய்க் கொண்டு வளர்ந்து வரையிட்டுக் காட்டுகிறது இல்லை என்று அருளிச் செய்தார் ஆயிற்று

இதில் இங்கனே அந்வயம்-உன் திருவடிச் சூடும் தகைமையினால்-நிலைப்பெய்த யான் தலைப்பெய்த
வாக்கைக்கு நோற்ற விம்மாயமும் மாயம் செவ்வே நிலைப் பெய்திலாத நிலைமையும் காண் தோறு
அசுரர் குழாம் தொலைப் பெய்த நேமி எந்தாய் தொல்லை யூழி சுருங்கலதே
–என்று–உம்மை விட்டு இங்குப் பொறாமைக்கு அடியேனுடைய நிஜ ஸ்வபாவம் ஒரு ஹேது-இப்போதாக வந்தேறின ஆக்கைக்கு தேவரீர் ஸங்கல்பித்த ஆச்சர்யமும் ஹேதுவாம்-பகவத் ஸ்வரூப திரேதாந கரீம் -சத்யத்ரயம் என்று தொடங்கி அருளிச் செய்தபடி-ஸ்வ விஷய போக்ய புத்தி ஜனனியான ப்ரக்ருதியானது
ஸ்வ பர ஸ்வரூப யாதாம்ய அநு குண ஞான ப்ரவ்ருத்திகளை நிலை நிற்க ஹேதுவாம்-உன் திருவடிச் சூடும் தகைமையினால் நிலைப்பெய்த வாக்கைக்கு நோற்ற விம்மாயமும்-தகைமை என்று ஸ்வ பாவம்
இடை விடாதே த்வதீய புக்தோஜ்ஜித -ஸ்தோத்ர ரத்னம் -42-இத்யாதி யுக்த விதனாய் உன் திருவடிகளில் கீழ் இருப்பதை நிலை நின்ற யான் இங்கனே இங்கு இருப்பைப் பொறுத்து இருக்க ஒட்டுமோ என்றபடி-தலைப்பெய்து யான் உன் திருவடிச் சூடும் தகைமையினால் நிலைப்பெய்த வாக்கைக்கு நோற்ற விம்மாயமும் எனக்கு இப்போது வந்தேறினதான இத்தேஹத்துக்காக தேவரீர் நோன்பு நோற்றதே -ஸங்கல்பித்ததே -என்றபடி–இந்த ஆச்சார்யம் இன்னம் எத்தனை அநர்த்தத்துக்கு ஹேதுவோ என்று
ஏங்கப் பண்ணுமது அன்றி இங்கனே இங்கு இருப்பைப் பொறுத்து இருக்க ஒட்டுமோ என்றபடி-மாயம் செவ்வே நிலைப் பெய்திலாத நிலைமையும் காண் தோறு-மயாத்யஷேண ப்ரக்ருதி –ஸ்ரீ கீதை -9-10-என்று உன்னால் புகழப்பட்ட மாய ப்ரக்ருதி யானது ஸ்வரூப யாதாத்ம்ய அநு குண ஞான ப்ரவ்ருத்திகளை நிலை நிற்க ஒட்டாத நியத ஸ்வ பாவம் யுடையது என்பதும்–இத்தேஹத்தில் அகப்பட்ட எனக்கும்-ராஜ்யாத் பிரம்ஸோ வநே வாஸே –ஆரண்ய -67-24-என்னும்படி பிரிந்து பட்ட உனக்குப் போலே அதி பயாவஹம் ஆகையாலே இங்கனே இங்கு இருப்பைப் பொறுத்து இருக்கப் போமோ என்றபடி-இம்மூன்றையும்-காண் தோறு-பார்க்கும் தோறும்–அசுரர் குழாம் தொலைப் பெய்த நேமி எந்தாய்-அஸூர வர்க்கத்தை உரு அழிக்கும் திருவாழியை ஏந்தின அழகாலே என்னை ஆண்டு கொண்டவனே-தொல்லை யூழி சுருங்கலதே-உன்னையே அனுபவித்தும்-உனக்கே அடிமை செய்தும் கழிந்த யாவதாத்ம உபக்ரமமாய் இந்நாள் வரைக்குள்ள காலம் எல்லாம் நாம் அங்கனே இருந்தோமோ
அங்கனே இருந்தது அத்யல்ப காலங்கள் என்றே போனதாகா நின்றதே-ஆகையாலே
எஞ்ஞான்று தலைப்பெய்வன் என்று இங்கு இருப்பைப் பொறாமையால் ஜலாதுத் த்ருத மத்ஸ்யம் போன்று இரா நின்றேன் என்கிறார் –

தாத்பர்யம்
இதில் சர்வேஸ்வரன் தன்னுடைய கைங்கர்யத்துக்கு உபயோகியான சரீரத்தையும்-தன்னிடம் உள்ள பக்தியும் அருளிய பின்பு பேறு தப்பாது என்று விஸ்வசித்து இல்லாமல் இவற்றின் அஸ்திரம் பார்த்து அலமந்து கூப்பிடுகிறார்-இங்கு தகைமைக்கும் ஆக்கைக்கும் முக்யத்வம் கொண்டு இரண்டு நிர்வாஹங்கள்-பக்திக்கு ஆக்கை எதுக்கு-ஆக்கை சரீரம் பக்தி எதுக்கு-ஒன்றுக்கு முக்கியம் கொடுக்க அடுத்தது அமுக்கியம்-இரண்டுமே வேண்டுமே -சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும் போல்
நான் உன்னைக் கிட்டி உனது திருவடிகளை தலையில் வைத்து கொண்டால் அல்லது தரிப்பது அரிது ஆற்றாமையுடைய இந்த சரீரத்தை அநேக பிறவிகளில் அநேக தவம் செய்து பெற்றும்-இனி வரையில் உன்னைக் காணப் பெற்றிலேன்-இனி காணும் அளவும் இவை ஸ்திரமாக இருக்காவே-சரீரம் மின்னின நிலையில -மன்னுயிர் ஆக்கை-இனி மறு பிறவியில் உன்னை ஆஸ்ரயிப்போம் என்னில்-அங்கு பக்தி நிலைக்க வேண்டுமே -அதுவும் சங்கை உண்டே-அதி துர்லபமான மானுஷ்ய தேஹம் -க்ஷண பங்கி
அது பெற்றாலும் முக்குண மயமான இங்கு சத்வகுண கார்யமான பக்தி இருக்க வேண்டுமே அவ்வளவு துர்லபம்-இப்பிறவியில் இப்போதே பெற வேண்டும்-இவ்விதமாக பாதங்களை நினைத்துப் பார்க்க
உன்னைப்பெறாத இக்காலம் கல்பமாக நெடுகி உள்ளதே-நாதனான நீயோ ஆஸ்ரித விரோதி நிரசன நீயும் ரக்ஷண தீஷிதனாயும் உள்ளாய்-இப்படி இருக்க வீணாக காலம் பெருகுவது பொறுக்கப் போவது இல்லை என்று சர்வேஸ்வரன் இடம் முறை இடுகிறார் –

6-4-குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும்-ப்ரவேஸம்

இத் திருவாய்மொழியில் ஆழ்வார் ஸ்ரீ வால்மீகி பகவானோடு ஒப்பர்.
அவனும் இராமாவதார மல்லது போக்கி அறியான்; அவனுடைய பிரபந்தமும் அப்படியே.
இவரும் கிருஷ்ணாவதாரம் அல்லது அறியார்;
இத் திருவாய்மொழி கிருஷ்ணனுடைய சரிதை ஒழிய வேறு ஒன்றைச் சொல்லாது.

அன்றிக்கே,
“சூரனே! என் எண்ணமானது வேறு இடத்தில் செல்வது இல்லை” என்று கொண்டு
‘பர நிலையும் கூட வேண்டேன்’ –
“ஸநேஹோ மே பரமோ ராஜந் த்வயி நித்யம் ப்ரதிஷ்டித:
பக்திஸ்ச நியதா வீர பாவோ நாந்யத்ர கச்சதி”- என்பது, ஸ்ரீராமா. உத். 40 : 16.
என்ற திருவடியைப் போலே யாயிற்று இவரும் கிருஷ்ணாவதாரம் ஒழிய வேறு ஒன்று அறியாதபடி என்னுதல்.

“சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான்” -5-3-9-என்கிறபடியே, கிட்டி நின்று அநுபவிக்கப் பெற்றிலோம் என்கிற இழவு தீர,
பூமியிலே ஆகப் பெற்றது;-அவதரித்து என்றபடி –
“தொல்லருள் நல் வினையால் சொலக் கூடுங் கொல்?” -5-9-10-என்றே யன்றோ இவர் ஆசைப் பட்டது.
அதாவது,
நா நீர் வந்து திருநாமம் சொல்லுகையாகிறது புண்ணியத்தின் பலமே அன்றோ.

“பிறந்தவாறும்”-5-10- என்ற திருவாய்மொழியில் இவர்க்கு உண்டான இழவு எல்லாம் தீரும்படி
ஸ்ரீ பிருந்தாவனத்தில் நடந்த செயல்களைக் காட்டிக் கொடுக்கக் கண்டு,
அவை இறந்த காலத்தில் நடந்த செயல்கள் போலத் தோற்றுகை அன்றிக்கே,
சம காலத்தில் நடக்கும் செயல் போலே தோற்றக் கிட்டி நின்று அனுபவிக்கிறார்.

“மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியிலே, ‘அல்லோம்’ என்று அகன்று முடிந்து போகப் புக்க தம்மை
‘ஆவோம்’ என்னச் செய்து சேரவிட்டுக் கொண்டபடியை நினைத்து,
இப்படி வல்லார் இவன் அல்லது இலர் கண்டீர்-6-3- என்று தலைக் கட்டுகிறாரா யிருக்கிறது.
(இப்படி 5-3- தொடங்கி 6-3 -இவ்வாறு தலைக்கட்டி இத்திருவாய் மொழி என்கிறார் ஆயிற்று )

“சன்மம் பல பல”-3-10- என்ற திருவாய்மொழியிலும் இப்படி இருப்பது ஓர் உவகை உண்டே;
அதற்கும் இதற்கும் வாசி என்? என்னில்,
அங்கு, இதர வியாவிருத்தி மாத்திரத்தால் உண்டான ஞான லாபத்தால் உண்டான உவகை;
இங்கு, அவன், தன் குணங்களை நேரே இவரை நெருங்கி அநுபவிப்பிக்க,
தம் வசப்பட்டவர் அல்லாதபடி அநுபவித்து உவகையராய் வாய் விடுகிறார்.

சன்மம் பல பல-3-10-அவதார சேஷ்டிதங்கள்
பிறந்தவாறும் -5-10 -அவதார சேஷ்டிதங்கள்
6-2/6-4- நேரே சங்கதி -6-3- பிராசங்கிகம்-சேர மாட்டேன் என்றவரை சேர்த்த வ்ருத்த கடநா சாமர்த்தியம் இடைச் சேர்க்கை
4-10-/5-2—நேரே சங்கதி –5-1- போலே – உபகார பரம்பரை சொல்லி அருளியது போலே –

சேஷத்வம் பாரதந்த்ர்யம் மறந்து -இருப்பதே ஆழ்வார் தம் வசம் இல்லை –
எனக்கு நிகர் யார் -ஸ்வாதந்த்ர்யம் தோன்ற அருளிச் செய்கிறார்
கிருஷ்ணானுபவம் இப்படி பண்ண வைக்கிறதே –

நாலாம் திருவாய் மொழியில் -கீழ் விருத்த விபூதி யோகத்தால் தன் அகடி கடநா சக்தியைக் காட்டி -பல பிரதான சமர்த்தன்
என்கிற பிரதிபத்தியைப் பிறப்பித்த ஸர்வ ஸ்மாத் பரனுடைய ஸூக மத்வ ஸூச நார்த்தமாக
அவனுடைய அனந்த ஸாயித்தவத்தையும்
ஆச்சர்ய ஆகாரவத்தையும்
அதிசயித உஜ்ஜ்வல்யத்தையும்
அப்ராக்ருத விக்ரஹவத்தையும்
அர்த்திகளுக்கு அபேக்ஷிதா கரத்வத்தையும்
அந்நிய அபிமான நிவர்த்தகத்வத்தையும்
அதிசயித போக்ய ஆகாரத்தையும்
அர்த்தியாயும் அபேக்ஷிதம் தலைக் கட்டிக் கொள்ளூம் படியையும்
அசாதாரண சிஹ்ன யோகத்தையும்
பரஞ்சோதி ஸ்வரூபவத்தையும்
அனுசந்தித்து ஏவம் பிரகாரனான ஸ்ரீ கிருஷ்ணனுடைய மநோ ஹரியானா அகில சேஷ்டிதங்களையும் இங்கே இருந்து
அனவரத அனுபவம் பண்ணப் பெற்ற எனக்கு ஆர் இனி நிகராவர் என்று ஹ்ருஷ்டராய்க் கொண்டு
அவனுடைய ஸூப ஸூகத்வத்தை ப்ரதிபாதித்து அருளுகிறார் –

குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம்ஒன்று ஏந்தியதும்
உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும்பல
அரவில் பள்ளிப் பிரான்தன் மாய வினைகளையே அலற்றி
இரவும் நன்பகலும் தவிர்கிலன் என்ன குறைவு எனக்கே
.–6-4-1-

பிறந்தவாறும்” என்றாற் போலே தொடங்கி ஓர் அவதாரம் முன்னாக இழியாமல், இதிலே இழிவான் என்? என்னில்,
“மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியில் உண்டான தம்முடைய பிரணய ரோஷத்தினைப் போக்கித் தம்மைச் சேர விட்டுக் கொண்டபடி,
திருக் குரவைக் கூத்தில் பெண்களோடே கலந்து அவர்களை அநுபவிப்பித்தாற் போலே இருக்கையாலே, அது முன்னாகப் பேசுகிறார்.-நாம் அநுசந்திக்கில் அன்றோ ஓர் அடைவாக இழிவது!-அவன் அநுபவிப்பித்தபடியே பேசுகிறாராகையாலே திருக் குரவைக் கூத்தினை முதல் முன்னம் பேசுகிறார் -திருக் குரவையில் பெண்களோடு உண்டான கலவியையாயிற்று இவர்க்கு முதலிலே காட்டிக் கொடுத்தது.-ஐந்து லக்ஷம் குடிகளிலுள்ள பெண்கள் எல்லாரோடும் கலந்த பிரீதி உண்டாயிற்று, இவர் ஒருவரோடு கலந்து பிரீதி.-குரவை பிணைந்த குழகும்” என்று ஆசைப்பட்டபடியே அநுபவிக்கிறார்.-திருக்குரவையில் இவனை ஒழியப் பெண்களுக்குச் செல்லாதது போலே காணும்
“மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியில், ஆழ்வாரை ஒழிய இவனுக்குச் செல்லாமை விளைந்தபடி,

பூமியிலே ஒரு பருவத்திற் பெண்களோடே கூடப் பூர்ணமாக அநுபவித்திருக்கிற இருப்பைக் கண்டு அது பொறுக்க மாட்டாமையால் பொறாமை மிக்கு, ‘நமக்கு இட்ட சோற்றை உண்டான்’ என்று ஒரு வியாஜமாகக் கல் மழையைப் பெய்வித்தான்;
அப்போது கைக்கு எட்டிற்று ஒரு மலையை எடுத்துத் தரித்துக் கொண்டு நின்ற படி.-இப்படி அநுபவிக்கிறான் சர்வேஸ்வரன்’ என்று அறியான் அன்றோ;
இவன், தன்னை மனித சஜாதீயன் ஆக்கிக் கொண்டு இருக்கையாலே.-அன்றைய தினத்தில் கல் மழையில் பசுக்களுக்கும் இடையர்க்கும் வந்த ஆபத்தைத் தீர்த்தாற் போலே யாகாதே,
இவர்க்கும் “மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியில் வந்த ஆபத்தைத் தீர்த்தபடியும்.

உள் பட மற்றும் பல –-இவை முதலான செயல்களுக்கு ஓர் எண் இல்லை.
“பிறந்தவாறும்” என்ற திருவாய்மொழியில், வலிமைக் குறைவாலே சொல்ல மாட்டிற்றிலர்;
இங்கு, உகப்புத் தலை மண்டை யிட்டுச் சொல்ல மாட்டுகிறிலர்.
மற்றும், இப்படிப் பெண்களுடைய கலவிக்குத் தண்ணீர்த் துரும்பு அறுத்தவை பலவாம்.

அரவில் பள்ளிப் பிரான் –நாட்டார் உறக்கம், தமோ குணத்தால் மறைக்கப்பட்டதாய்த் தங்கள் பொருட்டேயாய் இருக்கும்;-இவன் உறக்கம் பிறருடைய ரக்ஷணத்தின் பொருட்டு இருக்கும்.
உறங்குவான் போல் யோகு செய்த பெருமான் அல்லனோ.-திருவாய். 5. 4 : 11.–
உறங்கினானாகில் பிறருடைய ரக்ஷணத்துக்கு உடலாயிருக்கும்;
உணர்ந்திருந்தானாகிலும் அப்படியே; இது என்ன உபகாரந்தான்!

அரவில் பள்ளிப் பிரான் –-மேலே, ஒரு பாம்போடு உண்டான சேராமை சொல்லிற்று;
இங்கு, ஒரு பாம்போடு உண்டான சேர்த்தி சொல்லுகிறது.
அங்கு, போகத்தைக் காற் கடைக் கொண்டமை சொல்லிற்று;-இங்கு, போகப் பிராவண்யம் சொல்லுகிறது.-போகம் -பாம்பு -இனிமை-பிரதிகூலனான காளியனைப் பறக்க ஓட்டினான்;
அநுகூலனானவனைப் படுக்கையாகக் கொண்டான்.-இவன் தான் -அநந்த முகமாக -பல பல முகமாக அநுகூலிக்கும்;-அவனும்-அநந்த முகமாக – பல பல முகமாக அடிமை கொள்ளும்.

அரவில் பள்ளிப் பிரான்-அவதாரங்களுக்கு அடி திருப்பாற் கடலாகையாலே அதனைச் சொல்லுதல்;-அன்றியே,“நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்” –திருவாய். 5. 10 : 11.என்றதனை நினைக்கிறாராதல்.

அநுபவத்திற்குத் தக்கதான காலமாகையாலே, நல்ல இரவும் நல்ல பகலும் என்கிறார்.
பிரிந்த காலத்திலே அன்றோ நெருப்பை உருக்கி ஏறட்டினாற் போலே இருப்பது,

என்ன குறைவு எனக்கே –-“அங்குக் காலம் பிரபுவாய் இல்லை” என்று கொண்டு பகலும் இரவும் நடையாடாதது ஒரு தேச விசேடம் தேடி அநுபவிக்கைக்குப் பட்டைப் பொதி சோறு கட்ட வேண்டும்படி குறைவாளனா யிருந்தேனோ?-ஒரே தன்மையதான அநுபவம் அன்றோ அங்கு உள்ளது;-அந்த அந்தக் காலங்கள் தோறும் உண்டான அநுபவ விசேடங்களை அநுபவிக்கப் பெற்ற எனக்கு ஒரு குறை உண்டோ?
அன்றிக்கே,-பரத்துவ அநுபவமே அன்றோ அங்கு உள்ளது;-சீல குண அநுபவமுள்ளது இங்கே அன்றோ. ஆதலின் “என்ன குறைவு எனக்கே” என்கிறார் என்னுதல்.
(ஒரே திவ்ய தேசம் அங்கு இங்கு பஹு வாக உள்ளவை அன்றோ )

—————-

கேயத் தீங்குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் கெண்டை ஒண்கண்
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல
மாயக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனம் குழைந்து
நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ்வுலகம் நிகரே
.–6-4-2-

கேயம் தீம் குழல் ஊதிற்றும் – தான் நினைத்த பெண்களுடைய பெயரை வைத்துப் புணர்த்துச் சுவைப் பாட்டாக வைத்து ஊதிற்றும்.-கேயம் – பாட்டு. தீம் – இனிமை. இனிமையை யுடைய பாட்டு என்றபடி.-இதுக்கும் பசு மேய்க்கைக்கும் ஒன்றே பரிகரம்.–குழலை ஊதவே பசுக்கள் வயிறு நிறையும்-சக்கரவர்த்தித் திருமகனுக்கு வில் கை வந்திருக்குமாறு போலே யாயிற்று, கிருஷ்ணனுக்குக் குழல் கை வந்திருக்கும்படி.-இது வைஸ்ய வர்ண தர்மம் -அது ஷத்ரியன் வர்ண தர்மம்-

பசு மேய்த்து வந்த சிரமம் எல்லாம் போகும்படி நப்பின்னைப் பிராட்டி இளமை பொருந்திய அழகிய திருக் கண்களாலே குளிர நோக்கி அழகிய திருக் குழலின் பரிமளத்தாலே திருமேனியை வாசனை யுடைய தாம்படி ஆக்கித் தன் தோள்களோடே அணைத்ததுவும்.-“தோளி”சேர் பின்னை-இவளுக்கு அழகு கை விஞ்சி யிருக்குமே.-

சக்கரவர்த்தித் திருமகனுக்கு அத்யயநம், ஆசாரிய சேவை, அஸ்திர சஸ்திரப் பயிற்சிகள் உண்டாமாறு போலே,-இவனுக்கு-பெண்களை அழைக்கை மற்றும் பல-
மற்றைப் பிராட்டிமாரோடு கலந்த படி.

மாயக் கோலப் பிரான்-நப்பின்னை பிராட்டியாரோடே கலவியால் வந்த ஒற்று மஞ்சளும் மாளிகைச் சாந்துமான அத்யாச்சர்யமான ஒப்பனையை யுடையனாய் -உபகார சீலனானவனுடைய-கிருஷ்ண சேஷ்டிதங்களை நினைத்து அத்தாலே நெஞ்சு நெகிழ்ந்து

எனக்கு எவ் வுலகம் நிகர் – ஒரு தேச விசேடத்தில் தான் எனக்கு ஒப்பாவார் உளரோ?
அநுபவ வேளை போலே நினைக்கின்ற காலத்திலும் இனிமையோடே செல்லக் கடவதானால் எனக்கு எங்கே ஒப்பு?-ஆகாச வாயர் எனக்கு எதிரோ!
( ஆகாசம் கிடைக்குமா பார்த்து இருக்கும் சம்சாரிகளைச் சொல்லிக் கழிக்கக் கூடாதே )
வாய் – இடம். பரமாகாசம் என்கிற பரம பதமாகிற இடத்திலுள்ளார் தாம் எனக்கு ஒப்பாரோ!!
உலகம் என்பது, உயர்ந்தோராகையாலே நித்திய ஸூரிகள் என்றபடி.
பிரார்த்தித படி பெற்றதால் பரம பதத்திலும் சமம் தனக்கு இல்லை என்கிறார்-

——————

நிகரில் மல்லரைச் செற்றதும் நிரை மேய்த்ததும் நீள் நெடுங்கைச்
சிகர மாகளிறு அட்டதும் இவைபோல்வனவும் பிறவும்
புகர்கொள் சோதிப் பிரான்தன் செய்கை நினைந்து புலம்பி என்றும்
நுகர வைகல் வைகப்பெற்றேன் எனக் கென்னினி நோவதுவே
–6-4-3-

மல்லரோடே கூட எல்லா அவயவங்களும் பொருந்தி போர்த் தொழில் செய்ய நிற்கச் செய்தே, சாத்தின சாந்து குறி அழிந்தது இல்லை காணும்.
கூனி சாத்தி விட்ட உடனே பெண்கள் கண்களாலே இலச்சினை இட்டு விடுகையினாலே இவனால் அழிக்கவும் போகாதே அன்றோ.
இவர்கள் கண்களாலே இலச்சினை இடுகையாவது, அவன் தோள்களிலே சேலும் கயலும் இடுகை அன்றோ.
இவன் மல்லரோடே சேர்ந்து அழித்தானாகிலும், ‘மற்று எங்கேனும் அழித்தான்’ என்றே அன்றோ அவர்கள் இருப்பார்கள்.-இதனை அழித்துப் போனானாகில், பின்பு பெண்கள் கோஷ்டிக்கு ஆளாகானே.

க்ஷத்திரியப் பிறவிக்கு ஈடாம்படி மல்லரோடே போர் செய்தான்;-ஆயர் பிறவிக்கு ஈடாம்படி பசுக்களை மேய்த்தான்.-பசுக்களை மேய்த்த போதை ஆயாச மாகாதே, மல்லரோடு பொருத போதும் உள்ளது

சிகர மாகளிறு அட்டதும்-பர்வத சிகரம் போலே உரத்து பெருத்து இருக்கிற குவலயா பீடத்தை நிரசித்ததும்-இவை போல்வனவும் பிறவும்-இவை போலே மற்றும் உண்டான கேசி நிரசன நாதிகளும்-புகர்கொள் சோதிப் பிரான்-விரோதி நிரசன த்தாலே ஒளி பெற்ற தேஜஸ் ஸூ –உபகார சீலன்

எனக்கு என் இனி நோவதுவே –‘காலம் நெடுகுவது குறுகுவது ஆகாத இடந் தேடி அநுபவிக்கப் பெற்றிலேன்’ என்கிற அதிருப்தி யுண்டோ எனக்கு என்கிறார்.
அன்றிக்கே,-அவனுக்கு வரும் நோவன்றோ, இவர்க்கு நோவாவது; அது கழியப் பெற்ற தன்றோ என்னுதல்.
இவர் நோவு போக்கும் அவனுக்கு வரும் நோவன்றோ,-சம்சார ரஷண்ம் -பலிக்காததே அவனது நோவு – ரஷிக்க இசைவதே அவன் நோய்க்கு பரிகாரம் –
இவர்க்கு நோவாவது: அது போகவே இவர்க்கு நோவு போயிற்றதாமன்றோ.-உயிருக்கு வரும் நோவு உடம்புக்கு வரும் நோவாமன்றோ.-

—————-

நோவ ஆய்ச்சி உரலோ டார்க்க இரங்கிற்றும் வஞ்சப்பெண்ணைச்
சாவப் பாலுண்டதும் ஊர் சகட மிறச் சாடியதும்
தேவக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனங்குழைந்து
மேவக் காலங்கள் கூடினேன் எனக்கு என் இனி வேண்டுவதே?
–6-4-4-

ஆய்ச்சி உரலோடு நோவ ஆர்க்க இரங்கிற்றும் –-சீயர், இத் திருப் பாசுரத்தை இயல் அருளிச் செய்ய புக்கால் “நோவ”என்று அருளிச் செய்யும் அழகு காணும்.
‘நோவ என்கிறார் காணும் ஆழ்வார், தம் திரு மேனியிலே கயிறு உறுத்தினாற் போலே.’
ஒரு துவேஷம் உண்டாய்க் கட்டுகிறாள் அல்லளே, சிநேக காரியமான கோபமாகையாலே
சிநேகமுள்ள அளவும் இடை நிற்கும் -சத்ருசமாக -அன்றோ கோபமும்.
தாய் எடுத்த சிறு கோலுக்கு -8-3-5-உளைந்து ஓடியன்றோ, விளியா ஆர்க்க ஆப்புண்டு விம்மி அழுதான்;-வாய் விட்டு அழ மாட்டாதது அன்றோ இவரை வருத்துகிறது.
“தறியார்ந்த கருங்களிறே போல நின்று தடங்கண்கள் பனி மல்கும் தன்மையானை” என்கிறபடியே,-ஒரு மத்த யானையைத் தறியோடே சேர்த்தாற் போலே காணும் இவன் கட்டுண்டு நின்ற நிலை.
ஓர் அபலை கட்டின கட்டு அவிழ்த்துக் கொண்டு போக மாட்டாதே, நின்று அழுகையே இயல்பாய் இருந்தபடி.-“வல்லையாகில் போய்க் காணாய்” என்றாள் அன்றோ.
(அகாரம் கட்டி வைத்து ஆகாரம் கட்ட போனாள் அன்றோ பஹு குடும்பிநி )

யசோதைப் பிராட்டியின் முலை உண்ணும் போதும் தான் உயிர் பெற உண்ணுமாறு போலே காணும், இவள் முலை உண்கிற போதும் தான் உயிர் பெற முலை யுண்டபடி; ஆதலின், ‘உண்டதும்’ என்கிறார்.(அவள் உயிரை தான் பெரும் படி இங்கு )

தேவக் கோலப் பிரான் – மனிதர்களை ஒத்து நின்று செய்யவும் பெற்றதில்லையே.
அதி பால்யத்திலே செய்த செயலாகையாலே அப்ராகிருதமாய் இருப்பதோர் ஒப்பனை போலே இருக்கிறபடி.-தன் செய்கை நினைந்து மனம் குழைந்து மேவக் காலங்கள் கூடினேன் –அவனுடைய செயல்களை நினைத்து அகவாய் உடை குலைப்பட்டு
வேறு பிரயோஜனம் இல்லாதவனாய்க் கொண்டு காலம் போக்கப் பெற்றேன்.
நெஞ்சு நெகிழ்ந்து செயல்களோடே பொருந்தும்படி காலங்களைக் கூடப் பெற்றேன்.
எனக்கு என் இனி வேண்டுவது – இனி அடையத் தக்கது ஒன்று இல்லை என்கிறார்.-

—————-

வேண்டித்தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள்வாய்ப்
பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கோர் ஆய்க்குலம் புக்கதும்
காண்ட லின்றி வளர்ந்து கஞ்சனைத் துஞ்ச வஞ்சம்செய்ததும்
ஈண்டு நான் அலற்றப் பெற்றேன் எனக்கு என்ன இகல்உளதே?
–6-4-5-

தந்தையாக அடைய வேண்டும் என்று விரும்பி-இச்சையாலே-இரக்கிறவர்கள் அளவு பார்த்தல், தன்னளவு பார்த்தல் செய்கை யன்றிக்கே வந்து பிறந்தபடி காணும் இவரை வருத்துகிறது.-தான் இரப்பாளனாய்க் காரியம் செய்யுமவன், பிறர் இரந்தால் பொறுக்க மாட்டானே யன்றோ.

இருளாலே அன்றோ நாம் பிழைத்தது.-இனி, இந்த இருளைச் சரணம் புகுமித்தனை அன்றோ’ என்று பிள்ளை யுறங்கா வில்லி தாசர் பணிப்பாராம்.
“ஊர் எல்லாம் துஞ்சி” -5-4-என்ற திருவாய்மொழியில், கூற்றமான இருள், இப்போது இவர்க்கு ஆதாரத்துக்கு விஷயமாயிற்று அன்றோ.

அங்கு ஓர் ஆய்க் குலம் புக்கதும் – அந்த நிலையிலே இடையிலே வளருகைக்கு ஓர் அஞ்சினான் புகலிடம் உண்டாவதே! ஆய்க்குலம் – ‘கம்சன் பாதகன்’ என்று பயப்பட அறியாதவர்கள். ‘குடி வாய் உடன் பட இருந்தானாகில் இருக்கிறான், இல்லை யாகில் உழக் கோலாலே தகர்க்கிறோம்’ என்று இருப்பர்கள்.

தேவகியாரைப் போலே சமகாலத்தே இருந்து பயப்படாதே, இப்போது பயம் கெட்டு இருந்து அநுபவிக்கப் பெற்றேன்.-கம்சனை முடித்த படியை இன்று இருந்து அநுபவிக்கப் பெற்ற எனக்கு இனி ஒரு மிடி இல்லை-எனக்கு என்ன இகல் உளதே-கம்சன் பட்ட பின்பு எனக்குப் பகைவர்கள் உண்டோ?-இகல் – பகை.-பகவத் விமுகர்களே சத்ருக்கள் -அவர் ஆணைக்கு எதிராக செயல் படுபவர்கள் எனக்கு சத்ரு –

————-

இகல்கொள் புள்ளைப் பிளந்ததும் இமிலேறுகள் செற்றதுவும்
உயர்கொள் சோலைக் குருந்தொசித்ததும் உட்பட மற்றும்பல
அகல்கொள்வைய மளந்த மாயன் என்னப்பன்தன் மாயங்களே
பகலிராப் பரவப் பெற்றேன் எனக்கென்ன மனப்பரிப்பே
.–6-4-6-

பகல் இராப் பரவப் பெற்றேன் – நாட்டார் அபிமத விஷயங்களை அநுபவிப்பதற்குப் ‘பகல் இரா’ என்று கூறிட்ட காலம் இரண்டும்-இந்த விஷயத்திலே அநுபவிக்கப்பெற்ற எனக்கு,
இரவு பகல் புறம்பே விஷயங்களை அனுபவிப்பாருடைய மனோ துக்கம் உண்டோ?
பரிவு – துக்கம்.-அதிலே ஒரு ஒற்றெழுத்து ஏறினாலும் அந்தப் பொருளையே காட்டக் கடவது.பரிவு என்கிறதை சந்தஸ்ஸூ க்குச் சேர பரிப்பு என்கிறது-

————

மனப்பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான்பிறந்து
தனக்கு வேண்டுருக் கொண்டு தான்தன சீற்றத்தினை முடிக்கும்
புனத்துழாய்முடி மாலை மார்பன்என்னப்பன்தன் மாயங்களே
நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கினியார் நிகர் நீணிலத்தே.
–6-4-7-

நாட்டாரை அழுக்கு உடம்பு கழிக்குமவன் தான் கண்டீர் அழுக்கு மானிடச் சாதியில் வந்து பிறந்தான்;-குழந்தை கிணற்றிலே விழுந்தால் எடுக்க வரும் தாய் நெஞ்சு நொந்து வந்து எடுக்குமாறு போலே-குற்றங்களுக் கெல்லாம் எதிர்த்தட்டான தான் பிரகிருதி சம்பந்தம் இல்லாத திவ்ய திருமேனியோடே கர்ப்பத்தில் வாசம் செய்து அவதரித்தானாதலின் ‘தான் பிறந்து’ என்கிறது.
அன்றிக்கே,-பிறப்பதற்குக் கர்மம் செய்து வைத்தவரும் கூட அருவருக்கும் பிறவியிலே கண்டீர்-கர்மத்துக்கு வசப்படாத தான் பிறந்தது என்பார் ‘தான் பிறந்து’ என்கிறார் என்னுதல்.
இதற்கு அடி பரம கிருபை அன்றோ.-அப்படிப் பிறந்தால் ஒருபடிப் பட்டிருக்கப் பெற்றோமோ! இரண்டு தோள்களுடையவனா? நான்கு தோள்களுடையவனா?” என்னும்படியன்றோ பட்ட படி.-தான் வேண்டிய உருவம் அப்ராக்ருத சமஸ்தான விக்ரகம் –
அடியார்கள் வேண்டிய உருவம் என்றுமாம் –இச்சையால் எடுத்தவை-

அடியார்களுடைய விரோதியைப் போக்கினானாய் இருக்கை யன்றிக்கே,
தன் சினம் தீர்ந்தானாய் இருக்கை;-தாயானவள், குழந்தையை நலிந்தவர்களைத் தான் நலிந்து தன் சினம் தீருமாறு போலே.-புனம் துழாய் முடி மாலை மார்பன் என் அப்பன்-
அடியார்களுடைய விரோதிகளைப் போக்கித் திருமஞ்சனம் செய்து ஒப்பித்து,
திருமேனியின் பரிசத்தாலே தன் நிலத்தில் நின்றாற் போலே செவ்வி பெற்று இருக்கின்ற
திருத்துழாய் மாலையினைத் திரு முடியிலும் திருமார்பிலுமுடையவனாய்,
அந்த ஒப்பனையாலே என்னை எழுதிக் கொண்டவன்.-பொதுவாகை யன்றிக்கே, அவனுடைய ஆச்சரியமான செயல்களையே அநுசந்திக்கும் நெஞ்சை யுடையேன்.

எனக்கு நீள் நிலத்தில் யார் நிகர்--பூமி பரப்பை யுடைத்து என்னா, எனக்கு ஒப்பாவார் உளரோ?-பரமபதத்தை ஒன்றாக நினைக்கின்றிலர்; தம்மைப் போலே கவி பாடி அடிமை செய்வார் இல்லாமையாலே, சம்சாரத்தே இருந்து கவி பாடி அடிமை செய்யப் பெற்ற எனக்கு, பூமியில் ஓர் எதிர் உண்டோ? என்கிறார்.-

————–

நீணிலத்தொடு வான்வியப்ப நிறை பெரும் போர்கள்செய்து
வாண னாயிரம் தோள்துணித்ததும் உட்பட மற்றும்பல
மாணியாய்நிலம் கொண்ட மாயன் என்னப்பன்தன் மாயங்களே
காணும் நெஞ்சுடையேன் எனக்கினி என்ன கலக்க முண்டே?
–6-4-8-

சம்பந்தமில்லாத விஷயங்களைப் பற்றின தோள்களைக் கழித்தபடி.
‘இவன் கர பாதை ஆற்ற மாட்டாமல் கண்டார் கால்களில் எல்லாம் குனிந்து திரியா நின்றான்’ என்று அந்தக் கரத்தைக் கழித்து விட்டான்.
‘கை கழியப் போய்ச் சிவனை அடைந்தான், இவன் கர பாதை ஆற்றாமை’ என்று அதனைப் படைக்கு -திரு ஆழிக்கு –-அடைத்து விட்டான். –இவர் கை சக்கரம் கழிய போய் அவன் கைகளை கழித்தான்–வேறு தெய்வத்தைப் பற்றிக் கையிலே பலம் பெற்று விட்டான்.
பகவானைப் பற்றுவதற்குக் கைம் முதல் இல்லாமை விட்டான் அன்றே.
(கை முதல் -மூல தனம் இல்லை -ஆயிரம் கை கொடுத்தான்-அஞ்சலி பண்ணாததால் -கை தப்பிற்று -கைகள் போனது )

கண்ணழிவற்ற அழகாலும்,-வரையாதே எல்லாரையும் தீண்டுகையாலும்,
அடியார்கள் விஷயத்தில் ஓரத்தாலும்,-செய்யும் ஆனைத் தொழில்களாலும்
கிருஷ்ணாவதாரத்தோடு ஒத்திருக்கையாலே, ஸ்ரீ வாமனாவதாரத்தை அநுபவிக்கிறார்.

நிலம் கொண்ட மாயன் என் அப்பன் –-திரு உலகு அளக்க’ என்று ஒரு வியாஜத்தை இட்டு அளந்து கொண்டது தம்மை என்று இருக்கிறார்.-மநோ வாக் காயங்கள் -சிந்தை சொல் செயல் மூன்றையும் கொண்டானே –

அப்பன் தன் மாயங்களே காணும் நெஞ்சுடையேன் – ‘முடியானே’ என்ற திருவாய்மொழியிற் கூறிய கரணங்களை யுடைய ஆழ்வார் ஆகையாலே, நெஞ்சு தானே நினைக்கவும் வற்றாய்க் காணவும் வற்றாயிருக்கும் என்று பிள்ளான் பணிப்பர்” என்று அருளிச் செய்வர்.
அன்றிக்கே,-‘கட்கண்’ என்றும், ‘உட்கண்’ என்றும் சொல்லுகிறபடியே,
நெஞ்சு தன்னையும் கண்ணாகச் சொல்லக் கடவதன்றோ; அது ஆகவுமாம்.
கட்கண்ணால் காணாத அவ்வுருவை நெஞ்சென்னும் உட்கண்ணேல் காணும்
உணர்ந்து”-(பெரிய திருவந். 28.)– என்பது, ஈண்டு அநுசந்தேயம்–

எனக்கு இனி என்ன கலக்கம் உண்டே –-‘இந்த விஷயத்தைக் காணப் பெற்றிலோம்’ என்கிற கலக்கம் எனக்கு உண்டோ?
அன்றிக்கே,-வேறு தெய்வங்கள் ‘ரக்ஷகர்’ என்று இருக்கிற கலக்கமும்,
ஈஸ்வரனுடைய ரக்ஷணத்திலே ஐயப்படும் கலக்கமும்,
‘தானே தனக்குக் கடவன்’ என்னும் கலக்கமும் இல்லை என்னலுமாம்.

என் நான் செய்கேன் -யாரே களை கண் -என்னை என் செய்கின்றாய் போலே –
உபாய அம்சத்தில் கண் வைக்காமல் பிராப்ய அம்சத்தில் கண் வைத்து-கைங்கர்யமே யாத்ரையாக போக வேண்டும் –

———-

கலக்க ஏழ்கடல் ஏழ்மலை உலகேழும் கழியக் கடாய்
உலக்கத் தேர்கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும்பல
வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவை யுடை மால்வண்ணனை
மலக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம்மண்ணின் மிசையே?
–6-4-9-

வைதிக புத்திரர்களை இந்தத் தேசத்தினின்று கொண்டு போருகையும், போன செவ்வியிலே கொடு வந்து கொடுக்கையும், காலையில் செய்ய வேண்டிய யாக காரியங்களைச் செய்து முடித்த பின்பு மத்தியானத்தில் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்வதற்கு முன்பு இவை அடங்கலும் செய்கையும்.

வலம் கை ஆழி இடம் கைச் சங்கம் இவை யுடை மால் வண்ணனை மலக்கு நாவுடையேற்கு –
இவ்விடத்தைப் பட்டர் அருளிச் செய்யா நிற்கச் செய்தே கஞ்சனூரில் இருந்தவரான வண்டுவரைப் பெருமாள் என்பவர்,-மால் வண்ணனை ‘மலக்கு நாவுடையேன்’ என்ன அமையாதோ? ‘வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவையுடை’ என்று விசேடித்ததற்குக் கருத்து என்? என்ன,
“சோளேந்திர சிங்கனை உளுக்காக்கப் பண்ணுகிறேன் என்கிறார் காணும்” என்று அருளிச் செய்தார்.-சோளேந்திர சிங்கன்’ என்பது, நம் பெருமாளுடைய யானை. உளுக்காக்க – இருக்கும்படி. என்றது சர்வேஸ்வரனாகிற மத்த யானையானது பணிந்து கொடுக்கும்படி செய்கிறேன் என்கிறார் என்றபடி.
அறப் பெரியவனுக்கு லக்ஷணம் அன்றோ சங்க சக்கரங்கள்.-“ஒன்றிலும் ஆசை இல்லாதவன், மௌனமாக இருப்பவன்”-“அவாக்யநாதர:” என்பது, சாந்தோக்யம். 3 : 14.-என்கிற சர்வாதிக வஸ்துவைக் கலங்கச் செய்யும் நாவீறுடையேன் என்கிறார்.

மலக்கும் நாவுடையேன் – இவர் வார்த்தையில் கலங்குமவனன்றோ அவன் தான்.
இவர் கலங்கிச் சொல்லச் சமைந்தாற் போலே யன்றோ அவனும் கலங்கிக் கேட்கச் சமைந்தபடி.-இம் மண்ணின் மிசை மாறு உளதோ –-பரம பதத்தில் அநுபவம் வாய் புகுநீர் ஆகையாலே அதனை ஒன்றாக நினைத்திருக்கின்றிலர்.-இனி, உண்டாகில் பூமியிலே; அதிலும் இல்லை என்கிறார்.-தரித்து நின்று அனுபவம் இங்கே தானே –
அன்றிக்கே,-‘ஒப்பு உண்டு, இல்லை’ என்று ஐயங்கொள்ளுகைக்குத் தான் விஷயமுள்ளது நித்திய விபூதியிலே யன்றோ? ஆதலால், ‘இம் மண்ணின் மிசை மாறுளதோ?’ என்கிறார் என்னுதல்.

———–

மண்மிசைப் பெரும்பாரம் நீங்க ஓர்பாரத மாபெரும்போர்
பண்ணிமாயங்கள் செய்துசேனையைப் பாழ்படநூற் றிட்டுப்போய்
விண்மிசைத் தன தாமமே புக மேவிய சோதிதன்தாள்
நண்ணி நான்வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே
-6-4-10-

மண் மிசைப் பெரும் பாரம் நீங்க –-‘விஸ்வம்பரை’ என்றும், ‘க்ஷமை, பொறை’ என்றும் பெயர்களை யுடைத்தாய்த் தாங்கக் கூடியதான பூமியாலும் பொறுக்க ஒண்ணாதபடி அன்றோ துர் வர்க்கம் திரண்டபடி,
பரமபதத்தில்-“எந்தப் பரம பதத்திலே பழையர்களான சாத்தியர் என்கிற தேவர்கள் வசிக்கிறார்களோ” என்கிறபடியே, கனத்தார் உண்டாயிருக்கச் செய்தேயும், பாரம் இல்லை அன்றோ அகங்கார சம்பந்தமுடையார் இல்லாமையாலே. “யத்ர பூர்வே ஸாத்யா: ஸந்தி தேவா:” என்பது, புருஷ ஸூக்தம்.
இங்குப் பாரம் என்கிறது, மக்கள் பாரம் அன்று; யான் எனது என்னும் செருக்கே பாரம் என்றபடி.-தங்கள் பாரத்தினை அவன் தலையிலே வைத்திருக்குமவர்களன்றோ அவர்கள்

பகைவர்களை அழித்ததற்கு மேலே அன்றோ-இவர்கள் இருந்த நிலத்தில் இராமல் பரம பதத்திலே போய்ப் புகப் பெற்றபடி என்று உகக்கிறார்.-பொய்யாசனம் இடுவார், பரிபவிப்பவர் இவர்களையுடைய இந்த நிலத்தை விட்டுப் பரிவரேயான பரம பதத்து ஏறப் போகப் பெறுவதே!

ஒரு தீர்த்தத்தின் அன்று நாயிறு -அஸ்தமன காலம் -போது ஆண்டானும் எம்பாரும் தங்களிலே சந்தித்து,-“யான் எனது என்னும் செருக்கினால் மலினமாக்கப் பட்டவராயிருப்பார் பத்துக் கோடி பேர் நடுவே,-அதி சுகுமாரமான திருமேனியைக் கொண்டு பத்து நாள் எழுந்தருளி, அபாயம் இல்லாமல் புக்கருளப் பெற்றபடி கண்டதே!” என்று
ஒருவரை ஒருவர் தண்டன் இட்டுத் தழுவிக் கொள்ளா நிற்கக் கண்டேன் என்று சீயர் அருளிச் செய்வர்.

எனக்கு நாயகர் பிறர் ஆர் – அவனுடைய அவதாரம் தொடக்கமாக, நடுவுள்ள அபாயங்களைத் தப்பி அடியார்களை வாழ்வித்துத் தனக்கு அமர்ந்த நிலத்தே போய்ப் புக்கபடி யளவும் அநுபவிக்கப் பெற்ற எனக்கு ஆர் தான் நியமிக்கின்றவர்கள் என்கிறார்.“பயிலும் திருவுடையார் யவரேலும்” என்றதனை மறந்தார் போலே இருந்தது.
அன்றிக்கே,-அவர்களைப் பிறராக நினையாரே யன்றோ என்னலுமாம்.-

————————–

நாயகன் முழுவேழுலகுக்குமாய் முழுவேழுலகுந் தன்
வாயகம்புக வைத்துமிழ்ந்து அவையாய் அவை அல்லனுமாம்
கேசவன் அடியிணை மிசைக் குருகூர்ச்சடகோபன் சொன்ன
தூய ஆயிரத் திப்பத்தால் பத்தராவர் துவளின்றியே.
–6-4-11-

கேசவன் அடியிணை மிசைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன – கேசி என்னும் அசுரனைக் கொன்ற சர்வேஸ்வரன் திருவடிகளிலே. “மேல் திருவாய் மொழியிற் சொன்ன சர்வேஸ்வரத்வத்தையும், – இத் திருவாய்மொழியிலே, கேசியைக் கொன்றவனான கிருஷ்ணனுடைய அவதாரத்தையும் அநுபாஷித்துத் தலைக்கட்டுகிறது” என்று சொல்லுவர்.–நாயகன் —6-3 சுருக்கம் –கேசவன் -6-4- சுருக்கம்-
‘நாயகன் முழுவேழ் உலகுக்குமாய்” என்றது முதல் “அவையல்லனுமாய்” என்றது முடிய,
“நல் குரவும்” என்ற திருவாய்மொழியிற் கூறிய சர்வேஸ்வரத்தையும்,
“கேசவன்” என்றதனால், இந்தத் திருவாய்மொழியிற் கூறிய கிருஷ்ணனுடைய செயல்களையும் அநுவதித்துத் தலைக் கட்டுகிறார் என்றபடி.

அன்றிக்கே,-எல்லா உலகங்கட்கும் காரணன் கிருஷ்ணனே” என்கிறபடியே, கிருஷ்ண விஷயமே சொல்லுகிறது என்னுதல்,,“க்ருஷ்ண ஏவஹி லோகாநாம் உத்பத்திரபிசாப்யய: க்ருஷ்ணஸ்ய ஹிக்ருதே பூதமிதம் விஸ்வம் சராசரம்” என்பது, மஹாபாரதம் சபாபர். 38 : 23.

இப் பத்தினையும் கற்றவர்கள் ஆழ்வாரைப் போலே ஆவர்.-துவள் இன்றியே பத்தர் ஆவர் –
துவள் – குற்றம்.-அதாவது பரத்வத்திலே நெஞ்சு செல்லுகை-குற்றம் இல்லாமையாவது, -அத்தை தவிர்ந்து-வேறு அவதாரங்களில் போகாமல் கிருஷ்ணனுடைய செயல்களிலே தாழ்தல்.-திருவடி ஸ்ரீ ராமாவதாரத்தில் பிரவணராய் இருக்குமா போலே-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -89-தீ வினைக்கு அரு நஞ்சை –அங்கும் இங்கும் -8-3-

March 31, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

அடைவதில் சம்சயம் இல்லையே ஆழ்வாருக்கு-எஞ்ஞான்று தலைப்பெய்வன்-(நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–8-3-3-) -என்று என்பதே –உலகம் அளந்த பொன்னடி திரிவிக்ரமன்-ஊராகத் தொட்ட கண்ணன் ஆவினை மேய்க்கும்-வல்லாயன் -சஜாதீயத்தில் மெய்ப்பாடு-அன்று தப்பினேன்-அகாரம் ஆகாரம் தீ வினைக்கு அரு நஞ்சு ஆறு நஞ்சு -தளை தப்பாமல் -தமிழர் –ஆர்ஷ பிரயோகம் போல் ஆழ்வார் -மாற்ற வேண்டாம்-ஆரும் -போக்குவதற்கு போருமதான நஞ்சு–அங்கும் இங்கும் -8-3-இதன் விவரணம்-

அவதாரிகை –-சம்சாரிகளில் காட்டில் வ்யாவ்ருத்தராகப்      பெற்றோம் –இனி அவனைப் பெற்று
அனுபவிக்கிற வர்களோடு  நாம் சஜாதீயராகப் பெறுவது என்றோ -என்கிறார் –(சம்சாரிகளில் வியாவருத்தரானதால் மகிழலாம்-நித்யர்கள் உடன் சேரப்பெறாமல் துக்கம்-ஆரூரோஹ-ரதம் ஏறி -அனிஷ்டம் தொலையப் பெற்று மகிழ்ந்த பரதன் -அதே சமயம் கூடப் பெறாமல் துக்கம் போல் இங்கும் -)

இப்படி பக்தி விரோதி பாபம் கழிந்தாலும் பிராப்தி பிரதிபந்தகம் கிடக்கையாலே அது கழிந்தால் அன்றோ பெறலாவது என்ன-ஆஸ்ரித விரோதி நிரசன சீலனாய் நிரதிசய போக்ய பூதனாய்
ஸ்ரீ யபதியாய் ஸூலபனான இவனை என்று கிட்டி அனுபவிக்கக் கடவோம் என்கிறார்-இது நாயகி இரங்கி உரைத்ததாகவுமாம்-

தீ வினைக்கரு நஞ்சை நல் வினைக்கின்ன முதத்தினை
பூவினை மேவிய தேவி மணாளனை புன்மை எள்காது
ஆவினை மேய்க்கும் வல்லாயனை அன்றுலகீரடியால்
தாவின வேற்றை எம்மானை எஞ்ஜான்று   தலைப் பெய்வனே
– – 89-தலைவனது  கலவிக்கு விரைகிற தலைவி இரங்குதல் —

தீ வினைக்கு அரு நஞ்சை–(அடியார்களுடைய பாவத்துக்கு ப்ரபலமான விஷம் போனறிருப்பவனும்.
நல் வினைக்கு இன் அமுதத்தினை–(அவர்களுக்கு கைங்கரியமாகிய நல்ல தொழிலுக்கு இனிய அமிருதம் போல் இனிப்பாகவுள்ளவனும்-பிரபத்தி செய்வித்து -இசைவித்து தனது தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான் என்றுமாம்
பூவின் மேவிய தேவி மணாளனே–தாமரை மலரைத் தனக்கு இடமாகக் கொண்டு பொருந்திய திருமகளுக்கு கண்வனும்.
புன்மை என் காது ஆவினை மேயக்கும் வல் ஆயனை–சிறுமை கருதி இகழாமல் பசுக்களை மேய்க்கும் வலிமையையுடைய இடையனானவனும்
அன்று–முன்பொரு காலத்திலே
உலகு–உலகங்களை
இர் அடியால்–இரண்டு அடியாலே
தாவின ஏற்றை–அளந்து கொண்ட மேன்மையுடையவனுமான
எம்மானை–எம்பெருமானை
எஞ்ஞான்று தலைப்பெய்வன்–எப்பொழுதும் சேர்வேன்?

அங்கு அமரர் பேண அவர் நடுவே வாழ் திரு மாற்கு
இங்கு ஓர் பரிவர் இலை என்று அஞ்ச -எங்கும்
பரிவர் உளர் என்னப் பயம் தீர்ந்த மாறன்
வரிகழல் தாள் சேர்ந்தவர் வாழ்வார்–73-ஒரு கோல நீல நன்னெடும் குன்றம் வருவது ஒப்பான் -என்று கீழே அனுசந்தித்த அவனுடைய திவ்ய மங்கள விக்ரஹ வைலஷண்யத்திலே திரு உள்ளம் சென்று
இப்படி சௌந்தர்ய சௌகுமார்யங்களுக்கு கொள்கலமான இவ் வடிவோடே பிரயோஜனாந்தர பரர்களான தேவர்கள் கார்யம் செய்கைக்காக-பிரதிகூலர் வர்த்திக்கிற இஸ் சம்சாரத்திலே தனியே வந்து அவதரித்து சஞ்சரியா நின்றான்-எங்கே என்ன தீங்கு வரத் தேடுகிறதோ என்று -இவர் வயிறு எரிந்து பயப்பட-நமக்கு-முமுஷூக்களும்-நித்தியரும்-முக்தரும் உண்டு-நாம் கடலை குளப்படி போலே கலக்க வல்ல பெறு மிடுக்கர் ஆகையாலே நமக்கு ஒரு குறைகளும் இல்லை -என்று அவன் அருளிச் செய்ய அச்சம் தீருகிற அங்கும் இங்கும் -அர்த்தத்தை அங்கு அமரர் பேண -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –ஸ்ரீ ஆழ்வாரைப் போலே-பயமும்-பய நிவ்ருத்தியும் இன்றிக்கே ஸ்ரீ ஆழ்வார் உடைய
வரியை உடைத்தான வீரக் கழலோடு கூடின திருவடிகளைச் சேர்ந்தவர்கள்-நிர்ப்பயமாய் வாழப் பெறுவார்கள் —ஸ்ரீ ஆழ்வார் இப் பாசுரத்தாலே பயம் தீர்க்கையாலே இவர்களுக்கு வாழ்வேயாய் இருக்கும் –

தீ வினைக்கரு நஞ்சே –பகவத் பிராப்திக்கு பிரதி பந்தகமான துஷ் கர்மங்களுக்கு ஆற்ற ஒண்ணாத-
நஞ்சாய் உள்ளவனை–நல் வினைக்கு –பலாபிசந்தி ரஹீதமான கர்மத்தை பரிகரமாக உடைய பக்திக்கு -(பிரபத்திக்கு என்றே கொள்ள வேண்டும் )-இன்னமுதினை –நிரதிசய போக்யனாய் – பரம ப்ராப்யனாய் உள்ளவனை –இப்படி பாபங்களை போக்குகைக்கும் –தன் பக்கல் ருசி ஜநகன் ஆகைக்கும் அடி என் -என்ன –பூவினை மேவிய இத்யாதி –பிராட்டியோடு சேர்த்தியாலே–பெரிய பிராட்டியாருக்கு வல்லபன்-ஆகைக்கு மேற்பட இல்லை இறே மேன்மைக்கு–புன்மை இத்யாதி –அம் மேன்மை  உடையனாய்  இருக்கச் செய்தே –அவளோட்டை சேர்த்தியாலே- ஆஸ்ரிதர்க்கு ஸூலபனாய் உள்ளவனை –புன்மை எள்காது ஆவினை மேய்க்கும் –ஸ்ரீயபதி யான தன் மேன்மைக்கு இது போருமோ –இது புல்லிது என்று இகழாது -பசுக்களை மேய்க்கும் ஆயிற்று –வல்லாயினை –மற்றும் பசு மேய்ப்பார் உடம்பில் துளி நீர்  ஏறிட்டு கொள்ளிலும் அதுக்கும் அவசரம் இல்லாதபடி இருக்குமவனை –அன்று உலகு இத்யாதி-
ஒரூரை ரஷித்தால் போலே இப் பூமியாக ரஷிக்குமவனை –ஏற்றை –லோகத்தை அடைய தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொள்ள பெற்ற  படியால் மேணானித்து இருக்கிறவனை –-இத்தால் வந்த பலமும் தன்னதாய் இருக்கும் படி–எம்மானை –அவன் வெற்றியாலே மேணானித்து இருக்க வல்லன் ஆனால் போல் ஆயிற்று- இவர் அவன் செயலுக்கு தோற்க வல்லபடி –எஞ்ஞான்று தலைப் பெய்வனே
அவன் படிகள் இவை யான பின்பு-நான்  இழவல்லது பொருள் இழவு இல்லை இறே – அப் பேறு பெரும் நாள் என்றோ என்கிறார் -(வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே ) அபீதா நீம் சகாலஸ் ஸ்யாத்-பதினாலு ஆண்டு கழித்தால் வரக் கடவது இறே –அந்நாள் இன்றாகப் பெறுவது -காண் -என்றாப் போலே –

பேற்றுக்கு விரைந்து பேசுகிற படி-தீய கருமங்களை ஒழித்து கைங்கர்யம் செய்பவர்க்கு இன்ப மயமாய் இருந்து -பக்தியை வளர்ச்சி செய்பவன்-நல் வினை-என்றது முக்திக்கு வியாஜ்ய காரணமான பிரபத்தியை புன்மை எள்காது-ஆவினை மேய்க்கும் வல்லாயனை -திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி செங்கனிவாய்-எங்கள் ஆயர் தேவே– எள்காது-பெறாப் பேறு பெற்றால் போன்று அன்றோ உகப்பான் –நாயகனுடைய ஸம்ச்லேஷத்துக்கு விரைகின்ற நாயகி இரங்கியுரைக்கும் பாசுரம் இது. கொடிய துன்பத்தை விளைக்கின்ற தீக் கருமங்களை எளிதில் ஒழிப்பவனும், தன் பக்கல் அடிமை செய்வார்க்கு நிகரற்ற இன்பமூர்த்தியாயிருப்பவனும், தாமரையைத் தனது சிறப்புக்கும் ஸௌகுமார்யத்துக்கும் அழகுக்கும் தக்க இடமாகக் கருதி அதில் வீற்றிருப்பவளாய்ப் புருஷகார பூதையான பிராட்டிக்கு நாயகனும், திருவுள்ளத்தில் சிறிதும் வெறுப்பின்றியே உகப்புடனே பசுக்களை மேய்க்கப்பிறந்து, வேஷம் கொண்டவன் போலன்றிச் சாதி குணந்த தொழிகளில் உறைந்து நிலைநின்ற இடையனும் இரண்டடிகளாலே ஸகல லோகங்களையும் அளந்து கொண்ட மேம்பாடுடையனுமான எமது தலைவனை எப்பொழுது சேரப்பெறுவேன் என்கிறாள்.
அடியார்கட்குப் பகை தீர்ப்பவனும் அடிமைக்கு இனியனும் புருஷகாரமான திருமகளுக்குக் கணவனும் அனபர்க்கு எளியனும் எல்லாவுலகையும் கீழ்ப்படுத்தியவனுமான எம்பெருமானை எப்பொழுது சேர்ந்து அநுபவிக்கப் பெறுவேனென்று ஆழ்வார் பேற்றுக்கு விரைந்து பேசுகிறபடி.–‘தீவினைக்கு அரு நஞ்சு’ என்றது- கொடிய துன்பத்தை விளைக்கிற தீய கருமங்களை எம்பெருமான் எளிதில் ஒழிப்பவன் என்றவாறு.‘நல்வினைக்கு இன்ன முதம்’ என்றது- தன் விஷயத்தில் கைங்கரியம் செய்பவர்கட்கு இன்பமயமாயிருப்பவன் எம்பெருமான் என்றவாறு;-அவர்கள் பக்தியை அழியாது வளரச் செய்பவன் என்க. முக்திக்க வ்யாஜ காரணமான ப்ரபத்தியை இங்க நல்வினை என்றது.புன்மை யெள்காது ஆவினை மேய்க்கும் = மகிவும் நீச ஜாதியாகிய பசுக்கையோ நாம் மேய்ப்பது’ என்று ஜுகுப்ஸை கொள்ளாமல்“ திவத்திலும் பசுநிரை மேய்ப்புவத்தி செங்கனிவா யெங்களாயர் தேவே!” (திருவாய்மொழி 10-3-10). என்கிறபடியே ‘பசுமேய்க்கும் பாக்யம் பெற்றோமே!’ என உவந்து மேய்ப்பவனென்றவாறு.–‘தாவின வேற்றை’ என்றவிடத்து ‘ஏறு’ என்றது விளக்கவந்த உபசார வழக்கு; ஏறு காளை சிங்கம் இச்சொற்கள் ஆண்பாற்கு வருகையில் சிறப்புப் பொருளுணர்த்துவனவாம்; இது வடமொழி மரியாதை.

தீ வினைக்கரு நஞ்சை-கொடிதாய்-துக்கத்தை விளைப்பதான-துஷ் கர்மத்துக்கு ஆற்ற அரிய நஞ்சானவனை–ஆறு நஞ்சினை -என்றால்-எழுத்து மேறும் -பாடமும் அல்ல-அரு நஞ்சினை -நல் வினைக்கின்ன முதத்தினை-என்னவுமாம்நல் வினைக்கின்ன முதத்தினை-ஆஸ்ரயண ரூபமான நல் தொழிலுக்கு நிரதிசய ரஸமான நித்ய போக்யமானவனை-பூவினை மேவிய தேவி மணாளனை-அத்யந்த போக்யதையைப் பூரிப்பதான போக்ய அதிசயத்துக்கு ஸூசகமாய் இருக்கிற பூவிலே
நித்ய வாஸத்தை யுடையளாய்-நிரதிசய வை லக்ஷண்யத்தை யுடைத்தான ஸ்வரூபாதிகளாலே த்யோதமானையாய் இருக்கிற-பெரிய பிராட்டியாருக்கு நித்ய போக்யனானவனை-(இதம் இத்தம்-ஸ்வரூபத்துக்கும் ஸ்வாதந்தர்யத்துக்கும் நீயே நிரூபணம் பட்டர்) புன்மை எள்காது ஆவினை மேய்க்கும் வல்லாயனை-இந்த மேன்மை யுண்டாய் இருக்கச் செய்தே சிறுமை என்று இகழாதே பசுக்களை மேய்க்கக் கடவனாய் அதிலே நிலை நின்ற சிக்கனவை யுடைய இடையனானவனை-அன்றுலகீரடியால் தாவின வேற்றை-இப்படி இனியனானாலும் தன்னுடைமை பிறர் கொள்ளும் அளவில் தன் கால் கீழே இட்டுக் கொள்ளும் மேனாணிப்பை யுடையவனை–எம்மானை-கீழ்ச் சொன்ன ஸ்வபாவங்களைக் காட்டி
என்னை அடிமையாக்கிக் கொண்ட ஸ்வாமி யானவனை–எஞ்ஜான்று தலைப் பெய்வனே –இப் பிரகாரங்களாலே கிட்டக் குறை யில்லை-அது எக்காலம் என்றதாயிற்று –

தாத்பர்யம்--இப்படி பகவத் விலக்ஷண பக்தி உக்தராய் இருக்க சம்சாரி வ்யாவருத்தராய்
அதே சமயம் நித்ய ஸூரிகளுடன் சேரப் பெறாமையால் ஆற்றாமை மிக்கு அத்யந்த வல்லபையான – கமல வாஸினியான பெரிய பிராட்டியார் யுடைய -புருஷகாரம் இருக்க ஆஸ்ரிதருக்கு அத்யந்த துக்க ஜனகமாய் உள்ள பாபங்களைப் போக்கி பிரபத்திக்கு -நல்வினைகள் -அவனே பலம் -அவன் முக விலாசத்துக்குச் செய்ய வேண்டுமே-கர்மமும் கைங்கர்யத்தில் புகுமே-அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம்-மேன்மையைப் பாராதே இடைக்குலத்தில் பிறந்து பசு மேய்த்தும்
மஹாபலி அபஹரிக்க தனது உடைமையை -கால் கீழ் இட்டுக் கொண்ட விசித்திர சரிதங்களால் புகர் பெற்று-இவ்வண்ணமாக பரத்வ ஸுலபயங்களைக் காட்டி என்னை ஆளாக்கிக் கொண்டான்
எப்போது நித்ய கைங்கர்யம் பெறப்போகிறேனோ என்று பிராப்தி -காலத்தைப் பிரதேஷிக்கிறார்- எதிர்பார்த்து அருளிச் செய்கிறார் –

8-3-அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும்-ப்ரவேஸம்-

அங்கும் இங்கும் -பிரவேசம் –
மேல் திருவாய் மொழியிலே பத்தாம் பாசுரத்தில்
ஒரு கோல நீல நல் நெடும் குன்றம் வருவது ஒப்பான் -என்று வடிவு அழகை அனுசந்தித்தவாறே-
தாம் பட்ட கிலேசத்தை மறந்து -சிலர் விரும்பியதுவே காரணமாக-இவ் வடிவோடே சம்சாரத்திலே தனியே வந்து அவதரித்து உலாவா நிற்பன் –
பகைவர்களும் -நடுநிலையரும்-பிரயோஜனங்களை விரும்புகின்றவர்களாயும்-
இவனுக்கு பரிவுடையார் ஒருவரும் இன்றக்கே இருக்கிற சம்சாரத்திலே-
அடியார்கள் விரும்பினவற்றைத் தருவதற்காக சம்சாரிகள் இனத்தனனாய்-
சிலருக்கு பரதந்தரனாயும்-
அவதாரத்துக்கு பிற்பட்டாருக்கு கோயில்களிலும் வீடுகளிலும் அண்மையினில் இருப்பவனாயும்-
இருந்து கொண்டு இருக்கிற இவனுடைய சௌகுமார்யம் அறிந்து பரியக் கூடியவர் ஒருவரும் இலர்-
நானும் உதவப் பெறுகின்றிலேன் என்று அவன் தனிமைக்கு–வெறுத்து அஞ்சினாராக

நமக்கு பரிவர் இலர் -என்று அஞ்ச வேண்டா
முமுஷுக்களும் முக்தரும் நித்தியரும் -கலக்க மில்லா நல் தவத்தர்-கரை கண்டோர் -ஆகிய இவர்கள்
நம் மேல் பரிகையே யாத்ரையாக இருக்குமவர்கள் அல்லரோ –
அன்றியும் நமக்குத் தான் வேறே சிலர் பரிய வேண்டி இருந்ததோ என்று சர்வேஸ்வரன்-
தன் வரம்பில் ஆற்றல் உடைமையைக் காட்டி-மா கடல் தன்னை கடைந்ததைக் -காட்டி அருள சமாதானம் செய்ய-
சமாதானம் அடைந்தவராய் உவகையர் ஆகிறார் – –
அதுக்கு மேலே பரியாமல் போனால் சேஷத்வம் போகுமே என்ற கவலை பட்டார் –

அன்றிக்கே –
சர்வேஸ்வரன் மேல் பரிகைக்கு தமக்கு கூட்டு ஆவார் இல்லை என்று தம் தனிமைக்கு-வெறுக்கிறார் என்றும் சொல்வார்கள்
நித்ய ஸூரிகள் பகவத் விஷய அனுபவத்தில் நோக்கு உள்ளவர்கள்-
சம்சாரிகள் ஐம்புல இன்பங்களிலே நோக்கு உள்ளவர்கள் –
பிரமன் சிவன் முதலானவர்கள் தங்களுக்காக–
நீள் நகர் நீள் எரித்து அருளாய் -திரு விருத்தம் -92–என்று அவனை அம்புக்கு இலக்காக்குதல் –
ஏவிக் கார்யம் செய்து கொள்ளுதல் செய்பவர்கள் –
ஆகையால் பரிகைக்கு தமக்கு ஒரு துணை இல்லை என்று தன் தனிமைக்கு வெறுக்கிறார் -என்றபடி

சேஷமாக உள்ள இவ் வாத்ம வஸ்துவுக்கு-சேஷியே ரட்ஷகன்-என்னும் வெளிச் சிறப்பு –அறிவுக்கு முதல் அடி –
சேஷ வஸ்து ஆகில் சேஷிக்கு அதிசயத்தை விளைத்து தன் ஸ்வரூபம் பெறுமது ஆகையாலே
அவன் காப்பாற்றப்படுமவன் நாம் காப்பாற்றுமவர் என்னும் அளவும் செல்ல அறிகை -ஸ்வரூபத்தை உள்ளபடி உணருகையாவது-
அர்த்திக்கும் அளவும் ஒழிய பரியத் தேடுவது என் –பிரார்த்தனைக்கு மட்டும் இல்லையே அவன் -மங்களா சாசனமே ஸ்வரூபம் —

இத் திருவாய்மொழி நம் ஆழ்வார் உடைய திருப் பல்லாண்டு என்று அருளிச் செய்வர்-
வீற்று இருந்த போற்றி -சப்தத்தால் அங்கு திருப் பல்லாண்டு –

மூன்றாம் திருவாய் மொழியில் -அவனுடைய நிஸ் சங்க ஸூலபதையை அனுசந்தித்து இதர சங்க நிவ்ருத்தி பூர்வகமாகத்
தாம் தத் விஷயத்திலே சக்தரான படியை அனுசந்தித்தவர் –
அவன் ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக இந்த விபூதியில் தன் போக்யதையையும் ஸுகுமார்யத்தையும் பாராதே
ஆஸூர ப்ரப்ருதிகளும் அந்நிய பரருமான திரள்களுக்கு நடுவே அஸஹாயனாய் வந்து வர்த்திக்கிற இதுக்கு அஞ்சி
அவனுடைய அதிசயித போக்யதையையும்
விரோதி நிரசன உத்தியுக்தமான ஆயுதவத்தையும்
சஹாயாந்தர ராஹித்யத்தையும்
க்ஷண காலம் காணாது ஒழியிலும் கல்பமாம்படி அச்சத்தை விலைக்கும் படி ஆபி ரூப்ய அதிசயத்தையும்
ஆயாச சஹம் அல்லாத ஸுகுமார்யத்தையும்
ரமணீய விக்ரஹணாய் வைத்து விரோதி நிரசன அர்த்தமாக வியாபாரிக்கும் படியையும்
கிஞ்சித்க்கார அனுகுணமாக ஸ்ரீ யபதித்வத்தையும்
அசேஷ ஜன சம்ச்லேஷ ஸ்வ பாவத்தையும்
அதிசயித ஞானர்க்கும் அறியவரிய ஆகாரத்தையும்
அத்யந்த விலக்ஷண புருஷரும் சேவிக்கும் படியான அதிசயித சக்தி யோகத்தையும்
அனுசந்தித்து ஏவம் பிரகார விசிஷ்டனானவன் தண் அழகையும் மார்த்வத்தையும் பாராதே ப்ரதிகூல பூயிஷ்டமான சம்சாரத்திலே
அஸஹாயனாய் வர்த்திக்கிற அளவிலே அடிமை செய்யப் பெற்றிலோம் என்று தளர்ந்தவர் –
அவன் தன்னுடைய ஆஸ்ரித ஸாமக்ர்யத்தையும் அதிசயித சக்தியையும் காட்டக் கண்டு
ஸமாஹிதராய் யுகந்து தலைக் கட்டுகிறார் –

அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும்
எங்குமினையை யென்றுன்னை அறியகிலாதலற்றி
அங்கம் சேரும் பூ மகள் மண் மகளாய் மகள்
சங்கு சக்கரக் கையவனென்பர் சரணமே-8-3-1-

அபிமதம் அவன் -அபிமத சாதனம் இல்லை -இதுவே ஆழ்வார் கொள்கை –இவர் நெஞ்சில் அவன் சௌகுமார்யமே ஆயிற்று உறைத்து இருப்பது

எங்குமினையை யென்றுன்னை அறியகிலாதே-நிரதிசய ஸுகுமார்ய யுக்தன் என்று

கருமுகை மாலை போலே இருக்கிற உன் படி அறியாதே –போக்ய பூதன் என்று அனுபவியாதே-புருஷகார பூதன் அபீஷ்ட பல பிரதன் என்பர்

ஸ்வரூப அனுரூபம் மங்களா சாசனம் என்றவாறு

சரணமாகிய நான் மறை நூல்களும் சாராதே
மரணம் தோற்றம் வான் பிணி மூப்பு என்றிவை மாய்த்தோம்
கரணப் பல் படை பற்றறவோடும் கனலாழி
அரணத்தின் படை ஏந்திய ஈசற்காளாயே–8-3-2-

க்ஷேமம் கரமான-சேஷ பூதராக–சேஷிக்கு அதிசயம் பண்ணி பரியாமல்-ஆத்தும லாபத்துக்காக வணங்குகிற  கேவலரை நிந்திக்கிறார்

தாதர்த்தம் ஸ்வரூபமாக இருக்க ஸ்வார்த்ததா -தங்கள் பிரயோஜனத்துக்காக இருப்பதே

ஈஸ்வரன் விடினும் அடியார்களை விடாத திண்மையை உடைய படை ஆதலின் திண் படை

ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை
தாளும் தோளும் கைகளை யாரத் தொழக் காணேன்
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–8-3-3-

அழும் தொழும் ஸ்நேக பாஷ்ப அஞ்சலி யோடே ருசிர சானுக்களின் கூவிக் கொள்ளும் பிரியா வடிமைக்குச் சரணே சரண்
என்று வாழும் வில்லும் கொண்டு பந்துவும் பிதாவும் அவரே என்கையும் –சூர்ணிகை -127 –

விரோதி பூயிஷ்டமான ஜகத்தில் -சஹாயாந்தர ராஹித்யம் -சஹாயாந்தர நிரபேஷ்யம் இத்தை கொண்டே பிர பத்திக்கு ஏற்றம்-அதுவே குறையாகப் படுகிறதே பரிந்து இருக்கும் ஆழ்வாருக்கு

ஆளுமாளார் –
விபூதி த்வயத்திலும் புரிவதற்கு ஆள் இல்லை -தனியே ஒருவரே ஆள வேண்டும் என்று இருக்கிறார்
நித்ய ஸூரிகள் பகவத் அனுபவத்தில் நோக்கு உள்ளவர்கள்-சம்சாரிகள் ப்ரயோஜனாந்தரங்களிலே அந்ய பரர்

தொழக் காணேன்
தொழுகையும்-பரிதலும்-பர்யாயம் போலே காணும்–தொழக் காணப் பெறுகின்றிலேன்

ஆளுமாளார் -சுமப்பார் தாம்– பின் செல்வார் மற்றில்லை -என்கிறது
பரிவரான நீர் அவற்றுக்கு அன்றோ -என்று தம்மை ஏவுகைக்காக

ஞாலத்தே-
பரம பதத்தில் இருந்து அஸ்தானே பய சங்கை பண்ணுகிறேனா-
பிரம்மாஸ்திரம் விடுவார் நாக பாசத்தை இட்டுக் கட்டுவார்
அழைத்து வைத்து மல்லரை இட்டு வஞ்சிக்க தேடுவர்
பொய்யாசனம் இடுவார்
ஆகிய இவர்கள் இருக்கிற தேசத்தில் வாழா நின்றால் நான் அஞ்சாது செய்வது என் –

ஞாலம் போனகம் பற்றி ஓர் முற்றா வுருவாகி
ஆலம் பேரிலை அன்ன வசம் செய்யும் அம்மானே
காலம் பேர்வதோர் காரிருளூழி யொத்துளதால் உன்
கோலம் காரெழில் காணலுற்றாழும் கொடியேற்கே--8-3-4-

ஆலம் பேரிலை அன்ன வசம் செய்யும் அம்மானே-ஆலிலை பேர் சொல்லும் படி -வயிற்றில் இடம் இருக்கும்
இலையில் இடம் இல்லையே-இடம் வலம் கொண்டு கண் வளர்ந்து -திருப் பாற் கடல் போலே திரு உள்ளம்

பேரிலை-பெயருகிற இலை-அதாவது-முகிழ் விரிகிற இலை -என்றபடி –ஆலிலை என்ற ஓர் பெயர் மாத்ரமான இலை-பெரிய இலை என்று விபரீத லஷணையாய்-சிற்றிலை -என்னுதல் –

கோலம் காரெழில் காணலுற்றாழும் கொடியேற்கே-உலக பயத்துக்கு உம்மைப் பற்றி போக்குவேன்
உம்மைப் பற்றிய பயம் போக்க முடியாத பாவி அன்றோ -ஆழ்ந்து போன கொடியேன் -எல்லாரையும் இரட்சிக்கின்ற வஸ்து அன்றோ பிரளயத்தில் அகப்படப் புக்கது -என்று அதற்கும் அஞ்சுகிறார்-அகடிதகடநா சாமர்த்தியமும் -ரக்ஷகத்வம் சக்தியும் அன்றோ என்னில் இவையே இவருக்கு அஞ்ச ஹேதுக்கள் ஆனதே-

1-தனக்கு ஜீரணம் ஆகாத பூமியை உண்டலும்
2-ஜீரணம் ஆகாது -என்று அறியாத இளைஞன் ஆகியும் –
3-பிரளயத்தில் சிறிய இடத்தை உடைய ஆல் இலையிலே திருக் கண் வளர்ந்து அருளுகையும் –
4-அதிலே கிடந்த இடத்தில் கிடக்காமல் விளையாடுகையும் –
இவை எல்லாம் பயத்துக்கு இடங்களாய் இருக்கிற தாயிற்று இவருக்கு –

கொடியார் மாடக் கோளூரகத்தும் புளிங்குடியும்
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியார் அல்லல் தவிர்த்த வஸைவோ அன்றேலிப்
படி தான் நீண்டு தாவிய வசவோ பணியாயே–8-3-5-

கொடிக்கு பயப்பட வல்லார் இவரைப் போன்றார் இலர் –கொடி இடை மடவாருக்கு பயப்படுவார் –

அளந்த திருவடி பிடிக்கவோ -எய்த்த திருத் தோள்களை பிடிக்கவோ இவருக்கு உத்தேச்யம்

உகந்து அருளின இடங்களிலும் செய்ய முடியாதன இல்லை-
சொல்ல நினையாமல் இருக்கிறான் இத்தனை -என்று இருக்கிறார்

பணியா வமரர் பணிவும் பண்பும் தாமேயாம்
அணியாராழியும் சங்கமுமேந்துமவர் காண்மின்
தணியா வெந்நோய் உலகில் தவிர்ப்பான் திரு நீல
மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே–8-3-6-

திரு நீல மணியார் மேனியோடு –
நீல மணி போலே ஸ்ரமத்தை போக்கக் கூடியதாய் சுகுமாரமான வடிவோடு-
இங்கே வர வேண்டுமானால் அவ்வடிவோடே வர வேண்டுமோ-
அத்தை கழற்றி வைத்து வரக் கூடாதோ -இச்சா க்ருஹீதாம் அன்றோ -வடக்கே அதனால் வெள்ளை திருமேனி பரிவு அதிகம் என்பதால்

வருவார் செல்வார் வண் பரிசாரத்து இருந்த என்
திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வதென்
உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும்மோடு
ஒருபாடு உழல்வான் ஓரடியானும் உளன் என்றே-8-3-7-

ஸ்ரம மனம் சூழும் ஸுகுமார்ய பிரகாசம் ஆய்ச்சேரியிலே –சூர்ணிகை -173-மனம் சூழும் படி ஸூ குமார்யம் பிரகாசிப்பித்தானே
ஒரே பாசுரம் -மங்களா சாசனம்

மாயக் கூத்தன் -சாதரரைப் பரிசு அழிக்கும் சேஷ்டித ஆச்சர்யம் குளத்தே கொடி விடும் சூர்ணிகை -173-அங்கேயும் ஒரே பாசுரம் –

அராயி காணே விகடே கிரிம் கச்ச ஸதான்வே ஸ்ரீம் பிடஸ்ய சத்த்வபி தேபிஷ்ட்வா ஸாதயாமசி -ருக்கு -8-அஷ்டகம் -8-அத்யாயம் -13-வர்க்கம் –முதல் ருக்கு மந்த்ரம்
த்வயி அராயி சதி –குழந்தாய் நீ இஹ லோக பரலோக ஐஸ்வர்யம் இல்லாமல் இருந்தாயானால்
த்வயி காணே சதி -நீ வெளிக்கண்ணும் உள் கண்ணும் இல்லாதவனாய் இருந்தால்
த்வயி விக்டே சதி -நீ ஆத்யாத்மீகம் -ஆதி பவ்திக்கம் -ஆதி தைவிகம் -தாப த்ரயங்களால் பீடிக்கப் பட்டு இருந்தாயாகில் —கடம் -தாஹம்
த்வயி ஸதான்வே சதி -புருஷார்த்தங்களை பெற முடியாமல் பிரதிபந்தகங்கள் இருந்தால்
ஸ்ரீம் பீடஸ்ய -திருமகளுக்கு திரு மார்பினால் பீடமாகிய ஸ்ரீ நிவாசனுடைய
கிரிம் -திருமலையைக் குறித்து
ஸ்ரீம் பிடஸ்ய சத்த்வபி கச்ச -ஸ்ரீ நிவாசனுடைய பக்தர்களோடு சென்று சேர்
தேபி -அவர்கள் மூலமாகவே
த்வா ஸ்ரீம் பீடஸ்ய ஸாதயாமசி -நீ ஸ்ரீ நிவாஸனை வேண்டிக் கொள்ள தகுதி பெற்று இருக்கிறாய்-
சமர்பிக்கத் தகுதி பெற்று இருப்பாய் என்றுமாம் –

ஒருவர் இலர் என்று கை வாங்கி இருப்பர்-அது வேண்டா-
ஒருவன் உளன் என்று என் இடையாட்டம் சொல்லுகின்றிலர்கள் -என்கிறார் -என்றபடி –செய்வது என் –
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்றே இருக்கும் ஒருவன் உளன் என்று சொல்லார் செய்வது என் –

என்றே என்னை உன் ஏரார் கோலத்திருந்து அடிக் கீழ்
நின்றே ஆட்செய்ய நீ கொண்டருள நினைப்பது தான்
குன்றேழ் பாரேழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும்
நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே-8-3-8-கொண்டு அருளி -பாட பேதம் –

உம் திருவடிக் கீழ் பரிகைக்கு நிலை ஆளாக என்னைக் கொள்வது என்று–அவனைக் கேட்கிறார்-
சர்வஞ்ஞன் -மடி பிடித்துக் கேட்க்கிறார் –

வண் பரிசாரத்து இருந்த -என்ற எழுந்தருளி இருக்கிற இருப்பு தனக்கு பரிய வேண்டி இருக்க–
அதி மானுஷ  செயல்களுக்கு –மங்களா சாசனம் செய்து நிற்க வேண்டாவோ -என்கிறார் மேல்-
இருந்த திருக் கோலம் -ஈரடிக்கு பாடினால் மூவடிக்கு -பாட வேண்டாவோ –இருந்தவனுக்கு பாடினால் நடந்தவனுக்கு பாட வேண்டாவோ

திருமால் ! நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம்
பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசியென்
ஒரு மா முதல்வா ஊழிப் பிரான் என்னை யாளுடை
கரு மா மேனியன் என்பன் காதல் கலக்கவே-8-3-9-

நம்மிடத்தில் பரிவு கொள்ளுவதற்காக பிரமன் முதலானோர் இருக்க-நீர் இங்கன் அஞ்சுகிறது என் -என்ன
அவர்கள் உன் சௌகுமார்யத்தை அறிவார்களோ -என்கிறார்-

திருமால்-திருமால் என்று பிரித்து விளிக்கிறார்-நீயும் பிராட்டியுமான சேர்த்திக்கு மங்களா சாசனம் செய்வார்களோ அவர்கள்-

ப்ரஹ்மாதிகளுக்கும் ப்ரேமாந்தகனான அடியேனாலும் உனக்கு சத்ருசமாக பரிய ஒண்ணாதே

காதலால் கண் இல்லாதவனான என் பரிவும் உனக்கு ஒத்தது அன்று என்றதாயிற்று-

ஸுகுமார்யம் பாராமல் மதுரமான -உபகாரகனாய் வியாபாரித்து -என் போல்வாரை அங்கீ கரிக்க
திவ்ய மேனிகள் உடன் வந்து -என்ன பாசுரம் இட்டு சொல்ல முடியும் –

கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர்
துளக்கமில்லா வானவர் எல்லாம் தொழுவார்கள்
மலக்கமெய்த மா கடல் தன்னைக் கடைந்தானை
உலக்க நாம் புகழ் கிற்பது என் செய்வதுரையீரே–8-3-10-

இவருடைய அச்சத்தைப் போக்குகைக்காக–
நம்மிடையே சனகன் முதலான முனிவர்கள் -முக்தர்கள் -நித்யஸூரிகள் –இவர்கள் கிட்டி நின்று அபிமத சாதனமாக இல்லாமல் அபிமதமாகவே பரிமாறுகிறார்கள் -தொழுகின்றார்கள்-
நாம் தான் அரிய செயல்களும் செய்ய வல்லோம்-ஆன பின்பு நீர் நம் பொருட்டு அஞ்ச வேண்டாம் காணும் -என்ன-
முன்பு அச்சங்களுக்கு காரணங்களாக இருந்தவை தாமே-அச்சம் நீங்குவதற்கு காரணமாக
அதனை நினைத்து இனியர் ஆகிறார்-முக்தர் கரை ஏறி -ஆப்நோதி என்பதின் தமிழ் ஆக்கம் –
இவர் தமக்கு இன்ன போது இன்னது அச்சத்துக்கு காரணமாம்-இன்ன போது இன்னது பரிகாரமாம் என்று தெரியாதே அன்றோ-

முன்பு தன் மிடுக்கைக் காட்டின இடங்களில் அதனை நினையாதே-அதனையே சொல்ல இப்போது
சமாதானத்தை அடைந்தவர் ஆயினர்-இது –
இப் பிரபந்தம் தலைக் கட்டக் கடவது ஆகையாலே யாதல்-
ஈஸ்வரனுடைய ஜீவன அதிர்ஷடத்தாலே யாதல்-

உரையா வெந்நோய் தவிர அருள் நீண் முடியானை
வரையார் மாட மன்னு குருகூர்ச் சடகோபன்
உரையேய் சொல் தொடை ஓராயிரத் துளிப்பத்தும்
நிரையே வல்லார் நீடுலகத்தப் பிறவாரே–8-3-11-

நிகமத்தில்-இத் திருவாய்மொழி கற்பவர்கள்-அவன் தனிமை கண்டு பயப்படும் சம்சாரத்தில்-பிறவார் -என்கிறார் –
பயம் ஊட்ட வல்ல சம்சாரம் -என்றபடி –ஒரு நாடாக மங்களா சாசனம் செய்கிற தேசத்திலே சென்று நித்ய அனுபவம் பண்ணப் பெறுவர்-

உரையா வெந்நோய் –
சொல்லுதற்கு முடியாததாய் -மிகக் கொடியதான நோய்–
தம் அளவில் பொறுத்தல் அன்றிக்கே–உபய விபூதி நாதனுக்கு என் வருகிறதோ என்று அஞ்சின நோயே அன்றோ

தவிர அருள் நீண் முடியானை –கிரீடம் விபூதி பூர்த்தி -சக்தி பூர்த்தி-சர்வாதிக சேஷி
இது போகும்படிக்கு தகுதியாக திருவருள் புரியும் தன்மையனான-உபய விபூதி நாதனை –
இவர் அச்சம் போகும்படி -நீர் விரும்பிய காரித்தைச் செய்கிறோம் என்று தலையை-சிரக்கம்பனம் பண்ணினான் -துலுக்கினான் போலே காண் –
என்று அம்மங்கி அம்மாள் அருளிச் செய்வர்-
கிரீடம் தாழ்ந்தே –தொழுது எழும் நீண் முடி இவருக்கு — அவனுக்கு அருள் நீண் முடி

அன்றிக்கே-
இவ் ஆழ்வார் உடைய பயம் நீங்கிய பின் பாயிற்று உபய விபூதிக்கும்
இரட்ஷகனாய் சூடிய முடியும் நிலை நின்றதாயிற்று -என்ற படியுமாம்

வரையார் மாட மன்னு குருகூர்ச் சடகோபன் –
இவர் அச்சம் நீங்கின வாறே நிறைவு பெற்றதுமாய் நிலை உள்ளதுமாயிற்று திரு நகரியும்–

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -88-திருமால் உரு ஒக்கும் மேரு –புகழும் நல் ஒருவன் -3-4-

March 31, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

திருமால் தலைக் கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீ வினையே – களிப்புடனும் -வருத்தத்துடனும் பேசலாம்-ஸ்ரீ மத் பாகவத -உபதேசம் -காரணந்து த்யேய -கேட்டு -நினைத்து -இடைவிடாமல் எப்போதும் -கண்டு-ஸ்ரோதவ்ய –மந்தவ்ய நிதித்யாசிதவ்ய -த்ரஷ்டவ்ய-விராட் ஸ்வரூபம் -பாதாள லோகம் பாதம் -ஸத்ய லோகம் சிரஸ் – ஜெகதாகாரம் -ப்ரஹ்ம ஸ்வரூபம் த்யானம் -கை வராதே –கோல நீள கொடி மூக்கும் –திவ்ய மங்கள விக்ரஹம்-அந்தாமத்து அன்பு செய்து – கண்ணுக்கு அடங்கும் படி தன்னை அமைத்து -பிடித்துக் கொள்ளப் பண்ணுவான் -அவனே-நீராய் நிலனாய் –சிவனாய் அயனானாய் -வேதாந்தம் கோஷிக்கும்-கூரார் ஆழி வெண் சங்கு ஏந்தி வாராய் –உலகும் மகிழவே –-அதே போல் இங்கும் மேரு -ஸூர்யன் -போலி கண்டு திருப்தி அடைய மாட்டாரே –அன்ன கண்டும் -ஓக்க கண்டு திருப்தி இல்லாமல்-திருமால் உரு -அவன் ரூபம் –-திருமால் தலைக்கொண்ட -நல்ல அபிநிவேசம் தலைக் கொண்ட –ஞானாதிகம் அடியாக வந்த பித்து -பக்தியின் உச்சநிலையில் உள்ள எங்களுக்கு எப்படி தீ வினை வரும் –இவ்வளவு பக்தி மேலிட்டு இருந்தும் -பிரிந்து உள்ளதால் -தீ வினை இதுவே – பிரிவு ஆற்றாமை- மிக்கு புலம்புவதாகவும் கொள்ளலாம் –சிஹ்னமே பிதற்றி -மறக்காமல் இருக்கிறாள் அன்றோ –இரண்டுக்கும் முரண்பட்டு இல்லையே-பக்தர்கள் பக்கம் பாபம் அண்டாது-பாபம் தொலைந்தால் தானே பக்தி பிறக்கும் –பக்தி ஆரம்ப விரோதி தொலைந்து பக்தி செய்ய -க்ஷணம் விஸ்லேஷமும் பொறுக்காத துன்பம் வருமே –-இரண்டு துன்பமும் வேறு வகைகள்-இங்கே உள்ளவரை இவை இருக்குமே –புகழும் நல் ஒருவன் -3-4-இதன் விவரணம் –கூவுமாறு அறிய மாட்டேன்,-குன்றங்கள் அனைத்தும் என்கோ!-மேவு சீர் மாரி என்கோ! விளங்கு தாரகைகள் என்கோ!-3-4-2-இங்கும் குன்றமும் தாரகைகளும் உண்டே –

அவதாரிகை–இப்படி நாடு பழி சொல்லா நிற்கச் செய்தே -இத்தை சொல்லி பழி சொல்லும்படியாக
பெற்ற நமக்கு இனி ஒரு குறை உண்டோ -என்கிறாள்–இப்பாட்டில் சொல்லுகிறது என் என்னில் –
சர்வதா சத்ருசமாய் இருப்பதொரு வஸ்து -இல்லாதபடி இருக்கிற சர்வேஸ்வரன் – திரு மேனிக்கு-சேர்ந்து இருப்பதொரு உபமானத்தைக் கண்டால் –உபமான ரஹிதமாய் இருப்பதொரு வஸ்துவுக்கு-கதிர் பொறுக்கி யாகிலும்-இங்கனே ஒரு உபமானமாக உண்டாகப் பெற்றோம் -என்று –-இது ஆஸுவாச-ஹேது  வாகை யன்றிக்கே –அவ் உபமேயம் தன்னையே காண வேணும் என்னும்படியான-விடாயை உடைய – நமக்கு இனி ஒரு குறை உண்டோ -என்றது -ஆதல் –அன்றிக்கே-(ஜெகதாகாரம் கீழ்-சரீர ஆத்ம பாவம் -மலையே திரு உடம்பு -ஜகத் சரீரம் சர்வம் தே -இனி) அவனுடைய ஜகதாகாரதையை அனுசந்தித்தால் – அவ்வளவிலே பர்யசியாதே –அவனுடைய-அசாதாரண விக்ரஹத்தை காண வேணும் -என்னும் அபேஷை பிறக்கும்படியான -எனக்கு- ஒரு குறை உண்டோ -என்னுதல் –போலி கண்டு அழிகிற தலைவி ஆற்றாமைக்கு இரங்குதல் —

இப்படி ஸூ ஹ்ருத்துக்களும் நொந்து உரைக்கும் படி ஈடுபட்டவர் பகவத் ப்ராவண்யம் உடையாரைப் பாபம் ஸ்பர்சியாது இருக்க அனுபவ அலாப ஹேதுவான பாபம் நமக்கு எங்கனே வந்தது என்று
விஷண்ணரான (துன்புற்ற )பாசுரத்தை நாயகி வெறுத்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

திருமாலுரு வொக்கும் மேரு அம் மேருவில் செஞ்சுடரோன்
திருமால் திருக் கைத் திருச் சக்கர மொக்கும் அன்ன கண்டும்
திருமாலுருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது ஓர்
திருமால் தலைக் கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீ வினையே
– – -88-போலி கண்டு அழிகிற தலைவி ஆற்றாமைக்கு இரங்குதல் –

மேரு–மஹாமேருமலையானது
திருமால் உரு ஒக்கும்–திருமகன் கேள்வனான தலைவனது திருமேனியை யொத்திருக்கும்
அம் மேருவில் செம் சுடரோன்–அந்த மஹாமேருவின் அருகிலே விளங்குகிற சிவந்த ஒளியை யுடைய ஸூர்யன்.
திருமால் திரு கை திரு சக்கரம் ஒக்கும்–அத் தலைவனது அழகிய கையிலுள்ள திருவாழியை யொத்திருப்பன்;
அன்ன கண்டும்–(அவனுருவத்தையும் சக்கரத்தையும் நேரில் காணாமல்) அவற்றிற்றுப் போலியாயுள்ளவற்றையே கண்டும்.
திருமால் உருவோடு அவன் சின்னமே–அவனுருவத்தையும் அவனது அடையாளத்தையும்
(நேரிற் கண்டாற்போல அன்பு மிகுதியாற் பரவமடைந்து.) பேரிட்டுக் கூவும்படியான.
ஓர் திருமால்–ஒப்பற்ற செல்வமாக வேட்கை-போற்றத்தக்க வ்யாமோஹம் -பக்தி –
தலைக் கொண்ட நங்கட்கு–ஏற்றுக் கொண்டுள்ள எமக்கு
தீ வினை–(பிரிவுக்குக் காரணமான) பாவம்
எங்கே வரும்–எப்படி வரக்கடவது? (வரமாட்டாது.)

புகழ் ஓன்றும்மால் எப்பொருள்களும் தானே
நிகழ்கின்ற நேர் காட்டி நிற்க -மகிழ் மாறன்
எங்கும் அடிமை செய்ய இச்சித்து வாசிகமாய்
அங்கு அடிமை செய்தான் மொய்ம்பால் —
——24-கீழ்-இவர் அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று பாரித்தபடியே சர்வாத்ம பாவத்தைக் காட்டி அடிமை கொள்வதாக ஒருப்பட்ட சர்வேஸ்வரனுக்கு
உத்யோக மாத்ரத்திலே வயிறு நிறையும் அவன் பிரக்ருதிக்கும் வாசிகத்துக்கும் மேற்பட அடிமை செய்ய மாட்டாத தம் பிரக்ருதிக்கும் சேர வாசிகமாக அடிமை செய்து தலைக் கட்டுகிற புகழு நல ஒருவனில் -அர்த்தத்தை புகழ் ஒன்றும் மால் -என்று துடங்கி அருளிச் செய்கிறார் –

திருமால் உரு ஒக்கும் மேரு –ஸ்ரீ ய பதி உடைய வடிவோடு ஒத்திரா நின்றது மேரு வானது –வடிவாலும் –புகாராலும் -(மேரு சிகரி யாணாமாம் அஹம் -கீதை )-அம் மேரு இத்யாதி-அம் மேருவிலே சஞ்சரியா நிற்கிற ஆதித்யன் ஆனவன் –திருமால் திருக்கை திருச் சக்கரம் ஒக்கும் –வடிவார் சோதி வலத் துறையும் சுடர் ஆழியும் -என்கிறபடியே –அவன் கையிலே திரு வாழியைப் போலே இருக்கும் –அன்ன கண்டும் –இப்படியே அவனுக்கு போலியானவற்றைக் கண்டு வைத்தும் –திருமால் -இத்யாதி –ஸ்ரீயபதி உடைய -அந்த மேருவோடே ஒத்த திரு மேனியையும் –வலக்கை ஆழி இடக்கை சங்கம் -என்கிறபடியே –
அசாதாராண சிஹ்னத்தையும் காண வேண்டும்-என்று ஆசைப்பட்டு பிதற்றா நின்றுள்ள –அன்றிக்கே –
திருமால் உரு ஒக்கும் இத்யாதி-சர்வேஸ்வரன் திரு மேனியோடு ஒத்து இருந்தது மேரு –அதிலே சஞ்சரிக்கிற ஆதித்யன் அவன் கையில் திரு ஆழியோடு ஒத்து இருந்தான் –இவை இரண்டும் ஜகத் ஆகாரதைக்கு பல ஷணமாய் இருந்தது –அன்ன கண்டும்- ப்ருதக் ஸ்திதித்ய அநர்ஹ ஆதார ஆதேய பாவ -நியந்தரு நியாம்ய பாவ-சேஷ சேஷி பாவாதிகளாலே –இவை அவனுக்கு சரீரமாய் இருக்கிற படியை கண்டு வைத்தும் –(நியாம்யம் தார்யம் சேஷம் -மூன்றும் சரீர லக்ஷணம்-அப்ருதக் ஸித்த விசேஷணம்-விஸிஷ்ட ப்ரஹ்மமாகவே தானே இருக்கும்)த்வைதி தனித்தனியாகவே இருக்கும்
அத்வைதி ஒன்றாகவே இருக்கும்-விசிஷ்டாத்வைதி -பிரிந்து இருக்க யோக்யதை இல்லாமல் தனித் தனியாகவே இருக்கும்-(அன்ன கண்டும் -வேதாந்த அர்த்த-மதிநலம் அருள பெற்றதாலும் –-பிரணயிதவம் மிகுதியாலும் திருப்பதி அடைய மாட்டாரே ) திருமால் இத்யாதி –இப்படி ஜகதா காரனாய் இருக்கிற அளவில் பர்யவசியாதே –அவனுடைய அசாதாராணமான ரூபத்தையும் –அசாதாராணமான  சிஹ்னங்களையும் காண வேணும் என்று ஆசைப்பட்டு கூப்பிடும்படி –திருமால் –அடிக் கழஞ்சு பெற்ற பிச்சு –நிதித்யா ஸி தவ்ய-என்று விதேயமானது தான் இவருக்கு பிரகிருதி ஆயிற்று –(விதேயம்- விதிக்கப்பட்ட சாதனம் -ஸ்ருதி-இவருக்கு ஸஹஜ பக்தி -இவை ஸ்வ பாவம் இவருக்கு)-தலைக் கொண்ட –தலைக் கொள்கை யாவது -சிலர் பழி சொன்னார்கள் -என்று மீளாதபடி-முறுகு-கொளுந்துகை –நங்கட்கு இத்யாதி –இப்படி பகவத் விஷயத்தில் அவகாஹித்த நம்மை- அவஸ்யம் அநு போக்யத்வம்  -என்கிற வசனத்தைக் கொண்டு நம் கர்மம் நம்மை வடிம்பிட வற்றோ –என்கிறார் –முறுகு  – கொளுந்துகை -வயிரம் பற்றினது என்றபடி –முறுகு -வயிரம் -நெருப்பானது வயிரத்தில் பற்றினால்-அவிக்கப் போகாதது போல் –ஒருத்தராலும் மீட்க்கப் போகாது என்றபடி –த்ருடமாகை -என்றது ஆயிற்று –அவனைக் காண வேண்டும் என்ற உறுதிப்பட்டு நின்ற இவ் அபிநிவேசம் நமக்கு பிறந்த பின்பு-பல ப்ராப்தியில் எவ்விதமான குறையும் நேரிடாது என்று நிச்சயித்து ஹ்ருஷ்டரானார்-

இடைவிடாமல் நாம உச்சாரணம் பண்ணி வருகிற நல்லோமான நமக்கு தீவினை எங்கிருந்து வந்தது என்று தலைவி வெறுத்து பேசும் பாசுரம்-திருமாலுரு வொக்கும் மேரு-அவளது பொன்னிறமான திருமேனி கலப்பதால் தானும் பொன்னிறம் பொலியப் பெற்று-எம்பெருமான் பெரிய திரு மேனி பொன்னிறமான மேருவை ஒக்கும்-அன்ன கண்டும்-நேரில் கண்டால் போலே -அன்பு மிகுதியால் பரவசம் அடைந்து இத்தனை பேரிட்டுக் கூவும்படியான வ்யாமோஹம் பெற்ற நமக்கு பிரிவுக்கு அடியான பாவம் எங்கனே உண்டாயிற்றோ – செய்யதோர் நாயிற்றைக் காட்டி சிரீதரன் மூர்த்தி இது என்னும் -போல அன்றோ வாய் பிதற்றுகிறாள் – ஜன்மாந்தர சகஸ்ரேஷூ தபோ ஞான சமாதிபி-நாராணாம் ஷீண பாபா நாம் கிருஷ்ணே பக்தி ப்ரஜாயதே –என்கிறபடி பாபம் கழிந்தால் தானே பக்தியே பிறக்கும் -பக்தியின் மேல் எல்லையில் இருந்தும் – பேறு பெறாமைக்கு காரணமான பாபங்கள் வர வழி என்னவோ -என்று வருந்தி உரைக்கிறார் –போலிகண்டு அழிகிற தலைவி ஆற்றாமைக்கு இரங்கி யுரைக்கும் பாசுரம். எம் பெருமானை நேராக ஸேவிக்கப் பெறுமளவில் மாத்திரமே யல்லாமல் அவனது போலியைக் காணுமளவில் அவனாகவே பாவித்து இடைவிடாது நாமோச்சாரணம் பண்ணி வருகிற நல்லோமான நமக்கு இங்ஙனே விஹவேதனைக்குரிய தீவினை எங்கிருந்து வந்ததென்று தலைவி வெறுத்துரைக்கிறாள்.-திருமாலுரு வொக்கும் மேரு = ஸ்ரீமஹாலக்ஷ்மியின் பொன்னிறமான திருமேனியினொளி கலப்பதனால் தானும்,-பொன்னிறம் பொலியப்பெற்ற எம்பெருமானது பெரிய திருமேனி பொன்மயமான பெரிய மேருபர்வதம் போன்றிருக்குமென்க.–அம்மேருருவில் செஞ்சுடரோன் திருமால் திருக்கைத் திருச்சக்கரமொக்கும் = அந்த மஹாமேருபர்வதததின் ஸமீபத்திலே விளங்கா நின்ற சிவந்த லொளியையுடைய ஸூர்யன் அவ்வெம்பெருமானுடைய அழகிய திருக்கையிலுள்ள திருவாழியாழ்னாவ் போன்றிருப்பான்.(அன்ன கண்டும் இத்யாதி.) அப்பெருமானுடைய திவ்ய ரூபத்தையும், திவ்யாயுதத்தையும் நேரில் காணப் பெறாமல் அவற்றிற்குப் போலியாக வுள்ளவறறையே கண்டிக்கச் செய்தேயும் அவனுருவத்தையும் அவனது அடையாளத்தையுமே நேரிற் கண்டாற்போல
அன்பு மிகுதியாற் பவசமடைந்து இத்தனை பேரிட்டுக் கூவும்படியான வ்யாமோஹம் பெற்றிருக்கிற எமக்கு, பிரிவுக்கு அடியான பாவம் எங்ஙனே உண்டாயிற்றோ தெரியவில்லையே! என்கிறாள்.
மால் தலைக்கொண்ட – ஆசையின் மேலெல்லையிலே நிற்கிற என்னவுமாம். நாயகனைப் பிரிந்த நாயகி நாயகன் போலிகளை அவனாகவே பாவித்து வாய் பிதற்றுவதை!
(திருவாய்மொழி 4-4-4) “நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலே! வா வென்று கூவும்”
(திருவாய்மொழி 4-4-2). “செய்யதோர் நாயிற்றைக் காட்டிக் கிரீதரன் மூர்த்தியீதென்னும்” என்பவற்றிலும் காண்க.
ஜந்மாந்தஸஹஸ்ரேஷு தபோஜஞாநஸமாதிபி:- நராணாம் க்ஷீணபாபாநாம் க்ருஷ்ணே பக்தி: ப்ரஜாயதே.”-பாபங்கழியப் பெற்றவர்களுக்கே பகவத பக்தி பிறக்குமென்றும், பகவத் பக்தியுடையாரைப்பாவம் அணுகாதென்றும் சாஸ்திரமிருக்க, அந்தப் பக்தியின் மெலெல்லையிலே நிற்கிற நமக்குப் பேறு பெறாமைக்குக் காரணமான பாவம் வருவதற்கு வழியுண்டோ? என்று
ஆழ்வார் வருந்தியுரைத்தாராயிற்று. எம்பெருமான் பக்கலில் மாத்திரமேயன்றி எம்பெருமான் வடிவத்தை யொத்திருக்கும் பொருளிலும் ஈடுபடுதலே பக்தியின் மேலெல்லையாம்.–மூன்றாமடியில், சிஹ்நம் என்றும் வடசொல் சின்ன மெனத்திரிந்தது

திருமாலுரு வொக்கும் மேரு-மஹா மேருவானது ஸ்ரீ யபதியினுடைய திருமேனியோடே ஒக்கும்-பிராட்டி திருமேனியின் ஒளி விரவுகையாலே-ருக்மாபம் ஸ்வப்னம் தீ கம்யம் -(மனு 12-12 ) திருமேனியோடே ஒக்கும் என்றபடி-அம் மேருவில் செஞ்சுடரோன்-அம் மஹா மேருவிலே சிவந்த சுடரை யுடைய ஆதித்யனானவன்–திருமால் திருக்கைத் திருச் சக்கர மொக்கும்-ஸ்ரீ மானுடைய வலது திருக்கையிலே உறைகிற திருவாழியோடே ஒக்கும்–மேருவானது ஸர்வ வர்ஷங்களுக்கும் உத்தரமாகையாலே
ஆதித்யன் வலத்ததாகக் குறையில்லை-அன்ன கண்டும்–அவன் தன்னைக் காண்கை அன்றிக்கே
ஒப்புக் கண்டும்-திருமாலுருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது-ஸ்ரீ மானுடைய வடிவோடே
அசாதாரண சிஹ்னத்தையே ப்ரேம பாரவஸ்யத்தாலே அக்ரமமாகச் சொல்லும்படியான-ஓர் திருமால் தலைக் கொண்ட நங்கட்கு-அத்விதீயமாய் சம்பத்தாய் இருக்கிற பக்தியின் மேல் எல்லையிலே நிற்கிற நமக்கு-எங்கே வரும் தீ வினையே –விஸ்லேஷ ஹேதுவான துஷ் கர்மமானது எங்கனே வருவதாயிற்று-ஏவம் ஹ்வா வத தபதி கிமஹம் ஸாது நா கரவம் கிமஹம் பாப மகரவமிதி -( தைத்ரியம் -ஆனந்த -2-9 ) என்று அக்ருத்ய கரணாதிகள் இவனைத் தபிப்பியாது என்று அன்றோ சொல்லுகிறது–ஷீண பாபரானவர்களுக்கு பக்தி பிறக்கும் என்னச் செய்தே-பக்தியின் மேல் எல்லையிலே நிற்கிற நமக்கு
பிரிகைக்கு அடியான பாபம் வர விரகு யுண்டோ என்றதாயிற்று-கிளவியிலும்-நாயகன் ஈஸ்வரனாகையாலே நல்லோமான நாம் பிரிந்து இருக்கைக்கு அடியான தீ வினை எங்கே வந்தது என்று உரைத்தாள் யாயிற்று

தாத்பர்யம்--இதில் சர்வேஸ்வரன் உடன் போலியான வஸ்துக்களைக் கண்டும் திருப்தி- நேராக குறை வராது-சர்வ சாம்யமான வாஸ்து இல்லையே-ஆயினும் ஆராய்ந்தால்-தனக்கு மேல் உத்க்ருஷ்டம் இல்லாத மகத்தான மேரு படர்வதமே-‘மிக்க உன்னதமாய் தங்க மயம் அது -கரு=மாய் இவன்
உன்னதமாய் உயரம்-ஒளி புகர்-அவன் திருவாளிக்கு ஆயிரம் சூரியனை சொல்லில் சொல்லலாம்
அப்படி நீர் உபமானமான அத்திருமேனிக்கு சத்ருசமான பதார்த்தம் ஆராயும் இடத்தில் இப்படி சொல்லப் பெற்றோமே என்று திருப்தி அடையாமல் ஆசைக்குத் தக்க இவை சத்ருசம் இல்லையே-வஸ்து அந்தரமும் இல்லையே-அவரையே கண்டு திருப்தி அடைவதே வழி காண வேணும் என்று வைர ஊருக்கு போல் அபிநிவேசம் பெற்ற பின்பு பல ப்ராப்திக்கு குறை இல்லை என்று நிச்சயித்து ஹ்ருஷ்டராகிறார் –

3-4-புகழும் நல் ஒருவன் என்கோ!-பிரவேசம்

கீழே – ‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்,’ என்று அடிமை செய்யப் பாரித்தார்;
இவர் பாரித்த பாரிப்புக்கெல்லாம் போரும்படி ஈசுவரனும் தன்னுடைய சர்வாத்தும பாவத்தைக் காட்டிக் கொடுத்தான்;
அதனை அநுசந்தித்துச் சொற்களைக்கொண்டு அடிமை செய்கிறார் இத்திருவாய்மொழியில்.

சர்வ பிரகாரத்வம் சொல்லும் திருவாய் மொழிகள் -புகழு நல் ஒருவன் என்கோ 3-4/–நல் குரவும் செல்வமும் -6-3/மாயா வாமனனே -7-8-
‘பேதம் -தது தது பிரகரணங்களுக்கு சேர –இங்கே அனைத்து கைங்கர்யங்களையும் கொள்வதற்கு
சர்வாத்மா பாவம் -இங்கு -சரீரம் எல்லாம் பிரகாரம் -பிரகாரம் எல்லாம் சரீரம் இல்லை -புஷ்பம் -மணம் -பிரகாரம்-சரீரம் இல்லை
இங்கே இரண்டு சப்தங்களையும் வைத்து அருளிச் செய்கிறார் -அப்ருதக் சித்த விசேஷணம் பிரகாரம் –
ஸூ வியதிரிக்த -தான் அந்தராத்மா பாவம் இருப்பதைக் காட்டிக் கொடுத்தான் -என்கோ-சொல்லுவேனா -வாசிக கைங்கர்யம் –
சகலவித கைங்கர்யம் கேட்டு இதுதானா –

“உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்யவேண்டும்,’ என்று பாரித்த இவர், சொற்களை மாத்திரம் கொண்டு
அடிமை செய்வான் என்?’ எனின், இருவரும் இலையகலப் படுக்குமித்தனை போக்கி–ந ச இச்ச்யதி மாதவ- அவனும் அடிமை கொள்ளமாட்டான்; –
‘கேட்டேயும் -காலாழும்நெஞ்சு அழியும் கண்சுழலும்’ என்னும் தன்மையராய் இவரும்.-இவரும் செய்ய மாட்டார் –
இலையகலப்படுக்குமித்தனை’ என்றது, ‘உணவு உண்பதற்கு இடப்பட்ட இலையை மிகப் பெரிதாக இடவேண்டும் என்று நினைத்தல் இத்தனை’ என்றபடி.
அகலப்படுத்தல் – விரிவுபடுத்துதல்; ‘பெரிய இலையாக இருத்தல் வேண்டும்’ என்றபடி.
இவரும் அடிமை செய்யமாட்டார்; ‘ஜனார்த்தனன் ஒன்றையும் விரும்புவது இல்லை,’ என்கிறபடியே,
-அந்ய குசல பிரச்னம் -ந ச இச்ச்யதி மாதவ -விதுரன் -சஞ்சயன் -சொன்னதாகவும் உள்ளது–இரண்டு வித மஹா பாரதம் மா முனிகள் காலத்திலேயே –
விதுரன் சொல்வதாக இவர் இடம் உள்ள மஹா பாரதம் -பூர்வர்கள் சஞ்சயன் சொன்னதாக சொல்வார்கள் என்கிறார் -அவரே
எளிய முறையில் ஆராதிக்கத் தக்கவனாய் இத்தலையில் பெற்றது கொண்டு மனம் நிறைவு பெறுமவனே அவ்விறைவன்;-பூர்தியைப் பற்ற –
‘புனையும் கண்ணி எனதுடைய வாசகஞ்செய் மாலையே;-திரு வாய் மொழியே – வான் பட்டாடையும் அஃதே,’ என்கிற
இவருடைய சொல் அளவையே எல்லாமாகக் கொள்ளும் தன்மையனே யன்றோ அவ்விறைவன்-உக்தி மாதரத்தை எல்லாவாகமாகவே கொள்பவன் அவன் –
இவருடைய காதல்தானே ‘ஆராத காதலே’ அன்றோ? இவருடைய பாரிப்புக்குத் தகுதியாக அவன்
சர்வாத்தும பாவத்தைக் காட்டிக்கொடுத்த இடத்தில் அடிமை செய்கையின்றியே’, அவனுடைய குணங்களை அநுசந்தித்து
நிலை குலைந்த அந்தக் கரணங்களை உடையராய் ‘கேட்டேயும் -காலாழும்நெஞ்சு அழியும் கண்சுழலும்’ என்னும் தன்மையராய் இவரும்.

நான் ஷூத்ர சம்சாரி -அவாப்த சமஸ்த காமன் -என்னுடைய பாரிப்பு ஏற்று -எங்கும் பரந்து வியாபித்து –
தனக்காக இப்பொழுது தான் -சர்வாத்மா பாவம் கொண்டதாக -எண்ணி காலாழும் நெஞ்சு அழியும் கண்சுழலும்’
அப்படி என்றால் வாசிக கைங்கர்யம் எவ்வாறு பண்ணினார் –மனஸ் நினைத்து தானே வாய் பாட வேண்டும் -மநோ பூர்வோ வாக் உத்தர –
முடியானாலே -கரணங்கள் அனைத்தையும் விரும்புமே –
ஸூ வாரதனே யாகிலும் -இவர் பக்கல் சிறிதாகிலும் வேண்டுமே -இவர் கிஞ்சிதவாறே எல்லாமாகவே கொண்டான் அவன்
-தாய் குழந்தை மழலை சொல் போலே -அவன் ப்ரீதியைக் கண்டு இவரும் எல்லாம் செய்ததாக இவரும் மகிழ்ந்தார்
அதீத காதல் கொண்டவன் இவர் கிஞ்சித் செய்ததையும் பெரியதாக கொண்டு மேலே செய்ய விடாமல் இருப்பானே
அதனால் அனைத்து கைங்கர்யங்களையும் பாரித்தபடியே செய்து முடித்தார் என்றவாறு –
இத் திருவாய்மொழியில் -பிரதிபாதிக்கப்படும் -விபூதி யோகமும் -சமா நாதி கரண்யமும் -அலமாப்பும் சம்சயமும் –
பொருவில் சீர் பூமி -விபூதி -சமா நாதி கரண்யம் -என்கோ -அலமாப்பும் சம்சயமும் —

அவன் சொரூபத்தோடு குணத்தோடு விபூதியோடு செயல்களோடு வேறுபாடு இல்லாமலே எல்லாம் உத்தேஸ்யமாய் இருக்கின்றது இவர்க்கு;
‘இறைவனுடைய குணங்களுக்கும் விபூதிக்கும் இவர்க்கு வேற்றுமை இல்லை,’ என்பது கருத்து.
அவனைச் சார்ந்து விட்டுப் பிரியாமல் -அப்ருதக் சித்த விசேஷணம்-பிரகாரம் – என்பதால் இவற்றுக்கு சாம்யம் உண்டே –
அவை தம்மைக் கண்ட கண்ட இடங்களில் -தனித்தனி -வையதிரண்யத்தில் -அனுபவிக்கை யன்றிக்கே, மாணிக்கத்தையும் வயிரத்தையும்
முத்தையும் ஓர் ஆரத்திலே சேர்த்து அனுபவிப்பாரைப் போலே அவற்றை அடைய அவன் பக்கலிலே-சமா நாதி கரண்யத்தில் – சேர்த்து அனுபவிக்கிறார்.
அன்றியே,
‘குணங்களுக்குப் பிரித்து நிலையுதலாதல் தோன்றுதலாதல் இல்லையாமாறு போன்று, விபூதிக்கும் அவனை ஒழிய
நிலையுதலாதல் தோன்றுதலாதல் இல்லாமையாலே, சேர்த்து அனுபவிக்கிறார்,’ என்னுதல்;
அன்றியே,
‘முத்தனுக்கு லீலா விபூதியும் ததீயத்வ ஆகாரத்தாலே அனுபவிக்கப்படும் பொருள் ஆகா நின்றதே யன்றோ?
அத் தன்மையாலே அனுபவிக்கிறார்,’ என்னுதல்.
‘ஆயின், முத்தன் ‘இச்சரீரத்தை நினையாமலே நான்கு பக்கங்களிலும் சஞ்சரிக்கின்றான்,’ என்று கூறப்பட்டுள்ளதே?’ எனின்,
அவ்விடத்தில் கர்மம் காரணமான உருவத்தை நினையான் என்கிற இத்தனையேயாம்.
ஆக, கர்மங்காரணமான உருவம் நினைவிற்கு விஷயம் ஆகாதபடியான பாகம் பிறந்தால், எல்லாம் அவனுடைய பொருள்
என்றே தோன்றி, எல்லாம் ஒக்க அனுபவிக்கப்படும் பொருளாகவே இருக்கும். இவர்க்கு அவன் குணங்களோடு விபூதியோடு
வேற்றுமை அற அனுபவிக்கப்படும் பொருளாகும்படியன்றோ மயர்வற மதிநலம் அருளிற்று?
கர்மம் காரணமான நினைவு பின் நாடாதபடியன்றோ இவர்க்கு ஈசுவரன் வெளிச்சிறப்புப் பண்ணிக்கொடுத்தது?-வெளிச்சிறப்பு – ஞானம்.

‘நன்று; இவ்விபூதிதன்னிலே ‘எண்ணாத மானிடத்தை எண்ணாதபோது எல்லாம் இனியவாறே,’ என்று சிலரைச்சொல்லி,
‘பேராளன் பேரோதும் பெரியோரை ஒரு காலும் பிரிகிலேனே,’ என்று ஒரு சிலரை மறக்கவொண்ணாதபடியாகவும் சொல்லா நின்றதே?’ எனின்,
ஞானம் பிறந்த நிலையிலே இருக்கும்படியாயிற்று இது; பிராப்தி சமயத்தில் வந்தால், இவ்வேறுபாடின்றி எல்லாம் ஒக்க
அனுபவிக்கப்படும் பொருளாகவே இருக்கும். எல்லாம் ஈசுவர விபூதியாக இருக்கச்செய்தேயன்றோ சிலரைப்
‘பொல்லாத தேவரைத் தேவரல்லாரைத் திருவில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு’ என்கிறது?
இங்ஙனம், அவ்வந்நிலைகள் காரணமாக விஷயங்களைப் பாகுபாடு செய்யாதொழியின், சாஸ்திரங்கள் எங்கும் ஒக்கச் சேரக் கிடக்கும்படி
பார்க்கும் போது நின்ற நின்ற நிலைகளிலே ஹேய உபாதேய விபாகம் பண்ணி அநுசந்திக்க வேண்டி வருமேயன்றோ?

இவர்க்கு, இறைவன் தன் ஸ்வரூப குண விபூதி சேஷ்டிதங்கள் முதலானவைகளை அடையக் காட்டிக்கொடுக்கக் கண்டு,
விபூதி காரணமான பூதங்கள் பௌதிகங்கள் அவற்றில் பிரகாசிக்கின்ற மாணிக்கம் முதலானவைகள் சுவைப்பொருள்கள்
செவிக்கு இனிய இசை முதலானவைகள் மோக்ஷம் முதலான புருஷார்த்தங்கள் இவ்வுலகிற்குப் பிரதானரான பிரமன் முதலானோர்
இவற்றுக்கு அடையக் காரணமான பிரகிருதி புருஷர்கள் ஆகிய இவை முழுதினையும் விபூதியாகவுடையனாய் இவற்றினுள்ளே
அந்தராத்துமாவாய் அநுப்பிரவேசித்து இவற்றோடே கலந்து நிற்கச் செய்தேயும் இவற்றினுடைய தோஷங்கள் தீண்டப்படாதவனாய்,
’ஈசுவரன் தான் கர்மபலத்தைப் புசியாமல் மிக அதிகமாகப் பிரகாசிக்கிறான்,’ என்கிற பிரமாண பலத்தாலே இவ்வாத்துமாவுக்கு
வரக்கூடியதான இன்ப துன்பம் முதலானவைகள் தன்பக்கல் தட்டாதபடி நிற்கையன்றிக்கே, எல்லாப் பொருள்களையும் ஏவுகின்ற
தன்மையால் வந்த புகரையுடையவனுமாய், விபூதியில் அவ்வப்பொருள்கட்கு வாசகமான சொற்கள் அசித்தையும் அசித்தாலே
அபிமானத்தையுடைய ஆத்துமாவையும் காட்டுகிற கணக்கிலே அவற்றுக்குள் அந்தர்யாமியாய் இருக்கிற பரமாத்துமாவையும்
காட்டி இக்கூட்டத்துக்குப் பெயர்களாய் அவன் பக்கலிலே முடிவு அடைந்திருக்கையாலே அசாதாரணமான நாராயணன் முதலான
சப்தங்களோடு வேற்றுமை அற எல்லாச் சொற்களும் அவனையே சொல்லுகின்றன வாயிருக்கிறபடியையும்,
இவ் விபூதிதான் புறம்பாய் விஞ்சிக் காட்டுகையன்றிக்கே தோளில் கிடக்கின்ற தோள் மாலையைப்போன்று தகுதியாய்
அனுபவிக்கப்படும் பொருள்களிலே அடங்கியிருக்கிறபடியையும் அநுசந்தித்துப் பேறு பெற்றாராய்ப் பாரித்தபடியே
எல்லா அடிமையும் செய்யமாட்டாமையாலும், அவன்தான் ‘கோவை வாயாள்’ என்ற திருவாய் மொழியிற் கூறியபடியே,
ஒன்றையே எல்லா அடிமையுமாகக் கொள்ளும் தன்மையனாதலானும், சொற்களைக் கொண்டு செய்கிற அடிமையிலே இறங்கியவராய்,
மஹா வாதத்திலே பலோபாதாநம் பண்ணுவாரைப் போன்று ‘அத்தைச் சொல்லுவேனோ, இத்தைச் சொல்லுவேனோ!’ என்று இங்ஙனம் அலமருகிறார்.

‘என்கோ!’ என்பது ஐயப்பொருளதாதலின், அதனை உதாரண முகத்தால் விளக்குகிறார், ‘மஹாவாதத்திலே பலோபாதாநம் பண்ணுவாரைப் போன்று’என்று.
மஹாவாதம் – பெருங்காற்று; பல உபாதாநம் – பழங்களைச் சேகரித்தல். என்றது, பெருங்காற்று அடிக்கின்ற காலத்தில் மரங்களினின்றும் கீழே விழுந்து
சிதறிக்கிடக்கின்ற பழங்களை எடுக்கின்றவர்கள் ‘இதனைஎடுப்போமா, அதனை எடுப்போமா!’ என்று மனம் சுழன்று அலைவதுபோன்று’ என்றபடி.

இத்திருவாய்மொழியில், முதற்பாசுரத்தை நோக்கி, ‘விபூதி காரணமான பூதங்கள்’ என்கிறார்.
இரண்டாம் பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றிப்‘பௌதிகங்கள்’ என்கிறார்.
நாலாம் பாசுரத்தில் முதலிரண்டு அடிகளைத் திருவுள்ளம் பற்றி, ‘அவற்றில் பிரகாசிக்கின்ற மாணிக்கம் முதலானவைகள்’ என்கிறார்.
ஐந்தாம் பாசுரத்தில் ‘நலங்கடல் அமுதம்’ என்பதுமுதலானவைகளைத் திருவுள்ளம் பற்றிச் ‘சுவைப்பொருள்கள்’ என்கிறார்.
ஆறாம்.பாசுரத்தில் ‘நுடங்கு கேள்வி இசை என்கோ’ என்றதனைத் திருவுள்ளம் பற்றிச் ‘செவிக்கினிய இசை முதலானவைகள்’ என்கிறார்.
ஏழாம் பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றி, ‘மோக்ஷம் முதலான புருஷார்த்தங்கள்’ என்கிறார்.
எட்டாம் பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றி, ‘இவ்வுலகிற்குப் பிரதானரான பிரமன் முதலானோர்’ என்கிறார்.
‘யாவையும் எவரும் தானே’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘இவற்றுக்கு அடையக் காரணமான பிரகிருதி புருஷர்கள்’ என்கிறார்.
‘யாவையும் எவரும் தானாய்’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘இவை முழுதினையும் விபூதியாகவுடையனாய்’ என்கிறார்.
‘தோய்விலன்’என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘இவற்றினுடைய தோஷங்கள் தீண்டப்படாதவனாய்’ என்கிறார்.
‘எல்லாப் பொருள்களையும் ஏவுகின்ற தன்மையால் வந்த புகழையுடையவனுமாய்’ என்றது, ‘தோய்விலன்’ என்றதன் பொருள் ஆற்றலால் போந்த பொருள்.
‘கண்ணனை, சங்கு சக்கரத்தன்’முதலான அசாதாரணமான பெயர்களோடு விபூதியில் அவ்வப்பொருள்கட்குச் சாமாநாதி கரண்யம்
சொல்லுகைக்கு ஏதுவை அருளிச்செய்கிறார்,
‘விபூதியில் அவ்வப் பொருள்கட்கு’ என்று தொடங்கி. வாசகமான சொற்கள் – தேவர்கள், மனிதர்கள் முதலான சொற்கள். பதினோராம் பாசுரத்தைத்
திருவுள்ளம் பற்றித் ‘தோளில் கிடக்கின்ற தோள் மாலையைப் போன்று’ என்கிறார்.

ஆக, இத்தால், ‘வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்’ என்று தாம் பாரித்தபடியே அடிமைசெய்து தலைக்கட்டுகிறார்.
முன்னர்க்கூறிய ‘புனையுங் கண்ணி எனதுடைய வாசகஞ் செய்மாலையே’ என்றதனையும், ‘இவருடைய காதல்தானே ஆராத காதலேயன்றோ?’
என்றதனையும் மீண்டும் அநுவதிக்கிறார், ‘பாரித்தபடியே’ என்று தொடங்கி.

நாலாம் திருவாய் மொழியில் -கீழ் ப்ரஸ்துதமான கைங்கர்யத்துக்கு பிரதிசம்பந்தி சகல சேதன அசேதன விசிஷ்டனான நாராயணன் ஆகையாலே-
அவனுடைய சர்வ பிரகார விசிஷ்டத்வத்தையும் அனுசந்தித்து
1-பூத பவ்திகாத்மக சகல பிரகாரத்வத்தையும்
2-பூத கார்ய விசேஷ பிரகாரத்வத்தையும்
3-அசாதாரண விக்ரஹ யோகத்தையும்
4-ரத்நாதி வி லக்ஷண பதார்த்த பிரகாரத்வத்தையும்
5-சரசமான போக்ய வஸ்து பிரகாரத்வத்தையும்
6-வேத வைதிக ரூபமான காந பர்யந்த சப்த ராசி பிரகாரத்வத்தையும்
7-போக மோக்ஷ ரூபமான புருஷார்த்த பிரகாரத்வத்தையும்
8-லோக பிரதானரான ப்ரஹ்மாதி சரீரகத்வத்தையும்
9-இப்படி ஸமஸ்த சேதன அசேதன பிரகாரத்வத்தையும்
10-தத் கத தோஷைர சம்ஸ்ப்ருஷ்டத்வத்தையும் அனுசந்தித்து
பிரகார வாசக சப்தங்களாலே பிரகாரியான தன்னைச் சொல்லும்படியான அவிநா பாவத்தை பிரகாசிப்பிக்கையாலே-அவனுக்கு பிரகார தயா சேஷ பூதராய் இருக்கிற இவர்
பிரகார வாசக சப்தங்களும் அசாதாரண திவ்ய நாமங்களோ பாதி அங்குத்தைக்கு வாசகமாகையாலே தத் தத் சப்தங்களாலே-தம்முடைய ஸ்வரூப அனுரூபமான வாசிக கைங்கர்யம் பண்ணுகிறார் –

முதற்பாட்டில், இத்திருவாய்மொழியில் பரக்க அருளிச்செய்த அர்த்தத்தைச் சுருங்க அருளிச்செய்தார்;
இரண்டாம் பாட்டில், முதற்பாட்டில் சொன்ன ஐம்பெரும்பூதங்களினுடைய காரியத்தை முறையே பேசினார்;
மூன்றாம் பாட்டில், உலகமே உருவமாய் நின்ற நிலையோடே அசாதாரண விக்கிரகத்தைச் சேர்த்து அனுபவித்தார்;
நான்காம் பாட்டில், ‘ஒளி பொருந்திய மாணிக்கம் முதலிய பொருள்களை விபூதியாகவுடையவன்’ என்றார்;
ஐந்தாம் பாட்டில், ‘சுவைப்பொருள்களை விபூதியாக உடையவன் என்றார்;
ஆறாம் பாட்டில், ‘வேதம் தொடக்கமான இயலும் இசையுமான ஒலிகளின் கூட்டத்தை விபூதியாக உடையவன்’ என்றார்;
ஏழாம் பாட்டில், ‘செல்வம் முதலான புருஷார்த்தங்களை விபூதியாக உடையவன்’ என்றார்;
எட்டாம் பாட்டில், ‘உலகத்தில் பிரதானரான பிரமன் சிவன் முதலியோரை விபூதியாக உடையவன் என்றார்;
ஒன்பதாம் பாட்டில், அவனுடைய விபூதியின் விரிவைத் தனித்தனியே பேசமுடியாமையாலே
‘சேதன அசேதனங்களை விபூதியாகவுடையவன்’ என்று சுருங்க அருளிச்செய்தார்;
பத்தாம் பாட்டில், ‘இவற்றுக்கும் உள்ளுயிராய்ப் பரந்து நின்றாலும் அவற்றினுடைய தோஷங்களால் தீண்டப்படாதவன்’ என்றார்;
முடிவில், இது கற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைக் கட்டினார்-

புகழும் நல் ஒருவன் என்கோ!
பொரு இல் சீர்ப் பூமி என்கோ!
திகழும் தண் பரவை என்கோ
தீ என்கோ! வாயு என்கோ!
நிகழும் ஆகாசம் என்கோ!
நீள் சுடர் இரண்டும் என்கோ!
இகழ்வு இல் இவ் வனைத்தும் என்கோ!
கண்ணனைக் கூவு மாறே
.—————–3-4-1-

அவனுடைய குணங்களையும் விபூதி காரணமான ஐம்பெரும்பூதங்களையும் சேரப்பிடித்து,
இத்திருவாய் மொழியில் மேல் விரிவாகச் சொல்லப்படும் அர்த்தத்தையெல்லாம் சுருக்கமாக அருளிச் செய்கிறார்.

புகழும் நல் ஒருவன் என்கோ 
1–‘உயர்வற உயர்நலம்’ தொடங்கி இதுகாறும் தாம் அனுபவித்த குணங்களை யடைய ஒரு சொல்லாலே ‘புகழும் நல் ஒருவன் என்கோ’ என்கிறார்.
2– இனி, ‘சுருதி ஸ்மிருதி இதிகாசம் முதலானவைகளெல்லாம்
கையெடுத்துக் கூப்பிடாநின்றுள்ள வேறுபட்ட சிறப்பையுடையனான ஒத்தாரை மிக்காரை இலையாய புருஷன் என்பேனோ!’ என்னுதல்;
3– இனி, ‘புகழும் என்கோ, நல் என்கோ, ஒருவன் என்கோ’ எனத் தனித்தனியே கூட்டி,
‘எல்லாராலும் நன்றாகப் புகழப்படுமவன் என்பேனோ! நல்ல ஆனந்தம் முதலிய குணங்களையுடையவன் என்பேனோ!-சமாயப்திக தரித்திரன் –ஒத்தாரை மிக்காரை இலையாய அரியவன் என்பேனோ!’ என்னுதல்.
ஆக, குணத்தின் சேர்க்கையால் வந்த வேறுபட்ட சிறப்பினைச் சொல்லி, மேல் விபூதியைச் சொல்லுகிறார்:-குணங்களுக்கும் செல்வங்களுக்கும் உண்டான சேர்த்தியாலே குணங்களோடு ஒக்கச் செல்வத்தையும் சேர்த்து அனுபவிக்கிறார்-

1-குணம் ஜாதி -வியக்தி விட்டு பிரியாது –கோத்வம் போலே -/ குண்டலம் -த்ரவ்யம் -பிரியுமே -பிரித்து ஸ்திதி உண்டே இதற்கு-சௌலப்யம் -குணம் பிரியாது அறிவோம் –பிருத்வி -த்ரவ்யம் -பிரியாமல் இருக்குமோ சங்கை வருமே -இவற்றின் ஸ்திதி அவனாலே தானே
2-சமா நாதி கரண்யம் இருப்பதால்
3-ஸ்வரூப ருப குண விபூதி -சேர்த்து படிப்பதால்
4-சேர்த்தி -ஆஸ்ரயித்து பெருமை சேர்க்கும் –
5-ஜன்ய ஜனக பாவம் -குணங்கள் -தாய் -படைக்கப் பட்டதால் தானே விபூதி -காருணிகன் நீர்மையால் அருள் செய்தான் -யௌகபத்யம் அனுக்ரகத்தால்
6-ததீயத்வ ஆகாரத்தால் இனிமையாய் எல்லாம் இருக்குமே-

பொரு இல் சீர்ப் பூமி என்கோ-ஒப்பில்லாத பொறுமை முதலிய குணங்களையுடைய பூமி என்பேனோ!-இனி, ‘பூமி திருவடியிலே பிறந்தது’ என்கிறபடியே பூமி அடியிலே பிறந்துடையது ஒன்று ஆகையாலே ‘பொரு இல் சீர்ப்பூமி’ என்கிறார் என்னுதல்.காரணமான ஐம்பெரும்பூதங்களையும் அருளிச்செய்தார்.-நீள் சுடர் இரண்டும் என்கோ –காரியமான கூட்டத்துக்கு அடைய உபலக்ஷணமாகச் சந்திர சூரியர்களைச் சொல்லுகிறார்.-இகழ்வில்’ என்பதற்கு, ‘ஓன்று ஒழியாமே எல்லாம் என்னுதல் -உபாதேய தமமான எல்லாம் என்னுதல் –  ‘கண்ணனைக் கூவுமாறு’ என்பதனைப் ‘புகழும் நல் ஒருவன் என்கோ!’ என்பது
முதலானவற்றோடு தனித்தனியே கூட்டுக.-அருச்சுனன், ‘ஹே கிருஷ்ண ஹே யாதவ’ என்றத்தோடு தாம் ‘பொரு இல் சீர்ப் பூமி’ என்றத்தோடு ஒரு வேற்றுமையற்று இருக்கிறதாயிற்று இவர்க்கு.

———-

கூவுமாறு அறிய மாட்டேன்,
குன்றங்கள் அனைத்தும் என்கோ!
மேவு சீர் மாரி என்கோ!
விளங்கு தாரகைகள் என்கோ!
நாவியல் கலைகள் என்கோ!
ஞான நல் ஆவி என்கோ!
பாவு சீர்க் கண்ணன் எம்மான்
பங்கயக் கண்ண னையே
.–3-4-2-

உக்தமான பூதங்கள் உடைய கார்ய விசேஷத்தை அருளிச் செய்கிறார்-மேற்கூறிய ஐம்பெரும்பூதங்களினுடைய காரியங்களை முறையாகப் பேசுகிறார்.-‘பங்கயக் கண்ணன்’ என்றதனோடு ‘குன்றங்கள் அனைத்தும்’ என்றதனோடு வாசியற்றிருக்கிறதாயிற்று இவர்க்கு.அன்றிக்கே,-‘பெரும் புறக்கடல்’ என்கிற திருமொழி நிர்வஹிக்கிற கிரமத்திலே ‘குன்றங்களனைத்தும்’ என்றது ‘நின்ற குன்றத்தினை நோக்கி’ என்னுமாறு போன்று வடிவிற்குப் போலியாய், சாமா நாதி கரண்யம் இல்லாமல் அவற்றை நிர்வகிப்பவர் வையதி கரண்யம் -கொண்டு –நிர்வகிப்பது போலே -இவற்றை நிர்வகிப்பவர் –

———

பங்கயக் கண்ணன் என்கோ!
பவளச் செவ் வாயன் என்கோ!
அங் கதிர் அடியன் என்கோ!
அஞ்சன வண்ணன் என்கோ!
செங் கதிர் முடியன் என்கோ!
திரு மறு மார்பன் என்கோ!
சங்கு சக்கரத்தின் என்கோ
சாதி மாணிக்கத்தையே!
–3-4-3-

உலகமே உருவமாய் நின்ற நிலையோடு அசாதாரண விக்கிரகத்தையும் சேர்த்து அனுபவிக்கிறார்.-தம்மோடு முதல் உறவு பண்ணின கண்ணழகைச் சொல்லுகிறார்.-ஜிதந்தே புண்டரீகாஷன் -தூது செய் கண்கள்-அந்நோக்குக்குத் தப்பினாலும் தப்பவொண்ணாத முறுவலைச் சொல்லுகிறது.-நோக்குக்கும் புன்முறுவலுக்கும் தோற்றார் விழும் நிலத்தைச் சொல்லுகிறது.-அத்திருவடிகளிலே விழுந்தார்க்கு அனுபவிக்கக் கூடியதான வடிவைச் சொல்லுகிறது.-இது பிராப்த விஷயத்தில் அனுபவம் என்னுமிடத்தைக் காட்டித்தருவது தலைவனாந்தன்மைக்குப் பிரகாசகமான திருமுடி யன்றோ?-திருமுடியைக் கண்டால் சுவாதந்தரியத்தை அனுசந்தித்து இறாய்க்குமதனைத் தவிர்த்துத் தருவது லக்ஷ்மீ சம்பந்தமன்றோ?-‘திருவையும் மறுவையும் மார்வில் உடையவன் என்பேனோ!’ -திரு மறுவைப் பீடமாக கொண்டு இருப்பவள் என்றுமாம் –‘இச் சேர்த்திக்கு என் வருகிறதோ!’ என்று இடமல்லாத இடத்திலும் அச்சத்தாலே ஐயங்கொள்ளுகிற பிரேமத்தின் முடிவெல்லையிலே-நிற்கின்றவர்களுடைய வயிற்றெரிச்சலைத் தவிர்ப்பன திவ்விய ஆயுதங்கள் அல்லவோ?-போலி அன்றியே ஆகரத்திலே பிறந்து நன்றான மாணிக்கம் போலே குற்றமற்றதாய் இயல்பாய் அமைந்த வடிவழகையுடையவனை.-இந்த விபூதி யோகம் அவனுடைய அப்ராக்ருதமாய் திவ்ய பூஷணாதி களாலே அலங்க்ருதமான திருமேனியோடு ஓக்க தகுதியாய் இருக்கும் என்னும் இடம் தோற்றுகைக்காக விபூதி கதனத்தின் நடுவே அவனுடைய திரு மேனியின் அழகைப் பேசுகிறார் –

———

சாதி மாணிக்கம் என்கோ!
சவி கொள் பொன் முத்தம் என்கோ!
சாதி நல் வயிரம் என்கோ!
தவிவு இல் சீர் விளக்கம் என்கோ!
ஆதி அம் சோதி என்கோ!
ஆதி அம் புருடன் என்கோ!
ஆதும் இல் காலத்து எந்தை
அச்சுதன் அமலனையே.
–3-4-4-

‘எனக்கு எம்பெருமானை நினைக்க விரகு சொல்லவேண்டும்,’ என்ன, ‘நான் உனக்கு அது சொல்லுகிறேன்;-நீ எனக்கு அவனை மறக்க விரகு சொல்ல வல்லையே?’ என்றாராம்.–குருகைக் காவல் அப்பன்-பொருள்களாயிருந்தும் அவனை ஒழியப் பிரிந்து நிலையுதலாதல் தோன்றுதலாதல் இல்லையாம்படி இருக்கின்றனவே யன்றோ-எல்லாப் பொருள்களும் பிரகாரமாக, தான் பிரகாரியாயிருக்கும்படியைச் சொல்லுகிறது-எல்லாம் தனக்கு விபூதியாய் இருந்தும், சிறப்புடைய சில பொருள்களை எடுத்து ‘என்னுடைய விபூதி’ என்றானன்றோ இறைவன்? அப்படியே இவரும் பேரொளியையுடைய மாணிக்கம் முதலான பொருள்கள் அவனுக்கு விபூதியாயிருக்கிறபடியை அனுபவிக்கிறார்.-

எல்லை இல்லாத பேரொளி உருவமாய் விளங்குகின்ற பரமபதத்தை விபூதியாக வுடையவன் என்பேனோ!-லீலா விபூதியைச் சொல்லுகிற இடத்தில் நித்திய விபூதியைச் சொல்லுவான் என்?’ என்னில்,‘ஆதி அம் சோதி என்கோ’ என்றதும், ‘சாதி மாணிக்கம் என்கோ!’ என்றது போலே இருக்கிறது.-ஆதும் இல் காலத்து எந்தை அச்சுதன் அமலனையே 1–சமுசார காலத்திலே; என்றது, எனக்குத் தன்னைப் பெறுகைக்கு முதல் ஒன்றுமில்லாத காலத்திலே, தான் எந்தையான முறையை எனக்கு அறிவித்து,பின்பு ஒரு காலமும் நழுவ விடாதே பாதுகாத்து, இதுதான் என்பக்கல் ஒரு பிரயோஜனம் கொண்டன்றியே நிர்ஹேதுகமாகத் தன் பேறாகப் பாதுகாத்தவனை.
அன்றியே,
2–‘யாதுமில்லாத பிரளயகாலத்தில் காரியமாக மாறின இவையடங்கலும் அழிந்து, ‘சத்’ என்ற நிலையாய்க் கிடக்கிற அன்று, தான் ஸ்வாமியான சம்பந்தத்தைக்கொண்டு நாம ரூபங்களை இழந்த இவற்றைச் சத்தை இழந்து போகாமல் தன் பக்கலிலே ஏறிட்டுக்கொண்டு இவற்றைத் தரித்து, ‘தான்’ என்று சொல்லலாம்படி இவை தன் பக்கலிலே கலந்த அன்றும் இவற்றின் குற்றங்கள் தன் பக்கல் தட்டாதபடி இருக்கிறவனை’ என்னுதல்.

‘ஆயின், ‘தோய்விலன்’ என்னுமதனோடு இங்குக் கூறிய இரண்டாவது பொருள், கூறியது கூறலாகாதோ?’ எனின்,
‘நாம ரூபங்களையுடையனவாய்ப் பொருளாகச் சொல்லலாம்படி பிரிய நின்ற போதும் இவற்றோடே கலந்து இவற்றின் குற்றம் தன் பக்கல் தட்டாதபடி நிற்கும் நிலையினைச் சொல்லுகிறது அங்கு; இவை, தான் என்ற சொல்லுக்குள்ளேயாம்படி கலந்து நின்ற
போதும் இவற்றின் குற்றம் தன் பக்கல் தட்டாதபடி நிற்கும் நிலையினைச் சொல்லுகிறது இங்கு,’ 
என்று அருளிச் செய்வர்.
அதற்கு அடி, பிரவேச ஹேது விசேஷம்.-இங்கே அமலன் -காரண -பிரளய – அவஸ்தையில் -ஸ்தூலம்–தோய்விலன் -எனபது -கார்ய அவஸ்தையில் -சூஷ்ம –

———

அச்சுதன் அமலன் என்கோ!
அடியவர் வினை கெடுக்கும்
நச்சு மா மருந்தம் என்கோ!
நலம்கடல் அமுதம் என்கோ!
அச்சுவைக் கட்டி என்கோ!
அறுசுவை அடிசில் என்கோ!
நெய்ச்சுவைத் தேறல் என்கோ!
கனி என்கோ! பால்என் கேனோ!
–3-4-5—

ஹேயப்பிரத்தியநீஹதை புக்க இடத்தே உபலக்ஷணத்தால் கல்யாணகுணங்களும் புகுமாதலின்,-‘அமலன்’ என்றதற்குக் குற்றம் ஒன்றும் தீண்டப்படாதவனாய் நற்குணங்கட்கெல்லாந் தானே இருப்பிடமானவனாய்’ என்று பொருள் அருளிச்செய்கிறார்.-அடியார்கள் இடர்ப்பட வேண்டாதபடி, யானை இடர்ப்பட்ட மடுவின் கரையிலே விழும் தன்மையன்

1-நாம் ஆபத்துக்குள்ளான சமயத்திலே வந்து பாதுகாக்கும்’ என்று நம்பலாம்படி இருப்பான் ஒருவன். -சஞ்சீவி -ஔஷதி நச்சிக் கொண்டு போக வேண்டாத படி நச்சு மா மருந்தம் -2-‘ஆசைப்படும் ஓர் மருந்து’ என்னுதல். மா மருந்து – பெரிய மருந்து; வியாதியினளவு அல்லாத மருந்து-மேல் காற்றிலே காட்ட நோய் தீருமாயிருக்கையைத் தெரிவித்தபடி. –வாட்டம் தணிய வீசீரே — நமனும் முத்கலனும் பேச -நரகில் நின்றார்கள் கேட்க -நரகமே ஸ்வர்க்கமே நாமங்கள் உடைய நம்பி –
3- இனி, ‘மா மருந்து’ என்பதற்கு, ‘ஒரே மூலிகையாய் எப்பொழுதும் உண்ணக்கூடியதாய் இருக்கிற மருந்து’ என்னுதல்.-ஏக மூலிகை -சஹாயாந்திர நைரபேஷ்யம் -பக்க விளைவு போக்க வேறே மருந்து தேவை இல்லாத -சக்ருத் சேவய்யையாய் இருக்குமே-4- இனி, ‘பத்தியமில்லாத மருந்து’என்னுதல்; என்றது, இவன் பிராமாதிகமாகப் பண்ணும் பாவங்களையும் காணாக் கண்ணிட வல்லனாயிருக்கை.-பார்க்காத தன்மையன் என்றபடி -காவலில் புலனை வைத்து -கட்டுக்காவல் இல்லாமலும் –பலன் கொடுக்கும் -பத்தியமே வேண்டாம் –கடைய வேண்டாதே-கடலிலே கிடக்கிற அமுதம்-

——–

பால் என்கோ! நான்கு வேதப்
பயன் என்கோ! சமய நீதி
நூல் என்கோ! நுடங்கு கேள்வி
இசை என்கோ! இவற்றுள் நல்ல
மேல் என்கோ! வினையின் மிக்க
பயன் என்கோ! கண்ணன் என்கோ!
மால் என்கோ! மாயன் என்கோ
வானவர் ஆதி யையே.
–3-4-6-

வேதமானது ஆராதன சொரூபம் சொல்லுமிடமும், ஆராதிக்கப்படும் இறைவன் சொரூபம் சொல்லுமிடமுமாய்க் கட்டடங்க இவனையே சொல்லுகையாலே, வேதத்தில் நாலு மூலைக்கும் உள்ள பயன் இல்லாத இடம் இல்லையாதலின், ‘நாலு வேதப் பயன்’ என்கிறார் –வினையில் மிக்க பயன் என்கோ –-கல நெல்லை வித்தி நூறாயிரக் கலமாக விளைத்துக் கொள்வாரைப் போன்று, இத்தலையிலுள்ளது நட்புத் தன்மையேயாய் அதற்கு -மித்ர பாவமே சம்ப்ராப்தம் -’நத்யஜேயம்-நான் விட மாட்டேன்’ என்னும்படி இருக்கையைக் கூறியபடி.-உனக்கு நான் இருந்தேனே’ என்று ‘மாசுச:- நீ துக்கப்படவேண்டா’ என்னும் கிருஷ்ணன் என்பேனோ!-‘‘நான் தரும் அதனை நீ விலக்காமல் ஏற்றுக்கொள்ளுமித்தனையே வேண்டுவது; உனக்கு நான் இருந்தேன்,’ என்றவனன்றோ?’-

இதற்கு அடி என்?’ என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க, ‘ திரௌபதி குழலை விரித்துக் கிடக்கையாலே அது முடிக்கைக்காக, செய்வது அறியாமையாலே மூலையில் கிடந்தாரை முற்றத்தே இட்டான்; பின்னை அர்த்தத்தின் சீர்மையை அநுசந்தித்து, ஆர் அதிகாரிகளாகச் சொன்னோம்? கைப்பட்ட மாணிக்கத்தைக் கடலிலே போகட்டும்,’ என்று பதண் பதண் என்றான் காணும்,’ என்று அருளிச் செய்தார்.

வானவர் ஆதியையே.–ப்ரஹ்மாதிகளுக்கும் சத்தா ஹேது வானவனை –-தன் சத்தை ஆச்ரித அதீனையாய் இருக்கும் என்கை –

——————

வானவர் ஆதி என்கோ!
வானவர் தெய்வம் என்கோ!
வானவர் போகம் என்கோ!
வானவர் முற்றும் என்கோ!
ஊனம்இல் செல்வம் என்கோ!
ஊனம்இல் சுவர்க்கம் என்கோ!
ஊனம்இல் மோக்கம் என்கோ
ஒளிமணி வண்ண னையே!
–3-4-7-

அதனுடைய நித்தியத்துவம் (என்றுமிருக்குந்தன்மை) அவனுடைய நித்தியமான இச்சையாலே இருக்கும்;-அந்த இச்சை நெகிழில், அதனுடைய நித்தியத்துவமும் மாறும்படியாய் இருக்கும். –திருமந்த்ரார்த்தம் -மூன்றையும் சேஷித்வம் -சரண்யத்வம் பிராப்யத்வம் மூன்றும் -ஆதி -தெய்வம் -போகம் -என்கிறார் -நம்மாழ்வார் பத த்ரயம்

ஒளி மணி வண்ணனை – விபூதியைச் சொல்லுகிற இவ்விடத்தில் ‘ஒளிமணி வண்ணன்’ என்று அவன் தனக்கேயுரிய விக்கிரகத்தைச் சொல்லுகிறது;-இதனால், இவ்வசாதாரண விக்கிரகத்தைப் போன்று இருக்கிறதாயிற்று -மேற்கூறியவையெல்லாம் என்பதனைத் தெரிவித்தபடி.

—————-

ஒளி மணி வண்ணன் என்கோ!
ஒருவன் என்று ஏத்த நின்ற
நளிர் மதிச் சடையன் என்கோ!
நான் முகக் கடவுள் என்கோ!
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம்
படைத்து அவை ஏத்த நின்ற
களி மலர்த் துளவன் எம்மான்
கண்ணனை மாயனையே
.–3-4-8-

உலகத்தில் முதன்மையினையுடையவரான பிரமன் சிவன் முதலியோர்களை விபூதியாகவுடையனானபடியைப் பேசுகிறார்.-கண்ணனை மாயனையே.–
எத்திறம் என்று மோஹிக்கும் படியான ஆச்சர்ய சேஷ்டிதங்களை உடைய கிருஷ்ணனை –

———-

கண்ணனை மாயன் றன்னைக்
கடல் கடைந்து அமுதம் கொண்ட
அண்ணலை அச்சு தன்னை
அனந்தனை அனந்தன் றன்மேல்
நண்ணி நன்கு உறைகின்றானை
ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை
எண்ணுமாறு அறிய மாட்டேன்
யாவையும் எவரும் தானே
.–3-4-9-

அவனுடைய விபூதியினுடைய விரிவினைத் தனித்தனியே பேச முடியாது; காரிய காரண உருவமான அறிவுடைப் பொருள்களும் அறிவில் பொருள்களும் அவனுக்கு விபூதி என்று -பிரயோஜகத்திலே -சேர பிடித்து -கோவையாக -சுருங்கச் சொல்லலாமித்தனை,’ என்கிறார்.யாவையும் எவரும் தானே – அறிவுடைப் பொருள் அறிவில் பொருள் முற்றும் சரீரமாகத் தான் ஆத்துமாவாக இருக்குமித்தனை.

———–

யாவையும் எவரும் தானாய்
அவர் அவர் சமயந் தோறும்
தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும்
சொலப்படான்; உணர்வின் மூர்த்தி;
ஆவி சேர் உயிரின் உள்ளால்
ஆதும் ஓர் பற்று இலாத
பாவனை அதனைக் கூடில்,
அவனையும் கூட லாமே
.–3-4-10-

‘அறிவுடைப்பொருள் அறிவில் பொருள்களுக்கு உள்ளுயிராய் நிறைந்து நின்றாலும், அவற்றின் குற்றங்களால் தீண்டப்படாதவன்’ என்கிறார்.-சரீரத்தினுடைய பரிணாமம் முதலியவைகளையும், ஆத்துமாவினுடைய இன்ப துன்பங்களையும் நினைக்கிறது-தான்’ என்ற சொல்லுக்குள்ளே அடங்கும்படி அவற்றோடே கலந்து நிற்பினும், அவற்றினுடைய தோஷங்கள் தன் பக்கல் தட்டாதபடி நிற்பான்.-ஆத்துமா கர்மமடியாகப் பிரவேசிக்கின்றது;
இறைவன் இவற்றுக்குள் திருவருள் காரணமாகப் பிரவேசிக்கின்றான். சிறைக் கூடத்திலே சிறையனும் கிடந்தான்; அரசகுமாரனும் இருந்தான்; சிறையன் கர்மமடியாகப் பிரவேசிக்கையாலே துக்கத்திற்கு ஏதுவாயிற்று; அரசகுமாரன் இச்சையாலே பிரவேசிக்கையாலே போக ரூபமாயிருந்தது.

ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆதும் ஓர் பற்றிலாத பாவனை அதனைக்கூடில் அவனையும் கூடலாம் –
1–உடலில் சேர்ந்திருக்கின்ற உயிரினிடத்து அந்தச் சரீரத்திற்கு உண்டான பால்யம் யௌவனம் முதலியவைகள் ஒன்றினாலும்-ஒரு சம்பந்தமும் இல்லையாம்படியாகச் சொல்லுகிற சொல்லானது அந்த ஆத்துமாவிற்குக் கூடாநின்ற பின்பு,-அப்பொருள் அவனையுங்கூடத் தட்டு இல்லை.-பாவனை -அநுசந்தான பர அனுசந்தானம்-
அன்றிக்கே, பின்னிரண்டு அடிகட்கு,
2– ‘அவன் பக்கல் பத்தி உண்டாகில் அவனைக் கிட்டலாம்’ -பிரயோஜநாந்தரங்களில் பற்றில்லாத-பத்தி பரமாக அருளிச் செய்தது;-என்றும்,
3–‘புறம்பே உள்ளவேறு உபாயங்களில் உண்டான பற்று முழுதையும் விட்டு, அவனையே பற்றில் அவனைக் கூடலாம்’-‘உபாயாந்தரங்களில் பற்றில்லாத’-பிரபத்தி பரமாக அருளிச்செய்தது;- என்றும்,
4–‘மரண காலத்தில் நம்பிக்கை உண்டாகில் அவனைக் கூடலாம்’ -வேறுபட்ட விஷயங்களில்
சங்கமில்லாத’ என்றும் வேறு வேறு வகையாகவும் பொருள் அருளிச்செய்வர்.
இவ்வுரை விகற்பங்களை எம்பெருமானார் கேட்டருளி, ‘முன்னிரண்டு அடிகளில் எங்கும் பரந்து நிறைந்திருத்தலை அருளிச்செய்தாராதலின், இனி வியாபிக்கப்படுகின்ற பொருள்களினுடைய தோஷங்கள் எங்கும் பரந்து நிறைந்திருக்கிற இறைவனுக்குத் தட்டமாட்டா என்னுமிடம் அவசியம் சொல்ல வேண்டும்; ஆன பின்னர், இத்தையே சொல்லிற்றாக அமையும்,’ என்று அருளிச் செய்வர்.

———–

கூடிவண்டு அறையும் தண்தார்க்
கொண்டல்போல் வண்ணன் றன்னை
மாடுஅலர் பொழில் குருகூர்
வண்சட கோபன் சொன்ன
பாடல்ஓர் ஆயி ரத்துள்
இவையும்ஓர் பத்தும் வல்லார்
வீடுஇல போகம் எய்தி
விரும்புவர் அமரர் மொய்த்தே.
–3-4-11-

மலர்கள் மணத்தோடே மலருமாறு போன்று இசையோடு கூடின ஆயிரத்திலும் வைத்துக்கொண்டு இப்பத்தையும் கற்க வல்லவர்கள். நித்திய கைங்கரியத்தைப் பெற்று, அயர்வறும் அமரர்களாலே விரும்பப்படுவார்கள்,’இத் திருப்பதிகத்தில் பரக்கச் சொன்ன விபூதி முழுதும், தோளில் தோள் மாலையைப் போன்று அவனுக்குத் தகுதியாயிருக்கிறபடியைக் கண்டு கூறினேன்,’ என்பார், ‘வண்டு கூடி அறையும் தண்தார் கொண்டல் போல் வண்ணன்’ என்கிறார்.ஆழ்வார் பக்கல் பண்ணின பிரேமத்தின் மிகுதியாலே, அவருடைய பிரபந்தங்களைக் கற்றவர்களை, சர்வேஸ்வரனை விட்டு இவர்களை நெருங்கி ஆதரிப்பார்கள் நித்திய ஸூரிகள் ஆதலின், ‘அமரர் மொய்த்து விரும்புவர்,’-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –