ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
இணங்கு நின்னோரை இல்லாய் – நிகரானவர் இல்லாதவனே -திரு நாமம் சாத்தி ஸம்போதிக்கிறார்
நின் கண் வேட்கை எழுவிப்பனே –உன்னை விட நான் உயர்ந்தவன் என்று உள்ளுறைப் பொருள்
உன்னுடன் விலக்கி வைத்து -தேவதாந்த்ரங்களை உருவாக்கி –வணங்கும் துறைகள் பல பல வாக்கி மதி விகற்பால்-புத்தி பேதத்தால் -சம்பிரதாயங்கள் பல பல வாக்கினாய் -துறைகள் உபதேசிக்கும் ஆச்சார்யர்கள்-பிணங்கும் சமயம் -சம்ப்ரதாயம்- பல பல வாக்கி அவையவை தோறு அணங்கும் பல பல வாக்கி-தேவதாந்தரங்களும் பல நின் மூர்த்தி-உன்னுடைய திருமேனியை விரித்து –பஹுஸ்யாம் ப்ரஜாயேய -மயில் தோகை -கடல் அலைகள் போல் தன்னுள்ளே திரைத்தெழுந்த இத்யாதி – பரப்பி வைத்தாய்-யாரை வணங்கினாலும் -சரவ்ச தேவ நமஸ்காரம் கேசவ கச்சதி-என்றும் சொல்லி வைத்தாய்-அநாதி கால கர்மம் -ஆகவே யாரையாவது வணங்கலாம் என்னும் புத்தி-இத்தை மாற்றி உன்னையே வணங்கச் செய்வதே நின் கண் வேட்கை எழுவிப்பேன்-முதல் மூன்று வரிகள் அவன் செய்த செயல்கள்-இறுதியில் என்னை அனுப்பிய கார்யம்-உனது பக்தி வளர்க்கவே என்னை பிறப்பித்தாய்-ஆழ்வார் பெருமையை உலகோருக்கு அறிவிக்கவே இந்தச் செயல்கள்-ஆழ்வார் ஜெயித்தால் தான் பெருமாள் ஜெயிப்பதாக ஆவான்–ஒன்றும் தேவும் -4-10-இதன் விவரணம்-தலைவனை முன் நினைந்து -பாவனையால் பேசுகிறாள் உனக்கு சமமானவர் இல்லை என்பதால் –
தனது கற்பு நிலையை வெளியிடுகிறாள் -தலைவி வெறி விலக்குவிக்க நினைதல் -சஹி வெறி விலக்கு இல்லை-
அவதாரிகை –-பேச ஒண்ணாது என்று கை வாங்கவும் மாட்டாதே –-பேசாது இருக்கவும் மாட்டாதபடி யாகவும் – இதர விஷயங்களில் அருசியையும் -பிறப்பித்து – தன் பக்கலிலே ருசியையும் பிறப்பித்த-இந்த மகா உபகாரத்துக்கு சத்ருசமாக பண்ணுவது ஒரு பிரத்யுபகாரம் இல்லை இறே –உன்னதான வஸ்துவையும் உன் பக்கலிலே சமர்ப்பிக்கும் அத்தனை இறே இனி-என்று அத்தைச் செய்தார் –வணங்கும் துறை -லபிக்கும் அம்சம் எல்லாம் இங்கு இல்லை என்கிறார் –நீ கை விட்டால் உன் கார்யம் செய்யப் போந்த நானும் கை விடவோ- லபிக்கும் அம்சம் இங்கு இல்லை என்று பூர்வ அர்த்தத்தை கடாஷித்துக் கொண்டு –நீ இப்படி செய்த பின்பு உன்னை ஆஸ்ரயிக்கும் உபாயம் ஒன்றும் இல்லை
என்று அருளிச் செய்கிறார் –நீ கை விட்டால் உன் கார்யம் செய்ய போந்த நானும் கை விடவோ-என்று
ஸ்வ சரண கமல சமாஸ்ரயணத்துக்கு உறுப்பாக -கரண களேபரங்களைக் கொடுத்து- பிரவ்ருத்தி நிவ்ருத்தி சக்திகளையும் கொடுத்து –ஹிதைஷியாய் இருந்தேன் இத்தனை ஒழிய- கை விட்டேனோ என்று அருளிச் செய்கிறார் –சித் சக்திகளையும் பிரவ்ருத்தி சக்திகளையும் -அடியிலே இவை அசித் கல்பமாய் இருந்த-சமயத்திலே – இவற்றினுடைய தயநீய தசையைக் கண்டு – புருஷார்த்தம் இன்னது என்று அறிந்து – ருசித்து பற்றுகைக்கு ஈடாக கொடுத்து விட —அவை தான் இதர விஷயங்களின் ருசிக்கைக்கும்–அதுக்கு ஈடாக ப்ரவர்த்திக்கைக்கும் பொதுவாய் இருக்கையாலே – இவை சம்சரிக்கைக்கு ஈடாக-ப்ரவர்த்தித்ததாய் நீ என்னலாம்படி விழுந்தது -(ப்ரவர்த்திப்பித்தாய் என்றுமாம் கிணற்றின் கரையில் பிரஜையை வாங்காதே -யாறி இருந்த தாயைத் தானே தள்ளினாள் என்னக் கடவது இறே –
இப்படி
விரோதி நிவர்த்தகத்வத்தையும்
பந்தத்தையும்
புருஷகார யோகத்தையும்
முன்னிட்டுத் தாம் ஆஸ்ரயித்த படியைச் சொல்லக்கேட்ட ஈஸ்வரன்
ஸம்ஸாரிகள் நாநா மத பேதங்களாலே நாநா தேவதைகளை ஆஸ்ரயித்து அநர்த்தப்பட்டுப் போகா நிற்க-நீர் நம்மை உறவு அறிந்து ஆஸ்ரயிக்கப் பெறுவதே-இனி உமக்கு நிரந்தர அனுபவமே க்ருத்யம்
நீர் செய்யப் பார்த்தது என் என்று-இவரைக் கொண்டு ஜகத்தைத் திருத்தப் பார்த்து இருக்கிறவன்
ஸா பிப்ராயமாக இவருக்கு கார்யம் செய்ய உத்யோகிப்பாரைப் போலே அருளிச் செய்ய
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் அவன் மைப்படியே –திரு விருத்தம் -93- என்று
ஸம்ஸாரிகள் இழவுக்கு நொந்தவர் ஆகையாலே நீ ப்ரவர்த்திப்பித்த பாஹ்ய மார்க்கத்தாலே உன் பக்கல் விமுகமான ஜகத்தை உன் பக்கலிலே ப்ராவண்யம் உண்டாம்படி பண்ணக் கடவேன் என்று
ஈஸ்வரன் திரு உள்ளக் கருத்தைத் தாமே அருளிச் செய்கிறார் –
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-அவதாரிகை-உம்முடைய மநோ ரதங்கள் எல்லாம் கைபுகுந்து நம் பக்கல் உபகார ஸ்ம்ருதியாலே வணங்கும்படி யானீர் இறே-இனி உமக்கு ஒரு கர்தவ்ய அம்சம் இல்லையே என்ன
எனக்கு ஒரு கர்தவ்யம் உண்டு என்கிறார்-ஸம்ஸாரிகளையும் என் படி ஆக்கி யல்லது நான் ஓர் இடத்தில் இரேன் என்கிறார் நீ கை விட்டால் உன் கார்யம் செய்யப்போந்த நானும் கை விடவோ
சித் சக்தியையும் ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி சக்தியையும் அடியிலே இவை அசித் கல்பமாய்க் கிடக்கிற சமயத்திலே இவற்றினுடைய தய நீய தசையைக் கண்டு புருஷார்த்தத்தை இன்னது என்று அறிந்து
ருசித்துப் பற்றுகைக்கு ஈடாகக் கொடுத்து விட –அவை தான் இதர விஷயங்களை ருசிக்கைக்கும் அதுக்கு ஈடாக ப்ரவர்த்திகைக்கும் பொதுவாகையாலே கர்ம ப்ரவாஹம் அடியாக வந்த இத்தைக் கொண்டு இதர விஷயங்களிலே ஒழுக–நீயும் அனுமதி தானத்தைப் பண்ணி உதாசீனனாய் இருக்கையாலே-இவை ஸம்ஸரிக்கைக்கு ஈடாக ப்ரவர்த்திப்பித்தாய் நீ என்னலாம்படி இருந்தது
பிரஜை கிணற்றில் விழா நின்றால் வாங்காத தாயை தள்ளினாய் என்னக் கடவது இறே –
வணங்கும் துறைகள் பல பல வாக்கி மதி விகற்பால்
பிணங்கும் சமயம் பல பல வாக்கி அவையவை தோறு
அணங்கும் பல பல வாக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கு நின்னோரை இல்லாய் நின் கண் வேட்கை எழுவிப்பனே – -96 –தலைவி வெறி விலக்குவிக்க நினைத்தால் –
வணங்கும்–(தெய்வத்தை) வணங்குகிற
துறைகள் பலபல–வகைகள் பற்பலவற்றை-முதலில் மத உபதேஷ்டாக்கள் குருக்கள் -துறை –
ஆக்கி–உண்டாக்கி
மதி விகற்பால்–அறிவின் வேறுபாட்டால்
பிணங்கும்–(ஒன்றொடொன்று) மாறுபடுகிற
சமய பலபல–மதங்கள் பலவற்றையும்
ஆக்கி–உண்டாக்கி
அவை அவை தோறு–அந்தந்த மதங்கள் தோறும்
அணங்கும் பல பல–தெய்வங்கள் பற்பலவற்றையும்.
ஆக்கி–உண்டாக்கி
நின் மூர்த்தி–(இங்ஙனம்) உனது வடிவத்தைப் -சரீரத்தை -பரவச் செய்து வைத்துள்ளாய்-ஜகத் ஸர்வம் சரீரம் தே அங்க -அங்கீ பாவம்
இணங்கும் நின்னோரை இல்லாய்–உன்னோடு இணைத்துச் சொல்லத் தக்க உன் போல்வார் எவரையுமில்லாதவனே!-இணைவனாம் சத்ருஸ்த்தம் தோற்றி -முதல் -வைலக்ஷண்யம்
நின் கண்–உன்னிடத்திலேயே
வேட்கை–பக்தியை
எழுவிப்பன்–வளரச் செய்வேன்-
ஒன்றும் இலைத் தேவு இவ் வுலகம் படைத்த மால்
அன்றி என யாரும் அறியவே -நன்றாக
மூதலித்துப் பேசி யருள் மொய்ம் மகிழோன் தாள் தொழவே
காதலிக்கும் என்னுடைய கை——40-நண்ணாதாரில் -ஈஸ்வரனும் கூட -திருத்த ஒண்ணாது -என்று
கை விட்ட சம்சாரிகளைத் திருத்த ஒருப்பட்டு ப்ரமாணாந்தர விலஷணமாய் நித்ய நிர்தோஷமான
வேதாந்த வாக்யங்களாலும் சந்தம்ச நியாயங்களாலும் இதிஹாசாதி சித்திதமான ஜகன் நிதரணாதி திவ்ய சேஷ்டிதங்களாலும் சம்சார பீஜமான தேவதாந்திர பரத்வ பிரதிபத்தியை அடி அறுத்து
ஸ்ரீ யபதியான நாராயணனே ஜகத் காரண பூதன் -என்று த்ருட தரமாக உப பாதித்து இப்படி சர்வ ஸ்மாத் பரனான இவன் அரியன் -என்று கை வாங்க வேண்டாத படி திரு நகரியிலே வந்து சந்நிஹிதன் ஆன பின்பு அவனை ஆஸ்ரயிங்கோள் என்று பரோபதேச பிரவ்ருத்தர் ஆகிற ஒன்றும் தேவில் அர்த்தத்தை
ஒன்றும் இலைத் தேவு -என்று துடங்கி அருளிச் செய்கிறார் –எம் பெருமான் திருவடிகளுக்கு
ஆட் சேர்த்து அருளுகையாலே பகவத் கைங்கர்ய அதி சீதள அம்ருத மய தடாக அவகாஹன
ஸூ பிரசன்ன ஆத்மா ஸ்வரூப காத்ர நிரதிசய ஸூ கந்த விகசத் கேசர மால அலங்க்ருத
வஷஸ் ஸ்தலரான ஆழ்வார் திருவடிகளை – வகுளா பிராமம் ஸ்ரீ மத அங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்த்னா என்று பஜிக்கையிலே பக்தி பண்ணா நின்றன என்னுடைய ஹஸ்தங்கள் ஆனவை –
நாம் இவை சம்சரிக்கைக்கு ஈடாக ப்ரவர்த்திப்பிக்கை யாவது என் என்ன –-வணங்கும் துறை இத்யாதி –
ரஜஸ் தமஸ்க்கள் உடையராய் இறே புருஷர்கள் இருப்பது –அவ்வவ குண அநு குணமாக ருசி பிறந்தால்
அவ்வளவிலே -ராஜசராயும் -தாமசராயும் உள்ள அவ்வவோ தேவதைகளே-ஆஸ்ரயணீய வஸ்துக்கள் என்று உபதேசிக்கைக்கு ஈடாக-உபதேஷ்டாக்களான தீர்த்தர்கள் பலவாயும் உண்டாக்கி வைத்தாய்-துறை என்று-தீர்த்தமாய் -அத்தால் தீர்த்தரை நினைக்கிறது –மதி இத்யாதி – மதி பேதத்தால் -ஒருவன் சித்தாந்தித்து –அது தன்னையே பூர்வ பஷமாக கொள்ளும்-இறே வேறு ஒருவன் – இப்படி பிணங்குகைக்கு பாசுரமான அவ்வவோ சாஸ்திரங்கள் பலவற்றையும் உண்டாக்கி வைத்தாய் –அவையவை இத்யாதி –அவ்வவோ சாஸ்த்ரங்களில் பிரதிபாதிக்கப் படுகிற தேவதைகள்
பலவற்றையும் உண்டாக்கி வைத்தாய் –நின் மூர்த்தி பரப்பி வைத்தாய் —யோயோயாம்யாம் தநும்பந்த்யா (ஸ்ரீ கீதை 7 அத்யாயம் )-என்கிறபடியே உனக்குத்த அநு பூதர் ஆனவர்களை பலரையும் உண்டாக்கி வைத்தாய் –பைசல் கைசு நோய் முக்தைசு -என்று பண்டே இவற்றினுடைய அறிவு கேட்டுக்கு மேலே ஷுத்திர தேவதைகளை ஆஸ்ரயணீயர் என்று உபதேசிப்பாரையும் – அவர்களுக்கு உபதேசிக்கைக்கு-பாசுரமான சாஸ்திரங்களையும் – அவ்வவோ தேவதைகளையும் உண்டாக்கி வைத்தாய் –இணங்கு நின்னோரை யில்லாய் –நீ இப்படி பரப்பி வைத்தால் இத்தை வேறு சிலரால் தவிர்க்கலாம்படி இருப்பான் ஒருவன் அல்லை – உன்னோடு ஒக்க நிற்கும்படி – உனக்கு போலி யானாரை-உடையை அல்லை –-இனி நீ செய்யப் பார்த்தது என் என்ன –நின் கண் வேட்கை எழுவிப்பனே –ஸ்வ தந்த்ர்யத்தையும் தவிர்த்து – அவர்கள் தங்கள் அறிவு கெட்டு-இன்பம் அனுபவியாதபடி -பண்ணி – எல்லாரும் என்னைப் போலே உன் பக்கலிலே ஆசை-உடையராம்படி -பண்ணக் கடவேன் –இது சம்சாரத்தில் இருக்கச் செய்தே பகவத் ஜ்ஞானம்-பிறக்கையால் வந்த கர்வோக்தி யிருந்தபடி இறே –நீ கை விட்டாலும் நான் கை விடவோ – அனைவரையும் ஆஸ்ரிதர்-ஆக்குகிறேன் என்று ஈஸ்வரன் இடம் மார் தட்டுகிறார் –
உபாயாந்தரங்களைக் காட்டி வைத்து -ஒன்றே பொருள் எனின் வேறு என்ப வேறு எனின் அன்று என்ப ஆறு சமயத்தார்-பல சமயங்களையும் தேவதைகளையும் நாட்டி வைத்து -அனைத்தும் உன் சரீரமே -உன்னால் அல்லாது வேறு யாராலும் ஒன்றும் செய்ய முடியாதே-இருந்தாலும் ஸ்ரீ வைஷ்ணவ சமயம் ஒன்றே பரவச் செய்வேன் -பிரபத்தி மார்க்கம் ஒன்றையே பரவச் செய்வேன்-ஸ்ரீ மன் நாராயண ரூபியான உன் வடிவத்திலேயே பக்தி செலுத்தும் படி பண்ணுவேன்-குலமகட்க்கு தெய்வம் கொழுநன் -என்றவாறு –ஆழ்வார் எம்பெருமானை நோக்கி ‘ஒப்பற்ற பெருமானே! ஸர்வேச்வரனான நீ ரஜோகுண தமோகுணங்களால் மிக்கவர்-கரும கதியால் உன்பக்கல் வாராதொழியும்படி பலபல தெய்வங்களையும் பலபல மதக்கோட்பாடுகளையும் பலபல உபாஸ்னை விதங்களையும் ஏற்படுத்தி அமைத்து வைத்தாய்; உன்னை நேதராக அடைந்து உஜ்ஜீவிப்பதற்கு இடையூறான
அவ்வெளி வழிகளிலே யான் இறங்கி விலகாதபடி அவற்றிற்கெல்லாம் மூலமான உது ஸ்யரூபத்தை யறிந்த உன்னிடத்திலே அன்பை மிகுதியாகச் செய்வதோடு பிறகும் அங்ஙனஞ்ª சய்யத் தூண்டுவேன்’ என்று இப்பாட்டால் விண்ணப்பஞ் செய்கிறார். -ஆழ்வார் எம்பெருமானது திருவுள்ளத்தின்படி உலகத்தைச் சீர்திருத்தி நல்வழிப்படுத்த அவதரித்தவராதலால் இங்ஙனம் தமது செய்கையைக் கூறுதல் தகும்.–வணங்குந் துறைகள் பலபல வாக்கி= கர்மயோகமென்றும் ஜ்ஞாநயோகமென்றும் பக்தியோகமென்றும் இப்படி பலவகைப்பட்ட உபாயங்களைக் காட்டிவைத்து என்றபடி. மதிவிகற்பில் பிணங்குஞ் சமயம் பலபல வாக்கி‘ஓன்றே பொருளெனின் வேறென்ப்வேறெனின் அன்றென்ப ஆறுசமயபத்தார்” ( திருவள்ளுவமாலை 9. )என்றாற்போல,-ஆம் என்பதை அல்ல என்பதும் அல்ல என்பதை ஆம் என்பதுமான சமயச் சண்டைகள் மதிவிகற்பால் பிணங்குதலாம்.-இப்படி பிணங்குகின்ற மதங்கள் பலவற்றையும் உண்டாக்கி வைத்தவன் எம்பெருமானேயிறே.-அவையவைதோறு வணங்கும் பலவாக்கி = ஒவ்வொரு மதத்திலும் அம்மனென்றும் பிடாரி என்றும் சாத்தனென்றும் கூற்றனென்றும்
பலவகைப்பட்ட தெய்வங்களை ஆராதனைக்கு உரியனவாக நாட்டி என்றபடி, நின்மூர்த்தி பரப்பி வைத்தாய்–அனைத்துக்கும் எம் பெருமானே அந்தராத்மாவாய் அவையெல்லாம் எம்பெருமானுடைய சரீரங்களாயுண்ளள்ளனவாதலால் இங்ஙனஞ் சொல்லப்பட்டது.–இணங்கு நின்னோரையில்லாய் = இங்ஙனே ஜகத்துக்களை நிர்வஹிக்க உன்னாவல்லது வேறொருவரால் முடியுமோ?-சக்தியில் ஒப்பற்றவனன்றோ நீ என்றவாறு.-(நின்கண்வேட்கை யெழுப்பனே) வணங்குந் துறைகள் பலபல ஆக்கியிருந்தாலும் ப்ரபத்தி மார்க்மொன்றையே பரவச் செய்வேன்;-மதிவிகற்பாற் பிணங்குஞ்சமயம் பலபல ஆக்கியிருந்தாலும் ஸ்ரீவைஷ்ணவ சமயமொன்றையே பரவச் செய்வேன்;-அணங்கும் பலபல ஆக்கியிருந்தாலும் ஸ்ரீமந்நாராயண ரூபியான நின் வடிவத்திலேயே பக்தியை நிகழ்த்துவேன் என்பதாகக் கொள்க.
இப்பாட்டுக்கும் கிளவித்துறை வகையில் பொருள் கொள்ள வேண்டில், தலைவி வெறிவிலக்குவிக்க நினைத்தல் இதற்கு துறையாம்.-எம்பெருமானாகிற நாயகனைக் களவொழுக்கத்தாற் கூடி அவனது விரஹத்தில் வருந்தி மெலிகிற (பாசாங்குச ) நாயகி, தன் மெலிவைக்கண்டு கவலைப்பட்ட செவிலித்தாய் கட்டுவிச்சிக்குக் கூறி அவளைக் கொண்டு அவள் மரபின்படி கட்டுவைப்பித்து
நோக்குகையில் முருகக்கடவுள் தோன்றக்கண்டு அதற்கு பரிஹாரமாக ஸ்ரீமந்நாராயணமூர்த்தியின் நிமித்தமாக கொண்ட தன்« நாய் சிறு தெய்வம் பாராட்டலாகிய இவ் வெறியாடடினால் தீருமாயின் தனது கற்புக்குக் குறைவாதலையும் தீராதமாயின்-ஊரலர் மிகுதலையுங் கருதி, கான நாணந்துறந்தாயினும் ரஹஸ்யத்தை வெளியிட்டு வெறிவிலக்குவிக்கத் துணிந்து
பாவநப்ரகர்ஷத்தாலே தலைவனை முன்னிலையாகக் கொண்டு தன்னிலே தான் உரைத்தது இது
“குலமகட்குத் தெய்வம் கொகுகனே” (நீதி நெறிவிளக்கம் 26.)என்றபடி கற்புச்சிறந்த இத்தலைவி தன் தலைவனையே சிறந்த தெய்வமாகவுடையவளாதலால் மற்றைய தெய்வங்களை யெல்லாம் அத் தெய்வத்தின் வடிவங்களாகவே கருதி கூறுகின்றாள்.-வணங்குந் துறைகள் பலபல= கட்டுவைத்தல்,வெறியாடுதல், ஆடுபலி கொடுத்தல், கள்ளும் இறைச்சியும் தூவுதல் முதலியன.
அயலார்க்கு இக்களவொழுக்கம் தெரியவொண்ணாதபடி கட்டுவிச்சியின் நெற்குறியில் முருகக் கடவுளைக் காட்டியவனும்,-வேலன் வழிபாட்டுக்கு வழிமுறையால் உரியனாகுகிறவனும் முதற்பெருந் தெய்வமாகிய நீயேயாயினும் அத்தெய்வத்தினால்-என் நோய் சிதைக்கப்படுதல் முழுமுதற் கடவுளாகிய ஒப்பற்ற உன்னை நேரில் தலைவனாகக் கொண்ட எனது கற்பிற்குக் குறைவாதலின் யான் அதனை உடன்படேன் என்றவாறு.
வணங்கும் துறைகள் பல பல வாக்கி-ஆஸ்ரயிக்கைக்கு இழியும் தீர்த்தங்களை நாநா விதமாக்கி
அதாவது-தத் தத் மத ப்ரவர்த்தக புருஷர்களைச் சொன்னபடி–மதி விகற்பால் பிணங்கும் சமயம் பல பல வாக்கி-பரஸ்பர விருத்தங்கள் ஆகையாலே மதி பேதம் பிறக்கையாலே–அந்யோன்யம் விவாத சீலமான ஸாங்கேதிக ஸித்தாந்தங்களையும் நாநா விதமாக்கி-அவை யவை தோறு அணங்கும் பல பல வாக்கி
அந்த ஸித்தாந்தங்கள் தோறும் ஆஸ்ரயணீயமான தேவதைகளையும் நாநா விதமாக்கி–பல பல என்ற
வீப்சையாலே அந்த தேவ ஜாதிகளுடைய-ஸ்வரூப பேதத்தையும் அவாந்தர பேதத்தையும் நினைக்கிறது–நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்-உன்னுடைய சரீரமானத்தை விஸ்தீர்ணமாக்கி வைத்தாய்–இணங்கு நின்னோரை இல்லாய்-இத் தேவ ஜாதிகளில் இணைத்துச் சொல்லலாம்படி உன் போல்வாரை உடையான் அல்லாதவனே–நின் கண் வேட்கை எழுவிப்பனே – இப்படி ஸமாப்யதிக தரித்ரனாய்-ஸர்வ சரீரியான உன் பக்கலிலே அபிநிவேசத்தைப் பிறப்பிப்பன் –
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்–அணங்கும் பல பல வாக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்-தன் மார்க்க ப்ரவர்த்தந பூஜா தத் விக்ரஹ ஸ்தாபன பஜ நாதிகளையும்-தத் தத் தேவதா விக்ரஹ துல்யத்வாதி பிரம விஷயமாம் படியான உன் திவ்ய மங்கள விக்ரஹங்களையும் எங்கும் வைத்தாய்–இணங்கு நின்னோரை இல்லாய்-உன் போல்வாரையும் உன் ஸமர் அல்லாரையும் இல்லாத-நின் கண் வேட்கை எழுவிப்பனே –-இங்கனே உன் பிரகிருதி பரவசராய் உன் நிக்ரஹத்தால் தானே அந்நிய விஷய ப்ரவணர்க்கு அடியேன் எங்கனே உன்னில் ப்ராவண்யத்தைப் பிறப்பிக்கக் கடவேன்-எங்கனே என்பது இதில் அர்த்த ஸித்தம் –
தாத்பர்யம்-இதில் தம்மைப்போலே எல்லாரையும் எம்பெருமான் திருவடிகளில் ஆஸ்ரயிக்கப் பார்க்க
அவர்கள் விஷயாந்தர ப்ராவண்யத்தில் இருப்பதைக் கண்டு-மோக்ஷ ஹேதுவான சரீரம் கொடுக்காமல் ஸம்ஸாரத்தில் உழலவே அத்தைக் கொடுத்து பொதுவாக பந்த மோக்ஷ ஹேதுக்கள் ஆகின்றது அன்றோ-மோக்ஷ உபயோகி மட்டும் அல்லவே-ஈஸ்வரன் கெடுத்தான் என்று அவனை வெறுத்து -கொடுத்தவனையே கெடுத்தவன் என்று வெறுக்கும் படி அன்றோ உனது செயல்கள்
இவர்களுக்கு எப்படியாகிலும் உன்னையே ஆஸ்ரயிக்கும் படி ப்ரீதியை வளர்த்து-ஊரும் நாடும் உலகும் என்னைப் போலவே ஆக்குவேன் என்று மார் தட்டுகிறார்-ரஜோ தமோ குணம் -சத் சாஸ்திரம் கற்று சத்வ மூர்த்தியான உன்னை விரும்பாமல் பரஸ்பர விருத்தமாய் மதங்ககள் குருக்கள்-ருத்ராதி தேவதைகளையும் உருவாக்கி சேதனர்களுக்கு அறிய வல்ல -செய்ய வல்ல சக்தியையும் கொடுத்து வைத்தாய்-அவற்றைக் கொண்டு அந்த தேவர்களையே தொழுது சம்சாரிகளாகவே திரியா நின்றார்கள்
நீ அவர்களை உபேக்ஷித்தாலும் அவர்களைத் திருத்தி-உன்னிடம் ஆஸ்ரயிக்கும் படி உனது பக்கலிலே ப்ரீதியை எழுவிப்பன் என்கிறார்
4-10-ஒன்றும் தேவும்-ப்ரவேஸம்-
ஒரு நிலத்திலே ஒரு கூறு உவர்ந்து கிடக்க மற்றைக் கூறு விளைவதும் அறுப்பதுமாய் இருக்குமாறு போலே,
நித்ய விபூதியும் நித்ய ஸூரிகளும் பகவத் அனுபவமே பொழுது போக்காகச், சொல்லா நிற்க, இவ்வுலகமாகிற பாலை நிலத்தில்
உள்ளார் சிற்றின்பங்களிலே ஈடுபாடுடையவர்களாய் இவற்றினுடைய லாபாலாபங்களே பேறும் இழவுமாய்ப் பகவானிடத்தில்
விருப்பு இல்லாதவர்களாய்த் துன்பப்படுகிற படியை நினைத்து, ‘அவர்களைத் திருத்துவோம்’ என்று பார்த்து,
சர்வேசுவரன் உளனாய் இருக்க நாம் இருந்து துன்பப் பட வேண்டுமோ?’ என்று, ‘தேவர் உள்ளீராய் இருக்க,
இவர்கள் இப்படி நோவுபட விட்டிருக்கை போருமோ?’ இவர்களையும் திருத்தி நல் வழி போக்க வேண்டும்.’
என்று அவன் திருவடிகளிலே சரணம் புக,
அவன் இவரை நோக்கி, ‘நம் குறையன்று காணும்; இவர்கள் அறிவில்லாத பொருள்களாயிருக்க நாம் நினைத்தபடி
காரியங்கொள்ளுகிறோம் அல்லோமே? அறிவுடையராய பின்பு இவர்கள் பக்கலிலேயும் ருசி உண்டாக வேண்டுங்காணும்.
உம்மைத்தொகை-தம் பக்கல் ருசி என்றே உண்டே -கிருஷிகன் அவனே –
ருசி உண்டாகவேணுங்காணும்’ என்றது, ‘ருசி முன்னாகப் போகாமையாலே வைதிக புத்திரர்கள் மீண்டார்களே யன்றோ? என்றபடி.
தாளாற் சகங்கொண்ட தாரரங்கா!பண்டு சாந்திபன் சொல் கேளாக் கடல் புக்க சேயினை மீட்டதுங் கேதமுடன்
மாளாப் பதம் புக்க மைந்தாரை மீட்டதும் மாறலவே மீளாப் பதம் புக்க மைந்தரை நீயன்று மீட்டதற்கே?’– என்பது திருவரங்கத்துமாலை.
மீண்டு வருதல் இல்லாத தன்மையையுடைய மோக்ஷத்தைப் பெறும்போது; நாமும் உம்மைப் போன்று
ஆவன எல்லாம் செய்து பார்த்தோம்;
முடியாமையாலே கண்ண நீரோடே காணும் கை வாங்கினோம்,’ என்ன,
(கண்ண நீரோடே மீளாமல் சேர்த்து -பிள்ளை லோகாச்சார்யார் அருளுவார்-மீண்டும் ஸ்ருஷ்ட்டி செய்து அருளுவான் )
இவர்களுக்கும் ருசி இல்லையேயானாலும் பேற்றுக்கு வேண்டுவது இச்சை மாத்திரமே யாயிற்று;
ஆன பின்பு, இந்த இச்சையையும் தேவரீரே பிறப்பித்துக் கொள்ளுமித்தனை அன்றோ?’ என்று,
ஸ்ரீ கிருஷ்ணன், துரியோதனாதியர்களை அழியச் செய்து, வெற்றி கொண்டு நிற்கச் செய்தே,
துரியோதனாதியர்கள் பக்கல் உண்டான அன்பினாலே உதங்கன் வந்து,
உனக்குச் சம்பந்தம் ஒத்திருக்க, பாண்டவர்களிடத்தில் அன்புள்ளவனாய்த் துரியோதனாதியர்களை
அழியச் செய்தாயே?’ என்ன, ‘அவர்களை ஆந்தனையும் பொருந்த விட்டுப் பார்த்தோம்; அவர்கள்
பந்துக்கள் வாழ்ந்தால் நாங்கள் வாழோம்!’ என்ற பின்பன்றோ நாம் அவர்களை அழியச் செய்தது?’ என்ன,
நீ எல்லாப் பொருள்களையும் நியமிக்கின்றவனான பின்பு அவர்களுக்கு இசைவைப் பிறப்பித்துப் பொருந்த விட்டுக் கொள்ளாது
விட்டது என்?’ என்று அவன் நிர்ப்பந்தித்தாற் போலே,
உதங்க ப்ரஸ்னத்துக்கு உத்தரம் இல்லை என்பர் -இவரும் நிர்ப்பந்திக்க,
சேதநரான பின்பு ருசி முன்பாகச் செய்ய வேண்டும் என்று இருந்தோம் இத்தனை காணும்;
அது கிடக்க, உமக்குக் குறை இல்லையே?
உம்மைக் கொடு போய் வைக்கப் புகுகிற தேசத்தைப் பாரீர்,’ என்று பரம பதத்தைக் காட்டிக் கொடுக்க-கண்டு
கிருதார்த்தரானார் மேல் திருவாய்மொழியிலே.
பரம பதத்தைக் காட்டிக் கொடுக்க’ என்றது, மேல் திருவாய் மொழியிலே யுள்ள
ஒண் தொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்பக், கண்ட சதிர்
கண்டொழிந்தேன்’ என்ற பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றி.
பின்னையும் தம் செல்லாமையாலே, சர்வேசுவரன் கை விட்ட இவ் வுலகத்தையும் திருத்தப் பார்க்கிறார்.
பின்னையும் – ஈசுவரன் கை விட்ட பின்பும். ‘அருள் கொண்டாயிரம் இன் தமிழ் பாடினான்,
அருள் கண்டீர் இவ் வுலகினில் மிக்கதே,’ என்றும்,
நின் கண் வேட்கை எழுவிப்பனே’ என்றும் சொல்லுகையாலே ‘தம் செல்லாமையாலே’ என்கிறார்.
ஈசுவரன் கை விட்டிருக்க, இவர் திருத்தினால்
திருந்துவர்களோ?’ என்னில், ‘உபரிசரவசு வினுடைய உபதேச சுத்தியாலே பாதாளத்தை யடைந்தவர்கள்
திருந்தினாற் போன்று,(ஸ்ரீ விஷ்ணு தர்மத்தில் உள்ள வ்ருத்தாந்தம் ) மஹா பாகவதரான
இவருடைய கடாக்ஷ விசேஷத்தாலும் உபதேச சுத்தியாலும் திருந்துவார்கள்,’என்க.
முதல் திருவாய் மொழியிலே, தம்முடைய அனுபவத்திற்கு உறுப்பாக, அவன் காட்டிக் கொடுத்த பரத்வத்தை அநுசந்தித்து,
அது தன்னை ‘உளன் சுடர்மிகு சுருதியுள்’ என்று சுருதிச் சாயையாலே விரித்து அருளிச் செய்தார்,
சுவானுபவந்தான் பிறர்க்கு உறுப்பாய் இருக்கையாலே, அறிவுடையராகில் இவ்வளவு அமையுமே அன்றோ?’ என்று பார்த்து.
பின்னர் இதிகாச புராணக் கூற்றுகளாலே-விபவே – பரத்வத்தை அருளிச்செய்தார், ‘திண்ணன் வீடு’ என்ற திருவாய்மொழியில்.
அதிலும் அவர்கள் திருந்தாமையாலே, ‘அவர்கள் தம்மையே உத்தேசித்தே பகவானுடைய பரத்வத்தை விளக்கி
விரித்துப் பேசுவோம்’ என்று பார்த்து, அதற்கு உறுப்பாக, மற்றைத் தேவர்கள் பக்கல் உண்டான பரத்வ சங்கையை
அறுத்துக் கொண்டு, பகவானுடைய பரத்வத்தை விளக்கி விரித்துப் பேசுகிறார் இத் திருவாய் மொழியில்.
அன்றிக்கே, முதல் திருவாய்மொழியிலே பரத்வத்திலே பரத்துவத்தை அருளிச் செய்தார்;
அது இவ்வுலக மக்களுக்கு எட்டா நிலமாய் இருந்தது.
அதற்காக, அவதாரத்திலே _ பரத்வத்தை அருளிச்செய்தார், ‘திண்ணன் வீடு’ என்ற திருவாய்மொழியில்.
அதுவும் பரத்வத்திலே பரத்துவத்தை ஒத்ததாய்ப் பிற்பாடர்க்கு எட்டிற்று இல்லை.
இரண்டும் தேசத்தாலும் காலத்தாலும் கை கழிந்தன.
அக்குறை ஒன்றும் இன்றிக்கே, ‘பின்னானார் வணங்குஞ்சோதி’ என்கிறபடியே, பிற்பாடர்க்கும் இழக்க வேண்டாத
அர்ச்சாவதாரத்திலே பரத்வத்தை அருளிச்செய்கிறார் இத் திருவாய் மொழியில் என்னுதல்.
எம்பார், ‘சிலர் எல்லா வேத சாஸ்திரங்களும் கை வரப் பெற்று வைத்து, ‘பர தத்வம் இன்னது’ என்று அறுதியிட மாட்டாதே,
சேம்புக்குக் கூராச் சிற்றரிவாள் உண்டோ? நமக்கு வணங்கத் தகுந்தவர் அல்லாதார் உளரோ?’ என்று கண்ட இடம் எங்கும்
புக்குத் தலை சாய்த்துத் தடுமாறி நிற்க, எம்பெருமானார் தரிசனத்தில் எத்தனையேனும் கல்வி இல்லாத பெண்களும்
(திரிபுரா தேவி -அகனங்க ஆழ்வான் திரு பத்னி )
மற்றைத் தெய்வங்களை அடுப்பிடு கல்லைப் போன்று நினைத்திருக்கிறது,
இந்த ‘ஒன்றுந் தேவும்’ என்ற திருவாய்மொழி உண்டாகையினாலே அன்றோ? என்று அருளிச் செய்வர்;
எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளை அடைந்தவர்கள் பிரமன் முதலாயினாருடைய குறைவற்ற செல்வத்தைத்
துரும்புக்குச் சமமாக நினைப்பார்கள்,’ என்னக் கடவது அன்றோ?
பலாப்பழம் -எடுக்க கூளம் பலாப்பிசை/ தேவதாந்த்ர கலந்த கட்டி –
திராச்சா பாகம் -பகவத் பரம் மாத்திரம் -கலக்கம் இருக்காதே –
அதே போலே திருவாய் மொழி ஈஸ்வரனுக்கு மங்களா சாசன பரராக்க உபதேசம் ஆழ்வார் –
வேதம் போலே பலருக்குமாக இல்லையே –
கார்த்த வீரியார்ஜூனன் என்பான் ஒருவன் தான் இராச்சிய பரிபாலனம் செய்கிற காலத்தில் யாரேனும் ஒருவர்
பாப சிந்தனை பண்ணினார் உளராகில் அவர்கள் முன்னே கையும் வில்லுமாய் நின்று அவற்றைத் தவிர்த்துப் போந்தான் என்றால்,
இது பொருந்தக் கூடியதே,’ என்று இருப்பர்கள்; ஒரு அற்ப மனிதனுக்கு ‘இது கூடும்’ என்று இருக்கிறவர்கள்,
சர்வசத்தியாய் ‘சர்வாந்தர்யாமியாய் இருக்கிற சர்வேசுவரன் இப்படிப் பரந்து நின்று நோக்கும்,’ என்றால்,
மக்கள், ‘இது பொருத்தம் அற்றது’ என்று இருப்பர்கள். ‘ஜாதி, பொருள்கள் தோறும் நிறைந்து தங்கியிருக்கும்’ என்றால்,
அசித் பதார்த்தத்திற்கு இது கூடும்’ என்று இருப்பர்கள்;-கோத்வம் பசு முழுவதும் வியாபிப்பதை ஒத்துக் கொள்கிறார்கள்
பரம சேதநனாய் இருப்பான் ஒருவன் பரந்து நிறைந்து தங்கியிருப்பான்,’ என்றால், ‘இது கூடாது’ என்று ஐயப்படா நிற்பார்கள்.
தங்கள் பாப ப்ரஸுர்யத்தாலே –
இனி, ‘இவர் திருத்தப் பார்த்த வழிதான் யாது?’ என்னில், எல்லாரும் ஒரு சேர விரும்புவது சுகங்கள் உண்டாகவும்,
துக்கங்கள் இன்றிக்கே ஒழியவுமாய் இருக்கச் செய்தே, விரும்பிய சமயத்தில் விரும்பப்பட்ட சுகம் வரக் காணாமையாலும்,
விருப்பம் இல்லாத துக்கம் வரக் காண்கையாலும் ‘இவற்றை எல்லாம் நியமிக்கின்றவனாய் நின்று நுகர்விக்கிறான்
ஒருவன் உளன்,’ என்று கொள்ள வேண்டி இருந்தது.
அது என்? சுக துக்கங்களுக்குக் காரணமான புண்ணிய பாவங்கள்
நுகர்விக்கின்றன என்று கொண்டாலோ?’ என்னில்,
அந் நல்வினை தீவினைகளினுடைய தன்மையை ஆராய்ந்தவாறே, அவை, அறிவு அற்றனவாய் இருப்பன
சில கிரியா விசேடங்கள் ஆகையாலே,அப்போதே நசிப்பனவாம்;
இனி ஒரு மரத்தைச் செப்பன் இடுங்காலம் வந்தால், கருத்தாவை ஒழிய வாய்ச்சி முதலானவைகட்கு
ஒரு செயல் கூடாதது போன்று, அந்தக் கிரியைகளுக்கும் ஒரு இறைவனை ஒழியப் பலத்தைக் கொடுக்கும் ஆற்றல் கூடாமையாலே
ஒரு இறைவனைக் கொள்ள வேண்டி வரும்;
இனி, ‘அபூர்வம்’ என்று ஒன்றைக் கற்பித்து
அது அதிருஷ்ட ரூபேண நின்று பலத்தைக் கொடுக்கிறது’ என்பதனைக் காட்டிலும்,
ஒரு பரமசேதநன் நெஞ்சிலே பட்டு அவனுடைய தண்டனை உருவத்தாலும் திருவருள் உருவத்தாலும்
இவை பலிக்கின்றன,’ என்று கூறுதல் நன்றே அன்றோ?
இனி, ‘அந்தப் பரமசேதநன் ஆகிறான் யார்?
அவனுடைய சொரூப சுபாவங்கள் இருக்கும்படி எங்ஙனே? அவனுடைய செயல்கள் இருக்கும்படி எங்ஙனே?’ என்னில்,
அவற்றைப் பிரமாணம் கொண்டு அறியவேண்டும். அவற்றுள், பிரத்தியக்ஷம் முதலான பிரமாணங்கள் இந்திரியத்தாலே
காண முடியாத பொருளைக் காண்பதற்குப் பயன்படாமையாலே அவை பிரமாணம் ஆக மாட்டா;
இனி, ‘ஆகமம் முதலானவைகள் பிரமாணம் ஆனாலோ?’ என்னில், புருஷனுடைய புத்தியால் வருகின்ற வஞ்சகம்
முதலான தோஷங்கள் அவற்றிற்கு உள ஆகையாலே, அவையும் பிரமாணம் ஆக மாட்டா;
இனி, பதினான்கு வகைப்பட்ட வித்தியைகளுள் முக்கியமானதாய், நித்தியமாய், புருஷனாலே செய்யப்படாதது ஆகையாலே
வஞ்சகம் முதலான தோஷங்கள் இல்லாததாய், சாத்துவிக புராணங்களாலே விரித்துரைக்கப்படுகின்ற வேதம் பிரமாணம் ஆக வேண்டும்.
மக்கள் நினைத்தபடி இன்ப துன்பங்கள் வாராமையாலே ஒரு சேதனன் உளன்’ என்று அவன் செய்யும்படியை
அனுமானத்தாலே சாதித்தார் மேல்.
அவனுடைய ஸ்வரூபம் ஸ்வபாவம் முதலானவை இருக்கும்படி எங்ஙனே?’ என்ன,
பிரமாணங்கொண்டு அறிய வேண்டும்’ என்று பிரமாணத்தை அறுதியிடுகிறார்,
அவற்றைப் பிரமாணங்கொண்டு அறியவேணும்’ என்று தொடங்கி.
பிரத்யக்ஷம், அநுமானம், உபமானம், ஆகமம், அர்த்தாபத்தி, அபாவம், சம்பவம், ஐதிஹ்யம் எனப் பிரமாணங்கள் எட்டு வகைப்படும்.
அவற்றுள்,மநுவினாலே அங்கீகரிக்கப்பட்ட பிரமாணங்கள் மூன்று; அவை, பிரத்தியக்ஷம், அநுமானம், ஆகமம் என்பனவாம்.
அவற்றையே, இங்குப் பிரத்தியக்ஷம் முதலான பிரமாணங்கள்’ என்று அருளிச்செய்கிறார். ‘
முதலான’ என்றதனால், அநுமானத்தைக் கொள்க. ‘ஆகமம் முதலானவைகள்’ என்றது, பாசுபத சாங்கிய யோகங்களைக் குறித்தபடி.
வஞ்சகம் முதலான தோஷங்கள்’ என்றது, பிரமம், பிரமாதம், அசக்தி இவைகளை.
பதினான்கு வகைப்பட்ட வித்தியைகள்’ என்றது, இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்னும் வேதங்களையும்;
சிக்ஷை, வியாகரணம், கல்ப சூத்திரம்,நிருத்தம், ஜோதிஷம், சந்தோவிசிதி என்னும் ஆறு அங்கங்களையும்;
நியாயம், மீமாம்சை, புராணம், தர்மசாத்திரம் என்னும் உபாங்கங்கள் -நான்கனையுமாம்.
ஆயுர் வேதம் -அர்த்த சாஸ்திரம் -தனுர் வேதம் -காந்தர்வ வேதம் -சேர்த்தும் சொல்வர் –
சாத்விக புராணங்களாலே விரித்துரைக்கப்படுகின்ற வேதம்’ என்றது, என்னை?
வேதார்த்தத்தை நிர்ணயம் செய்வதற்கு உபப்பிருஹ்மணங்கள் வேண்டுமோ?’ எனின்,
வேதார்த்தத்தை அறுதியிடுவதற்கு, சர்வ சாகைகளிலும் சர்வ வேதாந்த வாக்கியங்களிலும் நிறைந்த அறிவு
படைத்திருத்தல் வேண்டும்; அத்தகைய ஞானம் படைத்தவர்கள் மஹரிஷிகளேயாவர்; ஆதலால், ‘இதிஹாச புராணாப்யாம் வேதம்
ஸம்உபபிரும்ஹயேத்’, ‘பிபேதி அல்ப சுருதாத் வேதோமாமயம் பிரதரிஷ்யதி’ என்கிறபடியே, மஹருஷிகள் வசனங்களாகிய
உபப் பிருஹ்மணங்கள் வேண்டும். ‘
வேதார்த்தம் அறுதியிடுவது ஸ்மிருதி இதிகாச புராணங்களாலே’ என்பது, ஸ்வாமி பிள்ளை லோகாசாரியர் ஸ்ரீ சூக்தி. (ஸ்ரீவசன பூஷணம்)
சாத்விக புராணங்கள்’ என்று விசேடித்துக் கூறுவதற்குக் கருத்து என்?’ என்னில், புராண கர்த்தாக்கள் எல்லாரும் பிரமன் பக்கலிலே
சென்று இவ் விரண்டு காதைகளைக் கேட்டுப் போந்து தாங்கள் தாங்கள் புராணங்கள் செய்தார்கள்;
அந்தப் பிரமனும் ‘ஸ்ரீமந் நாராயணர் உலகங்களைப் படைப்பதற்கு முன்னே பிரமனைப் படைத்தார்;
அந்த நாராயணர் அந்தப் பிரமனுக்கு வேதங்களையும் உபதேசித்தார்,’ என்கிறபடியே, சர்வேசுவரனாலே படைக்கப்பட்டவனாய்
அவனாலே ஞானத்தையடைந்தவனுமாய் இருக்கச் செய்தேயும், ‘முனி புங்கவர்களான தக்ஷர் முதலானவர்களாலே கேட்கப்பட்டவரும்
முக் காலங்களையும் உணர்ந்தவரும் தாமரை மலரில் உதித்தவருமான பிரமாவானவர், ‘உள்ளவாறு சொல்லுகிறேன், என்று சொன்னார்,’
என்கிறபடியே, முனிவர்களைப் பார்த்து உபதேசிக்கிற விடத்திலே, ‘நான் முக் குணங்களுக்கும் வசப்பட்டவனாய் இருப்பேன்;
தமோ குணம் மேலிட்ட போதும் ரஜோகுணம் மேலிட்டபோதும் சொன்னவற்றைப் போகட்டு,
சத்வ குணம் மேலிட்ட சமயத்தில் சொன்னவற்றை எடுத்துக் கொள்ளுங்கோள்,’ என்றானே அன்றோ?
இனி, ‘தாமச கல்பங்களிலே அக்நி சிவன் இவர்களுடைய மாஹாத்மியமானது பரக்கச் சொல்லப்படுகிறது;
இராஜச கல்பங்களிலே பிரமனுடைய மாஹாத்மியம் அதிகமாகச் சொல்லப்படுவதை அறிகிறார்கள்;
சாத்விக கல்பங்களிலே விஷ்ணுவினுடைய மாஹாத்மியம் அதிகமாகச் சொல்லப்படுகிறது’ என்னா நின்றதே அன்றோ? ஆகையாலே
குண பேதங்களாலே புருஷ பேதங்களைக் கொண்டு அவ் வழியாலே புராண பேதம் கொள்ளலாய் இருந்தது.
ஆகையாலே, ‘சாத்விக புராணங்களாலே அறியப்படுகின்ற வேதம்’ என்று விசேடித்துச் சொல்ல வேண்டியிருந்தது.
ஆதலால், சாத்விக புராணங்களாலே விரிக்கப்படுகின்ற வேதமே பிரமாணமாகக் கொள்ளவேண்டி இருந்தது,’ என்க.
அந்த வேதத்துக்கு மூன்று குணங்களால் வருகின்ற குற்றம் இல்லையே யாகிலும்,இரு வகைப்பட்ட உலகங்களோடு கூடின
சர்வேசுவரனை விளக்கிப் பேச வந்ததாகையாலே, ‘மூன்று குணங்களை யுமுடைய மக்களை விஷயமாக உடையன வேதங்கள்.’ என்கிறபடியே,
முக் குணங்களையும் உடையவர்களாய் இருக்கின்ற மக்களை விஷயமாக வுடையதாய் அவர்களுக்கு நலம் சொல்லப் போந்தது ஆகையாலே,
அவர்களுடைய குணங்கட்குத் தகுதியாக நலம் சொல்லுமது உண்டாய் இருக்கும் வேதத்துக்கும்.
அது அங்ஙனம் சொல்லிற்றேயாகிலும், ‘எல்லா இடங்களிலும் நிறைந்த தண்ணீரில் வேட்கை யுடையவனுக்கு எவ்வளவு நீர்
பிரயோஜனப்படுகிறதோ, அறிந்த பிராமணனுக்கு எல்லா வேதங்களிலும் அவ்வளவே பிரயோஜனப் படுகின்றது,’ என்கிறபடியே,
ஆறு பெருகி ஓடாநின்றால், நீர் வேட்கையால் வருந்தின ஒருவன் தன் விடாய் தீருகைக்கு வேண்டுவது எடுத்துக் கொள்வானே அல்லது.
ஆற்று நீரை அடங்கலும் வற்றுவிக்க வேண்டும் என்னும் நிர்ப்பந்தம் இல்லையே யன்றோ அவனுக்கு?
அப்படியே, முமுக்ஷூ வானவன் இந்த வேதத்தில் தனக்குக் கொள்ள வேண்டியதான அமிசத்தை யன்றோ அறிய வேண்டுவது?
இந்த உதரத் தெரிப்பு, த்ரைகுண்ய விஷயமான வற்றுக்குப் பிரகாசகம். வத்சலையான மாதா, பிள்ளை பேழ்கணியாமல் மண் திண்ண
விட்டுப் பிரதி ஒளஷதம் இடுமா போலே, எவ் வுயிர்க்கும் தாய் இருக்கும் வண்ணமான இவனும், ருசிக்கு ஈடாகப் பந்தமும் பந்தம்
அறுப்பதோர் மருந்தும் காட்டுமிறே,’ என்னும் ஆசார்ய ஹிருதய வாக்கியங்கள் (13, 14. சூ.) இங்கு அநுசந்தேயங்கள்.
இனி,அந்த வேதந்தான் ‘பூர்வ பாகம்’ என்றும், ‘உத்தர பாகம்’ என்றும் இரண்டு வழிகளாலே பிரிவுண்ணக் கடவதாய்,
அதில் பூர்வ பாகமானது, ஆராதனத்தில் தன்மையைச் சொல்லியும், சுவர்க்கம் முதலான பேறுகளையும் அவற்றை யடைதற்குரிய
சாதனம் முதலான வற்றையும் சொல்லியும் அவற்றிலே நின்று பரக்குமதாய் இருக்கும்;
இனி, உத்தர பாகமானது, சர்வேசுவரனுடைய சொரூப ரூப குணங்களைப் பரக்க நின்று விளக்கிப் பேசும்.
இனி, பற்றத் தகுந்ததையும், விடத் தக்கவைகளையும் அறுதியிடுவது எது?’ என்ன,
அதற்கு விடை அருளிச் செய்கிறார், ‘இனி, இந்த வேதந்தான்’ என்று தொடங்கி.
ஆதௌ வேதா: பிரமாணம் ஸ்மிருதி: உபகுருதே ஸேதிஹாஸை: புராணை: நியாயை: ஸார்த்தம் த்வத் அர்ச்சாவிதிம் உபரிபரிக்ஷீயதே பூர்வபாக:
ஊர்த்வோபாக: த்வத் ஈகா குண விபவ பரிஜ்ஞாபநை: த்வத் பதாப்தௌ வேத்யோ வேதைச் ச ஸர்வை: அஹம் இதி பகவந்! ஸ்வேந ச வியாச கர்த்த
பகவானே! வேதங்களானவை முதலிலே (வேறொரு பிராமணத்தை விரும்பாமல் தாமாகவே) பிரமாணமாகின்றன;
மநு முதலான ஸ்மிருதிகளானவை, இதிகாசங்களோடு கூடின புராணங்களோடும் பூர்வ உத்தர மீமாம்சை களோடுங்கூடி
(அந்த வேதங்களுக்குப் பொருள் விவரணம் செய்தலாகிற) உபகாரத்தைச் செய்கின்றன;
(அந்த வேதத்தில்) கர்ம காண்டம் எனப்படுகிற பூர்வ பாகமானது, தேவரீருடைய திருவாராதன முறைமையைச்
சொல்லும் வகையில் முடிகின்றது; பிரம காண்டம் எனப்படுகின்ற உபநிடத பாகமானது,
தேவரீருடைய செயல்கள் குணங்கள் விபூதிகள் ஆகிய இவற்றை விளங்கத் தெரிவிப்பதனாலே தேவரீருடைய திருவடிகளைச் சேர்வதில் முடிகின்றது;
எல்லா வேதங்களாலும் அறியக் கூடியவன் நானே,’ என்று
தேவரீர் அருளிச் செய்ததும் உண்டேயன்றோ?’ என்பது ஸ்ரீ ரங்க ராஜஸ்தவம்.
இனி, வணங்குவதற்குரிய பரம்பொருள் யாது?’ என்றால், உலகத்தைப் படைத்தல் முதலிய முத்தொழில்கட்கும் காரணமாய்
இருக்கும் பொருள் எதுவோ, அதுவே, வணங்கத் தக்க பொருள் என்று காரண வாக்கியங்கள் ஒருங்க விட்டு வைத்தன.
எங்ஙனே?’ என்னில்,
எதனிடத்திலிருந்து இந்தப் பொருள்கள் உண்டாகின்றனவோ,எதனால் உண்டான பொருள்கள் பிழைத்திருக்கின்றனவோ,
நாசத்தை யடைந்து எதனிடத்தில் இலயப் படுகின்றனவோ, அதனைத் தியானம் பண்ணுவாயாக;
அது தான் பரம்பொருள்,’ என்று கொண்டு,
மற்றைப் பொருள்கட்குத் தியானம் பண்ணத் தகாததாகுகையை முன்னாக உலகத்திற்குக் காரணமாயுள்ள பொருளுக்குத்
தியானம் பண்ணத் தகுந்ததாகுகையை விதித்துக் கொண்டு நின்றது;
காரணப் பொருளே தியானம் செய்வதற்குரியது,’ என்னக் கடவதன்றோ?
‘யதோவா இமாநி பூதாநி ஜாயந்தே யேந ஜாதாநி ஜீவந்தி யத்பிரயந்தி அபிஸம்விசந்தி
தத்விஜிஜ்ஞாஸஸ்வ தத்பிரஹ்ம’–என்பது, தைத்திரீய. பிருகு. 1.
எல்லா வாக்கியங்களும் ஏவகாரத்தோடு கூடியவை,’ என்கிற நியாயத்தாலே,
இங்கு, ‘தத்விஜிஜ்ஞாஸஸ்வ’ என்ற தொடர்மொழியை ‘ததேவ
விஜிஜ்ஞாஸஸ்வ’ என்று ஏவகாரத்தோடு கூட்டினால், ‘அந்தப் பொருளையே தியானம் பண்ணுவாய்’ என்ற பொருள் போதரும்;
அவ்வாறு போதரவே, மற்றைப் பொருள்கள் தியானம் செய்யத் தக்கவையல்ல’ என்ற பொருளும் கிடைக்குமே யன்றோ?
அதனைத் திருவுள்ளம் பற்றியே, ‘மற்றைப் பொருள்கட்கு’ என்று தொடங்கி அருளிச் செய்கிறார்.
தியானம் செய்தற்குரிய அந்தப் பொருளை,
சோமபானம் செய்வதற்குரிய சுவேத கேதுவே! இந்த உலகமானது படைப்பதற்கு முன்னே
சத்’ என்று சொல்லக் கூடியதாய் இருந்தது,’ என்று ‘சத்’ என்ற சொல்லால் சொல்லி, வேறு சாகைகளிலே நின்று,
இந்த உலகமானது படைப்பதற்கு முன்னே பிரஹ்மம் என்ற ஒன்றேயாய் இருந்தது,’ என்று பிரஹ்ம சப்தத்தாலே சொல்லி,
அந்த பிரஹ்ம சப்தந்தானும் அநேக பொருள்களைக் கூறுமாகையாலே, ‘இந்த உலகமானது படைப்பதற்கு முன்னே
ஆத்மா என்ற ஒன்றேயாய் இருந்தது,’ என்று ஆத்ம சப்தத்தாலே சொல்லி, அந்த ஆத்ம சப்தமும் பல விடங்களிலும்
ஒட்டிக் கொள்ளலா யிருக்கையாலே, ‘நாராயணன் ஒருவனே இருந்தான்,’ என்று
நாராயணன் என்ற சொல்லுக்கு உரிய பொருளாகச் சொல்லி நின்றது.
காரணந்து த்யேய:’ என்பது, அதர்வசிகை.
ஸதேவ ஸோம்யே தமக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம்’– என்பது, சாந்தோக்யம்.
பிரஹ்ம வா இதம் ஏகமேவ அக்ர ஆஸீத்’- என்பது, வாஜஸநேயம்.
அநேக பொருள்களைக் கூறுமாகையாலே’ என்றது, ‘பிரஹ்மம் என்ற சொல் -வேதம் முதலிய
பொருள்களைக் காட்டுமாகையாலே’ என்றபடி.
ஆத்மா வா இதம் ஏக ஏவ அக்ர ஆஸீத்’ என்பது, ஐதரேயம்.
ஆனால், பின்னர் சத்தும் இல்லை; அசத்தும் இல்லை; சிவன் ஒருவனே இருந்தான்,’ என்றும்,
சம்பு: ஆகாஸ மத்யே த்யேய:’ என்றும் காரணனாய் உள்ள தன்மையையும், தியானம் செய்யத் தகுந்தவனாயுள்ள தன்மையையும்
சிவன் முதலானவர்களுக்கு விதியா நின்றதே; அவை செய்வன என்?’ என்னில், அப் பெயர்களால் அவர்கள் உத்தேசியர்களாகச்
சொல்லப்பட்டார்களே யாகிலும், சுத்தி குணத்தை யுடையவன், சுகத்தைக் கொடுக்கிறவன் என்ற காரணங்களால்
அப் பெயர்களும் விசேடியமான நாராயணன் என்ற பெயரால் சொல்லப்படுகிறவன் பக்கலிலே சென்று சேரும்.
சம்பு சிவன் முதலிய பெயர்களை நாராயணன் என்ற பெயரால் சொல்லப் படுகின்றவனுக்கு விசேடணமாக்கிக் கூறியது போன்று,
நாராயணன் என்ற இந்தப் பெயரையும், சம்பு சிவன் முதலிய பெயர்களால் சொல்லப் படுகின்றவனுக்கு விசேடணமாக்கிக் கூறினாலோ?’ என்னில்,
சுத்தி குணத்தை உடையவன், சுகத்தைக் கொடுக்கிறவன் என்ற காரணங்களால் அவற்றை இங்கே சேர்க்கலாம்;
நாராயணன் என்னும் பெயர், காரண இடு குறிப் பெயராகையாலே, வேறு பொருள்கட்குச் சேர்க்க ஒண்ணாது.
ஏகோ ஹவை நாராயண ஆஸீத் நபிரஹ்மா நேஸாநோ நேமே த்யாவா பிருதிவீ ந நக்ஷத்ராணி’–என்பது, மஹோபநிடதம்.
ந சத் நச அசத் சிவ ஏவ கேவல:’– என்பது , ஸ்வேதாஸ்வதரம். ‘சத்’ என்றது, நாம ரூபங்களோடு கூடின சித்தினை.
அசத்’ என்றது, நாம ரூபங்களோடு கூடின அசித்தினை.
சம்பு : ஆகாச மத்யே த்யேய:’- என்பது, ஸ்வேதாஸ்வதரம்.
அவர்கள் உத்தேசியர்களாகச் சொல்லப் பட்டார்களே யாகிலும்’ என்றதனால்
ஸ்வ பக்ஷத்தால் அவர்கள் உத்தேசியராகச் சொல்லக்கூடாது என்கை. யாங்ஙனம்?’ எனின்,
நாராயணாத் பிரஹ்மா ஜாயதே நாராயணாத் ருத்ரோ ஜாயதே’, ‘த்ரயக்ஷ: சூல பாணி: புருஷோ ஜாயதே’ என்பனவற்றால் பிறப்பும்,
‘நபிரஹ்மாநே ஸாநோ’ என்றதனால் அழிவும், சிவனுக்குச் சொல்லுகையாலே ‘சிவ ஏவ கேவலம்’ என்ற காரணத்துவம் கூடாது.
சத பதத்திலே அஷ்ட மூர்த்திப் பிராஹ்மணத்திலே, ‘பூதாநாம்பதி: ஸம்வத்ஸர உஷஸி’ என்பது முதலாகத் தொடங்கப்படும்
வாக்கியங்களால், நான்முகனால் படைக்கப்படுதலும், பாவங்கள் நீக்கப்படுதலும், பெயர் வைக்கப்படுதலும் முதலாயின
சிவனுக்குச் சொல்லப்படுதலால், தியானிக்கப் படுதலும் கூடாது,’ என்றபடி.
ஆயின், ‘பிரஹ்ம விஷ்ணு ருத்ர இந்த்ரா: தே ஸர்வே ஸம்பிரஸூயந்தே’ என்பதனால், விஷ்ணுவுக்கும் பிறப்புச்
சொல்லப்படுகிறதே?’ எனின், அது, அநுவாத ரூபமாகையாலே, ‘அஜாயமாந:’ முதலிய விதி வாக்கியங்களுக்குத் தகுதியாக,
கர்மங்கட்குக் கட்டுப்படாதவனாயும் கர்ம பலன்களை அநுபவிக்காதவனாயும் தன் இச்சையாலே அவதரிக்கின்ற
சர்வேசுவரனுடைய அவதாரங்களைக் குறிக்கின்றது. ‘தஸ்யதீரா: என்பது முதலான சுலோகங்கள் இங்கே அநுசந்தேயங்கள்.
சிவன் முதலியோர்கட்கு இத்தகைய விதி வாக்கியங்கள்
இல்லாமையாலே, பிறப்பு, கர்மங்காரணமாய் வந்தது என்றே கோடல் வேண்டும்,’ என்க.
சுத்தி குணத்தையுடையவன்’ என்று தொடங்கும் வாக்கியத்திற்குக் கருத்து யாது?’ என்னில்,
சிவன், சம்பு முதலிய பெயர்கள், வேறு பொருள்களிலும்
இரு வகை வழக்கிலும் வழங்கி வருகின்றன; ஆதலால், அப்பெயர்களை இங்குச் சேர்க்கலாம்.
நாராயணன்’ என்ற பெயர், வேறு பொருள்களுக்குப்
பெயராக வழங்காமையின், அதனை வேறு பொருளுக்குச் சேர்க்க ஒண்ணாதே!’ என்பது.
இப்பெயர், காரண இடுகுறிப் பெயர் என்க. ‘ஆயின்,
சிவன், சம்பு முதலிய பெயர்களும் காரண இடுகுறிப்பெயர்களேயன்றோ?’ எனின்,
அவை, சாதாரண காரண இடுகுறிப் பெயர்கள்; இது, அசாதாரண காரண இடுகுறிப் பெயர்,’ என்க.
இதனை, ‘அத்யந்த யோகரூடி’ என்பர். ‘மோ, பங்கஜம்’ என்னும் பெயர்களைப் போன்று கொள்க.
நன்று; சிலர்க்கே உரியனவாய் அவர்கட்கே முடிவு செய்யப்பட்டனவாய் உள்ள பெயர்களை வேறு ஒருவர் பக்கலிலே
கொடு போய்ச் சேர்க்கும்படி எங்ஙனே?’ என்னில், இந்திரன், பிராணன், ஆகாசம் என்னும் இப் பெயர்கள்,
அவ் வப் பொருள்கள் அளவில் முடிந்து நில்லாது, அவற்றிற்கு உரிய நேர்ப் பொருள்களில் சென்று முடிந்து நிற்கின்றன அல்லவோ?’
யாங்ஙனம்?’ எனின், ‘இந்திரன் என்றால், இப் பெயர் உண்டாக்கப்பட்ட இந்த இந்திரனைக் காட்டுதலோடு அமையாது,
சர்வேசுவரன் பக்கலிலே சென்று முடிவு பெறுதலைப் போலவும், பிராணன் என்னும் பெயர், ஐவகைப்பட்ட பிராணன்களில்
ஒன்றனைக் காட்டுதலோடு அமையாது, பிராணனாய் இருக்கின்ற சர்வேசுவரன் பக்கலிலே சென்று முடிவுறுதலைப் போலவும்,
ஆகாசம் என்னும் பெயர், ஐம் பெரும் பூதங்களில் ஒன்றான ஆகாசத்தைக் காட்டுதலோடு அமையாது, அவனளவும் காட்டுகிறாப் போலேயும்,
சம்பு சிவன் முதலிய பெயர்களும், சர்வேசுவரன் பக்கலிலே சென்று முடிந்தல்லது நில்லா,’ என்க.
இனித்தான் பிரகாரவாசி சப்தங்கள் பிரகாரி பர்யந்தம் சென்று தத்தம் பொருளைச் சொல்லக் கூடியன ஆகையாலும்,
பிரகாரியான சர்வேசுவரன் பக்கல் சென்று முடிந்தல்லது நில்லா,’ என்க.
‘நன்று; சம்பு சிவன் முதலிய பெயர்கள் காரணத்தை நோக்குமிடத்துப் பகவத் பரம் ஆகலாம்;
உமாபதி’ என்பது போன்ற அசாதாரணமான பெயர்களில் நிர்வாஹம் எப்படி?’ என்ன,
இனித் தான்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச் செய்கிறார். ‘பிரகார வாசி சப்தங்கள்’ என்றது,
விசேஷணம்’ அல்லது,‘சரீரம்’ என்ற பொருளைக் காட்டுகின்ற சொற்கள் என்றபடி. பிரகாரி -விசேடியம்: அல்லது,
சரீரி. சிவன் முதலானோர் சர்வேசுவரனுக்குச் சரீரமாய் உள்ளவர்கள் என்பதனை,
ஸபிரஹ்மா ஸசிவ:’ ‘ஸ: அந்தராத் அந்தரம் பிராவிசத்’,
பிரஹ்ம விஷ்ணு சிவாத்மிகாம்’ என்ற வாக்கியங்களால் உணர்தல் தகும்.
நன்று; இனி, ‘ததோயத் உத்தரதரம்’ என்று கொண்டு சொல்லுகிற இடத்தில் செய்வது என்?’ என்னில்,
மேலே சர்வேசுவரனைப் புருஷன் என்ற பெயர்க்குரிய பொருளாகச் சொல்லி, அதற்கு மேலே ‘உத்தரதரம்’ என்னும் போது
புருஷோத்தமன் என்பதனைத் தெரிவித்ததா மத்தனை.
அங்ஙனங்கோடற்குக் காரணம் என்?’ என்னில், ‘எந்தப் பரம் பொருளுக்கு ஒத்த தாயும் மிக்கதாயுமுள்ள பொருள்
வேறு ஒன்றும் இல்லை,’ என்று கூறி வைத்து, ‘அதற்கு மேலே ஒன்று உண்டு காண்’ என்னும் போது
அறிவில்லாதவனாகச் சொன்னவனா மத்தனை; முதலிலே ஓதாதவன் வார்த்தையா மத்தனை.
தத:’ என்ற சொல். மேலே கூறிய புருஷனைக் காட்டுகிறது என்றும், ‘உத்தரதரம்’ என்றது, அவனுக்கு மேலே யுள்ள
சிவனைக் காட்டுகிறது என்றும் பிற மதத்தினர் பொருள் கூறுவர். ‘தத:’ என்பதற்கு ஹேது பரமாகவும்,
உத்தரதரம்’ என்பதற்கு, சர்வ உத்கிருஷ்ட புருஷ பரமாகவும் பொருள் கூற வேண்டும் என்பது நமது சித்தாந்தம். என்றது,
அந்தக் காரணங்களால், புருஷோத்தமன்’ என்பதனைத் தெரிவித்தபடி என்றவாறு. தத: – ஆகையால்,
இதனையே அருளிச் செய்கிறார், ‘மேலே சர்வேசுவரனை’ என்று தொடங்கி. ‘புருஷன் என்ற பெயர்க்குரிய
பொருளாகச் சொல்லி’ என்றது, ‘வேதாஹ மேதம் புருஷம் மஹாந்தம்’ ‘தேநேதம் பூர்ணம் புருஷேண ஸர்வம்’
என்று வருகின்ற மேல் வாக்கியங்களைத் திருவுள்ளம் பற்றி.
யஸ்மாத் பரம் நா பரம் அஸ்தி கிஞ்சித்’ என்பது சுருதி வாக்கியம்.
ததோயத் உத்தரதரம்’ என்று கூறும் வாக்கியத்திற்குப் பிறர் கூறும் பொருளைத் திருவுள்ளம் பற்றி,
அதற்கு மேலே ஒன்று உண்டு காண் என்னும்போது’ என்று அருளிச் செய்கிறார்.
முதலிலே ஓதாதவன் வார்த்தையாமத்தனை’ என்றது, ‘உஸ்மாத் பரம் நா பரம் அஸ்தி கிஞ்சித்’ என்ற
முன் வாக்கியத்தைப் ‘படிக்காத அறிவில்லாதவனுடைய வார்த்தை,’ என்றபடி.
நன்று; ‘அந்தப் பகவானிடத்தில் உள்ளே இருக்கிற பொருள் உபாசிக்கத் தக்கது,’ என்கிறதோ?’ எனில், அது,
வேறு பொருள் உபாசிக்கத் தக்கது என்கிறது அன்று; அந்தப் பகவானைப் போன்ற அவன் குணங்களும்
தியானிக்கத் தக்கவை என்பதனைக் கூறியதாம்.
இனித் தான், உலகத்திற்குக் காரணப் பொருளாய் இருந்து கொண்டு வணங்கத் தக்கதாய் இருப்பது,
என்றும் ஒக்க இருக்கும் பொருளாக வேண்டுமே அன்றோ?’ அதில் சம்ஹார காலத்தில் ‘நாராயணனே இருந்தான்’ என்று
நாராயணன் என்ற பெயரால் சொல்லப் படுகின்றவன் ஒருவனுமே உளன் என்று சொல்லி,
பிரமனும் இல்லை, சிவனும் இல்லை’ என்று அவர்களை இல்லையாகச் சொல்லிற்றே அன்றோ?’
இனி, ‘மற்றைத் தேவர்களைக் காட்டிலும் அவர்களுக்கு ஓர் உயர்வு உளதோ?’ என்று ஐயப் படாமைக்கு
ஆகாயம் பூமி இல்லை; நக்ஷத்திரங்களும் இல்லை,’ என்று அவற்றோடு ஒக்க,
பிரமன் சிவன் என்னும் இவர்களையும் ஒரு சேரச் சேர்த்துவிடுகிறது.
படைத்தலைக் கூறுமிடத்தும், ‘நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணி’ என்று
ஒரு நீராகப் பொருந்த வைத்தன்றோ கிடக்கின்றது?
தஸ்மிந்யத் அந்த: தத்உபரஸிதவ்யம்’ இங்கு, ‘அந்த:’ என்பதற்கு, ‘உள்ளே இருக்கிற வேறொரு தத்துவம்’
என்று பிற மதத்தினர் பொருள் கூறுவர்.
உள்ளே இருக்கின்ற கல்யாண குணங்கள்’ என்பது நமது சித்தாந்தம்.சாந்தோக்ய உபநிடதமும் இங்ஙனமே கூறா நிற்கும்;
தஹரோஸ்மிந் அந்த:ஆகாஸ: தஸ்மிந்’ என்று தொடங்கி விரிவாகக் கூறிச் செல்லுதலை ஆண்டுக் காணல் தகும்.
மற்றைத் தேவர்கட்கு அபரத்துவ பூர்வமாக எம்பெருமானுடைய பரத்துவத்தைக் காட்டுவதற்கு
மூன்று ஏதுக்களை அருளிச் செய்கிறார்,
இனித்தான்’ என்று தொடங்கி.
ஏகோஹவை நாராயண ஆஸீத் நபிரஹ்மா நேஸாநோ நேமேத்யாவா பிருதிவி ந நக்ஷத்ராணி.’
பிரமனை அசேதனத்தோடு சேர்த்துச் சொல்லலாமோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
படைத்தலைக் கூறுமிடத்தும்’ என்று தொடங்கி. திருவாய். 7. 5 : 4.
ஆக, இத் திருவாய் மொழியில் சொல்லுகிற பரத்துவ நிர்ணயத்துக்கு உபயோகமான பிரமாண உபபத்திகளைத் தெரிவித்த பின்பு,
இத் திருவாய் மொழியிற் சொல்லுகிற பொருளைத் தொகுத்து அருளிச் செய்கிறார், ‘ஆக, இப்படிகளாலே’ என்று தொடங்கி.
இத் திருவாய் மொழியில் வருகின்ற, ‘இலிங்கத் திட்ட புராணத் தீரும்,’ ‘விளம்பும் ஆறு சமயமும்’ என்ற பாசுரங்களைத் திருவுள்ளம் பற்றி
மற்றைத் தேவர்கள் பக்கல் உண்டான பரத்துவ சங்கையை யறுத்து’ என்றும்,
நாயகன் அவனே’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘எல்லாப் பொருள்களைக் காட்டிலும் உயர்ந்தவனாய்,என்றும்,
உலகோடு உயிர் படைத்தான்’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி,‘எல்லாப் பொருள்களையும் படைக்கின்றவனாய்’ என்றும்,
வீடில் சீர்ப்புகழ்’ என்றதனைத் திருவுள்ளம் பற்றிக் ‘கல்யாண குணங்கள் எல்லாவற்றை யுமுடையவனாய்’ என்றும்,
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது?’என்றதனைத் திருவுள்ளம் பற்றி ‘எல்லாப் பொருள்களையும் காப்பாற்று கின்றவனாய்’ என்றும்,
மறுவில் மூர்த்தியோடொத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்க’ என்றதனைக் கடாக்ஷித்து, ‘எல்லாப் பொருள்களுக்கும் அந்தரியாமியாய்’ என்றும்,
நாராயணன் அருளே’ என்றதனைக் கடாக்ஷித்து, ‘நாராயணன் என்ற பெயரால் சொல்லப்படுகின்றவனான’ என்றும்,
இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே’ என்றதனைக் கடாக்ஷித்து, ‘தன் பெருமைகள் எல்லாவற்றோடுங்கூட’ என்றும் அருளிச் செய்கிறார்.
ஆக, இப் படிகளிலே மற்றைத் தேவர்கள் பக்கல் உண்டான பரத்துவ சங்கையை அறுத்து,
எல்லாப் பொருள்களைக் காட்டிலும் உயர்ந்தவனாய்
எல்லாப் பொருள்களையும் படைக்கின்றவனாய்க்
கல்யாண குணங்கள் எல்லாவற்றை யுமுடையவனாய்
எல்லாப் பொருள்களுக்கும் அந்தரியாமியாய்
நாராயணன் என்ற பெயரால் சொல்லப்படுகின்றவனான சர்வேசுவரன்
தன் பெருமைகள் எல்லாவற்றோடுங்கூடக் கண்களுக்குப் புலனாகும்படி திரு நகரியிலே வந்து
அண்மையிலே இருப்பவன் ஆனான்;
அவனை அடைந்து எல்லாரும் பயன் பெற்றவர்களாகப் போமின்,’ என்று அருளிச் செய்கிறார்.
ஒன்றும் தேவும்’ என்ற இத் திருப் பதிகத்தில் திரு மந்திரத்தின் பொருள் சொல்லப்படுகிறது, ‘யாங்ஙனம்? எனின்,
முதல் இரண்டு திருப் பாசுரங்களாலே காரணத்வத்தையும்,
மூன்றாந் திருப் பாசுரத்தாலே இரட்சகத்வத்தையும்,
நான்காந் திருப் பாசுரத்தாலே சேஷித்துவ நிவர்த்தியையும்,
ஐந்தாம் பாசுரத்தாலே அந்நிய சேஷத்துவ நிவர்த்தியையும்,
ஆறாந் திருப் பாசுரத்தாலே நமஸ் சப்தார்த்தமான உபாயத்துவத்தையும்,
ஏழாந் திருப் பாசுரத்தில் ‘ஆடு புட் கொடி யாதி மூர்த்தி’ என்கையாலே நாராயண பதத்திற் சொன்ன உபய விபூதி யோகத்தையும்,
எட்டாந் திருப் பாசுரத்தாலே நாராயண சப்தந்தன்னையும்,
ஒன்பதாந் திருப் பாசுரத்தாலே அவன் அடியார்க்கு அடிமைப் பட்டிருத்தலையும்,
பத்தாந் திருப் பாசுரத்தாலே கைங்கரியத்தையும் அருளிச் செய்திருத்தலால்,’ என்க.
பத்தாம் திருவாய் மொழியில் –
கீழ் -சம்சார தோஷ அனுசந்தான பூர்வகமாக பகவத் பிராப்தியை பிரார்த்தித்தவர் ப்ராப்யமான பர தசையை
அவன் ஆவிஸ்கரிக்கக் கண்டு ஸந்துஷ்டராய்-இப்பரத்வம் அறியாமல் சம்சாரிகள் இழக்க ஒண்ணாது என்று பார்த்து
ப்ராப்யத்வ பர்யந்தமான அவனுடைய பரத்வத்தை உபதேசிப்பதாக உத்தியோகித்து
அதுக்கு உபகாரகமான சர்வ காரணத்வத்தையும்
காரணத்வ அநு குணமான நித்ய கல்யாண குண யோகத்தையும்
கார்ய ரூபமான ஜகத் விஷய ரக்ஷண வியாபாரம் பரத்வாவஹமான படியையும்
சோபா பாதகமான சர்வேஸ்வரத்வத்தையும்
அந்த ஈச்வரத்வ பிரகாசகமான ஸுலப்ய அதிசயத்தையும்
சம்சார நிர்வஹண சாமர்த்யத்தையும்
பரதவ பிரகாசகமான கருட த்வஜத்வத்தையும்
அல்லாத தேவதைகள் பல பிரதத்வத்துக்கும் சக்த்யாதாயகன் அவனே என்னும் இடத்தையும்
அந்நியதுரவ போதனான அவன் வர்த்திக்கிற தேசமே உஜ்ஜீவன அர்த்திகளுக்கு ஞாதவ்யமாம் படியையும்
சர்வ சரீரியான அவன் திருவடிகளில் கைங்கர்யமே உத்தேசியமான படியையும்
உபதேசித்து -இப்படி பரம ப்ராப்ய பூதனான ஈசுவரனுடைய போக்யதா அதிசயத்தாலே
இவ்வாத்மாவினுடைய ததேக பிரியத்வத்தை உபபாதித்துத் தலைக் கட்டுகிறார் –
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர்படைத்தான்
குன்றம் போல் மணிமாடம் நீடு திருக் குருகூரதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–4-10-1-
ஒன்றும் இல்லாத அன்று’-காரணனாய் இருக்கிற தன் பக்கலிலே சென்று
ஒன்றுகின்ற அன்று-ஆகிஞ்சன்யம் -ஒன்றையே-பச்சையாகக் கொண்டு ரஷிக்கும் சர்வேஸ்வரன்-நான்முகனைப் படைத்தான்; நான்முகன் ஐம்முகனைப் படைத்தான்: ஐம்முகன் அறுமுகனைப் படைத்தான்;-ஆக இதுதான் பல முகமாயிற்றுக் காணும்.
நாட்டார் சிவனுக்கு உயர்வுகளைச் சொல்லி மயங்கா நிற்கவும், இவர் அவன் பக்கல் ஒன்றும் காணாமையாலே,-திருநாபிக் கமலத்தில் நேரே பிறந்து-அதனாலே உண்டான ஏற்றத்தை யுடையவனாகையாலே, பிரமனை (முதலாக) எடுத்துச் சொல்லி,-சிவனைத் தேவ கூட்டத்திலே சேர்த்துப் பேசுகிறார்.-
சம்ஹாரத்தில் மகத்து முதலானவைகள் அளவும் சொன்னார் படைப்பில் பிரமன் தொடக்கமாகச் சொன்னார்;மகத்து முதலான தத்வங்களிலே பரத்வ சங்கை பண்ணுவார் இலர்; அறிவில்லாத மக்களாய் இருப்பவர்கள் பிரமன் முதலாயினார் பக்கல் பரத்வ சங்கை பண்ணுவார்கள்; அதற்காக அவ்விடமே பிடித்துக் கழிக்கிறார்.
நாம் கொடுத்த கரணங்களைக் கொண்டு ‘நான் வணங்கமாட்டேன்,’ என்னாமல், வணங்குவர்களோ?
அன்றிக்கே,-நாம் வளைந்து கூட்டிக் கொள்ளப் புக்கால், விலக்கா தொழிவர்களோ!’ என்று கொண்டு காலத்தை எதிர் நோக்கினவனாய் நிற்கின்றபடி.-அடியவர்களைப் பெறுகைக்கு இறைவன் நின்ற நிலை.-சேஷ பூதனை லபிக்க சேஷி நிற்கும் நிலை –ஆதிப்பிரான் நிற்க –
இப்படி உங்கள் பக்கல் ஆசையாலே திருநகரியிலே நித்தியவாசம் செய்கிற இவனை விட்டு-நீர் வேட்கையுடைய ஒருவன், கங்கை பெருகி ஓடா நிற்க அதிலே அள்ளிக் குடித்துத் தன் விடாய் தீரமாட்டாதே, அதன் கரையிலே குந்தாலி கொண்டு கிணறு தோண்டித் தன் விடாய்க்கு உதவ நாக்கு நனைக்க இருக்குமாறு போலே,
அடையத் தக்கவனுமாய் எளியனுமாய்-எளிதில் ஆராதிக்கக் கூடியவனுமாய் நல்நெறியை யுடையவனுமான இவனை விட்டு,-அடையத் தகாதவராய் அரியராய் அரிதில்-ஆராதிக்கக் கூடியவராய்த் தீ நெறியை யுடையராய், வருந்தி ஆராதித்தாலும் சேட்டை தன் மடி யகத்துச் செல்வம் பார்த்திருக்குமாறு போலே-பலிப்பதும் ஒன்று இன்றிக்கே இருக்கிற திருவில்லாத் தேவரைத் தேடி அடைவதற்குத் திரிகின்றீர்கோளே!’ என்று நிந்திக்கிறார்.
ஆதிப் பிரான்’ என்றதனை நோக்கி, ‘அடையத் தக்கவனுமாய்’-பிராப்தன்- என்றும்,
திருக் குருகூரதனுள்’ என்றதனை நோக்கி, ‘எளியனுமாய்’ என்றும்,
யாதுமில்லா அன்று உயிர் cடைத்தான்’ என்றதனை நோக்கி, ‘எளிதில் ஆராதிக்கக் கூடியவனுமாய்’ -ஸூ ஆரதன் -என்றும்,
நின்ற’ என்றதனை நோக்கி, ‘நல்ல சுவபாவத்தை யுடையனுமான’ -ஸூலபன்-என்றும் அருளிச் செய்கிறார்.
————
நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்,
மாட மாளிகை சூழ்ந்தழகாய திருக் குருகூரதனைப்
பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே.–4-10-2-
நீர் நாடி வணங்கும் தெய்வமும் – இயல்பாகவே அமைந்தது ஓர் உயர்வு இல்லாமையாலே அவைதாம் இறாயா நிற்கச்செய்தே. வசன ஆபாசங்களாலும் யுக்தி ஆபாசங்களாலும்
நீங்கள் பொரி புறந்தடவி வருந்திச் சேமம் சார்த்தி வைத்து அடைகின்ற தேவர்களையும்.
கள்ளரைத் தேடிப் பிடிக்குமாறு போலே தேடிப் பிடிக்க வேண்டி இருப்பவர்களாதலின், ‘நாடி’ என்கிறார்.-ஆடு திருடின கள்ளர்களே அன்றோ இவர்கள் தாம்? அணங்குக்கு அரு மருந்து என்று அங்கே ஆடு கட்டினவர்கள் ஆகையாலே, தேடிப் பிடிக்க வேண்டுமே? –நீர்’ என்று, அவர்களோடு தமக்கு ஒட்டு அறச் சொல்லுகிறார் -உங்கள் நினைவு ஒழிய அவர்கள் பக்கல் ஓர் உயிர் இல்லை’-உங்களுக்கு இறைமைத் தன்மை உண்டாகும் அன்றே அன்றோ, அவர்களும் இறையவராவது?’ என்பார்,-உம்மையும் படைத்தான்’ என்கிறார்.
வீடு இல் சீர் –இயல்பாகவே அமைந்துள்ளதான செல்வத்தை யுடையவன்.-நீங்கள் அடைகின்ற தேவர்களுடைய செல்வம் போலே அவதியுடன் கூடியிருப்பது அன்று-அழிவில்லாத கல்யாண குணங்களை யுடையவன்’ -அவனைப் போன்றே
அவன் குணங்களும் உபாசிக்கத் தக்கவை-புகழ் – எல்லாரையும் பாதுகாத்து, அவ்வாறு பாதுகாத்தலால் வந்த புகழையுடையவன்.-பாதுகாப்பதால் வந்த புகழையுடையவன் அன்றோ அடையத் தக்கவன் ஆவான்?-கீர்த்திக்குத் தானே இருப்பிடமாக இருப்பவர்
ஆதிப் பிரான் – பாதுகாத்துப் புகழைப் படையாமல் பழி படைத்தாலும் விட ஒண்ணாத சம்பந்தத்தை ‘ஆதி’ என்கிற பதத்தால் சொல்லுகிறது.-கேவலம் சம்பந்தமே அன்று, உபகாரகன்’ என்பதனைச் சொல்லுகிறது ‘பிரான்’ என்ற சொல்.-காரண வஸ்துவே அன்றோ உபாசிக்கத் தக்கது?
அவன் மேவி உறை கோயில் – அவன் பரம பதத்திலே உள் வெதுப்போடே -மனஸ் தாபம் -காணும் இருப்பது. இம் மக்கள் படுகிற துக்கத்தை நினைந்து, இவை என் படுகின்றனவோ?’ என்கிற திரு வுள்ளத்தில் வெறுப்போடே ஆயிற்று அங்கு இருப்பது.–ச ஏகாகி ந ரமேத -என்றது,-நித்ய விபூதியும் குணங்களும் உண்டாயிருக்கச் செய்தே அன்றோ?
பரமபதத்திலும் சமுசாரிகள் படுகிற துக்கத்தை நினைத்துத் திருவுள்ளத்தில் வெதுப்போடே யாயிற்று எழுந்தருளி யிருப்பது,’ என்று பட்டர் அருளிச்செய்ய,
பண்டிதர்’ என்கிறவர், ‘ஆச்சானும், பிள்ளை யாழ்வானும் இத்தைக் கேட்டுப் பரம பதத்திலே ஆனந்தத்தால் நிறைந்தவனாய் இருக்கிற இருப்பிலே திருவுள்ளத்திலே ஒரு வியசனத்தோடே இருந்தான் என்கை உசிதமோ என்கிறார்கள்,’ என்று ‘பண்டிதர்’ என்கிறவர், வந்து விண்ணப்பஞ்செய்ய,
மனிதர்களுக்குத் துக்கம் வருகின்ற காலத்தில் தானும் மிகவும் துக்கிக்கின்றான்’ என்றது,
குணப் பிரகரணத்திலேயோ, துக்கப் பிரகரணத்திலேயோ?’ என்று கேட்க மாட்டிற்றிலீரோ?
இது குணமாகில், ‘குணம்’ என்று பேர் பெற்றவற்றில் அங்கு இல்லாதது ஒன்று உண்டோ?’ என்று அருளிச் செய்தார்.
பரமபதத்தில் தன்னில் குறைந்தார் இல்லாமையாலே, அவ் விடத்தை விட்டு, நல்ல படுக்கையையும் போகத்துக்கு ஏகாந்தமானவற்றையும் காற்கடைக் கொண்டு, குழந்தையினுடைய தொட்டிற் காற்கடையிலே கிடக்கும் தாயைப் போலே,
காப்பாற்றுவாரை விரும்புமவர்களான இம் மக்கள் இருக்கிற இடமாகையாலே விரும்பி வசிக்கும் இடம் இவ்விடம் ஆயிற்று-அதனைப்-பாடி ஆடிப் -பரவச் சென்மின்கள்,
நின்ற ஆதிப்பிரான் என்றது மிகையாய் இருக்கை-.-தேசோயம் சர்வ காம துதூத் – என்கிறபடியே, இது தானே பேறு,’–பல்லுலகீர்!-தாந்தனாய் சமித்பாணியாய் வந்தவனுக்கு ஹிதம் சொல்லுகிறார் அன்றேஇவை என்ன உலகியற்கை!’ என்று, உலகம் கிலேசப் படுகிறபடியைக் கண்டு எல்லார்க்கும் சொல்லுகிறாரே அன்றோ?ஆதலால், ‘உலகீர்’ எனப் பொதுவில் அழைக்கிறார்.-
————–
பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக்
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர் அதனுள்
பரன் திறமன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே.–4-10-3-
அந்தப் பரமாத்மா முன்னே பிரமனைப் படைத்தார்,’ என்கிறபடியே,-படைக்கிற போது முறையாகப் படைத்தான்; ஆபத்து வந்தால், அங்ஙனம் முறை பார்க்க ஒண்ணாதே,
பிரளயாபத்திலே ஒரு காலே வயிற்றில் வைத்து.–இப்படிச் செய்த இவற்றை,-கண்டும் –
இவர்க்குப் பிரத்யக்ஷத்திலும் சாஸ்திரம் விளக்கமாகக் காணப் படுகிறது காணும்.-தெளியகில்லீர் – மக்கள் செயலுக்கு அப்பாற்பட்ட இத்தகைய செயல்களைக்கொண்டே ‘அவனே அடையத் தக்கவன்’ என்று அறியலாய் இருக்க, அறிய மாட்டுகின்றிலீர்கோள். இவர்கள் தெளிவும் தெளியாமையும் ஒழிய, உண்மை நிலையில் மாறாட்டம் அற்று இருக்கிறது ஆதலின், கண்டும் தெளியகில்லீர்’ என்கிறார். ‘உங்கள் கலக்கமும் தெளிவும் ஒழிய, அவனை ஈஸ்வரன் அல்லனாகச் செய்தல்,-இவர்களை ஈஸ்வரர்கள் ஆக்குதல் செய்ய ஒண்ணாதே அன்றோ?’ என்றபடி.
திருக் குருகூர் அதனுள் பரன் – மனித வடிவத்தில் பரத்வத்துக்கும் அவ்வருகே ஒரு பரத்துவமே அன்றோ இது? இவ் வருகே போரப் போர உயர்வு மிகுமத்தனை. குணத்தாலே அன்றோ பொருளுக்கு உயர்வு?-குணங்களுக்குப் பெருமை உள்ளது இங்கேயே யன்றோ?
அவர்கள் இருவரில் சேதனன் கரும பலத்தை இனிமையாக அனுபவிக்கிறான்; மற்றவனான ஈசுவரன் கர்ம பலத்தை அனுபவியாமல் மிகவும் பிரகாசிக்கிறான்!’ என்கிறபடியே, இவ் வுயிர்கள் சரீரத்தோடே கலசக் கலச ஒளி மழுங்கி வாரா நிற்கச் செய்தே,
அவனுக்கு நியமிக்கும் தன்மையால் வந்த புகர் அற விஞ்சி வருமாறு போன்று,
இம் மக்கள் நடுவே போரப் போர ஆயிற்று, முதன்மை – மேன்மை பிரகாசிப்பது.-இதம் பூர்ணம் –சர்வம் பூர்ணம் சஹோம்
தெய்வம் மற்று இல்லை –-சுதந்தரமாய்த் தனக்கு உரித்தாய் இருப்பது ஒரு தெய்வம் இல்லை.-தேவர்களுடைய சொரூபத்தை விலக்குகிறார் அன்று, ‘அவனுக்கு விபூதி வேண்டும்’ என்று இருக்கிறவர் ஆகையாலே;-அவர்களுடைய சுவாதந்தரியத்தை விலக்குகிறார்.பேசுமின் – நான் ‘அவனுக்குச் சரீரமாய் அல்லது சுவதந்தரமாயிருப்பது ஒரு தேவதை இல்லை,’ என்றேன்;-இப்படி வேறு ஒருவருக்கும் வசப்பட்டிராத நியமிக்குந் தன்மையை யுடைய இவனைத் தனக்குச் சரீரமாக வுடையது ஒரு தெய்வம் உண்டு,’ என்று சொல்ல வல்லார் உண்டாகில், வாய் படைத்தார் என் முன்னே நின்று சொல்லிக் காணுங்கோள்,’ என்கிறார்.-
பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின்
தேச மாமதிள் சூழ்ந்து அழகாய திருக்குருகூர் அதனுள்
ஈசன் பால் ஓர் அவம் பறைதல் என்னாவது இலிங்கியர்க்கே?–4-10-4-
ஈசன், ஈசானன்’ என்கிற பெயர்களால் தோற்றுகிறவர்களும் தலை யறுப்புண்பாரும் தலை யறுத்துப் பாவமுடையராய் நிற்பாருமாய் இராநின்றார்கள்;
இவன் அவர்களுக்குத் துக்கத்தைப் போக்குமவனாய் இரா நின்றான்;
ஆனால், ‘அவர்களைப் ‘பரன்’ என்னவோ, இவனைப் ‘பரன்’ என்னவோ?’ என்ற இலிங்கத்தாலுமாக அநுமானத்தையும் சமாக்யையையும் தள்ளிப் பகவானுடைய பரத்துவத்தை நிலையிடுகிறார்.-சொற்களின் பொருட்டு முட்டுப் பொறாது; பேசுகைக்குப் பற்றுக்கோடு மாத்திரமே உள்ளது’ என்பார், ‘நின்ற’ என்கிறார்.-சிவனுடைய ஈசுவரத்துவம் பகவானுடைய திருவருளாலே வந்தது.-வைஷ்ணவாணாம் அஹம் சம்பு -ஜ்யேஷ்ட விஷ்ணு பக்தன் சிவன்-பிரமன் சிவனை நோக்கி, ‘உனக்கும் எனக்கும் அந்த விஷ்ணு அந்தரியாமியாய் இருக்கிறார்;-மற்றும் எவர்கள் சரீரம் படைத்தவர்கள் என்று பெயர் பெற்றிருக்கிறார்களோ, அவர்கள் எல்லாருக்கும்-அந்த விஷ்ணுவானவர் சாக்ஷியாய் இருக்கிறார்,’ என்றான்-
நாயகன் அவனே – இக் காரியத்திற்குத் தகுதியான காரணத்தைக் கற்பிக்கிலும் அவனையே கொள்ள வேண்டும்.-ஸ்ருதிப் பிரசித்தியை நினைத்து ‘அவனே’ என்கிறார். அநந்ய பரமான நாராயண அநுவாகப் பிரசித்தியையும்-ய: பரஸ்ஸ மஹேஸ்ர:’ என்கிற அகரத்தின் பொருளாய் உள்ள பிரசித்தியையும் நினைக்கிறார்.
கபால நன்மோக்கத்துக் கண்டு கொண்மின்’-என்று கையோடே காட்டிக்கொடுக்கிறார். -கையில் ஓட்டுடன் -காட்டி -உடனே காட்டிக் கொடுக்கிறார்-நீங்கள் இப்படிச் சொன்னால் மறுமாற்றம் சொல்லுகைக்கு இது ஒன்று உண்டாகப் பெற்றோமே!’நீங்கள் ஈசுவரர்களாகச் சந்தேகப்படுவதற்குரியவர்கள் இருவரும் நின்ற நிலை கண்டீர்களே!
ஒருவன் தலை கெட்டு நின்றான்; ஒருவன் ஓடு கொண்டு பிராயஸ்சித்தம் செய்ய வேண்டியவனாய் நின்றான்.
ஓட்டை ஓடத்தோடு ஒழுகல் ஓடமாய் உங்கள் குறை தீரப் பற்றுகிற நீங்கள் உங்களிலும் பெருங்குறைவாளரையோ பற்றுவது!
பாவமுடையவனாய்ப் பிச்சை புக்குத் திரிந்தான்,’ என்று நீங்களே சொல்லி வைத்து, அவனுக்கே பரத்துவத்தைச் சொல்லவோ?’
ஒருவனுடைய ஈசுவரத்துவம் அவன் தலையோடே போயிற்று.
மற்றவனுடைய ஈசுவரத்துவம் அவன் கையோடே காட்டிக் கொடுக்கிறார்;
மஹாபலி, ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான் பக்கலிலே வந்து, ‘ராஜ்யமடைய ஒளி மழுங்கி வாராநின்றது;-என் பலமும் குறைந்து வாராநின்றது; இதற்கு அடி என்?’ என்ன,
நீ சர்வேசுவரன் பக்கல் பண்ணின அபராதத்தாலே காண்,’ என்ன, ‘இந்த விஷ்ணு எவன்?’ என்பது போன்று விருப்பு இல்லாத வார்த்தைகள் சிலவற்றை அவன் பேச,
எனது தலையை அறுப்பதைக் காட்டிலும் பெரிது இந்த வார்த்தை’ என்கிறபடியே,
என் தலையை அறுத்து என் கையிலே தந்தாயாகில் ‘என் பேரன் செய்த உபகாரம்’ என்று இருப்பேன் யான்;-என் முன்பே பகவானை நிந்தை செய்தாய், நீ இராஜ்யப் பிரஷ்டன் ஆவாய்’ என்று சபித்து விட்டான்;
இதனை இப்படியே பட்டர் அருளிச் செய்தவாறே, ‘பிரகிருதி புருஷ விவேகம் பண்ணியிருக்கிற இவன் ஆத்துமாவுக்குக் குறைவு வருவது ஒன்றனைச் சபியாமல், ‘இராச்சியத்திலிருந்து நழுவினவனாய் விழுவாயாக’ என்று சபிப்பான் என்?’ என்று கேட்க, ‘நாயைத் தண்டிக்கையாவது, மலத்தை விலக்குகையே அன்றோ? சாந்தை விலக்குகை அதற்கு விருப்பம் இல்லாதது அன்றே? ஆகையால், இவனுக்கு அநிஷ்டம் செய்கையாவது இதுவே அன்றோ?’ என்று அருளிச் செய்தார்.
இலிங்கியர்க்கு என் ஆவது – அநுமானத்தைப் பிரமாணமாகக் கொண்டவர்க்கு என்ன பிரயோஜனம் உண்டு? என்றது, அந்தத் தேவிற்கு ஓர் உயர்வு பெற்றிகோள் அன்று; அத் தேவினைப் பற்றியதற்கு ஒரு பலம் பெற்றிகோள் அன்று; இதனால், உங்களுக்கு ஓர் உயர்வு பெற்றி கோள் அன்று; என்றிய பட்டிகோள்’ என்கிறார் என்றபடி.-
———–
இலிங்கத் திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்று நும் தெய்வமுமாகி நின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக் குருகூர் அதனுள்
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே.–4-10-5-
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் – பரமபதத்தை விட்டு இம்மக்கள் நடுவே வந்து புகுந்த இடத்து அவர்கள் படுகின்ற கிலேசத்தைத் தானும் ஒக்கப்படுகை அன்றிக்கே,
இவ்வருகே போதரப் போதரச் சொரூப ரூப குண விபூதிகள் மேன்மேலென விஞ்சி வாராநின்றன ஆயின.-அன்றிக்கே, ‘சொன்னார் சொன்னவற்றுக்கும் எல்லாம் அவ்வருகாயிருக்கும்,’ என்னுதல்.
ஒன்றும் பொய் இல்லை – மற்றைத் தேவர்கட்குச் சொல்லுகிற உயர்வுகள் ஒன்று ஒழியாமல் பொய்யாய் இருக்குமாறு போலே,-பகவான் சம்பந்தமாகச் சொல்லுமவற்றில் ஒன்றும் பொய்யில்லை.-அவ்வத் தேவர்கட்கு இயல்பிலே உயர்வு இல்லாமையாலே மெய் ஒன்றும் இல்லை; பகவானுடைய உயர்வுக்கு எல்லை இல்லாமையாலே, பொய் சொல்லுகைக்கு இடம் இல்லை.
போற்றுமினே – நீங்கள் விரும்பாதிருக்க, நானே இப்படிச் சொல்லுகிறது, எனக்கு உங்கள் பக்கல் உண்டான அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே,’ என்கிறபடியே, மிக்க அருளாலே அன்றோ? அவ்வருளின் காரியம் பிறக்க வேண்டுமே. ‘கிரமத்திலே செய்கிறோம்’ என்று ஆறியிராமல், சடக்கென அவன் திருவடிகளிலே அடைவதற்குப் பாருங்கோள்.-
———-
போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு, உம்மை இன்னே
தேற்றி வைத்தது, எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே;
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர் அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்தறிந்து ஓடுமினே.–4-10-6-
ஓட்டை ஓடத்தோடு ஒழுகல் ஓடமான இதர தேவதைகளைப்பற்றி உங்களுக்கு அவர்கள் பக்கலிலே ருசி விசுவாசங்கள் உண்டாம்படி செய்து பாரம் அற்றவர்களாய் இருக்கும்படி வைத்தது,’-பாவம் செய்தவர்கள் அதன் பலத்தினை அனுபவித்தலும், புண்ணியம் செய்தவர்கள் அதன் பலத்தினை அனுபவித்தலும் ஆகிற சாஸ்திர மரியாதை குலையாத படியாகச் செய்து வைத்தான்-ஆற்ற வல்லவன் – மிகவும் வல்லவன். என்றது, ‘சம்பந்தம் ஒத்திருக்கச் செய்தே, புண்ணியம் செய்தார் அதன் பலத்தினை அனுபவிக்கவும்,
பாவம் செய்தார் அதன் பலத்தினை அனுபவிக்கவும் செய்ய வல்லவன்’ —அறிந்து ஓடுமின் –-‘இது அவன் செய்து வைத்ததான பின்பு, அவனை வெல்ல வேண்டில்,
அவனோடு பிரிய நின்று வெல்லப் பாராமல், அவனையே காற்கட்டி இதனைத் தப்பப் பாருங்கோள்,-
———–
ஓடி ஓடிப் பல பிறப்பும் பிறந்து, மற்றோர் தெய்வம்
பாடி ஆடிப் பணிந்து பல்படி கால் வழி ஏறிக் கண்டீர்;
கூடி வானவர் ஏத்த நின்ற திருக் குருகூரதனுள்
ஆடு புட்கொடி ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே.–4-10-7-
ஒருவன் பகவானைத் தியானம் செய்து கொண்டிருக்கச் செய்தே, ‘இவன் சமாதியிலே நின்ற நிலையை அறிய வேண்டும்’ என்று
பார்த்துச் சர்வேசுவரன் இந்திரன் வேடத்தை மேற்கொண்டு ஐராவதத்திலே ஏறி வந்து முன்னே நின்று,
உனக்கு வேண்டுவது என்?’ என்ன, ‘ஒரு புழுவும் தானுமாய் வந்து நிற்கிறவன் யார்?’ என்றான்;
சர்வேசுவரன் பெரிய திருவடியை மேற்கொண்டு வந்தான்’ என்னுமிடம் அறியானே, கொண்டு வந்த வேடம் இது வாகையாலே?’
வந்தவனைப் பார்த்து, ‘நீ யாவன் ஒருவனை அடைந்து இந்தச் செல்வம் முழுதும் பெற்றாய்? அப்படிப் பட்டவனைக் காண் நான் பற்றுகிறது;
இப்படி வழியிலே போவார்க்கு எல்லாம் பச்சை யிட்டுத் திரியுமவன் அல்லேன் காண்;
இப்போது முகங்காட்டாதே போக வல்லையே பிரானே! உன்னைக் கும்பிடுகிறேன்,’ என்றானே அன்றோ?
பகவானிடத்தில் அடைக்கலம் புகுந்து ஞானாதிகராய் இருப்பார் ஒருவர், இருந்து தம்முடைய வஸ்திரத்தைப் புரையா நின்றாராய்,
அவ்வளவிலே தேவியும் தேவனுமாகப் போகா நிற்க, இவர் அநாதரித்திருந்தாராய், தேவி யானவள்,
நீர் எல்லார்க்கும் பெரியராய் இருக்க, உம்மைக் கண்ட இடத்தில் இவன் அநாதரித்துக் காலை நீட்டிக் கொண்டிருந்தானே!’ என்ன
தேவனும், ‘அவன் பகவத் பத்தன் போலேகாண்,’ என்ன, தேவியும், ‘அதுதான் இருக்கிறபடி அறிவோம்,’ என்ன,
இருவரும் இவர் பக்கலிலே வந்து, ‘நீ என்? தேவர்களை மனிதர்கள் கண்டால் அவர்களிடம் சென்று வேண்டும்
வரங்களும் வேண்டிக் கொள்ளக் கடவர்களாய் இருப்பார்கள்; நீ நம்மைக் கண்ட இடத்தில் நீட்டின காலை முடக்குதல்,
சில உபசாரங்களைச் செய்தல், சிலவற்றை வேண்டிக்கோடல் செய்யாமல் இருந்தாயே?’ என்ன,
அழகிது! அவை யெல்லாம் செய்யக்கடவன், மோக்ஷம் தரலாமோ?’ என்ன ‘அது நம்மாலே செய்யலாமதன்று;
பகவானிடத்தில் சரணாகதி செய்து அவன் திருவருளாலே பெற வேண்டும்,’ என்ன,
ஆகில், இன்று சாவாரை நாளை இறக்கும்படி பண்ணலாமோ?’ என்ன, ‘அதுவும் கர்மங்களுக்குத் தகுதியாக அன்றோ இருப்பது?
நம்மால் செய்யப் போகாது,’ என்ன, ‘ஆகில், நீ செய்யுமது, இந்த ஊசி போகும் வழியே நூலும் போகும்படி
திருவருள் புரிந்து நடக்குமித்தனை,’ என்ன, தேவனும் கோபத்தாலே நெற்றியிற் கண்ணைக் காட்ட,
இவரும் காலிலே பல கண்களை உண்டாக்கிக் காட்டினார்,’ என்ற சரிதம் இங்கு நினைக்கத் தகும்.
கூடி வானவர் ஏத்த நின்ற திருக்குருகூர் அதனுள் – உங்களால் அடையப்படுகின்ற தேவர்கள் இவ்வளவும் உங்களைக் கும்பீடு கொண்டு, இத்தனை போது சென்று அங்கே
வணங்கா நிற்பர்கள்; அவர்கள் செய்கின்றவற்றைக் கண்டாகிலும் நீங்களும் அவனை வணங்கப் பாருங்கோள்
தலை யறுப்பாரும் தலை யறுப்புண்பாருமாய், கிராமணிகளைப் போலே ஒருவரை ஒருவர் வேரோடே அலம்பிப் போகட வேண்டும்படியான விரோதம் செல்லாநிற்கச் செய்தேயும், ஆபத்து எல்லார்க்கும் ஒத்திருக்கையாலே எல்லாரும் ஒரு மிடறாய் ஏத்தா நிற்பர்கள்,
ஒருவர்க்கு ஒருவர் விரோதமும் கிடக்கச்செய்தே, ‘ஊராகக் கூடி வந்தது’ என்பார்களே அன்றோ?
வெற்றிப்புள்ளைக் கொடியாகவுடையவன்; அடியார்களுடைய விரோதிகளை அழிக்கும் விஷயத்தில் சர்வேசுவரன் செய்ய வேண்டுவது ஒன்றும் இன்று; திருவடி திருத்தோளிலே சலியாமல் இருக்குமத்தனையே வேண்டுவது,’ என்பார், ‘ஆடுபுள்’ என்கிறார்.
ஆடுபுள் -வெற்றிப்புள்; ஆடு – வெற்றி. புள் – பறவை.-ஆஸ்ரித ரக்ஷணத்துக்கு கொடி கட்டி ரக்ஷிக்குமவன் என்கை -கருட வாஹனத்வம் பரத்வ லக்ஷணம் இறே –
அவன் இதனை ‘என்னுடைமை’ என்றிருக்க, நீங்களும் ‘என்னுடைமை’ என்றிராமல், ‘அவனது’ என்று இசைய அமையும்,’
யயாதி சரிதத்தைப் பட்டர் வாசித்துப் போந்திருக்கச்செய்தே, பிள்ளை விழுப்பரையரும் ஆப்பான் திருவழுந்தூர் அரையரும்,
வேதத்தின் பொருளை அறிதற்குக் கருவியாய் வெளிப்போந்த பிரபந்தங்களில்
இது எந்தப் பொருளை விரித்துப் பேசுகிறது?’ என்று கேட்க,
புன்சிறு தெய்வங்களை அடைந்து ஒரு பயனைப் பெற்றாலும், பிறர் பக்கல் ஓர் உயர்வு கண்டால்,
அதனை அவர்கள் பொறுக்கமாட்டார்கள்’ என்றும்,
சர்வேசுவரனே ‘பிறர் வாழ்வு நம் வாழ்வு’ என்று நினைத்திருப்பான்’ என்றும் சொல்லி, -அனைவரும் அவன் அங்கமாக இருப்பதால் –
ஆன பின்பு, மற்றைத் தேவர்கள் ஆஸ்ரயணீயர் வணங்கத் தக்கவர் அல்லர்; அவன் ஒருவனுமே வணங்கத் தக்கவன்
என்னும் பொருளைச் சொல்லுகிறது,’ என்று அருளிச் செய்தார்.
முனி புங்கவரே! இதற்கு முன் ஏவிய காரியங்களை எல்லாம் செய்து முடித்தவர்களாய்
வந்து உம்மைச் சார்ந்திருக்கிறோம்,’ என்கிறபடியே,
பெருமாளும் இளைய பெருமாளும் விஸ்வாமித்ரர் இடம் – தாழ நிற்க வல்லான் இவனேயன்றோ?
யாதவர்கள் முடிவிலே வந்தவாறே வாட்கோரையை இட்டு ஒருவரை ஒருவர் எறிந்து முடிந்து போனார்கள்,’ என்று கேட்டவாறே,
கிருஷ்ணன் இவர்கள் விஷயமாகச் சங்கநிதி பதுமநிதி தொடக்கமானவற்றைக் கொடு வந்து கொடுத்துச் செய்யாதன இல்லை;
பின்னையும் முடிவிலே வந்தவாறே இப்படியேயாய் இருந்தது; ‘நாம் பகவானை வணங்குகிற வணக்கத்துக்கும் பலம்
அங்ஙனே ஆகிறதோ?’ என்று அஞ்சி யிருந்தோம்,’ என்ன, ‘அங்ஙன் ஆகாது; அஞ்ச வேண்டா;
அவர்கள் ‘இவன் என் தோழன், மைத்துனன்’ என்று சரீர சம்பந்தத்தைக் கொண்டு விரும்புகையாலே
அவர்களுக்குத் தேகம் எல்லையாய் விட்டது; நாம் சொரூப ஞானத்தாலே, என்றும் உள்ள ஆத்துமாவுக்கு வகுத்த பேறு
பெற வேண்டும் என்று பற்றுகையாலே பேறும் உயிர் உள்ள வரையிலும் இருக்கும்,’ என்று அருளிச் செய்தார்.-
———-
புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை
நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே;
கொக்கு அலர்தடம் தாழை வேலித் திருக்குருகூர் அதனுள்
மிக்க ஆதிப்பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் விளம்புதிரே!–4-10-8-
‘அவனுக்கு அடிமையாமிடத்தில் உன்னோடு என்னோடு வாசியில்லை’ என்று
ஞானோபதேசத்தைச் செய்து அவன் திருவடிகளிலே காட்டிக் கொடுத்தான் -நானும் உன்னைப் போன்று ஒருவனை ஆஸ்ரயித்துக்காண் இப்பதம் பெற்றது;-அவனைக் கொண்டுபோய்ச் சர்வேசுவரன் பக்கலிலே காட்டிக் கொடுத்தமையைத் தெரிவித்தபடி.அவனுக்குச் சரீரமாய் அல்லது ஒன்றற்கும்
பொருளாகுந் தன்மை இன்றிக்கே யிருக்க, சரீரியாகச் சொல்லிக் கேட்டினை அடைகின்றீர்கோளே கெடுவிகாள்!’ விளம்புதிரே’ என்ற ஏகாரத்தால், ‘எடுத்துப் பேசுவதற்கும் தகுதி இல்லை’ என்று இருக்கிறார் காணும் இவர்.-
விளம்பும் ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும்
வளங் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை
உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக்கொண்டு போகுறிலே.–4-10-9-
நீங்கள் உய்வு பெறுவதற்கு அவ்வளவும் செல்ல வேண்டுமோ?
அவன் தங்கியிருக்கிற திருநகரியை உங்கள் ஞானத்துக்கு விஷயமாக்க அமையும்,’ என்கிறார்.-இவனுடைய சொரூப ரூப குண விபூதிகள் புறம்பான குத்ருஷ்டிகளால்
அசைக்க முடியாதனவாய் -அவி சால்யமாய் -இருக்கும்,-அதற்கு அடி என்?’ என்றால், ‘ஆதிப் பிரான்’ -என்னுடைய தாய் மலடி என்ன ஒண்ணாதே அன்றோ?’ -ஞானம் உதித்து, புறத்தே யுள்ள இந்திரியங்களாலே புறப் பொருள்களில் செல்வதற்கு முன்னே,
மனக் கண்ணுக்குத் திரு நகரியை விஷயம் ஆக்குங்கோள்-பிரயோஜனம் என் என்னில்
உம்மை உயக்கொண்டு போகுறிலே.--அசன்னேவ என்னும் படி -இருக்கிற உங்களை சந்த மேனம் ததோ விது-என்ன பண்ண வேண்டி இருந்து கோள் ஆகில் -நேய மஸ்தி என்கிறபடி தக்தப்படம் போலே இவற்றின் சத்தை சென்று அற்றது என்று இருக்கிறார் –
———————-
உறுவது ஆவது எத்தேவும் எவ் வுலகங்களும் மற்றும் தன்பால்
மறுவின் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக் குருகூரதனுள்
குறிய மாண் உருவாகிய நீள்குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே.–4-10-10-
தன் ஐஸ்வரியத்தில் ஒன்றும் குறையாமல் வந்து திருநகரியிலே நின்றருளுகின்ற
பொலிந்து நின்ற பிரானுக்கு அடிமை செய்கையே தக்கது,’ என்கிறார்.
தன்பால் மறு இல் மூர்த்தியோடு ஒத்து –
தன்னிடத்து வந்தால் மறு இல்லாதபடி மூர்த்தியோடு ஒத்து. என்றது,
இவை மூர்த்தியாமிடத்தில் பிரகிருதி சம்பந்தம் இல்லாத விக்கிரஹத்தைப் போன்று குறைவு இன்றிக்கே இருக்கையைத் தெரிவித்தபடி.
மறு ஆகிறது – குற்றம்; அதாவது, குறைவு; இது இன்றிக்கே இருக்கை.
பிரிந்து நிலைத்திருக்கையும் தோன்றுதலும் முதலானவைகள் இன்றிக்கே இருக்கையைத் தெரிவித்தவாறு.
அன்றிக்கே,
மறுவையுடைத்தான விக்கிரகம் – ஸ்ரீவத்சத்தை யுடைத்தான விக்கிரகம்; அதனோடு ஒத்து என்னுதல்;
மறு – ஸ்ரீவத்சம்; இல் – வீடு; இருப்பிடம்.
அன்றிக்கே,
மறு இல்லாத மூர்த்தி உண்டு – குற்றங்கட்கு எதிர்த்தட்டான விக்கிரகம்; அதனோடு ஒத்து’ என்னுதல்;
மறு – குற்றம். ‘இவை சரீரத்தோடு ஒத்திருத்தலாவது என்?’ என்னில்,
1- பிரிந்து நிலைத்திருத்தலுக்குத் தகுதியில்லாத -2-ஆதார ஆதேய பாவ – 3-ஏவுகின்ற ஏவப்படுகின்ற பாவ –4- சேஷி சேஷ பாவமான
சரீர இலக்கணங்கள் நான்கும் இவற்றிற்கு உண்டு ஆகையாலே. மரத்திலே தேவதத்தன் நின்றால் அது அவனுக்குச் சரீரமாகாதே அன்றோ?
இங்கு அங்ஙன் அன்றிக்கே இருக்கையைத் தெரிவித்தபடி.
தாழ நிற்கிற இடத்தில் ஐசுவரியம் தோற்றுமோ?’ எனின், இராஜபுத்திரன் ஓர் ஒலியலை உடுத்துத் தாழ இருந்தாலும் இறைமைத் தன்மையில் குறைந்து தோன்றாதே அன்றோ?நீள் குடக் கூத்தனுக்கு –
குடக் கூத்து ஆடி விட்ட பின்பும், மனத்தைக் கவர்கின்ற அச் செயலைப் பிற்பட்ட காலத்தில் கேட்டார்க்கும் சம காலத்திலே
கண்டாற்போலே பிரீதி பிறக்கும்படி யாயிற்றுக் குடக் கூத்து ஆடிற்று.
மன்றில் இன்றும் அமர்ந்து ஆனந்திக்கும் படி அன்றோ குடக் கூத்து ஆடி மகிழ்ந்தானே
ஆள் செய்வதே –
அச் செயல் தானே அடிமையிலே மூட்டும்; நீங்கள் இசையுமத்தனையே வேண்டுவது.
—————
ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே.–4-10-11-
அவன் கொடுத்த உறுப்புகளைக் கொண்டு உலக விஷயங்களிலே போகாமல், ‘தந்த நீ கொண்டாக்கினையே’ என்கிறபடியே, வகுத்த விஷயத்துக்கே உரியதாக்கிக் கொண்டு
கிட்டினமையைத் தெரிவித்தபடி.-ஆட் கொள்ளுகைக்கு உபாயம் அவன் கையிலே உண்டு போலே காணும்,-தான் விருத்தவானாய்க் காணும் இவரை விருத்தியிலே சேர்ப்பித்தது.
கையில் திருவாழி சேர்ந்தாற்போலே ஆயிற்று இவரும் சேர்ந்தபடி.-கெடு மரக்கலம் கரை சேர்ந்தாற்போலே இருத்தலின் ‘சேர்ந்த’ என்கிறார்.
ஆட்செய்கையாவது,-அடிமை செய்கை. மனத்தால் செய்தல், வாக்கால் செய்தல், சரீரத்தால் செய்தல் என அவ்வடிமை தான் மூன்று வகைப்படும்.
இவற்றுள், மனத்தாலும் சரீரத்தாலும் செய்யும் அடிமைகட்கு இவர் ஆள் அல்லர். ‘என்?’ என்னில்,
கால் ஆழும் நெஞ்சழியும் கண் சுழலும்’ என்கையாலே. இனி, ‘வாக்கால் செய்யும் அடிமை ஒன்றுமேயானால். வாசிகமாகத் திருவாய்மொழி பாடி அடிமை செய்தார் என்கிறதோ?’ என்னில், அன்று; அப்படியாமன்று இப்பாசுரம்;-முனியே நான்முகனே’ என்ற திருவாய்மொழியிலே ஆக வேண்டும்;
இல்லையாகில், எல்லாவற்றிற்கும் சுருக்கமான முதல் திருவாய்மொழியிலேயாகிலும் ஆக வேண்டும்;-இல்லையாகில், இவர் வாசிகமாக அடிமை செய்த ‘புகழும் நல்லொருவன்’ என்ற
திருவாய்மொழியிலே ஆகப்பெறில் சிறப்புடையதாம்.
ஆனால், மற்றைத் தேவர்கள் பரம்பொருள் அல்லர் என்று மறுத்து அறுதியிட்டுப் பேசுதல் மூலமாகச் சர்வேசுவரனுடைய பரத்துவத்தை அருளிச்செய்கையாலே ஆனாலோ?’ என்னில், அதுவாகில், முதல் திருவாய்மொழியிலேயாக அமையும்.
ஆனால், பரத்துவ நிர்ணயத்திலே பரோபதேசமும் ஆகையாலே ஆனாலோ?’ என்னில்,
அதுவாகில், ‘திண்ணன் வீடு’ என்ற திருவாய்மொழியிலேயாதல், ‘அணைவதரவணை’ என்ற திருவாய்மொழியிலேயாதல் அமையும்.
ஆனால், அர்ச்சாவதாரத்திலே பரத்துவம் அருளிச்செய்கையாலே ஆனாலோ?’ என்னில், அதுவாகில், செய்ய தாமரைக் கண்ணன்’ என்ற திருவாய்மொழியிலேயாதல் அமையும்.
ஆனால், பரோபதேசம் பண்ணுகையாலே சொல்லிற்று ஆனாலோ?’ என்னில், அதுவும் ஒண்ணாது. ‘என்னை?’ எனின் வீடுமின் முற்றவும்’ என்ற திருவாய்மொழி தொடங்கிப் பலவிடங்களிலும் பரோபதேசம் செய்தார்; அவற்றிலும் ஆகப்பெற்றதில்லை.
ஆனால், யாது ஆவது!’ என்னில், இந்த ‘ஒன்றும் தேவும்’ என்ற திருவாய்மொழியிலே,
திருக்குருகூரதனுள் பரன்திறமன்றிப் பல் உலகீர் தெய்வம் மற்று இல்லை பேசுமினே,’ என்று, பொலிந்து நின்ற பிரானே எல்லாப் பொருள்கட்கும் அறப்பெரியவன் என்று இவர் அருளிச்செய்யக் கேட்டு, கபால நன்மோக்கத்துக் கண்டு கொண்மின்’ என்ன, கண்டு, உலகம் எல்லாம் திருந்தி ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆனார்கள்.
இவர்தாம் அவர்களுக்கு மங்களாசாசனம் பண்ணும்படி அன்றோ அவர்கள் தாம் திருந்தினபடி?-பொலிக பொலிக’ என்று இதற்கென்ன ஒரு திருவாய்மொழி நேருகிறாரே அன்றோ? சர்வேசுவரன் அவதரித்துத் திருத்தப் பார்த்த இடத்தும் திருந்தாத சமுசாரத்திலே இவர் திருத்தத் திருந்தினபடி.
இனி, இவர்க்குத் தத்துவ நிர்ணயம் பண்ண வேண்டாதபடி ‘இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலத் தடங்கடற்பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களே’ ஆம்படி திருத்துகையாலே, ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன்’ என்கிறார்.
நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன் – நண்ணாதார் முறுவலிப்ப’ என்ற திருவாய்மொழியிலே இம்மக்கள் படுகிற துன்பத்தை நினைத்து, சாத்தின மாலையும் வாடி இருந்தது முன்பு; இப்போது, பகவானுடைய பரத்துவத்தை விரித்து அருளிச் செய்து,
இனி இவர்களுக்கு ஒரு குறை இல்லை,’ என்று தேறின பின்பு, இட்ட மாலையும் செவ்வி பெற்றதாயிற்று;-ஆதலின், ‘நாள் கமழ் மகிழ் மாலை’ என்கிறது.
மீட்சி இன்றி வைகுந்த மாநகர் வல்லார் கையது – இரண்டும் இவர்கள் கையது. மீண்டு வருதல் இல்லாத பரம பதமானது இவர்கள் கையது.-இந்தப் பத்தும் பத்தாக இவர்கள் கையது பரமபதம். இப் பொருளில் ‘மற்றது’ என்பது இடைச்சொல்.
அன்றிக்கே, ‘மற்றது’ என்பதனை வைகுந்த மாநகருக்கு அடைமொழி யாக்கி, ‘மற்றையதான – அதாவது,-இவ் வுலக வாழ்க்கைக்கு எதிர்த்தட்டான வைகுந்த மாநகரமானது இவர்கள் கையது,’ என்னலுமாம்.
அன்றிக்கே, ‘பகவானுடைய பரத்வ ஞானமே பிரயோஜனம் போரும்;
அதற்குமேல், ஞான பல ரூபமான கைங்கரியத்திற்கு ஏகாந்த தேசமான பரம பதமும் இவர்களுக்கு எளிதாம்,’ என்னலுமாம்.-உபய பிரதானமான பிரணவம் போலே -உறை கோயிலில் -எத்தேவும் என்னும் பரே சத்வம் பொலியும் –இவர் இப் பாட்டில் தம்மை புகழ்ந்தது பர ப்ரதிபாத அர்ஹமாம் படி பரத்வ ஞானம் கை வந்த ஹர்ஷத்தாலே —
——————–——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –