ஸ்ரீ கோதையின் உத்சவங்களின் விவரம்–

September 19, 2026

“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||
”கலி 98 வதான நள வருடம் ஆடி மாதம் சுக்ல பக்ஷம் சதுர்த்தசியும் பூர நட்சத்திரமும் கூடிய நன்னாளில்-ஸ்ரீ விஷ்ணுசித்த குலநந்தந கல்பவல்லீம்” -அரங்கனையும் ஆண்டாள்! அரங்கன் அடியவர்களையும் ஆண்டாள்!]

தநுர்த்தராய வித்மஹே ஸர்வ ஸித்தயை ச தீமஹி தந்நோ தரா ப்ரசோதயாத் “த்ரிகும்ஸத் தாம வ்ராஜதி’ என்கிறது பூஸுக்தம். 30 இடங்களில் பூமாதா வாஸம் பண்ணுவதாக சொல்லுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருமாளிகையிலுள்ள “கனக சமர பூபாலனம்” எனும் மஞ்சத்தில் திருப்பாவை முப்பது பாசுரங்களை நினைவூட்டும்படி 30 தங்க மாவிலைகள் உள்ளன.

 திருவரங்க அழகியமணவாளனின் கைத்தலம் பற்றுவதையே குறிக்கோளாக கொண்டு வராகஷேத்திரத்தில் தோன்றியது ஸ்ரீகோதை ஆண்டாளின் திருப்பாவையான பகவதி கீதை.-துயிலெழும்போது ஹரி ஹரி என்று எழுந்திருக்கவேண்டும். (‘உத்திஷ்ட சிந்தய ஹரிம்’)-முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து ஹரி என்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ’-குளிக்கும்போது கேசவனின் நாமம் சொல்லி குளிக்க வேண்டும். (‘வ்ரஜன் சிந்தய கேசவம்’)கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?”-உண்ணும்போது கோவிந்தனை மனதில் நினைத்து உண்ணவேண்டும். (‘புஞ்சன் சிந்தய கோவிந்தம்’)தூங்க போகும் முன் மாதவனை நினைக்க வேண்டும். (‘ஸ்வபன் சிந்தய மாதவம்’) .-ஏமப் பெரும் துயில் மந்திரப் பட்டாளோ, மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்றேலோ.

ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணு: ஸ்மரணம் பாத சேவனம் அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் சக்கியம் ஆத்ம நிவேதனம்.”
[ஸ்ரவணம் – கேட்பது; கீர்த்தனம் – பாடுவது; ஸ்மரணம் – நினைப்பது, அசை போடுவது; பாத சேவனம் – திருவடிகளில் அடைக்கலம்; அர்ச்சனம் – துதிப்பது; வந்தனம் – வணங்குவது; தாஸ்யம் – சொல்வதை சிரமேற் கொண்டு செய்வது; சாக்கியம் – நட்புடன் இருப்பது; ஆத்ம நிவேதனம் – பரிபூரண சரணாகதி.]

மகாபார யுத்தம் மார்கழி மாதத்தில் நடைபெற்றதாக இதிகாசம் கூறுகிறது.
திருப்பாற்கடல் கடையப்பட்டதும், முதலில் விஷம் எழுந்ததும், சிவன் அதனை உண்டு உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றியதும் மார்கழி மாதத்தில்தான்.
• இந்திரனால் பெரு மழை வெள்ளம் உருவாக்கப்பட்டு கோகுலத்தில் அனைவரும் துன்பப்பட்டபோது, கோவர்த்தனகிரி மலையை, கிருஷ்ணர் குடையாகப் பிடித்து மக்களை காப்பாற்றியதும் இந்த மார்கழி மாதத்தில்தான் என்பது வரலாறு.

ஸ்ரீபெரும்புதூரில் ஆசூரி கேசவ சோமையாஜி பட்டர், காந்திமதி அம்மையார் இவர்களின் திருமகனாக “இளையாழ்வார்’ என்றழைக்கப்பட்டார்-ராமானுஜர்.  மதுராந்தகத்தில் பஞ்ச சமஸ்காரம் செய்யும்போது “ராமானுஜன்’ என்ற பெயர் குருவான பெரிய நம்பியால் சூட்டி அருளப்பட்டது. “எதிராஜர்‘ என்ற திருநாமம் கச்சிப் பேரருளாளனாலும் “உடையவர்’ என்ற பெயர் திருவரங்கத்து நம்பெருமாளாலும் “தேசிகேந்திரன்‘ என்ற திருப்பெயர்  திருமலை வேங்கடேசப் பெருமாளாலும். “ஸ்ரீ பாஷ்யகாரர்‘ என்று காஷ்மீரத்து சாரதா பீட சரஸ்வதியாலும், பெரிய நம்பிகளால்  “திருப்பாவை ஜீயர்’ எனவும், திருக்கோஷ்டியூர் நம்பிகளால் “எம்பெருமானார்‘ எனவும் அழைக்கப்பட்டார். ஆண்டாள்  நம் “கோவிலண்ணன்‘ எனவும் திருமாலையாண்டான் “சடகோபன் பொன்னடி’ எனவும் திருவரங்கப்பெருமாளரையர் “லட்சுமண முனி‘ எனவும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அழைத்துள்ளனர்.-இந்த பன்னிரு திருநாமங்களில் இராமானுஜருக்கு பிடித்த திருநாமம்
 | “திருப்பாவை ஜீயர்” | என்பதே ஆகும்

தேவஸ்ய மஹிஷீம் திவ்யாம் ஆதௌ கோதா முபாஸ்மஹே |
யந்மௌலி மாலிகாம் ப்ரீத்யா ஸ்வீகரோதி ஸ்வயம்ப்ரபு:
||(எவள் சூடிக்களைந்த மாலையை ஸர்வேஸ்வரனான ப்ரபு உகப்புடன் ஏற்றுக்கொண்டானோ அவ்விஷ்ணுவின் திவ்யமஹிஷியான அத்தகைய கோதையை முதலிலே உபாசிக்கிறோம்.)

திருப்பாவையின் மூன்று பத்தும் மூன்று கபாலங்கள் என்கிறபடி, ஒவ்வொரு கபாலத்தின் தொடக்கத்திலும் திரிவிக்கிரமனை துதிக்கிறார் ஆண்டாள் என்பதைக் கவனிக்க வேண்டும்.”ஒங்கி உலகளந்த உத்தமன்” என்று முதல் பத்திலே திரிவிக்கிரமனை நினைக்கிறாள். “அம்பர மூடறுத்து ஓங்கி உலகளந்த..” என்று அடுத்த பதினொன்று முதல் இருபது வரையிலான பாசுரத்துக்குள்ளே இரண்டாவது முறையாக திரிவிக்ரம அவதாரத்தைப் பாடுகிறாள். “அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி” என்று மறுபடியும். இருபத்தொன்று முதல் முப்பது வரையிலான பாசுரங்களுக்குள்ளே மறுபடியும் திரிவிக்கிரமன் திருவடிகளைப் போற்றுகிறாள். ஆகையினாலே, திருப்பாவை ஒரு வேள்வி போன்றது. ஆண்டாள் நமக்கு கீதையின் வழியைக் காட்டி, “நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா!” என்று ஆச்ரயித்து, அவனையே திருக்கல்யாணமும் செய்துக் கொண்டாள்.-ஆண்டாள் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்தாள். அப்படிச் சேர்ந்ததில் நமக்கெல்லாம் ஒரு வழிகாட்டல் இருக்கிறது. வராஹ மூர்த்தி சொன்னதை  அனுசரித்து அவள் அவனை அடைந்தது போல நாமும் அவனை அடையலாம். அவன் நமக்குப் பதி. நாம் அவனுக்கு பத்தினி என்கிற பாவத்துடன் உத்தமமான சரணாகதி மார்க்கத்தைக் கடைப்பிடித்தோமானால் நாமும் அவனை அடையலாம்.!

நீளாதுங்க ஸ்தன கிரிதடீஸூப்தம் உத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சதசிரஸ் ஸித்தம் அத்யா பயந்தீ
ஸ்வோச் சிஸ்டாயாம் ஸ்ரஜிநிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து பூய :
–நீளாதேவியின் அம்சமான நப்பின்னைப் பிராட்டியின் உயர்ந்து பருத்த முலைத்தடங்களாகிற மலையடிவாரத்திலே உறங்குகின்றவனும், தான் சூடிக் கொடுத்த மாலையாலே கட்டுப்பட்டவனும் ஆன கிருஷ்ணனுக்கு அவனுடைய பாரதந்த்ர்யத்தை (அதாவது ஆத்மாக்கள் அவனிட்ட வழக்காயிருந்து அவனுக்கே பயன்படுவதை) உணர்த்தி எம்மை அடிமைகொள்ள வேணும் என்று நிர்பந்தித்த ஆண்டாளை நமஸ்கரிக்கிறேன் என்று இந்தத் தனியனை சமர்ப்பிக்கிறார் ஸ்ரீ பராசர பட்டர்

பதவுரை:
நீளா
– நப்பின்னைப் பிராட்டியுடைய;
துங்க-உயரமான;
ஸ்தநகிரி-முலையாகிய மலையின்;
தடீ- தாழ்வாரத்தில்
ஸுப்தம்-தூங்குகின்றவனான;
க்ருஷ்ணம்-கண்ணனை;
உத்ப்போத்ய-நன்றாக எழுப்பி;
சத-நூற்றுக்கணக்கான;
ச்ருதிசிரஸ்-வேதாந்தங்களில்;
ஸித்தம்-முடிந்தபொருளாகச் சொல்லியிருக்கிற;
ஸ்வம்-தன்னுடைய;
பாரார்த்யம்-பரத்வத்தை;
அத்யாபயந்தி-சொல்லிக்காட்டுகிறவளும்;
ஸ்வ-தன்னுடைய;
உச்சிஷ்டாயாம்-சூடிக்களைந்ததான;
ஸ்ரஜி-மாலையில்;
நிகிளிதம்-நன்றாகக்கட்டுப்பட்டவனாயிருக்கின்ற அந்தக்கண்ணனை
யா-எவள்;
பலாத்க்ருத்ய-பலவந்தப்படுத்தி;
புங்க்தே-அவனுடைய குணங்கள், செயல்களை அனுபவிக்கிறாளோ (அப்படிப்பட்ட)
கோதா-கோதை யென்று ப்ரஸித்தமான;
தஸ்யை-அவள்பொருட்டு;
இதம் இதம் நம- இத்தகைய படிகளில் நமஸ்கரிக்கிறேன்;
பூய ஏயவாஸ்து பூய-இவ்விதமே மறுபடியும் நமஸ்கரிக்கின்றேன்.

ஏஷ நாராயண: ஸ்ரீமாந் க்ஷீரார்ணவநிகேதந: | நாகபர்யங்கமமுத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் || ‘(க்ஷீராப்தி நாதனான ஸ்ரீமந்நாராயணனன்றோ  ஆதிசேஷனான படுக்கையை விட்டு மதுராபுரிக்கு கிருஷ்ணனாக வந்திருக்கிறான்.) என்று ஹரிவம்சத்திலும் சொல்லப்பட்டதன்றோ?

கம்ப நாட்டாழ்வார் ஒரு முறை ‘மார்கழி நீராடல்’ உற்சவத்தைக் காண ஸ்ரீவில்லிப்புத்தூருக்குக் கிளம்பினார். [ நம் அன்னை கோதை ஆண்டாளுக்கு எண்ணெய்க் காப்பு உற்சவத்தின் போது, உற்சவத்தின் ஆறு மற்றும் எட்டாம் நாட்களில் நடக்கும் சவுரித் திருமஞ்சனம் விசேஷமானது.] ஆனால், குறித்த நேரத்துக்குள் அவரால் திருமுக்குளத்துக்கு வந்து சேர இயலவில்லை. ‘நீராடல் வைபவத்தை தரிசிக்க முடியாதோ’ என்ற ஆதங்கத்துடன் உற்சவ மண்டபத்துக்கு வந்து சேர்ந்த கம்பருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அதுவரை விழா ஆரம்பமாகவில்லை. காரணத்தை கம்பர் கேட்டபோது, ‘‘எண்ணெய்க் காப்பு நீராடல் முடிந்ததும், ஸ்ரீஆண்டாளுக்கு வைர மூக்குத்தி சேவை நடைபெறும். அந்த மூக்குத்தியைக் காணோம்’’ என்று பதில் அளித்தனர் விழாக் குழுவினர்.-உடனே, கம்பர் தன் கையிலிருந்து மூக்குத்தி ஒன்றை எடுத்து அவர்களிடம் காட்டி, ‘‘இதுவா பாருங்கள்?’’ என்றார். எல்லோருக்கும் ஆச்சரியம். ‘ஸ்ரீஆண்டாளின் வைர மூக்குத்தி கம்பரிடம் எப்படி வந்தது?’ எனக் கேட்டனர். கம்பர், ‘‘திருமுக்குளம் கரை ஏறியபோது ஏதோ ஒன்று மின்னியதைக் கண்டு எடுத்து வந்தேன்!’’ என்றார். நீராடல் வைபவத்தைக் கம்பர் காண வேண்டும் என்பதற்காக ஸ்ரீஆண்டாள் நடத்திய திருவிளையாடலே இது என்று அனைவரும் உணர்ந்தனர். அந்த. ஆபரணத்தை “கம்பர் கொச்சு” என்றே வழங்கினர்.-ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் ராஜகோபுரம், தமிழக அரசின் சின்னமாக உள்ளது. 11 நிலை, 11 கலசங்களுடன் இருக்கும் இதன் உயரம், 196 அடி ஆகும். ஸ்ரீவில்லிபுத்தூர் வடபெருங் கோயில் இராஜகோபுரத்தைக் கண்டு வியந்த கம்பநாட்டாழ்வார் வானளாவிய இத்திருக்கோபுரத்திற்கு இணையாக “மேருமலைச் சிகரமேயன்றி வேறு உவமானம்” கூற முடியாது என்று பொருள்படியாக ஒரு பாடலைப் பாடினார்.

இருக்கோதும் அந்தணர் சூழ் புதுவாபுரி யெங்கள் பிரான்
மருக்கோதை வாழும் வடபெருங்கோயில் மணிவண்ணனார்
திருக்கோபுரத்துக் கிணை அம்பொன் மேருச் சிகரம் என்றே
பருக் கோதலா மன்றி வேறுவ மானப் பணிப்பில்லையே” 

பேய்முலை நஞ்சுண்டு கள்ளச்சகடம் கலக்கழிய காலோச்சி” என்று அவதாரத்தை அனுபவித்து “வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை” என்று அவதாரங்களுக்கு அடியான க்ஷிராப்தி நாதனைப் பற்றி பேசுகிறார்கள். “வித்தை விரைக்கைக்கு நீரிலே சேர்த்தாப்போலே இருக்கை” என்கிறது நாலாயிரப்படி வ்யாக்யானம். வித்தினை என்பதை ஜகத் காரணபூதன் என்றும் பொருள் கொள்ளலாம்.

மூன்று வகையான நோன்புக் கிரிசைகள் பற்றி இப்பாசுரம் பேசுகிறது.
அ) வாக்கு
– “பரமனடி பாடி” என்பது வாசிகம்
ஆ) செயல் – நீராடுதல், ஈகை செய்தல் ஆகியவை காயிகம்
இ) மனம் – “உய்யுமாறெண்ணி” அதாவது பரமனை சதாசர்வ காலமும் சிந்தையில் வைத்தல் என்பது மானசீகக் காரியம்
• நோன்பின் போது விலக்க வேண்டிய ஆறு: நெய் உண்ணல், பால் உண்ணல், மையிடுதல், மலர் சூடல், செய்யாதனச் செய்தல், கோள் சொல்லல் ஆகியவை.
• கடைபிடிக்க வேண்டிய ஆறு: பரமனடி பாடுதல், அதிகாலை நீராடல், ஐயம் இடல், பிச்சை இடல், அவற்றை இயன்றவரை இடல், உய்வதற்கு வேண்டி உகந்து இடல் ஆகியவை
மையிட்டெழுதல் என்பது ஞான யோகத்தையும், மலரிட்டு முடித்தல் என்பது பக்தி யோகத்தையும், ஐயம் என்பது பகவத் வைபவத்தையும், பிச்சை என்பது பாகவத வைபவத்தையும் உட்பொருளாகக் கொண்டுள்ளன.
‘உய்யுமாறெண்ணி’ என்ற பதத்தை ‘உய்யும்’, ‘ஆறு எண்ணி’ என்று பிரிக்கலாம். ‘உய்யும்’ என்பது மோட்ச சித்தி பெறுவதைக் குறிக்கிறது. அதை அடைய, காஞ்சீ வரதராஜப் பெருமாள், திருக்கச்சி நம்பிகள் வாயிலாக, ராமானுஜருக்கு உபதேசித்த ஆறு (விசிஷ்டாத்வைத) வைணவக் கோட்பாடுகளை சிந்தையில் நிறுத்துவதை, “ஆறு எண்ணி” என்பது உட்பொருளாகக் குறிக்கிறது.

1.[அஹமேவ பரம் தத்வம்] – நானே எல்லாவற்றுக்கும் மேலான மெய்ப்பொருள்
2.[தர்சனம் பேத ஏவ] – ஜீவாத்மாக்களும்/அசேதனங்களும் என்னிலிருந்து வேறுபட்டவை (அவை என்னுடைய சரீரமாக விளங்குபவை)
3.[உபாயம் ப்ரபத்தி] – “என் ஒருவனையே தஞ்சமாகப் பற்றுவாய்” என்னிடத்தில் சரணம் அடைவது ஒன்றே என்னை அடைவிக்கும் வழி.
4.[அந்திம ஸ்ம்ருதி வர்ஜநம்] – தங்களின் மரணத்தருவாயில் இருக்கும் சரணாகதர்களுக்கு, என்னைப்பற்றிய சிந்தனை கட்டாயமில்லை. வராஹ சரம ஸ்லோகத்தில் நானே அறிவித்தது போல, உன்னுடைய அந்திம காலத்தில் நானே உன்னைப்பற்றிய சிந்தனையை ஏற்கிறேன்.
5.[தேஹாவஸானே முக்தி] – சரணாகதர்கள் தற்போதுள்ள தங்களுடைய இந்த சரீரத்தின் முடிவிலேயே முடிவில்லாத பரமாத்மாவிற்கு கைங்கர்யம் செய்வதற்கான பரமபதத்தை அடைவர்
6.[பூர்ணாசார்ய பதாச்ரிதா] – மஹாபூர்ணரை (பெரிய நம்பிகளை) ஆசார்யனாக ஏற்றுக்கொள்வாயாக என்ற ஆறு கட்டளைகளாகும். இதையே ஆண்டாள் “உய்யும் ஆறு எண்ணி” என்று நமக்கு வழி காட்டுகிறாள் என்பார்கள்.

“யத்ராஷ்டாக்ஷர ஸம்ஸித்தோ மஹாபாகோ  மஹீயதே |
ந தத்ர ஸஞ்சரிஷ்யந்தி வ்யாதி துர்ப்பி க்ஷதஸ்கரா:||”

[அஷ்டாக்ஷர ஸித்தியடைந்த மஹான் எவ்விடத்திலிருக்கிறானோ அங்கு வ்யாதி, பஞ்சம், திருடர்கள் முதலியவர்கள் ஸஞ்சரிப்பதில்லை.] 

பாபாநாம் வாஸுபாநாம்  வா வதார்ஹாணாம்  ப்லவங்கம |
கார்யம் கருணமார்யேண ந சச்சிந்நாபராத் யதி||”

[வானர! பாபிகளாயிருந்தாலும், புண்யவான்களாயிருந்தாலும், கொல்லத்தக்கவர்களாயிருந்தாலும் அவர்கள் விஷயத்தில் குணவானாயிருப்பன் கிருபை செய்யவேண்டும். குற்றம் செய்யாதவர்கள் எவனுமில்லையே.] என்றவளுடைய [*சீதா லட்சுமி*] கடாக்ஷத்தாலே வந்ததாகையாலே  நீங்காத செல்வமாயிருக்கிறது.

ஸர்வேsஸ்மை  தேவா பலிமாவஹந்தி” [இந்த ப்ரஹ்மஞானிக்கு எல்லா தேவர்களும் காணிக்கை செலுத்துகிறது.]  என்றும்
“யஸ்த்வைவம் ப்ராஹ்மணோ வித்யாத் தஸ்ய தேவா அஸந் வசே”  [ப்ரஹ்ம ஞானியான ஒருவன் இம்மாதிரி உன்னையறிந்தானாகில் அவனுக்கு எல்லா தேவர்களும் வசத்திலிருக்கிறார்கள்.] என்றும் வேதம் கோஷிக்கிறதல்லவா?
ஒருமுறை ஸ்வாமி கூரத்தாழ்வானை ஒருவர் “மற்ற தெய்வங்களைக் கண்டால் நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்கள்” என்று கேட்க “சாஸ்திர வ்ருத்தமாக கேளாதே காண்! உங்களைக் கண்டால் மற்ற தெய்வங்கள் எப்படி நடந்து கொள்ளும், என்றல்லவோ நீ கேட்கவேண்டுவது என்று  பதிலுரைத்தாராம். 

“ருசம் ப்ராம்ஹம் ஜநயந்த: தேவா அக்ரே ததப்ருவந்” [பரப்ரம்மத்தின் ப்ரீதியை உண்டு பண்ணுவதற்காக நித்யஸூரிகள் முதலில் நம: என்னும் அச்சொல்லைச் சொன்னார்கள்.] என்று நித்யஸுரிகளும் அவனுடைய உகப்புக்காகவன்றோ கைங்கர்யம் செய்வது .

திருப்பாவை நான்காம் பாசுரத்தில் 11 முறை ‘ழ’கரத்தைப் பயன்படுத்தியிருக்கிறாள். இப்பாசுரத்தில், தமிழுக்கே சொந்தமான “ழ” என்ற எழுத்து “ஆழி (3 தடவை) மழை (2 தடவை), ஊழி, பாழியம், தாழாதே, வாழ, மார்கழி, மகிழ்ந்து” என்று ‘ழ’கரம் பதினோரு முறை வருவதைக் காணலாம்.
ஆண்டாளின் தந்தையார் பெரியாழ்வார் தனது ஒரே பாசுரத்தில் 10 முறை தமிழ் மொழியின் சிறப்பு மிகுந்த எழுத்தான , ‘ழ’கரத்தைப் பயன்படுத்தியுள்ளார்.[பெரியாழ்வாரின் “குழல் இருந்து” என்று தொடங்கும் 285-வது பாசுரத்தில் “ழ”கரம் பத்து முறை வருகிறது.]
“ஊழிமுதல்வ னுருவம் போல் மெய் கருத்து” எனும்போது மெய் உவமையும், உரு உவமையும்,
“ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து” எனும்போது வினை உவமையும்,
“சரமழை போல்” எனும்போது பயன் உவமையும்
உள்ளதால் உவமையணிக்கான தமிழ் இலக்கணம் இப்பாசுரத்தில் வெளிப்படுவதைக் காணலாம்.

(ஒன்றும் நீ கை கரவேல்)
அருமையாகப் பெற்ற அர்த்த விசேஷங்களை ஒன்றும் ஒளித்திடாமல் வர்ஷித்த யதிராச மேகம்.”இராமாநுசனென்னுஞ் சீர்முகிலே” – [இராமா.நூற்ற.82] என்கிறபடி “உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்” என்கிற ஸ்ரீபாஷ்யகார திவ்ய ஸூக்தி மிகப்பொருத்தமாக அநுஸந்திக்கத்தகும்.

ததோSகில ஜகத் பத்ம போதாயாSச்யுத பாநுநா |
தேவகீ பூர்வ ஸந்த்யாயாமாவிர்பூதம் மஹாத்மநா||
” [ பிறகு, உலகங்களாகிற தாமரைகளை மலரச் செய்வதற்காக அச்யுதனாகிற பெரிய ஸூர்யன் தேவகியாகிய விடியற்காலைவேளையில் ஆவிர்பவித்தான்.] என்று அருளினாரன்றோ.

.1-உபாயம்: தூமலர் தூவித் தொழுதல், வாயினால் பாடுதல், மனத்தினால் சிந்தித்தல்
2.உபேயம்: மாயன், மன்னு வடமதுரை மைந்தன், தூயபெருநீர் யமுனைத் துறைவன், ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு, தாயை குடல் விளக்கம் செய்த தாமோதரன்
3.புருஷார்த்தம்: போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்

“புண்யாம்போஜ விகாஸாய பாபத்வாந்த க்ஷயாய ச;
ஸ்ரீமான் ஆவிரபூத்பூமௌ ராமாநுஜ திவாகர:”

அரியென்ற) ஸர்வ பாபங்களையும் போக்கடிப்பவன் என்பதை உணர்த்தும் திருநாமத்தை அநுஸந்திக்கை.
“ஹரிர் ஹரதி பாபாநி துஷ்ட சித்தைரைபி ஸம்ருத: |
அநிச்சயாsபி ஸம்ஸ்ப்ருஷ்டோ தஹத்யேவ ஹி பாவக:||”

[கெட்ட மனமுடையவர்களால் நினைக்கப்பட்டாலும் ஹரியானவன் அவர்களது பாபத்தைப் போக்கடிக்கிறான். விருப்பமில்லாமல் தொடப்பட்ட அக்னியும் கொளுத்துகிறதன்றோ?]
என்றல்லவோ சொல்லப்பட்டது.

இந்த ஆறாம் பாசுரத்தில் திருமாலின் ஐந்து நிலைகளும் பாடப்பட்டுள்ளன.
வித்தினை” எனும்போது பரம்பொருளான (1.பரம்) வைகுண்டநாதனையும்,
“வெள்ளத்தரவில் துயிலமர்ந்த” எனும்போது (2.வ்யூஹம்) பாற்கடல்  வியூஹ மூர்த்தியையும்,
“சகடம் கலக்கழியக் காலோச்சி” எனும்போது (3.விபவம்) விபவ அவதார கண்ணனையும்,
“புள்ளரையன் கோயில்” எனும்போது (4.அர்ச்சை) அர்ச்சாவதார ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமானையும், “உள்ளத்துக் கொண்டு” எனும்போது (5.அந்தர்யாமித்வம்) அந்தர்யாமியான பரமனையும்

நம் அன்னை கோதை நாச்சியார் போற்றிப் பாடியிருப்பதாக நம் வைணவப் பெரியோர்களௌ உள்ளுரையாக கூறுவர்

புள்ளரையன் கோயில் வெள்ளை விளிசங்கு )எம்பெருமானார்க்கு மிகச்சிறந்த பிரத்யபிஜ்ஞாபகம். பாலன்னவண்ணத்துன் பாஞ்சஜன்யமே என்றபடி பால் போன்ற நிறத்தது சங்கு; ஸ்வாமி எம்பெருமானாரும் “துக்தோதத்வத் தவள மதுரம் சுத்த ஸத்வைகரூபம் ரூபம் யஸ்ய ஸ்புட யதித ராம யம பணீந்த்ராவதாரம்” என்றபடி பால் போன்ற திருநிறத்தவர்-(புள்ளரையன் கோயில்) “பூமருவப் புள்ளினங்கள் புள்ளரையன் புகழ் குழறும் புனலரங்கமே” என்று பெரியாழ்வார் புள்ளரையன் கோயிலாகக் கூறிய திருவரங்கத்தில் வாழ்ந்தது. சக்கரம் சங்கு என்ற திவ்யாயுதங்களில் சக்கரமானது கருதுமிடம் பொருது என்ற அருளிச் செயலின் படியே. காதீவிப்லோஷாதி நாநா கார்ய ஷடகஷங்களுக்காக, பாஹ்ய ஸஞ்சாரங்கள் செய்து கொண்டேயிருக்கும். சங்கு அப்படியன்றியே “உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம் கண்படை கொள்ளல் கடல்வண்ணன் கைத்தலத்தே” என்னும்படியிருக்கும். ஸ்வாமி ராமாநுஜர் தாமும் “யாவச் சரீர பாதம் அத்ரைவ ஸ்ரீரங்கே ஸுவ மாஸ்வ” (சரணாகதி கத்யம்) என்ற ஸ்ரீரங்கநாதன் கட்டளையைப் பெற்றுக் கோயிலே கதியாயிருந்தவர். ஆகவே “கோயில் சங்கு” என்றது ஸ்வாமி ராமாநுஜருக்கு மிகப்பொருத்தமாகும்.

உத்காயதீ நாமரவிந்த லோசநம்
வ்ரஜாங்க நாநாம் த்வமஸ்ப்ருசத் த்வநி: |
தத்நச்ச நிர்மந்த நசப்தமிச்ரிதோ
நிரஸ்யதே யேந திசாமமங்களம் ||
[தாமரைக்கண்ணனை நினைத்துப் பாடுகிற கோபஸ்த்ரீகளின் ஒலியானது, தயிர்  கடையும் ஓசையுடன் கூடிக்கொண்டும், திசைகளின் அமங்களங்களைப் போக்கிக் கொண்டும் ஸ்ரீவைகுண்டத்தையும் எட்டியது.]

காசு, பிறப்பு, தயிர் என்ற மூன்றும் முறையே அஷ்டாட்சரம், த்வயம் மற்றும் சரமசுலோகம் ஆகிய மூன்று மகா மந்திரங்களை உணர்த்துவதாகவும் ஒர் உள்ளர்த்தம் உண்டு.

“தமீச்வராணாம் பரமம் மஹேச்வரம் தம் தேவதாநாம் பரமஞ்ச தைவதம்|” [ஈச்வரர்களுக்கும் மேலான மஹேச்வரனும், தேவதைகளுக்கும் மேலான தேவதையை, ] என்று ச்வேதாச்வர உபநிஷத் உத்கோஷித்தது. ஆழ்வார்களும் “அயர்வரும் அமரர்கள் அதிபதியானவன்” என்றும் “மனிதர்க்குத் தேவர் போலே தேவர்க்கும் தேவாவோ” என்றார்கள். இவைகளையெல்லாம் கொண்டு “தேவாதி தேவனை” என்கிறாள் ஆண்டாள்.

“அர்வாஞ்சோ யத்பத் சரஜி ஜத்த்வமாஸ்ரித்ய பூர்வே மூர்த்த்னா யச்யான் வ்யபமுகதா தேசிகா முக்திமாபு” என்ற பட்டர் ஸ்ரீஸூக்தி படிக்கும், “பாத கோடீரயோஸ் சம்பத்தேன சமித்யமான விபவாந்” என்ற நிகமாந்த மகாதேசிக குரு ஸ்ரீஸூக்திபடிக்கும், திருவடி ஸம்பந்தத்தாலே பின்னானார்களையும், திருமுடி ஸம்பந்தத்தாலே முன்னோர்களையும் வாழ்வித்தவர் ஸ்வாமி எம்பெருமானார்.

மேதினி யெலாம் புகழும் வேதாந்த தேசிகன் சொல்
மாதர் செயுங் கோதா மான்மியத்தை  — ஆதரவாய்ப்
போற்றினோர் பட்டர்பிரான் போலப் புகழ்மருவி வீற்றிருப்பர் வைகுந்த மேல்
“-என்ற ஒரு பாடலும் ஒன்றுண்டு.

விது: க்ருஷ்ணம் ப்ராஹ்மணாஸ் தத்வதோ யே தேஷாம் ராஜந் ஸர்வயக்ஞாஸ் ஸமாப்தா:“-[ அரசரே! ப்ரம்மஞானிகளான எவர்கள் கிருஷ்ணனை உண்மையாக அறிகிறார்களோ, அவர்களுக்கு எல்லா நோன்புகளும் முடிந்து விட்டன.] 

நான்கு பாசுரங்கள் ஸ்ரீராமாவதாரப் பெருமையைப் பாடுகின்றன. அவற்றில் 10 ஆவது,முதலாவது ஆகும்.(மற்றவை,12ஆவது,13ஆவது,24 ஆவது பாசுரங்கள்.)

கோகுலத்து கோபியர் கண்ணனைக் காணும் பெரும்பேறு பெற்றவர்கள். அதனால், அவர்களுக்கு கண்ணபிரான் “கண்ணுக்கினியவன்” ஆவான் 🙂 ஆனால், ஸ்ரீராமபிரானை (ராம அவதாரம் முடிந்து விட்டபடியால்!) கோபியரால் நினைக்க மட்டுமே முடியும், அதனாலேயே அவர்களுக்கு சக்ரவர்த்தி திருமகன் “மனத்துக்கினியவன்” ஆகின்றான் என்று அபினவ தேசிகன் சுவாமிகள் கூறுவார்.

இதை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பிரத்யேகமாக தினமும் செய்கிறார்கள். எப்படிச் செய்கிறார்கள் தெரியுமா ?-அது ஒரு தனிக்கலை , அதற்கென்றே ஒரு குடும்பத்தினர் கோவிலுக்கு அருகில் வசிக்கிறார்கள்.  சுத்தமான வாழை நார் மற்றும் மரவள்ளிக்கிழங்கின் இலைகளைக் கொண்டு இந்தக் கிளியின் உடலும் முகமும் வடிவமைக்கிறார்கள் . ஏழிலை என்று சொல்லப் படுகின்ற மரவள்ளி இலை கிளியின் உடலுக்கும், மற்றும் நந்தியாவட்டை இலைகளை கிளியின் இறக்கைகளுக்கும் பயன் படுத்துகிறார்கள். கிளி உருவாக பயன் படுத்தப் படுகிற சிறிய மூங்கில் குச்சிகளை அந்த இலைகள் மறைத்து விடுகின்றன. கிளி அமர்ந்திருப்பது போல காண்பிப்பதற்கு , நந்தியாவட்டை பூக்களே கிளியின் கால்களாக அமைக்கப் படுகின்றன . இறக்கைகளுக்கு முதலில் பனைஒலையும் , அதன் மேல் இலைகளும் போர்த்தப் படுகின்றன .கிளியின் வால் பகுதிக்கு, வெள்ளை அரளி மற்றும் செவ்வரளி மொட்டுக்கள் உபயோகப் படுத்தப் படுகின்றன. கிளியின் கண்கள் பளிச்சிட காக்காய் பொன் என்கிற பொருளை உபயோகிக்கின்றனர். சிவப்பு நிற மாதுளம் பூ , கிளியின் மூக்கிற்கு பயன் படுத்தப் படுகிறது. இவ்வாறான ஒரு கிளியைத் தயாரிக்க சுமார் ஆறு மணி நேரம் ஆகிறது. நுணுக்கமான இந்த  வேலையை ஆண்கள்தான் செய்கின்றனர்.
• அந்தப் பச்சைக் கிளியை தினசரி மாலை 6.30. மணிக்கு நடைபெறும் சாயரட்சை பூஜையின் போது தாயார் ஆண்டாளின் இடது தோளில் சார்த்துவது வழக்கம். அந்தக் கிளி, இரவு அர்த்தசாமப் பூஜை வரை ஆண்டாளின் தோளில் வீற்றிருக்கும். அதற்குப் பிறகு ஆண்டாளுக்குச் சார்த்தப்பட்ட மாலை முதலானவற்றைக் களையும் நிகழ்வின் போது, கிளியும் அகற்றப்படும்.

இதுவரை பத்து இடைச்சிகளாக உருவகப்படுத்தப்பட்டவை, 10 இந்திரியங்கள், புலன்கள். (செய்புலன்-கர்மேந்திரியம் 5, உணர்புலன்-ஞானேந்திரியம் 5) ஆகும். இந்தப் பாசுரத்தில் குறிக்கப்படுவது இவை பத்தையும் பின்னிருந்து இயக்குவது மனம்.
 “மனஸ் – மனம்” இறைவனை அடையத் தடையாயிருக்கும் கதவு. குரு தொடர்பினால் அந்த இருளை நீக்கித் தாளைத் திறந்திட்டால், நமது “இதய கமலத்தில் கோயில்” கொண்டிருக்கும் இறைவனைக் காணலாம்.

கோ உறையும் இல் ‘கோயில்’ ஆவது தாரக மந்திரமான திருமந்திரம்–மந்த்ர இரஹஸ்யம்’-.-கொடி தோன்றும் வாயில்’ தாயாய் இறை ஞான அமுதூட்டி சீவர்களைக் காத்து நிற்கும் போஷக மந்திரமாம் -விதி இரஹஸ்யம்’-த்வயத்தைக் குறிக்கிறது.-இறைவன் தன் வாய்மொழியாக அளித்த வாக்கு, சரணம் செய்தவர்களைக் காப்பேன் என்னும் உறுதிமொழி. ஆகவே ‘வாய் நேர்நதது’ சீவாத்மாக்களுக்குப் பலனைத் தருவதாக, மகிழ்ச்சியை உண்டுபண்ணுவதான, அனுபவித்து சுகமடையச் செய்வதாக விளங்கும் போக்ய மந்திரமாம் -அநுஸந்தான அநுஷ்டான இரஹஸ்யம்-சரமஸ்லோகத்தைக் குறிக்கின்றது.-இப்பாசுரத்தில் கோயில் காப்பான் – திரு மந்திரம் என்றும் கொடி தோன்றும் தோரண வாயில் காப்பான் – த்வயம் என்றும், நென்னலே வாய் நேர்ந்தான் – சரம ஸ்லோகம் என்றும் பூர்வர்கள் கருதினர்.

பெரியாழ்வாரின் சகோதரர் ஆதிகேசவரின் அபிமான புத்திரரான நாராயணதாசரின் வழிவந்தோர், “வேதப்பிரான் பட்டர்” என்ற திருநாமத்துடன் பெரியாழ்வாரின் வம்சத்துக் குரியவர்களாக இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் கைங்கர்யம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
உற்சவகாலங்களில் ஸ்ரீஆண்டாளுக்கும் ஸ்ரீரெங்க மன்னாருக்கும் திருமஞ்சன நீராட்டு செய்யும் போது கட்டியம் கூறும் உரிமை இவர்களுக்குண்டு.
மார்கழி பகற்பத்து முதல் நாளன்று ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரங்க மன்னார் துணையுடன் சன்னதித் தெருவில் எழுந்தருளும்போது ஸ்ரீபெரியாழ்வாரின் வம்சத்தில் வந்த வேதப்பிரான் பட்டர்கள் அவர்களை எதிர்கொண்டழைக்கிறார்கள். தங்கள் வீட்டு வாசலில் அவர்களை நிறுத்தி பிறந்தவீட்டு உபசாரங்களையும் செய்கிறார்கள். வாசலிலும் திண்ணையிலும் காய்கறிகளையும், கனிவர்க்கங்களையும் நிரப்பி பாலும் பருப்பும் (இவ்விதம் காய்கறிப் பரப்பி வைத்து பெண்வீட்டுச் சீதனமாக வழங்குவதை “பச்சை பரத்தி என்றும் பொரிகடலையுடன் சர்க்கரைப்பால் கலந்து கொடுப்பதை” மணிப்பருப்பு” என்றும் வழங்குவர்) நிவேதனம் செய்து தம் குடும்பத்து பெண்ணான ஆண்டாளையும், மாப்பிள்ளை அரங்கனையும் அன்போடு உபசரிக்கிறார்கள்.

அம்பரத்தையும், தண்ணீரையும், சோற்றையும் அறம் செய்தவர் ஸ்வாமி ராமாநுஜர். “அம்பரம் வ்யோம வஸ்த்ரயோ” என்று நிகண்டு கூறியபடி அம்பரமாவது ஆகாசம்; பரமாகாசம் எனப்படுகிற பரமபதம். அதையும் வ்ரஜையாகிற தண்ணீரையும், “அந்நம் ப்ரஹ்மேதி வ்யாஜாநாத்” என்று உபநிஷத்தில் அன்னமாய்ச் சொல்லப்பட்ட பரப்ரஹ்மாநுபவத்தையும், அறம் செய்யும் எம்பெருமான். க்ருபாமாத்ர ப்ரஸன்னாச்சார்யராய் உபகரித்தருளினவர் எம்பெருமானார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நிதி முன்புறத்தில் மாதவிப்பந்தல் உள்ளது. ஆண்டாள், இந்த பந்தலுக்கு கீழ்தான் வளர்ந்தாள். இந்தப்பந்தல் மரங்களால் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆண்டாள், தன்னை கோபிகையாக பாவித்து, கண்ணனை வேண்டி பாடிய சிற்பங்கள் இந்த பந்தலுக்கு அருகிலுள்ள விதான சுவரில் உள்ளது.-(மாதவி = வசந்தமல்லி அல்லது செண்பகம் என்னும் கொடி! குருக்கத்திக் கொடி என்றும் சொல்வார்கள்.)-ஆச்சார்யர்கள் விளக்கங்களில் மாதவிப் பந்தல்:
⭐ சுகப் பிரம்ம மகரிஷிகள் முதலான பல ஞான முனிவர்களும்,
⭐ சனகாதி மகரிஷிகள் முதலான கர்ம யோகிகளும்,
⭐ துருவன்,பிரகலாதன் போன்ற பக்த அன்பு உள்ளங்களும்,
⭐ ஆஞ்சநேயர் முதலான சரணாகத தொண்டு உள்ளங்களும், இன்னும் பலரும் வந்த அமரும் பந்தல் என்றே குறிப்பிடுகின்றனர்.

ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள், தான் அணிந்திருக்கும் மாலையில் 108 திவ்யதேசங்களில் அருளும் பெருமாள்களை மாலையாக அணிந்திருப்பதாக ஐதீகம். ஆண்டாள் கோயில் கருவறையைச் சுற்றி முதல் பிரகார சுவர்களில் 108 திவ்யதேச பெருமாளின் உருவங்கள் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தில் திருப்பாற்கடல், வைகுண்டம் பெருமாள் உட்பட அனைத்து பெருமாளையும் தரிசிக்கலாம்.
ஸ்ரீஆண்டாள் சன்னதியில் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளியிருக்கும் மண்டபம், “கனக சமர பூபாலனம்” (முத்துப்பந்தல்) எனப்படுகிறது. இதில் வாழைமரம், மாவிலை மற்றும் பூச்செண்டும் இருக்கிறது. மேலே திருமாலின் பாதம் இருக்கிறது. திருப்பாவை 30 பாசுரங்களையும், நினைவுறுத்தும்படி 30 தங்க மாவிலைகள் இம்மஞ்சத்திலே கட்டப்பட்டுள்ளன. ஒரு இலைக்கும் மற்றொரு இலைக்கும் இடையே ஒரு பூச்செண்டு உள்ளது.

ஸ்ரீகோதை ஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னார், ஸ்ரீபெரியாழ்வார் ஆகிய மூவரும் ஸ்ரீவில்லிபுத்தூரில் அருள்பாலிக்கின்றனர். ரெங்கமன்னார் “அ’காரம், ஆண்டாள் “ம’காரம், கருடாழ்வார் அம்சமான பெரியாழ்வார்  “உ’காரம் என இம்மூவரும் ” ௐ ” எனும் பிரணவ மந்திரத்தின் பொருளாக திகழ்கின்றனர் என்பதால் “முப்புரிஊட்டியதலம்” என அழைக்கப்படுகிறது.-ஸ்ரீஆண்டாளின் திருக்கோயிலான “நாச்சியார் திருமாளிகை” முழுதும் கருங்கற்களால் ஆனது. கருவறை விமானத்தில் திருப்பாவை பாசுரங்களின் கருத்துகளைப் பிரதிபலிக்கும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
அவ்விமானத்திற்கு “திருப்பாவை விமானம்”
என்று பெயர்.-உட்பிராகாரத்தில் தேக்குமர வேலைப்பாடுகளுடன் விளங்குகிறது “மாதவிப் பந்தல்” உள்ளது.  மணி மண்டபத்தில்
ஆண்டாள் சந்நிதியின் நேர் எதிரில் வெண்கலத்தால் செய்யப்பட்ட தட்டொளி இருக்கிறது. இதில் தான் ஆண்டாள் தன் முகத்தை பார்த்தாளாம். ஆண்டாள் திருப்பாவை(20)யில், ‘உக்கமும்  தட்டொளியும்‘ என்று குறிப்பிட்டிருக்கிறாள்.
தட்டொளிக்கு அருகிலுள்ள ஒரு தூணில், தனது வாலை தலைக்குமேல் சுருட்டி வைத்துள்ள ஆஞ்சநேயர் சிற்பம் மிக வித்தியாசமான முறையில், சிறப்பான சிற்பக்கலைக்குச் சான்றாக விளங்குகிறது. ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைத் தூக்கியவாறு தமது வாலை உடல் முழுவதும் வட்டமாகச் சுற்றியவாறு அமைந்திருக்கும் சிற்பம் இது.
நாச்சியார் திருமாளிகையில் தென்கிழக்கு மூலையில் பெரியாழ்வார் வழிபட்ட ‘இலக்குமி நாராயணர்’ திருவுருவச் சிலையும் அமைந்துள்ளது. சுதை சிற்பமாக அமைந்திருக்கும் இத்திருமேனியின் இடது மடியில் இலக்குமி தேவி அமர்ந்திருக்கிறாள். பல வர்ணங்களால் அழகு மிளிரும் இச்சிற்பம் ‘வர்ணகலாபேரர்’ என்றழைக்கப்படுகிறது.
மகா மண்டபத்தில் தங்கமுலாம் பூசப்பெற்ற ‘வெள்ளிக் கிழமை குறடு’ என்ற மண்டபம் ஒன்று உள்ளது.[இதன் தூண்களில் திருமலை நாயக்கர் மற்றும் அவரின் மனைவியர் இருவரது சிலைகள் உள்ளன.] அர்த்த மண்டபத்தில் தங்கமுலாம் பூசப்பெற்ற மஞ்சத்தில் இடக் கையில் கிளியை ஏந்தி நிற்கும் ஆண்டாளுடன் ரங்க மன்னார் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அருகில் கூப்பிய கரங்களுடன் கருடாழ்வார். கருவறையில் ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரங்க மன்னார், ஸ்ரீகருடாழ்வார் (பெரிய திருவடி) ஆகியோர் சேவை சாதிக்கிறார்கள். திருவரங்கன், திருமணக் கோலத்தில் ராஜகோபாலனாக செங்கோல் ஏந்தி கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். மூல விக்கிரகங்களுக்கு முன்னால் தங்கத்தாலான கனக சப்ர மஞ்சத்தில் உற்சவர்களாக இந்த மூவரும் எழுந்தருளி உள்ளனர். ஸ்ரீவில்லிப்புத்தூர் உற்சவர் “ரங்கமன்னார், ராஜ மன்னார்” ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறார். விரத நாட்கள் தவிர மற்ற நாட்களில், இவர் மாப்பிள்ளைக் கோலத்தில் காட்சி தருகிறார். அப்போது அந்தக் கால நிஜார் மற்றும் சட்டை அணிவார். காலில் செருப்பும் அணிந்திருக்கிறார். அருகில் மணப்பெண் அலங்காரத்தில் ஆண்டாளின் திருக்காட்சி. ‘மன்னாருக்கு தொடை அழகு’ என்பர். ஆண்டாளின் மாலையை (தொடை = மாலை) அணிந்து கொள்வதால் அழகு என்பர்.

அம்பரமே’ எனத் தொடங்கும் 17 ஆம் பாசுரத்தில் முதலெழுத்து ‘அ ‘காரம். ‘உந்து மத’ எனத் தொடங்கும் 18 ஆம் பாசுரத்தின் முதலெழுத்து ‘உ’காரம். ‘முப்பத்துமூவர்’ எனத் தொடங்கும் 20 ஆம் பாசுரத்தில், இந்தப் பாசுரம், முதலெழுத்து ‘ம’காரம். இந்த மூன்று எழுத்துகளும் , ‘அ’காரம் +’உ’காரம் +’ம’காரம் ,சேர்ந்தால் வருவதே ப்ரணவம் . நடுவில் வரும் 19 ஆம் பாசுரம் ‘குத்துவிளக்கெரிய’ அதன் முதலெழுத்து ‘கு’ இது வினையையும் பெயரையும் இணைக்கும் வேற்றுமை உருபு. எனவே 17,18,20 ஆகிய பாசுரங்களை இணைக்கும் பாசுரம் 19. இவை நான்கும் ஒன்றோடொன்று தொடர்புடைய வகையில் அமைந்து ப்ரணவத்தைக் குறித்தன.

ஆண்டாளின் பிறபெயர்கள்:ஆண்டாளின் இயற்பெயர் கோதை. இதற்கு பூமாலை என்று பொருள். இவளுக்கு சூடிக்கொடுத்த சுடர்க்கொடி, ஆண்டாள், பட்டர்பிரான் புதல்வி, திருப்பாவை பாடிய செல்வி, வேயர்குல விளக்கு, ஶ்ரீரங்கமஹிஷி, புதுவையர்கோன் விட்டுசித்தன்கோதை, சீலத்தனள், தென்திருமல்லிநாடி, புதுவையர்கோன் பட்டன்கோதை,
குழற்கோதை,-புதுவைமன்னன் பட்டர்பிரான்கோதை,
வில்லிபுத்தூர்கோன் கோதை, சுரும்பார் குழற்கோதை, விட்டுசித்தன்வியன் கோதை, வில்லைத்தொலைத்த புருவத்தாள், ஶ்ரீவிஷ்ணுசித்த குலநந்தன கல்பவல்லீ, கோதா விஷ்ணு சித்தாத்மஜா, ஶ்ரீதந்விநவ்யபுரவாஸினி, வைதிக விஷ்ணுசித்த தநயா, ஶ்ரீரங்கபதிதேவி, ம்ருதுவாணி, நூதனநகரஸ்திதா, நூதனபுரநாயகி, ரங்கஜீவிகா,ஶ்ரீரங்கநாயகி, கோபீவேஷதரா, துளசிவன ஸஞ்ஜாதா, பட்டநாதப்ரியா, க்ருஷ்ணாயுத போகி, ரங்கநாதப்ரியா, யதிராஜ ஸகோதரி,துர்லபஶ்ரீ ஸுலக்ஷணா, தநுர்மாஸ க்ருத வ்ரதா, நாராயணபதாஶ்ரிதா, திருவாடிப்பூரத்துச் செகத்துதித்தாள், திருப்பாவை முப்பதும்செப்பினாள், பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள், ஒருநூற்றுநாற்பத்து மூன்றுரைத்தாள், உயரரங்கர்க்கே கண்ணியுகந்தளித்தாள்,
திருமல்லிவளநாடி, வண்புதுவை நகர்க்கோதை, விஷ்ணுசித்த தநூஜா 
என பல பெயர்கள் உண்டு.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் த்வஜஸ்தம்ப மண்டபத்தில் வடபுறப்பகுதியில் இந்த கண்ணாடி மாளிகை உள்ளது. வேறு எந்தக் கோயிலிலும் இப்படி இல்லையென்று கூறுமளவிற்கு மிகவும் எழிலார்ந்த அமைப்புடன் இம்மண்டபம்  உள்ளது. இதனை இரண்டு லட்சம் செலவில் கோயம்புத்தூர் விஜயலட்சுமி மில்ஸ் அதிபர் ஸ்ரீமான் V.L. பாலகிருஷ்ண நாயுடு  –
B. ஜானகியம்மாள் தம்பதியனர் நம் கோதை ஆண்டாளின் உகப்பிற்கினியவாறு (30-07-1985 அன்று) கட்டிக்கொடுக்கப்பட்டது.-இந்த கண்ணாடி மாளிகையின் உள்ளே ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரங்கமன்னார் எழுந்தருள்வதற்கான நாலுகால் குறடு உள்ளது. அதன் தூண்கள் உள்பட. மண்டபத்தின் தாழ்வாரம் ஆகிய எல்லாப் பகுதிகளும் கண்ணாடி வேலைப்பாடுகள் தாம். 7 1/2 அடி உயரமும் 3 1/2 அடி அகலமும் உள்ள பல நிலைக் கண்ணாடிகளை இணைத்துள்ளார்கள். இம்மாளிகையின் வாயிலில் கருங்கல் பளிங்கினால் செதுக்கப்பெற்ற இரண்டு யானைகள் உள்ளன.

தத்துவங்களின் வரிசையில் அகந்தைக்கு 22 ஆவது இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதையொட்டியே இந்த திருப்பாவை 22 ஆவது பாசுரத்தில் அகந்தையை அகற்ற வேண்டியதன் அவசியத்தை ஸ்ரீஆண்டாள் அழகுற அமைக்கிறாள் என்பர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் கோதை ஸ்ரீஆண்டாள் திருக்கோயிலில் வைகானஸ ஆகம முறைப்படி
மொத்தம் 12 திருநாட்கள் திருஆடிப்பூர உற்சவம் நடைபெறுகிறது. வழக்கம் போல் திருப்பூர நந்தவனத்தில் ம்ருத்சங்க்ரஹணம் மற்றும் த்வஜஸ்தம்ப மண்டபத்தில் கொடி ஏற்றம், என சேனை முதலியார் புறப்பாட்டுடன் உற்சவம் தொடங்குகிறது.

🔹முதல் நாள்
அன்று இரவு ஸ்ரீஆண்டாள்-ஸ்ரீரங்கமன்னார் 16வண்டிச்சப்பரத்தில் திருவீதிப் புறப்பாடு கண்டருளுவர்.
🔹இரண்டாம் நாள்
இரவு ஸ்ரீஆண்டாள் – சந்திரப்ரபை வாகனம்;
ஸ்ரீரங்கமன்னார் – சிம்மவாகனம்;
🔹மூன்றாம் நாள்
இரவு ஸ்ரீஆண்டாள் – தங்கப்பரங்கி நாற்காலி       வாகனம்; ஸ்ரீரங்கமன்னார் – அனுமார் (சிறிய திருவடி ) வாகனம்;
🔹நான்காம் நாள்
இரவு ஸ்ரீஆண்டாள் – சேஷ வாகனம்;
ஸ்ரீரங்கமன்னார் – கோவர்த்தனகிரி;
🔹ஐந்தாம் நாள்
காலை ஐந்து பெருமாள் ஆண்டாளுடன் பெரியாழ்வாருக்கு மங்களாசாசனம் நடைபெறும்.
இரவு ஸ்ரீஆண்டாள் – அன்னவாகனம்;
ஸ்ரீரங்கமன்னார் உள்பட ஐந்து பெருமாள்களும் ஐந்து கருட சேவை நடைபெறும்.
🔹ஆறாம்  நாள்
இரவு ஸ்ரீஆண்டாள் – கனகதண்டியல்          வாகனம்; ஸ்ரீரங்கமன்னார் – யானை வாகனம்;
🔹ஏழாம் நாள்
இரவு ஸ்ரீஆண்டாள் மடியில் ஸ்ரீரங்கமன்னார்  சயன சேவை
🔹எட்டாம் நாள்
இரவு ஸ்ரீஆண்டாள் – புஷ்பப்பல்லக்கு;
ஸ்ரீரங்கமன்னார் – குதிரை வாகனம்
🔹ஒன்பதாம் நாள்  காலை திருவாடிப்பூரம் தேரோட்டம்;

🔹பத்தாம் நாள்  சப்தாவரணம்;
இரவு ஸ்ரீஆண்டாள் சிங்கம்மாள் குறட்டில் முத்துக்குறி உற்சவம்;         
🔹பதினொன்றாம் நாள் தீர்த்தவாரி
🔹பன்னிரண்டாம் நாள் விடையாற்றி.

ஒன்பதாம் திருநாளான திருவாடிப்பூரத்தன்று அதிகாலையிலேயே ஸ்ரீஆண்டாளும் ஸ்ரீரங்கமன்னாரும் பெரியதிருத்தேர் எழுந்தருளுகிறார்கள். இத்திருத்தேர் வானமாமலை ஜீயர் ஸ்வாமிகளால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இத்தேரின் வடம் கோர்க்கும் ஒரு  இரும்பு வளையத்தில்,  “சாலிவாகன சகாப்தம், கொல்லம் 1025 வருஷம் [கி.பி.1825](சௌமிய வருடம்) ஆவணி மாதம் 14ம் தேதி, குருவாரம்” என்றெழுதப்பட்டுள்ளது. இத்தேரின் அமைப்பு அதிசயிக்கத்தக்கது. இத்தேரின் சக்கரங்கள் 4+4+1= 9 ஆகும். தேர்தட்டின் ஊன்று கால்கள் 81 ஆகும்.  (8+1= 9) இவற்றை எந்த வரிசையிலிருந்து பார்த்தாலும் ஒன்பது என்ற எண் வரும். தேரின் உள் பகுதியான அஸ்திவார அமைப்பில்  உள்ள தூண்கள் 144 ஆகும்.( 4+4+1= 9).
எண்கணிதசாஸ்திரப்படி, இத்தேரின் எப்பகுதியையும், குறுக்கு வசமாகவோ, நெட்டு வசமாகவோ, நடுவசமாகவோ, எப்படிக் கூட்டினாலும் ஒன்பது என்ற இலக்கம் வரும். அதே போல தேருக்கு வடமும் ஒன்பது ஆகும். இத்தேரில் ஒவ்வொரு தட்டின் பக்கவாட்டிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் தலபுராணச்செய்திகள், இராமாயண, மகாபாரதம் மற்றும் சைவ,வைணவ புராணக் காட்சிகள் உள்ளன.
160 அடி உயரமுள்ள இத்தேரில் மேல்பகுதியிலுள்ள கலசம் மட்டும் 150 கிலோ எடை கொண்டது என திருக்கோயில் பழைய தல வரலாற்றுப்புத்தகம் கூறுகிறது.  முற்காலங்களில் 15000 பேர் சேர்ந்து இழுத்தும் ரதவீதி சுற்றி நிலைக்கு வர சில நாட்கள் ஆகுமாம். ரதவீதி சுற்றி வந்த பிறகு ஸ்ரீஆண்டாள் ரங்கமன்னார் திவ்ய தம்பதியினர் சிங்கம்மாள் குறட்டில் எழுந்தருளுகிறார்கள். பின்னர் வெள்ளிக்கிழமை குறட்டில் உள்ள திருமலை நாயக்கர் சிலைக்கு மரியாதை செய்யப்படுகிறது. பிறகு சிங்கம்மாள் குறட்டிலிருந்து புறப்பட்டு திருவாடிப்பூர நந்தவனத்திலுள்ள திருப்பூர மண்டத்தில் எழுந்தருளுகிறார்கள்.

(எப்பாடும் பேர்ந்து உதறி)
“ஸ்ரீ ரெங்கம் கரிசைலம் அஞ்சனகிரிம் தார்ஷ்யாத்ரி சிம்ஹாசலௌ
ஸ்ரீ கூர்மம் புருஷோத்தமஞ்ச பத்ரி நாராயணம் நைமிசம்
ஸ்ரீமத த்வாராபதி ப்ரயாகா மதுரா அயோத்யா கயாபுஷ்கரம்
சாளக்ராமகிரிம் நிஷேவ்ய ரமதே ராமானுஜோயம் முனிம்” 
என்கிறபடியே எண்டிசையும் பாதசரத்தாலே சஞ்சரித்து, ஆங்காங்கு விபக்ஷர்களுண்டாகில் அவர்களை உதறியருளினவர் ஸ்வாமி.

திருவாடிப்பூர உற்சவம் 5ம் திருநாளன்று ஐந்து கருட சேவை நடைபெறும். பெரிய தங்க அன்ன வாகனத்தில் ஸ்ரீஆண்டாளும், சிறிய அன்னவாகனத்தில் ஸ்ரீபெரியாழ்வாரும், ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் கொண்டிருக்கும் பெரியபெருமாள் (வடபத்திரசாயீ), மற்றும் ஸ்ரீரங்கமன்னார், மற்றும் செண்பகத்தோப்பு காட்டழகர் (சுந்தரராஜப் பெருமாள்), ஸ்ரீவி.திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப் பெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகிய ஐந்து பெருமாள்களும் தனித்தனி தங்க கருட வாகனத்திலும் ஆக இந்த ஏழுவரும் எட்டு வீதிகளில் சுற்றி புறப்பாடு கண்டருளுவர். ஆண்டாள் இந்த ஐந்து பெருமாள்களை மட்டுமே  பதிகமாக மங்களாசாசனம் செய்துள்ளாள்.
இந்த ஐந்து கருடசேவை பற்றி சுவையான ஓர் செய்தி! பூமிதேவியின் அம்சமான சத்யபாமா ஒருநாள் பஞ்சபாண்டவர்களின் பத்தினியாகிய திரௌபதியைப் பார்த்து ஐவர்க்கு மனையாள் என்பதை பரிகசிக்க கோபம் கொண்ட அவள் சத்யபாமாவை “தன்னைப் போல ஐவரைப் பதியாக அடைக!” எனச் சாபமிட்டாளாம். அச்சாபத்தின் காரணமாக பூமிபிராட்டியான சத்யபாமா பட்டர்பிரான் பெரியாழ்வார் நந்தவனத்தில் ஸ்ரீஆண்டாளாக அவதரித்து, சாபத்தின்படி ஐந்து பெருமாள்களை மணந்தாள் என்கிற புதுமைச் செய்தியினை வில்லி இயற்றிய “ஸ்ரீஆண்டாள் பிள்ளைத்தமிழ்” மற்றும் சிதம்பரநாத கவி இயற்றிய “சீவலமாறன் கதை” ஆகிய சிற்றிலக்கிய நூல்களில் காணலாம்.

ஏழாம் நாள் காலையில் ஸ்ரீஆண்டாள் அரங்கமன்னார் தங்கத் தோளுக்கினியானில் வழக்கமாக வருகிற வீதி உலாக்களையும் சேர்த்து, சில புதிய தெருக்களில் எழுந்தருளி, இரவில் ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில் எழுந்தருளுகின்றனர்.-(ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையம் போகும் பாதையில் ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கர்ப்பகிருகம், அர்த்தமண்டபம், இரண்டு பிராகாரங்கள் இருக்கின்றன. கர்ப்பகிருகத்தில் ருக்மிணி, சத்யபாமா சமேத ஸ்ரீநவநீதகிருஷ்ணன் எழுந்தருளியிருக்கிறார்-அங்கே சயனத் திருக்கோலம் நடைபெறுகிறது. ஸ்ரீ ஆண்டாள் தொடையில் இராஜகோலத்திலுள்ள ஸ்ரீரங்கமன்னாரின் “சயனத்திருக்கோலம்” கண்டவர்கள் கண் படைத்த பயனை அறிவர்.

முத்துக்குறி உற்சவம்-(ஆடிப்பூர ப்ரம்மோற்சவம் பத்தாம் நாள்)- (அரையர் சேவை)-சிங்கம்மாள் குறடு என்ற ஒரு இடத்தில் தான் இது நடக்கும்! தலைவியின் அம்மா, தன் பெண், பெருமாள் மேல் காதல் கொண்டு, இப்படி உருகி உருகி மெலிகிறாளே என்று ஏக்கப்படுவாங்க!  “இரக்கம் இல்லாத பெருமாளே”ன்னு காய்வாய்ங்க.
வாணுதல் இம் மடவரல், உம்மைக்
காணும் ஆசையுள் நைகின்றாள், விறல்
வாணன் ஆயிரந்தோள் துணித்தீர், உம்மைக்
காண நீர் இரக்கம் இல்லீரே.
“-பின்னர், கட்டுவிச்சி என்னும் குறத்தி வந்து முத்துக்குறி சொல்லுவாள்.முறத்தில் முத்தைப் பரப்பி, பாடிக்கிட்டே, எண்ணி என்ணிக் குறி சொல்லுவாள் குறத்தி!
மாலையில் தொடங்கி இரவெல்லாம் தொடர்ந்து விடிய விடிய நடக்கும் இந்த உற்சவம்.-அரையர்களே, தங்களை அலங்கரித்துக் கொண்டு, தாளங்கள் தட்டி, தமிழ்ப் பாசுரங்கள் இடையே முழங்க, ஆடி அபிநயித்துக் காட்டுவார்கள்!பத்தாம் நாள் சப்தாவரணம் முடிந்த பிறகு முத்துக்குறி உற்சவம் நடைபெறுகிறது. ஸ்ரீஆண்டாள் செட்டியக்குடித் தெருப்பெண் உருவில் காட்சியளிப்பாள். ஸ்ரீநாதமுனிகள் பரம்பரையைச் சேர்ந்த அரையர் குறத்தியாய் இருந்து பாசுரங்களின் மூலம் அபிநய முத்திரையோடு முத்துக்குறி சொல்வர். ஆண்டாள் அரங்கனை அடைய குறி கேட்பதாக ஐதீகம்

சங்கம்) சங்க ஸ்பர்சத்தால் துருவனுக்கு ஸர்வக்ஞ சக்தியை பகவான் உண்டாக்கினதாக புராணங்கள் கூறுகின்றன-ஸ்வாமி ஸ்பர்சத்தால் கூரத்தாழ்வான், கூரத்துஆண்டாள் எம்பார், அனந்தாழ்வான் பிள்ளான் முதலானோரை ஸர்வக்ஞனாக்கினவர் ஸ்வாமி.
(பறை) பகவத் குணங்களை எங்கும் பறை சாற்றினவராகையாலே தாமே பறையென்னத் தகுவர்.
(பல்லாண்டிசைப்பார்) பெரியாழ்வார் போலே எம்பெருமானுக்குத் தாம் பல்லாண்டு பாடினது மட்டுமின்றியே பல்லாயிரவரைப் பாடுவிக்கவும், வல்லவராயிருந்தார்.
(கோல விளக்கு) ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு குல பிரதீபம் ஆக இருந்தார்.
(கொடி) ஸ்ரீவிசிஷ்டாத்வைத சித்தாந்த விஜய த்வஜம் ஆவார்.
(விதானம்)தொடுத்து மேல் விதானமாய் பௌவ நீரார் அரவணை” என்ற திருச்சந்த வ்ருத்தத்தின் படியே கண்ணன் வடமதுரையிலிருந்து திருவாய்ப்பாடிக்கு எழுந்தருளின போது விதானமாய் இருந்தவர் ஆதிசேஷன்

“அன்னம் தடந்தாம ரைப்போதி னைக்கொணர்ந்து அளியமென் பேடையோ டும்
ஆடகப் பூஞ்சோலை யுள்குடம் பையைஅமைத்து அகலாத சோலைமலை வாழ்
மன்னன் தனக்குநீ வாய்நேர்த்தி டப்பொன்னி வளைகோயில் அண்ணன்அன் பால்
வாழ்விக்கு மாறர்திரு மகளாய உரிமைக்கும் வரிசைஇது எனமதித் தே
இன்அன் புறப்புதிய வெண்ணெயொடு தேன்நிறைத்து இருநூறொடு ஒருநூற தாய்
இனியதெள் அமுதென்ன அக்கார அடிசிலும் இயற்றவே தைத்திங்கள் வாய்
பொன்னின் தடாநிறைத் தருளும்இன் அமுதமே!
பொன்ஊசல் ஆடியரு ளே! புதுவைமா நகர்மன்னர் வதுவைக்கு அமைந்துளாய்!
பொன்ஊசல் ஆடியரு ளே (பாடல்: 98)(ஆண்டாள் பிள்ளைத் தமிழ் எனும் சிற்றிலக்கியத்தில்
(10. பொன்னூசல் பருவம்))

|அக்கார அடிசில்||-தேவையான பொருள்கள்:-தினை அரிசி – ஒரு கப்
பாசிப் பருப்பு – அரை கப்
பால் – 3 கப்
வெல்லம் நன்றாகப் பொடித்தது – இரண்டரை கப்
நெய் – அரை கப்
முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை – தலா 10 அல்லது 15
ஏலக்காய்த் தூள் – அரை டீஸ்பூன்
தினை அரிசி, பாசிப் பருப்பு இரண்டையும் வெறும் வாணலியில் வாசனை வரும்வரை நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஆறியதும் தண்ணீர்விட்டுக் களைய வேண்டும். அதனுடன் 3 கப் பாலைச் சேர்த்து குக்கரில் நன்றாக வேகவைக்க வேண்டும். 3 முறை விசில் சத்தம் வந்ததும் இறக்கிவைத்துவிட வேண்டும். அதன் பிறகு சூடு ஆறியதும் குக்கரைத் திறந்து சாதத்தை ஒரு குழிக்கரண்டியின் அடிபாகத்தால் நன்றாக மசிக்கவும்.-இப்போது, பொடித்து, நன்றாக தூள் செய்யப்பட்ட வெல்லம் ரெடியாக வைத்திருக்கிறோம்தானே! அந்த வெல்லத்துடன் சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்க வேண்டும். வெல்லம் நன்றாகக் கரைந்ததும் வடிகட்டி, பிறகு ஐந்து நிமிடங்கள் வரை கொதிக்கவிடவும். இப்போது அது கெட்டியானல் போதும், பாகு பதம் இருக்கவேண்டும் என்பதில்லை.வேகவைத்திருக்கும் சாதத்தை இந்த வெல்லக் கரைசலில் சேர்த்து நன்றாகக் கிளறுங்கள். இப்போது பாதி நெய்யை ஊற்றுங்கள். எல்லாம் சேர்ந்து கெட்டியானதும் அடுப்பை அணைத்துவிடலாம். மீதியுள்ள நெய்யைச் சூடாக்கி அதில் முந்திரிப் பருப்பு, ஏலக்காய்த் தூள், உலர் திராட்சை ஆகியவற்றைச் சேர்த்து வறுத்து, அக்கார அடிசிலில் கொட்டி நன்றாகக் கிளற வேண்டும்.

கி.பி.1872ல் தஞ்சை மாவட்டத்தில் பிறந்து 12வயதிலே நாடகக் கம்பெனியில் சாதாரண நடிகனாகச் சேர்ந்து, பிற்காலத்திலே நம் கோதை ஸ்ரீஆண்டாளின் அற்புத அருள் சக்தியில் நாடகக் கலையுலகில் தமிழகம் கண்டிராத புதுமைகளையும் புரட்சிகளையும் செய்தவர் சி. கன்னையா நாயுடு அவர்கள். ஆண்டாளின் அருளைப் பெறுவதற்கு முன்பு வீண் பொழுது போக்குக் கதைகளையே நாடகமாக நடத்தி வந்தார். அவற்றால் பெரும் நஷ்டமடைந்து, மனமொடிந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து சேர்ந்தார். ஸ்ரீஆண்டாளை வணங்கி, கோவில் வாசலில் அனாதையாக படுத்துறங்கினார். பிறகு மறுநாள் மதுரையில் தங்கியபோது, அவரது கனவில் ஸ்ரீஆண்டாள் தோன்றி, ஆறுதல் கூறி ஊக்கமும்,ஆறுதலும் அளித்தாள். மதுரை மேலக்கோபுரவாசலில் ஓட்டலில் பணியாற்றிய கிட்டப்பா, செல்லப்பா, அனந்த நாராயணன் என்னும் மூவரையும் வைத்து நாடகம் நடத்துமாறும் அவருக்கு அறிறுத்தி விட்டு கனவில் மறைந்தாள். அதன்படியே கன்னையா இராமாயணம்,மகாபாரதம், பகவத் கீதை, ஸ்ரீஆண்டாள் கல்யாணம், ஸ்ரீஇராமானுஜ வைபவம், தசாவதாரம், அரிச்சந்திரா போன்ற தெய்வீகக் கதைகளையே நடத்திக் காட்டி, மக்களைக் கவர்ந்து நாடகக் கலை உலகில் பெரும் பெயரும் செல்வமும் பெற்றார்.ஸ்ரீஆண்டாள் கோயிலுக்கு கன்னையா அவர்கள் வழங்கியவை:- யானை,ஒட்டகம்,பசு, காளை, 305தோலா எடையுள்ள தங்கக் குடம் (“கன்னையா தங்கக்குடம்” என்றே கூறுவர்), தங்க டம்ளர்கள், தங்கத்தால் செய்த எச்சில் பணிக்கம், தங்கத்தால் செய்த மாம்பிஞ்சு மாலை, ரங்கூன் காசுமாலை, பச்சைக்கல் நடுவிலும், சுற்றிலும் வைரக் கற்களும் பதித்த பதக்கம் (“கன்னையா வைரப் பதக்கம்” என்பர்), தங்க சரிகைப் பாவாடைகள், தண்டியல், ஜரிகைப் பண்ணாங்கம், தசாவதாரத் தோரணம், அரங்கநாதர் சயனக் கோலத்துடன் கூடிய பெரிய திரை ஆகியன. இன்னும் பல கைங்கர்யங்களை நம் கோதை ஆண்டாளுக்குச் செய்துள்ளார்.

கிழக்கு நோக்கியுள்ள ஶ்ரீஆண்டாள் கோயிலின் முதல் மண்டபமாகிய கொட்டகை போல கல்லாலே கட்டப்பட்ட பந்தல் அமைப்புடைய பந்தல் மண்டபம், மற்றும் திருமலை நாயக்கரின் அத்தையும், இரகுவீரமுத்து விஜயரங்க சொக்கப்ப நாயக்கரின் மகளுமான சிங்கம்மாள் கட்டிய குறடு உள்ளது. இவர் பெயரால் சிங்கம்மாள்புரம் தெரு  (சிங்கமாடத்தெரு) என்னும் அக்கிரகாரமும் இவ்வூரில் உள்ளது.
“சிங்கம்மாள்  குறடு” என்னும் மண்டபம் தாண்டி, பங்குனி உத்திர திருக்கல்யாண மண்டபம்  உள்ளது. இம்மண்டபத்தின் உட்புற உச்சியில் இராமாயணக்கதை முழுவதும் வண்ண ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளது. இம்மண்டபத்தில் ஆண்டு தோறும் பங்குனிமாதம், ஶ்ரீஆண்டாள் திருக்கல்யாண மகோத்ஸவம் நடைபெறுகிறது.-இக்கோவிலிலூள்ள தூண்கள் மிகவும் பெரியவை. ஒவ்வொரு தூணும் சிற்பக் கலை வல்லுநர்கள் கண்டுவியக்கும் மகிமை வாய்ந்த சிறந்த வேலைப்பாடுகள் உடையது.வேணுகோபாலன், இராமன், இலட்சுமணன், கார்த்தவீரியார்ச்சுனன், கர்ணன், ஜலந்தரன், மன்மதன், அயோமுகி என்னும் அரக்கி, ரிஷிகள், ரிஷிபத்னிகள், காண்டீபன், குகப்பெருமான், சந்நியாசி வேடத்தில் அர்ச்சுனன், ஊர்த்துவமுக வீரபத்ரர், பிக்ஷாண்டார் கோலத்தில் பரமசிவன், ருத்ரகணிகை, விஸ்வகர்மா, நடனமாது, சாத்தகி, மோகனஅவதாரம், அன்னத்தின் மீது இரதிதேவி, நடன நிலையில் வீணையேந்திய கலைமகள், இவ்வளவு அழகு ததும்பும் அபாரமான வேலைப்பாடுகள் உடைய சிற்பங்கள் பல துவஜஸ்தம்ப மண்டபத்தில் உள்ளன. இதில் கலைவாணி சிலை அற்புதமானது. கலைவாணியின் கால்பெருவிரலிலிருந்து மூக்கு வரை ஒரே சமநிலையும், மேற்படி சிலையில் நான்கு வளைவுகளும் கொடுத்திருப்பது கலைக்கு பெருமை தரக்கூடிய அற்புதம் ஆகும். சில தூண்களில் வியாக்ரபாத விநாயகி, சங்கநிதி, பத்மநிதி ஆகியவற்றையும்காணலாம். சூர்ப்பனகையின் மூக்கு மற்றும் முலைகளை வாளால் அறுக்கும் இலட்சுமணன் சிலை மற்றகோயில்களில் காணக்கிடைக்காத நாயக்கர் காலத்து கலைப்படைப்பாகும்.

மார்கழி நீராட்ட உற்ஸவம்-இவ்வுற்சவம் தொடங்குவதற்கு முந்தைய நாள் இரவு ஶ்ரீஆண்டாள் சர்வாலங்கார பூஷிதையாக வடபெருங்கோயிலுக்கு எழுந்தருளி வடபத்ரசாயியிடம் மார்கழி நோன்பு நோற்க, அனுமதிகேட்கும் “பிரியாவிடை” நடைபெறுகிறது. ஶ்ரீஆண்டாள், வடபத்ரசயனர் பெரியபெருமாள் சந்நிதியின் மஹாமண்டபத்திற்கு எழுந்தருளி, ஏகாந்த திருமஞ்சனம் கண்டருள்வார். பின்னர் குடை,சாமரங்களுடன், புஷ்பமாரி பொழிய ஸ்வஸ்திவாசனம் கோஷிக்க கைத்தல சேவையாக மூலஸ்தானம் எழுந்தருளுகிறாள். ஆண்டாளுக்கும்,வடபெருங்கோயிலுடையானுக்கும் திருவாராதனம், வேதவிண்ணப்பம் நடைபெறும். பின்னர் திருக்கதவம் தாளிடப்படும். அப்போது ஶ்ரீஆண்டாள் மார்கழி நீராட்டத்திற்கு எம்பெருமானிடம் அனுமதி கேட்பதாக ஐதீகம். பின்னர் திருக்கதவம் நீக்க, அரையருக்கு அருளப்பாடு சாதிக்க, அவரும் திருப்பாவை முப்பது பாசுரங்களையும் அமுததொழுக, தாளத்தோடு சேவித்து, முதல்பாட்டுக்கு வியாக்யானம் செய்வார். பின்னர் ஸ்தலத்தார் உற்சவ வைபவம் மற்றும் பஞ்சாங்கம் வாசிப்பர். ஆண்டாள் அங்கிருந்து புறப்பட்டு, பெரியாழ்வார் மங்களாசாசனம் முடிந்து நாச்சியார் திருமாளிகையை அடைவார்-நீராடல் உற்ஸவத்தின் ஒவ்வொரு நாளும் தங்கப் பல்லக்கில் வட பெருங்கோவிலின் ராஜகோபுர வாசலில் ஸ்ரீ ஆண்டாள் எழுந்தருள, நாள்பாட்டு’ வைபவம் நடைபெறும். அதாவது, ஒவ்வொரு நாளும் அந்த நாளுக்கான திருப்பாவைப் பாடல் பாடப்படுவதே இந்த நிகழ்ச்சி.)மறுநாள் காலையில், ஶ்ரீஆண்டாள் தங்கப்பல்லக்கிலே எழுந்தருளி பெரியகோபுர வாசலை அடைகிறாள். அன்று நாட்பாட்டு ‘மாலே மணிவண்ணா’ பாசுரத்தை ஸ்ரீ ஆண்டாளே சொல்வதாக ஐதீகம். இந்தப் பாடல், “ஆலின் இலை யாய் அருளேலோ எம்பாவாய்” என்று முடிவுறும்.
சமஸ்கிருதத்தில் ‘வட விருட்சம்’ என்றால் ஆலமரம் என்றும், ‘பத்ரம்’ என்றால் இலை என்றும் பொருள் ஆகும். ‘வடபத்ரசாயி’ என்பதையே, ‘ஆலின் இலையாய்’ என்று அழகுத் தமிழில் ஆண்டாள் கூறுகிறாள். அரையர் நாள் பாசுரம் சேவித்த பிறகு, அங்கிருந்து புறப்பட்டு பல விடையாத்து மண்டபங்களை முடித்துக்கொண்டு திருமுக்குளக்கரையில் உள்ள எண்ணெய் காப்பு மண்டபம் எழுந்தருளுகிறாள். இவ்வாறு பல்லக்கிலே எழுந்தருளும் போது ஶ்ரீஆண்டாள் தினமும் ஒரு திருக்காலத்துடன் விளங்குவார்.

ஸ்ரீ ஆண்டாள் நீராடல் உற்சவத்தின்
2ஆம் நாள் கள்ளழகர் திருக்கோலம்.
3ஆம் நாள் கண்ணன் கோலம்,
4ஆம் நாள் முத்தங்கி சேவை,
5ஆம் நாள் பெரியபெரு மாள் கோலம்,
6ஆம் நாள் மஹாராணியாக அமர்ந்த கோலம்,
 7ஆம் நாள் தங்க கவச சேவை என தரிசனம் தருவது சிறப்பு.

திருமுக்குளம் கரையில் உள்ள நீராட்ட மண்டபத் தில், மாலை 3 மணிக்கு ஆண்டாளுக்கு ‘எண்ணெய் காப்பு’ வைபவம் நடை பெறும்.
அழகான தோற்றத்துடன் சௌரிக் கொண்டையுடனும், சர்வ ஆபரணங்களுடனும், ஶ்ரீஆண்டாள் அமர்ந்தபடி இருக்க அர்ச்சகர்களும், பரிசாரகர்களும் இணைந்து அனைத்து உபசாரங்களுடன் எண்ணெய் காப்பு சாற்றுதல் என்னும் வைபவத்தை தொடங்குகிறார்கள். முதலில் ஶ்ரீஆண்டாளின் திருவடிகளை விளக்கி, கைகளை விளக்கி அர்க்யம், பாத்யம் முதலியவைகளை சமர்ப்பிக்கிறார்கள். பின்பு ஶ்ரீஆண்டாளின் தலையலங்காரமாக உள்ள சூரிய-சந்திரன், நெற்றிச்சரம், துராய் இழுப்புச்சங்கிலி, தங்க மல்லிகை மொட்டு, தங்க கமலம், ரத்ன ராக்கொடி,  ரத்னஜடை, முதலான தலையணிகளையும், காசு மாலை, பவளமாலை, வைரப்பதக்க மாலை முதலிய ஆபரணங்களையும் படிகளைந்து, பின் ஶ்ரீகோதையின் சௌரிக் கொண்டையை அவிழ்த்துக் கோதி விட்டு சிடுக்கு நீக்கி, சீப்பினால் தலைவாரி, மூலிகைகளால் காய்ச்சப்பட்ட தைலத்தை சாற்றுகிறார்கள். இவ்வாறு மூன்று முறை செய்யப்படுகிறது. ஒரு மஹாராணிக்கு செய்யும் சகல உபசாரங்களும் நம்  அன்னை ஶ்ரீகோதை ஆண்டாளுக்கு செய்கிறார்கள். (பக்தர்களுக்கு தைலம் ப்ரசாதமாக வழங்கப்படுகிறது.) பின்னர் பத்தி உலாத்தல் முடிந்து திருமஞ்சன குறட்டிற்கு எழுந்தருளுகிறாள். அங்கு நவகலசத்தினால், வேதகோஷங்கள், முழங்க, வாத்ய கோஷங்களுடன் ஶ்ரீஆண்டாளுக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. பிரபல நாடகக் கலைஞரான கன்னையா நாயுடு அவர்களால் சமர்பிக்கப்பட்ட தங்கக் குடம் இதில் பிரதான கலசமாகும். பின்னர் தினம் ஒரு வாகனத்தில் சௌரிக் கொண்டையுடன் திருவீதி வலம் வந்து வடபெருங்கோயிலை அடைகிறாள். அங்கு நாள் பாட்டு நடைபெறும்.
அந்த உற்சவத்தின் ஆறு மற்றும் எட்டாம் நாட்களில் நடக்கும் சவுரித் திருமஞ்சனம் விசேஷமானது.
அப்போது ஒரு நாள், மூக்குத்தி சேவை நடைபெறும். ஸ்ரீ ஆண்டாளின் மூக்கருகே, தங்க மூக்குத்தியைக் கொண்டு சென்றதும், அது தானாகவே ஆண்டாளின் மூக்குடன் ஒட்டிக் கொள்கிறது.தை மாதப்பிறப்பன்று, ஸ்வாமி மணவாளமாமுனிகளுக்காக எண்ணெய் காப்பு உற்சவத்தின் நிறைவுத்திருநாள் கொண்டாடப்படுகிறது. எண்ணெய்க்காப்பு, நீராட்டம் முடிந்து பல்லக்கிலே வடபெருங் கோயிலுக்கு ஶ்ரீஆண்டாள் எழுந்தருளி நாள்பாட்டு முடிந்தவுடன்
கவிச்சக்ரவர்த்தி கம்பர் சார்பாக “கம்பன் கொச்சு” என்னும் கம்பன் குஞ்சலம் சாற்றப்படுகிறது. பின்பு மணவாளமாமுனிகள் சந்நிதியை அடைகிறாள். மாமுனிகள் எழுந்தருளி வந்து ஶ்ரீஆண்டாளுக்கு மங்களாசாசனம் செய்கிறார்.

திருப்பாவை முப்பதுக்கும் வங்கக்கடல் கடைந்த மாதவன் தான் லக்ஷ்யபூதன். கண்ணபிரானை லக்ஷ்ய பூதனாகக்கொள்ளுமவர்கள் தேவர்களின் பிரார்த்தனையினால் கடலைக் கடைந்து அமுதம் கொடுத்து, “பலேக்ரஹிர் ஹி கமலாலாபேந ஸர்வச் ச்ரம:” என்று பட்டரருளிச்செய்த படியே பிராட்டியையும் பெற்று மகிழ்ந்த எம்பெருமானைப் பொருளாகக் கொள்க. திருப்பாவை ஜீயரென்ற திருநாமத்திற்கேற்ப எம்பெருமானாரையே திருப்பாவைக்கு லக்ஷ்ய பூதராகக் கொள்ளுமவர்கள் இங்ஙனே பொருள் காண்க:− “நிர்மத்த்ய ஸ்ருதி ஸாகராத்” என்றும் “நாமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்” என்றும் கடலாகச் சொல்லப்பட்ட ஸம்ஸ்க்ருத த்ராவிட உபய வேதங்களையும் திருநாவின் மந்த்ரத்தால் கடைந்து “வஸஸ்ஸுதாம் வஸுமநஸோ பௌம: பிபந்த்வந்வஹம்” என்று ஸ்வாமி தாமே அருளிச்செய்தபடி நிலத்தேவர்கள் நித்யாநுபவம் பண்ண அமுதமளித்தவர் ஸ்வாமி.-மாதவனை) மா- மஹத்தான; தவனை- தவத்தையுடையவரை; மஹாதவத்தையுடைய எம்பெருமானாரை என கொள்க.-இங்கு இப்பரிசுரைப்பார்) இங்ஙனே முப்பது பாசுரங்களுக்கும் நாம் காட்டின நிர்வாஹமும் அணி புதுவை பைங்கமலத் தண்டெரியல் பட்டர்பிரான் கோதை திருவுள்ளமுகந்ததேயென்று, கொண்டு உபந்யாஸ கோஷ்டிகளிலெடுத்துரைக்குமவர்கள்.-செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்) “பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகி வந்து” [
பெரியாழ். திரு.5-2-8]  என்ற பெரியாழ்வாரின் அருளிச் செயலின்படியும், “ஸா மூர்த்திர் முரமர்த நஸ்ய ஜயதி” என்ற யதிராச ஸப்ததி [ஸ்லோ:63] யின்படியும், ஸாக்ஷாத் ஶ்ரீமந்நாராயண அவதாரமான ஸ்வாமி எம்பெருமானாருடைய திருவருளை எங்கும் பெற்று “அம்ருதஸாகராந்தர் நிமக்ந ஸர்வாவயவாஸ் ஸுகமாஸீரந்” என்று தலைக்கட்டாயாயிற்று.-‘பகவதா ஆத்மீயம் ஸ்ரீமத் பாதாரவிந்தயுகளம் ஸிரஸி க்ருதம் த்யாத்வா அம்ருதஸாகராந்தர் நிமக்ந ஸர்வாவயவஸ் ஸூகமாஸீத‘ (எம்பெருமானால் தன்னுடைய பரமபோக்யமான திருவடித்தாமரைகளை தன் தலையில் வைக்கப்பட்டதாக த்யாநம் பண்ணி ஆனந்தமாகிற அமுதக்கடலுக்குள்ளே மூழ்கிய எல்லா அவயங்களையும் உடையவானைக் கொண்டு ஸுகமாக இருக்கக்கடவன்) என்று ஸ்ரீ வைகுண்ட கத்யத்தில் எம்பெருமானார் ஸ்வாமி ஶ்ரீராமாநுஜர், ஶ்ரீமந்நாராயணன் விஷயத்தில் அருளிச்செய்தார்.

தேடிக்கிடையாத் திரவியத்தைத் தெவிட்டாத அமுதைத் திருமாலைப்
பாடிப் பரவும் பசுங்கிளியைப் பவ வெம்பிணி தீர்த்திடும் மருந்தை
ஆடிப்பூரத் தவதரித்த அகில நிகமாகம விளக்கைச்
சூடிக்கொடுத்த சுடர் கொடியைத் தொழுது வினைக்கு விடை கொடுப்போம்!”
–வரகவி அப்புவைய்யங்கார் என்கிற ஶ்ரீநரசிம்மாச்சாரியார்]

ஸ்ரீ விஷ்ணுசித்த குலநந்தந கல்பவல்லீம்
ஸ்ரீரங்கராஜ ஹரிசந்தன யோக த்ருச்யாம் |
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம்
கோதாம் அநந்யசரண: சரணம் ப்ரபத்யே |
|” [“கோதாஸ்துதி”  _ஸ்லோ.1) வேதாந்த தேசிகர் அருளியது.](ஶ்ரீவிஷ்ணுசித்தர் என்னும் வேயர் குலக்கொடியாம், நந்தவனத்தில் வளர்ந்த அழகு மிக்க கற்பகத் தருவினைச் சுற்றிப்படர்கின்ற பெண்கொடியாகவும், திருவரங்கநாதனான அரிச்சந்தன மரத்தைத் தழுவும் அழகு மிக்க பொறுமையுடன் கூடிய பூமிப்பிராட்டியாகவும், இனிமையான மற்றுமொரு ஸ்ரீதேவியாகவும் விளங்கும் கோதையை அல்லாமல், மற்றொரு தெய்வம் சரணடையாது அவளையே அடைந்தேன்.)

மின்னனைய நுண்ணிடையார் விரிகுழல் மேல் நுழைந்த வண்டு
இன்னிசைக்கும் வில்லிபுத்தூர்nஇனிதமர்ந்தாய் உன்னைக் கண்டார்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவளைப் பெற்ற வயிறுடையாள்
என்னும் வார்த்தை எய்து வித்த இருடீ கேசா முலையுணாயே
-பெரியாழ்வார் திருமொழி: 2-2-6]

மென்னடை யன்னம் பரந்து விளையாடும் வில்லிப் புத்தூருறை வான்றன்
பொன்னடி காண்பதோ ராசையினாலென் பொருகயற் கண்ணினை துஞ்சா
இன்னடி சிலோடி பாலமு தூட்டி எடுத்தவென் கோலக் கிளியை
உன்னோடு தோழமை கொள்வன் குயிலே உலகளந் தான்வரக் கூவாய்
!–நாச்சியார் திருமொழி:5-5]

வேயர்புகழ் வில்லிபுத்தூர் ராடிப்பூரம் மேன்மேலும் மிகவிளங்க விட்டுசித்தன்
தூயதிரு மகளாய் வந்த ரங்கனார்க்குத் தூழாய்மாலை முடிசூடித் கொடுத்த மாதே!
நேயமுடன் திருப்பாவை பாட்டாறந்தும் நீயுரைத்த தையொரு திங்கட்பாமாலை
ஆயபுகழ் நூற்றுநாற்பத்து மூன்றும் அன்புடனே யடியேனுக்குகருள் செய்நீயே
–ஶ்ரீதேசிகன் பிரபந்தம்

இன்றோ திருவாடிப்பூர மெமக்காக
அன்றோவிங் காண்டா ளவதரித்தாள் – குன்றாத
வாழ்வாக வைகுந்த வான்போகந் தன்னையிகழ்ந்து
ஆழ்வார் திருமகளாராய்
. (22 )

பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த
திருவாடிப் பூரத்தின் சீர்மை – ஒருநாளைக்
குண்டோமனமே யுணர்ந்துபார் ஆண்டாளுக்
குண்டாகி லொப்பிதற்கு முண்டு
(23)

அஞ்சு குடிக்கொரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தஞ்செயலை விஞ்சிநிற்கும் தன்மையளாய் – பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஆண்டாளைப் பக்தியுடன் நாளும்
வழுத்தாய் மனமே மகிழ்ந்து
(24)

ஸ்வோச்சிஷ்ட மாலிகா பந்த கந்த பந்துர ஜிஷ்ணவே|
விஷ்ணு சித்த தனுஜாயை  கோதாயை நித்ய மங்களம்||

மாத்ருசா (அ)கிஞ்சன த்ராண பத்த கங்கண பாணயே|
விஷ்ணு சித்த தனுஜாயை  கோதாயை நித்ய மங்களம்||

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே|
நந்த நந்தன ஸூ ந்த்ர்யை கோதாயை நித்ய மங்களம்||

நல்ல திருமல்லிநாடியார்க்கு மங்களம்!
நால்திசையும் போற்றும் எங்கள் நாச்சியார்க்கு மங்களம்!
மல்லிகை தோள் மன்னனாரை மணம் புரிந்தார்க்கு மங்களம்!
மாலை சூடிக்கொடுத்தாள் மலர்தாள்களுக்கு மங்களமே!!

நல்ல திருப்பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே !
நானூற்று அறுபத்தொன்றும் நமக்குரைத்தான் வாழியே !
சொல்லரிய லானிதனிற் சோதிவந்தான் வாழியே !
தொடை சூடிக்கொடுத்தாளைத் தொழுமப்பன் வாழியே !
செல்வநம்பி தனைப்போலச் சிறப்புற்றான் வாழியே !
சென்று கிழியறுத்து மால் தெய்வமென்றான் வாழியே !
வில்லிபுத்தூர் நகரத்தை விளங்கவைத்தான் வாழியே !
வேதியர்கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே!.

திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே!
திருப்பாவை முப்பதூஉம் செப்பினாள்  வாழியே!
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே!
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!
ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!
உயரரங்கர்க் கேகண்ணி யுகந்தளித்தாள் வாழியே!
மருவாரும் திருமல்லி வளநாடு வாழியே!
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே!

சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி!
திருவரையில் சாத்திய செந்துவராடை வாழி!
ஏராரும் செய்ய வடிவு எப்பொழுதும் வாழி!
இலங்கிய முந்நூல் வாழி! இணைத் தோள்கள் வாழி!
சோராத துய்ய செய்ய முகச் சோதி வாழி!
தூ முறுவல் வாழி! துணை மலர்க் கண்கள் வாழி!
ஈராறு திரு நாமம் அணிந்த எழில் வாழி!
இனி திருப் போடு எழில் ஞான முத்தரை வாழியே!

அறு சமயச் செடி யதனை யடி யறுத்தான் வாழியே!
அடர்ந்து வரும் குதிட்டிகளை யறத் துரந்தான் வாழியே!
செறு கலியை சிறிதும் அறத் தீர்த்து விட்டான் வாழியே!
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே!
மறையதனில் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தான் வாழியே!
மாறனுரை செய்த தமிழ் மறை வளர்ந்தான் வாழியே!
அறம் மிகு நற் பெறும் பூதூர் அவதரித்தான் வாழியே!
அழகாரும் எதிராசர் அடி இணைகள் வாழியே!

ஶ்ரீமதே ரம்யஜாமாத்ரு முனீந்த்ராய மஹாத்மநே|
ஶ்ரீரங்க வாஸிநே பூயாத் நித்யஶ்ரீ நித்ய மங்களம்||

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திவ்ய தேசப் பிராட்டிமார் பதின்மரும் -ஸ்ரீ தென் புதுவைப் பிராட்டியும்–ஸ்ரீ உ. வே .வித்வான் குமாண்டூர் இளைய வில்லி பாஷ்யம் ரங்கராஜன் ஸ்வாமிகள்–

September 19, 2026

6 ஆம் பாசுரம் திருஆய்ப்பாடி திவ்ய தேசப் பிராட்டி
7 ஆம் பாசுரம் வடமதுரை திவ்ய தேசப் பிராட்டி
8 ஆம் பாசுரம் துவாரகை திவ்ய தேசப் பிராட்டி
9 ஆம் பாசுரம் திருப் பாற் கடல் திவ்ய தேசப் பிராட்டி
10 ஆம் பாசுரம் திருக் கண்ணபுர திவ்ய தேசப் பிராட்டி
11 ஆம் பாசுரம் திருவரங்கம் ஸ்ரீரங்க நாயகி
12 ஆம் பாசுரம் திருவேங்கடம் பத்மாவதித் தாயார்
13 ஆம் பாசுரம் திருக் குடந்தை கோமள வல்லித் தாயார்
14 ஆம் பாசுரம் பரமபதம் பெரிய பிராட்டியார்
15 ஆம் பாசுரம் திருமாலிருஞ்சோலை மலை சுந்தர வல்லித் தாயார்

ஸ்ரீஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரைத் திரு வாய்ப்பாடியாகக் கொண்டு பாசுரமருளிச் செய்துள்ளாள் என்பது பொதுவான கருத்து-ஆதலின் முதலில் துயிலுணர்த்தப் பெறும் பிராட்டி திருவாய்ப்பாடி
திவ்ய தேசத்துப் பிராட்டியாக எண்ணத் தட்டில்லை -ஆயர்பாடிக்கு அணி விளக்காகக் கண்ணன் பிறந்த நாலிரு திங்களில் செய்தனவாகப் பேசப்பெறும் பால லீலைகளில் பேய்முலை நஞ்சுண்டதும் திருக் காலால் சகடம் சாடியதும் திருவாய்ப் பாடியில் தானே அவை தாமே இப் பாட்டில் சுட்டப் பெறு கின்றன-

புள்ளினங்கள் புள்ள ரையன் புகழ் குழறின” என்றார் -திருத் தகப்பனார் பெரியாழ்வார். அவரது பெண் பிள்ளையான இவளும் அவர் வாக்கை ஒட்டி “ புள்ளும் சிலம்பின ” என்கிறார்.-துளசி வநத்தில் தன்னைக் கண்டெடுத்துத் தனக்குப் பாலும் அமுதுமாகக் க்ருஷ்ண பக்தியைக் கொடுத்து வளர்த்த
பட்டர் பிரானைத் திருத் தகப்பனாராக மட்டும் பார்க்காமல் ஆசாரியராகவும் வரித்தவளாயிற்றே –

ஸ்ரீ கோதா பிராட்டியார் விஷயமான ஸ்ரீ கோத உபமாஷ்டக ஸ்லோஹம் நீராட்டம் உத்சவம் போது திரு மஞ்சன கட்டியத்தில் சேவிப்பார்கள் ஸ்ரீ பெரியாழ்வார் வம்சம் ஸ்ரீ வேத பிரான் பட்டர் அருளிச் செய்தது என்பர்-

சயாமாம் த்விஜாதி ப ஸூ தாம் ஸ்ரவணாபி ராமம்
மஞ்ஜூ ஸ்வ நாம் மத நமீச்வரஜம் பஜந்தீம்
கோதே குரோஸ் த்ரிஜகதாம் குணசாலி நீம் த்வாம்
லீலா ஸூ கீம் க்ருததிய சமுதாஹரந்தி
–ஸ்ரீ கோதா பிராட்டியும் கிளியும்–பசுமை நிறம் கொண்டதாய் இருக்கும்-முட்டை -குஞ்சு இரு பிறவி -அரசன் கருடன் பெண் -கிளி -விஷ்ணு சித்தன் திருக்குமாரி
அணி மழலைக் கிளி மொழி-மன்மதன் வாஹனம் -உம்பியையும் உம்மையும் தொழுதேன்-சாஷாத் மன்மதன் கண்ணனையே பாடி உகப்பித்த நீர் ஸூகாச்சார்யாருக்கு ஒப்பு

முதலில் முட்டை வடிவில் தோன்றி பின்னர் குஞ்சு வடிவெடுப்பதால் பறவைகள் வட மொழியில் த்விஜம் என்று வழங்கப்படுகின்றன .-‘த்விஜாதிப’ என்று புள்ளரையரான கருடன்.-‘த்விஜாதிப ஸுதாம்’ என்று கருடனின் பெண்ணாக மதிக்கப் பெறும் பைங்கிளி

பிள்ளாய்” என்றது பூஜ்ய வாச ஸப்தம். ஸ்ரீ வான மா மலை ஜீயர் ஸ்வாமி அருளிச் செய்த ஸ்வாபதேசத்தில் ‘அஸ்மத் குருப்யோ நம:’ என்று காட்டுகிறார். ஆதலின் அவரை முன்னம்
துயிலுணர்த்தி அவர் துணை யோடு திருவாய்ப் பாடிப் பிரோட்டியைத் துயிலுணர்த்துகிறார்கள்
கண்ணன் போல் பொங்கும் பரிவுடைய யசோதைப் பிராட்டியாரைப் போல் பாவித்துத் தாய்ப் பாசுரமிட்ட அவரைப் புருஷகாரமாகப் பற்றித் திருவாய்ப்பாடிப் பிராட்டியை அன்பு கூர்ந்து ‘பிள்ளாய்!’ என்று
அழைத்துத் துயிலுணர்த்துகிறாள். ஸ்ரீவிட்டுசித்தர் பக்ஷிராஜன் திருவம்சமாகவே திருவவதரித்தார் அன்றோ –இந்தப் புள்ளரயனைப் புருஷகாரமாகப் பற்றிப் ‘புள்ளரையன் கோயில்… பிள்ளாய்’ என்று
கொண்டாடுகிறார்கள் –

‘புள்ளரையன் கோ ‘ என்று ‘தாஸஸ் ஸ ஸகா வஹநம்’ –ஆக பக்ஷி ராஜன் பணிவிடையை ஏற்கும் எம் பெருமானைச் சொல்லி, கோ இல்’ என்று அவ்வெம் பெருமானின் இன் துணையும் நற்றுணையுமான பிராட்டியைச் சொல்கிறது. (மனைவி, கிழத்தி, இல்லாள், இல் என்று அனையவை மருதத் தலை மகட்காகும்-முல்லை நிலத் தலைவிக்கும் ஆகும் திவாகர நிகண்டு – 307, 3088)’கோ இல் இல்’ என்று பிராட்டியின் இல்லமாகத் திகழும் திருவாய்ப்பாடி என்றுமாம்.

இந்த புள்ளரையன் கோயிலில் ஒலிக்கும் சங்கம் எம் பெருமானது இடக் கையில் ஏறி வீற்றிருக்கும் வலம்புரிச் சங்கத்தின்றும் மாறுபட்டது. எங்கனம் என்னில் ‘ஆநிரை மீளக் குறித்த சங்கம்’
(பெரியா .திரு. 3-4-3) என்கிற படியே அந்தச் சங்கமோ கானகம் மேவி மேய்ந்து திரிந்து மாலை வேளையான அளவில் ஆநிரைகள் வீடு திரும்ப வேண்டி ஒலிக்கும்.-மற்ளற நாள் ருக்மிணிப் பிராட்டி வேண்டு கோளை ஏற்று அவளை மணம் முடிக்க வந்திருப்பதைக் குறிக்க பூங்கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கொலி’யும் (நாச்சியார்.திரு 9-9)-அன்று.-பின்னர் பாரதப்போர் துவங்கும் முன் பாண்டவர்க்கு அபயம் அளித்து உற்சாகம் ஊட்டவும் துர்யோதனாதியர் தொடை நடுங்கி வெலவெலத்துப் போம்படி ஜய கோஷம் செய்து முழங்கும் சங்கம்(ஸ்ரீ கீதை 1 -15)போன்றதன்று.
இஃது இந்த திவ்ய தம்பதிகளின் அடியார்கள் முழங்குவது; அர்ச்சையில் அவன் ரக்ஷணத்தில் யீடுபாடுடைய கைங்கர்ய பரர்களை அத்தாணிச் சேவகத்திற்கு அழைக்கும் சங்கம்.ஆதலின் அமைதியான விடியற் காலை வேளையில் பேரரவமாக முழங்கும். இந்த அடையாளம் கூறி ‘மலரணை பள்ளி கொள்ளும் அன்னமாம் (திருப்பள்ளி -.2) ஆயர் பாடி பிராட்டியைத் துயிலுணர்த்துகிறாள். அதனைச் செவி மடுத்தும் பிராட்டி அசை வின்றி யிருக்க மற்றும் ஒரு செய்தி கூறி எழுப்ப முற்படுகிறாள்.

வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்து’ இராம அவதாரத்தில் காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து பட்ட துன்பம் தீரவும், பூதேவி வேண்டின படி பூபாரம் போக்கப் பாரதப் போர் மூளும் நாள் வரை அமைதியாகத் துயில ஆய்ப்பாடி வந்து தோன்ற, இங்கும் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளும் பருவமடையாத
நிலை ல் நம்பி மூத்த பிரான் பாது காப்பில் ‘ஓர்க் கீழ்க் கன்றாய்’ (நாச்.திரு 14-1) வளர்ந்து வருமளவில்,
அன்று ஓருநாள் அன்னையின் உருவில் நச்சுப் பாலூட்ட வந்த பூதனையை மாய்த்த போது ‘ஸர்வ கந்த’ னாவனுடைய திருமேனி தீண்டப் பெறும் பேறு பெற்றதால் பூதனையின் உயிரற்ற உடலும் மணம் வீசியதாம். அத்தகைய க்ருக்ஷ்ண ஸம்ஸ்லேஷம் பெற்று மணம் பெற சற்றும் ஆசை யில்லாமல்
உறங்கிக் கிடக்கலாகுமோ?

மற்றொரு நாள் யசோதை பிராட்டி யமுனைக் கரையில் நீராடச் செல்லும் முன்பு காவலுக்கு வைத்த வண்டிச் சக்கரத்தில் கள்ளத் தனமாக உருமாறி வந்த ஓர் அசுரனைத் தாய்ப்பால் வேண்டி அழுவது போல் கால்களை உதைத்து அவ்வசுரனை வதம் செய்த அவன் திருக்கால்களை உன் தாமரைக் கைகள் கொண்டு ஒத்தடம் கொடுக்க வேண்டாமோ என்கிறார்கள்.
இங்கனம் ஓர் அசுரப் பெண்ணாலும் ஆணாலும் ஏற்படக் கூடிய ஆபத்தின் நின்றும் அவனைக் காக்க அவன் உறையும் இடத்தை எல்லோரும் அறியச் செய்யும் மங்கள தீப ரேகையான உன்னை ஒளிக்காட்டாதே மறைத்தாயோ.

அவனே இன்று அர்ச்ச பரா தீனனாக அர்ச்சையில் எழுந்தருளி யிருக்கையாலே அவனுக்கு என் வருகிறதோ என்று வயிறு பிடித்திருக்கும் எங்களுடன் பல்லாண்டு பாட ‘அகலகில்லேன் இறையும்’ (திருவாய் 6-10-10) என்றிருக்கும் மஹிஷியான நீயே தலைமை ஏற்று எம்மை வழி நடத்தத் துயிலெழுந்து வர வேண்டும் என்று வேண்டுகிறாள்.நாம் துயிலுணர வேண்டுமோ! தங்களின் ஸத்தோ ஹேதுவான அவன் ரக்ஷணத்திற் கென்றே சேஷத்வ பாரதந்த்ரயத்தில் தலை சிறந்த வைகுந்தத்தமரரும் முநிவரும் ஊரில் பசு நிரைக் கொட்டில்களில் எல்லாம் படுகாடு கிடக்கிறார்களே என்று பிராட்டி திருவுள்ளமாக , பிள்ளாய்! அவர்களும் துயிலெழுந்தனர் காண்.-அவர்கள் பாடும் பல்லாண்டு ஓலியானது விடியற் காலை நேரத்தில் யோகிகள் எல்லோரும் துயிலுணர்ந்தவாறே ஹரி: ஹரி: என்று ஏழு முறை உரக்க அனுஸந்திக்கும் பேரரவம் போல் எங்கள் காதுகளில் உட்புகுந்து உள்ளம் குளிரச் செய்து நாங்கள் எழுந்து வந்துள்ளோம்.
‘ஆயினும் அஞ்ஜையான பின் யான் என் செய்வது?’ என்று அப்பெண்பிள்ளை திருவுள்ளமாக , எப்படி மேய்ச்சலுக்குப் போய் ஊர் திரும்பும் பசு ஊர் நெருங்கியது கண்டு தன் கன்றினை நினைந்து கனைக்க உடன் வரும் குருட்டு பசுவும் கனைக்குமோ அது போல் நீயும் பகவத் விஷயத்தில் புதியவளாகையாலே சப்தாதி விஷயங்களில் தமோ குணம் மிக்கவராய் இருத்தலன்றி ஆத்ம விஷயத்திலும் ஈஸ்வர விஷயத்திலும் ஸங்கோச மில்லாத ஜ்ஞாந வைபவத்தை உடைய துஞ்சா முநிவரைப் பின் பற்றி அவன் திரு நாமங்களைப் பாடி பறை கொள்ள எழுந்திராய் என்று வேண்டுகிறார்கள் –

ஏழாம் பாட்டில் கோவர்த்தனமும் விருந்தாவநமும் உள்ளடங்கிய திருவடமதுரை திவ்ய தேசப் பிராட்டியைத் துயிலுணர்த்துகிறாள்-ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமத்தில் ‘ஹரி:’ என்கிற திரு நாமத்தை -656வது (ஸ்ரீ பட்டர் வ்யோக்யானத்தில்) திரு நாம மாகக் காணலாம்-கோவர்த்தன மலை மேல் எம் பெருமான் ‘ஹரி’ என்கிற திரு நாமத்துடன் சேவை சாதிக்கிறானாம் -கீழ்ப் பாசுரத்தில் முநி வர்களும் யோகிகளும் ஹரி: ஹரி: என்று அனுஸந்தித்த அளவில் திருவாய்ப்பாடிக்கு அருகில் உள்ள திவ்ய தேசமான கோவர்த்தநத்தில் கோயில் கொண்டுள்ள கோவர்த்தனேசன் நெஞ்சில் நிழலாட, அவனது பிராட்டியைத் துயிலெழுப்ப, அவளும் துயிலுணர்ந்து இவர்கள் திளரில் சேர,அடுத்து அருகே உள்ள பிரதாந திவ்ய தேசமான திருவடமதுரை பிராட்டியைத் துயிலெழுப்ப முற்படுகின்றனர்-

ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமத்தில் 654 ஆவது திரு நாமமான ‘கேசவ’திரு நாம வ்யோக்யானத்தில் வடமதுரையில் ‘கேசவன்‘ என்கிற திருப் பெயருடன் எம்பெருமான் சேவை சாதிக்கிறான் என்று காட்டப்படுகிறது. ஆதலின் ஏழாம் பாட்டில் ‘நாயகப் பெண் பிள்ளாய்’ என்றும், ‘தேசமுடையாய் ‘ என்றும் இந்த திவ்ய தேசப் பிராட்டியைத் துயிலுணர்த்துவதாகக் கருதலாம்.-ஆயினும் பிராட்டியை ‘நாயகப் பெண் பிள்ளை’யாகக் கொண்டாடும் முன் ‘பேய்ப் பெண்ணே ‘ என்று கூறுவதென்? எனில் -பேய்த்தனம் என்பது அந்யதா ஞாநத்தைக் குறிப்பது என்பது அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவுள்ளம். பகவத் ஸம்ஸ்லேஷம் பாகவத ஸம்ஸ்லேஷம் வரை என்றறிந்து ஆறி யிருப்பதே என்ன அறிவு? என்று கோபித்துப் பேசுகிற வார்த்தையே ‘பேய்ப்பெண்ணே ‘ ஆகும். அந்யதா ஞானம் என்பது வேறாக அறிவது ஆகும். அறிவின்மை அல்லது பேதமையைக் காட்டும்-மேலையார் செய்யாதன செய்யோம் என்று ஸங்கல்பத்திருக்கச் செய்தே-‘நெடுமோ லழகு தன்னில் நீள் குணத்தி லீடுபடுமா நிலை யுடை பத்தர்க்கு’ (திருவாய் நூற் 80) அடிமையாக வாழ்தல் இன்பம் என்று ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணமாக ஆழ்வார் அருளிச் செய்த வைதீக ஸித்தாந்தத்தை ‘ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும்’ (குறள் 834) அதனைத் தான் காற்கடை கொள்ளும் பேதையே என்றவாறு.-அறிவில் குறையுடைய ஆனைச் சாத்தன் பறவைகளும் ‘ கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்’ என்கிறபடியே க்ருஷ்ண க்ருஷ்ண என்று கம்சனுக்கு பயந்து சொல்ல முடியாமல் தமக்குள் கெஞ்சலாக கீச்சு கீச்சு என்று கலந்து பேசக் கேட்டும் கண்ணுறங்கும் பேதையே என்றுமாம்-மற்றும் பேதைப்பெண்ணே என்று கூறினால் பாடலின் சீர் தட்டுமாதலின் சுருக்கிப் பேய்ப் பெண்ணே ! என்கிறாள் எனலாம்-க்ருஷ்ண ஸம்ச்லேஷத்தைப் பெற தங்களின் பாரிப்பு அறியாமல் படுத்துக் கிடக்கிறாளே என்ற வேதனையை வெளியிட்டவாறே
‘பேய்ப்பெண்ணே ‘ என்கிறார்கள்.-தாழவோ பழித்தோ சொன்னார்களன்று. அங்கனம் தாழப் பழித்துச் சொன்னோமே யாகிலும் தன் பால் அன்பு மிக்கவர் தன்ளைத் தாழப் பழித்துச் சொன்ன வன்று அது பொறுக்காமல் முகம் ோட்டும் அவன் போல் அவனது பிராட்டியும் வந்து முகம் காட்டக் கூடும் என்று எண்ணி உரைத்தார்கள் போலும்.திருவிருத்தம் 62 ஆம் பாசுர வியாக்யானத்தில் ஸ்ரீ எம்பார்
அருளிச் செய்த வார்த்தையின் உட் பொருள் காண்க
-முகில் வண்ணனே என்று ஒருமையில் கூறாமல் முகில் வண்ணரே என்று பன்மையில் கூறினால் உள்ளுவார் உள்ளிற் றெல்லாம் உடன் இருந்து அறியுமவன் அன்பரானவர் அவ்வாறு கூறியதன் உள் நோக்கம் அறிந்து மேலோட்டமாக மதிப்புடன் கூறுவதாக எண்ணி என்ளை நிந்திப்பதென்? என்று மல்லு கட்டிக் கொண்டு வந்து முகம் காட்டுவானாம். தன் ஸ்வரூபத்தாலே தான் நாடும் பேற்றைப் பெற விருக்க யன்றிக்கே தன் ஸ்வரூபத்தை யழித்தாகிலும் அதனைப் பெற வார்த்தை யாடுகிறார்கள்.

திருவாய்ப் பாடியினின்றும் விருந்தா வநத்திற்குக் குடி பெயர்ந்த போதும் ஆயர் பெண்டிர் கண்ணன் மிகவும் விரும்பித் திருடியாவது உண்ணும் அன்று கடைந்த வெண்ணைய் எடுக்க ,முப்போதும் தயிர் கடையத் தவறுவதில்லை-அதே போல் அடியார்கள் க்லேசம் நீக்கவும் தன்னைத் தம் கண்கள் ஆரளவும் காண வேண்டும் என்ற அவர்கள் விடாய் தீர்க்கவும் தவறாத வண்ணம் கண்ணுக்குத் தோற்றாதே ரக்ஷிக்கும் ஸர்வேஸ்வரன் நாராயணன்- ஆஸ்ரித வாத்ஸல்ய மூர்த்தியாய் ஹரி கேசவ திரு நாமத்தோடே இங்கு வட மதுரை திவ்ய தேசத்தில் அர்ச்சா மூர்த்தியாகக் கோவில் கொண்டிருக்கின்றான். அவனது திவ்ய மஹிஷியாய் எம் காரியத்தைத் தலைக் கட்டித் தரத் துணையாக வர வேண்டும் என்று தேசமுடையாய் என்று போற்றிப் பிரார்த்திக்கிறார்கள்-தேசமுடையாய்’ – ஒளி பொருந்தியவளே
‘வக்ஷஸ் :பீடிம் மது விஜயிநோ பூஷயந்தீம் ஸ்வ காந்த்யா ’(மதுவெனும் அசுரளை வெற்றி கொண்ட எம் பெருமானுடைய திருமார்பாகிய பீடத்தை அழகுறச் செய்பவள்) என்று ஸ்வாமி வேதாந்தவாசிரியரின் ஸ்ரீஸ்துதி.

‘ஓஜஸ் தேஜோ த்யுதிதர:” (ஸஹ. நாமம் . 276)
ஓஜ;
பலம்
தேஜஸ் – தேசு பிறளர வெல்லும் பராபிபவந ஸாமர்த்யம்.
த்யுதி – ப்ரகாசம், ஒளி (ஔஜ்வல்யம்)
இவற்றை எல்லாம் உடைய அவனுக்கு ஒளிக் கற்றையாய்த் திகழ்பவளே என்று குண கீர்த்தநம் செய்கிறார்கள்.
அன்றிக்கே ‘ப்ரகாசாத்மா ‘ – (ஸஹ. நாம -.277) ஒளி மணி வண்ணன்
‘தேஜோ வ்ருஷ:’ – (ஸஹ. நாம -. 763) தேஜஸ்ஸை வர்ஷிப்பவன்-என்கிறபடியே அவளைக் கண் குளிரக் காண எங்களுக்குப் பூரண ஒளி விளக்காக இருப்பவளே என்று கொண்டாடுகிறார்கள்.-

ஆழ்வானும் ‘யஸ்யோ வீக்ஷ்ய முகம் ததிங்கித பராதீநோ விதத்தே அகிலம்’ (ஸ்ரீஸ்தவம் 1) என்று அருளிச் செய்தபடி, ‘ஆதிதேவ:’(ஸஹ.நா 491) எனும் திரு நாமமுடைய எம்பெருமான் தேவர்களைப் படைத்து அவர்களை வெவ்வேறு பணிகளைச் செய்ய நியமித்து அவர்களை அடக்கி ஆளும் தேஜஸ்ஸை உடையவன். அந்த ஆதி தேவன் உன் அன்பின் வழி நிற்பவனாதலின் உன் நியமநத்தைச் சிரமேற் கொண்டு தன் அடியார் வேண்டுவனவற்றைத் தலைக் கட்டித் தர வல்லவன் ஆதலின் அவனிலும் மிக்க தேஜஸ்ஸை உடைய நீ எழுந்தருளி நாம் வேண்டுவன வற்றைப் பெற்றுத் தர வேண்டும் என்று விண்ணப்பிக்கிறார்கள்.
இவ்வளவும் இவர்கள் சொல்வதைக் கேட்டிருந்தும் எழுந்து வராமையால் ‘தேசமுடையாய் ’ என்று தான் அரசியாகத் திகழும் வடமதுரை நாட்டின் செல்வ வளம் இவளைக் கண்ணுறங்கச் செய்வதாக எண்ணி அதனால் வரும் குற்றம் சுட்டிக் காட்டுகிறார்கள் ஆகவுமாம்.
இரு புனலும் வாய்ந்த மலையும் வரு புனலும்
வல்லரணும் நாட்டிற் குறுப்பு
‘ (குறள் 737)–என்கிறபடியே யமுநை ஆறும் கோவர்த்தந மலையும் அரணும்
அவயவமாய் அமைந்துள்ள வடமதுரை நாட்டின் அரசியாகத் திகழ்பவளே !

‘ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு’ (குறள் 740)
-என்றும் சொல்கிறபடியே உன்றன் குடிமக்களான நாங்கள் உன் பால் அன்போடு நாயகப் பெண் பிள்ளாய் என்று கொண்டாடுவதைக் கேட்டு நீயும் எங்களிடத்து அருள் கூர்ந்து எழுந்து வந்து வாயிற் கதவைத்த் திறக்க வேண்டும். அவ்வாறு செய்யாது போனால் நாட்டின் கண் யாவும் நிறைந்திருத்தலால்-ஏதும் பயனில்லை எனும் குற்றம் வாராமல் பார்த்தருள் என்கிறார்கள்.

‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானும் கெடும்’. (குறள் 448)-
என்பதனால் முதலில் பேய்ப்பெண்ணே என்று உரைத்ததோடு இப்போது வஞ்சப் புகழ்ச்சியாக தேசமுடையாய் என்றிடித் துரைப்பது என் பொருட்டு எனின்
ஏதங் கொண்டு ஊதியம் போக விடல்’-(குறள் 831)-என்கிற வள்ளுவன் வாக்கின்படி தனக்குக் கேடு பயப்பன வற்றைக் கைக் கொண்டு ஆக்கம் பயப்பனவற்றைக் கை விடுதலாகிற பேதைமை எனும் ‘அளற்றின் கண் (குறள் 835) வீழாமல் காப்பதற்காம்.
‘அஞ்சுவ தஞ்சாமை பேதைமை யஞ்சுவ
தஞ்ச லறிவார் தொழில்’ (குறள் 428)
-என்றதளை நோக்கி இவர்கள் கூற்றின் உண்மையை உணர்ந்த திரு வட மதுரை திவ்ய தேசப் பிராட்டி துயிலெழுகின்றாள்.

எட்டாம் பாட்டில் துயிலெழுப்பப்படும் பெண் பிள்ளை திருத்துவாரகை திவ்ய தேசத்துப் பிராட்டி எவ்வாறு ஒப்பாகிறாள் என்று பார்க்க வேண்டும்.-கண்ண பிரான் ஓரிரவில் வடமதுரையில் தோன்றி, அற்றை இரவிலேயே கோகுலத்தில் ஒளிந்து வளர்ந்து, பின்னர் விருந்தா வநத்தில் குடி புகுந்து, கம்ச வதத்தின் பின் வட மதுரையில் மீண்டும் வாழ்ந்து வருகையில், கம்ச வதத்திற்குப் பழி வாங்கும் பொருட்டு படை யெடுத்து வந்த ஐரா ஸந்தன் பதினேழு முறை தோற்றோடுகிறான்.-மீண்டும் பதினெட்டாம் முறை காலயவனன் துணை கொண்டு ஜரா ஸந்தன் வருவதை அறிந்து வடமதுரையை விட்டு குடி மக்களுடன் கடலரசன் அனுமதி பெற்று மேலைக் கடலருகே துவாரகா பட்டினத்தை நிறுவிக் குடியேறினான்.
இங்கு தான் ருக்மணி ஸத்யபாமா ஆகியோரைக் கடி மணம் கொள்கிறான். மற்றும் எண்மரையும், நரகாசுர வதத்திற்குப் பின் பதினாறாயிரவரையும் மணம் புரிந்து கொள்கிறான்.-ஆதலின் கண்ணன் பிறப்பு வளர்ப்பின் வரிசையில் அடுத்த திவ்ய தேசமாக துவாரகை இடம் பெறுகிறது
. இந்த திவ்ய தேசப் பிராட்டியான ருக்மிணி தேவியை கோது கலமுடைய பாவாய்‘என்று ஸ்ரீ ஆண்டாள்அழைக்கிறாள்-அன்று ருக்மணிப் பிராட்டியின் சகோதரன் அவளை சிசுபாலனுக்கு திருமணம செய்து தர ஏற்பாடு செய்வதை அறிந்த ருக்மிணிப் பிராட்டி கண்ணளை மணக்கவே தான் விரும்புவதை ஓர் அந்தணரிடம் கண்ணனுக்குக் கடிதம் அனுப்புகிறாள்.கண்ணன் அதைப் பெற்றதுமே பதில் கடிதம் எழுதி அனுப்பவும் தாமதிக்காமல் மிக்க குதூ கலத்துடன் தேரேறிச் சென்று
திண்ணார்ந்திருந்த சிசுபாலன் தேசழிந்து அண்ணாந்திருக்கவே ஆங்கவளைக் கைப் பிடித்து’ (நாச். திரு. 11-9) துவாரகைக்கு அழைத்து வந்து மணம் புரிந்து கொண்டான்.இங்கனம் ருக்மிணிப் பிராட்டி என்ற பெயர் செவிப்பட்டாலே கண்ணன் கொள்ளும் குதூகலத்தை அளவிட முடியாதாதலின் கோது கலமுடைய பாவாய் என்கிறாள்.-

கோது கலமுடைய ….. …..தேவாதி தேவன்’
‘தேவ: ஸ்ரீ கர்ப்ப:’ (ஸஹ. நா 376, 377)-
ஜீவர்களை மாயை என்னும் கயிற்றால் கட்டி விளையாடுபவர். அகலகில்லேன் என்றிருக்கும் பிராட்டியைத் தன் இன்புறும் விளையாட்டிலும் பிரியாமலிருந்து
கொண்டு கர்ப்பத்தைப் போல் காப்பவன்.
மன் பல்லுயிர்களும் அவனது பேரருளுக்கு இலக்காக விருப்பம் இன்றிக்கே மதி மயங்கிக் கேட்டினைச் சூழ்த்துக் கொண்டிருப்பது கண்டு பிராட்டி முகத்தைப்
பார்த்துப் புன் முறுவல் செய்ய அதுவே கோல் விழுக்காட்டாலே அவனுக்கு லீலா ரசமாயிற்றாம்.

‘ஸ்ரத்தயோ தேவோ தேவத்வமஸ்னுதே ‘ என்கிறபடியே சிறு தேவனான எம்பெருமான் ‘ஸ்ரத்தா ‘ சப்த வாஸ்யையான உன்னுடனான தொடர்பினாலேயே தேவாதி தேவனாய் யிருக்கும் தன்மையை அடைகிறான். ஆதலின் நீ எங்களுடன் சேர்ந்தாலன்றோ எங்கள் மநோ ரதம் கார்ய கரமாவது என்று கூறி அழைக்கிறாள்.-ஆனால் இப் பெண் பிள்ளையோ எனில், நாம் செல்ல வேண்டுமோ? ‘ஸ்வம்’ (சொத்து) இருக்கும் இடம் தேடி ஸ்வாமி வாரானோ என்று ஆராய்ந்து கொண்டிருப்பதை ஸ்ரீ ஆண்டாள்
உணர்ந்து’நாம் சென்று சேவித்தால் ….ஆ ஆ வென்று அருளும்’ என்று கூறுகிறாள்.

எங்கனே எனில் இவர்கள் நம்மை நாடி வரும்வரை வாளா இருந்து விட்டோமே ; ‘ஸர்வேஸ்வர:’ (ஸஹ. நா 97) -தன்னைப் பற்றியவரைத் தானே சென்றடைபவன் என்று ஸ்ரீ பீஷ்மர் சூட்டிய திரு நாமம் பொய்த்து விடுமோ என்று அவன் ஆராய்ந்து ‘ஐயகோ! தப்பச் செய்தோம்’ என்று விரைந்தருள் புரிவான்-அன்றிக்கே தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் என் செய்வான்? எனில் , ‘ஓதி நாமம் குளித்து உச்சி தன்னால் நாளும் ஒளி மா மலர்ப் பாதம் பணிவோம்’ என்றாரிறே பரகால நாயகியும் (திருமொழி 9-3-9). ‘அன்பராய்ப் போதும்’ – ஆஆ வென்று அருளும்.-அவன் என்ன தான் செய்தாலும் அவன் பக்தியால் அடையப் படுபவன் என்ற வார்த்தைகளை மாற்ற முடியாதன்றோ?

உபாயம் எனக் ருதி அவன் திருவடிகளில் வணங்கினால் அவன் மிறுக்கு பண்ணித் தராவிடினும் நாம் பண்ணும் பக்தி அவனைத் தரும்படி பண்ணி வைக்கும். ‘மம ப்ரிய:’ என்று அவன் நம்மிடம் பக்தி கொண்டு நம்மை அடைய வேண்டும் என்றிருப்பதனை விடுத்து, இனி நாம் பக்தராய் அவன் இருப்பிடம் நோக்கிப் போவோம். பேறு நமக்குக் கிட்ட வேண்டுமென்றால் அதற்குரிய வழிகளில் ஈடுபடுவதும் நம் செயலாக இருக்க வேண்டும் அன்றோ? அவனை ஒரே இடத்தில் நிலையாக இருக்கச் செய்ய வேண்டுமோ? அவன் நம்மை நோக்கி எதிரே வரும்படி நாம் அவனை நோக்கிச் செல்வோம். நாம் செய்யும் செயல்கள் நமக்கு இயல்பானுவை என்றிருந்தா லன்றோ அவன் பொறுத்திருப்பான். அவனை அடையப் பக்தியை உபாயமாகப் பற்றினால் அவனுக்கு நிலை கொள்ளா தன்றோ? ஆ! ஆ! தப்பச் செய்தோம் என்று உடனே அருள் செய்ய முற்படுவான் என்கிறாள்.
அன்று உன் பரிகாரமான எம் பெரிய தகப்பனார் (நம்மாழ்வார்) தாய்ப் பேச்சாக ‘முறையோ’ (திரு விருத் 62) என்று கேட்ட கேள்விக்கு உரு வெளிப்பாடாய் குளிர நோக்கப் பெற்றார் அன்றோ? அங்கனாகில் மஹிஷியே நேரில் வந்தால் கேட்க வேண்டுமோ?

ஒன்பதாம் பாட்டில் திருப்பாற் கடல் திவ்ய தேச பிராட்டியான கடல் மகள் நாச்சியாரைத் துயிலெழுப்புவதாகக் கருதலாம்-வட மேற்கே அரபிக் கடலோரம் உள்ள வண் துவராபதி போல்
தென் கிழக்கே வங்கக் கடலோரம் தக்ஷிண துவராபதியாக இராஜமன்னார்குடி எனும் செண்பக ஆரண்ய ஷேத்ரம்-அமைந்துள்ளது. இங்குள்ள ஸன்னிதி மாட வீதிகள் கோபால ஸமுத்திரம் என்றே வழங்கப்படுகிறது. மற்றும் இங்கு திருப் பாற் கடல் வீதி என்று ஒரு வீதியும் திருப் பாற் கடல் எனும் புஷ்கரணியும் உள்ளன . ஆதலின் துவாரகையை அடுத்துத் திருப் பாற் கடல் திவ்ய தேசப் பிராட்டியை யன்றோ துயிலெழுப்ப வேண்டும்.

எம்பெருமான் ஆமையாகி ஆழ் கடல் கடைந்த அன்று கடலரசனிடமிருந்து தோன்றிய கடல் மகள் நாச்சியார்மற்றெல்லாரும் கை தொழ எம்பெருமான் திரு மார்பைச் சென்று சேர்ந்தாள். கடலரசன் மனைவிமார்களான ஸப்த நதிகளும் பிராட்டியின் தாயார் முறையாயினர். அது போன்று ஸ்ரீ
ஆண்டாளும் அழகிய மணவாளப் பெருமாளான அரங்கன் அணி மார்பைச் சேர்ந்ததால் அவளைப் பெற்ற பெரியாழ்வாரும் கடலரசன் போல் எம்பெருமானுக்கு மாமனார் ஆகிறார். ஆதலால் தன் மணவாளரின் மாமனார் கடலரசனைத் தனக்கு ‘மாமான்’ என்ற உறவு முறையிலும் அவனது மனவியரை ‘மாமீர்’ என்ற முறையிலும் கடல் மகள் நாய்ச்சியாரை ‘மாமன் மகள் ‘ என்றும் விளிக்கின்றாள்.

இந்தப் பாற் கடலில் “இருளிரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி இனத் துத்தி அணிபணமாயிரங்களார்ந்த அரவரசப் பெருஞ் சோதி“யே (பெருமாள் திரு. 1-1) தூ மணி மாடத்துச் சுற்றும் விளக்கேற்றி வைத்தது போல் ப்ரகாசமாக உள்ளது. ஆங்குறையும் பிராட்டி அங்கு ‘வானவர்கள் அந்தூபம் தரா நிற்க ‘ (திருவிருத்தம் -21) அதில் நின்றும் கமழும் நறுமண மயக்கில் கண்ணுறங்கிக் கிடக்கிறாள்.

‘மாதவ’ (ஸஹ. நா 169, 741) என்ற பதத்தில் ‘மா’ -மௌனத்தைக் குறிக்கும்.-‘த’ த்யாநத்தைக் குறிக்கும்.-‘வ’ யோகத்தைக் குறிக்கும்.-ஆக ஊமை போல் வாய் மூடி மௌனமாயிருந்தும், செவிடு போல் த்யான நிலையில் நின்றும், அநந்தல் (தூக்கம்) போல் ‘ஸ்ரீ கர’ (ஸஹ.நா 618) என்கிற திரு நாமத்தை யொட்டி அவன் போல் பாற் கடல் யோக நித்திரை கொண்டுள்ளாள் போலும்.

ஸ்ரீவைகுந்தத்தின் நின்று திருமதுரைக்கு வரும் வழியில் கண்ணன் திருப் பாற் கடலில் வ்யூஹ வாஸுதேவக் கோலத்துடன் சேவை சாதிக்க , கண்குளிர காணப் பெற்று அங்கே அவனுக்கு ‘ஸுமுக :’
(ஸஹ.நா . 457) (மலர்ந்த திரு முக முடையவன்), ‘மநோ ஹர: ஸஹ.நா . 462) (மனதைக் கவர்பவன்), ‘ஸ்வாபந :’ (ஸஹ.நா . 466) வசீகரித்துத் தூங்க வைப்பவன்) ஆகிய திரு நாமங்கள் வழங்கப்படுகையால் அவனால் ஏமப் பெருந்துயிலில் ஆழ்த்தப் பட்டாளா ? என்று ஆச்சரியமாக இருக்கிறது என்கிறாள்
-இவளைத் துயிலெழுப்புவது எவ்வாறு என்று அன்னைமார் ஆராய்ந்து கொண்டிருக்கக் கண்டு எந்த அம்மான் பொடியால் கண்ணுறங்கப் பெற்றாளோ அது கொண்டே உறக்கம் கலைந்து எங்களுடன் சேர வேண்டும் ஆதலின் மாமீர் அவனது கல்யாண குணங்களைப் பேசும் ஸ்ரீஸஹஸ்ர நாமமும் நவின்று எழுப்புமாறு பிரார்த்திக்கிறார்கள்.

பத்தாம் பாட்டில் திருக் கண்ண புர நாயகியை ‘அம்மனாய்’ என்றும் ‘அருங்கலமே ‘ என்றும் விளித்துத் துயிலெழுப்புகிறாள். திருப்பாற் கடல் நாச்சியாரைத் துயிலுணர்த்திய பின் திருப் பரமபத நாயகியைத்
துயிலெழுப்பாமல் திருக் கண்ணபுர நாயகியைத் துயிலெழுப்புவான் என் என்றால் திருப் பாற் கடல் நாச்சியார் துயிலெழுந்ததும் ஸ்ரீ ஆண்டாளிடம் செய்தி ஒன்று தெரிவிக்கிறாள். அதாவது வங்க மலி தடங் கடலின் அருகில் மேற்கில் ‘பூலோ வைகுண்டம்’ என்றழைக்கப்படும் க்ருஷ்ண ஆரண்ய ஷேத்ரம் உள்ளது. இங்குள்ள திருக் கோயிலில் கருவறையில் மூல மூர்த்தி நீலமேகப் பெருமாளாக சேவை சாதிக்கிறார். அவரது வலது பக்கம் தனிக்கோயில் நாச்சியாராக மூல மூர்த்தி க்ருஷ்ண புர நாயகி எழுந்தருளி யிருக்கிறார்.-இப்பெருமானே திருப்பாற் கடல் சமுத்திர ராஜன் வேண்டு கோளுக்கிணங்க அவனது புதல்வன் சந்திரனுக்கு தக்ஷ முநிவனின் சாபத்தால் ஏற்பட்ட க்ஷய ரோகத்தைப் போக்கி யருளினான். இப் பெருமானின் பிராட்டியையும் நாம் உடன் அழைத்துச் சென்றால் நல்லது என்று யோசளை கூற, க்ருஷ்ண புர நாயகி பால் ஸ்ரீ ஆண்டாளின் கவனம் திரும்புகிறது.-அந்த பிராட்டியோ பரமபதத்தேறிச் செய்யும் கைங்கர்ய அனுபவத்தை இங்கேயே கண்ணபுரத்தம்மானால் கைக் கொண்டு, நோன்பாவது கண்ணபுரத்தம்மானை உபாயமாக அறிவது என்ற எண்ணம் கொண்டு உறங்கிக் கிடக்கிறாள். அவளிடம் ‘அம்மனாய்’ நீ எங்கள் குழுவிற்குத் தலைமை ஏற்று அழகு படுத்த வேண்டியவள் அன்றோ என்று அழைக்கிறாள்.

அவளோ ஆண்டாளின் இந்த செவிக்கினிய செஞ் சொல்லிலீடுபட்டும் நம்மை இவர்களின் அடிமையாகப் பார்க்காமல் நம்மைத் தங்கள் தலைவியாக ஏற்க விரும்பும் எண்ணத்திற்கு இளசந்தோமாவோம் என்று எழுந்திருந்து வாசல் கதவைத் திறக்காமலும் மறுமாற்றம் ஏதும் கூறாமலுமிருந்தாள்-இது நிற்க இந்த திவ்ய தேசத்தின் கிழக்கில் உள்ள கடலில் கருடன் அமர்ந்து தவஞ்செய்த கருட பர்வதம் ஆழப் புதைந்துளளது. அந்த கருட பர்வதத்திற்குக் காட்சி தர வருடந் தோறும் மாசி மாதம் பௌர்ணமி யன்று கடற் கரையிலிருக்கும் திருமலை ராயன் பட்டிைத்திற்கு உற்சவ
மூர்த்தி சவுரிப் பெருமான் கருட வாகனத்தில் சவுரி முடியுடன் எழுந்தருள்கிறான். மற்றும் தலம், வநம், நதி, கடல், நகரம்,தீர்த்தம், விமாநம், ஆகிய ஸப்த புண்ணிய ஷேத்ரமாகவும் விளங்குகிறது.

தவிர ஸ்ரீரங்கம், திருவேங்கடம், ஸ்ரீமுஷ்ணம், வான மா மலை , சாள க்ராமம், புஷ்கரம், பத்ரிகாஸ்ரமம், நைமி சாரண்யம் ஆகிய எட்டு ஸ்தலங்களிலும் திருமந்திரத்தின் எட்டெழுத்துக்களின் ஒவ்வொரு
எழுத்தின் வடிவத்தில் எம்பெருமான் எழுந்ததருளி இருக்க எட்டெழுத்துக்களின் முழு வடிவமாகத் திருக் கண்ணபுரத்தில் சேவை சாதிக்கிறான்-
ஆதலின் இத்தகைய நாற்றத்துழாய் முடி நாராயணனான
புண்ணியனின் மஹிஷியான உன்னுடன் சேர்ந்து அவனைப் போற்ற எங்களுக்கும் கைங்கர்ய ஸித்தி உண்டாக எழுந்தருள வேண்டும்.

கீழ்ப் பத்தாம் பாட்டில் எம் பெருமானின் கீழை வீடான திருக் கண்ணபுரத்து நாயகி இவர்களுடன் சேர கற்றுக் கறவை ‘ என்று தொடங்கும் பதினோராம் பாட்டில் எம் பெருமானின் மேலை வீடான ஸ்ரீரங்க ஷேத்ரத்து நாச்சியாரான ஸ்ரீரங்க நாயகியை ‘பொற் கொடி’ என்றும், ‘புன மயில்’ என்றும், ‘செல்வப் பெண்டாட்டி’ என்றும் விளித்துத் துயிலெழுப்புகிறாள்.
யது குலத்தில் ஸூரர் பிரிவில் வந்த வஸு தேவன் பிள்ளையாக அவதரித்ததால் கண்ணனுக்கு சௌரி என்ற பெயர் ஏற்பட்டது. கீழ்ப் பத்தாம் பாட்டில் அந்த திரு நாமம் அனுசந்திக்ப்பட்டது. அவன் எப்படிப்பட்ட ஸூரன் என்று இப் பாட்டில் அனுஸந்திக்கிறாள்-‘கற்றுக் கறவை கணங்கள் பல கறந்த ….கோவலன்’ என்கிறாள்.

‘மஹாபல:‘ (ஸஹ.நா. 174) என்கிற திரு நாமம் சாற்றி பீஷ்மரும் முன்னமே ஸ்துதித்துக் கொண்டாடினார். அதற்கேற்ப வெண்ணை யுண்ணும் பொருட்டு கோவலனாய்க் கறவை மாடுகள் பலவற்றையும் தானொருவனாகவே கறக்கும் பேராற்றல் படைத்த திண் புயம் கொண்டவன்.

அது மட்டுமோ? ‘செற்றார் திறலழியச் ….. செய்யும் …. கோவலன்’-என்கிறாள்.-அந்த வலிமை படைத்த தோள்களின் துணை கொண்டு ‘மஹாத்ரித்ருத்’ (ஸஹ.நா. 182) என்று பீஷ்மர் கொண்டாடின படி-அன்று மந்திர மலையைத் தம் முதுகில் சுமந்தது போல் மற்றை நாள் தன் சுண்டு விரலால் ஏழு நாள்கள் கோவர்த்தந மலையைக் குடையாகப் பிடித்துச செறுக்கொண்டு கல் மழை பெய்வித்த இந்திரன் திறலழியச் செய்து ‘கோவிந்த’ பட்டாபிஷேகம் செய்யப் பெற்ற கோவலன் – மற்றும், ‘செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும் ….கோவலன்’ என்கிறாள்.

கர தூஷணர்களுடன் போருக்கு வந்த பதினாயிரம் அரக்கரையும் இலக்குவன் துணை யின்றித் தானொருவனே போரிட்டு வென்று சீதாப் பிராட்டியின் அணைப்பால் போரில் ஏற்பட்ட இரணத்துக்கு ஒத்தடம் கொடுக்கப் பெற்றவன். பின் பிறக்க வுள்ள இளங் கிளியான பரகால நாயகியும் ‘பார்த்தன் செல்வத் தேரேறு சாரதியாய் எதிர்ந்தார் சேனை செருக்களத்துத் திறலழியச் செற்றோன்’ (திரு மொழி 2-10-8) என்றும், “மன்னெல்லாம் முன்னவியச் சென்று வென்றிச் செருக்களத்துத் திறலழியச்
செற்ற வேந்தன்’
(திருமொழி 6-6-8) என்றும் பாட்டினால் காட்டப் பெற இருப்பவன். இவர்களும் மேலே ‘சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி’ என்று பல்லாண்டு பாட விருக்கிறார்கள்.-அத்தகைய தோள்களைக் கொழுகொம்பாகக் கொண்டு தழுவிப் படரும் ‘லக்ஷ்மி கல்ப லதா ‘ என்றும், ‘லக்ஷ்மி கல்பவல்லீ” என்றும் ஸ்ரீரங்க ராஜ ஸ்தவத்திலும் (பூர்வ 10) ஸ்ரீகுணரத்ந கோசத்திலும் (3)
பேசப்படும் ‘பொற் கொடியே என்று விளிக்கிறாள்.

எனினும் தாடகை வாலி ஆகியோரை அழித்ததையும், கர தூஷணரோடு போரிடுகையில் பின்னால் மூன்றடிச் சென்றதுவும் கால யவனனுக்குப் பயந்து புறமுதுகிட்டதையும், குற்றமாகக்
கூறப்படுகிறதே எனில் இவ்வாறான சில செயல்கள் எதிரிகளுடைய தீ மனம் கெடுக்கவும் அவர்களுக்கு மருவித் தொழும் மனம் கொடுக்கவுமாம் என்று சொல்ல வேண்டுமே அன்றிக் குற்றமாகாது.-அன்றிக்கே வாலிப பருவத்தில் செய்தவையே அன்றி மாடு மேய்க்கும் கோவலனாய்க் குற்றமொன்றில்லாதவன். ‘சரப:’ என்ற 357 ஆவது திரு நாமத்தின்படி வரம்பு மீறி நடப்பவர்களை அழிப்பவன். ஆதலின் வலியச் சென்று போரிடும் குற்றமும் நிராயுத பாணிகளைத் தாக்கும் குற்றமும் இல்லாதவன்.

தன்னையே நாளும் வணங்கித் தொழுவார்க்குத் தன்னையே ஓக்க அருள்’ (திருவாய் மொழி 11-5-3) செய்யும் ‘பழுதில் தொல் புகழ்ப் பாம்பணைப் பள்ளியோன்’ (திருவாய். 9-3-9) அவன் ஆதலின், அவன்
அடியவனாகிய இந்தக் கோவலனும் குற்றமொன்றில்லாத கோவலன். இவன் பாதுகாப்பில் கண்வளரும் பொற்கொடி இவள்.-‘புற்றரவு புன மயில்‘ –பிராட்டி அடக்க ஒடுக்கமாய் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவது புற்றிலுள்ள அரவை நினைவு படுத்தும். ஆயினும்
எம்பெருமானுக்குள்ள அகடித கடநா சாமர்த்தியம் அதாவது சேராச் சேர்த்திப் பிராட்டிக்கும் இயல்பாக உள்ளதால் பார்க்க பாம்பையும் அதன் எதிரியான மயிலைப் போலவும் சேவை சாதிப்பவளே என்கிறாள்.

புன மயிலே ’ – ‘சிகீ யான அரங்கன் எனும் ஆண் மயில் ‘அநுசிகீ ’ எனும் இப் புன மயிலை மகிழ்விக்கத் தோகை விரித்தாடுகின்றான்.- பெண் மயிலான தன்னை மகிழ்விக்க ஆண் மயிலான அரங்கன் தன் தோகை விரித்தாடச் செய்பவள். அவன் சிங்கம் போலவும் எருது போலவும் தன் நடை யழகைக் காட்டினால் உன்னைப் போல் அமர்ந்த நிலையில் அவன் நடையைக் காட்ட இயலாது-அந்த நடை யழகைக் காட்டியருளப் போதராய் என்று வேண்டுகிறாள்.-‘எதற்கு’ என்று பிராட்டி அறிய விரும்புகிறாள் போலும் என்று எண்ணி ‘முகில் வண்ணன் பேர் பாட’ என்று கூறுகிறாள்.-‘முகில் வண்ணன் பேர்’ என்று வான் திகழும் சோலை முகில் வண்ண மதிலரங்கர் திருவடி மேல் எம் பிரபந்ந ஜந கூடஸ்தர் சொல் மாலையாக நோற்ற ஆயிரம் இன் தமிழ்ப் பா . அதனை இன்னிசை யோடு நாவினால் பாடி அவனும் நாமும் யின்பமெய்த என்கிறாள்.

திருவரங்கச் செல்வனைத் தன் திருக் கண் நோக்கினாலும் புருவ நெறிப்பினாலும் நியமிக்கும் திருவுடையவள். ஆதலின் செல்வப் பெண்டாட்டி’ என்று விளிக்கிறாள்.-அன்றிக்கே செல்வ நாரணனின் இணை பிரியா இன் துணையாகும் செல்வப் பெண்டாட்டி‘ என்று சொல்லவுமாம். திருவான உன்னுடன்
இருப்பதா லன்றோ திருவாளன் இனிதாக திருக் கண்கள் வளர்கின்றான். ஆதலின் நீ யன்றோ எங்கள் காரியத்தைத் தலைக் கட்டித் தர வேண்டும். தனியாகக் கிடந்துறங்கிப் பயனில்லை. ஆதலின் சிற்றாதே பேசாதே கிடக்காமல் எழுந்தருள பிரார்த்திக்கிறாள்.

அன்றிக்கே சுற்றத்துத் தோழிமார்- ஆராமம் சூழ்ந்த அரங்க மாதலின் அவன் பகல் வேட்டையாகச் சென்று தங்கும் தோட்டங்கள் மற்றை திவ்ய தேசங்கள்.-அவ் விடத்துப் பிராட்டிமார் சுற்றத்துத் தோழிமார் ஆயினர்-அன்றிக்கே திருவாய் மொழி 7-2-8 ன் ஈடு வ்யாக்யானத்தில் ‘என் திரு மகள்’ என்னுமிடத்தில் ஸ்வாமி நம்பிள்ளை அருளிச் செய்துள்ளமை போல் சாஷாத் லக்ஷ்மியோடு ஒக்கச் சொல்லலாம்படியான நம்மாழ்வார் தலைமையிலான தம் தந்தைமார் பதின்மரையும் சொல்லிற்றார் ஆகவுமாம்.’ காவியங் கண்ணி எண்ணில் கடி மா மலர்ப் பாவை ஓப்பாள்‘-(திருவாய் மொழி 3-7-9) என்றன்றோ பரகால நாயகியின் தாய்ப் பாசுரம்.

பன்னிரண்டாம் பாட்டில் திரு வேங்கடவன் திரு மார்பின் நின்றும் இறையும் அகலகில்லேன் என்றுறையும் பத்மாவதித் தாயாரைத் துயிலெழுப்புகிறாள். கீழை மற்றும் மேலை வீட்டில் எழுந்தருளி இருக்கும் பிராட்டிமார் துயிலுணர ஸ்ரீ ஆண்டாளின் கவனம் வடக்கில் திரும்புகிறது. அந்த பக்கத்திலிருந்த திரு வேங்கடவனே கீழை வீட்டில் திருக் கண்ணபுரத் தம்மானாகவும் மற்றும் மேலை வீட்டில் அரங்கத்தரவின் அணையனாகவும் எழுந்ததருளி இருப்பினும், குன்றாத வைகுந்த வாழ்வை இகழ்ந்து பூமகள் நாச்சியார் தாமே கோதை நாச்சியார் எனும் திரு நாமத்துடன் பெரியாழ்வார் பெண் பிள்ளையாக அவதரித்திருப்பதை அறிந்து, அவள் வரவை எதிர்பார்த்து வேங்கட மலையில் கோயில் கொண்டு, ‘முகிலிடை மின்’னே (மூன்றாம். திரு 55) போல் திகழ்கின்ற திரு மார்பில் அகலகில்லேன் இறையும் என்றிருக்கும் பிராட்டியுடன் நிற்கின்றான். ஆங்கனம் அங்குக் கோயில் கொண்டருளும் பத்மாவதித் தாயாரைத் துயிலெழுப்புகிறாள்.

பனித்தலை வீழ நின் வாசற் கடை பற்றி’, ‘குளிரருவி வேங்கடம்’ என்றும், ‘பனி வரையினுச்சி’ என்றும் சொல்லப்படும் ஷேத்ரமாதலின் மார்கழி முன் பனி தலை மீது விழுகிறது-அதாவது பகவத் குண அனுபவம் பெறும் மநோ ரதத்துடன் புறப்பட்டோம். நடுவில் பாகவத குண அனுபவம் பண்ணா நிற்கின்றோம்.-“நற் செல்வன்”-‘ஸர்வயோக விநிஸ்ருத:’ (ஸஹ.நா 104) என்று பீஷ்ம பிதாமகரால் போற்றப்படுகிறவன். எல்லா உபோயங்களாலும் அடையப் படுபவன். ஸாஸ்திரங்களில் சொல்லப்பட்ட தல்லாது தன் புத்தியில் தோற்றியதோர் உபாயத்தால் அடையக் கூடியவன்- ஒழிவில் காலமெல்லோம் நிழல் போல் கண்ணனை விட்டுப் பிரியாமல் மனம் மெய் மொழிகளால் தொண்டாற்றும் ஏந்து பெருஞ் செல்வம் படைத்த நற் செல்வன் இவன்.

போய பிழையும் புகு தருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்’ வண்ணம் ‘வேங்கடத்துறைவார்க்கு நம என்னலாம் கடமை அது சுமந்தார்கட்கே ‘ (திருவாய். 3-3-6) ஆதலின், மற்றைய விஷயங்களில் விரக்தராய்க் கைங்கர்ய ருசி யுடையராய்த் தங்கள் ஸ்வரூபத்தைச் சேர்ந்த கைங்கரியத்தையே செய்பவன்.-கீழ்ப் பாட்டில் மாற்றாதே பால் சொரியும் பசுக் கூட்டங்கள் பல ஆற்றப் படைத்த செல்வன் கருதப்பட்டு அவனுக்கு மாறான நற் செல்வன் இந்தப் பாட்டில் பாராட்டப் பெறுகின்றான்.-‘மனத்துக் கினியான்’ இராமனை நேரில் கண்டும் அவனிடம் மனம் பறி கொடுக்காமல் இருக்கும் வாநர வீரர்கள் நாற் திசையிலும் சென்று சீதாப் பிராட்டியைத் தேடும் பணியில் ஈடுபடுத்தும் காலை திருவேங்கட மலை பக்கம் செல்ல வேண்டாம் என்று சுக்ரீவன் எச்சரிக்கை செய்ததாக்க கம்ப நாட்டாழ்வான் கூறுவான். ( கிஷ் நாடு விட்ட படலம் 29 காண்க ). ஏனெனில், ‘இன்றிப் போக இரு வினையும் கெடுத்து ஒன்றி யாக்கை புகாமை உய்யக் கொள்வான் நின்ற வேங்கடம்’ (திருவாய். 9-3-8) என்ற ஆழ்வார் வாக்கினை அடி யொற்றி அந்தத் திருமலை யப்பனிடம் மனம் பறி கொடுத்து இராம காரியத்தை மறக்கச் செய்யும் மனத்துக் கினியான் அவன்- மேலும், ‘புணராய் நின்ற மரமேழ் அன்றெய்த ஒரு வில் வலவோ'(திருவாய். 6-10-5)என்கிற நம்மாழ்வார் வாக்கினை அடி யொற்றி ஸ்ரீவேங்கடச ஸ்தோத்திரத்தில் ‘அபிரோம குணாகர தாசரதே ‘ என்று ஸ்ரீப்ரதிவாதி பயங்கரம் அண்ணா ஸ்வாமி அனுபவித்தபடி திருமலை யப்பனே ஸ்ரீராமனாக திருவவதரித்தருளினதாக கருதலாம்.
வேடார் திருவேங்கடம் மேய விளக்கு’ (திருவாய் மொழி 4-7-5) என்றும்-‘வேங்கடம் மேவிய வேத நல் விளக்கு’ (திருவாய் மொழி 4-3-8) என்றும்-சொல்லப்படுகிற திருமலையில் ‘மின்னார் முகில் சேர் திருவேங்கடம்” (திரு வாய் மொழி 1-10-6) என்கிறபடியே திருமகள் கேள்வனாகிய தேவனை அனைத்தில்லத்தாரும் அறிந்து கொண்டாட எழுந்தருள என்று வேண்டுகிறாள்.

செழுங் கொழும் பெரும்பனி பொழியும்’ வடக்குத் திருமலையில் நிலையார நின்றான் தன் பிராட்டியைத் துயிலெழுப்பிய பின் தனது பெரிய தகப்பனாரான திருமழிசைப் பிரான் ஏரார் கோலம் திகழத் திருக் குடந்தையில் கிடந்த திருக்கோலம் காண ஏ ஏகினாற் போல் ஸ்ரீ ஆண்டாளும் பதின்மூன்றாம் பாட்டில் திருக் குடநதை அமுதனின் திவ்ய மஹிஷியான கோமள வல்லித் தாயாரைத் துயிலெழுப்ப முற்படுகிறாள். ‘போதரிக் கண்ணினாய்!’ என்றும் ‘பாவாய்!’ என்றும் உள்ள விளிகள் மற்ற திவ்ய தேச மஹிஷிகளுக்கும் பொருந்தி யிருக்க ஈண்டு’குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே …. கள்ளம் தவிர்’ என்பதை நோக்குங் கால் திருக் குடந்தை திவ்ய தேசத்தி பொற்றோமரைக் கயக் கரையிலே கோயில் கொண்டுள்ள கோமள வல்லித் தாயார் விஷயமாகவே இவ்விளிகள் அருளிச் செய்துள்ளதாகவே எண்ண வேண்டியதாகிறது.

கீழ் மூன்று பாட்டுக்களால் கிழக்கு மேற்கு வடக்கு திக்கில் குடி கொண்டுள்ள , முறையே திருக் கண்ணபுரத்தம்மான், திரு அரங்கன் மற்றும் திரு வேங்கடவன் பிராட்டி மாரைத் துயிலெழுப்பி பிறகு தெற்கில் குடி கொண்டுள்ள அழகரின் பிராட்டியைத் துயிலெழுப்பச் செல்லாமல் இடையில் இருக்கும் அமுதனின் பிராட்டியைத் துயிலெழுப்புவதன் காரணம் என்ன என்று ஆராய வேண்டும்.
அன்றொரு நாள் பிருகு முநிவரின் செயலால் வருந்தி தான் நித்ய வாசம் செய்து கொண்டிருந்த மாலவன் திரு மார்பை விட்டுப் பிரிந்த ஸ்ரீதேவித் தாயார் பூவுலகில் ஓரிடத்தில் மறைந்து வாசம்
செய்து கொண்டிருக்கையில் கலியுகத்தில் திருமலையில் எம்பெருமான் ஸ்ரீநிசாசனாக அவதாரம் செய்திருந்தான்.

முன்பு ஸ்ரீராம அவதாரத்தில் , ஏக பத்னி விரதனனான எம்பெருமான் தன்னை மணம் புரியத் தவம் மேற் கொண்ட குசத்துவஜ ரிஷியின் புதல்வியான வேதவல்லியை மற்றொரு அவதாரத்தில் திருமணம் செய்து கொள்வதாக வரமளித் திருந்தான். அதன் படியே அவ்வமயம் ஆகாச ராஜாவின் புதல்வியாக வேதவல்லி பிறந்து பத்மாவதியெனும் திரு நாமத்துடன் வளர்ந்திருக்க அவளைத் திருமணம் புரிந்து கொள்கிறான்-அதைக் கேள்விப்பட்டு ஸ்ரீதேவி மிக்க சீற்றத்துடன் திருமலை நோக்கி வருகிறாள். அவ்வாறு ஸ்ரீதேவி வருவதை அறிந்த ஸ்ரீநிவாசன் திருக் குடந்தை நகர் வந்து ஒரு பாதாள குகையில் குடியேறினார். அங்கு வந்த இந் நிலையில் இராம அவதாரத்தில் எம்பேருமான் விபீடணனுக்கு அளித்த ப்ரணவாக்ருதி விமானத்தின் மற்றொரு பிரிவான வைதீக விமானத்தில் சார்ங்க பாணியாக எம்பெருமான் திருக் குடந்தையில் கோயில் கொள்கிறான்

திவ்ய தம்பதிகளிடத்துத் தான் செய்த அபசாரத்திற்கு வருந்தி ப்ருகு முநிவரும் ஹேம ரிஷி எனும் பெயருடன் இந்த திவ்ய தேசத்திற்கு வந்து பொற்றாமரைக் குளத்தில் அவதரித்திருந்த பிராட்டியை
கோமள வல்லி எனும் திரு நாமமிட்டு சேர்த்து எம்பெருமான் சார்ங்க பாணிக்கு திருமணம் செய்து கொடுக்கிறார். ஆக திருமகள் பொருட்டே அரங்கனும் ஸ்ரீநிவாசனும் குடியேறி இந்த
திவ்ய தேச பிராட்டியான கோமள வல்லி நாச்சியாரைத் துயிலெழுப்புகிறாள்.

போதரிக் ண்ணி’-கொந்தார் பைம் பொழில் சூழ்ந்துள்ளதாய் ‘கொங்கார் சோலை ‘
‘சாலி வேலி தண் வயல் தடங் கிடக்கும்’ பூம் பொழிலும் கொண்டு,’என்றும் பொன்னித் தடங் கொண்ட தாமரை சூழும்தண் பூங் குடந்தை ‘ யாதலால், தவமியற்றும் காலத்தே தூமலர்கள் துவளற ஆய்ந்து கொண்டேத்தினமையால் அந்த பூக்களைப் போன்றே இவள் கண்களும் உரு மாறினமையால் போதரிக் கண்ணி ஆயினள்.
-‘போதரிக் கண்ணினாய்’ –‘போது’ என்று பூவையும், ‘அரி’ என்று மானையும் சொல்லி-பூவையும் மானின் கண்ணையும் ஒத்த கண்ணழகு படைத்தவள்.’கற்றுப் பிணை மலர்க் கண்’ (திரு. விரு 65) என்று ஆழ்வார் அருளிச் செய்தவாறு கன்றான மானின் மலர் போலே இருக்கிற கண் என்றுமாம். கண்ணனுடைய கண்ணிலே அகப்பட்டு அவன் தன் கருமை நிறம் இவளது கண்ணிலே ஏறப் பெற்ற கண்ணழகு படைத்தவள்-

அரி என்று சத்ருவாய் பூவைப் போட்டியில் எதிரிட்டு வெல்லும் கண் என்றுமாம். ‘ காவியும் நீலமும் வேலுங் கயலும் பல பல வென்று…..தூவியம் பேடை யன்னாள் கண்களாய துணை மலரே ‘ (திரு.விரு 67) என்று ஆழ்வார் அருளிச் செய்தவாறே அழகிய இறகு களையுடைய அன்னம் போன்ற நடை யழகை உடைய இந்தப் பிராட்டியின் இணை மலர்க் கண்கள் தம் கடைக்கண் சிவப்பினால் செங்கழுநீர்ப் பூவையும், கருமையால் கரு நெய்தலையும், நோக்குகின்ற கூர்மையால் வேலாயுதத்தையும், ஆகார
சௌந்தர்யத்தினால் கயல்மீன்களையும், இப்படியான தன் மற்றுமுள்ள குணங்களினால் மற்ற பொருட்களையும் அடையப் புக்கவிடம் புக்கு வென்றது.

இதனால் பிராட்டியின் ஜ்ஞாந ஸ்ரீ பேசப்பட்டது. இது கொண்டு ஒப்புயர்வற்ற உன் துணை மலர்க் கண்கள் எனும் ஓரவயவத்தாலே அவனையும் கூட மயக்க வல்லவளாயிற்றே ? அதனை யொழிந்து அந்த மரதக மணித் தடத்தே எம்மையும் சேர்த்துக் கொண்டு குள்ளக் குளிரக் குடைந்து நீராடாமல் படுத்துறங்க வல்லையோ என்கிறார்கள். உன் கை வளை பற்றித் தனித்து அழைத்துச் செல்கிற கள்வனின் கள்ளத்தனம் உன்னிடத்தில் ஏறிட்டதோ என்கிறார்கள்.-இன்று மநோ ரதம் கை கூடினமையால் ‘பள்ளிக் கிடத்தியோ’ எங்கள் மநோ ரதம் கை கூட வேண்டுமே ” கள்ளம் தவிர்”.
ஆராவமுதத்தை எங்களுடனும் சேர்ந்து அனுபவிக்க எண்ணாமல் தனித்து அனுபவிக்கும் கள்ளம் தவிர் என்கிறாள். அவர்கள் வேண்டியவாறே அன்று கலந்து நீராடியதைக் குறிக்கும் வண்ணம் இற்றை அளவும் தைத்திங்கள் பிறந்த அடுத்த நாள் கனுவன்று விஜயவல்லி சீதா பிராட்டியுடன் பொற்றாமரைக் குளத்தில் பிடி வைத்து நீராட்டம் காண்கிறாள்.

கீழ் பதின் மூன்றோம் பாட்டில் துயிலுணர்ந்த கோமள வல்லித் தாயார் கருவறையில் பெருமாளும் பிராட்டியும் எழுந்தருளி யிருக்கும் திவ்ய தேச தரிசநத்தைச் சுட்டிக் காட்டுகிறார்.-ஆங்கே , உத்யோக ஸயநம் புரிந்தவாறே திகழக் கிடந்தான் திருவடி வாரத்தில் ஸப்த நதி களும் பூதேவியும் துவய மந்திரத்தின் முற்கூற்றை (ஸ்ரீமந் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே )அனுஸந்தித்தபடி எழுந்தருளி யிருக்க , துவய மந்திரத்தின் பிற்கூற்றை (ஸ்ரீமதே நாராயணாய நம:) நினைவு படுத்தும் வகையில் திருமுடியின் வலப்பக்கம் பெரிய பிராட்டி உடனமர்ந்து இருவருமான சேர்த்தியில் கைங்கர்ய ரஸம் காணப் பணித்திருக்கும் அந்த திவ்ய தரிசநம் சேவிக்கப் பெற்றார் மாக வைகுந்தத்தே ‘குடந்தை எங்கோவலன் குடியடியோர்’ (திரு. வாய்.-10-9-7) இவர் என்று வைகுந்தத்தமரரும் முநி வரும் வாழ்த்தி வர வேற்று துதி போடுவது ஸ்ரீ ஆண்டாள் நெஞ்சில் நிழலாட பரமபதத்தே எழுந்தருளி இருக்கும் பெரிய பிராட்டியாரை நங்காய் என்று விளித்து அழைக்கிறாள்.

அன்றிக்கே , இங்குள்ளோர் எண்ணிய வுடன் பரம பதம் செல்ல முடியா விட்டாலும் அங்குள்ளோர் அவன் திருவுள்ளக் கருத்தினடியாக இங்கு வந்து பிறக்கலாமே .-வைகுந்தத் தமரரும் முநிவருமே கண்ணனின் பால லீலைகளை நேரில் அனுபவிக்க ஆயர்களாகப் பிறந்ததாகச் சொல்வதுண்டே பெரிய பிராட்டியாரும் அவ் வண்ணம் இங்கோர் ஆயர் சிறுமியராகத் தோன்றி யிருக்க அவளைத் துயிலெழுப்புகிறாள் என்றும் கருதலாம்.-இந் நிலவுலகில் எம்பெருமானின் அர்ச்சாவதாரக் கருத்தைச் சிறப்பிக்க தானும் வேண்டுருக் கொண்டு அவதரிக்கும் திருமகள், புரிந்தனர் – அவனுக்கு ஆயர் சிறுமியர் மேற் கொள்ள விருக்கும் நோன்பில் தானும் உடனிருந்து அவர்கள் காரியத்தைத் தலைக் கட்டிக் கொடுக்கும் பொருட்டு, தன் ஸ்வரூப ரூப குண விபூதிகளில் சற்றும் குறையாமல் பிறந்திருந்தாள் போலும். அவளை இன்னார் என்று கண்டு கொண்ட ஸ்ரீ ஆண்டாள் அவளைத் துயிலெழுப்புகிறாள்

‘த்ரிபாத் விபூதி’யான பரம பதத்தில் கால்பங்கே பூவுலகம். ஆதலின் இவ் வுலகம் பரம பதத்துக்குப் புழக் கடைத் தோட்டம் போலுள்ளது.’புரந்தரன் செய்த நாங்கை ‘ (பெரிய திரு. 3-6-8) என்கிற படியே சுவர்க்த்தில் உண்டான எல்லா நலன்களும் பூமிக்கும் உண்டாக வேண்டும் பொருட்டு காண்டற் கினிய பூக்களை உடைய சோலைகளால் சூழப்பட்டதாய் இந்திரனாலே அமைக்கப்பட்ட திரு நாங்கூரிலே திருக் காவளம் பாடியிலே ஸ்ரீருக்மிணி ஸத்யபாமா ஸமேத ஸ்ரீகோபாலன் அடியார்களுக்குக் கற்ப மரமாக எல்லாருக்கும் ஒரு சேர உதவுதற் பொருட்டு நிலையாக எழுந்தருளி யுள்ளது போல் அன்று திருவாய்ப்பாடி அருகே திருப் பரம பதத்துக்கு ஓப்பாக ஒரு திவ்ய தேசம் விளங்கி யிருக்க அந்த திவ்ய தேசப் பிராட்டியை எழுப்பினார்கள் போலும்.

எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்’-எம் பெரிய தகப்பனார் நம் மாழ்வார் எம் பெருமான் போல் எங்களுக்கு வேட்க்கை எழுப்பிய பின்னர் அவனை நாடிச் செல்லும் எங்கள் போல் ஏதேனும் குற்றம் கண்டு வெறுத்து எங்கள் கைங்கர்யம் கொள்ளாமல் விடக் கூடும். (கறவைகள் பாசுரத்தில் தெரிவித்த
வண்ணம்) அவனிடம் குற்றம் ஆவது என்?-இந்த உலகில் பிறந்திருக்கச் செய்தே குற்றம் செய்யாதவர் எவர்? எனது பரிகரமான இவர் திறத்து உனது ஸ்வாதந்திரியத்தைக் கை விட்டு காரணம் இன்ன தென்று சொல்ல மாட்டாத உன் பேரருள் புரிந்து இவர்கள் குற்றேவல் கொள்ள வேண்டும் என்று அவன்
வெருவாமைக்கு அவனோடே மறுதலைத்துப் பேசி எங்கள் பால் அவனுக்கு மாலேற்ற வல்லை நீயே அன்றோ? ஆதலின் நீ எழுந்திராய் என்கிறார்கள்.

பூவின் மிசை நங்கைக்கும் இவளுக்கும் வேற்றுமை காண்பதரிதால் ‘நங்காய்’ என்று அழைக்கிறாள்.-‘நங்காய்’-பரிபூர்ணனான பர வாசு தேவ நம்பிக்கு ஏற்ற பூர்த்தி ‘உனக்கேற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா ‘ என்கிறபடியே இவள் திறத்து அவனது ஸ்வரூப ரூப விபவங்கள் மூன்றும் நிறைந்திருத்தலால்-‘நங்காய்’ என்று அழைக்கிறாள். குண பூர்த்தி உடைய ஆண் -நம்பி, பெண் – நங்கை )
நாணாதாய்’ ‘நாவுடையாய் ‘ என்று மற்றுமிரு ஒற்றுமைகள் காட்டுகிறாள்.
‘நாணாதாய் ‘ பரமபதத்தே பர்யங்க வித்யையில் இருவருமான சேர்த்தியிலே உங்கள் அபிமத பிள்ளைகள் உங்கள் படுக்கையில் ஏறித் துவைக்க நாணாதாய் என்று சொல்கிறார்கள்.’நாவுடையாய் ‘ பாங்காக உன் திருவடியைப் பற்றி நிற்கும் எங்கள் எழில் சேனை முதல்வர்க்கு ஹிதமாக துவய மந்த்ரத்தை உபதேசித்தவளே . அன்றிக்கே உமது தொட்டில் பிள்ளையாகவே வளர்ந்த ஸ்ரீபராசர பட்டர் நம் பெருமாள் ஸ்ரீரங்க ரஜர் என்று பர்த்தாவின் பெயர் சொல்வதை நாவுக்கு அகாரியமாகக் கருதி’அழகிய மணவாளப் பெருமாள்’ என்கிற அசாதாரணமான திரு நாமம் செப்பப் பழக விட்டவளே என்கிறார்களாகவுமாம்.

பரமபதத்தை நித்யர்களும் சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையராக இருக்கச் செய்தே , பங்கயப் பூவிற் பிறந்த உன்னையே நாளும் பார்த்தனுபவிக்கும் எம்பெருமானின் திருக் கண்கள் பங்கயக் கண்ணாக சிவப்பேறி யிருப்பது போல் நித்யர் கட்கு இல்லை . ஆதலின் அந்த பங்கயக் கண்ணானைப் பாட
எழுந்தருள பிரார்த்திக்கிறார்கள்.

இதுவரை ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்துள்ள திருப்பாவையில் ஆறாம் பாட்டு தொடக்கமாக பதினைந்தாம் பாட்டு முடிவாக ஸ்ரீ ஆண்டாள் தான் அருளிச் செய்த நாச்சியார் திரு மொழியில்
மங்களா சாஸநம் செய்தருளிய பதினோரு திவ்ய தேசங்களுள், ஸ்ரீவில்லிபுத்தூர் நீங்கலாக மற்ற பத்து திவ்ய தேச பிராட்டிமாரைத் துயிலெழுப்புகிறாள் என்ற நோக்கில் கீழ் ஓன்பது பாசுரங்களில் எந்தெந்த திவ்ய தேச பிராட்டியைத் துயிலெழுப்புவதாகக் கருத வாய்ப்புண்டு என்று பார்த்தோம்.-
இனி இறுதியாக யுள்ள பதினைந்தாம் பாட்டில் திரு மாலிருஞ்சோலை மலை திவ்ய தேசத்தில் பஞ்ச ஆயுத
ஸஹிதனாய் தென்னானையாய்த் திகழும் சுந்தர ராஜன் என்றும்,கள்ளழகர் என்றும் பரம ஸ்வாமி என்றும் அழைக் ப்படுகின்ற எம்பெருமானின் பட்ட மஹிஷியான கல்யாண சுந்தர வல்லியைத்
துயிலெழுப்புகிறாள் என்பதைக் காண்போம்.

எழுப்பும் பெண் பிள்ளையோ ஸ்ரீ ஆண்டாள் மதிப்புடைய சோலைக் கிளி எழுப்பப்படும் பெண்பிள்ளையோ பிராட்டியோ பெருமதிப்புடைய மாலிருஞ் சோலை மலையில் துயிலும் இளங்கிளி
ஸ்ரீ வானமா மலை ஜீயர் பத்துப் பாடல்களினால் வாக்ய குரு பரம்பரை க்ரமத்தில் அமைந்துள்ள பகவத் கைங்கர்ய பரர்களைத் துயிலெழுப்புவதாக அனுஸந்தித்த அளவில், இப் பாட்டால் ‘ஸ்ரீமதே சடகோபாய நம:’ என்னும் அர்த்தம் தொனிப்பதாக அருளிச் செய்வர்.ஆதலின் தனிச்சிறையில் விளப்புற்ற கிளி மொழியாளான (திருவாய் 4-8-5) சுந்தர காண்டத்துச் சுடர் கொடியும், சுடர் முடியண்ணல் தாள் பணியும் ‘அணி மழலைக் கிளி மொழியாளான ‘ (திருவாய் 4-8-5) நம்மாழ்வாரும் சேர்ந்தே இப்பாசுரம் தன்னில் துயிலுணர்த்தப்படுகிறார்கள் என்று கருத வாய்ப்பாகிறது.-‘ காவியங் கண்ணி எண்ணில் கடி மா மலர்ப் பாவை ஒப்பாளாதலின் சுந்தர வல்லி நாச்சியாரையும் நம்மாழ்வாரையும் ஒரு சேர வைத்து இப்பாட்டில் உள்ள சொற்களுக்குப் பொருள் எவ்வாறு அவர்களைக் குறிப்பிடுகின்ற என்பதாய் அனுபவிக்கலாம்.

திருமாலிருஞ்சோலை மலை விஷயமாக தாமருளிச் செய்த திருவாய் மொழியினை பிராட்டி சந்நிதியில் ஆழ்வார் அதி காலை வேளையில் இந்தளம் என்கிற பண்ணில் இசைத்துப் பாடி அனுபவித்துக் கொண்டிருக்கிறார்-திருமாலிருஞ்சோலை விஷயமாக ஆழ்வார் அருளிச் செய்துள்ள நான்கு பதிகங்களிலே ‘முடிச்சோதியாய்’ (3-1)என்கிற பதிகமும் மற்றும் ‘திருமாலிருஞ்சோலைமலை ‘ பதிகத்தில் (10-8-1, 6) ஆகிய இரண்டு பாசுரங்களும் காலை 6 மணி முதல் 9 மணி வரையான முதல் ஜாமத்தில் பாட வேண்டிய இந்தளம் என்கிற பண்ணில் அமைந்துள்ளது. (மற்ற பாசுரங்களான கிளரொளி (2-10) நாட்டம் என்கிற பண்ணிலும், முந்நீர் (3-2) சீகாமரம் என்கிற பண்ணிலும் , செஞ்சொல் (10-7) தத்கேசி என்கிற பண்ணிலும் அமைந்துள்ளனவாகத் திருச்சித்திரகூடம் முனைவர் ஸ்ரீ
உ வே அ. வெ . ரங்காச்சாரியார் ஸ்வாமி அவர் தொகுத்துள்ள ‘ஸ்ரீமந் நாதமுநி வைபவப் பிரகாசிகை ” எனும் நூலில் திருவாய் மொழியில் பண்கள்’ என்ற தலைப்பில் உள்ள அத்யாயம்-19ல் காட்டியுள்ளார்.

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்துள்ள நாச்சியார் திருவாய் மொழியில் திருமாலிருஞ்சோலை மலை விஷயமாக பாடிய ஒன்பதாம் திருவாய் மொழியில் 8 ஆம் பாட்டில் ‘ காலை யெழுந்திருந்து கரிய
குருவிக் கணங்கள் மாலின் வரவு சொல்லி மருள் ‘பாடுவதைக் குறிப்பிட்டுள்ளாள். ஆங்கே ‘மருள்- இந்தளம் என்கிற பண்ணைப் பாடுகிறது’ என்று உரை வரைகிறார் பெரிய வாச்சான் பிள்ளை.

இவ்வாறு பிராட்டியும் ஆழ்வாரும் இந்தளம் பண்ணைப் பாடி அனுபவித்துக் கொண்டிருக்க அதின் இனிமையிலே ஆழ்ந்து செவி மடுத்த ஆண்டாள் அவர்களைக் குறித்து ‘எல்லே இளங் கிளியே ‘ என்றழைத்தாள் போலும்.-அவ்வாறு ஆண்டாள் அழைப்பது தங்கள் அனுபவத்திற்குத் தடையாய் இருப்பதோல் ‘சில் என்று அழையேன்மின்‘ என்று மறுமொழி வருகிறது.-குன்றம் என்றாலே ‘சில்லு சில் என்று ஒலி அறா ‘ (திருவாய் மொழி 1-7-9) என்கிற படியே மலைத்தேனைப் பருகத் துடிக்கும் சில் வீடு
என்ற வண்டினம் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் போலும். அந்த வண்டினம் போல் நங்கைமீர் நும்மின்குரல் திருமாலிருஞ்சோலைமலை விஷயமான அனுபவத்திற்கு இடையூறாக இருப்பதால் ‘அழையேன்மின் போதர்கின்றேன்’ என்கிறாள்

ஆழ்வாரும் ‘எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே ‘ என்றும் ‘வண்டுகளோ வம்மின்’ (திருவிருத்தம் 54,55) என்று பேசியிருக்கிறவாறு இவ்விடத்தும் வீட்டின் வாசலில் இருப்பவர்களின் பேச்சை வண்டுகளின் ரீங்காரமாகக் கொண்டாடிப் பேசுகிறார் .

“உனக்கென்ன வேறுடையை ” நாங்கள் முன்பு ஸ்ரீரங்க நாயகியை பொற்கொடி என்றது உன்னிடத்தில் அன்றோ பலிக்கக் காண்கிறோம். ‘ஆரூட ஸ்ரீ:’ என்கிற படியே அவன் வல மார்பினில் ஏறி வீற்றிருந்து
சுந்தரவல்லி யான நீ பொற் கொடி போல் அவன் திண் தோளைக் கொழு கொம்பாகப் பற்றி விளையாடும் உன்னாலன்றோ அவனுக்கு ‘ஏறு திருவுடையான்’ என்றும் ‘சுந்தரத் தோளுடையான்’என்றும் திரு நாமம் வாய்க்கப் பெற்றுள்ளது.
ஆதலின் அவனுக்கு-ஜகத் காரணன் என்கிற விசேஷணத்துடன் ஸ்ரீ வல்லபன் என்கிற விசேஷணத்தாலு மன்றோ நாங்கள் அவனைப் பற்றுவது.

ஆழ்வார் எங்கும் நாச்சியார் போன்று அமர்ந்து சேவை சாதிக்கிறார். ‘ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போல் அவன் பேரும் தார்களுமே பிதற்ற’ (திருவாய் 6-7-2) வைத்தவரைப் பின் பற்றி ஸ்ரீ ஆண்டாளும் இந்த திவ்ய தேசத்தில் அமர்ந்து சேவை சாதிக்கிறார்.-கீழே எட்டாம் பாட்டில் கூறியது போல் மிக்குள்ள பிள்ளைகளும் போந்தாரோ என்று பிராட்டி வினவ உங்கள் திருவடி நிலையான ஆழ்வாரை (ஸ்ரீ சடகோபரை ) எழுந்தருளப் பண்ணி எங்கள் சிரந்தொட்டு எண்ணிப் பார்த்துக் கொள்ள வேண்டுகிறாள். எங்கள் சிரம் மீது அவர் கரம் தொட்டு ஆசி கூற மற்றை நம் காமங்கள் மாற்றும் மாயனைத் தூயோமாய் வந்து தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் எங்கள் எண்ணம் ஈடேறப் பெற்றுய்வோம் என்கிறார்களாகவுமாம்-

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அருளிச் செயல்களில் -கண்ணன் -பத பிரயோகங்களும் வியாக்யான ஸ்ரீ ஸூக்திகளும்-

September 15, 2026

1 -கண்ணன் –கண்ணாக இருப்பவன் –
கண்ணாவான் என்றும் மன்னார் விண்ணோர்க்குத் தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே
வீதி வாய்ச செல்கின்றான் மேல் விழித்து இமையாது நின்ற மாதரார் கண்களூடே வாவுமான தேரில் செல்வான்
யாதினும் உயர்ந்தோர் தன்னை யாவர்க்கும் கண்ணன் என்றே ஓதிய பெயர்க்குத் தானே
உறுப் பொருள் உணர்த்தி விட்டான் –ராமனே கண்ணன் என்னும் பொருளில் கம்பர்
2 – கண்ணே -காண்கைக்கு சாதனமான கண்ணும் காணப் படும் விஷயமும் அவனே –
கொண்டல் வண்ணா குடக் கூத்தா வினையேன் கண்ணா கண்ணா –
3-கண்ணா -நிர்வாஹகன் -கணவன்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம் கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே
களை கண் -மற்றிலேன் -மணியை வானவர் கண்ணனை –எண்ணிலா அரக்கரை நெருப்பினால் நெருக்கினாய் கண் அலால் ஓர் கண்ணிலேன் –
மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் கண்ணாளன் -உலகத்துயிர் தேவர்கட்டு எல்லாம்
4-கண்ணன் எங்கும் நிறைந்தவன்
எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப-
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என் சிங்கப் பிரான் பெருமை யாரையும் சீர்மைத்தே
எஞ்ஞான்றும் எங்கும் ஒழி வற நிறைந்து நின்ற மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணன்
5-கண்ணன் -கண் அழகன் –
அண்ணல் மாயன் அணி கொள் செந்தாமரைக் கண்ணன் –
தண் பெரு நீர்த்தடந்தாமரை மலர்ந்தால் ஒக்கும் கண் பெருங்கண்ணன் / தகும் கோலத்தாமரைக்கு கண்ணன் /
செங்கோலக் கண்ணன் / அணி கொள் செந்தாமரைக் கண்ணன் / தாமரைக்கு கண்ணினன் / கமலத் தடம் பெரும் கண்ணினன் / செய்ய கண்ணினன்
5–கண் -கண்ணோட்டம் -கடாக்ஷம் -இரக்கம் -கருணை -அனுக்ரஹம் -கண்ணோட்டம் அதிகாரம் -திருக் குறளில் -தன்னோடு பயின்றாரைக் கண்டால்
அவர் கூறியன மறுக்க மாட்டாமை -இஃது அவர் மேல் கண் சென்ற வழி நிகழ்வதாதலின் அப்பெயர் யாயிற்று -பரி மேல் அழகர் –
பண்ணை வென்ற இன் சொல் மங்கை கொங்கை தங்கு பங்கயக் கண்ண-ஆபத் சகத்வாதி குண பெரிதமான விசேஷ கடாக்ஷத்தை பண்ணினவன் -வியாக்யானம்
கார்த்தன் கமலக் கண் -நாச் திரு –அகவாயில் அனுக்ரஹத்துக்கு பிரகாசத்தை பண்ணுமது யாய்த்து திருக் கண்கள் –
6–கண்ணன் –கையாளன்–ஸுசீல்யம் உரு எடுத்த எளியவன் –
உள்ளூலாவி உலர்ந்து உலர்ந்து என் வள்ளலே கண்ணனே -உன்னை எனக்கு கையாளாகத் தருமவனே
காண்பார் யார் எம்மீசன் என் கண்ணனை -சர்வேஸ்வரனாய் இருந்து கிருஷ்ணனாய் வந்து அவதரித்து எனக்கு கையாளானவன்
கரிய மேனியன் கண்ணன் –விண்ணோர் இறை –ஆஸ்ரிதற்குக் கையாளாய் உள்ளவன்
மெலிவு நோய் தீர்க்கும் நம் கண்ணன் —விரஹ வியசனம் தீர்க்கும் ஆச்ரித ஸூ லபன்
8–கண்ணன் -கரிய மேனியன் –
கார் முகில் போலே வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே
கைம்மாவுக்கு அருள் செய்த கார் முகில் போல் வண்ணன் கண்ணன்
காரார் கரு முகில் போலே என் அம்மான் கண்ணன்
காரார் மேனி நம் கண்ணன்
கார்மலி மேனி நிறைத்துகே கண்ணபிரானை
காரார்ந்த திரு மேனிக் கண்ணன்
கார்த்திரள் மா முகில் போல் கண்ணன்
9–கண்ணன் –களிக்கச் செய்பவன் -ஆனந்திப்பிக்கிறவன்
அல்லலில் இன்பம் –எல்லையில் மாயனைக் கண்ணனை –ஆனந்தாவாஹனனைப் பற்றின எனக்குத் துக்கம் இல்லை
9–கண்ணன் –ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை யுடையவன் -மாயன் என்னும் பொருளில்
மலியும் சுடர் ஓளி மூர்த்தி மாயப்பிரான் கண்ணன் / கண்ணனை மாயன் தன்னை / கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் –
-எத்திறம் என்னும் படியான குண சேஷ்டிதங்களை யுடையவன் –
10–கண்ணன் -அறிவு அளிப்பவன்
உள்ளொற்றி உள்ளூர் நகப்பருவர் எஞ்ஞான்றும் கள்ளொற்றிக் கண் சாய்பவர் -கண் சாய்பவர்–அறிவு தளர்வார் –
விண்ணருள வந்ததொரு மெல்லமுதம் அன்ன வண்ண முலை கொண்டு இடை வணங்க வரு போழ்தத்து
தண் அருளி ஏழ்மை துடைத்து எழு மெய் ஞானக் கண்ணருள் செய் கண்ணன் இரு கண்ணின் எதிர் கண்டான் —
ஞானக் கண்ணருள் செய் கண்ணன் –இராம பிரானை கம்பர் -மயர்வற மதி நலம் அருளுபவர் கண்ணன்
இப்படி பல பொருள்கள் உண்டே –

—————————————————-

கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு
தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே –1-8-3-சம்சாரிகளோடு நித்ய ஸூரிகளோடு வாசி இல்லை –அரை க்ஷணம் தங்கள் கார்யம் நிர்வஹித்துக் கொள்ள மாட்டாமைக்கு-கண்ணாவான்-கண்ணாகைக்காக என்னுதல்-கண்ணாம் அவன் என்னுதல்-கண் -என்று நிர்வாஹகன் –-சஷூர் தேவா நாம் உதமர்த்தயா நாம் -என்கிற ஸ்ருதி அர்த்தத்தின் படியே சொல்கிறார்

அடிகள் கை தொழுது, அலர்மேல் அசையும் அன்னங்காள்!
விடிவை சங்கொலிக்கும் திருவண் வண்டூ ருறையும்
கடிய மாயன் தனைக் கண்ணனை நெடுமாலைக் கண்டு
கொடிய வல்வினையேன் திறம் கூறுமின்; வேறுகொண்டே.–(3459) -6-1-9-துரியோதனாதிகளை அழிய செய்யும் இடத்தில் கடியனாய் -பாண்டவர்களுக்காக பகலை இரவாக்குகை முதலான ஆச்சர்ய சேஷ்டிதங்களை பண்ணுமவனை -அவர்களுக்கு கையாளாய் நிற்குமவனை -அவ்வளவிலும் பர்யாப்த்தன் அன்றிக்கே இருக்கிற வ்யாமுக்தனாய் -அன்றிக்கே பிறர் நோவு அறியானாய் கலக்கிற போது பிரியேன் என்று வைத்து பிரிய வல்லவனை கலக்கும் போது தாழ நின்று பரிமாறி பின்னை எட்டாதவனை என்றுமாம்

வண்ண மாடங்கள் சூழ் திரு கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணைய் சுண்ணம் எதிர் எதிர் தூவிட
கண்ணன்  முற்றம் கலந்து அளராயிற்றே–1-1-1-ஸ்ரீ திரு கோட்டியூரில் பிரசஸ்த  கேசனாய்-பரிபூர்ண குணனான ஸ்ரீ கிருஷ்ணன்–பிறந்தினில் -பிறந்து இன் இல் -இன் இல் பிறந்து-ஸ்ரீ மதுரையில் சிறைக் கூடம் போலே பிறந்த இடம்  தோன்றாமல் போக வேண்டாதே –எல்லா உபாலாள நத்துக்கும் யோக்யமான ஸ்ரீ நந்தகோபர் திரு மாளிகை யாகிற-இனிய இல்லிலே பிறந்து –அதவா –-பிரம ருத்ராதிகளுக்கு காரண பூதனாய்-பரி பூர்ண குணனானவன் ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து
அவதரித்த -அளவில் என்னவுமாம் –கண்ணன் முற்றம் -என்றது –ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்த போதே க்ர்ஹ நிர்வாககன்-பிள்ளையாக ஸ்ரீ நந்த கோபர் நினைத்து இருக்கையாலே ஸ்ரீ கண்ணனுடைய முற்றம் என்னுதல் –கண் நல் முற்றம் –இடமுடைத்தாய் -தர்ச நீயமான முற்றம் என்னுதல் –
எண்ணையும் மஞ்சளும் -இவை இரண்டும் துகை உண்டு தன்னிலே சேர்ந்து சேறாய் விட்டது –

என் தம்பிரானார் எழில் திரு மார்வற்கு
சந்தம் அழகிய தாமரை தாளர்க்கு
இந்திரன் தானும் எழிலுடை கிண் கிணி
தந்து உவனாய் நின்றான் தாலேலோ தாமரைக் கண்ணனே தாலேலோ -(42)-1-3 3- –கிஞ்சித் கரித்தவர்களை குளிர கடாஷிக்கும் தாமரை போன்ற திருக் கண்களை உடையவனே -தாலேலோ –

போர் ஒக்கப்  பண்ணி இப் பூமி பொறை தீர்ப்பான்
தேர் ஒக்க ஊர்ந்தாய் செழும் தார் விசயற்க்காய்
கார் ஒக்கும் மேனி கரும் பெரும் கண்ணனே
ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ ஆயர்கள் போர் ஏறே அச்சோ அச்சோ – 1-8-6-வர்ஷுக வலாஹகம் போலே இருக்கிற திருமேனியை உடையவனாய் –கரிய வாகிப்  புடை  பரந்து இருக்கிற திருக் கண்களை உடையவனாய் இருக்கிறவனே –இத்தால் –பூ பாரத்தை போக்குகையாலும் –ஆஸ்ரிதனான அர்ஜுனனை விஜயீ ஆக்குகையாலும் உண்டான ஹர்ஷம் வடிவிலும் கண்ணிலும் தோற்றும்படி நின்ற நிலையை சொல்லுகிறது –

கிண் கிணி கட்டிக் கிறி கட்டிக் கையினில்
கங்கணம் இட்டுக் கழுத்தில் தொடர்  கட்டித்
தன் கணத்தாலே சதிரா நடந்து வந்து
என் கண்ணன் என்னைப் புறம் புல்குவான் எம்பிரான் என்னைப் புறம் புல்குவான் -1 9-2-எனக்கு ஸூலபனானவன் -என்னைப் புறம் புல்குவான்-எனக்கு ஸ்வாமி யானவன் என்னைப் புறம் புல்குவான்-

கொங்கை வன் கூனி சொல் கொண்டு குவலயத்
துங்க கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கு அருளி வான் கானடை
அம் கண்ணன் அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் -2 1-8 –அழகிய சுலபனானவன் –கட்டின காப்போடே காடேறப் போக சொன்ன இடத்தில்-முகத்தில் கருகுதல் இன்றிக்கே -முடியை தவிர்ந்து ஜடையை புனைந்து நாட்டை விட்டு காடேறப் போன படியை நினைத்து – அழகிய சுலபன் –என்கிறது –அன்றிக்கே –-ராம கமல பத்ராஷா-என்கிறபடி-அழகிய திருக் கண்களை உடையவன் -என்னவுமாம் –அப்போது-ராஜ்ய ஐஸ்வர்யத்தை விட்டு காட்டுக்கு போந்தோம் -என்ற க்லேசம் இன்றிக்கே – அக வாயில் ஹர்ஷம் திருக் கண்களில் தோன்றும் படியாக போன படியை சொல்கிறது –

பதக முதலை வாய்ப்  பட்ட களிறு
கதறிக் கை கூப்பி என் கண்ணா கண்ணா என்ன
உதவப் புள்ளூர்ந்து அங்கு உறு துயர் தீர்த்த
அதகன் வந்து அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் -(126) 2 1-9 – அத் தசையில் சர்வேஸ்வரனே தனக்கு ரஷகனாக நினைத்து –தன் கையை எடுத்து அஞ்சலி பண்ணி – தன் ஆர்த்தி எல்லாம் தோற்றும்படி கூப்பிட்டு கொண்டு -எனக்கு நிர்வாகனானவனே என்று பல காலும் சொல்ல –
(முக்கரண பிரபத்தி நடந்ததே ) நாராயணா ஒ மணி வண்ணா நாகணையாய் வாராய் -என்று கூப்பிட்டவனாக அருளிச் செய்தார் திருமங்கை ஆழ்வார் – இவர் -என் கண்ணா கண்ணா என்று கூப்பிடவனாக அருளிச் செய்தார் – மூலேதி முக்த பதம் ஆலபதி த்வி எந்தரே-என்று கொண்டு -ஆதி மூலமே -என்று கூப்பிட்டானாக பௌராணிகர் சொன்னார்கள் இறே – இவை தன்னில் சேரும்படி என் என்னில் – மூலம்-என்கிற இடத்தில் அசாதாரண விக்ரக விசிஷ்டனான ஆகாரத்தை நினைத்து கூப்பிட்டான் ஆகையாலே அதுக்கு பர்யாய சப்தங்களை இட்டு ஆழ்வார்கள் அருளி செய்தார்கள் –
ஆகையால் எல்லாம் சேரக் குறை இல்லை ––

விண்ணெல்லாம்  கேட்க அழுதிட்டாய் உன் வாயில் விரும்பி அதனை நான் நோக்கி
மண்ணெல்லாம் கண்டேன் மனத்துள்ளே அஞ்சி மதுசூதனே என்று அறிந்தேன்
புண் ஏதும் இல்லை உன் காது மறியும் பொறுத்து இறைப் போது இரு நம்பீ
கண்ணா என் கார் முகிலே கடல்வண்ணா காவலனே முலை உணாயே – (144) -2-3 6- –எனக்கு சுலபன் ஆனவனே-ஜல ஸ்தல விபாகம் பாராமல் -உபகரிக்கும் காள மேகம் போலே எனக்கு உன்னை உபகரித்தவனே=எனக்கு அனுபாவ்யமான கடல் போன்ற நிறத்தை உடையவனே-எனக்கு ரஷகன் ஆனவனே – என்று ஸ்தோத்ரம் பண்ணி முலை உண்ண  வேணும் என்று அபேஷிக்கிறாள்

பேயின் முலை உண்ட பிள்ளை இவன் முன்னம்
மாயச் சகடும்  மருதும் இறுத்தவன்
காயா மலர் வண்ணன் கண்ணன் கரும் குழல்
தூயதாக வந்து குழல் வாராய் அக்காக்காய்
தூ மணி வண்ணன் குழல் வாராய் அக்காக்காய் -2 5-2 – –காயா மலர் வண்ணன்--ஆத்ம குணங்கள் மிகை யாம்படி அப்போது அலர்ந்த செவ்வி காயம் பூ போலே யாய் –அனுகூலரை எழுத்து இடுவித்து கொள்ளும் வடிவு அழகு படைத்தவன் –கண்ணன் –விரூபன் ஆனாலும் விட ஒண்ணாத சௌலப்யத்தை உடையவன் –

திண்ணக் கலத்து திரை உறி மேல் வைத்த
வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிடும்
அண்ணல் அமரர் பெருமானை ஆயர் தம்
கண்ணனை வந்து குழல் வாராய் அக்காக்காய்

கார் முகில் வண்ணன் குழல் வாராய் அக்காக்காய் – (164)-2-5 3-இது நவநீத ஸௌர்ய வ்ருத்தாந்தத்தாலே அனுகூலரானவர்களை எழுதிக் கொள்ளும் அவன் –அயர்வறும் அமரர்கள் அதிபதியை – மேன்மைக்கு  இவ்வருகு சொல்லலாவது இல்லை இறே –அம்  மேன்மைக்கு எதிர் தட்டான நீர்மை சொல்லுகிறது – இடக்கை வலக்கை அறியாத இடையருக்கு நிர்வாஹன் ஆனவனை

கண்ணில் மணல் கொடு தூவி காலினால் பாய்ந்தனை என்று என்று
எண்ணரும் பிள்ளைகள் வந்திட்டு இவரால் முறைப்படுகின்றார்
கண்ணனே வெள்ளறை நின்றாய் கண்டாரோடே தீமை செய்வாய்
வண்ணமே வேலையது ஒப்பாய் வள்ளலே காப்பிட வாராய் –(195)-2-8 -4- – எல்லாருக்கும் ஸூலபனாய் கொண்டு திரு வெள்ளறையிலே நின்று அருளினவனே–

வெண்ணெய் விழுங்கி வெரும்கலத்தை வெற்ப்பிடை இட்டதன் ஓசை கேட்கும்
கண்ண பிரான் கற்ற கல்வி தன்னை காக்கிலோம் உன் மகனைக் காவாய்
புண்ணில் புளி பெய்தால் ஒக்கும் தீமை புரை புரையா இவை செய்ய வல்ல
அண்ணற்கு அண்ணான்  மகனைப் பெற்ற வசோதை நங்காய் உன் மகனைக் கூவாய் -2 9-1 – வெண்ணெய் தான் விழுங்கினான் ஆகிறான் -வெறும் கலங்களை வெற்ப்பிடை இட்டு உடைக்குமோ –அது உடைகிற போதை ஓசை கேட்கை ஆய்த்து இவனுக்கு பிரயோஜனம் –கிருஷ்ணான உபகாரகன் கற்ற க்ரித்ரிம வித்யையை நாங்கள் காக்க மாட்டுகிறிலோம்-எல்லாருடைய களவும் காக்கலாம் –
இவனுடைய களவு எங்களால் காக்கப் போகாது என்கை-பிரான் என்கிறது-வ்யதிரேக உக்தி  -சர்வஸ்வ  அபஹாரி என்கிறபடி –

திண்ணார் வெண் சங்கு உடையாய் திருநாள் திருவோணம் இன்று ஏழு நாள் முன்
பண்ணேர் மொழியாரைக் கூவி முளை யட்டிப் பல்லாண்டு கூறுவித்தேன்
கண்ணாலம் செய்யக் கறியும் கலத்து அரிசியும் ஆக்கி வைத்தேன்
கண்ணா நீ நாளைத் தொட்டுக் கன்றின் பின் போகல் கோலம் செய்து இங்கே இரு –(252) -3 -3-9 –எனக்கு கண்ணாய் உள்ளவனே-ஜாதி உசிதமான தர்மம் -என்று கன்றுகள் மேய்க்க போம் நீ -நாளை முதலாக
கன்றுகளின் பின்னே போகாதே கோள்-ஆபராணாதிகளால் வந்த ஒப்பனை உடையவனாய் கொண்டு -அத்தை விட்டுப் போகாமல்-இங்கே இரு என்று அனுவர்த்தன பூர்வகமாக நியமித்து சொல்கிறாள்

சுரிகையும் தெறி வில்லும் செண்டு கோலும் மேலாடையும் தோழன்மார் கொண்டோட
ஒரு கையால் ஒருவன் தன் தோளை ஊன்றி ஆநிரை இனம் மீளக் குறித்த சங்கம்
வருகையில் வாடிய பிள்ளை கண்ணன் மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள்
அருகே நின்றாள் என் பெண்  நோக்கிக் கண்டாள் அது கண்டு இவ்வூர் ஓன்று புணர்க்கின்றதே-3 -4-3 –இப்படி வருகிற அளவில் –-பசுக்களின் பின்னே திரிந்த ஆயாசம் பொறாத ஸௌகுமார்யத்தாலும் –
பகல் எல்லாம் பெண்களைப் பிரிந்து போகையாலும் உண்டான தளர்த்தியாலும் –வந்த வாட்டத்தை உடையவனாய் – நவ யவ்வனாய் இருந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணனுடைய –பற்று மஞ்சள் பூசும்படி சுலபன் ஆகையாலே -அவர்கள் பூச -பட்டுப் படாத மஞ்சளும்-அதுக்கு பரபாகமான திரு மேனியின் நிறமும் -திவ்யமான அவயவ சமுதாய சோபையும் – அவன் வருகிற வழிக்கு அருகே நின்றவளான என் பெண் –
எல்லாரும் காண்கிறவோபாதி கண்டாள்-நோக்கிக் கண்டாள் –-விளையாடப் போகிறவள் அபூர்வ தர்சனத்தாலே புரிந்து கண் வைத்துப் பார்த்தாள்-

விண்ணின் மீது அமரர்கள் விரும்பி தொழ மிறைத்து ஆயர்பாடியிலே வீதி யூடே
கண்ணன் காலிப் பின்னே எழுந்து அருள கண்டு இள ஆய்க் கன்னிமார் காமுற்ற

வண்ண வண்டு அமர் பொழில் புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்
பண்ணின்பம் வரப் பாடும் பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே -3- 4-10 – –திரு ஆய்ப்பாடியிலே தெருவின் நடுவே -பசுக்களின் பின்னே – கீழ் சொன்ன ஒப்பனைகளோடும்  –
அவை தானும் மிகை யாம்படியான வடிவு அழகோடும் – கிருஷ்ணன் எழுந்து அருளக் கண்டு-யுவதிகளான இடைப் பெண்கள் ஆசைப்பட்டு விகர்தைகளான பிரகாரத்தை

செம் பெரும் தடம் கண்ணன் திரள் தோளன் தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம் 
நம் பரமன் இந்நாள் குழலூத கேட்டவர்கள் இடர் உற்றன கேளீர் 
அம்பரம் திரியும் காந்தப்பர் எல்லாம் அமுத கீதம் வலையால் சுருக்குண்டு 
நம் பரமன்று என்று நாணி மயங்கி நைந்து சோர்ந்து கை மறித்து நின்றனரே -3-6-6 –சிவந்து மிகவும் பெருத்து இருக்கிற திருக் கண்களை உடையவன்-கணையங்கள் போலே திரண்டு இருக்கிற திருத் தோள்களை உடையவன்-தேவகி பிராட்டிக்கு விதேயனான புத்ரனானவன் -துர்மானிகளான தேவர்களுக்கு சிம்ஹம் போலே அநபிபவநீயனாய் இருக்குமவன்-தன் அபிமான அந்தர் பூதரான நமக்கு தன் பெருமை எல்லாம் அறியலாம் படி இருக்குமவன் –

குடியில் பிறந்தவர் செய்யும் குணம் ஒன்றும் செய்திலன் அந்தோ
நடை ஒன்றும் செய்திலன் நங்காய் நந்தகோபன் மகன் கண்ணன்
இடை இருபாலும் வணங்க இளைத்து இளைத்து என் மகள் ஏங்கி
கடை கயிறே பற்றி வாங்கி கை தழும்பு ஏறிடும் கொலோ – 3-8-8—குடிப் பிறப்பில்  வந்தால் ஸ்ரீ நந்த கோபர் திரு மகனாய் இருக்கிற  – கிருஷ்ணன்-குடியில் பிறந்தவர் செய்யும் குணம் ஒன்றும் செய்திலன் –நடை ஒன்றும் செய்திலன் -அந்தோ -என்று அவன் முறை கெட கொண்டு போன பிரகாரத்தை சொல்லி 
விஷண்ணையாய் மேல் தன்னுடைய பெண் பிள்ளையின் மார்த்வத்தை நினைத்து நொந்து சொல்கிறாள்-

மருதப் பொழில் அணி மால் இரும் சோலை மலை தன்னை
கருதி உறைகின்ற கார்க்கடல் வண்ணன் அம்மான் தன்னை
விரதம் கொண்டு ஏத்தும் வில்லிபுத்தூர் விட்டு சித்தன் சொல்
கருதி உரைப்பவர் கண்ணன் கழலினை காண்பரே – 4-2 -11-
–சாபிப்ரயமாக புத்தி பண்ணி அனுசந்திக்குமவர்கள்-அத்யந்த ஸூலபனான ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளை கண்டு அனுபவிக்கப் பெறுவர்

நம்பி பிம்பி என்று நாட்டு மானிடப் பேர் இட்டால் 
நம்பும் பிம்பும் எல்லா நாலு நாளில் அழுங்கிப் போம் 
செம் பெரும் தாமரைக் கண்ணன் பேரிட்டு அழைத்தக்கால் 
நம்பிகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – 4-6- 8–சிவந்த பெருத்த தாமரை போலே இருக்கிற திருக் கண்களை உடையவனுடைய  திரு நாமத்தை இட்டு அழைத்தக்கால் -அதாவது  திரு நாமம் சொன்னவர்களுக்கு சகல சம்பத்துக்களும் உண்டாம்படி கடாஷிக்கும்  திருக் கண்களை உடையவன் திரு நாமத்தை – உங்கள் பிள்ளைக்கு இட்டு ஆதரம் தோற்ற – அழைத்தக்கால் -என்கை –

தேவுடைய மீனமாய்  யாமையாய் ஏனமாய் அரியாய் குறளாய்
மூவுருவில் ராமனாய் கண்ணனாய் கல்கியாய் முடிப்பான் கோயில்
சேவலோடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி யூசலாடி
பூவணை மேல் துதைந்து எழு செம்பொடியாடி விளையாடும் புனல் அரங்கமே -(420)–4-9 9-தேவுடைய–திவு -காந்தி -தேஜஸ்-இது அனைத்து அவதாரங்களும் விசேஷணம்-ஈஸ்வரனுடைய ஜன்மம் –-ஐசசீயமாய் -பரார்த்தமாய் -இருக்கையாலே பிறக்க பிறக்க-ஒளி பெற்று வாரா நிற்கும் –
பல் பிறப்பாய் ஒளி வரும் -என்று அருளிச் செய்தார் இறே –-ச ஏவ ஸ்ரேயான் பவதி ஜாயமான–(யஜுர் வேதம் )என்னக் கடவது இறே-கண்ணனாய் –-பூ பார நிரசன அர்த்தமாக ஸ்ரீ கிருஷ்ணனாய்

கண்ணா நான்முகனைப் படைத்தானே காரணா கரியாய் அடியேன் நான்
உண்ணா நாள் பசியாவது ஓன்று இல்லை ஓவாதே நமோ நாராயணா என்று
எண்ணா நாளும் இருக்கு யசுர் சாம வேதம் நாள் மலர் கொண்டு உன பாதம்
நண்ணா நாள் அவை  தத்துறுமாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே –-(438)- 5-1-6-ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்து தண்ணியரோடு நின்றான் -என்னும்படி ஸூலபன் ஆனவனே

வண்ண மால் வரையே குடையாக மாரி காத்தவனே மதுசூதா
கண்ணனே கரி கோள் விடுத்தானே காரணா களிறட்ட பிரானே
எண்ணுவர் இடரைக் களைவானே ஏத்தரும் பெரும் கீர்த்தியினானே
நண்ணி நான் உன்னை நாள் தோறும் ஏத்தும் நன்மையே அருள் செய்யும் பிரானே -(440)-5-1-8 –சர்வ ஸூலபனே-ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானின் ஆபத்தைப் போக்கினவனே-ஜகத்தை ஸ்ருஷ்ட்டித்து இறே வந்து அவதரிப்பது –இருவர் அவர் முதல்வன் தானே -இத்யாதி -குவலயா பீடத்தை நிரசித்தவனே

ஆழி மழைக் கண்ணா ஓன்று நீ கை கரவேல்
ஆழி யுட்புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
பாழியம் தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம் புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்–4–கம்பீர ஸ்வபாவத்தை உடையவனாய்-வர்ஷத்துக்கு நிர்வாஹகன் ஆனவனே –இவர்கள் தான் யாரேயேனும் அழைக்கையிலும் கண்ணா என்று ஒழிய அழையார்கள் கிருஷ்ணனோட்டை வாசனையால்“ஆழி மழைக் கண்ணா!” என்று அவன் அதிகரித்த காரியத்தையிட்டு அழைக்கின்றனரென்க.மழைக் கண்ணா – பகவத் காருண்ய வர்ஷ நிர்வாஹகனானவனே-என்னுதல்பூமிப் பரப்பில் உள்ள சேதனர் அடைய பகவத் காருண்யத்துக்கு விஷயமாம்படி பண்ண வல்லவனே -என்னுதல்பகவத் குணாம்ருத வர்ஷிகளான ஆசார்யர்களுக்கும் ஆசார்ய பதம் நிர்வஹிக்குமவன் -என்னுதல்மழைக் கண்ணா – பகவத் காருண்ய வர்ஷ நிர்வாஹகனானவனே-என்னுதல்பூமிப் பரப்பில் உள்ள சேதனர் அடைய பகவத் காருண்யத்துக்கு விஷயமாம்படி பண்ண வல்லவனே -என்னுதல்பகவத் குணாம்ருத வர்ஷிகளான ஆசார்யர்களுக்கும் ஆசார்ய பதம் நிர்வஹிக்குமவன் -என்னுதல்

கண்ணன் என்னும் கரும் தெய்வம் காட்சிப் பழகிக் கிடப்பேனை
புண்ணில் புளிப் பெய்தால் போலப் புற நின்று அழகு பேசாதே
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக
வண்ண வாடை கொண்டு என்னை வாட்டம் என்னை வாட்டம் தணிய வீசீரே–13-1-கிருஷ்ணன் என்றால்
தன்னை உகப்பார்க்கு இஷ்ட விநியோஹ அர்ஹமாக்கி வைக்கும் என்று இறே பிரசித்தி-இப்போது அது தவிர்ந்து-மனுஷ்யத்வே பரத்வமே சித்தித்து விட்டது-கிருஷ்ணன் என்றால் நாம் நினைத்து இருந்தவை எல்லாம் போய் – தான் பிறரைக் கும்பிடு கொள்ளத் தொடங்கினான்- பிரணயித்வம் போயிற்றே –நம்மைப் பெறுகைக்கு தான் நம் வாசலிலே அவசர ப்ரதீஷனாய் துவளுகை எல்லாம் போய் –
முகம் தோற்றாமே நின்று- வயிறு வளர்த்து போவாரோபாதி யானான்-கால் தரையிலே பாவாத படி நின்று முகத்தை மாற வைத்து ஹவிஸ்ஸை கொண்டு போம் தேவதைகளோ பாதி யானான்-கிருஷ்ணன் என்றால் உகப்பாருக்கு பவ்யன் என்று சொல்லுவது ஒரு சப்த மாத்ரமாய் – முன்புத்தை  நிலையே -(பரத்வமே )அர்த்தமாய் விட்டது-ஸ்வரூபம் மாறாடினால் –-ஆஸ்ரித பார தந்தர்யம்  -ஸ்வ பாவமும் -கருமை நிறமும் மாறாடினால் ஆகாதோ-இந் நிறம் எப்போதும் ஒக்க படு குலை அடிக்குமது தவிருகிறது இல்லை-கிருஷ்ண சப்தார்த்தம் -கரியவன் -மெய்யாகி விட்டது – புறம்பு போலும் உள்ளும் கரியனாய் இருக்கிறான்-இவன் பவ்யன் என்னுமது வடயஷ பிரசித்தி போலே -ஆல மரத்தில் பிசாசு -போலே யாய்த்து-உகப்பார்க்கு எளியன் என்னுமது விக்ருதியாய் -வெளி வேஷமாய் -பிரக்ருதிவத் பாவித்தே விட்டான் –இயற்கைத் தன்மை போலே நடித்துக் காட்டி விட்டான் –

மாவினை வாய் பிளந்து உகந்த மாலை வேலை வண்ணனை என் கண்ணனை வன் குன்றம் ஏந்தி
ஆவினை அன்று உய்ய கொண்ட ஆயர் ஏற்றை அமரர்கள் தம் தலைவனை அம் தமிழ் இன்ப
பாவினை அவ் வடமொழியை பற்றற்றார்கள் பயில் அரங்கத்து அரவு அணை பள்ளி கொள்ளும்
கோவினை நாவுற வழுத்தி என் தன் கைகள் கொய்ம் மலர் தூ என்று கொலோ கூப்பும் நாளே—(650)–1-4-கேசியை அநாயாசேன பிளந்து –ஆஸ்ரித விரோதி போகப் பெற்றோம் -என்று உகந்த ஆஸ்ரீத-வ்யாமுக்தனை-ஆஸ்ரித விரோதிகளை வளர்த்தாலும் விட ஒண்ணாத வடிவு அழகை யுடையவனை-வெறும் வடிவு அழகே அன்றியே எனக்கு பவ்யனானவனை

மாலை யுற்ற கடல் கிடந்தவன் வண்டு கிண்டு நறும் துழாய்
மாலை யுற்ற வரை பெரும் திரு மார்வனை மலர் கண்ணனை
மாலை உற்றுஎழுந்து ஆடி பாடி திரிந்து அரங்கன் எம்மானுக்கே
மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை யுற்றது என் நெஞ்சமே– (665)-2-8-செவ்வித் தாமரைப் பூ போலே மலர்ந்த திருக் கண்களை உடையவரை-

களி நிலா எழில் மதி புரைமுகமும் கண்ணனே ! திண் கை மார்வும் திண் தோளும்
தளி மலர் கரும் குழல் பிறை யதுவும் தடம் கொள் தாமரை கண்களும் பொலிந்த
இளமை இன்பத்தை இன்று என் தன் கண்ணால் பருவேற்க்கு இவள் தாய் என நினைந்த
அளவில் பிள்ளைமை இன்பத்தை இழந்த பாவியேன் எனது ஆவி நில்லாதே– (711)-7-4-செறிந்த நிலாவை வுடைய பூர்ண சந்தரனைப் போலே இருக்கிற திரு முகமும்-ஸ்ரீ கிருஷ்ணனே -சொல்லுகிற -விலஷணமான திண்ணிதாய் இருக்கிற திருக் கையும் திரு மார்வும் திருத் தோளும்-

தண் தாமரை கண்ணனே! கண்ணா ! தவழ்ந்து எழுந்து தளர்ந்த்ததோர் நடையால்
மண்ணில் செம் பொடி ஆடி வந்து என் தன் மார்வில் மன்னிடப் பெற்றிலேன் அந்தோ !
வண்ண செஞ்சிறு கை விரல் அனைத்தும் வாரி வாய் கொண்ட அடிசிலின் மிச்சில்
உண்ண பெற்றிலேன் ஓ! கொடு வினையேன் என்னை என் செய்ய பெற்றது எம்மோயே –7-6-குளிர்ந்து அழகிதான தாமரைப் பூப் போலே அலர்ந்த திருக்கண்களை யுடைய ஸ்ரீ கிருஷ்ணனே-

தண் தாமரை கண்ணனே! கண்ணா ! தவழ்ந்து எழுந்து தளர்ந்த்ததோர் நடையால்
மண்ணில் செம் பொடி ஆடி வந்து என் தன் மார்வில் மன்னிடப் பெற்றிலேன் அந்தோ !
வண்ண செஞ்சிறு கை விரல் அனைத்தும் வாரி வாய் கொண்ட அடிசிலின் மிச்சில்
உண்ண பெற்றிலேன் ஓ! கொடு வினையேன் என்னை என் செய்ய பெற்றது எம்மோயே –7-6–குளிர்ந்து அழகிதான தாமரைப் பூப் போலே அலர்ந்த திருக்கண்களை யுடைய ஸ்ரீ கிருஷ்ணனே-தவழ்ந்து எழுந்து இருந்து நடக்கப் புகுவது தள்ளம்பாறுவதான தளர் நடையாலே-நிலப் பண்பாலே சிவந்த புழுதியை யாடி வந்து அக்கோலத்தோடே என் மார்விலே வந்து கட்டிக் கொண்டு கிடக்கப் பெற்றிலேன் –

வரத்தினில் சிரத்தை மிக்க வாள் எயிற்று மற்றவன்
உரத்தினில் கரத்தை வைத்து உகிர் தலத்தை ஊன்றினாய்
இரத்தி நீ யிது என்ன பொய் யிரந்த மண் வயிற்றுளே
கரத்தி யுன் கருத்தை யாவர் காண வல்லர் கண்ணனே –(776)-25--கிருஷ்ணனாய்  வந்து அவதரித்து இடக்கையும் வலக்கையும் அறியாத இடையரையும் பசுக்களையும் ரஷித்து உன்னை ஒழியச் செல்லாதபடி பண்ணி அவர்களுக்கு நியாம்யனான நீயே அருளிச் செய்ய வேணும் என்று கருத்து –

காய்த்த நீள் விளங்கனி உதிர்த்து எதிர்ந்த பூங்குருந்தம்
சாய்த்து மா பிளந்த கைத்தலத்த கண்ணன் என்பரால்
ஆய்ச்சி பாலை உண்டு மண்ணை யுண்டு வெண்ணெய் உண்டு பின்
பேய்ச்சி பாலை உண்டு பண்டு ஓர் ஏனமாய வாமனா –(788) 37-ஓர் ஆயுதத்தால் அன்றிக்கே லீலையாக அழித்த திருக்கையை உடைய க்ருஷ்ணன் என்று ஜ்ஞாநாதிகாரான வியாச பராசராதிகள் சொல்லா நிற்பர்கள்-யசோதை பிராட்டியாருடைய பாலையையும் வெண்ணெயையும் அமுது செய்து –இத்தால் -விஜி கத்ஸ -என்கிற தத்வத்துக்கு ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ளதொரு த்ரவ்யத்தால் அன்றிக்கே செல்லாது இருக்கிறபடியைச் சொல்லிற்று –தாய் வடிவு கொண்டு விநாசிகையாய் வந்த பூதனையினுடைய முலையை அமுது செய்து – அவ்வழியாலே அவளை முடித்து –யசோதையினுடைய பாலோபாதி பூதனையினுடைய ப்ராணனும் தாரகமாய் இருக்கிற படி

சாடு சாடு பாதனே சலங்கலந்த பொய்கைவாய்
ஆடரவின் வன் பிடர் நடம் பயின்ற நாதனே
கோடு நீடு கைய செய்ய பாத நாளும் உள்ளினால்
வீடனாக மெய் செயாத வண்ணம் என் கொல் கண்ணனே –(837)-86-சம்சாரிகளுக்கு இச்சையே தொடங்கி பரமபக்தி பர்யந்தமாக எல்லா அவஸ்தைகளையும் உண்டாக்கி முக்தர் ஆக்குகைக்கு அன்றோ அவதாரத்துக்கு பலம் அனுபாவ்யமாய் இருப்பதொரு கர்ம சேஷம் உண்டாயோ அவதரித்தது –

நெற்றி பெற்ற கண்ணன் விண்ணின் நாதனோடு போதின் மேல்
நல் தவத்த நாதனோடு மற்றும் உள்ள வானவர்
கற்ற பெற்றியால் வணங்கு பாத நாத வேத நின்
பற்று அலால் ஓர் பற்று மற்ற துற்றிலேன் உரைக்கிலே –(838) 87-நெற்றியிலே கண்ணை உடைய ருத்ரன் –தன்னுடைய சக்தி அதிசயத்துக்கு பிரகாசகம் ஆகையாலே லலாட நேத்ரத்தை தனக்கு பேறாக நினைக்கிறான் ஆய்த்து –ஸ்வர்க்கத்துக்கு நிர்வாஹகரான இந்த்ரனோடே திரு நாபி கமலத்தை பிறப்பாகவும் ஸ்தாநமாகவும் உடையனாய் துஷ்கரமான தபச்சாலே சதுர் தச புவன ஸ்ர்ஷ்டாவுமாய் அதுக்கு நிர்வாஹகனான ப்ரஹ்மாவோடே ஹவிர்பாகபுக்குக்களான சகல தேவதைகள் – சம்ப்ரதிபன்ன ஷேத்ரஞ்ஞரான தேவர்களோடும் இந்த்ரனோடும் கூட ப்ரஹ்ம ருத்ரர்களைச் சொல்லிற்று –அவர்களோபாதி இவர்களும் ஷேத்ரஞ்ஞர் என்று தோற்றுகைக்காக

சுரும்பு அரங்கு தண் துழாய் அலர்ந்த பாதமே
விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு இரங்கு அரங்க வாணனே
கரும்பு இருந்த கட்டியே கடல் கிடந்த கண்ணனே
இரும்பு அரங்க வெஞ்சரம் துரந்த வில்லி ராமனே-93-பெரிய பெருமாள் உடைய கந்தத்தைச் சொல்லுகிறது –திருப்பாற் கடலிலே அபேஷா நிரபேஷமாக கண் வளர்ந்து அருளுகிற சௌலப்யத்தை
உடையவனே -ப்ரஹ்மாவுக்கு ஷீராப்தி நாதன் உகந்து அருளின படியாலே –அங்குத்தை சௌலப்யமும் வடிவழகும் பெரிய பெருமாள் பக்கலிலே பிரத்யபிஜ்ஜை-பண்ணலாம்படி இறே இருப்பது –

இனித் திரைத்  திவலை மோத வெறியும் தண் பரவை மீதே
தனிக் கிடந்து அரசு செய்யும் தாமரைக் கண்ணன் எம்மான்
கனி இருந்தனைய செவ்வாய்க் கண்ணனைக் கண்ட கண்கள்
பனி யரும்பு திரு மாலோ  என் செய்கேன் பாவியேனே-(889)18-நினைவு அறிந்து பரிமாறுவார் ஒரு நாடாக உடையவன் கிடீர் இங்கே வந்து தனியே கண் வளர்ந்து அருளுகிறான் –இப்படி கண் வளர்ந்து அருளா நிற்க-ஒரு கார்யம் அற்று அந்ய பரராய் திரியா நின்றார்கள் இறே ஸூகமே சம்சாரிகள் –
தனியேன் வாழ் முதலே -என்பான் ஒரு தனியேனைக் கிட்டுமோ என்னும் நசையிலே இறே-தனியே வந்து கண் வளர்ந்து அருளுகிறது –அரசு செய்யும்--அரசு செய்கை யாவது -வன்னியம் அறுக்கை-இவ்வன்னியம் அறுக்கைக்கு பரிகரம் எது என்னில்-தாமரைக் கண்ணன்--கையிலே ப்ரஹ்மாஸ்திரம் இருக்க வெல்ல ஒண்ணாத இடம் இல்லை இறே –-அங்கு உள்ளாரை வென்ற பரிகரத்தைக் கொண்டாய்த்து இங்கு உள்ளாரையும் வென்றது-தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலை மகனை -என்னக் கடவது இறே –அவர்களுக்கு போக உபகரணமான இத்தைக் கொண்டு கிடீர் இவர்களுடைய விரோதியைப் போக்குவது –(“அரசு செய்யுந் தாமரைக் கண்ணன் “என்ற சொற்போக்கால் எம்பெருமான் தனது திருக் கண்ணழகால் அனைவரையும் அகப்படுத்திக் கொள்ளுகிறான் என் விளங்கும்.)இப் ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கு அகப்பாட்டார் யார் என்னில் –எம்மான் – நான் தோற்று என்னை எழுதிக் கொடுத்தேன் –சம்சாரிகளுக்கும் இவ்வருகான என்னைத் தோற்பித்த
கண்களுக்கு இனி வெல்ல ஒண்ணாத நிலம் உண்டோ

ஊரிலேன் காணி இல்லை உறவு மற்று ஒருவர் இல்லை
பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
கார் ஒளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர் களைகண் அம்மா அரங்க மா நகர் உளானே –(900) -29–முதல் அடியிலே ருசி ஜனகமாய்
ருசி பிறந்தார்க்கு உபாயமுமாய் அன்றோ உன் வடிவு அழகு இருப்பது –கண்ணனே-வடிவு அழகு உண்டாலும் உத்துங்க தத்வம் அன்றோ -என்ன ஒண்ணாத படி -சௌலப்யாதி குண யுக்தன் அல்லையோ –பரம சேஷியாய் – விலஷண விக்ரஹோபேதனாய் சௌலப்யாதி குண யுக்தனாய்
இருக்கிற நீ இருக்க -எனக்கு இழக்க வேணுமோ-வகுத்த சேஷியாவது- சேஷித்வ சம்பந்தம் இல்லை யாகிலும் விட ஒண்ணாத வடிவு அழகை உடையவனாவது – இவை இரண்டும் இல்லை யாகிலும் விட ஒண்ணாத நீர்மையை உடையனாவது-இப்படிப் பட்ட தேவரீர் உள்ளீராய் இருக்க -எனக்கு ஓர் இழவு உண்டோ-

ஆர்த்து வண்டு அலம்பும் சோலை அணி திருவரங்கம் தன்னுள்
கார்த்திரள் அனைய மேனிக் கண்ணனே உன்னைக் காணும்
மார்க்கம் ஒன்றும் அறிய மாட்டா மனிசரில் துரிசனாய
மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்கனேனே-32-கண்ணனே – மேகத்தில் காட்டிலும் வ்யாவ்ருத்தி சொல்லுகிறது –கடக்க நின்று ஜலத்தை உபகரிக்குமது இறே மேகங்கள் – சஜாதீயனாய் வந்து கிட்டுத் தன்னை அன்றோ உபகரிப்பது –பெரிய பெருமாளை கண்டதும் – யசோதை பிராட்டி வைத்த வெண்ணையைக் களவு கண்டு அமுது செய்து மூலை அடியே திரிந்து வளர்ந்த செருக்கு தோற்றி யாய்த்து இருப்பது –கொண்டல் வண்ணனை கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் -என்னக் கடவது இறே –

வள வெழும் தவள மாட மதுரை மா நகரம் தன்னுள்
கவளமால் யானை கொன்ற கண்ணனை யரங்க மாலைத்
துளவத் தொண்டைய தொல் சீர்த் தொண்டர் அடிப் பொடி சொல்
இளைய புன் கவிதை ஏலும் எம்பிராற்கு இனியவாறே–(916)-45-கவளம் கொண்டு இருப்பதாய்
பெருத்து இருந்துள்ள ஆனையைக் கொன்ற கிருஷ்ணனை –கீழே ஆனைக்கு அன்று அருளை ஈந்த -என்றார்-இங்கே ஆனை கொன்ற என்கிறார்-இத்தால்-தேவாநாம் தானவாநாஞ்ச -என்றது அழிந்தது-அங்கு உள்ளார் விரோதிகளைப் போக்கி தன்னை அனுபவிப்பித்தாப் போலே
இவர் தம் உடைய பிரதிபந்தங்களைப் போக்கி தம்மை அனுபவிப்பித்த படி – திரு அவதரித்த அன்று ஒளிந்து போன ஊரிலே கண் காண வந்து விரோதியை அழியச் செய்த ஏற்றத்தை அனுபவிக்கிறார்-

பாலனாகி ஞாலமே ழும் உண்டு பண்டா லிலை மேல்
சால நாளும் பள்ளி கொள்ளும் தாமரைக் கண்ணன் எண்ணில்
நீல மார் வண்டுண்டு வாழும் நெய்தலந்தண் கழனி
ஏல நாறும் பைம் புறவில் எவ்வுள் கிடந்தானே–(1062)2-2-5-அத்யந்தம் செம்பால் பாய்கிற பருவத்தை உடைய பாலனாய் அப்பருவத்திலே சகல லோகங்களையும் எடுத்து வயிற்றிலே வைத்து-தனக்கு ஒரு பரிவர் இல்லாத பிரளய காலத்திலே-ஒரு ஆலந்தளிரிலே –பிள்ளை அகாலத்திலே உறங்கா நின்றான்-என் செய்தான் என்று எழுப்புகைக்கு ஒரு யசோதாதிகளும் இல்லையே –பரிமள பிரசுரமான பர்யந்தத்தை உடைத்தான தேசத்தில் அரியது செய்ய வல்லவன் ஆயிற்று கண் வளர்ந்து அருளுகிறான் எழுப்பி கார்யம் கொள்வார் குறையே –

கார் மன்னு நீள் விசும்பும் கடலும் சுடரும் நிலனும் மலையும் தன் உந்தித்
தார் மன்னு தாமரைக் கண்ணனிடம் தட மா மதிள் சூழ்ந்து அழகாய கச்சி
தேர் மன்னு தென்னவனை முனையில் செருவில் திரள் வாட்டிய திண் சிலையோன்
பார் மன்னு பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே–(1129)2-9-2-இவை அடைய திரு நாபீ கமலத்திலே உண்டாம்படி இருக்கிற புண்டரீகாஷனுக்கு வாச்ஸ்தானம் –

காரார்ந்த திரு மேனிக் கண்ணன் அமர்ந்து உறையும் இடம்
சீரார்ந்த பொழில் நாங்கைத் திருத் தேவனார் தொகை மேல்
கூரார்ந்த வேல் கலியன் கூறு தமிழ் பத்தும் வல்லார்
ஏரார்ந்த வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே–(1257)4-1-10-மேகம் போல் ஸ்ரமஹரமான வடிவை உடைய கிருஷ்ணன் விரும்பி வர்த்திக்கிற தேசமான

அங்கையால் அடி மூன்று நீர் ஏற்று அயன் அலர் கொடு தொழுது ஏத்த
கங்கை போதரக் கால் நிமிர்த்து அருளிய கண்ணன் வந்து உறை கோயில்
கொங்கை கொங்கு அவை காட்ட வாய் குமுதங்கள் காட்ட மா பதுமங்கள்
மங்கைமார் முகம் காட்டிடு  நாங்கூர் வண் புருடோத்தமமே-(1263)4-2-6-கங்கை புறப் படும் படியாகவும் திருவடிகளை நிமிர்த்து அருளின சர்வேஸ்வரன் -(ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக )வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்

களம் கனி வண்ணா கண்ணனே என்தன் கார் முகிலே என நினைந்திட்டு
உளம் கனிந்து இருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்து ஊறிய தேனைத்
தெளிந்த நான்மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
வளம் கொள் பேரின்பம் மன்னி நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே–(1276)-4-3-9-சிவந்து இருத்தல்-வெளுத்து இருத்தல்-செய்கை அன்றிக்கே-கண்ணுக்கு குளிர்ந்து-களாப் பழம் போலே இருக்கிற வடிவை உடையவனே கிருஷ்ணனே

தா வளந்துலகம் முற்றும் தட மலர்ப் பொய்கை புக்கு
நா வள நவின்று அங்கே ஏத்த நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்
மா வளம் பெருகி  மன்னு மறையவர் வாழும்  நாங்கைக்
கா வளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே -(1298)-4-6-1-உன்னை உகந்தாரை விட மாட்டாதே வர்த்திக்கிற நீயே-ரஷகன் ஆக வேணும்-அவன் மாம் ஏகம்-என்ற வார்த்தை-இவர் தாமே அருளிச் செய்கிறார்-

மண் இடந்து ஏனமாகி மாவலி வலி தொலைப்பான்
விண்ணவர் வேண்டச் சென்று வேள்வியில் குறை இரந்தாய்
துண்ணென மாற்றார் தம்மைத் துலைத்தவர் நாங்கை மேய
கண்ணனே காவளந் தண் பாடியாய் களை கண் நீயே –4-6-2--அவ் ஊரில் உள்ளாரில் ஒருவனாய்
புகுந்து இருக்கிற நீயே எனக்கு ரஷகனாக வேணும்-

ஏ விளம் கன்னிக்காகி இமையவர் கோனைச் செற்று
கா வளம் கடிது இறுத்துக் கற்பகம் கொண்டு போந்தாய்
பூ வளம் பொழில்கள் சூழ்ந்த புரந்தரன் செய்த நாங்கைக்
கா வளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே –(1305)-4-6-8-அன்று அப்படி ஸ்ரீ சத்ய பாமை பிராட்டிக்கு உதவினது எல்லாருக்கும் ஒக்க உதவுகைக்காக-திருக் காவளம் பாடியிலே வந்து-சந்நிஹிதனான நீயே ரஷகனாக வேணும்

மா வளம் பெருகி மன்னு மறையவர் வாழு நாங்கைக்
கா வளம் பாடி மேய கண்ணனை கலியன் சொன்ன
பா வளம் பத்தும் வல்லார் பார் மிசை அரசராகிக்
கோ விள மன்னர் தாழக் குடை நிழல் பொலிவர் தாமே –(1307)-4-6-10-திருக் காவளம் பாடியிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிற கிருஷ்ணனை-கிருஷ்ண அவதாரம் பர தசையோடு ஒக்கச் சொல்லலாம் படி இறே இங்குத்தை சௌலப்யம்

கவள யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் காமரு சீர்க்
குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும்

தவள மாட நீடு நாங்கைத் தாமரையாள்  கேள்வன் என்றும்
பவள வாயாள் என் மடந்தை   பார்த்தன் பள்ளி பாடுவாளே –(1318)4-8-1-கண்டார் மேல் விழும்படி ஆசை
மத முதிதமாய் குவலயபீடம் -அனாயாசன அநாயாசேன நிரசித்தவன்-விரோதியை போக்கா விட்டாலும் விட ஒண்ணாத வடிவு அழகு-கண்டாருக்கு பெரு விருப்பம் கொள்ளும் படி குவளை மேகம் போன்றவற்றை இன்னும் இப்புடைகளில் – கடல் மணி போன்ற -வடிவை பரிக்ரஹித்த ஸ்வாமி-வடிவு அழகுக்கு ஓன்று உவமானம் போகாமல் அங்கும் இங்கும் கதிர் பொறுக்குகிறார்

கண்ணன் என்றும் வானவர்கள் காதலித்து மலர்கள் தூவும்
எண்ணன் என்றும் இன்பன் என்றும் ஏழு உலகுக்கு ஆதி என்றும்
திண்ண மாடு நீடு நாங்கைத்  தேவ தேவன் என்று என்று ஓதிப்
பண்ணின் அன்ன மென் மொழியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே—(1326) 4-8-9-கிருஷ்ணன் என்றும்
ப்ரஹ்மாதிகள் ஸ்நேஹத்தைப் பண்ணி புஷ்பாதி உபகரணங்களைக்  கொண்டு ஆஸ்ரயிக்கும் படியாக அவர்கள் மநோ ரதத்தே நிற்கிறவன் என்றும்

ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு அரக்கர் தம் சிரங்களை யுருட்டிக்
கார் நிறை மேகம் கலந்ததோர் உருவக் கண்ணனார் கருதிய கோயில்
பூ நிரைச் செருந்தி புன்னை முத்தரும்பிப் பொதும்பிடை வரி வண்டு மிண்டித்
தேநிரைத்துண்டு அங்கு இன்னிசை முரலும் திரு வெள்ளியங்குடி யதுவே —4-10-2-கார் காலத்திலே நிறைந்த மேகம் போலே இருக்கிற வடிவை உடைய கிருஷ்ணன்-ரஷணத்துக்கு பாங்கான இடம் -என்று திரு உள்ளம் பற்றி வர்த்திக்கிற கோயில் –

காவிப் பெரு நீர் வண்ணன் கண்ணன்
மேவித் திகழும் கூடலூர் மேல்
கோவைத் தமிழால் கலியன் சொன்ன
பாவைப் பாடப் பாவம் போமே –(1367)5-2-10-காவி போலேயும்-பெரும் கடல் போலேயும் இருந்துள்ள வடிவை உடைய கிருஷ்ணன் திரு உள்ளத்தோடு பொருந்தி உஜ்ஜ்வலனாய் வர்த்திக்கிற திருக் கூடலூர் மேல் –

தூயாய் சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம்
தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா
ஆயா அலை நீர் உலகு ஏழும் முன்னுண்ட
வாயா உன்னை எங்கனம் நான் மறக்கேனோ  –(1556)-7-1-9-சகல தாபங்களும் ஆறும்படி ஸீதமான கிரணங்களை உடைய பூர்ண சந்தரனைப் போலே -சர்வ பிராணிகளையும் தாயாய் கொண்டு அளிக்கின்ற குளிர்ந்த திருக் கண்களை உடையவனே -என்று திருக் கண்களுக்கு விசேஷணம் ஆதல் -அன்றிக்கே சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிப்பவனுமாய் – அவ் வாத்சல்யம் எல்லாம் தோற்றும்படியாக இருக்கும் திருக் கண்களை உடையவனே -என்னுதல் -இப்படி இருந்து வைத்து உன்னுடைய விபூதி பூதரிலே சிலர் -இவன் என் புத்திரன் -என்று அபிமாநிக்கலாம் படி கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவனே –

உரங்களால் இயன்ற மன்னர் மாளப் பாரதத்து ஒரு தேரை ஐவர்க்காய்ச் சென்று
இரங்கி யூர்ந்தவர்க்கு இன்னருள் செய்யும் எம்பிரானை வம்பார் புனல் காவிரி
அரங்கமாளி என்னாளி விண்ணாளி ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று
சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே –(1571) -7-3-4-கடல் சூழ்ந்த அரணை உடைத்தாய் இருக்கிற இலங்கை ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படியாக எடுத்து விட்டு  அம்புகளை நடத்தின புண்டரீ காஷனான சர்வேஸ்வரனுக்கு அல்லது –ஆஸ்ரிதர்க்காக சாரத்தியம் பண்ணியும்-மார்விலே அம்பு ஏற்றும் உபகரிக்கும் அவனுக்கு அல்லது வேறு சிலர் விஷயமாக என்னுடைய ஹிருதயத்தில் தாழ்ச்சி பிறவாது –

சிங்கமதாய் அவுணன் திறலாகம் முன் கீண்டுகந்த
சங்க மிடத்தானைத் தழலாழி  வலத்தானைச்
செங்கமலத் தயனனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அங்கமலக் கண்ணனை அடியேன் கண்டு கொண்டேனே —(1598)-7-6-1-புண்டரீ காஷனான சர்வேஸ்வரனை –(தேவாதி ராஜனே இங்கே சேவை )அவ் ஊரில்  உள்ளார் உடைய ஜன்மமும் இன்றிக்கே ஸ்ரீ பிரகலதான் உடைய படியும் இன்றிக்கே இருக்கிற நான் கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –

திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா
உருவச் செஞ்சுடராழி வல்லானே உலகுண்ட ஒருவா திரு மார்பா
ஒருவருக்கு ஆற்றி உய்யும் வகை அன்றால் உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது
அருவித் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே —7-7-1-ஸ்வ வ்யதிரிக்தருடைய சம்பத்துக்கு நிதான பூதையான பிராட்டிக்கு சம்பத் ஆனவனே –அயர்வறும் அமரர்கள் அதிபதியே –புண்டரீகாஷனான சர்வேஸ்வரனே

உண்ணும் நாளில்லை உறக்கமும் தான் இல்லை
பெண்மையும் சால நிறைந்திலள்  பேதை தான்
கண்ணனூர் கண்ணபுரம் தொழுங்கார்க் கடல்
வண்ணர் மேல் எண்ணம் இவட்கு இது என் கொலோ —(1661) 8-2-4-கண்ணபுரம் தொழும் –
இது இவளுடைய தாரகம் – அது என்னம்புது -ஒருவரைத் தொழுதால் என்றால் தாரகம் ஆமோ -என்ன –கண்ணனூர் –-எல்லாம் கண்ணன் -என்கிற கிருஷ்ணன் அன்றோ உள்ளே நின்றான் –-பத்தாஞ்சலி புடா ஹ்ருஷ்டா -என்று இறே ஸ்வேத தீப வாசிகள் இருப்பது –தோற்றோம் -என்றும்-ஜிதம் –என்றும் –
அஞ்சலி மாறாதே இவர்கள் இருப்பது – அஞ்சலி மாறுவது சந்நிதி மாறில் இறே – அஞ்சலியால் சர்வ அவயவங்களும் புஷ்டமாய் இறே அவர்களுக்கு இருப்பது –

கண்ணனூர் கண்ணபுரம் தொழும் காரிகை
பெண்மையும் தன்னுடை யுண்மை யுரைக்கின்றாள்
வெண்ணெய் உண்டு ஆப்புண்டு வண்ணம் விளம்பினால்
வண்ணமும் பொன்னிறம் ஆவது ஒழியுமே —(1662)-8-2-5-அவனைத் தொழும் அளவன்றியே அவனூரைத் தொழும் இவளுக்கு என்ன பெண்மை -என்கிறாள் –ஸ்ரீ மதுரை -திருவாய்ப்பாடி -ஸ்ரீ மத் த்வாரகை -என்கிற இவை எல்லாம் கண்ணன் விண்ணூர் -என்கிற பரம பதத்தோபாதி கலவிருக்கை இறே –கலவிருக்கை -கொலு வைத்து -கொலு சாவடி -களைவது போல் -அங்கு எல்லாம் இருந்து தீர்த்தம் பிரசாதித்து போனானே-இங்கே 64 சதுர்யுகமாக நித்ய வாசம்-த்யக்த்யா வைகுண்டம்-ஸ்ரீ வைகுண்டம் விரக்த்யா ஸ்வாமி புஷ்கரணி தடம் போல் இங்கே தானே-கண்ணன் ஸ்வ பாவம் விட ஊரின் ஸ்வ பாவம் இருக்க ஓட்டவில்லையே 

வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலி யுருவில்
மீனாய் வந்து வியந்துய்யக் கொண்ட தண் தாமரைக் கண்ணன்
ஆனா வுருவிலானா யவனை யம்மா விளை வயலுள்
கானார் புறவில் கண்ண புரத்தடியேன் கண்டு கொண்டேனே —(1718)8-8-1-மத்ஸ்ய கமல லோசன -என்னக் கடவது இறே –

பெண்ணானாள் பேரிளம் கொங்கையின் ஆர் அழல் போல்
உண்ணா நஞ்சுண்டு உகந்தாரை யுகந்தேன் நான்
மண்ணாளா வாள் நெடும் கண்ணி மது மலராள்
கண்ணாளா கண்ண புரத் துறை யம்மானே —8-10-4-பொறை தானாய் இருக்கை–தான் பொறை யாளாய் இருக்கும் அளவன்றிக்கே-செய்த குற்றங்களை அவன் திரு உள்ளத்திலே படாத படி
ந கச்சின் ந அபராத்யதி –  என்று அவனையும் பொறுப்பிக்கும் அவள் ஆயிற்று – நோக்காலும் போக்யதையாலும் அவன் தன் வழியே போம்படி நியமிக்குமவள் ஆயிற்று – (கண்ணாளா -நோக்கு –மது மலராள் -போக்யதை )

தாம் மோர் உருட்டித் தயிர் நெய் விழுங்கிட்டுத்
தாமோ தவழ்வர் என்று ஆய்ச்சியர் தாம்பினால்
தாம் மோதரக் கையால்  ஆர்க்கத் தழும்பு இருந்த
தாமோதரா கொட்டாய் சப்பாணி தாமரைக் கண்ணனே சப்பாணி —(1890)-10-5-3-உடம்பிலே தழும்பு கிடைக்கையாலே தாமோதரன் என்னும் திரு நாமத்தை உடையவனே – எனக்கு கட்டலாம்படி பவ்யனான நீ இத்தையும் செய்யப் பாராய் –

காரார் புயல் கைக் கலி கன்றி மங்கையர் கோன்
பேராளன் நெஞ்சில் பிரியாது இடம் கொண்ட
சீராளா செந்தாமரைக் கண்ணா தண் துழாய்த்
தாராளா கொட்டாய் சப்பாணி தட மார்வா கொட்டாய் சப்பாணி –10-5-10-நம் ஆழ்வார் -சொல்லுமாறு அமைக்க வல்லேற்கு -(4-5-)-என்னா அநந்தரம் -யாவர் நிகர் -என்றாப் போலே கவி பாடப் பெற்ற ப்ரீதி பிரகர்ஷத்தாலே தாமே தம்மைப் புகழ்ந்தால் போலே பேராளன் -என்கிறார் -இவருடைய திரு உள்ளத்தை விட்டு பிரியாதே இங்கே நித்ய வாஸம் பண்ணுகையால் உள்ள சம்பத்தை  உடையனான இது – பிராட்டியை தனக்கு உடையனானதுக்கு மேலே ஒன்றாயிற்று -செந்தாமரைக் கண்ணா தண் துழாய்த் தாராளா -கொட்டாய் சப்பாணி தட மார்வா கொட்டாய் சப்பாணி- இவை எல்லாம் ஐஸ்வர்ய ஸூசகமாய் இருக்கிறது –இதுக்கு பல சுருதி சொல்லாமல் விட்டது தம்மை அறியாமை ( யசோதை பாவனையே பின்னாட்டி ) இவ் வனுபவம் தானே பிறருக்கும் பலமாய் இருக்கிறது –

அல்லிக் கமலக் கண்ணனை  யங்கோர் ஆய்ச்சி
எல்லிப் பொழுதூடிய ஊடல் திறத்தைக்
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை
சொல்லித் துதிப்பார் அவர் துக்கமிலரே–(1931)-10-8-10-அரை ஷணம் மாறி நிற்கில் கண்ணாஞ் சுழலை இடும்படியான நோக்கை உடையவன் –யங்கோர் ஆய்ச்சி –-அவன் தன்னை நூறு பட்டினி கொள்ளுமவள் ஆயிற்று –

வைத்தார் அடியார் மனத்தினில் வைத்து இன்பம்
உய்த்தார் ஒளி விசும்பில் ஓரடி வைத்து ஓரடிக்கும்
எய்த்தாது மண் யென்று இமையோர் தொழுது ஏத்தி
கைத் தாமரைக் குவிக்கும் கண்ணன் என் கண்ணனையே –(1977) 11-3-6-(கண்ணன் என் கண்ணனையே-ஸூகம் கொடுக்கும் கண்ணன் –-கிருஷ்ணன் -கிருஷி பூமி வாசக -நகன் -ஸூகம் கொடுக்கும் )

கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் கை வளைகள்
என்னோ கழன்ற விவை 
  யென்ன மாயங்கள்
பெண்ணானோம் பெண்மையோம்   நிற்க வவன் மேய
அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே –(1978) 11-3-7-அவன் ஹிருதயத்தில் நித்ய வாசம் பண்ணா நிற்கச் செய்தேயும் கையில் வளை கழலும் படி இருக்கிற நமக்கு –நம்முடைய விடாய்-அவனை ஹிருதயத்திலே வைத்து அனுசந்தித்து ஆனந்தித்தவர்கள் அளவன்றிக்கே இரா நின்றதி –

தூங்கார் பிறவிக்கள் இன்னம் புகப் பெய்து
வாங்காய் என்று சிந்தித்து நான் அதற்கு அஞ்சிப்
பாம்போடு ஒரு கூரையிலே  பயின்றாப் போலே
தாங்காது உள்ளம் தள்ளும் என் தாமரைக் கண்ணா -(2024)-11-8-3-ஆஜகாம -என்று இலங்கையில் பொருந்தாதே போனவன் தானே-பெருமாளாதானவாறே–விபீஷண விதேயம் ஹி -என்னலாம் படி அங்கே பொருந்தினான் இறே –

நந்தா நரகத்து அழுந்தா வகை நாளும்
எந்தாய் தொண்டர் ஆனவருக்கு இன்னருள் செய்வாய்
சந்தோகா தலைவனே தாமரைக் கண்ணா
அந்தோ அடியேற்கு அருளாய் யுன்னருளே —11-8-9-தலைமை பெற்று-உபாஸ்யன் ஆனவனுக்கு லஷணம் என் என்ன –-தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீக மேவ மஷிணீ-என்று சொல்லிற்று இறே –

திசையும் திசையுறு தெய்வமும் தெய்வத்
திசையும் கருமங்கள் எல்லாம் அசைவில் சீர்க்
கண்ணன் நெடுமால் கடல் கடைந்த காரோத
வண்ணன் படைத்த மயக்கு
–(2088) 7-ஒரு நாள் குறைந்து ஒரு நாள் நிறைந்து வரக் கடவது அன்றிக்கே
நித்தியமான கல்யாண குணங்களை யுடையவன் அல்லாதார் உடைய சீருக்கு அசைவுண்டு போலே –கண்ணன்--அந்த கல்யாண குணங்களாலே போந்து அவதரித்து கொண்டு ஸூலபன் ஆனவன்
தன்னை இதர சஜாதீயன் ஆக்குவதும் தன்னுடைய இச்சையாலே -என்றபடி –அன்றிக்கே
அசைவில் சீர்க் கண்ணன் –-தன்னை இதர சஜாதீயன் ஆக்கின இடத்திலும் அவனது அசைவில் சீர் -என்றுமாம்-இவன் தானே உயர வைத்துத் தரம் கொடுத்தாலும் அவர்களது அசையும் சீர் –நெடுமால்-
இப்படி ஸூலபன் ஆன இடத்திலும்-தன்னை அளவிட ஒண்ணாத படியான பெருமையை உடையவன்
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று ஒதப் படுமவன்-அன்றிக்கே ஆஸ்ரிதரை விட மாட்டாத பெரும் பிச்சன் -என்றுமாம் –

பேரே வரப் பிதற்ற லல்லால் எம்பெம்மானை
ஆரே யறிவார் அது நிற்க நேரே
கடிக்கமலத் துள்ளிருந்தும் காண்கிலான் கண்ண
னடிக் கமலம் தன்னை யயன் ––(2137) 56-
-சர்வேஸ்வரன் உடைய பரிமளத்தை யுடைத்தான-திரு நாபீ கமலத்திலே அவ்யவதாநேன பிறந்து அவ்விடம் தன்னையே இருப்பிடமாக யுடையனான சதுர்முகன் ஆனவன் இன்னம் திருவடிகளைக் காணப் பெற்றிலன் –கடற்கரையிலே குடில் கட்டி இருக்கும் காட்டில்
கடலைப் பரிச்சேதிக்க ஒண்ணுமோ-அபரிச்சேத்யம் என்று அறியில் அறியலாம்-அவன் பெரிய கிழாய் கிழாயனாய்-ப்ரஹ்ம விதாம் வர -யுத்த -120-3-என்னும் அவனான பின்பு அவன் தானே வரும்படி மறை காட்டும் இத்தனை போக்கி ஒருவரால் அறிந்ததே விடப் போமோ என்கிறார் –

கதையின் பெரும் பொருளும் கண்ணா நின் பேரே
இதையம் இருந்தவையே ஏத்தில்-கதையின்
திருமொழி யாய் நின்ற திருமாலே உன்னைப்
பரு மொழியால் காணப் பணி–(2245)-64-இதிஹாச புராணங்களில் நின்று பார்க்கச் சொல்லிற்றானது 
சர்வ ஸூ லபனான உன்னுடைய  குண சேஷ்டிதங்களுக்கு  வாசகமான திரு நாமங்களே –

மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியன் துழாய்க் கண்ணியனே -மேலாய்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன்
அளவன்றால் யானுடைய வன்பு –(2281)-100-சர்வாதிகனே -ஆஸ்ரித வ்யாமுக்தனே -என்றுமாம் -அபரிச்சேத்யனானவனே-வ்யாமோஹத்துக்கு எல்லை இல்லாதவனே -என்றுமாம் –-கீழ்ச் சொன்னவற்றின் கார்யம் -ஆஸ்ரித பவ்யனே -சர்வ நிர்வாஹகனே -என்னுதல்–

நாமம் பல சொல்லி நாராயணா வென்று
நாம் அங்கையால் தொழுது நன்னெஞ்சே வா மருவி
மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய்க்
கண்ணனையே காண்க நங்கண்    ——(2289_—8-பிரளயம் வரும் என்று ஏற்கவே கோலி
வயிற்றிலே வைத்துப் பேணி வெளிநாடு காண உமிழ்ந்து –போகய பூதனாய்-ஸூ லபனான கிருஷ்ணனையே-பூமியை அடங்க நோக்கும் ஸ்வ பாவனே யாகிலும்-விட ஒண்ணாத போக்யதை உடைய கிருஷ்ணனையே-அரியன செய்து நோக்கா விடிலும் விட ஒண்ணாத ஒப்பனையை யுடைய கிருஷ்ணனையே-நம் கண்கள் காண்பதாக விரும்பிக் காண வேணும்-

நின்ற பெருமானே நீரேற்று உலகெல்லாம்
சென்ற பெருமானே செங்கண்ணா -அன்று
துரக வாய் கீண்ட துழாய் முடியாய் நங்கள்
நரகவாய் கீண்டாயும் நீ —(2328)—–47-அவன் நீர் வார்த்த அநந்தரம் ஜகத் அடங்கலும் தானே யாம்படி அளந்து கொண்டான் ஆய்த்து உடையவன் என்று தோன்றும்படி நின்றவனே –இந்த்ரன் கார்யம் செய்து தலைக் கட்டுகையாலே உண்டான ப்ரீதி பிரகர்ஷத்தாலே சிவந்த திருக் கண்களை யுடையவனே –

கலந்து மணியிமைக்கும் கண்ணா நின்
மேனிமலர்ந்து மரகதமே காட்டும் -நலந்திகழும்
கொந்தின்வாய் வண்டறையும் தண்டுழாய்க்  கோமானை
அந்தி வான் காட்டுமது ————-87–கண்ணனே – கலந்து மணி இமைக்கும் நின் மேனியை மரகதமே மலர்ந்து காட்டா நின்றது –கிருஷ்ணனே – ஸ்ரீ கௌஸ்துபத்தின் உடைய சிவந்த தேஜஸ்ஸூம் ஸ்ரீ வத்ஸத்தின் உடைய கருத்த தேஜஸ்ஸூம் ஸ்யாமமான திரு நிறத்திலே விரவினவாறே – ஸ்யாமமான திரு நிறத்தைக் கொண்டு பிரகாசிக்கிற உன்னுடைய திரு மேனியை ஸ்ரமஹரமான மரகதத்தின் உடைய பிரபை விஸ்த்ருதமாய்க் கொண்டு ஸ்பஷ்டமாகக் காட்டா நின்றது –

கதைப் பொருள் தான் கண்ணன் திரு வயிற்றின் உள்ள
உதைப்பளவு போது போக்கின்றி -வதைப் பொருள் தான்
வாய்ந்த குணத்துப் படாதது அடைமினோ
ஆய்ந்த குணத்தான் அடி- (2413) 32-சாஸ்த்ரங்களால் சொல்லப்பட்ட தேவ திர்யகாதிகளான ஆத்மாக்கள் எல்லாம் ஒரு ஷண காலமும் ஒழியாமே- எப்போதும் சத்தை பெற்றுச் செல்லுகிறது அவனுடைய சங்கல்ப்பத்தாலே –

கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ
மாற்றமும் சாரா வகை யறிந்தேன் -ஆற்றங்
கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன்
உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு –(2431) 50-
திருக் கபிஸ்தலத்திலே காவேரி தீரத்திலே கண் வளர்ந்து அருளுகிற அனுக்ரஹ சீலனான கிருஷ்ணன் யுடைய உக்தியான உத்தம ஸ்லோகார்த்தம் என் ஹிருதயத்திலே கிடந்தது – திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற ஆச்சர்ய பூதனான அவனுடைய திருநாமங்கள் -என்றுமாம் –

விரைந்து அடைமின் மேலொருநாள் வெள்ளம் பரக்க
கரந்து உலகம் காத்து அளித்த கண்ணன் –பரந்து உலகம்
பாடின வாடின கேட்டு படு நரகம்
வீடின வாசற் கதவு–(2461) -80-—பண்டு ஒரு நாள் பிரளயமாகத் திரு வயிற்றிலே வைத்து லோகத்தைக் காத்து ரஷித்த கிருஷ்ணன் யுடைய லோகங்கள் ஆனவை பரந்து-திரு நாமங்களை பாடி யாடிற்றன –
பிறர் சொல்லக் கேட்டு பாதகமான நரகத்தில் வாசல் கதவுகள் பாதிர் இல்லாமையால் திறக்கவும் அடைக்கவும் தவிர்ந்தன –

பிதிரும் மனம் இலேன் பிஞ்ஞகன் தன்னோடு
எதிர்வன் அவன் எனக்கு நேரான் -அதிரும்
கழற் கால மன்னனையே கண்ணனையே நாளும்
தொழும் காதல் பூண்டேன் தொழில் –(2465) 84-ஞானத்தில் ருத்ரன் தன்னோடு ஒப்பான்
அவ்வளவே அன்று -ஆசையில் அவன் என்னோடு ஒவ்வான் –-ஆஸ்ரித விரோதி நிரசன த்துக்கு வீரக் கழல் இடுவதும் செய்து அச் செயலாலே என்னை அடிமை கொண்ட-ஸ்ரீ கிருஷ்ணனை-என்றும் தொழுகைக்கு ஈடான காதலே தொழிலாக ஏறிட்டுக் கொண்டேன் –

காப்பு மறந்தறியேன் கண்ணனே என்று இருப்பன்
ஆப்பு ஆங்கு ஒழியவும் பல் உயிர் க்கும் –ஆக்கை
கொடுத்தளித்த கோனே குணப்பரனே உன்னை
விடத் துணியார் மெய் தெளிந்தார் தாம்-(2474)-93-இவ்வாத்மாவுக்கு என்றும் உன்னுடைய ரஷையை மறந்து அறியேன் –கிருஷ்ணனே ப்ராப்ய ப்ராபகன் என்று இருப்பேன் -என்றுமாம்

செழு நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப சேயரிக் கண்
அழுநீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ
முழுநீர்  முகில் வண்ணன் கண்ணன் விண்ணாட்டவர்
மூதுவராம்
தொழுநீர் இணையடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே —(2479)-2-இக் கடலைத் தரையாக பருகின மேகம் இருந்தபடி-இவ்வடிவு உடையானும் தானேயாய் வருவானும் தானேயாய் இருக்கிறபடி – மேகம் ஜலம் இரண்டாய்  இன்றிக்கே ஜலமாகவே இருக்கை –கண்ணன்-பவ்யதா உச்யதே-எடுக்கவும் கட்டவும் அடிக்கவும் ஆஸ்ரித பரதந்த்ரனானவன்–அம் முகில் போலே ஆகாச வர்த்தியாய் எட்டாதே இருக்கை இன்றிக்கே பூமியிலே கால் தாழ்ந்து ஸூலபனானவனுடைய-கிருபா மயனானவனுடைய-

அரியன யாமின்று காண்கின்றன கண்ணன் விண்ணனையாய்
பெரியன காதம் பொருட்கோ பிரிவென ஞாலம் எய்தற்
குரியன வொண் முத்தும் பைம் பொன்னுமேந்தி ஒரோ குடங்கைப்
பெரியன கெண்டைக் குலம் இவையோ வந்து பேர்கின்றவே —(2488)-11-கண்ணன் விண்ணனையாய்
கிருஷ்ணனுடைய பரமபதம் போலே நிரதிசய போக்ய பூதை யானவளே (கண்ணனுக்கு அடங்கிய சரக்கு அனைத்தும் தானே )

பேர்கின்றது மணியாமை  பிறங்கி யள்ளல் பயலை
ஊர்கின்றது கங்குலூழிகளே இதெல்லா மினவே
ஈர்க்கின்ற சக்கரத் தெம்பெருமான் கண்ணன் தண்ணம் துழாய்
சார்கின்ற நன்னெஞ்சினார் தந்து போன தனி வளமே
—(2489)-12–ஆஸ்ரித விரோதிகளை அழியச் செய்யும்படியான திருவாழியைக் காட்டி என்னை எழுதிக் கொண்டு எனக்கு பவ்யனான கிருஷ்ணனுடைய-

பல பல ஊழி கள் ஆயிடும் அன்றியோர் நாழிகையை
பல பல கூறு இட்ட கூறாயிடும் கண்ணன் விண் அனையாய்
பல பல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்
பல பல சூழல் உடைத்து அம்ம வாழி இப்பாய் இருளே–16–அகால கால்யமான கிருஷ்ணனுடைய பரமபதம் போலே நித்ய அபிமதை யானவளே-விண் அனையாய் -என்று-க்ஷண அணுவத் ஷிப்த பராதி காலயா -ஸ்தோத்ர ரத்னம் —அனுபவ தசையில் காலம் அத்யல்ப மாம்படியை ஸூ சிப்பிக்கிறது-

கடல் கொண்டு எழுந்தது வானம் அவ் வானத்தை அன்றி சென்று
கடல் கொண்டு ஒழிந்த அதனால் இது கண்ணன் மண்ணும் விண்ணும்
கடல் கொண்டு எழுத்த அக் காலம் கொலோ புயல் காலம் கொலோ

கடல் கொண்ட கண்ணீர் அருவி செய்யா நிற்கும் காரிகையே –18-கிருஷ்ணனுடைய த்யாவா பிருத்விகளை பிரளய ஆர்ணவம் கொண்டு கிளர்ந்த காலமோ-

புனமோ புனத் தயலே வழி போகும் அரு வினையேன்
மனமோ மகளிர் நும் காவல் சொல்லீர் புண்டரீகத்து அம் கேழ்
வனமோர் அனைய கண்ணான் கண்ணன் வானாடு அமரும் தெய்வத்
தினம் ஓர் அனையீர் களாய், இவையோ நும் இயல்வுகளே
 –23-புண்டரீகத்துடைய அழகிய செறிவை யுடைத்தான காட்டுடனே போலிமை சொல்லும்படி வி லக்ஷணமான கண்களை யுடைய –

எம்கோல் வளை முதலா கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும்
செம்கோல் வளைவு விளைவிக்குமால்
திறல் சேர் அமரர்
தம் கோன் உடைய தம் கோன் உம்பர் எல்லா யவர்க்கும் தம் கோன்
நம் கோன் உகக்கும் துழாய் என் செய்யாது இனி நால் நிலத்தே –25-சர்வேஸ்வரன் உடைய மண்ணையும் விண்ணையும் ரஷியா நின்ற வாஞ்ஜையை பக்னம் ஆக்கா நின்றது-ஸர்வ ஸூலபமான கிருஷ்ணன் லீலா விபூதியையும் நித்ய விபூதியையும் நிர்வஹிக்கிற அபங்குரையான ஆஜ்ஜைக்கு வளைவை யுண்டாக்கா நின்றது-

நானிலம் வாய் கொண்டு நன்னீர் அற மென்று கோது கொண்ட
வேனிலம் செல்வன் சுவைத் துமிழ் பாலை கடந்த பொன்னே
கானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெக்காவுதம்
பூம்தேன் அலம் சோலை  அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே  —-26–ஆஸ்ரித ஸுலப்யத்தாலே-சொன்ன வண்ணம் செய்வார் -என்ற திருநாமமான கிருஷ்ணனுடைய திரு வெக்காவானது அடுத்து அணித்தாயிற்று-

சேமம் செம் கோன் அருளே செருவாரும் நட்பாகுவர் என்று
ஏமம் பெற வையம் சொல்லும் ,மெய்யே பண்டு எல்லாம் மறை கூய்
யாமங்கள் தோறும் எரி வீசும் நம் கண்ணன் அம் தண் அம் துழாய்
தாமம் புனைய ,அவ் வாடை ஈதோ வந்து  தண் என்றதே
 –27–துயில் அமர்ந்த வேந்தின் பாடே நின்றும் பிரசாதம் வந்தது போலே காணும்–வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே –அழகியதாய் ஸ்ரமஹரமான திரு துழாய் மாலையை ஸ்பர்சிக்க —சர்வாங்க சம்பந்தமாக கலக்க வேண்டா–ஸ்பர்சிக்கவே அமையும்–நமக்கு ஸூ லபனாய்ப் புகுந்து கலந்த கிருஷ்ணனுடைய அழகிய குளிர்ந்த திருத்துழாய் மாலையைச் சூட–அவ்வாடை நாம் அறியும்படி வந்து இப்பொழுது சீதளமாய் இரா நின்றது என்று தலைவி ஆற்றாமை தீரத் தலை மகன் இரவிடத்துக் கலந்தமை தோற்றுவித்ததாயிற்று –

அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன்
முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,கண்ணன் வைகுந்தனோடு
என் நெஞ்சினாரைக் கண்டால் என்னைச் சொல்லி
அவர் இடை நீர்
இன்னும் செல்லீரோ இதுவோ தகவு என்று இசைமின்களே –30–ஸுலப்யத்தை முன்னம் காட்டி என் மனசைக் கவர்ந்து கொண்டு-பரத்வத்தால் என்னை இன்று அளவும் வந்து கலவாது நிற்பவன் இடம் என் மனம் வீணே சென்று சேர்ந்து அலைகிறதே – அவனைக் கண்டாலும் காணலாம் –அந்தரங்க பரிவாரங்களில் ஒன்றாக கலந்த நெஞ்சைக் காண்பது அரிதே-வைகுந்தனோடு-என் நெஞ்சினாரை கண்டால் என்கிறார்-

கொடும் காற் சிலையர் நிரை  கோள் உழவர்  கொலையில் வெய்ய
கடுங்கா விளைஞர் துடி படுங்கவ் வைத்து அருவினையேன்
நெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற
தொடுங்கால்  ஓசியும்   இடை இள மான் சென்ற சூழ் கடமே –37–சடக்கென்று –சக்ருத் பிரபத்தியும் பொறாததை கிடீர் நான் தீர்க்க காலம் உபாசித்தது –தேவகியாரைப் போலே அநந்த வ்ரதம் அனுஷ்டித்து கிடீர் –தன்னையும் அறியாதே தன்னை பெறப் பட்ட அருமையும் அறியாதே கிடீர் போயிற்று –

திரிகின்றது வடமாருதம் திங்கள் வெந்தீ முகத்து
சொரிகின்றது அதுவுமது ,கண்ணன் விண்ணூர் தொழவே
சரிகின்றது சங்கம்
தண்ணம் துழாய்க்கு  வண்ணம் பயலை
விரிகின்றது முழு மெய்யும் என்னாம் கொல் என் மெல்லியற்கே –(2524) 47–அவதரித்து ஸூலபனான இது தான் காதா சித்கதம் ஆகையாலே -என்றும் ஒக்க ஓர்  இருப்பேயாய் காட்சி கொடுக்கிற
(கண்ணன் காதா சித்கதம் -விண்ணூர் என்றும் ஒக்க ஓர்  இருப்பேயாய் காட்சி கொடுக்கிற) கண்ணன் விண்ணூர் –ராகவஸ்ய நிவேசனே -ஸூந்தர காண்டம் – 33-7 – ஸ்ரீ ராமனுடைய அரண்மனையில் -என்னுமா போலே –(மானுஷன் லோகான் -ராகவஸ்ய வீட்டில் போல் இங்கும் கண்ணன் விண்ணூர் ) 

புலக் குண்டலப் புண்டரீகத்த போர்க் கெண்டை வல்லி யொன்றால்
விலக்குண்டுலாகின்று வேல் விழிக்கின்றன கண்ணன் கையால்
மலக்குண்டமுதம் சுரந்த மறி கடல் போன்றவற்றால்
கலக்குண்ட நான்று கண்டார் எம்மை யாரும் கழறலரே  – -57–ஒரு மகா பாஹுவான கிருஷ்ணன் கையாலே கடல்(ஆயிரம் கையால்; அலை கடல் கடைந்து தாள்கள் ஆயிரத்தாய் இத்யாதி ) கீழ் மண் கொண்டு மேல் மண் எறியும் படி-மறுகக் கடை யுண்டு –தன் நல் ஜீவனான அம்ருதத்தை காட்டிக் கொடுத்த கிளர்ந்த-கடல் போலே ஆயிற்று – இவன் காம்பீர்யம் அடைய விழுந்து நின்ற படி –மறி கடல் போன்று -என்னுதல்-மறி கடல் போன்றவற்றால் -என்று கண்களுக்கு விசேஷம் ஆதல்–அவள் நோக்கினவாறே இவனும் எதிரே நோக்கும் இறே-அந் நோக்கிலே தான் ஈடுபட்டு தன் அக வாயில் ஈடுபாடு எல்லாம் தன் கண்ணுக்குளே தோற்றும்படி நின்றாளாய்  –அவற்றை நினைக்கிறான் –

கழல் தலம் ஒன்றே நில முழு தாயிற்று ஒரு கழல் போய்
நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட வண்டத்து
உழறலர் ஞான சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லா
அழறலர் தாமரைக் கண்ணன் என்னோ விங்களக்கின்றதே
 – 58–இந்த ஆனந்தத்துக்குப் ப்ரகாசகமான கண்ணழகை யுடையவன்-அழறு என்று அளறு நீரிலும் சேற்றிலும் நின்று வளர்ந்து செவ்வி மாறாத தாமரை போன்ற கண்ணை யுடையவன் என்றபடி-

வண்ணம் சிவந்துள வானாடமரும் குளிர் விழிய
தண் மென் கமலத்தடம் போல் பொலிந்தன தாமிவையோ
கண்ணன் திருமால் திருமுகம் தன்னோடும் காதல் செய்தேற்கு
எண்ணம் புகுந்து அடியேனோடு இக்காலம் இருக்கின்றதே 
— 63–பெண் பிறந்ததற்கு பவ்யனானவன்(சுவையன் திருவின் மணாளன் )திருமால்— நாரீணாம் உத்தமையான பிராட்டிக்குப் பிச்சனாவான்–

என்னின் மிகு புகழார் யாவரே பின்னையும் மற்று
எண்ணில் மிகு புகழேன் யான் அல்லால் –என்ன
கருஞ்சோதிக் கண்ணன் கடல் புரையும் சீலப்
பெருஞ்சோதிக் கென்னஞ்சாள் பெற்று -4–தன் வடிவை எனக்கு சர்வ ஸ்வ தானம் பண்ணி
ஸூலபனாய்-அளவிறந்த சீலத்தை யுடைய ஸர்வேஸ்வரனுக்கு அதிசயத்தைப் பண்ணப் பெற்று இருக்கிற என்னில் காட்டில் மிக்க புகழை யுடையார் யார் –(ஈசன் வானவருக்கு –நீசனேன் நிறை ஒன்றுமிலேன் என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர் சோதிக்கே-இங்கு சீலம் காட்டிய பரஞ்சோதி )

நீ யன்றே ஆழ் துயரில் வீழ்விப்பான் நின்று உழன்றாய்
போ என்று சொல்லி என் போ நெஞ்சே -நீ என்றும்
காழ்ந்து உபதேசம் தரினும் கைக் கொள்ளாய் கண்ணன் தாள்
வாழ்த்துவதே கண்டாய் வழக்கு–12-
-ஆகில் இனிச் செய்வது என் என்று நெஞ்சு கேட்க-அவன் ஆபி முக்யம் பண்ணி நிற்க-நாம் வைமுக்யம் பண்ணலாகாது காண்-அவன் திருவடிகளுக்கு மங்களா ஸாஸனம் பண்ணுகை நியாயம் (அவனுடைய ஸுலப்யம் பரத்வம் அனைத்துக்கும் பல்லாண்டு பாடுவதே கர்தவ்யம்

நெறி காட்டி நீக்குதியோ நின் பால் கருமா
முறி மேனி காட்டுதியோ மேனாள் அறியோமை
என் செய்வான் எண்ணினாய் கண்ணனே ஈதுரையாய்
என் செய்தால் என் படோம் யாம் —(2590)-6-மந் மநா பவ -(9-34/-18-65 )என்னப் பார்த்தாயோ-மாம் ஏகம் சரணம் வ்ரஜ (18-68)–என்னப் பார்த்தாயோ-மயர்வற மதி நலம் முதலிய நன்மைகளைப் பண்ணினோமே என்ன –மாஸூச -என்று சொல்லுகையாம் இறே (ஸூலபனான உன்னைத் தானே நிர்பந்திக்க முடியும் )

ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை
ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே -சீரார்
மனத் தலை வன் துன்பத்தை மாற்றினேன் வானோர்
இனத் தலைவன் கண்ணனால் யான் —
(2609)-25-நித்ய ஸூரிகளுக்குத் தலைவனாய் வைத்துத்
தன்னை இதர சஜாதீயனாக்கி-ஸூலபனான கிருஷ்ணனாலே பகவத் சம்பந்தம் ஆகிற ஐஸ்வர்யத்தை யுடைத்தான மனஸ்ஸிலே தலையிலே கிடக்கிற ஸம்ஸார துக்கத்தை மாற்றினேன் எல்லாரையும் நம்மாலே திருத்தப் போமோ என்கிறார் –

அவனாம் இவனாம் உவனாம் மற்று உம்பர்
அவனாம் அவன் என்று இராதே -அவனாம்
அவனே எனத் தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால்
அவனே எவனேலுமாம் —36-ஆஸ்ரித பாரதந்தர்யமே அவனுக்கு ஸ்வரூபம் என்று தெளிந்து
ஸூலபனான கிருஷ்ணனுக்கே அற்றால்-யஸ்ய மந்த்ரீ ச கோப்தா ச ஸூஹ்ருச்சைவ ஜனார்தன -என்னும்படியே இவனுக்கு எல்லாப்படியும் ரக்ஷகனாம்

அதுவோ நன்று என்று அங்கு அமருலகோ வேண்டில்
அதுவோர் பொருள் இல்லை அன்றே அது ஒழிந்து
மண்ணின் நின்று ஆள்வேன் எனினும் கூடும் மட நெஞ்சே
கண்ணன் தாள் வாழ்த்துவதே கல்– (2651) -67-–ஸூலபனானவனுடைய திருவடிகளைக் கற்றாகிலும் வாழ்த்தப் பார்-அவன் உபய விபூதியும் தந்தாலும்-நீ அத்தை விட்டு அவனை மங்களா ஸாஸனம் பண்ணிப் போது போக்குவதையே கல் என்றபடி –(உபய விபூதி அனுபவமும் வேண்டாம் திருநாம சங்கீர்த்தனமே – இச்சுவை இங்கே இருக்க -அச்சுவை பெறினும் வேண்டா என்கிறார் )

தங்கா முயற்றிய வாய்த் தாழ் விசும்பின் மீது பாய்ந்து
எங்கே புக்கு எத் தவம் செய்திட்டன கொல் -பொங்கோதத்
தண்ணம் பால் வேலை வாய்க் கண் வளரும் என்னுடைய
கண்ணன் பால் நல் திறம் கொள் கார்–85-கிளர்ந்த திரையை யுடைத்தாய்க் குளிர்ந்து இருந்த திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற என் கண்ணனுடைய விலக்ஷண நிறத்தைக் கொள்ளுகிற மேகங்கள் எவ்விடத்தே புக்கு என்ன தபஸ்ஸூ பண்ணிற்றினவோ-தனக்கு என்று இல்லாமல் பர உபகாரார்த்தமாகவே இருப்பதால் தபஸ்ஸில் ஸ்வ அர்த்தம் இல்லையே-

கண மங்கை –கண்கள் ஆரளவும் நின்று கண்டு கொண்டேன் -என்று நான் சொன்னேன் இ றே-
அங்கன் சொன்னது அவனைப் பேணினேன் இத்தனை –-நான் கண்ணாரக் கண்டேனோ இல்லையோ என்று என் வடிவைக் காட்டுகிறேன் –காரார் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம் –(2707)- பரம பதத்தை விட்டுக் குறைவாளர்க்கு முகம் கொடுக்கத் திரு விண்ணகரிலே வந்தான்-தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தனதாள் நிழல் – என்று பிரசித்தம் இறே –குறைவாட்டியாய் இருக்கிற எனக்கு முகம் தந்தானோ இல்லையோ -என்று என் வடிவைக் காட்டுகிறேன் –சீரார் கணபுரம்- கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ-என்று நான் தனக்கு அனன்யார்ஹை யாகத் தாலி கட்டி இருக்க அங்கே சென்று என்னைத் தனக்குப் புறம்பாக்கின படி பாருங்கோள்-என்று என் வடிவைக் காட்டுகிறேன் –

நான் வணங்கும் கண்ணனைக் கண்ணபுரத் தானைத் –(2784)-கண்ணபுரம் ஒன்றுடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ –பெரிய திருமொழி -8-9-3-என்னும்படி அனந்யார்ஹை யாக்கின வடிவைக் கொண்டு நின்று அருளினவனை –

சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரிய நற்
காமமும் என்றிவை நான்கென்பர் நான்கினும் கண்ணனுக்கே
யாமது காமம் அறம் பொருள் வீடி தற்கென்று உரைத்தான்

வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண் மிசையே -40 – –வகுத்த சேஷியாய் -சுலபனான சர்வேச்வரனுடைய சம்ச்லேஷத்தை அபேஷிக்கும்படியான காமம் பிரதான புருஷார்தமாய் இருக்கும் –
அதிலே சுவார்த்தை யாகிற அஹங்காரத்தை-தவிர்த்து -அவனுடைய முக மலர்த்தியை உத்தேசித்து பண்ணும் –பகவத் சம்ச்லேஷமே பிரதான புருஷார்த்தம் என்றபடி –-கண்ணனுக்கே –-என்கிற அவதாரணத்தாலே –தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே –என்றும் –உற்றோமே யாம் உனக்கே நாம் ஆட் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று -என்கிறபடியே அத்யவசிக்க வேண்டும் -என்றபடி –

அளவியின்ற வேழுலகத்தவர் பெருமான் கண்ணனை
வளவயல் சூழ் வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்துரைத்த
அளவியன்ற வந்தாதி யாயிரத்துள் இப்பத்தின்
வளவுரையால் பெறலாகும் வானோங்கு பெரு வளமே –(2942)-1-4-11-கண்ணனை-இவ்வளவில் முகம் காட்டிற்று இலன் -என்ற குறை தீருகையாலே ஆஸ்ரித ஸூலபனானவன்-பத்துடை அடியவரில் கிருஷ்ணாவதாரத்தில் அனுபவிக்கப் பார்த்து அது கிடையாமையாலே தூது விட்டார் ஆகையாலே
இங்கு முகம் காட்டின கிருஷ்ணன் என்னவுமாம் –

அடியேன் சிறிய ஞானத்தன் அறிதலார்க்கும் அரியானை
கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை
செடியார் ராக்கை யடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கதோர் அயர்வுண்டே 
–(2949)-1-5-7-சர்வாதிக வஸ்துவுக்கு அடையாளம் இருக்கிறபடி-சர்வ கந்த -என்கிற விஷயம் ஆகையாலே பரிமளம் அலை எறியா நிற்கும் திரு மேனியில் குளிர்த்தியாலே செவ்வி மாறாதே இருக்கும்-இப்படி இருக்கிற திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதன் ஆனவனை-கண்ணனை-அறிவரிதான நிலை தான் அவதரித்து நின்ற இடத்திலே கடல் கிட்டிற்று என்றால் பரிச்சேதிக்கலாமோ- மனுஷ்யத்வே பரத்வம் இருக்கிற படி
அன்றிக்கே ஐஸ்வர்யத்தாலே எட்டாது இருக்குமோ என்னில் ஆஸ்ரிதற்கு ஸூ லபனாய் இருக்கும் என்னவுமாம் –

அம்மானாய்ப் பின்னும் எம்மாண்பும் ஆனான்
வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணனே –(2977)-1-8-2-அநாயாசேன பிளந்த ப்ரீதியாலே சிவந்து மலர்ந்த திருக் கண்களை உடையவனை-அம்மானாய் வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணன் எம் மாண்பும் ஆனான் –

கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு
தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே –1-8-3-சம்சாரிகளோடு நித்ய ஸூரிகளோடு வாசி இல்லை –அரை க்ஷணம் தங்கள் கார்யம் நிர்வஹித்துக் கொள்ள மாட்டாமைக்கு-கண்ணாவான்-கண்ணாகைக்காக என்னுதல்-கண்ணாம் அவன் என்னுதல்-கண் -என்று நிர்வாஹகன் –-சஷூர் தேவா நாம் உதமர்த்தயா நாம் -என்கிற ஸ்ருதி அர்த்தத்தின் படியே சொல்கிறார்

அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நன்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொருசிறைப் புள்ளுவந்தேறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே –(2989) -1-9-3–அகவாயில் தண்ணளிக்கு பிரகாசகமாய் இருக்கும் திருக் கண்களை உடையவன் –

உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண் மகள் ஆயர்
மடமகள் என்று இவர் மூவர் ஆளும் உலகமும் மூன்றே
உடன் அவை ஒக்க விழுங்கி யாலிலைச் சேர்ந்தவன் எம்மான்
கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் என் ஒக்கலையானே –1-9-4—இவ்வாச்சர்யங்கள் எல்லாம் தன் பக்கலிலே காணலாம் படி இருக்கிற கிருஷ்ணன்-யசோதை பிராட்டி ஓக்கலையிலே இருக்குமா போலே என் ஓக்கலையிலே இருந்தான் –

நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே
பூவியில் நால் தடம் தோளன் பொரு படை யாழி சங்கேந்தும்
காவி நன் மேனிக் கமலக் கண்ணன் என் கண்ணினுள் உளானே –1-9-8–புண்டரீகாக்ஷனான சர்வேஸ்வரன்-என் கண்ணினுள் உளானே–என் கண்ணுக்கு உள்ளே புகுந்தான் -என்னுதல்-கண்ணுக்கு விஷயமானான் என்னுதல் –

கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே
அமலங்களாக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி
கமலத்தயன் நம்பி தன்னைக் கண்ணுத லானொடும் தோற்றி
அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி என் நெற்றி உளானே –1-9-9–புண்டரீகாக்ஷனான சர்வேஸ்வரன் என் கண்ணுக்கு விஷயம் ஆனான் –-ந மாம்ஸ சஷூர் அபி வீக்ஷ தேதம் ந சஷூஷா பஸ்யதி-என்கிற மரியாதை குலைந்தது-காண்பன் – நானும் அவனைக் காணா நின்றேன் காண்பன் -என்கிற இடம் வர்த்தமானம்-நீர் காண வல்லீர் யாயிற்று -எத்தாலே என்னில்-அவன் கண்களாலே -அமலங்களாக விழிக்கும் –

எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனை
கொம்பராவு நுண்ணேரிடை மார்பனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே –(3000)-1-10-3-பிரயோஜன நிரபேஷமாக புகழுகிறார் -என்று உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணாலே குளிர நோக்கினான்-

மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர்
அணியை தென் குருகூர்ச் சடகோபன் சொல்
பணி செய் ஆயிரத்துள் இவை பத்துடன்
தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே –(3008)-1-10-11-தனக்கு முடிந்து ஆளலாம் படி ஸூ லெபனான் படியைச் சொல்லுகிறார் –-வானவர் கண்ணனைத்–நித்ய ஸூ ரிகளுக்கு நிர்வாஹகானான மேன்மையை உடையவனை-தன்னதோர் -அணியை – தனக்குத் தானே ஆபரணமாக அழகை உடையவனை

திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்
கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே – (3020) -2-2-1-நம்-கண்ணன்-என்று –க்ருஷ்ண ஏவ ஹி லோகா நாம் உத்பத்திரபிசாப்ய -க்ருஷ்ண ஸ்யஹிக்ரு தேபூத மிதம் விஸ்வம் சராசரம் -என்கிற பிராமண ப்ரஸித்தியைச் சொல்லுகிறது-நம் -என்று அத்தை நமக்கு பிரகாசிப்பித்தவன்-கண் –த்ருஷ்ட்டி -நிர்வாஹகன் –-களை கண் -என்று நிர்வாஹகரை சொல்லக் கடவது இறே-அல்லது இல்லையோர் கண்ணே–வேறு ஒரு த்ருஷ்ட்டி இல்லை -அர்த்தம் இன்றிக்கே -பீலிக் கண் -மாலைக் கண் -என்னுமா போலே-யுக்தி மாத்ரமாக இருப்பது ஓன்று இல்லை-கண்ணன் கண் -என்றது அன்வயத்தாலே-அல்லது இல்லையோர் கண் – என்றது வியதி ரேகத்தாலே-இல்லையோர் கண் -இது திண்ணம் –

தகும் சீர்த் தனி முதலினுள்ளே
மிகும் தேவும் எப்பொருளும் படைக்க
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்
மிகும் சோதி மேலறிவார் யவரே –2-2-5-தகும் என்னும் இடத்தை ஸ்பஷ்டம் ஆக்குவதாய் -ரக்ஷகத்வம் இல்லையே யானாலும் விடப் போகாதபடி தர்ச நீயமான-அக் கண் அழகாலே என்னை ஜிதம் என்னப் பண்ணினவன் –-யதா கப்யாசம் புண்டரீக ஏவம் அஷிணி-ராம கமல பத்ராஷ

முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே
பன்னலார் பயிலும் பரனே பவித்திரனே
கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா
நின்னலால் இலேன் காண் என்னை நீ குறிக்கொள்ளே–(3037) -2-3-7-கன்னலே–நிரதிசய போக்யமானவனே -அமுதே–போன உயிரை மீட்க வற்றாகை-கார் முகிலே–பிரயோஜன நிரபேஷமாக கொடுக்கை-என் கண்ணா-எனக்கு உன்னைத் தந்தவனே நின்னலால் இலேன் காண் –
உன்னை ஒழிய ரக்ஷகரை உடையேன் அல்லேன் என்னுதல்-உன்னை ஒழிய தரிக்க மாட்டேன் என்னுதல்-என்னை –-வை தர்மயம் நேஹா வித்யதே -என்று தம்மைக் காட்டுகிறார்-நீ குறிக்கொள்ளே–
திரு உள்ளம் பற்ற வேணும் –

கடிவார் தண்ணம் துழாய்க் கண்ணன் விண்ணவர் பெருமான்
படிவானம் இறந்த பரமன் பவித்ரன் சீர்
செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்தாடி
அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே –(3039) –2-3-9-திரு மேனியில் ஸ்பர்சத்தாலே பிறந்த மது தாரைகளை உடைத்தான திருத் துழாயாலே அலங்க்ருதனான கிருஷ்ணன்-கடி என்று பரிமளமாய்-வார் என்று மிகுதியாகவுமாம் –கடி என்று புதுமையாய் -செவ்வி மிக்க என்னவுமாம் –

உள்ளுளாவி உலர்ந்து உலர்ந்து என்
வள்ளலே கண்ணனே என்னும் பின்னும்
வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும் என்
கள்வி தான் பட்ட வஞ்சனையே –(3048)-2-4-7-தனக்கு தாரகமாக அவனுடைய உதார பவ்யத்தைகளை சொல்லா நின்றாள் – அதி பிராவண்யம் ஆகாது என்று ஜனனி சொன்ன ஹிதமும் நெஞ்சில் படாத படி என்னை அநன்யார்ஹை ஆக்கினவனே-அவ்வளவு அன்றிக்கே உன்னை எனக்கு கையாளாக தந்தவனே

ஆராவமுதமாய் யல்லாவி யுள் கலந்த
காரார் கரு முகில் போல் என்னம்மான் கண்ணனுக்கு
நேராவாய் செம்பவளம் கண் பாதம் கை கமலம்
பேரார நீண் முடி நாண் பின்னும் இழை பலவே –(3057)-2-5-5–என்னோட்டை கலவி பெறாப் பேறு-என்னும் இடம் வடிவிலே தோற்ற இரா நின்றான் தனக்கு நிறக் கேடாம் படி இ றே என்னோட்டைக் கலவி இருப்பது கார் காலத்தில் ஆர்ந்த மேகம் –தன் காலத்தில் காள மேகம்-என்னம்மான் கண்ணனுக்கு
அவ் வடிவைக் காட்டி முறையை உணர்த்திய கிருஷ்ணனுக்கு

சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற் பின்
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் துளக்கற்ற அமுதமாய் எங்கும்
பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே
–(3065)-2-6-2-பிராட்டி பின்னே வந்து அணைத்தாலும் விலங்கப் பார்க்கிறிலன் –-இங்கே ஆளவந்தாருக்கு குருகைக் காவல் அப்பன் அருளிச் செய்த வார்த்தை-என் பைந்தாமரைக் கண்ணனே–ஆடியாடியிலே ஆற்றாமையால் வந்த தாபம் தீர்ந்து திருக் கண்களும் குளிர்ந்த படி

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை துழாய் விரைப்
பூ மருவி கண்ணி எம்பிரானைப் பொன் மலையை
நாம் மருவி நன்கேத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட நா வலர்
பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே –2-6-3-ஒரு கால் நோக்கினால் நித்ய ஸூ ரிகள் ஜ்வர சந்நிபதரைப் போலே அடைவு கெடக் கூப்பிடுவார்கள் ஆயிற்று-தலைமகனை – இப்படிக்கு கூப்பிடா நின்றாலும் -நிரவத்ய பர ப்ராப்தே-என்கிறபடியே அவ்வருகாய் இருக்கும்-துழாய் விரைப்-பூ மருவி கண்ணி எம்பிரானைப்–அவர்களைக் கண்ணாலே தோற்ப்பித்தான்-என்னைத் தோளில் மாலையால் தோற்ப்பித்தான் –

கண்னித் தண்ணம் துழாய் முடிக் கமலத் தடம் பெரும் கண்ணனைப் புகழ்
நண்ணித் தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன
எண்ணில் சோர்வில் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையோடும்
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே -(3074)-–2-6-11-இவர் நம்மை விடில் செய்வது என் என்று அவனுக்கு ஓடின அதி சங்கை தீருகையாலே பிறந்த செவ்வியைச் சொல்லுகிறது –-வைத்த வளையமும் செவ்வி பெற்று இருக்கிற கண்களும் விகசித்தம் யாயிற்று

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே– (3075) -2-7-1-ஈசன் –-சர்வ நியாந்தாவானவன்
என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன்-அந்த சாமான்ய ரக்ஷகம் அன்றிக்கே தன வடிவு அழகை எனக்கு முற்றூட்டாக்கி திருக் கண்களாலே என்னை அநந்யார்ஹன் ஆக்கினவனே –-ஆரைப் போலே என்னில்-விண்ணோர்-நாயகன்- எம்பிரான்-நித்ய ஸூரிகளை அனுபவிக்குமா போலே என்னை அனுபவிப்பித்தவன்-எம்மான்– அவர்களைப் போலே என்னை அநந்யார்ஹன் ஆக்கியவன் –

சிரீ இதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்
வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து
மரீ இய தீ வினை மாள இன்பம் வளர வைகல் வைகல்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை யென்னிருடீ கேசனே –2-7-9-நீர் பாய்ந்த பயிர் போலே -அவள் சந்நிதியாலே குளிர்ந்த திருக் கண்களை உடையவன்-வக்ஷஸ்தலேந ச்ரியம் உத்வஹம் விபு -விஸ்தாரி பத்மோத்பல பத்ர லோசன–மைய கண்ணாள் -என்று இறே அவனை அனுபவிக்கிறவள் கண் இருப்பது

வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகனை
கண்ணனை நெடுமாலைத் தென் குருகூத்ச் சடகோபன்
பண்ணிய தமிழ் மாலை யாயிரத்துள் இவை பன்னிரண்டும்
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே– (3087)-2-7-13-அழகிய நிறத்தை உடைத்தாய் -பெரு விலையனான நீல மணி போலே இருக்கிற வடிவை உடையவனை-அமரர் தலைமகனை-இவ் வழகு நித்ய ஸூ ரிகளாலும் அனுபவித்து முடிக்க ஒண்ணாத படி அவ்வருகாய் இருக்கை-கண்ணனை–இவ் வழகு விலக்ஷண அதிகாரமாய் அன்றிக்கே அஸ்மாதாதிகளுக்கும் ஸூலபனாக்கை-நெடுமாலைத்-என் அளவில் பர்யவசியாதே என்னோடே பரம்பரயா சம்பந்தித்தவர்கள் அளவும் செல்லும் வியாமோஹ அதிசயத்தை உடையவனை

காண்பாரார் எம்மீசன் கண்ணனை என் காணுமாறு
ஊண் பேசில் எல்லா வுலகுமோர் துற்றாற்றா
சேண் பால் வீடோ வுயிரோ மற்று எப்பொருட்கும்
ஏண்பாலும் சோரான் பரந்துளான் எங்குமே –2-8-8-சர்வேஸ்வரனாய் வைத்து கிருஷ்ணனாய் வந்து அவதரித்து எனக்கு ஸூலபனானவனை ஸ்வ யத்னத்தால் காண்பார் யார்-

எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கில்லை யால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என்
சிங்கப்பிரான் பெருமை யாராயும் சீர்மைத்தே –-(3096)-2-8-9-சர்வேஸ்வரன் சர்வகதன் என்றான் -இதுவாயிற்று அவன் சொன்ன தப்பு –மயா ததாமிதம் சர்வம் ஜகத் அவ்யக்த மூர்த்தி நா –என்றும்
நத தஸ்தி விநாயத் ஸியாத் மயா பூதம் சராசரம் -என்று அவன் தானே சொன்னதை யாயிற்று இவன் சொல்லிற்று –

சீர்மை கொள் வீடு ச்வர்க்க நரகு ஈறா
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10-பரமபதத்தில் வர்ஷூ கலாவாஹம் போலே -ஸ்ரமஹரமான வடிவோடே அத்விதீயனாய் எழுந்து அருளி இருக்குமவன்
கிருஷ்ணனாய் எனக்கு உபகரிக்கையாலே நான் அனுபவிக்கப் பெற்றேன் என்கிறார் –

எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –(3102)-2-9-4-எனக்கே ஆடச்செய் -என்கிற இடம் -அந்நிய சேஷத்வத்தை தவிர்க்கிறது-தனக்கே யாக என்கிற இடம் -தன்னோடு தனக்கு உள்ள அன்வயத்தைத் தவிர்க்கிறது-எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –-எனக்கு அசாதாரணமான சிறப்பு -ப்ராப்தனாய் பவ்யனானவனைக் கொள்ளும் சிறப்பு – ஸ்வரூப ஞானம் உடைய நான் கொள்ளும் சிறப்பு – சிறப்பு ஆகிறது ஏற்றம் -அதாகிறது புருஷார்த்தம் –-தனக்கே என்கிறது -பாரதந்தர்ய காஷ்டை -எனக்கே என்கிறது -புருஷார்த்தம் –

எஞ்ஞான்று நாம் இருந்து இருந்து இரங்கி நெஞ்சே
மெய்ஞ்ஞானம் இன்றி வினையியல் பிறப்பு அழுந்தி
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்து நின்ற
மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே –(3138)-3-2-7-சர்வ காலமும் சகல பதார்த்தங்களிலும் குறைவற வியாபித்து நிற்குமவனாய் விசதமமான ஞானத்தை உடைய கிருஷ்ணனை –-நினைவுக்கு வாய்த்தலையிலே புகுந்து நம் படியை உள்ளபடி அறியுமவன் ஆனவனை-கண்ணனை -மேவுதுமே
ஸூலபன் என்றால் அவனைக் கிட்டப் போமோ -என்னுதல்–நிர்வாஹகன் என்றால் அவனைக் கிட்டலாமோ என்னுதல் –-யதா பாடம் அன்வயமாதல் -எஞ்ஞான்றும் மேவுதல்-என்னுதல் –

மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்
ஓவுதல் இன்றி யுன் கழல் வணங்கிற்றிலேன்
பாவு தொல் சீர்க் கண்ணா வென் பரஞ்சுடரே
கூவிகின்றேன் காண்பான் எங்கு எய்தக் கூவுவனே –3-2-8-விதித–சத்ருக்கள் கோஷ்ட்டியிலும் பிரசித்தமாய் ஸ்வா பாவிகமான கல்யாண குணங்களை உடைய கிருஷ்ணனே-வென் பரஞ்சுடரே-
தாழ நின்று இவ் வடிவு அழகை எனக்கு முற்றூட்டாக்கி தந்தவனே -பரஞ்சுடர் உடம்பாய் -என்ன கடவது இறே

தலைப்பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால்
அலைப்பூண் உண்ணும் அவ் வல்லல் எல்லாம்
அகலக் கலைப்பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டு கொண்டு
நிலைப்பெற்று என்னெஞ்சம் பெற்றது நீடுஉயிரே.–(3141)-3-2-10-பல கலைகளாலும் அறியப் படுபவன்
வேதைஸ் ச சர்வர் அஹமேவ வேத்ய -என்று வேதைக சமதி கம்யனான கிருஷ்ணனைக் கண்டு கொண்டு-

அண்ணல் மாயன் அணி கொள் செந் தாமரைக்
கண்ணன்
செங்கனி வாய்க் கரு மாணிக்கம்
தெண்ணிறை சுனை நீர்த்திரு வேங்கடத்து
எண் இல் தொல் புகழ் வானவர் ஈசனே. – (3145) -3-3-3-அந்த ஐஸ்வர்ய ஸூசகமான திருக் கண்களை உடையவன் -தனக்குத் தானே ஆபரணமாக திருக் கண்கள்

புகழும் நல் ஒருவன் என்கோ! பொரு இல் சீர்ப் பூமி என்கோ!
திகழும் தண் பரவை என்கோ தீ என்கோ! வாயு என்கோ!
நிகழும் ஆகாசம் என்கோ! நீள் சுடர் இரண்டும் என்கோ!
இகழ்வு இல் இவ் வனைத்தும் என்கோ! கண்ணனைக் கூவு மாறே.—(3154)—–3-4-1—அர்ஜுனன் -ஹே கிருஷ்ண ஹே யாதவ -என்றத்தோடு -பூமி -என்றத்தோடு வாசி அற்று இருக்கிறது இறே-

கூவுமாறு அறிய மாட்டேன், குன்றங்கள் அனைத்தும் என்கோ!
மேவு சீர் மாரி என்கோ! விளங்கு தாரகைகள் என்கோ!
நாவியல் கலைகள் என்கோ! ஞான நல் ஆவி என்கோ!
பாவு சீர்க் கண்ணன் எம்மான் பங்கயக் கண்ண னையே.–-(3155) -3-4-2-பரந்த குணங்களை உடைய கிருஷ்ணன்-தன் கண் அழகால் என்னை அநந்யார்ஹன் ஆக்கினவனை –

பங்கயக் கண்ணன் என்கோ! பவளச் செவ் வாயன் என்கோ!
அங் கதிர் அடியன் என்கோ! அஞ்சன வண்ணன் என்கோ!
செங் கதிர் முடியன் என்கோ! திரு மறு மார்பன் என்கோ!
சங்கு சக்கரத்தின் என்கோ சாதி மாணிக்கத்தையே!–3-4-3-கிட்டினாரோடு முதல் உறவு பண்ணும் கண்-

பால் என்கோ! நான்கு வேதப்பயன் என்கோ! சமய நீதி
நூல் என்கோ! நுடங்கு கேள்வி இசை என்கோ! இவற்றுள் நல்ல
மேல் என்கோ! வினையின் மிக்க பயன் என்கோ! கண்ணன் என்கோ!
மால் என்கோ! மாயன் என்கோ வானவர் ஆதி யையே.–(3159) -3-4-6-உனக்கு நான் உளேன் -மா ஸூ ச –நீ சோகியாதே கொள்-என்னுமவன் என்பேனோ-

ஒளி மணி வண்ணன் என்கோ! ஒருவன் என்று ஏத்த நின்ற
நளிர் மதிச் சடையன் என்கோ! நான் முகக் கடவுள் என்கோ!
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம் படைத்து அவை ஏத்த நின்ற
களி மலர்த் துளவன் எம்மான் கண்ணனை மாயனையே.–(3161)3-4-8-எத்திறம் என்று மோஹிக்கும் படியான ஆச்சர்ய சேஷ்டிதங்களை உடைய கிருஷ்ணனை –

கண்ணனை மாயன் றன்னைக் கடல் கடைந்து அமுதம் கொண்ட
அண்ணலை அச்சு தன்னை அனந்தனை அனந்தன் றன்மேல்
நண்ணி நன்கு உறைகின்றானை ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை
எண்ணுமாறு அறிய மாட்டேன் யாவையும் எவரும் தானே.–3-4-9-ஸுலப்யமும்-ஆச்சர்ய குண சேஷ்டிதங்களும் பின்னாடுகிற படி

மொய்ம்மாம் பூம்பொழிற் பொய்கை முதலைச் சிறைப்பட்டு நின்ற
கைம்மாவுக்கு அருள் செய்த கார் முகில் போல் வண்ணன் கண்ணன்
எம்மானைச் சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார்
தம்மால் கருமம் என்? சொல்லீர், தண் கடல் வட்டத்து உள்ளீரே!– (3165)–3-5-1-ஆனைக்கு அதின் கையிலே புஷ்பத்தைச் செவ்வி குலையாமல் அலங்கரிக்கை யாகிற அருளைப் பண்ணினவனாய்-அது தன் ஆர்த்தி தீரக் கண்டு -களிக்கும்படியாய்-உகக்கும்படியாய் -ஸ்ரமஹரமாய்-காளமேக நிபமான வடிவையும் உள்ளே இழிந்து எடுத்துக் கரை ஏற்றும்படியான சவ்லப்யத்தையும்-

செய்ய தாமரைக் கண்ணனாய் உலகு ஏழும் உண்ட அவன் கண்டீர்
வையம் வானம் மனிசர் தெய்வம் மற்று மற்றும் மற்றும் முற்றுமாய்
செய்ய சூழ் சுடர் ஞானமாய் வெளிப்பட்டு இவை படைத்தான் பின்னும்
மொய்கொள் சோதியோடு ஆயினான் ஒருமூவர் ஆகிய மூர்த்தியே.– (3176) 3-6-1-தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ-என்றும்-யஞ்ஜேசோ யஞ்ஞ புருஷ புண்டரீகாக்ஷ சம்ஞ்சித -என்றும் ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் சொல்லுகிறபடியே -செவ்வியை உடைத்தாய் சிவந்த தாமரைப் பூ போலே இருக்கிற கண் அழகை உடையனாய் பிரளய ஆர்ணவத்திலே அந்தர் படாத படி ஜகத்தை திரு வயிற்றில் வைத்தவன் கிடீர் – வடிவு அழகில் புண்டரீகாக்ஷத்வம் போலே குணங்களில் பிரளய ஆபத் ஸகத்வமும்

மூவர் ஆகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னைச்
சாவம் உள்ளன நீக்குவானைத் தடங் கடற் கிடந்தான் தன்னைத்
தேவ தேவனைத் தென்னிலங்கை எரி எழச்செற்ற வில்லியைப்
பாவ நாசனைப் பங்கயத் தடங் கண்ணனைப் பரவுமினோ.–(3177) -3-6-2-பாபத்தை உண்டாக்கிலும் விட ஒண்ணாத வடிவு அழகை உடையவனை -ராம கமல பத்ராஷ

திரியும் காற்றோடு அகல் விசும்பு திணிந்த மண் கிடந்த கடல்
எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம் மற்றும் மற்றும் முற்றுமாய்
கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன் கண்ணன் விண்ணோர் இறை
சுரியும் பல் கருங்குறிஞ்சி எங்கள் சுடர் முடி யண்ணல் தோற்றமே –3-6-5-அசாதாரண விக்கிரஹத்தை சொல்லுகிறது-வாத்சல்ய ஸூ சகமான கண் அழகை உடையவன்-சர்வ ஸமாச்ரயணீயன் ஆகைக்காக ஸூலபன் ஆனவன்-அந்நிலையில் நித்ய ஸூரிகளும் வந்து ஆஸ்ரயிக்கலாம் படி பரத்வத்தை உடையவன்-

கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர் கருமாணிக்கம் எனது ஆர்உயிர்
பட அரவின் அணைக் கிடந்தபரஞ்சுடர் பண்டு நூற்றுவர்
அடவரும் படை மங்க ஐவர்கட்கு ஆகி வெஞ்சமத்து அன்று தேர்
கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே?– (3185) -3-6-10-அபரிச்சேத்ய மஹீனனான கிருஷ்ணன் என்னுதல்-சிரமஹரமான வடிவை உடைய கிருஷ்ணனை என்னுதல்

பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனைப்
பயில இனிய நம் பாற்கடற் சேர்ந்த பரமனைப்
பயிலும் திருவுடையார் எவரேலும் அவர்கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறு எம்மைஆளும் பரமரே.–3-7-1-செறியா நின்றுள்ள மிக்க தேஜஸ்ஸையே விக்ரஹமாக உடையவனை-பயிலுகை -செறிகை -சுடர் என்றும் ஒளி என்றும் தேஜஸ்ஸாய் மிக்க தேஜஸ் ஸூ என்கை-சுத்த சத்வமாய் ஸ்வரூப ப்ரகாசகமான விக்கிரஹத்தை உடையவன் என்கை
இவ்வடிவிலே துவக்குண்டாரை அநந்யார்ஹம் ஆக்கும் கண்

ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப்பிரான் தன்னைத்
தோளும் ஓர் நான்குடைத் தூமணி வண்ணன் எம்மான் தன்னைத்
தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர் கண்டீர்
நாளும் பிறப்பிடை தோறு எம்மை ஆளுடை நாதரே.–(3188)3-7-2-ஆளும் பரமனைக்
இவ்வஸ்துவை ஆளும் போது ஒப்பு இல்லாதவனை –-அடியார்க்கு என்னை ஆட்படுத்தும் விமலன் -என்னக் கடவது இறே-கண்ணனை –-தான் கையாளாக நின்றாய்த்து ஆட்க்கொள்ளுவது
ஆட்க்கொள்ளத் தோன்றிய ஆயர் தம் கோவினை-ஆழிப்பிரான் தன்னைத்
– ஆஸ்ரித ரக்ஷணத்தில் பகலை இரவாக்குகை பெரு நிலை நின்ற திரு ஆழியை உடையனாய் கொண்டு உபகரிக்குமவனை
கையும் திரு ஆழியுமான சேர்த்தியை காட்டி அநந்யார்ஹன் ஆக்குமவனை

அளிக்கும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னைத்
துளிக்கும் நறுங்கண்ணித் தூமணி வண்ணன் எம்மான்தன்னை
ஒளிக்கொண்ட சோதியை உள்ளத்துக் கொள்ளுமவர் கண்டீர்
சலிப்பின்றி யாண்டு எம்மைச் சன்ம சன்மாந்தரம் காப்பரே.–(3192) -3-7-6-அளிக்கும் பரமனைக் –
ரக்ஷிக்கும் இடத்தில் தனக்கு மேற்பட்டார் இல்லாதவனை-கண்ணனை–உபகரித்தது தன்னை யாயிற்று
ஆழிப் பிரான் தன்னைத்-நா யுதாநி -என்கிறபடி -தன்னோடே ஆயுதங்களோடு வாசி அற பக்தா நாம் என்று இருக்குமவனை

உளனாகவே எண்ணித் தன்னை ஒன்றாகத் தன் செல்வத்தை
வளனா மதிக்கும் இம் மானிடத்தைக் கவி பாடி என்
குளன் ஆர் கழனி சூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே
உளன் ஆய எந்தையை எந்தை பெம்மானை ஒழியவே?––(3210) -3-9-2-கண்ணன் குறுங்குடி சர்வேஸ்வரன் என்னது என்று அபிமானித்த தேசம்-கண் நல் குறுங்குடி என்று நிர்வஹித்தான் ஒரு தமிழன்-

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் றனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர்பத்து
ஏற்கும் பெரும்புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே.–3-9-11-தகுதியான மிக்க புகழை உடையனாய் நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனாய் -அம்மேன்மையோடே வந்து அவதரித்து மனுஷ்யத்தவே பரத்வத்தை உடையவனும்-

குறைவு இல் தடம் கடல் கோள் அரவு ஏறித்தன் கோலச் செந்தாமரைக் கண்
உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த ஒளி மணி வண்ணன் கண்ணன்

கறை அணி மூக்குடைப் புள்ளைக் கடாவி அசுரரைக் காய்ந்த அம்மான்
நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டு இலனே.–(3221) -3-10-2–ரஷ்ய வர்க்கத்தை தன வடிவு அழகாலே துவக்கி கரைமரம் சேர்க்கைக்காக கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவன்–ஒளியை உடைய நீல மணி போலே இருக்கிற வடிவை உடைய கிருஷ்ணன்-

துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி நின்ற வண்ணம் நிற்கவே
துயரின் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து
துயரங்கள் செய்து தன் தெய்வ நிலை உலகில் புக உய்க்கும் அம்மான்
துயரம் இல் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் ஓர் துன்பம் இலனே.–(3225) -3-10-6-ஹேய ப்ரத்ய நீகமான கல்யாண குணங்களையும் ஆச்சர்யமான சேஷ்டிதங்களையும் உடைய கிருஷ்ணனுடைய புகழை நெருங்க புஜிக்கப் பெற்ற எனக்கு ஒரு துக்கமும் இல்லை என்கிறார் –

துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி நின்ற வண்ணம் நிற்கவே
துயரின் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து
துயரங்கள் செய்து தன் தெய்வ நிலை உலகில் புக உய்க்கும் அம்மான்
துயரம் இல் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் ஓர் துன்பம் இலனே.–3-10-6-ஹேய ப்ரத்ய நீகமான கல்யாண குணங்களையும் ஆச்சர்யமான சேஷ்டிதங்களையும் உடைய கிருஷ்ணனுடைய புகழை
நெருங்க புஜிக்கப் பெற்ற எனக்கு ஒரு துக்கமும் இல்லை என்கிறார் –

அல்லல் இல் இன்பம் அளவு இறந்து எங்கும் அழகு அமர்சூழ் ஒளியன்
அல்லி மலர்மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான்
எல்லை இல் ஞானத்தன் ஞானம் அஃ தேகொண்டு எல்லாக் கருமங்களும் செய்
எல்லை இல் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே.–(3229) -3-10-8-எல்லை இல் மாயனைக் சங்கல்ப ரூப ஞானத்தால் ஸ்ருஷ்டியாதிகளைப் பண்ண வல்ல ஆச்சர்ய சக்தி உக்தனை
இப்படி ஆர் இருக்கிறார் என்னில்-கண்ணனைத்-கிருஷ்ணனை -க்ருஷ்ண ஏவ ஹி லோகா நாம்
கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே
.–-பிராட்டி புருஷகாரமாக சஹகார நிரபேஷமாக நம் கார்யம் செய்பவனுமாய் ஏஷ -ஹ் யே வா நந்தயாதி -என்கிறபடியே ஆனந்த அவஹனானவனைப் பற்றின எனக்கு ஒரு துக்கமும் இல்லை என்கிறார் –

அடி சேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ
இடி சேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்
பொடி சேர் துகளாய்ப் போவர்கள் ஆதலில் நொக்கெனக்
கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ.–-(3233)-4-1-3--ஸர்வேஸ்வரத்வ ஸூசகமான திருத் துழாய் மாலையால் அலங்க்ருதமான கிருஷ்ணன் திருவடிகளை நினையுங்கோள் –திருமுடி யோட்டை ஸ்பர்சத்தாலே நாள் செல்ல நாள் செல்ல பரிமளம் பரிமளம் மிகா நிற்கை-பரிகர மது ஸூதன ப்ரபந்நான் -என்று யமாதிகள் அஞ்சும் மதிப்பை பெறுவர் –

அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய்கோலத்து ஆயிரம் சீர்த்தொடைப் பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற் பாலரே.–(3241)–4-1-11-நான் சொன்னதுவே ஆத்மாவுக்கு உஜ்ஜீவன உபாயம் என்று-அது ஏது என்னில்-கண்ணன் கழல்கள் மேல்-நினைமினோ என்கிறது –
ஸூலபனான கிருஷ்ணனை யாயிற்று கவி பாடிற்று –

என் செய்கேன்? என்னுடைப் பேதை,என் கோமளம்,
என் சொல்லும் என் வசமும் அல்லள்; நங்கைமீர்!
மின்செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய்
பொன்செய் பூண் மென்முலைக்கு என்று மெலியுமே.––(3251) -4-2-10-மின்னா நின்ற ஆபரணம் உண்டு -ஸ்ரீ கௌஸ்துபம் -அத்தை திரு மார்பிலே உடைய கிருஷ்ணனுடைய திருவடிகளில்-விரஹத்தாலே துவண்ட முலைக்கு வேணும் என்று சொல்ல நினைத்து முடியச் சொல்ல மாட்டாதே மெலியா நின்றாள்-

மெலியும் நோய் தீர்க்கும் நம் கண்ணன் கழல்கள் மேல்
மலிபுகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மலிபுகழ் வானவர்க்கு ஆவர் நற்கோவையே.– (3252) -4-2-11-இவ் வவ சாதனம் எல்லாம் தீரும்படி வந்து முகம் காட்டின கிருஷ்ணன் திருவடிகளில் –மெலியும் என் செய்கேன்-என்று கை விட்டாள் திருத் தாயார் –உடையவர்கள் கை விடார்கள் இறே-நம் கண்ணன்-தாஸாம் ஆவிர் பூத் ஸவ்ரி என்று இப்படிப் பட்ட ஆபத்துக்களில் வந்து முகம் காட்டும் என்ற பிராமண பிரசித்தி-

கண்ணி எனது உயிர்காதல் கனகச் சோதி முடி முதலா
எண்ணில் பல்கலன்களும்; ஏலும் ஆடை யும் அஃதே;
நண்ணி மூவுலகும் நவிற்றும் கீர்த்தியும் அஃதே;
கண்ணன் எம்பிரான் எம்மான் கால சக்கரத் தானுக்கே.–(3257) -4-3-5-–கையும் திரு ஆழியுமான அழகைக் காட்டி எனக்கு அநந்ய பரத்வ மஹா உபகாரத்தை பண்ணி தொழுது எழும் படி பண்ணின ஸ்வாமியான கிருஷ்ணனுக்கு-பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி நம் கண்ணன் -என்னக் கடவது இறே

உய்வு உபாயம் மற்று இன்மை தேறி, கண்ணன் ஒண் கழல் மேல்
செய்ய தாமரைப் பழனம் தென்னன் குருகூர்ச் சடகோபன்
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே.–-(3263)-4-3-11-அவன் பிரணயித்வ குணத்தை பேசா விடில் உஜ்ஜீவன உபாயம் இல்லை என்று தெளிந்து –வேறு இல்லாமை -அவதரித்து தன் பிரணயித்வ குணத்தை ஆவிஷ் கரித்த கிருஷ்ணன் திருவடிகளில்

ஏறிய பித்தினோடு ‘எல்லா உலகும் கண்ணன் படைப்பு’ என்னும்’
நீறு செவ்வே இடக் காணில், நெடுமால் அடியார்’ என்று ஓடும்;
நாறு துழாய்மலர் காணில்,‘நாரணன் கண்ணி ஈது’ என்னும்;
தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே இத் திருவே.–(3270) -4-4-7-இவள் பிச்சேறி இருக்கிற தசையில் இஜ் ஜகத்து எல்லாம் கிருஷ்ணனால் ஸ்ருஷ்டமாயிற்று என்னுதல்-கிருஷ்ண ஏவ ஹி லோகா நாம் உத்பத்தி -என்னா நின்றாள்-அவன் ஆதரித்து ஸ்ருஷ்டித்தது என்று தத் சம்பந்தத்தால் விபூதியையும் விரும்பா நின்றாள்-ஏதேனும் ஒரு பதார்த்தமும் தத் சம்பந்தம் ஒழிய தோற்றதாய் இருக்கிற படி-ப்ராஹ்மணர் பிச்சேறினாலும் ஒத்துச் சொல்லுமா போலே கலங்கின போதும் வாசனையால் இவ்விஷயமேயாய் இருக்கிற படி –

திருவுடை மன்னரைக் காணில், ‘திருமாலைக் கண்டேனே’ என்னும்;
உருவுடை வண்ணங்கள் காணில், ‘உலகுஅளந் தான்’என்று துள்ளும்;
‘கருவுடைத் தேவில்கள் எல்லாம் கடல்வண்ணன் கோயிலே’ என்னும்;
வெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே.–4-4-8--தெளிவுடையாளாய் பந்துக்களுக்கு அஞ்சின போதோடு -அறிவழிந்து மோஹித்த போதோடு வாசி அற கிருஷ்ணன் திருவடிகளை விரும்பா நிற்கும்-அல்லாதவை அஸ்திரமாய் இவளுக்கு இது ஸ்திரமாய் செல்லா நின்றது-வெருவுகை -அஞ்சுகை –வீழ்கை -மோஹிக்கை –

விரும்பிப் பகவரைக் காணில், ‘வியலிடம் உண்டானே’ என்னும்;
கரும் பெரு மேகங்கள் காணில், ‘கண்ணன்’ என்று ஏறப் பறக்கும்;
பெரும் புலம் ஆநிரை காணில், ‘பிரான் உளன்’ என்று பின் செல்லும்;
அரும் பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக்கின்றானே.–4-4-9-கறுத்து பெருத்த மேகங்களை காணில் –ஞான அஞ்ஞான விபாகம் அறத் தன் வடிவைக் காட்டி அபகரிக்கும் ஸ்ரீ கிருஷ்ணன் என்று மேலே எழப் பறக்கத் தேடா நிற்கும் –

அயர்க்கும்;சுற்று ம்பற்றி நோக்கும்; அகலவே நீள் நோக்குக் கொள்ளும்;
வியர்க்கும்; மழைக் கண் துளும்ப வெவ் வுயிர் கொள்ளும்;மெய் சோரும்;
பெயர்த்தும்‘கண்ணா!’என்று பேசும்; ‘பெருமானே, வா!’என்று கூவும்;
மயற் பெருங் காதல் என் பேதைக்கு என் செய்கேன் வல் வினையேனே?–(3273)4-4-10-

வல்வினை தீர்க்கும் கண்ணனை வண் குருகூர்ச் சடகோபன்
சொல் வினையாற் சொன்ன பாடல் ஆயிரத்துள் இவை பத்தும்
நல்வினை என்று கற்பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணித்
தொல் வினை தீர எல்லாரும் தொழுது எழ வீற்றிருப்பாரே.–(3274) -4-4-11-பெற்றவர்கள் கை விட்டால் கைப்பிடித்தார் விடாரே-ஆஸ்ரிதர் உடைய விஸ்லேஷ ஹேதுவான மஹா பாபத்தை போக்கும் ஸ்வ பாவனான கிருஷ்ணனை

மைய கண்ணாள் மலர்மேல் உறை வாள் உறை மார்பினன்
செய்ய கோலத்தடங் கண்ணன் விண்ணோர் பெருமான் தனை
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேன்
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே.–4-5-2-பத்ம வர்ணையான அவளை அனுபவிக்கையாலே பழைய சிவப்புக்கு மேலே சிவந்து அழகை யுடைத்தாய் –ப்ரேம பாரவசயத்தாலே விஸ்தீர்ணமான திருக் கண்களை யுடையனாய்-

வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்
வீவு இல் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
வீவு இல்காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப்பெற்றேன்;
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே.–4-5-3-முடிவு இல்லாத யுவத்வாதி நித்ய குண விபூதி வைலக்ஷண்யத்தை யுடையனாய்-இவ்வதிசயத்துக்கு ஸூசகமாம் படி புண்டரீ காஷனாய் -இக் கண் அழகாலே-விண்ணோர் பரவும் தலை மகனானவனை

கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும்
பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேற்கு
அரியது உண்டோ எனக்கு இன்று தொட்டும் இனி என்றுமே?–(3280) -4-5-6-ஒப்பனை வேண்டாத படி -அழகு அளவிருந்து இருக்கிற படி-தடங்கண்ணன்-போக்தாக்கள் அளவு அன்றிக்கே போக்யத்தை இருக்கிற படி–கறுத்த திரு நிறத்தால் வந்த அழகுக்கு மேலே அதுக்கு பரபாகமாக திருக் கண்களிலே அஞ்சனத்தை இடும் என்றுமாம்-கரி -என்று ஆனையாய்-அத்தால் நினைக்கிறது குவலயா பீடமாய் -அது -அம் மேனியில் -அழகிய மேனியில் – வெளிய கோபிக்க -நீறு சிறிதே இடும் -பொடியாகும் -பஸ்மாத்தாக்கும் -என்று ஒரு தமிழன் நிர்வாஹம்-

தழுவி நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன்றனைக்
குழுவு மாடம் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல்
வழு விலாத ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இப்பத்தும்
தழுவப் பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே.–(3307) -4-7-11-நான் விடுவேன் என்னிலும் விட ஒண்ணாத உடன் வந்தியான-அதிமாத்ர ப்ரேமத்தாலே-தாமரைக் கண்ணன்றனைக் –இக் காதலுக்கு கிருஷி பண்ணினாராய்ச் சொல்லுகிறார்-கண்ணாலே குளிர நோக்கி யாயிற்று -இவருக்கும் காதலை விளைவித்தது –-செந்தாமரைக் கண்ணோடு மறப்பற என்னுள்ளே மண்ணினான் -என்ன கடவது இறே -இது இ றே மதி நலம் அருளின படி

என் கொள்வன் உன்னை விட்டு என்னும் வாசகங்கள் சொல்லியும்
வன் கள்வனேன் மனத்தை வலித்துக் கண்ண நீர் கரந்து
நின் கண் நெருங்க வைத்தே எனது ஆவியை நீக்க கில்லேன்
என் கண் மலினம் அறுத்து என்னைக் கூவி அருளாய் கண்ணனே –(3344)-5-1-4-அஷமனான என்னை அழைத்துக் கொண்டு அருள வேணும் -தன் பக்கல் அசக்தியை அனுசந்தித்து சோகித்தவனை -மாஸூச -என்றில்லையோ –அதாவா –கண்டு கொண்டு உந்து ஒழிந்தேன் -என்ற இடம் ஞான அனுசந்தான மாத்ரமாய்-பாஹ்ய சம்ச்லேஷ அபேக்ஷை பிறந்து -அது கை வராமையாலே இதுக்கு அடி பிரகிருதி சம்பந்தம் -என்று அனுசந்தித்து -இந்த விரோதியை போக்குகைக்கு சாதன அனுஷ்டானம் பண்ண -உன் பக்கல் உண்டான பிரேம அதிசயத்தாலே நான் மாட்டு கிறிலேன்-நீயே இத்தை அறுத்து தந்து அருள வேணும் என்கிறார்

கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே! என்றென்று
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?
ஐயோ! கண்ண பிராஅன்! அறையோ! இனிப் போனாலே.(3351)–5-1-1-ஓர் இடைச்சி கையிலே  கட்டுண்ட தசையில் அந்த பந்தத்தை தப்ப விரகு அறியாதே சக்தியும் இன்றிக்கே இருந்த நீயோ போகப் புகுகிறாய்-கண்ணபிரான் என்று சம்புத்தி -இனிப்போனால் அறையோவறை -அனுக்ரஹ சீலனான உனக்கும் -மெய் என்று பேரிடலாவதொரு பொய் என் பக்கலிலே உண்டான பின்பு போகலாமோ-மித்ர பாவம் பெற்றால் -நத்யஜேயம் என்னும் உனக்குப் போகலாமோ -ஸூ க்ரீவ மஹா ராஜரைப் போலே அறை கூவுகிறார் –

நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்
மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்பதெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே.–-(3358) 5-2-7-இதர தேவதைகள் பக்கல் பரத்வ புத்தி யாகிற தண்ணிய நெஞ்சு ஒன்றும் உங்களுக்கு வேண்டா-சர்வ தேவா தேவகீபுத்ர ஏவ -என்கிறபடியே கிருஷ்ணனை ஒழிய ஆஸ்ரயணீயர் இல்லை –அவனுக்கு பிரகார பூதராய் கொண்டு உளராம் அத்தனை அல்லாத தேவதைகள் –

மிக்க உலகுகள் தோறும் மேவிக் கண்ணன் திருமூர்த்தி
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாகத்
தொக்க அமரர் குழாங்கள் எங்கும் பரந்தன தொண்டீர்!
ஒக்கத் தொழகிற்றிராகில் கலியுகம் ஒன்றும் இலையே.–(3361) -5-2-10-கிருஷ்ணன் உடைய அசாதாரண விக்ரஹத்தை பொருந்தி ஆஸ்ரயித்து-

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான் கண்ணன் தன்னைக்
கலிவயல் தென்னன் குருகூர்க் காரிமாறன் சடகோபன்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக் கும்மே.–5-2-11-மிகவும் வி லக்ஷண தேஜோ ரூபமான வடிவை யுடையவன் -அருளாதே அநாதரிக்கிலும் விட ஒண்ணாத வடிவு -அருள் செய்தது அவ்வடிவு தானே யாயிற்று –மாயப் பிரான்கண்ணன் தன்னை–அத்யாச்சர்யமான குண சேஷ்டிதங்களை யுடைய கிருஷ்ணனை –

என் செய்யும் ஊரவர் கவ்வை? தோழீ! இனி நம்மை
என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறைகொண்டான்
முன் செய்ய மாமை இழந்து மேனி மெலி வெய்தி
என் செய்ய வாயும் கருங்கண்ணும் பயப்பூர்ந்தவே.–5-3-2-கண்ணாலே தவாஸ்மி-என்று என்னை சொல்லி என்னை ச்ரவஸ்வபஹாரம் பண்ணினான் -கிட்டினால் என்னுடையவன் என்னும் படி இ றே இருப்பது -வாத்சல்யத்தாலே குதறிச் சிவந்த கண்ணாலே -ஆத்மாத்மீயங்கள் நீ இட்ட வழக்கு அன்றோ -என்று சொல்லி என்னை உரி சூறை கொண்டான் -தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசி -என்னக் கடவது இ றே -சொலவு ஒன்றும் செயல் ஒன்றும் ஆயிற்று -அவனுக்கு புண்டரீகாக்ஷத்வம் போலே இவளுக்கு ஸ்த்ரீத்வம் –-என்னை நிறைகொண்டான்-என்று வாய் விடப் பண்ணுகை

ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னை சொல் நீர்படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ! கடியனே?–5-3-4-எருவும் நீரும் உண்டானாலும் வர்ஷம் வேணும் இறே -வ்ரஷூக வலாஹம் போலே சிரமஹரமான வடிவு-நம் கண்ணன்-விரூபனானாலும் விட ஒண்ணாத பவ்யதையை-இவ்வடிவும் பவ்யதையும் யாயிற்று புறம்பு உள்ளோரோட்டை தொக்கை அறுத்ததும் -அபரிச்சின்னமான காதலை விளைத்ததும்-நம் கண்ணன் -கிருஷ்ணன் என்றால்பெண்களுக்கு கையாள் என்று பிரசித்தம் இறே-

ஆவி காப்பார் இனியார்? ஆழ்கடல் மண் விண் மூடி
மா விகாரமாய் ஓர் வல்லிரவாய் நீண்டதால்
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால்
பாவியேன் நெஞ்சமே! நீயும் பாங் கல்லையே.–(3375)-5-4-2-புல்லேந்தீவர பத்ராபம் –என்கிற நிறத்தை யுடையவன் –இருளோடு செறிந்த நிறம் நிறம் ஆகையால் -இருளோடு செறிந்து வரலாம் கிடீர் கம்சன் காவலாக வைத்த துஷ்ப்ரக்ருதிகள் கண் படாத படி -இருளிலே வந்து அவதரித்தவர் -அன்று தாமஸ பிரக்ருதிகளை போக்க வந்தவனுக்கு இன்று இந்த தமஸை போக்கல் ஆகாதோ-என் கண்ணனும்  வாரானால்–-முன்பு இராத்திரிகளில் வந்து உதவுமவன் பாவியேன் நெஞ்சமே! நீயும் பாங் கல்லையே.-
அவனும் என்னுடையவனாய் இ றே உதவாது ஒழிந்தது -ஆபத்துக்கு உதவாதவனாய் யன்றே -அது உனக்கும் ஒக்கும் இறே -என் கண்ணன் என்னலாம் படி இ றே அவன் பவ்யதை-பவ்யரானார் அடங்க அபவ்யராம் பாவத்தை பண்ணினேன் –

ஆர் என்னை ஆராய்வார்? அன்னையரும் தோழியரும்
நீர் என்னே என்னாதே நீளிரவும் துஞ்சுவரால்
கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால்
பேர் என்னை மாயாதால் வல்வினையேன் பின் நின்றே.–5-4-5-வர்ஷூகமான மேகம் போலே சிரமஹரமான வடிவை யுடைய கிருஷ்ணனும் வருகிறிலன் –தாஸாம் ஆவீர்பூத் –என்று ஒரு நீர் சாவியிலே வர்ஷித்தால் போலே தோற்றுமவன் வருகிறிலன் –-நம் கண்ணனும்-பெண்களுக்கே யுதவுமவன் வருகிறிலன் –

தெய்வங்காள் என் செய்கேன்? ஓர் இரவு ஏழ் ஊழியாய்
மெய் வந்து நின்று எனதாவி மெலிவிக்கும்
கை வந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்
தை வந்த தண் தென்றல் வெம்சுடரில் தான் அடுமே.–5-4-8-நினைத்தபடி விதேயமான திரு வாழி யை யுடைய -பாவஞ்ஞமான பரிகரத்தை யுடையவன் கிடீர்–என் கண்ணனும் வாரானால்--ஆஸ்ரிதற்காக தன் ப்ரதிஞ்ஞஜையை அழிய மாறுமவன் -கையில் திரு வாழி யை விட்டு இருளைத் துணித்து தன் வடிவைக் காட்டுகிறிலன்

செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்
செய்வான் நின்றனகளும் யானே என்னும்
செய்து முன் இறந்தவும் யானே என்னும்
செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்
செய்ய கமலக் கண்ணன் ஏறக் கொலோ?
செய்ய உலகத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?
செய்ய கனிவாய் இளமான் திறத்தே.–(3399) 5-6-4-அஸி தேஷிணா -கரிய கண்ணை யுடையவளான தன்மை நீங்கி, புண்டரீகாக்ஷன் படியாய் விட்டது. என்றது,-மையக் கண்ணாளான தன்மை போய், செய்ய கோலத் தடங்கண்ணன் படியாய் விட்டது என்றபடி.-கரும் தடம் கண்ணி -தாயார் -திரு நாமம் -திருத் தொலை வில்லி மங்கலம் – ஆழ்வார் தன் பாவனை மாறி பெண்ணாகி அதுவும் மாறி புருஷோத்தமனாது வாசா மகோசரம் அன்றோ –

அழுவன் தொழுவன் ஆடிக் காண்பான் பாடி அலற்றுவன்
தழுவல் வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன்
செழு வொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்! செந்தாமரைக் கண்ணா!
தொழுவனேனை உனதாள் சேரும் வகையே சூழ்கண்டாய்.–(3422)-5-7-5-பெருத்து தர்ச நீயமான நீர் நிலங்கள் ஆசைப் பட்டார்க்கு நெடுங்கை நீட்டாக ஒண்ணாது என்று காண் கைக்கு அண்ணிதாக கண் வளர்ந்து அருளுகை-செந்தாமரைக் கண்ணா!-சந்நிதியே இன்றிக்கே ரக்ஷண பரிகரமும் உடையவனே -என் ஆர்த்தி தீர நோக்குகைக்கு யோக்யதை யுண்டாய் இருக்க இழக்கவோ-அழகிய திருக் கண்களால் நோக்கி அருள வேணும் என்கை –அவலோக நதாநேந

இடரில் போகம் மூழ்கி இணைந்தாடும் மட அன்னங்காள்?
விடலில் வேத ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்
கடலின் மேனிப்பிரான் கண்ணனை நெடுமாலைக் கண்டு
உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே.–(3454) -6-1-4-கடல் போலே சிரமஹரமான வடிவை யுடையவன் –பிரான் -பக்தானாம் என்று அவ்வடிவை ஆஸ்ரிதற்கு உபகரிக்குமவன் – கண்ணன் -அவர்க்கு கையாளாய் யாயிற்று அனுபவிப்பது-நெடுமால் – வ்யாமுக்தனானவனை –அன்றிக்கே -சிரமஹரமான வடிவை எனக்கு உபகரித்து -பவ்யனாய் -இன்று எட்டாதே இருக்கிறவனைக் கண்டு -இது பட்டர் நிர்வாஹம் –

அடிகள் கை தொழுது, அலர்மேல் அசையும் அன்னங்காள்!
விடிவை சங்கொலிக்கும் திருவண் வண்டூ ருறையும்
கடிய மாயன் தனைக் கண்ணனை நெடுமாலைக் கண்டு
கொடிய வல்வினையேன் திறம் கூறுமின்; வேறுகொண்டே.–(3459) -6-1-9-துரியோதனாதிகளை அழிய செய்யும் இடத்தில் கடியனாய் -பாண்டவர்களுக்காக பகலை இரவாக்குகை முதலான ஆச்சர்ய சேஷ்டிதங்களை பண்ணுமவனை -அவர்களுக்கு கையாளாய் நிற்குமவனை -அவ்வளவிலும் பர்யாப்த்தன் அன்றிக்கே இருக்கிற வ்யாமுக்தனாய் -அன்றிக்கே பிறர் நோவு அறியானாய் கலக்கிற போது பிரியேன் என்று வைத்து பிரிய வல்லவனை கலக்கும் போது தாழ நின்று பரிமாறி பின்னை எட்டாதவனை என்றுமாம்

புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்று இவையாய்
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய்
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
கண்ணன் இன்னருளே கண்டு கொண்மின்கள் கைதவமே.–(3476) -6-3-4-அவ் வவதாரத்துக்கு பிற்பட்ட என்னைப் பெறுகைக்காக திரு விண்ணகரிலே வந்து நிற்கிற கிருஷ்ணனான உபகாரகன்- தன் பேறாகப் பண்ணும் கிருபையால் இது அடங்க உண்டாயிற்று –-இதில் அர்த்தவாதம் உண்டோ -இல்லை இறே – -ஆராய்ந்து கொள்ளுங்கோள்-

வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங்கூற்றமுமாய்த்
தன் சரண் நிழற்கீழ்உலகம் வைத்தும் வையாதும்
தென் சரண் திசைக்குத் திருவிண்ணகர்ச் சேர்ந்த பிரான்
என் சரண் என்கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே.–(3480)-6-3-8-எனக்கு புகலானவன்–எனக்கு பவ்யனானவன்-என்னை அடிமை கொண்டு போகிறவன் -எனக்கு உபகாரகன் –

உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற்றிலையு மெல்லாம்
கண்ணன்எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர்வளம் மிக்கவன் ஊர்வினவித்
திண்ணம் என்இளமான் புகுமுர் திருக்கோளூரே.–(3517) -6-7-1-ஜீவித்து அல்லது தரிக்க ஒண்ணாத சோறு -தாஹித்தால் பானம் பண்ணி யல்லது நிற்க ஒண்ணாத தண்ணீர் -தின்றால் அல்லது புஷ்டனாக விரகு இன்றிக்கே இருக்கும் வெற்றிலையும் –தாரக போஷக போக்யம் ஆனவை எல்லாம் எனக்கு நாதனான கிருஷ்ணன் -வாஸூ தேவஸ் சர்வம் –என்று ஆயிற்று இவள் இருப்பது-

காரியம் நல்லனகள் அவைகாணில் என் கண்ணனுக்கு என்று
ஈரியா யிருப்பாள் இதெல்லாம் கிடக்க இனிப்போய்ச்
சேரி பல்பழி தூஉய் இரைப்பத் திருக்கோளூர்க்கே
நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே.–6-7-9-பதார்த்தங்களில் நல்லனவற்றைக் காணில் -ஒன்றிலும் கண் வைப்பது இல்லை -கண்டாள் ஆகில் எனக்காக தன்னை யோக்கி வைத்த கிருஷ்ணனுக்கே என்னும் –ஈரியா யிருப்பாள் -கிருஷ்ணனுக்கு என்றால் மேல் ஒன்றும் சொல்ல மாட்டாதே -அவன் குணங்களை அனுசந்தித்து நீராய் இரா நின்றாள் -ஈரித்து இருக்கும் -ஆர்த்த ஹ்ருதையாய் இருக்கும்-

பொன்னுல காளீரோ? புவனிமுழு தாளீரோ?
நன்னலப் புள்ளினங்காள்! வினையாட்டியேன் நான்இரந்தேன்
முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன்
என்னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே.-(3528) –6-8-1-ஸ்ருஷ்ட்டி காலத்தில் வரையாதே சகல லோகங்களையும் உண்டாக்கினவன்-அழிந்தவற்றை உண்டாக்கினவன் உண்டான வஸ்துவை அழிக்குமோ-உண்டாக்கும் இடத்தில் தரமிடாதவன் தன்னைப் பெற வேணும் என்று இருப்பாரே தரம் விடுமோ-முகில் வண்ணன்-தரம் இட்டாலும் விட ஒண்ணாத வடிவு -தன் பேறாக கொடுக்குமவன் என்றுமாம் –-கண்ணன்-ஆஸ்ரிதற்கு தன்னைக் கையாள் ஆக்குமவன்

என் மின்னு நூல் மார்வன் என் கரும் பெருமான் என் கண்ணன்
தன்மன்னு நீள்கழல்மேல் தண்துழாய் நமக்கன்றி நல்கான்
கன்மின்கள் என்று உம்மை யான் கற்பியா வைத்த மாற்றம்சொல்லிச்
சென்மின்கள் தீவினையேன் வளர்த்த சிறு பூவைகளே!–6-8-6-மேகத்திலே மின்னினால் போலே திரு யஜ்ஜோபவீதத்தைக் காட்டி என்னை அநன்யார்ஹை யாக்கினவன்-என் கரும் பெருமான் -அதற்கு பரபாகமான வடிவை எனக்காக்கி என்னை அடிமை கொண்டவன்-என் கண்ணன்-இங்கனம் பிரித்து சொல்ல வேண்டாத படி தன்னை எனக்கு கையாளாக்கினவன்-

பூவைகள் போல்நிறத்தன் புண்டரீகங்கள் போலும் கண்ணன்
யாவையும் யாவருமாய் நின்ற மாயன்என் னாழிப்பிரான்
மாவைவல் வாயபிளந்த மதுசூதற்குஎன் மாற்றம் சொல்லிப்
பாவைகள்! தீர்க்கிற்றிரே வினையாட்டியேன் பாசறவே.–(3533) -6-8-7-பூவைப் போப் போலே இருக்கிற நிறத்தை யுடையவன் -வடிவில் போக்யதை இருக்கிற படி -பிரிந்தார் உடம்பில் வை வர்ணயம் குடி புகுரும்படியான வடிவு –அகவாயில் தண்ணளி எல்லாம் தோற்றும் படியான கண் அழகை யுடையவன் -பிரிந்தாரை பாவைகள் காலிலே விழ விடும் கண் இறே

பேர்த்து மற்றோர் களை கண் வினையாட்டியேன் நான் ஒன்றிலேன்
நீர்த்திரை மேல்உலவி இரை தேரும் புதா இனங்காள்!
கார்த் திரள் மா முகில் போல் கண்ணன் விண்ணவர் கோனைக் கண்டு
வார்த்தைகள் கொண்டருளி யுரையீர் வைகல் வந்திருந்தே.–6-8-9-கறுப்பு எல்லாம் திரண்டால் போல் இருக்கிற மஹா மேகம் போன்ற வடிவை உடையவன் -கார் காலத்தில் திரண்ட மேகம் என்றுமாம் –மா முகில் -மாறாதே கொடுக்க வல்ல முகில் –கண்ணன் -தன்னை பிறருக்கு ஆக்கி வைக்குமவன் –விண்ணவர் கோனை-மத்ஸ்யத்துக்கு தண்ணீர் வார்ப்பாரைப் போலே இவ் வழகையும் குணத்தையும் நித்ய ஸூரிகளை அனுபவிப்பித்து இருக்கிறவனை

இன்னமு தெனத் தோன்றி ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த
முன்னம் மாயமெல்லாம் முழு வேர் அரிந்து என்னை யுன்
சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்தேத்திக் கை தொழவே அருள் எனக்கு
என்னம்மா! என்கண்ணா! இமையோர் தம் குல முதலே!–(3568)-7-1-8-எனக்கு தாய் போலே பரிவனானவனே-என் கண்ணா!-எனக்கு பவ்யனானவனே இமையோர்தம் குலமுதலே!–நித்ய ஸூ ரிகள் சமூகத்தை அடிமை கொண்டு உஜ்ஜீவிப்பிக்குமவனே -நித்ய ஸூ ரிகளை அடிமை கொள்ளுமா போலே நானும் அடிமை செய்யும் படி பண்ணி அருள வேணும் என்கை -ஒரு விபூதிக்காக தாயும் தந்தையாய் அவர்கள் சிந்தித்து ஏத்தி தொழும் படி அருளிக் கொண்டு இருக்கிறவனே –

குல முதல் அடுந் தீவினைக் கொடு வான் குழியினில் வீழ்க்குமைவரை
வல முதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய்
நில மு தல் இனி எவ்வுலகுக்கும் நிற்பன செல்வன எனப்பொருள்
பல முதல் படைத்தாய்! என் கண்ணா! என் பரஞ்சுடரே!–7-1-9-பூமி தொடக்கமாக மற்றும் எல்லா லோகங்களுக்கும் ஸ்தாவர ஜங்கமாத்மகமாய் உள்ள அநேக பதார்த்தங்களையும் முதலிலே படைத்தாய் -ஸ்ருஷ்டிக்கு பிரயோஜனம் மோஷமான பின்பு அது தான் பெற வேண்டாவோ என்கை
என் கண்ணா! என் பரஞ்சுடரே!–எனக்கு பவ்யனாய் நிரதிசய போக்யனுமாய் உள்ளவனே -சர்வ சக்தியாய் எனக்கு பவ்யனாய் போக்யனான நீயே இந்திரிய உபாதையை போக்கி அருள வேணும்-

என் செய்கின் றாய்? என் தாமரைக் கண்ணா!
என்னும் கண்ணீர் மல்க இருக்கும்
என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய்!
என்னும் வெவ் வுயிர்த் துயிர்த் துருகும்
முன் செய்த வினையே முகப்படாய் என்னும்
முகில்வண்ணா! தகுவதோ என்னும்
முன் செய்திவ் வுலகம் உண்டு மிழ்ந் தளந்தாய்!
என் கொலோ முடிகின்றது இவட்கே?–7-2-2-தாமரைக் கண் என்றே தளரும் -என்று தளர்த்திக்கு உடலானது இப்போது தாரகமாகச் செல்லுகிறது -நீர் ஏறுண்டார்க்கு அந்நீரைத் தெளித்து ஆஸ்வசிப்பிக்குமா போலே -எனக்கு ஆற்றாமையை விளைத்த கண்களாலே என் ஆர்த்தி தீர்க்கப் பார்த்தாயோ இல்லையோ -கண்களால் பிறர்க்கு ஆகாதபடி பண்ண அமையுமோ -சதா தரிசனத்தையும் பண்ண வேண்டாவோ -முதலிலே நானும் என் உடைமையும் நீ இட்ட வழக்கு அன்றோ -என்று கண்ணாலே சொன்ன வார்த்தை ப்ரதிஜ்ஜா மாத்ரமாய் அமையுமோ -அது அர்த்தகிரியாகாரியாக வேண்டாவோ-

வட்கிலள் இறையும் ‘மணிவண்ணா!’ என்னும்; வானமே நோக்குமை யாக்கும்
‘உட்குடை அசுரர் உயிரெலாம் உண்ட ஒருவனே!’ என்னும் உள் ளுருகும்;
‘கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய் காகுத்தா! கண்ணனே!’ என்னும்;
திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்’ இவள் திறத் தென் செய்திட்டாயே–(3574)-7-2-3-ஆயாந்தம் புண்டரீகாக்ஷம் வீக்ஷ மாணா குருஸ் த்த்ரிய-என்றும் தாஸாம் ஆவிர்பூத் என்றும் இடைச்சிகளுக்கும் அகப்பட காட்டிக் கொடு திரிந்திலையோ

பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்! பற்றிலார் பற்ற நின்றானே!
கால சக் கரத்தாய்! கடலிடங் கொண்ட கடல்வண்ணா! கண்ணனே!’ என்னும்;
‘சேல்கொள் தண் புனல்சூழ் திருவரங்கத்தாய்!’ என்னும்’என் தீர்த்தனே!’ என்னும்;
கோல மா மழைக்கண் பனி மல்க இருக்கும் என்னுடையக் கோமளக் கொழுந்தே.–7-2-7–நீ எங்களை காலம் பார்த்து அன்றோ கிடக்கிறது –ஒரு கடல் கடலிலே சாய்ந்தால் போலே அணித்தாக திருப் பாற் கடலிலே சாய்ந்தில்லையோ-அவ்வளவு வர வல்லார்க்கே என்ன –-கண்ணனே!’ என்னும்;-அசக்தரான இடையர்க்கும் இடைச்சிகளுக்கும் கிருஷ்ணனாய் வந்து உதவிற்றிலையோ –நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகாதோ மதுராம் புரீம் -அது தப்பிற்று இறே என்ன –

வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்! என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்!
வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த வேத ஒலியும் விழாவொலியும்
பிள்ளைக் குழா விளையாட்டொலியும் அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானே- (3583).–7-3-1-ஸ்யாமமான வடிவுக்கு பரபாகமான வெண்மையையும் சுரியையும் யுடைய ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் -மற்றைக் கைக்கு ஆபரணமான திரு வாழி -இரண்டு ஆழ்வார்கள் அளவும் வந்து அலை எறிகிற கண்கள் -சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் தாமரைக் கண் என்றே தளரும் -என்று கீழ் வாசிதமானது பிரகாசிக்கிற படி -ஜிதந்தே என்னப் பண்ணுகைக்கு திருக் கண்களோடு திவ்யாயுதங்களோடு வாசி இல்லை

நானக் கருங்குழல் தோழிமீர் காள்! அன்னையர் காள்! அயற் சேரியீர் காள்!
நான் இத் தனி நெஞ்சம் காக்க மாட்டேன் என் வசம் அன்று இது இராப்பகல் போய்த்
தேன் மொய்த்த பூம்பொழில் தண் பணை சூழ் தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
வானப் பிரான் மணி வண்ணன் கண்ணன் செங்கனி வாயின் திறத்ததுவே.–7-3-2-வானப் பிரான்-மேன்மை இருந்த படி-மணி வண்ணன் -அம்மதிப்பு இல்லை யாகிலும் விட ஒண்ணாத அழகு
கண்ணன்-இரண்டும் இல்லை யாகிலும் விட ஒண்ணாத பவ்யதை-செங்கனி வாயின் திறத்ததுவே.–-இவை மூன்றிலும் போக ஒட்டாத ஸ்மிதத்திலே படிந்தது-பிரிவை பிரசங்கித்து தாழ்வு தோற்ற வார்த்தை சொல்லப் புக்கு தலைக் கட்ட மாட்டாதே ஸ் மிதம் பண்ணி நின்ற படி-

கோளிழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்
கோளிழைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோளிழை யாவுடைய கொழுஞ்சோதி வட்டங்கொல்? கண்ணன்
கோளிழை வாண் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே.
–7-7-8-தன் ஒளியே தனக்கு ஆபரணமாக உடைய திரு முகமாய்க் கொண்டு உபமான உபேமேயங்கள் மாறாடும் படி ரூபகம் முற்றின படி-கொடியேன் உயிர் கொள்கின்றதே.-எல்லாரும் உயிர் பெறும் நிலத்திலே இப்படி துக்கப் படுகைக்கு ஈடாகப் பண்ணின பாபத்தை யுடைய என் பிராணனை நலியா நின்றது-

தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக்கதி செய்யும்
தெளிவுற்ற கண்ணனைத் தென் குரு கூர்ச்சட கோபன் சொல்
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்
தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே.–(3615)-7-5-11-நாம் இவன் கார்யம் செய்யக் கடவோம் -என்று இருக்கும் கிருஷ்ணனை -இவன் கலங்கின அன்றும் தான் தெளிந்து முடிய நடத்துமவனை

பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!
பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ!
தாமரைக் கண்ணாவோ!தனியேன் தனி ஆளாவோ!
தாமரைக் கையாவோ! உன்னை என்று கொல் சேர்வதுவே?–7-6-1-இத்தை உண்டாக்கி நோக்கின அளவேயோ –போக்யத்தை இல்லை என்று தான் ஆறி இருக்கிறேனோ -உமக்கு வேண்டுவது என் -என்ன -அவலோகந தாநேந பூயோ மாம் பாலய -என்கிறபடியே அழகிய திருக் கண்களால் நோக்கி அருள வேணும் –

கட்குஅரிய பிரமன் சிவன் இந்திரன் என்ற இவர்க்கும்
கட்குஅரிய கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
உட்குஉடை ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் வல்லார்
உட்குஉடை வானவரோடு உட னாய் என்றும் மாயாரே.–(3637) -7-7-11-மநுஷ்யர்கள் உடைய கண்ணுக்கு காண ஒண்ணாத ப்ரஹ்மாதிகள் கண்ணுக்கும் அவிஷயமான கண்ணனை -ப்ரஹ்மாதிகள் என்றும் கேட்டே போம் அத்தனை அல்லது அவர்களுக்கு காண ஒண்ணாதாய் இருக்கிறவன் -உறவு வெளிப்பட்டால் -சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் -என்கிறபடியே பார்த்த பார்த்த இடம் எங்கும் தானேயாய் இரா நின்றான்-

கள்ளவிழ் தாமரைக் கண் கண்ணனே!எனக்கு ஒன்று அருளாய்
உள்ளதும் இல்லதுமாய் உலப்பில்லனவாய் வியவாய்
வெள்ளத் தடங்கடலுள் விட நாகணை மேன் மருவி
உள்ளப் பல்யோகு செய்தி இவை என்ன உபாயங்களே!–(3641)-7-8-4-அப்போது அலர்ந்த தாமரைப் பூ போலே இருக்கிற திருக் கண்களை யுடையனாய் –பவ்யனாய் இருக்கிறவனே -அவனுடைய திருக் கண்கள் போலே யாயிற்று இவருக்கு விபூதியும் ஆகர்ஷகமாய் இருக்கிறபடி -கீழில் திருவாய் மொழியில் -தாமரை நாண் மலர் போல் -என்று பாதகமானது தானே இறே இப்போது அனுகூலமாய் இருக்கிறது

துயரங்கள் செய்யும் கண்ணா !சுடர் நீள் முடி யாய்!அருளாய்
துயரஞ் செய் மானங்களாய் மதனாகி உகவைகளாய்த்
துயரஞ் செய் காமங்களாய்த் துலையாய் நிலையாய் நடையாய்த்
துயரங்கள் செய்து வைத்தி;இவை என்ன சுண் டாயங்களே.–7-8-7-ஆஸ்ரிதர்க்கு துக்கத்தை விளைக்கிற கிருஷ்ணனே -எத்தாலே நலிவது என்னில்-சுடர் நீள் முடி யாய்!-திரு அபிஷேகத்தில் அழகை காட்டி யாயிற்று நலிவது -தர்ச நீயமாய் உபய விபூதிக்கும் சூடின முடி -திரு அபிஷேகம் நலிகிறாப் போலே யாயிற்று விபூதி யோகமும் நலிகிற படி-அருளாய்-இவற்றால் நலிவு படாத படி பண்ணி அருள வேணும்

என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாய் என்னை ஆளுங்கண்ணா!
இன்னதோர் தன்மையை என்று உன்னை யாவர்க்குந் தேற்றரியை
முன்னிய மூவுலகும் மவையாய் அவற்றைப் படைத்தும்
பின்னும் உள்ளாய்!புறத்தாய்!இவை என்ன இயற்கைகளே–7-8-8-.-என்ன லீலைகளாய் யுடையையாய்க் கொண்டு என்ன பிரகாரத்தாலே நின்றாய் -லோகத்தில் காண்கிற லீலையில் காட்டிலும் லீலையும் வ்யாவ்ருத்தமாய் இரா நின்றதீ–என்னை ஆளுங்கண்ணா!-எனக்கு பவ்யனான கிருஷ்ணனே-

என்ன இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா
துன்னு கர சரணம் முதலாக எல்லா உறுப்பும்
உன்னு சுவை ஒளி ஊறு ஒலி நாற்றம் முற்றும் நீயே
உன்னை உணர உறில் உலப்பில்லை நுணுக்கங்களே.–7-8-9-என்ன ஸ்வபாவங்களை யுடையையாய் கொண்டு நிற்கிறாய்-என் கண்ணா-என்னை அடிமை கொள்ளுகிற கிருஷ்ணனே

நீணகரமதுவே மலர்ச் சோலைகள் சூழ் திரு வாறன்விளை
நீணகரத் துறைகின்ற பிரான் நெடுமால் கண்ணன் விண்ணவர் கோன்
வாணபுரம் புக்கு முக் கட்பிரானைத் தொலைய வெம் போர்கள் செய்து
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்றொன்று இலமே.–(3666) -7-10-7–விண்ணவர் கோனாய் வைத்து ஆஸ்ரிதர் பக்கலிலே வ்யாமோஹத்தாலே கிருஷ்ணனாய் வந்து அவதரித்து ஸூலபன் ஆனவன் –

காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கிக் கண்ண நீர் அலமர வினையேன்
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ
காணுமாறு அருளாய் காகுத்தா !கண்ணா !தொண்டனேன் கற்பகக் கனியே !
பேணுவாரமுதே !பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா !–8-1-2-திருவாறன் விளையை திரு நகரியிலே அணித்து ஆக்குதல் -நான் கால்நடை தந்து போய் புக வல்லேனாம் படி பண்ணுதல் செய்யாய் -இப்படி நாம் அங்கே செய்யக் கண்டு நிர்பந்திக்கிறீர் -என்னா-காகுத்தா !-காகுஸ்த வம்சத்தில் அவதரித்து உன் வடிவை எல்லார்க்கும் காட்டிற்று இல்லையோ -ரூப சம்ஹநனம் லஷ்மீம் –காகுஸ்த வம்சே விமுகா ப்ராயந்தி-என்னும் படி அன்றோ –-கண்ணா !-ருஷிகளுக்கே அன்றிக்கே தாஸாம் ஆவிர் பூத் -என்று இடைப் பெண்களுக்கு உன்னை காட்டிற்று இலையோ-தொண்டனேன் கற்பகக் கனியே !-எனக்கு உபகரித்தது கிடக்க பழம் கிணறு கண் வாங்குகிறது என் விஷயாந்தரங்களிலே சபலனான என்னை அத்தை தவிர்த்து நீயே வந்து உன்னை எனக்கு சர்வ ஸ்வதானம் பண்ணினவனே -அத்யத்ன சித்த போக்யன் ஆனவனே-பேணுவாரமுதே !–உன் பக்கல் ஆஸாலேசம் உடையோருக்கு நிரதிசய போக்யன் ஆனவனே -கலங்குகையும் அக்ரமமாக கூப்பிடுகையும் மிகையாகும் படி அன்றோ உன் படி இருப்பது

வேண்டிச் சென்று ஓன்று பெறுகிற்பாரில் என்னுடைத் தோழியர் நுங்கட்கேலும்
ஈண்டு இது உரைக்கும்படியை அந்தோ காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்
காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன் விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால்
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான் எத்தனை காலம் இளைக்கின்றேனே ?-(3683)–8-2-2–காணத் தக்கு இருந்துள்ள கண்களை யுடையவன் -சதா தர்சன யோக்கியமான கண்கள் -விகாசம் செவ்வி குளிர்த்தி நாற்றம் இவற்றால் பங்கஜ சத்ருசமாய் இருக்கை – கள்வன்-நானும் என் உடைமையும் உன்னதன்றோ என்று ஒரு கால் தன் செல்லாமையை ஆவிஷ்கரித்து ஆத்மாத்மீயங்களை அபஹரித்தவன்-

காலம் இளைக்கில் அல்லால் வினையேன் நான் இளைக்கின்றிலன் கண்டு கொண்மின்
ஞாலம் அறியப் பழி சுமந்தேன் நன்னுதலீர் ! இனி நாணித் தான் என் ?
நீலமலர் நெடுஞ்சோதி சூழ்ந்த நீண்ட முகில் வண்ணன் கண்ணன் கொண்ட
கோல வளை யோடு மாமை கொள்வான் எத்தனை காலமும் கூடச் சென்றே–8-2-3-நீலமாய் -விஸ்திருதமாய் அபரிச்சேத்யமான தேஜஸ் ஸூ சூழ்ந்த அபரிச்சேத்யமான காள மேகத்தின் நிறம் போலே இருக்கிற நிறத்தை யுடைய ஆஸ்ரித பவ்யன் இவ் வழகைக்காட்டி அபஹரித்துக் கொண்ட

பாதமடை வதன் பாசத்தாலே மற்றவன்பாசங்கள் முற்ற விட்டு
கோதில் புகழ்க் கண்ணன் தன்னடி மேல் வண் குருகூர் சடகோபன் சொன்ன
தீதில் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவையுமோர் பத்திசை யோடும் வல்லார்
ஆதுமோர் தீதிலராகி இங்கு மங்கு மெல்லாம் அமைவார்கள் தாமே–(3692) -8-2-11-திருவடிகளிலே சங்கத்துக்கு முதல் அவனுடைய கல்யாண குணங்கள் -இக் குணங்களுக்கு கோதாவது தன்னை ஒழிய புறம்பேயும் நசை பண்ணும் படி இருக்கை-கண்ணன் தன்னடி மேல்-இப் புகழை யுடைய கிருஷ்ணனுடைய திருவடிகளிலே யாயிற்று சொல்லிற்று -எல்லாம் கண்ணன் -என்று இறே தொடங்கிற்று-

மாயக் கூத்தா வாமனா வினையேன் கண்ணா கண் கை கால்
தூய செய்ய மலர்களா சோதித் செவ்வாய் முகிழதா
சாயல் சாமத் திருமேனி தண் பாசடையா தாமரை நீள்
வாசத்தடம் போல் வருவானே ஒரு நாள் காண வாராயே-8-5-1–ஸ்ரீ வாமனனாய் வந்து அவதரித்து இந்திரனுக்கு ஆனால் போலே கிருஷ்ணனாய் வந்து அவதரித்தது தனக்காக என்று இருக்கிறார் -அவதாரங்களில் காட்டில் கிருஷ்ணாவதாரத்தில் அண்மையாலே சொல்லுகிறார் -சர்வ சாதாரணனுடைய அவதாரம் ஆகையால் உணர்ந்தவர்களுக்கு எனக்கு என்னலாம் படி இருக்கையாலே சொல்லுகிறார் என்றுமாம் —வினையேன் என்கிறது பல்லில் பட்டு தெறித்தால் போலே அவதாரத்துக்கு பிற்பட்ட படியால் சொல்லுகிறார்-

கொண்டல் வண்ணா குடக்கூத்தா வினையேன் கண்ணா கண்ணா -என்
அண்ட வாணா வென்று என்னை ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்
விண் தன்மேல் தான் மண் மேல்தான் விரி நீர்க் கடல் தான் மற்றுத் தான்
தொண்டனேன் உன் கழல் காண ஒரு நாள் வந்து தோன்றாயே-8-5-6-கண்ட போதே விடாய் கெடும்படி சிரமஹரமான வடிவை யுடையவனே-குடக்கூத்தா-மநோ ஹரமான சேஷ்டிதங்களை யுடையவனே
வினையேன் கண்ணா-கண்ணா– எனக்கு த்ருஷ்டியான கிருஷ்ணனே –வினையேன் -கண்ணை இழந்து இருக்கும் படியான பாபத்தை பண்ணினேன்

மெல்லிலைச் செல்வ வண் கொடிப் புல்க வீங்கிளந்தான் கமுகின்
மல்லிலை மடல் வாழை ஈன் கனி சூழ்ந்து மணம் கமழ்ந்து
புல்லிலைத் தெங்கினூடு காலுலவும் தண் திருப் புலியூர்
மல்லலஞ் செல்வக் கண்ணன் தாள் அடைந்தாள் இம் மடவரலே–(3765) -8-9-7-நிரவதிகமாய் அழகிதான சம்பத்தை யுடைய கிருஷ்ணன்=தாள் அடைந்தாள்-பிரணயித்தவ குணத்திலே தோற்றுத் திருவடிகளை பற்றினாள்-இம் மடவரலே–இம் முக்தையான பெண் பிள்ளை -முன்பு எனக்கு பவ்யையான இவள் என்னால் விலக்க ஒண்ணாத தேசத்திலே போய்ப் புக்காள்-

நல்ல கோட்பாட்டுலகங்கள் மூன்றின் உள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை அந்தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப்பட்ட வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே–(3780) -8-10-11-இவர் ததீயரைப் பற்றின ஹர்ஷ ப்ரகர்ஷத்தாலே புதுக் கணித்த திருக் கண்களை யுடையவன்-

யாதும் இல்லை மிக்கதனில் என்று என்று அது கருதி
காது செய்வான் கூதை செய்து கடை முறை வாழ்க்கையும் போம்
மாதுகிலின் கொடிக் கொள் மாட வடமதுரைப் பிறந்த
தாதுசேர் தோள் கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரணே–
9-1-9-கம்சன் வாழ்கிறானாய் படை வீட்டைக் கொடி கட்ட இவர் அத்தை கிருஷ்ணனுடைய அவதாரத்துக்கு உடலாக்குகிறார் -சிசுபாலன் விவாஹத்துக்குச் செய்த சடங்குகளை தனக்கு உடலாக்கிக் கொண்டது போலே-தாதுசேர் தோள் கண்ணன் அல்லால்-வைஜயந்தி உள்ளிட்ட தோள் மாலைகளால் அலங்க்ருதமான கிருஷ்ணனை ஒழிய வேறு பிரயோஜனம் வேண்டாம் என்கை-இல்லை கண்டீர் சரணே-புறம்பு ரக்ஷகம் இல்லை கிடி கோள் –ஆனபின்பு சர்வாதிகனாய் ஸூ லபனான கிருஷ்ணனே பரம ப்ராப்யன் -என்கை –

கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து
மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்
திண்ண மா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்ம்மினோ
எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லையே–9-1-10-கிருஷ்ணனை ஒழிய வேறு சரணம் ஆவார் இல்லை என்னும் இவ்வர்த்தத்தை ஸ்தாபிக்கைக்காகவும் -அதுக்கு உறுப்பாக பூ பாரத்தை போக்கி அருளுகைக்கும் ஸ்ரீ மதுரையிலே வந்து திருவவதாரம் பண்ணினான் -உங்களுடைய ஆத்மாத்மீயங்கள் எல்லாம் சேஷியாயும் ஸூலபனானாயும் உள்ள அவன் திருவடிகளிலே சேஷத்வேன த்ருடமாக சமர்ப்பியுங்கோள்-அவனது நம்மதோ என்று விசாரிக்க வேண்டா -உங்களோடு உங்கள் உடைமையோடு வாசி யற அவனுக்கே சேஷம்-உங்களுக்கு சாத்யமானவை எல்லாம் சாதித்து தருவான் அவன் ஒழிய வேறு இல்லை -சமிதை பாதி சாவித்ரி பாதி யாய் உங்கள் தலையிலும் சிறிது கிடக்கிறது அன்று -அவனே நிரபேஷ உபாயம்-

ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே துணிந்து
தாது சேர் தோள் கண்ணனை குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீதிலாத ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும்
ஓத வல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே–(3791) -9-1-11-அவனை ஒழிய வேறு ப்ராப்ய ப்ராபகங்கள் இல்லை என்று அத்யவசித்து-தாது சேர் தோள் கண்ணனை -இவருக்கு இவ்வத்ய வஸ்யத்தை பிறப்பித்தார் யார் என்னில் -தோளும் தோள் மாலையுமான அழகைக் காட்டி யாயிற்று இவருக்கு இவ்வத்யா வஸ்யத்தை பிறப்பித்தது

மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று
பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்
கருந்தேவன் எம்மான் கண்ணன் விண்ணுலகம்
தருந்தேவனை சோரேல் கண்டாய் மனமே–(3806) -9-3-4-காள மேக நிபாஸ்யமான திவ்யமான வடிவை யுடையவன்-எம்மான்-அவ்வடிவைக் காட்டி என்னை அநந்யார்ஹன் ஆக்கினவன் -நித்ய ஸூ ரிகளுக்கு படிவிடும் வடிவைக் கிடீர் எனக்கு உபகரித்தது-கண்ணன் -தன்னிலை குலையாமல் நின்று உபகரிக்கை அன்றிக்கே அவதரித்து வந்து உபகரித்தவன்-விண்ணுலகம்-தருந்தேவனை -பரமபதத்தை தருவானாய் இருக்கிற சர்வேஸ்வரனை-சோரேல் கண்டாய் மனமே–நெஞ்சே விடாதே கிடாய் –அவன் உபகாரகனாய் நிற்க நீ வை முக்கியம் பண்ணாதே கிடாய் -அவன் வை லக்ஷண்யத்தை புத்தி பண்ணாதே ஸூ லபன் என்னா கால் கடைக் கொள்ளாதே கிடாய் –

உருவாகிய ஆறு சமயங்கட்கு எல்லாம்
பொருவாகி நின்றான் அவன் எல்லாப் பொருட்கும்
அருவாகிய வாதியைத் தேவர்கட்கு எல்லாம்
கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே–(3821)-9-4-8-ப்ரஹ்மாதிகளுக்கும் கூட காரண பூதனானவனை –கண்ணனைக் -காரியங்களில் ஒன்றுக்கு தான் காரணம் ஆனவனை-கண்டு கொண்டேனே–அவதாரத்துக்கு பிற்பாடராய் இருக்க கண்டு கொண்டேன் என்கிறார் இறே -ப்ரேமார்த்த சித்தருக்கு என்றும் காணலாம் -அவதார சம காலத்திலும் காண ஒண்ணாது சிசு பாலாதிகளுக்கு –பாஹ்ய சமயங்களால் அவிஸால்யனாய் -சர்வ அந்தராத்மாவாய்க் கொண்டு -சர்வ நியாந்தாவாய் -ப்ரஹ்மாதிகளுக்கும் உத்பாதகனாய் இருந்து வைத்து ஆஸ்ரிதற்கு ஸூ லபனாய் இருக்கிறவனைக் காணப் பெற்றேன் -என்கிறார் –

கூக்குரல் கேட்டும் நம் கண்ணன் மாயன் வெளிப்படான்
மேற் கிளை கொள்ளேன் மின் நீரும் சேவலும் கோழி காள்
வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கு அதே
ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே–(3828) -9-5-4-நீங்கள் கூவுகிற த்வனியைக் கேட்டு வைத்தும் -இவற்றினுடைய த்வனி செல்லாத இடம் இல்லை என்று இருக்கிறாள் –-நம் கண்ணன்-வட யஷி பிரசித்தி போலே இது ஒரு யுண்டாக்கி வைப்பதே –-மாயன் -ஆச்சர்ய சீலன் -பிரிந்தால் தரிக்க ஒண்ணாத படி கிட்டின போது கையைக் காலைப் பிடித்து தாழ நின்று பரிமாறுமவன் –-வெளிப்படான்-இவள் பிழையாள் -என்று தோற்றுகிறிலன் -தாஸாம் ஆவீரபூத் -என்னுமவன் கிடீர் -ருஷியும் ஆவீரபூத் -என்றான் -இவளும் வெளிப்பாடான என்றாள்-கை கழிய போகான் -மறைந்து நின்று தோற்றும் என்று இருக்கிறாள் –

நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளிப் பைதலே
இன் குரல் நீ மிழற்றேல் என் ஆர் உயிர்க் காகுத்தன்
நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன்
நின் பசுஞ்சாம நிறத்தன் கூட்டு உண்டு நீங்கினான்–9-5-6-உன்னுடைய சிவந்த வாய் போலே இருக்கும் வாயை யுடையவன் -உபமானத்தைச் சொல்லி சேர்த்து விடுமது ஒழிய உபமேயம் தன்னை பேச முடியாது-கண்ணன் கை காலினன்-உன்னைப் போலே சிவந்த கண்ணையும் கையையும் திருவடிகளையும் உடையவனே –-நின் பசுஞ்சாம நிறத்தன்–உன்னுடைய குளிர்ந்த ஸ்யாமமான நிறத்தை யுடையவன்

கூட்டுண்டு நீங்கிய கோலத் தாமரைக் கண் செவ்வாய்
வாட்டமில் என் கரு மாணிக்கம் கண்ணன் மாயன் போல்
கோட்டிய வில்லோடு மின்னும் மேகக் குழாங்கள் காள்
காட்டேன்மின் நும் உரு என் உயிர்க்கு அது காலனே–9-5-7-கோலத் தாமரைக் கண் செவ்வாய்–தர்ச நீயமான தாமரை போலே இருக்கிற கண்ணையும் சிவந்த வாயையும் உடையவனாய் –-வாட்டமில் என் கரு மாணிக்கம்-பிரிந்த பின்பும் மறக்க ஒண்ணாத படி ஸ்மாரகமாய் நலிகிற நீல ரத்னம் போலே இருக்கிற நிறத்தை யுடையனாய் –கலந்த போதை வடிவில் பிரிந்த செவ்வி பிரிந்த பின்பும் அப்படியே இருக்கிற படியைச் சொல்லிற்று ஆகவுமாம் –-இத்தலையை வெறும் தரை ஆக்கின பின்பு நிறம் இரட்டித்த படி -நைவ தம்சான் ந மசகான்-என்று அவன் இருக்க அரை க்ஷணம் தாழ்த்தான் என்னா இவ்வார்த்தையைச் சொல்லுகிறாள் இறே-கண்ணன் மாயன் போல்-ஆச்சர்ய பூதனான கிருஷ்ணனைப் போலே -கலந்த போது காலைக் கையைப் பிடித்து பரிமாறி பவ்யனாய் இருந்த படி-

உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர்
குயிற் பைதல் காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்
தயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து சொல்
பயிற்றிய நல் வளம் ஊட்டினீர் பண்பு உடையீரே –9-5-8-தீரா மாற்றாலே நெஞ்சைப் புண் படுத்தி வைக்கும் கிருஷ்ணன் திரு நாமங்களையே அவ்யக்தமாகச் சொல்லி முடித்தி கோள் -ம்ருத சஞ்சீவனமான ராம குணங்களை ஒரு காள் சொல்லலாகாதோ-

பண்புடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேன்மின்
புண்புரை வேல்கொடு குத்தால் ஒக்கும் நும் இன்குரல்
தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும்
கண் பெரும் கண்ணன் நம் ஆவி உண்டு எழ நண்ணினான்-(3833) 9-5-9-
குளிர்ந்த பெரிய நீரை யுடைய பொய்கையிலே தாமரைப் பூ அலர்ந்தால் போலே யாய் அவ்வளவு இன்றிக்கே பெரிய கண்களை யுடைய கிருஷ்ணன்-நம் ஆவி உண்டு எழ நண்ணினான்–அவ் அழகைக் காட்டி என்னை முடித்துப் பிரிந்து போனான் –

திருவருள் செய்பவன் போல என் உள் புகுந்து
உருவமும் ஓர் ஆர் உயிரும் உடனே உண்டான்
திருவளர் சோலைத் தென் காட்கரை என் அப்பன்
கருவளர் மேனி நம் கண்ணன் கள்வங்களே–(3840) -9-6-5–கருவளர் மேனி -கறுப்பு வளரா நின்றுள்ள வடிவு -சதைகரூபம் என்று சொல்லுமது கண்டிலோமீ-நம் கண்ணன் –ஆஸ்ரித பவ்யனான கிருஷ்ணன் –
கள்வங்களே–முகப்பில் ஒன்றாய் -முடிவில் ஒன்றாய் இருக்கும் ப்ரவ்ருத்திகள் –அடிமை கொள்வாரைப் போலே புகுந்து -தான் நியாம்யனாய் தாழ நிற்கையும் -விரோதியான சரீரத்தை கழித்து தர வேணும் என்று புகுந்து தேஹாத்ம விபாகம் பண்ண மாட்டாது ஒழிகையும் -போக்யமாய்ப் புகுந்து தான் போக்தாவாகையும் -எனக்கு உபகரிப்பானாய் புகுந்து தன் பேறாகத் தலைக் கட்டுகையும் -இது அடங்க வடிவிலே வேறுபாடடாலே தோற்றி இருக்கையும் -இத்தலையில் ஆத்மபஹாரத்தை தவிர்த்தது தன்னாத்ம அபஹாரத்தாலே யாயத்து –

எம் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும்
அம் கண்ணன் உண்ட என் ஆர் உயிர்க்கோது இது
புன் கண்மை எய்திப் புலம்பி இராப்பகல்
என் கண்ணன் என்று அவன் காட் கரை ஏத்துமே-9-6-6- எனக்கு பவ்யரைப் போலே இருக்கிற கிருஷ்ணனுடைய வஞ்சனங்கள் எனக்கு செவ்வையாய்த் தோற்றும் -அவன் களவிலே அகப்பட்டாலும் மீள மாட்டாதே -அவன் முகத்தே விழித்த வாறே அது எல்லாம் எனக்கு மெய்யாய் இருக்கும்
அவன் நமக்கு பவ்யன் அன்றோ -என் பக்கல் களவு பரிமாறுமோ -அவன் செய்தது எல்லாம் எனக்கு மெய் -என்றுமாம் –சேமம் போலே இருக்கும் என்றுமாம் –நம் கண்ணன் கள்வங்கள் -என்று கீழ் முடிய –எம் கண்ணன் -என்று தொடங்குவான் என் -நாம் என்றும் யாம் என்றும் பர்யாயம் ஆகையால் பொருளிசை அந்தாதியாகக் கிடக்கிறது –எம் கண்ணன் கள்வங்கள்-என்ற பாடமாகில் நேரே கிடக்கும் –
அம் கண்ணன் உண்ட -அதி சபலனானவன் அனுபவித்த -அதி பிரவணனானவனை -அம் கண்ணன்-என்ன கடவது இறே –என் ஆர் உயிர்க்கோது இது–கோதான என் ஆத்மாவான இது -ஆத்மாவை கோதாம் படியாய்த்து பரிமாறிற்று –புன் கண்மை எய்தி-பேகணிப்பு -பொல்லா நோக்கை யுடைத்தாய் -என்கை –மீளவும் உயிர்ப்பு பெய்து -என்றும் சொல்லிப் போரும் -ஸ்ருதமும் சப்தார்த்தமும் சேரும் படி என் என்று விசாரித்து -கோதான வாருயிர் பேகணிக்கும் போது மீளவும் உயிர்ப் பெய்ய வேணும் இ றே -என்று பிள்ளை அவிவிரோதேன அன்வயித்து அருளிச் செய்வர்புலம்பி இராப்பகல்-என் கண்ணன் -என்று அவன் காட் கரை ஏத்துமே-முன்பு எனக்கு பவ்யனான கிருஷ்ணன் என்று அஹோராத்ர விபாகம் இன்றியே கூப்பிட்டு -அவன் வர்த்திக்கிற திருக் காட்கரையையே ஏத்தா நின்றது –ராகவஸ்ய நிவேசனே -என்னுமா போலே –

காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–9-6-7-அவனிலும் அவன் இருந்த வூரை ஏத்தும் –அதனுள் கண்ணா என்னும்-பரத்வத்தில் காட்டில் அவ்வூரில் புகுந்த பின்பு யுண்டான ஏற்றம் -என் கண்ணன் -என்னா காட்கரை ஏத்தும் -அவ்வூரை ஏத்தா அவன் தன்னை ஏத்தும் -இரண்டுக்கும் புறம்பு போகிறதில்லை –

மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ வண் குறிஞ்சி இசை தவரும் ஆலோ
செல்கதிர் மாலையும் மயக்கும் ஆலோ செக்கர் நன் மேகங்கள் சிதைக்கும் ஆலோ
அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ –(3869) -9-9-1-இவற்றை இன்னாது ஆகிறது என் -அவன் தான் முன்னே நாம் முடிகைக்கு அன்றோ கலந்து போகின்றது சர்வமும் பாதகமாம் படி முன்னே புகல் அறுத்தான் அவன் அன்றோ –அல்லி யம் தாமரைக் கண்ணன் -அல்லியை யுடைத்தான அழகிதான தாமரை போலே இருந்த திருக் கண்களை யுடையவன் -முதல் உறவு பண்ணுவது கண்ணாலே இறே -த்ருஷ்ட்டி பந்தம் பிறந்தால் இறே சம்ச்லேஷம் யுண்டாவது -எம்மான் -அவ் வழகாலே என்னை அநன்யார்ஹை யாக்கினவன்-

இனி இருந்து என் உயிர் காக்குமாறு என் இணை முலை நமுக நுண்ணிடை நுடங்க
துனியிரும் கலவி செய்து ஆகம் தோய்ந்து துறந்து எம்மை விட்டு அகல் கண்ணன் கள்வன்
தனி இளம் சிங்கம் எம்மாயன் வாரான் தாமரைக் கண்ணும் செவ்வாயும் நீலப்
பனி இரும் குழல்களும் நான்கு தோளும் பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ–9-9-3—இப்படி விருப்பத்துக்கு விஷய பூதையான என்னைக்  கை விட்டு அசேதனத்தை பொகட்டால் போலே -பொகட்டோம் என்னும் நினைவும் இல்லாத படி பொகட்டு -இப்படி அவகாஹித்தது எல்லாம் கை விடுகைக்கு உடலாய்த்து என்கை –-அகல் கண்ணன் -அகலுகையே ஸ்வபாவமான கிருஷ்ணன் -அவனுக்கு கலவி காதாசித்கம் -அகலுகையே நிரூபகம் -கலவியால் அல்லது பிரிவு யுண்டாகாமையாலே கலந்தான் அத்தனை –-கள்வன்-தனி இளம் சிங்கம் -கலக்கிற போது நோக்கும் -பேச்சும் பண்ணின வியாபாரங்களும் சர்வ ஸ்வ அபஹாரிகளாய் இருக்கை –அப்போது தன் ஆற்றாமையால் கழிக்கிறான் என்று தோற்றும் படி -யாய் -பலத்தில் பிரிந்து நோவு படுத்தச் செய்தானாய் இருக்கை என்றுமாம் –தனி -தன்னோட்டை கலவியாலே அத்விதீயன் என்று தோற்றும்படி இருக்கிறவன் –இளஞ்சிங்கம் -என்னோட்டை கலவியாலே இளகிப் பதித்து மேனாணித்து இருக்கிறவன் –அவன் கண்ணுக்கு விஷயம் ஆகாது ஒழிந்தால் -இவை நெஞ்சுக்கு விஷயம் ஆகாது ஒழிந்தால் ஆகாதோ -தான் போகா நின்றால் -இவற்றை வைத்து போக வேணுமோ -கலந்த போது தன் பேறு என்று தோற்றும் படியான ஹர்ஷம் அடங்க கண்ணிலே தோற்றும் படியான திருக் கண்களை யுடையவன் என்னுதல் –பிரிவை நினைத்து வாய் விட மாட்டாதே ஆற்றாமை அடங்கலும் நோக்கிலே நின்ற நிலை என்னுதல்-

ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள் ஆர் உயிரவள் அன்றிக் கூர் தண் வாடை
காரொக்கும் மேனி நம் கண்ணன் கள்வம் கவர்ந்தவத் தனி நெஞ்சம் அவன் கண் அக்தே
சீருற்ற அகில் புகை யாழ் நரம்பு பஞ்சமா அம் தண் பசுஞ்சாந்து அணைந்து
போருற்ற வாடை தண் மல்லிகைப் பூப் புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ–9-9-7-மேகம் போலே ஸ்ரமஹரமான நிறத்தாலே அந்நிய பரமாக்கி நமக்கு பவ்யனான கிருஷ்ணனுடைய கள்வம் உண்டு -சம்ச்லேஷ தசையில் சொன்ன தாழ்வுகளும் செயல்களும் -அவற்றால் அபஹ்ருதமாய் -அத்விதீயமான என் நெஞ்சானது அவன் பக்கலது-

புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ பொங்கிள வாடை புன் செக்கராலோ
அது மணந்து அகன்ற நம் கண்ணன் கள்வம் கண்ணனில் கொடுத்தினியதனிலும்பர்
மது மண மல்லிகை மந்தக் கோவை வண் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து
அது மணம் தின்ன அருள் ஆய்ச்சியர்க்கே ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்-9-9-8-கலக்கிற போது நமக்கு ஸ்வம் என்னும் படி இருந்த கிருஷ்ணனுடைய தற்காலத்து பரிமாற்றம் -அவன் தன்னில் காட்டிலும் பாதகமாகா நின்றது -கலக்கிற போது தாழ்வுகள் தோற்ற பரிமாறின பரிமாற்றத்தில் காட்டிலும் அவன் தானே நல்லன் என்கை –

வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்காக்
காமரு குயில்களும் கூவும் ஆலோ கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ தகவிலை தகவிலையே நீ கண்ணா–10-3-1-நாம் பிரிந்திலோம் –பிரிய நினைத்திலோம் –இப்படி இருக்க போனோமுமாய் -போனால் நலியக் கடவ பதார்த்தங்களும் நலிந்ததாய் இருக்கிற இது ஒரு ப்ரேம ஸ்வபாவம் இருக்கும் படியே -என்று சாதரமாகப் பார்க்க –அழகிய திருக் கண்களால் நோக்கி -நோவு படுத்தா நின்றாய் என்கிறாள் -இந்நோக்கில் காட்டில் நீ பசு மேய்க்கப் போகை யமையும் என்கை முன்புத்தை நோக்கு -ஸ்ம்ருதி விஷயமாக சொல்லுகிறாள் என்பாரும் உண்டு –-ஈர்தி -என்கையாலே -இப்போது பார்த்தானாக வேணும் -இப்படி சொன்ன இடத்திலும் நோக்கை மாற வைத்திலன்–

தகவிலை தகவிலை யே நீ கண்ணா தடமுலை புணர்தொறும் புணர்ச்சிக்கு ஆராச்
சுகவெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க்கச் சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே
அக உயிர் அகம் அகம் தோறும் உள் புக்கு ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ
மிக மிக இனி உன்னை பிரிவை ஆமால் வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே–10-3-2-நீ கண்ணா தகவிலையே–பெண் பிறந்ததற்கு ஸ்வம்மான நீ நிர்த்தயனே யாகா நின்றாய் –கிருஷ்ணன் என்றால் பெண்களுக்கேயாய் இருக்கும் என்னும் இடம் பிரசித்தம் இறே -நாம் பிரிய நினையாது இருக்க நிர்த்தயன் என்கிறது தன் ஆற்றாமையால் இறே -என்று அதுக்கு பரிகாரமாக அணைத்தான் –

பணி மொழி நினைதொறும் ஆவி வேமால் பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா
பிணியவிழ்மல்லிகை வாடை தூவப் பெரு மத மாலையும் வந்தன்றாலோ
மணி மிகு மார்வினின் முல்லைப் போது என் வன முலை கமழ்வித் துன் வாயமுதம் தந்து
அணி மிகு தாமரைக் கையை யந்தோ அடிச்சியோம் தலை மிசை யணியாய்-10-3-5-பிரிவை நினைத்து பிரியேன் என்று சொல்லுகிற உன் வார்த்தை போலே –உன்னைப் பிரியாமைக்கு சொல்லுகிற வார்த்தை அல்ல -உன்னது கள்வப் பணி மொழி யாகையாலே பொய்-இது அனுபவத்துக்கு பாசுரம் இட்டுச் சொல்லுகிற வார்த்தை யாகையாலே மெய் –நான் போனேனோ என்ன –பகல் நிரை மேய்க்கிய போய -பகல் எல்லாம் பசு மேய்க்கப் போனாய் –-கண்ணா-என்று சம்போதித்து -அவன் தனக்கே -நீ போனாய் -என்கிறாள் இறே –

அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் ஆழி அம் கண்ணா உன் கோலப் பாதம்
பிடித்து அது நடுவு உனக்கு அரியையரும் பலர் அது நிற்க எம் பெண்மை ஆற்றோம்
வடித்தடம் கண் இணை நீரும் நில்லா மனமும் நில்லா எமக்கு அது தன்னாலே
வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே–10-3-6-கண்ணாலே குளிர நோக்க வேணும் -தலையிலே கையை வைக்கவும் வேணும் -என்கிறாள் -உனக்குத் தோற்றாரை–ஐயோ -என்று குளிர நோக்கி -ஈராக் கையால் தடவ வேண்டாவோ –ஆழி அம் கண்ணா ––கடல் போலே ஸ்ரமஹரமாய்–தர்ச நியாமான கண் –தலை மிசை நீ அணியாய்—என்கிற அதன் அருகே யாகையாலே –ஆழி அம் கண்ணா–என்கிற சம்போதானத்துக்கு -குளிர நோக்கி அருள வேணும் -என்று கருத்து

பற்று என்று பற்றி பரம பரம்பரனை
மல் திண் தோள் மாலை வழுதி வள நாடன்
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
கற்றார்க்கு ஓர் பற்றாகும் கண்ணன் கழலிணையே–10-4-11-கற்றார்க்கு கிருஷ்ணனுடைய திருவடிகளே ப்ராப்யமாம் -தாமோதரன் –தாள்கள் –சார்வு -என்று ஆழ்வார் அறுதியிட்ட பேற்றைக் கொடுக்கும் –

கண்ணன் கழலிணை-நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம்-திண்ணம் நாரணமே–10-5-1-விபக்ருஷ்டமான பரம பதத்தில் இருக்கை இன்றிக்கே -இங்கே வந்து அவதரித்து -அதிலும் அதிகாரம் ஆராய்க்கைக்கு வசிஷ்டாதிகளும் வாசல் காப்பாரும் இன்றிக்கே -சர்வ ஸூலபனான கிருஷ்ணன் திருவடிகளை –கழலிணை–தூது போதல் -சாரத்யம் பண்ணுதல் -செய்யும் திருவடிகளை –இதுக்கு ஒரு அதிகாரம் சம்பாதிக்க வேண்டா -இச்சையே வேண்டுவது -விலக்ஷண புருஷார்த்தமாய் இருக்க ருசி மாத்திரமே அமையும் ஆகிறது -இதுக்கு சத்ருசமான அதிகாரம் சம்பாதிக்க ஒண்ணாமையாலும் ப்ராப்த விஷயம் ஆகையால் அதிகார அபேக்ஷை இல்லாமையாலும் — கண்ணன் கழலிணை–என்று தாமோதரன் தாள்கள் சார்வே -என்றத்தை அனுபாஷிக்கிறார்-எண்ணும் திருநாமம்–எப்போதும் அநுஸந்திக்கும் திரு நாமம் -மந்த்ரம் என்னாதே திரு நாமம் என்கிறது -அதிகாரி நியதி யாதல் –அங்க நியதி யாதல் -வேண்டா என்கைக்காக -மாத்ரு நாம க்ரஹணத்துக்கு அதிகாரமும் வேண்டா -சரசமுமாய் இருப்பது 

ஸ்ரீ புருஷ ஸூக்தம்–

September 12, 2026

ஸஹஸ்ர சீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்‌ ஸ பூ,மிம்‌ விஸ்வதோ வ்ருத்வா. அத்யதிஷ்டத்‌ தசாங்குலம்‌–1-

புருஷ ஏவேதம் ஸர்வம்‌, யத்‌, பூ,தம்‌. யச்ச பவ்யம்‌ உதாம்ருதத் வஸ்யேசாந:, யத,ந்நேநாதி ரோஹதி-2-

ஏதாவாந் ௮ஸ்‌ய மஹிமா, அதோ ஜ்யாயாம்ச்ச பூருஷ:
பாதோஸ்ய விஸ்வா பூ,தாநி ,த்ரிபாத,ஸ்யாம்ருதம்‌ திவி.–3-

த்‌ரிபாதூர்த்‌வ உதைத்‌ புருஷ; பாதோஸ்யே ஹா பவாத்புந :
ததோ விஷ்வங்‌ வ்யக்ராமத்‌ ஸாசநா நசநே அபி..| -4-

தஸ்மாத்‌, விராட, ஜாயத விராஜோ ௮தி பூருஷ:
ஸ ஜாதோ அத்யரிச்யத பச்சாத்‌ பூ,மிமதோ புர:–5-

யத் புருஷேணே ஹவிஷா, தே,வா யஜ்ஞமதந்வத
வஸந்தோஸ்யா ஸீதஜ்யம்‌, க்ரீஷ்ம இத்‌மச்‌ஸ்ரத்‌தவி:–6-

ஸப்தாஸ்யாஸந்‌ பரித,ய:, த்ரிஸ் ஸப்த ஸமித,: க்ருதா:
தே,வா யத்‌;யஜ்ஞம்‌ தந் வாநா :; அபத்நந்‌ புருஷம்‌ பசும்‌.-7-

தம்‌ யஜ்ஞம்‌ ப,ர்ஹிஷி ப்ரெளக்ஷந்‌, புருஷம்‌ ஜாதம் அக்ரத :
தேந தே,வா அயஜந்த, ஸாத்‌,யா ருஷயச்ச யே. –8-

தஸ்மாத்‌, யஜ்ஞாத்‌ ஸர்வஹுத:, ஸம்ப்‌,ருதம்‌ ப்ருஷதாஜ்யம்‌
பசூம்ஸ்தாம்ஸ் சக்ரே வாயவ்யாந்‌, ஆரண்யாந் க்‌,ராம் யாச்சயே–9-

தஸ்மாத்‌, யஜ்ஞாத்‌ ஸர்வஹுத: ருசஸ்‌ ஸாமாறி ஜஜ்ஞிரே
சந்தராம்ஸி ஜஜ்ஞிரே தஸ்மாத்‌, யஜுஸ்‌ தஸ்மாத, ஜாயத,–10-

தஸ்மாத,ச்வா அஜாயந்த ஏகேசோப,யாத,த:
காவோ ஹ ஐஜ்ஜிரே தஸ்மாத்‌ தஸ்மாத்‌ ஜாதா அஜா வய:–11-

யத்‌ புருஷம்‌ வ்யத,து,: கதிதா வ்யகல்பயந்‌
முக,ம்‌ கிமஸ்ய கெள பராஹ, காவூரு பாதர வுச்யேதே-12-

ப்‌ராஹ்மணோஸ்ய முக,மாஸீத்‌ பாஹூ ராஜந்ய: க்ருத;
ஊரூ ததஸ்ய யத்‌,வைச்ய: பத்‌,ப்‌,யாம்‌ சூத்‌ரோ அஜாயத.–13-

நாப்‌,யா ஆஸீ த,ந்தரிக்ஷம்‌, சீர்ஷ்ணோ த்‌,யெளஸ்‌ ஸம வர்த்தத
பத்ப்‌,யாம்‌ பூ,மிர்‌ தி,சச்‌ ச்ரோத்ராத்‌, ததர லோகாந்‌ அகல்பயந்-15-

நாப்‌,யா ஆஸீ த,ந்தரிக்ஷம்‌, சீர்ஷ்ணோ த்‌,யெளஸ்‌ ஸம வர்த்தத
பத்ப்‌,யாம்‌ பூ,மிர்‌ தி,சச்‌ ச்ரோத்ராத்‌, ததர லோகாந்‌ அகல்பயந்-15-

வேதாஹ மேதம்‌ புருஷம்‌ மஹாந்தம்‌
ஆதித்ய வர்ணம்‌ தமஸஸ்து பாரே
ஸர்வாணி ரூபாணி விசித்ய தீர:
நாமாநி க்ருத்வாபி,வதந்‌ யதாஸ்தே–16-

தாதா புரஸ்தாத்‌, யமுதாஜஹார சக்ர: ப்ரவித்‌,வாந்‌ பரதி ,சச்சதஸ்ர:
தமேவம்‌ வித்‌,வாந்‌ ௮ம்ருத இஹப,வதி நாந்ய: பந்தா: அயநாய வித்‌யதே.-17-

யஜ்ஞேந யஜ்ஞமயஜந்த தே,வா: தாநி தர்மாணி ப்ரதமா ந்யாஸந்
தே ஹ நாகம்‌ மஹிமாநஸ்‌ ஸசந்தே யத்ர பூர்வே ஸாத்‌யாஸ்‌ ஸந்தி தேவா–18

உத்தரானுவாகம்‌.
1-அத்ப்‌யஸ்‌ ஸம்பூத: ப்ருதிவ்யை ரஸாச்ச விஸ்வ கர்மணஸ்‌ ஸம வர்த்ததாது,
தஸ்ய த்வஷ்டா விததத்‌, ரூபமேதி தத் புருஷஸ்ய விஸ்வமாஜா நமக்‌ரே.
-1-

வேதாஹமேதம்‌ புருஷம்‌ மஹாந்தம்‌, ஆதித்ய வர்ணம்‌ தமஸ: பரஸ்தாத்‌
தமேவம்‌ வித்‌வாந்‌ அம்ருத இஹ ப,வதி, நாந்ய: பந்தா வித்‌யதேயநாய–2-

ப்ரஜாபதிச்‌ சரதி கர்ப்பே, அந்த:, அஜாயமாநோ பஹுதா விஜாயதே
தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம்‌, மரீசீகாம்‌ பதமிச்சந்தி வேத,ஸ:3-

யோ தே,வேப்‌,ய ஆதபதி, யோ தே,வாநாம்‌ புரோ ஹித:.
பூர்வா யோ தே வேப்‌யோ ஜாத:, நமோ ருசாய ப்‌ராஹ்மயே–4-

தஸ்மாத்‌, விராட, ஜாயத விராஜோ ௮தி பூருஷ:
ஸ ஜாதோ அத்யரிச்யத பச்சாத்‌ பூ,மிமதோ புர:–5-

ருசம்‌ ப்‌ராஹ்மம்‌ ஜநயந்த: தேவா அக்‌ரே தத;ப்‌ருவந்‌
யஸ்த்வைவம்‌ ப்‌ராஹ்மணோ வித்‌யாத்‌ தஸ்ய தே,வா அஸந்‌ வசே.–5

ஹ்ரீச்ச தே லக்ஷ்மீச்ச பத்ந்யெள, அஹோராத்ரே பார்ஸ்வே நக்ஷத்ராணி ரூபம்‌ அஸ்விநெள வ்யாத்தம்‌ இஷ்டம்‌ மநிஷாண அமும்‌ மநிஷாண ஸர்வம்‌ மநிஷாண,-6-

ஸஹஸ்ர சீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்‌ ஸ பூ,மிம்‌ விஸ்வதோ வ்ருத்வா. அத்யதிஷ்டத்‌ தசாங்குலம்‌–1-
[புருஷனென்று சொல்லப்படும்‌ நாராயணன்‌ அநந்தமான தலைகளையும்‌, எண்ண முடியாத கண்களையும்‌, அநேகம்‌ கால்களையும்‌ உடையவர்‌. அவர்‌ பூமியை நான்கு புறத்திலும்‌ வியாபித்து அநந்த யோஜன ப்ரமாணமான ப்ரம்ஹாண்டத்தை ஆக்ரமித்தார்‌.

“ஸஹஸ்ர சீர்ஷா இத்யத்ர ஸஹஸ்ர அநந்த வாசக:-அநந்த யோஜநம்‌ ப்ராஹத,சாங்குலவசஸ்‌ ததா தஸ்ய ப்ரதமயா விஷ்ணோர்‌ தே சதோ வ்யாப்திருஸ்யதே”
[“ஸஹஸ்ர சீர்ஷா””
 என்னுமிடத்தில்‌ ஸஹஸ்ர சப்தம்‌ அநந்தம்‌ என்னும்‌ அர்த்தத்தைச்‌ சொல்லுகிறது. தசாங்குல பதம்‌ அநந்த யோஜனையைச்‌ சொல்லுகிறது. புருஷ ஸூக்தத்தின்‌ முதல்‌ மந்திரத்‌தினால்‌ விஷ்ணுவினுடைய ஸர்வ தேச வ்யாப்தி சொல்லப்படுகிறது] என்று புருஷ ஸம்ஹிதையில்‌ இந்த முதல்‌ மந்திரத்தின்‌ அர்த்தம்‌ சொல்லப்பட்டது.

(ஸஹஸ்ரசீர்ஷா)கணக்கற்ற தலைகளை உடையவன்‌, இங்கு தலை என்பது எல்லா அங்கங்களையும்‌ காட்டுகிறது. மெய்‌, வாய்‌, கண்‌, மூக்கு, செவி என்னும்‌ ஜ்ஞானேந்த்ரியங்கள்‌ ஐந்தையும்‌ உடைத்தாயிருப்பதால்‌ தலை முதலில்‌ எடுக்கப்படுகிறது. இங்கு சீர்ஷ சப்தம்‌ ஜ்ஞானேந்த்ரியங்களால்‌ உண்டாகும்‌ ஜ்ஞானத்தைக்‌ குறிக்கிறது.
ப்ராம்ஹணத்தில்‌ போத,ந மநந ஸ்ரவண ஸ்பர்சந தரர்சந ரஸந க்ராண ஜ்ஞாநாநி ஸ்ருதாநி ப,வந்தீத்யத: சிரஸ் ‘” .[அறிதல்‌, நினைத்‌தல்‌,கேட்பது, ஸ்பர்சம்‌, பார்ப்பது, ரசிப்பது, முகர்வது என்னும்‌ ஞானங்கள்‌ இதனால்‌ அறியப்படுவதால்‌ இது சிரஸ்‌ என்று சொல்லப்‌ படுகிறது] என்று “சிரஸ்‌’ என்னும்‌ சப்தத்தின்‌ பொருள்‌ சொல்லப்‌ பட்டிருக்கிறதன்றோ. இதனால்‌ அபரிமிதமான ‘அறிவை யுடையவன்‌ அநந்தன்‌ என்று அறிவிக்கப்பட்டதாயிற்று. இதையே (ஸஹஸ்‌ராக்ஷ:) என்று விவரித்திருக்கிறது வேதம்‌. ‘“ஸர்வேந்த்‌ரியாணாம்‌ நயதம்‌ ப்ரதாதம்‌’” என்பதினால்‌ கண்‌ எடுக்கப்பட்டது. இவ்விடக்‌ தில்‌ கண்‌” என்னும்‌ பதம்‌ ஐந்து ஜ்ஞானேந்த்ரியங்களையும் காட்டி புருஷோத்தமன்‌ அநந்தமான ஜ்ஞானத்தை யுடையவன்‌ என்று விளக்குகிறது. (ஸஹஸ்ரபாத்‌) அளவற்ற திருவடிகளை உடையவன்‌. இங்கு ‘பாத்‌’ என்னும்‌ சப்தம்‌ ஐந்து கர்மேந்த்ரியங்களையும்‌ காட்டுவதன் மூலம்‌ அளவற்ற சக்தியை யுடையவன்‌ என்று அச்யுதன்‌ அறிவிக்கிறது. இவ் விரண்டு பதங்களாலும்‌ அளவற்ற ஞான சக்திகளை யுடையவன்‌ பகவான்‌ என்று உரைக்கப்பட்டது.“பராஸ்ய சக்திர்‌ விவிதை,வ ஸ்ரூயதே ‘ஸ்வாபவிகீ ஜ்ஞாந ப,ல க்ரியா ச -ஸர்வேஸ்வரேஸ்வரனுடைய சக்தியும்‌, ஜ்ஞானமும்‌, பலமும்‌, செய்கைகளும்‌, ஸ்வாபாவிகமானதாகவும்‌, பலபடிப் பட்டதாகவும்‌, மேலானதாகவும்‌ சொல்லப் படுகிறது.] என்றல்லவோ உபனிஷத்‌ உத்கோஷித்தது.

(ஸஹஸ்ரசீர்ஷா): இதற்கு வேறு வகையாகவும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. ஸகல ப்ராணிகளடங்கிய ப்ரம்மாண்ட்ம்‌ – நாராயணனுக்கு சரீரமானதினால்‌ இதற்குள்‌ளடங்கிய பிராணிகளுடைய தலை,கண்‌, கால்‌ முதலியவை இவனுடையவையே என்னத்‌ தட்டில்லை.
இவ் விடத்தில்‌ வித்யாரண்ய பாஷ்யத்திலும்‌ ஸர்வ ப்ராணிகளும்‌ இவருடைய சரீரத்தில்‌ அடங்கினபடியால்‌ அந்த அவயவங்களெல்‌லாம்‌ இவருடைய அவயவங்களாகும்‌ என்று காணப்படுகிறது ஸகல ப்ராணிகளுடைய அவயவங்களையும்‌ தனக்கு சேஷமாக உடையவன்‌ பகவான்‌ எனப்படுகிறது. அதனாலேயே அவன்‌ ஹ்ருஷீகேசன்‌
(இந்த்ரியங்களை நியமிப்பவன்‌) எனப்படுகிறான்‌. தலையால்‌ வணங்‌கப் படவேண்டியவன்‌ அவனே. வாயினால்‌ பேசத் தக்கவனும்‌ அவனே. புத்தியினால்‌ அறியப்பட வேண்‌டியவன்‌ ஹரியே: .கண்‌ களால்‌ பார்க்கத் தக்கவனும்‌ அவனே. செவிகளால்‌ கேட்க வேண்டியது அவனுடைய கீர்த்திகளையே. (ஸஹஸ்ரபாத்‌) என்று நம்முடைய கர்மேந்த்ரியங்களும்‌ அவனுடைய கைங்கர்யம்‌ செய்ய ஏற்பட்டவைகள்‌ என்று உணர்த்தப்படுகிறது. இவ்விடத்தில்‌,
வாய்‌ அவனை யல்லது வாழ்த்தாது கை உலகம்‌
தாயவனை யல்லது தாம்‌ தொழா–பேய்முலை நஞ்சு
ஊணாக உண்டான்‌ உருவோடு பேரல்லால்‌
காணா கண்‌ கேளா செவி,-
என்ற பாசுரம்‌ அனுஸந்திக்கத்தக்கது. (ஸஹஸ்ரசீர்ஷா) முதலிய
பதங்கள்‌ அர்ஜுனனுக்கு விஸ்வரூப தர்ஸசனத்தின் போது காட்டப்‌ பட்டது போன்ற அஸாதாரணமான விக்ரஹத்தை வர்ணிக்கின்றனஎன்றும்‌ கொள்ளலாம்‌. ஆழ்வாரும்‌ இதையே, “தோள்களாயிரத்தாய்‌! முடிகளாயிரத்தாய்‌! துணை மலர்க்‌ கண்களாயிரத்தாய்‌! தாள்களாயிரத்தாய்‌!” என்று வர்ணித்தாரன்றோ.

(புருஷ:) இதில்‌ சொல்லப்படும்‌ புருஷன்‌ யார்‌? இது எந்த தெய்வத்தையும்‌ குறிக்கலாமே. புருஷ: என்பது ஸாமாந்ய சப்தமல்லவா? என்று சிலர்‌ கேட்கிறார்கள்‌.
“ப,கவாநிதி சப்தோயம்‌ ததா புருஷ இத்யபி | நிருபாதீ, ச வர்த்தேதே வாஸு தே,வே ஸ. நாதநே ||
ஸ ஏவ வாஸு தே,வோஸெள ஸாக்ஷாத்‌ புருஷ உச்யதே | ஸ்த்ரீ ப்ராயமிதரத்‌ ஸர்வம்‌ ஐகத்‌ ப்‌,ரஹ்ம புரஸ் ஸரரம்‌ |

[பகவான்‌, புருஷன்‌ என்னும்‌ இத்த இரு சப்தங்களும்‌ இயற்கையாகவே ஸநாதனனான வாஸுதேவனைக்‌ குறிக்கின்றன. அந்த வாஸு தேவனே ஸாக்ஷாத்‌ புருஷனாகச்‌ சொல்லப் படுகிறான்‌. பிரம்‌மாவை முன்னிட்ட மற்ற ஸகல ப்ராணிகளும்‌ ஸ்த்ரி ப்ராயர்களே.] என்று பாத்ம புராணத்தில்‌ பேசப் பட்டிருக்கிறது. பகவான்‌, புருஷன்‌ என்னும்‌ இவ்விரு பதங்களும்‌ முக்யமாக நாராயணனையே குறிக்கும்‌. அவன்‌ ஓருவனே புருஷன்‌. மற்றவர்கள்‌ ஸ்த்ரீ ப்ராயர்‌களே. ஸ்த்ரீ புருஷனை விட்டால்‌ ஜார ஸ்த்ரீயாவது போல்‌ இதர தெய்வங்களைத்‌ தொழும்‌ ஜீவனும்‌ அப்படியே கருதப் படுகிறான்‌.-புருஷன்‌ என்றால்‌ ஸகல சேதந அசேதநங்களிலும்‌ வியாபித்து நிறைந்து நிற்பவன்‌ என்று பொருள்‌. இது நாராயணனுக்கே அஸாதாரணமான குணம்‌. ஸுபாலோபநிஷத்தில்‌ “ஸஹஸ்ர சீர்ஷா…” என்னும்‌ மந்த்ரத்தைப்‌ பரம புருஷனைக்‌ குறித்து ப்ரயோகம்‌ செய்து அவனே ஸர்வ பூதாந்தராத்மாவான நாராயணன்‌ என்று நிர்ணயம்‌ செய்திருப்பதால்‌ இந்தப்‌ புருஷ சப்தம்‌ நாராயணனையே குறிக்கிறது என்பது ஸர்வ வேதாந்த ப்ரத்யய ந்யாயப்படி ஸித்திக்கிறது. கீதாசார்யனும்‌,
“யஸ்மாத்‌ க்ஷரமதீதோஹம்‌ அக்ஷராத,பி சோத்தம: |
தஸ்மாத்‌ வேதே; ச லோகே ச ப்ரதி,த: புருஷோத்தம: ||’”

[ஞானத்தில்‌ ஏற்றத் தாழ்வுகளுள்ள ஸம்ஸாரி புருஷனை அதி க்ரமித்தவனாகவும்‌, ஜ்ஞானத்தில்‌ ஸங்கோச விகாஸமற்றவனான முக்‌தனைக் காட்டிலும்‌ மேலானவனாகவும்‌ நான்‌ இருப்பதால்‌ லோகத்‌திலும்‌, வேதத்திலும்‌ புருஷோத்தமன்‌ என்று பிரஸித்தி பெற்றிருக்‌கிறேன்‌] என்று கீதையில்‌ அருளிச் செய்திருக்கிறார்‌.

(ஸ:) இப்படி வேதத்தில்‌ ப்ரஸித்தி பெற்றவரான அந்த நாராயணன்‌.
(பூமிம்‌) “பூ,மிர்‌ பூ,ம்நா * என்று பூஸூக்தத்தில்‌ சொல்லியபடி பரப்பை உடைத்தாயிருப்பதால்‌ பூமி எனப்படுகிறது. இங்கு பூமி என்பதினால்‌ பதினாலு புவனங்களும்‌ சொல்லப்படுகின்றன. (விஸ்வதோ வ்ருத்வா…) இப்படிப்பட்ட கீழேழு மேலேழு லோகங்‌களையும்‌ நான்கு புறமும்‌ வியாபித்து, அவருடைய அங்குலத்தில்‌ பத்து அங்குலம்‌ ப்ரமாணமுள்ள ப்ரஹ்மாண்டத்தை ஆக்ரமித்தார்‌. இந்த ப்ரஹ்மாண்டம்‌ அவருடைய ஸ்வரூபத்தில்‌ ஒரு மூலையில்‌ அடங்கி விட்டது என்று பொருள்‌.

(தசாங்குலம்‌) என்பதற்கு விஷ்ணு சித்தாசாரியர்‌ தசகுணம்‌” என்று பொருள் கூறி மஹா ப்ரமாணமான இந்த அண்டம்‌ என்று விளக்கி யிருக்கிறார்‌. புருஷ ஸம்ஹிதையிலும்‌ இந்த அர்த்தமே ஆதரிக்கப்பட்டது. மாத்வர்‌ பிரஹ்மா முதலிய ஜீவர்‌களுடைய பத்தங்குலம்‌ அளவுடைய ஹ்ருதய கமலத்தில்‌ அந்தர்‌யாமி யாயிருக்கிறார்‌ என்று அர்த்தம்‌ செய்தார்‌. நாபிக்கு மேல்‌ பத்தங்‌குலத்திற்கு மேற்பட்டிருக்கிற ஹ்ருதயத்தில்‌ வஸிக்கிறார்‌ என்றார்‌ மஹீ தரர்‌. வித்யாரண்யர்‌ பத்து என்பதற்கு அநேகம்‌ என்று பொருள் கொண்டு அண்டத்திற்கு வெளியிலும்‌ வியாபித்திருந்தார்‌ என்று சொல்லி யிருக்கிறார்‌.

இதனால்‌ பரம புருஷனுக்கு தேச பரிச்சேதம்‌ (தேசத்தினால்‌ அளவு பட்டிருத்தல்‌) இல்லை என்று சொல்லப்பட்டது. அங்கும்‌ இங்கும்‌ எங்கும்‌ பரந்துளான்‌ புருஷோத்தமன்‌. இங்கு ஸர்வ வ்யாபகத்‌வத்தைக் கொண்டு இவன்‌ விஷ்ணுவே என்று காட்டப்பட்டது. ““விசதீதி விஷ்ணு:’” என்று எங்கும்‌ நுழைந்திருப்பதால்‌ விஷ்ணு எனப்படுகிறானன்றோ. இவ் விடத்தில்‌ பகவான்‌ ஜ்ஞானம்‌, சக்தி முதலிய கல்யாண குணங்களை உடையவனென்றும்‌, ஸகல லோகங்‌களையும்‌ வியாபித்து அவைகளை சரீரமாகக் கொண்டிருக்கிறான்‌ என்றும்‌, அஸாதாரணமான அப்ராக்ருத சரீரத்தை உடையவனென்‌ றும்‌ தெளிவாகச்‌ சொல்லப் பட்டிருக்கிறபடியால்‌, பூமி பொய்‌” என்‌றும்‌, **குணமில்லை ரூபமில்லை’” என்றும்‌ சொல்லும்‌ அத்வைத வாதங்‌கள்‌ அடியோடு அகற்றப் பட்டன.

———-

2-புருஷ ஏவேதம் ஸர்வம்‌, யத்‌, பூ,தம்‌. யச்ச பவ்யம்‌ உதாம்ருதத் வஸ்யேசாந:, யத,ந்நேநாதி ரோஹதி,[எந்த ஐகத்தானது முன்‌ கல்பத்திலிருந்ததோ, எந்த ஜகத்தானது பின் வரும்‌ கல்பத்தில்‌ உண்டாகப் போகிறதோ, எது இந்தக்‌ கல்பத்‌திலிருக்கிறதோ, எந்த ஜகத்தானது அந்நத்தினால்‌ மறையாமலிருக்‌கிறதோ இந்த ஸமஸ்தமான ஜகத்தும்‌ புருஷனாகிற நாராயணனே. மேலும்‌, மோஷாத்துக்கு ப்ரபுவும்‌ ஸ்ரீமந்‌ நாராயணனே.]“தீவிதீயயா சாஸ்ய விஷ்ணோ: கால தோ வ்யாப்தி ருஸ்யதே”” –[இரண்டாவது மந்த்ரத்தினால்‌ இந்த விஷ்ணுவுக்கு ஸர்வ காலத்‌திலும்‌ வ்யாப்தி சொல்லப்பட்டது. | என்று இந்த ருக்கின்‌ அர்த்தம்‌ புருஷ ஸம்ஹிதையில்‌ ஸங்க்ரஹிக்கப்பட்டது.

(புருஷ…… ) ‘போகின்ற காலங்கள்‌ போய காலங்கள்‌ போகு காலங்கள்‌” எனப்படும்‌ மூன்று காலங்களிலும்‌: இருக்கும்‌ வஸ்துக்களெல்லாம்‌ புருஷனே என்று சொல்லப் படுகிறது. :முன்‌ மந்த்ரத்‌தில்‌ பரம புருஷன்‌ எங்கும்‌ வியாபித்திருக்கிறான் என்று சொல்லப்‌பட்டது. ஆகாசம் போல்‌ வியாபித்திருப்பது மட்டுமல்ல; எல்லா வற்றையும்‌ சரீரமாகவும்‌ கொண்டிருக்கிறான்‌ பரமாத்மா என்பதை இது காட்டுகிறது.” என்று விஷ்ணுசித்தர்‌ வியாக்யானம்‌ செய்தார்‌.
“இதம்‌ ஸர்வம்‌” என்றதினால்‌ புருஷோத்தமனுக்கு வஸ்து பரிச்சேதம்‌ (வஸ்துவினால்‌ அளவு பட்டிருத்தல்‌) இல்லை என்று காட்டப்பட்டது. அவனில்லாத வஸ்துவே இல்லை யன்றோ. 

“யத்‌.பூ,தம்‌…ப,வ்யம்‌’” என்‌பதினால்‌ கால பரிச்சேதமில்லாதவன கேசவன்‌ என்று காட்டப்பட்டது.-ஆதி மத்‌,யாந்த ரஹிதனன்றோ அநந்தன்‌. “முன்‌ காலத்திலிருந்தான்‌; இப்பொழுதில்லை.” முதலிய குறைகள்‌ அவனைப் பற்றிச்‌ சொல்ல முடியாது. எல்லாம்‌ அவன்‌’ என்பதினால்‌ ஸர்வம்‌ விஷ்ணு மயம்‌ ஜகத்‌” என்று தெரிவிக்கப் படுகிறது.-அதனால்‌ மற்றவைகளில்லை என்று ஏற்படாது. மற்றவைகள்‌ அவனுக்கு சரீரமென்றும்‌, அவைகளுக்கு அவன்‌ அந்தர்யாமி என்றுமே ஏற்படும்‌. சரீரத்திற்குப்‌ பெயரான கிருஷ்ணன்‌, ஸ்ரீநிவாஸன்‌ முதலியவைகள்‌ ஆத்மாவையும்‌ குறிக்கின்றன. அம் மாதிரியே இவ் வுலகத்தை யெல்லாம்‌ சரீரமாகக்‌ கொண்ட புருஷனை ‘எல்லாம்‌ அவனே” என்று சொல்வது பொருந்‌ தும்‌. *இந்தக்‌ குடம்‌ கருப்பு” ‘என்று சொன்னால்‌ :குடம்‌” என்று சொல்லப்படும்‌ வஸ்துவும்‌ “கருப்பு என்று சொல்லப்படும்‌ வஸ்துவும்‌ ஓன்றாகி விடுமோ? கருப்பு நிறமானது பிரிக்க முடியாதபடி குடத்‌தில்‌ ஒன்றி நிற்கிறது என்றே ஏற்படும்‌. அம் மாதிரியே *புருஷனே இவ் வுலகம்‌” என்று சொன்னால்‌ இவ் வுலகமானது பரமாத்மாவை விட்டுப்‌ பிரிக்க முடியாதபடி ‘ அவனுடன்‌ ஒடுங்கி நிற்கிறது என்றே பொருள்படும்‌. இவ் விஷயத்தை ::அந்பச்ச ராஜந்‌ ஸ பர: ததராந்ய:பஞ்ச விம்சக: தத்ஸ்த,த்வாதநு பஸ்யந்தி ஹ்யேக்‌ ஏவேதி . ஸாத,வ[ராஜனே! பரமாத்மா வேறானவன்‌. இருபத்தைந்தாவது தத்வமான ஜீவன்‌ வேறானவன்‌. அவனுக்குள்‌ அந்தர்யாமியாக இருப்பதால்‌, ஸாதுக்கள்‌ ஓருவனென்றே நினைக்கிறார்கள்‌-] என்று வ்யாஸரால்‌ மோஷ தர்மத்தில்‌ சொல்லப்பட்டது. கீதையில்‌ அர்‌ ஜுனனும்‌ “ஸர்வம்‌ ஸமாப்நோஷி ததோஸி ஸர்வ:”” [நீ எல்லாவற்றினுள்ளும்‌ நிறைந்திருப்பதால்‌ எல்லாமாக இருக்கிறாய்‌-] என்று கண்ணனைத்‌ துதித்தான்‌. இங்கும்‌ புருஷோத்தமன்‌ எங்கும்‌ வியாபித்திருக்கிறான்‌ என்று சொன்ன பின்பல்லவோ புருஷனே எல்லாம்‌” என்று சொல்லப்பட்டிருக்கிறது.ஆழ்வாரும்‌ :’அவனே மற்றெல்லாமும்‌ அறிந்தனமே’‘ என்றும்‌, “வருங்காலம்‌ நிகழ் காலம்‌ கழி காலமாய்‌ உலகை ஒருங்காக அளிப்பாய்‌” என்றும்‌ பாடி யிருக்கிறார்‌.

(யத்‌ அந்நேந .அதி ரோஹதி) எந்த உலஃமானது அந்நத்தினால்‌ நசிக்காம லிருக்கிறதோ” என்று அர்த்தம்‌.-உலகத்திற்கு ஆஹாரத்தை அளித்து அவைகளை அழியாமல்‌ காக்கும்‌ இயல்வினன்‌ கண்ண பெருமான்‌‘. இங்கு அந்நம்‌’ என்பது . இந்திரியங்களால்‌ அனுபவிக்கப்படும்‌ விஷயங்களைக்‌ குறிக்கும்‌. தர்மார்த்த காமங்களாகிற இஹ லோக புருஷார்த்தங்களாக்‌ கொடுப்பவன்‌ பகவான்‌ என்று சொல்லப்படுகிறது. (உதாம்ருதத்வஸ்ய ஈசாந:) மோக்ஷ புரு ஷார்த்தத்தையும்‌ கொடுப்பவன்‌ பகவானே என்று சொல்லப்படுகிறது. இது பகவானுடைய அஸாதாரணமான லக்ஷணம்‌. இதர புருஷார்த்தங்களைக்‌ கொடுப்பதற்குப்‌ பல தேவதைகளை நாட்டி வைத்‌திருக்கிறான்‌ நாராயணன்‌. ஆனால்‌ மோக்ஷத்தையும்‌ கொடுப்பவன்‌ முகுந்தனே. “அம்ருதத்வம்‌ அஸ்நுதே‘ என்று வேதங்களில்‌ கோஷிக்கப்‌ பட்ட மோக்ஷத்திற்கு ப்ரபு நாராயணனே. வித்யாரண்யர்‌ ‘முக்காலங்‌களிலும்‌ உள்ள ஜகத்‌ எல்லாம்‌ விராட் புருஷனே. . எல்லாக் காலங்‌களிலுமுள்ள ஸஃல ப்ராணிகளுடைய தேஹங்களும்‌ விராட் புருஷனுடைய அவயவங்களே. ப்ரஹ்மா, இந்திரன்‌ முதலியவர்களும்‌ அவரை ஆஸ்ரயித்தே தங்களுடைய ஸ்தானங்களை யடைகிறார்கள்‌”* என்று அர்த்தம்‌ செய்தார்‌. மேலும்‌, “தங்கக் கட்டி, குண்டலம்‌ முதலிய ஆபரணமாக ஆனாலும்‌, அந்தக்‌ குண்டலம்‌ முதலியவை உண்டாவதற்கு முன்னும்‌ அழிந்ததற்குப் பின்னும்‌ காணாப் படாமையால்‌ வாஸ்தவமாகாது. தங்கம்‌ எப்போதும்‌ காணப் படுவதால்‌ உண்மையானதாகக்‌ கொள்கிறோம்‌. அதுபோல்‌ இந்த உலகமும்‌ முன்‌ இல்லாமலிருந்து இப்போது தோன்றி சில நாளைக்குப் பின்‌ அழித்து போகிற படியால்‌ உண்மை யல்ல. விராட் புருஷனுடைய (ஸ்வரூபம்‌ எப்போதுமிருப்பதால்‌ உண்மையானது. அவரே, ஜீவாத்மாக்களுடைய புண்ய பாபங்களுக்குத்‌ தகுந்தபடி அவர்களுக்குப்‌ பலன்‌ கொடுப்பதற்காகத்‌ தன்னுடைய நிஜ ஸ்வரூபத்தை ‘விட்டு இந்த ஜகத் ரூபமாய்‌ ஆகி யிருக்கிறார்‌.” என்றும்‌ சொல்லி இருக்கிறார்‌. இது சரியன்று. உண்டாவதற்கு முன்னும்‌ அழிந்ததற்குப்‌ பின்னும்‌ காணப் படாததால்‌ உலகம்‌” மாறுபாட்டை யுடையது என்றும்‌,அநித்யமானது (நிலை யற்றது) என்றும்‌ ஏற்படுமே யொழியப்‌ பொய்யானது என்று ஏற்படாது.

இந்த ருக்கில்‌ இதம்‌” என்று சேதனாசேதனங்களடங்கிய ஜகத்தைக் காட்டுகிறது. புருஷனென்று
பரமாத்மா சொல்லப்படுகிறான்‌. ஜகத்‌ பொய்யான வஸ்துவானால்‌ பொய்யான வஸ்துவைப்‌ புருஷன்‌ என்று சொல்லுவது அர்த்தமற்ற பேச்சு. *இதம்‌’ என்றும்‌, ‘புருஷ:” என்றும்‌ தனித் தனியாக எடுக்கப்‌ பட்ட இரண்டும்‌ ஸத்யமானது என்றே ஏற்படும்‌. யத்‌ பூதம்‌…… ்‌என்று மூன்று காலங்களும்‌ குறிக்கப்படுவதால்‌ காலம்‌ என்னும்‌ தத்வமும்‌ உண்மை யானது என்று உணர்த்தப் படுகிறது. அம்ரு தத்வமென்றும்‌ அதற்கு ஈசனனென்றும்‌ இரண்டு சொல்லப்படுகின்றன. அம்ருதத்வம்‌ (மோக்ஷம்‌) என்று ஒன்றிருந்தால்‌ அதை அடைகிற வஸ்துவும்‌ இருந்தேயாக வேண்டும்‌. ஜகத்‌ பொய்யானால்‌“அது அந்நத்தினால்‌ நாசமடையாம லிருக்கிறது” என்பது அஸம்பாவிதம்‌. ஆகையால்‌ இங்கு அத்வைத வாதத்திற்கு அணு வளவும்‌ அவகாசமில்லை- இந்த மந்த்ரத்தின்‌ அர்த்தம்‌
புருஷோ நாராயண: பூ,தம்‌ ப,வ்யம்‌ ப,விஷ்யச்ச ஆஸீத்‌
ஸ ஏஷ ஸர்வேஷாம்‌ மோக்ஷத,ச்ச ஆஸீத்‌”?

[புருஷனாகிற நாராயணன்‌ சென்றவைகளும்‌, வருமவைகளும்‌, இருப்பவைகளுமாக ஆனார்‌. அவர்‌ எல்லோருக்கும்‌ மோக்ஷத்தைக்‌ கொடுப்பவராகவும்‌. ஆனார்‌.] என்று முத்‌கலோபனிஷத்தில்‌ சொல்லப் பட்டது.

———-

ஏதாவாந் ௮ஸ்‌ய மஹிமா, அதோ ஜ்யாயாம்ச்ச பூருஷ:
பாதோஸ்ய விஸ்வா பூ,தாநி ,த்ரிபாத,ஸ்யாம்ருதம்‌ திவி.–
3-
[இந்தப்‌ புருஷனுடைய பெருமை இப் பேர்ப்பட்டது. ஆகையால்‌ புருஷோத்தமன்‌ மேலானவன்‌. எல்லா பூதங்களும்‌ இவனுடைய ஒரு பாகம்‌. போக்யமாயிருப்பதான மூன்று பாகம்‌ இவனுடைய பரம பதத்திலிருக்கிறது.]
ஏதாவாநிதி மந்த்ரேண வைப,வம்‌ கதி,தம்‌ ஹரே:’” [ஏதாவாந்‌……..” என்னும்‌ மந்த்ரத்தினல்‌ ஹரியினுடைய பெருமை பேசப்பட்டது] என்று புருஷ ஸம்ஹிதையில்‌ சொல்லப் பட்டிருக்கிறது.-

(ஏதாவாந்‌……) இந்தப்‌ புருஷோத்தமன்‌ தேசத்தினாலும்‌,காலத்தினாலும்‌, வஸ்துவினாலும்‌ அளவிட முடியாதவன்‌. போக மோக்ஷங்களைத்‌ தருபவன்‌ முகுந்தன்‌. இப்படிப்பட்டது அவனுடைய மஹிமை. ஆகையால்‌ அவனே மேலானவன்‌. (ஏதாவாந்‌ அஸ்ய மஹிமா?…) என்று வைத்துக் கொண்டு““இவ்வளவு தானே அவன்‌ மஹிமை? இதைக் காட்டிலும்‌ மேலானவனன்றோ புருஷன்‌”” என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌. “ஸோ அங்க; வேத; யதி;வா ந வேத ” [தன்‌ பெருமையை, அவனே அறிவனோ? அறியானோ?] என்றது வேதம்‌.“தனக்கும்‌ தன்‌ தன்மை அறிவரியானை”:- நம்மாழ்வார்‌.
**யஸ்யாமதம்‌ தஸ்ய மதம்‌” [எவன்‌ பரமாத்மாவை அளவிட்டு அறிய முடியாத வனென்று நினைக்கிருனோ அவனே அறிந்தவனாகிறான்‌.] என்று மறைகள்‌ முறை யிட்டன. ஆயிரம்‌ நாவு படைத்த ஆதி சேஷனாலும்‌, ‘ஸஹஸ்ர சீர்ஷா’ வான எம்பெருமானாலும்‌ அப்‌ பெருமையைப்‌ பேச முடியாது. எவ்வளவு வர்ணித்தாலும்‌ அதற்கும்‌ மேலானவனாகவே இருப்பான்‌ அநந்தன்‌.

(பாதோஸ்ய…… ) இவ் வுலகிலிருப்பவை களெல்லாம்‌ இவனுடைய ஏக தேசத்தில்‌ அடங்கி விடுகின்‌றன.*“யஸ்யா யுதாயுதாம்சாம்சே விஸ்வ சக்திரியம்‌ ஸ்திதா’ (எந்தப்‌ பரமாத்மாவினுடைய பல்லாயிரத்தில்‌ ஒரு பாகத்தில்‌ இந்த லீலா விபூதியானது அடங்கி விடுகிறதோ………] என்று பராசரர்‌ விஷ்ணு புராணத்தில்‌ விளக்கினார்‌… (த்ரிபாத்‌) அளவற்றதான இந்த லீலா விபூதியைக் காட்டிலும்‌ பன்‌ மடங்கு அளவற்றது நித்ய விபூதி.-இங்கு “மூன்று என்பது “அநந்தம்‌” என்பதைக்‌ குறிக்கும்‌.-இதனாலேயே பரம பதத்தை “த்ரிபாத் விபூதி” என்கிறோம்‌. (அம்ருதம்‌) அழியாதது. ::நச புநராவர்த்ததே’” [மோக்ஷமடைந்தவன்‌ மறுபடி திரும்பி வருவதில்லை.]என்று வேதம்‌ கோஷித்தது.-புணைக்‌ கொடுக்‌கிலும்‌ போக லொட்டான்‌” என்றார்‌ ஆழ்வார்‌. ஏற விட்டு ஏணி வாங்குபவனன்றோ எம்பெருமான்‌. இந்தப்‌ பரம பதத்திற்கும்‌ அதி லுள்ளார்க்கும்‌ அழிவு கிடையாது.-‘ இனிமையானது”என்றும் பொருள்‌ கொள்ளலாம்‌. கனியைக்‌ கரும்பினின்‌ சாற்றைக்‌ கட்டியைத்‌ தேனை அமுதை” எனப்படும்‌ ஆராவமுதாகிய அச்யுதனை அனுபவிக்கும்‌ ப்ரதேசமாகையால்‌  “:அம்ருதம்‌’” எனப்படுகிறது. “ஸோஸ்நுதே ஸர்வாந் காமாந்‌’” என்கிறபடி பகவத் குணங்களை அனுபவித்து “ப்ரஹ்மானந்தமடையும்‌ இடமன்றோ அது. (திவி) ப்ரகாசிக்கும்படியான பரம பதத்தில்‌ இருக்கிறது.

அத்யர்காநல தீப்தம்‌ தத்‌ ஸ்தராநம்‌ விஷ்ணோர்‌ மஹாத்மந :”[மஹாத்மாவான விஷ்ணுவினுடைய ஸ்தாநமானது ஸூர்யன்‌, அக்னி முதலியவர்களின்‌ ஓளியை அதிக்ரமித்த தேஜஸ்ஸை உடை யது.] என்றல்லவோ பாரதத்தில்‌ சொல்லப் பட்டிருக்கிறது.-வித்யாரண்யர்‌ இதற்கு பாஷ்யம்‌ செய்யும் போது மஹிமை என்றால்‌ ஸாமர்த்யம்‌ என்றும்‌ ஆகையால்‌ இது வாஸ்தவமன்று என்றும்‌ சொல்லியிருக்கிறார்‌. அப்படி யென்றால்‌ இது இந்த்ரஜாலமென்றே ஏற்படும்‌. இது ஸாஹஸமே யொழிய வேறல்ல. “மஹிமை” என்பது பெருமையைக்‌ காட்டுகிறது. ந தத் ஸமச்ச அப்‌,யதி,கச்ச த்‌ருச்யதே”” என்கிறபடி ஓப்பாரும்‌ மிக்காரு மற்றவன்‌ மாதவன்‌ என்றே பொருள்படும்‌..அவனை விடத்‌ தாழ்ந்த வஸ்துக்களில்லா விடில்‌ பெருமையே ஏற்படாது. பெருமை யென்று சொன்னாலும்‌ கேலிக்‌கூத்தாகும்‌. பெருமையும்‌ சிறுமையும்‌ ஒன்றை யொன்று அபேக்ஷித்‌திருக்கும்‌ வார்த்தைகளன்றோ. மேலும்‌, பகவான்‌ உபய விபூதி நாயகன்‌ என்று சொல்லப் பட்டபடியால்‌ அத்வைத வாதத்திற்குச்‌ சிறிதும்‌ இங்கு இடமில்லை.
ஸச ஸர்வஸ்மாந் மஹிம்நோ ஜ்யாயாந்‌, தஸ்மாந் ந கோபி ஜ்யாயாந்‌”
[அவன்‌ எல்லா மஹிமைகளைக் காட்டிலும்‌ உயர்ந்தவன்‌. அவனைக்‌ காட்டிலும்‌ உயர்‌ந்தவனில்லை.] என்று முத்கலோபநிஷத்தில் இந்த மந்திரத்தின்‌ பொருள்‌ உரைக்கப்பட்டது.

————-

த்‌ரிபாதூர்த்‌வ உதைத்‌ புருஷ; பாதோஸ்யே ஹா பவாத்புந :
ததோ விஷ்வங்‌ வ்யக்ராமத்‌ ஸாசநா நசநே அபி
..| -4-பரம பதத்திலிருக்கும்‌ பரம புருஷன்‌ மூன்று அவதாரத்தை உடையவனாகி ஸங்கல்பித்தார்‌. இவருடைய ஒரு அவதாரமான (அநிருத்தன்‌) இவ் வுலகத்தில்‌ அவதரித்தார்‌. அதற்குப் பின்‌ எல்லாப் பக்கத்திலும்‌ ஜீவன்‌ ஜடம்‌ இவர்களைக்‌ குறித்து (அவதாரம்‌ செய்வதன்‌ மூலம்‌)வியாபித்தார்‌.]
த்ரிபாதி,த்யநயா ப்ரோக்தம்‌ அநிருத்‌தஸ்ய வைப,வம்‌”[“த்ரிபாத்‌…” என்னும்‌ மந்த்ரத்தில்‌ அநிருத்த நாராயணனுடைய வைபவம்‌ விளக்கப் படுகிறது.] என்று புருஷ ஸம்ஹிதை சொல்லிற்று.

(த்ரிபாத்‌……) பரம பதத்திலிருக்கும்‌ பர வாஸுதேவன்‌ ஸங்கர்‌ஷணன்‌, அநிருத்தன்‌, ப்ரத்யும்நன்‌ என்னும்‌ மூன்று வ்யூஹங்களை உடையவரா யிருக்கிறார்‌. இந்த வ்யூஹங்களைப் பற்றிப்‌ பாஞ்சராத்‌ரத்தில்‌ அஹிர் புத்ந்ய ஸம்ஹிதையில்‌ விசேஷமாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது.
(உதைத்‌) “இவ் வுலகை யெல்லாம்‌ ரக்ஷிக்கக் கடவேன்‌” என்று ஸங்கல்பித்தார்‌.
(அஸ்ய பாத:) இவருடைய ஒரு அவதாரமான அநிருத்தன்‌.
(இஹ அபவாத்புந:) மறுபடியும்‌ இங்கு விஷ்ணுவாகத்‌ திருப் பாற்கடலில்‌ அவதரித்தார்‌.
(ததோ…வ்யக்ராமத்‌) அதன்‌ பிறகு அயோத்தி த்வாரகை முதலிய திவ்ய நகரங்களில்‌ ராமக்ருஷ்‌ணாதிகளாக அவதரித்தார்‌. அவைகளுக்கும்‌ பிற்பாடரானவர்களை உய்விப்பதற்காகத்‌ திருவரங்கம்‌, திருப்பதி முதலிய திவ்ய தேசங்‌ களிலும்‌, கிராமங்கள் தோறும்‌, பக்தர்களுடைய கிருஹங்கள் தோறும்‌ அர்ச்சா மூர்த்தியாக அவதரித்தார்‌. ‘விஷ்வக்‌’ என்றதால்‌ எண்ணிறந்த இடங்களில்‌ அவதாரம்‌ செய்திருப்பது தோற்றுகிறது–ஸ்வரூபவ்யாப்தி முதல்‌ மந்த்ரத்திலேயே சொல்லப்பட்டதால்‌ இங்கு “வ்யக்ராமத்‌” என்பதற்கு அவதாரம் செய்து வியாபித்தார்‌ என்றே பொருள் கொள்ளவேண்டும்‌. இவர்‌ எதற்காக இப்படி அவதாரம்‌ செய்ய வேண்டும்‌ எனில்‌: (ஸாசநாநசநே அபி) உணவருந்துபவர்‌களான தேவர்‌, மனுஷ்யர்‌ முதலியவர்களையும்‌, உணவருந்தாமல்‌ பாறை முதலியவையாய்க் கிடக்கும்‌ சேதனர்களையும்‌ உய்விப்ப்தற்கே–இப்படிப்‌ படாதன படுகிறான்‌ பரமபுருஷன்‌ என்று சொல்லப்படு கிறது. “உயிரளிப்பான்‌ எந் நின்ற யோனியுமாய்ப்‌ பிறந்தாய்‌! இமை யோர்‌ தலைவா!” என்றார்‌ ஆழ்வார்‌. “*அஜாயமாநோ பஹுதா விஜாயதே”” [பிறப்பிவியான பகவான்‌ பல தடவை பிறக்கிறான்‌] என்றது வேதம் –புற்பா முதலாப்‌ புல்லெறும்பாதி ஓன்றின்றியே்‌ நல்ல கதிக்கு அழைத்துச்‌ செல்ல வன்றோ அவதாரம்‌ செய்கிறான்‌ அச்யுதன்‌.-சேதநாசேதநங்களெல்லாம்‌ அவனுடைய உடைமைகளாயிற்றே.-உடைமையைப் பற்றிய கவலை உடையவனுக் கல்லவோ உண்டு.-விபவாவதாரங்களைப் பற்றி ராமாயணம்‌, பாரதம்‌, பாகவதம்‌ முதலியவைகளில்‌ விஸ்தாரமாக வர்ணிக்கப் பட்டிருக்கிறது.

அர்ச்சாவ தாரமாஹாத்ம்யங்கள்‌ பாஞ்சராத்ர வைகானஸ’ ஸம்ஹிதைகளிலும்‌,-வாராஹம்‌, ப்ரஹ்மாண்டம்‌ முதலிய புராணங்களிலும்‌ கீர்த்திக்கப்‌ பட்டிருக்கின்றன. ஆழ்வார்கள்‌ அருளிச் செயல்களிலும்‌ அனுபவிக்கிறோம்‌-இப்படி அவதாரம்‌ செய்தது ஸ்ரீமந்‌ நாராயணனே. வேறு தெய்வங்களல்ல,. பரித்ராணாய ஸாதூநாம்‌’”’ என்கிறபடி லோக ஸம் ரக்ஷணத்திற்காகப்‌ பல பிறப்புகளெடுத் திருக்கிறான்‌ பரந்தாமன்‌. உலகத்தைக்‌ காப்பதற்காக மற்ற தெய்வங்கள்‌ அவதாரம்‌ செய்ததில்லை. அவர்கள்‌ அவதாரம்‌ செய்ததாகச்‌ சொல்லுவதும்‌ அல்ப காரியங்களுக்கே. தாயில்லாப் பெண்‌ ப்ரசவ வேதனைப்படும் போது தாயும்‌ ஆகி ‘தாயுமானவர்‌’ என்று பெயர்‌ பெற்றதாகச்‌ சொல்லுகிறார்கள்‌. இப்படிச்‌ சில விருத்தாந்தங்கள்‌ சொல்லப்படுகின்றன–அவதாரங்கள்‌ செய்து மஹத்தான கீர்த்திய டைந்தவன்‌ மாதவனே.-வியூஹங்கள்‌ தேவர்களுக்குக்‌ கூப்பீடு கேட்குமிடங்கள்‌. நம்மால்‌ அணுக முடியாதவை.-விபவாவதாரங்களோ அக்காலத்திலிருந்த பாக்யவான்களுக்கே. ‘புல்லாய்ச்‌ சிலையாய்க்‌ கிடந்திலமே கழல்‌ தீண்டுகைக்கே”” என்றே நாம்‌ நினைக்க வேண்டி யிருக்கிறது. அவைகளைப் பற்றி இதிஹாஸ புராணங்களில்‌ கேட்டே ஆநந்தமடைகிறோம்‌. அவை ஒரு காலத்திலோடும்‌ பெருக்காறு போன்றவை.-அவற்றில்‌ தேங்கின மடுப் போலே சொல்லப்பட்ட அர்ச்சாவதாரமும்‌ வற்றி விட்டதோ என்று தோன்றுகிறது. அவைகட்கு யாதொரு தீங்‌கும்‌ ஏற்படாதென்று மநோ ரதித்திருந்தோம்‌. அவைகளும்‌ ஸமாப்தி யடைந்தனவோ என்றேங்கும்படி இருக்கிறது இப்போதிருக்கும்‌ நிலைமை. கூரத்தாழ்வாணையும்‌ பட்டரையும் போல்‌, கல்கி அவதாரத்தை இப்போதே எடுத்துச்‌ சீர்திருத்தும்படி பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழியில்லை,

————

தஸ்மாத்‌, விராட, ஜாயத விராஜோ ௮தி பூருஷ:
ஸ ஜாதோ அத்யரிச்யத பச்சாத்‌ பூ,மிமதோ புர:
–5-
[அந்த விஷ்ணுவிடமிருந்து ப்ரஹ்மாண்டம்‌ உண்டாயிற்று. ப்ரஹ்‌மாண்டத்தில்‌ பிரமன்‌ உண்டானான்‌. அத்த நான்முகன்‌ பூமியைப்‌ பக்கங்களிலும்‌, கீழும்‌, மேலும்‌ ஆக்ரமித்தனன்‌.]
தஸ்மாத்‌, விராடி,த்யநயா பாத.நாராயணாத்‌ ஹரே:
ப்ரக்ருதே: புருஷஸ்யாபி ஸமுத்பத்தி : ப்ரதர்‌சிதா”
[(“தஸ்மாத்‌ விராட்‌…
” என்னும்‌ மந்த்ரத்தினல்‌ நாராயணனுடைய ஓர்‌ அவதாரமான ஹரியினிடமிருந்து ப்ரக்ருதியினுடையவும்‌, பிரமனுடையவும்‌ உத்பத்தியானது காட்டப்பட்டது.] என்று புருஷ ஸம்‌ஹிதையில்‌ இதன்‌ பொருள்‌ உரைக்கப்பட்டது. (தஸ்மாத்‌…) இப்‌படிப்‌ பலவிதமான அவதாரங்களைச்‌ செய்‌த மஹா விஷ்ணுவிடமிருந்து முட்டை வடிவமான ஒரு அண்டம்‌ உண்டாயிற்று.

அயம்‌ லோகஸ்து வை ஸம்ராட்‌ அந்தரிக்ஷம்‌ விராட்‌ ஸ்ம்ருதம்‌”[இந்த லோகம்‌ ஸம்ராட்‌ என்றும்‌, அந்தரிக்ஷம்‌ விராட்‌ என்றும்‌ சொல்லப் படும்‌.] என்று வாயு புராணத்தில்‌ “ “விராட்‌’ என்பது அந்தரிக்ஷத்தை மட்டும்‌ குறிப்பதாகச்‌ சொல்லப்பட்டாலும்‌ – இங்கு எல்லா லோகங்களுமடங்கிய ப்ரஹ்மாண்டத்தையே குறிப்பதாகக்‌ கொள்ளலாம்‌-(விராஜோ…) அந்த அண்டத்தை ஆஸ்ரயித்து பிரமன்‌ உண்டானான்‌. அண்டத்திற்கு அதிகாரி புருஷனாகிற பிரமன்‌ உண்டானான்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌.-ஸுபாலோபனிஷத்தில்‌ அண்‌டம்‌ ஸமபவத்‌: [அண்டம்‌ உண்டாயிற்று.] என்றும்‌, “மத்‌யே புருஷ:”[மத்தியில்‌ பிரமனாகிற புருஷன்‌ உண்டானான்‌.] என்றும்‌ இவ்‌ விஷயமே சொல்லப் பட்டபடியால்‌ இப்படி ஸ்ருஷ்டித்தவன்‌ நாராயணனே என்று அறிகிறோம்‌-இதிலிருந்து அண்ட ஸ்ருஷ்டி, அனாதிபுருஷனும்‌, அகார வாஸ்யனுமான அநந்தனுடையதே என்று அறிவிக்‌கப் படுகிறது. இப்படி உண்டாக்கப்படும்‌ அண்டங்கள்‌ ஓன்றிரண்டல்ல.-ப்ரஹ்மாக்களும்‌ அப்படியே. இதையே பெரியாழ்வாரும்‌’அண்டக்குலத்துக் கதிபதியாகி’ என்றார்‌. பிரமன்‌ தன்‌னைத் தானே ஸ்ருஷ்டிக்கவுமில்லை. தான்‌ இருக்குமிடத்தை ஸ்ருஷ்டிக்கவுமில்லை.-அண்ட ஸ்ருஷ்டி அவனுடைய சக்திக்கு மீறினது. ப்ரஜா ஸ்ருஷ்டியே அவன்‌ . வல்லமைக்குட்பட்டது- அதுவும்‌ அச்யுதனுடைய அருளினலும்‌, நியமனத்தினாலும்‌ ஏற்படுவது. அப்படி ப்ரஜா ஸ்ருஷ்டி பண்ணின காலத்தில்‌ ப்ரஜைகள்‌ ‘இட்ட கால்‌ இட்ட கைகளாய்‌” “அயம்‌ லோகஸ்து வை ஸம்ராட்‌ அந்தரிக்ஷம்‌ விராட்‌ ஸ்ம்ருதம்‌”.

அப்படி ப்ரஜா ஸ்ருஷ்டி பண்ணின காலத்தில்‌ ப்ரஜைகள்‌ ‘இட்ட கால்‌ இட்ட கைகளாய்‌”செயலற்று இருந்தன. பிறகு பிரமன்‌ மாதவனிடம்‌ முறையிட்டதாகவும்‌, அவன்‌ ஸர்வேந்த்ரியங்களிலும்‌ வியாபித்து அவைகளுக்குக்‌ கார்யம்‌ செய்ய சக்தி கொடுத்ததாகவும்‌ அறிகிறோம்‌-முற் கூறிய பல உபனிஷத்துக்களலும்‌ சொல்லப்பட்ட நாராயணனே இப்படி ஸர்வ விதத்திலும்‌ ஸ்ருஷ்டி செய்கிறான்‌ என்று ஏற்படுகிறது.(ஸ ஜாதோ…) அந்தப்‌ பிரமன்‌ பூமியை, நான்கு பக்கங்களிலும்‌, கீழும்‌, மேலும்‌ வியாபித்ததாகச்‌ சொல்லப் படுகிறது.-*பச்சாத்‌” என்‌றதனால்‌ எல்லா த்வீபங்களிலும்‌, “அத; என்பதால்‌ பாதாளத்திலும்‌, புர: என்பதினால்‌ ஸ்வர்க்கம்‌ முதலியவைகளிலும்‌ வியாபித்தான்‌ என்று ஏற்படுகிறது.-பிரமனுடைய ஸ்வரூபம்‌ அணுவான படியால்‌ ஸ்வரூபத்தினால் இவைகளை வியாபிக்க. மூடியாது. ஆகையால்‌ ஞானம்‌, சக்தி முதலிய குணங்களால்‌ வியாபித்ததாகவே கொள்ள வேண்டும்‌. தன்னுடைய ஞானத்தினால்‌ பதினாலு உலகங்களிலும்‌ நடக்க வேண்டியவைகளை அறிந்து, சக்தியினால்‌ ஸ்ருஷ்டி செய்வதால்‌ இவ் வண்டத்திலுள்ள உலகங்களிலும்‌ ஞானத்தினாலும்‌ சக்தியினாலும் வியாபித்தான் என்றே கொள்ள வேண்டும்‌.-ஸ்ரீவிஷ்ணுசித்தர்‌ “தன்னுடைய பிரஜைகள்‌ மூலமாக வியாபித்தான்‌” என்றும்‌ பொருள் கொண்டார்‌. பெரிய சரீரத்தினால்‌ வியாபித்ததாகவும்‌ சொல்லலாம்‌.“ஸ ச பாத,நாராயண: ஐகத்‌ ஸ்ரஷ்டும்‌ ப்ரக்ருதிம்‌ அஜாயத்‌”[ நாராயணனின்‌ அவதாரமாகிய அந்த விஷ்ணு உலகை ஸ்ருஷ்டிப்‌பதற்காகப்‌ பிரமனை ஸ்ருஷ்டித்தார்‌.] என்று இத்த மந்திரத்தின்‌ பொருள்‌ முத்கலோபனிஷத்தில்‌ உரைக்கப்பட்டது. இங்கு “ப்ரக்ருதி”சப்தம்‌ ப்ரஜைகளுக்குக்‌ காரண பூதனான: பிரமனைக்‌ குறிக்கிறது.

——————

யத் புருஷேணே ஹவிஷா, தே,வா யஜ்ஞமதந்வத
வஸந்தோஸ்யா ஸீதஜ்யம்‌, க்ரீஷ்ம இத்‌மச்‌ஸ்ரத்‌தவி:–6-
[தேவர்கள்‌ (நித்ய ஸூரிகள்‌) சதுர்முகனாகிற ஹவிஸ்ஸினால்‌ ஸ்ருஷ்டியைக் குறித்துச்‌ செய்த (தியான ரூபமான ) யாகத்திற்கு வஸந்த ருது நெய்யாகவும்‌, க்ரீஷ்ம ருது ஸமித்தாகவும்‌, சரத் ருது புரோடாசமென்னும்‌ ஹவிஸ்ஸாகவும்‌ ஆயிற்று.]
“யத்‌ புருஷேணேத்யநயா ஸ்ருஷ்டி யஜ்ஞ்ஸ்‌ ஸமீரித:”
[யத்‌ புருஷேண’ என்னும்‌ மந்த்ரத்தினால்‌ ஸ்ருஷ்டிக்காகச்‌ செய்யப்பட்ட யஜ்ஞம்‌ சொல்லப் பட்டது.] என்று புருஷ ஸம்‌ஹிதை சொல்லிற்று-இந்த மந்த்ரத்திலிருந்து ஸ்ருஷ்டியைக்‌ குறித்து யஜ்ஞம்‌ செய்யப்‌பட்ட விஷயம்‌ விவரிக்கப்படுகிறது.

பிரமனுக்குப்‌ பிறந்த போதே ஸ்ருஷ்டி சக்தி யில்லை என்பது இதிலிருந்து ஏற்படுகிறது. நான்‌ முகனுக்குப்‌ படைக்கும்‌ சக்தி உண்டாவதற்காக எம்பெருமானணைக்‌ குறித்து யஜ்ஞம்‌ செய்தார்கள்‌ என்றும்‌ ஏற்படுகிறது. (யத்‌ புருஷேண…) இந்தப்‌ பிரமனாகிற புருஷனை அந்த யஜ்ஞத்தில்‌ ஹோமம்‌ செய்யப்படும்‌ பசுவாகக்‌ (ஹவிஸ்ஸாக) கல்பித்தனர்‌ என்று ஏற்படு கிறது. யார்‌ கல்பித்தார்கள்‌? (தேவா?) தேவர்கள்‌. யார்‌ அந்த தேவதைகள்‌? என்னும்‌ விசாரணை உண்டாகிறது.-இந்த்ராதி தேவர்‌ களோவெனில்‌ ஸ்ருஷ்டி சக்தியை அடைந்த பின்பு பிரமனால்‌ படைக்‌கப்பட்ட கச்யப ப்ரஜாபதிக்கு அதிதியிடம்‌ பிறந்த புத்திரர்கள்‌. ஆகையால்‌ இங்கு சொல்லப்பட்ட தேவர்கள்‌ அவர்களாக இருக்க முடியாது.-ஆகையால்‌ பிரகாசிக்கும்படி யானதும்‌ பரமாகாசமென்று புகழ்‌ பெற்‌றதுமான ஸ்ரீவைகுண்டத்திலிருக்கும்‌ நித்ய ஸூரிகளே இங்கு சொல்‌லப்படும்‌ தேவர்கள்‌ என்று கொள்ள வேண்டும்‌. 

(யத்‌ யஜ்ஞம்‌ அதந்வத அஸ்ய) பிரமனைப்‌ பசுவாகக் கொண்டு எந்த தியான ரூபமான
யஜ்ஞத்தைச்‌ செய்தார்களோ அந்த யஜ்ஞத்திற்கு. (வஸந்த: ஆஜ்‌யம்‌ ஆஸீத்‌…) வஸந்த ருதுவானது நெய்யாகவும்‌, க்ரீஷ்ம ருது ஸமித்‌தாகவும்‌, சரத் ருது புரோடாசம்‌ எனப்படும்‌ ஹவிஸ்ஸாகவும்‌. ஆயிற்று.
இந்த யஜ்ஞம்‌ பரம புருஷனைக்‌ குறித்து ஸ்ருஷ்டிக்காகச்‌ செய்யப்பட்ட தியான ரூபமான யஜ்ஞமாகும்‌. ஸ்ருஷ்டிக்குக்‌ காலம்‌ அவசியமாக வேண்டியபடியால்‌ அது இம் மாதிரி உபகரணங்களாகச்‌ சொல்லப்‌ பட்டிருக்கிறது. ‘புருஷேணா ஹவிஷா” என்கிற இடத்தில்‌ பிரமன்‌ யாக பசுவாகிற ஹவிஸ்‌ ஆகிறான்‌ என்று சொல்லப்பட்டது. “சரத்‌ஹவி:’ என்ற இடத்தில்‌ சரத்காலம்‌ புரோடாசம்‌. எனப்படும்‌ ஹவிஸ்‌ ஆகிறது என்று சொல்லப்படுகிறது. அரிசியின்‌ மாவினால்‌ செய்யப்‌ பட்டு ஹோமம்‌ பண்ணப்படுகிற அடை புரோடாசம்‌ எனப்படும்‌.-நித்ய ஸரிகள்‌ பிரஹ்மாவை ஸ்ருஷ்டிக்கு. முக்யமான உபகரணமாகவும்‌ காலத்தை ஸஹ காரியாகவும் கொண்டு ப்ரஜா ஸ்ருஷ்டிக்காக பகவானை தியானித்தார்கள்‌ என்று இதன்‌ பொருள்‌. அப்படி அவர்‌கள்‌ செய்ததற்குக்‌ காரணம்‌ பகவந் நியமனமே என்று நாம்‌ ஊஹிக்க வேண்டியிருக்கிறது-

இங்கு சொல்லப்பட்டிருக்கிற ஸ்ருஷ்டி “பஹுஸ்யாம்‌ ப்ரஜாயேய”[நான்‌ பலவாக ஆகக் கடவேன்‌.] என்ற ஸங்கல்பத்துடன்‌ நிமித்தோபாதான காரணமான நாராயணனால்‌ செய்யப்படும்‌ ஸமஷ்டி ஸ்ருஷ்டி யல்ல. இது வ்யஷ்டி ஸ்ருஷ்டி எனப்படும்‌ ப்ரஜா ஸ்ருஷ்டியே. இம் மாதிரியான சக்தி நித்யர்களுக்கு உண்டென்பதற்குப்‌ பல ஆதாரங்களிருக்கின்‌றன. விஷ்வக்ஸேனருடைய மந்த்ரத்தில்‌ “விஸ்வ ஸ்ருஜே ” | உலகத்தை ஸ்ருஷ்டிப்பவருக்கு]’ என்‌று சொல்லப்பட்‌டிருக்கிறது. நாரதீயமென்று ப்ரஸித்தமான ஹரி பக்தி ஸுதோதயத்‌தில்‌ ஐந்தாவது அத்யாயத்தில்‌’தே ஹி குர்யுர்‌ யதீச்சந்தி ஐகத் ஸர்க்க லயெள ஸ்வயம்‌”” [நித்ய ஸூரிகள்‌ விரும்பினார்களாகில்‌ ஜகத் ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களைத்‌ தாமே செய்வார்கள்‌.] என்று சொல்லப்பட்டிருக்‌ கிறது. ஆளவந்தார்‌ “த்வயா நிஸ்ருஷ்டாத்மப,ரேண”’| உன்னால்‌ வைக்கப்‌பட்ட உபய விபூதி நிர்வாஹ பாரத்தை யுடைய (விஷ்வக்ஸேனரால்‌)]
என்று பகவானை ஸ்தோத்ரம்‌ செய்திருக்கிறார்‌. ஸ்ரீராமாநுஜர்‌,
ஸ்வ ஸங்கல்ப மாத்ரா வக்லுப்த ஐகஜ் ஜென்ம ஸ்திதி த்‌வம்ஸா திகே
ஸ்ரீமதி விஷ்வக்ஸேநே ந்யஸ்த ஸமஸ்‌ தாத்மைஸ்வர்யம்‌”[தன்னுடைய ஸங்கல்பத்தால்‌ கொடுக்கப்பட்ட ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களை யுடைய ஸ்ரீவிஷ்வக்ஸேனரிடம்‌ – வைக்கப்பட்ட தன்‌னுடைய எல்லா ஐஸ்வர்யங்களையும்‌ உடையவனை] என்று ஸ்ரீவைகுண்ட கத்யத்தில்‌ அருளிச் செய்திருக்கிறார்‌.-பிரமனாகிற ஜீவனுக்கு இச் சக்தி யிருக்கும் போது அவரைக் காட்டிலும்‌ பல்லாயிரம்‌ மடங்கு பெரியவர்களான நித்யர்களுக்கு இச் சக்தி யிருப்பது அதிசயமல்ல. இந்த யாகத்தினால்‌ பிரமனுக்கு ஸ்ருஷ்டி செய்யும்‌ சக்தி கிடைக்கிறதென்றும்‌, அந்தப் பிரமனை நிமித்த மாத்ரமாகக் கொண்டு அவர்‌ மூலமாக நித்ய ஸூரிகள்‌ ஸ்ருஷ்டி செய்விக்கிறார்களென்றும்‌ ஏற்படுகிறது.

முத்கலோபனிஷத்தில்‌ இதன்‌ பொருள்‌ வேறுவகையாகச்‌ சொல்லப்பட்டிருக்கிறது.
ஸ ஸம்ருத்‌த,காயஸ்‌ ஸந் ஸ்ருஷ்டி கர்ம ந ஜஜ்ஞிவாந்‌,ஸ: அநிருத்‌த,
நாராயண: தஸ்மை ஸ்ருஷ்டிம்‌ உபாதி;சத்‌:-*ப்‌ரஹ்மந்‌ தவ இந்த்‌ரியாணி
யாஜகாநி த்‌,யாத்வா கோச பூ,தம்‌ த்‌ருட க்‌ரந்திரம்‌ கலேவரம்‌ ஹவிர்‌ த்‌யாத்வாமாம்‌ ஹவிர் புஐம்‌ த்‌யாத்வா வஸந்த காலம்‌ ஆஜ்யம்‌ த்‌யாத்வா க்‌ரீஷ்மம்‌ இத்‌ஃமம்‌ த்‌,யாத்வா சரத்‌,ருதும்‌ ரஸம்‌ த்‌,யாத்வா ஏவம்‌ அக்‌;கெள ஹுத்வா அங்கஃ ஸ்பர்சாத்‌ கலேவர: வஜ்ரம்‌ ஹீஷ்யதே, தத: ஸ்வ கார்யாந் ஸர்வ ப்ராணி ஜீவாந்‌ ஸ்ருஷ்ட்வா பச்வாத்‌யா: ப்ரா துர்ப,விஷ்‌பந்தி, தத:
ஸ்தாவர ஜங்க மாத்மகம்‌ ஜகத்‌ ப,விஷ்‌பதி””
[பெரிய தேகத்தை உடையவரான அப் பிரமன்‌ ஸ்ருஷ்டியை அறியவில்லை. அந்த அநிருத்த நாராயணன்‌ அவருக்கு ஸ்ருஷ்டியை உபதேசித்தார்‌:– *பிரமனே! உன்னுடைய இந்திரியங்களை யாகம்‌ செய்பவர்களாகவும்‌, சரீரத்தை ஹவிஸ்ஸாகவும்‌, என்னை அந்த ஹவிஸ்ஸை உண்பவனாகவும்‌, வஸந்த காலத்தை நெய்யாகவும்‌, க்ரீஷ்ம ருதுவை ஸமித்தாகவும்‌, சரத் ருதுவை(ஹோமம்‌ செய்யப்படும்‌)ஷட் ரஸமாகவும்‌ தியானித்து, இம் மாதிரியாக அக்னியில்‌ ஹோமம்‌ செய்து, அதன்‌ ஸ்பர்சத்தினால்‌ (உன்னுடைய) சரீரம்‌ வஜ்ரம் போல்‌(ஸ்ருஷ்டி செய்ய ஸமர்த்தமானதாக) ஆகி விடும்‌. பிறகு தங்களிடமிருந்து உண்டாகும்‌ ஸா்வ ப்ராணிகளையும்‌ உண்டாக்கிக் கொண்டு பசு முதலியவை. உண்டாகப் போகின்றன. அதன்‌ பிறகு ஸ்தாவர ஜங்கமங்களடங்கிய ஜகத்‌ உண்டாகும்‌’”] இதிலிருந்து பிரமன்‌ ஸ்ருஷ்டி செய்ய ஞானமும்‌, சக்தியுமில்லாமல்‌ திகைத்ததாகவும்‌ பகவான்‌ ஸ்ருஷ்டி செய்ய வழியை உபதேசித்ததாகவும்‌ அறிகிறோம்‌.
“*மஹாதே,வஸ்‌ ஸர்வமேதே, மஹாத்மா ஹுத்வாத்மாநம்‌ தேவதேவோ
பபூவ” [மஹாத்மாவான மஹா தேவர்‌ (சிவன்‌) ஸா்‌வமேத யாகத்தில்‌தன்னை ஹோமம்‌ செய்து தேவர்களுக்கெல்லாம்‌ தேவரானார்‌.]என்பது போல்‌ பிரமனும்‌ பகவானைக் குறித்து ஆத்ம ஸமர்ப்பணமாகிற யாகத்‌தைச்‌ செய்து ஸ்ருஷ்டி சக்தியை அடைந்தார்‌ என்று ஏற்படுகிறது.

————

ஸப்தாஸ்யாஸந்‌ பரித,ய:, த்ரிஸ் ஸப்த ஸமித,: க்ருதா:
தே,வா யத்‌;யஜ்ஞம்‌ தந் வாநா :; அபத்நந்‌ புருஷம்‌ பசும்‌.
இந்த யஜ்ஞத்துக்கு ஏழு வஸ்துக்கள்‌ பரிதிகளாக ஆயின. இருபத்‌தொரு வஸ்துக்கள்‌ ஸமித்துக்களாகச்‌ செய்யப்பட்டன. யஜ்ஞத்தைச்‌ செய்யும்‌ தேவர்கள்‌ நான்முகனாகிற. புருஷ (ஹோமம்‌ செய்யப்‌ படும்‌) பசுவாகக்‌ கட்டினார்கள்‌. -யாகம்‌ செய்யும்‌ போது அக்னிக்குத்‌ தெற்கு, மேற்கு, வடக்கு திக்குகளிலும்‌, உத்தர வேதிக்குத்‌ தெற்கு, மேற்கு, வடக்கு திக்குகளலும்‌ ஆறு தண்டங்‌கள்‌ (பலாசம்‌ முதலிய மரங்களின்‌ கொம்புகள்‌) வைக்கப்படுகின்றன. கிழக்கு திக்கில்‌ ஸூர்யனைச்‌ சேர்த்து ஏழு பரிதிகளாகக்‌ கணக்கிடப்‌படுகின்றன.

இந்த ஸ்ருஷ்டி யஜ்ஞத்திலும்‌ ஏழு பரிதிகள்‌ ஏற்பட்டன என்று சொல்லப்படுகிறது. அவையாவன:.ப்ருதிவீ, ஜலம்‌, அக்னி, வாயு, ஆகாசம்‌ எனப்படும்‌ ஐந்து பூதங்களும்‌, அஹங்காரமும்‌ மஹானும்‌(த்ரிஸ்‌…க்ருதா🙂 இங்கு இருபத்தொரு ஸமித்துக்கள்‌ அக்னியில்‌ ஹோமம்‌. செய்வதற்காகக்‌ கல்பிக்கப்பட்டன. அவையாவன–ப்ருதிவீ முதலிய ஐந்து பூதங்கள்‌; இவைகளுக்கு முறையே காரணமான கந்த தன்மாத்ரை, ரஸ தன்மாத்ரை, ரூப தன்மாத்ரை, ஸ்பர்ஸ தன்மாத்ரை, சப்த தன்மாத்ரை எனப்படும்‌ ஐந்து தன்மாத்ரைகள்‌; கண்‌, காது, நாக்கு, மூக்கு, தோல்‌ எனப்படும்‌ ஐந்து ஞானேந்‌திரியங்கள்‌. வாய்‌, கால்‌, கை, ஆண்‌ பெண்‌ குறிகள்‌, ஆஸனவாய்‌ எனப்படும்‌ ஐந்து கர்மேந்திரியங்கள்‌; மனஸ்‌. ஆக இந்த இருபத்‌தொரு தத்வங்களும்‌ ஸமித்துக்களாகக்‌ கல்பிக்கப்பட்டன. ப்ரஜைகளை ஸ்ருஷ்டிப்பதற்கு இவைகள்‌ உபகரணங்களாகையால்‌ ஸ்ருஷ்டி யஜ்ஞத்திற்கு ஸாம க்ரிகளாகச்‌. சொல்லப்படுகின்றன.-

 (தேவா… பசும்‌) “இப்படி யஜ்ஞம்‌ செய்பவர்களான நித்ய ஸூரிகள்‌ யஜ்ஞத்‌தில்‌ ஹோமம்‌ செய்யப்படும்‌ பசுவான பிரமனை ப்ரக்ருதியாகிய யூப ஸ்தம்பத்தில்‌ கட்டினார்கள்‌. அடுத்த மந்தர த்தில்‌ “படர்ஹிஷி :பஜ்ஞம்‌ ப்ரெளக்ஷந்‌” [மூல ப்ரக்ருதியிலுள்ள பிரமனை ப்ரோக்ஷித்தார்கள்‌ ] என்று வருவதால்‌ இங்கு மூல ப்ரக்ருதியாகிய யூப ஸ்தம்பத்தில்‌ கட்டினார்கள்‌ என்றே கொள்ள வேண்டும்‌.

தம்‌ யஜ்ஞம்‌ ப,ர்ஹிஷி ப்ரெளக்ஷந்‌, புருஷம்‌ ஜாதம் அக்ரத :
தேந தே,வா அயஜந்த, ஸாத்‌,யா ருஷயச்ச யே. –8-
[முதலில்‌ உண்டானவனும்‌ யஜ்ஞத்தில்‌ ஹோமம்‌. செய்யப் படுபவனும்‌,மூல ப்ரக்ருதியில்‌ உட்ப்பட்டவனுமான பிரமனாகிற புருஷனை ப்ரோக்ஷித்தார்கள்‌. ஸாத்யர்களென்று சொல்லப்படும்‌ நித்யஸூரிகளும்‌, ரிஷிகளும்‌ (முக்தர்களும்‌) அப்பசுவைக் கொண்டு யஜ்ஞம்‌ செய்‌தனர்‌.] (தம்‌ யஜ்ஞம்‌) யஜ்ஞநத்தில்‌ ஹோமம்‌ செய்யப்படுபவனான அப்‌ பிரமனை. (பர்ஹிஷி) ‘பர்ஹி:‘ என்னும்‌ பெயரை யுடைய மூல ப்ரக்ருதியில்‌ முன் சொன்னபடி கட்டி. (ப்ரெளக்ஷந்‌) ப்ரோக்ஷணம்‌ என்னும்‌ ஸம்ஸ்காரத்தைச்‌ செய்தார்கள்‌.

(புருஷம்‌ ஜாதம்‌ அக்ரத:) முன்னால்‌ பிறந்தவனான அந்தப்‌ பிரமனாகிற புருஷனை ப்ரோக்ஷித்தார்கள்‌. “ப்‌, ரஹ்மா: தேஃவாநாம்‌ ப்ரதமஸ்‌ ஸம்பஃபூ,வ”” [பிரமன்‌ தேவர்களுள்‌ முதலில்‌ உண்டானான்‌] என்று முண்டக உபனிஷத்தில்‌ சொல் லியிருக்‌கிறபடியால்‌ இங்கு சொல்லப்படும்‌ ‘புருஷன்‌’ பிரமனே என்று நிச்ச யிக்கப்படுகிறது. (தேந அயஜந்த) அப் பிரமனைப்‌ பசுவாகக் கொண்டு யாகம்‌ செய்தார்கள்‌. ஒரு த்ரவ்யத்தை ஓரு தேவதையை உத்தேசித்‌துக்‌ கொடுப்பது யாகமெனப்படுகிறது. இங்கு நான்முகனாகிய ஹவிஸ்ஸை அநிருத்த நாராயணனகிய அக்நியில்‌ ஹோமம் செய்வதாகிய யஜ்ஞத்தைச்‌ செய்தார்கள்‌ என்று தாத்பர்யம்‌.

எவர்‌ இம்‌ மாதிரி யாகம்‌ செய்தார்களெனில்‌: (ஸாத்யா தேவா;) ஸாத்யர்களென்று ப்ரஸித்தரான நித்யஸூரிகளே இப்படி யாகம்‌ செய்தவர்‌ என்று சொல்லப்படுகிறது. இப்புருஷஸூக்தத்தின்‌ பூர்வானுவாகத்தில்‌ கடைசி மந்திரத்தில்‌ “யத்ர. பூர்வே ஸாத்‌,யாஸ்‌ ஸந்திதேஃவா:”” [எந்தப்‌ பரமபதத்தில்‌ பழைமையானவர்களும்‌ ஸாத்யர்கள்‌என்று சொல்லப்படுபவர்களுமான தேவர்கள்‌ இருக்கிறார்களோ… ]என்று சொல்லப்பட்டதால்‌ இங்கு சொல்லப்படும்‌ தேவர்கள்‌ பிறப்‌பற்றவர்களான நித்ய ஸூரிகளே என்று நிஸ் ஸந்தேஹமாக நிர்ணயிக்கப்படுகிறது. (ருஷயச்சயே) முக்தர்களும்‌ இந்த யஜ்ஞத்தில்‌ கலந்து கொண்டார்கள்‌ என்று சொல்லப்படுகிறது. பிரமனுக்கு ஸ்ருஷ்டி சக்தி கிடைத்த பின்பு ஸ்ருஷ்டிக்கப் பட்டவர்களான அத்ரி, பிருகு, வஸிஷ்டர்‌ முதலிய ரிஷிகள்‌ இங்கு சொல்லப்படும்‌ ரிஷிகளாக ஆக முடியாது. ஆகையால்‌ முக்தர்களே இங்கு சொல்லப்படுபவர்‌கள்‌. புஷோத்தமனை த்யானம்‌ பண்ணுவதையே தங்களுக்கு உண்‌ணும்‌ சோறும்‌, பருகும்‌ நீரும்‌, தின்னும்‌ வெற்றிலை யுமாகக்‌ கொண்‌டிருக்கும்‌ முக்தர்களை ரிஷிகள்‌ என்று சொல்லத் தட்டில்லை.

———–

தஸ்மாத்‌, யஜ்ஞாத்‌ ஸர்வஹுத:, ஸம்ப்‌,ருதம்‌ ப்ருஷதாஜ்யம்‌
பசூம்ஸ்தாம்ஸ் சக்ரே வாயவ்யாந்‌, ஆரண்யாந் க்‌,ராம் யாச்சயே–9-
[ எல்லாவற்றையும்‌ ஹோமம்‌ செய்யப்பட்ட அப் பிரமனிடமிருந்து, தயிருடன்‌ கூடிய நெய்‌ (ஜகத் காரண பூதமான வீர்யம்‌) உண்டாயிற்று. அந்த நான்முகன்‌ வாயு மார்க்கத்தில்‌ ஸஞ்சரிக்கும்‌ பக்ஷி களையும்‌, காட்டில்‌ ஸஞ்சரிக்கும்‌ ம்ருகங்களையும்‌, கிராமத்திலிருக்கிற மிருகங்களையும்‌ படைத்தனன்‌.] “தஸ்மாதி,தி ச மந்த்ரேண ஜகத் ஸ்ருஷ்டிஸ்‌ ஸமீரிதா”'[*தஸ்மாத்‌…” என்னும்‌ மந்த்ரத்தினால்‌ ஜகத் ஸ்ருஷ்டியானது சொல்‌லப்பட்டது.|] என்று புருஷ ஸம்ஹிதையில்‌ சொல்லப்பட்டது.

ச’காரத்தினால்‌ இது முதல்‌ ஏழு மந்த்ரங்களில்‌ ஜகத் ஸ்ருஷ்டி சொல்‌லப் படுகிறதென்று அறியப்படுகிறது. (ஸர்வஹுத: தஸ்மாத் யஜ்‌ஞாத்‌) தன்னை யுள்ளிட்ட எல்லாவற்றையும்‌ ஹோமம்‌ செய்விக்கப்‌பட்ட அப் பிரமனிடமிருந்து. நித்ய ஸூரிகளால்‌ பகவானிடம்‌ ஆத்ம ஸமர்ப்பணம்‌ செய்விக்கப்பட்ட அந்த நான்முகனிடமிருந்து.(ப்ருஷதாஜ்யம்‌ ஸ்ம்ப்‌ருதம்‌) தயிருடன்‌ கூடிய நெய்‌ உண்டாயிற்று.-இங்கு ‘ப்ருஷதாஜ்யம்‌’ என்று ஜகத்‌ ஸ்ருஷ்டிக்குக்‌ காரணமான வீர்யம்‌ சொல்லப்படுகிறது, (பரூம்ஸ்தாந்‌…) வாயு ஸஞ்சரிக்கும்‌படியான ஆகாசத்தில்‌ பறக்கும்‌ பக்ஷிகளையும்‌, காட்டில்‌ ஸஞ்சரிக்கும்‌ புலி, கரடி முதலிய ப்ராணிகளையும்‌, கிராமங்களில்‌ திரியும்‌ பூனை முதலிய ப்ராணிகளையும்‌ அந்த நான்முகன்‌ ஸ்ருஷ்டித்தார்‌.

————

தஸ்மாத்‌, யஜ்ஞாத்‌ ஸர்வஹுத: ருசஸ்‌ ஸாமாறி ஜஜ்ஞிரே
சந்தராம்ஸி ஜஜ்ஞிரே தஸ்மாத்‌, யஜுஸ்‌ தஸ்மாத, ஜாயத,–10-
[எல்லாவற்றையும்‌ ஹோமம்‌ செய்யப்பட்ட அப் பிரமனிடமிருந்து ருக் வேதங்களும்‌, ஸாம வேதங்களும்‌ உண்டாயின. அந்த நான்முகனிடமிருந்து சந்தஸ்ஸுக்கள்‌ உண்டாயின; யஜுர் வேதமும்‌ அவனிடமிருந்து உண்டாயிற்று.] ்‌
பிரமனுடமிருந்து ருக் யஜுஸ் ஸாம வேதங்களும்‌, க௱யத்ரி முதலிய சந்தஸ்ஸுக்களும்‌ உண்டாயின வென்று சொல்லப்படுகிறது.
யோ ப்‌,ரஹ்மாணம்‌ விததாதி பூர்வம்‌ யோ வை வேதாம்ச்ச ப்‌ரஹிணோதி தஸ்மை”[எந்தப்‌ பரமாத்மாவானவர்‌ ஸ்ருஷ்டி காலத்தில்‌ பிரமனைப்‌ படைத்துஅவனுக்கு வேதங்களை உபதேசிக்கிறாரோ…] என்று சொல்லப்‌ பட்டிருக்கிறபடியால்‌ பரம புருஷனிடமிருந்து உபதேதசம் பெற்று வேதங்களை வேதன்‌ (பிரமன்‌) வெளிப்படுத்தினா்‌ என்றே கொள்ள வேண்டும்‌. “தஸ்ய ஹ வா ஏதஸ்ய மஹதோ பூ,தஸ்ய நிச்வஸிதம்‌ ஏதத்‌, ருக்‌, வேதோ யஜுர்வேதஸ்‌ ஸாமவேதே…”” (ருக்‌ யஜுஸ்‌ ஸாமம்‌ முதலிய வேதங்களெல்லாம்‌ பரமாத்மாவினுடைய மூச்சுக் காற்றுகள்‌.] என்று மஹா புருஷனுடைய மூச்சுக் காற்றாகச்‌ சொல்லப்பட்ட அபெளருஷேயமான வேதங்களைப்‌ பிரமன்‌ பிரகாசப் படுத்தினான்‌ என்று ஏற்படுகிறது.

———–

தஸ்மாத,ச்வா அஜாயந்த ஏகேசோப,யாத,த:
காவோ ஹ ஐஜ்ஜிரே தஸ்மாத்‌ தஸ்மாத்‌ ஜாதா அஜா வய:--11-
[அந்த நான்முகனிடமிருந்து குதிரைகளும்‌, ஒரு பக்கத்தில்‌ பற்களையுடைய எருமை முதலிய ப்ராணிகளும்‌. இரண்டு பக்கத்தில்‌ பற்களை யுடைய கழுதை முதலியவைகளும்‌ உண்டாயின.-அவரிடமிருந்து பசுக்களும்‌ உண்டாயீன.] (காவோ ஹ…) ஒரு பக்கத்தில்‌ பற்களை யுடைய ம்ருகங்களில்‌ பசுக்களும்‌ அடங்கின போதிலும்‌ அவைகளின்‌ மேன்மையை முன்‌னிட்டு அவை தனியாகச்‌ சொல்லப்படுகின்றன என்று விஷ்ணு சித்தாசாரியர்‌ வியாக்யானம்‌ செய்தார்‌. புருஷோத்தமனுடைய ‘ ஆராதனமாகிய யஜ்ஞத்திற்கு உபயோகப்படும்‌ பால்‌, தயிர்‌, நெப்‌ முதலியவை பசுக்களிடமிருந் தல்லவோ கிடைக்கிறது.

யத்‌ புருஷம்‌ வ்யத,து,: கதிதா வ்யகல்பயந்‌
முக,ம்‌ கிமஸ்ய கெள பராஹ, காவூரு பாதர வுச்யேதே.[பிரமனாகிய புருஷனைப்‌ (பசுவாகச்‌) செய்த போது, எவ்வளவு விதமாகக்‌ கல்பித்தார்கள்‌? இந்த ப்ரஹ்மாவினுடைய முகம்‌ எதுவாக ஆயிற்று? கைகள்‌ எவர்களாக ஆயின?துடைகளும்‌ திருவடிகளும்‌ எவர்களாகச்‌ சொல்லப்படுகின்‌றன?] யஜ்ஞத்தைச்‌ செய்பவர்களான ப்ராஹ்மணர்‌ முதலியவர்களின்‌ ஸ்ருஷ்டியை இம் மந்த்ரமும்‌ அடுத்த மந்த்ரமும்‌ சொல்லுகின்‌றன. இந்த ருக்‌ கேள்வியாகவும்‌ அடுத்த ருக்‌- பதிலாகவும்‌ இருக்கின்றன. நித்ய ஸூரிகள்‌ பிரமளைப்‌ பசுவாகக்‌ கல்பித்த போது அவருடைய அவயவங்கள்‌ எத்தனை விதமாகக்‌ கல்பிக்கப்பட்டன வென்றும்‌ எத்‌ தெந்த அவயவங்களினின்றும்‌ எந்தெந்தப்‌ பதார்த்தங்கள்‌ படைக்கப்‌பட்டன வென்றும்‌ கேட்கப் படுகிறது. விசேஷமாக முகம்‌, கைகள்‌, துடைகள்‌, பாதங்கள்‌ இவைகளிலிருந்து எவர்‌ உண்டானார்கள்‌ என்றும்‌ கேட்கப் படுகிறது.

ப்‌ராஹ்மணோஸ்ய முக,மாஸீத்‌ பாஹூ ராஜந்ய: க்ருத;
ஊரூ ததஸ்ய யத்‌,வைச்ய: பத்‌,ப்‌,யாம்‌ சூத்‌ரோ அஜாயத.–13-ப்ராஹ்மணன்‌ இவருடைய முகமானான்‌. கைகள்‌ க்ஷத்ரியனாகச்‌ செய்யப்பட்டன. அப்பொழுது துடைகள்‌ வைச்யனாக ஆயின.-திருவடிகளிலிருந்து சூத்ரன்‌’ உண்டானான்‌. முகம்‌ ப்ராஹ்மணனாக ஆயிற்று என்று சொல்லப் படுகிறது. பாதங்களிலிருந்து சூத்ரன்‌ உண்டானான்‌” என்று கடைசியில்‌ சொல்லப் படுகிறபடியால்‌ இங்கும்‌ முகத்திலிருந்து ப்ராஹ்மணன்‌ உண்டானான்‌ என்றே தாத்பர்யம்‌. ப்ராஹ்மணன்‌ அதிகமான ஞானத்‌தை உடையவனாதலால்‌ ஞானேந்த்ரியங்களெல்லா வற்றையும்‌ உடையதான முகத்தினின்றும்‌ அவனைப்‌ படைத்‌தார்

(பாஹூ…க்ருத:) கைகளிலிருந்து க்ஷத்ரியன்‌ உண்டானான்‌.-யுத்தம்‌ செய்வதைத்‌ தொழிலாக உடைய க்ஷத்ரியனுக்குத்‌ தோள்‌ வலிமையும்‌ கை வன்மையும்‌ அவச்யமாதலால்‌ -ப்ரஹ்ம தேவன்‌ அவனைத்‌ தன்‌ கைகளிலிருந்து ஸ்ருஷ்டித்தார்‌. -(ஊரூ…வைச்ய) உழுதலையும்‌ வியாபாரத்தையும்‌ தொழிலாக வுடைய வைச்யனுக்குத்‌ துடை பலம்‌ முக்யமாதலால்‌ நான்முகன்‌ அவளைத்‌ தன்‌ துடைகளிலிருந்து படைத்தார்‌.-(பத்ப்யாம்‌.. ) பாதங்களினின்றும்‌ நான்காவது வர்ணத்தைச்‌ சேர்ந்த சூத்ரன்‌ உண்டானான்‌. முதல்‌ மூன்று வர்‌ணத்தவர்களுடைய ஏவல்களைச்‌ செய்வதே ஸ்வ தர்மமாக வுடைய சூத்ரனுக்குக்‌ கால் வன்மை அவச்யமாதலால்‌ பிர்மன்‌ தன் கால்களிலிருந்து அவனைப்‌ படைத்தார்‌.

இதிஹாஸ புராணங்களில்‌ பலவிடங்களில்‌ நாராயணனுடைய முகம்‌, கைகள்‌, துடை, திருவடி முதலியவைகளிலிருந்து நான்கு வர்ணத்தவர்களும்‌ உண்டானதாகச்‌ சொல்லப்பட்டிருக்க – இங்கு நான்முகனின்‌ அவயவங்களிலிருந்து அவர்கள்‌ உண்டானதாகச்‌ சொல்லுவது எப்படிப்‌ பொருந்தும்‌? என்ற ஸந்தேஹம்‌ ஏற்படுகிறது.-பிரமனை சரீரமாகக் கொண்ட புருஷோத்தமனே இப்படிப்‌ படைப்ப தாலும்‌, நான்முகனுடைய அவயவங்கள்‌ நாராயுணனுடைய அவ யவங்களே யாகையாலும்‌ இதில்‌ ஒரு’ விரோதமுமில்லை.-இந்தப்‌ புருஷ ஸூக்தம்‌ முழுவதும்‌, தைத்திரீய ஆரண்யகத்தில் மூன்றாவது ப்ரச்நத்தில்‌ படிக்கப் பட்டிருக்கிறது. ஆகையால்‌ நான்கு ஜாதிகளும்‌ ஸ்ருஷ்டி காலத்திலேயே தனித் தனியாகப்‌ படைக்கப்பட்‌டனவென்று வேதத்திலிருந்தே அறிகிறோம்‌. நவீன காலத்தில்‌ சிலர்‌ வேதங்களில்‌ ஜாதி சொல்லப் படவில்லை யென்றும்‌,. புராணாங்களிலேயே ஜாதிப் பிரிவினை சொல்லப் பட்டிருக்கிறதென்றும்‌ கட்டுரைகள்‌ எழுதுவது இதனால்‌ நிராகரிக்கப்பட்ட.து. கீதையிலும்‌ பகவான்‌, “சாதுர் வர்ண்யம்‌ மயா ஸ்ருஷ்டம்‌ குண கர்ம விபாக,ச:’ [குணம்‌, தொழில்‌ முதலியவைகளில்‌ பேதங்களுடன்‌ கூடிய நான்கு வர்ணங்களும்‌ என்னால்‌ ஸ்ருஷ்டிக்கப்பட்டன.] என்று அருளிச்‌ செய்திருக்கிறார்‌.-

ஜன ஸமூஹத்தினுடைய முக ஸ்தானமாயிருக்கும்‌ ப்ராஹ்மண ஜாதி பிரமனுடைய முகத்தினின்றும்‌ உண்டாயிற்று. முகத்தில்‌ ஞானேந்த்ரியங்களான கண்‌, மூக்கு, நாக்கு, செவி, மெய்‌ (தோல்‌) என்னும்‌ ஐந்தும்‌ இருக்கின்றன. ‘ஸர்வேந்த்‌ரியாணாம்‌ நயநம்‌ ப்ரதாநம்‌” என்று எல்லா இந்த்ரியங்களிலும்‌ முக்கியமானதாகச்‌ சொல்‌லப்படும்‌ கண்ணினாலேயே படைக்கப்பட்ட எல்லாப்‌ பொருள்களையும்‌ பார்க்கிறோம்‌.-கண்ணால்‌ பார்க்கப்பட்டதே ப்ரத்யக்ஷ ப்ரமாணமாகிறது, படைக்கப்பட்ட பொருள்‌களைப்‌ பார்ப்பதிலிருந்து அவைகளை நியமிக்கும்‌ ஜீவனையும்‌, படைப்பவனான ஈஸ்வரளையும்‌ அறி கிறோம்‌. அம் மாதிரியே ப்ராஹ்மணார்களும்‌ திர்க்க தர்சிகளாகவும்‌,ஜீவாத்ம பரமாத்ம தத்வ ஜ்ஞானிகளாகவும உலகத்திற்குக்‌ கண்‌ போன்றும்‌ விளங்குகிருர்கள்‌. கண்ணிற்கு அடுத்த படியான மேன்மை வாய்ந்தது காது. சப்த ராசியான வேதமும்‌ கர்ண பரம்பரையாகவே வந்தது. ‘பஹுநா ஸ்ருதேந ” என்கிறபடி பலரிடம்‌ கேட்டுப்‌ பரமாத்ம ஜ்ஞானத்தை அடைவதற்கு ஸாதனமாயிருப்பது இது.-ரஸனேந்திரியம்‌ ருசிப்பதாகிற ஞானத்தை அறிகிறது. ஞானத்திற்கு ஆதாரமான தேஹத்தைப்‌ போஷிப்பதற்கும்‌ ரஸனேந்திரியம்‌ அவச்‌ யம்‌..

ஸ்வ தேஹம்‌ ஆத்ஃயம்‌ க,லு தர்ம ஸாதநம்‌”” [ தன்னுடைய தேஹ மல்லவோ தர்மத்திற்கு முதன்மையான ஸாதனம்‌. |என்று சொல்லப்‌ பட்டிருக்கிறது. அச்யுதனுக்கு அளிக்கப்பட்ட ப்ரஸாதங்களை ருசிப்‌பதற்கே ஏற்பட்டது நாக்கு. க்ராணேந்திரியம்‌ (மூக்கு) புருஷோத்தமனுக்கு ஸமர்ப்பிக்கப்பட்ட புஷ்பம்‌, சந்தனம்‌ முதலியவைகளை முகர்வதற்கு ஸாதனமானது. ஸ்வாஸம்‌ விடுவதற்கும்‌ மூக்கு உபயோகமாயிருக்கிறது. தொடுவதினால்‌ ஏற்படும்‌ உணர்ச்சியை அறிவிப்பது த்வக்‌ (தோல்‌) என்னும்‌ இந்த்ரியம்‌,-““உடுத்துக் களைந்த நின்‌ பீதக வாடை உடுத்துக்‌ கலத்ததுண்டு தொடுத்த துழாய்‌ மலர்‌ சூடிக்‌ களைந்தன சூடும்‌ இத் தொண்டர்களோம்‌’என்பது போல்‌ தம்முடைய ஞானேந்த்ரியங்களையெல்லாம்‌ புரு ஷோத்தமன்‌ விஷயத்தில்‌ ஈடுபடுத்துபவர் களாகையால்‌ ப்ராஹ்‌மணர்கள்‌ முகத்தினின்றும்‌ உண்டானார்கள்‌. கர்மேந்த்ரியங்களில்‌ ப்ரதானமான வாயும்‌ முகத்திலிருக்கிறது. இது ப்ராம்ஹணர்களின்‌ வாக்கு வன்மையையும்‌ சாபானுக்ரஹ ஸாமர்த்யத்தையும்‌ காட்டுகிறது. வாயினால்‌ “கடல்‌ சூழ்ந்த மண்ணுலகம்‌ வாழ”’ என்றும்‌, “ஸர்வே ஜநா: ஸுகிநோ ப,வந்து’” என்றும்‌ அச்யுதனால்‌ படைக்கப்பட்ட அவனியிலுள்ளோர்‌ எல்லோரும்‌ ஸுகமாயிருக்க வேண்டுமென்று வாழ்த்துவது ப்ராஹ்மணானுடைய தொழில்‌ என்று உணர்த்தப்படுகிறது.-வேதாத்யயனத்திற்கும்‌ வேதத்தை ஓதுவிப்பதற்கும்‌ யஜ்ஞம்‌ முதலியவைகளைப்‌ பண்ணி வைப்பதற்கும்‌, வாய்‌ உபயோகப்படுவ தாகையால்‌ இவைகள்‌ அவனுடைய தொழில்கள்‌ என்றும்‌ தெரிவிக்‌ கப்படுகின்றன. முகம்‌ புத்தி (மூளை)யையும்‌ தேஜஸ்ஸையும்‌ உடைய தாதலால்‌ ப்ராஹ்மணான்‌ புத்திமானாகவும்‌, ப்ரஹ்ம தேஜஸ்ஸை உடையவனாஃவும்‌ இருப்பான்‌ என்று தெரிவிக்கப்படுகிறது. ப்ரஹ்ம ஜ்ஞானியாகையால்‌ ப்ராஹ்மணான்‌ எனப்படுகிறான்‌. ராஜாக்‌களுக்கு மந்தரியாகவும்‌ ஆசார்யனாகவும்‌ இருந்து புத்திமதியும்‌ உபதேசமும்‌ செய்பவன்‌ ப்ராஹ்மணன்‌. இவ்வளவு கார்யங்களையும்‌ செய்வதற்கேற்பட்ட ப்ராஹ்மணன்‌ பிரமனின்‌ முகத்திலிருந்து உண்டானான்‌.

ப்ராஹ்மணர்களுடைய தேஹ குடும்ப ஸம்ரக்ஷணங்‌கள்‌ ராஜாக்களால்‌ நன்கு கவனிக்கப்பட்டு வந்ததால்‌ முன் காலத்தில்‌ அவர்கள்‌ தங்கள்‌ தொழிலை சரியாகச் செய்துவந்தார்கள்‌. ஆசார்‌யர்கள்‌ காலத்தில்‌, ராஜாங்கம்‌ பரதேசிகள்‌ கையில்‌ அகப்பட்ட போதிலும்‌, ப்ராஹ்மணார்கள்‌ உஞ்ச வ்ருத்தி செய்தாவது தங்கள்‌ தொழிலைச்‌ செய்து வந்தார்கள்‌. கவியின்‌ கோலாஹலத்தினாலும்‌, பலவித அஸெளகர்யங்களாலும்‌, இப்போது ப்ராஹ்மணார்கள்‌ தங்கள்‌ தொழிலை விட்டுப்‌ பல தொழில்களிலும்‌ புகும்படி தேரிட்டிருக்கிறது.-சில பாக்யவான்கள்‌ இக் காலத்திலும்‌ வைதிக மார்க்கத்திலிருந்துகொண்டு பணப் பேயாட்படாமல்‌ முறை தவராமல்‌ இருந்து கொண்டு வருகிறார்கள்‌-கர்மேந்த்ரியங்களுள்‌ வலிமை வாய்ந்ததான கையிலிருந்து தோளாண்மை யுடைய க்ஷத்ரியன்‌ பிறந்தான்‌. தேஹம்‌ கையினுடைய பலத்தினாலேயே ரக்ஷிக்கப்படுவது போல்‌ ஜன ஸமூஹமும்‌ க்ஷத்ரியனுடைய தோள்வலியினால்‌ ரஷிக்கப் படுகிறது. ராஜாக்களில்லாவிடில்‌உலகம்‌ அராஜமாகி அழிந்துவிடும்‌. அதனாலேயே அரசனுக்குத்‌ திருமாலின்‌ அம்சம்‌ உள்ளதாகக்‌ கூறப்படுகிறது.

எல்லாரும்‌ உண்டு ஜிவிப்பதற்கு அவச்யமான உணவுப்‌ பொருள்களை உண்டாக்குவதையும்‌ பலருக்கு வினியோகிப்பதையும்‌ தொழிலாக வுடைய வைச்யன்‌ துடையிலிருந்து உண்டாக்கப்பட்‌டான்‌. வைஸ்யனுடைய தாளாண்மையினாலேயே வேளாண்மை நடக்கிறதன்றோ. எல்லாருடைய தேஹத்தையும்‌ போஷிப்பது வைஸ்யனுடைய தொழில்‌.

இம் மூவர்ணத்தார்க்கும்‌ வேண்டிய உபகரணங்களை ஸம்‌பாதித்துக்‌ கொடுப்பதற்காக ஆடி ஓடித்‌ திரிந்து நடந்து கார்யம்‌ செய்பவனாகையால்‌ சூத்ரன்‌ காலிலிருந்து படைக்கப்பட்டான்‌. கால்‌கள்‌ சரீரத்தைத்‌ தாங்குவது போல்‌ அவன்‌ இம் மூவர்ணத்தாரையும்‌ தாங்குகிறான்‌. காலிலிருத்து உண்டானதால்‌ ஒருவிதமான தாழ்வும்‌ கிடையாது. எம்பெருமானுடைய திருவடிகளே எல்லோருக்கும்‌ வணங்கும்‌ துறையாகும்‌. மற்ற வர்ணத்தார்க்குள்ள நியம நிஷ்டை கள்‌, ஆசார வ்யவஹாரங்கள்‌ முதலிய கஷ்டங்கள்‌ இவர்களுக்குக்‌ கிடையாது. சொன்னதைச்‌ செய்வதில்‌ பாபமும்‌ கிடையாது; பொறுப்‌பும்‌ கிடையாது. அவர்களுக்கு நற்கதியடைவது மிகவும்‌ ஸுலபமாகும்‌, பிறப்பினலேயே அவர்களுக்கு நைச்யமும்‌, அஹங்கார மமகாரமில்லாமையும்‌ ஏற்பட்டிருக்கின்றன. ஆசார்யர்களும்‌ உயர்ந்த வர்ணத்தார்க்குப்‌ பிறப்பினாலேற்படும்‌ அஹங்கார மமகாரங்கள்‌ அழிய வேண்டுமென்று உபதேசித்திருக்கிறார்கள்‌. “தொழுமினீர்‌ கொடுமின்‌ கொண்மின்‌” என்று அவர்களிடமிருந்து ஞானத்தைப்‌ பெற்றுக் கொள்வதிலும்‌, அவர்களுக்கு ஞானத்தைக்‌ கொடுப்பதிலும்‌ தடையில்லை என்று தொண்டரடிப் பொடி யாழ்வாரும்‌ அருளி யிருக்கிறார்‌.

போதனம்‌, ரக்ஷணம்‌, போஷணம்‌, ஸேவகம்‌ என்பவை முறையே நான்கு வர்ணத்தாருக்கும்‌ தொழிலாகும்‌. ஓவ்‌வொருவரும்‌ மற்ற வர்ணத்தார்க்காக உழைக்கிறார்கள்‌. நால்வரும்‌ பகவானுடைய அவயவங்களே. அவர்களுக்குள்‌ ஏற்றத் தாழ்வு கிடையாது. அவர்கள்‌ ஓருவர்க்கொருவர்‌ சண்டையிடுவது சரீரத்தின்‌ அவயவங்கள்‌ ஒன்றுக்கொன்று சண்டையிடுவதை யொக்கும்‌, வயிறுடன்‌ மத்த அவயவங்கள்‌ சண்டையிட்ட கதை எல்லோரும் அறிந்ததே -நமது ஸநாதன வைதிக தர்மமாகிற மண்டபத்தைத்‌ தாங்கும்‌ தூண்கள்‌ ஐந்து. நடுத்தூண்‌ ஸ்ருதி ஸ்ம்ருதீதிஹாஸ புராணங்கள்‌ மூதலியவையும்‌ அவைகளில்‌ சொல்லப்பட்டிருக்கும்‌ தெய்வங்களின்‌ கோவில்களுமேயாகும்‌. ஜாதி, ஸ்த்ரீகள்‌, சொத்து, சுதந்திரம்‌ ஆகிய நான்கும்‌ மற்ற தூண்களாகும்‌. இவைகளைக்‌ காப்பாற்றுவதே அரசர்களின்‌ கடமை யென்று பாரதத்தில்‌ ராஜ தர்மத்தில்‌ பரக்கப்‌ பேசப் பட்டிருக்கிறது. ஸ்ருதி ஸ்ம்ருதிகளில்‌ இவைகளைப் பற்றி ஏற்‌ பட்டிருக்கும்‌ சட்ட திட்டங்களை மாற்ற அரசனுக்காவது, அவனுடைய மந்த்ரிகளுக்காவது, ஜன ப்ரதிநிதி ஸபைக்காவது அதிகாரம்‌ கிடையாதென்பது ஸர்வ ஸித்தமாக ஏற்பட்டிருந்தது. இதை மாற்ற ப்ரயத்னம் செய்த வேன மஹாராஜன்‌ அடைந்த கதியை ஹரி வம்சம்‌ முதலியவைகளில்‌ நன்கு காணலாம்‌. இக்காலத்தில்‌ அந்த நியமத்திற்கு ஏட்டிக்குப்‌ போட்டியாக” மாற்ற முடியாதது ஓன்றும்‌ கிடையாது என்ற கொள்கையைக்‌ கொண்டிருக்கிறார்கள்‌.-முன்பு நியமிக்கப்பட்டதெல்லாம்‌ பிசகென்று கொண்டு அவைகளுக்கு தேர்‌ மாறாக ஆக்க வேண்டுமென்று சட்டம்‌ செய்கிறார்கள்‌. கோயில்களேற்பட்ட தத்வத்திற்கு விரோதமாகச்‌ சட்டங்களேற்படுத்தி தெய்வ ஸாந்தநித்யத்தைச்‌ சிதைத்தது தேசமெங்குமறிந்ததே.

பிறப்பையும்‌ புத்தியிருப்பதையுமே குற்றமாகக் கொண்டு உத்யோகங்களுக்கு உள்ளே விடாமலும்‌, பாடசாலைகளில்‌ படிக்கவிடாமலும்‌ ப்ராஹ்‌மணர்களை த்வேஷிப்பது எல்லோரும்‌ அறிந்ததே. ப்ராஹ்மணர்‌கள்‌ க்ருஷ்ணணையே கதியாகக்‌ கொண்டவர்கள்‌. க்ருஷ்ணனும்‌ ப்‌ராஹ்மணோ மம தே;வதா””[ப்ராஹ்மணன்‌ என்னுடைய தேவதை]என்று அருளிச் செய்தார்‌. ஆகையால்‌ ப்ராஹ்மண த்வேஷமானது தெய்வ த்வேஷத்திலேயே முடியுமென்று எல்லோரும்‌ பயந்துகொண்டிருந்தோம்‌. அம்மாதிரியே ப்ராஹ்மண த்வேஷத்தில்‌ ஆரம்பித்த ஒரு சாரார்‌ தெய்வ த்வேஷத்திற்குக்‌ கொடி கட்டிக் கொண்டு கதறுகிறார்கள்‌. ஜாதியென்பது அவரவர்‌ கர்மானுகுணமாக பகவந்‌ நியமனப்படி ஏற்பட்டது. சொத்து அவரவர்‌ பண்ணிய புண்யபாபத்தின்‌ பலனேயாகும்‌. :மேலைத் தவத்தளவே யாகுமாம்‌ தான்பெற்ற செல்வம்‌ குலத்தளவே யாகும்‌ குணம்‌’” என்றல்லவோ சொல்லப்பட்‌டிருக்கிறது. ஆங்கிலேயர்களும்‌ பணத்தினாலும்‌ அந்தஸ்தினாலும்‌ பேதம்‌ ஏற்படுத்தி யிருக்கிறார்கள்‌. சமதர்மக் கொள்கை பேசும்‌ ருஷ்ய தேசத்திலும்‌ அதிகாரப் பதவியினால்‌ வித்தியாசங்களிருக்கின்றன. அம்மாதிரியான . வித்தியாசங்கள்‌ இங்கு கிடையா. பேதமென்பது இயற்கையின்‌ சட்டமாகும்‌. அதை ஓழிப்பதென்பது மனிதனால்‌ முடியாத முயற்சியே. ஒரு விதமாக ஓழிக்கப் பார்த்தால்‌. மற்றொரு விதமாக முளைக்கும்‌. பழைய -பேதத்திற்குப்‌ பழகி யிருக்கிறோம்‌.
‘அபேதம்‌” என்பதினாலேற்படும்‌ புது பேதங்கள்‌ படு விஷத்தைக்‌ கக்குமே யொழிய வேறொரு குணமும்‌ காணக் கிடைக்காது. ஸ்த்ரீகள்‌ மனுஷ்ய வர்க்கத்திற்கே தாயாயிருக்கும்‌ தனிப் பெருமையுடையவர்கள்‌; அவர்கள்‌ அதற்காகவே பிறப்பிக்கப்பட்டவர்கள்‌. அதற்கனுகுணமாகவே அவர்களுடைய கல்வியோ, குணமோ, செயலோ இருக்க வேண்டும்‌. அவைகளை அழிக்க முயன்றால்‌ மானிட ஸமூஹமே
முறை கெட்டு நிலை கலங்கி அழிந்து விடும்‌. குடும்பமென்பது இடும்பையாய் விடும்‌, கிருஹமென்பது குட்டிச் சுவராய் விடும்‌. கற்பு நிலையென்பது அழிந்து, கல்யாணமென்பது ஓழிந்து உயிர்வாழ்வகுற்கோர்‌ நோக்கமுமில்லாமல்‌ உலகம்‌ சுடுகாடாய் விடும்‌, ஆண்‌ வார்சு க்ரமம்‌ மாறிப்‌ பெண்மலையாளமாகிவிடும்‌.-சொத்து விஷயத்தைப் பற்றிச்‌ சில உண்மைகள்‌ உரைக்க வேண்டி யிருக்கிறது.உழைப்பின்‌ கூலியில்‌ செலவழித்தது போக மிகுந்ததைச்‌ சேர்த்து வைத்ததே சொத்தாகும்‌. அதை அழிக்க முயற்சித்தார்களாகில்‌ உழைப்பதற்குத்‌ தூண்டுகோலே இல்லாமல்‌ போய்விடும்‌. எல்லோரும்‌ சோம்பேறிகளாகத்‌ திரிவார்கள்‌. சொத்தை அபஹரிக்கச்‌ சட்டம்‌ செய்வது பகல் கொள்ளைக்கு ஸமானமாகும்‌. ஏழைகளுக்கு என்னகதி? என்று நினைக்கலாம்‌. அவர்களுக்கு உழைக்க வேலையும்‌, உண்ண உணவும்‌, உடுக்க. ஆடையும்‌ கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டியது முற்காலத்திலும்‌ ராஜ தர்மமாகச்‌ சொல்லப்பட்டிருக்‌கிறது. செய்வதற்கு. வழிகளும்‌ சொல்லப்பட்டிருக்கின்‌றன. சொத்து என்னும்‌ தத்வமழிந்தால்‌, கணவன்‌, மனைவி என்னும்‌ ஸம்பந்தமும்‌, தாய்‌, தகப்பன்‌, பின்ளை, பெண்‌ என்னும்‌ ஸம்பந்தமும்‌ அழிந்துவிடும்‌. குடும்பமென்பது உடும்பு பிடித்தவன்‌ கைபோலாகி விடும்‌.-இவைகளெல்லாம்‌. போனால்‌ சுதந்திரமும்‌ பெரும்பாலும்‌ தானாகவே போய்விடும்‌. பேச்சு சுதந்திரம்‌, கார்ய சுதந்திரம்‌, முன்னோர்‌ மொழிந்த முறைப்படி வாழும்‌ சுதந்திரம்‌, மத சுதந்திரம்‌ முதவியவைகளை இழப்போமாகில்‌ நாம்‌ நடை பிணமாகவே கருதப் படுவோம்‌.-உயிர்‌ வாழ்வதற்கு ஓர்‌ நோக்கமும பலனும்‌ இல்லாமல்‌ போய்விடும்‌.-ஆகையினால்‌ சீர்திருத்தக்காரர்கள்‌ முன்‌ இருப்பதை மாற்றுவதற்கு முன்‌ பின்‌ வரும்‌ கெடுதல்களைப் பற்றி தீர்க்காலோசனை செய்ய வேண்டும்‌.

————-

சந்த்‌ரமா மநஸோ ஜாத:, சக்ஷாஸ்‌. ஸர்யோ அஜாயத
முகாதிந்த்‌ரச்‌ சாக்‌,நிச்ச, ப்ராணாத்‌, வாயுர ஜாயத–14-
[மனத்தில்‌ நின்றும்‌ சந்திரன்‌ ‘உண்டானான்‌. கண்ணிலிருந்து ஸூர்யன்‌ உண்டானான்‌. முகத்திலிருந்து இந்த்ரனும்‌, அக்னியும்‌ ஜனித்தார்கள்‌. ‘ ப்ராணனிலிருந்து வாயு உண்டானான்‌.]-இந்த மந்த்ரத்தில்‌ ஸர்வ லோகோபகாரகமான ஸ்ருஷ்டியைச்‌ சொல்லுகிறது. 

(சந்த்ரமா…ஜாத:) சந்திரன்‌ மனத்திலிருந்து உண்‌ டானான்‌. ஏன்‌ மனஸ்ஸிலிருந்து சந்திரன்‌ உண்டாக வேணும்‌? மற்ற அங்கங்களிலிருந்து ஏன்‌ உண்டாகக் கூடாது? பிரமனை சரீரமாகக்‌ கொண்ட பகவானுடைய மனஸ்ஸிற்கும்‌, சந்திரனுக்கும்‌ எவ்விதமான ஓற்றுமை இருக்கிறது? உலகிலிருப்பவர்களுடைய மனஸ்ஸிற்கு- ஸந்தோஷத்தைத்‌ தருபவனாதலால்‌ சந்திரன்‌ மனஸ்ஸிலிருந்து படைக்கப்பட்டான்‌. அவன்‌ உலகத்திலுள்ள உயிர்களுக்கும்‌, பயிர்‌களுக்கும்‌ குளிர்ச்சியையும்‌ ஸந்தோஷத்தையும்‌ உண்டாக்குபவன்‌-அவனுடைய கிரணங்களே பயிர்களுக்கு உயிர் கொடுப்பவை. சந்‌திரனில்லா விடில்‌ உலகம்‌ காய்ந்து தீய்ந்து விடும்‌. கேசவனும்‌ குளிர்ந்த சுபமான மனத்தை யுடையவன்‌.-அப்படிப்பட்ட மனத்தினால்‌ எல்லோரும்‌ வாழ்வதற்கு ஸங்கல்பித்து, அத்வேஷத்தை உண்‌டாக்கி, ஆபிமுக்யத்தை வளர்த்து ஞானப் பயிரை விருத்தி செய்கிறான்‌.-மேலும்‌ சந்திரன்‌ மனத்திற்கு அதி தேவதையாகவும்‌ இருக்கிறான்‌.-இக் காரணங்களால்‌ சந்திரன்‌ புருஷோத்தமனுடைய மனத்திலிருந்து உண்டானான்‌.

(சக்ஷோஸ்‌…)உலகத்திற்குக்‌ கண்ணாயிருப்பவனும்‌, வெளி யிருளை விரட்டுபவனுமான ஸுர்யன்‌ அஞ்ஞானமாகிய இருளைப் போக்குகிற, மண்ணுக்கும்‌ விண்ணுக்கும்‌ கண்ணாகிய கண்ணனுடைய கண்ணிலிருந்து உண்டானான்‌. உலகத்தைப்‌ பார்க்‌கும்படி செய்வது கண்‌. ஸுூர்யனும்‌ பார்ப்பதற்கு ஸாதனமாயிருக்‌கிறான்‌., ஸூர்யன்‌ கண்ணுக்கு அதி தேவதை. கண்ணின்‌ ரோகங்‌கள்‌ ஸூர்ய நமஸ்காரம்‌ செய்வதினால்‌ போக்கப்படுவதாகச்‌ சொல்‌லப்படுகிறது. ஸூர்ய நமஸ்காரம்‌ வேதத்திலும்‌ உரைக்கப்படுகிறது. ஸூர்ய நமஸ்காரத்திலும்‌ ‘த்‌,யேயஸ் ஸதா ஸவித்ரு மண்‌டல மத்‌,யவர்த்தீ நாராயண:”” என்று சொல்லப்பட்ட, தாமரைக் கண்ணனான நாராயணனே நமஸ்கரிக்கப்படுபவன்‌. ஸூர்யன்‌ தன்‌ கிரணங்‌களால்‌ பாஹ்யாந்தகாரத்தைப்‌ போக்கடித்து, ப்ராணிகளுக்கு உஷ்ணத்தைக் கொடுத்து ஜீவிக்கும்படி செய்கிறான்‌. கேசவனுடைய கண்ணிலிருந்து உண்டாகும்‌ கடாஷத்தினால்‌, ஜிவர்கள்‌ அஜ்ஞானம்‌ நசிக்கப் பெற்று ஞான மடைந்து மோக்ஷம்‌ பெறுகிறார்கள்‌. ஆதித்‌யன்‌ தேஜோ மயமானவன்‌. அச்யுதனும்‌ தேஜோ மயமான தாமரை போன்ற கண்ணை யுடையவன்‌. ”தஸ்ய யதா கப்யாஸம்‌ புண்ட,ரீகமேவ மக்ஷிணீ” [அந்தப்‌ பரமபுருஷனுக்கு ஸூர்யனால்‌ மலரும்‌ தாமரை போன்ற இரு கண்களிருக்கின்றன.] என்றல்லவோ பர ப்ரஹ்ம லக்ஷணம்‌ சொல்லப் பட்டிருக்கிறது. இக் காரணங்களால்‌ பரந் தாமனுடைய கண்களிலிருந்து பாஸ்கரன்‌ உண்டானான்‌.-

(முகாத்‌…)முகம்‌ ஆதிபத்யத்தையும்‌ தேஜஸ்ஸையும்‌ காட்டுகிறது. ஆகையால்‌ தேவர்களுக்கு அதிபதியானவனும்‌, தேஜோவானுமாயிருக்கும்‌ இந்‌திரன்‌ முகத்திலிருந்து உண்டானான்‌. .-தேஜோ மயமான அக்னியும்‌ முகத்திலிருந்து உண்டானான்‌. “அக்‌நி முகா வை தேஃவதா:”” [தேவதைகள்‌ அக்னியை முகமாக உடையவர்கள்‌.] என்கிறபடி தேவர்களுக்கு முகமாயிருக்கும்‌ அக்னி முகத்திலிருந்து உண்டாவது நியாயமே.

(ப்ராணாத்‌ வாயுரஜாயத) ப்ராணனிலிருந்து வாயு உண்டானான்‌. ப்ராணன்‌ ஒரு வாயு விசேஷமே. அதிலிருந்து வாயு உண்டாயிற்று.-எல்லோருக்கும்‌ ப்ராணனாயிருக்கும்‌ வாயு ப்ராணனிலிருந்து உண்‌டாவது பொருத்த முடையது. வாயுவில்லாவிடில்‌ ஜீவிக்க முடியாது.-அனுமான்‌ வஜ்ராயுதத்தினால்‌ அடிபட்டபோது வாயு ஸ்தம்பித்ததும்‌ உலகமெல்லாம்‌ திண்டாடினது எல்லோரும்‌ அறிந்ததே. இம்மாதிரியாக உலகத்திற்கு உபகாரகமான வஸ்துக்கள்‌ உண்டாக்கப்பட்டன.

———-

நாப்‌,யா ஆஸீ த,ந்தரிக்ஷம்‌, சீர்ஷ்ணோ த்‌,யெளஸ்‌ ஸம வர்த்தத
பத்ப்‌,யாம்‌ பூ,மிர்‌ தி,சச்‌ ச்ரோத்ராத்‌, ததர லோகாந்‌ அகல்பயந்-
15-
[நாபியிலிருந்து ௮ந்‌தரிக்ஷம்‌ உண்டாயிற்று. தலையிலிருந்து ஸ்வர்க்கம்‌ உண்டாயிற்று. பாதங்களினின்றும்‌ பூமி உண்டாயிற்று. திக்குகள்‌ காதிலிருந்து உண்டாயின. அப்படியே லோகங்களை யெல்லாம்‌ பிரமன்‌ படைத்தான்‌.] இதில்‌ உலகங்களுடைய ஸ்ரூஷ்டி சொல்லப்படுகிறது)

தேஹத்தின்‌ நடுவிலிருக்கும்‌ நாபியிலிருந்து பூமிக்கும்‌ மேலுலகங்களுக்கும்‌ நடுவிலிருக்கும்‌ அந்தரிக்ஷம்‌ உண்டாயிற்று.(சீர்ஷ்ணோ…) மேலேயிருக்கும்‌ தலையிலிருந்து மேலேழுலோகங்‌களும்‌ உண்டாயின. இங்கு “த்‌யெள:” என்னும் பதம்‌ மேலேழு உலகங்களையும்‌ உணர்த்துகிறது. (பத்ப்யாம்‌ பூமி🙂 பாதங்களி லிருந்து பூமி உண்டாயிற்று. திருவடிகளிலிருந்து: பிறந்ததா லன்றோ ‘பொருவில்‌ சீர்ப்பூமி” என்று ஆழ்வாரும்‌ புகழ்‌ந்திருக்கிறார்‌. தேஹத்தைத்‌ தாங்குவது திருவடி. எல்லோரையும்‌ தாங்குவதால்‌ தரணியென்று பெயர் பெற்றது பூமி. கேசவ நம்பியைக்‌ கால் பிடிக்‌கும்‌ பேற்றுக்குப் பிறந்தவள்‌ பூமி தேவி.“இடந்திருந்து நின்றனந்து கேழலாய்க்‌ கீழ்ப்புக்கு இடந்திடும்‌ தன்னுள்‌ கரக்கும்‌ உமிழும்‌ தடம்‌ பெரும்‌ தோளாரத்தழுவும்‌ பாரென்னும்‌ மால்‌ செய்கின்ற மால்‌ ஆர்‌ காண்பாரே”[கேழல்‌-வராஹம்‌. இடந்திடும்‌-கு த்தி எடுக்கும்‌. தன்னுள்‌ கரக்கும்‌- ‘தன்‌ வயிற்றினுள்ளே மறைத்து வைக்கும்‌. பார்‌-பூமி. மால்‌-திருமால்‌-அன்பு.] என்று நம்மாழ்வாரும்‌,“அரவாகிச்‌ சுமத்தியால்‌ அயிலெயிற்றின்‌ ஏந்துதியால்‌ ஒரு வாயின்‌ விழுங்குதியால்‌ ஓரடியால்‌ ஒளித்தியால்‌ திருவான நிலமகளை”?என்று கம்ப நாட்டாழ்வாரும்‌ அருளிச் செய்தபடி பகவானுடைய ஸர்வாவயவங்களாலும்‌, விசேஷமாகத்‌ திருவடியினாலும்‌ தீண்டப் பெற்ற வளன்றோ தரணி. இக் காரணங்களாலும்‌, மண்ணுலகில்‌ மாந்தர்கள்‌ உய்வதற்கு உபாயம்‌ நாராயணனுடைய திருவடிகளே என்று காட்டுவதற்கும்‌ பூமி திருவடிகளிலிருந்து படைக்கப்பட்டது. இங்கு பூமி கீழிருக்கும்‌ ஏழுலோகங்களையும்‌ காட்டும்‌. கீழேழுலோகங்களும்‌ திருவடிகளிலிருந்து படைக்கப்பட்டன என்று கொள்ள வேண்டும்‌-(திசச்‌ ச்ரோத்ராத்‌) காதுகளினின்றும்‌ திக்குகள்‌ படைக்கப்பட்டன. சப்தத்திற்கு ஆதாரமான திக்குகள்‌ சப்தத்தைக்‌ கேட்கும்‌ இந்த்ரியமான காதிலிருந்து படைக்கப்பட்டன. (தத…) அப்படியே இவ்‌ வண்டத்திலுள்ள மற்ற உலகங்களையும்‌ பரந்தாமனை அந்தர்யாமியாகக் கொண்ட பிரமன்‌ படைத்தான்‌.” அகல்பயந்‌ என்று பன்மை யாகச்‌ சொல்லியிருப்பது சாந்தஸம்‌ என்று கொள்ள வேண்டும்‌; அல்லது பிரமணை உபகரணமாகக் கொண்ட நித்ய ஸூரிகள் படைத்தனர்‌ என்றும்‌ கொள்ளலாம்‌.

———–

வேதாஹ மேதம்‌ புருஷம்‌ மஹாந்தம்‌
ஆதித்ய வர்ணம்‌ தமஸஸ்து பாரே
ஸர்வாணி ரூபாணி விசித்ய தீர:
நாமாநி க்ருத்வாபி,வதந்‌ யதாஸ்தே–
16-
[எல்லா சரீரங்களையும்‌ உண்டு பண்ணி, பெயர்களைக்‌ கொடுத்து அவைகளை உச்சரிததுக்‌ கொண்டிருப்பவரும்‌, ‘விகாரமற்றவரும்‌, ஸூர்யன் போன்‌ற வர்ணத்தை யுடையவரும்‌,ப்ரக்ருதி மண்டலத்திற்கு அப்பாலிருப்பவரும்‌, (எல்லா விதத்திலும்‌) பெரியவருமான இந்தப்‌ புருஷ, (வேத புருஷனாகிய) நான்‌ அறிகிறேன்‌.
வேத ஹமிதி மந்த்ராப்‌,யாம்‌ வைப,வம்‌ கதிதம்‌ ஹரே:” [“வேதாஹம்‌…” என்னும்‌ இரண்டு மந்த்ரங்களாலும்‌ ஹரியினுடைய வைபவம்‌ வெளியிடப்பட்டது.] என்று புருஷ ஸம்ஹிதையில்‌ இந்த மந்த்ரமும்‌, அடுத்த ருக்கும்‌, ஹரியின்‌ வைபவத்தைச்‌ சொல்லுகின்றனவென்று உரைக்கப்பட்டது. வேத புருஷன்‌ மஹா புருஷனின்‌ மஹிமையை மகிழ்ந்துரைக்கும்‌ பாசுரங்களிவை.

இந்த மந்திரத்தின்‌ முதலடி ஸ்ரீராமாயணத்தில்‌ **அஹம்வேத்‌மி மஹாத்மாநம்‌ ராமம்‌ ஸத்ய பராக்ரமம்‌” [நான்‌ உண்மையான பராக்ரமத்தை யுடையவனும்‌, மஹாத்மாவுமான ராமனை அறிவேன்‌.] என்ற விச்வாமித்ர வாக்யத்‌தினால்‌ உப ப்ரும்ஹணம்‌ செய்யப்பட்டது என்‌று பெரியவாச்சான்‌ பிள்ளை அருளிச் செய்திருக்கிறார்‌. பரமகாருணிகரான பெரியவாச்சான்‌ பிள்ளையின்‌ வியாக்யானத்தை அனுசரித்து நாம்‌ இங்கு விவரிக்‌கிறோம்‌. ராமாயணத்தில்‌ உப ப்ரும்ஹணம்‌ செய்யப்பட்டதால்‌ இந்த ஸ்ருதி ராமனாய்‌ அவதாரம் செய்த நாராயணனையே குறிக்கிறது என்‌பது தெளிவாகிறது. இந்த மந்த்ரத்தின்‌ முற்பாதி ஸ்வேதாஸ்வதரத்தி லும்‌ சிறிது வித்தியாசத்துடன்‌ படிக்கப்படுகிறது. இதிலிருந்து ஸர்வ வேதாந்த ப்ரத்யய ந்யாயப்படி, ஸ்வேதாஸ்வதரத்தில்‌ சொல்லப்படுபவனும்‌, இங்கு சொல்லப்படுபவனும்‌ ஸ்ரீமந்நாராயணனே என்று ஸித்திக்கிறது. அங்கு வியாக்யானம்‌ செய்த ரங்கராமாநுஜ முனியும்‌,“ப்ரக்ருதே: பரஸ்தாத்‌ ஜ்யோதி: மஹா புருஷம்‌ தமேவ நாராயணம்‌ விதி,த்வா ம்ருத்யு சப்‌,தி,தம்‌ ஸம்ஸாரம்‌ அதிக்ராமதி”‘[ப்ரக்ருதிக்கு மேற்பட்டவனும்‌, ஜ்யோதிர் மயமானவனும்‌, மஹா புருஷனுமான நாராயணனையே அறிந்து “ம்ருத்யு என்று சொல்லப்படும்‌ ஸம்ஸாரத்தைத்‌ தாண்டுகிறான்‌.] என்று பொருளுரைத்திருக்கிறார்‌.

(அஹம்‌ வேத) நான்‌ அறிகிறேன்‌. இங்கு நான்‌” என்று சொல்லுபவன்‌ வேதபுருஷன்‌. பரமாத்மாவை அறிவதினாலும்‌, பிறரை அறியச் செய்வதினாலும்‌ வேதமென்றே பெயரும்‌ புகழும்‌ பெற்ற நான்‌ அறிகிறேன்‌. நித்யனான நான்‌ அறிகிறேன்‌. அபெளருஷேயனான நான்‌ அறிகிறேன்‌. ப்ரமம்‌ (தவறாக நினைத்தல்‌), விப்ரலம்பம்‌ (வஞ்‌சனை) முதலிய குறைகளில்லாத நான்‌ அறிகிறேன்‌. *வேதநம்‌”- உபா ஸநம்‌” என்னும்‌ சப்தங்களால்‌ சொல்லப்படுவதும்‌,தைல தாரயைப் போல்‌ இடைவிடாததும்‌ பார்ப்பதற்கு ஸமானமானதுமான பக்தி ரூபமான ஞானமே இங்கு *வேத;” என்று சொல்லப்படுகிறது. வாக்‌யத்தினல்‌ ஏற்படும்‌ அர்த ஜ்ஞானம்‌ மட்டுமல்ல. (வேத) அறிகிறேன்‌. . **ந சஷுஷா க்ருஹ்யதே‘” [பரமாத்மா கண்ணால்‌ காணப்‌படாதவன்‌.] என்றும்‌, **மநஸா து விசுத்‌தேந ”” [சுத்தமான மனத்தாலேயே அறியத் தக்கவன்‌)] என்றும்‌, “என்றேனும்‌ கட் கண்ணால்‌ காணாத அவ் வுருவை நெஞ்சென்னும்‌ உட் கண்ணால்‌ காணும்‌ உணர்ந்து”” என்றும்‌ சொல்லுகிறபடி வேத புருஷன்‌ தன்னுடைய ஞானக் கண்‌ணால்‌ கண்டு சொல்லுகிறான்‌. “நேதி நேதி ”[பரமாத்மா இப்படிப்‌பட்டவன்‌ அல்லன்‌; இப்படிப்பட்டவன்‌ ஓருவனுமில்லை.] என்றும்‌,““க இத்தா வேத; யத்ர ஸ:”” [பரமாத்மா இப்படிப் பட்டவன்‌ என்று யார்‌ அறிவார்‌?] என்றும்‌ ப்ரமாண பூதமான வேதத்திலும்‌ பரம புருஷன்‌ அறிய முடியாதவன்‌ என்று கீர்த்திக்கப் பட்டிருக்கிறது.“ப்‌ரஹ்ம ருத்‌,ரேந்த்‌ர பூதா நாம்‌ மநஸா மப்ய கோசரம்‌”[ப்ரஹ்மா, ருத்ரன்‌, இந்திரன்‌, என்னும்‌ இவர்களுடைய மனத்திற்‌கும்‌ எட்டாதவன்‌ ] என்றும்‌, “நான்முகன்‌ செஞ்சடையான்‌ என்றிவர்கள்‌ எம்பெருமான்‌ தன்மையை யாரறிகிற்பார்‌?”” என்றும்‌ ப்ரமாதாக்களான (அறிவுடையவர்களான) ப்ரஹ்ம ருத்ராதிகளாலும்‌ அச்யுதனை அறிய முடியாதென்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. “ஸோ அங்க; வேத; யதி,வா ந வேத”: [(தன்‌ பெருமையை) அவனே அறிவனோ?அறியானோ?]என்றும்‌, “தனக்கும்‌ தன்‌ தன்மை அறிவரியானை’” என்றும்‌ புருஷோத்தமன்‌ தானும்‌ தன்‌ பெருமையை அறிய மாட்டான்‌ என்று சொல்லப்‌ பட்டிருக்கிறது. அளவுபட்ட ஞானத்தை யுடைய ப்ரஹ்ம ருத்ராதிகள்‌ அறியாதது நியாயமே. *யஸ் ஸர்வஜ்ஞ: ஸர்வவித்‌’” “ஸ்வாபாவிகீ ஜ்ஞாந பல க்ரியா ச ‘” என்னும்‌ ப்ரமாணங்களை நம்பி ஸார்ஜ்ஞ்யம்‌ கொண்டாடி ஒரு ஆசாரியன் பக்கல்‌ அடி பணிந்து அறியாமையால்‌ அவனும்‌ அறியான்‌. வேதம்‌ அறிந்தபடி எப்படி என்னில்‌: (மஹாந்தம்‌) அளவிட முடியாதவனென்றே அறிந்தது. “அறிந்தன வேதவரும்‌பொருள்‌ நூல்கள்‌ அறிந்தன கொள்க அரும் பொருளாதல்‌’” என்றும்‌, “யஸ்யாமதம்‌ தஸ்ய மதம்‌” [எவனுக்கு பரமபுருஷனை (அளவிட்டு) அறிய முடியவில்லையோ அவனே அறிந்தவனாகிறான்‌.] என்றும்‌ சொல்லியபடி அளவிட முடியாதவன்‌ என்று அறிகையே உள்ளபடி அறிவது. “வேதாஹம்‌’”’ என்பதை ராமாயணத்தில்‌ *அஹம்‌ வேத்மி”என்பது விவரிக்கிறது.-இங்கு ‘வேத’ என்பது அங்கு *வேத்மி‘ என்றும்‌,இங்கு “அஹம்‌’ என்பது அங்கு “அஹம்‌” என்றும்‌ சொல்லப்படுகிறது,(ஏதம்‌ வேத;) இப்படி ப்ரஸித்தமானவனை -அறிகிறேன்‌. ஸர்வ காரண புருஷனாயிருந்தும்‌, மனிசர்க்காகப்‌ படாதன பட்டு என் நின்ற யோனியுமாய்ப்‌ பிறந்த இவனை அறிகிறேன்‌- அவதார ஸெளலப்‌யத்தைக்‌ காட்டுவது இந்த ஏதச் சப்தம்‌. இங்கு “ஏதம்‌” என்பதை அங்கு :ராமம்‌” என்று அவதார நிர்தேசம்‌: செய்கிறது. (புருஷம்‌)அவன்‌ ஓருவனே புருஷன்‌ எனத் தகுந்தவன்‌. மற்றவர்கள்‌ ஸ்த்ரீ ப்ராயர்களே. ஸகல கல்யாண குணங்களாலும்‌ பூர்ணமானவன்‌ புருஷன்‌. இங்கு சொல்லப்படும்‌ செளர்ய வீர்யாதி குணங்கள்‌ ராமாயணத்தில்‌ “ஸத்ய பராக்ரமம்‌” என்று பேசப்படுகின்றன. புரி சேதே”என்ற வ்யுத்பத்தியின்படி வைகுண்டத்தில்‌ ஆதிசேஷன் மேல்‌ பள்ளி கொண்ட புருஷன்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌.-(ஏதம்‌ புருஷம்‌)-அங்குஷ்ட்ட மாத்ர: புருஷோந்தராத்மா ஸதா ஜநாநாம்‌ ஹ்ருதயே ஸந்நிவிஷ்ட:’” [கட்டை விரல்‌ பரிமாணாமுள்ளவனும்‌, அந்தர்யாமியுமான புருஷன்‌ ஜனங்களுடைய ஹ்ருதயத்தில்‌ எப்பொழுதும்‌ இருக்கிறான்‌. ]என்று சொல்லுகிறபடி எல்லா ஜனங்களுடைய ஹ்ருதய புரத்திலும்‌ வசிப்பவன்‌ புருஷன்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌. தேசாந்தரத்‌தில்‌ எட்டியிராமல்‌ அருகில்‌ அந்தர்யாமியாயிருப்பதால்‌ “இந்தப்‌ புருஷன்‌’ என்று சொல்லப்படுகிறான்‌. அவன்‌ பரவஸ்து வாயிற்றே யென்று நாம்‌ பயப்படவேண்டியதில்லை.-அருவருக்கும்படியான தோஷங்களுக்கு இவர்கள்‌ ஓரு கொள்கலமாயிற்றே என்று அவன்‌ அகல நிற்க மாட்டான்‌. அவனிடம்‌ நாம்‌ முறையிடும்போது முன் வருவதற்காக அருகிலேயே அமர்ந்திருப்பவன்‌.-

மஹாந்தம்‌) இதை அனுஸரித்து ஸ்ரீராமாயணத்தில்‌ ‘மஹாத்மானம்‌‘ எனப்படுகிறது.-மிகவும்‌ பெரியவனென்று அறிவேன்‌. *“ஸ உ ச்ரேயாந்‌ ப,வதி ஜாயமாந ”” [அந்தப்‌ புருஷோத்தமன்‌ பிறந்த பின்பே பெரியவனாகிறான்‌.] என்று தாழ்ந்தார்க்கு முகங்கொடுக்கைக்காகப்‌ பல அவதாரங்‌கள்‌ செய்த பின்பு அவனைப்‌ பெரியவனென்று அறிகிறேன்‌. எல்லா விதத்திலும்‌ பெரியவன்‌ பரம புருஷன்‌.-(மஹாந்தம்‌) ஸ்வரூபத்தில்‌ பெரியவன்‌ இவன்‌ ஓருவனே. எங்கும்‌ பரந்துளன்‌. (மஹாந்தம்‌) குணங்களில்‌ பெரியவன்‌. கணக்கற்ற கல்யாண குணங்களை யுடையவன்‌. ஓவ்வொரு குணமும்‌ அளவிட முடியாதது. ஆனந்த குணம்‌ ஓன்றை மட்டும்‌ அளவிடப் பார்த்த வேதம்‌ யதோ வாசோ நிவர்த்‌தந்தே” என்று கை விட்டுத்‌ திரும்‌பி வந்ததல்லவோ? எல்லையில்‌ ஞானத்தன்‌’ என்று-ஆழ்வார்‌ அருளிச்‌ செய்தபடி அளவற்ற ஞானத்தை யுடையவன்‌; பலத்தில்‌ பெரியவன்‌; ஐஸ்வர்யத்தில்‌ பெரியவன்‌: வீர்யத்தில்‌ விஞ்சியன்‌; சக்தியில்‌ சிறந்தவன்‌; தேஜஸ்ஸில்‌ மிக்கவன்‌: பிறருடைய துக்கத்தைக் கண்டு ஐயோ வென்று இரங்கும்‌ தயையை யுடையவன்‌. அடியார்களின்‌ தோஷத்தை அறியாதவன்‌-தன்னடியார்களின்‌ தோஷங்களை குணங்களாகக்‌. கொள்ளும்படியான வாத்ஸல்யத்தையுடையவன்‌. “செய்தாரேல்‌ நன்று செய்தார்‌” என்றும் அல்லவோ அவன் வார்த்தை-அபயம்‌ ஸர்வ பூதேப்‌யோத,நாம்யே தத்‌ வ்ரதம்‌ மம” [(என்னை சரணமடைந்தவனுக்கு) எல்லா பூதங்களிடமிருந்தும்‌ அபயமளிக்கிறேன்‌. இதுவே என்னுடைய” விரதம்‌.]என்று சொல்லி ஆபத்தில்‌ அகப்பட்டவர்களை ௮ஞ்சலென்று அளிக்கும்‌ அரிய பெரிய ஸ்வபாவத்தை யுடையவன்‌. பெரிய விரோதிகளையும்‌ புழுப் பூச்சிகளை நசுக்குவது போல்‌ நசுக்க வல்ல பராக்ரமத்தை யுடையவர் ஜயிப்பரோ? தோற்பரோ?” என்னும்‌ ஸந்தேஹம்‌ இவருடைய பராக்ரம விஷயத்தில்‌ கிடையாது. “நாவிஜித்ய நிவர்த்ததே’ என்றும்‌ “சென்று கொன்று வென்றி கொண்ட”” என்றும்‌ சொல்லுகிற படி புறப்பட்டால்‌ ப்ரபல விரோதிகளையும்‌ பராஜயப் படுத்தித்‌ தலையறுத்தல்லது மீளார்‌. (மஹாந்தம்‌) பெருமை யுள்ள சரீரத்தை யுடையவன்‌. “மாசூணாச்‌ சடருடம்பாய்‌’* என்றும்‌, “ந தஸ்ய பராக்ருதா மூர்த்தி: மாம்ஸமே தோஸ்தி,ஸம்பவா”” அந்த மஹா புருஷனுக்கு மாம்‌ஸங்களாலும்‌, கொழுப்பினாலும்‌, எலும்புகளாலுமான ப்ராக்ருத சரீரம்‌ கிடையாது. என்றும்‌, “*நித்யம்‌ நித்யாக்ருதிதரம்‌”” [ நித்யமானவனும்‌,நித்யமான திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவனும்‌] என்றும்‌ சொல்‌லப்பட்ட நித்ய நிரவத்ய நிரதிசய ஓளஜ்வல்யமுடைய (என்றும்‌”குற்றமற்றதும்‌ ஓப்பற்ற ஓளியை யுடையதுமான) சரீரத்தையுடையவன்‌. எல்லா அண்டங்களிலுமுள்ள ஸகல சேதனாசேதனங்களையும்‌ சரீரமாக உடையவனாதலால்‌ பெரிய சரீரத்தை யுடையவன்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌. (மஹாந்தம்‌) பரமாத்மாவாயிருப்பவன்‌. *யஸ்‌மாத்‌ பரம்‌ நாபரமஸ்தி கிஞ்சித்‌‘ [எவனைக் காட்டிலும்‌ பெரிய வஸ்து வேறொன்றும்‌ கிடையாதோ.] என்றும்‌, “ந தத் ஸமச்ச அப்‌,யதி,கச்ச த்ருஸ்யதே” | அவனுக்கு ஸமானமானவனும்‌, மேலானவனும்‌ காணப்‌ படவில்லை.] என்றும்‌, தமீஸ்வராணாம்‌ பரமம்‌ மஹேஸ்வரம்‌, தம்‌ தேவதா நாம்‌ பரமம்‌ ச தைவதம்‌’” [ஈஸ்வரர்களுக்கும்‌ மேலான ஈஸ்வரனும்‌, தேவதைகளுக்கும்‌ மேலான தேவதையுமான அவனை] என்றும்‌, “ஒத்தார்‌ மிக்காரை இலையாப மாமாயா!’ என்றும்‌ சொல்லுகிறபடி தேவாதி தேவனாய்‌, ஆதி மூலமாய்‌, அந்தர்யாமி யாயிருப்பவன்‌.(ஆதித்யவர்ணம்‌) ஸூர்யனைப் போன்ற ஓளியை யுடையவன்‌.-கோடி ஸூர்ய ப்ரகாசத்தையுடைய பரஞ் சோதிக்கு அல்ப ப்ரகாசத்தை யுடைய ஆதித்யனை உபமானமாகச்‌ சொல்லலாமோ? எனில்‌: நாம்‌ கண்ணால்‌ காணும்‌ ஜ்யோதிஸ் ஸுகளுக்குள்‌ ஸூர்யனே மிகுந்த ஓளி யுடையவனாகக்‌ காணப்படுவதால்‌ அவனே உபமானமாகச்‌ சொல்லப் பட்டான்‌. ‘ய ஏஷ அந்தராதித்யே ஹிரண் மய: புருஷ:’” [ஸூர்யனுக்கு நடுவில்‌ ஸுவர்ணம்‌ போன்ற ஓளியை யுடையபுருஷன்‌ ] என்று பரம புருஷன்‌ வர்ணிக்கப்பட்டானன்றோ.-இந்த மஹா புருஷணையே “ஸவிதுர்‌ வரேண்யம்‌’” என்று காயத்ரியில்‌ அனு சந்திக்கிறோம்‌. :மலர் கதிரின்‌ சுடருடம்பாய்‌’” என்று ஆழ்வாரும்‌ அருளினார்‌. வேதங்களும்‌, வைதிக புருஷர்களும்‌ இவனைப் பேசப்‌ புக்கால்‌ ஸூர்யனுக்கு ஓப்பான ஒனியை யுடையவன்‌ என்றே பாசுரமிடுகிறார்கள்‌. (தமஸஸ்து பாரே) தமஸுக்கு அக்கரை யிலிருப்பவன்‌-தமஸ;: பரமோ தாதா சங்க,சக்ர கதா தர’”’ என்று மண்டோதரியால்‌ சொல்லப்பட்ட சக்ர பாணியே இவன்‌. *தம:” என்பது மூலப்ரக்ருதியைக்‌ குறிக்கிறது. ப்ரக்ருதி மண்டலத்திற்கு அப்பாலிருப்பவன்‌ என்று பொருள்‌. *தம:’ என்பது அஜ்ஞானத்தையும்‌ ஸம்ஸாரத்‌ தையும்‌ குறிக்கும்‌. “ஸோத்‌,வந: பாரமாப்நோதி தத்‌ விஷ்ணோ: பரமம்‌ பதம்‌” [அவன்‌ ஸம்ஸாரத்திற்கு அக் கரையை அடைகிறான்‌. அதுவே விஷ்ணுவினுடைய பரம பதம்‌] என்று கடோபனிஷத்தில்‌ சொல்லப்‌ பட்டிருப்பதிலிருந்து இங்கு சொல்லப்பட்டதும்‌ விஷ்ணுவினுடைய பரமபதமே என்று நிஸ் ஸந்தேஹமாக நிச்சயிக்கப்படுகிறது.(ஸர்வாணி…) சேதனர்கள்‌ “லூந பக்ஷ இவாண்ட ஐ:’* என்று சிறகொடிந்த பக்ஷி போல்‌ அசித் ஸமராய்‌, கரண களேபரமற்று போக மோக்ஷ சூந்யராய்‌ இருக்கும்படியான எளிவரவைக் கண்டு தயையுடைய மனஸ்ஸை யுடையவனாய்‌ அவர்கள்‌ தன்னை அடைவதற்காக சரீரங்களைக்‌ கொடுத்து நாம ரூபங்களை ஏற்படுத்தினான்‌. (ஸர்வாணி ரூபாணி விசித்ய) தேவர்‌, மனுஷ்யர்‌, திர்யக்‌ (ஊர்வன) ஸ்தாவரம்‌ எனப்படும்‌ நான்கு விதமான சரீரங்களையும்‌ ஏற்படுத்தி. (நாமாநி க்ருத்வா…) அவர்களுக்கு நாமங்களைக் கொடுத்து அவற்றை உச்சரித்துக் கொண்டு எந்தப் பரமாத்மா இருக்கிறாரோ அவரை அறிவேன்‌. “*அநு ப்ரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி””[இவற்றைவியாபித்து நாம ரூபங்களைக்‌ கொடுக்கக் கடவேன்‌] என்று பரமபுருஷன்‌ ஸங்கல்பிப்பதாகச்‌ சொல்லப்பட்டிருக்கிறதன்றோ. (தீர)இம் மாதிரியாக இவற்றை வியாபித்து இவற்றுக்கு நாம ரூபங்களைக்‌ கொடுத்த போதிலும்‌ அவற்றின்‌ விகாரங்கள்‌ தன் மேல்‌ படாதபடி இருப்பதால்‌ புருஷோத்தமன்‌ தீர-என்று சொல்லப்படுகிறான்‌.-புத்தியை ரமிக்கச் செய்பவன்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.-யத்‌” என்கிற விடத்தில்‌ நபும்ஸகலிங்கம்‌ சாந்தஸம்‌.-இதிலிருந்து உண்மையான தத்வமான வேதம்‌ ஒன்றிருக்கிற தென்று அறிகிறோம்‌. “புருஷம்‌” என்பதிலிருந்து ‘ ப்ரமாத்மாவுக்கு குணங்களிருக்கின்‌றனவென்று. ஏற்படுகிறது. *மஹாந்தம்‌’ என்பதிலிருந்து அவனுக்குக்‌ கீழ்ப்பட்டவர்கள்‌ உளர்‌ என்று உணர்த்தப்‌படுகிறது. “ஆதித்ய வர்ணம்‌” என்பதிலிருந்து அஸாதாரணமான திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவன்‌ என்றும்‌ தெரிவிக்கப்படுகிறது. ‘*தமஸஸ்து பாரே”” என்று அப்ராக்ருதமான திவ்ய தேசத்தில்‌ திகழ்கின்றான்‌ தாமோதரன்‌ என்றும்‌ ஏற்படுகிறது.” அநேக சேதனர்கள்‌ உண்மையாக இருக்கின்றனரென்றும்‌-அவர்களுக்கு நாம ரூபங்களைக்‌ கொடுத்தான்‌ என்பதும்‌ அறியப்படுகிறது.-இவைகளை ஓப்புக் கொண்டால்‌ அத்வைதம்‌ அழிந்து விடும்‌ என்னும்‌ பயத்தினால்‌ வேதம்‌ வாஸ்தவமல்ல வென்றும்‌, புருஷோத்தமனுக்கு ரூபமில்லை, குணமில்லை, ஸ்தானமில்லை என்றும்‌ சேதனாசேதநங்கள்‌ உண்மையல்ல வென்றும்‌, மாயையினால்‌ ஏற்படும்‌ தோற்றமே யென்றும்‌ சொல்லும்‌ மாயா வாதிகளின்‌ மதம்‌ முழுவதும்‌ இங்கு மறுக்கப்பட்டது.

————-

தாதா புரஸ்தாத்‌, யமுதாஜஹார சக்ர: ப்ரவித்‌,வாந்‌ பரதி ,சச்சதஸ்ர:
தமேவம்‌ வித்‌,வாந்‌ ௮ம்ருத இஹப,வதி நாந்ய: பந்தா: அயநாய வித்‌யதே.-17-
[எவரை முன்‌ பிரம தேவர்‌ தியானித்தாரோ, பரமாத்ம ஜ்ஞானியான இந்திரன்‌ எவரை உபாஸித்தானோ, எட்டு திக் பாலகர்களும்‌ (ருஷிகளும்‌) எவரை தியானம்‌ செய்தனரோ அந்தப் பரம புருஷனை இம் மாதிரியாக அறிபவன்‌ இந்த ஜன்மத்திலேயே முக்தி யடைகிறான்‌. மோக்ஷத்திற்கு வேறு வழியில்லை.] வேத புருஷன்‌ தன்னைத் தவிர மற்றும்‌ சிலரும்‌ இந்த மஹா புருஷனை அறிந்துள்ளார்களென்று வெளியிட்டு அவனை இம் மாதிரி அறிவதே மோக்ஷோபாயம்‌ என்று நிர்ணயிக்கிறான்‌. (ததா…) முதலில்‌ ஸ்ருஷ்டிக்கப்பட்ட பிரமன்‌ மஹா புருஷனை தியானித்தார்‌ என்று சொல்லப்படுகிறது. ஸ்ருஷ்டிக்கு முன்‌ ஸ்ருஷ்டி செய்ய வழி தெரியாத நான்முகன்‌ பகவானை நோக்கி தியானம்‌ செய்தாரென்று இதிலிருந்து ஏற்படுகிறது.

“யுக கோடி ஸஹஸ்ராணி விஷ்ணுமாராத்‌ய பத்‌ம பூ , புநஸ்‌ த்ரைலோக்ய தாத்ருத்வம்‌ ப்ராப்தவாநிதி சுச்ரும:”[பிரமன்‌ ஆயிரங் கோடி யுகங்கள்‌ விஷ்ணுவை ஆராதித்து, அடுத்த கல்பத்திலும்‌ ப்ரஹ்ம பட்டத்தை அடைந்தான்‌ என்று கேள்விப் படுகிறோம்‌.] என்று சொல்லப்பட்டபடி தன்‌ பதவிக்காகச்‌ சென்ற கல்பத்தில்‌ பிரமன்‌ புருஷோத்தமனைத்‌ தியானித்தார்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌. (சக்ர:…) நூறு அச்வமேத யாகங்கள்‌ செய்து பகவானை ஆராதித்து இந்திரப் பதவியை அடைந்தான்‌ இந்திரன்‌-அடுத்த மன்வந்தரத்தில்‌ இந்திரப் பதவியை அடையப் போகும்‌ மஹா பலியும்‌ அம்மாதிரியே பகவானை உபாஸித்திருக்கிறார்‌. (ப்ரதிச:…) ‘சதஸ்ர:’ என்று கிழக்கு முதலிய நான்கு திக்குகளும்‌ ப்ர திச:என்று தென் கிழக்கு முதலிய விதிக்குகளும்‌ சொல்லப்படுகின்‌றன. இந்த எட்டுத்‌ திக்குகளுக்கும்‌ பாலகர்களும்‌, இந்த திக்குகளிலுள்‌ள ரிஷிகளும்‌ இப் பதங்களால்‌ உணர்த்தப்படுகின்றனர்‌.-அவர்களும்‌ புருஷோத்தமனை உபாஸிக்கிறார்களென்று ஏற்படுகிறது. ஈசான்ய திக்கிற்கு அதிபதியும்‌ அங்கு வாஸம்‌ செய்பவருமான சிவனும்‌ இந்தப்‌ பரம புருஷணையே உபாஸனை செய்கிறார்‌ என்றும்‌ ஏற்படுகிறது.

நம்மாழ்வாரும்‌ இதையே, “கள்வா! எம்மையும்‌ ஏழுலகும்‌ நின்‌ உள்ளே தோற்றிய இறைவ! என்று வெள்ளேறன்‌ நான்முகன்‌ இந்திரன்‌ வானவர்‌ புள்ளூர்தி கழல்‌ பணிந்து ஏத்துவரே”-[வெள்ளேறன்‌–வெளுத்த காளையை வாஹனமாகவுடைய சிவன்‌.-புள்ளூர்தி–கருட வாஹனன்‌.] என்று அருளிச் செய்தார்‌. அத்ரி, ப்ருகு, காச்யபர்‌, கர்தமர்‌, தக்ஷர்‌, வஸிஷ்டர்‌, நாரதர்‌, வால்மீகி, பராசரர்‌, வியாஸர்‌, சுகர்‌, செளநகர்‌, யாஜ்ஞவல்க்யர்‌ முதலிய ரிஷிகளும்‌ இந்த இருடீகேசனையே ஏத்துகிறார்கள்‌ என்றும்‌ சொல்லப்படுகிறது. (தம்‌) இப்படிப்பட்ட ப்ரஸித்தமான பரமாத்மாவான நாராயணனை. (ஏவம்‌ வித்வாந்‌) இம் மாதிரியாக அறிபவன்‌. ஸர்வ காரண பூத னென்றும்‌, ஸர்வ ரக்ஷகனென்றும்‌, ஸமஸ்த கல்யாண குணாத்மகனென்றும்‌, ஸ்ரீவைகுண்ட வாஸனென்றும்‌, அஸாதாரணமான திவ்ய மங்கள விக்ரஹ முடையவனென்றும்‌, சேதனர்களுக்கு நாம ரூபங்‌களையும்‌, கரண களேபரங்களையும்‌ கொடுப்பவனென்றும்‌, பிரமன்‌, ருத்ரன்‌, இந்திரன்‌, முதலியவர்களால்‌ பூஜிக்கப் படுபவனென்றும்‌ அறிபவன்‌. இங்கு ‘அறிவு’ என்பது தியான ரூபமான அறிவையே காட்டுகிறது. (அம்ருத…) * இந்த ஜன்மத்திலேயே பிறப்பிறப்பாகிற ஸம்ஸார ஸாகரத்தைத்‌ தாண்டுகிறான்‌. இந்த உலகத்திலேயே முக்தனுக்கு ஸமானமாக ஆகிறான்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌. (ப்ராரப்த கர்மம்‌ எந்த ஜன்மத்தில்‌ முடிகிறதோ, அந்த ஜன்‌ மத்திலேயே மோக்ஷம்‌. என்பது சாஸ்திரார்த்தமாயிருக்க, “இந்த ஜன்மத்திலேயே’ என்ற்து. எப்படியெனில்‌: ‘ஏதம்‌ புருஷம்‌* என்று அவதாரத்தைக் காட்டுகையால்‌, அவதார ரஹஸ்ய ஜ்ஞாநத்தோடு கூடிய பக்தியாலே இந்த : ஜன்மத்திலேயே மோக்ஷமடைகிறான்‌ என்பது “புநர் ஜந்ம நைதி’” [கீதை] முதலான ப்ரமாணங்களில்‌. உணர்த்தப் பட்டதாகையாலே விரோதமில்லை.)

நம்‌மாழ்வாரும்‌, “பிடித்தேன்‌ பிறவி கெடுத்தேன்‌ பிணி சாரேன்‌”” என்று பரந்தாமனின்‌ பாதங்களைப்‌ பிடித்தவுடன்‌ பிறப்பு இறப்பு முதலிய ஸகல துக்கங்களும்‌ நீங்குகின்றன என்றல்லவோ அருளினார்‌. நாராயணனை அடி பணிந்து, பல்லாண்டு பாடி, ஆனந்த ஸாகரத்தில்‌ அமிழ்ந்து “அச் சுவை பெறினும்‌ வேண்டேன்‌” என்று சொல்லுபவர்‌களை முக்தர்கள்‌ என்று சொல்லத்‌ தட்டில்லை.-அவர்கள்‌ கலி தன்னைக்‌ கடக்கப்‌ பாய்ந்தவர்களே. (நாந்ய:..) மோக்ஷமடைவதற்கு வேறொரு மார்க்கமும்‌ கிடையாது. “அயநாய* என்றவிடத்தில்‌ பரம பதமடைவதற்கு’ என்று ஸ்வேதாஸ்வதரோபதிஷத் பாஷ்யத்தில்‌ சங்கரர்‌ வியாக்யானம்‌ செய்தார்‌.-இவ் விடத்தில்‌,“நாயமாத்மா ப்ரவசநேஈ லப்‌ய: ந மேதயா ந ப,ஹுநா ஸ்ருதேந யமேவைஷ வ்ருணுதே தே லப்‌,ய: தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம்‌ ஸ்வாம்‌”[| இந்தப்‌ பரமாத்மா (பக்தி யில்லா) ஸ்ரவண மனன தியானங்களால்‌ அடையத் தக்கவனல்லன்‌: எவனை இப் பரம புருஷன்‌ வரிக்கிறானோ அவனுக்கே தன்‌ ஸ்வரூபத்தைக்‌ காட்டுகிறான்‌.]“ந கர்மணா ந ப்ரஜயா த,நேந த்யாகே,ந ஏகேந அம்ருதத்வ மாநசு:’?[கர்மத்தினாலும்‌, ப்ரஜையினாலும்‌, தனத்தினாலும்‌, மோக்ஷமடைய முடியாது. நீயாஸ வித்யை (சரணாகதி) யினாலேயே (பலர்‌) மோக்ஷ
மடை ந்தனர்‌] என்னும்‌ ஸ்ருதி வாக்யங்கள்‌ அனுஸந்திக்கத் தக்கன. கீதாசார்யனும்‌,
நாஹம் வேதைர் ந தபஸா ந தாநேந ந சேஜ்யயா
சக்ய ஏவம் விதே த்‌ரஷ்டும்‌ த்‌ருஷ்டவாநஸி மாம்‌ யதா
ப,க்த்யா த்வத் அந்யயா சக்ய: அஹமேவம்‌ விதோர்‌ஜுந”[அர்ஜுனா! (என்னிடத்தில்‌ பக்தி யற்ற) வேதாத்யயனத்தாலும்‌, தபஸ்ஸுகளாலும்‌, தானத்தினாலும்‌, யாகத்தினாலும்‌, நீ என்னைக்‌கண்டது போல்‌, நான்‌ (எவராலும்‌) காணத் தக்கவனல்லன்‌. அனன்ய ப்ரயோஜனமான பக்தியினாலேயே காணத் தக்கவன்‌.] என்று அருளிச் செய்தாரன்றோ. இந்த மந்த்ரத்தில்‌, பிரமன்‌, இந்திரன்‌ முதலிய பலர்‌ பரமாத்‌மாவை உபாஸிப்பதாகச்‌ சொல்லப் படுவதிலிருந்து ஜீவாத்மாக்கள்‌ பலருண்டென்பது ஸித்திக்கிறது. *தம்‌ ஏவம்‌ வித்‌வாந்‌ என்பதிலிருந்து அறியப் படுபவன்‌, அறிவு, அறிகிறவன்‌ என்னும்‌ மூன்றும்‌ உண்டென்று உணர்த்தப்படுகிறது. “ஏவம்‌” என்பதிலிருந்து மேலே சொன்னபடி ஸமஸ்த கல்யாண குண ஸம்பன்னனென்றும்‌, விக்ரஹ விபூதி விசிஷ்டனென்றும்‌ அறிய வேண்டும்‌ என்று அறிவிக்கப்படுகிறது. ‘விக்ரஹமில்லை; விபூதியில்லை: குணமில்லை’ என்பவருடைய பிடரியைப்‌ பிடித்துப்‌ புறக்கணிக்கிறது இவ்வாக்கியம்‌. “ஏவம்‌ வித்‌வாந் -என்பதை கீதாசார்யன்‌ *ஏவம் விதோ த்ரஷ்டும்‌* [இம் மாதிரி காண்பதற்கு] என்றும்‌, ‘பக்த்யா” என்றும்‌ விவரித்த படியால்‌ இங்கு சொல்லப்படும்‌ அறிவு காண்பதற்கு ஸமானமான பக்தியே என்று ஏற்படுகிறது. ஆகையால்‌ வாக்யார்த்த ஜ்ஞானத்தினால்‌ மோக்ஷமடைய முடியாதென்றும்‌ ஸித்திக்கிறது. “அம்ருதோ பவதி‘ என்பதிலிருந்து ஸம்ஸாரி, முக்தன்‌ என்னும்‌ பேதமுண்டென்றும்‌ தெரிவிக்கப்படுகிறது.

—————–

யஜ்ஞேந யஜ்ஞமயஜந்த தே,வா: தாநி தர்மாணி ப்ரதமா ந்யாஸந்
தே ஹ நாகம்‌ மஹிமாநஸ்‌ ஸசந்தே யத்ர பூர்வே ஸாத்‌யாஸ்‌ ஸந்தி தேவா–18- [நித்ய ஸூரிகள்‌ பிரமனை உபகரணமாகக் கொண்டு ஸ்ருஷ்டி ரூபமான யஜ்ஞத்தைச்‌ செய்தார்கள்‌. அந்த யஜ்ஞம்‌ முதலிய்‌ தர்மங்‌கள்‌ முக்யங்களாக ஆயின.-இவ் விதமாக அறிபவர்கள்‌ மஹிமை யுடையவர்களாய்‌ பழைமை யானவர்களான நித்ய ஸூ9ரிகள்‌ வாஸம்‌ செய்யும்‌ பரம பதத்தை அடைகிறார்கள்‌.] இந்த மந்த்ரத்தின்‌ பூர்வார்த்தத்தில்‌ இந்த அனுவாகத்தில்‌ சொல்லப்பட்ட ஸ்ருஷ்டி ப்ரகாரமும்‌ பின்‌ பாதியில்‌ *வேதாஹம்‌”
என்னும்‌ இரண்டு மந்த்ரங்களினால்‌ சொல்லப்பட்ட பகவதுபாஸனமும்‌ அதின்‌ பலமும்‌ சொல்லப் படுகின்‌றன வென்று வித்யாரண்யர்‌.“நாராயணம்‌” என்று ப்ரஸித்தமான புருஷ ஸூக்தத்தின்‌ பூர்வானுவாகம்‌ இந்த ருக்குடன்‌ முடிவடைகிறது.

(யஜ்ஜஞேந ..) யஜ்ஞத்‌திற்கு முக்ய ஸாதனமான பிரமனைக் கொண்டு நித்ய ஸூரிகள்‌ ஸ்ருஷ்டி ரூபமான யஜ்ஞத்தைச்‌ செய்தனர்‌. (தாநி…) அது முதல்‌ அந்த யஜ்ஞம்‌ தானம்‌ முதலிய தர்மங்கள்‌ முக்யமானவையாக ஆயின-தர்மார்த்த காம மோக்ஷம்‌ எனப்படும்‌ நான்கு புருஷார்த்‌தங்களுக்கும்‌ ஸாதனமாயிருக்கின்றன. கீதையில்‌,
ஸஹ யஜ்ஷஞை: ப்ரஜாஸ்‌ ஸ்ருஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி:
அநேந ப்ரஸவிஷ்யத்‌வம்‌ ஏஷ வோஸ் த்விஷ்ட காம துக்‌”(யஜ்ஞங்களுடன்‌ கூட, ப்ரஜைகளை முன்‌ ஸ்ருஷ்டித்து, பகவான்‌ பின் வருமாறு சொன்னார்‌:–இந்த யஜ்ஞத்தைக் கொண்டு வ்ருத்தி யடையுங்கள்‌. இது நீங்கள்‌ விரும்பியதை யெல்லாம்‌ கொடுக்கக்‌ கடவது.] என்று சொல்லப்பட்டது இங்கு அனுஸந்திக்கத்தக்கது.(தேஹ…) இந்த ஸ்ருஷ்டி ரூபமான யஜ்ஞத்தை அறிந்து அர்தத்‌துடன்‌ அனுஸந்திப்பவர்கள்‌, ஸனாதனிகரான ஸாத்யர்களென்னும்‌ பெயரை யுடைய நித்ய ஸூரிகள்‌ வாழும்‌ ஸ்ரீ வைகுண்டத்தை மஹிமை யுடையவர்களாய்‌ அடைகிறார்கள்‌. (நாகம்‌) *நாகஸ்ய ப்ருஷ்டே,” என்று நாராயண வல்லியில்‌ சொல்லப்பட்ட ஸ்ரீ வைகுண்டமே இங்கு சொல்லப்படுகிறது. (மஹிமான….) ஜ்ஞான ஸங்கோச மில்லாதவர்‌களாக அனந்த கருட விஷ்வக்ஸேனாதி களிருக்கும்‌ பரமபதத்தை அடைகிறார்கள்‌.
ஒளிக் கொண்ட சோதியமாய்‌ உடன்‌ கூடுவதென்று கொலோ..? அளிக்கின்ற மாயப் பிரான்‌ அடியார்கள்‌ குழாங்களையே” என்று ஆழ்வாரால்‌ பிரார்த்திக்கப்பட்ட பலத்தைப்‌ பெறுவார்கள்‌. இதிலிருந்து ஸாத்ய தேவர்களென்று சிலர்‌ இருக்கிறார்களென்றும்‌ அவர்கள் இருக்குமிடத்தை யடைவதே மோக்ஷ மென்றும்‌ ஏற்படுகிறது. ஸாத்யர்‌-ப்ராப்யா்‌.

————

உத்தரானுவாகம்‌.
1-அத்ப்‌யஸ்‌ ஸம்பூத: ப்ருதிவ்யை ரஸாச்ச விஸ்வ கர்மணஸ்‌ ஸம வர்த்ததாது,
தஸ்ய த்வஷ்டா விததத்‌, ரூபமேதி தத் புருஷஸ்ய விஸ்வமாஜா நமக்‌ரே.[உலகம்‌ ஐலத்தினின்றும்‌ உண்டாயிற்று. பூமியிலுள்ள அன்ன ரஸத்தினால்‌ விருத்தி யடைந்தது. பரம புருஷனிடத்திலிருந்து உண்‌டாயிற்று. புருஷோத்தமன்‌ அதை தரித்துக் கொண்டு வியாபிக்கிறான்‌. ஆகையால்‌ இவ் வுலகமெல்லாம்‌ மஹா புருஷனுக்கு சேஷமாயிருப்பது என்று முன்னமே அறிந்தேன்‌.]-

(அத்ப்யஸ்‌ ஸம்பூத:) உலகம்‌ நீரிலிருந்து உண்டாயிற்று என்று சொல்லப்படுகிறது. மஹோபனிஷத்தில்‌,
அத; புநரேவ நாராயணஸ்‌ ஸோந்யம்‌ காமம்‌ மநஸா த்‌யாயீத
தஸ்ய த்‌யாநாந்தஸ் தஸ்ய லலாடாத்‌ ஸ்வேதோபதத்‌ தா இமாஆப: தத்‌ ஹிரண்மய மண்டம பவத்‌”[பிறகு, நாராயணன்‌ மற்றொரு ஸங்கல்பத்தை மனத்தினால்‌ செய்தார்‌:ஸங்கல்பம்‌ செய்தவுடன்‌ அவருடைய நெற்றியிலிருந்து வேர்வை விழுந்தது. அதுவே இங்கு காணப்படும்‌ தண்ணீர்‌. அதில்‌ ஹிரண்‌ மயமான அண்டம்‌ உண்டாயிற்று.] என்று சொல்லப்பட்டது இங்கு உணர்த்தப்படுகிறது. இதுவே அப ஏவ ஸஸர்ஜாதெள…ததண்ட,மபவத்‌ ஹைமம்‌’ [நாராயணன்‌ தண்ணீரை முதலில்‌ படைத்தான்‌. அதில்‌ பொன்மயமான அண்ட முண்டாயிற்று.] என்று மனு ஸ்ம்ருதியிலும்‌ உரைக்கப்பட்டது. ஆழ்வாரும்‌ ‘“தானோர்‌ பெருநீர்‌ தன்னுள்ளே தோற்றி’” என்று அருளிச் செய்தார்‌. 

(ப்ருதிவ்யை ரஸாச்ச ஸம்பூத:) பூமியிலிருந்து உண்டான அன்ன ரஸங்களினால்‌ வ்ருத்தி யடைந்தது.(விஸ்வ கர்மண:…) பரமாத்மாவினிடமிருந்து இவை உண்டாயின.ஜலத்திலிருந்தும்‌ பூமியிலிருந்தும்‌ தானாகவே உண்டாக வில்லை என்று உணர்த்துவதற்காக உலகத்தை உண்டாக்கிய உத்தமனால்‌ கர்மானுகுணமாக உயர்வு தாழ்வுகளுடன்‌ உண்டாக்கப்பட்டன வென்று உரைக்கப்படுகிறது. மஹோபனிஷத்தை அனுஸரித்து, இங்கு சொல்லப்படும்‌

(தஸ்ய…) ஸர்வேஸ்வரன்‌ அந்த உலகத்தை தரித்துக் கொண்டு வியாபிக்கிறான்‌. தாதா நாராயண:’ என்றல்லவோ ஸுபாலோபனிஷத்தில்‌ இம் மஹாபுருஷன்‌ கீர்த்திக்கப் பட்டான்‌. (தத் புருஷஸ்ய விச்வம்‌) ஆகையினால்‌ இவ்வுலகம்‌ புருஷனுடையதே. உலகம்‌ உடமை. உடையவன்‌ புருஷோத்‌தமன்‌. ‘க்ருஷ்ணஸ்ய ஹி க்ருதே பூதமிதம்‌ விஸ்வம்‌ சராசரம்‌” [சராசரமான ஜீவராசிகளெல்லாம்‌ க்ருஷ்ணனுடையதன்றோ?] என்னும்‌ ஸ்ம்ருதி வசனம்‌ இந்த ஸ்ருதியை விவரிக்கிறது. (ஆஜாநம்‌ அக்ரே) “பகவானுக்கு சேஷ பூதமானது இவ் வுலகம்‌ என்பதை நான்‌ முன்‌னமே அறிந்தேன்‌’ என்று வேத புருஷன்‌ வெளியிடுகிறான்‌. பகவான்‌ உலகத்தை உண்டாக்கி, தரித்து, வியாபிப்பதாகச்‌ சொல்லுகிற படியாலும்‌ உலகத்தை உடையவன்‌ என்று உரைக்கிறபடியாலும்‌ விசிஷ்டாத்வைத வேதாந்தமே வேதத்தின்‌ உட்பொருள்‌ என்பது நன்கு விளங்குகிறது.

——–

வேதாஹமேதம்‌ புருஷம்‌ மஹாந்தம்‌, ஆதித்ய வர்ணம்‌ தமஸ: பரஸ்தாத்‌
தமேவம்‌ வித்‌வாந்‌ அம்ருத இஹ ப,வதி, நாந்ய: பந்தா வித்‌யதேயநாய–2-
“அண்டக்குலத்துக்கதிபதியாகி, அண்டத்திற்கு அப் புறத்திலுள்ள சுத்த சத்வ மயமான ஸ்ரீவைகுண்டத்தில்‌ கோடி ஸூர்ய ப்ரகாசத்துடன்‌ எழுந்தருளி யிருக்கும்‌ இந்த மஹாபுருஷனை நான்‌ அறிகிறேன்‌? அவனே உபாயமும்‌, உபேயமும்‌ என்று அறிபவன்‌ இந்த ஜன்மத்திலேயே மோக்ஷமடைகிறான்‌. மோக்ஷத்திற்கு வேறு மார்க்கமில்லை’ என்னும்‌ இந்த ரஹஸ்யார்த்தத்தை வேதம்‌ ஆதராதி சயத்தினால்‌ மறுபடியும்‌ உத்கோஷிக்கிறது. இதன்‌ பொருள்‌ பூர்வானுவாகத்தில்‌ விசேஷமாக விவரிக்கப்பட்டது. பூர்வானுவாகத்தில்‌-16-வது மந்த்ரத்தின்‌ முற்பாதியும்‌, 17-வது மந்த்ரத்தின்‌ பிற்‌பாதியும்‌ காண்க.

———-

ப்ரஜாபதிச்‌ சரதி கர்ப்பே, அந்த:, அஜாயமாநோ பஹுதா விஜாயதே
தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம்‌, மரீசீகாம்‌ பதமிச்சந்தி வேத,ஸ:3-(பரம புருஷன்‌ ஹ்ருதயத்தில்‌ அந்தர்யாமியாய்‌ ஸஞ்சரிக்கிறான்‌. உத்‌பத்தி யில்லாத புருஷோத்தமன்‌ பலபடியாகப்‌ பிறக்கிறான்‌. அவனுடைய அவதாரங்களை தீரர்களே அறிகிறார்கள்‌. (அவர்கள்‌) பரம புருஷன்‌ வாழும்‌ நித்ய ஸூரிகளின்‌ நாட்டை விரும்புகிறார்கள்‌.]**ததோ விஷ்வங்‌ வ்யக்ராமத்‌ ஸாசநா நசநே அபி,” என்று பூர்‌வானுவாகத்தில்‌ சொல்லப்பட்ட அவதார வைபவம்‌ இங்கு அனுபவிக்கப் படுகிறது.-“விஷயஸ்‌-பாதி பூமித்வாத்‌ ஜ்ஞாந தெ,ஃளஷ்கர்ய சங்கிநாம்‌ அவதாரேண ஸெளலப்யம்‌ த்ரிஷ்டு போக்தம்‌ த்ருதீயயா”[ பகவத் ஸ்வரூபமானது அறிவிற் கெட்டாத படியால்‌, அவளை அறிய முடியாது என்று ஸந்தேஹிப்பவர்களுக்கு, மூன்றாவது மந்திரத்தில்‌ அவ்தார ஸெளலப்யம்‌ சொல்லப்பட்டது.] என்று மணவாள மா முனிகளின்‌ ப்ரமாணத்திரட்டில்‌ எடுக்கப்பட்டிருக்கும்‌ “நாராயண முனி”
என்பவரின்‌ வியாக்யானத்தில்‌ இந்த மந்த்ரார்த்தம்‌ ஸங்க்ரஹிக்கப்‌ பட்டிருக்கிறது. முத்தின மந்த்ரத்தில்‌ ப்ரஹ்மத்தை அறிவதினலேயே மோக்ஷம்‌ என்று சொல்லப்பட்டது. இங்கு அவதாரங்கள்‌ பல செய்திருக்கும்‌ ௮ச்யுதனை அறிவது எளிது என்று காட்டப்படுகிறது.

(ப்ரஜாபதி:…௮ந்த:) ப்ரஜைகளைக்‌ காப்பாற்றுபவனுன ஸர்வேஸ்வரன்‌ ஹ்ருதயத்தில்‌ அந்தர்யாமியாக ஸஞ்சரிக்கிறான்‌. இந்த வாக்யம்‌ நாராயணவல்லியிலும்‌ காணப் படுகிறது. அதனால்‌ நாராயணனே இங்கு ப்ரஜாபதி சப்தத்தினால்‌ சொல்லப் படுகிறான்‌ என்று நிர்ணயிக்கிறோம்‌. மேலும்‌, ஸர்வ ஜீவர்களையும்‌ காப்பது விஷ்ணுவுக்கே அஸாதாரணமானது. பதிம்‌ விச்வஸ்ய என்று சொல்லப்பட்ட அவனே உலகிற்கெல்லாம்‌ ஸ்வாமியாவான்‌.-ஆத்மாவிற்கு நிலைநின்ற புருஷார்த்தமாகிற மோக்ஷத்தை மற்றவர்களால்‌ கொடுக்க இயலாது. நசிக்கக் கூடிய சிற்றின்பப்‌ பலன்களாகிய, அர்த்த காமங்‌களையும்‌, பகவானிடமிருந்து வரம் பெற்றே கொடுக்கிறார்கள்‌-மஹாபாரதத்தில்‌,
ராஜாதி,ராஜஸ்‌ ஸர்வேஷாம்‌ விஷ்ணுர்‌ ப்‌,ரஹ்ம மயோ மஹாஙந்‌ ஈஸ்வரம்‌ தம்‌ விஜாநீம: ஸ பிதா ஸ ப்ரஜாபதி:”'[எல்லா அரசர்களுக்கும்‌ மேலான அரசராயிருப்பவரும்‌, பெரியவரும்‌, ப்ரஹ்ம ஸ்வரூபியுமானவர்‌ விஷ்ணு. அவரை ஈஸ்வரரென்று அறிகிறோம்‌. அவரே (எல்லோருக்கும்‌) தந்‌தை . அவரே ப்ரஜாபதி.]என்று சொல்லப் பட்டபடியால்‌ ப்ரஜாபதி சப்தத்தினால்‌ குறிக்கப்‌ படுபவன்‌ கேசவனே.-:அஸத்‌(இல்லாதவை)திலிருந்து வேறுபட்ட எல்லா வஸ்துக்களுக்கும்‌ ஸ்வாமியாகவும்‌, ரக்ஷகராகவும்‌ இருப்பவர்‌ ப்ரஜாபதி” என்று நாராயணயதி வியாக்யானம்‌ செய்தார்‌.

(கர்ப்பே அந்த:சரதி) ஹ்ருதயத்தில்‌ அந்தர்யாமி யாயிருக்கிறான்‌. இப்படி அந்தர்யாமி யாயிருப்பதற்குக்‌ காரண மென்ன?ப்ரயோஜனமென்ன? துஷ்ட நிக்ரஹ சிஷ்டபரிபாலனங்கள்‌ காரணமல்ல. இவனுக்குத்‌ தன்னிடம்‌ அத்வேஷத்தை உண்டாக்கி, ஆபிமுக்யத்தை வளர்ப்ப,தற்காக அந்தர்யாமி யாமிருக்கிறான்‌ அநந்தன்‌. யோக ஸாக்ஷாத்‌ காரம்‌ கை வந்தவர்களுக்கு ஹ்ருதய கமலத்தில்‌ ஸேவை ஸாதிக்கிறான்‌. தினந்தோறும்‌ உறங்கும் போது ஜீவர்களை ஆலிங்கனம் செய்து கொண்டு ஸகல ஸ்ரமங்களையும்‌ போக்குகிறான்‌. ஜன்மம்‌ கழியும்போது மரணாவஸ்தையின்‌ ஸ்ரமத்தைக்‌ குறைக்கிறான்‌. மோக்ஷமடைபவர்‌களான ஜீவாத்மாக்களுக்கு ஸுஷும்னா நாடியைத்‌ தெரியும்படி செய்து அதன் வழியே ப்ரஹ்ம ரந்த்ரத்தை பேதித்துக் கொண்டு போக அனுக்ரஹம்‌ செய்கிறான்‌.-அந்தர்யாமியை அறிவது மிகவும்‌ கடினம்‌. பூகத (பூமிக்குள்‌ இருக்கும்‌) ஜலத்திற்கு ஸமானமானது அந்தர்யாம்யவஸ்தை என்று ஆசாரியர்கள்‌ அருளி யிருக்கிறார்கள்‌. மண்ணைத்‌ தோண்டி யெடுத்து அவசியமானால்‌ பாறையையும்‌ உடைத்து பூமியிலிருக்கும்‌ ஐலத்தைத்‌ தேடிக்‌ கண்டுபிடிக்குமாப் போலே மாம்ஸ சரீரமாகிற மண்ணினால்‌ மறைக்கப்பட்டதும்‌, நெஞ்சாகிற பாறையினால்‌ மூடப்பட்டதுமான அந்தர்யாமியை அறிய முடியாதென்றே பூகத ஜலத்தை உவமை யிட்டார்கள்‌. அம்மாதிரியான அருமை யில்லாமல்‌, எல்லாருடைய ஊனக் கண்ணுக்கும்‌ இலக்காகும்படியான அவதாரங்களை அடுத்த படியாக அறிவிக்கிறது. அப்படி அவதாரம்‌ செய்வதற்குக்‌ கர்மம்‌ காரணமன்று. அனுக்ரஹமே காரணம்‌. கிணற்றில்‌ விழுந்த குழந்தையை எடுப்பதற்குத்‌ தாயும்‌ கூடக் குதிக்குமாப் போல்‌ ஸம்‌ஸார ஸாகரத்தில்‌ அமிழ்ந்து அவஸ்தைப்படும்‌ சேதனர்களை அக்‌ கடலினின்றும்‌ கறை யேற்றுவதற்காக நாட்டில்‌ பிறந்து மனிசர்க்‌காகப்‌ படாதனபடுகிறான்‌ நாராயணன்‌.-துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம்‌ செய்வதற்காகப்‌ பிறக்கிறான்‌ பர வாஸுதேவன்‌, இந்திரியங்களுக்கு எட்டாத தன்னை ஸம்ஸாரிகள்‌ கண்ணுக்குத்‌ தோன்றும்‌ படி செய்கிறான்‌. வேண்டினவற்றை யெல்லாம்‌ தன்னடியார்களுக்குத்‌ தருகிறான்‌. குளிரக் கடாக்ஷிப்பது, பேசுவது, கேட்பது, சிரிப்பது. ஆலிங்கனம் செய்வது, இப்படிப்‌ பலவிதமாக அவர்‌களை ஆட்‌ கொள்ளுகிறான்‌. “*ஹஸிதம்‌ பாஷிதம்‌ சைவ” [சிரிப்பதையும்‌, பேசுவதையும்‌] என்றார்‌ வால்மீகி. ராமனுடைய ஆலிங்கனத்தை அனுமானும்‌ ““பாவோ நாந்யத்ர கச்சதி”” [என்‌ நினைவு வேறெங்கும்‌ செல்லாது.] என்றார்‌. ‘“ஸம்ஸ்ப்ருச்யாக்ருஷ்ப ச ப்ரீத்யா ஸூ காடம் பரிஷஸ்வஜே’”[க்ருஷ்ணன்‌ அக்ரூரனைத் தொட்டு, இழுத்து, ப்ரீதியுடன்‌ நன்கு தழுவிக் கொண்டார்‌.] என்றதும்‌ இங்கு நினைக்கத் தக்கது. விபவாவதார காலங்களில்லாமல்‌ இழந்தவர்க்கும்‌ அவ் விழவு தீருவதற்காக எடுக்கப்படும்‌ அர்ச்சாவதாரமும்‌ இங்கு சொல்லப்‌ படுவதாகக்‌ கொள்ளலாம்‌. ஒரு காலத்திலோடும்‌ க௱ட்டாறு போன்றது விபவாவதாரம்‌. அதில்‌ தேங்கின மடுப் போன்றது அர்ச்சாவதாரம்‌. பாஞ்சராத்ர வைகானஸ ஆகமங்களில்‌ சொன்ன படி ஸுதை, சிலை முதலியவைகளால்‌ செய்யப்பட்ட ரூபங்களில்‌ ஆவாஹனம்‌ செய்யப்பட்டு சாஸ்த்ர வஸ்யனாயும்‌ அர்ச்சக பராதினனாயும்‌ இருக்கிறான்‌ இருடீகேசன்‌. எல்லா ஜனங்களுடைய ஊனக்‌ கண்ணுக்கும்‌ தன்னை விஷயமாக்கிக் கொண்டு ஸ்ர்வாபேக்ஷிதங்‌களையும்‌ கொடுக்கிறான்‌.

(அஜாயமாநோ பஹுதா விஜயாதே) *பிறப்பில்லாதவனாயிருந்‌தும்‌ பலவிதமாகப்‌ பிறக்கிறான்‌” என்கிற து வேதம்‌. ** அஜோபி ஸந்‌-ஸம்பவாமி’” [பிறப்பற்றவனாயிருந்தும்‌ பிறக்கிறேன்‌.] என்று க்ருஷ்ண பகவான்‌ கீதையில்‌ அருளினான்‌. “பிறப்பில்‌ பல் பிறவிப்‌ பெருமான்‌” என்றார்‌ வேதம்‌ தமிழ்‌ செய்த மாறன்‌. (அஜாயமாந:) “ஜநிஜராதி; ஸகலதுரித தூ;ர:” [பாப பலமான ஜன்மம்‌, கிழத்தனம்‌ முதலியவைகள ற்றவன்‌.] என்று வியாக்யானம்‌ செய்தார்‌ நாராயணயதி. இங்கு “பிறப்பு என்பது, கிழத்தனம்‌, இறப்பு முதலிய ஆறு விகாரங்களையும்‌ காட்டுகிறது. (பஹுதா விஜாயதே)எந்நின்ற யோனியுமாய்ப்‌ பிறந்தான்‌. “ப;ஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி””[எனக்குப்‌ பல பிறப்புகள்‌ கடந்து விட்டன.] என்று தன்‌ ஜன்மத்‌தைத்‌ தானே சொன்ன அவனும்‌ தெஞ்சு உளுக்கியிறே இருப்பது.-ஆழ்வாரும்‌ “சன்மம்‌ பலபல செய்து” என்றார்‌. (பஹுதா) தேவர்‌, திர்யக்‌, மனுஷ்யர்‌, ஸ்தாவரம்‌ என்று சொல்லப்படும்‌ எல்லா யோனிகளிலும்‌ பிறந்தான்‌. வ்யூஹம்‌, விபவம்‌, அர்ச்சை எனப்படும்‌ எல்லா அவஸ்தைகளிலும்‌ ஆவிர்ப்பவித்தான்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. பிறக்கைக்கு ஹேதுவான கர்மம்‌ இல்லாமலிருந்தும்‌ கர்ம வஸ்யரும்‌ பிறவாத ஜன்மங்களிலும்‌ பிறந்தான்‌. கர்ம வஸ்யன்‌ பிறவிக்கு எல்லை காண்கிறோம்‌. அகர்ம வஸ்யன்‌ (கர்மத்திற்கு வசப்‌ படாதவன்‌) பிறவிக்கு எல்லை காணவில்லை. கர்மத்திற்கு எல்லையுண்டு. அனுக்ரஹத்துக்கு எல்லை யில்லை. (விஜாயதே) “பலவிதமாகப்‌ பிறக்கிறான்‌’ என்றும்‌, ‘விசேஷமாகப்‌ பிறக்கிறான்‌. என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. “தேவர்‌ முதலிய ஓவ்வொரு ஜாதியிலும்‌ பலவிதமாகப்‌ பிறக்கிறான்‌ என்று நாராயண முனி. (விசேஷேண ஜாயதே) விசேஷமாகப்‌ பிறக்கிறான்‌. அப்ராக்ருத சரீரத்தை இதர ஸஜாதீயமாக்கிப்‌ பிறக்கிறான்‌. “சங்கொடு சக்கரம்‌ வில்‌ ஓண்மையுடைய உலக்கை ஓள் வாள்‌ தண்டு கொண்டு” பிறக்கிறான்‌. தன்‌ ஐஸ்வர்ய சக்திகளில்‌ ஓன்றும்‌ குறையாமல்‌ பிறக்கிறான்‌. அவதார ரஹஸ்யத்தை அறிந்து அனுஸந்தித்தவர்கள்‌ ஜன்மம்‌ அறும்படி பிறக்கிறான்‌. பிறந்த பின்பே மேன்மை யடைகிறான்‌. வேதத்திலும்‌-யுவா ஸுவாஸா: பரிவீத ஆகத்‌ ஸ உ ஸ்ரேயாந்‌ ப,வதி ஜாயமாந: தம்‌ தீராஸ: கவய உந்நயந்தி’” [யெளவனத்தை யுடையவனாகவும்‌, அழகிய பீதாம்பரத்தை தரித்தவனாகவும்‌, நித்ய ஸூரிகளால்‌ சூழப்பட்டவனாகவும்‌ புருஷோத்தமன்‌ பிறக்கிறான்‌. அவன்‌ பிறந்த பின்பே மேன்மை யுடையவனாகிறான்‌. அவளை தீரர்களான கவிகள்‌ தியானிக்‌கிறார்கள்‌] என்றல்லவோ சொல்லப்பட்டது.(விஜாயதே) கர்ம வஸ்யர்களைப் போன்ற சரீரத்துடன்‌ பிறக்கிறான்‌. அவர்கள்‌ பத்து மாதம்‌ வயிற்றிலிருந்து பிறந்தால்‌ இவன்‌ பன்னிரண்டு மாதம்‌ கர்ப்ப வாஸம்‌ செய்து பிறக்கிறான்‌. “ததச்ச த்‌வாதசே மாஸே” [பன்னிரண்டாவது மாதத்தில்‌] என்றும்‌, ‘பன்னிரு திங்கள்‌ வயிற்றிற்‌ கொண்ட” என்றுமல்லவோ சொல்லப் பட்டிருக்கிறது. அவர்களுக்கு ஆபத்தேற்படும்‌ காலத்தையே தனக்குப்‌ பிறக்கைக்குக்‌ காலமாகக்‌ கொண்டு பிறக்கிறான்‌. அவர்களுடைய ஸம் ரக்ஷணத்தையே. ப்ரயோஜனமாகக் கொண்டு பிறக்கிறான்‌. ஆவிர்பூ,தம்‌ மஹாத்மநா:”[மஹாத்மாவான நாராயணன்‌ ஆவிர்பவித்தான்‌.] என்ற வால்மீகி மஹரிஷி அவதரித்ததினால்‌ தோஷமில்லை என்பதைக்‌ காட்டுவதற்காக
*ஆவிர்ப்பவித்தான்‌” என்று உரைத்தார்‌. ஆஸ்ரிதர்க்காக கர்ப்ப வாஸம்‌ பண்ணின மஹா குணத்தை இழக்கலாகாது என்று வேதம்‌“பிறந்தான்‌” .என்கிறது. ஆழ்வாரும்‌ *தோன்றினவாறும்‌* என்று சொல்லாதே *பிறந்தவாறும்‌” என்ற்ல்லவோ பாடினர்‌. ஸம்ஸாரிகளுக்குப்‌ பிறக்கப்‌ பிறக்க ஞானம்‌ மழுங்கும்‌.. ரத்னத்தைத்‌ தேய்க்கத்‌ தேய்க்க ஒளி அதிகமாமாப் போலே அவதாரம்‌ செய்யச்‌செய்ய இவனுடைய மஹா குணங்கள்‌ பிரகாசிக்கும்‌. ராமாவதாரத்‌தைக்‌ காட்டிலும்‌ க்ருஷ்ணாவதாரத்தில்‌, பாண்டவ தூதனாயும்‌,பார்த்த ஸாரதியாயு மிருந்து தன்‌ பெருங் குணங்களை வெளியிட்டானன்றோ? தானே சொல்லும்போதும்‌ “ஜென்ம கர்ம ச மே திவ்யம்‌”[என்னுடைய ஜன்மங்களும்‌, சேஷ்டிதங்களும்‌ அப்ராக்ருதமானவை] என்று மதிப்புடனன்றோ சொன்னான்‌.

(தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம்‌) அவனுடைய அவதார ரஹஸ்யத்தை தீரர்களே அறிகிறார்கள்‌. (தீரா:)புத்திமான்கள்‌. “தீரர்களான கவிகள்‌” என்று மற்றொரு ஸ்ருதியில்‌ சொல்லப்பட்ட வர்கள்‌. – பராங்குச பட்டநாத பரகாலாதிகளே இவன்‌ பிறப்பின்‌ பெருமையை அறிவார்கள்‌. (தீரா:) கலங்காதவர்கள்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌. ஸ்ருதிகளை அறியாதவர்கள்‌ புருஷோத்தமனுடைய அவதார மஹிமையை அறியாமல்‌, “பர ப்ரஹ்மத்திற்கு ஜன்மமுண்டோ’ என்று ஸந்தேஹப்பட்டுக் கொண்டு இவன்‌ மனுஷ்‌யனோ?” என்று கலங்குவார்கள்‌.-அம் மாதிரியான கலக்கமில்லாதவர்கள்‌. “பிதா புத்ரேண பித்ருமாந்‌ யோநி யோநவ் நாவேத,விந் மநுதே தம்‌ ப்‌ருஹந்தம்‌’ [ஒவ்வொரு அவதாரத்திலும்‌ ஸர்வலோக பிதாவான நாராயணன்‌ தன்னால்‌ உண்டாக்கப்பட்ட ஒருவனைத்‌ தனக்குத்‌ தகப்பனாகக் கொண்டு பிறக்கிறான்‌. வேதத்தை அறியாதவன்‌ அவனே ‘பரமாத்மா வென்று அறிய மாட்டான்‌. ] என்றல்லவோ மறைகள்‌ முறையிட்டன. (தஸ்ய யோநிம்‌ பரிஜாநந்தி) அவனுடைய:அவதாரத்தை நன்கு அறிகிறார்கள்‌. (பரிஜாநந்தி). திரும்பத் திரும்ப அறிகிறார்கள்‌.-ஸகல சேஷ்டிதங்களையும்‌ அறிகிறார்கள்‌. அதை விட்டுப்‌ பரத்வத்‌திலும்‌ மனம்‌ செலுத்தமாட்டார்கள்‌. *பாவோ: நாந்யத்ர கச்சதி”-என்பார்கள்‌. *அச்சுவை பெறினும்‌ வேண்டேன்‌”” என்று இருப்பார்கள்‌. நம்மாழ்வார்‌; ஸர்வேச்வரன்‌ யசோதையால்‌ உரலில்‌ கட்டுண்டு ஏங்கிய எளிவை அனுஸந்தித்தவுடன்‌ எத்திறம்‌!’” என்று ஆறு மாதம்‌: மோஹித்துக்‌ கிடந்தாரன்றோ. மறுபடியும்‌ ‘”பிறந்தவாறும்‌’என்று பரம புருஷனுடைய பிறப்பை அனுஸந்தித்து ஆறு மாதம்‌ மோஹித்துக்‌ கிடந்தார்‌ என்று நம்‌ ஆசார்யர்கள்‌ அருளிச் செய்வர்‌கள்‌. அவனுடைய பிறப்பின்‌ பெருமையை அநிந்தவர்களை தீரர்‌கள்‌” என்றது வேதம்‌; அறியாதவர்களை :மூடர்கள்‌” என்றான்‌ கண்ணன்‌. *யோநிம்‌” என்றது ஸ்ருதி; *மாநுஷீம்‌ தநும்‌ ஆஸ்ரிதம்‌” என்‌றான்‌ மாதவன்‌. . அறிந்தவர்களை “பரிஜாநந்தி’ என்றது மறை; அறியாதவர்களை *அவஜாநந்தி’ என்றான்‌ அச்யுதன்‌.

எதற்காக இந்த அவதார ரஹஸ்யத்தை அறிகிறார்கள்‌? எனில்‌:(மரீசீநாம்‌ பதமிச்சந்தி வேதஸ:) சோதி மயமான நித்ய ஸூரிகளுடைய பரம பதத்தை அடைவதற்காக என்று சொல்லப்படுகிறது.(மாரீசீநாம்பதம்‌… வேதஸ:)’ நித்ய ஸூரிகளின்‌ நாடு: என்று சொன்ன
பின்‌ அப்ரதானமாக. ,புரம புருஷனுடைய தேசம்‌ என்றும்‌ சொல்லப்படுகிறது.-நம்மாழ்வாரும்‌ “வானவர்‌ நாடு” என்றல்லவோ அருளிச் செய்தார்‌. , அவர்களிட்ட வழக்காயிருப்பதால்‌” அவர்‌களுடைய பரம பதம்‌ என்று உரைக்கப்படுகிறது. * வானவர்‌ நாட்டையும்‌” என்னுமிடத்தில்‌ வியாக்யானத்தில்‌ நம்‌ ஆசார்யர்கள்‌ “குடியிருப்பாரோ பாதியாயிற்று பரம பதத்தில்‌ ஸ்ரீவைகுண்ட நாதனுக்கு(இருப்பு). ப்ராப்தி தேசம்‌ நித்ய ஸூரிகள்‌ இட்ட வழக்காயிருக்கும்‌.”‘என்று அருளிச் செய்தது இங்கு அனுஸந்திக்கத் தக்கது. அவதார
ரஹஸ்யத்தை அறிவதால் மோஷம் அடைவார்கள் என்பதை “ஜந்ம கர்ம ச மே திவ்யம்‌ ஏவம்‌ யோ வேத்தி. தத்த்வத; த்யக்த்வா தேஹம்‌ புநர்‌ ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜூநா ”[அர்ஜுனா! என்னுடைய அப்ராக்ருதமான ஜன்மத்தையும்‌ ‘சேஷ்டிதங்களையும்‌ இம் மாதிரியாக எவன்‌ உண்மையாக அறிகிறானோ அவன்‌ தேஹத்தை விட்டு மறு ஜன்மத்தை யடைவதில்லை.-என்னையே-அடைகிறான்‌.] என்று கீதாசார்யனால்‌.சொல்லப் பட்டது;-இம்மாதிரியான அவதார வைபவம்‌ மற்ற தேவதைகளுக்குக்‌ கிடையாது-

———–

யோ தே,வேப்‌,ய ஆதபதி, யோ தே,வாநாம்‌ புரோ ஹித:.
பூர்வா யோ தே வேப்‌யோ ஜாத:, நமோ ருசாய ப்‌ராஹ்மயே
–4-
[எந்தப் பரம புருஷன்‌ நித்ய ஸூரிகளுக்காகப்‌’ பிரகாசிக்கிராரோ. எவர்‌ நித்ய ஸூரிகளுக்கு அநாதி காலமாக ஹிதத்தைக்‌ கொடுப்‌பவரோ, எவர்‌ நித்ய ஸூரிகளுக்கும்‌ முதல்‌வரா யிருக்கிறாரோ. பிரகாசிப்பவரும்‌, பர ப்ரம்ஹ ஸ்வரூபியுமான அவருக்கு நமஸ்காரம்‌.]இந்த மந்திரத்தில்‌ புருஷோத்தமன்‌ நித்ய ஸூரி நிர்வாஹகன்‌ என்னும்‌ விஷயம்‌ சொல்லப்படுகிறது.-இதையே வேதம்‌ தமிழ்‌ செய்த மாறனும்‌,
வானவராதியென்கோ? வானவர்‌ தெய்வமென்கோ?
வானவர்‌ போகமென்கோ? வானவர்‌ முற்றுமென்கோ?
‘” என்று திருவாய்மொழியில்‌ ‘ திருவாய் மலர்‌ந்தருளினார்‌.

(யோ தேவேப்ய ஆதபதி) எந்தப்‌ பரம புருஷன்‌ நித்ய ஸூரி களுக்காக ஆதியஞ்சோதி யுருவுடனும்‌, ஸமஸ்த கல்யாண குணங்களுடனும்‌ பிரகாசிக்கிறாரோ என்று சொல்லப்படுகிறது. ஜிதந்தே ஸ்தோத்ரத்திலும்‌, ‘பக்தாநாம்‌ த்வம்‌ ப்ரகாசஸே”” [பக்தர்களுக்காகவே நீ பிரகாசிக்கிறாய்‌] என்றல்லவோ சொல்லப் பட்டது. நம்மாழ்வார்‌-இதை வானவர்‌ தெய்வமென்கோ?” என்றார்‌. (யோ தேவாநாம்‌ புரோஹித:). எந்தப்‌ பரமாத்மா நித்ய ஸூரிகளுக்காக அநாதி காலமாக ஹிதத்தைக்‌ கொடுக்கிறாரோ-அவர்களுக்கு உண்ணும்‌ சோறு பருகு நீர்‌ தின்னும்‌ வெற்றிலையுமான பகவத் கைங்கர்யத்தைக்‌ கொடுக்கிறார்‌ என்று தாத்பர்யம்‌- “தத்‌; விப்ராஸோ விபந்யவோ” என்று சொல்லுகிறபடி பகவானைச்‌ சூழ்‌ந்திருந்தேத்துவதாகிற ப்ரஹ்‌மானந்தத்தை அவர்கள்‌ அநாதி காலமாக அனுபவிக்கிறார்கள்‌ -கைங்‌கர்யமே உண்மையான ஹிதம்‌; “இவ்வுலகிலுள்ள ஐஸ்வர்யங்களும்‌ ஹிதமல்ல. கைவல்ய நிஷ்டர்களுடைய ஆத்மாநுபவமும்‌ உண்மையான ஹிதமல்ல.. ப்ரகாரத்தளவில்‌ நிற்கும்‌ ஆத்மானுபவ மாத்ரத்திலன்றிக்கே ப்ரகாரியளவும்‌ செல்லும்‌ பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷமே ஹிதமெனத் தகுந்தது, சடகோபன்‌ இதை “வானவர்‌,போக மென்கோா? வானவர்‌ முற்றுமென்கோ?” என்று அருளினார்‌.

(பூர்வோ…ஜாத:). எவர்‌ . நித்ய ஸூரிகளுக்கு முதல்வரா யிருக்‌கின்றாரோ. ‘வானவராதியென்கோ?” என்றார்‌ நம்மாழ்வார்‌. நித்ய ஸூரிகளுக்கு. நிர்வாஹகன்‌-அவர்களுடைய ஸத்தைக்கு (இருப்‌புக்கு) காரணமாயிருப்பவன்‌-அவர்கள்‌ நித்யராயிருக்கும் போது ஸத்தா ஹேதுவென்று எப்படிச்‌ சொல்லமுடியும்‌? அவர்‌களுடைய நித்யத்வம்‌ அவனுடைய நித்யேச்சையாலே இருக்கிற படியால்‌ அவர்களுக்கு ஸத்தா ஹேது வென்று சொல்லலாம்‌. இந்த இச்சை அழிந்தால்‌ நித்யத்வமும்‌ மாள வேண்டிவருமன்றோ?-(ருசாய) திவ்ய மங்கள விக்ரஹத்துடன்‌ ப்ரகாசித்துக் கொண்டிருக்கும்படியான பரம புருஷ்னுக்கு. “ ஒளி மணி வண்ணன்‌ என்று சொல்லப்பட்ட அவனுடைய சோதி வடிவு இங்கு உணர்த்தப்படுகிறது.(ப்ராஹ்மயே நம🙂 பர ப்ரஹ்மமா யிருக்கும்‌ ஸ்ரீமந் நாராயணனுக்கு நமஸ்காரம்‌.-நாராயணாய நம:‘ என்று த்‌வயத்தில்‌ சொல்லப்பட்டது இங்கு உணர்த்தப் படுகிறது. ப்ராஹ்மயே’ என்னுமிடத்தில்‌ நான்காம்‌ வேற்றுமையால்‌ கைங்கர்யம்‌ பிரார்த்திக்கப் படுகிறதென்றும்‌, “நம: என்று “அந்தக்‌ கைங்கர்யத்தினால்‌ வரும்‌ ஆனந்தமும்‌ என்னுடையதல்ல; பகவானுடையதே’ என்று சொல்லப் படுகிறதென்றும்‌ கொள்ள வேண்டும்‌. இந்த மந்திரத்திலுள்ள தேவ சப்தங்களை ப்ரஹ்மாதி தேவ பரமாகவும்‌ ஆசாரியர்கள்‌ பொருள் கொண்டுள்ளனர்‌-

———–

ருசம்‌ ப்‌ராஹ்மம்‌ ஜநயந்த: தேவா அக்‌ரே தத;ப்‌ருவந்‌
யஸ்த்வைவம்‌ ப்‌ராஹ்மணோ வித்‌யாத்‌ தஸ்ய தே,வா அஸந்‌ வசே.–5

[பர ப்ரஹ்மத்தினுடைய ப்ரீதியை உண்டு பண்ணும்‌ நித்ய ஸூரிகள்‌ புருஷோத்தமனுக்கெதிரில்‌ நம.” என்னும்‌ அச் சொல்லை உரைத்தனர்‌-ப்ரஹ்ம ஜ்ஞானியான ஓருவன்‌ உம்மை இப்படி அறிந்தானாகில்‌, அவனுக்கு ப்ரஹ்மாதி தேவர்கள்‌ வசத்திலிருப்பார்கள்‌.](ருசம்‌ ப்ராஹ்மம்‌ ஜநயந்த: தேவா…) புருஷோத்தமனுடைய ப்ரீதியை உண்டு பண்ணும்‌ தேவர்களான நித்ய ஸூரிகள்‌, அவ னுக்கு எதிரில்‌ “நம:* என்னும்‌ சொல்லைக்‌ கூறுகின்றனர்‌. இதிலிருந்து பகவானுடைய முகோல்லாஸத்திற்காகக்‌ கைங்கர்யம்‌ செய்‌யப்படுகிறதே யொழிய, நம்முடைய ஆனந்தத்திற்காக வல்ல என்று உணர்த்தப் படுகிறது. அவனுகக்கிறான் என்பதற்காக நாமுகந்து செய்ய வேண்டுமே யொழிய நம்‌ உகப்புக்காகக்‌ கைங்கர்யம்‌ செய்யலாகாது, நம:’ என்னும்‌ பதம்‌ “அஹமபி நமம பகவத ஏவாஹமஸ்மி””-[நானும்‌ எனக்குரியேனல்லேன்‌. பகவானுக்கே நான்‌ உரியவன்‌.] என்னும்‌ பொருளை யுடையதன்றோ. :நம இத்யேவ ‘வாதி,ந:”* [நம:”என்றே சொல்லுபவர்கள்‌ நித்ய ஸூரிகள்‌.] என்றல்லவோ சொல்லப்‌ பட்டிருக்கிறது. “பூயிஷ்டராம்‌ தே நம உக்திம்‌”” என்கிறபடி “நம:என்னும்‌ சொல்லை மிகப் பெரிதாக வன்றோ நினைத்து உகக்கிறான்‌ மாதவன்‌.-

(யஸ்த்வைவம்‌…) எவன்‌ இம் மாதிரி பகவத் கைங்கர்யமே பரம புருஷார்‌த்தமென்‌ றிருக்கிறானோ அவனுக்கு ப்ரஹ்மாதி தேவர்கள்‌ வசத்திலிருக்கிறார்கள்‌. ஸ்ரீ விஷ்ணு புராணத்தில்‌,-“ஸ்வ பருஷமபி,வீக்ஷய பாச ஹஸ்தம்‌ வததி பம: கில’தஸ்ய கர்ண மூலே -பரிஹர மதுஸூதந ப்ரபந்நாரந் ப்ரபு,ரஹமந்‌ய ந்ருணாம்‌ ந வைஷ்ணவாநாம்‌””[யமன்‌ பாசத்தைக்‌ கையில் கொண்ட தன்‌ தூதனைப் பார்த்து, அவன்‌ காதினுள்‌ பின் வருமாறு சொல்லுகிறான் :-‘மதுஸூதனனை சரணமடைந்தவர்களை அணுகாதே. நான்‌ மற்றவர்களுக்கே பிரபு: வைஷ்ணவர்களுக்கல்ல.] என்றல்லவோ யமன்‌ கூறியதாகச்‌ சொல்லப்பட்டது.-திருமழிசையாழ்வாரும்‌,
திறம்‌ பேன்மின்‌ கண்டீர்‌ திருவடி தன்‌ நாமம்‌ மறந்தும்‌ புறந்தொழா மாந்தர்‌–இறைஞ்சியும்‌ சாதுவராய்ப்‌ போதுமின்களென்றான்‌ நமனும்‌ தன்‌ தூதுவரைக்‌ கூவிச்‌ செவிக்கு.-என்று இதையே அருளிச் செய்தார்‌.-தொண்டரடிப்பொடியாழ்வார்‌
“*நாவலிட்டுழி தருகின்றோம்‌ நமன்‌ தமர்‌ தலைகள்‌ மீதே” என்று அருளிச்‌ செய்தார்‌. ‘-திருமங்கை யாழ்வாரும்‌ “வள்ளலே! உன்‌ தமர்க்‌ கென்றும்‌ நமன்‌ தமர்‌ கள்ளர் போல்‌” என்று அருளினார்‌. “என்‌ தமர்‌ நமன்‌ தமரால்‌ ஆராயப்படார் காண்‌”” என்றும்‌, **நமன்‌ தமர்‌ என்‌ தமரை வினவப்‌. பெறுவாரலர்‌” என்றும்‌ அபயமளித்தான்‌ அச்யுதன்‌. பகவானைப்‌ பற்றினவுடன்‌ எத் தேவர்‌ வாலாட்டும்‌ ஓழியும்‌. “பிஞ்ஞகன்‌ தன்னோடும்‌ எதிர்‌வன்‌ அவன்‌ எனக்கு நேரான்‌’” [பிஞ்ஞகன்‌-சிவன்‌]என்றல்லவோ திருமழிசைப் பிரான்‌ அருளிச் செய்தார்‌.

————–

ஹ்ரீச்ச தே லக்ஷ்மீச்ச பத்ந்யெள, அஹோராத்ரே பார்ஸ்வே நக்ஷத்ராணி ரூபம்‌ அஸ்விநெள வ்யாத்தம்‌ இஷ்டம்‌ மநிஷாண அமும்‌ மநிஷாண ஸர்வம்‌ மநிஷாண,-6-[உனக்கு பூமி தேவியும்‌, ஸ்ரீ தேவியும்‌ பத்நிகள்‌. பகலுமிரவும்‌ பக்கத்திலிருக்கிறார்கள்‌. உன்‌ உருவம்‌ -நக்ஷத்திரங்கள் போல்‌(ஒளியுள்ள தாய்‌) இருக்கிறது. அச்விநீ தேவர்கள் போல்‌(உம்முடைய திரு முகம்‌) அழகாயிருக்கிறது. இஷ்டத்தைக் கொடுக்கும்‌. இந்தக்‌ கைங்கர்யத்தைக்‌ கொடுக்கும்‌. எல்லாவற்றையும்‌ கொடுக்கும்‌.]முன்‌ இரண்டு மந்த்ரங்களிதும்‌ சொல்லப்பட்ட கைங்கர்யம்‌ எம்பெருமானும்‌ பிராட்டியுமான சேர்த்தியிலேயே செய்யப்பட வேண்டும்‌ என்று கோஷிக்கிறது இந்த ருக்‌. இது வரையில்‌, விக்ரஹத்தாலும்‌, குணங்களாலும்‌, பரிகரங்களாலும்‌ பரம புருஷன்‌ நிர்ணயிக்கப் பட்டான்‌. புருஷ ஸூக்தத்தின்‌ கடைசி மந்த்ரமான இதில்‌ அவனுக்கே அஸாதாரணமான பிராட்டிகளைக் கொண்டு நிச்சயிக்கப்‌ படுகிறான்‌. பட்டரும்‌,“வேதாந்தா: தத்வ சிந்தாம்‌ முரபிதுராஸி யத் பாத,சிந்ஹைஸ் தரந்தி””[வேதாந்தங்கள்‌, முராரியின்‌ மார்பில்‌ எந்தப்‌ பிராட்டியின்‌ திருவடி யடையாளத்தைக் கொண்டே, பர தத்வ விசாரத்தை முடிக்கின்றனவோ] என்று இவ் விஷயத்தை அழகாக அருளிச்‌ செய்தார்‌-மேலும்‌,“ஈஷ்டே கச்சித்‌ ஜகத இதிய: பெளருஷே ஸுூக்த உக்த:தம்‌ ச த்‌வத்கம்‌ பதிமதி ஜகாவுத் தரச்சாநுவாக:’”[புருஷ ஸூக்தத்தில்‌ உலகத்திற்கெல்லாம்‌ நாயகனாகச்‌ சொல்லப்‌ பட்டவனை, உன்னுடைய (லக்ஷ்மியினுடைய) பதி யென்று உத்தரானுவாகம்‌ உத்கோஷித்தது.] என்றும்‌ அருளிச் செய்தார்‌. திருவின்‌ நாயகன்‌, நிலமகள்‌ நண்பன்‌, ஆயர் மடமகள்‌அன்பன்‌, அச்யுதனே இங்கு அறிவிக்கப் படுகிறான்‌, நமக்கு உபாயோபேயங்கள்‌ ஸ்ரீய:பதியே ஓழிய. ப்ரஹ்மசாரி நாராயணனல்ல என்னும்‌ ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தம்‌ இங்கு வெளியிடப்படுகிறது-

(தே): உமக்கு.-

  1. தலைகளாயிரம்‌, கண்களாயிரம்‌, தாளன்களாயிரமுடைய உமக்கு.
  2. ஸகல சராசரங்களையும்‌ வியாபித்திருக்கும்‌ உமக்கு.
  3. “ஸர்வம்‌ விஷ்ணு மயம்‌ ஜகத்‌” எனப்படும்‌ உமக்கு.
  4. தேச கால வஸ்து பரிச்சேதமில்லாத உமக்கு.
  5. மோக்ஷத்திற்கு ப்ரபுவான உமக்கு.
  6. ஸ்ரீவைகுண்ட வாஸியான உமக்கு.
  7. அண்‌டத்தை உண்டாக்கின உமக்கு.
  8. நான்முகனைப்‌ படைத்த நாராயணனான உமக்கு.
  9. ப்ரக்ருதி மண்டலத்திற் கப்பால்‌ சோதி யுருவா யிருக்கும்‌ உமக்கு.
  10. நாம ரூபங்களைக்‌ கொடுத்தருளிய உமக்கு.
  11. ப்ரஹ்ம ருத்ரேந்த்ர்களால்‌ தியானிக்கப்படும்‌ உமக்கு.
  12. “உம்மை உபாஸிப்பதைத் தவிர வேறு மோக்ஷோபாயமில்லை” என்னும்‌ கீர்த்தி பெற்ற உமக்கு.
  13. பாற் கடலில்‌ பள்ளி கொண்ட பரமனாய்‌ அந்தர்யாமி யாயிருக்கு முமக்கு.
    14. பிறப்பில்‌ பல் பிறவிப்‌ பெருமானா யிருக்கு முமக்கு.
  14. அவதார ரஹஸ்யத்தை அறிந்தவர்‌களால்‌ அடையப்படும்‌ உமக்கு. 16. ‘நித்ய ஸூரிகளுக்கு: நாதனாயும்‌,அவர்களால்‌ வணங்கப் படுபவனாயு மிருக்கும்‌ உமக்கு-இங்‌கு சொன்ன ஏற்றங்களுக்கெல்லாம்‌ மேலான ஏற்றத்தை அடுத்தபடியாகச்‌ சொல்லுகிறது. (ஹ்ரீச்ச லக்ஷ்மீச்ச பத்ந்யெள) பூ தேவியும்‌,ஸ்ரீ தேவியும்‌ உமக்குப்‌ பத்னிகள்‌.-இரண்டாவது ‘சகார”த்தினால்‌ நீளா தேவியும்‌ உணர்த்தப் படுகிறாள்‌. ஆழ்வாரும்‌ ‘குழற் கோவலர்‌ மடப் பாவையும்‌ மண் மகளும்‌ திருவும்‌” என்று அருளினார்‌. ஆஸ்ரிதர்‌ குற்றத்தைப்‌ பொறுப்பிக்கும்‌ பிராட்டி; “குற்றம்‌ காண்பானென்‌? பொறுப்பானென்‌?” என்றிருக்கும்‌ ஸ்ரீ பூமிப் பிராட்டி; நப்பின்னைப்‌ பிராட்டி க்ஷ்மை தான்‌ ஒரு வடிவாயிருக்கும்‌-பெரிய பிராட்டியார்‌ இவனுக்கு ஸம்பத்தாயிருக்கும்‌; அது விளையும்‌ தரை (பூமி); அதனை அனுபவிக்கும்‌ போக்தாவாயிருக்கும்‌ நப்பின்னை;’? என்ற பெரிய வாச்சான் பிள்ளையின்‌ ஸ்ரீஸூக்தி இங்கு அனுஸந்திக்கத் தக்கது. :நகச்சிந்‌ நாபராத்‌,யதி’* [குற்றம்‌ செய்யாதவர்கள்‌ ‘ஒருவருமில்லையே. ]என்பாள்‌ ஸ்ரீதேவி. *குற்றமே இல்லையே’ என்று காணாக் கண்ணிட்‌டிருப்பாள்‌ பூமி தேவி. ‘“க்ஷமயா ப்ருதிவீ ஸம:’” [(ஸ்ரீராமன்‌) பொறுமையில்‌ பூமிக்கு ஸமானமானவன்‌.] என்றல்லவோ சொல்லப் பட்டது.-பூமிப் பிராட்டிக்கு நாம்‌ செய்யும்‌ குற்றங்களுக்கோர்‌ கணக்கில்லை.-அவள்‌ நமக்குச்‌ செய்யும்‌ நன்மைகளுக்கோ எல்லையில்லை. ‘ நாம்‌ உண்டாவதற்கு உதவுகிறாள்‌. நாம்‌ நடக்கும் போதும்‌ கிடக்கும்‌ போதும்‌ நம்மைத்‌ தாங்குகிறாள்‌. தாம்‌ உயிருடனிருப்பதற்கு வேண்டியவைகளைக்‌ கொடுத்துக்‌ காப்பாற்றுகிறாள்‌. நாம்‌ அதற்குப்‌ பதில்‌ அவளை வெட்டுகிறோம்‌; கூரிய ஆயுதங்களினால்‌ குத்திக்‌ கீறிக்‌ கிழிக்‌கிறோம்‌; மல ஜலாதிகளை விட்டு அசுத்தம்‌ செய்கிறோம்‌. பூமியின்‌ புத்ரர்களான நாம்‌ ஒருவர்க்கொருவர்‌ த்வேஷிப்பதன்‌ மூலமும்‌, தூஷிப்பதன்‌ மூலமும்‌ முக் கரணங்களாலும்‌ முடிவில்லாத துன்பங்கள்‌ செய்வதன்‌ மூலமும்‌ நம்‌ தாயாகிய பூமியைத்‌ துன்புறுத்துகிறோம்‌.-பொறுமையாகிய பாலை நமக்கு ஊட்டின தாயின்‌ வழி நாம்‌ நடக்க வேண்டாமா? பொறையின்‌ மக்கள்‌ குறை கூறலாமோ? பொறுமையில்‌ மிக்கவளாகையாலும்‌, பூமியில்‌ பிறந்து வளர்ந்த நமக்கு இஹ பர புருஷார்த்தங்களை அடையச்‌ செய்பவள்‌ இவளே யாகையாலும்‌ முதலில்‌ “ஹ்ரீ:’ என்று பூமி தேவி சொல்லப் பட்டாள்‌. தேச பக்தி யென்‌பது தாயிடம்‌ அன்பே. ஆனால்‌ அந்த மாதவியோ மாதவனுடையவள்‌-அவளிடம்‌ பத்தி யென்று பெயர் பூண்டு அவனியாள்‌ நாதனின்‌ ஆஜ்ஞைகளை மீறுகிறார்கள்‌ சிலர்‌. பூமி தேவி அவர்களைப்‌ பொறுக்‌காமல்‌ பாரமாகவே கருதுவாள்‌. புருஷோத்தமனிடமிருந்து பூமியைப்‌ பிரிப்பவர்கள்‌ தகப்பனை விட்டுத் தாயைப்‌ பிரிப்பவர்களாகக்‌ கருதப்‌ படுவார்கள்‌. பிராட்டியை பகவானை விட்டுப்‌ பிரித்த ராவணன்‌ தலை யறுப்புண்டான்‌; பிரிக்கப் பார்த்த : சூர்ப்பணகை மூக்கறுப்புண்‌டாள்‌” என்று நம்‌ ஆசார்யர்கள்‌ அருளிச் செய்திருப்பது இங்கு அனுஸந்திக்கத் தக்கது.

(லக்ஷ்மீ:) திவ்ய லக்ஷணங்கள்‌ பொருந்தியவளாதலால்‌ :லக்ஷ்மி” என்று கீர்த்தி பெற்றிருக்கிறார்‌ பெரிய பிராட்டியார்‌- தேவர்‌,” மனுஷ்‌யர்‌ முதலிய எல்லாராலும்‌ பிரார்த்திக்கப் படுபவளாதலால்‌ ‘லக்ஷ்மி’ என்றுரைக்கப்படுவதாகவும்‌ கொள்ளலாம்‌.-பகவானுக்கு ஜ்ஞானனந்தாதி குணங்களைப் போல்‌ ஸவரூப நிரூபக பூதையா யிருப்பவள்‌.-மற்ற எல்லா மஹிஷிகளுக்கும்‌ தலைவியா யிருப்பவள்‌. ஜீவர்களுககெல்லாம்‌ புருஷகாரமா யிருப்பவள்‌. உலகிலுள்ள ஐஸ்வர்யங்களை யெல்லாம்‌ கொடுப்பவள்‌ ஸ்ரீதேவி. ஐஸ்வர்யங்கள்‌ எட்டு வகைப்‌ படும்‌:- 1-தங்கம்‌, வெள்ளி முதலியவைகள்‌ (தன லக்ஷ்மி). 2. தான்‌யங்கள்‌ (தான்ய லக்ஷ்மி). 3-புத்ர பெளத்ராதிகள்‌(ஸந்தான லக்ஷ்மி),4, ரத கஜ துரக பதாதிகளை யுடைய ராஜ்ய லக்ஷ்மி-5-வீர்ய (பராக்ரம) லக்ஷ்மி, 6. விஜய லக்ஷ்மி. 7. துஷ்டி, புஷ்டி முதலியவற்றைத் தரும்‌ ஸெளபாக்ய லக்ஷ்மி. 8, மோக்ஷ லக்ஷ்மி. இவற்றை யெல்லாம்‌ கொடுப்பவள்‌ ஸ்ரீ தேவி.

(ஹ்ரீச்ச லக்ஷ்மீச்ச) ஸம்பத்தாயிருப்பவள்‌ ஸ்ரீதேவி; ஸர்வ ஸம்பத்துகளுக்கும்‌ விளை நிலமாயிருப்பவள்‌ நிலமகள்‌. பெருமை யுடையவள்‌ பூமகள்‌; பொறுமை யுடையவள்‌ பூ தேவி. குணமுடையவள்‌ ஸ்ரீதேவி;மணமுடையவள்‌ மண்‌ மடந்தை. கோஷிப்பிப்பவள்‌ ஸ்ரீதேவி; போஷிப்பவள்‌ பூமி தேவி. அழகுடையாள்‌ இலக்குமி; புகழமுடையாள்‌ பூ தேவி. ஆதரமுடையவள்‌ அலர் மேல் மங்கை; ஆதாரமானவள்‌ அவனியாள்‌.

(பத்ந்யெள) இப்படிப்பட்ட கீர்த்தியை யுடைய இவர்கள்‌ .பரம புருஷனுக்குப்‌ பத்னிகள்‌ என்று உரைக்கப்படுகிறது. “பதிம் நயதி “என்னும்‌ வ்யுத்பத்தியின்படி ஸர்வேஸ்வரனைக்‌ கண் காட்டிய இடத்‌தில்‌ காரியம்‌ செய்யச் செய்பவள்‌ என்று பொருள் கொள்ளலாம்‌.
**யஸ்யாவீக்ஷ்ய முகம்‌ ததிங்கித பராதீநோ விதத்தேகி,லம்‌” [எந்தப்‌ பிராட்டியின்‌ முகத்தைப்‌ பார்த்து அவளுடைய முக பாவத்திற்கு வசப்‌பட்டு ஸர்வேஸ்வரன்‌ எல்லாவற்றையும்‌ செய்கிறானோ…]என்றல்‌லவோ ஆழ்வான்‌ அருளினார்‌. ‘ப்ரஜைகளை பகவானிடத்தில்‌ அழைத்‌துச்‌ செல்லுபவள்‌’ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌-இதனால்‌ இவ்‌விருவரும்‌ புருஷகாரமா யிருக்கிறார்களென்று அறிவிக்கப் படுகிறது.

“லஷ்மீ: புருஷகாரத்வே நிர்தி,ஷ்டா பரமர்ஷிபி,:’”? [லக்ஷ்மி புருஷகாரம்‌ (சிபார்சு) செய்பவள்‌ என்று பரம ரிஷிகளால்‌ நிர்ண யிக்கப்பட்டிருக்கிறாள்‌.] என்ற பாஞ்சராத்ர வசனம்‌ இங்கு அனு ஸந்திக்கத் தக்கது; பூதேவியும்‌ புருஷகாரத்வத்தை உடையவளென்‌பது * விஷ்ணுக்ராந்தே வஸுந்தரா…தயா ஹதேந பாபேந கச்சாமி பரமாம்‌ கதிம்‌” [விஷ்ணுவினால்‌ (திரிவிக்ரமாவதாரத்தில்‌) அளக்கப்‌ பட்ட பூமியே… அவளால்‌ பாபம்‌ நீங்கினவனாகி பரம பதத்தை அடைகிறேன்‌.] என்று வேதத்தில்‌ சொல்லப்பட்டது. “*பத்யுர்‌ நோ யஜ்ஞ ஸம்யோகே” என்கிற பாணினி ஸூத்ரத்தின்படி ஆஸ்ரிதர்களை
ரக்ஷிப்பதாகிற யஜ்ஞத்தில்‌ ஸஹ தர்ம சாரிணியா யிருப்பவள்‌ என்றும்‌ பத்னீ சப்தத்திற்குப்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. ஹ்ரீ:” என்‌ று லஜ்ஜைக்கு அபிமானி தேவதை; :லக்ஷ்மீ:” என்று ஐஸ்வர்யத்துக்கு அபிமானி தேவதை’” என்றார்‌ வித்யாரண்யர்‌.

எவ்வுலகத்திலி ருப்பவரும்‌, எம்மதத்திலி ருப்பவரும்‌ விரும்பும்‌ இஹ புருஷார்த்தங்கள்‌ தனம்‌, தான்யம்‌, ஸெளக்யம்‌ என்பவையே யாம்‌. இவைகளைக்‌ கொடுப்பவர்கள்‌ ஸ்ரீபூமி நீளா தேவிகளே. இவர்கள்‌ மூவருக்கே :ஸ்ரீஸூக்தம்‌” *பூஸூக்தம்‌” ‘நீளா ஸூக்தம் ’ என்று மூன்று ஸூக்தங்கள்‌ வேதத்தில்‌ படிக்கப் பட்டிருக்கின்‌றன. இவைகள்‌ நாராயண ஸூக்தத்திற்குப்‌ பின்‌ விவரிக்கப்படும்‌, ஸ்ரீஸூக்தம்‌ லக்ஷ்மியைச்‌ சொல்லுவதென்பதை சைவர்களுட்பட எல்லோரும்‌ ஓப்புக் கொள்ளுகிறுர்கள்‌. ஸ்ரீதேவியினால்‌ கொடுக்கப்‌ படும்‌ ஐஸ்வர்யங்களும்‌, பூமியில்‌ விளையும்‌ நவதான்யங்களும்‌, காய்‌ கனிகளும்‌, அதிலிருக்கும்‌ மண்‌, நீர்‌, அக்னி, வாயு, ஆகாசம்‌ எனும்‌ பஞ்ச பூதங்களுமில்லாமல்‌ மனிதர்களோ மற்ற பிராணிகளோ உயிருடனிருக்க முடியுமோ? இஹ லோக ஸுக ஸாதனங்களான நெய்‌, பால்‌, தயிர்‌, உண்ணும்‌ சோறு, பருகுநீர்‌, தின்னும்‌ வெற்றிலை முதலிய பதார்த்தங்களை விரும்பாதார்‌ யாவரே இவ் வுலகிலுள்ளார்‌?இந்த ஸ்ரீஸூக்த, பூஸூக்த, நீளா ஸூக்தங்களைப்‌ படிப்பதனால்‌ இஹ லோக புருஷார்த்தங்களெல்லாவற்றையும்‌ அடையலாம்‌. இவற்றைத்‌ தருவதுடன்‌ நில்லாமல்‌ பரம புருஷார்த்தமாகிய பகவத்‌ கைங்கர்யத்தையும்‌ பரந்தாமனுடைய பத்னிகள்‌ கொடுக்கிறார்கள்‌-புருஷோத்தமன்‌ தன்‌ பத்னிகள்‌ மூலமாக இவற்றைத்‌ தருகிறான்‌.

(அஹோராத்ரே பார்ஸ்வே) ‘பகலுமிரவும்‌ பரந்தாமன்‌ பக்கத்‌தில்‌ இப் பத்னிகளிருக்கிறார்கள்‌. அகலகில்லேன்‌ இறையும்‌ என்றிருக்‌கிறார்கள்‌. நம்மாழ்வாரும்‌, உடனமர்‌ காதல்‌ மகளிர்‌ திருமகள்‌ மண்‌மகள்‌ ஆயர்‌ மடமகள்‌ என்றிவர்‌ மூவர்‌‘” என்றும்‌, “நிழல்‌ போல்வனர்‌”‘ என்றும்‌ அருளிச்செய்தார்‌. எதற்காக இப்படி இருக்கிறார்களென்றுல்‌:
“சஞ்சலம்‌ ஹி மந:’* [மனது சஞ்சலமானது.] என்றும்‌, “நின்றவா நில்லா நெஞ்சு” என்றும்‌ சொல்லுகிறபடியே சேதனர்கள்‌ மிகவும்‌ நிலை யற்ற நெஞ்சை யுடையவர்களாதலால்‌, அவர்களுக்கு பகவத்‌ விஷயத்தில்‌ ருசி ஏற்பட்டவுடன்‌ அவர்களை பகவானிடம்‌ சேர்த்து
விட வேண்டும்‌ என்றே அச்யுதனின்‌ அருகிலிருக்கிறார்கள்‌. மேலும்‌, இருவருமான சேர்த்தியே உத்தேச்யம்‌. *தேவிமாராவர்‌ திருமகள்‌ பூமி ஏவ மற்றமரர்‌ ஆட் செய்வார்‌’” என்று நித்யஸூரிகளும்‌ இவர்களுடைய சேர்த்தியில்‌ ஏவினதை எடுத்துக்‌ கை நீட்டுபவர்களென்று சொல்லப்‌ பட்டிருக்கிறது. அவர்கள்‌ ஏவலைக் கேட்பதே பரமானந்தமாகும்‌.-சேஷனான இளைய பெருமாள்‌ :க்ரியதாமிதி மாம்‌ வத;’”[செய்யப்படட்டும்‌ என்று என்னை ஆஜ்ஞாபிப்பாயாக.] என்று இதையே விரும்பினர்‌.““ரமமாணா வநே த்ரய:‘”[மூவரும்‌ வனத்தில்‌ ரமித்தார்கள்‌,] என்று சொல்லப்பட்டபடி ஜீவன்‌, எம்பெருமான்‌, பிராட்டி என்னும்‌ மூவர்‌களுடைய சேர்த்தியே பரஸ்பரம்‌ ஆனந்தத்தைத்‌ தருவதாகும்‌.-ஸீதா ராமர்களுக்குப்‌ பரஸ்பர ஸம்ஸ்லேஷத்தினா லேற்படும்‌ ஸந்‌ தோஷம்‌, இளைய பெருமாளுக்கு (லக்ஷ்மணனுக்கு) இருவருமான சேர்த்தியை ஸேவிப்பதனால்‌ ஏற்பட்டதன்றோ. இங்கு பிராட்டிகளும்‌ பகவானும்‌ வெவ்வேறு தத்வங்கள்‌ என்பதும்‌ காட்டப்படுகிறது.

“ராமஸ்ய தக்ஷிணே பார்ஸ்வே பத்‌மா ஸ்ரீஸ்ஸம வஸ்த்திதா- ஸவ்யே து ஹ்ரீர்‌ விசாலாக்ஷ”[ராமனுடைய வலது புறத்தில்‌ தாமரையாளாகிற ஸ்ரீதேவி இருந்‌
தாள்‌; இடது புறத்தில்‌ விசாலமான கண்களை யுடைய பூதேவி இருந்தாள்‌.] என்னும்‌ ஸ்ரீராமாயண வசனத்தாலும்‌“தரணீ தேவீ தஷிணேதரகா ததா [பூமிதேவி இடது புறத்திலிருப்பவள்‌.| என்‌னும்‌ பாத்ம புராண வசனத்தினாலும்‌ இந்த மந்திரம்‌ . விவரிக்கப்‌ பட்டது. இத்தால்‌ ‘திருவில்லாத்‌ தேவரைத்‌ தேறேன்மின்தேவு”” என்று திருமழிசை யாழ்வாரால்‌ சொல்லப்பட்டபடி, மற்ற தெய்வங்களிற்‌ காட்டிலும்‌, மாதவனின்‌ மேன்மை உரைக்கப்பட்டது. மற்றிருந்தீர்‌ கட்கறியலாகா மாதவனென்பதோர்‌ அன்பனாகிய அச்யுதனுக்கு “தே,வ்யா காருண்ய ரூபயா”” என்று ப்ரஸித்தமடைந்த வேரி(வாஸனை) மாறாத பூமேலிருப்பவளான ஸ்ரீதேவியும்‌, மாதவியாகிய பூதேவியும்‌ பத்னிகளாயிருந்து கொண்டு சேதனர்களை ஸ்ருஷ்டிக்கும்படியும்‌,மோக்ஷத்தை அடையும்படியும்‌ செய்கிறார்கள்‌. இம் மூவரும்‌ சேர்ந்து கொண்டு ஒருவர்க்கொருவர்‌ சேதனரிடம்‌ அன்பு காட்டுவதில்‌ போட்டி போடுகிறார்கள்‌, “தன்னடியார்‌ திறத்தகத்துத்‌ தாமரையாளாகிலும்‌ சிதகுரைக்குமேல்‌ என்னடியார்‌ அதுசெய்‌யார்‌ செய்தாரேல்‌ நன்று செய்தார்‌ என்பர் போலும்‌
என்று அருளிச் செய்தார்‌ பெரியாழ்வாரும் -இம் மாதிரியாக பரனுக்கே ஸ்ரீ, பூமி, நீளா என்று மூன்று பத்னிகள்‌ பரத்வாவஸ்தையிலும்‌ இருப்பதாகச்‌ சொல்லப்பட்டது.-அவர்‌ புத்ரனான பிரமனுக்கும்‌ ஸரஸ்வதி, காயத்ரி, ஸாவித்ரி என்று மூன்று பத்னிகளிருப்பதாக அறிகிறோம்‌. அவருடைய பேரனாகிய ஸுப்ரஹ்மண்யனுக்கும்‌ வள்ளி, தேவ ஸேனை என்று இரு பத்னிகளிருப்பதாகப்‌ புராணங்களில்‌ பேசப்பட்டிருக்கிறது.-புருஷோத்தமனுடைய விபவாவதாரங்களிலும்‌ க்ருஷ்ணாவதாரத்தில்‌ அஷ்ட மஹிஷி களுடனிருந்தது எல்லோரும்‌ அறிந்ததே.-யாஜ்ஞ வல்க்யர்‌ இரண்டு பத்னிகளை யுடைவரென்பது வேத ப்ரஸித்தம்‌. வைஷ்ணவ ஆசார்ய ஸ்ரேஷ்‌டர்களான பட்டர்‌, நஞ்சியர்‌, நம்பிள்ளை என்னும்‌ இம் மூவரும்‌ இரண்டு பத்னிகளை உடையவர்களென்று படித்திருக்கிறோம்‌.இப்படி புண்ய பூமியாகிய பாரத தேசத்தில்‌ நாம்‌ வணங்கும்‌ தெய்வமும்‌; ரிஷிகளும்‌, ஆசார்யர்களும்‌ அனேக பத்னிகளை உடையவர்களாக இருந்திருக்‌கிறார்கள்‌. ஸ்ம்ருதிகளிலும்‌ பல தாரங்களை மணம்‌ செய்து கொள்ளப்‌ புருஷர்களுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது. பல கோடிக்‌ கணக்‌
கான வருஷங்களாக இருந்து வரும்‌ இவ் வழக்கத்தை கிறிஸ்தவ மதக்‌ கொள்கையைக்‌ காரணமாகக் கொண்ட ஐரோப்பியரின்‌ அனுஷ்‌டானத்தைக் கொண்டு மாற்ற சட்டம்‌ ஏற்படுத்தப்‌ பார்க்கிறார்கள்‌-அப்படிச்‌ செய்வது நமது நாட்டுக்கும்‌ அதன்‌ மக்களுக்கும்‌ அதில்‌ வழங்கி வரும்‌ மதங்களுக்கும்‌ பெருத்த தீங்காகும்‌.

(நக்ஷத்ராணி ரூபம்‌) உம்முடைய .. திரு வுருவம்‌ நக்ஷத்ரங்கள்‌ போல்‌ அழகா யிருக்கிறது. ஆதித்யனைப் போன்ற ஒளியை யுடையவன்‌ என்று முன்‌ சொன்னதில்‌ த்ருப்தி யில்லாமல்‌ கணக்கற்ற நக்ஷத்‌ரங்களைப் போல்‌ அழகியதா யிருக்கிறது உன்‌ சோதி யுருவம்‌ என்று சொல்லப்படுகிறது. சங்க சக்ரங்கள்‌, திவ்யாபரணங்கள்‌, ஹிரண்யவர்ணையான பிராட்டி பீதாம்‌பரம்‌ முதலியவைகளுடன்‌- கூடிய திவ்ய மங்கள விக்ரஹம்‌ நக்ஷத்ரங்களுடன்‌ கூடிய நீல மேகம் போல்‌ விளங்குகிறதன்றோ-“தாரா ரூபாணி த்‌ருஸ்யந்தே யாந்யேதாநி நபஸ் ஸ்தலே மம ரூபாணி தாந்யேவ”[ஆகாயத்தில்‌ காணப்படும்‌ நக்ஷத்ர ரூபங்களெல்லாம்‌ என்னுடைய உருவங்களே.] என்று மஹா பாரதத்தில்‌, ஆரண்ய பர்வத்தில்‌ பகவான்‌ மார்க்கண்டேயரைக்‌ குறித்துச்‌ சொன்ன வசனத்தை அனுஸரித்து நக்ஷத்ரங்கள்‌ பகவானுடைய சரீரங்களே என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. (அச்விநெள வ்யாத்தம்‌) அழகில்‌ மிக்க உம்முடைய திருமுக மண்டலம்‌ அச்வினீ தேவர்கள் போல்‌ விளங்குகிறது. “அழகனே! காப்பிட வாராய்‌”” என்றார்‌ பெரியாழ்வார்‌. கண்டவர்‌ தம்‌ மனம்‌ வழங்கும்‌ அழகுடையவனன்றோ இவன்‌. அச்வினீ தேவர்‌களைக் காட்டிலும்‌ அழகிய உருவமுடையவர்‌ லீலா விபூதியில்‌ இல்‌லாமையால்‌ இவர்கள்‌ உபமானமாகச்‌ சொல்லப் பட்டனர்‌. இவர்‌களும்‌ பகவானுடைய திருமுக மண்டலத்திற்கு ஓப்பாகார்கள்‌.

பட்டரும்‌-ஸ்ரீரங்கராஜ ஸ்தவத்தில்‌ ““விஹரது மயி ரங்கிரணச் சூலிகா ப்‌ரமரக திலகோர்த்‌வ புண்ட்‌ரோஜ்ஜ்வலம்‌ முகம ம்ருத தடாக சந்த்‌ராம்பு,ஜஸ்மர ஹரசுசி முக்‌த,மந்த;ஸ்மிதம்‌’”-[திருமுடி, திரு நெற்றியில்‌ அலையும்‌ திருக் குழல்‌, திலகம்‌, திருமண்‌காப்பு, இவற்றால்‌ பிரகாசிப்பதும்‌, அம்ருத தடாகம்‌, சந்திரன்‌,தாமரைப் பூ, இவற்றின்‌ கர்வத்தைப்‌ போக்கடிப்பதும்‌, வெண்மையான, அழகிய புன் முறுவலை உடையதுமான ஸ்ரீரங்கநாதனுடைய முகம்‌ என்னிடம்‌ விஹாரம்‌ செய்யக் கடவது என்று பகவானுடைய திரு முகத்தை ஓப்பற்றதாக வன்றோ பேசினார் -இதற்கு மேல்‌ வேத புருஷன்‌, இப் புருஷ ஸூக்தத்தை அனுஸந்‌தித்தவர்களுக்கு இஹ லோக புருஷார்த்தங்களையும்‌, பகவத் கைங்கா்‌யத்தையும்‌ கொடுக்கும்படி புருஷோத்தமனைப்‌ பிரார்த்திக்கிறான்‌.-இங்கு கைங்கர்ய ப்ரார்த்தனை செய்யப் படுகிறதென்பது கருணைக் கடலான பெரியவாச்சான் பிள்ளையால்‌ பரந்த ரஹஸ்யத்தில்‌ அருளிச் செய்‌யப்பட்டது.

(இஷ்டம்‌ மநிஷாண) இவர்கள்‌ விரும்பின எல்லாப்‌ புருஷார்த்தங்களையும்‌ கொடும்‌. இதனால்‌ ப்ரயோஜனாந்தர பரராக மாட்டார்களோ என்ற ஸந்தேஹம்‌ எழுகிறது. புருஷோத்தமனிடம்‌ மற்ற பலன்களை நமக்காக விரும்பினால்‌ ப்ரயோஜனாந்தர பரராவோம்‌. ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு இவ் வுலகிலுள்ள எல்லா ஸம்ருத்திகளும்‌ உண்டாக வேண்டும்‌ என்று பிரார்த்திப்பது தோஷ மன்று. ஆழ்வார்‌களும்‌ ‘நன் மக்களைப்‌ பெற்று மகிழ்வரே” என்றும்‌, “நல்ல பதத்தால்‌ மனை வாழ்வர்‌ கொண்ட பெண்டிர்‌ மக்களே’” என்றும்‌, “விடுமால்‌ வினை வேண்டிடில்‌ மேலுலகும்‌ எளிதாயிடும்‌ அன்றி இலங்கொளி சேர்‌ கொடு மா கடல்‌ வையகம்‌ ஆண்டு மதிக்குடை மன்னவராய்‌ அடி கூடுவரே’” என்றும்‌ அருளிச் செய்தனரன்றோ.(அமும்‌ மநிஷாண) முன்‌ மந்திரங்களில்‌ சொல்லப்பட்ட கைங்‌கர்யம்‌ ‘அமும்‌’ என்று காட்டப்படுகிறது. நித்யஸூரிகள்‌ செய்யும்‌ கைங்கர்யத்தையும்‌ கொடும்‌; பரம புருஷார்த்தமாகிற பகவதநுபவத்தைக்‌ கொடுப்பீராக. பிராட்டியும்‌ நீருமாயிருக்கிற சேர்த்தியில்‌ அடிமையை அருளுவீராக. (ஸர்வம்‌ மநிஷாண) எல்லாவற்றையும்‌ கொடும்‌. வேண்டிற்றெல்லாம்‌ தருபவனன்றோ தாமோதரன்‌-“சாய் கொண்ட இம்மையும்‌ சாதித்து வானவர்‌ நாட்டையும்‌ நீ கண்டு கொள்ளென்று வீடும்‌ தரும்‌ நின்று நின்றே”என்றார்‌ நம்மாழ்வார்‌.

இந்த ருக்கில்‌ அச்யுதனுடைய அன்பெனும்‌ அவியா விளக்கை ஸ்ரீ பூமிகள்‌ தூண்டுகிறார்களென்றும்‌, புருஷோத்தமன்‌ அன்பு மயமானவனென்றும்‌, சோதி வடிவானவனென்றும்‌; அழகமா் சூழொளிய னென்றும்‌ சொல்லப் பட்டது-“ஸர்வம்‌ ஐகந் மம பவேதிதி ஸஞ் சிந்தயந்‌ முநி: த்‌யாயேத்‌ புருஷ ஸூக்தேந ப்ரதி பாத்‌,ய ஜநார்த்தநம்‌ விஷ்ணு: புருஷ ஸூக்தார்த்த, இதீயம்‌ வைதிகீ ஸ்ருதி: புருஷஸ்ய ஹரேஸ்‌ ஸூக்தம்‌ ஸர்‌வ பாப ப்ரணாசநம்‌”[“இவ் வுலகெல்லாம்‌ எனக்காகட்டும்‌” என்று நினைத்துக் கொண்டு, முனியானவன்‌, புருஷ ஸூக்தத்தினால்‌ ஜனார்த்தனனைச்‌ சொல்லி, தியானிக்கக் கடவன்‌.-விஷ்ணுவே புருஷ ஸுூக்தத்தினால்‌ சொல்லப்‌ படுபவனென்று வேதத்தில்‌ உரைக்கப் பட்டது. ஹரியாகிற புருஷ, னுடைய ஸூக்தம்‌ எல்லாப்‌ பாபங்களையும்‌ போக்கடிப்பது.] என்று கார்க்க செளநக மஹ ரிஷிகளால்‌ புருஷ ஸூக்தம்‌ நாராயணனைச்‌ சொல்லுவதென்று உரைக்கப் பட்டது. போதாயனரும்‌,““அதைநம்‌ ருக்‌,யஜுஸ் ஸாமபி,ஸ்‌ ஸ்துவந்தி த்‌ருவ ஸூக்தம்‌ ஜபித்வா புருஷ ஸூத்தம்‌ ச அந்யாம்ச்ச வைஷ்ணவாந் மந்த்ராந்‌”*(இத்த நாராயணனை, த்ருவ ஸூக்தத்தையும்‌, புருஷ ஸூக்தத்தையும்‌ மற்ற வைஷ்ணவ மந்திரங்களையும்‌ ஜபித்து, ருக் யஜுஸ் ஸாம வேதங்‌களால்‌ ஸ்தோத்ரம்‌ செய்கிறார்கள்‌.] என்று விஷ்ணுவினுடைய ஆராதனத்தில்‌ புருஷ ஸூக்த ஜபம்‌ செய்ய விதித்திருக்கிறார்‌.“ஏஷா வைஷ்ணவீ நாம ஸம்ஹிதா, ஏதாம்‌ ப்ரயுஞ்ஜந்‌ விஷ்ணும்‌ ப்ரீணாதி”[இது விஷ்ணுவினுடைய நாம ஸம்ஹிதை; இதை ப்ரயோகிப்பவன்‌
விஷ்ணுவை ப்ரீதி யடையச்‌ செய்கிறான்‌.] என்று ஸாம விதி ப்ராஹ்மணத்தில்‌ சொல்லப் பட்டது. ஆதர்வணத்திலும்‌, கோ பத ப்ராஹமணத்தில்‌, ‘“வைஷ்ணவ்யா புருஷ ஸூக்தம்‌’” என்று உரைக்கப்பட்டது.

புருஷஸ்ய ஹரேஸ் ஸூக்தம்‌ ஸ்வர்க்‌யம்‌ தந்யம்‌ யசஸ்கரம்‌…ஸ்ருதிஷு ப்ரப,லா மந்த்ராஸ்‌ தேஷ்வப்யத்‌,யாத்ம வாதி: தத்ராபி பெளருஷம்‌ ஸூக்தம்‌ ந தஸ்மாத்‌, வித்‌யதே பரம்‌”[புருஷனாகிய ஹரியின்‌ ஸூக்தம்‌ ஸ்வர்க்கத்தைத்‌ தருவது; மேலானது; கீர்த்தியைக்‌ கொடுப்பது. வேதங்களில்‌ மந்த்ரங்கள்‌ மேலானவை? அவைகளிலும்‌ பரமாத்மாவைச்‌ சொல்லுபவை சிறந்‌தவை. அவற்நிலும்‌ புருஷ ஸூக்தம்‌ பெருமை வாய்ந்தது. அதைக்‌ காட்டிலும்‌ மேலானதில்லை.] என்று செளநக ஸ்ம்ருதியில்‌ புருஷ ஸூக்தத்தின்‌ பெருமை பேசப்பட்டது. வியாஸ ஸ்ம்ருதியிலும்‌,“ந விஷ்ண்வாராத நாத்‌ புண்யம்‌ வித்‌யதே கர்ம வைதிகம்‌ . தஸ்மாத,நாதி, மத்‌,யாந்தம்‌ நித்யமாராத,யேத்‌ ஹரிம்‌ தத்‌; விஷ்ணோரிதி மந்த்ரேண ஸுக்தேந பெளருஷேண ச நைதஸ்ய ஸத்‌,ருசோ மந்த்ர: வேதே,ஷூக்தச்‌ சதுர்ஷ்வபி”[விஷ்ணுவை ஆராதிப்பதைக் காட்டிலும்‌ புண்யமான வைதிக கர்மம்‌
கிடையாது. ஆகையால்‌ :*தத்‌; விஷ்ணோ: பரமம்‌ பத;ம்‌’” என்னும்‌ மந்‌திரத்தாலும்‌, புருஷஸூக்தத்தாலும்‌, ஆதி மத்யாந்தமில்லாத ஹரியை தினந்தோறும்‌ ஆராதிக்கக் கடவன்‌. இதற்கு ஸமானமான மந்திரம்‌ நான்கு வேதங்களிலும்‌ சொல்லப் படவில்லை.] என்று உத்கோஷிக்‌ கப்பட்டது. விஷ்ணு ஸ்ம்ருதியிலும்‌, “வாஸுதேவம்‌ ஸமர்ச்சயேத்‌::…[வாஸு தேவனை அர்ச்சனை செய்ய வேண்டியது. ] என்று ஆரம்பித்து“ஏவமப்‌யர்ச்ய து ஜபேத்‌ ஸூக்தம்‌ வை பெள்ருஷம்‌ தத:””[இம்மாதிரி ஆராதித்து புருஷ் ஸூக்தத்தை ஜபிக்க வேண்டியது.] என்று சொல்‌லப்பட்டது. வாதூல ஸூூத்ரத்தில்‌. “யத்ர யத்ர கர்ம ப்ரேஷோ ஜாயதே தத்ர தத்ர புருஷம்‌ த்‌யாயந் புருஷ ஸூக்தம்‌ ஜபே தர்ச்சயேத்‌ பூர்ணத்வாத்‌ புருஷ:”” [கர்ம ப்ரம்சம்‌ உண்டாகும் போது, புருஷனை தியானித்து,புருஷ் ஸூக்தத்தை ஜபித்து ஆராதிக்க வேண்டியது; . பூர்ணானாகை’யால்‌ புருஷனெனப்படுகிறான்‌.] என்று.புருஷ ஸூக்தத்தின்‌ சிறப்பு சொல்லப் பட்டது. இம் மாதிரியாகப்‌ பல்லாயிரக்கணக்கான இடங்‌ களில்‌ புருஷ ஸூக்தத்தில்‌ ப்ரதிபாதிக்கப் படுமவன்‌ நாராயணனே என்று சொல்லப் பட்டிருக்கிறது.

இதிஹாஸ புராணங்களிலும்‌ பல பல விடங்களில்‌. இது பகவத் பரமென்று பேசப் பட்டிருக்கிறது.’ ஸாரமான சிலவற்றை எடுத்துக்‌ காட்டுவோம்‌. : மஹாபாரதத்தில்‌,மோக்ஷதா்மத்தில்‌,“ப;ஹவ: புருஷா ராஜந்‌ உதாஹோ ஏக ஏவது।கோஹ் யத்ர புருஷ: ச்ரேஷ்ட்ட,: கோ வா யோநிரிஹோச்யதே॥”[ப்ராஹ்மணரே! புருஷர்கள்‌ பலரா? அல்லது ஒருவனா?(பலரானால்‌)இவர்களுள்‌ எந்தப்‌ புருஷன்‌ மேலானவன்‌? எவன்‌ மற்றவர்களுக்கு காரணமாயிருப்பவன்‌?] என்று ஜனமேஜயர்‌ வைசம்பாயனரை வினவினார்‌.-வைசம்பாயனரும்‌ தாம்‌ சொல்லப் போகும்‌ விஷயம்‌ அதி ரஹஸ்யமானதாகையால்‌ தன்‌ குருவான வியாஸரை நமஸ்கரித்து,“ப,ஹவ: புருஷா ராஜ்‌ ஸாங்க்‌,ய யோக,விசாரிணாம்‌.। நைத திச்ச,ந்தி புருஷம்‌ ஏகம்‌ குரு குலோத்‌,வஹ।’ பாஹுநாம் புருஷாணாஞ்ச யதை,கோ யோ நிருச்யதே |ததா தம்‌ புருஷ வ்யாக்‌,ரம்‌ வ்யாக்‌,யாஸ்யாமி கு.ணாதி,கம்‌ ॥ இத,ம்‌ புருஷ ஸுக்தம்‌ ஹி ஸர்வ வேதே,ஷு பார்த்திவ | ருதம்‌ ஸத்யம்‌ ச விக்‌,யாதம்‌ ருஷி ஸிம்ஹேந சிந்திதம்‌ |”-(குருகுல ச்ரேஷ்ட்டனான அரசனே! ஞானிகளும்‌. யோகிகளும்‌ புருஷர்‌கள்‌ பலரென்ற நிர்ணயித்திருக்கிறார்கள்‌. ஒரு புருஷன்‌ என்பதை அவர்கள்‌ அங்கீகரிக்க மாட்டார்கள்‌. பல புருஷா்களுக்கும்‌ காரண மானவனும்‌, குணங்களில்‌ சிறந்தவனுமான புருஷ ச்ரேஷ்டனைச்‌ சொல்லுகிறேன்‌. ரிஷி ச்ரேஷ்ட்டரால்‌ ஸாஷாத் கரிக்கப்பட்ட இந்தப்‌ புருஷஸூக்தம்‌ எல்லா வேதங்களாலும்‌ உண்மையை உணர்த்துவது என்று கீர்த்தி பெற்றிருக்கிறது- என்று அத்வைத நிரஸனம்‌ செய்து புருஷ் ஸூக்தமே காரண புருஷனைக்‌ கூறுகிறது என்று உரைத்து,புருஷோத்தமன்‌ யாரென்பதை நிர்ணயம்‌ செய்ய ப்ரஹ்மாவுக்கும்‌ ருத்ரனுக்கும்‌ நடந்ததான பின் வரும்‌ ஸம்பாஷணையைச்‌ சொன்னார்‌:-

முன்‌ ஒரு காலத்தில்‌, பாற்கடலின்‌ நடுவிலுள்ள வைஜயந்த மென்னும்‌ பர்வதத்தில்‌ பிரமன்‌ தவம்‌ செய்து கொண்டிருக்கும்‌ போது, சிவபிரான்‌, ‘தன்‌ தகப்பனான பிரமனை அடி பணிந்து பல புருஷர்களை ஸ்ருஷ்டி செய்யும்‌ நீர்‌ எந்தப் புருஷனை தியானிக்கிறீர்‌? என்று கேட்டார்‌. அதற்கு பிரமன்‌’ஸ்ருணு புத்ர யதரா ஹ்யேஷ புருஷ: சாஸ்வதோவ்யய:…ந ஸ ஸக்யஸ்‌ த்வயா த்‌,ரஷ்டும்‌ மயாந்யைர் வாபி ஸத்தம…மமாந்தராத்மா தவ ச யே சாந்யே தேஹி ஸம்ஜ்ஜிதா:…விஸ்வ மூர்த்த, விஸ்வ பு,ஜ: விஸ்வ பாதாஷி நாஸிக:…மஹா புருஷ சப்‌தம்‌ ஸ பிபர்த்யேகஸ்‌ ஸநாதந:…ஸஹி நாராயணோ ஜ்ஜேய: ஸர்வாத்மா புருஷோ ஹி ஸ.””[குழத்தாய்‌! நித்யனானவனும்‌, அழிவற்றவனுமான புருஷனைப் பற்றிக்‌ , கேட்பாயாக.-அவனை உன்னாலும்‌, என்னாலும்‌, எவராலும்‌ காண முடியாது. அவன்‌ உனக்கும்‌ எனக்கும்‌, எல்லோருக்கும்‌ அந்தர்‌யாமி, அவன்‌ முடிகளாயிரம்‌, அடிகளாயிரம்‌, கைகளாயிரம்‌, கண்‌களாயிரமுடையவன்‌. பழைமையான அவனே மஹா புருஷ சப்தத்தை வஹிக்கிறான்‌. அவனை நாராயணனென்று அறிவாயாக;-ஸர்வாந்தர்‌யாமியான அவனன்றோ புருஷன்‌.] என்று புருஷ ஸூக்தத்தால்‌ சொல்லப் படுபவன்‌ பரமாத்மாவான நாராயணனே என்று தெளிவாகத்‌ தெரிவித்தார்‌. விஷ்ணு புராணத்தில்‌ துருவன்‌ இவ் விஷயத்தை விளக்கினான்‌. மேலும்‌, ஹரி வம்சத்தில்‌ கைலாஸ யாத்ரையின் போது ருத்ரன்‌, உமையுடன்‌ கூடி யிருந்து கை கூப்பி, பகவானைக் குறித்து,-ஸஹஸ்ர சீர்ஷா புருஷஸ்‌ ஸஹஸ்ராக்ஷஸ்‌ ஸஹஸ்ர பாத்‌ ஸஹஸ்ரோதர பாஹுச்ச ஸஹஸ்ராத்மா திவஸ்பதி:….”முதலிய ஸ்லோகங்களால்‌ ஸ்தோத்ரம்‌ செய்ததாலும்‌ புருஷ ஸூக்தம்‌ பேச நின்ற சிவனுக்கு நாயகனான நாராயணனையே சொல்லுகிறதென்று ஸித்திக்கிறது. மோக்ஷதர்மத்தில்‌ முப்பத்து மூன்றாவது’ அத்யாயத்தில்‌ பீஷ்மரை யுதிஷ்டிரன்‌ .-நாராயணம்‌ ஹ்ருஷீகேசம்‌ கோவிந்தம் அபராஜிதம்‌ தத்‌வேந பரத ஸ்ரேஷ்ட்ட, ஸ்ரோதுமிச்ச,ரமி கேஸவம்‌”[பரத குலத்தில்‌ பிறந்தவருள்‌ சிறந்தவரே! ஐயிக்கப்படாதவனும்‌, கோவிந்தன்‌, ஹ்ருஷீகேசன்‌, கேசவன்‌ என்னும்‌ பெயர்களை யுடையவனுமான நாராயணனை உண்மையாக அறிய விரும்புகிறேன்‌-என்று கேட்க,கேசவோ பரத ஸ்ரேஷ்ட்ட, பகவாநீஸ்வர: ப்ரபு: புருஷஸ்‌ ஸர்வமித்யேவ ஸ்ரூயதே பஹுதா விபு : ப்‌ராஹ்மணாநாம்‌ சதம்‌ ஜ்யேஷ்ட,ம்‌ முகாதஸ்யாஸ்‌ ருஜத் ப்ரபு,:”[பரத ஸ்ரேஷ்ட்டனே! ப்ரபுவும்‌, பகவானுமான கேசவனே ஸர்வேசஸ்வரன்‌, ஸர்வ வ்யாபியான அந்தப்‌ புருஷனே எல்லாமென்று பலவிதமாகச்‌ சொல்லப் படுகிறான்‌. ப்ரபுவான இவனே முகத்திலிருந்து உயர்ந்தவர்களான நூறு ப்ராஹ்மணார்களை ஸ்ருஷ்டித்தான்‌.] முதலிய ஸ்லோகங்களாலும்‌ இவ் விஷயம்‌ நன்கு விளக்கப்பட்டது.-ராமாயணத்திலும்‌, பாகவதத்திலும்‌, கீதையிலும்‌, மற்ற புராணங்‌களிலும்‌ புருஷ ஸூக்தம்‌ நாராயணனையே பரமாத்மா வென்று உத்‌கோஷிக்கிற தென்பது சொல்லப்பட்டது. இதைப்‌ பன்னியுரைக்குங்‌கால்‌ பாரதமாம்‌. ஆதலால்‌ இத்துடன்‌ நிறுத்திக் கொள்கிறோம்‌.

கூரத்தாழ்வான்‌ ஸ்ரீவைகுண்ட ஸ்தவத்தில்‌-*யம்‌ பூத பவ்ய பவதீ சமநீ சமாஹு: அந்தஸ் ஸமுத்‌ர நிலயம்‌ யமநந்தரூபம்‌ யஸ்ய த்ரிலோக ஜநநீ மஹிஷீ ச லக்ஷ்மீ: ஸாக்ஷாத்‌ ஸ ஏவ புருஷோஸி ஸஹஸ்ர மூர்த்தா ஸர்வ ஸ்ருதிஷ்வநுக;தம்‌ ஸ்திரம ப்ரகம்ப்பம்‌ நாராயணாஹ் வயத,ரம்‌ த்‌வமிவாந வத்‌யம்‌ ஸூக்தம்‌ து பெளருஷ மசேஷ ஜகத் பவித்ரம்‌ த்வாமுத்தமம்‌ புருஷமீச முதாஜஹார”[முக் காலங்களிலுள்ள வற்றிற்கு ஈசனென்றும்‌, தனக்கொரு ஈசன் இல்லாதவனென்றும்‌, பாற் கடலில்‌ பள்ளி கொண்டவனென்றும்‌,அபரிமிதமான அவதார ரூபங்களை யுடையவனென்றும்‌, மூவுலகிற்கும்‌ தாயாகிய லக்ஷ்மியைப்‌ பத்னியாக வுடையவனென்றும்‌ சொல்லப்‌ பட்ட நீயே ஆயிரம்‌ தலையை யுடைய புருஷனாகிறாய்‌. உன்னைப்‌ போல்‌, எல்லா ஸ்ருதிகளிலும்‌ உத்கோஷிக்கப் பட்டதும்‌, நிலையானதும்‌, அசைக்க முடியாததும்‌, ‘நாராயணம்‌’ என்ற பெயரை யுடையதும்‌, குற்றமற்றதும்‌, உலகை யெல்லாம்‌ புனிதமடையச் செய்வதுமான புருஷ ஸூக்தம்‌, உன்னையே மேலான புருஷனாகவும்‌, ஈஸ்வரனாகவும்‌ சொல்லிற்று.] எனறு புருஷ ஸூக்தத்தின்‌ பெருமையையயும்‌, பொருளையும்‌ ஸங்க்ரஹித்தார்‌.-பெரியவாச்சான்பிள்ளையும்‌ திருவாய்‌ மொழி வியாக்யானத்தின்‌ கடைசியில்‌ ”ஸ்ரீமானான நாராயணானே ப்ராப்யமும்‌ ப்ராபகமும்‌ என்று இவர்க்குப்‌ பஷமென்னுமிடம்‌ தோற்றிற்று. இவ்வர்த்தம்‌ உபநிஷத்‌ ப்ரஸித்தமும்‌;-அநந்ய பரமான நாராயண அநுவாகத்திலே, நாராயண சப்தத்தாலே ஸர்வாதிகனைச் சொல்லி, ‘ஹ்ரீச்ச தே லக்ஷமீச்ச பத்ந்யெள’*? என்று உத்தர நாராயணத்தே சொல்லிற்று” என்று அருளிச் செய்தார்‌.

இந்தப்‌ புருஷ ஸூக்தத்தில்‌, ஸ்ரீ பூமி நாதனான நாராயணனே பராத் பரனென்றும்‌, அவனே நான்முகளைப்‌ படைத்தானென்றும்‌,அவனே ஸர்வ காரண பூதனென்றும்‌, ஸர்வாந்தர்யாமி யென்றும்‌, லோக ஸம்ரக்ஷணார்த்தம்‌ பல அவதாரங்களைச்‌ செய்தானென்றும்‌, நித்ய விபூதி நாயகனென்றும்‌ நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. புருஷ ஸூக்தம்‌ என்னும்‌ பெயரிலிருந்தே ஸ்தோதாவாகிய ஜிவாத்மா உண்டென்றும்‌, ஸ்தவ ப்ரியனாகிய மஹா புருஷன்‌ உண்டென்றும்‌, ஸ்தோத்ரமும்‌ உண்‌மை யென்றும்‌ உணர்த்தப்படுகிறது. ஜ்ஞாதா, ஜ்ஜேயம்‌, ஜ்ஞானம்‌ என்னும்‌ மூன்று இல்லை என்று சொல்லும்‌ அத்வைத வாதம்‌ இங்கு ஓப்புக் கொள்ளப் படவில்லை. உலகம்‌ பொய்‌ யென்கிற ப்ரம வாதத்திற்கு, இங்கு விவரமாகச்‌ சொல்லப்பட்ட ஸ்ருஷ்டி க்ரமத்தில்‌ இடமுண்டோ? பரம புருஷனுக்கு ஆயிரம்‌ கண்‌கள்‌, ஆயிரம்‌ தலைகள்‌ என்றும்‌, ஆதித்ய வர்ணமானவனென்றும்‌, நக்ஷத்ரங்கள் போல்‌ உருவமுடையவனென்றும்‌, அச்வினீ தேவர்கள்‌ போல்‌ அழகானவனென்றும்‌ சொல்லப்பட்டதால்‌ ரூபமில்லை என்னும்‌ வாதம்‌ வீண் வாதமென்று விளங்குகிறது. “சேதனர்கள்‌, நித்யர்‌,முக்தர்‌, பத்தர்‌ என்று மூன்று விதமானவர்களென்றும்‌, மோக்ஷத்தைக்‌ கொடுப்பவன்‌ முகுந்தவனே என்றும்‌ காட்டப்படுகிறது. காலமும்‌ வருங்காலம்‌, நிகழ்காலம்‌, கழிகாலம்‌ என்னும்‌ மூன்று பேதத்தை உடையதென்று தெரிகிறது. புருஷோத்தமனுடைய மஹிமை வாக்குக்‌கும்‌ மனத்திற்கும்‌ எட்டாததென்று அறிவிக்கப்படுகிறது. புருஷோத்தமன்‌ ஸமஸ்த கல்யாண குணங்கள்‌ நிறைந்தவனென்றும்‌, ஹேய குணம்‌ சிறிதும்‌ இல்லாதவனென்றும்‌, ஸுலபமாக ஆராதிக்கத்‌ தக்கவனென்றும்‌ உத்கோஷிக்கப்பட்ட திலிருந்து குண மில்லை என்‌னும்‌ கட்சிக்குக்‌ கொஞ்சமும்‌ இடமில்லை. ப்ரக்ருதிக்கு அப்பாற்‌ பட்டதும்‌, “விஷ்ணோர்‌ யத்‌ பரமம்‌ பதம்‌” என்றும் சொல்லப்பட்டதுமான ஸ்தான விசேஷம்‌ இருக்கிறதென்றும்‌, அதை அடைவதே மோக்ஷமென்றும்‌ விரித்துரைக்கப் பட்டிருக்கிறது. பகவத்‌ கைங்கர்‌யமே பரம புருஷார்த்தமென்றும்‌ அதுவும்‌ இருவருமான சேர்த்தியில்‌ செய்யப் படவேண்டும்‌ என்றும்‌ சொல்லும்‌ ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்‌தம்‌ ஓப்புக் கொள்ளப் பட்டிருக்கிறது. விசிஷ்டாத்வைதமே, வேதாந்‌தத்தின்‌ விழுப்பொருள்‌ என்னும்‌ ஸித்தாந்தம்‌ ஸ்தாபிக்கப்பட்டது.

———————

வேதேஷீ புருஷ ஸூ க்தம். தர்ம ஸாஸ்திரேஷு மாணவம். பாரதே பகவத்கீதா புராணே ஷீ வைஷ்ணவம். பூர்வ அனுபாகம் உத்திர அனுபாகம் என இருபாகங்கள் கொண்டது புருஷ ஸூக்தம் ச்ருத்வா தர்மாத சேஷேண பாவ நா நிச ஸர்வ ச: யுதிஷ்டிர: சாந்த நவம் புநரேவாப்ப பாஷத !! என விஷ்ணு ஸஹஸ்ரநாமம் கூறுவது சிறந்த தர்மம், பல கேள்விக் கணைகளை யுதிஷ்டிரர் தொடுக்க பீஷ்மர் பதிலளிக்கிறார். ஹரி ப்ரபு கேசவன் யார? ஈஸ்வரன் யார் ? என்றால் பகவான் ஈஸ்வரன் ப்ரபு புருஷன் சப்தத்தின் விளக்கம் என்றால் அது நாராயணன் என்ற ஒரு வ்யக்தியையே குறிக்கும்.

கேசவன் என்றால் ஒரு தனி மனிதனை குறிக்கும். புருஷ ஸர்வ வக்தேவ : ஒளபசாரிகம் என்பது உபச்சார வார்த்தை அது ப- ஞான பல, க. ஐஸ்வர்ய வீர்ய, க – சக்தி தேஜஸ் (பகவான்) இந்த 6குணங்களில் ஒன்று இருந்தாலும் அது வால்மீகிக்கு இருந்தால் வால்மீகி பகவான் என்றும் வ்யாசருக்கு இருந்தால் ல்யாச பகவான் என்றும் உபச்சாரமாய் சொல்வது வழக்கம் என்பதை லெளி கீ க திருஷ்டாந் தத்துடன் அழகாய் விளக்கினார். புருஷ: ஈஸ்வர: என்பது நியமன சாமர்த்தியம் உள்ளவர். நாராயண பரப்ரஹ்ம : தத்வம் நாராயண பர: நாராயண பரஞ்ஜோதி ஆத்ம நாராயணோ பர: என்றால் தன்னைக் காட்டிலும் சமமானவரோ மேம்பட்டவரோ கிடையாது என்று அர்த்தம். எந்த வேதாந்தியைக் கேட்டாலும் புருஷ : என்ற சபதம் ஒருவர் மட்டுமே குறிக்கும் என்பர். அது புருஷோத்தமனான ஸ்ரீமன் நாராயணன் ஒருவரே. ஏனையவர்கள் அனைவரும் பெண்களே .

பெண்கள் ஆழ்வார்களில் ஆண்டாள் போல் பெண் உடுப்பு உடுத்தி ஸ்தீரித்தவத்துடன் இருப்பர். ஆண்கள் – ஆண் வேடம் கொண்ட அவர்களும் பெண்களே . பெருமான் ஒருவரே புருஷோத்தமன். புரு பஹீ சமமா இதி புருஷ: கையேநீண்டு போகும் அளவிற்கு நிறைய கொடுக்கிறார் வாங்குபவர்களுக்கு பெற்று பெற்று கைவலிக்கும். புருஷர்களில் பக்தாத்மா , முக்தாத்மா நித்யாத்மா என மூன்று வகையினர். புருஷோத்தமர் இவர்கள் அனைவரையும் விட உயர்ந்தவர். போக மோக்ஷ ப்ரதானமாய் இருப்பர். இவ்வுலக போகத்தையும் அவ்வுலக வைகுண்டத்தில் மோக்ஷத்தையும் கொடுக்க வல்லவராய் மோக்ஷ பிரதாரராய் இருப்பர். இந்த லீலா விபூதியில் எல்லா லீலைகளையும் விளையாட்டாய் செய்பவர், நித்ய வீபூதியான வைகுண்டத்தில் நாம் நித்ய கைங்கர்யம் அவருக்கு செய்வோம். புருஷ ஸூக்தம் ஜபித்தால் அந்த ஜனார்த்தனனான நாராயணன் மோக்ஷம் கொடுப்பார். புருஷஸூக்தம் எந்த ஒரு நிமித்தத்திற்கும் சொல்லலாம். அதற்கு உண்டான பலனைக் கொடுக்கும். புருஷ ஸூக்தம் ஸர்வ பாப விநாசனம். தேவதாந்திரங்களை ப்ரதக்ஷணம் செய்தால் அந்தந்த பலனை சுலபத்தில் கொடுத்து விடுவார்கள். ஆனால் நாராயணனை ப்ரதக்ஷணம் செய்தால் சுலபத்தில் மோக்ஷத்தை கொடுக்க மாட்டார், நமக்கு அதற்காத தகுதி இருக்கிறதா என்பதை பார்த்து கொடுப்பார். ஸர்வ பல ப்ரயோகி விஷ்ணு: ஒருவன் காசுக்கு ஆசைப்பட்டு ஒரு ப்ராமணனை அடித்து கொன்றால் கூட அவன் புருஷ ஸூக்தம் கூறினால் அந்த பாபத்திலிருந்து விடுதலை பெற்றவனாகிறான். ஹரிஹரிதி பாபானி ஹரி என்ற திருநாமமே பாபத்தை போக்கவல்லது. இதன் அடியாய் கண்ணன் வெண்ணெய் திருடும் போது அந்தந்த ஆயர் பெண்கள் உள்ளத்தையும் திருடுவதாக அந்த பெண்களின் தாயார் கண்ணன் மேல் புகார் கூற கண்ணன் அந்த ஆயர் பெண்கள் வீட்டுப் பக்கம் கூட தலைவைத்து படுக்காமல் இருக்க திரும்ப அந்த பெண்களின் தாயார் யசோதையிடம் கண்ணன் வந்து விட்டு போகட்டும் என்று கூறினாள். அவர் வெண்ணெயை திருடும் போது நம் பாபங்களையும் சேர்த்து திருடிக் கொண்டு போவார். குருவிடமோ குருபத்தினியிடமோ அப்ச்சாரம் பட்டால் கூட புருஷ ஸூக்தம் கூறினால் அந்த பாபம் நீங்கும். தினம் ஒரு ப்ரச்சனம் பஞ்சாதி வேதத்திலிருந்து சொல்வது பாபம் தீரும். பஞ்ச மஹா யக்ஞங்கள் செய்தாலும் நம் பாபங்கள் நீங்கும்

அம்ருதம் என்று சொல்லும் ஸ்ரீவைகுண்டத்தில் ஈஸ்வரனாய் இருக்கிறார். ஸ்லோகம் தொடர்கிறது. அன்னத்தால் மறைக்கப்படவில்லை. அன்னம் இல்லாமல் ப்ரஹ்மா இருக்க மாட்டார். மழை இருந்தால் தான் அன்னமே வளரும். நாம் அன்னத்தை அளவோடு சாப்பிடனும். இல்லை என்றால் அன்னம் நம்மை சாப்பிட்டு விடும். சாத்வீகமான உணவை வாழ்வதற்காக சாப்பிடனும். அன்னத்தை நிறைய விளைவிக்கனும். அன்னத்தை பரிசேஷனம் பண்ணி எல்லோருக்கும் கொடுக்கனும். ஏதாவா நஸ்ய மஹிமா | எல்லா காலத்திலும் எல்லா இடங்களிலும் எல்லா பொருட்களிலும் (ஸர்வதேச ஸர்வகால ஸர்வவஸ்து) வியாபிக்கிறார். பூத பவ்ய பவது ப்ரபு: முக்காலத்திலும் இருக்கும் அனைவருக்கும் அவரே ப்ரபு. ப்ரஹ்ம ஸ்வரூபம் என்றாலே விபு நீக்கமற எங்கும் நிறைந்திருக்கார் . ஏதாவா நஸ்ய மஹிமா ! அனைத்திலும் இவர் மஹிமை. அனந்தம் -என்று எப்படி அடையாளம் சொல்வது. எதுவுமே தெரியாததிலிருந்து தெரியாததை கழித்தால் எப்படி தெரிந்த ஒரு எண்ணிக்கை வரும்? இந்த கணக்குக்கே இப்படி என்றால் அவர் பரப்ருஹ்மம் எவ்வளவு பெரியவராக அளவிட முடியாதபடி இருப்பார்? எல்லாவற்றைக் காட்டிலும் ஜ்யாயா புருஷ: உயர்ந்தவர். தனக்கு ஒக்கார் மிக்கார் இல்லாத மாமாயா என ஒப்பில்லாத அப்பனாய் உப்பிலி அப்பனாய் கும்பகோணம் அருகே தரிசனம் கொடுக்கிறார். ஸர்வக்ஞன். அவர் பெருமை என எது உள்ளதோ அதை தெரிந்து கொள்பவனே ஞானி. இல்லாததை யாரும் அறிய முடியாது. ஆகாயதாமரை குதிரை கொம்பு போன்ற இல்லாததை ஒருவன் அறிந்தேன் என்றால் அவன் மூடன். தெரியாததை தெரியாது என்று சொன்னால் தான் ஞானி பெருமான் வைபவத்திற்கு எல்லை உண்டா? அவர் ஸர்வக்ஞத்திற்கு எந்த குறையும் இல்லை

பாதோஸ்ய விஸ்வா பதா நி | திருப்பாதம் என்றால் முதல் 2 வரி அர்த்தம். பின் கால்கள் பிரிந்து 2 பாதம் ஆகிறது. இது போல் 3 மடங்கு பெரிதாக இருப்பது வைகுண்டம். 1/4 பங்கு பூமி என்றால் 3/4 பங்கு வைகுண்டம். அமிர்த – ம்ருதம் மரணம் இல்லை. எது மரணத்திற்கு நேர் எதிரோ அதுவே அ மிர்தம் . இச்சுவை தவிர யான் போய் அச்சுவை பெரிதும் வேண்டேன் என தொண்டரடி பொடி ஆழ்வார் கூறியது போல். கனி கட்டி கரும்பு தேன் அமுதம் எல்லாம் பரப்ருஹ்மேதான். அயுத அம்சே. 1000 ல் ஒரு மடங்கு. அதை 1000 ஆக பிரித்தால் அதி ல்ஒருமடங்கு . அதில் ஒரு பங்கு விஸ்வசக்தி முழுவதும் . விஸ்வத்தையே ஒரு மயிர் கல்லால் நான் தாங்குகிறேன் அர்ஜுனா என்கிறார். அங்கு வைகுண்டம் போனவன் திரும்பி வருவதில்லை.

வாஸூ தேவனான எம்பெருமான் 3 ஆக தன்னை ஆக்கிக் கொள்கிறார். சங்கர்ஷண ப்ரத்யும்னன் அநிருத்தன 3 ஆக பிரிந்து ஒவ்வொருவரும் முறையே ஞான பல , ஐஸ்வர்ய வீர்ய, சக்தி தேஜஸ் என்ற கல்யாண குணங்கள் கொண்டவர். பின் அநிருத்த நாராயணன் பிறக்கிறான். அநிருத்தன் இடத்திலிருந்து எல்லா அவதாரங்களும் உண்டாகிறது . ஹிரண்ய கசிபுவை அழிக்க நரசிம்மனாக ஹிரண்யாக்ஷகளை அழிக்க வராஹ அவதாரம் . இங்கனம் 4 பக்கங்களிலும் எல்லா இடத்திலும் பரவின. ராமராய் த்ரேதாயுகத்தில் அவதரித்தவர் அர்ச்சாமூர்த்தி ராம விக்ரஹமாய் கலியுகத்தில் அவதரித்தார். கண்ணனாய் த்வாபரயுகத்தில் அவதரித்தவர். கண்ணன் விக்ரஹமாய் அர்ச்சாவதாரத்தில் அவதரிக்கிறார். ஸாது பரித்ராணம். துஷ்ட விநாசனம். சாப்பிடக்கூடியது. சாப்பிட முடியாத பதார்த்தங்கள். எல்லாவற்றையும் ரக்ஷிக்க தான் பிறந்தார். பெரிய அண்ட கடாகம் படைக்கிறார். ஒவ்வொன்றுக்குள்ளும் நான்முக ப்ரஹ்மாவை படைக்கிறார். ப்ரஹ்மாவை படைக்கும் பூவில் நான்முகனை படைத்த தேவன் ஒன்று சமஷ்டி சிருஷ்டி வரை பரப்ருஹ்மம் படைக்கிறார். . அதாவது மூலப்ரக்ருதி தொடங்கி அகங்காரம் உருவாகி, கர் மேந்திரியங்கள் , ஞானேந்திரியங்கள் அண்டம் வரை உருவாக்குதல். அதன் பின் வ்யக்தி சிருஷ்டி நான்முக ப்ரஹ்மா படைக்கிறார். விராம அண்டம் பிறந்து அதற்குள் சதுர்முக ப்ரஹ்மா இருக்கிறார். 4 புறமும் வியாபிக்க ஆரம்பிக்கிறார்.

பஹுஸ்யாம் ப்ரஜாயேனை நான் பல படிகளாக ஆகக் கட வேன் என பரப்ருஹ்மம் சங்கல்பிக்கிறார். ப்ரஹ்மம் தான் தன் திருமேனியை மாறுதலுக்கு உட்படுத்துகிறார். நான் முக ப்ரஹ்மாவை படைத்து இனிநீ பார்த்துக் கொள் . வேதத்திற்கும் ஒரு சம்பந்தமான எது அறிவது எனில் வேத புத்தகம், சப்தம், ஆனுகுலி மட்டும் மாறாது. உச்சாரணம் அணு உச்சாரணம் பிரஹ்மாவிற்கு சொல்லிக் கொடுக்கிறார். ஞானம் சக்தி 4 புறமும் பரவி நான் எல்லாமுமாக ஆகப்போகிறேன் என ப் ரஹ்மம் சங்கல்பம் எடுத்துக் கொள்கிறார். அதற்கிடையில் சதுர்முக ப்ரஹ்மாவை படைக்கிறார். எல்லா நித்யர்களும் சேர்ந்து ஒரு யாகம் பாண்ணுவார்கள். ஹோம குண்டம், நெய், அவிஸ் இருக்காது. நெருப்பு சமித்து உண்டு. 4 முக ப்ரஹ்மாவையே அவிஸ்ஸாக வைத்து ஹோமம் செய்கிறார். யூபஸ்தம்பம் – ப்ரக்ருதி இதை வைத்து ஜகத்தை படைத்தாகனும். அந்த ப்ரக்ருதியிலே நான்முக ப்ரஹ்மாவை கட்டி வைத்தார்கள். அவரை வைத்துக் கொண்ட மேற்கொண்டு சிருஷ்டி ஆரம்பிக்கும். அந்த நித்யசூரிகள் யக்ஞம் பண்ண ஆரம்பித்தார்கள். இந்த யாகத்திற்கு நெய் – வசந்தருது. கிரீஷ்ம ருது – இக்மம் சமித்து ஆயிற்று. சரத் ஹவி: ப்ரோமாசமாய் கொண்டார்கள். அதோடு பரிதி என 7 பரிதிகள் – முன்னாடி ஹோமம், நெய் சேர்க்கும் பாத்திரம், நாம் பார்ப்பது கிழக்கு பக்கத்தில், அதற்கு முன் அக்னி ஹோமகுண்டம் வைக்கனும். ஆக இவனுக்கு புரியாது. ஆஸப்யாம் என்றால் ஆசமனம் பாராயணம் பண்ணனும் 3 பக்கம் முன்னாடி அக்னி குண்டம் இருக்கு. தெற்கு மேற்கு வடக்கு நெய் பாத்திரம் சூரியன் எப்போதும் கிழக்கு சூரியன் ஒன்று சேர்த்தால் சப்த 7 பகுதிகள். அதற்குரிய சமித்து சேர்த்து கொடுத்தால் பஞ்சபூதங்கள் – 5. பஞ்ச தன்மாத்திரம் – கண்காது மூக்கு நாக்கு போன்ற பஞ்சகர்மேந்திரியங்கள் பஞ்ச ஞானேந்திரியங்கள மனஸ் – 1 இதையே சமித்து. அப்போதுதான் சிருஷ்டியே வரும்.

அந்த 7 சக்திக்கு இந்த 3 பக்கம். அங்கு நித்ய ஸூரிகள் எல்லாம் யக்ஞம் பண்ணுவார்கள். 1000 யுக் கோடி ஸஹஸ்ராணி 1000 தடவை ப்ரஹ்மாவும் ஜீவாத்மா. பிறவி எடுத்திருக்கிறார். ந கிம் அவிஸ் சொல்லப்பட்டதே உலகத்தில் தலைவர். இனி முதல் பிறந்தவராவர். பசூ குஸ் தாகுச்சக்ரே வாயவ்யாந்! தேவர்கள் நித்ய ஸூரிகள் ரிஷிகள் முக்தாத்மாக்கள் நமக்கு முக்தி அடைந்து வைகுண்டம் போனால் நமக்கும் படைக்கும் சக்தி உள்ளதாம். அங்கு போனால் உறவே நினைவிற்கு வராது. ஒருவேளை என் தாத்தா யாரோ ஒருத்தர் மோக்ஷம் போகலை என்றால் நான் அவரை பார்க்கனும் என்று ஆசைப்பட்டாலும் சங்கல்ப சக்தியாலே பார்க்க முடியும்.

நித்ய ஸூரிக்கும் முக்தாத்மாவிற்கும் படைக்கும் சக்தி உள்ளது. வியாசர் கூறுகிறார் சக்தி உண்டு. ஜகத் வ்யாபார வஜ்யம். ஸதா பஸ்யந்தி ஸூர: என ப்ரஹ்மத்தையே அனுபவிப்பர். தேவதேவர்கள் யக்ஞம் பண்ணுகிறார்கள். இப்படி எல்லாம் ஆக்ருதியாய் ஒன்றுக்கொன்று யக்ஞம் நடக்கிறது. தயிரும் நெய்யும் சேர்ந்து உருவாகிறது. சிருஷ்டிக்கு வேண்டிய வீர்ய சக்தி உருவாகிறது. ப்ரக்ருதி பரமாத்மா அதற்கு வேண்டிய வீர்யசக்தி உருவாகும். விலங்கினங்கள் காட்டில் இருப்பது நாட்டில் இருப்பது என பகுதிவாரியாய் படைக்கிறார். அசைவ உணவு கூடாது . வரும்போது விமானநிலையத்தில் இங்கு புகைபிடிக்கலாம் என்ற ஒரு இடத்தை ஒதுக்கியிருக்கிறார்கள். மாவால் செய்யப்பட்ட பசுதான் ஆகிருதிக்கு உகந்தது. ஆரண்ய க்ரமம். காட்டு நாட்டு மக்களை படைத்தல். ரிக், சாமவேதம் பிறந்தது. காயத்ரி முதலான மந்திரங்கள் பிறந்தது. குதிரைகள் படைக்கப்பட்டன. ஏகேச உபாயாத: ஒரு பக்கம் மட்டும் பல் இருப்பது – பசு. 2 பக்கமும் பல் இருப்பது கழுதை இதன் கழுத்து அசைபோடுவதே வித்யாசமாய் தெரியும். பசுமாடு கோமாதா இதில் வெண்ணெய், நெய் பகவான் பூஜைக்கு உகந்தது. அந்த பசுமாட்டிற்கு ஆராதனைக்கு வேண்டிய பொருட்கள் பிறந்தன. மனிதர்களை ஒரே மாதிரி படைத்தல்.

ப்ரஹ்மத்தின் முகத்திலிருந்து ப்ராமணர் தோன்றினார். அவரின் தோள்களில் இருந்து ஷத்ரியர். அவர் தொடையிலிருந்து வைச்யன் பிறக்கிறான். காலால் நடந்து நடந்து போவது 4வது வர்ணத்தவர்கள். , முகத்தில் பிறந்த பிராமணர்கள் வேதம் ஓதுவார்கள். தோளில் பிறந்த ஷத்ரியர்கள் வில் வித்தை புரியும் வலிமை கொண்டவர்கள். வைசியன் தொடையில் வலிமை அமர்ந்து அமர்ந்து வியாபாரம் செய்வான். ஓடி ஓடி காலால் நடந்து உழைப்பது 4 வது வர்ணத்தவர்கள். சந்திரமா மனசோ ஜாயத: சந்திரன் போன்ற குளிர்ச்சி உடைய மனசை படைக்கிறார். நாள் முழுக்க வெப்பம் இருந்தாலும் சந்திரனை பார்த்தால் குளிர்ந்து விடும். ப்ரஹ்மாவின் மனதிலிருந்தே சந்திரன் பிறந்தான். பௌர்ணமி அன்று கடல் ஆர்ப்பரிக்கும். மனசும் பௌர்ணமி என்று ஆர்ப்பரிக்கும். சூரியன் பிறந்தார் என்றால் வெளிச்சம். வெளிச்சம் என்றால் ஞானம்

எம்பெருமான் கண்ணிலிருந்து சூரியன் பிறந்தார். பெருமான் வாயிலிருந்து இந்திரனும் அக்னியும் பிறந்தார்கள். ப்ராணத்திலிருந்து விமான, உதான அபான போன்ற 5 வாயுக்கள் பிறந்தன. நாப்பியா ஆஸீ தந்தரிக்ஷம் சீர்ஷ்ணோத்தெள ஸமவர்த்தத ! தலையிலிருந்து ஸ்வர்க்கம் பிறந்தது. பக்த்யாமி பூமி: பத்ப்யாம் பூமிர்திச : ச்ரோத்ராத் ! காதுகளிலிருந்து திக்கு கேட்கும். ததாலோகாகும் அகல் பயந் !! இப்படி உலகம் படைத்ததின் மேலே ஏழுலோகம் கீழே ஏழு லோகம், அவர் அவர்களை அந்தந்த லோகத்திற்கு அனுப்பினர். வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ! இந்த ராமலக்ஷ்மணரை கூட்டிக் கொண்டு போக விஸ்வாமித்திரர் வரும் போது தசரதன் அனுப்ப மாட்டேன் என்கிறார். நீ பொய் சத்யம் போட்டு இருக்கிறாய். நீ நன்றாக இரு என விஷமத்துடன் கூறினார் விசுவாமித்திரர். பின் வசிஷ்டர் தசரதனை தேற்றி சீதா கல்யாணம் பண்ணி வைக்க உன் பிள்ளை போகனும். உன் பிள்ளையின் நலனுக்குத்தான் கூட்டிக் கொண்டு போகிறார் என சமாதானம் சொன்னபின் சம்மதித்தார். அஹம் வேத்மி மஹாத்மானம் ஸத்ய பராக்ரம : இதையே வால்மீகி ராமாயணத்தில் வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே | வேத: ப் ராசேதஸா தாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா!! அந்த வேதமே ராமாயணமாய் வடிவெடுத்தது. ஸத்ய பராக்ரம: மஹா பெருமை வாய்ந்தவர். விப்ரலோகம்

இதுவோ அதுவோ சந்தேகித்தால் அது ஐயம். தப்பாக முடிவு பண்ணினால் திரிபு. இந்த ஐயம் திரிபு இரண்டும் வேதத்திற்கு கிடையாது. ஒரு புருஷன் வாக்கில் வேதம் வரவில்லை. வேதம் அபௌருஷ்யம். அநாதி. சூர்ய மண்டல மத்யவர்த்தி நாராயணன். ஒரு கோடி சூரியனை எரித்தாலும் ப்ரஹ்மம் முன் அது இருட்டி விடும். தமஸ: பரஸ்தாத் தமஸீ சொல்லப்படும் மூல ப்ரக்ரு தியை தாண்டி நிற்கும். . வேதத்தில் எளிமை சொல்லப்படுகிறது. இந்த ப்ரஹ்மத்தை கையால் காலால் தெரிந்து கொள்ள முடியாது. ஸூத்தமன ஸால் தான் தெரிந்து கொள்ள முடியும். ஆதித்யவர்ணம் தமஸஸ்து பாரே! ராவணன் மாண்டபின் மந்தோதரி ராமனைப் பார்த்து சொல்கிறாள். தமஸ்ஸை காட்டிலும் உயர்ந்தவராய் சங்கு சக்ரம் பிடித்துக் கொண்டு இருக்கிறார் என்றாள். மொத்தத்தையும் தாங்குகிறார். தாண்டுகிறார். எல்லாவற்றிற்கும் பெயர் கொடுக்கிறார். அந்த பொருள் அவர் உச்சரித்தால் தான் அந்த பொருள் அந்த பொருளாய் விளங்கும். வேதத்திலிருந்து வந்தது வைதீக சொல். நாமா கிருத்வா அபவதந் யதாஸ்தே!! எல்லாவற்றையும் படைத்து அதன் உள் புகுந்தார். நான். ப்ரஹ்மத்தை தெரிந்தேன் என்றால் ஐயத்திற்கும் திரிவு ற்கும் வாய்ப்பே இருக்காது. இது இது இந்த சொல் இந்தப் பொருளை குறிக்கும். அப்படி இல்லையென்றால் சிறகு ஓடிந்த பறவை போல் கிடந்து இருப்போம். கட்கண்ணால் காண முடியாததை ஞானக்கண்ணால் தான் பார்க்க முடியும். மொத்தம் 8 திக்கு கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு, வடகிழக்கு தென்கிழக்கு வடமேற்கு தென்மேற்கு .8 திக்பாலர்களும் தியானிப்பார்கள் எல்லாவற்றையும் படைத்து படைத்தற்குள் தானே புகுகிறார். இவர் அருமை பெருமை ஸர்வவியாபகர். ஸர்வ அந்தராத்மா .தமேவம் வித்வா – இதை அறிபவன் இந்த பிறவியில் கடைசியிலே முக்தி பெற்று விடுவான். ஞானம் கலந்த பக்தியை தவிர். ஞானம் அன்பு கலந்தால் உபாசனம். ஆகிவிடும். யக்கம் தானம் பட்டினி கிடந்து போகலாமா என்றால் ஒன்றுமே முடியாது .

வேதத்தை அதன் அங்கமாய் உப அங்கமாய் சொல்லும் பெருமை வாய்ந்தது இந்த புருஷ ஸூக்தம். இந்த புருஷஸூக்தத்தை கூறியவுடன் கை மேல் பலன் கிட்டும். ஸப்தத்தின் படி பாரத்தோமானால் நாராயணன் பெருமை இனிமை. பிராயச்சித்த மாய் சொன்னால் தீமை விலகுகிறது. ஸூக்தம் – புருஷ ஸூக்தம் நன்றாக சொல்லப்பட்டு ஸத்தாய் நன்றாக ஸ்தோத்திரம் பண்ணப்பட்டது. உண்மையை உள்ளது உள்ளபடியே சொல்லும் ஸ்தோத்திரம். பெருமானுக்கு , இல்லாதது என்று ஒன்று இல்லை. அவருக்கு இருப்பதை சொல்ல நமக்கு நாக்கு பத்தாது. வேதத்தின் சாரமே நன்கு சொல்லப்பட்டதால் புருஷஸூக்தத்தை சொன்னால் பெருமாள் கொடுத்துக் கொண்டே இருப்பார்.

பு – புரம் – பட்டணம் ஆத்மா பரமாத்மா ஹ்ருதயம் என புரத்தில் படுத்துக் கொண்டு இருக்கிற படியால் புருஷன். பெருமாள் தான் உள்ளிருந்து மனசாட்சி போல் பேசுகிறார். ஜீவாத்மா வழிகாட்ட உள்ளேயே உட்கார்ந்து இருக்கிறார். உயிர்பிரியும் தருவாயில் மோக்ஷம்கிட்ட 101 வது நாடியான ஸீ ஷூம்னா நாடி வழியாக போகனும். அந்த இருட்டறைக்குள் பெருமான் ப்ரகாசிக்க அந்த ஒளியில் அந்த 101 வது நாடி கண்ணிற்கு தெரிந்து அதன் மூலம் போவோம். ஆக அந்த திருமேனி வெளிச்சத்தில் 101 நாடி தெரிந்து போவோம். அத்ய திஷ்டத் தசாங்குலம்!! எம்பெருமான் ஸர்வ வியாபி எல்லா இடத்திலும் எங்கும் வியாபித்து இருக்கிறார் என என்னும் போதே நகர்வது செல்வது இல்லை என ஆயிற்று . ஆயிரம் ஆயிரம் கண்கள் ஆயிரம் ஆயிரம் சதுர்புஜம் எண்ணிறந்த தோள்கள். இதுதான் விஸ்வரூபத்தின் போது 11வது அத்யாயத்தில் தத்ரை கஸ்தம் ஜகத்ருத்ஸ்தம் …..என்ற ஸ்லோகப்படி ஜகத் அனைத்தும் ஒரே இடத்தில் இருப்பதைக் கண்டான். 1000 தலை என்றால் அதற்கு தகுந்த திருமேனி . கண்காது மூக்கு நாக்கு எல்லாம் ஞானத்திற்கு துவாரம். நினைவிற்கு வேண்டிய ஊற்றுவாய் ஹ்ருதயத்திற்குள் இருக்கிறது.

அறிவு என்றாலே ப்ரத்யக்ஷ ஞானம் தானே ஞானத்திற்கு வேண்டிய இருதயத்தை சொல்லி ஸர்வக்ஞன். ஸர்வவிது. ஸர்வஸக்தி படைத்தவன். எதைப் பற்றியும் விஸ்தாரமாகவும் ஆழமாகவும் தெரிந்து வைத்திருப்பவர். ஆயிரம் ஆயிரம் திருவடிகள் கொண்டவர் என்றால் கர்மேந்திரியங்களால் காலால் நடக்கனும். கையால் தூக்கனும். பாணி பாத வாயு உபஸ்தம். இது எல்லாம் கர்மம். அதன் செயல் ஸர்வசக்தி உள்ளவர்.எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருப்பது வ்யாபகம். எது நிறையப்பட்டு இருக்கிறதோ அது வ்யாப்யம் என்பதை லௌகீக திருஷ்டாந்தத்துடன் அழகாய் விளக்கினார். விஷ்ணு என்றாலே எல்லா இடத்திலும் வியாபித்தவர். அத்ய திஷ்டத் தசாங்குலம் – 10 அங்குலம் தாண்டி நிற்கிறார் என்றால் எங்கும் வியாபித்து ஸர்வகதன் விஷ்ணு: அவர் இருந்தால் தான் ஒரு வஸ்து சத்தை பெறுகிறது. அதற்கு சத்பாவம் கிட்டும். ஒரு ஜீவனுக்குள் அனுப்ரவேசம் (உட்புகுந்து) பண்ணுகிறார் என்றால் அந்த பொருள் சத்தை பெற்றதாய் அர்த்தம். ப்ரஹ்மம் உள்ளே இருந்தால் தான் சத்பாவமே. அதீத ஞானம் அதீத சக்தி உடையவர். ரொம்ப பெரியவர் . நம் சக்திக்கு அப்பாற்பட்டவர். புருஷம் ஏவே தகும் ஸர்வம்… யத்பூதம் யச்ச பவ்யம் | . முதலில் சொன்னது ஸர்வதேச வ்யாப்தி அடுத்து இப்போது ஸர்வகால வ்யாப்தி. எப்போதும் எங்கும் நிறைந்திருக்கும் பூதம் இறந்த காலத்தில் பவ்யம் வரும் காலத்தில் அந்த புருஷன் நாராயண பரமாத்மாவே இதம் ஸர்வம் எல்லா வற்றிலும் அவர் தான் காரணமாய் வியாபித்து இருக்கிறார். காரணப்பெயர் பொருளைக் கொண்டே காரிய பொருளை பார்க்கலாம். இதற்கு சான்றாய் நூல் வேஷ்டி தங்க செயின். போன்றவை. இது எல்லாவற்றிலும் ப்ரஹ்மம் காரணமாய் இருக்க அனைத்தும் அவர் காரியமாய் இருக்கிறது. யத்பூதம் யச்ச பவ்யம். வருங்காலம் பூதகாலம் எனக் கூறும் போதே நிகழ்காலம் – வர்த்தமான காலம் என்பது தானே வருகிறது. எல்லா காலத்திலும் வியாபித்து இருக்கிறார்.

எந்த முயற்சி எடுத்தாலும் நாம் ப்ரஹ்மத்தை தெரிந்து கொள்ள முடியாது அவரே தன்னை கருணனையுடன் காட்டினால் ஒழிய தெரிந்து கொள்ள முடியாது. அவருடைய ரூபம் அவருக்காக அல்ல. நமக்காக . சந்யாஸ ஸ்வாமிக்கு பூரண கும்பம் கொடுப்போம். இவை அனைத்தையும் விட்டு அவர் திருவடிகளை பற்றுவதே ஒரே வழி இந்த உண்மை ஞானத்தை யார் உணர்கிறாரோ அவர் ஸ்ரீவைகுண்டத்தை அடைந்து விடுகிறார். முதலில் தண்ணீரை படைத்து அதிலேயே படுத்துக் கொள்கிறார் பெரிய நீர் படைத்து அதை உடைத்து பாற்கடல் கடைந்து கடலை அடைத்து அணைத்து விடுகிறார். உடைத்தது தனுஷ்கோடி தன் வில்லின் ஒரு முறையால் மூடி போக்குவரத்திற்கு பயன்படாதபடி பண்ணி விடுகிறார். அவர் எல்லாவற்றையும் தரித்து விட்டு பின் வியாபிக்கிறார். படைக்கப்பட்ட வஸ்துக்கள் சேஷன். யாருக்கு அடிமைப் படனும். உள்ளும் புறமும் நிறைந்திருக்க படியால் அவர் தான் எனக்கு சேக்ஷி நான் உனக்கு பழவடியேன். படைத்து வியாபித்து அனைத்தையும் தாங்குகிறார். மோக்ஷம் போக வழியை மீண்டும் ஒரு முறை சொல்லிற்று எந்த பொருளை உற்பத்தி பண்ணினாலும் உற்பத்தி பண்ணியவர் கூடவே வந்தால் கஷ்டம். ஆனால் பகவான் எல்லாவற்றிலும் உறைகிறார். நமக்குள்ளேயும் வியாபிக்கிறார்.

அஜாயமாநோ பஹீதா விஜாயதே பிறப்பே இல்லாதவர் பல பிறவிகள் எடுக்கிறார். நம்மைப் போல் கர்மத்தால் பிறவி எடுப்பதில்லை. அவர் தன் இச்சையால் சங்கல்பத்தால் க்ருபையால் கருணையால் பிறவி எடுக்கிறார். வானவர் போகம் வானவர் நாடு ஆதலால் கொண்டாடுகிறோம். ஆதித்ய சூரியனாய் ப்ரகாசிக்கிறார். நம்முன்னால் அமர்ந்து ஹிதத்தை சொல்லிக் கொண்டு இருக்கிறார். நித்யசூரிகளுக்கு புரோகிதர். அறிவியலில் நீருபித்தால் நம்புவார்கள். ஆன்மீகத்தில் நம்பிக்கை அடிப்படையில் நீருபிப்போம். யோ தேவா நாம புரோஹித;! அப்படி ப்ரகாசிப்பவர் ப்ருஹ்ம ஸ்வருபமாய் இருக்கிறார். அவரே படைத்து காத்து வியாபிக்கும் புருஷோத்தமன். உண்மை நிலை புரிந்த மனிதருக்கு ப்ரஹ்மாதி தேவர்கள் வசப்படுவார்கள், அவர் ஸ்ரிய பதி . லகஷ்மிநாதன் என்பதே இன்றியமையாத அடையாளம் ஸ்வரூப நீரூபக தர்மமாய் நிலை நிற்கிறார். ஹ்ரீச்ச தே லகஷ்மீச்ச பதந்யெ ள! ஸ்ரீ தேவியும் பூதேவியுமாய் இரண்டு பத்தினிகள். ஸ்ரீதேவி கருணையே உருவானவள். பூ மாதேவி பொறுமையின் சிகரமாய் இருப்பவள். இவர்களுடன் கறுத்த மேகம் போல் பெருமாள் விளங்க மின்னல் வெட்டினார் போல் பிராட்டி. அதன் பின்னால் பளிச்சென்று ஒளிரும் திருமேனி. பகலும் இரவும் போல் இருபுறமும் இருக்கிறார்கள். கைங்கர்யத்தை கொடுப்பார். அடியார்க்கு வேண்டியதை கொடுப்பார். உத்தர அனுவாகம் புருஷ ஸூக்தம் நிறைவுற்றது

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் தனியன்களும் வாழித் திருநாமங்களும்–

September 11, 2026

வாக்ய குருபரம்பரையில் முதல் மூன்று வாக்யங்கள் வேதவாக்யங்கள். மற்றவை ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச்செய்தது ஆகும்
அஸ்மத் குருப்யோ நம:
-எனக்கு பஞ்ச ஸம்ஸ்காரங்களைச் செய்து வைஷ்ணவனாக்கிய எனது ஆசார்யனை வணங்குகிறேன்
அஸ்மத் பரமகுருப்யோ நம:-எனது ஆச்சார்யனின் ஆசார்யனையும் அவர் சம காலத்து ஆச்சார்யர்களையும் வணங்குகிறேன்
அஸ்மத் ஸர்வ குருப்யோ நம:-எனது எல்லா ஆச்சார்யர்களையும் வணங்குகிறேன்
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயையும் திருவரங்கச் செல்வத்தையுமுடைய எம்பெருமானாரை வணங்குகிறேன்
ஸ்ரீ பராங்குச தாஸாய நம:-ஆச்சார்ய அபிமானம் ஆகிற செல்வமுடைய பெரிய நம்பியை வணங்குகிறேன்
ஸ்ரீமத் யாமுந முநயே நம:-வேதாந்த சித்தாந்தமாகிற செல்வமுடைய ஆளவந்தாரை வணங்குகிறேன்
ஸ்ரீ ராமமிஸ்ராய நம:-ஆச்சார்ய கைங்கர்யம் ஆகிற செல்வரான மணக்கால் நம்பியை வணங்குகிறேன்
ஸ்ரீ புண்டரீகாக்ஷாய நம:-ஆச்சார்ய அனுக்ரஹம் ஆகிற செல்வமுடைய உய்யக்கொண்டாரை வணங்குகிறேன்
ஸ்ரீமந் நாதமுநயே நம:ஸ்ரீவைஷ்ணவ குலபதியும், ப்ரபந்ந குலத்துக்கு முதல்வரும், பரமாச்சார்யரான நம்மாழ்வாரிடம் அருளிச் செயல் செல்வம் பெற்றவரான ஸ்ரீமந் நாதமுநிகளை வணங்குகிறேன்
ஸ்ரீமதே சடகோபாய நம:-மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயை உடையவரான நம்மாழ்வாரை வணங்குகிறேன்
ஸ்ரீமதே விஷ்வக்ஸேநாய நம:-பெரிய பிராட்டியாரிடம் ரஹஸ்யத்ரய உபதேசம் பெற்ற மிக்க செல்வரான சேனை முதலியாரை(முதல்வர்) வணங்குகிறேன்
ஸ்ரீயை நம:-தேவதேவ திவ்ய மஹிஷியாய் எம்பெருமானுக்கு வல்லபையாய் புருஷகாரம் மிக்க செல்வமுடையவளை வணங்குகிறேன்
ஸ்ரீதராய நம:-திருவுக்கும் திருவாகிய செல்வனான எம்பெருமானை வணங்குகிறேன்.

ஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமி அருளிச் செய்த ஸ்லோக குருபரம்பரை ஸ்லோகம் –
அஸ்மத் தேசிகம்-அஸ்மதீய பரமாச்சார்யான் -அஸேஷாந் குரூந்:-ஸ்ரீமல் லக்ஷ்மண யோகி புங்கவ:மஹாபூர்ண :யாமுநம் முநிம்:ராமம்-பத்ம விலோசனம்: நாதம் முநிவரம் -ஸடத்வேஷிணம்: ஸேநேஸம்: ஸ்ரியம் இந்திரா ஸஹசரம்:நாராயணம்:ஸம்ஸ்ரயே:

அஸ்மத் தேசிகம் : நம் ஆசார்யனையும்
அஸ்மதீய பரமாச்சார்யான் : ஆச்சார்யனுக்கும் ஆச்சார்யரான பரமாச்சார்யர்களையும்
அஸேஷாந் குரூந்:-ஸ்வாமி மணவாளமாமுனிகள் வரை உள்ள மற்றுமுள்ள எல்லா ஆச்சார்யர்களையும்
ஸ்ரீமல் லக்ஷ்மண யோகி புங்கவ:-யதிராஜரான எம்பெருமானாரையும்
மஹாபூர்ண : பெரிய நம்பியையும்
யாமுநம் முநிம்: ஸ்ரீ ஆளவந்தாரையும்
ராமம் : மணக்கால்நம்பியையும்
பத்ம விலோசனம்: உய்யக் கொண்டாரையும்
நாதம் முநிவரம் : ஸ்ரீமந் நாதமுனிகளையும்
ஸடத்வேஷிணம்: நம்மாழ்வாரையும்
ஸேநேஸம்: சேனைமுதலியாரையும்
ஸ்ரியம் இந்திராஸஹசரம்: பெரிய பிராட்டியையும், திருமகள் கேள்வனான
நாராயணம்: நாராயணனையும்
ஸம்ஸ்ரயே: ஆஸ்ரயிக்கிறேன்(தஞ்சமாகப் பற்றுகிறேன்)

ஜ்யேஷ்டாமாஸே த்வநூராதே ஜாதம் நாதமுநிம் பஜே|
ய: ஸ்ரீஸடாரே: ஸ்ருதவாந் ப்ரபந்த மகிலம் குரோ:-
-ஆனி அனுஷத்தில் அவதரித்தவராய், ஆசார்யரான நம்மாழ்வாரிடமிருந்து எல்லா திவ்யப்ரபந்தங்களையும் கேட்டவரான நாதாமுனிகளிடம் பக்தி செய்கிறேன்.
ஆசாரியர்களில் முதல்வரான ஸ்ரீமந்நாதமுனிகள் ஸேனைமுதலியாருடைய முக்கியமான படைத்தலைவரான கஜாநநர் என்னும் யானை முகமுடைய நித்யஸுரியினுடைய அம்ஸமாய், சோழ தேசத்தில் உள்ள வீரநாராயணபுரம் என்னும் காட்டுமன்னார்கோவிலில் கிபி 823 ஆம் ஆண்டு ஆனி மாதம் 7ஆம் தேதி புதன்கிழமை பௌர்ணமி திதி அநுராதா நக்ஷத்ரத்தில் அவதரித்தார். ஸ்ரீரங்கநாதன் என்பது அவர் திருநாமம். அவர் யோகத்திலே வல்லவராய் இருந்தபடியால் முனி என்கிற சப்தம் சேர்ந்து ஸ்ரீரங்கநாதமுனி என்று வழங்கப்பட்டார்.
இவருடைய திருவடிகளில் ஆஸ்ரயித்த சிஷ்யர்கள் எண்மர்.-உய்யக்கொண்டார்,-குருகைக்காவலப்பன்,நம்பி கருணாகர தாஸர், ஏறுதிருவுடையார், திருக்கண்ணமங்கையாண்டான், வானமாமலைத்தேவியாண்டான்,உருப்பட்டூர் ஆச்சான்பிள்ளை மற்றும்சோகத்தூர் ஆழ்வான் ஆகியோர் ஆவர்.

ஒருநாள் சோழராஜன் ஸபரிவாரனாய் வேட்டையாட வந்து திரும்பிப்போகையில், இவருடைய பெண்பிள்ளைகள் வந்து “நம் அகத்திலே ஒரு குரங்கும் இரண்டு வில்லிகளும் ஒரு பெண்பிள்ளையுமாக வந்து நாதமுனிகள் எங்கே என்று தேடிப்போனார்கள்” என்று தெரிவிக்க, அது கேட்ட நாதமுனிகள் பெருமாளும், பிராட்டியும், இளையபெருமாளும் சிறியதிருவடியுமாக இந்நால்வர் வந்திருக்கக் கூடும் என்று எண்ணி, அவர்களை பின் தொடர்ந்து சென்ற நாதாமுனிகள் எதிரே வந்தவர்களிடம் இப்படி யாரையேனும் பார்த்தீர்களா என்று கேட்டுக்கொண்டே கங்கைகொண்டசோழபுரத்திற்கு முன்பு அமைந்துள்ள செம்போடை என்னும் சொர்க்கப்பள்ளம் என்ற சிற்றூர் வரை சென்று அங்கு இருந்தவர்களிடம் விசாரிக்க, அவர்கள் நாங்கள் பார்க்கவில்லை என்று தெரிவித்தார்கள். நாதமுனிகளும் ஏங்கி விழுந்து மோஹித்து அங்கேயே திருநாடு அலங்கரித்தார். இதுவே நாதமுனிகளின் திருவரசு அமைந்துள்ள இடம் ஆகும்.

ஆனிதனில் அனுட்டத்தில் அவதரித்தான் வாழியே
ஆளவந்தாருக்கு உபதேசம் அருளிவைத்தான் வாழியே
பானுதெற்கிற் கண்டவன் சொல் பல உரைத்தோன் வாழியே
பராங்குசனார் சொற்பிரபந்தம் பரிந்து கற்றான் வாழியே
கானமுறத்தாளத்திற் கண்டு இசைத்தான் வாழியே
கருணையினால் உபதேசக் கதியளித்தான் வாழியே
நானிலத்திற் குருவரையை நாட்டினான் வாழியே
நலந்திகழ் நாதமுனி நற்பதங்கள் வாழியே

புண்டரீகாக்ஷர் என்னும் திருநாமமுடையவருமான ஸ்ரீ உய்யக்கொண்டாரின் திருநக்ஷத்ரம்.-சித்திரை கார்த்திகை 

மேஷமாஸே ஸரோஜாக்ஷம் க்ருத்திகா ஜாதமாஸ்ரயே
நாதயோகி பதாம்போஜ த்வந்த்வ ப்ரணவ மாநஸம்
நம: பங்கஜ நேத்ராய நாத ஸ்ரீபாத பங்கஜே
ந்யஸ்த ஸர்வபராயாஸ்மத் குலநாதாய தீமதே

நமஸ்யாம்யரவிந்தாக்ஷம் நாத பாவே வ்யவஸ்த்திதம்
சுத்த ஸத்வ மயம் சௌரே: அவதாரம் இவாபரம்

நாதமுனிகள் அவதரித்து 63 வருடங்கள் கழித்து பராபவ வருடத்தில் (கிபி 886) சித்திரை மாதம் கார்த்திகை நக்ஷத்ரம் அன்று ஜயத்ஸேநர் என்னும் நித்யஸுரியின் அம்சமாக திருவெள்ளறை என்னும் திவ்யதேசத்திலே பூர்வஸிக ஸ்ரீவைஷ்ணவ ப்ராஹ்மண குலத்திலே அவதரித்தார்.-மற்ற திருநாமங்கள் – புண்டரீகாக்ஷர், பத்மாக்ஷர் மற்றும் அரவிந்தாக்ஷர்.
ஆசார்யன் – ஸ்ரீமந் நாதமுனிகள்.-நாதமுனிகள் புண்டரீகாக்ஷரிடமும், நீரும் யோகத்தைப் பெற்றுப் போகிறீரா என்று வினவ, பிணங்கிடக்க மணம் புணர்வருண்டோ? என்று பதிலுரைத்தாராம்.
சிஷ்யர்கள் – மணக்கால் நம்பி, திருவல்லிக்கேணிப் பாண் பெருமாள் அரையர், சேட்டலூர் செண்டலங்கார தாஸர், ஸ்ரீ புண்டரீக தாசர், கோமடம் திருவிண்ணகர் அப்பன் மற்றும் உலகப் பெருமாள் நங்கை ஆகியோர் ஆவர். இவர் நூற்று ஐந்து திருநக்ஷத்ரங்கள் (105 வயது) எழுந்தருளியிருந்தார் என்பது பெரிய திருமுடி அடைவு என்கிற கிரந்தம் கொண்டு அறிந்து கொள்ள முடிகிறது.

வாலவெய்யோன் தனை வென்ற வடிவழகன் வாழியே
மால் மணக்கால் நம்பி தொழும் மலர்ப்பதத்தோன் வாழியே
சீலமிகு நாதமுனி சீருரைப்போன் வாழியே
சித்திரையில் கார்த்திகை நாள் சிறக்க வந்தோன் வாழியே
நாவிரண்டும் ஐயைந்தும் நமக்குரைத்தான் வாழியே
நாலெட்டின் உப்பொருளை நடத்தினான் வாழியே
மாலரங்க மணவாளர் வளமுரைப்போன் வாழியே
வையம் உய்யக்கொண்டவர் தாள் வையகத்தில் வாழியே

—————–

வைஸாக ரோஹிண்யுதிதம் கோஷ்டீ பூர்ணம் ஸமாஸ்ரயே|
சரமஸ்லோக தாத்பர்யம் யதிராஜாய யோவதத்||
ஸ்ரீ வல்லப பதாம்போஜ தீபக்த்யம்ருத ஸாகரம் |
ஸ்ரீமத் கோஷ்டீபுரீ பூர்ணம் தேஸிகேந்த்ரம் பஜாமஹே ||-
-ஸ்ரீ திருக்கோட்டியூர் நம்பிகள் தனியன் -ஸ்ரீய:பதியின் திருவடித் தாமரையில் ஞானமும் பக்தியுமாகிற அமுதங்களுக்குக் கடல் போன்றவரும், திருக்கோட்டியூர் நம்பியென்னும் பெயருடையவருமான ஆசார்ய உத்தமரை ஆஸ்ரயிக்கிறோம்.
பரமாசார்யரான ஆளவந்தார் அவதரித்தப் பதினோரு வருடங்கள் கழிந்த பின் ஸர்வஜித் வருடம், வைகாசி மாதம் ரோஹிணி நக்ஷத்ரம் காஸ்யப கோத்ரத்தில் பெரியாழ்வாருக்கு பரம ஆப்தரான செல்வநம்பியின் திருவம்சத்தில் ஸ்ரீ புண்டரீகர் என்னும் நித்யஸூரியின் அம்ஸமாய் பூர்வஸிக ஸ்ரீவைஷ்ணவ ப்ராஹ்மண குலத்திலே குருகேசர் (திருக்குருகைப்பிரான்) என்னும் திருநாமம் உடையவராய் அவதரித்தவர் ஸ்ரீ திருக்கோட்டியூர் நம்பி.நாதமுனிகளிடமிருந்து உய்யக்கொண்டார் மணக்கால்நம்பி மூலம் கிடைத்த பவிஷ்யத் ஆசார்ய விக்ரஹத்தை ஆளவந்தார் தம் சரமதஸையிலே இவரிடம் ப்ரஸாதித்து, அது வந்த வழியையும் அருளிச்செய்து, ரஹஸ்ய அர்த்தங்கள் அனைத்தையும் ஸ்ரீ ராமாநுஜருக்கு உபதேசிக்கும்படியும் நம் தரிசனத்தை அவர் திருநாமத்தாலே விளங்கவைக்கும்படியும் நியமித்துச் சென்றார்.ஸ்ரீ ராமாநுஜருக்கு திருமந்திரம் மற்றும் சரம ஸ்லோகத்தின் அர்த்தத்தை உபதேசித்தார்.-கருணைக்கடலான ஸ்ரீ ராமாநுஜருக்கு எம்பெருமானார் என்று திருநாமம் சாற்றியாருளியவர் ஸ்ரீ திருக்கோட்டியூர் நம்பி.-ஸ்வாமி திருமாலையாண்டானிடம் திருவாய்மொழிக்கு அர்த்தம் கேளுமென்று ஸ்ரீ ராமானுஜருக்கு நியமித்தார்.-ஸ்ரீ ராமாநுஜருக்கு தளிகை பண்ணி ப்ராஸாதிக்கும் படி கிடாம்பியாச்சானை நியமித்தவர் ஸ்ரீ திருக்கோட்டியூர் நம்பி.

மன்னியசீர் ஆளவந்தார் மலர்ப்பதத்தோன் வாழியே
வைகாசி ரோஹிணி நாள் வந்துதித்தோன் வாழியே
இன்னிள வஞ்சிக்கு இனிதுரைத்தான் வாழியே
எம்பெருமானார் எனும் பேர் இயம்புமவன் வாழியே
தென்னணியாம் காசிப கோத்திரத்து உதித்தான் வாழியே
திருக்குருகைப்பிரான் எனும் பேர் திகழ வந்தோன் வாழியே
முன்னர் அரும் பெரும்பூதூர் முனிக்கு உரைத்தோன் வாழியே
மொழிந்த திருக்கோட்டிநம்பி மூதுலகில் வாழியே

காசிபன் தன் கோத்திரத்தைக் கருதிவந்தோன் வாழியே
கலை அனைத்தால் முன்னவர்க்குக் கதியளித்தோன் வாழியே
மாசற மெய்ப்பொருள் எதிக்கு வழங்குமவன் வாழியே
வையகம் உன் தரிசனத்தால் வாழும் என்றான் வாழியே
ஏசறவே உகந்து எதியை எடுத்து அணைத்தான் வாழியே
எம்பெருமானார் எனும் பேர் இயம்புமவன் வாழியே
தேசுபுகழ்ச்செல்வன் மொழி தேர்ந்து உரைப்போன் வாழியே
திருக்கோட்டியூர் நம்பி சகதலத்தில் வாழியே

ஈரேழு மூன்று ஒன்றில் இதம் உரைத்தான் வாழியே
ஏற்றமாம் ஆளவந்தார் இணையடியோன் வாழியே
ஈர் எழுவருக்கும் பதம் ஈயுமவன் வாழியே
எம்பெருமானார் எனும் பேர் இயம்புமவன் வாழியே
நாலேழில் நாலாநாள் நாடி வந்தோன் வாழியே
நம் மதுரகவி நிலையை நண்ணினான் வாழியே
நாலேழுநாலெழுத்தை நன்குரைத்தான் வாழியே
நங்கள் திருக்கோட்டியூர் நம்பி நற்பதங்கள் வாழியே

அல்பகலும் ஆளவந்தார் அடிநினைவோன் வாழியே
அனவரதம் தெற்க்காழ்வார்க்கு ஆட்செய்வோன் வாழியே
வெல்பொருள் வெளியிட எதியை வெறுத்துகந்தான் வாழியே
மேதிநியோர் உய்வரென்று மெச்சினான் வாழியே
உள் மந்திரம் எதிராசர்க்கு ஒளித்து உரைத்தான் வாழியே
உந்துமதத்தெதியை உகந்தணைத்தான் வாழியே
செல்வநம்பிகுலம் தழைக்க செகத்து உதித்தான் வாழியே
திருக்கோட்டியூர் நம்பி சகதலத்தில் வாழியே

பிதாமஹஸ்யாபி பிதாமஹாய ப்ராசேதஸாதேஸபலப்ரதாய|
ஸ்ரீபாஷ்யகார உத்தம தேஸிகாய ஸ்ரீசைல பூர்ணாய நமோ நமஸ்தாத்||-ஸ்ரீ பெரிய திருமலை நம்பி ஸ்வாமிகள் தனியன்
-பிரமன்னுக்குத் தந்தையான திருவேங்கடமுடையானாலே அப்பா என்று கூப்பிடப் பெருகையாலே உலகிற்குப் பாட்டனான பிரமனுக்கும் பாட்டனாராய், ஸ்ரீபாஷ்யகாரருக்குச் சிறந்த ஆசார்யராய் அவருக்கு வால்மீகியின் வாக்காகிற ஸ்ரீராமாயணத்தின் பொருளை உபதேசித்தவரான பெரிய திருமலைநம்பிக்குப் பலகால் வணக்கம்.
ஸ்ரீமல் லக்ஷ்மண யோகீந்த்ர ஸ்ரீராமாயண தேஸிகம்
ஸ்ரீசைலபூர்ணம் வ்ருஷப ஸ்வாதி ஸஞ்ஜா தமாச்ரயே
-எம்பெருமானாருக்கு ஸ்ரீராமாயணத்தை உபதேசித்த ஆசாரியரும் வைகாசி ஸ்வாதியில் திருவவதரித்தவருமான திருமலை நம்பியை அஸ்ரயிக்கிறேன்.
வைகாசிச் சோதிநாள் வந்து உதித்தான் வாழியே
வண் திருவேங்கடமுடையான் வரபுத்திரன் வாழியே
அய்யன் ஸ்ரீ ஆளவந்தார் அடிதொழுவோன் வாழியே
அனவரதம் மலைகுனியர்க்கு அடிமை செய்வோன் வாழியே
மெய்யன் இராமாநுசாரியன் விரும்புமவன் வாழியே
மிக்க திருமலையார்க்கு எல்லாம் மேலாவான் வாழியே
செய்யதமிழ் வேதத்தின் சிறப்பு அறிந்தோன் வாழியே
திருமலைநம்பிகள் உபயதிருவடிகள் வாழியே

ஸுமுகர் என்னும் நித்யசூரியின் அம்ஸமாகச் சித்திரை ஸ்வாதியில் திருமலையில் அவதரித்தவர். எம்பெருமானாருக்கு மாதுலர்(தாய்மாமா). இவர் ஸ்வாமி எம்பெருமானாருக்குக் கீழ்த்திருப்பதியில் ஒருவருஷகாலம் ஸ்ரீராமாயணத்தைக் காலக்ஷேபம் சாதித்தார். உள்ளங்கைகொணர்ந்த நாயனார் என்னும் திருநாமாத்துடன் சைவராக மாறி காளஹஸ்தியில் வாழ்ந்து கொண்டிருந்த தமது மருமகனான கோவிந்தரை மறுபடியும் ஸ்ரீவைஷ்ணவராகத் திருத்திப்பணிகொண்டார். தமது குமாரர்கள் பிள்ளை திருமலை நம்பியையும், பிள்ளானையும் மற்றும் இருகுமாரத்திகளையும் உத்தாரகரான எம்பெருமானார் திருவடிகளில் ஆஸ்ரயிக்கச்செய்தார்.மற்றொரு திருநாமம் – ஸ்ரீசைலபூர்ணர்-திருவாராதனம் – மலைகுனியநின்ற பெருமாள்-வெண்ணைக்காடும் பிள்ளை-அமலனாதிபிரான் தனியன் பெரிய திருமலை நம்பி அருளியது.

ஸ்ரீராமமிஸ்ர பதபங்கஜ சஞ்சரீகம் ஸ்ரீயாமுநார்யவரபுத்ரமஹம் குணாட்யம்|
ஸ்ரீரங்கராஜகருணா பரிணாம தத்தம் ஸ்ரீபாஷ்யகார சரணம் வரரங்கமீடே ||-ஸ்ரீ ஆழ்வார் திருவரங்கப்பெருமாள் அரையர் ஸ்வாமிகள்
-பிங்கள வர்ஷம் வைகாசி கேட்டை –ஸங்கு கர்ணர் என்னும் நித்ய ஸூரியின் அம்ஸம்-ஸ்ரீராமமிஸ்ரராம் மணக்கால் நம்பியின் திருவடித் தாமரையில் வண்டாய் இருப்பவரும், ஸ்ரீ யாமுநாசார்யாருடைய சிறந்த புத்திரரும், குணத்தில் மிக்கவரும், ஸ்ரீரங்கராஜ கருணையினாலே அளிக்கப்பெற்றவரும், ஸ்ரீபாஷ்யகாரரை சிஷ்யராகக் கொண்டவருமான திருவரங்கப்பெருமாள் அரையரைத் துதிக்கிறேன்.
நாதமுனி குலம்திகழ நன்கு உதித்தோன் வாழியே
நற்றமிழின் மறைக்கு இசையை நவின்று உரைப்போன் வாழியே
காதல் அரங்கேசர் இருகழல் பணிவோன் வாழியே
கானவர நயவிசையால் களிப்பிப்போன் வாழியே
ஏதமில் வண்கச்சிப்பயனை ஏத்திசைப்போன் வாழியே
எதிபதியைப் பரிசாக ஏற்று வந்தோன் வாழியே
தீதில் யமுனைத்துறைவன் சேவடியோன் வாழியே
திருவரங்கப் பெருமாள் அரையர் திருவடிகள் வாழியே

ஸ்ரீ விஷ்ணுசித்த பதபங்கஜ ஸங்கமாய
சேதோ மம ஸ்ப்ருஹயதே கிமத: பரேண|
நோசேந் மமாபி யதிஸேகரபாரதீநாம்
பாவ: கதம் பவிதுமர்ஹதி வாக்விதேய: ||ஸ்ரீ எங்களாழ்வான் தனியன்

திருவெள்ளறையில் பூர்வசிக ஸ்ரீவைஷ்ணவ ப்ராஹ்மண குலத்தில் ஸ்ரீ விஷ்ணுசித்தர் என்னும் திருநாமாத்துடன் சித்திரை மாதம் ரோஹிணி நக்ஷத்ரத்தில் அவதரித்தவர். ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமி தம் கண்களை இழந்துவிட்ட காரணத்தினால், மேல் நாட்டிலிருந்து திரும்பிய யதிராஜர் ஸ்ரீ பாஷ்யத்தில் எஞ்சிய பகுதியைக் கூரத்தாழ்வானுக்கு பதிலாக இவரை உசாத்துணையாகக் கொண்டு எழுதுவித்தார் என்றும், அப்படி எழுதும் போது, ஆழ்வானுக்குத் துல்யமாயிருந்த இவருடைய மேதா விலாசத்தைக்கண்டு “எங்கள் ஆழ்வானோ” என்று எம்பெருமானார் அபிமானித்தாரம். அன்று முதல் இவர் எங்களாழ்வான் என்றே அழைக்கப்படுகிறார்.சிஷ்யர் – ஸ்ரீபாஷ்ய ஸிம்ஹாஸநாதிபதிகளில் ஒருவரான ஸ்ரீ நடாதூராழ்வானின் பேரரான “வாத்ஸ்யவராதாச்சார்யார்” என்னும் ஸ்ரீ நடாதூரம்மாள்.பிதாமஹர் ஸ்ரீ நடாதூராழ்வான் நியமித்தபடி திருவெள்ளறையில் எழுந்தருளியிருந்த எங்களாழ்வான் ஸ்வாமியிடம் ஸ்ரீ பாஷ்யார்த்தம் அனைத்தையும் கசடறக் கற்றார் ஸ்ரீ நடாதூர் அம்மாள். இப்படி அம்மாளுக்கு ஆசார்யரானமையாலே “அம்மாள் ஆசார்யர்” என்று அழைக்கப் பெற்றார் எங்களாழ்வான்.74 ஸிம்ஹாஸநாதிபதிகளில் ஒருவரான இவர் ஸ்ரீ விஷ்ணு புராணத்திற்கு ஸ்ரீ விஷ்ணு சித்தீயம் என்னும் வ்யாக்யானத்தையும், ஸித்தாந்த ப்ரமேயங்களைச் சுருக்கி
“ப்ரமேயஸங்க்ரஹம்” என்னும் க்ரந்தத்தையும், ப்ரஹ்மஸுத்ரத்தின் அதிகரணங்களின் சங்கதியை விளக்கி “ஸங்கதிமாலா” என்னும் க்ரந்தத்தையும், கத்ய வ்யாக்யானம் மற்றும் “ஸாரார்த்த சதுஷ்டயம்” ஆகிய க்ரந்தங்களை அருளிச்செய்துள்ளார்.
சீராரும் வெள்ளறையில் சிறந்துதித்தோன் வாழியே
சித்திரை உரோகிணி நாள் சிறக்க வந்தோன் வாழியே
பார்புகழும் எதிராசன் பதம் பணிந்தோன் வாழியே
பங்கயச் செல்வியின் பதங்கள் பரவுமவன் வாழியே
திருக்குருகைப் பிரான் பிள்ளான் திருவருளோன் வாழியே
தீதிலா பாடியத்தைத் தேர்ந்துரைப்போன் வாழியே
தாரணியில் விண்டுமதம் தழைக்க வந்தோன் வாழியே
தண்ணளியோன் எங்களாழ்வான் தாளிணைகள் வாழியே-

ஸ்வாமி பெரியதிருமலைநம்பி–சித்திரை ஸ்வாதி–ஸுமுகர் என்னும் நித்யசூரியின் அம்ஸம் -திருவாராதனம் – மலைகுனியநின்ற பெருமாள்/வெண்ணைக்காடும் பிள்ளை-அமலனாதிபிரான் தனியன் பெரிய திருமலை நம்பி அருளியது

பிதாமஹஸ்யாபி பிதாமஹாய ப்ராசேதஸாதேஸபலப்ரதாய|

ஸ்ரீபாஷ்யகார உத்தம தேஸிகாய ஸ்ரீசைல பூர்ணாய நமோ நமஸ்தாத்||

பிரமன்னுக்குத் தந்தையான திருவேங்கடமுடையானாலே அப்பா என்று கூப்பிடப் பெருகையாலே உலகிற்குப் பாட்டனான பிரமனுக்கும் பாட்டனாராய், ஸ்ரீபாஷ்யகாரருக்குச் சிறந்த ஆசார்யராய் அவருக்கு வால்மீகியின் வாக்காகிற ஸ்ரீராமாயணத்தின் பொருளை உபதேசித்தவரான பெரிய திருமலைநம்பிக்குப் பலகால் வணக்கம்.

ஸ்ரீமல் லக்ஷ்மண யோகீந்த்ர ஸ்ரீராமாயண தேஸிகம்

ஸ்ரீசைலபூர்ணம் வ்ருஷப ஸ்வாதி ஸஞ்ஜா தமாச்ரயே

எம்பெருமானாருக்கு ஸ்ரீராமாயணத்தை உபதேசித்த ஆசாரியரும் வைகாசி ஸ்வாதியில் திருவவதரித்தவருமான திருமலை நம்பியை அஸ்ரயிக்கிறேன்.

வைகாசிச் சோதிநாள் வந்து உதித்தான் வாழியே

வண் திருவேங்கடமுடையான் வரபுத்திரன் வாழியே

அய்யன் ஸ்ரீ ஆளவந்தார் அடிதொழுவோன் வாழியே

அனவரதம் மலைகுனியர்க்கு அடிமை செய்வோன் வாழியே

மெய்யன் இராமாநுசாரியன் விரும்புமவன் வாழியே

மிக்க திருமலையார்க்கு எல்லாம் மேலாவான் வாழியே

செய்யதமிழ் வேதத்தின் சிறப்பு அறிந்தோன் வாழியே

திருமலைநம்பிகள் உபயதிருவடிகள் வாழியே

பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா|
தஸ்ய தாஸரதே: பாதௌ ஸிரஸா தாரயாம்யஹம் ||ஸ்ரீ முதலியாண்டான் தனியன்
–யதிராஜருடைய பாதுகைகள் எவருடைய பெயராலே (முதலியாண்டான் என்று) வழங்கப்படுகின்றனவோ, தாஸரதி எனும் திருநாமமுடைய அந்த முதலியாண்டானின் திருவடிகளை யான் தலையாலே தரிக்கிறேன்.
கிபி 1027) பிரபவ வருடத்தில் பச்சைப் பெருமாள் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் புருஷமங்கலத்தில்/வரதராஜபுரத்தில் சித்திரை மாதம் புனர்வஸு நக்ஷத்திரத்தில் ஆபஸ்தம்ப ஸூத்ரம் வாதூல கோத்ரத்தில் எம்பெருமானாருக்கு மருமகனாகவும், பரதனின் அம்சமாகவும் “தாசரதி” என்னும் திருநாமத்தோடு அவதரித்தவர் ஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமி.-எம்பெருமானாருடைய சிஷ்யர்கள் அனைவருக்கும் நிர்வாஹகராக இருந்தமையால் “முதலியாண்டான்” என்று அழைக்கப்பெற்றார்.-எம்பெருமானாருடைய திருவடி ஸ்தானமாயிருந்து அவருக்கு அந்தரங்க கைங்கர்யங்கள் செய்தமையால் எம்பெருமானாருடைய திருவடி நிலை இன்றளவும் “முதலியாண்டான்” என்றே அழைக்கப்படுகிறது.எம்பெருமானார் இவரைத் தமது த்ரிதண்டமாக அபிமானித்தார்.முதல் திருவந்தாதி ப்ரபந்தத்துக்கு தனியன் அருளிச்செய்தார் ஸ்வாமி முதலியாண்டான்.
ய: பூர்வம் பரதார்த்தித: பிரதிநிதிம் ஸ்ரீ பாதுகாமாத்மந:
ராஜ்யாய ப்ரததௌ ஸ ஏவ ஹி குரு: ஸ்ரீ தாஸரத்யாஹ்வய:
பூத்வா லக்ஷ்மண பாதுகாந்திமயுகே ஸர்வாத்மநாம் ஸ்ரேயஸே
ஸாம்ராஜ்யம் ஸ்வயமத்ர நிர்வஹநி நோ தைவம் குலஸ்யோத்தமம்–
முக்த ஸ்லோகம்:-எவனொருவன் முற்காலத்தில் பரதனால் ப்ரார்திக்கப் பட்டு அரசாளுவதற்குத் திருப்பாதுகையைத் தனக்கு ப்ரதிநிதியாகக் கொடுத்தானோ, அந்த ராமனே தாசரதி (முதலியாண்டான்) என்ற திருநாமமுள்ள ஆசார்யனாய், கலி காலத்தில் நம் குலத்திற்கு உத்தம தெய்வமான ஸ்ரீ ராமானுஜ பாதுகையாகி அனைத்து ஆத்மாக்களும் உஜ்ஜீவிக்கும் படி ஸ்ரீவைஷ்ணவ ஸாம்ராஜ்யத்தைத் தானே இங்கு நடத்திக்கொண்டிருக்கிறான்.
ஸ்ரீவைஷ்ணவ ஸிரோபூஷோ ஸ்ரீ ராமானுஜ பாதுகா|
ஸ்ரீ வாதூல குலோத்தம்ஸ: ஸ்ரீ தாசரதி ரேததாம்||-ஸ்ரீவைஷ்ணவர்களின்
தலைக்கு அலங்காரமாயிருக்கும் ஸ்ரீ ராமானுஜரின் பாதுகையாய், வாதூல குலத்திற்குச் சிறந்த அலங்காரமான ஸ்ரீ தாசரதியெனும் முதலியாண்டான் வெற்றி பெருவாராக என்பதாக அமைந்த ஸ்லோகம்.
ஸ்ரீ ராமாம்ஸ ஸமாஸ்லிஷ்டம் பாஞ்சஜன்யாம்ஸ ஸம்பவம்|
பஞ்ச நாராயணஸ்தாந ஸ்தாபகம் குருமாஸ்ரயே||-
ஸ்ரீராமனின் அம்ஸத்தோடு கூடியவராய், பாஞ்சஜன்ய அம்ஸமாக அவதரித்தவராய், ஐந்து நாராயண ஸ்தலங்களை ஸ்தாபித்தவரான முதலியாண்டானை ஆஸ்ரயிக்கிறேன்.
யஸ்சக்ரே பக்தநகரே தாடீபஞ்சக முத்தமம்
ராமனுஜார்ய ஸச்சாத்ரம் வந்தே தாசரதிம் குரும்-
பக்த நகரத்தில் எவரொருவர் சிறந்த தாடீபஞ்சக ஸ்தோத்திரத்தை இயற்றினாரோ, ராமானுஜாச்சார்யரின் ஸத் சிஷ்யரான ஸ்ரீ முதலியாண்டானை வணங்குகிறேன்
வித்யா விமுக்திஜநநீ விநயாதி கத்வம்
ஆசாரஸம்பத் அநுவேலவிகாஸசீலம்
ஸ்ரீ லக்ஷ்மணார்ய கருணா விஷயீ க்ருதாநாம்
சித்ரம் ந தாசரதி வம்ஸ ஸமுத்பவாநாம்||-ஸ்ரீ முதலியாண்டான் திருவம்ஸ ப்ரபாவ ஸ்லோகம்-
மோகஷத்திற்கு உறுப்பான ஜ்ஞானம், சிறந்த அடக்கம், அநுஷ்டானச் செல்வம், சிறந்த குணம், ஆகியவை எம்பெருமானாருடைய கருணைக்கு இலக்கான முதலியாண்டான் வம்சத்தினற்கு வாய்துள்ளதில் வியப்பில்லை என்பதாக அமைந்த ஸ்லோகம்.

———

சித்திரை அஸ்வினி -ஸ்வாமி வடுக நம்பியின் திருநக்ஷத்ரம்-மற்றொரு திருநாமம் – ஆந்த்ர பூர்ணர்-

சைத்ரே த்வச்விநிஸஞ்ஜாதம் ஸம்ஸாரார்ணவ தாரகம்
ராமாநுஜார்ய ஸச்சிஷ்யம் ஆந்த்ர பூர்ண அஹம் பஜே

ராமாநுஜார்ய ஸச்சிஷ்யம் ஸாலக்ராம நிவாஸிநம்
பஞ்சமோபாய ஸம்பந்நம் ஆந்த்ர பூர்ணமஹம் பஜே

ராமாநுஜார்ய சரண ப்ரவணம் பரதேவவத்
வடுபூர்ணமஹம் வந்தே பரஜ்ஞாந பயோ நிதிம்

யதிராஜ வைபவம் என்ற நூலை அருளிச்செய்தார். 114 ஸ்லோகங்கள் கொண்ட அழகிய நூல்.-வடுக நம்பி, இது தான் பெற்ற பேறு என்று தாம் அருளிச்செய்த யதிராஜ வைபவம் என்னும் நூலில் 113வது ஸ்லோகத்தில் அருளிச்செய்துள்ளார்.

113 வது ஸ்லோகத்தின் விளக்கம்:
தன்னுடைய அந்தரங்க ஸிஷ்யர்களில் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு கைங்கர்யத்தில் நியமித்து அருளிய ஸ்ரீ யதிராஜர், மிகவும் தகுதியற்ற என்னையும் தமக்குப் பால் காய்ச்சும் கைங்கர்யத்தில் நியமித்து அருளினார். அத்துடன் தன் அடியார்க்கு அடியார்க்கு அடியார்க்கு அடியவனாகவும், மிகுந்த அன்புடையவனாகவும் தனக்கு நல்லது செய்பவனாகவும் கொண்டு என்னையும் ரக்ஷிக்கிறவரான அவர் பல்லாண்டு வாழ்க! என்பது 113வது ஸ்லோகத்தின் அர்த்தம்.

ஸ்வாமி வடுக நம்பி உடையவருக்கு செய்தருளிய கைங்கர்யத்தைப் பற்றி திருக்கோளூர் பெண் பிள்ளை தாம் அருளிச்செய்த கிரந்தத்தில் 56 ஆம் வார்த்தையாக இங்கு பால் பொங்கும் என்றேனோ வடுகநம்பியைப் போலே என்று தெரிவிக்கிறார்.-நிகழ்வு – ஒரு நாள் எம்பெருமான் திருவீதி புறப்பாடு கண்டருளியபோது ஸ்வாமி எம்பெருமானார் பெருமாள் சேவிக்க வாரும் என்று வடுக நம்பியை அழைக்க, அப்போது உடையவருக்கு பால் காய்ச்சி கொண்டு இருந்த வடுக நம்பி, “உம்முடைய பெருமாளை சேவிக்க வந்தால், என்னுடைய பெருமாளுக்கு பால் பொங்கிப்போமே” என்று அருளினாராம்.-ஸ்வாமி வடுக நம்பி அருளிச் செய்த வார்த்தைகளைப் பற்றி திருவல்லிக்கேணி அம்மாள் தாம் அருளிச் செய்த கிரந்தத்தில் “இருகரையர் என்றேனோ வடுகரைப் போலே” என்றும் “நாவகாரியம் ஆக்கினேனோ வடுகரைப் போலே” என்றும் குறிப்பிடுகிறார்.-இருகரையர் என்று வடுகநம்பி குறிப்பிட்டது ஆழ்வானையும் ஆண்டானையும் ஆகும். இந்த விஷயத்தை ஸ்ரீ பிள்ளைலோகாசார்யார் தாம் அருளிச்செய்த ஸ்ரீ வசனபூஷன திவ்ய சாஸ்திரத்தில் “வடுக நம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் இருகரையர் என்பர்” என்று அருளிச்செய்துள்ளார். இருகரையர் என்பதற்கு வடுகநம்பியைப் போன்று அல்லாமல் ப்ரதமபர்வம் சரமபர்வம் இரண்டிலும் கால்வைத்து நிற்குமிவர்கள் என்று பொருள். அதாவது பிரதமபர்வமான எம்பெருமான் ஒரு கரை; சரமபர்வமான ஆசார்யன் மற்றொரு கரை – இரண்டு கரையிலும் கால் வைத்திருப்பவர் என்று பொருள்.ஒரு ஸ்ரீவைஷ்ணவர் இவர் காதருகே திருமந்த்ரதை உச்சரிக்க இவர் நாவகாரியம் என்று சொல்லி, ராமாநுஜா என்ற திருநாமமே நாவுக்குத்தக்கது என்றாராம் வடுக நம்பி. அப்படி இருந்தது இவருடைய ஆசார்ய நிஷ்டை.மேலும் ராமானுஜ அவயவ ப்ரபாவம் என்னும் நூலில் வடுக நம்பியை ராமாநுஜர் திருமேனியில் காஷயமாக பாவித்து “ஆந்த்ரபூர்ணஸ்ச காஷாய: என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

——————–

ஈயுண்ணி மாதவப் பெருமாள் –
கார்த்திகே பரணி ஜாதம் ஸ்ரீ லோகார்ய பதாஸ்ரிதம்
வேதாந்த த்வய சம்பந்நம் மாதவார்யம் அஹம் பஜே
–கார்த்திகையில் பரணியில் அவதரித்தவராய் நம்பிள்ளை திருவடிகளை அடைந்தவராய் உபய வேதாந்தச் செல்வரான மாதவப் பெருமாளை வணங்குகிறேன்.
லோகாசார்ய பதாம்போஜ ஸம்ஸ்ரயம் கருணாம்புதிம்
வேதாந்த த்வய சம்பந்நம் மாதவார்யம் அஹம் பஜே
-உலகாரியரான நம்பிள்ளையின் திருவடித்தாமரையைப் பற்றியவராய் கருணைக்கடலாய் உபய வேதாந்தச் செல்வமுடையவரான மாதவாச்சார்யரை ஆஸ்ரயிக்கிறேன்.
சீரார் வடக்கு திருவீதிப் பிள்ளை* எழு
தேரார் தமிழ்வேதத்து ஈடுதனைத் – தாருமென
வாங்கி முன் நம்பிள்ளை ஈயுண்ணி மாதவர்க்குத்
தான்கொடுத்தார் பின் அதனைத்தான்
ஆங்கு அவர்பால்பெற்ற சிறியாழ்வான் அப்பிள்ளை
தாம் கொடுத்தார் தம்மகனார் தம் கையில்-பாங்குடனே
நாலூர் பிள்ளைக்கு அவர்தாம் நல்ல மகனார்க்கு அவர்தாம்
மேலோர்க்கு ஈந்தார் அவரே மிக்கு.

பெரிய பெருமாள் நியமனமின்றி நம்பிள்ளை இந்த ஸ்ரீகோசத்தை தந்தருளமாட்டார் என்பதை நன்கறிந்த ஈயுண்ணி மாதவப் பெருமாள் என்ற ஸ்வாமி, பெரிய பெருமாளிடம் ப்ரார்திக்க, பெரிய பெருமாளும் திருவுள்ளம் உவந்து இரங்கி நம்பிள்ளைக்கு நியமித்தருள, பின்பு அந்த ஸ்ரீகோசத்தை நம்பிள்ளை ஈயுண்ணி மாதவப் பெருமாளுக்கு தந்தருளினாராம். அப்படியாக ஸ்வாமி நம்பிள்ளையிடம் ஸ்ரீகோசத்தைப் பெற்றுக்கொண்ட சிறியாழ்வான் அப்பிள்ளை(ஈயுண்ணி மாதவப் பெருமாளுடைய மற்றொரு திருநாமம்) தம்முடைய திருக்குமாரரான பத்மநாபப் பெருமாளிடம் அந்த ஈட்டை ப்ரசாதித்து அருளினார். பத்மநாபப் பெருமாள் தம் சிஷ்யரான நாலூர்ப் பிள்ளைக்கு ப்ரசாதித்து அருளினார். அந்த நாலூர்ப் பிள்ளை தம்முடைய திருக்குமாரரான நாலூராச்சான் பிள்ளைக்கு ப்ரசாதித்து அருளினார். அந்த நாலூராச்சான் பிள்ளையே மேலுள்ளவர்களுக்கு கொடுத்து உபகரித்து அருளினாராம். நாலூராச்சான் ஸ்வாமியின் சிஷ்யர்கள் திருநாராயணபுரத்து ஆயி, ஸ்ரீசைலேசர் என்னும் திருநாமமுடைய திருவாய்மொழிப்பிள்ளை மற்றும் ஈயுண்ணி தேவப்பெருமாள் ஆகியோர் ஆவர்.

மிதுநே ஸ்வாதிஸம்பூதம் கலிவைரிபதாஸ்ரீதம்|
உதக்ப்ரதோளீ நிலயம் க்ருஷ்ணபாதம் அஹம் பஜே||-
ஆனி ஸ்வாதியில் அவதரித்தவராய் நம்பிள்ளையின் திருவடிகளை ஆஸ்ரயித்தவரான வடக்குத் திருவீதிப்பிள்ளையை வணங்குகிறேன்.
ஸ்ரீ க்ருஷ்ணபாத பாதாப்ஜே நமாமி ஸிரஸா ஸதா |
யத்ப்ரஸாதப்ரபாவேந ஸர்வஸித்திரபூந்மம||
-எவருடைய அருளின் பெருமையால் எனக்கு ஜ்ஞான பக்தி வைராக்யங்களாகிற எல்லா ஸித்திகளும் கிடைத்தனவோ, அத்தகைய ஸ்ரீக்ருஷ்ணர் என்னும் வடக்குத்திருவீதிப்பிள்ளையின் திருவடித் தாமரைகளைத் தலையால் எப்போதும் வணங்குகிறேன்.

ஆனி மாதத்தில் பெரியாழ்வாருடைய திருவவதார நன்னாளாகிய ஸ்வாதி நக்ஷத்ரத்தில், முடும்பைக் குடியில் ஸ்ரீவத்ஸ கோத்ரத்தில் யஜுஸ்ஸாகை ஆபஸ்தம்பஸுத்ரத்தில் ஸ்ரீக்ருஷ்ணபாதர் என்னும் வடக்குத்திருவீதிப்பிள்ளை அவதரித்தார்.அஷ்டாதச ரஹஸ்யங்களை அருளிச்செய்த பிள்ளைலோகாசாரியர்க்கும், ஆசார்ய ஹ்ருதயம் அருளிச்செய்த அழகிய மணவாளப்பெருமாள் நாயனாருக்கும் திருத்தந்தையார் இவர்.இவருடைய இயற்பெயர் ஸ்ரீகிருஷ்ண மஹாகுரு.

ஆனிதனில் சோதி நாள் அவதரித்தான் வாழியே
ஆழ்வார்கள் கலைப்பொருளை ஆய்ந்து உரைப்போன் வாழியே
தான் உகந்த நம்பிள்ளை தாள் தொழுவோன் வாழியே
சடகோபன் தமிழ்க்கு ஈடு சாற்றினான் வாழியே
நானிலத்தில் பாடியத்தை நடத்தினான் வாழியே
நல்ல உலகாரியனை நமக்கு அளித்தான் வாழியே
ஈனமற எமையாளும் இறைவனார் வாழியே
எங்கள் வடவீதிப்பிள்ளை இணையடிகள் வாழியே

ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை வைபவம்
அவதார ஸ்தலம்
– திருவெள்ளியங்குடிக்கு அருகிலே உள்ள சங்கநல்லூர் என்னும் சிற்றூர்
திருவவதாரம் – சர்வஜித் வருஷம், ஆவணி மாதம் ரோஹிணி நக்ஷத்ரம் (கண்ணன் எம்பெருமான் திருவவதரித்த நன்னாளிலே அவதரித்தவர் – ஸ்ரீஜயந்தி)
திருதகப்பனார் திருநாமம் – ஸ்ரீ யாமுனதேசிகர்
திருத்தாயார் – நாச்சியாரம்மாள்
பெற்றோர் இட்ட திருநாமம் – க்ருஷ்ணர்
திருவாராதனப் பெருமாள் – க்ருஷ்ண விக்ரஹம்
திருக்குமாரர் – ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை
மற்ற திருநாமங்கள் – அபயப்ரதராஜர், வ்யாக்யான சக்ரவர்த்தி, க்ருஷ்ணஸூரி, பரம காருணிகர், அபார கருணாம்ருத சாகரர் ஆகியவை ஆகும்.
ஆசார்யன் – ஸ்ரீ நம்பிள்ளை
வ்யாக்யான சக்ரவர்த்தியான ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளைக்கு நான்கு திக்குகளிலும் நான்கு ஸிம்ஹாஸனங்கள் உண்டு என்பது ஸ்ரீவைஷ்ணவ பெரியோர்களின் திருவாக்கு.
முதல் ஸிம்ஹாஸனம் – நாலாயிர திவ்யப்ரபந்த பாசுரங்களுக்கு ஸ்வாமி அருளிச் செய்த திவ்ய வ்யாக்யானங்களே முதலாவதும் முக்கியமானதுமான ஸிம்ஹாஸனம் ஆகும். அவைகள் இல்லாவிடில் ஸ்ரீவைஷ்ணவ உலகமே ஞான சூன்யமாய் இருளடைந்து பாழாகி யிருக்கும். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு திருப்பல்லாண்டு முதலான நாலாயிர திவ்ய ப்ரபந்தங்களை யொழிய பகவானை அறிவதற்கு வேறு வழியில்லை. திவ்ய ப்ரபந்தங்களிலே இருக்கக் கூடிய ஆழ்ந்த அர்த்தங்களை அறிவதற்கு பூர்வாசார்ய பரம்பரையாகவும், ஆசார்ய நியமனப்படியும், ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளையால் அருளிச் செய்யப்பட்ட வ்யாக்யானங்களைத் தவிர வேறு புகல் இல்லை.
இரண்டாவது ஸிம்ஹாஸனம் – இதிஹாஸ ஸ்ரேஷ்டமான ஸ்ரீ இராமாயணத்தில் அமைந்துள்ள மிகச் சிறந்த ஸ்லோகங்கள் பலவற்றில் இருக்கக்கூடிய ரஹஸ்ய அர்த்தங்களை விவரித்து அருளிச் செய்த ஸ்ரீராமாயண தனிஸ்லோகம், ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளையின் இரண்டாவது ஸிம்ஹாஸனமாகும்.
மூன்றாவது ஸிம்ஹாஸனம் – ரஹஸ்ய த்ரயங்களையும் மற்றும் ஸ்ரீவைஷ்ணவர்கள் அவஸ்யம் தெரிந்து கொள்ள வேண்டிய மற்ற ரஹஸ்யார்த்தங்களையும் விவரித்து ஸ்வாமி அருளிச்செய்த பரந்த ரஹஸ்யம், மாணிக்க மாலை, ஸகல ப்ராமண தாத்பர்யம், ரஹஸ்யத்ரய தீபிகை, ரஹஸ்யத்ரய விவரணம் மற்றும் நிகமனப்படி முதலானவை மூன்றாவது ஸிம்ஹாஸனம்.
நான்காவது ஸிம்ஹாஸனம் – பரமாசார்யரான ஸ்ரீ ஆளவந்தாரும் ஜகதாசார்யரான ஸ்வாமி எம்பெருமானாரும் அருளிச்செய்த ஸ்தோத்ரரத்னம், சதுஸ்லோகி, கத்யத்ரயம் முதலான ஸ்தோத்ரங்களுக்கு ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்த திவ்ய வ்யாக்யானங்களும் மற்றும் ஜிதந்தே ஸ்தோத்ர வ்யாக்யானமும், வ்யாக்யான சக்ரவர்த்தியான ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளையின் நான்காவது ஸிம்ஹாஸனம் ஆகும்.

ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளையின் கோஷ்டியிலே எழுந்தருளியிருந்த சிலர் “எங்களுக்கு தஞ்சமாய் இருபத்தொரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் என்று ப்ரார்திக்க” அதற்கு ஸ்வாமி, கலங்குகிறவனும், கலக்குகிறதும், கலங்கிக் கிடக்கிறவர்களும், தெளிவிக்கிறவனும், தெளிகிறவனும், தெளிந்திருப்பவனுமாயிறே இருப்பது என்று பதிலுரைத்தாராம்
கலங்குகிறவன் – ஜீவாத்மா
கலக்குகிறது – பகவானையும் ஆத்மாவையும் அறியவிடாமல் மறைத்துத் தன் விஷயத்திலே மூளும்படி பண்ணுகிற அசித்து.
கலங்கிக்கிடக்கிறவர்கள் – தேஹமே ஆத்மா என்று கிடக்கும் சம்சாரிகள்
தெளிவிக்கிறவன் – ஆசார்யன்
தெளிகிறவன் – சேதனன்(ஞானவானான ஜீவாத்மா)
தெளிந்திருக்கிறவன் – ஈஸ்வரன்
ஆகையாலே கலங்குகிற தன்னையும், கலக்குகிற ப்ரக்ருதியையும், கலங்கிக்கிடக்கிற சம்சாரிகளையும் தஞ்சம் அன்று என்று கைவிட்டு, தெளிவிக்கிற ஆசார்யனையும், தெளிந்திருக்கும் ஈஸ்வரனையும் பற்றுகையே, ஆசார்யனாலே தெளிந்த இவ்வாத்மாவுக்கு ஸ்வரூபம் என்று அருளினார் ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை.

ஸ்ருத்யர்த்த ஸாரஜநகம் ஸ்ம்ருதிபாலமித்ரம்
பத்மோல்லஸத் பகவதங்க்ரி புராண பந்தும்|
ஜ்ஞாநாதிராஜம் அபயப்ரதராஜபுத்ரம்
அஸ்மத்குரும் பரமகாருணிகம் நமாமி ||

வேதப்பொருள்களின் ஸாரத்தைக் கடைந்து எடுப்பவராய், ஸ்ம்ருதிகளாகிற தாமரைகளுக்கு இளஞ்சூரியனாய், ஸ்ரீய:பதியின் திருவடிகளுக்குப் பழைய உறவினராய், ஞானங்களுக்குப் பேரரசராய், அபயப்ரதராஜரின் பிள்ளையாய், பரமகாருணிகரான நாயனார் ஆச்சான் பிள்ளையை வணங்குகிறேன்.
மற்ற திருநாமங்கள்-ஸுந்தரவரராஜாசார்யர்-சௌம்யவரேஸ்வரர்

அருளிச்செய்தவை
1-சதுஸ்லோகி வ்யாக்யானம் – இந்த க்ரந்ததில் பிராட்டி பற்றிய பூர்வாசார்ய நிர்ணயத்தை மிக விரிவாக விளக்கியுள்ளார்.
2-தத்வ ஸங்க்ரஹம் – பிராட்டி விஷயமாக மற்றொரு க்ரந்தம்
3-சரம உபாய நிர்ணயம் – எம்பெருமானாரே உத்தாரக ஆசார்யர் என்னும் பரம ரஹஸ்யத்தை விளக்கும் க்ரந்தம்
4-முக்தபோகாவலீ
5-ஜ்ஞாநார்ணவம்
6-தத்வத்ரய விவரணம்
7-அணுத்வபுருஷகாரத்வஸமர்த்தனம்
8-சரமரஹஸ்யத்ரயம்-
ஆகியவை ஆகும்

ஸ்வாமி எங்களாழ்வான் திருநக்ஷத்ரம்-சித்திரை ரோஹிணி

ஸ்ரீ விஷ்ணுசித்த பதபங்கஜ ஸங்கமாய
சேதோ மம ஸ்ப்ருஹயதே கிமத: பரேண|
நோசேந் மமாபி யதிஸேகரபாரதீநாம்
பாவ: கதம் பவிதுமர்ஹதி வாக்விதேய: ||

ஸ்ரீபாஷ்ய ஸிம்ஹாஸநாதிபதிகளில் ஒருவரான ஸ்ரீ நடாதூராழ்வானின் பேரரான “வாத்ஸ்யவராதாச்சார்யார்” என்னும் ஸ்ரீ நடாதூரம்மாள்-அம்மாளுக்கு ஆசார்யரானமையாலே “அம்மாள் ஆசார்யர்” என்று அழைக்கப் பெற்றார் – இவர் ஸ்ரீ விஷ்ணு புராணத்திற்கு ஸ்ரீ விஷ்ணு சித்தீயம் என்னும் வ்யாக்யானத்தையும், ஸித்தாந்த ப்ரமேயங்களைச் சுருக்கி “ப்ரமேயஸங்க்ரஹம்” என்னும் க்ரந்தத்தையும், ப்ரஹ்மஸுத்ரத்தின் அதிகரணங்களின் சங்கதியை விளக்கி “ஸங்கதிமாலா” என்னும் க்ரந்தத்தையும், கத்ய வ்யாக்யானம் மற்றும் “ஸாரார்த்த சதுஷ்டயம்” ஆகிய க்ரந்தங்களை அருளிச்செய்துள்ளார்.

சீராரும் வெள்ளறையில் சிறந்துதித்தோன் வாழியே
சித்திரை உரோகிணி நாள் சிறக்க வந்தோன் வாழியே
பார்புகழும் எதிராசன் பதம் பணிந்தோன் வாழியே
பங்கயச் செல்வியின் பதங்கள் பரவுமவன் வாழியே
திருக்குருகைப் பிரான் பிள்ளான் திருவருளோன் வாழியே
தீதிலா பாடியத்தைத் தேர்ந்துரைப்போன் வாழியே
தாரணியில் விண்டுமதம் தழைக்க வந்தோன் வாழியே
தண்ணளியோன் எங்களாழ்வான் தாளிணைகள் வாழியே

ஒன்றான ஸ்ரீ எம்பார் ஜீயர் ஸ்வாமியின் திருநக்ஷத்ரம்-ஆவணி ரோஹிணி-ஆசார்யன் – சோளசிம்மபுரம் ரங்காசார்ய தொட்டையாசார்ய ஸ்வாமி

ஸ்ரீ வாதூல ரமாப்ரவாள ருசிர ஸ்ரக்ஸைந்ய நாதாம்சஜ
ஸ்ரீ குர்விந்த்ர மஹார்ய லப்த நிஜஸத்ஸத்தம் ச்ரிதா பீஷ்டம்|
ஸ்ரீ ராமாநுஜ முக்ய தேசிக லஸத் கைங்கர்ய ஸம்ஸ்தாபகம்
ஸ்ரீமத் வேங்கட லக்ஷ்மணார்ய யமிநம் தம் ஸத்குணம் பாவயே ||

ஸ்ரீ வாதூல தயாபாத்ரம் ஜ்ஞானவைராக்ய வாரிதிம் |
யதீந்த்ர ப்ரவணம் வந்தே கோவிந்தம் பக்திம் முநிம் ||

அக்ஷயாப்தே ஸிம்ம க்ருஷ்ண ரோஹிண்யாம் கலிதோதயம் |
ராமாநுஜ பதச்சாயாம் வந்தே வேங்கட லக்ஷ்மணம் ||

அக்ஷயாத்ரே ஸிம்ம க்ருஷ்ண ரோஹிண்யாம் ஜாதமாச்ரயே |
ஸ்ரீ ப்ரவாள குரோர் சிஷ்யம் முநிம் வேங்கட லக்ஷ்மணம் ||

ஜீயர் ஸ்வாமி அருளிச்செய்த நூல்கள்

ஸித்தோபாய ஸுதர்சனம்
ஸத்தர்சன ஸுதர்சனம்
துத்தர்சன கரிசனம்
விப்ரதிபத்தி நிரஸனம்
ஸ்ரீ வசனபூஷண அரும்பதம்
ஸ்ருதப்ரகாசிகா விவரணம்
பூகோள நிர்ணயம்
ஸ்ரீ ராமாநுஜ அஷ்டபதி
ஸித்த உபாய மங்கள தீபிகை
தர்மஜ்ஞ ப்ராமண்ய ப்ராகாசிகை
ஸித்தாந்த பரிபாஷை
கைவல்ய சததூஷணி
கீதார்த்தடிப்பணி
செத்தத்தின் என்கிற ஸ்ரீசுக்தி வ்யாக்யானம்
சரணாகதிக்கு அதிகாரி விசேஷணத்வ ஸமர்த்தனம்
ஜோதிஷ புராணங்களுக்கு ஐககண்ட்ய ஸமர்த்தனம்
துர் உபதேச திக்காரம்
சரண சப்தார்த்த விசாரம்
முக்திபதசக்தி வாதம்
ப்ரஹ்மபதசக்திவாதம்
ஸித்ததாத்பர்ய டிப்பணி
ஸாரநிஷ்கர்ஷ டிப்பணி
உடையவர் வடிவழகில் அடியார்கள் ஈடுபாடு
திருமஞ்சனக்கட்டியம்
த்யாக சப்தார்த்த டிப்பணி
ஸித்தாந்த தூலிகை
அஷ்டாக்ஷர ஸர்வாதிகார ஸமர்த்தனம்
பிரபத்தி அநுபாயத்வ விசாரம்
பிரமாண்ட க்ரஹண வரைபடம்

சீர் பெரும்பூதூரைச் செழுப்பித்தோன் வாழியே
திருப்பாவை சீயர் உளம் தேர்ந்து உணர்ந்தோன் வாழியே
பார்மேவும் பரசமயப் பற்று அறுத்தோன் வாழியே
பாடியத்தின் உட்பொருளைப் பகருமவன் வாழியே
காரிசுதன் தமிழ்மறைக்குக் கருத்து உரைப்போன் வாழியே
கருணையினால் அடியேற்குக் கழல் அளித்தோன் வாழியே
ஏராரு முனிதிலகம் என வந்தோன் வாழியே
எங்கள் எம்பார் சீயர் தமது இணையடிகள் வாழியே

————

ஸ்ரீ கோயில் கந்தாடை இளையவில்லி பாலதந்வி வரதாச்சார்யார் ஸ்வாமி-சித்திரை ரோஹிணி –ஸ்வாமி ராமானுஜரால் நியமிக்கப்பட்ட 74 சிம்மாசனாதிபதிகளுள் 72 ஆம் ஸிம்ஹாசனாதிபதியாக நியமிக்கப்பட்ட ஸ்ரீ கோயில் கந்தாடை குமாண்டூர் இளையவில்லியாச்சான் ஸ்வாமி திருவம்சத்தில் அவதரித்து திருமாளிகையின் ஸமாஸ்ரயண குருபரம்பரையின் வர்த்தமான ஸ்வாமியாக எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கோயில் கந்தாடை இளையவில்லி பாலதந்வி வரதாச்சார்யார் ஸ்வாமி

ஸ்ரீமத் கௌஸிக வார்தீந்தும் ஸீலாதி குணஸாகரம்|

ஸ்ரீமத்கநார்ய ஸத்புத்ரம் வரதார்யம் அஹம் பஜே||

வாழி இளையவில்லி ஆச்சான்

மாதகவால் வாழும் பாலதந்வி வரதாசிரியன்

வாழியவன் ஸரணாகதி மொழிப்பொருளை

சிச்சனவன் உய்யும்படி உரைக்கும் சீர்

கௌசிகர் தம் குலத்து உதித்த குணக்கடலோன் வாழியே

தொல் புகழ் சீர் தொட்டையாரியன் தனயனவன் வாழியே

சித்திரையில் உரோகிணி நாள் உதித்த செல்வன் வாழியே

திருவரங்கன் பெரிய கோயில் போற்றுமவன் வாழியே

திருகடிகைத் தக்கானைத் தினம் தொழுவோன் வாழியே

காரேய் கருணையிராமாநுசன் கழல் பணிவோன் வாழியே

பதின்மர் தம் பாசுரத்தில் பற்றுடையோன் வாழியே

நம் பாலதந்வி வரதாரியன் பொற்பதங்கள் வாழியே

சீராரும் இளையவில்லி இணையடிகள் வாழியே

பன்னிருசீர் திருநாமம் அணிந்த எழில் வாழியே

பன்னிருவர் பாடல்கள் பயில் பவளம் வாழியே

திருமலைமால் திருக்கோஷ்டித் தழைக்க வந்தான் வாழியே

திருமுகமும் கருணைமிகுக் கண்ணிணைகள் வாழியே

திருமுடியிற் திகழ்வழகுக் குழலொழுங்கும் வாழியே

தாள் பணிவோர் ஆருரைப் பேணுமவன் வாழியே

கௌஸிகர் தம் குலமகனார் வாழி என்றும் வாழியே

மாலடியார்வாழ மாநகர் அரங்கம் வாழ* பெரும்பூதூர்

மாமுனி தன் மன்னுபுகழ் வாழ* ஆழிசூழ்

அனைத்துலகும் தாம் வாழ* நன்னெறி சேர் ஆத்திகர் புகழ்

இளையவில்லி வரதாரியனே இன்னுமொரு நூற்றாண்டு இ

ஸ்ரீ விளாஞ்சோலைப்பிள்ளை -திருநக்ஷத்ரம் – ஐப்பசி உத்திரட்டாதி
திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ள ஆறநூர் என்னும் கிராமத்தில் அவதரித்தவர்.
ஆசார்யன் – ஸ்ரீ பிள்ளைலோகாசார்யார்
வேறு திருநாமம் – நலந்திகழ் நாராயண தாஸர்
துலாஹிர்புத்ந்ய ஸம்பூதம் ஸ்ரீ லோகார்ய பதாஸ்ரிதம்
ஸப்தகாதா ப்ரவக்தாரம் நாராயணமஹம் பஜே-
-தனியன்-ஐப்பசி உத்திரட்டாதியில் அவதரித்தவரும் பிள்ளை லோகாசார்யரின் திருவடிகளைப் பற்றியவரும் ஸப்தகாதை அருளிச் செய்தவரும் “நலந்திகழ் நாராயண தாஸர் என்ற விளாஞ்சோலைப் பிள்ளையை வழிபடுகிறேன்.
ஸ்ரீ லோகார்ய பதாரவிந்த மகிலம் ஸ்ருத்யர்த்த கோசாம் ஸ்ததா
கோஷ்டீஞ்சாபி ததேக லீநமநஸா ஸஞ்சிந்தயந்தம் முதா
ஸ்ரீ நாராயண தாஸமார்யமமலம் சேவே ஸதாம் ஸேவிதம்
ஸ்ரீ வாக்பூஷண கடபாவ விவ்ருதிம் யஸ்ஸப்த காதாம் வ்யதாத்-
-மற்றொரு தனியன்-ஸ்ரீ பிள்ளை லோகாசார்யருடைய பாதார விந்தங்களில் மறைப் பொருள் அனைத்தையும் பெற்றவரும் அவருடைய கோஷ்டியை எப்போதும் நினைத்துக் கொண்டு இருப்பவரும், ஸ்ரீ வசனபூஷணத்தின் உட்பொருள்களை ஸப்தகாதை என்ற நூலால் வெளியிட்டவரும் ஸ்ரீ நாராயண தாஸர் என்ற திருநாமமுடையவரான உயர்ந்தவரை எப்போதும் சேவிக்கிறேன்.
ஸ்ரீ பிள்ளை உறங்காவில்லிதாஸர் ஸ்வாமி எம்பெருமானாருக்கு அந்தரங்கராய் இருந்தது போல், ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார் ஸ்வாமியினிடத்திலே, அந்தரங்க சிஷ்யராய் இருந்து ஸகல சாஸ்திர அர்த்தங்களையும் கேட்டவர் ஸ்ரீ விளாஞ்சோலைப்பிள்ளை.-இவர் ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார் திருவாய் மலர்ந்தருளிய ஸ்ரீ வசனபூஷண திவ்ய சாஸ்த்ரத்தில் ஊன்றினவராயும் அதிலுள்ள அர்த்த விசேஷங்களை அனுபவிப்பதைத் தவிர வேறொன்று அறியாதவராயும் வாழ்ந்து வந்தவர்.-ஸ்ரீமத் பகவத் கீதையில் அமைந்துள்ள ஸ்லோகங்களுள் சரம ஸ்லோகம் சிறப்பெய்தினது போல, ஸ்ரீ வசனபூஷணத்தில் அமைந்துள்ள ப்ரகரணங்களுள் சரம பர்வ நிஷ்டா ப்ரகரணம் சிறப்புற்றது. ஆகையால் இந்த ப்ரகரணத்தில் அருளிச் செய்யப்பட்ட அர்த்த விசேஷங்களை எல்லாம் திரட்டி ஒரு பிரபந்தம் அருளிச் செய்ய திருவுள்ளம் கொண்டு திருவாசிரியம் போலே ஏழு பாசுரம் கொண்ட ஸப்தகாதை என்னும் நூலை அருளிச்செய்தார் ஸ்ரீ விளாஞ்சோலைப்பிள்ளை என்று பெரியோர் பணிப்பர்.-ஸ்ரீ வசனபூஷண ரஹஸ்ய அர்த்தத்தை ஸ்வாமி திருவாய்மொழிப் பிள்ளைக்கு உபதேசித்தார். இவருடைய திருவரசு திருவனந்தபுரம் எம்பெருமானின் கர்பக்ரஹம் (அநந்த பத்மநாப பெருமாள் திருவடி).

நம: ஸ்ரீசைலநாதாய குந்தீநகர ஜந்மநே|
ப்ராஸத லப்த பரமப்ராப்ய கைங்கர்ய ஸாலிநே||ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை தனியன்
-குந்தீ நகரத்தில் உதித்தவராய், ஆசார்யன் அருளாலே அடையப்பெற்ற பரமப்ராப்யமான கைங்கர்யத்தை உடையயவரான திருமலையாழ்வாருக்கு வணக்கம்.
ஸ்ரீசைலேஸ குரும் லோக தேசிகாங்க்ரி ஸமாஸ்ரிதம்
வ்ருஷே விசாக ஸம்பூதம் வந்தே வரகுணாகரம்
–வைகாசி விசாகத்தில் அவதரித்தவரும் பிள்ளைலோகாசார்யாரை ஆஸ்ரயித்தவரும் உயர்ந்த குணங்களுக்கு இருப்பிடமானவருமான திருமலையாழ்வார் ஆகிற திருவாய்மொழிப்பிள்ளையை வணங்குகிறேன்
வையகம் எண் சடகோபன் மறைவளர்த்தோன் வாழியே
வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே
ஐயன்அருள்மாரிகலை ஆய்ந்து உரைப்போன் வாழியே
அழகாரும் எதிராசர் அடிபணிந்தோன் வாழியே
துய்யஉலகாரியன் தன்துணைப் பதத்தோன் வாழியே
தொல் குருகாபுரி அதனைத் துலக்கினான் வாழியே
தெய்வநகர் குந்தி தன்னில் சிறக்க வந்தோன் வாழியே
திருவாய்மொழிப்பிள்ளை திருவடிகள் வாழியே
“காடுவெட்டிக் கண்டேனோ திருமலை யாழ்வார் போலே என்று திருவல்லிக்கேணிப் பெண்பிள்ளை அருளிச் செய்துள்ளார்


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ மாமுனிகள்‌ சிஷ்யரான ஸ்ரீ கோயில்‌ கந்தாடை யண்ணன் திருக் குமாரரான ஸ்ரீ கந்தாடை நாயன் அருளிய -ஸ்ரீ பெரிய திருமுடி யடைவு –

September 10, 2026

https://archive.org/stream/ptma-kn-ao/Periya-Thirumudi-Adaivu_djvu.txt

அநந்த கோடி ப்ரஹ்மாண்ட, நாயகனாய்‌, ஆதி மத்‌யாந்த மதிந்யனாய்‌, , ஸமாநாதிக ரஹிதனாய்‌, வேதாந்த வேத்யனாய்‌, அவாப்த ஸமஸ்த காமனாய்‌, அநந்த கல்யாண குணங்களுடையனா யிருக்கிற ஸ்ரீமந் நாராயணன்‌ உகந்‌ தருளி யிருக்கிற ஸ்தலங்கள்‌ :- பரம்‌, வ்யூஹம்‌, விபவம்‌, அந்தர்யாமி, அர்ச்சாவதாரம்‌ என்று ஐந்து.

அதில்‌ பரமாவது- அநந்த கோடி ப்ரஹ்மாண்டங்களுக்கும்‌ புறம்பாய்‌, விரஜைக் கப்புறமாய்‌, பரிணமாதி, ரஹிதமாய்‌, குண்டேரா நாஸ்தீதி வைகுண்ட ” என்று சொல்லுகிற படியே நாஸ ரஹிதமாய்‌, நாநா ரத்ன ஸ்வர்ண மயமாய்‌, அநந்த விவித, விசித்ர கோபுர மண்டப ப்ராஸாதராதி, பரிஸோபிதமாய்‌, நிரதிசயானந்த; ஸுக வஹமாய்‌, பஞ்சோபநிஷண் மயமாய்‌, ஸகல வஸ்து பரிபூரிதமாய்‌, ஸகல ஸாம்ராஜ்ய லக்ஷ்மீ கரமான ஸ்ரீ வைகுண்ட மென்கிற பரம பதத்தில்‌, லஷ்மீ பூமி நீளா நாயகனாய்‌, அநந்த கருட விஷ்வக்ஸேனாதி, நித்ய முக்த ஸஹிதனாய்‌,ஸ்புரத்ரிடாங்குத; ஹாரகண்டுகா * என்றும்‌-“ஸ்வோசித விவித, விசித்ராநந்தாஸ்சர்ய”” என்றும்‌ சொல்லுகிறபடியே திவ்யாம்பர, திவ்யாபரண, திவ்யமால்ய திவ்யாயுதாதி;, ஸர்வாலங்கார பூரி நிதனாய்‌, அநந்த கோடி ஸூர்ய ப்ரகாஸயனா யெழுந்தருளி யிருக்கிறது.

வ்யூஹமாவது :– திருப்பாற்கடலிலே ப்ரஹ்ம ருத்‌ர தேவேந்தராதி; தேவதைகளுக்கு ஸேவ்யனாய்‌, அநந்தாவதாரங்களுக்கும்‌ முதலாய்‌, ‘ உத்பத்தி ஸ்திதி லயங்களுக்குக்‌ கர்த்தாவா யெழுந்தருளி யிருக்கிறது.-விபவமாவது * பரித்ராணாய ஸாதூநாம்‌”‘ என்கிறபடியே துஷ்ட நிக்ரஹ தர்ம ஸம்ஸ்தாபநாதிகள்‌ பண்ணக்‌ கடவதான ராம கிருஷ்ணாதி யவதாரங்கள்‌-அந்தர்யாமித்‌வமாவது “அந்தர்‌ பஹிஸ்ச தத்‌ ஸர்வம்‌ வ்யாப்ய நாராயண: ஸ்தித:” என்றும்‌, **அந்தர் பஹிஸ்‌ ஸகல வஸ்துஷு ஸந்தமீரம்‌” என்றும்‌ சொல்லுகிறபடியே வ்யாப்யவ்யாபகனாய்‌; ஆப்ரஹ்ம பிபீலிகாதி; ஸகல சேதநா சேதனங்களுக்கும்‌ அந்தர்யாமியாய்‌, ஸர்வ கதனாய்‌, பரி பூர்‌ணனா யெழுந்தருளி யிருக்கிறது.அர்ச்சாவதாரமாவது:-ஸர்வ ஸுலபமாய்‌, சேதனர்க்கு அபிமதமான த்ரவ்யத்திலே விக்‌ரஹமாய்‌, ஸகல மோஹனமாய்‌, கோயில்களிலும்‌, கிருஹாதிகளிலும் எழுந்தருளி யிருக்கிறது.

அதில்‌ ஆழ்வார்‌ பாடின திருப்பதிகள்‌ நூற்றெட்டு; அதில்‌ முக்யமான திருப்பதிகள்‌:– 6. *!ஸ்ரீரங்க மங்களமணிம்‌ கருணா நிவாஸம்‌ ஸ்ரீவேங்கடாத்‌ரி நிகராலய கான மேகம்‌ | ஸ்ரீ ஹஸ்தி சைல சிகரோஜ்ஜ்வல பாரிஜாதம்‌ ஸ்ரீம்‌ நமாமி ஸிரஸா யது ஸைல தீபம்‌ || *’ என்று சொல்லுகிறபடியே புஷ்ப த்யாக; போக, ஜ்ஞான மண்டபங்கள்‌. அதிலும்‌ ப்ரதானமானது ஸாக்ஷாத்‌ பரம பதமான
நம் பெருமாள் கோயில்‌. எங்ஙனே என்னில்‌ **காவேரீ விரஜா ஸேயம்‌ வைகுண்டம்‌ ரங்க மந்திரம்‌। ஸ வாஸு தேவோ ரங்கேஸ : ப்ரத் யக்ஷம்‌ பரமம்‌ பதம்‌ || ‘
‘ என்று சொல்லுகிறபடியே. இப்படி ஸாக்ஷாத்‌ பரம பதமான நம்‌ பெருமாள்‌ கோயிலுக்கு ராஜாவானவர்‌ பரமபதநாதர்‌,-ஸ்ரீ ரங்கராஜர்‌. இப்படி ஸ்ரீரங்கராஜரான பெரிய பெருமாளுக்குத் திருநக்ஷத்ரம்‌ பங்குனியில்‌ ரேவதி; திருநாமங்கள்‌
ஸ்ரீரங்கராஜர்‌ நம்பெருமாள்‌. அழகிய மணவாளப் பெருமாள்‌, தகட்ட பெருமாள்‌. ஆபரணத்துக்கு அழகு கொடுக்கும் பெருமாள்‌ i மந்தா சங்கு மறையும்‌ பெருமாள்‌, தேவசிகாமணிப்பெருமாள்‌;
சிஷ்யைகள்‌ ஸ்ரீ பூமி நிளாதிகளான நாச்சிமார்கள்‌.

தனியன்கள் திருவவதார ஸ்தலங்களும் அருளிச் செய்துள்ளார்

நாதமுனிகளின் சிஷ்யர்‌ -உய்யக் கொண்டார்‌, குருகைக் காவலப்பன்‌, பிள்ளை கருணாகர தாஸர்‌, நம்பி கருணாகர தாஸர்‌, ஏறு திருவுடையார்‌ திருக் கண்ண மங்கை யாண்டான்‌, வானமாமலை தெய்வ நாயக
ஆண்டான்‌, உருப்புட்டூராச்சான் பிள்ளை, சோகத்தூராழ்‌வான்‌, கீழையகத் தாழ்வான்‌, மேலையகத் தாழ்வான்‌, ஆக சிஷ்யர்‌ பதினொரு பேர்களும்–உய்யக்கொண்டாரின் சிஷ்யர்‌கள் மணக்கால் நம்பி,
திருவல்லிக்கேணி பாண் பெருமாள்‌ அரையர்‌, சேட்டலூர்‌ செண்டலங்கார தாஸர்‌, ஸ்ரீபுண்டரீக தாஸர்‌, கோமடம்‌ திருவிண்ணகரப்பன்‌, உலக பெருமாள்‌ நங்கை முதலானோர்-மணக்கால் நம்பியின் சிஷ்யர்‌கள் -ஆளவந்தார்‌ திருவரங்கப் பெருமாளரையர்‌, தெய்வத்துக்கரசு நம்பி, பிள்ளை யரசு நம்பி, சிறுபுள்ளூருடையார் பிள்ளை, திருமாலிருஞ்‌ சோலை தாஸர்‌, ‘ வங்கிபுரத்தாச்சி முதலானோர்-

ஆளவந்தாருடைய சிஷ்யர்கள் பெரியநம்பி, பெரியதிருமலைநம்பி, திருக்‌ கோட்டியூர்‌ நம்பி, திருமாலையாண்டான்‌, தெய்வ வாரியாண்‌ டான்‌, வானமாமலை யாண்டான்‌, ஈஸ்வராண்டான்‌, ஜீய
ராண்டான்‌. ஆளவந்தாராழ்வான்‌, திரு மோகூரப்பன்‌, திருமோகூர்‌ நின்றார்‌, தேவப் பெருமாள்‌ மாறனேர் நம்பி, திருக்கச்சி நம்பி, திருவரங்கப் பெுமாளரையர்‌, திருக்‌ குருகூர்‌ தாஸர்‌, வகுளாபரண ஸோமயாஜியார்‌, அம்மங்கி, ஆள் கொண்டி, வடமதுரையில்‌ பிறந்த கோவிந்த தாஸர்‌, ராஜ புரோஹிதரான நாதமுனிதாஸர்‌, ரங்க சோழாவின்‌ ராஜ பத்நியான திருவரங்கத்தம்மன்‌ ஆக சிஷ்யர்‌களில் ப்ரதானரானவர்‌ இருபத்திருவர்‌.-பெரிய நம்பியின் சிஷ்யர்‌கள் திருக்கச்சிநம்பி, எம்பெருமானார்‌. மலை குனிய நின்றார்‌, ஆரியூரில்‌ ஸ்ரீசடகோபmதாஸர்‌, அணியரங்கத் தமுதனார்‌ பிள்ளை, திருவாய்க் குலமுடையார்‌ பட்டர்‌ முதலானவர்கள்‌

இளையாழ்வாருக்குயதிராஜருக்கு தேவப் பெருமாள்‌ யதிராஜரென்னும்‌ திருநாமஞ்‌ சாத்தியருளினார்‌-நம்பெருமாள்‌ உபய விபூதிகளுக்கும்‌ யதிராஜரைப்‌ பட்டங் கட்டி உடையவரென்று திருநாமம்‌ சாத்தி யருளினார்‌. திருவரங்கப்பெருமாளரையர்‌ இவருடைய கைங்கர்யத்‌துக்குத்‌ திருவுள்ளமுகந்து, த்வயார்த்தம்‌ ஸாதித்தருளி லக்ஷ்மண முனி என்கிற திருநாமமும்‌ சாத்தி அருளினார் –திருக்கோட்டியூர்‌ நம்பி திருமந்த்ரார்த்தமும்‌ எம்பெருமானார்‌ என்கிற திருநாமமும்‌ சரம ஸ்லோ கார்த்தமும்‌ ஸாதித்தருளினார் –திருமாலை ஆண்டான் திருவாய்மொழி முத லான நாலாயித்துக்கும்‌ வ்யாக்யானஙகள்‌ ஸாதித்தருளி –சடகோபன்‌ பொன்னடி என்கிற திருநாமம்‌ சாத்தி, தம்முடைய குமாரரான சுந்தரத் தோளுடையாரை இவர்‌ திருவடி களிலே ஆஸ்ரயிப்பித்தருளினார்‌-பெரியதிருமலைநம்பி ஸ்ரீமத்‌, ராமாயண வ்யாக்‌யானம்‌ சாதித்தருளி, கோயிலண்ணனென்‌கிற திருநாமம்‌ சாத்தி அருளினார் -ஆதி கேசவப் பெருமாள்‌ சாத்தின திருநாமம்‌ பூத புரீஸர்‌. திருவேங்கடமுடையான்‌ சாத்தின திருநாமம்‌ தேஸிகேந்த்ரர்‌-சரஸ்வதி தேவி சாத்தி அருளின திருநாம ஸ்ரீ பாஷ்யகாரர்-பின்னும்‌ விஸேஷ திரு நாமங்கள்‌ – யதீந்த்ரர்‌, யதி குலதுர்யர்‌, யதி ஸார்வ
பெவ்மர்‌, யதிசக்ரவர்த்தி, யதிபதி,யதி நாதர்‌,யோகிந்த்ரர்‌, க்ருபா மாத்ர ப்ரஸரந்நாசார்யர்‌

நடாதூரம்மாள்‌ ஸ்ரீபாதத்திலே ஸ்ருத ப்ரகாஸிகாரும்‌ கிடாம்பி அப்பிள்ளானும் – அப்பிள்ளான்‌ ஸ்ரீபாதத்திலே தூப்பில் பிள்ளை என்னும்‌ வேதாந்தாசார்யர்‌. இவருக்குத்‌ திருவவதார ஸ்தலம்‌ பெருமாள்‌ கோயில்‌. திருநக்ஷத்ரம்‌ புரட்டாசி மாஸம்‌ திருவோணம்‌- திருத்தகப்‌பனார்‌ அநந்த ஸூரிகள்‌ -குடி தூப்பில்‌. குலம்‌ வடமாள்‌, விஸ்வாமித்ர கோத்ரம்‌. திருநாமங்கள்‌ தூப்பில்‌ பிள்ளை, வேங்கடாசார்யர்‌-வேதாந்தாசார்யர்‌. திருவாராதனம்‌ திருவேங்கடமுடையான்‌, திருப்‌பாணாழ்வார்‌. ஹயக்ரீவோபாஸ்தி. ஆசார்யர்‌ கிடாம்பி அப்பி(பு?)ள்ளான்‌, சிஷ்யர்‌ குமாரரான நயினாராசார்யரும்‌,
ப்ரஹ்ம தந்த்ர ஸ்வதந்த்ர ஜீயரும்‌.–ப்ரஹ்ம தந்த்ர ஸ்வதந்த்ர ஜீயர்‌ ஸ்ரீ பாதத்திலே கிடாம்பி திருமலை ஐயங்கார்‌ ஆஸ்ரயித்தார்‌. அவர்‌ சிஷ்யர்‌ திரு நாராயணபுரத்தாய்‌ ஸ்வாமிகள்

ப்ரமாணத் திரட்டுக்கள்
(பிரகாசிக்கிற கிரீடம்‌, தோள் வளைகள்‌, ஹாரம்‌, பதத கழுத்தணி ஸ்ரீகெளஸ்துபம் , திருவரை நாண் , திருச்சிலம்பு முதலிய திருவாபூரணங்கள் – சங்கு , சக்கரம்‌, வில்‌ போன்ற ஆயுதங்களாலும்‌ (உன்‌ சேர்த்தி யாலே) பிரகாசிக்கும்‌ திருத் துழுாயை உடைய வனமாலையாலும்‌ பிரகாசிப்பவனை ]

[தனக்குத் தக்கவையாய்‌, பலளிதமானவையாய்‌, விசித்ரமானவையாய்‌, எல்லையற்ற ஆஸ்சர்யத்தை உடையவையாய்‌, நித்யமானவைமாய்‌, குற்றமற்றவையாய்‌ , மிகச் சிறந்த நறுமணமுடையவையாய்‌, மிகச் சிறந்த மென்மை உடையவையாய்‌, மிகச் சிறந்த ஒளியையும் வுடையவையான கிரீடம்‌, மகுடம்‌, திருச் சுட்டி, திருச் செவி மலர்‌, மகர குண்டலங்கள்‌, திருக் கழுத்தணி, ஹாரம்‌, திருத் தோள்வளை, முன் கை வளை, ஸ்ரீவத்ஸமென்னும்‌ திருமறு, ஸ்ரீ கெளஸ்துபம்‌, திரு முத்து வடங்கள்‌, திரு உ.தரபந்தனம்‌, பீதாம்பரம்‌, அரை நூல்‌ பட்டிகை, திருச் சிலம்பு முதலான எண்ணிறந்த திவ்யாபரணங்கள உடையவனே

ஸ்ரீரங்கத்திற்கு மங்கள மணி போன்றிருக்கும்‌ ஸ்ரீரங்க நாதனயும்‌, கருணை நீர்க்கு இருப்பிடமாய்‌, திரு
வேங்கடமலையின்‌ உச்சியிலிருக்கு கார் மேகம்‌ போன்ற திருவேங்கட முடையானையும்‌, அத்திகிரிரின்‌ உச்சியில்‌ விளங்கும்‌ பாரிஜாதம்‌ போன்‌றவனாய்‌, பெருந்தேவியின்‌ கணவனுமான பேரருளாளனையும்‌, யதுகிரிக் குன்‌றிலிட்ட விளக்‌குப்‌ போன்ற திரு நாரணனையும்‌ தலையால்‌ வணங்குகிறேன்‌.

பரமபதத்தில்‌ உள்ள அந்த விரஜா நதியே இங்கு காவேரி நதியாய்‌ உள்ளது. வைகுண்டமே திருவரங்கம்‌
பெரிய கோயிலாய்‌ உள்ளது. அந்தப்‌ பரவாஸுதேவனே ரங்கநாதனாக இருக்கிறான்‌. இவ் வண்ணமாக ஸ்ரீரங்கம்‌ நேரே காணும்‌ பரம பதமாய்‌ உள்ளது.

லக்ஷ்மி தேவியாகிற கற்பகக்‌ கொடியின்‌ உயர்ந்த ஸ்தனங்களாகிற பூங்கொத்துக்களில்‌ ஸஞ்சரிக்கும்‌ ஸ்ரீரங்கராஜனாகிற வண்டு என்‌ மனத் தாமரையில்‌ விளையாடக்‌ கடவது

எவருடைய புருவ நெரிப்பின்‌ தார தம்யத்தாலே ஒரு வன்‌ அடிமையாகவும்‌, மற்றொருவன்‌ ஆண்டானாகவும்‌ வேறுபட்டு இருக்கை யாகிற மேடு பள்ளமுடையதாக இவ்‌ வுலகம்‌ விளங்குகிறதோ, அத்தகைய ஸ்ரீரங்கநாச்சியாருக்கு நமஸ்காரம்‌.

ஸ்ரீரங்க சந்திரனைப்‌ பெரிய பிராட்டியாரோடு விளையாட விட்டு விட்டு, எல்லாச்‌ சேதநாசேதனங்களையும்‌ நியமிக்கும்‌ அதிகாரத்‌தைத்‌ தம்‌ அங்குளி முத்ரையாலேயே எவர்‌ நிர்வஹிக்கிறாரோ, அந்த ஸேனை முதலியாரை வேறு புகலற்றவர்களாய்‌ அடி பணிந்தோம்‌.

அரசரால்‌ கல்பிக்கப்பட்ட பொற்கிழியைக்‌ கைப்‌ பற்றுவதற்காக குருமுகமாக ஒதாமலே எல்லா வேதங்களையும்‌ முழங்கியவராய்‌. ரங்கநாதனுக்கு நேரே மாமனாராய்‌, அந்தணர்‌ தலைவரான அந்தப்‌ பெரியாழ்வாரை வணங்குகிறேன்‌.

நீளாதேவியின்‌ உயர்ந்த திருமுலைத் தடங்களாகிற மலையில்‌ உறங்கும்‌ கண்ணனே உணர்த்தி, கணக்கற்ற வேத வாக்யங்களினின்றும்‌ தேறும்‌ தன்‌ பாரதந்த்ரியத்தை அவனுக்கு ஒதுவித்தவளாய்‌, தான்‌ சூடிக் களைந்த மாலையால்‌ கட்டப்பட்ட அவனை வலியச் சென்று அனுபவித்தவளான அந்த கோதா தேவிக்கு மறுபடியும்‌ மறுபடியும்‌ நமஸ்காரம்‌.

அரசனைப் போல்‌ உபசரிக்கத் தக்க ரங்க நாதனையே அந்தப்‌ பரவாஸுதேவனாக எண்ணித்‌ திருப் பள்ளியெழுச்சி யாகிற திவ்ய ப்ரபந்தத்தைப்‌ பாடி யருளிய தொண்டரடிப்‌ பொடிகளைத்‌ துதிக்கிறேன்‌

இரண்டு காவேரிகளுக்கும்‌ நடுவில்‌ திருவரங்கத்தில்‌ சயனித்திருக்கும்‌ அரங்கனை அனுபவித்துப்‌ பேரானந்த மடைந்த நெஞ்சை யுடையவராய்‌, வேறு எந்த விஷயத்தையும்‌ தன்‌ கண்கள்‌ காண மாட்டா என எவர்‌ அறுதியிட்‌டாரோ, அத்தகைய முனி வாஹனரை மனனம்‌ செய்கிறோம்‌.

எவருடைய ஒளி மிக்க வாக்குகளாகிற கிரணங்‌களாலே அஜ்ஞானத்தினால்‌ ஏற்படும்‌ உள்ளிருள்‌ அழிந்ததோ, அத்தகைய கவிலோக ஸுர்யனான கலிகன்றியை தியானிக்கிறேன்‌.

இப்படிப் பட்டதென்று நினைக்க முடியாததும்‌, ஆஸ்‌சர்யமானதும்‌, (பகவானுடைய அருளாலே) எளிதாகக்‌
கிடைத்ததுமான ஞானத்தினுடையவும, வைராக்யத்தினுடையவும்‌, குவியல்‌ போன்றவராகவும்‌, பகவானை மனனம்‌ செய்பவராகவும் ஆழ்ந்த பகவத்‌ பக்திக்குக் கடலாகவுமிருக்‌கிற நாதமுனிகளுக்கு நமஸ்காரம்‌ செய்கிறேன்‌.

நாதமுனிகளின்‌ நினைவில்‌ நிலை நிற்பவரும்‌, ஸூத்த; ஸத்வ மயராயிருப்பவரும்‌, பகவானுடைய மற்றொரு அவதாரம்‌ போன்றுள்ளவருமான புண்டரீகாக்ஷரை (உய்யக்‌ கொண்டாரை ) வணங்குகிறேன்‌.

நாத முனிகளுடைய திருவடியில்‌ ஈடுபட்டவராய்‌, ஜ்ஞான யோக பக்தி யோகச்‌ செல்வங்களை உடையவரான குருகைக் காவலப்பன்‌ என்னும்‌ யோகி, ஸ்ரேஷ்டரை எப்‌ போதும்‌ தலையால்‌ வணங்குகிறேன்

‌(பரசு ராமனைப் போல்‌) பொறுமையை (பூமியை) விடாதவராய்‌, (ராமனைப்‌ போல) புண்ய ஜனங்களை (ராக்ஷஸர்‌களை) பாதிக்காதவராய்‌, (பலராமனைப் போல்‌)மதுவான மதம்‌ இல்லாதவரான நாலாவது ராமனை (மணக்கால் நம்பியை) உபாஸிக்கிறோம்‌.பகவத்‌ பக்தியாகிற பாற்கடலில்‌ குடைந்தாடப்‌ பெற்றவராய்‌, (அதனால்‌) ஆதியாத்மிகம்‌, ஆதி தைவிகம்‌, ஆதிபெனதிகம்‌ என்னும்‌ மூன்று தாபங்களும்‌ ஆறப்‌ பெற்றவரான ஸ்ரீராமன்‌ என்னும்‌ மணக்கால்‌ நம்பியை ஆஸ்ரயிக்கிறேன்‌ .

ஸ்ரீராம மிஸ்ரராம்‌ மணக்கால்‌ நம்பியின்‌ திருவடித்‌ தாமரையில்‌ வண்டாயிருப்பவரும்‌, ஸ்ரீயாமுநாசார்யருடைய சிறந்த புத்திரரும்‌, குணத்தில்‌ மிக்கவரும்‌, ஸ்ரீரங்கராஜ கருணையினாலே அளிக்கப் பெற்றவரும்‌, ஸ்ரீபாஷ்யகாரரை சிஷ்யராகச்‌ கொண்டவருமான திருவரங்கப் பெருமாளரையரைத்‌ துதிக்கிறேன்‌.

ஒன்றியொன்றி உலகம்‌ படைத்த விஷ்ணுவின்‌ (சேதந லாப,) மநோரதம்‌ எவராலே நிறைவேற்றி வைக்கப்‌ பட்டதோ, கருணை நிரம்பியவரும்‌, யதிராஜருடைய ஆச்சார்யருமான அத் தகைய பெரிய நம்பிகளை ஆஸ்ரயிக்கிறேன்‌-

(பிரமனுக்குத்‌ தந்தையான திருவேங்கடமுடை யானாலேயே அப்பா” என்று கூப்பிடப் பெறுகையாலே) உலகிற்குப்‌ பாட்டனான பிரமனுக்கும்‌ பாட்டனாராய்‌, ஸ்ரீ பாஷ்யகாரருக்குச்‌ சிறந்த ஆசார்யராய்‌, அவருக்கு வால்மீகியின்‌ வாக்காகிற ஸ்ரீராமாயணத்தின்‌ பொருளை உபதேசித்தவரான பெரிய திருமலை நம்பிக்குப்‌ பலகால்‌ வணக்கம்‌.

பக்தர்களுக்கு அமுதம்‌ போன்றவராய்‌, கேட்‌பார்ககுக்‌ கேட்டதைக்‌ கொடுக்கும்‌ கற்பக வ்ருக்ஷமாய்‌,
யாமுநாசார்யரின்‌ திருவடியில்‌ அன்பு கொண்டவராய்‌, ஸ்ரீபாஷ்யகாரருக்குத்‌ திருவாய்மொழியின்‌ பொருளாகிற பரம ஹிதத்தை உயதேசித்தவராய்‌, நல்லறிவு மிக்கவரான திருமாலை யாண்டானைத்‌ தலையாலே வணங்குகிறேன்‌-

யாமுநாசார்யருடைய நல்ல சீடரும்‌, திருவரங்கம்‌ பெரிய கோயிலில் வாழ்பவரும்‌, ஞானம்‌, பக்தி முதலான வற்றுக்குக்‌ கடலா யிருப்பவருமான மாறனேரி தம்பியை பஜனம்‌ செய்கிறேன்‌

ஸ்ரீவரதராஜனின்‌ கருணைக்கு இருப்பிடமாய்‌, மிகச்‌ சிறந்த ராமாநுஜ முனிக்கும் மதிக்கத் தக்கவராய்‌,
நல்லோர்கள்‌ சென்று சேருமிடமான திருக்கச்சி நம்பியை வணங்குகிறேன்‌

கண்ணனின்‌ அவதாரத்தால்‌ மதுரையைப் போலவும்‌, ராமனின்‌ அவதாரத்தால்‌ அயோத்தியைப் போலவும்‌, கருணைக்கோர்‌ இருப்பிடமான யதிராஜருடைய அவதாரத்‌தால்‌ ஸ்ரீ பெரும்பூதூர்‌ மிகப்‌ புண்ணியமான நகரமாயிற்று

திருக் கோட்டியூர்‌ நம்பியின்‌ நல்ல பிள்ளையாய்‌, யதிராஜரின்‌ திருவடிகளை அடைந்தவராய்‌, காஸ்யப கோத்‌ரத்தில்‌ உதித்தவரான நாராயணன்‌ என்னும்‌ திருநாமமுள்ள தெற்காழ்வானை ஆஸ்ரயிக்கிறேன்‌-

பெரிய திருமலை நம்பியின்‌ நல்ல பிள்ளையாய்‌, இளையாழ்வாரான உடையவரின்‌ திருவடிகளை ஆஸ்ரயித்தவராய்‌, திருமலைக்‌ குடியில்‌ அவதரித்தவரான பிள்ளை திருமலை நம்பியை ஆஸ்ரயிக்கிறேன்‌.

பாரத்வாஜ குலத்‌துதித்தவராய்‌, ராமாதுஜ முனிவரின்‌ திருவடிகளை ஆஸ்ரயித்தவராய்‌, கருணைக்கோர்‌ இருப்பிடமான வங்கி புரத்து தம்பியை வணங்குகிறேன்‌.

எம்பெருமானாருடைய நல்ல சீடராய்‌, ஸாளக்ராமம்‌ என்னும்‌ ஊரில்‌ வாழ்ந்தவராய்‌, ஐந்தாம்‌ உபாயமான ஆசார்ய நிஷ்டை கை வரப் பெற்றவரான ஸாளக்ராம ஐயன்‌ எனப்படும்‌ வடுக நம்பியை ஆஸ்ரயிக்கிறேன்‌.

பாரத்வாஜ குலத்தில்‌ உதித்தவராய்‌, பெரிய நம்பிகளின்‌ திருக் குமாரராய்‌, எம்பெருமானாரை ஆஸ்ரயித்தவரான ஸ்ரீ புண்டரீகாக்ஷரை வணங்குகிறேன்‌.

திராவிட வேதத்தின்‌ ஸாரத்தை அறிந்தவராய்‌, எம்பெருமானாரின்‌ திருவடிகளை ஆஸ்ரயித்தவராய்‌, பேரறிவாளரான திருக் குருகைப்‌ பிரான்‌ பிள்ளானைத்‌ தினந்தோறும்‌ தலையால்‌ வணங்குகிறேன்‌.

திருமாலை யாண்டானின்‌ திருக் குமாரராய்‌, எம்பெருமானாரின்‌ நல்ல சீடராய்‌, சிறந்த கருணைக்கு இருப்பிடமான சுந்தரத் தோளுடையார்‌ என்னும்‌ ஆசார்யனை வணங்குகிறேன்

ஸ்ரீ பாஷ்யகாரருக்கு நல்ல சீடராய்‌, கமல நயன பட்டருடைய குமாராய்‌, எம்பாரின்‌ தம்பியாய்‌, கருணைக்கு இருப்பிடமான சிறிய கோவிந்தப்‌ பெருமாளை வணங்குகிறேன்‌.

ஸ்ரீரங்கத்தில்‌ பங்குனி ஹஸ்தத்தில்‌ அவதரித்தவராய்‌, அணி யரங்கத் தமுதனாரின்‌ குமாரராய்‌, எம்பெருமானாரின்‌ திருவடியைப்‌ பற்றியவரான திருவரங்கத்தமுதனாரை ஆஸ்ரயிக்கிறேன்‌.

எம்பெருமானாருடைய நல்ல சீடராய்‌, வேத ஸாஸ்த்ரார்த்தால்‌ பொருள்களைச்‌ செல்வமாக உடையவராய்‌, ஸந்யாஸ ஆஸ்ரமத்தை உடையவரான தேவராஜ முனிவர்‌ என்னும்‌ அருளாளப்‌ பெருமாள்‌ எம்பெருமானாரை ஆஸ்ரயிக்கிறேன்‌

ஜ்ஞாந வைராக்யம்‌ நிறைந்தவராய்‌, எம்பெருமானாரின்‌ திருவடிகளைப்‌ பற்றியவராய்‌, நாலாவது ஆஸ்ரம மாகிய ஸந்யாஸத்தை ஏற்றுக் கொண்டவரான முனிவர்‌ தலைவராம்‌ ஆட் கொண்ட வில்லி ஜீயரை வணங்குகிறேன்‌-

(எதிரிடும்‌) கவிகளுக்கும்‌, தார்க்கிகர்களுக்கும்‌ சிங்கம்‌ போன்றவராய்‌, (ஜஞாநம்‌, பக்தி, வைராக்யம்‌ முதலான) செல்வங்கள்‌ நிறைந்தவராய்‌, “வேங்கட நாதன்‌ ” என்னும்‌ திருநாமமுடையவரான ஸ்ரீ வேதாந்த தேசிகர்‌ என்‌ நெஞ்சில்‌ எப்போதும்‌ வாழ்வாராக.

கூரத்தாழ்வானுக்குப்‌ பிள்ளையாய்‌, ஸ்ரீபராஸர பட்டருக்குத்‌ தம்பியான ஸ்ரீராம பிள்ளயை ஆஸ்ரயிக்கிறேன்‌.

ஸ்ரீபராசர பட்டருடைய கருணையினால்‌ சமஸ்த உண்மை யறிவையும் வுடையவராய்‌, ஸம்ப்ரதாய ப்ரவர்த்தராய்‌, ஸ்ரீராமப் பிள்ளயின்‌ குமாரரான வாக்கினால்‌ வென்றார்‌ பட்டருக்கு அடிமை செய்கிறேன்‌.

கூர குலத்திற்குத்‌ தலைவராய்‌, மிகச் சிறந்தவராம்‌, எம்பெருமானார்‌ அருளிய ஸ்ரீபாஷ்யத்தின்‌ பொருள்களை (ஸ்ருத ப்ரகாசிகையால்‌) விரித்துக் காட்டியவரான ஸதாம்‌ பட்டரை வணங்குகிறேன்‌.

ஸ்ரீபராசர பட்டரின்‌ சீடராய்‌, திருவரங்கம்‌ பெரிய கோயிலை ரக்ஷிப்பவராய்‌, ஞானம்‌ முதலான குணங்களுக்குக்‌ கடலா யிருப்பவரான நலந் திகழ்‌ நாராயண ஜீயரை வணங்குகிறேன்‌

வேதாந்தி தஞ்சீயராகிற அமுதக்‌ கடலினின்றும்‌ மிகச்‌ சிறந்ததான வேதப் பொருளமுதப்‌ [பெருக்கைப் பருகிப்‌ பொழிபவராய்‌, கருணை (நீர்‌) நிறைந்த (மேகம்‌ போன்றவரான திருக்கலிகன்‌றி தாஸராம்‌ நம்பிள்ளையைச்‌ சரணடைகிறேன்‌.

ராமாநுஜர்‌” என்னும்‌ திருநாமமுள்ள கந்தாடை யாண்டானின்‌ நல்ல பிள்ளையாய்‌, உலகாசிரியரான நம்‌பிள்ளையின்‌ கருணைக்குப்‌ பாத்திரராய்‌, நற்குணக்கடலான வாரணாதீஸரை (கந்தாடை தோழப்பரை) வணங்குகிறேன்‌-

வாதூல குலத்தில்‌ உதித்தவராய்‌, பச்சை வாரணப்‌ பெருமாளின்‌ பிள்ளையாய்‌, கந்தாடை யாண்டானின்‌ பேரனை ஈயான்‌ எனப்படும்‌ ராமாநுஜாசார்யரை வணங்குகிறேன்‌ –

வாதூல குலத்துக்கு ‘ஆபரணமா யிருப்பவராய்‌, ஈயானின்‌ குமாரராய்‌,ஜ்ஞாந வைராக்யங்கள்‌ நிறைந்தவரான திருக் கோபுரத்து நாயனாரை வணங்குகிறேன்‌-

வாதூல குலக் கொழுந்தாய்‌, திருக் கோபுரத்து நாயனாரின்‌ குமாரராய்‌, உபய வேதாந்தச்‌ செல்வமுடையவரான தெய்வப் பெருமாள்‌ தோழப்பரை வணங்குகிறேன்‌-

வாதூல குல விளக்காய்‌, தெய்வப் பெருமாள்‌ தோழப்‌பருடைய நல்ல குமாரராய்‌, ஞானம்‌ முதலான குணங்களுக்குக்‌ கடலான தேவராஜ தோழப்பரை வணங்குகிறேன்‌.

உலகாரியரான நம்பிள்ளையின்‌ திருவடிகளில்‌ ஈடுபட்டவராய்‌, நடுவில்‌ திருவீதியில்‌ வாழ்பவராய்‌, கூரத்தாழ்‌வானுடைய குலமாகிய கடலுக்குச்‌ சந்திரன்‌ போன்‌றவரான நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டரை ஆஸ்ரயிக்கிறேன்‌-

ஞானமும்‌, வைராக்யமும்‌ நிறைந்தவராய்‌, திராவிட வேதமான திருவாய்மொழியின்‌ பாஷ்யத்தை அளித்தவராய்‌, என்‌ ஆசார்யரான பின்பழகிய பெருமாள்‌ ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்‌.

உலகாரியரான நம்பிள்ளையின்‌ திருவடித் தாமரையைப்‌ பற்றியவராய்‌, கருணைக் கடலாய்‌, உபய வேதாந்தச்‌ செல்வ முடையவரான (ஈயுண்ணி) மாதவாசார்யரை ஆஸ்ரயிக்கிறேன்‌ –

(ஈயுண்ணி) மாதவரின்‌ நல்ல குமாரராய்‌, அவருடைய திருவடித் தாமரையில்‌ ஆஸ்ரயித்தவராய்‌, வாத்‌ஸல்யம்‌ முதலான குணங்களை யுடையவரான (ஈயுண்ணி) பத்மநாபாசார்யரை ஆஸ்ரயிக்கிறேன்‌.

நாலூரானின்‌ வம்ஸத்தில்‌ உதித்தவராய்‌, (எம்‌பெருமானாரின்‌ சீடரான) எச்சான்‌ எனப்படும்‌ யறிஜ்ஜோரின்‌ குலத்திற்குத்‌ திலகமாய்‌, திராவிட வேதப் பொருளை அறிந்தவரான ஸ்ரீவராஹர்‌ எனப்படும்‌ நாலூர்ப் பிள்ளையை ஆஸ்ரயிக்கிறேன்‌

நாலூரில்‌ வாழ்பவரும்‌, ராமாநுஜார்யர்‌ எனப்படும்‌ நாலூர்ப்‌ பிள்ளையின்‌ குமாரரும்‌, குணமுடையவருமான தேவராஜர்‌ எனப்படும்‌ நாலூராச்சான்‌ பிள்ளைக்கு வணக்கம்‌.

ஆசார்ய ஹ்குதயத்தின்‌ பொருள்களை வியாக்கியான மிட்டுக் காட்டியவராய்‌, ஸ்ரீய:பதியின்‌ தாஸராய்‌, குற்றமற்றவரான தேவராஜ ரெனப்படும்‌ திருநாராயணபுரத் தாயியை ஆஸ்ரயிக்கிறேன்‌-

ஸ்ரீமத்‌ வேத மஹாசார்யரின்‌ திருவடித் தாமரையில்‌ பிரியாதே யிருப்பவராய்‌, தமிழ்‌ வேதாந்த தேசிகரான இளரிசைப் பிள்ளை நூறாண்டு வாழ்வாராக.

ஸ்ரீரங்காசார்யரின்‌ நல்ல குமாரராய்‌, ஞானம்‌ ஸமதமங்கள்‌ முதலான குணங்களுக்குக்‌ கடலாய்‌, திராவிட வேதாந்தத்திற்கு ஆசார்யரான ஸ்ரீ கேசவாசார்யரை வணங்குகிறேன்‌.

ஸ்ரீமத்‌ கேசவாசார்யரின்‌ திருவடித்‌ தாமரையில்‌ வண்டா யிருப்பவராய்‌, நல்ல திருவடிகளை (சீடர்களை) உடையவராய்‌, தாயின்‌ அடிமையைத்‌ தகர்த்தெறிந்த கருடனின்‌ திரு நாமத்தை உடையவரான கருடாசார்யரை வணங்குகிறேன்‌-

கேசவாசார்யரின்‌ நல்ல பிள்ளையாய்‌, அவருடைய திருவடித்‌ தாமரையை ஆஸ்ரயித்தவராய்‌, தமிழ்‌ வேதத்‌திற்கு ஆசார்யரான ஸ்ரீ நிவாஸாசார்யரை வணங்குகிறேன்‌-

குற்றமற்ற குணச்‌ செல்வங்களுக்குக்‌ கடைவீதியுமாயிருப்பவரும்‌, ஸம்ஸாரத்தைக்‌ கண்டு பயந்தவர்களுக்‌குப்‌ புகலா யிருப்பவருமான (ஆதி) வண் சடகோப ஜீயரை ஸரணடைகிறேன்‌-

வண் சடகோப ஜீயரின்‌ திருவடியைப்‌ பற்றியவராய்‌, கருணைக்கோர்‌ இருப்பிடமாய்‌, (குணச்‌) செல்வமுடையவரான ஸ்ரீமந் நாராயண ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்‌-

எவருடைய கடாக்ஷத்திற்கு இலக்கானவர்களுக்கு தான்‌ எப்போதும்‌ கிடைத்தற்கெளியவனோ, அத்தகையவராய்‌, யாமுநாசார்யரின்‌ பிள்ளையாய்‌, ஸ்ரீமத் க்ருஷ்ணர்‌ என்னும்‌ பெயரை யுடையவரான பெரிய வாச்சான் பிள்ளைக்கு வணக்கம்‌.

பெரியவாச்சான் பின்ளையின்‌ திருவடித் தாமரையில்‌ ஈடுபட்டவராய்‌. நற்குணக் கடலாய்‌, தமிழ் வேதத்துக்கு ஆசார்யரான ஸ்ரீரங்காசார்யரை வணங்குகிறேன்‌-

பர கால தாஸரெனும்‌ ரங்கராஜரால்‌, அறிந்த படியும்‌ கேட்ட படியும்‌ ஆசார்ய ஹ்ருதயத்தின்‌ பொருள்கள்‌ காட்டப் பட்டன-

ஸம்ஸாரக் கடலில்‌ அமிழ்ந்த சந்துக்களைத்‌ தாண்டுவிக்கும்‌ ஓடம்‌ போன்றதான (வாதிகேஸரி) அழகிய மணவாள ஜீயரின்‌ திருவடித் தாமரையை ஸராணடைகிறேன் –

எவருடைய அருளின்‌ பெருமையால்‌ எனக்கு எல்லா ஸித்திகளும்‌ கிடைத்தனவோ, அத்தகைய
ஸ்ரீ க்ருஷ்ணரெனும்‌ வடக்குத் திருவீதிப் பிள்ளையின்‌ திருவடித்‌ தாமரைகளைத்‌ தலையால்‌ எப்போதும்‌ வணங்குகிறேன்‌ –

ஸம்‌ஸாரமாகிற பாம்பினால்‌ கடிக்கப்பட்ட ஜீவனுக்கு உயிர் தரும்‌ மருந்தா யிருப்பவராய்‌, வடக்குத் திருவீதிப் பிள்ளையின்‌ குமாரரான பிள்ளை யுலகாசிரியராம்‌ ஆசார்யருக்கு வணக்கம்‌-

ஆசார்ய பரம்பரா ப்ராப்தமான திராவிட வேத ஹ்ருதயம்‌ வடக்குத்‌ திருவீதிப் பிள்ளையின்‌ குமாரரான
அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனாரால்‌ காட்டப்பட்டது,

திருமலை யாழ்வாராகிய திருவாய் மொழிப்பிள்ளைக்‌குத்‌ தாமே வலியச் சென்‌றழைத்து நற் பொருள்களை உப தேசிக்கையாலே *உதாரர்‌” என்னும்‌ அடைமொழி பெற்றவரான கூர குலோத்தமரை ஆஸ்ரயிக்கிறேன்‌

பிள்ளை யுலகாசிரியரின்‌ கிருபைக்குப்‌ பாத்திரரும்‌, கெளண்டின்ய குலத்திற்கு அலங்காரமா யிருப்பவரும்‌, எல்லா ஆத்ம குணங்களுக்கும்‌ இருப்பிடமானவருமான கூர குலோத்தம தாஸரை வணங்குகிறேன்‌.-

குந்தீ நகரத்தில்‌ பிறந்தவராய்‌,(ஆசார்யனுடைய) அருளாலே கிடைக்கப் பெற்ற பரம ப்ராப்யமான கைங்கர்‌யத்தை உடையவரான திருமலை யாழ்வாரெனும்‌ திருவாய்‌ மொழிப் பிள்ளைக்கு வணக்கம்‌.

ஸ்ரீ மானான மணவாளமாமுனிகள்‌ பாஷ்யகாரரேயாக விளங்குபவர்‌. அவர்‌ பாஷ்யத்தை விவரிக்கும் போது கேட்கும்‌ பேறு பெற்றவன்‌ அடியேன்‌.

திருமலை யாழ்வாராம்‌ திருவாய்மொழிப் பிள்ளயின்‌ தயைக்குப்‌ பாத்திரராய்‌, ஞானம்‌, பக்தி முதலான குணங்‌களுக்குக்‌ கடலாய்‌, எம்பெருமானாரிடம்‌ ஈடுபட்டவரான மணவாள மாமுனிகளை வணங்குகிறேன்‌

மணவாள மாமுனிகளின்‌ பாத ரேகை போன்‌றிருப்‌பவராய்‌, எப்போதும்‌ அவராலே தம் ஸ்வருப ஸ்‌திதி ப்ரவ்ருத்திகளாம்படி யிருப்பவரான வானமாமலை ஜீயரை ஆஸ்ரயிக்‌கிறேன்‌.

மணவாளமாமுனிகளின்‌ பாத கைங்கர்யத்தையே தாரகமாகக்‌ கொண்டவராய்‌, வாத்ஸல்யம்‌ முதலான குணங்களுக்குக்‌ கடலாயிருப்பவரான பட்ட நாத முனிவரை வணங்குகிறேன்‌.

எல்லா வேதாந்த ஸாரப் பொருள்களும்‌ நிறைந்த திருவுள்ளத்தை உடையவரும்‌, பெரிதான வாதூல கோத்‌ரத்தில்‌ உதித்தவர்களுக்குள்‌ சிறந்தவரும்‌, மணவாள மா முனிகளின்‌ திருவடிகளை ஆஸ்ரயித்தவரும்‌, என்‌ ஆசாரயருமான வரத நாராயணனை (கோயில்‌ கந்தாடை அண்ணனை) ஆஸ்ரயிக்கிறேன்‌ –

வேதாந்த தேசிகரின்‌ கடாக்ஷத்தாலே விரிவடைந்த அறிவை யுடையவராய்‌, மணவாள மாமுனிகளின்‌
கருணைக்கு ஒரே பாத்திரமா யிருப்பவராய்‌, ஸ்ரீ வத்ஸ கோத்திரத்தி லுதித்தவராய்‌, குற்றமற்ற குணங்களை யுடையவரான ப்ரதிவாதி பயங்கரம்‌ அண்ணாவை பக்தி யுடன்‌ ஆஸ்ரயிக்கிறேன்‌-

மணவான மாமுனிகளின்‌ திருவடித் தாமரைகளில்‌ வண்டா யிருப்பவராய்‌, திவ்ய ஜ்ஞானமளிப்பவராய்‌, மங்களமானவரான தேவராஜரெனும்‌ எறும்பி யப்பாவை வணங்குகிறேன்‌–

மணவாள மாமுனிகளின்‌ திருவடித் தாமரைகளில்‌ வண்டா யிருப்பவராய்‌, ஸ்ரீவத்‌ஸ கோத்ரத்தில் உதித்தவரான ப்ரணதார்த்தி ஹரர்‌ எனும்‌ அப்பிள்ளயை வணங்குகிறேன்‌-

மணவாள மாமுனிகளுடைய எல்லாக்‌ கைங்கர்ய பாரங்களையும்‌ தாமொருவரே வஹிப்பவராய்‌, அவரையே தெய்வமாகக்‌ கொண்டவரான ராமானுஜூரெனும்‌ அப்பிள்ளானை ஆஸ்ரயிக்கிறேன்‌-

சமம்‌, தமம்‌ முதலான குணங்களுக்கு ஒரே இருப்‌பிடமாய்‌, சரம பர்வமான ஆசார்யனிடம் நிறைய ஈடுபாட்டை யுடையவராய்‌, யதிராஜரின திருவடித் தாமரையில்‌ வண்டா யிருப்பவரான கந்தாடை போரேற்று நாயனார்‌ எனும்‌ நல்லாசிரியரை ஆஸ்ரயிக்கிறேன்‌-

மணவாள மாமுனிகளின்‌ திருவடித் தாமரையை ஆஸ்ரயித்தவராய்‌, நற் குணக் கடலான ஹீணைல் நாணிம்‌ ஹாசார்யரை வணங்குகிறேன்‌-

நம்மிடம்‌ வாத்ஸல்யத்தாலும்‌, கருணையாலும்‌ மணவாள மா முனிகள்‌ தாமே விரும்பி மறுபடி அவதரித்‌தாரோ என்னலாம்படி யிருப்பவரும்‌, அம் மா முனிகளின்‌ திருப் பேரனாராம்‌, பரம கருணை யுடையவருமான அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனார்‌ எனும்‌ என்‌ ஆசார்யரை ஆஸ்ரயிக்கிறேன்‌.

வரத நாராயண குருவென்னும்‌ கோயில்‌ கந்தாடை யண்ணனின்‌ திருவடிகளையே உபாயமாகக் கொண்டவரும்‌, மணவாள மா முனிகளின்‌ பெருங்‌ கருணைக்குப்‌ பாத்திரமா யிருப்பவரும்‌, சிறந்த குணங்களாகிற ரத்னங்கள்‌ நிறைந்த கடலா யிருப்பவருமான ஸ்ரீ நிவாஸாசார்யரென்னும்‌ கோயில்‌
கந்தாடை அப்பனை வணங்குகிறேன்‌

வானமாமலை (ஆதி) ராமானுஜ ஜீயருக்கு இனியவரும்‌, எல்லாமறிந்தவரும்‌, ஸ்ரீவத்ஸ கோத்ரத்தை அலங்‌கரிப்பவருமான ஆத்தான்‌ ராமாநுஜன்‌ பிள்ளையை வணங்குகிறேன்‌.

பட்டர்பிரான்‌ ஜீயருடைய விளங்கும்‌ கருணைக்குப்‌ பாத்திரமா யிருப்பவரும்‌, மிகவும்‌ சாந்தியையும் யுடையவரும்‌, பெருத்த ஞானம்‌, பக்தி, வைராக்யம்‌ முதலான குணங்‌களால்‌ மிகச் சிறந்து விளங்குபவரும்‌, எப்போதும்‌ எம்பெருமானைப்‌ பெற வேணும்‌ என்னும்‌ ஆர்த்தி நிறைந்து விளங்கு பவருமான பரவஸ்து அழகிய மணவாள ஜீயரை பஜிக்கிறோம்‌.

ஸ்ரீ மத் வாதூல கோத்ரத்திலுதித்த வரத நாராயண குருவாகிற கோயில்‌ கந்தாடை யண்ணனின்‌ பிள்ளையாயும்‌, எல்லா மறிந்தவரும்‌, எல்லார்க்கும் எளியவருமான ஸ்ரீநிவாஸாசார்ய ரென்னும்‌ கோயில்‌ கந்தாடை நாயனை பஜிக்கிறேன்‌

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கந்தாடை நாயன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பராங்குசரும் ஸ்ரீ பரகாலனும்–

September 9, 2026

வேத சதுஷ்ட (த்தயத்துக்கு-இங்கும் லுப்தம் ) அங்க உபாங்கங்கள் போலே இந் நாலுக்கும்
இரும் தமிழ் நூல் புலவர் பனுவல் ஆறும் மற்றை எண்மர் நன் மாலைகளும்- (இருமை -பெருமை -)-சூரணை-43-

அதாவது
ருகாதி வேத சதுஷ்டயத்துக்கும்-சீஷா வியாகரண நிருக்த சந்த கல்ப ஜோதிஷங்கள் ஆகிற ஆறு அங்கங்களும் மீமாம்ச நியாய புராண தர்ம சாஸ்த்ராத் உப அங்கங்கள் எட்டுமாய் இருந்துள்ள பதினாலும் போலே-(ஆதி -ஆயுர்வேதம் காந்தர்வ வேதம் அர்த்த வேதம் தனுர் வேதம் )-இந்த திராவிட வேத சதுஷ்டயதுக்கும்-இரும் தமிழ் நூல் புலவன் நங்கை யாளன்–பெரிய திருமொழி -1-7-10- -என்று
ஒருவரால் கரை காண ஒண்ணாத படி இருக்கிற திராவிட வேத சாஸ்த்ரத்தை கரை கண்ட ஞான ஆதிக்கத்தை உடையரான திரு மங்கை ஆழ்வார் உடைய-கலியன் வாயொலி செய்த பனுவல் -பெரிய திருமொழி -1-4-10–என்று சாஸ்திர ரூபங்களான பிரபந்தங்கள் ஆறும்–மற்றை ஆழ்வார்கள் எண்மர் உடையவும் விலஷணமான பிர பந்தங்களும் என்கை ..-நன் மாலைகள் என்றது –நய நின்ற நன் மாலை -முதல் திருவந்தாதி -57–என்று முதல் ஆழ்வார் பிரபந்தத்தில் அருளிச் செய்தது எல்லா பிரபந்ததுக்கும் ஒக்கும் என்று நினைத்து .

1-பொய் நின்ற ஞானமும் -திருவிருத்தம் -1––இத்யாதியாலே ஸ்வரூப விரோதியாய் வந்தேறி யான தோஷங்களை முதல் அடியிலே பேசினால் போலே பிரதமத்திலே -வாடினேன் வாடி-பெரிய திருமொழி -1-1-1- -இத்யாதியாலே ஸ்வ ரூபத்துக்கு வந்தேறியான தோஷங்களை கண்டு நொந்து பேசுகையும்

2-பகவத் ப்ராவண்ய ப்ராசுர்யமும்-பத்துடை அடியவர்க்கு எளியவன் –எத்திறம் ப்ராவண்ய ப்ராஸூர்யம் உருகுமால் நெஞ்சம் கார் ஒக்கும் காட்கரை அப்பன் –முலையோ முழு முற்றும் போந்தில பால்யாத் ப்ராவண்யம் –கணபுரம் கை தொழும் பிள்ளையை -பிறர் சொல்ல கேட்டு கை தொழும் இவள் -அருவி சோர் வேங்கடம் நீர் மலை உருகினாள் உள் மெலிந்தாள்

3-அதில் அர்ச்சாவதாரத்தில் ஊற்றமும்-செய்ய பரத்துவுமாய் –எய்துபவர்க்கு அர்ச்சாவதார எளிது -அவனாகும் நீள் கடல் வண்ணனே –-அன்று தேர் கடாவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொலோ-ஸ்ரீ கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் – விபவம் பாடப் பிறந்தவர் அர்ச்சையை பாடுவது ஏற்றம் –
காரார் திருவேங்கடம் காணும் அளவும் போய்–ஆராமம் சூழ் -மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யலாமே–ஏரார் முயல் வீட்டுக் காக்கை பின் போவதே

4-கலவியும் பிரிவும் மாறி மாறி வருகையும்அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மான் -ஆடி ஆடி அகம் கரைந்து –வாடி வாடி இவ்வாணுதலே –கோவை வாயாள் பொருட்டு–பூசும் சாந்து என் நெஞ்சமே -ஹர்ஷம் மிக்கு -மண்ணை இருந்து துழாவி —-ஏறிய பித்தினோடு -மாயன் திறத்தனள் இத்திரு தேறியும் தேறாமல் –யானும் ஏத்தி –ஏத்த ஏத்த எங்கு எய்தும் /ஒரு நாள் காண வாராயே–வருத்தம் -8-5-எல்லியும் காலையும் திருக்கடித்தானாம் தாயப்பத்தி விட்டு -ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்காமல் சன்னிஹிதன் -மைந்தனும் வந்திலன் என் செய்கேன் -திருக்கண்ணபுர பாசுரம் -வருத்தம் சொல்லி ஆழ்வார் –8-5-வருந்தாது இரு மட நெஞ்சே ஆறாம் பத்தில் நம் மேல் வினைகள் வாரா -சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸூ ச – நேரான மொழி பெயர்ப்பு-சோகப்படாதே முதலில் சொல்லி –

5–அந்ய உபதேச பேச்சும்–ஆறு கிண்ணகம்-தாய் மகள் தோழி

6-அது தன்னில் ராத்ரி வ்யசனமும்-மடல் எடுக்க ஒட்டாமல் -ஊரெல்லாம் துஞ்சி பெண் பிறந்தார் பெரும் துயர் காண மாட்டாமல் -கண்ணனும் வாரானால் -காகுத்தனும் வாரானால் -காப்பார் யார் -நங்கள் அடிகள்-தோழியும் நானும் ஒழிய -வியக்தமாக தோழி பாசுரம் இல்லை ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் அருளிச் செயலில் -கோழியும் கூவுகின்றதில்லையே -கூர் இருள் ஆயிற்றே

7-தூத ப்ரேஷணமும்-நான்கு தூது பதிகம் -அவ்வளவு தெம்பு இல்லையே ஸ்ரீ திருமங்கை ஆழ்வாருக்கு -நான்கு பாசுரங்களுக்கு பின்பே நேராக-ஓ மண் அளந்த தாடாளா -வரை எடுத்த தோளாளா –தண் குடந்தை நகராளா–மலையாள ஊட்டு இல்லையே

8-அநுகாரம்-கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் -பதிகம் -ஜெகதாகாரம் –வடவரை நின்றும் வந்து இன்று கணபுரம் இட வகை கொள்வது யான் என்று பேசினாள்

9–மடல் எடுக்கை-மாசறு சோதி பதிகம் –/ஸ்ரீ சிறிய திருமடல் ஸ்ரீ பெரிய திரு மடல் -ஸ்ரீ திரு நறையூர் நம்பி மேல் –

10/11/12-தோழி தாய் மகள் என்னும் அவஸ்தை த்ர்யாபத்திகளும்-சாழல் பதிகம் அவ்யக்தம் தோழி பதிகம்-இவள் திறத்து இருவரும் –2-7-/-7-2-திருத்தாயார் பதிகங்கள் -திண்ணம் என் இள மான் புகுமூர் திருக்கோளூரே-உண்ணும் சோறு / கள்வன் கொல்-அவனூர் வினவி சென்றாள்-கரியான் ஒரு காளை வந்து–அணி யாலி புகுவார் கொலோ -கள்வன் கொல் பிராட்டி திருக்கோலம் இன்றும் சேவை உண்டே -பொன்னிவர் மேனி -நாள் வேதம் ஓதும் -அவர் நாகரீகர் செல்வர் பெரியர்-என்னையும் நோக்கி
அன்னையும் நோக்கும் என்று அஞ்சுகிறேன் –அச்சோ ஒருவர் அழகியவா -ஸுந்தர்யம் இங்கு -எங்கனே நீ லாவண்யம் அங்கு-இரண்டும் மகள் பாசுரங்கள்
1

3-இந்திரிய பய குரோசம் -ஐவர் திசை திசை எற்றி-

14-ஈஸ்வர ஸ்வாதந்த்ர்ய பயம் ,-அரவணை மேல் பள்ளி கொள்ளும் முகில் வண்ணனே அறையோ முறையோ ஸ்ரீ திருவிருத்தம் —தடுப்பார் இல்லாத நிரங்குச ஸ்வாதந்தர்யம் /-தெள்ளியீர்-கை வளை கொள்வது தக்கதோ -ஸ்ரீ நீல மேக பெருமாள் -நீணிலா முற்றத்து நின்று இவள் நோக்கினாள்

15-அசக்ருத் பிரபத்தி கரணம்-ஐந்து தடவை-நோற்ற நாலும்–உலகுண்ட பெரு வாயா ஸ்ரீ நம்மாழ்வார் –பத்து தடவை இவர்–ஸ்ரீ நைமிசாரண்யம் -ஸ்ரீ திருவேங்கடமுடையான் -ஸ்ரீ அண்ணன் கோயில் -ஸ்ரீ திருவரங்கம் -ஸ்ரீ திரு விண்ணகர்–திரு நறையூர் இடர் கெடுத்த திருவாளர் –6-9-பாட்டு தோறும் திருப்பாத பிரஸ்தாபம் இங்கும் உலகுண்ட பெரு வாயா போலே–தேரெழுந்தூர் -திருக்குறுங்குடி மகள் பாவனையில் -9-5-/ 5-9 மானே நோக்கு அங்கு நாயகா பாவம் /

16-ஆர்த்தியின் உடைய கரை புரட்சிகளும்–மாலுக்கு ஏரார் விசும்பில் இருப்பு அரிதாம் படி அங்கு -ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சி இவர் –

17-பர துக்க அசஹிஷ்ணுதையாலே பல காலும் ஹிதம் சொல்லுகையும்–தொடக்கமான கட்டளையாலே மற்றை ஸ்ரீ ஆழ்வார் பிர பந்தங்களைக் காட்டிலும் ,இப் பிரபந்த சதுஷ்டியார்த்த ஜ்ஞாபகமாய் இருக்கையாலே ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் பிரபந்தங்களையே இதுக்கு அங்கங்கள் என்கிறது ..-

மற்றை ஸ்ரீ ஆழ்வார் பிரபந்தங்கங்களும் எதார்த்த அனுசாரிகளாய் , இதில் அர்த்த நிர்ணயத்துக்கு உறுப்பு ஆகையாலே .இதுக்கு உப அங்கங்கள் என்கிறது ..ஆக –சீஷாயாம் வர்ண சிஷா பத சமதிகமோ வ்யாக்ரியா நிர்வசோப்யாம் சந்தஸ் சந்தச் சிதவ் ஸ்யாத் கமயதி சமயம் ஜ்யோதிஷம் ரெங்கநாத ,கல்ப அனுஷ்டான முக்தம் ஹ்யுசித கமிதயோர் நியாய மீமாம்ச யோஸ் ஸ்யாத் அர்த்த வ்யக்தி
புராண ஸ்ம்ருதிஷூ ததனுகாஸ் த்வாம் விசின் வந்தி வேதா -ஸ்ரீ ரெங்கராஜ உத்தர ஸ்தவம்-18-
–என்கிற படியே அவை அந்த வேத சதுஷ்டயத்துக்கும் உபகார அங்கங்களாய் இருக்குமா போலே இவையும் கீழ் சொன்ன படியே இத வேத சதுஷ்டயத்துக்கும் உப அங்கங்களாய் இருக்கும் என்றது ஆய்த்து —

““அங்காநி வேதாஸ் சத்வாரோ மீமாம்ஸா ந்யாய விஸ்தர? ! புராணம்‌ த,ர்ம ஸாஸ்த்ரஞ்ச வித்‌,யா ஹ்யேதாஸ் சதுர்தஸ -என்கிறபடியே சதுர்தஸ வித்‌யாஸ்தாந வேதம் போல்‌ இங்கும்‌ இவருடைய ப்ரபந்தங்கள்‌ நாலும்‌ நாலு வேதத்தினுடைய ஸ்தாநேயாய்‌, “இருந் தமிழ் நூற் புலவன் மங்கை யாளன்‌?” (திருமொழி 1 – 7 – 10) என்றும்‌, ““கலியன் வாயொலி செய்த பனுவல்‌ ” (திருமொழி 1 – 4 – 10) என்றும்‌ சொல்லுகிற திருமங்கை யாழ்வாருடைய ப்ரபந்தங்களாறும்‌, அங்கங்களினுடைய ஸ்தாநத்திலேயாய்‌, மற்றை எட்டு ஆழ்வார்களுடைய ப்ரபந்தங்களும்‌ உபாங்கங்களா யிருக்கும் –

செங்கணாளி யிட்டிறைஞ்சும் சிங்க வேள் குன்றுடைய
எங்கள் ஈசன் எம்பிரானை இரும் தமிழ் நூல் புலவன்
மங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார்க் கலியன்
செங்கை யாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே-1-7-10–ஒருவரால் கரை காண ஒண்ணாத படி இருக்கிற தமிழ் சாஸ்திர உக்தமான படியைக் கரை கண்ட ஜ்ஞான ஆதிக்யத்தை உடையவர் –

வரும் திரை மணி நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானை
கரும் கடல் முந்நீர் வண்ணனை எண்ணிக் கலியன் வாயொலி செய்த பனுவல்
வரம் செய்த வைந்தும் ஐந்தும் வல்லார்கள் வானவர் உலகுடன் மருவி
இரும் கடல் உலகம் ஆண்டு வெண் குடைக் கீழ் இமையவராகுவர் தாமே —1-4-10-

அயல் நின்ற வல் வினையை அஞ்சினேன் அஞ்சி
உய நின் திருவடியே சேர்வான் நய நின்ற
நன் மாலை கொண்டு நமோ நாரணா வென்னும்
சொன் மாலை கற்றேன் தொழுது —
—57-நிர் வசன ரூபமாக நின்ற நல்ல மாலை கொண்டு-நயம் நின்ற நன் மாலை -நயம் -அன்பும் மகிழ்ச்சியும் -திருமந்த்ரார்த்தை நயப்பிக்கையில் ஈடுபட்ட திவ்ய பிரபந்தம் என்றுமாம்-ஸாஸ்த்ர ரூபமாய் இருக்கும் விலக்ஷணமான மாலையைக் கொண்டு என்றுமாம்-நயப்புடைத்தாய் –அதி விலக்ஷணமான சப்தங்களாலே தொடுக்கப் பட்ட இப் பிரபந்த ரூபமான மாலையைக் கொண்டு உன்னை ஆஸ்ரயித்து உனக்கு வாசகமாய் திரு மந்திரம் என்று பிரசித்தமான சொல் தொடை

கலியுகத்தில், தமிழகத்தில் உள்ள ஆற்றங்கரையோரங்களில் ஆழ்வார்கள் அவதரிக்கப் போகிறார்கள் என்று துவாபர யுகத்திலேயே ஸ்ரீமத் பாகவதத்தில் வேதவியாசர் கூறியுள்ளார்.-அந்தச் சமஸ்கிருத ஸ்லோகம்:
“கலௌ கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா: | க்வசித் க்வசிந் மஹாபாகா
த்ரமிடேஷுச பூரிச: | தாம்ரபர்ணி நதியத்ர
க்ருத மாலா பயஸ்விநீ | காவிரீ ச மஹாபாகா ப்ராதீசீச மாஹாநதீ ||”.

இதன் பொருள்: கிருதயுகம் முதலியவற்றில் வாழ்ந்த ரிஷிகள் கலியுகத்தில் பிறக்க வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். ஏனென்றால், நாராயணனே அடையத்தக்கவன் என்று பறைசாற்றும் சான்றோர்கள் கலியுகத்தில் திராவிட தேசத்தில் தோன்றுவார்கள். எங்கு தாமிரபரணி, கிருதமாலா (வைகை), பயஸ்வதி (பாலாறு), பெருமை மிகுந்த காவிரி, மேற்குக்கடலில் சென்று கலக்கும் பெரியாறு ஆகிய நதிக்கரையில் அவர்கள் தோன்றுவார்கள் என்று வேதவியாசர் கூறினார். அப்படியே பன்னிரு ஆழ்வார்கள் அவதரித்து, சரணாகதி தர்மத்தை நிலைநாட்டினர்.

——–

கஜ ஸிம்ஹ -கதி விசார ஸதஸ் -வேழம் -வலிமிக்க சீயம் ராமானுஜன் –

விரிவு நம்மாழ்வார் -சுருக்கம் திருமங்கை ஆழ்வார் -தூது -நான்கு பதிகம்-இவர் 3 -6 வயலாலி மணவாளனுக்கு வண்டு தூது -வேதம் வல்லார் மூலம் பற்ற என் நிலைமை உரையாய் — –
நரஸ்துதி தவிர்தல் – 3-10-திருவாய் மொழி -சொன்னால் விரோதம் -1-1-7-கண்டவா தொண்டரைப் பாடாமல் திருக்குடந்தை வம்மின் –
அனுகரித்துத் தரித்தல்-5-6-கடல் ஞாலம் –8-2-6-வடவரை நின்றும் வந்து இன்று கணபுரம் இடவகை கொண்டது யான் -ஒரே பாசுரம்

நம்மாழ்வார் சுருக்கமாக -இவர் விரித்து பாடியவை
பிரளயம் -திருவாசிரியம் -7 பாசுரம் -ஒரே -11-6-பதிகம் முழுவதும் –

வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி வேற் கணார் கல்வியே கருதி
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன் என் செய்கேன் நெடு விசும்பு அணவும்
பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே
நன்று நான் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —4–

ஊர்வசீ ஸ லோக்யத்துக்கு லோகம் அடங்க சாதன அநுஷ்டானம் பண்ணா நிற்க
நேர் கொடு நேர் அவள் தான் நடந்து உபஸ்தானம் பண்ணி முன்னே நிற்க
அர்ஜுனன் நமஸ்கரித்து நின்றான் நின்றான் இறே விரக்தியாலே –
இப்படிப் பட்டவன்-தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோரி வஸூ துஷ்கரம் -என்று பிரதிகூல வாயுவை பிடித்துக் கூடு கட்டிலும் என் நெஞ்சைப் பிடிக்க போகாது காண்–என்றான் இறே-(சஞ்சலம் ஹி மனஸ் கிருஷ்ண என்றானே)-ஒரு விஷயங்களிலே அரை ஷணம் கால் தாளாத (தங்கி நிற்காத) நெஞ்சை உடையேனான நான்-இந் நெஞ்சை பரிகரமாகக் கொண்டு உன்னை பெறுகைக்கு ஈடான உபாய அனுஷ்டானம் பண்ண என்பது ஓன்று உண்டோ – உன்னை இழக்கைக்கு உறுப்பாம் இத்தனை-என் செய்கேன்
அர்ஜுனனுக்கு பதினெட்டு ஒத்திலும் சோகத்தை உத்பாதித்தாற் போலே -கண்டது எல்லாம் இவருக்கு பய வாஹமாய் இருக்கிறபடி-நீர் இப்படி இருந்தீர் ஆகில் உமக்கு பேற்றுக்கு அடி எத்தாலே என்று இருந்தீர் என்ன பிரளயம் கொண்ட  பூமி தன்னுடைய ரஷணத்தில் அசர்த்தமாய் அத்தை ரஷித்தான் யாவன் ஒருவன் அவனாலே என்கிறார்-

மடலூர்தல் -5-3- ஒரே பாசுரம் -தேவப்பிரான் தன்னை –மடலூர்துமே -சிறிய திரு மடல் -155 வரிகள் 297 வரிகள் பெரிய திரு மடல் -அரங்கனுக்கு மதிள் நறையூர்நம்பிக்கு மடல் ஆச்சார்யன் -என்பதால் –
யானையுடன் ஒப்புமை -திருவேங்கடத்து என் யானை -சொன்னால் விரோதம் ஒரே பாசுரம் -நம்மாழ்வார் -தென்னானாய் வடவானாய் குடபாலானாய் குணபால மத யானாய் –

சமமாக பாடியவை
பாகவத சேஷத்வம் -இரண்டு பதிகங்கள் இருவரும் -பயிலும் சுடரொளி 3-7/நெடுமாற்க்கு அடிமை -8-10-/கடல்மல்லை 2-6-/திருச்சேறை -7-4/
தாய் பாசுரம்–கங்குலும் பகலும் -7-2/திருவிடவெந்தை -2-7-
பிரேமத்தில் பெண் பேச்சு -27 பதிகங்கள் இருவரும் இவள் திறத்து என் செய்கின்றாய் -உன் மனத்தால் என் நினைத்திருந்தாய் –
சரணாகதி -நோற்ற நாலும் -திருவேங்கடத்திலும் 6-10–இவர் பத்து இடங்களிலே –1-6நைமிசாரண்யம் -1-9-திருவேங்கடம் /4-6 காவளம்பாடி /4-7 திருவெள்ளக்குளம் /5-8 திருவரங்கம் /6-2-ஒப்பிலியப்பன் /6-9- நாச்சியார் கோயில் /7-7 தேரெழுந்தூர் -திருஎழுகூற்றிருக்கை திருக்குடந்தை

சிறப்பித்து பாடியவை
குறி சொல்வது -கட்டுவிச்சி -4-6-தீர்ப்பாரை -ஸ்ரீ வைஷ்ணவ கட்டுவிச்சி இவளுக்கு -தெய்வ நல் நோய் இது –
உண்ணும் சோறு -திண்ணம் இள மான் புகுவது திருக்கோளூரே -3-7-1கள்வன் கொல் – அணியாலி புகுவர் கொலோ -ஆளவந்தார் நிர்வாகம் –
கேசவன் தமர் -2-7- திரு நாமங்கள் பதிகம் -பன்னிரு நாமப்பாட்டு -நாராயணன் -ஒன்றே -20 தடவை -1-1 வாடினேன் உப கிரமத்திலும் பின்பு நறையூர் -6-10 கிடந்த நம்பி -நாமம் சொல்லில் நமோ நாராயணமே

இருவரும் -6-3 ஒப்பிலியப்பனுக்கு

———

வார்த்தை -435-
நம் ஆழ்வார் அறிவு கலங்கின போதோடு –
அறிவு நடையாடின போதோடு –
சாத்விக அஹங்காரம் தலை மண்டி இட்ட போதோடே அநுவர்த்தநத்தோடு -வாசியற
மிதுனம் அல்லது வாய் திறக்க அறியார் -எங்கனே என்னில் –

அறிவு கலங்கின போது
சிந்தை கலங்கித் திருமால் என்று அழைப்பன் -திருவாய்மொழி -9-8-10-என்பர் –

அறிவு நடை யாடின போது –
திருமால் நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம்பெருமான்
தன்மையை யார் அறிகிற்பார் -திருவாய்மொழி -8-3-9- என்பர் –

அஹங்காரம் தலை மண்டை இட்ட போது –
திருமால் தலைக் கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீவினை -திருவிருத்தம் -87-என்பர் –

அநுவர்த்தநத்தில் –
அடிமை செய்வர் திருமாலுக்கே -திருவாய்மொழி -6-5-11- என்பர் –

——————————————————-

வார்த்தை -436-

திருமங்கை ஆழ்வாரை  ஈஸ்வரன் ஆக்கலாம் விரகு ஏது என்று பார்த்த இடத்து –
இவர் விஷயாந்தர பிரவணர் ஆகையாலே இவர் பக்கல் சாஸ்திரம் ஜீவியாதாய் இருந்தது –
இவர் விஷயாந்தரங்களிலே வந்தால் –
இது விலஷணம் -இது அவிலஷணம் -என்று அறிகிற உள்மானம் புறமானம் அறிவார் ஒருத்தராய்  இருந்தார்-என்கிற இதுவே பற்றாசாக
நம்மை விஷயம் ஆக்கினால் மீட்கக் கூடும் -என்று தன் வடிவைக் காட்ட
அதிலே அதி பிரவணராய் –
அர்ச்சாவதாரத்துக்கு அவ்வருகு ஒன்றும் அறியாதபடி யானார் –

————————————————————

வார்த்தை -437-

நம் ஆழ்வாரை ஈஸ்வரன் ஸ்வரூபத்தைக் காட்டி அங்கீகரித்தான் –
அவருக்கு எல்லாம் பரத்வத்திலேயாய் இருக்கும் –
இவருக்கு எல்லாம் அர்ச்சாவதாரத்திலேயாய் இருக்கும் -எங்கனே என்னில்

அவர் தொழுவது -கண்ணன் விண்ணோரை -திருவிருத்தம் -47
இவர் தொழுவது -கண்ணபுரம் தொழுதாள் -என்றும் -பெரிய திருமொழி -8-2-1-

(அன்று தேர் கடாவிய பெருமாள் கழல் காண்பது என்றோ -அர்ச்சாவதார மஹிமை பேசிய செந்தாமரைக்கண்ண பதிகம் நிகமனம் பாசுரம்)

அவர் தூது விடுவது -வீசும் சிறகால் பறத்தீர் விண்ணாடு நுங்கட்கு எளிது -திரு விருத்தம் -54 என்றும் –
இவர் தூது விடுவது -செங்கால மட நாராய் இன்றே சென்று திருக்கண்ணபுரம் புக்கு -திரு நெடும் தாண்டகம் -27-என்றும் –

அவர் மடல் எடுப்பது -சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான் தன்னை –குதிரியாய் மடலூர்தும் -திருவாய்மொழி -5-3-9- என்றும் –
இவர் மடல் எடுப்பது -சீரார் கணபுரம் –ஊராய வெல்லாம் ஒழியாமே –ஊராது ஒழியேன் – சிறிய திருமடல் -72-77- என்றும் –

அவர் வளை இழப்பது -விண்ணூர்  தொழவே சரிகின்றது சங்கம் -திருவிருத்தம் -47 என்றும் 
இவர் வளை இழப்பது -திருக் கண்ணபுரத்து உறையும் வரை எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரி வளை -பெரிய திருமொழி -8-3-1- என்றும் –

அவர் எண்ணுவது -மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் -திருவாய்மொழி -9-3-7- என்றும் –
இவர் எண்ணுவது -கண்ணபுரம் தொழும் கார்க்கடல் வண்ணர் மேல் எண்ணம் -பெரிய திருமொழி -8-2-4- என்றும் –

அவர் -விரும்புவது அந்தமில் பேர் இன்பத்து அடியோரோடு இருந்தமை -திருவாய்மொழி -10-9-11-என்றும்
இவர் -அந்தரங்கம் -காட்டினாய் கண்ண புரத்துறை யம்மானே -பெரிய திருமொழி -8-10-9- என்றும்

அவருக்கு ஜ்ஞானப் ப்ரதன் -ஏனத்துருவாய் இடந்த பிரான் -திருவிருத்தம் -99-
இவருக்கு ஜ்ஞானப் ப்ரதன் -வயலாலி மண வாளன் –

அவருக்கு சேஷி -ஒரு மா தெய்வம் மற்றுடையமோ யாமே -திருவாசிரியம் -7 -என்கிற ஜகத் காரண வஸ்து
இவருக்கு சேஷி -அரங்க நகரப்பா துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு -பெரிய திருமொழி -11-8-8- என்றும் –

அவருக்கு உபாயம் -அந்நலன் உடை ஒருவனை நணுகினம் நாமே -திருவாய்மொழி -1-1-3 -என்றும்
இவருக்கு உபாயம் குருங்குடிக்கே என்னை உய்த்திடுமின் -பெரிய திருமொழி -9-5-என்றும் –

——————————————————————————————–————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

கண்டேன் ஸ்ரீ ராமனை-ஸ்ரீ உ .வே.வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள்-

September 9, 2026

த்யானஸ்லோகங்கள் – கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம்! ஆருஹ்ய கவிதா ஸாகாம் வந்தே வால்மீகி கோகிலம்!! வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே ! வேத ப்ராசேதஸா தாஸீத் ஸாக்ஷாத் ராமாயணத்மநா!! யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருத மஸ்தகாஞ்சலீம் ! பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம் ! மாருதிம் நமத ராக்ஷ ஸாந்தகம்!! ஆபதாம் அபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வ ஸம்பதாம் ! லோகாபி ராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்!! ஸ்ரீராமராம ராமேதி ரமே ராமே மனோரமே ! ஸஹஸ்ர நாம தத் துல்யம் ராம நாம வரானனே!!

ஸ்ரீய பதியான ஸர்வேஸ்வரன் ஸ்ரீமன் நாராயணன் சேதனர்கள் உஜ்ஜீவனத்திற்காக எத்தனையோ அவதாரங்கள் செய்திருக்கிறார் – அதில் ப்ரதானமாய் ராம க்ருஷ்ண அவதாரங்கள் அகிலத்தாலும் போற்றக் கூடியது. இந்த பூலோகத்தில் அவதரித்து நம்மை எல்லாம் நேராக வந்து ரக்ஷித்து பின் திரும்ப வைகுண்டம் சென்றடைந்தார். உபநிஷத் வாக்யமான “யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ: “என்கிறபடியே வாக்கிற்கும் மனதிற்கும் அப்பாற்பட்டவர் ஸர்வேஸ்வரன் எவராலும் அளவீட்டு கூற முடியாத அளவிற்கு அளப்பறியர் ராமன். ஆழ்வார் தன் பாசுரத்தில் மனன கமலமற மலர்மிசை எழுதரும் மனனுணர் வளவிலன் பொறி யுணர் வவை யிலன் இனனுனர் முழுநலம் எதிர் நிகழ் கழிவினும் இனனில னெனனுயிர் மிகுநரையிலனே என்ற பாசுரத்தை அர்த்தத்துடன் விசேஷித்தார். யாரோ ஒருத்தருக்கு ராமன் தன்னை காட்டவே மற்றவர்களுக்கும் ராமனை காண வேண்டும் என்ற ஆவல் உந்துகிறது. நாம் காண ஆசைப்பட்டாலும் அவராகவே தன்னை கருணையுடன் வெளிக் காட்டிக் கொண்டால் தான் காண முடியும். கண்டவர் விண்டிலர். விண்டிலர். கண்டலர். வாயு வேகம் மன வேகம் காற்று போவதை விட மனம் வேகமாக செல்லும் இந்த உட் கண்ணால் பெருமானை காண முடியாது. ஞானக் கண்ணால் தான் தரிசிக்க முடியும் என்பர் சான்றோர்கள். ஆகாய தாமரை குதிரை கொம்பு என்று ஒன்று இல்லை. ஆதலால் யாரும் பார்த்திருக்க சாத்யமில்லை. ஆனால் பெருமான் ராமன் குலசேகர ஆழ்வார் போன்ற ஆழ்வார்களுக்கு காட்சி கொடுத்து இருக்கார். யாரோ ஒருவர் கண்டேன் ராமனை என்று கூறியதால் நமக்கும் ராமனை பார்க்க ஒரு துடிப்பு உள்ளது. ஸதா பஸ்யந்தி ஸூரய: நித்ய ஸூரிகள் பெருமானை சேவித்துக் கொண்டே இருக்கும் பாக்யம் பெற்றவர்கள். ஏக தேவ அமிர்தம் திருஷ்ட்வா . ஒரு தடவை பார்த்து திருப்தி ஏற்பட முடியாத திருமுகம் . தெய்வத்தை அபரிமித ஆசையுடன். பார்ப்பதற்கு உந்துதல் இருந்து கொண்டே இருக்கும். ஆதித்ய குலத்தில் சித்திரை மாதம் புனர்வஸு நக்ஷத்திரத்தில் நவமி திதியில் மாதா கெளசல்யைக்கு திருக் குமாரனாய் உலகமே மெச்சும்படி அவதரித்து ப்ரதானமாய் ராமசந்திரன் என்ற பெயருடன் விளங்கினார்.

ஸூரிய குலத்தில் அவதரித்தால் பிறர் உதவியை நாடாமல் ஸ்வயம் ப்ரகாசமாய் ப்ரகாசிக்கலாம் என்ற காரணம் தான், விளக்குக்கு இருக்கும் பெருமை அது தன்னைத் தானே ப்ரகாசித்துக் கொண்டு சுற்றி உள்ளதையும் ப்ரகாசப்படுத்தி காட்டும் தன்மை . ராமரை வைகுண்டத்தில் காண்பதை விட இந்த பூலோகத்தில் காண அவா. அது அர்ச்சாவதார திவ்ய தேசத்தில் தான் சாத்யம். எங்கனம் ஆச்சார்யன் நம் மேல் வைக்கும் அபிமானம் தான் நாம் அவர்மேல் வைக்கும் அபிமானம் விட பெரியது. அது போல் நாம் பெருமானை பார்ப்பதை விட பெருமான் நம்மை கடாக்ஷிப்பதே ஏற்றம். பெருமான் அருள் இருந்தால் தான் மோக்ஷம் கிட்டும். அவர் அடியேனை கடாக்ஷப்பதே அவர் அருள் இருந்தால் மட்டுமே சாத்யம். உலக விஷயமான அப்ராப்த விஷயத்தில் ஒரு விஷயம் கிட்டா விடில் பரவாயில்லை ஆனால் ப்ராப்த விஷயமான பகவத் விஷயத்தில் அது கிட்டியே தீர வேண்டும். கைகேயி தசரதனிடம் கேட்ட 2 வரம் அது அனர்த்தம் என்று தசரதன் கருத்து தெரிவித்து அதனால் ராமன் ஊரை விட்டு சென்றால் எனக்கு வயதாகிவிடும். ராமன் என்னுடனே இருந்தால் ராமா வா என்று சொல்லி வரும் போது எனக்கு 100 வயசு கம்மியாகும். ராமா போ என்று சொல்லும் போது இன்னொரு 100 வயசு கம்மியாகும். இங்கே தொடர்ந்து 6௦௦௦௦ வயது இளமை திரும்பி யுவா ஆகிவிடுவேன் என்பது தசரதன் கருத்து எந்த மனைவிக்குத் தான் தன் கணவன் இளமையுடன் இருப்பது பிடிக்காது? ஆனால் மந்திரா கைகேயி மனதை முழுவதுமாய் மாற்றி விட்டாள். தசரதனின் கண்கள் ராமன் என்ற குணக் கடல் அழகுக் கடல் வீரக் கடல் பின்னே சென்று விட்டதால் கெளசல்யை நீ என்னை தொடு அப்போது தான் இருப்பதே உணர்வேன் என்று தசரதன் கூறுகிறார். கடல் கொண்ட வஸ்துவை திரும்ப கிடைப்பது என்பது துர்லபம். திரும்பி வராது. இது தசரதனின் எண்ணம். பரதனோ 14 வருஷம் ராமன் காட்டிலிருந்து பின் 15வது வருஷம் முதல் நாள் ராமன் அயோத்தியில் இல்லை என்றால் தான் அக்கினிக்கு இரையாகுவதாக சபதம் செய்தான். ஆக ராமன் வீபீஷணனிடம் 14 வருஷம் கழித்து நான் ஸ்நானம் செய்வது கூட பரதன் இருக்கும் அயோத்தியில் தான் விபீஷணா என்று ராமன் அறுதியிட்டதோடு

புஷ்பக விமானம் நற் காரியத்திற்கு முதன்முதலில் பயன்படப் போகிறது என்று விபீஷணன் ராமனை அதில் ஏறச் சொல்ல சீதா லஷ்மணருடன் ராமன் அதில் ஏற சுக்ரீவன் தானும் கூட வந்து பட்டாபிஷேகத்தை காண ஆசைப்படுவதாய் தெரிவிக்க சுக்ரிவன் மற்றும் ஏனைய வானரங்களும் தம் தம் மனைவிமார்களுடன் புஷ்பக விமானத்தில் பயணிக்க பரத்வாஜ முனிவர் .ஆச்ரமத்திற்கு ராமன் முதலில் வந்து சேர அந்த பரத்வாஜர் கேட்டுக் கொண்டதின் பேரில் என்று ஒரு நாள் ராத்திரி எங்கு தங்கி விட்டு போக, ராமன் முடிவெடுத்து ஹனுமனையும் குகளையும் முன்னால் அனுப்பி நடந்த விஷயத்தை கூற கோர , அதற்குள் பரதன் அக்னியை மூட்டி ப்ரதக்ஷணம் பண்ணி குதிக்க சித்தமாகும் போது ஹனுமன் மறுபடியும் ராமாயண கதையை முதலிலிருந்து தொடங்கி கூற ராமநாமம் ம்ருத்யு சஞ்சீவினி போகும் உயிரை காப்பாற்றும் என்பதால் பரதன் தீயில் விழுவதிலிருந்து தடுத்தப் பட்டான். ஹனுமன் தன் வாயால் ஊதியே அந்த அக்னியை அனைத்தார் என்பது சரித்ரம் . கம்பன் இதை பாட்டாய் வடிவெடுத்து பக்தர் பித்தன் பேதையர் பேசியது என்று அதை கூறிவிட்டார். ராமனை பற்றி பாட இவ்வளவு தான் இயலும் என்பது போல், சத்யப்ரக்ஞன் திடவரதன் ராமர் வந்ததும் பரதன் அனைத்தும் மறந்து விட்டு ராமனை தரிசிப்பதில் லயித்து போனான். இந்தக் காட்சிக்காக ஏங்கியது எத்தனை வருஷங்கள் இங்கு பேசாமல் இருப்பதே உசிதம் பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ என கம்பரும் எந்த கவியும் இயற்றவில்லை. ப்ரிய தர்சன: வால்மீகி 16 கேள்விகள் கேட்கிறார். திருட வ்ரத: ஸர்வ பூதேஷு கோயித ஆத்மானன் போன்ற 16 கேள்விகள் ராமனின் கல்யாண குணங்களை பற்றி கேட்க அனைத்தும் ஒரு சேர ராமனிடத்தல் குடியிருக்கிறது எனபதல சந்திரனுக்கு 16 கலைகள் போல 16 கேள்விகள் . ராமன் யாரைப் பார்த்தாலும் ஆனந்தமாய் பார்ப்பார். ரூப ஒனதார்ய குணைகி. பும்ஸாம் த்ருஷ்டி ஸித்தாம். அபஹாரிணம். கண் போகிறது என்றால் மனமும் அவர் பின்னே செல்கிறது. ராம தர்சனத்தை மட்டும் கண்டேன். அவரால் தான் அனைத்தும் படைக்கப்பட்டிருக்கு .உம்மை வணங்க வைத்த கரணம் என ஸ்வாமி ராமானுஜர் கூறியபடி கண் இருப்பது ராமனின் சௌந்தரியத்தை காண, காது படைத்த பயன் அவர் நாமங்களை கேட்க, மூக்கு இருக்கும் பயன் அவர் பாத துளஸியை முகர்வதற்கு, இங்கனம் ஒவ்வொரு கரணமும் இருப்பது ராம கைங்கரியத்திற்கு. இதையே முகுந்த மாலையில் ஜிஹ்வே கேசவம் …என துவங்கும் ஸ்லோகத்தை கூறி அதன் அர்த்தத்தை விளக்கினார். அந்த ராமனை பத்மதள பத்ராக்ஷம் மலர்ந்த தாமரைகளை ஒத்த ராமரின் திருக்கண்கள் . கண்கள் பாக்கியசாலிகள். மாதா சீதா ஆசைப்படுகிறாள். எல்லா வானர சைன்யத்தையும் ஒட்டி விட்டார். யாரெல்லாம் மம நாதனை . சேவிக்கிறார்களோ அவர்கள் தன்யர்கள் என சீதா மாதா கூறினாள். ஹனுமனை பார்த்து சீதை இந்த உலகுக்கே நாதன் எனக்காக ஒரு தடவை திரும்பிப் போய் நான் வணங்குவதாக சொல்லி நீ வணங்கி வா என்று அழுத்தம் திருத்தமாக கூறி

சந்திரகுலத்தில் பிறந்த கண்ணனுக்கு அந்த பெயர் இல்லை. இந்த ராமரை தரிசிப்பதே ஆஹ்லாதகரமாய் குளிர்ச்சியாய் இருக்கும். அங்க ணெடு மதின் புடைசூழ் அயோத்தி யென்னும் அணிநகரத்து லகனைத்தும் விளக்கும் சோதி….. தில்லைநகர் திருச்சித்திர கூடந்தன்னுள் எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை என்று கொலோ ? கண் குளிரக் காணும் நாளே. எனகுலசேகர பெருமான் ராமனை தரிசித்த அனுபவத்தை பாசுரமாய் வடித்துள்ளார். அவருக்கு ராமன் காட்சி கொடுத்திருக்கார். 11000. வருஷங்கள் இந்த பூவுலகத்தில் இருந்து பின் வைகுண்டம் சென்றடைந்தார். இவர் அவதரித்த அயோத்தி நகரம் அபராஜிதா என்ற வைகுண்டத்திற்கு ஒரு பெயர் போல் அயோத்திக்கும் உண்டு. யாரும் சண்டையிட்டு ஜெயிக்க முடியாத ஊர் அயோத்தி வேதவதி வேதக மறை என்று தமிழில் மறைத்து சொல்லும்.. த்ருஷ்ட்வா திருந்த பந்தி பார்த்து பார்த்து திருப்தி ஏற்படா அளவு பேரழகு. ரம இத்தீ ராம: ராமன் பிறந்தவுடன் ராமன் என்ற பெயரை வைக்க அவர் பேரழகே தூண்டித்தாம். திரும்ப திரும்ப தரிசிக்க தூண்டும் திருமுக ப்ரபாவம். குலசேகர ஆழ்வார் 105 பாசுரங்கள் ராமனை போற்றி பாடியுள்ளார். ராமன் ஆராதித்த அரங்கன் இஷ்வாகு குலம் கொண்டாடிய அரங்கனாய் ஆராதிக்கப்பட்டவராய் இருப்பதால் தான் அவதரிக்க இஷ்வாகு வம்சத்தை ராமன் தேர்ந்தெடுத்தார். சரயு நதியின் தெற்கு கரையில் மனுவால் ஸ்தாபிக்கப்பட்ட அயோத்தி அவரை அர்ச்சிக்கிறோம் அவரே அர்ச்சனாகவும் இருக்கனும். இன்று ஸ்ரீரங்கத்தில் சயனிக்கும் பெருமாள் தான் அங்கு இருக்கும் பெருமாள். வெண்கதிரோன் குலத்திற்கு விளக்காய் திகழ்ந்தார். எங்கனம் நன்கு உண்டு திருப்தியஸ்ய போஜனம் செய்து ஏப்பம் விட்டவனை திரும்ப சாப்பிட கூப்பிட முடியாத அதுபோல்பகலை ப்ரகாசப்படுத்த விளக்கு வேண்டாம். சூரிய குலத்தில் பிறந்த ராமன் ஸ்வயம் ப்ரகாசமாய் திகழ்ந்தார்

சீதை ஹனுமனிடம் நான் சொன்னதாக எனக்காக ஒரு முறை சேவித்து நான் கேட்டேன் என்று குசல ப்ரசனம் பண்ணும்படி கூறினாள். அவள் தேவதேவ திவ்ய மஹிஷி என்று ஹனுமனும் சீதை கூறியதைக் அப்படியே கேட்டுக் கொண்டார். கெளசல்யை தசரதன் கொடுத்த பாயசத்தில் அரை பாகம் குடித்து இந்த லோகமே நன்றாய் இருக்க லோகத்தை ரக்ஷிக்க ஒரு பிள்ளையை லோகார்த்தமாய் வேண்டினாள். மேலும் சீதை இதையே தன் பிரார்த்தனையாய் வைத்து மாதா கெளசல்யை பிரார்த்தித்த லோகத்தில் நானும் ஒருத்திதானே என்னை ரக்ஷிக்காமல் இருக்கிறாயே என்ற பொருள்பட கூறியது ஹனுமன் அறியாமல் இருந்தாலும் ராமனுக்கு விளங்கிவிட்டது. மேலும் தன் தாயார் பெயர் போக ராமன் ஒரு நாளும் அனுமதிக்க மாட்டார் என்பது நன்கு சீதை அறிந்து வைத்திருந்தாள். நல்கித்தான் எனதுவங்கும் ஆழ்வார் பாசுரத்தை அனுசந்தித்து பின் அஞ்சன மடவாராய்! அளியத்தாய்! நீயும் நின் அஞ்சிறை சேவலுமாய் ஆவா! என்று எனக்கருளி வெஞ்சிறைப் புள்ளுயர்த்தார்க்கு என் விடு தூதாய் சென்றக்கால் வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ? என பெருமான் மீது உள்ள ப்ரேமத்தால் நாரையை தூதுவிட்டார் ஆழ்வார். பறவை எங்கே போகனும் என்ன சொல்லனும் என்று கேட்க நாரணன் என்ற பெயர் நிலைத்து இருக்க வேண்டுமானால் தாழ்ந்தவர்களிலும் தாழ்ந்தவனான அடியேனை ரக்ஷிக்க வேண்டும் என்று சொல் என நாரையிடம் ஆழ்வார் கூறியது போல் சீதையும் ஹனுமனிடம் கூறினாள். சீதை அருகில் இருந்ததால் காகாசுரன் ரக்ஷிக்கப்பட்டான் சீதை அருகில் இல்லாததால் ராவணன் மாண்டான். ஜனஸ்தானத்தில் 14000 ராக்ஷஸர்களை வேதாந்த தேசிகர் கூறியது போல் அசகாயசூரனாய் அநபாய சாகஸனாய் கொன்று வீழ்த்தினார். ஜெய ஜெய மஹாவீர என்னும் படிக்கு ஒருத்தரையும் மிச்சம் வைக்காமல் ராமன் கொன்றார். மஹாலஷ்மி தன் திருமேனியிலேயே சந்தான கரணி ஒரு மூலிகை விஷகரணி ஒரு மூலிகை கொண்டுள்ளதால் அவள் ராமனை ஆலிங்கனம் – ஆரத்தழுவிக் கொள்ள ராமன் திருமேனியில் வழிந்த ரத்தத்திற்கு மருந்தாகி இருந்ததாம். கெட்டது கூடாது என்பதற்காக பூமாதேவி மறைத்து வைக்க வேணன் வேண்டுகோளுக்கினாங்கி தான் காமதேனுவாய் மாற ராஜா அனைத்து செல்வத்தையும் அதிலிருந்து கறந்தான். தம் திருஷ்வா… ராமன் தன்னை காட்டனும் என்று முடிவெடுத்தால் தான் காண முடியும். அவர் அவராகவே அவரை பார்த்துக் கொள்வார் என்பது ராமனிடத்தில் மட்டும் தான் சாத்யம் . அவரே காட்சியாகவும் இருந்து அவரைக் கொண்டே தான் நாம் அவரை அவர் அனுக்ரஹத்தால் அறிந்துமுடி வில் அவரை அடையவும் முடியும். வாலியின் பத்தினி தாரை இதை நன்கு அறிந்து வைத்திருந்தாள். வைய வந்த வாயால் ராமனை வாழ்த்தி விட்டு போனாள்.

திவம் அப்ரமேயச்ச துராதஹஸ்ய…. குரங்கினமான தாரை ராமனை பார்த்து நீ என்று சொன்னாள். அப்ரமேயன் புத்திக்கு அப்பாற்பட்டவன். என்னால் ப்ரத்யக்ஷமாய் கண்ணால் பார்க்க முடியவில்லை. ஆனால் மனதால் புத்தியால் அனுபவிக்கிறேன். ராமன் உடன்பிறந்தவர்கள் கண்களால் ராமனைப் பார்த்தாலும் புத்தியால் மனதால் அனுபவிக்கவில்லை. ராமனுக்கும் சுக்ரீவனுக்கும் ஸக்யம் ஆயிற்று. ஸா கேத் என்ற இடத்தில் ஜடாயுக்கு மோக்ஷம் கொடுத்தார். ரிஷ்யமுக பர்வதத்திற்கு வடமேற்கில் இந்த ஸாகேத் இடம் உள்ளது. சீதைக்கு வியப்பு. நரத்துவமும் வாரைத்துவமும் எப்படி தோழமை கொண்டது என்று. ராவணன் சீதையை அபஹரித்து ஆகாய விமானத்தில் சென்ற போது சீதை தன் ஆபரணங்கள கழட்டி ஒரு மூட்டையாய் கட்டி வீச அதை சுக்ரீவாதிகள் கண்டார்கள். வானரர்கள் அப்போதே பிராட்டியின் கடாக்ஷத்தை பெற்றார்கள். சீதை 10 மாதங்கள் சிறை இருந்த போதே வீ பீஷணன் சீதையின் கடாக்ஷத்தை பெற்றதால் தான் ராமனை சரணாகதி பண்ண முடிந்தது. இருந்தும் வியந்து… எனத்துவங்கும் ஆழ்வார் பாசுரம். இதன் அடியாய் நம்பிள்ளை ஈடு காலக்ஷேபத்தில் வானரர்களையே ராமன் சந்தித்தபோது எங்கள் ஆழ்வாரை சந்திக்க கசக்குமா என்று குறிப்பிட்டு உள்ளார். அதேபரமாத்மாவான ராமன் ஆழ்வாரையும் கடாக்ஷித்துக் கொண்டே இருக்கார். கண்டேன் ராமனை என்ற இடத்தில் தான் இரண்டும் கூடுகிறது. ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதஸே. ரகுநாதாய நாதாய சீதாயா பதயே நம: ஸ்ரிய காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்திதாம். ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீனிவாசாய மங்களம். நல்ல கோட்பாட்டுலங்கள் மூன்றினுள்ளும் தான் நிறைந்த அல்லிக் கமலக்கண்ணனை அந்தண் குரு கூர் சடகோபன் சொல்லப்பட்ட ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள். நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே என ஆழ்வார் பாசுரத்துடன் இத்தொடரை அருமையாய் நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு எனப் ப்ரார்த்திக்கிறேன் . எடுத்துக் கொண்ட தலைப்பை உபநிஷத்து மூலமும் ஆழ்வார் பாசுரங்கள் வாயிலாகவும் அடிகோடிட்டு அற்புதமாய் நிறைவு செய்தார்.

ஸ்ரீ அருளிச் செயல்களில் ஒருமைப்பாடு -பேசிற்றே பேசும் ஏக கண்டர்கள்–

September 9, 2026

நான்கு பாதங்களும் ஒன்றானவை

கடைநின்றமரர் கழல்தொழுது* நாளும்
இடைநின்ற இன்பத்தராவர் – புடைநின்ற
நீரோத மேனி நெடுமாலே! நின்னடியை
யாரோத வல்லாரவர்
…. இரண்டாம் திருவந்தாதி 11

கடைநின்றமரர் கழல்தொழுது நாளும்
இடைநின்ற இன்பத்தராவர் – புடைநின்ற
நீரோத மேனி நெடுமாலே! நின்னடியை
யாரோத வல்லாரவர்
…. நான்முகன் திருவந்தாதி 55

———

3,4 பாதங்கள் ஒன்றானவை

விரும்பி நின்று ஏத்த மாட்டேன் விதியிலேன் மதி யொன்று இல்லை
இரும்பு போல் வலிய நெஞ்சம் இறை இறை உருகும் வண்ணம்
சுரும்பமர் சோலை சூழ்ந்த வரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்ட என் கண்ணினை களிக்குமாறே –திருமாலை–17

இரும்பு அனன்று உண்ட நீரும் போதரும் கொள்க என் தன்
அரும் பிணி பாவம் எல்லாம் அகன்றன என்னை விட்டுச்
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டு என் கண்ணினை களிக்குமாறே
–திருக் குறும் தாண்டகம்-13

அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய எம்மாயனே! அருளாய்
என்னும் இன்தொண்டர்க்கு இன்னருள் புரியும் இடவெந்தை எந்தை பிரானை
மன்னுமாமாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன்வாயொலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழவினை பற்றறுப்பாரே
….பெரிய திருமொழி 2-7-10

பொன்னுமாமணியும் முத்தமும் சுமந்து பொருதிரை மாநதி புடைசூழ்ந்து
அன்னமாடுலவும் அலைபுனல் சூழ்ந்த அரங்கமாநகரமர்ந்தானை
மன்னுமாமாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன் வாயொலிகள்
பன்னிய பனுவல் பாடுவார்நாளும் பழவினை பற்றறுப்பாரே…
.பெரிய திருமொழி 5-7-10

வண்டுணு நறுமலரிண்டை கொண்டு பண்டைநம் வினைகெடவென்று* அடிமேல்
தொண்டரும் அமரரும் பணியநின்று அங்கண்டமொடகலிடமளந்தவனே
ஆண்டாயுன்னைக் காண்பதோர் அருளெனக்கருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே…
.பெரிய திருமொழி 6-1-1
6-1-1 முதல் ஒன்பது பாசுரங்கள் ஒரே பின்னடியில் அமைந்தவை.

—————–

சிறு மாறுதலுடன் 3,4பாதங்கள் ஒன்றானவை

தானே தனக்குவமன் தன்னுருவே எவ்வுருவும்
தானே தவவுருவும் தாரகையும் – தானே
எரிசுடரும் மால்வரையும் எண்டிசையும்* அண்டத்து
இருசுடருமாய இறை…
. மூன்றாம் திருவந்தாதி 38

நீயே உலகெல்லாம் நின்னருளே நிற்பனவும்
நீயே தவத்தேவ தேவனும் – நீயே
எரிசுடரும் மால்வரையும் எண்டிசையும்” அண்டத்து
இருசுடருமாய இவை
…. நான்முகன்திருவந்தாதி 20

————

மூன்றாம் பாதம் ஒன்றானவை

மின்னனைய நுண்மருங்குல்
மன்னுமுதுநீர் அரவிந்தமலர்மேல் வரிவண்டிசை பாட
புன்னை பொன்னேய்தாதுதிர்க்கும் புள்ளம்பூதங்குடிதானே
என்னைம்புலனும் எழிலும் கொண்டு
….பெரிய திருமொழி 5-1-6

மன்னுமுதுநீர் அரவிந்தமலர்மேல் வரிவண்டிசை பாட
அன்னம் பெடையோடுடனாடும் அணியார் வயல்சூழ் அழுந்தூரே
-..பெரிய திருமொழி 7-5-9

கொல்லையென்பர் கொலோ?
செல்வம்மல்கி அவன்கிடந்த திருக்கோளூர்க்கே
மெல்லிடை நடங்க இளமான் செல்ல மேவினளே
….. திருவாய்மொழி 6-7-4

மல்குநீர்க்கண்ணொடு …..
செல்வம்மல்கி அவன்கிடந்த திருக்கோளூர்க்கே
ஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகுங்கொல் ஒசிந்தே
…..திருவாய்மொழி 6-7-7

சீர்கண்டுகொண்டு …
ஏர்விலா என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
பார்பரவின்கவி பாடும் பரமரே
-திருவாய்மொழி 7-9-5

ஆர்வனோ? ஆழியங்கை
ஏர்விலா என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
சீர்பெற இன்கவி சொன்ன திறத்துக்கே
…. திருவாய்மொழி 7-9-8

கோதில வண்புகழ்…….
பாதங்கள் மேலணி பைம்பொன் துழாயென்றே
ஒதுமால் ஊழ்வினையேன் தடந்தோளியே
…. திருவாய்மொழி 4-2-4


மாதர் மாமண்மடந்தை ……..
பாதங்கள் மேலணி பைம்பொன் துழாயென்றே
ஓதுமால் எய்தினள் என்தன் மடந்தையே
…. திருவாய்மொழி 4-2-6

————–

மூன்றாம் பாதம் சிறுமாறுதலுடன் ஒன்றானவை

குடையா விலங்கல் கொண்டேந்தி
குடியாவண்டு கள்ளுண்ணக் கோலநீலம் மட்டுகுக்கும்
புடையார் கழனி எழிலாரும் புள்ளம் பூதங்குடிதானே-பெரிய திருமொழி 5-1-7

வடிவாய் மழுவே படையாக….
குடியாவண்டு கொண்டுண்ணக் கோலநீலம் மட்டுகுக்கும் அடியேன் கண்டு கடியார் புறவிற் கண்ணபுரத்து கொண்டேனே….பெரிய திருமொழி 8-8-6

————

நான்காம் பாதம் ஒன்றானவை

மாடமாளிகைசூழ் திருமங்கை
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாவே
….பெரிய திருமொழி 5-8-10

தோடு விண்டலர் பூம்பொழில் மங்கையர்
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாவே
….பெரிய திருமொழி 7-3-10

———-

தொடக்கம் ஒன்றானவை

அண்டத்தமரர்கள் சூழ அத்தாணியுள்ளங்கிருந்தாய் தொண்டர்கள் பூச்சூட்டவாராய்….பெரியாழ்வார் திருமொழி 2-7-9

அண்டத்தமரர் பெருமான் ஆழியான்…. வைக்குங் கொலோ….பெரியாழ்வார் திருமொழி 3-8-7

அண்டமும் இவ் வலை கடலும் அவனிகளுமெல்லாம் அமுது செய்த வணங்கு மடநெஞ்சே…. பெரிய திருமொழி 3-9-2

அண்டமும் இவ் வலைகடலும் அவனிகளும் குலவரையும் உண்டபிரான் திருத்தேவனார் தொகையே…. பெரிய திருமொழி 4-1-5

அருளாதொழியுமே ஆலிலைமேல் * அன்று தெருளாத நிற்பார்க்கு முன்… மூன்றாம் திருவந்தாதி 19அருளாதொழிவாய் அருள் செய்து……. தென்திருநாவாய் என்தேவே … திருவாய்மொழி 9-8-8

அவரிவரென்றில்லை அரவணையான் பாதம் எவர்வணங்கி .. நாளும்தொடர்ந்து… இரண்டாம் திருவந்தாதி 2அவரிவரென்றில்லை அனங்கவேள் தாதைக்கு எவரும் எதிரில்லை…. தோற்றான் ஒருங்கு
நான்முகன் திருவந்தாதி 56

அழைப்பன் திருமாலை ஆங்கவர்கள் சொன்ன பிழைப்பில் ….. என்று மதித்து-இரண்டாம் திருவந்தாதி 50அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண இழைப்பன் .. வெற்பு… நான்முகன் திருவந்தாதி 39

அறிந்தறிந்து வாமனன் அடியிணை வணங்கினால் செறிந்தெழுந்த … .பற்றறுதல் பான்மையே… திருச்சந்தவிருத்தம் 74அறிந்தறிந்து தேறித்தேறி யான் எனதாவியுள்ளே நிறைந்த ஞான ……கண்டுகொண்டே-திருவாய்மொழி 4-7-7

அன்றிவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி சென்றங்கு எம்பாவாய்… திருப்பாவை 24அன்றிவ்வுலகம் அளந்த அசைவேகொல் நின்றிருந்து நெஞ்சமே காண்… நான்முகன் திருவந்தாதி 34

அன்றுலகமளந்தானையுகந்து …….நின்றும் துரப்பன்… நாச்சியார் திருமொழி 5-10
அன்றுலக மூன்றினையும் அளந்து வேறோர் அரியுருவாய் ….. மணிமாடம் சேர்மின்களே
…. பெரிய திருமொழி 6-6-5

ஆங்குமாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடமளந்து… திருவயிந்திரபுரமே.. பெரிய திருமொழி 3-1-5
ஆங்குமாவலி வேள்வியில் இரந்துசென்று அகலிடம் முழுதினையும்
பாங்கினால் கொண்ட பரம! திருவெள்ளறை நின்றானே
…. பெரிய திருமொழி 5-3-9

இரும்பனன்றுண்ட நீர்போல் எம்பெருமானுக்கு * என்தன் அரும்பெறலன்பு ….பருகினேற்கு இனியவாறே…. திருக்குறுந்தாண்டகம் 7–இரும்பனன்றுண்ட நீரும் போதரும் கொள்க* என்தன் அரும்பிணி பாவமெல்லாம் களிக்குமாறே …. திருக்குறுந்தாண்டகம் 13

உண்ணாது உறங்காது ஒலிகடலை ஊடறுத்து பெண்ணாக்கை … எண்ணுவரே…. நாச்சியார் திருமொழி 11-7-உண்ணாது உறங்காது உணர்வுறும்……உயிராயின காவிகளே-…திருவிருத்தம் 66

உருப்பிணி நங்கையைத் தேரேற்றிக் கொண்டு விருப்புற்றங்கேக பாடிப்பற-பெரியாழ்வார் திருமொழி 3-9-3–உருப்பிணி நங்கை தன்னை மீட்பான்…….. மாலிருஞ் சோலையதே…. பெரியாழ்வார் திருமொழி 4-3-1

உலவு திரையும் குலவரையும்…….… சாளக்கிராமம் அடைநெஞ்சே…. பெரிய திருமொழி 1-5-3
உலவு திரைக்கடல் பள்ளி கொண்டுவந்து………அணியாலியம்மானே…. பெரிய திருமொழி 3-5-7

உளன்கண்டாய் நன்னெஞ்சே! உத்தமனென்றும் உளன்கண்டாய் உள்ளுவாருள்ளத்து – உளன்கண்டாய் வெள்ளத்தினுள்ளானும் வேங்கடத்து மேயானும் உள்ளத்தினுள்ளானென்றோர் முதல் திருவந்தாதி 99–உளன்கண்டாய் நன்னெஞ்சே! உத்தமனென்றும் உளன்கண்டாய் உள்ளுவாருள்ளத்து – உளன்கண்டாய் விண்ணொடுங்கக் கோடுயரும் வீங்கருவி வேங்கடத்தான் மண்ணொடுங்கத் தானளந்த. மன்--மூன்றாம் திருவந்தாதி 40-உளன்கண்டாய் நன்னெஞ்சே! உத்தமனென்றும்
உளன்கண்டாய் உள்ளுவாருள்ளத்து – உளன்கண்டாய் தன்னொப்பான் தானாய் உளன்காண் தமியேற்கும் என்னொப்பார்க் கீசனிமை|-
… நான்முகன் திருவந்தாதி 86

ஊழிதோறூழி ஒவாது * வாழிய வென்றே.. மாமுதலடியே—திருவாசிரியம் 4
ஊழிதோறூழி உலகுக்கு நீர் கொண்டு தோழியரும் …… நைவாயே ….திருவாய்மொழி 2-1-5-ஊழிதோறூழி உருவும் பேரும் செய்கையும் ஆழியாரே…. திருவாய்மொழி 7-3-11

எந்தை தந்தைதந்தை தந்தைதம்……….…..பல்லாண்டு பாடுதுமே-திருப்பல்லாண்டு 6
எந்தை தந்தை தம்மான் என்றென்று …..இந்தளூரீரே…. …. பெரிய திருமொழி 4-9-9
எந்தை தந்தைதந்தை தந்தை தந்தைக்கும் முந்தை….காரெழிலண்ணலே …. திருவாய்மொழி 3-3-2

எனக்காவார் ஆரொருவரே! எம்பெருமான்
தனக்காவான் தானேமற்றல்லால் – புனக்காயாம்
பூமேனி காணப் பொதியவிழும் பூவைப்பூ
மாமேனி காட்டும் வரம்
.-முதல் திருவந்தாதி 89

எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்று அல்லால் -புனக்காயா
வண்ணனே யுன்னைப் பிறர் அறியார் என் மதிக்கு
விண்ணெல்லாம் உண்டோ விலை –நான்முகன் திருவந்தாதி -51-

என்றும் மறந்தறியேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்
நின்று நினைப்பொழியா. … காண்.
இரண்டாம் திருவந்தாதி 55
என்றும் மறந்தறியேன் என்னெஞ்சத்தே வைத்து
நின்றும் இருந்தும். காப்பு
-நான்முகன் திருவந்தாதி 92

ஏழை பேதை ஓர்பாலகன் வந்து என்|-மூதுரையுமிலளே… பெரியாழ்வார்திருமொழி 3-7-4 ஏழை பேதை இராப்பகல் * தன|கேழில்……வாட்டேன்மினே. திருவாய்மொழி 2-4-10

ஓதியாயிர நாமங்கள் உணர்ந்தவர்க்கு…பிரிதி சென்றடைநெஞ்சே…. பெரிய திருமொழி 1-2-9
ஓதியாயிர நாமம் பணிந்தேத்தி ……..அணியாலியம்மானே. பெரிய திருமொழி 3-5-9

கண்டு கொண்டு என்னைக்….…..சடகோபனருளையே-.கண்ணிநுண் சிறுத்தாம்பு 7
கண்டு கொண்டு என் கைகளார ……..வந்திடகில்லாயே. திருவாய்மொழி 4-7-8
கண்டு கொண்டு என் கண்ணிணையாரக்….அடியேனே. திருவாய்மொழி 9-4-9

கண்ணார் கடல் சூழ் இலங்கைக்கு…அடியேனிடரைக் களையாயே… பெரிய திருமொழி 1-10-1 கண்ணார் கடல் போல் திருமேனி கரியாய் நண்ணார்முனை…..களையாயே-. பெரிய திருமொழி 4-7-1

கலையிலங்கும் அகலல்குல் அரக்கர்……..வணங்கு மடநெஞ்சே…. பெரிய திருமொழி 3-9-4
கலையிலங்கும் அகலல்குல் கமலப்பாவைகதிர்முத்த……என் செங்கண்மாலே– பெரிய திருமொழி 4-4-5

கல்லார் மதிள்சூழ் கடியிலங்கைக் காரரக்கன்வல்லாகம்…………….நறையூரில் கண்டேனே. பெரிய திருமொழி 6-8-8
கல்லார் மதிள்சூழ் கச்சிநகருள் நச்சி .நமோநாராயணமே-. பெரிய திருமொழி 6-10-5

கற்றினம் மேய்த்துக் கனிக்கொரு கன்றினை பற்றியெறிந்த .அக்காக்காய். பெரியாழ்வார் திருமொழி 2-5-5
கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான் காடுவாழ்– என்னை உய்த்திடுமின். நாச்சியார் திருமொழி 12-8

கன்னிநன் மாமதிள் சூழ்தரு என்குட்டனே முத்தம் தா…. பெரியாழ்வார் திருமொழி 3-3-2
கன்னிநன் மாமதிள் புடைசூழ் …….பாங்காய பக்தர்களே.. பெருமாள் திருமொழி 8-11

காண்கின்றனகளும் கேட்கின்றனகளும் கற்ற திண்ணனவே. திருவிருத்தம் 8-காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும் காண்கின்ற. செய்கின்றவே-திருவாய்மொழி5-6-3

காரிகையார்க்கும் உனக்கும்……இருடீகேசா என்தன் கண்ணே. பெரியாழ்வார் திருமொழி 2-3-10
காரிகையார் நிறைகாப்பவர் ……..என் சின்மொழிக்கே.. திருவிருத்தம் 19

கார்த்தண் கமலக் கண்ணென்னும்…..….விருந்தாவனத்தே கண்டோமே-. நாச்சியார் திருமொழி 14-4
கார்த்தண் முகிலும் கருவிளையும் ….பக்தலிலோசனத்துய்த்திடுமின். நாச்சியார் திருமொழி 12-6

காலையெழுந்து கடைந்த இம்மோர்…..….என்செய்கேனோ..பெரியாழ்வார் திருமொழி 10-7-2
காலையெழுந்திருந்து கரிய குருவிக்….வார்த்தையுரைக்கின்றவே…. நாச்சியார் திருமொழி 9-8
காலையெழுந்து உலகம் கற்பனவும் …..பெயர் குரைகழல்கள் நீட்டி மண்கொண்ட…….
என்னதாவி மேலதே
…. முதல் திருவந்தாதி 66

குரைகழல்கள் நீட்டி மண்கொண்ட…என்னதாவி மேலதே-திருவாய்மொழி 4-3-7 குரைகழல்கள் குறுகினம் நம் ……மெய்ந்நின்று கமழுமே…. திருவாய்மொழி 10-6-7

குன்றமெடுத்தபிரான் அடியாரொடும் ஒன்றிநின்ற ………கற்பார்க்கே-. திருவாய்மொழி 7-4-11
குன்றமெடுத்து ஆநிரை காத்தவன் தன்னை மன்றில்புகழ் .சாரகில்லாவே – பெரிய திருமொழி 11-8-10
குன்றமெடுத்து மழைதடுத்து இளையாரொடும் மன்றில் குரவை .. …..ஆர்கொலோ–. பெரிய திருமொழி 11-2-1

குன்றால் மாரி தடுத்தவனைக் ……நிறைந்தேனே…. பெரிய திருமொழி 7-6-4
குன்றால் மாரி பழுதாக்கிக் …..கண்ணபுரம் நாம் தொழுதுமே ……. பெரிய திருமொழி 8-6-9 குன்றெடுத்து ஆநிரை காத்த பிரான் என்வசமல்லவே…. பெரியாழ்வார் திருமொழி 3-4-4
குன்றெடுத்து ஆநிரை காத்த ஆயா! ……அரங்கத்தரவணைப் பள்ளியானே-. பெரியாழ்வார் திருமொழி 4-10-9

கொங்குமலி கருங் குழலாள்கௌசலை …..தாலேலோ…. பெருமாள் திருமொழி 8-31
கொங்குமலி கருங் குவளை கண்ணாக……..செறி வளையே…. பெரிய திருமொழி 8-3-8

கொண்டல் வண்ணனைக்கோவலனாய்—.காணாவே–. அமலனாதிபிரான் 10 கொண்டல் வண்ணா! இங்கே போதராயே! கோயிற்பிள்ளாய். .கலவிதானே. –பெரியாழ்வார் திருமொழி 2-9-4
கொண்டல் வண்ணா! குடக்கூத்தா! ஒருநாள் வந்து தோன்றாயே— திருவாய்மொழி 8-5-6

சலங்கொண்ட இரணியனது…….வணங்கு மடநெஞ்சே…. பெரிய திருமொழி 3-9-1 சலங்கொண்டு கிளர்ந்தெழுந்த …….நடலை நோய் செப்புமினே…. நாச்சியார் திருமொழி 8-6-

செய்கின்றது என் கண்ணுக்கொன்றே ……ஊழி பெயர்த்திடும்கொன்றே-. திருவாய்மொழி 5-2-5
செய்கின்ற கிதியெல்லாம் யானே யென்றும் செய்வானின்றனகளும்…………..திறத்தே…. திருவாய்மொழி 5-6-4

சேயன்அணியன் என சிந்தையுள் நின்ற மாயன் ..மற்றறியேனே–. பெரிய திருமொழி 1-10-8
சேயன் அணியன் சிறியன் பெரியன்……..தொழில் பூண்டாயே-. பெரிய திருமொழி 2-1-8
சேயன் அணியன் சிறியன் மிகப்பெரியன் ஆயன் துவரை…. மெய்ஞ்ஞானமில்-நான்முகன் திருவந்தாதி 71

சோத்தென நின்று தொழவிரங்காள்..–என்னை உய்த்திடுமின்…. பெரிய திருமொழி 9-5-9 சோத்தென நின்னைத் தொழுவன் வரம்தர பேய்ச்சி .கொட்டாய் சப்பாணி …. பெரிய திருமொழி 10-5-5-

ஞாலமுற்றும் உண்டு ஆலிலைத்துயில் …..…. இல்லை வருதுயரே-. பெரியாழ்வார் திருமொழி 3-7-11
ஞாலமுற்றும் உண்டுமிழ்ந்த நாதன்…..பார்த்தன் பள்ளி பாடுவாளே-. பெரிய திருமொழி 4-8-6=

தவம் செய்து நான்முகனால் பெற்ற வரத்தை அவம் செய்த .எவ்வுயிர்க்கும் நீ-. நான்முகன் திருவந்தாதி 19
தவம் செய்து நான்முகனே பெற்றான் * தரணி நிவந்தளப்ப………. பேர்மொழிந்து பின்…. இரண்டாம் திருவந்தாதி 78

தளர்ந்தும் முறிந்தும் வருதிரைப்…..வந்துலாகின்றதே--. திருவிருத்தம் 74
தளர்ந்தும் முறிந்தும் சகடவசுரர்…..விண்மீதே …. திருவாய்மொழி 6-9-4

தாங்கரும் சினத்துவன் தாள்……திருமணிக்கூடத்தானே…. பெரிய திருமொழி 4-5-4
தாங்கரும் போர் மாலி படப்….. கண்டேன் நானே…. பெரிய திருமொழி 2-10-4-

தாராய தணதுள் போரானைக்.. ….கவர்வானோ… பெரிய திருமொழி 3-6-6
தாராய தண்துளவ வண்டுழுத…கண்டாள் கொலோ. பெரிய திருமொழி 8-1-4-

திடவிசும்பெரிநீர் திங்களும் சுடரும்….கண்டுகொண்டுய்ந்தொழிந்தேனே…. பெரிய திருமொழி 4-3-3
திடவிசும்பெரிவளி நீர்நிலம் இவைமிசை படர்பொருள் ……சுரனே…. திருவாய்மொழி 1-1-7-

திருமாலிருஞ் சோலையானேயாகிச் அருளையீந்த அம்மானே— திருவாய்மொழி 10-7-6- திருமாலிருஞ் சோலை மலையே……….முதல்வன் ஒருவனே— திருவாய்மொழி 10-7-8-
திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்ன திருமால் வந்து —-தென்திருப்பேரே–. திருவாய்மொழி 10-8-1

தேமருவு பொழிலிடத்து மலர்ந்த போதைத் தேனதனை …………….இயம்பிக் காணே-.. திருநெடுந்தாண்டகம் 26
தேமருவு பொழில்புடைசூழ் ……வினையாய நண்ணாவே…. பெரிய திருமொழி 8-3-10

தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை…….ஒருகாலும் பிரிகிலேனே…. பெரிய திருமொழி 7-4-4-தேராளும் வாளரக்கன் செல்வம்…..என்றல்லால் பேசலாமே…. திருநெடுந்தாண்டகம் 20

தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே! யாவரும் .இராகவனேதாலேலோ
…. பெருமாள் திருமொழி 8-10
தேவரையும் அசுரரையும் திசைகளையும் கடல்களையும்….பொலிவர் தாமே.– பெரிய திருமொழி 11-6-10-

தொண்டெல்லாம் நின்னடியே தொழுதுய்யுமா கண்டு தான் ….தக்கதே–. பெரிய திருமொழி 8-2-8-தொண்டெல்லாம் பரவி நின்னைத் தொழுதடி…..….பரவுவேனே…. திருக்குறுந்தாண்டகம் 11-

நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய் நிகரில் சூழ் .புண்ணியமே – திருவாய்மொழி 6-3-3 நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்….….எனை யூழியானே…. திருவாய்மொழி 7-3-10

நந்தன் மதலையைக் காகுத்தனை நவின்று உந்தி பறந்த ………….. அல்லலில்லையே-பெரியாழ்வார் திருமொழி 3-9-11-
நந்தன் மதலை நிலமங்கை நல் துணைவன் அந்த முதல்வன் கோல்தும் !…. பெரிய திருமொழி 8-4-9-

நீலத்தடவரை மாமணிநிகழக் …….அணியாலி யம்மானே…. பெரிய திருமொழி 3-5-2-நீலத்தடவரைமேல் புண்டரீக நெடுந்தடங்கள் போல பொலிந்து ….. .கோலங்களே-திருவிருத்தம் 39

பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து நஞ்சுமிழ் நாகம் கிடந்த நற்பொய்கைபுக்கு
அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட்டு அருள்செய்த அஞ்சன வண்ணனே அச்சோவச்சோ
ஆயர்பெருமானே அச்சோவச்சோ
…. பெரியாழ்வார் திருமொழி 1-8-3-பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து நஞ்சுமிழ் நாகம் கிடந்த நற்பொய்கைபுக்கு அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட்டு அருள்செய்த அஞ்சன வண்ணனைப் பாடிப்பற அசோதைதன் சிங்கத்தைப் பாடிப்பற…. பெரியாழ்வார் திருமொழி 3-9-5-

பண்டை நாளாலே நின்திருவருளும் ….திருப்புளிங்குடிக்கிடந்தானே…. திருவாய்மொழி 9-2-1
பண்டை நான்மறையும் வேள்வியும்…….அரங்கமாநகரமர்ந்தானே…. பெரிய திருமொழி 5-7-1

பதினாறாமாயிரவர் தேவிமார் பணிசெய்ய…….புனலரங்கமே…. பெரியாழ்வார் திருமொழி 4-9-4
பதினாறாமாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப மதுவாயில் செல்வப் பெருஞ்சங்கே…. நாச்சியார் திருமொழி 7-9-

பந்தணைந்த மெல் விரலாள் பாவைதன் ….. எவ்வுள் கிடந்தானே…. பெரிய திருமொழி 2-2-4
பந்தணைந்த மெல் விரலாள் சீதைக்காகி………அமரர் கோவே… பெரிய திருமொழி 7-8-7-

புள்ளினை வாய் பிளந்திட்டாய் பொரு கரியின் …செங்கழுநீர் சூட்டவாராய்…. பெரியாழ்வார் திருமொழி 2-7-5
புள்ளினை வாய் பிளந்து பொருமாகரி ….வல்லள் கொலோ…. பெரிய திருமொழி 9-9-7
புள்ளினை வாய் பிளந்து பூங்குருந்தம் சாய்த்து துள்ளி விளையாடி சப்பாணி
…. பெரிய திருமொழி 10-5-7

புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தானை. . எம்பாவாய்…. திருப்பாவை 13-புள்ளின்வாய் பிளந்தாய்! மருதிடை …….. உய்யுமாறு எனக்கே…. திருவாய்மொழி 5-7-9

பூங்குருந்தொசித்து ஆனை காய்ந்து அரிமாச் செகுத்து அடியேனை யாளுகந்து………..திருக்கோட்டியூரானே ….பெரிய திருமொழி 9-10-8
பூங்குருந்தொசித்து ஆனை காய்ந்து அரிமாச் செகுத்து ஆங்கு வேழத்தின் இளமையே … பெரிய திருமொழி 11-2-2-

பெற்றார் தளை கழலப் பேர்ந்தங் கயலிடத்து உற்றாரொருவரும்…… ..சப்பாணி…. பெரிய திருமொழி 10-5-4
பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய் செற்றார் படிகடந்த ..நின்று
…. முதல் திருவந்தாதி 20-

பேரானைக் குறுங்குடியெம்பெருமானை * திருத்தண்கால் ஊரானைக் .தென்னரங்கத்தே
…. பெரிய திருமொழி 5-6-2-பேரானைக் குடந்தைப் பெருமானை இலங்கொளி சொ
வாரார் .கண்டு கொண்டு களித்தேனே-….பெரியதிருமொழி 7-6-9

மண்ணும் மலையும் கடலும் உலகேழும் உண்ணும். .வந்து காணீரே-.பெரியாழ்வார் திருமொழி 1-2-18
மண்ணும் மலையும் மறிகடல்களும் மற்றும்…..…மணந்தானைக் கண்டாருளர்
….பெரியாழ்வார் திருமொழி 4-1-9
மண்ணும் மலையும் மறிகடலும்மாருதமும் விண்ணும்……………உண்டோவுன்வாய் –முதல் திருவந்தாதி 10

மற்றுமோர் தெய்வமுண்டே மதியிலா…..பணிமின் நீரே--திருமாலை 9
மற்றுமோர் தெய்வம் உளதென்று …….கண்ணபுரத்துறையம்மானே-பெரிய திருமொழி 8-10-3

மனத்துள்ளான் வேங்கடத்தான்………பிளந்த மகன்-…. இரண்டாம் திருவந்தாதி 28
…. திருமாலை 9-மனத்துள்ளான்மாகடல் நீருள்ளான்…மருந்து…. மூன்றாம் திருவந்தாதி 4
…. பெரிய திருமொழி 8-10-3
மாடமாளிகை சூழ் மதுரைப் பதி நாடி….. .கூடிடு கூடலே-நாச்சியார் திருமொழி 4-5-மாட மாளிகை சூழ் திருமங்கை மன்னன் ஒன்னலர்…….-.பாவம் நில்லாவே…. பெரிய திருமொழி 5-8-10

மானேய் நோக்கியர் தம் வயிற்றுக் குழியிலுழைக்கும் ஊனே யாக்கை ……திருவிண்ணகர் மேயவனே…. பெரிய திருமொழி 6-2-3
மானேய் நோக்கு நல்லார் மதிபோல் முகத்துலவும் ஊனேய் கண் …..திருவிண்ணகரானே
….பெரிய திருமொழி 6-3-3
மானேய் நோக்கி மடவாளை மார்பில் கொண்டாய்! மாதவா!கூனே சிதைய .சேருமாறு வினையேனே…. திருவாய்மொழி 1-5-5

மின்னனைய நுண்ணிடையார் விரி குழல் மேல் …..முலை யுணாயே -.பெரியாழ்வார்திருமொழி 2-2-6-மின்னனைய நுண்ணிடையார் உருப்பசியும் ……
..அருந் தவத்தனாவேனே
….பெருமாள் திருமொழி 4-6
மின்னனைய நுண் மருங்குல்…. வணங்கு மடநெஞ்சே--.பெரிய திருமொழி 3-9-5

மின்னொத்த நுண்ணிடையாய்! …..ஓர் அடையாளம்….பெரியாழ்வார் திருமொழி 3-9-5
மின்னொத்த நுண்ணிடையாளைக்.மட நம்பி! நீயே….பெருமாள் திருமொழி 6-5-

மைத்தடங் கண்ணி யசோதை வளர்க்கின்ற செய்த்தலை .வந்து காணீரே….பெரியாழ்வார் திருமொழி 1-2-12
மைத்தடங் கண்ணி யசோதை தன் மகனுக்கு…. இடரில்லையே….பெரியாழ்வார் திருமொழி 1-4-10-

வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலை யுண்ட–அஞ்சன. இல்லை இடர் தானே
….பெரியாழ்வார் திருமொழி 1-3-10 –-வஞ்சனையால் வந்தவள் தன் உயிருண்டு வாய்த்த வணங்கு மட நெஞ்சே….பெரிய திருமொழி 3-10-9

வண்டமரும் வனமாலை மணிமுடிமேல் ….….கண்டாள் கொலோ….பெரிய திருமொழி 8-1-9
வண்டமரும் மலர்ப்புன்னை வரி ழல்………என்ஒளிவளையே….பெரிய திருமொழி 8-3-7-வண்டமரும் சோலை வயலாலி…..கோல்தும்பீ….பெரிய திருமொழி 8-4-10

வண்டார் பொழில் சூழ்ந்து அழகாய…….விரும்புவரே–….பெரிய திருமொழி 3-8-10
வண்டார் பொழில் சூழ் நறையூர்…… இல்லை துயரே–….பெரிய திருமொழி 7-4-10

வண்ணக் கருங்குழல் மாதர்வந்து …..எல்லே பாவமே….பெரியாழ்வார் திருமொழி 3-2-4
வண்ணக் கருங்குழல் ஆய்ச்சியால் ….சாழலே….பெரிய திருமொழி 11-5-5

வந்தாய் என்மனத்தே வந்து நீ ….மறவாமை பெற்றேனே….பெரிய திருமொழி 8-9-5-….வந்தாய் என் மனம் புகுந்தாய் .என்றும் விடேனே….பெரிய திருமொழி 1-10-9-

வந்தாய் போலே வந்தும் என் …. அணுகிற்பனே… திருவாய்மொழி 3-2-5
வந்தாய் போலே வாராதாய் ……அகலகில்லேன் இறையுமே–… திருவாய்மொழி 6-10-9

வம்பவிழும் துழாய் மாலை ……ஒருவர் அழகியவா….பெரிய திருமொழி 9-2-4-வம்பவிழ் வானவர் வாயுறை –பள்ளி எழுந்தருளாயே –திருப்பள்ளியெழுச்சி -8-
வம்பவிழ் கோதை பொருட்டா –சாது சனங்களினிடையே –-திருவடி –3-5-4-

வம்புலாம் கூந்தல் மனைவியை –நைமிசாரண்யத்துள் எந்தாய் –பெரிய திருமொழி -1-6-4-
வம்புலாம் கூந்தல் மண்டோதரி –தென்னரங்கமே –பெரிய திருமொழி -5-4-5-

வாரணிந்த கொங்கை யாய்ச்சி —பெறுவர் தாமே –பெரியாழ்வார் –2-2-11-
வாரணிந்த முலை மடவாய் –ஓரடையாளம் –பெரியாழ்வார் –3-10-4-

வாராரும் முலை மடமாள் வைதேவி –இமையவரோடு இருப்பாரே -பெரியாழ்வார் -3-10-10-
வாராரும் முலை மடமாள் பின்னைக்காகி –என் செங்கண் மாலே -பெரியாழ்வார்-4-4-4-
வாராரும் இளங்கொங்கை மைதிலியை —திருத்தேவனார் தொகையே –பெரிய திருமொழி –4-1-8-

வாராளும் இளம்கொங்கை வண்ணம் ….. எங்ஙனம் நான்செப்புகேனே….பெரிய திருமொழி 5-5-7-வாராளும் இளம்கொங்கை……… இழந்தேன் என் பெய்வளையே….பெரிய திருமொழி 8-3-9-

வாழ்த்தி அவனடியைப் பூப் புனைந்து………..தங்கு–….பெரிய திருவந்தாதி 84
வாழ்த்திய வாயராய் வானோர் ….…தாமரையாமலர்….மூன்றாம் திருவந்தாதி 96

வெஞ்சினக் களிறும் வில்லொடு அல்லல் தீர்ந்தேனே…. பெரிய திருமொழி 4-3-7
வெஞ்சினக் களிற்றை விளங்காய் ………கண்டு கொண்டேனே….பெரிய திருமொழி 7-10-8

வெந்திறல் களிறும் வேலைவாய் ….வதரியாச்சிராமத்துள்ளானே--….பெரிய திருமொழி 1-4-7
வெந்திறல் வாணன் வேள்வியிட…….நம்மையாளுமரசே….பெரிய திருமொழி 11-4-5-

வெள்ளை நுண் மணற் கொண்டு…….. என்னை எய்கிற்றியே….நாச்சியார் திருமொழி 1-2
வெள்ளை நுண் மணற் கொண்டு…..…… உன்முகத்தன கண்களல்லவே–.நாச்சியார் -2-5-திருமொழி 2-5

வெள்ளை விளிசங்கு வெஞ்சுடர்த் ……….கைசெய்யக் கண்டாருளர்….பெரியாழ்வார் திருமொழி 4-1-7–வெள்ளைவிளிசங்கு இடங்கையில்…… என் வேங்கடவன் வரக்கூவாய்-.நாச்சியார் திருமொழி 5-2

வெற்பென்று வேங்கடம் பாடும்……புகும்--….மூன்றாம் திருவந்தாதி 69
வெற்பென்று வேங்கடம் பாடினேன்… காண்….நான்முகன் திருவந்தாதி 40-

வையமெல்லாம் பெறும் வார்கடல் வாழும்…….மாதவனே! இங்கே வாராய்….பெரியாழ்வார் திருமொழி 2-3-3
வையமெல்லாம் உடன்வணங்க வணங்கா….கண்டுகொண்டேனே….பெரிய திருமொழி 8-8-7

————————

முடிவு ஒன்றான பாசுரங்கள்

இல்லை பாவமேசெந் நெலார் வயல் சூழ் –இம் மன்னுபாடல் வல்லார்க்கு இல்லை பாவமே …. பெரியாழ்வார் திருமொழி 1-1-10 ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை… பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லைபாவமே —நாச்சியார் திருமொழி-4-11-

இடரில்லையே
1) மைத்தடங்கண்ணி யசோதை சொல்ல வல்லவர்க்கு இடரில்லையே.. பெரியாழ்வார் திருமொழி 1-4-10
z) என்றும் எனக்கினியானை என்………. மாலைகள் வல்லவர்க்கு இடரில்லையே… பெரியாழ்வார் திருமொழி 3-2-10-

வினைபோமே
1) ஆட் கொள்ளத் தோன்றிய ஆயர்தங்…..சொல்லுவார் வினை போமே--. பெரியாழ்வார் திருமொழி 1-6-11
2) போதமர் செல்வக் கொழுந்து ………பத்தருள்ளார் வினை போமே... பெரியாழ்வார் திருமொழி 2-8-10

மக்களைப் பெற்று மகிழ்வரே
1) ஆய்ச்சியன்றாழிப்பிரான் நன்மக்களைப் பெற்று மகிழ்வரே…பெரியாழ்வார் திருமொழி 1-9-10
2) ஆயனுக்காகத் தான்கண்ட கனாவினை…… வாயும் நன்மக்களைப் பெற்று மகிழ்வரே
…. நாச்சியார் திருமொழி 6-11

கழலிணை காண்பர்களே
1) புற்றரவல்குல் அசோதை நல்லாய்ச்சி……..கடல் வண்ணன் கழலிணை காண்பர்களே
…. பெரியாழ்வார் திருமொழி 3-3-10—2)மருதப் பொழிலணி மாலிருஞ–கண்ணன் கழலிணை காண்பர்களே.... பெரியாழ்வார் திருமொழி 4-2-11-

பரமான வைகுந்தம் நண்ணுவரே
1) விண்ணின் மீது அமரர்கள் விரும்பித்…….பண்ணின்பம் வரப்பாடும் பத்தருள்ளார்
பரமான வைகுந்தம் நண்ணுவரே… பெரியாழ்வார் திருமொழி 3-4-10
2) அரவில் பள்ளி கொண்டுஅரவம் ……..பரவுமன நன்குடைப் பத்தருள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே.... பெரியாழ்வார் திருமொழி 3-5-11-

தூமணி வண்ணனுக்கு ஆளரே
1) மாயவன்பின் வழிசென்று ……. தூமணி வண்ணனுக்குஆளரே-. பெரியாழ்வார் திருமொழி 3-8-10
2) மாயவனை மதுசூதனனைமாதவனை …. தூமணி வண்ணனுக்கு ஆளரே--… பெரியாழ்வார் திருமொழி 4-10-10

8. அல்லலில்லையே-நந்தன் மதலையைக் காகுத்தனை நவின்று…… ஐந்தினோடைந்தும் வல்லார்க்கு அல்லலில்லையே... பெரியாழ்வார் திருமொழி 3-9-11
2) அன்று பாரதத்து ஐவர் தூதனாய் சென்ற மாயனைச் செங்கண் மாலினை மன்றிலார் புகழ் மங்கை வாட்கலி கன்றி* சொல் வல்லார்க்கு அல்லலில்லையே... பெரிய திருமொழி 10-1-10
3) பாதம் நாளும் பணியத் தணியும் பிணி… ஆதியானை அடைந்தார்க்கு அல்லலில்லையே
…. திருவாய்மொழி 9-10-9-

நண்ணுவாரொல்லை நாரணனுலகே- காமர்தாதை கருதலர்சிங்கம் .. நாமமென்று நவின்றுரைப்பார்கள் நண்ணுவாரொல்லை நாரணனுலகே... பெரியாழ்வார் திருமொழி 5-1-10
2) மல்லை மாநகர்க்கிறையவன் தன்னை….. நல்லிசைத் தமிழ் மாலை வல்லார்கள்
நண்ணுவாரொல்லை நாரணனுலகே-.… பெருமாள் திருமொழி 7-11

10. அணுக்கர்களே / அணுக்கரே-வேயர் தங்கள் குலத்துதித்த விட்டு சித்தன் மனத்தே…..
சாயை போலப் பாடவல்லார் தாமும் அணுக்கர்களே.. பெரியாழ்வார் திருமொழி 5-4-11-பாஞ்ச சன்னியத்தைப் பற்ப நாபனோடும்..ஆய்ந்தேத்த வல்லாரவரும் அணுக்கரே.. நாச்சியார் திருமொழி 7-10

நலந்திகழ் நாரணனடிக்கீழ் நண்ணுவாரே
1) திடர்விளங்கு கரைப் பொன்னி நடுவு பாட்டுத் நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார் நலந் திகழ் நாரணனடிக் கீழ் நண்ணுவாரே… பெருமாள் திருமொழி 1-11
2) தில்லை நகர்த் திருச் சித்திர கூடந்தன்னுள் நல்லியலின் தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலந்திகழ் நாரணனடிக் கீழ் நண்ணுவாரே… பெருமாள் திருமொழி 10-11-

பாங்காய பத்தர்களே
1) மன்னிய தண்சாரல் வடவேங்கடத்தான் தன் ……  பன்னியநூல் தமிழ் வல்லார் பாங்காய பத்தர்களே… பெருமாள் திருமொழி 4-11
2) கன்னிநன் மாமதிள் புடைசூழ் கணபுரத்தென் பன்னியநூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே... பெருமாள் திருமொழி 8-11

பயில்வார்க்கு இல்லை பாவங்களே
1) கண்ணாய் ஏழுலகுக்குஉயிராய எங்கார் வண்ணனை….. பண்ணார் பாடல்பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே... பெரிய திருமொழி 1-9-10
2) தேடற்கரியவனை திருமாலிருஞ்சோலை நின்ற…..பாடல் பனுவல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே… பெரிய திருமொழி 9-9-10-

வானவராகுவர் தாமே / வானவர் தாமே
1) வில்லார்மலி வேங்கடமாமலை மேய … வல்லாரவர் வானவராகுவர் தாமே… பெரிய திருமொழி 1-10-10- நல்லனபுடை வேதியர் மன்னிய நாங்கூர் …வல்லரென வல்லவர் வானவர் தாமே–…. பெரிய திருமொழி 4-7-1

15. இடமாகும் வானுலகே–.மின்னுமாமுகில்மேவு தண்திருவேங்கட மலை………
மன்னுபாடல் வல்லார்க்கு இடமாகும் வானுலகே... பெரிய திருமொழி 2-1-10
2) ஆலுமாவலவன் கலிகன்றி மங்கையர் தலைவன்….நாலுமாறும் வல்லார்க்கு இடமாகும் வானுலகே.. பெரிய திருமொழி 9-10-10

நாளும் பழவினை பற்றறுப்பாரே
1) அன்னமும் மீனும் ஆமையும் அரியும் பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழவினை பற்றறுப்பாரே.… பெரிய திருமொழி 2-7-10
2) பொன்னும் மாமணியும் முத்தமும் சுமந்து……. பன்னிய பனுவல் பாடுவார் நாளும்
பழவினை பற்றறுப்பாரே... பெரிய திருமொழி 5-7-10

இமையவரோடும் கூடுவரே
1) மன்னுளார்புகழ் வேதியர் நாங்கூர் எண்ணிலாத பேரின்பமுற்று இமையவரோடும் கூடுவரே... பெரிய திருமொழி 3-2-10
2) வார்கொள் மென்முலை மடந்தையர்……. ஏர்கொள் வைகுந்தமாநகர்புக்கு இமையவரோடும் கூடுவரே--…. பெரிய திருமொழி 8-5-10

18. பாவம் நில்லாவே-மாடமாளிகைசூழ் திருமங்கைமன்னன் ……..பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர்பாட நும்மிடைப் பாவம் நில்லாவே… பெரிய திருமொழி 5-8-10-தோடுவிண்டலர் பூம்பொழில் மங்கையர் …..பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாவே.… பெரிய திருமொழி 7-3-10
3) மீனோடு ஆமை கேழல் அரிகுறளாய்……தேனாரின்சொல் தமிழ்மாலைசெப்பப் பாவம் நில்லாவே... பெரிய திருமொழி 8-8-10
4) சிலையால் இலங்கை செற்றான் நிலையார் பாடல் பாடப் பாவம் நில்லாவே... பெரிய திருமொழி 9-6-10-

இவை பாடி ஆடுமினே
1) செருநீர வேல்வலவன் கலிகன்றி மங்கையர்கோன்…. வருநீர் வையமுய்ய இவை பாடி ஆடுமினே-… பெரிய திருமொழி8-9-10
2) மெய்ந்நின்ற பாவமகல ஐயொன்றுமைந்தும் இவை பாடி ஆடுமினே-…. பெரிய திருமொழி 11-7-10

20. நல்குரவே–கலையுலாவல்குல் காரிகை திறத்துக் உலவ சொல்மாலை வான்றும் வல்லவர்க்கில்லை நல்குரவே... பெரிய திருமொழி 9-1-10
2) ஆய்ச்சியாகிய அன்னையால் நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல்குரவே-…. திருவாய்மொழி 6-2-11

21. பாவம் பயிலாவே-மூவராகிய ஒருவனை மூவுலகுண்டுஉமிழ்ந்தளந்தானை ….. பாவுதண்டமிழ்ப் பத்திவை பாடிடப் பாவங்கள் பயிலாவே… பெரிய திருமொழி 3-1-10
2) சீரார்நெடுமறுகில் சிறுபுலியூர்ச் சலசயனத்து ….பாரார் இவை பரவித்தொழப் பாவம் பயிலாவே… பெரிய திருமொழி 7-9-10-

22. செந்தமிழ்ப் பத்தும் வல்லார்
1) சந்தொடு காரகிலும் சுமந்து தடங்கள் பொருது…… . செந்தமிழ்ப்பத்தும் வல்லார் திருமாலடி சேர்வர்களே... நாச்சியார் திருமொழி 9-10
2) சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும்…..செந்தமிழ்ப்பத்தும் வல்லார் அடிமைசெய்வார் திருமாலுக்கே... திருவாய்மொழி 6-5-11

—————-

கவலை தரும் பகுதிகள்

உழந்தாள்  நறு நெய் ஒரோ தடா உண்ண
இழந்தாள் எரிவினால் ஈர்த்து எழில் மத்தின்
பழம் தாம்பால் ஒச்ச பயத்தால் தவழ்ந்தான்
முழம் தாள் இருந்தவா காணீரே முகிழ் முலையீர் வந்து காணீரே- 1-2-4-

மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை
சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில்
அத்ததின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன்
முத்தம் இருந்தவா காணீரே முகிழ் நகையீர் வந்து காணீரே -1-2-6-

வந்த முதலை குழாத்தை வலி செய்து
தந்த களிறு போல் தானே விளையாடும்
நந்தன் மதலைக்கு நன்றும் அழகிய
உந்தி இருந்தவா காணீரே ஒளி இழையீர் வந்து காணீரே -1-2-8-

அதிரும் கடல் நிற வண்ணனை ஆச்சி
மதுர முலை ஊட்டி வஞ்சித்து வைத்து
பதரப் படாமே பழம் தாம்பால் ஆர்த்த
உதரம் இருந்தவா காணீரே ஒளி வளையீர் வந்து காணீரே -1-2-9-

மைத்தடம் கண்ணி யசோதை வளர்க்கின்ற
செய்த்தலை நீல நிறத்துச் சிறுப் பிள்ளை
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய
கைத் தலங்கள் வந்து காணீரே கனம் குழையீர் வந்து காணீரே -1-2-12-

விண் கொள் அமரர்கள் வேதனை தீர
மண் கொள் வசுதேவன் தம் மகனாய் வந்து
திண் கொள் அசுரரை தேய வளர்கின்றான்
கண்கள் இருந்தவா காணீரே கன வளையீர் வந்து காணீரே -1-2-16-

சுருப்பார் குழலி யசோதை முன் சொன்ன
திருப் பாத கேசத்தை தென் புதுவை பட்டன்
விருப்பால் உரைத்த இருபதோடு  ஒன்றும்
உரைப்பார் போய் வைகுந்தத்து ஒன்றுவர் தாமே -1-2-21-

வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலை உண்ட
அஞ்சன வண்ணனை யாய்ச்சி தாலாட்டிய
செம் சொல் மறையவர் சேர் புதுவை பட்டன் சொல்
எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர் தானே-1 3-10

மைத் தடம் கண்ணி யசோதை தன் மகனுக்கு இவை-
ஒத்தன சொல்லி உரைத்த மாற்றம் ஒளி புத்தூர்
வித்தகன் விட்டு சித்தன் விரித்த தமிழ் இவை
எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு இடரில்லையே -1-4 10-

துப்புடை யாயர்கள் தம் சொல் வழுவா தொரு கால் தூய கரும் குழல் நல்  தோகை மயிலனைய
நப்பினை தன் திறமா நல் விடை யேழ் அவிய நல்ல திறல் உடைய நாதனும் ஆனவனே
தப்பின பிள்ளைகளைத் தன மிகு சோதி புகத் தனி யொரு தேர் கடவித் தாயொடு கூட்டிய என்
அப்ப எனக்கு ஒரு கால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே -1 5-7 –

ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சன வண்ணன் தன்னை
தாயர் மகிழ ஒன்னார் தளரத் தொடர் நடை நடந்ததனை
வேயர் புகழ் விட்டு சித்தன் தன் சீரால் விரித்தன உரைக்க வல்லார்
மாயன் மணி வண்ணன் தாள் பணியும் மக்களைப் பெறுவர்களே – 1-7 11- –

கத்தக் கதித்து கிடந்த பெரும் செல்வம்
ஒத்து பொதிந்து கொண்டு உண்ணாது மண் ஆள்வான்
கொத்து தலைவன் குடி கெடத் தோன்றிய
அத்தன் வந்து என்னைப் புறம் புல்குவான் ஆயர்கள் ஏறு என்னைப் புறம் புல்குவான் -1 9-3 –

பொத்த உரலைக் கவிழ்த்து அதன் மேல் ஏறித்
தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்
மெத்த திரு வயிறு ஆர விழுங்கிய
அத்தன் வந்து என்னைப் புறம் புல்குவான் ஆழியான் என்னைப் புறம் புல்குவான் -1-9 7- –

வல் ஆள் இலங்கை மலங்க சரம் துரந்த
வில் ஆளானை விட்டு சித்தன் விரித்த
சொல் ஆர்ந்த அப் பூச்சி பாடல் இவை பத்தும்
வல்லார் போய் வைகுந்தம் மன்னி இருப்பரே -2- 1-10 – –

பெண்டிர் வாழ்வார் நின் ஒப்பாரை பெறுதும் என்னும் ஆசையாலே
கண்டவர்கள் போக்கு ஒழிந்தார் கண் இணையால் கலக்க நோக்கி
வண்டுலாம் பூம் குழலினார் உன் வாய் அமுதம் உண்ண வேண்டி
கொண்டு போவான் வந்து நின்றார் கோவிந்தா முலை உணாயே -2-2 -7- –

ஓட ஓட கிண் கிணிகள் ஒலிக்கும் ஓசை பாணியாலே
பாடிப் பாடி வருகின்றாயை பற்ப நாபன் என்று இருந்தேன்
ஆடி ஆடி அசைந்து அசைந்து இட்டு அதனுக்கு ஏற்ற கூத்தை யாடி
ஓடி ஓடி போய் விடாதே உத்தமா நீ முலை உணாதே -2 2-10 – –

வண நன்றுடைய வைரக் கடிப்பு இட்டு வார் காது தாழப் பெருக்கி
குண நன்றுடைய இக் கோபால பிள்ளைகள் கோவிந்தா நீ சொல்லுக் கொள்ளாய்
இணை நன்று அழகிய இக்கடிப்பு இட்டால் இனிய பலாப் பழம் தந்து
சுண நன்று அணி முலை உண்ணத் தருவன் நான் சோத்தம்பிரான் இங்கே வாராய் -2 3-4 – –

சோத்தம்பிரான் என்று இரந்தாலும் கொள்ளாய் சுரி குழலாரோடு நீ போய்
கோத்து குரவை பிணைந்து இங்கு வந்தால் குணம் கொண்டு இடிவனோ நம்பீ
பேர்த்தும் பெரியன  அப்பம் தருவன் பிரானே திரி இட ஓட்டில்
வேய்த் தடம் தோளார் விரும்பு கரும் குழல் விட்டுவே நீ இங்கே வாராய் -2 3-5 –

என் குற்றமே என்று சொலவும் வேண்டா காண் என்னை நான் மண் உண்டேனாக
அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டி இற்றிலையே
வன் புற்றரவின் பகைக் கொடி வாமன நம்பீ உன் காதுகள் தூரும்–
துன்புற்றன எல்லாம் தீர்ப்பாய் பிரானே திரி இட்டு சொல்லுகேன் மெய்யே -2 3-8 – –

மெய்யென்று சொல்லுவார் சொல்லைக்  கருதி தொடுப்புண்டாய் வெண்ணெயை என்று
கையைப் பிடித்துக் கரை உரலோடு என்னைக் காணவே கட்டிற்று இலையே
செய்தன சொல்லி சிரித்து அங்கு இருக்கில் சிரீதரா உன் காது தூரும்
கையில் திரியை இடு கிடாய் இந்நின்ற காரிகையார் சிரியாமே -2 3-9 – –

கன்றுகளோடச் செவியில் கட்டெறும்பு பிடித்திட்டால்
தென்றிக் கெடுமாகில் வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்
நின்ற மராமரம் சாய்த்தாய் நீ பிறந்த திருவோணம்
இன்று நீ நீராட வேண்டும் எம்பிரானே ஓடாதே வாராய் -2 4-2 – –

கன்றினை வாலோலை கட்டி கனிகள் உதிர எறிந்து
பின் தொடர்ந்தோடி ஓர் பாம்பை பிடித்துக் கொண்டாடினாய் போலும்
நின் திறத்தேன் அல்லேன் நம்பி நீ பிறந்த நல் திரு நாள்
நன்று நீ நீராட வேண்டும் நாரணா நீராட வாராய் -2 4-8 – –

பின்னை மணாளனை பேரில் கிடந்தானை
முன்னை அமரர் முதல் தனி வித்தினை
என்னையும் எங்கள் குடி முழுது  ஆள் கொண்ட
மன்னனை வந்து குழல் வாராய் அக்காக்காய்
மாதவன் தன் குழல் வாராய் அக்காக்காய் -2 5-1 – –

பிண்டத் திரளையும் பேய்க்கிட்ட நீர் சோறும்
உண்டற்கு வேண்டி நீ ஓடித் திரியாதே
அண்டத்த அமரர் பெருமான் அழகமர்
வண்டு ஒத்து  இருண்ட  குழல் வாராய் அக்காக்காய்
மாயவன்தன் குழல் வாராய் அக்காக்காய் -2 5-7 – –

கறுத்து எதிரிட்டு நின்ற கஞ்சனை கொன்றான்
பொறுத்திட்டு எதிர் வந்த புள்ளின் வாய் கீண்டான்
நெறித்த குழல்களை நீங்க முன்னோடி
சிறுக்கன்று மேய்ப்பாற்க்கு ஓர் கோல் கொண்டு வா
தேவ பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா – 2-6-3-

தென் இலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து
மின் இலங்கு பூண் விபீடணன் நம்பிக்கு
என் இலங்கு   நாமத்து அளவும் அரசு என்ற
மின் இலங்கு ஆரற்க்கு  ஓர் கோல் கொண்டு வா
வேம்கட வாணற்க்கு   ஓர் கோல் கொண்டு வா -2 -6-9 –

தெருவின் கண் நின்று இள ஆய்ச்சிமார்களை தீமை செய்யாதே
மருவும் தமநகமும் சீர் மாலை மணம் கமழ்கின்ற
புருவம் கரும் குழல் நெற்றி பொலிந்த முகில் கன்று போலே
உருவம் அழகிய நம்பி உகந்து இவை சூட்ட நீ வாராய் -2 7-4 –

மாவலி வேள்வியின் மாண் உருவாய் சென்று
மூவடி தா என்று இரந்த இம் மண்ணினை
ஓரடி இட்டு இரண்டாம் அடி தன்னிலே
தாவடி இட்டானால் இன்று முற்றும்
தரணி அளந்தானால் இன்று முற்றும் 2-10-7 – –

வானத்து எழுந்த மழை முகில் போல் எங்கும்
கானத்து மேய்ந்து களித்து விளையாடி
ஏனத் துருவாய்  இடந்த இம் மண்ணினை
தானத்தே வைத்தானால் இன்று முற்றும்
தரணி இடந்தானால் இன்று முற்றும் -2 10-9 –

குடையும் செருப்பும் கொடாதே தாமோதரனை நான்
உடையும் கடியன ஊன்று வெம் பரற்களுடைக்
கடிய வெம் கானிடைக் காலடி நோவக் கன்றின் பின்
கொடியனேன் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே -3 -2-9 –

கடியார் பொழில் அணி வேம்கடவா கரும் போரேறே நீ உகக்கும்
குடையும் செருப்பும் குழலும் தருவிக்க கொள்ளாதே போனாய் மாலே
கடிய வெம் காநிடை  கன்றின் பின் போன சிருக் குட்ட செம் கமல
வடியும் வெதும்பி உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான் -3 3-4 –

பற்றார் நடுங்க முன் பாஞ்ச சனியத்தை வாய் வைத்த போரேறே என்
சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா சிறுக்குட்டச் செம் கண் மாலே
சிற்றாடையும் சிறுப் பத்திரமும்  இவை கட்டிலின் மேல் வைத்து போய்க்
கற்றாயரோடு நீ கன்றுகள் மேய்த்து கலந்து உடன் வந்தாய் போலும் -3 3-5 –

புற்று அரவு அல்குல் யசோதை நல் ஆய்ச்சி தன் புத்திரன் கோவிந்தனை
கற்றினம் மேய்த்து வரக் கண்டு  உகந்தவள் கற்பித்த மாற்றம் எல்லாம்
செற்றம் இலாதவர் வாழ்தரு தென் புதுவை விட்டு சித்தன் சொல்
கற்று இவை பாட வல்லார் கடல் வண்ணன் கழல் இணை காண்பர்களே
-3 3-10 –

சிந்தூரம் இலங்க தன் திரு நெற்றி மேல் திருத்திய கோறம்பும் திருக் குழலும்
அந்தரம் முழவத் தண் தழை காவின் கீழ் வரும் ஆயரோடு உடன் -வளை கோல் வீச
அந்தம் ஒன்றில்லாத ஆய்ப் பிள்ளை அறிந்து அறிந்து இவ்வீதி போதுமாகில்
பந்து கொண்டான் என்று வளைத்து வைத்து பவள வாய் முறுவலும் காண்போம் தோழி 3-4-6- –

சிந்துரப் பொடி கொண்டு சென்னி யப்பிப் திருநாமம் இட்டு அங்கு ஓர் இலை அம் தன்னால்
அந்தரம் இன்றி தன்னெறி பங்கியை யழகிய நேத்திரத்தால் அணிந்து
இந்திரன் போல் வரும் ஆயப் பிள்ளை எதிர் நின்று அங்கு இனவளை இழவேல் என்னச்
சந்தியின் நின்று  கண்டீர் நங்கை தன் துகிலொடு சரி வளை கழல் கின்றதே – 3-4-8-

விண்ணின் மீது அமரர்கள் விரும்பி தொழ மிறைத்து ஆயர்பாடியிலே வீதி யூடே
கண்ணன் காலிப் பின்னே எழுந்து அருள கண்டு இள ஆய்க் கன்னிமார் காமுற்ற
வண்ண வண்டு அமர் பொழில் புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்
பண்ணின்பம் வரப் பாடும் பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே -3- 4-10 – 

அரவில் பள்ளி கொண்டு அரவம் துரந்திட்டு அரவப் பகை ஊர்தி அவனுடைய
குரவில் கொடி முல்லைகள் நின்று உறங்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடை மேல்
திருவில் பொலி மறை வாணர் புத்தூர் திகழ பட்டார் பிரான் சொன்ன மாலை பத்தும்
பரவும் மனம் நன்குடை பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே -3- 5-11 –

மாயவன் பின் வழி சென்று வழி இடை மாற்றங்கள் கேட்டு
ஆயர்கள் சேரியிலும் புக்கு அங்குத்தை மாற்றம் எல்லாம்
தாயவள் சொல்லிய சொல்லை தண் புதுவை பட்டன் சொன்ன
தூய தமிழ் பத்தும் வல்லார் தூ மணி வண்ணனுக்கு ஆளரே  – 3-8 -10-

முடி ஒன்றி மூ உலகங்களும் ஆண்டு உன்
அடியேற்கு அருள் என்று அவன் பின் தொடர்ந்த
படியில் குணத்து பரத நம்பிக்கு அன்று
அடி நிலை ஈர்ந்தானைப் பாடிப் பற
அயோத்தியர் கோமானைப் பாடிப் பற -3- 9-6 –

தார்க்கு இள தம்பிக்கு அரசு ஈந்து தண்டக
நூற்றவள் சொல் கொண்டு போகி நுடங்கிடை
சூர்பணகாவை செவியோடு மூக்கவள்
ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற
அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற -3 -9-8 –

காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு
ஓராதான் பொன் முடி ஒன்பதோடு ஒன்றையும்
நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த
ஆராவமுதனைப் பாடிப் பற
அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற – 3-9- 10-

கரிய முகல் புரை மேனி மாயனை கண்ட சுவடு உரைத்து 
புரவி முகம் செய்து செந்நெல் ஓங்கி விளை கழனி புதுவை 
திருவில் பொலி மறை வாணன் பட்டர் பிரான் சொன்ன மாலை பத்தும் 
பரவு மனம் உடை பத்தர் உள்ளார் பரமன் அடி சேர்வார்களே -4- 1-10 –

தக்கார் மிக்கார்களை சஞ்சலம் செய்யும் சலவரை
தெக்கா நெறியே  போக்குவிக்கும் செல்வன் பொன் மலை
எக் காலமும் சென்று சேவித்து இருக்கும் அடியரை
அக் கான் நெறியை மாற்றும் தண் மால் இரும் சோலையே – 4-2- 3-

ஒரு வாரணம் பணி கொண்டவன் பொய்கையில் கஞ்சன் தன்
ஒரு வாரணம் உயிர் உண்டவன் சென்று உறையும் மலை
கரு வாரணம் தன் பிடி துறந்து ஓடக் கடல் வண்ணன்
திரு ஆணை கூறத் திரியும் தண் மால் இரும் சோலையே – 4-2- 5-

மருதப் பொழில் அணி மால் இரும் சோலை மலை தன்னை
கருதி உறைகின்ற கார்க்கடல் வண்ணன் அம்மான் தன்னை
விரதம் கொண்டு ஏத்தும் வில்லிபுத்தூர் விட்டு சித்தன் சொல்
கருதி உரைப்பவர் கண்ணன் கழலினை காண்பரே – 4-2 -11-

பூதம் ஐந்தோடு வேள்வி ஐந்து புலன்கள் ஐந்து பொறிகளால்
ஏதம் ஒன்றும் இலாத வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர்
நாதனை நரசிங்கனை நவின்று எத்துவாரகள் உழக்கிய
பாத தூளி படுதலால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே – 4-4-6-

கொம்பினார் பொழில் வாய் குயில் இனம் கோவிந்தன்  குணம் பாடு சீர்
செம்பொனார் மதிள் சூழ் செழும் கழனி வுடைத் திரு கோட்டியூர்
நம்பனை நரசிங்கனை நவின்று  ஏத்துவார்களைக் கண்டக்கால்
எம்பிரான் தன் சின்னங்கள் இவர் இவர் என்று ஆசைகள் தீர்வேனே – 4-4- 9-

பெருவரங்கள் அவை பற்றி பிழக்கு உடை இராவணனை 
உருவரங்க  பொருது அழித்து இவ்வுலகினை கண் பெறுத்தானூர்  
குருவு அரும்ப கொங்கு அலர குயில் கூவும் குளிர் பொழில் சூழ் 
திருவரங்கம் என்பதுவே  என் திரு மால் சேர்விடமே – 4-8 5- –

பருவரங்கள் அவை பற்றி படை யாலித்து எழுந்தானை
செருவரங்க பொருது அழித்த திருவாளன் திருப்பதி மேல் 
திருவரங்க தமிழ்மாலை விட்டு சித்தன் விரித்தன கொண்டு 
இருவரங்கம் எரித்தானை ஏத்த வல்லார் அடியோமே -4 -8-10 –

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய துவரை என்னும்
அதில் நாயகராகி வீற்று இருந்த மணவாளர் மன்னு கோயில்
புது நாள் மலர்க் கமலம் எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான்
பொது நாயகம் பாவித்து இறுமாந்து பொன் சாய்க்கும் புனல் அரங்கமே – 4-9 4-

சாமிடத்து என்னை குறிக்கொள் கண்டாய் சங்கோடு சக்கரம்  ஏந்தினானே
நாமடித்து என்னை யனேக தண்டம் செய்வதா நிற்பர் நமன் தமர்கள்
போமிடத் துன்றிறத்தனையும் புகா வண்ணம் நிற்பதோர் மாயை வல்லை
ஆமிடத்தே உன்னை சொல்லி வைத்தேன் அரங்கத்து அரவணைப் பள்ளியானே -4- 10-2 –

மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும்
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத்து அரவணைப் பள்ளியானே
வேயர் புகழ் வில்லி புத்தூர் மன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்
தூய மனத்தனராகி வல்லார் தூ மணி வண்ணனுக்கு ஆளர் தாமே  – 4-10 -10-

சழக்கு நாக்கொடு புன்  கவி சொன்னேன் சங்கு சக்கரம் ஏந்து கையனே
பிழைப்பர் ஆகிலும் தம் அடியார் சொல் பொறுப்பது பெரியோர் கடன் அன்றே
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்று அல்லால் வேறு ஒருவரோடு என் மனம் பற்றாது
உழைக்கோர் புள்ளி மிகை யன்று கண்டாய் ஊழி  ஏழு உலகு உண்டு உமிழ்ந்தானே -5- 1-2 –

நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால்
புன்மையால் உன்னை புள்ளுவம் பேசி புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே
உன்னும் ஆறு உன்னை ஒன்றும் அறியேன் ஓவாதே நமோ நாரணா என்பன்
வன்மை யாவது உன் கோயிலில் வாழும் வைட்டணவன் என்னும் வன்மை கண்டாய் -5- 1-3 –

நம்பனே நவின்று ஏத்த வல்லார்கள் நாதனே நரசிங்கமதானாய்
உம்பர் கோன் உலகு ஏழும் அளந்தாய் ஊழி யாயினாய் ஆழி முன்னேந்தி
கம்ப மா கரி கோள் விடுத்தானே காரணா கடலைக் கடைந்தானே
எம்பிரான் என்னை ஆளுடைத் தேனே ஏழையேன் இடரைக் களையாயே – 5-1 -9-

சென்று உலகம் குடைந்தாடும் சுனை திரு மால் இரும் சோலை தன்னுள்
நின்ற பிரான் அடி மேல் அடிமைத் திறம் நேர்பட விண்ணப்பம் செய்
பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும்  புதுவைக் கோன் விட்டு சித்தன்
ஒன்றினோடு ஒன்பதும் பாட வல்லார் உலகம் அளந்தான் தமரே– 5-3- 10- –

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை…..தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது-5-நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய…. தூயோமாய் வந்தோம்- துயிலெழப் பாடுவான்–16-

நாச்சியார் திருமொழி
வெள்ளை நுண்மணற் கொண்டு தெருவணிந்து வெள்வரைப்பதன் முன்னம் துறைபடிந்து-1-2-
வெள்ளை நுண்மணற்கொண்டு சிற்றில்விசித்திரப்பட * வீதிவாய்த்-2-5-

தெள்ளியார் பலர் கைந்தொழும் தேவனார்
வள்ளல் மாலிரும் சோலை மணாளனார்
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட
கொள்ளுமாகில் நீ கூடிடு கூடிலே–4-1-

காட்டில் வேங்கடம் கண்ணபுரநகர்
வாட்டமின்றி மகிழ்ந்துறை வாமனன்
ஓட்டரா வந்து என் கைப்பற்றி தன்னோடும்
கூட்டுமாகில் நீ கூடிடு கூடலே-–4-2-

மாட மாளிகை சூழ் மதுரைப் பதி
நாடி நந்தெருவின் நடுவே வந்திட்டு
ஓடை மா மதயானை யுதைத்தவன்
கூடுமாகில் நீ கூடிடு கூடலே—4-5-

வெள்ளை விளி சங்கு இடம் கையில் கொண்ட விமலன் எனக்கு உருக் காட்டான்
உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும் உயிர்ப் பெய்து கூத்தாட்டுக் காணும்
கள்ள விழ் செண்பகப் பூ மலர்க் கோதிக் களித்து இசை பாடும் குயிலே
மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது என் வேங்கடவன் வரக் கூவாய்–5-2-

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
மது வாயில் கொண்டால் போலே மாதவன் தன் வாயமுதம்
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ யுண்டக்கால்
சிதையாரோ வுன்னோடு செல்வப் பெரும் சங்கே–7-9-

சந்தொடு கார் அகிலும் சுமந்து தடங்கள் பொருது
வந்திழியும் சிலம்பாறுடை மாலிருஞ்சோலை நின்ற
சுந்தரனை சுரும்பார் குழல் கோதை தொகுத்து உரைத்த
செந்தமிழ் பத்தும் வல்லார் திருமாலடி சேர்வர்களே –9-10-

மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பதோர் அன்பு தன்னை
உற்று இருந்தேனுக்கு உரைப்பது எல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை
பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப் பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி
மல் பொருந்தா மற்களம் அடைந்த மதுரைப் புறத்து என்னை யுய்த்திடுமின்–12-1-

ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில் ஆய்ப்பாடிக்கே என்னை யுய்த்திடுமின்--12-2-

நந்த கோபாலன் கடைத் தலைக்கே நள்ளிருட்கண் என்னை யுய்த்திடுமின்–12-3-

இங்குத்தை வாழ்வை ஒழியவே போய் யமுனைக் கரைக்கு என்னை யுய்த்திடுமின்--12-4-

போர்க்களமாக நிருத்தம் செய்த பொய்கைக் கரைக்கு என்னை யுய்த்திடுமின்–12-5-

பார்த்திருந்து நெடு நோக்குக் கொள்ளும் பத்த விலோசனத்து உய்த்திடுமின் –12-6-

பண்ணழியப் பலதேவன் வென்ற பாண்டி வடத்து என்னை யுய்த்திடுமின்–12-7-

கொற்றக் குடையாக வேந்தி நின்ற கோவர்த்தனத்து என்னை யுய்த்திடுமின்–12-8-

சூட்டுயர் மாடங்கள் தோன்றும் துவாராபதிக்கு என்னை யுய்த்திடுமின்–12-9-

பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவற்கோர் கீழ்க் கன்றாய்
இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே
இட்டமான பசுக்களை யினிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே –14-1-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .












ஸ்ரீ வாழி திருநாம பாசுரங்கள்-

September 8, 2026

திருமகளும்‌ மண்களும்‌ சிறக்க வந்தோன்‌ வாழியே
செய்யவிடைத்‌ தாய்மகளார்‌ சேவிப்போன்‌ வாழியே
இருவிசும்பில்‌ வீற்றிருக்கும்‌ இமையவர் கோன்‌ வாழியே
இடர்கடியப்‌ பாற்கடலை எய்தினான்‌ வாழியே
அரிய தயரதன்‌ மகனாய்‌ அவதரித்தான்‌ வாழியே
அந்தர்யாமித்துவமும்‌ ஆயினான்‌ வாழியே
பெருகிவரும்‌ பொன்னி நடுப்‌ பின்‌ துயின்றான்‌ வாழியே
பெரியபெருமாள்‌ எங்கள்‌ பிரான்‌ அடிகள்‌ வாழியே-

திருமகளும்‌ – பெரிய பிராட்டியாரும்‌,
மண்மகளும்‌ பூமிப்‌ பிராட்டியாரும்‌,
சிறக்க வந்தோன்‌ – மேன்மை அடையும்படி வந்த நம்பெருமாள்‌,
வாழியே – வாழ வேண்டும்‌;
செய்ய இடைத்தாய்மகளார்‌ – செப்பமான நேர்மையான இடையர்‌ குலத்தில்‌ பிறந்த ஸ்ரீ கும்பன்‌ மகளான நப்பின்னையால்‌,
சேவிப்போன்‌ – சேவிக்கப்‌ படுமவன்‌;
இரு விசும்பில்‌ – பெருமை பொருந்திய பரம பதத்தில்‌, –
வீற்றிருக்கும்‌,
இமையவர் கோன்‌ – இமை கொட்டாதவர்களான நித்ய ஸூரிகளுக்குத்‌ தலைவனானவன்‌;
இடர்கடிய- துன்பங்கள்‌ அகல,
பாற்கடலை – திருப் பாற்கடலை,
எய்தினான்‌ – அடைந்தவன்‌;
அரிய – அருமையான
தயரதன்‌ – தசரதன்‌ என்னும்‌ அரசன்‌,
மகனாய்‌ -மகனான இராமனாய்‌,
அவதரித்தான்‌ – அவதரித்தவன்‌;
அந்தர்யாமித்வமும்‌ ஆயினான்‌ – எல்லார்‌ மனத்திலும்‌ உறையும்‌ தன்மையும்‌ உடைவனானவன்‌;
பெருகி வரும்‌ – வற்றாது ஆற்றொழுக்காகப் பொங்கி வரும்‌,
பொன்னி – பொன்னி என்னும்‌ காவிரி ஆற்றின்‌,
நடுப்பின்‌ – நடுவில்‌,
துயின்றான்‌ – பள்ளி கொண்டவன்‌;
பெரிய பெருமாள்‌ கோயிலில்‌ உள்ள பெருமை மிக்க மூலமூர்த்தியான பெரிய பெருமாள்‌,
எங்கள்‌ பிரான்‌ – எங்களுக்கு உதவி செய்த பிரானானவன்‌,
அடிகள்‌ – திருவடிகள்‌ வாழி-வாழியவே

(திருமகளும்‌ மண்மகளும்‌ சிறக்க வந்தோன்‌)
திருவாகிய மகள்‌ திருமகள்‌. தேவர்களுக்கும்‌ அசுரர்‌களுக்கும்‌ நடந்த யுத்தத்தில்‌ திருப்பாற்கடலை எம்பெருமான்‌ கடைந்தான்‌. கடைந்த போது தோன்றியவள்‌ தாமரை மலரில்‌ வாழ்கின்ற பெரிய பிராட்டியாரான திருமகள்‌. பாற்கடலைக்‌ கடையும்‌ எம்பெருமானுக்கு சிரமம்‌ நீங்குவதற்காக, புன் சிரிப்பு, கருணை இவைகளாகிற அமுதங்களாலே நனைத்துக் கொண்டு சந்திரனுடைய நிலவு போலே சுழன்று வருகின்ற அமுத அலைச்‌ சுழல்களிலிருந்து பிராட்டி தோன்றினாள்‌ என்று கூறும்‌ ஸ்ரீ குணரத்னகோசம்‌ (49).

ஸ்கலித கடக மால்யை: தோர்பி: அப்திம் முராரே:
பகவதி ததிமாதம் மத்நத: ச்ராந்தி சாந்த்யை
ப்ரமத் அம்ருத தரங்க வர்த்தத: ப்ராதுராஸீ:
ஸ்மித நயந ஸுதாபி: ஸஞ்சதீ சந்த்ரிகேவ–49-விண்ணவர் அமுது உண்ண வமுதில் வரும் பெண் அமுது உண்ட எம்பெருமானே
–-கடல் கடைந்த ஸ்ரமம் தீர்க்கவே திரு மார்பிலே அணைந்தது –பகவானுக்கு ஏற்றவளே! ஸ்ரீரங்கநாயகீ! தேவர்களுக்காகத் திருப்பாற்கடலைக் கடைந்த போது எம்பெருமானின் திருக்கரங்களில் இருந்த ஆபரணங்கள் நழுவின; அவனது மாலைகள் நழுவின.-இப்படிப்பட்ட திருக்கைகளை உடைய அவன், தயிர் கடைவது போன்று திருப்பாற்கடலைக் கடைந்தான்.-இப்படியாகச் சோர்ந்த அவனது களைப்பு நீங்கும்படியாக எழில் வீசும் புன்னகையும் கனிவான பார்வையும் கொண்டபடி நீ தோன்றினாய். இப்படியாக அமிர்தமாகிய அலைகள் வீசும் அந்தத் திருப்பாறகடலில் இருந்து, வெண்மையான குளிர்ந்த நிலவு போல நீ தோன்றினாய் அல்லவா?“உனக்கு ஏற்கும் கோலமலர்ப்பாவை” என்பது போன்று, அவனுக்கு ஏற்றவளாக இவள் வந்தாள்.-இவ்விதம் அவதரித்த இவளைக் கண்டவுடன் அவன் களைப்பு பறந்தது.-உத்தர சதகத்தில் -உந்மூல் யாஹர மந்தராத்ரி மஹிநா பலேக்ரஹிர் ஹி கமலா லாபேந சர்வஸ் ஸ்ரம –என்று-ஸ்ரீ ரெங்க நாதனை நோக்கி அருளிச் செய்தது போலவே இங்கும் –


அரங்கனுக்கு திருமகளும்‌ மண்மகளும்‌ பத்னிகள்‌ என்று புருஷஸுக்தம்‌ (2-5) கூறும்‌. திருமகளுக்கும்‌ மண்‌ மகளுக்கும்‌ சிறப்பாவது நம்மாழ்வார்‌ “என்‌ திருமகள்‌ சேர்‌ மார்பன்‌” என்றும்‌, “நின்‌ திருவெயிற்றால்‌ இடந்து நீ கொண்ட நிலமகள்‌ கேள்வன்‌” என்றும்‌ அருளியது காண்க. இது தன்னையே திருமழிசை யாழ்வாரும்‌ “மன்னு மாமலர்க் கிழத்தி வைய மங்கை மைந்தனாய்‌” என்று திருச்சந்த விருத்தத்தில்‌ (55) அருளியபடியே சிறந்த தாமரைப்பூவில்‌ பிறந்த பிராட்டிக்‌கும்‌ மண்மகளுக்கும்‌ வல்லபனானவன்‌ அரங்கன்‌ என்று அருளுவர்‌. நம்பெருமாளுக்கு வலது பக்கத்திலும்‌ இடதுபக்கத்திலும்‌ விளையாடவல்ல அன்ன பேடை போன்‌றுள்ள திருமகளும்‌, மேன்மேலும்‌ வளர்த்தியை உடைய நிழல்‌ போன்றவளான மண்களும்‌ திகழ்வதை பட்டர்‌ ஸ்ரீ ரங்கராஜ பூர்வ சதகத்தில்‌ (63) அருளியதும்‌, “கமலயா ஷமயா ச ஸிம்ஹாஸநே நிஷண்ணம்‌” (66) என்கிறபடியே திருமகளோடும்‌ நிலமகளோடும்‌ சிங்காசனத்தில்‌ அரங்கனை எப்போதும் விட்டப்பிரியாது வீற்று இருப்பதை அருளியதும்‌ அநுபவிக்கத்‌ தக்கவை.

திருமகளுக்குச் சிறப்பாவது – திருவாகிய பெரிய பிராட்டியாரை திவ்ய மஹிஷியாக பெரிய பெருமாள்‌ கொண்டமை. இது பற்றியே பெரியாழ்வார்‌ “திருவாளன்‌” என்கிறார்‌. மேலும்‌, ஏழு உலகங்களையும்‌ படைத்தவுடன்‌ தளிர்‌ விடுவதாகவும்‌, அவற்றின்‌ நிர்வாகத்தினால்‌ மொட்டு விடுவதுமாகிற கடைக்கண்‌ பார்வை உடையவளும்‌, திருவரங்க மாளிகைக்கு ஒரு மங்கள தீபக்கொழுந்து போலிருப்பவளுமான ஸ்ரீரங்கராஜனுடைய திவ்ய மஹிஷீயுமானவள்‌ என்று பட்டர்‌ ஸ்ரீ குணரத்னகோசத்தில்‌ உரைப்பர்‌. அரங்கனுடைய கருணைக்கோர்‌ இருப்பிடமானவளாய்‌, ஞானம்‌, சக்தி முதலான ஆறு குணங்கள்‌ நிரம்பப் பெற்ற வளாய்‌, மேலான பிரிகிருதியாகச்‌ சொல்லப்படுமவளான திருமகள்‌ எம்பெருமானுடைய மேலான ஒரு சக்தியாவாள்‌ என்று ஸநத் குமார ஸம்ஹிதை கூறும்‌. திருமங்கையாழ்வாரும்‌ ‘“ஒலிதிரை நீர்ப்பெளவம்‌ கொண்ட திருவாளன்‌” என்பதற்குச் சேர ஒலிக்கின்ற அலைகளோடு கூடிய ஜலத்தையுடைய கடலிலே பிறப்பையுடையவளான பெரிய பிராட்டியாரான திருவுக்கு வல்லபனானவன்‌ என்கிறார்‌. எல்லாவற்றாலும்‌ உயர்ந்தவனாய்‌ பரமபுருஷனான எம்பெருமான்‌, மங்களத்தை உண்டு பண்ணுபவளான இவளுக்கு அநுரூபமான பதி ஆவான்‌. “உனக்கு ஏற்கும்‌” என்று ஆழ்வார்‌ அருளியபடியே இவள்‌ அவனுக்கு ஒப்பாய்‌ இருக்குமாபோலே எம்பெருமானும்‌ திருத்தக்கச்‌ செல்வனாய்‌ இருப்பவன்‌ என்பர்‌. பிராட்டியின்‌ வால்லப்யத்தாலே அவன்‌ திருமகள்‌ கேள்வனானான்‌. ஸ்ரீ ய:பதி என்பர்‌. இங்ஙனே பல உள.

மண்மகளுக்கு சிறப்பாவது –-திருமதிள்கள்‌, திருமண்டபங்கள்‌, இடைகழி முதலான தன்‌ பரிவாரங்களோடு கூடிய ஸ்ரீ ரங்கவிமானத்தை சேவிப்பதற்காகவே பூமிப்பிராட்டி இங்கு வந்து சேர்ந்ததுபோல இருக்கிறது என்று பட்டர்‌ ஸ்ரீரங்கராஜ பூர்வ சதகத்தில்‌ (35) அநுபவிப்பர்‌. பிரளயம்‌ கொண்ட காலத்திலே பாசி பற்றிக் கிடந்த மண் மகளை உத்தரிப்பதற்காக வராக அவதாரம்‌ செய்து, அதனால்‌ வந்த ஒளியுடையவனாய்‌ திருவரங்கத்தில்‌ பள்ளி கொண்டான்‌ என்பதற்குச் சேர ஆண்டாள்‌ “பாசி தூர்த்துக்‌ கிடந்த பார்மகட்கு… திருவரங்கச்‌ செல்வனார்‌” (நாச்‌.திரு. 11-8) என்று அருளியது காண்க. இதனால்‌ மண்மகள்‌ சிறப்பு சொல்லப்பட்டதாயிற்று-

(செய்ய விடைத்‌ தாய்மகளார்‌ சேவிப்போன்‌) – செய்ய – நேர்மையான, இடைத்‌ தாய்மகள்‌ – இடையர்‌ குலத்தில்‌ ஸ்ரீ கும்பனுக்கு பிறந்த நப்பின்னை. இடையரால்‌ பெற்று வளர்க்‌கப்பட்ட மகளாக- அன்பிற்குரிய தேவி நப்பின்னை என்னும்‌ நீளா தேவி. இவளுக்கு மணவாளர்‌ நம்பெருமாள்‌. அவளால்‌ சேவிக்கப்படுபவன்‌ நம்பெருமாள்‌. நம்மாழ்வார்‌ அருளியபடியே ‘“அன்று உருவு ஏழும்‌ தழுவி நீ கொண்ட ஆய்மகள்‌ அன்பன்‌” என்று கண்ணனாய்‌ ஏழு எருதுகளை அடக்கி தாய்மகளான நப்பின்னைப்‌ பிராட்டிக்கு அன்பன்‌ என்று அவளால்‌தொழப்பட்டவன்‌ இன்று அரங்கனாய்‌ இருக்கிறான்‌ என்றபடி. பின்னும்‌ “ஆயர்‌ பின்னை தோள்‌ மணம்‌ புணர்ந்து” என்கிற படியே கோபாலரான ஸ்ரீ கும்பனுடைய மகளான நப்பின்னைப் பிராட்டியினுடைய தோளோடே கலந்தவன்‌ அரங்கன்‌ என்று சுவை பட திருமழிசையாழ்வார்‌ (திருச்‌. வி.55) அநுபவிப்பர்‌. பின்னைக்கு இனிய பெருமாள்‌ அரங்கர்‌ என்றும்‌ திருவரங்‌ கத்து மாலையில்‌ (21) அருளியது காண்க.

(இருவிசும்பில்‌ வீற்றிருக்கும்‌ இமையவர் கோன்‌) “அமரர்க்கும்‌ பிரானாரைக்‌ கண்டது தென்னரங்கத்தே” என்று திருமங்கையாழ்வார்‌ அருளியதற்கு ஏற்ப நித்ய ஸுரிகளுக்கும்‌ தலைவனானவன்‌ அரங்கன்‌ என்கிறார்‌. மேலும்‌ பிறவியின்‌ தொடுதலாகிற வாசனை இல்லாத நித்ய ஸுரிகளுக்கு தலைவனான அரங்கன்‌ பள்ளி கொண்ட இடம்‌ தென்னரங்கம்‌ என்பதற்குச் சேர இமையோர்கள்‌ தாதைக்கு இடம்‌” என்று பாடுகிறார்‌ திருமங்கையாழ்வார்‌. “அமரரேறே என்று தொண்டரடிப்பொடிகளும்‌, “விண்ணோர்‌ முதல்‌ என்னும்‌” என்று நம்மாழ்வாரும்‌, “விண்ணவர்‌ கோன்‌” என்று திருப்பாணாழ்வாரும்‌ அனுபவித்தனர்

(இடர் கடியப்‌ பாற்கடலை எய்தினான்‌) எம்பெருமான்‌ எழுந்தருளிய நிலைகளில்‌ திருப்பாற்கடலில்‌ பள்ளிகொண்ட நிலை வியூகம்‌ எனப்‌படும்‌. வியூகமாவது படைப்பு, காப்பு, அழிவு முதலானவற்றுக்குக்‌ கடவனாய்‌, ஸம்ஸாரிகளின்‌ இடர்களைப்‌ போக்கி விருப்பத்தைக்‌ கொடுப்பவனாய்‌ திருப்பாற்கடலில்‌ பள்ளிகொண்ட நிலை. பாற்கடல் போலே வியூகம்‌ என்பர்‌ பிள்ளைலோகாசார்யர்‌. “ஆயிரம்‌ பெயரால்‌ அமரர்‌ சென்றி றைஞ்ச அறிதுயில்‌ அலைகடல்‌ நடுவே ஆயிரம்‌ சுடர்வாய்‌ அரவணைத்‌ துயின்றான்‌ அரங்கமாநகருளானே”‘ என்று திருமங்கையாழ்வார்‌ அருளியபடியே, தேவர்கள்‌ எல்லாரும்‌ தங்களுக்கு ஏற்பட்ட இடரைப்‌ போக்க அவர்கள்‌ கூக்குரலைக் கேட்க பாற்கடலில்‌ பள்ளி கொண்டவன்‌ இன்று அரங்கத்தில்‌ துயிலுகிறான்‌ என்று உரைப்பர்‌ -பெரியாழ்வாரும்-பையரவினணைப்‌ பாற்கடலுள்‌ பள்ளி கொள்கின்ற பரம் மூர்த்தி” என்று கூறுவர்‌. இதற்கு உரையிட்ட மணவாள மாமுனிகள்‌, திருப்பாற்கடலிலே தன்‌ தொடுதலாலே விரிந்ததான பணங்களை யுடையவனாய்‌, மென்மை, குளிர்த்தி, நாற்றங்களைத்‌ தன்மையாகவுடைய திருவனந்தாழ்வானாகிற படுக்கையின்‌ மேலே ஸம்ஸாரிகளான ஆத்மாக்களை உய்விக்கும்‌ பொருட்டு பல உபாயங்‌களை மனத்திலே சிந்தித்துக் கொண்டு படுத்திருப்பதாக அநுபவிப்பர்‌. நம்மாழ்வாரும்‌ “கடலிடம்‌ கொண்ட கடல்‌ வண்ணா” என்று அநுபவிப்பர்‌. திருப்பாற்கடலானது முப்பத்திரண்டு லக்ஷம்‌ யோசனை யுள்ளது. அதன்‌ நடுவே உள்ள திருவனந்தாழ்வானுடைய உடலானது மூன்று லக்ஷம்‌ யோசனை, அவன்‌ மேலே யோக நித்ரை செய்யும்‌ திருவரங்கனின்‌ திருமேனியானது இரண்டரை லக்ஷம்‌ யோசனை (யோசனை என்பது 7, 8 மைல்‌) என்று அஷ்ட ப்ரபந்த நூலில்‌ திருவரங்கத்து மாலையில் அருளிச் செய்துள்ளார் –

(அந்தர்யாமித்துவமும்‌ ஆயினான்‌) – அந்தர்யாமித்வம்‌ – உள்ளே உறையும்‌ தன்மை. எம்பெருமானின்‌ பரம்‌, வியூகம்‌, விபவம்‌, அந்தர்யாமி, அர்ச்சை ஆகிய ஐந்து நிலைகளில்‌ அந்தர்யாமி என்பது ஒவ்வொரு வஸ்துவிலும்‌ எம்பெருமான்‌ உள்ளே உறையும்‌ நிலை.-“பூதத ஜலம்‌ போலே அந்தர்யாமித்வம்‌”” என்பர்‌ பிள்ளை லோகாசார்யர்‌. பிரம்மாண்ட புராணத்தில்‌ (5வது அத்யா. 4-5 சுலோகம்‌) சொல்லியபடியே பெரியபெருமாள்‌ தெய்வீகத் தன்மை கொண்டு திருமேனியுடன்‌ எங்கும்‌ வியாபித்துள்ளான் என்றும் எங்கும்‌ பரந்துள்ள எம்பெருமான்‌ அடியார்கள்‌ பொருட்டு ஆசை கொண்டவனாக அர்ச்சாமூர்த்தியாக திருவரங்கத்தில்‌ எழுந்தருளி யிருக்கிறான்‌ என்றதும்‌ காண்க, பூதத்தாழ்வார்‌ நல்லவர்கள்‌ உள்ளத்தில்‌ இருக்கும்‌ எம்பெருமான்களைச்‌ சொல்லும்‌ வரிசையில்‌ “தலை அரங்கம்‌” என்று திருப்பதிகளில்‌ ப்ரதானமான கோயில்‌ என்று உரைப்பர்‌. தொண்டரடிப்‌ பொடியாழ்வாரும்‌ தம்‌ நெஞ்சைப் பார்த்து “மாசற்‌றார்‌ மனத்துளானை வணங்கி நாம்‌ இருப்பதல்லால்‌ பேசத்‌ தானாவதுண்டோ பேதை நெஞ்சே நீ சொல்லாய்‌” என்று மாசற்ற மனத்தில்‌ அரங்கன்‌ இருப்பைத்‌ தெரிவிக்‌கிறார்‌. திருப்பாணாழ்வாரும்‌ “என்னைத் தன்‌ வாரமாக்கி வைத்‌ தான்‌ வைத்ததன்றி என்னுள்‌ புகுந்தான்‌” என்று அரங்கன்‌ அந்தர்யாமியாய்‌ இருப்பதை அநுபவிக்‌கிறார்‌. நம்மாழ்‌ வாரும்‌ தாம்‌ அருளிய திருவாய்மொழியில்‌,“மூவுல காளியே என்னும்‌”, கடிகமழ்‌ கன்றைச்‌ சடையனே-என்னும்‌, “நான்முகக்கடவுளே என்னும்‌” என்று இந்திரன்‌, சிவன்‌, நான்முகன்‌ ஆகியோர்க்கு அந்தர்யாமியாய்‌ இருக்கிறான்‌ திருவரங்கன்‌ என்றதும்‌ காணலாம் –

(அரிய தயரதன்‌ மகனாய்‌ அவதரித்தான்‌) அருமையான தசரதனுக்கு மகனாகப்‌ பிறந்தான்‌. “மயா | ராகவேரூபேண”: என்று ஸ்ரீரங்க மஹாத்மியத்திலும்‌ | (அத்யாய. 8-30 சுலோகம்‌) எம்பெருமான்‌ தான்‌ இராமனாக அவதரிப்பேன்‌ என்றது காண்க. தொண்டரடிப்‌ பொடியாழ்வாரும்‌ தாம்‌ அருளிய திருப்பள்ளியெழுச்‌ சியில்‌ “அயோத்தி எம்‌ அரசே அரங்கத்தம்மா”” என்கிறார்‌. அதாவது சக்கரவர்த்தி திருமகனாய்‌ அவதரித்தவன்‌ இந்த அரங்கனே என்றபடி. இராமனாய்‌ அவதரித்து இராவணனைக்‌ கொன்று தேவர்கள்‌ ரிஷிகள்‌ முதலானோர்‌ கார்யம்‌ நிறைவேற்றிய பின்பும்‌, அந்த அவதாரத்‌ துக்குப்‌ பிற்பட்டவர்களுக்கும்‌ உதவுவதற்காக திருவரங்‌கத்தில்‌ படுத்துள்ளான்‌ என்பர்‌. திருவரங்கப்பதிகத்தை (4-9) அநுபவிக்கும்போது “மூவுருவில்‌ இராமனாய்‌” என்று அருளியதற்கு ஏற்ப, இராவணன்‌ பொருட்டு தசரதாத்மஜ ராமாவதாரம்‌ செய்தான்‌ என்று மணவாள மாமுனிகள்‌ உரையிடுவர்‌.நம்மாழ்வாரும்‌ நாயகி பாவத்தில்‌ தாய்ப்‌ பாசுரமாகச்‌ சொல்லும்போது அரங்கனை “காகுத்தா” என்று சொல்‌லிக்‌ கொண்டிருப்பதைக்‌ காணலாம்‌. பராசர பட்டரும்‌ ஸ்ரீ ரங்கராஜஸ்தவ உத்தர சதகத்தில்‌ (70) “ஹே நாத மநுஜஸமயம்‌ க்ருத்வா பத்மயா லஹ” என்று அரங்கனே இராமனாய்‌ அவதரித்தான்‌ என்றது காண்க –

(பெருகிவரும்‌ பொன்னி நடுப்பின்‌ துயின்‌றான்‌) – பொன்னி என்பது காவிரி நதியின்‌ மறு பெயராகும்‌. மிகப்‌ பழமையான காவிரி பாய்ந்து வளம்‌ சிறக்‌கும்‌ நாடுகளிலெல்லாம்‌ பொன்‌ கொழிக்கும்‌. இது பற்றியே காவிரிக்குப்‌ பொன்னி என்ற பெயரும்‌ உண்டு. காவிரித்‌ தாயும்‌ அரங்கன்‌ வருவதற்கு முன்னமேயே அவனுக்கு தன்னையே ஒரு மாலை போல்‌ இட்டு ஒரு மணல்‌ திட்டை ஏற்படுத்தியவள்‌. இதன்‌ நடுவில்‌ அரங்கன்‌ துயின்ற வரலாறு பின்வருமாறு–விந்திய மலையின்‌ அடிவாரத்தில்‌ எல்லா களும்‌ சேருகின்ற இடம்‌ ஒன்று முன்பு இருந்தது. விச்‌வாவசு என்ற கந்தர்வன்‌ ஒரு நாள்‌ வந்தான்‌. அவன்‌ வந்தவுடன்‌ தென்‌ திசையைப் பார்த்துக்‌ கைகூப்பி அத் திசையை நோக்கிச் சென்றான்‌. அப்போது அந்த நதிகளுக்கு இடையே விவாதம்‌ வந்தது. ஒவ்வொரு நதியும்‌ தனக்கே அந்த கந்தர்வன்‌ வணக்கம்‌ செலுத்தினான்‌ என்று போட்டி யிட்டன. தெற்கு நோக்கிச்‌ சென்ற அந்த கந்தர்வன்‌ தெற்கில்‌ உள்ள கடல்‌ வரை சென்‌றான்‌. அங்கு பற்பநாபன்‌ தனது உறக்கம்‌ நீங்கி எழுந்த தைக்‌ கண்டான்‌. அப்போது உத்தராயண காலம்‌ தொடங்கியது. கந்தர்வன்‌ வடக்கு நோக்கிச்‌ சென்றான்‌. அங்கு சென்ற போது மீண்டும்‌ அந்த நதிகளைக் கண்டு வணங்கினான்‌. அந்த நதிகள்‌ நீர்‌ யாரை வணங்கினீர்‌? என்று கேட்டன-

அதற்கு அவன் உங்களில் உயர்ந்தவர் யாரோ அவரை வணங்கினேன்‌” என்றான் உடனே அந்த நதிகளுக்கு நடுவில்‌ யார்‌ உயர்ந்தவர்‌ என்ற போட்டி ஏற்‌பட்டது. ஆனால்‌ சில நிமிடங்களில்‌ அந்த நதிகள்‌ தாங்‌கள்‌ உயர்ந்தவர்கள்‌ அல்லர்‌ என்று முடிவுக்கு வந்து அமைதியாயின. ஆனால்‌, கங்கையும்‌ காவிரியும்‌ தங்களுக்குள்‌ தானே உயர்ந்தவள்‌ என்று பல காரணங்‌களைக்‌ காட்டியபடி இருந்தன. அந்த இரு நதிகளும்‌ நான்முகனிடம்‌ சென்று கேட்டன. அவரும்‌ “கங்கையே உயர்ந்தவள்‌ அதில்‌ எந்த சந்தேகமும்‌ இல்லை” என்று சொன்னார்‌. இதைக்கேட்ட காவிரி துக்கப்பட்டு நான்‌முகனைக்‌ குறித்து, தான்‌ கங்கைக்குச்‌ சமமாக ஆக வேண்டும்‌ என்று தவம்‌ இருந்தாள்‌. நான்முகனும்‌ “கங்கைக்கு நிகராக காவிரி இருப்பாள்‌” என்று வரம்‌ தந்தான்‌, ஆனால்‌ கங்கையைக் காட்டிலும்‌ காவிரி உயர்ந்தவள்‌ என்று வரம்‌ தர மறுத்தான்‌. அப்போது காவிரி ஸ்ரீ ரங்கநாதன்‌ விக்ரகத்தை திருச் சேறையில்‌
பிரதிஷ்டை செய்தாள்‌. நீண்ட காலம்‌ வழிபட்டதன்‌ பொருட்டு அரங்கன்‌ அவளை வரம்‌ கேட்கச்‌ சொன்னார்‌. காவிரியும்‌ கங்கையைக் காட்டிலும்‌ உயர்ந்தவளாக விரும்‌பினாள்‌. உடனே எம்பெருமான்‌ தன்‌ ஸம்பந்தம்‌ மூலமாக கங்கை அடைந்த உயர்வை யாரும்‌ அடைய முடியாது என்றும்‌, ஆனால்‌ தன்‌ கருணை மூலமாக காவிரி கங்கையைக்‌ காட்டிலும்‌ மேன்மை அடைவாள்‌ என்றான்‌. அரங்கன்‌ காவிரியை பார்த்து “ஸ்ரீரங்க விமானம்‌ உன்‌ நடுவே வந்து அமையும்‌ அங்கு வந்து நான்‌ வசிப்பேன்‌” என்று கூறினார்‌.
-மேலும் நான் உன் நடுவிலே வசித்து வருவதால் நீ எப்போதும் என் சம்பந்தம் பெற்று கங்கையைக் காட்டிலும் உயர்ந்தவளாவாய் என்றான் -ப்ரஹ்மாண்ட புராணம் ஸ்ரீ ரெங்க மஹாத்ம்யம் -9-22-38-ஸ்லோகங்கள்

இது பற்றியே தொண்டரடிப் பொடி யாழ்வாரும்‌ தாம்‌ அருளிய திருமாலை என்னும்‌ பிரபந்தத்தில்‌ “கங்கையில்‌ புனிதமாய காவிரி நடுவுபாட்டு ” என்றும்‌, “வெள்ளநீர்‌ பரந்து பாயும்‌ விரிபொழில்‌ அரங்கம்‌ தன்னுள்‌ கள்வனார்‌ கிடந்தவாறும்‌” என்றும்‌ பாடினார்‌. மேலும்‌ குலசேகராழ்வாரும்‌ “திருவரங்கப்பெருநகருள்‌ தெண்ணீர்ப்பொன்னி திரைக்‌ கையால்‌ அடி வருட” என்று அருளியதற்கு ஏற்ப திருவரங்க மாநகரத்திலே தெளிந்த நீரையுடைய காவிரி திரைகளாகிற கைகளாலே அரங்கன்‌ திருவடிகளை வருட பள்ளி கொண்‌டுள்ளான்‌ என்பர்‌. இவ் வாழ்வாரே அரங்கன்‌ காவிரியின்‌ நடுவே பள்ளி கொண்டதை “திடர்‌ விளங்கு கரைப் பொன்னி நடுவு பாட்டு” என்கிறார்‌. அதாவது திட்டுக்கள்‌ விளங்கும்படியான கரையை யுடைய காவிரியின்‌ நடுவே எம்பெருமான்‌ பள்ளி கொண்டபடி-திருமழிசை ஆழ்வாரும் பரந்து பொன் நிரந்து நுந்தி வந்தலைக்கும்‌ வார் புனல்‌” என்பதற்குச் சேர காவிரியானவள்‌ அரங்கனிடம்‌ தனக்குள்ள பெரிய அபிமாநத்தாலே இருபுறமும்‌ சுற்றிலும்‌ பரந்து நின்று என்றும்‌ -ஊற்று மாறாமல்‌ பெருகி வருகிறாள்‌ என்று அநுபவிப்பர்‌ – பெரியவாச்சான் பிள்ளை. மேலும்‌, பெருகி வரும்‌ காவிரி யைப்‌ பற்றிச்‌ சொல்லும் போது இவ்வாழ்வாரே – குலைத் தலைத்து இறுத்தெறிந்த குங்குமக் கழம்பினொடு அலைத் தொழுகு காவேரி என்கிறார்‌, அதாவது -குங்குமப் படர் கொடியை நீர்‌ வந்து குலைத்துச்‌ சுற்றும்‌ அலைத்து முறித்‌ தெறிந்த குங்குமத் துகள்களைக் குழம்பாக்கி அத்தோடு கூட அலைத்துக் கொண்டு பெருகி வருகிறாள்‌ என்றபடி – இவ்வாறு மற்ற ஆழ்வார்களும்‌ தாங்கள்‌ அருளிய பிரபந்தங்களிலே பொன்னி என்றும் காவேரி பெருகி வரும் தன்மையைப் போற்றி உள்ளனர் –

( பெரியபெருமாள்‌ எங்கள்‌ பிரான்‌ அடிகள்‌) பெரிய பெருமாள்‌- மூலவர்‌. நம்பெருமாள்‌- அழகிய மணவாளன்‌ – உற்சவர்‌. ஆழ்வார்கள்‌ பதின்மராலும்‌, ஆண்டாளாலும்‌ 247 பாசுரங்களால்‌ மங்களா சாசனம்‌ செய்யப் பெற்ற திவ்யதேசம்‌ ஸ்ரீ ரங்கமாகும்‌. ஸ்ரீரங்கத்தில்‌ கோயில்‌ பெரிய கோயில்‌, மதிள்‌ பெரிய மதிள்‌, பிராட்டியார்‌ பெரிய பிராட்டியார்‌. பெண்‌ கொடுத்த ஆழ்வார்‌ பெரியாழ்வார்‌, மண்டபம்‌ பெரிய திருமண்டபம்‌ திருநாள்‌,-பெரிய திருநாள் -திருப்பாவடை – பெரிய திருப்பாவாடை, , ஆசார்யர்‌ -பெரிய மணவாளமாமுனிகளான பெரிய ஜீயர்‌, எனவே பெருமாள்‌ பெரிய பெருமாளானார்‌.
இந்த திவ்யதேச எம்பெருமானான பெரிய பெருமாள்‌ வைபவம்‌ புராணங்களில்‌ பேசப்பட்டுள்‌ளன. ஸூர்ய வம்சத்தில்‌ அயோத்யையை ஆண்டு வந்த இக்ஷ்வாகு மன்னன்‌, நான்முகனால்‌ சத்ய லோகத்தில்‌ திருவாராதனம்‌ செய்து வந்த ஸ்ரீரங்க விமானத்தைப்‌ பெற்றுக்‌ கொண்டான்‌. அயோத்திக்கு வந்தான்‌. அயோத்யையின்‌ வடகரையில்‌ சுமார்‌ 3500 அடி தூரத்தில்‌ ஸரயூ மற்றும்‌ தபஸா நதிகளின்‌ நடுவில்‌ அயோத்யை நகரத்தைப்‌ பார்க்கும்‌ விதமாக சுப நேரத்தில்‌ சாஸ்த்ரங்களில்‌ கூறியபடி பிரதிஷ்டை செய்தான்‌. பங்குனி மாதம்‌ ரோகிணி நக்ஷத்ரத்தில்‌ பிரம்மோத்ஸவத்தை மிகவும்‌ நேர்த்தியாகத்‌ தன்‌ புத்ரர்கள்‌ பேரன்கள்‌ புடை சூழ நடத்தினான்‌ என்று பிரம்மாண்ட புராணத்தில்‌ ஸ்ரீரங்க மஹாத்மியத்தில்‌ எட்டாவது அத்யாயத்தில்‌ (3-7 ஸ்லோகங்கள்‌) கூறப்‌ பட்டுள்ளது. இதனை அறியும்‌ வகையில்‌ இன்றும்‌ திருவரங்கத்தில்‌ பங்குனி ரோகிணி அன்று ஆதி பிரம்மோற்சவம்‌ ஆரம்பமாகிக்‌ கொண்டாடப்படுகிறது அறியலாம்‌. உற்சவர்‌ நம்பெருமாள்‌ அழகிய மணவாளன்‌. “சைத்ரே ரேவதி ஸஞ்ஜாதம்‌ ஸெளம்ய ஜாமாதரம்‌ ப்ரபும்‌” என்கிறபடியே சித்திரை ரேவதியில்‌ அவதரித்தவர்‌ நம்பெருமாள்‌ என்னும்‌ அழகிய மணவாளர்‌ ஆவர்‌. அவ்வாறே தர்மவர்மன்‌ அரசனாய்‌ இருந்த போது விபீஷணனால்‌ கொண்டு வரப்பட்ட ஸ்ரீரங்க நாதனோடு கூடிய ஸ்ரீ ரங்கவிமானம்‌ பங்குனி மாதம்‌, சுக்ல பக்ஷம்‌, ரோகிணி நக்ஷத்ரம்‌ ஞாயிற்றுக் கிழமை அன்று சுபமான லக்னத்தில்‌ காவிரிக்‌ கரையில்‌ பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பதையும்‌ அதே அத்யாயத்தில்‌ (ஸ்லோகம்‌ 60) கூறப்பட்டுள்ளது அறியலாம்‌. கலி யுகத்தில்‌, பல நூற்றாண்டுகளுக்குப்‌ பிறகு காவிரி வெள்ளப் பெருக்கால்‌ மணலில்‌ புதை யுண்ட ஸ்ரீ ரங்க விமானத்தை கிளிச் சோழன்‌ என்னும்‌ அரசன்‌ மீண்டும்‌ மேலே கொண்டு வந்து பல மண்டபங்கள்‌ எழுப்புதல்‌ முதலான கைங்கர்யம்‌ செய்தான்‌. இதனை அறியும்‌ வகையில்‌ இன்றும்‌ சித்திரையில்‌ விருப்பன்‌ திரு நாளாக பிரம்மோத்ஸவம்‌ துவஜாரோஹணம்‌ தொடங்கி ரேவதியில்‌ ரதோற்சவம்‌ காணும்‌ வகையில்‌ கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படி பெரிய பெருமாளும்‌, உபய நாச்சிமார்களுடன்‌ நம்பெருமாளும்‌ அர்ச்சா மூர்த்தி யாய்‌ எல்லாரும்‌ உய்யும்‌ பொருட்டு எழுந்தருளி இருக்கிறார்கள்‌. இப்படி அடியார்கள்‌ சேவிப்பதற்‌காக வந்து உதவி செய்தது பற்றி“பிரான்‌” என்கிறார்‌.

(எங்கள்‌ பிரான்‌ அடிகள்‌) இப்படிப்பட்ட பிரானான திருவரங்கன்‌ திருவடிகளைச்‌ சரணமாகப்‌ பற்றும்‌ போது, திருமங்கையாழ்வரர்‌, “ஆழி வண்ண நின்டியிணை அடைந்தேன்‌”, “எனக்கும்‌ ஆதல்‌ வேண்டும்‌ என்று அடியிணை அடைந்தேன்‌”, “உன்‌ அடியனேனும்‌ வந்து அடியிணை அடைந்தேன்‌, அஞ்சி வந்து நின்‌ அடியிணை அடைந்தேன்‌”, “எனக்கும்‌ ஆக வேண்டும்‌ என்று அடியிணை அடைந்தேன்‌”, “அன்னமதாகும்‌ என்று அடியிணை அடைந்தேன்‌”, “ஆதலால்‌ வந்து உன்னடியிணை அடைந்தேன்‌”, “உலகமளந்த பொன்னடியே அடைந்து வந்தேன்‌” (பெரிய திருமொழி 5-8) என்று ஒருகால்‌ மட்டுமின்றி ஒன்பதின் கால்‌ திருவடிகளை வேண்டியது காணலாம்‌.
நம்மாழ்வாரும்‌ பெரிய பெருமாளை “முகில்‌ வண்ணன்‌ அடியை அடைந்து அருள்‌ சூடி உய்ந்தவன்‌’‘ என்று அருளியது காண்க. திருவரங்கப்‌ பெருமாள்‌ அரையர்‌ என்னும்‌ ஆசார்யர்‌ திருமாலைக்கு அருளிய தனியனில்‌ -“கற்றினம்‌ மேய்த்த கழலிணை” என்கிற படியை, அடியாரைக்‌ காப்பதற்கு உறுப்பாக மிகவும்‌ எளிமையான திருவடிகள்‌ என்றும்‌ அந்தத்‌ திருவடிகளுக்கு திருமாலை என்னும்‌ பிரபந்தத்தை தொண்டரடிப்பொடியாழ்‌வார்‌ பாடி திருவடிகளிலே சூட்டினார்‌ என்றும்‌ உரைப்பர்‌ பிள்ளைலோகம்‌ சீயர்‌. இவ்வாழ்வார்‌ அருளியபடியே “குணதிசை பாதம்‌ நீட்டி” என்பதற்குச்‌ சேர எல்லா உலகங்களும்‌ வாழ்ச்சி பெறுவதற்கு இழியும்‌ துறையான திருவடிகளைக்‌ கிழக்கு திக்கு வாழும்படியாக நீட்டி உள்ளான்‌ என்பர்‌ திருப்‌ பாணாழ்வாரும்‌. “திருக்கமலபாதம்‌” என்பதற்குச்‌ சேர பிராட்டிமார்‌ திருமுலைத்‌ தடங்களிலும்‌ திருக்கண்களிலும்‌ ஒற்றிக்கொள்ளும்‌ திருவடிகள்‌ என்பர்‌ பெரிய வாச்சான் பிள்ளை. அழகிய மணவாளப்பெருமாள்‌ நாயனாரும்‌ இந்தத்‌ தொடருக்குப் பெரிய பெருமாள் திருவடியானது பெரும் காற்றிலே இழிவார் தெப்பம்‌ கொண்டு இழியுமாபோலே, செவ்வி, குளிர்த்தி, மணம்‌, விகாஸம்‌ இவை அமைந்த ஒரு தாமரைப்‌ பூவைப் போலே இருக்கும்‌ திருவடிகள்‌ என்கிறார்‌.
அந்தத்‌ தாமரையானது சூரிய ஒளி பட்டு மலரும்‌. பெரிய பெருமாள்‌ திருவடியானது அடியார்‌ ஸந்நிதியிலே அலரும்‌ தாமரை யாய்த்து என்று சுவைபட உரைப்பர்‌. வேதாந்த தேசிகரும்‌ தாம்‌ அருளிய முனி வாகன போகத்தில்‌ நீர்மைக்கும்‌ மேன்மைக்கும்‌ எல்லையானவனான அரங்கன்‌ திருவடியானது உபாயம்‌ உபேயம்‌ ஆகியவற்றில்‌ உரைப்புண்டானவை என்று அநுபவிப்பர்‌. திருவுக்கு லீலா கமலம்‌ போலே இருக்கிற பாதம்‌ என்றும்‌ உரைப்பர்‌. மேலும்‌, “தமுப்பரிய சந்தனங்கள்‌ தடவரை வாயீர்த்துக்கொண்டூ தெழிப்புடைய காவிரி வந்து அடி தொழும்‌”: என்று பெரியாழ்வார்‌ அருளியதற்கு ஏற்ப, பெரிய மலையிடத்திலே வளர்ந்து, ஒருவரிருவரால்‌ தழுவ அரிதாம்படி இருக்கிற சந்தன மரங்களை வேரோடே அகழ்ந்து இழுத்துக்கொண்டு “இத்தைக்‌ கைக்‌ கொண்டருள வேணும்‌” என்னுமாபோலே இருக்கிற முழங்கின ஒலியை யுடைய காவிரியானவள்‌ ஆதரத்தோடே வந்து, தான்‌ கொண்டு வந்த சாத்துப்படியையும்‌ பெரிய பெருமாளுக்கு சமர்ப்‌ பித்துத்‌ திருவடிகளை தொழுகிறாள்‌ என்று சுவை யாக உரைப்பர்‌ மாமுனிகள்‌. இப்படி பிரானாய்‌ உதவி செய்யும்‌ பெரிய பெருமாள்‌ திருவடிகளைப்‌ “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம்‌ மல்லாண்ட திண்தோள்‌ மணி வண்ணா உன்‌ சேவடி செவ்வி திருக்காப்பு” என்று வாழ்த்துவோமாக.

பங்கயப்‌ பூவில்‌ பிறந்த பாவை நல்லாள்‌ வாழியே
பங்குனியில்‌ உத்திர நாள்‌ பாருதித்தாள்‌ வாழியே
மங்கையர்கள்‌ திலதமென வந்த செல்வி வாழியே
மாலரங்கர்‌ மணி மார்பை மன்னுமவள்‌ வாழியே
எங்கள்‌ எழில்‌ சேனை மன்னர்க்கு இதமுரைத்தாள்‌ வாழியே
இருபத்தஞ்சு பொருள்‌ மால்‌ இயம்புமவள்‌ வாழியே
செங்கமலச்செய்ய அரங்கம்‌ செழிக்க வந்தாள்‌ வாழியே
சீரங்க நாயகியார்‌ திருவடிகள்‌ வாழியே

பங்கயப்பூவில்‌ தாமரைப்பூவில்‌,
பிறந்த- அவதரித்த,
பாவை நல்லாள்‌ – சிறந்த பெண்ணான
பெரிய பிராட்டியார்‌ வாழியே – வாழ வேண்டும்‌.
பங்குனியில்‌ – பங்குனி மாதத்தில்‌,
உத்திர நாள்‌ – உத்திர நக்ஷத்ரத்தில்‌,
பாருதித்தாள்‌ – இவ்‌ வுலகில்‌ அவதரித்தாள்‌;
மங்கையர்கள்‌ – பெண்களுக்குள்‌,
திலதமென – திலகம்‌ என்று சிறப்பாகக்‌ கொண்‌டாடப்பட்டு,
வந்த செல்வி – தோன்றின பிராட்டி;
மால்‌ அரங்கர்‌ – பெருமை பொருந்திய திருவரங்கர்‌,
மணி மார்பை – அழகான மார்பை,
மன்னுமவள்‌ – பொருந்தி இருப்பவள்‌;
எங்கள்‌ எழில்‌ – எங்கள்‌ அழகான,
மன்னர்‌ – தலைவரான,
சேனை மன்னர்க்கு- சேனை முதலியாருக்கு,
இதம்‌-நன்மை,
உரைத்தாள்‌ – சொன்னவள்‌;
இருபத்தஞ்சு பொருள் — இருபத்தி ஐந்து எழுத்து கொண்ட துவயப்‌ பொருளை,
மால்‌ – பெருமையுடன்‌,
இயம்புமவள்‌ உபதேசம்‌ செய்தவள்‌;
செங்கமலம்‌ – சிவந்த தாமரை போன்ற,
செய்ய அரங்கம்‌ – அழகான திருவரங்கம்‌,
செழிக்க வந்தாள்‌ – வளர்ச்சி பெற வந்தவள்‌;
சீ ரங்க நாயகியார்‌ – திருவரங்கத்துத்‌ தலைவியான ஸ்ரீரங்க நாச்சியார்‌, திருவடிகள்‌ – அழகான திருவடிகள்‌,
வாழியே – பல்லாண்டு வாழ வேண்டும்‌

(பங்கயப்பூவில்‌ பிறந்த பாவை நல்லாள்‌) பங்கயம்‌ – “பங்கஜம்‌” என்ற வடசொல்‌ “பங்கயம்‌” ஆயிற்று. “பங்க” வடமொழியில்‌ சேறு என்று பொருள்‌. சேற்றில்‌ தோன்றுவது – தாமரைப்‌ பூ. பங்கயப்பூ – தாமரைப்பூ. பாவை – பதுமை, அழகிய உருவம்‌. கருவிழி, பெண்‌, நல்லாள்‌ குணத்தில்‌ சிறந்த பெண்‌. தக்கவள்‌. பனி மலராள்‌ குளிர்ந்த தாமரைப்‌ பூவை பிறப்பிடமாக உடையவள் -பாவை- நாணம்‌, மடம்‌ அச்சம்‌ பயிர்ப்பு என்னும்‌ பெண்மை குணங்கள்‌ நிறைந்த பெரிய பிராட்டியார்‌. “அரவிந்தப்‌ பாவை” (பெரியா. திரு.5-2-10) என்று பெரியாழ்வார்‌ அருளியதற்கு ஏற்ப செந்தாமரை மலரைப்‌ பிறப்பிடமாக உடைய பிராட்டி என்றும்‌, எல்லையற்ற அழகை யுடையவளாய்‌ இயற்கையான பெண்மையை உடையவள்‌ என்‌றும்‌ உரைப்பர்‌ மாமுனிகள்‌. “பாவை பனி மலராள்‌’ (பெரிய. திரு.2.2.9) என்று திருமங்கையாழ்வார்‌ அருளியது காண்க.

(பங்குனியில்‌ உத்திர நாள்‌ பாருதித்தாள்‌) – பங்குனி தமிழ்‌ மாதங்களில்‌ 12 வது மாதம்‌. உத்திரம்‌ – 12 வது நக்ஷத்ரம்‌. “பால்கு நோத்தர பல்குந்யாம்‌ ஸம்‌ பூதாம்‌ ஸ்ரியமாஸ்ரயே] விஷ்ணோர்‌ திவ்ய பதாம்போஜ கடகாம்‌ தத்‌ பதாஸ்ரிதாம்‌।।” என்கிற தனியன் படியே ஸ்ரீ ரங்க நாச்சியாரான பெரிய பிராட்டியார்‌ பங்குனி மாதம்‌ உத்திர நக்ஷத்திரத்தில்‌ அவதரித்தாள்‌ என்றும்‌, அவள்‌ எம்பெருமானுடைய திருவடியில்‌ சேதனர்களைச்‌ சேர்த்து வைப்பவள்‌ என்றும்‌ அறியப்படுகிறது. ஸ்ரீ ப்ரஸ்ன ஸம்ஹிதையில்‌ பெரிய பிராட்டியார்‌ அவதாரம்‌ பற்றி சொல்லும்‌ போது “பால்குனே மாஸி நக்ஷத்ரே உத்தரே பூர்ணிமாதிதெள” (33) என்கிற படியே திருப்பாற்கடல்‌ கடையும் போது கடலரசன்‌ கன்னியான பிராட்டியார்‌ பங்குனி மாதம்‌ உத்திர நக்ஷத்ரம்‌ பெளர்ணமி அன்று தோன்றினாள்‌ என்றது காண்க. பார்‌ பூமி. ஸ்ரீரங்க நாச்சியாரான பெரிய பிராட்டியார்‌ பங்குனி மாதம்‌ உத்திர நக்ஷத்ரத்தில்‌ இப்பூமியில்‌ அவதரித்தாள்‌. பங்குனி உத்திர நாளுக்குச் சிறப்பாவது – தர்ம சாஸ்த்ரத்‌தில்‌ ஒரு மஹாராணி பிறந்தநாளன்று வரம்‌ வேண்டி வந்தவர்களுக்கு அவர்கள்‌ கேட்பதைத்‌ தப்பாமல்‌ அவள்‌ கொடுப்பாளாம்‌. அந்த வகையில்‌ எம்பெருமானார் இந்த உலக மக்கள்‌ பிறவித்‌ துயர்‌ அகல ஸ்ரீரங்க மஹிஷியான பெரிய பிராட்டியை வேண்டினார்‌. அதாவது பிராட்டி பிறந்த நாளான பங்குனி உத்திரத்தன்று பிரதி வருடமும்‌ ஸ்ரீரங்கநாதன்‌ ஸ்ரீரங்க நாச்சியார்‌ சேர்த்தி உண்டு. ஒரு (பங்குனி) உத்திரத்‌ திருநாளிலே, பெருமாளும்‌ நாச்சியாருமாகப்‌ புறப்பட்டு ஒரே ஸிம்மாஸனத்தில்‌ எழுந்தருளி இருக்கும் போது எம்பெருமானார்‌ அந்த திவ்ய தம்பதியைத்‌ திருவடி தொழ எழுந்தருளினார்‌. அந்த சமயத்தில்‌ மனத்தில்‌ ஸம்ஸார மண்‌டல வாழ்க்கையில்‌ பயம்‌ விளைந்து திருவடிகளில்‌ சரணம்‌ புகுந்து மூன்று கத்யங்களை விண்‌ணப்பித்தார்‌ என்று பெரியவாச்சான்‌ பிள்ளை கத்யத்ரய வ்யாக்யான அவதாரிகையில்‌ அருளியது காண்க. சரணாகதி கத்யத்தில்‌ முதல்‌ சூர்ணையில்‌ பிராட்டி திருவடிகளிலே சரணம்‌ புகுகிறார்‌ எம்பெருமானார்‌. இதனால்‌ பங்குனி உத்திர திருநாள்‌ சிறப்புற்றது. அன்று இருவருமான சேர்த்தியிலே பெரிய பெருமாள்‌ வாழித்‌ திருநாமமும்‌ பெரிய பிராட்டியார்‌ வாழித்‌ திருநாமமும்‌ சேவிப்பது வழக்கம்‌.

(மாலரங்கர்‌ மணிமார்பை மன்னுமவள்‌) : “மால்‌”- மையல்‌, கருமை, பெருமை இத் தன்மைகள்‌ அனைத்தையும்‌ அடியார்களிடம்‌ காட்டும வன்‌ அரங்கன்‌. இது பற்றியே “மாலரங்கர்‌” என்ற படி. “மணி” – ஸ்ரீ கெளஸ்துபம்‌. அரங்கன்‌ திருவரங்கத்திற்கு வரும்‌ முன்னமேயே ஸ்ரீரங்க நாயகித்‌ தாயார்‌ எழுந்தருளி அரங்கன்‌ அமர்ந்த பின்‌ வெளிப்பட்டவள்‌. “மார்பை மன்னுமவள்‌–காசாந்யா த்வாம்‌ ருதே தேவி” என்ற விஷ்ணு புராண ஸ்லோகத்தில்‌ (1-9-122) இந்திர துதியில்‌, “பிராட்டியைத்‌ தவிர வேறு யாராலும்‌ எம்பெருமான்‌ திருமேனியில்‌ இருக்க முடியாது” அந்த வகையில்‌ ஸ்ரீ ரங்க மஹாத்மியத்தில்‌ பிரமன்‌ ஸ்ரீரங்க விமானத்தைச்‌ சேவிக்கும்‌ போது ஸ்ரீ ரங்கநாதனுடைய பரந்த திருமார்பில்‌ கருணையே வடிவான ஸ்ரீ ரங்க நாச்சியாருக்கான இருப்பிடம்‌ காணப்பட்டது (ஸ்ரீ ர. மஹா.4-15) என்றும்‌ பிரமன்‌ துதிப்பதும்‌ காண்க.

இந்திராயா:'(ஸ்ரீ குணரத்ந) என்று பட்டர்‌ அருளியபடியே “இந்ததீதி இந்திரா’‘ என்று
கொண்டு எம்பெருமானுக்கும்‌ ஈஸ்வரியாக அவனது மார்பில்‌ ஏறியிருக்கையே பிராட்டியின்‌ கண்‌ உள்ள சிறந்த ஐஸ்வர்யம்‌ என்பர்‌. நம்மாழ்வாரும்‌ பிராட்டி எம்பெருமான்‌ மார்பில்‌ மன்னி இருப்‌பதைக்‌ கண்டு “உன்‌ திருமார்‌ வத்து மாலை நங்கை” என்கிறார்‌. இதற்குச்‌ சேர வாதிகேசரி சீயரும்‌ பிராட்டி ஆனவள்‌ “அகலகில்லேன்‌” என்று விரும்பும்படியான திருமார்புக்குப்‌ பரபாகமாக இருப்பவள்‌ என்கிறார்‌.-திருமார்புக்கு அலங்காரமான மாலையாயிருப்பவள்‌ எம்பெருமான்‌ என்பர்‌ நஞ்சீயர்‌. கேவலம்‌ ஸம்பத்தி யாயிருக்கை யன்றிக்கே திருமார்புக்கு அலங்காரமுமா யிருக்கை என்றும்‌ மார்வுக்கு அலங்காரம்‌ அவள்‌. அவளுக்கு அலங்காரம்‌ மார்வு என்றும்‌ நம்பிள்ளை சுவை பட உரைப்பர்‌. “அல்லி மாதரமரும்‌ திருமார்பன்‌ அரங்கன்‌” (பெரிய திரு 5.4.10) என்பர்‌ திருமங்கையாழ்வார்‌. மேலும்‌, “மின்‌ னொத்த நுண் மருங்குல்‌ மெல்லியலைத்‌ திரு மார்பில்‌ மன்னத்தான்‌ வைத்து உகந்தான்‌” (பெரிய திரு. 6.9.6) என்பதற்குச்‌ சேர மின்னோடு ஒப்பானதாய்‌ மிக நுண்ணியதான இடையை உடையவளாய்‌ ஸெளகுமார்யத்தை ஸ்வபாவ பெரிய பிராட்டியை அழகிய திருமார்பில்‌ பொருந்தும்‌ படி வைத்து உகந்தவன்‌ என்று உரைப்பர்‌. ஸ்ரீ துதியில்‌ வஷ பீடீம் மதுவிஜயிநோ பூஷயந்தீம்‌ ஸ்வகாந்த்யா”(1) என்கிறபடியே தன்‌ காந்தியினால்‌ ஸ்ரீ ரங்கராஜனுடைய திருமார்பை அலங்‌கரித்துக்‌ கொண்டிருப்பவள்‌ என்பர்‌. பட்டர்‌ ஸ்ரீ ரங்கராஜ பூர்வ சதகத்தில்‌, “அநந்தபோகிந: உத்வாந்தம்‌ சிந்தாமணி இவ” (8)என்கிறபடியே ஆதிசேஷனு டைய மடியிலே கோக்கப்பட்ட சிந்தா மணி போன்றது போல இருப்பவர் என்றும்‌, இந்த மணியானது பெரிய பிராட்டியாருடைய மார்பில்‌ ஆபரணமாயிருக்கும்‌.
மேலும்‌, அவள்‌ திருமுலைத்‌ தடத்திலே அழிந்தின மணியாக இருக்கும்‌ என்பர்‌. அப்படிப்பட்ட மணி மார்பை உடைய பெரிய பெருமாளுக்குப்‌ பொருந்தினவள்‌ என்றபடி.
வேதாந்த தேசிகரும்‌ பகவத்‌ த்யான ஸோபானத்தில்‌ “ஸ்ரீ பதந்‌ யாஸ தந்யம்‌… ஸ்ரீரங்கதாம்ந” (6) என்று பிராட்டி திருவடியால்‌ தீண்டும்படியான பாக்கியம்‌ பெற்றது ஸ்ரீரங்க ராஜனுடைய திரு மார்பு என்கிறார்
தேன்‌ பூத்த தாமரையாள்‌ மார்பில்‌ ஆட ” என்று அஷ்ட ப்ரபந்தத்தில்‌ ஸ்ரீ ரங்கநாயகர்‌ ஊசலில்‌ (8) அருளியபடியே தேன்‌ நிறைந்த செந்தாமரை மலரில்‌ வாழ்கின்ற பெரிய பிராட்டியார்‌ அரங்கன்‌ மார்பில்‌ அசையாது நிற்கிறாள்‌ என்பர் –திருமால்‌ திருவுள்ளம்‌ உவந்து வந்து எழுந்தருளிய இடமானது பற்றி “ரங்கம்‌” என்று அந்த விமானத்துக்குப்‌ பெயர்‌. “ரங்கம்‌” என்னும்‌ வடசொல்‌ “அகரம்‌” மொழி முதலாக வரப் பெற்று “அரங்கம்‌” என்றாயிற்று. விமானத்தின்‌ பெயரான இது ஆகு பெயராய்‌ “திருவரங்கம்‌” என்று ஊருக்கு ஆயிற்று. திருமகளார்‌ திருநர்த்தனம்‌ செய்யும்‌ இடமாயிருந்ததாலும் இப்பெயர் பெற்றது எனலாம்

(மங்கையர்கள்‌ திலதமென வந்த செல்வி) திலதம்‌ – திலகம்‌ – நெற்றிப் பொட்டு, ஆபரணம்‌. மங்கையர்களுக்கு ஆபரணம்‌ என்று சிறப்பாகத்‌ தோன்ற வந்த லக்ஷ்மி. செல்வி – தலைவி, லக்ஷ்மி, செல்வ முள்ளவள்‌, புதல்வி. திலகம்‌ – சிறந்தது என்ற பொருளில்‌ பிராட்டியானவள்‌ கருணைக்கோர்‌ இருப்பிடமானவள்‌. ஞானம்‌ முதலான ஆறு குணங்கள்‌ நிரம்பப் பெற்றவள்‌, மேலான பிரகிருதி யாகச்‌ சொல்லப்படுபவள்‌ மற்றும்‌ எம்பெருமானின்‌ மேலான ஒரு சக்தி என்று ஸநத்குமார ஸம்ஹிதை எண்‌ 109 அருளுவது காணலாம்‌.

(எங்கள்‌ எழில்‌ சேனை மன்னர்க்கு இதமுரைத்‌தாள்‌) எல்லா உலகங்களையும்‌ நெறிபட நிர்வகிக்கும்‌ கடமை எம்பெருமானுடையதானாலும்‌ அதனை சேனை முதலியார்‌ ஏற்றுக் கொண்டு தமது திருவிரல்‌ முத்திரையினாலேயே உலகங்களை அடக்கி ஆளுபவராகையாலே “எழில்‌ சேனை மன்னர்‌” என்றபடி. திருவிரல்‌ முத்திரையை இன்றும்‌ திருவரங்கத்தில்‌ சேனை மன்னர்‌ திருக் கோலங்களில்‌ காணலாம்‌. பிரம்மோற்சவ திருநாள்களில்‌, திருமுளையின்‌ போது தாயார்‌ ஸந்நிதிக்கு சேனை முதலியார்‌ மண்‌ எடுக்க எழுந்தருளுவர்‌.
“வானவர்‌ வானவர்‌ கோன்‌”
(திருவா. 3.3.2) என்று ஆழ்வார்‌ அருளியதற்கு ஏற்ப பரமபத வாஸிகளுக்குத்‌ தலைவர்‌ என்பர்‌ வாதி கேசரி சீயர்‌. “ஹிதம்‌” தமிழில்‌ “இதம்‌” ஆயிற்று. நன்மை என்று பொருள்‌. நன்மை யாவது எம்பெருமானே உபாயம்‌. இதனை துவய மந்திரத்தின்‌ முதல்‌ வாக்யம்‌ உணர்த்துகிறது. குருபரம்பரா விவரணத்தில்‌ அருளியபடியே ஹரிக்கு எப்போதும்‌ இனியவரான சேனை மன்னருக்குத்‌ தாபம்‌ புண்ட்ரம்‌ முதலான ஸம்ஸ்காரங்களை முன்‌னிட்டுக்‌ கொண்டு மூல மந்த்ரம்‌, துவயம்‌ முதலான இதத்தைப்‌ பெரிய பிராட்டியார்‌ உரைத்தது காணலாம்‌.

மேலும்‌, “லக்ஷ்மீ நாத ஸமாரம்பாம்‌’‘ என்ற தனியனுக்கு உரை வழங்கிய பிள்ளை லோகம்‌ ஜீயர்‌, “ஸமாரம்பாம்‌”” என்று இவர்கள்‌ தொடக்கமாக குரு பரம்பரையைச்‌ சொல்லுகையாலே, ஸ்ரீவிஷ்வக்‌சேந ஸம்ஹிதையிலே பகவானாலே ப்ரபத்தி உபதேசம்‌ பண்ணப்பட்டதாகச்‌ சொல்லப்படுமவர்‌ என்றும்‌, பூவளரும்‌ திருமகளாலே அருள்‌ பெற்று அத்தாலே “ஸ்ரீமதி விஷ்வக்ஸேநே” என்னும்படி கைங்கர்யமுயையுடைய சேனை முதலியார்‌ என்பர்‌. எனவே சேனை முதலியாருக்கு இதம்‌ உரைத்தவள்‌ பெரிய பிராட்டியார்‌ என்றதாயிற்று.

இருபத்தஞ்சுட்பொருள்‌ மால்‌ இயம்புமவள்‌) மூன்று ரகசியங்களுள்‌ துவயம்‌ என்பது (ஸ்ரீமந்‌ நாராயண சரணெள சரணம்‌ ப்ரபத்யே| ஸ்ரீமதே நாராயணாய நம:।। என்று இரண்டு வாக்யமாய்‌, இருபத்தைந்து எழுத்துக்கள்‌ கொண்டதாகும்‌. அதன்‌ உட்பொருளாவது “திருமகளோடு கூடிய நாராயண னுடைய திருவடிகளைச்‌ சரணமாகப்‌ பற்றுகிறேன்‌” என்ற முதல்‌ வாக்ய பொருளுக்குச்‌ சேர ஸ்ரீமந்‌ நாராயணனே உபாயமாவான்‌ என்பதாகும்‌. இதனை சேனை முதலியாருக்கு பெருமையுடன்‌ உபதேசம்‌ செய்தாள்‌ என்றபடி. மால்‌ – இங்கு பெருமை என்று பொருள்‌.

(செங்கமலச்செய்ய அரங்கம்‌ செழிக்க வந்தாள்‌) செங்கமலம்‌ – செந்தாமரை, செய்ய – சிவப்பு. தாமரைக்கு சிவப்பானது “திருமுகமாய்ச்‌ செங்கமலம்‌” (பெரியா. திரு.4.8.3) என்று பெரியாழ்வார்‌ அருளி யதற்கு ஏற்ப பெரிய பெருமாளுடைய திருமுகத்‌துக்குப்‌ போலியாய்‌ இருக்கிறது என்று மாமுனிகள்‌ மேலும்‌ புது நாண் மலர்க்‌ கமல எம்பெருமான்‌” (பெரியா.திரு.4.9.4) என்பதற்கு ஏற்ப அப்போது அலர்ந்த செவ்வித்‌ தாமரைப் பூவானது உலகுக்குக்‌ காரணமான ஸர்வேஸ்வரனுடைய விரும்பத் தக்கதான திரு வயிற்றில்‌ உள்ள தாமரைக்கு ஒப்பானது என்பர்‌ மாமுனிகள்‌. திருவரங்கமானது “ஓரம்‌ பெற்ற மலர்க் கமலம்‌ உலகளந்த சேவடி போல்‌ உயர்ந்து காட்ட” (பெரிய.திரு.4.9.8) என்பதற்குச்‌ சேர சேற்று வாய்ப்பாலே உரம்‌ பெற்றிருக்கிற தாமரைப்‌ பூவானது திரு வுலகளந்தருளின போது மேலே எடுத்த திருவடிகளைப்‌ போலே கிளர வளர்ந்து பிரகாசிக்‌கிறது என்று மாமுனிகள்‌ சுவைபட உரைப்பர்‌. அது மட்டுமின்றி அன்னமானது புருஷ அன்னத்தோடே சிவந்த தாமரைப்‌ பூவின்‌ மேலே ஏறி இருந்து அசைத்து ஊசலாடுகின்றன என்பதற்குச்‌ சேர “சேவலொடு பெடை அன்னம்‌ செம்கமலமலர்‌ ஏறி ஊசல்‌ ஆடி” (பெரியா.திரு.4.9.9) என்கிறார்‌ பெரியாழ்வார்‌. இத்தகைய செழுமை தங்கிய அரங்கத்தில்‌ செரு வாளும்‌ புள்ளாளனாய்‌, மண்ணாளனாய்‌, கொற்ற வாளை யுடையவனாய்‌, நான்கு வேதங்களையும் ஆளுமவனாய்‌, கொடையாளனாய்‌, இரவு பகலாகிய காலங்களுக்குத்‌ தலைவனாய்‌ இருக்கும்‌ பெரிய பெருமாள்‌ பெரிய பிராட்டியாரை திவ்ய மஹிஷி யாக உடையவர்‌ என்றபடி.

மேலும்‌, பட்டர்‌ “ஸ்ரீரங்க மங்கள விஜ்ரும்பண வைஜயந்தி” (ஸ்ரீ குண. ர.33) என்று அருளுபவர்‌. அதாவது ஸ்ரீ ரங்கத்‌தில்‌ நன்மைகளை செழிப்புறச் செய்யும்‌ கொடி போன்றவள்‌ பிராட்டி என்றபடி.-(அரங்கம்‌ செழிக்க வந்தாள்‌) பட்டர்‌ ஸ்ரீ குணரத்ன கோசத்தில்‌ (23) ஸ்ரீ ரங்கேஸ்வர கேஹ லக்ஷ்மி’” என்று அருளியதற்கு ஏற்ப பிராட்டியானவள்‌ ஸ்ரீ ரங்கநாதன்‌ கோயிலை அழகு படுத்துபவள்‌ என்றது காண்க. இல்லாள்‌ இன்றேல்‌ இல்லம்‌ வெறியாடுமாதலின்‌ “கேஹ லக்ஷ்மி” என்று விளித்ததாகக்‌ கூறுவர்‌ உரையாசிரியர்‌.

(ஸ்ரீ ரங்க நாயகியார்‌ திருவடிகள்‌) பட்டர்‌ ஸ்ரீ குணரத்ன கோசத்தில்‌ பிராட்டியின்‌ திருவடிகளைப்‌ பல ஸ்லோகங்களில்‌ பல படியாக அநுபவிக்கிறார்‌ – “மாலதீம்ருதுபதம்‌” (53) என்கிறபடியே ஜாதிப்பூ போல மெல்லிய திருவடி என்றும்‌, வேதாந்‌தங்கள்‌ பேசும்‌ சிறப்பை உடையது பிராட்டியின்‌ திருவடிகள்‌ என்றும்‌ உரைப்பர்‌. மேலும்‌, பிராட்டி திருவடிகள்‌ துகைத்தாலும்‌ எம்பெருமான்‌ வைஜயந்தி என்னும்‌ வனமாலை வாடுவதில்லையாம்‌. அப்படிப்‌ பட்ட திருவடிகள்‌. அடிக்கடி பனிநீர்‌ தெளித்தாற் போலே தேனே மலரும்‌ திருப் பாதத்தால்‌ துகைக்கத்‌ துகைக்கப்‌ புதுமை பெற்று மேலும்‌ சோபிக்கின்றனவாம்‌ என்றும்‌ சுவைபட உரைப்பர்‌.தாமரையில்‌ இருப்பவளாகையால்‌ அதன்‌ துகள்‌ பாதத்தின்‌ அடித் தலத்தை உறுத்தக்‌ கூடியதாகவே இருக்கும்‌ தாமரை இதழின்‌ ப்ரகாரம்‌ மணம்‌ மென்மை முதலியன.-அவற்றைப்‌ பிராட்டியின்‌ இணை அடிகள்‌ உடையனவா யிருக்‌கின்றன. தாமரை இதழை ஒத்த இணை யடி என்றவாறு. சேர்த்தி அழகு கருதி “பாத யுக்மம்‌” என்கிறார்‌. பிராட்டி திருவடியின்‌ இருப்பைச்‌ சொல்லும் போது “ஏகம்‌ பாதாம்புஜம்‌ ந்யஞ்ச்ய பரம்‌ ஆகுஞ்ச்ய” என்று பட்டர்‌ ஸ்ரீ குணரத்ன கோசத்தில்‌ (38) அருளிய படியே வலது திருவடியை தொங்க விட்டும்‌, இடது திருவடியை மடித்தும்‌ வைத்து வீற்றிருக்கிறாள்‌.-தாம்‌ வணங்குவதற்கே பிராட்டி இவ்வாறு வீற்றிருக்கிறாள்‌ என்பதற்குச்‌ சேர “மம நதிகூஷமம்‌” என்று பட்டர்‌ அருளியது காண்க.-இப்படிப்பட்ட பெருமைகளை யுடைய பெரிய பிராட்டியாரைத்‌ தினந்தோறும்‌ ஸ்ரீ வைஷ்ணவர்கள்‌ அனுஸந்திக்கும்‌ குரு பரம்பரையில்‌ ஆரோஹண க்ரமத்தில்‌ பெரிய பெருமாளுக்கு அடுத்ததாக “ஸ்ரீயை நம:”’ என்று அருளுவது வழக்கம்‌. அத்தகைய பெரிய பிராட்டியாரான ஸ்ரீ ரங்கநாச்சியார்‌ திருவடிகளுக்கு பல்லாண்டு பாடுவோமாக.

ஓங்கு துலாப் பூராடத்து உதித்த செல்வன்‌ வாழியே
ஒண்டொடியாள்‌ சூத்திரவதி உறை மார்பன்‌ வாழியே
ஈங்கு உலகில்‌ சடகோபற்கு இதமுரைத்தான்‌ வாழியே
எழிற்‌ பிரம்பின்‌ செங்கோலை ஏந்துமவன்‌ வாழியே
பாங்குடன்‌ முப்பத்து மூவர்‌ பணியுமவன்‌ வாழியே
பங்கயத்தாள்‌ திருவடியைப்‌ பற்றினான்‌ வாழியே
தேங்கு புகழ்‌ அரங்கனையே சிந்தை செய்வோன்‌ வாழியே
சேனையர்கோன்‌ செங்கமலத்‌ திருவடிகள்‌ வாழியே
–ஜப்பசி பூராடத்தில்‌ திருவவதாரம் –

ஓங்கு துலா – உயர்ந்த துலா மாதத்தில்‌,
பூராடத்து – பூராட நக்ஷத்திரத்தில்‌,
உதித்த அவதரித்த,
செல்வன்‌ – கைங்கர்யமாகிற செல்வத்தைப்‌ பெற்ற சேனை முதலியார்‌,
வாழியே வாழ வேண்டும்‌;
ஒண்தொடியாள்‌ – முன்‌ கைவளை கழலா இருக்குமவளான,
சூத்திரவதி – சூத்திரவதி என்னும்‌ பத்னியை,
உறை மார்பன்‌ – நெஞ்சில்‌ இருப்பிடமாகக்‌ கொண்டவர்‌;
ஈங்கு – இங்கு,
உலகில்‌ – உலகத்தில்‌,
சடகோபற்கு – நம்மாழ்வாருக்கு,
இதம்‌ – நன்மையை,
உரைத்தான்‌ – உபதேசித்தவர்‌;
எழில்‌ அழகான,
பிரம்பின்‌ – பிரம்பினாலான,
செங்கோலை – அரசாட்சி சின்னமாகிய நேர்கோலை,
ஏந்துமவன்‌ கையிலே வைத்திருப்பவர்‌; பாங்குடன்‌ – அழகுடன்‌,
முப்பத்து மூவர்‌ – முப்பத்து மூன்று தேவர்களால்‌,
பணியுமவன்‌ – வணங்கப்படுபவர்‌; பங்கயத்தாள்‌ தாமரைப்பூவில்‌ பிறந்த பெரிய பிராட்டியார்‌,
திருவடியை – திருவடிகளை,
பற்றினான்‌ – பற்றுபவர்‌;
தேங்கு புகழ்‌ – நிறைந்த புகழை யுடைய
அரங்கனையே – ரங்கநாதனையே,
சிந்தை செய்வோன்‌ – மனத்தில்‌ எண்ணுமவர்‌;
சேனையர்‌ கோன்‌ – சேனையர்களுக்குத்‌ தலைவனானவர்‌,
செங்கமலம்‌ – சிவந்ததாமரை போன்ற, திருவடிகள்‌ -திருவடிகள்‌,
வாழியே – வாழ வேண்டும்‌

ஓங்கு துலாப்பூராடத்து உதித்த செல்வன்‌” ஓங்கு துலா – உயர்ந்த துலா மாதம்‌. துலா மாதத்துக்கு உயர்வாவது – அசுவனி நக்ஷத்ரமும்‌ பெளர்ணமியும்‌ கூடிய நாள்‌ துலா மாதப்‌ பிறப்பாகும்‌. ஆஸ்வயுஜ மாதமாகும்‌. அத்தகைய மாதத்தில்‌ ஸ்ரீ வைஷ்ணவ குரு பரம்பரைக்கு ப்ரதானரான சேனை முதலியார்‌ பூராட நக்ஷத்ரத்தில்‌ அவதரித்தார்‌. அதனால்‌ “ஓங்கு துலா பூராடம்‌” என்று கொண்டாடப்‌ படுகிறது. மேலும்‌ இம் மாதம்‌ முதலாழ்வார்கள்‌ மூவரும்‌ அடுத்தடுத்த நக்ஷத்ரத்தில்‌ தோன்றிய பெருமை யுடையதாகும்‌. ஆசார்யர்களில்‌ பிள்ளை லோகாசார்யர்‌, மணவாளமாமுனிகள்‌ ஆகியோர்‌ அவதரித்த உயர்வாகும்‌. சேனை முதலியாருக்குச்‌ செல்வமாவது – எம்பெருமானுடைய அமுது செய்து மிகுந்த மிச்சத்தை உண்பதாகும்‌. இது இவருக்கு தாரகம்‌. எல்லாருக்கும்‌ அன்பன்‌. இது பற்றியே ஆளவந்தார்‌ “த்வதீய… ப்ரியேண ஸேநாபதி” என்று ஸ்லோகமிடுகிறார்‌ (ஸ்தோ.ர.42). இராமாநுசர்‌ ஸ்ரீ வைகுண்ட கத்யத்தில்‌ “ஸ்ரீமதி விஷ்வக்ஸேநே ந்யஸ்த ஸமஸ்த ஆத்மைஸ்வர்யம்‌” என்று அருளிய படியே கைங்கர்யச்‌ செல்வத்திற்கு இட்டுப்‌ பிறந்த சேனை முதலியாரிடத்தில்‌ எம்பெருமான்‌ தம்முடைய எல்லா நியமனச்‌ செல்வத்தையும்‌ வைத்திருப்பவர்‌ என்று அருளியது காண்க. மேலும்‌, மற்றுமுள்ள திருவனந்தாழ்வான்‌, கருடன்‌ போலே நியமமில்லாமல்‌, ஸர்வேஸ்வரன்‌ அமுது செய்த மிச்சம்‌ ஒழிய அமுது செய்யாத நியமத்தைக்‌ குறித்து சேஷாசனர்‌ என்று சேனை முதலியாரை நிரூபிக்கிறது என்று தத்வ த்ரய வியாக்யானத்தில்‌ (சூ.45) உரைப்பர்‌ மாமுனிகள்‌.- கூரத்தாழ்வான்‌ ஸுந்தரபாஹு ஸ்தவத்தில்‌ (72) “வந்த்நிநாதஸ்ய ஸுஸுந்தரஸ்ய ப்ரபுக்த சிஷ்டாசீ ஸந்‌’” என்று அருளியதற்கு ஏற்ப அர்ச்சாவதாரத்தில்‌ திருமாலிருஞ்சோலை அழகருடைய போனகத்தின்‌ மிகுந்த மிச்சத்தை உண்பாராய்‌ சேனை முதலியாருக்கு சேஷாசநன்‌ என்றே திருநாமமாயிற்று என்பர்‌.

(ஒண்டொடியாள்‌ ஸூத்ரவதி ௨றை மார்பன்‌) ஒண்டொடியாள்‌ – தொடி என்பது முன்‌ கை வளை. அதுக்கு ஒண்மையாவது – கையிலிருந்து கழலாதிருக்கை. ஒண்மை – அழகு. அழகிய கை வளையை உடையவள்‌. மேலும்‌ பட்டர்‌ ஸ்ரீரங்க ராஜஸ்தவ பூர்வ சதகத்தில்‌ (54) சூத்ரவதியானவள்‌ பெரிய பிராட்டி யாருடைய திருவடியிலே இட்ட செம்பஞ்சுக்‌ குழம்பினால்‌ அடையாளம்‌ இடப்‌ பெற்றதாய்‌, கைங்‌கர்ய உபயோகியான திருவொற்று ஆடையினால்‌ விளங்குமதான கொடி போன்ற அழகை யுடையவள்‌ என்றும்‌, சேனை முதலியாரின்‌ பிரிய பத்தினியுமாக இருப்பவள்‌ என்றும்‌ உரைப்பர்‌. அப்படிப்பட்டவளை நெஞ்சில்‌ இருப்பிடமாக உடையவர்‌ சேனை முதலியார்‌ என்றபடி. மார்பு – நெஞ்சு, உறை இருப்பிடம்‌.

வேதாந்த தேசிகரும்‌ யதிராஜ சப்ததியில்‌ (3) “வைகுண்ட ஸேநாந்யம்‌ தேவம்‌ ஸூத்ரவதீ ஸகம்‌” என்கிறபடியே ஸுத்ரவத துணைவனான வைகுண்ட ஸேநாதிபதி என்பர்‌. திருமாலிருஞ்‌ சோலையில்‌ ஸுத்ரவதியோடு சேனை முதலியார்‌ அர்ச்சா விக்ரகமாய்‌ எழுந்தருளி சேவை சாதிப்பது குறிப்பிடத்தக்கதாகும்‌

(ஈங்கு உலகில்‌ சடகோபர்க்கு இதமுரைத்தான்‌) – ஈங்கு – இங்கு, இவ்விடம்‌. இந்த உலகில்‌ “ஸேநேச கருணா லப்த திவ்ய மந்த்ர த்வய முதா” என்று குருபரம்பரா ப்ரபாவத்தில்‌ அருளியபடியே நம்மாழ்வாரான சடகோபருக்கு சேனை முதலியார்‌ கருணையினால்‌ துவயம்‌ என்னும்‌ திவ்ய மந்த்ரத்தை உபதேசித்தவராவர்‌. மேலும்‌ பரமபதநாதனுடைய நியமனத்தால்‌ சேனை முதலியார்‌ வந்து மந்த்ரம்‌. மந்த்ரத்தின்‌ பொருள்‌, எல்லா புருஷார்த்தங்கள்‌, திராவிட வேதங்கள்‌ முதலானவற்றை பிறர்‌ காதில்‌ படாதபடி உபதேசித்து திவ்விய ஞான ஸம்பந்தராக்கினார்‌ என்றும்‌ கூறும்

ஆனிதனில்‌ அனுடத்தில்‌ அவதரித்தான்‌ வாழியே
ஆளவந்தார்க்கு உபதேசம்‌ அருளி வைத்தான்‌ வாழியே
பானு தெற்கில்‌ கண்டவன்‌ சொல்‌ பல உரைத்தான்‌ வாழியே
பராங்குசனார்‌ சொல்‌ பிரபந்தம்‌ பரிந்து கற்றான்‌ வாழியே
கானமுறத்‌ தாளத்தில்‌ கண்டு இசைத்தான்‌ வாழியே
கருணையினால்‌ உபதேசக்‌ கதி அளித்தான்‌ வாழியே
நானிலத்தில்‌ குருவரையை நாட்டினான்‌ வாழியே
நலந்திகமும்‌ நாதமுனி நற்பதங்கள்‌ வாழி
–ஸ்ரீமந்நாதமுனிகள்‌ ஆனி மாதம்‌ அனுஷ நஷத்ரத்தில்‌ காட்டுமன்னார் கோயிலில்‌ அவதரித்தார்‌. இவர்‌ சேனை முதலியாருடைய முக்கியமான படைத் தலைவரான கஜானரநர்‌ என்னும்‌ யானை முகமுடைய நித்ய ஸூரிகள்‌ அம்சர்‌ என்பர்-

ஆனிதனில்‌ – ஆனி மாதத்தில்‌,
அனுடத்தில்‌ – அனுஷ நக்ஷத்ரத்தில்‌,
அவதரித்தான்‌ – தோன்றினவர்‌,
வாழியே வாழ வேண்டும்‌.
ஆளவந்தார்க்கு – தன்‌ பேரனான ஆளவந்தார்‌ என்னும்‌ ஆசார்யருக்கு,
உபதேசம்‌ – நல்‌ வார்த்தைகளை,
அருளி வைத்தான்‌ – சொல்லி வைத்தவர்‌,
பானு – பாஸ்கரரான நம்மாழ்வாரை,
தெற்கில்‌ கண்டவன்‌ தெற்குத்திக்கிலே கண்ட மதுரகவியாழ்வார்‌,
சொல்‌ – சொல்‌ லான கண்ணிநுண்‌ சிறுத்தாம்பை,
பல உரைத்தான்‌ பன்னிரண்டாயிரம்‌ தடவை சொன்னவர்‌.
பராங்குசனார்‌ – பரரான பிற மதங்களுக்கு அங்குசம்‌ போன்றவரான நம்மாழ்வாருடைய,
சொல்‌ பிரபந்தம்‌ வாய்மொழியான பிரபந்தங்கள்‌,
பரிந்து கற்றான்‌ நம்மாழ்வார்‌ மூன்று நாள்‌ கனவில்‌ சொல்ல கற்றுக்‌ கொண்டவர்‌.
கானமுற – தேவ கானம்‌ நிலைக்க,
தாளத்தில்‌ – தாளத்தில்‌ கண்டு
இசைத்தான்‌ இடுவித்தவர்‌.
கருணையினால்‌ – தன்‌ மிக்க கருணையினால்‌,
உபதேசக்‌ கதி – உபதேசமாக பரம்பரையை,
அளித்தான்‌ – கொடுத்தவர்‌.
நானிலத்தில்‌ நல்ல இந்த உலகில்‌,
குருவரையை – குருவை நிர்ணயித்து,
நாட்டினான்‌ – நிலை நிறுத்தியவர்‌.
நலம்‌ திகழும்‌-நன்மை விளங்குகிற,
நாதமுனி – ஸ்ரீமந்நாதமுனிகள்‌,
நற்பதங்கள்‌ – நன்மை தரும்‌ திருவடிகள்‌,
வாழியே – வாழ வேண்டும்‌.

(ஆனிதனில்‌ அனுடத்தித்தில்‌ அவதரித்தான்‌) பன்னிரண்டு மாதங்களில்‌ மூன்றாவது மாதம்‌ ஆனி மாதமாகும்‌. வடமொழியில்‌ ஜ்யேஷ்டா எனப்படும்‌. நக்ஷத்ர வரிசையில்‌ அனுஷம் பதினேழாவதாகும்‌. இதற்கு வடமொழியில்‌ அநுராதா என்று பெயர்‌. “அநுராதா நக்ஷத்ரம்‌ மித்ரோ தேவதா” என்று வேதம்‌ கூறும்‌.ஆழ்வார்கள்‌ காலத்துக்குப்‌ பிறகு அவர்கள்‌ அருளிய நாலாயிரத்‌ திவ்வியப்‌ பிரபந்தங்கள்‌ மேல்‌ பக்தி, நம்பிக்கை இல்லாமல்‌ தீய சக்திகளின்‌ மேலீட்டால்‌ அவை இருந்த இடம்‌ தெரியாமல்‌ போய் விட்டன. அந்த சமயத்தில்‌ பொதிய மலையில்‌ கும்ப ஸம்பவர்‌, ஆங்கீரஸர்‌ முதலான முனிவர்கள்‌ திருமலைக்குச்‌ சென்று திருவேங்கடவனைத்‌ தொழுது ஆழ்வார்களின்‌ அருளிச்‌ செயல்களின்‌ நிலையை மீட்டு உருவாக்கம்‌ செய்து உலகை வாழ்விக்க வேண்டினர்‌. திருவேங்கடவனும் வீரநாராயணபுரத்தில்‌ மன்னனார்‌ ஸந்நிதியில்‌ நித்ய வாஸம்‌ செய்யும்‌ ஈஸ்வர பட்டாழ்வானுக்கு கஜானனர்‌ அம்சமாக நாத முனிகள்‌ என்பவராக அவதரித்து திராவிட வேதத்தை கொடுத்தருளுவர்‌ என்று அருளியதற்கு ஏற்ப, முனிவர்கள்‌ வீர நாராயணபுரம்‌ சென்று ஈஸ்வர பட்டராழ்வாரை ஸேவித்து திருவேங்கடவன்‌ அருளியதை விண்ணப்பித்தனர்‌.அவ்வாறே கலியுகத்தில்‌ 3224 வருடங்கள்‌ கழித்த பிறகு சோபக்ருது வருடம்‌ ஆனி மாதம்‌ பெளர்ணமி அன்று அனுஷ நக்ஷத்ரத்தில்‌ புதன்கிழமையில்‌ சேனை முதலியாரின்‌ மந்திரியான கஜானனருடைய அம்சமாக ஈஸ்வர பட்டர்‌ என்னும்‌ அந்தணருக்கு பிறந்தவராவர்‌ என்று ப்ரபந்நாம்ருதம்‌ கூறும்‌.

(ஆளவந்தார்க்கு உபதேசம்‌ அருளி வைத்தான்‌) ஸ்ரீ மந்‌ நாதமுனிகளின்‌ குமாரரான ஈஸ்வரமுனிக்குப்‌ பிறந்தவர்‌ யமுனைத்‌ துறைவராவர்‌. இவர்‌ ஆக்கியாழ்வான்‌ என்னும்‌ வித்வானோடு வாதப்‌ போர்‌ செய்து, அதனைக்‌ கண்ட அந்த தேசத்து ராஜ மஹிஷி “என்னை ஆளவந்தீரோ” என்று அழைத்ததனால்‌ ஆளவந்தார்‌ என்ற பெயர்‌ கொண்டார்‌.-ஸ்ரீமந்நாதமுனிகள்‌ தம்‌ குமாரரான ஈஸ்வர முனியிடம்‌, அவருக்கு ஒரு பிள்ளை பிறக்க இருப்பதாகவும்‌ அவருக்கு யமுனைத்‌ துறைவர்‌ என்ற பெயரும்‌ இடச்‌ சொன்னார்‌. மேலும்‌ ஸ்ரீமந்நாதமுனிகள்‌ தம்‌ சீடர்களான உய்யக்கொண்டாரிடம்‌ தாம்‌ அருளிய தர்சன தாத்பர்யங்களையும்‌, குருகை காவலப்பனிடம்‌ தாம்‌ அருளிய யோக ரகஸ்‌யங்களின்‌ பொருள்‌ விசேஷத்தையும்‌ யமுனைத்‌ துறைவனுக்கு உபதேசிக்கச்‌ சொன்னார்‌. இது பற்றியே “அருளி வைத்தான்‌” என்றபடி.

(பானு தெற்கில்‌ கண்டு அவன்‌ சொல்‌ பல உரைத்தான்‌) பானு- சூரியன்‌. மதுரகவிகள்‌ வடதேச யாத்ரையின்‌ போது அயோத்யையிலிருந்து வகுள பூஷண பாஸ்கரரான நம்மாழ்வாரை ஒரு திவ்ய ஒளியாகக்‌ கண்டவர்‌. எனவே “பானு தெற்கில்‌ கண்டவன்‌” என்றபடி. அந்த மதுரகவிகள்‌ அந்த திவ்ய ஒளியைக்‌ கண்டு ஏதேனும்‌ கிராமமோ நகரமோ வேகிறதோ, காட்டுத்தீயோ என்று சந்தேகித்து இரண்டு மூன்று நாள்‌ அப்படியே கண்டு, பகலில்‌ தூங்கி இரவில்‌ அந்த ஒளி வரும்‌ திக்கை நோக்கி நடந்து வழியில்‌ வரும்‌ திருத் தலங்க ளெல்லாம்‌ ஆராய, இறுதியில்‌ திருக்குருகூரில்‌ வந்து அங்கு உறங்காப்புளி நிழலிலே நம்மாழ்வாரைக்‌ கண்டு அவரைப்‌ பேச வைத்து, அவர்‌ அருள்‌ பெற்று, அவரைப்‌ பற்றி “கண்ணிநுண்‌ சிறுத்தாம்பு” என்னும்‌ பிரபந்தமருளினது பற்றி “அவன்‌ சொல்‌” என்றபடி –ஸ்ரீ மந்‌ நாதமுனிகள்‌ ஆழ்வார்‌ திருநகரியில்‌ பராங்குச தாஸரிடம்‌ இருந்து மதுரகவிகள்‌ சொல்லான கண்ணி நுண்‌ சிறுத்தாம்பைப்‌ பெற்று பன்னீராயிரம்‌ தடவை அநுஸந்தித்ததனால்‌ “சொல்‌ பல உரைத்தான்‌” என்றவாறு-

(பராங்குசனார்‌ சொல்‌ பிரபந்தம்‌ பரிந்து கற்றான்‌) பராங்குசன்‌ – நம்மாழ்வார்‌ திருநாமம்‌. தடை யற்ற சுதந்த்ரனான எம்பெருமானை தம்முடைய பாசுரங்களாலே வஸீகரிக்க வல்லவர்‌. கல்வி, செல்வம்‌, குடிப்பிறப்பு ஆகிய வற்றால்‌ உண்டான மும்மதச்‌ செருக்கால்‌ திரியுமவர்கள்‌ தலை வணங்கும்படி உபதேசமாகிற அங்குசத்தை இட்டவர்‌ என்பர்‌. பராங்குசனார்‌ சொன்ன பிரபந்தமாவது திருவாய்‌ மொழியும்‌ மற்ற மூவாயிரமுமாகும்‌. இவற்றைப்‌ பரிந்து கற்கையாவது – ஒரு சமயம்‌ மேல்‌ நாட்டிலிருந்து சில ஸ்ரீ வைஷ்ணவர்கள்‌ வீரநாராயணபுரத்தில்‌ மன்னனாரைச்‌ சேவிக்கும்‌ போது “ஆராவமுதே” (5-8) என்கிற திருவாய்‌ மொழியை அநுளந்தித்தார்கள்‌.-அதனைக்‌ கேட்ட ஸ்ரீமந்‌ நாதமுனிகள்‌ மிகவும்‌ சந்தோஷ மடைந்தவராய்‌ அவர்களிடம்‌ “ஆயிரத்துள்‌ இப்பத்தும்‌” என்று சேவித்தர்களே, இப்பிரபந்தம்‌ முழுவதும்‌ தெரியுமா உங்களுக்கு” என்றார்‌. அவர்கள்‌ “இப்பத்துப்‌ பாட்டு மட்டுமே தெரியும்‌” என்றனர்‌. உடனே அவர்களுக்கு தீர்த்த ப்ரஸாதம்‌ கொடுத்து அனுப்பினார்‌. இந்த பிரபந்தம்‌ சடகோபர்‌ அவதரித்த திருக்குருகூர்‌ என்னும்‌ ஆழ்வார்‌ திருநகரி திவ்ய தேசத்திலே இருக்க வேண்டும்‌ என்று நினைத்து ஆழ்வார்‌ திருநகரிக்குச்‌ சென்றார்‌. ஆழ்வாரையும்‌ பொலிந்து நின்ற பிரானையும்‌ சேவித்தார்‌.அங்கே மதுரகவிகளின்‌ சீடரான ஸ்ரீபராங்குச தாஸரை சேவித்து, “இவ்விடத்தில்‌ திருவாய்மொழி ஓதினவர்கள்‌ உண்டோ? ஸ்ரீ கோசங்கள்‌ உண்டோ?” என்று கேட்டார்‌. அவரும்‌ “அவையெல்லாம்‌ மறைந்து போயிற்று. இப்போது மதுரகவிகள்‌ அருளிய கண்ணி நுண்‌ சிறுத்தாம்பு என்ற திவ்ய பிரபந்தம்‌ உள்ளது. இதனை பன்னீராயிரம்‌ தடவை ஏக சிந்தையராய்‌ ஆழ்வார்‌ திருவடிகளை தியானித்து அநுஸந்தித்தால்‌, ஆழ்வார்‌ மனக் கண்ணிலே தென்படுவார் என்று அருளினார்‌. ஸ்ரீமந்‌ நாதமுனிகளும்‌ இப்படி நம்மாழ்வார்‌ விஷயமாக மதுரகவிகள்‌ அருளிய கண்ணி நுண்‌ சிறுத்தாம்பை பன்னீராயிரம்‌ உரு சொல்லவே, நம்மாழ்வாரும்‌ ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு அறியாமையைப்‌ போக்கி பக்தியையும்‌ ஞானத்தையும்‌ அருளி, திவ்யமான கண்ணைக்‌ கொடுத்து, மூன்று இரகசியங்களையும்‌, திருவாய்மொழியையும்‌, மற்றுமுள்ள மூவாயிரப்‌ பிரபந்தங்களையும்‌, எல்லா தர்சன கருத்துக்களையும்‌ அஷ்‌டாங்க யோக ரகசியத்தையும்‌ உபதேசித்தார் -என்று குரு பரம்பரா ப்ரபாவம்‌ கூறுவது அறியற்பாலதாகும்‌. மேலும்‌ இவருடைய தனியனில்‌ “ய: ஸ்ரீசடாரே: ஸ்ருதவாந்‌ ப்ரபந்தம்‌ அகிலம்‌ குரோ:”‘ என்று அருளியதற்கு ஏற்ப நம்மாழ்வாரை ஆசார்யராகப்‌ பற்றி திவ்ய பிரபந்தம்‌ முழுவதையும்‌ கேட்டவர்‌ என்று அருளியது காண்க. இதற்குச்‌ சேர, தமிழ்க்‌ கண்ணி நுண்‌ சிறுத்‌ தாம்பைப்‌ பண்டை உருவால்‌ பன்னீராயிரம்‌ உரு உரை செய்ய, ஒண்‌ தமிழ்‌ மாறன்‌ திருவுள்ளமுகந்து திவ்ய ஞானம்‌ நாதமுனிக்கு நயந்தருள்‌ புரிந்தாரன்றோ” என்று உரைப்பர்‌ பிள்ளைலோகம்‌ சீயர்‌. இவற்றை விரும்பி ஸ்ரீமந்‌ நாதமுனிகள்‌ கற்றதனால்‌ “பரிந்து கற்றான்‌” என்றபடி.

(கானமுறத் தாளத்தில்‌ கண்டு இசைத்தான்‌) கானம்‌ உற – கானம்‌ நிலைக்க, தாளம்‌ – கைத்தாளக்‌ ஸ்ரீமந்நாதமுனிகள்‌ தம்முடைய திவ்ய ஸ்தலமான வீரநாராயணபுரத்துக்கு வந்து, அங்கு எழுந்தருளியிருக்கும்‌ எம்பெருமானான மன்னனாரிடம்‌ தமக்கு திவ்ய பிரபந்தங்களை அருளினதைச்‌ சொன்னார் -மன்னனாரும்‌ மிக்க உகப்புடனே இவர்‌ கனவில்‌ வந்து இந்த திவ்வியப்‌ பிரபந்தங்களை ஒருரு நாதமுனிகளுடன்‌ அருளிச்‌ செய்து, “இவ்வுலக மக்களைத்‌ திருத்த நீர்‌ இந்த பிரபந்தங்களை இயலும்‌ இசையுமாக்கும்‌” என்று அர்ச்சகர்‌ வாயிலாக நியமித்தார்‌. தம்முடைய மருமக்களான கீழை அகத்தாழ்வாரையும்‌ மேலை அகத்தாழ்வாரையும்‌ கூட்டிக் கொண்டு இத் திவ்வியப்‌ பிரபந்தங்களை, வேத வியாஸர்‌ வேதங்களை நான்கு ஸ்வரங்களோடு உச்சரிப்பது போல, ஸ்ரீமந்நாதமுனிகளும்‌ இவற்றை திவ்ய தேவ கானத்திலே சேர்த்து நன்கு இசைக்கும்படி செய்வித்தார்‌.பின்னர்‌ இருவரும்‌ இனிய குரலை யுடையவர்களாய்‌, முற்காலத்‌திலே குசலவர்கள்‌ இராமனுக்கு முன்னால்‌ ஸ்ரீராமாயணத்தைப்‌ பாடியது போல, வீரநாராயணபுரம்‌ ஸ்ரீராஜகோபாலன்‌ ஸந்நதியில்‌ திவ்ய பிரபந்தங்களை ஆர்வத்துடன்‌ பாடினார்கள்‌.

தாளத்தில்‌ கண்டு இசைத்தலாவது -ஸ்ரீ மந்நாதமுனிகள்‌ காலத்தில்‌ சோழ ராஜாவின்‌ அரண்மனை வாசலிலே தேவ கானம்‌ பாடுவாள்‌ ஒருத்தியும்‌, மனுஷ்ய கானம்‌ பாடுவாள்‌ ஒருத்தியும்‌ சேர்ந்து தங்கள் தேவ கானமே உயர்ந்தது என்று ஒருத்தி சொல்ல மற்றொருத்தி மனுஷ்ய கானமே உயர்ந்தது என்று சொல்ல, இதனால்‌ வாதம்‌ முற்றி ராஜாவிடம்‌ அறிவிக்க, அவனும்‌ வித்வான்‌௧ளைத்‌ திரட்டி இவ்விருவரையும்‌ பாடுவித்து, மனுஷ்ய கானம்‌ செய்தவளை பாராட்டி வெகுமதி அளித்தான்‌.-தேவகானம்‌ பாடுபவள்‌ மிகவும்‌ மனம்‌ நொந்து இந்த கானத்தை தேவர்களே அறிவர்‌. மனிதர்கள்‌ அறியார்‌ என்று எண்ணி, கோயில்‌ தோறும்‌ சென்று பாடி, இறுதியில்‌ மன்னனார்‌ கோயிலிலே பெருமாள்‌ முன்‌ பாடினாள்‌-மன்னனார்‌ கோயிலிலே பெருமாள்‌ முன்‌ தேவகானம்‌ பாடுவதைக்‌ கேட்ட ஸ்ரீ மந்நாதமுனிகள்‌ அவளுக்கு மன்னனார்‌ தீர்த்த பிரசாதம்‌ முதலான வற்றைக்‌ கொடுத்து கெளரவித்தார்‌. அவளும்‌ இவரை வணங்கி அரசனிடம்‌ சென்று தாம்‌ பாடுகிற தேவ கானத்தை அறிந்த ஒருவர்‌ வீரநாராயணபுர மன்னனார்‌ கோயிலில்‌ இருக்கும்‌ ஸ்ரீ மந்நாதமுனிகள்‌ என்கிற பெரியவர் தான்‌. அவரைத்‌ தவிர உலகில்‌ வேறு யாரும்‌ இல்லை என்று சொன்னாள்‌. உடனே அரசனும்‌ ஸ்ரீ மந்நாதமுனிகளை வரவழைத்து, அவரை உபசரித்து தேவ கானத்தை அறிந்தபடியை விளக்கிச்‌ சொல்லச்‌ சொன்னார்‌. ஸ்ரீமந்நாதமுனிகள்‌ நாற்பது நூறு தாளத்தைக்‌ கொண்டு வரச்‌ சொன்னார்‌.அவற்றைச்‌ சேர ஒத்தச்‌ சொன்னார்‌. அந்த ஓசையைக்‌ கேட்டு இது இவ்வளவு எடை, இது இவ்‌ வளவு எடை உள்ளது என்று ஒவ்வொன்றினுடைய அளவையும்‌ சொன்னார்‌. அரசனும்‌ தனித் தனியே அவற்றை சோதித்து நிறுத்து, அவற்றில்‌ முந்திரி அளவாவது ஏற்றம்‌ குறைவில்லாமல்‌ இருப்பதைக்‌ கண்டு வியப்படைந்தான்‌. அரசனை ஆசிர்வதித்து மன்னனார்‌ கோயில்‌ வந்தார்‌. பின்னர்‌, ஸ்ரீமந்நாத முனிகள்‌ நியமனத்தாலே ஸ்ரீரங்கத்தில்‌ மிகச்‌ சிறந்ததான அரையர்‌ சேவை என்ற பெயரில்‌ இந்த திவ்ய கானம்‌ தடையின்றி அரையர்களால்‌ அபிநயனத்துடன்‌ அத்யயன உற்சவங்களில்‌ இன்றளவும்‌ பாடப்படுகிறது.-திருப்பல்லாண்டு தொடக்கமாக திருநெடுந் தாண்டகம்‌ வரை பகல்‌ பத்து நாட்களிலும்‌, திருவாய்‌ மொழியை இராப்பத்து நாட்களிலும்‌ சேவிப்பர் -இயற்பாவை இயலாக சேவிப்பது ஸ்ரீமந்நாதமுனிகள்‌ ஏற்படுத்திய முறையாகும்‌. இந்த அரையர்‌ சேவை ஆழ்வார்‌ திருநகரி, ஸ்ரீ வில்லிபுத்தூர்‌ மற்றும்‌ மேலக்‌ கோட்டை ஆகிய திவ்ய தேசங்களில்‌ இன்றும்‌ பிரசித்‌தமாக நடந்து வருகிறது. இது பற்றியே தாளமுடன்‌ இசைத்தவர்‌ ஸ்ரீமந்நாதமுனிகள்‌ என்றபடி-

(கருணையினால்‌ உபதேசக்‌ கதி அளித்தான்‌) கதி- வழி, புகலிடம்‌. உபதேசமாவது தாம்‌ நம்மாழ்வாரிடம்‌ இருந்து பெற்ற ரகஸ்ய தாத்பர்யங்களும்‌ திவ்வியப்‌ பிரபந்தங்களும்‌ மற்றும்‌ அஷ்டாங்க யோக ரகஸ்யமுமாகும்‌. இவற்றை தம்‌ கருணையினால்‌ உய்யக்‌ கொண்டார்‌, குருகை காவலப்பன்‌, நம்பி கருணாகர தாஸர்‌, ஏறு திருவுடையார்‌, திருக் கண்ண மங்கை ஆண்டான்‌, வானமாமலை தேவியாண்டான்‌, உருப்பட்டூர்‌ ஆச்சான்‌ பிள்ளை மற்றும்‌ சோகத்‌ தூராழ்வான்‌ ஆகிய எண்மருக்கு உபதேசித்ததாகக்‌ குருபரம்பரா ப்ரபாவம்‌ கூறும்‌.மேலும்‌ கருணைக்கு எடுத்துக்காட்டாக குருகை காவலப்பனுக்கு அஷ்டாங்க யோக க்ரமத்தை உபதேசித்தார்‌. உய்யக் கொண்டாருக்கு சாஸ்த்ரங்‌களையும்‌ திருவாய்மொழி முதலான திவ்வியப்‌ பிரபந்தங்களையும்‌ உபதேசித்து அவற்றை வளர்க்கச்‌ சொன்னார்‌. தம்‌ குமாரரான ஈஸ்வர முனிக்குப்‌ பிறக்கும்‌ குமாரருக்கு யமுனைத் துறைவர்‌ என்று பெயரிடச்‌ சொன்னார்‌. உய்யக்கொண்டாரையும்‌ குருகை காவலப்பனையும்‌ பார்த்து அவர்களுக்கு உபதேசித்தவற்றை யமுனைத்‌ துறைவருக்கு உபதேசிக்கச்‌ சொல்லி வழி காட்டினார்‌ ஸ்ரீமந்‌ நாதமுனிகள்‌. இது பற்றியே உபதேச கதி அளித்தவன்‌-என்றபடி-

(நானிலத்தில்‌ குரு வரையை நாட்டினான்‌) நானிலமாவது குறிஞ்சி, முல்லை, மருதம்‌, நெய்தல்‌ என்னும்‌ நால்வகைப் பட்ட இந்த பூமி. குரு வரையை நாட்டுதலாவது – நானிலமாகிய இந்த உலகில்‌ குரு பரம்பரையை நிர்ணயித்தல்‌, முதன் முதலாக கூரத்தாழ்வான்‌ அனைவருக்கும்‌ குருபரம்பரை அநுஸந்தாநத்தின்‌ மூலம்‌ உய்வு பெற அருளிய தனியன்‌ லக்ஷ்மீநாத ஸமாரம்பாம்‌ நாதயாமுநமத்‌ யமாம்‌” என்பதாகும்‌. இந்தத்‌ தனியனில்‌ திருமகள்‌ கேள்வனான எம்பெருமானுக்கு அடுத்ததாக நாதமுனிகளை அருளியுள்ளார்‌.-மதுரகவிகளினுடைய திவ்ய ப்ரபந்தத்தை நாத முனிகள்‌ தான்‌ அநுஸந்தித்து நம்மாழ்வாருடைய அருள்‌ பெற்ற நாதமுனியானார்‌. அந்த ஸ்ரீமந்‌ நாதமுனிகள்‌ அருளாலே அவர்‌ திருப் பேரனான யமுனைத்‌ துறைவர்‌ நம்‌ தர்சனத்தை ஆள வந்தது. இந்த தனியனில்‌ நாதமுனிகளை நடுவில்‌ சொன்னது. இராமாநுசருக்கும்‌ உபலக்ஷணமாகும்‌ என்பர்‌. ஏனெனில்‌ உடையவர்‌ தாம்‌ குருபரம்பரைக்கு நடு நாயகமாகத்‌ திகழ்பவர்‌. வியாசர்‌ முதலானவர்கள்‌ மூலமாக பகவத்‌ ப்ரஸாதம்‌ காரணமாக வளர்ந்து வந்த சாஸ்த்‌ரங்களைக்‌ காட்டில்‌, நேராக பகவத்‌ ப்ரஸாதம்‌ காரணமாக ஆழ்வாராலே அவதரிக்க ஏற்றத்தை உடைய திருவாய்மொழியை அவர்‌ க்ருபையாலே பெற்ற ஏற்றத்தைச்‌ சொல்லுகிறது.-சாஸ்த்ரம்‌ பரப்புவதற்கு காரணம்‌ வியாஸர்‌ கருணையாகையாலே வேதம்‌ மூலமிருக்கும்‌ அது. அதன்‌ கருத்தான இதுக்கு “நாதம்‌ பங்கஜ நேத்ர…” என்று மாமுனிகள்‌ அருளியபடி ஸ்ரீமந்‌ நாதமுனிகள்‌ தொடக்கமாக நடந்து செல்லுகிற ஆசார்ய பதத்தில்‌ இருப்பவராய்‌, அருளிச்‌ செயலை விரும்பி வளர்த்துக்‌ கொண்டு வருமவர்கள் தான்‌. மேலும்‌ ஸ்ரீமந்‌ நாத முனிகள்‌, உய்யக்கொண்டார்‌ என்று தொடங்கி தேவராஜர்‌ என்னுமளவிலும்‌ காட்டப்பட்ட ஆசார்யர்கள்‌ என்றும்‌ “திருவருள்மால்‌… அருள்‌ பெற்ற நாதமுனி முதலாம்‌ நம்‌ தேசிகர்‌” என்று ஆசார்யர்கள்‌ பரம்பரையை அருளியது காணலாம்‌. மேலும்‌ “சேனைநாதன்‌ அருள்‌ மாறன்‌ நாதமுனி தாமரைக்‌ கண்ணி ராமர்‌ வா…” என்ற தனியன்‌ மூலமாகவும்‌ அறியலாகும்‌.

(நலந்திகழும்‌ நாதமுனிநற்பதங்கள்‌ வாழியே) நலமாவது நன்மை. திகழ்வதாவது – விளங்குவது -நாத முனிகளுக்கு நன்மையாவது -ஆளவந்தார்‌ தாம்‌ அருளிய ஸ்தோத்ர ரத்னத்தில்‌ “நமோ… ஸிந்தவே” என்கிறபடியே நாதமுனிகளுடைய ஞான, வைராக்ய பக்திகளினுடைய உயர்வைச்‌ சொல்லுகிறார்‌.-இவருடைய ஞானம்‌ முதலானவை இன்னாருடையது என்று நினைக்க முடியாது. இவ்வளவு என்று அறிவிற் சிறந்தவராலும்‌ அளவிட முடியாது என்கிறார்‌. மேலும்‌ உண்மை அறிவினுடையவும்‌ அன்பினுடையவும்‌ பெரு மேன்மையின்‌ முடிவே எல்லையா யிருப்பவருமானவர்‌ என்பர்‌. அளவற்ற பகவத்‌ பக்தி என்ன, உண்மை அறிவு என்ன, பக்தியின்‌ பரம பர்யோஜனமாயும்‌ இருப்பவர்‌ என்கிறார்‌.

முநி: – பகவானை நினைக்கிலுண்டான ஆனந்‌தத்தினால்‌ நிலை நின்றவர்‌. அதாவது தியானிக்கத்‌ தக்க வஸ்துவான எம்பெருமானை எப்போதும்‌ மனக் கண்ணாலே காண்கை. சலங்கொள்‌ நாதமுனி. நாதன்‌ அருளுருவானவ ராகையாலே இவருக்கு நாதமுனிகள்‌ என்று பெயர்‌. ஸ்ரீரங்கநாதர்‌ என்னும்‌ திருநாமத்தை உடையவர்‌. நம்மாழ்வாரை நாதராக உடையவராய்‌, அந்த ஆழ்வாருடைய அருள்‌ பெற்ற நாதமுனி என்பர்‌. அருள்‌ பெற்ற நாதமுனி – அருள்‌ மாறன்‌ அருளைப்‌ பெற்றவர்‌. அல்லது ஆழ்வார்‌ அருளையாவது அதற்குக்‌ காரணமான மன்னனாருடைய அருளையாவது பெற்றவர்‌ என்பர்‌ பிள்ளை லோகம்‌ சீயர்‌.
வேதாந்த தேசிகர்‌ அருளிய ஸம்ப்ரதாய பரி ஸூத்தி என்னும்‌ ரஹஸ்யத்திலே வேதாந்த ஸம்ப்ர தாயத்துக்கு இந்த யுக ஆரம்பத்திலே பிரம்மநந்தி முதலானோர்க்குப்‌ பிறகு நம்மாழ்வார்‌ ப்ரவர்த்த கரானார்‌ என்றும்‌ குருபரம்பராஸாரத்திலும்‌ இவ்‌ வாசார்யர்களில்‌ ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு மதுரகவிகள்‌ முதலாக உண்டான ஸம்ப்ரதாய பரம்பரையாலும்‌ திருவாய்மொழி முகத்தாலும்‌ யோக தசையிலே ஸாக்ஷாத்‌ க்ருதராயும்‌ நம்மாழ்வார்‌ ஆசார்யரானார்‌ என்றும்‌ உள்ளமை காண்க.ஸ்ரீ மந்நாதமுனிகள்‌ திருவடியானது “நாதஸ்ரீபாத பங்கஜே” என்கிறபடியே தம்‌ ஸர்வ பாரங்களையும்‌ வைத்து அவர்தம்‌ சீடரான உய்யக்கொண்டார்‌ வணங்‌குவதாகக்‌ கூறுவர்‌. அவ்வாறே நாமும்‌ அவர் தம்‌ திருவடிகளை வணங்குவோமாக. வாழி

வாலவெய்யோன்தனை வென்ற வடிவழகன்‌ வாழியே
மால்‌ மணக்கால்‌ நம்பி தொழு மலர்ப்‌ பதத்தோன்‌ வாழியே
சீலமிகு நாதமுனி சீருரைப்போன்‌ வாழியே
சித்திரையில்‌ கார்த்திகை நாள்‌ சிறக்க வந்தோன்‌ வாழியே
நாலிரண்டும்‌ ஐயைந்தும்‌ நமக்குரைத்தான்‌ வாழியே
நாலெட்டின்‌ உட்பொருளை நடத்தினான்‌ வாழியே
மாலரங்க மணவாளர்‌ வளமுரைப்போன்‌ வாழியே
வையமுய்யக்‌ கொண்டவர் தாள்‌ வையகத்தில்‌ வாழியே–
பராபவ வருடம்‌ (886) சித்திரை மாதத்தில்‌ வெள்ளிக்கிழமை, பெளர்ணமி அன்று கார்த்திகை நட்சத்திரத்தில்‌ அவதரித்தவர்‌ உய்யக்‌ கொண்டார்‌ என்னும்‌ ஆசார்யர்‌. இவர்‌ திருவரங்கத்துக்கு வடக்கே உள்ள திருவெள்ளறையில்‌ பூர்வசிகை ஸ்ரீவைஷ்ணவ ப்ராஹ்மண குலத்தில்‌ அவதரித்தவர்‌. இவருக்கு புண்டரீகாக்ஷர்‌, பத்மாக்ஷர்‌, ராஜீவாக்ஷர்‌, அரவிந்தாக்ஷர்‌ என்று பல திருநாமங்கள்‌. இவருடைய சீடர்கள்‌ ஸ்ரீராமன்‌ என்னும்‌ மணக்கால்‌ நம்பி, திருவல்லிக்கேணி பாண்பெருமாள்‌ அரையர்‌, சேட்டலூர்‌ செண்டலங்காரதாஸர்‌, ஸ்ரீபுண்டரீகதாஸர்‌, கோமடம்‌ திரு விண்ணகரப்பன்‌ மற்றும்‌ உலக பெருமாள்‌ நங்கை ஆகியோராவர்‌. இவர்‌ ஆண்டாள்‌ அருளிய திருப்‌ பாவைக்குத்‌ தமிழில்‌ இரண்டு தனியன்கள்‌ அருளியுள்ளார்

வாலவெய்யோன்தனை – உதய கால சூரியனை,
வென்ற வடிவழகன்‌ – வென்ற திருமேனி அழகையுடையவர்‌,
வாழியே – வாழ வேண்டும்‌;
மால்‌ – பெருமை பொருந்திய, –
மணக்கால்‌ நம்பி, தொழும்‌ வணங்கும்‌,
மலர்ப் பதத்தோன்‌ – மலர் தலை யுடைய திருவடிகளை உடையவர்‌;
சீலமிகு – நல்ல குணம்‌ மிக்க,
நாதமுனி – ஸ்ரீமந் நாதமுனிகள்‌
சீர்‌ – குணங்‌களை,
உரைப்போன்‌ – சொல்லுபவர்‌;
சித்திரையில்‌ சித்திரை மாதத்தில்‌,
கார்த்திகை நாள்‌ – கார்த்திகை நட்சத்திரத்தில்‌,
சிறக்க வந்தோன்‌ – பெருமை பெற தோன்றியவர்‌;
நாலிரண்டும்‌ – எட்டு எழுத்து மந்திர மான திருமந்திரத்தையும்‌,
ஐயைந்தும்‌ – இருபத்து ஐந்து எழுத்தான துவய மந்திரத்தையும்‌,
நமக்கு உரைத்தான்‌ – நமக்காக வழிவழியாகப்‌ பரம்பரை யாக வரும்படி செய்தவர்‌;
நாலெட்டின்‌ – முப்பத்து இரண்டு எழுத்தான சரம ச்லோகத்தின்‌,
உட்‌ பொருளை – ஆழ்ந்த பொருளை,
நடத்தினான்‌ – வழி வழியாக உபதேசித்தவர்‌;
மால்‌ – பெருமை தங்கிய,
அரங்க மணவாளர்‌ – திருவரங்கனான நம்பெருமாள்‌,
வளம்‌ – அழகை,
உரைப்போன்‌ – உரைப்பவர்‌;
வையம்‌ – உலகம்‌,
உய்யக்‌ கொண்டவர்‌ – உயர்ந்த ஜீவனம்‌ பெற விரும்பியவர்‌,
தாள்‌ – திருவடிகள்‌,
வையகத்தில்‌ – இவ் வுலகில்‌ வாழ பல்லாண்டு பாடு வோமாக.

வால வெய்யோன் தனை வென்ற வடிவழகன்‌) வால வெய்யோன்‌ – உதய கால சூரியன்‌. தன்னை என்பது தனை ஆயிற்று. உதயகால சூரியனையும்‌ வென்ற வடிவழகை உடையவர்‌ உய்யக்கொண்டார்‌ என்றபடி. **ஸுத்தஸத்த்வமயம்‌ செளரேரவதார மிவாபரம்‌” என்று வேதாந்த தேசிகர்‌ யதிராஜ சப்ததி யில்‌ (6) அருளியதற்கு ஏற்ப உய்யக்‌ கொண்டார்‌ சுத்த ஸத்வ மயமாயும்‌ எம்பெருமானுடைய திவ்ய அவதாரங்கள்‌ போல்‌ சுத்த ஸத்வ குணமயமாக விளங்கி இருப்பவர்‌ என்பதனால்‌ உதயகால சூரியனைக்‌ காட்டிலும்‌ வடிவழகன்‌ என்றபடி.-இந்த சுலோகம்‌ பெரிய திருமுடி அடைவிலும்‌, யதிராஜ ஸப்ததியிலும்‌ காணலாம்‌. பெற்றோர்கள்‌ அவருடைய தூய ஸத்வ மயமான திருமேனியையும்‌ தாமரை போன்ற திருக் கண்களையும்‌ கண்டு திருவெள்ளறை எம்பெருமானான அப் புண்டர்‌ காக்ஷணே அவதரித்துள்ளான்‌ போலும்‌ என்று எண்ணி புண்டரீகாக்ஷர்‌ என்று பெயரிட்டனர்‌.“அவர்‌ தாம்‌ புண்டரீகாக்ஷரன்றோ. “புண்டரீக த்ருசே நம!:”’ என்றாயிற்று என்பர்‌ பிள்ளைலோகம்‌ சீயர்‌. இது பற்றியே ஒன்றான எம்பார்‌ ஜீயர்‌ ஸ்வாமி, எம்பெருமானார்‌ அவயவ சுலோகத்தில்‌ புண்டரீகாக்ஷ ரான இவரை “நேத்ரயுக்மம்‌ ஸரோஜாச்ஷ:”’ என்கிற படியே எம்பெருமானாருக்கு இரு கண்களாகத்‌ திகழ்பவர்‌ உய்யக்‌ கொண்டார்‌ என்று உரைப்பர்‌.-

(மால்‌ மணக்கால்‌ நம்பி தொழும்‌ மலர்ப்‌ பதத்‌தோன்‌)-மால்‌- பெருமை. மணக்கால்‌ நம்பி- உய்யக்‌ கொண்டாரின்‌ சீடர்‌. மணக்கால்‌ நம்பிக்கு பெருமை யாவது பன்னிரெண்டு வருடம்‌ தம்‌ ஆசார்யரான உய்யக் கொண்டார்‌ திருவடிகளில்‌ எல்லா வித கைங்கர்யங்களையும்‌ செய்தவர்‌. ஒரு நாள்‌ உய்யக்கொண்டார்‌ தேவிகளான ஆண்டாளம்மா பரமபதிக்க, திருமாளிகை கைங்கர்யமெல்லாம்‌ மணக்கால்‌ நம்பி தமக்கே பரமாய்‌ நடத்திக்‌ கொண்டு வரும்போது, தம்‌ ஆசார்யரின்‌ பெண்‌ பிள்ளைகள்‌ இருவரையும்‌ நீராட்டி அழைத்து வரும்‌ வழியிலே வாய்க்கால்‌ சேறாயிருக்கக்‌ கண்டு அவர்கள்‌ திகைக்க, நம்பிகள்‌ படியாய்க்‌ கிடந்து அவர்களைத்‌ தம்‌ முதுகிலே அடியிட்டு அழைத்துக்‌ கொண்டு போனார்‌.-உய்யக்‌ கொண்டாரும்‌ இந்த விஷயத்தைக்‌ கேட்டு “இப்படி செய்வதே” என்று மிகவும்‌ ப்ரீதி அடைந்தவராய்‌, நம்பிகள்‌ தலையை தம்‌ திருவடித்‌ தாமரைகளாலே அலங்கரித்தார்‌. பொன்னடிப்பூ முடிசூட்டி “உமக்கு நாம்‌ செய்ய வேண்டுவது என்ன” என்று கேட்க, நம்பியும்‌ “உற்றேன்‌ உகந்து பணி செய்து உனபாதம்‌ பெற்றேன்‌” என்றார்‌.-மேலும்‌ இரண்டாவது தடவை துவய மந்த்ரத்தை உபதேசித்தார்‌. ஆசார்ய பெண்‌ பிள்ளைகளின்‌ மணக்கால்‌ பொலிய நின்ற திருமேனியை உடையவராய்‌ இருந்ததால்‌ அன்று முதல்‌ “ராம மிச்ரர்‌” என்ற இயற்‌ பெயரையுடையரான இவருக்கு “மணக்கால்‌ நம்பி” என்ற திருநாமம்‌ உடையவரானார்‌. அவர்‌ தலையில்‌ உய்யக்கொண்டார்‌ திருவடிகள்‌ அலங்கரிக்கப்‌ பட்டது பற்றி “நம்பி தொழும்‌ மலர்ப்‌ பதத்தோன்‌” என்றபடி-

(சீலமிகு நாதமுனி சீருரைப்போன்‌) சீலமாவது நல்ல குணம்‌. அதை மிகுதியாக உடையவர்‌ ஸ்ரீமந்நாத முனிகள்‌. சீராவது பெருமை. ஸ்ரீமந்நாதமுனிகளுக்குப்‌ பெருமையாவது உய்யக்‌ கொண்டாரைக்‌ கொண்டு திவ்வியப்பிரபந்தத்தை உலகம்‌ முழுவதும்‌ பரவச்‌ செய்ததாகும்‌. மேலும்‌ “குளப்படியிலே தேங்கினால்‌ குருவி குடித்துப் போம்‌, வீராணத்து ஏரியிலே தேங்கினால்‌ நாடு விளையும்‌” என்று ஸ்ரீமந்நாதமுனிகளும்‌ தம்‌ சீ லகுணத்தால்‌ உய்யக் கொண்டாருக்கு திவ்வியப்‌ பிரபந்தத்தை அருளிச்‌ செய்தார்‌.-அதாவது ஒரு மாட்டின்‌ குளம்பின்‌ அடியிலே மழைநீர்‌ தேங்கும்‌ போது சில குருவிகள்‌ குடிக்க உதவும்‌. அதே மழைநீர்‌ வீரநாராயணபுரத்து ஏரியில்‌ தேங்கினால்‌ அந்நாட்டிலுள்ள வயலெல்லாம்‌ விளைந்து நாடே வாழும்‌.-எம்பெருமானாருடைய சீடரான எம்பார்‌ அருளிய “லக்ஷ்மீ நாதாக்ய ஸிந்தெள” என்ற ஸ்லோகத்தில்‌ லக்ஷ்மீநாதனாகிற பெருங்கடலில்‌ சடகோபராகிய மேகம்‌, கருணை நீரைப்‌ பருகி ஸ்ரீமந்நாதமுனிகளாகிற மலையில்‌ பொழிந்து, அந்நீர்‌ புண்டரீகாக்ஷர்‌ என்னும்‌ உய்யக்கொண்டார்‌, ராம மிச்ரர்‌ என்னும்‌ மணக்கால்‌ நம்பி ஆகிய இரு அருவி களின்‌ மூலம்‌ மேலும்‌ பாய்ந்து கொண்டு வந்தது என்று அருளியது காணலாம்-

ஸ்ரீ லக்ஷ்மி நாதாக்ய சிந்தௌ சடாரிபு ஜலதஹா ப்ராப்ய காருண்ய நீரம்!
நாதா த்ரவப் க்ஷிஞ்சன் ததானு ரகுவரம் போஜ ஷக்சுர் ஜலாப்யம்!!
கத்வதாம் யாமுநாக்யம் சரிதாமத் யதீந்த்ராக்ய பாத்மாகாரேந்திரம்!
ஸம்பூர்ய ப்ராணி சாஸ்யே ப்ரவஹத பஹூதா தேசிகேந்த்ர பிரமேகைஹி.”!!

ஸ்ரீ லட்சுமி நாதன் ஒரு பெரிய கடல்.  நம்மாழ்வார் ஒரு மேகம்.
இந்த கருமேகம் ஆழ்வார் கடலில் இருந்து தண்ணீரை (ஞானம்/அறிவு) எடுத்து மலைகளில் மழையாக (பாசுரங்கள்) பொழிந்தார்.
மலை என்பது ஸ்வாமி நாதமுனிகல் என்று குறிப்பிடப்படுகிறது.
இரண்டு நீர்வீழ்ச்சிகளாக நீர் விழுகிறது,
இந்த நீர் வீழ்ச்சி ஸ்வாமி உய்யக்கொண்டார் மற்றும் ஸ்வாமி மணக்கால் நம்பி என்று குறிப்பிடப்படுகிறது,
இந்த நீர் அருவி ஸ்ரீ ஆளவந்தார் என்ற பெரிய ஆற்றை அடைந்தது.
அப்போது ஏரியில் தண்ணீர் தேங்கியது.
இந்த ஏரி ஸ்வாமி ராமானுஜரால் குறிப்பிடப்படுகிறது.
ஏரியில் இருந்து 74 கால்வாய்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

லக்ஷ்மீ நாதாக்ய ஸிந்தௌ சடரிபு வஹநாத்போத வாஹைர் விபக்தோநாதேநாரோபிதோ ய: ப்ரணதி குணவசாத் யாமுநா க்யேந பூய:தேநாம்போதேந முக்தோ அம்ருதமிவ பவபாகே குலோத்பாஸி பூய:தஸ்மை நமோ அஸ்து ராமாய மஹா முநயே…
லக்ஷ்மீ நாதாக்ய ஸிந்தௌ: ஸ்ரீமன் நாராயணன் (லக்ஷ்மி நாதன்) என்னும் பிரம்மாண்டமான கருணைக்கடலில் இருந்து,சடரிபு வஹநாத்: நம்மாழ்வார் (சடகோபன்) என்னும் மேகம் ஞானமாகிய நீரை முகந்து கொள்கிறது.நாதேநாரோபிதோ: நாதமுனிகள் அந்த ஞானத்தை உலகிற்கு மழையாகப் பொழிகிறார்.யாமுநா க்யேந: ஆளவந்தார் (யாமுனாசாரியர்) அதை ஒழுங்குபடுத்தி கால்வாயாக மாற்றுகிறார்.ராமாநுஜர்: இந்த ஞானாமிர்தத்தை உலக மக்கள் அனைவரும் பருகும்படிச் செய்து, சம்சாரக் கடலில் தவிப்பவர்களின் துயரத்தைத் துடைக்கிறார்.

(சித்திரையில்‌ கார்த்திகை நாள்‌ சிறக்க வந்தோன்‌) தமிழ்‌ மாதங்களில்‌ சித்திரை மாதம்‌ முதன்மையானதாகும்‌. “சைத்ர ஸ்ரீமாந்‌ அயம்‌ மாஸ”. (அ.கா.3-3) என்று இராமாயணத்தில்‌ சித்திரை மாதத்தைக்‌ கொண்டாடியபடியே இந்தச்‌ சித்திரை மாதமானது மிகச்சிறந்ததாகும்‌. இந்த மாதத்தில்‌ கார்த்திகை நக்ஷத்ரத்துக்கு சிறப்பாவது நித்ய ஸுரிகளில்‌ ஜயத்ஸேநர்‌ என்பவரின்‌ அம்சமாக உய்யக்கொண்டார்‌ அவதரித்த சிறப்பாகும்‌. இவர்‌ அவதரித்தது பராபவ வருஷம்‌ சித்திரை மாதம்‌ வெள்ளிக்கழமை பெளர்ணமி கார்த்திகை நக்ஷத்திரமாகும்‌.

(நாலிரண்டும்‌ ஐயைந்தும்‌ நமக்குரைத்தான்‌) நாலிரண்டு – எட்டு எழுத்து மந்திரமான “ஓம்‌ நமோ நாராயணாய” என்ற திருமந்திரம்‌ ஆகும்‌. இதனை பதரிகாச்ரமத்தில்‌ நரனுக்கு நாராயணன்‌ உபதேசித்‌தான்‌. ஐயைந்தாவது – இருபத்து ஐந்து எழுத்து கொண்ட “ஸ்ரீமந்நாராயண சரணெள சரணம்‌ ப்ரபத்யே, ஸ்ரீமதே நாராயணாய நம:” என்ற துவய மந்திரமாகும்‌. இதனை ஸ்ரீவிஷ்ணு லோகத்தில்‌ விஷ்ணுவானவர்‌ பெரிய பிராட்டிக்கு உபதேசித்தார்‌. இவ்விரண்டு மந்திரங்களையும்‌ சீடர்களான மணக்கால்‌ நம்பி, திருவல்லிக்கேணி பாண்‌ பெருமாள்‌ அரையர்‌, ஸ்ரீ புண்டரீகதாஸர்‌ முதலான சீடர்கள்‌ மூலமாக நம்‌ ஆசார்யர்‌ வரை வாழையடி வாழையாக சொல்லும்படி உரைத்தார்‌ உய்யக்‌ கொண்டார்‌. எட்டு எழுத்தான திருமந்திரத்தின்‌ பொருளாவது “எம்பெருமானுக்கே உரியேனான நான்‌ எனக்கு உரியன்‌ அன்றிக்கே ஒழிய வேணும்‌. எல்லோரையும் காட்டிலும்‌ தலைவனான நாராயணனுக்கே எல்லா அடிமைகளும்‌ செய்யப் பெறுவேனாக வேணும்‌” என்பதாகும்‌. இருபத்து ஐந்து எழுத்தாய்‌ இரண்டு வாக்யமாக அமைந்த துவயத்தின்‌ பொருளாவது “பிராட்டியோடு கூடிய ஸ்ரீமந்நாராயணனுடைய திருவடிகளையே தஞ்சமாகப்‌ பற்றுகிறேன்‌. பிராட்டியோடு கூடிய நாராயணனுக்கே எல்லா அடிமைகளும்‌ இருவருமான சேர்த்தியிலேயே ஆக வேணும்‌” என்பதாகும்‌. மந்த்ர ரத்னமான துவய மந்த்ரமானது வீர்யம்‌, பலம்‌, மங்களத்தை அளிப்பது, வேத ஸாரமாயிருப்பது, பழையதாயிருப்பது. மேலும்‌ துவயத்தின்‌ பெருமையைப்‌ பற்றிச்‌ சொல்லும் போது “ப்ரமாண ஸாரமாகையாலே துவயம்‌ ப்ரமாணம்‌ அதற்கு விஷயம்‌ ஆகையாலே அதுவே உண்மையாய்‌ அறியத் தக்கது துவயத்தின்‌ அறிந்து உபதேசிப்பவன்‌ ஆசார்யனாகையாலே அவனே என்றும்‌, அர்ச்சாவதாரம்‌ என்றும்‌ பொருளை ஞானமுள்ளவர்‌” என்றும்‌ வார்த்தா மலையில்‌ (136) உய்யக் கொண்டார்‌ அருளியது காண்க.

(நாலெட்டின்‌ உட்பொருளை நடத்தி னான்‌) நாலெட்டாவது-முப்பத்திரண்டு எழுத்துக்கள்‌ கொண்ட சரம சுலோகமாகும்‌. ஸர்வ தர்மாந்‌ பரித்பஜ்ய மாமேகம்‌ சரணம்‌ வ்ரஜ -அஹம்‌ த்வா ஸர்வ பாபேப்யோ மோக் ஷயிஷ்யாமி மாசுச:” என்று “எல்லா தருமங்களையும்‌ விட்டு என்னை ஒருவனையே தஞ்சமாகப்‌ பற்று. நான்‌, உன்‌ எல்லா பாபங்களையும்‌ போக்கி மோக்ஷத்தைக்‌ கொடுக்கிறேன்‌”. இதனை கண்ணன்‌ அர்ச்சுனனுக்கு திருத் தேர்த் தட்டில்‌ நின்றும்‌ உபதேசித்த பகவத்‌ கீதையில்‌ பதினெட்டாம்‌ அத்யாயத்தில்‌ வரும்‌ 66வது சுலோகமாகும்‌. சரம ச்லோகத்தின்‌ உட்பொருளாவது எல்லா தருமங்களையும்‌ (உபாயமாக நினையாமல்‌) விட்டு எம்பெருமான்‌ ஒருவனையே உபாயமாகப்‌ பற்றுவதாகும்‌.

(மாலரங்க மணவாளர்‌ வளமுரைப்போன்‌) மால்‌- பெருமை. மால்‌ அரங்க மணவாளர்‌- பெருமை பொருந்திய அரங்கத்தில்‌ உள்ள பெரிய பெருமாள்‌. வளம்‌ – வண்‌மை – செழுமை. வளம்‌ – நன்மை. மணவாளனுக்கு நன்மையாவது – ஆண்டாள்‌ அருளிய திருப்பாவைக்கு அமைந்த இரு தனியனில்‌, உய்யக்கொண்டார்‌, “அன்ன வயல்‌ புதுவை ஆண்டாள்‌ அரங்கற்குப்‌ பன்னு திருப்பாவைப்‌ பல் பதியம்‌” என்று ஆண்டாள்‌ அரங்கனுக்கு திருப்பாவை பாடினாள்‌ என்கிறார்‌. அதாவது ஆண்டாள்‌ திருப்பாவை என்னும்‌ பிரபந்தம்‌ மூலமாக பாட்டுக்களை இனிய இசையுடன்‌ பாடி அவற்றை ஸ்ரீ ரங்கநாதனுக்கு விலக்ஷணமான பாமாலையாக ஸமர்ப்பித்தாள்‌ என்று வாசிக கைங்கர்யம்‌ செய்தபடி. இதற்கு உரையிட்ட பிள்ளைலோகம்‌ சீயர்‌, “பூமிப் பிராட்டியாரான ஆண்டாள்‌ விரும்பும் ஸ்ரீவராக நாயனார்‌ தன்மையும்‌, ஆண்டாள்‌ அநுகாரத்தாலே விரும்புகிற கோபாலர்‌ தன்மையும்‌ பண்பின்‌ ஒன்றாம்‌ தன்மையாலும்‌ அடியாரிடம்‌ மையல்‌ குணத்தாலும் பெரிய பெருமாளிடத்திலே காணலாயிருக்கும்‌” என்றும்‌ அருளியது காண்க.

(வையமுய்யக்‌ கொண்டவர் தாள்‌ வையகத்தில்‌ வாழியே) வையம்‌ – உலகம்‌. பிறவித்‌ துயரிலிருந்து உய்யும்‌ பொருட்டு ஸ்ரீமந்‌ நாதமுனிகளிடம்‌ இருந்து திவ்வியப்‌ பிரபந்தத்தைப்‌ பெற்று உலகுய்யக்‌ கொண்டவனார்‌ உய்யக்‌ கொண்டார்‌. அதாவது ஸ்ரீமந்நாதமுனிகளிடம்‌ இரு நிதிகள்‌ இருந்தன. ஒன்று எம்பெருமானை அடைவதற்கு பக்தி யோகம் -மற்றொன்று எம்பெருமானுடைய ஸ்வரூபம்‌, ரூபம்‌, குணம்‌, உறுப்பான யோகம்‌. செல்வங்கள்‌ ஆகியன பற்றிப்‌ பேசும்‌ ஆழ்வார்கள்‌ அருளிய நாலாயிரத்‌ திவ்வியப்‌ பிரபந்தமாகும்‌. சரீரம்‌, பொருள்‌, அறிவு, வசிக்கும்‌ இடம்‌, செயல்கள்‌, குணங்கள்‌, பிராணன்கள்‌ ஆகியவற்றை ஆசாரியனுக்காக எவன்‌ தரிக்கிறானோ அவனே சிஷ்யன்‌ ஆவான்‌ என்பதற்கு ஏற்ப இருந்த சிஷ்யர்களில்‌ ஒருவரான உய்யக் கொண்டாரைப்‌ பார்த்து ஸ்ரீமந்நாதமுனிகள்‌, “நீரும்‌ குருகைக்‌ காவலப்பன்‌ விரும்பினாற் போல பக்தி யோகத்தைப்‌ பெற்றுப்‌ போகிறீரா” என்று கேட்க, அவரும்‌ “பிணம்‌ கிடக்க மணம்‌ புணர்வார்‌ உண்டோ? என்கிறபடியே “உலகம்‌ ஆத்ம நாசம்‌ அடைந்து பிணக்காடாய்‌ இருக்கும்‌ போது அடியேன்‌ ஒருவன்‌ மட்டும்‌ எம்பெருமானோடு ஆத்ம விவாகம்‌ செய்து கொண்டு மோக்ஷமடைவது சரியாகுமோ” என்கிறார்‌.
ஆதலால்‌ “அடியேன்‌ எப்படியானாலும்‌ பரவா யில்லை. உலகம்‌ உய்யும்படி திவ்வியப்‌ பிரபந்தங்‌களை உபதேசிக்க வேணும்‌” என்று ப்ரார்த்தித்தார்‌. இதனைக்‌ கேட்ட ஸ்ரீமந் நாதமுனிகள்‌ அவரை வாரி அணைத்து, “நீரே உலகையும்‌, உலகைப்‌ படைத்த நாராயணனையும்‌, அவனைச்‌ சொல்லும்‌ திவ்வியப்‌ பிரபந்தங்களையும்‌, அதனைப் பெற்ற என்னையும்‌ உய்யக் கொண்டவர்‌. உம்மாலன்றோ நாம்‌ மிகவும்‌ அரும்பாடுபட்டு மாறன்‌ அருள் பெற்று, பெற்ற அருளிச்‌ செயல்கள்‌ உலகெங்கும்‌ பரவி அனைவரையும்‌ உய்விக்கப்‌ போகின்றன. எனவே நீர்‌ உய்யக் கொண்டார்‌ என்னும்‌ பெயராலே கொண்டாடப்படுவீர்‌” என்று அருளி, திவ்வியப்‌ பிரபந்தங்களை உபதேசித்தார் -ஒரு முறை ஸ்ரீமந்நாதமுனிகளின்‌ மாமனார்‌ வங்கிபுரத்து தம்‌ மகளான ஸ்ரீமந்நாதமுனிகளின்‌ தர்மபத்னியான அரவிந்தப்பாவையைத்‌ தம்‌ இல்லத்துக்கு சில நாள்‌ அனுப்பி வைக்க வேண்டினார்‌. ஸ்ரீமந்நாதமுனிகளும்‌ இசைந்து வழித் துணையாக புண்டரீகாக்ஷரை அனுப்பி வைத்தார்‌. ஸ்ரீமந்நாதமுனிகளுடைய தர்ம பத்னியை விட்டு விட்டு திரும்பி வந்த அவரை அங்கு நடந்ததை வினவினபோது அவரை உணவு வகையில்‌ உபசரித்த தம்‌ மாமனார்‌ திருமாளிகையில்‌ உள்ளவர்களின்‌ அச்ரத்தையை புரிந்து கொண்டார்‌.“நீர்‌ எப்படி இதனை பொறுத்திருந்தர்‌” என்று கேட்க, “போனகம்‌ செய்த சேடம்‌ தருவரேல்‌ புனிதமன்றே” (திருமாலை 41) என்று தொண்டரடிப்‌ பொடியாழ்வார்‌ பாசுரத்தைச்‌ சுட்டிக் காட்டினார்‌. இதற்கு மகிழ்ச்சி அடைந்த ஸ்ரீமந்நாதமுனிகள்‌ அவரைத்‌ தழுவிக்‌ கொண்டு “நீரன்றோ எம்மை உய்யக் கொண்டீர்‌” என்று கொண்டாடினார்‌. அதனால்‌ உய்யக்கொண்டார்‌ என்ற திருநாமம்‌ ஏற்பட்டது. இவ்வாறு ஆட்கொண்டவில்லி கோவிந்த ஆசார்யர்‌ இயற்றிய நூலில்‌ அமைந்தது காணலாம்‌. உய்யக் கொண்டாருடைய சுயநலம்‌ பேணாத பரந்த மனப்பான்மையாலே இன்று நாம்‌ அருளிச்‌ செயல்களாலே உய்ந்து போகிறோம்‌.
ஸ்ரீமந் நாத முனிகளின்‌ சீடர்களில்‌ குருகைக்‌ காவலப்பன்‌ ஸமாதி நிலையில்‌ ஆழ்ந்து விட்ட படியால்‌ உய்யக்கொண்டார்‌ ஸ்ரீமந்நாதமுனிகளிடம்‌ பெற்ற அர்த்தங்களைப்‌ பிரசாரம்‌ செய்தார்‌ என்று திவ்ய ஸுரி சரிதம்‌ கூறும்‌. இதனாலேயே ஸ்ரீ வைஷ்ணவ சமூகம்‌ முழுவதற்கும்‌ இவர்‌ பரமாசார்யராய்‌ வாக்ய குருபரம்பரையிலும்‌ ச்லோக குருபரம்பரையிலும்‌ ஸ்ரீமந்நாத முனிகளுக்கு முன்‌ அநுஸந்திக்கப்படுகிறார்‌. மேலும்‌ ஈடு முப்பத்தாறு ஆயிரப்படியின்‌ ஸம்ப்ரதாய தனியன்களில்‌ திருவாய்மொழிப்‌ பிள்ளை “பங்கஜநேத்ர” என்றும்‌, மணவாள மாமுனிகள்‌ “சீர்‌ உய்யக்‌ கொண்டார்‌” என்றும்‌ நாதமுனிகளுக்கு அடுத்தவராகக்‌ காட்டுவது அறியற்பாலதாகும்‌. பராசரபட்டரும்‌ தாம்‌ அருளிய ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யத்தில்‌ குருபரம்பரை வணக்க ச்லோகத்தில்‌ “பத்மாக்ஷம்‌ ப்ரேக்ஷிஷீய” என்கிற படியே “புண்டரீகாக்ஷரான உய்யக்‌ கொண்டாரைப்‌ பார்க்கக்‌ கடவேன்‌” என்கிறார்‌. இப்படிப்பட்ட ஆசார்யர்‌ திருவடிகள்‌ வையகத்தில்‌ வாழ பல்லாண்டு பாடுவோமாக –

மகரமதில்‌ விசாகம் நாள்‌ வந்துதித்தான்‌ வாழியே
மாறன் தாள்‌ நாதமுனி மலரடியோன்‌ வாழியே
நிகரில்‌ நன் ஞான யோகம்‌ நீண்டு செய்வோன்‌ வாழியே
நிர்ணயமாய்‌ ஐந்து பொருள்‌ நிலை யறிவோன்‌ வாழியே
அகமறுக்கும்‌ இராமர் பதம்‌ ஆசை யுள்ளோன்‌ வாழியே
ஆழ்வார்கள்‌ மறையதனை ஆய்ந்துரைப்போன்‌ வாழியே
செகதலத்தில்‌ குருகூரில்‌ செனித்த வள்ளல்‌ வாழியே
செய்‌(ய) குருகைக்‌ காவலப்பன்‌ திருவடிகள்‌ வாழியே-
-பாண்டிய தேசத்தில்‌ ஆழ்வார்‌ திருநகரியில்‌ தை மாதம்‌ விசாக நக்ஷத்ரத்தில்‌ அவதரித்தவர்‌ குருகைக்‌ காவலப்பன்‌. இவர்‌ இருப்பிடம்‌ ஸ்ரீமந்நாத முனிகளுடைய திருப்பள்ளி. அது அன்றைய சோழ தேசத்தில்‌ திருக்‌ காவேரிக் கரையில்‌ கங்கை கொண்ட சோழ புரம்‌ அருகில்‌ குருகைக் காவலப்பன்‌ கோயில்‌ அமைந்துள்ளது. இந்த ஆசாரியார்‌ ஸ்ரீமந்நாதமுனிகளிடம்‌ அடி பணிந்து ஞானம்‌ யோகம்‌ முதலான செல்வங்களைப்‌ பெற்றவர்‌. இவருக்கு கல்வி அஷ்டாங்க யோகம்‌. இவர்‌ நூற்றைம்பத்தொரு ஆண்டுகள்‌ எழுந்தருளி இருந்தார்‌ என்று பெரியதிருமுடி அடைவு கூறும்

மகரமதில்‌ – மகர மாதமான தை மாதத்தில்‌,
விசாகநாள்‌ – விசாக நக்ஷத்ரத்தில்‌,
வந்து உதித்தான்‌ வந்து அவதரித்தவர்‌,
வாழியே – வாழ வேண்டும்‌.
மாறன் தாள்‌ – நம்மாழ்வாரின்‌ திருவடியைப் பற்றின,
நாதமுனி – ஸ்ரீமந்நாதமுனிகள்‌,
மலரடியோன்‌ – மலர்ந்த திருவடிகளைப்‌ பற்றியவர்‌,
நிகரில்‌ – ஒப்பில்லாத,
நன் ஞான யோகம்‌ – பகவத் விஷயமாகிற நல்ல ஞான யோகத்தை,
நீண்டு செய்வோன்‌ – நீண்ட கால அனு பவத்தில்‌ கொண்டவர்‌,
நிர்ணயமாய்‌ – நிர்ணயிக்கப்‌ பட்டதாய்‌,
ஜந்து பொருள்‌ – அர்த்த பஞ்சகத்தின்‌,
நிலை அறிவோன்‌ – நிலைமையை அறிந்தவர்‌.
அக மறுக்கும்‌ – அகங்காரத்தை அறுக்கும்‌,
இராம பதம்‌ – இராமபிரான்‌ திருவடிகளில்‌,
ஆசையுள்‌ ளோன்‌ – ஆசை உடையவர்‌.
செகதலத்தில்‌ இவ்வுலகில்‌,
குருகூரில்‌ – ஆழ்வார்‌ திருநகரியில்‌ அப்பன்‌ கோயில்‌ என்ற தேசத்தில்‌,
செனித்த வள்ளல்‌ – அவதரித்த வள்ளல்‌.
செய்ய குருகைக்‌ காவலப்பன்‌ திருவடிகள்‌ – நேர்மை யான குருகைக்‌ காவலப்பன்‌ திருவடிகள்‌,
வாழியே – வாழ வேண்டும்

(மகரமதில்‌ நாள்‌ வந்துதித்தான்‌) குருகைக் காவலப்பன்‌ “ம்ருகே விசாக ஸம்பூதம்‌” என்று தனியனில்‌ அருளியபடி-பெளர்ணமியும்‌ மிருகசீரிஷ நக்ஷத்ரமும்‌ கூடிய மகர மாதத்தில்‌ விசாக நக்ஷத்ரத்தில்‌ அவதரித்‌தார்‌. இந்த மாதத்தில்‌ மக நக்ஷத்ரத்தில்‌ திருமழிசை ஆழ்வாரும்‌, வைசாகி விசாக நக்ஷத்ரத்தில்‌ நம்மாழ்வாரும்‌ அவதரித்த பெருமை யுடையதாகும்‌. இந்த ஆசார்யருக்கு திருமழிசை ஆழ்வார்‌ பிறந்த மாதத்திலும்‌, நம்மாழ்வார்‌ அவதரித்த நக்ஷத்ரத்திலும்‌ அவதரித்த பெருமை ஒரு சேரப் பெற்றது காணலாம்‌.

(மாறன் தாள்‌ நாத முனி மலரடியோன்‌) மலரடி- தாமரை போன்ற திருவடி “நாதமெளநி பதாச்ரிதம்‌” என்ற தனியனில்‌ அருளியபடியே ஸ்ரீமந் நாத முனிகளுடைய திருவடியில் ஈடுபட்டவர்‌ குருகைக் காவலப்பன்‌. ஸ்ரீமந்‌ நாதமுனிகளும்‌ மாறனான நம்மாழ்வாரிடம்‌ உபதேசம்‌ பெற்று நாலாயிரத்‌ திவ்ய பிரபந்தத்தைப்‌ பெற்று, பவிஷ்ய தாசார்யரான எம்பெருமானாரை ஆழ்வார்‌ திருவடிகளிலே தண்டம்‌ ஸமர்ப்பித்துப்‌ பெற்றதனாலும்‌, குருபரம்பராநு ஸந்தானத்திலே “ஸுமதே பராங்குசாய நம:” என்பதற்கு பிறகு ஸ்ரீமந்நாதமுநயே நம என்பதாலும்‌ மாறன்‌ தாளாக நாதமுனிகள்‌ திகழ்கிறார்‌ என்பது பொருத்த முடையதாகும்‌–அத்தகைய நாத முனிகள்‌ மலரடியை வணங்குபவர்‌ அப்பன்‌ ஆதலால்‌ “மலரடியோன்‌” என்றபடி. மேலும்‌ அஷ்டாங்க யோகத்தில்‌ ஈடுபட்டவரான குருகைக் காவலப்பன்‌ யோகிகளில்‌ சிறந்தவராய்‌, பெரும்‌ புகழாளராய்‌ ஸ்ரீமந் நாதமுனிகள்‌ வாழ்ந்த வீர நாராயண புரத்திலேயே ஆசார்ய கைங்கரியம்‌ செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்‌ என்றும்‌ பிரபந்நாம்ருதம்‌ கூறுவதால்‌ “நாதமுனி மலரடியோன்‌” என்று கொண்டாடத் தக்கதாகும்‌.

(நிகரில்‌ நன் ஞான யோகம்‌ நீண்டு செய்வோன்‌) நன் ஞானம்‌ – பகவத்‌ விஷயமாகிய விலக்ஷணமான ஞானம்‌. யோகம்‌ – ஸம்பந்தம்‌. திருவிருத்தத்தில்‌ (பாடல்‌-93) “நன் ஞானத்து” என்பதற்குச்‌ சேர பெரியவாச்சான் பிள்ளை, “ஞான மாகில்‌ பகவத்‌ விஷயத்தைக்‌ குறித்தன்று வேறு இராது” என்றும்‌, “ஒண் தாமரையாள்‌ கேள்வன்‌ ஒருவனையே நோக்கும்‌ உணர்வு என்று முதலாழ்‌ வாரும்‌ அருளியது காண்க. திருவாய்மொழியில்‌ (13-10) “துயக்கறு மதியில்‌ நன் ஞானத்துள்‌” என்று அருளியதற்கு ஏற்ப நன் ஞானமாவது நன்றான ஞானம்‌ என்பர்‌ நம்பிள்ளை. அதாவது, ஆத்ம யாதாத்ம ஞானம்‌. பரமாத்ம ஞானம்‌ என்றபடி. அத்தகைய ஞான யோகம்‌ கைவந்தவர்‌ அப்பன்‌ என்றபடி. மேலும்‌ ஸ்ரீமந் நாத முனிகளிடம்‌ ஒப்பற்ற நன்மை தரும்‌ அஷ்‌டாங்க யோகத்தை உபதேசமாகப்‌ பெற்று, அவரிடம்‌ பக்தியை காட்டும்‌ வகையில்‌ அவர்‌ பரமபதித்த இடத்திலேயே ஆயுள்‌ உள்ள வரையில்‌ தம்‌ ஆசார்ய திருவடியைத்‌ தியானம்‌ செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்‌ என்றும்‌ பிரபந்நாம்ருதம்‌ கூறுவதனாலும்‌ “நீண்டு செய்வான்‌” என்றபடி.

(நிர்ணயமாய்‌ ஐந்துபொருள்‌ யறியோன்‌) மோக்ஷத்திலே இச்சை உடையவர்களுக்கு அறிய வேண்டிய ரகசியம்‌ மூன்று என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது முதல்‌ ரகசியமான திருமந்திரத்தில்‌ ஐந்து பொருட்கள்‌ அறிய வேண்டி யவை. அவை யாவன, இறை இயல்பு, ஆத்மாவின்‌ இயல்பு, ஆத்மா இறையைப்‌ பற்ற உபாய இயல்பு, அந்த உபாயத்துக்கு வரும்‌ தடையான விரோதி இயல்பு, அந்த விரோதி நீங்கி பெறும்‌ பேற்றின்‌ இயல்பு என ஐந்து நிலைகளாகும்‌. இதனை அப்பன்‌ தன்‌ ஆசார்யரான ஸ்ரீமந் நாதமுனிகளிடமிருந்து அறிந்தவர்‌ ஆகையாலே ஐந்து பொருள்‌ நிலை அறிவோன்‌ என்றபடி –

(அகமறுக்கும்‌ இராமர் பதம்‌ ஆசை உள்‌ ளோன்‌ ) குருகைக் காவலப்பனுடைய திருவாரதனப்‌ பெருமாள்‌ சக்ரவர்த்தி திருமகன்‌. இராமர்‌ அருளிய சரம ஸ்லோகங்கள்‌ இரண்டு. அதில்‌ சக்ரவர்த்தி திருமகனான “மித்ரபாவநே ஸம்ப்ராப்‌தம்‌” (யு.கா.183) என்ற ஸ்லோகத்தின்‌ படியே அகங்காரமுடையவன்‌ ஆயினும்‌ பகையின்மை அநுகூலமாயிருக்கை ஆகியவற்றால்‌ நெருங்கி வந்தவனை ஒரு படியாலும்‌ என்‌ பிராணனுக்குக்‌ கேடு வருவதாயிருந்தாலும்‌ அவனை விடமாட்டேன்‌ என்று விரதம்‌ பூண்ட இராம பிரானுடைய திருவடிகளில்‌ அப்பன்‌ ஆசை உடையவரான படியால்‌ அகமறுக்கும்‌ இராமர் பதம்‌ எனப்பட்டது காணலாம்‌.

(ஆழ்வார்கள்‌ மறையதனை ஆய்ந்து உரைப்போன்‌) நம்மாழ்வார்‌ அருளிய திருவிருத்‌தத்தில்‌ (38) “கடமாயினகள்‌ கழித்து” என்ற பாடலில்‌ குருகைக் காவலப்பன்‌ ஆய்ந்துரைத்த ஒரு ஐதிகத்தை நம்பிள்ளை காட்டி உரைப்பர்‌. ஒருவன்‌ உலகுக்கும்‌ ஈஸ்வரனுக்கும்‌ உள்ள ஸம்பந்தம்‌ எப்படிபட்டது என்று கேட்டான்‌. அதற்கு அப்பன்‌ இந்த உலகுக்கும்‌ ஈஸ்வரனுக்கும்‌ உள்ள தொடர்பை நீயா கேட்பது என்றார்‌. அதாவது “ஈஸ்வரனான இந்த ஜீவாத்மா பிறக்‌கும்‌ போது எந்த உடலைப்‌ பெற்று மரணத்தின் போது எந்த ஒரு உடலிலிருந்து கிளம்புகிறதோ” என்று பகவத்‌ கீதையில்‌ (15-8) கூறியபடி உறுப்புக்களோடு கூடியிருக்கும்‌ இந்த உடலாகிற இந்த உலகுக்கு ஜீவாத்மாவை ஈஸ்வரனாகச்‌ சொல்லிற்று.இந்த உடலுக்கும்‌ இதற்கு ஜீவாத்மாவுக்கும்‌ உள்ள தொடர்பாகிற உடல்‌ உயிர் தன்மையே உலகுக்கும்‌ ஈஸ்வரனுக்கும்‌ உள்ள தொன்‌றாகும்‌ என்பர்‌. மேலும்‌ அந்த மனிதன்‌ அப்பனைப்‌ பார்த்து “எம்பெருமானை எப்போதும்‌ நினத்துக்‌ கொண்டிருக்கும்‌ நீர்‌, அவனை நினைக்க எனக்கு ஒரு வழி சொல்ல வேண்டும்‌” என்றான்‌. உடனே அப்பன்‌ “நான்‌ உனக்கு எம்பெருமானை நினைக்க வழி சொல்கிறேன்‌. நீ அவனை மறக்க ஒரு வழி சொல்வாயாக” என்றார்‌.-அதாவது ஒரு பொருளானது பொருளாயிருப்‌பதும்‌ அதற்கு ஒரு பெயர்‌ உண்டாவதும்‌ எம்பெருமான்‌ அதன்‌ உள்ளே உறைதலாலேயே ஆகும்‌. அவ்வாறு இருக்கும்‌ போது அவன்‌ உள்‌ளுறை நிலையாய்‌ அடைமொழியாய்‌ எந்தப்‌ பொருளைப் பார்த்தாலும்‌ உடலாய்‌ அடை கொளியான எம்பெருமானுடைய நினைவும்‌ வந்தே தரும்‌. எனவே நினைக்க ஒரு வழி சொல்ல வேண்டுமோ என்றபடி.
மேலும்‌ திருவாய்மொழியில்‌ “சிக்கெனச்‌ சிறிதோரிடமும்‌” (2-6-2) என்ற பாசுரத்தில்‌ “எங்கும்‌ பக்கம்‌ நோக்கி அறியான்‌” என்பதற்குச் சேர ஆழ்வார்‌ பக்கல்‌ எம்பெருமானுக்கு உண்டான மிக்க அன்பைத்‌ தவிர்க்க வேணும்‌ என்ற நாச்சிமார்‌ திருமுலைத்‌ தடத்தாலே நெருக்கிலும்‌ அவர்கள்‌ பக்கல்‌ கண்‌ வைக்க வில்லை என்பர்‌.-இந்த இடத்தில்‌ ஆளவந்தாருக்குக்‌ குருகைக்‌ காவலப்பன்‌ அருளிச்‌ செய்ததைக்‌ காட்டி உரைப்பர்‌. ஆளவந்தாரின்‌ ஆசார்யரான மணக்கால்‌ நம்பி அருளியபடியே குருகைக் காவலப்பனிடத்தில்‌ ஒரு ரகசிய விசேஷம்‌ அறியவேண்டி , ஆளவந்தார்‌ அதனை அறிய கங்கைகொண்ட சோழபுரம்‌ சென்றார்‌. அங்கே குருகைக் காவலப்பன்‌ ஒரு குட்டிச்‌சுவரில்‌ யோகத்தில்‌ எழுந்தருளி யிருந்தார்‌. இவரை இப்போது தடங்கல்‌ செய்யக்கூடாது என்றெண்ணி ஆளவந்தார்‌ சுவருக்கு பின்பு நின்றார்‌. அப்போது குருகைக் காவலப்பனும்‌ திரும்பிப்‌ பார்த்து சொட்டைக்‌ குலத்தில்‌ ஆரேனும்‌ வந்தாருண்டோ? என்று கேட்டார்‌.-ஆச்சரியப்பட்ட ஆளவந்தார்‌ அடியேன்‌ பின்னே இருப்பது எப்படி தெரிந்தது என்று கேட்க, அப்பனும்‌ “நானும்‌ எம்பெருமானுமாக அனுபவித்திருந்தால்‌ பெரிய பிராட்டி திருமுலைத்‌ தடத்தாலும்‌ நெருக்கி அணைத்தாலும்‌ அவள்‌ முகம்‌ கூடப்பாராத எம்பெருமான்‌, என்‌ கழுத்தை அமுக்கி நாலு மூன்று தடவை அங்கே எட்டிப் பார்த்தான்‌. இப்படி அவன்‌ பார்த்த போது தான்‌ நான்‌ சொட்டைக்‌ குலத்தில்‌ சிலர்‌ வந்திருக்க வேணும்‌” என்று அறிந்தேன்‌ என்றாராம்‌.-இதனால்‌ அப்பன்‌ ஆழ்வார் பால்‌ கொண்ட பக்தியின்‌ பெருக்கால்‌ ஆழ்வார்‌ சொன்ன பாசுரத்திற்கு ஏற்ப, ஆய்ந்து சொல்லும்‌ அநுபவம்‌ அறியலாகும்‌. இதுபற்றியே “ஆய்ந்துரைப்போன்‌” என்று அருளியது காணலாம்‌. பேயாழ்வாரிடம்‌ பக்தி கொண்டவராய் அவர்‌ அருளிய மூன்றாம்‌ திருவந்தாதிக்கு ஆழ்வார்‌ திருவடிகளைப்‌ போற்றி “சீரான்‌ கழலே உரைக்‌ கண்டாய்‌ நெஞ்சே உரை” என்று நெஞ்சைப்‌ பார்த்து அருளுவது காணலாம்‌.

செக தலத்தில்‌ குருகூரில்‌ செனித்த வள்ளல்‌) செக தலம்‌ – உலகம்‌. பாண்டியநாட்டில்‌ தாமிரபரணி என்ற பொருநை யாற்றங்கரையில்‌ அமைந்த திருக்‌ குருகூர்‌ நம்மாழ்வாரால்‌ பாடப்பெற்ற திவ்ய தேசங்களில்‌ ஒன்று. அந்த நாட்டைத்‌ தலைநகராகக்‌ கொண்டு குருகன்‌ என்னும்‌ அரசன்‌ நீதி தவறாமல்‌ ஆண்டு வந்ததால்‌ திருக்குருகூர்‌ என்று அழைக்கப்‌ பட்டது. வள்ளலான நம்மாழ்வார்‌ அவதரித்த அந்த குருகூருக்கு உட்பட்ட தேசமான அப்பன்‌ கோவிலில்‌ இந்த ஆசார்யார்‌ அவதரித்ததனால்‌ இவரும்‌ வள்ளல்‌ என்று கொண்டாடப்படுவர்‌.

செய்ய குருகைக் காவலப்பன்‌ திருவடிகள்‌)– குருகை – பிரம்மன்‌ தவம்‌ செய்து எம்பெருமானை வேண்ட தாமிரபரணி தென் கரையிலுள்ள ஆதி க்ஷேத்திரத்தைக்‌ காட்டிக்‌ கொடுத்து “குரு ச அத்ர மதர்சனம்‌” என்கிறபடியே “ஆதிநாதனான எனக்கு இங்கு அர்ச்சனை செய்‌” என்று நாராயணன்‌ அருளியதால்‌ பிரமனும்‌ பெருமானை நோக்கி-குருக அத்ர மதர்சனம்‌” என்கிறபடியே தங்களுக்கு தரிசனம்‌ கொடுத்த அந்த ஆதி க்ஷேத்ரத்துக்கு குருகபுரி என்று மற்றொரு பெயர்‌ வைக்க விரும்பினான்‌. எம்பெருமானும்‌ இசைந்ததால்‌ அது குருகை ஆயிற்று. இதில்‌ அவதரித்தவர்‌ குருகைக் காவலப்பன்‌ ஆவார்‌. இத்தகைய பெருமைப்‌ பெற்ற குருகைக்‌ காவலப்பன் திருவடிகளுக்கு பல்லாண்டு பாடுவோமாக-

அன்புடனே நாதமுனி அடி பணிந்தோன்‌ வாழியே
ஆனி தனில்‌ திருவோணத்தில்‌ அவதரித்தான் வாழியே
இன்பமுடன்‌ கண்ண மங்கை வந்து உதித்தான்‌ வாழியே
எழிலுடனே நாதனாக ஆட்சி செய்தான்‌ வாழியே
துன்பமென தன் முயற்சி நீத்த செல்வன்‌ வாழியே
தூமணி வண்ணன்‌ தாள்‌ கதி என்றான்‌ வாழியே
அன்பால்‌ உலகாரியனார்‌ போற்ற நின்றான் வாழியே
அழகாரும் திருக்கண்ணமங்கை யாண்டான் வாழியே –

திருக்கண்ணமங்கையாண்டான்‌ என்னும்‌ ஆசார்யர்‌ பத்தாம்‌ நூற்றாண்டில்‌ ஆனி மாதம்‌ திருவோணம்‌ நக்ஷத்‌ரத்தில்‌ தமிழ்‌ நாட்டில்‌ கொடை வாசல்‌ அருகிலுள்ள திருக்‌ கண்ண மங்கை என்னும்‌ திவ்ய தேசத்தில்‌ அவதரித்தவர்‌. ஸ்ரீ க்ருஷ்ண லக்ஷ்மி நாதாசார்யர்‌ என்ற இயற்பெயர்‌ கொண்ட இவ்வாசாரியர்‌, ஸ்ரீமந்நாதமுனிகளின்‌ தேக ஸம்பந்தம்‌ பெற்றவராய்‌, அவருடைய எட்டு சீடர்களில்‌ ஒருவருமாவார் –

அன்புடனே-அன்போடு,
நாதமுனி-ஸ்ரீமந்நாத முனிகளின்‌,
அடி பணிந்தோன்‌-திருவடிகளைப்‌ பற்றினவர்‌,
வாழியே-வாழ வேண்டும்‌.
ஆனி தனில்‌-ஆனிமாதத்தில்‌,
திருவோணத்தில்‌-திருவோண நக்ஷத்திரத்தில்‌,
அவதரித்தவர்‌-தோன்றியவர்‌.
இன்பமுடன்‌ மகிழ்ச்சியுடன்‌,
திருக்கண்ண மங்கை -திருக் கண்ணமங்கை என்னும்‌ திவ்ய தேசத்தில்‌, வந்து உதித்தான்‌-வந்து தோன்றியவர்‌. எழிலுடனே-அழகுடனே,
நாதனாக-தலைவராக
ஆட்சி செய்தான்‌-கைங்கர்யம்‌ செய்தவர்‌.
துன்பமென- இந்தப்பிறவித்‌ துன்பம்‌ என்று,
தன்முயற்சி-தான்‌ முயல்வதை,
நீத்த-விட்ட,
செல்வன்‌-சிறப்புடையவர்‌.
தூமணி வண்ணன்‌ தூய மணி போன்ற பெருமாள்‌,
தாள்‌-திருவடி,
கதி-புகல்‌,
என்றான்‌-என்று இருந்தவர்‌.
அன்பால்‌-அன்புடனே,
உலகாரியனார்‌-பிள்ளை லோகாசார்யரால்‌,
போற்ற நின்றான்‌-புகழும்படி இருந்தவர்‌. அழகாரும்‌-அழகு நிறைந்த திருக்‌ கண்ண மங்கையாண்டான்‌,
வாழியே- பல்லாண்டு வாழ வேண்டும்-

(அன்புடனே நாதமுனி அடி பணிந்தோம்‌) ஸ்ரீ மந்நாதமுனிகளின்‌ சீடர்களில்‌ ஒருவர்‌ திருக்கண்ண மங்கையாண்டான்‌ ஆவர்‌. சீடருக்கு உரிய குண நிறைவை உடையவர்‌. தம்‌ ஆசார்யரிடம்‌ அன்பு கொண்டதால்‌, அவ்வாசிரியரும்‌ இவருக்கு துவய மந்திர உபதேசம்‌ செய்தார்‌. மேலும்‌ திருவாய்மொழி முதலான திவ்ய பிரபந்தங்களை கற்பித்தார்‌. திருவாய்மொழியில்‌ ஐந்தாம்‌ பத்தில்‌ “பொலிக பொலிக” என்ற பதிகத்தை உபதேசிக்கும்‌ போது ஸ்ரீமந்நாதமுனிகள்‌ ஆழ்வார்‌ தமக்குக்‌ கனவில்‌ அருளிய திவ்ய ஸுக்திகளையும்‌ தாம்‌ உடனே கனவில்‌ நேராகக்‌ கண்ட தேவரீரோடே கண்ட கனவு பற்றியும்‌ அருளினார்‌. திருக்கண்ணமங்கை யாண்டானும்‌ வ்யக்தியை ஸம்பந்தம்‌ உள்ள அடியேனுக்கு ஒரு குறைகளும்‌ இல்லை” என்று பெருமிதமடைந்தார்‌. ஸ்ரீமந்நாத முனிகள்‌ சம்பந்தத்தால்‌ வேதாந்தங்கள்‌ அனைத்தும்‌ கற்ற திருமழிசையாழ்வாரைப்‌ போல குற்றமற்றவர்‌. வேதார்த்தங்களை நிர்ணயிப்பதிலும்‌ பேச்சு வன்மையிலும்‌ பிரஹஸ்பதியைப்‌ போன்றவர்‌. பிரகலாதனைப்‌ போல பக்தி மிகுந்தவர்‌. நாதமுனிகள்‌ போல எம்பெருமானுடைய திருநாமங்களை ஸங்கர்த்‌தனம்‌ செய்பவர்‌. உபய வேதாந்த ஸாரத்தை அறிந்தவர்‌. இதுபற்றியே “அன்புடனே நாதமுனி அடி பணிந்தவன்‌” என்றது காண்க –

(ஆனி தனில்‌ திருவோணத்தில்‌ அவதரித்‌ தான்‌) ஆனி-வடமொழியில்‌ ஜ்யேஷ்ட மாதம்‌ எனப்படும்‌. திருவோணம்‌-விஷ்ணு நக்ஷத்திரம்‌. இத் திருவோணம்தான்‌ நக்ஷத்ர பெருமையில்‌ மீன்‌, ஆமை, வராகம்‌ ஆகிய அவதாரங்களைச்‌ செய்த விஷ்ணுவானவர்‌ ஐப்பசி மாதம்‌ அவதரித்ததாக பாஞ்சராத்ர ஆகமம்‌ கூறும்‌. இப்படிபட்ட பெருமை கொண்ட திருவோணத்தில்‌ ஆனி மாதம்‌ கிருஷ்ண பக்ஷத்தில்‌ அவதரித்தவர்‌ திருக்கண்ண மங்கை யாண்டான்‌ ஆவார்‌. இவர்‌ பராத்ரர்‌ என்ற நித்ய ஸுரியின்‌ அம்சமாவார்‌.

இன்பமுடன்‌ கண்ண மங்கை வந்துதித்‌தான்‌) ஆழ்வார்களால்‌ பாடப்பெற்ற 108 திவ்ய தேசங்களில்‌ சோழநாட்டு திருப்பதியில்‌ ஒன்றானது திருக்கண்ணமங்கை என்னும்‌ திவ்ய தேசமாகும்‌. திருமங்கையாழ்வாரால்‌ இன்பம்‌ பயக்க 14 பாசுரங்‌ களால்‌ பாடப்பெற்ற திருத்தலமாகும்‌. கண்ண மங்கைக்கு “கழுநீர்‌ மலரும்‌ வயல்‌” (பெரி.திரு.7-10-6) என்றும்‌, “களிவண்டறையும்‌ பொழில்‌” (பெரி.திரு.710-7) என்றும்‌, “கருநெல்‌ சூழ்‌” (பெரி.திரு.10-1-1) என்றும்‌, “கன்னமதில்‌ சூழ்‌” (பெரி.மடல்‌ 116) என்றும்‌ திருமங்கையாழ்வாரால்‌ பாடப் பெற்றது.மேலும்‌, அங்கு நின்ற கோலத்தில்‌ எழுந்தருளியிருக்கும்‌ எம்பெருமானை, “பெரும்புறக்கடலை”, “அடலேற் றினை” , “இன்சுவைக்‌ கரும்பினை” என்று பலபடியாக பெரியதிருமொழி ஏழாம்‌ பத்து, பத்தாம்‌ பதிகத்தில்‌ 97 திருநாமங்களைக்‌ கொண்டு ஆழ்வார்‌ அழைக்கும்‌ அழகு, இன்பம்‌ பயப்பதாகுவது பற்றி “இன்பமுடன்‌ கண்ணமங்கை” என்றபடி. இத்தகைய திருத்தலத்தில்‌ உதித்தவர்‌ ஆண்டான்‌ ஆவார்‌. உதித்தலாவது சூரியன்‌ உதிக்கும்‌ போது ஒளி அமைந்தது போல ஆண்டானும்‌ அந்தணர்‌ தலைவராக அவதரித்து தந்தையால்‌ உபநயனம்‌ செய்விக்கப் பெற்று ஒரு விஜாய மாத்ரத்தினால்‌ ஆசார்யருடைய திருமுகத்தில்‌ இருந்து எல்லா வேதங்களையும்‌ அத்யயனம்‌ செய்தவராவார்‌. இதுவன்றோ உதித்ததின்‌ பெருமை-

எழிலுடன் நாதனாக ஆட்சி செய்தான் எழில்‌- அழகு, நாதன்‌ – தலைவன்‌ என்று சொல்லுகிறபடியே நம்‌ வைணவ தர்சனத்‌துக்குத்‌ தலைவராவார்‌. ஸ்ரீ பாகவத புராணம்‌ பன்னிரண்டாம்‌ ஸ்கந்தத்தில்‌, பன்னிரண்டாம்‌ அத்தியாயத்‌தில்‌, பதினாறு நாதர்களுடைய விஷயம்‌ சொல்லப்‌ பட்டுள்ளது காணலாம்‌. தலைமையாம்‌ தன்மைக்‌ கேற்ப தம்‌ ஆசார்யரான ஸ்ரீமந்நாதமுனிகளைப்‌ போல ஞானம்‌, பக்தி,வைராக்கியம்‌ முதலான நற் குணங்களுக்கு ஓர்‌ கொள்கலமானவர் –ஐந்தாவது உபாயமான ஆசார்யனே உபாயம்‌ என்ற ஊற்றத்தை உடையவர்‌. தமிழ்‌ வேதம்‌ வட மொழி வேதம்‌ ஆகியவற்றின்‌ ஸாரத்தை அறிந்தவர்‌. ஆட்சியாவது எம்பெருமானுக்குக்‌ கைங்கர்யம்‌. கைங்கர்யமாவது ஸ்ரீமந்நாதமுனிகள்‌ நியமனத்தினால்‌ திருக்கண்ணமங்கை திவ்ய தேசத்தை அடைந்து ஊக்கத்துடன்‌ ஸ்ரீ கிருஷ்ண துளசி மாலைகளை ஸமர்ப்பிக்கும்‌ கைங்கர்யத்தில்‌ ஈடுபடுத்திக்‌ கொண்டதாகும்‌. மேலும்‌ ஆழ்வார்களைப்‌ போல பகவத்‌ கைங்கர்யமாகிற சுவையை பருகுபவராய்‌ இருந்தார்‌-கண்ணமங்கையில்‌ துளசி தோட்டத்தை உண்டாக்க, தினமும்‌ துளசி இதழ்களைத்‌ தொடுத்து, மாலையாக்கி, பக்தியுடன்‌ கண்ணமங்கை பக்தவத்ஸலப்‌ பெருமாள்‌ உகப்புக்கு ஏற்ப ஸமர்ப்பித்து வந்தவர்‌. ஆண்டாளிடமும்‌, அவள்‌ அருளிய நாச்சியார்‌ திருமொழியிலும்‌ மிக்க பக்தி உடையவராகையாலே வாசிக கைங்கர்யமாக “அல்லி நாள்‌…” என்ற ஒரு தனியன்‌ மூலம்‌ அப்போது அலர்ந்த தாமரைப் பூவில்‌ பொருந்தி இருக்கும்‌ தெய்வப்‌ பெண்ணான பெரிய பிராட்டியாருக்கு இனிமையான துணைவி என்றும்‌, மல்லிநாட்டை தன்‌ குணத்தாலே ஈடுபடுத்தி ஆண்ட அழகிய மயில்‌ போன்றவள்‌ என்றும்‌, மென்மைத்‌ தன்மையுடையவளான ஆண்டாள்‌ கண்ணன்‌ திருமேனியில்‌ பொருத்த முடையள்‌ என்றும்‌, அழகிய ஸ்ரீவில்லிபுத்தூரில்‌ வேயர்‌ குலத்தில்‌ பெரியாழ்வாராலே பெறப்பட்ட விளக்கு என்றும்‌ அருளியது காணலாம்‌. இதனால்‌ காயிக வாசிக கைங்கர்யமாகிற ஆட்சி நடத்தினபடி-

துன்பமென தன் முயற்சி நீத்த செல்வன்‌ –-கைம்மாறு கருதாது பெருமாளுக்குக்‌ கைங்கர்யம்‌ செய்து வரும்‌ ஆண்டாள்‌ ஒருநாள்‌ இரண்டு சேவகர்கள்‌ கையில்‌ கத்தியை ஏந்தியவர்களாய்‌, செருப்பு அணிந்துக்‌ கொண்டு நாயை ஒவ்வொருவரும்‌ அழைத்துக்‌ கொண்டு வந்தனர்‌. பெருமாள்‌ பெருமையைக்‌ கேட்டு அவர்கள்‌ இருவரும்‌ பெருமாளை சேவிக்க கோயிலுக்குள்‌ சென்றனர்‌. தங்கள்‌ செருப்புக்களை கோயில்‌ வாசலில்‌ விட்டு, அவற்றை பாதுகாக்க தங்கள்‌ நாயை காவலாக வைத்துச்‌ சென்றனர்‌. அதற்குள்‌ ஒரு நாய்‌ மற்றொரு சேவகன்‌ செருப்பை கவ்வவே நாய்கள்‌ சண்டையிட்டன.-ஒரு சேவகனுடைய நாயை ஒரு சேவகன்‌ அடிக்க, அவன்‌ அதை பொறுக்காது அடித்தவனோடு எதிர்த்த பொழுது அவனையும்‌ கொன்று தானும்‌ குத்திக்‌ கொண்டு இறப்பதைக்‌ கண்டார்‌ ஆண்டான்‌.-உடனே ஒரு தாழ்ந்த சேதனன்‌ தன்‌ அபிமானத்திலே நாய்‌ ஒதுங்கினது என்னும்‌ இவ்வளவுக்காகத்‌ தன்னை அழிய மாறினபடியைக்‌ கண்டால்‌, பரம சேதனான பெருமாள்‌ அபிமானத்‌ திலே ஒதுங்கினால்‌ அவன்‌என்படுமோ? என்று தன்‌ முயற்சிகளை முழுவதும்‌ விட்டு, அந்த நாயைப் போல தம்மை நினைத்துக் கொண்டு திருக்கண்ண மங்கையில்‌ அப்போதே வாசல்படியின்‌ மேல்‌ கட்டையிலிருந்து குதித்து பத்தராவிப்‌ பெருமாள்‌ கோபுர வாசலுள்‌ உள்ளிருக்கிற ஒட்டுத்திண்ணையில்‌ இருந்து வாழ் நாளைக்‌ கழித்தார்‌.-பகவத்‌ பக்தராய்‌ தனது பொறுப்பு முழுவதையும்‌ ஸ்ரீய:பதியான பக்தவத்ஸல பெருமாளிடம்‌ ஒப்படைத்தார்‌. தனக்காக தான்‌ முயல்வதை விட்டு எல்லா நித்ய நைமித்திக கர்மாநுட்டானங்களையும்‌ விட்டு நாயைப்‌ போல இரண்டு கைகளையும்‌ கால்களாக்கிக்‌ கொண்டு நான்கு கால்களாலே திரியலானார்‌. பெருமாள்‌ கோயிலில்‌ ஒரு மகிழ மரத்தடியில்‌ மெளனமாக இருப்பவராய்‌, பெருமாள்‌ பிரசாதத்தை உண்டு வாழ்ந்தார்‌. இது கொண்டு திருக்கண்ண மங்கையில்‌ “தன்‌ முயற்சி நீத்த செல்வன்‌” என்று சொல்லப்பட்டது. இதுபற்றியே ஸ்ரீ வசனபூஷணத்தில்‌ (82) பிள்ளை லோகாசார்யார்‌–திருக்கண்ணமங்கை ஆண்டான்‌ ஸ்வ வ்யாபாரத்தை விட்டான்‌ என்று அருளினார்‌. ஸ்வவ்யாபாரமாவது – தன்‌ முயற்சி யால்‌ தன்னைக்‌ காத்துக்‌ கொள்ளுதல்‌. இதனால்‌ ஆண்டானுடைய அரிய விச்வாஸம்‌ சொல்லப்‌ பட்டது. பெரியவாச்சான்‌ பிள்ளையும்‌ தாம்‌ அருளிய மாணிக்க மாலையில்‌ “…… திருக்கண்ண மங்கை யாண்டானைப்‌ போல பரபரப்பற்று வகுத்தவன் எம்பெருமான்‌ வாசலிலே தன்னைப்‌ பேணாது ஒதுங்கும்‌” என்று உரைப்பார்‌-மேலும்‌ தொண்டரடிப்‌ பொடியாழ்வார்‌ அருளிய திருமாலையில்‌ முப்பத்து எட்டாவது பாசுரத்தில்‌ “உன்‌ கடைத்தலை இருந்து” என்ற தொடருக்குச்‌ சேர திருக்கண்ண மங்கையாண்டான்‌ எம்பெருமான்‌ திருவாசலைப்‌ பற்றிக்‌ இடந்ததை எடுத்து உரைப்பர்‌. இந்த விச்வாஸத்தினால்‌ தூமணி வண்ணனான பத்தராவிப்‌ பெருமாளையே கதியாகப்‌ பற்றினார் என்க –

(அன்பால்‌ உலகாரியனார்‌ போற்ற நின்றான்‌) உலகாரியான்‌ – வடக்குத்‌ திருவீதிப்‌ பிள்ளையின்‌ குமாரருக்கு நம்பிள்ளை இட்டபெயர்‌ பிள்ளை லோகாசார்யார்‌ என்பதாகும்‌. இவர்‌ அருளிய ஸ்ரீ வசன பூஷணம்‌ என்னும்‌ நூலில்‌ மூன்றாம்‌ பிரகணத்தில்‌ (80) ஆண்டானிடம்‌ அன்பு கொண்டு “உபாயத்‌ துக்கு…. திருக்கண்ணமங்கை ஆண்டானைப்‌ போல இருக்க வேணும்‌” என்று ஸூத்திரமிடுகிறார்‌. இதற்கு மாமுனிகளும்‌ அற்புதமான வியாக்கியானம்‌ வழங்கியுள்ளார்‌. இதனால்‌ இவருக்கு ஆண்டான்‌ பால்‌ கொண்ட அன்பின்‌ வெளிப்பாடாக போற்றுவது காணலாம்‌-

(அழகாரும்‌ திருக்கண்ணமங்கை யாண்டான்‌)அழகு- அவயவ அழகு, பராத்பரர்‌ என்ற நித்யஸுரி அம்சமாகப்‌ பிறந்தவராதலால்‌ அழகு மிக்கிருந்தவர்‌. இதனால்‌ கல்வி, ஒழுக்கம்‌, நிரம்பப்‌ பெற்றவரானார்‌. அதாவது தந்தையால்‌ உபநயனம்‌ செய்வித்த பிறகு பிரம்மசரிய விரதத்தில்‌ ஊன்றியவர்‌; ஆசாரியனிடத்தில்‌ வேதங்களையும்‌ எல்லா அத்யயனம்‌ செய்தவர்‌. விடியற்காலையில்‌ நீராடி சாஸ்த்ரங்களில்‌ விதிக்கப்பட்ட கர்மங்களை செய்தவர்‌. வைதக ஆசாரங்களோடு கூடியவர்‌. பஞ்ச மஹா வேள்வி களைச்‌ செய்பவர்‌. வேத வேதாந்தங்களை அர்த்தத்‌துடன்‌ கற்றவர்‌. நல்லோர்களின்‌ ஒழுக்கத்தைக்‌ கடைபிடிப்பவர்‌. ஸ்ரீமந்நாதமுனிகளிடம்‌ பஞ்ச ஸம்ஸ்காரம்‌ செய்யப்‌ பெற்றவர்‌. ஸ்ரீ வைஷ்ணவர்‌களில்‌ சிறந்தவர்‌. அறிவாளி. பெரும்‌ புகழாளராய்‌ விளங்கினார்‌. இத்தகைய பெருமைப்‌ பெற்ற திருக்கண்ணமங்கை ஆண்டானுக்கு பல்லாண்டு பாடுவோமாக

தேசம்‌ உய்யக்கொண்டவர் தாள்‌ சென்னி வைப்போன்‌ வாழியே
தென்னரங்கர்‌ சீர்‌ அருளைச்‌ சேர்ந்திருப்போன்‌ வாழியே
தாசரதி திருநாமம்‌ தழைக்க வந்தோன்‌ வாழியே
தமிழ்‌ நாதமுனி உகப்பைத்‌ தாபித்தான்‌ வாழியே
நேசமுடன்‌ ஆரியனை நியமித்தான்‌ வாழியே
நீணிலத்தில்‌ பதின்மர்கலை நிறுத்தினான்‌ வாழியே
மாசி மகந்தனில்‌ விளங்க வந்துதித்தான்‌ வாழியே
மால்‌ மணக்கால்‌ நம்பி பதம்‌ வையகத்தில்‌ வாழியே-
மணக்கால்‌ நம்பி என்னும்‌ ஆசார்யர்‌ சோழ தேசத்தில்‌ திருக்காவேரி தீரத்தில்‌ கோயில்‌ பிரதேசம்‌ மணக்கால்‌ என்னும்‌ கிராமத்தில்‌ விரோதிக்ருத்‌ வருடம்‌ மாசி மாதம்‌ மக நக்ஷத்ரத்தில்‌ அவதரித்தார்‌. இவர்‌ குமுதாக்ஷர்‌ அம்ஸராய்‌, ராமமிச்ரர்‌ என்ற இயற்பெயரைக்‌ கொண்டவர்‌. ஆளவந்தார்‌, திருவரங்கப்பெருமாள்‌ அரையர்‌, தெய்வத்துக்கரசு நம்பி, பிள்ளையரசு நம்பி, சிறுபுள்ளூருடையார்‌ பிள்ளை, திருமாலிருஞ்சோலை, வங்கிபுரத்து ஆச்சி ஆகியோர்‌ சீடர்கள்‌ ஆவர்-

தேசம்‌ – ஒளியுடைய,
உய்யக் கொண்டவர் தாள்‌ – உய்யக் கொண்டார்‌ என்னும்‌ ஆசார்யர்‌ திருவடியில்‌,
சென்னி வைப்போன்‌ – தலையை வைத்து வணங்கும்‌
மணக்கால்‌ நம்பி, வாழியே-வாழ வேண்டும்‌.
தென்னரங்கர்‌ – தெற்குத்‌ திக்கிலுள்ள திருவரங்கர்‌,
சீர்‌-சீரியதான,
அருளை – அருளை,
சேர்ந்திருப்‌ போன்‌ – பெற்றவர்‌.
தாசரதி – தசரதன்‌ மகனான இராமன்‌,
திருநாமம்‌ – பெயரை யுடைய ராம மிஸ்ரர் –
தழைக்க வந்தோன்‌ – சிறப்பாக வாழ்ந்தவர்‌.
தமிழ்‌ நாதமுனி – தமிழ்‌ பிரபந்தத்தை வளர்த்த,
நாதமுனி ஸ்ரீமந்நாதமுனிகள்‌ என்னும்‌ ஆசார்யர்‌,
உகப்பை மகிழ்ச்சியை,
தாபித்தான்‌ – நிலை நிறுத்தியவர்‌.
நேசமுடன்‌ – அன்புடன்‌,
ஆரியனை – ஆசார்யரான ஆளவந்தாரை,
நியமித்தான்‌ – தன்‌ சொல்படி கேட்கச்‌ செய்தவர்‌.
நீணிலத்தில்‌ – பெருமை பொருந்திய உலகில்‌,
பதின்மர்‌ – பத்து ஆழ்வார்களின்‌,
கலை அருளிச்‌ செயலை,
நிறுத்தினான்‌ – நிலை பெறச்‌ செய்தவர்‌.
மாசி மகந்தனில்‌ – மாசி மாதம்‌ மகம்‌ நக்ஷத்ரத்தில்‌,
விளங்க – பிரகாசிக்க,
வந்துதித்தான்‌ வந்து அவதரித்தவர்‌.
மால்‌ – பெருமை பொருந்திய
மணக்கால்‌ நம்பி, பதம்‌ – திருவடிகள்‌,
வையகத்தில்‌ உலகில்‌,
வாழியே – வாழ வேண்டும் –

(தேசம்‌ உய்யக் கொண்டவர் தாள்‌ சென்னி வைப்போன்‌) “தேசு” என்ற வடசொல்‌, தேசம்‌ என்றாயிற்று. “தேசம்‌ உடையாய்‌” (திருப்பாவை 7) என்று ஆண்டாள்‌ திருப்பாவையில்‌ அருளியது காண்க. தேசு – ஒளி, ஞானம்‌, பெருமை என்று பல பொருள்‌. ஸ்ரீமந்நாதமுனிகள்‌ அருளைப்‌ பெற்றதனால்‌ உய்யக் கொண்டார்‌ தேசுடையவரானார்‌.-மேலும்‌, ஸ்ரீமந்நாத முனிகளிடம்‌ தமிழ்‌ ஞானமாகிற திவ்ய ப்ரபந்தத்தைப்‌ பெற்றதனால்‌ தேசமுடையவரானார்‌. அவற்றை மணக்கால்‌ நம்பி உள்ளிட்ட தம்‌ சீடர்களுக்கு அருளியதால்‌ பெருமை படைத்து தேசமுடையவரானார்‌.அத்தகைய பெருமை படைத்த உய்யக் கொண்டார்‌ திருவடிகளைத்‌ தம்‌ தலையில்‌ சேர்த்துக்‌ கொண்டவர்‌ மணக்கால் நம்பி -எங்ஙனே என்னில்‌ – பன்னிரண்டு வருடம்‌ தம்‌ ஆசார்யரான உய்யக் கொண்டார்‌ திருவடிகளிலே இளைய பெருமாளைப்‌ போலே எல்லாவித கைங்கர்‌யங்களையும்‌ செய்தவர்‌. ஆசார்யருடைய தேவிகள்‌ பரமபதித்த பிறகு, திருமாளிகை கைங்கர்யமெல்லாம்‌ தமக்கே பொறுப்பாய்‌ நடத்தி வந்தவர்‌ நம்பி. ஒரு சமயம்‌ தம்‌ ஆசார்யர்‌ புத்ரிகளை நீராட்டி அழைத்துக்‌ கொண்டு வருகிற வழியிலே வாய்க்கால்‌ சேறா யிருக்கக்‌ கண்டு, தாம்‌ குறுக்கே பாலமாகப்‌ படுத்துக்‌ கொண்டு படியாய்க்‌ கிடந்து அவர்களைத்‌ தம்‌ முதுகிலே அடி இட்டு அழைத்துக்‌ கொண்டு போனார் -உய்யக்கொண்டார்‌ இந்த விஷயம்‌ அறிந்து “இவர்‌ இப்படிச்‌ செய்யாதே” என்று மிகவும்‌ அன்புடை யவராய்‌, நம்பி சென்னியைத்‌ தம்‌ திருவடித்‌ தாமரை களாலே அலங்கரித்தார்‌. ப்ரமேய ரத்னம்‌ என்னும்‌ நூலில்‌ மூன்றாவது பிரகரணத்தில்‌ “ஆசார்ய கைங்‌ கர்யத்துக்குப்‌ படிமா வடுகநம்பியோடு மணக்கால்‌ நம்பி” என்றது காண்க. இதுபற்றியே “(ஆசார்யர்‌) தாள்‌ சென்னி வைப்போன்‌” என்று அருளியபடி –

(தென்னரங்கர்‌ சீர்‌ அருளைச்‌ சேர்ந்திருப்போன்‌)-ஸ்ரீமந்நாதமுனிகளின்‌ திருப்பேரரான ஆளவந்தார்‌ ராஜ போகத்தில்‌ சுகமாக இருந்த போது மணக்கால்‌ நம்பி அவருக்கு விருப்பமான தூதுளை கீரையை தினமும்‌ திருமடப்‌ பள்ளிக்குக்‌ கொடுத்து வந்தார்‌. ஆளவந்தாரும்‌ அதனை அமுது செய்து வந்தார்‌. அவர்‌ இதனை விசாரியாமல்‌ இருக்கவே, நம்பி நான்கு நாளைக்குத்‌ தூதுளைக்‌ கொடுப்பதை தவிர்த்தார்‌. ஆளவந்தாரும்‌ தூதுளை இன்றியே இருக்கவே, அதனைக்‌ கொடுப்பவரைத்‌ தாம்‌ காண நினைத்து, மறுநாள்‌ வந்த போது அவரை ஆளவந்‌தாரிடம்‌ அழைத்துச்‌ சென்றனர்‌.“தூதுளை கொடுப்பதின்‌ நோக்கம்‌ என்ன?” என்று கேட்க, நம்பியும்‌ “அவரைக் காண இது தான்‌ வழி” என்று சொன்னார்‌. மேலும்‌, அவருடைய பாட்டனாரான ஸ்ரீமந்நாதமுனிகள்‌ தேடி வைத்த பொருளும்‌, அந்நிதி கிடக்கிற இடமும்‌ அதனை ஸமர்ப்பிக்கவும்‌ தான்‌ வந்ததாகக்‌ கூறுவர்‌. ஆளவந்தாரும்‌ மிக்க ஆர்வத்துடன்‌ அப்பொருளைச்‌ சொல்லும்படி கேட்க, நம்பிகளும்‌ அன்று முதல்‌ கதையின்‌ செம்மைப்‌ பொருள்‌ தெரியும்படி பதினெட்டு அத்தியாயத்தையும்‌ அருளிச்‌ செய்தார்‌.-நெல்லுக்குப்‌ பால்‌ கட்டக்‌ கட்டத்‌ தலை வணங்குமா போலே, ஆளவந்தாருக்கும்‌ கொஞ்சம்‌ கொஞ்சமாக ஸம்ஸாரத்தில்‌ ருசி யில்லாமை பிறந்தது. நம்பிகளும்‌ ஆளவந்தாரைக்‌ கூட்டிக்‌ கொண்டு திருவரங்கம்‌ சென்று அழியாத மகா நிதியான பெரிய பெருமாளுடைய முடிவில்லாத எழிலைக்‌ காணச்‌ செய்தார்‌. ஸ்ரீமந்நாதமுனிகள்‌ காட்டிக்‌ கொடுத்த அர்த்தங்கள்‌ எல்லாம்‌ திருவரங்‌கனின்‌ சீர்‌ அருளால்‌ ஆளவந்தாருக்கு மணக்கால்‌ நம்பி அருளாலே சேர்ந்தது. இதனால்‌ “சீர்‌ அருளைச்‌ சேர்ந்து இருப்போன்‌” என்றபடி.

தாசரதி திருநாமம்‌ தழைக்க வந்தோன் –அயோத்தி மன்னனான தசரத சக்கரவர்த்தி திருமகன்‌ இராமன்‌ தாசரதி என்று அழைக்கப்பட்டார்‌. நம்பிகளுக்கு அமைந்த தனியனில்‌, “பரசு ராமனைப்‌ போல பொறுமையை (பூமியை) விடாதவராய்‌, இராமனைப்‌ போல புண்ய ஜனங்களை (ராக்ஷஸர்‌ களை) பாதிக்காதவராய்‌, பலராமனைப்‌ போல மது பான மதம்‌ இல்லாதவரான நாலாவது இராமனான மணக்கால்‌ நம்பியை உபாஸிக்கிறோம்‌” என்று அருளியதற்கு ஏற்ப, தாசரதி திருநாமம்‌ தழைத்தபடி.-வேதாந்த தேசிகரும்‌ யதிராஜ ஸப்ததியில்‌ (7) “அநுஜ்ஜித க்ஷமா” என்ற சுலோகத்தின்‌ மூலம்‌ மணக்கால்‌ நம்பியை மறக்காமல்‌ இருப்போம்‌ என்‌ றது காண்க. மேலும்‌ “பகவத்‌ பக்தியாகிற பாற்கடலில்‌ குடைந்தாடப்‌ பெற்றவராய்‌, அதனால்‌ தாப த்ரயம்‌ என்று சொல்லப்படும்‌ ஆத்மாவைப்‌ பற்றி வருவது ஜுரம்‌, தலைவலி, மனக்கஷ்டம்‌ முதலானவை. காற்று, மழை, இடி, மின்னல்‌ முதலானவற்றால்‌ வரும்‌ துன்பம்‌, பசு, பறவை முதலானவற்றால்‌ வரும்‌ துன்பம்‌ என்னும்‌ மூன்று தாபங்களும்‌ நீங்கப்‌ பெற்றவரான ஸ்ரீராமன்‌ என்னும்‌ மணக்கால்‌ நம்பியைப்‌ பற்றுகிறேன்‌” என்ற தனியன்‌ மூலமும்‌ தாசரதி என்ற திருநாமம்‌ தழைத்தபடியாகும் –

தமிழ்‌ நாதமுனி உகப்பைத்‌ (ஸ்)தாபித்தான்‌) தமிழ்‌ நாதமுனி – சேதநரோடு செறிந்து ஆராயப்‌ படுமதான த்ராவிடமான தமிழையே அடையாளமாக உடையவர்‌ நம்மாழ்வார்‌ என்று பிள்ளை லோகம்‌ சீயர்‌ திருவாய்மொழி நூற்றந்தாதியில்‌ 26 “பன்னுதமிழ்‌ மாறன்‌” என்பதற்குச்‌ சேர உரைப்பர்‌. அந்த தமிழ்‌ மாறன்‌ அருளால்‌ ஸ்ரீமந்நாதமுனிகள்‌ நாலாயிர திவ்விய ப்ரபந்தத்தைப்‌ பெற்றார்‌. அதனால்‌ தமிழ்‌ நாதமுனியானார்‌ என்றபடி. அவர்‌ அருளால்‌ ஆசார்யரான உய்யக்‌ கொண்டார்‌ பரமபதித்த பின்பு, அவர்‌ சொல்லியபடியே சொட்டைக்‌ குலத்தினவரான ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு திருப்பேரனார்‌ அவதரித்து, அவருக்கு யமுனைத்‌ துறைவர்‌ என்று திருநாமமிட்டு நம்‌ தர்சனம்‌ வளரச்‌ செய்யும்படி எல்லா தர்சன ரகசியங்களையும்‌ உபதேசித்தருளினார்‌. அதுவரை மணக்கால்நம்பி தர்சனத்தை நிர்வகித்து வந்தார்‌. ஆர்வத்தோடு ஸ்ரீமந்நாத முனிகள்‌ நியமனத்தை தம்‌ ஆசார்யரான உய்யக்‌ கொண்டார்‌ சொல்லியபடி, ஆளவந்தாரை நம்‌ தர்சன ஆசார்யனாக ஆக்கி ீஸ்ரீமந்நாதமுனிகள்‌ உகப்பை நிலை நிறுத்தியதால்‌ (ஸ்தாபித்ததால்‌) ஆசார்ய ஞான பரிபாலனம்‌ மிகவும்‌ செய்யத்தக்கது என்றபடி.

(நேசமுடன்‌ ஆரியனை நியமித்தான்‌) நேசம்‌ அன்பு. ஆரியன்‌ – ஆர்ய: என்ற வடசொல்‌ தமிழில்‌ ஆர்யன்‌ ஆயிற்று. பல பொருள்களில்‌ ஒன்றான வித்வான்‌ என்று பொருள்‌. திருவாய்மொழியை ஓதுவித்தல்‌, அதனுடைய அர்த்தத்தை அருளிச்‌ செய்தல்‌ ஆகிய இரண்டையும்‌ வளர்த்தவர்‌ நம்பி.
ஆதலால்‌ இவரை ஆசார்ய பதம்‌ ஏறிப்‌ போந்தவர்‌ என்று ப்ரமேய ரத்னம்‌ இரண்டாம்‌ பிரகரணத்தில்‌ கூறியது காண்க. அத்தகைய ஆசார்ய பதத்தை மணக்கால்‌ நம்பி தம்‌ இறுதிக்‌ காலத்தில்‌ ஸ்ரீமந்நாதமுனிகளின்‌ திருப்பேரனாரான ஆளவந்தாரைப்‌ பார்த்து “ஸ்ரீமந்நாதமுனிகளோடு ஞானம்‌ மற்றும்‌ வம்ச ஸம்பந்தமுடையவரான “நீர்‌ அவர்‌ திருவடிகளே தஞ்சமாக எண்ணி இரும்‌” என்றும்‌ கூறியதற்கு ஏற்ப “இரந்து சொல்லுகைக்கு மணக்கால்‌ நம்பியோடு ஒப்பர்‌” என்று பகவத்‌ விஷயத்தில்‌ 9-3-5 யில்‌ அருளியது காண்க. திருவாய் மொழி அதன்‌ பொருள்‌ ஆகியவற்றை உபதேசித்து நம்‌ தரிசனத்துக்கு ஆசார்ய பதமான ஆரியனாக நியமித்தார்‌ என்பர்-

(நீணிலத்தில்‌ பதின்மர் கலை நிறுத்தினான் நீள்‌ * நிலம்‌ – நீளுதல்‌ – பெருமையாதல்‌. பெருமை பொருந்திய இடம்‌ – ஸ்ரீ ரங்கம்‌. ஸ்ரீ ரங்கத்தில்‌ பதின்மர்‌ கலையான திவ்ய ப்ரபந்தத்தை தன்‌ சீடர்களான ஆளவந்தார்‌, தெய்வத்துக்கரசு நம்பி, கோமடத்துத்‌ திருவிண்ணகரப்பன்‌, சிறுப்புள்ளுடைப்‌ பிள்ளை, வங்கிபுரத்து ஆச்சி ஆகியோர்க்கு பதின்மர்‌ கலை யில்‌ அமைந்த தர்சன தாத்பர்ய விசேஷங்களைக்‌ கற்பித்ததனால்‌ “பதின்மர்கலை நிறுத்தினான்‌” என்றபடி.
வேதாந்த தேசிகர்‌ அருளிய குருபரம்பரா ஸாரத்தில்‌ மணக்கால்‌ நம்பி சீடர்கள்‌ ஐவர்‌ என்றது காண்க. அதுமட்டுமன்றி, “திருவாய்மொழி துவய மந்த்ரத்தின்‌ விரிவாக்கமாதலால்‌, ஸம்ஸாரமாகிற விஷம்‌ தீண்டப்‌ பெற்றவனுக்கு துவயம்‌ விஷம்‌ தீர்க்கும்‌ மருந்தாய்‌ இருக்கும்‌” என்பர்‌ நம்பி. மேலும்‌ பத்து ஆழ்வார்கள்‌ அருளிச்‌ செயலில்‌ ஆழ்ந்த ஞானம்‌ கொண்டு திருவாய்மொழி ஈடு என்னும்‌ வியாக்யானத்தில்‌ நம்பிள்ளை என்னும்‌ ஆசார்யர்‌ நம்பியின்‌ ஐதிகங்களையும்‌ நிர்வாகத்தையும்‌ காட்டி உரைப்பர்‌. நம்பியின்‌ நிர்வாகத்‌ திறனை திருமாலை 37ஆம்‌ பாட்டு, திருவாய்மொழி 2-6-2, 6-5-5, 6-6-1, 6-8-1, 9-3-5 ஆகிய இடங்களில்‌ காணலாம்‌. இதனால் நம்பிகள்‌ பதின்மர்‌ கலையைப்‌ பரப்பினபடி.

மாசி மகந்தணில்‌ விளங்க வந்துதித்தான் ) தமிழ்‌ மாதங்களில்‌ பதினோறாவது மாதம்‌ மாசி மாதமாகும்‌. இம் மாதமானது பிரிதொன்றுக்கில்லாத சிறப்புடையதாய்‌ கொள்ளத் தக்கதானது என்பர்‌. மாசி மகம்‌ சேர்ந்த பெளர்ணமி முழுமை பெற்ற தாகும்‌. வருடத்தில்‌ இந்த மாசி மக பெளர்ணமி சிறப்புடையதாகும்‌. பெருமாள்‌ கோயில்களில்‌, மாசி மகம்‌ என்பது மாசி மாத பெளர்ணமியுடன்‌ கூடி வரும்‌ மக நட்சத்திர நாளில்‌ பெருமாளை கருட வாகனத்தில்‌ கடற்கரைக்கு எழுந்தருளப்‌ பண்ணி தீர்த்தவாரி கண்டருளுவது காணலாம்‌. மாசி மகத்தைக்‌ “கடலாடும்‌ நாள்‌” என்றும்‌, “தீர்த்தமாடும்‌ நாள்‌” என்றும்‌ அழைப்பர்‌. ஆண்டாளும்‌ தைமாதம் முழுவதும்‌ காமன்‌ வரும்‌ இடத்தை அலங்கரிப்பதைச்‌ சொல்லும்போது “தையொரு திங்களும்‌ தரை மண்டலமிட்டு மாசி முன்னாள்‌ ஐய நுண்‌ மணல்‌ கண்டு தெருவணிந்து அழகினக்கு அலங்கரித்து அணங்க தேவா” (நாச்‌.திரு.1-1) என்கிறாள்‌. “மாசி முன்னாள்‌” என்றால்‌ மாசியில்‌ பூர்வ சுக்ல பக்ஷமாகிற முதல்‌ பதினைந்து நாள்‌. அத்தகைய சிறப்பு பெற்ற மாசி மாதத்தில்‌ சுக்ல பக்ஷ சதுர்தசியோடு கூடிய மக நக்ஷத்ரத்தில்‌, அந்த நக்ஷத்ரம்‌ புகழ்‌ பெற, புதன்‌ கிழமையில்‌ உதித்தவர்‌ மணக்கால்‌ நம்பி ஆவர்‌

மால்‌ மணக்கால்‌ நம்பி பதம்‌ வையகத்தில்‌ வாழியே மால்‌ – மையல்‌, பெருமை, கருமை என்று பல பொருள்‌. பெருமை என்பதற்குச்‌ சேர நித்ய ஸுரிகளில்‌ ஒருவரான குமுதாக்ஷரின்‌ அம்சமாக அவதரித்தவர்‌. இங்கு மணக்கால்‌ நம்பியின்‌ மையலானது தம்‌ ஆசார்யரான உய்யக்‌ கொண்டார்‌ திருமாளிகையில் 12 ஆண்டு சேவை பண்ணிப்‌ படியாய்க்‌ கிடந்து மணக்கால்‌ நம்பி என்னும்‌ திருநாமம்‌ பெற்றதாகும்‌. மேலும்‌ நம்பிக்குப்‌ பெருமையாவது எம்பார்‌ என்னும்‌ ஆசார்யர்‌ அருளியபடியே லக்ஷ்மி நாதனாகிற பெருங்கடலில்‌, நம்மாழ்வாராகிய மேகம்‌, கருணை என்னும்‌ நீரைப் பருகி, ஸ்ரீமந்நாதமுனிகளாகிற மலையிலே பொழிந்தது.அந்நீர்‌ உய்யக்கொண்டார்‌, மணக்கால்‌ நம்பி ஆகிய இரு அருவிகள்‌ மூலம்‌ ஆளவந்தாராகிய பெரிய ஆற்றை அடைந்து மேலும்‌ சென்றதை அருளுவர்‌. அவ்வாறே பகவத்‌ ராமாநுஜ அவயவ பிரபாவத்தில்‌ இராமாநுசருக்கு “ராகவ கபோலெள” என்கிறபடியே ஸ்ரீராமமிச்ரர்‌ என்னும்‌ மணக்கால்‌ நம்பிகள்‌ இரண்டு கன்னங்களாகத்‌ திகழ்கிறார்‌ என்று கூறுவர்‌. அப்படிப்பட்ட பெருமையுடைய மணக்கால்‌ நம்பி பதமான திருவடிகள்‌ இவ்வுலகத்தில்‌ வாழ வேண்டும் –

மச்சணியும்‌ மதிளரங்கம்‌ வாழ்வித்தான்‌ வாழியே
மறை நான்கும்‌ ஒருருவில்‌ மகிழ்ந்து கற்றான்‌ வாழியே
பச்சையிட்ட ராமர்பதம்‌ பகருமவன்‌ வாழியே
பாடியத்தோன்‌ ஈடேறப்‌ பார்வை செய்தோன்‌ வாழியே
கச்சிநகர்‌ மாயன்‌ இருகழல்‌ பணிந்தோன்‌ வாழியே
கடக உத்திராடத்துக்‌ காலுதித்தான்‌ வாழியே
அச்சமற மனமகிழ்ச்சி அணைந்திட்டான்‌ வாழியே
ஆளவந்தார்‌ தாளிணைகள்‌ அனவரதம்‌ வாழியே
–சேனை முதலியாருடைய கணங்களில்‌ ஒருவரான ஸிம்ஹாந்நர்‌ என்ற நித்ய ஸுரியின்‌ அம்சமாக அவதரித்தவர்‌ ஆளவந்தாராவர்‌. இவர்‌ திருவவதார ஸ்தலம்‌ சோழ தேசத்தில்‌ திருக்காவேரி தீரத்தில்‌ வீரநாராயணபரம்‌. திருநக்ஷத்ரம்‌ கலியுகம்‌ 3077க்கு மேல்‌ தாது வருடம்‌, ஆடி மாதம்‌ பெளர்ணமி வெள்ளிக்கிழமை, உத்தராடம்‌ விஷ்கம்பம்‌ பவ கரணம்‌. திருத்தகப்பனார்‌ ஈஸ்வர முனிகள்‌. திருப்‌ பாட்டனார்‌ ஸ்ரீமந்நாதமுனிகள்‌. இவருக்கு ஸ்ரீமந்நாத முனிகள்‌ இட்ட திருநாமம்‌ யமுனைத்‌ துறைவர்‌. இவர்‌ அருளிய நூல்கள்‌ எட்டு – 1. ஆத்ம ஸித்தி, 2. ஸம்வித்ஸித்தி, 3.ஈச்வர ஸித்தி என்னும்‌ ஸித்தி த்ரயம்‌, 4. கதார்த்த ஸங்க்ரஹம்‌, 5. ஆகம ப்ராமாண்‌ யம்‌, 6. மஹாபுருஷ நிர்ணயம்‌, 7.ஸ்தோத்ர ரத்னம்‌, 8. சதுஸ்லோகி .

வாழ் வித்தான் -சுகமாக இருக்கும்படி செய்தவர்‌,
வாழியே வாழ வேண்டும்‌;
மறைநான்கும்‌- ருக்‌, யஜுர்‌, ஸாம, அதர்வண ஆகிய நான்கு வேதத்தை,
ஒருருவில்‌ ஒரு தடவை சொன்னபோதே,
மகிழ்ந்து கற்றான்‌ சந்தோஷத்துடன்‌ கற்றவர்‌;
பச்சையிட்ட – தூதுவளை கீரை அளித்து உபகரித்த,
ராமர்‌ பதம்‌ – இராமன்‌ என்னும்‌ மணக்கால்‌ நம்பி திருவடிகளை,
பகருமவன்‌ – சொல்லுபவர்‌;
பாடியத்தோன்‌ – ஸ்ரீ பாஷ்யத்தை அருளிய ராமாநுஜர்‌,
ஈடேற – உய்வு பெற,
பார்வை செய்தோன்‌ – கடாக்ஷித்தவர்‌,
கச்சிநகர்‌ – காஞ்சிமா நகரம்‌,
மாயன்‌ – வியப்பான வரதராஜப்‌ பெருமாள்‌,
இருகழல்‌ – பெருமை பொருந்திய திருவடிகள்‌,
பணிந்தோன்‌ சேவித்தவர்‌;
கடக உத்திராடத்து கால்‌ -கடக மாதமான ஆடியில்‌ உத்திராட நக்ஷத்ர முதல்‌ பாதத்தில்‌,
உதித்தான்‌ – தோன்றியவர்‌;
அச்சமற பயமின்றி,
மனமகிழ்ச்சி – (ராமாநுஜரைக்‌ கொண்டு தர்சனம்‌ வளரச்‌ செய்தமையால்‌) மனம்‌ மகிழ்ச்சி கொண்டு,
அணைந்‌ திட்டான்‌ – அடைந்தவராவர்‌;
ஆளவந்தார்‌ – ஆளவந்தார்‌,
தாளிணைகள்‌ – இரு திருவடிகள்‌,
அனவரதம்‌ – எப்போதும்‌,
வாழியே வாழ வேண்டும்‌.

(மச்சணியும்‌ மதிளரங்கம்‌ வாழ்வித்தான்‌)“மச்சணி மாட மதிளரங்கர்‌” (11-4 நா.தி) என்று ஆண்டாள்‌ அருளியபடியே மச்சணி – மேல்‌ தளங்களாலே அலங்கரிக்கப் பெற்ற மாட மாளிகைகளையும்‌ விரோதிகள்‌ நுழையாதபடி அரணாயிருக்கும்‌ மதிள்களையும்‌ உடையது திருவரங்கம் -திருப்பாணாழ்வார்‌ “நீள் மதிள்‌ அரங்கத்து” என்பதற்குச்‌ சேர திருவரங்கத்தைக்‌ காப்பதையே நோக்‌காகக்‌ கொண்டு மதிள்‌ விளங்குகிறது என்பர்‌. மதிள்‌ அரங்கம்‌ என்பதனால்‌ ஏழு மதிள்களால்‌ சூழப்பட்ட தாகும்‌. “மதிள்‌ திருவரங்கம்‌” என்பதற்கு ராம அவதாரம்‌ போலே இங்கும்‌ சில ஆபத்து விளையுமோ என்று அஞ்சித்‌ திருமங்கையழ்வார்‌ போல்‌வார்‌ காப்பாக இட்ட மதிளையுடையது திருவரங்கம்‌ என்பர்‌. “மதிள்‌ திருவரங்கத்தானே” (திருமாலை 42) என்று தொண்டரடிப்பொடியாழ்வார்‌ மதிளே அரணாகக்‌ கொண்டிருக்கும்‌ திருவரங்கன்‌ என்றது காண்க.-திருமங்கையாழ்வாரும்‌ “செம்பொனாரும்‌ மதிள்‌ சூழ்ந்த தென்னரங்கம்‌” என்று அருளியதற்கு ஏற்ப தேவர்களுக்குத்‌ தலைவனான பிரமனும்‌ அவனாலே படைக்கப்பட்ட உலகிலுள்ளாரும்‌ திரண்டு பற்றும்படியாய்‌, அழகியதாய்‌, உள்ளே சாய்ந்திருக்கும்‌ அரங்கனுக்கு அரணாகத்‌ தகும்படி யான மதிள்‌ என்பர்‌ பெரியவாச்சான்‌ பிள்ளை. மற்றும்‌ கல்லின்‌ மன்னு மதிள்‌” (பெரி.திரு.5.5.10) என்கிறார்‌ ஆழ்வார்‌. அதாவது கல்லாலே கட்டப்பட்ட திண்ணியதான ப்ராகாரம்‌ என்றபடி. இப்படிப்பட்ட பெருமையுடைய அரங்கத்தை வாழ்வித்தவர்‌ ஆளவந்தார்‌. எங்ஙனேயென்னில்‌ – யமுனைத்‌ துறைவர்‌ ராஜ புரோகிதனான வாதத்திலே ஆக்கியாழ்வான்‌ வாயை அடக்குகையாலே ஆளவந்தார்‌ என்ற திருநாமத்தை உடையவர்‌ ஆனார்‌. நம்‌ தரிசனத்தை ஆளவந்தவராய்‌ இருக்கை யாலே, மணக்கால்நம்பி இத்தைக்‌ கேள்விப்பட்டு இவரைத்‌ திருத்தி ஸ்ரீமந்நாதமுனிகள்‌ கொடுத்த நிதியை இவருக்குக்‌ காட்ட எண்ணி, இவர்‌ பக்கல்‌ பல தடவை தூதுவளை கீரையைக்‌ கொடுத்து உபகரித்து இவரை திருவரங்கம்‌ அழைத்துச்‌ சென்று பச்சை மாமலைபோல்‌ திருமேனியையுடைய அரங்கனிடம்‌ உண்டு இதனால்‌ ஆளவந்தார்‌ பெருமாள்‌ கடாக்ஷத்தாலே பரம விரக்தராய்‌ ஐச்வர்யம்‌ முதலானவற்றை விட்டுவிட்டு ஸந்யாஸ ஆச்ரம ஸ்வீகாரம்‌ பண்ணி பெரிய பெருமாள்‌ ஸாம்ராஜ்யத்துள்‌ புகுந்து, ஸ்ரீ கார்யம்‌ நிர்வஹித்து வந்தார்‌. அந்தக்‌ காலத்திலே “ஆகம ப்ராமாண்யம்‌” என்ற நூலை எழுதி பிற மதத்தவர்‌களைத்‌ தோற்கடித்து திருவரங்கம்‌ திருப்பதியிலே அவர்கள்‌ இருப்பையும்‌ போக்கினார்‌. பின்னர்‌, பல க்ரந்தங்கள்‌ வாயிலாக தர்சன நிர்வாகம்‌ செய்தருளினார்‌ என்று கோயில்‌ ஒழுகு கூறும்‌. பராசர பட்டர்‌ தாம்‌ அருளிய ஸ்ரீரங்கராஜ ஸ்தவ பூர்வ சதகத்தில்‌ (4) “விதாய வைதிகம்‌ … யாமுநம்‌ மநவாமஹை” என்ற ஸ்லோகம்‌ மூலமாக ஆளவந்தார்‌ அவதரிப்பதற்கு முன்‌ வைதிக மார்க்க மானது தவறான வாதங்கள்‌ என்னும்‌ முள்செடிகள்‌ நிறைந்திருந்தது. அந்த வழியிலுள்ள முள்‌ செடி களை நீக்கி, பகவத்‌ பக்தியை ஸ்ரீரங்கத்தில்‌ நன்கு வளரச்‌ செய்தவர்‌ ஆளவந்தார்‌ என்கிறார்‌. இது பற்றியே “மதிளரங்கம்‌ வாழ்வித்தான்‌” என்றபடி

மறை நான்கும்‌ ஓருருவில்‌ மகிழ்ந்து கற்றான்‌) உபநயனம்‌ செய்விக்கப்பட்ட பிறகு, ஆளவந்தார்‌ வேதமோதும்‌ அந்தணரான ஆசார்யரிடம்‌ வேதங்‌ களை ஓதினார்‌. இவர்‌ செய்த வேதாத்யயனம்‌ மிகவும்‌ வியப்பை விளைவித்தது. ஆசார்யரிடம்‌ ஓதியது அனைத்தும்‌ ஒரு முறை கேட்டதனாலேயே கற்றுக்‌ கொண்டார்‌. வேதமோதும்‌ ஆசார்யரும்‌ இவரை அழைத்து “நீர்‌ இன்று ஏன்‌ வேத அத்யயனத்துக்கு வரவில்லை” என்று கேட்டார்‌.-ஆசார்யருடைய அந்த வார்த்தையைக்‌ கேட்டு, “ஐயா தேவரீர்‌ நேற்று வேதத்தின்‌ எந்த வாக்கியங்‌ களை ஓதச்‌ சொன்னீரோ அந்த வாக்கியங்களையே முன்பு போலவே இன்றும்‌ ஓதச்‌ சொல்லுகிறீர்‌ அரைத்த மாவையே அரைப்பது போல சொன்னதை சொல்லும்‌ இதனால்‌ பயனில்லை என்று நான்‌ வரவில்லை என்றார்‌. இதனைக்‌ கேட்ட ஆசார்யர்‌ மிகவும்‌ வியப்புற்றவராய்‌, அவரை அணைத்துக்‌ கொண்டு கொண்டாடினார்‌. சிம்ஹாநனர்‌ என்னும்‌ நித்யஸுரிகள்‌ அம்சமான இவர்‌ சிறுமாமனிசராய்‌ பதம்‌, ஜடை, வர்ண க்ரமம்‌, கனம்‌ ஆகியவற்றோடு கூடிய எல்லா வேதங்களையும்‌ ஆறு வேதாங்கங்‌ களையும்‌ ஆர்வமுடன்‌ கற்றார்‌ என்று பிரபந்நாம்‌ ருதம்‌ கூறும்‌. இதுபற்றியே “ஓருருவில்‌ மறை அனைத்தும்‌ மகிழ்ந்து கற்றான்‌” என்றபடி.

(பச்சையிட்ட ராமர்‌ பதம்‌ பகரும வன்‌) பச்சை – பச்சை இலை, தூது வளை கீரை. பச்சை – உதவி. தூது வளை கீரையை இட்டு யாமுனாசார்‌யரான ஆளவந்தாரைத்‌ திருத்தினவர்‌ ராமர்‌ என்ற பெயருடைய மணக்கால்‌ நம்பி ஆவர்‌. அதாவது ஆளவந்தார்‌ ராஜ புரோகிதனான ஆக்கியாழ்வானோடு வாதப்போர்‌ செய்து வெற்றி கொண்டதை அறிந்த மணக்கால்‌ நம்பி ஆளவந்தாரைக்‌ காண ஆசைப்பட்டார்‌.-அரண்மனையில்‌ கட்டும்‌ காவலு மாய்‌ இருப்பதைக்‌ கண்டு நம்பி திருமடப்பள்ளில்‌ புகுந்தார்‌. ஆளவந்தாருக்கு உணவு செய்பவர்‌ களைக்‌ கண்டு, “ஆளவந்தார்‌ விரும்பி உண்ணும்‌ கறியமுது எது?” என்று கேட்டார்‌. அவர்களும்‌ அவர்‌ விரும்புவது “தூதுவளை” என்று சொன்னார்கள்‌. உடனே நம்பியும்‌ அன்று முதல்‌ ஆறு மாத காலம்‌ மடைப்பள்ளிக்குத்‌ தூதுவளை (கீரை வகை) இட்டு வந்தார்‌.-மேலும்‌, இவருக்கு புருஷார்த்தங்களும்‌, பகவத்‌ விஷயமும்‌, நாலாயிரமும்‌, நான்காவது ஆச்ரம ஸ்வீகாரம்‌ முதலான அர்த்த விசேஷங்கள்‌ எல்லாம்‌ அருளினவர்‌ ஸ்ரீராம மிச்ரர்‌ என்னும்‌ மணக்கால்‌ நம்பியாவார்‌. இது பற்றியே “பச்சை இட்ட ராமர்‌ பதம்‌” என்று மணக்கால்‌ நம்பியைக்‌ கொண்டாடுகிறார் –

பாடியத்தோன்‌ ஈடேறப்‌ பார்வை செய்தோன்‌) “பாஷ்யம்‌” என்ற சொல்‌ தமிழில்‌ பாடியம்‌ என்று ஆயிற்று. பாஷ்யமாவது விரிவாய்ப்‌ பொருள்‌ விளக்கம்‌ செய்யும்‌ உரை நூலாகும்‌. ப்ரஹ்ம ஸுத்ரத்துக்கு ஸ்ரீ பாஷ்யம்‌ என்னும்‌ உரை எழுதியவர்‌ இராமாநுசராவர்‌. அவரே பாஷ்யகாரர்‌ ஆவர்‌.-அந்த பாஷ்யகாரர்‌ உய்வு பெற ஆளவந்தார்‌ அவரைப்‌ பார்வை செய்தார்‌. எங்ஙனேயென்னில்‌- காஞ்சியிலுள்ள இராமாநு சருடைய பெருமையை இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள்‌ வாயிலாகக்‌ கேட்ட ஆளவந்தார்‌, உடனே அவரைக்‌ காண வேண்டும்‌ என்று எண்ணி திருவரங்கத்தில்‌ இருந்து காஞ்சி புரத்துக்கு வந்தார்‌.-அவர்‌ சீடரான திருக்கச்சி நம்பி மூலமாக பேரருளாளன்‌ பெருந்தேவித்‌ தாயாரைத்‌ திருவடி தொழுதார்‌. பிரதக்ஷிணமாக வரும்‌ போது பாடசாலை குருவான யாதவப்ரகாசன்‌ என்பவர்‌ தம்‌ சீடர்களோடு பேரருளாளனைச்‌ சேவித்து வலம்‌ வந்து கொண்டிருந்‌தார்‌. அப்போது ஆளவந்தாரும்‌ “இவர்களிலே இளையாழ்வாரான இராமாநுஜர்‌ யார்‌?” என்று திருக்கச்சி நம்பிகளைக்‌ கேட்க, நம்பியும்‌, “சிவந்து நெடுகி வலியராய்‌ நீண்ட வாயும்‌, உருண்டிருப்பவையும்‌, இரும்பு உலக்கை போல்‌ விளங்குபவையும்‌, எல்லா ஆபரணங்களையும்‌ அலங்கரிக்கத்‌ தக்கவையுமான ஸ்ரீராமனுடைய திருக்கைகள்‌ போல்‌ ஆஜாநுபாஹுவாய்‌ நடுவே வருகிறவர்‌” தான்‌ இராமாநுஜர்‌ என்று சுட்டிக்‌ காட்டினார்‌. ஆளவந்தாரும்‌ அவரைத்‌ தமது மலர்ந்த மதுரமான கம்பீர கண்களாலே செவ்வரியோடப்‌ பார்த்‌தார்‌.-தம்மிடமுள்ள பவிஷ்யதாசார்ய விக்ரஹத்துக்‌கும்‌ இவருக்கும்‌ அவயவங்கள்‌ எல்லாம்‌ ஒரு அச்சில்‌ வார்த்தது போல இருக்கக்‌ கண்டு “ஆம்‌ முதல்வன்‌ இவன்‌” என்று நம்மாழ்வார்‌ அருளியதை நினைவில்‌ கொண்டு விசேஷ பார்வை செய்தார்‌. இதைக்‌ குறித்தே இராமாநுஜரும்‌ ஆளவந்தார்‌ விஷயமாக தாம்‌ அருளிய“யத் பதாம்போருஹ த்யான…” என்னும்‌ தனியனில்‌ உபகார ஸ்மிருதியாக தம்மை பார்வை செய்து வஸ்து வாக்கியமைக்கு வணங்குகிறார்‌. இது பற்றியே “பாடியத்தோன்‌ ஈடேறப்‌ பார்வை செய்தோன்‌” என்றபடி.இதற்கு ஏற்ப இராமாநுஜரின்‌ அவயவங்களின்‌ அம்சமாக உள்ள ஆசார்யர்களைச்‌ சொல்லும் போது ஒன்றான எம்பார்‌ ஜீயர்‌ ஸ்வாமிகள்‌ “வக்ஷஸ்தலம்‌ யாமுநார்ய:” என்று இராமாநுஜரின்‌ திருமார்பாக ஆளவந்தாரைக்‌ குறிப்பர்‌. இதனால்‌ இராமாநுஜர்‌ மனத்தில்‌ ஆளவந்தார்‌ நீங்காத இடம்‌ பெற்றுள்ளார்‌ என்று சொன்னபடி.

(கச்சிநகர்‌ மாயன்‌ இருகழல்‌ பணிந்தோன்‌) கச்சி-முக்தி தரும்‌ ஏழு நகரங்களுள்‌ ஒன்று காஞ்சிபுரம்‌. தொண்டை நாட்டுத்‌ திருப்பதிகளில்‌ ஒன்று. மாயன்‌ வியப்பான குணம்‌. திருவிளையாடல்களை உடைய வன்‌. இராமாநுசரைக்‌ கண்ட ஆளவந்தார்‌ காஞ்சியில்‌ பெருமாளை நோக்கி, “எந்த மாயனான பேரருளாளனுடைய அருளால்‌ செவிடன்‌ கேட்கும்‌ சக்தி உடையவன்‌ ஆகிறானோ, காலில்லாதவன்‌ வேகமாக நடக்க வல்லவனாகிறானோ, ஊமை பேச வல்லவனாகிறானோ, குருடன்‌ காண வல்லவன்‌ ஆகிறானோ, மலடியும்‌ பிள்ளை பெறுகிறாளோ, அந்த தேவப்‌ பெருமாளான வரதராஜனை சரணமடைகிறேன்‌” என்று நம்‌ தர்சனம்‌ வளர ஆளவந்தார்‌ மாயன்‌ இரு கழல்‌ பணிந்தார்‌. “தாம்‌ வேண்டும்‌ காமமே காட்டும் கடிது” என்கிற படியே தேவப் பெருமாள்‌ அவ்வவர்‌களுடைய விருப்பங்களைத்‌ தந்தருளுகிறவர்‌. ஆகையாலே ஆளவந்தாரும்‌ இராமாநுசன்‌ ஆகிற மகாநுபாவரை நம்‌ தரிசனம்‌ வளர விசேஷ அருள்‌ புரிய சரணமடைவதாகச்‌ சொன்ன படியால்‌ “மாயன்‌ இருகழல்‌ பணிந்தோன்‌” என்றவாறு-

(கடக உத்திராடத்துக்‌ காலுதித்தான்‌) கடகம்‌ ஆடி மாதம்‌. உத்திராட நக்ஷத்ரத்தில்‌ அவதரித்தவர்‌ ஆளவந்தார்‌. கால்‌ – முதல்‌ பாதம்‌. அதாவது உத்திராட நக்ஷத்ரத்தில்‌ முதல்‌ பாதத்தில்‌ அவதரித்தவராவர்‌. “உத்திராடம்‌ முதல்‌ பாதத்தில்‌ ஒரு பிள்ளையும்‌ ஊர்‌ கோழியில்‌ ஒரு நிலமும்‌ இருந்தால்‌ உயர்வானது” என்பது முதியோர்‌ வாக்கு. அதற்கு ஏற்ப ஆளவந்தார்‌ தனுர்‌ ராசியில்‌ உத்திராடம்‌ முதல்‌ பாதத்தில்‌ அவதரித்தார்‌. அதனால்‌ இராமாநுசருக்கு மானஸ ஆசார்யரான உயர்வைப்‌ பெற்றார்‌. ஆளவந்தாருடைய முக்கியமான ஐந்து சீடர்கள்‌ இராமாநுசருக்கு ஆசார்யரானார்கள்‌. இவரை பரமாசார்யர்‌ என்று கொண்டாடுவர்‌. இவர்‌ சேனை முதலியார்‌ அம்சம்‌ என்று குரு பரம்பரா ப்ரபாவம்‌ கூறும்‌. இது பற்றியே “கடக உத்திராடத்துக்‌ கால்‌ உதித்தான்‌” என்றபடி.

(அச்சமற மன மகிழ்ச்சி அணைந்திட்டான்‌) அணைதல்‌ – அடைதல்‌, பொருந்துதல்‌ ஆளவந்தாருக்கு அச்சமாவது – திருவரங்கத்தில்‌ தாமும்‌ தம்‌ சீடர்களுமாக இருந்து தர்சனத்தை நடத்தி வந்த போது “இனி மேல்‌ நம்‌ தர்சனத்தை வளர்ப்பவர்‌ யார்‌?” என்று விசாரம்‌ உண்டாய்‌, ஒருவரையும்‌ காணாமல்‌ முசித்துச்‌ சிந்தித்திருந்தாராம்‌. சில நாள்‌ கழித்து இராமாநுசரின்‌ பெருமை அறிந்து அவரைக் காண காஞ்சி வந்து திருக்கச்சி நம்பிகளின்‌ மூலமாக இராமாநுசரை யாதவ பிரகாசன்‌ திரளில்‌ கண்டு மகிழ்ச்சி அடைந்து “ஆம்‌ முதல்வன்‌ இவன்‌” என்று விசேஷ அருள்‌ புரிந்து தேவப் பெருமாளிடம்‌ சரணாகதி செய்து திருவரங்கம்‌ வந்து சேர்ந்தார்‌. பின்னர்‌ திருவரங்கத்தில்‌ ஒருநாள்‌ கால க்ஷேபம்‌ செய்யும் போது “இலிங்கத்திட்ட புராணத்தீரும்‌”” என்ற திருவாய்மொழி (4.10.3) பாசுரத்திற்கு பொருள்‌ சொல்லும் போது “நமக்குப்‌ பின்பு இந்த தர்சனம்‌ நிர்வகிக்க ஒருவரையும்‌ காணப் பெற்றிலோமே” என்கிற விசாரத்தாலே “முன்பு காஞ்சியில்‌ கண்ட இராமாநுஜரை நினைவில்‌ கொண்டு அவரை யாதவப்‌ பிரகாசனோடு உறவறுத்து நம்‌ பக்கல்‌ சேர்க்கும்‌ உபாயம்‌ உண்டோ” என்று எண்ணி தேவப்‌ பெருமாளிடம்‌ “முன்பு செய்த சரணாகதியை பயனுடையதாக்க வேணும்‌” என்று வேண்டினார்‌. இப்படி இராமாநுசனை நம்‌ தர்சனத்தை நிர்வகிக்க வேண்டினது பற்றி “மன மகிழ்ச்சி அணைந்திட்டான்‌” என்றவாறு.

(ஆளவந்தார்‌ தாளிணைகள்‌ அனவரதம்‌) ராஜ புரோகிதனான ஆக்கி யாழ்வானோடு வாதப்‌ போர்‌ செய்து ஆக்கி யாழ்வான்‌ வாயை அடக்குகையாலே “ஆளவந்தார்‌” என்ற திரு நாமத்தை உடையவராய்‌ தர்சனத்தை ஆளவந்தார்‌ என்பர்‌. அனவரதம்‌ – இடை வீடின்றி எப்போதும்‌. ஆளவந்தார்‌ தாளிணையின்‌ பெருமை அவர் தம்‌ சீடர்கள்‌ தொடங்கி இன்று வரை விளங்கி வருவது காணலாம்‌.ஆளவந்தார்‌ இறுதிக்‌ காலத்தில்‌ அவர்தம்‌ சீடர்களான பெரிய நம்பியும்‌ திருக் கோட்டியூர்‌ நம்பியும்‌ ஆளவந்தாருடைய திருவடிகளைச்‌ சேவித்து தங்களுக்குத்‌ தஞ்சமான வார்த்தை அருள வேண்டினர்‌. அவரும்‌ “கோயிலாழ்வாரே உங்களுக்கு உயிர்‌ நிலை” என்றும்‌, “பெரிய பெருமாள்‌ திருவடிகளின்‌ கீழே வீணையும்‌ கையுமாய்‌ ஸேவித்திருக்கும்‌ திருப்பாணாழ்வார்‌ திரு மேனியை பாதாதி கேசமாக ஸேவித்துக்‌ கொண்டிருங்கோள்‌” என்றும்‌ காட்டிக்‌ கொடுத்தார்‌. இது பற்றியே பெரிய நம்பிகளை “ஆளவந்தார்‌ தாளிணையை அடைந்து உய்ந்தோன்‌” என்று போற்றுவது காணலாம்‌. பெரிய திருமலை நம்பிகளை “அய்யன்‌ ஸ்ரீ ஆளவந்தார்‌ அடி தொழுவோன்‌” என்றும்‌, திருக்‌ கோட்டியூர்‌ நம்பியை “ஏற்றமாம்‌ ஆளவந்தார்‌ இணை யடியோன்‌” என்றும்‌, “அல் பகலும்‌ ஆளவந்தார்‌ அடி நினைவோன்‌ ” என்றும்‌, “ஏராரும்‌ ஆளவந்தார்‌ இணை யடியோன்‌” என்றும்‌, “ஏராரும்‌ ஆளவந்தார்‌ இணை யடிகள்‌ மறவாத எங்கள்‌ திருக்கோட்டியூர்‌ நம்பி” என்றும்‌ அருளுவது காண்க. மேலும்‌ திருக்கோட்டியூர்‌ நம்பியும்‌ பெரிய நம்பியும்‌ ஆளவந்தார்‌ திருவடிகளைத்‌ தியானித்துக்‌ கொண்டு திருநாட்டுக்கு எழுந்தருளினர்‌ என்று குருபரம்பரா ப்ரபாவம்‌ கூறும்‌. திருவரங்கப்‌ பெருமாள்‌ அரையரும்‌ திருவடிகளை வணங்கிப்‌ பேறு பெற்றார்‌. இது பற்றியே “தீதில்‌ யமுனைத்‌ துறைவன்‌ சேவடியோன்‌” என்று புகழ்ந்தது காணலாம்‌.
திருமாலை யாண்டானையும்‌ ““அம்புவியி ஆளவந்தார்‌ அடியிணையோன்‌”” என்று போற்றுவது காணலாம்‌. மாறனேரி நம்பிகளையும்‌ “ஆளவந்தார்‌ திருவடிகள்‌ ஆஸ்ரயித்தான்‌ வாழியே” என்று வாழ்த்தியது காணலாம்‌.
திருக்கச்சி நம்பிகளை “தெருளாரும்‌ ஆளவந்தார்‌ திருவடியோன்‌” என்பர்‌.
இராமாநுசரையும்‌ “எதிகட்கிறைவன்‌ யமுனைத்‌ துறைவன்‌ இணையடியாம்‌ கதி பெற்றுடைய இராமாநுசன்‌” என்று திருவரங்கத்தமுதனார்‌ அருளியபடி இராமாநுசருக்கு நேரே ஆசார்யர்‌ ஆளவந்தாராவர்‌. வேதாந்த தேசிகர்‌ குரு பரம்பரா ஸாரத்தில்‌ “என்‌ உயிர்‌ தந்து” என்ற பாட்டில்‌ “ஆளவந்தார்‌ என்று இவரை முன்னிட்டு எம்பெருமான்‌ திருவடிகள்‌ அடைகின்றேனே” என்று அருளியது காண்க. மேலும்‌, யதிராஜ ஸப்ததியில்‌ (8) “விகாஹே யாமுநம்‌ தீர்த்தம்‌” என்கிற படியே தீதில்லாது நல்லோர்‌ திரளைக்‌ காக்கும்‌ பணியில்‌ பிருந்தாவனம்‌ ஸம்பந்தம்‌ உடையவராய்‌, காளியன்‌ முதலான பாம்புகள்‌ தொடர்பில்லாதவராய்‌, கண்ணன்‌ அருளுக்கு இலக்கானவரான யமுனையின்‌ துறை போலுள்ள யமுனைத்‌ துறைவனான ஆளவந்தாரை அடைந்து களிப்போம்‌ என்றதும்‌ காண்க. மணவாளமாமுனிகள்‌ தாம்‌ அருளிய யதிராஜ விம்சதியில்‌ (15) “சுத்தாம யாமுந…’” என்று ஆத்மாவுக்கு சுத்தியாவது தாம்தாம்‌ தம்தம்‌ நூல்‌களில்‌ (அதாவது ஆளவந்தார்‌ தமது ஸ்தோத்ர ரத்‌னத்தில்‌ (62) கூறிய குற்றங்கள்‌ தம்மிடம்‌ உள்ளதாகக்‌ கூறுவர்‌) தம்மிடமுள்ளனவாகக்‌ கூறிக்‌ கொண்ட குற்றங்களில்‌ ஒன்றுகூட ஆளவந்தாரிடம்‌ இல்லாமை யாகும்‌. அப்படிப்பட்ட சுத்தாத்மாவான ஆளவந்தார்‌ திருவடிகளை அனவரதம்‌ வாழ்த்துவோமாக –

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-