ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
ஸூர்யன் அஸ்தமித்தது -அரசாண்டு கழிந்த மன்னர் போல் நித்ய லீலா உபய விபூதிக்கு அரசே -என்னை நீத்து வஞ்சித்த நிகர் அற்ற அரசே-எம் விசும்பு அரசே -ஆழ்வாருக்கு பரமபதம் அண்ணியது தானே –அக்கரை இக்கரை -பெரியாழ்வார் போல் இங்கும்-அருளாய்-உரு வெளிப்பாட்டில் -கண்ணுக்கு தோன்றும் தலைவனை சம்போதித்து -இரங்கி பேசும் தலைவி பாசுரம்–வேதனை-கீழ் பாசுரம் -தானான தன்மையாகவும் கொள்ளலாம்-இதில் பெண் நாயகி பாவனை-பிராட்டி தசையைப் பிராபித்து -அரும்பதம்–முடிச் சோதியாய் -3–1-இதன் விவரணம்–மூன்று முடிக்கு உரிய அரசு -நாயனார்-வைரமுடி – ராஜ முடி -கிருஷ்ண ராஜ முடி-கிரீடம் மகுடம் சூடாவதம்சம் –மூன்றும்-
ஆதித்யனும் போய் அஸ்தமித்து – இருளும் வந்து பாதகமாக நோவு படுகிறாள்-ஒரு பிராட்டி வார்த்தையாய் இருக்கிறது –
இப்படி அனுபவ அபி நிவேசம் பிறந்தவர் அதுக்கு ஈடாக அனுபவிக்கப் பெறாமையாலே தம்முடைய விவேக பிரகாசம் குலைந்து மோஹ அந்தகாரம் மேல் இடுகிறபடியை பிரிவாற்றாது பொழுதொடு புலம்பின தலைவி வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-அவதாரிகை-இவ்விபூதியில் தம் இருப்பைத் தாம் அசஹமாநராய்
வைத்தவனையே நிவர்த்திப்பாய் என்ற அபிப்ராயத்தால் இருளுக்கு அஞ்சின நாயகியாய் அருளாய் என்று பிரார்திக்கிறார் இதில்
சீரரசாண்டு தன் செங்கோல் சில நாள் செலீஇக் கழிந்த
பார் அரசு ஒத்து மறைந்தது நாயிறு பாரளந்த
பேரரசே எம் விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்த
ஓரரசே அருளாய் இருளாய் வந்து உறுகின்றதே – -80 –பிரிவு ஆற்றாத தலைவி மாலைப் பொழுதுக்கு இரங்குதல் –
சீர் அரசு ஆண்டு–சிறப்பாக ராஜ்ய பரிபாலனம் பண்ணி
தன் செங்கோல் சில நான் செலீ இ–தனது நீதி தவறாத ஆஜ்ஞையைச் சில காலம் (உலகத்திற்) செலுத்தி
கழிந்த–பின்பு இறந்தொழிந்த
பார் அரசு–ஸார்வபௌமனான ஒரு சக்ரவர்த்தியை
ஒத்து–போன்று
ஞாயிறு–ஸூர்யன்
மறைந்து–அஸ்தமித்தான்;
பார் அளந்த–உலகத்தை அளந்து கொண்ட
பேர் அரசே–சிறந்த தலைவனே!
எம் விசும்பு அரசே–பரமபதத்துக்கு நாயகனான எம்பெருமானே!
எம்மை நீத்து வஞ்சித்த–எம்மைத் தனியே பிரித்து வஞ்சனை செய்த
ஓர் அரசே–ஒப்பற்ற நாதனே!
அருளாய்–(இங்ஙனம் நீங்கியிராதபடி எமக்கு, வந்து) அருள் புரிவாய்; (அங்ஙனம் அருள் புரியாமையினால்)
இருள் ஆய் வந்து கூறுகின்றது–இருள் மிக்கதாய் வளர்ந்து கொண்டு வந்து சூழ்ந்து (எம்மை) வருந்துகிறது.
முடியார் திருமலையில் மூண்டு நின்ற மாறன்
அடிவாரம் தன்னில் அழகர் -வடிவழகைப்
பற்றி முடியும் அடியும் படி கலனும்
முற்றும் அனுபவித்தான் முன்———-21-கீழ்-அயன் மலையோடு-புறமலையோடு-திருப்பதியோடு
உத்தேச்யமாக திருமலை ஆழ்வாரை அனுபவித்துக் கொண்டு வருகிற மருளில் வண் குருகூர் வண் சடகோபனான ஆழ்வார் வட மா மலை உச்சி –என்கிற படியே அம் மலையிலே ஒரு கொடி முடி என்னலாம் படியையும் அதுக்கு அவயவமாய் இருப்பதொரு கல்பக தரு பஹூ சாகமாகத் தழைத்து பூத்தாப் போலேயாயுமாய் இருக்கிற மேலிரும் கற்பகமான அழகர் உடைய திவ்ய அவயவங்களும்
திரு அணிகலன்களுக்கும் உண்டான ஸூகடிதத்வத்தையும் வேத வைதிக புருஷர்களாலும் அளவிட ஒண்ணாத பெருமையையும் அத்தையும் விளாக் கொலை கொள்ளும்படியான ஆஸ்ரித வாத்சல்யத்தையும் அனுபவித்து விஸ்மிதர் ஆகிற முடிச் சோதியில் அர்த்தத்தை முடியார் திருமலையில் -என்று துடங்கி அருளிச் செய்கிறார் –
சீரரசாண்டு –குணமாக ஆண்டு –தர்ம புத்ரம் ராஜ்ஜியம் பண்ணாவிடில் நாங்களும் இங்கு இரோம்-
என்று அக்னி ஹோத்ரங்களையும் கொண்டு அவன் இருந்த காடேறப் புறப்பட்டு போனார்கள் இறே –
அப்படி சீரியதாக ராஜ்யத்தை நடத்தி –தன் செங்கோல் சில நாள் செலீஇ–இது தான் அல்ப காலத்தோடு பர்யவசிக்கை அன்றியே –தன்னுடைய-ஆஜ்ஜையை நெடு நாள் நடத்தி-(சில நாள் -விபரீத லக்ஷணை )-கழிந்த பாரர சொத்து –-இப்படி நெடுநாள் லோகத்தை நடத்திப் போந்த மாந்தாத்ரு பிரமுகரான-ராஜாக்களைப் போலே–பார் அரசு ஒத்து-மறைந்தது நாயிறு- ஆதித்ய சன்னதியிலே -நாயக சன்னதியில் போல ஆஸ்வசித்து இருக்க கடவதாய்- ராத்ரியில் வந்தால் கரணங்களுக்கு எல்லாம் பிரிந்த விஷயம் ஒன்றுமே இலக்காகையாலே – ராத்திரி என்றால் வெருவக் கடவதாய் இறே இருப்பது –
பகலில் இந்திரியங்கள் ஸ்வ விஷயங்களிலே-பாவி பாய்கையாலே வியசனம் அரையாறு பட்டு இருக்கும் இறே –மறைந்தது –-ஆதித்யன் எல்லாருக்கும் கண்ணாய் இருக்க ஆகாரம் கிடக்கச் செய்தே
விசேஷித்து இவளுக்கு கண்ணாய் இருக்கையாலே –-நாயகனைப் போக விட்டு வழி பார்த்து -நின்றாப் போலே –கண் மறைய பார்த்து நின்றால் போலே காணும் –கண்ணாஞ்சுழலை இட்டுப் பார்த்தாள் –பார் அளந்த பேர் அரசே –இருளின் கையில் அகப்பட்ட ஆதித்யனை மீட்கும் போது – மகா பலி-கையிலே அகப்பட்ட பூமியை மீட்டவனே வேணும் போலே காணும் –அளந்த –பூமிப் பரப்படைய அளந்த திருவடிகளைக் கொண்டு இவ்விருளையும் அளந்தால் ஆகாதோ –இருளார் வினை கெட இறே-(39 ) செங்கோல் நடத்துகிறது –(அளப்பது ஸ்வ அதீனமாக்குவது )பேரரசே –-எளிய செயல்கள் செய்யுமவன் அல்லனே –செய்யுமவை அடங்க பெருத்தாயிற்று இருப்பது –எம் விசும்பரசே –பகவத் விஷயத்தில் ஜ்ஞானம் பிறந்த பின் சம்சாரத்தில் காட்டில் பரம பதம் அணித்தாய் காணும் இவருக்கு இருப்பது –பொன் உலகு ஆளீரோ -என்று முதல்-அதுவே இறே கொடுத்தது –எம்மை நீத்து வஞ்சித்து ஓரரசே –
உபய விபூதிக்கும் தனித் தனியே கடவனோபாதி- என்னை அகற்றி-முடிக்கைக்கும் தனி முடி சூடி இருக்கிறவனே -என்று பிள்ளான் –(என்று எம்பார் என்றும் சிலர் சொல்வர் )என்னை அகற்றி -அது செய்கிற போது பிரியேன் என்று வைத்து பிரிந்து – இஸ் ஸ்வபாவதுக்கு புறம்பு-என்னோடு ஒப்பார் யார் -என்று இருக்கிறவன் ஆயிற்று — என்னால் அல்லது செல்லாதவரை பொகட-வல்லார் யார் – என்னோபாதி இல்லையே -என்று இதுக்கும் தனி முடி சூடி இருக்கிறவன் ஆயிற்று-என்று பட்டர்-அருளாய் –அருளுக்கு விஷயமறக் கிடாய் புகுகிறது – சத்தை போனால் அருளுக்கு விஷயம் இல்லையாம் இறே –பரம பதத்தில் உள்ளார் நித்ய அனுபவத்தாலே நிரபேஷராய் இருப்பார்கள் –
சம்சாரிகள் அன்ன பாநாதிகளாலே தரித்து இருப்பார்கள்-இங்கே இருந்தே அவ் விபூதியில் உள்ளார் படியாய் இருப்பார்க்கு அருளல் ஆகாதோ –குண அனுபவத்தால் அங்குள்ளார் (அநந்ய )அந்ய பரராய் இருப்பார்கள்-இங்குள்ளார் சப்தாதி விஷயங்களிலே (அநந்ய) அந்ய பரராய் இருப்பார்கள் –
குண ஜ்ஞானமே யாய் அனுபவம் இன்றிக்கே இருக்கிற இவர் பக்கலிலே இறே அவனுக்கு-
தான் அருளின படி காட்டலாவது –அருள வேண்டும்படி இப்போது இங்கு வந்தது என் என்ன –
இருளாய் வந்து உறுகின்றதே--இருளாய் வந்து கோமுக வ்யாக்ரமாகை தவிர்ந்து – வ்யாக்ரமாயே வரா நின்றது –ஊழி என்கிற பேராய் தலைக் காட்டுகை தவிர்ந்து – இருளாயே பாதகமாய் நின்றது –மத்யஸ்தர்க்கு இறே ஊழி பாதகமாவது —பிரிந்தார்க்கு இராத்திரி இறே பாதகமாவது –ஜகதுப சம்ஹாரத்துக்கு ஹேதுவாகையாலே நாட்டார்க்கு இறே ஊழி பாதகமாவது –உறுகின்றதே –
இருள் வந்து ஸ்பர்சிக்க புகா நின்றது –அதுக்கு முன்னே –இருளன்ன மா மேனியை-( பெரிய திருவந்தாதி )கொண்டு வந்து இடை இட்டுக் கலக்க வேணும் என்கிறாள் –
மாலைப் பொழுது கண்டு தலைவி இரங்கும் பாசுரம் -உரு வெளிப்பாட்டால் நாயகன் நேராக தோன்றி-அவனை நோக்கி அருளிச் செய்யும் பாசுரம் –சீரரசாண்டு தன் செங்கோல் சில நாள் செலீ இ க்கழிந்த-பார் அரசு ஒத்து மறைந்தது நாயிறு – சூர்ய அஸ்தமனம் அரசன் ஆண்டு மறைந்தால் போலே என்றவாறு – நீர் வந்து ரஷியா விடில் அரசர்கள் இல்லாத ராஜ்யத்தில் கணவனை இழந்த பெண் மக்கள் கொடியோரால் படும் பாட்டை இருளினால் நான் பாடுவேன் என்கிறார் யாயிற்று-இருளில் அகப்பட்ட தன்னையும் சூரியனையும் மீட்க ஓங்கி இலக்கு அளந்த உத்தமன் வேண்டுமே –பாரளந்த பேரரசே -என்கிறார் –பரமபதம் போலே என்னையும் அனர்யார்ஹம் ஆக்கிக் கொள்ளத் தக்கவனே-எம் விசும்பரசே-பிரியேன் பிரிந்தால் தறியேன் -இன்ன காலத்தில் வருவேன் சொல்லி வராமல் -எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே –-ஓரரசே -இப்படியும் ஒரு தலைவன் உண்டாவதே – என்னை உபேக்ஷித்து உன்னைக் காட்டாது இருக்கும் இந்த ஸ்வபாவத்தில் முடி சூடி இருக்கிறவனே-வஞ்சித்ததோர் அரசே –
அவனைச் சேர பெறாமையாலே விவேக பிரகாசம் குலைந்து மோஹாந்தகாரம் மேல் இடுகின்ற படியை-எம்பெருமானைக் குறித்து விண்ணப்பம் செய்கிறார்-இத்தால் சம்சாரத்தில் இருப்பு அஞ்ஞானம் வந்து மேல் இடும்படி இருக்கையாலே கடுக இவ்விருப்பைக் கழித்துத் தர வேணும்-என்று அருளிச் செய்கிறார் -நம்பிள்ளை -ஸ்ரீ ஸூ க்திகள்--பிரிவாற்றாத தலைவி மாலைப்பொழுது கண்டு இரங்கி யுரைக்கும் பாசுரம் இது.-இப் பாட்டில் நாயகனை நோக்கின் விளியுள்ளதனால், உருவெளிப்பாட்டில் கண்ணெதிரில் நாயகன் காணப்பட்டாதென்றும்-அன்னவனை நோக்கி இது கூறுகின்ற தென்றுங் கொள்க.-ஸூர்யன் உலகமுழுவதும் பகலெல்லாம் தடையறத் தனது செய்ய கிரணத்தைச் செலுத்திப் பின் அப்பாற் சென்றபடியை-“சீராசாண்டு தன் செங்கோல் சில நாள் செலீஇக் கழிந்தஅ பாராசொத்து மறைந்தது நாயிறு” என்றார்.–ஓரரசன் சிறப்பாக ராஜ்யத்தை அரசாட்சி செய்து தனது நீதி தவறாது ஆஞ்ஞையைச் சிலகாலம் உலகததிற் செலுத்திப் பிறகு இறந்தொழியுமா போலே யிருக்கிறதாயிற்று ஸூர்யாஸ்தமனம், நாயகனே! இப்பொழுது நீ என்னை வந்து சேர்ந்திடாயாயின்
அரசனில்லாத ராஜ்யத்தில் கணவனையிழந்த பெண்மகள் கொடியரால் படும் பாட்டை யான் இருளினால் படுவேன் என்பது தோன்ற இது சொல்லப்பட்ட தென்க.–இருளின் கையிலே யகப்பட்ட ஸூர்யனையும் தன்னையும் மீட்கைக்கு மஹாபலிகையிலே யகப்பட்ட உலகத்தை மீட்டவன்
வேண்டுமென்பாள் பாரளந்த பேரரசை விளித்தாள்.-எம் விசுபரசே!= பரமபதத்தைப் போலவே எம்மையும் அநந்யார்ஹ சேஷமாக்கிக் கொள்ளதக்கவனே! என்றபடி.-முதலில் என்னை விட்டுப் பிரியவேமாட்டேன், என்று சொன்னதும், பின்பு ‘இன்ன காலத்தில் வருவேன்’ என்று காலங் குறித்துக் கூறினாலும் இரண்டும் பொய்யாம்படி. தன்னைப் பிரிந்து சென்று நெடுநாள் வாராது விளம்பித்தது பற்றி “எம்மைநீத்து வஞ்சித்த ஓராசே” என்றாள். ‘இவ்விடத்து ஓராசே!’ என்றது இப்படியும் ஒரு தலைவனுண்டோவென்று குறை கூறியவாறு.–“எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே!” என்பதற்கு- “என்னை உபேக்ஷித்து உன்னைக் காட்டாதிருக்கிற இந்த ஸ்வபாவத்திலே முடிசூடியிருக்கிறவனே!”
என்று விசேஷார்த்தம் உரைப்பர். ‘வஞ்சித்த’ என்னும் பெயரெச்சத்தின் ஈறு தொக்கியிருப்பதால் ‘வஞ்சித்தோராசே’, என்றாயிற்று.–செலீஇ = செலுத்தி; சொல்லிசை யளபெடை! இங்கு அளபெடை அலகுபெறவில்லை.–“எம்பெருமானைச் சேர்ந்து அநுபவிக்கப் பெறாமையாலே தமது விவேக ப்ரகாசங் குலைந்து மோஹாந்தகரநம் மேலிடுகிறபடியை எம்பெருமானைக் குறித்து இதனால் ஆழ்வார் விண்ணப்பஞ் செய்தாராயிற்று. இங்கே நம்பிள்ளையீடுகாண்மின்;-“இத்தால் ஸம்ஸாரத்திலிருப்பு அஜ்ஞானம் வந்து மேலிடும்படியிருக்கையாலே கடுக இவ்விருப்பைக் கழித்துத் தரவேணுமென்று அருளிச்செய்கிறார்.
சீரரசாண்டு தன் செங்கோல் சில நாள் செலீஇக் கழிந்த பார் அரசு ஒத்து மறைந்தது ஞாயிறு-அழகிய ராஜ்யத்தைப் பண்ணி தன்னுடைய அபங்குரையான ஆஜ்ஜையைச் சில காலம் நடத்திக் கழிந்து போன பூமியில் ராஜாக்களோடு ஒத்தது என்னலாம் படி ஆதித்யனானவன் பகல் எல்லாம் ப்ரதா போத்தரனாய் நடத்தி அஸ்தமித்தான்–பாரளந்த பேரரசே-ரக்ஷணீயமான பூமிக்கு அந்நிய அபிமானத்தைக் கழித்து
உன் திருவடிகளின் கீழே ஆக்கிக் கொண்ட பெரிய ஸ்வாமி யானவனே–எம் விசும்பரசே அந்நிய அபிமான ப்ரஸங்கம் இல்லாத நித்ய விபூதிக்கு ஸ்வாமி யானால் போலே எங்களையும் அநந்யார்ஹமாக ஆண்டு கொண்டவனே–எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே -இப்படி அநந்யார்ஹதை ஒத்து இருக்க-அவர்களைப் போலே அனுபவம் பெறாதபடி எங்களை நீக்கி வஞ்சித்து வைத்தமைக்கு அத்விதீய நாயகன் ஆனவனே–அருளாய்-இப்படி நீங்கி இராதபடி கிருபை பண்ணி அருள வேணும்-இருளாய் வந்து உறுகின்றதே –தனித்து இருக்கில் இருளின் கையிலே அகப்படும் அத்தனை-ஆகையால் அருள வேணும் என்றதாயிற்று–இத்தால் ஆதித்ய ப்ரகாஸம் என்னலாம்படி ஸர்வ லோகத்தையும் வெளிச் சிறப்பிக்கிற தம்முடைய விவேகம் அனுபவ அலாபத்தாலே குலைந்து
மோஹ அந்தகாரமும் மேலிடுகையாலே ஸமஸ்த விபூதி ரக்ஷகனாய் நம்மைக் காரியப்பட்டாலே
பிரித்து வைத்து இருக்கிற ஸர்வேஸ்வரனுடைய கிருபையை இவ் வஸ்தைக்கு ரக்ஷகம் என்று அறுதியிட்டு இரங்க வேணும் என்று அபேக்ஷித்தார் ஆயிற்று
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்—வியாக்யானம்–சீரரசாண்டு-இந்த லோகமான பூமி எல்லாவற்றையும்
ராஜ்ய ஆஜ்ஞக ராஜாவாய் அனுபவித்தவனாய்–தன் செங்கோல் சில நாள் செலீஇக்-தன் ஆஜ்ஜையைச் சில நாள் நடத்தி–கழிந்த பார் அரசு ஒத்து-கழிந்து போன பூபரோடு ஒத்தவளாய்-மறைந்தது ஞாயிறு-மறைந்தான் ஆதித்யன்–பாரளந்த பேரரசே -இந்தப் பூமியை எல்லாம் ஓர் அடியால் அளந்து கொண்ட மஹா பிரபுவானவனே-எம் விசும்பரசே-எங்களதான தெளி விசும்புக்கு அரசானவனே
அங்காகவே இருப்பதான எங்கள் பதின்மரையும் சில நாள் அங்கு இராதபடி விலக்கி எங்களை வஞ்சிப்பதற்கு அத்விதீய பிரபு ஆனவனே-அருளாய்-அங்காக நான் வந்து இருப்பதாக அருளிச் செய்யாய்–இங்கு உமக்கு என்ன பாதகம் என்ன-இருளாய் வந்து உறுகின்றதே –அஞ்ஞான அந்தகாரமே எவரிலும் வந்து திணுங்கி எல்லாரையும் பாதியா நின்றது-ஆர் தான் இந்த ப்ரபந்ந அதிகாரிகள்
இவர்களுக்கு அனுபவ காரகமான இந்த பிரபந்தங்களை இங்கனே வைத்து தேவரீர் ப்ரவர்த்திப்பத்துக்கு என்ன பலம் ஆகையால் என்னை அங்கு வாங்கு என்றபடி –
ஸ்வாபதேசம் –இத்தால்-சம்சாரத்தில் இருப்பு அஞ்ஞானம் வந்து மேலிடும்படியாய் இருக்கையாலே
கடுக இவ்விருப்பை கழித்து தர வேணும் என்று அருளிச் செய்கிறார் –
தாத்பர்யம்–கீழே விண்ணுளாரிலும் சீரியரான பாகவதர்களைக் கண்டு களித்த ஆழ்வார் அந்த அனுபவம் தமக்கு கிட்டாமல் தளர்ந்து இங்கு அஞ்ஞானம் வளர்க்கும் ஸம்ஸாரத்திலே இருப்பு பொறுக்க மாட்டாமல் இரவுக்கு வருந்தும் நாயகி பாசுரத்தால் அருளிச் செய்கிறார்-மாந்தாதா போன்ற ராஜாக்கள் சாது சம்மதித்து செங்கோல்- தர்ம ஆஜ்ஜை -நடத்தி பின்பு காலம் கழிந்து சென்றால் போல் இத்தனை காலமும் இந்திரியங்கள் வேறே வேறே விஷயம் போகும்படி உபகரித்த ஆதித்யனும் அஸ்தமிக்க
நீண்ட இருளும் வந்து பாதித்து மனசை ஏக முகமாக உபய விபூதி நாயகனையே நினைக்கும் படி பண்ணி என்னையும் ரக்ஷிப்பதாகச் சொல்லிப் போந்த நீ என்னை –‘உன்னையே கதியாக கொண்ட என்னை – உனது அருளுக்கு விஷயம் ஆக்க வேண்டும் -என்று பிரார்திக்கிறார்
3-1-முடிச் சோதி பிரவேசம்-
பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல் மருளில் வண் குருகூர் வண் சடகோபன் –2-10-1-என்று அவன் கல்யாண குண விஷயமாக
அஜ்ஞ்ஞானம் இல்லை என்றார் கீழில் திருவாய்மொழியில் –அந்த குணாதிக விஷயம் தன்னில் ஒரு அஜ்ஞ்ஞானம் அனுவர்த்திக்கிற படி
சொல்லுகிறார் இதில் -கீழ்ச் சொன்ன அஜ்ஞானத்துக்கு அடி கர்மமாய் இருக்கும் -இங்குத்தை அஜ்ஞானத்துக்கு அடி
விஷய வைலஷண்யமாய் இருக்கும் -நித்ய ஸூரிகளுக்கும் உள்ளதொரு சம்சயம் ஆயிற்று இது –
ஸ்வரூப அனுபந்தியாய் இருப்பதொரு சம்சயம் ஆகையாலே ஸ்வரூபம் உள்ளதனையும் நிற்பது ஓன்று இறே இது
திருமலையை அனுபவித்துக் கொண்டு வாரா நிற்கச் செய்தே -வடமா மாலை உச்சியை -என்னுமா போலே திருமலையில் ஏக தேசம்
என்னலாம் படியாய் கல்பக தரு பஹூ சாகமாய்ப் பணைத்துப் பூத்தால் போலே நிற்கிற அழகருடைய சௌந்தர்யத்தை அனுபவித்தார் –
-வேதங்களோடு வைதிக புருஷர்களோடு ப்ரஹ்ம ருத்ராதிகளோடு வாசியற ஸ்வ யத்னத்தால் காணும் அன்று காண ஒண்ணாதபடி
இருக்கிற இருப்பரையும் தானே கொடு வந்து காட்டும் அன்று ஜன்ம வ்ருத்தாதிகளால் குறைய நின்றார்க்கும் காணலாய் இருக்கிற இருப்பையும்
அனுசந்தித்து விஸ்மிதர் ஆகிறார் –
திருமலை -சரம பர்வம் -சுந்தர தோள் உடையான் -பிரதம பர்வம் –சரம பர்வம் அனுபவித்த பின்பு பிரதம பர்வம் அனுபவிப்பது எதனால் –
ஏக தேசம் -திருமலைக்குள் அவனும் அடக்கம் -சரம பர்வத்தில் பிரதம பர்வமும் அடங்குமே –
வேதங்கள் – -ஓதுவார் ஒத்து எல்லாம் –நின் புகழை
மறையாய நால் வேதத்துள் நின்ற -வியாசாதிகளும் காண முடியாதவன்
அரன் முதலாய -நான் முகனும் இந்த்ரனும் பிறை ஏறும் சடையானும் -அறிய முடியாதவன்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே -தானே கொடு வந்து காட்டுவதற்கு திருஷ்டாந்தம்-
கீழ் இரண்டு பத்தாலும் –
ப்ராப்யமான ப்ரஹ்ம ஸ்வரூபத்தினுடைய சேஷித்வ ஸித்தமான-ரக்ஷகத்வ போக்யத்வங்கள் சொல்லிற்றாய்
அநந்தரம்-முன்றாம் பத்தாலும் நாலாம் பத்தாலும்
ப்ராப்தாவான ப்ரத்யகாத்ம ஸ்வரூபத்தினுடைய பகவத் ஏக சேஷத்வ ஸித்தமான தத் ஏக அநு பவத்வமும்-
தத் ஏக ப்ரியத்வமும்-சொல்லுகிறது –
அதில் தத் ஏக அனுபவத்வ பரமான இம்மூன்றாம் பத்தில் –
1-பகவச் சேஷித்வ பாரம்ய ஸித்தமான ஆத்ம சேஷத்வத்தினுடைய ஸ்வாபாவிகத்வத்தையும்
2-அதுக்கு விரோதியான தேஹ சம்பந்தாதி நிவர்த்த நீயம் என்னும் இடத்தையும்
3-நிவ்ருத்த விரோதிகனுக்கு சேஷ வ்ருத்தி பிரகாரம் பரார்த்த நீயம் என்னும் இடத்தையும்
4-சேஷியினுடைய சர்வாத்ம பாவ ப்ரயுக்தமான சேதனனுடைய அப்ருதக் சித்த பிரகாரத்வம் -சேஷத்வ வேஷம் என்னும் இடத்தையும்
5-ஏவம் வித சேஷத்வ ரசத்தால் வந்த ப்ரேம விகாரத்தையும்
6-சேஷத்வ பிரதிசம்பந்தி அர்ச்சாவதார பர்யந்தம் என்னும் இடத்தையும்
7-தச் சேஷத்வாபி வ்ருத்தி ரூபமான ததீய சேஷத்வ காஷ்டயையும்
8-ததீயா பாரதந்தர்ய நிதானமான தத் அனுபவ அபி நிவேசத்தையும்
9-அனுபவ விசேஷமான வாசிக்க அனுபவ வை லக்ஷண்யத்தையும்
10-சர்வ பிரகார அனுபவ ஸித்தமான ஸமஸ்த விருத்தி நிவ்ருத்தியையும்
அருளிச் செய்து -இச் சேதனனுடைய பகவத் ஏக அனுபவத்தை ப்ரதிபாதிக்கிறார் –
இதில் முதல் திருவாய் மொழியில்
சேஷத்வத்தினுடைய ஸ்வா பாவிகத்வத்துக்கு மூலமான சேஷியினுடைய சர்வ பிரகார பாரம்யத்தை ப்ரதிபாதிப்பதாக
தெற்குத் திருமலையில் கைங்கர்ய பிரதிசம்பந்தி தயா சந்நிஹிதரான அழகருடைய திவ்ய சவ்ந் த்ர்யத்தை அபரோக்ஷித்து
1-ஆபரண அவயவ சோபையினுடைய ஸூ கடிதத்வத்தையும் –
2-உஜ்ஜ்வலமான சவ்ந்தர்யத்தினுடைய உபமான ராஹித்யத்தையும்
3-சர்வ பிரகார உஜ்வல்யத்தால் உண்டான ஸர்வேஸ்வரத்வத்தையும்
4-அந்த பாரம்யத்தினுடைய போக்யதாதிசயத்தையும்
5-இந்த வை லக்ஷண்யத்தினுடைய வாசா மகோசர மாஹாத்ம்யத்தையும்
6-ஸமஸ்த வேதங்களாலும் சாகல்ய யுக்தி பண்ண ஒண்ணாமையும்
7-அதிசயித ஞானரான ப்ரஹ்ம ருத்ராதி தேவதா வர்க்கமும் சொல்ல நினைத்தாலும் அவ் உஜ்வல்யத்துக்கு மாலிந்யாவஹம் என்னும் இடத்தையும்
8-அபூர்வனாய் அதிசயித ஞானனாய் இருப்பான் ஒரு ப்ரஹ்மா தலைப் படிலும் அதேஜஸ் கரம் என்னும் இடத்தையும்
9-ஆச்ரித வாத்சல்ய அதிசயத்துக்கு சங்கல்ப முகத்தாலே பண்ணும் ஸம்ஸ்ரித ரக்ஷண பாராம்யமும் திரஸ்கார கரம் என்னும் இடத்தையும்
10-ஏவம் விதமான பாரம்யத்தை அறிந்து ஈஸ்வர அபிமானிகளும் ஆஸ்ரயிக்கை ஏற்றம் அல்ல என்னும் இடத்தையும்
அருளிச் செய்து பரம சேஷியான ஈஸ்வரன் சந்நிதியில் தச் சேஷத்வத்தினுடைய ஸ்வா பாவிகத்வத்தையும் உபபாதித்து அருளுகிறார் –
முதல் பாட்டில் அழகருடைய திரு அணி கலன்களுக்கும் திருமேனிக்கும் உண்டான ஸூ கடிதத்வத்தை அனுசந்தித்தார்
இரண்டாம் பாட்டில் அதுக்கு நாட்டார் திருஷ்டாந்தம் இட்டுச் சொல்லுமவை எல்லாம் உனக்கு அவத்யத்தை விளைக்கும் என்றார்
மூன்றாம் பாட்டில் -நாட்டாரை விடும் மயர்வற மதிநலம் அருளப் பெற்ற நீர் சொல்லீர் என்ன என்னால் சொல்லி முடியாது என்றார்
நாலாம் பாட்டில் -இப்படி விலஷணனாய் நிரதிசய போக்யனாய் இருக்கிற உன்னை நாட்டார் இழந்து போம்படி
அவர்களை மதி விப்ரமங்களைப் பண்ணினாய் என்றார்
அஞ்சாம் பாட்டில் நாட்டாரில் வ்யாவ்ருத்தர் அல்லீரோ உம்மால் பேச ஒண்ணாமைக்கு குறை என் என்ன
-என்னை வ்யாவ்ருத்தன் ஆக்கினவோபாதி உன்னை சாவதி ஆக்கிற்று இல்லையே என்றார்
ஆறாம் பாட்டில் வேதங்களும் நீரும் கூடப் பேசினாலோ என்ன அவையும் உன்னைப் பரிச்சேதிக்க மாட்டாது என்றார்
ஏழாம் பாட்டில் வேதங்கள் கிடக்கட்டும் -வைதிக புருஷர்கள் என்று சிலர் உண்டே அவர்கள்
ஏத்தக் குறை என் என்ன அதுவும் உனக்கு நிறக்கேடு என்றார்
எட்டாம் பாட்டில் கர்ம பாவனை இன்றிக்கே ப்ரஹ்ம பாவனையேயாய் இருப்பான் ஒரு ப்ரஹ்மாவை உத்ப்ரேஷித்து
அவனும் ஏத்தினாலும் தேவர்க்கு அவத்யம் என்றார்
ஒன்பதாம் பாட்டில் மேன்மை பேச ஒண்ணாது என்கைக்கு நீர்மையோ தான் பேசலாய் இருக்கிறதோ என்றார்
பத்தாம் பாட்டில் உன்னாலே ஸ்ருஷ்டரான ப்ரஹ்மாவாலே ஸ்ருஜ்யரான இவர்கள் உன்னை ஏத்துகையாவது
உனக்கு அவத்யம் அன்றோ என்றார்
நிகமத்தில் இத்திருவாய் மொழி தானே ப்ராப்யத்தைத் தரும் என்கிறார் –
முடிச் சோதி யாயுனது முகச் சோதி மலர்ந்ததுவோ
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் யலர்ந்ததுவோ
படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே –3-1-1-
கடலுக்குள் பட்டதொரு த்ருணம் ஒரு திரை ஒரு திரையிலே தள்ளக் கடந்து அலையுமா போலே -ஓர் அழகு ஓர்-அழகிலே தள்ளக் கிடந்து அவற்றை அனுபவிக்கிறார்-சேஷித்வ ஸூசகமான அழகை அனுபவித்து தம் சேஷத்வத்துக்கு அனுரூபமான திருவடிகளின் அழகை அனுபவிக்கிறார் –மருளில் வ ண் குருகூர் வ ண் சடகோபன் -என்ற தத்வ ஹிதங்களில் சம்சயம் அற்ற இவருக்கு இது ஒரு நித்ய சம்சயம் விளைந்தது
விஞ்ஞான பலமாய் விஷய வை லக்ஷண்யம் அடியாக பிறந்த சம்சயம் ஆகையால் நித்யமாகச் செல்லும் என்கை –
திருமாலே கட்டுரையே —இதுவும் ஒரு சேர்த்தி அழகு இருக்கிறபடி-இப்படி இன்று அனுபவிக்கப் புக்க இவரோடும் நித்ய அனுபவம் பண்ணுபவர்களோடு அவன் தன்னோடு வாசியில்லை இச்சம்சயம் அனுவர்த்திக்கைக்கு-தமக்கு இந்த சம்சயம் அறுதியிட ஒண்ணாதாப் போலே அவர்களுக்கும் என்று இருக்கிறார்-கட்டுரையே -சொல்ல வேண்டும் என்றபடி -ஷேப உக்தி -சொல்ல முடியாது என்றபடி –அறிந்தேன் என்பவன் அறியாதவன் ஆகிறான் –
————-
கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை யொவ்வா
சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது
ஒட்டுரைத்து இவ்வுலகு உன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி –3-1-2-
முதல் உறவு பண்ணும் கண் -அதுக்கு தோற்று ஜிதந்தே என்று விழும் திருவடிகள் -அவ் விழுக் காட்டுக்கு தோற்று அவன் தான் ஜிதந்தே என்று அணைக்கும் கை-இவை இருக்கிற படி –நின் கண் -என்கையாலே -உனது முகச் சோதி -என்றத்தை நினைக்கிறது-பாதம் என்று -அடிச் சோதி என்றத்தை நினைக்கிறது –-கை என்று தாம் நடு வனுபவித்த அழகுக்கு உப லஷணம் –ரத்னம் அறியாதான் ஒருவன் குருவிந்தக் கல்லோடு ஒக்கும் இது -என்றால் -அவ்வளவாக இ றே இவனுக்கு இதில் பிரதிபத்தி –
அவ்வழியாலே அதுக்கு அவத்யமாம் இ றே -அப்படியே இவன் பண்ணும் ஸ்தோத்ரம் இங்குத்தைக்கு அவத்யமாகவே தலைக் கட்டும் –இங்குத்தைக்கு புன்மையைக் காட்டுகைக்கு நிபந்தனம் என் -என்னில் பரஞ்சோதி –நாராயண பரோ ஜ்யோதி -என்கிறபடியே நீ சர்வ வஸ்து விசஜாதீயன் ஆகையாலே –
——————
பரஞ்சோதி நீ பரமாய் நின்னிகழ்ந்து பின் மற்றோர்
பரஞ்சோதி யின்மையில் படியோவி நிழல்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த எம்
பரஞ்சோதி கோவிந்தா பண்புரைக்க மாட்டேனே –3-1-3-
உன்னுடைய சங்கல்ப லவ லேசத்தாலே கார்யகரமாய்க் கொண்டு விஸ்த்ருதமாக நின்றுள்ள லோகங்களை எல்லாம் உண்டாக்கின எம் பரஞ்சோதி –மேன்மையை எல்லை காணிலும்-நீர்மை தரை காண ஒண்ணா தாய் இருக்கிறதே-நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய்யூண் என்னும் ஈனச் சொல் -திரு விருத்தம் -98-என்று நெஞ்சால் நினைக்க ஒண்ணாதது சொல்லத்தானே போகாதது இறே- -ஸூலபதையால் வந்த தேஜஸ் ஸூம் உன்னது-அழகுக்கு மேற்பட்டார் இல்லாமையால் அழகால் வந்த தேஜஸ் ஸூம் உன்னது-லோகத்தில் உபமான ரஹிதர் நீயே யாகையாலே உபமான ராஹித்யத்தால் வந்த தேஜஸ் ஸூம் உன்னது–ஜகத் காரணத்வ ப்ரயுக்தமான தேஜஸ்ஸூம் உன்னது
பண்புரைக்க மாட்டேனே-பண்பு -படி -உன் படிகள் இவையான பின்பு என்னால் பேசப் போகாது-அனுபவித்துப் போம் இத்தனை- என்கிறார் –
———–
மாட்டாதே யாகிலும் மலர்தலை மா ஞாலம் நின்
மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம் வைக்க
மாட்டாதே பல சமய மதி கொடுத்தாய் மலர்த்துழாய்
மாட்டே நீ மனம் வைத்தாய் மா ஞாலம் வருந்தாதே –3-1-4-
மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம் வைக்க–உன் இடத்திலேயான -உன் பக்கலிலே யான -அன்றிக்கே -மாட்டு -என்று மாடாய் -நிதி போலே ஸ்லாக்க்யமான என்னுதல்-
மாட்டு என்று மட்டாய்-மத்வ உத்ஸ – என்று மதுஸ் யந்தி யாகையாலே நிரதிசய போக்யம்-என்னுதல் – –மாட்டு -இடம் -தேன் -நிதி மூன்று பொருள்கள்
மாஞாலம் -இத்யாதி-இம் மஹா பிருத்வியானது இங்கனே நோவு பட்டே போமித்தனை ஆகாதே
1–கர்ம வச்யர் ஆகையாலே தானே உன் பக்கலிலே நெஞ்சை வைக்க மாட்டிற்றிலர்-
2–அதுக்கு மேலே நீ பல விலக்கடிகளையும் உண்டாக்கி வைத்தாய் –
3–நீயோ நிரதிசய போகய ஜாதத்திலே பிரவணனானாய்-இனி சம்சாரிகளுக்கு க்லேசமேயோ சேஷித்தது –-உன்னை விட்டால் பின்னை புத்தி நாசாத் ப்ரணச்யதி -ஸ்ரீ கீதை -2-63–என்னும் விஷயங்களிலே இவர்கள் பிரவணராய் இங்கனே நோவு பட்டே போம் இத்தனையாகாதே –படிக்கட்டு-விஷாயாந்தர -நினைவு -சங்கம் பற்று -விருப்பம் -பேராசை கிடைக்காமல் –கோபம் -சம்மோஹம் மயக்கம்-நினைவு போகும் -புத்தி நாசம் -ஸ்வரூப நாசம் –பிரானே தமக்கு பகவத் விஸ்லேஷம் கிலேச கரமாய் இருக்கையாலே எல்லாருக்கும் இப்படி இருக்கும் என்று இருக்கிறார்–
————
வருந்தாதே வருந்தவத்த மலர்கதிரின் சுடருடம்பாய்
வருந்தாத ஞானமாய் வரம்பின்றி முழுதியன்றாய்
வரும் காலம் நிகழ்காலம் கழிகாலமாய் உலகை
ஒருங்காக வளிப்பாய் சீரெங்குலக்க வோதுவனே -3-1-5-
மூன்றாம் பாட்டுக்கும் இப்பாட்டுக்கும் நேரே சங்கதி -நாட்டார் இழவு நடுவு பிரசங்காத் ப்ரஸ்துதம் இத்தனை – கோவிந்தா பண்புரைக்க மாட்டேனே -என்று சொல்லுவான் என்-நாட்டார் பேர் இழவு கிடக்கிடீர் -மயர்வற மதிநலம் அருளப் பெருகையாலே நீர் வ்யாவ்ருத்தரே – நாட்டாரில் வ்யாவ்ருத்தரான அளவேயோ -விண்ணுளாரிலும் வ்யாவ்ருத்தரே -நீர் நம்மைப் பேச மாட்டீரோ என்ன – என்னை வ்யாவ்ருத்தன் ஆக்கினாய் இத்தனை அல்லது உன்னை சாவதி ஆகிற்றிலையே -என்கிறார் –
திரு மேனியைக் கண்டவாறே -அரிய தப பலமோ -என்று தோற்றி இருக்கும் -ஆபாத ப்ரதீதி –
சிறிது அவஹாகித்தவாறே -ஒரு தப பலம் அல்ல -சஹஜ பாக்ய பலம் -என்று தோற்றி இருக்கும் -நிர்ணயம் -காலத் த்ரயத்திலும் லோகத்தை ஒருங்காக ஒருமடைப்பட ஒரு படியே ரஷிக்கிற உன்னுடைய குணங்களை எங்கே முடிய நான் பேசுவேன்-உடையவன் ஆகையால் எல்லாவற்றையும் உடைய உன் சர்வ ரக்ஷகத்வம் இவற்றை எங்கே நான் முடிவு காண –
—————
ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும்
சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிறிதில்லை
போது வாழ் புனந்துழாய் முடியினாய் பூவின் மேல்
மாது வாழ் மார்பினாய் என் சொல்லி நான் வாழ்த்துவனே -3-1-6-
எங்குலக்க ஓதுவன் -என்றார் -வேதங்கள் நம்மைப் பேசா நின்றனவே -உமக்குப் பேசத் தட்டு என் -என்ன-அவையும் இவ்வளவு அன்றோ -தகையல்லால் பிறிதில்லை -செய்தது -வேதங்கள் உன்னைப் பேசி சத்தை பெற்றன-என்கிறார் –
ஸ்ரீ ராமாயணம் என்றால் ப்ரஹ்ம லோகத்தில் அநேகம் க்ரந்தமாய் இருக்கச் செய்தே இங்கு இருபத்து நாலாயிரமாய் இரா நின்றது-
பூவின் மேல் மாது வாழ் மார்பினா-பிராட்டி பிரிந்து இருக்கில் இறே வைத்த வளையம் சருகாவது –இவ்வொப்பனையை ஒப்பனை யாக்கும் அவளோட்டை சேர்த்தி தான் என்னாலே பேசலாய் இருந்ததோ –தாமரைப் பூவை இருப்பிடமாக உடைய பெரிய பிராட்டியார் பூ அடி கொதித்துப் போந்து வர்த்திக்கும் மார்வை உடையவனே –
பிராட்டி பெருமாளைக் கைப்பிடித்த பின்பு பிறந்தகமான ஸ்ரீ மிதிலையை நினைக்கும் அன்றாயிற்று இவளும் இம்மார்வை விட்டு பிறந்தகமான தாமரையை நினைப்பது –
என் சொல்லி யான் வாழ்த்துவனே-இவ்வொப்பனைக்கும் இச்சேர்த்திக்கும் என்னாலே பாசுரம் இட்டு சொல்லலாய் இருந்ததோ –சர்வேஸ்வர சிஹ்னமான திருத் துழாய் ஆகையால் அவ் வைஸ்வர்யத்தைப் பேசவோ –பிராட்டி யோட்டைச் சேர்த்திக்கு நான் பாசுரம் இட்டுச் சொல்லவோ –
——————
வாழ்த்துவார் பலராக நின்னுள்ளே நான்முகனை
மூழ்த்த நீருல்லெல்லாம் படை என்று முதல் படைத்தாய்
கேழ்த்த சீரரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து
சூழ்த்தமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே –3-1-7-
உன்னாலே ஸ்ருஷ்டனான சதுர்முகனாலே ஸ்ருஷ்டரானவர்கள் உன்னை ஏத்த என்ற ஒரு பொருள் உண்டோ –இப்பங்களத்தை விட்டு கால்கடியரானவர்கள் ஏத்தப் புக்கால் எல்லை காணப் போமோ -கால் கடியார் -சக்தர் –இவர்கள் ஏத்தும் அளவோ இவன் குணங்கள் என்ன — அவ்வழியாலே அவத்யமாய்த் தலைக்கட்டாதோ –
————-
மாசூணாச் சுடருடம்பாய் மலராது குவியாது
மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய்
மாசூணா வான் கோலத்தமரர் கோன் வழிப்பட்டால்
மாசூணா வுனபாதம் மலர்ச்சோதி மழுங்காதே–3-1-8-
இவனைப் போல் அன்றியே கேவலம் ப்ரஹ்ம பாவனையேயாய் இருப்பான் ஒரு ப்ரஹ்மாவை உத்ப்ரேஷித்து-அவன் ஏத்தினாலும் தேவர்க்கு அவத்யமாம் அத்தனை அன்றோ – என்று பட்டர் அருளிச் செய்யும் படி-
மலராது குவியாது -என்கிறது கீழும் மேலும் அந்வயிக்கக் கடவது-சம்சாரிகள் கர்ம நிபந்தமாக பரிக்ரஹித்த தேஹத்துக்கு வரக் கடவதான ஸ்வரூப அந்யதா பாவமும் இல்லை இவன் திருமேனிக்கு – அவர்கள் ஞானத்துக்கு வரக் கடவதான ஸ்வபாவ அந்யதா பாவமும் இல்லை இவனுடைய ஞானத்துக்கு -என்கை-தம்முடைய சேஷத்வ அனுரூபமாக உன் திருமேனி என்னாதே உனபாதம் என்கிறார்-திருமேனி -சோதி சொல்லாமல் –சுடர் உடம்பாய் -தொடங்கி -சேஷ பூதர் என்பதால் –பாத மலர்ச் சோதி மழுங்காதே -என்கிறார்-மாசூணா வுனபாதம் மலர்ச்சோதி-ஹேய பிரதி படமான உன்னுடைய திருவடிகளின் அழகு –
—————
மழுங்காத வைந் நுதிய சக்கர நல் வலத்தையாய்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படையாக மலருலகில்
தொழும் பாயர்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே –3-1-9-
கையில் திரு வாழி இருந்தது அறிந்திலன்-அறிந்தான் ஆகில் இருந்த விடத்தே இருந்து அத்தை ஏவிக் கார்யம் கொள்ளலாம் இறே-ஆர்த்த நாதம் செவிப் பட்டவாறே -தன்னை மறந்தான் -கையும் திரு வாழியுமான தன்னை -தான் ரஷகன் என்பதை மறக்க வில்லை –
நினைத்தாலும் இருந்த இடத்திலே இருந்து துக்க நிவ்ருத்தி பண்ண ஒண்ணாது
தொழும் காதல் களிறு ஆயிற்று-கையும் திரு வாழியுமான அழகு காண ஆசைப்பட்டு இருக்கிறவன் ஆயிற்று –காதலே இதுக்கு நிரூபகமாய் இருக்கை-சேஷ பூதனுக்கு காதல் அடையாளம் -சேஷிக்கு அடையாளம் நல் சக்கர வலத்தை புள்ளூர்வது-சங்கல்பத்துக்கு முற்பட்டாயிற்று திருவடி வேகம் இருப்பது-அவன் வேகம் போராமல் அவனையும் இடுக்கிக் கொண்டு இறே வந்து விழுந்தது -ஹூம் ஹூம் -பட்டர் –-தோன்றினையே -இடர் பட்டார் தாமாய்-தமக்குத் தோற்றினால் போலே காணும் இருக்கிறது –மலருலகில்-திரு நாபீ கமலத்தை அடியாக யுடைததான சம்சாரத்தில் -மலரும் உலகம் -மலரை அடியாக கொண்ட உலகம் –மறையாதே என்ற இதுக்கு மறையும் மறையும் -என்று சிற்றாட் கொண்டான் வார்த்தை —பெரு முதலியாய் இருந்து வைத்து திருவடிகளை ஆஸ்ரயித்தார்க்கு தானே தடுமாறி கொண்டு வந்து உதவும் என்னும் இவ் வழகிய தேஜஸ்ஸை இழந்தாய் ஆகாதே –
————–
மறையாய நால் வேதத்துள் நின்ற மலர்ச் சுடரே
முறையால் இவ்வுலகெல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய்
பிறையேறு சடையானும் நான்முகனும் இந்த்ரனும்
இறையாதல் அறிந்து ஏத்த வீற்று இருத்தல் இது வியப்பே –3-1-10-
மறை என்றும்-வேதம் என்றும் இரண்டு படியாகச் சொல்கிறது –
பாஹ்யராய் நாஸ்திகராய் இருப்பாருக்கு தன் படிகளை மறைக்கையாலும்
ஆஸ்திகராய் இருப்பார்க்கு தன் அர்த்தத்தை வெளியிட்டுக் காட்டுகையாலும்-வேதங்களிலே சர்வாதிகனாகவும் நிரதிசய போக்யனாகவும் பிரகாசிக்கிறவனே-சர்வவித ரஷணங்களையும் பண்ணிணவனே-விஷம சிருஷ்டிக்கு அடியான கர்ம விசேஷம் இறே சேதனர் பண்ணி வைப்பது-யௌ கபத்யம் அனுக்ரஹ கார்யம் -ஒருவன் ஒரு குழமணனைப் -மரப்பாச்சி பொம்மை -பண்ணி -அதன் கழுத்திலே காக்கைப் பொன்னித் தொற்றி -அதன் தலையிலே காலை வைத்து-இது என்னை வணங்கிற்று என்று இறுமாந்து இருக்குமா போலே நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணி -திருவாய்மொழி -7-5-4-என்கிறபடியே-உன்னாலே மனையப் பட்ட பிரம்மாவும் அவனாலே ஸ்ருஷ்டரான இவர்களும் உன்னை ஏத்த அத்தாலே இறுமாந்து இருந்தால் என்றால் இது உனக்கு ஏற்றமோ -ஹாச்யமாய்த் தலைக்கட்டும் அத்தனை அன்றோ-உனக்கு அவத்யம் அன்றோ –-
—————
வியப்பாய வியப்பில்லா மெய்ஜ்ஞான வேதியனை
சயப்புகழார் பலர் வாழும் தடம் குருகூர் சடகோபன்
துயக்கின்று தொழுதுரைத்த வாயிரத்துள் இப்பத்தும்
உயக்கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே -3-1-11-
துயக்காவது -மனம் திரிவு சம்சார விபர்யய ரஹிதமாக சாஷாத்கரித்து அருளிச் செய்த ஆயிரத்தில் வைத்துக் கொண்டு இப்பத்தும் அராஜகமான தேசத்தில் ராஜ புத்திரன் தலையில் முடியை வைத்து விலங்கு வெட்டி விடுமா போலே அழகர் திருவடிகளிலே கைங்கர்யத்தை அன்வயித்து பின்னை தத்விரோதியான சம்சார சம்பந்தத்தை அறுத்துக் கொடுக்கும்-
——————–——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –