(1) பூர்வ த்,விகம் – ஸூரி வைபவம் 1 முதல் 186 வது ஸூத்ரம் வரை (186)
(2) உத்தர த்,விகம் – ஸூரி ஸுக்த்தி வைபவம்– 187 முதல் 284 முடிய (48)
(1) ப்ரத, மோத், யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம் 1-38 (38)
(2) த்,விதீயோத், யாய: – க்,ரந்த, கர்த்ரு வைப,வம் 39 – 186 (148)
(3) த்ருத்யோத், யாயம் – க்,ரந்தாந்தர தார தம்ய வைப,வம் 187-207 (21)
(4) சதுர்த்தே ரத், யாயம் -கிரந்த, ப்ரதிபாத்,ய க்ரம வைப,வம் 208-284 (27)
7-ஒளபம்ய பாதம் – 122–155—மொத்தம் 34 ஸூரணைகள் -இதில் இரண்டு அதிகரணங்கள் —
10-ப,க,வந்நாயி கெளபம்யாத்,யதி, கரணம்–122–132–மொத்தம் – 11 ஸூரணைகள்
11-அந்யாபதேஸ -ஸ்வாபதேஸ அதி கரணம் —-133–155– மொத்தம் —23-ஸூரணைகள்
—
இப்படி கேவலம் ஸ்திரீ சாம்யமே அன்றிக்கே –-நாரீணாம் உத்தமையான பிராட்டி யோடு சாம்யமும் பரிசுத்த ஆத்ம ஸ்வரூபதுக்கு உண்டு என்னும் அத்தை ஸ்பஷ்டமாக அருளிச் செய்கிறார் மேல் ..கேவலம் ஸ்த்ரீத்வ ஸாம்யமே யன்றிக்கே பரிஸூத்தமான ஸ்வரூபத்தினுடைய யாதாத்ம்யத்துக்குப் பெரிய பிராட்டியாரோடு அநந்யார்ஹத்வாதிகளாலே ஸ்வரூப ஸாம்யம் உண்டென்கிறார்–
இன்பும் அன்பும் முற்படுவது கொழுந்து விடுவதாகிற-கடி மா மலர் பாவையோடு-உள்ள சாம்ய ஷட்கத்தாலே–சூரணை -122-
இன்பு முற்படுவது-அதாவது –-நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை -4-5-8–என்று
இன்று ஆஸ்ரயித்த நமக்கும் — நித்ய சூரிகளுக்கும் அவ் அருகாய் ,ரூப குணத்தாலும் ,ஆத்ம குணத்தாலும் பூர்ணயாய் இருக்கும் பிராட்டிக்கும் இன்பனாம் -என்ற இடத்தில் –முற்பட இங்கே இன்பனாய் பின்பாயிற்று அவளுக்கு ஸ்நேஹிப்பது என்னும் படி – பிராட்டிக்கு முன்பே இவர் பக்கல் இன்பன் ஆவது –இன்பனாவது -அன்பு கொழுந்து விடுவதாகிறது –-அதாவது-கோல மலர் பாவைக்கு அன்பாகிய என் அன்பே 10-10-7–என்று-நிரதிசய போக்யையான பிராட்டிக்கு அன்பன் ஆகையாலே அவள் பரிக்ரஹமான என் பக்கலிலும் அன்பனாவனே என்னும் படி — அவள் பக்கல் பண்ணின ஸ்நேஹம் இவர் அளவும் வளர வருவதாய் – இப்படி இன்பு முற்படுகிறது அன்பு கொழுந்து விடுகிறது ஆகிறது –கடிமா மலர் பாவை ஒப்பாள்–பெரிய திருமொழி -3-7-9–என்று-பரிமள பிரசுரமான பூவில் பிறப்பாலும் , நிருபாதிக ஸ்த்ரீத்வத்தாலும் நிரதிசய போக்ய பூதையான பிராட்டியோடு ஒக்க சொல்லலாம் அவள் என்னும்படி பிராட்டியோடு இத் தலைக்கு உள்ள சாம்யத்துக்கு உடலான –
1-அனந்யார்ஹ சேஷத்வம்-2-அநந்ய சரணத்வம்-3-அநந்ய போக்யத்வம்-4-சம்ஸ்லேஷத்தில் தரிக்கை
5-விஸ்லேஷத்தில் தரியாமை-6-ததேக நிர்வாஹ்யத்வம்-ஆகிற ஆறு பிரகாரத்தால் என்கை .-இன்பன் -என்றது ஸ்நிக்தன் என்றபடி ..ஆகையால் அன்போ பாதி இன்பும் சிநேக வாசி ஆகையாலே ஸ்நேஹம் முற்படுவது -கொழுந்து விடுகிறது என்றபடி–-இன்பும் அன்பும் -இரண்டு போல சொல்லிற்று –
முற்படுதலும் ,கொழுந்து விடுதலும் சொல்லுகிற ஸ்தலங்களிலே சிநேக வாசக தயா ப்ரயுக்த சப்தங்கள் இவை ஆகையாலே இரண்டு சந்தையும் தோற்றுகைக்காக –பிராட்டியோடு உள்ள என்ன அமைந்து இருக்க -கடி மா மலர் பாவை யோடு உள்ள – என்றது – அந்த சந்தையிலே பிராட்டி சாம்யம் முக்த கண்டமாக சொல்லி இருக்கையாலும் ,-கந்தல் கழிந்த ஸ்வரூபத்தை உடையோர் எல்லோரையும் இப்படிச் சொல்லுகிறது – ஸ்வரூப அனுபந்தியான இஸ் சாம்ய ஷட்கத்தாலே என்று அறிவிக்கைக்காகவும் —சாம்யத்தாலே என்னாது சாம்ய ஷட்கத்தாலே என்றது –-1-நிரூபகத்வம்
2-அனுரூபத்வம்-3-அபிமதத்வம்-4-சேஷத்வ சம்பந்த த்வாரபாவம்-5-புருஷகாரத்வம்
6-ப்ராப்ய பூரகத்வம் முதலான ஸ்வாப விசேஷங்கள் தத் அசாதாரணங்கள் ஆகையாலே –
(இன்பும் அன்பும் முற்படுவது கொழுந்து விடுவதாகிறது) “நமக்கும் பூவின் மிசை நங்கைக்குமின்பனை”’ (திருவா. ச – 5 – 8) என்று – இன்று ஆஸ்ரயித்த நமக்கும் நித்ய ஸூரிகளுக்கும் அவ்வருகாய், ரூப குணத்தாலும் ஆத்ம குணத்தாலும் பரிபூர்ணை யாயிருக்கிற பெரிய பிராட்டி யார்க்கும் இன்பனாமிடத்தில் “இங்கே இன்பனாயாய்த்துப் பின்னே அவளுக்கு ஸ்நேஹிப்பது’ என்று பிராட்டிக்கு முன்னே தன்பக்கல் இன்பனாவது, ‘*கோல மலர்ப் பாவைக்கன்பாகிய என் அன்பேயோ?‘” (திருவா. 10 -10 -7) என்று – நிரதிஸய போக் யதைக வேஷையான பெரிய பிராட்டியாருக்கு அன்பனாகையாலே அவள் பரிக்ரஹமான என் பக்கலிலும் அன்பனானவன் என்று பெரிய பிராட்டியார் பக்கல் அவனுக்குண்டான அன்பு தம்மளவாக வர்த்திப்பதாய், இப்படி இன்பு முற்படுவது, அன்பு கொழுந்து விடுவதாகிறது. (கடி மா மலர்ப் பாவையோடுள்ள ஸாம்ய ஷட்கததாலே) “காவியங் கண்ணி யெண்ணில் கடி மாமலர்ப்பாவை யொப்பாள்” (திருமொழி 3 – 7 – 9) என்றும், “காவி?” என்று செங்கழுநீராய், செவ்வரியாலும், கடைக் கண்ணில் சிவப்பாலும் செங்கழுநீர் போன்ற கண்ணழகை உடையள் என்கையாலே ராகோத்தரமான ஜ்ஞாநத்தை உடையள் என்றபடி.-இத்தால் மேற் சொல்லப்படுகிற அநந்யார்ஹ ஸேஷத்வ ஜ்ஞாநாதி ஷட்கத்துக்கும் உப லக்ஷணம். அது என் என்னில், ”கடிமாமலர்ப்பாவை யொப்பாள்”’ என்று – இவளை ஆராயில் பரிமள ப்ரசுரமான தாமரையை இருப்பிடமாக உடையளாய், நிருபாதிகமான ஸ்த்ரீத்வத்தை உடையளாகையாலே ரூப குணத்தாலும், ஆத்ம குணத்தாலும் பூர்ணையாய்க் கொண்டு நிரதிஸய போக்யையாயிருக்கிற பெரியபிராட்டியாரோடொக்கச் சொல்லலாம்படியான அநந்யார்ஹ ஸேஷத்வமும், அநந்ய ஸரணத்வமும், அநந்ய போக்யத்வமும், ஸ்ம்ஸ்லேஷத்தில் தரிக்கை, விஸ்லேஷத்தில் தரியாமை, ததேக நிர்வாஹ்யத்வம் என்கிற ஆறு ப்ரகாரத்தாலே என்கிறார்; இனி அபிமதத்வம், அநுகூலத்வம், நிருபகத்வம், ஸேஷத்வ ஸம்பந்த த்வாராபாவம், புருஷகாரத்வம், ப்ராப்ய பூரகத்வம் என்கிற இவை முதலான ஸ்வபாவ விஸேஷங்கள் பெரியபிராட்டியாருக்கே அஸாதாரணமா யிருக்குமிறே–
நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானைத் தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொல்மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனியாவர் நிகர் அகல் வானத்தே?–4-5-8–இன்று தன் திருவடிகளை ஆஸ்ரயித்த நமக்கும் – நித்ய சம்சாரிகளுக்கும் இவ்வருகான நமக்கும் -நீசனேன் நிறை ஒன்றும் இலேன் -என்றார் இறே-பூவின்மிசை நங்கைக்கும்-நித்ய ஸூரிகளுக்கும் அவ்வருகாய்-ரூப குணத்தாலும் ஆத்ம குணத்தாலும் பூர்ணையாய் இருந்துள்ளவளுக்கும் புஷ்பத்தில் பரிமளத்தை வகுத்தால் போலே இருந்துள்ள ஸுகுமார்யத்தையும் போக்யத்தையும் உடையவள்-இத்தலை நிறைவு இன்றிக்கே இருக்கிறாய் போலே யாயிற்று அத்தலையில் குறைவற்று இருக்கிற படி-இன்பனை-ஸ்நேஹித்து இனியனாம் இடத்தில் முற்பட்டு இருப்பது நம் பக்கலிலே-த்வயி கிஞ்சித் சமாபன்னே-ஒருத்தருக்கு பிரஜைகள் பலரானால் அவிலக்ஷணர் பக்கலிலே இறே -ஸ்நேஹம் மிக்கு இருப்பது
கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7–பிராட்டி பக்கல் ஸ்நேஹ அதிசயத்தாலே -அந்த ஸ்நேஹமே ஹேதுவாக அவள் பரிக்ரஹமான என் பக்கலிலே அதி பிரவணன் ஆனவனே –சரம தசையில் இவர் அருளிச் செய்த வார்த்தை ரகசியத்தின் படி இருந்தபடி கண்டாயே என்று சீயரைக் குறித்து பட்டர் அருளிச் செய்தார் –பிராதி கூல்யத்தை கனக்கப் பண்ணினார் பக்கலிலும் நாலடி வர நின்றதுவே ஹேதுவாக ரக்ஷகனாம் ஈஸ்வரன் என்னும் இடம் காக விபீஷணாதிகள் பக்கல் கண்டது இறே-க்ருபயா பர்யபாலயாத் — என்றும் நத்யஜேயம் என்றும் அவ்வளவு அன்றிக்கே தனி இருப்பில் தர்ஜன பர்ச நாதிகளாலே நலிந்த ராக்ஷஸிகள் பக்கல் திருவடி எதிர்க்க –க குப்யேத்-கார்யம் க் ருணம் ஆர்யேனே நகச்சின் நபராத்யதி -என்னும் நீர்மை இறே பிராட்டி நீர்மை –
காவியங்கண்ணி எண்ணில் கடி மா மலர்ப் பாவை யொப்பாள்
பாவியேன் பெற்றமையால் பணைத் தோளி பரக்கழிந்து
தூவி சேர் அன்னம் அன்ன நடையாள் நெடுமாலொடும் போய்
வாவி யந்தண் பணை சூழ் வயலாலி புகுவர் கொலோ ?–3-7-9—ஈஸ்வரனைக் காட்டில் பிராட்டி
அஸி தேஷணை-என்னும் ஏற்றத்தை உடையாள் ஆனாப் போலே-பிராட்டியில் ஏற்றம் இவளுக்கு -காவியங்கண்ணி -என்று இருவரையும் சேர அனுபவிக்கிற கண் இறே இவளுடைய கண்கள் –
(அத் திரு அவனைப் பற்றும் இத் திரு இருவரைப் பற்றும் )
—
இப்படி ஆறு பிரகாரத்தாலே பரிசுத்த ஆத்ம ஸ்வரூபத்துக்கு தத் சாம்யம் உண்டாகையாலே
பிராட்டி தசை இவருக்கு வந்தேறி அல்லாமையை பிரகாசிப்பித்தாராய் நின்றார் கீழ்– ஏவம் பூதாகாரத்தாலே பெரிய பிராட்டியாரோடு உள்ள சாம்யமே அன்றிக்கே – தம்முடைய பாவ விசேஷங்களால் பகவத் அபிமத திவ்ய மகிஷிகளான பிராட்டிமார் மூவரோடும் இவருக்கு உண்டான சாம்யம் இவர் பாசுரங்களிலே பிரகாசிக்கும் என்கிறார் மேல்-இப்படிப் பெரிய பிராட்டியாரோடு ஸாம்யம் சொன்னவள வன்றிக்கே நிரதிஸய போக்யதையை உடைய பிராட்டிமார் மூவரோடும் இவர்க்கு ஸாம்யம் உண்டு என்னுமாகாரம் இவருடைய பாசுரங்களிலே ப்ரகாஸிக்கு மென்கிறார்-
உண்ணாது கிடந்தோர் மாயையினால் என்னும் வீறுடைய முடிக்கு உரியரோடு இத் திரு மண்ணேர் அன்ன ஒண்ணுதல் பின்னை கொல் என்கிற ஒப்பு தென்பால் நெடுமாடம் கடும் சிலை அம்பெரி யூட்டி
நீறு எழ வெரித்த பெரும் தோற்றத்து ஆர் உயர் காகுத்தன் ஆதி அம் காலம் மண் புரை பொன் மாதின் துகளாடி எருது ஏழ் தழீ இச் சறையினார் என்னுமவற்றிலே தோன்றும்–சூரணை -123-
(உண்ணாது என்னும் வீறுடைய முடிக்கு உரியரோடு இத் திரு என்கிற ஒப்பு –1-தென்பால் 2-நெடுமாடம் 3-கடும் சிலை 4-அம்பெரி 5-யூட்டி 6-நீர் எழ 7-வெரித்த 8-பெரும் தோற்றத்து 9-ஆர் உயர் காகுத்தன்-என்னுமவற்றிலே தோன்றும் –கிடந்து என்னும் வீறுடைய முடிக்கு உரியரோடு மண்ணோர் அன்ன ஒண்ணுதல் என்கிற ஒப்பு – 1-ஆதி அம் காலம் 2-மண் புரை 3-பொன் மாதின் 4-துகளாடி-என்னுமவற்றிலே தோன்றும்– ஓர் மாயையினால் என்னும் வீறுடைய முடிக்கு உரியரோடு பின்னை கொல் என்கிற ஒப்பு- 1-எருது ஏழ் தழீ 2-இச் சறையினார் என்னுமவற்றிலே தோன்றும் )- (பட்ட மஹிஷிகள் மூவரும் என்பதால் மூவரும் முடிக்கு உரியர் )–உண்ணாது என்னும் –அதாவது – உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடறுத்து பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்ற பேதெல்லாம் –நாச்சியார் -11-7–என்கிறபடி ஜனக குல சுந்தரியான தன்னைப் பிரிந்த போது –கம்பீர சத்ய சம்பன்ன க்ருபாவான் அவிகத்தன பரகீய குணக்ராஹீ தீரா தாத்தோ நிகத்யதே-என்கிறபடி -தீரோத்த நாயகன் ஆகையாலே ,
விகார ஹேதுக்கள் உண்டானாலும் தைர்யத்தாலே புறம் தோன்றாது இருக்கும் சக்கரவர்த்தி திரு மகனை – ந மாம்சம் ராகவோ புங்க்தே -ந மது சேவிதே அநித்ரஸ் சததம் ராம –நைவ தம்சான் ந மசகான்–ஸூந்தர -36-42-/44 –இத்யாதிப் படியே – (அநஸ்நன் -உபநிஷத் பரத்வம் உண்ணாமல் இருப்பதே ஸ்வரூபம் – இங்கு அவதார தசையில் உண்ணுவாரே பிராட்டி உடன் கூட இருந்தால் ) ஊணும் உறக்கமும் அற்று -கடித்ததும் ஊர்ந்ததும் அறியாதபடி பண்ண வல்ல வைலஷண்யத்தால் -வந்த–
(உண்ணாது என்று தொடங்கி). ‘“உண்ணாதுறங்கா தொலி கடலை ஊடறுத்துப் பெண்ணாக்கை ஆப்புண்டு தாமூற்ற பேது” என்றும், “’ந மாம்ஸம் ராகவோ பு,ங்க்தே ந சாபி மது ஸேவதே”’ (ரா. ஸு, 36 – 41), ”அநித்ரஸ்ஸதம் ராமஸ் ஸுப்தோபி ச நரோத்தம: (ரா.ஸு. 36 – 44), “நைவ தம்ஸாந் ந மஸகாதந் ந கீடாந்த ஸரீஸ்ருபாந் ! ராகவோபநயேத், கத்ராத் தவத் கதேநாந்தராத்மநா” (ரா.ஸு., 36 -42) என்கிறபடியே தீரோதாத்த நாயகனான சக்ரவர்த்தித் திருமகனையும் தன்னுடைய விஸ்லேஷத்தில் ஊணுமுறக்கமுமற்று, கடித்ததும், ஊர்ந்ததும் அறியாதபடி பண்ணவல்ல வைலக்ஷ்ண்யத்தால் வந்த வீறுடையளாய், –
உண்ணாது உறங்காது ஒலி கடலை யூடறுத்து
பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்றபேதெல்லாம்
திண்ணார் மதிள் சூழ் திருவரங்கச் செல்வனார்
எண்ணாதே நம்முடைய நன்மைகளே எண்ணுவரே–11-7-ந மாம்சம் ராகவோ புங்க்தே ந சாபி மது சேவதே-என்கிறபடியே பார்த்து பரிந்தூட்டுமவள் போனால் -இனி யார் அவரைப் பரிந்தூட்ட – மா மலர் மங்கை மணம் உண்டு இருந்தான் இறே அவள் போனால் இவனுக்கு ஊண் இல்லை இறே –அநித்ரஸ் சததம் ராம -என்கிறபடியே – கண் உறக்கம் அற்று ஊண் உறக்கம் அற்று-ஸூக்ரீவம் சரணம் கத –என்று
கண்ட காபேயர் கால்களிலே விழுந்து-ஓதம் கிளர்ந்த கடலை ஊடறுத்து-கூறு அறுத்து அடைத்து –
சமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்தும் அர்ஹதி -யுத்த -19-30-என்று ராஷசனுக்கு சிஷ்யராய்ப் புக்கு -அவன் சொல்லக் கடலை சரணம் புக்கு –பிராட்டி வடிவிலே பத்தராய்-ஒரு பெண் கொடியாலே கட்டுண்டு – ஆக்கை -சரீரம்-கொடி இரண்டு பொருளும்-தாம் பட்ட எளிமை எல்லாம் பண்ணாதே-
வீறுடைய முடிக்கு உரியரோடு-அதாவது –வீறு உடையவளாய் –-சர்வேஸ்வர சாம்ராஜ்யத்தில் அவனோடு ஒக்க முடி சூடுகையாலே –முடிக்கு உரியளான ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடும் ,–கிடந்து என்னும் வீறுடைய முடிக்கு உரியரோடு-அதாவது-கிடந்து இருந்து நின்று அளந்து —திருவாய் -2-8-7-என்கிற பாட்டின் படி (விராதன் ஸ்தோத்ரம் -அரவாகி சுமத்தியால் -இத்யாதி ) சர்வஜ்ஞனாய் , அவாப்த சமஸ்த காமனான சர்வேஸ்வரனை -பஹு பிரகாரமாகத் தன்னை அனுபவித்தாலும் – பர்யாப்த்தன் ஆகாதபடி பிச்சேற்ற வல்ல வைலஷண்ய பிரயுக்தமான வீறு உடையளாய்- ஸ்ரீ பெரிய பிராட்டியாரோபாதி முடிக்கு உரியளான ஸ்ரீ பூமி பிராட்டியாரோடும் —
ஸர்வேஸ்வர ஸாம்ராஜ்யத்தில் அவனோடொக்க அபிஷிக்தை யாகையாலே முடிக்குரியளா யிருக்கிற ஜநக குல ஸுந்தரியான பெரிய பிராட்டியாரோடும், “கிடந்திருந்து நின்றளந்து ” (திருவா. 2 – 8 – 7) என்கிற பாட்டின் படியே ஸர்வஜ்ஞனான ஸர்வேஸ்வரனையும், பஹு ப்ரகாரமாகத் தன்னை அநுபவித்தாலும் பர்யாப்தனாகாதபடி பிச்சேற்ற வல்ல வைலக்ஷண்யத்தை உடையளாய்ப் பெரிய பிராட்டியாரோபாதி முடிக்கு உரியளான ஸ்ரீபூமிப் பிராட்டியாரோடும்–
கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு
இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பார் என்னும்
மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பரே –2-8-7—கிடந்து – திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின படியாதல் – அஞ்சலிம் பிராங்முக க்ருத்வா பிரதிசிஸ்யே மஹோததே -என்று கடல் கரையிலே கண் வளர்ந்து அருளின படியாதல் இருந்து –உடஜே ராம மாசீ நம் அபித பாவ கோபமம்-என்று சித்ர கூடத்தில் இருப்பு நின்று –அவஷ்டப்ய ச திஷ்டந்தம் ததர்ச தனுரூர்ஜிதம் ராமம் ராமாநுஜஞ்சைவ பர்த்துச்சைவா நுஜம் சுபா -என்று ராவண வதம் வீர ஸ்ரீயோடே நின்ற நிலை – அளந்து -மஹா பாலி அபஹரித்த பூமியை எல்லை நடந்து மீட்டுக் கொண்டு கேழலாய்க் -பூமியை பிரளயம் கொள்ள -தன் மேன்மை பாராதே நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு கீழ்ப் புக்கு-இடந்திடும்-
அண்ட புத்தியில் புக்கு ஒட்டு விடுவித்துக் கொண்டு ஏறின படி தன்னுள் கரக்கும்- பிரளய ஆபத்தில் பிரளயம் தனக்கு தெரியாத படி திரு வயிற்றில் வைத்துக் காக்கும் –-உமிழும்- இவை என் பட்டனவோ என்று உமிழ்ந்து பார்க்கும்
ஓர் மாயையினால் என்னும் வீறுடைய முடிக்கு உரியரோடு-அதாவது-ஓர் மாயையினால்- ஈட்டிய வெண்ணெய் –திருவிருத்தம் -21-இத்யாதிப் படியே நித்ய சூரிகள் சமாராதன பரராய் நிற்க -அவர்கள் அறியாதபடி அத்தை உபேஷித்து தாழ்வுக்கு எல்லையான இடைக் குலத்திலே – ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து பிறந்து தன்னைப் பெறுகைக்கு சுல்கமாக விட்ட மிருத்யு சமன்களான ருஷபங்களின் கொம்பின் இடையிலே கருமாறி பாய்ந்தார் போல் தன்னைப் பேணாமல் சென்று விழும் படி பண்ண வல்ல வைலஷண்ய வீறு உடையளாய் – முற்பட்ட மகிஷிகளோ பாதி முடிக்கு உரியளான ஸ்ரீ நப்பின்னை பிராட்டியாரோடும்-
(ஓர் மாயையினால் இத்யாதி,) நித்ய ஸூரிகள் ஸமாராதந பரராய் நிற்க, அவர்களையும் உபேக்ஷித்துத் தாழ்வுக் கெல்லையான இடைக் குலத்திலே க்ருஷ்ணனாய் வந்து பிறந்து, அவள் தன்னைப் பெறுகைக்கு ஸூல்கமாக இட்டு ம்ருத்யு ஸமங்களான ருஷபங்களின் கொம்பிலே கருமாறிப் பாய்ந்தாப் போலே தன்னைப் பேணாமல் சென்று விழும்படி அவனைப் பிச்சேற்ற வல்ல வைலக்ஷண்யத்தை உடையளாய் அவர்களோபாதி முடிக்குரியளான நப்பின்னைப் பிராட்டியோடும்.
சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி வானோர்கள் நன்னீர்
ஆட்டி அம் தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்தி மிலேற்றுவன் கூன்
கூட்டிடை ஆடின கூத்து அடல் ஆயர் தம் கொம்பினுக்கே –21-ஓர் மாயையினால்- அத்வதீயமான ஆச்சர்யம் –அவ்விடம் அங்கனே செல்லா நிற்க செய்தே ,-திரு ஆய்ப்பாடியிலே அனுகூலர் பக்கல் வெண்ணெய் உண்டாய் இருந்தது என்று நாரதராதிகள்-சொல்ல — தனது சங்கல்பத்தால் கிடைக்கும் வெண்ணெய் விட-கோபிமார் ஸ்பர்சத்தால் கிடைக்கும் வெண்ணெயில் விருப்பம் கொண்டு ,-தூபம் உண்டாகிய புகையிலே தன்னை மறைத்து – ஸதா பஸ்யந்தி ஸூரய -என்று இருக்கிறவர்களை-கண்ணில் மணல் தூவின படி—மாயை– மாயா வயுனம் ஞானம் என்கிற படியே இச்சை-அப் புகை நிழலிலே ஒளித்துப் போருவாரைப் போலே அத்விதீயமான தனது அபிநிவேச சங்கல்பத்தினாலே–தம் கொம்பினுக்கே-அம் கொம்போடே பொரலாம் ஆகில் , -இக் கொம்புகளோடே பொருதல் என்றே வேணும் என்று பொருதான்-கரு மாறி பாய்ந்தாலும் பேற்றுக்கு தக்கது போராதாய் இருக்கிற படி–ஜனகானாம் குலே கீர்த்தி மா ஹரிஷ்யதி மேசுதா–என்னும் படியே —சீதை பிராட்டியால் ஜனகன் குலத்துக்கு கீர்த்தி உண்டானது போல் –பால காண்டம் -68-21–நம் கொம்பினுக்கே -அக் குலத்தை எல்லாம் உண்டாக்க பிறந்த படி-ஆயர் பன்மை -கொம்பு ஒருமை -இதுக்கு இந்த பிரமாணம் – பிரபலரான கோப குலத்தில் பிறந்த நப்பின்னை பிராட்டிக்கு நாம் போக்தா ஆக வேணும் என்று
ஸய்யாசனம் இது
இத் திரு என்கிற ஒப்பு –அதாவது –மாயோன் திறத்தனளே இத் திரு–திருவாய் -4-4-7-என்றும்
அநந்ய ராகவேணாஹம்–ஸூந்தர -21-15-என்கிறபடியே – சர்வ தசையிலும் ( தேறியும் தேறாமல் இருந்தும்) அவன் திறம் அல்லது அறியாளான ஸ்ரீ மகா லஷ்மியோடு விகல்பிக்கலாம் ஸ்வபாவையான இவள் என்றும் – (அத்திரு அவனைப் பற்றும் ஏக சேஷித்வம் -இத்திரு இருவரைப் பற்றும் -மிதுன சேஷித்வம் அத்திரு மார்பில் ஏறும் -இத்திரு திருவடி விடாமல் இருக்கும் )மண்ணோர் அன்ன ஒண்ணுதல் என்கிற ஒப்பு-அதாவது-உண்டும் உமிழ்ந்து கடாய மண்ணோர் அன்ன ஒண்ணுதல்—திருவிருத்தம் -49-என்று ஸ்ரீ பூமி பிராட்டியாரோடு ஒத்த வைலஷண்யத்தை உடையவள் என்றும் ,-பின்னை கொல் என்கிற ஒப்பு–அதாவது-பின்னை கொல் நில மா மகள் கொல் திரு மகள்கொல் —திருவாய் -6-5-10-என்று-ஸ்ரீ நப்பின்னை பிராட்டியோ ? ஸ்ரீ பூமி பிராட்டியோ ?ஸ்ரீ பெரிய பிராட்டியாரோ ?-என்று சொல்லும்படி இவர்க்கு உண்டான சாம்யம் –
(இத்திரு மண்ணேரன்ன பின்னைகொல் என்கிற் ஒப்பு) “’தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே இத்திருவே”’ (திருவா. 4 – 4 – 7), “மண்ணேரன்ன ஒண்ணுதலே ”’ (திருவிரு. 50), “பின்னை கொல் நில மா மகள் கொல்’‘ (திருவா. 6 – 5 – 10) என்று தேறின தஸையோடு தேறாத தஸையோடு வாசியற ““அநத்யா ராக, வேணாஹம்”” (ரா. ஸு. 21 – 16) என்கிறபடியே அவனை யல்லது அறியாள் இத்திரு என்றும், ஸ்ரீபூ,மிப்பிராட்டி யாரோடொத்த வைலக்ஷ்ண்யத்தை உடையாள் என்றும், ‘நப்பின்னைப் பிராட்டியாரோ? ஸ்ரீபூமிப்பிராட்டியாரோ? பெரிய பிராட்டியாரோ?’ என்று விகல்பிக்கலாம்படி இவர்க்குண்டான ஸாம்யம்-
ஏறிய பித்தினோடு ‘எல்லா உலகும் கண்ணன் படைப்பு’ என்னும்’
நீறு செவ்வே இடக் காணில், நெடுமால் அடியார்’ என்று ஓடும்;
நாறு துழாய்மலர் காணில்,‘நாரணன் கண்ணி ஈது’ என்னும்;
தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே இத் திருவே.–4-4-7-–நீறு செவ்வே -என்ற இடம் -தேறாமை-நாரணன் கண்ணி ஈது என்ற இடம் -தேற்றம் – கோவை வாயாள் திருவாய்மொழி -தேற்றம் -இத்திருவாய்மொழி -தேறாமை-மாயோன் திறத்தனளே-ஞானம் அப்ரயோஜனமாம் படி ஆச்சர்யமான பிரணயித்வத்தை உடையவன் திறத்தனள்-இத் திருவே-இத்திரு என்றும் அத்திரு என்றும் விகல்பிக்கலாம் படி இருக்கிறது-அநபாய நிகளாய் இருக்கிற ஆகாரம் இருவருக்கும் ஒக்கும்
அவளுக்கு அவனே உத்தேச்யன் இருவரும் உத்தேச்யரான ஏற்றம் உண்டே இவளுக்கு
பின்னை கொல்?நிலமாமகள்கொல்? திருமகள்கொல்? பிறந்திட்டாள்
என்ன மாயங்கொலோ? இவள்நெடு மால்என்றே நின்று கூவுமால்
முன்னி வந்தவன் நின்றிருந் துறையும் தொலை வில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும் அவ்வூர்த் திருநாமம் கேட்பது சிந்தையே.–6-5-10—நப்பின்னை பிராட்டி பிறந்திட்டாளோ -அங்கனம் இன்றிக்கே ஸ்ரீ பூமி பிராட்டி பிறந்திட்டாளோ -எல்லாருக்கும் இவ் வேற்றங்களைக் கொடுக்கும் பிராட்டி தான் பிறந்திட்டாளோ -என்பார்கள் பூர்வர்கள் –
சர்வேஸ்வரனுக்கு சம்பத்தாய் இருக்கிறவள் பிறந்தாளோ-அதுக்கு விளை பூமியாய் இருக்கிறவள் பிறந்தாளோ -அவ் விளை பூமியினுடைய பல ஸ்வரூபமாய் இருக்கிறவள் பிறந்தாளோ –
அங்கனம் இன்றியே அவர்களுக்கும் இவள் படி இல்லாமையால் அவர்களோடு ஒப்பு அன்று -லோகம் எல்லாம் வாழ்க்கைக்கு இவள் ஒருத்தி பிறந்தாள் என்றுமாம் –விஷ்ணு நா சத்ருஸோ வீரயே -என்றால் போலே நாய்ச்சிமார் பக்கலிலும் ஒரு வகைக்கு ஒப்பு சொல்லலாம் படி இருக்கையாலே கதிர் பொறுக்குகிறாள் -உபமான ம சேஷானாம் ஸாதூ நாம் யஸ் சதாபவத் -என்கிறபடியே எல்லாருக்கும் இவரை ஒப்பாகச் சொல்லலாம் –இவருக்கு ஒப்பாவார் ஒருவரும் இல்லை
பண்டும் பல பல வீங்கிருள் காண்டும் இப்பாயிருள் போல்
கண்டும் அறிவதும் கேட்பதும் யாமிலம் காள வண்ண
வண்டுந்துழாய் பெருமான் மதுசூதனன் தாமோதரன்
உண்டும் உமிழ்ந்தும் கடாய மண்ணேர் அன்ன ஒண்ணுதலே -49–பிரளய ஆபத்தில் திரு வயிற்றிலே வைத்தும்-அநந்தரத்திலே உமிழ்ந்தும்-ரக்ஷிக்கப் பட்டுப் போந்த பூமியினுடைய அழகுக்கு ஸத்ருசமான ஒள்ளிய நுதலை யுடையவளே-மண்ணேர் அன்ன-நேர் அழகு-அன்ன -நிகரான—கடாய -என்று-நடத்துதலாய் நிர்வஹிக்கை-அதாவது ரஷிக்கை–அன்றியே-கடாய் என்று கடத்தலாய் அளக்கையைச் சொல்லுகிறது ஆகவுமாம்
தென்பால் நெடுமாடம் கடும் சிலை அம்பெரி யூட்டி நீறு எழ வெரித்த பெரும் தோற்றத்து
ஆர் உயர் காகுத்தன்-என்னுமவற்றிலே தோன்றும் –1-தென்பால் –-அதாவது-தென் பால் இலங்கை வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே–திருவிருத்தம்-77- -என்று சக்கரவர்த்தித் திரு மகனைப் பிரிந்து பாதக பதார்தங்களாலே நோவு படுவது-
2-நெடு மாடம் – அதாவது-வாழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ இலங்கை
குழா நெடு மாட மிடித்த பிரானார் கொடுமைகளே –திருவிருத்தம் -36-–என்று பிரணயித்வம் இல்லையானால் சாமான்ய கிருபையும் இல்லையோ ? என்று கொடுமை சொல்லுவது —
(வாடை இரவு நான் நான் என்று போட்டி போட்டி கொண்டு நையப்பண்ண இந்த வார்த்தை )
3-கடும் சிலை –-அதாவது – காயும் கடும் சிலை என் காகுத்தன் வாரானால் ?—திருவாய் -5-4-3-என்று
எதிரிகள் தான் கண் பார்க்கிலும் , கண் பாராத வில்லை உடைய காகுத்தன் -இத் தசையில் வருகிலன் என்று வெறுப்பது —இராத்திரி வசனம் -காகுத்தன் -சத்யவாதி வம்சத்தில் பிறந்தும் வரவில்லையே என்று வெறுப்பது )
4-அம்பெரி-அதாவது –-இலங்கை நகர் அம்பெரி உய்த்தவர் தாளினை மேல் அணி வம்பவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள் நம்பும் –திருவாய் -4-2-8 –என்று இலங்கையை சர அக்நியால் தக்தம் ஆக்கினவர் திரு அடிகளில் திரு துழாயை ஆசைப் படுவது –
5-ஊட்டி-அதாவது-தீ முற்ற தென் இலங்கை ஊட்டினான் தாள் நயந்த யாம் உற்றது உற்றாயோ ?-திருவாய் -2-1-3-என்று இலங்கைக்கு எல்லாம் அக்நிக்கு விருந்து இட்டவன் திரு அடிகளை ஆசைப் பட்ட
நான் பட்டது பட்டாயோ என்று சம துக்கிகளைக் கட்டிக் கொண்டு அழுவது ,
6-நீறு எழ-அதாவது-மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழ செற்று உகந்த ஏறு சேவகனார்க்கு என்னையும் உளன் என்மின்களே-6-1-10-என்று எதிரில்லாத போரை உடைய ராவணன் தனக்கு அரணாக இட்ட மதிளைத் துகளாக்கி பொகட்ட பிரசித்தமான சேவகத்தை உடையவருக்கு-ரஷ்ய வர்க்கத்தில் நானும் ஒருத்தி உண்டு என்று சொல்லுங்கோள் என்று தூது விடுவது –
(கௌசல்யா லோக பார்த்தா -என்ற பிராட்டி வார்த்தை லோகத்தில் நானும் ஓன்று அன்றோ
அங்கு திருவடி -இங்கு மிதுன பறவைகள் -சேர்த்தி இன்பமும் கலவி வியசனமும் அறியும் )7-எரித்த-
அதாவது –கிளர் அரக்கன் நகர் எரித்த களி மலர் துழாய் அலங்கல் கமழ் முடியன் கவராத அறிவினால் குறைவிலம்-4-8-5-என்று –(மதுரா மதுரா லாபம்-வால்மீகி -கிளி மொழியாள் இங்கு )ஐஸ்வர் யோத்தகனான ராவணனுடைய நகரத்தை தக்தமாக்கி முடி சூடி வளையம் வைத்து இருக்கிறவன்
விரும்பாத அறிவினால் என்ன கார்யம் உண்டு என்று அவனுக்கு உறுப்பு இல்லாதவற்றை உபேஷிப்பது–
8-பெரும் தோற்றத்து-அதாவது –காண் பெரும் தோற்றத்து என் காகுத்த நம்பிக்கு என் பூண் புனை மென் முலை தோற்றது பொற்பே -6-6-9-–என்று கண்ணுக்கு இனியதாய் அபரித்சேத்ய போக்யமான சந்நிவேசத்தையும் குண பூர்த்தியையும் உடைய சக்கரவர்த்தி திரு மகனுக்கு இவள் தன் அழகை இழந்தாள் என்னும்படி அவனை ஆசைப் பட்டு அழகு அழிவது —
9-ஆர் உயிர் காகுத்தன்-அதாவது – என் ஆர் உயிர் காகுத்தன் நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன் நின் பசும் சாம நிறத்தன் கூட்டுண்டு நீங்கினான் சிறு கிளி பைதலே இன் குரல் நீ மிழற்றேல் -9-5-6–என்று விஸ்லேஷத்தில் தரிக்க ஒண்ணாதபடி எனக்கு பிராண பூதனான சக்கரவர்த்தி திருமகன் என்னோடு கலந்து வைத்து பிரிந்தான் –-இத் தசையில் அவனுக்கு போலியான உன் வடிவாலே நலிகிறதுக்கு மேல் பேச்சாலும் ( உருவத்தால் நலிவதற்கும் மேலே ) நலியாதே கொள் என்று கிளியைப் பார்த்து நிஷேதிப்பதாய் கொண்டு பேசின 9-பாசுரங்களிலும் –
(தென்பால் இத்யாதி, ) “தென்பால்”’ (திருவிரு. 77), “இலங்கைக்குழா நெடுமாடம் இடித்தபிரானார் கொடுமைகளே”‘ (திருவிரு. 36), ““காயுங்கடுஞ்சிலை என் காகுத்தன் வாரானால்”‘ (திருவா. 5 – 4- 3), “இலங்கைநகர் அம்பெரி உய்த்தவர்” இத்யாதி, (திருவா. 4-2- 8), ‘தீழுற்றத் தென்னிலங்கை ஊட்டினான் தாள் நயந்த யாமுற்றதுற்றுயோ? (திருவா. 2 – 1 – 3), “மாறில் போரரக்கன்’” இத்யாதி, (திருவா. 6 – 1 – 10) ”கினிமொழியாள் காரணமா?’ இத்யாதி, (திருவா. 4 – 8 – 5), ““என்னாருயிர்க் காகுத்தன்” இத்யாதி, (திருவா. 9 – 5 – 6) என்று சக்ரவர்த்தித் திருமகனான அவ் வவதாரத்தையும், அவ் வவதாரத்திலுண்டான அபதாநங்களையும் அநுபவிக்கவேணும் என்று ஆசைப்பட்டுப் பேசின இப்பாசுரங்களிலும்
திங்களம் பிள்ளை புலம்பத் தன் செங்கோலரசு பட்ட
செங்களம் பற்றி நின்று எள்கு புன்மாலை தென் பாலிலங்கை
வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா
நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே – -77—ஆர்யர்கள் இழந்த மிலேச்ச பூமியான தெற்குத் திக்கில் அறிவுடையார் நடை யாடாத இலங்கையை வெவ்விய களமாம் படி பண்ணி ராவண வத அனந்தரமாக –பவான் நாராயணோ தேவ -என்று ப்ரஹ்மாதிகள் ஸ்துதிக்கும் படி நின்ற உபகாரகர் ஆனவர் –துழாய் துணையா –அவர் தோளில் மாலையைப் பெற வேணும்-என்ற ஆசைப்பட்ட இதுவே பரிகரமாகக் கொண்டு –நங்களை இத்யாதி –தன் இழவுக்கு கூப்பிடுகை அன்றிக்கே – நம்மை நலிகைக்கு கூப்பிடுகிறதாய் இருந்தது இறே –நங்களை மாமை கொள்வான் – நிறம் கொள்வாருக்கு நிறம் தான் வேண்டாவோ – தன் இழவுக்கு கூப்பீடும் கிடக்கச் செய்தே – பண்டே குறை பட்டு நொந்து இருக்கிற நம்மை நலிகைக்கு பாரிக்கிற பாரிப்பாய் இருந்ததீ –
துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தாரது பெயரா
எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும் ஈங்கு இவளோ
வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ இலங்கைக்
குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே –36–ஹேய ப்ரத்ய நீகரான தமக்கு தம்மை உகந்தாருடைய ஹேயத்தையும் போக்கிக் கொண்டு அருள வேண்டாவோ-பிரணயித்வம் வேண்டாவாகில் ஸ்வரூபமும் வேண்டாவோ –(ரக்ஷணம் கிருபை தானே ஸ்வரூபம் )ஆபத்து நிமித்தமாக ரக்ஷித்தான் ஆகில் -பிரளய ஆபத்தில் இங்கு உண்டான சாதன சம்பத்தி -ஆழ்வாருடைய ஆற்றாமை -பொய்யானதோ-கிருபை கருணையும் சாதன சம்பத்தி -இங்கு இல்லாமல் போனதோ–ஆபத்து நிமித்தமாக தாம் இரங்காது ஒழிகைக்கு பரதந்த்ரரோ–எங்களுக்குப் புறப்படில் குற்றம் – தங்களுக்கு புறப்படாது ஒழியில் குற்றம் –வரில் எங்கள் சேஷத்வம் அழியும்-வராது ஒழியில் தம்முடைய சேஷித்வம் அழியும் –
நீயும் பாங்கல்லை காண் நெஞ்சமே! நீளிரவும்
ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்
காயும் கடும் சிலை என் காகுத்தன் வாரானால்
மாயும் வகை அறியேன் வல் வினையேன் பெண் பிறந்தே.–5-4-3—பிரதி பக்ஷத்தை தக்தமாக்குவதாய் -பெருமாள் கண் பார்க்கிலும் கண் பாராத சிலை –அவஷ்டப்ய மஹத்தநு-வில்லை அணைக்கவே பணி போரும்படி இ றே இருப்பது –என் காகுத்தன் வாரானால்-பிராட்டிக்கு உதவியது தனக்கு உதவிற்று என்று இருக்கிறாள் -ஒரு நாள் ஓர் ஆபத்தில் உதவினார்க்கு பின்பு உதவல் ஆகாதோ -தயரதற்கு மகன் தன்னை யன்றி மற்றிலேன் தஞ்சமாகவே என்னக் கடவது இறே-கீழே கண்ணனும் வாரானால் -என்றாள்-அபி ஷிக்த ஷத்ரிய புத்ரன் அல்லேன்-என்ற அவன் வரத் தவிர்ந்தாலும்-முடி சூடி நோக்கிப் போந்த குடியிலே பிறந்ததற்கு வர வேண்டாவோ-சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற மனத்துக்கு இனியானை -என்றார்கள் இறே -பெண்கள் இருந்த இடத்தே சென்று விரோதியைப் போக்கினவன் வருகிறிலன் –அபியாதா ப்ரஹர்த்தாச-என்ன கடவது இறே –
கொம்பு போல் சீதை பொருட்டு, இலங்கை நகர்
அம்பு எரி உய்த்தவர் தாள் இணை மேல் அணி
வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள்
நம்புமால்; நான் இதற்கு என்செய்கேன் நங்கைமீர்?–4-2-8—சந்த்ர ஆதித்யர்களும் புகப் பயப்படுமூர்
சர அக்னியை புக பிறப்பித்தவர் -கேவல அக்னி சோற்றை வேவிக்குமது ஒழிய பிரவேசிக்க கூசுமூர்
கையாலே சர அக்னியை பிரவேசிப்பித்தான்-யதா ராகவா நிர்முக்த சர -என்று திருவடி புகிலும் சரஸ்த நீயானாக இறே புகுந்தது-வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள்-நம்புமால்;-பரிமளத்தை உடைத்தாய் இருக்கும் என்னுதல் -நித்ய அபூர்வமாய் இருக்கும் என்னுதல் –-பண்டு ஒருத்திக்கு உதவினவன் எனக்கு உதவானோ என்று ஆசைப்படா நின்றாள்-அசாதாரண விக்ரஹத்தை இதர சஜாதீயம் ஆக்கினால் போலே ஏதேனும் ஒரு புஷபத்தை சாத்தினாலும் திருத் துழாய் இதர சஜாதீயமாக ஆயிற்றாகக் கடவது-நான் இதற்கு என்செய்கேன்-கிருஷ்ணனைப் போலே சாதாரணன் அன்றிக்கே ஏக தாரா வ்ரதன் திருவடிகளில் திருத் துழாயை எங்கே தேடுவேன்-அவளும் அவனுமான சேர்த்தியிலே ஆசைப்பட்டாள் என்று அறிகிறிலள்-
காமுற்ற கையறவோடு எல்லே யிராப்பகல்
நீ முற்றக் கண் துயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்
தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான் தாள் நயந்த
யாமுற்ற துற்றாயோ வாழி கனை கடலே –2-1-3—தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான்-
அக்னி வயிறு நிறைய ஊட்டினான் -என்னுதல்-இலங்கையை முற்ற தீ யூட்டினான் என்னுதல் –
ஒருத்தியைப் பெறுகைக்கு மார்விலே அம்பு ஏற்றவன் அவளுடைய அந்தப்புர பரிகரத்துக்கு உதவானோ -என்று நீயும் ஆசைப் பட்டாயோ-தாள் நயந்த-யாமுற்ற துற்றாயோ –-அவன் திருவடிகளை ஆசைப்பட்டு நான் பட்டது பட்டாயோ-தாள் நயந்தாரோடு தோள் நயந்தாரோடு வாசி இல்லை
அவனுடைய பிரணயித்தவ குணத்திலேயோ நீயும் அகப்பட்டது –
வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்!
தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திருவண்வண்டூர்
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே.–6-1-10-எதிர் இல்லாத போரை ராவணனையும் அவன் அரணாக இட்ட மதிலையும் துகளாகச் செற்று – ருஷிகள் குடியிறுப்பு பெற்றோம் -பிராட்டி உடன் கூடப் பெற்றோம் இலங்கை விபீஷண விஷயமாகப் பெற்றோம் என்று உகந்த-ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே.-எங்கும் மேற்பட்ட ஆண் பிள்ளை தனத்தை யுடையவர்க்கு -ரஞ்ச நீ யஸ்ய விக்ரமை -என்று எதிரிகள் மேலிட்ட வீரம் –ரதசர்யா ஸூ சம்மத -என்று வீரர்கள் கொண்டாடின வீரம் –உம்முடைய ரஷ்ய வர்க்கத்தில் இன்னும் ஒருத்தி நோவுபடா நின்றாள் என்னுங்கோள் –
தளிர் நிறத்தால் குறையில்லாத் தனிச்சிறையில் விளப்புற்ற
கிளி மொழியாள் காரணமாக் கிளர் அரக்கன் நகர் எரித்த
களி மலர்த் துழாய் அலங்கல் கமழ் முடியன் கடல் ஞாலத்து
அளி மிக்கான் கவராத அறிவினால் குறையிலமே.–4-8-5—தாயையும் தமப்பனையும் சேர இருக்க ஒட்டாதே பிரித்த மிகையை யுடையவன்-நகர் எரித்த ராவணனுடைய சம்ருத்தமான நகரத்தை தக்தமாக்கினவன்-களி மலர்த் துழாய் அலங்கல் கமழ் முடியன் கடல் ஞாலத்து-ராவண வத அநந்தரம் மீண்டு எழுந்து அருளி -முடி சூடி வைத்த வளையமும் தாமுமாய் இருந்த படி-தேனை யுடைத்தாய் மலர்ந்து இருந்துள்ள திருத் துழாய் மாலையால் கமழா நின்றுள்ள திரு முடியை உடையவன்-களி -தேன் -அலங்கல் -மாலை-அவள் இதர சஜாதீயனாய் வந்து அவதரித்தால் அது திருத் துழாயும் அங்குத்தைக்கு அனுரூபமான புஷபங்களாகக் கடவது-அவன் கரு முகை மாலை சூடினும் அத்தையே சொல்லாக கடவது-பாண்டியன் ஏதேனும் ஒன்றைச் சூடிலும் வேப்பம்பூ என்ன கடவது இறே-கடல் ஞாலத்து அளி மிக்கான்--சம்சாரிகள் பக்கலிலே தண்ணளி மிக்கவன்-தேவர்கள் பிராட்டியை பிரிப்பது இளைய பெருமாளை பிரிப்பதாய் எழுந்து அருளிவிக்கும் படி இறே-சம்சாரிகள் நோவைக் கண்டு தண்ணளியால் எழுந்து அருளி இருக்கும்-
மாண்பமை கோலத்து எம் மாயக் குறளற்கு
சேண்சுடர்க் குன்றன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு
காண்பெருந் தோற்றத்து எம் காகுத்த நம்பிக்குஎன்
பூண்புனை மென்முலை தோற்றது பொற்பே.–6-6-9-–கண்ணுக்கு இனியதாய் அபரிச்சேத்யமான போக்யமான சந்நிதியை யுடையவன் என்னுதல் –ஜென்ம ராமஸ்ய ஸூ மஹத் -என்கிற அவதாரம் ஆதல் -குண பூரணமான சக்கரவர்த்தி திருமகனுக்கு –என் பூண்புனை மென்முலை தோற்றது பொற்பே.–பூண் என்று ஆபரணமாய் அத்தாலே அலங்க்ருதமாய் விரஹ சஹம் அல்லாத முலையை யுடையவள் -பொற்பு என்று அழகு –-பூம் புணை மென் முலை என்கையாலே ஒப்பனையால் வந்த அழகை இழந்தாள் -அவனைத் தோற்பிக்கும் முலையை உடையவள் கிடீர் தோற்றாள்-
நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளிப் பைதலே
இன் குரல் நீ மிழற்றேல் என் ஆர் உயிர்க் காகுத்தன்
நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன்
நின் பசுஞ்சாம நிறத்தன் கூட்டு உண்டு நீங்கினான்–9-5-6–இன் குரல்–கூரிய வேல் -என்னுமா போலே –
நீ மிழற்றேல் -நிரம்பா மென் சொல்லாலே என்னை முடியாதே கொள் -மாத்ரு வதத்திலேயும் ப்ரவர்த்திப்பார் உண்டோ –என் ஆர் உயிர்க் காகுத்தன்-வ்யதிரேகத்தில் தரிக்க அரிதாம் படி இறே கிட்டின போது பரிமாறின படி -தயரதற்கு மகன் தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாக -என்று இறே இவர் இருப்பது –-உன்னுடைய சிவந்த வாய் போலே இருக்கும் வாயை யுடையவன் -உபமானத்தைச் சொல்லி சேர்த்து விடுமது ஒழிய உபமேயம் தன்னை பேச முடியாது-உன்னைப் போலே சிவந்த கண்ணையும் கையையும் திருவடிகளையும் உடையவனே –உன்னுடைய குளிர்ந்த ஸ்யாமமான நிறத்தை யுடையவன்-
ஆதி அம் காலம் மண் புரை பொன் மாதின் துகளாடி-என்னுமவற்றிலே தோன்றும்–
அதாவது-1-ஆதி அம் காலத்து-அதாவது –-ஆதி அம் காலத்து அகல் இடம் கீண்டவர் பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே ஒதுமால் எய்தினாள்-4-2-6-–என்னும்படி வராஹ கல்பாதியில் மகா பிருதிவியை அண்ட பித்தியில் நின்று ஒட்டு விடுவித்து எடுத்தவனுடைய திரு அடிகளில் திருத் துழாய் என்றே பலகாலம் ஓதும் படி பிச்சேறுவது–
2-மண் புரை-அதாவது –மண் புரை வையம் இடந்த வராகற்க்கு –என் கண் புனை கோதை இழந்தது கற்பே –6-6-5–என்னும்படி அவனை ஆசைப் பட்டு அறிவு இழப்பது —
3-பொன் மாதின்-அதாவது –ஞாலப் பொன் மாதின் மணாளன் துழாய் நங்கள் சூழ் குழற்கே
ஏலப் புனைந்து என்னைமார் எம்மை நோக்குவது என்று கொல் -திரு விருத்தம் –40– என்று
ஸ்ரீ பூமிப் பிராட்டி செவ்வி கொள்ள விட்டு பிறந்தவன் சூடின திருத் துழாயை பந்துக்கள் ஆனவர்கள் ஏற்கவே கொண்டு வந்து நம் குழலிலே சூட்டி நம்மை ரஷிப்பது என்றோ என்பது —
4-துகளாடி-அதாவது –-ஏனம் ஒன்றாய் மண் துகளாடி வைகுந்தம் அந்நாள் (அன்ன அவள்) குழல் வாய்
விரைபோல் விண்டு கள்வாரும் மலர் உளவோ நும் வியலிடத்தே—திருவிருத்தம் -55-என்று
(நீர் பூ -அம்பஸ்யா பாரே பரத்வம் -நிலப்பூ புவனஸ்ய மத்யே -வ்யூஹம் மரத்தில் ஒண் பூ நாகஸ்ய ப்ருஷ்டே– மஹதோ மஹீயான் -நலம் பாராட்டு துறை -ஆழ்வாரை போலே எங்குமே இல்லையே ஸ்வா பதேசம் ) அத்வதீய வராஹமாய் -பிரளயங்கதையான பூமியை எடுத்த போது , வடிவில் பெருமையால் –
திரு வயிற்றில் கிடக்கிற பூமி ஒரு துகள் மாத்ரம் என்னும்படி – நின்றவனுடைய அபதானத்தை
அனுபவித்து இருக்கிற இவள் போக்யதை உபய விபூதியிலும் உண்டோ என்று விசேஷஜ்ஞர் ஸ்லாக்கிக்கும் படியைப் பிரகாசிப்பதாய்க் கொண்டு பேசின 4-பாசுரங்களிலும் –
(ஆதியங்காலம் இத்யாதி,) ““ஆதியங் காலத்தகவிடங் கீண்டவர்”” (திருவா. 4 – 2 – 6), “மண்புரை” இத்யாதி, (திருவா. 6 – 6 – 5), “மண்ணளந்த – செவ்வாய் ”” இத்யாதி, (5 4 – 4), ““ஞாலப் பொன் மாதின் மணாளன்” இத்யாதி, (திருவிரு. 50), “ஏனமொன்றாய் மண்துகளாடி”’ இத்யாதி, (திருவிரு. 55) என்று ஸ்ரீவராஹ ப்ராதுர் பாவத்தையும் அதில் அபதாநங்களையும் அநுபவிக்க ஆசைப்பட்டுப் பேசின இவர் பாசுரங்களிலேயும்.-
மாதர் மா மண் மடந்தை பொருட்டு ஏனமாய்,
ஆதி அம் காலத்து அகலிடம் கீண்டவர்
பாதங்கள் மேல் அணி பைம்பொன் துழாய் என்றே
ஓதும்மால் எய்தினள் என்றன் மடந்தையே.–4-2-6—வராஹ கல்பாதியாய் அவதாரகாலம் ஆகையாலே ஸ்லாக்யமான காலத்திலே மஹா பிருத்வியை அண்ட பித்தியினின்றும் ஒட்டு விடுவித்து அருளினவருடைய திருவடிகளில்-ரோமாந்தரஸ் த்தா முனயஸ் ஸ் துவந்தி -என்று சனகாதிகள் இட்ட திருத் துழாயை யாயிற்று இவள் ஆசைப்படுகிறது-ஓதும்மால் எய்தினள்-எப்போதும் இத்தையே சொல்லும்படியான பிரேமத்தை -பிரமத்தை -உடையவள் ஆனாள்-
பண்புடை வேதம் பயந்த பரனுக்கு
மண்புரை வையம் இடந்த வராகற்கு
தெண்புனற் பள்ளிஎம் தேவபி ரானுக்குஎன்
கண்புனை கோதை இழந்தது கற்பே.–6-6-5—பிறருடைய ஸ்வரூப சித்யர்த்தமாக -தன்னை அழிய மாறுபவன் –மானமிலா பன்றியாம் தேசு -என்ன கடவது இறே -மண் மிகுதி சொல்லிற்று எடுக்கையில் அருமை தோற்றுகைக்காக–இழந்தது கற்பே-சர்வருக்கும் ஞான பிரதனான தனக்கும் கூட அறிவு கொடுக்குமவள் அறிவைக் கிடீர் இழந்தது -கற்பு கல்வி -அதாவது -ஞானம் –
கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய குழாம் விரிந்த
நீல கங்குல் களிறு எல்லாம் நிறைந்தன நேரிழையீர்
ஞால பொன் மாதின் மணாளன் துழாய் நாங்கள் குழல் சூழற்க்கே
ஏலப் புனைந்து என்னைமார் எம்மை நோக்குவது என்று கொலோ -40–அவன் தனி இருந்தது அன்று கிடீர் நான் இந்நோவு படுகிறது –ஸ்லாக்கியமான ஸ்ரீ பூமிப் பிராட்டியும் தானும் கூட இருக்கிற இருப்பிலே –-நிதி உடையார்-எல்லா விநியோகமும் கொள்ளுகிறோம் என்று அஞ்சாது இருக்குமா போலே-இவளுக்கும்-இவள் உண்டு என்று சொல்லி அஞ்சாது இருக்கலாய் இறே இருப்பது –கோலத் திருமா மளோடு கூடி சாலப் பலகால் உயிர்கள் உகந்து காப்பவன் அன்றோ-அவளும் நின் ஆகத்தின் இருப்பதும் அறிந்தும் ஆகிலும் ஆசை விடாதவள் அன்றோ–மாதின் மணாளன் –இவளுடைய போக்யதையாலே பிச்சேறி இறே இருப்பது –இவள் பக்கலில் இவனுக்கு உண்டான வியாமோகம் இத்தனையும் தனக்கு உறுப்பு என்று இருக்கிறாள் (அல்லி மலர் மகள் போக மயக்குகள் -அம்மான் )துழாய் இத்யாதி – அவனுடைய பிரமச்சரியத்தே சூடின மாலை அன்றிக்கே – அவனும் அவளுமாக துகைத்த மாலையை ஆசை படுகிறாள் –ராஜ குமரன் புழுகு நெய்யிலே பூவை தோய்த்து சூடுமா போலே- இவன் தான் –சர்வ கந்த சர்வ ரச தத்வம் இறே –வாசம் செய் பூம் குழலாள் -திருவாய்மொழி -10-10-2-என்று அங்குத்தைக்கும் வாசம் கொடுக்கும் படி இறே இவள் இருப்பது – அப்படி பட்ட மிதுனமாய் இருக்கும் இருப்பிலே சூடி துகைத்தைதை இறே இவள் ஆசைப் படுகிறது-
வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித் துழல் வீர்க்கு ஓன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய்
மண்டுகளாடி வைகுந்த மன்னாள் குழல்வாய் விரை போல்
விண்டுகள் வாரும் மலருளவோ நும்வியலிடத்தே–55—அத்விதீயமான மகா வராஹமாய் –இப் பூமியை தன் திருவடிகளால் துகைத்து – அது தன்னை அடைய-தன் திரு மேனியிலே செருக்காலே எங்கும் ஏறிட்டு கொண்டவன் –வைகுந்த மன்னாள் –-வைகுந்தம் அன்னாள் –காதா சித்தமாக அவன் வந்து ரஷித்து போம் இவ் விபூதி போல் அன்றியிலே –அவன் சதா சன்னதி பண்ணுகிற அவ்விபூதியோடு ஒத்து -உள்ளவள் இறே இவள் – தன் சன்னதியிலே வேறு ஒன்றின் உடைய போக்யதை நெஞ்சில் படாதபடி இருக்கும் அவன்–அம்பஸ்ய பாரே-புவனஸ்ய மத்யே -நாகஸ்ய ப்ருஷ்டே மஹதோ மஹீயான் அணுவில் அணுவாய் –(நாராயண உபநிஷத் ) என்னக் கடவது இறே –-அம்பஸ்ய -வியூகம்–புவனஸ்ய -விபவம் -அர்ச்சை–நாகஸ்ய -பரம்–மஹதோ மஹீயான் அணுவில் அணுவாய் –அந்தர்யாமி-இவையே இங்கு மூன்று வித மலர்கள் என்று உரைக்கப்பட்டன –பாட்டுக் கேட்க்கும் இடம்-கூப்பீடு கேட்க்கும் இடம் -வளைத்த இடம் -குதித்த இடம் –எல்லாம் வகுத்த இடமே-
எருது ஏழ் தழீ இச் சறையினார் என்னுமவற்றிலே தோன்றும்-அதாவது – 1-எருது எழ தழீ இ
அதாவது –எருது எழ தழீ இக்கொளியார் கோவலனார் குடக் கூத்தனார் தாளிணை மேல் அணி தண் அம் துழாய் என்றே நாளு நாள் நைகின்றது-4-2-5–என்னும்படி ஏறு தழுவுகை முதலான அபதானங்களை உடைய ஸ்ரீ கிருஷ்ணன் திரு அடிகளில் திருத் துழாயை ஆசைப் பட்டு நாள் தோறும் சைல்யத்தை அடைவது –
2-சறையினார்- அதாவது –கறையினார் துவர் உடுக்கை கடையாவின் கழி கோல் கை சறையினார்
கவராத தளிர் நிறத்தால் குறைவிலம்-4-8-4–என்று கோப வேஷ தரனாய் ரஷ்ய வர்க்கத்தின் உடைய ரஷணத்துக்கு தன் உடம்பு பேணாமல் திரியும் ஸ்ரீ கிருஷ்ணன் விரும்பாத ஸ்நிக்தமான நிறம் எனக்கு வேண்டாம் என்பதாய் பேசின-2- பாசுரங்களிலும் தோன்றும் என்றபடி ..
எருதேழ்தழீஇச்சறையினார் இத்யாதி,) ““எருதேழ்தழீஇ” (திருவா. 4 – 2 – 5) என்று தொடங்கி *‘நாளு நாள் நைகின்றதால்”” என்றும், ‘“நிறைவினால் குறைவில்லா” (திருவா, 4 – 8 – 4) என்று தொடங்கி *’சறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவிலமே”” என்று நப்பின்னைப் பிராட்டியார் ஆசைப்பட்ட க்ருஷ்ணாவதாரத்தையும், அதில் அபதாநங்களையும் அநுபவிக்க ஆசைப்பட்டுப் பேசின இப் பாசுரங்களிலேயும் ப்ரகாஸிக்குமென்கிறார்-
தோளி சேர் பின்னை பொருட்டு எருது ஏழ்தழீஇக்
கோளியார், கோவலனார்,குடக் கூத்தனார்
தாள் இணை மேல் அணி தண் அம்துழாய் என்றே
நாளும் நாள் நைகின்றதால் என்றன் மாதரே.–4-2-5—எருதுகள் ஏழையும் தழுவிக் கொள்ளுமவர் -அவளை பெறுகைக்கு ஹேது வாகையாலே போக ரூபமாய் இருந்தபடி –-கோவலனார்,குடக் கூத்தனார்-தாள் இணை மேல் அணி தண் அம்துழாய் என்றே- அவனைப் பெறுகைக்கு ஈடான ஆபி ஜாத்யத்தையும் செருக்கையும் உடையவர் – வில்லை முறித்தாலும் இஷுவாகு வம்ஸயர்க்கு அல்லது பெண் கொடாத ஜனகனைப் போலே எருது ஏழு அடர்த்தாலும் இடைத் தனத்தில் புரை உண்டாகில் பெண் கொடார்கள் இறே-அவளுக்கு உதவின கிருஷ்ணன் திருவடிகளில் திருத்துழாயை யாயிற்று இவள் ஆசைப் பட்டது-நாளும் நாள் நைகின்றதால் –ஒரு நாள் நைகைக்கு ஆஸ்ரயம் பொறாத மார்த்வத்தை உடையவள் நாள் தோறும் நாள் தோறும் நையா நின்றாள்-ஆச்ரயத்தையும் கொடுத்து நையப் பண்ணும் விஷயம் இறே
நிறையினால் குறைவில்லா நெடும் பணைத் தோள் மடப்பின்னை
பொறையினால் முலை யணைவான் பொரு விடை ஏழு அடர்த்த உகந்த
கறையினார் துவர் உடுக்கைக் கடையாவின் கழி கோல் கை
சறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவிலமே –4-8-4-–கறை மிக்கு துவரூட்டின -சிவந்த தோலாயிற்று -உடுக்கை -இடையர் காட்டிலே போனால் முன் கிழியாமைக்கு உடுக்கும் உடைத் தோலைச் சொல்லுகிறது –துவர் என்னைச் செய்தே-கறையினார் என்கிறது -காட்டில் பழங்களை அறுத்து இடுகையாலே கறை மிக்கு இருக்கை –கடையாவின் – கடியாவையும் -கறக்கும் மூங்கில் குழாயையும்-கழி கோல் கை-கழி கோல் ஆகிறது -வீசு கோல்-கடையாவையும் -வீசு கோலையும் கையிலே உடையவர்-காலத்தில் கறக்க ஒட்டாத பசுக்களை பாங்கான போது கறைக்கக்கு ஒரு கடை யாவையும் -அபவ்யமான பசுக்களை நியமிக்கைக்கு ஒரு வீசு கோலையும் கொண்டு திரிகை –
கழி கோல் -கன்றுகள் பசுக்களோடு போனால் முலை உண்ணாமைக்கு வாயிலே கட்டும் கொறுக் கோல் என்றுமாம்-சறையினார் -சறைகை மணி என்று ஒரு மணி -இடையர் அரையிலே சேர்த்துக் கட்டி பசுக்கள் த்வனி வழியே வருகைக்காக முன்னே ஓடுவார்கள் –அத்தை உடையவர் என்னுதல் –
சறை என்று தாழ்வாய்-தாழ்ந்த இடை ஜென்மத்தில் பிறந்தவர் என்னுதல்-சறாம்பி இருக்கையாய் உடம்பை பேணாது இருக்கை என்னுதல்-பசுக்களின் பின்னே திரிகையாலே தன்னைப் பேண அவசரம் இன்றிக்கே இருக்கை –ரஷ்ய வர்க்கத்தின் உடைய ரக்ஷணத்துக்காக தன்னைப் பேணாத வடிவை யாயிற்று இவள் ஆசைப் படுகிறது-அவன் விரும்பாத தளிர் நிறத்தால் என்ன பிரயோஜனம் உண்டு
கீழ் மணிமாமை என்ற இடம் -அழகிய நிறம் என்றது இங்கு தளிர் நிறம் என்றது -ஸ்நிக்தமான நிறத்தைச் சொல்லுகிறது –
இத்தால் திவ்ய மகிஷிகள் மூவரோடும் இவருக்கு உண்டான சாம்யம் ,
ஸ்ரீ ஜனக குல சுந்தரியான பிராட்டிக்கு அசாதாரணமான ஸ்ரீ ராமாவதார தத் அபாதானங்களிலும் ,
ஸ்ரீ பூமிப்பிராட்டிக்கே அசாதாரணமான ஸ்ரீ வராஹ நாயனார் அபாதானங்களிலும்
ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்கு அசாதாரணமான ஸ்ரீ கிருஷ்ண அவதார அபாதானங்களிலும் ,
( ஸ்ரீ ருக்மிணி ஸ்ரீ சத்யபாமை போல்வாரும் இவர்களும் உண்டே என்னில்- சரணாகதிக்கு ஸ்ரீ நப்பின்னை பிராட்டி உடன் தானே – உந்து குத்து முப்பத்து மூன்று பாசுரங்களில் கண்டோமே )
அந்த பிராட்டிமார் தங்களைப் போலே அதி மாத்ர பிரவணராய் அருளிச் செய்த அவ்வவ திவ்ய ஸூக்திகளிலே அபி வ்யக்தம் என்றது ஆயிற்று —
—
இப்படி பிரதான மகிஷிகளான இவர்களோடு உள்ள சாம்யமே அன்றிக்கே இவர்களை உபேஷித்தும் தங்களை உகக்கும் படி அவனுக்கு அபிமதைகளான திரு ஆய்ப்பாடியில் பெண்களுடையவும் –
அவர்களையும் தங்கள் பேச்சு அழகாலே அவன் மறக்கும் படி பண்ணும் ஸ்ரீ மதுரையில் பெண்களுடையவும் – நரக வத அநந்தரம் பரிஹிரகித்த ஸ்ரீ மத் த்வாரகையிலே பதினாறாயிரம் தேவிமாருடையவும் பாவங்கள் ( பக்தி தன்மைகள் ) இவர்க்கு உண்டு என்னும் இடமும் – இவர் தம் பேச்சில் தோன்றும் என்கிறார் —(கீழே மூவர்-பிரதான முடிக்கு உரியர் இதில் மூ இடங்களிலும் உள்ளோர் உடன் சாம்யம் )அவ்வளவே யன்றிக்கே, ப்ரதாந மஹிஷிகளான இவர்களையும் உபேக்ஷித்து வந்து மேல் விழும்படியான வைலக்ஷண்யத்தை உடையரான திருவாய்ப்பாடியில் பெண்களுடைய பாவமும், அவர்களையும் தங்கள் பேச்சழகாலே மறப்பிக்கும் படியான ஸ்ரீமதுரையில் பெண்களுடைய பாவமும், நரகவத,அநந்தரம் பரிக்ரஹித்த “கோப ஸ்த்ரீ ஸஹஸ்ராணி” (வி. பு. 5 – 31 – 18) என்கிற ஸ்ரீமத் த்வாரகையில் பதினாறாயிரம் தேவிமார்களுடைய பாவமும் இவர்க்குண்டான ஆகாரம் இவர் பேச்சிலே தோன்றும் என்கிறார்-
இவர்கள் தேடி நிற்கப் பொய்கை முது மணல் முல்லைப் பந்தல் முற்றம் மச்சொடு மாளிகை அவ்வவ்விடம் புக்கு வாரிச் சிதைத்துப் பறித்துக் கிழித்துக் கோயின்மை குறும்பு செய்து அல்லல் விளைத்துக் கவரும் உகக்கு நல்லவர் முழிசி ஆவர் என்னும் தேன் மொழியாலே கோகுலத்தை மறப்பிக்கும் நகர ஸ்திரீகள் நரகனைத் தொலைத்துக் கவர்ந்த பதினாறு பல்லாயிரம் எண்ணிறந்தார்
பாவம் கடல் ஞாலம் மின்னிடை மல்லிகை வேய்மரு பேய் முலை முனிந்து மற்பொரு விறல் கஞ்சனை
மங்க நூற்ற வாயும் தீர்ப்பார் என்னுமவற்றிலே தோன்றும்-சூரணை-124-
(இவர்கள் தேடி நிற்கப் பொய்கை முது மணல் முல்லைப் பந்தல் முற்றம் மச்சொடு மாளிகை அவ்வவ்விடம் புக்கு வாரிச் சிதைத்துப் பறித்துக் கிழித்துக் கோயின்மை குறும்பு செய்து அல்லல் விளைத்துக் கவரும் உகக்கு நல்லவர் பாவம் கடல் ஞாலம் மின்னிடை மல்லிகை வேய்மரு பேய் முலை முனிந்து-என்னுமவற்றிலே தோன்றும்--முழிசி ஆவர் என்னும் தேன் மொழியாலே கோகுலத்தை மறப்பிக்கும் நகர ஸ்திரீகள் பாவம்-மற்பொரு விறல் கஞ்சனை என்னும வற்றிலே தோன்றும்-
நரகனைத் தொலைத்துக் கவர்ந்த பதினாறு பல்லாயிரம் எண்ணிறந்தார் பாவம் மங்க நூற்ற வாயும் தீர்ப்பார் என்னுமவற்றிலே தோன்றும்–என்றபடி இவர்கள் –கீழே -தேவிமார் மூவரும் -இங்கு-மூன்று ஸ்தானங்கள் உகக்கும் நல்லவர் -ஆயர் குலத்துக் கோபிமார்கள் -நகர ஸ்த்ரீகள்)–இவர்கள் தேடி நிற்க
அதாவது -ஸ்ரீ வடமதுரை பெண்கள்-தேடித் திரு மா மகள் மண் மகள் நிற்க-பெரிய திருமொழி -10-8-9- காதில் கடிப்பிட்டு (பிரணய ரோஷ பதிகம் )என்கிறபடியே பிரதான மகிஷிகளான இவர்கள் தன்னைத் தேடி நிற்கும் படி இவர்களை உபேஷித்து–பொய்கை முது மணல் முல்லைப் பந்தல் முற்றம் மச்சொடு மாளிகை அவ்வவ்விடம் புக்கு-அதாவது –-இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய் –நாச்சியார் -3-2–முது மணல் குன்றேறி –பெரியாழ்வார் -1-10-8–முல்லையின் பந்தர் நீழல் மன்னியவளை புணரப் புக்கு –பெருமாள் -6-8–முற்றத் தூடு புகுந்து–நாச்சியார் -2-9–மச்சொடு மாளிகை ஏறி–பெரியாழ்வார் -2-7-3-
அவ்வவ்விடம் புக்கு அவ்வாயர் பெண்டிர்க்கு அணுக்கனாய்-பெரியாழ்வார் -3-2-5-என்கிறபடியே
இவர்கள் ஜலக்ரீடை பண்ணும் இடம்- விளையாடும் இடம் – மற்றும் அவர்கள் இச்சா அனுகுணமாக திரளவும் தனியாவும் இருக்கும் இடங்களான – பொய்கை–மணல் குன்று -முல்லைப் பந்தல்-முற்றம் –
மச்சொடு மாளிகை அவ்வவ ஸ்தலங்களில் சென்று புக்கு –
தேடித் திருமாமகள் மண்மகள் நிற்ப”? (திருமொழி 10 – 8 – 9) என்று இப்படி ப்ரதாந மஹிஷிகளான இவர்களும் தேடி நிற்கும்படி இவர்களை உபேஷித்து வந்து, (பொய்கை முது மணல் முல்லைப் பந்தல் முற்றம் மச்சொடு மாளிகை அவ்வவ்விடம் புக்கு வாரிச் சிதைத்துப் பறித்துக் கிழித்துக் கோயின்மை குறும்புசெய்து அல்லல் விளைத்துக் கவரூமூகக்கும் நல்லவர்) (பொய்கை) !”இப்பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்”: (நா. தி. 3 2), “மூத்தவை காண முதுமணற்குன்றேறி”” (பெரியா. தி. 1 – 10 – 8) , “முல்லையின் பந்தர் நீழல் மன்னி அவளைப் புணரப் புக்கு”” (பெருமா.தி. 6 – 8), “முற்றத்தூடு புகுந்து நின்முகங்காட்டிப் புன்முறுவல் செய்து”? (நா. தி. 2 – 9), “மச்சொடு மாளிகையேறி’” (பெரியா. தி. 2 – 7 – 3), “அவ்வவ்விடம் புக்கவ்வாயர் பெண்டிர்க் கணுக்கனாய்”’ (பெரியா. தி. 3 – 2 – 5) என்று அவர்கள் ஜலக்ரீடை பண்ணுமிடம், அவர்கள் விளையாடுமிடம், அவ்வோவிடங்களிலே புக்கு-“
ஆடி அசைந்து ஆய் மடவாரொடு நீ போய்க்
கூடிக் குரவை பிணை கோமளப் பிள்ளாய்
தேடித் திரு மா மகள் மண் மகள் நிற்ப
ஏடி இது என் இது என் இது என்னோ —10-8-9-அகலகில்லேன் இறையும் என்று அவர்கள் ஆசைப் பட்டு நிற்க –
இது என் புகுந்தது இங்கு அந்தோ இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்
மதுவின் துழாய் முடி மாலே மாயனே எங்கள் அமுதே
விதி இன்மையால் அது மாட்டோம் வித்தகப் பிள்ளாய் விரையேல்
குதி கொண்டு அரவில் நடித்தாய் குருந்திடைக் கூறை பணியாய்-3-2-நீயும் நாங்களுமாய் ஜல கிரீடை பண்ணிப் போரும் பொய்கையோ இது –இது அறிந்து நீ வந்தபடி எங்கனே – நாங்கள் உன்னைக் கூடக் கொண்டு போந்திலோம்- இட்ட அடியையும் அழித்து அன்றோ நாங்கள் போந்தது -நீ இங்கு வந்த வழி என் –ஆனை நின்ற பொய்கையாய் வந்தாய் அல்லை — ஆர்த்த நாதம் வழி காட்ட வந்தாய் அல்லை –எவ்வாறு வந்தாய் –காளியன் நின்ற பொய்கையாய் வந்தாய் அல்லை – அநு கூலன் கிடந்த பொய்கையாய் வந்தாய் அல்லை –பிரதிகூலன் கிடந்த பொய்கையாய் வந்தாய் அல்லை-நீ வந்த வழி என்
மூத்தவை காண முது மணல் குன்று ஏறி
கூத்து வந்து ஆடி குழலால் இசை பாடி
வாய்த்த மறையோர் வணங்க இமையவர்
ஏத்த வந்து என்னைப் புறம் புல்குவான் எம்பிரான் என்னைப் புறம் புல்குவான் -1 9-8 –எல்லாருக்கும் தெரியும்படியான மணல் குன்றின் மேல் ஏறி முதுமையால்-கிளர்த்தியை சொல்லுகிறது
என்னை வருக என குறித்திட்டு இன மலர் முல்லையின் பந்தர் நீழல்
மன்னி அவளை புணர புக்கு மற்று என்னை கண்டு உழறா நெகிழ்ந்தாய்
பொன் நிற ஆடையை கையில் தாங்கி பொய் அச்சம் காட்டி நீ போதியேலும்
இன்னம் என் கையகத்து ஈங்கு ஒரு நாள் வருதியேல் என் சினம் தீர்வன் நானே– 6-8-பரப்பு மாறப் பூத்த முல்லைப் பந்தலின் கீழே எக்காலத்தில் இடம் குறித்து விட்டான் என்று தெரியாது – அவள் அங்கே குடில் கட்டி காத்துக் கிடக்கிறது -அவளோடு சம்ச்லேஷிக்கப் புக்கு-ஒரு மஹா பாரதத்தை பாரித்துக் கொண்டு புக்கு இவளைக் கண்டவாறே கலங்கி எழுந்து இருந்தான் –
முற்றத்தூடு புகுந்து நின் முகம் காட்டிப் புன் முறுவல் செய்து
சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக் கடவையோ கோவிந்தா
முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற நீண்டு அளந்து கொண்டாய் எம்மைப்
பற்றி மெய்ப் பிணக்கிட்டக்கால் இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார் –2-9–இவன் கோலுகிறபடி சாலப் பொல்லாதாய் இருந்தது – இவன் கண் வட்டத்தில் நிற்கில் தீம்பு செய்கை தவிரான் – அதில் காட்டில் மறைய நிற்கை நன்று -என்று எல்லாரும் திரண்டு சமேத்ய மந்த்ரயித்வா து சர்வே சங்கத புத்தய–ஊசுஸ்ச மநஸா ஜ்ஞாத்வா வ்ருத்தம் தசரதம் ந்ருபம் -அயோத்யா -2-20-என்கிறபடியே சமயம் பண்ணி – அது செய்யும் இடத்து எல்லாரும் திரளப் போவோமாகில் இவன் அடி ஒற்றிக் கொண்டு வரும் -என்று பார்த்து ஒருவர் ஒருவராகப் போய் பஞ்ச லஷம் குடியில் உள்ளார் எல்லாரையும் கொள்வதொரு முற்றத்திலே புக்கு கதவுகளையும் -தலை வாசல் தொடங்கி அடைத்து கணையங்களையும் ஏறிட்டு
இவனுக்கு புகுர வழி இல்லாத படி பண்ணிக் கொண்டு இருந்தார்கள் –இவனுக்கு புகுருகைக்கு வழி தேட வேண்டா இறே-இட்ட இலச்சினை அழியாது இருக்க வெண்ணெய் குடி போமா போலே நினைவு இன்றிக்கே இருக்க தாங்கள் அவன் கையிலே அபஹ்ருதைகள் ஆனார்கள் இம் முற்றத்திலே தங்கள் திரளின் நடுவில் வந்து நிற்கக் கண்டார்கள்-நாம் இவனை மறைத்துப் போந்தோம் என்று இருந்தோம் -அழகிதாய் இருந்தது இவன் நமக்கு முற்பட்டுக் கொடு நின்றான் -என் செய்தோம் ஆனோம்
இவன் கையிலே அகப்பட்டோம் – இனி இவனுக்கு தென்பட்டோம் ஆகாமல் கழியும் விரகு ஏதோ என்று பார்த்து ஒரு போக்குக் காணாமல் லஜ்ஜித்து கவிழ் தலையிட்டார்கள்–நின் முகம் காட்டிப் – எல்லாரையும் தனித் தனியே முகத்தை எடுத்து – ஏன் வந்தோம் இறே பிற்பட்டோமே -கூட வரப் பெற்றிலோமே –
எவ்வழியே வந்தி கோள்-கால்கள் நொந்தது இறே -என்றால் போலே சிலவற்றைச் சொன்னான்
நம் நினைவு தப்புவதே -என்று தங்கள் தோல்வியை அனுசந்தித்து லஜ்ஜித்தார்கள்-புன் முறுவல் செய்து- அத்தை அறிந்து -ஸ்மிதம் பண்ணினான் – நாம் இவனுக்குத் தோற்று லஜ்ஜித்தோம் ஆனமை அவன் அறியல் ஆகாது – புறம்பே அந்ய பரர ஆனோம் ஆவோம் என்று அங்கேயே இருந்து சிற்றில் இழைக்கப் புக்கார்கள் –இங்கேயே நம் சந்நிதியிலே இருந்து அந்ய பரதை பண்ணுவதே -என்று சிவிட்கு என்னா நினைக்கைக்கு நெஞ்சும் கூடாதே – வ்யாபரிக்கைக்கு கையும் கூடாத படியாகச் சிலவற்றைச் செய்தான் –
மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள் தம் இடம் புக்கு
கச்சோடு பட்டைக் கிழித்து காம்பு துகில் அவை கீறி
நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள் திருவேம்கடத்து எந்தாய்
பச்சை தமநகத்தோடு பாதிரிப் பூ சூட்ட வாராய் 2-7 3–மச்சு -நடு நிலம்-மாளிகை -மேல் நிலம்
மச்சொடு கூட மாளிகையில் சென்று ஏறி பெண்கள் இருக்கிற இடங்களிலே புக்கு அவர்கள் முலைக் கச்சோடே அதற்கு மேலீடான பட்டுக்களையும் கிழித்து-பணிப் புடவைகள் ஆனவற்றையும் கிழித்து
காம்பு துகில் -விளிம்பில் பணி உடன் சேர்ந்த புடவை(பணி -கரை -எழுத்து போன்ற செயல்கள் ) நாள் தோறும் தீம்புகள் செய்யுமவனே – வளர வளர தீம்பு மிகை ஏறிச் செல்லா நின்றது இறே
அவ்வவிடம் புக்கு அவ்வாயர் பெண்டிர்க்கு அணுக்கனாய்
கொவ்வைக் கனிவாய் கொடுத்து கூழமை செய்யாமே
எவ் வுஞ்சிலை உடை வேடர் கானிடைக் கன்றின் பின்
தெய்வத் தலைவனைப் போக்கினேன் எல்லே பாவமே -3-2-5- மச்சொடு மாளிகை நிலவரை முதலான அவ்வவ ஸ்தலங்களிலே பிறர்க்கு தெரியாதபடி சென்று புக்கு –அவ்வவ ஸ்தலங்களில் இருந்த இடை பெண்களுக்கு அந்தரங்கனாய் – அதாவது – அவர்கள் புத்ய அதீனமாக தன்னைத் சமைத்து வைக்கை
வாரிச் சிதைத்துப் பறித்துக் கிழித்து-அதாவது-துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும் –பெரிய திருமொழி -3-8-8–பந்து பறித்து துகில் பற்றி –பெரிய திருமொழி -10-7-5–கச்சோடு பட்டை கிழித்து–பெரியாழ்வார் -2-7-3- -என்கிறபடியே குடைந்து நீராடுவார்கள் கூறைகளை வாரிக் கொள்வது – இட்டமா விளையாடுவார்கள் இழைத்த சிற்றிலைச் சிதைப்பது – பந்து கழல் முதலிய லீலா உபகரணங்களை பறிப்பது – அவர்களோடு இட்டீடு கொண்டு பட்டுகள் கச்சுகள் எட்டினவற்றை பற்றி வலித்து கிழிப்பதாய்-
துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும்”” (திருமொழி 3 – 8 – 8), ““பந்து பறித்துத் துகில் பற்றிக் கீறி” (திருமொழி 10 – 7 – 5) என்றும் அவர்களுடைய துகிலை வாரியும், அவர்களுடைய லீலா ஸ்தாநங்களை அழித்தும், அவர்களுடைய வீலோபகரணங்களைப் பற்றிக் கொண்டும்,
துளையார் கரு மென் குழல் ஆய்ச்சியர் தம் துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும் முற்றா
இளையார் விளையாட்டோடு காதல் வெள்ளம் விளைவித்த அம்மானிடம் வேல் நெடுங்கண்
முளை வாள் எயிற்று மடவார் பயிற்று மொழி கேட்டிருந்து முதிராத இன் சொல்
வளைவாய கிள்ளை மறைபாடு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-8—அவர்கள் அரையிலே இட்டு வைத்த பர்யட்டங்களை மசி மயிலீ கூறை தாராய்–நாச்சியார்-3-9- -என்னும்படி
வாரிக் கொண்டு போய் குருந்திலே ஏறியும் தீமை செய்யும் சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேல் -என்னும்படி சிற்றில் சிதைத்தும்-
தந்தை புகுந்திலன் நான் இங்கு இருந்திலேன் தோழிமார் ஆரும் இல்லை
சந்த மலர்க் குழலாள் தனியே விளையாடும் இடம் குறுகி
பந்து பறித்துத் துகில் பற்றிக் கீறிப் படிறன் படிறு செய்யும்
நந்தன் மதலைக் கிங்கு என் கடவோம் நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ —10-7-5—அவர்களோடு சென்று கிட்டி பந்தைப் பறித்தும் பரியட்டங்களைக் கிழித்தும் –பின்பு சொல்ல ஒண்ணாத படி களவு செய்யும் –பிரபுக்கள் கீழே குடி இருக்க ஒண்ணாதே சாதுக்களுக்கு –
மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள் தம் இடம் புக்கு
கச்சோடு பட்டைக் கிழித்து காம்பு துகில் அவை கீறி
நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள் திருவேம்கடத்து எந்தாய்
பச்சை தமநகத்தோடு பாதிரிப் பூ சூட்ட வாராய் 2-7 3- –அவர்கள் முலைக் கச்சோடே அதற்கு மேலீடான பட்டுக்களையும் கிழித்து-பணிப் புடவைகள் ஆனவற்றையும் கிழித்து-காம்பு துகில் -விளிம்பில் பணி உடன் சேர்ந்த புடவை (பணி -கரை -எழுத்து போன்ற செயல்கள் ) நாள் தோறும் தீம்புகள் செய்யுமவனே வளர வளர தீம்பு மிகை ஏறிச் செல்லா நின்றது இறே
கோயின்மை குறும்பு செய்து-அதாவது-கோயின்மை செய்து கன்மம் ஒன்றில்லை –திருவாய் -6-2-6-
குறும்பு செய்வானோர் மகனைப் பெற்ற –நாச்சியார் -12-3–என்னும்படி நியாமகர் அற்ற ஸ்வதந்த்ரன் செய்யும் அத்தையும் – நியாமகர் கீழ் அடங்காமல் மூலை அடியே நடத்துவார் செய்யும் அத்தையும் செய்து –
“கோயின்மை செய்து கன்மமொன்றில்லை” (திருவா. 6 – 2 – 6), “குறும்பு செய்வானோர் மகனைப் பெற்ற”? (நா. தி. 12 – 3), ‘“கொள்ளை கொள்ளிக் குறும்பனை”’ (நா. தி, 13 – 8) என்றும், அராஜகமாய், ஸ்வதந்த்ரமான செயலைச் செய்து,
குழகி எங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்மம் ஒன்றில்லை;
பழகி யாம் இருப்போம் பரமே இத் திருவருள்கள்?
அழகியார் இவ் வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலருளர்;
கழகம் ஏறேல், நம்பி! உனக்கும் இளைதே கன்மமே.–6-2-6—நிவாரகர் இல்லை என்னா -அடிக் கழிவான செயல்களை செய்தால் உனக்கு ஒரு கார்யம் இல்லை -நீ நினைக்கிறவர்களது அல்லாமையாலே உனக்கு ஒன்றும் வாயாது –எங்கள் அனுமதி இல்லாமையாலும் பிரயோஜனம் இல்லை –பிரயோஜனம் இல்லை யாவது என் -இது தானே பிரயோஜனம் -பிரயோஜனத்துக்கு பிரயோஜனம் உண்டோ –
தந்தையும் தாயும் உற்றாரும் நிற்கத் தனி வழி போயினாள் என்னும் சொல்லு
வந்த பின்னைப் பழி காப்பரிது மாயவன் வந்து உருக்காட்டுகின்றான்
கொந்தளமாக்கிப் பரக்கழித்துக் குறும்பு செய்வானோர் மகனைப் பெற்ற
நந்த கோபாலன் கடைத் தலைக்கே நள்ளிருட்கண் என்னை யுய்த்திடுமின்–12-3—ஸ்ரீ நந்தகோபர் தம்முடைய ராஜ்யத்தில் வன்னியம் அடிக்கைக்காக நோன்பு நோற்றுப் பிள்ளை பெற்றாராய்
அது கண்டி கோளே-அவன் இவனை நியமியாதே இருக்கிறபடி-
உள்ளே உருகி நைவேனை உளளோ இலளோ என்னாத
கொள்ளை கொள்ளிக் குறும்பனை கோவர்த்த நனைக் கண்டக்கால்
கொள்ளும் பயன் ஓன்று இல்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எறிந்து என்னழலைத் தீர்வேனே–13-8—என் பக்கல் தயை பண்ணத் தவிர்ந்தால் என்னிடை யாட்டம் ஆராயாது ஒழிந்தால் ஆகாதோ- என்னை சர்வ ஸ்வாபஹாரம் பண்ண வேணுமோ – (கொள்ளை கொள்ளி -குறும்பன் -இரண்டு விசேஷணங்கள் )
அல்லல் விளைத்து--அதாவது – அல்லல் விளைத்த பெருமான் -நாச்சியார் -13-10–என்ற படி பேர் ஆரவாரம் விளைத்து –-கவரும் –-அதாவது –-ஆயர் பாடிக் கவர்ந்து உண்ணும் –நாச்சியார் -14-2–என்று திரு ஆய்ப்பாடியிலே – பெண்களை அடைய முற்றூட்டாக விரும்பிப் புஜிக்கும் என்ற படி-உகக்கு நல்லவர்-அதாவது அவன் ( அவனால் ) விரும்பப் படுபவர்களாய் அத்தாலே நீ உகக்கும் நல்லவர்–திருவாய் -10-3-8–என்னும் படி அவன் உகப்புக்கு விஷயமான வைலஷண்யத்தை உடையவர்கள் என்று நிரூபகமாய் இருக்கிற திரு ஆய்ப்பாடியில் பெண்களுடைய பாவம் இவருக்கு உண்டு என்னும் இடம் –
“அல்லல் விளைத்த பெருமான்?” (தா. தி. 13 – 10) என்கிறபடியே ஆரவாரத்தை விளைத்து-“முன்கைவளை கவர்ந்தாய்”” (திருமொழி 10 – 9 – 2), “நீ உகக்கு நல்லவரொடுமுழிதந்து “‘ (திருவா. 6 – 2 – 6) என்றும் அவன் இப்படி மேல் விழ வேண்டும்படியான வைலக்ஷ்ண்யத்தை யுடைய திருவாய்ப்பாடியில் பெண்களுடைய பாவம்.
அல்லல் விளைத்த பெருமானை ஆயர்பாடிக்கு அணி விளக்கை
வில்லி புதுவை நகர் நம்பி விட்டுசித்தன் வியன் கோதை
வில்லைத் தொலைத்த புருவத்தாள் வேட்கை யுற்று மிக விரும்பும்
சொல்லைத் துதிக்க வல்லார்கள் துன்பக் கடலுள் துவளாரே–13-10—பஹவோ ந்ருப கல்யாண குணகணா புத்ரச்ய சந்தி தே--அயோத்யா -2-26-என்று திரு அயோ த்யை ராம குணங்களிலே கையடியுண்டு -ஈடுபட்டு – மற்று ஓன்று அறியாது இருக்குமா போலே யாய்த்து திரு வாய்ப்பாடியில் உள்ளார் கிருஷ்ணன் தீம்பிலே கையடி யுண்டார்களாய் இருக்கும் படி -ஊரை மூலையடியே நடந்து -வெண்ணெய் பெண்கள் இவை களவு போய்த்து-என்றும் பாலும் பதின் குடம் கண்டிலேன் –பெரிய திரு -10-7-2-என்று சொல்லும் படி பெரிய ஆரவாரத்தைப் பண்ணி யாய்த்து வார்த்திப்பது
அனுங்க வென்னைப் பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்துண்ணும்
குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே
கணங்களோடு மின் மேகம் கலந்தால் போலே வனமாலை
மினுங்க நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே–14-2—பட்டி மேயும்படி தன்னைச் சொல்கிறது -அகங்களிலே சிறை செய்து வைத்து அவற்றையே யாய்த்து விரும்பி அமுது செய்வது-
தன்னை ஆசைப் பட்டாரை உபேஷித்துப் போந்தான்-இப்போது ஆசைப் பட்டு இறே நோவு படுகிறது
மன்றில் மலிந்து கூத்து வந்தாடி மால் விடை ஏழும் அடர்த்து ஆயர்
அன்று நடுங்க வா நிரை காத்த ஆண்மை கொலோ வறியேன் நான்
நின்ற பிரானே நீள் கடல் வண்ணா நீ யிவள் தன்னை நின் கோயில்
முன்றில் எழுந்த முருங்கையில் தேனா முன் கை வளை கவர்ந்தாயே —10-9-2-ரஷகத்வத்தில் முற்பாடனாய் இருக்கும் நீ உன்னுடைய ரஷகத்வமும் போராத படியான த்வரை உடைய இவளை –
கையும் வளையுமான சேர்த்தி கண்டு கொண்டாடும் நீயே அனுபவித்து விடப் புக்காயோ -கோயிலில் உள்ள முருங்கை மரத் தேன் போலே இருக்கும் இவளை (முருங்கை மரத் தேன் எளிதாக எடுக்குமா போல் இவள் வளையல்களையும் எளிதாகப் பறித்தாயோ )
அசுரர்கள் தலைப்பெய்யில் எவன் கொல் ஆங்கு என்று ஆழும் என்னார் உயிர் ஆன் பின் போகல்
கசிகையும் வேட்கையும் உள் கலந்து கலவியும் நலியும் என் கை கழியேல்
வசி செய் உன் தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக வுடையும் காட்டி
ஓசி செய் நுண்ணிடை இள வாய்ச்சியர் நீ யுகக்கும் நல்லவரோடும் உழி தராயே-10-3-8-வடிவு அழகும் பருவமும் ஒழியவே நீ உகந்த நன்மையை யுடையவர்கள் -அவர்களோடு கூட என் கண் வட்டத்தில் சஞ்சரிக்க அமையும்-
கடல் ஞாலம் மின்னிடை மல்லிகை வேய்மரு பேய் முலை முனிந்து-என்னுமவற்றிலே தோன்றும்–
கடல் ஞாலம்-அதாவது – கிருஷ்ண விரஹம் ஆற்றமாட்டாமல்-துஷ்ட காளிய திஷ்டாத்ரா கிருஷ்ணோ ஹமி திசபரா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-27–-க்ருஷ்ணோஹம் ஏஷ லலிதம் விரஜாம் யாலோக்ய தாங்தி -இத்யாதிப் படியே –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-27– அவர்கள் அனுகரித்தாப் போலே இவர் அவனைப் பிரிந்து ஆற்றாமையாலே அனுகரித்த – கடல் ஞாலத்திலும் -5-8–திருவாய் மொழியிலும்
மின்னிடை-அதாவது –-அந்ய விஷயத்தில் பரப்பனாகையாலும் அபேஷித சமயத்தில் வாராமல்
அவன் விளம்பித்து வந்தால் ,அவர்கள் ஊடினாப் போலே இவரும் அவனோடு ஊடின- மின்னிடை மடவாரிலும் -6-2-திருவாய்மொழியிலும்
மல்லிகை –அதாவது –பகல் எல்லாம் பசு மேய்க்கப் போய் அவற்றுடன் வரும் கண்ணனை பசுக்களின் முற் கொழுந்தில் காணாதே பிற் குழையில் வருகிறவன் வரப் பற்றாமல் ஒரு சந்த்யையிலே பஞ்ச லஷம் குடியில் பெண்களும்-பாதக பதார்த்தங்களுக்கு இடைந்து கூப்பிட்டாப் போலே இவர் கூப்பிட்ட மாலைப் பூசலான – மல்லிகை கமழ் தென்றலிலும்-9-9-திருவாய் மொழியிலும்
வேய் மரு--அதாவது – இரவு எல்லாம் கிருஷ்ண சம்ஸ்லேஷம் பண்ணி இருந்து போது விடிந்தவாறே அவன் பசு மேய்க்கப் போகும் காலம் என்னும் நினைவாலே அவனை அணைத்துக் கொண்டு இருக்க
செய்தே போனானாகவே கருதி பாதக பதார்த்தங்களும் சம்ஸ்லேஷ தசையில் அவன்
பரிமாற்றங்களும் புறம்பும் உள்ளும் நின்று நலிகிற நலிவை அவர்கள் அவன் தனக்கு சொல்லிக் கூப்பிட்டாப் போலே இவர் கூப்பிட்ட காலை பூசலான – வேய் மரு தோளிணை-10-3-திருவாய் மொழியிலும் –
பேய் முலை முனிந்து-அதாவது தனக்கு பாதங்ககங்களாய் வந்து கிட்டின -பூதனா சகட யமளார்ஜுனாதிகளை நினைவை அவை தன்னோடு போக்கி – தன்னை நமக்காகா நோக்கித் தந்த உபாகரனை – நான் கிட்டுவது என்றோ என்னும் – அப்படி செய்த கிருஷ்ணனான உபகாரனுக்கு என் ஸ்த்ரீத்வம் இழந்தேன் என்றும் சொன்ன பேய் முலை உண்டு-5-3-8–(மாசறு சோதி மடலூர முயன்ற பதிகம்) முனிந்து சகடம் உதைத்து-7-3-5-(நிகரில் முகில் வண்ணன் -அவன் முனிவுக்கு அகப்பட்ட நான்
உங்கள் முனிவுக்கு மீழுவேனோ -ஹிதம் பிரியம் அவனது- உங்களது அஹிதம் அபிரியம் ) என்கிற பாட்டுகளிலும் தோன்றும் ..
(கடல் ஞாலம் மின்னிடை மல்லிகை வேய் மரு பேய் முலை முன்னின்று) என்று – “துஷ்ட காளிய திஷ்டராத்ர க்ருஷ்ணோஹமிதி சாபரா”’ (வி. பு. 5 – 13 – 27), “க்ருஷ்ணோஹமேஷ லலிதம் வ்ரஜாம்யாலோக்ய தாம் கதிர” என்று அவர்கள் அநுகரித்தாப் போலே ““கடல் ஞாலம் செய்தேனும் யானே யென்னும்”” (திருவா. 5 – 6 – 1) என்று இவரும் அநுகரிக்கையாலும், *மின்னிடை மடவாரிலே அவனோடே ஊடுகையாலும், *மல்லிகை கமழ் தென்றலிலே பகல் போதெல்லாம் பசுமேய்க்கப் போன க்ருஷ்ணனைப் பசுக்களின் முற்கொருந்தில் காணாதே பிற்கழையிலே வருமளவில் பற்றாமல் ஒரு ஸந்த்யையில் திருவாய்ப்பாடியில் பஞ்ச லக்ஷம் குடியில் பெண்களுடைய ஆற்றாமையை இவரொருவரு முடையராய்க் கொண்டு பேசுகையாலும், *வேய்மருதோளிணையில் ராத்ரியெல்லாம் க்ருஷ்ண ஸம்ஸ்லேஷம் ப்ரவ்ருத்தமாய் அவன் பசு மேய்க்கப் போகிற ப்ராதசகாலம் வந்தவாறே அவன் அணைத்துக் கொண்டிருக்கச் செய்தேயும், அவன் விஸ்லேஷித்தானாக அதிசங்கைபண்ணி அவனுடைய முகத்தைப் பார்த்துத் தம்முடைய ஆற்றாமையைப் பேசுகையாலும், *“பேய்முலை யுண்டு சகடம் பாய்ந்து” (திருவா. 5 – 3 – 8), “முனிந்து சகடமுதைத்து”” (திருவா. 7 – 3 – 5) என்கிற பாட்டுக்களிலே பூதநா சகட யமளார்ஜுநாதிகளை நிரஸித்த க்ருஷ்ணனை கிட்டுவதென்றோ என்றும், அப்படிப்பட்ட க்ருஷ்ணனுக்கு என்னுடைய ஸ்த்ரீத்வத்தைத் தோற்றேன் என்றும் சொல்லுகிற பேச்சுக்களிலே இவர்க்கு உண்டென்னுமாகாரம் தோன்றும்.
கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்-ப்ரவேஸம்-கீழ் ப்ரீதி அப்ரீதி சமமாக சென்றது -இதில் அப்ரீத் யம்சமே தலை எடுத்து -ஸ்மரித்து தரித்ததும் போய் ஆத்ம தாரணம் பண்ண முடியாமையாலே -அநுகரித்து தரித்த கோபிமார்களை போலே -அநு காரமாய்ச் செல்லுகிறது
6-2-மின்னிடை மடவார்கள்-ப்ரவேஸம்-ஸ்வரூப அன்விதம் இன்றியே தமக்கு வந்தேறியான
வைமுக்யத்தைக் களித்து அபிமுகீகரித்துக் கொண்ட ஆகாரத்தை ப்ராணாய ரோஷத்தாலே விழுகையாய் அவன் வந்தாலும் முகம் கொடேன் என்று தோழிமாரோடு கூட லீலா பிரசாங்கத்தாலே அந்நிய பரத பாவனை பண்ணி இருக்கிற கோபிகையை அநு நயித்து ஊடல் தீர்த்த ஆபீமுக்யம் பண்ணுவித்துக் கொண்டு ஸம்ஸ்லேஷித்த ஆகாரம் ஆகிற அந்யாப தேசத்தாலே அருளிச் செய்கிறார்
9-9-மல்லிகை கமழ் தென்றல் -ப்ரவேஸம்--திருவாய்ப்பாடியிலே பெண்கள் எல்லாம் ஒரு ராத்திரியில் கிருஷ்ண விரஹத்தால் பட்ட நோவை இவர் ஒருவருமே படுகிறார் -என்று ஆளவந்தார் அருளிச் செய்வார் முன்பே ஆற்றாமையாலே தற்பு அற்று இருக்கிறவர் ஆகையால் அத்தனை ஆடல் கொடுக்கைக்கு ஆஸ்ரயம் இல்லை-ஒரு ஸந்த்யையில் அவர்கள் பட்ட நோவை படுகிறார் என்று அருளிச் செய்வர் எம்பெருமானார் – ஸந்த்யையாவது எம்பெருமான் தம்மை விஷயீ கரிப்பதற்கு முன்பு உண்டான அல்ப காலம் –மாலைப் பூசல் அன்றோ இது —
10-3-வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ-ப்ரவேஸம்-போது விடிந்தவாறே – பண்டு என்றும் இக்காலத்தில் பிரியக் கண்ட வாஸனையாலே -அவன் பசு மேய்க்கப் போகிறானாக அதி சங்கை பண்ணி–போனானாக அத்யவசித்து -நீயும் பிரிந்தாய் -நீ பிரிந்தால் நலியக் கடவ பதார்த்தங்களும் நலியா நின்றன –-பசு மேய்க்கப் போமது எனக்கு அநபிமதம் -நீ போக வேண்டா என்று சொல்ல ஒண்ணாத படி என்னுடைய நாக்கு நீர் அற்று வாரா நின்றது -நான் நினைத்ததை சொல்ல வல்லேனாம் படி உன்னுடைய அணி மிகு தாமரைக் கையை என் தலை மேலே வைத்து அருளி -உன்னுடைய திருக் கண்களாலே நோக்கி அருள வேணும் -அஸூர ராக்ஷசர் சஞ்சாரத்தால் -சப்ரமாதமான காட்டில் பசு மேய்க்கப் போகாது ஒழிய வேணும்–மாதா பிதா பிராதா -என்று இவ்வாத்மாவுக்கு சர்வவித பந்துவும் என்று உணர்ந்தால் தன் இழவில் காட்டில் இவனுக்கு பரிய வேண்டும்படி யாயத்து இருப்பது –
ஆனபின்பு நீ போகில் நான் உளனாக மாட்டேன் -என்று இன்னுயிர்ச் சேவலிலும்-மல்லிகை கமழ் தென்றலிலும் படும் வியசனத்தை-அவன் சந்நிதியில் பட -அத்தைப் பார்த்து -நாம் போகக் கடவோம் அல்லோம் -நாம் போக நினைப்பதும் செய்திலோம்-என்று தான் போகாமையை இவள் நெஞ்சிலே படுத்த -அத்தாலே தரித்தாள் ஒரு பிராட்டி பேச்சாலே தம் தசையை அருளிச் செய்கிறார் ––எம்மா வீட்டில் தம்முடைய தாதார்த்தயத்தை ஆசைப் பட்டார்- -இதில் அவன் ஸம்ருத்தியை ஆசாசிக்கும் இதுவே புருஷார்த்தம் -என்கிறார் –
பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து மருதிடை
போய் முதல் சாய்த்துப் புள்வாய் பிளந்து களிறு அட்ட
தூ முறுவல் தொண்டைவாய்ப் பிரானை எந்நாள் கொலோ?
நாம் உறுகின்றது தோழீ! அன்னையர் நாணவே.–5-3-8-பூதனை யுடைய முலை வழியே பிராணனை முடித்து -அந்த அவசாதத்தை தப்பி ரக்ஷையாக நிறுத்தின சகடம் தானே அஸூரா வேசத்தாலே மேல் விழ-அத்தை நிரசித்து -தவழ்ந்து போகா நிற்க முன்னே நின்ற யமளார்ஜ்ஜுனங்களின் நடுவே போ அவ்வாபத்தை தப்பி தன்னைக் கொண்டு தப்புகை அன்றிக்கே அஸூர விஷ்டமான குருந்தை வேரோடு பறித்து -பகாசூரனை நிரசித்து -குவலயா பீடத்தை முடித்த-
முனிந்து சகடம் உதைத்து மாயப் பேய் முலை உண்டு மருதிடை போய்க்
கனிந்த விளவுக்குக் கன்று எறிந்த கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன்
முனிந்து இனி என்செ ய்தீர் அன்னைமீர்காள்! முன்னி அவன் வந்து வீற்றிருந்த
கனிந்த பொழில் திருப் பேரெயிற்கே காலம் பெற என்னைக் காட்டுமினே.–7-3-5-ஸ்தந்யார்த்தியாய் சீற -அதுக்கு இலக்காய் சகடாசூரன் முடிந்து போனான் -ஸ்தந்யார்த்தியாய் சீற அதிலே நசித்தான் -சகடம் மேலிடப் புக்க வாறே சீறி என்றுமாம் -கிருஷ்ணனுடைய பும்ஸத்வத்துக்கு என் ஸ்த்ரீத்வத்தை தோற்றேன் -விரோதி வர்க்கத்தை அழியச் செய்த ஆண் பிள்ளைத் தனத்தை காட்டி ஒரு காலும் அழியாத ஸ்த்ரீத்வத்தை அழித்தான்
முழிசி ஆவர் என்னும் தேன் மொழியாலே கோகுலத்தை மறப்பிக்கும் நகர ஸ்திரீகள் பாவம்
அதாவது-ஸ்ரீ மாலாகாரரும் கூனியும் கொடுத்த திரு மாலையையும் சாந்தையும் சாத்திக் கொண்டு –
ராஜ மார்க்கத்தில் எழுந்து அருளி குவலயா பீடம் நிரசனம் பண்ணி நிற்கிற போது –
முழுசி வண்டாடிய –பெரிய திருமொழி -2-8-7-ஆவர் இவை செய்வது அறிவார் -பெரிய திருமொழி -3-3-7–என்கிற பாட்டுகளில் சொல்லுகிற படி ஒப்பனை அழகிலும் வடிவு அழகிலும் .குவலயா பீட நிரசின சேஷ்டிதங்களிலும் தோற்று – சக்க்ய பஸ்யத க்ருஷ்ணஸ்ய முகமத்ய ருணேஷணம் கஜ யுத்த க்ருதா யாஸஸ் வேதாம்பு கணி காசிதம்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-20-53– -இத்யாதிப் படியே அந்யோன்யம் தங்களில் பேசுகிற-மழறு தேன் மொழி -திருவாய் -6-2-5–என்கிறபடியே மழலை தேன் போல இனிதான பேச்சுக்களாலே – மதுரம் பிராப்ய கோவிந்த -கதம் கோகுல மேஷ்யதி நகர ஸ்திரீ கலா லாப
மதுஸ் ரோத்ரண பாஸ்யதி -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-8-13–என்று ,mகோகுலத்தில் பெண்கள் பேசும்படி அவன் கோகுலத்தை மறக்கப் பண்ணும் ஸ்ரீ மதுரையில் உள்ள பெண்களின் பாவம் இவருக்கு உண்டு என்னும் இடம் —
(முழுசியாவரென்னும் தேன்மொழியாலே கோகுலத்தை மறப்பிக்கும் நகர ஸ்த்ரீகள் என்று) க்ருஷ்ணன் ஸ்ரீமாலாகார க்ருஹ்த்திலே திருமாலை சாத்தி, கூனி பக்கலிலே சாந்து சாத்தி, ராஜ மார்க்கத்தாலே எழுந்தருளி, குவலயாபீட நிரஸநம் பண்ணி நின்றருளின போது, ““முழுசி வண்டாடிய தண்டுழாய்”’ (திருமொழி 2 – 8 – 7), ““ஆவரிவை செய்தறிவார் (திருமொழி 3 – 3 – 7) என்கிற பாட்டுக்களில் சொல்லுகிறபடியே “ஸக்ய பஸ்யத க்ருஷ்ணஸ்ய முகமத்யருணே க்ஷணம் ! கஜயுத்த க்ருதாயாஸஸ் வேதாம்பு கணிகாசிதம்’” (வி. பு. 5 – 20 – 54) என்று ஒப்பனை யழகிலும், வடிவழகிலும், குவலயாபீட நிரஸநமாகிற சேஷ்டிதத்திலும் தோற்று, “மழறு தேன் மொழியார்கள்’” (திருவா. 6 – 2 – 8) என்று அந்யோந்யம் தங்களிலே பேசுகிற மழலைத் தேன் போலே இனிதான பேச்சுக்களினாலே ““மதுராம் ப்ராப்ய கோவிந்த கதம் கோகுலமேஷ்யதி ! நகர ஸ்த்ரீகலாலாபமது ஸ்ரோத்ரேண பாஸ்யதி” (வி. பு. 5 – 18 – 14) என்று கோகுலத்தில் பெண்கள் தானே பேசும்படி அவனை அந்த கோகுலத்தை மறக்கும்படி பண்ணும் ஸ்ரீமதுரையில் பெண்களுடைய பாவம்.
முழுசி வண்டாடிய தண் துழாயின் மொய்ம் மலர்க் கண்ணியும் மேனி யஞ்சாந்து
இழுசிய கோலம் இருந்தவாறும் எங்கனம் சொல்லுகேன் ஓவி நல்லார்
எழுதிய தாமரை யன்ன கண்ணும் ஏந்து எழில் ஆகமும் தோளும் வாயும்
அழகியதாம் இவரார் கொல் என்ன அட்ட புயகரத்தேன் என்றாரே–2-8-7—கிண்ணகத்தில் இழிவாரைப் போலே வண்டுகள் ஆனவை மதுபான மத்தமாய் களித்தாடா நின்றுள்ள திருத் துழாயினுடைய செறியத் தொடுத்த மாலையும்-
ஆவர் இவை செய்தறியார் அஞ்சன மா மலை போலே
மேவு சினத்து அடல் வேழம் வீழ முனிந்து அழகாய
காவி மலர் நெடும் கண்ணார் கை தொழ வீதி வருவான்
தேவர் வணங்கு தண் தில்லைத் சித்திர கூடத்துள்ளானே–3-3-7—ஆனைத்தொழில்கள் சேஷ்டிதங்கள் செய்வது அறிவார் யார்-எவர் இவை செய்வது அறிவார்-இப்படிப்பட்ட -ஜென்ம கர்ம மே திவ்யம்-அறிவார் இல்லை ஆழ்வார் நொந்து எத்தனை உபதேசித்தாலும் திருத்துவார் இல்லையே
அன்றிக்கே-ஆஸ்ரிதற்காக இப்படி செயல்களை செய்தவர் யார் இல்லை
அன்றிக்கே-மதுரைப் பெண்கள் ஈடுபாடாய் -கை கூப்பிச் சொன்ன படி-
கழறேல் நம்பி! உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும் ; திண்சக்கர
நிழறு தொல்படையாய்! உனக்கு ஒன்று உணர்த்துவன் நான்
மழறு தேன் மொழியார்கள் நின்னருள் சூடுவார் மனம் வாடி நிற்க எம்
குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே.–6-2-5—போலி கண்டு இப்படி உன்னை பிச்சேற பண்ணினவர்கள் ஆரோ –மழறு தேன்-மழலைத் தேன் -கலங்கின தேன் போலே இருந்துள்ள பேச்சு அழகை யுடையவர்கள் –ஆரோ என்றவாறே நீங்களே என்றோ எங்கள் தங்கள் தலையிலே ஏறிடப் புகுகிறானோ என்று நின்னருள் சூடுவார் -என்கிறார் –
மற்பொரு விறல் கஞ்சனை என்னும வற்றிலே தோன்றும்-அதாவது-மற்பொரு–மற்பொரு தோளுடை மாயப் பிரானுக்கு என் கற்புடை யாட்டி இழந்தது கட்டே -திருவாய் -6-6-10-என்று பிரபலரான மல்லரோடு தோளில் சாந்து அழியாதபடி மல்லை பொருத ஆச்சர்ய பூதனான உபாகரனுக்கு அறிவுடையாளாய் இருக்கிற என் பெண் தனக்குள் அடங்கலும் இழந்தாள் என்றும் –-விறல் கஞ்சனை-அதாவது
விறல் கஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மை தஞ்சம் என்று இவள் பட்டனவே -திருவாய் -2-4-8–என்று
பெரு மிடுக்கனான கம்சனை அவன் வஞ்சனை அவனோடு போம் படி பண்ணினவரே ! உம்மையே தனக்கு தஞ்சம் என்று இவள் பட்ட வெள்ளம் என் தான் என்று தமக்கு பரிவானவர்கள் சொன்ன பாசுரத்தாலே –மல்லரையும் கம்சனையும் நிரசித்த கண்ணனை அச் சுவடோடே அனுபவிக்க ஆசைப்பட்டமையை பேசின பாசுரத்தில் தோன்றும் —
(மற்பொரு விறல் கஞ்சனை)”மற்பொரு தோளுடை – மாயப் பிரானுக்கு” (திருவா. 6 – ப – 10) இத்யாதி – சாணூர முஷ்டிக நிரஸநம் பண்ணின ஆஸ்சர்ய பூதனான க்ருஷ்ணனுககு அறிவை யுடையளான என்னுடைய பெண் பிள்ளை எல்லாத்தையும் இழந்தாள் என்றும், ““விறற் கஞ்சனை வஞ்சனை செய்தீரும் மைத்தஞ்சமென்றிவள் பட்டனவே”’ (திருவா. 2 4 – 8) என்று பெரு மிடுக்கனான கம்ஸனை நிரஸித்த உம்மைத் தஞ்சமென்று விஸ்வஸித்த இவளை நீர் இப்படிப் படுத்துவதே என்றும், சாணூர முஷ்டிகரையும் கம்ஸனையும் நிரஸித்து நின்ற க்ருஷ்ணனை ஆசைப்படுகையாலே இவர்க்கு உண்டென்னுமாகாரம் தோன்றும்.
பொற்பமை நீண்முடிப் பூந்தண் துழாயற்கு
மற்பொரு தோளுடை மாயப் பிரானுக்கு
நிற்பன பல்லுருவாய் நிற்கு மாயற்கு என்
கற்புடை யாட்டி இழந்தது கட்டே.–6-6-10—வந்து திருவவதரித்து மற்பொரு தோளை யுடையவன் – மாயப் பிரானுக்கு-சாத்தின சாந்து அழியாத படி மல் பொருத ஆச்சர்யம் -சாவத்தகர்த்த சாந்தணி தோள் சதுரன் இறே -மற்றும் ஆச்சர்யமான உபகாரகங்களைப் பண்ணினவன் என்றுமாம்-நிற்பன பல்லுருவாய் நிற்கு மாயற்கு – -ஸ்தாவர ஜங்கமாத்மக சகல பதார்த்தங்களும் அந்தர்யாமியாக நிற்கிற ஆச்சர்ய பூதனுக்கு-என்-கற்புடை யாட்டி — .–மிக்க அறிவுடைய என் மகள் -தத் தஸ்ய சத்ருசம்பவேத்-என்று இருக்கும் அறிவு இறே-இழந்தது கட்டே-தனக்கு உள்ளவற்றை நேராகக் காட்டி இவள் பக்கல் உள்ளவற்றை நேராகக் கொண்டான் –கட்டு என்று மரியாதையாய் அத்தை இழந்தாள் என்றுமாம் –
வஞ்சனே என்னும் கை தொழும் தன்
நெஞ்சம் வேவ நெடிதுயிர்க்கும் விறல்
கஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மைத்
தஞ்சம் என்று இவள் பட்டனவே –2-4-8-–மிடுக்கை உடைய கஞ்சனை அவன் நினைத்த நினைவு அவன் தன்னோடே போம்படி வஞ்சித்தீர் –ஆணுமாய் மிடுக்கனுமாய் எதிரியுமான அவன் பட்டது படுவதே
பெண்ணுமாய் அபலையுமாய் உம்மை உகந்தவள்-உம்மைத்-தஞ்சம் என்று – அதஸ்மின் தத் புத்தி பண்ணி அந்தர பட்டாள்–தஞ்சமாகிய தந்தை தாய் என்னும் -சர்வ ரக்ஷகனை காதுகரைச் சொல்லுமா போலே சொல்லுகிறாள் இறே -மக்களுடைய தசையைப் பார்த்து-இவள்-விறலுக்கு எதிர்தலையான இவள்-பட்டனவே – எதிரிகளா பாதி முடியப் பெற்றால் அல்லள்-சம்சாரிகளோ பாதி அகல இருக்கப் பெற்றிலள்-நித்ய ஸூரிகளோ பாதி அனுபவிக்கப் பெற்றிலள் எங்களைப் போலே தத் தஸ்ய சத்ரு சம்பபவேத் -என்னும் அளவில் இருக்கப் பெற்றிலள்-என் வழி வராதே உம்மைத் தஞ்சமாகப் பற்றின இவளை எத்தனை படுத்த வேணும் தான் –
நரகனைத் தொலைத்த கரதலத்த– என்றும் ,-நரகன் தன்னை சூழ் போகி வளைத்து எறிந்து கன்னி மகளிர் தம்மைக் கவர்ந்த -என்றும் சொல்லுகிறபடி நரகாசுரன் கன்னிகைகளாக கொண்டு வந்து திரட்டி வைக்க -அவனை நிரசித்துப் பொகட்டுப் பரிக்கிரஹித்தவர்களாய்-பதினாறாம் ஆயிரவர் தேவிமார் –
பல்லாயிரம் பெரும் தேவிமார் – எண்ணிறந்த பெரும் தேவிமார் –என்கிறபடி – ஆயிரம் இரண்டாயிரம் இல்லாமையாலே பல்லாயிரம் என்றும் , எண்ணிறந்த என்றும் சொல்லப் படுபவராய்-ஷோடச ஸ்திரீ சஹச்ராணி- என்று புராண சித்தரான பதினாறாயிரம் தேவிமார் பாவம் இவர்க்கு உண்டு என்னும் இடம் –
(நரகனைத் தொலைத்துக் கவர்ந்த பதினாறு பல்லாயிரம் எண்ணிறந்தார் பாவம்) ‘நரகனைத் தொலைத்த கரதலத்த மதியின் கருத்தோ?” (திருமொழி 10 – 9 – 4), மன்னு நரகன் தன்னைச் சூழ் போகி வளைத்தெறிந்து கன்னி மகளிர் தம்மைக் கவர்ந்த கடல் வண்ணன்”? (பெரியா. தி. 4 – 3 – 4) என்றும், ‘“பதினாறாமாயிரவர் தேவிமார் பணிசெய்ய” (நா. தி. 7 – 9), “பல்லாயிரம் பெருந்தேவிமார்” (பெரியா. தி. 4- 1 – 6) என்று நரகாஸூரவத அநந்தரம் பரிக்ரஹித்த பதினாறாயிரம் தேவிமார் பாவமும்.
மல்கிய தோளும் மானுரியதளும் உடையவர் தமக்குமோர் பாகம்
நல்கிய நலமோ நரகனைத் தொலைத்த கர தலத்தது அமைதியின் கருத்தோ
அல்லியங் கோதை யணி நிறம் கொண்டு வந்து முன்னே நின்று போகாய்
சொல்லி யென் நம்பி இவளை நீ யுங்கள் தொண்டர் கைத் தண்டு என்றவாறே –10-9-4—நரகனான அசுரனை நிரசித்த கையில் மிடுக்கை நினைத்தோ –
மன்னு நரகன் தன்னை சூழ் போகி வளைத்து எறிந்து
கன்னி மகளிர் தம்மை கவர்ந்த கடல் வண்ணன் மலை
புன்னை செருந்தியொடு புன வேங்கையும் கோங்கும் நின்று
பொன்னரி மாலைகள் சூழ் போகி மால் இரும் சோலை அதுவே – 4-3- 3—நிரசிக்க கடவோம் – என்று
நிரசிக்கும் பிரகாரமும் – திரு உள்ளத்திலே விசாரித்து – சத்ய பாமை பிராடியாரோடு கூட பெரிய திருவடியை மேல் கொண்டு – திரு ஆழி தொடக்கமான திவ்ய ஆயுதங்களோடு ப்ராக்ஜ்யோதிஷா புரத்திலே எழுந்து அருளி – தப்ப ஒண்ணாதபடி -அவனை வளைத்து கொன்று –சூழ்ச்சியாவது -விசாரம்-வளைத்தல் -போக்கறுத்தல்-எறிதல்-சேதித்தலாய்-திரு ஆழியாலே அறுத்துப் பொகட்டமையை சொல்லுகிறது-அவன் தான் பாணி க்ரஹனம் பண்ணுவதாக அங்கும் இங்கும் தெரிந்து -திரிந்து -பொறுக்கிக் கொண்டு வந்து திரட்டி வைத்த கன்னிகைகளான பதினாறாயிரத்து ஒரு நூறு ஸ்திரீகளையும் கைக் கொண்டு போந்து ஸ்ரீ மத் த்வாரகையில் பாணிக் க்ரஹனம் பண்ணி தனக்கு தேவிமார் ஆக்கி அருளின-
பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்ச புணர் முலை வாய் மடுக்க
வல்லானை மா மணி வண்ணனை மருவும் இடம் நாடுதிரேல்
பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு பவளம் எறி துவரை
எல்லாரும் சூழ சிங்காசனத்தே இருந்தானைக் கண்டார் உளர் – -4 -1-6 – நரக வத அநந்தரம் கொண்டு வந்து கைக் கொண்ட ஓர் ஒருவருமே-ஸ்ரம ஹரமாம் படி சமுத்ரமானது திரைக்கையாலே சேவிக்கிற ஸ்ரீ மத் த்வாரகையிலே தேவிமார் எல்லாரும் சூழச் சிங்காசனத்தே ரஸோத்தரானாய் இருந்தவனை
ஏகாசன பரிச்சேத்யனாய் இருந்து எல்லாரையும் ஏகாசனத்தே இருந்தாரைப் போலே உகப்பித்த ஆச்சர்யத்தோடே கண்டார் உளர் –
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
மது வாயில் கொண்டால் போலே மாதவன் தன் வாயமுதம்
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ யுண்டக்கால்
சிதையாரோ வுன்னோடு செல்வப் பெரும் சங்கே–7-9-எத்தனை பேரை வாய்க்காவல் இட்டால் தான் உனக்கு வயிறு வளர்க்கலாவது பதினாறாமாயிரம் பேர் இது அனுபவிப்பதாக அவசரம் பார்த்து இருக்க –
நூற்றுவரை அன்று மங்க நூற்ற நிகரில் முகில் வண்ணன் நேமியான் என்நெஞ்சம் கவர்ந்து எனை ஊழியான்-என்று துரியோதனாதிகள் மண் உண்ணும் படி மந்தரித்த கிருஷ்ணனுக்கு நெஞ்சு பறி கொடுத்தமை சொன்னதிலும் – துரி யோதனாதிகளை நிரசிக்கைக்காக அவன் எழுந்து அருளின போது அவர்கள் பிரிவாற்றாமையால் -கண்ணாஞ் சுழலை இட்டு –குரரி விலபசி த்வம் வீத நித்ரா நசேஷ ச்வபதி ஜகதி ராத்ராமீச்வர க்ரச்தபோதே வயமிவி சகி கச்சித் காட நிர்வின்ன சேதா நளின நயன ஹாசோ தார லீலேஷன ந–இத்யாதிகளாலே ப்ரலாபித்தால் போலே – நாரை அன்றில் தொடக்கமான வற்றுக்கு வெளுப்பு -விரஹ கூப்பாடு ,முதலானவை நித்ய ஸ்வாபம் என்று அறியாதே தமக்கு போலே பகவத் விரஹஜமான வைவர்ண்யாதிகளாகக் கருதி , அவற்றுக்காக தாம் நோவு பட்டு பிரலாபித்த வாயும் திரை உகளிலும்—தேர்பாகனார்க்கு இவள் சிந்தை துழாய் திசைக்கின்றதே –என்று
ஆஸ்ரிதருக்காக சாரத்தியம் பண்ணினவனை அனுபவிக்கைக்கு இவள் அந்த கரணம் கலங்கி அறிவு கெடுகிறது என்று ஆஸ்ரிதருக்காக சாரத்தியம் பண்ணினவனை அனுபவிக்கைக்கு இவள்
அந்த கரணம் கலங்கி அறிவு கெடுகிறது என்று தொடங்கி வண் துவராவதி மன்னனை ஏத்துமின் -ஏத்தலும் தொழுது ஆடுமே என்று ஸ்ரீமத் த்வாரகைக்கு நிர்வாகனான அவனை மங்களாசாசனம் பண்ண இவள் நோவு பரிஹ்ருதமாம் என்று தலைக் கட்டின –தீர்ப்பாரை யாம் இனியிலும் தோன்றும் என்றபடி-
(மங்க நூற்ற வாயும் தீர்ப்பாரென்னுமவற்றிலே தோன்றும்) ““நூற்றுவரை அன்று மங்க நூற்ற” (திருவா. 7 – 3 – 10) இத்யாதி, – துர்யோதநாதிகள் மண்ணுண்ணும்படி மந்த்ரித்த க்ருஷ்ணன் என் நெஞ்சை அபஹரித்தான் என்றும், ‘“குரரி விலபஸி த்வம் வீத நித்ரா ந ஸேஷே ஸ்வபதி ஜகதி ராத்ர்யா மீஸ்வரக் ரஸ்த போதே, ! வயமிவ ஸகி, கச்சித் காட நிர்விண்ண சேதா நளிந நயந ஹாஸோதார லீலே க்ஷணேந ” (பாக,.10) இத்யாதிகளால் ஸ்ரீமத் த்வாரகையில் பெண்கள் க்ருஷ்ண விஷயத்திலே பேசினாப் போலே *வாயுந்திரையுகளிலே நாரை அன்றில் தொடக்கமானவற்றுக்கு தாவள்யாதி ஸ்வபாவங்கள் நியதம் என்றறியாதே அவையும் தம்மைப் போல் நோவு படுகிறனவாகக் கொண்டு தாம் நோவு படுகையாலும், *தீர்ப்பாரை யாமினியிலே ‘*தேர்ப்பாகனார்க்கிவள் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே ” (திருவா. 4 – 6 – 1) என்று அவனுடைய ஸாரத்ய வேஷத்தில் அகப்பட்டு இவள் நெஞ்சு கலங்கினாள் என்று தொடங்கி, ““’வண்டுவராபதி மன்னனை ஏத்துமின்” (திருவா. 4 – 6 10) என்று ஸ்ரீமத் த்வாரகைக்கு நிர்வாஹகனானவனை மங்களா ஸாஸதம் பண்ணவே இவர் வ்யாதி பரிஹ்ருதமாம் என்று தலைக் கட்டுகையாலே இவர்க்கு உண்டானமை தோன்றும்.
நகரமும் நாடும் பிறவும் தேர்வேன் நாண் எனக்கு இல்லை என் தோழிமீர் காள்!
சிகர மணி நெடு மாட நீடு தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
மகர நெடுங்குழைக் காதன் மாயன் நூற்று வரை யன்று மங்க நூற்ற
நிகரில் முகில் வண்ணன் நேமியான் என் நெஞ்சங் கவர்ந்து எனை ஊழியானே–7-3-10—துரியோதனாதிகளை முதல் அற அழியச் செய்தவன் சிலரை அழிக்க நினைத்தாள் முதல் அற அழிக்கும் அவன் -ஆயுதம் எடுக்க ஓட்டோம் என்ன மந்திரத்தால் அழியச் செய்கை-
தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்!
ஓர்ப்பால் இவ் வொண்ணுதல் உற்ற நல் நோய் இது தேறினோம்;
போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த்
தேர்ப் பாகனார்க்கு இவள் சிந்தை துழாஅய்த் திசைக்கின்றதே.–4-6-1–இப்படிப் பட்ட ஆஸ்ரய பாரதந்தர்யத்திலே யாயிற்று இவள் மோஹித்தது-அவனுடைய சாராத்ய வேஷம் இவள் வடிவிலே நிழல் இட்டு தொடருகின்றது இல்லையோ-இவள் சிந்தை -கடல் கலங்கிற்று என்றால் -மந்திரத்தால் என்று அறிய வேண்டாவோ இவள் அந்தக்கரணம் கலங்கி மதி கெடுகிறது கிருஷ்ணனைப் பெறுகைக்காக
உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;
நும் இச்சை சொல்லி,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!
மன்னப் படுமறை வாணனை வண் துவராபதி
மன்னனை ஏத்துமின்! ஏத்துதலும்,தொழுது ஆடுமே.–4-6-10—இப்படி ஓலைப் புறத்தே கேட்டுப் போகாமே கண்டு அனுபவிக்கலாம் படி ஸ்ரீ மத் துவாரகைக்கு ராஜாவாகப் பிறந்தவனே-வாய் படைத்த பிரயோஜனம் பெறும்படி ஏத்துங்கோள்-அவனை ஆஸ்ரயிக்கக் கடவ நீங்களே ஷூ த்ர தேவதையின் காலிலே விழுவுதி கோள்-உங்கள் ஸ்வரூப லாபமே அன்று-அதாஸோ அபயங்கதி பவதி -என்கிறபடியே ஏத்தின சம நந்தரத்திலே ப்ரபுத்தையாய் வியாபார க்ஷமையுமாம்-இவள் உணர்ந்தாள் செய்வது தொழுதல் விக்ருதை யாதல் போலே காணும்-நீர் ஏறுண்டு மோஹித்தார்க்கு நீரே பரிஹாரமாம் போலே நோவுக்கு அடியானை கிருஷ்ணனுடைய குண கீர்த்தனமே பரிஹாரம் என்று கருத்து –
—
இப்படி பிரதான மகிஷி களோடும் மற்றும் பகவத் பரிக்ரஹம் உடையாரோடும் இவருக்கு சாம்யம் உண்டே ஆகிலும் – அல்லாதார் எல்லாம் இவர் ஒருவருக்கு ஒப்பாம் இத்தனை ஆகையாலே சர்வதா சாம்யம் ஜனக குல சுந்தரியான பிராட்டி யோடு என்கிறார் அடுத்து —ஆகக் கீழ், ப்ரதாந மஹிஷிகளான மூவரோடும் மற்றும் பகவத் பரிக்ரஹ முடையாரோடும் ஆழ்வாருக்கு ஸாம்யமுண்டென்று சொல்லிற்றாய்த்து. இவர்களெல்லாரும் இவர்க்கு ஒரு புடைக்கு ஒப்பாய் ஸர்வதா ஸாம்யமுள்ளது ஜநக குல ஸுந்தரியான பெரிய பிராட்டியாரோடே என்கிறார்-
இரான் எனில் நசவாகக் குழைத்தவன் பின் தொடர விருந்த வன் சிறையிலும் விதி தன் புணைவன் என்று ஜீவிதாதிகளால் குறைவின்றி மாயும் வகை விஷ சஸ்த்ரங்கள் தேடி வில் வலவா ஹா என்று
இரக்க மொழாக் கொடுமைகள் சங்கித்து என்னையும் ஜீவந்தீம் என்று ஆள்விட்டுச் சுடரை அடைந்து
அகலகில்லா முற்றுவமை பெருமகளோடே.–சூரணை -125-–
(1–இரான் எனில் நசவாகக் குழைத்தவன் பின் தொடர விருந்த வன் சிறையிலும்–சிறை வாசம் –
அங்கு இவளே சிறையில் -இங்கு அவன் வைக்க
2–விதி தன் புணைவன் என்று–சிறை வாசத்திலும் பர உபதேசம்-ராவணன் திருந்தவில்லை – இங்கு ஊரும் நாடும் தன்னைப் போலே ஆக்கி
3–ஜீவிதாதிகளால் குறைவின்றி-அத் தலைக்கு உருப்பில்லாத ஆத்மாத்மீயங்களை உபேஷிக்கையாலும்–மால் விரும்பாத அங்கு -திருமால் விரும்பாத இவர்
4 -மாயும் வகை விஷ சஸ்த்ரங்கள் தேடி –முடியும் வகை தேடுகையாலும்
5–வில் வலவா ஹா என்று-அவன் வீரப்பாட்டைச் சொல்லிக் கூப்பிடுகையாலும்-
6 -இரக்க மொழாக் கொடுமைகள் சங்கித்து -என்கிற படி நைர்குண்ய சங்கை பண்ணுகையாலும்
7–என்னையும் ஜீவந்தீம் என்று ஆள்விட்டு -ஆற்றாமை தோற்றதூது விடுகையாலும்-
8 -சுடரை அடைந்து-அநாதியான பிரகாரதயா சேஷத்வத்தாலே – அவனோடு தாம் நித்ய சம்யுக்தராய் பேசுகையாலும்–
பிரபாவை அடைந்து என்று இருந்தால் பிராட்டி ஆழ்வார் இருவர் வார்த்தைகளும் இருக்கும் –
இங்கு முற்று உவமை என்பதால் ஒன்றையும் மட்டும் தானே சொல்ல வேண்டும்
அகலகில்லா முற்றுவமை பெருமகளோடே.–அகலகில்லேன் சீதா வாக்கியம் தானே –
இப்படிகளால் பிரிவில் தரியாமை இறே இச் சூர்ணையில் ப்ராசுர்யேன பிரதி பாதிக்கப் பட்டது -)
இரான் எனில் நசவாகக் குழைத்தவன் பின் தொடர விருந்த வன் சிறையிலும்-அதாவது-
இரான் எனில் நசவாக-அதாவது–நச சீதா த்வயா ஹீநா நஸா அஹம் அபி ராகவா முஹூர்த்தம் அபி ஜீவாவோ ஜலான் மத்ஸ்யா விவோத் த்ருத்வ –அயோத்யா -53-31– -இத்யாதி ஸ்லோகத்தின் படி
ஜலாதுத்ருமான மத்ஸ்யம் போலே விஸ்லேஷத்தில் சத்தா ஹானி பிறக்கும்படி –-மனச்வீ தத்கதஸ் தத்ய–பால –77-25- -என்று-ஜாதி குணங்கள் த்ர்வ்யத்துக்கு பிரகாரமாய் பிரிக்க ஒண்ணாதபடி இருக்குமா போலே-பிரிக்க ஒண்ணாதபடி ஒரு நீராக கலந்த சக்கரவர்த்தி திருமகன் –-உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடருத்து –நாச்சியார் -11-7–-லங்கத்வாரத் அளவும் பின் தொடர்ந்து வரும் படியாக –தனிச் சிறையில் விளப்புற்ற–திருவாய் -4-8-5- -என்கிறபடி-ஒருத்தி சிறை இருந்து ரஷிக்கும் படியே -என்று லோஹம் அடையக் கொண்டாடும் படி தேவ ஸ்திரிகள் சிறையை விடுவிக்கைக்காக பிராட்டி தனிப் பட்டு சிறை இருந்தாப் போலே –இரான் எனில் நச ஆக-அதாவது-மராமரம் எய்த மாயன் என்னுள் இரான் எனில் -பின்னை யான் ஒட்டுவேனோ –திருவாய் -1-7-6- என்று சக்கரவர்த்தி திருமகன் என் பக்கல் இரேன் என்று அகலுமாகில் பின்னை நான் தொங்குவேனோ என்று விரஹத்தில் சத்தா ஹானி பிறக்கும் படியாக –
இரானெனில் ந ச ஆக என்று தொடங்கி). ‘“மராமர மெய்த மாயவன் என்னுளிரானெனில் பின்னை யானொட்டுவேனோ ”‘ (திருவா. 1- 7- 6) என்றும், ““ந ச ஸீதா த்வயா ஹீநா ந சாஹமபி ராகவ ! மூஹூரர்த்தமபி ஜீவாவோ ஜலாந் மத்ஸ்யா விவோத் த்ருதெள’* (ரா. ௮.) என்று சக்ரவர்த்தித் திருமகனைப் பிரியில் ஜலாதுத த்ருதமான மத்ஸ்யம் போலே முடியும்படியான பிராட்டியைப் போலே,இவரும் அவனைப் பிரியில் தாம் உளராகாதபடி-
உண்ணாது உறங்காது ஒலி கடலை யூடறுத்து
பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்றபேதெல்லாம்
திண்ணார் மதிள் சூழ் திருவரங்கச் செல்வனார்
எண்ணாதே நம்முடைய நன்மைகளே எண்ணுவரே–11-7–ந மாம்சம் ராகவோ புங்க்தே ந சாபி மது சேவதே-என்கிறபடியே-பார்த்து பரிந்தூட்டுமவள் போனால் -இனி யார் அவரைப் பரிந்தூட்ட –
மா மலர் மங்கை மணம் உண்டு இருந்தான் இறே-அவள் போனால் இவனுக்கு ஊண் இல்லை இறே –உறங்காது – அநித்ரஸ் சததம் ராம -என்கிறபடியே – கண் உறக்கம் அற்று ஊண் உறக்கம் அற்று
ஸூக்ரீவம் சரணம் கத –என்று கண்ட காபேயர் கால்களிலே விழுந்து-ஒலி கடலை யூடறுத்து-ஓதம் கிளர்ந்த கடலை ஊடறுத்து-கூறு அறுத்து அடைத்து – சமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்தும் அர்ஹதி -யுத்த -19-30-என்று ராஷசனுக்கு சிஷ்யராய்ப் புக்கு -அவன் சொல்லக் கடலை சரணம் புக்கு –
தளிர் நிறத்தால் குறையில்லாத் தனிச்சிறையில் விளப்புற்ற
கிளி மொழியாள் காரணமாக் கிளர் அரக்கன் நகர் எரித்த
களி மலர்த் துழாய் அலங்கல் கமழ் முடியன் கடல் ஞாலத்து
அளி மிக்கான் கவராத அறிவினால் குறையிலமே.–4-8-5—பிரபையையும் ப்ரபாவனையும் பிரித்தால் போலே பெருமாளை பிரிந்து ராக்ஷஸே மத்யத்திலே நிருத்தையாய் இருந்த படி-விளப்புற்ற–கிருசா மனஸ நே நச-என்று திருவடியால் பெருமாளுக்கு சொல்லப் பட்டவள்-தேவ ஸ்த்ரீகள் காலில் விலங்கு கழற்றுகைக்கு தான் சிறை இருந்தாள் என்று லோகத்தில் ப்ரஸித்தியானவள் என்றுமாம் –
கிளி மொழியாள் காரணமாக்–மதுரா மதுரா லாபா -என்று அவள் பேச்சை அவன் வார்த்தை வழியே நினைத்து அவள் நிமித்தமாக-கிளர் அரக்கன் தாயையும் தமப்பனையும் சேர இருக்க ஒட்டாதே பிரித்த மிகையை யுடையவன்
பிரான் பெரு நிலம் கீண்டவன் பின்னும் விராய் மலர்த்துழாய் வேய்ந்த முடியன்
மராமரம் எய்த மாயவன் என்னுள் இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ –1-7-6—ரக்ஷணத்திலே அதிசங்கை பண்ணினவனுக்கு மழு வேந்திக் கொடுத்தும் அவன் காரியத்தை முடியச் செய்யும் வியாமோஹ அதிசயத்தை உடையவன்–இப்படி ஆஸ்ரிதர் தன் பக்கலிலே சேருகைக்கு க்ருஷி பண்ணுமவன் என் பக்கல் இரான் என்னில்-எனில் -என்கையாலே -விட சம்பாவனை இல்லை என்கை
பின்னை யான் ஒட்டுவேனோ பின்னை நான் இசைவேனோ பின்னை நான் தொங்குவனோ -என்னும் ஆச்சான் –
குழைத்தவன்-அதாவது-இலங்கை செற்றாய்—- உன்னை என்னுள்ளே குழைத்த எம் மைந்தா –திருவாய் -2-6-9-என்கிறபடி , ஏக தத்வம் என்னலாம் படி சம்ஸ்லேஷித்தவன்–பின் தொடர இருந்த வன் சிறையிலும்--அதாவது-பிரிவில் தம் ஆற்றாமை குளப்படியாம் படி கடல் போன்ற ஆற்றாமையோடே விண்ணுலகம் தர விரைந்து – தாம் இருந்த இடத்து ஏற வரும்படி –-வன் சிறையில் அவன் வைக்கில் -திருவாய் -1-4-1-என்கிறபடியே – சம்சாரிகள் சிறையை விடுகிக்கைக்காக அவன் சம்சாரத்தில் இருக்க இருந்த வன் சிறையிலும் –
*இலங்கை செற்றாய் உன்னை என்னுள்ளே குழைத்த வெம் மைந்தா”” (திருவா. 2 – 6 – 9) என்று இவரோடு ஏக தத்த்வ மென்னலாம்படி ஸம்ஸ்லேஷித்த சக்ரவர்த்தித் திருமகன் லங்கா த்வாரத்தளவும் அவளைத் தேடிப் பின் தொடர்ந்தாப் போலே *““எதிர் சூழல் புக்கு’ (திருவா. 2 – 7 – 6) என்று இவர் பிறந்த ஜந்மங்கள் தோறும் தானும் பின் தொடரும்படி அவள் ராவண பவநத்திலே சிறை யிருந்தாப் போலே இவரும் “வன்சிறையில் அவன் வைக்கில்’” (திருவா. 1 – 4 – 1) என்று ஸம்ஸாரத்திலே சிறையிருந்த விடத்தில்-
எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் இலங்கை செற்றாய் மராமரம்
பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா
கொந்தார் தண் அம் துழாயினாய் அமுதே உன்னை என்னுள்ளே குழைந்த வெம்
மைந்தா வானேறே இனி எங்குப் போகின்றதே –2-6-9—சம்பந்த ஞான விரோதி வர்க்கம் இலங்கை பட்டது பட்டது-மஹா ராஜரை இசைவித்தால் போலே யாயிற்று இவரை இசைவித்தது –-கலக்கிற இடத்தில் -ஏக தத்வம் என்னலாம் படி யாயிற்று கலந்தது-என்னோடே கலக்கப் பெற்ற இத்தாலே நவீக்ருத யுவன ஸ்வ பாவன் ஆனவனே-அஸ் ப்ருஷ்ட சம்சார கந்தரை அனுபவிப்பித்தால் போலே யாயிற்று இவரை அனுபவிப்பித்தது-நித்ய ஸூரிகளை விடில் அன்றோ என்னை விடலாவது -போகிலும் கூடப் போக வேண்டும்படி யன்றோ கலந்தது –
மது சூதனை யன்றி மற்றிலேன் எத்தாலும் கருமமின்றி
துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே –2-7-6—நான் இழவுக்கு யத்னம் பண்ணிப் போந்த காலம் எல்லாம் என்னைப் பெறுகைக்கு அவன் கிருஷி பண்ணிப் போருகையாலே பெற்றேன்
எதிரான சூழல் -என்னை அகப்படுத்திக் கொள்ளுகைக்கு ஈடான திரு வவதாரங்கள்-எனக்கும் பிறருக்குமாக அன்றிக்கே எனக்கே அருள்கள் பண்ணும்படி-சர்வேஸ்வரனாய் வைத்து ஸ்ரீ வாமனனாய் சகல லோகங்களையும் திருவடியின் கீழே இட்டுக் கொண்டவனை – அது பரதசை என்னும்படி எனக்கு என்னவே விதி சூழ்ந்தது-தம்மை விஷயீ கரித்து அல்லது அவனை இருக்க ஒட்டாமையாலே அவனுடைய க்ருபா குணத்தை விதி என்கிறது -ச தம் நிபதிதம் –
அஞ்சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின்
அஞ்சிறைய சேவலுமாய் யாவா என்று எனக்கு அருளி
வெஞ்சிறைப்புள் உயர்த்தார்க்கு என் விடுதூதாய்ச் சென்றக்கால்
வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ –1-4-1–பிரணயிநி பாடு நின்றும் வந்தவர்களை சிறையிடுவான் ஒரு மூர்க்கனும் உண்டோ-இனி சிறை யாகிறது -இவர்கள் வார்த்தையை அநாதரிக்கை-இவர்களைக் கண்ட போதே துணுக் என்று –மதுரா மதுராலாபா கிமாஹ மமபாமி நீ -என்னாமை இறே-நைவ தம்சான் நமசகான் -என்று ஆதரியாது ஒழியுமோ-வைக்கில்–
அநாதரிக்க பிரசங்கம் இல்லை -சிரஸா வஹிக்கும் என்று கருத்து –அங்கனே யாகில் அது உங்கள் பேறு அன்றோ – பரார்த்தமாகச் சிறை இருக்கை கிடப்பது ஒன்றோ -என்று இருக்கிறாள்-தேவ ஸ்த்ரீகளுக்காக தான் சிறை இருந்தவள் இறே –
விதிதன் புணைவன் என்று-அதாவது —அச் சிறை இருப்பிலும் அவள் -விமுகனான ராவணனுக்கு –
விதிதஸ் சஹ தர்மஞ்ச்ஞஸ் சரணாகத வத்சலா தேன மைத்ரீ பவது தே யது ஜீவிதுமிச்சசி ஸூந்தர -21–20–என்று நீ பிராணனோடு இருக்க வேண்டி இருந்தாய் ஆகில் -சரணாகத தர்மஜ்ஞருமாய் -சரணாகத வத்சலருமாய் – பிரசித்தராய் இருக்கும் பெருமாளோடே உறவு பண் என்று ஹிதோ உபதேசம் பண்ணினாப் போலே —புணைவன் என்று-அதாவது – இவரும் விமுகரான சம்சாரிகளுக்கு –புணைவன் பிறவி கடல் நீந்துவார்க்கே –திருவாய் -2-8-1–என்று சம்சார சமுத்திர திதீஷர்களுக்கு தன் நிஸ்தரண உபாயம் அவன் என்று ஹித உபதேசம் பண்ணுகையாலும்-
ப்ரதிகூலனான ராவணனுக்கு “‘விதிதஸ்ஸ ஹி தர்மஜ்ஞஸ் சரணாகத வத்ஸல:। தேந மைத்ரீ பவது தே யதி ஜீவிதுமிச்சஸி”’ (ரா. ஸு. 21 – 20) என்று ஹிதம் சொன்னாப் போலே இவரும் ப்ரதிகூலரான ஸம்ஸாரிகளுக்கு புணைவன் பிறவிக் கடல் நீந்துவார்க்கே’‘ (திருவா. 2 – 8 – 1) என்று ஹிதமருளிச் செய்கையாலும்.-
அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்
புணர்வது இருவரவர் முதலும் தானே
இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே –2-8-1—சம்சாரம் ஆகிறது ஒரு கடல் -அது நம்மால் கடக்க அரிது -ஒரு சர்வ சக்தியைப் பற்றி கடக்க வேணும் -என்று நினைப்பார்க்கு ப்ரதி பூவாய்த் தலைக் கட்டிக் கொடுக்கும் –சர்வ பர நிர்வாஹகன் இறே– ப்ரதி பூ-விஷ்ணு போதம் என்கையாலே தெப்பம் என்னவுமாம்
ஜீவிதாதிகளால் குறைவின்றி –அதாவது-அவள்-நஹிமே ஜீவிதே நார்த்தோ நைவார்த்தைர் நச பூஷணை வசந்த்யா ராஷசீ மத்யே விநா ராமம் மஹாரதம் –ஸூ ந்தர –26-5- என்று பெருமாளைப் பிரிந்து ராஷசிகள் நடுவில் இருக்கிற எனக்கு பிராணாதிகளால் என்ன பிரயோஜனம் என்று
தத் விநியோகத்துக்கு புறம்பானவற்றை உபேஷித்தாப் போலே இவரும் –-மாறாளன் கவராத மணிமாமை குறைவிலம்-4-8-1–என்று தொடங்கி அத் தலைக்கு உருப்பில்லாத ஆத்மாத்மீயங்களை உபேஷிக்கையாலும்-
ஜீவிதாதிகளால் குறைவின்றி)“ந ஹி மே ஜீவிதே நார்த்தோ நை வார்த்தைர் ந ச பூஷணை??’ (ரா. ஸு.)என்று மஹா ரதரான சக்ரவர்த்தித் திருமகனை யொழிய ராக்ஷஸிகள் நடுவே இருக்கிற எனக்கு என் ஆத்மாத்மீயங்களால் என்ன ப்ரயோஜநம் உண்டென்று பிராட்டி அவற்றை உபேக்ஷித்தாப் போலே ”மாறாளன் கவராத மணிமாமை குறைவிலமே”” (திருவா. 4 – 8 – 1) என்று தொடங்கி, ”உயிரினால் குறைவிலமே””, (திருவா. 4 – 8- 10), “உடம்பினால் குறைவிலமே”‘ (திருவா, 4 – 8 – 9 9) என்று இவரும், அவனுக்குறுப்பல்லாத நானும் என்னுடைமையும் வேண்டா என்று ஆத்மாத்மீயங்களை உபேக்ஷிக்கையாலும்.-
ஏறு ஆளும் இறையோனும், திசைமுகனும், திருமகளும்,
கூறு ஆளும் தனி உடம்பன், குலம் குலமா அசுரர்களை
நீறு ஆகும் படியாக நிருமித்து, படை தொட்ட
மாறாளன் கவராத மணிமாமை குறைஇலமே.–4-8-1--அவனுகுக்காக கண்ட என்னுடைய ஆத்மாத்மீயங்கள் அவனுக்கு ஆதரணீயம் அன்றாகில் எனக்கும் அவற்றால் கார்யம் இல்லை என்று
அவற்றால் தாம் நசை அற்ற படியை அந்யாபதேசத்தால் அருளிச் செய்கிறார்-ஆத்மாத்மீயங்களை அவன் விரும்பின வழியாலே விரும்ப வாயிற்று பிராப்தம் –அல்லது தான் உகந்த வழியாலே விரும்புமது தேஹாத்ம அபிமானத்தோடே ஒக்கும் அத்தனை –முந்துற ஆத்மாவை வேண்டேன் என்னாதே-உடைமையை வேண்டேன் -என்றது -இவள் தன்னிலும் இவள் உடைமையை அவன் விரும்புகையாலே அவன் விரும்புன அடைவே உபேக்ஷிக்கிறாள்-என்னுடைமையை வேண்டேன் என்று திரளச் சொல்லாதே வ்யக்தி தோறும் வேண்டேன் என்கிறது என் என்னில் – அவன் வ்யக்தி தோறும் விரும்புகையாலே –நதேஹம் ந பிராணன் -நஹிமே ஜீவிதே நார்த்த-ந தேவ லோகா க்ரமணம்–
மாயும் வகை விஷ சஸ்த்ரங்களை தேடி-அதாவது – , அவள் ஆற்றாமையின் அதிசயத்தாலே –
விஷஸ்ய தாதா நஹி மேஸ்தி கச்சித் சஸ்த்ரஸ்ய வா வேஸ்மநி ராஷசஸ்ய -ஸூந்தர –28-16-என்று
உயிர்க் கொலையாக்கி வைத்தவனுடைய க்ருஹத்தில் நற் கொலை ஆக்குவது இத்தனை விஷம் தருவார் இல்லையோ ?-விஷம் போலே சிறிது போது நின்று கொல்லுகை அன்றிக்கே , அப்போதே முடிப்பதொரு சஸ்த்ரம் தருவார் இல்லையோ ?-என்று முடியும் வகை தேடினாப் போலே இவரும் –மாயும் வகை அறியேன்–திருவாய் -5-4-3-என்று முடியும் வகை தேடுகையாலும் —
(மாயும் வகை விஷ ஸஸ்த்ரங்கள் தேடி) “மாயும் வகை யறியேன் வல் வினையேன்”? (திருவா-4 – 8 – 1) என்றும், ‘“விஷஸ்ய ததா ந ஹி மேஸ்தி கஸ்சித் ஈஸ்த்ரஸ்ய வா வேஸ்மநி ராக்ஷஸஸ்ய ”” (ரா.ஸு.) என்று உயிர்க் கொலையாக்கி வைத்த ராவண க்ருஹத்திலே நற் கொலையாக்குவ தித்தனை விஷம் தருவாரில்லையோ? விஷம் போலே நின்று கொல்லுகை யன்றிக்கே அப்போதே முடிப்பதொரு ஸஸ்த்ரம் தருவாரில்லையோ? என்று பிராட்டி முடியும் வகை தேடினாப் போலே இவரும் மாயும் வகை தேடுகையாலும்–
நீயும் பாங்கல்லை காண் நெஞ்சமே! நீளிரவும்
ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்
காயும் கடும் சிலை என் காகுத்தன் வாரானால்
மாயும் வகை அறியேன் வல் வினையேன் பெண் பிறந்தே.–5-4-3—அபிமதர் வாரா விட்டால் முடிகை இறே பிரியம் அதுக்கு விரகு அறிகிறிலன் –காலோ ஹி துரதிக்ரம -என்றாள் இறே பிராட்டி-வல் வினையேன் –
அவன் வாராமைக்கு அடியான பாபத்தை பண்ணினேன் -முடியவும் அரிதான பாபத்தை பண்ணினேன் -பாபம் மரண ஹேது வன்றிக்கே ஜீவிக்கைக்கு ஹேது வாய் இருக்குமது யாகாதே -ஜீவிக்கை தேட்டமான போது அரிதாம் -முடிகையும் தேட்டமான போது அரிதாம் -அநிஷ்டாவஹம் பாபம் இத்தனை இறே-பெண் பிறந்தே –முடிகையும் ஜீவிக்கையும் ஸ்வ அதீனம் இல்லாத ஜன்மத்தே பிறந்தேன் -எல்லா வளவிலும் அவனை நோக்க வேண்டும் ஜென்மம் இறே — முடியும் போது ஆண் பிள்ளையுமாய் ஸ்வ தந்திரனுமான சக்ரவர்த்தி போல்வார் வேணும் ஆகாதே –
ஹா வில் வலவா என்று –அதாவது அவள் அதிமாத்ர துக்கிதையாய் ரஷகரான பெருமாள் உடைய சௌர்யாதிகளை நினைத்து –ஹா ராமா–ஸூந்தர -28-8- -என்று கூப்பிட்டாப் போலே -இவரும் –
புணரா நின்ற மரம் எழ அன்று எய்த ஒரு வில் வல வா வோ-6-10-5- -என்று அவன் வீரப்பாட்டைச் சொல்லிக் கூப்பிடுகையாலும்-
(வில் வலவா ஹா என்று) ”புணரா நின்ற மரமேழன்றெய்த ஒரு வில் வலவாவவோ”? (திருவா. 6 – 10 – 5) என்று – “ஹா ராம ஹா லக்ஷ்மண ஹா ஸுமித்ரே ஹா ராம மாதஸ் ஸஹ மே ஜநந்யா । ஹா ராம ஸத்ய வ்ரத தீர்க்க, பாஹோ ஹா பூர்ண சந்த்ர ப்ரதிமாந வக்தர”’ (ரா.ஸு.), “ஹா ஜிவ லோகஸ்ய ஹித ப்ரியஸ்ய வத்யம் ந மாம் வேத்ஸி ஹி ராக்ஷஸாநாம்”” (ரா. ஸு.) என்று பிராட்டி பெருமாளுடைய சவ்ர்யாதிகளைச் சொல்லிக் கூப்பிட்டாப் போலே இவரும் கூப்பிடுகையாலும்.–
புணரா நின்ற மரமேழ் அன் றெய்த ஒருவில் வலவாவோ!
புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ!
திணரார் மேக மெனக்களிறு சேரும் திருவேங்கடத்தானே!
திணரார் சார்ங்கத் துனபாதம் சேர்வ தடியேன் எந்நாளே.–6-10-5—புணர்ந்து நின்ற -அம்புக்கு நேரோட ஒண்ணாத படி திரண்டு நின்ற-மரமேழ் அன் றெய்த -ரக்ஷணத்தில் சங்கை பண்ணின வன்று ஏழையும் ஓர் அம்பால் அழித்த-அதி சங்கை பண்ண மழு வேந்திக் கொடுத்து ரஷித்தவன் கிடீர் ஆசைப்பட்ட என்னை அநாதரிக்கிறான் -அதி சங்கையைப் போக்கி பணி கொண்டவன் கிடீர் இரந்த என்னை பணி கொள்ளாது ஒழிகிறான்- ஒரு வில் வலவாவோ!–ஏக வீரனே -ஓ என்று விஷாத அதிசய ஸூ சகம் –
இரக்கம் எழா கொடுமைகள் சங்கித்து – அதாவது-அவள் தன் ஆற்றாமைக்கு உதவ வந்து முகம் காட்டாமையாலே ,-க்யாத ப்ராஞ்ச க்ருதஞ்சச் சசா னுக்ரோசச ராகவ ஸத் வ்ருத்தோ நிரநுக்ரோசாஸ்
சங்கே மத் பாக்ய ஸங்க்ஷ்யாத் ஸூந்தர –26-13- -என்று பெருமாளை நிர்க் குணராக சங்கித்தாப் போலே -இவரும்-இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன் அரக்கன் இலங்கை செற்றீர்க்கே –திருவாய் -2-4-3–
வாழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனே ! இலங்கை குழா நெடும் மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே –திருவிருத்தம் –36-என்று இத் தசையில் கிருபை பண்ணாமல் இருக்கிற கொடுமையாலே –அறிவொன்றும் சங்கிப்பன்–திருவாய் -8-1-7–என்கிற படி நைர்குண்ய சங்கை பண்ணுகையாலும் ..
இரக்கமெழாக் கொடுமைகள் ஸங்கித்து) ”க்,யாத: ப்ராஜ்ஞ க்ருதஜ்ஞஸ்ச ஸாநுக்ரோஸஸ் ச ராகவ? | ஸத் வ்ருத்தோ நிரதுக்ரோ ஸஸ்ஸங்கே மத் பாக்ய ஸங்ஷயாத்” (ரா.ஸு.]என்று பெருமாளை நிர்க்ருணாராக ஸங்கியா நின்றேன், என்னுடைய பாக்ய ஹாநியாலே என்று பிராட்டி அப்படி ஸங்கித்தாப்போலே, இவரும் ”இரக்கமெழீரிதற்கென்செய்கே ன்” (திருவா. 2 ௨4 – 3) என்றும், ‘“இலங்கைக் குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே?”? (திருவிரு. 36) என்றும், ”அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன் ‘‘ (திருவா. 9 – 1 – 4) என்றும் சொல்லுகிறபடியே அவரை நிர்க்ருணராக ஸங்கிக்கையாலும்,–
இரக்க மனத்தோடு எரியணை
அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள்
இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன்
அரக்கன் இலங்கை செற்றீருக்கே –2-4-3––இரக்கம் உடையீர் ஆகிறிலீர் – பிரணயித்தவம் குடி போனால் வழி போக்கருக்கு உண்டான அம்சமும் போக வேணுமோ -இப்போது உதவாமையாலே இரக்கம் இல்லை என்று இருக்கிறாள் –இதற்கு என் செய்கேன்- இவளை உருக்காது ஒழிய பண்ணவோ-உம்மை இரங்கப் பண்ணவோ-அரக்கன் இலங்கை செற்றீருக்கே-உமக்கு இரக்கம் இன்றிக்கே ஒழிந்தால் இவள் இரங்குவதை ஒன்றைச் செய்து வைக்க வேணுமோ-ஒரு பிரணியி நிக்கு உதவினவன் நமக்கு உதவானோ என்று ஈடுபட நின்றாள்-புழு குறித்தது எழுத்து ஆனால் போலே ஓன்று வாய்த்தத்தைக் கொண்டு அந்யார்த்தம் என்று இராதே நோவு படுகிறாள் – அரக்கன் இலங்கை செற்றீருக்கே-இவள் இரக்க மனத்தோடு -எரியணை-அரக்கும் மெழுகும் ஒக்கும்-நீர் இரக்கம் எழீர் -நான் இதற்கு என் செய்கேன் –
துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தாரது பெயரா
எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும் ஈங்கு இவளோ
வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ இலங்கைக்
குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே –36––ஒருத்திக்காக கடலை யடைத்து- இலங்கையை ராமன் என்றும் லஷ்மணன் என்றும் எழுத்து வெட்டின அம்புகளை புக விட்டு குட்டிச் சுவரும் மட்டைத் தெங்குமாக்கி மூலையடி போகப் பண்ணின இந்த உபகாரகனுடைய இந்த நீர்மை எல்லாம் எங்கே குடி போயிற்றோ -என்று எம்பார் அருளிச் செய்தார் –இதுவும் அழகியது-ஒன்றாய் உண்டாய் இருக்கலாகாது என்று அஸூயையாலே அழித்தான் அத்தனை காண் –ஒருத்திக்காக உதவினன் அல்லன் காண் -என்பர் திருமலை நம்பி –
இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதோ நீ யின்னே யானால்
சிறந்த நின் தன்மை யது விது வுது வென்று அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்
கறந்த பால் நெய்யே ! நெய்யின் சுவையே ! கடலினுளமுதமே !அமுதிற்
பிறந்த இன் சுவையே ! சுவையது பயனே பின்னை தோள் மணந்த பேராயா !–8-1-7–சரீரகதமான துக்கம் ஆத்மாவுக்கு ஆனால் போலே எல்லாருடைய துக்கங்களும் பிரகாரியான உன்னது என்றும் -சம்பந்த ஞானம் ஒன்றுமே யாயிற்று எனக்கு உஜ்ஜீவன ஹேதுவாக நினைத்து இருப்பது -அது ஒன்றிலும் அதி சங்கை பண்ணா நின்றேன் –
என்னையும் ஜீவந்தீம் என்று ஆள் விட்டு –அதாவது – அவள்– ஜீவந்தீம் மாம் எதா ராமஸ் சம்பாவயதி கீர்த்திமான் தத்த்வயா ஹனுமன் வாச்யோ வாசா தர்ம மவாப்நுஹி—ஸூந்தர -39-10-என்று
சத்தையோடு கிடக்கிற என்னை இச்சத்தை போவதற்கு முன்னே யாதொருபடி பெருமாள் வந்து
நோக்கிக் கொள்வார் அப்படி அவருக்கு விண்ணப்பம் செய் என்று தூது விட்டாப் போலே -இவரும் –
ஏறு சேவகனாருக்கு என்னையும் உளள் என்மின்களே -6-1-10-என்று என் சத்தை கிடந்தமையை அவனுக்கு அறிவியுங்கோள் -என்று ஆற்றாமை தோற்ற தூது விடுகையாலும்-
(என்னையும் ஜீவந்திமென்று ஆள்விட்டு) ”ஜீவந்திம் மாம் யதா ராமஸ் ஸம்பா வயதி கீரத்திமாந் | தத்த்வயா ஹநுமந் வாச்யோ வாசா தர்மமவாப்றுஹி’” (ரா.ஸு.) என்று தம்முடைய ரக்ஷ்ய வர்க்க,த்திலே நானுமொருத்தி உளேனாகப் பெருமாளுக்கு விண்ணப்பம் செய் என்று பிராட்டி ஆள்விட்டாப் போலே, இவரும் ‘“மாறில் போரரக்கன் மதிள் நீறெழச் செற்றுகந்த ஏறு சேவகனார்க் கென்னை யுமுளளென்மின்கள்’” (திருவா. 6 1 – 10) என்று ஆர்த்த ரக்ஷணத்திலே தீஷித்தவர்க்கு ஆர்த்தரிலே நானும் ஒரு ஆர்த்தை யுளேனாகச் சொல்லுங்கோள் என்று பிராட்டியைப் போலே சதுஷ்பாத்தா யிருப்ப தொன்றைத் தூதுவிடுகை யன்றிக்கே ஷட் பத,ங்களாய், பக்ஷ பாதத்தை உடையனவாய், ஸாகா ஸஞ்சாரிகளாய், மதுகர வ்ருத்திகளுமாய், அத ஏவ ஸாரக்ராஹிகளாயிருப்பார் பலரையும் தூது விடுகையாலும்.–
வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்!
தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திருவண்வண்டூர்
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே.–6-1-10-–எதிர் இல்லாத போரை ராவணனையும் அவன் அரணாக இட்ட மதிலையும் துகளாகச் செற்று –-ருஷிகள் குடியிறுப்பு பெற்றோம் -பிராட்டி உடன் கூடப் பெற்றோம் இலங்கை விபீஷண விஷயமாகப் பெற்றோம் என்று உகந்த-எங்கும் மேற்பட்ட ஆண் பிள்ளை தனத்தை யுடையவர்க்கு -ரஞ்ச நீ யஸ்ய விக்ரமை -என்று எதிரிகள் மேலிட்ட வீரம் –ரதசர்யா ஸூ சம்மத -என்று வீரர்கள் கொண்டாடின வீரம் – உம்முடைய ரஷ்ய வர்க்கத்தில் இன்னும் ஒருத்தி நோவுபடா நின்றாள் என்னுங்கோள் –
சுடரை அடைந்து – அதாவது – அவள்- அநந்ய ராகவேணாஹம் பாஸ்கரேண ப்ராயாத –ஸூந்தர -21-15-என்று ஆதித்யனோடு பிரபை போலே நான் பெருமாளோடு அனந்யையாய் இருப்பன் என்றார் போலே –இவரும் – அரக்கியை மூக்கு ஈர்ந்தாயை –சுடரை–அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே -திருவாய் -2-3-6–என்று அநாதியான பிரகாரதயா சேஷத்வத்தாலே – அவனோடு தாம் நித்ய சம்யுக்தராய் பேசுகையாலும்–
(சுடரை யடைந்து) “ அநந்யா ராகவேணாம் பாஸ்கரேணே ப்ரபாயதா” (ரா.ஸ. 21 – 15) என்று பிராட்டி தன்னை அநந்யையாகப் பேசினாப் போலே, இவரும் “அரக்கியை மூக்கீர்ந்தாயை சுடரை – அடியே னடைந்தேன் முதல் முன்னமே”’ (திருவா. 2 – 3 -6) என்று தம்மை அநந்யார்ஹமாகப் பேசுகையாலும்-
சேர்ந்தார் தீ வினைகட்கு அரு நஞ்சைத் திண் மதியைத்
தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாதவருயிரை
சோர்ந்தே போகல் கொடாச் சுடரை அரக்கியை மூக்கு
ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதன் முன்னமே –2-3-6—சூர்ப்பணகையை அழித்தால் போலே அழித்துக் கொடுக்க வல்ல உன்னை–உனக்கு சேஷபூதமான ஸ்வரூபத்தை யுடைய நான் -முதலுக்கு முன்னே அடைந்தேன் அல்லவோ –மயர்வற மதிநலம் அருளுவதற்கு முன்னே பிராப்தி உண்டு அல்லவோ என்று கருத்து –
அகலகில்லா-அதாவது – அவள்-அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா -திருவாய் -6-10-10-என்கிறபடியே உன்னை ஷண காலமும் அகல சக்தை அல்லேன் என்னுமா போலே -இவரும் – அடியேன் உனது பாத கமலம் அகலகில்லேன் இறையும் -6-10-9-என்று உன்னை ஷண காலமும் பிரிய சக்தன் அல்லேன் என்கையாலும் —
(அகலகில்லா)’அகலகில்லலே னிறையுமென்றலர்மேல் மங்கை யுறை மார்பா”‘ (திருவா. 6 – 10 – 10) என்று பெரிய பிராட்டியார் அவனுடைய திருமார்வைப் பறறி அகல ஸக்தை யல்லே னென்னுமாப் போலே, “அடியேனுனபாத மகலகில்லேன்” (திருவா. 6 – 10 -9) என்று இவரும் அவன் திருவடிகளைப் பற்றி அகல ஸக்தனல்லேனென்கையாலும்–
அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன் றில்லா அடியேன் உன் னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10-
வந்தாய் போலே வாராதாய்! வாராதாய்போல் வருவானே!
செந்தாமரைக்கட் செங்கனிவாய் நாற்றோ ளமுதே! எனதுயிரே!
சிந்தா மணிகள் பகரல்லைப் பகல்செய் திரு வேங்கடத்தானே!
அந்தோ அடியேன் உனபாதம் அகல கில்லேன் இறையுமே.–6-10-9-–ஆற்றாமையும் அபேக்ஷையும் எனக்கே பரமாவதே-அடியேன் -ஸ்வ ரக்ஷணத்தில் பிராப்தி இல்லாத பாரதந்தர்யத்தை யுடைய நான்
உன பாதம் அகல கில்லேன் இறையுமே.–நிரதிசய போக்யமான உன் திருவடிகளை க்ஷண காலமும் அகல ஷமன் ஆகிறிலேன்-
முற்றுவமை பெருமகளோடே –அதாவது – இவருக்கு சர்வதா சாதுர்சயம்-பெருமைகள் பேதை மங்கை–பெரிய திருமொழி -6-5-5–என்கிற பெரிய பிராட்டியாரோடே– என்ற படி —இரான் எனில் நசவாக -தொடங்கி-அகலகில்லா -என்று தலைக் கட்டுகையாலும் – ஜீவிதாதிகளால் குறைவருதி முதலாக ஆள்விடுகை ஈறாக நடுச் சொன்னவையும் விரஹ துக்க அசஹத்வ கார்யங்கள் ஆகையாலும் ,
பிரிவில் தரியாமை இறே இச் சூர்ணையில் ப்ராசுர்யேன பிரதி பாதிக்கப் பட்டது –
முற்றுவமை *பெரு மகள் பேதை மங்கை தன்னோடே என்கிறார். அவள் மார்வைப் பற்றி அகலகில்லேனென்னும்; இவர் தாளைப் பற்றி அகலகில்லேனென்பர். இதுவே இருவர்க்கும் வாசி. ஆனாலும் அவளைப் பற்ற இவர்க்குக் கால் கூறு ஏற்றமுண்டிறே –
கருமகள் இலங்கையாட்டி பிலம் கொள் வாய் திறந்து தன் மேல்
வருமவள் செவியும் மூக்கும் வாளினால் தடித்த வெந்தை
பெருமகள் பேதை மங்கை தன்னொடும் பிரிவிலாத
திருமகள் மருவு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-5—நிருபாதிக ஸ்த்ரீத்வத்தை உடையவள் -பெருமகள்–பிறர் குற்றம் அறிகைக்கு அறிவு இல்லாதபடி இருக்கிறவள் -பேதை -மங்கை-ஸ்ரீ பூமிப் பிராட்டியை சொன்னபடி (வஞ்சப் புகழ்ச்சி ) அகலகில்லேன் இறையும் -என்கிறபடியே ஒருகாலும் பிரியக் கடவள் அன்றிக்கே இருக்கிற-பெரிய பிராட்டியார்-ஸ்ரீ பூமிப் பிராட்டியாரும் பெரிய பிராட்டியாரும் நித்ய வாசம் பண்ணா நின்றுள்ள திரு நாங்கூர்-
—
இப்படி பிராட்டியோபாதி பிரியில் தரியாமைக்கு இவர் ஒருவருமேயோ ? பின்னையும் உண்டோ என்னும் ஆகாங்ஷையில் அருளிச் செய்கிறார் மேல் —இனிமேல், மற்றும் பகவத் ப்ரத்யாஸத்தியை யுடையரான லக்ஷ்மண-பரத-ஸத்ருக்ந-தஸரத,-யஸோதா – ப்ரஹ்லாத-விபிஷண-மாருதி அர்ஜுநன் என்கிற இவர்களோடு ஸாம்யமுண்டென்கிறார்.-
பிரியில் இலேனுக்கு இளம் கோவும் அக் குளத்தில் மீன் இறே–சூரணை -126-
அதாவது-நிருபாதிக சேஷியானவனை பிரியில் –நின்னால் இலேன் காண்–2-3-7- என்று இலர் ஆகைக்கு –நேர் இழையும் இளம் கோவும் பின்பு போக -பெருமாள் -9-2–என்ற படி பிராட்டியோபாதி பின் தொடர்ந்து போன இளைய பெருமாளும் -நிறுத்தி போவதாகப் பெருமாள் அருளிச் செய்த போது –-நச சீதா த்வயா ஹீநா நஸா அஹம் அபி ராகவா முஹூர்த்தம் அபி ஜீவாவோ ஜலான் மத்ஸ்யா விவோத் த்ருத்வ –அயோத்யா -53-31- -என்கையாலே அந்த ஜலத்தில் மத்ஸ்யம் இறே என்கை–இத்தால் பிராட்டியை போலே -பிரியில் முடிகைக்கு இளைய பெருமாளும் இவரும் ஒக்கும் என்றது ஆய்த்து–
(ப்ராசங்கிகமான சூர்ணிகை இது -அதனால் இவரும் இளைய பெருமாளும் என்று வியாக்யானம் –
மேலே பலருடன்–தம்பிகள் மூவர் -நெருங்கிய பக்தர் ஆறு பெயர் – இவர்களுடன் சாம்யமும் உத்கர்ஷமும் அருளிச் செய்யப் போகிறார்-பக்தியின் தன்மைகளை சொல்லி இவருடைய சஹஜ பக்திக்கு மெருகூட்டுகிறார் இவற்றால் )
(பிரியிலிலேனுக்கு) அவனைப் பிரியுமளவில் ‘‘நின்னலாலிலேன் காண்”” (திருவா. 2 – 3 – 7) என்று இவரைப் போலே ஸத்தை அழிகைக்கு (இளங்கோவும்) “*நேரிழையுமிளங்கோவும்’‘ (பெருமா.தி. 9 – 2) என்றும், “ந சாஹமபி ராகவ”’ (ரா.அ.53-31) என்று – பிராட்டியோ டொக்கத் தம்மை ஏக ப்ரக்ருதியாகச் சொன்ன இளைய பெருமாளும். (அக் குளத்தில் மீனிறே) கீழ் ப்ரஸ்துதமான ஜலாந் மத்ஸ்யமிறே.-இத்தால் அவனைப் பிரியில் தரியாமைக்குப் பிராட்டியும் இளைய பெருமாளும் இவருமொக்குமென்றபடி. இத்தால் இளைய பெருமாள் ஸாம்யம்-
முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே
பன்னலார் பயிலும் பரனே பவித்திரனே
கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா
நின்னலால் இலேன் காண் என்னை நீ குறிக்கொள்ளே–2-3-7--உன்னை ஒழிய ரக்ஷகரை உடையேன் அல்லேன் என்னுதல்-உன்னை ஒழிய தரிக்க மாட்டேன் என்னுதல்-என்னை –-வை தர்மயம் நேஹா வித்யதே –என்று தம்மைக் காட்டுகிறார்-நீ குறிக்கொள்ளே–திரு உள்ளம் பற்ற வேணும் –
வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இரு நிலத்தை வேண்டாதே விரைந்து ,வென்றி
மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து மா ஒழிந்து வானமே மேவி
நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும் இளம் கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ! எம்பெருமான்! என் செய்கேனே ?– 9-2–நீர் போய்ப் புக்காலும் புகுகைக்கு தகாதவர்களை கூடக் கொண்டு-கால் நடை நடந்து அறியாத நீர் இவர்களையும் கூடக் கொண்டு பொல்லாத காட்டிலே போனீர் – என்னாயனே நான் என் செய்கேன் –
—
இனிமேல் பகவத அநந்யராய் சகஜ பக்திகராய் இருக்கும் லஷ்மண பரத சத்ருக்நர்கள் படியும் –
பகவத் ப்ரத்யா சன்னராய் தத் பக்தி யுக்தரான –தசரத- யசோதா -பிரகலாத -விபீஷண-மாருதி -பார்த்தன் படிகளும் – இவர் பக்கல் உண்டு என்னும் அத்தை -தனித் தனியே அடைவே தர்சிப்பிக்கிறார் திருஷ்ந்த தார்ஷ்டாங்கள் இரண்டுக்கும் தனித் தனியே வாசகம் இடாதே இரண்டும் ஒரு சந்தர்ப்பத்திலே பலிக்கும் படி வாக்யத்தை சுருக்கி அருளிச் செய்கையாலே ,த்ருஷ்டாந்த்தத்தில் ஆதல்-தார்ஷ்டாந்திகத்தில் ஆதல் -வசனம் இல்லாதவற்றுக்கு பிரதிகோடிக்கு அனுகுணமாகக் கூட்டி நிர்வகிக்கக் கடவது ..இந்த ந்யாயம் இப் பிரபந்தத்தில் இப்படி வந்த ஸ்தலங்களுக்கு எல்லாம் ஒக்கும்-
அழுந்தொழும் ஸ்நேஹ பாஷ்பாஞ்ஜலியோடே ருசிர-ஸாநுக்களில் கூவிக் கொள்ளும் பிரியா வடிமைக்குச் சரணே சரண் என்று வாளும் வில்லுங் கொண்டு பந்துவும் பிதாவுமவரே என்கையும், அன்னை யென் செய்யிலென் ராஜ்யமும் யானே என்று பெருஞ் செல்வமும் இச்சியாமல் வேண்டிச் சென்று திருவடியே சுமந்து விரைந்து வருமளவும் கண்ண நீர் பங்கமாக நிலந் துழாவிக் குடிக் கிடந்த கையறவும் கோதிலடிமை உறுமோ என்பித்த புலங்கொள் நித்ய ஸத்ரு விசிந்தநமுமான ப்ராதாக்கள், அப்பொழுதைக்கப் பொழுது போனாய் என்னும் மாதா பிதாக்கள், செந்தீ தண் காற்று இள நாகம் முதலான பகையறச் சிந்தை செய்து எங்குமுளனென்னும் பள்ளிப் பிள்ளை, முற்றவிட்டு மற்றிலேனென்னும் தர்மாத்மா வாளி பொழிந்த நிர்குண விஸ்வாத்மா உள்ளே உறைய ஊக வீர சரிதம் கற்பார் பாவம் மற்றிலேன் என்னும் ராம தாஸன் பல்வகையும் கண்டு வெண் சங்கேந்தின ரூபபரனான ஸ்வேதன் முதலானார் படிகளும் காணலாம்.–சூரணை -127-
(அழும் தொழும் ஸ்நேக பாஷ்ப அஞ்சலியோடு-ருசிரசாநுக்களிலே கூவிக் கொள்ளும் பிரியா அடிமைக்கு சரணே சரண் என்று வாளும் வில்லும் கொண்டு பந்துவும் பிதாவும் அவரே என்கையும்–
இதுவரை இளைய பெருமாள் தன்மையைச் சொல்லி –அன்னை என் செய்யில் என் ராஜ்யமும் யானே என்று பெரும் செல்வமும் இச்சியாமல் வேண்டிச் சென்று திரு அடியே சுமந்து விரைந்து வரும் அளவும் கண்ண நீர் பங்கமாக நிலம் துழாவி குடி கிடந்த கையறவும் ,–-இதுவரை பரதாழ்வான் தன்மை –கோதில் அடிமை உறுமோ என்பித்த புலன் கொள் நித்ய சத்ரு விசிந்தன முமான–-இதுவரை சத்ருக்கனன் தன்மை –பிராதாக்கள்-மூவரையும் சொல்லி-அப்பொழுதைக்கு அப்பொழுது போனாய் என்னும்
மாதா பிதாக்கள்-யசோதா பிராட்டியாரையும் சக்கரவர்த்தியையும் சொன்ன படி-செந்தீ தண் காற்று இள நாகம் முதலான பகை அற சிந்தை செய்து எங்குமுளன் என்னும் பள்ளிப் பிள்ளை-ப்ரஹ்லாதனைச் சொன்னபடி –முற்றவிட்டு மற்றிலேன் என்னும் தர்மாத்மா-ஸ்ரீ விபீஷண ஆழ்வானைச் சொன்னபடி –வாளி பொழிந்த நீர் குண விச்வாத்மா உள்ளே வுறைய வீர சரிதம் ஊணாக கற்பார் பாவம் மற்றிலேன் என்னும் ராம தாசன்-திருவடியைச் சொன்னபடி –பல் வகையும் கண்டு வெண் சங்கு ஏந்தின ரூபபரனான ஸ்வேதன்-அர்ஜுனனைச் சொன்னபடி – முதலானார் படிகளும் காணலாம்-)
அழும் தொழும் ஸ்நேக பாஷ்ப அஞ்சலியோடு ருசிரசாநுக்களிலே ( அழகிய மலைத் தாழ்வரைகளிலே )
கூவிக் கொள்ளும் பிரியா அடிமைக்கு சரணே சரண் என்று வாளும் வில்லும் கொண்டு பந்துவும் பிதாவும் அவரே என்கை--அதாவது-அழும் தொழும் இத்யாதி -அதாவது –-இளைய பெருமாள்-பால்யாத் பிரப்ருதி ஸூஸ் நிக்த-பால -18-27- -என்கிறபடி பால்யமே தொடங்கி பிரியில் தரிக்காத ஸ்நேஹத்தாலே
பாஷ்ப பர்யா குலமுக–அயோத்யா -31-1- ( கண்ணநீரால் கலங்கிய முகமுடைய )என்றும் –ப்ரஹ்வாஞ்சலி புடம் ஸ்திதம்-அயோத்யா -16-26-என்றும் -சொல்லுகிறபடி- விஸ்லேஷ பிரசங்கஜமான சோக வேகத்தாலே சொரிகிற பாஷ்பத்தோடே -ஸ்வரூப பிரகாசமான அஞ்சலியும் கையுமாகக் கொண்டு –ஸ்வயந்து ருசிரே தேசே க்ரியதாமித மாம் வாத–ஆரண்ய -15-7- -என்றும் ,-பவாம்ஸ்து சஹா வைதேஹ்யா கிரிஸ அநுஷூ ரம்ஸ்யதே அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வபதஸ் சதே—அயோத்யா -31-25-என்றும் சொல்லுகிறபடியே–திருச் சித்ர கூட கிரி தாழ்வரை முதலான ருசிர தேசங்களிலே – பிராட்டி உடன் தேவரீர் ஸ்வைரமாக எழுந்து அருளி இருக்க சர்வ வித கைங்கர்யங்களையும் அடியேன் செய்ய வேண்டும் – அது செய்யும் இடத்தில் ஏவிப் பணி கொண்டு அருள வேண்டும் என்று பிரார்த்தித்து -அப்படி-ஏவிப் பணி கொள்ளச் செய்யப் படுமதாய்-
குருஷ்ய மாம் அனுசரம் -அயோத்யா -31-23-என்கிறபடி- விச்சேதமாய் பின் தொடர்ந்து செய்யும் அடிமை தொழிலைப் பெருகைக்காக –ச பிராதுஸ் சரணவ் காடாம் நிபீட்ய ரகுநந்தன சீதா முவாசாதியஸா ராகவஞ்ச மஹா வ்ரதம் —அயோத்யா -31-2- என்கிறபடியே -சாயுதராய்க் கொண்டு பெருமாளைப் பின் சென்று – பிராதா பர்த்தா ச பந்து ச பிதா ச மம ராகவா –அயோத்யா -58-31–என்று தமக்கு சர்வ வித பந்துவும் பெருமாளே என்றால் போலே –
அழுந் தொழும் ஸ்நேஹ பாஷ்பாஞ்ஜலியோடே) ”பால்யாத் ப்ரப்ருதி ஸுஸ்நிக்த(ரா. பா, 18 – 27) என்றும், ”பாஷ்பபர்யாகுலமுக,?”‘ (ரா. ௮. 33 – 1) என்றும், ‘*ப்ரஹ்வாஞ்ஜலிபுடம் ஸ்திதம்” (ரா. ௮. 16 – 26) என்றும் இளைய பெருமாள் பெருமாளைப் பிரியில் தரியாத ஸ்நேஹத்தாலே கண்ணும் கண்ண நீருமாய், அஞ்ஜலி ஹஸ்தராய்க் கொண்டு ‘‘குருஷ்வ மாமநுசரம் வைதர்ம்யம் நேஹ வித்யதே’‘ (ரா. ௮. 31 – 24) என்றும், ““ஸ்வயந்து ருசிரே தேஸே கரியதாமிதி மாம் வத,” (ரா. ஆ, 785 – 7) என்றும், “பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே ! அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வபதஸ்ச தே” (ரா. அ. 31 – 27) என்றும் சொல்கிறபடியே என்னை அநு சரனாகப் பண்ண வேணுமென்று ப்ரார்த்தித்துச் செய்கிற அடிமைக்கு உபாயமாக “’ஸ ப்ராதும் சரணெள காடம் நிபீட்ய ரகுநந்தநச । ஸீதாமுவாசாதியஸா ராகவஞ்ச மஹா வ்ரதம்’ ் (ரா. அ. 31 – 2) என்று நாச்சியார் புருஷகாரமாகத் திருவடிகளைக் கட்டிக் கொண்டு ”அக்ரத? ப்ரயயெள ராமஸ் ஸீதா மத்யே ஸுமத்யமா। ப்ருஷ்டதஸ்ச தநுஷ்பாணி: லக்ஷ்மணோநுஜகாம ஹூ”? (ரா. ஆ. 11 – 1) என்று ஸாயுதராய்க் கொண்டு அவரைப் பின் சென்று “‘ப்ராதா பர்த்தா ச பந்து,ர்ீச பிதா ச மம ராகவ?”‘ (ரா.௮.58-34) என்று பெருமாளை எல்லா உறவுமாகப் பற்றினாப் போலே,
இவரும் – அறியாக் காலத்துள்ளே அடிமை கண் அன்பு செய்வித்து -2-3–3 என்கிறபடியே
பருவம் நிரம்புதர்க்கு முன்பே பிரியில் தரியாதபடி பிறந்த ஸ்நேகத்தால்-அழும் தொழும்-7-2-8 -என்று –
விஸ்லேஷம் பொறாமல் கண்ணும் கண்ண நீரும் கையும் அஞ்சலியுமாய் –திரு வேம்கடத்து எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கு –ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு இலா அடிமை செய்ய வேண்டும் -3-3-1-என்று,-மொய்த்த சோலையும் -மொய் பூம் தடம் தாழ் வரையுமான-3-3-10– போக ஸ்தலங்களை உடைய திரு மலையில் –அலர் மேல் மங்கை உறை மார்பன் –6-10-10–ஆகையாலே
பிராட்டியோடு கூடி ரசோத்தரமாய் இருக்கிற பரம சேஷி யானவனுக்கு -சர்வதேச – சர்வ கால -சர்வ அவஸ்தைகளிலும் சர்வ சேஷ வ்ருத்திகளையும் பண்ண வேணும் — அது தன்னிலும்-முகப்பே கூவிப் பணி கொள்வாய்-8-5-7—என்று சந்நிதியிலே
இவருமப்படியே (அழுந் தொழுமித்யாதி, – பிரியா வடிமைக்கு) ”அழுந்தொழும்”் (திருவா. 7 – 2- 8) என்று அழுவது தொழுவதாய், “திருவேங்கடத்தெழில்கொள்சோதி எந்தை தந்தை தந்தைக்கு – ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா வடிமை செய்ய வேண்டும் நாம்”’ (திருவா, 3 – 3 – 1) என்று திருமலையிலே நின்றருளின பரம ஸ்வாமிக்கு ஸர்வதேஸ ஸர்வ கால-ஸர்வாவஸ்தோசிதமான ஸர்வஸேஷ வ்ருத்திகளையும், “முகப்பே கூவிப் பணி கொள்ளாய்‘” (திருவா, 8 – 8 – 7) என்கிறபடியே ஏவி அடிமை கொள்ள வேணுமென்று ப்ரார்த்தித்து,ஏவிப் பணி கொள்ள வேணும் என்று பிரார்த்தித்து-
அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று
அறியாமை வஞ்சித்தாய் எனதாவியுள் கலந்தே –2-3-3—அறிவுக்கு சம்பாவனை இல்லாத பால்யத்திலே -பிராப்தி பலமான அடிமையிலே ஸ்நேஹத்தை பிறப்பித்து வைத்தாய்-
கொழுந்து வானவர்கட்கு!’ என்னும்’குன்றேந்திக் கோ நிரை காத்தவன்!’ என்னும்;
அழும் தொழும் ஆவி அனல வெவ்வுயிர்க்கும்; ‘அஞ்சன வண்ணனே!’ என்னும்;
எழுந்து நின்று மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்; ‘எங்ஙனே நோக்குகேன்?’ என்னும்;
செழுந்தடம் புனல் சூழ் திருவரங் கத்தாய்! என் செய்கேன் என் திரு மகட்கே?–7-2-8–அழும் -வரையாதே ரக்ஷிக்குமவனுடைய ரக்ஷணத்துக்கு புறம்பு ஆவதே -என்று அழும் -பாலர் செய்வதும் செய்யும் என்னுதல் ஸ்நே ஹிகள் செய்வதும் செய்யும் என்னுதல்-தொழும் -புகல் அற்றார் செய்வதும் செய்யும் என்னுதல் -வேதாந்த ஞானம் உடையார் செய்வதும் செய்யும் என்னுதல்
ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1-சர்வ தேசத்திலும் -காட்டிலும் தொடர்ந்து அடிமை செய்த இளைய பெருமாளை போலே-மன்னி-சர்வ அவஸ்தையிலும் -உலகத்தோடு ஏகாந்தத்தோடு வாசி அற-வழு இலா அடிமை -சர்வ சேஷ வ்ருத்தியும் செய்ய வேண்டும்-சாஸ்த்ரங்களால் இதுவே புருஷார்த்தம் என்று அறிக்கை போராது-அனுஷ்டான பர்யந்தமாக வேணும் –
வைத்த நாள்வரை எல்லை குறுகிச் சென்று,
எய்த்து, இளைப்பதன் முன்னம் அடைமினோ
பைத்த பாம்பணையான் திரு வேங்கடம்
மொய்த்த சோலை மொய் பூந்தடந் தாள்வரை.–3-3-10–ஸ்வ ஸ்பர்ஸ ஸூ காதி அதிசயத்தால் விகசிதமான பணங்களை உடைய திரு அனந்த ஆழ்வானைக் காட்டிலும் விரும்பி வர்த்திக்கிற திரு மலை-திரு மலையை திரு அனந்த ஆழ்வானாக வும் சொல்லக் கடவது–செறிந்த சோலையையும் -பரப்பு மாறப் பூத்த பொய்கையும் உடைய திருத் தாழ் வரையை –
அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன் றில்லா அடியேன் உன் னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10–வெய்யிலில் நின்று நிழலிலே ஒதுங்கினார் சொல்லுமா போலே க்ஷண மாத்ரமும் விஸ்லேஷிக்க க்ஷமை அல்லேன் என்று நிரதிசய போக்யையான பெரிய பிராட்டியார் நிரந்தர வாசம் பண்ணுகிற திரு மார்வை யுடையையாய்-
வந்து தோன்றாயன்றேல் உன் வையம் தாய மலரடிக் கீழ்
முந்தி வந்து யான் நிற்ப முகப்பே கூவிப் பணி கொள்ளாய்
செந்தண் கமலக் கண் கை கால் சிவந்த வாயோர் கரு நாயிறு
அந்தமில்லாக் கதிர் பரப்பி அலர்ந்தது ஒக்கும் அம்மானே–8-5-7—க்ரியதாம் இதி மாம் வத -என்று கண் முகப்பே அடிமை கொள்ள வேணும் -குண ஞானத்தால் தரித்து இருக்கும் ஸ்ரீ பரத ஆழ்வான் ப்ரக்ருதி யல்லேன் –ஜலான் மத்ஸ்யா விவோத்தருதவ் -என்னும் இளைய பெருமாள் பிரக்ருதியான என்னை அடிமை கொண்டு அருள வேணும் –
அப்படியே ஏவிக் கொள்ளப் படுமதாய்–பிரியா அடிமை-5-8-7–என்கிறபடியே – யாவாதாத்மா அனுவர்தியான கைங்கர்யத்தைப் பெருகைக்கு உபாயமாக-நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு-5-10-11–என்று புருஷகாரம் முன்னாக அவன் திரு அடிகளைப் பற்றி –-வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்று இல்லை-8-3-3–என்று திவ்ய ஆயுதங்களைக் கொண்டு தாம் பின்னே செல்ல ஆசைப் பட்டு –சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் -நன் மக்களும் -மேலாத் தாய் தந்தையும் அவரே -5-1-8–என்று சேஷியான சர்வேஸ்வரனே தமக்கு மாதா பித்ராதி சர்வ வித பந்து என்கையாலும்
““பிரியா வடிமை என்னைக் கொண்டாய்?! (திருவா. 5 – 10 – 11) என்று விச்சேதியாதபடியான கைங்கர்யத்துக்கு (சரணே சரணென்று) ““நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் தமக்கு ‘” (திருவா. )என்று அவன் திருவடிகளை உபாயமென்று அத்யவஸித்து“வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை’‘ (திருவா. 8 – 3 ஃ- 3) என்று அவற்றைக் கொண்டு தாம் பின்னே திரிய ஆசைப்பட்டு. (பந்துவும் பிதாவும் அவரே என்கையும்) ““சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையுமவரே இனியாவார்” (திருவா. 5 – 1 – 8) என்று ஸர்வேஸ்வரனே எல்லா உறவு முறையாகப் பற்றுகையாலும்-
அரியேறே! என்னம் பொற் சுடரே! செங்கட் கருமுகிலே!
எரியேய் பவளக்குன்றே! நால்தோள் எந்தாய்! உனதருளே
பிரியா அடிமை என்னைக் கொண்டாய்! குடந்தைத் திருமாலே!
தரியேன் இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே.–5-8-7—அருளாலே என்னுதல் –அருள் ஏய்ந்த -அருளோடு கூடின என்னுதல் –நிர்ஹேதுக கிருபையால் என்னை ஆத்மாந்த தாஸ்யத்திலே ஸ் வீகரித்தாய் -கைங்கர்யம் கொள்ளும் போதும் கிருபை முன்னாக வேண்டி இருக்கையாலே அத்தோடு கூடின அடிமை என்றுமாம் –அடிமை கொள்ளுகைக்காக பிராட்டியோடே கூட திருக் குடந்தையில் வந்து காண் வளர்ந்து அருளுகிறவனே -ஒரு தேச விசேஷத்தில் என்ன வேண்டாத படி -தேசத்தில் குறை இல்லை -ஸ்ரீ யபதி யாகையாலே ப்ராப்யத்தில் குறையில்லை –பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா -என்ற இளைய பெருமாளை போலே பற்றுகிறார் –
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்
ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ் வெய்துவர் வைகலுமே.–5-10-11-அனந்த சாயித்தவம் சர்வாதிக வஸ்துவுக்கு லக்ஷணம் ஆகையாலே -சர்வாதிகனே சரண்யன் என்கிறது -திரு வனந்த ஆழ்வானுடைய புருஷகார பாவம் சொல்லுகிறது என்றுமாம் –படுக்கையைச் சொல்ல படுக்கை யுடையாரைச் சொல்லிற்றாம் இறே
நம்பிரான் -ஆஸ்ரித விஷயத்தில் உபகார சீலனானவன் –-சரணே சரண் நமக்கு என்று -நமக்கு திருவடிகளே உபாயம் என்று –அவதாரணத்தாலே உபாய நைரபேஷ்யம் சொல்லுகிறது -சம்சாரிக ஸ்வ பாவங்கள் மேலிட்டு விபரீதமே பலியா நின்றாலும் இது தவிர வேறு ஒன்றில் கால் தாழாது ஒழி கை -மஹா விச்வாஸம் ஆகிறது –-நாடொறும் ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்-ஆக நூற்ற
நாள் தோறும் இதுவே மநோ ரதமான ஆழ்வார் -பகவத் குண பிரேரிதராய் தாம் உள்ராகைக்காக-
ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை
தாளும் தோளும் கைகளை யாரத் தொழக் காணேன்
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–8-3-3—உபய விபூதியிலும் பரிகைக்கு ஓர் ஆளில்லை -தனியே ஒருத்தரை ஆள வேணும் என்று இருக்கிறார் -நித்ய ஸூ ரிகள் பகவத் அனுபவத்தில் அந்நிய பரர் -சம்சாரிகள் சப்தாதி விஷய பரர்-ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்–ஆபரணமான திவ்யாயுதங்கள் -அவன் ஸுகுமார்யத்தாலே மலை எடுத்தால் போலே சுமையாய் தோற்றுகிறது இவர்க்கு -எதிரிகளுக்கு அஸ்திரமாய் -அனுபவிப்பார்க்கு ஆபரணமாய் இருக்கிறதை -ஸுகுமார்யத்தை அனுசந்தித்த இவருக்கு மலையாய் இருக்கிறது-தாம் -தம்மைப் பார்த்துக் கொள்ள வேண்டாவோ -எப்போதும் கை கழலா நேமியான் அன்றோ -நிரூபகங்கள் ஆனவை சுமையோ என்ன -அது தானே செய்கிறது –-வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை-வாளும் வில்லும் கொண்டு பின்னே செல்லுகைக்கு இளைய பெருமாள் மாத்திரம் ஒருவர் உண்டானாலோ – ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்-வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை-என்கிறது
மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித் தொழுஉம்
மாலார் வந்து இனநாள் அடியேன் மனத்தே மன்னினார்
சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே.–5-1-8–அடியேன் மனத்தே மன்னினார்–சம்பந்தம் அடியாக மனசிலே செறிந்தார் -இனி நீர் செய்யப் பார்த்தது என் என்ன-போக்யைகளான ஸ்த்ரீகளும் -அதுக்கு உறுப்பான நிரவதிக சம்பத்தும் -குணவான்களான புத்திரர்களும் பரிவுடைய தாயும் தந்தையும் ஆவார் அவரே -க்லேசகரமான-அவ்வோ பந்துக்களாலே க்லேசப் பட வேண்டா -மாதா பிதா பிராதா -அஹம்தாவத்-
அன்னை என் செய்யில் என் ராஜ்யமும் யானே என்று பெரும் செல்வமும் இச்சியாமல் வேண்டிச் சென்று திரு அடியே சுமந்து விரைந்து வரும் அளவும் கண்ண நீர் பங்கமாக நிலம் துழாவி குடி கிடந்த கையற வுடைய பிராதாவின் படியும்-அதாவது –அன்னை என் செய்யில் என் ராஜ்யமும் யானே
அதாவது –ஸ்ரீ பரத ஆழ்வான்,பெருமாள் திரு முடி சூடி இருக்க தாம் அடிமை செய்து வாழப்
பெறாதபடி அவரைக் காட்டிலே அகல விடுத்து தம் மேலே ஸ்வாதந்த்ர்யத்தை ஆரோபித்த கொடுமையால் –-ஹன்யா மஹமிமாம் பாபம் கைகேயீம் துஷ்ட சாரிணீம்–அயோத்யா -78-22- -என்று
மாதாவானவளை சீறி உபேஷித்து ஸ்வாதந்திர அசஹதை தோற்ற –-ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய –அயோத்யா –82-12- என்று ராஜ்யமும் நானும் பெருமாளுக்கு சேஷம் என்று –பெரும் செல்வமும் இச்சியாமல்–அதாவது –-ம்ருதேது தஸ்மின் பரதோ வசிஷ்ட பிரமுகைர் த்விஜை–நியுஜ்யமானோ ராஜ்யாய நைச்சத் ராஜ்ஜியம் மஹாபல -பால -1-33-என்கிற படியே- வசிஷ்டாதி புரோகிதர் நீ ராஜாவாக வேணும் என்று நியோகியா நிற்க – இஷ்வாகூண மியம் பூமிஸ் ச சைல வநகா நனா –கிஷ்கிந்தா 18-6- -என்று மகா ஐஸ்வர்யத்தையும் இச்சியாதே-
(அன்னை என் செய்யிலென் இத்யாதி.) ஸ்ரீபரதாழ்வான் பெருமாளுடைய திருவபிஷேகத்தைக் கைகேயி விலக்கின சீற்றத்தாலே “*ஹந்யாமஹமிமாம் பாபாம் கைகேயீம் துஷ்டசாரிணீம்” (ரா. அ. 78 – 22) என்கிறபடியே கைகேயியைச் சீறி உபேக்ஷித்து “’ராஜ்யஞ்சாஹஞ்ச ராமஸ்ய’” (ரா. அ. 82 – 12) என்று – ராஜ்யமும் நானும் பெருமாளுக்கு ஸேஷமென்றும், “ம்ருதே து தஸ்மிந் பரதோ வஸிஷ்ட ப்ரமுகைர் த்விஜைச ! நியுஜ்யமாநோ ராஜ்யாய நைச்சத்,ராஜ்யம் மஹாபலா ”? (ரா. படா. 1 – 33) என்றும் வஸிஷ்டாதி,புரோஹிதர் ராஜாவாக வேணுமென்று அபேக்ஷிக்க, ““இக்ஷ்வாகூணாமியம் பூமிஸ் ஸ ஸைல வந காநநா ।”” (ரா. கி. 18 – 6) என்கிற மஹதைஸ்வர்யத்தை இச்சியாதே,-
வேண்டிச் சென்று-அதாவது -பெருமாளை மீட்டிக் கொண்டு வந்து திரு அபிஷேகம் பண்ணுவிக்கையிலே அபேஷை தோன்ற –-ஏபிச்ச சசிவைஸ் சார்த்தம்–அயோத்யா –104-12- -என்கிறபடி –அவர் திரு அடிகளில் சென்று –அயாசாத் பிராதரம் ராமம் –பால -1-35- என்கிற படியே மீண்டு எழுந்து அருள வேண்டும் என்று அபேஷித்த இடத்தில்–திருவடியே சுமந்து –அதாவது-அவர் அது செய்யாதே –
பாதுகே சாஸ்ய ராஜ்யாய ந்யாசம் தத்வ புன புன –பால -1-37–என்கிறபடியே-திருவடி நிலையைக் கொடுத்து அருள –-ததஸ்து சிரஸா க்ருத்வா பாதுகே பரதஸ் ததா ஆருரோஹ ரதம் ஹ்ருஷ்டஸ் சத்ருனநேன சமன்வித –அயோத்யா -113-1-என்கிற படியே அத் திருவடிகளை சிரஸா வகித்துக் கொண்டு ஹ்ருஷ்டராய் மீண்ட போது–விரைந்து வரும் அளவும் கண்ண நீர் பங்கமாக நிலம் துழாவி-அதாவது –
சிரஸா யாசதஸ் தஸ்ய வசனம் நக்ருதம் மயா –யுத்த –124-9-என்கிற இழவு திரு உள்ளத்தில் கிடக்கிறதாலே – நமே ஸ்நானம் பஹூமதம் வஸ்த்ராண்ய பரணா நிச , தம் விநா கைகேயீ புத்ரம் பரதம் தர்ம சாரிணீம் இத ஏவ யதா ஷிப்ரம் – பிரதிகச்சாம தாம் புரீம் -அயோத்யா மாகதோ ஹ்யேஷா பந்தா பரமதுர்கம –யுத்த -124-6-/7என்று நம் பிள்ளை பரதனை ஒழிய குளியல் ஒப்பித்தல் செய்யக் கடவோம் அல்லோம் – சீக்கிரமாக இனி அங்கே செல்லலாம்படி என் என்று பெருமாள் த்வரையோடே மீண்டு எழுந்து அருளும் அளவும் – பங்க திக்தஸ்து ஜடிலோ பரத -யுத்த -127-4-என்கிறபடியே கண்ண நீரால் உண்டான சேற்றிலே தரைக் கிடை கிடைக்கையாலே – பங்க திக்தராய் –குடி கிடந்த கையறவும்
அதாவது –மூத்தார் இருக்க இளையார் முடி சூடக் கடவர் அல்லர் என்ற இஷ்வாகு குல மரியாதை தப்பாமல் நோக்கிக் கொண்டு –-ச காமம் அனவாப்யைவ –பால -1-38–என்கிறபடி தாம் ஆசைப் பட்ட பொருள் கை புகுராத இழவோடே இருந்தால் போலே –
அயாசத்,ப்ராதரம் ராமமார்ய பாவ புரஸ்க்ருதச” (ரா. பதா, 1 – 35) என்று பெளர ஜநங்களோடே பெருமாள் திருவடிகளிலே சென்று மீண்டெழுந்தருளவேணும் என்றபேக்ஷிக்க, ““பாதுகே சாஸ்ய ராஜ்யாய ந்யாஸம் தத்த்வா புந புந” (ரா. பா 1 -37) என்று அவரும் அப்படிச் செய்யாதே திருவடி நிலையைக் கொடுத்துவிட.-““பாதுகே தே புரஸ்க்ருத்ய’‘ (ரா. யு. 124 – 4) என்று அத் திருவடி நிலையை முன்னிட்டுக் கொண்டிருந்து, ““பமிரஸா யாசதோ யஸ்ய வசநம் ந க்ருதம் மயா”‘ (ரா. யு. 121 – 19) என்கிற இழவு திருவுள்ளத்திலே கிடக்கையாலே ““ந மே ஸ்நாநம் பஹுமதம் வஸ்த்ராண்யாபரணாநி ச (தம் விநா கைகயீ புத்ரம் பரதம் தர்ம சாரிணம்”’ (ரா. யு. 121 6) என்று – நாம் பிள்ளை பரதனை யொழியக் குளித்தல் ஒப்பித்தல் செய்யக் கடவோமல்லோமென்று பெருமாள் த்வரையோடே மீண்டு வருமளவும் ”பங்கதிக்தஸ்து ஜடில?”’ (ரா. யு. 124 -4 ) என்று கண்ணீராலுண்டான சேற்றிலே தரைக் கிடை கிடந்து இக்ஷ்வாகு குல மர்யாதை தப்பாமலிருந்து, “க்ருதம் தஸ குணம் மயா” (ரா. யு. 127 – 56) என்று பெருமாளுடைய திவ்யைஸ்வர்யத்தை ஒன்று பத்தாகப் பெருக்கி, ”ஸ காம மநவாப்யைவ”’ (ரா.ப.. 1 – 38) என்று தாம் ஆசைப்பட்ட பொருள் கைப்படாத இழவோடே இருந்தாப் போலே-
இவரும் பகவத் பிராவண்ய அதிசயத்தாலே – வழி அல்லா வழி எல்லாம் கிட்டும் அத்தனை – என்கிற த்வரைக்கு இடம் கொடாமல் – விலக்கும் மாதாவை சத்ரு பஷமாகக் காண்கையாலே –-அன்னை என் செய்யில் என்-அதாவது-அன்னை என் செய்யில் என்-5-3-6-என்று ஜீவிக்கில் என் -முடியில் என் -என்று சீறி உபேஷித்து –-ராஜ்யமும் யானே என்று – யானே என் தனதே -2-9-9–என்கிற ஸ்வாதந்த்ர்ய அசஹராய்க் கொண்டு – யானே நீ என் உடைமையும் நீயே-2-9-9- -என்று ஆத்மா ஆத்மீயங்கள் இரண்டும் அங்குத்தைக்கு சேஷம் என்று –பெரும் செல்வம் இச்சியாமல் –அதாவது –-கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பு-4-9-4- என்று மென் மேலும் சம்ருத்தமாய் வரும் நிரவதிக ஐஸ்வர்யத்தையும் அக்நி சமமாகக் கொண்டு –
இவரும் அப்படியே “அன்னை என் செய்யிலென்”’ (திருவா. 5 – 3 – 6) என்று – தாயார் முடியிலென்? பிழைக்கிலென்? என்று உபேக்ஷித்து (ராஜ்யமும் யானே என்று) யானே நீ என்னுடைமையும் நீயே”” (திருவா. 2 – 9 – 9) என்று ஆத்மாத்மீயங்கள் அவனுக்கு சேஷமென்று. (பெருஞ்செல்வமும் இச்சியாமல்) ““கொள்ளென்று கிளர்ந்தெழுந்த பெருஞ்செல்வம் நெருப்பு?” (திருவா, 4 – 9 – 4) என்று ஐஸ்வர்யத்தை அக்நி ஸமமாகக் கண்டு,-’ஜங்கருவிகண்ட இன்பம் – ஓழிந்தேன் ”” (திருவா. 4- 9 – 10) என்கிறபடியே உபேஷித்து.-
அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்!
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே.–5-3-6—கீழே தாயார் பொறாள்-என்ன பொறாதே செய்வது என் -என்றது –இதில் –அவள் என் செய்யும் -என்று வ்யவசிதை யானாள்-என்றால் -அவள் ஜீவியாள் கிடாய் –என்ன ஜீவிக்கில் என் –முடியில் என் -என்கிறாள்-என்னை -தாயார் பிழையாள்-ஊரார் பழி சொல்லுவார்கள் கிடாய் -என்ன மீளாத என்னை –
யானே என்னை யறியகிலாதே
யானே என்தனதே என்று இருந்தேன்
யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –2-9-9—அவனுக்கு கலக்கம் இல்லாமையால் -தன்னைத் தருகைக்கு எதிர் சூழல் புக்கு திரிய -நான் என்னை முடிய சூழ்த்துக் கொண்டேன்-தேஹாத்ம அபிமானத்தாலே என்னை அவனுக்கு பிரகாரம் என்று அறிந்திலேன்-ஈஸ்வரோஹம் என்று இருந்தேன்-இவன் நான் என்றால் ஈஸ்வரனுக்கு கிட்ட அரிதாய் இறே இருப்பது-நானும் எனக்கு உரியேன் இன்றிக்கே இருக்க எனக்கு ஒரு உடைமையும் உண்டாக நினைத்து இருந்தேன்-தேகத்தை ஆத்மாவாகவும் -ஈஸ்வர விபூதியை என் உடைமை யாகவும் இந்த விபரீத அஞ்ஞானமே யாய் இருந்தேன்-இப்படி ஸ்வரூபம் நசித்துக் கிடைக்க அனுதாபம் இன்றிக்கே க்ருதக்ருத்யனாய் இருந்தேன்-அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று இருக்கை பிராப்தமாய் இருக்க ஒரு கார்யம் இல்லாதாரைப் போலே இருந்தேன்-அர்த்த தத்வம் இங்கனே யன்றோ என்ன-நானும் உனக்கு பிரகாரமே –-என் உடைமையும் உனக்கு பிரகாரமே
கொள் என்று கிளர்ந்து எழுந்து பெருஞ்செல்வம் நெருப்பாகக்
கொள் என்று தமம் மூடும்; இவை என்ன உலகியற்கை!
வள்ளலே! மணிவண்ணா! உனகழற்கே வரும்பரிசு,
வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே.–4-9-4—இவன் அர்த்தியாது இருக்க தானே -என்னைக் கொள் என்னைக் கொள் என்று மேல் மேல் எனக் கிளர்ந்து வருகிற நிரவதிக சம்பத்தானது –
நிச்சேஷமாக நசிக்க -என்னுதல் -தனக்கு விநாச ஹேதுவாக -என்னுதல்
கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி
கண்ட இன்பம், தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப,
கண்ட சதிர் கண்டொழிந்தேன்; அடைந்தேன் உன் திருவடியே.–4-9-10–ரூபாதிகளை க்ரஹிக்கைக்கு கருவியான சஷூராதிகளாலே அனுபவிக்கப் பட்ட ஸூகம்-ஆத்மாவுக்கு நித்யதர்மமான ஞானம் கர்மத்தால் சங்குசிதம் ஆகையால் உழக்காலே அளக்குமா போலே இந்த்ரியத்வாரா பிரஸ்ருதமான ஞானத்தால் வந்த ஐஹிக ஸூகம்-தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,-சம்சாரிகளுக்கு துர் ஜேயமாய் இந்திரிய ஸூகத்தில் காட்டிலும் பெருத்து பகவத் கைங்கர்ய ஸூகத்தைப் பற்ற அத்யல்பமான ஆத்ம அனுபவ ஸூகம் இவற்றை-ஒழிந்தேன் -விட்டேன்
வேண்டிச் சென்று-அதாவது-வேம்கட வாணனை வேண்டிச் சென்று -8-2-1–என்று திருச் சித்ர கூடத்தில் இருந்தால் போலே திரு மலையில் இருக்கிறவனை யதா மனோ ரதம் அனுபவிக்கைக்காக அபேஷித்து சென்று –திருவடியே சுமந்து-அதாவது-தம் அபேஷிதம் அவன் அப்போதே செய்யாதே ஒரு சைவத்ய முகத்தாலே – திரு அடியே சுமந்து உழல கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை-4-9-9- -என்று திரு அடிகளைத் தந்தாய் என்று ஹ்ருஷ்டராம் படி பண்ணி விட – அப்படி அவன் கொடுத்த திரு அடிகளை சிரஸா வஹித்து
(வேங்கடவாணனை வேண்டிச் சென்று) அவனை அநுபவிக்க வேணுமென்று வேண்டிச் சென்று இவர் அபேக்ஷித்தபடி கிடையாமையாலே. (திருவடியே சுமந்து) “திருவடியே சுமந்துழலக் கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை’” (திருவா. 4 – 9 – 9) என்று அவன் திருவடிகளை ஸிரஸா வஹிப்பிக்க ஸிரஸா வஹித்து.-
நங்கள் வரி வளை யாயங்களோ நம்முடை ஏதலர் முன்பு நாணி
நுங்கட்கு யான் ஓன்று உரைக்கும் மாற்றம் நோக்குகின்றேன் எங்கும் காண மாட்டேன்
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன் தடமுலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன்
வெங்கண் பறவையின் பாகன் எங்கோன் வேங்கட வாணனை வேண்டிச் சென்றே–8-2-1–பரமபதத்தில் இருப்பை ஆசைப் பட்டேன் அல்லேன் -நமக்கு காட்சி தருகைக்கு வர நின்ற இடத்திலே-வேண்டிச் சென்றே–நம்மை ஆசைப்பட்டு நிற்கிறவனை காண ஆசைப்பட்டுச் சென்று -அவன் தான் வரக் கண்டு இருக்கை அன்றிக்கே -அவன் இருந்த தேசத்தளவும் சென்று -அபேக்ஷிதம் பெறாமையாலே சங்கம் சரிந்தன -சென்று -பால் சென்றால் போலே சென்று என்றுமாம்
கூட்டுதி நின் குரை கழல்கள்; இமையோரும் தொழா வகைசெய்து,
ஆட்டுதி நீ; அரவணையாய்! அடியேனும் அஃது அறிவன்;
வேட்கை எலாம் விடுத்து எனை உன் திருவடியே சுமந்து உழலக்
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே.–4-9-9-ருசியுடைய என்னை உன் திருவடிகளிலே கைங்கர்யம் பண்ணி வர்த்திக்கும் படி-அந்நிய சாத்தியமான திருவடிகளிலே கூட்டினாய் -கேட்டார் வாய் கேட்க்கை யன்றிக்கே நான் அனுபவிக்க பெற்றேன் ஆகையால் அறிந்தேன்-
விரைந்து வரும் அளவும்-அதாவது-வீடு திருத்தப் போனவன் விண்ணுலகம் தர விரைந்து வரும் அளவும் – கண்ண நீர் கைகளால் இறைக்கும் இரு நிலம் கை துழாவிருக்கும்-7-2-1- -என்கிற படி
கண்ண நீர் வெள்ளத்தால் உண்டான சேற்றிலே இருந்து ஆற்றாமையாலே நிலம் துழாவி –குடிக் கிடந்த கையறவும்-அதாவது–குடி கிடந்து ஆக்கம் செய்து-9-2-2-என்கிறபடி பிரபன்ன குலத்தில் செய்து போரும் மரியாதை தப்பாமல் – காமுற்ற கையறவோடு -2-1-3-என்கிற படி தாம் ஆசைப் பட்ட பொருள் கை புகுராத இழவோடு இருக்கையாலும்-
வீடு திருத்துவான்போய் விண்ணுலகம் தருவானாய் விரைந்து வருமளவும். (கண்ணநீர் பங்கமாக்கி) *“கண்ணநீர் கைகளாலிறைக்கும்”’ (திருவா. 7 – 2 – 1) என்று கண்ணநீர் வெள்ளமிட இருந்து. (நிலந்துழாவி) ”இருநிலம் கைதுழாவிருக்கும்”” (திருவா. 7 – 2 – 1) என்று ஆற்றாமையாலே நிலம் துழாவி (குடிக்கிடந்த) ““குடிக்கிடந்தாக்கம் செய்து” (திருவா. 9 – 2 – 2) என்கிறபடியே ப்ரபந்ந குலத்தில் செய்து போருகிற மர்யாதையைத் தப்பாமலிருந்து. (கையறவும்) “காமுற்ற கையறவோடு”” (திருவா. 2 – 1 – 3) என்று ஆசைப்பட்ட பொருள் கைபுகுராத இழவோடே இருக்கையாலும்-
கங்குலும் பகலும் கண்துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்; ‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்; இரு நிலம் கைதுழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1—கண்ண நீர் கைகளால் இறைக்கும்;-கண் உறங்காமையாலே போது போக்கு அரிதாய் -அதினாலே கண்ண நீர் வெள்ளம் இடத் தொடங்கிற்று -இவ்வாற்றாமையில் அவன் வாராது ஆழியான் -என்று அத்யவசித்து -வரும் போது காண்கைக்கு கண்ண நீர் பகையாக ஒண்ணாது என்று அத்தை மாற்றப் பாரா நின்றாள் -கடலைக் கையாலே இறைக்கத் தொடங்குவாரைப் போலே இது என்ன சாஹசம் என்கிறாள் -கடல் கொண்ட கண்ணீர் அறிவி செய்யா நிற்கும் இறே -இவள் கண்ணும் கண்ண நீரும் தாயாருக்கு சுபாஸ்ரயமாய் யாயிற்று இருக்கிறது –கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் –இவள் தர்சன விரோதி என்று மாற்றப் பார்க்கிறாள் இத்தனை –இரு நிலம் கைதுழா இருக்கும்;-இம் மஹா பிருத்வி எல்லாம் கைகளால் துழாவா நின்றாள் இறே -பூமிப பரப்பு அடங்க ஒரு பாஜனத்துக்கு உட்பட்ட சந்தனம் போலே யாயிற்று இவள் கைக்கே படுகிறது -சர்வ சக்தியே வேண்டா வாகாதே பூமியை அளக்க -ஆற்றாமையாலும் அளக்கலாம் ஆகாதே –
குடிக் கிடந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த வடிமைக்குக் குற்றேவல் செய்து உன் பொன்
அடிக் கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி நீ யொருநாள்
படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கணியாய்
கொடிக்கொள் பொன் மதில் சூழ் குளிர் வயல் சோலைத் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-2—குடிக்கு ஈடாக வர்த்தித்து -குல மரியாதை தப்பாதே வர்த்திக்கை -இஷுவாகு வம்சயரில் -கநிஷ்டர் முடி சூடி அறிவார் இல்லை -என்றான் இ றே-ஸ்ரீ பரதாழ்வான்–ஆக்கம் செய்து-குடியில் பண்டு இல்லாத நன்மைகளை யுண்டாக்கி –பங்கதிக் தஸ்து ஜடில -என்கிறபடியே ஜடாவல்கலமும் கண்ணும் கண்ண நீருமாய் இருக்கை –
கோதில் அடிமை உறுமோ என்பித்த புலன் கொள் நித்ய சத்ரு விசிந்தன முமான பிராதா படியும்-அதாவது ஸ்ரீ சத்ருன ஆழ்வான் –கச்சதா மாதுல குலம் பரதேன தத அநக சத்ருனோ நித்ய சத்ருனோ நீத ப்ரீதி புரஸ் க்ருத –அயோத்யா -1–1 என்கிற படியே பாகவத சேஷத்வமே பரம புருஷார்த்தம் என்று ஸ்ரீ பரத ஆழ்வானுக்கே சேஷ பூதனாய் – அவருடைய பாவநத்வ போக்யத்வங்களிலே கால் தாழ்ந்து –
ரூப ஒவ்தார்ய குனைஸ் பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம்-அயோத்யா 3-28- என்கிறபடியே வயிர உருக்காய் — ஆண்களையும் பெண் உடை உடுத்தும் பெருமாளுடைய வடிவழகில் துவக்குண்ணாதே-
பரத அனுவர்த்தியில் போகாத படி தன் பக்கலில் துவக்க வற்றும் என்னும் அத்தாலே – தம்முடைய நிஷ்டைக்கு அது நித்ய சத்ரு என்று அறுதி இட்டு இருக்கச் செய்தே – ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு உகப்பு ஆகையாலே – உத்தேச்ய ப்ரீதி என்று புரிந்து பெருமாள் வடி வழகில் நெஞ்சு சென்று
-விதிச்தயந்த்–அயோத்யா -89-3- -என்ற படி எப்போதும் அதை மனசில் கொண்டு இருப்பது போல் –
(கோதிலடிமை உறுமோ என்பித்த) ஸ்ரீஸத்ருக்நாழ்வான் “கச்சதா மாதுல குலம் பரதேந ததா அநக,சத்ருக், நோ நித்ய சத்ருக்நோ நீத: ப்ரீதி புரஸ்க்ருத”” (ரா. அ. 1 – 1) என்று – ““அநக’, “*நித்ய சத்ருக்ந’” என்று ஸ்ரீபரதாழ்வானுடைய பாவநத்வ போக்யத்வங்களிலே கால் தாழ்கையாலே “பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம்”‘ (ரா. அ. 3 – 29) என்று ஸஜாதீயரையும் ஈடுபடுத்தவற்றான பெருமாளுடைய விக்ரஹத்திலே துவக்குண்ணாதே, அந்த வடிவழகுதான் பரதாநுவ்ருத்தியில் போகாதபடி துவக்க வற்றாகையாலே நித்ய ஸத்ருவாக நினைக்கிறாப் போலே.–
இவரும் –கோதில் அடிமை –அதாவது –-கோதில் அடியார் -8-10-9–என்று பிரதம அவதியில் நிலை போல் அன்றிக்கே -ஸ்வரூபத்தின் உடைய எல்லை நிலம் ஆகையாலே-கோதில் அடிமை-என்று சொல்லப் படுகிற பாகவத சேஷத்தின் உடைய ரசம் –உறுமோ என்பித்த-அதாவது-அவன் அடியார் சிறு மா மனிசராய் என்னை ஆண்டார் —இங்கே திரிய 8–10-3– அவர்களைத் தவிர்ந்து –செம் தாமரைக் கண் திரு குறளன் நறு மா விரை நாண் மலர் அடிக் கீழ் புகுதல் –பாவியேனுக்கு –உறுமோ ?-8-10-3– என்று சொல்லுவிக்கப் பட்டதாய் – சர்வ இந்திரிய அபஹார ஷமம் ஆகையாலே அந்த பாகவத சேஷ நிஷ்டா விரோதியான பகவத் விக்ரகத்தை உத்தேச்ய ப்ரீதி என்னும் அத்தைப் பற்ற – திரி தந்தாகிலும் கண்ணி நுண்-3–படியே மீண்டு –புலன் கொள் வடிவு என் மனத்ததாய்-8-10-4- -என்று எப்பொழுதும் தம் மனசுக்கு விஷயமாய் கொண்டு இருக்கையாலும் –விசிந்தனம்-என்கிற இதுக்கு இப்படி வியாக்யானம் பண்ணிற்று – இதின் பட்டோலை ஆனதிலே –உறுமோ என்று நித்ய சத்ருவை வென்று –
புலன் கொள் வடிவை விசிந்தயனாய் இருக்கும் -என்று – விசின்தயன் என்ற ஒரு வசனம் உண்டாகவும் எடுத்து –இப்படி இவர் தாமே அருளிச் செய்து வைக்கையாலே . .. இவ்விடத்திலும் சிந்தனம் என்னாமல் விசிந்தனம் என்றது அவ் வசன ஸூசகம் இறே..-விசிந்தனம் என்ற வசனம் -இன்ன இடத்தில் என்று த்ருஷ்டம் ஆய்த்து இல்லை– வந்த இடத்திலே கண்டு கொள்வது — (அயோத்யா -89-3-நாஹம் ஸ்வபிமி ஜாகர்மி தமே வார்யம் விசிந்தயன்-என்கிற பாடம் பின்பு நாஹம் ஸ்வபிமி ஜாகர்மி ராமமே வாநு சிந்தயன்-என்கிற பாடமாக மாறிற்று என்பர் )
இவரும் ““கோதிலடிமை”’ (திருவா. 8 – 10 – 9) என்று சொல்லப்படுகிற பாகவத ஸேஷ்த்வ ரஸம் (உறுமோ என்பித்த) ““அவனடியார் சிறு மா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரிய – அதுவன்றி உலக மூன்றுமுடன் நிறைய சிறுமாமேனி நிமிர்த்த என் செந்தாமரைக் கண் திருக்குறளன் – நறுமா விரை நாண் மலரடிக்கீழ்ப் புகுதல் – பாவி யேனுக்குறுமோ’” (திருவா. 8 – 10 – 3) என்னும்படி பண்ண அந்த பாகவத ஸேஷத்வ ரஸத்தாலே. (புலங்கொள் நித்ய சத்ரு விசிந்தநமும்) ““புலங்கொள் வடிவு’” (திருவா. 8 – 10 – 4) என்று ஸர்வேந்த்ரி யாபஹார க்ஷமமான வடிவழகையும் உபேக்ஷிக்கையாலும்.
தமர்கள் கூட்ட வல்வினையை நாசம் செய்யும் சதிர் மூர்த்தி
அமர் கொள் ஆழி சங்கு வாள் வில் தண்டாதி பல்படையன்
குமரன் கோல வைங்கணை வேள் தாதை கோதில் அடியார் தம்
தமர்கள் தமர்கள் தமர்களாம் சதிரே வாய்க்க தமியேற்கே–8-10-9-–அப்பருவத்துக்கும் அழகுக்கும் தோற்று இருக்கும் அநந்ய பிரயோஜனரான ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய அடிமையில் முடிந்த நிலம் ஆக வேணும் -இந்த மிக உயர்ந்த புருஷார்த்தம் என்றும் ஒக்க வாய்க்க வேண்டும்-என்பார் -சதிரே வாய்க்க -என்கிறார்-தமியேற்கே–சென்ற காலத்திலும் ஸ்ரீ சத்ருகன ஆழ்வானைத் தேடித் பிடிக்க வேண்டி-இருக்கையாலே -இப்பொழுது நடக்கும் காலத்திலும்- தமக்கு உபமானம் இன்றிக்கே இருக்கை
உறுமோ பாவியேனுக்கு இவ்வுலக மூன்றுமுடன் நிறைய
சிறுமா மேனி நிமிர்ந்த எம் செந்தாமரைக் கண் திருக் குறளன்
நறு மா விரை நாள் மலரடிக் கீழ் புகுதல் அன்றி அவன் அடியார்
சிறுமா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே-8-10-3—ஸ்ரீ வாமனனுடைய ஸுந்தர்ய சேஷ்டிதாதிகளிலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்-ப்ரபாவங்களைப் பார்த்தால் -பரிச்சேதிக்கப் போகாதே -வடிவைப் பார்த்தால் நம்மோடு ஒக்கச் சொல்லலாம் படி இருக்கை -சர்வேஸ்வரன் மனுஷ்ய சஜாதீயனாய் முகம் கொடுத்து கொண்டு இருக்குமா போலே யாயிற்று இவர்களும்-என்னை யாண்டார்-இங்கே திரியவே-கண் வட்டத்தில் சஞ்சரியா நிற்க –அன்றி-அவர்களைத் தவிர்ந்து —நறு மா விரை நாள் மலரடிக் கீழ்—உறுமோ பாவியேனுக்கு–இவருடைய கண்ணி நுண் சிறுத் தாம்பு இருக்கிற படி -ஸ்ரீ மதுரகவிகளுக்கும் அடி இது இறே -பொய் நின்ற ஞானம் தொடங்கி முனியே நான்முகன் அளவும் அனுவர்த்தித்த விடத்து ஆழ்வார் தமக்கு பிரயோஜன ரூபமாக சொன்ன பயிலும் சுடர் ஒளி-நெடுமாற்கு அடிமை யே தமக்கு தஞ்சமாக பற்றினார் -யான்யஸ்மாகம் ஸூ சரிதாநி -என்ன கடவது இறே –
இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என் இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்த
செங்கோ லத்த பவள வாய்ச் செந்தாமரைக் கண் என் அம்மான்
பொங்கு ஏழ் புகழ்கள் வாய ஆய் புலன் கொள் வடிவு என் மனத்தது ஆய்
அங்கு ஏய் மலர்கள் கைய ஆய் வழி பட்டு ஓட அருளிலே–8-10-4–சர்வ இந்திரிய அபஹார ஷமமான வடிவு என் மனசிலே சந்நிஹிதமாய்-
கீழ் சொன்ன ஆகாரங்களை உடையரான இளைய பெருமாள்-ஸ்ரீ பரத ஆழ்வான் ஸ்ரீ சத்ருகன ஆழ்வான் ஆகிய திரு தம்பிமார் மூவர் படியும் இவர் பக்கலிலே காணலாம் —
(ஆன ப்ராதாக்கள்) இப்படியிருந்துள்ள இளையபெருமான், ஸ்ரீபரதாழ்வான், ஸ்ரீஸத்ருக்நாழ்வான் என்கிற ப்ராதாக்கள்.
அப்பொழுதைக்கு அப்பொழுது போனாய் என்னும் மாதா பிதாக்கள் படியும் காணலாம்-அதாவது –
அப்பொழுதைக்கு அப்பொழுது என்னும் பிதா அதாவது –சக்கரவர்த்தி –ந ததர்ப்ப சமாயாந்தம் பஸ்ய மானோ நராதிப–அயோத்யா -3-29- -என்கிற படியே வைத்த கண் வாங்காதே உத்தரோத்தர அனுபவியா நிற்கச் செய்தே -ஒருகாலும் த்ருப்தன் ஆகாமல் அநுபுபூஷுவாய் செல்லுமா போலே –இவரும் –
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு -இத்யாதிப் படி யாவத் காலம் அனுபவியா நின்றாலும் அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதம் –2-5-4- என்று அனு ஷணம் எனக்கு அதிருப்தி கரமான போக்ய வஸ்து என்று மேன்மேலும் அபிநிவிஷ்டர் ஆகையாலும்-
(அப்பொழுதைக்கப்பொழுது போனாய் என்னும் மாதா பிதாக்கள்) “ந ததர்ப்ப ஸமாயாந்தம்”” (ரா. ௮. 3 – 30) என்று பெருமாளை ஸர்வ காலமும் அநுபவியா நிற்கச் செய்தேயும் பர்யாப்தனாகாத சக்ரவர்த்தியைப் போலே இவரும் ”அப்பொமுதைக்கப்பொழுதென் ஆராவமுதம்” (திருவா. 2 – 5 – 4) என்று ஸர்வ காலமும் அநுபவியா நிற்கச் செய்தேயும் பர்யாப்தி பிறவாத அபிநிவேஸத்தை உடையராகையாலும்,-
எப்பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும்
அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம் கை கமலம்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி ஊழி தொறும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே –2-5-4-–க்ஷண காலமும் -கலா காஷ்டாதிகளாலும் பேதிக்க ஒண்ணாத அத்யல்ப காலம் அனுபவிப்பது-ஒரு நாள் அனுபவிப்பது -ஒரு மாசம் அனுபவிப்பது -ஒரு சம்வத்சரம் அனுபவிப்பது-கல்பம் தோறும் கல்பம் தோறும் அனுபவிப்பது -இப்படி கால தத்வம் உள்ளதனையும் அனுபவியா நின்றாலும் பூர்வ க்ஷணத்தில் அனுபவம் போலே அன்றியே உத்தர க்ஷணத்தில் அனுபவம் இருப்பது – ஊழி ஊழி -மேல் போக்கு இல்லாமையால் மடிக்கிறார்-தாரா வாஹிக ஞானத்தில் கால உபஷடம்பாதிகளால் வருவதொரு பேதம் உண்டு இறே ஞானத்துக்கு-
அது போல் அன்றிக்கே அனுபவித்த ஒன்றை அனுபவித்தால் போலே நித்ய அபூர்வமாய் இருக்கை-
போனாய் என்னும் மாதா –அதாவது –யமளார்ஜுனயோர் மத்யே ஜகாம – ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-6-15-என்று கிருத சங்கேதமாய் நலிய வந்து நின்ற யமளார்ஜுனர் நடுவே கிருஷ்ணன் போன போது
யசோதை பிராட்டி ஓடிச் சென்று , எடுத்து கொள்ளா நிற்க – மருதுகளின் பெருமையையும் ,இவன் மவ்க்யத்தையும் கண்டு வயிறு எரிந்தி கொண்டு முகத்தைப் பார்த்து – இப் பெரிய மருதிகளின் நடுவே போனாயே -என்று வெறுத்தார் போலே –இவரும் – அதீத கால ஸ்மிதமாய் இருக்கவும் சம காலத்தில் போலே பிரகாசிக்கையாலே – அப்படி வயிறு எரிந்து கொண்டு –-போனாய் மா மருதின் நடுவே -5-1-2-என்கையாலும்-பிதாவும் மாதாவுமான அவர்கள் இருவர் படியும் இவர் பக்கல் காணலாம் என்கை-
போனாய் மாமருதின் நடுவே! என் பொல்லா மணியே!
தேனே! இன்னமுதே! என்றேன்றே சில கூத்துச் சொல்லத்
தானேல் எம்பெருமான் அவன் என்னாகி ஒழிந்தான்
வானே மாநிலமே மற்றும் முற்றும் என்னுள்ளனவே.–5-1-2—போனாய் -யாமலார்ஜுனங்கள் நடுவே போன போது யசோதை பிராட்டி ப்ரேமத்தாலே சொன்ன வார்த்தையை -ப்ரேம கந்தம் இன்றிக்கே இருக்கிற நான் சொன்னேன் –-போனாய் -கை கழிந்தது -இனி பிரதிகிரியை இல்லை -பல அனுபவமே என்று இருக்கிறார் -பூத காலமாய் இருக்க இவருக்கு வர்த்தமான காலம் போலே இருக்கிறது –ஈஸ்வரன் கொடுத்த ஞான வைஸத்யம் இவருக்கு வயிறு எரிச்சலுக்கு உறுப்பாயிற்று -நலிய வந்தவை தான் நலிய பற்றாமை தானே சென்று புக்கான் என்கிறார்-மா மருது-மஹா அசுரர்கள் வடிவுக்குத் தகுதியாக ஆவிர்பவித்த மருதுகள்-இவன் மௌக்யத்தை அறிந்து பணைத்தவை என்றுமாம் -அவ்வருகே சாய்ந்தவை இப்பெரிய வடிவோடே உள்ளே சாய்ந்தனவாகில்-என்னாவக் கடவது என்கிறார் –
நடுவே போனாய் –இருவரும் க்ருத சங்கேதர்களாய் இருக்க -ஒன்றிலே துளை கண்டு போனாய் போலே யாயிற்று போனது- புணர் மருதம் இறே – மௌக்யத்தாலே ஓர் அருகு ஒதுங்க அறியானே -யாமளார்ஜ்ஜுன யோர் மத்யே ஜகாம என்று ருஷி வயிறு பிடிக்கிறான் -இவர் மா மருதுவின் நடுவே போனாய் என்கிறார்
போனாய் மா மருதின் நடுவே”’ (திருவா. 5 – 1 – 2) என்று யமளார்ஜநங்களின் நடுவே போன போது யஸோதைப் பிராட்டி வயிறெரிந்தாப் போலே இவரும் அதீத காலமாயிருக்கச் செய்தேயும் ஸம காலத்திற் போலே வயிறு பிடிக்கையாலும்.
செந்தீ தண் காற்று இள நாகம் முதலான பகை அற சிந்தை செய்து எங்குமுளன் என்னும் பள்ளிப் பிள்ளை படியையும் காணலாம் –-அதாவது ஸ்ரீ பிரஹ்லாதன் –நாக்நிர் தஹதி நைவாயம் சஸ்த்ரைஸ் சின்னோ ந சோரகை ஷயம் நீதோ நவாதேன ந விஷேண ந க்ருத்யா––ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-19-58-என்றும் – சத்வா சக்தமதி கிருஷ்னே தஸ்ய மானோ மஹோரகை நவி வேதாத்மனோ காத்ரம் தத் ஸ்முருத் யாஹ்லாத சம்ஸ்தித–ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-38- -என்கிறபடி அக்நி முதலானவை பாதகம் ஆகாத படி – சர்வ பூதாத்மகே தாத ஜகந்நாதே ஜகன் மயே பரமாத்மனி கோவிந்தே மித்ராமித்ர கதா குத – ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-19-36- என்று மித்ரா அமித்ரா அவகாசம் அற சர்வமும் பகவத் ஆத்மகதயா
அனுகூலமாக அனுசந்தித்து –எங்கும் உளன் கண்ணன் -2-8-9–என்கிறபடியே – உர்வ்யாமஸ்தி- ஸ்ரீ விஷ்ணு புராணம் – தொடங்கி -சர்வத்ராஸ்தி-என்று பிறர்க்கும் உபதேசித்தால் போலே
(செந்தீ தண்காற்று இத்யாதி, ) ““நாக்நிர்தஹதி தைவாயம் மஸ்தரைஸ்சிந்நோ மஹோரகை.। க்ஷயம் நீதோ ந வாதேந ந விஷேண நக்ருதயயா”‘ (வி. பு. 1 – 19-59), “ஸத்வாஸக்தமதி: கருஷ்ணே தஸ்ய மாநோ மஹோரகை, ! ந விவேதாத்மநோ காத்ரம் தத்ஸ்ம்ருத் யாஹ்லாத,ஸம்ஸ்தித?’” (வி. பு. 1 – 17 – 39) என்று அக்நி முதலான பாதக பதார்த்தங்களும் தன்னை பாதியாதபடி **ஸர்வ பூதாத்மகே தாத ஜகந்நாதே, ஜகந்மயே । பரமாத்மநி கோவிந்தே, மித்ராமித்ரகதா குத?” (வி. பு. 1 – 19 – 37) என்று ஸர்வத்தினுடையவும் பகவதாத்மகத்வாநு ஸந்தாநத்தாலே ஸத்ரு மித்ர விபாகமற ஸர்வமும் தனக்கு அநுகூலமாக அநுஸந்தித்து, “எங்குமுளன் கண்ணன்” (திருவா. 2 8 – 9) என்கிறபடியே ‘“உர்வ்யாமஸ்தி”” என்று தொடங்கி ““ஸர்வத்ராஸ்தி’‘ என்று பிறர்க்கு உபதேஸிக்கவும் வல்லனாய், “’பள்ளியிலோதி வந்ததன் சிறுவன்”, “பிள்ளையைச் சீறி” (திருமொழி 2 – 8 -8) என்று சொல்லப்படுகிற பள்ளிப் பிள்ளையான ஸ்ரீப்ரஹ்லாத ஆழ்வானைப் போலே.-
எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கில்லை யால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என்
சிங்கப்பிரான் பெருமை யாராயும் சீர்மைத்தே –2-8-9—சர்வேஸ்வரன் சர்வகதன் என்றான் -இதுவாயிற்று அவன் சொன்ன தப்பு –மயா ததாமிதம் சர்வம் ஜகத் அவ்யக்த மூர்த்தி நா -என்றும்-நத தஸ்தி விநாயத் ஸியாத் மயா பூதம் சராசரம் -என்று அவன் தானே சொன்னதை யாயிற்று இவன் சொல்லிற்று –-இவ் வர்த்தத்தை சத்ருக்கள் சொல்லிலும் ஆதரிக்க வேணும்-இவன் பருவத்தாலும் சம்பந்தத்தாலும் ஏதேனும் ஒன்றை சொல்லிலும் ஆதரிக்க வேணும் –
பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் வாயில் ஓர் ஆயிர நாமம்
ஒள்ளியவாகிப் போத வாங்கு அதனுக்கு ஒன்றுமோர் பொறுப்பிலனாகி
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்பப் பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய்
தெள்ளிய சிங்கமாகிய தேவைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே—-2-3-8—பள்ளி ஓதும் பருவத்தில் சொன்னவை அடங்கலும்-சிரஸா வஹிக்க வேண்டும்படி இருக்கும் –-இதாயிற்று பருவம் -இருந்தபடி –
அதுக்கு மேலே தன் வயிற்றில் பிறந்த பிரஜை சொன்னவை அடையப் பொறுக்க வேணும் –திரு நாமம் சொன்னதுவே ஹேதுவாக வயிற்றில் பிறந்தவனை கை விட்டான் அவன் – திரு நாமம் சொன்னாரோடே தமக்கு சம்பந்தமாக நினைத்து இருக்கிறபடியாலே –பிள்ளையை –என்கிறார்-கோபத்தாலே செய்வது அறியாதே தூணைத் தட்ட –
இவரும் –செந்தீ தண் காற்று இள நாகம் முதலான பகை அற-அதாவது –-அறியும் செம்தீயை தழுவி அச்சுதன் என்னும் மெய்யே வாள் எறியும் தண் காற்றை தழுவி என்னுடை கோவிந்தன் என்னும் -4-4-3–என்றும் போம் இள நாகத்தின் பின் போய் அவன் கிடக்கை ஈது என்னும் -4-4-5-என்று அக்நி முதலான பாதக பதார்த்தங்கள் பகவதாத்மகத்வேன அனுகூலமாம் படி — என் முன்னை கோளரியே —-உன்னை சிந்தை செய்து —-என் முன்னை தீ வினைகள் முழு வேர் அரிந்தனன் யான் — முடியாதது என் எனக்கு -2-6-6-என்று அவனை அனவரதம் அனுசந்தானம் பண்ணி
இவரும் (செந்தீ தண்காற்று இத்யாதி, பகையறச்சிந்தைசெய்து) ”அறியும் செந்தீயைத் தமுவி அச்சுதனென்னும் மெய்வேவாள் எறியும் தண் காற்றைத் தழுவி என்னுடைக் கோவிந்தனென்னும்”” (திருவா. 4 – சீ – 3), ““போமிள நாகத்தின் பின் போய் அவன் கிடக்கை ஈதென்னும்’” (திருவா. 4 – 4- 5) என்றும் அப்படியே அக்நி முதலான பாதக பதார்த்தங்களும் பகவதாத்மகத்வாநுஸந்தாநத்தாலே அநுகூலமானபடி, “என் முன்னைக் கோளரியே – உன்னைச் சிந்தை செய்துசெய்து – என் முன்னைத் தீவினைகள் முழுவேரரிந்தனன் – முடியாததென் எனக்கேலினி”’ (திருவா. 2 – 6 – 6) என்று அதுஸந்தித்து,
அறியும் செந்தீயைத் தழுவி,‘அச்சுதன்’ என்னும்;மெய் வேவாள்;
எறியும் தண் காற்றைத் தழுவி, ‘என்னுடைக் கோவிந்தன்’ என்னும்;
வெறி கொள் துழாய் மலர் நாறும் வினையுடை யாட்டியேன் பெற்ற
செறிவளை முன்கைச் சிறுமான் செய்கின்றது என்கண்ணுக்கு ஒன்றே?–4-4-3—தாஹகம் என்று அறிந்து போருமத்தை தழுவா நின்றாள்-மந்த்ர யவ்ஷாதிகளாலே பிரதிபந்தக சக்தி தான் உண்டாயத் தழுவுகிறாள் அன்றே-தேஜஸாம் ராசி மூர்ஜ்ஜிதம் -என்று ஒளி உடைமையை பார்த்து தழுவா நின்றாள் –பொரு நீர்க் கடல் தீப்பட்டு எங்கும் திகழும் எரியோடு செல்வது ஒப்ப -என்னுமா போலே-மாணிக்கப் படி சாத்தி வந்து தன்னோடே அணைவதாக நிற்கிறானாக கொண்டு தழுவா நின்றாள் –-அச்சுதன்’ என்னும்;-இத்தசையிலே வந்து சந்நிஹிதனாய்-என்னை மங்காமே நோக்கினான் என்னா நின்றாள்
எல்லா அவஸ்தையிலும் உள்ளவர்கள் உடைமையை நழுவ விடாதார்கள் இறே-மெய் வேவாள்;
அதக்த காத்ரையாய் இரா நின்றாள்-இவள் பிரமித்தால் அது தன் கார்யம் செய்தால் ஆகாதோ –
பஸ்யாமி பத்மாஸ் தரணாஸ் த்ருதானி சீதானி சர்வாணி திஸாம் முகாநி –என்னக் கடவது இறே-
சீதோ பவ என்றாரும் இல்லை கிடீர் –சீதோ பவ என்றவள் தானே இறே இங்கனே செய்கிறாள் –
எங்கும் உளன் என்னும்-அதாவது-கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்துளன் –1-1-6-என்று அவனுடைய சர்வகதத்வத்தை பிறரும் அறியும்படி அருளிச் செய்கையாலே- பள்ளிப்பிள்ளைப் படியும் காணலாம் – அதாவது பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் -பெரிய திருமொழி -2-3-8-என்றும் பிள்ளையைச் சீறி-பெரிய திருமொழி -2-3-8– -என்றும் சொல்லப் பட்ட
பள்ளிப் பிள்ளையான பிரகலாதன் படியும் இவர் பக்கல் காணலாம்–
உன்னைச் சிந்தை செய்து செய்து உன் நெடுமா மொழியிசை பாடியாடி என்
முன்னைத் தீ வினைகள் முழு வேரரிந்தனன் யான்
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட என்
முன்னைக் கோளரியே முடியாதது என் எனக்கே –2-6-6—அநாதி கால சஞ்சிதமான கர்மங்களை -சவாசனமாகப் போக்கினேன்-யான்–யான் என்கிறது பேறு தம்மைதான படியால் விரோதியை நீ போக்கினை படி என் என்ன -நரசிம்ஹமமாய் ஹிரண்யனைப் போக்கினால் போலே-உன்னைச் –
வகுத்தவனுமாய் -உபகாரகனுமான உன்னை–ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு உபகரித்ததும் தமக்கு என்று இருக்கிறார்-ஆஸ்ரிதரிலே ஒருவருக்குச் செய்தது தனக்குச் செய்ததாக நினைத்து இராத வென்று பகவத் சம்பந்தம் இல்லையாம் அத்தனை-முடியாதது என் எனக்கே –-ஆஸ்ரித ப்ரதிஞ்ஞா சமயத்திலே உன்னை அழிய மாறி தோற்றுவாயான பின்பு பெறாதது உண்டோ -எல்லாம் பெற்றேன் அல்லேனோ-
“’கரந்தசிலிடந்தொறுமிடந்திகழ்பொருள் தொறும் கரந்தெங்கும் பரந்துளன்”’ (திருவா. 1 – 1 – 10) என்று அவனுடைய ஸர்வகதத்வத்தை அருளிச் செய்கையாலும்
முற்றவிட்டு மற்றிலேன் என்னும் தர்மாத்மா-ஸ்ரீ விபீஷண ஆழ்வான் படியம் காணலாம்-அதாவது
ஸ்ரீ விபீஷண ஆழ்வான்-த்யக்த்வா புத்ராம்ஸ் ச தாராம்ஸ்ச ராகவம் சரணம் கத –யுத்த -17-14-.-என்றும் –
பரித்யக்தா மயா லங்கா மித்ரானி ச தநாநி ச பவத்கதம் மே ராஜ்யஞ்ச ஜீவிதஞ்ச ஸூகாநிவை –யுத்த -19-5-என்று இலங்கையோடு கூட புத்திர தாராதிகள் சர்வத்தையும் விட்டு சக்கரவர்த்தி திரு மகனே தமக்கு எல்லாம் என்று பற்றினால் போலே–இவரும் –-பாதம் அடைவதன் பாசத்தாலே மற்ற வன் பாசங்கள் முற்ற விட்டு -8-2-11–என்று சம்சாரிக சகல சங்கங்களையும் ஸ வாசனமாக விட்டு –
தயரதற்க்கு மகனை தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாகவே-3-6-8 -என்று சக்கரவர்த்தி திருமகனையே தமக்கு சர்வ பிரகார ரஷகனாக பற்றுகையாலே- விபீஷணஸ்து தர்மாத்மா ந து ராக்ஷஸ சேஷ்டித –ஆரண்ய –17-23-– என்று தர்ம புத்தி உடையவன் மாத்ரம் அன்றிக்கே –
ராமோ விக்ரஹவான் தர்ம-ஆரண்ய –37-13- -என்று சொல்லப் பட்ட தர்ம ஸ்வரூபனான
சக்கரவர்த்தி திரு மகனையே தனக்கு தாரகமாக உடையவன் ஆகையாலே – தர்மாத்மா என்று விசேஷஞர் சொல்லும் ஸ்ரீ விபீஷண ஆழ்வான் படியும் இவர் பக்கல் காணலாம்-
(முற்றவிட்டும் மற்றிலேன் என்னும் தூர்மாத்மா) ‘பரித்யக்தா மயா லங்கா மித்ராணி ச தநாநி ச | பவத் கதம் மே ராஜ்யஞ்ச ஜீவிதஞ்ச ஸுகாநி வை”’ (ரா. யு. 19 – 5), “த்யக்த்வா புத்ராம்ஸ்ச தாராம்ம்ச ராகவம் ஸரணம் ௧த ச’” (ரா. யு. 17 – 16) என்றும் லங்கையோடே கூட புத்ர தாராதிகளான ஸர்வத்தையும் விட்டு எல்லாம் சக்ரவர்த்தித் திருமகனாகப் பற்றின ‘“விபீஷணஸ்து தர்மாத்மாந து ராக்ஷஸ சேஷ்டித?’”” (ரா. ஆ. 17 24) என்ற, “ராமோ விக்,ரஹவாந் தர்ம?” (ரா. ஆ. 37 -13) என்று தர்ம ஸ்வரூபமான சக்ரவர்த்தித் திருமகனைத் தனக்கு தரரகமாக உடையனாகையாலே தர்மாத்மா என்று சொல்லப்படுகிற ஸ்ரீவிபீஷணப் பெருமாளைப் போலே இவரும். (முற்றவிட்டு) “பாதமடைவதன்பாசத்தாலே மற்ற வன் பாசங்கள் முற்ற விட்டு” (திருவா. 8 – 2 – 11) என்று ஸாம்ஸாரிகமான ஸகல ஸங்கத்தையும் ஸவாஸநமாக விட்டு. (மற்றிலேன் என்று) தயரதற்கு மகன் தன்னை யன்றி மற்றிலேன் தஞ்சமாகவே”’ (திருவா. 3 – 6 – 8) என்று சக்ரவர்த்தித் திருமகனையே தஞ்சமாகப் பற்றுகையாலும்.
பாதமடை வதன் பாசத்தாலே மற்றவன்பாசங்கள் முற்ற விட்டு
கோதில் புகழ்க் கண்ணன் தன்னடி மேல் வண் குருகூர் சடகோபன் சொன்ன
தீதில் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவையுமோர் பத்திசை யோடும் வல்லார்
ஆதுமோர் தீதிலராகி இங்கு மங்கு மெல்லாம் அமைவார்கள் தாமே–8-2-11—திருவடிகளில் கிட்டுகையில் உண்டான சங்கத்தால் புறம்பு உண்டான வலிய சங்கங்களை நிச்சேஷமாக விட்டார் -இதுவாயிற்று இத்திருவாய் மொழியிலே சொல்லிற்று யாயிற்று -புறம்புள்ள பற்று அற்று திருவடிகளிலே ஆசைப்பட்டவர் அல்லர் -மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு -என்கிறபடியே திருவடிகளிலே சங்கத்தால் உபாதிகமான பாஹ்ய சங்கத்தை தவிர்ந்தவர்
வாளி பொழிந்த நிர்க்குண விச்வாத்மா உள்ளே வுறைய வீர சரிதம் ஊணாக கற்பார் பாவம் மற்றிலேன் என்னும் ராம தாசன் படியும் காணலாம் –-அதாவது திருவடி –-நிர்குண பரமாத்மா ஸௌ தேஹந்தே வ்யாப்ய திஷ்டதி -பாரதம் –ஆரண்யம் -149-8–என்கிறபடியே விரோதி வர்க்கத்தை கிழங்கு எடுக்கையாலே ஏறிட்ட நாண் இறங்கிட்டு –-பவான் நாராயணோ தேவ -யுத்த -130-13-என்கையாலே பரமாத்ம சப்த வாச்யனாய் கொண்டு – விஸ்வாத்மாநம்-தைத்ரியம் -என்கிறபடியே விச்வத்துக்கும் ஆத்ம பூதனாய் இருக்கிற சக்கரவர்த்தி திரு மகனைத் தன்னுள்ளே உடையவனாய் –-சோத்ரை வஹந்த ஹனுமான் பரமாம் விமுக்தம் புத்த்யா விதூய சரிதம் தவ சேவ தேசவ் –அதிமானுஷ ஸ்தவம் -32-என்கிறபடியே சக்கரவர்த்தி திரு மகனின் வீர சரித்ரத்தைப் போக்யமாக உடையனாய் –-ஸ்நேஹோ மே பரமோ ராஜம்ஸ்த்வயி நித்யம் ப்ரதிஷ்டித பக்திஸ் ச நியதா வீர பாவோ நான் யத்ர கச்சதி– உத்தர காண்டம் –40-15-என்று குணத்தாலும் சரத்தாலும் , அனுகூலரையும் பிரதி கூலரையும் ஜெயிக்கும் வீரரான சக்கரவர்த்தி திரு மகன் அளவிலே எப்போதும் பிரதிஷ்டமாய்-இதுக்கு மேல் இல்லை என்கிற ஸ்நேகத்தாலும் , நியதியான பக்தியாலும் -இவ் விஷயத்தை விட்டு பரத்வத்தில் தன் நெஞ்சு போகாமை
சொல்லுகிற இடத்தில் -பரத்வத்தின் பேரும் சொல்லுகை அசஹ்யமாய் –அன்யத்ர – என்னும்படி –
சக்கரவர்த்தி திருமகனை அல்லாது அறியேன் என்று இருந்தால் போலே
(வாளிபொழிந்த இத்யாதி, ) “நிர்குண பரமாத்மாஸெள தேஹம் தே வ்யாப்ய திஷ்ட,தி”’ (பா. ஆ. 147 – 8) என்று – ஏறிட்ட நாணை இறங்கிட்ட சக்ரவர்த்தித் திருமகனைத் தனக்குள்ளே உடையனாய், “*ஸோத்ரைவ ஹந்த ஹநுமாந் பரமாம் விமுக்திம் புத்த்யா விதூய சரிதம் தவ ஸேவதேஸெள”’ (அதிமாநு. 32) என்று அந்த சக்ரவர்த்தித் திருமகனுடைய வீரசரிதத்தை போக்யமாக உடையனாய், “ஸ்நேஹோ மே பரமோ ராஜம் ஸ்த்வயி நித்யம் ப்ரதிஷ்டித | பக்திஸ் ச நியதா வீர பாவோ நாந்யத்ர கச்சதி” (ரா.௨.40-16) என்று சக்ரவர்த்தித் திருமகனுடைய வீர சரிதத்தை போக்,யமாக உடையனான திருவடியைப் போலே.
இவரும்-வாளி பொழிந்த நீர் குண விச்வாத்மா உள்ளே வுறைய-அதாவது-செருக்கடுத்து அன்று திகைத்த அரக்கரை உருக்கெட வாளி பொழிந்த ஒருவன் திருக் கடித் தானமும் என்னுடை சிந்தையும் ஒருக்கடுத்து உள்ளே உறையும் பிரான் கண்டீர் -8-6-2-என்று மூல பலம் மூதலறும் படி சர வர்ஷத்தை வர்ஷித்த ஏக வீரனான சக்கரவர்த்தி திருமகனை தன் உள்ளே உடையவராய் ,-வீர சரிதம் ஊணாக
-அதாவது-கணை நாணில் ஓவாத் தொழில் சார்ங்கன் தொல் சீரை நன் நெஞ்சே ஓவாதே ஊணாக ஊண் -பெரிய திருவந்தாதி -78-என்கிற படி அவனுடைய வீர சரித்ரத்தையே போக்யமாய் உடையவராய் –கற்பார் பாவம் மற்றிலேன் என்னும்-அதாவது-கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ-7-5-1–என்று பிரிய ஹிதங்கள் பற்ற ஒன்றை கற்கும் அவர்கள் ரமணீயனும் உபாகரனுமாய் இருக்கும்
சக்கரவர்த்தி திரு மகனை ஒழிய பரத்வாதிகளையும் அவதாராந்தரங்களையும் கற்பரோ என்று
தமக்கு இவ் விஷயத்தில் உண்டான பிராவண்ய அதிசயத்தாலே பரத்வாதிகளை கழிக்கிற இடத்தில் அவற்றின் பேர் சொல்லுகையும் அசஹ்யமாய் –மற்றும் -என்னும் படி –தயரதற்க்கு மகன் தன்னை அன்றி மற்றிலேன்-3-6-8- -என்று இருக்கையாலே-தாசோஹம் கோசலேந்த்ரஸ்ய–ஸூந்தர –43-9- -என்று
ராம தாசனாய் இருக்கும் திருவடி உடைய படியும் இவர் இடம் காணலாம் –
இவரும் (கற்பார் பாவம் மற்றிலேன்) ““கற்பாரிராமபிரானையல்லால் மற்றும் கற்பரோ”’ (திருவா. 7 – 5 – 1) என்று ப்ரிய ஹிதங்களிலொன்றைக் கற்குமவர்களைப் பற்ற உன்னைக் கற்குமவர்கள் சக்ரவர்த்தித் திருமகனை யொழியப் பரத்வாதிகளையும், அவதாராந்தரங்களையும் கற்பரோ என்று தமக்கு இவ்விஷயத்திலுண்டான ப்ராவண்யத்தாலே “சிந்தை மற்றொன்றின் திறத்ததல்லா’” (திருவா. 7 – 11 – 10) என்று பரத்வத்தின் பேருங்கூட அஸஹ்யமாம்படி “தயரதற்கு மகன் தன்னை யன்றி மற்றிலேன் தஞ்சமாகவே”’ (திருவா.3 – 6 – 8) என்று அந்த சக்ரவர்த்தித் திருமகனையே தஞ்சமாகப் பற்றுகையாலும்.-
திருக் கடித்தானமும் என்னுடைச் சிந்தையும்
ஒருக்கடுத்துள்ளே உறையும் பிரான் கண்டீர்
செருக்கடுத்தன்று திகைத்த வரக்கரை
உருக்கெட வாளி பொழிந்த வொருவனே–8-6-2-ஒருங்கவடுத்து -அதாவது ஓக்க நினைக்கை -திருப்பதியையும் என் ஹிருதயத்தையும் ஓக்க ஆதரித்து –உள்ளே உறையும்-என் மனசிலே நித்ய வாஸம் பண்ணா நின்றான் -விரோதி செய்தது என் என்ன -அது ராக்ஷசர் பட்டது பட்டது-யுத்த கண்டூதி வர்த்தித்து திகைத்த வரக்கரை-சக்கரவர்த்தி திருமகனை வெல்ல நினைத்த மதி கேடரான ராக்ஷஸரை –அன்று -ந நமேயம்-என்ற அன்று –உருக்கெட -சின்னம் பின்னம் சரைர்த்தக்தம் –வாளி பொழிந்த-சர வர்ஷம் வவர்ஷஹ ஒருவனான –பிரான் கண்டீர் -ஏக வீரனான உபகாரகன் கண்டீர்
துணை நாள் பெருங்கிளையும் தொல் குலமும் சுற்றத்
திணை நாளும் இன்புடைத்தா மேலும் -கணை நாணில்
ஓவாத் தொழில் சார்ங்கன் தொல் சீரை நல் நெஞ்சே
ஓவாத ஊணாக வுண்–78–அம்பானது நாணில் இடைவிடாதே வியாபிக்கிற வில்லை யுடையவன்-என்றும் ஆஸ்ரிதர் கார்யம் மாறாதே செய்து போருமவருடைய கல்யாண குணங்களை-ஸோபாதிக பந்துக்களுக்கும் நிருபாதிக பந்துக்களுக்கும் வாசி யறியும் நெஞ்சே-விச்சேதம் இல்லாத போகமாக புஜி-
கற்பார் இராம பிரானை அல் லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே.–7-5-1-ஒருவன் ஒன்றைக் கற்பது -அப்போதை இனிமைக் காதல் -விபாகத்தில் புருஷார்த்தத்தை தரும் என்றாதல் இறே –பிரியவாதீச பூதா நாம் என்றும் –ராமோ ராமோ ராம இதி -என்றும் –லோகா நாம் த்வம் பரோ தர்ம -என்றும் –ராமோ விக்ரஹவான் தர்ம -என்றும் பிரிய ஹிதங்கள் இரண்டும் ஒரு தலைத்த விஷயமாய் -நிலாத் தென்றல் சந்தனம் தண்ணீர் போலே பரார்த்தமாய் இருக்கிற விஷயத்தை ஒழிய -அதிகரிப்பார் புறம்பேயும் ஒன்றை அப்யசிப்பாரோ -அநர்த்த கரம் என்றாலும் விட ஒண்ணாத பிரிய விஷயமாய் -அபிரியம் ஆனாலும் விட ஒண்ணாத படி பத்த்யமான இவ்விஷயத்தை ஒழிய வேறு ஒன்றை அப்யஸிக்கக் கடவதோ –மற்றும் என்று -தேவதாந்தரங்களை சொல்லுகிறது அன்று -பரத்வத்தையும் அவதாரங்களையும் சொல்லுகிறது -பாவோ நான்யத்ர கச்சதி –
துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய் அவை அல்லனாய்
உயர நின்றது ஓர் சோதியாய் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் தனை
அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன் தனைத்
தயரதற்கு மகன் தனையன்றி மற்றிலேன் தஞ்சமாகவே.–3-6-8-–ராவண வத சமனந்தரத்திலே முதலிகளிலே சிலரை காணாது ஒழிய தேவதைகளைக் கொண்டு மீட்டும் ஒரு பாலனுக்கு அகால ம்ருத்யு வர அம்பாலே மீட்டுக் கொடுத்தும் செய்த சக்கரவர்த்தி திருமகனை அன்றி –ததவ் கௌசிக புத்ராய -என்று ராஜ்யத்தை தந்தேன் என்னா அத்தை தவிர்ந்து காடு ஏறப் போம் என்னா ஒரு சம்சாரிக்கு இஷ்ட விநியோக அர்ஹன் ஆனவனை –-பவான் நாராயணோ தேவ -என்று ஈஸ்வர அபிமானிகள் தங்கள் வந்து சொன்னால் ஆத்மா நம் மானுஷம் மன்யே என்னுமவன் –-மற்றிலேன் தஞ்சமாகவே.-–மற்று என்று பகவத் வியக்த்ரந்தரங்களை நினைக்கிறார் –தஞ்சம் -ஆபத் தனம் –
பல் வகையும் கண்டு வெண் சங்கு ஏந்தின ரூப பரனான ஸ்வேதன் படியையும் காணலாம் –-அதாவது
அர்ஜுனன்-பஸ்யாமி தேவாம் ஸ்தவ தேவ தேஹே சர்வாம் ஸ்ததா பூத விசேஷ சங்கான்
ப்ரஹ்மாணம் ஈசம் கமலாசனஸ்தம் ருஷீம்ச ச சர்வம் உரகாம் ச தீப்தான் -ஸ்ரீ கீதை -11-15-என்று
விஸ்வரூபம் கண்ட அநந்தரம் –-அத்ருஷ்ட பூர்வம் ஹ்ருஷிதோஸ்மி த்ருஷ்ட்வா பயேன ச பிரவ்யதிதம் மனோமே ததேவ மே தர்சய தேவ ரூபம் ப்ரசீத தேவேச ஜகன் நிவாச -11-45-என்றும்-கிரீடிநிம் கதினம் சக்ர ஹஸ்தம் இச்சாமி த்வாம் த்ரஷ்டுமஹம் ததைவ தேனைவ ரூபேண சதுர் புஜேன சஹஸ்ர பாஹோ பவ விச்வமூர்த்தே–11-46–என்று திவ்ய சஷுஸ்ஸாலே -இப்போது கண்ட விஸ்வரூபம் -அத்ருஷ்ட பூர்வதையாலும் – உக்ரதையாலும் -ஹர்ஷ பயங்கள் இரண்டையும் விளைவிக்கையாலே – சதத ஹர்ஷ ஹேதுவாய் -பூர்வ பரிசிதமுமான ஸௌம்ய ஸ்வரூபத்தை காண ஆசைப் பட்டு சதுர் புஜமுமாய் -சங்கு சக்கர கதா தரமுமான திவ்ய விக்ரகத்தைக் காட்ட வேணும் என்று – தத் தர்சன தத் பரனாய் அபேஷித்தால் போலே –
(பல்வகையுங்கண்டு வெண் சங்கேந்தின ரூபபரனான ஸ்வேதன்) *“பண்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹே ஸர்வாம்ஸ்ததா பூதவிபேஷஸங்காந் ! ப்ரஹ்மாணமீஸம் கமலாஸநஸ்த ம்ருஷீம்ஸ்ச ஸர்வாநுரகாம்ஸ்ச தீப்தாந்”” (கீதை 11 – 15) என்று விஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரித்த அநந்தரம் தன்னால் அமைத்தநுபவிக்க வொண்ணாமையாலே *’க்ருதாஞ்ஜலிர்வேபமாநச கிரீடீ”” (கீதை 11 – 35) என்று பீ.தியாலே நடுங்கி அஞ்ஜலி ஹஸ்தனாய்க்கொண்டு ““கிரீடிநம் கதிநம் சக்ர ஹஸ்தமிச்சாமி த்வாம் த்ரஷ்டு மஹம் ததைவ । தேநைவ ரூபேண சதுர்புஜேந ஸஹஸ்ர பாஹோ பவ விஸ்வமூர்த்தே”’ (கீதை 11 – 46) என்று ஸங்க சக்ர கதா தரமாய் அஸாதாரணமான உன்னுடைய விக்ரஹத்தைக் காட்ட வேணுமென்று அவ்வடிவிலே தத் பரனாய் அபேக்ஷித்த அர்ஜுநனைப்போலே.
இவரும் –பல்வகையும் கண்டு-அதாவது –-நல்குரவும்–6-3-1-என்று தொடங்கி-பல்வகையும் பரந்த பெருமானை—திரு விண்ணகர் கண்டேனே -என்று வ்ருத்த விபூதி யுக்தனாய் கொண்டு விபூதி முகத்தால் பல படியாக விஸ்த்ருதனாய் இருக்கிறவனைக் கண்டு –நீராய் நிலனாய்–6-9-1-என்று தொடங்கி- சிவனாய் அயனானாய் -என்று கார்ய காரணங்கள் இரண்டையும் சரீரமாக கொண்டு நீ ஜகத் ஆகாரயனாய் இருக்கும் இருப்பைக் காட்டித் தந்தாய் ஆகிலும் இத்தால் நான் பெற்றது உன்னாதான வஸ்துக்களை என்னது என்றும் -பிறரது என்று இருக்கும் விப்ரதிபத்தி போய் -உன்னதே சகலம் என்று இருக்கிற மாத்ரம் – இது எனக்கு ஆகர்ஷமாய் அனுபாவ்யமாய் இருக்கிறது இல்லை —
ஆன பின்பு -கூராழி வெண் சங்கு ஏந்தி —வாராய்–என்று சங்கு சக்கர தரமான உன் அசாதாரண விக்ரகத்தோடே என் முன்னே வர வேண்டும் என்று – அசாதாரண விக்ரக அனுபவ தத் பரராய் அபேஷிக்கையாலே –சினப் போர் ஸ்வேதன்-நான் முகன்-27- -என்று சொல்லப் பட்ட அர்ஜுனன் படியும் இவர் பக்கல் காணலாம் என்கை — ஸ்வேதன் என்றது -ஸ்வேத வாஹனன் என்ற படி– (வெள்ளைப்புரவி தேர் விசயர்க்காய் )
இவரும் “நல்குரவும்” (திருவா. 6 – 3 – 1) என்று தொடங்கி “’பல்வகையும் பரந்த பெருமானை – திருவிண்ணகர்க் கண்டேன்’” என்று விருத்த விபூதி யுக்தானானவனைக் கண்டு. (வெண் சங்கேந்தின) “நீராய் நிலனாய்”’ (திருவா. 6 – 9 – 1) என்று தொடங்கி, *“சிவனாயயனானாய்” என்று கார்ய காரணங்களிரண்டையும் ஸரீரமாகக் கொண்டு நீ ஜகச் சரீரனா யிருந்தாயே யாகிலும், அத்தால் நான் பெற்றது “விபூதி என்னதுமல்ல, பிறரதுமல்ல; உன்னதே” என்கிற ப்ரதிபத்தி யொழிய எனக்கு-அநுபாவ்யமாகிறதில்லை. ஆனபின்பு எனக்கு அநுபாவ்யமாம்படி “கூராராழிவெண்சங்கேந்தி – வாராய்”’ (திருவா. ‘ 6 – 9 – 1) என்று சங்க,சக்ர கதா தரனான உன்னுடைய அஸாதரண விக்ரஹத்தோடே வரவேணுமென்று அபேக்ஷிக்கையாலும்-
நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே.–6-3-1-பதார்த்த சங்கோச ரூப தாரித்ர்யம் –கீழே பகவத் அனுபவ தாரித்ர்யம் தத் விகாச ரூபமான சம்பத் துக்க ஸ்தானம் சுக ஸ்தானம்-ஆய்-ஒவ் ஒரு இரட்டையிலும் சேர்த்துக் கொண்டு-எதிர்த் தலையைச் சாய்க்கும் -சாத்ரமும் பகைமை -குணம் இங்கு -குணம் ஸ்தானம் பொருள் – முடிக்கும் விஷம் உஜ்ஜீவிக்கும் அமிர்தம்-பல் வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்-வியாப்தன் -என்னை இந்த ஆகாரத்தை பிரகாசிப்பித்தது -காட்டி
நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்
கூரார் ஆழி வெண்சங் கேந்திக் கொடியேன்பால்
வாராய்! ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே.–6-9-1-அண்ட காரணமான பூத பஞ்சகங்களையும் ஸ்ருஷ்டித்து -ஸமேத்யான் யோன்ய சம்யோகம் -என்கிறபடியே ஒன்றாகச் சேர்த்து -பூதேப்யோ அண்டம் -என்கிறபடியே அண்டத்தை ஸ்ருஷ்டித்து -ஸ்ருஷ்டமான அண்டத்துக்கு -பிரகாசகரான சந்த்ர சூர்யர்களை ஸ்ருஷ்டித்து-பிரகாசகராயும் போஷகராயும் இருக்கை-அண்டரருஷ்டாவாக ப்ரஹ்மாவையும் -இவை அதிப்ரவர்த்தமான போது அழிக்கைக்கு ருத்ரனையும் ஸ்ருஷ்ட்டித்தான் –தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு ப்ராவிஸத்-தத் அநு பிரவேஸ்ய ஸச் சத்யச்சா பவத் என்கிறபடியே –சாமா நாதி கரண்யம் அநு பிரவேச க்ருதம் –-நீராய் நிலனாய் என்கிற அசித் பதார்த்தத்தோடு -சிவனாய் அயனாய் -என்கிற ஈஸ்வர அபிமானிகளோடு வாசி அற்று இருக்கிற தாயிற்று ஈஸ்வர பாரதந்தர்யம் -இப்படி ஜகதா காரதையைக் காட்டி தன்தோமேயென்ன-அது போராது -அசாதாரண விக்ரஹத்தை காட்ட வேணும் என்கிறார்-காட்டும் இடத்திலும் ஒப்பனையோடே காட்ட வேணும் -பிரதிபக்ஷத்தின் மேலே ஏவ சாணையில் இட்டால் போலே கூர்மை மிக்கு இருக்கிற திரு வாழி -ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தில் வெளுப்போடே திரு வாழி யிலே கூர்மையோடு வாசி அற இவருக்கு அழகுக்கு உறுப்பாய் இருக்கிறது இறே –
முதலானோர் என்றது –உபமான மசேஷானாம் சாதூனாம் யஸ்ஸதா பவேத் –ஸ்ரீ விஷ்ணு புராணம் –1-15-156– என்கிறபடி எல்லோருக்கும் தம்முடைய ஒரோ வகைகளாலே உபமான பூமியாய் இருக்கும் அவர் ஆகையாலே – இன்னமும் ஞானிகள் ஆனவர்கள் பலர் படியும் இவர் பக்கலிலே காணலாம் என்று தோற்றுகைக்காக –பிராட்டிமாரோடு சாம்யம் சொன்ன போது ஸ்ரீ கோபிமார் முதலானாரோடு சாம்யம் சொன்னாவோ பாதி இறே-லஷ்மணாதிகளோடு சாம்யம் சொன்ன பின்பு தசரதாதிகளோடே இவர்க்கு உண்டான சாம்யம் சொன்ன இதுவும்-
இப்படி இளையபெருமாள் முதலானவர்களெல்லாரோடும் ஸாம்யம் சொல்லிற்று.
—
ஆக இப்படி நித்ய ஸூரிகளில் தலைவராய் தொடர்ந்து அடிமை செய்யப் பிறந்த லஷ்மணாதிகளோடும்-
நித்ய சம்சாரிகளிலே அந்ய தமராய் வைத்து பகவத் பிரத்யாசன்னராய் பெற்ற தசரதாதிகளோடும்
இவர்க்கு உண்டான சாம்யத்தை அருளிச் செய்தார் கீழ்– அவர்கள் அனைவரிலும் இவருக்கு உண்டான ஏற்றத்தை அருளிச் செய்கிறார் மேல் -இனிமேல் இவர்களெல்லார்க்கும் இவரோடு ஏகதா ஸாம்யமல்லது ஸர்வதா ஸாம்யமில்லை என்று அவர்களில் இவருக்குண்டான வ்யாவ்ருத்தியை அருளிச் செய்கிறார்–
குழலில் நெஞ்சும் அருகலில் சுவையுமான இவர் அவர்கள் அளவு அல்லர்-சூரணை -128-
குழலில் நெஞ்சும்-அதாவது-குழல் கோவலூர் மடப்பாவையும் திருவிருத்தம் -3–என்கிற பாட்டில் சொல்லுகிற படி – பிராட்டியாரும் நித்ய சூரிகளும் – அவனுமான திரளிலே பற்றின நெஞ்சினராய்-
குழற்கோவலர் மடப்பாவையும்”’ (திருவிரு. 3) என்கிற பாட்டிற்படி மஹிஷீ த்ரயத்துக்கும் வல்லபனாய் பூஷணாயுத, விஸிஷ்டனாய்க் கொண்டு ஸர்வ ஸ்வாமியாய், கருடவாஹநனான ஸர்வேஸ்வர விஷயத்தில் அவகாஹித்த என்னுடைய நெஞ்சானது அவனுடைய பரத்வத்தைக் கண்டு மீளுமோ? போக்யதையையும், ஸெளலப்யத்தையும் கண்டு நிற்குமோ? என்னும்படியான நெஞ்சை யுடையராய், அத்தால் *அப் புள்ளின் பின் போன தனி நெஞ்சமே”’ (திருவிரு. 4) என்கையாலே இவருடைய திருவுள்ளம் ப்ரமாணாநுஸாரியாய்க்் கொண்டு ப்ரமாண ஸார ப்ரதிபாத்,யமான ஸ்வாராதத்வ ரக்ஷகத்வ- போக்யத்வங்களிலே கால் தாழ்ந்து மேன்மை முதலாக நீர்மை ஈறாக அவகாஹித்ததென்றபடி.
அருகலில் சுவையுமான-அதாவது-அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன் –திருவாய் -1-9-3-என்ற பாட்டில் சொல்லுகிறபடியே பிராட்டிமாரோடும் -திருவடி- திரு அனந்தாழ்வான் முதலான நித்ய ஸூரிகளோடும் ஒரோ வகையில் பரிமாறும் அவன் அவர்களோடு பரிமாறுமா போலே ஒரு வழியாய் வந்த ரசத்தை தந்து விடுகிறலன் என் அளவில் — அவர்கள் எல்லார் பக்கலிலும் பண்ணும் ஆதரத்தை என் பக்கலிலே பண்ணா நின்றான் என்னும் படி எல்லா வழிகளாலும் உள்ள சம்ஸ்லேஷ ரசத்தை அவன் தமக்கு விளைக்கையாலே போக ரசமும் விஞ்ச பெற்றவரான இவர் –
அருகவிலாய”’ (திருவா. 1 – 9- 3) என்கிற பாட்டிற்படி ஹேய ப்ரத்ய நீகனாய், கல்யாண குணங்களை யுடையனாய், நித்ய ஸூரிகளுடைய ஸத்தாதிகளுக்கெல்லாம் காரண பூதனாய், விலக்ஷண விக்ரஹ யுக்தனாய், புண்டரீகாக்ஷனாய், கருடவாஹநனாய், ஸ்ரீய:பதியான ஸர்வேஸ்வரன், பிராட்டி நித்ய ஸூரிகளெல்லாரோடும் ஓரோ வகைகளாலே பரிமாறும் பரிமாற்றமெல்லாம் என்னொருவனோடே பரிமாறி அத்தால் வந்த ரஸத்தை எனக்குத்தந்து பின்னையும் விட க்ஷமனாகிறிலன் என்னும்படியான ரஸத்தை யுடையராய்,
இவர்-அவர்கள் அளவு அல்லர்-–ஓர் ஓர் அவதாரம் மாத்ரத்திலும் கேவலம் அவன் தன் அளவிலும் பற்றின நெஞ்சை உடையவராய் – பகவத் ப்ராவண்யமும் காதாசித்கமாய் விஷயாந்திர பிராவண்யமும் கலசி இருப்பாரும் – இதர விஷய வைராக்ய பூர்வகமாக எப்போதும் நடந்து செல்லும் பகவத் ப்ராவண்யம் உண்டாயும் – ததீயரும் அவனுமான சேர்த்தியில் ரசம் அறியாதருமான தசரதாதிகளும் –
பரத்வ அவதார விபாகம் அற அவஹாஹித்த நெஞ்சை உடையவராயும் ஒரு வழியால் வந்த ரசத்தை பெற்று இருக்கும் லஷ்மணாதிகளுமான அவர்களில் அத்யந்த வ்யாவிருத்தர் என்கை-(அநேக அவதாரம்-பரத்வாதிகள்-ததீய பர்யந்தம்-வைராக்யம் மிக்கு-காதாசித்கமாக இல்லாமல் எப்பொழுதும்
இவை இவருக்கு மட்டுமே )ஆக லஷ்மணாதிகள் தசரதராதிகளோடும் இவருக்கு உள்ள சாம்யத்தை
தர்சித்தால் போலே -அவர்களில் இவருக்கு உண்டான ஆதிக்யத்தையும் தர்சிப்பித்தார் ஆயிற்று .—
இப்படிப்பட்ட சுவையையும் நெஞ்சையுமுடைய இவர், பகவத் விஷயத்தில் ப்ராவண்யம் காதசித்கமாய், புறம்பே பரந்த நெஞ்சை யுடையராய், விஷயாந்தரங்களிலும் ரஸஜ்ஞராய்ப் போருகிற இவர்களளவல்லர் என்கிறார். ஆக இதுக்குக் கீழ் பகவத் ப்ரத்யாஸந்நரான லக்ஷ்மணாதிகளோடு இவ்வாழ்வாருக்கு ஸாதர்ம்ய வைதர்ம்யங்களிரண்டும் சொல்லிற்றாய்த்து –
குழல் கோவலர் மடப்பாவையும் மண் மகளும் திருவும்
நிழல் போல்வனர் கண்டு நிற்கும் கொல் மீளும் கொல் தண்ணம் துழாய்
அழல் போல் அடும் சக்கரத்தண்ணல் விண்ணோர் தொழக் கடவும்
தழல் போல் சினத்த அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே –திரு விருத்தம் -3–மகிஷி த்ரத்துக்கும் வல்லபனாய் திவ்ய ஆயுத விசிஷ்டானாய் சர்வ ஸ்வாமியாய் கருட வாஹனான ஸ்ரீ சர்வேஸ்வரன் இடத்தில் -அவஹாகித்த நெஞ்சு-தனி நெஞ்சு -நிற்கும் கொல் மீளும் கொல் – பரத்வம் கண்டு மீளுமோ போக்யம் ஸுலப்யம் கண்டு நிற்குமோ –புள்ளின் பின் போன தனி நெஞ்சம் -இவர் திரு உள்ளம் பிரமாண அனுசரியாய்க் கொண்டு – பிரமாண சார ப்ரதிபாத்யமான அவன் ஸூராதன் ரக்ஷகன் போக்யன் பரத்வன் –-நிழல் போல்வனர் இருப்பதால் -பரத்வ பரமாகவும் ஸுலப்ய பரமாகவும் இரண்டு நிர்வாகம் –-கோவலர் மடப்பாவை -ஸுலப்யம்-மண் மகள் -திரு பரத்வம் -ரக்ஷகன் –-பிரமாணம் தானே ரக்ஷகன்-பரத்வம் ஸுலப்யம் என்று அனைத்தும் சொல்லும்-ஆகவே இந்த திரு விருத்த பாசுரம் காட்டுவது அனைத்தையும் ஆழ்வார் திரு உள்ளம் கொண்டது –-மேன்மை முதலாக நீர்மை இறுதியாக தாழ்ந்தது-நப்பின்னைப் பிராட்டியை முதலில் சொல்வதானால் மேன்மையை விட நீர்மைக்கு உள்ள மேம்பாட்டு சொல்லிற்று—அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே -மங்களா ஸாஸன பரர் –அருளாழி புள் -அங்கு பரிவர் உண்டே என்று விஸ்லேஷத்திலும் மகிழ்கிறாள் இவள் கத கத என்னும் அவனையும் குளிரப் பண்ணிப் புறப்படுமே இவன் )-பரிகர பூதனான ஆழ்வானிலும் பரிகரவானான ஈஸ்வரனிலும் விரோதி விஷயத்தில் சீற்றம் கால அக்நி போலே இருக்கும் படியான மஹா ப்ரபாவனாய் இருந்துள்ள பெரிய திருவடியின் பின்னே எனக்கு முந்துற்றுப் போன தனி நெஞ்சமே–
அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நன்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொருசிறைப் புள்ளுவந்தேறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே –1-9-3-ஒரு வகைப் பட்ட ரசத்தை அனுபவிப்பித்து விடுகிறிலன் –-நித்ய ஸூரிகள் எல்லார் பக்கலிலும் பண்ணும் ஓரத்தை என் பக்கலிலே பண்ணா நின்றான்-என்னோடு உடனே–நித்ய விபூதி நிர்வஹணமும் இங்கே இருந்து -என்னும் படி என்னை விடுகிறிலன் –ஹேய ப்ரத்ய நீகனாய் -கல்யாண குணங்களை உடையவன் -நித்யர் சத்தாதிகளுக்கு காரணன்–நீல நல் மேனி -செம் தாமரைக் கண்ணன் -கருட வாஹனன் -ஆறு பேருடன் பரிமாறும் பரிமாற்றம் எல்லாம் இவருடன் பரிமாறி ––ஆறு பேர் உடன் உள்ள கதி இவருக்கு மட்டும் என்றவாறு –
இப்படிப்பட்ட குழலின் பாட்டின் படி நெஞ்சையும் – அருகலியா சீர் பாசுரம் படி சுவையையும் உடைய இவர் -வ்யாவருத்தர் அன்றோ –சா தர்ம்யமும் வை தர்ம்யமும் சொன்னார் இவற்றால் –
—
இப்படிப் பட்ட நெஞ்சையும் சுவையும் உடைய இவர் தம்முடைய அபிநிவேசத்தாலே – அவன் பிறவிக்கு அனுகுணமாக பிறந்து அநேக அனுவ்ருத்திகளை பண்ணும் பிராட்டிமாரையும் – அசேஷ சேஷதை கரதிகராய் அநேகதாபாவித்து அநேக வித கைங்கர்யங்களைப் பண்ணும் அநந்த வைனதேயாதிகளையும் அவர்கள் தாம் என்னலாம் படி பாவிப்பார் என்கிறார் –இப்படி ஸாம்யம் சொல்லுகிற மாத்ரமே யன்றிக்கே தம்முடைய பாவத்தாலும் வ்ருத்திகளாலும் பிராட்டிமாரையும், திருவடி திருவநந்தாழ்வான் தொடக்கமானவர்களையும் தாம் அவர்களாக பாவிப்பர் என்கிறார்-
எற்றைக்கும் என்றது தோன்றப் பிறந்து ஒப்புவித்து வீசிக் காப்பிட்டு காட்டுக்கு முற்பட்டு தர்மம் சொல்லிக் கேட்டு சிஷ்யா தாஸி பக்தைகளாய் பாடி வருடி இன்று வந்து என்பாரையும் சென்றால் ஊரும் நிவாஸ தாஸ பேதம் கொள்வாரையும் தாம் அவராக பாவிப்பார்-சூரணை -129-
எற்றைக்கும் என்றது தோன்ற-அதாவது-ஸ்ரீ பூமிப் பிராட்டி அவதாரமான ஆண்டாள் பிரார்த்தனை மூவருக்கும் ஒக்கும் ஆகையாலே – எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆள் செய்வோம் ––திருப்பாவை -29–என்று அநேக ஜன்மங்கள் பிறந்து– உனக்கு சேஷ சேஷி-பாவம் ஆகிய உறவை உடையோமாய் -உனக்கே உகப்பான அடிமைகளை நாங்கள் செய்ய வேணும் என்று அபேஷித்தமை தோன்ற –-தேவத்வே தேவதேஹேயம் மனுஷ்யத்வேச மானுஷீ
விஷ்ணோர் தேக அனுரூபம் வை கரோத் ஏஷாத் மநஸ் தநூம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-145–என்கிறபடியே ஈஸ்வரன் லோக ரஷண அர்த்தமாக தேவ மனுஷ்யாதி சஜாதியனாய் அவதரிக்கும் அளவில் – அவன் கொண்ட வடிவுக்கு அனுரூபமான வடிவு கொண்டு தோற்றுமவள் ஆகையாலே –
ராகவத் வேபவத் சீதா —ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-144–என்கிற படியே அவன் சக்கரவர்த்தி திரு மகனாய் அவதரித்த போது தானும் ஸ்ரீ ஜனக மகராஜனின் மகளாய் அவதரித்து —
“எற்றைக்குமேழேழ் பிறவிக்குமுன்றன்னோடுற்றோமேயாவோம்”‘ (திருப்பாவை 29) என்று அபேக்ஷித்தமை தோன்ற “‘ராகவத்வேபவத்ஸீதா ருக்மிணீ க்ருஷ்ணஜந்மநி । அந்யேஷு சாவதாரேஷு விஷ்ணோரேஷாநபாயிநீ”’ (வி.பு. 1 – 9 – 144) என்கிறபடியே அவன் வந்தவதரித்த அவதாரங்கள் தோறும் தாமுமவதரித்து-
சிற்றம் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்–29—திரு நாட்டிலே இருக்கவுமாம் ஆஸ்ரித சஜாதீயனாய்க் கொண்டு சம்சாரத்தில் பிறக்கவுமாம்-அதில் ஒரு நிர்பந்தமும் இல்லை-காட்டிலும் படை வீட்டிலும் ஒக்க இளைய பெருமாள் அடிமை செய்தாப் போலே யாக வேணும் –நீ பிறவாது இருக்கும் இடத்திலும் பிறந்து திரியும் இடத்திலும் கூடத் திரியும் அத்தனை
ஒப்புவித்து-அதாவது-வராஹா ருதி ராபேண ஸூசிநாச ஸூகந்தினா அனுலப்தம் பரார்த்யேன சந்தநேன பரந்தபம்-அயோத்யா -16-9- என்கிற படியே திரு அபிஷேக அர்த்தமாக அலங்கரித்து –
வீசி –அதாவது-ஸ்திதயா பார்ஸ்வதஸ் சாபி வாலவ்ய ஜன ஹஸ்தாய உபேதம் சீதயா பூயச் சித்ரயா சசினம் யதா- அயோத்யா –16-10- என்கிறபடியே- அப்போது அருகே சேவித்து நின்று -திரு வெண் சாமரம் பணி மாறி – அநந்தரம் சக்கரவர்த்தி மாளிகைக்கு எழுந்து அருளின போது –-பதி சம்மானித சீதா பர்த்தாரம் அஸி தேஷணா ஆத்வார மனுவவ்ராஜா மங்கள அந்ய பிதத்நுஷீ –அயோத்யா -16-21-என்றும்
பூர்வம் திசம் வஜ்ரதரோ தஷிணாம் பாது தேயம வருண பஸ்சி மாமாசம் தநேசஸ் தூத்தராம் திசம்–அயோத்யா –16-24- என்கிறபடியே பெருமாள் வடிவழகைக் கண்டு இது நமக்கு தொங்கப் புகுகிறதோ என்னும் வயிறு பிடியாலே – அந்த புர த்வாரம் அளவும் பின் சென்று மங்களாசாசனம் பண்ணி காட்டுக்கு முற்பட்டு-அதாவது-தத் அநந்தரம் காட்டுக்கு எழுந்து அருளிய போது –அக்ரதஸ்தே கமிஷ்யாமி ம்ருத்னந்தீ குச கண்டசான் –அயோத்யா -27-6–என்று தான் முற்பட்டு-தர்மம் சொல்லி
அதாவது-ஸ்ரீ தண்டகாரண்யத்தில் எழுந்து அருளி இருக்கிற போது அவர் ஆயுதங்களைத் தரித்து கொண்டு நிற்கிற நிலையைக் கண்டு ,-நஹிமே ரோசதே வீர கமனம் தண்டகான் ப்ரிதி காரணம் தத்ர வஷ்யாமிவ தந்த்யாஸ் ஸ்ரூயதாம் மம – த்வம் ஹி பாண தனுஷ் பாணி ப்ராத்ரா சஹ வனம் கத த்ருஷ்ட்வா வனசரான் சர்வான் கச்சித் குர்யாச் சரவ்வயம் – ஷத்ரியாணாஞ்ச ஹி தனுர்குதா ச ஸ்யேந்த நாநிச சமீபதஸ் ஸ்திதம் தேஜோ பல முச்ச்ரயதே ப்ருசம்—ஆரண்ய -9-13 /-14-/15— என்று- இவர் சாயுதராய் நிற்கில் ஆரேனையும் மேல் விழுந்து பிரமாதம் விளையக் கூடும் என்று பயப்பட்டு
தர்மாதர்த்த பிரபவதே தர்மாத் பிரபவதே ஸூகம்–ஆரண்ய -9-30–இத்யாதியால்- சர்வத்துக்கும் தர்மமே மூலம் என்ற இடத்தை ஸ்மர்பித்து -ஆன பின்பு -ஆயுதத்தை வைத்து தாபச வேஷத்தோடு தர்மத்தை
அனுஷ்டிக்க அமையும் என்று தர்மோ உபதேசத்தையும் பண்ணின பெரிய பிராட்டியாரையும் —
(ஒப்பித்தென்று) ‘திருவபிஷேக மஹோத்ஸவத்துக் கீடாம்படி பெருமாளை அலங்கரித்து. (வீசி) ‘“ஸ்திதயா பார்றவதஸ்சாபி வாலவ்யஜதஹஸ்தயா ! உபேதம் ஸுதயா பூயஸ்சித்ரயா ஸஸிநம் யதா” என்று திருவெண்சாமரம் பரிமாறி. (காப்பிட்டு) ““பதிஸம்மாநிதா ஸீதா பர்த்தாரமஸிதேக்ஷ்ணா । ஆத்வாரமநுவவ்ராஜ மங்களாந்யபிதத்யுஷீ”, ““பூர்வாம் திஸம் வஜ்ரதரோ தக்ஷிணாம் பாது தே யம? । வருண? பஸ்சி மாமாஸம் தநேசஸ்தூத்தராம் திஸம்”” என்று பெருமாள் வைலக்ஷண்யத்தைக் கண்டு இவ்வழகு தமக்குத் தொங்கப் புகுகிறதோ என்னும் வயிறுபிடியாலே மங்களாஸாஸநம் பண்ணி.
(காட்டுக்கு முற்பட்டு) “அக்ரதஸ்தே கமிஷ்யாமி ம்ருத்,நந்தீ குஸ கண்டகாந்” என்று பெருமாள் வநத்துக்கு எழுந்தருளுகிறபோது தான் முற்பட்டு. (தர்மம் சொல்லி) பெருமாள் தண்டகாரண்யத்திலே கையும் வில்லுமாய்க் கொண்டு நின்ற நிலையைக் கண்டு இவர் ஸாயுத,ராய் நிற்கில் ஆரேனையும் மேல்விழுந்து ப்ரமாத,ம் விளையக்கூடுமென்று பயப்பட்டு, பெருமாளைப் பார்த்து “நாயன்தே, தர்மமூலமாயிருக்கும் ஸர்வமும், ஆன பின்பு தேவரீர் ஆயுதத்தை வைத்து தாபஸ வேஷத்தோடே தர்மத்தை அநுஷ்டிக்க அமையும்” என்று தர்மோபதேஸத்தையும் பண்ணினாள் பிராட்டி.-
கேட்டு சிஷ்யா தாஸி பக்தைகளாய்-அதாவது-அஹம் சிஷ்யாச தாஸி ச பக்தாச த்வயி மாதவ மத் க்ருதே சர்வ பூதானாம் லகு உபாயம் வத பிரபோ –கைசிக புராணம் -என்று-ஸ்ரீ வராஹா நாயனார் பக்கலிலே பர தர்மம் கேட்டு தன் மூலமாக சிஷ்யையும் தாசியும் பக்தையுமாய் –பாடி-அதாவது-உன் தன்னைப் பாடி–திருப்பாவை –27-என்கிற படியே கவி பாடி –-வருடி –-அதாவது – திருமகளும் புவியும் செம்பொன் திருவடி இணை வருட–பெரிய திருமொழி -7-8-1- -என்கிறபடி பெரிய பிராட்டியாரோபாதி அவன் திருவடிகளைப் பிடித்து –-இன்று வந்து –-அதாவது-இன்று வந்து இத்தனையும் அமுது செய்திட பெறில் நான் ஓன்று நூறாயிரம் கொடுத்து பின்னும் ஆளும் செய்வன்-நாச்சியார் -9-7-என்று தன்னை கைங்கர்யம் கொண்டால் ,-அதுக்கு பிரத் உபகாரம் பண்ணுவன் என்ற ஸ்ரீ பூமி பிராட்டியாரையும் –
(தர்மம் கேட்டு) ஸ்ரீபூ,மிப்பிராட்டியார் ஸகலதர்மங்களையும் ஸ்ரீவராஹ நாயனார் பக்கவிலே கேட்டு. (ஸிஷ்யா தாஸீ பக்தைகளாய்) “அஹம் ஸிஷ்யா ச தாஸீ ச பக்தா ச த்வயி மாதவ | மத் க்ருதே ஸர்வபூதாதாம் லகூபாயம் வத ப்ரபோ ‘ என்று ஸிஷ்யா தாஸீ பக்தையாய் விஸேஷ தர்மத்தையும் கேட்டு.(பாடி) “பாடிப் பறைகொண்டு”’ (திருப்பாவை 27) என்கிறபடியே க்ருஷ்ணனைப் பாடுவதும் செய்தாள். (வருடி) இவர்களிருவரும் ”ஒருமதிமுகத்து மங்கையரிருவரும் மலரன அங்கையின் முப்பொழுதும் வருட” (திருவெழு.), ”செங்கமலத்திருமகளும் புவியும் செம்பொன்திருவடியினிணை வருட ” (திருமொழி 7 – 8 – 1) என்று இருவரும் திருவடியை வருடினார்கள். ‘“இன்றுவந்தித்தனையும் அமுதுசெய்திடப்பெறில் நான் ஒன்று நூறாயிரமாகக் கொடுத்துப் பின்னுமாளும் செய்வன்”’ (நா. தி. 8 – 7) என்று தம்மைக்கொண்டு கைங்கர்யம் கொண்டால் அதுக்கு ப்ரத்யுபகாரமும் பண்ணுவர் என்கிறார்.
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா வுன் தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெரும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பல் கலனும் யாம் அணிவோம்
ஆடை யுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்–27–ஹிரண்யாய நம -என்கை தவிர்ந்து வகுத்த உன்னுடைய பேரை-ஸுயம் பிரயோஜனமாகச் சொல்லப் பெறுவதே -என்கை – கோபீ ஜன வல்லபனான உன்னை பாடுகையே எங்களுக்கு பிரயோஜனம் போரும் -என்னவுமாம் –பெண்கள் புணர்ப்பே தாரகமாகப் பாடித் திரியும் உன்னைப் பாடுகையே பிரயோஜனம்–
நின்னீரடி யொன்றிய மனத்தால் ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும் மலரன அங்கையின் முப்பொழுதும் வருட அறி துயில் அமர்ந்தனை—தம்முடைய அபேஷிதம் பெறுகைக்கு புருஷகாரம் யுண்டு என்கிறார் –எனக்குப் புருஷகாரம் இல்லாமே இழக்கிறேனோ–
செங்கமலத் திருமகளும் புவியும் செம் பொன் திருவடியின் இணை வருட முனிவர் ஏத்த
வங்கமலி தடம் கடலுள் அநந்தன் என்னும் வரி அரவின் அணைத் துயின்ற மாயோன் காண்மின்
எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம் ஐந்து வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை
அங்கமலத் தயன் அனையார் பயிலும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-1—ஆஸ்ரிதர் உடைய சர்வ அபராதங்களையும் பொறுப்பிக்கும் பெரிய பிராட்டியாரும் –அப் பொறைக்கு உவாத்தான ஸ்ரீ பூமிப் பிராட்டியாரும் –ஸ்ப்ருஹணீயமாய்-ஒன்றுக்கு ஓன்று ஒப்பான திருவடிகளை வருட –
இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நான்
ஓன்று நூராயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வன்
தென்றல் மணம் கமழும் திரு மால் இருஞ்சோலை தன்னுள்
நின்ற பிரான் அடியேன் மனத்தே வந்து நேர் படிலே –9-7–நான் பிரார்த்திக்கிற இன்று வந்து உவந்து —
என் இரப்பு மாறாமைக்கு ஓன்று செய்தானாய் விடுகை அன்றிக்கே தனக்கு இது ஒழியச் செல்லாமை உடையானாய்க் கொண்டு உவந்து அமுது செய்திடப் பெறில்-நூறு தடாவில் வெண்ணெயும் நூறு தடா நிறைந்த அக்கார வடிசிலையும்–அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும் தயிர் வாவியும் நெய் அளறும் அடங்கப்ம் பொட்டத் துற்று –பெரியாழ்வார் -3-5-1-அமுது செய்திடப் பெறில்-இதுவே இவளுக்கு பேறு
பின்னையும் அவனுக்குக் கொடுக்கும் அத்தனை – அவன் அமுது செய்தால் கொள்ளும் பிரயோஜனம் என் என்னில்-பிராப்ய த்வரையாலே கைங்கர்யம் செய்யத் துடிக்கும் நான் அவன் ஆசைப்பட வேண்டும் என்று பிரார்த்திக்கிற நான்-நூறு தடாவுக்கும் நூறாயிரம் தடாவாகக் கொடுத்து-அவன் உகந்து கொடுக்கிற நான் ஆசைப் பட்டத்தை விடுவேனோ-வேறு ஓன்று பெறுமதில் காட்டிலும் அடிமை செய்யும் இத்தனை யாகாதே தான் அவன் விரும்பி இருப்பது – புதியது ஓன்று பெறுமதில் காட்டிலும் -பழையதாய் இழந்தது பெற்றால் அன்றோ அவன் உகப்பது-வழு விலா வடிமை செய்ய வேண்டும் நாம் –திருவாய் -3-3-1-என்று தமப்பனார் பாரித்து இருக்குமதே காணும் -இவளும் ஆசைப் படுகிறது
சென்றால் நிவாஸ தாஸ பேதம் கொள்வாரையும்--அதாவது-சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் நின்றால் மரவடியாம்-நீள் கடலுள் என்றும் புணையாம் மணி விளக்காம் பூம் பட்டாம் புல்கும் அணையும் திருமாற்கு அரவு –முதல் திருவந்தாதி-53- என்கிற பாட்டிலும் –-நிவாஸ சய்யா ஆசன பாதுக அம்ஸூக உபாதான வர்ஷாத பவாரணாதிபி சரீர பேதைஸ் தவ சேஷதாம் கதைர் யதோசிதம் சேஷ இதீரி தேஜநை -ஸ்தோத்ர ரத்னம் -40- ஸ்லோகத்திலும் சொல்லுகிறபடி -பகவத் விநியோக அனுகுணமாக சத்ர சிம்ஹாசன பாதுகாம் சுகாதி சரீர பேதம் கொண்டு சகலவித கைங்கர்யங்களையும் செய்யும் திரு அனந்தாழ்வானையும் —
(சென்றால் ஊரும் நிவாஸ)திருவநந்தாழ்வான் ‘“சென்றால் குடையாம்’” (மூ.திருவ. 59) என்கிறபடியே ““நிவாஸ ஸய்யாஸந பாதுகாம் ஸூகோபதாந வர்ஷாத பவாரணாதி.பிர் ஸாரீரபேதை ஸ்தவ ஸேஷதாம் க,தைர்ய தோசிதம் ஸேஷ இதீரிதே ஜநை?”’ (ஸ்தோ. ர.40) என்று ஸர்வேஸ்வரனுடைய விநியோகத்துக்கு அநுகுணமாக ஸாரீர பேதங்களைக் கொண்டு அஸேஷ ஸேஷவ்ருத்திகளையும் பண்ணினார்.
சென்றால் குடையாம் யிருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும்
புணையாம் மணி விளக்காம் பூம் பட்டாம் புல்கு
மணையாம் திருமாற் கரவு ——53-ஸ்ரீ யபதிக்கு-கட்டிப் பொன் போலே எல்லா வடிவையும் ஆக்கிக் கொள்ளலாம் படி இருக்கிற படி-அரவு –தான் ஒரு சேதனன் என்று கூச வேண்டாத படி-தன்னை அமைத்த படி -ராஜ நிவேசனங்களிலே கூனர் குறளரைப் போலே —
ஊரும் தாஸ பேதம் கொள்வாரையும்-அதாவது –-ஊரும் புள் கொடியும் அக்தே—திருவாய் -10-2-3-என்கிற சந்தையிலும் –-தாஸஸ் சஹா வாஹனம் ஆசனம் த்வஜோ யஸ்தே விதானம் வ்யஜனம் த்ரயீ மய உபஸ்திதம் தேன புரோ கருத்மதா த்வதங்கரி சம்மர்த்த கினாங்க சோபினா –ஸ்தோத்ர ரத்னம் -41- ஸ்லோகத்திலும் சொல்லுகிற படி – வாகன த்வஜ விதான வ்யஜனாதி தேக பேதங்களைக் கொண்டு சகல வித கைங்கர்யங்களைச் செய்யும் பெரிய திருவடி போலேயும் —
“ஊரும் புட்கொடியுமக்தே” (திருவா. 10 – 2 -3) என்றும், ”தாஸஸ்ஸகா வாஹநமாஸநம் த்வஜோ யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய? । உபஸ்திதம் தேந புரோ கருத்மதா த்வதங்க்ரி ஸம்மர்த்த, கிணாங்கஸோபிநா’? (ஸ்தோ. ர.41) என்று பெரியதிருவடி நாயனார் வாஹந த்வஜாதி முகத்தாலே ஸகலவித, கைங்கர்யங்களையும் பண்ணினார்.
ஊரும் புள் கொடியும் அக்தே உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான்
சேரும் தண்ணனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில்
தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறியச் சொன்னோம்
பேரும் ஓர் ஆயிரத்துள் ஓன்று நீர் பேசுமினே-10-2-3—–வாஹனமானது பெரிய திருவடி /கொடியும் அக்தே -இது நித்ய ஸூரிகளுக்கும் உப லக்ஷணம் -இது நித்ய ஸூரிகளுக்கு கொடுத்து வைக்கும் நாநா ரஸ அனுபவத்தை -இன்று செல்லுமவனுக்கும் கொடுக்கும் என்னுமிதுக்காக சொல்கிறது
தாம் அவராக பாவிப்பார்--அதாவது-இவரும் –-பின்னை கொல் நிலமா மகள் கொல் திருமகள் கொல் பிறந்திட்டாள்-திருவாய் -6-5-10-என்கிறபடியே பிறந்து பிராட்டிமார் தசையிலே நின்று பேசும் படியான பல பாவ வ்ருத்திகளையும் ,-ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்–திருவாய் -3-3-1–என்று சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தைகளிலும் உசிதமான சகல சேஷ வ்ருத்திகளையும் பண்ண வேணும் என்னும் அபிநிவேச அதிசயத்தை உடையவர் ஆகையாலே –
பிராட்டிமாரையும் -அனந்தாதிகளான ஸூரிகளையும் -அவர்களுக்கும் தமக்கும் ஒரு விசேஷம் அற
அவர்கள் தாமாகவே பாவிப்பார் என்ற படி —
அப்படியே இவரும் ““பிறந்திட்டாள்”” (திருவா. 6 – 5- 10) என்கிறபடியே பிறந்து அந்த நாச்சிமார் மூவரையும் திருவநந்தாழ்வானையும், பெரியதிருவடியையும் தாமவர்களாகப் பாவிப்பர் என்கிறார்-
பின்னை கொல்?நிலமாமகள்கொல்? திருமகள்கொல்? பிறந்திட்டாள்
என்ன மாயங்கொலோ? இவள்நெடு மால்என்றே நின்று கூவுமால்
முன்னி வந்தவன் நின்றிருந் துறையும் தொலை வில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும் அவ்வூர்த் திருநாமம் கேட்பது சிந்தையே.–6-5-10–நப்பின்னை பிராட்டி பிறந்திட்டாளோ -அங்கனம் இன்றிக்கே ஸ்ரீ பூமி பிராட்டி பிறந்திட்டாளோ -எல்லாருக்கும் இவ் வேற்றங்களைக் கொடுக்கும் பிராட்டி தான் பிறந்திட்டாளோ -என்பார்கள் பூர்வர்கள் –
சர்வேஸ்வரனுக்கு சம்பத்தாய் இருக்கிறவள் பிறந்தாளோ-அதுக்கு விளை பூமியாய் இருக்கிறவள் பிறந்தாளோ -அவ் விளை பூமியினுடைய பல ஸ்வரூபமாய் இருக்கிறவள் பிறந்தாளோ –
அங்கனம் இன்றியே அவர்களுக்கும் இவள் படி இல்லாமையால் அவர்களோடு ஒப்பு அன்று -லோகம் எல்லாம் வாழ்க்கைக்கு இவள் ஒருத்தி பிறந்தாள் என்றுமாம் –விஷ்ணு நா சத்ருஸோ வீரயே -என்றால் போலே நாய்ச்சிமார் பக்கலிலும் ஒரு வகைக்கு ஒப்பு சொல்லலாம் படி இருக்கையாலே கதிர் பொறுக்குகிறாள் –உபமான ம சேஷானாம் ஸாதூ நாம் யஸ் சதாபவத் -என்கிறபடியே எல்லாருக்கும் இவரை ஒப்பாகச் சொல்லலாம் -இவருக்கு ஒப்பாவார் ஒருவரும் இல்லை–
—
இப்படி இவருக்கு இவ் அவஸ்தை விளையும் படி -ஈஸ்வர விக்ரக வைலஷண்யம்-இவர் பும்ஸ்த்வத்தை அழித்து -ஸ்த்ரீத்வ பாவனையை ஜனிப்பததற்க்கும்-இத் திரு மேனியோடு இவருக்கு இவ் விஷயத்தில் அநேக வித அனுவ்ருத்திகள் உண்டானதுக்கும் – திரௌபதி கௌசல்யைகள் படிகளை திருஷ்டாந்தமாக சொல்லாமோ என்னும் ஆ காங்ஷையிலே – இதுக்கு அவற்றை திருஷ்டாந்தம் ஆக்குகை ஸ்தூலம் என்னும் இடத்தை தர்சிப்பிக்கிறார்-இவர்க்கு இந்த நாச்சிமாருடைய பாவமும் இந்த விருத்தி பேதத்தில் அபி, நிவேஸமு முண்டானபடி எங்ஙனே என்னில், அப்ராக்ருதமான விக்ரஹம் பும்ஸ்த்வத்தை அழித்து ஸ்த்ரீத்வத்தை உண்டாக்கினதுக்கும், அநுரூப ப்ராப்தமான அவ் விஷயத்தி லுண்டான வ்ருத்த்யபி நிவேஸத்துக்கும், ப்ராக்ருதமாய் ஓளபாகிகமா யிருக்கிற விஷயங்களி லுண்டான வற்றை த்ருஷ்டாந்தமாக்குகை ஸ்தூலம் என்கிறார்-
எழுவதோர் உரு அழிக்கச் செய்கிற வழு இலா அடிமைக்கு பாஞ்சாலி படுத்துமதும் கௌசல்யை அனுவ்ருத்தியும் ஒப்பாக்குகை பரிசு-சூரணை –130-
(எழுவதோர் உரு அழிக்க -அதுக்கு-பாஞ்சாலி படுத்துமது ஒப்பாக்குகை பரிசு-என்றும் செய்கிற வழு இலா அடிமைக்கு கௌசல்யை அனுவ்ருத்தியும் ஒப்பாக்குகை பரிசு-என்றும் – பரிசு -ஸ்தூலம்–சிறுபான்மை -)எழுவதோர் உரு அழிக்க-அதாவது-குழுமித் தேவர் குழாங்கள் சோதி கை தொழச் சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதோர் உரு என் நெஞ்சினுள்ளே எழும்–திருவாய் -5-5-10- -என்று தேஜோ ராசி மத்யே உன்நேயமாம் படி இருப்பதாய் –பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம் -அயோத்யா –3-28-என்கிறபடியே – வயிர உருக்காய் ஆண்களையும் பெண்ணுடை உடுத்துமதான அவனுடைய அப்ராக்ருத விக்ரகம் இவருடைய பும்ஸ்த்வத்தை அழித்து ஸ்த்ரீத்வ பாவனையை விளைத்ததற்கு-பாஞ்சால்யா பத்ம பத்ராஷ்யா ஸ்னாயந்த்யா ஜகனம் கனம் யாஸ் த்ரியோ த்ருஷ்ட வத்யஸ்தா பும்பாவம் மனசா யயு—பாரதம் -என்கிறபடியே ப்ராக்ருதமாய் மாம்சாஸ்ருகாதி மயமான தேகத்தை உடைய திரௌபதி ஸுவ தேக ஸுந்தர்யத்தாலே சஜாதீயரை ஸ்த்ரீத்வத்தை அழித்து பும்ச பாவத்தை அடைவித்ததையும் –
(எழுவதோருரு அழிக்க) *’சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோருரு (திருவா. 5 – 5 – 40) என்று தேஜஸ்தரங்கங்களுக்கு நடுவே உந்நேயமான ‘‘பும்ஸாம் த்ருஷி சித்தாபஹாரிணம்”” (ரா.௮. 3 – 29) என்று ஸஜாதீயரையும் விஜாதீயராக்க வற்றான அப்ராக்ருத விக்ரஹம் இவருடைய பும்ஸ்த்வத்தை அழிக்க, இவர்க்குண்டான ஸ்த்ரீத்வத்துக்கும். (வழுவிலா அடிமைக்கு) ஸ்வரூப ப்ராப்தமான அவ்விஷயத்தில் இவர்க்கு உண்டான வ்ருத்தி பேதங்களுக்கும் (பாஞ்சாலி படுத்துமதும்) ”பாஞ்சால்யா: பத்ம பத்ராக்ஷ்யா: ஸ்நாயந்த்யா ஜகநம் ௧நம் । யா ஸ்தரியோ த்ருஷ்டவத்யஸ்தா: பும்பாவம் மநஸா யயு: ” என்று ப்ராக்ருதமாய், பூதிகந்தியாய், மாம்ஸாஸ்ருகாதி மல மயமான த்ரெளபதி,யினுடைய ஸரீரம் ஸஜாதீயருடைய ஸ்த்ரீத்வத்தை அழித்து பும்பாவத்தை அடைவித்தத்தையும்.
கழிய மிக்கதோர் காதலள் இவள் என்று அன்னை காணக்கொடாள்
வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
குழுமித் தேவர் குழாங்கள் கைத்தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே
எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே.–5-5-10—உஜ்ஜவலமாய் தோற்றுகிற அத்விதீயமான விக்ரஹம்-இன்னார் என்று அறியேன் என்கிறபடியே நித்ய அபூர்வமாய் இருக்கும் வடிவு –தேஜஸாம் ராசி மூர்ஜ்ஜிதம்–அத்திரளோடே அவ்வடிவு என் நெஞ்சில் பிரகாசியா நின்றது -அது நாங்கள் காண்கிறி லோமே என்ன -ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கும் அறிய ஒண்ணாது -த்வரை இல்லார்க்கு அறிய ஒண்ணாது -எனக்கு மறக்க ஒண்ணா தாப் போலே பிறர்க்கு நினைக்க ஒண்ணாது
செய்கிற வழு இலா அடிமைக்கு-அதாவது-நிருபாதிக சேஷியான அவன் விஷயத்தில் நிரதிசய பிரேமத்தால் – வழு இலா அடிமை செய்ய –3-3-1– என்கிற படியே தம்முடைய பாவ விசேஷங்களால் -இவர் செய்கிற நானாவித வ்ருத்திகளுக்கு–யதா யதா ஹி கௌசல்யா தாஸீ வச்ச சகீவச பார்யாவத் பகிநீவச்ச மாத்ருவச் சோப திஷ்டதி –அயோத்யா -12-68–என்கிறபடி-கௌசல்யார் ஒவ்பாதிக பர்த்ரு விஷயத்தில் அவஸ்த அனுகுணமாக பண்ணின பாவ விசேஷ பிரயுக்த கதி பய அனுவர்த்தியையும் திருஷ்டாந்தம் ஆக்குகை ஸூ சத்ருசம் அல்லாமையால் -ஸ்தூலம் என்ற படி.–இத்தால் ஒரு புடை ஒப்பு சொல்வோம் என்றாலும் -இதுக்கு அது பற்றாது என்றது ஆயிற்று —
““யதா யதா ஹி கெளஸல்யா தாஸீவச்ச ஸ்கீவச பார்யாவத் பகி நீவச்ச மாத்ருவச்சோபதிஷ்டதி” (ரா.அ. 12 – 68) என்று கெளஸலையார் ஓளபாதிகமான பர்த்ரு விஷயத்தில் தத்ததாவஸ்த அநுகு,ணமாகப் பண்ணின அநுவ்ருத்தியையும் த்ருஷ்டாந்தமாக்குகை அதில் ஸ்தூலம் என்கிறார் –
ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1-சர்வ சேஷ வ்ருத்தியும் செய்ய வேண்டும்-சாஸ்த்ரங்களால் இதுவே புருஷார்த்தம் என்று அறிக்கை போராது-அனுஷ்டான பர்யந்தமாக வேணும் –
நாம்-திரு உள்ளத்தைக் கூட்டிக் கொள்ளுகிறார் ஆதல்-கேசவன் தமருக்கு பின்பு தனியர் அல்லாமை யாலே திரு உள்ளத்தோடு ஒக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கூட்டிக் கொண்டு சொல்லுகிறார் ஆதல்-
—
இப்படி அவஸ்தாந்தராபந்னர் ஆனாலும் தாமான தன்மையால் செல்லும் அபிநிவேசமும் – இவருக்குக் குறையாது என்னும் அத்தை சத் திருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார்–ஆனால் தாமான தன்மையும் பிராட்டிமார் தஸையுமுண்டான இதில் தாமான தன்மையில் அபிநிவேஸம் அளவு பட்டிருக்குமோ? என்னில்; ஆறு பெருகா நின்றால் பல வாய்த்தலை களிலும் போரா நிற்கச்செய்தே, தானும் கடலில் போரும் அம்ஸம் குறையாதிருக்குமாப் போலே பிராட்டிமார் தஸையோடும், தாமான தன்மையோடும் வாசியற அபி நிவேவம் கரை புரண்டு பகவத் விஷயத்தை அவகாஹிக்கும் என்கிறார்–
பெருக்காறு பல தலைத்து கடலை நோக்குமா போலே நெக்கொசிந்து கரைந்து அலைந்து இடிந்து உடைய பெருகு காதல் கடல் இடம் கொண்ட கடலை பஹுமுகமாக அவஹாகிக்கும்-சூரணை -131-
பெருக்காறு பல தலைத்து கடலை நோக்குமா போலே-அதாவது கிண்ணகம் எடுத்த ஆறு பல தலையாய் பரந்து செல்லா நிற்க தனக்கு ஒரு குறைவு இன்றியே –பெயரும் கரும் கடலே நோக்கும் ஆறு-முதல் திருவந்தாதி -67-என்கிறபடியே தனக்கு புகலான கடலை நோக்கிச் சென்று புகுமா போலே-நெக்கொசிந்து கரைந்து அலைந்து இடிந்து உடைய-அதாவது-நெக்கொசிந்து கரையும் –6-5-2-
நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே -5-8-1–நினைதொறும் சொல்லும்தொறும் நெஞ்சு இடிந்து உகும் –9-6-2-என் மனம் உடைவதும் அவர்க்கே-9-3-6–என்று உடை குலைப் பட்டு சிதிலராய் பரவசராய் த்ரவீ பூதராய் நிலை கலங்கி நெஞ்சு கட்டு அழிந்து உருக் குலைந்து போம் படி –
(பெருக்காறு என்று தொடங்கி), (பெருக்காறு பல தலைத்துக் கடலை நோக்குமாப்போலே நெக்கொசிந்து கரைந்து அலைந்து இடிந்து உடையப் பெருகு காதல்) ““நினைந்தென்னுள்ளே நின்று நெக்கு”! (பெரியா. தி. 5 – 4 – 8), ”நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க நெக்கொசிந்து கரையும்”? (திருவா. 6 – 5- 2), ”என் மனம் உடைவதும் அவர்க்காகவே”‘ (திருவா. 9-3 – 6) என்று அபிநிவேஸத்துக்குக் கரைப் பற்றான நெஞ்சானது விட்டுச் சரிந்து கரைந்து அலைந்து இடிந்து உடைந்து ஸிதிலமாய்ப் போம்படி-
பெயரும் கருங்கடல் நோக்கும் ஆறு ஒண் பூ
உயரும் கதிரவன் நோக்கும் -உயிரும்
தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு –67—ஆறானது பூர்ணமாய் சலியா நின்ற கடலையே நோக்கா நின்றது-ஆறு கடலை நிறைக்கைக்கு அன்று புகுகிறது -புக்கு அல்லது தான் தரிக்க மாட்டாமை
அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து என்
மனந்தனுள்ளே வந்து வைகி வாழ செய்தாய் எம்பிரான்
நினைந்து என்னுள்ளே நின்று நெக்கு கண்கள் அசும்பு ஒழுக
நினைந்து இருந்தே சிரமம் தீர்த்தேன் நேமி நெடியவனே – 5-4 -8—இவர் பிராயச்சித்த குடி போலே –
அவர்கள் ஏற்றத்தையும் – தம்முடைய தண்மையும் நினைத்து கூசாதபடி பண்ணின படியும் – இவர்கள் பக்கல் ஆதரம் குளப்படி என்னும் படி தம் பக்கல் கடல் போலே அவன் பண்ணின ஆதர அதிசயத்தையும் இவர் தண்மை பாராதே இவர் நெஞ்சினில் புகுந்தபடியையும் –நினைத்து – என்னிலே நினைந்து நின்று-நெக்கு – நினைதொறும் நெஞ்சு இடிந்து உகும் -என்கிறபடியே நெஞ்சு சிதிலமாகி-கண்கள் அசும்பு ஒழுக – உள் உருகினது புற வெள்ளம் இட்டபடி –அசும்பு ஒழுக -அசறுபாய-நினைந்து இருந்தே சிரமம் தீர்த்தேன் –நீ பண்ணின உபகார பரம்பரைகளை அனுசந்தித்து சிரமம் தீர்ந்தேன் –-ஓடியாடின இளைப்பு எல்லாம் இருந்த இடத்தே இருந்து ஆறி இருந்தேன்-
குமுறுமோசை விழவொலித் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
அமுத மென்மொழி யாளை நீர்உமக் காசை யின்றி அகற்றினீர்
திமிர்கொ டாலொத்து நிற்கும் மற்றிவள் தேவ தேவபிரான் என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர்மல்க நெக்கொசிந்து கரையுமே.–6-5-2-–அந்த சீலவத்யையை சொல்லப் புக்கு தலைக் கட்ட மாட்டாதே உதடு நெளிக்கும்-உதடு நெளிக்கிற வாயோடு கண்ண நீர் மல்க –நெக்கு -சிதலையுமாய் –ஒசிந்து -பரவசையுமாய் –கரையும் -நீராகா நின்றாள்-நெக்கொசிந்து கரையுமே.-பெரு வெள்ளத்தில் கரையானாது நெகிழ்ந்து ஒட்டு விட்டு ஒசிந்து பொசிந்து அவயவியாகாத படி கரைந்து போமா போலே அழிந்து போகா நின்றாள் -இப்படி இவள் கரையா நிற்க வன் நெஞ்சரான நாம் இதுக்கு பாசுரம் இடுவது மீட்க்கத் தேடுவது ஆகா நின்றோம் இறே-
ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–5-8-1—சரீரமானது கட்டுக் குலைந்து-அன்பாய் –அதுதான் போய் -நீராய் -அலைந்து கரையும் படி யுருக்கிற்று-உருக்குகின்ற -இத்தலை அழியா நிற்க அத்தலை முதலடி இட்டதில்லையாய் இருக்கை-நெடுமாலே!-சர்வேஸ்வரன் என்னுதல் -போக்யதையின் மிகுதியைச் சொல்லுதல் -வ்யோமோஹ அதிசயத்தை சொல்லுதல் -இப்படி ஸைதில்யத்தை பிறப்பியா நின்று வைத்து எட்டாது இருக்கிறவன் என்னுதல் –தன் போக்யத்தையாலே ஸைதில்யத்தை பிறப்பியா நிற்கை என்னுதல் -தன் வ்யோமோஹ அதிசயத்தை காட்டி ஸைதில்யத்தை பிறப்பியா நிற்கிறவன் என்னுதல்-
நினைதொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும்
வினை கொள் சீர் பாடிலும் வேம் எனது ஆர் உயிர்
சுனை கொள் பூஞ்சோலைத் தென் காட்கரை என் அப்பா
நினைகிலேன் நான் உனக்கு ஆள் செய்யும் நீர்மையே –9-6-2—நினைக்க உபக்ரமிப்பர் -அந்நினைவே யாய்ச் செல்ல ஒண்ணாத படி பலஹானி மிகும் -மறக்க மாட்டார் -திரியட்டும் நினைக்க என்று இழிவார் -இப்படி பல காலும் நினைக்க உபக்ரமித்து தலைக் கட்ட மாட்டாதே செல்லுகிற படி – சொல்லும் தொறும் -நினைக்க அரிய விஷயம் சொல்ல ஒண்ணாது என்னும் இடம் சொல்ல வேண்டாது இருக்க சொல்லும் தொறும் -என்கிறது -என்னும் எப்போதும் என் வாசகம் -என்கிற படியே மனஸ் சஹகாரம் ஒழிய வாசனையால் வாக்கு பேசாத தொடங்கும் -செவி வன்மையாக புக்கு நெஞ்சை அழிக்கும்
நெஞ்சு இடிந்து உகும்-நெஞ்சு கட்டு அழிந்து நீராகா நின்றது –பெருக்காற்றில் கறை இடிந்து விழுந்து பின்பு நீராய் கரைந்து போமா போலே சிதிலம் ஆகா நின்றது–
அடைவதும் அணியார் மலர் மங்கை தோள்
மிடைவதும் அசுரர்க்கு வெம்போர்களே
கடைவதும் கடலுள் அமுதம் என் மனம்
உடைவதும் அவற்கே யொருங்காகவே–9-3-6-—என்னுடைய மனஸ்ஸூ ஒருமடைப்பட உடை குலைப்பட நிற்பதும் ஏவம் வித சேஷ்டிதங்களை யுடையவனுக்கே –
பெருகு காதல்-அதாவது-பெருகுமால் வேட்கை–9-6-1–கழிய மிக்கதோர் காதல்–5-5-10– என்கிறபடியே கரை அழியப் பெருகின காதல் ஆனது-கடல் இடம் கொண்ட கடலை பஹுமுகமாக அவஹாகிக்கும்–
அதாவது-கடல் இடம் கொண்ட கடல் வண்ணா –7-2-7–என்கிறபடியே ஒரு கடல் ஒரு கடலிலே சாய்ந்தார் போலே -திரு பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின ஸ்ரமஹரமான வடிவை உடைய பெரிய பெருமாள் ஆகிற அபரிசேத்ய வஸ்து வத்தமான தன்மையாலும் அவஸ்தாந்திர பத்தியாலும் உண்டான பேதத்தாலே பலமுகமாக சென்று அவஹாக்கிக்கும் என்கை -இத்தால் உக்த வஷ்யமாண அவஸ்தைகளுக்கு எல்லாம் உடலான இவருடைய பக்தி வைபவம் பிரதிபாதிக்க பட்டது —
“*பெருகு காதலடியேன்”’ (திரு மொழி 5 – 2 – 9) என்று இவருடைய அபரிச்சேத்யமான பக்தியான ஆறானது. (கடலிடங்கொண்ட கடலை) க்ஷீராப்திஸாயியாய், ஸர்வேஸ்வரனாய், ஸ்ரமஹரமான வடிவை யுடைய பெரிய பெருமாளாகிற கடலைப் பலமுகமாக அவகாஹிக்கும் என்கிறார் –
உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி
பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
தெருவு எல்லாம் காவி கமழ் திருக் காட்கரை
மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே–9-6-1-ஆத்மாவுக்கு பொறுக்க ஒண்ணாத படி அபி நிவேசம் பெருகா நின்றது -அணு பரிமாணமாக இவ்வஸ்துவின் அளவன்றிக்கே ஆறு பெருகுமா போலே மேன்மேல் என பெருகா நின்றது –ஆலும் ஓவும் விஷாத அதிசய ஸூசகம் —நெஞ்சம் உருகுமால் –வேட்க்கையும் பெருகுமால்-என்று தம்மால் நியமிக்க ஒண்ணாத விஷாதம் தோற்றச் சொல்லுகிறார்
என் செய்கேன் -நெஞ்சு உருகாத படி தரிப்பேனோ -பெருகுகிற அபி நிவேசத்தை அமைப்பேனோ -இதுக்கு அடியான அவன் குணங்களை தவிர்ப்பேனோ-தொண்டனேன்-அதுக்கு அடியான என் சாபல்யத்தை தவிர்ப்பேனோ -சாபலம் அபூமி என்று கை வாங்க ஓட்டுகிறது இல்லை -மறந்து தரிக்க வொட்டுகிறது இல்லை –
பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்! பற்றிலார் பற்ற நின்றானே!
கால சக் கரத்தாய்! கடலிடங் கொண்ட கடல்வண்ணா! கண்ணனே!’ என்னும்;
‘சேல்கொள் தண் புனல்சூழ் திருவரங்கத்தாய்!’ என்னும்’என் தீர்த்தனே!’ என்னும்;
கோல மா மழைக்கண் பனி மல்க இருக்கும் என்னுடையக் கோமளக் கொழுந்தே.–7-2-7–நீ எங்களை காலம் பார்த்து அன்றோ கிடக்கிறது –ஒரு கடல் கடலிலே சாய்ந்தால் போலே அணித்தாக திருப் பாற் கடலிலே சாய்ந்தில்லையோ
பெருகு காதல் அடியேன் உள்ளம்
உருவப் புகுந்து ஒருவரூர் போல்
அருகு கைதை மலரக் கெண்டை
குருகு என்றும் அஞ்சும் கூடலூரே–5-2-9—நாள் செல்ல நாள் செல்ல ஆற்றுப் பெருக்கு போலே பெருகா நின்றுள்ள காதலை உடைய அடியேனுடைய ஹிருதயமானது உருகும்படி யாகப் புகுந்த அத்விதீயனானவன் வர்த்திக்கிற தேசம் போலே இருந்தது – ( உருக்கவே புகுந்தார் )-
கழிய மிக்கதோர் காதலள் இவள் என்று அன்னை காணக்கொடாள்
வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
குழுமித் தேவர் குழாங்கள் கைத்தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே
எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே.–5-5-10-அலைவு அற விஞ்சின காதல் என்னுதல் -நாள் கழிய கழிய விஞ்சின காதல் என்னுதல் –சோகச்சகில காலேந கச்ச தாஹ்யபக்கச்சதி -மம்ஸாபச்யதிச் காந்தா மஹான் யஹனி வர்த்ததே –
—
இவருடைய பக்தி தான் சாஸ்த்ரங்களில் சொல்லுகிறபடியே சக்ரமமாய் -சாத்ம்யமாய் -ஏக முகமாய் இராமல் இப்படி அமர்யாதமாய் -அசாத்தியமாய் -அநேக முகமாய் நடப்பான் என் என்னும் ஆ காங்ஷையில் அருளிச் செய்கிறார் —இப்படி இரா நிற்கிற இவருடைய பக்தி தான் ஸக்ரமமாயிருக்கமோ? என்னில், இவருடைய பக்திக்கு “ந ஸாஸ்த்ரம் நைவ ச க்ரம:‘” என்கிறபடியே தேஸ விஸேஷத்தில் பக்தி போலே இதுவும் வைதமல்லாமையாலே க்ரமாபேக்ஷை இல்லை என்கிறார்-
அச்சேத்யம் என்னும் அது ஈரும் வேம் ஈரியாய் உலர்த்த வென்னப் பட சித்தம் சித்தாய் அல்லேன் என்று நீங்க கரணங்கள் முடியானேயில் அவையாக உடலம் ஆத்ம தர்மம் கொள்ள காற்றும் கழியும் கட்டி அழக்
கொண்ட பெரும் காதலுக்கு பத்திமை நூல் வரம்பில்லையே —சூரணை –132-
அச்சேத்யம் என்னும் அது–அதாவது–அச்சேத்யோய மதாஹ்யோயம் அக்லேத்யோ சோஷ்ய ஏவச–ஸ்ரீ கீதை -2-24- -என்று-சேதன தகன க்லேதன சோஷன நர்ஹமாக சொல்லப் படும் ஆத்ம வஸ்து –
ஈரும்-சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை சேர் திருவாக எம்மாவி ஈரும் -9-9-6–என்று பிராட்டியோடு ருத்ராதிகளோடு வாசி அற உடம்பு கொடுக்கும் அவனுடைய சீலம் ஸ்மாரகமாய் என் ஆத்மாவை ஈரா நின்றது என்றும் —-வேம்- வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கு –10-3-7–என்று என் ஆத்மாவானது நெருப்பில் இட்ட மெழுகு போலே உருக் குலைந்து வேவா நின்றது என்றும் –ஈரியாய்–கண்ணனுக்கு என்று ஈரி யாய் -6-7-9–என்று நல்லது கண்டால் கிருஷ்ணனுக்கு என்று அனுசந்ததாலே ஆர்த்தரதை அடையும் -என்றும் –-உலர்த்த –வேட்கை நோய் மெல்லாவி உள் உலர்த்த -2-1-10–என்று பிரேம வியாதி யானது மிருது ஸ்வாபமான ஆத்மாவை குருத்து வற்றாக உலர்த்த என்றும் – இப்படி சேதன ஆத்யர்ஹம் ஆயிற்று என்று ஸ்வயமேவ சொல்லும்படியாக –
(அச்சேத்யமென்று தொடங்கி). **௮ச்சேத்யோ யமதாஹ்யோயமக்லேத்யோ ஸோஷ்ய ஏவ ச?” (கீ,. 2 – 24) என்று சேதந-தஹந-ப்லாவந-ஸோஷணாதிகளுக்கு அயோக்யமா யிருக்கிற ஆத்ம வஸ்து. (ஈரும் வேம் ஈரியாய் உலர்த்த என்னப்பட) “சிவனொடு பிரமன் வண்திருமடந்தை சேர் திருவாக மெம்மாவி ஈரும்” (திருவா. 9 – 9- 6), ‘‘வேம் எமதுயிரழல் மெழுகிலுக்கு”” (திருவா. 10 – 3-6) ”கண்ணனுக் கென்றீரியாயிருப்பாள்”‘ (திருவா. 6 – 3 – 6), “’வேவாரா வேட்கை நோய் மெல்லாவி உள்ளுலர்த்த”‘ (திருவா. 2 -.1 – 1) என்று அவனுடைய ஸீல குணம் என் ஆத்மாவை ஈரா நின்றது என்றும், அக்நி ஸகாஸத்துக்குள்ளே புகுந்த மெழுகு போலே என் ஆத்மாவானது தக்தமாகா நின்றது என்றும், விலக்ஷண பதார்த்தங்களைக் காணில் கண்ணனுக்கு என்று த்ரவீ பூதையாகா நின்றாள் என்றும், ப்ரேம வ்யாதியானது என் ஆத்மாவைக் குருத்து பற்றாக உலர்த்தா நின்றது என்றும், இப்படி சேதநாதிகளுக்கு யோக்யமாய்த் தென்று இவர் தாமே சொல்லும்படியாக ஆத்ம வஸ்து பாஹ்ய பதார்த்தங்களாலே சேதநாதிகளுக்கு அயோக்யமென்றது இத்தனை போக்கி, தன்னிலும் அச்சமான பகவத் குணங்கள் புக்கழிக்க, அழியாதாகில் இதுதான் ஜ்ஞாந-. த்ரவ்யமன்றியிலே ஒழியுமிறே-
அவனுடை யருள் பெறும் போதரிதால் அவ்வருள் அல்லன வருளும் அல்ல
அவன் அருள் பெறுமள வாவி நில்லாது அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன்
சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை சேர் திரு வாகம் எம்மாவி ஈரும்
எவன் இனிப் புகுமிடம் எவன் செய்கேனோ ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள்–9-9-6-பிராட்டியோடு -அந்நிய பரரான ருத்ராதிகளோடு வாசி அற உடம்பு கொடுக்கும் சீலம் ஸ்மாரகமாய் நித்தியமான ஆத்மாவை முடியா நின்றது -அந்நிய பரர்க்கு எளிதான உடம்பு கிடீர் எனக்கு அரிதாய்த்து –
எவன் இனிப் புகுமிடம் -சர்வ சாதாரணமான உடம்பை இழந்தால் இனி எங்கே போய் தரிப்பது –அவன் உடம்பு கிட்டிற்று இல்லை என்னா ஹிதம் சொல்லுகிற உங்கள் உடம்பைப் பற்றித் தரிக்கவோ-
வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கு வெள் வளை மேகலை கழன்று வீழ
தூ மலர்க்கண் இணை முத்தம் சோரத் துணை முலை பயந்து என தோள்கள் வாட
மா மணி வண்ணா உன் செங்கமல வண்ண மென் மலரடி நோவ நீ போய்
ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு அசுரர்கள் தலைப் பெய்யில் எவன் கொல் ஆங்கே–10-3-7-எங்கள் உபதேசம் கொண்டாகிலும் அறியாய் –எமது உயிர் -உனக்கு இல்லை என்னும் இடம் கண்டோம் இறே-
காரியம் நல்லனகள் அவை காணில் என் கண்ணனுக்கு என்று
ஈரியா யிருப்பாள் இதெல்லாம் கிடக்க இனிப் போய்ச்
சேரி பல்பழி தூஉய் இரைப்பத் திருக்கோளூர்க்கே
நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே.–6-7-9-பதார்த்தங்களில் நல்லனவற்றைக் காணில் -ஒன்றிலும் கண் வைப்பது இல்லை -கண்டாள் ஆகில் எனக்காக தன்னை யோக்கி வைத்த கிருஷ்ணனுக்கே என்னும் –-ஈரியா யிருப்பாள் -கிருஷ்ணனுக்கு என்றால் மேல் ஒன்றும் சொல்ல மாட்டாதே -அவன் குணங்களை அனுசந்தித்து நீராய் இரா நின்றாள் –ஈரித்து இருக்கும் -ஆர்த்த ஹ்ருதையாய் இருக்கும்–
வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்
மாவாய் பிளந்த மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே –2-1-10—ஒரு கால் வெந்து சமையக் கடவது அன்றிக்கே -அக்னி நேவாக் நி பர்வத -என்கிறபடியே வெந்த இடமே இந்தநமாக தஹியா நிற்கிற காதல்
அளவில்லாத வேட்க்கை நோய்-மெல்லாவி – பாத்தம் போராத ஆத்மாவை -அதாஹ்யமாய் இருப்பது கேவல அக்னி யாகில் இறே-யுள்ளுலர்த்த- கூடோ அக்னி ரிவ பாதபம் -கோடாரத்தில் பற்றின அக்னி போலே குருத்து வற்றாக வற்றுவிக்க-ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்- வேவேரா வேட்க்கை நோயாகைக்கு அடி இருக்கிற படி-இடை விடாதே சர்வ காலமும் உன் குணங்களைக் காட்டி என்னை உன் பக்கலிலே விழ விட்டு நீ கடக்க நின்றாய்-விழ விட்டுக் கொண்டாய் என்னவுமாம்
சித்தம் சித்தாய் அல்லேன் என்று நீங்க-அதாவது-என் நெஞ்சு என்னை நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி –8-2-10-என்று அசேதனமான சித்தம் சேதன சமாதி அடைந்து அவன் விஸ்லேஷித்து போன உனக்கு கரணமாக அல்லேன் என்று-சம் ந்யஸ்தம் மயா-என்கிறபடி உறவறச் சொல்லி தம்மை விட்டு நீங்க-
(சித்தம் சித்தாய் அல்லேனென்று நீங்க) என்னெஞ்சென்னை நின்னிடையே னல்லேனென்று நீங்கி” (திருவா, 8 – 2 – 10) என்று அசேதநமான சித்தமானது சேதந ஸமாதியாலே இவரை ““ஸந்ந்யஸ்தம் மயா”’ என்று விட்டு நீங்க,-
என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள் யானினிச் செய்வதென் என்னெஞ்சென்னை
நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி நேமியும் சங்கு மிரு கைக்கொண்டு
பன்னெடுஞ் சூழ் சுடர் ஞாயிற்றோடு பால் மதி ஏந்தி யோர் கோல நீல
நன்னெடும் குன்றம் வருவதொப்பான் நாண் மலர்ப்பாத மடைந்ததுவே-8-2-10–என்னெஞ்சு -எல்லா அவஸ்தையிலும் இதுக்கு முன்பு எனக்கு பவ்யமாய்ப் போந்த என் நெஞ்சு-என்னை-தன்னைக் கொண்டு ஜீவித்து இருக்கிற என்னை-நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி-உன்னோடு எனக்கு அடைவில்லை என்று அகன்று -இதயுக்த்வாபருஷம் பண்ணிப் போயிற்று -பிராப்தி சொல்லி மீட்க ஒண்ணாத படி ஸந்நயஸ்தம் மயா என்று போயிற்று -உங்களுக்கு நான் நிற்கிற நிலையிலே இறே என் நெஞ்சு எனக்கு அவ்வருகே போனபடி
கரணங்கள் முடியானேயில் அவையாக-அதாவது-பாஹ்ய கரணங்கள் –முடியானே -3-8-திருவாய் மொழியில் படியே சேதன சமாதியாலே ஒரு கரணத்தினுடைய வ்ருத்தியை கரணாந்தரம் ஆசை படும் படி விடாய்க்க-உடலம் நின் பால் அன்பாயே நீராய் அலைந்து கரைய -5-8-1-என்று பகவத் பிரேம பாரவச்யத்தால் ஆத்மா சிதிலமாய் போகாதபடி கட்டின கரியான சரீரம் த்ரவ்யம்(பொன் ) இருந்த குகையும் உருகுமா போலே அன்பும் அதுக்கு ஆஸ்ரயமான ஓன்று என்று இரண்டு அன்றியே – அன்பு தான் ஒரு வடிவு கொண்டால் போலே உத்தரோத்தரம் சைதில்யத்தை அடைந்து ஆத்ம தர்மத்தை ஏறிட்டு கொள்ள –
(கரணங்கள் முடியானேயிலவையாக) “முடியானேயிற்படியே சேதந ஸமாதியாலே விடாய்த்த கரணங்களை உடையராய். (உடலம் ஆத்மதர்மம் கொள்ள) ‘“அடியேனுடலம் நின்பாலன்பாயே நீராயலைந்து கரைய”’ (திருவா. 5 – 8 – 1) என்று த்ரவ்யமிருந்த குஹை உருகுமாப் போலே ஆத்மா பகவத் ப்ரேம வஸ்யதையாலே ஸிதிலமாகாதபடி கட்டின கரையான ஸரீரமானது அந்தராத்மாவைப் போலே பகவத் ப்ராவண்யத்தை உடைத்தாய் கொண்டு ஸிதிலமாக.-
முடியானே -3-8-திருவாய் மொழியில்--ஓன்று ஒன்றே சர்வ இந்திரிய வ்ருத்தியை ஆசைப்படுகிற
தம்முடைய கரண க்ராமமும் அப்படியே விடாய்த்த தாமும் – நாம் அவனை என்றோ காண்பது என்று துர்பிக்ஷ காலத்தில் தரித்ரனாய்-பஹு பிரஜனானவன் பிரஜைகள் பசிக்கும் தன பசிக்கும் ஆற்றாமே
கூப்பிடுமா போலே ஆபரணங்களையும் திவ்ய ஆயுதங்களையும் இவற்றுக்கு ஆச்ரயமான வடிவு அழகையும் குணங்களையும் சேஷ்டிதங்களையும் உடையவனாய் காணப் பெறுவது என்றோ என்று கேட்டார் அடைய நீர்ப் பண்டமாம் படி கூப்பிடுகிறார் –
ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–5-8-1—அடியேன் என்கிறது யஸ்யாஸ்மி என்ற வசனத்தால் அன்று -போக்யதைக்கு தோற்று சொல்லுகிறார்-அடியேன் உடலம் -ஞான குணகமான ஆத்மவஸ்து அழியும் அளவன்றிக்கே அசேதனமான சரீரத்து அளவும் செல்லக் கரைகை -ஆத்மவஸ்து உத்தேசியத்தில் ஈடுபட்டு அழியாமைக்கு கட்டின கரை யாயிற்று சரீரம் அதுவும் அழிந்தது என்கை
நின்பால் அன்பாய் நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற–நின்பால் – சேதன அசேதன விபாகம் அற அழிக்க வல்ல உன் பக்கலிலே –அபி வ்ருஷாபரிம்லாநா–உபதப்தோ தகா நத்ய–அன்பாய் -அசித் த்ரவ்யம் அன்றியே -பிரமத்தை இட்டுச் செய்தது என்னலாம் படி இருக்கை -அன்னமயமாய் இருக்கை அன்றிக்கே ப்ரேமமயமாய் இருக்கை –காதல் குருகூர் சடகோபன் இறே-சரீரமானது கட்டுக் குலைந்து-அன்பாய் –அதுதான் போய் -நீராய் -அலைந்து கரையும் படி யுருக்கிற்று-உருக்குகின்ற -இத்தலை அழியா நிற்க அத்தலை முதலடி இட்டதில்லையாய் இருக்கை-நெடுமாலே! சர்வேஸ்வரன் என்னுதல் -போக்யதையின் மிகுதியைச் சொல்லுதல் -வ்யோமோஹ அதிசயத்தை சொல்லுதல் -இப்படி ஸைதில்யத்தை பிறப்பியா நின்று வைத்து எட்டாது இருக்கிறவன் என்னுதல் –தன் போக்யத்தையாலே ஸைதில்யத்தை பிறப்பியா நிற்கை என்னுதல் -தன் வ்யோமோஹ அதிசயத்தை காட்டி ஸைதில்யத்தை பிறப்பியா நிற்கிறவன் என்னுதல்
காற்றும் கழியும் கட்டி அழக்-அதாவது-கடலும் மலையும் விசும்பும் துழாய் –2-1-4–இருளின் திணி வண்ணம் மா நீர்க் கழியே -2-1-8- -இத்யாதிகளின் படியே-காற்றுக்கு சதத கதித்வமும் கழிக்கு ஏறுவது வடிவதாகவும் நித்ய ஸ்வபாவம்என்று அறியாதே – அவற்றுக்கு அவை பகவத் விரஹ கிலேச ஜனிதமாகக் கருதி – அசேதனமான அவற்றை தமக்கு சக துக்கிகளாகக் கொண்டு –-எம் ஆற்றாமை சொல்லி அழுவோமை-2-1-7–என்று தாம் அவற்றைக் கட்டிக் கொண்டு கிடந்தது கதருமாம் படி—கொண்ட பெரும் காதலுக்கு பத்திமை-அதாவது –அலர் தூற்றிற்றது முதலாகக் கொண்ட என் காதல்-7-3-8– -என்றும் –மயல் பெரும் காதல்-4-4-10—என்றும் சொல்லுகிறபடி -பிறர் பழி சொல்லுவதே எருவாக பணைத்து செல்லுமதாய் – (ஊரவர் கவ்வை எருவாக அன்னை சொல் நீராக நீளும் இந்நோய் -திருக்குறள் ) க்ருத்ய அக்ருத்யம்-தெரியாதபடி – அறிவு கேட்டை விளைவிப்பதான அபரிசேத்ய பக்திக்கு
(காற்றும் கழியும் கட்டியழ) “கடலும் மலையும்” இத்யாதி, (திருவா. 2-1. 4), “எம் ஆற்றாமை சொல்லி அழுவோமை’: (திருவா, 2 – 1 – 7) என்று வாயுவுக்கு ஸதத கதித்வம் ஸ்வாபாவிகமென்றும், கழிக்கு ஏறுதல் வடிதல் செய்கை ஸ்வாபாவிகமென்றும், மற்றும் நாரை தொடக்கமானவற்றுக்கு அவ்வோ ஸ்வபாவம் நியதமென்றும் அறியாதே தம்மைப் போலே பகவத் விஸ்லேஷத்தாலே இவையும் நோவு படுகிறனவாக இவற்றோடே க்லேஸிக்கும் படியாகக் கொண்ட பெருங்காதலுக்கு, ”அலர் தூற்றிற்றது முதலாக் கொண்ட என் காதல்” (திருவா. 7 – 3 – 8) என்று இப்படியிருக்கிற இவருடைய அபரிச்சேத்யமான பக்திக்கு.-
கடலும் மலையும் விசும்பும் துழாய் எம் போல்
சுடர் கொள் இராப்பகல் துஞ்சாயால் தண் வாடாய்
அடல் கொள் படை யாழி அம்மானைக் காண்பான் நீ
உடலம் நோய் உற்றாயோ ஊழி தோர் ஊழியே –2-1-4—பரப்பு உடைத்தான் கடலோடே-நிர் விவரமான மலையோடு -அபரிச்சின்னமான ஆகாசத்தோடு -வாசி அறத் துழாவி –-காரார் திரு மேனி காணும் அளவும் போய் -என்று ஷீராப்தி யோடு -திருமலையோடு -பரமபதத்தோடு வாசி அறத் தேடுவார்க்கு போலியாய் இருக்கிற படி –-தவ் வனானி கிரீன் சைவ சரிதச்ச சராம்ஸிச நிகிலேந விசின்வா நவ் ஸீதாம் தசரதாத் மஜவ் –
தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
வேற்றோர் வகையில் கொடியதாய் எனையூழி
மாற்றாண்மை நிற்றியே வாழி கனையிருளே –2-1-7—எங்கள் ஆற்றாமையைச் சொல்லிக் கூப்பிடுகிற எங்களை – நாங்கள் பெறுகிறது உண்டோ – நீ பொறுக்க மாட்டாதே ஸாத்ரவம் கொண்டாட -அவனைப் பெறவோ-போன நெஞ்சைப் பெறவோ-எங்கள் தரியாமையாலே அழப் பெறோமோ–நீ நடுவே-
உனக்கு பாத்ய பாதக பாவ சம்பந்தம் இன்றிக்கே இருக்கச் செய்தே-வேற்றோர் வகையில் கொடியதாய் சத்ருக்கள் படியிலும் கொடியதாக செய்யா நின்றாய்-வகை -பிரகாரம் –-கொடிதாய்-கொடிதான படியை உடையையாய்-
இருளின் திணி வண்ணம் மா நீர்க் கழியே போய்
மருளுற்று இராப்பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
உருளும் சகடம் உதைத்த பெருமானார்
அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே –2-1-8—இருள் செறிந்தால் போலே இருக்கிற பெரு நீரை உடைய கழியே-போய்-மருளுற்று –மிகவும் அறிவு கெட்டு-உள்ளுள்ளவை எல்லாம் கலங்கி
மயர்வற மதி நலம் அருளப் பெற்ற அவ்வளவு எல்லாம் கலிங்கினார்க்கு போலியாய் இருக்கை –
கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடிக் கார்க்கடல் வண்ணனோடு என் திறத்துக்
கொண்டலர் தூற்றிற்றது முதலாக் கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ!
மண் திணி ஞாலமும் ஏழ்கடலும் நீள் வீசும்புங் கழியப் பெரிதால்;
தெண் திரை சூழ்ந்தவன் வீற்றிருந்த தென் திருப் பேரெயில் சேர்வன் சென்றே.–7-3-8–என் வை வர்ணயத்தைக் கண்டு -இவள் நிறத்தை இழக்கும் போது அந்நிறத்தை உடையனுக்கு ஆக வேணும் என்று கொண்டார்கள் -அவன் அழகிலே இவள் அகப்பட்டாள் என்கை-அலர் தூற்றிற்றது-பழி தூற்றினார்கள்-அது முதலாக்-கொண்ட என் காதல் -அது அடியாக -அதுவே எருவாக -இடம் கொண்ட -ஊரவர் கவ்வை எருவிட்டு -என்ன கடவது இறே-என் காதல் உரைக்கில் தோழீ!–யதோ வாசோ நிவர்த்தந்தே -என்கிற பகவத் ஆனந்தத்துக்கு அவதி உண்டாகிலும் இக்காதலுக்கு பாசுரம் இட்டுச் சொல்லப் போகாது -தோழீ -அவன் காதலின் பெருமை சொல்லி அது அடியாக என் காதலுக்கு கிருஷி பண்ணின நீ படும் பாடு அறிவுதியே-
அயர்க்கும்;சுற்றும் பற்றி நோக்கும்; அகலவே நீள் நோக்குக் கொள்ளும்;
வியர்க்கும்; மழைக் கண் துளும்ப வெவ் வுயிர் கொள்ளும்;மெய் சோரும்;
பெயர்த்தும்‘கண்ணா!’என்று பேசும்; ‘பெருமானே, வா!’என்று கூவும்;
மயற் பெருங் காதல் என் பேதைக்கு என் செய்கேன் வல் வினையேனே?–4-4-10—மதி கெடுகைக்கு உடலான அதி பிரமத்தை உடையவள்-ஆசா லேசம் உடையார்க்கு அனுபவிக்கலாம் வி லக்ஷண விஷயம் கிடீர் இவளுக்கு விபரீத பலம் ஆயிற்று-இவளுடைய அதி மாத்ர ப்ரேமம் பேற்றுக்கு உடலாகை அன்றிக்கே மயலுக்கு உறுப்பாவதே-
நூல் வரம்பு இல்லையே-அதாவது-அத்யந்த பக்தி யுக்தா நாம் -ந சாஸ்திரம் நைவ ச க்ரமம்- என்கிற தேச விசேஷத்தில் -அனுபவ உபகரண பக்தி போலே சென்ற படி கண்டு இருக்கும் அத்தனை அல்லது –பக்திமைக்கு அன்பு உடையேன் ஆவதே –திருக் கூறும் தாண்டகம் -10- என்கிறபடி நூல் பிடித்து பரிமாறும் படி வரம்பு கட்ட ஒண்ணாது இறே என்கை–இத்தால் – வா ஆத்மா அரே த்ரஷ்டவ்ய ஸ்ரோதவ்ய மந்தவ்ய நிதித்யாசிதவ்ய-என்கிற விதி பிரேரிதியாய் – சேதன சாத்யையாய் -க்ரம பரிணாமினி யான பக்தி போல் அன்றிக்கே அதற்க்கு எதிர் தட்டாய், கரை அழிந்து செல்லுகிற இது சாஸ்திர மரியாதையின் கீழ் அடங்காதது என்றது ஆயத்து-
(பத்திமை நூல் வரம்பில்லையே) ”ந ஸாஸ்த்ரம் நைவ ச க்ரம:’‘ என்று தேஸ விஸேஷத்தில் அநுபவோபகரணமான பக்தி போலே இவருடைய பக்திக்கு, ஸாதந பக்தி போலே வைதமாகையும் க்ரமா பேஷையும் இல்லை யிறே.
சித்தமும் செவ்வை நில்லாது என் செய்கேன் தீ வினையேன்
பக்திமைக்கு அன்புடையேன் ஆவதே பணியாய் எந்தாய்
முத்தொளி மரகதமே முழங்கொளி முகில் வண்ணா என்
அத்த நின் அடிமை அல்லால் யாதும் ஒன்றும் அறிகிலேனே–10—என் தன் அளவன்றால் யானுடைய அன்பு -என்னும்படியே-நூல் பிடித்த பக்தியை அளவாக்க வேணும் –-அளவிறந்த பத்தியை மாற்றி நூல் பிடித்த செவ்வே அனுபவிக்கக் கூடிய பக்தியை அளவாக்க –மட்டமாக்க -வேணும்-பக்தியை உண்டாக்கின நீயே அளவு படுத்த வேணும் –(அளவு கடந்த ஆசை நிலைமைக்குப் பத்திமை யென்று பெயர்;-ஓரளவிலே நிற்கிற ஆசை நிலைமைக்கு அன்பு என்று பெயர் என்பதாகக் கொள்க.–இப்போது ஆழ்வாருடைய ஆசையின் நிலைமை எல்லை கடந்த அவஸ்தையிலே நிற்பதால் ‘இப்படிப்பட்ட பத்திமையைக் கொண்டு என்னால் பாடாற்றப் போகவில்லை,-இந்த நிலைமையை மாற்றி வெறும் அன்பு நிலைமையையே தந்திடாய்‘ என்று வேண்டிக் கொள்ளுகிறார்.
ஆக-
ஞானத்தில் தம் பேச்சு–என்று தொடங்கி – இவ்வவளவும் ஞான தசையில் தாமான தன்மையாலும்
பிரேம தசையில் ஸ்த்ரீத்வ ரூபேணவும் பேசுவர் என்றும் –
ஸ்த்ரீத்வம் ஆத்மாவுக்கு வந்தேறி அல்லாமையாலே இவருக்கு இது ஸ்வாபாவிகம் என்றும் –
அது தான் சாமான்யம் அன்றிக்கே ஆறு பிரகாரத்தாலே லஷ்மி சமர் என்றும் –
மற்றை பிராட்டிமார் பகவத் பரி க்ரஹம் உடையோர் எல்லோரோடும் சாம்யம் உடையவர் என்றும் –
சர்வதா சாம்யம் இவருக்கு லஷ்மி யோடே என்றும் –
மற்றும் பகவத் அனந்யராயும் பகவத் பிரத்யாசன்னராயும் உள்ள லஷ்மணாதிகள் தசரதாதிகள் படியும் இவருக்கு உண்டு என்றும் –
அவர்களில் இவர் வ்யாவிருத்தர் என்றும் —
பிராட்டிமாரையும் அனந்தாதிகளையும் அவர்கள் தாமாகவே பாவிப்பார் என்றும் –
இந்த பாவனா ஹேதுவான இவருடைய ஸ்த்ரீத்வ வரலாற்றுக்கும் – அநேக விருத்திகளில் அபிநிவேசதுக்கும் திரௌபதி கௌசல்யாதிகள் படிகளை திருஷ்டாந்தம் ஆக்குகை ஸ்தூலம் என்றும் –
இந்த பாவ வ்ருத்திகளுக்கு மூலமான பக்தி பிரகாரங்களையும் சொல்லிற்று ஆய்த்து-
ஆக இதுக்குக் கீழ் –ஜ்ஞாந தஸையில் தாமான தன்மையிலே பேசுவர்; ப்ரேம தஸையில் ஸ்த்ரீ ஸ்வபாவத்தாலே பேசுவர் என்றும், அந்த ஸ்த்ரீத்வம் இவர்க்கு ஸ்வாபாவிகம் என்றும், ஸ்த்ரீத்வந்தான் ஸாமான்யமன்றிக்கே அநந்யார்ஹ ஸேஷத்வாதிகளாலே பிராட்டியோடொப்பர் என்றும், மற்றுமுண்டான பிராட்டிமார் பகவத் பரிக்ரஹமுடை யாரெல்லாரோடும் ஒப்பர் என்றும் ஸர்வதா ஸாம்யமுன்ளது பெரிய பிராட்டியாரோடே என்றும், மற்றும் பகவத் ப்ரத்யாஸந்நரான லக்ஷ்மணாதிகள் படியும் இவர்க்கு உண்டென்றும், அவர்களிலும் வ்யாவ்ருத்தர் என்றும், அவர்களோடு ஸாம்யமன்றிக்கே அவர்களைத் தாமாக பாவிப்பர் என்றும், இந்த பாவ வ்ருத்திகள் இவர்க்கு உண்டாகைக்கு நிதாநம் இன்னதென்னுமிடத்தையும், இந்த பாவ வ்ருத்திகளுக்கு அடியான பக்தி ப்ரகாரங்களையும் சொல்லி நின்றது கீழ். ஆக இத்தால் பக்தி தஸையில் இவர் பேச்சிருக்கும் படி சொல்லிற்று-
—
–——————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்