5 –ஸூரி வைபவ பாத, – 3 அதிகரணங்கள் இதில்-
5– க்ரந்த,-தத் கர்த்ரு வைப, வாதி, கரணம் —39 – 74 –மொத்தம் 36 ஸூரணைகள்
6—ஸூரி ப்ராமாண்ய விஸேஷாதி கரணம்(ப்ரமாத்ரு வைபவம் ) 75 – 93 –மொத்தம் 19-ஸூரணைகள்
7-ப,க,வத் கடாக்ஷ விஸேஷாதி கரணம் 94–96—மொத்தம் -3- ஸூரணைகள்–
5– க்ரந்த,-தத் கர்த்ரு வைப, வாதி, கரணம் —39 – 74 –மொத்தம் 36 ஸூரணைகள்–முதல் பகுதி-39 – 49–மொத்தம் 11-ஸூரணைகள்—இரண்டாம் பகுதி-50-74–மொத்தம் 25-ஸூரணைகள்–
திரு வாய் மொழி ஒன்றுக்கும் அன்றே வேதத்வம் சாதித்தது . இவருடைய பிரபந்தங்கள் நாலுக்கும் ஒக்கும் இறே –ஆகை இறே-வேத சதுஷ்டய -சூரணை 43–இத்யாதி வாக்யத்தில் இவர் பிரபந்தங்கள் நாலையும் நாலு வேதத்தினுடைய ஸ்தாநேயாக அருளிச் செய்தது – -அதில் எந்த பிரபந்தம் எந்த வேதத்தின் உடைய ஸ்தானத்திலே என்ன அருளிச் செய்கிறார் -கீழே இவருடைய ப்ரபந்தங்கள் நாலும் வேத சதுஷ்டயம் போலே என்றது, எந்த ப்ரபந்தம் எந்த வேத ஸ்தாநத்திலே என்னில்-
இயற்பா மூன்றும் வேத த்ரயம் போலே-பண்ணார் பாடல் பண்புரை இசை கொள் வேதம் போலே-சூரணை -50–
அதாவது
இயற்பாவான திரு விருத்தம் திருவாசிரியம் , பெரிய திரு அந்தாதி என்கிற பிரபந்தங்கள் மூன்றும் -அடைவே ருக், யஜுர், அதர்வணங்கள் ஆகிற மூன்று வேதத்தின் உடையவும் ஸ்தானத்திலே ..-பண்ணார் பாடல்–திருவாய்-10-7-5-என்று -பண்ணோடு சேர்ந்து இருந்துள்ள இசையை உடைய திருவாய்மொழி –-பண்புரை வேதம்-திருவாய்-6-6-5–என்றும் -இசை கொள் வேதம்–பெரிய திருமொழி-5-3-2–என்றும்-பண்ணையும் இசையும் உடைத்தான சாம வேதம் போலே என்கை ..வியாக்யானங்களில் -பண்புடை வேதம் -என்று ஒழிய –பண்புரை வேதம்-என்ற பாடமும் ,-இசை கொள் வேதம் என்கிறதுக்கு -சாம வேத பரத்வம் கண்டது இல்லை ஆகிலும் , ஆப்த தமரான இவர் ,இப் பிரபந்தத்திலே இப்படி அருளிச் செய்கையாலே ,இப்படியும் கொள்ள வேணும் ..-அப்போதைக்கு அவ்வவ ஸ்தலங்களில் சாம வேத வைலஷண்யத்தைப் பற்ற இத்தைச் சொன்னதே உள்ளது . மற்றயவற்றுக்கும் இது உப லஷணம் என்று கொள்ளக் கடவது .-பண்புரை வேதம் என்றது -பண்ணை புரைந்து இருக்கிற வேதம் என்றதாய்
அப் பண்ணுக்கு ஆஸ்ரயமான வேதம் என்ற படி ..-இசை கொள் வேதம்-என்றது இசையை உடைத்தான வேதம் என்ற படி-பண்ணார் பாடல் என்று -திரு வாய் மொழி பண்ணையும் இசையையும் உடைத்தாய் –
ஆகையாலே சாம வேதத்துக்கு பண்ணும் இசையும் உண்டு என்னும் இடம் அறிவிக்கைக்காக வாய்த்து
சாம வேத பரமான சந்தைகள் வேண்டுவது உண்டாய் இருக்க ,இவற்றை இவர் இப்போது எடுத்தது-
இயற்பாவா யிருக்கிற திருவிருத்தம், திருவாசிரியம், திருவந்தாதி என்கிற ப்ரபந்தங்கள் மூன்றும் ருக், யஜூர் அதர்வணம் என்கிற மூன்று வேத ஸ்தாநத்திலே; ”பண்ணார் பாடல்”’ (திருவா, 10 – 7 – 5) என்கிற திருவாய்மொழி “பண்புடை வேதம்”, (திருவா. 6 – 6 – 5) ‘இசை கொள் வேதநூல்” (திருமொழி 5 – 3 – 2) என்றும் சொல்லுகிற காந ப்ரதாநமான ஸாம வேதம் போலே என்கிறார் –
நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–10-7-5—பண்ணார் பாடல் இன் கவிகள் —ஆர்தல் -சேர்தல் -மிகுதல்-பண் மிக்கு இருந்துள்ள பாடல் -புஷ்ப்பம் பரிமளத்தோடே அலருமா போலே -திருவாய் மொழி அவதரித்த போதே பண் மினுங்கி யாய்த்து இருப்பது –இன் கவி–பண்ணுக்கு ஆஸ்ரயமான கவி தானே இனிதாய் இருக்கை –
பண்புடை வேதம் பயந்த பரனுக்கு
மண்புரை வையம் இடந்த வராகற்கு
தெண்புனற் பள்ளிஎம் தேவபி ரானுக்குஎன்
கண்புனை கோதை இழந்தது கற்பே.–6-6-5—ஈஸ்வரனை உள்ளபடியே காட்டித் தரும் நீர்மையை யுடைய வேதம் —
வசையில் நான்மறை கெடுத்த அம் மலர் அயற்கு அருளி முன் பரி முகமாய்
இசை கொள் வேத நூல் என்று இவை பயந்தவனே எனக்கு அருள் புரியே
உயர் கொள் மாதவிப் போதொடு உலாவிய மாருதம் வீதியின் வாய்த்
திசை எல்லாம் கமழும் பொழில் சூழ் திரு வெள்ளறை நின்றானே –5-3-2—நல்ல நாதத்தை உடைத்தாய் இருந்துள்ள வேதம் இதிஹாசாதிகள் இவற்றை உண்டாக்கினவனே என் பக்கலிலே கிருபையை பண்ணி யருள வேணும் –
—
ஆனால் அந்த சதுஷ்டயத்தில் ருக்கு சாம ரூபேண விஸ்த்ருதமாம் ஆகாரம் இங்கும் ஒக்குமோ என்னும்
ஆ காங்ஷையிலே அருளிச் செய்கிறார் மேல் ..இதில் ருக்கு ஸாமமாகப் பாடப்படுகிறாப் போலே ருக் வேத ஸ்தாநே யாயிருக்கிற திருவிருத்தம் திருவாய்மொழியாகப் பாடப்படும் என்கிறார்-
ருக்கு சாமத்தாலே சரசமமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே சொல்லார் தொடையல் இசை கூட்ட
அமர் சுவை ஆயிரம் ஆயிற்று-சூரணை-51-
அதாவது-
சாம ஸங்க்ரஹமான ருக்கானது ஸ்வ விவரணமாய் ருசஸ் சாம ரச -என்கிற படியே தனக்கு
ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே , ரச சகிதமாய் ,-ஹாவு ஹாவு-இத்யாதியான ஸ்தோபத்தாலே விச்த்ருதமாமா போலே ருக் வேத ஸ்தாநேயாய் இருக்கிற சொல்லார் தொடையலான–(தொடையல் -சப்த சந்தர்ப்பம் )திருவிருத்தம்-100–திரு விருத்தம் நூறு பாட்டும்- இசை கூட்டி-திருவாய்-2-4-11- என்கிற படியே -இசையிலே கூட்டினவாறே-சாம வேத ஸ்தாநேயாய் –அமர் சுவை ஆயிரம்–திருவாய்-1-3-11-என்கிற படியே சரசமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாய் பரம்பின என்கை .
ஸாம ஸங்க்,ரஹம் ருக்கு; ருக் விவரணம் ஸாமம். அப்படியே திருவிருத்தமும் திருவாய்மொழியும். (ருக்கு ஸாமத்தாலே ஸரஸமாய்) ருக்கு ஸாமத்தோடே கூடி ரஸ ஸஹிதமாய். (ஸ்தோப,த்தாலே பரம்புமாப் போலே) ஸ்தோப,ம் என்கிறது ருக் வேதங்களை யொழிந்த “*ஹாவு ஹாவு ஹாவு”” இத்யாதிகளாலே பாட, ஒன்று பத்தாக விஸ்த்ருதமாமாப் போலே *சொல்லார் தொடையலான இந் நூறு பாட்டும் ““இசை கூட்டி வண் சடகோபன்”‘ (திருவா. 2 – 4 – 11) என்கிறபடியே இசையிலே கூட்டினவாறே “அமர் சுவை யாயிரம்”’ (திருவா. 1 – 3 – 11)என்கிறபடியே ஸரஸமான ஆயிரமாயிற்று-
நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர்
வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல்லார் தொடையில் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம்
பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே – – 100–ஆப்த வாக்கியம் என்று ஆதரிக்க வேண்டா –பாட்யே கேயே ச மதுரம் -என்கிறபடியே-இதில் சாரஸ்யத்துக்கும் ஆக ஆதரிக்க வேணும்-
வாட்டமில் புகழ் வாமனனை இசை
கூட்டி வண் சடகோபன் சொல் அமை
பாட்டோராயிரத்து இப்பத்தால் அடி
சூட்டலாகுமே அந்தாமமே –2-4-11–இசை-கூட்டி –இயல் தானே ஆகர்ஷகமாய் இருக்க புஷ்ப்பம் பரிமளத்தோடே அலர்ந்தால் போலே இசையோடே புணர்ப்புண்டது என்கை-வண் சடகோபன் சொல் –
மானஸ அனுபவம் அன்றிக்கே வாசகம் ஆக்கி நாட்டை அடைய வாழ்வித்த உதார குணம்
அமை பாட்டு-சப்த லக்ஷணங்களாலும் அர்த்தத்தாலும் பூரணமாய் இருக்கை -அமைவு -சமைவு-
அமரர்கள் தொழுது எழு அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே–1-3-11—இவ் வாசிகமான அடிமை -முறை என்று -கார்யாபுத்த்யா செய்ய வேண்டாதபடி -ரச கனமாயிற்று இவ்வாயிரமும் –ரசகனமாயிற்று -சுவை நிறைந்தனவாய் இருக்கிற ஆயிரம்.-‘இதனால், சொற்களைக் கொண்டு செய்யும் அடிமை ‘முறை’ என்று காரிய புத்தியாகச் செய்ய வேண்டா என்றபடி.
—
இனி சாமம் தான் அநேக விதம் ஆகையாலே ,இது எந்த சாமத்தொடு ஒக்கும் என அருளி செய்கிறார் மேல் –ஸாமந்தான் ஆயிரமாய் அநேக விதமாயிருக்குமே. எந்த ஸாமத்தோடே ஓப்பாகிறது என்னில், சாந்தோக்ய ஸமமாயிருக்கும் என்கிறார் மேல்–
சாந்தோகன் என்று சாமான்யம் ஆகாமல் முதலிலே பிரித்து-யாழ் பயில் கான ஸ்வரூபியை பாலையாகி என்று விசேஷிக்கையாலே-வேத கீத சாமி நான் என்ற சாமம் தோன்ற உத்கீத பிரணவத்தை பிரதமத்திலே மாறாடி சரம கதி முடிவாக தொண்டர்க்கு அமுது என்ன தேவான்னம் ஆக்கி மகா கோஷ நல் வேத ஒலி போலே மகாத்யயனம் என்ன பாடுகையாலே இத்தை சாந்தோக்ய சமம் என்பர்கள்.–சூரணை-52-
சாந்தோகன் என்று சாமான்யம் ஆகாமல் முதலிலே பிரித்து — அதாவது –சாம வேத கீதனாய சக்ரபாணி அல்லையே–திருச்சந்த -14- – திசை முகனார் தங்கள் அப்பன் சாமி அப்பன் – பெரிய திருமொழி –2-2-7-
சாமவேதோஸ்மி-ஸ்ரீ கீதை –10-22- -என்று அபியுக்தரும் ,அவன் தானும் சொன்ன சாமம் சாமான்யம் ஆகாமல் சாந்தோகன் ,பவ்ழியன்,ஐம் தழல் ஓம்பு தைத்ரியன் ,சாம வேதி –பெரிய திருமொழி-5-5-9-
என்ற இடத்தில் –சாம வேதி -என்று மேல் சொல்லா நிற்க –சந்தோகன் -என்று முதலில் பிரித்தது என்கை –இது நினைவன்றாகில் –சாம வேதி -என்றதுக்குள்ளே இந்த சாமமும் அந்தர் பவிக்குமாய் இருக்க இங்கன் பிரித்து சொல்ல வேண்டா விறே- என்ற கருத்து-யாழ் பயில் கான ஸ்வரூபியை பாலையாகி என்று விசேஷிக்கையாலே– அதாவது –யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவை திருவாய்-2-3-7–என்று
யாழ் விஷயமாக அப்யசிக்க படுவதான சாஸ்திரத்தில் சொன்ன லஷணத்தை உடைய நரம்பிலே பிறந்த பண் பட்ட ரசம் என்னும் படி கான ஸ்வரூபம் போலே இனியன் ஆனவனை -கான சாமான்யம் ஆகாமல் –யாழ் நரம்பில் பெற்ற பாலை யாகி-(பாலையாகிய கான ஸ்வரூபி )-பெரிய திருமொழி-7-3-7–என்று அந்த சாந்தோக சாமத்தின் நிறமான-பாலையாழ் என்கிற பண்ணை இட்டு விசேஷிக்கையாலே என்கை ..இப்போது இது சொல்லிற்று – சாம வேத கீதன் –என்கிற இடத்தில் வேதத்தோடு அன்றிக்கே , அதன் கீதத்தோடு சாமானாதி கரிக்கையாலே அந்த கீதமும் சாந்தோக சாம வேதம் என்று அறிவிக்கைகாக —வேத கீத சாமி நான் என்ற சாமம் தோன்ற — அதாவது –இப்படி விசேஷிக்கையாலே ,பச்வதி கரண ந்யாயத்தாலே ,-சாம வேத கீதன்–சாமி–சாம வேதோச்மி –என்று சொன்ன சாமான்யமான இஸ் சாம சப்தமும் ,-கீத சப்தமும் ,கீழ் சொன்ன சந்தோக தத் கீதங்கள் ஆகிற விசேஷத்தில் பர்யவசிக்கும் இறே –-ஆன பின்பு சாந்தோக சாமமே இத்தால் சொல்லப் பட்டது-ஆகையாலே இப்படி அப்யுக்தரும் தானும் தன்னோடு சாமானாதி கரிக்கும் படி உத்க்ருஷ்டமாய் அவனுக்கு ஆதரீயணமான சாந்தோக சாமம் ஈது என்னும் இடம் தோன்றும் படியாக என்கை ..
““சந்தோகன் பெளழியன் ஐந்தழலோம்பு தைத்திரியன் சாமவேதி”” (திருமொழி 5 – 5 9) என்கிற விடத்தில் ““’ஸாமவேதி” என்று ஸாம ஸாமாந்யமாகாமல் ““சந்தோகன்”” என்று முதலிலே பிரித்து “’முன்னல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர்சுவை”’ (திருவா 2-5 – 7) என்கிற காந ரூபியை காந ரஸமானவனை; ““யாழ் நரம்பில் பெற்ற பாலையாகி”’ (திருமொழி 7 – 3 – 7) என்று கொண்டு காந ஸ்வரூபி என்று ஸமுதாயமாக்காமல், “பாலை?””, “யாழ்” என்கிற பண்ணை யிட்டு விஸேஷிக்கையாலே “சாம வேத கீதனாய”” (திருச்ச. 14) என்றும், “’வேதா நாம் ஸாம வேதோஸ்மி?” (கீதை 10 – 22) என்றும் அவன் தன்னோடொக்க ஸமாநாதி, கரிக்கும் படியான சந்தோக ஸாமம் இத்திருவாய் மொழி என்னுமிடம் தோற்ற-
தூய்மை யோகமாயினாய் துழாய் அலங்கல் மலையாய்
ஆமையாகி ஆழ் கடல் துயின்ற வாதிதேவ நின்
நாமதேயமின்னதென்ன வல்லமல்ல வாகிலும்
சாமவேத கீதனாய சக்ர பாணி அல்லையே –14-நீ அழிவுக்கு இட்ட கூர்ம விக்ரஹம் சாந்தோக்ய சித்தமாய் -கையும் திரு வாழியுமான அதி ரமணீய விக்ரஹம் என்று அறிந்தேன் –ய ஏஷோ அந்தராதித்யே ஹிரண்மயம் புருஷோ தர்ச்யதே ஹிரண்மய ஸ்மஸ்ருர் ஹிரண்யகேஸ ஆப்ரணகாத் சர்வ ஏவ ஸுவர்ண: தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீக மேவ மக்ஷிணி (சாந்தோக்யம் 1-6 and 7)-த்யேயஸ் ஸதா சவித்ர் மண்டலமத்யே வரதீ நாராயணாயஸ் சஸரஸிஜாஸன ஸன்னிவிஷ்ட கேயூரவான் மகரகுண்டலவான் கிரீடி ஹரீ ஹிரண்மயவபுர் -த்ர்த சங்கசக்ர (ஸ்ரீ நரஸிம்ஹ புராணம் )
திங்களப்பு வானெரி காலாகித் திசை முகனார்
தங்களப்பன் சாமியப்பன் பாகத்திருந்த வண்டுண்
தொங்கலப்பு நீண் முடியான் சூழ் கழல் சூட நின்ற
எங்களப்பன் எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-7—கார்ய வர்க்கத்துக்கு உப லஷணமாக சந்திரனையும் காரணமான பூத பஞ்சகத்துக்கு உப லஷணமாக நாலையும் சொல்லி இவற்றுக்கு அந்தராத்மாவாய் நிற்கிறான் என்றபடி – சதுர் முகனுக்கும் ஜநகன் ஆனவன் –சாம வேத ப்ரதிபாத்யனான காரண -பூதன் -( ஏக விஞ்ஞான சர்வ விஞ்ஞானம் )
வேதாநாம் ஸாமவேதோऽஸ்மி தேவாநாமஸ்மி வாஸவ:
இந்த்ரியாணாம் மநஸ்சாஸ்மி பூதாநாமஸ்மி சேதநா–10-22-வேதங்களில் யான் சாமவேதம்; தேவரில் இந்திரன்; புலன்களில் மனம் யான்; உயிர்களிடத்தே உணர்வு நான்.-மஹா விஷ்ணுவுக்கே ஸாமக அதாவது ஸாமவேதம் ஓதுபவர் என்ற பெயர், விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் அமைந்துள்ளது-இசையோடு கூடியிருப்பதால் ஸாமவேதம் பொருள் விளங்காதவர்களுக்கும் உள்ளத்தைக் கவர வல்லதாகிறது.
பந்தோடு கழல் மருவாள் பைங்கிளியும் பாலூட்டாள் பாவை பேணாள்
வந்தானோ திருவரங்கன் வாரானோ என்று என்றே வளையும் சோரும்
சந்தோகன் பவுழியன் ஐந்து அழல் ஓம்பு தைத்ரியன் சாம வேதி
அந்தோ என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே —5-5-9—சந்தோகன் –சந்தோக சாமத்தை பிரித்துச் சொல்லுகிறதாகவுமாம் – அன்றிக்கே இத்தால் –வேதைக சமதி கம்யன் என்ற படியாய் –பவுழியன் ஐந்து அழல் ஓம்பு தைத்ரியன் சாம வேதி-மேல் வேதாந்த வித்தமன் என்றதாகவுமாம் –
முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே
பன்னலார் பயிலும் பரனே பவித்திரனே
கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா
நின்னலால் இலேன் காண் என்னை நீ குறிக்கொள்ளே–2-3-7—பழையதாய் வி லக்ஷணமாய் யாழ் விஷயமாக ப்ரவ்ருத்தமாய் அப்யஸிக்கப் படுவதான நூல் உண்டு சாஸ்திரம்-அது சொன்ன லக்ஷணத்தை உடைய நரம்பில் பிறந்த முதிர்ந்த ரசம் போலே போக்யமானவனே
ய ஆத்ய ஸ்வா தூ நாம் -என்று சப்த சாரஸ்யத்தை தலையாகச் சொல்லக் கடவது இறே
மிடற்றைச் சொல்லாதே நரம்பைச் சொல்லிற்று கர்மத்தால் போது செய்யாதது ஆகையால்-
பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற பாலையாகி இங்கே புகுந்து என்
கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான் கொண்ட பின் மறையோர் மனம் தன்னுள்
விண்ணுளார் பெருமானை எம்மானை வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல்
வண்ணன் மா மணி வண்ணன் எம் அண்ணல் வண்ணமே அன்றி வாய் யுரையாதே –7-3-7–பண் வர்க்கத்திலே இனிய பேச்சை உடைய யாழ் நரம்பிலே – யாழிலே பிறக்கப் பெற்ற -பாலை -யாகிற பண்ணாய் அப் பண் போலே போக்யனாய்க் கொண்டு வந்து புகுந்து –
உத்கீத பிரணவத்தை பிரதமத்திலே மாறாடி — அதாவது –ஒரு சாமம் தனக்கே ,பிரஸ்தாபம், உத்கீதம் ,ப்ரதீஹாரம் ,உபத்ரவம் ,நிதநம் என்று அஞ்சு பாகங்கள் உண்டாகையாலே ,அவற்றுக்குள் ஒன்றாக இருக்கச் செய்தே , சாம்ன உத்கீதோ ரச –சாந்தோக்யம்- என்று சாமத்துக்கு ரசமாக சொல்லப் படுமதாய் ,பிரணவ பூர்வமாக , கானம் பண்ணப் படுமதாய் ,இருப்பது ஓன்று இறே உத்கீதம் –-ஆகையால் அந்த உத்கீத அவயவமான பிரணவத்தை ,-ஓம் இத் ஏதத அஷரம் உத்கீதம் உபாசீத -என்று சாந்தோக்யம் தன்னில் பிரதமத்தில் எடுத்தால் போலே ,இங்கும் பிரதமத்திலே எடுக்கிற அளவில் ,ஓம் என்று
சம்ஹிதா காரேன வெடுத்தால் அதிகிரிதா அதிகாரமாம் என்று அசம்ஹிதா காரேன அஷர த்ரயத்தையும் பிரதம த்வதீய த்ருதீய பாதங்களில் எடா நிற்க செய்தே , பிரதம அஷரமான அ காரம் முதலாக எடாதே உ காரம் முதலாக எடுக்கையாலே அஷர க்ரமத்தை மாறாடி என்கை-இப்படி உ காரம் முதலாக எடுத்ததுக்கு பிரயோஜனம் அந்த சாந்தோக்ய ரசமான உத் கீதத்துக்கு நோக்கான உத் -என்கிற
திரு நாமம் இதற்க்கு உள்ளுறை யானமை தோன்ற உ காராதியாக எடுத்து -உயர்ந்தே -10-10-11–என்று தகாராந்தமாக முடிக்கை ….-இது தான் மேலில் சூர்ணையில் வியக்தம் ..-ஆக இப்படி அஷர த்ரய ரூபேண ,பிரணவத்தை பிரதமத்திலே கீர்த்தியா நிற்கச் செய்தே ஏதத் அபிப்ரா யேன அஷர க்ரமத்தை மாறாடி-
“உத் கீத மேதத் பரமநுப்ரஹ்ம””, ““ஓங்காரோத் கீத மேவ”, “ஓமித் யேததக்ஷர முத் கீத முபாஸீத”‘(சா. 1 – 1 – 1) என்று சொல்லுகிற உத் கீத ப்ரணவத்தை ப்ரதமத்திலே மாறாடி. இப் ப்ரபந்தத்துக்கு உத்கீதம் என்கிற இது ப்ரதாநம் என்னுமாகாரம் தோன்ற ப்ரணவத்தை ப்ரபந்த ஆதியிலே “உயர்வற-மயர்வற, அயர்வறும்”” என்று மாறாடி–
அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே-இந்த பத்தும் அனுசந்தித்து -உயர்ந்தே பிறந்தார்
சரம கதி முடிவாக — அதாவது -சாந்தோக்ய மத்யே சொன்ன ,அர்சிராதியான சரம கதியை –
சூழ் விசும்பு அணி முகிலிலே-10-9-1- -பேசுகையாலே சரம கதியை முடிவாக கொண்டு என்கை ..
இத்தை சரம கதி என்கிறது -கர்ப்ப யாம்ய தூமாதிகள் போல் அன்றிக்கே எல்லை நிலமான முக்தி மார்க்கம் என்கையாலே —தொண்டர்க்கு அமுது என்ன தேவான்னம் ஆக்கி —அதாவது -அந்த சாமம் –ஏதத் சாம காயன்னாச்தே–தைத்ரியம்–என்கிற படியே பகவத் அனுபவ ஜனித ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக –ஹாவு ஹாவு -இத்யாதிபடியே சாம கானம் பண்ணி அஹம் அந்நாதா -என்று களிக்கும் நித்ய முக்தரான தேவர்களுக்கு போக்யமாம் ஆம் போலே –தொண்டர்க்கு அமுது உண்ண -9-4-9–என்கிற படியே
இதுவும் பகவத் அனுபவ சபலர்க்கு போக்யமாம் படி ஆக்கி என்கை ..மகா கோஷ நல் வேத ஒலி போலே மகாத்யயனம் என்னப் பாடுகையாலே —-அதாவது –சர்வேப்யோபிஹி வேதேப்ய சாமகோஷோ மகாநபூத் அன்வ கோஷாய தத்யர்த்தம் தேன ப்ரஹ்மாண்ட மண்டப -என்றும்–பாடு நல் வேத ஒலி -திருவாய்-5-9-3–என்றும் சொல்லுகிற பெரிய கோஷத்தை உடைத்தான சாம வேதம் போலே ,பெரிய திரு அத்யயனம் என்னப் பாடுகையாலே என்கை .. இத்தை சாந்தோக்ய சமம் என்பர்கள்..-ஆக இப்படி கீழ் சொன்ன ஆகாரங்களை கொண்டு ,இத்தை சாந்தோக சாமத்தில் உபநிஷத் பாகமான சாந்தோக்யத்துக்கு சமம் என்று அபியுக்தர்கள் சொல்லுவார்கள் என்கை-
“உயர்ந்தே” என்று சரம கதி முடிவாக அகார மகாரங்களிரண்டினுடைய சரமமான நடு தகாரம் அத்தைத் திருவாய்மொழிக்கு முடிவாக்கி {அகார-உகாரங்களின் சரமமான தகாரத்தைத் திருவாய்மொழிக்கு முடிவாக்கி!.–அன்றிக்கே அர்ச்சிராதி,யை முடிவாக்கி என்னவுமாம். அதுக்கடி – முடிவிலே சூழ் விசும்பணிமுகிலாகையாலே. “’தொண்டர்க்கமுதுண்ணச் சொன் மாலைகள் சொன்னேன்”’ (திருவா. 9 – 4 – 9) என்று இப் ப்ரப,ந்த,த்தை ““ஹாவு ஹாவு ஹாவு” என்று தொடங்கி, “அஹமந்நாதோரஹ மந்நாதோரஹமந்நாத,?‘” என்று தேவ போக்யமானாப் போலே, ப,க,வத்,விஷயத்தில் சபலரானார்க்கு போக்யமாக்கி.““ஸர்வேப்யோபி ஹி வேதேப்ய: ஸாம கோஷோ மஹாநபூத் | அந்வ கோஷய தத்யர்த்த,ம் தேந ப்ரஹ்மாண்ட,மண்டபா ” என்று (மஹாகோஷம்) பெரிய ஆரவாரத்தை உடைத்தாயிருப்பது ஸாம கோஷமிறே. “எழுந்த நல்வேதத்தொலி”* என்றும், *“ஸாமத்வநி” என்றும் சொல்லுமாப் போலே இப்ப்ரபந்தத்தையும் மஹாத்யயநமென்னப் பாடுகையாலே பெரிய திருவத்யயந மென்னக் கடவதிறே. ஆகையாலே இத்தை சாந்தோக்ய ஸமமென்பர்கள் என்கிறார்
சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே –10-9-1–அங்குத்தை அனுபத்துக்கு ஈடாம்படி மிகவும் விடாய் பிறக்கைக்காக – தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளைக் கண்ணாலே கண்டால் போலே விசதமாக பிரகாசிக்கும் படி பண்ணி அருளினான் –காட்டி அருளக் கண்டு ப்ரீதராய் -அத்தை அந்யாபதேசத்தாலே பேசி அனுபவிக்கிறார் –தமக்கு அவன் பண்ணிக் கொடுத்த பேற்றை ஸ்ரீ வைஷ்ணவர்கள் எல்லாரும் பெற்றவராக பேசுகிற இது -அந்யாபதேசமாவது–அது தனக்கு பிரயோஜனம் -இங்குள்ளார் ஆழ்வார் பேறு நமக்குத் தப்பாது -என்று இருக்கைக்காக –
கண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து
பண்டை வினை ஆயின பற்றோடு அறுத்துத்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே –9-4-9—ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் உபகாரகனாகப் பெற்றேன்-இப்பேறு என்னால் வந்ததாக மாட்டாது -நான் சர்வேஸ்வரனால் விஷயீக்ருதன் ஆனேன் –
சூடு மலர்க் குழலீர்! துயராட்டியேனை மெலியப்
பாடு நல் வேத ஒலி பரவைத் திரை போல் முழங்க
மாடுயர்ந் தோமப் புகை கமழும் தண் திரு வல்லவாழ்
நீடுறை கின்ற பிரான் கழல் காண்டுங் கொல் நிச்சலுமே.–5-9-3—ஈஸ்வரனைப் பாடுகிற பழம் புணர்ப்பான வேதம் என்னுதல்-கானத்தை யுடைய சாம வேதம் என்னுதல் -உளன் சுடர் மிகு சுருதியுள்-என்று பிரமாணங்களில் உத்கர்ஷம் ஆதல் -வேதா நாம் சாம வேதோ அஸ்மி -என்னும் உத்கர்ஷம் ஆதல்-
—
உத்கீத பிரணவத்தை பிரதமத்திலே மாறாடி-என்று கீழ் சொன்னதின் கருத்தை ஆப்த உபதேச முகேன அறிவிக்கிறார் மேல் .-அந்தராதித்யவித்யை தொடக்கமான வற்றையும் இதிலே சொல்லுமென்று கொண்டு முற்பட்ட யோஜனையை அருளிச் செய்கிறார் மேல்-
புரவி ஏழு ஒரு கால் உடைய தேரிலே திரு சக்கரம் ஒத்து கால சக்கரச் செங்கோல் நடாவி ஜோதிஸ் சக்கர ஒளி சுருக்கி அக்நீஷோ மீய தேஜோ அம்ருதத்துக்குக் ஊற்றும் மந்தேஹர்க்கு செம் தீயும்
முக்தி மார்க்கத் தலை வாசலும் கண்ணாவான் கண்ணில் பிறந்த கண்மணியும் த்ரயீ மயமுமான மண்டலத்திலே தண் தாமரை சுமக்க தோள் வளையும் குழையும் திரு செய்ய முடியும் ஆரமும் படையும் திகழும் பொன் மேனியும் செஞ்சுடர் தாமரை கண்ணுமாய் அணி நிற மூர்த்தி ஈது என்னும் படி இரண்டையும் தன்னிறம் ஆக்குகிற செய்யாளான வித்தை யோடே அருக்கன் மேவின சதாத்யேய தேஜஸ்ஸின் சாம ரச உத்கான நாமம் உள்ளுறையான ஆத்யந்தங்களாலே ஓர் ஆயிரமாம் அவற்றிலே ஒன்றை ஆயிரம் முகத்தினால் அருளின தீர்த்தம் போலே தீர்த்தங்கள் ஆயிரமுமாக விஸ்தரிக்கிறார் என்று வேத குரு உபதேசம் .–சூரணை -53–
1-புரவி ஏழு ஒரு கால் உடைய தேரிலே –-அதாவது –காரார் புரவி ஏழ் பூண்ட தனி ஆழி -சிறிய திருமடல் –என்றும்-ஒரு கால் உடைய தேர் -பெரிய திருமொழி-5-7-8–என்றும் சொல்லுகிற படியே – காயத்ரீ /ப்ருஹதீ /உஷ்ணிக் /ஜகதீ/த்ருஷ்டுப் /அனுஷ்டுப் /பங்க்தி -என்கிற ஏழு சந்தஸ்ஸூக்களும் ஏழு குதிரைகளாக கொண்டு வகிக்கையாலே ,-சப்தாஸ்வ யுக்தமாய் .கால சக்ர மயமான ஏக சக்கரத்தையும் உடையதான ரதத்திலே என்கை–சப்த யுஜ்ஞஜந்தி ரதமேக சக்ரம் -ஆரணம்–என்றும்
ஹாயாச்ச சப்த சந்தாம்சி தேஷாம் நாமாநி மே ஸ்ருணு காயத்ரீ ச ப்ருஹத் யுஷ்ணிக் ஜகதீ
த்ருஷ்டுபேவச அனுஷ்டுப் பங்க்தி ரித்யுக்தா சந்தாம்சி ஹரயோ ரவ -ஸ்ரீ விஷ்ணு புராணம்-2-8-4-– என்றும் சொல்லக் கடவதிறே-ஏகோ அச்வோ வஹதி சப்தநாமா-ஆரணம்-–என்றதுக்கு ஹிருதயம் ஏதத் அனுகுணமாக வியாக்யாதமான இடங்களில் கண்டு கொள்வது —திரிநாபிமதி பஞ்சாரே ஷண்ணே மின்யஷா ஆத்மகே , சம்வத்சர மயே க்ருத்ஸ்னம் காலசக்ரேத் மகே பிரதிஷ்டிதம் –ஸ்ரீ விஷ்ணு புராணம்-2-8-3- என்கிற படியே , சாதுர் மாஸ்ய த்ரயாத் மகமான நாபியை உடைத்தாய்-சம்வஸ்தரம் பரிவஸ்த்ரம் , இதாவஸ்த்ரம்.அனுவஸ்த்ரம் , இத்வஸ்த்ரம் என்று சொல்லப் பட்ட ஐஞ்சு
வஸ்தரத்தையும் ,அரங்களாக உடைத்தாய் வசந்த கிரீஷ்ம வர்ஷா சரத்தே மந்த சிசிரங்களாகிற ஆறு ருதுக்களையும் நேமியாக உடைத்தாய் , ப்ரவாஹா பரி விருத்தியாலே , அஷய ரூபமாக இருக்கிற கால சக்கரத்திலே , சர்வம் பிரதிஷ்டிதம்-என்கையாலே , இந்த ஏக சக்கரம் கால சக்கரமாய் இறே இருப்பது .
ஆக இப்படி இருந்துள்ள சப்த அஸ்வங்களையும் ,ஏக சக்கரத்தையும் உடைத்து ஆகையாலே ,இதர வ்யாவ்ருத்த வைபவமான ரதத்திலே என்ற படி –
“காரார் புரவியேழ்”’ (சி. திருமடல்) என்றும், ““ஓருகாலுடைய தேரொருவன்”” (திருமொழி 5 – 7 – 8) என்றும், “ஸப்த யுஞ்ஜந்தி ரத மேக சக்ரம்”” (அருணம் 3) என்றும், “ஏகோ அஸ்வோ வஹதி ஸப்தநாமா‘ (அருணம் 3) என்று ஸப்தநாமா வாயிருப்பதொரு அஸ்வத்தாலே வஹிக்கப்படுவதாய், ஏக சக்ரியுமாயிருக்கிற தேரிலே-
கார் ஆர் புரவி ஏழ் பூண்ட தனி ஆழித் தேரார் – நிறை கதிரோன் -மண்டலத்தைக் கீண்டு புக்கு –
ஆராவமுதம் அங்கு எய்தி -அதில் நின்றும் வாராது ஒழிவது ஓன்று உண்டே –மேக மண்டலத்தில் செல்லுவதும் ஏழு குதிரைகள் பூட்டப் பெற்றதும் ஒற்றைச் சக்கரத்தை வுடையதுமான – அது தான் உங்களுக்கு ஏற்க உண்டே என்று தோற்றிற்றோ -தனி ஆழித் தேரார் – பிள்ளாய் -இரண்டாதல் நாலாதல் அன்றிக்கே தனிச் சக்கரமாம் –பிள்ளாய் -ஆகாசத்திலே ஒருவன் தேர் நடக்கை யாவதென் –மேக பதத்திலே குதிரை சஞ்சரிக்கை யாவது என் புரவி -இரண்டு அல்ல நாலு அல்ல ஆறு அல்ல -எட்டு அல்ல ஏழு குதிரை பூண்கை யாவது என் –நிறை கதிரோன் – ஒரு விளக்கின் சந்நிதியில் விழிக்க மாட்டாத அதி சூத்திரன் உஷ்ண கிரணங்களால் பூர்ணனாய் இருக்கிற ஆதித்யனைச் சென்று கிட்டுகை யாவதென் –மண்டலத்தைக் கீண்டு புக்கு –ஒருவனை இங்கே உபாசித்து அவனுடைய ராஜகுலத்தாலே -ஆதித்ய மண்டலத்தின் நடுவே போகிறானாம் இறே அங்கே ஏறப் போனால் அவ்வழிப் போக்குத் தான் இங்குப் போலே இரண்டருகும் பணையாக நடவே போகிறானோ தான் -என்கை –
ஊழியாய் ஓமத்து உச்சியாய் ஒரு காலுடைய தேர் ஒருவனாய் உலகினில்
சூழி மால் யானைத் துயர் கெடுத்து இலங்கை மலங்க வன்று வடு சரம் துரந்து
பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளிப் பகலவன் ஒளி கெடப் பகலே
ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே —5-7-8–காலோ பல ஷிதமான சகல பதார்த்தங்களுக்கும் நிர்வாஹகனாய்-அஹம் ஹி சர்வ யஞ்ஞாநாம் போக்தா பிரபு – என்றும்-போக்தாம் யஜ்ஞ தபஸாம் -என்கிறபடியே-சர்வ கர்ம சமாராத்யனாய்-ஏக சக்கரமான ரதத்தை உடைய ஆதித்யனுக்கு அந்தராத்மாவாகக் கொண்டு அவ் வழியாலே உபாஸ்யனாய்-
இனி மேல் மண்டலத்தை வர்ணிக்கிறது –2-திரு சக்கரம் ஒத்து -அதாவது — அம் மேருவில் செஞ்சுடரோன் திரு மால் திருக் கை திருச் சக்கரம் ஒக்கும் -திரு விருத்தம் -88–என்னும் படி
விருத்தாகாரதையாலும் ,தேஜோ விசேஷத்தாலும் ,திரு ஆழியோடு ஒத்து இருக்கை–3-கால சக்கரம் செம் கோல் நடாவி —- அதாவது –திரு சக்கரத்தால் அகல் விசும்பும் ,நிலனும்,இருளார் வினை கெட செம் கோல் நடாவுதீர்–திரு விருத்தம் -33 -என்கிற படி உபய விபூதியிலும் ,ஈஸ்வரன் தன் ஆக்ஜையை நிர்வகிக்கைக்கு உபகரணமான திரு ஆழியைப் போலே ,-கால சக்கரத்தாய்–-திருவாய்-7-2-7-என்னும் படி கால சக்கர நிர்வாகனானவனுடைய கால சக்கர விஷயமான ஆக்ஜையை-தனி வளர் செம் கோல் நடாவு தழல் வாய் அரசு -திரு விருத்தம் -13- -என்கிற படியே நடத்துகை .
திருமால் திருக்கைத் திருச் சக்கரமொக்கும்”’ (திருவிரு. 86) என்கிறபடியே திருவாழி யாழ்வானோடே ஒப்புச் சொல்லலாய், (கால சக்கரச் செங்கோல் நடாவி) ““கால சக்கரத்தாய்” (திருவா. 7 – 2 – 7), ‘தனி வளர் செங்கோல் நடாவுதிர்’” (திருவிரு, 13) என்கிறபடியே கால சக்ர நிர்வாஹகமுமாய்,
திருமாலுரு வொக்கும் மேரு அம் மேருவில் செஞ்சுடரோன்
திருமால் திருக் கைத் திருச் சக்கர மொக்கும் அன்ன கண்டும்
திருமாலுருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது ஓர்
திருமால் தலைக் கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீ வினையே – – -88-அம் மேருவிலே சஞ்சரியா நிற்கிற ஆதித்யன் ஆனவன் –திருமால் திருக்கை திருச் சக்கரம் ஒக்கும் –வடிவார் சோதி வலத் துறையும் சுடர் ஆழியும் -என்கிறபடியே –அவன் கையிலே திரு வாழியைப் போலே இருக்கும்-அந்த மஹாமேருபர்வதததின் ஸமீபத்திலே விளங்கா நின்ற சிவந்த லொளியையுடைய ஸூர்யன் அவ்வெம்பெருமானுடைய அழகிய திருக்கையிலுள்ள திருவாழியாழ்னாவ் போன்றிருப்பான்-
பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்! பற்றிலார் பற்ற நின்றானே!
கால சக் கரத்தாய்! கடலிடங் கொண்ட கடல்வண்ணா! கண்ணனே!’ என்னும்;
‘சேல்கொள் தண் புனல்சூழ் திருவரங்கத்தாய்!’ என்னும்’என் தீர்த்தனே!’ என்னும்;
கோல மா மழைக்கண் பனி மல்க இருக்கும் என்னுடையக் கோமளக் கொழுந்தே.–7-2-7-விஷயீ கரிக்க காலமாக வேணுமே என்ன –கால தத்வம் நீ இட்ட வழக்கு அன்றோ -ஆஸ்ரிதர்க்காக பகலை இரவாக்கினவன் அன்றோ -அங்கனம் அன்றிக்கே பிரதிபந்தகமும் உண்டு காணும் என்ன -ப்ரதி பஷத்துக்கு ம்ருத்யுவான திரு வாழி கையிலே இருக்க பிரதிபந்தகம் உண்டோ
தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாயரசவிய
பனிவளர் செங்கோல் இருள் வீற்று இருந்தது பார் முழுதும்
துனி வளர் காதல் துழாயை துழாவு தண் வாடை தடிந்து
இனி வளை காப்பவர் ஆர் எனை வூழிகள் ஈர்வனனே-13-தன்னுடைய தேஜஸ்ஸிலே அல்லாத தேஜஸ் பதார்த்தங்கள் அடைய மறையும்படி அத்விதீயமாய்க் கொண்டு வளருவதான தன்னுடைய பிரகாசத்தை எங்கும் ஓக்க நடத்துவானாய் உஷ்ண கிரணன் ஆகையாலே ப்ரதாப உத்தரரான ஆதித்யன் அஸ்தமிக்க
4-ஜோதீஸ் சக்கர ஒளி சுருக்கி –அதாவது –சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம் -திருப்பள்ளி எழுச்சி -7–என்னும் படி ,சர்வதோதிக்கமாக வ்யாப்தமான ஸ்வ தேஜஸ் பிரகர்ஷத்தாலே –துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி –திருப்பள்ளி எழுச்சி -3- இத்யாதிப் படியே ,நஷத்ராதியான ஜ்யோதிர் கணங்களின் தேஜஸ்ஸை சங்கோசைப்பிக்கை –5-அக்நி ஷோமீய தேஜோ அம்ருதத்து ஊற்றும் -அதாவது –அக்னிம் வா வாதித்யஸ் சாயம் ப்ரவிசதி தஸ்மாத் அக்னிர் தூராத் நக்தம் தத்ருசே உபேவா தேஜஸீ சம்பத்யேதே–அஷ்டகம் -2- –என்றும்-ப்ரபா விவஸ்வதோ ராத்ரவ் அஸ்தம் கச்சதி பாச்கரே விசத்யக்னி மாதோ ராத்ரவ் வஹ்நிர் தூராத் பிரகாசதே-ஸ்ரீ விஷ்ணு புராணம்-2-8-20-என்றும் சொல்லுகிற படியே அஸ்தமய சமயத்திலே தன்னுடைய பிரபையை அக்னியிலே பிரவேசிப்பித்து ராத்ரியில் அக்னிக்கு தேஜோ வ்ருத்தியை வுண்டாக்குகையாலே அக்நியுடைய தேஜஸ் ஸூக்கு ஊற்று என்கிறது .-6-ஷீணம் பீதம் ஸூரைஸ் சோமம் ஆப்யாயயதி தீப்தி மான் ,மைத்ரேயைககலம்
சந்தம் ரச்மினைகேன பாஸ்கர , க்ரமேண ஏன பீதோசவ் தேவைஸ் தேன நிசாகரம்
ஆப்யாயத் யனுதினம் பாஸ்கரோ வாரி தஸ்கர–ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-12-13-–என்கிற படியே
அபார பாசத்தில் ,பிரதமை தொடங்கி சதுர்த்தசி அளவும் நித்யம் ஒரு கலையாக அமிர்த மயமான பதினாலு கலைகளையும் தேவர்கள் புசித்து பதினைந்தாவது கலையை பஞ்சதசி அன்று அபராஹனத்திலே , பித்ருக்கள் புசிக்க ,இப்படி ஷீணனான சந்த்ரனுக்கு , பூர்வ பஷ பிரதமை தொடங்கி நித்யம் ஒரு கலையாக பஞ்ச தசி அளவும் பதினஞ்சு கலைகளையும் தன்னுடைய ரச்மிகளாலே ,வர்திப்பிக்கை யாலே ,சோமனுடைய அமிர்தத்துக்கு ஊற்று என்கிறது ..-ஆக இப்படி அக்னியினுடைய தேஜஸ்ஸூக்கும் ,சோமனுடைய அமிர்ததுக்கும் உத்பத்தி ஸ்தானமாய் இருக்கும் என்கை.-
(ஜயோதிஸ் சக்ரவொளி சுருக்கி) “துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி” (திருப்பள்ளி. 3) என்கிறபடியே நக்ஷத்ர தேஷஸ்ஸுக்கு ஸங்கோசத்தைப் பண்ணுமதாய்-(அக்நீஷோமீய தேஜோம்ருதத்துக்கு ஊற்றும்) அக்நியினுடைய தேஜஸ்ஸூக்கும் சந்தரனுடைய அம்ருத கலைக்கும் உத்பத்தி ஸ்தலமுமாய். பூர்வாபரங்களாகிற பக்ஷ த்வயத்திலும் சந்த்ர கலையானது போவது வருவதாவது ஆதித்யன் பக்கல் நின்றுமிறே.-
சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம் துன்னிய தாரகை மின் ஒளி சுருங்கி
படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ பாய் இருள் அகன்றது பைம் பொழில் கமுகின்
மடல் இடை கீறி வண் பாளைகள் நாற வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
அடல் ஒளி திகழ் தரு திகிரி அம் தடக் கை அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே-—3 –சூழ்ந்த திக்குகளெங்கும், சுடரொளியானது ஆதித்யனுடைய தேஜஸ்ஸானது விஸ்த்ருதமாய்த்து- (தேஜஸாம் ராஸி மூர்ஜிதம்) என்றும், “பயிலும் சுடரொளி” என்றும் சொல்லுகிறபடியே தேவரீருடைய திருமேனி யொளியானது எங்குமொக்க விஸ்த்ருதமாம்படியாக உணர்ந்தருளலாகாதோ? என்று கருத்து.
( தம் த்,ருஷ்ட்வா தே ததா தேவா: ஸங்க சக்ர க,தா த ரம் அபூர்வ ரூப ஸம்ஸ்தாநம் தேஜஸாம் ராஸி மூர்ஜிதம்!!|(வி-பு 1-9-67][சங்க,சக்ர கதா தரனாய், அபூர்வமான திருமேனி அமைப்பை உடையவனாய், உறுதி யானவனாய், தேஜோ ராலியான அந்த பாகவானைக் கண்ட தேவர்கள் அப்போது (ஸ்துதிக்கத் தொடங்கினர்)] என்றும், “பயிலும் சுடரொளி ” [ கிருவாய் 3-7-1] என்றும் சொல்லு கிறபடியே, கோடி ஸூர்ய ப்ரகாஸமான தேவரீருடைய திருமேனி ஒளியானது எல்லா விடங்களிலும் பரவும் படியாக விழித்தெழ வேண்டாவோ? என்று கருத்து. )(துன்னிய இத்யாதி)நெருங்கின நக்ஷத்ரங்களினுடைய பரஞ்செய்கிற தேஜஸ்ஸானது ஸங்குசிதமாய், விஸ்த்ருதமான ஒளியை யுடைய குளிர்ந்த சந்த்ரனும்,
(பசுத்தனன்) விவர்ணனானான்;-கருகினானென்று கருத்து.
7-மந்தேஹருக்கு செம் தீயும் –அதாவது மந்தேகர் என்பார் ,சில ராஷசர் சந்த்யா சமயத்தில் ,ஆதித்ய ரதத்தை பற்றிக் கொண்டு ,போக ஒட்டாதே ஆதித்யனோடே மகா யுத்தம் பண்ணி , அவனைக் கொல்லத் தேடுவர்களாய் ,அவ்வளவிலே பிராமணர் காயத்ரி அபி மந்திரிதைகளான அப்புக்களை அர்க்க்ய ரூபேண ஊர்தவமாக ப்ரேஷேபிக்க அந்த காயத்ரி பூத அர்க்க்ய சக்தியாலே , ஆதித்ய மண்டலத்தில் ஜொலித்து கொண்டு , தோற்றின சிவந்த அக்னியிலே விழுந்து முடிந்து போவார்கள் என்று –
-மீண்டு அவற்றுள் எரி கொள் செம்தீ வீழ் அசுரரை போல் –திருவிருத்தம் -82—என்று ஆழ்வார்
அருளிச் செய்கையாலே ,மந்தேஹருக்கு ஜொலிக்கிற அக்நியாய் இருக்கும் என்கிறது ..-ராஷசரை அசுரர் என்று ஆழ்வார் அருளி செய்தது –தானவனாகம் தரணியில்-பெரிய திருமொழி-1-4-1-என்றும் –
தானவன் வாள் அரக்கன்-பெரிய திருமொழி-2-2-2–என்றும் சொன்னவை போலே ஆசூர பிரக்ருதிகளான ஆகாரத்தாலே ..-ததுஹா வா ஏத ப்ரஹ்மவாதின பூர்வாபிமுகா சந்த்யாயம் காயத்ரி அபிமந்த்ரிதா ஆப ஊர்த்வம் விஷி பந்தி -ஆரணம்–என்றும்
சந்த்யா காலே து சம்ப்ராப்தே ரவ்த்ரே பரம தாருனே மன்தேஹா ராஷசா கோராஸ் சூர்ய மிச்சந்தி காதிதும் பிரஜாபதி க்ருதஸ் சாபஸ் தேஷாம் மைத்ரேய ரஷசாம் அஷயத்வம் சரீரானாம் மரணம் ச தினே தினே ததஸ் சூர்யஸ்ஸ தேஷாம் வை யுத்த மாஸீத் ஸூதாகுணம் ததோ திவிஜோத்தமாஸ் தோயம் ப்ரஷிபந்தி மகாமுனே ஓங்கார ப்ரஹ்ம சம்யுக்தம் காயத்ரியா சாபி மந்த்ரிதம் தேன தக்யந்தி தே பாபா வஜ்ர பூதேன வாரிணா –என்றும் பிராமணர் இங்கு பிரேஷேபிக்கிற அர்க்க்ய ஜலம் தானே
வஜ்ரீ பூதமாய் கொண்டு அந்த ராஷசரை நிரசிக்கும் என்று ஸ்ருதியிலும் புராணங்களிலும் சொல்லுகையாலும் , அந்த அர்க்க்ய ஜலம் ஆதித்ய மண்டலத்தையும் ஜொலிப்பித்து அணுக செல்லில் நசிக்கும் படி ஆக்கும் என்றும் சொல்லலாம் இறே–
(மந்தேஹர்க்குச் செந்தீயும்)மந்தேஹரென்று – ஆதித்யனோடே உத,யாஸ்தமய ஸமயங்களிலே யுத்தம் பண்ணுவார் சில அசுரர்கள். அவர்களை ‘“எரிகொள் செந்தீ வீழ்” (திருவிரூ. 82) என்கிறபடியே தப்தமாக்குகைக்கு ஒரு அக்நி ஜ்வாலையுமாய்,
எரி கொள் செந் நாயிறு இரண்டுடனே உதய மலை வாய்
விரிகின்ற வண்ணத்த எம்பெருமான் கண்கள் மீண்டவற்றுள்
எரி கொள் செந் தீ வீழ் அசுரரைப் போலே எம்போலியர்க்கும்
விரிவ சொல்லீர் இதுவோ வையமுற்றும் விளரியதே – – – 82–அவ் வாதித்யர்கள் உடைய தேஜஸ்சிலே விழுந்து முடிந்து போகிற ஆசூரப் பிரக்ருதிகளைப் போலே ஆயிற்று என் போல்வார்களுக்கும் இக் கண்கள் பாதகமாம் ஆகிறபடி
ஏனம் முனாகி யிரு நிலம் இடந்து அன்று இணை யடி யிமையவர் வணங்க
தான வனாகம் தரணியில் புரளத் தடஞ்சிலை குனித்த வென் தலைவன்
தேனமர் சோலைக் கற்பகம் பயந்த தெய்வ நன்னறு மலர் கொணர்ந்து
வானவர் வணங்கும் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே –1-4-1-இப்பொழுது தானவன் என்கிறது ராவணனை –-தையலாள் மேல் காதல் செய்த தானவன் வாளரக்கன் -என்னக் கடவது இறே
தநுவினுடைய வம்சஜன் என்று தானவன் என்கிறது ஆதல் -தநு வம்சம் ராவணனுக்கு மாத்ரு வம்சம்
ஆசூரமான வியாபாரங்களை உடையவன் என்றாதல் – ராவணன் உடைய வராதிகளாலே பூண் கட்டி இருக்கிற சரீரமானது அம்பு தைச்சு பூமியிலே புரளும் படியாக-
தையலாள் மேல் காதல் செய்த தானவன் வாளரக்கன்
பொய்யிலாத பொன் முடிகள் ஒன்பதோடு ஒன்றும் அன்று
செய்த வெம்போர் தன்னில் அங்கோர் செஞ்சரத்தால் உருள
எய்த வெந்தை யெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-2–நிரூபாதிக ஸ்த்ரீத்வத்தை உடையவள் பக்கலில் ஜநநீ என்று பாராதே அப்ராப்தமான சங்கத்தைப் பண்ணினான் ஆயிற்று – அதுக்கடி ஆசூர பிரக்ருதியாகைலே -யாயிற்று-தேவதை கொடுத்த வாளை விஸ்வசித்து இருந்தான் ஆயிற்று – பெருமாள் மிடுக்கை பார்க்க அறியாதே –
8-முக்தி மார்க்கத் தலை வாசலும்-அதாவது அர்ச்சிராதி கதி என்னும் முக்தி மார்க்கத்தாலே போம் அளவில் – அர்சிஷா மேவாபி சம்பவந்தி -இத்யாதி படியே- அர்ச்சி ப்ரப்ருதிகளை சென்று கிட்டிப் போகிற மாத்ரம் அன்றிக்கே ,- தத் பித்வா சூர்யச மண்டலம்-என்றும் – தேரோர் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு -சிறிய திருமடல்-என்றும்–வெம் கதிர் வட்டத்தூடு போய்–பெரிய திருமொழி-4-5-10-என்றும் – சொல்லுகிற படியே , இம் மண்டலதூடே போகையாலும்- அண்ட கடாஹத்தைப் பேதித்து புறப்படும் அதுக்கு முற்பட்டது ஆகையாலும் இத்தை இம் மார்க்கத்துக்கு தலை வாசல் என்கிறது -9-கண்ணாவான் கண்ணில் பிறந்த கண் மணியும் -அதாவது கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு –திருவாய்-1-8-3- சஷூர் தேவநாமுத மர்த்யாநாம்-யஜுர் வேதம் – -என்கிற படியே – சர்வருக்கும் திருஷ்டி பூதனான சர்வேஸ்வரன் கண்ணிலே –-சஷோஸ் சூர்யோ அஜாயத -புருஷ ஸூக்தம்-என்கிற படியே ஜனிப்பதும் செய்து-ஜகதேக சஷுஷே -என்ற படி ஜகத்துக்கு திருஷ்டி பூதமுமாய் இருக்கும் என்கை –10-த்ரயீ மயமுமான மண்டலத்திலே -அதாவது -‘ த்ரயீ மயாய-என்கிற படியே வேத மயமாய் இருக்கிற ஆதித்ய மண்டலத்திலே என்கை ..–இத்தால்-த்யேய சதா சவித்ரு மண்டல மத்திய வர்த்தி நாராயண சரசி ஜாசன சந்நிவிஷ்ட கேயூரவான் மகர குண்டலவான் கிரீடி ஹாரி ஹிரண்மயவபு த்ருத சங்க சக்கர -என்ற இதில் அவன் எழுந்து அருளி இருக்கிற சவித்ரு மண்டலத்தை வர்ணித்தார் ஆயிற்று .
(முக்தி மார்க்கத் தலை வாசலும்)“’நக்ஷத்ராதாதித்யம்” என்று முக்தி மார்க்க த்வாரமுமாய்,- “ஸம்வத்ஸராதாதித்யம்‘”’ என்று ஆதித்யனைக் கூட்டி “’தத் பித்வா ஸூர்ய மண்ட,லம்”” என்றும், “தேரார் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு” (சி.திருமடல்) என்றும் சொல்லுகிறபடியே ஆதித்ய மண்டலத்தை பேதித்தே முக்தனுக்குப் போக வேண்டுகையாலும், மற்றவை யெல்லாம் கிட்டுமளவேயாய் ௮ண்ட பேதம் பின்பே (அண்ட பேதத்துக்கு முன்பே )யாகையாலே முக்தி மார்க்கத் தலை வாசலும் என்கிறார். (கண்ணாவான் கண்ணில் பிறந்த கண் மணியும்) *“’கண்ணாவானென்றும் மண்ணோர் விண்ணோர்க்கு’‘ (திருவாய். 1.- 8 – 3) என்றும், ““சஷுர் தேவாநாமூத மர்த்யாநாம்” (யஜு. ஸம். ச் – 6) என்றும் சொல்லுகிறபடியே தேவர்களுக்கு நேத்ர பூதனான ஸர்வேஸ்வரனுடைய “’சக்ஷோஸ் ஸூர்யோ அஜாயத’” (பு.ஸூ .) என்கிறபடியே திவ்ய சக்ஷுஸ்ஸைப் பிறப்பகமாக உடைத்தாய்- ”ஜக தேக சக்ஷுஷே”’ என்கிறபடியே ஜகத்துக்கு த்ருஷ்டி பூதமாய், (த்ரயீ
மயமுமான மண்டலத்திலே) ““தரயீ மயாய” என்கிறபடியே வேத மயமுமான ஆதித்ய மண்டலத்திலே
கார் ஆர் புரவி ஏழ் பூண்ட தனி ஆழித் தேரார் –
நிறை கதிரோன் -மண்டலத்தைக் கீண்டு புக்கு –
ஆராவமுதம் அங்கு எய்தி–மேக மண்டலத்தில் செல்லுவதும் ஏழு குதிரைகள் பூட்டப் பெற்றதும்
ஒற்றைச் சக்கரத்தை வுடையதுமான – அது தான் உங்களுக்கு ஏற்க உண்டே என்று தோற்றிற்றோ
மேக பதத்திலே குதிரை சஞ்சரிக்கை யாவது என்-புரவி -இரண்டு அல்ல நாலு அல்ல ஆறு அல்ல -எட்டு அல்ல ஏழு குதிரை பூண்கை யாவது என் –தனி ஆழித் தேரார் –பிள்ளாய் -இரண்டாதல் நாலாதல் அன்றிக்கே-தனிச் சக்கரமாம் – பிள்ளாய் -ஆகாசத்திலே ஒருவன் தேர் நடக்கை யாவதென் –நிறை கதிரோன் –ஒரு விளக்கின் சந்நிதியில் விழிக்க மாட்டாத அதி சூத்திரன் -உஷ்ண கிரணங்களால் பூர்ணனாய் இருக்கிற ஆதித்யனைச் சென்று கிட்டுகை யாவதென் –மண்டலத்தைக் கீண்டு புக்கு –
ஒருவனை இங்கே உபாசித்து அவனுடைய ராஜகுலத்தாலே -ஆதித்ய மண்டலத்தின் நடுவே போகிறானாம் இறே-அங்கே ஏறப் போனால் அவ்வழிப் போக்குத் தான் இங்குப் போலே இரண்டருகும் பணை யாக நடவே போகிறானோ தான் -என்கை –
திங்கள் தோய் மாட நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானை
மங்கையர் தலைவன் வண்டார் கலியன் வாயொலிகள் வல்லார்
பொங்கு நீருலகம் ஆண்டு பொன்னுலகு ஆண்டு பின்னும்
வெங்கதிர்ப் பருதி வட்டத்தூடு போய் விளங்குவாரே –4-5-10-ஆதித்ய மண்டலத்தின் நடுவிட்டு அர்ச்சிராதி மார்க்கமே போய் பரமபதத்திலே சென்று ஸ்வ ஸ்வரூபத்தை பெற்று உஜ்ஜ்வலராவர்
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு
தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே –1-8-3—சம்சாரிகளோடு நித்ய ஸூ ரிகளோடு வாசி இல்லை – அரை க்ஷணம் தங்கள் கார்யம் நிர்வஹித்துக் கொள்ள மாட்டாமைக்கு-கண்ணாகைக்காக என்னுதல்-கண்ணாம் அவன் என்னுதல்-கண் -என்று நிர்வாஹகன் – சஷூர் தேவா நாம் உதமர்த்தயா நாம் –என்கிற ஸ்ருதி அர்த்தத்தின் படியே சொல்கிறார்-
இனி அதில் எழுந்து அருளி இருக்கிற படியை வர்ணிக்கிறார் –1-தண் தாமரை சுமக்க –அதாவது
தண் தாமரை சுமக்கும் பாத பெருமான் -திருவாய்-4-5-8–என்கிற படியே-சரசி ஜசன சந்நிவிஷ்டனாய் இருக்கை-தோள் வளையும் குழையும் பெரியாழ்வார்-1-5-10–அதாவது-இத்தால் கேயூரவான் மகர குண்டலவான் -என்றதை சொல்லுகிறது .-திரு செய்ய முடியும் ஆரமும் படையும் திகழ-திருவாய்-8-4-7-
இத்தால் கிரீடி ஹாரி த்ருத சங்க சக்கர -என்றதைச் சொல்லுகிறது ..–2-திகழும் பொன் மேனியும்-அதாவது-ஆரமும் படையும் திகழ திருவாய்-8-4-7–என்கிற படியே கீழ் சொன்ன ஆயுத ஆபரணங்கள் எல்லாம் விளங்கும் படி இருப்பதாய் ,பொன் மேனி கண்டேன்-மூன்றாம்-1–என்னும் படி ஹிரண்ய மயமான திரு மேனியும்-ச எஷாந்தர் ஆதித்யே ஹிரண்மய புருஷோ த்ருச்யதே ஹிரண்ய ச்மஸ்ரூர்
ஹிரண்ய கேச ஆப்ரணகாத் சர்வ ஏவ ஸூவர்ண -சாந்தோக்யம்-–என்றும் ஹிரண்மயவபு –என்றும் சொல்லக் கடவதிறே-3-செஞ்சுடர் தாமரை கண்ணுமாய் -அதாவது அஞ்சுடர் வெய்யோன் அணி நெடும் தேர் தோன்றாதால்-என்ற அநந்தரம்-செஞ்சுடர் தாமரை கண் செல்வனும் வாரான்-என்றது அந்த ஆதித்ய மண்டலத்தில் எழுந்து அருளி இருக்கிறவனை இறே ..-ஸ்ருதியும் -தஸ்ய யதா கப்யாசம் புண்டரீக மேவ மஷிணீ-என்றது அவ் இருப்பிலே இறே .. ஆகையால் ஆதித்ய கிரணங்களால் விகசிதமான போதை சிவந்த ஒளியை உடைய தாமரை போன்ற திரு கண்களுமாய் என்கை-
(தண்டாமரை சுமக்க) ”தண்டாமரை சுமக்கும் பாதப் பெருமான்”” (திருவாய். 4 5 – 8) என்றும், “த்யேயஸ் ஸதா ஸவித்ரு மண்டல மத்ய வர்த்தீ நாரயாணஸ் ஸரஸி ஜாஸந ஸந்நிவிஷ்டா கேயூரவாந் மகர குண்டலவாந் கிரீடீ ஹாரீ ஹிரண்மயவபுஸ் த்ருத சங்க சக்ர” என்றும், ““மங்கல வைம்படையும் தோள் வளையும் குழையும் மகரமும்” (பெரியா.திரு, 1 – 8 -9) என்றும், ”திருச் செய்ய முடியுமாரமும் படையுந் திகழ” (திருவாய். 8 – 4 – 7) என்றும், ‘‘நீண்ட பொன் மேனியோடும்’” (திருவாய். 5- 5- 7), *“செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும்”’ (திருவாய். 5 – 4 – 9) என்றும் சொல்லுகிற படியே பாஹு-வலய-மகர குண்டல-அபிஷேக-ஹார-கேயூர- சங்க, -சக்ராதி, திவ்ய பூூஷணங்களாலும் விளங்கா நிற்பதுமாய், ““ருக்மாபம் ஸ்வப்ந தீ கம்யம் வித்யாத்து புருஷம் பரம்” (மநு. 12 – 122) என்றும், “’ஆப்ரணகாத் ஸர்வ ஏவ ஸுவர்ண?”‘ (சா. 1 – 6 – 6) என்றும் சொல்லுகிற ஸ்ப்ருஹணீயமான திவ்ய விக்ரஹத்தையும், “யதா கப்யாஸம் புண்டரீக மேவ மக்ஷிணீ”” (ச,ா.) என்கிறபடியேஆதித்ய கிரணத்தாலே அலர்த்தப்பட்டு சிவந்த தேஜஸ்ஸை யுடைய திருக் கண் மலரையுமுடைத்தாய்,
நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானைத் தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொல்மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனியாவர் நிகர் அகல் வானத்தே?–4-5-8—குளிர்ந்த ஆசன பத்மத்தாலே தரிக்கப் பட்ட திருவடிகளை உடைய சர்வேஸ்வரனை-திருவடிகளில் மென்மை குளிர்த்தி நாற்றம் தொடக்கமான போக்யதைக்கு தோற்று சுமக்கிற படி-ஆசன பத்மத்தால் அல்லது தனக்கு ஸ்திதி இல்லாதா போலே என் கவி அல்லாது தரிக்க மாட்டாது இருக்கை–
செங்கமலக் கழலில் சிற்று இதழ் போல் விரலில் சேர் திகழ் ஆழிகளும் கிண்கிணியும் அறையில்
தங்கிய பொன் வடமும் தாள நன் மாதுளையின் பூவொடு பொன் மணியும் மோதிரமும் கிறியும்
மங்கல ஐம் படையும் தோள் வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்து இலக
எங்கள் குடிக்கரசே ஆடுக செங்கீரை யேழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே – 1-5 10- –திரு மார்பில் சாத்தின மங்கள அவஹமான ஸ்ரீ பஞ்சாயுதமும் – அதுக்கு பரபாகமாக கொண்டு இரண்டு அருகும் விளங்கா நின்றுள்ள திருத் தோள் வளைகளும் திருக் காது பணிகளும் -திரு மகரக் குழைகளும்-திருச் செவி மடல் மேல் சாத்தின வாளிகளும் – திருக் குழலில் சாத்தி திரு நெற்றிக்கு அலங்காரமாக -நாலும் = தொங்குகின்ற -சுட்டியும் –
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு அதனுள் கண்ட அத்திருவடி என்றும்
திருச் செய்ய கமலக் கண்ணும் செவ்வாயும் செவ்வடியும் செய்ய கையும்
திருச் செய்ய கமல வுந்தியும் செய்ய கமலை மார்பும் செய்ய வுடையும்
திருச் செய்ய முடியும் ஆரமும் படையும் திகழ வென்ன சிந்தை யுளானே–8-4-7-அப்படி திரு மேனிக்கு பரபாகமாய் பயம் தீரும் படி ரக்ஷகத்வ ஸூ சகமாய் இருந்துள்ள திரு அபிஷேகமும்-ஆரமும்-பெரிய வரை மார்பில் பேராரம் பூண்டு -என்கிறபடியே திரு மார்வுக்குத் தகுதியான திருவாரமும் –-படையும்-வினைத்தலையில் ஆயுதமாய் போக தசையில் ஆபரணமாய் இருக்கிற திவ்யாயுதங்களும் திகழ -சோபபயன் தாண்ட காரண்யம்-என்கிறபடியே திவ்யாயுதம் தானே விளங்கும்படியாக
என்றும் — வென்ன சிந்தை யுளானே–அவன் என்றும் ஓக்க என் நெஞ்சிலே வர்த்திகையாலே பயத்துக்கு ஒதுங்க இடம் இல்லை –பயம் பய நாஸநம் –
திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் -செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக் கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று ———-1-திருக் கண்டேன்– தர்மம் தன்னைக் கண்டேன் –பொன் மேனி கண்டேன்–அவள் இருக்கும் ஆசனம் கண்டேன்–
நிறைந்த வன்பழி நம்குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்
சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும்
நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் நேமி அம் கை உளதே.–5-5-7-அபரிச்சின்னமான தேஜஸ்ஸினுள்ளே உன்நேயமாம் படி யாயிற்று திரு மேனி இருப்பது -இது தேஜஸ்ஸினுள்ளே வடிவு தான் அபரிச்சேதயமான போக்யதையை யுடையதாய் நித்ய ஸ்ப்ருஹா விஷயமாய் இருக்கை –
வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்
அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.–5-4-9–இத்தசையில் புண்டரீ காஷனான ஸ்ரீ யபதியும் வருகிறிலன் -சிவந்த ஒளியை யுடைய தாமரைப் பூ போல் இருக்கிற திருக் கண்களை யுடைய ஸ்ரீ யபதியும் வருகிறிலன் -இந்த துர்த்தசையிலே குளிர நோக்கிக் கொண்டு இருவருமாய் வர ப்ராப்தமாய் இருக்க அது கிட்டிற்று இல்லை -ஆதித்யன் உதித்தாலும் ராத்திரி வர சம்பாவனை யுண்டு -அஸ்தமியாத ஆதித்யன் வருகிறிலன் -பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -என்ன கடவது இறே-
4-அணி நிற மூர்த்தி ஈது என்னும் படி இரண்டையும் தன்னிறம் ஆக்குகிற செய்யாளான வித்தையோடே –அதாவது-திருக் கண்டேன்-என்று முதலில் தன்னை கண்ட அநந்தரம்-ருக்மாபம்-என்னும் படி இருக்கிற அவன் திரு மேனியைக் கண்டு –பொன் மேனி கண்டேன்-என்று இருக்கச் செய்தேயும்-தன் திரு மேனி நிறத்தில் வியாப்தியாலே இள வெய்யில் கலந்தால் போல் விளங்கி , தர்சநீயமாய் இருக்கும் அவன் திரு மேனி நிறத்தைக் கண்டு திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன் -என்னும்படி யாகவும் ..–செய்யதோர் ஞாயிற்றை காட்டி சிரீதரன் மூர்த்தி ஈது என்னும்—திருவாய் –4-4-2-என்று அந்த மண்டல வாசிநியான தன் விக்ரக தேஜோ வியாப்தி யாலே சிவந்த ஒளியாலே அத்வீதீயமாய் இருக்கும் படியைக் கண்டு ஸ்ரீ தரன் வடிவு ஈது என்று பிரமித்து சொல்லும் படியாகவும் , பகவத் விக்ரகமும் ஆதித்ய மண்டலமும் ஆகிய இரண்டையும் தன்னிறமாகும் படி பண்ணுகிற சிவந்த நிறத்தை உடையவள் ஆகையாலே ஹிரண்ய வர்ணாம்—ஸ்ரீ ஸூக்தம் – இத்யாதி படியே கமல மலர் மேல் செய்யாள்–திருவாய்-9-4-1-என்று நிரூபகம் ஆகும் படி இருப்பாளாய் வித்யா சகாய மாதித்ய சமஸ்தம் வித்யா பிரசாதகம் -என்றும்-வித்யா சகாய வந்தம் மாம் ஆதித்யஸ்தம் சனாதனம்-என்றும் சொல்லுகிற படியே வித்யா சப்த வாச்யையான பிராட்டி யோடே கூடே–அருக்கன் மேவின- அதாவது வானிடை அருக்கன் மேவி நிற்ப்பார்க்கு -பெரிய திருமொழி-2-1-7-என்கிற படியே சவித்ரு மண்டல மத்ய வர்தியான
-ய ஏஷ அந்தராதித்யே -என்றதை சொல்லுகிறது-சதாத்யேய தேஜஸ்ஸின்-அதாவது த்யேயஸ் சதா -என்கிற படியே சர்வ காலமும் த்யானம் பண்ணுவாருக்கு விஷயமாய்-ஹிரண்மயஸ் சகுநிர் ப்ரஹ்ம நாம ஏன சூர்யஸ் தபதி தேஜசேத்த–காடகம்–என்றும்-தத் சவிதுர் வரேண்யம் பர்க்க -காயத்ரி –என்றும்
தேஜ பரம் தத் சவிதுர் வரேண்யம் தாம்னா பரேணா பிரணகாத் ஸூவர்ணம்–ஸ்ரீ ரெங்கராஜ ஸ்த்வம் உத்தர -79-என்றும் சொல்லுகிற படி தேஜோ மயமாய் இருக்கிற வஸ்துவினுடைய-
““அருக்கனணிநிறமும் கண்டேன்” (மூ.திரு. 1) என்றும், ““செய்யதோர் நாயிற்றைக் காட்டிச் சிரீதரன்மூர்த்தி”” (திருவாய். 4 –4– 2) என்றும் சொல்லுகிறபடியே ஆதித்ய தேஜஸ்ஸு போலே யிருக்கிற பகவத் விக்ரஹத்தையும், ப்ரபா -ப்ரபாவான்௧ளுடைய சேர்த்தியாலே ஸ்ரியப் பதித்வத்துக்கு ஸ்மாரகமு மாயிருக்கிற ஆதித்ய மண்டலத்தையும்,இவை யிரண்டையும் தன்னிறமாக்கும்படியான ““கமலமலர் மேல் செய்யாள்” (திருவாய். 9 – 3 – 1) என்கிறபடியே ஹிரண்ய வர்ணையாய், *“வித்யா ஸஹாயம்” “ஆதித்ய ஸம்ஸ்தம் வித்யாப்ரபாவகம் (ப்ரஸாதகம்)’” என்கிறபடியே வித்யை என்கிற திருநாமத்தை உடையளாயிருக்கிற பெரிய பிராட்டியாரோடே.-“வானிடை அருக்கன் மேவி நிற்பார்க்கு’” (பெ.திருமொழி 2 – 1 – 7) என்கிறபடியே ஆதி,த்யாந்தர் வர்த்தியாய், ஸதாத், த்யேய தேஜோ ருபமாயிருக்கிற இவரை ப்ரதிபாதி,க்கிற .
திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் -செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக் கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று ———-1–இருவரும் சேர்ந்த சேர்த்தியாலே இள வெய்யில் கலந்தால் போலே இருக்கிறபடி –இருவர் ஒளி சேர்ந்து -தங்கத்தின் பெருமை தங்க ஒளி கலந்து –லோக விஜாதீயம்--பால ஸூர்யன் ஒளி –இருளின் ஒளியும் வெளிச்சமும் சேர்ந்தால் போல் -என்று சொல்லலாம் படி சமுதாய சோபை பொன் மேனி ஸுந்தர்யம் -நீல மேனி ஐயோ -நீலமாக ஸ்ப்ருஹணீயமாய் மேல் அவயவ சோபை லாவண்யம்-
பெய் வளைக் கைகளைக் கூப்பி, ‘பிரான் கிடக்கும் கடல்’ என்னும்;
செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டி, ‘சிரீதரன் மூர்த்தி ஈது’ என்னும்;
நையும் கண்ணீர் மல்க நின்று, ‘நாரணன்’ என்னும்; அன்னே!என்
தெய்வ உருவிற் சிறுமான் செய்கின்றது ஒன்று அறியேனே.–4-4-2—இராத்திரி எல்லாம் சமுத்திர கோஷத்துக்கு ஆடல் கொடுத்து ஆதித்யன் உதித்தவாறே ஆதித்யனும் பிரபையும் சேர்ந்து இருக்கிற படியைக் கண்டு -இது ஸ்ரீதரனுடைய வடிவு என்று ஹ்ருஷ்டை யாகா நின்றாள் – பிரபா ப்ரபாவன்கள் உடைய சேர்த்தி மாத்ரத்தையே கொண்டு சொல்லா நின்றாள் – செய்யதோர் ஞாயிற்றை – அழகியதாய் அத்விதீயமான நாயிறு -தாயும் தமப்பனும் சேர இருந்த சந்நிதியிலே பசித்த பிரஜைகளை போலே சிதிலையாகா நின்றாள்-
மையார் கருங்கண்ணி கமல மலர்மேல்
செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே
வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும்
கையா உனைக் காணக் கருதும் என் கண்ணே–9-4-1-ஸ்வா பாவிகமான கறுப்பை யுடைத்தாய் அஞ்ஞனத்தாலே அலங்க்ருதமான திருக் கண்களை யுடையவள் -ஒன்றால் சமாதானம் பண்ண வேண்டாத படி அழகு ஸ்வாபாவகமாய் இருக்கையாலே கண்ணுக்கு அஞ்சனம் மங்களமார்த்தம் இறே –
கமல மலர்மேல்-செய்யாள் –ஸுகுமார்யத்தாலே வந்த போக்யதையை யுடையவள் – திரு மார்வினில் சேர் -மேகத்திலே மின் சேர்ந்தால் போல் யாயிற்று சேர்த்தியால் வந்த அழகு -அபூ அடி கொதித்துக் கால் வாங்கி திரு மார்விலே ஏற வேண்டும் படி யாயிற்று -அவளுக்கு திரு மார்வில் சேர்த்தி இருப்பது –
திருமாலே-அவன் பக்கல் அத்யந்தம் வ்யாமுக்தனானவனே –அவள் திரு மார்வில் பண்ணும் வ்யாமோஹத்தை இவன் அவயவங்கள் தோறும் பண்ணும் என்கை -இப்படி அந்நியோன்யம் சேர்ந்த சேர்த்தியிலே இறே கைங்கர்யம் பண்ண ஆசைப் பட்டது -இச்சேர்த்தியைப் பற்ற இறே அவள் முன்னாக பற்ற ஆசைப்படுவார் ஆசைப்படுவது –நகச்சின் நபராத்யதி -என்னும் அவளும் –என்னடியார் அது செய்யார் -என்னுமவனுமான சேர்த்தி இறே -சம்சாரிகளுக்கு தஞ்சம் –
தருக்கினால் சமண் செய்து சோறு தண் தயிரினால் திரளை மிடற்றிடை
நெருக்குவார் அலக்கண் அது கண்டு என்னெஞ்சம் என்பாய்
மருட்கள் வண்டுகள் பாடும் வேங்கடம் கோயில் கொண்டதனோடும் வானிடை
அருக்கன் மேவி நிற்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-7-வைதிகர் ஆனவர் ஆஸ்ரயிக்கும் படியாக-ஆதித்ய அந்தர்யாத்மாவாகக் கொண்டு நிற்கிறவனுக்கு –ஆதித்ய அந்தராத்மாவாய் இருக்கும் என்று அனுசந்தித்துப் போகை அன்றிக்கே கண்ணாலே கண்டு அடிமை செய்து அனுபவிக்கப் பெற்றாயே நீ –
சாமரே சோத்கானநாமம் உள்ளுறையான ஆத்யந்தங்களாலே – அதாவது சாம்ன உத்கீதோ ரச – என்கையாலே சந்தோக சாமத்துக்கு ரசமாய் இருந்துள்ள உத்கானம் உண்டு–உத்கீதம்-( சாம ரஸம் உத்கீதம் -அதில் நாமம் உத் ) அதில் –உத்-என்று சொல்ல பட்ட –தஸ்ய உதிதி நாம -என்கிற திரு நாமம்
இதுக்கு உள்ளுறை யானமை தோற்றும் படியான ஆத்யந்தங்களை உடைத்தாய் இருக்கையாலே என்கை .. உயர்வு-என்று எடுத்து உயர்ந்தே -என்று தலைக் கட்டுகையாலே உ காரம் ஆதியும் த காரம் அந்தமும் ஆய இறே இருக்கிறது ஆத்யந்தங்களாலே -என்றது மேல் சொல்லுகிறதுக்கு ஹேது இது என்று தோற்றுகைக்காகா-ஓர் ஆயிரம் அவற்றிலே ஒன்றை-அதாவது-ஓர் ஆயிரமாய் உலகு எழ அளிக்கும் பேர் ஆயிரம்-என்கிற படியே ஒரு திரு நாமமே ஆயிரம் முகமாக நின்று ஜகத் ரஷணம் பண்ண வல்ல திரு நாமங்களிலே ஒரு திரு நாமத்தை – (ஒன்றே ஆயிரமாய் அளிக்கும் என்றால் ஆயிரமும் பத்து லக்ஷமாக அளிக்கும்)ஆயிரம் முகத்தினால் அருளிய -இத்யாதி-அதாவது –
ஆயிரம் முகத்தினால் அருளி மந்தரத்து இழிந்த கங்கை–பெரிய திருமொழி-1-4-7–என்று
கங்கை தானும் ஒன்றாய் இருக்க ,லோக பாவன அர்த்தமாக சகஸ்ர முகமாக பிரவஹித்தால் போலே
தீர்த்தங்கள்-ஆயிரம் என்ற படியே –லோக பாவனமான ஆயிரம் பாட்டாக விஸ்தரிக்கிறார் என்று ஸ்ரீ வேதாசார்ய பட்டர் உபதேசித்து அருளும் படி என்கை ..-விஸ்தரிக்கிறார் என்ற கர்த்ருத்வத்தை அபௌருஷேயத்வ விரோதமற கீழ் சொன்ன படி கொள்வது-
“ஸாம்ந உத்கீதோரஸ?” (சாந்) என்று ஸாமத்துக்கு ரஸமாய், ““தஸ்யோதிதி நாம”‘ (சாந்த ] என்கிறபடியே அவர்க்குக் திருநாமமாயிருக்கிற உத்காந நாமத்தை உள்ளுறையாக உடைத்தாகையாலே * ‘உத்’” என்கிற விதில் உகார தகாரங்களை ஆதி யந்தங்களில் உடைத்தாயிருக்கிற இப் பரபந்தத்தை.
ஓராயிரமா யுலகேழளிக்கும் பேராயிரம்”” (திருவாய்;9 – 3 – 1) என்கிறபடியே ஒரோ திருநாமமே அநேக பிரகாரமாக ரக்ஷிக்கும் படியான திருநாமங்களில் வைத்துக் கொண்டு ஆதித்யாந்தர வஸ்திதனான வனுக்குத் திருநாமமான ”உத்” என்கிற உத்துக்கு பர்யாயமான நாராயண ஸப்தத்தை “’ஆயிர முகத்தினாலருளி மந்தரத் திழிந்த கங்கை” (பெரிய. திரு. 1 – 4 – 7) என்கிறபடியே கங்கை லோக பாவநார்த்தமாக ஸஹஸ்ர முகமாக ப்ரவஹித்தாப் போலே “’தீர்த்தங்களாயிரத்து”’ (திருவாய். 7 – 10 – 11) என்கிறபடியே லோக பாவநார்த்தமாக ஆயிரம் பாட்டாக விஸ்தரிக்கிறார் என்று வேதாசார்ய ப,ட்டர் அருளிச் செய்யும்படி
ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்
பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்
கார் ஆயின காள நல் மேனியினன்
நாராயணன் நங்கள் பிரான் அவனே–9-3-1-ஓர் ஆயிரமாய் -ஒரோ திரு நாமங்களே ஆயிரம் முகத்தால் ரக்ஷிக்க வற்றாய் இருக்கும் –ஐஸ்வர்யஸ்ய சமக்ரஸ்ய வீர்யஸ்ய யசசச் ச்ரிய- என்று நிர்வசன பேதத்தால் அநேகம் படி ரக்ஷிக்க வற்றாய் இறே இருப்பது –-உலகு -ரக்ஷிக்கும் இடத்திலே ஓரோர் ஒருத்தரை அன்றிக்கே லோகமாக ரக்ஷிக்கும்-ஏழ் -அது தன்னிலும் ஒரு லோகம் மாத்திரம் அன்றிக்கே சர்வ லோகங்களையும் ரக்ஷிக்கும் – அளிக்கும்- பேர்— அவன் பாப பிராஸுர்யத்தாலே ஷிபாமி என்னக் கடவன் -இவை ரஷிக்கையே ஸ்வபாவமாக இருக்கும் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்–இப்படிப்பட்ட திரு நாமங்களை ஆயிரம் உடையனாகையால் யுண்டான பெருமையை யுடையவன் -தேவோ நாம சஹஸ்ரவான்–
வெந்திறல் களிறும் வேலை வாய் அமுதும் விண்ணோடு விண்ணவர்க்கு அரசும்
இந்திரர்க்கு அருளி எமக்கும் ஈந்து அருளும் எந்தை எம்மடிகள் எம்பெருமான்
அந்தரத்து அமரர் அடி இணை வணங்க ஆயிர முகத்தினால் அருளி
மந்தரத்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே–1-4-7-ஆயிர முகத்தினால் –
மேருவிலே இழிந்து மந்த்ரத்திலே இழிந்து ஹிமவானில் இழிந்து இங்கே பல வகைகளிலே வரும்படியை சொல்லக் கடவது இறே-
தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குரு கூர்ச்சட கோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே.–7-10-11-தன் இனிமையால் புறம்புள்ளவற்றை அறுக்கும் என்னுதல் -பாவனம் என்னுதல் –
ஆக –எவ்வுலகத்து எவ்வகையும் -சூரணை -39- தொடங்கி இவ் ஆழ்வார்-பிரபந்த சதுஷ்டயத்துக்கும்
வேத ரூபவத்வமும் அங்க உபாங்க சாகித்யமும் சாஸ்திர வாதி வேத லஷண சாம்யமும் இதில் இவருக்கு தோற்றுகிற கர்த்ருத்வத்தால் இதின் நித்ய அபௌருஷேயத்வ ஹானி இல்லாமையும்
அதில் சாம வேத ஸ்த்தாநீயமான திரு வாய் மொழி சாம வேத ஸ்ரேஷ்டமான சந்தோக சாம உபநிஷத் சமம் என்னும் அதுவும் சொல்லிற்று ஆயத்து-
ஆக, ‘“எவ்வுலகத்தெவ்வெவையும்”’ என்று தொடங்கி, இவ் வாழ்வார் அருளிச் செய்த ப்ரபந்தங்கள் நாலுக்கும் வேத ரூபத்வமும், அங்கோபாங்க ஸஹிதத்வமும், ஸாஸ்த்ரதவம் முதலான வேத லக்ஷணங்களும் இவற்றினுடைய நித்யத்வ-அபெளருஷேயத்வமும், இந்நாலு ப்ரபந்தங்களுக்கும் நாலு வேத ஸ்தாநேயான ப்ரகாரத்தையும், அதில் திருவாய்மொழி ஸாம ஸாமாந்ய மன்றிக்கே, சந்தோக,ஸாமோபநிஷத் தாயிருக்கிற ப்ரகாரத்தையும், அதில் விசேஷ லக்ஷணங்களையும் சொல்லுகையாலே இப்ப்ரபந்தத்துக்கு வேத,ஸாம்யம் சொல்லா நின்றது –
—
ஆக இப்படி இப் பிரபந்த சதுஷ்டத்யத்துக்கும் வேத சாம்யத்தை சாதித்தார் கீழ் .. இங்கன் அன்றிக்கே இது தனக்கு வேதோபப்ருஹ்மண சாம்யமும் சொல்லுவார்கள் என்கிறார் மேல் ..-இனி மேல் ஸ்வரூபாதிகளை விஸத,மாகச் சொல்லுகிற ஸ்ரீபாஞ்சராத்ராதிகளைப் போலே விக்ரஹத்தை விஸதமாகச் சொல்லுகிற வேதத்துக்கு இப் ப்ரபந்தம் விவரண ரூபமாயிருக்கும் என்பாரு முண்டென்கிறார் –
அன்றிக்கே ஸ்வரூப குண விபூதி சேஷ்டிதங்களை விசதமாக்குகிற பாஞ்சராத்ர புராண
இதிகாசங்கள் போலே நீலபாரூ போக்தி தெரியச் சொன்ன வேத உப ப்ருஹ்மணம் என்பர்கள்-சூரணை -54-
அதாவது இப்படி வேத சாம்யம் சொல்லுகை அன்றிக்கே பகவத் ஸ்வரூப குண விபூதி சேஷ்டிதங்களுக்கு எல்லாம் -பிரதிபாதகமாய் இருந்துள்ள வேதத்தில்-யத்த தத்ரேச மக்ராஹ்ய மகோதர மவர்ண மசஷுஸ் ச்ரோத்ரம் தாதா பாணி பாதம் நித்யம் விபும் சர்வகதம் ஸூ ஸூஷ்மம் ததவ்யயம்யத் பூதயோநிம் பரிபஸ்யந்தி தீரா -என்றும்-சத்யம் ஞான அநந்தம் ப்ருஹ்ம-என்றும்-நிஷ்கலம் ,நிஷ்க்ரியம் ,சாந்தம் நிரவத்யம் ,நிரஞ்சனம் நிர்குணம் -இத்யாதிகளால் சொல்லப் படுகிற ஸ்வரூபத்தையும்-யஸ் சர்வஜ்ஞஸ் சர்வவித்–முண்டோகம்-பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வாபாவிகீ ஞான பல க்ரியா ச–ஸ்வேதாஸ்வதரம் சத்ய காமஸ் சத்ய சங்கல்ப -சாந்தோக்யம் –இத்யாதிகளால் சொல்லப் படுகிற குணங்களும்-ஸ்ருணு தத் பரமம் ஸூஷ்மம் சர்வஞ்ஜம் சர்வப்ருத் ததா ,ஞான ரூபம் அநாதி அந்தம் அவிகாரி நிராமயம் அசஷுச் ஸ்ரோத்ரம் அஸ்பர்சம் அபாணி சரணம் த்ருவம், நாம ஜாத் ஆதி ரஹிதம் அவர்ணம் அ குணம் த்வபி விச்வஸ்ரவோ ,விச்வ சஷூர் , விச்வ பாணி பதம் பரம் , அ சக்தம் அ சரம்
சாந்தம் ஸ்வயம் ஜோதிரநூபமம் ,தூரஸ்த்தம் அந்திக சரம் ,ஜ்ஞான கம்யம் , நிரஞ்சனம் ,பூத பர்த்ரு சமம் ,ஜ்யோதிர் ஜ்யோதிஷாம் தமஸ பரம் அஷரம் சர்வ பூதஸ்தம் தத் விஷ்ணோ பரமம் பதம்–ஸ்ரீ பாஞ்ச ராத்ரம் –இத்யாதிகளாலும்–அப்ராக்ருத குண ஸ்பர்சாத் நிர்க் குணம் பரிகீயதே ,ஸ்ருணு நாரத ஷாட் குண்யம் கத்திய மானம் மயானன.அ ஜடம் ஸ்வாத்ம சம்போதி நித்யம் சர்வ அவகாஹனம் .ஜ்ஞானம் நாம குணம் பிராஹு பிரதமம் குண சிந்தகா . ஸ்வரூபம் ப்ரஹ்மணஸ் தச்ச குணச்ச பரிகீயதே
ஜகத் பிரக்ருத் பாவோய சா சக்தி பரிகீர்த்திதா கர்த்ருத்வம் நாம யத் தஸ்ய ஸ்வாதந்த்ர்யம் ,பரிப்ரும்ஹிதம் ஐஸ்வர்யம் நாம தத் ப்ரோக்தம் குண தத்வார்த்த சிந்தகை ,ச்ரம ஹானிஸ்து யாதஸ்ய சததம் குர்வதோ ஜகத்பலம் நாம குணஸ் தஸ்ய கதிதோ குண சிந்தகை தஸ்யோபாதான பாவேபி
விகார விரஹோ ஹி யவீர்யம் நாம குணஸ் சோயம் அச்யுதத்வா பராஹ்வய , சக கார்ய நபேஷா
யாதத் தேஜஸ் சமுதாஹ்ருதம்–அஹிர் புத்ன்யா சம்ஹிதை -இத்யாதிகளால் விசதமாக்குகிற பாஞ்ச ராத்ரம் போலேயும்-–-யதோ வா இமானி பூதானி ஜாயந்தே ,யேன ஜாதானி ஜீவந்தி
யத் பிரயந்தி அபிசம்விசந்தி–தைத்ரியம்-ப்ராஹ்மணோஸ்ய முகம் ஆசீத் பாஹு ராஜன்ய க்ருத ஊரூ ததஸ்ய யத் வைஸ்ய பத்ப்யாம் ஸூத்ரோ அஜாயத–புருஷ ஸூக்தம் – அந்த ப்ரவிஷ்ட சாஸ்தா ஜனானாம் சர்வாத்மா -ஆரணம் – பாதோஸ்ய விஸ்வா பூதானி –புருஷ ஸூக்தம் –தைத்ரியம் –இத்யாதியாலும்–ச ஹோவாச மஹிமான ஏ வைஷாம் ஏதே த்ரயஸ் த்ரிம் ச தேவ தேவா இதி
கதமேத த்ரயஸ் த்ரிம்சதிதி அஷ்டவ் வஸவ் ஏகாதச ருத்ரா த்வாதச ஆதித்ய த ஏகரிம்சத் இநதிரஸ் சைவ பிரஜாபதிஸ் ச த்ரயச்த்ரிசம்த்-ப்ருஹதாரண்யம்- -இத்யாதியாலும்–பவ்திமாப்யோ கோபவநாத் கோபவன , கௌசிகாத் கௌசிக ,கௌடிந்ண்யாத் கௌடிண்ந்ய சாண்டில்யாத் சாண்டில்ய ,கௌசிகாச்ச ,கௌதமாச்ச ,கௌதம ,அக்நிவைச்யா அக்னிவைஸ்ய சாண்டில்யாத் -ப்ருஹதாரண்யம்-இத்யாதியாலும்–ஜகஜ் ஜென்மாதிகளையும் ப்ராஹ்மணாதி வர்ணங்களையும் தேவ ஜாதியில் வைவித்யத்தையும் ருஷி வம்சாதிகளையும் பிரதிபாதிக்கிற வாக்யங்களால் சொல்லப் படுகிற விபூதியை-சர்க்கச்ச பிரதி சர்கச்ச வம்சோ மன்வந்த்ராணி ச ,வம்சானுசரிதஞ் சைவ புராணம் பஞ்ச லஷணம்-அமரம்- என்கிறபடியே சர்க்காதிகளையும் ,வம்சங்களையும் , மன் வந்தரங்களையும் ,வம்சானு சரிதங்களையும் , விஸ்தரேண பிரதி பாதிக்கிற முகேன விசதமாக்குகிற புராணம் போலவும்—உத்ர்ர்தாசி வராஹேண -தைத்ரியம்-இதம் விஷ்ணு விசக்ரமே த்ரேதா நிததே பதம் –ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம் -இத்யாதிகளாலே சொல்லப் படுகிற அவதார சேஷ்டிதங்களை– ஸ்ரீ ராமாயணம் நாராயண கதாம் -என்னும் படி ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணா அவதார சேஷ்டிதங்களை விஸ்தரேண பிரதி பாதிக்கையாலும்-அத விஷ்ணுர் மகா தேஜ அதித்யாம் சமஜாயதே ,வமானம் ரூபமாஸ்த்தாய, வைரோசநிமுபாகமத் ,த்ரீன் க்ரமாநத பிஷித்வ பிரதி க்ருஹ்ய ச மாதவ ஆக்ரம்யலோகன் லோகாத்மா சர்வ லோகே ஹிதே ரத மஹேந்த்ராய புன பிரதாந் நியம்ய பலிமோஜசா––பால காண்டம் -29-19-இத்யாதிகளாலே ப்ராசங்கிகமாக அவதாராந்தர சேஷ்டிதங்களையும் ஸ்ரீ ராமாயணத்தில் சொல்லுகையாலும் ,–மோஷ தர்மத்திலே ஸ்ரீ ஜன்ம ரகஸ்யத்திலே-அவதார ரஹஸ்யத்திலே –நார தேனைவ முக்தச்து பிரத்யுவாச ஜனார்தனா -என்று தொடங்கி-பூர்வம் மஸ்த்யோ பவிஷ்யாமி ஸத்தா பயிஷ்யாமி மேதிநீம் வேதாம்ஸ்வை உத்தரிஷ்யாமி மஜ்ஜமானான் மகார்ணவே,த்வதீயம் கூர்ம ரூபேண ஹேம கூட சமப்ரபம் ,மந்தரம் தாரைஷ்யாமி அமிர்தார்த்தே த்விஜோத்தம –சாந்தி பர்வம் –348-3-4-இத்யாதியாலே தசாவதார சேஷ்டிதங்களையும் விசதமாக்கும் இதிகாசம் போலவும்-—நீல தோயாத மத்யஸ்தா வித்யுத்லேகேவ பாஸ்வர –நாராயண அநுவாகம்-மனோமய பிராண சரீரோ பாருப -முண்டகம்-இத்யாதிகளாலே விக்ரஹத்தை சொன்ன இத்தை-ஆதி மத் யந்தம்–விக்ரஹத்தை பல இடங்களிலும் வர்ணித்து கொண்டு பேசுகையாலே- தெரியச் சொன்ன-திருவாய் -6-9-11–என்கிற படியே விசதமாக்கி சொன்ன வேத உப ப்ரஹ்மணம் என்று இத்தை சொல்லுவார்கள் என்கை-
இப் பிரபந்த சதுஷ்டயமும்
முழு நீர் முகில் வண்ணன்-திருவிருத்தம் -2–என்றும்
மைப்படி மேனி-திருவிருத்தம் -94-
பச்சை மேனி–திருவாசிரியம்-1-
தாமரைக் காடு–திருவாசிரியம்-5-
நற் பூவை பூவீன்ற–பெரிய திருவந்தாதி –1-
கார் கலந்த மேனி–பெரிய திருவந்தாதி –86-
துயர் அறு சுடர் அடி–திருவாய்-1-1-1-
புனக் காயா நிறத்த–திருவாய்-10-10-6- என்று உபக்கிரமம் பிடித்து உபசம்ஹாரம் பரியந்தம்
விக்ரஹத்தை வர்ணித்து கொண்டு செல்லா நிற்கும் இறே .-தெரியச் சொன்ன–திருவாய்-6-9-11- -என்கிற இது திருவாய்மொழி சந்தையே ஆகிலும் உப ப்ரஹ்மணத்வம் பிரபந்தாந்தரங்களுக்கு ஒக்கும் என்றே கொள்ள வேணும்-வேதத்வம் சொன்ன போது சாதாரணமாக சொன்னது இங்கும் ஒக்கும் இறே
பாஞ்ச ராத்ர புராண இதிகாசங்களிலும் இப் பிரபந்தத்திலும் ஸ்வரூபாதி சம்ஸ்தார்தங்களும் சொல்லப் பட்டதே ஆகிலும் இவ்வோ அர்த்தங்களில் இவற்றுக்கு நோக்கு ஆகையாலே- இப்படி வகை இட்டு சொல்லக் குறை இல்லை-
ஸ்வரூப ரூப கு,ண விபூதி சேஷ்டிதங்களித்தனையும் வேதத்திலே சொல்லும்-ஸ்வருபத்தையும், குணத்தையும் விஸதமாகச் சொல்லும் ஸ்ரீபாஞ்சராத்ரம்-விபூதியை விஸதமாகச் சொல்லும் புராணங்கள்-அவனுடைய திவ்ய சேஷ்டிதங்களுக்கு பிரகாஸகமாயிருக்கும் இதிஹாஸங்கள், அவை போலே “’நீல தோயத மத்யஸ்த வித்யுல்லேகேவ பாஸ்வரா”‘ (தை.நா.) என்றும், பாரூபஸ் ஸத்ய ஸங்கல்ப ” (முண்டக 2- 27) என்றும் விக்ரஹ பரமான வே வாக்யங்களை “*“தெரியச் சொன்ன ஓராயிரம்” (திருவாய். 6 – 9 -11)என்கிறபடியே விஸதமாக்குகிற வேத உப ப்ரும்ஹணம் என்பாருமுண்டென்கிறார்.
தெரிதல் நினைதல் எண்ண லாகாத் திருமாலுக்கு
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்
தெரியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே.–6-9-11—இதர புருஷார்த்தங்களில் அல்ப அஸ்திரத்வாதிகளையும்-பகவத் விஷயத்தின் உடைய வை லக்ஷண்யத்தையும் வ்யக்தமாகச் சொன்ன
செழு நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப சேயரிக் கண்
அழுநீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ
முழுநீர் முகில் வண்ணன் கண்ணன் விண்ணாட்டவர் மூதுவராம்
தொழுநீர் இணையடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே —-2—இக் கடலைத் தரையாக பருகின மேகம் இருந்தபடி-இவ்வடிவு உடையானும் தானேயாய் வருவானும் தானேயாய் இருக்கிறபடி – மேகம் ஜலம் இரண்டாய் இன்றிக்கே ஜலமாகவே இருக்கை -ஆதார ஆதேய இரண்டுமே நீராயாயேயான மேகம் போலே இருக்கும்-இவளைப் பிரிந்த அவன் வடிவு என்று நிச்சயிக்கிறாள்-இவளைக் கண்டு அனுமானிக்கிறாள்–இது தான் முழு நீர் மேகம்-மேகத்தில் உள்ள நீர் மேகமே நீர்-அவன் இடத்தில் கறுமை -கறுமையே அவன்-கண்ணன் என்னும் கறும் தெய்வம்–முழு நீர் முகில் வண்ணன் என்று-ப்ரேம விஷயம் பூர்ணமாய் –-தர்ச நீயமாய்-உத்துங்கமாய் இருக்கும் என்றதாயிற்று-கண்ணன் என்று-இவ் விஷயம் இவருக்குக் கை புகுந்தமை தோற்றுகிறது-
மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும் வைதிகரே
மெய்ப்படியால் உன் திருவடிச் சூடும் தகைமையினார்
எப்படி யூராமி லைக்கக் குருட்டாமிலைக்கும் என்னும்
அப்படி யானும் சொன்னேன் அடியேன் மற்று யாது என்பனே — – 94—அஞ்சனத்தின் படியான திரு மேனியும் –-கண்டார்கள் கண் குளிரும்படியான-வடிவும் –பட்டர் ஒருகால் இவ்விடத்தை அருளிச் செய்யா நிற்க –-பிள்ளை விழுப்பர் அரையரும் -ஆப்பான் திருவழுந்தூர் அரையரும் -இருந்தார்களாய் –-அனுசந்தித்தார் நெஞ்சில் இருள் படியும் படியான-திரு மேனியும் -என்று அருளிச் செய்ய –நஞ்சீயர் –இன்னார் என்று அறியேன்–என்னப் பண்ணுகை யாகாதே -என்று அருளிச் செய்து அருள –(பொன்னார் சார்ங்கம் யுடைய அடிகளை இன்னார் என்று அறியேன் -சார்ங்க பாணி உள்ளத்தில் அமர்ந்து இருட்டாக்கி அருளச் செய்ததற்கு பிரமாணம்)-இவ்வார்த்தை சொன்னார் யார் -என்ன -ஜீயர் -என்று அவர்கள் சொல்ல –நூற்றுப் பதின் காதத்து அவ்வருகே பிறந்து –இவ்வளவும் வந்து –இன்று நமக்கு இத்தை உபகரிப்பதே -என்று கொண்டாடி அருளினாராம் –மைப்படி –காதல் மையலை உண்டாக்கும் படியான திரு மேனி-பொன்னார் சார்ங்கம் உடைய யடிகளை இன்னார் என்று அறியேன் –செந்தாமரை கண்ணும் –அகவாயில் குண பிரகாசமான திருக் கண்களும் –
செக்கர் மா முகில் உடுத்து மிக்க செம் சுடர்
பரிதி சூடி அம் சுடர் மதியம் பூண்டு
பல சுடர் புனைந்த பவள செவ்வாய்
திகழ பசும் சோதி மரகத குன்றம்
கடலோன் கை மிசை கண் வளர்வது போல்
பீதக ஆடை முடி பூண் முதலா
மேதகு பல் கலன் அணிந்து சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப மீது இட்டு
பச்சை மேனி மிக பகைப்ப
நச்சு வினை கவர் தலை அரவின் அமளி ஏறி
எறி கடல் நடுவுள் அறி துயில் அமர்ந்து
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர்
தெய்வ குழாங்கள் கை தொழ கிடந்த
தாமரை வுந்தி தனி பெரு நாயக
மூ வுலகு அளந்த சேவடியோயே –1–மீது இட்டு பச்சை மேனி மிக பகைப்ப-கீழ்ச் சொன்னவற்றாலும் -அவற்றை நெருக்கிற தன்னாலும் ஒன்றை ஓன்று ஸ்பர்த்தித்து- ஸ்யாமமான நிறமும் மிகவும் உஜ்ஜவலமாக – அவற்றை அடைய நெருக்கி உள்ளே இட்டுக் கொள்ளப் பார்த்ததான அத்தையும் அழித்து ப்ரசரிக்க திருமேனி தேஜஸ் மிகவும் பிரகாசிக்க என்றபடி –-கடலோன் கை மிசைக் கண் வளர்வது போலே -என்ற உபமானத்துக்கு இது உபமேயம்-
மா முதல் அடி போது ஓன்று கவிழ்த்து அலர்த்தி
மண் முழுதும் அகப்படுத்து ஒண் சுடர் அடி போது
ஓன்று விண் செலீ இ நான் முகப் புத்தேள்
நாடு வியந்து உவப்ப வானவர் முறை முறை
வழி பட நெறீ இ தாமரை காடு
மலர்க் கண்ணொடு கனி வாய் உடையது
மாய் இரு நாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன
கற்பகக காவு பற்பல வன்ன
முடி தோள் ஆயிரம் தழைத்த
நெடியோய் கல்லது அடியதோ வுலகே–5-தாமரை காடு மலர்க் கண்ணொடு கனி வாய் உடையதுமாய்
ஆரேனுமாகத் தன திருவடிகளைத் தலையிலே வைத்தால் ஆதித்ய சந்நிதியில் தாமரை போலே
திருக்கண் செவ்வி பெறுமாயிற்று- தாமரைக் காடு அலர்ந்தால் போலே இருக்கிற திருக் கண்ணோடே கனிந்த வாயையும் யுடைத்தாய் இருப்பதுமாய் –
முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மோடி நீ கூடி –நயப் புடைய
நாவீன் தொடை கிளவி யுள் பொதிவோம் நற் பூவைப்
பூ வீன்ற வண்ணன் புகழ் –1-நற் பூவைப்-வாசகத்துக்கு எட்டுமது அன்று என்கிறது
(திருமேனி அழகு ஸ்வரூபத்தின் அளவு அல்லவே ) உபமானம் உபமேயத்துக்குப் போராமையாலே
உபமானத்தையும் சிக்ஷிக்கிறது-பூ வீன்ற வண்ணன்-பூவைப் பூ காட்டுகிற நிறத்தை யுடையவன்
பூவைப் பூவைக் காட்டுகிற நிறத்தை யுடையவன் என்றுமாம் –-கோ சத்ருஸோ கவய கவய சத்ரூஸோ கவ் –என்னுமா போலே-
கார் கலந்த மேனியான் கை கலந்த வாழியான்
பார் கலந்த வல் வயிற்றான் பாம்பணையான் -சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை
என்னினைந்து போக்குவார் இப்போது –86-ஸர்வதா ஸத்ருசமான மேகத்தோடே ஒத்த திரு மேனியை யுடையவன்-கார் கலந்த மேனியான் சீர் கலந்த சொல் –ஸ்ரீ ராமாயணம்-கை கலந்த வாழியான் சீர் கலந்த சொல் –ஸ்ரீ பாகவதம்-பார் கலந்த வல் வயிற்றான் சீர் கலந்த சொல் –இதிஹாசங்கள் புராணங்கள்-பாம்பணையான் -சீர் கலந்த சொல் -அருளிச் செயல்கள்சீர் கலந்த சொல்–திருநாமங்கள் என்றுமாம் –
உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே –1-1-1-துயர் அற்ற என்றபடி-இவர் மயர்வு அற அவன் துயர் அற்றபடி–சுடரடி-நிரவதிக தேஜோ ரூபமான திவ்ய விக்ரஹம்-அடி -சேஷபூதர் அனுபவிக்க இழியும் துறை
எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6-—புனக்காயா நிறத்த-தன்னிலத்திலே காயாய் பூ போலே யாய்த்து வடிவு இருப்பது –புண்டரீகக் கண் –வாத்சல்ய அமிருத வர்ஷியாய் யாய்த்து கண்கள் இருப்பது —செங்கனி வாய்-சிவந்து கனிந்தாய் யாய்த்து முறுவல் இருப்பது -பிராட்டி விரும்பும் துறைகள் இறே இவை –
—
உப ப்ருஹ்மணத்வ சாம்யம் உண்டானாலும் ,இவ் ஆழ்வார் பிரபந்தங்களுக்கு உள்ள ஏற்றம்
ஆர்ஷமான புராணாதிகளுக்கு இல்லை என்னும் இடத்தை அறிவிக்கைக்காக , உபயத்தின் உடையவவும் உத்பத்தி மூலங்களை அருளி செய்ய கோலி ,பிரதமம் ஆர்ஷோ பிரபந்த உத்பத்தி மூலத்தை அருளி செய்கிறார்-கீழ்ச் சொன்ன புராணேதிஹாஸ கர்த்தாக்களான ருஷிகளாலே சொல்லப்பட்ட ஆர்ஷங்களுக்கு மூலமெது; இவர் திருவாய்மொழி பாடுகைக்கு மூலமெது என்ன; கல்பாதியிலே உத்ரிக்த குணாநுகுணமாகச் சொல்லும் ப்ரஹ்மாவின் ப்ரஸாதமும், ரஜஸ் தமஸ் ப்ரசுரனான ருத்ரன், அவை தலை சாய்ந்து ஸத்த்வம் தலை யெடுத்த போது அத்யாத்மம் சொல்லக் கேட்ட ஸப்ரஹ்மசாரிகளான ப்ரூகு-புலஸ்த்ய-மார்க்கண்டேய வாமதேவாதி,கள் என்று சொல்லப்படுகிறவர்கள் ப்ரஸாதமும் ஆர்ஷத்துக்கு மூலம்-ப்,ரஹ்ம ருத்ராதிகளுக்கு அந்தர்யாமியாய்க் கொண்டு அவர்களுக்கு ஜ்ஞாந ப்ரதாநம் பண்ணினவன் தானே ஸ்ரீ யப்பதியாய், பரம ஸத்த்வ ஸமாஸ்ரயமான திவ்ய விக்ரஹ யுக்தனுமாய் நின்று செய்த ப்ரஸாதம் இவர்க்கு மூலம் என்கிறார் –
கல்பாதியில் தோற்றிற்று வர்ணிக்கும் சதுர் முகன் சந்தஸூம் மோஹ சாஸ்திர பிரவர்தகன்
பிண சுடலை வெந்தார் அக்கும் ஆறும் அணிந்து ஏறி ஏறி சுழன்று ஆடும் ஆலமமர் பிச்சுத் தெளிந்து
தான் வணங்குமாறு உரைக்க கேட்ட சஜாதீயர் பிரசாதமும் ஆர்ஷ மூலம்-சூரணை -55-
அதாவது
யஸ்மின் கல்பேது யத் ப்ரோக்தம் புராணம் ப்ரஹ்மணா புரா தஸ்ய தஸ்யது மஹாத்மியம் தத் ஸ்வரூபேண வர்ண்யதே –ஸ்ரீ மாத்ஸ்ய புராணம் –என்கிறபடியே-குண த்ரய வஸ்யனான தனக்கு கால பேத குண த்ரயமும் சங்கீர்ணமாயும்-அதில் ஒரு குணம் பிரசுரமாய் இருக்கும் விசேஷத்தை இட்டு –
சங்கீர்ணாஸ் சாத்விகாஸ் சைவ ராஜசாஸ் தாமசாஸ் ததா-ஸ்ரீ மாத்ஸ்ய புராணம் – -என்று சங்கீர்ணங்கள் என்றும் சாத்விகங்கள் என்றும் ,ராஜசங்கள் என்றும் ,தாமசங்கள் என்றும் சொல்லப் படுகிற அஹஸ் ஸூக்களாகிற கல்பங்களுடைய ஆதிகளிலே உத்ரிக்தமான குணானுகுனமான பிரதி பந்தம் ஆன படியே —அக்னேஸ் சிவஸ்ய மஹாத்மியம் தாமசேஷு பிரகீர்திதம் ராஜசேஷு ச மஹாத்மியம் அதிகம் ப்ரஹ்மணோ விது– சாத்விகேஷ்வத கல்பேஷு மஹாத்ம்யமதிகம் ஹரே தேஷ்வேவ யோக சம்சித்தா கமிஷ்யந்தி பராம் கதிம் , சங்கீர்னேஷூ சரஸ்வத்யா பித்ரூணாம் ச நிகத்யதே –ஸ்ரீ மாத்ஸ்ய புராணம்-என்கிற படி – தாமச கல்பங்களிலே அக்னி சிவர்களுடைய மகாத்ம்யத்தையும் ராஜச கல்பங்களில் தன்னுடைய மகாத்ம்யத்தையும் சாத்விக கல்பங்களில் சர்வேஸ்வரனுடைய மகாத்ம்யங்களையும் சங்கீர்ண கல்பங்களில் பித்ரு சரஸ்வதியின் மகாத்ம்யத்தையும் வர்ணியா நிற்கும் சதுர் முகனுடைய –மச் சந்தா தேவ தே ப்ரஹ்மன் பிரவ்ருதேயம் சரஸ்வதி–பால காண்டம் 2-30- என்கிற படி இவன் வாக்கிலே இச் சப்தம் பிறக்கைக்கு அடியான அனுக்ரக கார்யமான நினைவும் .. சந்தஸ் என்கிற இது நினைவு என்றே இவ் இடத்தில் கொள்ள வேண்டும் .
சந்தம் என்றே நினைவுக்கு வாசகம் . சந்தஸ் என்கிற இதுவும் நினைவுக்கு வாசகமாக வந்த இடங்களிலோ கண்டு கொள்வது . ஆக இப்படி இருந்துள்ள சதுர் முகன் நினைவும் –மோஹ சாஸ்திர பிரவர்தகன்-அன்யம் தேஹி வரம் தேவ பிரசித்தம் சர்வ ஜந்துஜூ மர்த்த்யோ பூத்வா பாவனேவ மாமாராதய கேசவ .. மாம் வ்ருணீஷ் வச தேவேச வரம் மத்தோ க்ருஹாணச, யேநாஹம் சர்வ பூதானாம் பூஜ்யாத் பூஜ்யதரோ பவம்–என்று வரம் வேண்டின ஸ்வ உத்கர்ஷ காமன் ஆகையாலே — த்வஞ்ச ருத்ர மஹாபாஹோ மோஹா சாஸ்த்ராணி காரய -என்று பகவான் நியோகித்தது வியாஜமாக ஆகமாதி மோஹ சாஸ்த்ர பிரவர்தகனான ருத்ரன் ,-பிணங்கள் இடு காடதனுள் ,நடமாடு பிஞ்சகன் -பெரிய திருமொழி-2-6-9–என்றும் ,-சுடலையில் சுடு நீறன்-பெரிய திருமொழி-10-1-5–என்றும்-வெந்தார் என்பும் சுடு நீரும் மெய்யிற் பூசி–பெரிய திருமொழி-1-5-8–என்றும்-அக்கும் புலி இன தளும் உடையார் –பெரிய திருமொழி-9-6-1–என்றும் ஆறும் பிறையும் அரவமும் உடம்பும் சடை மேல் அணித்து –பெரிய திருமொழி-6-7-9–என்றும் எரி உருவத்து ஏறேறி –இரண்டாம் திரு வந்தாதி — 63-என்றும் – சுழன்றாடும் கொன்னவிலும் மூவிலை மேல் கூத்தன்-பெரிய திருமடல்-60- -என்றும்-ஆலமமர் கண்டத்தவன்–முதல் திருவந்தாதி-4- -என்றும் சொல்லுகிற படியே தம பிரசுரன் ஆகையாலே நிஹீன வ்ருத்தி பரனாய்—உன்மத்த வத நுன்மத்த .பிரபு ,பிரபவதாமபி ராத்ரவ் ஸ்மசாநேப்யடசிதத் கிமே தத் தவேச்வர – -இத்யாதியாலே சிம்சான பர்யடனம் தொடக்கமான நிஹீன வ்ருத்திகளை நீ அனுஷ்டிக்கைக்கு ஹேது என் என்று தேவி கேட்க்கும் படி சம்சானங்களிலே சஞ்சரித்து ,சப பஸ்மத்தை உடம்பு எங்கும் பூசி ,
அத்தி மாலையை பூண்டு ,வயாக்ர சர்மத்தை உடுத்தி ,நதி சந்திர சர்பாதிகளை ஜடையிலே அணிந்து ,
சர்வேஸ்வரன் தன சார்வஜ்ஞ அனுகுணமாக , வேத மயனான விஹஹேச்வரனை மேற் கொண்டு உலவுவா போலே , தன் அறிவு கேட்டுக்கு அனுகுணமாக ஞான ஹீனமான ரிஷபத்தை வாகனமாய் உடையனாய் ,மத்தர் களித்து ந்ருத்தம் பண்ணுமா போலே சக்ர பிரமம் போலே சுழன்று ஆடுவது ,விஷத்தை கண்டத்திலே தரிக்கை ஆகையாலே ,நம்மில் காட்டில் அதிசயித சக்திகர் இல்லை என்று தன்னை ஈஸ்வரனாக நினைத்து இருப்பதாக பிராந்தி நீங்கி ,சத்வ குணம் தலை எடுத்து ,-சத்வம் விஷ்ணு பிரகாசம் ஆகையாலே –-ஆல் மேல் வளர்ந்தானை தான் வணங்குமாறு -நால்வருக்கு மேலை யுகத்துரைத்தான் –நான்முகன்-17–என்கிற படியே -அகடிதகடநா சமர்த்தனான சர்வேஸ்வரனை தான் உபாசிக்கும் பிரகாரத்தை உபதேசிக்கக் கேட்டவர்கள் ஆகையாலே , சத்வ நிஷ்டராய் ,ருஷித்வத்தால் வந்த சாஜாத்யத்தை யுடையரான அகஸ்த்ய புலஸ்திய தஷ மார்கண்டேயர்கள் நால்வரில் ஒருவனான புலஸ்த்யன் புராண சம்ஹிதா கர்த்தா பவான் வத்ஸ பவிஷ்யதி தேவதாபார மார்த்யஞ்ச யதாவத் வேத்ச்யதே பவான் -என்று ஸ்ரீ பராசர பகவானுக்கு வர பிரதானம் பண்ணுகையாலே சஜாதியரான ருஷிகள் பிரசாதமும் ருஷி ப்ரோதக்தங்களான பிர பந்தகளுடைய மூலம் என்கை-–ஸ்ரீ வால்மீகி பகவானுக்கு அனுக்ரகரான பிரம்மாவை போலே விஜாதீயன் அன்றிக்கே ஸ்ரீ பராசர பகவானுக்கு வரபிரதனான புலஸ்தயனும் ருஷி ஆகையாலே ,இவனுக்கு சஜாதியன் என்னத் தட்டில்லை இறே..மற்று உண்டான இதிகாச புராண கர்த்தாக்கள் உடைய பிரபந்தங்களுக்கு மூலமும் ஆராய்ந்தால் ,இப்புடையிலே யாயிருக்கும் அத்தனை அல்லது அத்வாரக பகவத் பிரசாதம் ஒரு விஷயத்திலும் இல்லை என்று நினைத்து இறே ஆர்ஷ மூலம் என்று திரள அருளி செய்தது—
(கல்பாதி,யில்) ‘“யஸ்மிந் கல்பே து யத் ப்ரோக்தம் புராணம் ப்ரஹ்மணா புரா ! தஸ்ய தஸ்ய து மாஹாத்ம்யம் தத் ஸ்வரூபேண வர்ண்யதே ॥ அக்நேஸ் ஸிவஸ்ய மாஹாத்ம்யம் தாமஸேஷு ப்ரகீர்த்யதே । ரஜஸேஷு ச மாஹாத்ம்யம் அதிகம் ப்ரஹ்மணோ விது | ஸாத்த்விகேஷ்வத கல்பேஷு மாஹாத்ம்யம் அதிகம் ஹரே -தேஷ்வேவ யோக ஸம் ஸித்தாக,மிஷ்யந்தி பராம் க,திம்”” (மாத்ஸ்யே) என்று குண த்ரய வஸ்யனாகையாலே கல்பாதியிலே தனக்குத் தோற்றின குணாநுகுணமாக தமஸ்ஸு தலையெடுத்த போது ருத்ராக்நி மாஹாத்ம்யமும், ரஜஸ்ஸு தலையெடுத்த போது ஸ்வ வர்ணநமும், ஸத்த்வம் தலையெடுத்த போது பகவத்,வர்ணநமும் சொல்லக் கடவனான ப்,ரஹ்மாவினுடைய ““மச்சந்தா தேவ தே ப்ரஹ்மந் ப்ரவ்ருத்தேயம் ஸரஸ்வதீ?” (ரா. பா. 2 – 31) என்கிற நினைவும். ““சந்தஸ்ஸு” என்றது நினைவென்றபடி–(மோஹ ஸாஸ்த்ர ப்ரவர்த்தகன்”) “தவம் ஹி ருத்ர மஹா பாஹோ மோஹ ஸாஸ்த்ராணி காரய ! மாஞ்ச கோபய யேந ஸ்யாத் ஸ்ருஷ்டிரேஷோத்தரோத்தரா | த்ரய்யாமபி ச ஸாமாந்ய வாதஸ்சித்த விபே,த,த₹ ॥ கிம்புநர் லோக மோஹார்த்த,ம் ப்ரவ்ரூத்தம் ருத்ர ஸாஸநம் | மயாநுமிஷ்டோ ருத்ரஸ்து மோஹ ஸாஸ்த்ரம் வ்யதாத் ஸ்வயம்”’-என்கிறபடியே பகவந் நியோகத்தாலே மோஹ ஸாஸ்த்ர ப்ரவர்த்தகனான ருத்ரன்- (பிணச்சுடலை இத்யாதி, ) ”பிணங்களிடுகாடதனுள்”’ (திருமொழி 2 – 6 – 9) என்றும், “சுடலையில் சுடு நீறன்’” (திருமொழி 10 – 1 – 5) என்றும், ““வெந்தாரென்பும் சுடு நீறும்” (திருமொழி 1 – 5 – 8) என்றும், ““அக்கும் புவியினதளுமுடையர்” (திருமொழி 9 – 6 – 1) என்றும், “ஆறும் பிறையுமரவமும் அடம்பும் சடைமேலணிந்து”” (திருமொழி 6 – 7 – 9) என்றும், “வேறேறிப் பட்டவிடுசாபம்”” (இர.திருவ. 63) என்றும், “’தன்னினுடனே சுழலச் சுழன்றாடும்”’ (பெ.திருமடல்) என்றும், “’ஆலமமர் கண்டத்தரன்”’ (மு.திருவ. 4] என்றும், ““ஆல் மேல் வளர்ந்தானைத் தான் வணங்குமாறு – மேலை யுகத்துரைத்தான்’” (நா. திருவ, 17) என்றும் சொல்லுகிற இவற்றாலே ருத்ரன் தமஸ்ஸு தலை மண்டை யிட்டு பகவத் விமுகனய் ப்ரமித்து, பிணங்களிடுகாடுகள்தோறும் ஸஞ்சரியாநின்றுகொண்டு, “தீ பாக்நிம் தீ பதைலஞ்ச பஸ்ம சாஸ்திம் ரஜஸ் வலாம் ॥ ப்ரமாதாத் ஸ்பர்ஸநாத், விப்ரஸ்ஸவாஸா ஜலமாவிஸேத்’” என்று தர்ஸந-ஸ்பர்ஸந-அநர்ஹங்களான பஸ்மாஸ்திகளைத் தரித்து வ்யாக்ர சர்மவஸநனாய், நதீ சந்த்ரர்களை ஜடையிலே தரித்து, ஸாபோபஹதனாய், க்ருத்யாக்ருத்ய விவேக ஸூந்யனாய் விஷத்தை தரித்து, சக்ர ப்ரமம் போலே ப்ரமிக்கிறவன்,-அதுக்கு மேலே ஸத்த்வம் தலை யெடுத்து, ஸத்த்வம் விஷ்ணு ப்ரகாஸகமாகையாலே, அகடிதகடநா ஸாமர்த்யத்தை யுடைய ஸர்வேஸ்வரனே உபாஸ்யனென்று தான் அவனை உபாஸிக்கும் ப்ரகாரத்தை உபதேஸிக்கக் கேட்டு ஸத்த்வஸ்தராய், ருஷித்வத்தால் ஸாஜாத்யத்தை யுடையரான புஸஸ்த்ய ப்ருகு. மார்க்கண்டேய-வாம தேவாதிகளுடைய ப்ரஸாத,ம் ஆர்ஷங்களான புராணேதிஹாஸங்களுக்கு காரணமென்றதாய்த்து. புலஸ்த்யாதிகளுக்கு பராஸரனோடே ருஷி ஸாஜாத்யமுண்டாகையாலே ஸஜாதீயர் என்றது.
பிணங்கள் இடு காடதனுள் நடமாடு பிஞ்ஞகனோடு
இணங்கு திருச் சக்கரத்து எம்பெருமானார்க்கிடம் விசும்பில்
கணங்கள் இயங்கும் மல்லைக் கடல் தல சயனம்
வணங்கும் மனத்தாரவரை வணங்கு என் தன் மட நெஞ்சே-2-6-9–மனிச்சு கலவாத நெஞ்சை உடைய
ருத்ரனோடு கூட – ஸ்மசாந பூமியிலே ஆடா நின்றுள்ள ருத்ரனோடே கூட – அபிமான உபஹதரானவர்களுக்கும் நித்ய ஸூரிகளுக்கும் ஒக்க திருமேனியில் இடம் கொடுத்து இருக்கும் நீர்மையைச் சொல்லுகிறது – திரு வாழி ஆழ்வானைச் சொல்லுகிற இடம் நித்ய ஸூரிகளுக்கும் உப லஷணம்-
வெந்தார் என்பும் சுடு நீரும் மெய்யில் பூசிக் கையகத்து ஓர்
சந்தார் தலை கொண்டு உலகு ஏழும் திரியும் பெரியோன் தான் சென்று என்
எந்தாய் சாபம் தீர் என்ன இலங்கமுது நீர் திரு மார்வில்
தந்தான் சந்தார் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-8—வெந்தவர்களுடைய எலும்பும்
அது சுட்ட சாம்பலும் உடம்பிலே பூசி கையிலே சந்துகள் ஆர்ந்து இருந்துள்ள தலையைக் கொண்டு –
எல்லா நரம்புகளும் வந்து கூடின இடத்திலே யிறே சேதித்தது – தலை என்னாமல் சந்தார் என்பதால் -எல்லா நரம்புகளும் இத்யாதி -என்கிறார்-கூறு செய்த ஊரிலே -கையும் கைத்தளையுமாய்-கை விலங்குமாய் – திரிவாரைப் போலே-ஈஸ்வர அபிமாநியாய் தன் ஆஞ்ஞை நடத்திப் போந்த இடத்தில்
கையும் ஒடுமாய் திரிந்த துர் மாநியானவன் சென்று – என் ஸ்வாமீ – என்னுடைய சாபத்தைப் போக்க வேணும் -என்ன –
அக்கும் புலியின தளமுடையார் அவரொருவர்
பக்கம் நிற்க நின்ற பண்பரூர் போலும்
தக்க மரத்தின் தாழ்சினை ஏறி தாய் வாயில்
கொக்கின் பிள்ளை வெள்ளிற வுண்ணும் குறுங்குடியே —9-6-1-தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து -என்கிறபடியே அனுகூல சிஹ்னத்தோடே வருகை அன்றிக்கே-அக்கும் -எலும்பும்
புலித் தோலும் உடையராய்-மற்றும் எருக்கம் பூ சாம்பல் என்றால் போலே நிஷித்த த்ரவ்யங்களுக்கு ஒரு அவதி இல்லை இறே –ஈஸ்வர அபிமாநிகளாய் இருப்பர்க்கும் முகம் கொடுத்துக் கொண்டு இருக்குமவன் அனுகூலராய்ச் சென்று கிட்டுகிற நமக்கு முகம் தரச் சொல்ல வேணுமோ –
ஆறும் பிறையும் அரவமும் அடம்பும் சடை மேல் அணிந்து உடலம்
நீறும் பூசியேறூரும் இறையோன் சென்று குறை யிரப்ப
மாறு ஒன்றில்லா வாச நீர் வரை மார்வகலத்து அளித்து உகந்தான்
நாறும் பொழில் சூழ்ந்து அழகாய நறையூர் நின்ற நம்பியே–6-7-9—என்னுடைய ரஷணம் நானே பள்ளிக் கொள்ள வல்லேன் -என்று துர்மானத்தைப் பண்ணி அதுக்கு ஈடான அடையாளங்களை உடையனாய் இருக்கிற தன் ஜடையில் ஏக தேசத்தில் கங்கையை தரித்து -( கங்கா தரன் ) போக பிரதானன் என்று தோற்ற சந்த்ரனையும் தரித்து -( சந்த்ர சேகரன் ) சர்ப்பத்தையும் அடப்பம் பூவையும் ஜடையிலே அணிந்து –அடம்பம் பூ-கடம்பம் மர விசேஷ பூ – உடம்பிலே பஸ்மத்தையும் அணிந்து ருஷபத்தை நிர்வஹியா நின்றுள்ள ஈஸ்வர அபிமாநியானவன் லோக குருவுமாய் தனக்குப் பிதாவுமாய் இருக்கிற
ப்ரஹ்மாவின் உடைய தலையைச் சேதித்து அத்தாலே பாதகியாய்க் கொண்டு சர்வேஸ்வரன் திருவடிகளில் தன் குறையை அறிவிக்க
ஏறு எழும் வென்று அடர்த்த வெந்தை எரி உருவத்து
ஏறேறி பட்ட விடு சாபம் -பாறேறி
யுண்ட தலை வாய் நிறையக் கோட்டங்கை யொண் குருதி
கண்ட பொருள் சொல்லில் கதை–63-ஏறு ஏழையும் வென்ற ஸ்வாமி எரியினுடைய உருவை உடையனாய் ருஷபத்தை ஏறின ருத்ரனை ப்ரஹ்மா கபாலீ த்வம் பவிஷ்யஸி -என்று இட்ட சாபத்தை
ஒட்டின அழகிய கை –கழுகும் பருந்தும் ஏறி உண்ணா நின்ற தலையை உடைய வாய் நிறையும்படிக்கு ஈடாக அழகிய குருதியைக் கண்ட அர்த்தத்தைச் சொல்லில் அது ஒரு மகா பாரதம்-
மன்னு குலவரையும் மாருதமும் தாரகையும்
தன்னினுடனே சுழலச் சுழன்று ஆடும் ———–70
கொன்னவிலும் மூவிலைக் வேற்கூத்தன் பொடியாடி
அன்னவன் தன் பொன்னகலம் சென்று ஆங்கு அணைந்து இலளே —–71–திரு வுலகு அளந்து அருளின தேசம் எல்லாம் உபதஹதமான படி –கிடந்த விடத்தில் கிடவாது ஒழிகை-குலவரை யுள்ளிட்ட பதார்த்தங்கள் எல்லாம் புன்னைப் பூ போலே சுழன்று வர –ஆசைப் பட்டாரும் வயிறு பிடிக்கும் படி இருக்கை-கண் மூன்றானால் போலே இருக்கிறது அன்றோ –
நெறி வாசல் தானேயாய் நின்றானை யைந்து
பொறி வாசல் போர்க் கதவம் சாத்தி அறிவானாம்
ஆலமர நீழல் அறம் நால்வர்க்கு அன்றுரைத்த
ஆலமர் கண்டத் தரன் –4—தாமஸ குணத்துக்குச் சேர்ந்தது செய்யுமது அல்லது –
சத்வாத் சஞ்ஜாயதே ஞானம்–ஸ்ரீ கீதை -14-17–என்கிறபடியே கதற (உபதேசிக்க )அவன் கடவானோ -என்கிறார்-எம்பெருமான் கொடுத்த வெளிச்சிறப்பு மாத்ரத்தையும் விஷ ஹரண சக்தியையும் கொண்டு இத் துறையிலே இழியப் போமோ –
ஆல நிழல் கீழ் அற நெறியை நால்வர்க்கு
மேலை யுகத்து உரைத்தான் மெய்த்தவத்தோன் -ஞாலம்
அளந்தானை ஆழிக் கிடந்தானை ஆல் மேல்
வளர்ந்தானைத தான் வணங்குமாறு -17-ஆகம பிரசித்தமான வட விருஷத்தின் கீழே இருந்து தர்ம மார்க்கத்தை ஆப்தரான நாலு சிஷ்யர்களுக்குப் போன யுகத்தில் சொன்னான் – பகவத் ஜ்ஞானம் அறிக்கைக்கு ஈடான தபஸ்சை யுடையவன் –
—
இனி இவ் ஆழ்வார் பிரபந்தங்களுக்கு மூலம் இன்னது என்கிறார் —
பரம சத்வத்தோடே உள்ளி உரைக்கும் நிறை ஞானத்து அயனாம் சிவனாம் திருமால் அருள் கொண்டு
இவர் பாடினார்-சூரணை -56-
அதாவது –
கல்பாதியில் உத்ரிக்தமான குண அனுகுணமாக தோற்றிற்று வர்ணிக்கும் என்றதுக்கு எதிர் தட்டாம் படி
பரம சத்வத்தோடே -உள்ளி உரைக்கும் -என்று ரஜஸ் தமஸ் ஸூக்களோடும் தத் சகபடிதமான சத்வதோடும் அந்வயம் இன்றிக்கே , பரம சத்வ சமாஸ்ரய ஸ்தோத்ர ரத்னம் -12–என்கிறபடியே –
தனக்கு மேல் எல்லை இல்லை என்னும் படியான சுத்த சத்வ யுக்தனாய் ,தான் சொல்லிற்று அடைய வேதார்தமாய் இருக்கச் செய்தே சடக்கென சொன்னால்,-வாய் வந்த படி சொன்னான் நிரூபியாதே -என்பார்கள் என்று சேதனர் பக்கல் வாத்சல்யாதிசயத்தாலே இவர்களுக்கு ஆப்திக்கு உறுப்பாக –
நெறி உள்ளி உரைத்த திருவாய்-1-3-5-–என்கிற படியே வேத மார்க்கத்தை விசாரித்து ,அருளி செய்யுமவனாய் பிச்சு தெளிந்து சொன்னவன் வார்த்தை கேட்டு உண்டான , ஞான மாத்ரத்தை உடையவர்கள் போல் அன்றிக்கே ,-நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி – திருவாய்-4-8-6–என்கிறபடி பரி பூர்ண ஞானத்தை நிரூபகமாக உடையவனாய் ,-அயனாம் சிவனாம் திரு மாலால் -என்கிற படி கீழ் சொன்ன பிரம்மா ருத்ரருகளுக்கும் அந்தர்யாமியாய் நின்று , அவ்வவ கார்யங்களை நிர்வஹிக்கையாலே ,தத் தத் சப்த வாச்யனாய் , சர்வாதிகனான ஸ்ரீயபதி யினாலே –
அருளப் பட்ட சடகோபன்–திருவாய்-8-8-1- என்கிறபடியே மயர்வற மதி நலம் அருளப் பெற்றவராய் அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் -கண்ணி 8–– என்கிற படியே அந்த அத்வாரக பகவத் பிரசாதத்தை மூலமாக கொண்டு இவர் இப் பிரபந்தங்கள் பாடி அருளினார் என்கை .-
“பரம ஸத்த்வஸமாஸ்ரய: கஸ் (ஸ்தோ.ர. 12) என்கிறபடியே ரஜஸ் தமஸ்ஸூக்கு ஆஸ்ரயமன்றிக்கே பரம ஸத்வ ஸ்மாஸ்ரயனாய், அவர்களைப் போலே தோற்றிற்றுச் சொல்லுகை யன்றிக்கே “நெறி யுள்ளி யுரைத்த ” (திருவா. 1 – 3 – 8) என்கிறபடியே இவன் சொல்லிற்றொன்று வேதர்த்தமாயிருக்கச் செய்தேயும், இச் சேதநர் பக்கல் க்ருபாதிஸயத்தாலே விசாரித்துச் சொல்லலாம்படி ஆப்தனுமாய், ““நிறை ஞானத்தொரு மூர்த்தி”” (திருவா. 4 – 9 – 6) என்கிறபடியே அதுக்கடியான ஸார்வஜ்ஞ்யத்தை யுமுடையனாய், *’அயனாய் சிவனானாய் திருமாலாலருளப்பட்ட சடகோபன்”’ (திருவா. 8 – 8- 11) என்கிறபடியே ப்ரஹ்ம ருத்ராதி களுக்கும் அந்தர்யாமியாய் நின்று அவர்களை ப்ரவர்த்திப்பித்தாப் போலே ஸ்ரீயப் பதியாய் அஸாதாரண விக்ரஹ யுக்தனான ஈஸ்வரனுடைய க்ருபை இவர் திருவாய்மொழி பாடுகைக்கு மூலமென்கிறார் –
கஶ்ஶ்ரீ: ஶ்ரிய: பரம ஸத்வ ஸமாஶ்ரய: க:
க: புண்டரீகநயந: புருஷோத்தம: க: |
கஸ்யாயுதாயுத ஶதைக கலாம்ஶகாம்ஶே
விஶ்வம் விசித்ர சிதசித் ப்ரவிபாக வ்ருத்தம்||-ஶ்லோகம் 12 –யாரிடத்தில் சுத்த ஸத்வம் உள்ளது?
பிணக்கற வறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த
கணக்கற நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புறநெறி களை கட்டு
உணக்குமின் பசையற வவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே –1-3-5-ஆறு வகைப்பட்ட பாஹ்ய சமயத்துக்கு வைதிக சமயத்தோடு உண்டான பிணக்கு அற-வேத மார்க்கத்தை ஆராய்ந்து அருளிச் செய்த படி-வாக்விவ்ருதாச்சா வேதா -என்று தான் சொன்னது அடங்க வழியாய் இருக்க பிரஜைகள் பக்கல் பரிவாலே-ஒர்ரர்த்தம் போதியாதவன் நிரூபிக்குமா போலே ஆராய்ந்து அருளிச் செய்த படி –
அறிவினால் குறையில்லா அகல் ஞாலத்தவர் அறிய,
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி,
குறிய மாண் உருவாகி, கொடுங் கோளால் நிலங்கொண்ட
கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறையிலமே.–4-8-6-சேதன பேதத்தோ பாதி போறும் இறே உபாய பேதமும் -கர்ம யோகம் முதலாக பிரபத்தி பர்யந்தமாக சகல உபாயங்களையும் வ்யக்தமாக உபதேசித்த படி-கர்ம ஞான பகுதிகள் -அவதார ரஹஸ்யம் புருஷோத்தம வித்யை -ஸ்வரூப யாதாம்யம் -விரோதி நிவ்ருத்திக்கு பிரபத்தி -ஆத்மாபிராப்திக்கு பிராப்தி -பகவல்லாபத்துக்கு பிரபத்தி -இவற்றை அடங்க விசத்தமாக அருளிச் செய்தநிறைந்த ஞானத்தை உடைய அத்விதீயமான ஸ்வரூபத்தை யுடையவன் – ஞானாதிகன் சொன்னது இறே பிரமாணம் ஆவது -எல்லாருடைய ஞானத்துக்கும் அடியான ஞான பூர்த்தியை யுடையவன் –
தெருளும் மருளும் மாய்த்துத் தன் திருந்து செம் பொற் கழல் அடிக் கீழ்
அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால்
அருளப் பட்ட சடகோபன் ஓராயிரத்துள் இப்பத்தால்
அருளி யடிக் கீழ் இருத்தும் நம் அண்ணல் கரு மாணிக்கமே–8-8-11–ப்ரஹ்ம ருத்ர பிரமுகரான சர்வாத்மாக்களுக்கும் நிர்வாஹகனாய் -சர்வேஸ்வரனான ஸ்ரீ யபதியாலே – அருளப் பட்ட சடகோபன்-மயர்வற மதி நலம் அருளினன்-என்கிறபடியே கிருபைக்கு விஷய பூதரான ஆழ்வார் -இவ்வருளுக்கு வாய்த்தலை பிராட்டி -என்கை-
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
வருளினான் அவ் வருமறையின் பொருள்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே-8--பரம ரஹஸ்யமான வேதார்த்தத்தை நிர்ஹேதுகமாகத் தன் பக்கல் ஆசாலேசம் உடையார் வாழும் படி-ஸ்ரீ கீதா உபநிஷத் ஆச்சார்யனாய் நின்று வெளியிட்டான்
வேதங்கள் மறைத்த அர்த்தத்தை தீரோத்தகன் ஆகையாலே பிரகாசிப்பித்தான் (மூலையில் உள்ள உபநிஷத் அர்த்தங்களை நடு முற்றத்தில் இட்டு அருளி பதன் பதன் என்று அர்ஜுனனுக்கு அருளிச் செய்தானே )-ஆழ்வாருக்குத் திருவாய் மொழிக்கு உள்ளுறை போலே காணும் அருளிச் செய்தது-(சூத்ரம் -உபநிஷத் -விருத்திக்காரர் -கீதாச்சார்யன் -ஆழ்வார் ப்ரஹ்ம சூத்ரம் போலே ) இருவருக்கும் முழு நோக்காகப் பெற்றால் ஆழ்வாருக்கு செய்யப் போகாது இல்லை யாகாதே-வேத அதிகாரிகளுக்கு உஜ்ஜீவமாம் படி எம்பெருமான் செய்தது -அநாதிகாரிகளும் க்ருதார்த்தராம் படி ஆழ்வார் அருளிச் செய்தது-எம்பெருமான் அருளினது ப்ராதேசிகம் –ஆழ்வார் அருள் சார்வத்ரிகம்- பாலேய் தமிழ் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரம் -என்றும் -தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் -என்றும் இறே சொல்லிற்று –
—
அவர்கள் பிரசாதம் ஆர்ஷ மூலம் என்னும் இடம்-மச் சந்தா தேவாதே ப்ரஹ்மன் -என்றும்
புராண சம்ஹிதா -இத்யாதியாலே பிரபன்ன வக்தாக்களானவர்கள் வசன சித்தமாய் இருந்தது …
அப்படியே இவர் பிரபந்தங்களுக்கு ,மூலம் பகவத் பிரசாதம் என்னும் அது இவர் வசன சித்தமோ
என்னும் அபேஷையில் அத்தை மூதலிக்கிறார்-அவர்களுடைய ப்ரஸாதம் ஆர்ஷத்துக்கு மூலமென்னுமிடம் பரமாண ப்ரஸித்தமா யிருந்தது. இவருடைய பரபந்தத்துக்கு பகவத் ப்ரஸாதம் மூலமென்னுமிடம் அறிந்தபடி என் என்னில், அவர் தம்முடைய வசநங்கள் ப்ரமாணமென்கிறார்–
கருவுள் வேறலாமை அரன் அயன் எனச் செய்யும் அவை போலே மூவுருவா முதல்வன் துப்பரவாலே பரம கவிகளால் பாடுவியாது நேர் படச் சொல்லும் நீர்மை இலா என்னை தன்னாக்கி என் நா முதல் வந்து புகுந்து தப்புதல் அற தன்னை வைகுந்தனாக தன் சொல்லால் தானே துதித்து மலக்கு நாவியல் மொய்ய சொல்லால் சொல்ல வல்லேன் என்று நானும் சொல்லி நாடும் கை எடுக்கும் படி என் சொல்லால் யான் சொன்ன இன்கவி என்பித்தான் என்றார் இறே-சூரணை-57–
அதாவது
ஸ்ருஷ்டும் தத கரிஷ்யாமி த்வாமாவிச்ய பிரஜாபதே —ஸ்ரீ விஷ்ணு தர்மம் –-கல்பாந்தே ருத்ரரூபீ யோ க்ரசதே சகலம் ஜகத் – விஷ்ணுராத்மா பகவதோ பவஸ்யாமித தேஜச -பாரதம் கர்ணபர்வம் -என்கிற படியே-திசை முகன் கருவுள் வீற்று இருந்து படைத்திட்ட கருமங்களும் –திருவாய்-5-10-8–என்றும்
வெள்ளை நீர் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும் திருவாய்-5-10-4–என்றும் சொல்லும் படி பிரம்மா ருத்ரர்களுக்கு அந்தர்யாமியாய் கொண்டு ஸ்ருஷ்ட்டி சம்ஹாராதிகளை பண்ணா நிற்கச் செய்தே-அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே -திருவாய்-1-1-8–என்று
ஜகத் ஸ்ருஷ்ட்டி வேதோபதேசம் ஜகத் சம்ஹாரம் திரி புர தஹனம் இவற்றை பிரம்மா ருத்ரர்கள் தாங்களே செய்தார்களாக லோகத்தார் சொல்லும்படி செய்தாற் போலே-
“ஸ்ருஷ்டி ஸ்தித் யந்தகரணீம் ப்ரஹ்ம விஷ்ணு ஸிவாத்மிகாம் | ஸ ஸம்ஜ்ஞாம் யாதி பகவாந் ஏக ஏவ ஜநார்த்தநா ”” (வி.பு.1 – 2) என்றும், “ஸ்ருஷ்டிம் தத? கரிஷ்யாமி த்வாமாவிஸ்ய ப்ரஜாபதே”’, “கல்பாந்தே ருத்ரரூபீ யோ க்ரஸதே ஸகலம் ஜகத் ! தமாத்யம் புருஷம் விஷ்ணும் ப்ரணதோஸ்மி ஜநார்த்தநம்”’, “’விஷ்ணுராத்மா பகவதோ பவஸ்யாமித தேஜஸ । தஸ்மாத் தநுர்ஜ்யா ஸம்ஸ்பர்ஸம் ஸவிஷேஹோ மஹேஸ்வர?” (பார. கர்ண. 29) என்றும், ”திசைமுகன் கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும்’” (திருவா. 5 – 10 – 8) என்றும், ‘“வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும்”” (திருவா. 5 – 10 – 4) என்றும் சொல்லுகிறபடியே ப்ரஹ்மாதிகளுக்கு அந்தர் யாமியாய் ஸ்ருஷ்ட்யாதிகளைப் பண்ணா நிற்கச் செய்தேயும் ‘அரனயனென உலகழித்தமைத்துளன்”’ (திருவா. 1 – 1 – 8) என்கிறபடியே ப்ரஹ்மா ஜகத்தை ஸ்ருஷ்டித்தான்; வேதங்களை உபதேஸித்தான்; ருத்ரன் ஜகத்தை ஸம்ஹரித்தான்; த்ரிபுரங்களை தஹித்தான்” என்று லோகத்தார் சொல்லும்படி செய்தாப் போலே–
திருவுருவு கிடந்தவாறும் கொப்பூழ்ச் செந்தாமரை மேல் திசைமுகன்
கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும்
பொருவிலுன் தனி நாயக மவை கேட்குந்தோறும் என்நெஞ்சம் நின்று நெக்கு
அருவி சோருங் கண்ணீர் என்செய்கேன் அடியேனே.–5-10-8-திரு நாபி கமலத்தில் சதுர்முகன் ஆகிற அதிஷ்டானத்துக்கு உள்ளே –ஸ்ருஷ்டிம் தாத்தா கரிஷ்யாமி த்வாமாவிஸ்ய ப்ரஜாபதே-என்கிறபடியே சதுர்முகன் ஆசன பத்மத்தோ பாதியாய் இருக்கை–அவனுக்கு அந்தராத்மாவாய் -சர்வ நியந்தரு த்வத்தால் வந்த வேறுபாடு தோன்ற இருந்து-ஸ்ருஷ்டித்த வியாபாரங்களும் -ப்ரஹ்ம ஸ்ருஷ்ட்டி அடைய அவனே செய்கிறான் என்னும் படி இருந்த படி-
கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புரம் புக்க வாறும் கலந்த சுரரை
உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும்
வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும்
உள்ளமுள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே.–5-10-4-கங்கையினுடைய நீர் வெள்ளத்தை ஜடையிலே தரித்த ப்ரபாவத்தை யுடைய ருத்ரனும் விஷ்ணுராத்மா என்கிறபடியே சரீரவத் பரதந்த்ரன் என்னும் இடம் ப்ரஸித்தமாம்படி நின்றதுவும் –
சுரர் அறிவரு நிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என வுலகு அழித்து அமைத்து உளனே –1-1-8–ருத்ரனுக்கு அந்தர்யாமியாய் கொண்டு திரிபுர தஹனம் பண்ணி-பிரம்மாவுக்கு அந்தர்யாமியாய் நின்று வைதிக ஜ்ஞானத்தை தேவர்களுக்கு உபதேசித்து-இயந்து -ஈந்து -அறிவையீந்து -என்றபடி-திரிபுர தஹனம் பண்ணின ருத்ரன் என்றும் -வைதிக ஜ்ஞானம் ப்ரவர்த்தகன் ப்ரஹ்மா என்றும் அவர்களுக்கு பிரசித்தியை கொடுத்தால் போலே-ப்ரஹ்மாவுக்கு அந்தர்யாமியாக அண்டாந்த வர்த்திகளை ஸ்ருஷ்டித்தும் அவனுக்கு நிலம் அல்லாத ப்ராக்ருத சிருஷ்டியை ஸ்வேன ரூபேண பண்ணியும்-ருத்ரனுக்கு அந்தர்யாமியாய் நின்று அவனாலே சம்ஹார்யமான அம்சத்தை சம்ஹரித்தும் அவனுக்கு நிலம் அல்லாத ப்ராக்ருத சம்ஹாரத்தை ஸ்வேன ரூபேண பண்ணினான் சர்வேஸ்வரனே – ஏதௌ த்வௌ விபுதஸ் ரேஷ்டௌ- இப்படி சமஸ்த சிருஷ்டி சம்ஹாரங்களையும் தானே செய்கையாலே வேறேயும் சிலர் சிருஷ்டி சம்ஹாரங்களுக்கு கடவர் உண்டு என்று சொல்ல முடியாது –
மூவுருவா முதல்வனே--அதாவது –-என் முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே-திருவாய் -7-9-2-
என்று ஸ்வேன ரூபேண நின்று கார்யம் செய்யும் இடத்தில் தனக்கு தானே அடி ஆனால் போலே பிரம்மா ருத்ரர்களுக்கும் தானே அடியாய் அவர்களை சரீரமாக கொண்டு நின்று சிருஷ்டி யாதிகளைப் பண்ணி
அவர்கள் செய்தார்கள் என்று பிரசித்தம் ஆக்கும் அவன்-துப்புரவாம்-அதாவது –திறத்துக்கே துப்புரவாம் திருமால்—திருவாய் -7-9-9-என்கிற படி ஏதேனும் ஒரு கார்யத்திலும் வந்தால் ஒரு த்ருணைத்தை கொண்டு கார்யம் தலை கட்டிக் கொள்ள வல்ல சாமர்த்தியத்தை உடையவன் ஆகையால் –பரம கவிகளால் பாடுவியாது-அதாவது –-இன் கவி பாடும் பரம கவிகளால் தன் கவி தான் தன்னை பாடுவியாது –திருவாய்-7-9-6- என்று சொல்லுகிறபடியே ,தன்னைக் கவி பாடுவிக்க வேண்டினால், அதுக்கு ஈடான ஞான சக்தி யாதிகளால் குறை வற்றவர்களாய் , இனிய கவி பாட வல்ல மேலான கவிகளான , வியாச பராசர வால்மீகி ப்ரப்ருதிகளும் ,செம்தமிழ் -பாடுவாரான முதல் ஆழ்வார்கள் உண்டாம் இருக்க , அவர்களைக் கொண்டு பாடுவித்து கொள்ளாதே ,–நேர் பட யான் சொல்லும் நீர்மை இலாமையால் ஏர்விலா என்னைத் தன் ஆக்கி —திருவாய்-7-9-5-என்கிற படியே , தனக்கு தகுதியாம் படி வாய்க்க சொல்லுகைக்கு அடியான ஞானாதி குணங்கள் எனக்கு இன்றிக்கே இருக்க ,-என்னை தன்னாக்கி -என்கிற படியே ,என்னை தன்னோடு ஒக்க ஞான சக்திகளை உடையனாம் படி பண்ணி-
ஆ முதல்வன் இவன் என்று தன்தேற்றி என் நா முதல் வந்து புகுந்து-திருவாய் -7-9-3- -என்கிற படியே
என்னுடைய வாக் பிரவர்திக்கு முதாலாய் வந்து புகுந்து-என்னாகியே தப்புதல் இன்றித் தனைக் கவி தான் சொல்லி–திருவாய் -7-9-4 -என்கிறபடியே -என்னை உபகரணமாக கொண்டு பாடா நிற்க செய்தே ,என்னுடைய ஸ்பர்சத்தால் வந்த தோஷம் தட்டாத படியாகக் கொண்டு ,-என்னால் தன்னை வைகுந்தனாக புகழ -திருவாய் -7-9-7-என்கிற படியே நான் புகழ்ந்த இத்தாலே , ஸ்ரீ வைகுண்ட நாதனாய் ,அங்குத்தை ஐஸ்வர்யம் பெற்றானாய் நினைத்து ,-தன் சொல்லால் தான் தன்னைக் கீர்தித்த மாயன்—திருவாய் -7-9-2-என்றும்-தானே யான் என்பரானாகித் தன்னைத் தானே துதித்து -திருவாய்-10-7-2–என்றும் சொல்லுகிற படி-சொல்லும் தன்னது ,சொன்னானும் தான் ,சொல்லிற்றும் தன்னை-என்னும் படி எனக்கு அந்தர் ஆத்மாவாய் நின்று ,தன்னைத் தானே ஸ்துதித்து-
““மூவுருவாம் மூதல்வன்” (திருவா. 7 – 9- 2) என்கிறபடியே ப்ரஹ்மாதிகளுக்குத் தானே காரணமானாப் போலே தனக்குத் தானே அடியாயிருக்கிறவன்,-*திறத்துக்கே துப்பரவாம்”‘ (திருவா. 7 – 9 – 9) என்கிறபடியே யாதொன்றைக் கொண்டு யாதொரு கார்யம் கொள்ள நினைத்தான், அத்தைக் கொண்டே அக் கார்யம் கொள்ள வல்ல ஸாமர்த்யத்தை உடையனாகையாலே, தன்னைக் கவி சொல்லுவித்துக் கொள்ள நினைத்தால் ‘“இன் கவிபாடும் பரம கவிகளால் தன் கவி தான் தன்னைப் பாடுவியாது” ‘ (திருவா. 7 – 9 – 6) என்கிறபடியே வ்யாஸ-பராஸர-வால்மீகிகளைக் கொண்டு கவி பாடுவித்துக் கொள்ளுதல், முதலாழ்வார்களைக் கொண்டு கவி பாடுவித்துக் கொள்ளுதல் செய்யாதே. (நேர் படச் சொல்லும் நீர்மையிலா என்னைத் தன்னாக்கி) “நேர் பட யான் சொல்லும் நீர்மையிலாமையில்”” (திருவா. 7 – 9 – 5) என்கிறபடியே தன்னைக் கவி பாடுகைக்குத் தகுதியான ஜ்ஞாந சக்த்யாதிகளின்றிக்கே இருக்க, “என்னைத் தன்னாக்கி”” (திருவா, 7 – 9 – 1) என்கிறபடியே என்னைத் தனக்கு அநந்யார்ஹமாக்கி என்னுதல்; என்னைத் தன்னோடொத்த ஜஞாந சக்த்யாதிகளை உடையனாம்படி பண்ணி, “என் நா முதல் வந்து புகுத்து’” (திருவா. 7 – 9 – 3) என்கிறபடியே ஜ்ஞாநாதிகளை உண்டாக்கித் தான் தூரஸ்தனாயிராதே என்னுடைய ஜிஹ்வாக்ரத்திலே வந்து புகுந்திருந்து–தப்புதலின்றித் தனைக் கவி தான் சொல்லி?” (திருவா. 7 – 9 – 4) என்கிறபடியே என்னை உபகரணமாகக் கொண்டு கவி பாடா நிற்கச் செய்தே என்னுடைய ஸ்பர்ஸத்தால் வந்த தோஷம் தட்டாத படி பண்ணி, *’தன்னை வைகுந்தனாகப் புகழ வண் தீங்கவி’‘ (திருவா, 7 – 9- 7) என்கிறபடியே நான் கவி பாடின பின்பு தன்னை ஸ்ரீவைகுண்ட நாதனாகவும் அவ் விபூதியில் ஐஸ்வர்யம் தான் பெற்றானாகவும் நினைத்து, *‘தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன்” (திருவா. 7 – 9 – 2) என்கிறபடியே சொல்லும் தன்னதாய், சொன்னானும் தானாய், சொல்லிற்றும் தன்னையாய், “தன்னைத் தானே துதித்து” (திருவா. 10 – 7- 2) என்கிறபடியே எனக்கு அந்தர்யாமியாய் நின்று தன்னைத் தானே ஸ்துதியா நிற்கச் செய்தேயும்–
என் சொல்லி நிற்பன்?என் இன்னுயிர் இன்று ஒன்றாய்
என் சொல்லால் யான் சொன்ன இன்கவி என்பித்துத்
தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன் என்
முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே.–7-9-2-–மூவுருவாம் முதல்வனே.-அது தானே ஏது போலே என்னில் த்ரி மூர்த்திகள் என்று தன்னையும் கூட எண்ணும் படி ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு அடியானால் போலேயும் -ப்ரஹ்மாவை ஓதுவித்து தேவர்களுக்கு வெளிச்சிறப்பு பண்ணி அத்தை அவன் தலையிலே ஏறிட்டால் போலேயும் -ருத்ரனுக்கு அந்தராத்மாவாய் நின்று திரிபுர தஹனம் பண்ணி அவன் தலையிலே ஏறிட்டால் போலேயும் தானே காரியம் செய்து பிறர் கையிலே ப்ரஸித்தியை ஏறிடுகை பண்டே ஸ்வபாவம் என்கை –
திறத்துக்கே துப்பரவாம் திரு மாலின் சீர்
இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ?
மறப்பிலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னை
உறப்பல இன்கவி சொன்ன உதவிக்கே?–7-9-9—ஏதேனும் ஒன்றிலே புக்கால் அத்தை தலைக் கட்ட வல்ல சாமர்த்தியத்தை யுடையவன் -த்ருணத்தைக் கொண்டு ஒரு கார்யம் கொள்ளப் புக்கால் -அத்தைக் கொண்டே நினைத்த கார்யம் கொள்ளும் சாமர்த்தியத்தை யுடையவன் –திறம் -கூறுபாடு துப்புரவு -சாமர்த்தியம்-திரு மாலின் சீர்-இந்த சாமர்த்யரத்துக்கு அடியாய் இருக்கிறது ஸ்ரீ யபதித்தவம் ஆயிற்று –
இன் கவி பாடும் பரம கவிகளால்
தன் கவி தான் தன்னைப் பாடுவியாது இன்று
நன்கு வந்து என்னுடன் ஆக்கி என்னால் தன்னை
வன் கவி பாடும் என் வைகுந்த நாதனே.–7-9-6—தன்னை கவி பாடுவித்துக் கொள்ள நினைத்தால்-பராசர வ்யாஸ வால்மீகிகள் ஆதல் -செந்தமிழ் பாடுவார் என்னும் முதல் ஆழ்வார்கள் ஆதல் அன்றோ பாத்ர பூதர் -அவர்களை ஒழிய –தன் கவி தான் தன்னைப் பாடுவியாது-கவியும் தன்னது –கர்த்தாவும் தான் -விஷயமும் தான் –
சீர் கண்டு கொண்டு திருந்து நல் இன் கவி
நேர்பட யான் சொல்லும் நீர்மை இலாமையில்
ஏர்வுஇலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைப்
பார் பரவு இன் கவி பாடும் பரமரே.–7-9-5-நான் கவி பாடுகைக்கு அடியான ஞானாதி குணங்கள் இன்றிக்கே இருக்கச் செய் தேயும் ஏர்வுஇலா என்னைத்-சைதன்ய ப்ரயுக்தமான இச்சையும் இன்றிக்கே இருக்கிற என்னை தன் ஆக்கி என்னால் தன்னைப்-தனக்கு உண்டான ஞானாதிகளை எனக்கு உண்டாக்கி -என்னைக் கொண்டு அபரிச்சின்னனான தன்னை -என்னை தன்னாக்கி -தனக்கு அநந்யார்ஹம் என்னும் இடத்தை அறிவித்து என்றுமாம்-
என்றைக்கும் என்னை உய்யக்கொண்டு போகிய
அன்றைக்கு அன்று என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
இன் தமிழ் பாடிய ஈசனை ஆதியாய்
நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ?–7-9-1-கவி பாடுகைக்கு அனுரூபமான ஞான சக்தி யாதிகள் இல்லாத என்னை -தன்னோபாதி ஞான சக்தி யாதிகளை யுடையேனாம் படி பண்ணி -என்னுதல் -என்னைத் தன்னாக்கி-தனக்கு ஆளாம் படி பண்ணி என்னுதல் –
ஆ முதல்வன் இவன் என்று தன் தேற்றி என்
நா முதல் வத்து புகுந்து நல் இன்கவி
தூமுதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்
வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ!–7-9-3–ஸ்ரீ வால்மீகி பகவான் கவி பாடிற்று ஈஸ்வரன் திரு உள்ளம் அடியாக ப்ரஹ்மா சரஸ்வதியை அவன் நாவிலே ஏவி இ றே -அங்கனம் இடையீடு இன்றிக்கே தானே என்னுடைய வாக் பிரவ்ருத்திக்கு முதலாய் வந்து புகுந்து என்னுதல் –முந்துற நாவில் வந்து புகுந்து என்னுதல் –
அப்பனை என்று மறப்பன் என் ஆகியே
தப்புதல் இன்றித் தனைக் கவி தான் சொல்லி
ஒப்பிலாத் தீ வினையேனை உயக்கொண்டு
செப்பமே செய்து திரிகின்ற சீர்கண்டே.–7-9-4—என்னோட்டை சம்சர்க்கத்தால் வந்த தோஷம் தட்டாமே -நானே கவி பாடினேன் ஆகில் நிரவத்யமாம்-இது இ றே அரிது-தனைக் கவி தான் சொல்லி-தனக்கு சத்ருசமாக தான் சொல்லி
வைகுந்த நாதன் என் வல்வினை மாய்ந்து அறச்
செய்குந்தன் தன்னை என்னாக்கி என்னால் தன்னை
வைகுந்தனாகப் புகழ் வண் தீங்கவி
செய்குந்தன் தன்னை எந்நாள் சிந்தித்து ஆர்வனோ?–7-9-7—நான் புகழ்ந்தால் தான் ஸ்ரீ வைகுண்ட நாதன் ஆவானாய் இறா நின்றான் -அது தான் முன்பே நித்தியமாய் இருக்க -என் கவி பாட்டாலே இப்போது பெற்றானாய் இருக்கை -தமப்பன் கொடுத்து அது தன்னையே மகன் கொடுக்க அன்று பெற்றானாய் இரா நின்றான் இறே -ஆத்மா நித்தியமாய் இருக்கச் செய்தே அசன்னேவா என்றும் சந்தமேனம்-என்றும் சொல்லுகிறது-
என் சொல்லி நிற்பன்?என் இன்னுயிர் இன்று ஒன்றாய்
என் சொல்லால் யான் சொன்ன இன்கவி என்பித்துத்
தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன் என்
முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே.–7-9-2-சொல்லும் தன்னது -சொன்னானும் தானே -சொல்லிற்றும் தன்னை –கவி பாட்டுண்டேன் ஆகில் கிடீர் கவி பாடினேன் ஆவது -தான் தன்னைக் கவி பாடினான் ஆகில் உம்முடைய கவி என்று நாட்டிலே பிரசித்தம் ஆக்கின படி எங்கனே என்னில்
மாயன் -இது இ றே அவனுடைய ஆச்சர்ய சக்தி இருக்கும் படி -நீர் இதில் அந்வயித்த படி என் என்ன -என்னை உபகரணமாக கொண்டு தானே கவி பாடினான்
வலக்கை ஆழி இடக்கை சங்கம் இவை உடைய மால் வண்ணனை மலக்கு நாவுடையேற்கு –திருவாய்-6-4-9-என்று ஒன்றுக்கும் விக்ருதன் ஆகாத ,சர்வாதிகனை என் உக்தி மாத்ரத்தாலே விக்ருதனாம் படி
பண்ண வல்ல நா வீறுடைய எனக்கு என்றும் – நாவியலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்–திருவாய்-4-5-4–என்று நெஞ்சு ஒழிய வாக் பிரவர்த்தி மாத்ரத்தாலே ,இசை மாலைகளைக் கொண்டு ஸ்துதிக்க கிட்டப் பெற்றேன் என்றும் –மொய்ய சொல்லால் இசை மாலைகள் , ஏத்தி உள்ளப் பெற்றேன்–திருவாய்-4-5-2–என்று செறிந்த சொல்லாலே உண்டாய் ,இசையோடு கூடி இருந்துள்ள தொடைகளால் ஏத்தி அனுசந்திக்கப் பெற்றேன் என்றும் வானக் கோனை கவி சொல்ல வல்லேற்க்கு–திருவாய்-4-5-9-என்று- ஸ்ரீ வைகுண்ட நாதனை கவி சொல்ல வல்ல எனக்கு என்றும்-நான் பாடினேனாக நினைத்து நானும் சொல்ல –-சடகோபன் சொல் -திருவாய்-2-2-11–என்றவாறே நான் இத்தை பாடினேனாக நினைத்து நாடும் அஞ்சலி பண்ணும் படி –என் சொல்லால் யான் சொன்ன இன் கவி என்பித்து –திருவாய்-7-9-2–என்ற படி என்னுடைய வசன வ்யக்தியாலே ,நான் கர்த்தாவாக சொன்ன இனிய கவி என்று நாட்டிலே பிரசித்தம் ஆக்கினான் என்று அருளிச் செயதார் இறே என்கை ..
ஆகையால் இவர் சர்வேஸ்வரன் அருள் அடியாகவே பாடினதாய் நிச்சிதம் என்று கருத்து .
மலக்கு நா வுடையேற்கு”’ (திருவா. 6 – 4- 9) என்றும்,“நாவியலாலிசை மாலைகளேத்தி”’ (திருவா. 4 – 5 – 4) என்றும், ‘மொய்ய சொல்லாலிசை மாலைகளேத்தி”” (திருவா. 4 – 5 2) எனறும், ‘‘வானக் கோனைக் கவி சொல்ல வல்லேற்கு”” (திருவா. 4 – 5 – 9) என்றும் இப்படி நானும் சொல்லி, *’சடகோபன் சொல்”” என்றவாறே நாடும் அஞ்ஜலி பண்ணும் படி பண்ணி, *“என்சொல்லால் யான் சொன்ன இன் கவி என்பித்து”’ (திருவா. 7- 9- 2) என்று – சொல் என்னதாகவும், சொன்னேன் நானாகவும், அது தான் எனக்கு இனிதாகவும் சொல்லுவித்தான் என்கிறாரிறே. ஆகையால் இவருடைய உக்திகளால் ஸர்வேஸ்வரனருளாலே திருவாய்மொழி பாடினார் என்னுமிடம் ஸித்தம் –
கலக்க ஏழ்கடல் ஏழ்மலை உலகேழும் கழியக் கடாய்
உலக்கத் தேர்கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும்பல
வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவை யுடை மால்வண்ணனை
மலக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம்மண்ணின் மிசையே?–6-4-9--தாமஸ பரமோ தாதா சங்க சக்ர கதா தரா-என்று சர்வாதிக வஸ்துவுக்கு லக்ஷணம் ஆயிற்று திவ்யாயுதங்கள் -வலக்கையில் திரு வாழி யையும் -இடக்கையில் ஸ்ரீ பாஞ்ச ஜன்யமும் -இவற்றை யுடையனுமாய் -கறுத்த நிறத்தை யுடையவனை
மால் வண்ணனை என்ன அமைந்து இருக்க திவ்யாயுதங்களை சொல்லுவான் என் என்று கஞ்சனூர் வண் துவரைப் பெருமாள் பட்டரை கேட்க -அவிக்ருத வஸ்துவுக்கு லக்ஷணம் இ றே திவ்யாயுதங்கள் என்றார்-மலக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம்மண்ணின் மிசையே?– அவாக்ய அ நாதரா என்கிற சர்வாதிக வஸ்துவை விக்ருதமாக்கும் நா வீறுடைய எனக்கு சோழேந்திர சிம்ஹனை உளுக்காகப் பண்ண வல்ல நாவைப் படைத்த எனக்கு -பூமியில் எதிர் உண்டோ-ஈஸ்வரன் உளுக்கு ஆகும் படி கவி சொல்ல வல்லார் தம்மை ஒழிய சிலைவர் இல்லாமையால் வேறு என்னோடு ஒப்பார் இல்லை என்கிறார்-
மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்
தூவி அம் புள்ளுடையான் அடல் ஆழி அம்மான் தன்னை
நாவியலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்;
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே.–4-5-4-நெஞ்சின் வருத்தம் இன்றிக்கே வாக் ப்ரவ்ருத்தி மாத்ரமான திருவாய்மொழி யைக் கொண்டு நா புரட்டின இடம் எங்கும் கவியாய்க் கிடக்கை
ஏத்தி நண்ணப் பெற்றேன்;-இவர் நண்ணி ஏத்தினவர் அல்லர் -ஏத்திக் கொண்டு பண்ணுகிறார்-
மைய கண்ணாள் மலர்மேல் உறை வாள் உறை மார்பினன்
செய்ய கோலத்தடங் கண்ணன் விண்ணோர் பெருமான் தனை
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேன்
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே.–4-5-2—மொய் என்று வலி யாதல் -பெருமை யாதல்
வலி யான போது-சிதிலமாய் இராதே சொல் செறிந்து கட்டுடைத்தாய் இருக்கை–பெருமையான போது இவ்விஷயத்தை விளாக் குலை கொள்ளவற்றாய் இருக்கை –யதோ வாசோ நிவர்த்தந்தே-என்று மீளாதே இவ்விஷயத்துக்கு நேரே வாசகமாய் இருக்கை –இசை மாலைகள் – பரிமள பிரசுரமான பூ மாலைகள் போலே கேட்டார் நெஞ்சு பிணிப்புண்ணும் படி இசை விஞ்சி இருக்கை – அவனும் அவளும் நித்ய ஸூ ரிகளுமாய் இருந்து கேட்டுக் கொண்டாட பிறந்த பிரபந்தம் இறே-ஸ்ரீ ராமாயணத்தில் காட்டில் இப்பிரபந்தத்துக்கு ஏற்றம் -பகவத் ஹ்ருதயத்தை பின் சென்ற ப்ரஹ்மா அடியாக நாரதாதிகள் முன்னிலையாக பிறந்த பிரபந்தம் அன்றிக்கே-கேட்டாரார் வானவர்கள் – தென்னா வென்னும் என் அம்மான் -என்கிறபடி தானும் நித்ய ஸூரிகளும் கேட்டுக் கொண்டாடும் படி இருக்கை –-ஏத்தி உள்ளப் பெற்றேன்–மன பூர்வோ வாக் உத்தர -என்கிற நாட்டார் படியும் அன்று –இவர் படி-ஏத்தி பின்னை யாயிற்று நினைத்தது-கவி பாடுகைக்கு நினைவு அத்தலையில் யானாலும் பேறு தம்மதாய் இருக்கிற படி-சாஸ்திர பலம் ப்ரயோத்த்ரி என்கிற இடம் அன்றியிலே இருக்கிற படி-முடியானே -யிலே விடாய்த்த போது தனித்தனியே கரணங்கள் விடாய்த்தால் போலே இங்கு தனித் தனியே யாயிற்று அனுபவிக்கிறது–ஈஸ்வரன் நினைவாலே பாடுகிற கவி யாகையாலே தாமும் கரணங்களோ பாதி அந்வயித்தார்–
வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த்
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான் தனை,
கூனற் சங்கத் தடக்கை யவனை, குடமாடியை,
வானக் கோனைக் கவிசொல்ல வல்லேற்கு இனி மாறுஉண்டோ?–4-5-9-இப்படிப் பட்டவனை கவி சொல்ல வல்லேனுக்கு -அகல் வானம் என்று விசேஷிக்க வேணுமோ -உபய விபூதியிலும் எதிரில்லை-
ஏத்த வேழுலகும் கொண்ட கோலக்
கூத்தனை குருகூர்ச் சடகோபன் சொல்
வாய்ந்த வாயிரத்துள் இவை பத்துடன்
ஏத்த வல்லார்க்கு இல்லையோ ரூனமே –2-2-11-வேதத்தில் காட்டில் ஆழ்வார் அடியாகப் பிறந்த ஆபி ஜாத்யம்-ஆப்திக்கு இன்னார் கூறியது என்ன வேண்டுதலின், ‘குருகூர்ச் சடகோபன்’ என்கிறார்.
இதனால், (த்ரீணீ பதா விசக்ரமே )வேதாந்தத்தைக் காட்டிலும் ஆழ்வாரிடத்தில் பிறந்த திருவாய்மொழிக்குள்ள ஆபி ஜாத்யம் — உயர்குடிப் பிறப்பின் சிறப்பினைக் கூறியபடி
என் சொல்லி நிற்பன்?என் இன்னுயிர் இன்று ஒன்றாய்
என் சொல்லால் யான் சொன்ன இன்கவி என்பித்துத்
தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன் என்
முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே.–7-9-2-சொல்லும் என்னதாய் -சொன்னேனும் நானேயாய் -அது தான் இனிய கவியாம் படி நாட்டிலே பிரசித்தம் ஆக்கினான் –என்பித்து-பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் -என்கிறபடியே லோக பிரசித்தம் ஆக்கி –தான் வென்று அர்ஜுனனை நாட்டார் உடன் ஓக்க புகழுமா போலே -அது தான் அப்படி அன்றோ என்னில் – தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த -சொல்லும் தன்னது -சொன்னானும் தானே -சொல்லிற்றும் தன்னை –கவி பாட்டுண்டேன் ஆகில் கிடீர் கவி பாடினேன் ஆவது -தான் தன்னைக் கவி பாடினான் ஆகில் உம்முடைய கவி என்று நாட்டிலே பிரசித்தம் ஆக்கின படி எங்கனே என்னில்-மாயன் -இது இ றே அவனுடைய ஆச்சர்ய சக்தி இருக்கும் படி -நீர் இதில் அந்வயித்த படி என் என்ன -என்னை உபகரணமாக கொண்டு தானே கவி பாடினான் -உபகரணமான படி தான் என் என்ன-என்-முன் சொல்லும்-அவன் முன்னே சந்தை இட பின்னே சொன்னேன் –தானே சொன்னான் ஆகில் ஸ்ரீ கீதை போலே வறமுறுகலாம் இறே –
—
இப்படி இப் பிரபந்தங்களுக்கு மூல வைலஷண்யத்தால் வந்த ஏற்றம் உண்டு என்று அறிவித்த அளவும் அன்றிக்கே, வக்த்ரு வைலஷண்யத்தால் ,வந்த ஏற்றமும் உண்டு ,என்று அறிவிக்கைகாக ருஷிகளில் காட்டில் ஆழ்வாருக்கு உண்டான வ்யாவ்ருத்தியை அருளிச் செய்கிறார் ..(ஆழ்வார் ஏற்றம் ஐந்து சூரணைகளில்-பிரேமம் -வைராக்யம் -தாரக போஷாக போக்யங்களில் வேறுபாடு பல சாதன தேவதாந்தர-இவற்றைச் சொல்லும்) இதுக்குக் கீழ் ப்ரபந்த, மூல வைலக்ஷண்யம் சொல்லிற்று. இனி மேல் வக்த்ரு வைலக்ஷண்யம் சொல்லுகிறது-
தர்ம வீர்ய ஞானத்தாலே தெளிந்து ஹ்ருஷ்டராய் மேலே மேலே தொடுப்பாரைப் போல் அன்றி
அருளின பக்தியாலே உள் கலங்கி சோகித்து மூவாறு மாசம் மோஹித்து வருந்தி ஏங்கி தாழ்ந்த சொற்களாலே நூற்கிற இவர்-சூரணை -58-(பக்தியாலே உள் கலங்கி-தாழ்ந்த சொற்களாலே நூற்கிற இவர்-ஞானத்தாலே மேலே மேலே தொடுப்பாரைப் போல் அன்றே -)
அதாவது
ஹஷிதம் பாஷிதம் சைவ கதிர்யா யச்ச சேஷ்டிதம் தத் சர்வம் தர்ம வீர்யேண யதாவத் சம்பிரபச்யதி—ஸ்ரீ பாலகாண்டம் –3-4-(ஸ்ரீ ராமபிரானுடைய புன்முறுவல் வார்த்தைகள் என்னும் இவற்றையும் -சஞ்சாரத்தையும் -செயல்களையும் மற்றும் எல்லாவற்றையும் பிரமனுடைய வரபலத்தால் உள்ளபடியே நன்கு அறிகின்றார் )என்கிற படியே தாம் தாம் அனுஷ்டித்த தபோ ரூபமான தர்மத்தின் உடைய சக்தியாலே ஜனித்த ஞானத்தாலே –கண்டும் தெளிந்தும் கற்றார் கண்ணற்க்கு ஆள் அன்றி ஆவரோ –திருவாய் -7-5–7-என்கிற படியே ஜ்ஞாதவ்யங்களை தெளிய அறிந்து , அது தான் –ந போதாத் அபரம் சுகம்-(ஞானத்தை தவிர வேறு இன்பம் இல்லை )என்னும் படி இருக்கையாலே ,ஹர்ஷ யுக்தராய் ,அந்த தெளிவும் ஹர்ஷமும் அடியாக உத்தரோத்தரம் சப்தங்களை தொடுக்கும் ருஷிகளை போல் அன்றியே–தர்ம வீர்யத்தாலே வந்ததுக்கும் -அது தான் ஞான மாத்ரத்துக்கும் -எதிர் தட்டாம் படி-மயர்வற மதி நலம் அருளினன்–திருவாய் -1-1-1–என்கிற படியே , நிர்ஹேதுக பகவத் பிரசாதத்தாலே வந்ததாய் ஞான விபாக ரூபையான பக்தியாலே தெளிவுக்கும் ஹர்ஷத்துக்கும் எதிர் தட்டாம் படி-மதி எல்லாம் உள் கலங்கி–திருவாய் -1-4-3-என்கிற படி விரஹவ்யதையாலே ஞானம் எல்லாம் அடி மண்டியோடே கலங்கி ,
யதா மனோரதம் பகவத் அனுபவம் பெறாமையாலே-ஆடியாடி அகம் கரைந்து-2-4-பதிகங்கள் படியே சோகித்து —மூவாறு மாசம் மோகித்து—மேலே தொடுக்கும் அதுக்கு எதிர் தட்டாம் படி –-எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே –திருவாய் -1-3-1- என்றும்-பிறந்த வாறும் வளர்ந்தவாறும் –5-10-1-திருவாய் — என்றும் –-கண்கள் சிவந்து பெரியவாய் –திருவாய் -8-6-1-என்றும்
சர்வாதிகனாய் ,அவாப்த சமஸ்த காமனாய் இருக்க செய்தே , ஷூத்ரராய் ,சபலராய் இருப்பாரைப் போலே -அவன் செய்த நவநீத சௌர்ய வ்ருத்தாந்தையும் –-அகர்ம வச்யனாய் இருக்க செய்தேயும் -கர்ம வச்யரை போலே பிறந்த படியையும்-மாயக் கூத்தனில் தான் கண்ணும் வாயும் துவர்ந்தால் போல் தம்மை பிறிகையாலே ,அவன் கண்ணும் வாயும் துவர்ந்து ,தம்மோடு கலந்த பின்பு அவை தன்னிறம் பெற்ற படியும் அனுசந்தித்து -ஈது என்ன பிரகாரம் -ஈது என்ன பிரகாரம்- என்று ஓர் ஒன்றில் அவ்வாறு மாசமாக மூவாறு மாசம் மோஹித்து — வருந்தி நான் வாசக மாலை கொண்டு–திருவாய் -3-8-10-என்கிற படியே ஒரு சொல் எடுக்கும் பொது ஒரு மலை எடுக்குமா போலே வருத்தப் பட்டு —என்று என்று ஏங்கி அழுதக்கால்–திருவாய் -8-5-3-என்கிற படியே அனுபவ அலாப க்லேசத்தால் அவன் படிகளை பல காலும் சொல்லி பொருமி பொருமி அழுது–அங்கே தாழ்ந்த சொற்களால்—திருவாய் -8-5-11-என்கிற படியே -எங்கே காண்கேன்-என்ற மன சைதில்யத்தாலே கத்கத ஸ்வரமான சப்தங்களால் –வண் தமிழ் நூற்க நோற்றேன் –திருவாய் -4-5-10-என்ற இப் பிரபந்தத்தை நூற்கிறவர் இவர் என்கை .
“ஹஸிதம் பாஷிதஞ்சைவ கதிர்யா யச்ச சேஷ்டிதம் | தத் ஸர்வம் தர்ம வீர்யேண யதாவத் ஸம் ப்ரபஸ்யதி?” (ரா. பாடி – 4) என்கிறபடியே தந்தாமுடைய தபோ பலத்தாலே லப்தமான ஜ்ஞாநத்தாலே “கண்டும் தெளிந்தும்’” (திருவா. 7- 5- 7) என்கிறபடியே கண்டு தெளிந்து ஹ்ருஷ்டராய், மேலே மேலே ஸப்தங்களைத் தொடுக்கும் ருஷிகளைப் போலன்றே அருளின ப,க்தி ரூபமான ஜ்ஞாநமெல்லாம் அடி மண்டியோடே கலங்கி யதா மநோரதம் பகவதநுபவம் பண்ணப் பெறாமையாலே ஸோகித்து, “’தாம்நா சைவோதரே பத்த்வா ப்ரத்யபத் நாதுலூகலே யதி ஸக்நோஷி கச்ச த்வம் அதி சஞ்சல சேஷ்டித” என்றும், “‘உரலினோடிணைந் திருந்தேங்கிய எளிவு எத்திறம்’” (திருவா, 1 – 3 1) என்றும், “போனாய் மா மருதின் நடுவே ” (திருவா. 5 – 1 – 2) என்றும், ““பிறந்தவாறும் வளர்ந்தவாறும்”’ (திருவா. 8 – 10 – 1) என்றும், “ஸர்வஜ்ஞனாய் ஸர்வ ஸக்தியா யிருக்கச் செய்தே இப்படி ஓரபலை கையாலே கட்டுண்பதே! இதென்ன ஆஸ்ரித வ்யாமோஹந்தான்!’ என்கிற ஆஸ்ரித வ்யாமோஹாநுஸந்தாநமும், இவர் பக்தி பாரவஸ்யத்தாலே கலங்கி ஸர்வஜ்ஞத்வாதிகளை மறந்து விரோதம் பண்ணுவதாக நின்ற இரண்டு மருதுக்கும் நடுவே தவழ்ந்து சென்றதை அநுஸந்தித்து, உலகங்கட்கெல்லாம் ஒருயிரான வஸ்துவுக்கு ஒரு தீங்குவரில் செய்வதென்?” என்கிற ப்ரேமாதிஸயமும், ‘ஜநந ஹேதுவான கர்ம ஸ்பர்ஸ மில்லாத வஸ்து “’ததஸ் ச த்வாதஸே மாஸே”? (ரா.படா. 10 – 8) என்கிறபடியே பன்னிரண்டு மாஸம் கர்ப்பவாஸம் பண்ணி ஸத்ரு க்ருஹத்திலே இருளிலே வந்து அவதரிப்பதே!” என்றும், ஓரொன்றில் மூவாறு மாஸம் மோஹித்து, ““வருந்தி நன் வாசக மாலை கொண்டு” (திருவா. 3 – 8 – 10) என்கிற படியே ஒரு சொல் எடுக்கும் போது ஒரு மலை எடுத்தாப் போலே வருந்தி, (ஏங்கி) “என்றென்றேங்கி அழுதக்கால்”” (திருவா. 8 – 5 – 3) என்கிறபடியே அவன் திருநாமங்களைச் சொல்லப் புக்கு பல ஹாநியாலே நடுவு நடுவே ஏங்குவது இளைப்பதாய். (தாழ்ந்த) “அங்கே தாழ்ந்த சொற்களால்”” (திருவா. 8 – 5 – 11) என்கிறபடியே சொல்லப் புக்குச் சொல்ல மாட்டாதே தரைப்பட்டு கத்கத ஸ்வரத்தோடே ““வண்டமிழ் நோற்க நோற்றேன்”” (திருவா. 4 – 5 – 10) என்று நூற்கிற விவர் என்கிறார்
கண்டு தெளிந்தும் கற்றார் கண்ணற்கு ஆளன்றி ஆவரோ?
வண்டுண் மலர்த் தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழுநாள்
இண்டைச் சடைமுடி ஈசன் உடன்கொண்டு உசாச் செல்லக்
கொண்டங்குத் தன்னொடுங் கொண்டு உடன் சென்றது உணர்ந்துமே.–7-5-7–பிரிய ஹிதங்களை ஸ்ரவணம் பண்ணி -தங்களிலே அத்யவசித்து -அத்தை சாஷாத் கரித்தவர்கள்–சர்வ ஸூலபனுக்கு அன்றி ஆளாவாரோ -ஐஸ்வர்யார்த்திக்கு ஐஸ்வர்ய விசிஷ்டானாயும் -கேவலனுக்கு சுத்தி குண உக்தனாயும் -பகவத் சரணார்த்திக்கு ஸமஸ்த கல்யாண குண விசிஷ்டானாயும் -இப்படியால் சர்வ ஸூலபன் ஆனவனுக்கு –ஒருவன் பக்கலிலே ஓர் அர்த்தத்தைக் கேட்டு, அதிலே தெளிய வாசனை பண்ணி. பின்பு நேரே அறிதல் பரியந்தமாக்கி வைப்பார்.-கேட்டல் தெளிதல்கள் தாம், நேரே பார்ப்பதற்குச் சமானமான ஆகாரத்தளவும் சென்று நிற்கும் அன்றோ? (த்ரஷ்டவ்ய -ஸ்ருதி போல் ஆழ்வார் இங்கும் கண்டும் என்கிறார் ஸ்ரவணம் மனனம் நிதித்யாசிதவ்யம் சாஷாத்காரம் அளவு கூட்டிப்போகுமே )-
விதியினால் பெடை மணக்கும் மென்னடைய அன்னங்காள்
மதியினால் குறள் மாணாய் வுலகிரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல்வினையே மாளாதோ வென்று ஒருத்தி
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே –1-4-3-நீர் கொடுத்த மயர்வறு மதி நலம் எல்லாம் அடி மண்டியோடே கலங்கிற்று என்று சொல்லுங்கோள் –மயங்குமால் –இப்போது அறிவு போயிற்று ஆகில் பின்பு அறிவு உண்டாகிறது என்று இராமே முடியும் தசை யாயிற்று என்னுங்கோள்
எம்பெருமானோடே புணர்ந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி -க்ஷண மாத்திரை விஸ்லேஷத்தாலே -அறத் தளர்ந்து -ஆர்த்தியாலே கிடந்த இடத்தே கிடவாதே மோகமும் உணர்ச்சியுமாய் மாறி மாறிச் சென்று கண்டார்க்கு எல்லாம்தயை நீயை யான தசையை பிராப்த்தையாய்-நோவு படுகிற இவளைக் கண்ட திருத் தாயார் -அவன் திரு முன்பே பொகட்டு ராம கிருஷ்ணாதி ரூபேண வந்து திருவவதாரம் பண்ணி ஆர்ஜித்த நீர்மைகளை எல்லாம் இவளுடைய அவசாதத்தை போக்காமையாலே இழக்கப் புகா நின்றீர் என்று கூப்பிடுகிறாள்-அஞ்சிறைய மட நாரையிலும் வாயும் திரையுகளிலும் காட்டில் இதில் ஆற்றாமை விஞ்சி இருக்கும் காசை இழந்தவனுக்கும் பொன்னை இழந்தவனுக்கும் மாணிக்கத்தை இழந்தவனுக்கும் இழவு ஒத்து இராது இறே -இங்கு தம் தசை தாம் பேச மாட்டார் –2-4-ஆடியாடி -பிரவேசம் –
பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே –1-3-1-மார்வினிடையிலே கட்டுண்டு –உரத்த ஏறு போலச் செருக்கன் -என்றுமாம் –எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே – உரலோடு ஒக்கச் சலியாதே இருந்து -அச்சத்தாலே ஏங்கின -குரல் இரங்க மாட்டாத – எளிமை என்னபடியாய் இருக்கிறது –எளிவு -எளிமை –
போனாய் மாமருதின் நடுவே! என் பொல்லா மணியே!
தேனே! இன்னமுதே! என்றேன்றே சில கூத்துச் சொல்லத்
தானேல் எம்பெருமான் அவன் என்னாகி ஒழிந்தான்
வானே மாநிலமே மற்றும் முற்றும் என்னுள்ளனவே.–5-1-2-போனாய் -யாமலார்ஜுனங்கள் நடுவே போன போது யசோதை பிராட்டி ப்ரேமத்தாலே சொன்ன வார்த்தையை -ப்ரேம கந்தம் இன்றிக்கே இருக்கிற நான் சொன்னேன் –போனாய் -கை கழிந்தது -இனி பிரதிகிரியை இல்லை -பல அனுபவமே என்று இருக்கிறார் -பூத காலமாய் இருக்க இவருக்கு வர்த்தமான காலம் போலே இருக்கிறது –ஈஸ்வரன் கொடுத்த ஞான வைஸத்யம் இவருக்கு வயிறு எரிச்சலுக்கு உறுப்பாயிற்று -நலிய வந்தவை தான் நலிய பற்றாமை தானே சென்று புக்கான் என்கிறார்-மா மருது-மஹா அசுரர்கள் வடிவுக்குத் தகுதியாக ஆவிர்பவித்த மருதுகள்-இவன் மௌக்யத்தை அறிந்து பணைத்தவை என்றுமாம் -அவ்வருகே சாய்ந்தவை இப்பெரிய வடிவோடே உள்ளே சாய்ந்தனவாகில்-என்னாவக் கடவது என்கிறார் –
நடுவே போனாய் -இருவரும் க்ருத சங்கேதர்களாய் இருக்க -ஒன்றிலே துளை கண்டு போனாய் போலே யாயிற்று போனது- புணர் மருதம் இறே – மௌக்யத்தாலே ஓர் அருகு ஒதுங்க அறியானே -யாமளார்ஜ்ஜுன யோர் மத்யே ஜகாம என்று ருஷி வயிறு பிடிக்கிறான் -இவர் மா மருதுவின் நடுவே போனாய் என்கிறார்
5-10-பிறந்த வாறும் வளர்ந்த வாறும்-ப்ரவேஸம்-திரு வல்ல வாழிலே புக வேணும் பரிமாற வேணும் என்று மநோ ரதித்து-அப்படிப் பெறாதே மிகவும் அவசன்னராய் -நின்றார் கீழே-இத் திருவாய் மொழியில் அவனுடைய குண சேஷ்டிதாதிகளை அனுசந்திக்கப் புக்கு சிதிலரானவர் –இச் ஸைதில்யத்தை போக்கி அருளி தரித்து நின்று அனுபவிக்க வல்லேனாம் படி பண்ணி அருள வேணும் என்று சரணம் புகுகிறார்–-8-8-கண்கள் சிவந்து -ப்ரவேஸம்-மாயாக் கூத்தனில் விடாய் தீர இருத்தும் வியந்திலே இப்படி -எவ்வாய்ச் சுடரும் தம்மில் முன் வளவாய்க் கொள்ள -என்கிறபடியே –
நிரவதிக ப்ரீதியோடே சம்ச்லேஷிக்க பெற்றானாய் -இவர் விடாயும் தீர்ந்து -தன் விடாயும் தீர்ந்து -தம்மிலும் அதிக ப்ரீதனானவன் –
பொருந்திய மாமருதின்னிடை போய எம் பொருந் தகாய்! உன் கழல் காணிய பேதுற்று
வருந்தி நான் வாசக மாலை கொண்டு உன்னையே இருந்திருந்து எத்தனை காலம் புலம்புவனே?–3-8-10-ஆசைப்பட்ட விஷய அநு குணமாய் இறே நோவு பாடும் இருப்பது –ஒரு சொல் தொடை எடுக்கையாகிறது ஒரு மலையை எடுத்தால் போலே இருக்கிறது-நான் விரஹம் பொறுக்க மாட்டாத மேன்மையை உடைய நான்-வாசக மாலை கொண்டு உன் குணத்துக்கு வாசகமான சொல் தொடையைக் கொண்டு-உன்னையே இருந்திருந்து-யதோ வாசோ நிவர்த்தந்தே-என்னும்படியான உன்னையே ஒரு வார்த்தை தலைக் கட்டுகைக்கு நடுவே பல படி இளைப்பாற வேண்டி இருக்கை
எத்தனை காலம் புலம்புவனே?–-இதுக்கு முடிவு என்று -என்கிறார் -சாதனா புத்தியா சொல்ல மாட்டார் -ப்ராப்யபுத்தியாலே தவிர மாட்டார்-
முடி சேர் சென்னி யம்மா நின் மொய் பூந்தாமத் தண் துழாய்
கடி சேர் கண்ணிப் பெருமானே என்று என்றே ஏங்கி அழுதக்கால்
படிசேர் மகரக் குழைகளும் பவளவாயும் நால் தோளும்
துடி சேரிடையும் அமைந்ததோர் தூ நீர் முகில் போல் தோன்றாயே–8-5-3-என்று என்றே-ஒரு கால் சொல்லி யாறி இருந்தேனாய் தான் தாழ்கிறாயோ-ஏங்கி அழுதக்கால்-பொருமி அழுதக்கால் -என்னுடைய அழுகை குரலில் தளர்த்தியை கேட்டால் சடக்கென வந்து கொடு நிற்க வேண்டாவோ –
எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்று என்று
அங்கே தாழ்ந்த சொற்களால் அந்தண் குருகூர்ச் சடகோபன்
செங்கேழ் சொன்ன வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
இங்கே காண விப் பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே-8-5-11–நிரந்தரமாக சொல்லி -ஒரு கால் சொல்லி -ஆசையை ஆவிஷ்கரித்தோம் இ றே -என்று ஆறி இருக்கிறார் அல்லரே -லாபத்தளவும் சொல்லும் அத்தனை இறே-அங்கே தாழ்ந்த சொற்களால்-தோளும் தோள் மாலையிலும் அந்த சேஷித்வத்திலும் பிரவணமான சொற்களாலே-அந்தண் குருகூர்ச் சடகோபன்-உபதிஷ்டந்து மாம் சர்வே என்னுமா போலே இவ்வாற்றமைக்கு எல்லாம் இடம் கொடுத்த ஆழ்வார் என்று ஆளவந்தார் நிர்வாஹம்
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.–4-5-10-––விலக்ஷணமாய் சர்வாதிகாரமான திராவிட பிரபந்தத்தை நிர்மிகைக்கு- அவனுடைய அங்கீ காரமாகிற புண்யத்தைப் பண்ணினேன்-அவனுக்கு அடியாராக பாகவதருக்கு இப்பிரபந்தம் ஆனந்த வர்ஷியான மேகமாய் இறே இருக்கிறது –
—
இப்படி பகவத் பிரேமத்தாலே ருஷிகளில் வ்யாவ்ருத்தரான அளவின்றிக்கே , இதர விஷய வைராக்யத்தாலும் ,அவர்களில் இவர் வ்யாவ்ருத்தர் என்கிறார் .-இனி மேல் இந்த ருஷிகளிற் காட்டில் இவர்க்கு ஸம்ஸாரத்தில் நசை யறுகையாலுண்டான வைலக்ஷண்யம் சொல்லுகிறது-
ஸ்வாத்யாய யோகங்களைக் கற்றும் தெளிந்தும் கண்டமை மைப்பாலே ஓதி உணர்ந்தவர்
இன்னும் ஆசாபாச பத்தர்-அவன் வழங்கும் திவ்ய சஷுஸ்ஸாலே நேரே கார் செறிந்த நீறாடி
கட்கரிய அரும் பொருளை கண்ட போதே யாமுறாமை என்னும் படி இவர்க்கு வன் பாசங்கள் நீங்கிற்று -சூரணை -59-..
(ஸ்வாத்யாயம் -வேதம் – ஓதி உணர்ந்தவர் கண்டமை மைப்பாலே –கண்ட காட்சியில் கலக்கத்தாலே -மயக்கத்தால் –( வானமே நோக்கும் மையாக்கும் –திருவாய் -7-2-3- )இன்னும் ஆசாபாச பத்தர்-
அவன் வழங்கும் திவ்ய சஷுஸ்ஸாலே நேரே கண்ட போதே இவர்க்கு வன் பாசங்கள் நீங்கிற்று .)-அதாவது-
ஸ்வாத்யாயாத் யோகமாசீத யோகாத் ஸ்வாத்யாய மாமேநேத் , ஸ்வாத்யாய யோக சம்பத்யா பரமாத்மா பிரகாசதே , ததீஷணாய ஸ்வாத்யாயஸ் சஷூர் யோகஸ் ததா பரம் , ந மாம்ச சஷுஷா த்ரஷ்டும் ப்ரஹ்ம பூதஸ் ச சக்யதே –-ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-6-2-3- என்கிறபடியே ,( வேதத்தாலே பொருளை அறிந்து அஷ்டாங்க யோகத்தை அடையக் கடவன் -யோகத்தால் மீண்டும் வேதத்தை சொல்லக் கடவன்
வேதம் யோகம் இவ்விரண்டின் நிறைவினால் பரம்பொருள் பிரகாசிக்கின்றன -அந்தப் பரம் பொருளைப் பார்ப்பதற்கு வேதம் ஒரு கண் அப்படியே யோகம் சிறந்த கண் -பரம்பொருளாகிய அவன் ஊனக் கண்களால் பார்க்க முடியாதவன் ) ஸ்வாத்யாய யோகங்கள் ஆகிற இரண்டு த்ருஷ்டிகளாலும் ஒழிய மாம்ச சஷுசால் பரமாத்மாவை காணப் போகாமையாலே ஸ்வாத்யாத்யா சப்த வாசகமான வேதத்தை ஓதியும்- யம நியமாத் அஷ்டாங்க யோகத்தை அப்யசித்தும் அவ் வழியாலே தத் உபய விஷயமான பரமாத்மாவை ஏவம் பூதன் என்று தெளிந்தும் ,இம் முகத்தாலே ஸ்வ யத்நேன கண்ட காட்சியில்-அ வைசத்யாலே –ஓதி உணர்ந்தவர் முன்னா -திருவாய் –3-5-5-என்கிறபடியே வேத சாஸ்த்ரங்களை ஓதி , த்யாஜ்ய உபாதேயங்களை உணர்ந்து இருக்கிற ருஷிகள் இன்று அளவும்
ஆசா பாச சதைர் பத்தா–ஸ்ரீ கீதை -16-12- (ஆசைகளாகிற பல வகைப்பட்ட தளைகளால் கட்டுண்டு இருப்பார்கள் ) -என்கிற படியே சாம்சாரிக போக விஷயங்களான ஆசாக்ய பாத சதங்களாலே பந்திக்கப் பட்டு இருப்பார்கள் ..-திவ்யம் ததாமி தே சஷு –ஸ்ரீ கீதை -11-8- -என்கிற படி தன்னைக் காண்கைக்கு சாதனமாக அவன் கொடுத்த திவ்ய ஞான ரூப சஷுசாலே –நேரே கடிக் கமலத்துள் இருந்தும் காணகிலான் -முதல் திருவந்தாதி -56-என்றும் ,-கார் செறிந்த கண்டத்தான் எண் கண்ணான் காணான்—நான்முகன் –73-என்றும் , நீறாடி தான் காண மாட்டாத தாரகல சேவடி –நான்முகன் 27–என்றும்
கட்கரிய பிரமன் சிவன் இந்திரன் இவர்கட்க்கும் கட்கரிய கண்ணன் -திருவாய் –7-7-11-என்றும்
சொல்லுகிற படி இவ் அருகில் உள்ளாரைக் காட்டில் ஞான சக்தி யாதிகளில் அதிகராய் ,
தாமோதரனை ,தனி முதல்வனை ஞாலம் உண்டவனை–திருவாய் -2-7-12-–ஒருவருக்கும் தரம் அறியலாமோ – என்று தங்களை ஒழிய ஒருவருக்கும் அறியப் போகாது என்று இருக்கும் பிரம ருத்ராதிகளுக்கும் காண அரியனாய்–
வேதங்களைக் கற்றும் அதில் அர்த்தத்தைத் தெளிந்தும் யம நியமாத்,யஷ்டாங்க, யோகத்தாலேயும் அவனைக் கண்ட மைமைப்பாலே – ஸ்வ ப,ஹு பலாரா்ஜிதமான ஸாஸ்த்ர ஜந்ய ஜ்ஞாதத்தாலே தாங்கள் காண்கிறதாகையாலே மெய்ம்மை யற்றிருக்கும்; அவிஸத மாயுமிருக்கும். அத்தாலே ““ஓதி யுணர்ந்தவர் முன்னா” (திருவா. 3 – 5- 5) என்கிறபடியே வேத ஸாஸ்த்ரங்களை ஓதி, த்யாஜ்யோபாதேயங்களை உணரந்திருக்கிற ருஷிகள் இன்றும் “ஆஸா பாஸ ஸதைர் பத்தா காம க்ரோத,பராயணா ”” என்கிறபடியே ஸாம்ஸாரிக ஸங்க பாஸ பத்தர். இவர்க்கோ வென்னில் 2- (அவன் வழங்கும் திவ்ய சக்ஷுஸ்ஸாலே) “அவன் கண்களாலே அமலங்களாக விழிக்கும்” (திருவா. 1 – 9 – 9) என்றும், ““திவ்யம் ததாமி தே சஷு பஸ்ய மே யோக,மைஸ்வரம்”‘ (கீதை 11 – 8) என்றும் சொல்லுகிற படியே இவரை அமலராம்படி கடாக்ஷித்து, அவனாலே தத்தமான திவ்ய சஷுஸ்ஸாலே “நேரே கடிக்கமலத் துள்ளிருந்தும் காண்கிலான் கண்ணனடிக் கமலந் தன்னை அயன்”” (மூ.திருவ. 56) என்றும், ““கார் செறிந்த கண்டத்தான் எண் கண்ணான் காணான்’” (தா.திருவ. 73) என்றும், “*நீறாடி தான் காண மாட்டாத-தாரகல சேவடி ” (நா. திருவ. 27) என்றும், *“கட்கரிய பிரமன் சிவனிந்திரனென் றிவர்க்கும் கட்கரிய கண்ணன்’‘ (திருவா. 7 – 7 – 11) என்றும், ”விதி ஸிவ ஸநகாத், யைர்த் யாதுமத்யந்த தூ,ரம்”’ (ஸ்தோ.ர. 47) என்றும் சொல்லுகிறபடியே தங்களைப் போரப் பொலிய நினைத்திருக்கும் ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் காண வரிதாயிருக்கிற-
சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு
ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த
வேத முதல்வனைப் பாடி வீதிகள் தோறும் துள்ளாதார்
ஓதி உணர்ந்தவர் முன்னா என் சவிப்பார் மனிசரே?–3-5-5-பரபரக்கற்ற அறிவுடையராக தங்களை நினைத்து இருக்குமவர்கள் ஞான பலம் இல்லாமையால் நிந்தியரில் பிரதம பாவிகள் என்கை –
விதுஷோ அதிக்ரமே தாண்ட பூயஸ்தம்–
கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே
அமலங்களாக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி
கமலத்தயன் நம்பி தன்னைக் கண்ணுத லானொடும் தோற்றி
அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி என் நெற்றி உளானே –1-9-9-அவன் திருக் கண்களால் நிர் தோஷனாம் படியும் -காண வல்லேனாம் படியும் விசேஷ கடாக்ஷத்தைப் பண்ணினான்-
ஆஸாபாஸஸதைர்பத்தா: காமக்ரோதபராயணா:
ஈஹந்தே காமபோகார்தமந்யாயேநார்தஸஞ்சயாந்-16-12-நூற்றுக்கணக்கான ஆசைக் கயிறுகளால் கட்டுண்டு காமத்துக்கும் சினத்துக்கும் ஆட்பட்டோராய்க் காம போகத்துக்காக
அநியாயஞ்செய்து பொருட் குவைகள் சேர்க்க விரும்புகிறார்கள்.
ந து மாம் ஸக்யஸே த்ரஷ்டுமநேநைவ ஸ்வசக்ஷúஷா
திவ்யம் ததாமி தே சக்ஷú: பஸ்ய மே யோகமைஸ்வரம்–11-8-உன்னுடைய இயற்கையான இக்கண்களால் என்னைப் பார்க்க முடியாது. உனக்கு ஞானக் கண் கொடுக்கிறேன்.
என்னுடைய ஈசுவர யோகத்தைப் பார்.
பேரே வரப் பிதற்ற லல்லால் எம் பெம்மானை
ஆரே யறிவார் அது நிற்க நேரே
கடிக் கமலத் துள்ளிருந்தும் காண்கிலான் கண்ண
னடிக் கமலம் தன்னை யயன் ——56-சர்வேஸ்வரனுடைய பரிமளத்தை யுடைத்தான திரு நாபீ கமலத்தில் அவ்யவதாநேந பிறந்து அவன் தன்னாலே ஓதுவிக்கப் பட்டு அங்கே இருக்கிற ப்ரஹ்மா சர்வேஸ்வரனைக் காண்கிறிலன்-அறிகிறிலன்-(கண்ணன் -கண் இடம் முடையவன் சர்வ வியாபி -சர்வேஸ்வரன் )
ஆரே அறிவார் அனைத்துலகும் உண்டு உமிழ்ந்த
பேராழியான் தன் பெருமையை -கார் செறிந்த
கண்டத்தான் எண் கண்ணான் காணான் அவன் வைத்த
பண்டைத் தானத்தின் பதி–73-—சர்வ லோகத்தையும் யுண்பது உமிழ்வதாய் பிரதிகூல நிரசனத்துக்கு உறுப்பான திரு வாழியை யுடையவன் –உபாயாந்தரங்களை யருளிச் செய்யாதே தன்னையே யுபாயமாகச் சொன்ன மஹா குணத்தை யறிய வல்லார் யார் –கறுத்த கண்டத்தை யுடைய ரூத்ரனோடு கூடின எட்டுக் கண்களை யுடைய ப்ரஹ்மாவும் அறிய மாட்டான் –
மாறான் புகுந்த மட நெஞ்சம் மற்றதுவும்
பேறாககே கொள்வேனோ பேதைகாள் -நீறாடி
தான் காண மாட்டாத தாரகல சேவடியை
யான் காண வல்லேற்கு இது-27-–பேரளவு யுடையனான ருத்ரன் காண மாட்டாத –தாரை யுடைத்தாய் அகன்று சிவந்து இருந்துள்ள திருவடியை நான் காண வல்லேனான பின்பு-அவன் தானே அபி நிவிஷ்டனாய்க் கொண்டு என் பக்கலிலே புகுரா நின்ற பின்பு-நான் அவன் திரு நிறத்திலே சிறிது அறிந்தேன் என்று இது பேறாகக் கொள்வேனோ – ஒரு லாபமோ -என்கிறார்-இது மாறன் புகுந்த மட நெஞ்சம் – மால் தான் புகுந்த மட நெஞ்சம் –சர்வேஸ்வரன் தானே விரும்பிப் புகுந்த பவ்யமான நெஞ்சு –
கட்குஅரிய பிரமன் சிவன் இந்திரன் என்ற இவர்க்கும்
கட்குஅரிய கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
உட்குஉடை ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் வல்லார்
உட்குஉடை வானவரோடு உட னாய் என்றும் மாயாரே.–7-7-11-மநுஷ்யர்கள் உடைய கண்ணுக்கு காண ஒண்ணாத ப்ரஹ்மாதிகள் கண்ணுக்கும் அவிஷயமான கண்ணனை –ப்ரஹ்மாதிகள் என்றும் கேட்டே போம் அத்தனை அல்லது அவர்களுக்கு காண ஒண்ணாதாய் இருக்கிறவன் -உறவு வெளிப்பட்டால் –சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் -என்கிறபடியே பார்த்த பார்த்த இடம் எங்கும் தானேயாய் இரா நின்றான்–
தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை
ஆமோ தரமறிய ஒருவர்கென்றே தொழுமவர்கள்
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும்
ஆமோ தரமறிய எம்மானை என்னாழி வண்ணனையே –2-7-12-தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை-ப்ரஹ்மாதிகள் பாசுரம் இருக்கிற படி -ஆஸ்ரித பாரதந்தர்யம் ஒருவருக்கும் தரை காணப் போமோ –தனி முதல்வனை-சதேவ என்கிறபடியே -ஜகத்துக்கு த்ரிவித காரணமும் தானே யாய் இருக்கிற படியை தான் அறியப் போமோ –-ஞாலம் உண்டவனை-ஆபத் ஸகத்வத்தைத் தான் அறியப் போமோ-ஆமோ தரமறிய ஒருவர்க்கு -என்றே தொழுமவர்கள் தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும் ஆமோ தரமறிய- எங்களை ஒழிய ஒருவருக்குத் தான் அறியப் போமோ என்பர்கள் -இப்படி சொல்லிக் கொண்டு தொழும் ஸ்வ பாவருமாய் -அவனுக்கு சரீரவத் அந்தரங்கரான ருத்ரனுக்கும் ப்ரஹ்மாவுக்கும் தான் அறியலாமோ-எம்மானை என்னாழி வண்ணனையே- தன் குண ஆர்ணவத்தை என் பக்கலிலே மடுத்து என்னை அடிமை கொண்டவனை –
திகஶுசிம் அவிநீதம் நிர்த்தயம் மாமலஜ்ஜம்
பரம புருஷ! யோ’ஹம் யோகிவர்யாக்ரகண்யை: |
விதிஶிவ ஸநகாத்யைர் த்யாதும் அத்யந்த தூரம்
தவ பரிஜநபாவம் காமயே காமவ்ருத்த: ||–47—புருஷோத்தமனே! என்னுடைய (தவறான) எண்ணப்படி நடக்கும் தன்மையை உடைய காரணத்தால் ப்ரஸித்தமான நான், என்னுடைய புனிதமற்ற தன்மையாலும், சீர் செய்யப்படாத தன்மையாலும், கருணையும், வெட்கமும் இல்லாத தன்மையாலும்,
ப்ரஹ்மா, சிவன், ஸனகாதி முனிவர்கள் போன்ற உயர்ந்த யோகிகளுக்கும் எட்டாததான உன் கைங்கர்யத்தை ஆசைப்பட்டதை என்னையே நினைத்து நொந்துகொள்ள வேண்டும்.
அறிந்தன வேத வரும் பொருள் நூல்கள் அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்-திருவாய் -9–3-3-என்கிற படியே-யஸ்ய அமதம் தஸ்ய மதம்—கேனோ உபநிஷத் — (எவன் பரம்பொருளை அளவிடப் பட்டதாக எண்ண வில்லையோ அவன் பரம்பொருளை அறிகிறான் ) இத்யாதியாலே வேதங்களும் அறிவரிய வஸ்து என்றே அறியும் படியாய் ,–கேட்ப்பார்க்கு அரும் பொருளாய் நின்ற –நான்முகன் –60-என்று –நாயமாத்மா ப்ரவசநேன லப்யா ந மேதையா ந பஹுநா ஸ்ருதேந –கட உபநிஷத் –( பரம்பொருள் மனத்தாலும் தியானத்தாலும் கேள்வியாலும் -இறைவனாகிய தன்னுடைய அருளால் ஒழிய – அடையத்தக்கவன் அல்லன் -)என்ற படி தன் பிரசாதம் ஒழிய ஸ்வ யத்னத்தாலே ஸ்ரவணாதிகள்-கேட்டு -சிந்தித்து -தெளிந்து -இத்யாதிகள் – பண்ணுவாருக்கு துர் லப வஸ்துவான சர்வேஸ்வரனை-–கண்டேன் கமல மலர்ப் பாதம் – திருவாய் -10-4-9- என்கிற படியே அவன் தானே காட்டுகையாலே ,
விசதமமாக கண்ட போதே ,-பொய் நின்ற ஞானமும் -திருவிருத்தம் -1–என்று தொடங்கி , இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று அவித்யாதிகளை விடுவித்து அருள வேண்டும் என்று அவனைக் கால் கட்டும் படி இவருக்கு–மற்ற வன் பாசங்கள் –திருவாய் -8-2-11-என்று ஸ்வ யத்ன நிவர்த்யம் அல்லாத படி பிரபலமான பாஹ்ய சங்கங்கள் –பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அறக் கொண்டிட்டு -திருவாய் -7–8–5-என்னும் படி , தத் ப்ரசாதத்தாலே ஸ்வாசனமாக விட்டு அகன்றது என்கை ..
அரும் பொருளாய் நின்ற அரங்கனே?” (நா. திருவ. 60) என்கிற படியே பெறுதற்கரிய ப்ரயோஜநமாய் பரத்வ- ஸெளலப்ய விஸிஷ்டனான ஸர்வேஸ்வரனை “கண்டேன் கமல மலர்ப் பாதம்” (திருவா. 10 – 4- 9) என்கிறபடியே கண்ட போதே ““பொய்ந் நின்ற ஞானமும் ” (திருவிரு. 1) என்று தொடங்கி, “’இனி யாமுறாமை”” (திருவிரு. 1) என்று – ‘அவித்யாதிகளை விடுவித்தருளவேணும்” என்று இவர் தாமே அவனைக் கால்கட்டி அபேக்ஷிக்கும்படி இவர்க்கு வேறொருவரால் விடுவிக்க அரிதான ‘“மற்ற வன் பாசங்கள்”’ (திருவா. 6 – 2 11) என்கிறபடியே ஸாம்ஸாரிக ஸகல பாபயங்களும் “பாசங்கள் நீக்கி” (திருவா. 7 – 8 5) என்கிறபடியே அவன்தானே போக்குகையாலே நீங்கிற்று; நேராக நிவ்ருத்த மாய்த்தென்கிறார்-
அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள்
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே–9-3-3-துர்ஜ்ஜேயன் என்னும் -இவ்வளவு அறிந்தனவாக கொல்ல அமையும் –யதோ வாசோ நிவர்த்தந்தே –யஸ்யாமதம் தஸ்ய மதம் –அவ்விஞ்ஞாதம் விஜா நதம் -என்னும் இவ்வளவே அறிந்தது –
ஆட் பார்த்து உழி தருவாய் கண்டு கோள் என்றும் நின்
தாட் பார்த்து உழி தருவேன் தன்மையை -கேட்பார்க்கு
அரும் பொருளாய் நின்ற வரங்கனே உன்னை
விரும்புவதே விள்ளேன் மனம்–60--புக்கு அநு பவிக்கில் அநு பவிக்கும் இத்தனை போக்கி ஆராயப் புகில் அளவிட ஒண்ணாத-வைலஷண்யத்தை யுடையையாய்க் கொண்டு கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிறவனே–உன்னை விரும்பும் அத்தனை மனசை உன் பக்கல் நின்றும் வாங்கேன் –த்வாம்ருதஸ் யந்தி நி -ஸ்தோத்ர ரத்னம் -27-இதிவத்–
கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக
பண்டே பரமன் பணித்த பணி வகையே–10-4-9—கண்டேன்–என்றும் கேட்டே போம் விஷயத்தை சாஷாத் கரிக்கப் பெற்றேன் — கமல மலர்ப்பாதம் –பிராப்தி ஒழியவே ஞான லாபமே அமையும் படியான போக்ய விஷயம் என்கிறது – காண்டலுமே-விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்–கண்ட போதே வினை என்று பேர் பெற்றவை எல்லாம் விட்டுப் போய்த்து –சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்னுமவன் அடியாக வந்ததாகையாலே தட்டில்லை இறே –
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந் நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே –1–சர்வஞ்ஞனுமாய் சர்வ சக்தியாய் இருக்கிற நான் இவற்றைச் செய்து வருகிறேன்-உன்னுடைய அவதாரத்துக்கு பிரயோஜனம் சொல் என்கிறார் – நீயோ நானோ உபாய அனுஷ்டாம் பண்ணுவது சொல்லு–அவதார பிரயோஜனம் சாது பரித்ராணாம் துஷ்ட நிக்ரஹம் தர்ம ஸம் ஸ்தாபனம் மூன்றுக்கும் அல்லவே ஸித்த உபாயம் ஆகவதர்க்கே அன்றோ நீர் அவதரித்தீர்–அடியேன் -என்று தம்முடைய ஸ்வரூபத்தை விண்ணப்பம் செய்கிறார்-செய்யும் –இவ் வபேஷைக்கு மேல் இல்லை –இப் பாட்டில் விரோதி நிவ்ருத்தியையும் அவதார ஸுலப்யத்தாலே -உபாய பாவத்தையும் நித்ய ஸூரி ஸேவ்யமான -ப்ராப்யத்தையும் அடியேன் -என்று ஸ்வரூபத்தையும் மெய்ந்நின்று கேட்டு அருளாய் -என்று பல அபேக்ஷையும் பண்ணுகையாலே அர்த்த பஞ்சகம் ஸூசிதமாயிற்று-
பாதமடை வதன் பாசத்தாலே மற்றவன்பாசங்கள் முற்ற விட்டு
கோதில் புகழ்க் கண்ணன் தன்னடி மேல் வண் குருகூர் சடகோபன் சொன்ன
தீதில் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவையுமோர் பத்திசை யோடும் வல்லார்
ஆதுமோர் தீதிலராகி இங்கு மங்கு மெல்லாம் அமைவார்கள் தாமே–8-2-11—திருவடிகளில் கிட்டுகையில் உண்டான சங்கத்தால் புறம்பு உண்டான வலிய சங்கங்களை நிச்சேஷமாக விட்டார் -இதுவாயிற்று இத்திருவாய் மொழியிலே சொல்லிற்று யாயிற்று -புறம்புள்ள பற்று அற்று திருவடிகளிலே ஆசைப்பட்டவர் அல்லர் –மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு -என்கிறபடியே திருவடிகளிலே சங்கத்தால் உபாதிகமான பாஹ்ய சங்கத்தை தவிர்ந்தவர்-
பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அறக் கொண்டிட்டு நீ
வாச மலர்த் தண் துழாய் முடி மாயவனே!அருளாய்
காயமும் சீவனுமாய்க் கழிவாய்ப் பிறப்பாய் பின்னும் நீ
மாயங்கள் செய்து வைத்தி;இவை என்ன மயக்குகளே.–7-8-5-அவித்யா கர்ம வாசனா ருசிகளைப் போக்கி-என்னை-விஷயாந்தரங்களிலே கால் தாழ்ந்து இருக்கிற என்னை-உனக்கே அறக் கொண்டிட்டு நீ-துயர் அறு சுடர் தொழுது எழு-என்னும் படி பண்ணி
—
இவ்வளவும் அன்றிக்கே ,தாரகாதி வைலஷண்யத்தாலும் அவர்களில் இவருக்கு உண்டான வ்யாவ்ருதியை அருளிச் செய்கிறார் .-இனி மேல் அவர்களுக்கும் இவர்க்கும் தாரகாதிகளும் வேறுபட்டபடி சொல்லுகிறது-
அவர்களுக்கு காயோடு என்னும் இவையே தாரகாதிகள் .. இவர்க்கு எல்லாம் கண்ணன் இறே-சூரணை -60-
அதாவது –
ருஷிகள் ஆனவர்களுக்கு-காயோடு நீடு கனி உண்டு வீசு கடும்கால் நுகர்ந்து –பெரிய திருமொழி -3–2-2–என்றும் –வீழ் கனியும் ஊழ் இலையும் என்னும் இவையே நுகர்ந்து–பெரிய திரு மடல் -12- என்றும் சொல்லுகிற படி பல மூல பத்ர வாயு தோயங்களே-(கனிகள் கிழங்குகள் இலைகள் காற்றுத்தண்ணீர் என்னும் இவைகளே ) தாரக போஷாக போக்யங்கள் .-ருஷிம் ஜுஷாமஹி–ஸ்ரீ பராங்குச அஷ்டகம் –) ரிஷியாகிற நம்மாழ்வாரை வணங்குகிறேன் )-என்று இவரையும் ருஷி என்று சொல்லிற்று ஆகிலும் ,
தாரகாதிகள் அவை அன்று –கிருஷ்ண த்ருஷ்ண தத்வமான இவர்க்கு- உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் –திருவாய் -6-7-1- என்கையாலே ,தாரக போஷாக போக்யங்கள் எல்லாம் கண்ணன் இறே என்கை-
“காயோடு நீடு கனியுண்டு”” (திருமொழி 3 – 2 – 2) என்றும், ““வீழ் கனியுமூழிலையு மென்னு மிவையே நுகர்ந்து ”” (பெ.திருமடல்) என்றும் சொல்லுகிறபடியே பல-மூலபத்ர-வாயு- தோயங்களே அவர்களுக்கு தாரக போஷக போக்யங்கள். இவரையும் “ருஷி” என்று கீழே சொல்லிற்றிறே. அது இவர்க்கும் ஒவ்வாதோ என்னில், ஒவ்வாது. “உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையு மெல்லாம் கண்ணன்” (திருவா. 6 – 7 – 1) என்கிறபடியே தாரகாதிகளுமெல்லாம் ஸர்வ ஸுலபனான ஸர்வேஸ்வரனிறே இவர்க்கு.
காயோடு நீடு கனி யுண்டு வீசு கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம் ஐந்து
தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்
வாயோது வேதம் மலிகின்ற தொல் சீர் மறையாளர் நாளும் முறையால் வளர்த்த
தீயோங்க வோங்கப் புகழ் ஓங்கு தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-2—பருவம் இளைதான காய்களையும் வெய்யிலிலும் காற்றிலும் உலர்ந்து பசையற்ற கனிகளையும் புஜித்து வீசின வெட்டிய காற்றைப் பருகி நெடும் காலம் பஞ்சாக்னி மத்யஸ்தராய் நின்று தபஸு பண்ண வேண்டா-ஸ்ரீயபதியை ஹிருதயத்தில் பிரியாதபடி வைத்துக் கொள்வோம் என்பீர் (வைப்பவர்கள் இல்லை –வைக்க நினைத்தாலே போதும் அவன் உள்ளே புக தான் காத்துக் கொண்டு இருக்கிறானே விலக்காமையே வேண்டுவது )
தொன்னெறியை வேண்டுவார் வீழ் கனியும் ஊழிலையும் –12
என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தித்
துன்னும் இலைக் குரம்பைத் துஞ்சியும் வெஞ்சுடரோன் —-13
மன்னு மழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும்-
இன்னதோர் தன்மையராய் ஈங்குடலம் விட்டு எழுந்து —-14
தொன்னெறிக் கண் சென்றார் எனப் படும் சொல் அல்லால்—வீழ் கனியும் – தானே விழுந்து பசை அற்ற கனியும்–ஊழிலையும் – முளையிலே விழுந்த இலையும் – முற்றிப் பழுத்த சருகான இலையும் –என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தித்- அதாவது -சருகு இலை தின்றும் காயும் கிழங்கும் தின்றும் இறே தபஸ் ஸூ அனுஷ்டிப்பது-அவதாரணத்தாலே-ஒரு வ்ரத சமாப்தி பிறந்து பின்னை ஒரு வ்ரத ஆரம்பித்ததின் முன்னே யாகிலும் ஏகவாரம் அன்னம் புஜித்ததும் இல்லை என்று தோன்றுகிறது –
இத்தால் அநவரத காயக் கிலேசம் சொல்லுகிறது-நுகர்ந்து – அந்த சாதனத்தில் பண்ணின ஆதரம் தோற்ற போக்யதை உண்டானது போலே இருக்க புஜிககை-உடலம் தாம் வருந்தி –அபிமத விஷயத்தைக் கண்டு இங்கே அனுபவிக்கலாய் இருக்கிற சரீரத்தை கிலேசிப்பித்து-தாம் வருந்தி-இவனுடைய கர்மம் கொண்டு போய் கிலேசிப்பித்தல் தைவம் கொண்டு போய் கிலேசிப்பித்தல் செய்யும் அது ஒழிய தாமே கிலேசிப்பித்து-துன்னும் இலைக் குரம்பைத் துஞ்சியும் – இலையாலே நெருங்கச் செய்த பர்ண சாலைகளிலே கிடந்தும் – அதில் நின்றும் உதிர்ந்த புழுதியானது கண்ணிலே புக்கு நோவு படும்படியாகத் துஞ்சியும் நித்ரை மரணத்தோடு பர்யாயம் ஆகையாலே துஞ்சியும் -என்கிறது –
உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற்றிலையு மெல்லாம்
கண்ணன்எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர்வளம் மிக்கவன் ஊர்வினவித்
திண்ணம் என்இளமான் புகுமுர் திருக்கோளூரே.–6-7-1-ஜீவித்து அல்லது தரிக்க ஒண்ணாத சோறு -தாஹித்தால் பானம் பண்ணி யல்லது நிற்க ஒண்ணாத தண்ணீர் -தின்றால் அல்லது புஷ்டனாக விரகு இன்றிக்கே இருக்கும் வெற்றிலையும் -தாரக போஷக போக்யம் ஆனவை எல்லாம் எனக்கு நாதனான கிருஷ்ணன் -வாஸூ தேவஸ் சர்வம் -என்று ஆயிற்று இவள் இருப்பது-என்றென்றே கண்கள் நீர்மல்கி-
இடைவிடாமல் இப்படியே சொல்லி -அவளைக் காணப் பெறாமையாலே கண்கள் சோகா ஸ்ருவாலே நிரம்பி -அவ்விஷயத்தை இடைவிடாமல் அனுசந்தித்து -ஸ்மர்த்தவ்ய விஷய சாரஸ்யத்தாலே-ஆஹ்லாத சீத நேத்ராம்பு -என்கிறபடியே ஆனந்தா ஸ்ருவாலே நிரம்பி என்னவுமாம் –
—
இப்படி சர்வ பிரகாரத்தாலும் பிராக்ருத விஷயங்களில் நசை அற்று பகவத் ஏக பரரான இவர் தத் விரஹத்தில் படும் அது எல்லாம் அவர்கள் ப்ராக்ருத விஷய சங்கம் அறாமையாலே ,அவ் விஷயங்களுடைய விரஹத்தில் படுவார்கள் என்கிறார்.-ஆகில் இவர்க்கு ஸம்ஸாரத்தில் நசையற்ற தென்றும், அவர்களுக்கு நசையற்ற தில்லை என்றும் சொல்லிற்றே, அதறிந்தபடி என் என்னில், அத்தைச் சொல்லுகிறது-
அழுநீர் துளும்ப கடலும் மலையும் விசும்பும் துழாய் திரு மால் என்று எங்கே காண்கேன் என்னும் இவர் அலமாப்பு , அவர்களுக்கு புத்ர வ்யோகத்திலே–சூரணை -61-
அதாவது –
சேயரி கண் அழுநீர் துளும்ப அலமருகின்றன–திருவிருத்தம் –2-என்றும்
‘கடலும் மலையும் விசும்பும் துழாய் -திருவாய் -2-1-4-என்றும்
சிந்தை கலங்கி திரு மால் என்று அழைப்பன்–திருவாய் -9-8-10–என்றும்
எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை—திருவாய் -8-5–11-என்றும்
உன்னை காண்பான் நான் அலப்பாய் -திருவாய் -5-8-4-என்றும் சொல்லுகிற படி பகவத் விரஹ விசயனத்தாலே கண்ணும் கண்ணீருமாய் அபரிச்சேத்யமான கடலோடு,நிர்விவரமான மலையோடு – அச்சமான ஆகாசத்தோடு வாசி அற , எங்கும் தேடி ,ஹ்ருதயம் கலங்கி ,ஸ்ரீ ய பதியே -என்று கூப்பிட்டு
எங்கே காணக் கடவேன் என்று இவர் படும் அலமாப்பு –ஸ்ரீ வசிஷ்ட பகவான் புத்ர வியோக க்லேசத்தாலே ,-ச மேரு கூடாதாத்மானம் முமோச பகவான் ருஷி சிரஸ் தஸ்ய சிலாயஞ்ச தூலராசா விவாபதத் , ந மமார ச பாதேன ததாச முனி சத்தமே ததாக் நிமித்வா பகவான் ச விவேச மகாவனே
தம் ததா ஸூ சமித் தோபி ந ததாஹா ஹூதாசன தீப்ய மானோப்ய மித்ரக்னம் சீதோக்நிர்பவத்ததா
ச சமுத்திர மபிப்ரேத்ய சோஹாவிஷ்டோ மகா முனி கண்டே பத்தவா சிலாம் குர்வீம் நிபபாத ததம்பசி -என்கிற படியே(அந்த பகவானான வசிஷ்ட முனிவர் மேரு மலையின் சிகரத்தில் இருந்து விழுந்தார் -அவருடைய தலை கல்லில்பஞ்சுக் குவியலில் விழுவது போலே விழுந்தது -அப்பொழுது அந்த முனிவர் தலைவன் அப்படி விழுந்ததனால் இறந்தார் இலர் – ஏ முனிவரே அந்த வசிஷ்ட பகவான் அப்படியே நெருப்பினை மூட்டி அதிலே புகுந்தார் -நெருப்பு மிக்க ஆற்றல் வாய்ந்ததாயினும் – அப்பொழுது அந்த நெருப்பு எரிந்து கொண்டு இருந்தாலும் அவரை எரிக்க வில்லை -சோகத்தினால் பீடிக்கப்பட்டு இருக்கும்-அந்த வசிஷ்ட முனிவர் கடலை அடைந்து பெரிய கல்லினை கழுத்தினில் கட்டிக்க கொண்டு அந்தக் கடலிலே விழுந்தார் ) என்கிறபடி மலையில் ஏறி விழுவது ,நெருப்பிலே புகுவது , கழுத்திலே கல்லைக் கட்டி கடலிலே விழுவது ஆகையாலும் ,–ஸ்ரீ வேத வியாச பகவான் புத்ர விரகம் பொறுக்க மாட்டாமல்–த்வை பாயனோ விரஹ காதர ஆஜுஹாவ புத்ரேதி –ஸ்ரீ பாகவதம் -1-2-2–( வியாசர் புத்திரனான சுகரைப் பிரிந்த பிரிவுக்கு அஞ்சினவராய் புத்திரனே என்று கூப்பிட்டார் )என்கிற படியே
புத்ரனே என்று வாய் விட்டுக் கூப்பிட்டு அழுது கொண்டு காணப் பெறாமையால் அலமந்து திரிகையாலும் , அவர்களுக்கு புத்ர விச்லேஷத்திலே நடக்கும் என்றபடி –
“அழுநீர் துளும்ப அலமருகின்றன (திருவிரு. 2) என்றும், ‘‘கடலும் மலையும் விசும்பும் துழாய்” ் (திருவா. 2 -1- 4) என்றுதொடங்கி, * ‘சிந்தை கலங்கித் திருமால் என்றழைப்பன் (திருவா. 9 – 8 – 10) என்றும், ”எங்கே காண்கேன் ஈன் துழாயம்மான் தனனை ” (திருவா, 8-5-11) என்றும், “‘உன்னைக் காண்பான் நானலைப்பாய்”” (திருவா, 5 – 8 – 4) என்றும் சொல்லுகிறபடியே பகவத் விஸ்லேஷ வ்யஸநத்தாலே கண்ணும் கண்ணீருமாய் அபரிச்சேத்யமான கடலோடு, நிர்விவரமான மலையோடு, அச்சமான ஆகாஸத்தோடு வாசியற, எங்கும் தேடி ‘ஸ்ரீயப் பதியே!’ என்று கூப்பிட்டுப் படுகிற இவருடைய அலமாப்பு – (அவர்களுக்கு புத்ர வியோகத்திலே) வஸிஷ்ட வ்யாஸாதிகளான அவர்களுக்கு ஸக்தி ஸூகாதிகளாகிற புத்ர வியோகத்திலே காணலாம் –
செழு நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப சேயரிக் கண்
அழுநீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ
முழுநீர் முகில் வண்ணன் கண்ணன் விண்ணாட்டவர் மூதுவராம்
தொழுநீர் இணையடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே —-2—அஸி தேஷணை-கண் கிடீர்-சேய் -அழகாய் –அரி -வண்டாய்-அன்றிக்கே-ஹரிக்கிற மநோ ஹாரி என்றுமாம்-அன்றிக்கே-சிவந்த அரியை உடைத்தான-அன்றிக்கே-சிவந்து மநோ ஹரிக்கும் கண்கள்-ஸ்ரீ வாதி கேசரி ஸ்வாமி நிர்வாகம் –-கறும் கண்ணி தவிர்ந்து விஸ்லேஷத்தால் கரும் கண்ணி மாறி சிவந்து இருக்கை-அஸ்ரு பிரவஹிக்கிறது–என் கார்யம் தலைக் கட்டிற்று-இவள் கார்யம் தலைக் கட்டும் அத்தனை-பகவத் வ்யதிரேகத்தில் கண்ணும் கண்ணீருமாய் இருக்கும் இது இறே ஆத்மாவுக்கு ஸ்வரூபம்–இத்தைக் காணும் அது இறே இவர்களுக்கு உத்தேச்யம்-இவ்விருப்பை இவனும் காணப் பெற்றதில்லை – அசலிட்டுக் கேட்கும்-தோழி சொல்ல – இத்தனை இறே –கிமர்த்தம் -இத்யாதி-ஆர் குடி வேர் பறிய இக்கண்ணும் கண்ண நீருமாய் இருக்கிறது-ஆரைச் சேதனராகக் கொண்டு -என்றுமாம் –-அவன் கண்டு உகக்கும் அலமருகின்றன -தடுமாறா நின்றனஅழு நீர் துளும்ப அமலருகின்றன -என்கையாலே-அபிநிவேசம் மிகுந்தமை தோற்றுகிறது-
கடலும் மலையும் விசும்பும் துழாய் எம் போல்
சுடர் கொள் இராப்பகல் துஞ்சாயால் தண் வாடாய்
அடல் கொள் படை யாழி அம்மானைக் காண்பான் நீ
உடலம் நோய் உற்றாயோ ஊழி தோர் ஊழியே –2-1-4—பரப்பு உடைத்தான் கடலோடே-நிர் விவரமான மலையோடு -அபரிச்சின்னமான ஆகாசத்தோடு -வாசி அறத் துழாவி –-காரார் திரு மேனி காணும் அளவும் போய் –என்று ஷீராப்தி யோடு -திருமலையோடு -பரமபதத்தோடு வாசி அறத் தேடுவார்க்கு போலியாய் இருக்கிற படி –தவ் வனானி கிரீன் சைவ சரிதச்ச சராம்ஸிச நிகிலேந விசின்வா நவ் ஸீதாம் தசரதாத் மஜவ் –
அந்தோ அணுகப் பெறு நாள் என்று எப்போதும்
சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன்
கொந்தார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வந்தே உறைகின்ற எம்மா மணி வண்ணா–9-8-10–சொல்லத் தொடங்கினது தலைக் கட்ட மாட்டாத பல ஹானியாலே அந்தோ -என்கிறார் -அணுகப் பெறு நாள் யாவை என்ன வேண்டி இருக்க -அது மாட்டாது ஒழிகிறார் இறே -ஒரு கால் சொல்லி பல ஹானியாலே விடுகை அன்றிக்கே –சர்வ காலமும் ஹிருதயம் கலங்கி -மாதா பிதாக்களைக் கூப்பிடுமா போலே திருமால் என்று அழையா நிற்பன் -பிதா மாதா ச மாதவ –
எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்று என்று
அங்கே தாழ்ந்த சொற்களால் அந்தண் குருகூர்ச் சடகோபன்
செங்கேழ் சொன்ன வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
இங்கே காண விப் பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே-8-5-11—-ஐஸ்வர்ய ஸூ சகமான திருத் துழாய் மாலையை யுடைய சர்வேஸ்வரனை கண்டு அல்லது தரிக்க மாட்டாத படி சபலனான நான் எங்கே காணக் கட வேன்-என்று என்று-நிரந்தரமாக சொல்லி -ஒரு கால் சொல்லி -ஆசையை ஆவிஷ்கரித்தோம் இறே -என்று ஆறி இருக்கிறார் அல்லரே -லாபத்தளவும் சொல்லும் அத்தனை இறே
அங்கே தாழ்ந்த சொற்களால்-தோளும் தோள் மாலையிலும் அந்த சேஷித்வத்திலும் பிரவணமான சொற்களாலே
செலக் காண்கிற்பார் காணு மளவும் செல்லும் கீர்த்தியாய்!
உலப்பிலானே! எல்லா உலகு முடைய ஒருமூர்த்தி!
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான் நான்
அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே.–5-8-4—ஆஸ்ரித வத்சலனான உன்னை காண் கைக்காக -அத்தலை இத்தலையாய் நீ என்னை காண பட்ட அளவன்று-நான் உன்னை காண் கைக்கு பட்டது-அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே-அலமந்து -விஷயம் சந்நிஹிதமாய் இருக்கச் செய்தே-ஆகாசத்தை பார்க்கிறது -நினைத்த பரிமாற்றம் பெறாமையாலே ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு உதவ வந்து தோற்றினால் போலே -தம் தசையைப் பார்த்து தோற்றுகிறானோ என்று பார்த்து -என்னுடைய நிராலம்பநதையைப் பார்த்து என்னுமாம் ஆண்டான்-வரக் காணா மையாலே ஸ்நே ஹிதிகள் செய்வதும் செய்யா நின்றேன் -க்ருபணர் செய்வதும் செய்யா நின்றேன் -சபலர் செய்வதும் செய்யா நின்றேன் -விரக்தர் செய்வதும் செய்யா நின்றேன் –
—
இம் மாத்ரமே அன்றியே பல சாதனாதிகளில் பிரதிபத்தி விசேஷத்தாலும் , இரண்டு தலைக்கும் உண்டான நெடு வாசியை அருளி செய்கிறார் மேல் .-பல ஸாதந தேவதாந்தரங்களில் இவர்களிருவர்க்கும் நினைவு ஒக்குமோ என்னில்,
பல சாதன தேவதாந்தரங்களில் இவர்கள் நினைவு பேச்சிலே தோன்றும்–சூரணை -62-
அதாவது
நிரஸ்தாதிஸயாஹ்லாத ஸூக பாவைக லஷணா பேஷஜம் பகவத் ப்ராப்தி ரேகாந்தாத் யந்திகீ மதா
தஸ்மாத் தத் ப்ராப்தயே யத்ன கர்தவ்ய பண்டிதைர் நரை தத் பிராப்தி ஹேதுர் ஜ்ஞானாநஞ்ச கர்ம சோக்தம் மகாமுனே –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-59-60— (தனக்கு மேல் ஒன்றும் இல்லாததாக ஆனந்த ரூபமான சுகம் ஒன்றையே வடிவாக யுடையதும் துக்கம் இல்லாததும் மீண்டு வருதல் இல்லாததுமான பகவானை அடையும் பேறானது சம்சார துக்கத்துக்கு மருந்தாக இருக்கும் –ஆகையால் பண்டிதர்களான மனிதர்கள் அந்தப் எம் பெருமானை அடைவதற்கு முயற்சி செய்யக் கடவர் –-மைத்ரேய முனிவரே ஞானமும் கர்மமும் அவனை அடைவதற்கு உபாயமாகச் சொல்லப் பட்டன ) இத்யாதிகளாலே
பகவத் ப்ராப்தியே பலமாகவும் , கர்ம ஞானாதிகளே உபாயமாகவும் , இந்திராதி தேவ அந்தர்யாமியான ஈச்வரனே உத்தேச்யன் ஆகையாலே , இந்திராதி தேவதைகள் அனுவர்த்த நீயராகவும் இறே ருஷிகள் சொல்லுவது ..தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே –திருவாய் -2-9-4-என்றும்-வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம் –திருவாய் -3-3–1-என்றும் கைங்கர்யமே புருஷார்த்தம் ஆகவும் தத் சாதனமும் ,
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் -திருவாய் -5–10 -11-என்றும் –அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே–திருவாய் -6-10 –10 -என்கிற பிரபத்தி யாகவும் , உன்னித்து மற்றோர் தெய்வம் தொழாள்–திருவாய் -4–6–10-என்று -தேவதாந்தரங்கள் அனுவர்த்தநீயர் அல்லராகவும் இறே இவர்கள் அருளிச் செய்தது ..
““பேஷஜம் பகவத் ப்ராப்தி?”‘(வி. பு. 6 – 5 – 59) என்று பகவத் ப்ராப்தி பலமாகவும், அதுக்கு ஸாதநம் கர்ம ஜ்ஞாந பத்திகள் என்றும், இந்த்ராதி, தேவதாந்தர்யாமியாய்க் கொண்டு ஈஸ்வரன் உபாஸ்யனா யிருக்கு மென்றுமிறே அவர்கள் சொல்லுவது. இவரோ வென்றால் ““தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே”’ (திருவா. 2- 9-4) என்றும், *“வழு விலா வடிமை செய்ய வேண்டும் நாம்”’ (திருவா. 3 – 3- 1) என்கிற கைங்கர்யம் புருஷார்த்தமாகவும், அதுக்கு ஸாதநம் ““நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு”’ (திருவா. 5 – 19 – 11) என்றும், *’அடிக் கீழமர்ந்து புகுந்தேன்” (திரூவா. 6 – 10 – 10) என்றும் சொல்லுகிற ப்ரபத்தி என்றும், தேவதாந்தரங்களை ‘‘உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள்‘ (திருவா. 4 – 6 – 10) என்றுமிறே இவரருளிச் செய்வது –
எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –2-9-4—சேஷ சேஷிகள் கலந்தால் சேஷ பூதனுக்கும் வருவதொரு ரசம் உண்டு இறே-அப்படியே அன்றியே நீ உகந்த அடிமை கொண்டு அருள வேணும்
ஸ் ரக் சந்த நாதிகளைப் போலே மிக்க அம்சம் கழிக்கலாய் இருக்கை–கீழ் முன்னிலையாய் போரச் செய்தே தனக்கே என்கிறது –முகத்தைப் பார்க்கில் நோக்கிலும் ஸ்மிதத்திலும் துவக்குண்டு அத்தாலே நிஷ்கர்ஷம் குலையும் என்று கவிழ்ந்து இருந்து கையோலை செய்து கொடுக்கிறார் –-எனக்கே ஆடச்செய் -என்கிற இடம் -அந்நிய சேஷத்வத்தை தவிர்க்கிறது தனக்கே யாக என்கிற இடம் -தன்னோடு தனக்கு உள்ள அன்வயத்தைத் தவிர்க்கிறது
ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1—சர்வ தேசத்திலும் -காட்டிலும் தொடர்ந்து அடிமை செய்த இளைய பெருமாளை போலே-மன்னி-சர்வ அவஸ்தையிலும் -உலகத்தோடு ஏகாந்தத்தோடு வாசி அற-வழு இலா அடிமை -சர்வ சேஷ வ்ருத்தியும்-செய்ய வேண்டும்-சாஸ்த்ரங்களால் இதுவே புருஷார்த்தம் என்று அறிக்கை போராது-அனுஷ்டான பர்யந்தமாக வேணும் –நாம்-திரு உள்ளத்தைக் கூட்டிக் கொள்ளுகிறார் ஆதல்-கேசவன் தமருக்கு பின்பு தனியர் அல்லாமை யாலே திரு உள்ளத்தோடு ஒக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கூட்டிக் கொண்டு சொல்லுகிறார் ஆதல்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்
ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ் வெய்துவர் வைகலுமே.–5-10-11—அனந்த சாயித்தவம் சர்வாதிக வஸ்துவுக்கு லக்ஷணம் ஆகையாலே -சர்வாதிகனே சரண்யன் என்கிறது -திரு வனந்த ஆழ்வானுடைய புருஷகார பாவம் சொல்லுகிறது என்றுமாம் –படுக்கையைச் சொல்ல படுக்கை யுடையாரைச் சொல்லிற்றாம் இறே
நம்பிரான் -ஆஸ்ரித விஷயத்தில் உபகார சீலனானவன் –சரணே சரண் நமக்கு என்று -நமக்கு திருவடிகளே உபாயம் என்று –அவதாரணத்தாலே உபாய நைரபேஷ்யம் சொல்லுகிறது -சம்சாரிக ஸ்வ பாவங்கள் மேலிட்டு விபரீதமே பலியா நின்றாலும் இது தவிர வேறு ஒன்றில் கால் தாழாது ஒழி கை -மஹா விச்வாஸம் ஆகிறது –நாடொறும் ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்-ஆக நூற்ற
நாள் தோறும் இதுவே மநோ ரதமான ஆழ்வார் -பகவத் குண பிரேரிதராய் தாம் உள்ராகைக்காக-
அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன் றில்லா அடியேன் உன் னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10-–சாஸ்திரங்களில் சொல்லுகிற உபாயாந்தரங்களில் அந்வயம் இன்றிக்கே அநந்யார்ஹ சேஷ பூதனான நான் -இத்தால் -அநந்ய கதித்வமும் ஸ்வரூப ஞானமும் ப்ரபத்திக்கு பரிகரம் என்கிறது-உன்னடிக் கீழ் -விக்ரஹ யோகம் சொல்லுகிறது-அமர்ந்து -செறிந்து -சஹகாரி வ்யவதானம் இன்றிக்கே ஒழிகை-புகுந்தேனே.–போக்கு வரவு யுண்டாய் அன்று -புத்தி கதியாய் அத்யாவசாயத்தை சொல்லுகிறது-
உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;
நும் இச்சை சொல்லி,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!
மன்னப் படுமறை வாணனை வண் துவராபதி
மன்னனை ஏத்துமின்! ஏத்துதலும்,தொழுது ஆடுமே.–4-6-10—உன்னித்து -மதித்து -நெஞ்சால் ஒன்றாக நினைத்து கிருஷ்ணனை ஒழிய வேறு ஒரு தேவதையை தொழாள்-வேறு ஒன்றை தேவதை என்று மதித்தல் தொழுதல் செய்யுமவள் அல்லள்-தேவதாந்தர்ய ஸ்பர்சம் பொறாத இவளுக்கே இந்த பரிஹாரம் பண்ணுவது
ஆகையால் பலத்திலும் ,சாதனத்திலும் ,தேவதாந்தரங்களிலும் ,-அவர்கள் பிரதி பத்தியும் இவர் பிரதி பத்தியும் இரண்டு தலையில் பேச்சில் தெரியும் என்கை-சகல வேத ஸங்க்ரஹமான திரு மந்த்ரத்திலே பிரதம பதத்தால் சேஷத்வைக நிரூபணியமாக பிரதி பாதிக்க பட்ட ஆத்மாவுககு ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தம் சரமபதத்தில் சதுர்த்தி யால் சொல்லப் பட்ட கைங்கர்யமே ஆகையாலும் , மத்யம பத பிரதிபாதிதமான பகவத் அத் யந்த பாரதந்த்ர்யதுக்கு தத் ஏக உபாயத்வம் ஒழிய ஸ்வ ரக்ஷண ஸ்வ பிரவ்ருத்தி சேராமையாலும் மத்யம அஷர பிரதிபாதிதமான ,பகவத் அனந்யார்ஹத்வதுக்கு
தேவதாந்தர அனுவர்தன கந்தமும் சகியாமையாலும் , பகவத் ப்ராப்தமே பலமாகவும் ,
ஸ்வ யத்ன ரூப கர்மாதிகள் உபாயமாகவும் , அஹங்கார யுக்த தேவதைகள் பகவத் விசேஷண தயா உபாதேயராகவும் கொள்ளுமது ஸ்வரூப யாதாம்ய தர்சிகளுக்கு பரித்யாஜமாய் இறே இருப்பது .-ஆன பின்பு பலாதி த்ரயத்தில் , அவர்கள் பிரதி பத்திக்கும் ,இவர் பிரதி பத்திக்கும் நெடு வாசி உண்டாகையால், இவ் வழியிலும் ,அவர்களில் இவர் அத்யந்த வ்யாவ்ருத்தர் என்றது ஆயிற்று-
—
ஆக தர்ம வீர்யேத்யாதி-சூரணை-58– தொடங்கி இது வரை இப் பிரபந்த வக்த்ரு வைலஷண்யம் பிரதி பாதித்து -இனி இப் பிரபந்த வைலஷண்யம் தன்னை பிரதிபாதிக்கிறார்-ஆக, இதுக்கு கீழ் வக்த்ரு வைலக்ஷண்யம் சொல்லிற்று – இனி மேல் ப்ரபந்த,வைலக்ஷண்யம் சொல்லுகிறது. அவர்கள் ப்ரபந்தங்களுக்கு கதாந்தர ப்ரஸ்தாவமுண்டு; இதுக்கில்லை என்னா நின்று கொண்டு இதினுடைய ஸார தமத்வம் சொல்லுகிறார் –
ஸ்ரீ ராமாயணம் ,நாராயண கதை என்று தொடங்கி , கங்கா காங்கேய சம்பவாத் யசத் கீர்த்தனம்
பண்ணின எச்சில் வாய் சுத்தி பண்ணாமல் , திரு மால் அவன் கவி என்றே , வாயோலை படியே
மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு உரிய சொல் வாய்த்த இது வேதாதிகளில் , பௌருஷ மாநவ கீதா வைஷ்ணவங்கள் போலே அருளிச் செயல் சாரம்-சூரணை -63-
அதாவது —
காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்னம் ஈத்ருசை : கரவாண்யஹம்—பாலகாண்டம் -2-42- ( ஸ்ரீ ராமாயணம் காவ்யம் முழுவதும் இத்தகைய ஸ்லோகங்களால் நான் செய்கிறேன் )என்றுஸ்ரீ ராம கதையை சொல்லுவதாக ஸ்ரீ ராமாயணம் என்று உபக்ரமித்து கங்கா சம்பவ ,ஸூப்ரஹ்மண்ய உத்பத்தி- புஷ்பக வர்ண ரூப கதைகளை பரக்கப் பேசுகையாலே ,அசத் கீர்த்தனம் பண்ணி , வாக் அசுத்தி வந்தது இறே
ஸ்ரீ வால்மீகி பகவானுக்கு —நாராயண கதாமிமாம்–பாரதம் ஆதிபர்வம் -என்கிற படி ,நாராயண கதை என்று உபக்ரமித்து சம்பவ பர்வதத்திலே காங்கேயரான ஸ்ரீ பீஷ்மருடைய உத்பத்தி தொடக்கமாக
அநேகருடைய உத்பத்தி பிரகாரங்களை ,விஸ்தரேண பிரதி பாதிக்கை யாலும் ,-பூசல் பட்டோலை -என்னும் படி பாரத யுத்த பிரகாராதிகளையே பரக்க நின்று வர்ணித்த படியாலும் ,அசத்கீர்தனத்திலே மிகவும் பரந்து ,அ சுத்த வாக்கை ,-அசத் கீர்த்தனா காந்தார பரிவர்த்தன பாம்ஸூலாம் ,வாசம் ஸௌரி கதா லாப கங்கயைவ புநீமஹே-ஸ்ரீ ஹரிவம்சம் –என்று –( பொருள் அல்லாதவற்றைப் பேசுதலாகிற காட்டிலே சுற்றியதால் புழுதி அடைந்த வாக்கினை ஸ்ரீ கண்ணபிரானுடைய சரிதையைச் சொல்லுதலாகிற கங்கை நீரால் தூய்மை ஆக்குகிறேன் ) –என்று அசத் கீர்தனமாகிற காட்டிலே ,அலைந்து புழுதி படைத்த வாக்கை ,பகவத் கதா லாபமாகிற கங்கையிலே ,சுத்தம் ஆக்குகிறேன் என்று சுத்தி பண்ணினான் இறே ஸ்ரீ வேத வியாச பகவான் .–-ஸ்ரீ வால்மீகி பகவான் இப்படி அனுதபித்து ,வாக் சுத்தி பண்ணிற்று இலன் ஆகிலும் , இந்த நியாயம் அவனுக்கும் ஒக்கும் என்று ,நினைத்து இறே இவர் கூட்டி எடுத்தது ..ஆக இப்படி உபக்ரமித்ததர்க்குச் சேராத படி அசத் கீர்த்தனம் பண்ணி ,வாக்கை அசுத்தை ஆக்கி அதுக்கு சுத்தி பண்ண வேண்டாதபடி ,-திரு மாலவன் கவி யாது கற்றேன் -திருவிருத்தம் –48-என்று ஸ்ரீய பதி என்று அடியிலே வாயோலை இட்ட பிரகாரத்திலே ,-
மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மது ஸூதன் அடி மேல் –திருவாய் -6-8-11-என்கிற படியே , அந்ய பரமான சப்தங்கள் ஒன்றும் ஊடு கலசாத படி சப்தங்களைத் தெரிந்து எடுத்து ,-உரிய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி திருவாய் -4–5-6-என்கிற படியே விஷயத்துக்கு தகுதியான சொல்லாலே
சொல்லப் பட்டதாய் ,-வாய்த்த வாயிரம்-திருவாய் -2-2-11-என்று வாஸ்யனான சர்வேஸ்வரனுக்கு வாய்த்த இப் பிரபந்தம் வேதேஷு பௌருஷம் ஸூக்தம்-தர்ம சாஸ்த்ரேஷூ மாநவம்-பாரதே பகவத் கீதா புராணேஷூ ச வைஷ்ணவம்–( வேதங்களில் புருஷ ஸூக்தமும் -தர்ம சாஸ்த்ரங்களுக்குள் மனுவால் சொல்லப்பட்ட மனு தர்ம சாஸ்திரமும் – மஹா பாரதத்தில் ஸ்ரீ கீதையும் -புராணங்களில் ஸ்ரீ விஷ்ணு புராணமும் ) என்று வேதங்களில் புருஷ சூக்தமும் ,-தர்ம சாஸ்த்ரங்களில் மனு பிரனீதமும் ,
மகா பாரதத்தில் ஸ்ரீ கீதையும் புராணங்களில் ஸ்ரீ விஷ்ணு புராணமும் சாரமாய் இருக்குமா போலே –
அந்யகதா கந்த ரஹிதமான அருளிச் செயலிலே சாரமாய் இருக்கும் என்கை--இத்தால்-தீதில் அந்தாதி -திருவாய் -8-2–11-என்கிற படியே கதாந்திர பிரஸ்தாப தோஷ ராஹித்யாலே , ஆர்ஷ பிரபந்தங்களில் ,வ்யாவிருத்தமாய் , பகவத் பிரதிபாதன சாமர்த்தியத்தாலே , பகவத் ஏக பரமான மற்றை ஆழ்வார் பிரபந்தங்களிலும் ,சாரமாய் இருக்கும் என்று இப் பிர பந்த வைலஷண்யம் சொல்லிற்று ஆயிற்று –
“காவ்யம் ராமாயணம் கருத்ஸ்நமீத்ருஸை கரவாண்யஹம்”‘ (ராபா. 2 – 42), “நமோ பகவதேதஸ்மை வயாஸாயாமித தேஜஸே | யஸ்ய ப்ரஸாதாத்,வஹ்யாமி நாராயண கத மிமாம்” (ப.ர.ஆதி;) என்றும் சொல்லுகிறபடியே இதிஹாஸ ஸ்ரேஷ்டமான ஸ்ரீராமாயணம் நாராயண கதை என்று தொடங்கி, கங்கையினுடைய வர்ணநமும், ஸுப்ரஹ்மண்ய கதையும், புஷ்பக வர்ணநமூமாய், ஸ்ரீமஹாபாரதத்தில் நாராயண கதை என்று தொடங்கி, கங்கையினுடையவும் ஸ்ரீபீஷ்மருடையவும் உத்பத்தி முதலான பூசல் பட்டோலையாய், *அஸத் கீர்த்தந காந்தார பரிவர்த்தந பாம்ஸுலாம்” (ஹரிவம்பே) என்கிறபடியே அஸத் கீர்த்தநம் பண்ணின எச்சில் வாயானது “வாசம் சவ்ரிகதா லாபகங்கயைவ புநீமஹே”’ என்று ஸூத்,தி, பண்ண வேண்டிற்றிறே அவர்களுக்கு. “ஸா ஜிஹ்வா யா ஹரிம் ஸ்தெளதி”’ (வி.த,ர்மே 1) என்றும், “வாயவனை யல்லது வாழ்த்தாது”” (மு.திரு11) என்றும் சொல்லுகிற இவர் நாக்குக்கு பகவத் வ்யதிரிக்தமான வர்ணநம் உச்சிஷ்டமிறே.-இவருடைய ப்ரபந்தத்தில் அப்படி எச்சில் வாய் ஸூத்தி பண்ண வேண்டாதே திருமாலவன் கவி யாது கற்றேன்’‘( திருவிரு. 48) என்று வாயோலை யிட்டாப் போலே மாற்றங்களாய்ந்து கொண்டு”’ (திருவா. 6 – 8- 11) என்கிறபடியே எல்லாச் சொற்களும் புறம்பு அந்ய பரங்களாயிராதே ஸர்வமும் *“உரிய சொல்லாலிசை மாலைகளேத்தி’* (திருவா. 4 – 5 – 6) என்கிறபடியே அவனுக்கு ப்ராப்தமான சொல்லாய் “*வாய்த்த வாயிரத்துள்”’ (திருவா. 2 – 2 – 11) என்கிறபடியே வாச்யனுக்கு வாய்த்த ப்ரபந்தம்; (வேதாதிகளில்) வேத ஸாஸ்த்ரேதிஹாஸ புராணங்களில் வைத்துக் கொண்டு “வேதேஷு பெளருஷம் ஸூக்தம் தர்மமமாஸ்த்ரேஷு மாநவம் ! பாரதே பகவத் கீதா புராணேஷு ச வைஷ்ணவம்”’ என்கிறபடியே வேதத்தில் ஸாரமான ஸ்ரீபுருஷ ஸூக்தம் போலேயும், தர்ம ஸாஸ்த்ரத்தில் மநு ப்ரணீதமானது ஸாரமானாப் போலேயும், ஸ்ரீமஹா பாரதத்தில் கீதை ஸாரமானாப் போலவும், புராணங்களில் வைத்துக் கொண்டு ஸ்ரீவிஷ்ணுபுராணம் ஸாரமானாப் போலவும், அருளிச்செயலில் வைத்துக் கொண்டு இத் திருவாய்மொழி ப்ரபந்தத்தினுடைய ஸார தமத்வம் சொல்லிற்று
வாய் அவனை அல்லது வாழ்த்தாது கை யுலகம்
தாயவனை அல்லது தாந்தொழ பேய் முலை நஞ்
சூணாக வுண்டான் உருவோடு பேர் அல்லால்
காணாக் கண் கேளா செவி —11-–நீ அளவிதாம் படி அமையும் காண் என்றாலும் கேளாது-என்னிலும் காட்டிலும் அவன் எங்குற்றான் என்று பார்க்கிற என்னுடைய வாக் இந்த்ரியமானது அவனை ஒழியப் புகழாது –
மெல்லியல் ஆக்கைக் கிருமி குருவில் மிளிர் தந்தாங்கே
செல்லியசெல் கைத்துலகை என் காணும் என்னாலும் தன்னைச்
சொல்லிய சூழல் திருமாலவன் கவியாது கற்றேன்
பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ வுண்டு பண்டு பண்டே-48 —திரு மால் –இந்த ஆச்சர்ய சக்தி தான் புறம்பு கிடவாதே –இவ்வாஸ்ரயத்தில் கிடக்க வேண்டுவான் என் என்னில் – ஸ்ரீய பதி ஆகையாலே –திருமாலவன் கவி –அவனும் அவளுமான சேர்த்திக்கு தகுதியான கவி –இத்தால் – ஸ்ரீ ராமாயணத்தில் வ்யாவ்ருத்தி சொல்லுகிறது –ஸீதாயாஸ் சரிதம் மகத்-என்று தொடங்கச் செய்தே அவளை ஒழிய-தனியே இறே இருந்து கேட்டது –1-யாது கற்றேன் -என்னுதல் –2-ஆறு கற்றேன் என்னுதல் –3-அவன் கவி யாது கற்றேன் என்னுதல் –4-யாதொன்று நான் கற்றது -அது திருமாலவன் கவி -என்னுதல் –யாது ஓன்று நான் கற்றது -எந்த சிறியத்தையும் நான் கற்றாலும் அதுவும் திருமாலவன் கவியே-ஆறு -ஸமஸத்தையும் கற்றேன்–கற்றேன் -என் முன் சொல்லும் -என்கிறபடியே அவன் முன்னே சந்தை இட – நான் பின்னே சொன்னேன் இத்தனை-
மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மதுசூதபிரான் அடிமேல்
நாற்றங்கொள் பூம்பொழில் சூழ் குருகூர்ச்சட கோபன்சொன்ன
தோற்றங்க ளாயிரத்துள் இவையும்ஒரு பத்தும்வல்லார்
ஊற்றின்கண் நுண்மணல்போல் உருகாநிற்பர் நீராயே.–6-8-11-நல்ல சொற்களை தெரிந்து கொண்டு -இத் தசையிலும் வாசக சப்தங்கள் விலக்ஷணமாய் இருக்கிற படி –சோக ஸ்லோகத்வமாகத -என்கிறபடியே –விரோதிகளை போக்கி தன்னை யுபரிக்குமவனை யாயிற்று கவி பாடிற்று-
கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும்
பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேற்கு
அரியது உண்டோ எனக்கு இன்று தொட்டும் இனி என்றுமே?–4-5-6-இவ்விஷயத்துக்கு நேரே வாசகமான சொல்லாலே-இசைமாலைகள்-ஸம்ஸரவே மதுரம் வாக்கியம் என்னும் படி திருச் செவி சாத்தலாய் இருக்கை-ஏத்தி உள்ளப்பெற்றேற்கு-ஏத்தி அனுபவிக்கப் பெற்ற எனக்கு அரியது உண்டோ-நான் பெறாதே இனி பெற வேண்டி இருப்பது ஒரு பொருள் உண்டோ-எனக்கு-ஈஸ்வரோஹம் என்று இருக்கிற சம்சாரத்தில் சேஷத்வம் ரசிக்கப் பெற்று ஸ்வரூப அநு ரூபமாக வாசிகமான அடிமை செய்யப் பெற்று வினை நோய்கள் கரியவே -என்று விரோதியும் கழிக்கப் பெற்ற எனக்கு-
ஏத்த வேழுலகும் கொண்ட கோலக்
கூத்தனை குருகூர்ச் சடகோபன் சொல்
வாய்ந்த வாயிரத்துள் இவை பத்துடன்
ஏத்த வல்லார்க்கு இல்லையோ ரூனமே –2-2-11—வாய்ந்த வாயிரம் – ஈஸ்வரனுக்கு இதுவும் ஓர் ஐஸ்வர்யம் ஆயிற்று நேர் பட்டது-சொல் வாய்ந்த வாயிரம் – வாஸ்யத்தில் காட்டில் வாசகம் நேர் பட்டது என்றுமாம் -அதாவது விஷயத்தை உள்ள அளவும் பேச வற்றாய் இருக்கை-உடனே ஏத்த வல்லார்க்கு –
சாபிப்ராயமாக சொல்லுமவர்க்கு –அல்லாதாருடைய அநீஸ்வரத்தையும் இவனுடைய பரத்வத்தையும் சொல்லுகிறது ஆகையால் அபிப்ராயத்தோடே கற்க வேணும் என்றதாயிற்று-இல்லையோ ரூனமே-
தேவதைகளோடு ஓக்க நினைத்தால் -அவர்களுக்கு உத்கர்ஷத்தை நினைத்தல் –இவனுக்கு அபகர்ஷத்தை நினைத்தல் -இவை யாயிற்று ஊனம்-அவை இவர்களுக்கு இல்லை -தேவதாந்த்ர ஸ்பர்சம் ஆயிற்று சம்சார பீஜம் –
பாதமடை வதன் பாசத்தாலே மற்றவன்பாசங்கள் முற்ற விட்டு
கோதில் புகழ்க் கண்ணன் தன்னடி மேல் வண் குருகூர் சடகோபன் சொன்ன
தீதில் அந்தாதி ஓர் ஆயிரத்துள்இவையுமோர் பத்திசை யோடும் வல்லார்
ஆதுமோர் தீதிலராகி இங்கு மங்கு மெல்லாம் அமைவார்கள் தாமே–8-2-11—பிரபந்தத்துக்கு தீதாவது –கதான்தர ப்ரஸ்தாவம்-ராம வ்ருத்தாந்தத்தை சொல்லப் புக்கு ஸூ ப்ரஹ்மண்ய உத்பத்தி -புஷ்ப்பக வர்ணன் இவற்றிலே இழிகையும்-நாராயண கதாமிமாம் என்று சொல்லி விட்டு விட்டார் விட்ட அம்பு எண்ணுகையும் இவை –
—
இனி மேல் இப்படி அருளிச் செயலில் சாரமான இதன் ப்ரமாண்ய அதிசயத்தை
பிரகாசிப்பைகாக ,ஆழ்வார்களுடைய ஐக கண்ட்யைத்தையும் ,அவர்களில் தலைவரான இவர்
அருளிச் செய்த இப் பிரபந்ததினுடைய பிராபல்யத்தையும் ,பிரதி பாதியா நின்று கொண்டு ,
ஏவம் பூதமான விதுக்குச் சேராத சாஸ்திரங்கள் பரீஷக பரித்யாஜ்யங்களாம் படியை அருளிச் செய்கிறார் –ஆனால் இவ்வாழ்வார்களுடைய ப்ரபந்தங்களும் பரஸ்பர விருத்தங்களாயிருக்குமோ என்ன, இவர்களெல்லாரும் ஏக கண்டராகையாலே எல்லாம் ஏகரர்த்த ப்ரதிபாதகங்களுமாய், எல்லா ப்ரபந்தங்களும் இவருடைய ப்ரபந்தத்தைப் பின் செல்லும்படியான வைபவத்தை உடைத்தாய், இத்தோடு சேராத ஸாஸ்த்ரங்களெல்லாம் த்யாஜ்யங்களா யிருக்குமென்று இதினுடைய ப்ராமாண்யம் சொல்லுகிறது –
குரு சிஷ்ய கிரந்த விரோதங்களை பரமதாதிகளாலே பரிஹரியாமல் செஞ்சொல் செம்தமிழ் இன் கவி
பரவி அழைக்கும் என்று அந்யோந்யம் கொண்டாடி பேசிற்றே பேசும் ஏக கண்டரில் என்னில் மிகு வென்னும் இவர் உரை கொள் இன் மொழி கொண்டு சாஸ்த்ரார்தங்களை நிர்ணயிக்க வேண்டுகையாலே வலம் கொண்டு இதுக்கு சேராதவை மநு விபரீதங்கள் போலே-(விலக்கப்படுவனவாம் )-சூரணை -64-
அதாவது –
ருஷிகளில் ,குரு சிஷ்யர்களான வியாச ஜைமிநிகளில் , குருவான வியாசனுடைய கிரந்தமான ,ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரத்தோடு சிஷ்யனான ஜைமினி உடைய கிரந்தமான கர்ம ஸூத்ரத்தோடு நிரீஸ்வர வாதாதிகளால் ,வந்த விரோதத்தை , சம்பத் தேரிதி , ஜைமினி–ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்–1-2-32–
( பிராணா ஹூதி ஹோமங்களை அக்னி ஹோத்ர ஹோமங்களாக செய்வதற்காக உபாசகனுடைய
மார்பு முதலான உறுப்புகளை நெருப்பு களாக கூறியுள்ளது என்று ஜைமினி சொன்னார் )
அன்யார்த்தம் து ஜைமினி–ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்– 1-4-18-( வேறு பயனுக்காகவே இங்கு ஜீவனைச் சொல்லுகிறது என்று ஜைமினி சொல்கிறார் )பரம் ஜைமினி முக்யத்வாத்—ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்– 4-3-11-
( பர ப்ரஹ்மத்தை உபாசிக்கின்றவர்களையே ஆதி வாஹிகர்கள் அழைத்துக் கொண்டு போகிறார்கள் என்று ஜைமினி எண்ணுகிறார்-ப்ரஹ்ம கமயிதி என்ற இடத்தில் உள்ள ப்ரஹ்ம சப்தம் ப்ரஹ்மத்தின் இடமே முக்கியமாக இருப்பதால் )ப்ராஹ்மனே ஜைமினி –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்-4-4 -5-( ப்ரஹ்ம சம்பந்தியான அபஹத பாப்மத்வம் முதலான குணங்களோடு முக்தன் தோன்றுகிறான் என்று
ஜைமினி சொல்லுகிறார் ) இத்யாதியான ,ப்ரஹ்ம ஸூத்தரங்களாலே ஜைமினிக்கு ப்ரஹ்ம ஸ்வரூப தத் குண தத் உபாசன தத் பலாதிகளின் உடைய அங்கீகாரம் உண்டு என்னும் இடமும் தோற்றுகையாலும் ,மகா பாரதத்திலே ,ஹய சிர உபாக்யானாதிகளிலே பகவத் வியாச உபதேச லப்த
பரமாத்மா தத்வ ஞானம் உடையவனாய் சொல்லுகையாலும் , ஸ்ரீ வேத வியாசனும் ஜைமினியும் ஏக கண்டர்கள்.-இனி தேவதா நிராகரணம் பண்ணின இது ,ஈஸ்வர பிரநீதமாக வேதத்தை சிலர் சொல்லுகையாலே ,அந்த பௌ ருஷேத்வம் அடியாக விப்ரலம்பாதி தோஷங்களை கல்பித்து வேத அப்ராமண்யம் சொல்லுவது , வைதிக கர்மங்களை ,நிந்திப்பதாகிற பாஹ்யரை நிராகரித்து ,
வேத ப்ராமண்ய கர்மா அவச்ய ,கர்தவ்யைகளை சாதிக்கையில் உண்டான இச்சையாலே
ஸ்வ மதம் அன்றிலே இருக்க பரம பதத்தை அவலம்பித்து சொன்னான் என்றாதல் ..
அன்றிக்கே -தேவதா நிராகரணத்தில் ,தாத்பர்யம் இல்லை ..–அஸ்ருத வேதாந்தருக்கு கர்மத்தில் ,அச்ரத்தையை நிவாரிக்கைக்காக , கர்ம பிரதாண்யம் சொல்லுகையிலே தாத்பர்யம் ஆகையாலே ,
நஹி நிந்த்யா நிந்த்யம் நிந்திதும் ந பிரவர்த்ததே நிந்திதாத் இதரத் பிரசம்கிதம் -(நிந்தையானது நிந்திக்கும் பொருளை நிந்திப்பதற்கு வரவில்லை – நிந்திக்கும் பொருளைக் காட்டிலும் வேறான ஒரு பொருளைத் துதிப்பதற்காக வந்தது ) –என்கிற ந்யாயத்தாலே , தேவதா நிரகரணம் பண்ணின இது ,கர்ம பிரசம்சார்த்தம் ஆகையாலே அந்ய பரம் என்றாதல் கொள்ள வேணும் என்று இப்படி பரமத அன்ய பரத்வங்களால் பரிஹரிக்க வேண்டிற்று இறே .( கர்மங்களை அவசியம் செய்ய வேண்டும் என்பதன் பொருட்டு ஆகையால் கடவுள் இல்லை என்று கூறின இது வேறு ஒன்றிலே நோக்கு என்றாதல் கொள்ள வேண்டும் -என்று இப்படி பிறர் தம் மதம் மேற்கொண்டு கூறினார் – வேறு ஒன்றினை உட்க்கொண்டு கூறினார் என்று பரிஹாரம் செய்ய வேண்டுமே )
ருஷிகளில் குரு ஸிஷ்யர்களான வ்யாஸ ஜைமிநிகளில் குருவான வியாஸனுடைய க்ரந்தமான ப்ரஹ்ம ஸூத்ரத்துக்கு ஸிஷ்பனான ஜைமிநி க்ரந்தமான கர்ம ஸூத்ரத்தில் நிரீஸ்வர வாதத்தால் வந்த விரோத,த்தை வ்யாஸன் தானே “’ஜைமீிநி ராசார்யோ மந்யதே”’ என்று ஆப்தமாக எடுக்கையாலே இருவரும் ஏக கண்டர்; இனி நிரீஸ்வர வாதம் சொன்னது – வைதிக க்ரியைகளை நாஸ்திவாதம் பண்ணுகிற பாஹ்யரை நிராகரிக்கைக்காக பர மதத்தை அதிஷ்டித்துச் சொன்னானென்று பரிஹரிக்க வேண்டிற்று அங்கு.
அப்படியே
இங்கும் அந்யோந்ய வசன விரோதம் உண்டாய் ,அதுக்கு பரிகாரம் பண்ண வேண்டாத படி
செஞ்சொல் கவிகாள்–திருவாய் -10-7-1-என்றும்
செம் தமிழ் பாடுவார் தாம் வணங்கும் -பெரிய திருமொழி -2-8-2–என்றும்
இன் கவி பாடும் பரம கவிகள்-திருவாய் -7-9-6 -என்றும்
பதியே பரவித் தொழும் தொண்டர் -பெரிய திருமொழி -7–1-7-என்றும்
அரங்காவோ என்று அழைக்கும் தொண்டர் -பெருமாள் திருமொழி -2-2–என்றும் பரஸ்பரம் ஸ்லாகித்து கொண்டு ,–பேசிற்றே பேசல் அல்லால்–திருமாலை -22- -என்ற படியே ஒருவர் பேசினதே எல்லாரும் பேசும் ஏக கண்டரான ஆழ்வார்களில் வைத்து கொண்டு-என்னில் மிகு புகழார் யாவர் –பெரிய திருவந்தாதி –4-என்று சேஷிக்கு அதிசயகராகப் பெற்ற ப்ரீதி பிரகர்ஷத்தாலே என்னில் காட்டில் மிக புகழ் உடையார் ஆர் என்னும் சர்வாதிகரான இவருடைய –உரை கொள் இன் மொழியாளை-திருவாய் -6-5–3- -என்கிற படியே ஸ்ரீ ராமாயணாதிகளையும் ஸ்வ வைலஷண்யத்தாலே ஜெயிக்கும் படியான
சக்திகளைக் கொண்டு வேத தத் உப ப்ரும்ஹண ரூப சாஸ்த்ரங்களில் ,சம்சயிதமான அர்த்தங்களை நிர்ணயிக்க வேண்டும் படியாய் இருக்கும் ஆகையாலே –வலம் கொண்ட வாயிரம்–திருவாய் -3–8-11-என்கிற படியே பிரதி பாத்ய வஸ்துவை உள்ள படியே பிரதி பாதிக்க வல்ல சாமர்த்தியத்தை உடைத்தான இப் பிரபந்தத்துக்கு சேராத சாஸ்திரங்கள் –மன் வர்த்த விபரீதா து யா ஸ்ம்ருதிஸ் ஸா ந சஸ்யதே –
( எந்த ஸ்ம்ருதியானது மனுவினால் சொல்லப்பட்ட பொருளுக்கு மாறுபட்டு இருக்கிறதோ அது புகழப்படுவது இல்லை ) என்று சொல்லப் பட்ட மநு விபரீதமான ஸ்ம்ருதிகள் போலே கழிக்க படும் என்கை-
இதுக்கு அப்படிப் பரிஹரிக்க வேண்டாதபடி ”சென்சொற் கவிகாள்’” (திருவா. 10 – 7 – 1) என்றும், ‘‘செந்தமிழ் பாடுவார்தாம்”” (திருமொழி 2 – 8 – 2) என்றும், “இன்கவி பாடும் பரம கவிகள்” (திருவா. 7 – 9 – 6] என்றும், “பாலேய் தமிழரிசைகாரர் பத்தர் பரவுமாயிரம்”’ (திருவா. 1 – 5- 11) என்றும், ““பரவித்தொழும் தொண்டர் தமக்குக்கதி?’ [திருமொழி 7 – 1 – 7) என்றும், *’அழைப்பன் திருமாலை ஆங்கவர்கள் சொன்ன பிழைப்பில் பெரும் பெயரே பேசி” (இ. திருவ. 50) என்றும், * அரங்கவோ என்றழைக்கும்?” (பெரு. தி, 2 – 2) என்றும் சொல்லுகிறபடியே அந்யோந்யம் கொண்டாடி “பேசிற்றே பேசலல்லால்“‘ (திருமாலை 22) என்று ஏக கண்டராகையாலே ஏகார்த்த ப்ரதிபாதகரான இவர்களில் வைத்துக் கொண்டு, ‘ “என்னில் மிகு புகழார் யாவரே?” (பெ. திருவ. 4) என்கிறபடியே தாஸ்ய ஹ்ருஷ்டோக்தியை உடையரான இவருடைய “உரை கொளின்மொழி’” (திருவா. 6 – 5 – 9) என்கிறபடியே “அது அது’ என்று வாய் புலற்றும் படியாகப் பேச்சுக்கு அவிஷயமாய்-மாற்று முறையு மற்றிருப்பதாய், ஸ்ரீராமாயணத்திலுங் காட்டில் இனிமையை உடைத்தாயிருக்கிற இவருடைய உக்திகளைக் கொணடு தத்வ ஹித புருஷார்த்தங்களை ப்ரதிபாதி,க்கிற வேதாந்த ஸாஸ்தரங்களில் ஸம்ஸயித்தவற்றை நிர்ணயிக்க வேண்டும்படி இருக்கையாலே “சொல் வலங்கொண்ட” (திருவா. 53. 9. 11) என்கிறபடியே அர்த்த ப்ரதிபாதந ஸாமர்த்யத்தை உடைத்தான இப் ப்ரபந்தத்தோடு சேராதவை யாவை சில ஸமாஸ்த்ரங்கள், அவை, **மந்வர்த்த விபரீதா து யா ஸ்ம்ருதிஸ்ஸா ந ஸஸ்யதே” என்று மநு விபரீதமான ஸ்ம்ருதிகளைப் போலே கழிக்கப்படுகிறது-
செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் திருமால் இரும் சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே–10-7-1—செவ்விய சொல்லை யுடைய கவிகாள் -கவிக்குச் செவ்வை யாகிறது –அநந்ய பிரயோஜனமாய் இருக்கை -பிரயோஜனத்தைக் கணிசிக்கை கவிக்கு குடிலம் ஆகையாவது –இன் கவி பாடும் பரம கவிகள் -என்றும் –செந்தமிழ் பாடுவார் என்றும் -சொல்லுகிற முதல் ஆழ்வாரைகளை யாய்த்து நினைக்கிறது –பெரும் தமிழன் அல்லேன் -என்னா- வாய் அவனை அல்லது வாழ்த்தாது -என்கிறவர்கள் இறே அநந்ய பிரயோஜனர் –
வெந்திறல் வீரரில் வீரர் ஒப்பார் வேதமுரைத்து இமையோர் வணங்கும்
செந்தமிழ் பாடுவார் தாம் வணங்கும் தேவர் இவர் கொல் தெரிக்க மாட்டேன்
வந்து குறள் உருவாய் நிமிர்ந்து மாவலி வேள்வியில் மண்ணளந்த
அந்தணர் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-2-பெருகு மத வேழம் என்கிறபடியே கலப்பற்ற பசும் தமிழ் பாடும் முதல் ஆழ்வார்கள் –
இன் கவி பாடும் பரம கவிகளால்
தன் கவி தான் தன்னைப் பாடுவியாது இன்று
நன்கு வந்து என்னுடன் ஆக்கி என்னால் தன்னை
வன் கவி பாடும் என் வைகுந்த நாதனே.–7-9-6–தன்னை கவி பாடுவித்துக் கொள்ள நினைத்தால்-பராசர வ்யாஸ வால்மீகிகள் ஆதல் –செந்தமிழ் பாடுவார் என்னும் முதல் ஆழ்வார்கள் ஆதல் அன்றோ பாத்ர பூதர் -அவர்களை ஒழிய –
மாலே மாயப் பெருமானே மா மாயனே என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே –-1-5-11-பாலேய் தமிழர்-பாலோடு ஒத்து உள்ள தமிழ் அறிவார்-இசைகாரர் இசை அறிவார்-பத்தர் பரவும்-சர்வேஸ்வரனும் ஆழ்வாருமான பரிமாற்றத்திலே கால் தாழ்ந்து இருக்குமவர்கள்-பாலேய் தமிழர் –என்கிறது முதல் ஆழ்வார்களை
இசைகாரர் –என்கிறது ஸ்ரீ மதுர கவிகள் போல்வாரை-பத்தர் -என்கிறது பெரியாழ்வார் போல்வாரை
ஸ்ரீ பராங்குச நம்பி -ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் பிள்ளை யுறங்கா வல்லி தாசர் போல்வர் என்னுமாம் -ஆழ்வான் ஓர் உருவிலே–
அழைப்பன் திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன
பிழைப்பில் பெரும் பெயரே பேசி -இழைப்பரிய
வாயவனே யாதவனே என்றவனை யார் முகப்பும்
மாயவனே என்று மதித்து —50-சிறியாத்தான் -த்வயத்தில் ஆநு பூர்வி பிரதானம் -அவைகளை நினைத்து பிரசன்னனாம் – அர்த்தம் விட சொற்களே முக்கியம் -அவற்றை கேட்டே எம்பெருமான் மகிழ்வான் -என்றபடி –ரிஷிகள் கோஷ்டியில் -ய படேத் ராமசரித்ரம் சர்வ பாபி ப்ரமுச்யதே -பால -1-97- என்று பாவனமாய் இருக்கும்-ஆழ்வார்கள் கோஷ்டியில் அது நச்சுப் பொய்கை –-உயிர்க்கு அது காலன் என்று இரந்தேற்க்கு நீர் குயில் பைதல்காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் – திருவாய் -9-5-8-என்னக் கடவது இறே-
தோடுலா மலர் மங்கை தோள் இணை தோய்ந்ததும் சுடர் வாளியால்
நீடு மா மரம் செற்றதும் நிரை மேய்த்ததும் இவையே நினைந்து
ஆடி பாடி அரங்காவோ! என்று அழைக்கும் தொண்டர் அடி பொடி
ஆட நாம் பெறில் கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை என்னாவதே ?–2-2-இந்த சீலாதி குணங்களையே நினைந்து இவற்றை நினைக்கும் அது ஒழிய வேறொரு பிரயோஜனத்தையும் கணிசியாதே –ப்ரீதி பிரகர்ஷத்தாலே இருக்க மாட்டாதே ஆடிப்பாடி-ஸ்ரீ பெருமாள் திரு நாமத்தைச் சொல்லி யாற்ற மாட்டாதே கூப்பிடும்-பகவத் குண வித்தரான ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய பாத ரேணுக்களிலே அவகாஹிக்கப் பெறில்-
பேசிற்றே பேசல் அல்லால் பெருமை ஓன்று உணரலாகாது
ஆசற்றார் தங்கட்கு அல்லால் அறியலாவான் அவனும் அல்லன்
மாசற்றார் மனத்து உளானை வணங்கி நாம் இருப்பது அல்லால்
பேசத்தான் ஆவது உண்டோ பேதை நெஞ்சே நீ சொல்லாய்–22-நீல தோயாத மத்யஸ்தா வித்யுல்லகேவ-என்றும்-நீலமுண்ட மின்னன்ன மேனி -என்றும்-அதஸீ புஷ்ப சங்காசம் -என்றும்-ஹிரண்மய புருஷோ த்ர்சயே -என்றும்-ருக் மாபம் -என்றும் சுட்டு உரைத்த நன் பொன் உன் திரு மேனி ஒளி ஒவ்வாது -இத்யாதி –வேதங்கள் பேசும் படியே பேசும் அத்தனை அல்லது நம்மால் பேச முடியாது –அப்ராப்ய -என்று பேசின இத்தனை அப்படியே பேச ஒண்ணாது என்று பேசும் அத்தனை என்றுமாம்–ஆசற்றார் நம் ஆழ்வார் போல்வார்-நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று ஏக சிந்தையராய் இருக்கும் சித்தோபாய விசுவாசிகள்-மாசற்றார் பெரியாழ்வார் போல்வார்
வடதடமும் வைகுந்தமும் மதிள் த்வாராபதியும் இடவகைகள் இகழ்ந்திட்டு என்பாள் இடவகை கொண்டனையே -என்றபடி நித்யவாசம் செய்து அருளுபவன் என்று சொல்லிக் கொண்டு வணங்கினால் நமக்குள்ளும் நித்ய வாஸம் செய்து அருளுவான்-
என்னின் மிகு புகழார் யாவரே பின்னையும் மற்று
எண்ணில் மிகு புகழேன் யான் அல்லால் –என்ன
கருஞ்சோதிக் கண்ணன் கடல் புரையும் சீலப்
பெருஞ்சோதிக் கென்னஞ்சாள் பெற்று -4—என்னில் காட்டில் மிக்க புகழை யுடையார் எவர் என்றுமாம்
(ஆத்மா அணு -கீர்த்தியோ விபூவாகி எட்டுத்திக்கிலும் பரவி உள்ளது –என் தன் அளவு என்றால் யானுடைய அன்பு பூதத்தாழ்வார் போல் இங்கும் -ஆஸ்ரயத்தில் (ஆத்மாவில் ) அடங்காத புகழை யுடையேன் யானே யன்றோ-அளவிறந்த சீலத்தை யுடைய ஸர்வேஸ்வரனுக்கு அதிசயத்தைப் பண்ணப் பெற்று இருக்கிற என்னில் காட்டில் மிக்க புகழை யுடையார் யார் –
கரைகொள் பைம்பொழில் தண்பணைத் தொலை வில்லி மங்கலம்கொண்டுபுக்கு
உரைகொள் இன்மொழி யாளை நீர்உமக் காசை யின்றி அகற்றினீர்
திரைகொள் பௌவத்துச் சேர்ந்ததும்திசை ஞாலம் தாவி அளந்ததும்
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடுங்கண் நீர்மல்க நிற்குமே.–6-5-3—கேட்டார் அடங்க இது ஒரு பேச்சே என்று கொண்டாடும்படியான இனிய மொழியை யுடையவள் என்னுதல் –அர்த்தத்தில் இழியா வேண்டாதே சப்தமே அமைந்து இருக்கும் என்னுதல் -பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரம் –என்று நின்றார் நின்ற துறைகளில் ஈடுபடும்படி இருக்கை –மாற்றும் உரையும் அற்ற பேச்சு என்னுதல் -உரை என்று -“-“பாட்யே கேயே ச மதுரம் பிரமாணை: த்ரிபி: அந்விதம்–படிப்பதிலும் இசையுடன் பாடுவதிலும் இனிமையோடு கூடியதும்” என்னும்–ஸ்ரீ ராமாயணமாய் அது குத்துண்ணும் படி இருக்கும் என்னுதல்–
புலம்பு சீர்ப் பூமி யளந்த பெருமானை நலங்கொள் சீர் நன் குருகூர்ச் சடகோபன் சொல்
வலங்கொண்ட வாயிரத்துள் இவையுமோர் பத்து இலங்குவான் யாவரும் ஏறுவர் சொன்னாலே –3-8-11-இருந்ததே குடியாக ஏத்தும் படியான குணங்களை உடையனாய் தன் விபூதியை அளந்து கொள்ளுகையினாலே ஸ்வாமி யானவனை யாய்த்து கவி பாடுகிறது-இதில் சொன்ன பேறு விடாயை உடைய ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திகள் -ப்ரதிபாத்யனை விளாக் குலை கொண்டு இருக்கும் -என்னுதல்
ப்ரதிபாதன சாமர்த்யார்த்த்தை உடைய ஆயிரம் என்னுதல்-
—
இப்படி இது கொண்டு சாஸ்திர அர்த்தங்கள் நிர்ணயித்தவர் யார் என்னும் அபேஷையிலே அருளிச் செய்கிறார் .-
பாஷ்யகாரர் இது கொண்டு சூத்திர வாக்யங்கள் ஒருங்க விடுவர்-சூரணை -65–
அதாவது
ஸ்ரீ பாஷ்ய காரர் ஸ்ரீ பாஷ்யம் பண்ணி அருளும் பொழுது ஸூத்திர வாக்யங்களில் சந்நிதிக்தங்களான அர்த்தங்கள் எல்லாம் இப் பிரபந்தத்தில் ,ஸூக்திகளைக் கொண்டு நிர்ணயித்து ஒருங்க விட்டு அருளுவர் என்கை-( பேத சுருதி -அபேத சுருதி -ஒருங்க கடக சுருதி -தத்வ த்ரயம் -பேதம் -விஸிஷ்ட அத்வைதம் -ப்ரஹ்மாத்மகம் – சரீராத்மா பாவம் -சாமானாதி கரண்யம் -பின்ன பிரவ்ருத்தி நிமித்தம் -காரிய காரண நிபந்தம் – த்ரிவித காரணம் -உபாதானமாக இருந்தும் நிர்விகாரம் -சரீரம் மாறலாம் ஆத்மா விகாரம் அடையாமல் -விஸிஷ்ட ப்ரஹ்மம் இல்லதும் உள்ளதும் அல்லது அவன் உரு -இப்படிப்பட்ட உரு இல்லை -உருவமே இல்லை என்பது இல்லை-அசித் சித் விலக்ஷணன்-வியாப்ய கத தோஷம் இல்லாதவன் –உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்-யானே நீ என் உடைமையும் நீயே –நீராய் நிலனாய் –சிவனாய் அயனானாய்-பரன் திறம் அன்றி பல்லுலகீர் தெய்வம் மற்று இல்லை -பிரகார பிரகாரி பாவம்-உரு பெரும் செல்வமும் இத்யாதி –மாறன் தமிழ் ஆரணமே )
ஆகையாலே பாஷ்யகாரர் இப் ப்ரபந்தங் கொண்டு ஸூத்ர வாக்யங்கள் ஒருங்கவிடுவர்” என்கிறார்–
—
அவர் தாம் அருளிச் செய்து அருளுகைக்கு மூலம் எது என்னும் -வேதாந்த ஸூத்ரங்களைக் கொண்டு இதிலர்த்தங்களைக் கடிப்பியாதே இப் ப்ரபந்தத்தைக் கொண்டு வேதாந்த ஸூத்ரங்களை கடிப்பிப்பானென் என்னில்அபேஷையில் அருளிச் செய்கிறார் மேல் ..
அதுக்கு மூலம் விதயச்ச என்கிற பரமாச்சார்ய வசனம்-சூரணை -66-
அதாவது
ஸ்ரீ பாஷ்ய காரர் அப்படி செய்து அருளுகைக்கு அடி –விதயச்ச வைதிகாஸ் த்வதீய கம்பீர மனோ னுசாரின-ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -20- (த்வதீயர் -பாகவதர்கள் -பக்தர்கள் வேதத்தில் சொல்லப்படுகின்ற விதிகள்-வேத வாக்கியங்கள் – தேவரீரைச் சரணமாகப் பற்றி இருக்கின்ற பெரியோர்களுடைய கம்பீரமான மனத்தினை அனுசரித்தவைகளாக ஆகின்றன -என்று இதம் குரு -இதம் மகார்ஷீ -ஆரணம் -( இதனைச் செய்க இதனைச் செய்யற்க )-என்கிற ஸ்வதந்த்ரமான வைதிக விதிகளும் , அநந்ய பிரயோஜனராய் ஆஸ்ரயித்து இருக்கும் த்வதீயருடைய ஐஸ் வர்யாதிகளால் கலக்க ஒண்ணாத படி கம்பீரமான மனசை பின் செல்லும் என்று -இந்த ஸ்ரீ ஆழ்வார் போல்வார் நினைவை சாஸ்திரங்கள் தான் பின் செல்லுமதாக பரம ஆசார்யரான ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த வசனம் என்கை-
*“வைதிகா: வித யஸ்ச த்வதீய கம்பீர மநோநு ஸாரிண?”” என்று கொண்டு ‘இத,ம் குர்யாத் இதம் ந குர்யாத்”, “விஜ்ஞாய ப்ரஜ்ஞாம் குர்வீத”” (ப்,ரூ. 6 – 4 – 21), “த்யாயத,”‘ (மூ. 2- 2- 6), “‘உபாஸீத” (கா. 1 – 1 – 1) என்கிற வைதிக ஸாஸ்த்ரங்களானவை ஐஸ்வர்ய கைவல்யங்களால் கடக்க ஓண்ணாதபடி கம்பீரமான த்வதீயருடைய மஸ்ஸைப் பின் செல்லுமென்று கொண்டு பரமாசார்யரான ஆளவந்தார் அருளிச் செய்கையாலே –
த்வதாஶ்ரிதாநாம் ஜகதுத்பவ ஸ்திதி
ப்ரணாஶ ஸம்ஸார விமோசநாதய: |
பவந்தி லீலா விதயஶ்ச வைதிகா:
த்வதீய கம்பீர மநோநுஸாரிண: ||–20-வேதத்தின் விதிகளும் கூட உன்னுடைய அடியார்களின் ஆழமான நெஞ்சங்களையே தொடரும்.
—
இப்படி அபியுக்தர்கள் ஆனவர்கள் இது கொண்டு சாஸ்திர அர்த்தங்கள் நிர்ணயிக்கும் படி ,சகல வேத உப ப்ருஹ்மணங்களிலும் அதி பிரபலமாய் , இவ்வளவும் அன்றிக்கே கீழ் சொன்ன படியே ,திராவிட வேதமாக கொண்டு , வேத சமமாய் இருக்கிற ஆப்த தமமான இப் பிரபந்தத்திலே ஆப்திக்கு உறுப்பாக
இவர் வேறே சில விஷயங்களை எடுப்பான் என் என்கிற சங்கையிலே ,அருளிச் செய்கிறார் ..–ஆனால் பாஷ்யகாரருட்பட ப்ரஹ்ம ஸூத்ரங்களில் ஸந்தேஹார்த்தங்களையும் இது கொண்டு நிர்ணயிக்கும்படியான ஆப்தியை யுடைய இப் ப்ரபந்தத்துக்கு இவர் வேறே சிலரை ஆப்தராக எடுப்பானென் என்னில்
ஆப்திக்கு இவர் சுருதி மார்கண்டேயன் பார்த்தன் என்கிற இவை வியாச மநு பிரமவாதிகளை வேதம் சொல்லுமா போலே—சூரணை -67-
அதாவது –
இதில் சொல்லுகிற அர்த்தங்கள் ஆப்த்திக்கு உறுப்பாக இவர் –-சுடர் மிகு சுருதியுள் -திருவாய் -1-1-7-என்றும்-மார்கண்டேயனும் கரியே –திருவாய் -5–2-7-என்றும்-பார்த்தன் தெளிந்து ஒழிந்த–திருவாய் -2-8-6- -என்றும்-ஸ்ருதியையும் ,மார்கண்டேனயனையும் ,பார்த்தனையும் சொல்லுகிறவை –பரம ஆப்தமான வேதம் –ச ஹோவாச வியாச :பாராசர்ய –ஆரணம் -(பராசர முனிவருடைய புதல்வரான அந்த வியாசர் சொன்னார் )என்றும்-யத் வை கிஞ்ச மநுரவதத் தத் பேஷஜம் -யஜுர்வேதம் (எது ஒன்றினை மனுவானவர் சொன்னாரோ அது மருந்து )என்றும்-ப்ரஹ்ம வாதினோ வதந்தி-யஜுர்வேதம் (ப்ரஹ்மத்தை அறிந்தவர்கள் சொல்லுகிறார்கள் ) -என்றும் ஆப்திக்கு உறுப்பாக வ்யாசனையும், மநுவையும் ,ப்ரஹ்ம வாதிகளையும் சொல்லுகிறாப் போல் என்கை ..-ஆன பின்பு ,அது தாழ்வு அல்ல –ஆப்தி அதிசயத்துக்கு உறுப்பு என்று கருத்து ..( கீதாச்சார்யனும் மனு இஷுவாகு இவர்களுக்கு நானே முன்பு சொன்னவை என்று அர்ஜுனனுக்கு சொன்னால் போலேயும் )
வேதந் தான் ஆப்ததமமா யிருக்கச் செய்தேயும் ஆப்திக்கு ”ஸஹோவாச வ்யாஸ? பாராமர்ய?” (யஜு. அரு.), ‘“யத் வை கிஞ்ச மநுரவதத் தத் பேஷஜம்”” (யஜு. 2 – 2 – 10) என்றும், ““ப்ரஹ்மவாதி நோ வதந்தி!” (யஜு. 1 – 7 – 1) என்றுமெடுத்தாப் போலே இவரும், “உளன் சுடர் மிகு சுருதியுள்’* (திருவா. 1 – 1 – 7) என்றும், ““மார்க்கண்டேயனும் கரியே”’ (திருவா. 5 – 2 7) என்றும், ““பார்த்தன் தெளிந்தொழிந்த”’ (திருவா. 2 – 8 – 6) என்றும் ஆப்த யதிஸயத்துக்காக எடுத்தார் என்கிறார்-
திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7-முதல் பாட்டுத் தொடங்கிச் சொன்ன அர்த்தங்கள் எல்லாவற்றுக்கும் பிரமாணம் நிர்த்தோஷ ஸ்ருதி என்கிறது-சுடர் மிகுகை யாவது -பௌருஷ்யத்வ நிபந்தனமான விப்ரலம்பாதி தோஷ ரஹிதமுமாய் பிரமாணாந்தரங்களைக் கொண்டு பாஹ்ய குத்ருஷ்டிகளால் அவிசால்யமாகையாலே மிக்க தேஜச்சை யுடைத்தாகை-ஒருவரால் பண்ணப் பட்டது அன்றிக்கே என்றும் கேட்டே வருமதாகையாலே ஸ்ருதி என்கிறது –
நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்
மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்பதெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே.–5-2-7-அவன் பிரசாதத்தாலே கிடீர் -நீங்கள் அவர்களை ஆஸ்ரயித்ததாலும் பலம் தருவான் அவனே –-பலமத-நஹி பாலன சாமர்த்த்யம் ருதே ஸர்வேச்வரீம் ஹரீம் – இவர்களை ஆஸ்ரயிக்க வேறே ஒருவன் பலம் தருமது எங்கே கண்டோம் என்னில்-ஸ்ரீ மார்க்கண்டேய பகவான் சாக்ஷி-
தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்
சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –2-8-6—அந்த பூ மாலைகள் தன்னையே ருத்ரன் ஜடையில் கண்டு
அவையே -தஜ் ஜாதீயங்கள் அன்றியே அவை தன்னையே-சிவன் முடி மேல் -இவன் திருவடிகளில் இட்டத்தை அவன் தலையிலே கண்டான்-தான் கண்டு -அர்ஜுனன் தானே கண்டு -சுருதி யாலே யாதல் -ஆப்த வாக்யத்தாலே யாதல் அன்றிக்கே அதாகிறது அர்ஜுனனுக்கு ஆர் அஸ்திர அபேக்ஷையாலே அத்தேவதையை அர்ச்சிக்க வேண்ட -அத்தை என் காலிலே இடு என்று இடுவித்துக் கொள்ள
ஸ்வப்னத்தில் அம்மாலையை சிரஸிலிலே தரித்துக் கொண்டு வந்து அஸ்திரத்தைக் கொடுத்துப் போயிற்று-பார்த்தன் தெளிந்து ஒழிந்த- அவன் சாரதியாய் தாழ நிற்கச் செய்த்தேயும்-அதில் கலங்காதே சது பார்த்தோ மஹா ம நா என்கிற அர்ஜுனன் நிஷ் கர்ஷித்தான் அன்றோ
—
ஆனால் இத்தை உபப்ருஹ்மணமாக சொன்ன பஷத்தில் ,வேத வ்யாக்யை யாமது ஒழிய
வேத ரூபம் இதம் க்ருதம் -என்றும் த்ராவிடீம் பிரம சம்ஹிதாம் -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் பூர்வ –6-என்றும்
திராவிட வேத ஸூக்தை–ரெங்கராஜ ஸ்தவம் பூர்வ –16-என்று அபியுக்தர் சொல்லுகிற வேதத்வம்
இதுக்கு கூடுமோ என்ன அருளி செய்கிறார் ..-கீழே இதுக்கு வேத ரஹஸ்யத்வம் சொல்லிற்று; இப்படி யிருக்க இத்தை கரந்தஸ்தமாக்கி வ்யாக்யாநம் பண்ணப்படா நின்றது-
பாரத கீதைகளின் வேத உபநிஷ்த்த்வம் போலே இதுவும் வ்யாக்க்யை யானாலும் வேத ரஹச்யமாம்-சூரணை -68-(பாரதத்தின் வேதத்வம் போலேயும் கீதையின் உபநிஷத்த்வம் போலேயும் )
இத்தால் கீழே வேத சாம்யம் சொன்ன இடத்தில் சொல்ல வேண்டி இருக்க அநுத்தமாய் கிடந்தவற்றை இங்கே அருளிச் செய்தார் ஆய்த்து-அதாவது –-வேத உபப்ருஹ்மாணமான மகா பாரதமும் ,அதில் சாரமான ஸ்ரீ கீதையும் , வேதாந் அத்யாப யாமாச மகாபாரத பஞ்சமான் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -என்றும்
( நீடாழி உலகத்து மறை நாலொடு ஐந்து நிலை நிற்கவே -ஸ்ரீ வில்லி பாரதம் ) பகவத் கீதா ஸூபநிஷத் ஸூ -என்றும் சொல்லுகிற படியே , வேதமும் உபநிஷத்தும் ஆகிறாப் போலே-இது வேத வ்யாக்க்யையான உப ப்ருஹ்மணமே ஆனாலும் வேத ரகஸ்யமாம் என்கை–வேத ரஹஸ்யம் ஆவது வேதத்தில் ரஹஸ்ய பாகமான உபநிஷத் ,கீழே சாந்தோக்ய சமமாகவே சொல்லிற்று –ஆகையால் இந்த பஷத்திலும் , இதின் திராவிட வேதத்வ ஹானி வாராது என்று கருத்து .
அப்போது வேதத்வத்துக்கும் ரஹஸ்யத்வத்துக்கும் கொத்தை வாராதோ என்னில், ப்ரஸித்த,-லிகித-படித- பாடங்களான மஹா பாரதத்துக்கும் ஸ்ரீகீதைக்கும் ‘“வேதாநத்யாபயாமாஸ மஹாபாரத பஞ்சமாந்”’ (வி.பு) என்றும், “பகவத் கீதாஸு உபநிஷத்ஸு’”'(கீ. 1) என்றும் சொல்லுகிறபடியே இவை யிரண்டுக்கும் வேதத்வ-உபநிஷத்த்வங்கள் உண்டானாப் போலே இதுவும் விகித-படிதங்களாய்ப் போந்ததே யாகிலும் வேத,த்வமும் ரஹஸ்யத்வமும் உண்டாம் -என்கிறார் –
—
ஆக இப்படி இப் பிரபந்தத்தை வேத சமம் என்பது தத் வேத உபப்ருஹ்மண சமம் என்பதாகா நின்றீர் ..
அவை இரண்டுக்கும் ,தத் அனுரூபமாய் இருப்பன சில அலங்காரங்கள் உண்டு இறே – தத்ருச அலங்காரங்கள் இதுக்கும் உண்டோ- என்ன—சம்ஸ்க்ருதமான வற்றுக்கு தத் அனுகுனமான அலங்காரங்கள் பலவும் உண்டானாப் போலே த்ராவிடமான இதுக்கும் ஏதத் அனுகுனமான அலங்காரங்கள்-( செய்கோலம்) பலவும் உண்டு என்கிறார் –ஆக, இப்ப்ரபந்த,ம் வேதத்தோடும், உப ப்ரும்ஹணத்தோடும் துல்யமென்றீர், அவை யிரண்டுக்குமுன்ள உதாத்தாதிகளான வேத லக்ஷணங்களும், அத்யாய அம்ச பர்வாதிகளான உப ப்ரும்ஹண லக்ஷணங்களும் இதுக்குமுண்டோ என்னில்,பலவும் உண்டு என்கிறார் –
உதாத்தாதி பத க்ரம ஜடா வாக்ய பஞ்சாதி பாத வ்ருத்த ப்ரஸ்ன காண்ட அஷ்டக அத்யாய அம்ச
பர்வ ஆதி அலங்காரங்கள் போல் எழுத்து அசை சீர் பந்தம் அடி தொடை நிரை நிரை யோசை தளை இனம் யாப்பு பாத்துறை பண் இசை தாளம் பத்து நூறாயிரம் முதலான செய் கோலம் இதுக்கும் உண்டு-சூரணை –69-
அதாவது-
உதாத்யாதி என்கிற இடத்தில் -ஆதி -சப்தத்தால் அனுதாத்த ஸ்வரித பிரசயங்களை சொல்லுகிறது . .
(உதாத்தம்-ஒலியை சமமாக வைத்து அத்யயனம் -அநுத்தாதம் -ஒலியைப் படுத்து அத்யயனம் –
ஸ்வரிதம் -ஒலியை எடுத்து வைத்து அத்யயனம் /பிரசயம்- முதலில் ஓசையை எடுத்துக் கூறி –
மற்றப் பதங்களையும் அதுக்கு சமமாக வைத்து அத்யயனம் ) இந்த உதாத்தாதி ஸ்வர விசேஷங்களும் ,க்ரம ஜடா பஞ்சாதிகளும் ( ஜடை ஒரு சொல்லை மாற்றி மாற்றி இரண்டு முறை சொல்லுதல்/ பஞ்சாதி -50 – சொற்கள் கொண்டது – ) ப்ரஸ்ன அஷ்டகங்களும் ,( ஒத்து இயல் போன்ற சிறு பகுதி ப்ரச்னம் என்றும் எட்டு ப்ரச்னங்கள் கொண்டதை அஷ்டகம் ) வேதா சாதாரணம்-(வேதத்துக்கே உரியவை ) .
அம்ச பர்வாதிகள் உப ப்ரஹ்மண சாதாரணம் .. பர்வாதி என்கிற இடத்தில் ஆதி சப்தத்தால் ,ஸ்கந்தாதிகளை சொல்லுகிறது ..பத வாக்ய பாத வ்ருத்த காண்ட அத்யாயங்கள் உபய சாதாரணம் .(பாதம் -ஆதி / விருத்தம் -செய்யுள் ) ஸ்ரீ ராமாயணத்தில் ,பிரதான பரிசேதனங்களிலும் காண்ட வ்யஹாரம் உண்டு இறே ..-கௌஷீதகி முதலான உபநிஷத்களில் ,அத்யாயம் என்கிற பரிசேத வ்யவஹாரம் கண்டு கொள்வது ..-ஆக இப்படி வேதத்துக்கும் தத் உபப்ருஹ்மணங்களுக்கும் உண்டான அலங்காரங்களைச் சொல்லி , அப்படியே இதுக்கும் உண்டான அலங்காரங்களைச் சொல்லுகிறது மேல் —எழுத்து இத்யாதி –எழுத்தாவது -குற்றெழுத்து ,நெட்டெழுத்து ,முதலான பதின் மூன்று எழுத்தும் ..
(குறிலும்- நெடிலும் -உயிரும்- குற்றியலுகரம் -குற்றியலிகரம் -ஐகாரக் குறுக்கமும் -ஆய்தமும் -மெய்யும் –வல்லினமும் -மெல்லினமும் -இடையினமும் -உயிர்மெய்யும் -அளபெடையும் -ஆக -13-) இவை அசைக்கு உறுப்பாக நிற்கும்-அசையாவது -நேரசை ,நிரை அசை இரண்டையும்(குறிலே நெடிலே குறிலிணை ஏனைக் குறில் நெடிலே நெறியே வரினும் நிறைந்து ஒற்றடுப்பினும் நேரும் நிறையுமாம் )சீராவது -ஆசிரிய உரிசீர் நான்கும் (நேர் நேர்- நிரை நேர்- நேர் நிரை-நிரை நிரை -என்பன ஆசிரிய உரிச்சீர் )வெண்பா உரிச்சீர் நான்கும் ,(நேர் நேர் நேர் -நிரை நேர் நேர் -நேர் நிரை நேர் -நிரை நிரை நேர் நான்கும் வெண்பா உரிச்சீராம் )வஞ்சி உரிச்சீர் நான்கும் ,(நேர் நேர் நிரை -நிரை நேர் நிரை -நேர் நிரை நிரை -நிரை நிரை நிரை -நான்கும் வஞ்சி உரிச்சீராம் )பொதுச்சீர் பதினாறும் , ஓர் அசைச் சீர் இரண்டும் –ஆக முப்பது சீரும்-(பொதுச் சீர் -மேல் கூறிய ஈரசைச் சிர் நான்கின் இறுதியிலும் -நேர் நேர் -நேர் நிரை -நிரை நேர் -என்னும் ஈர் அசைச் சீர்கள் நான்கினையும் தனித்தனியே தந்து உறழ்ந்தால் பொதுச் சீர் -16-/நேர் நிரை இரண்டும் ஓர் அசைச் சீர் )பந்தம் எனிலும் ,தளை எனிலும் ஒக்கும் என்று தமிழர் சொல்லுகையாலே பந்தமும் தளையும் ஒன்றாகையால் ,இங்கே பந்தம் என்றும் , மேலே தளை என்றும் ,சொல்லும் அளவில் ,புனருக்தம் ஆகையாலே இரண்டத்து ஓன்று வர்ஜிக்க-( நீக்க -) வேண்டும்-அடியாவது – குறள் அடி ,சிந்தடி முதலான அடி ஐந்தும்(குறள் அடி- சிந்தடி – அளவடி -நெடிலடி -கழி நெடிலடி –(குறள் இரு சீரடி -சிந்து முச்சீரடி -நேரடி நாலொரு சீர் -ஐந்து சீர் நெடிலடி -ஐந்து சீருக்கு
மேற்பட்ட சீர்களையுடைய அடிகள் எல்லாம் கழி நெடிலடி )தொடையாவது மோனை, இயைபு ,எதுகை, முரண் ,அளபெடை என்கிற ஐந்திலும் அடி மோனை முதலாக ஓர் ஒன்றிலே எவ்வெட்டு தொடையாக நாற்பதும் , அந்தாதி தொடை ,இரட்டை தொடை ,செந்தொடை என்கிற மூன்றுமாக ஆக நாற்பத்து மூன்று தொடையும் .-(எழுவாய் எழுத்து ஒன்றின் மோனை இறுதி இயைபு -இரண்டாம் வழுவா எழுத்து ஒன்றின் மாதே எதுகை-மறுதலைத்த மொழியான் வரினும் முரண் -அடிதோறும் முதன் மொழிக் கண் அழியா தளபெடுத்து ஒன்றுவதாகும் அளபெடையே –-அந்த முதலா தொடுப்ப தந்தாதி -அடி முழுதும் வந்த மொழியே வருவது இரட்டை -வரன் முறையான் முந்திய மோனை முதலா முழுவதும் ஒவ்வாது விட்டால் செந்தொடை நாமம் பெறும் -நறு மென் குழல் தே மொழியே )நிரை நிரை யாவது
நேர் நிரை நிரை ,நிரை நிரை நிரை முதலானவை ..(இத்தால் பொருள்கோளை சொன்னபடி -நிரனிறை சுண்ணம் அடிமறி மொழி மாற்று அவை நான்கு என்ப மொழி புனர் இயல்பே )ஓசையாவது –
செப்பலோசை ,அகவலோசை ,முதலான நாலு ஓசையும் ( வெண்பாவுக்கு உரியது செப்பலோசை -அகவலோசை ஆசிரியப்பாவுக்கு -துள்ளலோசை கலிப்பாவுக்கு -தூங்கலோசை வஞ்சிப்பாவுக்கு )தளை யாவது-நேர் ஓன்று ஆசிரிய தளை ,நிரை ஓன்று ஆசிரிய தளை-இயல் சீர் வெண்டளை-வெண் சீர் வெண்டளை -கலித்தளை – ஒன்றிய வஞ்சித்தளை -ஒன்றாத வஞ்சித்தளை –முதலான ஏழு தளையும்-இனமாவது தாழிசை துறை விருத்தம் -என்கிற பாக்கள் இனம் மூன்றும்-யாப்பாவது பிரபந்த ரூபமாய் இருக்கை ( தொகுத்தல் விரித்தல் தோகைவிரி மொழி பெயர்ப்பு எனத்தகு நூல் யாப்பு ஈர் இரண்டு என்ப )பாவாவது -வெண்பா ,ஆசிரியப்பா ,(கலிப்பா வஞ்சிப்பா )முதலான நான்கு பாக்கள்-துறை என்கிற இதுவும் இனத்தின் வகையில் ஒன்றாகையாலே புனருக்தமாம் –அர்த்தாந்தரம் உண்டாகில் கண்டு கொள்வது – (நாற்பெரு பண்ணும் இருபத்தொரு திறனும் ஆகிய இவை
எல்லாம் செந்துறை என்பது – மேற்புறமும் பதினோராடலும் என்ற இவை எல்லாம் வெண்டுறை யாகும் –செந்துறை பாடற்கு ஏற்கும்-ஒலி குறித்தற்றே என்பதால் -/ வெண்டுறை ஆடற்கு ஏற்பது -கூத்தின் மேற்றே என்பதால்-யாப்பு அருங்கல விருத்தி )பண் ஆவது –(ராகங்கள்) முதிர்ந்த குறிஞ்சி ,நட்ட பாஷை ,நட்டராகம் செந்திரி -பியந்தை இந்தளம் முதலானவை-இசையாவது –(ஸ்வர ஸ்தானம்)
குரல் ,துத்தம் ,கைக்கிளை -உழை இளி விளரி தாரம் -என்கிற பேரால் சொல்லப் படுகிற
நிஷாத ரிஷப ,காந்தார ,ஷட்ஜ மத்யம தைவத பஞ்சமங்கள் ஆகிற ஏழு இசையும்
(இளி குரல் துத்தம் நான்கு மாத்திரை விளரி கைக்கிளை மூன்றே யாகும் தாரம் உழை இரண்டாகத் தகுமே )தாளமாவது-கஜகர்ணச் சோராகதி மகரத்வஜ தாளக லஷ்மீ கீர்த்தி பாணி பாதவ் கௌரீ பஞ்சாநநஸ்ததா சதுராம்நாய தாளச்ச தாளோயம் கருடத்வஜ சங்கீத ஸாஸ்த்ர வித்வத்பிரேதா தாளா ப்ரகீர்த்திதா — ) கஜகர்ணம் – சோரகதிர் -மகரத்வஜ -லஷ்மி கீர்த்தி- பாணி -பாதவ் கௌரி -பஞ்சானனம் – , சதுராம் நாயம் .கருடத்வஜம் சங்கீத சாஸ்த்ர வித்வத்பி ரேதே தாளா பிரகீர்திதா -என்கிற படியே கஜகர்ணம் ,சோரகதி , மகரத்வஜம் முதலான தாளங்கள் .. ஆதி – ரூபகம்- சாபு -ஜம்பை -ஏகம் -மட்டியம் -துருவம் -அட –போன்றவை தாள வேறுபாடுகள் –பத்தாவது அம்ச பர்வாதிகளில் அவாந்தர பரிச்சேதங்களான அத்யாயாதிகள் போலே நூற்றினுடைய அவாந்தர பரிச்சேதங்களாய்
இப் பத்தும்-9-4-11- -இவை பத்தும்-5-5-11- -என்று சொல்லப் படுகிற திரு வாய் மொழிகள் . ,
நூறாவது – பிரதான பரிச்சேதங்களான அம்ச பர்வ காண்டாதிகள் போலே நூறே சொன்ன -9-4-11-
பத்து நூறு–6-7-11- என்னும் படி ..நூறு நூறு பாட்டாய் இருந்துள்ள பிரதான பரிச்சேதங்கள் .
ஆயிரமாவது சதுர் விம்சத் சஹஸ்ராணி ஸ்லோகானாம் –பாலகாண்டம் –4-2-என்னுமா போலே இருந்துள்ள மகா பரிச்சேதம்–முதலான என்கையாலே முதல் இட்டு மூன்று பத்து உத்தர கண்ட விவரணமாய் நடு இட்ட மூன்று பத்தும் பூர்வ கண்ட விவரணமாய் மேல் இட்டு மூன்று பத்தும் அதுக்கு உபயோகியான அர்த்த பிரதி பாதகமாய் மேலில் பத்து பல அவாப்தி கதனமாய் இருக்கையாலே உண்டான விபாக விசேஷங்களும் விவஷிதங்கள் என்று தோற்றுகிறது- ( பிரதம ஷட்கம் கர்ம ஞான யோகம் /மத்யம ஷட்கம் பக்தி யோகம்/ சரம ஷட்கம் பூர்வ ஷட்க சேஷம்-ஸ்ரீ கீதையில் போலே )முதலான செய் கோலம் இதுக்கும் உண்டு -என்றது செய் கோலத்து ஆயிரம் -4–1 -11-என்று கவிக்கு சொல்லுகிற அலங்காரங்களால் குறை வற்ற ஆயிரம் என்கையாலே ,ஏவமாதிகளான சர்வ அலங்காரங்களும் இதுக்கு உண்டு என்கை .
த்ரமிடோபநிஷத் விஹிதங்களாய், “’செய்கோலத் தாயிரம்” (திருவா. 4 – 1 – 11) என்கிறபடியே ‘எழுத்து, அசை, சீர்’ என்று இத்யாதிகளான அலங்காரங்கள் இதுக்குமுண்டென்கிறார் (உதாத்தாதி, என்று தொடங்கி] பாஷாநுகுணமாயும், வேதா அநு குணமாயுமிறே லக்ஷணங்களிருப்பது, ஆகையாலே அந்த பாஷாநுகுணமான லஷணங்களை அருளிச் செய்தது.
அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய்கோலத்து ஆயிரம் சீர்த்தொடைப் பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற் பாலரே.–4-1-11-கவிக்கு செய் -செய்த கவி –வாசிகமான அடிமை என்னுதல்-கோலத்து ஆயிரம்–கவிக்கு சொல்லுகிற அலங்காரங்களால் குறைவற்று இருக்கை
சீர்த்தொடைப் பாடல் இவை பத்தும் -கல்யாண குணங்களை தொடுத்துச் சொன்ன இது திருவாய் மொழி
—
ஆக இதுக்கு கீழ் திவ்ய பிரபந்தத்துக்கு வேத சாம்யமும் , தத் உப ப்ருஹ்மண சாம்யமும் உண்டு என்னும் இடத்தை அருளிச் செய்தார் .. இங்கன் அன்றிக்கே வேத ஆவிர்ப்பாவ விசேஷமாய் இவ் ஆழ்வாரால் நிர்மிதமாக பிரசித்தமாய் இருப்பது ஓன்று என்று ,இதுக்கு இன்னும் ஒரு யோஜனை பண்ணுகிறார் மேல் .-ஆக இதுக்குக் கீழ் வேதத்தினுடையவும், தது,பப்ரும்ஹணத்தினுடையவும் ஸ்தாநத்திலே யாக்கி அவற்றினுடைய ஸப்த லக்ஷணங்களும் அர்த்த லக்ஷணங்களும் அருளிச் செய்தார். இனி மேல் ப்ரமேய பூதனான ஸர்வ ஸ்மாத் பரனுடைய அவதார பரம்பரையில் எல்லையான அர்ச்சாவதாரம் போலே ப்ரமாண வேதாவதாரத்தினுடைய எல்லை இத் திருவாய்மொழி என்கிறார்-
அதவா வேத வேத்ய ந்யாயத்தாலே , பரத்வ பர முது வேதம் வியூஹ வியாப்தி அவதரணங்களில்
ஓதின நீதி கேட்ட மனு படு கதைகளாய் ஆக மூர்த்தியில் பண்ணின தமிழ் ஆனவாறே வேதத்தை திராவிடமாகச் செய்தார் என்னும்–சூரணை -70-
(வேத வேத்ய ந்யாயத்தாலே , பரத்வ பர முது வேதம்- வியூஹத்தில் ஓதின நீதியாய் -வியாப்தி யிலே கேட்ட மனுவாய் – அவதரணங்களிலே படு கதைகளாய் ஆக மூர்த்தியில் பண்ணின தமிழ் ஆயிற்று –
ஆதலால் வேதத்தை திராவிடமாகச் செய்தார்-அப்படி இன்றியும்-வியாப்தி -கரந்த சில இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் பரந்து நிற்றல்-ஓதின நீதி -பாஞ்சராத்ரம்-கேட்ட மனு -மனு தர்ம சாஸ்திரம் படுகதைகள் -ஸ்ரீ ராமாயணமும் ஸ்ரீ மஹா பாரதமும் ஆகமூர்த்தி -அர்ச்சாவதாரம் )
அதாவது
கீழ் சொன்ன-உபய பிரகாரமும் -(வேத சாம்யம் -உப ப்ரஹ்மணம் சாம்யம் )அன்றிக்கே ,
வேத வேதே பரே பும்சி ஜாதே வேத பிராசேத ஸாதா சீத் சாஷாத் ராமயணாத்மநா –பாலகாண்டம் –
(வேதங்களால் அறியப்படும் பரமபுருஷன் சக்கரவர்த்தி திருமகனாக அவதரித்தவாறே அந்த வேதங்களும் பிரசேதஸ்ஸின் புதல்வரான ஸ்ரீ வாலமீகி பகவானிடம் இருந்து ஸ்ரீ ராமாயணமாகப் பிறந்தது ) -என்று வேத வேத்யனான பரம புருஷன் தசரத புத்ரனே அவதரித்த இடத்தில் ,
அபௌ ருஷேயமான வேதமும் , ஸ்ரீ வால்மீகி பகவான் பக்கல் ஸ்ரீ இராமாயண ரூபேண அவதரித்தது என்கிற ந்யாயத்தாலே —ஷயந்தமஷ்ய , ரஜஸ ,பராகே-தைத்ரியம் -( இந்த ராக்ஷஸ தாமச குணங்களின் மயமான இப்பிரக்ருதி மண்டலத்தின் மேலே பரமபதத்தில் எழுந்து அருளி இருப்பவரான -)
ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத்–புருஷ ஸூக்தம் –( சூரியனனுடைய வர்ணம் போன்ற வர்ணத்தை யுடைய இந்த பரம புருஷனை நான் அறிவேன் -அவன் தமஸ்ஸாகிற பிரகிருதி மண்டலத்துக்கு அப்பால் பரமபதத்தில் இருக்கிறான் ) தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூரயே –யஜுர் வேதம் ( விஷ்ணுவுடைய அந்த உயர்ந்த பரமபதத்தை நித்ய ஸூரீகள் எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள் )யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமன் ,சோஸ்நுதே சர்வான் காமான் சக – ப்ரஹ்மணா விபிச்சதா -தைத்ரியம்( ஹிருதய குகையில் உள்ள இந்த ப்ரஹ்மத்தை எவன் வழிபடுகிறானோ அவன் பிரகிருதி சம்பந்தம் இல்லாதது என்று சொல்லப்படும் பரமபதத்தில் அந்த ப்ரஹ்மத்துடன் கூட எல்லாக் கல்யாண குணங்களையும் அனுபவிக்கிறான் )- இத்யாதிகளாலே
பல விடங்களிலும் ,ஈஸ்வரனுடைய பராவஸ்தையைப் பிரதி பாதிக்கையாலே ,பரத்வத்திலே நோக்காய் ,-முது வேதம்—திருவாய் -1-6–2-என்கிற படியே-புருஷ புத்தி பிரபவ தோஷம் கந்தம் இல்லாதபடி அநாதித்வேன பழையதாய் இருக்கும் வேதம் ஆனது—
வியூகத்தில் ஓதின நீதியாய் –அதாவது – ஷாண் குண்யாத் வாஸூ தேவ பர இதி ச பவான் முக்த போக்ய –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -யுத்த -39- ( தேவரீர் பரவாஸூ திவ்ய மங்கள விக்ரகத்தோடே கூடினவராய் ஆறு குணங்களால் முக்தருக்கு இனியராகா நின்றீர் ) என்கிற படியே ஷாட் குணிய பரி பூர்ணனாய் , முக்த போக்யனாய் இருக்கிற அந்த பரனாவன்-பலாட்யாத் போதாத் சங்கர்ஷணஸ் த்வம் ஹரசி விதனுஷே சாஸ்த்ர மைச்வர்ய வீர்யாத் , பிரத்யும்னஸ் சரக்க தர்மவ் நயசி ச பகவன் சக்தி தேஜோ அநிருத்தோ பிப்ராண பாசி தத்வம் கமயசிச ததா வ்யூஹ்ய -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் உத்த -39- (வலிமையோடு கூடின ஞானத்தால் சங்கர்ஷணராகிய நீர் சம்ஹாரத்தைச் செய்கின்றீர் -–சாஸ்திரங்களையும் நன்கு விரிவு படுத்துகின்றீர்– ப்ரத்யும்னராய் ஐஸ்வர்யத்தாலும் வீர்யத்தாலும் ஸ்ருஷ்ட்டியையும் செய்து தர்மத்தை பரப்புகின்றீர்- அப்படியே அநிருத்தராய் சக்தியையும் ஒளியையும் தரித்துக் கொண்டு ரஷிக்கவும் செய்து தத்துவத்தையும் பரப்புகின்றீர்-) என்கிற படி சர்க்காதி நிர்வஹனார்தமாக வியூஹி பவித்த அவஸ்தையில் –
சங்கர்ஷணாதி சத்பாவம் பஜே லோக ஹிதேப்யச கிரமச
பிரளயோத்பத்தி ஸ்த்திபி பிராண்யனுக்ரக பிரயோஜன மதான்யச்ச
சாஸ்த்ர சாஸ்த்தார்த்த தத்பலை தசாஸ் துர்ய ஸூஷூப் த்யாத் யாச்
சதுர் வியூஹேபி லஷயே – ஸ்ரீ விஷ்வக்ஸேன சம்ஹிதை
( லோக க்ஷேமார்த்தமாக ஸ்வ இச்சையால் சங்கர்ஷணாதி முதலிய வ்யூஹ நிலைகளை அடைகிறேன் –முறையாக சம்ஹாரம் ஸ்ருஷ்ட்டி ரக்ஷணம் என்பைகளால் உயிர்களுக்கு அனுக்ரஹம் ஏற்படுகின்றது –பின்னும் சாஸ்திரம் -சாஸ்திரத்தின் பொருளான தர்மம் – அவற்றாலாய தத்வ ஞானம் முதலிய பயன்களும் இருக்கின்றன –நான்கு வியூகங்களிலும் துரியம் ஸூஷூப்தி இவை முதலான நிலைகளையும் அறிந்து கோடல் வேண்டும் ) இத்யாதியாலும்-தத்ர ஞான பல த்வந்த் வாத் ரூபம் சங்கர்ஷணம் ஹரே ஐஸ் வர்ய வீர்ய சம்பேதாத் ரூபம் பிரத்யும்ன முச்யதே சக்தி தேஜஸ் சமுத்கர்ஷா தா அநிருத்த தனுர் ஹரே ஏதே சக்தி மயா வியூஹா குணோன் மேஷ ஸ்வ லஷணா -ஸ்ரீ விஷ்வக்ஸேன சம்ஹிதை – (அந்த வியூகத்தில் ஞானம் பலம் முதலிய குணங்களின் சேர்க்கையால் சங்கர்ஷண திரு உருவம் உண்டாகிறது –ஐஸ்வர்யம் வீர்யம் ப்ரத்யும்னன் திரு மேனி / சக்தி தேஜஸ் மூலம் அநிருத்தன் – இந்த சக்தி மயங்களான வியூகங்கள் குணங்களின் பிரகாசங்களுக்கு இலக்கணங்கள் )இத்யாதியாலும்-அந்த வியூஹ விசேஷ தத் குண ரூப க்ருத்யாதிகளை விஸ்தரேண பிரதி பாதிக்கைக்காக பஞ்ச ராத்ரச்ய க்ருஸ்த்னச்ய வக்தா நாராயணா ஸ்வயம்–பாரதம் -(எல்லா பாஞ்ச ராத்ரங்களையும் சொன்னவன் நாராயணனே )என்கிற படியே சர்வத்துக்கும் ஆதி வக்தா ஈஸ்வரன் ஆகையாலே –ஓதினாய் நீதி –இரண்டாம் திருவந்தாதி –48-என்று சொல்லப் பட்ட பாஞ்ச ராத்ரமாய் ஆவிர்பவித்து-
வியாப்தியில் கேட்ட மனுவாய்-அதாவது இப்படி வியூஹிப்பித்த மாத்ரம் அன்றிக்கே சர்வ சப்த வாஸ்யனாய் சர்வ கர்ம சமாராத்யனாய் கொண்டு சர்வ அந்தர்யாமித்வேன வியாபித்து நிற்கும் அவஸ்தையில் –ஆபோ நாரா இதி ப்ராக்தோ ஆபோ வை நர ஸூனவே
தா யதஸ்யாயநம் பூர்வம் தேன நாராயண ஸ்ம்ருத –மனு ஸ்ம்ருதி -1-19- (தண்ணீரானது நரேன் என்ற பரமாத்மாவினிடம் இருந்து தோன்றியது -ஆதலால் நாரம் என்று சொல்லப்படுகிறது –-முன்பு யாது ஒரு காரணத்தால் அந்நீரானது பரமாத்மாவுக்கு சரீரமாக இருந்ததோ அதனால் நாராயணன் என்று எண்ணப்படுகிறான் )-இத்யாதியாலும்
பிரசாசிதாரம் சர்வேஷாம் அணீயாம் சமணீயசாம்
ருக்மாபம் ஸ்வப்னதீகம்யம் வித்யாத்து புருஷம் பரம்–மனு ஸ்ம்ருதி -12–122-
( பரம புருஷனை எல்லாவற்றையும் நியமிக்கப்படுகின்றவனாகவும் சூஷ்மமானத்தைக் காட்டிலும் சூஷ்மமானவனாயும் ஓடவைத்த பொன்னிறம் யுடையவனாகவும் கனவில் உள்ள புத்தி போன்ற யோகத்தால் அடையத் தக்கவனாயும் அறிதல் வேண்டும் )
ஏநமேக வதந்த்யக்னிம் மருதோன்ய பிரஜாபதீம்
இந்திரமே கேபரே பிராண மபரே ப்ரஹ்ம சாஸ்வதம்–மனு ஸ்ம்ருதி -12-123-
(இவனைச் சிலர் நெருப்பு என்று சொல்கிறார்கள் – வேறு சிலர் மருத்துக்களாவும் சொல்கிறார்கள் -சிலர் பிரமனாகவும் இந்த்ரனாகவும் மற்றும் பிராணனாகவும் மற்றும் சிலர் நித்தியமான ப்ரஹ்மமாகவும் சொல்கிறார்கள் )
ஏஷ சர்வாணி பூதானி பஞ்சபிர் வ்யாப்ய மூர்திபி
ஜன்ம வ்ருத்தி ஷயைர் நித்யம் சம்சார யதி சக்ரவத்–மனு ஸ்ம்ருதி -12-124 –
(இவன் எல்லா உயிர்களையும் மண் முதலிய ஐந்து ஐந்து பூதங்களாலான சரீரங்களால் பரந்து பிறத்தல் வளர்த்தல் இறத்தல் என்னும் இவைகளால் எப்பொழுதும் சக்கரம் போன்று சுழலும்படி செய்கிறான் )இத்யாதியாலும்
ச ஆத்மா அங்கான்யன்ய தேவதா-தைத்ரியம் –என்கிற படியே சர்வ தேவதா சரீரதையா சர்வ கர்ம சாமார்த்யன் –இவன் என்று தோற்றும் படி பூர்வ பாக உப ப்ரஹ்மணமாய்க் கொண்டு சர்வ அந்தர்யாமிதயா வ்யாப்தியை பிரதி பாதிக்கைக்காக-கேட்ட மனு –நான்முகன்–76–என்கிற படியே
ஆப்தமாய் கேட்கப் பட்ட ,மன்வாதி ஸ்ம்ருதியாய் ஆவீர் பாவித்து-அவதரணத்தில் படுகதைகளாய்
அதாவது அப்படி அதீந்த்ரியனாய் நிற்கிறவன் சாது பரித்ராணாதிகளுக்காக ஸ்ரீ ராம ஸ்ரீ கிருக்ஷ்ணாத்ய அவதாரங்களைப் பண்ணின அவஸ்தையில் தத் அவதார சேஷ்ட்யாதிகளை
பிரதி பாதிக்கைக்காக -படு கதையும் -நான்முகன் -76-என்கிற படியே வ்ருத்த கீர்த்தன ரூபமான-பாடும் கதையாக – ஸ்ரீ இராமாயண ஸ்ரீ மகா பாரத இதிகாசங்களாய் ஆவீர் பாவித்து –
ஆக மூர்த்தியை பண்ணின தமிழனாவாறே -அதாவது-அப்படி அவதார முகேன நின்று ரஷித்து அருளுமவன் ,அவதாரத்தில் பிற்பட்டாரும் இழவாத படி – ஆக மூர்த்தி யாய வண்ணம் என் கொல் –திருச்சந்த -17-(யாக மூர்த்தி -ஆக மூர்த்தியாக -யஜ தேவ பூஜாயாம் -அர்ச்சிக்கத்தக்க மூர்த்தி
அன்றிக்கே இப்படியாக வேண்டும் என்று சங்கல்பித்துக் கொண்டு தோன்றிய திவ்ய மங்கள விக்ரஹம் -என்றுமாம் ) என்று விசேஷஜ்ஞர் ஈடுபடும் படி ஆஸ்ரித ஹிருதய அனுகுணமாக – ( நெஞ்சில் நினைப்பவன் எவன் -என்பதை நாமும் அறியும் படி மா முனிகள் )தமர் உகந்தது எவ் உருவம் –முதல் திருவந்தாதி -44–இத்யாதிப் படியே-த்ரவ்ய நாம ரூப ஆசன சயனாதிகளிலும்-தேச கால அதிகாராதிகளிலும் ஸ்நான போஜனாதிகளிலும் ஒரு நியமமற பண்ணிக் கொண்டு அத்யந்த ஸூலபனாய் இருக்கும் அர்ச்சாவாதார அவஸ்தையில் -தத் வைபவ பிரதிபாதன அர்த்தமாக
சடகோபன் பண்ணிய தமிழ்-2-7–13–என்னும் படி பிரமேயம் தன்னைப் போலே தானும் சர்வ ஸூலபமாய் சர்வ அதிகாரமாய் ஆகைக்கு உறுப்பாக த்ராவிட ரூபமாக கொண்டு செய்வதாக சொல்லுவதும் ஒரு பிரகாரம் உண்டு என்கை..எய்தற்கு அறிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் செய்தற்கு உலகில் வரும் சடகோபனை –இராமானுச நூற்றந்தாதி -18-என்னக் கடவதிறே..
இவை எல்லாத்திலும் -( வேதம் -பாஞ்சராத்ரம் மனு சாஸ்திரம் ஸ்ரீ ராமாயணம் ஸ்ரீ மஹா பாரதம் திருவாய் மொழி ) எல்லாம் சொல்லுமே ஆகிலும் ஒன்றுக்கு ஒன்றிலே நோக்காய் இருக்கையாலே இறே இவர் இப்படி அருளிச் செய்தது .. இது தான் பரத்வ பரம் -என்கையாலே ஸ்பஷ்டம் இறே ..
(அதவா) என்றது – கீழ்ச் சொன்ன யோஜனை யொழிய யோஜநாந்தர மென்கை. “வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தஸரதாத்மஜே ! வேதா ப்ராசேத ஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா”” (ரா. பா.) என்கிறபடியே வேத வேத்யனான பரம புருஷன் தஸரத புத்ரனாய் வந்தவதரித்த விடத்தில் அபெள்ருஷேயமான வேதமும் ஸ்ரீவால்மீகி பகவான் பக்கலிலே ஸ்ரீராமாயணமாய் வந்தவதரித்த தென்கிற ந்யாயத்தாலே. (பரத்வபரமுதுவேதம்) “’முதுவேத முதல்வனுக்கு?” (திருவா. 1 – 6 – 2) என்கிற ப்ரத்வ ப்ரதிபாதகமான பழைய வேதம். இத்தால் நித்ய நிர்தோஷமாய், அபெளருஷேயமாய் ப்ரம விப்ரலம்பாதி, தோஷ ரஹிதமான வேதம் என்றபடி.-அந்த பரத்வம் தானே வ்யூஹீபவித்த அவஸ்தையில் அந்த வேதந்தானே “பஞ்சராத்ரஸ்ய க்ருத்ஸ்நஸ்ய வக்தா நாராயணஸ் ஸ்வயம்”” (பர. மோ.) என்றும், ““ஓதினாய் நீதி”‘ (இ, திருவ.48) என்றும் சொல்லுகிறபடியே அவனருளிச் செய்த ஸ்ரீபாஞ்சராத்ர ஸாஸ்த்ரமாய் வந்தவதரித்தும்,-அந்தர்யாமியான அவஸ்தையில் “கேட்ட மனுவும்” (நா.திருவ. 76) என்கிறபடியே ஆசார வ்யவஹார ப்ராயஸ் சித்தங்களுக்கு ப்ரகாஸ கமான மந்வாதி ஸ்ம்ருதிகளாயும்,–ராம க்ருஷ்ணாத் யவதாரங்களில் வந்தவாறே ”பாட்டும் முறையும் படு கதையும்‘” (நா. திருவ. 76) என்கிறபடியே வேதங்கள் தான் இதிஹாஸாதிகளானாப் போலேயும்,
”ஆகமூர்த்தியாய வண்ணம்”” (திருச்ச, 17) என்கிறபடியே ஸர்வேஸ்வரன் ஆஸ்ரித ஹ்ருதயாநுகுணமாக “’தமருகந்ததெவ்வுருவம்”'(மூ.திரூவ. 45) என்கிறபடியே த்ரவ்ய-நாம-ரூப-ஆஸந-ஸயந-தேஸ – கால-அதிகாயு-போஜநாதீ ஸகல வ்யாபாரங்களையும் ஆஸ்ரித ஹ்ருதயாநுகுணமாக்கிக் கொண்டு ஸர்வ ஸுலபமான அர்ச்சாவதாரமான விடத்தில் ப்ரமாணமும் அப்படியே ப்ரமேயம் போலே ஸர்வ ஸுலபமாய் ஸர்வாகதிகாரமாம்படி த்ரவிட ஸம்ஹிதையாக ப்ராப்த மாகையாலே **பண்ணிய தமிழ் மாலை”” (திருவா. 2 – 7 – 13) என்கிறபடியே வேதத்தைத் திருவாய்மொழியாகச் செய்தருளினார் என்னவுமாம் என்கிறார். அந்த வேதம் முதலானவை எல்லாத்திலும் எல்லாம் சொல்லிற்றே யாகிலும் ஒன்றுக் கொன்றிலே நோக்காகக் கடவது –
மதுவார் தண்ணம் துழாயான் –முது வேத முதல்வனுக்கு
எதுவேது என் பணி என்னாது அதுவே ஆட்செய்யுமீடே –1-6-2—இவ்விஷயத்தை பேசும் போது
அபௌரு ஷேயம் ஆகையாலே நித்தியமான வேதமே யாக வேண்டாவோ -என்கிறார் –
வேத முதல்வன் ஆகையாவது -சாஸ்திர யோநித்வாத் -என்கிறபடியே வேத பிரதிபாத்யன் என்கை
திருத் துழாய் மாலையாலே அலங்கருதன் என்கைக்கு மேல் இல்லை சர்வாதிகன் என்கைக்கு
அதுக்கு மேலே ஓன்று இறே வேதைக சமதிகன்யன் என்னுமது-
உணர்ந்தாய் மறை நான்கும் ஓதினாய் நீதி
மணந்தாய் மலர்மகள் தோள் மாலே -மணந்தாய் போய்
வேயிரும் சாரல் வியலிரு ஞாலம் சூழ்
மா யிரும் சோலை மலை——48—வேத உப ப்ரும்ஹணமான இதிஹாச புராணங்களை உண்டாக்கினாய் அந்த வேதங்களின் பொருளை விவரிக்க வல்ல ஸ்ம்ருதி முதலிய உப ப்ரும்ஹண நூல்களையும் –மநு முதலிய மஹர்ஷிகள் முகமாக) அருளிச் செய்கின்றாய் ப்ராஹ்மணமான -ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களையும் யுண்டாக்கி – திரு முகத்துக்கு படியெடுத்துக் காட்டினாப் போலே –
பாட்டும் முறையும் படுகதையும் பல் பொருளும்
ஈட்டிய தீயும் இரு விசும்பும் -கேட்ட
மனுவும் சுருதி மறை நான்கும் மாயன்
தனமாயையில் பட்டதற்பு-76-—பாட்டுக்களும் அவற்றுக்கு வ்யக்தமான ரூபமானவையும் –
இசையும் இயலும் என்னவுமாம் – –படுகதை இத்யாதி-உத் க்ரந்தமாகச் சொல்லும் கதைகளும் -அவற்றின் யுடைய பஹூ விதமான பொருள்களும்-பாட்டும் – கீர்த்தனமான இதிஹாசங்கள்-
பல் பொருளும்--அவற்றுக்கு வ்யாக்யனாமான நாநாவான அவ்வர்த்தங்களைச் சொல்லுகிற புராணங்கள் என்றுமாம் –ஈட்டிய தீயும் இரு விசும்பும்-ஒன்றிலே எல்லாம் யுண்டாம்படி பஞ்சீ கரணத்தாலே சேர்க்கப் பட்ட அக்னியும் பரப்பை யுடைத்தான ஆகாசமும்-இவை அண்ட காரணமான பூத பஞ்சகங்களுக்கும் உபலஷிதையான தேவாதி கார்ய லஷணங்களுக்கும் உப லஷணம்-
கேட்ட மனுவும் – ஆப்த தமமாக ஜகத்து எல்லாம் கேட்டுப் போருகிற மனுவும்
சுருதி மறை நான்கும் – ஓதி வருகிற நாலு வேதங்களும்-மாயன் – ஆச்சர்ய பூதனானவனுடைய
தன மாயையில் பட்ட தற்பு- தன்னுடைய சங்கல்ப்பத்திலே யுண்டான தத்தவத்தை யுடைத்து
தற்பு – தத்த்வார்த்தம் –
ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி நாலு மூர்த்தி நன்மை சேர்
போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி எண்ணில் மூர்த்தியாய்
நாக மூர்த்தி சயநமாய் நலம் கடல் கிடந்தது மேல்
ஆக மூர்த்தி யாய வண்ணம் என் கொல் ஆதி தேவனே –17-ஆஸ்ரிதர் தேவரீருக்கு விக்ரஹமாக நினைத்த த்ரவ்யத்திலே ஸ்வ அசாதாராண விக்ரஹத்தில் பண்ணும் விருப்பத்தை பண்ணுகிற இஸ் ஸ்வபாவம் என்னாய் இருக்கிறது –ஆஸ்ரிதர் உனக்கு விக்ரஹமாக நினைத்த த்ரவ்யத்தை இறே ஸ்வ அசாதாராண விக்ரஹத்தோபாதி விரும்புவது -தமர் உகந்த எவ்வுருவம் அவ்வுருவம் ஆனாய்-ஜகத்துக்கு எல்லாம் காரண பூதனான நீ கார்ய பூதனாய் இருப்பான் ஒரு சேதனனுடைய
இச்ச அதீநமாக உன்னைப் பண்ணுவதே –
தமருகந்த தெவ் வுருவம் அவ் வுருவம் தானே
தமருகந்த தெப்பெர் மற்றப் பேர் தமருகந்து
எவ் வண்ணம் சிந்தித்து இமையா திருப்பரே
அவ் வண்ணம் ஆழியானாம் -44–-யார் எப்படி என்னை சேவிக்க ஆசைப்படுகிறானோ ) நமக்கு நல்லவர்கள் இன்னார் என்றும் இல்லை -இன்னபடி பஜிப்பார் ஒன்றும் இல்லை –அவர்கள் நின்ற நிலையிலே அவர்கள் பஜித்த படியே அவர்களை பற்றுவேன் என்கிறது -தமரானவர்கள் பிராகிருத த்ரவ்யங்களிலே ஒன்றை உனக்குத் திரு மேனியாகக் கொள்ள வேணும் -என்றால் அத்தைத் திருமேனியாகக் கொள்ளும் – -சதங்கை அழகியார் -என்று திரு நாமம் சாத்தினார் ஆகில்
நாராயணாதி நாமங்களைக் காட்டிலும் அத்தை விரும்பும் –
வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகனை
கண்ணனை நெடுமாலைத் தென் குருகூத்ச் சடகோபன்
பண்ணிய தமிழ் மாலை யாயிரத்துள் இவை பன்னிரண்டும்
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே–2-7-13-வேதம் போலே அடி அன்றிக்கே இருக்கிறது அன்று -அப்வருஷேயம் -என்னுமதில் காட்டிலும் விலக்ஷணமாய் இருக்கிறதாயிற்று வக்த்ரு சுத்தியால்-
எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபனைச் சிந்தை யுள்ளே
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம்
உய்தற்கு உதவும் இராமானுசன் எம் உறு துணையே – 18- துஷ் ப்ராபங்களான வேதங்களை –
பிரவணம் போலே சுருங்கி இருத்தல்-வேதம் போலே பரந்து இருத்தல் -செய்கை அன்றிக்கே -ஆயிரம் பாட்டாகவும் அது தான் சாரமாகவும்-ஸ்திரீ பாலர்களுக்கும் கற்கலாம் படியான பாஷையிலே செய்து அருளுகைக்கு லோகத்திலே வந்து அவதரித்து அருளினவராய் -பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆகிய சடர்க்கு பிரதிபடராய் இருக்கையாலே – ஸ்ரீ சடகோபர் -என்னும் திரு நாமத்தை உடையவரான ஆழ்வாரை–
—
ஆனால் அபௌருஷேயமான வேதம் இப்படி அவஸ்தாந்தரத்தை பஜித்ததாகில் கலுஷமாய் அர்த்த பிரகாசத்வம் குன்றாதோ -என்ன – வக்த்ரு விசேஷத்தாலே அது மற்றை படியாய்த்து-( தெளிந்து பிரகாசம் மிக்கு ) என்னும் அத்தை சத்ருஷ்டாந்தமாக அருளி செய்கிறார்–ஆனால் இப்படி பரத்வ ப்ரதிபாதகமான வேதம் அவஸ்தாந்தர பாக்காயுள்ள வளவில் ப்ரமேய ப்ரகாஸகமாக வற்றோ என்ன, இவ் வவஸ்தையிலே யதாவாக ப்ரகஸிக்கும் என்னுமிடத்தை த்ருஷ்டாந்த முகத்தாலே பேசுகிறார்–
மண்ணாடின சக்ய ஜலம் தோதவத்தி சங்கணி துறையிலே துகில் வண்ணத் தெண்ணீராய்
அந்தஸ் ஸ்தத்தத்தை காட்டுமா போலே அல்ப ஸ்ருதர் கலக்கின சுருதி நன் ஞானத் துறை சேர்ந்து
தெளி உற்று ஆழ் பொருளை அறிவித்தது .-சூரணை -71-
அதாவது
உச்ச ஸ்தலத்தில் நின்றும் ,வேகத்தோடு வந்து பூமியில் விழுகையாலே, ம்ருன் மிஸ்ரமாய் கலங்கி சஹ்யத்தில் நின்று வரும் ஜலமானது ,
தோதவத்தி தூய் மறையோர் துறை -பெரியாழ்வார் -4-8-1-என்றும்
பொருநல் சங்கணி துறை –திருவாய் -10-3-11-என்றும் சொல்லுகிற துறைகளிலே வந்தவாறே துறை வாசியாலே ,
துகில் வண்ண தூ நீர்–திருவாய் -7-2-11- -என்றும்
தெண்ணீர் பொன்னி–பெருமாள் திரு -1-1- -என்றும் சொல்லுகிற படியே தெளிந்த நீராய் ,தனக்குள்ளே கிடக்கிற பதார்த்தங்களை பிரகாசிக்குமா போலே-பிபேத் யல்ப ச்ருதான் வேதோ மாமயம் பிரதரிஷ்யதி –என்கிற படி –வேதம் தான் நடுங்கும் படி ,தத் அபிப்ராயம் அறியாமல் ,பிரதி பந்தங்களை சொல்லும் அல்ப ஸ்ருதர் ஒரு வாக்யத்து அர்த்தம் சொல்ல புக்கால் ,அது தன்னில் நின்று விபிரதிபத்தி பண்ணி
த்வைதம் என்பார் அத்வைதம் என்பார் த்வைதாத்வைதம் என்பராய் இப்படி கலக்க கலங்கிய சுருதியானது-நல் ஞானத் துறை -என்று இவர் தாம் அருளிச் செய்த படி-யதா ஞானத்து துறையான இவ் ஆழ்வார் பக்கலிலே வந்து சேர்ந்து ,-தெளி உற்ற ஆயிரம் -என்கிற படியே முன்புத்தை கலக்கம் தீர்ந்து ,தெளிவை அடைந்து ,-அறிவித்தேன் ஆழ் பொருளை -என்கிற படியே அகாதமாய் ,பரம ரகஸ்யமான அர்த்த விசேஷங்களை எல்லாம் தோன்றுவித்தது என்கை-
மண்ணாடின ஸஹ்ய ஜலமாவது – ‘*தோதவத்தித் தூய் மறையோர் துறை படிய”’ (பெரியா. 4 – 8 – 1) என்றும், “பொருநல் சங்கணி துறை ”” (திருவா. 10 – 3 – 11) என்றும் சொல்லுகிற துறைகளிலே ‘ ‘துகில் வண்ணத் தூநீர்ச் சேர்ப்பன்’‘ (திருவா. 7 – 211) என்றும், “தெண்ணீர்ப் பொன்னி” (பெருமா. தி. 1 – 1 ) என்றும் சொல்லுகிறபடியே தெளிந்த நீராய்த் தனக்குள்ளே கிடக்கிற பதார்த்தங்களை ப்ரகாஸிப்பிக்குமாப் போலே, அல்ப ஸ்ருதர் கலக்கின ஸ்ருதி – ”இதிஹாஸ புராணாப்யாம் வேதம் ஸமுபப்ரும்ஹயேத் பிபேத் யல்ப ஸ்ருதாத் வேத-மாமயம் ப்ரதரிஷ்யதி” (பர. ஆதி.) என்கிறபடியே அல்ப ஸ்ருதராயிருக்கு மவர்கள் ஒரு ஸ்ருதி வாக்யத்தைப் பிடித்து இதுக்குப் பொருள் த்வைதமென்றும், அத்வைதமென்றும், த்வைதாத்வைதமென்றும் இப்படி பஹு ப்ரகாரமாகக் கலக்க, கலங்கின ஸ்ருதியானது – (நன் ஞானத்துறை சேர்ந்து) ‘“ரமணீயம் ப்ரஸந் நாம்பு, ஸந் மநுஷ்யமதோ யத (ரா. பரா. 2 – 5) என்றும், ““காலை நன் ஞானத்துறை”: (திருவிரு. 93) என்றும் சொல்லுகிறபடியே ஞானத் துறையான இவ்வாழ்வார் பக்கலிலே சேர்ந்து, (தெளிவுற்று ஆழ் பொருளை அறிவித்தது) *’தெளிவுற்ற வரயிரம் ” (திருவா, 7 – 5 – 11) என்கிறபடியே ப்ரஸந்ந கம்பீரமான ஆயிரம் பாட்டாய், ““அறிவித்தேன் ஆழ்பொருளை ” (நா. திருவ. 1) என்கிறபடியே அகதமாய் பரம ரஹஸ்யமான அர்த்த விஸேஷங்களை யெல்லாம் யதா தர்ஸநம் பண்ணுவிக்கும் என்கிறார் –
மா தவத்தோன் புத்திரன் போய் மறி கடல் வாய் மாண்டானை
ஓதுவித்த தக்கணையா வுரு வுருவே கொடுத்தானூர்
தோதவத்தி தூய் மறையோர் துறை படிய துளும்பி எங்கும்
போதில் வைத்த தேன் சொரியும் புனல் அரங்கம் என்பதுவே – 4-8- 1—சமாசார (சம்யக் ஆச்சாரமாய் ) பரர் ஆகையாலே – பரிசுத்தமாய் தோய்த்து உலர்த்தின வஸ்தரங்களை தரித்து கொண்டு இருப்பாராய்-
தூய்தான மறையே தங்களுக்கு நிரூபகமாய் உடையராய் இருக்குமவர்கள்–மறைக்கு தூய்மையாவது –அபவ்ருஷேயமாய்-நித்ய – நிர்தோஷமாய் – இருக்கையாலேசர்வ பிரமாண விலஷணமாய்- பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை – உள்ளபடி பிரதி பாதிக்க வற்றாய் இருக்கை –இத்தை இவர்கள் நிரூபகமாக உடையராய் இருக்கை யாவது–ஸ்வாத்யாயோ அத்யே தவ்யே-என்கிற விதி பிரகாரம் தப்பாமல் அத்யயனம் பண்ணி – அதில் அர்த்த ஞானத்தையும் அதுக்கு அனுரூபமான அனுஷ்டானத்தையும் உடையராய் இருக்கையாலே வைதிகர் என்றே நிரூபகமாய் படி இருக்கை–துறை படி- கங்கையில் புனிதமாய காவேரி –என்கிறபடி கலந்து இழி புனலான கங்கையில் காட்டிலும் பரி சுத்தமான காவேரியிலே பெரிய பெருமாளுடைய திருக் கண் நோக்கான திரு முகத் துறை முதலான துறைகளிலே – திரள் திரளாக அவஹாகித்து ஸ்நானம் பண்ணி-
செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு அத் திருவடி திருவடி மேல் பொருநல்
சங்கணி துறைவன் வண்தென் குருகூர் வண் சடகோபன் சொல்லாயிரத்துள்
மங்கையர் ஆய்ச்சியர் ஆராய்ந்த மாலை அவனோடும் பிரிவதற்கு இரங்கி தையல்
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன இவையும் பத்து அவற்றின் சார்வே-10-3-11-இவர் இருந்த இடத்தே சத்துக்கள் சேருமா போலே -சங்குகளாலே அணியப் பட்ட -திருப் பொருநலை யுடையராய் –
முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் மொய்புனல் பொருநல்
துகில் வண்ணத் தூ நீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ் வண் குரு கூர்ச் சட கோபன்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே.–7-2-11-பொருநலில் துகிலினுடைய வர்ணமான சுத்த ஜலத்திலே சேர்க்கப் பட்டவர்–தம்முடைய திரு உள்ளம் போலே ப்ரசன்னமான ஜலத்தோடே சங்கதரானவர்-தூ நீர்த் துறைவன்-
இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த
அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
திரு அரங்க பெரு நகருள் தெண்ணீர் பொன்னி திரை கையால் அடி வருட பள்ளி கொள்ளும்
கருமணியை கோமளத்தை கண்டு கொண்டு என் கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே–1-1-தெளிந்த நீரை உடைத்த காவேரி -திரையாகிற கைகளாலே திருவடிகளை வருட-
காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்
மாலை வெய்யோன் பட வையகம் பரவுவர் அன்ன கண்டும்
காலை நன் ஞானத் துறை படிந்தாடிக் கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் அவன் மைப்படியே – – -93–காலை –சத்வோத்தரமான காலையிலே –நல் ஞானம் –ஞானம் ஆகில்-பகவத் விஷயத்தை பற்றி அன்றி இராது இறே –ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -(முதல் திருவந்தாதி )என்னக் கடவது இறே –தத் ஜ்ஞானம் அஞ்ஞானம் அதோன்யதுக்தம் (பராசர மகரிஷி )- என்றும் –வித்யான் யாசில் பகை புணம் – புறம்பே ஒன்றை அறிந்ததோடு துன்னம் பெய்ய அறிந்ததோடு வாசி இல்லை இறே –துறை படிந்தாடி –ஜ்ஞானம் ஆகிற இத் தீர்த்தத்திலே புக்கு அவஹாகித்து –
தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக்கதி செய்யும்
தெளிவுற்ற கண்ணனைத் தென் குரு கூர்ச்சட கோபன் சொல்
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்
தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே.–7-5-11-தெளிவுற்ற கண்ணனைத் –நாம் இவன் கார்யம் செய்யக் கடவோம் -என்று இருக்கும் கிருஷ்ணனை -இவன் கலங்கின அன்றும் தான் தெளிந்து முடிய நடத்துமவனை-தென் குரு கூர்ச்சட கோபன் சொல்-அவன் படி கிடக்க -சொன்னவர் படியாலும் ஆப்தர் என்று விஸ்வஸித்து இருக்கலாம் வார்த்தை –-தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்
இவை இரண்டும் கிடக்க இப்பாசுரம் தானே விஸ்வசிக்கலாம் படி தெளிவைப் பிறப்பிக்கும் இத்தை அப்யசிப்பவர்கள்-
நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்– யான்முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளைச்
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து–1-ப்ரஹ்மாவை சர்வேஸ்வரன் சிருஷ்டித்தான் – ஈஸ்வரனும் அறிய வேண்டாதே ப்ரஹ்மா தானே பிரதானனாய் ருத்ரனை சிருஷ்டித்தான் –அப்படி நானும் சொல்ல வல்லேனாய் அந்தாதி முகத்தாலே அகாதமான வேதார்த்தை அறிவித்தேன் –
—
ஆனால் வேதத்துக்கு அத்யயன கால நியதியும் ,அதிகாரி நியதியும் உண்டாய் இரா நின்றதே -அந்த வேத அவதாரமான இதுக்கு அவை இன்றிக்கே ஒழிவான் என் என்ன அருளி செய்கிறார் -இனிமேல் அந்த ப்ரதாநமான வேதத்திற் காட்டிலும் இதினுடைய அவதார ரூபமான திருவாய்மொழிக்கு இவருடைய ஸ்பர்ஸத்தாலே வந்த ஏற்றம் சொல்லுகிறது–
மேகம் பருகின சமுத்ராம்பு போலே நூற் கடல் சொல் இவர் வாயான வாய்த் திருந்தின வாறே சர்வதா சர்வோப ஜீவ்யம் ஆமே –சூரணை -72-
அதாவது –
விரசமாய் ,தத் அந்தர்கத சத்வங்களுக்கு ஒழிய புறம்புள்ளார்க்கு உப ஜீவ்யம் அன்றிக்கே -பர்வங்களில் ஒழிய ஸ்பர்சிக்கலாகாது என்கையாலே , ஸ்பர்ச கால நியதியை உடைத்தாய் ,இருக்கிற சமுத்திர ஜலமானது , மேகம் பருகி வர்ஷிக்க , அந்த மேக ஸ்பர்சத்தாலே, தன் விரதசை போய் , சர்வதா சர்வ ஜன போக்யமாம் போலே ,-ஸ்ராவண்யாம் ப்ரவ்ஷ்ட பாத்யம் வா உபாத்க்ருத்ய யதா விதி யுக்தச் சந்தாம் ஸ்யதீ யீத ஈன மாசான் விப்ரோர்த்த பஞ்சமான் ,அத ஊர்த்த்வம் து சந்தாம்சி சுக்லேது நியத படேத்
வேதான்காநி ரஹஸ்யம் ச கிருஷ்ண பஷேது சம்படேத்–மனு ஸ்ம்ருதி -4-95- (பிராமணன் ஆவணி மாதத்திலாவது புரட்டாசி மாதத்திலாவது சாஸ்திரத்தில் சொல்லியபடி உபாகர்மாக்களை செய்து
நியமத்துடன் கூடினவனாய் நாலரை மாதங்களில் வேதங்களை அத்யயனம் செய்யக் கடவன் –
இதற்குப் பிறகு நியமத்துடன் கூடினவனாய் சுக்லபக்ஷத்தில் வேதங்களை ஓதக் கடவன் –
வேதங்களையும் உபநிஷத்துக்களையும் கிருஷ்ண பக்ஷத்தில் நன்றாக அத்யயனம் செய்யக் கடவன் ) என்கிற படியே அத்யயன கால நியதியையும் த்ரைவர்ணிகாதி காரதயா அதிகார நியதியையும் உடைத்தாய் உள்ள –நூல் கடல்—மூன்றாம் திருவந்தாதி -32-என்கிற வேத வித்யா சமுத்ரத்தில் வசனம்-இவள் வாயனகள் திருந்த–திருவாய் -6-5–7- -என்கிற படியே ,இவருடைய வாக்கதமாய் ,-கால நியம ,அதிகாரி நியம நிரபேஷமான ஆகாரத்தை அடைந்து ,கட்டளைப் பட்டவாறே – அத்யே தவ்யம் த்விஜச் ரேஷ்டை : வேத ரூபமிதம் க்ருதம் ச்த்ரீபிஸ் சூத்ராதிபிச் சைவ தேஷாம் முக்திஸ் கரே ஸ்திதா–பாஞ்சராத்ரம் -(வேதரூபமாகச் செய்யப்பட இத்திருவாய் மொழி ப்ராஹ்மண உத்தமர்களாலும் பெண்களாலும் நான்காம் வருணத்தவர்களாலும் அத்யயனம் செய்யத்தக்கது –-இதனை அத்யயனம் செய்யுமவர்களுக்கு மோக்ஷம் கையில் இருக்கிறது -) -என்கிற படியே ஒரு கால நியமம் இன்றிக்கே ,சர்வ காலமும் சர்வருக்கும் உப ஜீவ்யமாம் இறே என்கை-
ஸமுத்ர ஜலம் விரஸதையை யுடைத்தாய் ததந்தர்கதமான பதார்த்தங்களுக்கே உபஜீவ்யமாய், புறம்புள்ளார்க்கு உப ஜீவ்யமன்றியிலே இருப்பதாய், அபர்வணி ஸ்பர்ஸிக்கைக்குக் கால நியதியையு முடைத்தாயிருக்கும். அந்த ஸமுத்ர ஜலத்தை மேகமானது பாநம் பண்ணி ஐகத்திலே வர்ஷிக்க அந்த மேக, ஸ்பர்ஸத்தாலே அதினுடைய விரஸ்தையும், ஸ்பர்ஸ கால நியதமும் போய், ஸர்வ ஜந போக்யமுமாமாப் போலே, பகவத் ஸ்வரூபாநுரூப குண விபூ,திகளை ப்ரதிபாதிக்கிற வேதம் பகவத் விபூதி பூ.தரான தேவதாந்தரங்களை ப்ரதிபாதிக்கை யாகிற விரஸதையை உடைத்தாய், வேதாதிகாரிகளான த்ரை வர்ணிகர்க்கே அத்யேதவ்யமாகையாலே அதி க்ருதாதி காரமுமாய் அத்யயந-அநத்யயந-கால நியதியையு முடைத்தா யிருக்கும். ‘“நூற் கடல்’” (மூ. திருவ, 92) என்கிறபடியே அபரிச்சேத்யமான அந்த வேதமாகிற ஸாஸ்த்ரத்திலுண்டான அர்த்த விஸேஷங்கள் ‘‘இவள் வாயனகள் திருந்தவே” (திருவா. 6 – 5- 7) என்கிறபடியே இவருடைய வாக் கதமாய்க் கொண்டு கட்டளைப் பட்டவாறே பகவத் வ்யதிரிக்த ப்ரஸம்ஸா பரதையாகிற விரஸதையும் போய் “அத்யேதவ்யம் த்விஜ ஸ்ரேஷ்டைர் வேத ரூபமிதம் க்ருதம் । ஸ்த்ரீபிஸ் ஸூத்ராதி பிஸ்சைவ தேஷாம் முக்தி: கரே ஸ்திதா” (பாஞ்ச.) என்கிறபடியே ஸர்வாதி காரமுமாய் ஸர்வ காலாத் யேதவ்யமுமா யிருக்கும்-
பாற் கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும்
நூற் கடலும் நுண்ணூல தாமரை மேல் -பாற் பட்டு
இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்
குருந்து ஒசித்த கோபாலகன் ——-32–வித்யா சமுத்ரமும்-இதிஹாச புராணங்கள் ஆகிற
கடலும் —
அன்னைமீர்! அணி மாமயில் சிறு மானிவள்நம்மைக் கை வலிந்து
என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலை வில்லி மங்கலம் என்றலால்
முன்னம் நோற்ற விதி கொலோ? முகில் வண்ணன் மாயம் கொலோ?
அவன்சின்னமும் திருநாமமும் இவள் வாயனகள் திருந்தவே.–6-5-7-அல்லாதார் தங்கள் திருந்துகைக்காக திரு நாமங்கள் சொல்லுவார்கள் –திருநாமம் திருந்துகைக்கு இவள் சொல்ல வேணும் -நாமும் திரு நாமங்கள் சொல்கிறோம் -இவள் வாயில் பட்ட வாறே இங்கனம் உயிர் பெற வேணுமோ என்கிறாள் –
—
இன்னமும் வேத கார்யமாய் இருக்க செய்தே காரணமனவது போல் அதிகிருதாதிகாரம் இன்றியே ,இது சர்வாதிகாரமாய் இருக்கக் குறை இல்லை என்னும் இடத்துக்கு ஒரு திருஷ்டாந்த விசேஷம் தர்சிப்பிகிறார்-ஸமுத்ர ஜலத்தையும் தத்கார்யமான மேகம் பருகின ஜலத்தையும் அதி க்ருதாதிகாரமான வேதத்துக்கும் தத் கார்யமான திருவாய்மொழிக்கும் த்ருஷ்டாத்தமாக்கினால் காரணம் போலே கார்யமும் அதிக்ருதாதிகாரமா யிருக்குமோ என்னில், அப்படியிராது–ஸர்வாதிகாரமாய், ஸ்லாக்யமாய்,ஸ்ப்ருஹணீயமா யிருக்குமென்கிறார்–
ம்ருத் கடம் போல் அன்றே பொற்குடம்-சூரணை -73-
அதாவது –
ம்ருத் கடம் தொடும் அவர்களே தொடும் இத்தனை போக்கி ,எல்லாரும் தொட ஒண்ணாதே இருக்க ,
பார்திவமாய் இரா நிற்க செய்தே ,பொற் குடம் எல்லோருக்கும் ஸ்பர்சிக்க இரா நின்றது இறே என்கை .
இத்தால் காரணமான வேதம், அதிக்ருதிதாதிகாரமாய் இருந்தாலும் , தத் கார்யமான இது
சம்ஸ்கார விசேஷத்தாலே ,சர்வாதிகாரமாய் இருக்கக் குறை இல்லை என்றதாயிற்று —
த்ருஷ்டாந்தத்திலே தோற்றுகிற காரணதய கார்ய ஸ்லாக்யாதிகள் ,தார்ஷ்டாந்திகத்திலும் விவஷிதம்
ம்ருத் கடமானது தொடுமவர்களே தொடுமித்தனை போக்கி எல்லார்க்கும் தொட வொண்ணாதிறே. அங்ஙனன்றிக்கே பொற் குடம் பார்த்திவமா யிருக்கச் செய்தேயும் எல்லார்க்கும் ஸ்பர்ஸிக்கவுமாய, ஸ்லாக்யமுமாய், ஸ்ப்ருஹணீய முமாயிருக்கும். ஆகையாலே அதி க்ருதாதிகாரமான வேதந் தான் திருவாய்மொழியான அவஸ்தையை பஜித்தாலும் ஸர்வாதிகாரமுமாய், ஸ்ப்ருஹணீயமுமா யிருக்குமென்கிறார்-
—
இனி மேல் இப்படி இருந்துள்ள திருவாய் மொழியும் ,ஏதத் பிரதிபாத்யமான அர்ச்சாவதாரம் ஆகிய பிரமாண பிரமேய சரமங்கள் இவற்றின் உடைய பூர்வ அவஸ்தைகளில் , அவஹாகன ஷமர் அல்லாதவருக்கு சுலபமாக கல்பிதங்கள் ஆனவை என்று –-வேத வேதே -சூரணை -70– இத்யாதி வாக்யத்தில் சொன்ன பிரமாண பிரமேய சரமங்களை நிகமிக்கிறார் –ஸர்வ ஸுலபமாய் ஸர்வாதிகாரமான அர்ச்சாவதாரத்தையும் திருவாய் மொழியையும் கீழ் ‘“பரத்வபரமுது வேதம்” என்று ப்ரஸ்துதமான ப்ரமாண ப்ரமேயங்களை “‘பெரும்புறக் கடலும்” ““ஸ்ருதி ஸாகரமும் என்று பராமர்ஸித்து, அவற்றினுடைய எல்லையான அர்ச்சாவதாரமும் திருவாய்மொழியும் கீழ்ச் சொன்ன பரத்வாதிகளுக்கும் வேதம் முதலான ஸாஸ்த்ரங்களுக்கும் அயோக்யரானார்க்கும் அநுபாவ்யமாம்படி சரமமாயிருக்கும் என்கிறார்.
பெரும் புறக் கடலும் சுருதி சாகரமும் அலைந்து ஆழ்ந்து ஓடும் இடங்களில் அயோக்யருக்கு சமைத்த மடுவும் சாய் கரகமும் மாண மேய சரமம்-சூரணை -74-
அதாவது
பெரும் புறக்கடலை –பெரிய திருமொழி -7-10 -1-எல்லாக் கடலுக்கும் புறம்பாய் ,தான் பெருத்து இருக்கிற கடல் போலே அபரிசேத்யமாய் இருக்கிற ,பரவஸ்துவான பிரமேயம் – சமுத்ரம் தரங்கிதமாய் அலைந்து நிற்கும் இடம் போலே ,ஜ்ஞானாதி ஷட் குண பரிபூரணமான தானே–அவற்றில் இவ் இரண்டு குணங்களை பிரகடிப்பித்து கொண்டு ,-பிரகாசிப்பித்துக் கொண்டு – சங்கர்ஷ்ணாதி ரூபேண ,வியூஹித்து இருக்கும் இடத்திலும் ,-சமுத்ரத்தில் நிலை காண ஒண்ணாத படி , ஆழ்ந்து இருக்கும் இடம் போலே ,-யாமாத்மா ந வேத -ப்ருஹதாரண்யம் -5-7-22(எந்தப் பரம்பொருளை ஆன்மா அறியவில்லையா )-என்றும்-கட்கிலி உன்னைக் காணுமாறு அருளாய் –திருவாய் -7-2-3 –என்றும் சொல்லுகிறபடி
அத்ருச்யத்வேன அந்தர்யாமியாய் நிற்கும் இடத்திலும்–சமுத்ரமானது ,கழிகளாய் கொண்டு ஓடும் இடம் போலே-மானுஷே லோகே ஜஜ்ஞே விஷ்ணு சநாதன-அயோத்யா காண்டம் -1-7- ( மனித லோகத்தில் நித்யரான விஷ்ணுவானவர் பிறந்தார் )என்றும் – யஸ்யாம் ஜாதோ ஜகன்னாதச் சாஷாத் விஷ்ணுஸ் ஸநாதன-( உலக நாதனான நித்யனான விஷ்ணு எவ்விடத்தில் அவதரித்தாரோ )-என்றும் –
நாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாதோ மதுராம் புரீம்–ஸ்ரீ ஹரி வம்சம் -113-62-( திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையைத் தனக்கு முன்னே அவதரிக்கும்படி போகவிட்டு வடமதுரை என்னும் நகரத்துக்கு எழுந்து அருளினாரோ ) என்றும்-விஷ்ணுர் மானுஷ ரூபேண சசார வஸூ தாதலே –( விஷ்ணுவானவர் மனித உருவத்தோடு பூ லோகத்தில் சஞ்சரித்தார் )-என்கிற படியே கண் காண வந்து தோன்றி ஞாலத்தூடே நடந்து திரிந்த அவதாரமான இடத்திலும் , தேச கரண கால விப்ரக்ருஷ்டைதகளால் கிட்டி அனுபவிக்க யோக்யதை அல்லாதவருக்கு ,-அதிலே தேங்கின மடுக்கள் போலே -( பூதக ஜலம் போலே அந்தர்யாமித்வம் -ஆவரண ஜலம் போலே பரத்வம் – பாற்கடல் போலே வ்யூஹம் -பெருக்காறு போலே விபவங்கள்-அதிலே தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம் — ஸ்ரீ வசன பூஷணம் –சூர்ணிகை -39-) -என்கிறபடியே தேசாதி விப்ரகர்ஷ கந்தம் இல்லாதபடி ,கல்பிக்க பட்ட அத்யந்த சுலப விஷயம்
பிரமேய ஆவிர்பாவ பரம்பரையின் உடைய சரம அவஸ்தையான அர்ச்சாவதாரம் .–மதி மந்தாந மாவித்ய யேனாஸௌ சுருதி சாகராத் –( எந்த வியாச பகவானால் வேதமாகிய கடலில் நின்றும்
ஞானமாகிய மத்தை த்தை கடைந்து )-என்கிறபடியே அபரிசேத்யமாய் பரத்வ பரமான வேதம் –
சமுத்திர தரங்கித பிரதேசம் போலே தத் வியூஹ பிரதி பாதகதயா அவச்த்தாந்தராபன்னமாய் பஞ்ச ராத்ரமான விடத்திலும் , சமுத்ரத்தில் அகாத ஸ்தலம் போலே தத் அந்தர்யாமித்வ பிரதிபாதகதயா அவஹாகித்து அர்த்த தர்சனம் பண்ண அரிதாம் படி மன்வாதி ஸ்ம்ருதி ரூபமான இடத்திலும்
சமுத்ரம் கழிகளாய் ஓடுமா போலே தத் அவதார பிரதிபாதகதயா இதிகாச ரூபேண விஸ்த்ருதமாய் நடக்கிற இடத்திலும் , ஞானசக்தியாதி சங்கோசத்தால் அவஹாகித்து விடாய் தீர மாட்டாருக்கு
–விடாய்த்தவன் வாயை அங்காந்து இருக்க தானே தண்ணீர் வந்து குதிக்கும் படி ,கல்பிதமான சாய் கரகம் போலே , அனாசாயேன உஜ்ஜீவிக்கலாம் படி ,அத்யந்த சுலபமான சாஸ்திரம் பிரமாண பூதமான வேதத்தின் உடைய ஆவிர்பாவ பரம்பர சரம அவஸ்தையான திருவாய் மொழி என்கை–இத்தால் மடுவும் சாய் கரகமும் என்கையாலே பிரமாண பிரமேயங்களின் உடைய ஒளியும் எளிமையும் இனிமையும் தொடக்கமான சத்குண சாஹித்யம் சொல்லப் பட்டது-(உப்புக் கடல் -எம்பெருமானாகிய பெரும் புறக்கடல் -வேதக்கடல் – மூன்றுக்கும் முடிந்தநிலை -தடாகம் -அர்ச்சாவதார -திருவாய்மொழி-என்றவாறு )-
( பெரும் புறக்கடலும் ஸ்ருதி ஸாகரமும்) அபரிச்சேத்யமான ப்ரமாண ப்ரமேயங்கள்; அவை யாவன – பரத்வமும் பரத்வ ப்ரதி பாதகமான வேதமும்-அவற்றுக்குடலானால் அலையக் கடவதிறே – அலைகையாவது – பர வாஸுதேவர் பக்கல் நின்றும் பிறந்த ஸங்கர்ஷண ப்ரத்யும்நாதிகளான வ்யூஹமூம் தத் ப்ரதிபாதகமான ஸ்ரீபாஞ்சராத்ர ஸாஸ்த்ரமும்-(ஆழ்ந்து) “யமாத்மா ந வேத,” (ப்,௬. 5 – 7 – 22) என்று சொல்லுகிற அந்தர்யாமித்வமும், தத் பரமான மந்வாதி ஸ்ம்ருதிகளும். (ஓடுமிடம்) ராம க்ருஷ்ணாத் யவதாரங்களும் தத் ப்ரகாஸகங்களான இதிஹாஸங்களும்;-இவை தேஸ -கால -இந்திரிய -விப்ரக்ருஷ்டங்களாகையாலே பரத்வாதிகளை அநுபவிக்க யோக்யரல்லாதவர்களுக்கு அப்படி தேஸ கால விப்ரகர்ஷமு மின்றிக்கே பெருகின ஆற்றில் மடுப் போலே ஸர்வ ஸுலப,முமாய், ருசி ஜநகமூமாய், ஸ்ரமஹரமுமாய், ஸர்வ ஜந போக்யமுமாய், ஸர்வாபாஸ்ரயமுமான அர்ச்சாவதாரமும், வேதாதி களுக்கு யோக்யரா யிருக்கிறவர்களுக்கு சாய் கரகம் போலே ஸுகரமுமாய், ஸர்வாதிகாரமுமான திருவாய் மொழியும் ப்ரமாண ப்ரமேயங்களினுடைய சரம மென்கிறார். ஆக, இத்தால் **பரத்வபரமுதுவேதம்’” என்று தொடங்கின அர்த்தங்களை உபபாதி,த்து அவ் வர்த்தத்துக்கெல்லை அர்ச்சாவதாரமும் திருவாய்மொழியுமென்று நிகமித்தாராய் ஆய்த்து –
பெரும் புறக் கடலை யடல் ஏற்றினைப் பெண்ணை யாணை எண்ணில் முனிவர்க்கு அருள்
தரும் தவத்தை முத்தின் திரட்கோவையைப் பத்தராவியை நித்திலத் தொத்தினை
அரும்பினை யலரை அடியேன் மனத்தாசையை அமுதம் பொதியின் சுவைக்
கரும்பினைக் கனியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே–7-10-1-சர்வ பதார்த்தங்களையும் தன்னுள்ளே அடக்கி நோக்கும் கடல் போலே-அபரிச்சேத்யனாய் உள்ளவனை –
எல்லா கடலுக்கும் புறம்பாய்-தான் பெருத்து இருக்கிற கடல் போன்று இருக்கிறவனை –
பூகத ஜலம் போலே அந்தர்யாமித்வம் – ஆவரண ஜலம் போலே பரத்வம் – பால் கடல் போலே வியூஹம் –
பெருக்காறு போலே விபவங்கள் – அதில் தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம் —சூரணை-39--இவனுக்கும் தேச கால கரண விப்ரக்ருஷ்டமின்றிக்கே – கோயில்களிலும் கிருஹங்களிலும் -என்றும் ஒக்க எல்லாருக்கும் கண்ணுக்கு இலக்காம்படி நிற்கிற – பின்னானார் வணங்கும் ஜோதி யான அர்ச்சாவதாரம் –(திருநெடும் தாண்டகம் ) பௌம நிகேதநேஷ் வபி குடி குஞ்சேஜ்ஷூ-என்கிறபடியே -பல இடங்களிலும் சன்னதி பண்ணி நிற்கும் படியை நினைத்து இறேமடுக்கள் போலே – என்ற பஹு வசனத்தாலே அருளிச் செய்தது – அவதார குணங்கள் எல்லாம் அர்ச்சா ஸ்தலங்களில் பரி பூரணமாய் இருக்கையாலும் – அவதார விக்ரஹங்களை அர்ச்சா ரூபேண பல இடங்களிலும் பரிக்ரஹித்து கொண்டு இருக்கையாலும்-அதிலே தேங்கின மடுக்கள் போலே -என்கிறது –மடுக்கள் பன்மை ஓர் அவதாரத்துக்கு பல பல சேஷ்டிதங்களுக்கும் பல திவ்ய தேசங்கள் உண்டே –அயத்ன ஸித்தமாய் –அதி ஸந்நிஹிதனுமாய்-அஷ்டாங்க தூர கமன நிரபேஷமாய்- கோயில் முதலான திவ்ய தேசங்களிலும் -க்ருஹங்களிலும் ஸ்தாவர ப்ரதிஷ்டையாய் இருந்து நிலைத்து தத் தத் அவதாரங்களில் நித்ய விக்ரஹமாய் கண்ணுக்கு இலக்காய் கொண்டு- சர்வ ஸமாஸ்ரயணீயமாய் – துர்லப பராங்முகையான பிரபத்திக்கு பிரிய விஷயம்-பெரிய விடாயான் -குளிர்ந்து தெளிந்து நிறைந்த –கிணறு கல்லியும் அண்டத்துக்கு பாய்ந்து பாற் கடலை கடைந்து -வற்றின ஆற்றிலே ஓடிச் சென்று தண்ணீர் தேடுவது போலே இத்தை விட்டு அங்கே தேடுகை –
–——————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்