இப்படி சரம பர்வ ஏக நிஷ்டரான இவர் தாம் ஸ்வ ஆச்சார்யரான நம்மாழ்வார் பகவத் விஷயத்திலே பண்ணும் அனுசந்தான பிரகாரத்தை இவ்வாழ்வார் விஷயத்தில் பண்ணினார் இறே -எங்கனே என்னில்
1-அவர் -அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாராவமுது -என்றார் -அந்த போக்யதா ப்ரகர்ஷத்தை ஸ்ரீ மதுரகவிகள் தாம் நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே -1-என்கிறார்
எப்பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும்
அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம் கை கமலம்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி ஊழி தொறும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே –2-5-4-இப்படிக் காலமெல்லாம் அனுபவியா நின்றாலும், அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதமேயாம்.-தாராவாஹிக விஞ்ஞானத்தில்-கால உபஷ்டம்பாதிகளால் வருவது ஒரு பேதம் உண்டு இறே ஞானத்துக்கு –அதாவது ஒரு பொருளைப் பற்றித் தொடர்ச்சியாக உண்டாகின்ற பல வகை அனுபவங்களில் காலம் தேசம் முதலியவைகளின்
கூட்டரவுகளால் வருவது ஒரு பேதம் உண்டு ஞானத்திற்கு;-இங்கு விஷயந்தானே பேதியா நின்றது வேறுபடுகின்றது-ஆயிற்று – என்பதாம்.–இப்படி கால தத்வம் உள்ளதனையும் அனுபவியா நின்றாலும்
பூர்வ க்ஷணத்தில் அனுபவம் போலே அன்றியே உத்தர க்ஷணத்தில் அனுபவம் இருப்பது –நித்ய அபூர்வமாய் இருக்கை-
அண்ணிக்கும் அமுதூரும்
ரச பதார்த்தங்கள் இட்ட பதார்த்தம் மாண்ட வாறே ரசம் மாளும்
இது ஒரு கால் இட்டால் உள்ளது அளவும் அமுது ஊற்று மாறாது என்கிறார்-அமுதூரும்
அமுது தான் ஊற்று மாறாதே செல்லும்–நசபுநர் ஆவர்ததே போலே-நினைத்த நெஞ்சம் தித்தித்தது
சொன்ன நாக்கும் தித்தித்துவாரா நின்றது-பகவத் விஷயம் நினைக்க நெஞ்சும் இல்லை
சொல்ல நாக்கும் இல்லை-அடியே பிடித்து ஆழ்வார் உடைய சாரச்யத்திலே பழகின நா அன்றோ-அமுதூரும்-அமுதூற்று மாறாதே நிற்கும்-அவ்விஷயம் ஆழ்வாருக்கு தத் ப்ரசாதத்தாலே நித்தியமாய் செல்லுமா போலே எனக்கும் ஆழ்வார் ப்ரசாதத்தாலே நித்யமாக செல்லப் பெற்றேன்
என் நாவுக்கே –இவ் வம்சத்தில் கரணியான என்னோடு கரணங்களோடு வாசி இல்லை-இது பின்னை எங்களுக்கு ரசிக்கிறது இல்லையோ என்னில்-முதல் அடியான பகவத் விஷயமும் கூட ரசியாது இருக்கிற உங்களுக்கு-அதின் எல்லையில் நிற்கிற எனக்கு ரசிக்குமா போலே ரசிக்குமோ-என் நாவுக்கே-அநாதி காலம் விஷயாந்தரங்களில் ரசித்துப் போந்த என் நாவுக்கே இவ் விஷயம் ரசிக்கிறது –என்றுமாம்
—
2-அவர் மலக்கு நாவுடையேற்கு -என்றார் -இவர் நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் -என்றார்
கலக்க ஏழ்கடல் ஏழ்மலை உலகேழும் கழியக் கடாய்
உலக்கத் தேர்கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும்பல
வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவை யுடை மால்வண்ணனை
மலக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம்மண்ணின் மிசையே?–6-4-9-ஹர்ஷ ப்ரகரஷத்தாலே அலமாக்கும் படி பண்ணும்-நா வீறு யுடைய எனக்கு இந்த பூமியின் மேலே எதிர் உண்டோ
ஈஸ்வரனுக்கு மநோ ஹாரியான வாக்கையுடையார் வேறு பூமியில் இல்லை என்று கருத்து –அவாக்ய அ நாதரா என்கிற சர்வாதிக வஸ்துவை விக்ருதமாக்கும் நா வீறுடைய எனக்கு-சோழேந்திர சிம்ஹனை உளுக்காகப் பண்ண வல்ல நாவைப் படைத்த எனக்கு -பூமியில் எதிர் உண்டோ -ஈஸ்வரன் உளுக்கு ஆகும் படி கவி சொல்ல வல்லார் தம்மை ஒழிய சிலைவர் இல்லாமையால் வேறு என்னோடு ஒப்பார் இல்லை என்கிறார்-சோளேந்திர சிங்கன்’ என்பது, நம் பெருமாளுடைய யானை. உளுக்காக்க – இருக்கும்படி. என்றது-சர்வேஸ்வரனாகிற மத்த யானையானது பணிந்து கொடுக்கும்படி செய்கிறேன் என்கிறார் என்றபடி.-மலக்கும் நாவுடையேன் – இவர் வார்த்தையில் கலங்குமவனன்றோ அவன் தான்.
இவர் கலங்கிச் சொல்லச் சமைந்தாற் போலே யன்றோ அவனும் கலங்கிக் கேட்கச் சமைந்தபடி.
நாவினால் நவிற்று -ஓர் உக்தியாலே இந்த சரீரத்தோடே அனுபவிக்கலாம் என்கிறார் –ஆழ்வார் -அடியை அடைந்து உள்ளம் தேறி ஈறில் இன்பத்திரு வெள்ளம் யான் மூழ்கினேன் –இத்தையும் செய்து அடைந்ததை-இவர் நாவினால் நவிற்று எய்தினார் என்கிறார் –என்றக்கால் அண்ணிக்கும் -என்று ப்ரஸ்துதமானத்தை யனுபாஷிக்கிறார்-மனஸ் சஹ காரம் இல்லை என்கிறார் –-பகவத் விஷயத்தில் உபகாரகரை ஸ்தோத்ரம் பண்ணக் கடவ நாவைக் கொண்டு அந்த கார்யதைக் கொள்ளப் பெற்றேன் -என்னவுமாம்-ஈஸ்வர ஸ்ருஷ்டிக்கு பிரயோஜனம் கொள்ளப் பெற்றேன் -நான் ஒருவனே என்கிறார்-இன்பம் எய்தினேன் –வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்ந்தனன் மேவி -என்று ஆழ்வார் அவ் விஷயத்தில் பெற்ற பேற்றை -இவ் விஷயத்திலே பெற்றேன் என்கிறார் –
சிந்தையினாலும் சொல்லாலும் செய்கையினாலும் -என்று கரண த்ரயத்தாலும் அவ்
விஷயத்தை ஆஸ்ரயித்தவர் பெற்ற பேற்றை உக்தி மாத்ரத்திலே பெற்றேன் –
அநாதி காலம் நரகத்திலே ஸ்ருஷ்டியும் -நரகத்திலே சம்ஹாரமும் ஆம்படி பண்ணின பாபத்தை-பண்ணிப் போந்த நாவால் -நிரதிசய ஆநந்தத்தை ப்ராபித்தேன் -என்னவுமாம் – (வையத்து வாழ்ச்சி போலே நாக்காலே இன்பம் -என்றபடி
–
3-அவர் -அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றார் -இவர் மேவினேன் அவன் பொன்னாடி மெய்மையே -என்றார்
அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன் றில்லா அடியேன் உன் னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10-உன் னடிக் கீழ் -விக்ரஹ யோகம் சொல்லுகிறது–அமர்ந்து -செறிந்து -சஹகாரி வ்யவதானம் இன்றிக்கே ஒழிகை
புகுந்தேனே.–போக்கு வரவு யுண்டாய் அன்று -புத்தி க தியாய் அத்யாவசாயத்தை சொல்லுகிறது-அடிக் கீழ் -என்கையாலே சரண சப்தார்த் தையும்-அமர்ந்து –என்கையாலே கிரியா பதத்தில் உபசர்க்க அர்த்தமாக உபாய உபேய விஷயமான வ்யவசாயத்தையும்-புகுந்தேனே.–என்று கிரியா ரூபமான ஆஸ்ரயணத்தையும்-புகுந்தேன் என்கிற பூதார்த்த நிர்த் தேசத்தாலே ஆஸ்ரயணத்துக்கு ஆவிருத் அபேஷை இல்லாத ஸக்ருத் கரணத்தையும் பிரகாசிப்பதாய்–இது பூர்ண சரணாகதி யாகையாலே
ஆச்ரயண அர்த்தமான ஸ்ரீ லஷ்மீ சம்பந்தமும் -குண யோகமும் ப்ராப்ய அன்விதமாய் இருக்கையாலும்
அடியேன் என்கிற அதிகாரி ஸ்வரூபத்தில் அநந்யார்ஹத்வ அநந்ய சரணத்வங்களோ பாதி அநந்ய போக்யத்வமும் ஸூசிதமாகையாலே-அமர்ந்து என்று பிரயோஜனாந்தர நிரசனம் ஸூ சிதமாகையாலே நமஸ் சப்தார்த்தம் சித்திக்கையாலும்-புகுந்தேன் என்கிற பிரதிவசனம் ப்ராப்திக்கும் ஸூ சகமாக வற்றாகையாலும்-பிரதானமான உபாய வரண வாக்யத்துக்குள்ளே வாக்ய சேஷமான உத்தர வாக்யார்த்தமும் அந்தரகதமாயிற்றதாயிற்று-ஆகையால் இப்பாட்டு வாக்ய த்வயார்த்த ப்ரகாசகமாகையாலே பூர்ண சரணாகதி யாகக் குறையில்லை-“புகல் ஒன்றில்லா அடியேன்”என்கையாலே, உத்தமனால் (உத்தமன் – தன்மையிடம்) போதருகின்ற அதிகாரியும்,
“உன்னடிக் கீழ்” என்கையாலே, “சரணௌ” என்ற சொல்லின் பொருளும்,-“அமர்ந்து புகுந்தேனே” என்கையாலே,“பிரபத்யே” என்ற சொல்லின் பொருளும் கூறியுள்ளதைத் தெரிவித்தபடி.
“சரணம்” என்ற சொல்லின் பொருளைத் தெரிவிக்கும் பதம் திருப்பாசுரத்தில் இல்லையே? எனின்,
“புகுந்தேன்” என்றதனால்“சரணம்” என்ற சொல் கோல் விழுக்காட்டாலே வருவது ஒன்றாம் ஆதலின், தனியே கூறிற்றிலர் என்க.-இப்பொருள் தன்னையே விவரணம் செய்கிறார்
‘“அகலகில்லேன் இறையும்” என்று’ என்றது முதல்‘பதத்தோடே சேரக் கடவனவாம்’ என்றது முடிய.
அமர்ந்து புகுந்தேனே – “முமுக்ஷுவான நான் சரணம் அடைகிறேன்” என்னுமாறு போலே.
அவனுக்கு ஒரு -ஸஹ காரி -துணை வேண்டுதல், தம் தலையிலே ஓர் உபாயத் தன்மை கிடத்தல் செய்யில் அன்றோ-நடுவே ஓர் இடையீடு விளம்பங்கட்குக் காரணம் உள்ளது என்பார் ‘அமர்ந்து’ என்கிறார், (இடையூறும் கால விளம்பமும் இல்லையே -பக்தி யோகம் இல்லையே )உன் அடிக் கீழ் –
“சரணௌ” என்ற பதத்தால் சொல்லப்படுகிற விக்கிரஹத்தைச் சொல்லுகிறது. யாங்ஙனம்? எனின்,
1-ஸூ பாஸ்ரயமாய் -எளிதில் பற்றக்கூடியதாய்,
2-உலக விஷயங்களிலே அருசி முன்னாகத் தன் பக்கல் ருசியையும் உண்டாக்கி,
3-பிறந்த உருசியையும் வளர்த்து,
4-பேற்றிற்கு விரோதமாயுள்ளனவற்றையும் தவிர்த்து,
5-ஒருதேச விசேடத்திலே போனால் நித்தியமாகக் கைங்கரியத்தைச் செய்வதற்கு எதிர்த் தொடர்புள்ளதுமாய்,
6-எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருப்பதற்கு விஷயமுமாவது விக்கிரஹம் ஆகையாலே என்க.
முதல் முதலிலே,
“துயர் அறு சுடர் அடிதொழுது எழு” என்று” திருவுள்ளத்தைக் குறித்து அருளிச் செய்து,
தாம் பற்றுகிற இடத்தில்
“உனபாதம் கூடுமாறு கூறாய்” என்றும்,
“உன்னடி சேர் வண்ணம் அருளாய்” என்றும்,
உன்னடி சேர அடியேற்கு ஆஆ என்னாயே!” என்றும்,
“பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராய்” என்றும்,
“உனபாதம் சேர்வது அடியேன் எந்நாள்” என்றும்,
“எந்நாள் உன்னடிக்கள் அடியேன் மேவுவதே?” என்றும்,
“நொடியார் பொழுதும் உனபாதம் காண நோலா தாற்றேன்” என்றும்,
“அடியேன் உனபாதம் அகலகில்லேன் இறையும்” என்றும்,
“உன்னடிகீழ் அமர்ந்து புகுந்தேன்” என்றும் இவர் அடி விடாமல் அநுசந்தித்தபடி கண்டதே!
அமர்ந்து –
அமருகையாவது, வேறு உபாயங்களை விட்டதைப் போன்று வேறு பலன்களில் அருசியைச் சொல்லுகிறதோ? என்னில், அது இங்குச் சொல்லப்பட வேண்டியது இல்லாமையாலே பொருள் அன்று.
இதற்குப் பொருள்,-“எல்லாத் தர்மங்களையும் விட்டு” என்றும், “பற்றுக்கோடாகப் பற்று” என்றும் சொல்லச் செய்தே “ஏகம்” என்னும் சொல்லைச் சொன்னதைப் போன்று,-திருவேங்கடமுடையான் திருவடிகளும் தம்முடைய தலையும் கொக்குவாயும் படுகண்ணியும் போலே இடைவெளி இல்லாமல் பொருந்தினபடி சொல்லுகிறது.
மேவினேன் அவன் பொன்னடி
-இங்கு இருந்த நாள் அஞ்ஞாத ஞாபநத்தாலே உபகாரகர் ஆகவும்-பகவல் லாபத்துக்கு புருஷகாரமாகவும் –-நித்ய விபூதியில் யத்ர பூர்வே சாத்யாஸ் ஸந்தி தேவா -என்கிறபடியே ப்ராப்யமாகவும் இவர் தம்மையே-பற்றினேன் -ஆளவந்தார் -அத்ர பரத்ர சாபி என்கைக்கடி இவர் இறே-இஹ லோக சுக ஜனகரும் -பர லோக சுகத்துக்கு சாதனமும் –எனக்கு சுவாமியும் -கால ஷேப விஷயமும் -ஆழ்வாரே என்கிறார்-அவன் பொன்னடி-அவனது போலே உலகம் அளந்த-ஊர் பொதுவாய் -எல்லார் தலையிலும் இருக்கும் பொன்னடி அன்று-நான் தொட்டுப் பரிமாறினாலும் தோஷம் வாராத திருவடிகள்
மேவினேன் –வர்த்தமான நிர்த்தேசம் பண்ண வேண்டாமல் சத்ருத் சமாஸ்ரயணம் அமைந்தது
உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே போலே இன்றி-எங்கேனும் இருந்து ஆஸ்ரயிக்கலாம் படி
அத்தோடு -வேறு ஒரு கால் இருக்கைக்கு இடம் இல்லாத படி -பொருந்தி விட்டேன்-மெய்மையே-சத்தியமே -ஸ்ரீ சடகோபனை தலையிலே கொண்டு இருந்தும் பொய் சொல்வார் உண்டோ-கால ஷேப விஷயம் எனக்கு ஓன்று இரண்டா ஆயிரம் பிரகாரம் அல்லையோ–
மேவினேன் அவன் பொன்னடி – ஆழ்வாருடைய ஸ்ப்ருஹணீ யமான திருவடிகளை உத்தேச்யமாக பொருந்தினேன் – ஷிபாமி -என்று ஈஸ்வரனும் கூட உபேஷித்த தசையிலே விஷயீ கரித்த ஆழ்வாருடைய விலஷணமான திருவடிகளோடே பொருந்தப் பெற்றேன் – (பரம காருணீகர் ஆகையால் ஷிபாமி -என்று-அச்சம் உறுத்தினான் -உபேக்ஷித்தான் என்கிறார்-அஹருத்ய யுக்தி என்றபடி- )
நீர் செய்தது -இதுவாகில் பேற்றில் அறுதிபாடு இருந்த படி என் -என்ன –
மெய்ம்மையே மேவினேன் –
1-உபகார விஷயத்திலே நிற்கிற அளவிலே வேறு ஒரு விஷயம் உத்தேச்யமாய்
அது கிட்டின வாறே அதிலே தோள் மாறும்படி யன்றிக்கே -ஐஹிக ஆமுஷ்மிகங்கள் இரண்டும் ஆழ்வார் திருவடிகளாகப் பொருந்தினேன் –
2-இங்கு இருந்த நாள் அஜ்ஞா தஜ்ஞாபநத்தாலே வுபகாரராகவும் –
யத்ர பூர்வே சாத்யாஸ் சந்திதேவா என்கிறபடியே-பகவத் லாபத்துக்கு புருஷகாரமாகவும்-நித்ய விபூதியில் ப்ராப்யமாகவும் இவர் தம்மையே பற்றினேன் –
4-அவர் -கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை -என்றார் -இவர் தேவு மற்றறியேன் -என்றார் –
நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்
மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்பதெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே.–5-2-7-சர்வ தேவா தேவகீபுத்ர ஏவ -என்கிறபடியே கிருஷ்ணனை ஒழிய ஆஸ்ரயணீயர் இல்லை –-அவனுக்கு பிரகார பூதராய் கொண்டு உளராம் அத்தனை அல்லாத தேவதைகள் –யோயோ யாம் யாம் தனும் பக்த –“வேதங்களும் மூன்று அக்நிகளும் ஐந்து ஆஹீதிகளும் எல்லாத் தேவர்களும் தேவகியின் புத்திரனான கண்ணபிரானே” என்கிறபடியே, அவனுக்குச் சரீரமாக அல்லது ஸ்வதந்திரமாயிருப்பது ஒரு தேவதை இல்லை.
“எந்த எந்த பக்தன் எந்த எந்தச் சரீரத்தைச் சிரத்தையுடன் அருச்சிப்பதற்கு விரும்புகிறனோ அவன் அவனுக்கு அந்த அந்தச் சிரத்தையையே நிலைநிற்கும்படி செய்கிறேன்” என்கிறபடியே, அக்கண்ணபிரானுக்குச் சரீரமாக உளராகில் ஆமித்தனை.
தேவு மற்று -அறியேன் விட்ட விஷயத்தின் பேர் சொல்லாமைக்கு பாவோ நாந்யாத்ர கச்சதி போலே –
பாவின் இன்னிசை -பாவிலே பூண்ட இன்னிசை-ஐஸ்வர்யத்தை -அல்பம் அஸ்திரம் என்று கழித்து
ஸ்திரமான ஆத்மப்ராப்தியை அபுருஷார்தம் என்று கழித்து-ஸ்திரமுமாய் பரம போக்யமுமாய் உள்ள பகவத் ப்ராப்தியை ப்ராப்யத்தில் பிரதம அவதி என்று கழித்து-இதில் சரம அவதியான ஆழ்வாரையும் உத்தேச்யர் அன்று என்று கழித்து-அவரோடு சம்பந்தித விஷயத்தையும் ரசாஸ்ரயம் அன்று என்று கழித்து-அத்தோடு சம்பந்தித இசையே உத்தேச்யம் என்கிறார்-தெய்வத் தண் அம் துழாய்த் தாராயினும் -தழை யாயினும் -தண் கொம்பாயினும் – கீழ் வேராயினும் -நின்ற மண் ஆயினும் கொண்டு வீசுமினோ -இத்யாதிப் படியே-பகவத் சம்பந்தம் போகப் போக நிறம் பெறுகிற படி-ரசாயன சேவை பண்ணித் திரிவாரைப் போலே –பாடித் திரிவனே-இது காணும் இவருக்கு தாரகமாய் சஞ்சரிக்கப் பண்ணுகிறது
தேவு மற்று அறியேன் –
ப்ராப்யமும் ப்ராபகமாக வேறு ஒரு வஸ்து உண்டு என்று இரேன்-மெய்ம்மையே என்ற இடம் அன்வயத்தாலே சொல்லுகிறார் -தேவு மற்று அறியேன் என்று-வ்யதிரேகத்தாலே சொல்லுகிறார் இ றே தம்முடைய அத்யாவசியம் தோற்றுக்கைக்காக -மற்று அறியேன் -என்று–புருஷார்தங்களோபாதி பகவத் விஷயத்தையும் கழிக்கிறார் இறே-அதின் எல்லையான ஆழ்வார் திருவடிகள் அளவும் வந்தவர் ஆகையாலே-சாஸ்திர வாசனையாலே யாதல் –ஆச்சார்ய உபதேசத்தால் ஆதல் -சொல்லுகிறார் அல்லர் –உபகாரகரான ஆழ்வார் திருவடிகளில் பாவ பந்தத்தாலே சொல்லுகிறார் –
—
5-அவர் பாடி இளைப்பிலம் என்றார் -இவர் பாடித் திரிவனே -என்றார்
அகலில் அகலும் அணுகில் அணுகும் புகலும் அரியன் பொருவல்லன் எம்மான்
நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம் பகலும் இரவும் படிந்து குடைந்தே –1-7-10–நீர்மைக்கு ஒப்பு இல்லாதவனுடைய-புகழ் பாடி இளைப்பிலம்-கல்யாண குணங்களை பாடி விச்சேதிக்க ஷமன் ஆகிறிலேன்-இளைக்கை யாகிறது விடுகை -அதாவது விச்சேதம்-அவனுடைய ஒப்பில்லாத கல்யாண குணங்களைப் பாடி -ஒரு காலமும் விச்சேதிக்க ஷமன் ஆகிறிலேன்-
குருகூர் நம்பி பாவின்னிசை பாடித் திரிவனே
குருகூர் நம்பி பா -கண்ணி நுண் சிறு தாம்பு என்னுதல் -திரு வாய் மொழி என்னுதல் –பாவின் இன்னிசை -பாவிலே பூண்ட இன்னிசை-ஐஸ்வர்யத்தை -அல்பம் அஸ்திரம் என்று கழித்து
ஸ்திரமான ஆத்மப்ராப்தியை அபுருஷார்தம் என்று கழித்து-ஸ்திரமுமாய் பரம போக்யமுமாய் உள்ள பகவத் ப்ராப்தியை ப்ராப்யத்தில் பிரதம அவதி என்று கழித்து-இதில் சரம அவதியான ஆழ்வாரையும் உத்தேச்யர் அன்று என்று கழித்து-அவரோடு சம்பந்தித விஷயத்தையும் ரசாஸ்ரயம் அன்று என்று கழித்து அத்தோடு சம்பந்தித இசையே உத்தேச்யம் என்கிறார்-பாடித் திரிவனே--உம்முடைய தேக யாத்ரை நடத்திப் போரும்படி என் என்ன –-ப்ரீதி ப்ரேரிரதனாய்க் கொண்டு சொல்லி இதுவே தாரகமாக சஞ்சரிப்பன் –-உண்டு திரிவன் -என்னுமா போலே –பாடித் திரிவன் -என்கிறார்-
—
6-அவர் இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்றதென் -என்றார் -இவர் திரி தந்தாகிலும் -என்றார்
இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என் இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்த
செங்கோ லத்த பவள வாய்ச் செந்தாமரைக் கண் என் அம்மான்
பொங்கு ஏழ் புகழ்கள் வாய ஆய் புலன் கொள் வடிவு என் மனத்தது ஆய்
அங்கு ஏய் மலர்கள் கைய ஆய் வழி பட்டு ஓட அருளிலே–8-10-4-இங்கே திரிந்தேற்கு -பாகவத கைங்கர்யத்துக்கு வர்த்தகமான பகவத் அனுபவம் பூர்ணமாக கிடைப்பது பரம பதத்தில் யன்றோ என்ன -அவ்வனுபவம் அவன் பிரசாதத்தாலே இங்கேயே கிடைக்குமாகில் இங்கேயே வர்த்தித்தால் சேதம் என் என்கிறார் என்றுமாம் –அங்குத்தை அனுபவத்துக்கும் அவன் பிரசாதமே இறே ஹேது -இங்கேயே கிடைக்குமாகில் சேதம் என் -என்கை –இழுக்கு உற்று என்-தண்ணிதானது என்–பாகவதர்கள் உடைய ப்ரீதியின் உருவமான-பகவத் கைங்கர்யத்தை-அவன் திருவருளாலே இங்கே செய்யப் பெறில்-எனக்கு அதுவே பேறு -என்கிறார் –-திரிதந்தாகிலும் தேவபிரானுடை-கரிய கோலத் திரு உரு காண்பன் நான் –
ஆசார்ய ஹிருதயம் –அழும் தொழும் ஸ்நேக பாஷ்ய அஞ்சலியோடு –புலன் கொள் நித்திய சத்ரு விசிதனம் – என்ற ஸ்ரீ சூக்தி இங்கே அனுசந்தேயம்-
திரி தந்தாகிலும் தேவபிரானுடைக்
கரிய கோலத் திரு உருக் காண்பன் நான்
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள்
உரியனாய் யடியேன் பெற்ற நன்மையே -3-திரி தந்தாகிலும் –திரி தருகை -யாவது மீளுகை –மீண்டாகிலும்-திரிதல் -என்றது கடைக் குறையான சொல்லாய் –திரி தந்தாகிலும் -போன வழி எல்லாம் மீண்டாகிலும் –-அதாவது –திருவாய்மொழிப் பாவை விட்டு –இசைகளை விட்டு –ஆழ்வாரை விட்டு –அவர் உகந்த விஷயம் என்று பிரதம அவதியில் வந்து –
—
7-அவர் உரிய தொண்டர் தொண்டர் என்றால் -இவர் நம்பிக்கு ஆள் உரியனே என்றார் -அவர் தாயாய் தந்தையாய் என்றார் -இவர் அன்னையாய் அத்தனாய் -என்கிறார்
தெரிதல் நினைதல் எண்ண லாகாத் திருமாலுக்கு
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்
தெரியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே.–6-9-11—உலகம் உண்டாற்கு உரிய தொண்டர் ஆக்கும்-
சர்வ ரக்ஷகனான சர்வேஸ்வரனுக்கு அநந்யார்ஹ சேஷமாக்கும் இத் திருவாய்மொழி.
சம்சாரம் நன்றுமாய், பகவத் விஷயம் தீதானாலும் அதனை விடமாட்டாதவர்களாதலின் ‘உரிய தொண்டர்’ என்கிறார்.-ஸ்ரீ யபதிக்கு அசாதாரணமான தாஸ்யத்துக்கு பர்யவசான பூமியான ஆழ்வார் -இவருடைய அஹம் புத்தி இருக்கிற படி -பயிலும் சுடர் ஒளிக்கு பின்பு ததீய சேஷத்வ பர்யந்தமாயிற்று –இவருடைய அஹம் அர்த்தம் இருப்பது -இவ்வளவு வருகை இறே அநந்யார்ஹ சேஷம் ஆவது–திருமகள் கேள்வனான சர்வேஸ்வரனுக்கே அடிமைபட்ட ஆழ்வார்,
சம்சாரத்தின் தன்மையை நினைத்த கொடுமையாலும்,-பகவத் விஷயத்திலே மூழ்கின கனத்தாலும்,
பெரு விடாயன் மடுவிலே விழுமாறு போலே, சேஷத்துவத்தினுடைய எல்லையிலே விழுகிறார் ‘
தொண்டர் தொண்டர் தொண்டன்’ என்று. -இது இவருடைய அஹம் புத்தி இருக்கிறபடி.–தேக ஆத்ம அபிமானியாம்போது தேகத்திலே அஹம் புத்தியைப் பண்ணுவான்;-‘தேகத்திற்கு வேறுபட்டது ஒன்று உண்டு’ என்று அறிந்த போது ஆத்மாவிலே அஹம் புத்தியைப் பண்ணுவான்;-தன்னைப் பகவானுக்கு அடிமையாக நினைத்த போது பிரகார மாத்திரத்திலே நின்று செல்வம் முதலானவற்றைக் கொண்டு போவன்;-‘அடிமையாக இருத்தலே பேறு’ என்று அறிந்த போது தன்னை அடியார்கட்கு அடியவன் என்னுமளவாக அநுசந்திக்கக் கடவன்.
திரி தந்தாகிலும் தேவபிரானுடைக்
கரிய கோலத் திரு உருக் காண்பன் நான்
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள்
உரியனாய் யடியேன் பெற்ற நன்மையே -3-நம்பிக்கு – நான் ஒன்றை விட்டேன் என்னலாம்படியோ ஆழ்வார் உடைய பூர்த்தி இருப்பது – அதாவது -ஆழ்வாரை அனுபவிக்கும் அனுபவத்திலே பகவத் விஷயம் அந்தர்பூதமாய் இருக்கை-(குருகூர் நகரான என்னாமல் குருகூர் நம்பி -இதற்குள் குறுங்குடி நம்பியும் அந்தரபூதம் –இருப்பிடம் வேங்கடம் இத்யாதி -பூர்ணர் -அன்றோ -)
ஆள் உரியனாய் –-உரிய அடியனாய்-உரிய அடியாருக்கு -தம்தாமுக்கு -என்ற ஒரு பிரிய அப்ரியங்கள் இன்றிக்கே ஸ்வாமி உகந்ததையே பற்றி அவன் கை விட்டதை விட்டு இருக்கும் அது இ றே ஸ்வரூபம்
அடியேன் – ஆழ்வார் உடைய நீர்மைக்கு தோற்று -அடியேன் -என்கிறார் – தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்னும் நீர்மை இ றே-பெற்ற நன்மை –பெற்ற பகவத் லாபம் – ஆழ்வாருக்கு உரிய அடியேனாய் பெற்ற பேறு இது இறே -ப்ராப்த அப்ராப்த விவேகத்தில் ப்ராவண்யத்தால் வந்த நன்மை அன்று -என்கை-
மாயா! வாமனனே!மது சூதா! நீ அருளாய்
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய்த்
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்
நீயாய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே!–7-8-1-காரியங்களில் வந்தால் மாதா உபகரித்த உபகாரம் அன்று இ றே தமப்பன் உபகரிப்பது -அவன் உபகரிப்பதும் அன்று இ றே பிரஜைகள் உபகரிப்பது -அவர்கள் உபகரிக்குமது அன்று இறே மற்றை பந்துக்கள் உபகரிப்பது –
நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மையாகக் கருதுவர் ஆதாலில்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே-4–அப் புன்மையே ஹேதுவாக -இவ்வளவில் நாம் அல்லது ரஷகர் இல்லை -என்று எனக்கு-சர்வ வித பந்துவுமானவர்-ச பித்ரா ச பரித்யக்தாஸ் ஸூரைச்ச ச மகார்ஷிபி –தரீன் லோகன் சம்பரிக்ரம்யா தமேவ சரணங்கத-என்று-காகத்தோபாதி இவனுக்கும் புறம்பு ஒரு பற்றாசில் இல்லை என்றதே ஹேதுவாக-சர்வ வித ரஷகர் ஆனவர் –-பிரியமே செய்யக் கடவ மாதா செய்யுமதுவும் –-ஹிதமே செய்யக்கடவ பிதா செய்யுமதுவும் – ஸ்வரூப அனுரூபமான அடிமை கொள்ளும் நாயகன் செய்யுமதுவும் -செய்யுமவர்-தாயாய் தந்தையாய் அறியாதன அறிவித்த அத்தா -என்று பகவத் விஷயத்தில் ஆழ்வார் சொல்லுவது எல்லாம் ஆழ்வார் விஷயத்தில் சொல்லுகிறார் இவர் –
ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயா
ஒத்தாய் எப் பொருட்கும் உயிராய் என்னைப் பெற்ற
அத்தாயாய் தந்தையாய்த் அறியாதன யறிவித்து
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே –2-3-2—என்னைப் பெற்ற அத்தாயாய் –-வளர்த்த தாயை வ்யாவர்த்திக்கிறது –-எனக்கு பிரியமே செய்யக் கடவ தாயாய்-தந்தையாய்த் – நேரே உத்பாதகனாய் கொண்டு ஹிதைஷையாய்-அறியாதன யறிவித்து–சஹி வித்யாஸ் தம் ஜநயதி -என்கிறபடியே ஆச்சார்யனாய்-ஏதத் விரதம் மம –மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்னுமவன் இ றே
அத்தா – ஸ்வாமி-நீ செய்தன – இவ் உபகாரங்களை -உடையவன் ஆகையால் செய்தாய் என்கிறார்
மாதா பிதா பிராதா -இத்யாதிநாராயண -என்கிறார்
—
8-அவர் -ஆள்கின்றான் ஆழியான் -என்றார் -இவர் என்னையே ஆண்டிடும் தன்மையான் -என்கிறார் –
ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறை உடையம்
மீள்கின்றதில்லை பிறவித் துயர் கடிந்தோம்
வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன்
தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே–10-4-3-வகுத்த சர்வேஸ்வரன் அடிமை கொள்ளா நின்றான் என்னுதல் –ஆஸிலே வைத்த கையும் தாணுமாய் விரோதியைப் போக்கி அடிமை கொள்ளா நின்றான் என்னுதல் –அசக்தனான தன்னாலே சாத்தியமான அசேதன க்ரியாகலாபங்கள் கொண்டு விரோதியைப் போக்குமவர் அன்றே இவர் –சர்வ சக்தி கையில் திரு வாழி யின் கூர்மையால் போக்குமவர் இறே –-ஆரால் குறை உடையம்-என்னால் வருமதொரு குறையும் இல்லை -யமாதிகளால் வருமவையும் இல்லை – மீள்கின்றதில்லை–இனி மறுவல் இடுகிறது இல்லை –சாதநாந்தரம்-செய்த பின்னையும் – அவன் கை பார்த்து இருக்கும் வேண்டும் படி–அறிவு இல்லாத கர்மங்களின் கூட்டங்களை -கர்மாதி உபாயாந்தரங்கள் -பூண் கட்டா நிற்பர் சிலர்- சாதநாந்தரம்-செய்த பின்னையும் – அவன் கை பார்த்து இருக்கும் வேண்டும் படி–அறிவு இல்லாத கர்மங்களின் கூட்டங்களை -கர்மாதி உபாயாந்தரங்கள் -பூண் கட்டா நிற்பர் சிலர்-கூர் அம்பன் அல்லால் குறை-மற்று இலை துணை -நெஞ்சே -குறை -ரக்ஷணம் -நான் முகன் திருவந்தாதி -8-என்ற அம்பின் கூர்மையையும்-
சுடர் வட்ட வாய் நுதி நேமியீர்-என்று திரு ஆழியில் கூர்மையையும் கொண்டு பெற இருப்பர் சிலர் –
ஆற்றல் இல்லாத தன்னாலே செய்யப் பட்ட கர்மங்களின் கூட்டத்தைப் பற்றிப் பெற இருப்பர் சிலர்-
என்றும் உள்ள ஸ்வரூபத்தை உடைய சர்வஞ்ஞனான பராத்பரனைப் பற்றி பெற இருப்பர் சிலர் –
கர்மங்களின் கூட்டத்தை நெகிழச் சொல்லி-கெடுவாய் என்னை அன்றோ பற்ற அடுப்பது -என்றான் அன்றோ அவன் சரம ஸ்லோகத்தில் –
நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மையாகக் கருதுவர் ஆதாலில்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே-4—தன்மையான் – அக்நிக்கு ஔஷண்யம் போலேயும் –-ஜலத்துக்கு சைத்யம் போலேயும் – இஸ் ஸ்வபாவாங்களை நிரூபகமாக உடையவர் –-அதாகிறது -இவனுக்கு உபகரித்தோம் -என்று தான் நினைத்தல் இவன் தனக்கு பிரத்யுபகாரத்தில் இழிய வேண்டி இருத்தல் -செய்யாது ஒழிகை-சடகோபன்-என் பக்கல் சாட்யத்தை போக்கினவர் –-கீழ் மூன்று -பாட்டிலும் தென் குருகூர் நம்பி -நம்பி என்று சொன்னவர்-இப் பாட்டிலே சடகோபன் என்றார் இ றே –ஸ்வ தோஷத்தை போக்கின படியாலே–என் நம்பி-தாய் செய்வது தகப்பன் செய்ய மாட்டான்-அவன் செய்வது இவள் செய்ய மாட்டாள் ஆச்சார்யன் செய்யுமது இருவரும் செய்ய மாட்டார்கள்-நாயகன் செய்யுமது அடியான் செய்ய மாட்டான்-எல்லார் செய்வதும் செய்ய வல்ல பூர்த்தியை உடையவர் –-என் நம்பியே – என்னுடைய தண்மை யாகிற பாழ்ந்த ஆறு நிரம்பும்படியான பூர்த்தியை உடையவர் என்னும் இத்தனை- இவருக்கு கீழ்ச் சொன்ன த்ர்ஷடாந்தங்கள் சர்வதா சாம்யம் அல்ல-கர்ம ஔபாதிகமாக வந்த சம்பந்தம் ஆகையாலும் பூர்ண ஸ்தலம் ஆகையாலும் –
—
9-அவர் கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான்-என்கிறார் -இவர் தக்க சீர் சடகோபன் -என்கிறார்
கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக்
கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
வடிவு அமை ஆயிரத்து இப்பத்தினால் சன்மம்
முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே–9-6-11-கம்சன் தான் நினைத்த நினைவை அவன் தன்னோடே போம்படி பண்ணினான் —கடியனாய்க் -தன் பக்கலில் இன்றிக்கே வந்தேறி -என்கை –
பிரான் தன்னைக்-முன்பு உபகாரகன் ஆனவன் கிடீர் நம்மை அழித்தான் —கொண்ட சீற்றம் -5-8-3- என்னக் கடவது அன்றோ – சினத்தினால் தென் இலங்கை கோமானைச் செற்ற மனத்துக்கு இனியான் –உகந்தாரை அழிக்கை இறே பாதகம் ஆவது -விரோதிகளை அழிக்குமது உபகாரம் இறே–
மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள்
நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர் சடகோபன் என்னம்பிக்கு ஆட்
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே -9-உபகார ஸ்ம்ருதியாலே தமக்குப் பிறந்த அபிநிவேசத்தை பேசுகிறார் –தக்க சீர் சடகோபன் – சர்வேஸ்வரன் கவிகள் -என்றால் தகுதியான கல்யாண குணங்களை உடைய ஆழ்வார் – அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்றால் சர்வேஸ்வரத்துக்கு போரும்படி இருக்குமா போலே-சர்வேஸ்வரன் கவிகள் -என்றால் போரும்படி யாயிற்று ஆழ்வார் இருக்கும் படி –
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு-ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர் சடகோபன் -என்று தாமே அருளிச் செய்தார் இறே-என் நம்பிக்கு –அதுக்கு மேலே (கீழே அவனுக்கு தக்க குணம் -இதில் தாழ்ந்த என்னை அபகரித்த குணம் அன்றோ -) ஒரு பௌஷ்கல்யம் இ றே இது -என்னை விஷயீ கரிக்கைக்கு தகுதியான சீலாதி குண பௌஷ்கல்யத்தை வுடையவர் ஆனவர்க்கு –
10-அவர் யானே என்தனதே என்று இருந்தேன் -என்றார் -இவர் நம்பினேன் பிறர் நன் பொருள் தன்மையும் -என்கிறார் –
யானே என்னை யறியகிலாதே
யானே என்தனதே என்று இருந்தேன்
யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –2-9-9–தேஹாத்ம அபிமானத்தாலே என்னை அவனுக்கு பிரகாரம் என்று அறிந்திலேன்-ஈஸ்வரோஹம் என்று இருந்தேன்-இவன் நான் என்றால் ஈஸ்வரனுக்கு கிட்ட அரிதாய் இறே இருப்பது-நானும் எனக்கு உரியேன் இன்றிக்கே இருக்க எனக்கு ஒரு உடைமையும் உண்டாக நினைத்து இருந்தேன்-தேகத்தை ஆத்மாவாகவும் -ஈஸ்வர விபூதியை என் உடைமை யாகவும் இந்த விபரீத அஞ்ஞானமே யாய் இருந்தேன்-இப்படி ஸ்வரூபம் நசித்துக் கிடைக்க அனுதாபம் இன்றிக்கே க்ருதக்ருத்யனாய் இருந்தேன்-அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று இருக்கை பிராப்தமாய் இருக்க ஒரு கார்யம் இல்லாதாரைப் போலே இருந்தேன்-
நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையும் முன் எலாம்
செம்பொன் மாட திருக் குருகூர் நம்பிக்கு
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்று –5-பிறர் -என்கிறது சர்வேஸ்வரனை-நன் பொருள் என்கிறது -ஆத்ம வஸ்துவை-பிறர் நன் பொருள்-த்ரிவித ஆத்ம வர்க்கத்துக்கும் அவ்வருகாய் -(அசேதனம் போலே -ஜடம் இல்லை -சேதனம் போலே பரதந்தர்யம் இல்லையே -ஷரம்-பத்த ஜீவன் அக்ஷரம் முக்த ஜீவன் -ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணம் -அங்குஷ்ட மாத்ர புருஷ மத்திய ஆத்மனி திஷ்டயே -கட்டை விரல் போலே -உண்ண கண்ட விரல் இல்லை எண்ண கண்ட விரல் – ) விசஜாதீயமான வைலஷண்யத்தை உடையவன் -ஆகையாலே –பிறர் -என்கிறது –உத்தம புருஷஸ் த்வன்ய-என்னக் கடவது இறே-பொருள் -என்று த்ரவ்யம்-நன் பொருள் -என்று -விலஷணமான ஆத்ம வஸ்து
த்ரவ்யாணி நவ தே விது-என்று த்ரவ்யங்களில் பிரதானமாக ஆத்மவஸ்துவை நிச்சயித்தார்கள் இறே
அத்தை இ றே நான் அபஹரித்தது-நம்புதல் –ஆசைப்படுதல்-பர த்ரவ்யதை ஆசைப்படுகை இறே -அபஹாரம் –வன் கள்வன் -என்று -கள்வன் ஆனேன் என்றும் -ஆழ்வார் அனுசந்திதது இறே இவருக்கு முதல் –-பகவத் சேஷத்து அளவே நில்லாதே -சேஷத்வ காஷ்டையில் நிற்கக் கடவ ஆத்ம வஸ்துவைக் கிடீர் நான் -அபஹரித்தது-(நன் நன் பொருள் அன்றோ இது )-ததீய சேஷமான வன்று இறே இவ் வாத்ம வஸ்து அனன்யார்ஹம் ஆயிற்று ஆவது-அபஹாரத்தில் வந்தால் த்ரவ்யத்தின் உடைய ஸ்லாக்யதைக்கும்-அபிமாநித்தவனுடைய ஸ்லாக்யத்தைக்கும் தக்கபடி பிராயச்சித்தம் கனத்து இருக்கும் இறே –-ப்ராஹ்மண வஸ்துவை அபஹரித்தால் போல் அன்று இறே சண்டாளன் வஸ்துவை அபஹரித்தல்-த்ரவ்யங்களிலும் குரு லகு பாவத்தாலே ப்ரயாசித்த வைஷம்யம் உண்டு இறே விறகு வைக்கோல் களவு கண்டால் போல் அன்று இறே ரத்னம் களவு காண்பது-
ஆத்ம வஸ்து ஸ்ரீ கௌச்துப ஸ்தாநீயமாய்-உடையவன் சர்வேஸ்வரனாய் இறே -இருப்பது-
—
11-அவர் எமர் கீழ் மேல் எழு பிறப்பும் மா சதிர் இது பெற்று -என்றார் -இவர் இன்று தொட்டு எழுமையும் -என்கிறார் –
கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே–2-7-1–கேசவன் தமர் –1-பிரசஸ்த கேசனான நிலையில் தோற்று இருக்குமவர்கள் -என்னுதல் –-2-விரோதி நிரசன சீலதையில் தோற்று இருக்குமவர்கள் என்னுதல்-3-தஸ்மாத் கேசவ நாமவான் -என்கிறபடியே சர்வ நிர்வாஹனான நிலையில் தோற்று இருக்குமவர்கள் என்னுதல்-எமர் -என்று ஆழ்வாருடைய சம்பந்தம் கொண்டாயிற்று அவன் இவர்களை விரும்புகிறது-இத்தால் ஒரு வைஷ்ணவ அபிமானமே வேண்டுவது அவன் விஷயீகரிக்கைக்கு என்றபடி-சர்வேஸ்வரன் உடையார் -என்றாயிற்று -ஆழ்வார் இவர்களை விரும்புகிறது-அவனுடைய அவயவ ஸுந்தர்யத்திலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்-கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்-கீழ் ஏழு படிகளிலும் மேலே ஏழு படிகளிலும் என்னோட்டை சம்பந்தமே ஹேதுவாக கேசவன் தமர்கள் ஆனார்கள்
ஆழ்வார் பரிகரம் என்றாயிற்று அவன் விரும்புவது -கேசவன் தமர் என்றாயிற்று இவர் விரும்புகிறது
மாசரிது பெற்று –கேசவன் தமர் ஆகிற பெரும் சதிரைப் பெற்று என்னுதல் –-மாதவன் என்றதே கொண்டு என்றத்தைச் சொல்லுதல் –-விதி சூழ்ந்ததால் என்று ஆகஸ்மிக பகவத் கிருபையை சொல்லுதல்—தம் பெற்ற பேற்றை தம்மோடு சம்பந்தம் உடையாரும் பெறும்படியான பேற்றை பெற்று என்னுதல்–மா சதிர் -தம் தலையால் வந்ததாகில் இறே சாவதியாய் இருப்பது-இது பெற்று
காணக் காண அவன் தலையால் சுமக்கிற படி—வாய்க்கின்றவா –ஊற்று மாறாதே மேன்மேல் என பெருகி வருகிறபடி —ஏழ் படி கால் என்றது தான் ஓர் அளவு இல்லை –இன்று நம் அளவும் வரச் செல்லுகிறது இறே –
இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
குன்ற மாடத் திருக் குருகூர் நம்பி
என்றும் என்னை இகழ்விலன் காண்மினே-6–விஷயீ கரித்த இன்று முதலாக -பகவத் சமாஸ்ரயணம் போலே ஆஸ்ரயிப்பதொரு காலமும்-பலிப்பதொரு காலமாயோ ஆழ்வார் உடைய விஷயீகாரம் இருப்பது –விஷயீகார திவசமே தொடங்கி அநுபவ காலமாய் அன்றோ இருப்பது-எழுமையும் –
ஏழு ஜன்மம் என்று உப லஷணம் -மேலுள்ள காலம் எல்லாம் -என்றபடி –எம்பிரான் ––பிரான் பெரு நிலம் கீண்டவன் -என்று பகவத் விஷயத்தில் ஆழ்வார் பேசும்படியை உபகார ஸ்ம்ருதியாலே ஆழ்வார் விஷயத்தில் -பேசுகிறார்-(அருளின பின்பு தான் பிரான் -இங்கே பிரான் முன்பே சொல்லி –உபகார ஸ்ம்ருதி யால் அருளி -உயர்வற –நடுவில் மயர்வற அருளியதை சொல்லி அயர்வரும் அமரர்கள் அதிபதி அருளியது போலே-சதிர்த்தேன் -சொன்னதும் உபகார ஸ்ம்ருதியால் பிரான் முன்பே இங்கே )
எம்பிரான் –என் ஸ்வாமி-நின்று –ஒருபடிப்பட நின்று-உபகார ஸ்ம்ருதியாலே பகவத் லாபத்தளவும் ஆழ்வாரை அநுபவித்து-பின்பு அது கிட்டினவாறே-அதிலே தோள் மாறும் படி அன்றிக்கே இருக்கை –
—
12-அவர் -என்னால் தன்னை இன்கவி பாடிய ஈசன் -என்றார் -இவர் நின்று தன் புகழ் ஏத்த அருளினான் -என்கிறார்
என்றைக்கும் என்னை உய்யக்கொண்டு போகிய
அன்றைக்கு அன்று என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
இன் தமிழ் பாடிய ஈசனை ஆதியாய்
நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ?–7-9-1-கழிகிற காலம் எல்லாம் நாள் தோறும் நாள் தோறும் விஷயீ கரித்து –-என்னைத் தன்னாக்கி -கவி பாடுகைக்கு அனுரூபமான ஞான சக்தி யாதிகள் இல்லாத என்னை -தன்னோபாதி ஞான சக்தி யாதிகளை யுடையேனாம் படி பண்ணி-என்னுதல் -என்னைத் தன்னாக்கி-தனக்கு ஆளாம் படி பண்ணி என்னுதல் –-என்னால் தன்னை-தன்னாலே தத்த சக்தகதனான என்னாலே –சுருதி யாதிகளுக்கும் பேச நிலம் அன்றிக்கே இருக்கிற தன்னை -யதோ வாசோ நிவர்த்தந்தே –யஸ்யாமதம் தஸ்ய மதம் -அவ்விஞ்ஞாதம் விஜயானதாம் –
இன் தமிழ் பாடிய-அர்த்தம் கிடக்க -சப்தம் தானே ரசித்து சர்வாதிகாரமாக தமிழிலே இசையை வைத்து தானே பாடினவனை-ஈசனை -இப்படி வாய்க்கைக்கு அடி சர்வ சக்தி யாகையாலே -அவன் பாடினான் ஆகில் நீர் செய்தது என் என்ன-ஆதியாய்-நின்ற-எனக்கு அடியாய் நின்று பாடுவித்தான்-என் சோதியை -இவருக்கு கவி பாடுகைக்கு உள்ளுறை கொடுத்தது வடிவு அழகாயிற்று -எனக்கு வடிவு அழகை ஆவிஷ்கரிக்க-அத்தைக் கண்டு கூப்பிட்டது கவி யாயிற்று -பிடாத்தை விழ விட்டு வடிவு அழகை காட்டினான் -திருத் திரை எடுத்தால் போல் கூப்பிட்டேன் -அது கவி யாயிற்று-
13-அவர் ஒட்டுமோ இனி உன்னை நெகிழ்க்கவே -என்றார் -இவர் என்றும் என்னை இகழ்விலன் காண்மினே -என்கிறார் –
யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன் தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
ஊனொட்டி நின்று என்னுயிரில் கலந்து இயல் வானொட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே–1-7-7–தன்னுடைய சீலாதி குணங்களாலும் வடிவு அழகாலும் என்னை அறியாமே அகப்படுத்தி மனஸ் ஸூ பிடிபட்ட பின்பு செய்வது என் என்னில்-ஊனொட்டி நின்று என்னுயிரில் கலந்து-அபிமத விஷயத்தில் அழுக்கு உகப்பாரைப் போலே எனக்கு த்யாஜ்யமான சரீரத்தை தனக்கு போக்யமாகப் பற்றி நின்று
விலக்காத தொரு சமயம் பெற்றவாறே என் ஆத்மாவோடு வந்து சம்ச்லேஷித்தான்
இயல் வான்-வியாமோஹத்தை ஸ்வ பாவமாக உடையவன் -என்னுதல்-இப்படி உத்ஸஹிக்குமவன் என்னுதல்-ஓட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே–-முன்பு த்வேஷம் பண்ணித் திரிந்த நாள் என்னை என் கை வசத்தே விட்டுத் திரிந்தான்-இப்போது இப்படி நிர்ஹேதுகமாக விஷயீ கரித்தவன்-பல தசையில் நான் நெகிழ்ந்து போவேன் என்றால் அவன் சம்வத்திக்குமோ –
இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
குன்ற மாடத் திருக் குருகூர் நம்பி
என்றும் என்னை இகழ்விலன் காண்மினே-6–நின்று –ஒருபடிப்பட நின்று-உபகார ஸ்ம்ருதியாலே பகவத் லாபத்தளவும் ஆழ்வாரை அநுபவித்து பின்பு அது கிட்டினவாறே அதிலே தோள் மாறும் படி அன்றிக்கே இருக்கை –தன் புகழ் ஏத்த –ஆழ்வார் உடைய அநுபவத்துக்கு உள்ளே பகவத் அநுபவம் ஆம்படியாய் அன்றோ-ஆழ்வார் உடைய பெருமை இருப்பது -(அவன் புகழ் -சொல்லாமல் தன் புகழ் -எம்பெருமானையும் சேர்த்து )-அருளினான் –நிர்ஹேதுகமாக கிருபை பண்ணினான் –-மயர்வற மதி நலம் அருளினன் -என்று ஆழ்வார் பகவத் விஷயத்தில் சொன்ன -வார்த்தையை-ஆழ்வார் திருவடிகளிலே சொல்லுகிறார் இறே இவர் -(என்னை அருளினான் சொல்ல வில்லை -தனக்கு அருளியது அனைவருக்கும் -அருளும் முன்பு வஸ்துவாகவே நினையாதவர்கள் அன்றோ )-என்றும் என்னை இகழ்விலன் –என்றும் இகழ்விலன் –என்னை இகழ்விலன் –-யாவதாத்மபாவி புறம்பே ஒரு விஷயத்தில் போக விட்டுக் கொடார் .-என் தண்மை பாராதே விஷயீ கரித்தவர் -என்னை விஷயாந்தரங்களிலே போக ஓட்டுவாரோ -தம் திருவடிகள் ஒழிய புறம்பு புகல் அற்று இருக்கிற என்னை புறம்பே போக -என்றாலும் போகலாம்படி என் கையிலே என்னைக் காட்டித் தருவரோ –
காண்மினோ-இது ப்ரத்யஷிக்கலாவது ஒன்றாய் இருக்க-ஆழ்வார் பெருமை நான் சொல்ல கேட்க மிகை அன்றோ –
—
14-அவர் மயர்வற மதிநலம் அருளினன் -என்றார் -இவர் எண்திசையும் அறிய இயம்புகேன் ஒண் தமிழ் சடகோபன் அருளையே -என்கிறார்
உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே –1-1-1-மயர்வற-மயர்வு -அஜ்ஞானம் -இத்தால் ஜ்ஞான உதய -அந்யதா ஜ்ஞான -விபரீத ஜ்ஞான ரூபமான அஜ்ஞானத்தைச் சொல்லுகிறது-அற -சவாசனமாகப் போகும்படி–ஞாநாநுதயம், அந்யதா ஞானம், விபரீத ஞானம் என்கிற இவை வாசனையோடே போகும்படியாக.-ஞாநாநுதயமாவது,-தேஹாத்ம அபிமானம் ( தேகத்தையே ஆத்துமாவாக நினைத்தல்.)
அந்யதா ஞானமாவது -தேவதாந்த்ர சேஷம் என்று இருக்கை (பிற தெய்வங்கட்குத் தன்னை அடிமையாக நினைத்தல்.)-விபரீத ஞானமாவது,-ஸ்வ தந்திரனாயும் ஸ்வ போக்யமாயும் நினைத்து இருக்கிற கேவலனுனைய ஞானம் (தனக்குத்தானே உரியவனாகவும் ஆத்துமாவோடு அனுபவிக்கின்ற இன்பமே இன்பமாகவும் நினைக்கும் கேவலனுடைய ஞானம்,) என்று ஸ்ரீ நம்பிள்ளை அருளிச் செய்வார் –தம் திருவாயாலே ‘மயர்வற’ என்று சொல்லலாம்படி காணும் அவன் தான் இவர்க்கு அஞ்ஞானத்தை வாசனையோடே போக்கினபடி.மதி நலம்-மதி என்று ஜ்ஞானம்-நலம் -என்று பக்தி -பக்தி ரூபாபன்ன ஜ்ஞானம் என்றபடி-மதி நலம் –-ஞான பத்திகள் இரண்டனையுந் தந்தான் என்று நிர்வகிப்பாரும் உண்டு
அன்றிக்கே (இனி, நலம் மதி என முன் பின்னாகக் கூட்டி) ‘நலமான மதி’ யைத் தந்தான் என்றதாய் –
‘முளைக்கும் போதே வயிரம் பற்றி முளைக்கும் பொருள்களைப் போலே -பக்தி ரூபாபன்ன ஞானத்தை
(பத்தியின் உருவத்தை அடைந்த ஞானத்தைத் )தந்தான் என்கிறார்,’ என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்யும் படி – கர்மா ஞான அநு க்ருஹீதையான பக்தி ஸ்தானத்தில் பகவத் பிரசாதமாய்-அனந்தரம் கைங்கர்யத்துக்கு பூர்வ க்ஷண வர்த்தியான பத்தி யாயிற்று இவரது . ஸ்ரீ ஆழ்வார் பிரபந்நரோ, பத்தி நிஷ்டரோ?’ என்று ஸ்ரீ எம்பாரைச் சிலர் கேட்க,-ஸ்ரீ ஆழ்வார் பிரபந்நர்; பத்தி இவர்க்கு தேக யாத்ரா சேஷம்,’ என்று அருளிச்செய்தார். என் போலே என்னில் , ‘நாமும் எல்லாம் பிரபந்நர்களாய் இருக்கச் செய்தே ஆண்டு ஆறு மாசத்துக்கு ஜீவனம் தேடுகிறாப் போலே – உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே’ இறே இவர்க்கு.அருளினன்-இத் தலையில் நன்மை தீமை பாராதே நிர்ஹேதுக கிருபையால் தந்து அருளினான்-முலைக் கடுப்பாலே தரையிலே பீச்சுமா போலே –எனக்குத் தந்து அருளினான் -என்னாது ஒழிந்தது -பகவத் விஷயீ காரத்துக்கு முன்பு தம்மை அசத் கல்பராக நினைத்து இருக்கையாலே-எவன்– இப்படி உபகாரகனான ஸ்ருதி பிரசித்தி ஆனவன்-அவன் அதுக்கு மேலே ஒரு நன்மை சொல்லுகைக்காக அவன் என்று உத்தேசிக்கிறது –
கண்டு கொண்டு என்னை காரி மாறப் பிரான்
பண்டை வல்வினை பாற்றி யருளினான்
எண் திசையும் அறிய இயம்புகேன்
ஒண் தமிழ் சடகோபன் அருளையே-7–விசேஷஞ்ஞர் உடன் அவிசேஷஞ்ஞர் உடன் வாசியற-ருசி உடையார் எல்லாரும் அறியும் படி சொல்லுகிறேன் –தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்னும் ஆழ்வாரோட்டை வாசநை யாலே சொல்லுகிறார்-அவர் -பகவத் விஷயத்தில் ருசி உடையார் எல்லாரும் வாரும் கோள் -என்கிறார்-இவரும் ஆழ்வார் பக்கல் ருசி உடையார் எல்லாரும் வாரும் கோள் -என்கிறார்
ஆழ்வார் பக்கல் பாவ பந்தத்தாலே-ஒண் தமிழ் சடகோபன் அருளையே- மயர்வற மதிநலம் அருளினவனுடைய அருள் போலே அல்ல ஆழ்வார் உடைய அருள் – அவ்வருளுக்கும் அயலான அளவிலே பண்ணி யருளின அருள் இறே-ஒண் தமிழ் -ஒள்ளிய தமிழ் -அழகிய தமிழ் -என்றபடி –
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும்படி திருவாய்மொழி பாடின அருளுக்கு மேலே இறே என்னை விஷயீ கரித்த அருள் –
—
15-அவர் அருளுடையவன் -என்றார் -இவர் -அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே -என்கிறார்
பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே –2-10-11-கேட்டார்க்குத் தம்மிலும் தெளிவைப் பிறக்கும் படி அருளிச் செய்தது – தம்முடைய ஞானத்துக்கு அடி ஈஸ்வரன் -இவர்களுக்குத் தாம் அடியாக வந்தது –
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே – அருளே நிரூபகமான அழகர் திருவடிகளிலே சம்சாரத்தை முடித்துச் சேர்க்கும் –
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
வருளினான் அவ் வருமறையின் பொருள்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே-8-அருள் கொண்டாடும் அடியவர் – இவ் வாழ்வார் தம்மைப் போலே இருக்குமவர்கள் –-அதுவும் அவனது இன்னருள் -என்றும் –அருள் பெறுவார் அடியார் தம் அடியன் -என்று இருக்கும் இவர் தம்மைப் போலே – ஆனைக்கு அன்று அருளை ஈந்த -என்றும் –
நின்னோடும் ஒக்க வழி பட வருளினாய் –என்றும் – அருள் புரிந்த சிந்தை -என்றும் –நின் அருளே புரிந்து இருந்தேன் –என்றும் அருளாது ஒழியுமே -என்றும் -(சீறி அருளாதே -சீற்றத்தையும் அருள் -கொண்ட சீற்றம் ஓன்று உளது -என்றும் கொண்டாடுவார்கள் அன்றோ )இப்படிகளால் அவன் அருளைக் கொண்டாடும் அடியவர் –-இப்படியே பகவத் பிரசாதத்தையே கொண்டாடி போருமவர்கள் –
பகவத் பிரசாத ஹேதுவாக -ஸ்வகதமான கர்ம ஜ்ஞான பக்திகளை உபாயமாக
ஆதரிக்கும் அவர்கள் அன்றிக்கே -கேவல பகவத் ப்ரசாதமே உஜ்ஜீவன ஹேது -என்று இருக்கும் அவர்கள் -தம் தாம் பக்கல் உள்ள ஆனுகூல்யங்களை பிரசாத பலமாக நினைத்து இருக்கும்-அது ஒழிய -பிரசாதமாக நினைத்து இராதவர்கள் – இவர் இப்படி நினைத்து இருப்பது மற்றைய ஆழ்வார்களை இறே – ஆழியான் அருளே -என்றும் – நின் அருளே புரிந்திருந்தேன் -என்றும் இறே அவர்கள் பாசுரங்கள் -(கிருபையால் பக்தியை பெற்றோம் என்பார்கள் –சரணாகதி கிருபா ஜனகமா -கிருபா ஜன்யமா –சரணாகதி கிருபையை தூண்டாது –கிருபா ஜனகம் இல்லை ஜன்யம் தானே -கிருபைக்கு பலம் தான் பக்தி -சரணம் நாக்கு பிறந்ததே தேவரீர் பிரசாதம் கூரத் தாழ்வான்-வைஷம்யம் இல்லை -அனைவரையும் –வரவாறு ஓன்று இல்லை -வெறிதே அருள் செய்வார் செய்வார்க்கு உகந்தே -பண்ணுவதற்காக கொடுத்தால் சாதிய உபாயம் -அவனே கொடுப்பதால் சாத்தியம் நிர்ஹேதுகம் –உபாயம் எதிர் பார்க்காமல் -அதிகாரி ஸ்வரூபம் -அடைய ஆசை இச்சை வேண்டும் -ஆசை தகுதி -என்றவாறு -புருஷ சாபேஷமாய் புருஷகார சாபேஷமாய் இருக்கும் -)மயர்வற மதிநலம் அருளினான் -என்னும்படியான அருள் அல்ல –அது தன்னையும் விளாக் குலை கொண்டு இருக்கும் அருள் இ றே -ஆழ்வார் அருள் – ஈஸ்வரன் கை விட்ட ஆத்மாக்களிலும் -அவர்களுடைய துர்கதியைக் கண்டு திருத்த ஒருப்பட்ட படியாலே இவர் அருள் ப்ரத்யஷம் அன்றோ -என்கை–இவ் உலகினில் மிக்கதே –சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரயதையும் கபளீ கரித்திருக்கை –அதனில் பெரிய என் அவா -என்று பகவத் விஷயத்தில் தமக்கு உண்டான அபிநிவேசத்தளவும் போருமாயிற்று- என்னளவில் -கிருபையும்-(நீசனேன் நிறை ஒன்றும் இல்லா என்னளவும் என்றவாறு )
—
16-அவர் -பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -என்றார் -இவர் -நிற்க்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்-என்கிறார் –
பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
காரேழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகு உண்டும்
ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே–10-8-2-திருப் பேரை தனக்கு கோயிலாகப் பேற்று அங்கே நிரந்தர வாசம் பண்ணுகிற சர்வேஸ்வரன்-நீ போவுதியோ இருப்புதியோ -என்று கேட்பாரும் இன்றிக்கே-உதாசீனராக – இருக்கச் செய்தே—இன்று வந்து-பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்-தன்னை ஒருவர் கேட்டார் இன்றிக்கே இருக்காது தானே -இனி ஒரு நாளும் போகேன் -என்று சொல்லி பிராட்டி தன் பக்கலிலே சொல்லுமத்தை தான் என் பக்கலிலே சொல்லா நின்றான் –நான் போகேன் போகேன் -என்று சூழ்த்துக் கொடா நின்றான் ஆயிற்று– என் நெஞ்சு –நிறையப் புகுந்தான்–இவனுடைய அபி நிவேசத்தை ஆதரியாத நெஞ்சானது பூர்ணமாம் படி –முன்பு நினைவு இன்றிக்கே இருக்க இன்று வந்து புகுந்தான் -முன்பு நினைவு உண்டாவது தன் பக்கல் முதல் உண்டாகில் இறே –தான் சர்வேஸ்வரனாய் வைத்து-என்னோடு கலக்கப் பெறாமையாலே குறைவாளனானவன்- இன்று வந்து-நிர்ஹேதுகமாக என் மனத்தின் கண் புகுந்து-நிறைவாளன் ஆனான் -என்கிறார்
மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள்
நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர் சடகோபன் என்னம்பிக்கு ஆட்
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே -9-துர்க்ரஹமான இந்த ரஹஸ்யார்த்தத்தை கேட்பார்க்கு பிரதிபத்தி விஷயமாம் படி –பாடி –பரமனைப் பயிலும் திரு வுடையார் எவரேலும் -என்றும் – எம்மை யாளும் பரமர் -என்றும்-அருளிச் செய்தார் இறே-என் நெஞ்சுள் நிறுத்தினான் – பகவத் சேஷத்வத்துக்கும் கூட மேட்டு மடையான என் நெஞ்சிலே இத்தை ஸ்திரமாக்கினார் – கல்லைத் துளைத்து அதிலே நீரை நிறுத்துவாரைப் போலே நிர் விவரமான என் நெஞ்சுக்கும் இதுவே விஷயமாம் படி பண்ணினார் இது இறே –என் தண்மையைப் பாராதே என் திறத்தே பண்ணின உபகாரம் -(ஆழ்வார் ஏவ கைங்கர்யம் இவருக்கு -ஆழ்வாருக்கு அர்ச்சை பெருமாள் ஏவ மாட்டாரே -ஏவிப் பணி கொள்ளப் படுவது அங்கே தானே )
—
17-அவர் -வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் -என்றார் -இவர் ஆட்ப்புக்க காதல் அடிமைப் பயன் -என்கிறார் –
ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1-ஒழிவு இல் காலம்எல்லாம்-முடிவு இல்லாத காலம் எல்லாம்-உடனாய் -சர்வ தேசத்திலும் -காட்டிலும் தொடர்ந்து அடிமை செய்த இளைய பெருமாளை போலே-மன்னி-சர்வ அவஸ்தையிலும் —மன்னி – சர்வேஸ்வரனும் பிராட்டியுமாய்த் திரையை வளைத்துக் கொண்டிருந்தாலும்,-படிக்கம் குத்துவிளக்குப் போலே அவ்வளவிலும் நின்று அந்தரங்கமான வ்ருத்திகளை – அடிமைகளைச் செய்ய வேண்டும்.-இதனால்,-சர்வ அவஸ்தைகளையும் எல்லா நிலைகளையும் நினைக்கிறது.உலகத்தோடு ஏகாந்தத்தோடு வாசி அற வழு இலா அடிமை -சர்வ சேஷ வ்ருத்தியும் செய்ய வேண்டும்-சாஸ்த்ரங்களால் இதுவே புருஷார்த்தம் என்று அறிக்கை போராது-அனுஷ்டான பர்யந்தமாக வேணும் – நாம்-திரு உள்ளத்தைக் கூட்டிக் கொள்ளுகிறார் ஆதல்-கேசவன் தமருக்கு பின்பு தனியர் அல்லாமை யாலே திரு உள்ளத்தோடு ஒக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கூட்டிக் கொண்டு சொல்லுகிறார் ஆதல்-வழுவிலா அடிமை செய்யவேண்டும் –-அடிமையில் ஒன்றும் ஒருவர்க்கும் கூறு கொடுக்க வொண்ணாதாயிற்று.-எல்லா அடிமைகளும் நானே செய்யவேண்டும். என்றது,-‘இளைய பெருமாள் பிரியாமல் காட்டிலேயும் கூடப்போந்து செய்த அடிமைகளும் செய்ய வேணும்;-ஸ்ரீபரதாழ்வான் படை வீட்டிலே பிரிந்திருந்து செய்த அடிமைகளும் பிரியாதேயிருந்து செய்யவேணும்,’ என்றபடி.-ஓரடிமை குறையிலும் இவர்க்கு உண்டது உருக்காட்டாது; ஆதலின், ‘வழுவிலா அடிமை’ என்கிறார்.-அடிமை செய்யக் கோலுகிற இவருடைய பாரிப்பேயன்றி, அடிமை கொள்ளக் கோலுகிறவனுடைய பாரிப்பு இருக்கிறபடி சொல்லுகிறது மேல்:-இருந்த விடத்திலே யிருந்து மநோரதிக்கிறார் இத்தனையன்றோ இவர்? அவன் தனக்குக் கலவிருக்கையான கலங்காப் பெருநகரத்தை விட்டு இவ்வளவும் வர வந்து திருமலையிலே நின்று, தன் அநுஷ்டானத்தாலே தெரிவிக்கிறானன்றோ தன் பாரிப்பை?-ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும்’ என்னுமிதனால்,-சதுர்த்தியில் -நான்காம் வேற்றுமையின் பிரார்த்தனையைச் சொல்லுகிறது;
மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள்
நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர் சடகோபன் என்னம்பிக்கு ஆட்
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே -9-என் நம்பிக்கு –அதுக்கு மேலே (கீழே அவனுக்கு தக்க குணம் -இதில் தாழ்ந்த என்னை அபகரித்த குணம் அன்றோ -) ஒரு பௌஷ்கல்யம் இ றே இது -என்னை விஷயீ கரிக்கைக்கு தகுதியான சீலாதி குண பௌஷ்கல்யத்தை வுடையவர் ஆனவர்க்கு –ஆட் புக்க காதல் –
அனந்யார்ஹ சேஷமாக்கின ருசி-(ஆள் புகப் பண்ணின காதல் -கைங்கர்யத்தில் மூட்டின காதல் )அடிமைப் பயன் அன்றே –இந்த ருசி யன்றோ அப்போதே தாஸ்யமான பிரயோஜனத்தோடே வ்யாப்தமாய் இருப்பது -பகவத் விஷயத்தில் ருசி அடியாக பிறந்த தாஸ்யம் -சரீர விச்லேஷம் பிறந்தால்
அர்ச்சிராதி மார்க்கத்தாலே -ஒரு தேச விசேஷத்தில் சென்றால் பெறக் கடவதாய் இறே இருப்பது –
அங்கன் அன்றிக்கே-ஆழ்வார் பக்கல் பிறந்த ருசி -இச் சரீரத்தோடே இங்கே யாழ்வார் திருவடிகளிலே எல்லா அடிமையும் செய்யலாம்படி பண்ணும் –துயர் அறு சுடர் அடி தொழுது எழு -என்று முதலிலே அபிநிவேசித்த ஆழ்வாருக்கு-முனியே நான்முகனுக்கு அவ்வருகு இ றே பேறாயிற்று-இவ் விஷயத்தில் ருசி பிறந்தால் அத்தனை விளம்பியாது என்கிறது –அன்றே -என்றது –ஆம் என்றுமாம் –
—
18-அவர் -ஆராத காதல் -என்றார் -இவர் -ஆட்ப்புக்க காதல் -என்கிறார்
சேராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே –2-1-11-லோகத்தில் சகல பதார்த்தங்களும் தம்மைப் போலே அவனைப் பிரிந்து நோவு படுகின்றனவாகக் கொண்டு பிரமிக்கும் படியான நிரவதிக பக்தியை உடையவர்-நிரூபக தர்மம் இவருக்கு காதல் ஆயிற்று-தம் படி சொல்லினும் தாமே சொல்லும் அத்தனை-ஆராத காதல் –-இத்திருவாய் மொழியில் சொல்லப்பட்ட பொருள்; கண்ணால் காணப்பட்ட பொருள்கள் எல்லாம் பகவானைப் பெறாத காரணத்தாலே தம்மைப் போலே நோவு படுகின்றனவாகக் கொண்டு,
அவற்றுக்குமாகத் தாம் நோவுபடும்படியான அபிநிவேசமாதலின் அதனைத் தெரிவிப்பதற்கு ‘ஆராத காதல்’ என்கிறார்.-காதல் குருகூர்ச் சடகோபன் –-காதலைக் கொண்டே இவரை நிரூபிக்க வேண்டி இருத்தலின், ‘காதல் சடகோபன்’ என்கிறார்.-‘இது, தற்புகழ்ச்சி அன்றோ?’ எனின், தம் படி சொல்லும் போதும் தாமே சொல்ல வேண்டுமே. -(அவரது பக்தியின் ஸ்வ பாவம் அவருக்கே தெரியுமது ஒழிய பிறருக்குத் தெரியாது இறே – இவருடைய ஆகாரங்கள் வேறே ஓர் இடத்திலே காணாமையாலே -)
—
19-அவர் -பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய் -என்கிறார் -இவர் -பயனன் றாகிலும் பாங்கலராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்-என்கிறார் –
கருளப் புட்கொடி சக்கரப் படை வானநாட என் கார் முகில் வண்ணா
பொருள் அல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்
தெருள் கொள் நான் மறை வல்லவர் பலர் வாழ் சிரீவர மங்கல நகர்க்கு
அருள் செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே –5-7-3-ஓர் அறிவு இன்றிக்கே இருக்கிற என்னை -உன் வாசியை அறிவித்து ஒரு வஸ்துவாக்கி -அசன்னேவ -என்கிற என்னை சந்தமென்னும் என்று உஜ்ஜீவிக்கும் படி பண்ணினாய்-பெரு மக்கள் உள்ளவர் -என்கிற நித்ய சித்தர் செய்யக் கடவ கைங்கர்யத்தை என்னைக் கொண்டாய் -உண்டாக்கின அளவே அன்றிக்கே-ஜீவனமும் இட்டிலையோ -கைங்கர்யமே ஜீவனம் –கார் முகில் என்றது பலித்த படி –-மயர்வற மதி நலம் அருள பெற்றவர் இப்படி சொல்லுகையாலே ஸ்வ நிகர்ஷம் சொல்லுகை ஞான கார்யம் –ஈஸ்வரோஹம் என்று இருக்கை அஞ்ஞான கார்யம்
பயனன் றாகிலும் பாங்கலராகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கன்பையே-10-பயனன் றாகிலும் –நாட்டிலே ஒருவனை -உபகரிப்பது ஒரு பிரயோஜனத்தைப் பற்றி இறே-அங்கன் ஒரு பிரயோஜனம் இல்லாது இருக்கச் செய்தேயும் –-பாங்கலராகிலும் –பிரயோஜனம் இல்லாவிட்டால் -சொல்லுகிறபோது ஹிதம் கேட்க்கைக்கு பங்காய் இருக்கலாம் இறே-அங்கன் பாங்கு இன்றிக்கே இருந்தார்களே -ஆகிலும்-இப்படி இருக்குமவர்களுக்கு ஹிதம் சொல்லுகைக்கு ஹேது என் என்னில் –இவர்கள் அநர்த்தம் பொறுக்க மாட்டாமை இறே இப்படி உபதேசிப்பார் உண்டோ -என்னில் – ராவணனுடைய துர்கதியைக் கண்டு மித்ர மௌபயிகங்கர்த்தும்-என்று-அவனுக்கு ஹிதம் சொன்னாள் இறே பிராட்டி-(தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவருக்கும் இவர் அடி பணிந்தார்க்கும் -இதில் சீதை மட்டும் காட்டி )-ஒருவன் தலைக் கடையையும் புழைக் கடையையும் அடைத்துக் கொண்டு-அகத்துக்குளே கிடக்க அகம் நெருப்பு பட்டு வேகா நின்றால் கண்டு நின்றாரவிக்கும் போது-தங்களுக்கு ஒரு பிரயோஜனத்தைப் பார்த்தல் -உள்ளே கிடந்தவன் அபேஷித்ததுக்காக-வரதல் அன்றி இறே அவிப்பது -இப்படி யாயிற்று ஆழ்வார் படியும்-செயல் நன்றாகத் –-தனக்கு ஒரு பிரயோஜனம் இல்லை யானாலும்-எதிர்தலை பாங்கின்றியே ஒழிந்தால்-அவன் உஜ்ஜீவிக்கும்படி என் என்னில் –-தன்னுடைய செயலாலே எல்லாம் நன்றாம்படி பண்ணி –இவன் செயல் தான் நன்றாம்படி –என்னவுமாம்-திருத்திப் பணி கொள்வான் –
தீர்ந்த வடியவர் தம்மைத் திருத்தி பணி கொள்ள வல்ல -(-3-5-)என்று-ப்ராப்யமும் ப்ராபகமும் தானே -என்று அத்யவசித்து இருக்குமவர்கள் உடைய-விரோதியைப் போக்கி அடிமை கொள்ளுமவன் என்றது இறே சர்வேஸ்வரனை –அங்கன் இன்றிக்கே-இவை ஒன்றும் இன்றிக்கே -இருக்குமவர்களையும் திருத்திப் பணி கொள்ளுமவர் இறே ஆழ்வார் –பணி கொள்வான் –குருகூர் நம்பி -என்று அந்வயம்-(கொள்வான் -கொள்ளுகைக்காக -)
—
20-அவர் கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -என்றார் -இவர் தென் குருகூர் நம்பிக்கு அன்பனாய் -என்கிறார் –
கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7-பிராட்டி பக்கல் ஸ்நேஹ அதிசயத்தாலே -அந்த ஸ்நேஹமே ஹேதுவாக அவள் பரிக்ரஹமான என் பக்கலிலே அதி பிரவணன் ஆனவனே -ரிஷிகளை ரக்ஷித்து அன்றோ பிராட்டியால் ஆலிங்கனம் பெற்றார் பெருமாள்–சரம தசையில் இவர் அருளிச் செய்த வார்த்தை ரகசியத்தின் படி இருந்தபடி கண்டாயே என்று சீயரைக் குறித்து பட்டர் அருளிச் செய்தார் –இப்பாட்டினை-நம்முடையார் த்வயத்தின் அர்த்தத்தோடு அனுசந்திப்பார்கள் -என்பது -என்று ஜீயருக்கு அருளிச் செய்தார் –-திரு மால் என்னை ஆளும் மால் -10-7-5-என்னும்படியே–தம்முடைய அன்புக்கு அடி சொல்லுகிறார் –அந்தப்புரத்தைச் சார்ந்தவன் அன்றோ –என் அன்புக்கு அடி இல்லையோ –-திருவுக்கு பரிகரமான என்னிடமும் மால் -மால் நடுவில் -திரு என்னை இரண்டு பக்கமும் – திரு மால் இடம் பேசி இருவருமாக என்னை ஆள்வார்கள் -கைங்கர்யம் கொள்ளுவார்கள் -என்றபடி –பிராதி கூல்யத்தை கனக்கப் பண்ணினார் பக்கலிலும் நாலடி வர நின்றதுவே ஹேதுவாக ரக்ஷகனாம் ஈஸ்வரன் என்னும் இடம் காக விபீஷணாதிகள் பக்கல் கண்டது இறே-க்ருபயா பர்யபாலயாத் — என்றும் நத்யஜேயம் என்றும் அவ்வளவு அன்றிக்கே தனி இருப்பில் தர்ஜன பர்ச நாதிகளாலே நலிந்த ராக்ஷஸிகள் பக்கல் திருவடி எதிர்க்க -க குப்யேத்-கார்யம் க் ருணம் ஆர்யேனே நகச்சின் நபராத்யதி -என்னும் நீர்மை இறே பிராட்டி நீர்மை –ஸ்ரீ பூமிப் பிராட்டியை பெறுகைக்கு செய்த செயலையும்-பிராட்டியை பெறுகைக்கு செய்த செயலையும்-என்னை பெறுகைக்கு செய்து- என்னைக் கிட்டப் பெற்ற பின்பு-உன்னைப் போக விடுவேனோ- நீ செய்த செயலின் பலத்தால் சேர்ந்த நான்-கைப்பட்ட செல்வத்தை விடத் தக்கவனோ-
அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெலாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -11–பகவத் விஷயத் தளவும் அன்றிக்கே -ததீயர் அளவும் அன்றிக்கே-ஆசார்ய விஷயத்திலே சக்தராய் – தனக்கு புருஷார்த்தம் வேண்டி இருக்கில் பகவத் விஷயத்தை பற்ற -அமையும்-அங்கன் தான் உகந்தது அன்றிக்கே -ஈஸ்வரன் உகப்பே புருஷார்த்தம் -என்று இருக்கில் பாகவதர்களைப் பற்ற அமையும் –ஜ்ஞா நீத்வாத்மைவ மே மதம் என்றும் மம ப்ராணா ஹி பாண்டவா -என்றும் பாண்டவர்களை தனக்கு தாரகராக இறே நினைத்து இருப்பது –ஈச்வரனோடு ஸ்ரீ வைஷ்ணவர்களோடு வாசியற எல்லாருடைய உகப்பும் புருஷார்த்தம் என்று இருக்கில்-ஆச்சார்யனைப் பற்ற அடுக்கும்-ஆசார்ய வான் -என்று ஆயிற்று ஸ்ரீ வைஷ்ணவர்கள் உகப்பது-பிரதமத்திலே -1-ஆசார்யன் தனக்கு அஜ்ஞாத ஜ்ஞாபந முகத்தாலே-ஸ்வரூப ஜ்ஞாநத்தைப் பிறப்பித்து-2-பகவத் சமாஸ்ரயண வேளையிலே புருஷகார -பூதனாய்–3-தன்னுடைய அனுஷ்டாநத்தாலே இவனை நல் வழியே கொண்டு போய்-4-ப்ராப்தி தசையிலும் சாத்ய வ்ருத்தியை பண்ணிக் கொடுக்கக் -கடவனாய் இப்படி பஹூ முகத்தாலே உத்தேச்யனாய் இறே -இருப்பது-
—
21-அவர் -உலகம் படைத்தான் கவி -என்றார்-இவர் மதுரகவி -என்கிறார் –
நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய்ச்
சென்று சென்றாகிலும் கண்டு,சன்மம் கழிப்பான் எண்ணி,
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?–3-9-10-சென்று சென்றாகிலும் நெடும் காலம் கூட வாகிலும்-கண்டு,-நம்மை இவன் கண்டு-சன்மம் கழிப்பான்-ஜென்ம சம்பந்தம் அரும்படி பண்ண வேண்டும் என்று-எண்ணி,-மநோ ரதித்து-ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான்-ஸ்ருஷ்டிகள் பலித்ததில்லை என்று கை வாங்காதே மிகவும் ஒருப்பட்டு லோகங்களை உண்டாக்கினான்
கவி ஆயினேற்கு-கவியாயினுக்கு-அவன் ஸ்ருஷ்ட்டி பலித்து அநந்யார்ஹனான எனக்கு
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?– கால தத்வம் உள்ளதனையும் வேறு சிலருடைய கவியில் எனக்கு அந்வயம் உண்டாகி தகுமோ-வேறு சிலர்க்கு கவியாக நான் தகு வேனோ என்றுமாம்
இப்போது பகவத் குணங்களை பாடி மேலும் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத– ஏதத் சாம காயன் நாஸ்தே-என்று பாடப் புகுகிற நான் வேறு சிலர்க்கு தகு வேனோ –சென்று சென்று ஆகிலும் கண்டு நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய் ஜன்மம் கழிப்பான் எண்ணிஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவியாயினேற்கு என்றும் என்றும் இனி மற்று ஒருவர் கவி ஏற்குமோ –
அவன் எதிர் சூழல் புக்குத் திரிந்து பண்ணின கிருஷி பலித்து, அவனுக்குக் கவியாகப் பெற்ற எனக்கு.
என்றும் என்றும் இனி மற்று ஒருவர் கவி ஏற்குமே –காலம் என்னும் ஒரு பொருள் உள்ள அளவும் வேறு சிலரைக் கவி பாடத் தகுமோ?-‘நன்று; இப்படிப் பலத்தது அவன் சன்மம் கழிப்பான் எண்ணி ஒன்றி ஒன்றி உலகம் படைத்ததே காரணமாம் ஆகில்,-பின்னை எல்லார்க்கும் பலிக்க வேண்டாவோ?’ என்னில், இறைவனுடைய நினைவு தானும் சென்று சென்று ஆகிலும் என்பதே அன்றோ?
ஒரு நாளிலேயே பலிக்குமது என்பது இன்றே? ஆகையால், பலிக்கப் பலிக்கக் காணுமித்தனை. இனி, ‘என்றும் என்றும் உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு மற்று ஒருவர் கவி ஏற்குமே,’ என்று கூட்டி, ‘இனி, மேல் பலவாக உள்ள காலம் எல்லாம் இச்சரீரமுள்ளதனையும் இதுவே வாழ்க்கையாக இருந்து, மேல் ‘மேல் சொல்லப்போகிற சாமத்தைப் பாடிக்கொண்டிருக்கிறார்கள்’ என்றும்,
‘அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நம்’ என்றும் பாடப் புகுகிற எனக்கு, பகவானுக்கு வேறுபட்டிருக்கிற பொருள்களைப் பற்றிக் கவி பாடுகை போருமோ?’ என்னலுமாம்.-வேறு சிலர்க்கு நான் கவியாகத் தகுமோ?’ என்னுதல். அன்றிக்கே, ‘வேறு சிலர் கவியிலே நான் சேர்தல் தகுமோ?’ என்னுதல்-கவி ஆயினேற்கு மற்றொருவர் கவி ஏற்குமே?’ என்பதற்கு இரு வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார்: முதற்பொருள், ‘இறைவனைப் பாடுதற்கு அமைந்த புலவனாகிய யான் வேறு சிலரைப் பாடும் புலவனாதல் கூடுமோ?’ என்பது. இப்பொருளில் ‘கவி’ என்பது ஆழ்வாரைக் குறித்தது. இதனையே, ‘அவன் எதிர் சூழல் புக்கு’ என்று தொடங்கிச் சிலரைக் கவி பாடத் தகுமோ?’ என்பது முடிய
அருளிச்செய்கிறார்.இரண்டாவது பொருள், ‘அவனைப் பாடுகின்ற பாடல்களைக் கொண்டு வேறு சிலரைப் பாடுதல் கூடுமோ?’ என்பது. இப்பொருளில் ‘கவி’ என்பது,பாடல் அல்லது பிரபந்தம் என்பதனைக் குறிக்கும். இப்பொருளையே, ‘பலவாக உள்ள காலமெல்லாம்’ என்று தொடங்கிக் ‘கவி பாடுகை போருமோ?’ என்பது முடிய அருளிச் செய்கிறார்.
—
22-அவர் உரைக்க வல்லாருக்கு வைகுந்தமாகும் தம்மூர் எல்லாம் -என்றார் -இவர் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -என்று தலைக் கட்டுகிறார் –
இரைக்குங் கருங்கடல் வண்ணன் கண்ணபிரான் தன்னை
விரைக்கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன
நிரைக்கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
உரைக்க வல்லார்க்கு வைகுந்த மாகுந்தம் மூரெல்லாம்.–5-3-11-இத்திருவாய் மொழியை சொல்ல வல்லார்க்கு உத்தேச்ய பூமி பரமபதமாக கடவது என்னுதல் -இது சொன்னவர்கள் இருந்த இடமே பரமபதம் என்னுதல் -அதாகிறது அவர்களுக்கு இவரைப் போலே மடல் எடுக்க வேண்டா -அவன் தானே மடல் எடுத்து இவர்கள் இருந்த இடத்தே நித்ய சம்ச்லேஷம் பண்ணும் என்கிறது -நாடு அறிய மடல் எடுத்துக் கொண்டு இவர்கள் புறப்பட வேண்டாமல், இவர்கள் இருந்த இடங்களிலே அவன் தானே வந்து எப்பொழுதும் சேர்ந்தே இருக்கையாலே, இவர்கள் இருந்த இடம் தானே பரம பதமாம் -அவன் சந்நிதி உள்ள இடம் ஸ்ரீ வைகுண்டமாகக் குறை இல்லை அன்றோ. இப் பாசுரங்களைச் சொன்ன அளவிலே இது கூடுமோ? என்ன ஒண்ணாது;-இப் பாசுரங்களில் சொல்லுகிற பகவானுடைய குணங்களைப் பார்த்தால், ‘இந்த வார்த்தை தானும் மிகை’ என்னலாம்படி இருக்கும்;-இது கூடாதாகில், பரிபூர்ண சமாஸ்ரயணத்துக்கும் பலம் இல்லையாம்;-இங்ஙன் அன்றாகில், புருடோத்தமன் இதர சஜாதீயன் ஆனான் ஆமே-
அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெலாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -11–இனிதாய் இருந்தில்லை யாகிலும்-(மதுரகவி சொல் போதுமே -சொன்ன – நடுவில் -சொன்னதாக வள வள பேச்சாக இருந்தாலும் என்றவாறு )-இப்பிரபந்தத்தை தஞ்சமாக நினைத்து இருக்குமவர்களுக்கு-வஸ்தவ்ய தேசம் பரம பதம் –
ஆழ்வார் உத்தேச்யர் ஆனால் திரு நகரி அன்றோ ப்ராப்யமாவது -என்னில் திரு நகரியில் -பொலிந்து நின்ற பிரான் ஆணையும்-ஆழ்வார் ஆணையுமாய் இரு புரியாச் செல்லும்-அங்கன் இன்றிக்கே ஆழ்வார் ஆணையே யாய்ச் செல்லும் -பரமபதம் அடியார் நிலாகின்ற வைகுந்தமோ –என்றும் /வானவர் நாடு -என்றும் /சொல்லக் கடவது இறே -நம்பி திரு வழுதி வள நாடு தாசர் –நம்புவார் பதி வைகுந்தம் -என்று அவர்கள் இருந்த தேசம் காணும் பரமபதம் –என்று சொல்லுவர் –
உரைக்க வல்லார்க்கு வைகுந்தமாகும் தம்மூர் -எல்லாம் -என்னக் கடவது இறே-(உள்ளுவாருக்கு உம்பர் ஊரே -அநந்த புரம் பதிகம் –உம்பர் -ஊர் திரு நாடு -திரு வனந்த புரம் /-வசிக்கும் ஊர் மூன்றும் -சாண்ட்லி விவகாரத்தில் கண்டோமே -இது அன்றோ எழில் ஆலி என்னார் தாமே -போலே )
கூரத் ஆழ்வான் மகன் பிறந்த பின்பு சம்சாரமும் பரம பதமும் இடைச் சுவரைத் தள்ளி
ஒரு போகி யாயிற்று காண் -என்று பெற்றி பணித்தார் -என்று பிள்ளை அருளிச் செய்வர் –
—
இப்படி ஆழ்வார் பகவத் விஷயத்திலே அனுசந்தித்து குண விசேஷங்களைத் தாம் ஆழ்வார் விஷயத்தில் அநுஸந்திக்கும்படிக்கு ஈடாக ஆழ்வார் தம்மை விஷயீ கரித்து சரம பர்வ ஏக நிஷ்டராம் படி பண்ணி அருளின உபகாரத்துக்கு -பிரதியுபகாரம் இல்லாமையாலே தத் குண அனுசந்தானத்தால் அல்லது செல்லாதபடியான தசை விளைந்து
1-தத் குண அனுபவ ஜெனித ப்ரீதிகளுக்குப் போக்குவீடாக பகவத் விஷயத்திலும் அதிசயிதமான ஆழ்வாருடைய போக்யதா ப்ரகர்ஷத்தையும்
2-அவருடைய பாசுரமே தேஹ யாத்ரை யாம்படி தாரகமான படியையும்
3-ஆழ்வார் உகந்த விஷயம் என்றும் தமக்குப் பகவத் விஷயமும் உத்தேச்யமாம் படியையும் –
4-அப்படி உத்தேசியமாக விரும்புகைக்கு அடி தம்மை ஆழ்வார் விஷயீ கரித்த விஷயீ காரம் என்னும் அத்தையும் –
5-இதர விஷய ப்ராவண்யத்தை விட்டு பகவத் விஷயத்தில் நில்லாதே ஆழ்வார் அளவும் வரும்படியான சாதுர்யத்தையும்
6-ஆழ்வார் தம்மை விஷயீகரித்த விஷயீ காரத்தினுடைய தார்ட்யத்தையும்
7-தம்மை விஷயீ கரிக்கைக்கு ஈடான ஆழ்வாருடைய கிருபா ப்ரகர்ஷ ப்ரகாஸத்தையும்
8-பகவத் கிருபையிலும் ஆழ்வாருடைய கிருபையே இவ் விபுதியில் விஞ்சி இருக்கும் என்னுமத்தையும் –
9-இப்படி ஆழ்வாருடைய கிருபை இவ் வுலகில் விஞ்சி இருக்கைக்கு அடி ஸகல வேத ரஹஸ்ய அர்த்த ஞாபகமாய் தம்முடைய பாசுரமான இப்பிரபந்தத்தை என் நெஞ்சினிலே ஸூ பிரதிஷ்டமாக்கினான் என்னுமத்தையும்
10-இப்படி ஆழ்வார் தம் பக்கலிலே உபகரித்த உபகாரம் பிரதியுபகார நிரபேஷமாய் இருக்கும் என்னுமத்தையும் –
11-இப் பத்துப் பாட்டாலே ஸூ க்ரஹமாக அருளிச் செய்து இப்பிரபந்தம் கற்றாருக்குப் பலம் ஸ்ரீ வைகுண்டம் என்றும் சொல்லித் தலைக் கட்டுகிறார்
–
திருவாய்மொழி வேத சாரமாய் -திருவாய் மொழியினுடைய சாரமாய்த்து இப்பிரபந்தம் இருப்பது –இவ்வாழ்வார் ஆகிறார் 1-அவ்வாச்சார்யா வைபவம் அறிந்தவர் ஆகையாலும்
2-ஆழ்வார் திருவடிகளிலே நெடு நாள் பரிசர்யை பண்ணி அவருடைய பிரசாத பாத்ரராய்ப் போந்தவர் ஆகையாலும்
3-அவர் பண்ணின உபகாரத்துக்கு பிரத்யுபகாரம் உண்டாக நினைத்திராதவர் ஆகையாலும்
4-அவரை வாயாராப் புகழ்ந்து அவருடைய உபகார அனுசந்தான ப்ரீதிக்குப்போக்கு விட வேண்டுகையாலும்
இப்பிரபந்த முகத்தாலே ஆழ்வார் வைபவத்தைப் பேசுகிறார்-
ஈஸ்வரன் துராராதனாய் ஆச்சார்யன் ஸ்வாராதனாய் இருக்கும்
ஈஸ்வரனை ஆராதிக்கைக்கு திருவிருத்தம் தொடக்கமான நாலு பிரபந்தங்கள் வேண்டிற்று
ஆழ்வாரை ஆராதிக்கைக்கு இப்பத்துப் பாட்டுக்களே அமைந்தது –
உறிகளில் வெண்ணெயோடு அறைகளில் பெண்களோடு வாசியற இரண்டையும் களவு கண்டு போந்த அபதானம் இறே –-இது வாய்த்து அபதா நாந்தரங்களில் போக்யதமமாய் இருப்பது –இவ்வபதானத்தின் போக்யதையை இவர் வ்யுத்பத்தி பண்ணிற்று ஆழ்வார் தம்முடைய பாடே யாய்த்து-
லோக உபகார அர்த்தமாக ஈஸ்வரன் இவர் அழுவது அலற்றுவது ஆண் பெண்ணாக மடல் எடுப்பது -தூது விடுவதாம் படி தன் சங்கல்ப பாசத்திலே கட்ட இவரும் அதை அவிழ்க்க மாட்டாதே அறியா மா மாயத்து அடியேனை வைத்தையால் -2-3-3-என்னும் படி கட்டுண்டு இருந்த இருப்பு தமக்கு போக்யமாய் இருக்கிறபடியை இப்பாட்டாலே அருளிச் செய்கிறார் – அவன் கட்டுண்ட இடத்தில் -பற்றி உரலிடை யாப்பும் உண்டான் பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக் கொலோ -என்று பிறருக்கு ஏசுகைக்கு உறுப்பாய் விட்டது இவர் கட்டுண்டது இறே நாட்டாருடைய கட்டை அவிழ்கைக்கு உறுப்பாய் பரம சாத்விக வர்க்கத்துக்கு போக்யமாய்த்து –இவ்வாழ்வார் பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும்
அழுக்கு உடம்பும் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று பிரகிருதி சம்பந்தத்தை அறுக்க வேணும் என்று அபேஷியா நிற்கச் செய்தேயும் பகவத் சங்கல்ப பாசத்தாலே இவர் கட்டுண்டு இருந்த படியைக் கண்டு ஈடுபடுகிறார் –அவன் தான் இவரைக் கட்டுகைக்கு அடி என் என்னில் இவரைக் கட்ட நாட்டில் உள்ளார் களவு போம் என்னும் நினைவாலே-ஊரும் நாடும் உலகும் தன்னைப் போலவும் அவ்வளவன்றிக்கே அறிவுக்கு அவகாசம் இல்லாத ஸ்தாவர ஜாதீயங்களையும்-மரங்களும் இரங்கும் வகை மணி வண்ணவோ வென்று கூவுமவராகையாலே இவரைக் கட்டி வைத்தான் – இவருக்குத் தன் களவு வெளிப்பட்டுப் பிறர் களவு போமாய்த்து –
தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும்-குறுங்குடி நம்பியைக் காட்டில் குருகூர் நம்பியை வ்யாவர்த்திக்கிறது-அவனுக்குப் பூர்த்தி ஜ்ஞான சக்த்யாதிகளாலே-இவருக்குப் பூர்த்தி ஜ்ஞான பக்த்யாதிகளாலே-ஜகத்தை தனக்கு ஆக்கும் படியான குணங்கள் அவனது அவன் தன்னைத் தனக்காக்கும் படியான குணங்கள் இவரது
கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே -1-தத் குண அனுபவ ஜெனித ப்ரீதிகளுக்குப் போக்குவீடாக பகவத் விஷயத்திலும் அதிசயிதமான ஆழ்வாருடைய போக்யதா ப்ரகர்ஷத்தை அருளிச் செய்கிறார்-
ஆழ்வார் உடைய போக்ய அதிசயம் தோற்றுகைக்காகவும் – ஆழ்வார் உடைய முக முலர்த்திக்காகவும் –
அவர் உகக்கும் பகவத் விஷயம் -ஆகையாலும் –பேசுகிறார்-உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எழில் எத்திறம் -என்றும் –-பிறந்தவாறும் -வளர்ந்தவாறும் -என்றும் –-பையவே நிலையும் -என்றும்
ஆழ்வார் ஆழம் கால் பட்ட விஷயம் ஆகையாலும் அத்தைப் பேசுகிறார் –
பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே –1-3-1-உரஸ் ஸ்தலத்திலே கட்டுண்டு
மலர் மகள் விரும்பி அணைக்கும் மார்விலே கிடீர் கையிற்றை இட்டுக் கட்டிக் கட்டுண்டு இருந்தது –இந்த சுத்தனைக் கள்ளன் என்று கட்டினால் பொறுக்க மாட்டாதே அழத் தொடங்குமே –-அவள் வாய் வாய் என்றால் ஏறிட்ட த்வனி இழிய விட மாட்டாதே பயப்பட்டு நிற்கும்-எளிவு -சௌலப்யம் –இது என்னபடி-யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று வேதம் மீண்ட பரத்வத்தை எல்லை காணலாம்-இந்த சௌலப்யம் தரை காண ஒண்ணாது இருந்ததீ-
அவனுடைய குண சேஷ்டிதாதிகளை அனுசந்திக்கப் புக்கு சிதிலரானவர் -இச் ஸைதில்யத்தை போக்கி அருளி தரித்து நின்று அனுபவிக்க வல்லேனாம் படி பண்ணி அருள வேணும் என்று சரணம் புகுகிறார்-பிறந்தவாறும் -5-10-கிருஷ்ணாவதாரத்தில் போந்தார் ப்ரத்யாசத்தியாலே -அதுவும் தீர்த்தம் பிரசாதிக்கையாலே-பல்லில் பட்டுத் தெறித்தது -என்று கூப்பிடுகிறார் -இது ஆழ்வான் நிர்வாஹம் –
உன்னைப் பிரிந்து நோவு படுகிற சமயத்தில் உன்னுடைய குண சேஷ்டிதாதிகள் ஸ்ம்ருதி விஷயமாய் நலியா நின்றது-இவ் வவசாதம் தீரும் படி உன் திருவடிகளில் வந்து சேர்வது என்று என்கிறார் என்று பிள்ளை திரு நறையூர் அரையர் அருளிட்டார் நிர்வாஹம் –
பெய்யும் பூங்குழல் பேய் முலை யுண்ட பிள்ளைத் தேற்றமும் பேர்ந்தொர் சாடிறச்
செய்ய பாதமொன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்
நெய் யுண் வார்த்தை யுள் அன்னை கோல் கொள நீயுன் தாமரைக் கண்கள் நீர்மல்கப்
பையவே நிலையும் வந்து என்நெஞ்சை உருக்குங்களே.–5-10-3-அஞ்சி முகத்தை பாரா நிற்க செய்தே-தெரியாத படி பின்னே கால் வாங்கி நிற்கும் என்னுதல் -பேகணித்து நின்ற நிலை என்னுதல்
பூத காலத்தில் செய்து போனது என்று இருக்க ஒண்ணாத படி புக்க இடம் புக்கு என்நெஞ்சை நீராக்கா நின்றன
தென் குருகூர் -நம்பி-
நல்கி என்னை விடான் நம்பி நம்பி -என்று ஆழ்வார் தாம் உத்தேச்யமாக பற்றின
விஷயத்தில் பூர்த்தி அளவு அன்று இ றே இவர் பற்றின விஷயத்தில் பூர்த்தி –
எங்கனே என்னில் – பகவத் விஷயத்தைப் பற்றினால் அதின் எல்லையான ஆழ்வார் அளவும் வர வேண்டி இருக்கும்-ஆழ்வாரைப் பற்றினால் -அவ் வருகு கந்தவ்ய பூமி இல்லை இறே- ஆச்சார்யர்களை -நம்பி -என்னக் கற்ப்பித்தார் ஸ்ரீ மதுரகவிகள் இறே என்று ஜீயர் அருளிச் செய்வர் –
செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே
அல்லும் நன்பகலும் இடைவீடின்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே –1-10-8-நான் ஒரு கால் தேடி விடா நின்றேன்-அவன் இடை விடாதே ஸ்நேஹியா நின்றான்-அபூரணனான என்னை பூர்ணனான தான் நம்பி விடுகிறிலன்
நம்பி -ஒருத்தனாக நினைத்து-ஆழ்வான் -நம்பியே என்று ஸ்வரத இவனையே பூர்ணன் என்பது என்பர் –
2-அவருடைய பாசுரமே தேஹ யாத்ரை யாம்படி தாரகமான படியையும்–
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே-2-
இன்பம் எய்தினேன் – வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்ந்தனன் மேவி -என்று ஆழ்வார் அவ் விஷயத்தில் பெற்ற பேற்றை -இவ் விஷயத்திலே பெற்றேன் என்கிறார் –
சிந்தையினாலும் சொல்லாலும் செய்கையினாலும் -என்று கரண த்ரயத்தாலும் அவ்
விஷயத்தை ஆஸ்ரயித்தவர் பெற்ற பேற்றை உக்தி மாத்ரத்திலே பெற்றேன் –
1-எனக்கு இஹ லோக ஸூ க ஜனகரும் ஆழ்வாரே-2 -பர லோக ஸூ கத்துக்கு சாதனமும் ஆழ்வாரே-3-எனக்கு ஸ்வாமி யும் ஆழ்வாரே -4-கால ஷேப விஷயமும் ஆழ்வாரே—நான்குக்கும் நான்கு அடிகள் இந்த பாசுரம்-பகவத் விஷயத்தை ஆஸ்ரயிக்கும் இடத்தில் நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும் ஏக சிந்தையனாய் என்று வர்த்தமான நிர்த்தேசம் பண்ண வேண்டிற்று
இங்கு அப்படி அன்றிக்கே சக்ருத் சமாஸ்ரயணம் அமைந்தது
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்
வீவு இல் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
வீவு இல்காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப்பெற்றேன்;
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே.–4-5-3-நித்தியமாய் நிரவதிகமான ஆனந்தத்தை உடையேன் ஆனேன்-அவனுடைய ஆனந்தத்துக்கும் தம்முடைய ஆனந்தத்துக்கும் வாசி சொல்கிறார்
மேவியே-அவனுடைய ஆனந்தம் ஸ்வதஸ் சித்தம்என்னுடைய ஆனந்தம் -அவனை மேவி வந்தது
அவனுடைய ஆனந்தம் தான் தோன்றி-என்னுடைய ஆனந்தம் அபிஜாதம்-ஏஷ ஹ் யேவா நந்தயாதி –
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண்குரு கூரவர் சடகோபன்
முந்தை ஆயிரத்துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச்சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே.–6-5-11-மநோ வாக் காயங்கள் மூன்றும் -ஒருபடிப்பட அவன் பக்கலிலே ப்ரவணமாய் இருக்கிற படி –இரங்கி -என்றும் –மணி வண்ணாவோ என்று கூவுமால் -என்றும் –தன் கரங்கள் கூப்பித் தொழும் -என்றும் -மூன்றாலும் இவருக்கு உண்டான இவருக்கு உண்டான பிராவண்ய அதிசயம் இ றே இது திருவாய் மொழியிலே சொல்லிற்று-அவனே தமக்கு சர்வவித்த பந்துவும் ஆனால் போலே அவ் வூரில் உள்ளார் -ஆழ்வாரே எல்லா உறவு முறையும் -என்று ஆயிற்று இருப்பது –அன்னையாய் அத்தனாய் -என்னும் ஸ்ரீ மதுர கவிகளை போலே–“தாயும் தமப்பனும் மனைவியும் குழந்தைகளும் செல்வமும் மற்றும் எல்லாம் வகுளாபரணர் திருவடிகளே”
மாதாபிதா யுவதய: தநயா விபூதி: ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் ஆத்யஸ்ய ந: குலபதே: வகுளாபிராமம் ஸ்ரீ மத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா”–என்றும் சொல்லுகிறபடியே இருப்பர்கள்.பழையதான வேதார்த்தத்தை அருளிச் செய்கையாலே சர்வேஸ்வரன் இதர சஜாதீயன் ஆனால் போலே -வேதமும் தமிழாய் வந்து இவர் பக்கலிலே அவதரித்த படி-
குருகூர் நம்பி இன்னிசை பாடி –பகவத் பிரதிபாதகம் என்று அன்று இவர் திருவாய் மொழியைப் பாடிற்று –ஆழ்வார் அருளிச் செய்தது என்றாயிற்று –உயர்வற உயர் நலம் உடையவன் -வண் புகழ் நாரணன் -மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள் –என் செய்ய தாமரைக் கண் பெருமானார் -என்று பாடா நிற்கச் செய்தும் பகவத் விஷயத்தோடு உறவற்று இறே இவர் பாடுகிறது–திரிவனே
அங்குப் போனால் அன்றோ ஏதத் சாம காயன் நாஸ்தே என்றிருக்க வேண்டுவது -இங்கு அப்படி அன்றிக்கே விஸ்ருங்கலாமாகத் திரியா நிற்பன்-திரிவேனே-இது எனக்கு கால யாத்ரை –ஆகையால்
1-ஸூக பூதரும் -2-சாதனா பூதரும் -3-ஸ்வாமி யும் -4-காலஷேப விஷயமும் -( நான்குக்கும் நான்கு அடிகள் இந்த பாசுரம் – )ஆழ்வாரே
–
3-ஆழ்வார் உகந்த விஷயம் என்றும் தமக்குப் பகவத் விஷயமும் உத்தேச்யமாம் படியையும் –சேஷி உகந்தத்தை உகக்குமது இ றே கைங்கர்யத்தின் எல்லை நிலமாகிறது—தேவு மற்று அறியேன் என்றார் கீழில் பாட்டில் –இங்கு ஈஸ்வரன் தான் இவர் பக்கலிலே மண்டினபடியைச் சொல்லுகிறார்–பிராட்டியைப் பற்றினாலும் அவள் அவனோடு சேர்க்கையாலே அவன் கை பார்த்து இருக்க வேணும்-இங்கு அவன் தானே மேல் விழுந்து தன்னை இவனுக்குக் கொடுக்கும் –
திரி தந்தாகிலும் தேவபிரானுடைக்
கரிய கோலத் திரு உருக் காண்பன் நான்
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள்
உரியனாய் யடியேன் பெற்ற நன்மையே -3-
தேவபிரானுடைக் கரிய கோலத் திரு உரு- (கரிய உரு –கோல உரு -திரு உரு )
நித்ய ஸூரிகளுக்கு படிவிடும் வடிவு -காளமேக நிபஸ்யாமமாய் -அழகு தான் ஒரு வடிவு கொண்டால் போலே-இறே இருப்பது –-இவ்வளவும் இவர்க்கு உத்தேச்யராகப் பெற்றிலோம் ஆகிலும் உத்தேச்யருக்கு உத்தேச்யராய்ப் பெற்றோம் இறே –என்று எம்பெருமான் திரு உள்ளம்-கோலமே தாமரைக் கண்ண தோர் அஞ்சன நீலமே –என்று ஆழ்வார் வாய் புலத்து கேட்டிருக்குமவர் ஆகையாலே பேசுகிறார்-என்னாவி சேர் அம்மானுக்கு செம்பொன் திருவுடம்பு என்று ஆழ்வார் அநுபவித்தபோதும் பொன் என்ற அளவத்தனை போக்கிக் கறுத்தது இல்லையே –கோலத்-ஆனைக்கு உதவ வந்தாப் போலே இருந்தபடியே வருகை அன்றிக்கே இங்கு அனுபாவ்யனாய் வருகிறவன் ஆகையாலே சாத்தின திரு ஆபரணமும் தானுமாய்த்து வந்தது-அபிமத விஷயத்தின் பாடு போவார் ஆபரணம் பூண்டு இறே போவது –திரு உருக் –கழற்ற ஒண்ணாது இருப்பதோர் ஆபரணத்தையும் கொண்டு வந்தார்
அவ் விருண்ட வடிவுக்கு மின் போலே ப்ரகாசிகையாய் இருக்குமவள் யாய்த்து-அமரர்கள் ஆதி முதல்வன் கருகிய நீல நன் மேனி வண்ணன் பூ மகளார் தனிக் கேள்வன் ஒரு கதியின் சுவை தந்திட்டு
ஒழிவிலன் என்னோடுடனே என்று ஆழ்வாரை அனுபவிப்பித்தால் போலே என்னையும் அனுபவிப்பித்தான்
கோலமே! தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன நீலமே! நின்று எனது ஆவியை ஈர்கின்ற
சீலமே! சென்று செல்லாதன முன் நிலாம் காலமே! உன்னை எந்நாள் கண்டு கொள்வனே?–3-8-8-அழகு என்றும் தாதாஸ்ரயம் என்றும் இரண்டு அன்றிக்கே அழகு தானே ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கை-ஞான ஸ்வரூபன் என்றும் ஞான குணகன் என்றும் சொல்லக் கடவது இறே ஞாதாவை–அஞ்சனம் என்றும் நீலம் என்றும் சொல்லுகையாலே ஓன்று ஒப்பாக மாட்டாமையாலே கதிர் பொறுக்குகிறார்-நீலம் தன்னை வடிவாக வகுத்தால் போலே இருக்கை –-வளவேழ் உலகின்’ என்ற திருவாய்மொழியில் தம்மைச் சேரவிட்டுக் கொண்ட சீலமாதல்.–செய்ய தாமரைக் கண்ணனில் நெஞ்சினால் நினைப்பான் எவன் என்கிற அர்ச்சாவதாரத்தில் நீர்மையை இறே இவர் நினைக்கிறது–நம்பிக்கு –-நான் ஒன்றை விட்டேன் என்னலாம்படியோ ஆழ்வார் உடைய பூர்த்தி இருப்பது –
அதாவது –ஆழ்வாரை அனுபவிக்கும் அனுபவத்திலே பகவத் விஷயம் அந்தர்பூதமாய் இருக்கை—அடியேன் – ஆழ்வார் உடைய நீர்மைக்கு தோற்று -அடியேன் -என்கிறார் – தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்னும் நீர்மை இறே
கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே.–5-2-2-பெரியோரை ஒரு காலும் பிரிகிலேனே -என்னும் பாகவத விஷயத்திலே சபலர் எல்லாரும் திரளுங்கோள்-பிரயோஜனத்துக்குப் பிரயோஜனம் தேட வேணுமோ? கை மேலே பிரயோஜனமன்றோ.-தொழுகை பிரயோஜனம் -சடக்கென அப்பொழுதே ப்ரத்யக்ஷ பலம்-பிரத்யஷ பலன் சடக்கென காணலாம் –‘தொழுது தொழுது’ என்ற அடுக்குத் தொடரால், அது தானே பிரயோஜனமாயிருக்கிறது என்பதனைத் தெரிவித்தபடி.-ஆர்த்தும் என்றது, ஆர்த்துக் கொள்ளுவோம்; சந்தோஷத்தோடு கூட ஆரவாரம் செய்வோம் என்றபடி
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு – சர்வ நிரபேஷரான ஆழ்வாருக்கு – ஆழ்வார் ஒருவருக்கும் இறே ஈஸ்வரன் மயர்வற மதி நலம் அருளிற்று-இவர் ஜகத்துக்காக மயர்வற மதி நலம் அருளினார் இறே
இவரையும் கட்டித் தருமூர் ஆகையாலே வண்மையின் மிகுதி சொல்லுகிறது-விசேஷஜ்ஞர் அடங்கத் திரண்டவூர் இ றே-(பெரிய வண்மை இரண்டு விசேஷணங்கள் )-அங்குத்தைக்கு நிர்வாஹகரான பூர்த்தியும் உண்டு இறே இவர்க்கு –தாம் சொல்லும் போதும் பெரிய வண் குருகூர் வண் சடகோபன் -8-1-11–என்று இ றே சொல்லுவது-இவருடைய நாராயணத்வம் இருக்கிறபடி –புவியும் இரு விசும்பும் நின்னகத்த நீ என் செவியின் வழி புகுந்து என்னுள்ளாய் -என்கிறபடியே-விபூதிமானையையும் விபூதியையும் தமக்குள்ளே அடக்கி இருக்கிற ஆழ்வாரைத் தனக்குள்ளே அடக்கும்படியான பெரிய தேசம்
பெரிய வப்பனைப் பிரமனப்பனை உருத்திரனப்பனை முனிவர்க்
குரியவப்பனை யமரரப்பனை உலகுக்குகோர் தனியப்பனை தன்னை
பெரிய வண் குருகூர்ச் சடகோபன் பேணின ஆயிரத்துள்ளும்
உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால் உய்யலாம் தொண்டீர் ! நம் கட்கே–8-1-11-ரக்ஷணம் தாழ்ந்தவாறே அதி சங்கை பண்ணுகையும் -உபகார ஸ்ம்ருதியாலே ஹ்ருஷ்டராகையும் ஆகிற இவை யுண்டாகைக்கு அடி அவ் வூரிலே பிறப்பு என்கை -மானஸ அனுபவ மாத்திரமே யாய் விடாதே ப்ரபந்ததீ கரித்த உதார குணம்
—
4-அப்படி உத்தேசியமாக விரும்புகைக்கு அடி தம்மை ஆழ்வார் விஷயீ கரித்த விஷயீ காரம் என்னும் அத்தையும் –
நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மையாகக் கருதுவர் ஆதாலில்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே-4—தாயாய் தந்தையாய் அறியாதன அறிவித்த அத்தா -என்று பகவத் விஷயத்தில் ஆழ்வார் சொல்லுவது எல்லாம் ஆழ்வார் விஷயத்தில் சொல்லுகிறார் இவர் –என் பக்கல் சாட்யத்தை போக்கினவர் –கீழ் மூன்று -பாட்டிலும் தென் குருகூர் நம்பி -நம்பி என்று சொன்னவர்
இப் பாட்டிலே சடகோபன் என்றார் இறே –ஸ்வ தோஷத்தை போக்கின படியாலே–என் தோஷ அதிசயத்தாலே அந்தப் பரம சாத்விகரும் என்னை நெகிழ அதுவே பற்றாசாக எனக்கு முகம் தந்து மாதா பிதாவும் தாமேயாய்–என்னை அடிமை கொண்டு போந்த ஸ்வ பாவம் ஆழ்வார்க்கு உள்ளது ஒன்றாகையாலே அவரே அன்றோ எனக்குப் பூரணரான உபகாரகர்–என்னை ரஷித்து சடகோபன் என்கிற பட்டப் பேர் சூடியவர்-சத்வ நிஷ்டர்க்கு பஹிஷ்டனான வென்னைத் தாம் அங்கீ கரித்தும் அப்ரியங்களிலும் அஹிதங்களிலும் கை வளர்ந்து போந்த வென்னைக் கைங்கர்யம் கொண்டும் போந்த –சடகோபன் என் நம்பியே-பூர்த்தியை யுடையவர் ஆழ்வாரே
ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயா
ஒத்தாய் எப் பொருட்கும் உயிராய் என்னைப் பெற்ற
அத்தாயாய் தந்தையாய்த் அறியாதன யறிவித்து
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே –2-3-2—வளர்த்த தாயை வ்யாவர்த்திக்கிறது –-பெறல் வேண்டும் என்று நோன்பு நோற்றுத் தன் சரீரத்தினை ஒறுத்துப் பெற்று-எனக்கு பிரியமே செய்யக் கடவ தாயாய்–நேரே உத்பாதகனாய் கொண்டு ஹிதைஷையாய்-சஹி வித்யாஸ் தம் ஜநயதி -என்கிறபடியே ஆச்சார்யனாய்-ஏதத் விரதம் மம –மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்னுமவன் இறே-ஸ்வாமி-இச்சரீரத்தை உண்டாக்கிய தாய் தந்தையர்களைக் காட்டிலும், ஞானத்தைத் தந்து உயர் பிறவி அடையச் செய்த ஆசாரியன் சிறந்தவனாதலின், தாய் தந்தையர்கட்குப்பின் ஆசாரியனை அருளிச் செய்கிறார்.-
நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்-அபகாரபரர் அளவிலும் உபகாரகனாய்ப் போருகை –அதாகிறது அவர்கள் அளவில் குறை காணாது ஒழிகை இறே-ததீயரை நலத்தால் மிக்கார் என்று ஆழ்வார் அருளிச் செய்யக் கேட்டிருக்கையாலே தாமும் -நன்மையால் மிக்க என்கிறார்-
செலக் காண்கிற்பார் காணு மளவும் செல்லும் கீர்த்தியாய்!
உலப்பிலானே! எல்லா உலகு முடைய ஒருமூர்த்தி!
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான் நான்
அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே.–5-8-4-க்ரம பிராப்தி பற்றாதபடி ஸ்நேஹித்து இருக்குமவர்கள் -அவர்களதான திருக் குடந்தையில் அவர்களை பிரிய மாட்டாமையாலே உடம்போடு கண்டு அனுபவிக்கலாம் படி கண் வளர்ந்து அருளுகிறவனே-ஆஸ்ரித வத்சலனான உன்னை காண் கைக்காக -அத்தலை இத்தலையாய் நீ என்னை காண பட்ட அளவன்று-நான் உன்னை காண் கைக்கு பட்டது
என்னை யாண்டிடும்-பொலிந்து நின்ற பிரான் பக்கலிலும் ஒரு கால் போய் வாரீர் என்று உபதேசித்தார் என்று வடக்குத் திரு வீதிப் பிள்ளை அருளிச் செய்வர்-கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் என்னப்பனில் நண்ணி என்று நான் விட்டுப் போந்த விஷயத்தை-நீள் குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே உறுவது என்று பொலிந்து நின்ற பிரானுக்கும் ஓர் அஞ்சலி நேரும்படி பண்ணினார்
–
5-இதர விஷய ப்ராவண்யத்தை விட்டு பகவத் விஷயத்தில் நில்லாதே ஆழ்வார் அளவும் வரும்படியான சாதுர்யத்தையும்–
நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையும் முன் எலாம்
செம்பொன் மாட திருக் குருகூர் நம்பிக்கு
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்று –5-பர த்ரவ்யதை ஆசைப்படுகை இறே -அபஹாரம் –வன் கள்வன் -என்று –கள்வன் ஆனேன் என்றும் -ஆழ்வார் அனுசந்திதது இ றே இவருக்கு முதல் –அர்த்த அபஹாரத்துக்கு இடம் பார்த்து திரியா நிற்க – அச் செம்பொன் மாடத்தை களவு காண புக்கேன் –
அங்கு வைத்த மா நிதியைக் கண்டு -அகப்பட்டேன் -என்கிறார் – இவருக்கு வைத்த மா நிதி ஆழ்வார் இறே-(திருக் கோளூர்-சொல்லாமல் திருக் குருகூர் என்கிறார் அன்றோ ) ஆழ்வார் திருவடிகளோபாதி திருநகரியும் இவருக்கு ஸ்ப்ருஹணீயம் ஆகையாலே திருநகரியைக் கவி பாடுகிறார் –
உயர்வற உயர்நலம் உடையவன் -எல்லை இல் அந்நலம் -எப்பால் யாவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பால் அவன் –என்றும் பலபடியாலும் ஈச்வரனைச் சித் அசித் வ்யாவ்ருத்தனாக ஆழ்வார் பாடே கேட்டுப் போருகையாலே அந்த வ்யாவ்ருத்தி தோற்ற பிறர் என்கிறார்-நம்பிக்கு அன்பனாய் அடியேன்-ஆழ்வாருக்குப் பிறந்த மதி நலன்கள் போலே கிரமத்திலே வருகை அன்றிக்கே அன்பு முற்பட்டு அடிமையில் பட்டது ஆழ்வார் திரு வஷ்டாஷர சம்சித்தராகையாலே இவருடைய கடாஷ லஷ்யன் ஆகையாலே அம்மாத்ரத்திலே பதத்ரயார்த்தத்திலும் முன்னாய் விட்டேன்
நான் அர்த்தாத்ஜ நேச்சுவாய் தேசாந்தர சஞ்சாரம் பண்ணா நிற்கச் செய்தே தைவாயத்தமாக திரு நகரியிலே மாடங்கள் ஓங்கி இருந்து பொற்கென்று தோற்றிற்று-இங்கே போய் அர்த்த அபஹாரம் பண்ணலாம் -இது தான் நகரி யாகையாலே நாகரிகைகளான மடவாரையும்-இம் மாடங்களிலே காணலாம் என்று அறுதியிட்டு வழி விலங்கி உள் புக்கேன் – அன்னகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் திரு வஷ்டாஷர சம்சித்தர் ஆகையாலே அவ்விடத்தில் தச்கர சஞ்சரணம் இல்லாமையாலே
ஒரு வைஷ்ணவ சகாசத்திலே ஷத்ர பந்துவுக்குப் பிறந்த அவஸ்தை போலே எனக்கும் ஆழ்வார் சகாசத்திலே-அபஹார புத்தி போய் உள்ளே ஆழ்வார் தம்மைக் காண வேணும் என்று புக்கு அவருடைய பூர்த்தியைக் கண்டு நின்றாப் போலே இருக்க அவருக்கு அன்பனாய் விட்டேன்–செம் பொன் மாடம்
துவளில் மா மணி மாடம் ஓங்கு துலை வில்லி மங்கலம் -என்று உகந்து அருளின நிலங்களில் மாடங்களும் ஆழ்வாருக்கு உபாதேயம் ஆனாப் போலே இவருக்கும் ஆழ்வார் உடைய மதி நலங்களோ பாதி மாடங்களும் உபாதேயமாய் இருக்கிறது யாய்த்து – ஆகையாலே அர்த்த காம ப்ரவணரையும் ஆளாக்கும் தேசமாய்த்து –
—
6-ஆழ்வார் தம்மை விஷயீகரித்த விஷயீ காரத்தினுடைய தார்ட்யத்தையும்
இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
குன்ற மாடத் திருக் குருகூர் நம்பி
என்றும் என்னை இகழ்விலன் காண்மினே-6–இது ப்ரத்யஷிக்கலாவது ஒன்றாய் இருக்க
ஆழ்வார் பெருமை நான் சொல்ல கேட்க மிகை அன்றோ —நின்று-–மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன் -என்று ஆழ்வாருக்கு வ்யவர்த்ய விஷயம் மனுஷ்யர் இறே -இவர்க்கு வ்யாவர்த்யம் எம்பெருமான் ஆனபடி –நின்று தன் புகழ் ஏத்த அருளினான்-–உபகார ச்ம்ருதியாலே பகவல் லாபத்து அளவும் இவரைப் பற்றி நின்று பின்னை அது கிட்டின வாறே அதிலே தோள் மாறும்படி யன்றியே தம்முடைய அனுபவத்துக்கு உள்ளே பகவத் அனுபவமாம் படி ஆழ்வார் எனக்கு அருளிற்று–எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும் தம்பிரானை –என்று ஆழ்வார் பகவத் விஷயத்தைச் சொல்லக் கேட்டுப் போந்த-வாசனையாலே தாமும் எம்பிரான் என்கிறார்–ஏத்த—நற்பூவைப் பூவீன்ற வண்ணன் புகழ் இயற்றுவாய் -என்று தொடங்கி –மொய் கழலே ஏத்த முயல் -என்ற ஆழ்வார் தம்மைப் போலே
ஏத்த உத்யோகித்து விட்ட அளவன்றிக்கே –தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும்-என்று தொடங்கி –முயல்கின்றேன் உந்தன் மொய் கழற்கு அன்பையே என்று-பத்தும் பத்தாக ஏத்தும்படி அருளினார்–ஆழ்வாருடைய குணங்களைப் புகழ்கையே புருஷார்த்தம்-அது சித்திப்பதும் அவருடைய அருளாலே என்று அத்யவசிதனாய் ஏத்தும் படியும் அருளினார் –புருஷார்த்த பூதருமாய் சாதன பூதருமானவர்கள் இறே அத்யவசாய ப்ரதரும்-அவருடைய குண அனுசந்தானத்தாலே மனஸ் சைதில்யம் பிறக்கையாலே – –நெஞ்சை ஒருங்கப் பிடித்து நின்ற ஏத்த என்றுமாம் –குன்ற மாடத் திருக் குருகூர் நம்பி என்றும் என்னை இகழ்விலன்-அம்மாடங்களுக்கு சலனம் உண்டானாலும் ஆழ்வார் திரு உள்ளம் சலியாது—காண்மினே –பாணானார் திண்ணம் -என்றும் சொல்லுகிற பிரமாணங்களிலே-பார்த்துக் கொள்ள மாட்டி கோளோ –
–
7-தம்மை விஷயீ கரிக்கைக்கு ஈடான ஆழ்வாருடைய கிருபா ப்ரகர்ஷ ப்ரகாஸத்தையும்
கண்டு கொண்டு என்னை காரி மாறப் பிரான்
பண்டை வல்வினை பாற்றி யருளினான்
எண் திசையும் அறிய இயம்புகேன்
ஒண் தமிழ் சடகோபன் அருளையே-7–இருந்தான் கண்டு கொண்டு -என்று எம்பெருமான் ஆழ்வாரைக் கண்டு கொண்டு இருந்தாப் போலே ஆழ்வாருக்கு அலாப்ய லாபம் ஆகிறபடி-காட்சி இத் தலைக்காக வன்றிக்கே தம் பேறாக இருக்கிறபடி-–தொண்டீர் எல்லீரும் வாரீர் –என்னும் ஆழ்வாரோட்டை வாசநை யாலே சொல்லுகிறார்-அவர் -பகவத் விஷயத்தில் ருசி உடையார் எல்லாரும் வாரும் கோள் -என்கிறார்-இவரும் ஆழ்வார் பக்கல் ருசி உடையார் எல்லாரும் வாரும் கோள் -என்கிறார்-ஆழ்வார் பக்கல் பாவ பந்தத்தாலே–மயர்வற மதிநலம் அருளினவனுடைய அருள் போலே அல்ல ஆழ்வார் உடைய அருள் – அவ்வருளுக்கும் அயலான அளவிலே பண்ணி யருளின அருள் இறே –பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும்படி திருவாய்மொழி பாடின அருளுக்கு மேலே இறே என்னை விஷயீ கரித்த அருள் –பார்க்க ஒண்ணாத என்னைப் பார்த்தார்-எல்லாரும் கை விட்ட வென்னைக் கைக் கொண்டார் இவர் ச்வீகரித்தால் அவனாலும் விடப் போகாதே—தெரியச் சொன்ன வாயிரம் -என்கிறபடியே திருவாய் மொழியைப் பாடி சம்சாரிகளுடைய சாட்யத்தைப் போக்கினவருடைய கிருபையை –ஸ்ரீ ஜாம்பவ மஹா ராஜர் தரை விக்கிரம பிரசம்சையை சாற்றிக் கொண்டு திரிந்தால் போலே அங்கு ஈஸ்வரனுடைய சக்தி பிரபாவம்–இங்கு ஆழ்வாருடைய கிருபா பிரபாவம்–அங்கு பிரயோஜனாந்த பரர் வாழ்ந்த படி -இங்கு அநந்ய பிரயோஜனர் வாழ்ந்த படி–அங்கு க்ருத்ரிம வியாபாரம் -இங்கு அக்ருத்ரிம வியாபாரம்–இனி பதக்ரமத்தாலே திருத்தின படிக்கு சாம்யம் உண்டாகில் உண்டு அத்தனை –
இருத்தும் வியந்து என்னைத் தன் பொன்னடிக் கீழ் என்று
அருத்தித் தெனைத்தோர் பல நாள் அழைத்தேற்கு
பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து என்தன்
கருத்தை யுற வீற்றிருந்தான் கண்டு கொண்டே-8-7-1-என்னைப் பெறுகையாலே -சம்சாரம் கொண்டவரை மீட்டோம் என்று இருந்தோம் -மாயக் கூத்தவன் கொண்டவரும் பிழைக்கப் பெற்றோமே -என்று குறைவற்று இருந்தான் என்னுதல் -என்னோட்டை கலவி தன் பேறாக இருக்கும் வேறுபாடு தோற்றும்படி இருந்தான் என்னுதல் –கண்டு கொண்டே -பிரபல வியாதிக்கே பிழைத்த புத்ரனைப் பார்த்துக் கொண்டு இருக்கும் பிதாவை போலே –விஜூவர பிரமுமோதஹ-என்கிறபடியே மாயாக் கூத்தனில் ஆற்றாமைக்கு பிழைத்தவன் என்று வைத்த கண் வாங்காதே இரா நின்றன் –தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -2-9-4-என்னும்-என் நினைவைத் தான் கைக் கொண்டான் –
இருந்தான் கண்டு கொண்டே எனதேழை நெஞ்சாளும்
திருந்தாத வோரைவரைத் தேய்ந்தற மன்னி
பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்
தருந்தானருள் தான் இனி யானறியேனே-8-7-2-தரித்ரன் நிதி கண்டால் கண்டு கொண்டே இருக்குமா போலே -பார்த்த படியே இரா நின்றான் -அந்யோன்யம் அபிவிஷந்த்வ நதிருப்திம் உபஜக்மது -என்கைக்கு எதிர்தலையான தம்மை காண்கிறீலர்—மொத்தமாக ஆழ்வாரை விழுங்கி -அசத் சமமாக திருவடிக்கு கீழ் சேர்த்துக் கொண்டானே —-இத்தை நினைத்து இறே அர்த்தித்தவம் என்னும் இதுவும் மிகை என்றார் முதல் பாட்டிலே –
கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே.–5-2-2-பெரியோரை ஒரு காலும் பிரிகிலேனே -என்னும் பாகவத விஷயத்திலே சபலர் எல்லாரும் திரளுங்கோள்
—
8-பகவத் கிருபையிலும் ஆழ்வாருடைய கிருபையே இவ் விபுதியில் விஞ்சி இருக்கும் என்னுமத்தையும் –
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
வருளினான் அவ் வருமறையின் பொருள்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே-8-ஆழ்வாருடைய அருள் -சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரயத்தையும்
கபளீ கரித்து இருக்கை-மயர்வற மதிநலம் அருளினான் -என்னும்படியான அருள் அல்ல –-அது தன்னையும் விளாக் குலை கொண்டு இருக்கும் அருள் இ றே -ஆழ்வார் அருள் –-ஈஸ்வரன் கை விட்ட ஆத்மாக்களிலும் -அவர்களுடைய துர்கதியைக் கண்டு திருத்த ஒருப்பட்ட படியாலே இவர் அருள் ப்ரத்யஷம் அன்றோ-பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே-பாட்டும் அன்று-பாடினவரும் அன்று-பாட்டுக்கு அடியான அருளும் அன்று-இவர் அருள் யாய்த்து-இன் தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே-வரை முறுவலான ஸ்ரீ கீதை சொன்னவனுடைய அருள் அன்று
அவன் நெறி எல்லாம் எடுத்துப் பாடின இடத்திலும் அகப்பட்டாரும் அகப்படாதாருமாயிற்று-இவர் அருள் அப்படி இன்றியிலே ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய பேரும் தார்களுமே பிதற்றப் பண்ணிற்று ஆயிற்று-கேட்டாரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல் -என்று அந்த லோகத்தில் இவருடைய பாட்டு மிக்கப் போலே-இந்த லோகத்தில் இவருடைய அருள் மிக்கது
இங்கு அருள் மிக்கு அங்கு போகம் மிகும் படி இறே லோக ஸ்பாவங்கள் இருப்பது –அவனுடைய அருள் சாஸ்திர கம்யம் -இது ப்ரத்யஷ சித்தம்–இவ்வுலகினில் –கண்டீர்-இப்போது இவ்வுலகத்தில் கண்டி கோளே-அந்த லோகத்தில் போனால் அங்குக் காண்கிறிகோள் (அவன் அருளை காண அங்கே போக வேண்டுமே -இங்கே கேடக்த் தானே முடியும் -என்றவாறு -இவர் அருள் இங்கேயே காணலாமே -மதுர கவி ஆழ்வார் சாக்ஷி அன்றோ -அங்கு ஆழ்வார் -ஓர் அரசு மட்டுமே -அதனால் தான் நம்புவார் பதி -வைகுந்தம் என்றார் )-இவ்வுலகினில் மிக்கது-இந்த லோகத்தையும் ஆழ்வாருடைய அருளையும் சீர் தூக்கிப் பார்த்தால் அதிலும் விஞ்சி இருப்பது இவர் அருள் அன்றோ–கடல் மண் எல்லாம் விலையோ வென மிளிரும் படி இறே இவருடைய கண்ணுடைமை இருப்பது-(அருள் பாலிப்பது திருக் கண்கள் தானே )
–
9-இப்படி ஆழ்வாருடைய கிருபை இவ் வுலகில் விஞ்சி இருக்கைக்கு அடி ஸகல வேத ரஹஸ்ய அர்த்த ஞாபகமாய் தம்முடைய பாசுரமான இப்பிரபந்தத்தை என் நெஞ்சினிலே ஸூ பிரதிஷ்டமாக்கினான் என்னுமத்தையும்–உபகார பிரகார உபபாதனம் பண்ணா நின்று கொண்டு தம்முடைய் க்ருதஜ்ஞதையைச் சொல்லுகிறார்- ஆசார்யனுக்கு கிருபையே வேஷமாய் சிஷ்யனுக்கு க்ருதஜ்ஞதையே வேஷமாய் இருக்கும் –
மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள்
நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர் சடகோபன் என்னம்பிக்கு ஆட்
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே -9-சகல வேதங்களின் உடைய ரஹஸ்யார்த்தத்தை –
வேதாந்த ரஹஸ்யம் –ததீய சேஷத்வ பர்யந்தமான பகவத் சேஷத்வம் என்று இறே-வைதிக சாஸ்திரம் நிர்ணயித்தது-துர்க்ரஹமான இந்த ரஹஸ்யார்த்தத்தை கேட்பார்க்கு பிரதிபத்தி விஷயமாம் படி –பாடி ––பரமனைப் பயிலும் திரு வுடையார் எவரேலும் -என்றும் – எம்மை யாளும் பரமர் -என்றும்-அருளிச் செய்தார் இறே—சகல வேத தாத்பர்யமான பாகவத சேஷத்வத்தை -பயிலும் சுடர் ஒளி-நெடுமாற்கடிமை-என்கிற-இரண்டு திருவாய் மொழிகளிலும் அருளிச் செய்து -என் நெஞ்சின் உள்ளே நிறுத்தினான்-ஆழ்வார் பக்கல் பிறந்த ருசி -இச் சரீரத்தோடே இங்கே யாழ்வார் திருவடிகளிலே எல்லா
அடிமையும் செய்யலாம்படி பண்ணும் –துயர் அறு சுடர் அடி தொழுது எழு -என்று முதலிலே அபிநிவேசித்த ஆழ்வாருக்கு முனியே நான்முகனுக்கு அவ்வருகு இறே பேறாயிற்று-இவ் விஷயத்தில் ருசி பிறந்தால் அத்தனை விளம்பியாது
அவர் பகவத் சேஷத்வத்தையும் -பகவத் பிரேமத்தையும் -பவகச் சேஷ வ்ருத்தியையும் உபதேசித்தார்
இவர் ஆழ்வாருக்கு சேஷமாய் -அவருக்கே ஸ்நிக்தராய்- அவருக்கே கிஞ்சித் கரிக்கத் தேடுகிறராய் நின்றது-இவர் கற்றது இதிலே யாய்த்து–அவர் புறப் பொருளை விட்டு உட்பொருளைக் கொடுத்தார்-
இவர் உட்பொருளான பகவத் விஷயம் தன்னை புறப் பொருள் ஆக்கி அதிலும் உட்பொருளான ஆழ்வார் திருவடிகளிலே-சேஷ பூதராய் ப்ரேம பூர்வகமான கைங்கர்யத்திலே இழிகிறார் யாய்த்து
—
10-இப்படி ஆழ்வார் தம் பக்கலிலே உபகரித்த உபகாரம் பிரதியுபகார நிரபேஷமாய் இருக்கும் என்னுமத்தையும் –
பயனன் றாகிலும் பாங்கலராகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கன்பையே-10-—திருத்திப் பணி கொள்வான் –தீர்ந்த வடியவர் தம்மைத் திருத்தி பணி கொள்ள வல்ல -(-3-5-)என்று-ப்ராப்யமும் ப்ராபகமும் தானே -என்று அத்யவசித்து இருக்குமவர்கள் உடைய-விரோதியைப் போக்கி அடிமை கொள்ளுமவன் என்றது இ றே சர்வேஸ்வரனை –அங்கன் இன்றிக்கே-இவை ஒன்றும் இன்றிக்கே -இருக்குமவர்களையும் திருத்திப் பணி கொள்ளுமவர் இறே ஆழ்வார் –பணி கொள்வான் –குருகூர் நம்பி -என்று அந்வயம்-(கொள்வான் -கொள்ளுகைக்காக -)
தீர்ந்த அடியவர் தம்மைத் திருத்திப் பணி கொள்ள வல்ல
ஆர்த்த புகழ் அச் சுதனை அமரர் பிரானைஎம் மானை
வாய்ந்த வளவயல் சூழ்தண் வளம் குரு கூர்ச்சட கோபன்
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப் பத்தும் அரு வினை நீறு செய்யுமே.–3-5-11-அவனே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று அத்யாவசித்த ஆஸ்ரிதரை பிரதிபந்தகங்களைப் போக்கி அடிமை கொள்ளும் சக்தியை உடையவன் – அவர்களைத் திருத்திப் பணி கொள்ளுகையாவது, அவர்களுடைய பிராப்பியப் பிராபக விரோதிகளைப் போக்கி அடிமை கொள்ளுகை.-‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி, வழுவிலா அடிமை செய்ய வேண்டும்’ என்று இருந்தாலும்,-‘முகப்பே கூவிப் பணிகொள்வானாய் குறைவற்ற கல்யாண குணங்களை யுடையவனாய், அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று இருந்தாலும் -கிரியதாம் இதி மாம் வத -என்ன வேண்டுமே –
முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கன்பையே –
உன்னுடைய ஸ்லாக்கியமான திருவடிகளுக்கு அன்பையே முயல்கின்றேன் –அர்த்தியா நின்றேன் –-செய்கிற அடிமையால் பர்யாப்தி பிறவாமையாலே திருவடிகளிலே எனக்கு அபிநிவேசம் பிறக்க வேணும் -என்று அர்த்திக்கிறார் இறே-என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் -என்று ஆழ்வார் தாம் அவ்விஷயத்தில் தடு மாறினாற் போலே- பண்ணின உபகாரத்துக்கு பிரத்யுபகாரம் காணாமையாலே தடு மாறுகிறார்-
வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே –2-7-8-விஷயாந்தர ஸ்பர்சியான நெஞ்சைப் போக்குவதும் செய்தாய்–ஸ்ரீ யபதியாகையாலே பூர்ணனான எனக்கு உன்னால் ப்ரத்யுபகாரமாக செய்யலாவது ஒன்றும் காண்கிறிலேன்- பிரதிபகாரம் பண்ணி அல்லது நிற்க மாட்டுகிறிலேன் –அம்ருதத்தையும் விஷத்தையும் ஒக்க விரும்புவாரைப் போலே உன்னையும் உகந்து ஷூத்ர விஷயங்களையும் உகக்கும் பொல்லாத நெஞ்சைத் தவிர்த்தாய் நல்ல நெஞ்சைத் தந்த அளவன்றிக்கே -பொல்லாத நெஞ்சைக் கெடுப்பதும் செய்தாய் – தேஷாம் சத்த யுக்தாநாம் பஜதாம் -ஸ்ரீ கீதை -10-10-
தேஷா மேவா நுகம் பார்த்தம் அஹம் அஜ்ஞ்ஞானாஜம் தம நாசயாமி ஆத்ம பாவஸ்ய -ஸ்ரீ கீதை -10-11-போலே-உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே — பண்ணின உபகாரத்தின் கனத்தாலே பிரத்யுபகாரம் பண்ணி யல்லது தரிக்க மாட்டு கிறிலேன்-அதுக்கு விரகு காண் கிறிலேன்-நான் ஒரு உபகாரம் கொள்ளாது ஒழிதல்-நீ குறைவாளன் ஆதல் செய்யப் பெற்றிலேன் –சிரீதரனே-புஷ்கலனாய் இருக்கிற
உனக்கு நான் எத்தைச் செய்வேன்
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி--இவர் ஆற்றாமையாலே ஒரு காலத்திலேயே காண வாராய் என்று கூப்பிடுவதுமொரு பாசுரம் உண்டு- ஹர்ஷத்தாலே யாவர் நிகர் அகல் வானத்தே -என்று களித்துச் சொல்லுவதும் ஒரு பாசுரம் உண்டு- இரண்டு பாசுரத்துக்கும் குயில் யாயிற்று பயிற்ருவன-இவர் பேச்சைக் கேட்க செவி ஏற்றாலே அவையும் இவர் பாசுரத்தைச் சொல்லும் யாயிற்று
குருகூர் நம்பி-ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே என்று சேதனர் அளவின்றியே திர்யக்குகள் அளவிலும்-ஏறும்படி யாய்த்து ஆழ்வாருடைய பூர்த்தி இருப்பது—செயல் நன்றாகத் திருத்தி- இவர் உபதேசித்த அர்த்தம் என் நெஞ்சிலே பட்டு அது தான் அத்யவசாய பர்யந்தமாய் அவ்வளவு அன்றிக்கே அனுஷ்டான சேஷமாய்-அவ்வனுஷ்டானம் தான் சதசத நுஷ்டான மிஸ்ரமாகை யன்றிக்கே சத நுஷ்டானமே யாம்படி திருத்தினார்-( சத் அஸத் அனுஷ்டானம் இரண்டும் கலந்து போலே இல்லாமல் )
1-முற்படச்ரவணமும் –2-ஸ்ருதமான வர்த்தத்தில் மனனமும் -3- மதமான வர்த்தத்தில் மஹா விசுவாசமும் –4-விச்வச்தமான அர்த்தத்தில் அனுஷ்டானமும்-5-அதில் அசத நுஷ்டானம் கலசாதே சத நுஷ்டானமே யாய்ப் போருகையும் இ றே செயல் நன்றாகத் திருத்துகை யாவது–திருத்தி-இவற்றில் என் கையில் என்னைக் காட்டிக் கொடாதே தாமே கைத்தொடராய் நின்று இவ்வவஸ்தா பன்னமாக்கினார்-
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி-–அசேதனமான பஷி ஜாதம் அடைய ஆழ்வார் பரிசரத்திலே திருந்தி திருவாய் மொழி பாடக் கற்றுப் பாடா நின்றால் சேதனான நான் திருந்தச் சொல்ல வேணுமோ-சாகா சம்பந்தம் உண்டாகையாலே அக்குயில்கள் திருவாய் மொழியைப் யாய்த்து பாடுவது (சாகா சம்பந்தம் -கிளை சம்பந்தம் ஆயிரம் பாசுரங்கள் சம்பந்தம் ) –அவை பாடும் குயில்கள் ஆகையாலே தம்பிரான்மாரைப் போலே ஆழ்வாருக்கு திருவாய் மொழி பாடுவான வாய்த்து-(விண்ணப்பம் செய்வார் முன்னே இரண்டு பேர் சேவிக்க –அத்தை அரையர் அனுவதிக்குமா போலே ஆழ்வார் முன்னே முன்னுரு அனுசந்திக்க -குயில்கள் தம்பிரான் பாட ஆழ்வாரும் கூட பாடுகிறார் என்றவாறு )-ஒரு தேச சம்பந்தத்தாலே செவ்வாய்க் கிளி நான்மறை பாடுமானால்-(தில்லை திருச் சித்ரகூடம் பாசுரம் கலியன் ) இத்தேச வர்த்திகளுக்குத் திருவாய் மொழி பாடச் சொல்ல வேண்டா விறே- தாம் மதுர வாக்காகை யாலே மதுர வாக்கான குயிலை இட்டுப் பொழிலை சிறப்பிக்கிறார்—மொய் கழற்கு அன்பையே-இத் திருவடிகளின் போக்யதை அன்பைக் கொடுத்தது-அன்பு பிரத்யுபகார்த்திலே மூட்டிற்று-அதுக்கு இடம் காணாமையாலே அலமரா நின்றேன்-இவ்வலமாப்பு யாவச் சைதன்யம் இ றே –மொய் கழற்கு அன்பையே-முயல்கின்றேன்-(வர்த்தமானம் யாவதாத்மா பாவி ப்ரபத்யே போலே )
—
11-இப் பத்துப் பாட்டாலே ஸூ க்ரஹமாக அருளிச் செய்து இப்பிரபந்தம் கற்றாருக்குப் பலம் ஸ்ரீ வைகுண்டம் என்றும் சொல்லித் தலைக் கட்டுகிறார்
அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெலாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -11–அடியார் அடியார் தம் அடியார் -என்று தத் சம்பந்திகள் அளவும் பண்ணின பிரேமத்தாலே பூரணராய் இருப்பர்–பிரதமத்திலே -1-ஆசார்யன் தனக்கு அஜ்ஞாத ஜ்ஞாபந முகத்தாலே-ஸ்வரூப ஜ்ஞாநத்தைப் பிறப்பித்து-2-பகவத் சமாஸ்ரயண வேளையிலே புருஷகார பூதனாய்–3-தன்னுடைய அனுஷ்டாநத்தாலே இவனை நல் வழியே கொண்டு போய்-4-ப்ராப்தி தசையிலும் சாத்ய வ்ருத்தியை பண்ணிக் கொடுக்கக் -கடவனாய் இப்படி பஹூ முகத்தாலே உத்தேச்யனாய் இ றே -இருப்பது-அவர்கள் இருந்த தேசம் காணும் பரமபதம் –என்று சொல்லுவர் –
உரைக்க வல்லார்க்கு வைகுந்தமாகும் தம்மூர் -எல்லாம் -என்னக் கடவது இறே-கூரத் ஆழ்வான் மகன் பிறந்த பின்பு சம்சாரமும் பரம பதமும் இடைச் சுவரைத் தள்ளி ஒரு போகி யாயிற்று காண் -என்று பெற்றி பணித்தார் -என்று பிள்ளை அருளிச் செய்வர் –
உபக்ரமத்திலே கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் என்னப்பன் -என்று-சீல சௌலப்ய ஸ்வாமித்வங்களை உபாதானம் பண்ணி உப சம்ஹாரத்தில் வாத்சல்ய குணத்தோடு தலைக் கட்டுகிறார் அவை ஒரு தட்டு -இது ஒரு தட்டு இ றே-இத்தைப் பற்ற விறே சீலாதி குண சம்பன்னஸ் சர்வ லோகைக வத்சலா -என்று ரிஷிகளும் சொல்லிற்று-
நிகமத்தில்- இப்பாட்டில் இப்பிரபந்தம் கற்றார்க்கு வஸ்தவ்ய பூமி பரமபதம் என்கிறார்
1-ஆழ்வாருடைய போக்யதையும்-அவர் தமக்கு ஸ்வாமி என்னும் இடத்தையும்
2–தமக்கு கால ஷேப விஷயம் அவருடைய ப்ரபந்தம் என்னும் இடத்தையும்
3-ஆழ்வாரோட்டை சம்பந்தம் அடியாக ஈஸ்வரன் மேல் விழுந்து அனுபவித்த படியையும்
4-தம்முடைய தோஷம் பாராமல் ஆழ்வார் விஷயீ கரித்த படியையும்
5-தோஷம் தானே அவருடைய தேச பிரவேச மாத்ரத்திலே தம்மை விட்டுக் கழன்ற படியையும்
6-பின்பு அத்தோஷம் மேலிடாதபடி ஆழ்வார் குண கீர்த்தனமே தமக்குக் கால யாத்ரையாம் படி அவர் தம்மைத் திருத்தின படியும்
7-அவருடைய க்ருபா வைபவத்தை லோகம் அடங்கலும் தாம் பரப்ப வேண்டும்படி தமக்குப் பிறந்த ஆதரத்தையும்
8-பகவத் கிருபையில் காட்டில் ஆழ்வாருடைய கிருபை லோகத்திலே அதிசயித்த படியையும்
9-அக்கிருபை அடியாக அவர் உபகரித்த உபகாரமும்
10-அவ்வுபகார பரம்பரைகளுக்கு பிரத்யுபகாரம் தேடி அவருடைய பூர்த்தியாலே பிரத்யுபகாரத்துக்கு அவகாசம் காணாமல்-தாம் அலமருகிற படியையும் இ றே கீழ்ச் சொல்லி நின்றது –
ஸ்ரீ கோயிலே கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தம்பிரான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –