முதல் அத்தியாயம்: ஆசார காண்டம்.
அதாதோ ஹிம ஸைலாக்ரே தேவ தாரு வநாலயே
வ்யாஸ மேகாக்ர மாஸிந மப்ருச் சந் ந்ருஷய புரா
மாநுஷாணாம் ஹிதம் தர்மம் வர்த்தமாநே கலெள யுகே
சவ்சாரம் யதாவச்ச வத ஸத்யவதீஸுத.
முன்னொரு காலத்தில் மகரிஷிகளெல்லாம் தேவதாரு மரங்களால் நிறைந்த இமய மலையில் ஒரே மனதாய் உட் கார்ந்து கொண்டிருக்கும் வியாஸரைப் பார்த்து ஓ ஸத்யவத குமாரரே! இந்தக் கலியுகத்தில் மனிதர்களுக்கு ஹிதமான தர்மத்தையும் சுத்தமான வாசாரத்தையும் சிரமப்பட சொல்லுவிரென்று கேட்டார்கள்
தச் ச்ருத்வா முநிவாக்யந்து ஸஸிஷ்யோக்ந்யர்க ஸந்நிப:
ப்ரதயுவாச மஹாதேஜாஸ் ஸ்ருதி ஸ்ம்ருதி விஸாரத
ந சாஹம் ஸர்வ தத்வஜ்ஞ கேதம் தர்மம் வதாம் யஹம்
அஸ்மத் பிதைவ ப்ரஷ்டவ்ய இதி வ்யாஸஸ் ஸுதோ ப்ரவீத்
சிஷ்யர்களோடு கூடியும் அக்நிக்கும் ஸூரியனுக்கும் சமமானவராயும் அதிக தேஜோ வானவராகவும் ஸ்ருதி ஸ்மிருதி இவைகளை உணர்ந்தவராகவும் பராசரருக்குப் புத்திரராயுமிருக்ற வியாஸர் அந்த ரிஷிகளின் வாக்யக்தைக் கேட்டு நான் எல்லாத் தத்துவங்களையும் உணர்ந்தவன் அல்லேன் எவ் வண்ணம் தர்மம் உரைக்கக் கடவேன் என் பிதாவைக் கேளுங்கள் என்று பதில் சொன்னார்
ததஸ்தே ருஷயஸ் ஸர்வே தர்ம தத்துவ ஸித்த காங்க்ஷிணா
ருஷிம் வ்யாஸம் புரஸ்க்ருத்ய கத்வா பத்ரிகாஸ்ரமம்
பிறகு அம் முனிவர்களெல்லாரும் தர்மத்தினுண்மைப் பொருளை யறிய விரும்பினவர்களாய் வியாஸ மகரிஷியை முன்னிட்டுக்கொண்டு பதரிகாச்ரமத்தை நோக்கிச் சென்று
நாநா புஷ்ப லதா கீர்ணம் பல புஷ்பைர லங்க்ருதம்
நதீ ப்ரஸ்ரவணோ பேதம் புண்ய தீர்தோப ஸோபிதம்
ம்ருக பஷி நிநா தாட்யம் தேவதாய தநா வ்ருதம்
யஷ கந்தர்வ ஸித்தைஸ் ச ந்ருக்த கீதை ரலங்க்ருதம்
(அந்த பதரிகாஸ்ரமம்) அனேகம் புஷ்பக் கொடிகளால் நிறைந்தும் பழங்களாலும் புஷ்பங்களாலு மலங்கரிக்கப் பட்டதாயும் ஆறுகளோடும் மலை யருவிகளோடும் கூடினதாயும் பரிசுத்த தீர்த்தங்களால் விளங்குகிறதாயும், மான்களுடையவும் பஷிகளுடையவும் சப்தங்களால் பூர்ணமாகவும் கோயில்களால் சூழப் பட்டதாயும் யக்ஷர்கள் கந்தருவர் சித்தர்கள் இவர்களுடைய ஆடல் பாடல்களால் அலங்கரிக்கப் பட்டதாயும் விளங்குகிறது
தஸ்மிந் ருஷி ஸபா மத்யே ஸக்தி புத்ரம் பராஸரம் –
ஸூகாஸீநம் மஹா தேஜா முநி முக்ய கணா வ்ருதம்
க்ருதாஞ்ஜலி புடோ பூத்வா வ்யாஸஸ் து ருஷிபிஸ் ஸஹ
ப்ர தஷிண அபிவாதைஸ் ச ஸ்துதி பிஸ் ஸம பூஜயத்
அவ் விடத்தில் ரிஷிகளின் சபை நடுவில் சுகமாக உட்கார்ந்து மகரிஷிகளால் சூழப்பட்டு சக்தி புத்திரராக விளங்கும் பராசரரை (மகா தேஜோவானான வியாஸர் ரிஷிகளோடு கூடிக் கை கூப்பிக் கொண்டு பிரதஷிண நமஸ்காரங்களாலும் ஸ்தோத்திரங்களாலும் பூஜித்தார்
ததஸ் ஸந்துஷ்ட ஹ்ருதய பராஸர மஹா முநிர்
ஆஹ ஸுஸ்வாகதம் ப்ரூஹீ த்யாஸீநோ முனி புங்கவ
பிறகு சந்தோஷத்துடன் பராசரர் முனிவர்களுக்குள் உயர்ந்தவராதலால் உட்கார்ந்தபடியே ஷேமமாக வந்தாயோ சொல் என்று விசாரித்தார்-
குஸலம் ஸம்யகித் யுத்வா வ்யாஸ ப்ருச் சத்யத பரம்
நல்ல க்ஷேமம் தானா வென்று விசாரித்த பிறகு வியாஸர் கேட்கிறார்
யதி ஜாநாஸி பக்திம் மே ஸ்நேஹாத்வம் பக்த வத்சல
தர்மம் கதய மேதா தஹ்ய நுக்ராஹ் யோப்யஹம் தவ.
நீர் பக்த வத்சலனாதலால் தேவரிர் விஷயமான என்னுடைய பக்கியை யறிந்தாவது , எனக்குத் தகப்பனாதலால் புத்திர ஸ்நேகத்தாலாவது எனக்குத் தர்மத்தைச் சொல்ல வேண்டும்,-எவ்விதத்திலும் நான் தேவரீருடைய அனுக்ரஹம் பெறத்தக்கவன்-
ஸ்ருதாமே மாநவா தர்மா வாஸிஷ்டா காஸ்யபாஸ் ததா
கார்கீயா கெளதமீயாஸ் ச ததா செளஸந ஸாஸ் ஸூருதா
அத்ரேர் விஷ்ணோஸ்ச ஸம்வர்தாத் தஷா தங்கிரஸஸ் ததா
ஸாதாத பாச்சஹாரி தாத் யாஜ்ஞவல்க்யாத் ததைவ ச
ஆபஸ்தம்ப க்ருதா தர்மாஸ் ஸங்கஸ்ய லிகிதஸ்ய ச காத்யாயந க்ருசதாஸ் சைவததா ப்ராசேத ஸாந் முநே
மநு – வசிஷ்டர் – காசிபர் -கர்க்கர் – கெளதமர் -உசநஸ்-அத்திரி – விஷ்ணு – ஸம்வர்ததர்-தக்ஷர் – அங்கிரஸ் – சாதாதபர்-ஹாரீதர்-யாக்ய வல்க்யர்-ஆபஸ்தம்பர்-சங்கர் -லிகிதர்-காத்தி யாயனர் – பிரசேதஸ் இவர்களால் செய்யப்பட்ட ஸ்மிருதிகளை நான் அறிந்திருக்கிறேன்
ஸ்ருதாஹ் யேதேபவத் ப்ரோக்தாஸ் ஸ்ருத்யரத்தாமேந விஸ்ம்ருதா, அஸ்மிந் மந்வந்தரே தர்மா க்ருத த்ரேதாதிகே யுகே
தேவரிரால் ஓதுவிக்கப்பட்ட வேதார்த்தங்களும் – க்ருதம் த்ரேதா முதலிய யுகங்களின் தர்மங்களும் எனக்கு மறக்க வில்லை-
ஸர்வே தர்மா க்ருதே ஜாதாஸ் ஸ்ர்வே நஷ்டா கலெள யுகே
சாதுர்வர்ணய ஸமாஸாரம் கிஞ்சித் ஸாதாரணம் வத
எல்லாத் தர்மங்களும் க்ருத யுகத்தில் உண்டானவை -தேச குல சாதி வயஸூ குண தேக கால ஆபத் தர்மங்களைக் போல் பலவும் உள்ளன-யுகம் தோறும் ஒரு கால் உடைந்து கலியுகத்தில் ஒரே கால் மட்டுமே இருப்பதால் அவைகள் கலியுகத்தில் நாசமடைந்தன. நான்கு வர்ணங்களுக்கும் சில பொதுவான தர்மங்களைச் சொல்ல வேண்டும்-சாமான்ய விசேஷ தர்மங்கள் இரண்டு வகைப்படுத்தலாம்-
சதுர்ணாமபி வர்ணா நாம் கர்தவ்யம் தர்ம கோவிதை
ப்ரூஹீர் தர்ம ஸ்வருபஜ்ஞ ஸூஷ்மம் ஸ் தூலஞ்ச விஸ்தராத் .
தர்மங்களுடைய ஸ்வரூபம் தெரிந்த தேவரீர் நான்கு வர்ணங்களுக்குள் தர்மம் தெரிந்தவர்களால் செய்யத் தகுந்த நுட்பமாயும் பெரிதாயுமிருந்துள்ள தர்மங்களை விஸ்தாரமாக வுரைக்க வேண்டும்
வ்யாஸ வாக்யா வஸாநேது முநி முக்ய பராஸர
தர்மஸ்ய நிர்ணயம் ப்ராஹ ஸூக்ஷ்மம் ஸ்தூலம் ச விஸ்தாராத்
வியாஸருடைய வார்த்தையின் முடிவில் ரிஷிகளுக்குள் உயர்ந்தவரான பராசரர் நுட்பமாயும் பெரிதாயுமிருக்கற தர்மத்தினுடை.ய வாஸ்தவத்தை விரிவாக வுரைக்கலுற்றார்
ஸ்ருணு புத்ர ப்ரவஹ்யாமி ஸ்ருண்வந்து முநயஸ் ததா
புத்திரா! சொல்லுகிறேன் கேள். அப்படியே ரிஷிகளும் கேட்கட்டும்.
கல்பே கல்பே க்ஷய உத்பத்யா ப்ரஹ்ம விஷ்ணு மஹேஸ்வரா
ஸ்ருதி ஸ்ம்ருதி ஸமாசார நிர்ணே தாரஸ் ச ஸர்வதா
பிரமன் விஷ்ணு ருத்திரன் இம் மூவரும் ஸ்ருதி ஸ்ம்ருதிகளி னர்த்தங்களை நிச்சயிக்கற மநு முதலியவர்களும் கல்பங்கள் தோறும் நாசம் உத்பத்திகளோடு கூடியிருக்கிறார்கள்-இவ்வண்ணம் ஸ்மிருதியை நிர்ணயித்தவர்கள் மனு, ஆங்கீரசு, வியாசர், வசிஷ்டர், பராசரர், போதாயனர், ஆபஸ்தம்பர் முதலாக முப்பத்தாறு ரிஷிகளென்று பைடீநசி ஸ்மிருதியில் சொல்லப்பட்டிருக்கிறது. அன்றியும், வத்ஸர், மரீசி, முதலானவர்களும் அவரவர் சொல்லிய தருமங்களும் உண்டென்று
பாரதம் அசுவமேத பருவத்தில் சொல்லியிருக்கிறது.
ந கஸ்சித் வேத கர்த்தா ச வேதம் ஸ்ருத்வா சதுர்முக
ததைவ தர்மாந் ஸ்மரதி மநு கல்பாந்த ரேந்தரே
ஒருவரும் வேதத்தைச் செய்தவர்களல்லர் பிரம்மா வேதத்கைக் கேட்ட அப்படியே ஸ்மிருதிகளைச் செய்கிறார். கல்பங்களுக் கிடையிடையில் மனுவும் ஸ்மிருதிகளைச் செய்கிறார் -அந்த ஸர்வேஸ்வரனும் அநாதியான வேதத்தைத் தோற்றுவித்தவரே யன்றிச் செய்தவரல்ல வென்று மச்சபுராணம் கூறுகின்றது. பிரமன் ஸ்மிருதிகளைச் செய்து தனக்குக் கற்பித்தாரென்று ஸ்வாயம்புவ மனு கூறினார்.
அந்யே க்ருதயுகே தர்மா ஸ்த்ரேதாயாம் த்வாபரே யுகே அந்யே கலி யுகே ந்ரூணாம் யுக ருபாநுஸாரத–
கிருத யுகத்தில் தர்மங்கள் வேறு, திரேதாயுக,துவாபர, கலி யுகங்களில் தர்மங்கள் வெவ்வேறு. யுகங்களுக்கு அனுகுணமாகவே தர்மங்கள் இருக்கின்றன-தர்மத்தின் அனுஷ்டானம் வேறு பட்டிருக்கு மென்பது கருத்து
தபஸ் பரம் க்ருதயுகே த்ரேதாயாம் ஜ்ஞாந முச்யதே திவாபரே யஜ்ஞமேவாஹுர் தாந மேவ கலெள யுகே–
தபஸ்ஸே கிருத யுகத்திலும்,திரேதா யுகத்தில் ஞாநமும், துவாபர யுகத்தில் யஜ்ஞமும்,கலியுகத்தில் தானமுமே சிறந்ததென்று சொல்லுவார்கள்
க்ருதேது மாநவா தர்மா ஸ்த்ரேதாயாம் கெளதமா ஸ்ம்ருதா
த்வாபரே சங்க லிகதா கலெள பாராஸரா ஸ்ம்ருதா
கிருத யுகக்தில் மனு ஸ்ம்ருதியும் திரேதா யுகத்தில் கெளதம ஸ்மிருதியும் திவாபர யுகத்தில் சங்க ஸ்மிருதியும் கலியில் பராசர ஸ்மிருதியும் முக்யமானவை
த்யஜேத் தேஸம் க்ருத யுகே த்ரேதாயாம் க்ராமமுத் ஸ்ருஜேத்
த்வாபரே குலமேகந்து கர்தாரந்து கலெள யுகே
கிருதயுகத்தில் பாபிஷ்டனிருக்கும் தேசத்தையும் திரேதா யுகத்தில்அவனிருக்கும் கிராமத்தையும் த்வாபர யுகத்தில் அவனுடைய குலத்தையும் கலி யுகத்தில் பாபம் செய்தவனையும் விட வேண்டும்-
க்ருதே ஸம்பாஷணாதேவ த்ரேதாயாம் ஸ்பர்ஸநெந ச த்வாபரேத் வந்நமாதாய கலெள பததி கர்மணா:
கிருத யுகத்திற் பாபியோட வார்த்தை சொல்வதாலும், த்ரேதா யுகத்தில் அவன் மேல் படுவதாலும், த்வாபரத்தில் அவனன்னம் வாங்குவதாலும், கலியில் பாபம் செய்தாலும் பதிதனாகிறான்-
க்ருதே தாத்ஷணிகஸ் ஸாபஸ் த்ரேதாயாம் தஸபிர் திநை
த்வாபரே சைகமாஸேந கலெள ஸம்வத்ஸரேண து
பெரியார்கள் சபித்தால் கிருத யுகத்தில் தத் க்ஷணத்திலும் , திரேதா யுகத்தில் பத்து நாளிலும், துவாபர யுகத்தில் ஒரு மாஸத்திலும் , கலி யுகத்தில் ஒரு வருஷத்திலும் பலிக்கும்-
அபிகம்ய க்ருதே தாநம் த்ரேதாஸ் வாஹு பதீயதே த்வாபரே யாசமாநாய ஸேவயாதீயதே கலெள
கிருத யுகத்தில் கொடுப்பவன் யாசகனிருக்கும் இடத்தில் சென்றும், திரேதா யுகத்தில் யாசகனை வரவழைத்தும் த்வாபரத்தில் தன்னிடத்தில் வந்து யாசிப்பவனுக்கும், கலி யுகத்தில் தனனை யடுத்துக் காத்திருப்பவனுக்கும் தானம் செய்யப்படுகிறது-
அபிகம்யோத்தமம் தாநமாஹுயைவது மத்யமம் அதமம் யாச மாதாய ஸேவா தாநந்து நிஷ்பலம்
தான் சென்று கொடுக்கும் தானம் உயர்ந்தது -யாசகனை வரவழைத்துக் கொடுப்பது மத்திமம் – யாசிப்பவனுக்கு கொடுப்பது அதமம்-அடுத்து காத்து இருப்பவனுக்குக் கொடுப்பது பயனற்றது-கடலுக்கும் அளவு உண்டு தானே சென்று கொடுக்கும் தானத்தினாலும் கேட்காமல் கொடுக்கும் தானத்தினாலும் உண்டாகும் பலனுக்கு அளவில்லை யென்று புராண ஸாரம் கூறுகின்றது-
ஜிதோ தர்மோஹ்ய தர்மேண ஸத்யம் சைவா ந்ருதேந ச
ஜிதாஸ் சோரைஸ்து ராஜாந ஸ்த்ரீ பிஸ்ச புருஷா கலெள
அதர்மத்தால் தர்மமும் அசத்தியத்தால் சத்தியமும் திருடர்களால் அரசர்களும் ஸ்திரிகளால் புருஷர்களும் கலியுகத்தில் ஜயிக்கப்படுகிறதுகள்-
ஸீதம்திச அக்னி ஹோத்ராணி குரு பூரஜா ப்ரணஸ்யதி
குமார்யஸ்ச ப்ரஸூ பந்தே தஸ்மி்ந் கலி யுகெஸதா
அக்நி ஹோத்திரங்கள் குறைகின்றன. ஆசார்ய சிஸ்ரூஷை நாசமடைகிறது. கன்னிகைகள் பிரஸவிக்கிறார்கள்; அந்த கலி யுகத்திலிவ் வண்ணமாகவே எப்போதும் நடக்கும்-
க்ருதேத் வஸ்தி கதா ப்ராணாஸ் த்ரேதாயாம் மாம்ஸமாஸ்ரிதா
த்வாபரே ருதிரம் சைவ கலெள த்வந் நாதி ஷுஸ்திதா?
கிருத யுகத்தில் பிராணங்கள் எலும்பைப் பத்தியும் திரேதா யுகத்தில் மாம்ஸத்தைப் பற்றியும் துவாபர யுகத்தில் ரத்தைப் பற்றியும் கலி யுகத்தில் அன்னம் முதலியவற்றைப் பற்றியும் இருக்கின்றன –
யுகே யுகே சயே தர்மாஸ் தத்ர தத்ர சயே த்விஜா
தேஷாம் நிந்தா நகர் தவ்யா யுக ரூபாஹிதே த்விஜா
யுகங்கள் தோறும் எந்த தர்மங்கள் ஏற்பட்டனவோ; அத் தர்மங்களைச் செய்கிறவர்கள் எந்த த்விஜர்களோ ; அவர்களை நிக்திக்கக் கூடாது, ஏனெனில் அவர்கள் யுகத்துக்கு அநு குணமாக நடப்பவர்கள்-
யுகே யுகேது ஸாமர்த்யம் ஸேஷம் முநி விபாஷிகம்
பராசரேண சாப் யுக்தம் ப்ராயஸ் சித்தம் விதீயதே
யுகங்கள் தோறும் பராசரரால் சொல்லப் படாத யுகத்தின் சாமர்த்தியம் மற்ற ரிஷிகளால் கூறப் பட்டிருக்கறது – முன் விருத்த பராசரரால் சொல்லப்பட்ட பிராயச் சித்தங்கள் விதிக்கப் படுகிறது –
அஹமத்யைவ தத் ஸர்வ மநு ஸ்ம்ருத்ய ப்ரவீமிவ சாதுர் வர்ண்ய ஸமாஸாரம் ஸ்ருண் வந்து முநிபுங்கவா –முநீஸ்வரர்களே ௮ந்த சகலமான நான்கு வர்ணங்களுடைய தர்மங்களையும் நான் இப்பொழுதே யறிந்து உங்களுக்குச் சொல்லுகிறேன் –
பராஸர மதம் புண்யம் பவித்ரம் பாப நாஸநம்
சிந்திதம் ப்ராஹ்மணார் தாய தர்ம ஸம்ஸ்தாபநாயச
புண்ணியமானதும் பரிசுத்த மானதும் பாபங்களைப் போக்க வல்லதுமான இந்த பராசரருடைய ஸாஸ்த்ரமானது பிராமணர்களுக்காகவும் தர்மத்தை நிலை நிறுத்துகைக்காகவும் ஆரம்பிக்கப் படுகிறது –
சதுர்ணாமபி வர்ணாநா மாசாரோ தர்ம பாலக
ஆசாரப்ரஷ்ட தேஹாநாம் பவேத் தர்ம பராங்மக:
நான்கு வர்ணங்களுக்கும் ஆசாரமே தர்மத்தைக் காப்பாற்றுகிறது -ஆசாரமில்லாத தேகம் உடையவனுக்கு தர்மம் பலப்படாது –
ஷட் கர்மாபிரதோ நித்யம் தேவதா திதி பூஜக ஹுத?ஸேஷம் துபுஞ்ஜாநோ ப்ராஹ்மணோ நாவ ஸீததி
யஜனம் முதலிய ஆறு தொழிலில் எக் காலத்திலும் சிரத்தை யுள்ளவனாகவும் தேவர் அதிதி யிவர்களைப் பூஜிப்பவனும் ஹோமம் பண்ணின மீதி ஹவிஸ்ஸை சாப்பிடுகிறவனுமான பிராமணன் துன்பப்படான் –
ஸந்த்யா ஸ்நாநம் ஜபோ ஹோமோ தேவதாநாஞ்ச பூஜநம்
ஆதித்யம் வைஸ்வ தேவம் ச ஷட் கர்மாணி திநே திநே
ஸ்நானத்தோடு கூடின சந்தியாவந்தனம் ஜபம் ஹோமம் தேவதா பூஜை அதிதி பூஜை வைச்வதேவம் இவை யாறு கருமங்களும் பிரதி தினமும் செய்ய வேண்டியது –
இஷ்டோவா யதிவா த்வேஷ்யோ மூர்க பண்டித ஏவ வா
ஸம்ப்ராப்தோ வைஸ்வதேவாந்தே ஸோ திதிஸ் ஸ்வர்க ஸங்க்ரம
மித்திரனானாலும் சத்தருவானலும் தெரியாதவனானாலும் தெரிந்தவனானாலும் வைச்வ தேவத்தின் முடிவில் வந்தவ னெவனோ அவனே ஸ்வர்க்கக்தை யடைவிக்கும் அதிதி-
தூரார்த்வோபகதம் ஸ்ராந்தம் வைஸ்வ தேவ உபஸ்திதம் அதிதிம் தம் விஜாநீயாந்நா திதி பூர்வமாகத
வெகுதூரம் வழி நடந்து வருந்தி வைச்வதேவ காலத்தில் எவன் வருகிறானோ அவனே அதிதி யென்றறிய வேண்டும் முன் வந்தவன் அதிதியாகான்-
நைகக்ராமீணமதிதிம் ஸம் ருஹ்ணீ தகதாசந அநித்யமாகதோ யஸ்மாத் தஸ்மாத் அதிதிருச்யதே
ஒரே கிராமத்திலிருப்பவனை யொரு போதும் அதிதியாக வெண்ணக் கூடாது. தினந்தோறும் வருகிறதில்லை யாதலால் அவனுக்கு அதிதி என்று பெயர் வந்தது. திதி யென்றால் தினம் –
அதிதிம் தத்ர ஸம் ப்ராப்தம் பூஜயேத் ஸ்வாகதாதிநா
அர்க்யாஸந ப்ரதாநேந பாத ப்ரஷாள நேநச
ஸ்ரத்தயா சாந்நதாநேந ப்ரிய ப்ரஸோத்தரேணச
கச்சந்தம் சாநு யாநேந ப்ரீதி முத்பாத யேத்த்க்ஹீ
அந்த வைஸ்வ தேவ காலத்தில் வந்த அதிதியை குசலப் பிரசனம் முதலியதுகளாலும் அர்க்யம் அந்நம் இவைகளைக் கொடுப்பதினலும் கால் கழுவுகிறதினாலும் சிரத்தையோடு அன்னம் இடுவதாலும் பிரியமாகக் கேட்டு பதில் சொல்வதாலும், போகிறவனைப் பின் செல்வதினாலும் கிரகஸ்தன் பிரிதி யுண்டு பண்ணி பூசிக்கக் கடவன் –
அதிதிர் யஸ்ய பக்நாஸோ க்ருஹாத் ப்ரதி நிவர்த்ததே
பிதரஸ் தஸ்ய நாஸ்நந்தி தஸ வர்ஷாணி பஞ்சச
காஷ்டபார ஸஹஸ்ரேண க்ருத கும்பஸதே நச
அதிதிர் யஸ்ய பக்நாஸஸ் தஸ்ய ஹோமோ நிரர்தக
எவனுடைய வீட்டில் அதிதி தன்னாசை நிறைவேறாமல் திரும்பிப் போகிறானோ. அவனுடைய விட்டில் பதினைந்து வருஷம் பித்ரு தேவதைகள் அன்னம் வாங்குகிறதில்லை. எவன் வீட்டில் வந்த அதிதியின் ஆசை நிறைவேற வில்லையோ, அவன் ஆயிரம் பாரம் கட்டைகளைக் கொண்டும் நூறு குடம் நெய்யைக் கொண்டும் ஓமம் செய்த போதிலும் அது பயன் படாது –
ஸூ ஷேத்ரேவாபயேத் பீஜம் ஸூபாத்ரே நிக்ஷிபேத்தநம்
ஸுுஷேத்ரே ச ஸாுபாத்ரே சஹ் யுப்தம் தந்ந விநஸ்யதி
நல்ல பூமியில் விதையை விதைக்க வேண்டும்; நல்ல பாத்திரத்தில் தானம் செய்ய வேண்டும்; நல்ல பூமியிலும் நல்ல பாத்திரத்திலும் செய்யப் பட்டது கெட்டுப் போகிற தில்லை –
ந ப்ருச்சேத் கோத்ர சரணே ந ஸ்வாத்யாயம் ஸ்ருதம் ததா ஹ்ருதயே கல்பயே தேவம் ஸர்வ தேவ மயோ ஹிஸ- அதிதியாக வந்தவனுடைய கோத்திரத்தையும் ஆசாரத்தையும் வேகத்தையும் சாஸ்திரத்தையும் கேட்க வேண்டியதில்லை. அதிதி – எல்லா தேவதைகளுடைய ஸ்வரூபர் என்பதொன்றையுமே மனதில் வைக்க வேண்டியது-
அபூர்வஸ் ஸுவ்ரதீவி ப்ரோஹ்ய பூர்வச்சா திதிஸ் ததா
வேதாப்யா ஸரதோ நித்யம் த்ரய பூஜ்யாதி நேதிநே
நல்ல விரதமுள்ள சன்னியாசியும் முன் வந்தவனல்லாத வதிதியும் தினந் தோறும் வேதமோதுகிற பிரம்மசாரியும் இம் மூவரும் தினந்தோறும் பூஜிக்கத் தக்கவர்கள் –
வைஸ்வதேவேது ஸம்ப்ராப்தே பிஷுகே க்ருஹமாகதே
உத்ருத்ய வைஸ்வதேவார்தம் பிஷுகம் து விஸர்ஜ்யேத்
வைஸ்வதேவம் செய்வதற்கு முன் பிஷுகர் வந்தால் வைஸ்வதேவத்தின் பொருட்டு தனியாக வெடுத்து வைத்து விட்டு, பிஷுகரை யனுப்ப வேண்டும் –
தத் யாச்ச பிஷா த்ரிதயம் பரிவ்ராட் ப்ரஹ்ம சாரிணாம்
இச்ச யாசததோ வித்வாரந் விபவே ஸத்ய வாரிதம்
சன்னியாசிக்கும் பிரம்ம சாரிகளுக்கும் மூன்று தரம் பிச்சை யிட வேண்டும்! தனது சக்திக்கும் இச்சைக்கும் ௮னுகுணமாக மேல் எவ்வளவிட்டாலுமிடலாம். அது விலக்கப் பட வில்லை –
யதி ஹஸ்தே ஜலம் தத்யாத்பி க்ஷரம் தத்வா புநர்ஜலம் தத்பைக்ஷம் மேருணா துல்யம் தஜ் ஜலம் ஸாகரோபமம் – சன்னியாசி கையில் முன்னமே ஜலத்தைக் கொடுத்த பிறகு பிச்சை யிட்டு மறுபடியும் ஜலத்தைக் கொடுக்க வேண்டும் அப்படியிட்ட பிச்சை மேருவைக் கொடுத்ததோடொக்கும் அந்த ஜலம் சமுத்திரத்தைக் கொடுத்ததோடொக்கும்-
யஸ்ய சத்ரம் ஹயச்சைவ குஞ்சரா ரோஹ ம்ருத்திமத் ஐந்தரம் ஸ்தாந முபாஸீத தஸ்மாத் தந்ந விசாரயேத்
எவன் குடை குதிரை இதுகளுடன் அதிதியாக வந்தானே அவனை யாதரித்தவன்-யானையிலேறி சம்பத்தோடு கூடிய விந்திர பதத்தை யடைவன். ஆதலால் அதை யவன் விசாரிக்க வேண்டிய தில்லை-
வைஸ்வதேவ க்ருதம் பாபம் ஸக்தோ பிஷுர் வ்யபோஹிதும்
நஹி பிஷு க்ருதம் தோஷம் வைஸ்வ தேவோ வ்யபோஹிதும்
வைஸ்வதேவம் செய்யாகதாலுண்டான பாவத்தை பிஷுர் போக்கடிப்பார்கள்-பிச்சையிடாததால் உண்டான தோஷத்தை-வைஸ்வதேவம் போக்காது –
அக்ருத்வா வைஸ்வதேவந்து புஞ்சதேயேத் விஜாதீய
தேஷாமந்நம் ந புஞ்ஜீத காக யோநிம் பஜந்திதே
அக்ருத்வா வைஸ்வதேவம் து புஞ்ஜதேயே த்விஜாயமா
ஸர்வேதே நிஷ்பலாஜ்யேயா பதந்தி நரகே ஸூசெள
எந்த பிராமணர்கள் வைச்வதேவம் செய்யாமல் போஜனம் செய்கிறார்களோ,. அவர்களுடைய அன்னத்தை புஜிக்கக் கூடாது, அப்படி புசித்தவர்கள் காக்கையாக பிறப்பார்கள். எந்த கெட்ட பிராமணர்கள் வைஸ்வதேவம் செய்யாமல் போஜனம் செய்கிறார்களோ அவர்கள் பயனற்றவர்களாய் அசுத்தமான நரகத்தில் விழுகிறார்கள் –
வைஸ்வதேவ விஹீநாயே ஆதித்யேந பஹிஷ் க்ருதா
ஸர்வேதே நரகம் யாந்தி காக யோநிம் வரஜந்திச –
எவன் வைஸ்வதேவத்தை விட்டும் அதிதி பூஜை செய்யாமலகிருக்கிறானோ, அவர்களெல்லாரும் நரகத்தை யடைகிறார்கள்; காக்கையின் சன்மத்தையும் அடைகிறார்கள் –
புஷ்ப மாத்ரம் விசு துயாந் மூலச் சேதம் ந காரயேத்
மாலாகார இவாராமேநய தாங்கார காரக
மாலை தொடுப்பவன் பூந் சோட்டத்தில் எப்படி பூக்களை மாத்தரம் கொய்து கிளைகளை விறகு வெட்டுகிறவனைப் போல் வெட்ட மாட்டானே. அப்படியே பிரஜைகளிடத்தில் பகுதி மாத்திரம் பெற்று ஹிம்சிக்கக் கூடாது –
லாப கர்மததா ரத்நம் கவாஞ்ச பரிபாலநம் . க்ருஷி கர்மச வாணிஜ்யம் வைஸ்ய வ்ருத்தி ருதாஹ்ருதா
வட்டி வாங்குவதும் ரத்ந வ்யாபாரமும் பசுக்களை ரக்ஷிப்பது பயிரிடுதல் இதர வியாபாரங்கள் இவைகள் வைச்ய விருத்தியாகக் கூறப் பட்டது –
ஸூத்ரஸ்ய த்விஐ ஸூஸ்ரூஷா பரமோ தர்ம உச்யதே
அந்யதா குருதே கிஞ்சித் தத் பவேத் தஸ்ய நிஷ் பலம் –
சூத்திரனுக்கு த்விஜர்களுடைய ஸூஸ்ரூஷையே பரம தர்ம மாகச் சொல்லப் படுகிறது; வேறு ஏதாவது செய்தானே யாகில் அது அவனுக்குப் பயன்படாது
லவணம் மது தைலம் ச ததி தக்ரம்க்ருதம் பய ந துஷ்யேச்ரூத்ர ஜாதீநாம் குர்யாத் ஸர்வேஷுு விக்ரயம் -உப்பு தேன் எண்ணை தயிர் மோர் நெய் பால் இவைகளை நான்கு வர்ணங்களுக்குள் சூத்திரன் விற்கலாம், அதினால் அவனுக்கு தோஷமில்லை –
விக்ரீணந் மத்ய மாம்ஸா நிஹ்ய பக்ஷ்யஸ்யச பக்ஷணம்
குர்வந் ந கம்யாகமநம் ஸூத்ர பததி தத்க்ஷணாத்
கபிலா க்ஷீர பாநேந ப்ராஹ்மணீ கமநே ந து
வேதாஷர விசாரேண ஸூத்ரஸ்ய நரகம் த்ருவம்
மத்யம் மாம்ஸம் இவைகளை விற்பதாலும் சாப்படத் தகாதவைகளை சாப்பிடுவதாலும் சேரத் தகாத ஸ்த்ரிகளைச் சேர்வதாலும் சூத்திரன் அக்கணமே பதிதனாகிறான், காராம்பசுவின் பால் குடித்தலாலும் பிராமண ஸ்திரியைப் புணர்தலாலும் வேத அஷரங்களை விசாரிப்பதாலும் சூத்திரனுக்கு நரகம் சம்பவிக்கும்.
முதல் அத்தியாயம் முற்றிற்று
இரண்டாவது அத்யாயம்
௮த:பரம் ஹ்ருஹஸ் தஸ்ய கர்மாசாரம் கலெளயுகே
தர்மம் ஸாதாரணம் ஸக்தயா சாதுர்வர்ண் யாஸ்ரமாகசம்
தம் ப்ரவஹ்யாம் யஹம் பூர்வம் பராசர வசோ யதா
இதின் பிறகு – இந்த கலியுகத்தில் நான்கு வர்ணங்களுக்கும் கிரகஸ்தனுடைய ஆசாரங்களுக்கும் உரியதாயும் தர்மமான ஆசாரமாயும் பொதுவாயுயிருக்கிற- தொழிலை விருத்த பராசர வாக்யானு குணமாகவே, முன்னிட்டுச் சொல்லுகிறேன்-
ஷுதிதம் க்ருஸிகம் ஸ்ராந்தம் பலீ வர்தநம் யோஜயேத் ஹீநாங்கம் வ்யாதிதம் க்லீபம் வ்ருஷம் விப்ரோ ந வாஹயேத் –
பசித்தும் க்ருஸித்தும் சிரமப்பட்டுமிருக்கற எருதை உழக்கூடாது. மேலும் குறைந்த அங்கங்களுடையதும் வியாதியுடன் கூடினதும் விரை யடித்ததுமான எருதை பிராமணன் கட்டக் கூடாது
ஸ்திராங்கம் நீருஜம் த்ருப்தம் ஸூநர்தம் ஷண்ட வர்ஜிதம் வாஹ யேத்தி வஸஸ் யார்தம் பச்சாத் ஸ்நாநம் ஸமாசரேத் –
அங்கம் பழுதில்லாமலும் மற்றதும் கொழுப்புடையதும் விரை யடியாததுமாய் இருக்கிற எருதை மத்தியானத்தின் பாதி வரையிலுழ வேண்டியது – பிறகு அதற்கு ஸ்நானம் செய்து வைக்க வேண்டியது-
ஜபம் தேவார்ச்சநம் ஹோமம் ஸ்வாத்யாயம் சைவமப்யஸேத்
ஏக த்வி த்ரி சதுர் விப்ராந் போஜயேத் ஸ்நாதகாந் த்விஜ-
பிராமணன், ஐபம் செய்தல் தேவதை பூசித்தல் ஹோமம் செய்தல் வேதமோதல் இவைகளைச் செய்ய வேண்டியது பிறகு ஒன்று-இரண்டு-மூன்று நான்கு ஸ்நாதகப் பிரராமணர்களுக்கு அன்னம் போட வேண்டும்-
ஸ்வயம் க்ருஷ்டே ததா ஷேத்ரே தாந்யைச் ச ஸ்வயமார்ஜிதை
நிர்வபேத் பஞ்ச யஜ்ஞாம் ஸ்சக்ரது தீஷாஞ் சகாரயேத்
பிராமணன் தானே உழுது பயிர் செய்தாலும் ௮ல்லது வேறொருவர் பயிர் செய்து தான் சம்பாதித்து வந்தாலும் அந்த தானியங்களால் பஞ்ச மகா யஜ்ஞங்களைச் செய்யக் கடவன் அல்லது வேறொருவருக்குக் கொடுத்து செய்விக்கக் கடவன் –
திலா ரஸாந விக்ரே யா தாந்ய தஸ் ஸமா விப்ரஸ் யைவம் விதா வ்ருத்திஸ் த்ருண காஷ்டாதி விக்ரயம்
பிராமணன் – எள்ளு-ரஸ வர்க்கங்க ளிவைகளை விற்கக் கூடாது-அப்படி அவஸ்யம் விற்க வேண்டுமானால் தானியங்களுக்குத் துல்யமாகில் விற்கலாம் இந்த விருத்தி பிராமணனுக்கு உரியது. புல் கட்டை முதலியவற்றை விக்கிரயம் செய்யலாம் –
ப்ராஹ்மணச் சேத் க்ருஷிம் குர்யாந் மஹா தோஷ மவாப்நுயாத் –
பிராமணன் தானே யுழவு செய்து பயிரிட்டால் மஹா தோஷத்தை யடைவன் –
ஸம்வத்ஸரேண யத் பாபம் மத்ஸ்யகாதீ ஸமாப்றநுயாத்
அயோ முகேந காஷ்டே நததேகாஹே நலாகங்கலி
ஒரு வருஷ காலமாய் மத்ஸ்யங்களைக் கொன்ற சூத்தரன் எவ்வளவு பாபத்தை யடைவனே அந்த பாபத்தை கலப்பை யெடுத்த பிராமணன் இலும்பை முளையிற் கொண்ட கட்டையால் ஒரே தினத்தில் அடைகிறான் –
பாஸகோ மத்ஸ்ய காதீச வ்யாதச் சாகுநிகஸ் ததா அதாதா கர்ஷ கச்சைவ பஞ்சைதே ஸம பாகிந
வலை வீசுகிறவன் – மத்ஸ்யங்களைக் கொல்லுகிறவன் வேடன் – பக்ஷிகளைக் கொல்லுகிறவன் தானம் செய்யாமல் பயிரிடுபவன்-இவர்களைவரும் சமமான பாவமுள்ளவர்கள்-
வ்ருஷாம்ச் சித்வா மஹீம் பித்வா ஹத்வா து க்ரிமி கீடகாந் கர்ஷக கலயஜ்ஞேந ஸர்வ பாபை ப்ரமுச்யதே
விருக்ஷங்களை வெட்டியும் பூமியைப் பிளந்தும் புழு பூச்சிகளைக் கொன்றும் பயிரிடுகிறவன் களப் பிச்சை யிடுவதால் எல்லாப் பாவத்தையும் போக்கடிக்கிறான் –
யோந தத்யாத் த்விஜாதிப்யோ ராஸி முல முபாகத
ஸ சோரஸ்சை பாபிஷ்டோ ப்ரஹ்மக்நம் தம் விநிர்திஸேத்
யாதொருவன் தானிய ராசியினருகில் உட்கார்ந்து பிராமணர்களுக்குத் தானம் செய்ய வில்லையோ அவன் திருடன்-அவனே பாவி-அவனை பிர்ம்மஹத்தி செய்தவனாகச் சொல்ல வேண்டும் –
ராஜ்ஜே தத்வாது ஷட் பாகம் தேவாநாம் சைக விம்சகம் த்ரிம் சத் பாகம் ப்ராஹ்மணாநாம் க்ருஷிம் குர்வந்ந தோஷ பாக் –
ஆறில் ஒரு பாகம் அரசர்களுக் கிட்டும் தேவதைகளுக்கு இருபத் தொன்றிலொரு பாகமிட்டும் முப்பதில் ஒரு பாகம் “பிரரமணர்களுக்குக் கொடுத்தும் பயிர் செய்பவன் தோஷமடைய மாட்டான் –
ஷத்ரியோபி க்ருஷிம் க்ருத்வா தேவாந் விப்ராம்ச் ச பூஜயேத்
வைஸ்யஸ் ஸூத்ரஸ் ததா குர்யாத் க்ருஷி வாணிஜ்ய ஸில்பநம் –
க்ஷத்திரியனும் பயிர் செய்து பிராமணர்-தேவதைகள் இவைகளைப் பூசிக்கக் கடவன் வைஸ்யனும் சூத்திரனும் பயிர் வர்த்தகம் சித்திர வேலைகளைச் செய்து தேவாதிகளுக்கு பூஜை செய்யக் கடவர்கள் –
விகர்ம குர்வதே ஸுத்ர சித்விஜ ஸூஸ்ரூஷ யோச்சிதா பவந்த் யல்பாயுஷஸ் தேவை நிரயம் யாந்ய ஸம்ஸயம்
பிராமண ஸூஸ்ரூஷையை விட்டு சூத்திரன் தனக்கடைத்த கருமத்தைச் செய்யாமல் விட்டால் ஆயுள் குறைந்தவனாகிறான் -பிறகு நரகத்தையுமடைவான்= இதில் ஸம்சயமில்லை
சதுர்ணாமபி வர்ணாநாமேஷ தர்மஸ் ஸநாதந
நான்கு வர்ணங்களுக்கும் இந்த தர்மமே யநாதியானது-
இரண்டாவது அத்தியாயம் முற்றிற்று.
மூன்றாவது அத்தியாயம்
அதஸ் ஸூத்திம் ப்ரவஹ்யாமி ஜநநே மரணே ததா –
இனி பிறப்பிலும் இறப்பிலு முண்டாகும் ஆசெளசத்திற்கு ஸூத்தி சொல்லுகிறேன்
திந த்ரயேண ஸூத்யந்தி ப்ராஹ்மணா ப்ரேத ஸூதகே ஷத்ரியோ த்வாதஸா ஹேந வைஸ்ய்ய பஞ்சத ஸாஹகை ஸூத்ரஸ் ஸூத்யதி மாஸேந பராஸர வசோ ததா
மரணத் தீட்டில் சமானோதகனான பிராமணன் மூன்று தினத்திலும் க்ஷத்திரியன் பனிரெண்டு தினத்திலும் வைச்யன் பதினைந்து தினத்திலும் சூத்திரன் ஒரு மாதத்திலும் வ்ருத்த பராசரர் வாக்கின்படி சுத்தி யாகிறான் –
உபாஸநேது விப்ராணா மங்கஸூத்திச் ச ஜாயதே –
பிராமணர்கள் சந்தியா வந்தனம் முதலியவற்றை யனுஷ்டிக்கும் காலத்தில் சரீர ஸூத்தி யுண்டாகிறது
மாதாவின் வர்ணம் வெவ்வேறாக விருந்தாலும் (தகப்பன்) அதாவது மூல புருவனுடைய சமான பிண்டர்களான தாயாதிகள் பிறப்பிலு மிறப்பிலும் மூல புருஷ வர்ணத்துக்குரிய தீட்டையே யனுஷ்டிக்கக் கடவர்-
தாவத் தத் ஸூதகம் கோத்ரே சதுர்த்த புருஷேணது
கீழ்ச் சொல்லிய அன்னிய வர்ண ஸ்திரீயின் சந்ததிக்கு மூன்று புருஷன் வரையில் தீட்டிருந்து நான்காம் புருஷனில் விடப்படும்-
தாயாத் விச்சேத மாப்நோதி பஞ்சமோ வாத்மவம் ஸஜ.
தன் வம்சத்தில் பிறந்த ஐந்தாம் தலைமுறைப் புருஷனும் பிண்டத்தில் நின்றும் நீக்க்கப் படுகிறான்-
சதுர்தே தஸ ராத்ரம் ஸ்யாத் ஷண்ணிஸா பும்ஸி பஞ்சமே
ஷஷ்டே சதுர ஹாச் சுத்திஸ் ஸப்தமே துதி நத்ரயாத் –
புருஷ சந்ததியில் நாலாம் தலைமுறையில் பத்து நாளும் செளசமும் ஐந்தாம் தலை முறையில் ஆறு நாளும் ஆறாவது தலை முறையில் நாலு நாளும் ஏழாவது தலைமுறையில் மூன்று நாளும் ஆசெளசம்
ப்ருக் வக்நி மாணே சைவ தேஸாந் தரம்ருதே ததா பாலே ப்ரேதேச ஸ்ந்யஸ்தே ஸத்யஸ்சவ் சம்விதீயதே
மலையிலிருந்து விழுந்தும் நெருப்புப் பட்டும் இறந்தாலும் தேசாந்தராத்தில் இறந்தாலும் அதிக பாலனிறந்தாலும் சந்நியாசியாய் இறந்தாலும் ஸ்நான மாத்திரத்தால் ஸூத்தி –
தேசாந்தர ம்ருத கச்சித்ஸ கோத்ர ஸ்ரூயதேயதி ந த்ரி ராத்ர மஹோ ராத்ரம் ஸத்ய ஸ்நாநேந ஸூத்யதி
சமான கோத்திரன் தேசாந்திரத்தில் இறந்ததாகக் கேள்விப்பட்டால் அதாவது ஒரு வருஷமான பிறகு கேள்விப் பட்டால் மூன்று நாளுமில்லை. ஒரு தினமுமில்லை. அப்பொழுது ஸ்நாந மாத்திரத்தால் ஸூத்தி –
அஜா ததந்தாயே பாலாயே ச கர்ப்பாத் விநிஸ்ருதா
ந தேஷா மக்நி ஸம்ஸ்காரோ நா சவ்சம் நோதகக்ரியா – பல் முளைக்காத குழந்தைகளுக்கும் சர்ப்பத்திலிருந்து நழுவி யிறந்த சிசுக்களுக்கும் அக்நி ஸமஸ்காரம் கிடையாது தீட்டுமில்லை, தர்ப்பணமுமில்லை –
யதி கர்ப்போ விபத்யே தஸ்ரவ தேசாபி யோஷித யாவந் மாஸம் ஸ்த்திதோ கர்ப்போதிநம் தாவத் து ஸூதகம்-
கர்ப்பம் கலைந்தாலும் ஸ்ரவித்தாலும் அந்த கர்ப்பம் எத்தனை மாஸமிருந்ததோ அத்தனை நாள் அதின் மாதாவுக்கு ஆ செளசம் –
ஆசதுர் தாத்பவேத் ஸ்ராவ பாத பஞ்சம ஷஷ்டயோ அத ஊர்த்வம் ப்ரஸுதிஸ் யாத்த ஸாஹம் ஸூதகம்பவேத் –
நாலு மாதத்தில் கர்ப்பமழிந்தால் ஸ்ராவமென்றும் ஐந்து ஆறில் பாதமென்றும் பெயர் அதின் பிறகு பரஸவ மென்னப் படும்’ அப் பிரஸவத்தில் பத்து நாள் ஆசெளசம் –
தந்த ஜாதேநுஜா தேச க்ருதா ஸூடேச ஸம் ஸ்த்திதே
அக்நி ஸம்ஸ்கரணே தேஷாம் த்ரி ராத்ரம ஸூஸிர் பவேத்
பல் முனைத்தவனா யிருந்தாலும் அவனுக்குப் பின் பிறந்தவன், (அதாவது) பல் முளையாதவனா யிருந்தாலும் செளனம் செய்யப்பட்டவனா யிருந்தாலும் அவன் மரணமடைக்தால், அவனுக்கு அக்நி ஸம்ஸ்காரம் செய்தால் ஞாதிகளுக்கு மூன்று நாள் ஆசெளசம் –
ஆ தந்த ஜந்மநஸ் ஸத்ய ஆசூடாந்நை ஸிகீக்ரியா திரி ராத்ர மா வ்ரதா தேஸாத் தஸ ராத்ரமத பரம்
ஜனனம் முதல் பல் முளைக்கும் வரையில் ஸத்ய சுத்தி. அது முதல் செளளம் வரையில் ஒரு தினம் ஆசெளசம். ௮து முதல் உபநயனம் செய்யும் வரையில் மூன்று நாள் தீட்டு, பிறகு பத்து நாள் தீட்டு.
ப்ரஹ்மசாரி க்ருஹே யேஷாம் ஹுய தேச ஹுதா ஸந ஸம்பர்க்கஞ்ச ந குரவந்தி ந தேஷாம் ஸூத கம்பவேத்
பிரம சாரியும் – எவன் அக்னி ஹோத்ரம் செய்கிறானோ, அவனும் தீட்டுக் காரரிடத்தில் சேராமலிருந்தால் அவர்களுக்குத் தீட்டில்லை-
ஸம்பர்க்காத் தூஷ்ப தேவி ப்ரோஜநநே மரணே ததா
ஸம்பர்க்காச்ச நிவ்ருத்தஸ்ய ந ப்ரேதம் நைவ ஸூதகம் கன–
தீட்டுக் காரர்களோடு சேர்வதனால் பிராமணன் பிறப்பிலும் இறப்பிலும் தீட்டுடையவனாகிறான்- சேர்க்கையை விட்டவனுக்கு ஜனன மரண செளசங்கள் கிடையா –
ஸ்ல்பிந காருகா வைத்யா தாஸீ தாஸாச்சநா பிதா
ராஜாந ஸ்ரோத்ரியாச் சைவ ஸத்யஸ் செளசா ப்ரகீர்த்திதா
ஸவ்ரதஸ் ஸத்ர பூதச்ச ஆஹிதாக் நிச்சயோ த்விஜ
ராஜ்ஞச்ச ஸூதகம் நாஸ்தி யஸ்ய சேச்சதி பார்ததிவ
உதயதோ நித நேதாநே ஆதர்தோ விப்ரோ நிமந்தரித
ததை வருஷிபிர் த்ருஷ்டம் யதா காலேந ஸூத்யத –
சித்திர வேலை செய்கிறவன் சமயல்காரன் வைத்தியர்கள் தாஸிகள் வேலைக் காரர்கள் ராஜாக்கள் ஸ்ரோத்ரியர்கள் இவர்கள் தந்தம் தொழிலைச் செய்யுங் காலத்தில் சுத்தர்கள். பின்னும் யஜ்ஞத்தில் சங்கல்பித்தவனும் யாகம் செய்கிறவனும் அக்ந்யா தானம் செய்தவனும் அரசன் தன் கருமம் முடியக் கோறினவனும் ஆசெளசிகனல்ல. யுத்தத்தில் சென்ற அரசனும் தானங்களில் பிரவேசித்தவனும் ஆபத்தை யடைந்தவனும் நிமந்திரணம் சொல்லப் பட்டவனும் அப் பொழுது சுத்தர்கள். பிறகு அவரவர்களுக்கு விதித்த காலத்தில் திட்டு நீங்கும் –
பிரணவ நிமித்தமான தீட்டில் கிருகஸ்தனானவன் (பிதாவானவன்) பிரஸவித்த ஸ்திரியுடன் ஸம்ஸர்க்கத்தைச் செய்யாதவனாயிருந்தால் பிரஸவித்தவுடன் ஸ்நாநத்தினால் சுத்தனாகிறான். மாதா பத்து நாட்களால் சுத்தியை அடைகிறாள்.
ஸகல ஸபிண்டர்களுக்கும் கர்மத்தில் அதிகாரத்தைப் போக்குவதான ஆசௌசம் மாதா பிதாக்களுக்கும் உண்டு; ஆனால் ஸ்பரிசிக்கத் தகாததான பிரஸவத் தீட்டு மாதாவுக்கே யுள்ளது. பிதா
வானவன் புத்திர ஜனநத்தில் ஸ்நாநத்தினால் சுத்தனாகிறான்.
பிரஸவித்தவளான பத்திநி யிடத்தில் பிராம்மணன் ஸம்பந்தத்தை அதாவது ஸ்பரிசிப்பது முதலியவைகளைச் செய்தானே யானால் அந்தப் பிராம்மணன் ஆறு வேதங்களையும். சகல கர்மங்களையும் அறிந்தவனான போதிலும் அவனுக்குப் பத்து நாள் ஸ்பரிசிக்கத் தகாத சூதகமுண்டு.
பிரஸவித்தவளான பாரியையினுடைய ஸம்பந்தத்தினால் பிராம்மணனிடத்தில் ஸ்பரிசிக்கத் தகாத தோஷம் ஸம்பவிக்கிறது. வேறு விதமான தோஷம் பிரஸ்வ நிமித்தத்தில் புருஷனுக்கில்லை. ஆகையால் பண்டிதனானவன் பிரஸவித்த ஸ்திரீயோடு சயநிப்பது உட்காருவது தாம்பூலம் முதலியவைகளைப் புசிப்பது முதலிய ஸம்பந்தத்தைப் பிரயத்தனப் பட்டாவது ஒழிக்கக் கடவன்
விவாகம், தேவோத்ஸவம், யக்கிய்ம் இவைகள் முன்னமே தொடங்கப்பட்டுச் செய்து வருகையில் இந்தக் கிரியைகளின் நடுவில் ஜநந மரணங்கள் ஸம்பவித்தால் முன்னமே இவைகளுக்கென்று மனதினால் உத்தேசித்து வைத்திருக்கும் திரவியமானது பிராம்மணாதிகளுக்கும் தேவதைகளுக்கும் கொடுக்கப்பட்டால் தோஷத்தை அடைகிறதில்லை.
ஒருவன் அனுஷ்டிக்கிற பத்து நாள் தீட்டின் நடுவில் ஜநந மரண நிமித்தமான வேறு ஆசௌசம் நேரிட்டால் முன் அநுஷ்டித்து வருகிற ஆசெளசமானது எவ்வளவு காலத்திற்குள் பத்துநாட்களைக் கடந்ததாகாதோ அவ்வளவு காலம் வரையில் பிராம்மணன் அசுசியாகிறான்-
பிராம்மணன் நிமித்தமாக அதாவது அவன் பிராணனை ரக்ஷிப்பதற்காக மரித்தவர்கள் விஷயத்திலும் சிறையில் வைக்கப் பட்டவர்களையும் ஆபத்தை அடைந்த பசுவையும் விடுவிப்பதற்காக
மரித்தவர்கள் விஷயத்திலும் யுத்தத்தில் தைரியமாய் எதிர்த்து மரித்தவர்கள் விஷயத்திலும் ஸபிண்ட ஞாதிகளுக்கு ஒருநாள் செளசம் அநுஷ்டிக்கத் தக்கதாகும்.
யோகத்தினால் ஸர்வேஸ்வரனை உபாஸிப்பவனான ஸந்நியாசி, யுத்தத்தில் பின் வாங்காமல் எதிர்த்துச் சத்துருக்களால் கொல்லப்பட்டவன் ஆகிய இவ் விரண்டு புருஷர்களும் சூரிய மண்டலத்தைப் பேதிப்பவர்கள்-சூரிய மண்டலத்தின் வழியாகப் ப்ரஹ்ம லோகத்திற்குச் செல்லுகிறார்களென்பது கருத்து.-
ஆயுத பாணிகளான அநேகம் சத்துருக்களால் நன்றாகச் சூழப்பட்டவனாகி அவர்களை எதிர்த்துப் பயமின்றி யுத்தம் செய்கிற சூரனானவன் அதைரியத்தைத் தோற்றுவிப்பதான வார்த்தையைச் சொல்லாமல் யுத்தம் செய்து சத்துருக்களால் அடிக்கப்பட்டு மரித்தால் அவன் அழியாத உத்தம லோகங்களை அடைகிறான்.
சத்துருக்களால் சேனையிலிருக்கும் ஐநங்கள் அடிக்கப்பட்டு நாலு புறமும் சிதறி யோடுகையில் ஏந்தச் சூரனானவன் அவர்களை ரக்ஷிப்பதற்காக மிகுந்த தைரியத்தினால் சத்துருக்களை எதிர்க்கிறானோ அவன் அசுவமேத யாகம் செய்த பலனைப் பெறுவான்.
ஒருவனை ரக்ஷிப்பதற்காகச் சத்துரு சேனையில் புகுந்து யுத்தம் செய்கிற எவனுடைய சரீரமானது முத்கரமென்னும் இரும்புலக்கை,பாணம், தடி இவைகளால் கை கால் முதலிய அவயவங்களில் அடிக்கப் பட்டுக் காயமுள்ளதாகிறதோ சூரனான அவனைத் தெய்வப் பெண்கள் கிரகித்துக் கொண்டு அவனுடன் க்ரீடிக்கிறார்கள்.
யுத்தத்தில் மரணமடைந்த சூரனைக் கண்டு தெய்வப் பெண்கள் ஆயிரம் பேர் கூடி வேகத்தை யுடையவர்களாகி இவன் என் பர்த்தா இவன் என் பர்த்தா வென்று சொல்லிக் கொண்டு ஓடுகிறார்கள்.
பலனை இச்சிக்காதவர்களும் ஸ்வர்க்க போகத்தை இச்சிப்பவர்களுமான புருஷர்கள் அனேக விதங்களான யக்கியங்களாலும் தவத்தினாலும் எந்தப் புண்ணிய லோகத்தை எப்படி அடை கிறார்களோ, யுத்தங்களில் எதிர்த்துச் சண்டையினால் பிராணனை ஒழித்த வீரர்கள் ஒரு க்ஷணத்தினால் அப்படியே தெய்வப் பெண்களால் கொண்டாடப்பட்டு அந்தப் புண்ணிய லோகங்களை அடைகிறார்கள்-
யுத்தத்தில் ஜயத்தினால் ஸம்பத்தானது பெறப்படுகிறது. மரணத்தினால் தெய்வப் பெண் அடையப் படுகிறாள். ஆதலால் க்ஷண காலத்தில் நசித்துப் போவதாகிய இந்தச் சரீர விஷயத்தில் ஆசை வைத்து யுத்தத்தில் மரிப்பதில் சிந்திக்க வேண்டுவதில்லை-
யுத்தத்தில் அடிபட்ட நெற்றியினின்று எந்த ரக்தம் வடிகிறதோ அது வாயில் புகுந்ததாகில் ஸோம பாநத்தோடு சமானமாகும். இது யுத்தமென்னும் யாக்கியத்தில் விதிக்கப்பட்ட ஸோம
பாநமாக அறியப்பட்டது.-
பந்துக்களில்லாதவனும் தனக்கு ஞாதியாகாதவனுமான பிராம்மணனுடைய சவத்தைப் பிரதி யுபகாரத்தை எதிர்பாராமல் எந்த இரு பிறப்பாளர் சுமந்து போய்க் கொளுத்துகிறார்களோ அவர்கள் அடி வைப்புகள் தோறும் கிரமமாக யக்கியம் செய்த பலனைப் பெறுகிறார்கள் -அவர்களுக்குச் சிறிதும் அசுபமில்லை. நல்ல காரியத்தைச் செய்கிற அவர்களுக்குப் பாபமுமில்லை. ஜலத்தில் முழுகுவதினால் அப்பொழுதே அவர்களுக்குச் சுத்தி விதிக்கப்படுகிறது.
தன்கோத்திரனாகாதவனும் (ஞாதியாகாதவனும்) பந்துக்களில்லாதவனுமான பிராம்மணனுடைய சவத்தைச் சுமந்து தகித்தவன் பிராணாயாமத்தினால் சுத்தியை அடைகிறான்.
பிரேதமான ஞாதியையும், அதாவது பந்துவையும்,ஞாதியாகாதவனையும் அதாவது பந்துவாகாதவனையும் பின் சென்றவன் ஸசேல ஸ்நாநத்தைச் செய்தும் அக்நியை ஸ்பரிசித்தும் நெய்யைக் குடித்தும் சுத்தனாகிறான் –
எந்தப் பிராம்மணன் மரித்த க்ஷத்திரியனைத் தெரியாமையினால் பின் செல்லுகிறானோ அவன் ஒருநாள் ஆசௌசத்தை அநுஷ்டித்துப் பஞ்ச கவியத்தைப் புசிப்பதினால் சுத்தி யடைகிறான். வைசிய சவத்தைத் தெரியாமையினால் பிராம்மணன் பின் தொடர்ந்தானாகில் அவன் இரண்டு நாள் ஆசௌசத்தை அநுஷ்டித்து ஆறு பிராணா யாமங்களைச் செய்யக் கடவன். சூத்திர சவத்தைப் பின் சென்றவனான மூடப் பிராம்மணன் மூன்று நாள் ஆசௌசத்தை அநுஷ்டித்துப் பின்பு சமுத்திரத்தை யடைகிற மஹாந்தியில் ஸ்நாநம் பண்ணி நூறு பிராணாயாமங்களைச் செய்து நெய்யைக் குடித்தால் சுத்தனாகிறான்-
சூத்திரர்கள் எப்போது தர்ப்பண முதலிய வியாபாரங்களை முடித்து (ஆசௌசத்தை முடித்து) இருக்கிறார்களோ, அந்தக் காலத்தில் அவர்கள் பிராம்மணர்களால் அனுசரிக்கத் தக்கவர்கள் . இது அநாதியான தர்மமாகும்.-
மூன்றாவது அத்தியாயம் முற்றிற்று.
ஆசாரகாண்டம் ஸம்பூர்ணம்.
—
பிராயச்சித்தகாண்டம்.-முதல் அத்தியாயம்.-
தாய்,மனைவி, முதலானவர்களுடைய கடுஞ் சொல்லினால் உண்டான மாநஹாநி, புத்திர மித்திராதிகள் செய்த சில அபராதங்களுக்காக உண்டான பெருங் கோபம்,அதிகமான சிநேஹம், அதிகமான பயம், இந்த ஹேதுக்களிலேதேனு மொன்றினால் ஸ்திரீ அல்லது புருஷன் உச்சுருக்கிட்டுக் கொண்டு மரணமடைந்தால் அவர்களுக்கு அடுத்த சுலோகத்தில் சொல்லப் போகிற கதி (நரக யாதனை) விதிக்கப்படுகிறது.
உச்சுருக்கினால் மரித்தவன் சீயினாலும், ரக்தத்தினாலும் நிறைந்து கோரமாயிருக்கிற அந்ததாமிஸ்ரமென்னும் நரகத்தில் முழுகி அதில் தானே அறுபதினாயிரம் வருஷ காலம் இடைவிடாமல் வசிக்கிறான்.
(துர்மரணமடைந்தவனுடைய சவத்தை) எடுத்தவர்கள்,அக்கினியினால் ஸம்ஸ்காரம் செய்தவர்கள், உச்சுருக்கிட்டிருந்த கயிற்றை அவிழ்த்தவர்கள் (தில தர்ப்பணாதிகளைச் செய்தவர்கள்) ஆகிய இவர்கள் தப்தகிருச்சிரம் என்னும் விரதத்தினால் சுத்தியை அடைகிறார்களென்று பிரஜாபதி சொன்னார்.
எருதினால் அல்லது பசுவினால் கொல்லப்பட்டவன்(அத்துடன் விளையாட்டினால் எதிர்த்து மரித்தவன்),ஒருவனால் உச்சுருக்கிட்டுக் கொல்லப்பட்டவன், பிராம்மணனால் கொல்லப்பட்டவன், இவர்களை ஸ்பரிசித்தவர்கள், சுந்தவர்கள், அக்கிநி தகநம் செய்தவர்கள், அந்தச் சவத்தைப் பின் தொடர்ந்தவர்கள், உச்சுருக்குக்கயிற்றை அவிழ்த்தவர்கள் , ஆகிய இந்தப் பிராம்மணர்கள் தப்கிருச்சிரத்தால் சுத்தர்களாகிப் பிராம்மணபோஜனம் செய்வித்து ஒரு பிராம்மணனுக்கு விருஷபத்துடன் பசுவைத் தக்ஷிணையாகக் கொடுக்கக் கடவர்கள்
தப்தகிருச்சிரமென்பது மூன்றுநாள் ஆறு பலம் விழுக்காடு உஷ்ண ஜலத்தையும், பின்பு மூன்றுநாள் மூன்று பலம் விழுக்காடு உஷ்ணமாகிய பாலையும், பின்பு மூன்று நாள் ஒரு பலம் விழுக்காடு உஷ்ணமாகிய நெய்யையும், குடித்துப் பின்பு மூன்று நாள் வாயுவைப் பக்ஷிப்பவனாகிச் (உபவாஸமிருந்து) செய்யும் விரதம்.
மஹாபாதகம்,உபபாதகம் முதலான பாபங்களைச் செய்தவர்கள், அவர்களுடைய பிள்ளைகள் முதலானவர்களுடன் அவர்கள் பாபிகளென்றறியாமல் பிராம்மண க்ஷத்திரியாதிகள் ஐந்து நாள், அல்லது பத்துநாள், அல்லது பனிரண்டுநாள், அல்லது அரைமாஸம், அல்லது ஒருமாஸம், அல்லது இரண்டுமாஸம், அல்லது அரை வருஷம், அல்லதுஒரு வருஷம் ஸம்ஸர்க்கத்தைச் செய்தால் பாபிகள் ஆகிறார்கள். ஒரு வருஷத்திற்கு மேற்பட்டால் அவர்களோடு சமானமாகிறார்கள்-
பதித ஸம்ஸர்க்க விஷயத்தில் கீழே சொன்ன எட்டு பக்ஷங்களில் முதல் பக்ஷமான ஐந்து நாளைக்கு த்ரிராத்ர கிருச்சிரத்தையும் (மூன்றுநாளுபவாஸத்தையும் ) இரண்டாவது படிமான பத்து நாளைக்கு கிருச்சிரத்தையும் (பிராஜாபத்திய கிருச்சிரத்தையும் ) செய்ய வேண்டும். ராஜாபத்திய கிருச்சிரமாவது மூன்றுநாள் பகவிலும் பினபு மூன்றுநாள் இரவிலும் பின்பு மூன்றுநாள் தான் யாசிக்காமல் வந்ததையும் புசித்துப் பின்பு மூன்றுநாள் புசிக்காமலிருப்பதென்று மனுகூறினார். பின்னும் மூன்றாவது பக்ஷமான பன்னிரண்டு நாளைக்கு ஸாந்தப கிருச்சிரத்தைச் செய்ய வேண்டும்.-
ஸ்திரீகளுக்கு ரஜ உண்டான நாள் தொடங்கிப் பதினாறு திநங்கள் ருது காலமாம்.அவைகளில் நாலாவது நாளில் ஸ்நாநம் செய்த ஸ்திரீ பர்த்தாவினால் அழைக்கப்பட்டும் புத்திரனை உண்டாக்குவதற்காக எவள் தன் பர்த்தாவை அடைய வில்லையோ அவள் மரித்து நரகத்தை யடைந்து பின்பு அடிக்கடி ஜனித்து விதவை யாகிறாள். இது போலவே ருது ஸ்நாநம் செய்த பாரியை அருகிலிருந்தும் வியாதி முதலிய தோஷமற்றிருக்கும் புருஷன் அவளைச் சேரா விட்டால் கோரமான ப்ரூணஹத்தி (சிசுஹத்தி)தோஷத்தில் ஸங்தேகமின்றிச் சேருகிறான்-
பெரு வெள்ளம் பெருங்காற்றுக்கள் இவைகளால் ஒருவனுடைய விரை வேறொருவனுடைய க்ஷேத்திரத்தில் தள்ளப்பட்டு முளைத்தெழுந்து பலித்தால் அந்த நிலக்காரன் ( ஷேத்திர) அந்தப் பலனை அடைகிறான். அந்த விரைக்கு உடையவன் (பிஜி) அந்தப் பாகத்தை அடைவதில்லை. (இது லோகப் பிரசித்தம்). இந்த நியாயத்தினால் குண்டனென்றும் கோளகனென்றும் சொல்லப்படுகிற பிள்ளைகளிருவரும் பர ஸ்திரியின் புத்திரர்களே (பீஜிக்குச் சம்பந்தமில்லை)
ஒவ்ரஸன்,க்ஷேத்திரஜன், தத்தன், கிருத்திரிமன்-என்றுபுத்திரர்கள் நாலுவகைப் பட்டவர்கள்-மனு இவர்களையுஞ் சேர்த்துப் பன்னிரண்டு பிள்ளைகளைச் சொல்லி யிருக்கிறார். -மாதா அல்லது பிதா (புத்திரனில்லாத ஒருவனுக்கு)எந்தப் பிள்ளையைக் கொடுக்கிறார்களோ அவன் தத்தனென்று சொல்லப்படுவன்-இங்குத் தாநங் கொடுப்பது போல் பிரீதியுடன் தாரா பூர்வகமாகக் கொடுக்கப்பட்டவன் என்று பொருள் கொள்ள வேண்டும்.
மூத்தவன் விவாகமில்லாதிருக்க இளையவன் விவாகம் செய்து கொண்டால் அவன் பரிவேத்தாவென்றும், மூத்தவன் பரிவித்தி யென்றும், விவாகம் செய்து
கொண்ட பெண் பரிவேதிநீ யென்றும்,அந்தப் பெண்ணைக் கொடுத்தவன் பரிதாதாவென்றும், விவாகம் செய்வித்த புரோஹிதன் பரியஷ்டா வென்றும் சொல்லப்படுவார்கள். ஆக இந்த ஐவரும் நரகத்தை அடைகிறார்கள். இவர்களில் பரிவித்திக்கு இரண்டு கிருச்சிரமும், அந்தப் பெண்ணுக்கு ஒரு கிருச்சிரமும், பெண் கொடுத்தவனுக்குக் கிருச்சிராதிகிருச்சிரமும், பிராயச் சித்தமாம். ஹோமம் செய்வித்த புரோஹிதன் சந்திராயண விரதத்தைச் செய்யக் கடவன்.
முதுகில் மாம்ஸ மிகுதியால் விகார சரீரத்தை யுடையவுனாகிய கூனன், சித்திர குள்ளன், நபும்ஸகன், நாவில் குற்றத்தினால் விரைவாகப் பேசச் சக்தி யற்றவன், எந்தக் காரியங்களையும் செய்ய வல்லமை யில்லாத ஜடன், பிறவிக் குருடன், பிறவிச் செவிடன், ஊமை, இவர்களில் ஒருவனாகத் தன் தமையன் இருக்கும் பக்ஷத்தில் அவனுக்கு விவாக யோக்கியதை யில்லாமையால் அவனுக்கு முன் கநிஷ்டன் விவாகம் செய்து கொண்டால் முன் சொன்ன பரிவேதன தோஷமில்லை .தமையன் சன்னியாசியாய் விட்டாலும் தேசாந்தரத்தை அடைந்திருந்தாலும் தம்பி விவாகம் செய்து கொள்ளலாம்.
சிறிய தகப்பனுடைய பிள்ளை, தனக்குச் சக்களத்தித் தாயார் பிள்ளை, தத்த மகன், இவர்கள் தனக்கு மூத்தவர்களா யிருந்தாலும், அவர்களுக்கு முன் கனிஷ்டனான தான் விவாகம்,யக்கியம் இவைகளைச் செய்து கொள்வதினால் பரிவேதந தோஷமில்லை.
ஜேஷ்டப் பிராதா இருந்து அவன் யக்கியத்தைச் செய்யாவிட்டால் அவனுடைய அநுமதி பெற்று இளையவன் அக்கிநியை ஆதாநம் செய்யலாம் (பக்கியம் செய்யலாம்),இவ்விதமாகச் சங்கர்சகமிருக்கிறது-இது போல் யக்கியம் செய்யாத பிதாவின் அனுமதியினால் புத்திரன் யக்கியம் செய்வதை மநு விலக்கினார்.
தன்பதியானவன் தேசாந்தரமடைந்து அவன் சங்கதியே தெரியாமலிருத்தல், மரணமடைதல், சன்னியாசி யாகுதல், நபும்ஸகனாயிருத்தல்,பதிதனாகுதல், ஆக இந்த ஐந்து விதமான ஆபத்துக்களில் ஸ்திரீகளுக்கு வேறு பதி விதிக்கப்படுகிறான்-
எந்த ஸ்திரியானவள் தன் பர்த்தா மரித்து விட்ட பின் பிர்ம்மசரிய விரதத்தை அநுஷ்டிக்கிறாளோ அவள் பிர்ம்மசாரிகள் மரித்தால் ஸ்வர்க்கத்தை அடைவது போல் மரித்த பின் ஸ்வர்க்கத்தை அடைகிறாள் –
எந்த ஸ்திரீ மரணமடைந்த தன் பதியை அநுகமநம் செய்கிறாளோ (உடன் கட்டை ஏறுகிறாளோ) அவள் ஒரு மனுஷியனுடைய தேகத்தில் மூன்றரை கோடி கணக்குள்ள எத்தனை மயிர்கள் இருக்கின்றனவோ அத்தனை கோடி காலம் ஸ்வர்க்க லோகத்தில் வசிக்கிறாள்-
பாம்பு பிடிப்பவன் புற்றின் ரந்திரத்திலழுந்திக் கிடக்கிற பாம்பைத் தன் பலத்தினால் எப்படி வெளியில் எடுத்து விடுகிறானோ அப்படி அநுமரணம் செய்த பதிவிரதை யானவள் (நரகத்திற்குச் செல்லுகிற பர்த்தாவைத் தன் புண்ணிய பலத்தினால் மீட்டுப் புண்ணிய லோகத்தில் சேர்த்து அவனுடன் ஆநந்திக்கிறாள்-
முதலாவது அத்தியாயம் முற்றிற்று.
–
இரண்டாவது அத்தியாயம்.
செந்நாய், நாய், குள்ள நரி, பன்றிமுதலான ஐந்துக்களால் பிராம்மணோத்தமன் கடிக்கப்பட்டால் அவன் ஸ்நாநம் செய்து வேதமாதாவும் பரிசுத்தமுமாகிய காயத்ரியை ஜபிக்கக் கடவன்
பின்னும் கோசிருங்க ஜல ஸ்நாநஞ் செய்தல், மஹாநதி சங்கமத்தில் ஸ்நாநம் செய்தல், சமுத்திரத்தைப் பார்த்தல் இவைகளைச் செய்தால் நாயால் கடிக்கப்பட்டவன் சுத்தனாகிறான்
வேதத்தை முழுதுமோதிப் பிராஜாபத்தியம் ஸௌம்மியம் முதலான விரதங்களை அநுஷ்டித்தவனான பிராம்மணன் நாயால் கடிக்கப்பட்டால் ஸ்வர்ணத்தோடு கூடின ஐலத்தில் ஸ்நாநம் செய்து நெய்யைக் குடித்தால் சுத்தானாகிறான்-
சாந்திராயணம்முதலான விரதத்தோடு கூடி யிருப்பவன் (விரதாநுஷ்டாந காலத்தில் ) நாயால் கடிக்கப்பட்டால் மூன்று நாள் உபவாஸமிருந்து நான்காவது தினத்தில் நெய்யையும் தர்ப்ப ஜலத்தையும் குடித்துப் பின்பு விரத சேஷத்தைச் செய்து முடிக்கக் கடவன்.
விரதத்தை அநுஷ்டிக்காதவன், விரதத்தோடு கூடினவன், இவர்களில் எவனாகிலும் நாயால் கடிக்கப் பட்டானே யாகில் அவ்விருவர்கவளும் பிராம்மணரைச் சேவித்து அவர்களால் பரிசுத்தமான பார்வைகளால் பார்க்கப்பட்டும் தகுந்த பிராயச் சித்தங்களைச் செய்தும் பரிசுத்தர்களாகிறார்கள்
எவன் நாயால் கடிக்கப்படாமல் மூக்கினால் முகரப்பட்டும் நாக்கினால் நக்கப்பட்டும் அல்லது நகங்களால் கீறப்பட்டுமாவது இருக்கிறானோ அவன் அந்த இடத்தை மண்ணினாலும் ஜலத்தினாலும் நன்றாக அலம்பி நெருப்பில் காய்ச்சினால் பரிசுத்தனாகிறான்.
பிராம்மண ஸ்திரீயானவள் நாய், குள்ளநரி, செந்நாய் முதலியவைகளால் கடிக்கப்பட்டால் அப்போது அந்தஸ்திரீ ராத்திரியில் உதயமாகின்ற சந்திரன் முதலான கிரகங்களையும் கிருத்திகை
முதலான நக்ஷத்திரங்களையும் பார்த்தால் சுத்தையாகிறாள்,
கிருஷ்ண பக்ஷத்திலும் மேகத்தால் ஆகாசம் மறைக்கப்படுகிற காலத்திலும் சந்திரனும் நக்ஷத்திரங்களும் காணப் படாவிட்டால் சாஸ்திர விதிப்படி அப்போது சந்திரன் இருக்கும் திசையையாவது பார்க்க வேண்டும்.
எந்த ஊரில் பிராம்மணர்கள் இல்லையோ அந்த ஊரில் நாயால் கடிக்கப்பட்டவன் பிராம்மணர்களைப் பற்றிச் செய்ய வேண்டிய பிரதக்ஷிணம் முதலான ஆசாரங்களை விருஷத்தினிடத்தில்
செய்து பின்பு ஸ்நாநம் பண்ணினால் சுத்தனாகிறான்-
சண்டாளனால் அல்லது சுவபாகனால் அல்லது பசுக்களால் அல்லது பிராம்மணர்களால் அடிக்கப்பட்டாவது தானே விஷந் தின்றாவது யாகஞ்செய்த பிராம்மணன் மரணமடைந்தால் அவனை அவனுடைய ஏழு தலைமுறைக்குட்பட்ட ஞாதிகளில் ஒரு பிராம்மணன் லௌகிகாக்நியில் மந்திரமில்லாமல் தகநம் செய்யக் கடவன். அந்தச் சவத்தை ஸ்பரிசித்தாலும் சுமந்தாலும் பின்பு பிராம்மணருடைய அநுமதி பெற்றுப் பிராஜாபத்திய கிருச்சிரத்தைச் செய்யக் கடவன்-
துர் மரணமடைந்த யாக சீலனுடைய சவத்தைத் தகநம் செய்த ஸமீப ஞாதியான பிராம்மணன் பிராஜாபத்திய கிருச்சிரத்தைச் செய்து கொண்ட பின்பு, முன் லௌகிகாக்நியில் மந்திரமின்றித் தகநம் செய்யப்பட்ட அஸ்திகளை எடுத்து அவைகளைப் பாலினால் அலம்பிக் காருபத்தியம் முதலான அக்நிகளாலே யாகஞ் செய்கிறவனுக்குச் சொல்லிய விதிப்படி புநர் ஸம்ஸ்கார மந்திரங்களைச் சொல்லி அந்த அஸ்திகளைப் பிரேதத்தைப் போல் தஹநம் செய்யக் கடவன்-
ஆஹிதாக்நியான ஒரு பிராம்மணன் தேசாந்தரம் சென்றவியத்தில் காலகதியினால் மரணமடைய அவனுடைய அக்னி வீட்டிலிருந்தால் அந்தப் பிரேதத்தை அக்நியினால் ஸம்ஸ்காரம் செய்ய வேண்டிய விதியைச் சொல்லுகிறேன் ரிஷிகளே கேளுங்கள். மான் தோலைப் பரப்பி அதன் மேல் தர்ப்பங்களாலும் எழு நூறு கணக்குள்ளது சிறிய பலாசம் சமித்துக்களாலும் அல்லது பலாசமரத்தின் இலைக்காம்புகளாலும் ஒரு புருஷாகாரத்தைச் செய்து பிறகு, முகத்தில் சடத்துக்கள் நாற்பது, கழுத்தில் பத்து, கைகளில் நூறு, விரல்களில் பத்து, தொப்புளின் கீழ் குயஸ்தநத்தில் நூறு, வயிற்றில் இருநூறு, ஜங்களில் எட்டு, ஆண் குறியில் ஐந்து, தொடைகளில் இருபத்தொன்று, முழங்கால் அதின் கீழ் ஐங்கைகளில் இருநூறு, கால விரல்களில் ஆறு, இவ்விதமாகச் சமித்துக்களை அல்லது இலைக் காம்புகளை வைத்துக் கட்டப்பட்ட அந்தப் புருஷ சரீரத்தில் சம்மியையை ஆண் குறியி லும் அரணிக் கட்டையை விருஷணத்திலும், ஐஹூ என்னும் பாத்திரத்தை வலது கையிலும்,உப்பிருத் என்னும் பாத்திரத்தை இடது கையிலும், உரல் உலக்கைகளை முதுகிலும், திருஷத் என்னும் பாத்திரத்தை (அம்மியை) மார்பிலும், அரிசி,நெய்,எள், இவைகளை முகத்திலும், புரோக்ஷ பாத்திரத்தைக் காதிலும், நெய்ப் பாத்திரத்தைக் கண்களிலும் தங்கத் தகடுகளைக் காது, கண், முகம், மூக்கு இந்த இடங்களிலும் இவ்விதமாக யக்கிய பாத்திரைங்களை எல்லாம் வைத்து மந்திரத்தால் ஒரு ஆகுதி(நெய்யாகுதி) செய்து புத்திரன் அல்லது பிராதா அல்லது வேறொரு சமீப பந்துவாவது சமர்த்தனாக இருந்து விதிப்படி தஹந ஸம்ஸ்காரத்தைச் செய்ய வேண்டும்
இவ்விதமான ஆஹிதாக்நி ஸம்ஸ்கார விதியைச் செய்தால் அந்த ஆஹிதாக்நி ப்ரஹ்ம லோகத்தை நிச்சயமாய் அடைகிறான்.எந்தப் பிராம்மணர்கள் இவ்விதமாகத் தஹநம் செய்தார்களோ அவர்களும் உத்தம கதியை அடைகிறார்கள்
இவ்விதமாகச் செய்யாமல் தங்கள் புத்திக்குத் தோன்றின படியே எவர்கள் இந்தக் கருமத்தைச் செய்கிறார்களோ அவர்கள் அல்பாயுசுக்களாகி அசுசியான நரகத்தில் விழுகிறார்கள் –
இரண்டாவது அத்தியாயம் முற்றிற்று
—
மூன்றாவது அத்தியாயம்.
பிரகீர்ணக பாபங்களுக்குப் பிராயச் சித்தத்தைச் சொல்லிய பின் விருத்த பராசரராலும் மனுவினாலும் விஸ்தரித்துச் சொல்லப்பட்டதும் மலிநீ கரண ரூபங்களான பிராணிஹத்திகளில் செய்ய வேண்டியதுமான பிராயச்சித்தத்தைச் சொல்லுகிறேன். (என்கிறார் பராசரர்)
கிரௌஞ்சம், வண்டாழ்வான், ஹம்ஸம், சக்கிரவாகம், கோழி, வாத்து, சரபம் ஆகிய இந்தப் பக்ஷிகளைக் கொன்றவன் ஒரு நாள் முழுதும் உபவாசமிருந்தால் சுத்தனாகிறான்-ஹம்ஸம் முதலிய பக்ஷிகளைக் கொன்றவன் கோ தாநம் செய்யக்கடவனென்று மனு யாக்கிய வல்கியர்கள் சொன்னது உபவாஸமிருக்க அசக்தனான தநிகன் விஷயமென்று கருத்து.
நாரை, சிறு குருவி, கிளி, மாடப்புற, ஸர்ப்பம், முதலை, இவைகளைக் கொன்றவன் பகலில் உபவாஸ் மிருந்து ராத்திரியில் போஐநம் செய்வதால் சுத்தனாகிறான்-
விருகம் என்னு மொருவித பக்ஷி, காக்கை, புறா பெண் கிளி, சிச்சிலவு இவைகளைக் கொல்லுகிறவன் ஜலத்தின் நடுவில் இரண்டு ஸந்தியைகளிலும் இடை விடாமல் அந்தந்த ஸந்தியைகள் முடியுமளவும் எவ்வளவுப் பிராணாயாமங்களைச் செய்யக் கூடுமோ அவ்வளவும் செய்தால் சுத்தனாகிறான்-
கழுகு, பருந்து, முயலடிப்பா னென்னும் பக்ஷி,கோட்டான் இவைகளைக் கொல்லுகிறவன் அக்நியில் பசநம் செய்யப்படாத கிழங்கு, பழம் முதலியவற்றை ஒரு திநம் புசித்துப் பின்பு மூன்று காலம் ( ஓன்றரை நாள்) உபவாஸ மிருக்கக் கடவன்.-இவைகளைக் கொல்லுகிறவன் ஒரு நாள் உபவாஸமும் ஸகலவிதமான விரை தாநமும் செய்ய வேண்டுமென்று காசியபர் விதித்தது அசக்தனைப் பற்றியதென்று கருத்து.
வல்குலி என்னும் பக்ஷி,நாரையின் பேதம் அல்லது மீன் குத்திக்குருவி, குயில், வலியன், லாவிகை என்னும் பக்ஷி, கருடபக்ஷி,இவைகளைக் கொன்றவன் பகலில் உபவாஸ மிருந்து இரவில் புசிப்பதினால் சுத்தனாகிறான்.
நீர்க் காக்கை, சகோரமென்னும் நிலாமொக்கி, பெண் கோட்டான், அன்றில் பக்ஷி, பரத்துவாஜ பக்ஷி இவை முதலிய பக்ஷிகளைக் கொன்றவன் சைவ மந்திர கல்பத்தில் சொல்லியபடி சிவனைப் பூஜித்தால் சுத்தனாகிறான்
கெண்டபேரண்டம், காடை, தங்கம் போன்ற தலைக் கொண்டையை யுடைய ஒரு பக்ஷி, ஓர்வகைப் புறா,சித்திரவர்ணமான் இறகை யுடைய பக்ஷி, இவைகளைக் கொன்றவனும், மற்ற எல்லாப் பக்ஷிகளையும் கொன்றவனும் ஒரு பகலு மிரவும் சுத்தோபவாஸமிருக்க வேண்டும்.
பெருச்சாளி, அதின் பேதங்கள், பூனை, கீரிப் பிள்ளை, ஸர்ப்பம், மலைப் பாம்பு, தண்ணீர்ப்பாம்பு, இவைகளை அடித்துக் கொன்றவன் எள் பயறு இவைளோடு பசநம் செய்விக்கப்பட்ட கிருஸர மென்கிற அன்னத்தைப் பிராம்மணருக்குப் போஜனம் செய்வித்து எஃகினால் செய்த தடியைத் தக்ஷிணையாகக் கொடுக்கக் கடவன்.
நீர்க் குரங்கு அல்லது ஒருவித முதலை, உடும்பு, ஆமை, சல்லியக மென்னும் ஒருவகை மத்ஸ்யம், முள்ளம் பன்றி, இவைகளைக் கொன்றவன் ஒரு பகலும் இரவும் கத்தரிக்காயை மாத்திரம்
புசித்தால் சுத்தனாகிறான்-இவைகளின் வதத்திலும் காசியபர் முதலானவர்கள் சொன்ன பிராய சித்த பேதங்கள் முன் சுலோகத்தில் சொல்லியபடி சில நிமித்தங்களால் வந்தன வென்று கண்டு கொள்க.-
செந்நாய், குள்ள நரி, கட்டி,சிவிங்கி, நாய் இவைகளைக் கொன்றவன், ஒரு படி எள்ளைப் பிராம்மணனுக்குக் கொடுத்து மூன்று நாள் சுத்தோபவாஸ மிருக்க வேண்டும்.-நாயைக் கொன்றவனுக்கு மூன்று நாள் உபவாஸத்தை விஷ்ணுவும், சூத்திரவத்திற்குரிய பிராயச் சித்தத்தைப் பைடீநஸியும் சொன்னது நெடு நாளாக இந்தப் பாதகத்தைச் செய்து கொண்டிருப்பவன் விஷயமென்று கொள்ள வேண்டும்.
யானை,குதிரை, எருமைக்கடா, ஒட்டகம், இவைகளைக் கொன்றவனுக்கு மூன்று கால ஸ்நாநத்தோடு கூடிய ஒரு நாள் உபவாஸம் பிராயச்சித்தமாம்.
மான், குரங்கு, சிங்கம், புலிபோன்றதான ஒருசித்திர மிருகம்,புலி இவைகளைக் கொன்றவன் பிராம்மண போஜநத்தைச் செய்விப்பதோடு மூன்று நாள் உபவாஸத்தால் சுத்தனாகிறான்.
மான் ஜாதிகள், குதிரையைப் போன்ற சரீரத்தையும் மூன்று கொம்புகளை யுமுடையதான ஒருவிதமான்,பன்றி, சண்டை செய்கிற அப்பியாஸமுடைய ஆட்டுக்கடா, பெண் ஆடு, இவைகளைக்
கொன்றவன் ஒரு நாள் உபவாஸ மிருந்து உழுத நிலத்தில் விளையாத செந்நெல் அரிசியைச் சமைத்துப் பாரணை செய்ய வேண்டும்-
நியாயத்தை உள்ளபடி அறிந்து பாப பேதங்களுக் கீடாகப் பிராயச்சித்தங்களை ஊஹித்து இவ் விதமாகக் கீழ சொல்லப்படாத சகல காட்டு மிருகங்கள் வதத்திலும் (ஐாதவேதஸம் என்
னும் மந்திர ஜபத்துடன் ஒரு நாள் உபவாஸ மிருக்க வேண்டும்.-மூன்று நாள் உபவாஸமும், ஸ்வர்ண தானமும் செய்ய வேண்டுமென்று கசியபர் சொன்னது தனிகனா யிருந்து இந்தப் பாபத்தை
அடிக்கடி செய்து கொண் டிருப்பவன் விஷயம்.
சித்திரம் எழுதுகிறவன் முதலானவன், சமையல் செய்கிறவன் முதலானவன், சூத்திரன்,ஸ்திரீ ஆகிய இவர்களைக் கொன்றவன் இரண்டு பிராஜாபத்திய கிருச்சிரங்களைச் செய்து பத்து பசுக்களையும் பதினோராவதாக ஒரு விருஷபத்தையும் தஷிணையாகக் கொடுக்கக் கடவன்.
தோஷமற்றவனா யிருக்கிற வைசியணை அல்லது அப்படிப்பட்ட க்ஷத்திரியனை எவன் கொல்லுகிறானோ அவன் இரண்டு அதி திருதிச்சி யங்களைச் செய்து இருந்து பசுக்களைத் தஷிணையாகக் கொடுக்கக் கட்டவன்.
அல்ப பாகம் நல்ல நடத்தையோடு கூடின வைசியனையும்,தன் நிலை தவறாத சூத்திரனையும், பிராம்மண வதம் முதலிய விருத்த கருமங்களைச் செய்பவனாகிய ஷத்திரியனையும், விருத்த கருமங்களில் நிலைத்திருப்பவனாகிய பிராம்மண சிரேஷ்டனையும், கொன்றவன் சாந்திராயண விரதத்தை அநுஷ்டித்து முப்பது பசுக்களைத் தக்ஷிணையாகக் கொடுக்கக் கடவன்-
சண்டாளர்களில் ஒருவனைக் கொன்ற பிராம்மணன் பிராஜாபத்திய கிருச்சிரத்தையும் இரண்டு கோதாநத்தையும் செய்தால் சுத்தனாகிறான். க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், பிராம்மண ஸ்திரிக்கு க்ஷத்திரியனால் பிறந்த ஜாதியான ஸூத வம்சத்தான் முதலானவர்கள் ஆகிய இவர்கள் சண்டாளனைக் கொன்றால் பாதிப்பிராஜாபத்திய கிருச்சிரத்தால் சுத்தராகிறார்கள்.
சண்டாளன், சக்கிலி, இவர்கள் திருடராகவர அவர்களைப் பிராம்மணன் கொன்றால் ஒருநாள் உபவாஸமிருந்து பஞ்சகவியத்தைப் புசிப்பதினால் சுத்தனாகிறான்.
சுவபாகனென்னும் சக்கிலி, சண்டாளன் இவர்களோடு பிராம்மணன் ஸம்பாஷித்தால் அவன் அதற்குப் பிராயச்சித்தமாகப் பூர்ணமாய் வேத மோதின மஹா பிராம்மணர்களோடு ஸம்பாஷணம் செய்யக் கடவன், அல்லது காயத்திரியை ஒரு தரம் ஜபிக்கக் கடன்.
சண்டாளர்களுடன் சயனித்துத் தூங்கினவனுக்கு மூன்று நாள் உபவாஸத்தை விதிக்க வேண்டும். சண்டாளனுடன் வழி நடந்தவன் காயத்திரியை ஸ்மரித்தால் சுத்தனாகிறான்-
சண்டாளனைப் பார்த்தவன் சூரியனைப் பார்க்கக் கடவன்,சண்டாளனைத் தொட்டவன் ஸசேல ஸ்நாநத்தைச் செய்யக் கடவன்.-
சண்டாளன் வெட்டுவித்து கிணறுகளில் அல்லது நடைபாவிகளில் பிராம்மணன் அறியாமல் தண்ணீர் குடித்தால் ஒருவேளை ஆஹார விரதத்தினாலும் அறிந்து குடித்தால் ஒரு உபவாஸத்தினாலும் சுத்தனாகிறான்.
சண்டாளன் பாண்டத்தினால் எந்தக் கிணற்றினின்று ஜலம் எடுக்கப் படுகிறதோ அந்தக் கிணற்று ஜலத்தைக் குடித்த பிராம்மணன் மூன்று நாள் கோ மூத்திரத்தைக் குடிப்பதோடு யவ அரிசி மாவையும் புசித்தால் சுத்தனாகிறான்
சண்டாளனுடைய பாண்டத்து ஜலத்தைப் பிராம்மணன் அறியாமல் குடித்து உடனே அறிந்து அதைக் கக்கினால் அப்போது பிராஜாபத்திய கிருச்சிரத்தைச் செய்யக் கடவன். அது வெளிப்படாமல் ஜெரித்து விட்டபஷத்தில் ஸபா ஐநங்கள் அவனுக்குப் பிராஜாபத்திய கிருச்சிரத்தைப் பிராயச்சித்தமாக விதிக்கக்கூடாது, ஸாந்தபநமென்னும் கிருச்சிரம் விதிக்கத்தக்கது.
சண்டாள பாண்ட லத்தை அறிந்து குடித்த பிராம் மணனுக்குஸாந்தப கிருச்சிரத்தையும், க்ஷத்திரியனுக்குப் பிராஜாபத்திய கிருச்சிரத்தையும், வைசியனுக்கு அதில் பாதியும், சூத்திரனுக்குக் கால்வாசியையும் பிராயச்சித்தமாக விதிக்க வேண்டும்.
அந்தியஜாதிகளுடைய பாண்டத்திலிருக்கின்ற ஜலம்,தயிர், பால்,இவைகளைப் பிராம்மணன் க்ஷத்திரி
யன் வைசியன் சூத்திரன் இவர்கள் அறியாமல் குடித்தார்களாகில் இருபிறப்பாளருக்குப் பிர்ம்மகூர்ச்சபாநத்துடன் உபவாஸமும், சூத்திரனுக்கு உபவாஸமும் சக்திக்கீடானதாமும் பிராயச்சித்தமாம்
அஞ்ஞாநத்தினால் சண்டாளாந்கத்தைப் புசித்த பிராம்மணன் கோமூத்திரத்தில் பசநம்செய்த யவஅரிசி அன்னத்தைப் பத்துநாள் புசித்தால் சுத்தனாகிறான்.
(அஞ்ஞாநத்தினால் சண்டாளார்கத்தைப் புசித்தவன்) கோமூத்திரத்தில் பசநம்செய்த யவஅரிசி அன்னத்தைத் திநம் ஒவ்வொரு கவளமாகப் பத்துநாள் புஜிக்கக்கடவன்.நியமத்திலிருப்பவனுக்கு அதாவது, ஸ்நாநம், மெளநம், உபவாஸம், யாகம், வேதமோதல், இந்திரியத்தை அடக்குதல், ஆசாரியன்பணிவிடை, செளசம், கோபமில்லாமை,மனம் நிலைத்திருக்கை இவைகளுடன் கூடி
யிருப்பவனுக்கு) இந்த யாவக ஆஹாரவிரதத்தை உபதேசிக்கவேண்டும்.
சண்டாளன் அறியப்படாதவனாகி எவனுடைய வீட்டில் வசிக்கிறானோ அந்தவீட்டுக்காரன் அவனைச் சண்டாளனென்றறிந்த பின்பு தங்களை அடுத்தானாகில் பிராம்மணர்கள் அவனுக்குப் பிராயச் சித்தோபதேசமாகிறஅநுக்கிரகத்தைச்செய்கிறார்கள்-
சகலவேதங்களையும் ஓதியும் தர்மங்களை அறிந்துமிருக்கிற பிராம்மணர்கள் மஹரிஷிகள் சொல்லியிருக்கின்ற தர்மங்களைச் சொல்லிப் பாபராசியினின்று பாபிஷ்டனைக் கரையேற்றுகிறார்கள்-
தயிரோடும் நெய்யோடும் பாலோடும்கூட்டிக் கோமூத்திரத்தில் பசநம் செய்த யவ அரிசி அந்நத்தைச் சண்டாள ஸஹவாசம் நேரிட்ட வீட்டுக்குடையவனும் அந்த வீட்டில் வசிக்கிற குழந்தை கிழவர் முதலிய எல்லாரும் புசிப்பதுடன் மூன்று காலத்திலும் ஸ்நாநமும் செய்யவேண்டும்.
கோமூத்திர பசந மான யவ அரிசி அந்நத்தைத் தயிரோடு கலந்து மூன்றுநாளும், நெய்யோடு கலந்து மூன்றுநாளும்,பாலோடுகலந்து மூன்றுநாளும் பின்பு இந்தவிதமாக ஒவ்வொருநாளும் ஆகப் பன்னிரண்டு நாள் புசித்தலாகிய இந்த விரதத்தைச் செய்ய வேண்டும்.
இந்தப்போசாத்தில் பாவதுஷ்டமானதையும், எச்சில், புழு, இவைகள் விழுந்து தூஷிக்கப்பட்டதையும், புசிக்கக்கூடாது.-எந்த அந்நம் பார்க்கும்போது அமேத்தியம் முதலானதுகளோடு பலவகையாலும் சமமாக புத்தியில் தோன்றுகிறதோ அது பாவதுஷ்டமானது அதாவது எண்ணத்தினால் தோஷமடைந்தது என்னப்படும்.
தயிர்ப் பால்களைத் திநத்திற்கு மூன்றுபலம் அளவாகவும் நெய்யை ஒருபலம் அளவாகவும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தாம்பிரம் வெண்கலம் இவைகளுக்குச் சாம்பலினால் சுத்தியும் வஸ்திரங்களுக்கு ஜலத்தில் அலம்புவதினால் சுத்தியும் உண்டாகும்.-மண்பாத்திரத்திற்கு அதைவிட்டுவிடுவதே சுத்தியாம். தாம்பிர பாத்திராதிகளுக்குப் போல் மண்பாத்திரத்திற்கு வேறு சுத்தியில்லை.
குசும்பம் (தைலசாதநமான ஒருதானியம்), வெல்லம், பஞ்சு,உப்பு,எண்ணெய்,நெய், தானியம் இவைகளைச் சண்டாள சகவாசம் நேரிட்ட வீட்டுவசற்படியில் வைத்து அந்த வீட்டை நெருப்பிட்டுக் கொளுத்தவேண்டும்.
இவ்விதமாகத்தானும் தன் ஜநங்களும் தன்வீடும் சுத்தி அடைந்தபின் பிராம்மணபோ நம் செய்வித்து முப்பது பசுக்களை ஒரு விருஷபத்துடன் பிராம்மணர்களுக்குத் தக்ஷிணையாகக் கொடுக்க வேண்டும்
பாண்டத்தை விடுவதுபோல் சண்டாளன் வசித்த பூமியை விடவேண்டுவதில்லை. அந்த வீட்டுச்சுவருக்கு மறுபடி பூசுதல், அந்தவீட்டுமண்ணைவெட்டி எடுத்தல் இவைகளைச்செய்வித்துப்
பிராம்மணர்களை அந்தவீட்டில் புகச்செய்து சாந்திஜபங்களையும் சாந்திஹோமங்களையும் செய்தால் அந்தப்பூமி சுத்தமாகிறபடியால் பூமிக்கு விடத்தக்க தோஷமில்லை.
சண்டாளர்களோடு ஒருமாஸம் அல்லது அரைமாஸம் ஸகவாஸம்செய்த பிராம்மணன் கோமூத்திர பாகமான யவ அரிசி அந்நத்தைப் புசிப்பதாகிய விரதத்தை ஒருமாஸதோஷத்திற்கு ஒரு மாஸமும் அரை மாஸ தோஷத்திற்கு அரை மாஸமும் பிராயச்சித்தமாகச் செய்யவேண்டும்.
வண்ணாத்தி, முச்சியின்ஸ்திரீ வேடுவச்சி,மூங்கில்பாய் நெசவுகளால் ஜீவநம்பண்ணுகிற ஒரு ஜாதிஸ்திரீ இவர்கள் பிர்ம்ம க்ஷத்திரிய வைசிய சூத்திரர்கள் வீட்டில் அறியப்படாதவர்களாக
வசிக்கப் பின்புஅவர்களை அறிந்தால் முன் சண்டாள ஸகவாஸத்திற்குச் சொன்ன பிராயச் சித்தத்தில் பாதியே செய்ய வேண்டும், வீட் டைக் கொளுத்த வேண்டியதில்லை. பாத்திரங்களைச் சுத்தி செய்வது முதலிய மற்ற எல்லாவற்றையும் செய்ய வேண்டும் .
பிராம்மணாதிகளுடைய வீட்டில் சண்டாளன் உள்ளேபுகுந்தால் அவனை அந்தவீட்டினின்று அப்புறப்படுத்தி மண்பாத்திரங்ககளை எடுத்தெறிந்து விடவேண்டும். எண்ணெய், நெய்முதலான ரஸங்களின் பாண்டங்களை எறியவேண்டியதில்லை .சாணி லத்தினால் அந்த வீட்டை நன்றாக அலம்ப வேண்டும்.
எந்தப் பிராம்மணனுக்குத் தேகத்தில் சீயும் ரக்தமும் பெருகிக் கொண்டிருக்கிற புண் வாயில் புழு உண்டாகிறதோ அவனுக்குப் பிராயச்சித்தம் எப்படி ஆகும்?-
சுக்களுடைய மூத்திரம் சாணி இவைகளாலும் தயிர் பால் நெய்களாலும் அதாவது பஞ்சகவியத்தால் மூன்றுநாள் ஸ்நாநம்பண்ணி மூன்றுநாள் பஞ்சகவியத்தைக் குடித்தால் புண்ணில் புழுத்தவன் சுத்தனாகிறான்.
ஷத்திரியனுக்கானால் ஐந்துமாஷம் அளவுள்ள ஸ்வர்ணதாநமும் வைசியனுக்கானால் கோதக்ஷிணையும் உபவாஸமும் விதிக்கவேண்டும். சூத்திரனுக்கு உபவாஸம் இல்லை, ஆனால் தாநத்தினால் சுத்தனாகிறான்
பூமிதேவர்களான பிராம்மணர்கள் அச்சித்ரம் (பரிபூர்ணம் என்று எந்தவாக்கியத்தைச் சொல்லுகிறார்களோ, அந்த வாக்கியமானது அக்கிஷ்டோமமென்னும் யாகத்தினால் கிடைத்த பலன் போன்றதாகையால் ஒருவன் அதைவணங்கிச் சிரத்தினால் கிரகித்துக்கொள்ள வேண்டும்.
ஒருபிராயச்சித்தத்தை அனுஷ்டிக்குங்காலத்தில் அதினுடைய ஏற்றக் குறைவுகளின் பூர்த்திக்காக ஸம்பூர்ணமாகட்டுமென்று பிரமாண வாக்கியத்தை அவசியம் பிரார்த்தித்துப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பது கருத்து.
ஜபத்திலுண்டான சித்ரம் (குறைவு), தபஸிலுண்டான சித்ரம், யக்கியத்திலுண்டான சித்ரம் இவைகளெல்லாம் பிராம்மணர்களால் அச்சித்ரம் (ஸம்பூர்ணம்) என்று சொல்லப்பட்டனவாகி
அப்படியே ஸம்பூர்ணமாகின்றன.
ஒருவன் வியாதியினால் பீடிதனாயிருக்கையிலும் நெடுந் தூரம் வழி நடந்து இளைத்திருக்கையிலும் தெய்வீகமான துர்ப்பி காலத்திலும் அந்நிய ராஜாவினால் தன்தேசத்திற்குத் துன்பம்
உண்டாயிருக்கையிலும் தான்செய்யவேண்டிய உபவாசம்,விரதம், ஹோமம் இவைகளைப் பிராம்மணர்களைக்கொண்டு செய்வித்துக் கொள்ளலாம். தன் பிதா முதலியவர்களும் தனக்காகச் செய்யலாம்.
ஒன்றையும் செய்து கொள்ளக் கூடாத விசேஷ ஆபத்து நேரிட்ட பக்ஷத்தில் வேதத்தை முழுதுமோதின பெரியோர்களான பிராம்மணர்கள் இவன் முன் செய்திருந்த உபகாரத்தினால் சந்தோஷித்தவர்களாகி ஆபத்தை அடைந்திருப்பவனை நோக்கி நீ தோஷ மற்றவனாகக் கடவை யென்று அனுக்கிரகிக்கிறார்கள். அவ்வளவு மாத்திரத்தினால் ஒருவன் ஒரு விரதத்தையும் அனுஷ்ட்டிக்காமலே குரு பிதா முதல்வர்களாக யுள்ள பிராம்மணர்களுடைய ஆசீர்வாதத்தினால் ஸகல இஷ்டங்களையும் அடைகிறான்.
முன் சொல்லியபடி வியாதி முதலான காரணங்களால் பிராயச் சித்தத்தைச் செய்யச் சக்தியற்றவன் விஷயத்திலும், அப்படியே பால விருத்தர்கள் விஷயத்திலும்,பெரியோர்கள் அவர்களை அனுக்கிரகிக்கத் தக்கவர்கள். அப்படி யில்லாமல் சக்தி யுள்ளவன் விஷயத்தில் அநுக்கிரகித்தால் தோஷம் ஸம்பவிக்கும், ஆகையால் அப்படிப் பட்டவர்கள் விஷயத்தில் அனுக்கிரகம் செய்யத் தக்கதன்று.-தர்ம சாஸ்திரத்தை அறியாதவனும் ஒருத்தனாயிருப்பவனும் அந்த அநுக்கிரகத்தைச் செய்யக் கூடாதென்றும் தர்மங்களை அறிந்த பிராம்மணர்கள் அநேகர் கூடி அனுக்கிரகிக்க வேண்டுமென்றும் தேவலர் சொன்னார்.
புத்திரமித்திராதிகள் விரதத்தை அனுஷ்டிக்கச் சக்தி யுள்ளவர்களாயிருக்க அவர்களிடத்தில் ஸ்நேகத்தாலாவது தன்னிடத்தில் பொருளாசையிலாவது ராஜா முதலியவர்களிடத்தில்
பயத்தினாலாவது துர்ப்பலன் விஷயத்தில் அனுக்கிரகம் செய்ய வேண்டுமென்கிற சாஸ்திரத்தை அறியாமல் எவர்கள் கீழ்ச் சொன்ன சக்தர்கள் விஷயத்திலும் அநுக்கிரகத்தைச் செய்கிறார்களோர் அவர்களிடத்தில் அனுக்கிரகம் செய்யப்பட்டவர்களுடைய பாபம் சேருகிறது.
ஒருவன் பாபியாயிருந்து அவனுடைய சரீரத்திற்கு அந்தியம்வந்தால் (மரணகாலம் ஸம்பவித்து பூமியில் படுத்திருக்கை நேரிட்டால்) அந்தத்தசையில் அவனுக்குச்செய்ய அசாத்தியமான
பிராயச்சித்தத்தை எவர்கள் சொல்லுகிறார்களோ அவர்கள் மரிக்கப் போகிறஅந்தப்பாபியானவன் அருகேயிருக்கின்ற பந்துக்கள் வாக்கியத்தினால் அப்போதுசெய்கிற தேவதாத்தியானத்தைத் தடுப்பதினால் அவனுடைய பாபம் அவர்களிடத்தில் சேருகிறது. சுகமான சரீரத்தை யுடையவனுக்குக் கீழ்ச் சொன்ன தேவதாஸ்மரண விரோதமில்லாமையால் பிராயச்சித்தத்தைச் சொல்லலாம்
வியாதி முதலிய ஆபத்துக்களை யுடையவனுக்கு மாத்திரம் பதிலாக மற்றொருவன் விரதங்களை அனுஷ்டிக்கலாமென்கிற சாஸ்திரத்தைஅறியாதவர்களாகிச் சுகமாக இருக்கிற ஒரு தனிகனு
க்குப் பதிலாக விரதத்தை எவர்கள் அநுஷ்டிக்கிறார்களோ அவர்களும்,இது சாஸ்திரவி திதானென்று எவர்கள் சொல்லுகிறார்களோ அவர்களும், அவனுடைய பாபம் நீங்கும் விஷயத்தில் தடை செய்தவர்களாகையால் அசுசியான நரகத்தில் விழுகிறார்கள-
சாஸ்திரத்தில் சொல்லிய நியமத்தைவிட்டு அதைச் சொல்லுகிற பிராம்மணனையும் அலட்சியம் செய்து தனக்குத் தோன்றியபடி பிராயச்சித்தத்தைச் செய்பவன் பிராயச்சித்த பலனான புண்ணியத்தை அடைகிறதில்லை. அவனுடைய உபவாஸமும் வீணாகும்.
பிராம்மணர்களுடைய விதி வாக்கியத்தின்படி பிராயச்சித்தம் அனுஷ்டிக்கத்தக்கது, வெகு பிராம்மணர்கள் கிடையாதபக்ஷத்தில் ஒரு பிராம்மணனாவது சொல்லுகிறபிராயச்சித்தத்தைச் செய்ய
வேண்டும், அப்படிப் பிராம்மணர்களுடைய அனுமதியின்றியே தானாகச் சாஸ்திரங்களை ஆலோசித்துப் பிராயச்சித்தங்களைச்செய்பவன் புரூணத்தியின்தோஷத்தை அடைகிறான்.
பிராம்மணர்கள் ஐங்கமங்களான (ஸஞ்சரிப்பவைகளான) புண்ணிய தீர்த்தங்களென்னப்படுகிறார்கள். பெரியோர்கள் பரிசுத்தர்களாகையால் அவர்கள் தீர்த்தங்களுக்கு ஸமானமானவர்கள். அவர்கள் விதிக்கிறவாக்கியமென்னும் ஜலத்தினால் பாபமாகிய அழுக்கடைந்த மனிதர்கள் பரிசுத்தர்களாகின்றனர்.
பிர்ம்மம் என்பது வேதம், அதில் நிஷ்டையுடையவர் பிராம்மணர். அவர்கள் எந்த வசநங்களைச் சொல்லுகிறார்களோ அந்த வசகங்களைத் தேவதைகள் அப்படியே அநுமதிசெய்கிறார்கள்.
ஸகலதேவதைகளையும் சொல்லுகிற வைதிகமந்திரங்களைத் தரிக்கிறபடியால் பிராம்மணர் ஸகல தேவதா ஸ்வரூபியாகிறார்கள். அவர்கள்சொல்லுகிற வசநம் வேறாகிறதில்லை.
உபவாஸம், வேறுவிரதம்,நாநம், ஸ் தீர்த்தயாத்திரை,ஜபம், தவம், இவைகள் எவனுக்குப் பிராம்மணர்களுடைய அனுமதியினால் செய்யப்படுகின்றனவோ அவைகளுடைய பலன் அவனுக்குப்
பரிபூர்ணமாகக் கிடைக்கிறது
பக்குவமான அந்நமானது சமைத்த பாண்டத்தில் அல்லது போஜந பாத்திரத்தில் புழு ஈ மயிர் இவைகளால் தோஷத்தை அடைந்திருந்தால் அந்த அந்நத்தின் நடுவில் தீர்த்தத்தினால் புரோக்ஷித்துக்
கொஞ்சம் பஸ்மத்தைச் சேர்க்க வேண்டும்.
எந்தப்பிராம்மணன் இடதுகையினால் தன் பாதத்தைத் தொட்டுக்கொண்டு புசிக்கிறானோ அவனும் இரண்டு வகையான இலைகளைச் சேர்த்துத் தைத்த இலையில் எவன் புசிக்கிறானோ
அவனும் இடது கையால் போசந பாத்திரத்தை ஸ்பர்சிக்காமல் எவன் புசிக்கிறானோ அவனும் தங்களுடைய எச்சிலைத் தாங்களே புசிக்கிறவர்களாகிறார்கள்.
பீடத்தில் கால்களை வைத்துக்கொண்டுஉட்கார்ந்தும்,) பாதக்குறட்டின் மேலிருந்தும், படுக்கையிலிருந்தும், நின்று கொண்டும், புசிக்கலாகாது. புசிக்கும் போது நாய் சண்டாளன் முதலியவர்களைப் பார்க்கும்படி நேரிட்டால் அந்த அந்நத்தை விட்டுவிடவேண்டும்.
(ஓ ரிஷிகளே) எந்த அந்நம் நிஷதிக்கப்பட்டதோ அதையும்,அந்நத்திற்குச் சுத்தி எதினாலேயோ அதையும் முன் விருத்த பராசரர் எந்தவிதமாகச் சொல்லியிருக்கிறாரோ அப்படியே உங்களுக்கு நான் சொல்லுகிறேன் (என்கிறார் பராசரர்).இதனால் கல்பங்கள் தோறும் அதிகாரிபுருஷர்களான மனு வஸிஷ்டாதிகள் சிருஷ்டிக்கப்படுவது போலக் கலியுக தர்ம சாஸ்திராதிகாரியாகப் பராசர முனிவரும் அந்தந்தக் கல்பங்களில் சிருஷ்டிக்கப் படுகிறாரென்பதும் அவருடைய வாக்கியம் பிரமாணமா மென்பதும் பெறப்பட்டன.
துரோணம் ஆடகம் என்னும்அளவை மேலே சொல்லப் போகிறார்.ஒரு துரோணம் ஒரு ஆடகம் அளவுள்ள நெல்லின் சம்பந்தமான பக்குவாந்நமானது காக்கை, நாய் இவைகளால் நக்கப்படுதல் முதலிய சேஷ்டைகள் நேரிட்டுத்தூஷிக்கப்பட்டால் இந்த அந்நம் எதினால் சுத்தமாகுமென்று பிராம்மணர்களுக்கு விண்ணப்பம் செய்யவேண்டும்.
காக்கை நாய்இவைகளால் தூஷிக்கப்பட்டதான் கீழே சொன்ன துரோணாநத்தைத் தர்மத்தைஅறிந்த பிராம்மணன் பரித் தியாகம் செய்யக்கடவனல்லன்.
வேதங்கள் வேதாங்கங்கள் இவைகளைக் கற்றுணர்ந்தபெரியோர்களும் தர்மசாஸ்திரத்தைப் பரிபாலநம் செய்கிறவர்களுமான பிராம்மணர்களால் முப்பத்திரண்டுபடி அளவுள்ளது துரோணமென்றும் இரண்டுபடி அளவுள்ளது ஆட மென்றும் நிச்சயிக்கப்பட்டது.
வேதம் ஸ்மிருதி இவைகளை அறிந்தவர்கள் கீழ்ச்சொன்ன துரோண ஆடக அளவையுடைய அந்நம் சுத்தமானதென்று நிச்சயிக்கிறார்கள்
காக்கை நாய் இவைகளால் நக்கப்பட்டதும் கவ்வப்பட்டதும் கழுதையால் முகரப்பட்டதுமான துரோண ஆடக அளவுள்ள அந்நத்தில் ஸ்வல்ப பாகத்தை எடுத்தெறிந்துவிடுவதினால் அதற்குச் சுத்தியுண்டாகும்
துரோணாடகமளவையுடைய அந்நத்தில் எவ்வளவு பாகம் நாய் காக்கைகளால் கவ்வப்பட்டதோ அவ்வளவு பாகத்தையும் அப்போது நாயின் வாய்ச் சொள்ளு நீர் எவ்வளவு அந்த்தில் விழுந்திருக்குமென்று தோன்றுகிறதோ அவ்வளவு அந்நத்தையும் எடுத்தெறிந்துவிட்டு மிகுந்த அந்நத்தை ஸ்வர்ணத்தோடு சம்பந்தப்பட்ட ஜலத்தினால் புரோக்ஷித்துப் பின்பு ஒருதரம் அக்நியில்
சுடவைக்கவேண்டும். இவ்விதமாக ஸ்வர்ண ஐலத்தினாலும் அக்நியினாலும் ஸ்பர்சிக்கப்பட்டதும், பின்பு பிராம்மணர்களுடைய “பவமாக ஸக்தம்” முதலான வேதகோஷத்தினால் சுத்தி செய்யப் பட்டதுமான அந்த அந்நமானது பிராம்மணர்களுடைய அநுமதியினால் அப்பொழுதே புசிக்கத் தக்கதாகும்.
எண்ணெய் முதலிய ரஸம்,பால் முதலானவை ஆகிய இவைகளுக்கு நாய் காக்கை முதலானவைகளால் தோஷம் ஸம்பவித்தால் வஸ்து அல்பமாயிருந்தால் அதைப் பரிகரிப்பதினாலும் அதிகமாயிருந்தால் எண்ணெய் முதலிய ரஸங்களைக் காய்ச்சுவதினாலும் பால் முதலிய கோ ரஸங்களை அக்நி ஜ்வாலையில் காட்டுவதினாலும் அல்லது காய்ச்சுவதினாலும் சுத்தி விதிக்கப்படுகிறது.
மூன்றாவது அத்தியாயம் முற்றிற்று.
நான்காவது அத்தியாயம்.
அந்நத்திற்கும் ரஸத்திற்கும் சுத்தியைச் சொன்ன பின்பு கீழ்ச் சொன்ன பிராயச்சித்தம் முதலியவை திரவிய சுத்தி யன்றிச் சிறந்தவைகளாக மாட்டாவாகையால் விருத்த பாரசரார் கூறியபடி திரவிய சுத்தி சொல்லப்படுகிறது.
மரத்தால் செபய்யப்பட்ட ( ஸ்ருக்கு, ஸ்ருவை முதலிய ) பாத்திரங்களுக்கு மல மூத்திரப் பிரதேசங்களின் அதிக சம்பந்தத்தால் துர்க்கந்தமுதலிய அசுத்தி ஸம்பவித்து மண்ஜலங்களால் அலம்பியும் அந்தத் தோஷம் நீங்கா விட்டால் வாசிமுதலிய ஆயுதங்களைக்கொண்டு சீவுகிறதினால் அவைகளுக்குச் சுத்தி உண்டாகிறது.
வெண்கலம் பஸ்மத்தினாலும் தாம்பிரம் புளியினாலும் சுத்தமாகின்றன.-புளியாலும் உப்பாலும் ஈயம், ஸீஸம், தாம்பிரம் இவைகளுக்குச் சுத்தி யுண்டாகுமென்று யாக்கிய வல்கியர் சொன்னார்.
வியபிசாரம் செய்கிற ஸ்திரீ வியபிசாரத்தினால் கர்ப்பம் தரியாதவளாயிருந்தால் அவள் மாஸ ருதுவினால் சுத்தையாகிறாள்.
ஓடிக்கொண்டிருக்கிற நதியானது அகத்த மான வஸ்துக்களின் ஸம்பந்தம் வெள்ளத்தில் காணப்படாத பக்ஷத்தில் வேகத்தினால் சுத்தியை அடையும்.
நடைபாவி கிணறு குளம்இவைகள் தோஷத்தையடைந்தால் அவைகளினின்று நூறு குடம் ஐலத்தை எடுத்து வெளியே கொட்டுவதினாலும் பஞ்சகவியத்தை அவைகளில்சேர்ப்பதினாலும் சுத்தி யுண்டாகிறது.
எட்டுவயதினை யுடையவள் கௌரி, ஒன்பது வயதினை யுடையவள்ரோஹிணி, பத்துவயதினை யுடையவள் கந்நிகை, பத்துவயதிற்கு மேல்பட்ட வயதினையுடைய வள் ரஜஸ்வலை என்னப்படுவார்கள்.
பனிரண்டாவது வயதுவந்தபின் (ருது உண்டாவதற்குமுன்) எவன் தன் கந்நிகையைத் தாநம் செய்யவில்லையோ அவனுடையபிதிர்கள் அந்தப்பெண்ணினுடைய பிரதிமாத ருது
மலத்தைப் புசிக்கிறார்கள்
விவாகம் செய்வதற்கு முன் பெண்ணைத் தன் வீட்டில் ரஜஸ்வலையாகப் பார்த்த அந்தப் பெண்ணினுடைய தாய், தந்தை, மூத்த சகோதரன் இம் மூவரும் நரகத்தை அடைகிறார்கள்-இதனால் ருதுவாவதற்கு முன் கந்நியாதாநம் செய்யாதவன் தன் பிதிர்க்களை நரகத்தில் தள்ளுவது போல் தானும் குடும்பத்துடன் நரகத்தில் விழுகிறானென்பது சொல்லப்பட்டது.
பிதிர் கிருகத்தில் ருதுவான பெண்ணை எவன் மதத்தினால் விவேக மற்றவனாகி விவாகம் செய்கிறானோ அவன் ஸம்பாஷணம் செய்யத் தக்கவனன்று, அந்தப் பிராம்மணன் விருஷளீபதி என்னப் படுவன்-
எந்தப் பிராம்மணன் ருதுவான பெண்ணை விவாகம் செய்து அவளுடன் ஒரு நாள் சங்கமம் செய்கிறானோ அவன் மூன்று வருஷம் பிக்ஷாந்தத்தைப் புசித்தும் நித்தியமும் (காயத்திரியை)
ஜபித்தும் சுத்தனாகிறான்- இங்கு இந்த மந்திரத்தை ஜபிக்க வேண்டுமென்று சொல்லாமையால் ஸர்வ பிராயச்சித்தமான காயத்திரி ஐபமே சொல்லப்பட்ட தென்று அறிக.
சூரியன் அஸ்தமனமானபின் சண்டாளன் பதிதன் பிரஸவித்த ஸ்திரீ இவர்களையும் பிணத்தையும் தொட்டவனுக்குச் சத்தி எதினால் விதிக்கப்படுகிறது (என்றால்) அக்கிநி,பொன், சுக் கிலபக்ஷத்தில் சந்திரன் அல்லது சந்திரனிருக்கும் மார்க்கம் இவை களில் எதாவதொன்றைப் பார்த்துப் பிராம்மணர்களின் அநுமதி பெற்று ஸ்நாநம் செய்வதினால் அவனுக்குச் சுத்தி யுண்டாகிறது.
ரஜஸ்வலையாயிருக்கிற பிராம்மணஸ்திரி அப்படிப்பட்ட பிராம்மணஸ்திரீயைத் தொட்டால் அவள்தொட்டதுமுதல் ஸ்நாங்காலம்வரையில் ஆகாரமில்லாமலிருந்து திரிராத்திர கிருச்சிரத்தைச்
செய்வதால் சுத்தையாகிறாள். இந்தவிஷயம் தொட்டவளுக்கும் தொடப்பட்டவளுக்கும் சரியானதே. ரஜஸ்வலையாயிருக்கிற பிராம்மண ஸ்திரி அப்படிப்பட்ட க்ஷத்திரியஸ்திரீயை ஸ்பர்சித்தால் பிராம்மண ஸ்திரீ பிராஜாபத்திய கிருச்சிரத்தில் பாதியும், க்ஷத்திரியஸ்திரி அதில் பாதியும், அதாவது கால்வாசியும் செய்யக்கடவர்கள். ரஜஸ்வலையாயிருக்கிற பிராம்மணஸ்திரீ அப்படிப்பட்ட வைசியஸ்திரீயை ஸ்பர்சித்தால் அவள் பிராஜாபத்திய கிருச்சிரத்தைக் கால்பாகத்திற்குக் குறைந்ததாகவும், வைசியஸ்திரீ கால்பாகமும்,செய்யக்கடவர்கள். ரஜஸ்வலையாயிருக்கிற பிராம்மணஸ்திரீ அப்படிப்பட்ட சூத்திரஸ்திரீயை ஸ்பர்சித்தால் பிராம்மணஸ்திரீ பிராஜாபத்தியகிருச்
சிரத்தாலும் சூத்திரஸ்திரீதானத்தினாலும் சுத்தைகளாகிறார்கள்.-
ரஜஸ்வலையானஸ்திரீ நாலாவது நாளில் ஸ்நாநம்செய்வதினால் சுத்தையா கிறாள். அன்றைய திநத்தில் ரஜஸ் ஒழிந்திருந்தால் அவள் தைவகர்மத்தையும் பிதிர்கர்மத்தையும் செய்யத்தக்கவள்.
ஸ்திரீகளுக்கு ரோகத்தினால் தினந்தோறும் யாதொரு ரஜஸானது உண்டாகிறதோ, அந்த ரஜஸானது அகாலத்தில்உண்டானதாகையால் அதனால் அந்தஸ்திரீ அசுத்தையாகாள்.
ஸ்திரீக்கு எவ்வளவுகாலம் ரோகத்தினால் ரஜஸானது ஒழியாமலிருக்கின்றதோ அவ்வளவு காலம் அந்தஸ்திரீ தைவகர்மத்திற்கும் பிதிர்கர்மத்திற்கும் செய்யத்தக்க சமைத்தல்முதலிய நல்ல
காரியத்தைச் செய்யத் தக்கவளன்று. அந்த ர ஸானது ஒழிந்துவளவில் புருஷனால் அடையத்தக்கவளாகவும் கீழ்ச்சொன்ன சமைத்தல் முதலிய கிரு கிருதியங்களைச் செய்யத் தக்கவளாகவும் ஆகிறாள்.
ரஜஸ்வலையானவள் முதல்நாளில் சண்டாள ஸ்திரியாகவும் இரண்டாவது நாளில் பிர்ம்மஹத்தி செய்தவளாகவும் மூன்றாவதுநாளில் வண்ணார ஸ்திரீயாகவும் சொல்லப்படுகிறாள். நான்காவது திநத்தில் சுத்தையாகிறாள்
ஆதுரனென்றால் ஜ்வரம் முதலிய வியாதியால் பீடிக்கப்படுகிறவன். அவனுக்கு ரஜஸ்வலை முதலியவர்களுடைய ஸ்பர்சம் பந்துமரணம் இவைமுதலிய நிமித்தங்களால் ஸ்நாநம் செய்ய
நேரிட்டால் நோயில்லாத மற்றொருவன் ஆதுரனைத்தொட்டுத்தொட்டுப் பத்துதரம் ஸ்நாநம் செய்தால் ஆதுரன் சுத்தானாகிறான் –
உச்சிஷ்டனான பிராம்மணன்உச்சிஷ்டனான மற் றொரு பிராம்மணனால் தொடப்பட்டாலும் அல்லது நாயால் அல்லது சூத்திரனால் தொடப்பட்டாலும் ஓரிரவு மாத்திரம் உபவாஸமி ருந்து பஞ்சக வியத்தினால் சுத்தனாகிறான்.
உச்சிஷ்டனல்லாத சூத்திரனோடு பிராம்மணனுக்கு ஸ்பர்சம் நேரிட்டால் ஸ்நாநம் விதிக்கப்படுகிறது. உச்சிஷ்டனான சூத்திரனால் தொடப்பட்ட பிராம்மணன் பிராஜாபத்திய கிருச்சிரத்தைச் செய்யக்கடவன்
மத்தியத்தினால் நன்றாகப் பூசப்படாத வெண்கலபாத்திரமானது பஸ்மத்தினாலும் மத்தியத்தினால் நன்றாகப் பூசப்பட்ட வெண்கல பாத்திரமானது நெருப்பில் காய்ச்சுவதினாலும் ஆ த்தினால்
மேல்பாகத்தில் சீவுவதனாலும் சுத்தியையடைகின்றன.
மலமூத்திரங்களின் ஸம்பந்தத்திலும் இந்தச் சுத்தியேசெய்ய வேண்டுமென்றும் மாம்சத்தினால்தோஷத்தையடைந்தால் நெருப்பில் காய்ச்சுவதினால் சுத்தியென்றும் வேறுஸ்மிருதியில் சொல்லப்பட்டது.
பசுவினால் முகரப்பட்டதும் நாய் காக்கைகளால்தூஷிக்கப்பட்டதும்சூத்திரனுடைய எச்சில் அல்லது சூத்திரன் புசித்தசேஷம் இவைகளையுடையதுமான வெண்கலப்பாத்திரங்கள் பஸ்மத்தினால் பத்து தரம் அலம்பச் சுத்தங்களாகின்றன.
வெண்கலப் பாத்திரத்தினால் வாய் கொப்புளித்தலையும் கால்அலம்புவதையும் செய்தவன் அதை ஆறுமாஸம் பூமியில் புதைத்து வைத்துப் பின்பு எடுத்து உபயோகித்துக் கொள்ளக்கடவன்.
இரும்பினால் செய்த பாத்திரங்கள் தோஷத்தையடைந்தால் அவைகளை மற்றொரு இரும்பினால் ராவுவதினாலும் ஈய பாத்திரத்தை உருக்குவதினாலும் சுத்தி உண்டாகிறது.
யானையின் தந்தத்தி னால் செய்யப்பட்டபாத்திரம் யானையின் எலும்பினால் செய்யப்பட்ட கரண்டம்முதலியவை, எருமைக்கொம்பினால் செய்யப்பட்டகரண்டம், வெள்ளி பொன் இவைகளால் செய்யப்பட்ட பாத்திரம், ரத்திநங்களால் செய்யப்பட்ட பாத்திரம், சங்கம் ஆகிய இவைகளுக்கு அலம்புவதினாலும் கல்பாத்திரத்திற்கு அலம்புவதோடு மற்றொரு கல்லில் உரைத்தலாலும் சுத்தியுண்டாகிறதென்று சொல்லப்பட் டது.
மண் பாத்திரங்களுக்கு எச்சில் முதலிய தோஷம் சம்பவித்தால் நெருப்பில் கொளுத்துவத்தினாலும் தாநியத்திற்குப் புரோக்ஷணத்தினாலும் சத்தி உண்டாகிறது.
மூங்கில்,மூங்கிற்பாய், மூங்கில் விசிறிமுதலிய மூங்கிலால் செய்யப்பட்ட வஸ்துக்களுக்கும் காட்டில் வசிப்பவர்கள் தரிக்கிற மரவுரி, வெண்பட்டு,பருத்தி இவைகள்சம்பந்தமான வஸ்திரம் இவைகளுக்கும் கம்பளம் வன வாசிகள் தரிக்கின்ற பூர் மரப்பட்டை இவைகளுக்கும் புரோக்ஷணத்தினால் சுத்தி உண்டாகிறது.
முஞ்சிப்புல்லினால் செய்யப்பட்ட ஆஸநம் முதலியவைகள், முறங்கள், சணல்பிரியினாற் செய்த கோணி முதலியவைகள், மாம்பழம் முதலியவைகள், மான் தோல் முதலியவைகள், புல்,விறகு, கயிறு ஆகிய இவைகளுக்குப் புரோக்ஷிப்பதே சுத்தியாக நிச்சயிக்கப்பட்டது.
இலவம்பஞ்சினால் செய்யப்பட்ட மெத்தை,திண்டு, ஆஸநம், தலையணை, குஸ்-ம்பாசாயமேற்றின வஸ்திரம் முதலியவைகள் வெயிலில் உலர்த்துவதினாலும் புரோக்ஷணத்தினாலும் பரிசுத்தங்களாகும்.
பூனை,ஈ, பூச்சி, விளக்கு விட்டில்பூச்சி, புழு, தவளை இவைகள் பரிசுத்தமாயும் அபரிசுத்தமாயுமுள்ள வஸ்துக்களை ஸ்பர்சிப்பவைகளா யிருந்தபோதிலும் அவைகள் அசுத்தங்களன்றென்று மநு சொன்னார்.
கால்களை அலம்பும் போதும் ஆசமநம் செய்யும் போதும் பூமியில் விழுந்து பிந்துவாகத் தன்மேல்பட்ட ஜலமும் ஒருவர்க்கொருவர் ஸம்பாஷணம் செய்யும்போது முகத்தில் நின்று தேகத்தில் பிந்துவாக விழுந்த ஜலமும் போஜநம் செய்து கையை அலம்புகையில் விடாமலிருக்கிற நெய் எண்ணெய் இவைகளின்சிக்கும் எச்சிலல்லவென்று மநு சொன்னார் .
தாம்பூலம்,கரும்பு, பழம், புசித்தகையிலுள்ள நெய்ச்சிக்கு, மதுபர்க்கம், ஸோமம் இவைகளுக்குத் தர்மமாக எச்சில்தோஷமில்லை என்றறிகிறார்கள்.புசித்தகையிலுள்ள நெய் சிக்குக்கு எச்சில் தோஷமில்லாதது போல் தாம்பூலாதிகளை வாயில்வைப்பது விவாகத்தில் மதுபர்க்கபாநம்செய்வது யாகத்தில் ஸோமபாநம் செய்வது இவைகளுக்கும் எச்சில்தோஷமில்லை யென்று அறிக.
தெருவில் போகின்ற சேற்றுத்தண்ணீரும், ஓடங்களும், வழியும், புல்லும்,சுட்ட செங்கல் கட்டடங்களானமரத்தடியிலுள்ள மேடை முதலியவைகளும்,சண்டாளாதிகளால் தொடப்பட்டால் காற்றினாலும் சூரியனாலும் அவைகள் சுத்தியை அடைகின்றன.
கமண்டலம்முதலிய தீர்த்தபாத்திரங்களினின்று வாய்வரைக்கும் விடாமல் ஒரேதாரையாகவிழுகிற ஜலங்களும், பலஇடங்களினின்று காற்றினால் கிளப்பப்பட்ட தூளிகளும் சுத்தமானவைகளே. புருஷனைப்போல் பிராதஸ்நாநம்முதலியவைகளை அநுஷ்டிக்காதவர்களேயாகிலும் ஸ்திரீகளும், கிழவர்களும், பாலர்களும் ஒருகாலத்திலும் அசுத்தர்களாகமாட்டார்கள்-
நான்காவது அத்தியாயம் முற்றிற்று.
—
ஐந்தாவது அத்தியாயம்.
கட்டுவதற்கு யோக்கியங்களான கயி களில் கட்டப்பட்ட பசுக்களுக்கு (இங்குமங்கும் சஞ்சரிக்கையில் கழுத்தில் உச்சுருக்கு நேரிட்டு) அறியாமல் மரணம் ஸம்பவித்தால் அறியாமல் செய்தகோவதரூபமான அந்தப் பாபத்திற்குப் பிராயச்சித்தம் எவ் விதமாகும் ?
பாப த்தைச்செய்தவன் வேதங்களையும் வேதாங்கங்களையும் அறிந்தவர்களும் தர்மசாஸ்திரத்தைக் கற்றுணர்ந்தவர்களும் தம் வர்ணாச்சிரமதர்மங்களை அன்புடன் அநுஷ்டிப்பவர்களுமான பிராம்மணர்களுக்குத் தன்பாபத்தை அறிவிக்கக்கட்டவன்
பிராஜாபத்தியம் ஸெளம்மியம் முதலிய விரதங்களை அனுஷ்டிக்காதவர்களும் வேதத்தை ஓதாதவர்களுமாகிப் பிராம்மண ஜாதியில் பிறந்ததை மாத்திரம் சொல்லிக் கொண்டு
பிழைக்கிறவர்கள் ஆயிரம் பேர்களாகச் சேர்ந்தாலும் அவர்களுக்குப் பரிஷத்தன்மை கிடையாது.
புத்திக்குறைவினால் கு மநியாயங்களில்மூடர்களும், தம்மைப் பண்டிதரென்று நினைத்துக் கொண்டவர்களும், இன்னபாகத்திற்கு இவ்விதமான பிராயச்சித்தமென்று அறியாதவர்களுமான
புருஷர்கள் எந்தப்பாபத்திற்குப் பிராயச்சித்தத்தை வேறாகச்சொல்லுகிறார்களேர் அந்தப்பாபமானது நூறுபங்கு அதிகமாகி அந்தப்பிராயச்சித்தம் சொன்ன மூடர்களையே அடைகிறது.
தர்மசாஸ்திரங்களைப் படியாமல் பெரியோர்களிடத்தில் பிராயச்சித்த விதிகளைப் பார்த்து அறிந்துகொண்டுஎவன் பிராயச்சித்தத்தை விதிக்கிறானோ அந்தப் பிராயச்சித்தம் பெரியோர்கள்
டத்தில் அறிந்து சொன்னதாகையால் அதைச்செய்துகொண்டவன் சுத்தனாகிறான், ஆனால் அதை விதித்தவன் பாபத்தை அடைகிறான்.
வேதம் முதலிய சாஸ்திரங்களைக் கரைகண்ட நான்கு அல்லது மூன்று பிராம்மணர்கள் சேர்ந்து எதைச் சொல்லுகிறார்கள்ளோ அது தர்மமென்று அறியத்தக்கது. அப்படியல்லாத மூடர்கள் ஆயிரம்பேர் கூடிச் சொன்னாலும் அது தர்மமாகாது.
பிரமாணமார்க்கமென்று சொல்லப்படுகிற தர்மசாஸ்திரத்தின் முக்கியமான கருத்தை நியாயங்களைக் கொண்டு நிச்சயித் துத் தர்மத்தைச்சொல்லுகிறவர்கள் சாஸ்திரங்களை அடிக்கடிப்பார்த்து ஒருவர்க்கொருவர் விசாரித்து மனதில் சலிக்காதவர்களாகி நிதாநத்துடன் நிச்சயித்ததும் வேறுபாட்டை அடையாததுமான ஸத்தானதர்மத்தை யுபதேசிக்கிறார்களாகையால் அவர்கள் விஷயத்தில்
பாபம் பயப்படுகிறது (நாசத்தைஅடையத்தக்கதாகிறது).
கல்லில் தேங்கிய ஜலமானது காற்றினாலும் சூரியனாலும் வற்றிப்போகிறதுபோல பரிஷத்
தானது சாஸ்திரவிதிப்படி பிராயச்சித்தத்தை யுபதேசிப்பதினால் பாபிஷ்டனுடைய பாபத்தை நசிக்கச்செய்கிறது. பிராயச்சித்தம் செய்துகொண்டபின்பு அந்தப்பாபமானது பாபம் செய்தவனைப் பற்றுகிறதில்லை. பரிஷத்தையும் அடைகிறதில்லை.வாயு, சூரியன், அக்நி இவர்களின் சம்பந்தத்தினால் ஜலம் தானே நசித்துப்போவதுபோல் பாபம் நசித்துப்போகிறது
வேதமோதிச் சிறந்தவர்கள்ளும் அக்நிஹோத்திரம் செய்தவர்களுமாகிய பிராம்மணர்களில் மிகுந்த சமர்த்துடையவர்களான நால்வர் முக்கியபரிஷத்தென்றும்,அப்படிக் கிடையாவிட்டால் முன்றுபேர்குறைந்த பக்ஷமான பரிஷத் தென்றும் சொல்லப்படுகிறார்கள். அக்கிஹோத்திரம் செய்யாதவர்களும் வேதவேதாங்கங்களைக் கரைகண்டவர்களும் தர்ம சாஸ்திரங்களைக் கற்றுணர்ந்தவர்களுமான பிராம்மணர்களில் ஐந்துபேர் முக்கிய பக்ஷமான பரிஷத்தென்றும் மூன்றுபேர் குறைந்தபக்ஷமான பரி ஷத்தென்றும் சொல்லப்படுகிறார்கள். பிரமவித்தையை யோதின வர்களும் யக்கியசீலர்களும் பரமாத்துமாவைத் தியானிப்பவர்களும் வேதவிரதங்களை அநுஷ்டித்து ஸ்நாதகர்களுமான பிராம்மணர்களில் ஒருவன்மாத்திரமே பரிஷத்தாகச்சொல்லப்படுவான். அக்நி ஹோத்திரம்செய்தவர்களில் இரண்டுபக்ஷமும், அதைச்செய்யாதவர்களில் இரண்டுபக்ஷமும், ஆத்துமஞாநமுள்ளவர்களில் ஒருபக்ஷமுமென்று ஐந்துபக்ஷங்கள் என்னால்சொல்லப்பட்டன. அந்தப்பபக்ஷங்களுடைய அஸம்பவத்தில் (கிடையாத பக்ஷத்தில்) ஆயுதமுதலியவைகளால் பிழைக்காமல் தமக்குரியஜீவனோபாயங்களால் மூவர் பரிஷத்தென்று சொல்லப்படுவார்கள்.
கீழ்ச்சொன்ன பிராம்மணர்களன்றிப் பிராம்மணரென்கிற பேரைமாத்திரம் தரிக்கின்றவர்கள் ஆயிரம்மடங்கு அதிகமாகக் கூடினாலும் அவர்களிடத் தில் பரிஷத்தன்மைஉண்டாகாது.
வேதாத்தியயனம் செய்யாத பிராம்மணன் கட்டை யினால் செய்யப்பட்ட யானைபோலவும் தோலால் செய்யப்பட்ட மான்போலவுமாகிப் பிராம்மணனென்னும் பேரைமாத்திரம் தரிப்பவனாகிறான்.
மந்திரமறியாத (வேதமோதாத பிராம்மணனைப் பிராம்மணனென்றுசொல்லுவது ஐந சூந்யமான விடத்தைக் கிராமமென்றும் ஜலமில்லாத பள்ளத்தைக் கிணறென்றும் சாஸ்திர விதிப்படி சுத்தி செய்யப்படாமையால் அக்த்தன்மையையடையாத அக்நியாயாபாஸத்தில் ஹோமம் செய்யப்பட்டதை ஆஹுதிஎன்றும் சொல்வதுபோலாகும்.
ஸ்திரீகள் விஷயத்தில் ஆண் தன்மை யுடைய புருஷன் கிடையாத பக்ஷத்தில் புருஷாபாஸனான நபும்ஸகன் எப்படிப் புத்திரனை ஜநிப்பிப்பதாகிய பிரயோஜநத்தைத் தர மாட்டானோ, முக்கியமான நிலங்கிடையாத பக்ஷத்தில் களர்பூமியானது எப்படி விளைவாகிய பலனைத் தர மாட்டாதோ, ஞாநமில்லாத மூடன் விஷயத்தில் செய்த தாநம் எப்படித் தாந பலனைத் தரமாட்டாதோ, அப்படி ருக்குவேதம் முதலிய வேதங்களை ஓதாத பிராம்மணன் பிராயச்சித் தோபதேசத்தினால் பாப நிவிர்த்தியாகிய பலனைத் தரத் தக்கவனாக மாட்டான்.
சித்திர வேலையானது அநேகமாயுள்ள அங்கங்களால் அதாவது பலவிதவர்ணங்களை அந்தந்த இடங்களுக்குத்தக்கபடி கொடுக்கிறதினால் எப்படி மெள்ளமெள்ளப் பிரகாசத்தை அடைகிற தோ அப்படிப் பிராம்மணத் தன்மையும் உபநயநம்முதலிய மந்திர ஸம்ஸ்காரங்களால் பிரகாசத்தை (உத்கர்ஷத்தை) அடைகிறது.-இதனால் நாமதாரகப்பிராம்மணனுக்கும் ஸம்ஸ்காரங்கள் ஏற்றவைகளென்பது சொல்லப்பட்டது.
உபநய நம்முதவிய ஸம்ஸ்காரங்களைச் செய்துகொண்டவனான ஒரு உத்தமபிராம்மணனோடு கூடினவர்களாய் நாமதாரகப் பிராம்மணரென்னும் பேரைமாத்திரமுடைய எந்தப்பிராம்மணர்கள் பிராயச்சித்தத்தை விதிக்கிறார்களோ, பாபகிருத்தியத்தைச்செய்ப வர்களான அந்தப்பிராம்மணர்கள் நரகத்தை அடைகிறார்கள்
எந்தப்பிராம்மணர்கள் வேதாத்தியயநம்செய்து பஞ்சமஹாயக்கியங்களை அநுஷ்டிக்கிறார்களோ அவர்கள் ஐந்துவிதமான கர்மேந்திரியங்களுக்குப் பிரீதியைச்செய்பவர்களானகிருகஸ்தர்களாயிருந்த
போதிலும் மூன்றுலோகத்தையும்கரையேற்றுகிார்கள் பாபத்தினின்றும் ரக்ஷிக்கிறார்கள்
மயாநங்களில் சவங்களைக் கொளுத்துவதில் உபயோகப்பட்டிருக்கிற அக்கியானவன் சகலத்தையும்ப
க்ஷிப்பவனாயிருந்தபோதிலும்எப்படித் தெய்வத்தன்மையை விடாதவனாகவே பிரகாசிக்கிறாம்னோ அப்படி வேதங்களை ஓதி யுணர்ந்த பிரா) ம்மணன் சகலத்தையும் பக்ஷிப்பவனாயிருந்தபோதிலும் அதாவது-பராந்நம்முதலியவைகளைப் புசித்தாலும் அவன் பூமிதேவனேயாகிறான்.
சகலவித அசுத்தவஸ்துக்களும் எப்படி ஜலத்தில் போடப்படுகின்றனவோ அப்படியே சகலவிதபாதகமும் வேதமோதின பிராம்மணோத்தமனிடத்தில் போடப்படவேண்டும்.
காயத்ரி மந்திரமில்லாதவன் அதாவது ஆலஸ்யத்தினால் காயத்ரியை நித்தியமும் ஐபிக்காதவன் சூத்திரனைக்காட்டி லும் அசுத்தனாவான். காயத்திரி த்துவமான அங்கநியாஸம் தியாநம்
முதலியவைகளையும், பிரமதத்துவமான வைதிக்கர்மங்களை அநுஷ்டிப்பதையும் கிரமமாக அறிந்த பிராம்மணர்கள் ஜநங்களால்பூஜிக்கப்படுகிறார்கள்
இந்திரியபரவசனாகிக்கெட்டநடத்தையோடுகூடியிருந்தபோதிலும் பிராம்மணன் பூஜிக்கத்தக்கவ
னாகிறான். இந்திரியங்களை ஜயித்துச்சாஸ்திரமுறை தவறாதவனாயிருந்தபோதிலும் சூத்திரன் பூஜிக்கத்தகாதவனாகிறான், அதற்குத்திருஷ்டாந்தம்.உதைப்பது முதலிய சேஷ்டைகளால் துஷ்டையான பசுவைவிட்டுப் பாலுள்ளதென்று பெண்கழுதையை எவன்கறப்பன்?
பிராம்மணர்கள் (இந்திரிய யத்தைப் பெறாதவர்களாகிலும் ) தர்மசாஸ்திரமென்னும் ரதத்தில் ஏறினவர்களும் வேதங்களென்னும் கத்தியை கையிலேந்தினவர்களுமாகி விளையாட்டுக்காக வாகிலும் யாதொன்றைச் சொல்லுகிறார்களோ அதுவே உத்தம தர்மமாகும்.
நான்குவேதங்களையும் அங்கங்களின்றி முழுதும் ஓதினவன் சாதுர் வைத்தியனென்றும், தர்மம்,பரிஷத்து,பிராயச் சித்தத்தின் கிரமம் இவைகளை அறிந்தவன் விகல்பியென் றும்,சிக்ஷை, வியாகரணம், சந்த நிருக்தம், ஜோதிஷம், கல்பம் என் னும் ஆறு அங்கங்களையும் அறிந்தவன் அங்கவித் என்றும், வேதங்களை முழுது மோதி வேதவிரதங்களையும் அநுஷ்டித்து ஸ்நாதகனா
கி நல்லகுலம் ஆசாரம் இவைகளோடுகூடித் தர்மசாஸ்திரங்களை வெ குவாய்ப்படித்தவன் தர்மபாடகனென்றும், சொல்லப்பட்டுக் கார்ஹஸ்தியம் முதலிய மூன்றாச்சிரமங்களில் ஒன்றி விருப்பவர்களான இவர்கள் முக்யராவார்கள். கீழ்ச்சொன்ன குணங்களோடு கூடின பத்துபேரைத் தாழ்ந்தகணக்காக வுடையது பரிஷத்தென்று சொல்லப்படும்.
ஆறாவது அத்தியாயம்-விலங்குகளைக் கொன்றதற்கான பிராயச்சித்தம்:-75 வசனங்களைக் கொண்டுள்ளது. இது பிராணி ஹத்யாவிற்கான பிராயச்சித்தங்களைப் பற்றி விளக்குகிறது
ஏழாம் அத்தியாயம்–பொருட்களின் தூய்மையாக்கல்:–4 வசனங்கள் உள்ளன. அது, மரம் மற்றும் உலோகத்தால் ஆன பாத்திரங்கள் போன்ற பல்வேறு பொருட்களைத் தூய்மைப்படுத்துவது பற்றியும், மாதவிடாய் காலத்தில் உள்ள பெண்கள் பற்றியும் விளக்குகிறது .
எட்டாவது அத்தியாயம்–தர்மத்தைப் பின்பற்றுவதற்கான விளக்கம்:50 வசனங்களைக் கொண்டுள்ளது. விருப்பமின்றி பசுக்கள் மற்றும் காளைகளைக் கொல்வதற்கான பரிகாரங்களையும், பிராமணர்களின் பரிஷத்தை அமைப்பதையும் இது விவரிக்கிறது .
ஒன்பதாவது அத்தியாயம்–பசுக்களுக்கான சேவை:-60 வசனங்கள் உள்ளன. அது ஒருவரின் பசுக்களை முறையாகப் பராமரிப்பதைப் பற்றியது
அத்தியாயம் 10-ல் 43 சுலோகங்கள் உள்ளன. அது சந்திராயணம் மற்றும் சாந்தபானம் போன்ற சில பரிகாரங்களைப் பற்றி விளக்குகிறது-
அத்தியாயம் 11-ல் 55 வசனங்கள் உள்ளன. அது, உணவு உண்பது தொடர்பான விதிகளை மீறுவதற்கும், விலங்குகளால் அசுத்தமான கிணறுகளைத் தூய்மைப்படுத்துவதற்கும் செய்யப்படும் பரிகாரங்களைப் பற்றியது.
அத்தியாயம் 12-ல் 77 வசனங்கள் உள்ளன. அது பின்வருவனவற்றைப் பற்றி விவாதிக்கிறது:பல்வேறு வகையான குளியல்-தூய்மைப்படுத்தும் குளியல்-பிராமணரைக் கொலை செய்தல், மது அருந்துதல், தங்கம் திருடுதல் போன்ற மரணப் பாவங்களுக்கான பரிகாரங்கள்
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-