ஸ்ரீ திருவாய் மொழி தனியன்-5-வான் திகழும் சோலை-ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் –

June 19, 2026

வான் திகழும் சோலை மதிள் அரங்கர் வண் புகழ் மேல்
ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும்
ஈன்ற முதல் தாய் சடகோபன் மொய்ம்பால்
வளர்த்த இதத்தாய் இராமானுசன்
-ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த தனியன்

இனி இதில் திருவாய் மொழியினுடைய உத்பாதகரையும் வர்த்தமானரையும் -சொல்லுகிறது

வான் திகழும் சோலை -ஆவது-ஆகாசத்திலே திகழ்கிற பிரகாசிக்கிற சோலை என்றபடி –
வ்ருஷ ஷண்ட மிதோ பாதி –
வான் ஏந்து சோலை
சோலை அணி –திருவரங்கம் இறே –

வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீது அணவும் சோலை குயிலினம் கூவும் சோலை
அண்டர் கோன் அமரும் சோலை அணி திருவரங்கம் என்னா
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமின் நீரே–14–சோலை அணி திருவரங்கம் –சோலையை ஆபரணமாக உடைத்தான கோயில் -என்னுதல் –சம்சாரத்துக்கு ஆபரணமான கோயில் -என்னுதல்

மதிள் அரங்கர்
திண் கொடி மதிள் சூழ்

மதிள் திருவரங்கம் –7-2-3-
அதுவும்-வானை யுந்து மதிளாய் இருக்கை – -9-10-4-

வட்கிலள் இறையும் ‘மணிவண்ணா!’ என்னும்; வானமே நோக்குமை யாக்கும்
‘உட்குடை அசுரர் உயிரெலாம் உண்ட ஒருவனே!’ என்னும் உள் ளுருகும்;
‘கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய் காகுத்தா! கண்ணனே!’ என்னும்;
திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்’ இவள் திறத் தென் செய்திட்டாயே–7-2-3–ராம கிருஷ்ணாதி அவதாரங்களில் பெறாதார்க்கும் உன்னைக் கொடுத்து அருள கடவதானமை தெரியும் படி கொடி கட்டிக் கொண்டு அன்றோ கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிறது–திண்ணிய மதிள் என்னுதல் -திண்ணிய கொடி என்னுதல் -அவிழ்த்துக் காட்டாத கொடி என்கை -வருவோர் எல்லாரும் வாருங்கோள் -என்று உறுதியாக கொடி கட்டிக் கொண்டு அன்றோ கிடக்கிறது

வான் திகழும் சோலை
உயர்ந்த சோலையையும் மதிளையும் யுடைய கோயிலிலே நிரூபகமான பெரிய பெருமாளுடைய –
ஸ்லாக்யமான கல்யாண குண விஷயமாய் விஸ்திருதமாயிற்று ஆயிரம் திருவாய் மொழியும்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரம்
–7-2-11-என்னக் கடவது இறே

முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் மொய்புனல் பொருநல்
துகில் வண்ணத் தூ நீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ் வண் குரு கூர்ச் சட கோபன்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே.–7-2-11-காளமேகம் போன்று மிக்க பேரெழிலை யுடையரான பெரிய பெருமாள் விஷயமாக -பெரிய பெருமாள் திருவடிகளிலே யாயிற்று ஆயிரமும் சொல்லிற்று -திரு மோகூர்க்கு ஈத்த பத்து -திரு வேங்கடத்துக்கு இவை பத்து -என்றும் பிரித்துக் கொடுத்த அத்தனை -திருப் பலகையில் அமுது படியில் திருப் பதிகளில் நாயன்மார்க்கு அளந்து கொடுக்குமா போலே -என்று பிள்ளை அருளிச் செய்வர் –

அது தான்
சீர்த் தொடை ஆயிரம்
–1-2-11- என்று சீர் கலந்த சொல்லாய் இறே இருப்பது –
நலமுடையவன் –1-1-1-
ஈறில வண் புகழ் நாரணன் -1-2-10-என்று உபக்ரமித்து
வாழ் புகழ் நாரணன் –10-9-1-என்று இறே தலைக்கட்டி அருளினார் –

சேரத் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
சீர்த் தொடை யாயிரத்து ஒர்த்த விப்பத்தே
 –1-2-11-சீர் என்று கவிக்கு உறுப்பான அலங்காரங்களைச் சொல்லுதல்-பகவத் குணங்களைச் சொல்லுதல்-எழுத்து அசை சீர் பந்தம் அடி தொடை’ பா இனம் – என்று கவிக்கு உறுப்பாக இருப்பன சில உள; அவற்றைச் சொல்லுதல்;-அன்றிக்கே , உபாசகன் அனுக்ரஹத்தாலே – உபாஸ்யனுடைய கல்யாண குணங்களைத் தொடுத்த ஆயிரம் என்னுதல்.

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே 
–1-1-1-உயர் – -உயரா நிற்கை-கால தத்வம் உள்ளதனையும் அனுபவியா நின்றாலும் அவ்வருகாய்க் கொண்டு வாக் மனஸ் அங்கங்களால் பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கை-அனுபூத அம்சம் அல்பமாய் அனுபாவ்ய அம்சமே விஞ்சி இருக்கை-நலம்-குண விபூத்யாதிகளை அனுபவிக்கையால் வந்த ஆனந்த குணம் – ஏக வசனம் ஜாத்யபிப்ராயமாய் -குண ஜாதி பரமாகவுமாம்- ஆனந்த அவஹமான குண விபூத்யாதி பரமாகவுமாம்-நலம் என்கையாலே -கட்டடங்க நன்மையேயாய் இருக்கைஉடையவன் ஆதந்துகம் அன்றிக்கே ஸ்வரூப அனுபந்தியாய் இருக்கை-இதுக்கு ஆளவந்தார் -ஸ்வா பாவிக அநவதிக அதிசய கல்யாண குண கண -என்று அருளிச் செய்வர்-குத்ருஷ்டிகளை மிடற்றை பிடித்தால் போலே நலமுடையவன் என்று ஆழ்வார் அருளிச் செய்த படி கண்டாயே -என்று பிள்ளை பிள்ளை ஆழ்வானுக்கு ஆழ்வான் பணித்தான் –

எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே
 –1-2-10-அசங்க் யேயமாய் அபரிச்சின்னமான கல்யாண குணங்கள் என்ன -இவற்றை யுடையன் ஆகையால் –நாராயண சப்த வாச்யனான ஸ்வாமியினுடைய-ஈறு இல’ என்பதனை ‘ஈறு இலவான ஒண் பொருள்’ என்றும்,-‘ஈறு இலவான வண் புகழ்’ என்றும் அன்வயித்துக் கிடக்கும்-ஈறு இலவான ஒண் பொருளையும், ஈறு இலவான வண் புகழையும் உடையன் ஆகையாயிற்று-‘நாராயணன்’ யாகையாகிறது –பாவத்க மங்கல குணா ஹாய் நிதர்சனம் ந -( ‘தேவரீருடைய குணங்கள் அன்றோ எங்களுக்கு எடுத்துக்காட்டாய் இருக்கின்றன?’ )என்கிறபடியே,
தன்னுடைய கல்யாண – நற்குணங்களைப் போன்று, இவ் வுயிர்களும் நித்தியமுமாய்ப் பிரகாரமுமாய் இருக்கும் என்பதனைத் தெரிவித்தபடி. குணங்களை நிதர்சனமாகச் சொல்லிற்று –
ஆக, நித்தியரான த்ரிவித -மூவகைப்பட்ட சேதனரையும், நித்தியமான கல்யாண குணங்களையும் உடையவன் நாராயணன் என்பதாயிற்று. 

சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே –10-9-1-ஆஸ்ரிதரை வாழும் படி பண்ண வற்றான கல்யாண குணங்களை யுடைய சர்வேஸ்வரன்

பெரிய பெருமாள் தான் நலம் திகழ் நாரணன் –பெருமாள் –10-11- இறே –
நாராயண பரம் ப்ரஹ்ம
நாராயணா பரா வேதா
–என்னக் கடவது இறே —
அத்தாலே –மதிள் அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும்-என்கிறது –

தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள் திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று அது முதலா தன் உலகம் புக்கது
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள் கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்ணுவாரே–10-11–-அழகிய இயலை உடைய தமிழ் மாலை பத்தும் வல்லார் –-ஸ்ரீ பரமபதத்திலே விளங்கா நின்றுள்ள ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளைக் கிட்டப் பெறுவார் –

நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண: பர: நாராயண பரோ ஜ்யோதி ராத்மா நாராயண: பரநாராயண பரோ த்யாதா த்யானம் நாராயண பர:–நாராயண ஸூக்தத்தில் (யஜுர் வேதம்)-நாராயண பரம் ப்ரஹ்ம: நாராயணனே முழுமுதற் கடவுள் (பரம்பொருள்).-எல்லாவற்றிற்கும் மேலான உயர்ந்த உண்மை அல்லது தத்துவம் நாராயணனே.-நாராயண பரோ ஜ்யோதி: நாராயணனே எல்லாவற்றிற்கும் மேலான ஒளி.-ஆத்மா நாராயண: பர: அனைத்து உயிர்களுக்கும் உள்ளே இருக்கும் ஆன்மாவும் நாராயணனே-நாராயணனே தியானம் செய்பவர்களுள் சிறந்தவர். நாராயணனே சிறந்த தியானம்.-யச்ச கிஞ்சிஞ்-ஜகத் சர்வம் த்ருஷ்யதே ஷ்ரூயதே அபி வா | அந்தர் பஹிஷ்-ச தத்ஸர்வம் வ்யாப்ய நாராயணா: ஸ்தித: ||-யாக்க கிஞ்சித் (அதெல்லாம்) ஜகத் சர்வம் (உலகம் முழுவதும்) த்ருஷ்யதே (அது
பார்த்தது) அபி வா (அல்லது உள்ளது) ஷ்ரூயதே (கேட்டது), நாராயணா: (ஸ்ரீமன் நாராயணா)
ஸ்திதா: (நின்று) வ்யாப்ய (வெளிப்படுத்துதல்) தத் சர்வம் (அனைத்தும்) அந்த:
(உள்ளே) பஹிஷ்-சா (மற்றும் வெளியே).-இந்த ஸ்லோகம் மீண்டும் ஸ்ரீமன் நாராயணனின் ‘விஸ்வத்வத்தை’ வலியுறுத்துகிறதுஅனந்தம் அவ்யாயம் கவீம் சமுத்ரே-அந்தம் விஷ்வஷம்புவம் |
பத்மகோஷ-ப்ரதீகாஷம் ஹৃதயம் சாப்யதோமுகம் |
|-அனந்தம் (முடிவற்றவர்) அவ்யயம் (மற்றும் அழிவற்றவர்) கவிம் (மற்றும் ஒரு கவிஞர், எல்லாம் அறிந்தவர்) சமுத்ரே (கடலில் இருப்பவர்) அந்தம் (மற்றும் உள்ளே இருப்பவர்) விஷ்வ – ஷம் – புவம் (யார் உலகமனைத்துக்கும் நல்வாழ்வை (ஷம்) அளிக்கிறாரோ – நான்) அந்த நாராயணனை தியானியுங்கள்). ஹ்ருதயம் கா அபி (இதயம் இது) அதோ-முகம் (முகம் குனிந்து) பத்மகோஷ-பிரதீகாஷம் (தாமரை மொட்டு போல் தன்னை வெளிப்படுத்துகிறது).

இனித்தான்
திருவாய் மொழி பத்துப் பத்தாலும் ப்ரதிபாதிக்கிற
1-பரபரன் –1-1-8- என்கிற பரத்வமும்

2-சோராத எப்பொருட்க்கும் ஆதி -2-1-11-என்கிற காரணத்வமும்

3-முழுதுமாய் முழுதியன்றாய் –3-1-8-என்கிற வியாபகத்வமும்

4-மறுகல் ஈசன் –4-1-10- என்கிற நியந்த்ருத்வமும்

5-ஆவா என்று அருள் செய்து -5-1-6- என்கிற காருணிகத்வமும்

6-ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் –6-1-10-என்றும்
வரம் கொள் பாதம் அல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரண் –6-3-7-என்றும் – சொல்லுகிற சரண்யத்வமும்

7-எண்ணிலாப் பெரு மாயன் –7-1-1- என்கிற சக்தி மதத்வமும்

8-தேவிமார் ஆராவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார் –8-1-1- என்கிற ஸத்ய காமத்வமும்

9-எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான் –9-1-1-என்கிற ஆபத் ஸகத்வமும்

10-சுரி குழல் கமலக் கட் கனிவாய்க் காள மேகம் –10-1-1-என்ற ஆர்த்தி ஹரத்வமும்

சுரர் அறிவரு நிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என வுலகு அழித்து அமைத்து உளனே 
–1-1-8-அவன் காட்டின வழியாலே ஏகதேச சிருஷ்டியையும் ஏக தேச சம்ஹாரத்தையும் பண்ணுகையாலே அஸ்மத் தாதிகளைக் காட்டில் பரராய் இருக்கிற ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு நிலம் அல்லாத சிருஷ்டி சம்ஹாரங்களைப் பண்ணுகையாலே அவர்களுக்கும் பரன் 

சேராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே –2-1-11-இப்படி இவரோடு கலந்து இவரை உளர் ஆக்குகையாலே ஓன்று ஒழியாதபடி சகல பதார்த்தங்களும் ஈஸ்வரனுமாய்
சோதிக்கே--முக மலர்த்தியும் தன்னைத்தான் படி இருந்தான்-இவர் ஒருவரையும் சோர விட்டான் ஆகில் சர்வ சேஷி யாக மாட்டானே-நிரவதிக தேஜோ ரூபமான விகிரஹத்தை உடையானான் என்றுமாம் –
சர்வ ரக்ஷகத்வம் நிலை நின்றது-வடிவு அழகும் புதுக் கணித்தது

மாசூணாச் சுடருடம்பாய் மலராது குவியாது
மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய்
மாசூணா வான் கோலத்தமரர் கோன் வழிப்பட்டால்
மாசூணா வுனபாதம் மலர்ச்சோதி மழுங்காதே–3-1-8–அனுக்தமான குண விபூதி யாதிகளை உடையையாய் எல்லா வற்றையும் நிர்வஹிக்கிறவனே –ஜகச் சரீரனாய் நிற்கும் நிலை
வரம்பின்றி முழுதியன்றாய் -என்றதன் அனுவாதமாய் எல்லாவற்றையும் நிர்வஹித்தாய்
என்றபடி –

குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம் விட்ட
இறுகல் இறப்பெனும் ஞானிக்கும் அப்பயன் இல்லையேல்,
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்; பின்னும் வீடு இல்லை,
மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில், வீடு அஃதே.–4-1-10-ஹேய ப்ரத்ய நீகனாகவும் ஞான ஏக ஆகாரகனாகவும் அனுசந்தித்து அவனோடு சஜாதீயனாகவும் ஆத்மாவை அனுசந்தித்து
மறுகல் இல்-மறுகுகிற சமயத்தில் -சரீர விஸ்லேஷ சமயத்தில் என்னவுமாம் -இப்படி துஸ் சாதகம் ஆகையால் -ஈஸ்வர சாபேஷம் யாகையாலும் -பகவத் அனுபவத்தை குறித்து தண்ணிது யாகையாலும்
தண்ணிது ஆனது தானே ஸ்த்திரம் ஆகையால் மிகவும் அபுருஷார்த்தம் ஆகையால் -அபிராப்த புருஷார்த்தம் ஆகையால் அண்ணல் கழல்கள் குறுகுமினோ -என்று கீழ்ச் சொன்ன கைங்கர்யமே புருஷார்த்தம் –மறுகல் இல் ஈசனைப் பற்றி -அந்திம ஸ்மிருதி பண்ணி சரீரத்தை-விடாவிடில் பின்னும் வீடு இல்லை – இந்திரிய நியமனம் முதலானவைகள் உண்டாய், பின்பு பகவானை வழிபட்டுக்
கர்மங்களை எல்லாம் அழித்து, ஆத்துமாவைக் காண வேண்டும் என்று இருக்கின்ற அன்றும், சர்வேசுவரன் பக்கல் அந்திம ஸ்மிருதி பண்ணி இச்சரீரத்தை விடுவதற்குப் பாரானாகில்,
அந்த மோக்ஷந்தான் இல்லை.-எதோ உபாசனம் ததோ பலம் -விருப்பம் இல்லாதவனுக்கு கொடுக்கக் கூடாதே –-அண்டாதிபதே -சொல்லி ஐஸ்வர்யம் பெற்று போவான் –-அசுத்த சரீரம் -கர்மா தீனம் இல்லாமல் -சுத்தன் என்றே உபாசித்து -கைவல்யம் பெற்று போவான் –-அவன் அழகை அனுசந்தித்து -பகவத் ப்ரீதி காரித கைங்கர்யம் பெற்று போவோம் – உபாசனம் ஆபிராணாத்- இதற்கு சாஸ்திரம் அந்திம ஸ்ம்ருதி -விதிக்கிறதே –-மறுகல் இல் ஈசனை – குற்றங்கட்கு எதிர்த்தட்டான சர்வேசுவரனை,
அன்றிக்கே,-‘மறுகலில் –-சப்தமி -ஏழாம் வேற்றுமை – மறுகுகிற சமயத்தில்; உயிர் நீங்குங் காலத்தில் வருகின்ற கலக்கத்தில்’ என்னுதல்.-ஈசனைப் பற்றி விடாவிடில் – பற்றாமல் இருந்தாயாகில் என்றபடி –
அந்திம ஸ்மிருதி இல்லையாகில் ஆதி பரதனைப்போலே மான் ஆதல், மரை ஆதல் ஆமித்தனை.
அஃதே வீடு – ‘திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ’ என்று நான் சொல்லுகிற அதுவே புருஷார்த்தம். பன்னீராயிரப்படி மட்டும் -அவனைப் பற்றி பிரயோஜ நாந்தரம் பெற்று விடா விடில் -அஃதே வீடு –

ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே.–5-1-9–பிரகிருதி சம்பந்தம் இல்லாத திவ்விய உறுப்புகளோடும் அவ் வுறுப்புக்களில் சேர்ந்த திவ்விய ஆயுதங்களோடுங் கூட வந்து, ஐயோ ஐயோ என்று தன்னுடைய நிரவதிக கிருபையை பண்ணி –கேசவன் தமர் தொடங்கி-கிருபையை விதி சப்தத்தால் சொல்லிப் போந்தவர் -இப்பாட்டில் அருள் என்று வெளியிடுகிறார் –ஸ்வரூப அநு ரூபமாக சேஷியாய் வந்து கலந்தான் –

வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்!
தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திருவண்வண்டூர்
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே.–6-1-10-எங்கும் மேற்பட்ட ஆண் பிள்ளை தனத்தை யுடையவர்க்கு -ரஞ்ச நீ யஸ்ய விக்ரமை -என்று எதிரிகள் மேலிட்ட வீரம் –ரதசர்யா ஸூ சம்மத -என்று வீரர்கள் கொண்டாடின வீரம் –-உம்முடைய ரஷ்ய வர்க்கத்தில் இன்னும் ஒருத்தி நோவுபடா நின்றாள் என்னுங்கோள் –

பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
வரங்கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன்சரணே
.–6-3-7-வரையாதே எல்லார்க்கும் ஆஸ்ரயிக்கலாம் படியான ஸ்ரேஷ்டமான திருவடிகள்-சிறியோர் பெரியோர் என்று அன்றிக்கே எல்லார்க்கும் தஞ்சமான புகல் வேறு இல்லை –அல்லாதவை ஓட்டை ஓடத்தோடு ஒழுகல் ஓடமாய் கழுத்துக் கட்டியாய் இறே இருப்பது –

உண்ணி  லாவிய ஐவராற் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம்
நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய்
எண்ணிலாப் பெரு மாயனே!இமையோர்கள் ஏத்தும் உலக மூன்றுடை
அண்ணலே! அமுதே! அப்பனே!என்னை ஆள்வானே!–7-1-1-
எண்ணிலாப் பெரு மாயனே!-எண்ணிறந்த காரியங்களை விளைக்க வற்றாய் துஸ்தரமான பிரக்ருதியை யுடையவனே -நீ வேண்டாதாரை நலிகைக்கு ப்ரக்ருதியை உபகரணமாக யுடையவன் என்கை -மமமாயா துரத்யயா -ஸமஸ்த கல்யாண குணாத்மகன் என்று பிள்ளான் பணிக்கும் -என்னுடைய நோய்க்கும் உன்னுடைய குணங்களுக்கும் என்ன சேர்த்தி யுண்டு

தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்
மேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்
பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணது ஓர் பவளவாய் மணியே
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாயே8-1-1-தேவிமார் ஆவார் திருமகள் பூமி -அவர்கள்புருவம் நெளிந்த இடத்தே உனக்கு கார்யம் செய்ய வேண்டும் படி வல்லபைகளாய் இருக்கிறார் பிராட்டியாரும் ஆண்டாளும் -நகச்சின் நபாராத்யதி -என்று பொறைக்கு உவாத்தாய் இருக்கும் ஒருத்தி -பொறுப்பது எத்தை குற்றம் தான் உண்டோ -என்று அப் பொறை தான் ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கும் ஒருத்தி -ஒருத்தி சம்பத்தாய் இருக்கும் -ஒருத்தி சம்பத்துக்கு விளை பூமியாய் இருக்கும் -அவர்கள் இருவரும் அருகே இருக்க நான் இழக்க வேண்டுகிறது என் என்ன
ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்-அவனும் அவளுமான சேர்த்தியிலே எடுத்துக் கை நீட்டுவார் நித்ய ஸூரிகள்-ஏவ -கைங்கர்யம் உத்தேச்யமானவோ பாதி ஏவிக் கொள்ளுகையும் உத்தேச்யம் என்கை –க்ரியதாம் இதி மாம் வத –-மற்று -என்று துல்ய விகல்பத்தை யாயிற்று -திரு முலைத் தடத்தில் அணைந்தால் பிராட்டிமார்க்கு உள்ள இனிமை -அச் சேர்த்தியில் கைங்கர்யம் பண்ணப் பெறுகையாலே இவர்களுக்கு உண்டாம் -ரமமாணா வநேத்ர்ய -ஸ்வரூப அனுரூபமாய் இறே-ஸூ கங்கள் இருப்பது –அருளே -ப்ராப்ய ப்ராபகம் இரண்டும் ஒன்றே என்று இருப்பார்க்கு கார்யம் செய்யலாகாது என்கை –

தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர்
நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்
காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே-
10-1-1-சுரி குழல்–இவன் பின்னே வழியே போமிடத்து திருக் குழலை ஒரு கால் பேண நெடு நாள் சம்சாரத்தில் பட்ட கிலேசம் எல்லாம் தீரும் படி யாய்த்து இருப்பது –கேசவ கிலேச நாசன –-கமலக் கண் கனி வாய்-பந்தம் எல்லாம் தோற்றும் படியான நோக்கும் ஸ்மிதமும் இருக்கிற படி –சம்சாரத்திலே பொய்யருடைய நோக்கிலும் ஸ்மிதத்திலும் பட்ட நோவு எல்லாம் ஆறும் படி இறே இருப்பது –கச்சதாம் தூர  மத்வானம் த்ருஷ்ணா மூர்ச்சித சேதஸாம் -பாதேயம் புண்டரீகாக்ஷ நாம சங்கீர்த்தன அம்ருதம் –-காளமேகத்தை – -வழி போம் போது முன்னே ஒரு காளமேகம் வர்ஷித்திக் கொண்டு போக பின்னே போமா போலே ஸ்ரமஹரமாய் இறே இருப்பது -சர்வ கந்த -என்கிற விஷயம் ஆகையால் -அவ்வாஸ நாற்றத்தை அனுபவித்திக் கொண்டு போம் அத்தனை -யன்றி மற்று ஓன்று இலம் கதியே--அவனை ஒழிய வேறு கதி உடையோம் அல்லோம் -வேறு ஒருவரை ரக்ஷகமாக உடையோம் அல்லோம் –

ஆகிற அதில் பத்து அர்த்தமும் பெரிய பெருமாளைப் பிரதிபாதிக்கிற-கங்குலும் பகலிலும் –7-2- காணலாய் இருக்கும் –

1- வடிவுடை வானோர் தலைவனே -7-2-10-என்று பரத்வமும்

2-முன் செய்து இவ்வுலகம் -7-2-2- என்றும்
விண்ணோர் முதல் -7-2-6- என்றும்
காரணத்வமும்

3-கட்கிலி–7-2-3- என்றும்
என்னுடை ஆவி -7-2-9-என்றும் வியாபகத்வமும்

4- பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய் –7-2-7–என்றும்
கால சக்கரத்தாய்–7-2-5- –என்றும்
மூ உலகாளி –7-2-10- என்றும்
நியந்த்ருத்வமும்

5- இவள் திறத்து அருளாய் –7-2-6–என்று காருணிகத்வமும்

6-பற்றிலார் பற்ற நின்றானே -7-2-7- என்று சரண்யத்வமும்

7- அலை கடல் கடைந்த ஆரமுதே –7-2-5- என்று சக்தி மத்வமும்

8-என் திருமகள் சேர் மார்பனே –என்றும்
நில மகள் கேள்வனே –என்றும்
ஆய் மகள் அன்பனே –7-2-9- என்றும்
சக்தியால் நித்யமாகக் கற்பித்த பத்நீ பரிஜா நாதிகளை யுடைய ஸத்ய காமத்வமும்

9- இவ்வுலகம் உண்டு உமிழ்ந்து அளந்தாய் -7-2-2- என்று ஆபத் ஸஹத்வமும்

10- முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் –7-2-11- என்று ஆர்த்தி ஹரத்வமும் அருளிச் செய்தார் இறே

முடிவிவள் தனக்கு ஒன்று அறிகிலேன்’ என்னும்; ‘மூவுல காளியே!’ என்னும்;
‘கடி கமழ் கொன்றைச் சடையனே!’ என்னும்; ‘நான்முகக் கடவுளே!’ என்னும்;
வடிவுடை வானோர் தலைவனே!’ என்னும்; ‘வண் திரு வரங்கனே!’ என்னும்;
அடி யடையா தாள் போல் இவள் அணுகி அடைந்தனள் முகில்வண்ணன் அடியே.–7-2-10–த்ரை லோக்ய நிர்வாஹனான இந்திரனுக்கு அந்தராத்மாதயா வாக நின்று அவனுடைய அதிகாரத்தை நடத்துவபனே என்னும் -ஐஸ்வர்ய ஸூ சகமான தாரையையும் -சாதகத்வ ஸூ சகமான ஜடையையும் உடைய ருத்ரன் அதிகாரத்தை அவனுக்கு அந்தராத்மாவாக நின்று நிர்வஹித்தவனே என்னும் -கடி கமழ்-பரிமளம் மிக்கு இருக்கை –சதுர்முகனான தேவதைக்கு ஆத்மாவானவனே என்னும் -உன்னோடே ஒத்த வடிவை யுடைய நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகன் ஆனவனே

என் செய்கின் றாய்? என் தாமரைக் கண்ணா! என்னும் கண்ணீர் மல்க இருக்கும்
என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய்! என்னும் வெவ் வுயிர்த் துயிர்த் துருகும்
முன் செய்த வினையே முகப்படாய் என்னும் முகில்வண்ணா! தகுவதோ என்னும்
முன் செய்திவ் வுலகம் உண்டு மிழ்ந் தளந்தாய்! என் கொலோ முடிகின்றது இவட்கே?–7-2-2-ஜல ஸ்தல விபாகமற உபகரிக்கும் மேக ஸ்வ பாவனானவனே -நீ முகம் காட்டாது இருக்குமது அந்த யுபகாரத்துக்குத் தகுவதோ என்னும்–அந்த யுபகாரகத்வம் பலமாம்படி இந்த லோகத்தை பிரதமத்திலே ஸ்ருஷ்டித்து – பிரளயத்தில் உண்டு -உமிழ்ந்து -அந்நிய அபிமானம் போம்படி அளந்து கொண்டவனே–நிர் ஹேதுகமாக முன்பு ஜகத் ஸ்ருஷ்ட்டி யாதிகளைப் பண்ணினவன் அல்லையோ –ஸ்ருஷ்ட்டி யாதிகளில் யவ் கபத்யத்தை கர்ம அனுகுணம் என்ன ஒண்ணுமோ -அபு நா வ்ருத்தி லக்ஷண மோக்ஷத்தை பெறுகைக்கு அடியாய் இருபத்தொரு கனவியதொன்று சேதனன் தலையிலே கிடக்க வற்றோ –காரணம் ஒன்றும் இல்லாமலே முன்பு உலகத்தைப் படைத்தல் முதலானவைகளைச் செய்து ‘தகவிதோ’ என்கைக்கு ‘உபகரணம் இல்லாத அன்று இதனை உண்டாக்கி நோக்கினாய் நீ அன்றோ?’ என்றது, ‘கரண களேபரங்கள் இல்லாமல் கிடந்த இதனை வெறும் உன் கிருபையாலே உண்டாக்கினாய் இத்தனை அன்றோ?-உண்டாக்கிவிட்ட அளவையோ? பிரளய ஆபத்து வயிற்றிலே வைத்துப் பாதுகாத்து, உள்ளே கிடந்து நோவு படாதபடி புறப்பட விட்டு, எல்லை நடந்து மீட்டுக் கொண்டு, எல்லாவிதமான பாதுகாத்தலையும் செய்தாய் அல்லையோ!’ என்றபடி.

மையல் செய்து என்னை மனங் கவர்ந்தானே ! என்னம்’மா மாயனே!’ என்னும்;
‘செய்யவாய் மணியே!’ என்னும்’தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;
வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல்!’ என்னும்;
பைகொள்பாம் பணையாய்!இவள் திறத் தருளாய் பாவியேன் செயற் பாலதுவே.–7-2-6-அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் வைத்து ஆர்த்த ரக்ஷண அர்த்தமாக அன்றோ திவ்யாயுதங்களை தரித்தது -காணவே எதிரிகள் மண் உண்ணும்படியான திவ்யாயுதங்களை தரித்து இருக்கிற நீ என் விரோதிகளை போக்கி முகம் காட்டாது ஒழிவதே-திவ்ய ஆயுதங்கள் பகைவர்களை அழிப்பதற்கு உடலாக இருக்குமாறு போலே காதலிகளை அழிக்கைக்கும் உடலாக இருக்குமன்றோ உகப்பாரையும் உகவாதாரையும் ஒக்கத் தோற்பிக்குமவை? முன்னே கை கண்டு வைக்கிறவை அன்றோ?
காணவே பகைவர்கள் மண்ணுண்ணும்படியான திவ்ய ஆயுதங்களைத் தரித்திருக்கிற நீ
என் விரோதிகளைப் போக்கி முகங்காட்டாது ஒழிவதே!விண்ணோர் முதல் என்னும்- திவ்விய ஆயுதங்களினுடைய சேர்த்தியால் வந்த அழகினைக் காட்டி நடத்த, அதுவே ஜீவனம் ஆயிற்று அந்நாடு கிடப்பது. இல்லையாகில், அங்கே வினை உண்டாகத் தரித்திருக்கிறான் அன்றோ?

வட்கிலள் இறையும் ‘மணிவண்ணா!’ என்னும்; வானமே நோக்குமை யாக்கும்
‘உட்குடை அசுரர் உயிரெலாம் உண்ட ஒருவனே!’ என்னும் உள் ளுருகும்;
‘கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய் காகுத்தா! கண்ணனே!’ என்னும்;
திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்’ இவள் திறத் தென் செய்திட்டாயே–7-2-3-பாஹ்ய சஷூஸூக்கு அவிஷயமான நீ நான் உன்னைக் காணும் படி கிருபை பண்ணி அருள வேணும்-நசஷூஷா பஸ்யதி -என்கிறது தாம் தாமே காண இழிவாருக்கு –தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம் –என்று அவன் தானே காட்டும் அன்று அவ்வருமை இல்லை -சிலருக்கு சதா தர்சனம் பண்ணைக் கொடுத்திலையோ – ‘கட்கிலீ! -கண்ணுக்கு இலீ என்றபடி -இப்படி அரிதான பொருளை நாம் சிலர்க்கு அருளிற்று உண்டோ என்ன-காகுத்தா! –ரூப ஓவ்த்தார்ய குணை பும்ஸாம் என்றும் ரூப சம்ஹ நனம் லஷ்மீம் என்றும் நாகரீகருக்கும் வான வாசிகளுக்கும் காட்டிக் கொடு திரிந்திலையோ-ஒரு கால் செய்தது கொண்டோ என்ன –-கண்ணனே!’ என்னும்;ஆயாந்தம் புண்டரீகாக்ஷம் வீக்ஷ மாணா குருஸ் த்த்ரிய-என்றும் தாஸாம் ஆவிர்பூத் என்றும் இடைச்சிகளுக்கும் அகப்பட காட்டிக் கொடு திரிந்திலையோ

என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்; ‘என்னுடைய ஆவியே!’ என்னும்;
‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நிலமகள் கேள்வனே!’ என்னும்;
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய்மகள் அன்பனே!’ என்னும்;
தென் திரு அரங்கம் கோயில் கொண் டானே! தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–7-2-9–இவளுடைய பிராணன் பஞ்ச வ்ருத்தியாய் அன்று இருப்பது -ஒரு மிதுனமாயிற்று இவளுக்கு பிராணன் –திருமகள் சேர்மார்பனாய்க் கொண்டு எனக்கு தாரகன் ஆனவனே என்னும் -இத்திருவாய்மொழி இயலைக் கேட்டருளாநிற்க, இப்பாட்டளவில் வந்தவாறே ‘என் திருமகள் சேர் மார்பனே! என்னும்; என்னுடைய ஆவியே என்னும்’ என்று இயலைச் சேர்த்து அருளிச் செய்ய, அதனைக் கேட்டுக் கையை உதறி, ‘ஸ்ரீரங்கநாத’ என்று அணையிலே சாய்ந்தருளினார் பட்டர்’ என்று அருளிச் செய்வர். ‘அப்போது திருமேனியிலே பிறந்த வேறுபாட்டினைக் கண்டு, ‘இவர்க்குப் பகவானை அடைவது அணித்தாகிறதோ?’ என்று அஞ்சியிருந்தேன்,’ என்று சீயர் அருளிச் செய்வார்.-இவர்க்குப் பிரமாணம் ஒரு காற்று விசேடம் அன்று: ஒரு மிதுநமாயிற்று. ‘திருமகள் சேர் மார்பனாய்க் கொண்டு எனக்குத் தாரகனானவனே!’ என்னும்.

பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்! பற்றிலார் பற்ற நின்றானே!
கால சக் கரத்தாய்! கடலிடங் கொண்ட கடல்வண்ணா! கண்ணனே!’ என்னும்;
‘சேல்கொள் தண் புனல்சூழ் திருவரங்கத்தாய்!’ என்னும்’என் தீர்த்தனே!’ என்னும்;
கோல மா மழைக்கண் பனி மல்க இருக்கும் என்னுடையக் கோமளக் கொழுந்தே.–7-2-7-இடம் அறிந்து ஸூக துக்கங்களை படைத்தவனே -பாலாவாக -ஸ்த்தாநே ஸ்த்தாநே யாக -பிரிந்தார் எல்லாரும் அனுபவிக்கும் இத்தை இவள் ஒருத்தியும் அனுபவிக்கப் பார்த்தால் இவளால் பொறுக்கப் போமோ -அங்கனம் இன்றிக்கே ஆஸ்ரிதர் வாழ்வும் அநாஸ்ரிதர் கெடும்படியாகவும் அன்றோ பண்ணி வைத்தது -தீமை உன்னடியார்க்குத் தீர்த்து அசுரர்க்கு தீமைகள் செய்யுமவன் அன்றோ –பண்டு கட்டின மரியாதையும் இல்லையோ இவளுக்கு — பற்றிலார் பற்ற நின்றானே!–அபராதம் யாய் ஸூக்ருத லேசமும் இல்லாத ஜெயந்தன் போல்வார்க்கும் ஆஸ்ரயிக்கலாம் படி யன்றோ உம்முடைய நீர்மை –ச பித்ராச பரித்யக்த=–‘ஒரு கைம்முதல் இல்லாதார்க்காக அன்றோ இங்கு வந்து சாய்ந்தருளிற்று?
இந்தக் கிடை நித்திய ஸூரிகளுக்காகவோ? உம்முடைய பக்கல் பற்று அறுத்துக் கொண்ட
ஜயந்தன் போல்வார்க்கும் பற்றாய் இருக்குமவர் அன்றோ நீர்!’ ‘அந்தப் பெருமாளையே சரணமாக அடைந்தான்’ என்றே அன்றோ கூறுகிறது- ஸ்ரீராமாயணம்? ‘தமேவ ஸரணம் கத;’ என்பது, ஸ்ரீராமா, சுந். 38:34-கால சக் கரத்தாய்! -காலத்தை நடத்தும் திரு வாழி யை யுடையவனே -விஷயீ கரிக்க காலமாக வேணுமே என்னில் காலதத்வமும் நீ இட்ட வழக்கு அன்றோ என்றுமாம்–விஷயீ கரிக்க காலமாக வேணுமே என்ன –கால தத்வம் நீ இட்ட வழக்கு அன்றோ -ஆஸ்ரிதர்க்காக பகலை இரவாக்கினவன் அன்றோ -அங்கனம் அன்றிக்கே பிரதிபந்தகமும் உண்டு காணும் என்ன -ப்ரதி பஷத்துக்கு ம்ருத்யுவான திரு வாழி கையிலே இருக்க பிரதிபந்தகம் உண்டோ –தடைகளுக்குக் கூற்றுவனான திருவாழி அன்றோ நீ தரித்திருக்கிறது?’ என்னுதல்.-காலம் -கூற்று-(கால -காலம் என்றும் மிருத்யு என்றும் )

முடிவிவள் தனக்கு ஒன்று அறிகிலேன்’ என்னும்; ‘மூவுல காளியே!’ என்னும்;
‘கடி கமழ் கொன்றைச் சடையனே!’ என்னும்; ‘நான்முகக் கடவுளே!’ என்னும்;
‘வடிவுடை வானோர் தலைவனே!’ என்னும்; ‘வண் திரு வரங்கனே!’ என்னும்;
அடி யடையா தாள் போல் இவள் அணுகி அடைந்தனள் முகில்வண்ணன் அடியே.–7-2-10-த்ரை லோக்ய நிர்வாஹனான இந்திரனுக்கு அந்தராத்மாதயா வாக நின்று அவனுடைய அதிகாரத்தை நடத்துவபனே என்னும்-இதனை-‘மூவுலகாளியே! கடிகமழ் கொன்றைச் சடையனே! நான்முகக் கடவுளே’ என்று சொல்லப்படுகிற, வடிவுடை வானோர்க்குத் தலைவனே!’ என்னும் என்று, திருமலை யாண்டான் வையதி கரண்யமாக்கிப் பொருள் நிர்வஹிப்பர்.- வானோர் வார்த்தை என்று-நிர்வஹிப்பர்‘–என்னும்’ என்பதற்கு ‘என்னுமவனாய்’ என்பது பொருள். (வானவர்கள் -தேவர்கள் மூவரையும் கொண்டாடும் படி -இங்கு லீலா விபூதி மட்டுமே )–இதனை எம்பெருமானார் கேட்டருளி,
ஸாமாநாதி கரண்யாத்தாலே அருளிச் செய்தருளினார்:-மூன்று உலகத்திற்கும் உரியனான இந்திரனுக்கு அந்தர்யாமியாய் நின்று அவனுடைய அதிகாரத்தை நிர்வஹிக்கிறவனே!’ என்னும்:
‘வாசனையை யுடைத்தான கொன்றையைச் சடையிலே யுடைய சிவபிரானுக்கு அந்தர்யாமியாய் நின்று அவனுடைய பதத்தை நிர்வஹிக்கிறவனே!’ என்னும்; ‘அவர்களோடு இவ்வருகுள்ளரோடு வாசி அற எல்லார்க்கும் நிர்வாஹகனாயிருக்கிற நான்முகனாகிய தெய்வத்துக்கு அந்தர்யாமியானவனே!’ என்னும் என்று. வடிவுடை வானோர் தலைவனே என்னும்- பகவானுடைய அனுபவத்தால் வந்த உவகை வடிவிலே தோற்றும்படி இருக்கிற நித்திய ஸூரிகளுக்கு நாதனானவனே’ என்னும்.–வடிவுடை வானோர் தலைவனே!’ என்றதனோடு, ‘மூவுலகாளியே!’ என்றதனோடு, ‘கடி கமழ் கொன்றைச் சடையனே!’ என்றதனோடு, ‘நான்முகன் கடவுளே!’ என்றதனோடு வாசியற்று இருக்கிறதாயிற்று இவர்க்கு:- புண்டரீகாக்ஷனே நால் தோள் அமுதே -போலே வேதாந்த வாசனை மாறாமல்
மயர்வற மதிநலம் பெறுகையாலே; விசேஷணாம்சத்தில் நிற்கின்ற வரல்லரே; சர்வ நிர்வாஹகன் என்று உணர்ந்திருக்குமவராயிற்று இவர்.
–மூ உலகு ஆளியே -பாட்டுத் தோறும் சம்போதானம் -வர வேண்டுமே – இந்திரன் என்று வானோர் சொல்வதாகக் கொண்டால் ரீதி பங்கம் வருமே – என்னும் -தாயார் அனுபாஷணம் பண்ண வேண்டுமே – திருமாலை ஆண்டான் நிர்வாகத்தில் லீலா விபூதி நாதத்வம் மட்டுமே வரும் -அதனால் எம்பருமானார் நிர்வாகம் ஸ்ரேஷ்டம்

மையல் செய்து என்னை மனங் கவர்ந்தானே ! என்னம்’மா மாயனே!’ என்னும்;
‘செய்யவாய் மணியே!’ என்னும்’தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;
‘வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல்!’ என்னும்;
பைகொள்பாம் பணையாய்!இவள் திறத் தருளாய் பாவியேன் செயற் பாலதுவே.–7-2-6-பாடோடிக் கிடக்கிற இவள் திறத்து-அருள் கொள்வார் தேட்டமான நீ அருள் பெற்றால் ஜீவிக்கும் இவளை இப்படி தறைக்கிடை கிடக்க இட்டு வைப்பதே-பாவியேன் செயல் இடத்தது-இவள் பக்கலிலும் குறை இல்லை -உம்முடைய பக்கலிலும் குறை இல்லை -இருவருமான சேர்த்திபெற இருக்கிற என் பாபம் இறே இதுக்கு ஹேது –மத்பாப மேவாத்ர நிமித்த மாஸீத்

சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும் ‘திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;
வந்திக்கும் ஆங்கே மழைக் கணீர் மல்க ‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
‘அந்திப்போ தவுணன் உடலி டந்தானே! அலைகடல் கடைந்த ஆர் அமுதே!
சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல் செய் தானே!–7-2-5-அலை கடல் கடைந்த ஆர் அமுதே!-பிரயோஜனாந்தர பரருமாய் -ஈஸ்வர அபிமானிகளும் ஆனார்க்கு நிரதிசய போக்யமான வடிவைக் கொண்டு ஷூபிதமான கடலைக் கடந்தவனே-இவளுக்கு கடல் கடைய வேணுமோ -கடல் கடைந்த வடிவைக் காட்ட அமையாதோ-ஒரு பிரணயிநியை லபிக்கைக்கு பண்டு கடல் கடைந்தவன் அல்லையோ–உன்னைக் கொண்டு ஒரு பிரயோஜனம் கொள்வார்க்கோ உதவலாவது?-உன்னையே ‘பிரயோஜனம்’ என்றிருப்பார்க்கு உதவலாகாதோ?-ஆர் அமுதே ‑-இவருடைய அமுதத்தைக் கொண்டாயிற்று அவர்கள் கடல் கடைந்து.

என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்; ‘என்னுடைய ஆவியே!’ என்னும்;
‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நிலமகள் கேள்வனே!’ என்னும்;
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய்மகள் அன்பனே!’ என்னும்;

தென் திரு அரங்கம் கோயில் கொண் டானே! தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–7-2-9-என் என்கிற இடம்  திரு மகளில் அந்வயிக்கிறது -மார்பனே என்கிற இடத்தில் அந்வயிக்கிறது அன்று -எனக்கு ஸ்வாமி நியான பிராட்டியை திரு மார்பிலே யுடையவனே என்னா நின்றாள் -இவ்வதி பிராவண்யம் பிராட்டி அடியாக வந்தது என்கை–என்னுடைய ஆவியே!’ என்னும்;-இவளுடைய பிராணன் பஞ்ச வ்ருத்தியாய் அன்று இருப்பது -ஒரு மிதுனமாயிற்று இவளுக்கு பிராணன் –திருமகள் சேர்மார்பனாய்க் கொண்டு எனக்கு தாரகன் ஆனவனே என்னும் – ‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட-நிலமகள் கேள்வனே!’ என்னும்;-அழகுக்கு நின் திரு எயிறு என்னும் அத்தனை -நீ இடந்து கொண்ட –அந்த புரகார்யத்துக்கு ஆளிட ஒண்ணாதே -ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு வல்லபன் ஆனவனே என்னும் –
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட-ஆய்மகள் அன்பனே!’ என்னும்;-உன்னோடே சம்ச்லேஷிக்க வல்லனே என்று துளும்புகிற அன்று -ம்ருத்யு சத்ருசமான ருஷபங்கள் ஏழையும் தழுவி -உருவென்று -உருமு-இடி போலே பயங்கரமான ஏறு -அந்தரம் ஏழும் அதிரும் இடி குரல் -என்ன கடவது இறே -அவளை லபிக்கைக்கு நிமித்தம் ஆகையால் அவள் முலையிலே அணைந்தால் போலே இருக்கை -நப்பின்னை பிராட்டிக்கு ஸ்நிக்தனானவனே என்னும் –நீ கொண்ட -நீ கைக் கொண்ட – இத்தால் என் ஸ்வாமிநி களுக்கு உதவின நீ -அவர்கள் அடியேனான எனக்கு உதவாது ஒழிவதே என்னுதல் -பிரணயி யான என்னை நீ அங்கீ கரியாது ஒழிவான் என் என்னுதல்

என் செய்கின் றாய்? என் தாமரைக் கண்ணா! என்னும் கண்ணீர் மல்க இருக்கும்
என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய்! என்னும் வெவ் வுயிர்த் துயிர்த் துருகும்
முன் செய்த வினையே முகப்படாய் என்னும் முகில்வண்ணா! தகுவதோ என்னும்
முன் செய்திவ் வுலகம் உண்டு மிழ்ந் தளந்தாய்! என் கொலோ முடிகின்றது இவட்கே?–7-2-2–நிர் ஹேதுகமாக முன்பு ஜகத் ஸ்ருஷ்ட்டி யாதிகளைப் பண்ணினவன் அல்லையோ –ஸ்ருஷ்ட்டி யாதிகளில் யவ் கபத்யத்தை கர்ம அனுகுணம் என்ன ஒண்ணுமோ -அபு நா வ்ருத்தி லக்ஷண மோக்ஷத்தை பெறுகைக்கு அடியாய் இருபத்தொரு கனவியதொன்று சேதனன் தலையிலே கிடக்க வற்றோ –காரணம் ஒன்றும் இல்லாமலே முன்பு உலகத்தைப் படைத்தல் முதலானவைகளைச் செய்து ‘தகவிதோ’ என்கைக்கு ‘உபகரணம் இல்லாத அன்று இதனை உண்டாக்கி நோக்கினாய் நீ அன்றோ?’ என்றது,
‘கரண களேபரங்கள் இல்லாமல் கிடந்த இதனை வெறும் உன் கிருபையாலே உண்டாக்கினாய் இத்தனை அன்றோ?-உண்டாக்கிவிட்ட அளவையோ? பிரளய ஆபத்து வயிற்றிலே வைத்துப் பாதுகாத்து, உள்ளே கிடந்து நோவு படாதபடி புறப்பட விட்டு, எல்லை நடந்து மீட்டுக் கொண்டு, எல்லாவிதமான பாதுகாத்தலையும் செய்தாய் அல்லையோ!’ என்றபடி.-

முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் மொய்புனல் பொருநல்
துகில் வண்ணத் தூ நீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ் வண் குரு கூர்ச் சட கோபன்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே.–7-2-11–பெரிய பெருமாள் திருவடிகளைக் கிட்டி அங்குத்தை பிரசாதத்தை பெற்று தரித்தவன் -பூர்வ அவஸ்தையில் சத்தையும் மேல் உள்ளவையும் அவன் அருளாலே யாய் இருக்கையாலே உய்ந்தவன் என்கிறது

ஆக -எல்லாவற்றாலும் –
மதிள் அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் -என்னத் தட்டு இல்லை இறே

ஆழ்வார்களில் நம்மாழ்வார் அதிகரானால் போலே
எம்பெருமான்களில் நம் பெருமாள் அதிகாரய் இறே இருப்பது
அத்தைப் பற்றவும் சொல்லிற்று –

இப்படிப் பெரிய பெருமாள் விஷயமாகவே ப்ரதிபாதித்த திருவாய் மொழியை
ஈன்ற முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன்
நெடும் காலம் நோற்றுப் பெற்ற முந்தின மாதா ஆழ்வார்
வண் தமிழ் நூற்க நோற்றேன் —4-5-10–என்றார் இறே

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.–4-5-10—அடியார்க்கு திருவாய்மொழி பாடுகைக்கு பாக்யம் பண்ணினேன் –-வண்தமிழ்-ஆவது பழையதாகச் செய்தவை இவர் பேச்சாலே இன்று செய்த செயல் போலே ஸ்பஷ்டமாய் இருக்கை-சிர நிர்வ்ருத்தம் அப் யேதத் ப்ரத்யக்ஷம் இவ தர்சிதம்–திருவாய்மொழி பாடுகைக்குப் பாக்கியம் செய்தேன். தன்னைச் சொன்ன மாத்திரத்தில் எல்லாப் பலன்களையும் கொடுக்கக் கூடியதான உதார குணத்ததாய் இருத்தலின், ‘வண்தமிழ்’ என்கிறது.-அன்றிக்கே.-இது முன்னே நடந்ததாயிருந்தாலும் இப்பொழுது நேரிற்கண்டது போல இருக்கின்றது,’ என்பது போன்று, லவ குசர்கள் பாட பாட நடந்த ராம சரித்ரம் மக்களுக்கு விளங்கினது போலே – பழையதாகச் செய்தவை இவர் பேச்சாலே இன்று செய்த செயல் போலே விளக்கமாய் இருத்தலின், ‘வண்தமிழ்’ என்கிறது என்னுதல். ‘கண்டவாற்றால்’ என்று நேரில் பார்ப்பதாய் இருக்கிறதே அன்றோ?

வருந்திப் பெற்ற பிள்ளையை வளர்த்து எடுக்கும் மாதாவைப் போலே திருவாய் மொழியை வளர்த்த இதத்தாய் –
வர்த்திப்பித்த மாதா -எம்பெருமானார் ஆயிற்று
ஞானக் கலையான -1-9-8- திரு வாய் மொழிக்கு ஜென்ம பூமி ஆழ்வார் -தத் வர்த்தகர் எம்பெருமானார் –
இப்படி யாயிற்று ஞான சந்தானம் வளர்த்தியோடே நடந்து செல்வது –

பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு உற்றானாய் வளர்த்து –பெரிய –8-9-7-என்னுமா போலே

நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே
பூவியில் நால் தடம் தோளன் பொரு படை யாழி சங்கேந்தும்
காவி நன் மேனிக் கமலக் கண்ணன் என் கண்ணினுள் உளானே –1-9-8—ஜிஹ்வாக்ரத்திலே விகசியா நின்றுள்ள வித்யாஸ் தலங்களுக்கு எல்லாம்–ஞான சாதனமான -ஞானத்திற்குக் கருவியான-வித்யா – கலை – விசேஷங்களுக்கு எல்லாம்.-

பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு
உற்றானாய் வளர்த்து என் உயிராகி நின்றானை

முற்றா மா மதி கோள் விடுத்தானை யெம்மானை
எத்தால் யான் மறக்கேன் இனி இது சொல் என் ஏழை நெஞ்சே—8-9-7–பித்ராதிகள் ராகாந்தராய்
பிரஜைகளை உத்பாதித்து யௌவன விரோதி என்று பொகட்டுப் போக நிற்பர்கள் ஆயிற்று –
பின்னையும் இவனுக்கு ஒரு உறவு முறை ஒழிய செல்லாது இறே – பண்ணிப் போந்த வாசனையாலே
அவ்வளவில் அவர்கள் வழியாலே நின்று முகம் கொடுக்குமாயிற்று –தன் கை பார்த்து இருக்க வேண்டும் படியான பருவத்தை உடைய எனக்கு எல்லா உறவு முறையும் தானேயாய் நின்று நோக்கி –தாய்  தகப்பன் பொகட்ட அன்றும் நான்  ஜீவிக்க வேணும் என்று இருக்கும் இறே-இச் சேதனன் தான் –
அப்படி தனக்கு பரிவனான தானாயும் நோக்கினான் ஆயிற்று –

மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் ஆவது –
ஈன்ற தாய் பெற்றுப் பொகட்டுப் போனால் வளர்க்கும் தாய் தன் மிடுக்காலே காத்து நோக்குமா போலே ஆயிற்று –
இவரும் அத்தைக் காத்து வளர்த்த படியும் –
தேவகி பெற்ற யுருவு கரிய ஒளி மணி வண்ணனை –பெரிய –1-2-17–
வளர்க்கும் தாயான யசோதை தன் மிடுக்காலே எடுத்து –
ஏதேனும் சொல்லி அசல் அகத்தார் ஏதேனும் பேச நான் கேட்க மாட்டேன் –பெரியாழ்வார் –2-9-6-என்றும்
தூசனம் சொல்லும் தொழுத்தை மாரும் தொண்டரும் நின்ற இடத்தே நின்று –2-9-8-
போதர் கண்டாய் –2-9-6-
தாய் சொல் கொள்வது தன்மம் கண்டாய் –2-9-8-என்று
குற்றம் சொல்லுமவர்களையும் தன் சொல்லாலே வாய்ப் புடை புடைத்து தன் வசமாக்கி
தீய புஞ்சிக் கஞ்சன் –2-2-5-என்று கருத்தைக் குலைத்து
காப்பாரும் இல்லை -2-3-1—என்று இரந்து
அசோதை வளர்க்கின்ற செய்த்தலை நீல நிறத்துச் சிறு பிள்ளை –1-3-12-என்னும்படி
நிறம் பெற வளர்த்து ப்ரமேய சாரத்தை வர்த்திப்பால் போலே
பிரமாண ஸாரத்தை வர்த்திப்பித்த பிரகாரமும் –

பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய
திருவின் வடிவு ஒக்கும் தேவகி பெற்ற
உருவு கரிய ஒளி மணி  வண்ணன்

புருவம் இருந்தவா காணீரே பூண் முலையீர் வந்து காணீரே -1-2-17-லஷ்மி துல்ய ஸ்வாபையான தேவகி பிராட்டி இப்படிக்கு ஈடாக நோற்றுப் பெற்ற –-திருவின் வடிவு ஒக்கும் என்கையாலே –-கீழ் சீதக் கடலுள் அமுதன்ன தேவகி –என்றது -இங்கே ஸ்பஷ்டமாய் இறே இருப்பது –

போதர் கண்டாய் இங்கே  போதர் கண்டாய் போதரேன் என்னாதே போதர் கண்டாய்
ஏதேனும் சொல்லி அசல் அகத்தார் ஏதேனும் பேச நான் கேட்க மாட்டேன்
கோதுகுலமுடை குட்டனேயோ குன்று எடுத்தாய் குடமாடு கூத்தா
வேதப் பொருளே என் வேம்கடவா வித்தகனே இங்கே போதராயே – 2-9 -6- –அசலகத்தானவர்கள்  உன் விஷயமாக வாசாமகோசரமான தோஷங்களை தங்களிலே சொல்லி –-அவ்வளவும் அன்றிக்கே –-என் பக்கலிலே வந்து என் செவியால் கேட்கவும் வாக்கால் சொல்லவும் ஒண்ணாதவற்றை சொல்ல நான் கேட்டு இருக்க மாட்டேன்-

கேசவனே இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே
நேசம் இல்லாதார் அகத்து இருந்து நீ விளையாடாதே போதராயே
தூசனம் சொல்லும் தொழுத்தை மாரும் தொண்டரும் நின்ற இடத்தில் நின்றும்
தாய் சொல்லுக்  கொள்வது தன்மம் கண்டாய் தாமோதரா இங்கே போதராயே 2-9 8- இடைச்சிகளுக்கு அடிச்சிகளாய் போருகிறவர்களும் இடையருக்கு அடியாராய் போருகிறவர்களும் உனக்கு சொல்லுகிற தூஷணங்களுக்கு ஓர் அவதி இல்லை காண் – அவர்கள் நின்ற இடத்தில் நில்லாதே போராய் –

போதர் கண்டாய் இங்கே  போதர் கண்டாய் போதரேன் என்னாதே போதர் கண்டாய்
ஏதேனும் சொல்லி அசல் அகத்தார் ஏதேனும் பேச நான் கேட்க மாட்டேன்
கோதுகுலமுடை குட்டனேயோ குன்று எடுத்தாய் குடமாடு கூத்தா
வேதப் பொருளே என் வேம்கடவா வித்தகனே இங்கே போதராயே – 2-9 -6- -போதரு -என்கிற இது போதர் என்று கிடக்கிறது-அங்கே நின்று தீம்பு செய்யாதே இங்கே போரு கிடாய் –-போதர் என்ற இது போதரு என்றபடி–இவள் கடுக வருகைக்காக மீளவும் ஒருகால் சொல்லுகிறாள் – இப்படி இவள் அழைக்கச் செய்தே -அவன் வர மாட்டேன் என்ன –-வாரேன் என்னாதே வா கிடாய் என்கிறாள்-

கேசவனே இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே
நேசம் இல்லாதார் அகத்து இருந்து நீ விளையாடாதே போதராயே
தூசனம் சொல்லும் தொழுத்தை மாரும் தொண்டரும் நின்ற இடத்தில் நின்றும்
தாய் சொல்லுக்  கொள்வது தன்மம் கண்டாய் தாமோதரா இங்கே போதராயே 2-9 8- –பெற்ற தாய் வசனம் கொள்ளுகை பிள்ளைகளுக்கு தர்மம் காண்-நீ தான் பிறந்த போதே -மாதா வசன பரிபாலனம் பண்ணினவன் அன்றோ – சதுர்புஜ ரூபோப சமஹரனத்தை-திரு உள்ளம் பற்றி அருளி  செய்கிறார் –

தீய புந்திக் கஞ்சன் உன் மேல் சினம் உடையன் சோர்வு பார்த்து
மாயம் தன்னால் வலைப் படுக்கில் வாழ கில்லேன் வாசு தேவா
தாயர் வாய் சொல் கருமம் கண்டாய் சாற்றிச் சொன்னேன் போக வேண்டா
ஆயர் பாடிக்கு அணி விளக்கே அமர்ந்து வந்து என் முலை உணாயே -2-2-5 –துர் புத்தியான கம்சன் –
பிள்ளைக் கொல்லி இறே–மக்கள் அறுவரைக் கல்லிடை மோதின பாபிஷ்டன் இறே –

போய்ப்பாடுடைய நின் தந்தையும் தாழ்த்தான் பொரு திறல் கஞ்சன் கடியன்
காப்பாரும்  இல்லை கடல் வண்ணா உன்னைத் தனியே போய் எங்கும் திரிதி
பேய்ப்பால் முலை உண்ட பித்தனே கேசவ நம்பீ உன்னைக் காது குத்த
ஆய்ப்பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார் அடைக்காய் திருத்தி நான் வைத்தேன் – 2-3 1- அதுக்கு மேலே விரகு அறிந்து -ரஷிக்க வல்லாரும் இங்கு இல்லை –ரஷகரான அவர் வந்திலர் – நானோ அபலை -வேறோர் பரிவர் காண வில்லை -யார்தான் ரஷிப்பார்-

மைத்தடம் கண்ணி யசோதை வளர்க்கின்ற
செய்த்தலை நீல நிறத்துச் சிறுப் பிள்ளை

நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய
கைத் தலங்கள் வந்து காணீரே கனம் குழையீர் வந்து காணீரே -1-2-12–கருத்து பெருத்து இருந்துள்ள கண்ணை உடையவள் என்னுதல் – அஞ்சன அலங்க்ர்தமாய் விஸ்தாரமாய் இருந்துள்ள கண்ணை உடையவள் -என்னுதல் – இப்படி இருந்துள்ள கண் அழகை உடைய யசோதை பிராட்டி -வைத்த கண் வாங்காமல்  நோக்கி வளர்க்கிற வளர்ப்பார் பலர் உண்டாய் இருக்கச் செய்தேயும் – அவர்கள் கையில் காட்டிக் கொடாதே -தானே இறே வளர்ப்பார்கள் –பூ சாரம் உள்ள ஷேத்ரத்தில் -அப்போது அலர்ந்த குவளை பூவின் நிறம் போல் இருக்கிற நிறத்தை உடையவனான சிறு பிள்ளை யினுடைய- அவள் சீராட்டி வளர்த்த முசு முசுப்பு-( ஸ்ரத்தை ) எல்லாம் திரு நிறத்திலே தோன்றும்படி இருக்கும் ஆயிற்று 

அது எங்கனே என்னில் —
இங்கும் ஆழ்வார் அவதரித்து
அவா அற்று வீடு பெற்று எழுந்து அருளின –10-10-11- பின்பு
பாஹ்ய குத்ருஷ்டிகளால்
பாஷா கானமான திருவாய் மொழி அபி பூதமாய் வருகிற படியைக் கண்டு
ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூ க்திகளாலே அத்தை நிரோதித்து-அத்தை இதுக்குக் காவலான வேலியாகக் கற்பித்துத்
திருவாய் மொழியைத் தன் கை வசம் ஆக்கி
திருக் குருகைப் பிரான் பிள்ளானைக் கொண்டு இதன் அர்த்தத்தை வெளியிடுவித்து வர்த்திப்பித்துக் கொண்டு போந்தார் இறே –
மாறன் அடி பணிந்து உய்ந்தவன் -என்னும்படியான அடியார் ஆகையால் –
ஆண்டவன் இட்ட பயிரை வர்த்திப்பிக்க வேணும் இறே அடியானுக்கு —

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11—அவனைப் பெற்று நிரஸ்தித ஸமஸ்த பிரதிபன்னராகையாலே நிர் துக்கரான ஆழ்வார் அருளிச் செய்த –கூப்பிட்டு அவனைப் பெற்று எல்லா தடைகளும் நீங்கியவர்-ஆகையாலே துக்கம் இல்லாத ஆழ்வார் அருளிச் செய்த-

பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பா மன்னு மாறனடி பணிந்து உய்ந்தவன் பல்கலையோர்
தாம் மன்ன வந்த விராமானுசன் சரணார விந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே -1 –மாறன் அடி பணிந்து உய்ந்தவன் -என்பதை மணவாள மா முனிகள்-பராங்குச பாத பக்தம் –என்று வட மொழியில் மொழி பெயர்த்தார்-சரம பர்வ ப்ரபந்தம் என்பது தோன்ற எம்பெருமானை அடி பணிவதாக கூறாது-எம்பெருமான் பாவில் மன்னும் மாறன் அடி பணிந்ததாக அமுதனார் அருளிய-நயம் வியந்து இன்புறத் தக்கது
மந்த்ரத்தின் தாத்பர்யம் தோன்ற-மாறன் அடி பணிந்து –என்றார் அமுதனார் -என்க –பூ மன்னு மாது -அம்ருத மயமான பாசுரம்அண்ணல் செய்து -விண்ணவர் அமுது உண -சக்கை -அமுதில் வரும் –பெண்ணமுதம் தான் கொண்டான்-மாது பொருந்திய மார்பன் -அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதன்-மார்பன் புகழ் மலிந்த பா -திருவாய் மொழி –பக்தாம்ருதம் -தொண்டர்க்கு அமுது உண்ண சொல்மாலைகள் சொன்னேன்-பா மன்னு மாறன் -இன்ப மாரி-அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே –மாறன் அடி பணிந்து உய்ந்த ராமானுஜன் -ராமானுஜன் எனக்கு ஆரமுதே – பிராட்டி -பகவான் -பா -ஆழ்வார் -எம்பெருமானார் -பஞ்சாம்ருதம் கொடுத்த அமுதக்கவி -ஆறு சுவைகளும் அமுதம்

——-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அனந்தாழ்வான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சொட்டை நம்பிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஈஸ்வர முனிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நாதமுனிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி தனியன்-4-ஏய்ந்த பெரும் கீர்த்தி ராமாநுச முனி-ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் –

June 18, 2026

ஏய்ந்த பெரும் கீர்த்தி ராமாநுச முனி தன் வாய்ந்த மலர்ப் பாதம் வணங்குகின்றேன்
ஆய்ந்த பெரும் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் பேராத வுள்ளம் பெற
–ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச் செய்தது —

இனி சடகோபன் பாதங்கள் -என்றத்தை விவரியா நின்று கொண்டு திருவாய் மொழி ஹ்ருத் கதமாம் படி ஆழ்வாருக்கு பரதந்த்ரரான உடையவர் திருவடிகளைத் தொழா நின்றேன் -என்கிறது

ஏய்ந்த பெரும் கீர்த்தி ராமாநுச முனி தன்
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் -3-9-11-என்னுமா போலே
அங்குத்தைக்கு அனுரூபமாய்ப் பொருந்தி இருக்கிற பெரிய புகழை யுடைய
எம்பெருமானார் தம்முடைய

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் றனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர்பத்து
ஏற்கும் பெரும்புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே
.–3-9-11-தகுதியான மிக்க புகழை உடையனாய் நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனாய் -அம்மேன்மையோடே வந்து அவதரித்து மனுஷ்யத்தவே பரத்வத்தை உடையவனும்-உபய விபூதி உக்தன் என்றால் -அவனுக்கு தக்கு இருக்குமா போலே சர்வேஸ்வரன் கவி என்றால் அதுக்கு போரும்படி இருக்கிற ஆழ்வார் –யதோ வாசோ நிவர்த்தந்தே -என்கிற விஷயத்தை விளாக்குலை கொண்ட பிரபந்தம் என்றால் அதுக்கு போரும்படி ஆயிரத்திலும் இப்பத்துக்கு தகுதியான புகழை உடைத்து ஸ்வரூப அநு குணமாக அப்ராப்த விஷயத்தை தவிர்ந்து-ப்ராப்த விஷயத்திலே கவி பாட சொல்லிற்று ஆகையால் ஏறிட்ட நன்மை எல்லாம் பொறுக்கை–பிறரை கவி பாட வேண்டா -என்று உபதேசிக்க வேண்டுகிறது இஸ் சம்சாரத்தில் பிறப்பு இறே -அந்த ஜென்ம சம்பந்தம் அறும் என்கிறா

வாய்ந்த மலர்ப் பாதம் வணங்குகின்றேன்
ஒன்றுக்கு ஓன்று பொருந்தி இருப்பதாய் மலர் போன்ற திருவடிகளை பிரணதி பண்ணா நின்றேன் –
ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே என்கிறபடியே
ப்ராப்ய புத்த்யா வர்த்தமானமாய்ச் செல்லுகிறது –

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் தத் இதராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே
–1-யாவர் ஒரு எம்பெருமானார் -எப்போதும் ஸ்ரீ எம்பெருமானுடைய திருவடித் தாமரை இணையாகிற ஸூவர்ணத்தில்
உள்ள வ்யாமோஹத்தால் அந்த பாதாரவிந்தங்கள் தவிர மற்ற விஷயங்களை த்ருணமாக எண்ணி தம் திரு உள்ளத்தால் திரஸ்கரித்தாரோ – இப்படிப்பட்டவரும் கிருபைக்கு முக்கியமான கடலாக உள்ளவரும் -கல்யாண குண சாலியும்- அஸ்மத் ஆச்சார்யருமான எம்பெருமானார் திருவடிகளை சரணம் புகுகிறேன் –ஸ்நந்த்ய பிரஜை முலையிலே வாய் வைக்குமா போலே ஸ்வாமி திருவடிகளில் சாய்ப்பதே நமக்கு பிராப்யம்

இப்படி வணங்குகிறது எதுக்காக என்னில்
ஆய்ந்த பெரும் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் பேராத வுள்ளம் பெற –

ஆய்ந்த பெரும் சீரார் சடகோபன்
ஆய் கொண்ட சீர் -3-9-9- என்றும்
ஆய பெரும் புகழ் –3-9-8- என்றும் சொல்லுகிறபடி
ஆயப்படும் -வி லக்ஷணமாய் நிரவதிகமான கல்யாண குணங்களால் -பூர்ணரான ஆழ்வாருடையதாய்
அதி ஸூ லபமான திராவிட வேதத்தைத் தரிக்கும் படி நிஸ் ஸலமான மனஸ்ஸைப் பெற

வாய் கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் அல்லேன்;
ஆய் கொண்ட சீர் வள்ளல் ஆழிப் பிரான் எனக்கே உளன்;
சாய் கொண்ட இம்மையும் சாதித்து, வானவர் நாட்டையும்
நீ கண்டு கொள் என்று வீடும் தரும் நின்று நின்றே.–3-9-9-ஆயப்பட்ட சீர் -ஹேய ப்ரத்ய நீக கல்யாண குணகணன்-ஆராயப்பட்ட சீர். என்றது, குற்றங்களுக்கு எல்லாம் எதிர்த்தட்டாக இருக்கிற கல்யாண குணங்கள்.

வேயின் மலிபுரை தோளி பின்னைக்கு மணாளனை
ஆய பெரும்புகழ் எல்லை இலாதன பாடிப்போய்க்
காயம் கழித்து,அவன் தாளிணைக் கீழ்ப்புகும் காதலன்,
மாய மனிசரை என்சொல வல்லேன் என்வாய் கொண்டே?–3-9-8–ஆயப் பட்டு இருக்கை -ஹேய பிரதிபடமாய் இருக்கை-ஆய -என்று ஆன-என்று ஆய் -ஸ்வரூப அநு பந்தி என்றுமாம்-ரூப குணத்தோடு ஆத்ம குணத்தோடு வாசி அற ஒரோ ஒன்றோ நிரவதிகமாய் இருக்கை-

அன்றிக்கே
ஆய்ந்த பெரும் சீர் என்று –
செந்தமிழ் வேதத்துக்கு விசேஷணம் ஆகவுமாம் –
சீர்த் தொடை ஆயிரம் –1-2-11- இறே
இந்தப் பிரபந்த தாரண அர்த்தமாக
வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன்

சேரத் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
சீர்த் தொடை யாயிரத்து ஒர்த்த விப்பத்தே
 –1-2-11-சப்த லக்ஷண கதமான சீர்களினுடைய தொடையை யுடைய ஆயிரத்தில்-சீர் என்று கவிக்கு உறுப்பான அலங்காரங்களைச் சொல்லுதல்-பகவத் குணங்களைச் சொல்லுதல்–எழுத்து அசை சீர் பந்தம் அடி தொடை’ பா இனம் – என்று கவிக்கு உறுப்பாக இருப்பன சில உள; அவற்றைச் சொல்லுதல்;-அன்றிக்கே , உபாசகன் அனுக்ரஹத்தாலே – உபாஸ்யனுடைய கல்யாண குணங்களைத் தொடுத்த ஆயிரம் என்னுதல்.

தீ மனம் கெடுத்து —2-7-8-
மருவித் தொழும் மனத்தை –2-7-7- ஆச்சார்யன் தர வேணும் இறே —
ஆகையால்
தங்கு மனம் நீ எனக்குத் தா –பெரிய திருமொழி தனியன் -என்னும்படி
பேராத வுள்ளம் பெற -என்று எம்பெருமானாரைப் பிரார்த்திக்கிறது –

வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே
–2-7-8-பந்த ஹேது அன்றிக்கே குண அனுபவமே யாத்ரையாம் படியான நிர்தோஷ அந்தகரணாய்-ஜென்மம் ஆகிற துழதி உண்டு -தூர்த்துக்கம் -அது போம்படியாக-விஷயாந்தர ஸ்பர்சியான நெஞ்சைப் போக்குவதும் செய்தாய்-அம்ருதத்தையும் விஷத்தையும் ஒக்க விரும்புவாரைப் போலே உன்னையும் உகந்து ஷூத்ர விஷயங்களையும் உகக்கும் பொல்லாத நெஞ்சைத் தவிர்த்தாய் நல்ல நெஞ்சைத் தந்த அளவன்றிக்கே -பொல்லாத நெஞ்சைக் கெடுப்பதும் செய்தாய் –ஸ்ரீயபதியாகையாலே பூர்ணனான எனக்கு உன்னால் ப்ரத்யுபகாரமாக செய்யலாவது ஒன்றும் காண்கிறிலேன்- பிரதிபகாரம் பண்ணி அல்லது நிற்க மாட்டுகிறிலேன் –

திரிவிக்ரமன் செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய்
உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளி
பரவிப் பணிந்து பல்லூழி யூழி நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே –2-7-7-இப்படி பலகாலும் நினைத்தும் அடைவு கெடப் பேசியும் குண பரவசனாய் வணங்கி இப்படி கால தத்வம் உள்ளதனையும் போக்யமும் பிராப்தமுமாய் உன் திருவடிகளையே அநந்ய ப்ரயோஜனமாய்க் கொண்டு அடிமை செய்யும் மனசையே தந்தாய்-விஷயாந்தரங்கள் அஸ்திரமுமாய் அபோக்யமும் ஆகையால் சஞ்சலம் ஹி மன-என்னும் படி இ றே இருப்பது –

எங்கள் கதியே ராமானுச முனியே
சங்கை கெடுத்தாண்ட தவராசா பொங்கு புகழ்
மங்கையர் கோன் ஈந்த மறை யாயிரம் அனைத்தும்
தங்கு மனம் நீ எனக்குத் தா
–எம்பார் அருளிச் செய்த தனியன்–இவ் வாழ்வாரைப் போலே பாஹ்ய குத்ருஷ்டிகளை நிரசித்து வைதிக மார்க்கத்தை நடத்தியும் உகந்து அருளின நிலங்களை உத்தரித்தும்
தத் பிரதிபாதகமான இவர் ஸ்ரீ ஸூக்தியை வர்த்திப்பித்தும் – போருமவர் இறே உடையவர் –அத்தைப் பற்ற இவ் வாழ்வார் ஸ்ரீ ஸூக்தியான திருமொழி ஆயிரமும் என் ஹிருதயத்திலே நிலைத்து நிற்கும்படி
உபகரித்து அருள வேணும் என்று எம்பெருமானாரை -அர்த்திக்கிறது -இதில் –கண்ண நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் -என்கிற திவ்ய ஸூக்தியை தரிக்கும் படியான மனஸ்சைத் தந்து அருள வேணும் – குறையல் பிரான் அடிக்கீழ் விள்ளாத அன்பன் இராமானுசன் -என்றும் -நீலன் தனக்கு உலகில் இனியான் -என்றும் -கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமான் ஒலி மிக்க பாடலை உண்டு தன் உள்ளம் தடித்து -என்றும்-எம்பெருமானாரைச் சொல்லக் கடவது இறே-அத்தாலே அவரை அபேஷிக்கிறது –

அதாவது
இவர் தான் – மாறன் அடி பணிந்து உய்ந்தவராய்
மாறன் பணித்த மறை யுணர்ந்தோனை –இராமா -46- என்றும்
தென் குருகைப்பிரான் பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னைத் தன் பத்தி என்னும் வீட்டின் கண் வைத்த ராமானுஜன் -இராமா –29-என்றும்
பண்டரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாக யுடையராய் –இராமா –64-
திருவாய் மொழியின் மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தொறும் இருக்குமவராய் –இரா –60-
உறு பெரும் செல்வமும் மாறன் விளங்கிய சீர் நெறி தரும் செந்தமிழ் என்று அறிதர நிற்குமவர் ஆகையாலும் –இராமா -19-
அவர் திருவடிகள் ராமானுஜர் ஆகையால் –இவரை அர்த்திக்கிறது –

கூறும் சமயங்கள் ஆறும் குலையக் குவலயத்தே
மாறன் பணித்த மறை யுணர்ந்தோனை மதியிலியேன்
தேறும்படி என் மனம் புகுந்தானைத் திசை யனைத்தும்
ஏறும் குணனை இராமானுசனை இறைஞ்சினமே -46- –ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த திராவிட வேதமான ஸ்ரீ திரு வாய் மொழியை-சாஷாத் கரித்து அருளினவராய் –உயர்வற உயர்நலம் உடையவன் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி -உளன் சுடர் மிகு சுருதியுள் -நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் – நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான் – அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல்-மங்கை உறை மார்பா – அவாவில் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே
-என்று இப்படி ஸ்ரீ நம் ஆழ்வாராலே அருளிச் செய்யப்பட்ட –மிக்க இறை நிலையும் மெய்யா உயிர் நிலையும் தக்க நெறியும்-தடையாகி தொக்கியிலும் ஊழ் வினையும் வாழ் வினையும் வோதும் குருகையர் கோன் யாழின் இசை வேதத்தியல் -என்கிறபடியே ஸ்ரீ ஆழ்வாராலே அருளிச் செய்யப்பட்டதாய்-அர்த்த பஞ்சகத்தையும் அடைவே பிரதிபாதிக்கிற ஸ்ரீ திருவாய் மொழி யாகிற
திராவிட வேதத்தை சார்த்தமாக தெளிந்து கொண்டு இருக்கை யாகிற-பரி பூர்ண ஞானத்தை உடையராய் –வட மொழி மறை போலே தான் தோன்றியாய் இராமல்-ஆபிஜாத்யத்தாலே உண்டான-மேம்பாடு தோற்ற – மாறன் பணித்த மறை-என்றார் .-மறை- மாறன் பணித்ததாயினும் தன்னிடம் அன்பு இல்லாதார்க்கு தன் பொருளை மறைத்திடுதல்-பற்றி –மறை -என்கிறார் – ரகுவர சரிதம் முநி ப்ரநீதம்-என்பது போலே மறை மாறன் பணித்தது –என்றார்–ஸ்ரீ திரு குருகூர் அதனை உளம் கொள் -உம்மை உய்ய கொண்டு போக-.திவ்ய தேச ப்ராவண்யமே உய்ய ஒரே வழி என்றவாறு

கூட்டும் விதி என்று கூடும் கொலோ தென் குருகைப்பிரான்
பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னை தன் பத்தி என்னும்
வீட்டின் கண் வைத்த இராமானுசன்
புகழ் மெய் உணர்ந்தோர்
ஈட்டங்கள் தன்னை என்னாட்டங்கள் கண்டு இன்பம் எய்திடவே -29 –தர்சநீயமான ஸ்ரீ திரு நகரிக்கு நாதரான ஸ்ரீ ஆழ்வார் உடைய பாட்டு என்று கொண்டு -பிரசித்தமாய் – வேத ரூபமாய் -செம் தமிழால்-இருக்கிற ஸ்ரீ திருவாய் மொழியைத் தம்முடைய பக்தி யாகிற-வாசஸ் ஸ்தானத்திலே வைத்த
ஸ்ரீ எம்பெருமானார்
 —தென் -தர்சநீயுமான என்னுதல் -தெற்கு திக்கிலே இருக்கிறது என்னுதல் –
தென்-தர்சநீயமான-அழகு-தர்சனத்துக்கு தர்சநீயமான-ஆழ்வாரை காட்டி கொடுத்த மகாத்மயம் .தென் திசை நோக்கி கை கூப்புகிறோம்.-திரு வாய் மொழி தோறும்-குருகை -பரம பதத்தை சேர்க்கும் ஊர் என்னுதல் – பரம பதத்தோடு சமமான வைபவத்தை உடைய ஊர் என்னுதல் –
பிரான் -இப்படிப் பட்ட திரு நகரியிலே அவதரித்து லோகத்தார் எல்லாரும் உஜ்ஜீவிக்கும்படி –
தத்வ ஹித-புருஷார்த்த தத் யாதாத்ம்யங்களை-திவ்ய பிரபந்த முகேன – உபகரித்த நம் ஆழ்வார் உடைய –அன்றிக்கே –-அவ்வூரிலே அவதரிக்கையாலே எல்லாருக்கும் அவர் உத்தேச்யமாய் இருக்கிற-வழியாலே அவ்வூருக்கு உபகாரகர் -என்னவுமாம்–பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னை –
அவா வற்று வீடு பெற்ற குருகூர் சடகோபன் சொன்ன
-என்றும் –-தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற-முதல் தாய் சடகோபன் -என்றும் சொல்லுகிறபடியே- பத்தர் பரவும் ஆயிரம் -1-5-11–ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரம்-3-9-11- பொய்யில் பாடல் ஆயிரம்–4-3-11- தென்னன் குருகூர்க் காரி மாறன் சடகோபன் ஒலி புகழ் ஆயிரம்–5-2-11- சேமங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த நாமங்களாயிரம்–5-9-11- குருகூர்ச் சடகோபன் சொன்ன ஆணை ஆயிரம்–6-3-11- தெளிவுற்ற கண்ணனைத் தென் குரு கூர்ச் சடகோபன் சொல் தெளிவுற்ற ஆயிரம்–7-5-11- தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குருகூர்ச் சடகோபன் சொன்ன தீர்த்தங்கள்–7-10-11-தென் குருகை –பசும் தமிழ் தன்னை-
பாட்டாய பல பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து –
திருவாய் மொழி – 10-6 2- – -என்றும்
குருகூர் சடகோபன் பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும் -திருவாய் மொழி – -10 6-11 – – -என்றும்-ஸ்ரீ குருகைப் பிரான் பாட்டு பிரசித்தம் –தன் பத்தி என்னும் – அத்தை விஸ்மரித்தால் -ஒரு ஷணம் ஒரு கல்பம் போலே இருக்கும்படி-பண்ணக் கடவதான -பரம பக்தி யாகிற அதுவும் –
தன் பக்தி –-எல்லாருடைய பக்தி போல் அன்றிக்கே –பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை உள்ளபடி அறிந்த எம்பெருமானாருடைய ப்ரேமம் அவருடைய ஞான-வைசத்யத்துக்கு தகுதியாய் இருக்கும் இறே -இப்படிப் பட்ட பக்தி யாகிற-வீட்டின் கண் வைத்த –-கண் -சப்தமி -வீடு -ஆவாசஸ்தானம் -அநர்கமான ரத்னத்தை செப்பிலே வைத்து கொண்டு இருப்பாரைப் போலே தம்முடைய பக்தி யாகிற மகா ஸௌதத்திலே வைத்துக் கொண்டு இருக்கிற–வீட்டின் கண்…ரத்னத்தை செப்பிலே வைப்பது போல
பக்தி தான் பொன் -திரு வாய் மொழி ரத்னம்–செப்பு பெட்டகத்தில் வைத்தால் போல.–தன் பத்தி என்னும் வீட்டின் கண் வைத்த திருவாய் மொழி விஷயமாக எம்பெருமானாருக்கு ஏற்பட்ட பக்தி -திரு வாய் மொழிக்கு குடி இருக்கும் இல்லமாக அமைந்தது – திருவாய் மொழி அன்றி -இருப்புக் கொள்ளாத நிலையே-எம்பெருமானார் உடைய பக்தி -என்க – அதனை இல்லமாக கொண்டது திருவாய் மொழி என்பது எப்பொழுதும்-பேர் அன்புடன் அனுசந்திகப் படுவது என்னும் கருத்து கொண்டது-இவ் இல்லத்துக்கு தனி சிறப்புண்டு – அது தோன்ற-தன் பத்தி என்னும் வீடு -என்றார் 

பண்டரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய்
விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம்
மெய்ம்மை
கொண்ட நல் வேதக் கொழும் தண்டம் ஏந்திக் குவலயத்தே
மண்டி வந்தேன்றது வாதியர்காள் உங்கள் வாழ்வற்றதே – – 64- –எங்களுக்கு விதேயமாய் இருக்கும் ஸ்ரீ இராமானுச முனி யாகிற யானை –-பண்ணார் பாடல் -திருவாய் மொழி – 10-7-5- -என்னும்படி ஸ்ரீ ஆழ்வார் பண்ணிலே உபகரித்து அருளின செவ்வித் தமிழான ஸ்ரீ திருவாய் மொழியால் விளைந்த ஆனந்தமானது –ஒழுகா நின்றுள்ள – மதமாய்க் கொண்டு -விஸ்த்ருதமாக –வேத நூலோதுகின்றதுண்மை – என்னும்படி யதாபூத வாதித்வத்தால் வந்த மெய்ப்பாட்டை உடைய விலஷண வேதமாகிற எழில் தண்டையும் ஏந்திக் கொண்டு – நீங்கள் தன்னரசாக நடத்துகிற பூமியிலே ஒருவருக்கும் நேர் நிற்க ஒண்ணாதபடி -தள்ளிக் கொண்டு வந்து உங்கள் மேலே எதிர்ந்தது –
வாதிகளாய் உள்ளீர் -சிஷ்யர்களும் பிரசிஷ்யர்க்களுமாய் பல்கிப் பணைத்து இருந்த உங்களுடைய சம்பத்து முடிந்ததே – லோகம் பிழைத்ததே -என்று கருத்து –பண்டரு மாறன் பசும் தமிழ் –என்றதுக்கு பண்டே உள்ளதாய் -பெறுதற்கு அரிதாய் –இருந்துள்ள மாறன் பசும் தமிழ் -என்று பொருள் ஆனாலோ என்னில் -அது ஒண்ணாது .-பண்டு என்கிற சொல்லு பூர்வ கால வாசி இத்தனை அல்லது பூர்வ காலீன வஸ்து வாசி யல்லாததினாலே.பண்டு அரு என்ற–பதச் சேதமாகில்-பண்டு என்கிற பதம் கால பரமே யானாலும் – கங்கா யாகோஷம் – என்கிற இடத்தில் கங்கா சப்தம் தீர வாசகம் ஆனால் போலே –
லஷணையாய் இச் சப்தம் காலீன வஸ்து வாசகம் என்று சொல்லலாம் இறே –அந்த பஷத்தில் –பிரதித்வாபராந்தரத்திலும் ஸ்ரீ வியாச அவதாரம் பண்ணி -சம்ஸ்ர்க வேதங்களை ஸ்ரீ சர்வேஸ்வரன் தானே வ்யவசிக்குமா போலே பிரதி கலி யுகத்திலும் ஜ்ஞான யோகியாய் அவதரித்து ஸ்ரீ த்ரமிட வேதங்களை ஸ்ரீ சர்வேஸ்வரன் வெளி இட்டு போகிறான் என்று -பிரம்ம பார்க்கவாவ்ர்த்த பாத்மாதி புராணங்களிலே ஸூபிரசித்தமாக சொல்லுகையாலே – நித்தியமாய் -அபௌருஷேயமாய் இருந்துள்ள ஸ்ரீ திருவாய் மொழி -பாகவதர்கு ஒழிய -அந்யருக்கு வாக் மனச்சுக்களாலே ஸ்பரசிக்கவும் கூட அரிதான -என்றபடி —பண்டரு மாறன் தமிழ்–மாறன் பண்ணிலே தருகிற பசும் தமிழ் என்று இயைக்க –
மாறன்-ஸ்ரீ நம் ஆழ்வார்–பண்-ஸ்வரம்-அதனிலே தருதலாவது -அப்பண்ணிலே அமைவுறும்படிதருகை
பண்ணார் பாடல் இன் கவிகள்-ஸ்ரீ திருவாய் மொழி -10 7-5 – – என்று தாமே அருளிச் செய்தது காண்க .–இனி தருதல்- உண்டு பண்ணுதலாய் -மணம் தரு மலர் -என்பது போல –பண் தரு பசும் தமிழ் -என்று இயைதலுமாம் – புஷ்பம் பரிமளத்தொடே அலருமா போலே ஸ்ரீ திருவாய் மொழி அவதரித்த போதே பண் மினுங்கி யாயிற்று இருப்பது –என்று பண்ணார் பாடல் வ்யாக்யானத்தில் ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்தது-இங்கு நினைக்கத் தகும் .–மாறன் பண்டரு பசும் தமிழ் என்னும் இடத்தில்
கபிலர் பாட்டு என்னும் இடத்தில் போலே –செய்யுட் கிழமைக் கண் ஆறாம் வேற்றுமை தொக்க தென்று கொள்க .-பசும் தமிழ்-பசுமையான தமிழ் -பண்புத் தொகை –-பசுமையாவது -செம்மை-செவ்விய தமிழ் என்றபடி .-பொருள் விளங்கு நடையில் உள்ள தமிழ் செவ்விய தமிழ் -என்க –இனி —
பசுமை என்றும் மாறாத இளமையாய்க் கன்னித் தமிழ் என்னலுமாம் .–இனி —பசும் தமிழாவது -பிற மொழி கலப்பற்ற தூய தமிழ் என்று உரைத்தலுமாம் .-ஸ்ரீ திரு வாய் மொழி என்னாது –ஸ்ரீ மாறன் பசும் தமிழ் -என்றார்-அவருடைய நான்கு திவ்ய பிரபந்தங்களையும் நெஞ்சில் கொண்டு-என் நெஞ்சத்து உள்ளிருந்து இங்கு இரும் தமிழ் நூல் இவை மொழிந்து -ஸ்ரீ திருவாய் மொழி -10 6-4 – -என்று
ஸ்ரீ நம் ஆழ்வாரே தம் நூல்களை இரும் தமிழ் நூல் –என்பது காண்க–இனி தமிழில் முதல் நூல் எனத்தக்கது இது ஒன்றே என்பது கருதி தமிழ் நூல்களுக்கு தாயான–திருவாய் மொழியை பசும் தமிழ் -என்றார் ஆகவுமாம்–குறு முனிவன் முத்தமிழும் என் குறளும் நங்கை சிறு முனிவன் வாய் மொழியின் சேய் – என்றது காண்க –லஷ்மி நாதாக்ய சிந்தவ்-சடரிபுஜலத ப்ராப்ய காருண்ய நீரம் நா தாத்ரா வப்யஷி சத்த நுர குபதாம்போஜா சஷூர் ஜ்ஜ்ராப்யாம் – கத்வாதாம்ய மு நாக்யாம் சரிதம நுய தீந்த்ராக்ய பத்மாகரேந்த்ரம் சம்பூர்ய ப்ரானிசச்யே ப்ரவஹதி நிதராம்-தேசிகேந்திர பிரமௌநை – என்கிறபடியே –ஸ்ரீயபதி யாகிற கடலில் நின்றும் –ஆழ்வார் ஆகிற முகில் – பெரும் கருணை யாகிற நீரை முகந்து – ஸ்ரீ பெரிய முதலியார் ஆகிற குன்று தன்னிலே வர்ஷிக்க – அக் கருணை யானது ஸ்ரீ மணக்கால் நம்பி ஸ்ரீ உய்யக்கொண்டார் -ஆகிய திரு வருவியாய் – பரம ஆசார்யரான ஸ்ரீ ஆள வந்தார் -ஆகிற ஆற்றிலே சென்று – ஸ்ரீ எம்பெருமானார் ஆகிய பொய்கையை பூரித்து – ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் ஆகிற மடையாலே தடையறப் பெருகி –சம்சாரி சேதனராகிற பயிரை நோக்கி – ரஷித்தது என்று சொல்லுகையாலே –கவியமுதம் –என்றும் –-தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலை -என்றும்
ஸ்லாக்கிக்கும்படி-சர்வருக்கும் அமுதமயம் ஆகையாலே -ஆனந்தாவஹமான ஸ்ரீ திருவாய் மொழியாலே விளைந்த ஆனந்த மானது – இவ்வளவாக பெருகி வாரா நின்றுள்ள -அம்ர்தமாய்க் கொண்டு –பண்ணார் பாடலினால் ஸ்ரீ திரு மால் இரும் சோலையான் ஆனந்தம் அதிகமாகி அவ் ஆனந்தத்துக்கு போக்கு வீடாக -தென்னா தென்னா -என்று ஆலாபனம் செய்து பாடா நிற்பானாயின்
ஸ்ரீ எம்பெருமானார்க்கு இத்தகைய பண்ணார் பாடலினால் ஆனந்தம் விளைய கேட்க வேண்டுமா –
தமிழ் – அதற்கு மேலே பசும் தமிழ் – அதற்கு மேலே பண் தரு பசும் தமிழ் – எல்லா வற்றிற்கும் மேலே மாறன் பண் தரு பசும் தமிழ் – ஸ்ரீ எம்பெருமானாரை மதம் பிடித்த பெரு வேழம் ஆக ஆக்குவதற்கு இதற்கு மேல் என்ன வேண்டும் – ஸ்ரீ திருவாய் மொழி அனுபவம் உள் அடங்காது வெளியே கண்களிலே ஆனந்த பாஷ்பமாய்ப் பெருக்கெடுத்த படி

உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகம் தொறும் திரு வாய் மொழியின்
மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தொறும்
மா மலராள்
புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும்
குணம் திகழ் கொண்டல் இராமானுசன் என்னும் குலக் கொழுந்தே – -60 –ஆத்ம குண ஔஜ்ஜ்வல்ய யுக்தராய் -ஆத்ம குணங்கள் தன்னை சர்வ விஷயமாக உபகரித்து அருளும் பரம ஔ தாரராய் –
எங்கள் குலத்துக்கு தலைவரான ஸ்ரீ எம்பெருமானார்-ஞாதவ்யார்தங்களை அடங்க அறிந்து இருந்தும் –
யதா ஞான யுக்தரானவர்கள் கூட்டுரவு தோறும் – ஸ்ரீ திரு வாய் மொழியினுடைய பரிமளிதமாய் விலஷணமான இசை நிரந்தரமாக நடக்கும் ஸ்த்தலங்கள் தோறும் – ஸ்ரீ பெரிய பிராட்டியாராலே நித்ய வாசம் பண்ணப்பட்ட அழகிய திரு மார்வில் உடையவன் உகந்தருளி வர்த்திக்கும் ஸ்ரீ திருப்பதிகள் தோறும் – அவ்வவற்றை அனுபவிக்கையில் உண்டான ஆசையாலே புக்கு அவற்றிலே ஆழம் கால் பட்டு நில்லா நிற்பர்- இது அவருடைய பக்தி வைபவம் இருக்கும் படி என்று கருத்து–உண்மையான மெய் ஞானி என்று ஸ்ரீ ஆழ்வார்களைச் சொல்ல குறை இல்லை- ஸ்ரீ குறையல் பிரான் அடி கீழ் ஸ்வாமி எழுந்து அருளி இருக்கிறார் இன்றும் நாம் சேவிக்கும் படி–ஸ்ரீ ஆழ்வார் உடன் சேர்த்தி திரு மஞ்சனம் இன்றும் சேவிக்கலாமே ஸ்ரீ திரு குருகூரில்–ஸ்ரீ ஆழ்வார்கள் பதின்மரிலும் வைத்துக் கொண்டு பிரதாநரான ஸ்ரீ நம் ஆழ்வாருடைய திருப் பவளத்தாலே அருளிச் செய்யப்பட சப்த ராசியான ஸ்ரீ திவ்ய பிரபந்தத்தினுடைய சர்வ கந்த -என்கிற விசேஷத்தை பிரதிபாதிக்கையாலே -தானும் பரிமளிதமாய் அநு சந்தாதாக்களுக்கு அவ் விஷயத்தைக் கொடுக்கக் கடவதாய் – யாழினிசை வேதத்தியல் -என்றும் –
தொண்டர்க்கு அமுதம் -என்றும் சொல்லுகிறபடியே போக்ய தமமாய் இருக்கிற அனுசந்தான கான ரூபமான இசையானது – எந்த எந்த ஸ்தலத்திலே நடையாடி ஸூ ப்ரதிஷ்டமாய் இருந்ததோ அவ்வவ ஸ்தலங்கள் தோறும்-
-ஸ்ரீ குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரியும் ஸ்ரீ மதுர கவிகள் போல்வார் ஸ்ரீ திரு வாய் மொழியை- இனிமையாக இசைக்கும் இடங்களில் எல்லாம் -ஸ்ரீ எம்பெருமானார் -புக்கு நிற்கிறார் -என்க —பண்ணார் பாடல் -என்று ஸ்ரீ நம் ஆழ்வாரே அருளிச் செய்தமைக்கு ஏற்ப –
திருவாய் மொழியின் இன்னிசை
-என்கிறார்–ஸ்ரீ நம் ஆழ்வார் உடைய ஏனைய திவ்ய பிரபந்தங்களும் இயற்பா ஆதலின் இசைப்பாவான ஸ்ரீ திருவாய் மொழியின் இன்னிசை என்கிறார்–எங்கு எங்கு எல்லாம் ஸ்ரீ ரகுநாதனுடைய கீர்த்தனம் நிகழ்கின்றதோ அங்கு அங்கு எல்லாம்-மத்தகதிடை கைகளைக் கூப்பி கண்ணும் கண்ணீருமாய் ஆஞ்சநேயன் ஈடுபட்டு நிற்பது போல்-ஸ்ரீ திருவாய் மொழியின் இன்னிசை மன்னும் இடம் எல்லாம் ஸ்ரீ எம்பெருமானார் புக்கு நிற்கிறார் என்க-இன்பம் பயக்க எழில் மாதர் தன்னோடும் அவனே இனிது கேட்பானே– ஸ்ரீ ஸ்வாமி கேட்க கேட்க வேண்டுமா -மிதுனமே அங்கே இருக்க – ஸ்ரீமத் பாகவதம் பாடும் இடம் எல்லாம் கன்று குட்டி -தாய் பசு போல கண்ணன் போவது போல–நுகர்ச்சி உறுமோ மூ உலகின் வீடு பேறு-திருவாய் மொழி -8 10 9- – என்று தொடங்கும் பாசுரத்தில் பேசியதற்கு ஏற்ப –ரசித்து ஸ்ரீ திருவாய் மொழி பாடும் இடங்கள் எல்லாம் பரம ரசிகரான ஸ்ரீ எம்பெருமானாரும் புக்கு நிற்கிறார் என்றது ஆயிற்று

உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்

நெறி தரும் செம் தமிழ் ஆரணமே என்று இந் நீள் நிலத்தோர்
அறிதர நின்ற இராமானுசன் எனக்கு ஆரமுதே – – 19-ஸ்வ சம்பந்தத்தை வுடையவர்களுக்கு இன்னார் என்னும் மதிப்பை கொடுக்குமதாய்-ஹித பரமுமாய் -ப்ரியகரமுமாய் -அஞ்ஞாத ஜ்ஞாபகமுமாய் -பிராப்ய ப்ராபகங்களுமாய்- இருக்கையாலே – சீரியதாய் -நிரவதிகமான சம்பத்தும் -பிதாவும் -மாதாவும் -சதாசார்யனும் – பரிமளிதமான புஷ்பத்தை பிறப்பிடமாக உடைய ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபனான ஸ்ரீ சர்வேஸ்வரனும் – ஸ்ரீ ஆழ்வார் பகவத் ப்ரசாதத்தாலே தமக்கு பிரகாசித்த -பரபக்தி -யாதி – ச்வபாவங்களின் உடைய அடைவிலே – உபகரித்து அருளின -திராவிட வேதமான ஸ்ரீ திருவாய் மொழியே-என்று இம் மகா ப்ருதிவியில் உள்ளார் அறியும்படி நின்ற ஸ்ரீ எம்பெருமானார் எனக்கு நிரதிசய போக்யர் –
அதவா-விளங்கிய சீர் நெறி தரும் என்றது -சீர்த் தொடை யாயிரம் -திருவாய் மொழி -1 2-11 – – என்னும்படி தமக்கு பிரகாசித்த பகவத் குணங்களை அடைவே உபகரித்து அருளின -என்னவுமாம் –உறு பெரும் செல்வமும்அவிந்தந தனஞ்சய பிரசமதம் தனம் தந்தனம் -என்கிறபடியே அப்ராப்தமான சம்பத் அன்றிக்கே – தனஞ்சய விவர்த்தனம் தனமுதூட கோவர்த்தனம் சூசாத நம பாதநம்-சூ மனசா சமாராதனம் -என்றும் –-ஸாஹி ஸ்ரீர்ம்ர்தாசதாம் -என்றும் -முக்த ஐச்வர்யத்துக்கு உடல் ஆகையாலே –ப்ராப்தமாய் –-பெரும் –-ஷீணே புன்யே மர்த்த்ய லோகாம் விசந்தி -என்றும் –-ஒரு நாயகம் ஓட வுலகு உடன் ஆண்டவர்-கரு நாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர் பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர் –என்றும்-சொல்லுகிறபடியே அதி ஸ்வல்பமாய் -அநித்யமாய்-இருக்கை அன்றிக்கே –
கொள்ளக் குறைவற்று இலங்கி – கொழுந்து விட்டோங்கிய -என்கிறபடியே – கொள்ளக் கொள்ள பெருகி வரக் கடவதாய் இருக்கிற – செல்வமும் – சம்பத்தும் -அளவியன்ற யந்தாதி யாயிரம் இறே -இது –சகல ஜன உஜ்ஜீவன ஏக ப்ரவர்த்தம் ஆகையாலும் –பக்தாம்ர்தம் விஸ்வ ஜன அநு மோதனம் -என்றும்
தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொன்னேன் -என்றும் சொல்லுகிறபடியே
பிரியத்தையே நடத்தக் கடவதாகையாலும் -திரு வாய் மொழியிலே – வீடு முன் முற்றவும் -என்று தொடங்கி -கண்ணன் கழலினை –என்னும் அளவும் ஆதி அந்தத்திலே ஹிதத்தையே போதிக்கையாலே ஹிதத்தை நடத்தக் கடவதாகையாலும் தாயும் தந்தையுமாய் இருக்கும்அத்ர பரத்ர சாபி – என்கிறபடியே உபய விபூதியிலும் இச் சேதனனுக்கு உபாதேய தமனாய் –பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி -அஞ்ஞாத ஜ்ஞாபனம் பண்ணின சதாசார்யனும் – இவ் உபகார ஆதிக்யத்தாலே காணும் இவன் பரித்யாஜ்யனாகாதே ஒழிந்தது – உயர்த்தியை உடையனானதும் – சேதனருடைய அஞ்ஞான அந்தகாரத்தை நிவர்த்திப்பவன் ஆகையாலே குரு –தனக்கு ஒரு பயன் கருதாது -அவ் இறைவனுக்கு மகிச்சியை ஊட்டுதல் வேண்டும் –-இதுவே அடிமை எனப்படுவது -இத்தகைய அடிமையே ஆத்மா ஸ்வரூபத்தின் உண்மை நிலையம் -என்று முன்னம் முன்னம் மறந்த ஆத்மாவினுடைய-அனந்யார்ஹ சேஷத்வத்தை உணர்த்துதலின் திருவாய் மொழி -உயர் குருவாய் ஆயிற்று என்க –திருவாய் மொழியும் -இவை பத்தும் வீடே – 1-1 11- – என்றபடி வீடு அளிப்பதாலின் உபாயமாகவும் கேட்டாரார் வானவர்கள் செவிக்கு இனிய செம் சொல்லே –10 6-11 – -என்றபடி வீட்டில் உள்ளாறும் கேட்டு இன்புறும்படி இருத்தலின் ப்ராப்யமாகவும் ஆதலின் -பூ மகள் நாதன் -ஆயிற்று –சீர்-பரபக்தி -பர ஞான -பரம பக்திகள் -என்னும் நல் இயல்புகள் மறைந்து கிடந்த அவை இறைவன் அருளால் நம் ஆழ்வாருக்கு வெளிப்பட்டன –அவை தமக்கு அங்கன் வெளிப்படும் அடைவிலே அவர் செம் தமிழ் ஆரணத்தை தந்து அருளினார் –
பரபக்தி யாவது பிரிவில் வருந்தும்படியான நிலையையும் கூடல் மகிழும்படியான நிலையையும் விளைவிப்பதான தனிப்பட்ட அன்பு –பர ஞானம் ஆவது -அத்தகைய அன்பு முதிர்ந்த நிலையில் ஏற்படும் நேரிடையான தோற்றம் – பரம பக்தி யாவது ஷண காலமும் பிரிவை சஹிக்க மாட்டாது அனுபவித்தே யாக வேண்டிய பேரன்பு – ஸ்ரீ நம் ஆழ்வாருக்கு சூழ் விசும்பு -திருவாய் மொழி வரையிலும் பர பக்தியும் – சூழ் விசும்பு அணி முகில் -லில் பர ஞானமும்-முனியே நான் முகனில் பரம பக்தியும் ஸ்ரீ இறைவன் அருளால் விளங்கியதாக பெரியோர் விளம்புகின்ற்றனர் –
இனி சீர்த் தொடை யாயிரம்
-என்றபடி-இறைவன் குணங்கள் அவன் அருளால் விளங்க அவ்வடைவில் நம் ஆழ்வார் செம் தமிழ் ஆரணத்தை தந்து அருளினார் என்னலுமாம் –

மற்றை ஆழ்வார் திவ்ய பிரபந்தங்களை அங்க உப அங்கமாக உடைய இவருடைய திராவிட வேதமான திவ்ய பிரபந்தம் ஒழிய தத் இதர கிரந்தங்களில் சபலமான மனஸ்ஸூ சலியாமல் இது ஒன்றிலுமே உற்று நிலை நிற்க வேணும் என்று அவரை அர்த்திக்கிறது -என்கை —

——-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அனந்தாழ்வான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சொட்டை நம்பிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஈஸ்வர முனிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நாதமுனிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி தனியன்-3-மனத்தாலும் வாயாலும் வண் குருகூர் பேணும்-ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் –

June 17, 2026

மனத்தாலும் வாயாலும் வண் குருகூர் பேணும் இனத்தாரை அல்லாது இறைஞ்சேன்
தனத்தாலும் ஏதும் குறைவிலேன் எந்தை சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று
–ஸ்ரீ சொட்டை நம்பிகள் அருளிச் செய்த தனியன் –

இதில் ஆழ்வார் திருவடிகளே-ப்ராபகமும் ப்ராப்யமுமாகிற படியை-அந்வய-வ்யதிரேகங்கள்
இரண்டாலும் தர்சிப்பிக்கிறது

மனத்தாலும் வாயாலும் வண் குருகூர் பேணும் இனத்தாரை அல்லாது இறைஞ்சேன்
மனத்தாலும் வாயாலும் வண் குருகூர் பேணுகை யாவது
திருக்குருகூர் அதனை உளம் கொள் ஞானத்து வைம்மின் –4-10-9-
திருக்குருகூர் அதனைப் பாடி யாடிப் பரவிச் சென்மின்கள் –4-10-2-என்று
ஆழ்வார் உபதேசம் கேட்ட படியே
மனஸ்ஸாலே நினைத்தும்
வாயாலே சொல்லியும் போருகை —
பேணுகை -விரும்புகை –

விளம்பும் ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும்
வளங் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை
உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக்கொண்டு போகுறிலே
.–4-10-9–வி லக்ஷணமாய் சிரமஹரமான நீர் நிலங்களாலே சூழப் பட்டு தர்ச நீயமான திரு நகரியை உளம் கொள் ஞானம் -மானஸ ஞானம் -ஞானம் உதித்து பாஹ்ய இந்த்ரியங்களாலே பாஹ்ய விஷயங்களை க்ரஹிப்பதற்கு முன்பே மானஸ ஞானத்துக்கு இவ் ஊரை விஷயம் ஆக்குங்கோள்—ஞானம் உதித்து, புறத்தே யுள்ள இந்திரியங்களாலே புறப் பொருள்களில் செல்வதற்கு முன்னே, மனக் கண்ணுக்குத் திரு நகரியை விஷயம் ஆக்குங்கோள்.-உளம் கொள் ஞானம் – மானச ஞானம். என்றது, ‘புறத்திலே செல்லாதபடி ஞானத்தை உள் விஷயத்தில் (திருநகரியில்) ஈடுபடும் படியாகச் செய்யப் பாருங்கோள்,’ என்றபடி.பிரயோஜனம் என் என்னில்-உம்மை உயக்கொண்டு போகுறிலே.-அசன்னேவ என்னும் படி -இருக்கிற உங்களை சந்த மேனம் ததோ விது-என்ன பண்ண வேண்டி இருந்து கோள் ஆகில் –நேய மஸ்தி என்கிறபடி தக்தப்படம் போலே இவற்றின் சத்தை சென்று அற்றது என்று இருக்கிறார் –இவனை இருக்கின்றவனாக அறிகிறார்கள்’ என்கிறபடியே, உம்முடைய இருப்பைப் பெற்றுப் போக வேண்டியிருக்கில்.-இல்லாதவனாக ஆகிறான்’ என்கிறபடியே, ‘சென்றற்றது’ என்றே இருக்கிறார் ஆயிற்று இவர்.-மஹாத்மநா – தன்னில் தான் வாசி சொல்லுமத்தனை போக்கிப் புறம்பு ஒரு ஒப்புச் சொல்ல ஒண்ணாத படியான பெருமாளோடே விரோதம் உண்டு; ஆகையாலே, இலங்கையும் இல்லை; இராவணனும் இல்லை; நீங்களும் இல்லை,’ என்று திருவடி கூறினாற்போலே.

நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்,
மாட மாளிகை சூழ்ந்தழகாய திருக் குருகூரதனைப்
பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே
.–4-10-2—மாடங்களாலும் மாளிகைகளாலும் சூழ்ந்து தர்ச நீயமான திரு நகரி -ப்ராப்ய பூமி என்று தோன்றும் படியாயிற்று இருப்பது–உங்களுக்கு தான் நல்ல தேசம் தேட்டமே; ‘முத்தனாகிற பேற்றினைக் கொடுக்கும் தேசம், என்று தோற்றுகிறதில்லையோ?’ என்றபடி.–அதனைப் பாடி ஆடி – பிரீதியினாலே தூண்டப் பட்டவராய்க் கொண்டு பாடி, உடம்பு இருந்த இடத்தில் இராமல் ஆடி, கிரம மின்றியே கூப்பிட்டுக் கொண்டு. இதனால், –நின்ற ஆதிப்பிரான் என்றது மிகையாய் இருக்கை-விஷ்ணோ ராயத நேவ சேத்-தேசோயம் சர்வ காம துக் -ப்ரீதி பிரேரித்தராய்ப் பாடி -அவ்வளவில் பர்யாப்தி பிறவாமையாலே அக்ரமாகப் புகழ்ந்து -இதுவே யாத்திரையாக வர்த்தியுங்கோள்-இத் தேசம் என்றால் எல்லார்க்கும் தன் திரு உள்ளம் போலே என்று இருக்கிறார்–பகவான் எழுந்தருளி யிருக்கும் ஊரில் வசிக்கக் கடவன்,’ ‘இந்தத் தேசமானது, புண்ணியத்தைக் கொடுக்கக் கூடியது;-விரும்பியன வற்றை எல்லாம் கொடுக்கக் கூடியது.-தேசோயம் சர்வ காம துதூத் – என்கிறபடியே, இது தானே பேறு,’ என்றபடி.-அந்தத் தேசம் என்றால் தம் திரு வுள்ளம் இருக்குமாறு போலே இருக்கும் என்று இருக்கிறார் காணும் எல்லார்க்கும்.பல்லுலகீர்!–தாந்தனாய் சமித்பாணியாய் வந்தவனுக்கு ஹிதம் சொல்லுகிறார் அன்றே-இவை என்ன உலகு இயற்கை -என்று லோகம் அடங்க நோவு படுகிற படியைக் கண்டு சொல்லுகிறார் ஆகையால் எல்லாரையும் காலைப் பிடிக்கிறார்-பரந்தே.–- பெரிய திரு நாளுக்கு வந்து ஏறுமா போலே சர்வதோதிக்கமாக சென்று ஆஸ்ரயிங்கோள்-பல் உலகீர் பரந்து பாடியாடிப் பரவிச் சென்மின்கள் -என்று அன்வயம்

வளந்தழைக்க உண்டால் என்? வாசம் மணந்தால் என்? தெளிந்த கலை கற்றால் என்? சீசீ! – குளிர்ந்த பொழில் தண் குருகூர் வாவிச் சடகோபன் ஊர் எங்கள் வண் குருகூர் என்னாத வாய்.’

யத்தி மனஸா த்யாயதி தத் வாஸா வததி -என்னக் கடவது இறே –
இப்படி ஆழ்வார் சம்பந்தம் உடைய தேசத்திலே விருப்பம் உடையவர்களை அடைய பஜித்தேன் –
ஆழ்வார் சம்பந்த சம்பந்திகளை ஒழிய அந்நியரை ஆதரித்துப் பஜியேன்

வண் குருகூர் பேணும் இனத்தாரை
நல்லார் நவில் குருகூர் –திரு விருத்தம் –100- இறே

நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர்
வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல்லார் தொடையில் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம்
பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே
 – – 100-நல்லார் நவில் –லோகத்தில் சத்துக்கள் அடைய -ஆழ்வார் ஆழ்வார் -என்னா நிற்கும் இத்தனை –ராமோ ராமோ ராம -இதிவத் -(ராமோத்வைதம் போல் ஆழ்வார் ஒருவரே இங்கு பேசப்படுகிறார் ) சர்வதாபி கதஸ் சத்பி –பெருமாள் சிரமம் செய்து விட்டு ஒரு-நிழலிலே இருந்த அளவிலே – பர சம்ருத்யை  ஏக பிரயோஜனாந்தர வர்கள் அதுக்கு உறுப்பான-கற்கைக்காக படு காடு கிடப்பர்கள் –-சமுத்திர இவ சிந்துபி -இப்படி கிடக்கிறது -இவர் குறை-நிரம்புக்கைக்கோ என்னில் –-பண்டே நிரம்பி நிற்கிற கடலை நிரப்புக்கைக்கு அன்றிக்கே ஆறுகள் வந்து புகுருகிறது –-நடுவு தரிப்பு இல்லாமை இத்தனை இறே –

இனத்தார்
ஸமூஹமாய் உள்ளவர்கள்
அன்றிக்கே
ஸஜாதீயர் -என்னவுமாம்
இத்தால்
குருகூர் சடகோபன் பாட்டான திருவாய் மொழியிலே அந்வயம் உடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸமூஹத்தை -என்றபடி –
குழாம் கொள் திருக்குருகூர் இறே –2-3-11-

இத்தால்
திருவாய் மொழியில் அதி பிரவணர் ஆனவர்களை ஒழிய அந்நியரை ஆதரியேன் என்றதாயிற்று –

குழாங்கொள் பேரரக்கன் குலம்வீய முனிந்தவனைக்
குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
குழாங்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடி
குழாங்களாய் யடியீருடன் கூடி நின்றாடுமினே –2-3-11-வாயும் திரையுகளில் அவசாதத்தே பிழைத்தவர் -என்று இவரை அனுபவிப்பிக்கைக்கு ப்ருந்தபிருந்தைர யோத்த்யாயாம் -என்கிறபடியே வைஷ்ணவ சமூகங்களை உடையதாயிற்று திரு நகரி-அடியார்கள் கூட்டத்தைக் கொண்ட அழகிய திருக் குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபர். ஜன ஸ்தானம் அடியறுப்பு உண்ட பின்பு தண்ட காரண்யத்தில் முனிவர்கள் குடி ஏறியது போன்று, ‘வாயும் திரையுகளும்’ என்ற திருவாய்மொழியில் உண்டான நிலையினின்றும் தப்பிய ஆழ்வாரைக் காண வேண்டும் என்னும் பேரவாவோடு ஸ்ரீ வைஷ்ணவர்கள் அடையத் திரண்டு வந்து சேர்ந்தார்களாதலின், ‘குழாங்கொள் தென்குருகூர்’ என்கிறார்.

இப்படி அந்நியரை அநாதரிக்கைக்கு அடியுடைமை சொல்லுகிறது –
தனத்தாலும் ஏதும் குறைவிலேன் -என்று –
தனம் மதீயம் தவ பாத பங்கஜம் -என்கிறபடியே
ஆழ்வார் திருவடிகளைப் பற்றின நமக்கு –
விபூதிஸ் ஸர்வம் -என்னும் படி
தனத்தாலும் ஏதும் குறைவிலேன்-ஒன்றும் குறை உடையேன் அல்லேன் –

விலாஸ விக்ராந்த பர அவர ஆலயம்
நமஸ் யதார்த்தி ஷபணே க்ருத ஷணம்
தனம் மதீயம் தவ பாத பங்கஜம்
கதா நு சாஷாத் கரவாணி சஷூஷா
—30-வைத்த மா நிதி -திருவாய் மொழி -6-7-11-என்கிறபடியே
எனக்கு ப்ராப்யமுமாய் பிராபகமுமாய் உள்ளத்தை-சர்வ ஸூ லபமுமாய் ஆஸ்ரித வத்ஸ்லமுமாய்
நிரதிசய போக்யமுமான திருவடிகளை –-த்ரிவிக்ரமா பதாந தூளி தானத்திலும் காணப் பெறாத நான்
என்று காண இருக்கிறேன்-விஷயங்களிலே மண்டிக் கிடக்கிற சம்சாரிகள் நடுவே இருக்கிற உமக்கு
நம்மை ஒழியச் செல்லாதபடி புகுர நிருத்தினோமாகில்-ஒன்றும் செய்யாதாரைப் போலே கூப்பிடுகிறது என் -என்ன-கண்ணாலே கண்டு விடாய் தீர இருக்கிற எனக்கு சம்சாரிகளில் காட்டில் ஒரு வ்யாவ்ருத்தி பண்ணித் தர அமையுமோ–ஒரு தேச விசேஷத்திலே சதா தர்சனம் பண்ணப் பெறாதே காண விடாய்த்த எனக்கு கண்ணாலே காண வேணும் –பரம புருஷார்த்தமான திருவடிகளை கண்டு களிப்பது என்றோ என்று அலமருகிறார்-தாவி வையம் கொண்ட தடம் தாமரை கட்கே கோவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ-என்றும்-அன்று தேர் கடாவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொலோ கண்களே –என்றும் சாஷாத்காரம் பெற பதறி அருளிச் செய்கிறார் –-சஷூஷா—திவ்ய சஷூஸ் ஸூக்களை கொடுத்து அருளினாய் அதே போலே பாவியேனுக்கும் அருள வேணும் – நெஞ்சு என்னும் உட் கண்ணால் காண விரும்புகிறார் –பரமபத பிராப்தியை அபேக்ஷிக்கிறார் என்றுமாம் –

எந்தை சடகோபன்
அன்னையாய் அத்தனாய் -கண்ணி -4-
மாதா பிதா –என்னும்படி-எனக்கு ஜனகரான ஆழ்வார் –

நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மையாகக் கருதுவர் ஆதாலில்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே-4தாயாய் தந்தையாய் அறியாதன அறிவித்த அத்தா -என்று பகவத் விஷயத்தில் ஆழ்வார் சொல்லுவது எல்லாம் ஆழ்வார் விஷயத்தில் சொல்லுகிறார் இவர் –

மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதி
சர்வம்
யதேவ நியமேன மதநவ்யாநாம்
ஆத்யஸ்ய ந குலபதேர் வகுளாபி ராமம்
ஸ்ரீ மத ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா –5—மாதா–உத்பத்திக்கு முன்னே வரம் கிடந்தது பெருகைக்கு வருந்தி பத்து மாசம் கர்ப்ப தாரணம் பண்ணி-பிரசவ வேதனையை அனுபவித்து-அஸூத்திகளையும் மதியாதே பால்ய தசையிலே ஆதரித்து பகவான் ஆனாலும் இவன் புருஷ பாஷணம் பண்ணப் பொறுத்து-அகல இசையாதே அவன் பிரியத்தையே வேண்டும் – மாதாவைப் போலே உபகாரகனாய் இருக்கை –பிதா–அவள் பாத்ர மாத்ரமாம் என்னும்படி உத்பாதகனாய் என்றும் ஒக்க ஹித பரனான பிதாவும்-யுவதயஸ் – இருவரையும் மறந்து விரும்பும் யுவதிகளைப் போலே நெஞ்சுக்கு இனியராய் இருக்கை–தனயா – அவளுடைய யௌவனத்தை அழிய மாறிப் பெற்றவனாய்
பால்யத்தில் ஸூககரனாய் பக்வ தசையில் ரஷகனாய் ஆமுஷ்மிகத்தில் நிரய நிஸ்தாரகனான-புத் -என்னும் நரகத்தை -தாண்டுவிப்பவன் – புத்ரனைப் போல் இருக்கை –விபூதி – விபவம் இல்லாத போது இவை எல்லாம் அசத் சமமாய் இருக்கையாலே-இவற்றை நன்றாக்கும் ஐஸ்வர்யம் போலே உத்தேச்யமாய் இருக்கை –சர்வம் – அனுக்தமான சர்வ போகங்களுமாய் இருக்கை –யதேவ
அவதாரண்த்தாலே –சேலேய் கண்ணியர்-திருவாய் மொழி -5-1-8- என்று இருக்கும் ஆழ்வார் நினைவு இன்றி இருக்கை –

பாதங்கள்
ப்ராப்த சேஷியானவர் திருவடிகள் –

யாமுடைய பற்று –
தச் சேஷ பூதரான நம்முடைய பற்று –
தகையார் சரணம் தமர்கட்க்கு ஓர் பற்று –10-4-10—
யாமுடைய பற்று இதுவாயிற்று

வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும்
புகையால் விளக்கால் புது மலரால் நீரால்
திகை தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற
தகையான் சரணம் தமர்கட்கு ஓர் பற்றே–10-4-10-அநந்ய பிரயோஜனர்க்கு அத்விதீயமான அபாஸ்ரயம் -பக்திமான்களுக்கு பல ப்ரதமமாய் உபாயமாய் இருக்கும் -தன்னையே பற்றினார்க்கு அவ்யவஹித உபாயமாம் –தன் திருவடிகளைப் பற்றினார்கட்கு பின்னையும் புறம்பு போய்-ஒரு பற்று தேட வேண்டாதபடியான பற்று–அநந்ய பிரயோஜன பக்திமான்களுக்கும் பலத்தை கொடுப்பவனாய் உபாயமாய் இருக்கும்–தன்னையே பற்றினார்க்கும் நேரே உபாயமாய் இருக்கும் –-தன் திருவடிகளைப் பற்றினார்கட்கு பின்னையும் புறம்பு போய்-ஒரு பற்று தேட வேண்டாதபடியான பற்று-–-தமர்கள் -பக்திமான்களையும் பிரபத்திமான்களையும் குறிக்கும்-

——-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அனந்தாழ்வான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சொட்டை நம்பிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஈஸ்வர முனிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நாதமுனிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி தனியன்-2-திரு வழுதி நாடு என்றும்-ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் –

June 16, 2026

திரு வழுதி நாடு என்றும் தென் குருகூர் என்றும் மருவினிய வண் பொருநல் என்றும்
அரு மறைகள் அந்தாதி செய்தான் அடி இணையே எப்பொழுதும் சிந்தியாய் நெஞ்சே தெளிந்து —
ஸ்ரீ ஈஸ்வர முனிகள் அருளிச் செய்த தனியன்-

ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை-அவர் சம்பந்தம் உடைய நாட்டோடும் ஊரோடும் ஆற்றோடும் வாசி அற எல்லாவற்றையும் சேர்த்து ப்ரஸன்னமான மனஸே -அனுசந்தித்துப் போரு -என்கிறது –

வைகுந்தச் செல்வனார் –நான்முகன் –75-சேவடி யோபாதி
வைகுண்ட வானாடும் -பெரிய திரு –68-
இறந்தால் தங்குமூரான –பெரிய –10-2-10-
கண்ணன் விண்ணூரும் –திரு விருத்தம் -47-
அமுத விரசை ஆறும் -ஆர்த்தி –20–உத்தேச்யமாம் போலே இங்கும் இவை உத்தேச்யம் ஆகிற படி –

நாக் கொண்டு மானிடம் பாடேன் நலமாகத்
தீக் கொண்ட செஞ்சடையான் பின் சென்று -என்றும் பூக் கொண்டு
வல்லவாறு ஏத்த மகிழாத வைகுந்தச்
செல்வனார் சேவடி மேல் பாட்டு
-75-பரம பதத்தில் ஐஸ்வர்யத்தை யுடையனாகையாலே ஷூத்ரரான இவர்கள் ஏத்த அவிக்ருத்தனாய் இருக்கிறவனுடைய திருவடிகளில் பாட்டைக் கொண்டு மனுஷ்யரைப் பாடேன் -திரு உள்ளத்தில் ஒரு உகப்பு இன்றிக்கே -மதியாதே கலங்காப் பெரு நகரில் அயர்வறும் அமரர்கள் அதிபதி(பரத்வத்திலே நோக்கு இவருக்கு -விகாரம் இல்லாத தேசமாயும் நித்ய முக்தரும்
எளியவன் என்றால் அவஜாநந்தி மாம் மூடர் ) பிரேம பரவசராய் புகழ –(விகாரம் இல்லா திவ்ய தேசம் -அயர்வில்லா நித்யர் முக்தர்களின் அதிபதி )அத்தை உகந்து கேட்டு வாழ்ந்து கொண்டு இருக்கும் ஐஸ்வர்யம் யுடையவருடைய -(செல்வனார் ) சிவந்த திருவடிகளை பாடக் கடவ நாக் கொண்டு
ஷூத்ர மனுஷர்களைப் பாடேன் –

கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும்
புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத் தகம்–68-திரு மலையும் திருப்பாற் கடலும் பரமபதமும் என்கிற தேசங்கள்
உள வாகவுமாம்-அளவாகவுமாம்-இப்படி சில விசாலமாக பிரதேசங்கள் இருக்கவுமாம் -என்றும் அர்த்தம்- அவற்றிலே தனக்கு ருசி யுண்டாகவுமாம் தோற்றும் இருக்கிறிலன் – என்னோடே கலந்த பின்பு ஸுபரி ஐம்பது பெண்களோடே (மாந்தாதாவுடைய பெண்கள் )கலந்து போருகிற இடத்தில் தன் மக்களைத் தனித்தனியே -பிதா உனக்கு குறை இல்லையே என்று கேட்க என்னுடன் பிறந்தாரை ஒருத்தரையும் அறியாதே எப்போதும் என்னோடே இருக்கும் இதுவே வெறுப்பு வேறே ஒரு குறையில்லை என்று சொன்னால் போலே இவரும் தம்முடைய எல்லா ஸ்தானங்களையும் மறந்து
என்னை அல்லது அறிகிறிலர் என்கிறார்

அங்கு வானவர்க்கு ஆகுலம் தீர அணி இலங்கை யழித்தவன் தன்னைப்
பொங்கு மா வலவன் கலிகன்றி புகன்ற பொங்கத்தம் கொண்டு இவ்வுலகினில்
எங்கும் பாடி நின்று ஆடுமின் தொண்டீர் இம்மையே இடரில்லை இறந்தால்
தங்குமூர்
அண்டமே கண்டு கொண்மின் சாற்றினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-10-இம்மையிலே இடர் இன்று வாழப் பெறுவீர்-இறந்த பின்பு மீட்சி இன்றி வைகுண்ட மா நகர் மற்றது கையதுவே

திரிகின்றது வடமாருதம் திங்கள் வெந்தீ முகத்து
சொரிகின்றது அதுவுமது ,கண்ணன் விண்ணூர் தொழவே
சரிகின்றது சங்கம் தண்ணம் துழாய்க்கு  வண்ணம் பயலை
விரிகின்றது முழு மெய்யும் என்னாம் கொல் என் மெல்லியற்கே
 –47–என்றும் ஒக்க ஓர்  இருப்பேயாய் காட்சி கொடுக்கிற(கண்ணன் காதா சித்கதம் -விண்ணூர் என்றும் ஒக்க ஓர்  இருப்பேயாய் காட்சி கொடுக்கிற) கண்ணன் விண்ணூர் –ராகவஸ்ய நிவேசனே -ஸூந்தர காண்டம் – 33-7 – ஸ்ரீ ராமனுடைய அரண்மனையில் -என்னுமா போலே –(மானுஷன் லோகான் -ராகவஸ்ய வீட்டில் போல் இங்கும் கண்ணன் விண்ணூர் -சர்வ ஸூலபன் எம்பெருமான் பரம பதத்தில் விருப்பம்-உண்டானதால் பார தந்தர்யம் இழக்க வேண்டி வருமே

இத்தால் ஆழ்வார் திருவடிகளைச் சிந்தித்த படி சொல்கிறது –
கவள யானைக் கொம்பு ஓசித்த கண்ணன் என்றும் -என்று தொடங்கி — பார்த்தன் பள்ளி பாடுவாளே –பெரிய –4-8-1-என்னுமா போலே-

கவள யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் காமரு சீர்க்
குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும்
தவள மாட நீடு நாங்கைத் தாமரையாள்  கேள்வன் என்றும்
பவள வாயாள் என் மடந்தை   பார்த்தன்பள்ளி பாடுவாளே
-4-8-1-பிராட்டி தன்மையில் -திருத் தாய் பாசுரத்தாலே -அருளிச் செய்தது –-ஆழ்வார் யுடைய அளவற்ற அபி நிவேசம் இத் திரு மொழியாக பரிணமித்தது-எம்பெருமான் யுடைய குண சேஷ்டிதங்களையே வாய் வெருவிக் கொண்டு இந்த திருப்பதியின் திரு நாமத்தையே பாடா நிற்கிறாள் -என்கிறாள்

திரு வழுதி நாடு என்றும்
வாய்த்த வழுதி வள நாடன்
-5-6-11- என்று நிரூபகமாக இறே அது தான் இருப்பது –
அவர் ஸம்பந்தத்தால் அவரோ பாதி அதுவும் அனுசந்தேயமாய் இருக்கும் ஆகையால் திருவடிகள் நாட்டோடே நடக்கிறது –

கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி வளநாடன் மன்னு குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ்மாலை ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெருஞ் செல்வத்தராய்த் திருமால் அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே.–5-6-11-வாய்க்கை யாவது கிட்டுகை -அதாவது பாவனா ப்ரகர்ஷத்தாலே சாஷாத் கரிக்கை-அநுகாரத்தாலே கிட்டின படியை நினைக்கிறது.-பாவநா ப்ரகரஷத்தாலே தத் பாவத்தை கிட்டி இருப்பாராய் வழுதி வள நாட்டுக்கு நிர்வாஹகராய் ஸூஸ்த்திரையான திரு நகருக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அந்தரங்க விருத்தியாக அனுஷ்ட்டித்து-

தென் குருகூர் என்றும்
குருகூர் நகரான் -திரு விரு -100–என்று அவர் இருக்கும் ஊர் ஆகையாலே அதுவும் அப்படியேயாய் இருக்கை –

நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர்
வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல்லார் தொடையில் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம்
பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே
 – – 100-குருகூர்க்கு ‘நல்லார்நவில்’ என்ற விக்ஷேணமிடட்தனால், அப்படிப்பட்ட திவ்ய தேசத்தில் பிறந்ததனால் தான் தமக்கு இப்படிப்பட்ட பக்திப் பெரு காதல் உண்டாயிற்று என்பதாகத் தொனிக்கும். இப்படி லோக விலக்ஷணராண ஆழ்வார்
திருவலதரிக்கப் பெற்ற திருநகரியை நல்லவரர் நவிலச் சொல்ல வேணுமோ?-திருவாய் மொழியில் * பயிலுஞ்சுடரொளி! நெடுமற்கடிமை முதலிய திருப்பதிககளில் ஆழ்வாருடைய பாகவத பக்தி நிஷ்டை
மிக விளங்குதலால் ‘திருமால் திருப்பேர் வல்லாறடிக் கண்ணி சூடிய’ என்று தமக்கு இட்டுக்கொண்ட விக்ஷேணம் மிகப் பொருத்தம்.

மருவினிய வண் பொருநல் என்றும்-மருவ இனிதான வண் பொருநல் -என்றபடி –
பொருநல் சங்கணித் துறைவன் –10-3-11- இறே-இதுவும் இவர் இறங்கும் துறை
அவர் திருவடிகளும் இறங்கும் துறை நல் ஞானத் துறை -திரு விரு –93-
வண் சடகோபனைப் போலே இதுவும் வண்மை யுடைத்தாய் இருக்கும் –

செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு அத் திருவடி திருவடி மேல் பொருநல்
சங்கணி துறைவன்
வண்தென் குருகூர் வண் சடகோபன் சொல்லாயிரத்துள்
மங்கையர் ஆய்ச்சியர் ஆராய்ந்த மாலை அவனோடும் பிரிவதற்கு இரங்கி தையல்
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன இவையும் பத்து அவற்றின் சார்வே–10-3-11-இவர் இருந்த இடத்தே சத்துக்கள் சேருமா போலே –சங்குகளாலே அணியப் பட்ட -திருப் பொருநலை யுடையராய் –சம்ருதமான திரு நகரியை யுடையராய் –பரம உதாரரான ஆழ்வார் அருளிச் செய்த ஆயிரத்திலும்

காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்
மாலை வெய்யோன் பட வையகம் பரவுவர் அன்ன கண்டும்
காலை நன் ஞானத் துறை படிந்தாடிக் கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் அவன் மைப்படியே –
 – -93 –ஞானம் ஆகில்-பகவத் விஷயத்தை பற்றி அன்றி இராது இறே –ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -(முதல் திருவந்தாதி )என்னக் கடவது இறே –தத் ஜ்ஞானம் அஞ்ஞானம் அதோன்யதுக்தம் (பராசர மகரிஷி )- என்றும் –வித்யான் யாசில் பகை புணம் – புறம்பே ஒன்றை அறிந்ததோடு துன்னம் பெய்ய அறிந்ததோடு வாசி இல்லை இறே –துறை படிந்தாடி –ஜ்ஞானம் ஆகிற இத் தீர்த்தத்திலே புக்கு அவஹாகித்து நல்ல ஞானமாகிய துறையிலே இறங்கி மூழ்கி (ஆச்சார்யர் கீழ் படிந்து -பகவத் பக்தியாகிய வெள்ளத்தில் ஆழ்ந்து ஈடுபட்டு)

ஸவித்ரீ முக்தாநாம்
இப்படி விலக்ஷணமான
நாடும்
நகரும்
துறையும்
என்று அனுசந்தித்து

அரு மறைகள் அந்தாதி செய்தான் அடி இணையே எப்பொழுதும் சிந்தியாய் நெஞ்சே தெளிந்து
அதாவது
எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் செய்தற்கு உலகில் வரும் சடகோபனைச்
சிந்தையுள்ளே சிந்தித்துப் போரு
-என்கை-

எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபனைச் சிந்தை யுள்ளே

பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம்
உய்தற்கு உதவும் இராமானுசன் எம் உறு துணையே – 18- –அநந்தாவை வேதா – என்கிறபடி ஒரு சங்கையை இட்டு –சொல்லப் போகாத படி ஒரு அபரிமிதங்களாய் -சர்வோப ஜீவியங்கள் ஆகாதே
அதி க்ருத்தாதி காரங்களாய்-அந்யோப மரத்தக வாக்யங்களாலே -ஸ்வார்த்தத்தை தெளியும் போது -எத்தனையேனும் அதிசய ஞானர் ஆனவர்களுக்கும் அருமைபடுத்தக் கடவதான சம்ஸ்க்ருத வேதங்களை –ஆயிரம் இன் தமிழால் –வரணாதி நியதி இன்றிக்கே -ருசி பிறந்தவர்கள் எல்லாரும் அதிகரிக்கும் படியாய் –ஆயிரம் என்ற ஒரு சங்கையுடன் கூடி இருப்பதாய் -உயர்வற உயர்நலம் -என்று தொடங்கி -உயர்ந்தே -என்னும் அளவும் – ஆதி மத்திய அவசானங்களிலே – ஸ்ரீ பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளையும் – சேதன அசேதன ரூப ச்வபாவங்களையும் – சேதனருடைய சம்சார பந்த ஹேதுக்களையும் – தந் நிவர்தன உபாயமான தத் விஷய ப்ரீதி ரூபாபன்ன ஞானத்தையும் –
ஜகத் காரண வஸ்து நாராயணனே என்று -தேவதாவஸ்து விசேஷ நிர்த்தாரணத்தையும் –
அவனுடைய சமஸ்த கல்யாண குணாத் மகத்வத்தையும்-அநந்த கருட விஷ்வக்சேநாதி திவ்ய சூரி பரிசர்யமான நளினனாய்க் கொண்டு நின்ற படியையும் – தாம் அனுபவித்த படியே எல்லாரையும் அனுபவிப்பைக்காக -தம்முடைய நிர்ஹேதுக பரம கிருபையாலே – லவ்கிகரைக் குறித்து உபதேசித்த படியையும் – தம்முடைய அபிநிவேசம் எல்லாம் தீரும்படி அவனை ப்ராபித்த படியையும் -விசதமாக பிரதிபாதிப்பதாய் –ஸ்வா ர்த்தத்தை எல்லாம் ஸூஸ்பஷ்டமாகவும் ஸூக்ரஹமாகவும் தெறிவிக்குமதாய் – அத ஏவ அத்யந்த சுலபமாய் -பக்தாம்ர்தம் -தொண்டர்க்கு அமுதுண்ண சொல் மாலைகள் –என்னும்படி அநு போக்தாக்களுக்கு அத்யந்தம் போக்யமாய் -நடை விளங்கு தமிழான -த்ரமிட பாஷையாலே – ஸ்ரீ திருவாய் மொழி என்கிற பிரபந்த ரூபேண –

குரு பாதாம் புஜத் த்யாயேத் -என்கிறபடியே
திருவடிகளையே சிந்தித்துப் போரு –
மற்று ஒன்றிலே மருளாதே தெளிந்து அவ்வடியை அனுசந்திக்கப் பார் –

அன்றிக்கே
வேதத்திலே -வைகுண்ட புவன லோகம் -என்று நாட்டையும்
யோ வைதாம் ப்ரஹ்மணோ வேத அம்ருதே நாவ்ருதாம் புரீம் -என்று
அம்ருத வாஹினியான விரஜை ஆற்றிலே ஆவ்ருதமான வைகுண்ட நகரத்தையும்

விஷ்ணோ பத பரமே மத்வ உத்ஸ-என்றும்
தத் விஷ்ணோ பரமம் பதம் -என்றும்
அவன் திருவடிகளையும் உபநிஷத்துக்கள் ஓதினால் போலே

அந்த அருமறையின் தாத்பர்யமான அர்ச்சாவதாரமான ஆதிப்பிரானதான திரு வழுதித் திரு நாட்டையும்

திருக்குருகூர் அதனுள் நின்ற ஆதிப்பிரான் –4-10-1-என்னும்படி அவன் வர்த்திக்கிற ஊரையும்

ஊருக்கு வடக்கான வண் பொருநல் ஆற்றையும்

அங்கே நிற்கும் ஆதிப்பிரானுடைய நீள் கழலையும் –1-9-11-இறே -திருவாய் மொழியில் சொல்லிற்று

இது மற்றை உகந்து அருளின நிலங்களில்
ஆற்றுத் துறைக்கும்
ஊருக்கும்
நாட்டுக்கும் உப லக்ஷணம் —

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர்படைத்தான்
குன்றம் போல் மணிமாடம் நீடு திருக் குருகூரதனுள்
நின்ற ஆதிப் பிரான்
நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–4-10-1–ஸ்ருஷ்டரான சேதனர்க்கு ஆச்ரயண ருசி பிறந்த அன்று நாம் தூரஸ்தராக ஒண்ணாது என்று திரு நகரியிலே நின்று அருளின ஸுலப்யத்தை சொல்லுகிறது – குன்றம் போல் -மலைகளை கொடு வந்து சேர வைத்தால் போலே-மணி மாடம் -மணி மயமான மாடம் நீடு -மாடங்களினுடைய ஒக்கம் இருக்கிற படி –ஆசிரயணீயன் தன்னோபாதி ஆகர்ஷகமான தேசம் என்கை–இப்படிப் படைத்தவன் தான் தூரத்தில் உள்ளவனாய் நிற்கை யன்றிக்கே, மலைகளைக் கொடு வந்து சேர வைத்தாற்போலே இருப்பனவாய், மணி மயமான மாடங்களினுடைய உயர்ச்சியை யுடைத்தான திருநகரியிலே நின்ற. பெருமாள் மீண்டும் என்னைக் கூப்பிடுவரோ என்னும் ஆசையால் பல நாள் குகனோடு கூட அங்கே நின்றிருந்தேன்,’ என்னுமாறு போலே, நாம் கொடுத்த கரணங்களைக் கொண்டு ‘நான் வணங்கமாட்டேன்,’ என்னாமல், வணங்குவர்களோ?
அன்றிக்கே,
நாம் வளைந்து கூட்டிக் கொள்ளப் புக்கால், விலக்கா தொழிவர்களோ!’ என்று கொண்டு காலத்தை எதிர் நோக்கினவனாய் நிற்கின்றபடி.
அங்குச் சேஷியைப் பெறுகைக்குச் சேஷ பூதனானவன் நின்ற நிலை; இங்கு அடியவர்களைப் பெறுகைக்கு இறைவன் நின்ற நிலை. சேஷ பூதனை லபிக்க சேஷி நிற்கும் நிலை –

உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவற்கு கண்ண பிராற்கு
இச்சையுள் செல்ல யுணர்த்தி வண் குருகூர்ச் சடகோபன்
இச்சொன்ன வாயிரத்துள் இவையுமோர் பத்து எம்பிராற்கு
நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே –1-9-11-ஒரு கால் விண்ணப்பம் செய்ய -என்றும் ஓக்க திருவடிகள் தலையிலே சேரும்-நீள் கழல் -ஆசா லேஸம் உடையார் இருந்த இடம் எல்லையாக வளரும் திருவடிகள்-பொரு வென்று ஒப்பாய் -சேரும் என்றபடி-உச்சியுள்ளே நிற்கும் என்று இவர் பெற்றதுவே பேறாகக் கடவது

குட்ட நாடு -என்று இறே நாட்டையும் அருளிச் செய்து போருவது
தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திரு வண் வண்டூர்-என்றும்
தண் புனல் சூழ் திருவரங்கத்து உள்ளாய் -என்றும் –
ஊரையும் ஆற்றையும் அருளிச் செய்தது

கருமாணிக்க மலை மேல் மணித் தடந்தாமரைக் காடுகள் போல்
திரு மார்பு வாய் கண் கை உந்தி காலுடை யாடைகள் செய்ய பிரான்
திருமால் எம்மான் செழு நீர் வயல் குட்ட நாட்டுத் திருப் புலியூர்
அருமாயன் பேரன்றிப் பேச்சிலள் அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ–8-9-1—அழகிய நிறைந்த தண்ணீரை உடைத்தான-வயல் சூழ்ந்த –-குட்ட நாடு -என்று அந்நாட்டுக்கு பெயர் –-பெறுதற்கு அரிய-ஆச்சர்யத்தை உடையவன் –-நீர் வாய்ப்பை யுடைய வயலாலே அலங்க்ருதமான குட்ட நாட்டுத் திருப் புலியூரில் வர்த்திக்கிற பெறுதற்கு அரிய ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை யுடையவனுடைய -திரு அயோத்யையில் உள்ளார்க்கு சக்கரவர்த்தி திரு மகனை போலே யாயிற்று இவனும் 

வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்!
தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திருவண்வண்டூர்
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே.–6-1-10—ஊரும் ஆறும் இன்ன இடத்திலே என்னுமிடம் நெஞ்சிலே பட்டுக் கிடக்கிறது காணும் இவளுக்கு.-வட பால் – வட திசை. கடலுக்குத் தென் பால் இருக்கிற பிராட்டியைப் போலே யாயிற்று இவள் இருக்கிற இருப்பு.-என்னைப் போல் கலங்கி இருக்கும் இங்குத்தை பதார்த்தங்கள் ஒழிய தெளிந்த பதார்த்தங்களை காண் கிறி கோள் இறே -வைடூர்ய விமலோதகா-என்கிறபடியே தெளிந்து இறே அங்குத்தை பதார்த்தங்கள் இருப்பது -உபதத்தோ தகா நத்ய-என்று இறே இங்குத்தவை இருப்பது-வட பார்ஸ்வத்திலே -கடலுக்கு தென்பால் இருக்கிற பிராட்டியை போல் யாயிற்று இவள் இருக்கிற இருப்பு

மையல் செய்து என்னை மனங் கவர்ந்தானே ! என்னம்’மா மாயனே!’ என்னும்;
‘செய்யவாய் மணியே!’ என்னும்’தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;
‘வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல்!’ என்னும்;
பைகொள்பாம் பணையாய்!இவள் திறத் தருளாய் பாவியேன் செயற் பாலதுவே.–7-2-6—உன்னைக் கிட்டி என் பரிதாபம் தீருகைக்கு ஈடாகக் குளிர்ந்த நீர் சூழ்ந்த கோயிலிலே ஸந்நிஹிதனானவனே என்னும்-குளிர்த்திக்கு இவ் வடிவு அழகு தேடித் போக வேண்டாத படி தேசமே சிரமஹரமாய் இருக்கிற படி -சந்நிஹிதனாய் வைத்து எனக்கு உதவாது ஒழிவதே

இப்படி யாயிற்று
திவ்ய தேச
திவ்ய நகர
திவ்ய நதிகளின் வைபவத்தையும் -திருவாய் மொழி முகேன தர்சிப்பித்தது –

ஆக மூர்த்தியில் பண்ணின தமிழன படி –ஆச்சார்ய ஹ்ருதயம் –

அதவா வேத வேத்‌ய ந்யாயத்தாலே பரத்வபரமுது வேதம்‌ வ்யூஹ வ்யாப்த் யவதரணங்களில்‌ ஓதின நீதி கேட்ட மநு படுகதைகளாய்‌ ஆக மூர்த்தியில்‌ பண்ணிய தமிழானவாறே வேதத்தை த்‌ராவிடமாகச்‌ செய்தாரென்னும்‌.–70-

ஆக மூர்த்தியை பண்ணின தமிழனாவாறே-அதாவது-அப்படி அவதார முகேன நின்று ரஷித்து அருளுமவன் ,அவதாரத்தில் பிற்பட்டாரும் இழவாத படி –-ஆக மூர்த்தி யாய வண்ணம் என் கொல் –திருச்சந்த -17-(யாக மூர்த்தி -ஆக மூர்த்தியாக -யஜ தேவ பூஜாயாம் -அர்ச்சிக்கத்தக்க மூர்த்தி
அன்றிக்கே இப்படியாக வேண்டும் என்று சங்கல்பித்துக் கொண்டு தோன்றிய திவ்ய மங்கள விக்ரஹம் -என்றுமாம் ) என்று விசேஷஜ்ஞர் ஈடுபடும் படி ஆஸ்ரித ஹிருதய அனுகுணமாக – (நெஞ்சில் நினைப்பவன் எவன் -என்பதை நாமும் அறியும் படி மா முனிகள் )தமர் உகந்தது எவ் உருவம் –முதல் திருவந்தாதி -44–இத்யாதிப் படியே த்ரவ்ய நாம ரூப ஆசன சயனாதிகளிலும்-தேச கால அதிகாராதிகளிலும் ஸ்நான போஜனாதிகளிலும் ஒரு நியமமற பண்ணிக் கொண்டு அத்யந்த ஸூலபனாய் இருக்கும் அர்ச்சாவாதார அவஸ்தையில் -தத் வைபவ பிரதிபாதன அர்த்தமாக
சடகோபன் பண்ணிய தமிழ்-2-7–13–என்னும் படி பிரமேயம் தன்னைப் போலே தானும்-பிரமணமான தானும் சர்வ ஸூலபமாய் சர்வ அதிகாரமாய் ஆகைக்கு உறுப்பாக த்ராவிட ரூபமாக கொண்டு செய்வதாக சொல்லுவதும் ஒரு பிரகாரம் உண்டு என்கை.–எய்தற்கு அறிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் செய்தற்கு உலகில் வரும் சடகோபனை –இராமானுச நூற்றந்தாதி -18-என்னக் கடவதிறே..

இவை எல்லாத்திலும் -( வேதம் -பாஞ்சராத்ரம் மனு சாஸ்திரம் ஸ்ரீ ராமாயணம் ஸ்ரீ மஹா பாரதம் திருவாயமொழி ) எல்லாம் சொல்லுமே ஆகிலும் ஒன்றுக்கு ஒன்றிலே நோக்காய் இருக்கையாலே இறே
இவர் இப்படி அருளிச் செய்தது ..-இது தான்-முது வேதம் தான் பரத்வபரம்-( பண்ணிய தமிழ் ஆக மூர்த்தி பரம் ) -என்கையாலே ஸ்பஷ்டம் இறே .. வக்த்ரு விசேஷத்தாலே -தெளிந்ததாய் அர்த்த பிரகாசகத்வம் நிறைந்து இருக்குமே இங்கு –

ஆக இதுக்குக் கீழ்‌ வேதத்தினுடையவும்‌, தது,பப்‌ரும்ஹணத்தினுடையவும் ஸ்தாநத்திலே யாக்கி அவற்றினுடைய ஸப்‌த லக்ஷணங்களும்‌ அர்த்த லக்ஷணங்களும்‌ அருளிச் செய்தார்‌. இனி மேல்‌ ப்ரமேய பூதனான ஸர்வ ஸ்மாத் பரனுடைய அவதார டரம்‌பரையில்‌ எல்லையான அர்ச்சாவதாரம்
”ஆகமூர்த்தியாய வண்ணம்‌”” (திருச்ச, 17) என்கிறபடியே ஸர்வேஸ்வரன்‌ ஆஸ்ரித ஹ்ருதயாநுகுணமாக “’தமருகந்ததெவ்வுருவம்‌”'(மூ.திரூவ. 45) என்கிறபடியே த்ரவ்ய-நாம-ரூப-ஆஸந-ஸயந-தேஸ – கால-அதிகாயு-போஜநாதீ ஸகல வ்யாபாரங்‌களையும்‌ ஆஸ்ரித ஹ்ருதயாநுகுணமாக்கிக் கொண்டு ஸர்வ ஸுலபமான அர்ச்சாவதாரமான விடத்தில்‌ ப்ரமாணமும்‌ அப்படியே ப்ரமேயம் போலே ஸர்வ ஸுலபமாய்‌ ஸர்வாகதிகாரமாம்படி த்‌ரவிட ஸம்ஹிதையாக ப்ராப்த மாகையாலே **பண்ணிய தமிழ் மாலை”” (திருவா. 2 – 7 – 13) என்கிறபடியே வேதத்தைத்‌ திருவாய்மொழியாகச்‌ செய்தருளினார்‌ என்னவுமாம்‌ என்கிறார்‌. அந்த வேதம்‌ முதலானவை எல்லாத்திலும்‌ எல்லாம்‌ சொல்லிற்றே யாகிலும்‌ ஒன்றுக் கொன்றிலே நோக்காகக் கடவது –

திரு நாமப் பாட்டுக்கள் தோறும் தமக்கு நிரூபகமாகவும்
ஊரையும்-நாட்டையும் –ஆற்றையும் -பாடுகையாலே -அது தான்
மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருளாக அருளிச் செய்கையாலே அத்தைப் பற்ற —
திரு வழுதி நாடு என்றும் தென் குருகூர் என்றும் மருவினிய வண் பொருநல் என்றும்
அரு மறைகள் அந்தாதி செய்தான்–என்று இங்கனே சொல்லுகிறது ஆகவுமாம்

திரு வழுதி நாடு என்றும் -சிந்தியா என்னுதல் –
திரு வழுதி நாடு என்றும்-அரு மறைகள் அந்தாதி செய்தான் -என்னுதல்
ததீய வைபவம் இறே வேத தாத்பர்யம் அறுவது –

இப்படி வேதத்தைத் த்ராவிடமாகச் செய்த திராவிட உபநிஷத் ஆச்சார்யருடைய
அங்கரி யுகங்களை –
தெளிவுற்ற சிந்தையர் -7-5-11-
தெளிந்த என் சிந்தை –9-2-4-என்னுமா போலே
உபாய உபேயம் என்று தெளிந்து
மனஸே ஸந்ததம் ஸ்மரித்துப் போரு -என்று ஆழ்வார் திருவடிகளே அனுசந்தேயமாகச் சொல்லிற்று —

தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக்கதி செய்யும்
தெளிவுற்ற கண்ணனைத் தென் குரு கூர்ச்சட கோபன் சொல்
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்
தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே.–7-5-11-பாமரு மூவுல கத்துள்ளே-தெளிவுற்ற சிந்தையர்-பதார்த்தங்கள் சேர்ந்து இருந்துள்ள சகல லோகங்களுக்கு உள்ளே கலக்கம் ஸ்வபாவமாய் இருந்துள்ள சம்சாரத்துக்கு உள்ளே சுத்தமான அந்தகரணத்தை உடையராவார் –அகர்ம வஸ்யனான தான் வரிலும் சோக மோகங்களை விளைக்கும் சம்சாரம் -சம்சாரி செல்லிலும் தெளிவைப் பிறப்பிக்கும் பரமபதம் –இப்படி வ்யவஸ்திதமாய் இருக்க இதுக்கு உள்ளே முக்தருடைய பாவ சுத்தியை உடையராவார் –பாபம் நிறைந்திருக்கிற தேசத்திலே’ என்றபடி. அவ் வருகே ஒரு தேச விசேடத்தே போனால் பெறக் கடவே தெளிவை அதற்கு எதிர்த்தட்டான இங்கே இருந்தே யுடையராவர்;
சர்வேஸ்வரன் தானே இங்கு வந்து அவதரிக்கிலும் சோக மோகத்தைச் செய்ய வல்ல சம்சாரத்தே இருந்தே தெளிவுற்ற சிந்தையர்: குற்றங்களுக்கு எல்லாம் எதிர்த் தட்டான பரமாத்துமாவையும் தன் வழி ஆக்க வல்ல இவ் விபூதியிலே இருந்து வைத்தே சுத்த பாவராய் இருப்பர். பாபம் என்பது, ‘பா’ எனக் கடைக் குறைந்து நிற்கிறது.

புளிங்குடிக் கிடந்து வர குணமங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி
நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்பப்
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வாராயே–9-2-4-அயோக்கியன் என்று அகலாத படி கண்கள் சிவந்திலே என் ஹிருதயம் தெளிந்தவாறே -அத்தைக் கை விடாதே நிரந்தர வாஸம் பண்ணி –அன்றிக்கே-தெளிந்த சிந்தை -என்னும் இவ்விடத்தில்-பட்டர் -தொட்டியம் -திருநாராயண புரத்திலே வெறுப்பிலே -பிள்ளை திரு நறையூர் அரையரும் திரு நாட்டுக்கு-
எழுந்து அருளியதாலும்-எம்பெருமான் திரு மேனிக்கும் அழிவு வந்ததாலும்- தேவர் ஸ்வாதந்தர்யம் எல்லாம் காட்டினாலும் பின்னையும் பண்ணின நம்பிக்கையில்- குலைத்தல் இன்றிக்கே இருக்கும்படி-எலும்பு உரமுடைய எம்பெருமானார் போல்வார் பக்கல் செய்யுமத்தனை–எலி எலும்பனான அடியேன் பக்கலிலும் செய்வதோ -என்றது- மகா விஸ்வாச பூர்வகம் -மிக பெரிய நம்பிக்கை முன்னாக -என்கிறபடியே-ஏதேனும் ஓன்று வந்தாலும்-இங்குத்தைக்கு வருவதாய் வந்தது ஓன்று அன்று-
இதற்கு அடி நம்முடைய பாவம் -என்று-பண்ணின நம்பிக்கை குலையாதார் விஷயத்தில் செய்யும் அத்தனை – இது தானே காரணமாக நெஞ்சு நெகிழும்படி இள நெஞ்சர் பக்கலிலும் அதைச் செய்யக் கடவதோ -என்றாராம் -என்றபடி–பேற்றுக்கு அடி கிருபை -இழவுக்கு அடி கர்மம் -என்கிற மகா விச்வாஸம் இருக்கும் படி -தெளிந்த என் சிந்தை –என்றபடி-

——-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அனந்தாழ்வான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சொட்டை நம்பிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஈஸ்வர முனிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நாதமுனிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி தனியன்-1-பக்தாம்ருதம்-ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் –

June 16, 2026

பக்தாம்ருதம் விஸ்வ ஜன அநு மோதனம் ஸர்வார்த்ததம் ஸ்ரீ சடகோப வாங் மயம்
ஸஹஸ்ர ஸாக உபநிஷத் ஸமாகமம் நமாம் யஹம் திராவிட வேத சாஹரம்
–ஸ்ரீ நாதமுனிகள் அருளிச் செய்த தனியன் –

பக்தாம்ருதம்
பத்தராகக் கூடும் –3-6-11-
தொண்டர்க்கு அமுது –9-4-9-என்றபடி

கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
மண்கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள்செய்யும் வானவர் ஈசனைப்
பண்கொள் சோலை வழுதி வளநாடன் குருகைக்கோன் சடகோபன் சொல்
பண்கொள் ஆயிரத்து இப் பத்தால் பத்தராகக் கூடும் பயிலுமினே.–3-6-11-எல்லாம் கிடைக்கிலும் கிடையாதாயிற்று பகவத் பக்தி –அதுவே நிரூபகமாகை நிச்சிதம்-பயிலுமினே.--அர்ச்சாவதார பர்யந்தமான ஸுலப்யத்தை சொல்லுகிற இது திரு வாய்மொழியை அப்யசியுங்கோள்-இத்திருவாய்மொழியைக் கற்க அதுவும் கிடைக்கும்
1- பரத்துவ ஞானத்துக்கு அடியான புண்ணியமாதல், -2-சாஸ்திர ஞானமாதல்,
3- நற்குருவின் உபதேசமாதல், 4-பகவானுடைய நிர்ஹேதுகத் திருவருளாதல் இவையனைத்தும் இல்லாதார்க்கும் அர்ச்சாவதார சௌலப்யத்தை அநுசந்திக்கவே பகவானிடத்தில் பத்தி உண்டாகக் கூடும் என்பார், ‘பத்தராகக் கூடும் பயிலுமின்’ என்கிறார்.
ஒரு பொருளிலும் விருப்பம் இல்லாதவனான சர்வேசுவரன் அடியார்களிடத்து வைத்த வாத்சல்யத்தாலே இவன் உகந்தது ஒன்றைத் திருமேனியாக விரும்பி, ‘இவன் உண்பித்ததை உண்டு, அகங்கள்தோறும் புக்கு விடமாட்டாமல் இருந்தால், ‘இவன் நம்மை விடமாட்டாதே இருந்த பின்பு நாமும் இவனிடத்தில் அன்பு வைத்தல் ஆகாதோ?’ என்னக் கூடும் அன்றோ?’ என்றபடி.
‘‘பயிலுமின்’ என்றால், பயில்வர்களோ?’ எனின், ‘நிதி இங்கே உண்டு’ என்ன, அவ்விடத்தைத் தோண்டுவார்களே அன்றோ? அப்படியே, ‘பத்தி உண்டாம்’ என்ன, கற்பார்கள் என்று அருளிச்செய்கிறார்.-கல்லுவார்கள் -தோண்டுவார்கள் கற்பார்கள் அப்யசிப்பார்கள்

கண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து
பண்டை வினை ஆயின பற்றோடு அறுத்துத்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே –9-4-9–என்னளவு இன்றிக்கே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் உபகாரகனாகப் பெற்றேன்-நானும் உண்டு-என் வேலையாள்களும் ஜீவித்து-என் உறவினர்களுக்கும் விருந்திட வல்லேன் ஆனேன் –என்பாரைப் போலே – சொல் மாலைகள் சொல்லப் பெற்றேன்-அடியார்கட்கு அடிமை யாதலை-எல்லையாக உடைய பேற்றினைப் பெற்றேன் – பெற்ற பேற்றின் கனம் இருந்த படியாலே-இது தான் தோன்றியான கைப்பற்று (ஸ்வ யத்னம் )அடியாக வந்தது ஓன்று அன்று –சர்வேஸ்வரனாலே-அடியவனாக-அங்கீகரிக்கப் பட்டவன் ஆனேன் –

விஸ்வ ஜன அநு மோதனம்
பார் பரவின் கவி –7-9-5-
அடியார்க்கு இன்ப மாரி –4-5-10—என்கிறதைச் சொன்ன படி

சீர் கண்டு கொண்டு திருந்து நல் இன் கவி
நேர்பட யான் சொல்லும் நீர்மை இலாமையில்
ஏர்வுஇலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைப்
பார் பரவு இன் கவி பாடும் பரமரே.–7-9-5-விசேஷஞ்ஞரோடு அவிசேஷஞ்ஞரோடு வாசி அற எல்லாரும் வாய் புலற்றும் படியான இனிய கவி என்னுதல் -பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரம் -என்கிறபடியே யாதல் –என்னைக் கருவியாகக் கொண்டு பாரில் உள்ளார் அனைவரும் தன்னைப் பரவும்படி இனிய கவிகளைப் பாடினான். என்றது-‘விசேஷஜ்ஞர், விசேஷஜ்ஞர் அல்லாதார் என்னும் வேற்றுமை இன்றியே எல்லாரும் கொண்டாடும்படி செய்தான்,’ என்றபடி.-மண் மிசை–ராமானுஜன் பிறந்த பின்பே–அப்பொழுதே மாதவனுக்கு ஆளானார்கள்-பரமரே –-அவனோடு ஒத்தவர் இல்லை’ என்கிற வாக்கியம் கொண்டு இவனுடைய உயர்வு அறிய வேண்டா; என்னை இடுவித்துக் கவி பாடுவித்துக் கொண்ட இதுவே போரும் அவனுடைய உயர்வு அறிகைக்கு.

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.–4-5-10-ப்ராப்த விஷயத்தில் அடிமை செய்யப் பெற்ற இதுவேயோ-இது ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஆனந்தாவஹமும் ஆயிற்று–இன்ப மாரி–இன்பத்தை உண்டாக்கும் மேகம்-இது எனக்கு இருக்கிறபடி கண்டால் உகக்கிறவர்களுக்கு எங்கனே இருக்கிறதோ என்கை–இன்பத்தையுண்டாக்கும் மேகம் ஆதலின், ‘இன்பமாரி’ என்கிறது.
‘இது எனக்கு இருக்கிறபடி கண்டால், இது உகக்குமவர்களுக்கு எங்ஙனே இருக்கிறதோ!’ என்கை.
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்,’ என்றாரே அன்றோ?–

ஸர்வார்த்ததம்
எல்லாப் பொருளும் விரித்தானை
–4-5-5-என்னும்படி ஸகல அர்த்த ப்ரதமமாய் இருக்கை –

ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை அமரர் தம்
ஏற்றை எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை
மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன்;
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே.–4-5-5-அர்ஜுனனுக்கு சார்வார்த்தங்களையும் வீசாதீ கரித்தால் போலே யுக்த அயுக்தம் அறியாதே-சிஷ்யாஸ் தேஹம் சாதிமாம் த்வம் ப்ரபன்னம் -என்று அர்ஜுனனுக்கு ஆத்ம யாதாம்யா ஞான பூர்வகமாக கர்மத்தை உபதேசித்து-தத் சாத்தியமான ஞானத்தை உபதேசித்து உபய அனு க்ருஹீதையான பக்தியை உபதேசித்து அவன் அதன் அருமையைக் கண்டு-அஞ்சின அளவிலே என்னையே தஞ்சமாகப் பற்று என்று அருளிச் செய்தான் இறே-விரித்தானை-சுருதி சுத்தமான அர்த்தத்தை ஸ்ரீ கீதா முகத்தாலே உபதேசித்தான்-எம்மான் தன்னை-அர்ஜுனனுக்கு -உபதேஸித்தால் போலே தன் குண சேஷ்டிதங்களை எனக்கு சாத்மிக்க சாத்மிக்க அனுபவிப்பித்த மஹா உபகாரகனை

மிக்க இறை நிலை –என்று தொடங்கி
மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள் நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் –என்கிறபடி
அறிய வேண்டிய அர்த்தம் எல்லாவற்றையும் அறிவிப்பிக்கும் என்கிறபடி –

ஸ்ரீ சடகோப வாங் மயம்
குருகூர் சடகோபன் சொல் –1-1-11-என்றபடி

கரவிசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
வரனவில் திறல் வலி யளி பொறையாய் நின்ற
பரனடி மேல் குருகூர்ச் சடகோபன் சொல்
நிரனிறை யாயிரத்து இவை பத்தும் வீடே 
–1-1-11-சர்வ ஸ்மாத் பிறனுடைய துயரறு சுடரடி விஷயமாக திரு நகரியைப் பிறப்பிடமாக யுடையராய் சடரான பாஹ்ய குத்ருஷ்டிகளை வெல்லும் ஸ்வ பாவரான ஆழ்வார் அருளிச் செய்ததாய்–திருவடிகளிலே பரிசர்யா ரூபமாக அருளிச் செய்தது
வால்மீகிர் பகவான் ருஷி என்னுமாபோலே -தம்முடைய ஆப்தியைத் தாமே அருளிச் செய்கிறார்

ஸஹஸ்ர ஸாக உபநிஷத் ஸமாகமம்
ஸஹஸ்ர சாகை -சாம விதமாய்-தத் சாரம் -சாந்தோக்ய உபநிஷத்தாய் –அதின் சாரம் உத்கீதம் -என்றதாய் அத்தை யாயிற்று இப்படிப் பாடி அருளிற்று என்றபடி –

வேத அரும் பெருமான் நூல்களை –9-3-3-
வண் தமிழ் நூலாக்கின –4-5-10-படி

எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் செய்தற்கு உலகில் வரும் சடகோபன் இறே –

அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள்
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே–9-3-3-துர்ஜ்ஜேயார்த்தத்தை அறிந்தனவாய் இருக்கிற வேதங்கள் ஆகிற சாஸ்திரங்கள் -என்னுதல் -அறிந்தனவாய் இருக்கிற வேதங்களில் துர்ஜ்ஜேயார்த்தங்களை நிஷ்கர்ஷித்து தரும் ப்ரஹ்ம ஸூ த்ர இதிஹாச புராணாதிகள் என்னுதல் –அறிதற்கு அரிய பொருள்களை அறிந்தனவாய் இருக்கிற-வேதங்கள் ஆகிற சாஸ்திரங்கள் –
அன்றிக்கே அறிந்தனவாய் இருக்கிற வேதங்களில் அறிதற்கு அரிய பொருள்களை அறுதி இட்டு தரும்
ப்ரஹ்ம சூத்ரம் இதிகாசம் புராணங்கள் -முதலானவைகள் -என்னுதல் –

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை
வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.–4-5-10-திருவாய்மொழி பாடுகைக்கு பாக்யம் பண்ணினேன் -தன்னைச் சொன்ன மாத்திரத்தில் எல்லாப் பலன்களையும் கொடுக்கக் கூடியதான உதார குணத்ததாய் இருத்தலின், ‘வண் தமிழ்’ என்கிறது.–வண் தமிழ்-ஆவது பழையதாகச் செய்தவை இவர் பேச்சாலே இன்று செய்த செயல் போலே ஸ்பஷ்டமாய் இருக்கை-அன்றிக்கே.
இது முன்னே நடந்ததாயிருந்தாலும் இப்பொழுது நேரிற்கண்டது போல இருக்கின்றது,’ என்பது போன்று,-லவ குசர்கள் பாட பாட நடந்த ராம சரித்ரம் மக்களுக்கு விளங்கினது போலே –
பழையதாகச் செய்தவை இவர் பேச்சாலே இன்று செய்த செயல் போலே விளக்கமாய் இருத்தலின், ‘வண்தமிழ்’ என்கிறது என்னுதல். ‘கண்டவாற்றால்’ என்று நேரில் பார்ப்பதாய் இருக்கிறதே அன்றோ?

எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபனைச் சிந்தை யுள்ளே

பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம்
உய்தற்கு உதவும் இராமானுசன் எம் உறு துணையே – 18- –அநந்தாவை வேதா – என்கிறபடி ஒரு சங்கையை இட்டு –சொல்லப் போகாத படி ஒரு அபரிமிதங்களாய் -சர்வோப ஜீவியங்கள் ஆகாதே
அதி க்ருத்தாதி காரங்களாய்-அந்யோப மரத்தக வாக்யங்களாலே -ஸ்வார்த்தத்தை தெளியும் போது -எத்தனையேனும் அதிசய ஞானர் ஆனவர்களுக்கும் அருமைபடுத்தக் கடவதான சம்ஸ்க்ருத வேதங்களை –ஆயிரம் இன் தமிழால் –வரணாதி நியதி இன்றிக்கே -ருசி பிறந்தவர்கள் எல்லாரும் அதிகரிக்கும் படியாய் –ஆயிரம் என்ற ஒரு சங்கையுடன் கூடி இருப்பதாய் -உயர்வற உயர்நலம் -என்று தொடங்கி -உயர்ந்தே -என்னும் அளவும் – ஆதி மத்திய அவசானங்களிலே – ஸ்ரீ பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளையும் – சேதன அசேதன ரூப ச்வபாவங்களையும் – சேதனருடைய சம்சார பந்த ஹேதுக்களையும் – தந் நிவர்தன உபாயமான தத் விஷய ப்ரீதி ரூபாபன்ன ஞானத்தையும் –
ஜகத் காரண வஸ்து நாராயணனே என்று -தேவதாவஸ்து விசேஷ நிர்த்தாரணத்தையும் –
அவனுடைய சமஸ்த கல்யாண குணாத் மகத்வத்தையும்-அநந்த கருட விஷ்வக்சேநாதி திவ்ய சூரி பரிசர்யமான நளினனாய்க் கொண்டு நின்ற படியையும் – தாம் அனுபவித்த படியே எல்லாரையும் அனுபவிப்பைக்காக -தம்முடைய நிர்ஹேதுக பரம கிருபையாலே – லவ்கிகரைக் குறித்து உபதேசித்த படியையும் – தம்முடைய அபிநிவேசம் எல்லாம் தீரும்படி அவனை ப்ராபித்த படியையும் -விசதமாக பிரதிபாதிப்பதாய் –ஸ்வா ர்த்தத்தை எல்லாம் ஸூஸ்பஷ்டமாகவும் ஸூக்ரஹமாகவும் தெறிவிக்குமதாய் – அத ஏவ அத்யந்த சுலபமாய் -பக்தாம்ர்தம் -தொண்டர்க்கு அமுதுண்ண சொல் மாலைகள் –என்னும்படி அநு போக்தாக்களுக்கு அத்யந்தம் போக்யமாய் -நடை விளங்கு தமிழான -த்ரமிட பாஷையாலே – ஸ்ரீ திருவாய் மொழி என்கிற பிரபந்த ரூபேண –

நமாம் யஹம் திராவிட வேத சாஹரம்
அளவியன்ற அந்தாதி ஆயிரத்தை –1-4-11-
பத்தர் பரவும் –1-5-11-படி சொல்லிற்று –

அளவியின்ற வேழுலகத்தவர் பெருமான் கண்ணனை
வளவயல் சூழ் வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்துரைத்த
அளவியன்ற வந்தாதி யாயிரத்துள் இப்பத்தின்
வளவுரையால் பெறலாகும் வானோங்கு பெரு வளமே –1-4-11-அபரிச்சேத்யனானவனையும் தனக்குள்ளே ஆக்கவற்றாய் அந்தாதியான ஆயிரம் இப் பத்தின் வளவுரையால் பெறலாகும்-வளவுரை -நற்சொல்லு-பாலைக் குடிக்க நோய் போமா போலே-இத் திருவாய் மொழியின் இனிய சொல்லாலே பெறலாம்-வானோங்கு பெரு வளமே-வான் என்று -பரம பதமாய் -பரமபதத்தில் விஸ்த்ருமாய்-நிரதிசயமான சம்பத்தைப் பெறுவார்கள்-பிதா கிருஷி பண்ணி வைத்தால் புத்ரனுக்கு பலத்தில் அந்வயமாம் போலே-இப் பத்தையும் கற்றவர்களுக்கு இவர் தூது விட்டு பட்ட க்லேசம் பட வேண்டா
இவர் பேற்றைக் கொடுக்கும் இப் பத்து–அதாவது, ஸ்வயம் பிரயோஜனமாக -‘தானே பிரயோஜனமாயிருக்கிற இத்தால், சம்சாரத்தில்-சங்குசிதமான- குறைவான நிலை போய், பரமபதத்தில் சென்று, தன் ஸ்வ ரூபத்தைப் பெற்று – விஸ்த்ருதன் -விரிவையடைந்தவன் ஆகையாகிற எல்லை இல்லாத செல்வத்தைப் பெறலாம், என்றபடி.-

மாலே மாயப் பெருமானே மா மாயனே என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே –-1-5-11-பாலோடு ஒத்து உள்ள தமிழ் அறிவார்-இசை அறிவார்-சர்வேஸ்வரனும் ஆழ்வாருமான பரிமாற்றத்திலே கால் தாழ்ந்து இருக்குமவர்கள்-பாலேய் தமிழர் -என்கிறது முதல் ஆழ்வார்களை–இசைகாரர் -என்கிறது ஸ்ரீ மதுர கவிகள் போல்வாரை
பத்தர் -என்கிறது பெரியாழ்வார் போல்வாரை-ஸ்ரீ பராங்குச நம்பி -ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் பிள்ளை யுறங்கா வல்லி தாசர் போல்வர் என்னுமாம் -ஆழ்வான் ஓர் உருவிலே
பரவும் ஆயிரத்தின்-அக்ரமாக கூப்பிடுகை

——

கடலையும் சடகோபன் சொல்லையும் சமமாகச் சொல்லுகிறது –

பக்தாம்ருதம்

விண்ணவர் அமுது உண –பெரிய -6-1-2-என்னும்படி
விண்ணின் மீது அமரர் கட்காய -பெரியாழ்வார் –3-4-10-
தேவ போக்யமான அம்ருதத்தை உடைத்தாய் இருக்கும் அது

அண்ணல் செய்து அலை கடல் கடைந்து அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே
விண்ணவர் அமுதுண்ண வமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே —6-1-2-தேவ ஜாதி அம்ருதத்தை புஜித்து உஜ்ஜீவிக்க அந்த அம்ருதம் தான் கோதாம் படியாக வந்து தோற்றின பெரிய பிராட்டியாரை லபித்தது
அவ்வழி யாலே ஆஸ்ரித வர்க்கத்துக்கு உபகரித்தவனே – ஜனனி பக்கல் பண்ணும் உபகாரம்
பிரஜைகளுக்காய் இருக்கும் இறே

இது பாலோடு அமுது அன்ன ஆயிரம் –8-6-11-என்னும்படி
அவனித் தேவரான -8-4-10– பூ ஸூரர்க்குப் போக்யமான அம்ருதமாய்
ஆரா வமுதத்தை -2-5-5- உடைத்தாய் இருக்கும் –

சோலைத் திருக் கடித் தானத்துறை திரு
மாலை மதிட் குருகூர்ச் சடகோபன் சொல்
பாலோடு அமுதன்ன ஆயிரத்திப் பத்தும்
மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே-8-6-11-பாலோடு அமுது அன்ன ஆயிரம் என்னுதல் -இப்பத்து என்னுதல் -வாஸ்ய வாசகங்கள் யுடைய சேர்த்தி இருக்கிற படி –பால் என்கிறது -சோலை திருக் கடித்தானத்து உறை-திருமால் என்கிற வாஸ்யத்தைஅமுது என்கிறது சடகோபன் சொல் என்கிற வாசகத்தை -இது ஆளவந்தார் நிர்வாஹம் –

அமர்ந்த நாதனை யவரவராகி அவரவர்கருளும் அம்மானை
அமர்ந்த தண் பழனத் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றறாங்கரையானை
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி அவனித் தேவர் வாழ்வு
அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை நான்முகனை யமர்ந்தேனே–8-4-10-பூ ஸூரரான வைஷ்ணவர்களுக்கு பிராப்ய பூமி-பூ தேவர்களான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அடையத் தக்க பூமி –

எப்பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும்
அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம் கை கமலம்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி ஊழி தொறும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே –2-5-4-
க்ஷண காலமும் -கலா காஷ்டாதிகளாலும் பேதிக்க ஒண்ணாத அத்யல்ப காலம் அனுபவிப்பது-ஒரு நாள் அனுபவிப்பது -ஒரு மாசம் அனுபவிப்பது -ஒரு சம்வத்சரம் அனுபவிப்பது-கல்பம் தோறும் கல்பம் தோறும் அனுபவிப்பது -இப்படி கால தத்வம் உள்ளதனையும் அனுபவியா நின்றாலும் பூர்வ க்ஷணத்தில் அனுபவம் போலே அன்றியே உத்தர க்ஷணத்தில் அனுபவம் இருப்பது –-ஊழி ஊழி -மேல் போக்கு இல்லாமையால் மடிக்கிறார்
அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே
– தாரா வாஹிக ஞானத்தில் கால உபஷடம்பாதிகளால் வருவதொரு பேதம் உண்டு இ றே ஞானத்துக்கு-அது போல் அன்றிக்கே அனுபவித்த ஒன்றை அனுபவித்தால் போலே நித்ய அபூர்வமாய் இருக்கை-அதாவது ஒரு பொருளைப் பற்றித் தொடர்ச்சியாக உண்டாகின்ற பல வகை அனுபவங்களில் காலம் தேசம் முதலியவைகளின்
கூட்டரவுகளால் வருவது ஒரு பேதம் உண்டு ஞானத்திற்கு; இங்கு விஷயந்தானே பேதியா நின்றது வேறுபடுகின்றது-ஆயிற்று – என்பதாம்.

ஆராவமுதமாய் யல்லாவி யுள் கலந்த
காரார் கரு முகில் போல் என்னம்மான் கண்ணனுக்கு
நேராவாய் செம்பவளம் கண் பாதம் கை கமலம்
பேரார நீண் முடி நாண் பின்னும் இழை பலவே –2-5-5–நிரதிசய போக்யனாய் -எப்போதும் உண்ணா நின்றாலும் மேன்மேலென திருஷ்ணையை விருப்பத்தை விளைக்கும் அமிருதம் போன்று-
நிரதிசய எல்லை இல்லாத -போக்யனாய் இனியனாய்- வைத்து–அசன்னேவ -என்கிற ஆத்மாவோடு வந்து கலந்தான் – தன்னையும் அறிந்திலேன் -என்னையும் அறிந்திலேன் -அசித்தில் காட்டில் தம்மைக் குறைய நினைத்த படி -அசித்துக்கு இழவு இல்லை –
சேதனனாய் இருந்து வைத்து ஞான பலம் இல்லாமையால் அசித்துக்கு அவ்வருகாக நினைத்து இருக்கிறார்

விஸ்வ ஜன அநு மோதனம்
ஸர்வ ஜன அபிமத ப்ரதமம் ஆகையாலும்
தர்ச நீயமாகையாலும்
ஸமுத்ரம் சர்வ ஜன சந்தோஷ வேஷத்தை யுடைத்தாய் இருக்கும் –

இதுவும் முதல் பத்தர் வானவர் என் அம்மான் பார் பரவ –ஆச்சார்ய ஹ்ருதயம் –187-என்னும்படி
சேஸ்வர விபூதி போக்யமாய் இருக்கும் –

இவற்றில் பிராவண்யம் இவள் பரமே என்ன உண்டாய் ஷோடசகலா பூரணமான சந்திர மண்டலம் போலே பதினாறு நஷத்ரம் நிரம்பினவாறே தேவ போக்யமானவதில் அம்ருதம் போல் அன்றிக்கே என்னாத் தமிழர் இசைகாரர் முதற் பத்தர் வானவர் என் அம்மான் பார் பர வென்னும் படி
சேஸ்வர விபூதி போக்யமான பாலோடு அமுதன்ன மென் மொழி முகம் செய்தது
–சூரணை -187-

அதாவது
இவ் அர்ச்சாவதார ஸ்தலங்களிலே ப்ராவண்யம் –இவள் பரமே என்ன உண்டாய்-
முலையோ முழு முற்றும் போந்தில –பெருமான் மலையோ திரு வேம்கடம் என்று
கற்கின்ற வாசகம் இவள் பரமே –திருவிருத்தம் -60–என்னும் படி பருவம் நிறம்புவதர்க்கு முன்னே உண்டாய் —பதினாறு கலைகளாலும் பரி பூர்ணமான சந்திர மண்டலம் போலே பதினாறு நஷத்ரம் பூர்ணமான வாறே-தேவ போக்யமானவதில் அம்ருதம் போல் அன்றிக்கே
அதாவது
கிருஷ்ண பஷே அமரைஸ் சஸ்வத் பீயதே வை ஸூதாமய–ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-11-22-என்கிறபடியே
தேவர்களுக்கு போக்கியம் ஆகையாலே -போக்த்ரு நியமம் உடைத்தான அந்த சந்திர மண்டல அம்ருதம் போல் அன்றிக்கே —பொருந்தா வானுறை நாள்களை நாள் தொறும் புணர்வோன் அருந்த வானவர்க்கு
ஆரமுது அன்புடன் அளிப்போன்-வில்லி பாரதம் ஆதி பர்வம்
என்னாவில் இன் கவி –திருவாய் -3-9-1-என்றும் -( இத்தால் ஆழ்வாருக்கும் இதன் இனிமை சொல்லி )
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரம் –திருவாய் -1-5-11–என்றும் –
தூ முதல் பத்தர்க்கு–திருவாய் –7-9-3- -என்றும் -(இவற்றால் கற்பவர்களுக்கு இனிமை )
கேட்டாரார் வானவர்கள்–திருவாய் -10-6-11- -என்றும் –
தென்னா வென்னும் என்னம்மான் -என்றும் -திருவாய் -10-7-5–
பார் பரவின் கவி–திருவாய் -7-9-5- -என்றும்
சொல்லுகிறபடி ஸ்வ பர விபாகம்-ஸூரி சம்சார விபாகம்–ஈச ஈசி தவ்ய விபாகம் அற-
ஈஸ்வரனோடே இரண்டு விபூதியும் புஜிக்கைக்கு யோக்யமாய் –( பெருமான் மகுடம் சாய்க்கும் வண்ணம் கவி சொல்ல வல்ல ஞானக்கவி -)பாலோடு அமுதன்ன ஆயிரம்–திருவாய் -8-6-11– -என்றும் –
அமுத மென்மொழி–திருவாய் –5-6-2- -என்கிறபடியே
வாச்ய வாசக சம்ச்லேஷ ரசத்தால் -பாலும் அமுதும் கலந்தால் போலேயாய் –
போக்யத அதிசயத்தாலும் – புஜித்தார்க்கு நித்யத்வத்தை கொடுக்கையாலும் – அம்ருத சமமாய் –
அதில் வ்யாவ்ருத்தமான மார்த்வத்தை உடைத்தான சப்தம் இவர் முகோத்கதமாய்த்து என்கை ..

ஸ்ரீ சடகோப வாங் மயம்
அதில் அம்பஸ்ஸூ அகஸ்த்ய வாங் மயமாய் இருக்கும்
இதில் சந்தஸ்ஸூ ஸ்ரீ சடகோப வாங் மயமாய் இருக்கும்-திரு வாய் மொழி இறே

ஸஹஸ்ர ஸாக உபநிஷத் ஸமாகமம்
அது ஸர்வ ஸாகா ஸாரமான சந்தந ஸாகா சமாகத்தை சமீபத்தில் உடைத்தாய் இருக்கும் –
இது ஸர்வ வேதா ஸாரமான உபநிஷத்துக்கள் திரட்சியாய் இருக்கும் –

நமாம் யஹம் திராவிட வேத சாஹரம்
அந்த சாஹரம்-அஞ்சலிக்கு பிராங் முக க்ருத்வா -என்னும் படி அசரண்யனுக்கு சரண்யமாய் இருக்கும்
வண் தமிழ் நூல்களான இது -4-5-10-சடகோபன் பாட்டு என்றவாறே நாடு அடைய கை எடுக்கும்படியாய் இருக்கும் – நமாம் யஹம் -என்று நாடு எல்லாம் அனுசந்திக்கக் கடவர்கள் இறே

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.–4-5-10-–திருவாய்மொழி பாடுகைக்கு பாக்யம் பண்ணினேன் ––தன்னைச் சொன்ன மாத்திரத்தில் எல்லாப் பலன்களையும் கொடுக்கக் கூடியதான உதார குணத்ததாய் இருத்தலின், ‘வண்தமிழ்’ என்கிறது. வண்தமிழ்-ஆவது பழையதாகச் செய்தவை இவர் பேச்சாலே இன்று செய்த செயல் போலே –லவ குசர்கள் பாட பாட நடந்த ராம சரித்ரம் மக்களுக்கு விளங்கினது போலே ––ஸ்பஷ்டமாய் இருக்கை–கண்டவாற்றால்’ என்று நேரில் பார்ப்பதாய் இருக்கிறதே அன்றோ?-அடியார்க்கு இன்பமாரியே – சர்வேசுவரனைக் கவி பாடப் பெற்ற இதுவேயோ? இது, வைஷ்ணவர்களுக்கு ஆனந்தத்தை உண்டாக்கக் கூடியதாகவும் ஆயிற்று.-இன்பத்தை யுண்டாக்கும் மேகம் ஆதலின், ‘இன்பமாரி’ என்கிறது.–இது எனக்கு இருக்கிறபடி கண்டால், இது உகக்குமவர்களுக்கு எங்ஙனே இருக்கிறதோ!’ என்கை.-‘தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்,’ என்றாரே அன்றோ?

——–

வந்தே ராமாயண ஆர்ணவம் -என்னுமா போலே

ஸ்லோக ஜால ஜலாகீர்ணம் சர்க்க கல்லோல சங்குலம்
காண்ட க்ராஹா மஹா மீநம் வந்தே ராமாயண ஆர்ணவம்

அங்கே சதுர் விம்ச ஸஹஸ்ரம்
இங்கே சீர்த் தொடை ஆயிரம் -4-1-11-
தீர்த்தங்களாய் இருக்கும் -7-10-11-

அங்கு ஐநூறு சர்க்கம்
இங்கு பத்து நூறு -6-7-11-என்னும்படி இருக்கும்

அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய்கோலத்து ஆயிரம் சீர்த்தொடைப் பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற் பாலரே.–4-1-11-கல்யாண குணங்களை தொடுத்துச் சொன்ன இது திருவாய் மொழி-

வைத்தமா நிதியாம் மதுசூ தனையே அலற்றிக்
கொத்தலர் பொழில்சூழ் குருகூர்ச்சட கோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப் பத்து அவன் சேர் திருக்கோ ளூர்க்கே
சித்தம் வைத் துரைப்பார் திகழ் பொன்னுல காள்வாரே.–6-7-11-கிழி கிழி யாய் கொடுப்பாரை போலே 

தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குரு கூர்ச்சட கோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே.–7-10-11-தன் இனிமையால் புறம்புள்ளவற்றை அறுக்கும் என்னுதல் -பாவனம் என்னுதல் -ஆயிரம் பாசுரங்களும் ஆயிரம் தீர்த்தங்கள் ஆயின.

அங்கு ஷட் காண்டமாய் இருக்கும்
இங்கே ஷட் பதார்த்த ப்ரதிபாதகமாய் பத்துப் பத்தாய் இருக்கும்

அது ராமாயண ஆர்ணவம்
இது திராவிட வேத சாகரம்

அது ரகு வம்ச சரிதமாய் இருக்கும்
இது முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரமாய் இருக்கும் –7-2-11-

முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் மொய்புனல் பொருநல்
துகில் வண்ணத் தூ நீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ் வண் குரு கூர்ச் சட கோபன்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே.–7-2-11—காளமேகம் போன்று மிக்க பேரெழிலை யுடையரான பெரிய பெருமாள் விஷயமாக அருளிச்செய்த சொற்களை யுடைய மாலை ஆயிரத்து இப்பத்தையும் கருத்தோடு கற்க வல்லவர்கள்–பெரிய பெருமாள் திருவடிகளிலே யாயிற்று ஆயிரமும் சொல்லிற்று -திரு மோகூர்க்கு ஈத்த பத்து -திரு வேங்கடத்துக்கு இவை பத்து -என்றும் பிரித்துக் கொடுத்த அத்தனை -திருப் பலகையில் அமுது படியில் திருப் பதிகளில் நாயன்மார்க்கு அளந்து கொடுக்குமா போலே -என்று பிள்ளை அருளிச் செய்வர் –

அது வால்மீகிர் பகவான் ருஷி என்னும்படி வால்மீகி ப்ரோக்தம்
இது குருகூர்ச் சடகோபன் சொல்லாய் –9-6-11-இருக்கும் –

கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக்
கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
வடிவு அமை ஆயிரத்து இப்பத்தினால் சன்மம்
முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே–9-6-11-திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்த

அது மஹா பாதக நாஸினமாய் இருக்கும்
இதுவும் அருவினை நீறு செய்யுமதாய் இருக்கும் —3-5-11-

தீர்ந்த அடியவர் தம்மைத் திருத்திப் பணிகொள்ள வல்ல
ஆர்த்த புகழ்அச் சுதனை அமரர் பிரானைஎம் மானை
வாய்ந்த வளவயல் சூழ்தண் வளம் குரு கூர்ச்சட கோபன்
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப் பத்தும் அரு வினை நீறு செய்யுமே.–3-5-11-பகவத் குணங்களை கேட்டால் -வேறுபடாதே திண்ணியராய் இருக்கைக்கு அடியான மஹாபாவங்களைச் சாம்பல் ஆக்கும்.–அவிகிருதரராய் இருக்கைக்கு அடியாகிற மஹா பாபத்தை போக்கும்

அது ஸம்ஸாரம் ஸ விஹாய கச்சதி புமான் விஷ்ணோ பதம் ஸாஸ்வதம் -என்று பலமாய் இருக்கும்
இதுவும் -வானின் மீதி ஏற்றி அருள் செய்து முடிக்கும் பிறவி மா மாயக் கூத்தினையே –8-4-11- என்று
திருவடியே அடைவிக்கும் -4-9-11-

தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத் திருந்துலகுண்ட வம்மானை
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ் மலர்மிசைப் படைத்த மாயோனை
கோனை வண் குருகூர் சடகோபன் சொன்ன வாயிரத்துள் இப்பத்தும்
வானின் மீதேற்றி யருள் செய்து முடிக்கும் பிறவி மா மாயக் கூத்தினையே–8-4-11-அராஜகம் ஆனால் ராஜ புத்ரன் தலையிலே முடியை வைத்து பின்னை விலங்கு வெட்டி விடுமா போலே இப்பத்து தானே முந்துற பரமபதத்தை கொடுத்து பின்னை சம்சாரம் ஆகிற மஹா நாடகத்தை அறுத்துக் கொடுக்கும் –

திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரைத்
திருவடி சேர்வது கருதிச் செழுங் குருகூர்ச் சடகோபன்
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே.
–4-9-11-திருவடிகளிலே வைத்து சொன்ன ஆயிரம் என்னுதல் –இவ் விசேஷணங்களை ஆயிரத்திலும் இட்டு நிர்வஹிப்பர்கள் பூர்வாச்சார்யர்கள் -பட்டர் அவ்வோ திருவாய்மொழியிலே இட்டு நிர்வஹிப்பர்–இத்திருவாய் மொழி தானே திருவடிகளிலே சேர்விக்கும் –திருவடிகளை பிராபித்து-சாயுஜ்யம் பிரதி பன்னாயா-என்றும் -யேந யேந தாதா கச்சதி தேந தேந ஸஹ கச்சதி -என்றும் சொல்லுகிறபடியே இளைய பெருமாளை போலே பிரியாதே நின்று எல்லா அடிமைகளையும் செய்யப் பாருங்கோள் –அவன் திருவடிகளிலே கிட்டக் கொள்ள, நீங்கள் உங்களுக்குமாய் இராமல்,-அடிசிற் பானை போலே அவன் திருவடிகளிலே
நித்ய கைங்கரியத்திலே சேரப் பாருங்கோள்.-சமானமான பதவியை அடைந்தவர்களாய், விரோதி கழிந்தவர்களாய்-எப்பொழுதும் என்னுடைய கைங்கரிய பரர் ஆகின்றார்கள்,’ என்றும்,
பகவான் எந்த எந்த வழியாலே செல்லுகிறானோ,-அந்த அந்த வழியிலே உயிரும் செல்கிறது,’ என்றும் சொல்கிறபடியே,-இளைய பெருமாளைப் போலே பிரியாதே நின்று அவன் நினைவிற்குத்
தகுதியாக அடிமை செய்யப் பாருங்கோள்.
இப்படி அடிமை செய்வார்க்கு, இவர் விட்டவையும் விட்டுப் பற்றியதும் பற்ற வேண்டுமோ?’ என்னில்
இவர் அருளிச் செய்த இத் திருவாய் மொழியைச் சொல்லவே,-தன்னடையே ஐம்புல இன்பங்களில் விரக்தியையும் பிறப்பித்து அவன் திருவடிகளில் சேர விடும் இத் திருவாய் மொழி தானே,’ என்க.

————-———————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அனந்தாழ்வான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சொட்டை நம்பிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஈஸ்வர முனிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நாதமுனிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கண்ணி நுண் சிறுத் தாம்பு – தனியன்-ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

June 15, 2026

ஸ்ரீ நாத முனிகள் அருளிய தனியன்கள்-

அவிதித விஷயாந்தரச் சடாரே ருபநிஷதன் முபகான மாத்ர போக
அபி ச குண வசரத் ததேக சேஷீ மதுரகவிர் ஹ்ருதயே மமாவி ரஸ்து —

அவிதித விஷயாந்தர-நம்மாழ்வாரைத் தவிர வேறொரு விஷயத்தை அறியாதவரும்
சடாரே ருபநிஷததாம் -நம்மாழ்வாருடைய திவ்ய ஸூ க்திகள் ஆகிய திவ்ய பிரபந்தங்களை
முபகான மாத்ர போக -இசை பாடுவது ஒன்றையே பேரின்பமாகக் கொண்டவரும்
அபி ச குண வசரத் -குண வசிரதபிர -குணம் அடியாகவும்
த தேக சேஷீ -அந்த நம்மாழ்வார் ஒருவரையே தமக்கு சேஷியாகக் கொண்டவருமான
மதுரகவிர் ஹ்ருதயே மமாவி ரஸ்து -ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் என் நெஞ்சில் ஆவிர்பவிக்கக் கடவர் –

தனியன் அவதாரிகை –

அவிதித விஷயாந்தர -இத்யாதி
இதில் வேறு ஒன்றும் நான் -அறியேன் என்று -ஆழ்வாரை ஒழிந்த விஷயங்கள் அவிவிதங்களாய் இருப்பாராய் – சடகோபர் -என்னும் திரு நாமத்தை உடையரான -ஸ்ரீ நம் ஆழ்வார் உடைய
அநுபவ பரிவாஹ ரூபமான -திருவாய்மொழியின் -காநமே -போகமாய் இருப்பாராய் –
அவ்வளவிலும் நில்லாதே -அதுக்கும் மேலே அவர் வாத்சல்யாதி குணத்தாலும் -தோற்று -அவரையே தம்மை அடிமை கொள்ளும் சேஷி -என்று அறுதி இட்டு இருக்கும் ஸ்ரீ மதுரகவிகள் -தன் நிஷ்டை -நிலை உண்டாகும்படி என் ஹ்ருதயத்தில் ஸூ ப்ரதிஷ்டராய் ஆகக் கடவர் –என்கிறது

தனியன் வியாக்யானம் –

அவிவித விஷயாந்தர –
ஆழ்வாரை ஒழிந்த விஷயங்களிலே வ்யத்புத்தி பண்ணி யறியார் -என்கிறது –
சிந்தை மற்று ஒன்றின் திறத்தல்லா –என்றும்
பாவோ நான்யத்ர கச்சதி –மற்று ஒன்றினைக் காணாவே -என்னக் கடவது இறே –

சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அல்லாத் தன்மை தேவபிரான் அறியும்
சிந்தையினால் செய்வதா னறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத் தேவர் குழு வணங்கும்
சிந்தை மகிழ் திரு வாறன் விளையுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே.–7-10-10-திருவாறன் விளை ஒழிய வேறு ஒன்றில் ப்ராப்ய புத்தி இல்லை என்னும் இடம் சர்வேஸ்வரன் அறியும் -நெஞ்சானது பரம பதம் என்று பேச்சு தன்னையும்-ப்ரசங்கமும் -நினையாதது சர்வேஸ்வரன் அறியும். தன்மை – சுபாவம்.
பரம பதம் என்ற பெயர் சொல்லுதலுங்கூடத் தமக்கு விருப்பமின்மையின், ‘மற்று ஒன்று’ என்கிறார்.

இங்கு விஷயாந்தரங்கள் ஆகிறது –
1-பாட்டுக் கேட்கும் இடமான பர விஷயமும்
2-கூப்பீடு கேட்கும் இடமான வ்யூஹ விஷயமும்
3-குதித்த இடமான விபவ விஷயமும் –
4-வளைத்த விதமான அந்தர்யாமி விஷயமும் –
5-ஊட்டும் இடமான அர்ச்சாவதாரவிஷயமும் —
எல்லாம் வகுத்த விஷயமான ஆழ்வாரே ஆகையாலே மற்று ஒரு விஷயங்களையும் அறியாதே இருப்பர் –

(அதாவது –
ஏதத்  சாம காயன் நாஸ்தே -என்கிறபடியே –-1-நிரந்தர அனுபவத்துக்கு போக்குவீடாகப் பண்ணும் சாம கானம் கேட்க்கும் ஸ்தலமான பரம பதமும் –
2-அசூர ராஷச பீடிதரான ப்ரஹ்மாதி தேவர்கள் ஆர்த்த நாதம் கேட்க செவி கொடுத்துக் கொண்டு கண் வளரும் வ்யூஹ ஸ்தலமும் –
3-அவர்கள் ஆர்த்த த்வனி கேட்டு -துடித்துக் கொண்டு எழுந்து இருந்து -நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் -என்கிறபடியே –திருபாற் கடலிலே திரு அரவணையின் நின்று இவ்வருகே வரக் குதிப்பாரைப் போலே -வந்து அவதரித்த -அவதார ஸ்தலமும் –
4-நினைத்து தலைக் கட்டும் அளவும் -மலையாளர் வளைக்குமா போலே -இட்டவடி பேர விடாதே -வளைத்துக் கொண்டு இருக்கிற -அர்ச்சாவதார ஸ்தலங்களும் –
5-ஏஷாம் இந்தீவரஸ்யாமோ ஹ்ருதயே ஸூப்ரதிஷ்டத -என்றும் –ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேன் உள்ளானே -என்றும் – சொல்லுகிறபடியே -ஹிருதய கமலத்திலே இருந்து -தான் உகந்தாருக்கு தன் அழகை புஜிப்பிக்கும்-அந்தர்யாமித்வ ஸ்தலம் ஆகிற –இந்த ப்ராப்ய ஸ்தலங்கள் எல்லாம் -தனக்கு வகுத்த ஸ்தலமாய் -பிராப்யமுமாய் -இருக்கும் ஆசார்ய விஷயமே என்று அத்யவசித்து இருக்க கடவன் -என்கை-

வளைத்த இடமாவது -பிறர் அறியாதபடி திரை வளைத்துக் கொண்டு இருக்கிற அந்தர்யாமி  ஸ்தலம் –
ஊட்டும் இடம் ஆவது -சஷூர் விஷயமாய் இருந்து -தன் வடிவு அழகையும் குணங்களையும் – ஆஸ்ரிதரை புஜிப்பிக்கும் அர்ச்சாவதார ஸ்தலம் -என்று சொல்லவுமாம்–
ஏனைவ குருணா யஸ்ய வியாச வித்யா ப்ரதீயதே தஸ்ய வைகுண்ட்ட துக்த்தாப்த்தி  த்வாரகாஸ் சர்வ ஏவச -என்றும் –
வில்லார் மணி கொழிக்கும் -என்று துடங்கி -அருளாலே வைத்தவர் -என்றும் சொல்லக் கடவது இறே–

அன்றிக்கே –
பாட்டு கேட்கும் இடம் -இத்யாதிக்கு -ரஷகமாக அவற்றை ஆசைப் படக் கடவன் அல்லன் என்கிற அளவன்றிக்கே -அவை எல்லாம் தனக்கு இவ் விஷயமே என்று இருக்கக் கடவன் என்கிறது என்று கீழோடு சேர யோஜிக்கவுமாம் —

ஆச்சார்யரே பிராப்தம் -அனுபவத்துக்கு போக்கு வீட்டு வைகுண்ட செல்வனார் மேல் -ஏதத் ஸாம கானம் 
ஆர்த்தி உடன் -கூப்பீட்டு கேட்க்கும் இடம்துடித்து எழுந்து அரை குலைய குதித்த அவதார ஸ்தலங்கள்
கண்ணையும் மனத்தையும் வளைக்கும் அர்ச்சைதேனும் பாலும் -நிரதிசய போக்யமான அந்தர்யாமி ஓவாத ஊணாக ஊட்டும்-நின்ற ஒன்றை உணர்ந்துபரமபதம் இத்யாதிகள் ஸ்தலம் -இங்கு -இடம் தான் -அனைத்தும் ஆச்சார்யர் திருவடி –

பகவத் அபிமத ஸ்தலம் -விமல சரம திருமேனியை -குற்றம் அற்ற கடைசியான விக்ரஹம் -திருவடி உப லக்ஷணம் –அன்றிக்கே–பிரகாரம் நிலைகளைப் பற்றி அவனுக்கும் தனக்கும் வகுத்த இடம்-ஆச்சார்யரே உபாயம் உபேயம் முக்த கண்டம் –பகவானுக்கும் ஆச்சார்யர் -அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் -அவனுக்கும் உத்தேச்யம்
மனக்கடலில் வாழ வல்ல என் மாய -வ்யூஹம்
வில்லாளன் என் நெஞ்சத்து உள்ளான் -விபவம்
ஒருவன் அடியேன் உள்ளான் அந்தர்யாமி
திருவேங்கடமே எனது உடலே -அவனுக்கும் நமக்கும் இதுவே வகுத்த இடம் -அடியார் திருமேனியையையே விரும்பி உள்ளான் -)

மாதா பிதா இத்யாதி
அன்னையாய் -அத்தனாய் -சர்வம் யதேவ –
சமஸ்த சாம்சாரிக விஷய சுகங்களும் சடகோபாச்சார்யர் என்று அறுதி இட்டு –
தத் அந்யங்களை அறியாதவர் –என்றுமாம்
ஆழ்வார் –எல்லாம் -கண்ணன் என்று இருக்குமா போலே
கோயில் கொள் தெய்வம் எல்லாம் தொழ -வைகுந்தம் கோயில் கொண்ட குடக்கூத்த
வம்மான் கோயில் கொண்டான் அதனோடும் என்நெஞ்சகம் –
என்றும் –
மொய்த்தே திரை மோது தண் பாற்கடல் உளான் பைத்தேய் சுடர் பாம்பணை நம் பரனை
வைத்தேன் மதியால் -என்கையாலே -அவனும் கிடந்தது என் நெஞ்சு -அகலான்
-என்றும் –
உருப்பிணி நங்கை அணி நெடும் தோள் -புணர்ந்தான் என்றும் –
எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப வுள்ளே இருக்கின்ற பிரான் -என்றும்
கண்கள் சிவந்திலே -அப்படியே –ஒருவன் அடியேன் உளான் -என்றும் –
திருப்பேர் நகரான் திருமாலிரும்சோலைப் பொருப்பே உறைகின்ற பிரான்
இன்று வந்து இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் -புகுந்தான்
என்றும் –
விண் மீது இருப்பாய் -என்கிற -ஐந்தும் எனதாவியுள் மீதாடி –என்றும் –
தேவர் கோலத்தோடுமானான் என்கிற தெய்வ உருவில் இவர்க்கு எல்லாம் உண்டாகையாலே
அவற்றை அறியத் தேவை இல்லை இறே-

பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள் உரியர் ஆகையாலே ஆயிற்று –
கரிய கோலத் திரு உருக் காண்பன் -என்றதும் –

அதவா –
அவிவித விஷயாந்தரஸ் ஸடாரே -என்கையாலே –
சடாரியைக் காட்டிலும் அறியாமல் இருப்பதான -அந்ய விஷயங்களை உடையவர்-என்கிறது –
அதாவது –ஆழ்வார் கழிக்குமது -இளம் தெய்வத்தை யாயிற்று –
இவர் கழிக்குமது –கழி பெரும் தெய்வமாய் -கரும் தெய்வமான -கண்ணனான பெரும் தேவனை யாயிற்று –
கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் என் அப்பனில் நண்ணி -என்றார் இறே-
உன்னித்து மற்று ஓர் தெய்வம் தொழாள் -என்றும் –
ஒரு மா தெய்வம் மற்று உடையமோயாமே -என்றும் –
தேவு மற்று அறியேன் -என்று ஆயிற்று இவர்கள் பேச்சு இருப்பது –
இப்படி ஆழ்வாரில் வ்யாவருத்தராய் இருக்கிற இவர்-

சடாரே ருபநிஷதர முபகாநமாத்ரே போகர் -ஆகையாவது –
நாட்டியல் ஒழிந்து சடரை ஒட்டின சடகோபன் மொழி பட்டோடும் கவி அமுதமான
யாழின் இசை வேதத்தின் பண்ணார் பாடலின் அநுபவ ரச ஜ்ஞராய் –
பாவின் இன்னிசை பாடித் -திரிவேன் என்றும் –
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் மேவினேன் அவன் பொன்னடி மெய்மையே –
என்று இருக்கை -என்றபடி-
இத்தால் –
அவரோபாதி அவர் சம்பந்தம் உடையதும் உத்தேச்யம் -என்று ஆயிற்று இவர் விரும்புவது –

அவிவித விஷயாந்தரஸ் ஸடாரே -என்று ஸ்வரூப பிரயுக்தமான தாஸ்யம் -சொல்லிற்று
அபிச குணவ ஸாத்தா தேக தேஷீ -என்று குணாக்ருத தாஸ்யமு+ம் உண்டு என்கிறது
அபிச -கீழ் சொன்ன அளவு அன்றிக்கே பின்னையும் –
குணவ ஸாத் -என்று த்ருதீயார்த்தே பஞ்சமியாய்க் கிடக்கிறது –
ஆதலில் அன்னையாய் அத்தனாய் என்னை யாண்டிடும் தன்மையான் சடகோபன் என் நம்பியே -என்றும் –
பயன் அன்றாகிலும் பாங்கலர் ஆகிலும் செயல் நன்றாக திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி -என்றும்
அனுசந்தித்த வாத்சல்யாதி குண பூர்த்தியாலும் குணைர்த் தாஸ்யம் உபாகதராய்
தத் ஏக சேஷியாய் இருப்பார் ஆயிற்று –

ஏவம் பூதரான –மதுரகவி -அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே -என்னும்படியான
வாக் மாதுர்யத்தை உடையவர்
மம ஹ்ருதயே –
மதுரகவி நிஷ்டையை அபேஷிக்கிற என் மனச்சிலே -நின்று இருந்து
பட்டோலை கொண்ட நிலையோடே
ஆவிரஸ்து
ஆவிர்ப்பிக்கக் கடவர் –
சந்நிதானம் பண்ணக் கடவர்
இத்தால் -அனுகூலரான ஆசார்ய பரதந்த்ரர் ஆதரணீயர் என்னும் அர்த்தம் சொல்லிற்று ஆய்த்து –

————————————————————————–

வேறு ஒன்றும் நான் அறியேன் வேதம் தமிழ் செய்த
மாறன் சடகோபன் வண் குருகூர் -ஏறு எங்கள்
வாழ்வாம் என்று ஏத்தும் மதுரகவியார் எம்மை
யாள்வார் யவரே யரண் –

வேறு ஒன்றும் நான் அறியேன் –
ஆழ்வாரை ஒழிய தேவு மற்று அறியாத மதுரகவிகள் நமக்கு ஸ்வாமியும் ரஷகரும் அவரே என்கிறது –
வேறு ஒன்றும் நான் அறியேன் -வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் வண் குருகூர் -ஏறு எங்கள் வாழ்வாம் -என்னும் அளவும் மதுரகவி சொல்லை அனுகரித்து சொன்னபடி
மேல் ஏவம்வித ரானவர் நமக்கு சேஷியும் சரண்யரும் -என்கிறது –
தேவு மற்று அறியேன் –என்றத்தை –வேறு ஒன்றும் நான் அறியேன் -என்றது –
மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள் நிற்கப் பாடி என் நெஞ்சினுள் -நிறுத்தினான் –
என்றத்தை –வேதம் தமிழ் செய்த -என்றது –
காரி  மாறப் பிரான் -சடகோபன் என் நம்பி -என்றத்தை –மாறன் சடகோபன் -என்கிறது
பெரிய வண் குருகூர் நம்பிக்கு ஆள் உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே –
என்றத்தை –வண் குருகூர் ஏறு எங்கள் வாழ்வாம் -என்றது

எழுமையும் எம்பிரான் நின்று தன் புகழ் ஏத்த அருளினான் -என்றத்தை –ஏறு எங்கள் வாழ்வாம் என்று -ஏத்தும் என்றது
தென் குருகூர் நம்பிக்கு அன்பனாய் மதுரகவி -என்றத்தை-வண் குருகூர் ஏறு எங்கள் வாழ்வாம் என்று ஏத்தும்-எம்மை யாள்வார் -என்றது –
அவரை ஆளுகிறவர் ஆழ்வார் -நம்மை ஆளுகிறவர் இவர்
யவரே யரண் –
ரஷை
சரண் -என்ற பாடமான போதும் ரஷை என்றே அர்த்தம் –
மதுரகவிக்கு எல்லாம் ஆழ்வாரே ஆனால் போலே-நமக்கு எல்லாம் மதுரகவி -என்கிறது

—————————————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மாறன் பாவும் அவர் பொன்னடி மேவியவர் பாவும் –

June 15, 2026

இப்படி சரம பர்வ ஏக நிஷ்டரான இவர் தாம் ஸ்வ ஆச்சார்யரான நம்மாழ்வார் பகவத் விஷயத்திலே பண்ணும் அனுசந்தான பிரகாரத்தை இவ்வாழ்வார் விஷயத்தில் பண்ணினார் இறே -எங்கனே என்னில்
1-அவர் -அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாராவமுது -என்றார் -அந்த போக்யதா ப்ரகர்ஷத்தை ஸ்ரீ மதுரகவிகள் தாம் நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே -1-என்கிறார்

எப்பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும்
அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம் கை கமலம்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி ஊழி தொறும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே –2-5-4-இப்படிக் காலமெல்லாம் அனுபவியா நின்றாலும், அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதமேயாம்.-தாராவாஹிக விஞ்ஞானத்தில்-கால உபஷ்டம்பாதிகளால் வருவது ஒரு பேதம் உண்டு இறே ஞானத்துக்கு –அதாவது ஒரு பொருளைப் பற்றித் தொடர்ச்சியாக உண்டாகின்ற பல வகை அனுபவங்களில் காலம் தேசம் முதலியவைகளின்
கூட்டரவுகளால் வருவது ஒரு பேதம் உண்டு ஞானத்திற்கு;-இங்கு விஷயந்தானே பேதியா நின்றது வேறுபடுகின்றது-ஆயிற்று – என்பதாம்.–இப்படி கால தத்வம் உள்ளதனையும் அனுபவியா நின்றாலும்
பூர்வ க்ஷணத்தில் அனுபவம் போலே அன்றியே உத்தர க்ஷணத்தில் அனுபவம் இருப்பது –நித்ய அபூர்வமாய் இருக்கை-

அண்ணிக்கும் அமுதூரும்
ரச பதார்த்தங்கள் இட்ட பதார்த்தம் மாண்ட வாறே ரசம் மாளும்
இது ஒரு கால் இட்டால் உள்ளது அளவும் அமுது ஊற்று மாறாது என்கிறார்-அமுதூரும்
அமுது தான் ஊற்று மாறாதே செல்லும்–நசபுநர் ஆவர்ததே போலே-நினைத்த நெஞ்சம் தித்தித்தது
சொன்ன நாக்கும் தித்தித்துவாரா நின்றது-பகவத் விஷயம் நினைக்க நெஞ்சும் இல்லை
சொல்ல நாக்கும் இல்லை-அடியே பிடித்து ஆழ்வார் உடைய சாரச்யத்திலே பழகின நா அன்றோ-அமுதூரும்-அமுதூற்று மாறாதே நிற்கும்-அவ்விஷயம் ஆழ்வாருக்கு தத் ப்ரசாதத்தாலே நித்தியமாய் செல்லுமா போலே எனக்கும் ஆழ்வார் ப்ரசாதத்தாலே நித்யமாக செல்லப் பெற்றேன்
என் நாவுக்கே –இவ் வம்சத்தில் கரணியான என்னோடு கரணங்களோடு வாசி இல்லை-இது பின்னை எங்களுக்கு ரசிக்கிறது இல்லையோ என்னில்-முதல் அடியான பகவத் விஷயமும் கூட ரசியாது இருக்கிற உங்களுக்கு-அதின் எல்லையில் நிற்கிற எனக்கு ரசிக்குமா போலே ரசிக்குமோ-என் நாவுக்கே-அநாதி காலம் விஷயாந்தரங்களில் ரசித்துப் போந்த என் நாவுக்கே இவ் விஷயம் ரசிக்கிறது –என்றுமாம்

2-அவர் மலக்கு நாவுடையேற்கு -என்றார் -இவர் நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் -என்றார்

கலக்க ஏழ்கடல் ஏழ்மலை உலகேழும் கழியக் கடாய்
உலக்கத் தேர்கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும்பல
வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவை யுடை மால்வண்ணனை
மலக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம்மண்ணின் மிசையே?–6-4-9-ஹர்ஷ ப்ரகரஷத்தாலே அலமாக்கும் படி பண்ணும்-நா வீறு யுடைய எனக்கு இந்த பூமியின் மேலே எதிர் உண்டோ
ஈஸ்வரனுக்கு மநோ ஹாரியான வாக்கையுடையார் வேறு பூமியில் இல்லை என்று கருத்து –அவாக்ய அ நாதரா என்கிற சர்வாதிக வஸ்துவை விக்ருதமாக்கும் நா வீறுடைய எனக்கு-சோழேந்திர சிம்ஹனை உளுக்காகப் பண்ண வல்ல நாவைப் படைத்த எனக்கு -பூமியில் எதிர் உண்டோ -ஈஸ்வரன் உளுக்கு ஆகும் படி கவி சொல்ல வல்லார் தம்மை ஒழிய சிலைவர் இல்லாமையால் வேறு என்னோடு ஒப்பார் இல்லை என்கிறார்-சோளேந்திர சிங்கன்’ என்பது, நம் பெருமாளுடைய யானை. உளுக்காக்க – இருக்கும்படி. என்றது-சர்வேஸ்வரனாகிற மத்த யானையானது பணிந்து கொடுக்கும்படி செய்கிறேன் என்கிறார் என்றபடி.-மலக்கும் நாவுடையேன் – இவர் வார்த்தையில் கலங்குமவனன்றோ அவன் தான்.
இவர் கலங்கிச் சொல்லச் சமைந்தாற் போலே யன்றோ அவனும் கலங்கிக் கேட்கச் சமைந்தபடி.

நாவினால் நவிற்று -ஓர் உக்தியாலே இந்த சரீரத்தோடே அனுபவிக்கலாம் என்கிறார் –ஆழ்வார் -அடியை அடைந்து உள்ளம் தேறி ஈறில் இன்பத்திரு வெள்ளம் யான் மூழ்கினேன் –இத்தையும் செய்து அடைந்ததை-இவர் நாவினால் நவிற்று எய்தினார் என்கிறார் –என்றக்கால் அண்ணிக்கும் -என்று ப்ரஸ்துதமானத்தை யனுபாஷிக்கிறார்-மனஸ் சஹ காரம் இல்லை என்கிறார் –-பகவத் விஷயத்தில் உபகாரகரை ஸ்தோத்ரம் பண்ணக் கடவ நாவைக் கொண்டு அந்த கார்யதைக் கொள்ளப் பெற்றேன் -என்னவுமாம்-ஈஸ்வர ஸ்ருஷ்டிக்கு பிரயோஜனம் கொள்ளப் பெற்றேன் -நான் ஒருவனே என்கிறார்-இன்பம் எய்தினேன் –வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்ந்தனன் மேவி -என்று ஆழ்வார் அவ் விஷயத்தில் பெற்ற பேற்றை -இவ் விஷயத்திலே பெற்றேன் என்கிறார் –
சிந்தையினாலும் சொல்லாலும் செய்கையினாலும் -என்று கரண த்ரயத்தாலும் அவ்
விஷயத்தை ஆஸ்ரயித்தவர் பெற்ற பேற்றை உக்தி மாத்ரத்திலே பெற்றேன் –
அநாதி காலம் நரகத்திலே ஸ்ருஷ்டியும் -நரகத்திலே சம்ஹாரமும் ஆம்படி பண்ணின பாபத்தை-பண்ணிப் போந்த நாவால் -நிரதிசய ஆநந்தத்தை ப்ராபித்தேன் -என்னவுமாம் – (வையத்து வாழ்ச்சி போலே நாக்காலே இன்பம் -என்றபடி 

3-அவர் -அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றார் -இவர் மேவினேன் அவன் பொன்னாடி மெய்மையே -என்றார்

அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன் றில்லா அடியேன் உன் னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10-உன் னடிக் கீழ் -விக்ரஹ யோகம் சொல்லுகிறது–அமர்ந்து -செறிந்து -சஹகாரி வ்யவதானம் இன்றிக்கே ஒழிகை
புகுந்தேனே.–போக்கு வரவு யுண்டாய் அன்று -புத்தி க தியாய் அத்யாவசாயத்தை சொல்லுகிறது-அடிக் கீழ் -என்கையாலே சரண சப்தார்த் தையும்-அமர்ந்து –என்கையாலே கிரியா பதத்தில் உபசர்க்க அர்த்தமாக உபாய உபேய விஷயமான வ்யவசாயத்தையும்-புகுந்தேனே.–என்று கிரியா ரூபமான ஆஸ்ரயணத்தையும்-புகுந்தேன் என்கிற பூதார்த்த நிர்த் தேசத்தாலே ஆஸ்ரயணத்துக்கு ஆவிருத் அபேஷை இல்லாத ஸக்ருத் கரணத்தையும் பிரகாசிப்பதாய்–இது பூர்ண சரணாகதி யாகையாலே
ஆச்ரயண அர்த்தமான ஸ்ரீ லஷ்மீ சம்பந்தமும் -குண யோகமும் ப்ராப்ய அன்விதமாய் இருக்கையாலும்
அடியேன் என்கிற அதிகாரி ஸ்வரூபத்தில் அநந்யார்ஹத்வ அநந்ய சரணத்வங்களோ பாதி அநந்ய போக்யத்வமும் ஸூசிதமாகையாலே-அமர்ந்து என்று பிரயோஜனாந்தர நிரசனம் ஸூ சிதமாகையாலே நமஸ் சப்தார்த்தம் சித்திக்கையாலும்-புகுந்தேன் என்கிற பிரதிவசனம் ப்ராப்திக்கும் ஸூ சகமாக வற்றாகையாலும்-பிரதானமான உபாய வரண வாக்யத்துக்குள்ளே வாக்ய சேஷமான உத்தர வாக்யார்த்தமும் அந்தரகதமாயிற்றதாயிற்று-ஆகையால் இப்பாட்டு வாக்ய த்வயார்த்த ப்ரகாசகமாகையாலே பூர்ண சரணாகதி யாகக் குறையில்லை-“புகல் ஒன்றில்லா அடியேன்”என்கையாலே, உத்தமனால் (உத்தமன் – தன்மையிடம்) போதருகின்ற அதிகாரியும்,
உன்னடிக் கீழ்” என்கையாலே, “சரணௌ” என்ற சொல்லின் பொருளும்,-“அமர்ந்து புகுந்தேனே” என்கையாலே,“பிரபத்யே” என்ற சொல்லின் பொருளும் கூறியுள்ளதைத் தெரிவித்தபடி.
“சரணம்” என்ற சொல்லின் பொருளைத் தெரிவிக்கும் பதம் திருப்பாசுரத்தில் இல்லையே? எனின்,
“புகுந்தேன்” என்றதனால்“சரணம்” என்ற சொல் கோல் விழுக்காட்டாலே வருவது ஒன்றாம் ஆதலின், தனியே கூறிற்றிலர் என்க.-இப்பொருள் தன்னையே விவரணம் செய்கிறார்
‘“அகலகில்லேன் இறையும்” என்று’ என்றது முதல்‘பதத்தோடே சேரக் கடவனவாம்’ என்றது முடிய.

அமர்ந்து புகுந்தேனே – “முமுக்ஷுவான நான் சரணம் அடைகிறேன்” என்னுமாறு போலே.
அவனுக்கு ஒரு -ஸஹ காரி -துணை வேண்டுதல், தம் தலையிலே ஓர் உபாயத் தன்மை கிடத்தல் செய்யில் அன்றோ-நடுவே ஓர் இடையீடு விளம்பங்கட்குக் காரணம் உள்ளது என்பார் ‘அமர்ந்து’ என்கிறார், (இடையூறும் கால விளம்பமும் இல்லையே -பக்தி யோகம் இல்லையே )உன் அடிக் கீழ் –
“சரணௌ” என்ற பதத்தால் சொல்லப்படுகிற விக்கிரஹத்தைச் சொல்லுகிறது. யாங்ஙனம்? எனின்,
1-ஸூ பாஸ்ரயமாய் -எளிதில் பற்றக்கூடியதாய்,
2-உலக விஷயங்களிலே அருசி முன்னாகத் தன் பக்கல் ருசியையும் உண்டாக்கி,
3-பிறந்த உருசியையும் வளர்த்து,
4-பேற்றிற்கு விரோதமாயுள்ளனவற்றையும் தவிர்த்து,
5-ஒருதேச விசேடத்திலே போனால் நித்தியமாகக் கைங்கரியத்தைச் செய்வதற்கு எதிர்த் தொடர்புள்ளதுமாய்,
6-எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருப்பதற்கு விஷயமுமாவது விக்கிரஹம் ஆகையாலே என்க.

முதல் முதலிலே,
“துயர் அறு சுடர் அடிதொழுது எழு” என்று” திருவுள்ளத்தைக் குறித்து அருளிச் செய்து,
தாம் பற்றுகிற இடத்தில்
“உனபாதம் கூடுமாறு கூறாய்” என்றும்,
“உன்னடி சேர் வண்ணம் அருளாய்” என்றும்,
உன்னடி சேர அடியேற்கு ஆஆ என்னாயே!” என்றும்,
“பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராய்” என்றும்,
“உனபாதம் சேர்வது அடியேன் எந்நாள்” என்றும்,
“எந்நாள் உன்னடிக்கள் அடியேன் மேவுவதே?” என்றும்,
“நொடியார் பொழுதும் உனபாதம் காண நோலா தாற்றேன்” என்றும்,
அடியேன் உனபாதம் அகலகில்லேன் இறையும்” என்றும்,
“உன்னடிகீழ் அமர்ந்து புகுந்தேன்” என்றும் இவர் அடி விடாமல் அநுசந்தித்தபடி கண்டதே!

அமர்ந்து –
அமருகையாவது, வேறு உபாயங்களை விட்டதைப் போன்று வேறு பலன்களில் அருசியைச் சொல்லுகிறதோ? என்னில், அது இங்குச் சொல்லப்பட வேண்டியது இல்லாமையாலே பொருள் அன்று.
இதற்குப் பொருள்,-“எல்லாத் தர்மங்களையும் விட்டு” என்றும், “பற்றுக்கோடாகப் பற்று” என்றும் சொல்லச் செய்தே “ஏகம்” என்னும் சொல்லைச் சொன்னதைப் போன்று,-திருவேங்கடமுடையான் திருவடிகளும் தம்முடைய தலையும் கொக்குவாயும் படுகண்ணியும் போலே இடைவெளி இல்லாமல் பொருந்தினபடி சொல்லுகிறது.

மேவினேன் அவன் பொன்னடி
-இங்கு இருந்த நாள் அஞ்ஞாத ஞாபநத்தாலே உபகாரகர் ஆகவும்-பகவல் லாபத்துக்கு புருஷகாரமாகவும் –-நித்ய விபூதியில் யத்ர பூர்வே சாத்யாஸ் ஸந்தி தேவா -என்கிறபடியே ப்ராப்யமாகவும் இவர் தம்மையே-பற்றினேன் -ஆளவந்தார் -அத்ர பரத்ர சாபி என்கைக்கடி இவர் இறே-இஹ லோக சுக ஜனகரும் -பர லோக சுகத்துக்கு சாதனமும் –எனக்கு சுவாமியும் -கால ஷேப விஷயமும் -ஆழ்வாரே என்கிறார்-அவன் பொன்னடி-அவனது போலே உலகம் அளந்த-ஊர் பொதுவாய் -எல்லார் தலையிலும் இருக்கும் பொன்னடி அன்று-நான் தொட்டுப் பரிமாறினாலும் தோஷம் வாராத திருவடிகள்
மேவினேன் –வர்த்தமான நிர்த்தேசம் பண்ண வேண்டாமல் சத்ருத் சமாஸ்ரயணம் அமைந்தது
உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே போலே இன்றி-எங்கேனும் இருந்து ஆஸ்ரயிக்கலாம் படி
அத்தோடு -வேறு ஒரு கால் இருக்கைக்கு இடம் இல்லாத படி -பொருந்தி விட்டேன்-மெய்மையே-சத்தியமே -ஸ்ரீ சடகோபனை தலையிலே கொண்டு இருந்தும் பொய் சொல்வார் உண்டோ-கால ஷேப விஷயம் எனக்கு ஓன்று இரண்டா ஆயிரம் பிரகாரம் அல்லையோ

மேவினேன் அவன் பொன்னடி – ஆழ்வாருடைய ஸ்ப்ருஹணீ யமான திருவடிகளை உத்தேச்யமாக பொருந்தினேன் – ஷிபாமி -என்று ஈஸ்வரனும் கூட உபேஷித்த தசையிலே விஷயீ கரித்த ஆழ்வாருடைய விலஷணமான திருவடிகளோடே பொருந்தப் பெற்றேன் – (பரம காருணீகர் ஆகையால் ஷிபாமி -என்று-அச்சம் உறுத்தினான் -உபேக்ஷித்தான் என்கிறார்-அஹருத்ய யுக்தி என்றபடி- )
நீர் செய்தது -இதுவாகில் பேற்றில் அறுதிபாடு இருந்த படி என் -என்ன –
மெய்ம்மையே மேவினேன் –
1-உபகார விஷயத்திலே நிற்கிற அளவிலே வேறு ஒரு விஷயம் உத்தேச்யமாய்
அது கிட்டின வாறே அதிலே தோள் மாறும்படி யன்றிக்கே -ஐஹிக ஆமுஷ்மிகங்கள் இரண்டும் ஆழ்வார் திருவடிகளாகப் பொருந்தினேன் –
2-இங்கு இருந்த நாள் அஜ்ஞா தஜ்ஞாபநத்தாலே வுபகாரராகவும் –
யத்ர பூர்வே சாத்யாஸ் சந்திதேவா என்கிறபடியே-பகவத் லாபத்துக்கு புருஷகாரமாகவும்-நித்ய விபூதியில் ப்ராப்யமாகவும் இவர் தம்மையே பற்றினேன் –


4-அவர் -கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை -என்றார் -இவர் தேவு மற்றறியேன் -என்றார் –

நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்
மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்பதெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே.–5-2-7-சர்வ தேவா தேவகீபுத்ர ஏவ -என்கிறபடியே கிருஷ்ணனை ஒழிய ஆஸ்ரயணீயர் இல்லை –-அவனுக்கு பிரகார பூதராய் கொண்டு உளராம் அத்தனை அல்லாத தேவதைகள் –யோயோ யாம் யாம் தனும் பக்த –“வேதங்களும் மூன்று அக்நிகளும் ஐந்து ஆஹீதிகளும் எல்லாத் தேவர்களும் தேவகியின் புத்திரனான கண்ணபிரானே” என்கிறபடியே, அவனுக்குச் சரீரமாக அல்லது ஸ்வதந்திரமாயிருப்பது ஒரு தேவதை இல்லை.
“எந்த எந்த பக்தன் எந்த எந்தச் சரீரத்தைச் சிரத்தையுடன் அருச்சிப்பதற்கு விரும்புகிறனோ அவன் அவனுக்கு அந்த அந்தச் சிரத்தையையே நிலைநிற்கும்படி செய்கிறேன்” என்கிறபடியே, அக்கண்ணபிரானுக்குச் சரீரமாக உளராகில் ஆமித்தனை.

தேவு மற்று -அறியேன் விட்ட விஷயத்தின் பேர் சொல்லாமைக்கு பாவோ நாந்யாத்ர கச்சதி போலே –
பாவின் இன்னிசை -பாவிலே பூண்ட இன்னிசை-ஐஸ்வர்யத்தை -அல்பம் அஸ்திரம் என்று கழித்து
ஸ்திரமான ஆத்மப்ராப்தியை அபுருஷார்தம் என்று கழித்து-ஸ்திரமுமாய் பரம போக்யமுமாய் உள்ள பகவத் ப்ராப்தியை ப்ராப்யத்தில் பிரதம அவதி என்று கழித்து-இதில் சரம அவதியான ஆழ்வாரையும் உத்தேச்யர்  அன்று என்று கழித்து-அவரோடு சம்பந்தித விஷயத்தையும் ரசாஸ்ரயம் அன்று என்று கழித்து-அத்தோடு சம்பந்தித இசையே உத்தேச்யம் என்கிறார்-தெய்வத் தண் அம் துழாய்த் தாராயினும் -தழை யாயினும் -தண் கொம்பாயினும் – கீழ் வேராயினும் -நின்ற மண் ஆயினும் கொண்டு வீசுமினோ -இத்யாதிப் படியே-பகவத் சம்பந்தம் போகப் போக நிறம் பெறுகிற படி-ரசாயன சேவை பண்ணித் திரிவாரைப் போலே –பாடித் திரிவனே-இது காணும் இவருக்கு தாரகமாய் சஞ்சரிக்கப் பண்ணுகிறது

தேவு மற்று அறியேன் –
ப்ராப்யமும் ப்ராபகமாக வேறு ஒரு வஸ்து உண்டு என்று இரேன்-மெய்ம்மையே என்ற இடம் அன்வயத்தாலே சொல்லுகிறார் -தேவு மற்று அறியேன் என்று-வ்யதிரேகத்தாலே சொல்லுகிறார் இ றே தம்முடைய அத்யாவசியம் தோற்றுக்கைக்காக -மற்று அறியேன் -என்று–புருஷார்தங்களோபாதி பகவத் விஷயத்தையும் கழிக்கிறார் இறே-அதின் எல்லையான ஆழ்வார் திருவடிகள் அளவும் வந்தவர் ஆகையாலே-சாஸ்திர வாசனையாலே யாதல் –ஆச்சார்ய உபதேசத்தால் ஆதல் -சொல்லுகிறார் அல்லர் –உபகாரகரான ஆழ்வார் திருவடிகளில் பாவ பந்தத்தாலே சொல்லுகிறார் –

5-அவர் பாடி இளைப்பிலம் என்றார் -இவர் பாடித் திரிவனே -என்றார்

அகலில் அகலும் அணுகில் அணுகும் புகலும் அரியன் பொருவல்லன் எம்மான்
நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம் பகலும் இரவும் படிந்து குடைந்தே –1-7-10–நீர்மைக்கு ஒப்பு இல்லாதவனுடைய-புகழ் பாடி இளைப்பிலம்-கல்யாண குணங்களை பாடி விச்சேதிக்க ஷமன் ஆகிறிலேன்-இளைக்கை யாகிறது விடுகை -அதாவது விச்சேதம்-அவனுடைய ஒப்பில்லாத கல்யாண குணங்களைப் பாடி -ஒரு காலமும் விச்சேதிக்க ஷமன் ஆகிறிலேன்-

குருகூர் நம்பி பாவின்னிசை பாடித் திரிவனே
குருகூர் நம்பி பா -கண்ணி நுண் சிறு தாம்பு என்னுதல் -திரு வாய் மொழி என்னுதல் –பாவின் இன்னிசை -பாவிலே பூண்ட இன்னிசை-ஐஸ்வர்யத்தை -அல்பம் அஸ்திரம் என்று கழித்து
ஸ்திரமான ஆத்மப்ராப்தியை அபுருஷார்தம் என்று கழித்து-ஸ்திரமுமாய் பரம போக்யமுமாய் உள்ள பகவத் ப்ராப்தியை ப்ராப்யத்தில் பிரதம அவதி என்று கழித்து-இதில் சரம அவதியான ஆழ்வாரையும் உத்தேச்யர்  அன்று என்று கழித்து-அவரோடு சம்பந்தித விஷயத்தையும் ரசாஸ்ரயம் அன்று என்று கழித்து அத்தோடு சம்பந்தித இசையே உத்தேச்யம் என்கிறார்-பாடித் திரிவனே--உம்முடைய தேக யாத்ரை நடத்திப் போரும்படி என் என்ன –-ப்ரீதி ப்ரேரிரதனாய்க் கொண்டு சொல்லி இதுவே தாரகமாக சஞ்சரிப்பன் –-உண்டு திரிவன் -என்னுமா போலே –பாடித் திரிவன் -என்கிறார்-

6-அவர் இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்றதென் -என்றார் -இவர் திரி தந்தாகிலும் -என்றார்

இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என் இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்த
செங்கோ லத்த பவள வாய்ச் செந்தாமரைக் கண் என் அம்மான்
பொங்கு ஏழ் புகழ்கள் வாய ஆய் புலன் கொள் வடிவு என் மனத்தது ஆய்
அங்கு ஏய் மலர்கள் கைய ஆய் வழி பட்டு ஓட அருளிலே–8-10-4-இங்கே திரிந்தேற்கு -பாகவத கைங்கர்யத்துக்கு வர்த்தகமான பகவத் அனுபவம் பூர்ணமாக கிடைப்பது பரம பதத்தில் யன்றோ என்ன -அவ்வனுபவம் அவன் பிரசாதத்தாலே இங்கேயே கிடைக்குமாகில் இங்கேயே வர்த்தித்தால் சேதம் என் என்கிறார் என்றுமாம் –அங்குத்தை அனுபவத்துக்கும் அவன் பிரசாதமே இறே ஹேது -இங்கேயே கிடைக்குமாகில் சேதம் என் -என்கை –இழுக்கு உற்று என்-தண்ணிதானது என்–பாகவதர்கள் உடைய ப்ரீதியின் உருவமான-பகவத் கைங்கர்யத்தை-அவன் திருவருளாலே இங்கே செய்யப் பெறில்-எனக்கு அதுவே பேறு -என்கிறார் –-திரிதந்தாகிலும் தேவபிரானுடை-கரிய கோலத் திரு உரு காண்பன் நான் –
ஆசார்ய ஹிருதயம் –அழும் தொழும் ஸ்நேக பாஷ்ய அஞ்சலியோடு –புலன் கொள் நித்திய சத்ரு விசிதனம் – என்ற ஸ்ரீ சூக்தி இங்கே அனுசந்தேயம்-

திரி தந்தாகிலும் தேவபிரானுடைக்
கரிய கோலத் திரு உருக் காண்பன் நான்
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள்
உரியனாய் யடியேன் பெற்ற நன்மையே -3-திரி தந்தாகிலும் –திரி தருகை -யாவது மீளுகை –மீண்டாகிலும்-திரிதல் -என்றது கடைக் குறையான சொல்லாய் –திரி தந்தாகிலும் -போன வழி எல்லாம் மீண்டாகிலும் –-அதாவது –திருவாய்மொழிப் பாவை விட்டு –இசைகளை விட்டு –ஆழ்வாரை விட்டு –அவர் உகந்த விஷயம் என்று பிரதம அவதியில் வந்து –

7-அவர் உரிய தொண்டர் தொண்டர் என்றால் -இவர் நம்பிக்கு ஆள் உரியனே என்றார் -அவர் தாயாய் தந்தையாய் என்றார் -இவர் அன்னையாய் அத்தனாய் -என்கிறார்

தெரிதல் நினைதல் எண்ண லாகாத் திருமாலுக்கு
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்

தெரியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே.–6-9-11—உலகம் உண்டாற்கு உரிய தொண்டர் ஆக்கும்-
சர்வ ரக்ஷகனான சர்வேஸ்வரனுக்கு அநந்யார்ஹ சேஷமாக்கும் இத் திருவாய்மொழி.
சம்சாரம் நன்றுமாய், பகவத் விஷயம் தீதானாலும் அதனை விடமாட்டாதவர்களாதலின் ‘உரிய தொண்டர்’ என்கிறார்.-ஸ்ரீ யபதிக்கு அசாதாரணமான தாஸ்யத்துக்கு பர்யவசான பூமியான ஆழ்வார் -இவருடைய அஹம் புத்தி இருக்கிற படி -பயிலும் சுடர் ஒளிக்கு பின்பு ததீய சேஷத்வ பர்யந்தமாயிற்று –இவருடைய அஹம் அர்த்தம் இருப்பது -இவ்வளவு வருகை இறே அநந்யார்ஹ சேஷம் ஆவது–திருமகள் கேள்வனான சர்வேஸ்வரனுக்கே அடிமைபட்ட ஆழ்வார்,
சம்சாரத்தின் தன்மையை நினைத்த கொடுமையாலும்,-பகவத் விஷயத்திலே மூழ்கின கனத்தாலும்,
பெரு விடாயன் மடுவிலே விழுமாறு போலே, சேஷத்துவத்தினுடைய எல்லையிலே விழுகிறார் ‘
தொண்டர் தொண்டர் தொண்டன்’ என்று. -இது இவருடைய அஹம் புத்தி இருக்கிறபடி.
–தேக ஆத்ம அபிமானியாம்போது தேகத்திலே அஹம் புத்தியைப் பண்ணுவான்;-‘தேகத்திற்கு வேறுபட்டது ஒன்று உண்டு’ என்று அறிந்த போது ஆத்மாவிலே அஹம் புத்தியைப் பண்ணுவான்;-தன்னைப் பகவானுக்கு அடிமையாக நினைத்த போது பிரகார மாத்திரத்திலே நின்று செல்வம் முதலானவற்றைக் கொண்டு போவன்;-‘அடிமையாக இருத்தலே பேறு’ என்று அறிந்த போது தன்னை அடியார்கட்கு அடியவன் என்னுமளவாக அநுசந்திக்கக் கடவன்.

திரி தந்தாகிலும் தேவபிரானுடைக்
கரிய கோலத் திரு உருக் காண்பன் நான்
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள்
உரியனாய் யடியேன் பெற்ற நன்மையே -3-நம்பிக்கு – நான் ஒன்றை விட்டேன் என்னலாம்படியோ ஆழ்வார் உடைய  பூர்த்தி இருப்பது – அதாவது -ஆழ்வாரை அனுபவிக்கும் அனுபவத்திலே பகவத் விஷயம் அந்தர்பூதமாய் இருக்கை-(குருகூர் நகரான என்னாமல் குருகூர் நம்பி -இதற்குள் குறுங்குடி நம்பியும் அந்தரபூதம் –இருப்பிடம் வேங்கடம் இத்யாதி -பூர்ணர் -அன்றோ -)
ஆள் உரியனாய் –-உரிய அடியனாய்-உரிய அடியாருக்கு -தம்தாமுக்கு -என்ற ஒரு பிரிய அப்ரியங்கள் இன்றிக்கே ஸ்வாமி உகந்ததையே பற்றி அவன் கை விட்டதை விட்டு இருக்கும் அது இ றே ஸ்வரூபம்
அடியேன் – ஆழ்வார் உடைய நீர்மைக்கு தோற்று -அடியேன் -என்கிறார் – தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்னும் நீர்மை இ றே-பெற்ற நன்மை –பெற்ற பகவத் லாபம் – ஆழ்வாருக்கு உரிய அடியேனாய் பெற்ற பேறு இது இறே -ப்ராப்த அப்ராப்த விவேகத்தில் ப்ராவண்யத்தால் வந்த நன்மை அன்று -என்கை-

மாயா! வாமனனே!மது சூதா! நீ அருளாய்
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய்த்
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்
நீயாய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே!–7-8-1-காரியங்களில் வந்தால் மாதா உபகரித்த உபகாரம் அன்று இ றே தமப்பன் உபகரிப்பது -அவன் உபகரிப்பதும் அன்று இ றே பிரஜைகள் உபகரிப்பது -அவர்கள் உபகரிக்குமது அன்று இறே மற்றை பந்துக்கள் உபகரிப்பது –

நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மையாகக் கருதுவர் ஆதாலில்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே-4–அப் புன்மையே ஹேதுவாக -இவ்வளவில் நாம் அல்லது ரஷகர் இல்லை -என்று எனக்கு-சர்வ வித பந்துவுமானவர்-ச பித்ரா ச பரித்யக்தாஸ் ஸூரைச்ச ச மகார்ஷிபி –தரீன் லோகன் சம்பரிக்ரம்யா தமேவ சரணங்கத-என்று-காகத்தோபாதி இவனுக்கும் புறம்பு ஒரு பற்றாசில் இல்லை என்றதே ஹேதுவாக-சர்வ வித ரஷகர் ஆனவர் –-பிரியமே செய்யக் கடவ மாதா செய்யுமதுவும் –-ஹிதமே செய்யக்கடவ பிதா செய்யுமதுவும் – ஸ்வரூப அனுரூபமான அடிமை கொள்ளும் நாயகன்  செய்யுமதுவும் -செய்யுமவர்-தாயாய் தந்தையாய் அறியாதன அறிவித்த அத்தா -என்று பகவத் விஷயத்தில் ஆழ்வார் சொல்லுவது எல்லாம் ஆழ்வார் விஷயத்தில் சொல்லுகிறார் இவர் –

ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயா
ஒத்தாய் எப் பொருட்கும் உயிராய் என்னைப் பெற்ற
அத்தாயாய் தந்தையாய்த் அறியாதன யறிவித்து
அத்தா
நீ செய்தன அடியேன் அறியேனே –2-3-2—என்னைப் பெற்ற அத்தாயாய் –-வளர்த்த தாயை வ்யாவர்த்திக்கிறது –-எனக்கு பிரியமே செய்யக் கடவ தாயாய்-தந்தையாய்த் – நேரே உத்பாதகனாய் கொண்டு ஹிதைஷையாய்-அறியாதன யறிவித்து–சஹி வித்யாஸ் தம் ஜநயதி -என்கிறபடியே ஆச்சார்யனாய்-ஏதத் விரதம் மம –மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்னுமவன் இ றே
அத்தா – ஸ்வாமி-நீ செய்தன – இவ் உபகாரங்களை -உடையவன் ஆகையால் செய்தாய் என்கிறார்
மாதா பிதா பிராதா -இத்யாதிநாராயண -என்கிறார்

8-அவர் -ஆள்கின்றான் ஆழியான் -என்றார் -இவர் என்னையே ஆண்டிடும் தன்மையான் -என்கிறார் –

ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறை உடையம்
மீள்கின்றதில்லை பிறவித் துயர் கடிந்தோம்
வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன்
தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே
–10-4-3-வகுத்த சர்வேஸ்வரன் அடிமை கொள்ளா நின்றான் என்னுதல் –ஆஸிலே வைத்த கையும் தாணுமாய் விரோதியைப் போக்கி அடிமை கொள்ளா நின்றான் என்னுதல் –அசக்தனான தன்னாலே சாத்தியமான அசேதன க்ரியாகலாபங்கள் கொண்டு விரோதியைப் போக்குமவர் அன்றே இவர் –சர்வ சக்தி கையில் திரு வாழி யின் கூர்மையால் போக்குமவர் இறே –-ஆரால் குறை உடையம்-என்னால் வருமதொரு குறையும் இல்லை -யமாதிகளால் வருமவையும் இல்லை – மீள்கின்றதில்லை–இனி மறுவல் இடுகிறது இல்லை –சாதநாந்தரம்-செய்த பின்னையும் – அவன் கை பார்த்து இருக்கும் வேண்டும் படி–அறிவு இல்லாத கர்மங்களின் கூட்டங்களை -கர்மாதி உபாயாந்தரங்கள் -பூண் கட்டா நிற்பர் சிலர்- சாதநாந்தரம்-செய்த பின்னையும் – அவன் கை பார்த்து இருக்கும் வேண்டும் படி–அறிவு இல்லாத கர்மங்களின் கூட்டங்களை -கர்மாதி உபாயாந்தரங்கள் -பூண் கட்டா நிற்பர் சிலர்-கூர் அம்பன் அல்லால் குறை-மற்று இலை துணை -நெஞ்சே -குறை -ரக்ஷணம் -நான் முகன் திருவந்தாதி -8-என்ற அம்பின் கூர்மையையும்-
சுடர் வட்ட வாய் நுதி நேமியீர்-என்று திரு ஆழியில் கூர்மையையும் கொண்டு பெற இருப்பர் சிலர் –
ஆற்றல் இல்லாத தன்னாலே செய்யப் பட்ட கர்மங்களின் கூட்டத்தைப் பற்றிப் பெற இருப்பர் சிலர்-
என்றும் உள்ள ஸ்வரூபத்தை உடைய சர்வஞ்ஞனான பராத்பரனைப் பற்றி பெற இருப்பர் சிலர் –
கர்மங்களின் கூட்டத்தை நெகிழச் சொல்லி-கெடுவாய் என்னை அன்றோ பற்ற அடுப்பது -என்றான் அன்றோ அவன் சரம ஸ்லோகத்தில்

நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மையாகக் கருதுவர் ஆதாலில்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே-4தன்மையான் – அக்நிக்கு ஔஷண்யம் போலேயும் –-ஜலத்துக்கு சைத்யம் போலேயும் – இஸ் ஸ்வபாவாங்களை நிரூபகமாக உடையவர் –-அதாகிறது -இவனுக்கு உபகரித்தோம் -என்று தான் நினைத்தல் இவன் தனக்கு பிரத்யுபகாரத்தில் இழிய வேண்டி இருத்தல் -செய்யாது ஒழிகை-சடகோபன்-என் பக்கல் சாட்யத்தை போக்கினவர் –-கீழ் மூன்று -பாட்டிலும் தென் குருகூர் நம்பி -நம்பி என்று சொன்னவர்-இப் பாட்டிலே சடகோபன் என்றார் இ றே  –ஸ்வ தோஷத்தை போக்கின படியாலேஎன் நம்பி-தாய் செய்வது தகப்பன் செய்ய மாட்டான்-அவன் செய்வது இவள் செய்ய மாட்டாள் ஆச்சார்யன் செய்யுமது இருவரும் செய்ய மாட்டார்கள்-நாயகன் செய்யுமது அடியான் செய்ய மாட்டான்-எல்லார் செய்வதும் செய்ய வல்ல பூர்த்தியை உடையவர் –-என் நம்பியே – என்னுடைய தண்மை யாகிற பாழ்ந்த ஆறு நிரம்பும்படியான பூர்த்தியை உடையவர் என்னும் இத்தனை- இவருக்கு கீழ்ச் சொன்ன த்ர்ஷடாந்தங்கள் சர்வதா சாம்யம் அல்ல-கர்ம ஔபாதிகமாக வந்த சம்பந்தம் ஆகையாலும் பூர்ண ஸ்தலம் ஆகையாலும் –

9-அவர் கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான்-என்கிறார் -இவர் தக்க சீர் சடகோபன் -என்கிறார்

கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக்
கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
வடிவு அமை ஆயிரத்து இப்பத்தினால் சன்மம்
முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே–9-6-11-கம்சன் தான் நினைத்த நினைவை அவன் தன்னோடே போம்படி பண்ணினான் —கடியனாய்க் -தன் பக்கலில் இன்றிக்கே வந்தேறி -என்கை –
பிரான் தன்னைக்-முன்பு உபகாரகன் ஆனவன் கிடீர் நம்மை அழித்தான் —கொண்ட சீற்றம் -5-8-3- என்னக் கடவது அன்றோ – சினத்தினால் தென் இலங்கை கோமானைச் செற்ற மனத்துக்கு இனியான் –உகந்தாரை அழிக்கை இறே பாதகம் ஆவது -விரோதிகளை அழிக்குமது உபகாரம் இறே

மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள்
நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர் சடகோபன் என்னம்பிக்கு ஆட்
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே -9-உபகார ஸ்ம்ருதியாலே தமக்குப் பிறந்த அபிநிவேசத்தை பேசுகிறார் –தக்க சீர் சடகோபன் – சர்வேஸ்வரன் கவிகள் -என்றால் தகுதியான கல்யாண குணங்களை உடைய ஆழ்வார் – அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்றால் சர்வேஸ்வரத்துக்கு போரும்படி இருக்குமா போலே-சர்வேஸ்வரன் கவிகள் -என்றால் போரும்படி யாயிற்று ஆழ்வார் இருக்கும் படி –
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு-ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர் சடகோபன் -என்று தாமே அருளிச் செய்தார் இறே-என் நம்பிக்கு –அதுக்கு மேலே (கீழே அவனுக்கு தக்க குணம் -இதில் தாழ்ந்த என்னை அபகரித்த குணம் அன்றோ -) ஒரு பௌஷ்கல்யம் இ றே இது -என்னை விஷயீ கரிக்கைக்கு தகுதியான சீலாதி குண பௌஷ்கல்யத்தை வுடையவர் ஆனவர்க்கு –


10-அவர் யானே என்தனதே என்று இருந்தேன் -என்றார் -இவர் நம்பினேன் பிறர் நன் பொருள் தன்மையும் -என்கிறார் –

யானே என்னை யறியகிலாதே
யானே என்தனதே என்று இருந்தேன்

யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –2-9-9–தேஹாத்ம அபிமானத்தாலே என்னை அவனுக்கு பிரகாரம் என்று அறிந்திலேன்-ஈஸ்வரோஹம் என்று இருந்தேன்-இவன் நான் என்றால் ஈஸ்வரனுக்கு கிட்ட அரிதாய் இறே இருப்பது-நானும் எனக்கு உரியேன் இன்றிக்கே இருக்க எனக்கு ஒரு உடைமையும் உண்டாக நினைத்து இருந்தேன்-தேகத்தை ஆத்மாவாகவும் -ஈஸ்வர விபூதியை என் உடைமை யாகவும் இந்த விபரீத அஞ்ஞானமே யாய் இருந்தேன்-இப்படி ஸ்வரூபம் நசித்துக் கிடைக்க அனுதாபம் இன்றிக்கே க்ருதக்ருத்யனாய் இருந்தேன்-அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று இருக்கை பிராப்தமாய் இருக்க ஒரு கார்யம் இல்லாதாரைப் போலே இருந்தேன்-

நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையும் முன் எலாம்
செம்பொன் மாட திருக் குருகூர் நம்பிக்கு
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்று –5-பிறர் -என்கிறது சர்வேஸ்வரனை-நன் பொருள் என்கிறது -ஆத்ம வஸ்துவை-பிறர் நன் பொருள்-த்ரிவித ஆத்ம வர்க்கத்துக்கும் அவ்வருகாய் -(அசேதனம் போலே -ஜடம் இல்லை -சேதனம் போலே பரதந்தர்யம் இல்லையே -ஷரம்-பத்த  ஜீவன்  அக்ஷரம் முக்த ஜீவன் -ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து  விலக்ஷணம் -அங்குஷ்ட மாத்ர புருஷ மத்திய ஆத்மனி திஷ்டயே -கட்டை விரல் போலே -உண்ண  கண்ட விரல் இல்லை எண்ண கண்ட விரல் – ) விசஜாதீயமான வைலஷண்யத்தை உடையவன் -ஆகையாலே –பிறர் -என்கிறது –உத்தம புருஷஸ் த்வன்ய-என்னக் கடவது இறே-பொருள் -என்று த்ரவ்யம்-நன் பொருள் -என்று -விலஷணமான ஆத்ம வஸ்து
த்ரவ்யாணி நவ தே விது-என்று த்ரவ்யங்களில் பிரதானமாக ஆத்மவஸ்துவை நிச்சயித்தார்கள் இறே
அத்தை இ றே நான் அபஹரித்தது-நம்புதல் –ஆசைப்படுதல்-பர த்ரவ்யதை ஆசைப்படுகை இறே -அபஹாரம் –வன் கள்வன் -என்று -கள்வன் ஆனேன் என்றும் -ஆழ்வார் அனுசந்திதது இறே இவருக்கு முதல் –-பகவத் சேஷத்து அளவே நில்லாதே -சேஷத்வ காஷ்டையில் நிற்கக் கடவ ஆத்ம வஸ்துவைக் கிடீர் நான் -அபஹரித்தது-(நன் நன் பொருள் அன்றோ இது )-ததீய சேஷமான வன்று இறே இவ் வாத்ம வஸ்து அனன்யார்ஹம் ஆயிற்று ஆவது-அபஹாரத்தில் வந்தால் த்ரவ்யத்தின் உடைய ஸ்லாக்யதைக்கும்-அபிமாநித்தவனுடைய ஸ்லாக்யத்தைக்கும் தக்கபடி பிராயச்சித்தம் கனத்து இருக்கும் இறே –-ப்ராஹ்மண வஸ்துவை அபஹரித்தால் போல் அன்று இறே சண்டாளன் வஸ்துவை அபஹரித்தல்-த்ரவ்யங்களிலும் குரு லகு பாவத்தாலே ப்ரயாசித்த வைஷம்யம் உண்டு இறே விறகு வைக்கோல் களவு கண்டால் போல் அன்று இறே ரத்னம் களவு காண்பது-
ஆத்ம வஸ்து ஸ்ரீ கௌச்துப ஸ்தாநீயமாய்-உடையவன் சர்வேஸ்வரனாய் இறே -இருப்பது-

11-அவர் எமர் கீழ் மேல் எழு பிறப்பும் மா சதிர் இது பெற்று -என்றார் -இவர் இன்று தொட்டு எழுமையும் -என்கிறார் –

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
மாசரிது பெற்று
நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே–2-7-1–கேசவன் தமர் –1-பிரசஸ்த கேசனான நிலையில் தோற்று இருக்குமவர்கள் -என்னுதல் –-2-விரோதி நிரசன சீலதையில் தோற்று இருக்குமவர்கள் என்னுதல்-3-தஸ்மாத் கேசவ நாமவான் -என்கிறபடியே சர்வ நிர்வாஹனான நிலையில் தோற்று இருக்குமவர்கள் என்னுதல்-எமர் -என்று ஆழ்வாருடைய சம்பந்தம் கொண்டாயிற்று அவன் இவர்களை விரும்புகிறது-இத்தால் ஒரு வைஷ்ணவ அபிமானமே வேண்டுவது அவன் விஷயீகரிக்கைக்கு என்றபடி-சர்வேஸ்வரன் உடையார் -என்றாயிற்று -ஆழ்வார் இவர்களை விரும்புகிறது-அவனுடைய அவயவ ஸுந்தர்யத்திலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்-கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்-கீழ் ஏழு படிகளிலும் மேலே ஏழு படிகளிலும் என்னோட்டை சம்பந்தமே ஹேதுவாக கேசவன் தமர்கள் ஆனார்கள்
ஆழ்வார் பரிகரம் என்றாயிற்று அவன் விரும்புவது -கேசவன் தமர் என்றாயிற்று இவர் விரும்புகிறது
மாசரிது பெற்று –கேசவன் தமர் ஆகிற பெரும் சதிரைப் பெற்று என்னுதல் –-மாதவன் என்றதே கொண்டு என்றத்தைச் சொல்லுதல் –-விதி சூழ்ந்ததால் என்று ஆகஸ்மிக பகவத் கிருபையை சொல்லுதல்—தம் பெற்ற பேற்றை தம்மோடு சம்பந்தம் உடையாரும் பெறும்படியான பேற்றை பெற்று என்னுதல்–மா சதிர் -தம் தலையால் வந்ததாகில் இறே சாவதியாய் இருப்பது-இது பெற்று
காணக் காண அவன் தலையால் சுமக்கிற படி
வாய்க்கின்றவா –ஊற்று மாறாதே மேன்மேல் என பெருகி வருகிறபடி —ஏழ் படி கால் என்றது தான் ஓர் அளவு இல்லை –இன்று நம் அளவும் வரச் செல்லுகிறது இறே –

இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
குன்ற மாடத்  திருக் குருகூர் நம்பி
என்றும் என்னை இகழ்விலன்  காண்மினே-6–விஷயீ கரித்த இன்று முதலாக -பகவத் சமாஸ்ரயணம் போலே ஆஸ்ரயிப்பதொரு காலமும்-பலிப்பதொரு காலமாயோ ஆழ்வார் உடைய விஷயீகாரம் இருப்பது –விஷயீகார திவசமே தொடங்கி அநுபவ காலமாய் அன்றோ  இருப்பது-எழுமையும் –
ஏழு ஜன்மம் என்று உப லஷணம் -மேலுள்ள காலம் எல்லாம் -என்றபடி –எம்பிரான் –பிரான் பெரு நிலம் கீண்டவன் -என்று பகவத் விஷயத்தில் ஆழ்வார் பேசும்படியை உபகார ஸ்ம்ருதியாலே ஆழ்வார் விஷயத்தில் -பேசுகிறார்-(அருளின பின்பு தான் பிரான் -இங்கே பிரான் முன்பே சொல்லி –உபகார ஸ்ம்ருதி யால் அருளி -உயர்வற –நடுவில் மயர்வற அருளியதை சொல்லி அயர்வரும் அமரர்கள் அதிபதி அருளியது போலே-சதிர்த்தேன் -சொன்னதும் உபகார ஸ்ம்ருதியால் பிரான் முன்பே இங்கே  )
எம்பிரான் –என் ஸ்வாமி-நின்று –ஒருபடிப்பட நின்று-உபகார ஸ்ம்ருதியாலே பகவத் லாபத்தளவும் ஆழ்வாரை அநுபவித்து-பின்பு அது கிட்டினவாறே-அதிலே தோள் மாறும் படி அன்றிக்கே இருக்கை  –

12-அவர் -என்னால் தன்னை இன்கவி பாடிய ஈசன் -என்றார் -இவர் நின்று தன் புகழ் ஏத்த அருளினான் -என்கிறார்

என்றைக்கும் என்னை உய்யக்கொண்டு போகிய
அன்றைக்கு அன்று என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
இன் தமிழ் பாடிய ஈசனை ஆதியாய்
நின்ற என் சோதியை
என் சொல்லி நிற்பனோ?–7-9-1-கழிகிற காலம் எல்லாம் நாள் தோறும் நாள் தோறும் விஷயீ கரித்து –-என்னைத் தன்னாக்கி -கவி பாடுகைக்கு அனுரூபமான ஞான சக்தி யாதிகள் இல்லாத என்னை -தன்னோபாதி ஞான சக்தி யாதிகளை யுடையேனாம் படி பண்ணி-என்னுதல் -என்னைத் தன்னாக்கி-தனக்கு ஆளாம் படி பண்ணி என்னுதல் –-என்னால் தன்னை-தன்னாலே தத்த சக்தகதனான என்னாலே –சுருதி யாதிகளுக்கும் பேச நிலம் அன்றிக்கே இருக்கிற தன்னை -யதோ வாசோ நிவர்த்தந்தே –யஸ்யாமதம் தஸ்ய மதம் -அவ்விஞ்ஞாதம் விஜயானதாம் –
இன் தமிழ் பாடிய-அர்த்தம் கிடக்க -சப்தம் தானே ரசித்து சர்வாதிகாரமாக தமிழிலே இசையை வைத்து தானே பாடினவனை-ஈசனை -இப்படி வாய்க்கைக்கு அடி சர்வ சக்தி யாகையாலே -அவன் பாடினான் ஆகில் நீர் செய்தது என் என்ன-ஆதியாய்-நின்ற-எனக்கு அடியாய் நின்று பாடுவித்தான்-என் சோதியை -இவருக்கு கவி பாடுகைக்கு உள்ளுறை கொடுத்தது வடிவு அழகாயிற்று -எனக்கு வடிவு அழகை ஆவிஷ்கரிக்க-அத்தைக் கண்டு கூப்பிட்டது கவி யாயிற்று -பிடாத்தை விழ விட்டு வடிவு அழகை காட்டினான் -திருத் திரை எடுத்தால் போல் கூப்பிட்டேன் -அது கவி யாயிற்று-

13-அவர் ஒட்டுமோ இனி உன்னை நெகிழ்க்கவே -என்றார் -இவர் என்றும் என்னை இகழ்விலன் காண்மினே -என்கிறார் –

யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன் தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
ஊனொட்டி நின்று என்னுயிரில் கலந்து இயல் வானொட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே–1-7-7–தன்னுடைய சீலாதி குணங்களாலும் வடிவு அழகாலும் என்னை அறியாமே அகப்படுத்தி மனஸ் ஸூ பிடிபட்ட பின்பு செய்வது என் என்னில்-ஊனொட்டி நின்று என்னுயிரில் கலந்து-அபிமத விஷயத்தில் அழுக்கு உகப்பாரைப் போலே எனக்கு த்யாஜ்யமான சரீரத்தை தனக்கு போக்யமாகப் பற்றி நின்று
விலக்காத தொரு சமயம் பெற்றவாறே என் ஆத்மாவோடு வந்து சம்ச்லேஷித்தான்
இயல் வான்-வியாமோஹத்தை ஸ்வ பாவமாக உடையவன் -என்னுதல்-இப்படி உத்ஸஹிக்குமவன் என்னுதல்-ஓட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே–-முன்பு த்வேஷம் பண்ணித் திரிந்த நாள் என்னை என் கை வசத்தே விட்டுத் திரிந்தான்-இப்போது இப்படி நிர்ஹேதுகமாக விஷயீ கரித்தவன்-பல தசையில் நான் நெகிழ்ந்து போவேன் என்றால் அவன் சம்வத்திக்குமோ

இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
குன்ற மாடத்  திருக் குருகூர் நம்பி
என்றும் என்னை இகழ்விலன்  காண்மினே-6–நின்று –ஒருபடிப்பட நின்று-உபகார ஸ்ம்ருதியாலே பகவத் லாபத்தளவும் ஆழ்வாரை அநுபவித்து பின்பு அது கிட்டினவாறே அதிலே தோள் மாறும் படி அன்றிக்கே இருக்கை  –தன்  புகழ் ஏத்த –ஆழ்வார் உடைய அநுபவத்துக்கு உள்ளே பகவத் அநுபவம் ஆம்படியாய் அன்றோ-ஆழ்வார் உடைய பெருமை இருப்பது -(அவன் புகழ் -சொல்லாமல் தன் புகழ் -எம்பெருமானையும் சேர்த்து )-அருளினான் –நிர்ஹேதுகமாக கிருபை பண்ணினான் –-மயர்வற மதி நலம் அருளினன் -என்று ஆழ்வார் பகவத் விஷயத்தில் சொன்ன -வார்த்தையை-ஆழ்வார் திருவடிகளிலே சொல்லுகிறார் இறே இவர் -(என்னை அருளினான் சொல்ல வில்லை -தனக்கு அருளியது அனைவருக்கும் -அருளும் முன்பு வஸ்துவாகவே நினையாதவர்கள் அன்றோ )-என்றும் என்னை இகழ்விலன் –என்றும் இகழ்விலன் –என்னை இகழ்விலன் –-யாவதாத்மபாவி புறம்பே ஒரு விஷயத்தில் போக விட்டுக் கொடார் .-என் தண்மை பாராதே விஷயீ கரித்தவர் -என்னை விஷயாந்தரங்களிலே போக ஓட்டுவாரோ -தம் திருவடிகள் ஒழிய புறம்பு புகல் அற்று இருக்கிற என்னை புறம்பே போக -என்றாலும் போகலாம்படி என் கையிலே என்னைக் காட்டித் தருவரோ –
காண்மினோ-இது ப்ரத்யஷிக்கலாவது ஒன்றாய் இருக்க-ஆழ்வார் பெருமை நான் சொல்ல கேட்க மிகை அன்றோ –

14-அவர் மயர்வற மதிநலம் அருளினன் -என்றார் -இவர் எண்திசையும் அறிய இயம்புகேன் ஒண் தமிழ் சடகோபன் அருளையே -என்கிறார்

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே 
–1-1-1-மயர்வற-மயர்வு -அஜ்ஞானம் -இத்தால் ஜ்ஞான உதய -அந்யதா ஜ்ஞான -விபரீத ஜ்ஞான ரூபமான அஜ்ஞானத்தைச் சொல்லுகிறது-அற -சவாசனமாகப் போகும்படி–ஞாநாநுதயம், அந்யதா ஞானம், விபரீத ஞானம் என்கிற இவை வாசனையோடே போகும்படியாக.-ஞாநாநுதயமாவது,-தேஹாத்ம அபிமானம் ( தேகத்தையே ஆத்துமாவாக நினைத்தல்.)
அந்யதா ஞானமாவது -தேவதாந்த்ர சேஷம் என்று இருக்கை (பிற தெய்வங்கட்குத் தன்னை அடிமையாக நினைத்தல்.)-விபரீத ஞானமாவது,-ஸ்வ தந்திரனாயும் ஸ்வ போக்யமாயும் நினைத்து இருக்கிற கேவலனுனைய ஞானம் (தனக்குத்தானே உரியவனாகவும் ஆத்துமாவோடு அனுபவிக்கின்ற இன்பமே இன்பமாகவும் நினைக்கும் கேவலனுடைய ஞானம்,) என்று ஸ்ரீ நம்பிள்ளை அருளிச் செய்வார் –தம் திருவாயாலே ‘மயர்வற’ என்று சொல்லலாம்படி காணும் அவன் தான் இவர்க்கு அஞ்ஞானத்தை வாசனையோடே போக்கினபடி.மதி நலம்-மதி என்று ஜ்ஞானம்-நலம் -என்று பக்தி -பக்தி ரூபாபன்ன ஜ்ஞானம் என்றபடி-மதி நலம் –-ஞான பத்திகள் இரண்டனையுந் தந்தான் என்று நிர்வகிப்பாரும் உண்டு
அன்றிக்கே (இனி, நலம் மதி என முன் பின்னாகக் கூட்டி) ‘நலமான மதி’ யைத் தந்தான் என்றதாய் –
‘முளைக்கும் போதே வயிரம் பற்றி முளைக்கும் பொருள்களைப் போலே -பக்தி ரூபாபன்ன ஞானத்தை
(பத்தியின் உருவத்தை அடைந்த ஞானத்தைத் )தந்தான் என்கிறார்,’ என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்யும் படி – கர்மா ஞான அநு க்ருஹீதையான பக்தி ஸ்தானத்தில் பகவத் பிரசாதமாய்-அனந்தரம் கைங்கர்யத்துக்கு பூர்வ க்ஷண வர்த்தியான பத்தி யாயிற்று இவரது . ஸ்ரீ ஆழ்வார் பிரபந்நரோ, பத்தி நிஷ்டரோ?’ என்று ஸ்ரீ எம்பாரைச் சிலர் கேட்க,-ஸ்ரீ ஆழ்வார் பிரபந்நர்; பத்தி இவர்க்கு தேக யாத்ரா சேஷம்,’ என்று அருளிச்செய்தார். என் போலே என்னில் , ‘நாமும் எல்லாம் பிரபந்நர்களாய் இருக்கச் செய்தே ஆண்டு ஆறு மாசத்துக்கு ஜீவனம் தேடுகிறாப் போலே – உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே’ இறே இவர்க்கு.அருளினன்-இத் தலையில் நன்மை தீமை பாராதே நிர்ஹேதுக கிருபையால் தந்து அருளினான்-முலைக் கடுப்பாலே தரையிலே பீச்சுமா போலே –எனக்குத் தந்து அருளினான் -என்னாது ஒழிந்தது -பகவத் விஷயீ காரத்துக்கு முன்பு தம்மை அசத் கல்பராக நினைத்து இருக்கையாலே-எவன்– இப்படி உபகாரகனான ஸ்ருதி பிரசித்தி ஆனவன்-அவன் அதுக்கு மேலே ஒரு நன்மை சொல்லுகைக்காக அவன் என்று உத்தேசிக்கிறது –

கண்டு கொண்டு என்னை காரி மாறப் பிரான்
பண்டை வல்வினை பாற்றி யருளினான்
எண் திசையும் அறிய இயம்புகேன்
ஒண் தமிழ் சடகோபன் அருளையே-7–விசேஷஞ்ஞர் உடன் அவிசேஷஞ்ஞர் உடன் வாசியற-ருசி உடையார் எல்லாரும் அறியும் படி சொல்லுகிறேன் –தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்னும் ஆழ்வாரோட்டை வாசநை யாலே சொல்லுகிறார்-அவர் -பகவத் விஷயத்தில் ருசி உடையார் எல்லாரும் வாரும் கோள் -என்கிறார்-இவரும் ஆழ்வார் பக்கல் ருசி உடையார் எல்லாரும் வாரும் கோள் -என்கிறார்
ஆழ்வார் பக்கல் பாவ பந்தத்தாலே-ஒண் தமிழ் சடகோபன் அருளையே- மயர்வற மதிநலம் அருளினவனுடைய அருள் போலே அல்ல ஆழ்வார் உடைய அருள் – அவ்வருளுக்கும் அயலான அளவிலே பண்ணி யருளின அருள் இறே-ஒண் தமிழ் -ஒள்ளிய தமிழ் -அழகிய தமிழ் -என்றபடி –
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும்படி திருவாய்மொழி பாடின அருளுக்கு மேலே இறே என்னை விஷயீ கரித்த அருள்

15-அவர் அருளுடையவன் -என்றார் -இவர் -அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே -என்கிறார்

பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே
–2-10-11-கேட்டார்க்குத் தம்மிலும் தெளிவைப் பிறக்கும் படி அருளிச் செய்தது – தம்முடைய ஞானத்துக்கு அடி ஈஸ்வரன் -இவர்களுக்குத் தாம் அடியாக வந்தது –
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே – அருளே நிரூபகமான அழகர் திருவடிகளிலே சம்சாரத்தை முடித்துச் சேர்க்கும் –

அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
வருளினான் அவ் வருமறையின் பொருள்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே-8-அருள் கொண்டாடும் அடியவர் – இவ் வாழ்வார் தம்மைப் போலே இருக்குமவர்கள் –-அதுவும் அவனது இன்னருள் -என்றும் –அருள் பெறுவார் அடியார் தம் அடியன் -என்று இருக்கும் இவர் தம்மைப் போலே – ஆனைக்கு அன்று அருளை ஈந்த -என்றும் –
நின்னோடும் ஒக்க வழி பட வருளினாய் –என்றும் – அருள் புரிந்த சிந்தை -என்றும் –நின் அருளே புரிந்து இருந்தேன் –என்றும் அருளாது ஒழியுமே -என்றும் -(சீறி அருளாதே -சீற்றத்தையும் அருள் -கொண்ட சீற்றம் ஓன்று உளது -என்றும் கொண்டாடுவார்கள் அன்றோ )இப்படிகளால் அவன் அருளைக் கொண்டாடும் அடியவர் –-இப்படியே பகவத் பிரசாதத்தையே கொண்டாடி போருமவர்கள் –
பகவத் பிரசாத ஹேதுவாக -ஸ்வகதமான கர்ம ஜ்ஞான பக்திகளை உபாயமாக
ஆதரிக்கும் அவர்கள் அன்றிக்கே -கேவல பகவத் ப்ரசாதமே உஜ்ஜீவன ஹேது -என்று இருக்கும் அவர்கள் -தம் தாம் பக்கல் உள்ள ஆனுகூல்யங்களை பிரசாத பலமாக நினைத்து இருக்கும்-அது ஒழிய -பிரசாதமாக நினைத்து இராதவர்கள் – இவர் இப்படி நினைத்து இருப்பது மற்றைய ஆழ்வார்களை இறே – ஆழியான் அருளே -என்றும் – நின் அருளே புரிந்திருந்தேன் -என்றும் இறே அவர்கள் பாசுரங்கள் -(கிருபையால் பக்தியை பெற்றோம் என்பார்கள் –சரணாகதி கிருபா ஜனகமா -கிருபா ஜன்யமா –சரணாகதி கிருபையை தூண்டாது –கிருபா ஜனகம்  இல்லை ஜன்யம் தானே -கிருபைக்கு பலம் தான் பக்தி -சரணம் நாக்கு பிறந்ததே தேவரீர் பிரசாதம் கூரத் தாழ்வான்-வைஷம்யம் இல்லை -அனைவரையும் –வரவாறு ஓன்று இல்லை -வெறிதே அருள் செய்வார் செய்வார்க்கு உகந்தே  -பண்ணுவதற்காக கொடுத்தால் சாதிய உபாயம் -அவனே கொடுப்பதால் சாத்தியம் நிர்ஹேதுகம் –உபாயம் எதிர் பார்க்காமல் -அதிகாரி ஸ்வரூபம் -அடைய ஆசை இச்சை வேண்டும் -ஆசை தகுதி -என்றவாறு -புருஷ சாபேஷமாய் புருஷகார சாபேஷமாய் இருக்கும் -)மயர்வற மதிநலம் அருளினான் -என்னும்படியான அருள் அல்ல –அது தன்னையும் விளாக் குலை கொண்டு இருக்கும் அருள் இ றே -ஆழ்வார் அருள் – ஈஸ்வரன் கை விட்ட ஆத்மாக்களிலும் -அவர்களுடைய துர்கதியைக் கண்டு திருத்த ஒருப்பட்ட படியாலே இவர் அருள் ப்ரத்யஷம் அன்றோ -என்கை–இவ் உலகினில் மிக்கதே –சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரயதையும் கபளீ கரித்திருக்கை –அதனில் பெரிய என் அவா -என்று பகவத் விஷயத்தில் தமக்கு உண்டான அபிநிவேசத்தளவும் போருமாயிற்று- என்னளவில் -கிருபையும்-(நீசனேன் நிறை ஒன்றும் இல்லா என்னளவும் என்றவாறு )

16-அவர் -பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -என்றார் -இவர் -நிற்க்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்-என்கிறார் –

பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
காரேழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகு உண்டும்
ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே–10-8-2-திருப் பேரை தனக்கு கோயிலாகப் பேற்று அங்கே நிரந்தர வாசம் பண்ணுகிற சர்வேஸ்வரன்-நீ போவுதியோ இருப்புதியோ -என்று கேட்பாரும் இன்றிக்கே-உதாசீனராக – இருக்கச் செய்தே—இன்று வந்து-பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்-தன்னை ஒருவர் கேட்டார் இன்றிக்கே இருக்காது தானே -இனி ஒரு நாளும் போகேன் -என்று சொல்லி பிராட்டி தன் பக்கலிலே சொல்லுமத்தை தான் என் பக்கலிலே சொல்லா நின்றான் –நான் போகேன் போகேன் -என்று சூழ்த்துக் கொடா நின்றான் ஆயிற்று– என் நெஞ்சு –நிறையப் புகுந்தான்–இவனுடைய அபி நிவேசத்தை ஆதரியாத நெஞ்சானது பூர்ணமாம் படி –முன்பு நினைவு இன்றிக்கே இருக்க இன்று வந்து புகுந்தான் -முன்பு நினைவு உண்டாவது தன் பக்கல் முதல் உண்டாகில் இறே –தான் சர்வேஸ்வரனாய் வைத்து-என்னோடு கலக்கப் பெறாமையாலே குறைவாளனானவன்- இன்று வந்து-நிர்ஹேதுகமாக என் மனத்தின் கண் புகுந்து-நிறைவாளன் ஆனான் -என்கிறார்

மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள்
நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர் சடகோபன் என்னம்பிக்கு ஆட்
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே -9-துர்க்ரஹமான இந்த ரஹஸ்யார்த்தத்தை கேட்பார்க்கு பிரதிபத்தி விஷயமாம் படி –பாடி –பரமனைப் பயிலும் திரு வுடையார் எவரேலும் -என்றும் – எம்மை யாளும் பரமர் -என்றும்-அருளிச் செய்தார் இறே-என் நெஞ்சுள் நிறுத்தினான் – பகவத் சேஷத்வத்துக்கும் கூட மேட்டு மடையான என் நெஞ்சிலே இத்தை ஸ்திரமாக்கினார் – கல்லைத் துளைத்து அதிலே நீரை நிறுத்துவாரைப் போலே நிர் விவரமான என்  நெஞ்சுக்கும் இதுவே விஷயமாம் படி பண்ணினார் இது இறே –என் தண்மையைப் பாராதே என் திறத்தே பண்ணின உபகாரம் -(ஆழ்வார் ஏவ கைங்கர்யம் இவருக்கு -ஆழ்வாருக்கு அர்ச்சை பெருமாள்  ஏவ மாட்டாரே  -ஏவிப் பணி கொள்ளப் படுவது அங்கே தானே )

17-அவர் -வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் -என்றார் -இவர் ஆட்ப்புக்க காதல் அடிமைப் பயன் -என்கிறார் –

ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1-ஒழிவு இல் காலம்எல்லாம்-முடிவு இல்லாத காலம் எல்லாம்-உடனாய் -சர்வ தேசத்திலும் -காட்டிலும் தொடர்ந்து அடிமை செய்த இளைய பெருமாளை போலே-மன்னி-சர்வ அவஸ்தையிலும் —மன்னி – சர்வேஸ்வரனும் பிராட்டியுமாய்த் திரையை வளைத்துக் கொண்டிருந்தாலும்,-படிக்கம் குத்துவிளக்குப் போலே அவ்வளவிலும் நின்று அந்தரங்கமான வ்ருத்திகளை – அடிமைகளைச் செய்ய வேண்டும்.-இதனால்,-சர்வ அவஸ்தைகளையும் எல்லா நிலைகளையும் நினைக்கிறது.உலகத்தோடு ஏகாந்தத்தோடு வாசி அற வழு இலா அடிமை -சர்வ சேஷ வ்ருத்தியும் செய்ய வேண்டும்-சாஸ்த்ரங்களால் இதுவே புருஷார்த்தம் என்று அறிக்கை போராது-அனுஷ்டான பர்யந்தமாக வேணும் – நாம்-திரு உள்ளத்தைக் கூட்டிக் கொள்ளுகிறார் ஆதல்-கேசவன் தமருக்கு பின்பு தனியர் அல்லாமை யாலே திரு உள்ளத்தோடு ஒக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கூட்டிக் கொண்டு சொல்லுகிறார் ஆதல்-வழுவிலா அடிமை செய்யவேண்டும் –-அடிமையில் ஒன்றும் ஒருவர்க்கும் கூறு கொடுக்க வொண்ணாதாயிற்று.-எல்லா அடிமைகளும் நானே செய்யவேண்டும். என்றது,-‘இளைய பெருமாள் பிரியாமல் காட்டிலேயும் கூடப்போந்து செய்த அடிமைகளும் செய்ய வேணும்;-ஸ்ரீபரதாழ்வான் படை வீட்டிலே பிரிந்திருந்து செய்த அடிமைகளும் பிரியாதேயிருந்து செய்யவேணும்,’ என்றபடி.-ஓரடிமை குறையிலும் இவர்க்கு உண்டது உருக்காட்டாது; ஆதலின், ‘வழுவிலா அடிமை’ என்கிறார்.-அடிமை செய்யக் கோலுகிற இவருடைய பாரிப்பேயன்றி, அடிமை கொள்ளக் கோலுகிறவனுடைய பாரிப்பு இருக்கிறபடி சொல்லுகிறது மேல்:-இருந்த விடத்திலே யிருந்து மநோரதிக்கிறார் இத்தனையன்றோ இவர்? அவன் தனக்குக் கலவிருக்கையான கலங்காப் பெருநகரத்தை விட்டு இவ்வளவும் வர வந்து திருமலையிலே நின்று, தன் அநுஷ்டானத்தாலே தெரிவிக்கிறானன்றோ தன் பாரிப்பை?-ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும்’ என்னுமிதனால்,-சதுர்த்தியில் -நான்காம் வேற்றுமையின் பிரார்த்தனையைச் சொல்லுகிறது;

மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள்
நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர் சடகோபன் என்னம்பிக்கு ஆட்
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே -9-என் நம்பிக்கு –அதுக்கு மேலே (கீழே அவனுக்கு தக்க குணம் -இதில் தாழ்ந்த என்னை அபகரித்த குணம் அன்றோ -) ஒரு பௌஷ்கல்யம் இ றே இது -என்னை விஷயீ கரிக்கைக்கு தகுதியான சீலாதி குண பௌஷ்கல்யத்தை வுடையவர் ஆனவர்க்கு –ஆட் புக்க காதல் –
அனந்யார்ஹ சேஷமாக்கின ருசி-(ஆள் புகப் பண்ணின காதல் -கைங்கர்யத்தில் மூட்டின காதல் )அடிமைப் பயன் அன்றே –இந்த ருசி யன்றோ அப்போதே தாஸ்யமான பிரயோஜனத்தோடே வ்யாப்தமாய் இருப்பது -பகவத் விஷயத்தில் ருசி அடியாக பிறந்த தாஸ்யம் -சரீர விச்லேஷம் பிறந்தால்
அர்ச்சிராதி மார்க்கத்தாலே -ஒரு தேச விசேஷத்தில் சென்றால் பெறக் கடவதாய் இறே இருப்பது –
அங்கன் அன்றிக்கே-ஆழ்வார் பக்கல் பிறந்த ருசி -இச் சரீரத்தோடே இங்கே யாழ்வார் திருவடிகளிலே எல்லா அடிமையும் செய்யலாம்படி பண்ணும் –துயர் அறு சுடர் அடி தொழுது எழு -என்று முதலிலே அபிநிவேசித்த ஆழ்வாருக்கு-முனியே நான்முகனுக்கு அவ்வருகு இ றே பேறாயிற்று-இவ் விஷயத்தில் ருசி பிறந்தால் அத்தனை விளம்பியாது என்கிறது –அன்றே -என்றது –ஆம் என்றுமாம் –

18-அவர் -ஆராத காதல் -என்றார் -இவர் -ஆட்ப்புக்க காதல் -என்கிறார்

சேராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே –2-1-11-லோகத்தில் சகல பதார்த்தங்களும் தம்மைப் போலே அவனைப் பிரிந்து நோவு படுகின்றனவாகக் கொண்டு பிரமிக்கும் படியான நிரவதிக பக்தியை உடையவர்-நிரூபக தர்மம் இவருக்கு காதல் ஆயிற்று-தம் படி சொல்லினும் தாமே சொல்லும் அத்தனை-ஆராத காதல் –-இத்திருவாய் மொழியில் சொல்லப்பட்ட பொருள்; கண்ணால் காணப்பட்ட பொருள்கள் எல்லாம் பகவானைப் பெறாத காரணத்தாலே தம்மைப் போலே நோவு படுகின்றனவாகக் கொண்டு,
அவற்றுக்குமாகத் தாம் நோவுபடும்படியான அபிநிவேசமாதலின் அதனைத் தெரிவிப்பதற்கு ‘ஆராத காதல்’ என்கிறார்.-காதல் குருகூர்ச் சடகோபன் –-காதலைக் கொண்டே இவரை நிரூபிக்க வேண்டி இருத்தலின், ‘காதல் சடகோபன்’ என்கிறார்.-‘இது, தற்புகழ்ச்சி அன்றோ?’ எனின்,  தம் படி சொல்லும் போதும் தாமே சொல்ல வேண்டுமே. -(அவரது பக்தியின் ஸ்வ பாவம் அவருக்கே தெரியுமது ஒழிய பிறருக்குத் தெரியாது இறே – இவருடைய ஆகாரங்கள் வேறே ஓர் இடத்திலே காணாமையாலே -)

19-அவர் -பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய் -என்கிறார் -இவர் -பயனன் றாகிலும் பாங்கலராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்-என்கிறார் –

கருளப் புட்கொடி சக்கரப் படை வானநாட என் கார் முகில் வண்ணா
பொருள் அல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்
தெருள் கொள் நான் மறை வல்லவர் பலர் வாழ் சிரீவர மங்கல நகர்க்கு
அருள் செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே –5-7-3-ஓர் அறிவு இன்றிக்கே இருக்கிற என்னை -உன் வாசியை அறிவித்து ஒரு வஸ்துவாக்கி -அசன்னேவ -என்கிற என்னை சந்தமென்னும் என்று உஜ்ஜீவிக்கும் படி பண்ணினாய்-பெரு மக்கள் உள்ளவர் -என்கிற நித்ய சித்தர் செய்யக் கடவ கைங்கர்யத்தை என்னைக் கொண்டாய் -உண்டாக்கின அளவே அன்றிக்கே-ஜீவனமும் இட்டிலையோ -கைங்கர்யமே ஜீவனம் –கார் முகில் என்றது பலித்த படி –-மயர்வற மதி நலம் அருள பெற்றவர் இப்படி சொல்லுகையாலே ஸ்வ நிகர்ஷம் சொல்லுகை ஞான கார்யம் –ஈஸ்வரோஹம் என்று இருக்கை அஞ்ஞான கார்யம்

பயனன் றாகிலும்  பாங்கலராகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கன்பையே-10-பயனன் றாகிலும் –நாட்டிலே ஒருவனை -உபகரிப்பது ஒரு பிரயோஜனத்தைப் பற்றி இறே-அங்கன் ஒரு பிரயோஜனம் இல்லாது இருக்கச் செய்தேயும் –-பாங்கலராகிலும் –பிரயோஜனம் இல்லாவிட்டால் -சொல்லுகிறபோது ஹிதம் கேட்க்கைக்கு பங்காய் இருக்கலாம் இறே-அங்கன் பாங்கு இன்றிக்கே இருந்தார்களே -ஆகிலும்-இப்படி இருக்குமவர்களுக்கு ஹிதம் சொல்லுகைக்கு ஹேது என் என்னில் –இவர்கள் அநர்த்தம் பொறுக்க மாட்டாமை இறே இப்படி உபதேசிப்பார் உண்டோ -என்னில் – ராவணனுடைய துர்கதியைக் கண்டு மித்ர மௌபயிகங்கர்த்தும்-என்று-அவனுக்கு ஹிதம் சொன்னாள் இறே பிராட்டி-(தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும்  இவருக்கும் இவர் அடி பணிந்தார்க்கும் -இதில் சீதை மட்டும் காட்டி )-ஒருவன் தலைக் கடையையும் புழைக் கடையையும் அடைத்துக் கொண்டு-அகத்துக்குளே கிடக்க அகம் நெருப்பு பட்டு வேகா நின்றால் கண்டு நின்றாரவிக்கும் போது-தங்களுக்கு ஒரு பிரயோஜனத்தைப் பார்த்தல் -உள்ளே கிடந்தவன் அபேஷித்ததுக்காக-வரதல் அன்றி இறே அவிப்பது -இப்படி யாயிற்று ஆழ்வார் படியும்-செயல் நன்றாகத் –-தனக்கு ஒரு பிரயோஜனம் இல்லை யானாலும்-எதிர்தலை பாங்கின்றியே  ஒழிந்தால்-அவன் உஜ்ஜீவிக்கும்படி என் என்னில் –-தன்னுடைய செயலாலே எல்லாம் நன்றாம்படி பண்ணி –இவன் செயல் தான் நன்றாம்படி –என்னவுமாம்-திருத்திப் பணி கொள்வான் –
தீர்ந்த வடியவர் தம்மைத் திருத்தி பணி கொள்ள வல்ல -(-3-5-)என்று-ப்ராப்யமும் ப்ராபகமும் தானே -என்று அத்யவசித்து இருக்குமவர்கள் உடைய-விரோதியைப் போக்கி அடிமை கொள்ளுமவன் என்றது இறே சர்வேஸ்வரனை –அங்கன் இன்றிக்கே-இவை ஒன்றும் இன்றிக்கே -இருக்குமவர்களையும் திருத்திப் பணி கொள்ளுமவர் இறே ஆழ்வார் –பணி கொள்வான் –குருகூர் நம்பி -என்று அந்வயம்-(கொள்வான் -கொள்ளுகைக்காக -)

20-அவர் கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -என்றார் -இவர் தென் குருகூர் நம்பிக்கு அன்பனாய் -என்கிறார் –

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7-பிராட்டி பக்கல் ஸ்நேஹ அதிசயத்தாலே -அந்த ஸ்நேஹமே ஹேதுவாக அவள் பரிக்ரஹமான என் பக்கலிலே அதி பிரவணன் ஆனவனே -ரிஷிகளை ரக்ஷித்து அன்றோ பிராட்டியால் ஆலிங்கனம் பெற்றார் பெருமாள்–சரம தசையில் இவர் அருளிச் செய்த வார்த்தை ரகசியத்தின் படி இருந்தபடி கண்டாயே என்று சீயரைக் குறித்து பட்டர் அருளிச் செய்தார் –இப்பாட்டினை-நம்முடையார் த்வயத்தின் அர்த்தத்தோடு அனுசந்திப்பார்கள் -என்பது -என்று ஜீயருக்கு அருளிச் செய்தார் –-திரு மால் என்னை ஆளும் மால் -10-7-5-என்னும்படியே–தம்முடைய அன்புக்கு அடி சொல்லுகிறார் –அந்தப்புரத்தைச் சார்ந்தவன் அன்றோ –என் அன்புக்கு அடி இல்லையோ –-திருவுக்கு பரிகரமான என்னிடமும் மால் -மால் நடுவில் -திரு என்னை இரண்டு பக்கமும் – திரு மால் இடம் பேசி இருவருமாக என்னை ஆள்வார்கள் -கைங்கர்யம் கொள்ளுவார்கள் -என்றபடி –பிராதி கூல்யத்தை கனக்கப் பண்ணினார் பக்கலிலும் நாலடி வர நின்றதுவே ஹேதுவாக ரக்ஷகனாம் ஈஸ்வரன் என்னும் இடம் காக விபீஷணாதிகள் பக்கல் கண்டது இறே-க்ருபயா பர்யபாலயாத் — என்றும் நத்யஜேயம் என்றும் அவ்வளவு அன்றிக்கே தனி இருப்பில் தர்ஜன பர்ச நாதிகளாலே நலிந்த ராக்ஷஸிகள் பக்கல் திருவடி எதிர்க்க -க குப்யேத்-கார்யம் க் ருணம் ஆர்யேனே நகச்சின் நபராத்யதி -என்னும் நீர்மை இறே பிராட்டி நீர்மை –ஸ்ரீ பூமிப் பிராட்டியை பெறுகைக்கு செய்த செயலையும்-பிராட்டியை பெறுகைக்கு செய்த செயலையும்-என்னை பெறுகைக்கு செய்து- என்னைக் கிட்டப் பெற்ற பின்பு-உன்னைப் போக விடுவேனோ- நீ செய்த செயலின் பலத்தால் சேர்ந்த நான்-கைப்பட்ட செல்வத்தை விடத் தக்கவனோ-

அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெலாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -11–பகவத் விஷயத் தளவும் அன்றிக்கே -ததீயர் அளவும் அன்றிக்கே-ஆசார்ய விஷயத்திலே சக்தராய் – தனக்கு புருஷார்த்தம் வேண்டி இருக்கில் பகவத் விஷயத்தை பற்ற -அமையும்-அங்கன் தான் உகந்தது அன்றிக்கே -ஈஸ்வரன் உகப்பே புருஷார்த்தம் -என்று இருக்கில் பாகவதர்களைப் பற்ற அமையும் –ஜ்ஞா நீத்வாத்மைவ மே மதம் என்றும் மம ப்ராணா ஹி பாண்டவா -என்றும் பாண்டவர்களை தனக்கு தாரகராக இறே நினைத்து இருப்பது –ஈச்வரனோடு ஸ்ரீ வைஷ்ணவர்களோடு வாசியற எல்லாருடைய உகப்பும் புருஷார்த்தம் என்று இருக்கில்-ஆச்சார்யனைப் பற்ற அடுக்கும்-ஆசார்ய வான் -என்று ஆயிற்று ஸ்ரீ வைஷ்ணவர்கள் உகப்பது-பிரதமத்திலே -1-ஆசார்யன் தனக்கு அஜ்ஞாத ஜ்ஞாபந முகத்தாலே-ஸ்வரூப ஜ்ஞாநத்தைப் பிறப்பித்து-2-பகவத் சமாஸ்ரயண வேளையிலே புருஷகார -பூதனாய்–3-தன்னுடைய அனுஷ்டாநத்தாலே இவனை நல் வழியே கொண்டு போய்-4-ப்ராப்தி தசையிலும் சாத்ய வ்ருத்தியை பண்ணிக் கொடுக்கக் -கடவனாய் இப்படி பஹூ முகத்தாலே உத்தேச்யனாய் இறே -இருப்பது-

21-அவர் -உலகம் படைத்தான் கவி -என்றார்-இவர் மதுரகவி -என்கிறார் –

நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய்ச்
சென்று சென்றாகிலும் கண்டு,சன்மம் கழிப்பான் எண்ணி,
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?–3-9-10-சென்று சென்றாகிலும் நெடும் காலம் கூட வாகிலும்-கண்டு,-நம்மை இவன் கண்டு-சன்மம் கழிப்பான்-ஜென்ம சம்பந்தம் அரும்படி பண்ண வேண்டும் என்று-எண்ணி,-மநோ ரதித்து-ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான்-ஸ்ருஷ்டிகள் பலித்ததில்லை என்று கை வாங்காதே மிகவும் ஒருப்பட்டு லோகங்களை உண்டாக்கினான்
கவி ஆயினேற்கு-கவியாயினுக்கு-அவன் ஸ்ருஷ்ட்டி பலித்து அநந்யார்ஹனான எனக்கு
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?– கால தத்வம் உள்ளதனையும் வேறு சிலருடைய கவியில் எனக்கு அந்வயம் உண்டாகி தகுமோ-வேறு சிலர்க்கு கவியாக நான் தகு வேனோ என்றுமாம்
இப்போது பகவத் குணங்களை பாடி மேலும் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத– ஏதத் சாம காயன் நாஸ்தே-என்று பாடப் புகுகிற நான் வேறு சிலர்க்கு தகு வேனோ –சென்று சென்று ஆகிலும் கண்டு நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய் ஜன்மம் கழிப்பான் எண்ணிஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவியாயினேற்கு என்றும் என்றும் இனி மற்று ஒருவர் கவி ஏற்குமோ –

அவன் எதிர் சூழல் புக்குத் திரிந்து பண்ணின கிருஷி பலித்து, அவனுக்குக் கவியாகப் பெற்ற எனக்கு.
என்றும் என்றும் இனி மற்று ஒருவர் கவி ஏற்குமே –காலம் என்னும் ஒரு பொருள் உள்ள அளவும் வேறு சிலரைக் கவி பாடத் தகுமோ?-‘நன்று; இப்படிப் பலத்தது அவன் சன்மம் கழிப்பான் எண்ணி ஒன்றி ஒன்றி உலகம் படைத்ததே காரணமாம் ஆகில்,-பின்னை எல்லார்க்கும் பலிக்க வேண்டாவோ?’ என்னில், இறைவனுடைய நினைவு தானும் சென்று சென்று ஆகிலும் என்பதே அன்றோ?
ஒரு நாளிலேயே பலிக்குமது என்பது இன்றே? ஆகையால், பலிக்கப் பலிக்கக் காணுமித்தனை. இனி, ‘என்றும் என்றும் உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு மற்று ஒருவர் கவி ஏற்குமே,’ என்று கூட்டி, ‘இனி, மேல் பலவாக உள்ள காலம் எல்லாம் இச்சரீரமுள்ளதனையும் இதுவே வாழ்க்கையாக இருந்து, மேல் ‘மேல் சொல்லப்போகிற சாமத்தைப் பாடிக்கொண்டிருக்கிறார்கள்’ என்றும்,
‘அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நம்’ என்றும் பாடப் புகுகிற எனக்கு, பகவானுக்கு வேறுபட்டிருக்கிற பொருள்களைப் பற்றிக் கவி பாடுகை போருமோ?’ என்னலுமாம்.-வேறு சிலர்க்கு நான் கவியாகத் தகுமோ?’ என்னுதல். அன்றிக்கே, ‘வேறு சிலர் கவியிலே நான் சேர்தல் தகுமோ?’ என்னுதல்-கவி ஆயினேற்கு மற்றொருவர் கவி ஏற்குமே?’ என்பதற்கு இரு வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார்: முதற்பொருள், ‘இறைவனைப் பாடுதற்கு அமைந்த புலவனாகிய யான் வேறு சிலரைப் பாடும் புலவனாதல் கூடுமோ?’ என்பது. இப்பொருளில் ‘கவி’ என்பது ஆழ்வாரைக் குறித்தது. இதனையே, ‘அவன் எதிர் சூழல் புக்கு’ என்று தொடங்கிச் சிலரைக் கவி பாடத் தகுமோ?’ என்பது முடிய
அருளிச்செய்கிறார்.
இரண்டாவது பொருள், ‘அவனைப் பாடுகின்ற பாடல்களைக் கொண்டு வேறு சிலரைப் பாடுதல் கூடுமோ?’ என்பது. இப்பொருளில் ‘கவி’ என்பது,பாடல் அல்லது பிரபந்தம் என்பதனைக் குறிக்கும். இப்பொருளையே, ‘பலவாக உள்ள காலமெல்லாம்’ என்று தொடங்கிக் ‘கவி பாடுகை போருமோ?’ என்பது முடிய அருளிச் செய்கிறார்.

22-அவர் உரைக்க வல்லாருக்கு வைகுந்தமாகும் தம்மூர் எல்லாம் -என்றார் -இவர் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -என்று தலைக் கட்டுகிறார் –

இரைக்குங் கருங்கடல் வண்ணன் கண்ணபிரான் தன்னை
விரைக்கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன
நிரைக்கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
உரைக்க வல்லார்க்கு வைகுந்த மாகுந்தம் மூரெல்லாம்.–5-3-11-இத்திருவாய் மொழியை சொல்ல வல்லார்க்கு உத்தேச்ய பூமி பரமபதமாக கடவது என்னுதல் -இது சொன்னவர்கள் இருந்த இடமே பரமபதம் என்னுதல் -அதாகிறது அவர்களுக்கு இவரைப் போலே மடல் எடுக்க வேண்டா -அவன் தானே மடல் எடுத்து இவர்கள் இருந்த இடத்தே நித்ய சம்ச்லேஷம் பண்ணும் என்கிறது -நாடு அறிய மடல் எடுத்துக் கொண்டு இவர்கள் புறப்பட வேண்டாமல், இவர்கள் இருந்த இடங்களிலே அவன் தானே வந்து எப்பொழுதும் சேர்ந்தே இருக்கையாலே, இவர்கள் இருந்த இடம் தானே பரம பதமாம் -அவன் சந்நிதி உள்ள இடம் ஸ்ரீ வைகுண்டமாகக் குறை இல்லை அன்றோ. இப் பாசுரங்களைச் சொன்ன அளவிலே இது கூடுமோ? என்ன ஒண்ணாது;-இப் பாசுரங்களில் சொல்லுகிற பகவானுடைய குணங்களைப் பார்த்தால், ‘இந்த வார்த்தை தானும் மிகை’ என்னலாம்படி இருக்கும்;-இது கூடாதாகில், பரிபூர்ண சமாஸ்ரயணத்துக்கும் பலம் இல்லையாம்;-இங்ஙன் அன்றாகில், புருடோத்தமன் இதர சஜாதீயன் ஆனான் ஆமே-

அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெலாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -11–இனிதாய் இருந்தில்லை யாகிலும்-(மதுரகவி சொல் போதுமே -சொன்ன – நடுவில் -சொன்னதாக வள வள பேச்சாக இருந்தாலும் என்றவாறு )-இப்பிரபந்தத்தை தஞ்சமாக நினைத்து இருக்குமவர்களுக்கு-வஸ்தவ்ய தேசம் பரம பதம் –
ஆழ்வார் உத்தேச்யர் ஆனால் திரு நகரி அன்றோ ப்ராப்யமாவது -என்னில் திரு நகரியில் -பொலிந்து நின்ற பிரான் ஆணையும்-ஆழ்வார் ஆணையுமாய் இரு புரியாச் செல்லும்-அங்கன் இன்றிக்கே ஆழ்வார் ஆணையே யாய்ச் செல்லும் -பரமபதம் அடியார் நிலாகின்ற வைகுந்தமோ –என்றும் /வானவர் நாடு -என்றும் /சொல்லக் கடவது இறே -நம்பி திரு வழுதி வள நாடு தாசர் –நம்புவார் பதி வைகுந்தம் -என்று அவர்கள் இருந்த தேசம் காணும் பரமபதம் –என்று சொல்லுவர் –
உரைக்க வல்லார்க்கு வைகுந்தமாகும் தம்மூர் -எல்லாம் -என்னக் கடவது இறே-(உள்ளுவாருக்கு உம்பர் ஊரே -அநந்த புரம் பதிகம் –உம்பர் -ஊர் திரு நாடு -திரு வனந்த  புரம்  /-வசிக்கும் ஊர்  மூன்றும் -சாண்ட்லி விவகாரத்தில் கண்டோமே -இது அன்றோ  எழில் ஆலி என்னார் தாமே -போலே )
கூரத் ஆழ்வான் மகன் பிறந்த பின்பு சம்சாரமும் பரம பதமும் இடைச் சுவரைத் தள்ளி
ஒரு போகி யாயிற்று காண் -என்று பெற்றி பணித்தார் -என்று பிள்ளை அருளிச் செய்வர் –

இப்படி ஆழ்வார் பகவத் விஷயத்திலே அனுசந்தித்து குண விசேஷங்களைத் தாம் ஆழ்வார் விஷயத்தில் அநுஸந்திக்கும்படிக்கு ஈடாக ஆழ்வார் தம்மை விஷயீ கரித்து சரம பர்வ ஏக நிஷ்டராம் படி பண்ணி அருளின உபகாரத்துக்கு -பிரதியுபகாரம் இல்லாமையாலே தத் குண அனுசந்தானத்தால் அல்லது செல்லாதபடியான தசை விளைந்து

1-தத் குண அனுபவ ஜெனித ப்ரீதிகளுக்குப் போக்குவீடாக பகவத் விஷயத்திலும் அதிசயிதமான ஆழ்வாருடைய போக்யதா ப்ரகர்ஷத்தையும்

2-அவருடைய பாசுரமே தேஹ யாத்ரை யாம்படி தாரகமான படியையும்

3-ஆழ்வார் உகந்த விஷயம் என்றும் தமக்குப் பகவத் விஷயமும் உத்தேச்யமாம் படியையும் –

4-அப்படி உத்தேசியமாக விரும்புகைக்கு அடி தம்மை ஆழ்வார் விஷயீ கரித்த விஷயீ காரம் என்னும் அத்தையும் –

5-இதர விஷய ப்ராவண்யத்தை விட்டு பகவத் விஷயத்தில் நில்லாதே ஆழ்வார் அளவும் வரும்படியான சாதுர்யத்தையும்

6-ஆழ்வார் தம்மை விஷயீகரித்த விஷயீ காரத்தினுடைய தார்ட்யத்தையும்

7-தம்மை விஷயீ கரிக்கைக்கு ஈடான ஆழ்வாருடைய கிருபா ப்ரகர்ஷ ப்ரகாஸத்தையும்

8-பகவத் கிருபையிலும் ஆழ்வாருடைய கிருபையே இவ் விபுதியில் விஞ்சி இருக்கும் என்னுமத்தையும் –

9-இப்படி ஆழ்வாருடைய கிருபை இவ் வுலகில் விஞ்சி இருக்கைக்கு அடி ஸகல வேத ரஹஸ்ய அர்த்த ஞாபகமாய் தம்முடைய பாசுரமான இப்பிரபந்தத்தை என் நெஞ்சினிலே ஸூ பிரதிஷ்டமாக்கினான் என்னுமத்தையும்

10-இப்படி ஆழ்வார் தம் பக்கலிலே உபகரித்த உபகாரம் பிரதியுபகார நிரபேஷமாய் இருக்கும் என்னுமத்தையும் –

11-இப் பத்துப் பாட்டாலே ஸூ க்ரஹமாக அருளிச் செய்து இப்பிரபந்தம் கற்றாருக்குப் பலம் ஸ்ரீ வைகுண்டம் என்றும் சொல்லித் தலைக் கட்டுகிறார்

திருவாய்மொழி வேத சாரமாய் -திருவாய் மொழியினுடைய சாரமாய்த்து இப்பிரபந்தம் இருப்பது –இவ்வாழ்வார் ஆகிறார் 1-அவ்வாச்சார்யா வைபவம் அறிந்தவர் ஆகையாலும்
2-ஆழ்வார் திருவடிகளிலே நெடு நாள் பரிசர்யை பண்ணி அவருடைய பிரசாத பாத்ரராய்ப் போந்தவர் ஆகையாலும்
3-அவர் பண்ணின உபகாரத்துக்கு பிரத்யுபகாரம் உண்டாக நினைத்திராதவர் ஆகையாலும்
4-அவரை வாயாராப் புகழ்ந்து அவருடைய உபகார அனுசந்தான ப்ரீதிக்குப்போக்கு விட வேண்டுகையாலும்
இப்பிரபந்த முகத்தாலே ஆழ்வார் வைபவத்தைப் பேசுகிறார்-

ஈஸ்வரன் துராராதனாய் ஆச்சார்யன் ஸ்வாராதனாய் இருக்கும்
ஈஸ்வரனை ஆராதிக்கைக்கு திருவிருத்தம் தொடக்கமான நாலு பிரபந்தங்கள் வேண்டிற்று
ஆழ்வாரை ஆராதிக்கைக்கு இப்பத்துப் பாட்டுக்களே அமைந்தது –

உறிகளில் வெண்ணெயோடு அறைகளில் பெண்களோடு வாசியற இரண்டையும் களவு கண்டு போந்த அபதானம் இறே –-இது வாய்த்து அபதா நாந்தரங்களில் போக்யதமமாய் இருப்பது –இவ்வபதானத்தின் போக்யதையை இவர் வ்யுத்பத்தி பண்ணிற்று ஆழ்வார் தம்முடைய பாடே யாய்த்து-

லோக உபகார அர்த்தமாக ஈஸ்வரன் இவர் அழுவது அலற்றுவது ஆண் பெண்ணாக மடல் எடுப்பது -தூது விடுவதாம் படி தன் சங்கல்ப பாசத்திலே கட்ட இவரும் அதை அவிழ்க்க மாட்டாதே அறியா மா மாயத்து அடியேனை வைத்தையால் -2-3-3-என்னும் படி கட்டுண்டு இருந்த இருப்பு தமக்கு போக்யமாய் இருக்கிறபடியை இப்பாட்டாலே அருளிச் செய்கிறார் – அவன் கட்டுண்ட இடத்தில் -பற்றி உரலிடை யாப்பும் உண்டான் பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக் கொலோ -என்று பிறருக்கு ஏசுகைக்கு உறுப்பாய் விட்டது இவர் கட்டுண்டது இறே நாட்டாருடைய கட்டை அவிழ்கைக்கு உறுப்பாய் பரம சாத்விக வர்க்கத்துக்கு போக்யமாய்த்து –இவ்வாழ்வார் பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும்
அழுக்கு உடம்பும் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று பிரகிருதி சம்பந்தத்தை அறுக்க வேணும் என்று அபேஷியா நிற்கச் செய்தேயும் பகவத் சங்கல்ப பாசத்தாலே இவர் கட்டுண்டு இருந்த படியைக் கண்டு ஈடுபடுகிறார் –அவன் தான் இவரைக் கட்டுகைக்கு அடி என் என்னில் இவரைக் கட்ட நாட்டில் உள்ளார் களவு போம் என்னும் நினைவாலே-ஊரும் நாடும் உலகும் தன்னைப் போலவும் அவ்வளவன்றிக்கே அறிவுக்கு அவகாசம் இல்லாத ஸ்தாவர ஜாதீயங்களையும்-மரங்களும் இரங்கும் வகை மணி வண்ணவோ வென்று கூவுமவராகையாலே இவரைக் கட்டி வைத்தான் – இவருக்குத் தன் களவு வெளிப்பட்டுப் பிறர் களவு போமாய்த்து –

தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும்-குறுங்குடி நம்பியைக் காட்டில் குருகூர் நம்பியை வ்யாவர்த்திக்கிறது-அவனுக்குப் பூர்த்தி ஜ்ஞான சக்த்யாதிகளாலே-இவருக்குப் பூர்த்தி ஜ்ஞான பக்த்யாதிகளாலே-ஜகத்தை தனக்கு ஆக்கும் படியான குணங்கள் அவனது அவன் தன்னைத் தனக்காக்கும் படியான குணங்கள் இவரது

கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே -1-தத் குண அனுபவ ஜெனித ப்ரீதிகளுக்குப் போக்குவீடாக பகவத் விஷயத்திலும் அதிசயிதமான ஆழ்வாருடைய போக்யதா ப்ரகர்ஷத்தை அருளிச் செய்கிறார்-

ஆழ்வார் உடைய போக்ய  அதிசயம் தோற்றுகைக்காகவும் – ஆழ்வார் உடைய முக முலர்த்திக்காகவும் –
அவர் உகக்கும் பகவத் விஷயம் -ஆகையாலும் –பேசுகிறார்-உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எழில் எத்திறம் -என்றும் –-பிறந்தவாறும் -வளர்ந்தவாறும் -என்றும் –-பையவே நிலையும் -என்றும்
ஆழ்வார் ஆழம் கால் பட்ட விஷயம் ஆகையாலும் அத்தைப் பேசுகிறார் –

பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே
 –1-3-1-உரஸ் ஸ்தலத்திலே கட்டுண்டு
மலர் மகள் விரும்பி அணைக்கும் மார்விலே கிடீர் கையிற்றை இட்டுக் கட்டிக் கட்டுண்டு இருந்தது –இந்த சுத்தனைக் கள்ளன் என்று கட்டினால் பொறுக்க மாட்டாதே அழத் தொடங்குமே –-அவள் வாய் வாய் என்றால் ஏறிட்ட த்வனி இழிய விட மாட்டாதே பயப்பட்டு நிற்கும்-எளிவு -சௌலப்யம் –இது என்னபடி-யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று வேதம் மீண்ட பரத்வத்தை எல்லை காணலாம்-இந்த சௌலப்யம் தரை காண ஒண்ணாது இருந்ததீ-

அவனுடைய குண சேஷ்டிதாதிகளை அனுசந்திக்கப் புக்கு சிதிலரானவர் -இச் ஸைதில்யத்தை போக்கி அருளி தரித்து நின்று அனுபவிக்க வல்லேனாம் படி பண்ணி அருள வேணும் என்று சரணம் புகுகிறார்-பிறந்தவாறும் -5-10-கிருஷ்ணாவதாரத்தில் போந்தார் ப்ரத்யாசத்தியாலே -அதுவும் தீர்த்தம் பிரசாதிக்கையாலே-பல்லில் பட்டுத் தெறித்தது -என்று கூப்பிடுகிறார் -இது ஆழ்வான் நிர்வாஹம் –
உன்னைப் பிரிந்து நோவு படுகிற சமயத்தில் உன்னுடைய குண சேஷ்டிதாதிகள் ஸ்ம்ருதி விஷயமாய் நலியா நின்றது-இவ் வவசாதம் தீரும் படி உன் திருவடிகளில் வந்து சேர்வது என்று என்கிறார் என்று பிள்ளை திரு நறையூர் அரையர் அருளிட்டார் நிர்வாஹம் –

பெய்யும் பூங்குழல் பேய் முலை யுண்ட பிள்ளைத் தேற்றமும் பேர்ந்தொர் சாடிறச்
செய்ய பாதமொன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்
நெய் யுண் வார்த்தை யுள் அன்னை கோல் கொள நீயுன் தாமரைக் கண்கள் நீர்மல்கப்
பையவே நிலையும் வந்து என்நெஞ்சை உருக்குங்களே.–5-10-3-அஞ்சி முகத்தை பாரா நிற்க செய்தே-தெரியாத படி பின்னே கால் வாங்கி நிற்கும் என்னுதல் -பேகணித்து நின்ற நிலை என்னுதல்
பூத காலத்தில் செய்து போனது என்று இருக்க ஒண்ணாத படி புக்க இடம் புக்கு என்நெஞ்சை நீராக்கா நின்றன

தென் குருகூர் -நம்பி-
நல்கி என்னை விடான் நம்பி நம்பி -என்று ஆழ்வார் தாம் உத்தேச்யமாக பற்றின
விஷயத்தில் பூர்த்தி அளவு அன்று இ றே இவர் பற்றின விஷயத்தில் பூர்த்தி –
எங்கனே என்னில் – பகவத் விஷயத்தைப் பற்றினால் அதின் எல்லையான ஆழ்வார் அளவும் வர வேண்டி இருக்கும்-ஆழ்வாரைப் பற்றினால் -அவ் வருகு கந்தவ்ய பூமி இல்லை இறே- ஆச்சார்யர்களை -நம்பி -என்னக் கற்ப்பித்தார் ஸ்ரீ மதுரகவிகள் இறே என்று ஜீயர் அருளிச் செய்வர் –

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே
அல்லும் நன்பகலும் இடைவீடின்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே –1-10-8-
நான் ஒரு கால் தேடி விடா நின்றேன்-அவன் இடை விடாதே ஸ்நேஹியா நின்றான்-அபூரணனான என்னை பூர்ணனான தான் நம்பி விடுகிறிலன்
நம்பி -ஒருத்தனாக நினைத்து-ஆழ்வான் -நம்பியே என்று ஸ்வரத இவனையே பூர்ணன் என்பது என்பர்

2-அவருடைய பாசுரமே தேஹ யாத்ரை யாம்படி தாரகமான படியையும்

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே-2-

இன்பம் எய்தினேன் – வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்ந்தனன் மேவி -என்று ஆழ்வார் அவ் விஷயத்தில் பெற்ற பேற்றை -இவ் விஷயத்திலே பெற்றேன் என்கிறார் –
சிந்தையினாலும் சொல்லாலும் செய்கையினாலும் -என்று கரண த்ரயத்தாலும் அவ்
விஷயத்தை ஆஸ்ரயித்தவர் பெற்ற பேற்றை உக்தி மாத்ரத்திலே பெற்றேன் –

1-எனக்கு இஹ லோக ஸூ க ஜனகரும் ஆழ்வாரே-2 -பர லோக ஸூ கத்துக்கு சாதனமும் ஆழ்வாரே-3-எனக்கு ஸ்வாமி யும் ஆழ்வாரே -4-கால ஷேப விஷயமும் ஆழ்வாரேநான்குக்கும் நான்கு அடிகள் இந்த பாசுரம்-பகவத் விஷயத்தை ஆஸ்ரயிக்கும் இடத்தில் நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும் ஏக சிந்தையனாய் என்று வர்த்தமான நிர்த்தேசம் பண்ண வேண்டிற்று
இங்கு அப்படி அன்றிக்கே சக்ருத் சமாஸ்ரயணம் அமைந்தது

வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்
வீவு இல் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
வீவு இல்காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப்பெற்றேன்;
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே.–4-5-3-நித்தியமாய் நிரவதிகமான ஆனந்தத்தை உடையேன் ஆனேன்-அவனுடைய ஆனந்தத்துக்கும் தம்முடைய ஆனந்தத்துக்கும் வாசி சொல்கிறார்
மேவியே-அவனுடைய ஆனந்தம் ஸ்வதஸ் சித்தம்என்னுடைய ஆனந்தம் -அவனை மேவி வந்தது
அவனுடைய ஆனந்தம் தான் தோன்றி-என்னுடைய ஆனந்தம் அபிஜாதம்-ஏஷ ஹ் யேவா நந்தயாதி –

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண்குரு கூரவர் சடகோபன்

முந்தை ஆயிரத்துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச்சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே.–6-5-11-மநோ வாக் காயங்கள் மூன்றும் -ஒருபடிப்பட அவன் பக்கலிலே ப்ரவணமாய் இருக்கிற படி –இரங்கி -என்றும் –மணி வண்ணாவோ என்று கூவுமால் -என்றும் –தன் கரங்கள் கூப்பித் தொழும் -என்றும் -மூன்றாலும் இவருக்கு உண்டான இவருக்கு உண்டான பிராவண்ய அதிசயம் இ றே இது திருவாய் மொழியிலே சொல்லிற்று-அவனே தமக்கு சர்வவித்த பந்துவும் ஆனால் போலே அவ் வூரில் உள்ளார் -ஆழ்வாரே எல்லா உறவு முறையும் -என்று ஆயிற்று இருப்பது –அன்னையாய் அத்தனாய் -என்னும் ஸ்ரீ மதுர கவிகளை போலே–“தாயும் தமப்பனும் மனைவியும் குழந்தைகளும் செல்வமும் மற்றும் எல்லாம் வகுளாபரணர் திருவடிகளே”
மாதாபிதா யுவதய: தநயா விபூதி: ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் ஆத்யஸ்ய ந: குலபதே: வகுளாபிராமம் ஸ்ரீ மத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா”
–என்றும் சொல்லுகிறபடியே இருப்பர்கள்.பழையதான வேதார்த்தத்தை அருளிச் செய்கையாலே சர்வேஸ்வரன் இதர சஜாதீயன் ஆனால் போலே -வேதமும் தமிழாய் வந்து இவர் பக்கலிலே அவதரித்த படி-

குருகூர் நம்பி இன்னிசை பாடி –பகவத் பிரதிபாதகம் என்று அன்று இவர் திருவாய் மொழியைப் பாடிற்று –ஆழ்வார் அருளிச் செய்தது என்றாயிற்று –உயர்வற உயர் நலம் உடையவன் -வண் புகழ் நாரணன் -மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள் –என் செய்ய தாமரைக் கண் பெருமானார் -என்று பாடா நிற்கச் செய்தும் பகவத் விஷயத்தோடு உறவற்று இறே இவர் பாடுகிறதுதிரிவனே
அங்குப் போனால் அன்றோ ஏதத் சாம காயன் நாஸ்தே என்றிருக்க வேண்டுவது -இங்கு அப்படி அன்றிக்கே விஸ்ருங்கலாமாகத் திரியா நிற்பன்-திரிவேனே-இது எனக்கு கால யாத்ரை –ஆகையால்
1-ஸூக பூதரும் -2-சாதனா பூதரும் -3-ஸ்வாமி யும் -4-காலஷேப விஷயமும் -( நான்குக்கும் நான்கு அடிகள் இந்த பாசுரம் – )ஆழ்வாரே

3-ஆழ்வார் உகந்த விஷயம் என்றும் தமக்குப் பகவத் விஷயமும் உத்தேச்யமாம் படியையும் –சேஷி உகந்தத்தை உகக்குமது இ றே கைங்கர்யத்தின் எல்லை நிலமாகிறதுதேவு மற்று அறியேன் என்றார் கீழில் பாட்டில்இங்கு ஈஸ்வரன் தான் இவர் பக்கலிலே மண்டினபடியைச் சொல்லுகிறார்பிராட்டியைப் பற்றினாலும் அவள் அவனோடு சேர்க்கையாலே அவன் கை பார்த்து இருக்க வேணும்-இங்கு அவன் தானே மேல் விழுந்து தன்னை இவனுக்குக் கொடுக்கும் –

திரி தந்தாகிலும் தேவபிரானுடைக்
கரிய கோலத் திரு உருக் காண்பன் நான்
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள்
உரியனாய் யடியேன் பெற்ற நன்மையே -3-

தேவபிரானுடைக் கரிய கோலத் திரு உரு- (கரிய உரு –கோல உரு -திரு உரு )
நித்ய ஸூரிகளுக்கு படிவிடும் வடிவு -காளமேக நிபஸ்யாமமாய் -அழகு தான் ஒரு வடிவு கொண்டால் போலே-இறே இருப்பது –-இவ்வளவும் இவர்க்கு உத்தேச்யராகப் பெற்றிலோம் ஆகிலும் உத்தேச்யருக்கு உத்தேச்யராய்ப் பெற்றோம் இறே –என்று எம்பெருமான் திரு உள்ளம்-கோலமே தாமரைக் கண்ண தோர் அஞ்சன நீலமே –என்று ஆழ்வார் வாய் புலத்து கேட்டிருக்குமவர் ஆகையாலே பேசுகிறார்-என்னாவி சேர் அம்மானுக்கு செம்பொன் திருவுடம்பு என்று ஆழ்வார் அநுபவித்தபோதும் பொன் என்ற அளவத்தனை போக்கிக் கறுத்தது இல்லையே –கோலத்-ஆனைக்கு உதவ வந்தாப் போலே இருந்தபடியே வருகை அன்றிக்கே இங்கு அனுபாவ்யனாய் வருகிறவன் ஆகையாலே சாத்தின திரு ஆபரணமும் தானுமாய்த்து வந்தது-அபிமத விஷயத்தின் பாடு போவார் ஆபரணம் பூண்டு இறே போவது –திரு உருக் –கழற்ற ஒண்ணாது இருப்பதோர் ஆபரணத்தையும் கொண்டு வந்தார்
அவ் விருண்ட வடிவுக்கு மின் போலே ப்ரகாசிகையாய் இருக்குமவள் யாய்த்து-அமரர்கள் ஆதி முதல்வன் கருகிய நீல நன் மேனி வண்ணன் பூ மகளார் தனிக் கேள்வன் ஒரு கதியின் சுவை தந்திட்டு
ஒழிவிலன் என்னோடுடனே
என்று ஆழ்வாரை அனுபவிப்பித்தால் போலே என்னையும் அனுபவிப்பித்தான்

கோலமே! தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன நீலமே! நின்று எனது ஆவியை ஈர்கின்ற
சீலமே! சென்று செல்லாதன முன் நிலாம் காலமே! உன்னை எந்நாள் கண்டு கொள்வனே?–3-8-8-அழகு என்றும் தாதாஸ்ரயம் என்றும் இரண்டு அன்றிக்கே அழகு தானே ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கை-ஞான ஸ்வரூபன் என்றும் ஞான குணகன் என்றும் சொல்லக் கடவது இறே ஞாதாவை–அஞ்சனம் என்றும் நீலம் என்றும் சொல்லுகையாலே ஓன்று ஒப்பாக மாட்டாமையாலே கதிர் பொறுக்குகிறார்-நீலம் தன்னை வடிவாக வகுத்தால் போலே இருக்கை –-வளவேழ் உலகின்’ என்ற திருவாய்மொழியில் தம்மைச் சேரவிட்டுக் கொண்ட சீலமாதல்.–செய்ய தாமரைக் கண்ணனில் நெஞ்சினால் நினைப்பான் எவன் என்கிற அர்ச்சாவதாரத்தில் நீர்மையை இறே இவர் நினைக்கிறதுநம்பிக்கு –-நான் ஒன்றை விட்டேன் என்னலாம்படியோ ஆழ்வார் உடைய  பூர்த்தி இருப்பது –
அதாவது –ஆழ்வாரை அனுபவிக்கும் அனுபவத்திலே பகவத் விஷயம் அந்தர்பூதமாய் இருக்கைஅடியேன் – ஆழ்வார் உடைய நீர்மைக்கு தோற்று -அடியேன் -என்கிறார் – தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்னும் நீர்மை இறே

கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே.–5-2-2-பெரியோரை ஒரு காலும் பிரிகிலேனே -என்னும் பாகவத விஷயத்திலே சபலர் எல்லாரும் திரளுங்கோள்-பிரயோஜனத்துக்குப் பிரயோஜனம் தேட வேணுமோ? கை மேலே பிரயோஜனமன்றோ.-தொழுகை பிரயோஜனம் -சடக்கென அப்பொழுதே ப்ரத்யக்ஷ பலம்-பிரத்யஷ பலன் சடக்கென காணலாம் –‘தொழுது தொழுது’ என்ற அடுக்குத் தொடரால், அது தானே பிரயோஜனமாயிருக்கிறது என்பதனைத் தெரிவித்தபடி.-ஆர்த்தும் என்றது, ஆர்த்துக் கொள்ளுவோம்; சந்தோஷத்தோடு கூட ஆரவாரம் செய்வோம் என்றபடி

பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு – சர்வ நிரபேஷரான ஆழ்வாருக்கு – ஆழ்வார் ஒருவருக்கும் இறே ஈஸ்வரன் மயர்வற மதி நலம் அருளிற்று-இவர் ஜகத்துக்காக மயர்வற மதி நலம் அருளினார் இறே
இவரையும் கட்டித் தருமூர் ஆகையாலே வண்மையின் மிகுதி சொல்லுகிறது-விசேஷஜ்ஞர் அடங்கத் திரண்டவூர் இ றே-(பெரிய வண்மை இரண்டு விசேஷணங்கள் )-அங்குத்தைக்கு நிர்வாஹகரான பூர்த்தியும் உண்டு இறே இவர்க்கு –தாம் சொல்லும் போதும் பெரிய வண் குருகூர் வண் சடகோபன் -8-1-11–என்று இ றே சொல்லுவது-இவருடைய நாராயணத்வம் இருக்கிறபடி –புவியும் இரு விசும்பும் நின்னகத்த நீ என் செவியின் வழி புகுந்து என்னுள்ளாய் -என்கிறபடியே-விபூதிமானையையும் விபூதியையும் தமக்குள்ளே அடக்கி இருக்கிற ஆழ்வாரைத் தனக்குள்ளே அடக்கும்படியான பெரிய தேசம்

பெரிய வப்பனைப் பிரமனப்பனை உருத்திரனப்பனை முனிவர்க்
குரியவப்பனை யமரரப்பனை உலகுக்குகோர் தனியப்பனை தன்னை
பெரிய வண் குருகூர்ச் சடகோபன் பேணின ஆயிரத்துள்ளும்
உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால் உய்யலாம் தொண்டீர் ! நம் கட்கே–8-1-11-ரக்ஷணம் தாழ்ந்தவாறே அதி சங்கை பண்ணுகையும் -உபகார ஸ்ம்ருதியாலே ஹ்ருஷ்டராகையும் ஆகிற இவை யுண்டாகைக்கு அடி அவ் வூரிலே பிறப்பு என்கை -மானஸ அனுபவ மாத்திரமே யாய் விடாதே ப்ரபந்ததீ கரித்த உதார குணம்

4-அப்படி உத்தேசியமாக விரும்புகைக்கு அடி தம்மை ஆழ்வார் விஷயீ கரித்த விஷயீ காரம் என்னும் அத்தையும் –

நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மையாகக் கருதுவர் ஆதாலில்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே-4தாயாய் தந்தையாய் அறியாதன அறிவித்த அத்தா -என்று பகவத் விஷயத்தில் ஆழ்வார் சொல்லுவது எல்லாம் ஆழ்வார் விஷயத்தில் சொல்லுகிறார் இவர் –என் பக்கல் சாட்யத்தை போக்கினவர் –கீழ் மூன்று -பாட்டிலும் தென் குருகூர் நம்பி -நம்பி என்று சொன்னவர்
இப் பாட்டிலே சடகோபன் என்றார் இறே  –ஸ்வ தோஷத்தை போக்கின படியாலேஎன் தோஷ அதிசயத்தாலே அந்தப் பரம சாத்விகரும் என்னை நெகிழ அதுவே பற்றாசாக எனக்கு முகம் தந்து மாதா பிதாவும் தாமேயாய்என்னை அடிமை கொண்டு போந்த ஸ்வ பாவம் ஆழ்வார்க்கு உள்ளது ஒன்றாகையாலே அவரே அன்றோ எனக்குப் பூரணரான உபகாரகர்என்னை ரஷித்து சடகோபன் என்கிற பட்டப் பேர் சூடியவர்-சத்வ நிஷ்டர்க்கு பஹிஷ்டனான வென்னைத் தாம் அங்கீ கரித்தும் அப்ரியங்களிலும் அஹிதங்களிலும் கை வளர்ந்து போந்த வென்னைக் கைங்கர்யம் கொண்டும் போந்த –சடகோபன் என் நம்பியே-பூர்த்தியை யுடையவர் ஆழ்வாரே

ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயா
ஒத்தாய் எப் பொருட்கும் உயிராய் என்னைப் பெற்ற
அத்தாயாய் தந்தையாய்த் அறியாதன யறிவித்து
அத்தா
நீ செய்தன அடியேன் அறியேனே –2-3-2—வளர்த்த தாயை வ்யாவர்த்திக்கிறது –-பெறல் வேண்டும் என்று நோன்பு நோற்றுத் தன் சரீரத்தினை ஒறுத்துப் பெற்று-எனக்கு பிரியமே செய்யக் கடவ தாயாய்–நேரே உத்பாதகனாய் கொண்டு ஹிதைஷையாய்-சஹி வித்யாஸ் தம் ஜநயதி -என்கிறபடியே ஆச்சார்யனாய்-ஏதத் விரதம் மம –மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்னுமவன் இறே-ஸ்வாமி-இச்சரீரத்தை உண்டாக்கிய தாய் தந்தையர்களைக் காட்டிலும், ஞானத்தைத் தந்து உயர் பிறவி அடையச் செய்த ஆசாரியன் சிறந்தவனாதலின், தாய் தந்தையர்கட்குப்பின் ஆசாரியனை அருளிச் செய்கிறார்.-

நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்-அபகாரபரர் அளவிலும் உபகாரகனாய்ப் போருகை –அதாகிறது அவர்கள் அளவில் குறை காணாது ஒழிகை இறே-ததீயரை நலத்தால் மிக்கார் என்று ஆழ்வார் அருளிச் செய்யக் கேட்டிருக்கையாலே தாமும் -நன்மையால் மிக்க என்கிறார்-

செலக் காண்கிற்பார் காணு மளவும் செல்லும் கீர்த்தியாய்!
உலப்பிலானே! எல்லா உலகு முடைய ஒருமூர்த்தி!
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான் நான்
அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே.–5-8-4-க்ரம பிராப்தி பற்றாதபடி ஸ்நேஹித்து இருக்குமவர்கள் -அவர்களதான திருக் குடந்தையில் அவர்களை பிரிய மாட்டாமையாலே உடம்போடு கண்டு அனுபவிக்கலாம் படி கண் வளர்ந்து அருளுகிறவனே-ஆஸ்ரித வத்சலனான உன்னை காண் கைக்காக -அத்தலை இத்தலையாய் நீ என்னை காண பட்ட அளவன்று-நான் உன்னை காண் கைக்கு பட்டது

என்னை யாண்டிடும்-பொலிந்து நின்ற பிரான் பக்கலிலும் ஒரு கால் போய் வாரீர் என்று உபதேசித்தார் என்று வடக்குத் திரு வீதிப் பிள்ளை அருளிச் செய்வர்-கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் என்னப்பனில் நண்ணி என்று நான் விட்டுப் போந்த விஷயத்தை-நீள் குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே உறுவது என்று பொலிந்து நின்ற பிரானுக்கும் ஓர் அஞ்சலி நேரும்படி பண்ணினார்

5-இதர விஷய ப்ராவண்யத்தை விட்டு பகவத் விஷயத்தில் நில்லாதே ஆழ்வார் அளவும் வரும்படியான சாதுர்யத்தையும்

நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையும் முன் எலாம்
செம்பொன் மாட திருக் குருகூர் நம்பிக்கு
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்று –5-பர த்ரவ்யதை ஆசைப்படுகை இறே -அபஹாரம் –வன் கள்வன் -என்று –கள்வன் ஆனேன் என்றும் -ஆழ்வார் அனுசந்திதது இ றே இவருக்கு முதல் –அர்த்த அபஹாரத்துக்கு இடம் பார்த்து திரியா நிற்க – அச் செம்பொன் மாடத்தை களவு காண புக்கேன் –
அங்கு வைத்த மா நிதியைக் கண்டு -அகப்பட்டேன் -என்கிறார் – இவருக்கு வைத்த மா நிதி ஆழ்வார் இறே-(திருக் கோளூர்-சொல்லாமல் திருக் குருகூர் என்கிறார் அன்றோ ) ஆழ்வார் திருவடிகளோபாதி திருநகரியும் இவருக்கு ஸ்ப்ருஹணீயம் ஆகையாலே திருநகரியைக் கவி பாடுகிறார் –

உயர்வற உயர்நலம் உடையவன் -எல்லை இல் அந்நலம் -எப்பால் யாவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பால் அவன் –என்றும் பலபடியாலும் ஈச்வரனைச் சித் அசித் வ்யாவ்ருத்தனாக ஆழ்வார் பாடே கேட்டுப் போருகையாலே அந்த வ்யாவ்ருத்தி தோற்ற பிறர் என்கிறார்-நம்பிக்கு அன்பனாய் அடியேன்-ஆழ்வாருக்குப் பிறந்த மதி நலன்கள் போலே கிரமத்திலே வருகை அன்றிக்கே அன்பு முற்பட்டு அடிமையில் பட்டது ஆழ்வார் திரு வஷ்டாஷர சம்சித்தராகையாலே இவருடைய கடாஷ லஷ்யன் ஆகையாலே அம்மாத்ரத்திலே பதத்ரயார்த்தத்திலும் முன்னாய் விட்டேன்

நான் அர்த்தாத்ஜ நேச்சுவாய் தேசாந்தர சஞ்சாரம் பண்ணா நிற்கச் செய்தே தைவாயத்தமாக திரு நகரியிலே மாடங்கள் ஓங்கி இருந்து பொற்கென்று தோற்றிற்று-இங்கே போய் அர்த்த அபஹாரம் பண்ணலாம் -இது தான் நகரி யாகையாலே நாகரிகைகளான மடவாரையும்-இம் மாடங்களிலே காணலாம் என்று அறுதியிட்டு வழி விலங்கி உள் புக்கேன் – அன்னகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் திரு வஷ்டாஷர சம்சித்தர் ஆகையாலே அவ்விடத்தில் தச்கர சஞ்சரணம் இல்லாமையாலே
ஒரு வைஷ்ணவ சகாசத்திலே ஷத்ர பந்துவுக்குப் பிறந்த அவஸ்தை போலே எனக்கும் ஆழ்வார் சகாசத்திலே-அபஹார புத்தி போய் உள்ளே ஆழ்வார் தம்மைக் காண வேணும் என்று புக்கு அவருடைய பூர்த்தியைக் கண்டு நின்றாப் போலே இருக்க அவருக்கு அன்பனாய் விட்டேன்செம் பொன் மாடம்
துவளில் மா மணி மாடம் ஓங்கு துலை வில்லி மங்கலம் -என்று உகந்து அருளின நிலங்களில் மாடங்களும் ஆழ்வாருக்கு உபாதேயம் ஆனாப் போலே இவருக்கும் ஆழ்வார் உடைய மதி நலங்களோ பாதி மாடங்களும் உபாதேயமாய் இருக்கிறது யாய்த்து – ஆகையாலே அர்த்த காம ப்ரவணரையும் ஆளாக்கும் தேசமாய்த்து –

6-ஆழ்வார் தம்மை விஷயீகரித்த விஷயீ காரத்தினுடைய தார்ட்யத்தையும்

இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
குன்ற மாடத்  திருக் குருகூர் நம்பி
என்றும் என்னை இகழ்விலன்  காண்மினே-6–இது ப்ரத்யஷிக்கலாவது ஒன்றாய் இருக்க
ஆழ்வார் பெருமை நான் சொல்ல கேட்க மிகை அன்றோ —நின்று-–மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன் -என்று ஆழ்வாருக்கு வ்யவர்த்ய விஷயம் மனுஷ்யர் இறே -இவர்க்கு வ்யாவர்த்யம் எம்பெருமான் ஆனபடி –நின்று தன் புகழ் ஏத்த அருளினான்-–உபகார ச்ம்ருதியாலே பகவல் லாபத்து அளவும் இவரைப் பற்றி நின்று பின்னை அது கிட்டின வாறே அதிலே தோள் மாறும்படி யன்றியே தம்முடைய அனுபவத்துக்கு உள்ளே பகவத் அனுபவமாம் படி ஆழ்வார் எனக்கு அருளிற்று–எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும் தம்பிரானை –என்று ஆழ்வார் பகவத் விஷயத்தைச் சொல்லக் கேட்டுப் போந்த-வாசனையாலே தாமும் எம்பிரான் என்கிறார்–ஏத்தநற்பூவைப் பூவீன்ற வண்ணன் புகழ் இயற்றுவாய் -என்று தொடங்கி –மொய் கழலே ஏத்த முயல் -என்ற ஆழ்வார் தம்மைப் போலே
ஏத்த உத்யோகித்து விட்ட அளவன்றிக்கே –தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும்-என்று தொடங்கி –முயல்கின்றேன் உந்தன் மொய் கழற்கு அன்பையே என்று-பத்தும் பத்தாக ஏத்தும்படி அருளினார்–ஆழ்வாருடைய குணங்களைப் புகழ்கையே  புருஷார்த்தம்-அது சித்திப்பதும் அவருடைய அருளாலே என்று அத்யவசிதனாய் ஏத்தும் படியும் அருளினார் –புருஷார்த்த பூதருமாய் சாதன பூதருமானவர்கள் இறே அத்யவசாய ப்ரதரும்-அவருடைய குண அனுசந்தானத்தாலே மனஸ் சைதில்யம் பிறக்கையாலே – –நெஞ்சை ஒருங்கப் பிடித்து நின்ற ஏத்த என்றுமாம் –குன்ற மாடத்  திருக் குருகூர் நம்பி என்றும் என்னை இகழ்விலன்-அம்மாடங்களுக்கு சலனம் உண்டானாலும் ஆழ்வார் திரு உள்ளம் சலியாதுகாண்மினேபாணானார் திண்ணம் -என்றும் சொல்லுகிற பிரமாணங்களிலே-பார்த்துக் கொள்ள மாட்டி கோளோ –

7-தம்மை விஷயீ கரிக்கைக்கு ஈடான ஆழ்வாருடைய கிருபா ப்ரகர்ஷ ப்ரகாஸத்தையும்

கண்டு கொண்டு என்னை காரி மாறப் பிரான்
பண்டை வல்வினை பாற்றி யருளினான்
எண் திசையும் அறிய இயம்புகேன்
ஒண் தமிழ் சடகோபன் அருளையே-7–இருந்தான் கண்டு கொண்டு -என்று எம்பெருமான் ஆழ்வாரைக் கண்டு கொண்டு இருந்தாப் போலே ஆழ்வாருக்கு அலாப்ய லாபம் ஆகிறபடி-காட்சி இத் தலைக்காக வன்றிக்கே தம் பேறாக இருக்கிறபடி-தொண்டீர் எல்லீரும் வாரீர் –என்னும் ஆழ்வாரோட்டை வாசநை யாலே சொல்லுகிறார்-அவர் -பகவத் விஷயத்தில் ருசி உடையார் எல்லாரும் வாரும் கோள் -என்கிறார்-இவரும் ஆழ்வார் பக்கல் ருசி உடையார் எல்லாரும் வாரும் கோள் -என்கிறார்-ஆழ்வார் பக்கல் பாவ பந்தத்தாலே–மயர்வற மதிநலம் அருளினவனுடைய அருள் போலே அல்ல ஆழ்வார் உடைய அருள் – அவ்வருளுக்கும் அயலான அளவிலே பண்ணி யருளின அருள் இறே –பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும்படி திருவாய்மொழி பாடின அருளுக்கு மேலே இறே என்னை விஷயீ கரித்த அருள் –பார்க்க ஒண்ணாத என்னைப் பார்த்தார்-எல்லாரும் கை விட்ட வென்னைக் கைக் கொண்டார் இவர் ச்வீகரித்தால் அவனாலும் விடப் போகாதேதெரியச் சொன்ன வாயிரம் -என்கிறபடியே திருவாய் மொழியைப் பாடி சம்சாரிகளுடைய சாட்யத்தைப் போக்கினவருடைய கிருபையை –ஸ்ரீ ஜாம்பவ மஹா ராஜர் தரை விக்கிரம பிரசம்சையை சாற்றிக் கொண்டு திரிந்தால் போலே அங்கு ஈஸ்வரனுடைய சக்தி பிரபாவம்இங்கு ஆழ்வாருடைய கிருபா பிரபாவம்அங்கு பிரயோஜனாந்த பரர் வாழ்ந்த படி -இங்கு அநந்ய பிரயோஜனர் வாழ்ந்த படிஅங்கு க்ருத்ரிம வியாபாரம் -இங்கு அக்ருத்ரிம வியாபாரம்இனி பதக்ரமத்தாலே திருத்தின படிக்கு சாம்யம் உண்டாகில் உண்டு அத்தனை –

இருத்தும் வியந்து என்னைத் தன் பொன்னடிக் கீழ் என்று
அருத்தித் தெனைத்தோர் பல நாள் அழைத்தேற்கு
பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து என்தன்
கருத்தை யுற வீற்றிருந்தான் கண்டு கொண்டே-8-7-1-என்னைப் பெறுகையாலே -சம்சாரம் கொண்டவரை மீட்டோம் என்று இருந்தோம் -மாயக் கூத்தவன் கொண்டவரும் பிழைக்கப் பெற்றோமே -என்று குறைவற்று இருந்தான் என்னுதல் -என்னோட்டை கலவி தன் பேறாக இருக்கும் வேறுபாடு தோற்றும்படி இருந்தான் என்னுதல் –கண்டு கொண்டே -பிரபல வியாதிக்கே பிழைத்த புத்ரனைப் பார்த்துக் கொண்டு இருக்கும் பிதாவை போலே –விஜூவர பிரமுமோதஹ-என்கிறபடியே மாயாக் கூத்தனில் ஆற்றாமைக்கு பிழைத்தவன் என்று வைத்த கண் வாங்காதே இரா நின்றன் –தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -2-9-4-என்னும்-என் நினைவைத் தான் கைக் கொண்டான் –

இருந்தான் கண்டு கொண்டே எனதேழை நெஞ்சாளும்
திருந்தாத வோரைவரைத் தேய்ந்தற மன்னி
பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்
தருந்தானருள் தான் இனி யானறியேனே-8-7-2-தரித்ரன் நிதி கண்டால் கண்டு கொண்டே இருக்குமா போலே -பார்த்த படியே இரா நின்றான் -அந்யோன்யம் அபிவிஷந்த்வ நதிருப்திம் உபஜக்மது -என்கைக்கு எதிர்தலையான தம்மை காண்கிறீலர்—மொத்தமாக ஆழ்வாரை விழுங்கி -அசத் சமமாக திருவடிக்கு கீழ் சேர்த்துக் கொண்டானே —-இத்தை நினைத்து இறே அர்த்தித்தவம் என்னும் இதுவும் மிகை என்றார் முதல் பாட்டிலே –

கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே.–5-2-2-பெரியோரை ஒரு காலும் பிரிகிலேனே -என்னும் பாகவத விஷயத்திலே சபலர் எல்லாரும் திரளுங்கோள்

8-பகவத் கிருபையிலும் ஆழ்வாருடைய கிருபையே இவ் விபுதியில் விஞ்சி இருக்கும் என்னுமத்தையும் –

அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
வருளினான் அவ் வருமறையின் பொருள்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே-8-ஆழ்வாருடைய அருள் -சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரயத்தையும்
கபளீ கரித்து இருக்கை-மயர்வற மதிநலம் அருளினான் -என்னும்படியான அருள் அல்ல –-அது தன்னையும் விளாக் குலை கொண்டு இருக்கும் அருள் இ றே -ஆழ்வார் அருள் –-ஈஸ்வரன் கை விட்ட ஆத்மாக்களிலும் -அவர்களுடைய துர்கதியைக் கண்டு திருத்த ஒருப்பட்ட படியாலே இவர் அருள் ப்ரத்யஷம் அன்றோ-பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே-பாட்டும் அன்று-பாடினவரும் அன்று-பாட்டுக்கு அடியான அருளும் அன்று-இவர் அருள் யாய்த்து-இன் தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே-வரை முறுவலான ஸ்ரீ கீதை சொன்னவனுடைய அருள் அன்று
அவன் நெறி எல்லாம் எடுத்துப் பாடின இடத்திலும் அகப்பட்டாரும் அகப்படாதாருமாயிற்று-இவர் அருள் அப்படி இன்றியிலே ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய பேரும் தார்களுமே பிதற்றப் பண்ணிற்று ஆயிற்று-கேட்டாரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல் -என்று அந்த லோகத்தில் இவருடைய பாட்டு மிக்கப் போலே-இந்த லோகத்தில் இவருடைய அருள் மிக்கது
இங்கு அருள் மிக்கு அங்கு போகம் மிகும் படி இறே லோக ஸ்பாவங்கள் இருப்பது –அவனுடைய அருள் சாஸ்திர கம்யம் -இது ப்ரத்யஷ சித்தம்இவ்வுலகினில் –கண்டீர்-இப்போது இவ்வுலகத்தில் கண்டி கோளே-அந்த லோகத்தில் போனால் அங்குக் காண்கிறிகோள் (அவன் அருளை காண அங்கே போக வேண்டுமே -இங்கே கேடக்த் தானே முடியும் -என்றவாறு -இவர் அருள் இங்கேயே காணலாமே -மதுர கவி ஆழ்வார் சாக்ஷி அன்றோ -அங்கு ஆழ்வார் -ஓர் அரசு மட்டுமே -அதனால் தான் நம்புவார் பதி -வைகுந்தம் என்றார் )-இவ்வுலகினில் மிக்கது-இந்த லோகத்தையும் ஆழ்வாருடைய அருளையும் சீர் தூக்கிப் பார்த்தால் அதிலும் விஞ்சி இருப்பது இவர் அருள் அன்றோ–கடல் மண் எல்லாம் விலையோ வென மிளிரும் படி இறே இவருடைய கண்ணுடைமை இருப்பது-(அருள் பாலிப்பது திருக் கண்கள் தானே )


9-இப்படி ஆழ்வாருடைய கிருபை இவ் வுலகில் விஞ்சி இருக்கைக்கு அடி ஸகல வேத ரஹஸ்ய அர்த்த ஞாபகமாய் தம்முடைய பாசுரமான இப்பிரபந்தத்தை என் நெஞ்சினிலே ஸூ பிரதிஷ்டமாக்கினான் என்னுமத்தையும்–உபகார பிரகார உபபாதனம் பண்ணா நின்று கொண்டு தம்முடைய் க்ருதஜ்ஞதையைச் சொல்லுகிறார்- ஆசார்யனுக்கு கிருபையே வேஷமாய் சிஷ்யனுக்கு க்ருதஜ்ஞதையே வேஷமாய் இருக்கும் –

மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள்
நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர் சடகோபன் என்னம்பிக்கு ஆட்
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே -9-சகல வேதங்களின் உடைய ரஹஸ்யார்த்தத்தை –
வேதாந்த ரஹஸ்யம் –ததீய சேஷத்வ பர்யந்தமான பகவத் சேஷத்வம் என்று இறே-வைதிக சாஸ்திரம் நிர்ணயித்தது-துர்க்ரஹமான இந்த ரஹஸ்யார்த்தத்தை கேட்பார்க்கு பிரதிபத்தி விஷயமாம் படி –பாடி –பரமனைப் பயிலும் திரு வுடையார் எவரேலும் -என்றும் – எம்மை யாளும் பரமர் -என்றும்-அருளிச் செய்தார் இறே—சகல வேத தாத்பர்யமான பாகவத சேஷத்வத்தை -பயிலும் சுடர் ஒளி-நெடுமாற்கடிமை-என்கிற-இரண்டு திருவாய் மொழிகளிலும் அருளிச் செய்து -என் நெஞ்சின் உள்ளே நிறுத்தினான்-ஆழ்வார் பக்கல் பிறந்த ருசி -இச் சரீரத்தோடே இங்கே யாழ்வார் திருவடிகளிலே எல்லா
அடிமையும் செய்யலாம்படி பண்ணும் –துயர் அறு சுடர் அடி தொழுது எழு -என்று முதலிலே அபிநிவேசித்த ஆழ்வாருக்கு முனியே நான்முகனுக்கு அவ்வருகு இறே பேறாயிற்று-இவ் விஷயத்தில் ருசி பிறந்தால் அத்தனை விளம்பியாது

அவர் பகவத் சேஷத்வத்தையும் -பகவத் பிரேமத்தையும் -பவகச் சேஷ வ்ருத்தியையும் உபதேசித்தார்
இவர் ஆழ்வாருக்கு சேஷமாய் -அவருக்கே ஸ்நிக்தராய்- அவருக்கே கிஞ்சித் கரிக்கத் தேடுகிறராய் நின்றது-இவர் கற்றது இதிலே யாய்த்து–அவர் புறப் பொருளை விட்டு உட்பொருளைக் கொடுத்தார்-
இவர் உட்பொருளான பகவத் விஷயம் தன்னை புறப் பொருள் ஆக்கி அதிலும் உட்பொருளான ஆழ்வார் திருவடிகளிலே-சேஷ பூதராய் ப்ரேம பூர்வகமான கைங்கர்யத்திலே இழிகிறார் யாய்த்து

10-இப்படி ஆழ்வார் தம் பக்கலிலே உபகரித்த உபகாரம் பிரதியுபகார நிரபேஷமாய் இருக்கும் என்னுமத்தையும் –

பயனன் றாகிலும்  பாங்கலராகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கன்பையே-10-திருத்திப் பணி கொள்வான் –தீர்ந்த வடியவர் தம்மைத் திருத்தி பணி கொள்ள வல்ல -(-3-5-)என்று-ப்ராப்யமும் ப்ராபகமும் தானே -என்று அத்யவசித்து இருக்குமவர்கள் உடைய-விரோதியைப் போக்கி அடிமை கொள்ளுமவன் என்றது இ றே சர்வேஸ்வரனை –அங்கன் இன்றிக்கே-இவை ஒன்றும் இன்றிக்கே -இருக்குமவர்களையும் திருத்திப் பணி கொள்ளுமவர் இறே ஆழ்வார் –பணி கொள்வான் –குருகூர் நம்பி -என்று அந்வயம்-(கொள்வான் -கொள்ளுகைக்காக -)

தீர்ந்த அடியவர் தம்மைத் திருத்திப் பணி கொள்ள வல்ல
ஆர்த்த புகழ் அச் சுதனை அமரர் பிரானைஎம் மானை
வாய்ந்த வளவயல் சூழ்தண் வளம் குரு கூர்ச்சட கோபன்
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப் பத்தும் அரு வினை நீறு செய்யுமே.–3-5-11-அவனே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று அத்யாவசித்த ஆஸ்ரிதரை பிரதிபந்தகங்களைப் போக்கி அடிமை கொள்ளும் சக்தியை உடையவன் – அவர்களைத் திருத்திப் பணி கொள்ளுகையாவது, அவர்களுடைய பிராப்பியப் பிராபக விரோதிகளைப் போக்கி அடிமை கொள்ளுகை.-‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி, வழுவிலா அடிமை செய்ய வேண்டும்’ என்று இருந்தாலும்,-‘முகப்பே கூவிப் பணிகொள்வானாய் குறைவற்ற கல்யாண குணங்களை யுடையவனாய், அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று இருந்தாலும் -கிரியதாம் இதி மாம் வத -என்ன வேண்டுமே –

முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கன்பையே –
உன்னுடைய ஸ்லாக்கியமான திருவடிகளுக்கு அன்பையே முயல்கின்றேன் –அர்த்தியா நின்றேன் –-செய்கிற அடிமையால் பர்யாப்தி பிறவாமையாலே திருவடிகளிலே எனக்கு அபிநிவேசம் பிறக்க வேணும் -என்று அர்த்திக்கிறார் இறே-என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் -என்று ஆழ்வார் தாம் அவ்விஷயத்தில் தடு மாறினாற் போலே- பண்ணின உபகாரத்துக்கு பிரத்யுபகாரம் காணாமையாலே தடு மாறுகிறார்-

வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே
–2-7-8-விஷயாந்தர ஸ்பர்சியான நெஞ்சைப் போக்குவதும் செய்தாய்–ஸ்ரீ யபதியாகையாலே பூர்ணனான எனக்கு உன்னால் ப்ரத்யுபகாரமாக செய்யலாவது ஒன்றும் காண்கிறிலேன்- பிரதிபகாரம் பண்ணி அல்லது நிற்க மாட்டுகிறிலேன் –அம்ருதத்தையும் விஷத்தையும் ஒக்க விரும்புவாரைப் போலே உன்னையும் உகந்து ஷூத்ர விஷயங்களையும் உகக்கும் பொல்லாத நெஞ்சைத் தவிர்த்தாய் நல்ல நெஞ்சைத் தந்த அளவன்றிக்கே -பொல்லாத நெஞ்சைக் கெடுப்பதும் செய்தாய் – தேஷாம் சத்த யுக்தாநாம் பஜதாம் -ஸ்ரீ கீதை -10-10-
தேஷா மேவா நுகம் பார்த்தம் அஹம் அஜ்ஞ்ஞானாஜம் தம நாசயாமி ஆத்ம பாவஸ்ய -ஸ்ரீ கீதை -10-11-போலே-உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே — பண்ணின உபகாரத்தின் கனத்தாலே பிரத்யுபகாரம் பண்ணி யல்லது தரிக்க மாட்டு கிறிலேன்-அதுக்கு விரகு காண் கிறிலேன்-நான் ஒரு உபகாரம் கொள்ளாது ஒழிதல்-நீ குறைவாளன் ஆதல் செய்யப் பெற்றிலேன் –சிரீதரனே-புஷ்கலனாய் இருக்கிற
உனக்கு நான் எத்தைச் செய்வேன்

குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி--இவர் ஆற்றாமையாலே ஒரு காலத்திலேயே காண வாராய் என்று கூப்பிடுவதுமொரு பாசுரம் உண்டு- ஹர்ஷத்தாலே யாவர் நிகர் அகல் வானத்தே -என்று களித்துச் சொல்லுவதும் ஒரு பாசுரம் உண்டு- இரண்டு பாசுரத்துக்கும் குயில் யாயிற்று பயிற்ருவன-இவர் பேச்சைக் கேட்க செவி ஏற்றாலே அவையும் இவர் பாசுரத்தைச் சொல்லும் யாயிற்று
குருகூர் நம்பி-ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே என்று சேதனர் அளவின்றியே திர்யக்குகள் அளவிலும்-ஏறும்படி யாய்த்து ஆழ்வாருடைய பூர்த்தி இருப்பதுசெயல் நன்றாகத் திருத்தி- இவர் உபதேசித்த அர்த்தம் என் நெஞ்சிலே பட்டு அது தான் அத்யவசாய பர்யந்தமாய் அவ்வளவு அன்றிக்கே அனுஷ்டான சேஷமாய்-அவ்வனுஷ்டானம் தான் சதசத நுஷ்டான மிஸ்ரமாகை யன்றிக்கே சத நுஷ்டானமே யாம்படி திருத்தினார்-( சத் அஸத் அனுஷ்டானம் இரண்டும் கலந்து போலே இல்லாமல் )
1-முற்படச்ரவணமும் –2-ஸ்ருதமான வர்த்தத்தில் மனனமும் -3- மதமான வர்த்தத்தில் மஹா விசுவாசமும் –4-விச்வச்தமான அர்த்தத்தில் அனுஷ்டானமும்-5-அதில் அசத நுஷ்டானம் கலசாதே சத நுஷ்டானமே யாய்ப் போருகையும் இ றே செயல் நன்றாகத் திருத்துகை யாவதுதிருத்தி-இவற்றில் என் கையில் என்னைக் காட்டிக் கொடாதே தாமே கைத்தொடராய் நின்று இவ்வவஸ்தா பன்னமாக்கினார்-

குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி-–அசேதனமான பஷி ஜாதம் அடைய ஆழ்வார் பரிசரத்திலே திருந்தி திருவாய் மொழி பாடக் கற்றுப் பாடா நின்றால் சேதனான நான் திருந்தச் சொல்ல வேணுமோ-சாகா சம்பந்தம் உண்டாகையாலே அக்குயில்கள் திருவாய் மொழியைப் யாய்த்து பாடுவது (சாகா சம்பந்தம் -கிளை சம்பந்தம் ஆயிரம் பாசுரங்கள் சம்பந்தம் ) –அவை பாடும் குயில்கள் ஆகையாலே தம்பிரான்மாரைப் போலே ஆழ்வாருக்கு திருவாய் மொழி பாடுவான வாய்த்து-(விண்ணப்பம் செய்வார் முன்னே  இரண்டு பேர் சேவிக்க –அத்தை அரையர் அனுவதிக்குமா போலே ஆழ்வார் முன்னே முன்னுரு அனுசந்திக்க -குயில்கள் தம்பிரான் பாட ஆழ்வாரும் கூட பாடுகிறார் என்றவாறு )-ஒரு தேச சம்பந்தத்தாலே செவ்வாய்க் கிளி நான்மறை பாடுமானால்-(தில்லை திருச் சித்ரகூடம்    பாசுரம் கலியன் ) இத்தேச வர்த்திகளுக்குத் திருவாய் மொழி பாடச் சொல்ல வேண்டா விறே- தாம் மதுர வாக்காகை யாலே மதுர வாக்கான குயிலை இட்டுப் பொழிலை சிறப்பிக்கிறார்மொய் கழற்கு அன்பையே-இத் திருவடிகளின் போக்யதை அன்பைக் கொடுத்தது-அன்பு பிரத்யுபகார்த்திலே மூட்டிற்று-அதுக்கு இடம் காணாமையாலே அலமரா நின்றேன்-இவ்வலமாப்பு யாவச் சைதன்யம் இ றே –மொய் கழற்கு அன்பையே-முயல்கின்றேன்-(வர்த்தமானம் யாவதாத்மா பாவி ப்ரபத்யே போலே )

11-இப் பத்துப் பாட்டாலே ஸூ க்ரஹமாக அருளிச் செய்து இப்பிரபந்தம் கற்றாருக்குப் பலம் ஸ்ரீ வைகுண்டம் என்றும் சொல்லித் தலைக் கட்டுகிறார்

அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெலாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -11–அடியார் அடியார் தம் அடியார் -என்று தத் சம்பந்திகள் அளவும் பண்ணின பிரேமத்தாலே பூரணராய் இருப்பர்–பிரதமத்திலே -1-ஆசார்யன் தனக்கு அஜ்ஞாத ஜ்ஞாபந முகத்தாலே-ஸ்வரூப ஜ்ஞாநத்தைப் பிறப்பித்து-2-பகவத் சமாஸ்ரயண வேளையிலே புருஷகார பூதனாய்–3-தன்னுடைய அனுஷ்டாநத்தாலே இவனை நல் வழியே கொண்டு போய்-4-ப்ராப்தி தசையிலும் சாத்ய வ்ருத்தியை பண்ணிக் கொடுக்கக் -கடவனாய் இப்படி பஹூ முகத்தாலே உத்தேச்யனாய் இ றே -இருப்பது-அவர்கள் இருந்த தேசம் காணும் பரமபதம் –என்று சொல்லுவர் –
உரைக்க வல்லார்க்கு வைகுந்தமாகும் தம்மூர் -எல்லாம் -என்னக் கடவது இறே-கூரத் ஆழ்வான் மகன் பிறந்த பின்பு சம்சாரமும் பரம பதமும் இடைச் சுவரைத் தள்ளி ஒரு போகி யாயிற்று காண் -என்று பெற்றி பணித்தார் -என்று பிள்ளை அருளிச் செய்வர் –

உபக்ரமத்திலே கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் என்னப்பன் -என்று-சீல சௌலப்ய ஸ்வாமித்வங்களை உபாதானம் பண்ணி உப சம்ஹாரத்தில் வாத்சல்ய குணத்தோடு தலைக் கட்டுகிறார் அவை ஒரு தட்டு -இது ஒரு தட்டு இ றே-இத்தைப் பற்ற விறே சீலாதி குண சம்பன்னஸ் சர்வ லோகைக வத்சலா -என்று ரிஷிகளும் சொல்லிற்று-

நிகமத்தில்- இப்பாட்டில் இப்பிரபந்தம் கற்றார்க்கு வஸ்தவ்ய பூமி பரமபதம் என்கிறார்
1-ஆழ்வாருடைய போக்யதையும்-அவர் தமக்கு ஸ்வாமி என்னும் இடத்தையும்
2–தமக்கு கால ஷேப விஷயம் அவருடைய ப்ரபந்தம் என்னும் இடத்தையும்
3-ஆழ்வாரோட்டை சம்பந்தம் அடியாக ஈஸ்வரன் மேல் விழுந்து அனுபவித்த படியையும்
4-தம்முடைய தோஷம் பாராமல் ஆழ்வார் விஷயீ கரித்த படியையும்
5-தோஷம் தானே அவருடைய தேச பிரவேச மாத்ரத்திலே தம்மை விட்டுக் கழன்ற படியையும்
6-பின்பு அத்தோஷம் மேலிடாதபடி ஆழ்வார் குண கீர்த்தனமே தமக்குக் கால யாத்ரையாம் படி அவர் தம்மைத் திருத்தின படியும்
7-அவருடைய க்ருபா வைபவத்தை லோகம் அடங்கலும் தாம் பரப்ப வேண்டும்படி தமக்குப் பிறந்த ஆதரத்தையும்
8-பகவத் கிருபையில் காட்டில் ஆழ்வாருடைய கிருபை லோகத்திலே அதிசயித்த படியையும்
9-அக்கிருபை அடியாக அவர் உபகரித்த உபகாரமும்
10-அவ்வுபகார பரம்பரைகளுக்கு பிரத்யுபகாரம் தேடி அவருடைய பூர்த்தியாலே பிரத்யுபகாரத்துக்கு அவகாசம் காணாமல்-தாம் அலமருகிற படியையும் இ றே கீழ்ச் சொல்லி நின்றது –


ஸ்ரீ கோயிலே கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தம்பிரான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர விளக்கங்கள்-மூன்றாம் அத்யாயம்-ஸாதந அத்யாயம் – முதல் பாதம்-வைராக்₃ய பாதம்–ஸ்ரீ வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்-

June 13, 2026

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநித விவித பூத விராத ரக்ஷைக தீக்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||-இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

பாராசர்ய வசஸ்ஸுதா₄ம் உபநிஷத் து₃க்₃தா₄ப்₃தி₄ மத்₄யோத்₃த்₄ருதாம்
ஸம்ஸாராக்₃நி விதீ₃பந வ்யபக₃த ப்ராணாத்ம ஸஞ்ஜீவநீம் |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் ப₃ஹுமதி வ்யாகா₄த தூ₃ரஸ்தி₂தாம்
ஆநீதாம் து நிஜாக்ஷரை : ஸுமநஸ: பௌ₄மா: பிப₃ந்து அந்வஹம்
 ||இரண்டாவது மங்கள ஸ்லோஹம்-

ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||

யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந   தர்சிதா:
வரம் ஸுதர்சனார்யம் தம் வந்தே கூர குலாதிபம்-ஸ்ருத  ப்ரகாசிகா பட்டருடைய தனியன்:

————————-

ஸித்த த்விகம் பார்த்துள்ளோம் -ஸாத்ய த்விகம் பார்க்கப் போகிறோம் –

முதல் அதிகரணம் -ததந்திர பிரதிபத்த்ய அதிகரணம் -7 ஸூத்ரங்கள் –
ஜீவன் இந்த உடலை விட்டு கிளம்பும் பொழுது
பஞ்ச பூதங்களுடன் கூடிய சூஷ்ம ரூபத்துடன் செல்வதை சாந்தோக்யம் -கருத்து நிரூபிக்கப்படுகிறது –

இரண்டாவது அதிகரணம் –க்ருதாத்ய யாதிகரணம்–4 ஸூத்ரங்கள்-
அனுபவிக்க வேண்டிய எஞ்சிய கர்ம பலன்களுடன் ஸ்வர்க்கத்தில் இருந்து ஜீவன் வருகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது-

மூன்றாம் அதிகரணம் –அநிஷ்டாதிகார்யாதிகரணம்-10- ஸூத்ரங்கள்–
பாபம் செய்தவர்கள் சந்திர மண்டலம் செல்வது இல்லை என்பது நிரூபிக்கப் படுகிறது-

நான்காவது அதிகரணம் –தத் ஸ்வா பாவ்யாபத்த்யதிகரணம் – 1 ஸூத்ரம்-
மேலே கிளம்பிய ஜீவன் ஆகாசம் போன்றவற்றுடன் தொடர்பு மட்டுமே அடைகின்றான் என்று நிரூபிக்கப் படுகிறது

ஐந்தாம் அதிகரணம் -நாதிசிராதி கரணம்- 1 ஸூத்ரம்-
ஆகாசம் போன்றவற்றில் ஜீவன் சிறிது காலமே தங்கி விட்டுக் கிளம்புகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –

ஆறாவது அதிகரணம் -அந்யா திஷ்டிதாதி கரணம் -4-ஸூத்ரங்கள்–
மற்ற ஜீவன்களுடன் தொடர்பு மட்டும் கொள்கின்றான் என்கிறதாயிற்று-

3-1-1-தத₃ந்தரப்ரதிபத்த்யதி₄கரணம் –மூன்றாம் அத்யாயத்தின் அறிமுகம் -ஸங்கதி –
ப்ரஹ்ம ஸூத்ரங்கள் என்ற நூலில் 4 அத்யாயங்கள் உள்ளன –ஸமந்வய, அவிரோத, ஸாதந, பல அத்யாயங்கள் என்று. அதில் முதல் இரண்டு அத்யாயங்களும் சேர்த்து ஸித்₃த₄ த்₃விகம் என்று அழைக்கப் படுகின்றன, ஸித்தமான (தயாரான) பொருளான ப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தையும், அவர் தான் ஜகத் காரணம் என்பதையும், மோக்ஷம் அடைவதற்கு அவரைத் தான் உபாஸிக்க வேண்டும் என்பதையும் சொல்வதால். இனி மேலுள்ள இரண்டு அத்யாயங்களும் சேர்த்து ஸாத்₄ய த்₃விகம் என்று அழைக்கப் படுகின்றன–ஸாதிக்கப் பட வேண்டிய(செய்யப் பட வேண்டிய) பொருள்களைப் பற்றிப் பேசுகிற படியால். அதில் மூன்றாம் அத்யாயத்தில் மோக்ஷம் அடைவதற்கான உபாயமான (வழியான) உபாஸநம் என்பதைப் பற்றிஆராய்கிறார் வ்யாஸர். நான்காம் அத்யாயத்தில் அடையப்படுகிற மோக்ஷத்தின் தன்மைகளை ஆராய்கிறார்–
இந்த மூன்றாம் அத்யாயத்தில் 4 பாதங்கள் உள்ளன–வைராக்₃ய பாதம், உப₄யலிங்க₃ பாதம், குண உப ஸம்ஹார பாதம் மற்றும் அங்க₃பாதம். இந்த நான்கு பாதங்களின் பொருளையும் சுருக்கமாக ஸ்வாமி வேதாந்த தேசிகன் தன்னுடைய அதிகார ஸாரா வலீ என்னும் நூலில் காட்டுகிறார்

பாதா₃ப்₄யாம் அத்ர பூர்வம் ஜநயதி ப₄விநாம் ப்₃ரஹ்ம வித்₃யாதி₄காரம்
பஶ்சாத் தேஷாம் உபா₄ப்₄யாம் வத₃தி ப₃ஹுவித₄தாம் தாம் அசேஷ꞉ ஸஹாங்கை ₃꞉ ।
ஐஶ்வர்யாதௌ விரக்திம் நிரவதி₄விப₄வே புருஷே சாபி₄லாஷம்
வித்₃யா பே₄தா₃வலம்ப₃ம் தது₃பகரண மப்யாஹ பாதை ₃꞉ க்ரமேண ॥

உபாஸநம் செய்வதற்கு அடிப்படைத் தகுதி–உலக விஷயங்களில் வைராக்யம் (பற்றின்மை ) மற்றும் பரமாத்மாவிடம் மிகுந்த ஆசை (பக்தி). இவை இரண்டையும் ஏற்படுத்துவதற்காகத் தான் முதல் பாதத்தில் ஸம்ஸாரத்தில் இருக்கும் ஜீவாத்மா வெவ்வேறு நிலைகளில் படக் கூடிய துன்பங்களையும், இரண்டாவது பாதத்தில் பகவானுடைய பெருமைகளையும் வ்யாஸர் கூறுகிறார். அதற்கு மேல் மூன்றாவது பாதத்தில் உபாஸநம் செய்வதில் உள்ள வெவ்வேறு முறைகளையும் நான்காவது பாதத்தில் உபாஸநத்துக்குத் தேவையான அங்கங்களையும் விவரிக்கிறார்.

3-1-1-தத₃ந்தர ப்ரதிபத்த் யதி₄கரணம் -அதிகரணத்தின் பின்புலம் ––இந்த அதிகரணத்தில் ஓர் ஆத்மா ஓர் உடலை விட்டு, வேறொரு உடலுக்குச் செல்லும் நிலம் ஆராயப் படுகிறது.
ஸந்தேஹம்– உடல் என்பது ஐம் பூதங்களால் ஆக்கப் பட்டது. பூத ஸூக்ஷ்மங்கள் அதாவது ஐம் பூதங்களில் நுண்ணிய பகுதிகளால் தான் அது உண்டாக்கப் பட வேண்டும். எனவே , ஜீவாத்மா ஓருடலிலிருந்து மற்றொரு உடலுக்குச் செல்லும் போது, அந்த உடலை உண்டாக்கத் தேவையான பூத ஸூக்ஷ்மங்களைத் தன்னோடு எடுத்துச் செல்கிறாரா? அல்லவா? என்பது தான் இந்த அதிகரணத்தில் உள்ள ஸந்தேஹம்-

பூர்வ பக்ஷம்– பூத ஸூக்ஷ்மங்கள் இல்லாமல் தனியாகத் தான் செல்கிறார் ஜீவாத்மா. ஏனெனில், அவர் எந்த இடத்தில் போய் சேருகிறாரோ , அங்கேயே பூத ஸூக்ஷ்மங்கள் இருக்கப் போகின்றன, அவற்றைக் கொண்டே புது உடலை உண்டாக்கி விடலாம்.அதனால் முன் உடலிலிருந்து பூத ஸூக்ஷ்மங்களைச் சுமந்து செல்லத் தேவை யில்லை

ஸித்தாந்தம்– ஜீவாத்மா பூத ஸூக்ஷ்மங்களை எடுத்துக் கொண்டு தான் செல்கிறார் என்று இந்த அதிகரணத்தில்உள்ள 7 ஸூத்ரங்களால் வ்யாஸர் நிரூபிக்கிறார்.
1–தத₃ந்தர ப்ரதி பத்தௌ ரம்ஹதி ஸம் பரிஷ்வக்த: ப்ரச்ந ப்ரதிவசநாப்₄யாம்(நிரூபணாப்யாம் )
தத₃ந்தர ப்ரதி பத்ததௌ
–வெவ்வேறு உடலை அடையும் பொழுது–தத் என்றால்’அது’ என்று பொருள்.
முன் அதிகரணத்தில் ’ஸம்ஜ்ஞா மூர்தி க்லிப்தி’ (நாம ரூப வியாக்ரணம் -பெயர் உருவம் கொடுத்தல் )என்ற ஸூத்ரத்தில் மூர்த்தி என்ற சொல்லால் ’உடல்’ குறிக்கப்பட்டது. அதைத் தான் இவ் விடத்தில் அது என்று நினைவு கூறுகிறார். ஆகவே , தத்= உடல்; ததந்தரம்= வெவ்வேறு உடல்; பிரதிபத்தி= அடைதல். அப்பொழுது–
ஸம் பரிஷ்வக்த:
– பூத ஸூக்ஷ்மங்களை (அணைத்துக் கொண்டு )அழைத்துக் கொண்டு (எடுத்துக் கொண்டு) ரம்ஹதி–(ஜீவாத்மா) செல்கிறார்
ப்ரச்ந ப்ரதிவசநாப்₄யாம் – கேள்வி பதில்களால் (நிரூபணாப்யாம் )-

பஞ்ச அக்நி வித்யை – சாந்தோக்ய உபநிஷத்தின் 5 ஆவது அத்யாயத்தில் பஞ்சோக்₃நி வித்₃யா என்பது வருணிக்கப் பட்டுள்ளது. அதிலிருக்கும் கேள்வி பதில்களைத் தான் இங்கு வ்யாஸர் குறிப்பிடுகிறார்
ச்வேத கேது என்பவன் (ஆருணி என்றும் இவர் பெயர் ) பாஞ்சால தேசத்து அரசனான ப்ரவாஹணனுக்குச் சில வைதிக கர்மங்களைச் செய்து வைப்பதற்காகச் சென்ற போது அவர் இவனிடம் 5 கேள்விகள் கேட்டார். அவனுக்குப் பதில் தெரியாததால் தன் தந்தையிடம் (கௌதமர் இவர் தகப்பனார் )வந்து அவன் கேட்க, அவரும் பதில் தெரியாமல் ப்ரவாஹணரிடமே சென்று விடை கேட்டார். அப்போது பஞ்சோக்₃நி வித்₃யா என்பதை ப்ரவாஹணர் உபதேசித்தார். அந்த ஐந்து கேள்விகள்-
1-வைதிக கர்மங்களைச் செய்பவர்கள் எந்தப் பாதையால் ஸ்வர்கத்தை அடைகிறார்கள்?
2-அவர்கள் எந்தப் பாதையால் திரும்பவும் பூ லோகத்தில் வந்து பிறக்கிறார்கள்?
3–தேவ யானம் பித்ரு யானம் என்ற இரண்டு பாதைகளுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
4-யாரெல்லாம் ஸ்வர்க லோகத்தை அடைவதில்லை ?
5–ஜலமானது ஐந்து ஆஹுதிகளுக்குப் பிறகு எப்படி ’மனிதன்’ என்றழைக்கப்படும் உடலாக மாறுகிறது?
இதில் ஐந்தாவது கேள்வியும் அதற்கான பதிலும் தான் நமக்கு இப்போது தேவையானவை

அக்நி என்ற உருவகப் படுத்தப்பட்ட ஐந்து பொருள்களில் ஜலத்தை ஆஹுதியாகக் கொடுக்கக் கொடுக்க அது பல மாறுபாடுகளை அடைந்து இறுதியில் மனித உடலான கர்பமாக மாறுகிறது என்று ப்ரவாஹணர் பதில் கூறினார். இது தான் பஞ்சோக்₃நி வித்₃யா என்று அழைக்கப் படுகிறது. இறுதியில் மனித உடல் உண்டாகிற படியால், அதற்குத் தேவையான பூத ஸூக்ஷ்மங்களை எடுத்துக் கொண்டு தான் ஜீவாத்மா இந்த ஐந்து நிலைகளையும் கடக்கிறார் என்று கேள்வி-பதில்களைக் கொண்டு நாம் அறிய முடிகிறது.

ஹோமப் பொருள் ஸ்ரத்தா-(பூத சூஷ்மங்களுடன் கூடிய ஜீவாத்மா)-அக்னி -ஸ்வர்க்கம் -மாற்றம் -ஸோமராஜா -அழகிய உடல்
ஹோமப் பொருள் -சோமராஜா -அக்னி -மேகம் -மாற்றம் -மழை –
ஹோமப் பொருள் -மழை -அக்னி -பூமி – -மாற்றம் -அன்னம் -சோறு
ஹோமப் பொருள் –அன்னம் -அக்னி -ஆண் -மாற்றம் -ரேதஸ் விந்து –
ஹோமப் பொருள் -ரேதஸ் -அக்னி -பெண் -மாற்றம் -கர்ப்பம் -மனித உடல் –

ஜீவாத்மா அடுத்த உடலுக்குப் பூத ஸூக்ஷ்மங்களை எடுத்துச் செல்கிறாா்–புலன்களும் பூத ஸூக்ஷ்மங்களும் செல்கின்றன -ஒரு ஜீவாத்மா ஓரு உடலை விட்டு வேறொரு உடலுக்குச் செல்லும் போது, அந்த உடலை உண்டாக்கத் தேவையான பூத ஸூக்ஷ்மங்களை எடுத்துக் கொண்டு செல்கிறாரா? இல்லையா ? என்கிற ஆராய்ச்சி செய்யப் படுகிறது. சாந்தோக்ய உபநிஷத்திலுள்ள பஞ்ச அக்நி வித்யையில் ப்ரவாஹணர் ஸ்வேத கேதுவுக்கும் அவருடைய தந்தைக்கும் உபதேசிக்கும் போது, இந்த உடலிலிருந்து பிரிந்த ஜீவாத்மா ஸ்வர்கம்,மேகம், பூமி, ஆண், பெண் என்ற ஐந்து அக்நிகளில் ஆஹுதியாகக் கொடுக்கப்பட்டதும் மனித உடலை அடைகிறார் என்று கூறுவதால், கண்டிப்பாக அந்த உடலை உண்டாக்கத் தேவையான பூத ஸூக்ஷ்மங்களையும் எடுத்துக் கொண்டு தான் அவர் சென்றிருக்க வேண்டும் என்று முதல் ஸூத்ரத்தில் வ்யாஸர் நிரூபித்தார். இனி மேலுள்ள ஸூத்ரங்களைப் பார்ப்போம்.

பூர்வ பக்ஷியின் கேள்வி–ப்ரவாஹணரின் கேள்வியில் “ஜலம் ஐந்து ஆஹுதிகளுக்குப் பிறகு எப்படி மனிதனாக மாறுகிறது என்று தெரியுமா?” என்று தானே உள்ளது. ஜலத்தை மட்டும் தானே குறிப்பிட்டு்கிறார். பிறகு எப்படி எல்லாப் பூத ஸூக்ஷ்மங்களையும் எடுத்துச் செல்வதாகக் கொள்ள முடியும்?
வ்யாஸரின் பதில் அடுத்த ஸூத்ரத்தில்–2-திரியாத் மகத் வாத் து பூ₄யஸ்த்வாத்
–“மூன்றின் வடிவமானதால்; அதிகமானதால்”
முன் அதிகரணத்தில் சொன்ன படிக்கு, ஐம்பூதங்களையும் படைத்த பிறகு பகவான் அவற்றைக் கலந்து பஞ்சீகரணம் என்ற செயலைச் செய்கிறார். அதனால் ஒவ்வொரு பூதமுமே ஐம் பூதங்களின் வடிவமாகத் தான் உள்ளது. எனவே இங்கு ஜலம் என்று குறிப்பிடப் பட்டதும் ஐம் பூதங்களின் பூத ஸூக்ஷ்மங்களும் தான்.(பஞ்சீகரணத்துக்கு உப லக்ஷணம் -பஞ்சாத்மகத்வாத் என்றே கொள்ள வேண்டும்)
-பிறகு ஏன் அதை மற்ற பெயர்களால் குறிப்பிடாமல் ’ஜலம்’ என்று குறிப்பிடுகிறார்? அதிகமான பகுதி ஜலமான படியால். உண்டாக்கப்படும் மனித உடலிலும் ஜலம் தானே பெரும்பாலும் உள்ளது

3– ப்ராண க₃தே : ச – “ப்ராணன்கள் (புலன்கள்) செல்வதாலும்”;
இதில் வேறொரு காரணம் காட்டுகிறார். -ஜீவன் உடலிலிருந்து புறப்படும் பொழுது மூச்சுக் காற்றையும் புலன்களையும் எடுத்துச் செல்கிறார் எனப்படுகிறது. புலன்களை மட்டும் எடுத்துச் செல்ல இயலாதாகையால், அவற்றுக்கு இருப்பிடமான பூத ஸூக்ஷ்மங்களையும் சேர்த்துத் தான் எடுத்துச் செல்ல வேண்டும், காற்று புஷ்பத்தின் துகள் களோடு மணத்தை எடுத்துச் செல்வது போல்.(கீதையிலும் இதே போல் அருளிச் செய்துள்ளார்)

ஸ்ரீ கீதை 15-7/8–மன ஷஷ்டானி இந்த்ரியாணி பிரகிருதி ஸ்தானி கர்ஷதி சரீரம் யத் அவாப் நோதி யத் ச அபி உக்த்க்ரமாதீச்வர க்ரஹீத்வைதானி சம்யாதி வாயுர் கந்தா நிவாசயாத் – என்று காற்று மலர்களில் உள்ள நறு மணத்தை கவர்ந்து செல்வது போலே ஜீவன் அனைத்தையும் எடுத்துச் செல்கிறான்-இவற்றுக்கு ஆஸ்ரயமாக பூத ஸூஷ்மங்களும் கூட செல்கின்றன –

புலன்கள் அழிகின்றனவா? செல்கின்றனவா?
கேள்வி
–வேதத்தில், ஒருவன் மரணமடையும் பொழுது புலன்கள் அழிந்து போகின்றன என்று தான் சொல்லப் படுகிறது. (யத்ர அஸ்ய புருஷஸ்ய ம்ருதஸ்ய அக்₃நிம் வாக்அப்யேதி, வாதம் ப்ராண :, சஷுஸ் : ஆதி₃த்யம்) அதாவது“ஒரு மனிதன் மரணம் அடையும் பொழுது அவனுடைய வாக்(பேச்சுப் புலன்) நெருப்பில் லயம் அடைகிறது (அழிந்து போகிறது), மூச்சு காற்றில் சேர்கிறது, கண் ஸூர்யனிடம் லயம் அடைகிறது” என்றுள்ளது. எனவே , ஜீவாத்மா வேறொரு உடலுக்குச் செல்லும் பொழுது புலன்களையும் எடுத்துச் செல்கிறார் என்பது தவறு.

வ்யாஸரின் பதில்–அடுத்த ஸூத்ரத்தில்
4–அக்₃ந்யாதி₃ க₃தி ச்ருதே : இதி சேத் ந பா₄க்தத்வாத்
அக்₃ந்யாதி₃க₃திச்ருதே
: – புலன்கள் அக்நி முதலானவற்றில் லயம் அடைவதாக வேதம் சொல்வதால்
இதி சேத் ந–என்று நீங்கள் கூ₂றினால், அது தவறானது
பா₄க்தத்வாத்– இந்த வாக்யம் நேரடிப் பொருளைக் குறிக்காமல் வேறொரு அர்த்தத்தில் சொல்லப் பட்டு்ள்ளபடியால்.

இதே இடத்தில் (ஓஷதீ₄: லோமாநி, வநஸ்பதீந் கேசா 🙂 அதாவது “உடலிலிருக்கும் முடிகள் செடி கொடிகளைச் சென்றடைகிறது, தலையிலிருக்கும் முடிகள் மரங்களில் லயம் அடைகின்றன” என்றும் கூறப்பட்டு்ள்ளது. அது கண்டிப்பாக நேரடியான பொருளில் கூறப் பட்டிருக்க முடியாது, அப்படி எதுவும் நடக்காததால். எனவே , இந்தப் பகுதி முழுவதுமே அதி₄ஷ்டா₂த்ரு தே₃வதா அபக்ரமணம் என்ற பொருளில் தான் உள்ளது. -அதாவது, உடலிலிருக்கும் ஒவ்வொரு பகுதிக்கும் வலுவூட்டக் கூடிய தெய்வங்கள் உள்ளார்கள் . நெருப்புக்கான கடவுள் பேச்சுப் புலனையும், காற்றுத் தேவதை மூச்சுக் காற்றையும் , ஸூர்யனுக்கான தேவதை கண்ணையும், செடி கொடிகளின் தேவதை உடல் முடிகளையும், மரங்களுக்கான அபிமாநிநீ தேவதை தலை முடியையும் பாதுகாக்கிறார்கள் ஒருவன் மரணமணடயும் போது, பேச்சுப் புலனை இதுவரை காத்து வந்த தெய்வம், இனி அதற்குத் தேவை இல்லாதலால், அக்நிக்கு மட்டும் தெய்வமாக இருக்கும். அதைத் தான்“பேச்சுப் புலன் அக்நியில் சேர்கிறது” என்று வேதம் கூறுகிறது. அதே போல் தான் மற்ற இடங்களிலும் புரிந்து கொள்ள வேண்டும். எனவே , புலன்கள் அழிவதில்லை , ஜீவாத்மாவால் தான் அடுத்த உடலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறார்.

ஸ்ரத்தா என்றால் என்ன?
கேள்வி
–ப்ரவாஹணரின் கேள்வியில்-’ஜலம் ஐந்து ஆஹுதிகளுக்குப் பிறகு எப்படி மனித உடலாக ஆகிறது?’ என்று ஜலத்தை (பூத ஸூக்ஷ்மங்களை ) பற்றின பேச்சு இருந்தாலும், ஆஹுதிகணை ஒவ்வொன்றாகச் சொல்லும் பொழுது, முதல் ஆஹுதியில் ’ஸ்ரத்₃தா₄’ என்ற பொருள் தான் ஸ்வர்கம் என்ற அக்நியில் ஆஹுதியாகக் கொடுக்கப் படுவதாகச் சொல்லப் பட்டு்ள்ளது. ஸ்ரத்தா என்றால் ஈடுபாடு-நம்பிக்கை என்கிற எண்ணம் தான் -ஆகவே , ஜீவாத்மா பூத ஸூக்ஷ்மங்களை எடுத்துச் செல்வதாக எப்படிச் சொல்ல முடியும்? வியாஸரின் பதில்–அடுத்த ஸூத்ரத்தில்

5– ப்ரத₂மே அஶ்ரவணத் இதி சேத் நதா: ஏவ ஹி உபபத்தே :
ப்ரத₂மே அஶ்ரவணத்
-முதல் ஆஹுதியில், ஜலம் (பூத ஸூக்ஷ்மங்கள் )வேதத்தில் சொல்லப்படாதபடியால்
இதி சேத் ந–என்று நீங்கள் சொன்னால், அது தவறு
தா: ஏவ ஹி–அந்த பூத ஸூஷமங்கள் தானன்றோ (ஸ்ரத்₃தா₄ என்ற சொல்லால் குறிக்கப் படுகின்றன)
உபபத்தே :– (அப்போது தான் கேள்வியும் பதிலும்) பொருந்துகிற படியால்
முதலில் ப்ரவாஹணரின் கேள்வியில் ’ஜலம் மனித உடலாக மாறுகிறது’ என்றுள்ளது. பதிலின் முடிவிலும் ’இவ்வாறு ஜலம் மனித உடலாக மாறுகிறது’ என்றுள்ளது. எனவே நடுவில்’ ஸ்ரத்தா என்ற பொருள் ஐந்து ஆஹுதிகளைத் தாண்டி மனித உடலாக மாறுகிறது’ என்று சொல்லப்பட்டாலும், அந்த ஸ்ரத்தா என்பது ஜலம் (பூத ஸூக்ஷ்மங்கள் ) என்று தான் கொள்ள வேண்டும். இல்லா விட்டால், கேள்விக்கும் பதிலுக்கும் பொருத்தமே இல்லாமல் போய் விடும்.
மேலும் வேதத்தில் வேறொரு இடத்தில்“ஸ்ரத்₃தா₄ வை ஆப:” அதாவது ’ஜலம் அன்றோ ஸ்ரத்தா என்று சொல்லப் படுகிறது’ என்று தெளிவாகவே சொல்லப்பட்டு்ள்ளது. எனவே இங்கும் அதுவே பொருள் –

ஜீவாத்மா எங்கே சொல்லப் பட்டு்ள்ளார்? கேள்வி–ஸ்ரத்தா-ஜலம் என்று பூத ஸூக்ஷ்மங்கள் சொல்லப் பட்டு்ள்ளன. அவை ஐந்து ஆஹுதிகளைக் கடந்து மனித உடல் ஆகின்றன. ஆனால் இங்கு ஜீவாத்மாவைப் பற்றின பேச்சே இல்லையே ? பிறகு இதைக் கொண்டு எப்படி ஜீவாத்மா பூத ஸூக்ஷ்மங்களை எடுத்துச் செல்கிறார் என்று கூற முடியும்? வ்யாஸரின் பதில்-
6-அஸ்ருத்த்வாத் இதி சேத் ந இஷ்டாதி₃காரிணாம் ப்ரதீதே : ச-•
அஸ்ருத்த்வாத்
–ஜீவாத்மா இங்கு சொல்லப் படாதபடியால் இதைக் கொண்டு முடிவு செய்ய இயலாது
இதி சேத் ந–என்று நீங்கள் சொன்னால் அது தவறானது
இஷ்டாதி₃காரிணாம் ப்ரதீதே ச:-யாகம் முதலானவற்றைச் செய்பவர்கள் என்றும் சொல்லப் படுகிற படியால்-அறிந்து கொள்ளலாம்-

இதே பஞ்சாக்நி வித்யையில்(அத₂ ய இமே க்₃ராமே இஷ்டா பூர்தே த₃த்தம் இத் யுபாஸதே தே தூ₄ம மேவ அபி₄ஸம்ப₄வந்தி… ஆகாசாத் சந்த்₃ரமஸம், ஏஷ ஸோமோ ராஜா) அதாவது “யாரெல்லாம் உலகத்தில் இஷ்டம்(தேவர்களுக்குச் செய்யும் யாகம் ஹோமம் முதலானவை ), பூர்தம் (மனிதர்களுக்காகச் செய்யும் மரம் நடுதல், குளம் வெட்டுதல் முதலானவை ), த₃த்தம் (தானம் செய்தல்) முதலானவற்றைத் தொடர்ந்து செய்கிறார்களோ அவர்கள் இந்த உடலை விட்டு புகை மண்டலம் இரவுக்காக தேவதை மூலமாகஆகாசம், சந்த்ரன் மூலமாக ஸ்வர்கத்தை அடைந்து ஸோம ராஜாவாக (அழகான உடலை உடையவராக) ஆகிறார்” என்றுள்ளது.

ஒரு இடத்தில் “ ஸ்ரத்தா என்பது ஸ்வர்கத்தில் ஆஹுதியாகக் கொடுக்கப்பட்டு ஸோமராஜாவாக ஆகிறது” என்றும், மற்றொரு இடத்தில் “யாகம் முதலானவற்றைச் செய்த ஜீவாத்மா ஸ்வர்கத்தை அடைந்து ஸோம ராஜாவாக ஆகிறார்” என்றும் சொல்லப் பட்டு்ள்ளபடியால், இங்கு ஸ்ரத்தா எனப்படுவதும் வெறும் பூத ஸூக்ஷ்மங்களை அல்ல, அவற்றோடு கூடின ஜீவாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்.

ஸ்ரத்தா, ஸோமராஜா, மழை , அந்நம், ரேதஸ், கர்பம் என்று ஒவ்வொரு நிலையிலும் வெறும் பூத ஸூக்ஷ்மங்கள் சொல்லப் பட வில்லை , அந்தந்த நிலையில் உள்ள பூத ஸூக்ஷ்மங்களை உடலாகக் கொண்ட ஜீவாத்மா தான் சொல்லப் படுகிறார்.

(சாந்தோக்யம் -5-10-3-அத ய இம க்ராமே இஷ்டாபூர்த்தா தத்தம் இதி உபாசதே தே தூமம் அபி சம்பவந்தி –குளம் வெட்டுதல் போன்ற -புண்யம் செய்து மார்க்கம் வழியாக ஸ்வர்க்கம் செல்கிறார்கள் –-இதை முடிக்கும் பொழுது -5-10-4/5- பித்ரு லோகன் ஆகாசம் ஆகாசாத் சந்த்ரமசம் ஏஷ சோமோராஜா தத் தேவா நாமந்தம் தம் தேவா பஷயந்தி தஸ்மின் யாவத் சம்பாதம் அத ஏவம் எத அத்வானம் புன நிவர்த்தந்தே
யோ யோ ஹி அந்தமத்தி யோ யோ ரேத சிஞ்சதி தத் பூய ஏவ பவதி-என்று-பித்ரு லோகம் -ஆகாயம் -சந்திர மண்டலம் -சோமராஜா வாகிறான் அங்கு உணவாகிறான்)

ஸ்வர்கம் செல்லும் ஜீவாத்மாவின் நிலை கேள்வி–இங்கு ஸோம ராஜா என்று சொல்லப்பட்டவர் ஜீவாத்மாவாக இருக்க முடியாது. ஏனெனில் (ஏஷ ஸோமோ ராஜா, தத் தே₃வாநாம் அந்நம், தம் தே₃வா: ப₄க்ஷயந்தி) அதாவது “ஸோம ராஜா என்பது தேவர்களின் அந்நம் (உணவு), அதை தேவர்கள் உண்ணுகிறார்கள் ” என்று ப்ரவாஹணர் உபதேசிக்கிறார். ஜீவாத்மாவை உண்ண முடியாதே ?வ்யாஸரின் பதில்–அடுத்த(கடைசி) ஸூத்ரத்தில்

7–பா₄க்தம் வா அநாத்ம வித்த்வாத் ததா₂ ஹி த₃ர்ஸயதி
பா₄க்தம் வா
–“உருவகம் தான்”. உணவு- உண்கிறார்கள் என்றது நேரடியான பொருளிலல்ல, உருவகமாக. உணவு எப்படி ஒருவனுக்குத் திருப்தியை அளிக்குமோ அது போல் ஸ்வர்கத்தை அடைந்த இந்த ஜீவாத்மா தேவர்களுக்குத் திருப்தி அளிக்கிறான் என்று தான் பொருள்
(ந வை தே ₃வா: அச்நந்திம் ந பிப₃ந்தி, ஏத்தே₃வ அம்ருதம் த்₃ருஷ்ட்வா த்ருப்யந்தி) அதாவது “தேவர்கள் உண்பதில்லை , பருகுவதில்லை , இதைப் பார்த்தே த்ருப்தி அடைகிறார்கள் ” என்று வேதமே காட்டுகிறது. அதனால், இங்கு நேரடியாக உண்பது சொல்லப் படாதபடியால் ஸோம ராஜா என்பது பூத ஸூக்ஷ்மங்களோடு கூடின ஜீவாத்மா தான்

அநாத்ம வித்த்வாத்–“ஆத்ம ஜ்ஞாநி அல்லாத படியால்”. ஸ்வர்கத்தை அடையும் இந்த ஜீவாத்மா சிறந்த ஆத்ம ஜ்ஞாநியோ ,பரமாத்மாவை உபாஸிப்பவனோ அல்ல. உலகத்தில் இஷ்டம் பூர்தம் த₃த்தம் முதலானவற்றைச் செய்தவன் தான். அதனால் அவன் ஸ்வர்கத்தை அடைந்து, அங்கு தேவர்களுக்கு ஒரு கருவி போல் -உதவியாளனாக இருந்து தொண்டு செய்து த்ருப்தியை ஏற்படுத்துகிறான் என்று சொல்வதில் எந்த முரண்பாடும் இல்லை-
ததா₂ ஹி த₃ர்ஸயதி–“அவ்வாறு அன்றோ வேதம் காட்டுிறாது”.
(யதா₂பசு: ஏவம் ஸ: தேவாநாம்₃) அதாவது “எப்படி ஒரு விலங்கோ அது போல் தான் அவன் தேவர்களுக்கு” என்று இவன் தேவர்களுக்கு ஒரு கருவியாக இருப்பதை வேதமே காட்டுகிறது. அதனால் இந்தப் பொருள் பொருத்த முடையதே .-

(ப்ரஹ்மத்தை பற்றி அறிவில்லாத காரணத்தால் அந்த அதிகாரிகள் தேவர்களுக்கு உணவாகிறார்கள்
வா -என்கிற பதம் இத்தைக் காட்டும்-ப்ருஹத் உபநிஷத் -1-4-10-யதா பசு ஏவம் ச தேவா நாம் –
மனிசர்களுக்கு பசு உணவாவது போலே தேவர்களுக்கு இவர்கள் உணவாகிறார்கள்-இத்தையே ஸ்ரீ கீதை -7-23–தேவான் தேவ யஜோ யாந்தி மத்பக்தா யாந்தி மாம்பி –-ஆக தேவர்களுக்கு பணிவிடை செய்வார்கள் என்ற கருத்து-இதனையே சாந்தோக்யம் -3-6-1-ந வை தேவா அச்நந்தி ந பிபந்தி எதத் ஏவ அம்ருதம் த்ருஷ்ட்வா த்ருப்யந்தி -என்றபடி-தேவர்கள் உண்ணாமல் பருகாமல் –அமிர்தத்தை கண்களால் பார்த்த படி மகிழ்ந்து இருப்பார்கள் மன நிறைவும் அடைவார்கள்)

ஆக, பஞ்சாக்நி வித்யையில் உள்ள கேள்வி பதில்களின் மூலம், ஒ்ரு உடலை விட்டு வேறொரு உடலுக்குச் செல்லும் ஜீவாத்மா, பூத ஸூக்ஷ்மங்களையும் எடுத்துக் கொண்டு தான் செல்கிறாா் என்பது நிரூபிக்கப் பட்டது.

இந்த பஞ்ச அக்னி வித்யையில் ப்ரக்ருதியை விட வேறுபட்ட பரிசுத்த ஆத்ம ஸ்வரூபத்தை
ப்ரஹ்மாத்மகமாகவே உபாஸிக்க வேண்டும் என்று கருத்துஇவ் வித்யைக்குப் பலம் ஸ்வ ஆத்ம அனுபவத்துடன் கூடிய பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவம்-மதுவித்யா நிஷ்டனுக்கு வஸூவாதி பத பிராப்தி இடைப்பட்ட பலன் போல் இவனுக்கு ஸ்வ ஆத்ம அனுபவம்-இங்கு ஸ்வாமி தேசிகன் –
தேவ லோகம் -மேகம் -ப்ருத்வீ புருஷன் ஸ்த்ரீ என்று ஐந்து அக்னிகளைக் கல்பித்து
அவற்றில் ஸ்ரத்தை என்னும் பூத ஸூஷ்மம் க்ரமமாக பரிணாமம் அடைந்து
சோமன் மழை அன்னம் ரேதஸ் என்ற ஹவிஸ்ஸை ஜீவனுடன் தேகத்தில் உள்ள ப்ராணன்கள்
ஹோமம் செய்கின்றன -என்பது பஞ்ச அக்னி வித்யை என்று
த்யவ் பர்ஜன்யோ அத ப்ருத்வீ ஜூஹ்வதீதி ப்ரவீதி -என்ற ஸ்லோகத்தால் அருளிச் செய்கிறார்

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வில்லிவலம் அழகிய சிம்ஹர் ஸ்ரீ விஷ்ணு புராண வ்யாக்யானம்-

June 12, 2026

ஸ்ரீவிஷ்ணு புராணத்தை அளித்து உபகாரம் செய்த ஸ்ரீ பராசர பகவானை ஆளவந்தார் வணங்குகிறார்.

தத்வேந யஶ்சிதசிதீஶ்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க்க ததுபாய கதீருதார: |
ஸந்தர்ஶயந் நிரமிமீத புராண ரத்நம்
தஸ்மை நமோ முநிவராய பராஶராய ||-
-ஶ்லோகம் 4 –

ரிஷிகளில் தலை சிறந்தவரான, உதார குணத்தை உடையவரான பராசர ரிஷிக்கு என் வணக்கங்கள்.
இவரே சித் (ஆத்மாக்கள்), அசித் (அசேதனப் பொருட்கள்), ஈச்வரன், இவர்களுடைய தன்மைகள்,
இவ்வுலக இன்பங்கள், மோக்ஷம், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அடையும் வழி,
ஆத்மாக்களால் அடையப்படும் குறிக்கோள் ஆகியவற்றை உள்ளபடி, புராணங்களில் ரத்னமான
ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவர்.

————- 

ப்ராஸ்ய -உதீஸ்ய -தஷிணாத்ய–பாஸ்சாத்ய சர்வ சிஷ்டை -சர்வ தர்ம -சர்வ தத்வ -வ்யவஸ்தாயாம் –
இதமேவ பர்யாப்தம்–இதயவிகீத பரிக்ருஹீதம்-ஸ்ரீ வைஷ்ணவம் ச புராணம்
ஜெந்மாத் யஸ்ய யத -இதி ஜகத் ஜென்மாதி காரணம் ப்ரஹ்மேத் யவகம் யதே –
தது ஜென்மாதி காரணம் கிமதி ப்ரஸ்ன பூர்வகம் -விஷ்ணோ சாகாசாதுத் பூதம் -இத்யாதிநா
ப்ரஹ்ம ஸ்வரூப விசேஷ ப்ரதிபாதந ஏக பரதயா ப்ரவ்ருத்தம் இதி சர்வ சம்மதம் ததாததத்ரைவ
ப்ரக்ருதிர்யா மயாக்யாதா வ்யக்தா வ்யக்த ஸ்வரூபிணீ
புருஷஸ் சாப்யுபாவேதவ லீயதே பரமாத்மநி
பரமாத்மா ச ஸர்வேஷாம் ஆதார பரமேஸ்வர
விஷ்ணு நாமாச வேதேஷு வேதாந்ததேஷு ஸகீயதே -இதி
-( என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் தலைக் கட்டி அருளுகிறார் )

சர்வ வேத வேதாந்ததேஷு சர்வைஸ் சப்தைஸ் பரம காரண தயா அயமேவ கீயதே இத்யர்த்த –வேதார்த்த ஸங்க்ரஹம் –114-

கிழக்கு வடக்கு தெற்கு மேற்கிலுள்ள சான்றோர்கள் யாவரும் நன்னெறிகளை தத்வங்கள் இவற்றை நிலை நாட்டுகையில் உயர்ந்த மஹான்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஸ்ரீ விஷ்ணு புராணத்தில்
பிறப்பிக்கக் காரணமானது எது என்று ஆராய்கையில் உலகின் காரணம் ப்ரஹ்மமே என்று நிறுவி அதுவே போதுமான காரணம் என்று கொள்ளப் பட்டது –
இவ் வுலகிற்குக் காரணம் எது என்ற கேள்விக்கு விடையிறுக்கும் முகமாக விஷ்ணுவிடமிருந்தே யாவும் உண்டாயின என்று ப்ரஹ்ம ஸ்வரூபத்தை அறுதியிட்டுக் காட்டவே இப் புராணம் தோன்றியது என்பது எல்லாராலும் ஏற்கப்பட்ட ஓன்று
அவ்வாறே அதைத் தலைக் கட்டுகையில்
மைத்ரேயா வெளிப்படை உள்ளுறையாயுள்ள எந்த மூலப்பிரக்ருதி என்னால் விளக்கப் பட்டதோ அதுவும் புருஷனும் பரமாத்மாவில் ஒடுங்குகின்றன
ஒப்பு மிக்கும் அற்ற பரமாத்மாவே எல்லாவற்றையும் தாங்குபவராகவும் ஏவுகின்றவனாகவும் இருக்கிறார் அவரே விஷ்ணு என்று வேத வேதாந்தங்களில் விளக்கப்பட்டு இருக்கிறது

இதனால் எல்லா வேதாந்தங்களிலும் உள்ள சொற்களின் படி அவனே காரணமாகிறான் என்பது பொருள்-

———-

ஸ்ரீ விஷ்ணு புராணம் 18 மகாபுராணங்களில் ஒன்றாகும். வேறு எந்த பெரிய புராணத்தையும் விட, 
விஷ்ணு புராணம் அதன் உள்ளடக்கங்களை 
பஞ்சலக்ஷண வடிவத்தில் வழங்குகிறது – 
சர்கா (பிரபஞ்சம்), 
பிரதிசர்கா  (அண்டவியல்), 
மன்வந்த்ரா-வம்சா (தெய்வங்கள், முனிவர்கள் மற்றும் மன்னர்களின் புராண மரபு),   ( அண்ட சுழற்சிகள்) மற்றும்  
வாமசாநுசரிதம் (புராணங்கள்)

ஆறு 
அம்சங்கள் (பாகங்கள்) மற்றும் 126 அத்யாயங்கள் (அத்தியாயங்கள்) உள்ளன. முதல் பாகம் 22 அத்தியாயங்களையும், இரண்டாம் பாகம் 16 அத்தியாயங்களையும், மூன்றாம் பகுதி 18 அத்தியாயங்களையும், நான்காவது பகுதி 24 அத்தியாயங்களையும் கொண்டுள்ளது. ஐந்தாவது மற்றும் ஆறாவது பகுதிகள் முறையே 38 மற்றும் 8 அத்தியாயங்களைக் கொண்ட உரையின் நீளமான மற்றும் குறுகிய பகுதியாகும்.
இதில் ஒவ்வொரு வசனமும் சரியாக 32 எழுத்துக்களைக் கொண்டுள்ளது, 

ஸ்ரீ விஷ்ணு புராணம் ஸ்ரீ மைத்ரேய முனிவருக்கும் அவரது குருவான ஸ்ரீ பராசரருக்கும்   இடையேயான உரையாடலாகத் தொடங்குகிறது  , முனிவர் “இந்த பிரபஞ்சத்தின் தன்மை மற்றும் அதில் உள்ள அனைத்தும் என்ன?”

விஷ்ணு புராணத்தின் முதல்  அம்சம்  (பகுதி)   பிரபஞ்சத்தின் உருவாக்கம், பராமரிப்பு மற்றும் அழிவைக் கையாளும் அண்டவியல் முன்வைக்கிறது. புராணம் சாம்க்யா தத்துவப் பள்ளியின் பரிணாமக் கோட்பாடுகளுடன் பின்னப்பட்டுள்ளது.

சிவன் அல்லது பிரம்மா அல்லது சக்தி தெய்வம் இருக்கும் சில புராணங்களைப் போலல்லாமல், இந்த உரையின் பிரபஞ்சவியலின் மையக் கூறுகளாக விஷ்ணு வழங்கப்படுகிறது. விஷ்ணுவின் பயபக்தியும் வழிபாடும் முதல் பாகத்தின் 22 அத்தியாயங்களில் முக்திக்கான வழிமுறையாக விவரிக்கப்பட்டுள்ளது, மேலும் விஷ்ணுவின் ஒத்த பெயர்களான ஹரி, ஜனார்தனா , மாதவா, அச்யுதா , ஹ்ரிஷிகேஷா மற்றும் பிறவற்றின் அபரிமிதமான பயன்பாடு. விஷ்ணு புராணத்தின் அத்தியாயங்கள் 1.16 முதல் 1.20 வரை  இரக்கமுள்ள மற்றும் விஷ்ணு பக்தரான பிரஹலாதன் மற்றும் அவனது அரக்க அரசன் தந்தை ஹிரண்யகசிபுவின் துன்புறுத்தலின்  புராணத்தை முன்வைக்கிறது   , இதில் பிரஹலாதன் இறுதியில் விஷ்ணுவால் காப்பாற்றப்படுகிறான். இந்தக் கதை மற்ற புராணங்களிலும் உள்ளது.

விஷ்ணு புராணத்தின் முதல் புத்தகத்தில் விஷ்ணு விவரிக்கப்பட்டுள்ளது   , அனைத்து கூறுகள், உலகில் உள்ள அனைத்து பொருட்கள், முழு பிரபஞ்சம், அனைத்து உயிரினங்கள், அத்துடன் ஆத்மா (ஆன்மா) ஒவ்வொரு உயிரினத்திலும், இயற்கை, புத்தி, ஈகோ, மனம், புலன்கள். , அறியாமை, ஞானம், நான்கு வேதங்கள் , உள்ளவை மற்றும் இல்லாதவை அனைத்தும்.

உரையின் இரண்டாம் பகுதி பூமி, ஏழு கண்டங்கள் மற்றும் ஏழு பெருங்கடல்கள் பற்றிய அதன் கோட்பாட்டை விவரிக்கிறது. இது மேரு மலை , மந்தாரா மலை மற்றும் பிற முக்கிய மலைகள், அத்துடன் பாரத-வர்ஷா (அதாவது, பாரத நாடு) அதன் ஏராளமான ஆறுகள் மற்றும் பலதரப்பட்ட மக்களையும் விவரிக்கிறது. ஏழு கண்டங்கள் ஜம்பு ,  பிளாக்ஷா ,  சல்மாலா ,  குஷா ,  க்ரௌஞ்சா ,  சாகா  மற்றும்  புஷ்கரம்  என்று பெயரிடப்பட்டுள்ளன , ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையான திரவங்களால் (உப்பு நீர், இளநீர், மது, கரும்புச்சாறு, தெளிக்கப்பட்ட வெண்ணெய், திரவ தயிர் மற்றும் பால்) சூழப்பட்டுள்ளன.

விஷ்ணு புராணத்தின் இந்த பகுதி   பூமி, கிரகங்கள், சூரியன் மற்றும் சந்திரனுக்கு மேலே உள்ள கோளங்களை விவரிக்கிறது. உரையின் இரண்டாவது புத்தகத்தின் நான்கு அத்தியாயங்கள் (2.13 முதல் 2.16 வரை) சன்னியாசியின் வாழ்க்கையை நடத்துவதற்காக தனது சிம்மாசனத்தைத் துறந்த பரத மன்னனின் புராணக் கதைகளை முன் வைக்கிறது, இது பாகவத புராணத்தின் பிரிவு 5.7 முதல் 5.14 வரை காணப்படும் புராணக் கதைகளைப் போன்றது.

விஷ்ணு புராணத்தின் மூன்றாவது புத்தகத்தின் ஆரம்ப அத்தியாயங்கள்   அதன்  மன்வந்தரங்கள் அல்லது மனு யுகங்கள் (ஒவ்வொன்றும் சுமார் 4.3 மில்லியன் ஆண்டுகள்) பற்றிய கோட்பாட்டை முன்வைக்கின்றன. எல்லாமே சுழற்சியானது,  யுகம்  (சகாப்தம், வயது) கூட ஆரம்பிக்கிறது, முதிர்ச்சியடைகிறது மற்றும் பின்னர் கரைந்துவிடும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இது முன்வைக்கப்படுகிறது. ஆறு மன்வந்தரங்கள், உரை கூறுகிறது, ஏற்கனவே கடந்துவிட்டது, தற்போதைய வயது ஏழாவதுக்கு சொந்தமானது. ஒவ்வொரு யுகத்திலும், உரை வலியுறுத்துகிறது, வேதங்கள் நான்காக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன, அது சவால் செய்யப்படுகிறது, இது ஏற்கனவே இருபத்தி எட்டு முறை நடந்துள்ளது. ஒவ்வொரு முறையும் , ஒரு வேத- வியாசர் தோன்றி, அவர் தனது மாணவர்களின் உதவியுடன் நித்திய அறிவை விடாமுயற்சியுடன் ஒழுங்கமைக்கிறார்.

வேத பாடசாலைகள் தோன்றியதை முன்வைத்த பிறகு, அத்தியாயம் 2.8 இல் நான்கு வர்ணங்களின் நெறிமுறைக் கடமைகள், அத்தியாயம் 2.9 இல் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையின் நான்கு ஆசிரமங்கள் (நிலைகள்), 2.10 முதல் அத்தியாயங்களில் திருமண சடங்குகள் உட்பட பத்தியின் சடங்குகளை உரை வழங்குகிறது. 2.12, மற்றும் 2.13 முதல் 2.16 வரையிலான அத்தியாயங்களில் ஷ்ரத்தா (மூதாதையர்களுக்கு மரியாதை செய்யும் சடங்குகள், நம்பிக்கை).

விஷ்ணு  புராணம்  , பிராமணன் சாஸ்திரங்களைப் படிக்க வேண்டும், கடவுள்களை வணங்க வேண்டும், மற்றவர்களுக்காகப் பரிகாரம் செய்ய வேண்டும், க்ஷத்திரியர்கள் ஆயுதங்களைப் பராமரிக்க வேண்டும், பூமியைப் பாதுகாக்க வேண்டும், வைசியர்கள் வணிகம் மற்றும் விவசாயத்தில் ஈடுபட வேண்டும், சூத்திரர்கள் வணிக லாபத்தால் வாழ வேண்டும், மற்ற வர்ணங்கள் மற்றும் இயந்திர உழைப்பு மூலம் சேவை. மற்றவர்களுக்கு நல்லது செய்வது, யாரையும் துஷ்பிரயோகம் செய்யாதது, அவதூறு அல்லது பொய்யில் ஈடுபடுவது, மற்றொருவரின் மனைவிக்கு ஆசைப்படுவது, மற்றொருவரின் சொத்துக்களை திருடுவது, யாரிடமும் தீய எண்ணம் கொள்ளாதது, அடிக்கவோ, கொல்லவோ கூடாது என்று அனைத்து வர்ணங்களின் நெறிமுறைக் கடமைகளை உரை வலியுறுத்துகிறது. எந்த மனிதர் அல்லது உயிரினம். கடவுள்கள், முனிவர்கள் மற்றும் குரு ஆகியோரின் சேவையில் விடாமுயற்சியுடன் இருங்கள்  , புராணம் வலியுறுத்துகிறது, அனைத்து உயிரினங்களின் நலனையும், தனது சொந்த குழந்தைகள் மற்றும் ஒருவரின் சொந்த ஆன்மாவையும் தேடுங்கள். வர்ணம் அல்லது வாழ்க்கையின் நிலை எதுவாக இருந்தாலும், மேற்கூறிய கடமைகளின்படி வாழ்பவர் விஷ்ணுவின் சிறந்த வழிபாட்டாளர் என்று  விஷ்ணு புராணம் கூறுகிறது . விஷ்ணு புராணத்தின் மற்ற பகுதிகளிலும் மனிதனின் நெறிமுறைக் கடமைகள் பற்றிய இதே போன்ற அறிக்கைகள் காணப்படுகின்றன.

இந்த உரை அத்தியாயம் 2.9 இல் வாழ்க்கையின் நான்கு நிலைகளை பிரம்மச்சார்யா (மாணவர்), கிரஹஸ்தா (வீட்டுக்காரர்), வானபிரஸ்தா (ஓய்வு) மற்றும் சந்நியாசம் (துறப்பு, பழிவாங்குதல்) என விவரிக்கிறது. இந்த அத்தியாயத்தில் உள்ள நெறிமுறைக் கடமைகளை உரை மீண்டும் கூறுகிறது. ஷ்ரத்தா (மூதாதையர்களுக்கான சடங்குகள்) பற்றிய அத்தியாயங்கள் குடும்பத்தில் ஒரு மரணத்துடன் தொடர்புடைய சடங்குகள், இறந்த உடலைத் தயாரித்தல், அதன் தகனம் மற்றும் தகனத்திற்குப் பிறகு சடங்குகள் ஆகியவற்றை விவரிக்கிறது.

மூன்றாவது புத்தகம் விஷ்ணுவின் புராணக்கதையுடன்,  மாயாமோஹாவின் மூலம், தேவர்கள் அசுரர்களை வெல்ல உதவுகிறது   , அசுரர்களுக்கு வேதங்களை மறுக்கும் மதவெறி கோட்பாடுகளை கற்பிப்பதன் மூலம், வேதங்களை அவமதிப்பதாக அறிவிக்கிறது, இது அவர்களை எளிதாக அடையாளம் கண்டு தோல்வியடையச் செய்கிறது.

உரையின் நான்காவது புத்தகம், 24 நீண்ட அத்தியாயங்களில், புராண அரச வம்சங்களை முன்வைக்கிறது, பிரம்மாவில் தொடங்கி, சூரிய மற்றும் சந்திர வம்சங்கள், பின்னர்  யுகங்கள்  (காலங்கள்) மீது பூமியில் உள்ளவை, பரிக்சித் “தற்போதைய ராஜா” என்று வலியுறுத்தினார். சௌப்ரி, மாந்தாத்ரி, நர்மதா, கபில முனிவர், ராமர், நிமி, ஜனகா, புத்தர், சத்தியவதி , புரு, யது , கிருஷ்ணர், தேவகா, பாண்டு , குரு , பரதன், பீஷ்மர் போன்ற பல புராணக் கதாபாத்திரங்களின் புனைவுகள் இந்த உரையில் உள்ளன .

விஷ்ணு புராணத்தின் ஐந்தாவது புத்தகம்   38 அத்தியாயங்களைக் கொண்டது. இது விஷ்ணுவின் அவதாரமாக கிருஷ்ணரின் புராணக் கதைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணரின் பிறப்பு, அவரது குழந்தைப் பருவ குறும்புகள் மற்றும் நாடகங்கள், அவரது சுரண்டல்கள், மதுராவின் கொடுங்கோல் அரசன் கம்சாவின் கொடுங்கோன்மையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்துடன் புத்தகம் தொடங்குகிறது.

விஷ்ணு புராணத்தில் உள்ள கிருஷ்ணரின் கதை,  பாகவத புராணம் , பல புராணங்கள் மற்றும் மகாபாரதத்தின் ஹரிவம்சம் ஆகியவற்றில் உள்ள  அவரது  புராணக் கதையைப் போலவே உள்ளது  .

விஷ்ணு புராணத்தின் கடைசிப் புத்தகம்   8 அத்தியாயங்களைக் கொண்ட மிகச் சிறியது. ஆறாவது புத்தகத்தின் முதல் பகுதி, கலியுகம்  கொடியது, கொடூரமானது மற்றும் துன்பத்தை உருவாக்கும் தீமையால் நிரம்பியது, இருப்பினும் “கலியுகம் சிறந்தது” என்று வலியுறுத்துகிறது, ஏனெனில் ஒருவன் தீமையில் சேர மறுத்து, விஷ்ணுவிடம் தன்னை அர்ப்பணித்து முக்தி அடைய முடியும்.

உரையின் 6.6 முதல் 6.7 வரையிலான கடைசி அத்தியாயங்கள் விஷ்ணு பக்திக்கான வழிமுறையாக யோகா மற்றும் தியானத்தைப் பற்றி விவாதிக்கின்றன. கருணை, உண்மை, நேர்மை, ஆர்வமின்மை, சுயக்கட்டுப்பாடு மற்றும் புனித ஆய்வுகள் போன்ற நற்பண்புகளால் மட்டுமே அடையக்கூடிய பிரம்மத்துடன் (உயர்ந்த ஆன்மா, இறுதி யதார்த்தம்) ஒன்றிணைவதே தியான பக்தி என்று உரை வலியுறுத்துகிறது. நூல் ஐந்து யமங்கள், ஐந்து நியமங்கள், பிராணாயாமம் மற்றும் பிரத்யாஹாரத்தைக் குறிப்பிடுகிறது. தூய்மையான மற்றும் பரிபூரண ஆன்மா விஷ்ணு என்று அழைக்கப்படுகிறது, உரை கூறுகிறது, மேலும் விஷ்ணுவில் உறிஞ்சுதல் விடுதலை.

உரையின் இறுதி அத்தியாயம் 6.8 தன்னை “அழியாத வைஷ்ணவ புராணம்” என்று வலியுறுத்துகிறது.

தத்த்வேன யஸ் சித் அசித் ஈஸ்வர தத் ஸ்வபாவ
போக அபவர்க்க தத் உபாய கதீ உதார
ஸ்ந்தர்ஸ்யன் நிரமிமீத புராண ரத்னம்
தஸ்மை நமோ முநிவராய பராசராய
–4-ஸ்ரீ விஷ்ணு புராணத்தை அளித்து உபகாரம் செய்த ஸ்ரீ பராசர பகவானை ஸ்ரீ ஆளவந்தார் வணங்குகிறார்.-ரிஷிகளில் தலை சிறந்தவரான, உதார குணத்தை உடையவரான ஸ்ரீ பராசர ரிஷிக்கு என் வணக்கங்கள். இவரே சித் (ஆத்மாக்கள்), அசித் (அசேதனப் பொருட்கள்), ஈச்வரன், இவர்களுடைய தன்மைகள், இவ்வுலக இன்பங்கள், மோக்ஷம், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அடையும் வழி, ஆத்மாக்களால் அடையப்படும் குறிக்கோள் ஆகியவற்றை உள்ளபடி, புராணங்களில் ரத்னமான ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவர்.

தத்த்வேன –
ஜ்ஞாதவ் யார்த்தங்களை உள்ள படியே காட்டுகை –ச ஹோவாச வியாச பாராசர்ய -என்கிற பிரமாண பிரசித்தியை பிரகாசிப்பிக்கிறது –

சித் –
ஆத்மா ஸூ ததோ அஷரஸ் சாந்தோ நிர்க்குண ப்ரக்ருதே பர
ப்ரவ்ருத்த்ய பசயௌ நாஸ்ய சைகஸ் யாகில ஜந்துஷூ
-ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-13-71-இத்யாதி –இதில் நிர்க்குண த்வம் ஆவது –சத்வாதி குண ராஹித்யம் .
ஏக ஸ்யாகில ஜந்துஷூ -தேவ திர்யக் மனுஷ்யாக்ய சர்வ ப்ரானிஷூ ஏகஸ்ய -ஜ்ஞானைக ஆகாரத யாசம இத்யர்த்த -என்றும்
நிர்தோஷம் ஹி சமம் ப்ரஹ்ம -என்றும்
பண்டிதாஸ் சம தர்சின -இதி பகவதைவோக்தம்-

அசித் –
அசம்ஜ்ஞா வத்தான அசேதனம் –
விகார ஜநநீம் அஜ்ஞாம்-இத் யுபநிஷத்
தத்ராபி பராசர –
த்ரிகுணம் தஜ் ஜகத் யோனி அநாதி ப்ரபவாப்யயம் அஷய்யம்
-இத்யாதி

ஈஸ்வர
உபயோர் நியந்தாவான ஸ்வாமி –

தத்ராபி பராசர –
பரமாத்மா ச சர்வேஷாம் ஆதார பரமேஸ்வர விஷ்ணு நாமா ச வேதேஷூ வேதாந்தேஷூ ச கீயதே -என்றும்
பர பராணாம் பரம பரமாத்மாத்ம சம்ஸ்தித ரூப வரணாதி நிர்தேச விசேஷண விவர்ஜித
சர்வத்ரா சௌ சமஸ்தஞ்ச வசத் யத்ரேதி வை யத ததஸ் ச வாஸூ தேவாதி வித்வத்பி பரிபட்யதே -இத்யாதி –

தத் ஸ்வபாவ-
தேஷாம் ஸ்வ பாவ தத்ர ஸ ச –
ப்ரதாநஞ்ச புமாம்ச்சைவ சர்வ பூதாத்மா பூதா
விஷ்ணு சக்த்யா மகா புத்தே வருதௌ சம்ச்ரய தரமிநௌ-இத்யாதி

போக –
ப்ரஹ்மாதி பிபீலி காந்தமான பத்த சேதன வர்க்கத்துக்குக் கர்ம அனுகுணமாக தாரதம்யேன அனுபாவ்யமான சப்தாதிகள் 

அப வர்க்க –
சப்தாதிகள் உடைய அல்ப அஸ்திரத்வாதி தோஷ தர்சனத்தாலே பீதரான சேதனருக்கு
துக்க நிவ்ருத்தி ரூபமானஆத்மபிராப்தியும் -ஸூகைகதமான பகவத் பிராப்தியும் .-

தத்ராபி ஸ –
யோகி நாமம்ருதம் ஸ்தாநம் ஸ்வாத்ம சந்தோஷ காரிணாம் – ததச்ய த்ரிவித ஸ்யாபி துக்க ஜாதஸ்ய -இத்யாரப்ய – நிரஸ்தாதிசய ஆஹ்லாத ஸூ காபாவைக லஷ்ணா பேஷஜம் பகவத் ப்ராப்தி ஏகாந்தாத் யந்திகீ மதா -இத்யாதி –

தத் உபாய கதீ –
போக மோஷங்கள் உடைய சாதன பேதங்களை-நித்ய நைமித்திக காம்ய கர்ம அனுஷ்டானம் போகச்ய-
சாங்கா நுஷ்டித கர்மசாத் யஜ்ஞானயோகாதி ஆத்மப்ராப்தே ஜ்ஞான கர்மானுக்ருஹீத பக்தி பிரபதிஸ்ஸ பகவத் பிராதே

உதார-
சம்சாரிகள் பக்கல் அர்தித்வம் ஆதல் -பிரயோஜனம் ஆதல் -நினையாதே இவர்கள் அனர்த்த பரிஹாரமே பிரயோஜனமாக உபகரித்து அல்லது நிற்க மாட்டாத மேகம் போலே உபகரித்தவர் –

ஸ்ந்தர்ஸ்யன் –
சம்சய -விபர்யய -ரஹிதமாக -பிரத்யஷிப்பியா நின்று கொண்டு –

நிரமிமீத –
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ பொருளை -நான் முகன் திருவந்தாதி -1- என்கிறபடியே
துரவகாஹமான வேதார்த்தத்தை அல்ப க்ரந்தாத்தாலே பண்ணினான் -என்கை –

புராண ரத்னம்-
புராணம் ஆவது -சர்க்கச்ச பிரதி சர்க்கச்ச -இத்யாரப்ய-புராணம் பஞ்ச லஷணம் -என்கிற படியே பஞ்ச லஷனோபேதமான கிரந்த சாதம்-புராபி நவம் புராணம் -என்றுமாம் –
அதாவது -ஸ்வ ரசத்தை என்றும் ஒக்க ஒருவரால் அழிக்க ஒண்ணாது இருக்கை –
ரத்னம் –
அர்த்த பிரகாசகமாய் இருக்கையும் – சங்க்ரஹமாய் இருக்கையும் –
ஆபத் ரஷகமாய் இருக்கையும் – இந்தப் புராணாதிகாரிக்கு லோக பரிக்ரஹம் சித்திக்கையும் –

தஸ்மை நமோ – முநிவராய –
தனக்கு வரம் கொடுத்த வசிஷ்ட புலஸ்த்யர்களுக்கு முத்ரிதா முத்ரித பிரதி முத்ரிதராய்
அத்தாலே அவர்கள் படியை உடையவன் -என்னுதல் –
முநிநாம் வரணீயாய் – என்கிறபடியே -அவர்களுக்கு ஆதரணீயன் -என்னுதல்

பராசராய —
பரராகிரார் -பாஹ்ய குத்ருஷ்டிகள்-அவரை பிரமாண சரங்களாலே ஹிம்சித்து வைதிக மரியாதையை ஸ்தாபித்தான் -என்னுதல் –
இந்திரிய ஜயத்தாலே ரஜஸ் தமஸ் ஸூக்களை ஜெயித்தான் -என்னுதல்

யா உதார சித் அசித் ஈஸ்வர தத் ஸ்வ பாவ போக அபவர்க்க தத் உபாய கதீ-தத்த்வேன சந்தர்சயன்
புராண ரத்னம் நிரமிமீத முநிவராய பராசராய நம -என்று அந்வயம்

அனுஷ்டுப் சந்தஸ்ஸுக்களுடன் 6000 ஸ்லோகங்கள் -ஆறாயிரப்படி –
ஸ்ரீ விஷ்ணு சித்தீயம் -ஸ்ரீ எங்கள் ஆழ்வான் -4000 படி

குரு பரம்பரை அருளிச் செய்து தொடங்குவதைக் காட்டிக்கொடுத்து அருளுகிறவன் பராசரர் -ஸர்வம் விஷ்ணு மயம்

அவிகாராய ஸூத்தாய -சுலோகமும் அத்யாய ஸ்லோகம்

2-24-

பிராகிருத ஸ்ருஷ்ட்டி -நைமித்திக ஸ்ருஷ்ட்டி -நித்ய ஸ்ருஷ்ட்டி மூன்றுவகை
பிராகிருத பிரளயம் -நைமித்திக பிரளயம் -நித்ய பிரளயம் -மூன்றுவகை-ஆத்யந்திக பிரளயம் நாலாவது வகை -நித்தியமான பிரளயம் -ஸ்ரீ வைகுந்த பிராப்திக்கு இந்தப்பெயர்

வராஹ அவதாரம் -1-4-6-

4-33-ரூப வர்ணனம்

பூ ப்ருக் -பூமியை நிலை நிறுத்து மலைகள் -ஸ்வேத வராஹன் -ஞானப் பிரான் -பிறவிப் பெரும் கடலில் நின்றும் உயர்த்தியவன்

லஷ்மீ கல்யாணம் –1-8-ப்ருகு மகரிஷி-க்யாதி -இவர்களின் திருக்குமாரத்தி -சமுத்திர ராஜ திருக் குமாரத்தி மற்ற அவதாரம்-1-8-17–நித்யைவேஷா ஜெகன் மாதா விஷ்ணோர் ஸ்ரீ அநபாயிநி –யதா ஸர்வ கதா விஷ்ணு-அர்த்தோ விஷ்ணு இயம் வாணீ–திரு உரையாய் தான் பொருளாய்-போதமும் புத்தியும் -தர்மமும் செயலும் -சந்தோஷமும் திருப்தியும் -யாகமும் தக்ஷிணையும் -சந்திரனும் குளிர்ந்த கிரண மும் பிரபாவான் பாஸ்கர-கடலும் கடலின் கரையும் போல் -கோபம் தடுப்பவள்-தீபமும் ஒளியும் மரமும் கொடியும் -வரனாயும் வதுவாயும் –கொடிக்கம்பம் கொடி போல் த்ருஷ்டாந்தங்கள்-

1-9-ஸ்ரீ ஸ்துதி-கௌதமர் போல்வார் அல்ல நான் –தூய்மையாக்கும் எண்ணத்துடன் சாபம் கொடுத்த துர்வாசர் அகல்மஷர் பாராட்டும் விஷ்ணு புராணம் –

அசுரர் பிறவிக் குருடர்கள் தேவர்கள் இன்று குருடர்கள் -தோற்றார்கள்

1-9-85-பாற் கடல் கடைய -கூர்மம் -தேவர்களுக்குள் ஒருவர் -அசுரர்களுக்குள் ஒருவர் -மந்த்ரம் சாயாமல் இருக்க பெரிய வடிவம் -வாஸுகி அந்தப்பிரவேசம் -தேவர்களுக்குள் அந்தப் பிரவேசம்–தன்வந்திரி அம்ருத கலசம் ஏந்தி- -போன்ற பல அவதாரங்கள்-எட்டாவது அவதாரம் -நாராயணன் பிராட்டிக்கு வருவதைப் பார்த்து ரசித்து இருக்க-வஷஸ்த்த்சலம் ஹரே -பஸ்யதாம் ஸர்வ தேவானாம் -வனமாலை உஊஞ்சலானது -டோல உத்ஸவம்–பிரார்த்திக்காமலேயே கடாஷித்து -இழந்த செல்வம் -செந்தாமரைக்கை அன்றோ-அம்ருதம் சுரர் திருட –மோஹினி ஒன்பதாவது அவதாரம்-

நமாம் ஸர்வ –பத்ம முகி தேவீம்–இந்திரனின் ஸ்லோகம் ஸ்ரீ ஸ்துதி -தேசிகனின் ஸ்ரீ ஸ்துதி இதைக் குறிக்கிறார்-ப்ரஹ்ம வித்யை அம்ருதம் பெறுவோம் –பத்மா வாமனன் தேவி -தரணி -பரசுராமனின் தேவி-

சஹஸ்ரசீஷா புருஷா–ஸ்வரூப பரம் -ஞானத்தை -கால் -சக்தி -சர்வ வ்யாபி -தாசங்குலம் -பராத்பரன் -என்றவாறு-

ப்ரஹ்லாத சரித்திரம்-1-15-141-ஸிம்ஹிகா ஹிரண்யன் சகோதரி -திருவடி அழித்தவள்-16 அத்யாயம் கேள்வி அத்யாயம்-17-20 அத்யாயங்கள் ப்ரஹ்லாத சரித்திரம் -நரஸிம்ஹர் பற்றி இல்லை -நமஸ்தே -நமோ ப்ரஹ்மண்ய தேவாயா கோ ப்ராஹ்மண ஹிதாயா தேவாயா கோவிந்தாய நம நம –யோகிகள் யாகம் கவ்யம் ஹவ்யம் அனைத்தும் உனக்கே -ப்ரஹ்லாத மானஸ ஸ்துதி -ஸ்ம்ருதி அதிகரணம் இந்த ஸ்லோகம் பாஷ்யகாரர் காட்டி அருளுகிறார்-தன்மயத்வம் உணர்ந்த உடனே -நாகபாசங்கள் தன்னடையே போனதும் -மீண்டும் ஸ்தோத்ரம் -சேராதவற்றைச் சேர்க்கும் -ஸ்தூல ஸூஷ்ம –விருத்த விபூதித்வம் –லௌகீகர்களுக்கு லௌகிக ஆசை போல் -த்ருஷ்டாந்தம் -இருப்பதையே வரமாக கேட்டு -அப்பா செய்த பாபங்களைப் போக்கி பாகவதராக்க வேண்டிக் கொண்டான்-பரிஷ்வங்கம் செய்து கொஞ்சினானாம்-தர்ம வித்தாக இருவரும் சேர்ந்து திருவாராதனம் –தூணைப் பிளந்து நரஸிம்ஹர் -தோன்றி -ஹிரண்யனை கொன்றாராம் -பெருமாளே ஹிரண்ய கசிபு வேஷத்தில் முன்பு -பெருமாளாலும் திருத்த ஒண்ணாத அவனை முடித்தார் -இதுவே ரஹஸ்யம் -ஹிரண்ய கசிபு அவதாரமும் எடுத்து அருளுவான் -அதிகாரம் -அசுரர் தலைவனாகி -முடிந்ததும் பேறு

அஸ்திர பூஷண அத்யாயம் -1-22-68–அதிகாரி ஸங்க்ரஹம் பாசுரம்-12 வர்ஷம் கார்த்திகை மாதம் முப்பது நாளும் புஷ்கரம் நீராடிய பலம் முதல் அம்சம் கேட்டவருக்கு கிடைக்கும்

புருடன் மணி வரமாகப் பொன்றா மூலப் பிரகிருதி மறுவாக மான் தண்டாகத்
தெருள் மருள் வாள் உறையாக ஆங்கு அரங்கள் சார்ங்கம் சங்காக மனம் திகிரியாக
இருடிகங்கள் ஈரைந்தும் சரங்களாக இரு பூத மாலை வன மாலையாகக்
கருடன் உருவாம் மறையின் பொருளாம் கண்ணன் கரிகிரி மேல் நின்று அனைத்தும் காக்கின்றானே–ஸ்ரீ அதிகார சங்கிரகம்41-

இரண்டாம் அம்சம் பூகோள வர்ணநை 3-அத்யாயம் பாரதம் மஹிமை-2-3-24-தேவ லோகத்தை விட புண்ணிய தேசம்–2-5-14-ஆதி சேஷன் மஹிமை -பிரபஞ்சம் தாங்கி-பெரிய திருவடிக்கு தேவிமார்கள் ருத்ரா ஸூகீர்த்தி-ஆதிசேஷனுக்கு -காந்தி வாருணி தேவிமார்கள்

2-6-31-பிராயச்சித்தம் சொல்லும்–பரம் -கிருஷ்ண அநு ஸ்மரணம்-கிருஷ்ண கிருஷ்ண-12 தடவை -தப்பாக -ஸ்மரணம் இல்லையே அநு ஸ்மரணம்-அவனுக்கே அடிமை என்ற எண்ணம் மஹா விஸ்வாசம் -ஆத்மா -அவன் அப்ருதக் ஸித்தம் என்றும் மனசில் நினைப்பது வேண்டும் -இதுவே சரணாகதி-எனது உடம்பில் அழுக்கை நானே போக்கிக் கொள்வேன்-

2-8–49- சந்தியாவந்தனம் -மந்தேகர்கள் விழுங்க வர -காயத்ரி -மந்த்ரம்-மரணம் தினம் தினம் ப்ரம்மா சாபம் கொடுத்தாராம் -தினம் சந்தியாவந்தனம் காயத்ரி சொல்லி அர்க்கம் விட வேண்டும் என்பதற்காக –லோக உபகாரமாக செய்யும் கடமை–2-8-109-ஸ்லோகம் கங்கை மஹிமை–துருவன் –இடது கட்டைவிரல் நகம் பட்டு துருவன் தாங்கி–அலகானந்தா -மட்டும் சிவன் தலையிலே சுமக்க-ஆச்சார்யன் ஸ்ரீ பாததீர்த்தமும் இடதுகட்டைவிரல் நகத்தில் இருந்து -நூறு யோஜனை தள்ளின கங்கை கங்கை–வாசகத்தாலே கடுவினை களைந்திடும்

ப்ரஹ்மத்தின் சரீரம் என்றே இந்த பூ கோள வர்ணனை-

12 அத்யாயம் அமாவாசை விளக்கம்–ஒரே கலை மட்டுமே இருக்கும் -பவ்ர்ணமி பூர்ண சந்திரன் -16 கலைகள் -தேவர்கள் அம்ருதம் ஒரு ஒரு 12 அத்யாயம் அமாவாசை விளக்கம்-கலையாக சாப்பிட -குறைந்து கொண்டே வரும் -சதுர்த்தசி -14 கலைகள் சாப்பிடும் –ஸூஷ்ம்நா –கலங்காத பித்ருக்கள் சாப்பிட ஒரே கலை -அமா என்றபெயர் -ஆகையால் அமா வசிக்கும்-அமாவாஸ்யை -செடி கொடிகளில் தங்குவதால் பறிக்கக்கூடாது -ப்ரஹ்மத்தி தோஷம் வருமாம் –

13 அத்யாயம் ஜடபரதர் சரித்திரம் -பக்தி யோகம் ஈடுபட்டு -தடங்கல் வந்தாலும் -இவர் போல் வென்று பக்தி பண்ண வேண்டும் -ராஜரிஷியாகி சாளக்ராமத்தில் ஆஸ்ரமம் -த்யானம் -2-13-20-மான்குட்டி செல்லும் இடமும் எல்லாமே மனம் போனதே -பற்று -மாதவனை மறந்து மானை நினைக்க -ராஜ்ஜியம் உறவு அனைத்தையுமே விட்டால் அவருக்கும் பக்தி யோகம் நழுவிற்றே-14 அத்யாயம் -ஸ்ரேயஸ் வேணுமா பரமார்த்தம் வேணுமா -பிரகார அத்வைதம் ஜீவர்கள் அனைவரும் ஒரே தன்மை பிரகாரி அத்வைதம் -ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன்-கர்மம் அடியாக ஸ்வ பாவம் மாறுதல் அடையும் -புல்லாங்குழல் வெளிய வரும் காற்று ஒன்றே துவாரம் பொறுத்து ஸ்வரம் மாறுமா -நிற்கின்றது எல்லாமே நெடுமால்-ஆழ்வார் –

3-7-எம கிங்கரர் சம்வாதம்-ஸூத்தாந்த சித்தாந்தி -அந்தப்புர பரிகரங்கள்

3-14-பித்ரு கீதா

அர்ஹத்வம் போதித்து -மாயா மோகன் அவதாரமே -இதுவே ஜைன மதம் என்பர்-இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் -சப்த பத வாதம் -வேதவழி அசுரர்கள் விட -புத்தி உபயோகம் -புத்தர் -இவரே -ராமாயணம் முன்பு நடந்ததாம்–கண்டதே கோலம் –தர்மமே கவசம் -அனுஷ்டானம் முக்கியம் சொல்ல வந்த கதை-இராமாயணமும் –4-4-86- வாக்கியம் தொடங்கி –உரைநடையாக–துஷ்ட கந்தர்வர்களை பரதன் அழிக்க லவணாசுரனை சத்ருக்ந அழிக்க இந்திரஜித்தை இலஷ்மணன் அழிக்க –குசன் லவன்–ராமருக்கும்– அங்கதன் சந்த்ரகேது லஷ்மணருக்கும் – தக்ஷண் புஷ்கலன் பரதனுக்கும் – ஸூபாஹு ஸூரசேனன் -சத்ருக்கனனுக்கும்-பிருஹத்பலன் -குசன் வம்சம் துரியோதனன் உடன் சேர்ந்து -அபிமன்யு கொன்றான் இஷுவாகு வம்சம் முடிந்தது –தீய குணம் உள்ளோருடன் கூடி அழிய வேண்டிற்று-

நான்காம் பிறை பார்த்து பழி வரும் -சுமந்தக மணி -விருத்தாந்தம் -கேட்டால் போலும் – அம்சம் -கண்ணண் அம்சம் -முன்பே கோடி காட்டி -ஒவ்வொரு நாளுமே 600 கிலோ தங்கம் கொடுக்குமாம் -சத்ராஜித் சூரியனிடம் கேட்டு வாங்கி வந்தான்-ஆசாரமாக இல்லாதவரைக் கொல்லுமாம் -ப்ரஸேனன் தம்பி -இடம் கொடுக்க -அவன் ஆசாரமாக இல்லாததால் -ஸிம்ஹம் வந்து அவனையும் குதிரையும் கொன்றதாம்-எச்சில் பட்டதால் ஸிம்ஹத்தை ஜாம்பவான் கரடி கொன்றது -ஜாம்பவதி ஸூகுமாரன் பிள்ளைகளுக்கு விளையாட கொடுத்தார்-

4-13-42-மட்டும் ஸ்லோகம் -முன்னும் பின்பும் உரைநடை -செவிலித்தாயார் படுகிறான் -பிரசேனனை ஸிம்ஹம் கொன்றது -ஸிம்ஹத்தை ஜாம்பவான் கொன்றார் -இதுவே நீ வைத்துக் விளையாடுகிறாய் ஸூகுமாரா –அமர்ஷ்ய பூர்ண ஹிருதயம் ஜாம்பவான் கோப வசப்பட்டதால் கிருஷ்ணன் இறைவன் என்பதை உணரவில்லை -21 நாள் சண்டை போடவே மக்கள் வெளியில் 8 நாள் கழித்து மீண்டும் துவாரகை போனார்கள்-பாந்தவர்கள் அந்திம சம்ஸ்காரம் பண்ணினார்களாம் -கர்மம் பண்ணப் பண்ண பலம் மிக்கு சேர்ந்ததாம் – -கிருஷ்ண லீலை -இத்தைக் காட்டவே-ஸ்ரத்தையுடன் செய்வதே ஸ்ரார்த்தம்-உணர்ந்து ஸ்தோத்ரம் பண்ணவே அடிபட்ட இடங்களைப் பிடித்து விட்டானாம் -ஜாம்பவதி திருக் கல்யாணம் -ஜமந்தக மணி ஒளி வீச –திரிவிக்ரம -வாத்யம் வீசி பறை அடுத்து -போர் வீரராக ராமர் -மாமனார் இப்பொழுது-மணியை சீதனமாக -கொடுக்க -கன்யா சுல்கம் தான் உண்டு -வரதக்ஷிணை வழக்கம் இல்லையே -தனது பழியைப்போக்க பெற்றுக்கொண்டான்-சத்ரஜித் -தனது பெண்ணை -சத்யபாமையை திருக்கல்யாணம் செய்து பிராயச்சித்தம் பண்ணிக்கொண்டான்-அக்ரூரர் கிருதவர்மா சததர்மா மூவரும் இவளை விரும்பினார்களாம் -கெட்ட ஸஹவாசத்தால் அக்ரூரர் -கம்சன் சோறுண்ட காரணம் மூவர் கூட்டணி-பெண் மணி கிடைக்கவில்லை இந்த சமந்தக மணியாவது கிடைக்காதா என்று எண்ணினார்கள்-சததன்வா கொல்லப் போந்தான்-65 வர்ஷம் அக்ரூரர் மணியைப் பாதுகாத்து யாகங்கள் பண்ணி -தக்ஷிணை கொடுத்து வந்தார் –மூன்று தேவிமார் -ருக்மிணி ஜாம்பவதி சத்யபாமா -மூன்றாம்பிறை -நான்காம் பிறை பார்த்தாலும் பழி வராது -அந்த ஸ்லோகம் சொல்லி தீர்க்கலாம் –

ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத் -5-1-உடல் மிசை உயிர் எனக்கரந்து எங்கும் பரந்துளன்கல்லோல இவ சஹரா –பெரிய அலை சின்ன அலையை அழிக்கும் -திமிங்கிலம் சின்ன மீன்களை அழிக்கும் -ஹிரண்யகசிபு ஒன்றுவிட்ட சகோதரன் -காலநேமி -உக்ரசேனன் மகன் கம்சன்-சஹஸ்ர கவசனே கம்சன்-சப்த ப்ரஹ்மம் -ஸாஸ்த்ர ஜன்ய ஞானத்தால் உணர்வது-அபர வித்யை இது -மேல் -பரவித்யா -உபாஸனம் -ஞானக் கண்ணால் காண்பது பர ப்ரஹ்மம் –ஜவனோ க்ரஹீதா— வேகமாக -infinity speed -பயணித்து -எங்கும் பரவி-கேசம் முடி தேஜஸ் -வெள்ளை நிற ஒளி நம்பிமூத்த பிராணன் அம்சம் -கறுப்பு ஒளி -கண்ணன்அஷ்ட கரப்பன் தரணிதரன் -எமன் அறிவாய் எவன் அறியாய் -நாரதர் -பூமி பாரம் போக்கவே அவதாரம்

3 கட்டளை யோகமாதாவுக்கு -ஷட் கர்ப்பர் —கீர்த்திமான்- சுஷேணன் -பத்ரசேனன் –ருஜு சம்மர்த்தனன் -பத்ரன் -காலநேமி பிள்ளைகள் – பிரகலாதன் கூடப் படித்தார்கள்-தனது பிள்ளையைக் கெடுத்தார்கள் என்று தப்பாக பிரிந்து ஹிரண்யன் -உனது கையாலே கொல்ல மரண தண்டனை -கடலுக்கு அடியிலே ஒளித்து வைத்து-ஒரே கர்மம் பாக்கி -காலநேமி கையால் கொல்லப்பட்டால் மோஷம் -தேவகி கர்ப்பத்தில் சேர்க்க முதல் கட்டளை –

2 வது கட்டளை -7வது குழந்தை ஆதிசேஷன் -தேவகி கர்ப்பத்தில் 7 மாதம் பூர்த்தியானதும் ரோஹிணி கர்ப்பத்தில் சேர்க்கை வேண்டும் -சங்கர்ஷணன் -இடம் பெயர்ந்தவன் -நாமம்

மூன்றாவது கட்டளை -தேவகி கர்ப்பத்தில் நான் நுழைவேன் -யசோதை கர்ப்பத்தில் நீ நுழைய வேண்டும் -ஆவணி கிருஷ்ண பாஷ அஷ்டமி முடியும் பொழுது அவதாரமே நவமி தொடக்கத்தில் நீ பிறக்க வேண்டும் -அந்தரக்ஷித்தில் நிற்க வேண்டும் -அந்தரி பெயர்-இந்திரனுக்கு சஹோதரியாவாய் –முதல் அத்யாயம் முடிகிறது-

அதிதி கர்ப்பத்தில் 3 கோடி தேவர்கள் போல் -அரணிக் கட்டையில் நெருப்பு போல் -திருப்திக்குள் சந்தோஜம் போல் -நினைவாற்றலுக்குள் அறிவு போல்–ஆகாசத்துக்குள் நக்ஷத்திரங்கள் போல் -பிரணவத்தில் யாகம் போல் -பல த்ருஷ்டாந்தங்கள் -கர்ப்பத்தில் கண்ணன்

ஜோதிர் அம்பரே-ஆகாசத்தில் ஒளி -சாதாரண அர்த்தம் -உள்ளர்த்தம் -அதிதி -அம்சமே தேவகி -தேவர்கள் ஸ்தோத்ரம் பண்ண -சாபம் வாங்கி வந்தாளே -காஸ்யபர் முனிவர் -சுரபி அதிதி மனைவிகள் தூண்ட -பசு திருட -பூமியில் பிறக்க சாபம் –சுரபி ரோகினி அதிதி தேவகி -காஸ்யபர் வசுதேவர்

தேவகி பூர்வ சந்த்யாயாம் ஆவிர்பூதம் மஹாத்மான -அச்யுத பானுபிருஸ்னி சுதபஸ்-பிருஸ்னிகர்ப்பன் -அதிதி கஸ்யபர் -வாமனன் -தேவகி வாசுதேவன் -மூன்று தடவையும் சங்கு சக்ர கதாதரானாக அவதாரம்

தமத்புதம் பாலகம் அம்புஜேக்ஷணம் சதுர்புஜம் ஶங்ககதார்யுதாயுதம் |
ஸ்ரீவத்ஸலக்ஷ்மம் களஶோபி கௌஸ்துபம் பீதாம்பரம் ஸாந்த்ர பயோத ஸௌபகம் | |மஹார்ஹ வைதூர்ய கிரீடகுண்டலத்விஷா பரிஷ்வக்த ஸஹஸ்ரகுந்தளம் |
உத்தாம காஞ்ச்யங்கத கங்கணாதிபிர் விரோசமாநம் வஸுதேவ ஐக்ஷத” | |– ஸ்ரீமத் பாகவத புராணம் -10 வது ஸ்கந்தம் – அத்தியாயம் 3 – ஸ்லோகம் 9,10

நந்த கோபன் ஆயர்-வந்தார்களாம் யமுனைக்கரையில் வாசுதேவன் குழந்தையுடன் போகும் பொழுது -3-19—குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் கப்பம் கட்ட மறந்தார்களாம் -கர்ப்பிணியாக இருந்தாலும் கப்பம் கட்ட வந்தார்கள் -இவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையாம் -வாசுதேவருக்குத் தெரிந்ததாம் -இது விஷ்ணு புராணத்தில் மட்டுமே உள்ளது

5-5 ரக்ஷ ஸ்லோகங்கள் -8- பிரசித்தம்— உந்தித்தாமரையில் உலகை வைத்த ஹரி -வராஹ -நரஸிம்ஹ -வாமன த்ரிவிக்ரம -ஐந்தாவது ஸ்லோகம் சிரஸ் கோவிந்தா கண்டம் கேசவஸ்ய வயிர விஷ்ணு தொடை கால்கள் ஜனார்த்தன -முகம் தோள் கைகள் மனாஸ் புலன்கள் நாராயணன் காக்கட்டும் -சங்கநாதம் காக்கட்டும் ஏழாவது ஸ்லோகம் -கடைசியில் திசைகளில் வைகுண்டநாதன் -மூலைகளில் மதுசூதனான ஹயக்ரீவர் -ஆகாசம் பயணிக்கும் பொழுது-ரிஷிகேசன் -தரணி தரன் பூமியில் பயனிக்கும் பொழுது -சாரசாரம் கிரந்தத்தில் இவற்றை தேசிகன் காட்டி அவன் தன்னையே மங்களாசாசனம் -சரணாகதி பண்ணின பிறகு இப்படி அவனையே வேண்டி அவனுக்கு காப்பிடுவதே நிபுணராவதுஸர்வான் தேவான் நமஸ்குரும் -அவனுக்காக மற்ற தேவதைகளையும் அர்ச்சிப்பது முதல் நிலை

5-6-8-மாட்டுவண்டியை சரிபண்ணி அர்ச்சனை செய்தாளாம் -தனது மேல் பேய் அடியை வாங்கி குழந்தையைக் காப்பாற்றியதாம்-முரன் அசுரர் அதில் ஆவேசித்து -முடிந்தான் -வசுதேவர் இப்பொழுது தான் கார்க்காச்சார்யரை நாமகரணம் செய்ய வைத்தாராம்-

பிருஹத் வனம் முன்பு இருந்து பிருந்தாவனம் போனார்களாம் ஆயர்கள் -கண்ணனுக்கு 3 வயது -மயில் பீலி தரித்து -காட்டுப்பூக்கள் மாலை -புல்லாங்குழள் -காக்காக் குடுமி யுடன் விளையாடினார்கள் -நம்பி மூத்த பிரான் கண்ணனைத் தூக்கி -சேஷ வாஹனம் -இப்படி நான்கு வர்ஷங்கள் சென்றன -5-6-38-மழைக்கால வர்ணனை –இங்கு தத்வ -துஷ்டனுக்கு அர்த்தராத்ரி காசு வந்த மாதிரி நீர் ஓடி-மேகங்கள் சந்திரனை மறைக்க -குத்ருஷ்டிகள் குழப்புவது போல் –

5-7-காளிய மர்த்தனம் -அடக்குவது -நர்த்தனம் உள்ளடக்கியது–நம்பி மூத்த பிரான் -விட்டுவிட்டு -பாம்பை அடக்குவது விடமாட்டார் -தப்பு -முன்பு அழித்து விடுவார் -லீலை கிட்டாதே நமக்கு-ரமணக தீவில் முன்பு இருந்தது -கருடனுக்கு உண்டானவற்றை உண்டதால் கருடன் கோபிக்க -ஸுபரி தபஸ் இடைஞ்சலாக முன்பு இருக்க அங்கு வரமாட்டார் -ஆகவே இந்த மடுவுக்கு வந்ததாம் -5-7-35-நம்பி மூத்த பிரான் -உலகத்துக்கு அச்சாணி தேவதேவன் -நடிக்காதே -மயங்காதே -சக்தியை வெளிக்காட்டு -தண்டனை கொடு -சொன்னவுடன் -துஷ்ட காளியனை -முடித்தான்-நாட்டியமாட கூட்டம் வரவேண்டுமே -மயங்கியது போல் நடித்தேன் என்றானாம்-பிராந்தி சுற்றி ஆடுவது ரேசகம் பக்கம் நோக்கி ஆடுவது தண்டபாதம் -தலைகளை நேராக குதித்து ஆடுவது -போல் பல ஆட்டங்கள் -மனஸு காளியன் -தத்வம் -ஸ்ரத்தா பக்தி பெண்பால் சொற்கள் -காளியன் மனைவிகள் ஸ்தோத்ரம் பண்ண -அது கண்டு அவனும் ஸ்தோத்ரம் –திருவடி பட்டு-நீயே பராத்பரன் -பரஸ்மாத் பரம் -பக்த முக்த நித்ய ஆத்மாக்கள் அசேதனங்கள் உனக்கும் சரீரம் –திருவடி ஸ்பர்சத்தால் அனுக்ரஹமே செய்து அருளினாய் –திருவடி பதிந்தால் கருடன் அடியேன் தாஸன் என்பான் –ஒரே தொண்டர் குலம்-

தேனுகாசுரன் பிரலம்பாசுரன் வதம் அடுத்து -மான் ஓட்ட பந்தயம் -இருவராக -தோற்றவர் வென்றவரைத் தூக்கி -இருவரையும் பலராமன் முடித்தார் –பாபங்களை அடியார்களே போக்கி அருளுவார் என்பதைக் காட்டவே – அடுத்து இலை உதிர் காலம் -பக்தி யோக பெருமை இதில் -கோவிந்தா பட்டாபிஷேகம்

வெண்ணெய் திருடியதை நேராக சொல்லாமல் ஓர் ஸ்லோகத்தில் உரலுடன் காட்டியதை சுருக்கமாக அருளிச் செய்து-கோவிந்த பட்டாபிஷேகம் -10-11-12-13 அத்யாயங்கள் விவரித்து –முதலில் 15 ஸ்லோகங்கள் சரத்கால வர்ணனை -பக்தி யோக விளக்கம் ஒப்புமை-கண்ணன் நந்தகோபர் ஸம்வாதம் விவரமாக உள்ளது -விவசாயிகள் பண்ண வேண்டியதை நீங்கள் செய்ய வேண்டுமோ -நம் தொழிலே தெய்வம் -அதன் கருவியே பூஜைக்கு உரியது-சொந்தவூர் பெருமாளை விட்டு விட்டு வேறே பூஜையால் என்ன பலன் -மலைகளே ஆயர்களுக்கு வீடு -மாட்டுவண்டிகளின் கீழே பசுக்கள் மேயும் இடத்திலே தங்குவோம் -மலை காடுகள் தானே ஏற்றதாகும் -குறிஞ்சி முல்லை -போய் பசு மாட்டுக்கு வாழ்வு -மழையும் காடுமே நமக்குத் தெய்வம்-காம ரூபிகள் மலைகள் -வேண்டிய உரு எடுத்து அருள் புரியும் – காக்கவும் தாக்கவும் தெரியும்-வாழ்வு இடமும் வாழ்வுக்கு ஆதாரமாயும் இருக்குமே இவை -வேதம் கற்றவர் யாக பலனாக மழை -அவர்களை அன்றோ பூஜிக்க வேண்டும் -இந்திரன் post man போல் –மூன்று பங்கு -கோவர்த்தனத்துக்கும் பசுமாட்டுக்கு வேதம் வல்லாருக்கும் என்றான்–மாம்சம் -பழங்களின் உள் பகுதிக்கு பெயர் -மது -தேன் -சுக்ரீவன் -கொடுத்தவற்றை பெருமாள் உண்ண வில்லை –ஏழு நாள்களும் இந்திரன் நின்று கோ கோபி கோபர்கள் அழிவதைப் பார்க்க இருந்து மீண்டானாம் –ஸூவ ஸ்தானே விஸ்மிதம் -ஏழு நாள்களும் கழிந்து தன்னிடத்தில் வைத்ததை ஆசர்யமாகப் பார்த்தார்கள் –தண் குடந்தை மூன்று தாப த்ரயங்களைப் போக்க மூன்று தடவை திரு நெடும் தாண்டகத்தில் உண்டு-உலகம் மேய்க்கும் அவன் மாடுகளை மேய்த்து -கருடன் குடை பிடிக்க-மேலாப்பின் கீழ் வருவானை பிருந்தாவனத்தில் கண்டேனே–கோவிந்த பட்டாபிஷேகமும் –உபரி இந்த்ரன்-சொல்ல வந்தவன் உபேந்த்ரன் வாய் குழறி சொன்னாலும் – கோவிந்தன் ஆகப் போகிறாய் -இதுவும் தப்பு -கோ வேதம் மலை கூர்மம் பூமி வராஹ ஸ்துதி நரஸிம்ஹன் தர்மம் நிலைநாட்டி பூமியை அளந்து உழுது அனைத்து அவதாரங்களிலும் பொருந்திய-திருநாமம் இருந்தாலும் -ஏற்றுக்கொண்டான்-தன் அம்சமாக வந்திருக்கும் அர்ஜுனனை ரக்ஷிக்க பிரார்த்திக்க -நான் பூமியில் இருக்கும் வரை அர்ஜுனனை மட்டுமே அல்ல -அவன் சகோதரர்களையும் காப்பாற்றி சாரதியாக மஹாபாரதம் நடத்தி குந்தியிடம் ஒப்படைப்பேன் -பாகவத சம்பந்தம் அனைத்தையுமே கிரமமாகக் கொடுக்கும் அன்றோ -ராமானுஜர் ஆறு கட்டளைகளில் உறுதி –பட்டாபிஷேகம் -இந்திரனும் தேவர்களும் மட்டுமே கண்டார்கள் -கோபி கோபர்கள் காணவில்லை –தேவேவோ -கந்தர்வ ஏவவோ –பாந்தவ நமஸ்துதே –அஹம் வோ பாந்தவ ஜாத-சிறு பேர் அழைத்தன -அறியாத பிள்ளைகள் -பரத்வம் நிந்தையானதே-நம் ஆழ்வார் நஞ்சீயர் அவர் அவர் தம் ஏற்றத்தால்-நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது யாவரும் அறிந்த உண்மை -நீர்மை

13 அத்தியாயத்தில் ராஸ லீலையும் உண்டு -உங்களில் ஒருவன் காட்டி -சிந்தயந்தி -கண்ணனையே சிந்தித்தவள் அதுவே ஸ்வரூப நிரூபணம்-கோபிகள் நடுவிலே கண்ணன் -பலவடிவம் -தப்பாக -ஒரே கண்ணன் நடுவிலே -ஒருத்தியைக் கைப் பிடிக்க மெய் மறந்து கோத்து விட – இதுவே விஷ்ணு புராணம் -ஸ்பர்ச ஸூக -மனசு அளவிலே பிடித்ததாக நினைத்துக் கொண்டார்களாம் –வேதாந்தம்–இதிலும் -சூழ்ந்து இருந்து ஏத்துவார் பல்லாண்டு -அங்கும் முதலில் உள்ளார் பின்னில் உள்ளார் போல் அல்லவே -உலகியல் மறந்து -அடியேன் தாஸன் -அனைவரும் -ஒரே அடையாளம் -கண்ணன் சந்திரன் மலர் இவற்றைப் பாட –அவர்கள் கண்ணனையே பாட-நான் காணும் உலகம் நீயாக வேண்டும் -நீ காண்பது அனைத்தும் நானே யாக வேண்டும் -நான்கு வருஷங்களுக்கு ஒவ்வொரு இரவும் ராஸலீலை நடந்ததாம் -7-11-நக்ஷத்திரங்கள் கண்ணனுக்கு –அனைவரும் சரீரம் -அவன் தனது சரீரத்தைத் தொட்டால் தோஷம் இல்லையே-மாறாக இந்த ராஸலீலை சிந்திக்க நமக்கு காமங்கள் விலகிப்போகும் –பரம பாவனம் அன்றோ-

தானபதி -அக்ரூரர் -சயந்தகமணி வைத்து தானம் கொடுத்ததால் –நாரதர் கம்சன் இடம் கண்ணனைப் பற்றி சொல்ல -அவன் வாசுதேவர் மேல் கோபிக்க -பாகவத அபசாரம் பொறுக்காமல் பூ பாரம் தீர்க்க வந்த கார்யம் கண்ணைப் பார்க்க வைத்தாராம் -பிள்ளைகள் இறக்கும் சோகம் வந்தபின்பு வாசுதேவர் நந்தகோபர் உக்ரசேனன் அனைவரையும் கொல்லப் போகிறேன் -அக்ரூரிடம் சொல்லி அனுப்புகிறான்-

5-16-5-கேசி வதம் -இந்த அசுரனைப் பார்த்து பயந்தால் என் மீது நம்பிக்கை இல்லாதவனாகுவீர் -ப்ரபன்னன் கரைந்தான் ஆகில் நாஸ்திகனாவான் -ராமானுஜர்-பிளந்து வதம் -மா வாய் பிளந்தான் -புலன்களை அடக்குவதைக் காட்டும் –நாரதர் மேகத்தில் மறைந்து கண்ணனைப் ஸ்தோத்ரம் பண்ணினார் -நர குதிரை -யுத்தம் பார்க்க வந்தேன் –கேசவ நாமம் -ஏற்படும் -கிலேசங்களை அழிப்பவன் -அவதார பிரயோஜனம் -அங்கு வந்து கம்சனை வதம் பண்ணும்பொழுது வந்து அங்கும் ஸ்தோத்ரம் பண்ணுவேன் -விதியாக அல்ல -அனுவாதம் -பாராவதார கர்த்தா பட்டம் கொடுப்பேன்
26 ஸ்லோகம் -மயா ஆயுஷ்மத் -பிரித்து -ஆயுஷ்மானாக பல்லாண்டு –
ஜடாயு பெருமாளை மங்களாசாஸநம் பண்ணியது போல் —

5-17-அத்யமே சபலம் ஜென்ம-நல் நாள் –தேரை ஒட்டி -மநோ ரதமும் ஒட்டி –சங்கல்பம் அடியாக அவதாரம்-யார் சங்கல்பம் -தமர் உகந்த உருவம்-அர்ச்சிராதி கமனம் அக்ரூரர் யாத்ரை -இரண்டும் மனஸால் நினைக்க-திருவேங்கட யாத்ரை-நேராக அனுபவிக்கிறோம்–கோபிகளுக்கு விப்ரலம்ப ஸ்ருங்காரம் -விஸ்லேஷம் -ஆர்த்தியை பெருக்கவே –முழுக்கு போட்டு ஆதிசேஷன் கண்ணன் -கண்டார் -வெளியில் கரையில் வந்து இரண்டு சிறுவர்களையும் -கண்டு -ஸ்தோத்ரம் பண்ணுகிறார்
ஸன் மாத்ர ரூபேண -பரமாத்மனே -வ்யாபினே -நைக ரூப ஏக ஸ்வரூபாய-பிரளய காலத்தில் ஒருவனாய் -பின்பு சகல சித் அசித் -ஒன்றே என்றால் ஒன்றாம் பல வென்றால் பலவாவான் -இந்திரிய ஆத்மா -பூதாத்மா -ஜீவாத்ம ஆத்மா -ஜடப் பொருள்களுக்கும் ஆத்மா -பரமாத்மா இப்படி பஞ்ச பிரகாரம்-தண்ணீருக்கு உள்ளே ஞானக் கண்ணால் கண்ட அதிசயம் தண்ணீருக்கு வெளியில் ஊனக் கண்ணால் அதே அதிசயம்–

கூனி -நைகவத்ரா விஷ்ணு புராணத்தில் த்ரிவிக்ரா பாகவதத்தில் —ஸூ கந்தி இயற்க்கை –ஸூகந்தம் செயற்கை -வேண்டாம் -திருமேனிக்கு ஏற்ற-பூசும் சாந்து என் நெஞ்சமே-விற் பெரும் விழா -சதுர்த்திக்கு நடக்க இருக்க முந்திய நாளே வந்தார்கள் -வில்லை எடுத்து நாண் ஏற்றி -உடைத்தான் –ராமாயணத்திலும் கூனியும் வில்லும் உண்டு–மநோ நயன நந்தன -நம்பி மூத்த பிரானைக் கொண்டாடி -மனத்துக்கு இனியான் ராமன் கண்ணுக்கு இனியான் கண்ணன் -இவனோ இரண்டுக்கும் இனியான்-மூப்பு உன்னைத் சிந்திப்பாருக்கு இல்லை -வா போகு வா இத்யாதி-சந்நிபாதம் கையால் தள்ளுவது அவதூத புறங்கையால் தள்ளுவது ப்ரஷேபனம் கீழே தள்ளுவது -சாணூர முஷ்டிகன் -மல்லர்களை முடித்து–விகலத் கிரீடம் –கேசத்தை இழுத்து -ராஜாவைக் கொல்லும் பொழுது ராஜ ஸிம்ஹம் வாங்கிய பின்பே கொல்ல வேண்டும் -கிரீடம் வாங்கிய பின்பு முடித்தான்-பாபங்கள் -திருவடியில் சரண் அடைந்த பின்பு தன்னடையே போகும்- சுனாமன் கம்சனின் சகோதரனை நம்பி மூத்த பிரான் முடித்தான்-வாசுதேவர் ஸ்தோத்ரம் -புத்ரன் கூப்பிட நா கூசுகிறது -மாயை வைத்து நடந்தத்தை மறைத்தான் -கூப்பிட்டார்கள்-

சிஷ்யாசாரம் –உபநயனம் பண்ணி சாந்திபினி -அவந்தி -உஜ்ஜெயினி -சென்றார்கள் -சிஷ்யர் கர்தவ்யம் காட்டி அருளி -ஆரை 4 கலைகளைக் கற்றார்கள்-குரு தக்ஷிணை -மிருதம் புத்ரம் மீட்டுக் கொடுத்து-

மேல் ஸ்ரீ ருக்மிணிப் பிராட்டியார் திருக் கல்யாணமும் ஸ்ரீ ப்ரத்யும்னனின் திருக் கல்யாணமும்

கார்க்க்ய ரிஷியிடம் பெற்ற சாபம் -யாதவர்களை அழிக்க-யவ்வனன்-greece- -கால -கறுத்தவன்-துவாரகைக்கு பெயர்ந்து-முசுகுந்தன் தூங்கி இருக்க-கண்ணன் என்று எழுப்ப- -சாம்பலாக்கி -தேவர்களுக்கு உதவி பெற்ற -தூக்கமே வரமாக-எழுப்பியவன் கண் திறந்து பார்த்தால் சாம்பலாவான்-ஸர்வம் ஸர்வேஸ்வத்வம் -அறிந்து -கார்க்கர் ரிஷி முன்பு தன்னிடம் சொல்லி இருந்தாரோ -28 சதுர்வம்சம் அவதரிப்பாய் என்று-ஸ்தோத்ரம் பண்ணுகிறான்-உலகமே நீயே மூர்த்த அமூர்த்த -உனது ஸரீரம் -ஜகத் கர்த்தா -படைத்து ஆள்பவனும் நீயே -விசிஷ்டாட்டவைதம்-அத்வைதம் -கட்செவி-கண்ணுக்கும் காதுக்கும் -நாவில் த்வைதம் -ஆதிசேஷ அவதார ராமானுஜர் தர்சனம்

அஹ்ருத ஹ்ருதய த்வஜன் -நன்றி கெட்டவன் -என்று அனைவரும் அறியும்படி -அத்யந்த பக்தர்களுக்கு மறையோ முறையோ இல்லை -கோபிகள் ஏங்கி பலராமனிடம் -5-25 பலராமன் திருக் கல்யாணம்-சங்கர்ஷணன் -யமுனையை இழுத்து – –5-26-ருக்மிணிப்பிராட்டியார் திருக் கல்யாணம்-காந்தி வாருணன் லஷ்மீ மூவரும் ஆதிசேஷனின் பத்னிகள் -ரேவதி பலராமன் -திருக்கல்யாணம் நிஷிதன் உன்முகன் திருமகன்கள்

ப்ரத்யும்னன் -ஞானம் ஒளி பலம் நிறைந்தவன் -சம்பராசுரன் கடத்தி -27 அத்யாயம் -2 ஸ்லோகம் -பிறந்த ஆறாம் நாள் கடத்தி -கடலில் வீசி -மீன் விழுங்கப் பார்த்து -முடியாமல் -செம்படவன் மீனைப் பிடிக்க –ரதி தேவியான மாயாவதி-சம்பாசுரனின் சமையல்காரி -மாய உருவில் தன்னைப் போல் ஒருத்தி சம்பாசுரனுக்கு மனைவி இடமும் கொடுக்க-மீனை வெட்ட குமாரன் கிடைக்க-மன்மதனே இவன் -பருவத்துக்கு வந்ததும் இவளே மனைவி -தாய்க்குப் பின் தாரம் – சம்பாசுரனனை வதம் பண்ணி கிருஷ்ணன் இடம் வந்தான் -வயசு வித்வாஸம் -பார்க்கக்கூடாது -மன்மதன் ரதி பிரிந்து சேர்ந்தார்கள்

ருக்மிணி காளிந்தி -மித்ரவிந்தா -சத்யா நக்கினஜித் மகளிர் –ஜாம்பவதி ரோஹிணி சுசிலா சத்யபாமா சாரு காசினி -அஷ்ட மனைவிகள்-ருக்மினிக்கு 11 மகன்கள் ஒரு மகள்-ருக்மி மகள் ருக்மவதி பிரத்யும்னன் இரண்டாம் கல்யாணம் -இவர்கள் மகன் -அநிருத்தன்-ருக்மிணிக்கு மகன் வயிற்று பேரன் -ரோசனா -மகள் வயிற்று பெண் –5-28- ருக்மி சூதாட்டத்தில் பொய் சொல்ல -அசரீரி சொல்ல பலராமன் வதம் பண்ண-அபயத்தின் பயம் -கண்ணன் பலராமனைக் கொண்டாடாமல் -ருக்மிணிக்கு -மவ்னமாக -இருந்தான்-

29 அத்யாயம்நரகாசுரன் -பூமிப் பிராட்டிக்கும் வராஹ மூர்த்திக்கும் பிறந்தாலும் கெட்ட ஸஹவாசத்தால் வந்த துர்விருத்தங்கள்–பிரக்ஜ்யோதிபுரம்-ASSAM- -சத்ய பாமையையும் கூட்டிப் போனான் -அவள் அனுமதி வேண்டுமே அவனை அழிக்க இவளுக்கு பாரிஜாத மரமும் கொடுக்கவும்-1000 மைல் RADIUS முள் வலை இரும்பால் முரன் போட்டு இருக்கிறான்-முரனை சக்ரத்தாலும்-7000 பேர்களும் சக்ரத்தின் தாரா-நெருப்பால் அழித்தான்-ஐப்பசி கிருஷ்ண பக்ஷம் சதுர்த்தசி -நரக சதுர்த்தசி -தீபாவளி முன்பே உண்டு -அன்று தான் லஷ்மீ பெண்ணமுதம் திருமார்பில் சேர்ந்து இருந்தாள்-16100 தேவ மாதுகளை மீட்டு திருக் கல்யாணம்-

30-அத்யாயம்-இவன் கருடவாஹனாக இந்திரலோகம் செல்ல அதிதியை வணங்க-கீழே இவள் அம்சம் தேவகி -இதுவரை உனது மாயத்தால் மோக்ஷம் கெடுக்காமல் இரண்டு தடவை தப்பினேன் -பர ரூபம் ஆசைப்பட கேட்க -அதிகாரி தேவதை யாகையால் கொடுக்காமல் மந்தஸ்மிதம் பண்ணி மீண்டும் மயக்க-ஆசீர்வாதம் பண்ணினாள் -இந்திரனின் தோட்டம் நந்தனம் -பாரிஜாதம்–30 யோஜநை 300 mile radius வாசனை-தேவர்கள் அங்கு அபசாரம் -அவர்கள் ஆயர்களாகி -கிருஷ்ணன் சந்நிதியில் இருந்து கைங்கர்யம் செய்து அஹங்காரம் அற்று இருக்கிறார்கள்-கிங்கர்கள் நான்கு தந்த யனைகள் குதிரிகைகள் மஹாமதிக்கு அளித்து -தானும் 16000 வடிவத்துடன் விளங்கி-உலகத்தையே சரீரமாகக் கொண்டவனுக்கு இது பெரிய கார்யம் இல்லையே-31அத்யாயம் முடிந்தது

கிருஷ்ணர் மற்றும் ருக்மிணி ஆகியோருக்கு 10 மகன்கள் இருந்தனர். அவர்களின் பெயர்கள் முறையே 1. பிரத்யும்னா, 2. சாரு தேஷ்ணா, 3. சுதேஷ்ணா, 4. சாருதேஹா, 5. சுச்சாரு, 6.சருகுப்தா, 7.பத்ராச்சாரு, 8. சாருச்சந்திரா, 9. விச்சாரு, 10. சாரு.-கிருஷ்ணர் மற்றும் சத்யபாமாவின் 10 மகன்களின் பெயர்கள்:பானு 12. சுபானு 13. ஸ்வபானு 14. பிரபானு 15. பானுமான் 16. சந்திரபானு 17. ப்ருஹத்பானு 18. அதிபனு 19. ஸ்ரீபானு 20. பிரதிபானு.கிருஷ்ணர் மற்றும் ஜம்பாவதி ஆகியோரின் மகன்களின் பெயர்கள்: 21. சம்பா 22. சுமித்ரா 23.புருஜித் 24. சதாஜித் 25. சஹஸ்ராஜித் 26. விஜய் 27. சித்ரகேத்து 28. வசுமான் 29. திராவின் 30. கிருது.-கிருஷ்ணர் மற்றும் நக்னஜிதியின் மகன்களின் பெயர்கள்:வீர் 32.சந்திர 33. அஸ்வாசென் 34. சித்ராகு 35. வேகவன் 36. வ்ரஷ் 37. ஆம் 38. ஷங்கு 39. வாசு 40. குந்தி. கிருஷ்ணர் மற்றும் காளிந்தியின் மகன்களின் பெயர் 41. ஸ்ருத் 42. காவி 43. வ்ரஷ் 44. வீர் 45. சுபாஹு 46. பத்ரா 47. சாந்தி 48. தர்ஷ் 49. பூர்ணமா 50. சோமக்.-கிருஷ்ணர் மற்றும் லட்சுமணின் மகன்கள்-பிரபோத் 52. கத்ரவன் 53. சிம்ஹா 54. பால் 55. பிரபால் 56. உர்த்வாக் 57. மகாசக்தி 58. சா 59. ஓஜா 60. அபராஜித். கிருஷ்ணர் மற்றும் மித்ரவிந்தாவின் மகன்கள் 61. வ்ரூக் 62. ஹர்ஷ் 63. அனில் 64. கிருத்ரா 65. வர்தன் 66. அன்னத் 67. மகாஷ் 68. பவன் 69. வான்ஹி 70. குஷி.-இறுதியாக, கிருஷ்ணர் மற்றும் பத்ராவின் மகன்கள்-71. சங்கிராம்ஜித் 72. புருஹட்சன் 73. ஷூர் 74. பிரஹரன் 75. அரிஜித் 76. ஜெய் 77. சுபத்ரா 78. வாம் 79. ஆயு மற்றும் 80. சத்யக். (வரிசை எண்கள் எந்த வரிசையையும் குறிக்காது)

32-அத்யாயம் –சத்ய பாமாவுக்கு பானு பவ்மன் இருக்கன்
தீப்த்திமான் தாம்ரபஷன்
சாம்பன்
சத்யம் பத்ரவிந்தன்
ஸங்க்ராமித்
விருகன்
காத்ரவான்
சுகன்
பாகவதத்தில் 16000-88800 பிள்ளைகள்
வஜ்ரன் -பிரத்யும்னனின் பிள்ளை –
32-8 உஷா -அனிருத்தன்
–பாணாசுரனின் மந்திரி கும்பாண்டன் மகள் சித்ரலேகா-33-19-ஜுரம் சண்டை கேட்டவர்களுக்கு ஜுரம் வராது –பாணன் மேல் பாணம் போட்டு -கோடரி அசுரப்பெண் ஆடை இல்லாமல் வர -கண்ணை மூடி தர்சனம் இல்லாமல் ஸூ தர்சனம் -பாஹு வனம் அழித்து -998 தோள்களை மட்டுமே -பிரகலாதன் கொள்ளுப்பேரன் -சிவனுக்கு மேளம் வாசிக்க வேண்டுமே -வில் அம்பு எடுத்து சண்டை போட -31-42-சிவன் ஸ்தோத்ரம் பண்ணி -3-46-கிருஷ்ணன் -உனது அபயம் பொய்யாகாது -நீயும் நானும் ஒன்றே தேவர் அசுரர் மனிதன் அனைவரும் என்னையே விட்டு இல்லையே -உனது ஆத்மாவாக இருந்து சொல்ல வைத்தேன்-நாக பாசத்தால் கட்டுண்ட பிள்ளையை பெரியதிருவடி சிறகு ஒலியால் போக்கி -புத்ர பவ்த்ர சந்ததிகள் உடன் இருக்க-அடுத்த 34 அத்யாயத்தில் -பவ்ண்டகர வதம்–காசிராஜனும் இவனுடன் கூட்டணி-ஸூ தக்ஷிணன் -காசிராஜனின் மகன் -சிவனைக் குறித்து யாகம் செய்து -பித்ருஹந்தாவை கொல்ல வரம் கேட்டு -அந்வயம் மாற்றி -மே வதா பித்ரு ஹந்தா -அப்பாவைக் கொன்றவனாலே எனக்கும் மரணம் ஏற்பட வேண்டும்அவன் ஏவின அக்னியே காசியை எரிக்க –பலராமன் லீலை -பாலுக்கு சக்கரை போல் -இரண்டு -சொல்லி தன்னுடை சோதிக்கு எழுந்தருளுகிறான்

35-அத்யாயம் -துரியோதனன் பெண் -லஷ்மணா -சாம்பனை காதலிக்க -சிறை பிடிக்க-யாதவர் போருக்குச் செல்ல -பலராமன் தடுத்து -தனியாகச் சென்று -கலப்பையுடன் -நடுங்கி -கைகூப்பி -உக்ரசேனர் கட்டளை -சாம்பனை விடுவிக்க -கேட்க -மறுத்து பேச -கர்ஜிக்க -ஹஸ்தினாபுரத்தை ஆட்டி -சாம்பனுக்கு திருக்கல்யாணம் பண்ணி வைத்தார்
36 ஸ்தானம் -மைந்தன் துவிதன் வானவர் -அஸ்வினி குமாரர் -அமிர்தம் உண்டு கலி யுகம் வரை இருக்க -தாரை சகோதரன் -ராமனுக்கு தொண்டு செய்த துவிதன்- -நரகாசுரனை நண்பனாக்கி -ரைவத மலையிலே பலராமன் ஒய்வு எடுத்து இருக்க-சண்டைக்குப் போக -பாகவத அபசாரம் -ஆயுஸ் குறைந்து பலராமனால் கொல்லப்பட்டான் –

37-தன்னுடைச் சோதிக்கு எழுந்தருளுகிறான் –125 திருநக்ஷத்ரம் இருந்து பலராமனுடன் சேர்ந்து பூமி பாரம் போக்கி -அவர் அங்கு இருந்து அவர்களுக்கு அஹங்காரம் வளர்த்து-யதுகுலத்திலும் அஹங்காரம் மிக்கு ள்ளார்-இருக்க -சாம்பனுக்கு பெண் வேஷம் -என்ன குழந்தை பிறக்கும் -இரும்பு உலக்கை பிறக்கும் -அது உங்கள் குலத்தை அழிக்கும் -திவ்ய ஞானம் இருந்ததால்–அவன் சங்கல்பம் அடியாகவே- இப்படி சாபம் -ரிஷி–உத்தவரை பக்தியோகம் பரப்ப -நர நாராயணன் -பத்ரி உள்ள இடத்துக்குச் செல்லச் சொல்லி -கிருஷ்ண பாதுகையும் தந்தருளி -அனுமோதித -பத பிரயோகம் இத்தையே குறிக்கும் -ஸாத்வத வித்யை உபதேசம்-பாஞ்சராத்ரமும் பக்தி யோகமும் -உபதேசம் -வஜ்ரனும் இருப்பான் -அநிருத்தன் பிள்ளை -ராஜ வம்சம் நிலை பெற இவனையும் இருக்க வைத்தான் –ப்ரபாஸ ஷேத்ரத்தில் அனைவரும் அழிந்தார்கள்-கிருஷ்ணனுக்கு துர்வாசர் சாபம் விஷ்ணு புராணத்தில் மட்டுமே உண்டு -பாகவத அபசாரம் க்ரூரம் என்பதைக் காட்டவே -ருக்மிணி அரண்மனையில் அழைத்து விருந்து வைத்து மீது உணவை உடம்பில் பூசிக்கச் சொல்லி -திருவடியில் மட்டும் பூசிக்காமல் -நான் சொன்னதை கேட்க்காத்தால் காலில் அடிப்பட்டு முடிவாய் –அதன்படியே மான் என்று எண்ணில் பாணம் போட-கட்டைவிரலில் -பட -மாஸூச சொல்லி ஜராசந்தனை ஸ்வர்க்கம் அனுப்பி –தனது நிரங்குச ஸ்வ தந்தர்யம் காட்டி அருளினவன் –

5-38-2-அர்ஜுனன் -தாருகன் இடமும் செய்து சொல்லி -துவாரகையில் இருந்த தேவிமார் -அஷ்ட மஹிஷிகள் -ரேவதி அக்னி பிரவேசம் -உக்ரசேனர் தேவகி வாசுதேவன் இவர்களும் அக்னி பிரவேசம் -ஸ்ம்ஸ்காரம் அர்ஜுனன் பண்ணி -16100 பெண்களையும் வஜ்ரன னையும் ஹஸ்தினாபுரம் கூட்டிப்போனான் -கண்ணன் போனதும் -கலியுகமும் நுழைந்ததாம் -கிருஷ்ணன் வாழ்ந்த அரண்மனை மட்டுமே மூழ்கடிக்கவில்லை -த்வராகாதீசன் இன்றும் எழுந்தருளி நம்மை கடாஷித்து அருளுகிறான் –

1000 வேடர்கள் வழி பறிக்க வர -காண்டீபம் தலைச்சுமை யானதே -நாணும் ஏற்ற முடியவில்லை -அஸ்திர மந்த்ரமும் மறந்தான் -16100 தேவிகளை வேடர் அபகரித்து போனார்கள் –வேதம் பிடிக்காதவர்களுக்கு தானம் அளிப்பது போல் பயன் அற்றுப்போந்தது -வஜ்ரனை இந்த்ர ப்ரதேசத்துக்கு அரசனாக்கினான் –
அர்ஜுனன் தனக்கு நேர்ந்த கஷ்டத்தை வேத வ்யாஸரிடம் சொல்ல –38-37- ஸ்லோகம்12 கேள்விகள் வியாசர் கேட்க –ஆட்டுப்புழுதி மேல் பட்டதா -வேதம் படித்தவரை கொன்றாயா -நம்பிக்கைத்ரோகம் பண்ணினாயா -ஆராதனம் பண்ணாமல் உண்டாயா -முரத்தின் காற்று பட்டதா -த்ருஷ்ட்டி தோக்ஷமா-மற்றவர் நகம் பட்ட நீர் பட்டதா -உன்னை விட எளியவனால் தோற்க்கப்பட்டாயா இத்யாதி – கிருஷ்ண லீலை தான் இது -என்று உணர்த்தினார்

பெண்களை வேடர் கொண்டு போவதற்கும் காரணம் உண்டு -அஷ்டாவக்ரர் வரம் கொடுத்ததால் இவர்கள் கல்யாணம் -வரம் பெற்றதும் இவர்களைப் பார்த்து கேலி பண்ண-வேடர்களால் சிக்கிக்கொள்வீர் -உங்கள் கற்புக்கு பங்கம் வராது -இதை உணர்த்தவே -தீயும் நன்றும் பிறர் தர வாரா –
38-87-பிறந்தால் இறந்தே தீர வேண்டும் மேல் உள்ளவன் கீழேயே வரவேண்டும் -சம்பாதித்த காசு செலவளிப்பதும் நிச்சயம் –நிரந்தர மோக்ஷம் -அங்கு தான் -பரிக்ஷித்துக்கு பட்டாபிஷேகம் செய்து ஸ்வர்க்க ஆரோகணம் -விஷ்ணு லோகம் பலன் -கேட்டவர்களுக்கு –

கலியுகம் பிரபாவம் 6 அம்சம்–பக்தியாலேயோ பிரபத்தியாலேயோ மோக்ஷம் -இவை செய்ய மனசில் அழுக்கு போக -த்யானம் -க்ருத யோகம் யாகத்தால் -அர்ச்சனையால் -திருநாம சங்கீர்த்தனம் அடுத்த அடுத்த யோகங்களால் -என்பதே விஷ்ணு புராணம் காட்டும்–6-6 அத்தியாயம் -6-7 அத்யாயம் பக்தி யோக விளக்கம்-விஸ்வரூபம்– ஸூபாஸ்ரய திவ்யமங்கள விக்ரஹம் தியானித்து தாரணம் -அஷ்டாங்க யோகத்தில் முக்கியம் -நல்லதாயும்-ஸூபமாயும் எளியதாயும் ஆஸ்ரயமாயும் -இருக்கும் -பிரசன்ன வதனம் தாமரைக்கண்கள் -ஒளி வீசும் நெற்றி சங்கு போன்ற கழுத்து திருமரு மார்பன் -ஸ்ரீயபதி -மஞ்சள் பட்டாடை -திருவடித் தாமரைகள் -திவ்ய ஆயுத பூஷணம் -அபய ஹஸ்தம் முத்ரிகா ரத்ன பூஷணம் -ப்ரத்யங்க தாரணம்-த்யானம் அடுத்த -தாரணையில் மூழ்கிப் போனால் த்யானம் -பின்பு சமாதி-பரமத பங்கம் -இந்த ஸ்லோகம் விளக்கம்-திவ்ய ஆத்ம ஸ்வரூபம் க்ரஹிக்கும் அளவு-விக்ரஹத்துடன் சேர்த்து ஸ்வரூப த்யானம்தத் பாவ பாவ ஆபன்னம் -ஒன்றாம் என்னும் அல்லல் எல்லாமே ஒழித்தார் உடையவர் -போக மாத்திரமே ஸாம்யாபத்தி-6-8-மைத்ரேயர் பராசரருக்கு நன்றி சொல்கிறார்-பலன்கள் சொல்லி நிகமிக்கிறார் பராசர மஹரிஷி-

உறுவது ஆவது எத்தேவும் எவ் வுலகங்களும் மற்றும் தன்பால்
மறுவின் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக் குருகூரதனுள்
குறிய மாண் உருவாகிய நீள்குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே
.–4-10-10-மறு இல்லாத மூர்த்தி உண்டு – குற்றங்கட்கு எதிர்த்தட்டான விக்கிரகம்; அதனோடு ஒத்து’ என்னுதல்;
மறு – குற்றம். ‘இவை சரீரத்தோடு ஒத்திருத்தலாவது என்?’ என்னில்,
1- பிரிந்து நிலைத்திருத்தலுக்குத் தகுதியில்லாத -2-ஆதார ஆதேய பாவ – 3-ஏவுகின்ற ஏவப்படுகின்ற பாவ –4- சேஷி சேஷ பாவமான சரீர இலக்கணங்கள் நான்கும் இவற்றிற்கு உண்டு ஆகையாலே. மரத்திலே தேவதத்தன் நின்றால் அது அவனுக்குச் சரீரமாகாதே அன்றோ?-இங்கு அங்ஙன் அன்றிக்கே இருக்கையைத் தெரிவித்தபடி.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மைத்ரேய முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பர்த்ருஹரி அருளிச் செய்த நீதி சதகம்‌-

June 11, 2026

கி. பி. 7ஆம்‌ நூற்றாண்டில்‌ வாழ்ந்தவராகக்‌ கருதப் பெறும்‌ பர்த்ரு ஹரி இந்நூல்‌ வாயிலாக மனித குலம்‌ மேன்மையுற நூறு நீதிக் கருத்துக்களைக்‌ கூறி யுள்ளார்‌. மிக உயர்ந்த கருத்துக்கள்‌ செறிந்த நீதிகளை
உணர்த்தும்‌ இந் நூலின்‌ சமஸ்கிருதப் பாக்களை அமரர்‌ ஓஒ.என்‌. அப்பா ஸ்வாமி அய்யரவர்கள்‌ மூல ஸ்லோகங்‌களுக்கு எந்த மாறுபாடுமின்றி சுவை மிகு தமிழ்ப்‌ பாக்களால்‌ மொழி பெயர்ப்பு செய்துள்ளார்‌.-இதே போல் ஸ்ருங்கார சதகமும் வைராக்ய சதகமும் உண்டு

அறிவும்‌ மகிழ்ச்சியும்‌ உருவமாய்‌ அமைந்து
திசையாற்‌ பொழுதால்‌ தீர்வு பெறலில்லாச்‌
சுயவனு பவமே சிறந்த அளவையாம்‌
சாந்தமாம்‌ ஒளியைச்‌ சிறப்புற வணங்குவாம்‌.

அழுக்கறுத்‌ துகவார்‌ அறிவு நிறைந்தவர்‌ விழுப்பமார்‌ விரகர்‌ நகுதலோ டிகழ்வர்‌
கற்றறி யாதவர்‌ கருத்துணர்ந்‌ தாய்வரோ உற்றநம்‌ உணர்மொழி உடலினுட்‌ புதைந்தது.–மூர்க்க பத்ததி-

அறிவில்‌ லாதவர்‌ எளிதினில்‌ மகிழ்வர்‌;
அறிவிற்‌ சிறந்தவர்‌ அதனி னின்புறுவர்‌;
நன்றுணர்ந்‌ தகங்கொளா நயனில்‌ கலைஞரை
பொன்புரை கலைமகள்‌ கொழுநனும்‌ பூரியான்‌.

சுறாப்பல்‌ வரிசையிற்‌ கவரலாம்‌ முத்தம்‌;
இராப்பகல்‌ கதறும்‌ இமிழ்கடற்‌ றிரைமேல்‌
உராய்நடந்‌ தேகிக்‌ கடக்கலாங்‌ கடலை;
அஞ்சுற்‌ றெனத்தலை புனையலாம்‌ சனவரா;
பிடித்ததே பிடியாய்ப்‌ புகல்செயும்‌ மூர்க்கரை
இடித்துக்‌ காட்டிமெய்‌ யுணர்த்துதல்‌ எளிதல்‌.

மணலைப்‌ பிசைந்துநெய்‌ யெடுக்கவும்‌ முயலலாம்‌
அனலென உடற்றும்‌ அருநீர்‌ வேட்கையைக்‌
கானல்நீர்க்‌ காட்சியால்‌ தணித்தலு மாகும்‌;
ஆனமட்டொருவன்‌ அலைந்து திரிந்துபின்‌
கானுறு முயற்கொம்‌ படையினு மடையலாம்‌;
தான்பிடித்‌ ததுபிடி யென்பவர்‌ துரிசற
நாமெடுத்‌ தோதல்‌ நவிலவும்‌ படுமோ

அமுதெனப்‌ பாயும்‌ அறியவின்‌ மொழிகளால்‌
அறிவிலா னொருவன்‌ அகம்‌8ர்‌ திருந்திடல்‌
தாமரைத்‌ தண்டின்‌ துன்னு நன்னூலால்‌
தாம்புலி தன்னைத்‌ தளைத்தலே யாகும்‌;

அனிச்சப்‌ பூவின்‌ அரியமெல்‌ லருகால்‌
மணிசெதுக்‌ கமைத்தல்‌ மற்றுவே றென்சொல்‌ 9
ஒருதுளித்‌ தேனால்‌ ஓதமார்‌ உவரியை
உறுசுவைத்‌ தாக்குதற்‌ குவமை யாக்கிடுமே.

அறிவிலார்‌ தமக்கே யழகிய போர்வையாம்‌
விதியினா லமைந்ததாம்‌ விரகுறு மெளனம்‌;
சான்றோர்‌ குழுவிற்‌ சார்ந்திடும்‌ போதில்‌
ஆன்ற வோரணியா மறிவிலார்க்‌ கமைவே.

சிற்றறி வினனாய்ச்‌ சிதறுறும்‌ சமயம்‌ |
உற்ற மதத்தால்‌ உணர்ந்தமென்‌ றுகந்தேன்‌;
நற்றிற வறிஞர்பால்‌ நவின்றபின்‌ சிற்சில
கற்றில னெனக்கண்‌ டற்றது மதஜுரம்‌.

இழிஞ நிழிய பொருள்தனை வெளவுவர்‌
இழிவுள உயிர்ப்பொறை யறிகிலர்‌ ஈனம்‌
கழிமுடை நாற்றத்‌ தழுக்குறும்‌ எலும்பை
பழிப்புறும்‌ தெருநாய்‌ பாய்ந்துணும்‌ போழ்தில்‌
விழுப்பமார்‌ இந்திரன்‌ விரும்பி யணுகினும்‌
கெழுத்கை யிலதாய்க்‌ கேடுறும்‌ பாவம்‌.

வானினின்‌ நிழிந்துறும்‌ வரநதி கங்கை
தான்வந்‌ தடைந்தது தகைமைசால்‌ சிவன்றலை;
பசுபதி முடியினின்‌ றகன்றுபர்‌ வதமுற
உயர்மலை முடியினின்‌ றிறங்கியூர்ந்‌ ததுதரை

தரையினின்‌ றோடி யணைந்தது கடலை
வரைவொளன்‌ நின்றிப்‌ பலநெறிச்சென்று
உரைசால்‌ கங்கையு முயர்வை யிழந்தது
பகுத்தறி வின்றிப்‌ புன்னெறிப்‌ பட்டு
தகுந்ததம்‌ பதவியிற்‌ றாழ்ந்தவர்‌ பலரே.

ஒவ்வொரு நோய்க்கும்‌ மருந்துள துலகில்‌;
செவ்விதாம்‌ அறிவிலார்‌ சிறக்க ஏதுளதோ 2
நெருப்பை அணைக்கலாம்‌ நீரி னுதவியால்‌;
எறிக்கும்‌ வெயிலைத்‌ தணிக்கலாம்‌ குடையால்‌; ,
தெறுக்குந்‌ தோட்டியால்‌ தாண்டலாம்‌ யானையை;
காளை கழுதையைக்‌ கழித்தலாம்‌ கழியால்‌;
ஆளைத்‌ தெறிநோ யகற்றலாம்‌ மருந்தால்‌;
மந்திர தந்திரத்தால்‌ மாற்றலாம்‌ நஞ்சை
தந்திர மொன்றிலைத்‌ தணிக்க மடமையை.

வித்வத்‌ பத்ததி

நூல்பல உணர்ந்து நுவல்வல அறிஞர்‌
நேர்படும்‌ இன்சொலால்‌ நிகழ்த்துவர்‌ தெளிவு
அத்தகை யறிஞர்‌ மிடியினும்‌ அரசரே;
வித்தக வன்மையின்‌ விளங்குவர்‌ மதியால்‌;
நேர்படா வரசால்‌ நிபுணர்‌ வறிஞராம்‌
இரத்தினச்‌ சோதகன்‌ இனமில னாயின்‌
சிறப்புள ஒளிக்கலும்‌ சீர்பெற விலையே.
சிறப்பிலா திருப்பினும்‌ சிறக்குநா ளுறுமே.

கல்வியென்‌ றோதும்‌ கரந்த உட்பொருள்‌
கள்வன்‌ றனக்குக்‌ கையுற விலையே;
எப்போதும்‌ அது அளித்திடும்‌ தென்பை
எப்போதும்‌ அதால்‌ இயம்பொணா வின்புறும்‌
அற்போ டோதுவோர்க்‌ கலித்தார்‌ பெருகிடும்‌
கற்ப முடிவிலும்‌ குறைவுறல்‌ இலையே.
இத்தகை யோரை யிறைவரே போற்றுமின்‌
வித்தக வறிஞரை விரக நிகழ்வரோ 9
அவர்தம்‌ மிடத்தில்‌ அழுக்கா றெவர்க்குரும்‌
எவர்க்கு மவரிட மன்பே வளர்க.

உயர்வுள வுண்மைகள்‌ உற்றுணர்‌ புலவரை
உயர்வுற்‌ றிணங்குறும்‌ ஆடென மதியேல்‌;
புல்லினிற்‌ புல்லிதாய்க்‌ கருதும்‌ பொருளால்‌
புல்லிப்‌ பிணைத்திடல்‌ பலித்திடும்‌ செயலை;
புதுமதப்‌ பொழிவால்‌ கவுளலைப்‌ புறுங்கயம்‌
சிதைமரை நாளநூற்‌ சிடுக்கினிற்‌ றளையா.

பால்நீர்க்‌ கலப்பிற்‌ பால்பிரித்‌ திடுந்திறம்‌
பால்நிற அன்னப்‌ புள்விட்‌ டகலுமோ 2
அனந்தா னனத்துடன்‌ ஆரச்‌ சினக்கினும்‌
அனத்தான்‌ பொய்கையை வற்றிடச்‌ செயலால்‌
வனச மலர்த்திரள்‌ விளையாட்‌ டயர்வுறும்‌;
இதற்குமே லிடரும்‌ பிரமனா லியலுமோ
எதற்கும்‌ மேலோர்‌ செறினு மிளையவர்‌
தமக்குறு திறமையிற்‌ பின்வாங்‌ குவரோ

ஆண்மகன்‌ றனக்கு அழகைத்‌ தருவன
தோள்வளை மதியொளித்‌ தொங்க லலவே
குளிப்பு முழுக்கல கும்மெனும்‌ பூச்சல;
அளிப்பன சிறப்பை அழகிய மலரல
கல்விசேர்‌ சொற்றிறம்‌ ஒன்றே கவினணி
பல்வகைப்‌ பிறவணி பழுதுறு மலவோ ?

கற்றோ னுக்கே கல்வியா லழகுறும்‌
கற்ற தாங்கல்வி காத்துள மறைபொருள்‌
கற்ற தனாலே க$தித்தஇிடு மின்பிசை;
உற்ற வாசாற்கு முயர்ந்ததோ ரொளியே;
மற்றோர்‌ நாட்டிலு முற்றதோ ர௬ுறவாம்‌;
பற்றுறுந்‌ தெய்வம்‌ பலவினும்‌ சிறந்ததே;
வெற்றிவேல்‌ மன்னரும்‌ பற்றொரு வணங்குவர்‌
நற்றுங்‌ கல்வி நண்ணா தாற்கு
உற்ற வுயர்தனம்‌ உறுவது மிலையே;
இத்திறத்‌ தாலே கற்றிலா ராடே.

பொறுமை யிருந்தால்‌ போர்க்கவசம்‌ ஏன்‌?
தெறுஞ்சினம்‌ இருந்தால்‌ தெவ்வர்‌ எதற்கோ 2
பங்காளி யனைய புல்லோர்‌ இருந்தால்‌
வெங்கன லென்னும்‌ வெம்பகை யெதற்கு ?
நண்பரி ருந்தால்‌ நன்மருந்‌ தெதற்கு ?
பண்பிலா ருண்டெனில்‌ பரம்புவே றெதற்கு 9
புரையிலாக்‌ கல்வி பொருந்தி யவற்கு
நிறைபொருட்‌ செல்வம்‌ நீங்கிலென்‌ குறையே.

ஒன்பது வகைத்தாம்‌ உலகுிய லோர்வு
அன்புடன்‌ நடத்தல்‌ உற்றார்‌ உறவை
பணிவிடை யாளர்பால்‌ பரவிய கிருபை
பணிபோற்‌ பகையிடம்‌ பதுங்கி வஞ்சித்தல்‌
நல்லோ நிடத்தில்‌ நயமார்‌ அன்பு
வல்லர சிடத்தில்‌ வணங்கு விசுவாசம்‌
கற்றசான்‌ றோர்பால்‌ கரவிலாத்‌ தன்மை
உற்றப கைவர்பால்‌ உளந்தள ராமை
முதியோர்‌ தம்மிடம்‌ முற்றிய பொறுமை
நிதிபோல்‌ மனையால்‌ நிகரிலா மதிப்பே.

நல்லோர்‌ பழக்கம்‌ நல்காப்‌ பயனெது 9
ஒல்லும்‌ வகையால்‌ ஒழித்திடும்‌ மதிநோய்‌
பேசும்‌ மொழிகளில்‌ புகுத்திடும்‌ மெய்ம்மை
நேசமார்‌ மதிப்பைத்‌ தந்திடும்‌ நன்கு
பகுத்தறி வதனைப்‌ பல்கிடச்‌ செய்யும்‌
வகுக்கும்‌ திசையெல்லாம்‌ வழங்கிடும்‌ நல்லிசை.

பொருட்சுவைச்‌ சித்தராம்‌ புலவோர்‌ தமக்கு
அருட்டிற வெற்றி யமைந்திட என்றும்‌
நல்லிசை யுருவாய்‌ நிறைந்தவர்‌ உடற்கு
இல்லையே மூப்புச்‌ சாக்காட்‌ டச்சம்‌.

மானசெளர்ய பத்ததி

மதங்கொள்‌ யானையின்‌ மண்டையை யுடைத்து
ASC செய்‌ ததனின்‌ செந்நீர்‌ சதையிவை
உண்பதே நோக்கமாய்‌ உறுதிகொள்‌ வயமா
நண்ணும்‌ ஊக்கம்‌ முழுதும்‌ நலிந்தும்‌
உண்ணா தளைத்தும்‌ மூப்பால்‌ ஒடுங்கியும்‌
விண்ணுறு வரைநாள்‌ கிட்டினு மஃது
புல்லுண்டு வாழும்‌ புன்மை யுறாது
வல்லாண்‌ மையாக வயத்துடன்‌ வீயும்‌2

உணவிடு வோனை எதிர்நோக்‌ கிடிலோ
தனதுடல்‌ தரைபட மல்லாந்‌ திடும்‌ நாய்‌
வயிற்றையும்‌ முகத்தையும்‌ வயங்கக்‌ காட்டி
கயற்றிய வாலை யாட்டுங்‌ கரைந்து
கால்கள்‌ தரையில்‌ மோதுறக்‌ குதித்து
சால்புள நன்றியைக்‌ சிறக்கக்‌ காட்டும்‌;
யானையிர்‌ சிறந்ததோ எஜமானனைப்போல்‌
தான்தன்‌ போஷகன்‌ தன்னைக்‌ கண்ணுறும்‌
செல்வ மாகப்‌ பலமுறை சொன்னபின்‌
மெல்ல மெல்ல மடுக்கும்‌ கவளம்‌.

பிறப்பிறப்‌ பமைந்த பீழையாம்‌ சுழலில்‌
இறந்தவன்‌ யாரோ பிறவா திருப்பவன்‌ 9
எவனது பிறப்பால்‌ குடிமே லுறுமோ
அவனே பிறப்பவன்‌, மற்றவர்‌ பிறப்பெவன்‌ –

நசையால்‌ மெலிந்த பரதையாம்‌ தெருநாய்‌
வசையுறும்‌ அழுக்கும்‌ கொழுப்புஞ்‌ செறிந்த
தசையிலா எலும்பையும்‌ தாவிக்‌ கடிக்கும்‌;
பசிதணி உணவுப்‌ பற்றின்‌ றேனும்‌
நசையால்‌ மென்றிடும்‌ நரம்படர்‌எலும்பை;
ஒள்ளிதாம்‌ சிங்கம்‌ ஒறும்‌ பசியுற்றும்‌
குள்ளை நறியது கைக்குற்‌ றதேனும்‌
பிள்ளா ததனைப்‌ பிடித்திடும்‌ கயமே;
பசிநோய்‌ வருத்தினும்‌ பசியுறும்‌ பிராணிகள்‌
உச௫ிதமாம்‌ தந்தமக்‌ குரியதே நாடும்‌.

பூங்கொத்‌ தவைபோற்‌ பூதலந்‌ தன்னுள்‌
ஒங்கிய நிலையுள விரண்டே வறிஞர்க்கு நல்லோர்‌
தலைமிசை நிலைபெறச்‌ சிறத்தலும்‌
கல்லார்‌ கானற்‌ கன்றி வீழ்தலுமே.

பகலிராத்‌ துலக்கும்‌ பகலவன்‌ மதியை
இகலுள ராகுவாம்‌ இறுந்தலை விழுங்குவன்‌
பருவநா ளிரண்டிலும்‌ பண்ணுவன்‌ புசிப்பு
உருவமார்‌ வியாழ னாதியாங்‌ கோளொரூஉம்‌
வீரியம்‌ விரும்பு விறலோ ஸிராகு
சீரிய சிந்தையிற்‌ பகையா னிவற்றை.

ஆதி சேடனாமை வராகம்‌;
பாது காக்குமிறை பகவன்‌ அம்சமாம்‌;
அகன்ற பணாமுடி அகிலம்‌ சுமந்தது
புகன்ற வவ்வரவைப்‌ புறம்பெற்‌ றதாமை;
தகவுள விவற்றைச்‌ சுமந்தது வராகம்‌
வைத்த பாரந்‌ தாங்கிய வயவரை
எய்த்த விவ்வுலகில்‌ ஏற்றுவர்‌ பலரும்‌;
வீரர்கள்‌ செயல்கள்‌ வியந்தக்‌ கனவே.

இந்திரன்‌ குலிசம்‌ தந்தையை எறிக்கையில்‌
வந்துறு துயரால்‌ பனிவரை வருந்துறத்‌
தன்னுயிர்‌ தக்கக்‌ கடலொளி மைநகம்‌
மன்னுங்‌ கடலில்‌ மாய்ந்ததேல்‌ மானமாம்‌
மான செளரியம்‌ மன்னுமோர்‌ மன்மகன்‌
தானவர்க்‌ குதவுறா துயிர்பெறல்‌ தகவோ 9

சூரியகாந்த மென்னுஞ்‌ சிலைப்பொருள்‌
வீரியன்‌ வெயிலவன்‌ கதிருறிற்‌ கதழ்ந்திடும்‌;
ஊக்கமும்‌ மானமும்‌ உற்றவோ ராண்மகன்‌,
தூக்குறல்‌ தகுமோ பிறர்செயும்‌ பழிப்பை.

இளஞ்சிங்‌ கமாயினு மிபந்தனைக்‌ கண்ணுறில்‌
மதம்வடி மண்டையிற்‌ பாய்ந்தடித்‌ தொறுக்கும்‌;
சவுரிய முடையார்‌ செய்வர்‌ துணிசெயல்‌
கவுரவமதுவே கரந்தொடுங்‌ குவதல்‌
ஆண்டுக்‌ குறைவினால்‌ ஆண்மை குறையுமோ 9
பூண்டிடும்‌ பெருஞ்செயல்‌ பிறப்புறு மிடலே.

அர்த்த பத்ததி

பணமொன்‌ நறின்றேல்‌ புல்லாம்‌ எல்லாம்‌
கனமாம்‌ குடிமை நரகுற விடுவர்‌;
நற்குணம்‌ பலவும்‌ நீடுமே அதன்‌$ழ்‌;
நன்னெரி யதுவே நெடுங்குன்‌ நிழிவுறும்‌;
நற்குடி யோமெனும்‌ நலஞ்செய்‌ மானம்‌
ஏற்குறு பஞ்சென எரியுற்‌ றிடுமே
முரண்சேர்‌ வலிமை முவங்இடிக்‌ கிரையுறும்‌
அருணாம்‌ பலவும்‌ அகன்றிட நேரினும்‌
பணமாம்‌ ஒன்றையே பரவுவர்‌ கயவர்‌.

பொன்னுடை யானே பெருங்குடிப்‌ புகல்‌ பெறும்‌
மன்னிய செல்வம்‌ மிகுந்திடில்‌ மாண்குடி
உன்னுங்‌ கல்விமான்‌ உயர்நிதி யுடையோன்‌
பன்னும்‌ மறைவலான்‌ உயர்நிதி யுடையோன்‌
பன்னும்‌ மறைவலான்‌ பணம்நிறைந்‌ தவனே;
நல்லியல்‌ பறியும்‌ நுட்பமும்‌ அவனதே
ஒல்லும்‌ வகையா லோதுவோ னவனே
பார்வைக்‌ கழகன்‌ பணமுள்‌ ளவனே
ஏர்மட்‌ டுமுறில்‌ எளியவள்‌ அலவோ 9
பல்வகைப்‌ பண்பும்‌ பணத்தை நாடிடுமே.

பன்னிரு விதங்களில்‌ கேடுறும்‌ புவியில்‌;
கசடுறுமமைச்சால்‌ கெடுவன்‌ வேந்தன்‌;
அசடுகள்‌ சேர்க்கையால்‌ அழிவன்‌ துறவி;
செல்லங்‌ கொடுத்தால்‌ சீர்கெடும்‌ சந்ததி;
நல்லநூற்‌ பயிற்சிக்‌ குறைவால்‌ மறையவன்‌
கெட்ட சந்ததியால்‌ கேடுறும்‌ தலைமுறை;
கெட்டவர்க்‌ குழைத்தால்‌ கேடுறும்‌ நடத்தை
நாணமும்‌ ஒழுக்கமும்‌ நகுகுடி யாற்கெடும்‌;
காணுறுங்‌ கவலை குறைவுறிற்‌ க்ருஷிகெடும்‌;
தூரதேசஞ்‌ செலிற்‌ றொலைந்திடு மன்பு;
நல்லுணர்‌ வற்றால்‌ நட்புக்‌ குறைவுறும்‌;
நடுநோக்‌ கற்றிடில்‌ நலிந்திடும்‌ வாழ்வு.

செல்வஞ்‌ செலற்கு மூன்றே வழியுள
நல்வழி யளித்தல்‌ நுகர லளித்தலே;
கொடையும்‌ நுகர்வும்‌ கைகூ டாவிடில்‌
அடுதலாங்‌ கடைவழி யதையே யடையும்‌.

கட்டளைக்‌ கல்லில்‌ தேய்த்தா மரதனம்‌,
முட்டிய முரணி லூறுபெறு வெற்றியன்‌,
மும்மதம்‌ பொழிதலால்‌ முரண்‌ குறை யானை,
அம்பொழி லிலையுறு அழகிய காலம்‌
அம்பு வடிந்துறும்‌ அறல்படி யாறுகள்‌,
எண்ணிரண்‌ டவைகளில்‌ ஒரு பிறைத்‌ தேய்பிறை,
பண்புறு மிளம்பெண்‌ பதிசேர்ந்‌ திளைத்தமை
எளியவர்க்‌ களித்தலால்‌ அளிதரும்‌ ஏழமை
ஒளியுறும்‌ இளைப்புகள்‌ இவைபல அழகே.

மிக்க பசியால்‌ வருந்திடும்‌ மிடியன்‌
தக்கதோர்‌ கைபிடித்‌ தானியம்‌ விரும்புவான்‌
அநீத வறிஞனே அளவிலாப்‌ பொருள்பெறில்‌
இந்தப்‌ புவியையு மிகழ்வன்‌ புல்லென;
ஆகவே பொருட்பால்‌ அற்பும்‌ வெறுப்பும்‌
ஆகும்‌ நிலைமைக்‌ கேற்கவே மாறிடும்‌;
செல்வரின்‌ பதவி சிறப்பதற்‌ கேற்ப
அல்கும்‌ அகலும்‌ பொருட்பால்‌ மதிப்பே

மன்னா முறைகேள்‌ நிலப்பசுப்‌ பால்பெற
கன்றாப்‌ போற்றல்போல்‌ காத்திடிவ்‌ வவனியை;
ஓயா விழிப்புடன்‌ உலகினைப்‌ புரந்தால்‌
ஓவாப்‌ பயன்தரு முயர்ந்தகற்‌ பகமென.

அரசவைத்‌ தந்திர மதிசய வெதிரிடை
விரவுறும்‌ விலைமகள்‌ போலத்‌ திரிவுறும்‌
உண்மை பொய்மை கடுமை மென்மை
கொடுமை கருணை கடுஞ்செட்‌ டுதாரம்‌
ஓயாச்‌ செலவு ஓயா வரும்படி.

பின்வரு மறுபயன்‌ போற்றா தார்க்கு
மன்னரை மன்னி யுறுவதென்‌ மகிழ்வு 2
சொன்னசொல்‌ நிறைவுறல்‌ மன்னு மிசைபெறல்‌
உன்னுமொண்‌ மறையவர்க்‌ குருபொரு ளுதவுதல்‌
தன்னிடஞ்‌ சார்ந்தவர்க்‌ காத்துமிக்‌ களிதரல்‌
இன்பம்‌ நுகர்ந்தடல்‌ நண்பரைப்‌ புரத்தலே

இணற்றினிற்‌ கொண்டிடு மவ்வள வேநீர்‌
கடற்றிரை தனிலுங்‌ கொண்டிடுங்‌ குடமே;
படைத்தவன்‌ தலையில்‌ பொறித்த நஞ்செல்வம்‌
கிடைத்திடல்‌ திண்ணம்‌ கொஞ்சமோ வதிகமோ
கிடைப்பது கிடைக்கும்‌ களர்மணற்‌ பரப்பிலும்‌;
இடைப்பிற மேருவின்‌ உயர்முக டேறினும்‌
படைப்பவன்‌ விதிக்குமேல்‌ பலிப்பதே இலையே.

துர்ச்சன பத்ததி

இரக்க மிலாமை இனமிலாச்‌ சண்டை
பிறன்பொருள்‌ மனைவியைப்‌ பேதையாய்‌ வெஃல்‌
அன்புள வுறவிடயம்‌ அழுக்கா றுறுதல்‌
புன்புரைக்‌ கயவர்க்‌ இயற்கை யிவ்வைந்தும்‌.

ஒளிக்கல்‌ புனையினு மொழித்திடு நச்சரா;
கல்வி சேர்ந்திடினும்‌ கழிந்திடு கயவனை

எவ்வித உயர்வை யவ்விய ரிகழார்‌ 9 வணக்க முள்ளமையை வெள்ளறி வென்பர்‌; நோன்பு தூய்மைகள்‌ வெளிப்பகட்‌ டென்பர்‌;
மாசிலா வொழுக்கை மோசடி யென்பர்‌;
தறுகணாண்மை தண்ணளிக்‌ குறைவாம்‌;
அறம்பியல்‌ துரவியை அறிவில னென்பர்‌;
மென்மையா மின்மொழி கையுறை யாகும்‌
ஒள்ளிய தன்மையைச்‌ செருக்கென உரைப்பர்‌
நாவலர்‌ நம்மைப்‌ பேச்சுவா யென்பர்‌;
எவ்வித உயர்வையு மவ்விய நிகழ்வரே

சினமுளதென்னில்‌ செந்தீ எதற்கு ?
இனம்பார்த்‌ தஇடாமையின்‌ இழிசெயல்‌ ஏது 2
உண்மை யுளதெனிற்‌ தவம்வே றெதற்கு 9
நன்மை யிதனிற்‌ நாம்கா ணலாமே;
உளத்தூய்‌ மையுண்டெனில்‌ குளம்நதி எதற்கு 9
அளவளாய்‌ நயத்தலில்‌ அருந்திற லேது 2
நல்லிசை தன்னிலும்‌ நயந்தரு மணியெது?
நல்லினக்‌ கல்வியின்‌ நலந்தரும்‌ பொருளெது 9
பொல்லா னெனப்பெயர்‌ புனைதலின்‌ விளிவெது 9
நல்லானெ னப்பெயர்‌ புனைதலே நல்லுயிர்‌.

என்னுளம்‌ ஊறுசெய்‌ அயில்வேல்‌ ஏழுள;
மன்னொளி நீங்கப்‌ பகற்றோன்‌ நிடும்‌ மதி;
தன்னிள நலங்கழிந்த தன்பினும்‌ காதலாள்‌;
நன்னிறத்‌ தாமரை நீங்கிய பொய்கை;
அறிவெழுத்‌ தில்லான்‌ அந்தமார்‌ வதனம்‌;
செறிபொரு ளாளன்‌ சேர்பொரு Mame;
ஓவா வறுமை யாலுழலு முத்தமர்கள்‌;
கோவா ரரண்மனைக்‌ கொடியவர்‌ புகலே.

சவிமிகுஞ்‌ செந்தீ சோர்வுடன்‌ தீண்டிடில்‌
அவிசொரி யந்தணர்‌ கரத்தையுஞ்‌ சுடுமே;
காய்சின வேந்தன்‌ கதமிகு போழ்தினில்‌
ஆய்பொரு எமைச்சரும்‌ அகல்க சற்றமைவுற.

மெத்த கடினம்‌ மிக்கவர்‌ பணிசெயல்‌;
மிக்கவர்‌ தமக்குப்‌ பணிவிடை எளிதல்‌;
வாய்திற வாவிடில்‌ மூகைய னென்பர்‌;
வாய்வல னாகில்‌ வாயாடி யென்பர்‌;
அணுகிப்‌ பழகி லகந்தைய னென்பர்‌;
அணுகா தகலின்‌ அ௮ச்சமிக்‌ குடையனாம்‌;
பொறுமையுள்‌ ளானெனில்‌ பயங்கொளி யென்பர்‌;
பொறுமையில்‌ லானெனில்‌ பிறப்பினை யிகழ்வர்‌.

கீழ்மகன்‌ பழக்கம்‌ கூட்டுமே துயரை;
கீழ்மக்‌ களுக்கே கிழியை ஈவன்
நீதித்‌ தளைகளை நீங்குறத்‌ தெறிப்பன்‌;
தீதாம்‌ பதவித்‌ தீச்செயல்‌ மறந்தவன்‌;
கணக்கிலாச்‌ செல்வம்‌ கணந்தரச்‌ சேர்ந்தவன்‌;
பிணக்குடன்‌ நற்குணம்‌ பலவும்‌ பகைப்பவன்‌.

புல்லார்‌ நட்பு முற்பகல்‌ நிழலே;
நல்லோர்‌ நட்பு பிற்பகல்‌ நிழலே;
நீண்டுபின்‌ குறுகும்‌ நிலையிலார்‌ நட்பு;
பூண்டுசிற்‌ றுருவம்‌ பெருகு நன்னட்பே.

புல்லுண்‌ மானைப்‌ பகைப்பன்‌ வேடன்‌;
தண்ணுண்‌ மீனைத்‌ திருகுவன்‌ வலையன்‌;
தன்னுள்‌ எமைதியுண்‌ தவசியைக்‌ கோட்சொல்லி;
எண்ணுள்‌ மூவரும்‌ இகல்கொளல்‌ எவனோ 9

ஸுஜன பத்ததி

இந்தநற்‌ றன்மையர்க்‌ காக்குவேன்‌ பணிவை;
நைந்து நெஞ்சுருகி நல்லினம்‌ பழகுவோர்‌,
மற்றவர்‌ நன்மையில்‌ மகஒழ்வுறும்‌ நல்லோர்‌,
உற்றமூப்‌ பாளருக்‌ குரியதொண்‌ டியற்றுவோர்‌,
ஆவலாய்க்‌ கல்வியை யகமுறப்‌ பயில்வோர்‌
காதலாய்த்‌ தன்மனை யாளையே கருதுவோர்‌,
நல்லோர்‌ வசைதமை நணுகுறா தஞ்சுவோர்‌,
வல்லோ னாமரன்‌ வன்சரண்‌ புகுவோர்‌
தம்புலன்‌ பொறிகளைத்‌ தகைபெற அடக்குவோர்‌,
வன்கணர்‌ இனத்தை வகைபெறத்‌ துறந்தோர்‌.

சான்றோர்க்‌ கியற்கையாம்‌ சால்புகள்‌ கேண்மோ,
தோன்றிய துயரால்‌ திறல்தள ராமை,
ஆன்றநல்‌ வாழ்வினில்‌ அரும்புரை பொறுத்தல்‌,
ஆன்றோ ரவையில்‌ அழகிய சொற்றிரம்‌,
நேர்ந்திடும்‌ போர்களில்‌ நிலைதள ராமை,
தேர்ந்துநல்‌ விசையினைத்‌ திகழ்வுறச்‌ சேர்த்தல்‌,
ஓர்ந்துணர்‌ மறைகளை யுவந்தே பயில்தல்‌
நேர்மையா மாறும்‌ நிலைபெறல்‌ நன்றே.

இயற்கையிற்‌ பெரியராய்‌ இருப்பவர்‌ தமக்கு
பெயர்த்தகும்‌ பணங்கா சில்லையென்‌ நாலும்‌
உடலின்‌ கூறாம்‌ உறுப்புகள்‌ தம்மில்‌
இடப்பட்‌ டழகுசெய்‌ யணிகள்‌ இவையுள;
புகழத்‌ தகுகொடை பொருந்துறுங்‌ கரத்தில்‌;
திகழுங்‌ குருவடிக்‌ கன்புறுந்‌ தலையில்‌;
மெய்மையாம்‌ பேச்சுறும்‌ மென்மைசால்‌ முகத்தில்‌
மொய்ம்படர்ப்‌ புயங்களில்‌ மிகுந்துள வெற்றி;
கள்ளம்‌ கவடிலா நெஞ்சகம்‌ தன்னில்‌
ஒள்ளி தாகிய தூய்மை உறைந்திடும்‌;
கல்விகேள்‌ விகளால்‌ கனமுறுங்‌ காதில்‌
செல்வமார்‌ வேதச்‌ சுருதிகள்‌ சொரிவன.

நல்லிசை தரும்வழி நவில்வேன்‌ பத்துள;
உயிர்க்கொலை நீத்தல்‌ ஊர்ப்பொரு எிகத்தல்‌,
உள்ளதை யேசொலல்‌ உற்றபோ தளித்தல்‌,
அயற்பெண்டிர்ப்‌ பேச்சறல்‌, ஆசைவெள்‌ எளந்தெறல்‌
பெறியோர்க்‌ கிணங்கல்‌, பல்லுயிர்க்‌ இரங்கல்‌,
பலநூல்‌ மதித்தல்‌, கடமை கடைப்பிடி.

தீரர்தம்‌ நெஞ்சம்‌ திரிவுறும்‌ முறைகேள்‌;
வாழ்வுறும்‌ போது வளமா ராம்பல்போல்‌
தாழ்வுறா திரங்கும்‌ தருமஞ்‌ செயற்கு;
தாழ்வுறும்‌ போது தன்சுகம்‌ மறுத்து
மகிழ்வுறாக்‌ கருங்கல்‌ மானும்‌ துயர்வதில்‌.

நீதி நெறிநேயம்‌ நெறியிலா ததனை
ஒது யிர்தந்தும்‌ இகந்திடும்‌ தன்மை
கெட்டவர்‌ தம்மிடம்‌ கெழுமெவ்‌ வுதவியும்‌
பெட்டவர்‌ தம்மைப்‌ பரவா திருத்தல்‌
நட்டவ ராயினும்‌ நீங்கியர்‌ பொருளெனின்‌
மூட்டுற்‌ றபோதும்‌ முயன்று கெஞ்சாமை
துயருற்‌ றபோதும்‌ துணிவாய்‌ முயலல்‌
சான்றோர்‌ பற்றிய சால்புறு நெறியை
தான்தவ றாமற்‌ றுன்னி நடந்திடல்‌
இவ்வறு நுட்பமும்‌ எளிதல லிவற்றை
செவ்விய வாள்வாய்ச்‌ சேர்நடை பழகல்போல்‌
எவ்விடம்‌ உணர்வரோ யாமறி யோமே.

புகலுறா தளித்தல்‌ புகும்விருந்‌ தெதிர்கொளல்‌
நகுங்கொடை நயந்து நாவ சையாமை
மற்றோர்‌ நற்செயல்‌ மகிமையால்‌ விளம்பிடல்‌
உற்ற செல்வத்தில்‌ உயர்வு பேசாமை
மற்றவர்‌ தம்மை மருப்படா துரைத்தல்‌
இவ்வறு நுட்பமும்‌ எளிதல இவற்றை
செவ்விய வாள்வாய்ச்‌ சேர்நடை பழகல்போல்‌
எவ்விடம்‌ உணர்வரோ யாமறி யோமே.

சிவப்பக்‌ காய்ந்த சிறப்புள இரும்புபோல்‌
உவப்பதாம்‌ நீர்த்துளி உற்றிடில்‌ உறிஞ்சிடும்‌
துளியதன்‌ பேரும்‌ துன்னுவோர்‌ கேட்பதில்‌
இளிவுறு மீனர்‌ இத்தன்‌ மையரே,
அதேவித நீர்த்துளி யந்தா மரையுறில்‌,
சுவேத முத்தெனச்‌ சுகமாய்‌ ஜொலிக்கும்‌;
தாமரை நீங்கில்‌ தரள மொழியும்‌,
ஆமித்‌ தன்மையர்‌ அடைவர்‌ மத்திமநிலை,
ஆழ்கடற்‌ சிப்பியில்‌ அழகிய சுவாதியில்‌,
வீழ்ந்திடில்‌ நிர்த்துளி விரும்புரும்‌ முத்தாம்‌,
விழுந்த இடத்தில்‌ வேருற நிலைத்து,
எழுந்தோங்‌ குவதே உத்தமர்‌ இயல்பு.

தாய்தந்தையர்க்குத்‌ தன்னன்‌ னடையால்‌
ஆய்ந்த உத்தமனாம்‌ அவனே மகனாம்‌
எப்போ துந்தன்‌ கணவ ஸினிப்புற
தப்பா நலம்நினை தருமியே மனைவி;
உயர்விலும்‌ தாழ்விலும்‌ உற்றவோர்‌ தன்மையாய்‌
துயரணு காமற்‌ றணைந்தவன்‌ நண்பன்‌.

வியப்புறத்‌ தகுந்த பெருந்தகை விரகரை;
நயந்தநன்‌ மதிப்புடன்‌ நல்லோர்‌ புகழ்வர்‌;
வணங்குதல்‌ கொண்டே வளம்பெற்‌ றுயர்வர்‌;
இணங்குமற்‌ றவரியல்‌ புகழ்தலா லிசையுறும்‌;
மற்றவர்‌ கருத்தை முற்றுறச்‌ செயலால்‌;
உற்றதங்‌ கருத்தையும்‌ வெற்றியாய்ச்‌ செய்வர்‌,
தீயோர்‌ தமக்குந்‌ தயையுட ஸிரங்குவர்‌;
வீயா நரகல்‌ வீழ்வதை யுன்னி;
கொடும்வசை வாயரைப்‌ பொறையற்‌ கடியும்‌;
நடுவுள நல்லரை வணங்கா ௬ளரோ 9

பரோபகார பத்ததி

பழச்சுமை மிகுந்திடில்‌ படிந்திடும்‌ மரமே;
மழைநீர்‌ சுரந்திடில்‌ மேகம்‌ பரவும்‌;
நல்லோர்‌ செல்வம்‌ நயனுறப்‌ பெருகில்‌;
அல்லோர்‌ போல அகந்தை பெறாரே;
மற்றோர்‌ தமக்கு மாண்புசெய்‌ பெரியோர்க்‌
கிற்றே இயற்கை இனிதுசெய்‌ வாரோ.

இரக்கச்‌ செயல்களால்‌ இரங்கிடும்‌ நல்லுடல்‌
மணப்பூச்‌ சாலல மற்றவர்க்‌ குதவியால்‌;
கல்விகேள்‌ விகளால்‌ கிளர்ந்திடுங்‌ காது;
பல்விதக்‌ காதணி பொலிவு செய்யாவே
பொன்வளை புனைதலால்‌ புகழ்பெறு மோகை ?
நன்கொடை தன்னால்‌ நலம்‌ பெறும்‌ கரமே.

கஞ்சம்‌ விரிக்கும்‌ கதிரவன்‌ வைகறை;
விஞ்சுப அல்லிகள்‌ விரிவன மதியால்‌;
கொண்டல்கள்‌ மழையைக்‌ கொட்டுவ தாமாய்‌;
தொண்டர்‌ பிறர்நலம்‌ போற்றுவர்‌ துணிந்தே.

தன்னலங்‌ கருதாப்‌ பிறர்நலம்‌ புரப்போன்‌
நன்னிலப்‌ பரப்பில்‌ நல்லாண்‌ மகனே;
தன்னலங்‌ கேடுறாத்‌ தந்திரஞ்‌ செய்து
மன்னிப்‌ பிறர்பணி முடிப்பவன்‌ மத்திமன்‌;
தன்பணி முடிக்கப்‌ பிறர்பணி கெடுப்பவன்‌
அன்னவனே இவண்‌ மானுட வரக்கன்‌;
எக்கா ரணமும்‌ இன்றிப்‌ பிறர்பணி
தக்கா தழிப்பவன்‌ யாரோ துணிந்திலேன்‌.

நண்பன்‌ தன்மையை நல்லோர்‌ நவிலல்கேள்‌;
பண்பிலாப்‌ பழியைப்‌ பற்றா தகற்றுவன்‌;
நன்னெறி யிற்செல நவில்வ னுபாயம்‌;
மன்னும்‌ மந்தணம்‌ மறைவுறப்‌ போற்றுவன்‌;
நம்மின்‌ நற்செயல்‌ நயனுறப்‌ பரப்புவன்‌;
நமக்குறும்‌ இடரில்‌ நம்மைக்‌ கைவிடான்‌.

நல்லோர்‌ நட்பின்‌ இயல்புகேள்‌ நவில்வேன்‌;
நன்னீர்‌ பாலிவை நட்பிற்‌ கலந்தன;
தன்னோடு கலந்த தூநீ ரதற்கு மன்னும்‌ பால்தான்‌ தன்னியல்‌ பலித்தது;
நெருப்புறு பாலது நிலைகுலைந்‌ தெழவே
விருப்புறு நீரும்‌ வீழ்ந்தது தீயினில்‌: துன்புறு தோழனுக்‌ குறுதுயர்‌ கண்டு இன்புறு பாலும்‌ எழுந்தது தீயுற;
பின்னுநீர்‌ நண்பன்‌ புனைந்து கலப்புற
இன்னுயிர்‌ திரும்பி அடைந்த தோரமைதி.

இங்ஙனே கேசவன்‌ இன்துயி லமர்ந்துளன்‌;
இங்ஙனே அவன்பகைக்‌ குழுவினர்‌ உளரே;
இங்ஙனே அடைக்கலம்‌ புக்கவாம்‌ வரைநுனி;
இங்ஙனே ஊழிக்‌ கொண்டல்கள்‌ உளவே;
இங்ஙனே அமர்ந்தது வடவைப்‌ பெருந்தீ;
தங்கும்‌ பொருட்குழமூஉக்‌ களிவிலை திரைக்‌்£ழ்‌
வித்தார மிக்கது விரிநீர்ப்‌ பெளவம்‌;
எத்தகை வல்லமை யடைந்துள திங்ஙனே.

வைத்த பாரம்‌ தாங்கும்‌ விழுப்பம்‌
எத்தகை யார்க்கும்‌ எய்துமோ வெளிதில்‌?
அவனிப்‌ பெருஞ்சுமை அ௮மைப்பாய்த்‌ தாங்க
தவறா தளித்தது தன்முது காமை;
வான்சோ இத்திரள்‌ வகையாய்ச்‌ சுழல
தான்மை யமாக வமைந்தனன்‌ துருவன்‌;
இவ்விரு தொண்டர்‌ எய்தினர்‌ பெரும்புகழ்‌
உயர்விலும்‌ தாழ்விலு மூுளபல பறவைகள்‌
செயவுள தென்னதொண்‌ டவைகளின்‌ சிறகால்‌?
அத்திப்‌ பழத்தின்‌ உள்ளுறும்‌ கிருமிபோல்‌
இத்தரை தன்னில்‌ இழிந்துமாய்ந்‌ துறும்பல.

நல்லோர்‌ இயற்கைகள்‌ நான்மூன்‌ றனவே;
ஆசையை யறுத்தல்‌; அரும்பொறை வளர்த்தல்‌;
உளச்செருக்‌ கொருத்தல்‌; தீமைசெய்‌ துடிப்பை
தீரத்‌ தொலைத்தல்‌; உண்மை யுரைத்தலே;
நல்லோர்‌ வழிபடல்‌; கற்றோர்க்‌ குதவுதல்‌
கல்வி மான்களைத்‌ தழுவி நடந்திடல்‌;
பிறர்புகழ்‌ பெருக்கல்‌, நல்லிசை காத்தல்‌
துயருளோர்க்‌ கிரங்கல்‌; துன்னுவாய்‌ துரிசற.

உளஞ்சொல்‌ உடலம்‌ மூன்ரும்‌ நன்மையாம்‌
உயிர்மருந்‌ ததனால்‌ நிறைந்தவராக
உலகமூன்‌ றுக்கும்‌ ஒருதெருப்‌ போல
அலகில்‌ லுதவிகள்‌ இயற்றிப்‌ போற்றி
மற்றவர்‌ மேங்குணம்‌ அணுவே யாகிலும்‌
உற்றவை தம்மை மலைபோல்‌ உயர்த்தும்‌
மெய்யுடை நெஞ்சம்‌ மலரென்‌ விரியும்‌
நையுமன்‌ புடையராம்‌ நல்லோர்‌ பலரே.

தைர்ய பத்ததி

கடைந்தனர்‌ கடலைக்‌ கடவுளர்‌ அமுதுற;
இடையிற்‌ கிடைத்தன உயிரொளிக்‌ கற்கள்‌;
அடைந்த அரதனம்‌ கொண்டோய்வில்லை;
அடலுறு கொடிய கடல்‌ நஞ்‌ செழுந்தது;
திட மிழஞ்தஞ்சி விடவிலை முயற்சியை;
அமுதம்‌ அகப்படும்‌ அதுவரை முயன்றனர்‌
விழுமிய முயற்சியிற்‌ றளர்விலர்‌ விரகர்‌.

அதமர்‌ மத்திமர்‌ உத்தமர்‌ இயல்கேள்‌;
அதமர்‌ முயலார்‌ இடர்தனக்‌ கஞ்சி;
இடருற்‌ றபோதே ஓய்வர்‌ மத்திமர்‌
இடர்பல உறினும்‌ உத்தமர்‌ ஓயார்‌.

கொண்ட முயற்சியிற்‌ கருத்துறு மறிஞர்‌
அண்டுமின்‌ பத்தையும்‌ துன்பையு மதியார்‌;
தளர்ந்து சில்போழ்து தரைமேல்‌ துயில்வர்‌
கிளர்ந்து சல்வேளை கட்டிலி லுறங்குவர்‌;
பச்சைக்‌ கறிகாய்‌ புசிப்பர்‌ பல்சமயம்‌
இச்சையாஞ்‌ சோற்றையும்‌ உண்பர்‌ சில்போழ்து?
பன்னும்‌ கந்தைகள்‌ புனைவர்‌ பல்நேரம்‌
பொன்னூ லாடையும்‌ புனைவர்‌ வாய்த்திடிலே.

நீதிநெறி நூலார்‌ புகழினு மிகழினும்‌
மீதுறும்‌ சம்பவம்‌ மிகுக்கினும்‌ தாழ்க்கினும்‌
உடனே சாகினும்‌ உறும்யுகம்‌ உய்யினும்‌
அடலுறு முளத்தவர்‌ அகலார்‌ நல்வழி.

அழகியர்‌ கட்கணைப்‌ போழ்விலா வகத்தன்‌;
கொழுவிய சினத்தீ கொளுந்துறா நெஞ்சன்‌;
ஆவல்‌ புலன்பொறித்‌ தூண்டலுக்‌ கிணங்கான்‌;
மூவுல கும்வெலும்‌ முரணவன்‌ அவனே.

திண்ணிய நெஞ்சர்‌ துயர்மிகப்‌ பெறினும்‌
திண்மை யதறுமோ ௦ திகழும்‌ மேன்மேல்‌
பந்தம்‌ தன்னைக்‌ &ழுறப்‌ பிடிக்கினும்‌
அந்தமாய்‌ மேலுறும்‌ அத்தீச்‌ சுடரே.

நன்னெறி விலகி நலமிழப்‌ பதிலும்‌
உன்னத வரைபாய்ந்‌ தொழிவுறல்‌ நன்றே
கூரெயிற்‌ றரசராக்‌ கொடியவாய்‌ தனிலே
நேறினிற்‌ கையை நுழைத்திடல்‌ நலமே;
நெறிவிட்‌ டிழிதலின்‌ எரியுறல்‌ நேரென
செறிபுகழ்ச்‌ சீரியர்‌ சாற்றினர்‌ சிறக்க.

எல்லோ ருளங்களுங்‌ கவர்ந்திடுந்‌ தூாய்மையோர்‌
சில்லெனும்‌ நீராய்‌ நெருப்பையுஞ்‌ செய்வர்‌;
கடலையுஞ்‌ சிறியதாம்‌ காலக மாக்குவர்‌;
வடமலை மேருவும்‌ இடந்தரு பாறையாம்‌;
விலங்க ரசாகிய வீரகே சநியும்‌
உளங்கொள்‌ மாத்திரத்தில்‌ உறுநல மானாம்‌;
களர்ந்திடுங்‌ கோளரா குளிர்ந்ததோர்‌ மாலையாம்‌;
நஞ்சு மமிர்‌ தமாம்‌; நல்லோர்‌ திறல்பால்‌.

வெட்டிக்‌ கழிக்கினும்‌ வளர்ந்திடும்‌ மரமே;
ஒட்டி வளர்ந்திடும்‌ கட்டதாம்‌ பிறையே;
இத்தகைக்‌ காட்சியை உற்றுநோக்‌ கறிஞர்‌
இத்தரைப்‌ பொருட்டே வடைந்திலர்‌ துயரே.

அன்புடன்‌ பழகுதல்‌ இறைமைக்‌ கணியாம்‌;
வன்கணாண்‌ மைக்கணி வணங்கிய சொல்லே;
பேரறி வாண்மைக்‌ கணியது பொறையே;
சேரரு மறைக்கணி செருக்கற்‌ நிருத்தல்‌;
செல்வத்‌ திற்கணி சறப்பறிந்‌ தீதல்‌;
மல்கருள்‌ தவத்திற்‌ கணியது மகிழ்வே;
தலைமைக்‌ கணியது தண்பொறை யுடைமை;
நிலையறத்‌ திற்கணி நினைபய னின்மை;
என்னோக்‌ குடையரும்‌ எவ்வினத்‌ தவரும்‌
தன்னுளங்‌ கொளுமணி தகைமைசால்‌ தூய்மையே.

தைவபத்ததி

வலனைத்‌ தொலைத்தவன்‌ வலியனாம்‌ இந்திரன்‌;
நலனைச்‌ சொலற்கு நேர்ந்தவன்‌ பிருகஸ்பதி;
வச்சிரா யுதமே வாய்ந்த படைக்கலம்‌;
உச்சித மான உம்பரே படைத்திறள்‌;
சுவர்க்கமே யவன்தன்‌ சிறப்புறு கோட்டை
எவர்க்கு முயர்ந்தவன்‌ விட்டுணு வாழ்த்தினன்‌,
அவனின்‌ நற்கரி ஐரா வதமே;
பவனி வருங்கால்‌ பாங்கா யமைந்தது,
மதிக்கத்தக்கவை மாண்புறு சேர்க்கை
அதிசய மான வலிமை யமைநீதவன்‌;
விதிவலி மிகுதியால்‌ எதுவுங்‌ காப்பிலை.
இத்தனை யுயர்வுள னாகிய இறைவனும்‌
இற்றனன்‌ போரில்‌ இசைகெடப்‌ பகைவரால்‌
ஆதலால்‌ நாமும்‌ அறிவது யாதெனில்‌
பேதையாய்ப்‌ பெருமையைச்‌ சொலிக்கொளல்‌ தவறே

முடங்கிய பாம்புள மூங்கிற்‌ பெட்டியை
மடங்கொளும்‌ எலியொன்றறுத்துளே முகர்ந்தது;
துயில்கலைந்‌ தெழுந்தது துட்டப்‌ பாம்பு;
அயில்நிகர்‌ பற்களால்‌ அலைத்ததை யுண்டது;
உண்டபின்‌ னரவம்‌ உற்ற வத்துளையால்‌
கண்டு வெளிப்புறங்‌ கழன்றோ டியதே
ஆதலால்‌ நண்ப அகற்றிடுன்‌ கவலை
போதுறும்‌ துயர்க்கும்‌ பெற்றிடுங்‌ களிக்கும்‌
ஓதுறும்‌ விதியே உற்ற காரணமாம்‌
போதுறும்‌ துயர்க்கும்‌ பெற்றிடுங்‌ களிக்கும்‌
ஓதுறும்‌ விதியே உற்ற காரணமாம்‌.

பெரியோர்‌ வீழினும்‌ பந்தென வீழ்வர்‌
சிறியார்‌ சிறுமையாம்‌ மண்ணுண்டை வீழ்ச்சிபோல்‌ பந்து வீழ்ந்திடில்‌ பறந்து மேற்களம்பும்‌;
உந்தி மேலெழுகுமோ உறுமண்‌ ணுண்டை

வெயில்பொறுக்‌ காதவோர்‌ வழுக்கைத்‌ தலையன்‌
நிழல்பெற விரும்பி நின்றனன்‌ பனைக்&ழ்‌;
பருத்தவோர்‌ பனங்காய்‌ பட்டென வீழ்ந்து
இரத்தந்‌ தோன்ற உடைத்தது மண்டையை;
விதிவசத்‌ தாலே வதங்குறும்‌ வறியனை
மதிக்கவ லைப்புண்‌ மதிக்குமே மேன்மேல்‌.

தலைவிதி யதற்கே தலைமையாம்‌ வலிமை
அலைகட லுலகில்‌ அதற்குமேல்‌ ஏது ?
கந்தடு கரியும்‌ கொடிய நச்சரவும்‌
வந்தகப்‌ படுமே வானுறு பறவையபோல்‌);
கதிர்மதி ஞாயிறும்‌ கோள்களால்‌ பற்றுறும்‌
எதிர்வுறும்‌ பொறியால்‌ அறிஞரும்‌ வறிஞரே.

குறைவில்‌ லாத குணம்நிறை கடலாய்‌
உறைவிட மான உலகினுக்‌ கணியாம்‌
அரதனம்‌ நிகர்த்த ஆண்மகன்‌ தன்னை
இரத மான இனியனை இயற்றியான்‌
அவனையும்‌ நொடியினில்‌ அக்கினி சேர்த்திடில்‌
இவனையு மந்தோ இருந்தை யென்போமே.

விதியின்‌ பயனை விலக்குதல்‌ எவர்க்காம்‌
நிதியாம்‌ அமுதம்‌ நிறைந்துள தவன்கண்‌,
சஞ்சீ வினிபோல்‌ சிறந்தவோ டதிக்கிறை;
அஞ்சிரு பதின்மராம்‌ மருத்துவ ரவனிடம்‌;
சம்புவாம்‌ பரமன்‌ சடைமுடி வதிபவன்‌;
அம்புவி இறைவர்க்‌ குறுபிணி கயமது
இம்மதிப்‌ பெரியனை இகவா தாகும்‌.

நண்பகேள்‌ நவில்வதை கலனாம்‌ பிரமன்‌
திண்ணிய குயவன்‌ மண்திரட்டு டுதல்போல்‌
உருட்டி உருவாக்குவன்‌ உளமாம்‌ பொருளை
புரட்டிப்‌ பெருந்துயர்‌ என்னுந்‌ தடியால்‌
ஓயா தொழியா துறுதியா யடிப்பன்‌;
ஓவாத்‌ தொடுகையால்‌ உலர்ந்ததை மறுபடி
கவலையாம்‌ சக்கர மீதினில்‌ சுழற்றுவன்‌;
கவலை யிறைப்பிற்‌ சுழலல்போல்‌ கலங்குறும்‌,
இவ்வகை விஷமம்‌ இயற்றலால்‌ பிரமன்‌
எவ்வகைப்‌ பயனுறும்‌ உணரோம்‌ யாமே.

முட்டாள்‌ விதியே ! முயலா தேநீ !
முட்டுற்ற போது முரணவர்‌ முரணற !
பெருமலைக்‌ கூட்டமோ பெருங்கடற்‌ றொகுதியோ
உறுநீ்தம்‌ வலிமை உகுந்திடும்‌ முடிவிலும்‌
அறுமோ அவைதம்‌ அழகிய பெருமை
உறுமோ தீரர்‌ உரமும்‌ இறுதியை
கற்பாந்‌ தத்திலும்‌ கரையா தவர்திறல்‌
விற்பனர்‌ மேன்மை அற்றிடல்‌ இலையே.

மண்ணுல கத்திற்‌ பிறந்தமா னிடத்திற்கு
கண்ணும்‌ பிரமன்‌ கதித்ததே கையுறும்‌;
வல்லவர்‌ சேர்க்கையால்‌ மேன்மேல்‌ வருதல்‌
ஒல்லுஞ்‌ செயலல உற்றுநோக்‌ கஇிடிலே,
எல்லா விருப்பும்‌ நிறைவுற எழிலிகள்‌
செல்லார்‌ வானின்‌ சொரிபொழு தெல்லாம்‌
விண்வீழ்‌ துளிக்கு விரும்பி யலைபுள்‌
நண்ணும்‌ நன்னீர்‌ சிற்சில துளிகளே.

கர்மபத்ததி

கடவுளர்‌ தமக்குநாம்‌ கருதுவோம்‌ வணக்கம்‌;
அடலுளார்‌ அவரும்‌ அமர்ந்தவர்‌ விதிக்‌£ழ்‌;
தலைவிதிக்‌ கும்நாம்‌ தலைவணங்்‌ கல்முறை;
தலைவிதி தானும்‌ தந்திடும்‌ வினைப்பயன்‌
வினைப்பயன்‌ கிடைப்பது விளையினா லேயெனின்‌
வினையன்றி மற்றவை யாலே பயனென்‌ 9
விதியுங்‌ கூட வினைக்கப்‌ புறத்தான்‌,
விதிவினை நீக்கி வினைசெயல்‌ இலையெனில்‌
வினைக்குத்‌ தானே விழுப்பஞ்‌ செய்வோம்‌
வினையினும்‌ வல்லது விண்ணிலு மிலையே.

அண்டமாம்‌ பிண்டத்து உட்புறத்‌ திருந்து
ஒண்டிறற்‌ பிரமன்‌ குயவனாய்‌ உழைத்துளன்‌;
காக்குங்‌ கடவுளும்‌ கடலினுட்‌ டங்குவோன்‌;
நோக்கிப்‌ பத்தவ தாரம்‌ நிகழ்த்துவோன்‌;
மண்டையோட்‌ டுடனே மகிமைசேர்‌ சிவனும்‌
அண்டமெ லாமுழன்‌ றலைவன்‌ பிச்சையாய்‌
பானுவாம்‌ வெங்கதிர்‌ பகர்விதிக்‌ கொடுமையால்‌
வானெலாந்‌ தினந்தோறும்‌ வருவன்‌ சுழன்று
வினையின்‌ வலிமையே விளைத்ததிக்‌ கதிகளை;
வினைவல்‌ லமைக்கே விழுப்பஞ்‌ செலுத்துவோம்

‌நல்லோ னேகேள்‌ நற்பய னடைய
பொல்லோர்‌ தமையும்‌ புண்ணிய ராக்கும்‌,
நல்லதாம்‌ விழுச்செயல்‌ வணங்குவாய்‌ நலம்பெற
கல்லார்‌ தமையும்‌ கற்றவ ராக்கும்‌;
பொல்லாப்‌ பகைவரும்‌ பொருந்துவர்‌ நண்பராய்‌
புலப்படா வற்றைப்‌ புலப்படச்‌ செய்யும்‌
கடல்படு நஞ்சைக்‌ கிளரமு தாக்கும்‌;
இடர்தமை விளைக்கும்‌ இயல்புகள்‌ கடிக.

நற்செயற்‌ பயன்கள்‌ நணுகுறுங்‌ காரும்‌
விற்செறி யரண்மனை, விழைவுரும கிறுமிகள்‌,
ஒள்ளிய வெண்குடை யுயர்நிழ லரசு
தெள்ளிய இன்பெலாம்‌ தானாய்‌ வந்துறும்‌;
நல்வினைத்‌ தொடர்கள்‌ நைந்திட்ட னவேல்‌
புல்லும்‌ இன்பச்‌ சரடது புரைபடும்‌.
அன்புறு காதலார்‌ அணுகாப்‌ பகைவராய்‌
இன்ப முத்தாரம்‌ இற்றுச்‌ சிதறல்போல்‌
பற்பல நற்பொருள்‌ பலவழி அகலும்‌
இற்பொருள்‌ சுற்றம்‌ இவையெலாம்‌ மறையும்‌.

எச்செயல்‌ செயினும்‌ எண்ணிச்‌ செயல்நலம்‌
அச்செயற்‌ பயன்களை ஆய்ந்தறிந்‌ தியற்றுக,
அவசர அடியாய்‌ அமைந்திடும்‌ அலுவல்‌
சிவப்பாம்‌ தணலெனச்‌ செதுக்குறும்‌ நெஞ்சை.

செயல்நிறை வாகச்‌ செறிந்த இவ்வுலகில்‌
செயல்செயும்‌ சுழலில்‌ சேர்ந்துழல்‌ ஒருவன்‌
உய்யும்‌ வழியாம்‌ உயர்தவ மிகந்தால்‌
பெய்யம்‌ எள்ளை நெல்லெனச்‌ சமைப்பவன்‌
தாழ்வாம்‌ விளைபொருள்‌ தழைத்தற்‌ பொருட்டு
மேலாம்‌ பண்டம்‌ மிகஅழிப்‌ பவனாம்‌.

உருவத்‌ தெழில்நலம்‌ உயர்குடிப்‌ பிறப்பு
திருத்தமாம்‌ நன்னடை தீர்புரைக்‌ கல்வி
ஆய்ந்துணர்ந்‌ தியற்றும்‌ அறிஞர்‌ பாற்றொண்டு
வாய்ந்த இவ்வியாவையும்‌ வளந்தரல்‌ சிறிதே;
நட்ட நன்மரம்‌ நாட்செல்‌ வதனால்‌
உற்ற நற்கனியை உகந்தே தரல்போல்‌
முற்பிறப்‌ பவைகளில்‌ முயன்றுசேர்‌ நற்பயன்‌
இப்பிறப்‌ பதனில்‌ ஈந்திடும்‌ நலமே.

ஆர்கலி ஓடினும்‌ மேருமுக டேறினும்‌
போர்க்‌ களந்தனிற்‌ பகைவரை வெல்லினும்‌
வாணிபம்‌ பயிர்த்தொழில்‌ வளமாய்க்‌ கற்கினும்‌
பன்னும்‌ பல்கலை பயின்று பறவையபோல்‌
அகல்வா னத்தில்‌ ஆரப்ப றக்கினும்‌
புகல்முற்‌ செயலால்‌ பூதலந்‌ தன்னில்‌
நிகழ விதித்தது நீங்குத விலையே
வகுத்தான்‌ வகுத்த வகைமா றுறுமோ

காடு போர்க்களம்‌ கதழெரி பகைக்‌ குழு
ஆடுநீர்‌ நடுக்கடல்‌ ஒங்குதலை மலையே
தூக்கம்‌ களிமயல்‌ துன்புறும்‌ இறுநிலை
ஊக்கிய முன்னறம்‌ உயிர்காத்‌ இடுமே.

முற்செய்‌ நன்மை முதிரறி வோர்க்கு
முற்றுல கெங்கனும்‌ நிதிமணி நிறைந்ததாம்‌,
அஞ்சத்‌ தகுங்காண்‌ அம்பே ரூராம்‌
எம்மா னிடரும்‌ தம்மவர்‌ ஆவரே.
நீதிசதகம்‌ முற்றிற்று

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் ..