5 –ஸூரி வைபவ பாத, – 3 அதிகரணங்கள் இதில்-
5– க்ரந்த,-தத் கர்த்ரு வைப, வாதி, கரணம் —39 – 74 –மொத்தம் 36 ஸூரணைகள்
6—ஸூரி ப்ராமாண்ய விஸேஷாதி கரணம்(ப்ரமாத்ரு வைபவம் ) 75 – 93 –மொத்தம் 19-ஸூரணைகள்
7-ப,க,வத் கடாக்ஷ விஸேஷாதி கரணம் 94–96—மொத்தம் -3- ஸூரணைகள்–
5– க்ரந்த,-தத் கர்த்ரு வைப, வாதி, கரணம் —39 – 74 –மொத்தம் 36 ஸூரணைகள்–முதல் பகுதி-39 – 49–மொத்தம் 11-ஸூரணைகள்
இனிமேல் –சந்தங்கள் ஆயிரம்-திருவாய்-10-9-11- –என்று திருவாய் மொழிக்கு சொன்ன வேதத்வத்தை சாதிக்கக் கோலி பிரதமம் ஏவம் விதமாய் இருப்பதொரு வேதம் உண்டோ என்கிற சங்கைக்கு பரிஹாரம் பண்ணுகிறார் மேல்-வேத அத்,யயந விதி, போலே இப் ப்ரப,ந்த,அத்,யயநமும் விதி, என்பது, இதினுடைய அர்த்த, பரிஜ்ஞாநா பாவத்தில் உத்பத்தி நிரூபிக்க வேணு மென்பதாய்க் கொண்டு வேதத்தோ டொக்கச் சொல்லா நின்றீர். இதுவும் பிற்றை வேதமோ என்னில் ; இதுவும் வேதம்; இது என்ன வேதம் என்ன–
எவ்வுலகத்து எவ்வெவையும் என்கையாலே வேதம் பஹு விதம்–சூரணை-39-
அதாவது
ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வவையும் -திருவாய்-3-1-6–என்கையாலே வேதம் ஆனது
அத்யேதாக்கள் உடைய பேதத்தாலும் ,லோக பேதத்தாலும் பஹுவிதமாய் இருக்கும் என்கை .. ஆகையால் அதிலே இதுவும் ஒரு விதம் என்ற கருத்து-
‘வேதா வா ஏதே । அநந்தா வை வேதா ச’” (யஜு. கா.) என்றும், ‘“ஓதுவாரோத்தெல்லாம் எவ்வுலகத் தெவ்வெவையும்”* (திருவா. 3 – 1- 6) என்றும் சொல்லுகிறபடியே அத்யேதாக்களுடைய பேதத்தாலும், லோக பேதத்தாலும் வேதம் ப,ஹு வித,ம் என்கிறார் –
ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும்
சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிறிதில்லை
போது வாழ் புனந்துழாய் முடியினாய் பூவின் மேல்
மாது வாழ் மார்பினாய் என் சொல்லி நான் வாழ்த்துவனே -3-1-6–ஓதுவார் என்கையாலே -அதிகாரி வைவித்யத்தைச் சொல்லுகிறது –-ருகாதி சதுர் வேதங்களும் அத்யேத்ரு பேதத்தாலே பிறந்த சாகா பேதங்களும் –ஊர்த்த லோகங்களில் உள்ளார் ஞானாதிகருமாய் -ஆயுஸ் சாலே அதிகருமாய் இருக்கையாலே அவர்களுக்கு அனுரூபமாக அவ்வோ லோகங்களிலும் இந்த பேதங்களும் உண்டு–
–
ஆனால் ஏக பாஷையாய் இருக்க வேண்டாவோ ? சம்ஸ்க்ருதமும் த்ராவிடமுமாய் அன்யோன்யம் பேதித்து இரா நின்றதீ என்ன சொல்லுகிறது மேல்-ஆனால் அது ஸம்ஸ்க்ருதமாய், இது த்ராவிடமாய்ப் பிரிந்திராறின்றதீ என்ன, சொல்லுகிறது மேல்.
இதில் சமஸ்க்ருதம் திராவிடம் என்கிற பிரிவு ருகாதி பேதம் போலே-சூரணை -40-
அதாவது
இப்படி பஹு விதமான இவ் வேதத்திலே சமஸ்க்ருத வேதம் திராவிட வேதம் என்கிற பிரிவு-சமஸ்க்ருதாம் சந்தன்னில் ருக் வேதம் ,யஜுர் வேதம் சாம வேதம், அதர்வண வேதம் ,என்கிற பிரிவு போலே என்கை ….-இத்தால் வேத ராசி ஒன்றாய் இருக்க செய்தே ,சமஸ்க்ருத பாஷா ரூபம் ஆனவது தன்னிலே ருகாதி ரூபேண பல படியாய் பிரிந்தால் போலே பாஷா பேதேநவும் இப்படி பிரிந்து இருக்கும் என்ற படி-(ஆதித்யருக்குள் அஹம் விஷ்ணு -ஏகாதச ருத்ரனுக்குள் சங்கரன் -அந்த கோஷ்ட்டிக்குள் –
நக்ஷத்திரங்களில் அஹம் – சந்திரன் -இல்லாத போதும் என்பதுக்கு த்ருஷ்டாந்தம் )
(இதில்) இந்த வேதத்தில். (ஸம்ஸ்க்ருதம் த்ராவிட,ம் என்கிற பிரிவு ருகாதி பேதம் போலே என்று) வேதங்கள் தான் ஒன்று போலேயோ மற்றது? ஸம்ஸ்க்ருத வேதந்தான் ரூக்,யஜுஸ் ஸாம அத,ர்வணங்களாய்ப் பிரிந்தாப் போலே வேதந்தான் ஸம்ஸ்க்ருத ரூபமாயும், த்ராவிட ரூபமாயும் பிரிந்ததென்கிறார் –
—
அப்படி சொல்லலாமோ ? சமஸ்க்ருத பாஷை போலே திராவிட பாஷை அநாதி அன்றே –ஆகஸ்த்யம் அன்றோ இது ?என்ன சொல்லுகிறது மேல்-ஆனாலும் அந்த ஸம்ஸ்க்ருத பாஷைதான் அநாதியாயிரா நின்றதே என்ன-
செந்திறத்த தமிழ் என்கையாலே ஆகஸ்யமும் அநாதி-சூரணை -41-
அதாவது
செம் திறத்த தமிழ் ஓசை வட சொல் ஆகி-திரு நெடும் தாண்டகம் -4- – -என்று (ஓசை -சொல் என்ற அர்த்தத்தில் இங்கு -ஸ்தான பிரமாணத்தாலே) சமஸ்க்ருததோடே சஹபடிதமும் , ப்ரதமோக்தமும் ஆகையாலே அகஸ்த்ய பிரகாசிதமான மாத்ரம் கொண்டு ஆகஸ்த்யம் என்று சொல்லப் படுகிற
திராவிடமும் அநாதியாய் உள்ளது என்கை .-இத்தால் அநாதித்வம் சமஸ்க்ருத திராவிட சாதாரணம் என்றது ஆய்த்து-
செந்திறத்த தமிழோசை வடசொல்லாகி’ (திருநெடு. 4) என்று ஸம்ஸ்க்ருதத்தோடே ஸஹபடிக்குமிடத்தில் ‘“செந்திறத்த தமிழோசை” என்றதுக்குப் பின்பிறே “வட சொல்லாகி’” என்றது. ஆகையாலே இரண்டும் அநாதி யிறே-
இந்த்ரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை யிரு நிலம் தீ நீர் விண் பூதம் ஐந்தாய்ச்
செந்திறத்த தமிழோசை வடசொல்லாகித் திசை நான்குமாய் திங்கள் நாயிறாகி
அந்தரத்தில் தேவர்க்கும் அறியலாகா அந்தணனை அந்தி மாட்டு அந்தி வைத்த
மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழ்தியேல் வாழலாம் மட நெஞ்சமே–4—சாஸ்திர வஸ்யர் உடைய (திசை நான்குமாய்த் திங்கள் ஞாயிறாகி,)ஸ்ருஷ்டியைச் சொல்லுகைக்காக சாஸ்திர ஸ்ருஷ்டியைச் சொல்லுகிறார் – திராவிட சம்ஸ்க்ருதங்களை ஸ்ருஷ்டித்து-ஆரியத்தைச் சொல்லி அதனுடைய சிதைவாகையாலே பின்னை தமிழைச் சொல்ல பிராப்தமாய் இருக்க – இத்தை பிரதமத்திலே உபாதானம் பண்ணிற்று —1-இது சர்வாதிகாரம் ஆகையாலும்-2-ஸ்வார்த்தத்தைச் செவ்வே பிரகாசிப்பிக்க கடவதாகையாலும்-3-தம் பாழி ( தம் துறை )யாகையாலும்-4-இன்னமும் அத்தோபாதி இதுவும் பிரமாணம் என்கைக்காக முற்பட அருளிச் செய்கிறார்-வேதங்கள் போலேயும் இதிஹாச புராணங்கள் போலேயும் அன்று இறே ஆழ்வார்கள் வார்த்தை – அனுஷ்டாவின் வார்த்தை இறே இது – (த்ரை குண்யா விஷயா வேதா )ஐஸ்வர்ய கைவல்யங்கள் த்யாஜ்ய தயா புகுரும் இத்தனை இறே இவர்கள் பக்கலில் –செந் திறத்த தமிழ் ஓசை–திறம் –கூறுபாடும்-பிரகாரமும் –-ஸ்வாரதத்தை செவ்வியதாக பிரகாசிப்பிக்கையே கூறான -த்ரமிட சப்தம்-உப ப்ரஹ்மண அபேஷை அற்று இருக்கை-
வேதங்களுக்கு உப ப்ரஹ்மண அபேஷை உண்டு இறே–‘ஈரத் தமிழ்‘ –-செவிக்கினிய செஞ்சொல்– ”செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய வோதித் தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே” –வேதாந்த தேசிகன்–ஓசை -என்று பாட்டுக்கும் த்வனிக்கும் பெயர்-லஷணையால் சப்தத்தை சொல்கிறது -மேல் வடசொல் -என்கையாலே-வடசொல் -என்று சமஸ்க்ரதத்தை சொல்கிறது –சாஸ்த்ரத்தை ஈஸ்வரன் ஸ்ருஷ்டிக்கை யாவது -பிரகாசிப்பிக்கை -(வெளியிட்டு அருளினான் ஆழ்வார்கள் மூலம் )
—
ஆனால் அந்த பாஷை அநாதி ஆகிறது ..-திருவாய் மொழிக்கு வேதத்வ பிரகாசமான வசனம் உண்டோ என்ன சொல்லுகிறது மேலே-ஆனால் அந்த பாஷை அநாதி யாகிறது; திருவாய்மொழிக்கு வேதத்வ முண்டாக வேணுமென்கிற நிர்பந்த, முண்டோ என்னில்;
வட மொழி மறை என்றது தென் மொழி மறையை நினைத்து இறே-சூரணை -42-
(பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை என்றதால் நல்ல அரக்கன் ஸ்ரீ விபீஷண ஆழ்வான் இருப்பதால் தானே இன சுட்டு அடை மொழி )
அதாவது
மறை-என்று கேவல வேத வாசி சப்தத்தாலே சொல்ல அமைந்து இருக்க –வட மொழி மறை -திருவாய் -8-9-8–என்று சமஸ்க்ருத வேதம் என்றது -திராவிட வேதம் உண்டு என்று நினைத்திறே என்கை
பிரதி கோடி இல்லாத போது இப்படி விசேஷிக்க வேண்டியது இல்லை இறே என்று கருத்து-
வேதம் என்னாதே ஸம்ஸ்க்ருத வேதம் என்கையாலே த்ராவிட, வேதமுமுண்டாக வேணுமென்கிறார்-
மடவரல் அன்னை மீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் மல்லைச் செல்வ
வடமொழி மறை வாணர் வேள்வியுள் நெய் யழல்வான்புகை போய்
திட விசும்பில் அமரர் நாட்டை மறைக்கும் தண் திருப் புலியூர்
படவர வணையான் தன் நாமம் அல்லால் பரவாள் இவளே–8-9-8—சம்ஸ்க்ருத பாஷையும் வேதங்களும் தாங்கள் இட்ட வழக்காய் வ்யாஸ பாதம் செலுத்த வல்ல ப்ராஹ்மணர் ஸமாராதன ரூபமான யாகங்களில் ஹோமம் பண்ணின நெய்யால் ஜ்வலித்த அக்னிகளினின்றும் புறப்பட்ட மிக்க புகையானது –
—
ஆனால் அந்த வேதத்துக்கு அங்க உபாங்கங்கள் உண்டானவோ பாதி இதுக்கும் அவை உண்டோ என்ன சொல்லுகிறது மேல்-அங்கோபாங்க ஸஹிதத்வம் இதுக்குமுண்டோ என்ன, உண்டென்கிறார் மேல்-
வேத சதுஷ்ட (த்தயத்துக்கு-இங்கும் லுப்தம் ) அங்க உபாங்கங்கள் போலே இந் நாலுக்கும்
இரும் தமிழ் நூல் புலவர் பனுவல் ஆறும் மற்றை எண்மர் நன் மாலைகளும்- (இருமை -பெருமை -)-சூரணை-43-
அதாவது
ருகாதி வேத சதுஷ்டயத்துக்கும்-சீஷா வியாகரண நிருக்த சந்த கல்ப ஜோதிஷங்கள் ஆகிற ஆறு அங்கங்களும் மீமாம்ச நியாய புராண தர்ம சாஸ்த்ராத் உப அங்கங்கள் எட்டுமாய் இருந்துள்ள பதினாலும் போலே-(ஆதி -ஆயுர்வேதம் காந்தர்வ வேதம் அர்த்த வேதம் தனுர் வேதம் )-இந்த திராவிட வேத சதுஷ்டயதுக்கும்-இரும் தமிழ் நூல் புலவன் நங்கை யாளன்–பெரிய திருமொழி -1-7-10- -என்று
ஒருவரால் கரை காண ஒண்ணாத படி இருக்கிற திராவிட வேத சாஸ்த்ரத்தை கரை கண்ட ஞான ஆதிக்கத்தை உடையரான திரு மங்கை ஆழ்வார் உடைய-கலியன் வாயொலி செய்த பனுவல் -பெரிய திருமொழி -1-4-10–என்று சாஸ்திர ரூபங்களான பிரபந்தங்கள் ஆறும்–மற்றை ஆழ்வார்கள் எண்மர் உடையவும் விலஷணமான பிர பந்தங்களும் என்கை ..-நன் மாலைகள் என்றது –நய நின்ற நன் மாலை -முதல் திருவந்தாதி -57–என்று முதல் ஆழ்வார் பிரபந்தத்தில் அருளிச் செய்தது எல்லா பிரபந்ததுக்கும் ஒக்கும் என்று நினைத்து .
1-பொய் நின்ற ஞானமும் -திருவிருத்தம் -1––இத்யாதியாலே ஸ்வரூப விரோதியாய் வந்தேறி யான தோஷங்களை முதல் அடியிலே பேசினால் போலே பிரதமத்திலே -வாடினேன் வாடி-பெரிய திருமொழி -1-1-1- -இத்யாதியாலே ஸ்வ ரூபத்துக்கு வந்தேறியான தோஷங்களை கண்டு நொந்து பேசுகையும்
2-பகவத் ப்ராவண்ய ப்ராசுர்யமும்-பத்துடை அடியவர்க்கு எளியவன் –எத்திறம் –ப்ராவண்ய ப்ராஸூர்யம் – உருகுமால் நெஞ்சம் கார் ஒக்கும் காட்கரை அப்பன் /முலையோ முழு முற்றும் போந்தில –பால்யாத் ப்ராவண்யம் -கணபுரம் கை தொழும் பிள்ளையை -பிறர் சொல்ல கேட்டு கை தொழும் இவள் -அருவி சோர் வேங்கடம் நீர் மலை உருகினாள் உள் மெலிந்தாள்
3-அதில் அர்ச்சாவதாரத்தில் ஊற்றமும்-செய்ய பரத்துவுமாய் –எய்துபவர்க்கு அர்ச்சாவதார எளிது -அவனாகும் நீள் கடல் வண்ணனே –-அன்று தேர் கடாவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொலோ-ஸ்ரீ கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் – விபவம் பாடப் பிறந்தவர் அர்ச்சையை பாடுவது ஏற்றம் –
காரார் திருவேங்கடம் காணும் அளவும் போய்–ஆராமம் சூழ் /-மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யலாமே–ஏரார் முயல் வீட்டுக் காக்கை பின் போவதே
4-கலவியும் பிரிவும் மாறி மாறி வருகையும்-அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மான் -ஆடி ஆடி அகம் கரைந்து –வாடி வாடி இவ்வாணுதலே /-கோவை வாயாள் பொருட்டு–பூசும் சாந்து என் நெஞ்சமே -ஹர்ஷம் மிக்கு -மண்ணை இருந்து துழாவி —-ஏறிய பித்தினோடு -மாயன் திறத்தனள் இத்திரு தேறியும் தேறாமல் /-யானும் ஏத்தி –ஏத்த ஏத்த எங்கு எய்தும் /ஒரு நாள் காண வாராயே–வருத்தம் -8-5-எல்லியும் காலையும் திருக்கடித்தானாம் தாயப்பத்தி விட்டு -ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்காமல் சன்னிஹிதன் -மைந்தனும் வந்திலன் என் செய்கேன் -திருக்கண்ணபுர பாசுரம் -வருத்தம் சொல்லி ஆழ்வார் /8-5-வருந்தாது இரு மட நெஞ்சே ஆறாம் பத்தில் நம் மேல் வினைகள் வாரா -சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸூ ச – நேரான மொழி பெயர்ப்பு-சோகப்படாதே முதலில் சொல்லி –
5–அந்ய உபதேச பேச்சும்–ஆறு கிண்ணகம்-தாய் மகள் தோழி
6-அது தன்னில் ராத்ரி வ்யசனமும்-மடல் எடுக்க ஒட்டாமல் -ஊரெல்லாம் துஞ்சி பெண் பிறந்தார் பெரும் துயர் காண மாட்டாமல் -கண்ணனும் வாரானால் -காகுத்தனும் வாரானால் -காப்பார் யார் -நங்கள் அடிகள்-தோழியும் நானும் ஒழிய -வியக்தமாக தோழி பாசுரம் இல்லை ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் அருளிச் செயலில் -கோழியும் கூவுகின்றதில்லையே -கூர் இருள் ஆயிற்றே
7-தூத ப்ரேஷணமும்-நான்கு தூது பதிகம் -அவ்வளவு தெம்பு இல்லையே ஸ்ரீ திருமங்கை ஆழ்வாருக்கு -நான்கு பாசுரங்களுக்கு பின்பே நேராக-ஓ மண் அளந்த தாடாளா -வரை எடுத்த தோளாளா –தண் குடந்தை நகராளா–மலையாள ஊட்டு இல்லையே
8-அநுகாரம்-கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் -பதிகம் -ஜெகதாகாரம் –வடவரை நின்றும் வந்து இன்று கணபுரம் இட வகை கொள்வது யான் என்று பேசினாள்
9–மடல் எடுக்கை-மாசறு சோதி பதிகம் –/ஸ்ரீ சிறிய திருமடல் ஸ்ரீ பெரிய திரு மடல் -ஸ்ரீ திரு நறையூர் நம்பி மேல் –
10/11/12-தோழி தாய் மகள் என்னும் அவஸ்தை த்ர்யாபத்திகளும்-சாழல் பதிகம் அவ்யக்தம் தோழி பதிகம்-இவள் திறத்து இருவரும் –2-7-/-7-2-திருத்தாயார் பதிகங்கள் -திண்ணம் என் இள மான் புகுமூர் திருக்கோளூரே-உண்ணும் சோறு / கள்வன் கொல்-அவனூர் வினவி சென்றாள்-கரியான் ஒரு காளை வந்து–அணி யாலி புகுவார் கொலோ -கள்வன் கொல் பிராட்டி திருக்கோலம் இன்றும் சேவை உண்டே -பொன்னிவர் மேனி -நாள் வேதம் ஓதும் -அவர் நாகரீகர் செல்வர் பெரியர்-என்னையும் நோக்கி
அன்னையும் நோக்கும் என்று அஞ்சுகிறேன் –அச்சோ ஒருவர் அழகியவா -ஸுந்தர்யம் இங்கு -எங்கனே நீ லாவண்யம் அங்கு-இரண்டும் மகள் பாசுரங்கள்
13-இந்திரிய பய குரோசம் -ஐவர் திசை திசை எற்றி-
14-ஈஸ்வர ஸ்வாதந்த்ர்ய பயம் ,-அரவணை மேல் பள்ளி கொள்ளும் முகில் வண்ணனே அறையோ முறையோ ஸ்ரீ திருவிருத்தம் —தடுப்பார் இல்லாத நிரங்குச ஸ்வாதந்தர்யம் /-தெள்ளியீர்-கை வளை கொள்வது தக்கதோ -ஸ்ரீ நீல மேக பெருமாள் -நீணிலா முற்றத்து நின்று இவள் நோக்கினாள்
15-அசக்ருத் பிரபத்தி கரணம்-ஐந்து தடவை-நோற்ற நாலும்–உலகுண்ட பெரு வாயா ஸ்ரீ நம்மாழ்வார் –பத்து தடவை இவர்–ஸ்ரீ நைமிசாரண்யம் -ஸ்ரீ திருவேங்கடமுடையான் -ஸ்ரீ அண்ணன் கோயில் -ஸ்ரீ திருவரங்கம் -ஸ்ரீ திரு விண்ணகர்–திரு நறையூர் இடர் கெடுத்த திருவாளர் –6-9-பாட்டு தோறும் திருப்பாத பிரஸ்தாபம் இங்கும் உலகுண்ட பெரு வாயா போலே–தேரெழுந்தூர் -திருக்குறுங்குடி மகள் பாவனையில் -9-5-/ 5-9 மானே நோக்கு அங்கு நாயகா பாவம் /
16-ஆர்த்தியின் உடைய கரை புரட்சிகளும்–மாலுக்கு ஏரார் விசும்பில் இருப்பு அரிதாம் படி அங்கு -ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சி இவர் –
17-பர துக்க அசஹிஷ்ணுதையாலே பல காலும் ஹிதம் சொல்லுகையும்–தொடக்கமான கட்டளையாலே மற்றை ஸ்ரீ ஆழ்வார் பிர பந்தங்களைக் காட்டிலும் ,இப் பிரபந்த சதுஷ்டியார்த்த ஜ்ஞாபகமாய் இருக்கையாலே ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் பிரபந்தங்களையே இதுக்கு அங்கங்கள் என்கிறது ..-மற்றை ஸ்ரீ ஆழ்வார் பிரபந்தங்கங்களும் எதார்த்த அனுசாரிகளாய் , இதில் அர்த்த நிர்ணயத்துக்கு உறுப்பு ஆகையாலே .இதுக்கு உப அங்கங்கள் என்கிறது ..ஆக –சீஷாயாம் வர்ண சிஷா பத சமதிகமோ வ்யாக்ரியா நிர்வசோப்யாம் சந்தஸ்
சந்தச் சிதவ் ஸ்யாத் கமயதி சமயம் ஜ்யோதிஷம் ரெங்கநாத ,கல்ப அனுஷ்டான
முக்தம் ஹ்யுசித கமிதயோர் நியாய மீமாம்ச யோஸ் ஸ்யாத் அர்த்த வ்யக்தி
புராண ஸ்ம்ருதிஷூ ததனுகாஸ் த்வாம் விசின் வந்தி வேதா -ஸ்ரீ ரெங்கராஜ உத்தர ஸ்தவம்-18- –என்கிற படியே அவை அந்த வேத சதுஷ்டயத்துக்கும் உபகார அங்கங்களாய் இருக்குமா போலே இவையும் கீழ் சொன்ன படியே இத வேத சதுஷ்டயத்துக்கும் உப அங்கங்களாய் இருக்கும் என்றது ஆய்த்து —
““அங்காநி வேதாஸ் சத்வாரோ மீமாம்ஸா ந்யாய விஸ்தர? ! புராணம் த,ர்ம ஸாஸ்த்ரஞ்ச வித்,யா ஹ்யேதாஸ் சதுர்தஸ -என்கிறபடியே சதுர்தஸ வித்யாஸ்தாந வேதம் போல் இங்கும் இவருடைய ப்ரபந்தங்கள் நாலும் நாலு வேதத்தினுடைய ஸ்தாநேயாய், “இருந் தமிழ் நூற் புலவன் மங்கை யாளன்?” (திருமொழி 1 – 7 – 10) என்றும், ““கலியன் வாயொலி செய்த பனுவல் ” (திருமொழி 1 – 4 – 10) என்றும் சொல்லுகிற திருமங்கை யாழ்வாருடைய ப்ரபந்தங்களாறும், அங்கங்களினுடைய ஸ்தாநத்திலேயாய், மற்றை எட்டு ஆழ்வார்களுடைய ப்ரபந்தங்களும் உபாங்கங்களா யிருக்கும் –
செங்கணாளி யிட்டிறைஞ்சும் சிங்க வேள் குன்றுடைய
எங்கள் ஈசன் எம்பிரானை இரும் தமிழ் நூல் புலவன்
மங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார்க் கலியன்
செங்கை யாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே-1-7-10–ஒருவரால் கரை காண ஒண்ணாத படி இருக்கிற தமிழ் சாஸ்திர உக்தமான படியைக் கரை கண்ட ஜ்ஞான ஆதிக்யத்தை உடையவர் –
வரும் திரை மணி நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானை
கரும் கடல் முந்நீர் வண்ணனை எண்ணிக் கலியன் வாயொலி செய்த பனுவல்
வரம் செய்த வைந்தும் ஐந்தும் வல்லார்கள் வானவர் உலகுடன் மருவி
இரும் கடல் உலகம் ஆண்டு வெண் குடைக் கீழ் இமையவராகுவர் தாமே —1-4-10-
அயல் நின்ற வல் வினையை அஞ்சினேன் அஞ்சி
உய நின் திருவடியே சேர்வான் நய நின்ற
நன் மாலை கொண்டு நமோ நாரணா வென்னும்
சொன் மாலை கற்றேன் தொழுது ——57-நிர் வசன ரூபமாக நின்ற நல்ல மாலை கொண்டு-நயம் நின்ற நன் மாலை -நயம் -அன்பும் மகிழ்ச்சியும் -திருமந்த்ரார்த்தை நயப்பிக்கையில் ஈடுபட்ட திவ்ய பிரபந்தம் என்றுமாம்-ஸாஸ்த்ர ரூபமாய் இருக்கும் விலக்ஷணமான மாலையைக் கொண்டு என்றுமாம்-நயப்புடைத்தாய் –அதி விலக்ஷணமான சப்தங்களாலே தொடுக்கப் பட்ட இப் பிரபந்த ரூபமான மாலையைக் கொண்டு உன்னை ஆஸ்ரயித்து உனக்கு வாசகமாய் திரு மந்திரம் என்று பிரசித்தமான சொல் தொடை–
—
வித்யாந்தரங்களில் வேதத்துக்கு உண்டான ஆதிக்யம் இதுக்கும் உண்டோ என்ன சொல்லுகிறது மேல் -ஸகல வித்யைகளிலும் வைத்துக் கொண்டு அங்கியான வேதம் அதிகமாயன்றோ இருப்பது என்னில்,
சகல வித்யாதிக வேதம் போலே இதுவும் திவ்ய பிரபந்த பிரதானம்-..சூரணை -44 –
அதாவது
அங்கானி வேதாஸ் சத்வாரோ மீமாம்ச நியாய விஸ்தர புராணம் தர்ம சாஸ்த்ரஞ்ச வித்யா ஹ்யேதாச் சதுர்தச —என்று சக படிதமாய் இருக்க செய்தே ,ஸ்வ அங்கோ உபாங்களான சகல வித்யைகளிலும் ,ஸ்வ வைபவத்தால் மேலாய் இருக்கும் வேதம் போலே ஸ்ரீ திவ்ய பிரபந்தங்களிலும் சகபடிதமாய் இருக்க செய்தே ஸ்வ அங்க உபாங்களான சகல ஸ்ரீ திவ்ய பிரபந்தகளிலும் ஸ்வ வைபவத்தாலே இதுவும் மேலாய் இருக்கும் என்கை-
அந்த ஸகல வித்யைகளிலும் அதிகமான வேதம் ப்ரதாநமானாப் போலே இதுவும் திவ்ய ப்ரபந்தங்களில் ப்ரதாநமாயிருக்கும்.
—
ஆனால் அந்த வைபவத்துக்கு உடலான சாஸ்த்ரத்வ பாகவத ஜ்ஞாரூபவத்வ நிர்தோஷத்வ ஸ்ருதித்வ சத்யத்வ அநாதி நித்யத்வங்கள் இதுக்கும் உண்டோ என்ன சொல்லுகிறது மேல்-ஆனால் வேதத்துக்குச் சொல்லுகிற ”வேத ஸாஸ்த்ராத் பரம் நாஸ்தி” (ஹரிவம்ஸே ) என்கிற ஸாஸ்த்ரத்வமும், ““ஸ்ருதி ஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா” என்கிற பகவதாஜ்ஞா ரூபத்வமும், ப்ரம விப்ரலம்பாதி, தோஷ ரஹிதத்வமும், பூர்வ பூர்வோச்சாரண க்ரமத்தாலே உத்த ரோத்தரோச்சார்யமாணத்வம், நித்யத்வம், ஸத்யத்வம் தொடக்கமான லக்ஷணங்கள் இத்திருவாய்மொழிக்குமுண்டோ என்னில், உண்டென்கிறார்-
வேத நூல் இரும் தமிழ் நூல்–ஆக்ஜை ஆணை வசையில் ஏதமில் சுருதி செவிக்கு இனிய ஓதுகின்றது உண்மை பொய்யில் பாடல் பண்டை நிற்கும் முந்தை அழிவில்லா என்னும் லஷணங்கள் ஒக்கும்-சூரணை -45-
அதாவது
வேத நூல் பிராயம் நூறு – திருமாலை -3- என்ற அத்தை வேத சாஸ்திரம் என்றால் போலே இத்தையும் –இரும் தமிழ் நூல் புலவன்-பெரிய திருமொழி -1-7-10–என்று பெரிய திராவிட சாஸ்திரம் என்கையாலும்
அத்தை — ஸ்ருதிஸ் ஸ்ம்ருதிர் மமை ஆக்ஜை -பாஞ்சராத்ரம் –என்று பகவத் ஆக்ஜை ரூபமாக சொன்னால் போலே-இத்தை –ஆணை ஆயிரம் -திருவாய்-6-3-11–என்று தத் ஆக்ஜா ரூபமாக சொல்லுகையாலும் ,-அத்தை -வசையில் நான் மறை –பெரிய திருமொழி-5-3-2- என்று விப்ரலம்பாதி தோஷ ரகிதம் என்றால் போலே ,-இத்தையும் –ஏதமில் ஆயிரம்-திருவாய்-1-6-11- -என்று நிர்தோஷமாக சொல்லுகையாலும் ,-அத்தை-சுடர் மிகு சுருதி-திருவாய்-1-1-7- -என்று ஸ்ரூயதே இதி ஸ்ருதி -என்கிறபடியே பூர்வ பூர்வோச்சாரண கிரமத்திலே சரவண இந்திரியத்தாலே கிரகிக்க படுமதாய் சொன்னால் போலே , இத்தையும் –கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே -திருவாய்-10-6-11 -என்று ஸ்ராவ்யமாய் சொல்லுகையாலும் ,-அத்தை –வேத நூல் ஓதுகின்றது உண்மை-திருச்சந்த -72- -என்று சொல்லும் அதில் ஒரு பொய் இல்லை என்றால் போலே ,-இத்தையும் –பொய்யில் பாடல்-திருவாய்-4-3-11–என்று அசத்திய கந்த ரகிதம் இல்லை என்கையாலும்,-அத்தை பண்டை நான்மறை -பெரிய திருமொழி-5-7-1–என்று அநாதியாகவும்-நிற்கும் நான்மறை-திருவாய்-6-5-4- -என்று -அநதினத்தவம்-அழிவில்லாததாகவும் சொன்னால் போலே இத்தையும் முந்தை ஆயிரம் -திருவாய்-6-5-11-அழிவில்லா ஆயிரம் -திருவாய்-9-7-11-என்று அநாதியாய் அழிவற்று இருக்குமதாய் சொல்லுகையாலும் இந்த லஷணங்கள் எல்லாம் இரண்டுக்கும் ஒக்கும் என்கை-
“வேதநூல்?” (திருச்ச.72) என்றாப் போலே ““இருந்தமிழ்நூல் ‘” (திருமொழி 1 – 7 – 10) என்று ஸாஸ்த்ரத்வமும், ”ஸ்ருதி ஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா’” என்றாப்போலே ஆணை யாயிரத்து”” (திருவா. 6 – 3 – 11) என்று பகவதநுஸாஸந ரூபமாய், “வசையில் வேதம்”” (திருமொழி 5 – 3 – 2) என்றாப் போலே ““ஏதமிலாயிரம்” (திருவா. 1 – 0 – 11) என்று ப்ரம விப்ரலம்பாதி, தோஷ ரஹிதமாய், “*சுடர் மிகு சுருதி”’ (திருவா. 1 – 1 – 7) என்றும், *’செவிக்கினிய செஞ்சொல்?” (திருவா. 10 – 6 – 11) என்றும் ஸ்ராவ்யமாய், ““வேத நூலோதுகின்றதுண்மை?” (திருச்ச.72) என்றாப் போலே ‘“பொய்யில் பாடலாயிரம்”? (திருவா. 4 – 3 – 11) என்று இதில் சொல்லுகிற அர்த்தங்களில் ஒரு பொய் இன்றியிலே இருப்பதாய், ‘“பண்டைநான்மறை” (திருமொழி 5 – 7 – 3), “நிற்கும் நான்மறை”! (திருவா. 6 – 5 – 4) என்றாப் போலே ‘‘முந்தை யாயிரம்’‘ (திருவா. 6 – 5 – 11) என்றும், “அழிவில்லா ஆயிரம்”’ (திருவா. 9 – 7 – 11) என்றும் ஆத்யந்த ரஹிதமாய், அதிற் சொல்லுகிற லக்ஷணங்கள் இதுக்குமுண்டென்கிறார் –
வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும்
பாதியும் உறங்கிப் போகும் நின்ற விப்பதினை யாண்டு (நின்றதில் பதினை யாண்டு -என்றும் பாடம் )
பேதை பாலகனதாகும் பிணி பசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்க மா நகர் உளானே–3—வேத சாஸ்த்ரா விரோதிநா -என்கிறபடியே
வேதமாகிற நூல் -வேதாக்ய சாஸ்திரம் -என்னக் கடவது இறே-நூல் -சாஸ்திரம்-அதவா வேதங்களும் நூல்களும் -என்னவுமாம் -வேதங்களும் வேதார்த்த ஞானம் உடைய புருஷர்கள் உடைய வசனங்களும் –
போதில் மங்கை பூதலம் கிழத்தி தேவி யன்றியும்
போது தங்கு நான்முகன் மகன் அவன்மகன் சொலில்
மாது தங்கு கூறனேற தூர்தி என்று வேத நூல்
ஓதுகின்றது உண்மை யல்லது இல்லை மற்றுரைக்கிலே –72–ஸ்ரீ பூமி சஹிதன் பிரம்மாவுக்கு உத்பாதகன் ப்ரஹ்ம உத்பன்னன் ருத்ரன் என்று வேதாக்ய சாஸ்திரம் ஓதுகிற அர்த்தமே சத்யம்-அதுக்கு புறம்பாக ஓர் அர்த்தம் சொல்லில் அது அசத்யம் – ஸூபர்ண வைகுண்ட சம்வாதே – யத்தத் பத்ம மபூத் பூர்வம் யத்ர ப்ரஹ்மா வ்யஜாயதே ப்ரஹ்மணச்சாபி சம்பூதச்சிவ இத்யவதார்யதாம் சிவாத் ஸ்கந்தஸ் சம்பபூவ ஏதத் ஸ்ர்ஷ்டி சதுஷ்டயம் –இத்யாதி –
செங்கணாளி யிட்டிறைஞ்சும் சிங்க வேள் குன்றுடைய
எங்கள் ஈசன் எம்பிரானை இரும் தமிழ் நூல் புலவன்
மங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார்க் கலியன்
செங்கை யாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே-1-7-10–ஒருவரால் கரை காண ஒண்ணாத படி இருக்கிற தமிழ் சாஸ்திர உக்தமான படியைக் கரை கண்ட ஜ்ஞான ஆதிக்யத்தை உடையவர் –
காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த
தாளிணையன்தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணைஇன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே.–6-3-11-பீஷாஸ் மாத் வாதே பவதே -என்கிறபடியே ஆயிரத்திலும்-ஜெகன் நியமனத்தைச் சொன்ன –
வசையில் நான்மறை கெடுத்த அம் மலர் அயற்கு அருளி முன் பரி முகமாய்
இசை கொள் வேத நூல் என்று இவை பயந்தவனே எனக்கு அருள் புரியே
உயர் கொள் மாதவிப் போதொடு உலாவிய மாருதம் வீதியின் வாய்த்
திசை எல்லாம் கமழும் பொழில் சூழ் திரு வெள்ளறை நின்றானே –5-3-2—விப்ரலம்பாதி தோஷ சம்பாவனை இல்லாத நாலு வேதத்தைக் கொடுத்து–தாதா யதபூர்வ மகல்பயத்-என்று
முன்பு போலே இவற்றை உண்டாக்கு -என்று விட அவனும் வேதத்தை அசுரர்கள் கையில் பறிகொடுத்து
வேதா மே பரமஞ் சஷூர் வேதா மே பரமம் தனம் -என்று கண்ணும் கண்ண நீருமாய் நின்று கூப்பிட
அவன் பக்கலிலே கிருபையைப் பண்ணி –
மாதவன் பால் சட கோபன் தீ தவம் இன்றி உரைத்த
ஏதமில் ஆயிரத்து இப் பத்து ஓத வல்லார் பிறவாரே–1-6-11-தீதாவது -தன் மேன்மையைப் பார்த்து எழ நிற்கை-அவமாவது -ஆஸ்ரயிக்கிறவனுடைய சிறுமை பார்த்து கையிடுகை –-இன்றியுரைத்த -இரண்டு குற்றமும் இல்லாமையைச் சொன்ன – ஏதமில் ஆயிரம் -லஷண ஹாநியால் வரும் குற்றம் இன்றிக்கே இருக்கை-
திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7–முதல் பாட்டுத் தொடங்கிச் சொன்ன அர்த்தங்கள் எல்லாவற்றுக்கும் பிரமாணம் நிர்த்தோஷ ஸ்ருதி என்கிறது சுடர் மிகுகை யாவது -பௌருஷ்யத்வ நிபந்தனமான விப்ரலம்பாதி தோஷ ரஹிதமுமாய் பிரமாணாந்தரங்களைக் கொண்டு பாஹ்ய குத்ருஷ்டிகளால் அவிசால்யமாகையாலே மிக்க தேஜச்சை யுடைத்தாகை-ஒருவரால் பண்ணப் பட்டது அன்றிக்கே என்றும் கேட்டே வருமதாகையாலே ஸ்ருதி என்கிறது –
காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே–10-6-11–பாட்யே கே யே ச மதுரம் -என்கிறபடியே இசையோடு புணர்ப்புண்ட தமிழ்த்தொடை –நித்ய ஸூரிகள் இத்தைக் கேட்டால் பர்யாப்தர் ஆகார் -இப்பாடுகிறது உள்ளீடானவன் சீலத்தாலேயே என்னில் –பாசுரத்துக்காக என்கிறது –ஸம்ஸ்ரவே மதுரம் -என்கிறபடியே செவியே தொடங்கி ரசிக்கும்-செஞ்சொல்லே–-நினைவும் சொல்லும் செயலும் ஒருபடிப் பட்ட சொல்லு –சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினால் -என்னா செந்தமிழ் பத்தும் என்றார் இறே –
போதில் மங்கை பூதலம் கிழத்தி தேவி யன்றியும்
போது தங்கு நான்முகன் மகன் அவன்மகன் சொலில்
மாது தங்கு கூறனேற தூர்தி என்று வேத நூல்
ஓதுகின்றது உண்மை யல்லது இல்லை மற்றுரைக்கிலே –72-ஸ்ரீ பூமி சஹிதன் பிரம்மாவுக்கு உத்பாதகன் ப்ரஹ்ம உத்பன்னன் ருத்ரன் என்று வேதாக்ய சாஸ்திரம் ஓதுகிற அர்த்தமே சத்யம்-யல்லது இல்லை மற்றுரைக்கிலே — அதுக்கு புறம்பாக ஓர் அர்த்தம் சொல்லில் அது அசத்யம் –-ஸூபர்ண வைகுண்ட சம்வாதே – யத்தத் பத்ம மபூத் பூர்வம் யத்ர ப்ரஹ்மா வ்யஜாயதே ப்ரஹ்மணச்சாபி சம்பூதச்சிவ இத்யவதார்யதாம் சிவாத் ஸ்கந்தஸ் சம்பபூவ ஏதத் ஸ்ர்ஷ்டி சதுஷ்டயம் -இத்யாதி –
உய்வு உபாயம் மற்று இன்மை தேறி, கண்ணன் ஒண் கழல் மேல்
செய்ய தாமரைப் பழனம் தென்னன் குருகூர்ச் சடகோபன்
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே.–4-3-11-ஆழ்வார் பிரணயித்வ குண அனுசந்தானத்தாலே தரித்தவாறே ஊரும் தளிரும் முறியுமாயிற்று -அகாலப்பலிநோ வ்ருஷா
சிவந்த தாமரையை உடைய பழனங்களை உடைத்தாய் தெற்குத் திக்குக்கு ஸ்லாக்யமான திரு நகரியை உடைய ஆழ்வார்-ந தே வாக ந்ருதா காவ்யே காசிதத்ர பவிஷ்யதி -என்கிறபடியே திருவாய் மொழி எல்லாவற்றுக்கும் ஆதல்-அவாப்த ஸமஸ்த காமன் ஒரு சம்சாரியினுடைய சத்தாதிகளே தனக்கு போக உபகரணமாக இருந்தான் -என்கிற பிரணயித்வத்தில் ஒரு பொய் இன்றிக்கே இருக்கிற பத்து என்னுதல் –
பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும்
பிண்டமாய் விரிந்த பிறங்கு ஒளி அனலும் பெருகிய புனலொடு நிலனும்
கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும் ஏழு மா மலைகளும் விசும்பும்
அண்டமும் தானாய் நின்ற எம்பெருமான் அரங்க மா நகர் அமர்ந்தானே –5-7-1-பூர்வே பூர்வேப்யோ வச ஏத தூசு -என்கிறபடியே பூர்வ பூர்வ உச்சாரண க்ரமத்தைப் பற்ற உத்தர உத்தர உச்சாரணம் ஆகையாலே புருஷ புத்தி அதீனம் ஆனால் வரக் கடவ தோஷங்கள் ஒன்றும் இல்லாத வேதங்களும் –
நிற்கும் நான்மறை வாணர் வாழ்தொலை வில்லி மங்கலம் கண்டபின்
அற்க மொன்றும் அறவு றாள்மலிந் தாள்கண் டீர்இவள் அன்னைமீர்!
கற்கும் கல்வி யெல்லாம் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான்என்றே
ஒற்கம் ஒன்றும் இலள் உகந்துகந்து உண்மகிழ்ந்து குழையுமே.–6-5-4-அபவ்ருஷேயமாய் நித்தியமான வேதங்கள் –
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண்குரு கூரவர் சடகோபன்
முந்தை ஆயிரத்துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச்சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே.–6-5-11–பழையதான வேதார்த்தத்தை அருளிச் செய்கையாலே சர்வேஸ்வரன் இதர சஜாதீயன் ஆனால் போலே -வேதமும் தமிழாய் வந்து இவர் பக்கலிலே அவதரித்த படி-செவ்விய தமிழ் -பசும் தமிழ் -அர்த்தத்தை விசதமாகக் காட்டுவது -இப் பத்தை அப்யஸிக்க வல்லார் ஸ்ரீ யபதிக்கு அடிமை செய்வார்-
ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை
ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்
வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அழிவு இல்லா ஆயிரத்து இப்பத்தும் நோய் அறுக்குமே–9-7-11–கேட்டார்கள் நெஞ்சை ஒரு நாளும் விடாதே வர்த்திக்கிற இப்பத்து –இப்பாசுரத்தை கேட்டார்க்கு சம காலத்தில் போலே சர்வ காலமும் ரசம் பிறக்கும் படி யாய்த்து இருப்பது-
—
அந்த வேதம் போலே இதுவும் அஸ்ம்ருத கர்த்ருகமாய் இருக்க வேண்டாவோ ? ஸ்ரீ ஆழ்வார் இதுக்கு கர்த்தா என்கையாலே ,நித்யத்வ அபௌருஷேயத்வங்கள் கூடாதீ என்ன சொல்லுகிறது மேல்-ஆனால் “சொல்லப்பட்ட ஆயிரத்துள்” (திருவா. 8 – 10 – 11) என்று இவர் தம்மாலே சொல்லப்பட்டது என்கிற இதில் கர்த்ருத்வத்தால் நித்யத்வ-அபெளருஷேயத்வ-ஹாநி வாராதோ என்னில், வாராதென்கிறார். அது என் போல வென்னில்-
சொல்லப் பட்ட என்ற இதில் கர்த்ருத்வம் ஸ்ம்ருதி அத்தை ஸ்வயம்பூ படைத்தான் என்றது போலே-சூரணை -46-
அதாவது
சடகோபன் சொல்லப் பட்ட ஆயிரம்–திருவாய்-8-10-11–என்று இதில் ஸ்ரீ ஆழ்வாருக்கு சொன்ன கர்த்ருத்வம்-அநாதி நிதனா ஹ்யேஷா வாகுத் ஸ்ருஷ்டா ஸ்வயம்புவா -என்று-(அநாதி அநிதன -பண்டை நின்ற வேதத்தை ) ஸ்ம்ருதி அந்த வேதத்தை-( ஜகத்தை-) பிரம்மா சிருஷ்டித்தான் என்று சொன்னாவோ பாதி என்கை- ஸ்வயம்பு சிருஷ்டித்தான் என்னாதே–படைத்தான்-என்றது முன்னம் திசை முகனை தான் படைக்க மற்றவனும் முன்னம் படைத்தனன் நான் மறைகள்-பெரிய திருமடல்-10 -என்று ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தியையும் தர்சிப்பைக்காக .. அநாதி நிதானமான சந்தர்ப்பம் பிரம்மாவின் வாக்கில் நின்றும் ஆவிர்பவித்த மாத்ரம் கொண்டு ,பிரம்மாவுக்கு அதில் சொன்ன கர்த்ருத்வ உபாதி இதிலும் ஸ்ரீ ஆழ்வாருக்கு சொன்ன கர்த்ருத்வம் ஆகையால் இத்தால் ,இதன் நித்யத்வ அபௌருஷேயத்வ ஹானி வாராது என்று கருத்து-
“முன்னம் திசை முகனைத் தான் படைக்க, மற்றவனும் முன்னம் படைத்தனன் நான்மறைகள்”! (பெ.திருமடல்) என்றும், ““அநாதி நிதாநா ஹ்யேஷா வாகுத்ஸ்ருஷ்டா ஸ்வயம்பு வா?‘ (பார-சபா ) என்றும் சொல்லுகிறபடியே, ஸ்ம்ருதி, “ப்ரஹ்மா வேதங்களைப் படைத்தான் ‘ என்ற இடத்தில், அந்த ப்,ரஹ்மாவால் வந்த கர்த்ருத்வத்தால் அவறறினுடைய நித்யத்வ-அபெளருஷேயத்வங்களுக்கு ஹாநி வாராதாப் போலே இதுக்கும் நித்யத்வ அபெளருஷேயத்வ ஹாநி வாராது –
நல்ல கோட்பாட்டுலகங்கள் மூன்றின் உள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை அந்தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப்பட்ட வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே–8-10-11-வேதம் போலே தான் தோன்றி அன்றிக்கே இருக்கை-பரத்வம் போலே வேதம்-அவதாரம் போலே திருவாய்மொழி –பிரமேய சரமம் -பிராமண சரமம் -பரத்வ பர முது வேதம் -அர்ச்சாவதாரங்களை திருவாய் மொழி சொல்லுமே —
மன்னிய தாமரை மா மலர்ப் பூ பூத்தம் மலர் மேல் —–9
முன்னம் திசை முகனைத் தான் படைக்க -மற்றவனும்
முன்னம் படைத்தனன் நான்மறைகள் அம்மறை தான் –10—-அந்தச் சதுர முகனும் முன்பு உண்டாக்கின நான்மறைகள் என்றால் போலே இருக்கிறது-சர்வேஸ்வரன் இவ் வேத அஷர ராசியை-ஸூப்த பிரபுத்த ந்யாயத்தாலே முன்புத்தை ஆநு பூர்வியை ஸ்மரித்துச் சொல்லும் என்று வேதத்தின் உடைய அபௌ ருஷேயத்வம் சொல்லா நிற்க-இவன் சிருஷ்டித்தான் -என்னில் பிரமாண விருத்தமாம் இறே-
இனித் தானே-யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை -என்று சொல்லுகிற்றவற்றோடும் விரோதிக்கும் இறே-ஆனால் பின்னை என் சொல்லிற்று ஆகிற்றது என்னில்
இன்னான் தன் பிதாவின் பக்கல் படைத்த த்ரவ்யம் இன்னதனை -என்னுமா போலே அந்த ப்ரஹ்மாவும் சர்வேஸ்வரன் பக்கல் அதிகரித்த நாலு வேதங்களும் -என்றபடி- பிறந்து படைத்தான் -என்னக் கடவது இறே பெற்றத்தை –
—
பூர்வ சந்தர்ப்ப பிரக்ரியை இவர் தர்சிப்பித்து பேசினதே உள்ளது என்னும் இடத்தை அறிவிக்கிறார் மேல்-
நால் வேதம் கண்ட புராண ரிஷி மந்த்ர தர்சிகளை போலே இவரையும் ரிஷி முனி கவி என்னும்-சூரணை -47-
அதாவது
நால் வேதம் கண்ட புராண ரிஷி–நால் வேதம் கண்டானே -பெரிய திருமொழி-8-10-1–என்னும் படி
ஈஸ்வரன் தான் அடியிலே செய்தால் போல் நாலு வேதங்களையும் சாஷாத் கரித்து அஷ்டா தச புராணம் கர்த்தா சத்யவதீ ஸுத-என்கிற படி அஷ்டாதச புராணங்கள் உடைய ஆநு பூர்வியையும் தர்சித்துச் சொன்ன வேத வியாச பகவானை சொல்லுகிறது-நால் வேதம் கண்டான் -என்கிற இடத்தில் ஸ்வேன ரூபேண நின்று தர்சித்தமை அன்றிக்கே வியாச ரூபேண நின்று தர்சித்தமை தன்னைச் சொல்லுகின்றது இவருக்கு கருத்தாகவுமாம் —சங்கீர்ண புத்தயோ தேவா பிரம ருத்ர புரஸ்ஸர சரண்யம் சரணம் ஜக்மு நாராயண மநாமயம்..தைர் விக்ஜ்ஞாபித்த கார்யஸ்து பகவான் புருஷோத்தம அவதீர்னோ மகா யோகி சத்யவத்யாம் பராசராத் என்றும்-கிருஷ்ண த்வைபாயனம் வியாசம் வித்தி நாராயண பிரபும் -என்றும் பகவத் ஏவச அவதாரயா பகவான் தானாக சொல்லக் கடவதிறே..–இப்படி இருந்துள்ள ஸ்ரீ வேத வியாச பகவானை வேதங்களின் பூர்வ சித்த அனுபூர்வியை தர்சித்து சொன்ன படியாலே தர்சநாத் ருஷி மனந சீலோ முனி கவி கிராந்த தர்சீ-என்கிற வர்தங்களை நினைத்துக் கொண்டு-ஸ்ரூயதாம் சிம்ஹனா தோயம் ருஷேச்தச்ய மகாத்மனா தர்மேச அர்த்தேச கர்மே ச மோஷே ச பரதர்ஷப -என்றும்-ஏவம் விதம் பாரதம் து ப்ரோக்தம் ஏன மகாத்மனா சோயம் நாராயணஸ் சாஷாத் வியாச ரூபீ மகா முனி –என்றும் சஷால் லோகான் பாவ்யமான கவி முக்ய பராசர்ய-என்றும்
ருஷி முனி கவி என்றும் சொல்லிற்று இறே–மந்த்ர தர்சிகள் ஆனவர்களை பூர்வ ஸித்த சந்தர்ப்பத்தை
சாஷாத் கரித்து சொன்னவர்கள் என்னும் இடம் தோற்ற நம ருஷிப்யோ மந்த்ர க்ருத்ப்ய -என்றும்
பகவான் சௌனக முனி -என்றும் இத்யாதிகளாலே ருஷி முனி என்று சொல்லிற்று இறே .-இவர்கள் விஷயத்திலும் கவி சப்த பிரயோகம் உண்டாகில் வந்த ஸ்தலங்களிலே கண்டு கொள்வது -ஆக இப்படி இவர்களை சொன்னால் போலே த்ராவிடமான இதின் பூர்வ ஸித்த அனுபூர்வியை சாஷாத் கரித்து பேசின இவ் ஆழ்வாரையும் –-ருஷிம் சுஷாமஹே கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் இவோதிதம்
சகஸ்ர சாகாம் யோத்ரா ஷீத் த்ராவிடீம் ப்ரஹ்ம சம்ஹிதாம் –என்றும்-சடகோபம் முனிம் வந்தே சடானாம் புத்தி தூஷகம் , அஞ்ஞானம் ஜ்ஞான ஜனகம் திந்திரிணீ மூல சம்ஸ்ரயம் -என்றும்-உலகம் படைத்தான் கவி யாயினேற்கு -திருவாய்-3-9-10–என்றும் முன்பு உண்டான சந்தர்ப்பத்தை தர்சிப்பித்து பேசினவர் என்னும் இடம் தோற்ற ருஷி என்றும் ,முனி என்றும் ,கவி என்றும் சொல்லும் என்கை
”நால் வேதங் கண்டானே”’ (திருமொழி 8 – 10 – 1) என்கிறபடியே நாலு வேதங்களைக் கரை கண்ட வர்களையும் அஷ்டாதஸ புராண கர்த்தாக்களையும் “*சதுர் வேத தர்ஸநாத் ருஷி:‘” என்கிறபடியே ருஷிகளென்றும், ”ஜிதந்தே”” இத்யாதி, ஜிதந்தா- மந்த்ர தர்ஸிகளான சவ்நகாதிகளை முனிகளென்றும், இதிஹாஸ கர்த்தாக்களான ஸ்ரீ வால்மீகி பகவான் போல்வாரை கவிகளென்றும் சொல்லுமாப் போலே இவரையும் ““ருஷிம் ஜுஷாமஹே க்ருஷ்ண த்ருஷ்ணா தத்த்வமிவோதிதம் | ஸஹஸ்ர ஸாகாம் யோ த்ராஷீத், த்ராவிடீம் ப்ரஹ்ம ஸம்ஹிதாம்” (பரா.௮.) என்றும், ““ஸட,கோபமுநிம் வந்தே, ஸடாநாம் புத்தி தூஷகம் | அஜ்ஞாநாம் ஜ்ஞாந ஜநகம் திந்த்ரிணீ மூல ஸம்ஸ்ரயம்””’ (பரா. அ) என்றும், “உலகம் படைத்தான் கவி” (திருவா. 3 – 9 – 10) என்றும் சொல்லுகையாலே இவரையும் ருஷி முனி கவி என்னும் என்கிறார் –
வண்டார் பூ மா மலர் மங்கை மண நோக்கம்
உண்டானே உன்னை உகந்து உகந்து உன் தனக்கே
தொண்டானேற்கு என் செய்கின்றாய் சொல்லு நால் வேதம்
கண்டானே கண்ண புரத் துறை யம்மானே—8-10-1-பிரளய காலத்திலே இவற்றின் உடைய ஆநு பூர்வியை ஸ்மரித்து இருந்து வெளி இடுகை -இறே இவற்றைக் காண்கை யாவது-நித்தியமான வேதத்தில் சாஷாத் காரத்துக்கு மேற்பட இல்லை இறே (ஆகவே படைத்தானே என்னாமல் -கண்டானே -சப்தங்கள் போனாலும் ஆனு பூர்வி அழியாதே )அன்றிக்கே பட்டர் அருளிச் செய்ததாக சிறியாத்தான் பணிக்கும் படி – இது கர்த்தரி அன்று -கர்மணி கிடாய் -என்று பிராப்ய பிராபகங்கள் இரண்டும் அவனே என்னும் இடத்தை யாயிற்று வேதங்கள் வெளி இட்டது –
ருஷிம் ஜுஷாமஹே க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வமிவோதிதம் |
ஸஹஸ்ர சாகாம் யோத்ராக்ஷீத் த்ராவிடீம் ப்ரஹ்ம ஸம்ஹிதாம் ||–3-எந்த ஒரு முனிவர் – ஆயிரம் சாகைகள் உள்ள சாம வேதம் போலே ஆயிரம் பாசுரங்களை யுடையதான திராவிட ப்ரஹ்ம சம்ஹிதையை சாஷாத் கரித்தாரோ, ஸ்ரீ கிருஷ்ண பக்தியே வடிவு எடுத்து அவதரித்தது என்று சொல்லும்படியான அந்த ஸ்ரீ சடகோப முனிவரை ஸேவிக்கிறோம்!
சடகோப முநிம் வந்தே சடாநாம் புத்தி தூஷணம் |
அஜ்ஞாநாம் ஜ்ஞான ஜனகம் திந்த்ரிணீ மூல ஸம்ஸ்ரயம் ||–6-குடில புத்திகளுடைய துர்ப்புத்தியைத் தொலைப்பவரும் – தீய மனத்தவர்களுடைய தீய மனத்தை கெடுத்து – அறிவில்லாதவர்களுக்கு நல்லறிவை நல்குமவரும் – அறிவிலிகளுக்கு மருவித் தொழும் மனமே தந்து – ஸ்ரீ திருப்புளி யாழ்வார் அடியிலே வீற்று இருப்பவருமான – இங்குத்தை வாழ்வே தமக்கு நிரூபகமாகக் கொண்ட ஸ்ரீ நம்மாழ்வாரை வணங்குகிறேன்!
நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய்ச்
சென்று சென்றாகிலும் கண்டு,சன்மம் கழிப்பான் எண்ணி,
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?–3-9-10-ஸ்ருஷ்டிகள் பலித்ததில்லை என்று கை வாங்காதே மிகவும் ஒருப்பட்டு லோகங்களை உண்டாக்கினான் கவி ஆயினேற்கு-கவியாயினுக்கு
அவன் ஸ்ருஷ்ட்டி பலித்து அநந்யார்ஹனான எனக்கு என்றும் -கால தத்வம் உள்ளதனையும் வேறு சிலருடைய கவியில் எனக்கு அந்வயம் உண்டாகி தகுமோ-வேறு சிலர்க்கு கவியாக நான் தகு வேனோ என்றுமாம்-இப்போது பகவத் குணங்களை பாடி மேலும் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத – ஏதத் சாம காயன் நாஸ்தே-என்று பாடப் புகுகிற நான் வேறு சிலர்க்கு தகு வேனோ –
—
இன்னமும் இதன் உடைய அநாதித்வ ஸூசுகமானது ஒன்றை தர்சிப்பிக்கிறார் மேலே-
படைத்தான் கவி என்ற போதே இதுவும் யதா பூர்வ கல்பனம் ஆமே-சூரணை -48-
அதாவது உலகம் படைத்தான் கவி –என்கையாலே ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் -என்கிற படியே
ஒருப் பட்டு மேன்மேலும் லோக சிருஷ்டியை பண்ணும் இடத்தில் ஸுூர்யா சந்திர மசவ் ததா எத பூர்வ மகல்பயத்––தைத்ரியம்-என்கிற படியே ஸ்ருஷ்ட்டி தோறும் சந்திர சூர்யாதி சகல பதார்த்தங்களையும்
யதா பூர்வ கல்பனமாய் வருமா போலே திராவிட வேதமான இப் பிரபந்தமும் ஸ்ருஷ்ட்டி தோறும் யதா பூர்வ கல்பனமாய் வரும் என்று தோன்றும் இறே என்கை ..
‘ஒன்றி யொன்றி உலகம் படைத்தான் கவியாயினேற்கு’” (திருவா-3-9-10) என்று அடுத்தடுத்து ஜகத் ஸ்ருஷ்டியைப் பண்ணினவனுக்குக் கவி யானேன் என்கையாலே “ஸுூர்யா சந்தரமஸெள ததா யத பூர்வ மகல்பயத்?” (தை. உ.) என்று ஸ்ருஷ்டி தோறும் ஸூர்யா சந்த்ரமாக்கள் உண்டானாப் போலே ஸ்ருஷ்டி தோறும் இந்த ப்ரபந்தமும் உண்டென்னுமிடம் தோற்றுகிறது. இத்தாலும் இதினுடைய அநாதித்வம் சொல்லுகிறது.
—
ஏவம் பூதமான இது பகவத் பிரசாதத்தாலே ஆழ்வாருக்கு சித்தித்து ,-ஆழ்வார் பிரசாத்தாலே இவ் அருகு உள்ளாருக்கு உப ஜீவ்யமாய் ,இவரை இட்டு நிரூபிக்கும் படியானமையை ச த்ருஷ்டாந்தமாக அருளி செய்கிறார் மேல்-ஆனால் அதிகாரிகள் ஸம்ஹ்ருதராக வேதம் நித்யமானபடி என் என்னில், ஸர்வஜ்ஞனான ஸர்வேஸ்வரன் நித்யனாகையாலே அவன் திருவுள்ளத்திலே வாஸனை கிடந்து ஸூப்த ப்ரபுத்த, ந்யாயத்தாலே ஸம்ஹாராநந்தரம் “யோ ப்,ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ஸ் ச பரஹிணோதி தஸ்மை” (ஸ்வே.6 – 18) என்கிறபடியே ப்,ரஹ்மாவை உண்டாக்கி, அநந்தரம் அவனுக்கு வேத ப்ரதாநத்தைப் பண்ண, ஸர்வேஸ்வரனோடே அத்யயநம் பண்ணின அந்த ப்ரஹ்மாவானவன் ஜ்யேஷ்ட புத்ரனான ருத்ரன் தொடக்கமானாரை ஒதுவித்தாப் போலே ஸர்வேஸ்வரன் இந்த த்ராவிட வேத ஸம்ஸ்காரத்தைத் திருவுள்ளத்திலே வைத்து இவரை ஓதுவிக்க, இவரும் தம் பக்கலில் க்ருதஜ்ஞரான ஸ்ரீ மதுர கவிகள் போல்வாரை அத்யயநம் பண்ணுவிக்க, இதுவும் இவரை யிட்டு நிரூபிக்கும்படி யாய்த்து என்கிறார்-
உறக்கம் தலை கொண்ட பின்னை மறை நான்கும் உணர்ந்த தங்கள் அப்பனோடே ஓதின சந்த சதுமுகன் சலம் கலந்த வெண்புரி நூல் மானுரி திரி தந்து உண்ணும் காமன் உடல் இருக்கு இலங்கு
ஜ்யேஷ்ட புத்ராதிகளுக்கு மறை பயந்தாப் போலே-ஆதுமில் காலத்து எந்தையான வாய் முதல் அப்பன் பிரம குருவாய் இராப் பகல் முன் சொல்ல-கற்றனமே என்ற இவரும் நாவினால் நன்மையால் என்னும் ஓத வல்ல பிராக்களை கன்மின்கள் என்று சொல் பயிற்ற வேதம் ஓதுவார் ஒத்து ஆகையாலே ஆதர்வணாதிகள் போலே இதுவும் பேர் பெற்றது-சூரணை -49-
அதாவது
உன்னிய யோகத்து உறக்கம் தலை கொண்ட பின்னை-பெரிய திருமடல் -8- -என்கிற படியே சம்ஹ்ருதி சமயத்தில் நாம ரூப விவாகநர்ஹமாய் சதவஸ்தமாய் கிடந்த இத்தை ஸ்ருஷ்ட்டி காலம் வந்தவாறே
விபக்தம் ஆக்கி மகதாதி சகல தத்வங்களையும் அண்டத்தையும் சிருஷ்டித்து சதுர் முக சிருஷ்டிக்கு முன்னாக ஏகார்ணவத்திலே –இவை நல் வழியாய் கரை சேரும் விரகு ஏதோ -என்று அனுசந்திக்கை யாகிற யோக நித்தரை செய்த அனந்தரம் –
உன்னிய யோகத் துறக்கம் தலைக் கொண்ட பின்னை”’ (பெ. திருமடல்) என்கிறபடியே “ந ப்ரஹ்மா நேஸாநோ நேமே த்யாவாப்ரூதிவீ ந நக்ஷத்ராணி”’ (மஹோபநிஷத்) என்றும், ““ப்ருதி வ்யப்ஸு ப்ரலீயதே” என்று தொடங்கி, “மஹாநவ்யக்தே லீயதே அவ்யக்தம் அஷரே லியதே அக்ஷரம் தமஸி லீயதே தம? பரே தேவ ஏகீ பவதி” ‘(ஸு.உ.), “ஏகோ ஹ வை நாராயண ஆஸீத்” (ம.உ.) என்றும், ““ஒன்றுந் தேவுமுலகுமுயிரும் மற்றும் யாதுமில்லாவன்று”” (திருவா. 4 – 10 – 1) என்றும் சொல்லுகிறபடியே ஸகல தத்த்வங்களும் அவர் பக்கலிலே ஏகீபவித்து ‘அப்ரஜ்ஞாதமலக்ஷணம்”‘ (மநு. 1 – 5) என்கிறபடியே நாம ரூப விபாகா நர்ஹமாய் அவனை யிட்டு நிரூபிக்க வேண்டும்படி அவனெருவனுமேயாய் மேல் ஸ்ருஷ்ட்யாதி முகத்தாலே சேதநருடைய ரக்ஷண ப்ரகாரங்களைத் திரு வுள்ளத்தோடே கூட்டுகிற தஸை யிறே ஸம்ஹாரமாவது.
தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும்———6
என்னும் இவையே முலையா வடிவமைந்த
அன்ன நடைய வணங்கேய் அடி இணையைத்—————7
தன்னுடைய அம் கைகளால் தான் தடவத் தான் கிடந்ததோர்
உன்னிய யோகத் துறக்கம் தலைக் கொண்ட—————8—தான் கிடந்து –-ஸ்வதஸ் சர்வஞ்ஞானாய் -ஒன்றால் ஒரு காலுஷ்யம் இன்றிக்கே இருக்கக் கடவ அவன்-இவள் உடைய ஸ்பரசத்தாலே வந்த ஸூகத்தாலே இரண்டும் அறியாதே கிடந்தது உறங்கா நிற்கும் –தோர் உன்னிய யோகத் துறக்கம் தலைக் கொண்ட பின்னை – அல்லாதார்க்கு முன்பே தானே நெஞ்சு இருண்டு இருக்கும் இ றே
அதுக்கு மேலே கண்ணைச் செம்பளித்தவாறே புறம்பு பிரகாசிக்கிற இதுவும் போய் இருளும் இறே –
இவனுக்கு அங்கன் ஒன்றும் இன்றியே திருக் கண்களை செம்பளித்தால் அகவாயில்
பிரகாசிக்குமதுக்கு வர்த்தமானாய் இருக்கும் –உன்னுகை –அனுசந்திக்கை –யோகத் துறக்கம் –
ரஜஸ் தமஸ் ஸூ க்களால் அபி பூதனாய்உறங்குகிறான் -அன்று-உறங்குவான் போல் யோகு செய்த பெருமான் -திரு வாய் மொழி -5-4-11-யோக நித்தரை இறே அவை நல் வழியாக கரை சேரும் வகையதோ -என்று ஜகத் ரஷண சிந்தை பண்ணிக் கொண்டாயிற்று கண் வளர்ந்து அருளுகிறது –
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர்படைத்தான்
குன்றம் போல் மணிமாடம் நீடு திருக் குருகூரதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–4-10-1–தேவ ஜாதியும் அவர்களுக்கு இருப்பிடமான லோகங்களும் மனுஷ்யாதிகளான ஆத்மாக்களும் அண்டத்துக்கு அடியான மஹதாதிகளும் ஒன்றும் இல்லாத அன்று-ஒன்றும் தேவும் என்று தேவாதி காரியங்களுக்கு காரணத்திலே லயத்தை சொல்லுகிறது என்று ஒரு தமிழன் சொன்னான் – அன்று,-கரண களேபரங்களை இழந்து அசித் விசிஷ்டமாய்க் கிடந்த அன்று நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்-சதுர்முகனோடு கூட தேவ ஜாதியையும் லோகங்களையும் மனுஷ்யாதி யாத்மாக்களையும் உண்டாக்கினான் – இவை அழிந்தது என்கிற இடத்தில் மஹதாதிகளையும் சொன்னார் –ஸ்ருஷ்டியில் ப்ரஹ்மா தொடக்கமாக சொன்னார் இதுக்கு கருத்து என் என்னில்-மஹதாதிகளிலே பரத்வ சங்கை பண்ணுவார் இல்லாமையால் பரத்வ சங்கை பண்ணுகிற இடமே பிடித்துச் சொல்லுகிறார் -அவர்கள் பக்கல் பரத்வத்தை கழிக்கைக்காக- சதுர்தச புவன சிரேஷ்டாவோடு -அவனாலே ஸ்ருஷ்டராய் நித்ய ஸ்ருஷ்டிக்கு கடவரான தச பிரஜாபதிகளோடு அவர்களுக்கு போக ஸ்தானமான லோகங்களோடு -அவர்களுக்கு குடி மக்களான மனுஷ்யாதிகளோடு வாசி அற படைத்தான்-போக மோக்ஷங்களை விளைத்து கொள்ளுகைக்காக கரணங்களைக் கொடுத்தான் –
உறங்குவான் போல் யோகு செய்த பெருமானைச்
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
நிறங் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப்பத்தால்
இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ?–5-4-11—நம்மால் கார்யம் இல்லாத இவர்களால் கார்யம் என் -என்று லோகத்தாரை விட்டு -இத்தசையை விளைத்தவன் இவ்வளவில் செய்வது என் -என்று அவளை அனுசந்தித்தார் –ஜகத் ரக்ஷணார்த்தமாக திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளின படியை அனுசந்தித்து –இப்போது வாராமையாலே வெறுத்தோம் அத்தனை -நம்முடைய ரக்ஷண சிந்தை பண்ணிக் கிடக்கிறன் நம்மைக் கை விடான் -என்று இம் மஹா குணத்தை அனுசந்தித்து தரிக்கிறார்-கண் வளருகை என்று ஒரு பேராய்-ஜகத் ரக்ஷண உபாய சிந்தை பண்ணுகிற சர்வேஸ்வரனை–
உணர்ந்தாய் மறை நான்கும் -இரண்டாம் திருவந்தாதி -48–என்கிற படியே-ஸூப்த பிரபுத்த ந்யாயத்தாலே ,சம்ஸ்கார கதமாய் கிடந்த நாலு வேதங்களையும் ஆநு பூர்வி தப்பாத படி ஸ்மரித்த –திசை முகனார் தங்கள் அப்பன் -என்கிற படியே தனக்கு ஜநகனான சர்வேஸ்வரனோடே-
யோ வை வேதாம்ச ப்ரஹனோதி தஸ்மை –ஸ்வேதாஸ்வர உபநிஷத்–என்னும் படி ஓதின –
சந்த சது முகன் –பெரியாழ்வார் திருமொழி-2-5-8–என்கிற படி சந்தசை நிரூபகமாக உடைய சதுர் முகன் –சலம் கலந்த செஞ்சடை –திருச்சந்த –113-வெண் புரி நூல் மார்வன் -முதல் திருவந்தாதி -46- –மானுரிய தளம் உடையவர் –பெரிய திருமொழி-10-9-4-பிறர் மனை திரிந்து உண்ணும் -திருக் குறும் தாண்டகம் -19-
காமன் உடல் கொண்ட தவத்தார் -நான்முகன்-78- இருக்கிலங்கு திருமொழிவா எண் தோள் ஈசர் -பெரிய திருமொழி-6-6-8- என்று நித்ய ஸ்நான உபவீத கிருஷ்ணாஜினதரான-பிஷான போஜன -இந்திரிய ஜெய -சதா அத்யயன – பரத்வங்களான பிராமச்சர்ய லஷண யுக்தனாய் -ப்ரஹ்மண புத்ராயா சேஷ்டாய – என்கிற படியே தனக்கு ஜேஷ்ட புத்ரனான ருத்ரன் முதலானார்க்கும் – சரணாம் மறை பயந்த -முதல் திருவந்தாதி-60–என்கிற படியே புருஷார்த்த தத் உபாய ஞான சாதனமான வேதத்தை ஒதுவித்தாப் போலே —
பின்னை ஸம்ஹாராநந்தரம் யோக, நித்ராஸமா ரூடனாய் ஸ்ருஷ்ட் யுந்முகனான காலத்தில் ““உணர்ந்தாய் மறை நான்கும்’” (இ.திருவ.48) என்கிறபடியே நாலு வேதங்களையும் ஸ்மரித்த “திசை முகனார் தங்களப்பன்” (திருமொழி 2 – 2- 7) என்கிறபடியே தனக்குப் பிதாவான ஸர்வேஸ்வரனோடே அத்யயநம் பண்ணின.–முன்புள்ளவையை யிறே அத்யயநம் பண்ணலாவதும்-ஸ்மரிக்கலாவதும்- ”சந்தச் சதுமுகன்” (பெரியா. 2 – 5 8) என்கிறபடியே ப்,ரஹ்மாவானவன் ”சலங் கலந்த செஞ்சடை”, (திருச்ச. 113) “வெண் புரிநூல் மார்வன்”’(மு.திரூவ. 46) , ““மானுரியதளுமுடையவர்‘ (திருமொழி 10 9 – 5) , ““பிறர் மனை திரி தந்துண்ணும்”’ (திருக்குறு. 19) , ““காமனுடல் கொண்ட தவத்தான்”’ (நா.திருவ.. 79) , ““இருக்கிலங்கு திருமொழி வாய் எண்டோளீசர்”’ (திருமொழி 6 – 6 – 9) என்றும், நித்ய ஸ்நாந யஜ்ஞோபவித க்ருஷ்ணாஜிந தாரணமும், பிக்ஷாசரணமும், ஜிதேந்த்ரியத்வமும், ஸதா அத்யயந பரத்வமுமாகிற ப்ரஹ்மசர்ய லக்ஷணத்தை உடையனாய், “ப்ரஹ்மண? புத்ராய ஜ்யேஷ்டாய ஸ்ரேஷ்டாய”’ என்கிறபடியே ஜ்யேஷ்ட புத்ரனான ருத்ரன் முதலானார்க்கு ‘சரணா மறை பயந்த தாமரையான்’‘ (மூ.திருவ. 60) என்று புருஷார்த்த, தத் ஸாதந ஜ்ஞாந ஸாதநமான வேதத்தை ஓதுவித்தாப் போலே
உணர்ந்தாய் மறை நான்கும் ஓதினாய் நீதி
மணந்தாய் மலர்மகள் தோள் மாலே -மணந்தாய் போய்
வேயிரும் சாரல் வியலிரு ஞாலம் சூழ்
மா யிரும் சோலை மலை——48–நாலு வகைப்பட்ட வேதங்களையும் ஸ்மரித்தாய்–பிரளய காலத்திலே இவை இழந்து கிடக்கிறபடி திரு உள்ளத்திலே பட்டு இவற்றை அடித் தொட்டும் யுண்டாக்க வேணும் என்று கோலி யருளி ஸூப்த பிரபுத்த ந்யாயத்தாலே மறந்தவன் நினைத்தால் போலே -உறங்கினவன் உணர்ந்தாப் போலே -மறைந்து கிடந்த வேதங்களையும் யுண்டாக்கினாய்–அந்த ஆனுபூர்வி தப்பாதபடி ஸ்மரிக்கையாலே- அபௌ ருஷேயத்வமும் நித்யத்வமும் எல்லாம் சித்தித்தது ஆய்த்து வேதத்துக்கு –வாக்யத்துக்கு பத நியதியோபாதியும் போருமாய்த்து -பதங்களில் வர்ண நியதியும் – வேதங்களும் தன்னோடு ஒக்க நித்யமாய்ப் பழையதாய் இருக்கையாலே பண்ணினான் என்னாதே உணர்ந்தான் என்கிறது-பூர்வே பூர்வேப்யோ வாச எத தூசு -காட்டகம் -3-9-50–உளன் சுடர் மிகு சுருதியுள் -என்றும் முது வேத முதல்வன் -திருவாய் 1-6-2- செப்பெட்டைக் கையிலே கொடுத்து நிதியைக் காட்டுமாப் போலே –
திங்களப்பு வானெரி காலாகித் திசை முகனார்
தங்களப்பன் சாமியப்பன் பாகத்திருந்த வண்டுண்
தொங்கலப்பு நீண் முடியான் சூழ் கழல் சூட நின்ற
எங்களப்பன் எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-7–கார்ய வர்க்கத்துக்கு உப லஷணமாக சந்திரனையும் காரணமான பூத பஞ்சகத்துக்கு உப லஷணமாக நாலையும் சொல்லி இவற்றுக்கு அந்தராத்மாவாய் நிற்கிறான் என்றபடி -சதுர் முகனுக்கும் ஜநகன் ஆனவன் –
உந்தி எழுந்த வுருவ மலர் தன்னில்
சந்தச் சதுமுகன் தன்னைப் படைத்தவன்
கொந்தக் குழலை குறந்து புளி யட்டித்
தந்தத்தின் சீப்பால் குழல் வாராய் அக்காக்காய்
தாமோதரன் தன் குழல் வாராய் அக்காக்காய் -2 5-8 – திரு நாபியிலே கிளர்ந்த அழகிய தாமரைப் பூவிலே உருவம்-அழகு –ஜகத் சிருஷ்டியில் வந்தால் தன்னோடு ஒக்க விகல்ப்பிக்கலாம்படி ஞான சக்திகளால் வந்த வைலஷண்யத்தை உடைய சதுர்முகனை சிருஷ்டித்தவன்-சந்தம் -அழகு–அன்றிக்கே
சந்தம் என்று சந்தஸை வேதத்தை தனக்கு நிரூபகமாக உடையவன் -என்னவுமாம்-
சலம் கலந்த செஞ்சடைக் கறுத்த கண்டன் வெண்டலைப்
புலன் கலங்க வுண்ட பாதகத்தன் வன் துயர் கெட
அலங்கல் மார்பில் வாச நீர் கொடுத்தவன் அடுத்த சீர்
நலம் கொள் மாலை நண்ணும் வண்ணம் எண்ணு வாழி நெஞ்சமே –113-கங்கா ஜலத்தை சாகல்யேந தன்னுள்ளே அடக்கினதாய் -சிவந்த சடையையும் -ஷீராப்தி சமுத்திதமான விஷத்தாலே கறுத்த கண்டத்தையும் உடைய ருத்ரன் –கங்கா தரத்வமும் -நீல கண்டத்வமும் -இவனுடைய சக்திக்கு ஸூசகமாய் இருக்கிறது –சிவந்த ஜடை என்கையாலே -இந்த சக்தி சாதித்துப் பெற்றது என்கைக்கு ஸூசகம் –இப்போது இவனுடைய சக்தி சொல்லுகிறது என் -என்னில் – குரு பாதக ஹேதுவாய் இருந்துள்ள இந்த துர்மாநத்துக்கு அடி இந்த சக்தி என்கைக்காக –சத் பிரக்ருதிகளுக்கு உண்டான சக்தி சாத்விகருக்கு நிழல் ஆமாப் போலே துர்மாநிகளுக்கு உண்டானது பிறர்க்கும் பாதகமாய் இறே இருப்பது –
பண்புரிந்த நான்மறையோன் சென்னிப் பலியேற்ற
வெண் புரி நூல் மார்பன் வினை தீர புண் புரிந்த
ஆகத்தான் தாள் பணிவார் கண்டீர் அமரர் தம்
போகத்தால் பூமி யாள்வார் –46-அழகிய ஸ்வரத்தை யுடைத்தான வேதத்தைத் தரித்துள்ள ப்ரஹ்மாவினுடைய தலையை ருத்ரன் அறுத்தான் ஆய்த்து-லோக குருவுமாய் தனக்குப் பிதாவுமான அவனுடைய சிரஸை இறே சேதித்தது –வாமாங்குஷ்ட நகாக்ரேண சிந்னம் தஸ்ய சிரோ மயா -என்கிறபடியே – அவனும் கபாலீத்வம் பவிஷ்யசி -என்று சபிக்கப்ரஹ்ம ஹத்யையாலே அத்தலை யோட்டிலே சிரகாலம் பிஷை புக்குக் கொடு திரிந்தான் ஆய்த்து –வெண் புரி நூல் மார்பன் வினை தீர –
பிராயச்சித்த வேஷத்தோடு கூட சர்வேஸ்வரன் உடைய முன்னே வந்து தோற்றினான் ஆய்த்து –விநீத வேஷத்தோடு ப்ராயசித்தியான படி – மூலை யடியே திரிந்தார் பாதகிகள் ஆனவாறே முழுகித் திரியுமா போலே இவனும் தேவியும் சண்டேஸ்வரனும் அப்படியே-வினை தீர –என்கிற இத்தால் இவனுடைய கர்ம வஸ்யத்வமும் தான் பண்ணின கார்யம் தனக்குப் பரிஹரிக்கப் போகாமையும் சொல்லுகிறது
இத்தால் ஈஸ்வரத்வ சங்கை இல்லை -என்கிறது –
மல்கிய தோளும் மானுரியதளும் உடையவர் தமக்குமோர் பாகம்
நல்கிய நலமோ நரகனைத் தொலைத்த கர தலத்தது அமைதியின் கருத்தோ
அல்லியங் கோதை யணி நிறம் கொண்டு வந்து முன்னே நின்று போகாய்
சொல்லி யென் நம்பி இவளை நீ யுங்கள் தொண்டர் கைத் தண்டு என்றவாறே –10-9-4—பல தோள்களை உடையனாய் – மானுடைய தோல் என்னுதல் –அன்றிக்கே-மகானான ஆனையினுடைய தோலை உடையனாய் (மானுரியதளும்-மான் -மகான் -மான் யானை -இரண்டின் -உரி அதளும் )-தன் தபோ பலத்தாலே நான் கார்யம் கொள்ள வல்லேன் -என்று கொண்டு துர்மானத்தை உடையனாய் இருக்கிற ருத்ரனுக்கும் திரு மேனியிலே இடம் கொடுத்த சீலாதிசயத்தை நினைத்து இருக்கிறாயோ –
பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர் மனை திரி தந்து உண்ணும்
முண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர் உலகம் ஏத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால் மற்றை யார்க்கு உய்யலாமே -19–உளுத்து அளம் பற்றின சுவர் போலே
பொடி உதிருகிற தலையோட்டையைக் கையிலே ஏந்தி –முடை யடர்த்த சிரம் ஏந்தி -மூ வுலகும் பலி திரிவோன் -என்கிறபடியே நெடும் காலம் கையோட்டைக் கொண்டு திரிந்து இரந்து உண்டான் –வெந்தார் என்பும் சுடு நீரும் மெய்யில் பூசிக் கையகத்து ஓர்
சந்தார் தலை கொண்டு உலகு ஏழும் திரியும் பெரியோன் தான் சென்று என்
எந்தாய் சாபம் தீர் என்ன இலங்கமுது நீர் திரு மார்வில்
தந்தான் சந்தார் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே —1-5-8-)
கண்டு வணங்கினார்க்கு என்னாம் கொல் காமன் உடல்
கொண்ட தவத்தான் குமை உணர்த்த -வண்டலம்பும்
தார் அலங்கல் நீண் முடியான் தன் பேரே கேட்டு இருந்து அங்கு
ஆர் அலங்கல் ஆனமையால் ஆய்ந்து-78—மன்மதனுடைய உடலை நீறாக்கின தபஸ்ஸை யுடைய ருத்ரனுக்கு-மஹிஷியான உமையானவள் முறை மாறாடி அஞ்ஞான ஞாபனம் பண்ண-
முருக் கிலங்கு கனித் துவர் வாய் பின்னை கேள்வன் மன்னெல்லாம் முன்னவியச் சென்று வென்றிச்
செருக் களத்து திறல் அழியச் செற்ற வேந்தன் சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர்
இருக் கிலங்கு திரு மொழி வாய் எண் தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட
திருக் குலத்து வளச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –6-6-8–வேதத்தில் ஸ்ரீ புருஷ ஸூக்தாதிகளை உச்சரியா நின்றுள்ள வாயை உடையராய் எட்டுத் தோள்களையும் உடையராய் இருக்கிற தேவர்க்கு -(ருத்ரன் )-
சரணா மறை பயந்த தாமரை யானோடு
மரணாய மன்னுயிர் கட்கெல்லாம் அரணாய
பேராழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது
ஓராழி சூழ்ந்த வுலகு ———–60–எல்லாருக்கும் ஹிதத்தை சொல்லக் கடவதான வேதத்தை ஓதுவிக்கப் பட்ட ப்ரஹ்மாவோடு –-சரணா மறை பயந்த–என்றத்தை -அரணாய-என்றத்தோடே கூட்டி ஈஸ்வரனுக்கு விசேஷணம் ஆக்கவுமாம் –சரணா மறை பயந்த–அபிமத சித்திகளுக்கு அடைத்த உபாய பேதங்களை யுடைய வேதங்களை ஜகத்துக்கு ஓதுவிக்கும்-ப்ரஹ்ம விதாவான ப்ரஹ்மா மந்த்ர க்ருத் என்பது(ப்ரஹ்ம விதம் வர -ப்ரஹ்மத்தை அறிந்தவர்களின் ஸ்ரேஷ்டரான நான்முகன் )
ஆதுமில் காலத்து எந்தை-திருவாய் -3-3-4- –என்றும் –ஒன்றும் தேவும்-திருவாய் -4-10-1- -இத்யாதிப் படியே
ஒன்றும் இல்லாத சம்ஹார காலத்திலே-நாம ரூபங்களை இழந்தவோ பாதி-சத்தையும் இழந்து போகாமே எந்தையான முறையாலே தன் மேல் ஏறிட்டுக் கொண்டு நோக்கி-மீளவும் கரணாதிகளை தந்து , ஞான விகாசத்தை பண்ணின –வாய் முதல் அப்பன்-திருவாய் -7-9-3- -என்கிற வாய்த்த காரண பூதனான உபகாரகன்-பீதக வாடை பிரானார் பிரம குருவாக வந்து -பெரியாழ்வார் -5-2-8–என்கிற படியே தானே ஆசார்யனாய் –-இராப் பகல் ஓதுவித்து பெரியாழ்வார் -5-2-3–என்கிற படியே -திவாராத்ர விபாகம் அற-என் முன் சொல்லும் -திருவாய் -7-9-2–என்கிற படியே – முன் உருச் சொல்ல – திரு நாமச் சொல் கற்றனமே -திருவிருத்தம் -66–என்று அநூச்சாரணம் பண்ணினேன் என்று இப்படியே அவனோடு ஓதின இவரும்-
“ஆதுமில் காலத்தெந்தை”’ (திருவா. 3 – 4 – 4) என்கிறபடியே-சேதநாசேதநாத்மகமான ஸகல பதார்த்தங்களும் வஸ்துத்வ-நாம பாக்த்வங்களை இழந்த காலத்தில் இவற்றைத் தன் பக்கலிலே ஏறிட்டுக் கொண்டு நோக்கி, “எந்தை” என்கிற படியே ஸ்வாமியா யிருக்கிறவன். “என் வாய் முதலப்பன்’‘ (திருவா. 7 – 9 – 3) எனக்கு வாய்த்த ப்ரதமோபகாரகன் என்கிற. ““பீதகவாடைப் பிரானார் பிரம குருவாகி’” (பெரியா. 5 – 2 – 8) என்கிறபடியே ஸர்வேஸ்வரன் தானே இவர் தமக்கு ஆசார்யனாய் வந்து ““எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப் பகலோதுவித்து”’ (பெரியா. 5 – 2 – 3) என்கிறபடியே திவா ராத்ரமோதுவித்து. இப்படி ஓதுவிக்குமிடத்தில் “என் முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே”’(திருவா. 7 – 9 – 2) என்கிறபடியே ஈஸ்வரன் முன்னுருச் சொல்ல, “’திருநாமச் சொல் கற்றனமே” (திருவிரு. 64) என்று அநூச்சாரணம் பண்ணினேன் என்று அவனோடே ஓதின இவரும்.
சாதி மாணிக்கம் என்கோ! சவி கொள் பொன் முத்தம் என்கோ!
சாதி நல் வயிரம் என்கோ! தவிவு இல் சீர் விளக்கம் என்கோ!
ஆதி அம் சோதி என்கோ! ஆதி அம் புருடன் என்கோ!
ஆதும் இல் காலத்து எந்தை அச்சுதன் அமலனையே.–3-4-4–எனக்கு ஒரு துணை அல்லாத சம்சார அவஸ்தையில் தன்னோடே உண்டான சம்பந்தத்தை அறிவித்தவன்-எனக்குத் தன்னைப் பெறுகைக்கு முதல் ஒன்றுமில்லாத காலத்திலே, தான் எந்தையான முறையை எனக்கு அறிவித்து, பின்பு ஒரு காலமும் நழுவ விடாதே பாதுகாத்து, இதுதான் என்பக்கல் ஒரு பிரயோஜனம் கொண்டன்றியே நிர்ஹேதுகமாகத் தன் பேறாகப் பாதுகாத்தவனை.
ஆ முதல்வன் இவன் என்று தன் தேற்றி என்
நா முதல் வத்து புகுந்து நல் இன்கவி
தூமுதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்
வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ!–7-9-3–என்னை உபகரணமாகக் கொண்டு -கர்த்தாவும் தானேயாய் -கர்மீபவிப்பானும் தானே யானான்-எனக்கு வாய்த்த -காரண பூதனான -உபகாரகனை-இனி ஒரு நாளும் மறக்க உபாயம் இல்லை-
ஏதங்கள் ஆயின எல்லாம் இறங்க விடுவித்து என்னுள்ளே
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து
போதில் கமல வல் நெஞ்சம் புகுந்தும் என் சென்னித் திடரில்
பாத இலச்சினை வைத்தார் பண்டு அன்று பட்டினம் காப்பே -5- 2-8 –-ஸ்ரீ சர்வேஸ்வரத்வ சிஹ்னமுமாய் –
ஸ்ரீ புருஷோத்வ லஷணமுமாய் இருக்கும் திருப் பீதாம்பரத்தை உடைய சர்வேஸ்வரன்-ப்ரஹ்மத்தை உபதேசிக்கிறவன்-உத்பாதக ப்ரஹ்ம பித்ரோர் கரீயான் பிரமத பிதா –என்னக் கடவது இறே-ப்ரஹ்ம சப்தம் ஞான வாசி-ஈஸ்வரத் பிடார் கொண்டு திருத்த ஒண்ணாமல் ஆசார்யனாய் இறே திருத்துவது (மண் மிசை மாதவன் —-நண்ணறு ஞானம் தலைக்கொண்டது அண்ணல் ராமானுஜன் வந்து தோன்றிய அப்பொழுதே )
வயிற்றில் தொழுவைப் பிரித்து வன் புல சேவை அதக்கி
கயிற்றும் அக்கும் ஆணி கழித்து காலிடை பாசம் கழற்றி
எயிற்றிடை மண் கொண்ட எந்தை யிராப் பகலா ஓதுவித்து என்னை
பயிற்றிப் பணி செய்யக் கொண்டான் பண்டன்று பட்டினம் காப்பே -5- 2-3 –பிரளய ஆவர்ணத்திலே அகப்பட்டு கிடக்கிற பூமியை எடுத்தால் போலே – சரீர வச்யனான என்னை எடுத்த ஸ்வாமி –திவா ராத்ர விபாகம் அற-சர்வ காலமும் -என்றபடி –என்னை சிஷிப்பித்து –அதாவது –கர்ப்ப வாசமும் —இந்திரிய வச்யத்வமும் –கர்ம வச்யத்வமும் –யம வச்யத்வமும் – த்யாஜ்யம் என்னும் அத்தை அறிவித்து-தன்னுடைய சர்வ சேஷித்வத்தையும் – நிரதிசய போக்யதையும் – தமக்கு சேஷத்வம் ஸ்வரூபம் என்னும் இடத்தையும் ஆய்த்து -ஒதுவித்து–இத்தை அனுஷ்டான பர்யந்தமாக்கி – செய்யேல் தீ வினை ( திருவாய் -2-9-3 ) -என்று-ஓதுவித்த பிரயோஜனம் பெற்ற படி – நித்ய கைங்கர்யம் கொள்ளக் கடவோம் -என்று திரு உள்ளத்தாலே அறுதி இட்டு -கொண்டபடி –
என் சொல்லி நிற்பன்?என் இன்னுயிர் இன்று ஒன்றாய்
என் சொல்லால் யான் சொன்ன இன்கவி என்பித்துத்
தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன் என்
முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே.–7-9-2-–அவன் முன்னே சந்தை இட பின்னே சொன்னேன் –தானே சொன்னான் ஆகில் ஸ்ரீ கீதை போலே வறமுறுகலாம் இறே –அது தானே ஏது போலே என்னில் த்ரி மூர்த்திகள் என்று தன்னையும் கூட எண்ணும் படி ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு அடியானால் போலேயும் -ப்ரஹ்மாவை ஓதுவித்து தேவர்களுக்கு வெளிச்சிறப்பு பண்ணி அத்தை அவன் தலையிலே ஏறிட்டால் போலேயும் -ருத்ரனுக்கு அந்தராத்மாவாய் நின்று திரிபுர தஹனம் பண்ணி அவன் தலையிலே ஏறிட்டால் போலேயும் தானே காரியம் செய்து பிறர் கையிலே ப்ரஸித்தியை ஏறிடுகை பண்டே ஸ்வபாவம் என்கை –
இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகளந்த
திருத் தாளிணை நிலத் தேவர் வணங்குவர் யாமுமவா
ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து கனியின்மையின்
கருக்காய் கடிப்பவர் போல் திருநாமம் சொல் கற்றனமே – -64–பூர்ண அனுபவம் பெறாமையாலே சத்தை கிடைக்கைக்காக அவன் திரு நாமத்தைச் சொல்லுகையை அப்யஸித்தோம் (இத்தனை ) என்றபடி-இல்லாமையால் கருக்காய் கடிப்பார் போல் ஆயிற்று- இவருடைய அபிநிவேசத்துக்கு திரு நாமம் –அவனைக் கண்ணாலே கண்டு கையாலே அணைக்க-ஆசைப்பட்டாருக்கு அவன் பேரைக் கொண்டு என் செய்வார்-அதிகாரம் இல்லை யாகிலும் திரு நாமம் மாத்ரம் சொன்னேன் – இத்தை வ்யாஜ்யமாக்கி நிர்ஹேதுகமாக கடாஷித்தான் என்றபடி –அவர்களைப் போல் பக்தி பரவசனாய் அனுபவிக்க பெறாமை இழந்தேன் என்றும் –அவர்கள் அனுபவிக்கும் விஷயத்தை கிட்டி அவத்யத்தை விளைத்தேன் என்றும் விஷாதத்திலே தாத்பர்யம்-
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் -என்று தொடங்கி– குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரிவன் -என்று ஸ்வாச்சார்ய பிரேமத்தையும்-நன்மையால் மிக்க நான் மறை யாளர்கள் புன்மையாய் கருதும் படியான என்னை அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையான் சடகோபன் -என்று க்ருதக்ஜைதையை முன்னிட்டு கொண்டு – ஓத வல்ல பிராக்கள்-திருவாய்-9-1-11- -என்று இத்தை அப்யசிக்க வல்ல உபகாரகர் என்னும் படி .. ஸ்ரத்தா பூர்வகமாக ஓதும் ஸ்ரீ மதுர கவிகள் போல்வாரை-கன்மின்கள் என்று உம்மை யான் -என்கிற படியே -இத்தை அப்யசி யுங்கோள்–என்று சொல்லி ,-சொல் பயிற்றிய -திருவாய்-9-5-8–என்கிற படியே -இச் சப்தத்தை அப்யசிக்க-வேதமானது -ஓதுவார் ஒத்து -என்று அத்யேதாக்களை இட்டு நிரூபிக்கபடுமது ஆகையாலே ,ஆதர்வணம் ,தைத்ரியம் காண்வம் என்று பேர் பெற்றால் போலே , இவர் இதுக்கு பிரதமாத்யேதாவனது கொண்டு -இதுவும் சடகோபன் சொல் -திருவாய்–1-2-11–என்று பேர் பெற்றது என்கை–
“‘நாவினால் நவிற்றின்பமெய்தினேன்”’ (க.நு.சி. 2) என்று தொடங்கி ““குருகூர் நம்பிப் பாவினின்னிசை பாடித் திரிவன்”” என்றும், “நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் புன்மையாகக் கருதுவரா”ம் படியான “என்னை ஆண்டிடும் தன்மையான் சடகோபன்’‘ (க.நு.சி,4) என்கிற ப்ரதிபத்தியை யுடைய *ஓத வல்ல பிராக்களான ஸ்ரீமதுரகவிகள் போல்வாரை ““கன்மின்களென்றும்மை யான் கற்பியா வைத்த மாற்றம்” (திருவா, 6 – 8 – 6) என்கிறபடியே இப் ப்ரபந்தத்தை அப்யஸியுங்கோள் என்று ““சொல் பயிற்றிய நல் வளமூட்டினீர்”” (திருவா. 9 – 5 – 8) என்கிறபடியே சொல்லிச் சொல்லுவிக்க, வேதமானது “’ஓதுவாரோத்தெல்லாம் ‘? (திருவா, 3 – 1 – 6) என்கிறபடியே அத்யேதாக்களை யிட்டு, அதர்வணமென்றும், தைத்திரீயம் என்றும் பேர் பெற்றாப் போலே இதுவும் “சட கோபன் சொல்”” என்கையாலே ‘திருவாய்மொழி’ என்று பேர் பெற்றது –
ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே துணிந்து
தாது சேர் தோள் கண்ணனை குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீதிலாத ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும்
ஓத வல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே-9-1-11-–சம்சாரத்தின் தண்மையும்-ஈஸ்வரனே ப்ராப்ய ப்ராபகங்கள் என்றும் இறே இதில் சொல்லிற்று -இத்தை அப்யஸித்து நல்வழியே போமிது இறே உபகாரகராகை யாவது–அத்தை அப்யசிக்கைக்கு ஹேதுவான சரீர பரிக்ரஹம் பண்ணின காலமே பிடித்து நாதர் என்கிறார் –
என்மின்னு நூல்மார்வன் என்கரும்பெருமான் என்கண்ணன்
தன்மன்னு நீள்கழல்மேல் தண்துழாய் நமக்கன்றி நல்கான்
கன்மின்கள் என்று உம்மை யான் கற்பியா வைத்த மாற்றம் சொல்லிச்
சென்மின்கள் தீவினையேன் வளர்த்த சிறு பூவைகளே!–6-8-6—நீங்கள் அபேக்ஷியாது இருக்க -நான் சொல்லுங்கோள் என்று -ரஷ்யங்களான உங்களை -ரஷகை யான நான் -கற்பித்து வைத்த மாற்றம் -தண்துழாய் நமக்கன்றி நல்கான்-என்கின்ற மாற்றத்தை என்னுதல் –இதுவோ தக்கவாறு என்று கற்பித்த மாற்றத்தை என்னுதல்–அவனுக்கு மறுமாற்றத்துக்கு அவகாசம் இல்லாத படி -கிட்டினால் -என்று இராதே -வழியே பிடித்து சொல்லிக் கொண்டு செல்லுங்கோள்-
உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர்
குயிற் பைதல் காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்
தயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து சொல்
பயிற்றிய நல் வளம் ஊட்டினீர் பண்பு உடையீரே –9-5-8—தயிரும் பழம் சோறும் -பாலும் வெஞ்சோறும் அவ்வவ காலங்களுக்கு உசிதமாகத் தந்து திரு நாமங்களை கற்பித்ததற்கு பிரதியுபகாரம் பண்ணினி கோள்-நல்ல சம்பத்தை புஜிப்பித்தி கோள் -நான் காலம் தோறும் உங்களுடைய ரக்ஷணம் பண்ணிப் போந்தேன் -நீங்களும் இவ்விடங்களில் நலிந்து போந்தி கோளே-
ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும்
சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிறிதில்லை
போது வாழ் புனந்துழாய் முடியினாய் பூவின் மேல்
மாது வாழ் மார்பினாய் என் சொல்லி நான் வாழ்த்துவனே -3-1-6-ஓதுவார் என்கையாலே -அதிகாரி வைவித்யத்தைச் சொல்லுகிறது – ருகாதி சதுர் வேதங்களும் அத்யேத்ரு பேதத்தாலே பிறந்த சாகா பேதங்களும் –ஆக அத்யேத்ரு பேதத்தால் சாகா பேதங்களாய்க் கொண்டு பிரி யுண்ட வேதங்கள் எல்லாம்–
சேரத் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
சீர்த் தொடை யாயிரத்து ஒர்த்த விப்பத்தே –1-2-11-ஹிதம் -நன்மை சொல்ல என்று இழிந்து அஹிதத்தை -தீமையைச் சொல்லுவான் ஒருவன் வார்த்தை அன்று; ஆப்த தமரானவர் வார்த்தை என்கை.
ஆக –அத்யயன -சூரணை-37-இத்யாதி வாக்யத்தில் சந்தங்கள் ஆயிரம் என்று பிரஸ்துதமான திரு வாய் மொழியின் வேதத்வத்தை –எவ்வுலகத்து -சூரணை -39 -இத்யாதி வாக்கியம் தொடங்கி இவ்வளவாக சாதித்தார் ஆய்த்து-
–——————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்