ஸ்ரீ ரகுவீர கத்யம்–

August 12, 2026

ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் அருளிச்செய்த  ஸ்ரீ ரகுவீர கத்யம் (ஸ்ரீ மஹா வீர வைபவம்)

ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய: கவிதார்க்கிக கேஸரீ ।
வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ॥

ஜயதிய ஆஸ்ரித ஸந்த்ராச த்வாந்த  வித்வம்ஸந உதய: ।
பிரபாவான் சீதயா தேவ்யா பரம வ்யோம பாஸ்கர: ॥மங்கள ஸ்லோகம்

பால ஸூர்யனாக அனுபவம் -அஞ்ஞானம் -பயம் –ஆஸ்ரித சந்த்ராஸம் –இவற்றைப் போக்கும்-ரகு குல சந்திரன் –பிரபாவான் சீதயாபாஸ்கரேண பிரபாதயா -இருவருமே அருளிச் செய்த த்ருஷ்டாந்தம்
பரம ஆகாஸம் -ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து அருள் கிரணங்களில் -உள்ளத்தில் புகுத்தி அபயம் அளித்து போக்கி அருளுகிறவன்–ஜயதிய-பல்லாண்டு பாடுவோம்

 பால காண்டம்

ஸ்ரீ திருவஹீந்த்ர புரத்தில் ஸ்ரீ ராமனை அனுபவித்து -கவிதார்க்கிக ஸிம்ஹம் -கவிதை இல்லாமல் கவியாக இல்லாமல் கத்யமாக அருளிச் செய்தவன்-மொத்தம் 94 சூர்ணிகைகள் பால காண்டத்தின் 20 சூர்ணிகைகள்

ஜய ஜய மஹாவீர !–1-
மஹாதீர தௌரேய !
–2

ஜய ஜய மஹாவீர !-உனக்கும் வெற்றி உண்டாகட்டும் -மஹா வீரனே உனக்கு பல்லாண்டு -விரோதிகள் கூடப் போற்றும்படி -சுகன் சாரணர் -குருவி வேஷத்துடன் வேவு பார்க்க வர -விபீஷணன் கண்டு கட்டி வைக்க -பெருமாள் நமது ராணுவ ரஹஸ்யங்களை கொடுக்கச் சொல்லி -மஹா வீரன் -தனி ஒருவனாக அழிக்க வல்லவன் என்று கண்டு சொல்ல -ராவணனும் -பின் புகழும் படி –வீர ராகவன் -திருநாமம் சாற்றி அருளினான் –

மஹாதீர தௌரேய !–வீரன் உடல் வலிமை -தீரன் -மன வலிமை -மனோ தைர்யம் -சோர்வு அடையாமல் -மஹா வீரனாகவும் தீரனாகவும் உள்ளவன்–தௌரேய !—வீர தீர ஸுர்ய -முன் அணியில் நிற்கும் முதன்மை யானவன் —அப்பொழுது அலர்ந்த செந்தாமரையை வென்றதம்மா —-கண் எச்சில் வராதபடி -ஜய ஜய -பல்லாண்டு பாடுகிறார் -ஒவ்வொரு சூர்ணிகையிலும் ஜய ஜய சேர்த்து பல்லாண்டு பல்லாண்டு பாட வேண்டும்

தேவாஸுர ஸமர ஸமய ஸமுதித நிகில நிர்ஜர நிர்தாரித நிரவதிக-மாஹாத்ம்ய !–3-

தேவாஸுர ஸமர ஸமய ஸமுதித –ஓன்று கூடி –
உத்தர காண்டம் -அசுரர்கள் அரக்கர்கள் -இரண்டு வகை -மாலி சுமாலி -வந்து தேவர்களுடன் போர் -தேவர்கள் சரணாகதி -கருட வாஹன ரூடனாக வந்து -இவர்கள் புறமுதுகு இட்டு ஓட-சரணாகதி ரக்ஷண விரத தர்மம் -ஓடி ஓடி துரத்தி அடிப்பேன் –பசுக் கூட்டம் தாக்கும் புலியைத் துரத்தி ஓடுவது போல் -சக்கரத்தாழ்வார் முன் வந்து கழுத்தை சீவி –
நிகில நிர்ஜர -அனைவரும் -ஜர இல்லாதவர் தேவர்கள்
நிர்தாரித நிரவதிக-மாஹாத்ம்ய !–நிச்சயம் பண்ணி கொண்டாடினார்கள் -இவனே ரக்ஷகன் என்று
ஆகவே பின்பும் ராவணனை வீழ்த்தவும் சரண் அடைந்தார்கள் என்பதை அடுத்த சூரணையில் அருளிச் செய்கிறார்=

தஶவதன தமித தைவத பரிஷதப்யர்தித தாஶரதி-பாவ !–4-

தஶவதன--ஸூமாலி -மகள் வயிற்றுப் பேரன் ராவணன்
தமித-துன்புறுத்துகிறான் – யாகம் செய்து நான்முகனிடம் பெற்ற வரம் -வாள் -கொண்ட பலனால் அஹங்கரித்தவன்-மனிதனால் இறக்கக் கூடாது என்று அஹங்காரத்தால் கேட்கவில்லை
தைவத பரிஷதப் யர்தித –முப்பத்து முக்கோடி தேவர் கூட்டங்கள் -பிரார்த்திக்க
தாஶரதி-பாவ !-பாபங்கள் போக்க அஸ்வமேத யாகம் பிள்ளை பெற ரிஷ்ய சிங்கர் மூலம் புத்திர காமோஷடி யாகம் –

தினகர – குல – கமல – திவாகர !-5

தினகர – குல – கமல – திவாகர !-ஸூர்ய வம்சம் -விவஸ்மான்- இஷ்வாகு -சத்யலோக நாராயணனை அடோத்யையில் ப்ரதிஷ்டை -சிபி சக்ரவர்த்தி -ஹரிச்சந்திரன் -மாந்தாதா -யாவத் ஸூர்ய உதயம் அஸ்தமனம்-உள்ள பிரதேசங்களை ஆண்டவன்-sun never sets in British empire இத்தை அறியாத நாம் பின்பு சர்ச்சில் சொன்னதை அறிவோம் -அம்பரீஷன் -ரகு -தானம் கொடுப்பதில் சிறந்தவன்-கஜானா முழுவதும் தானம் கொடுத்தவன் –கமல – திவாகர !–மொட்டு போல் இருக்கும் தாமரை விரிவடைய பிறந்த பெருமாள்-

திவிஷததிபதி – ரண – ஸஹசரண – சதுர – தசரத -சரமருண – விமோசன !-6-

திவிஷததிபதி-தேவர் அதிபதி இந்திரனின் – ரண – ஸஹசரண – சதுர – தசரத -உடன் சண்டை போட வல்லவன் –பத்து திசைகளிலும் ரதம் ஓட்ட வல்லவன்–சம்பாசரன் எதிர்த்து வெற்றி வாங்கி-கூட கைகேயி கூட்டிப் போனான்-இரண்டு வரங்கள் தருவதாக வாக்கு கொடுத்தான் –சரம ருண – விமோசன !-தேவர் கடன் -பூஜை தினம் பண்ணி -போக்க வேண்டும் -உடம்பில் புலன்கள் கண்ணில் ஸூர்யன் போல் –ரிஷி கடன் -படித்து நடப்பதே வேண்டும்-ஞானம் கொடுத்தவர்கள் – -பித்ரு கடன் -பிறவி கொடுத்தவர்கள் -வாரிசு உருவாக்கி தர்மம் படி வாழ வைக்க வேண்டும் -மூன்று கடன்கள் –குழந்தை இல்லை என்றும் நேராகச் சொல்லாமல் -மங்கள கர நூல் -அத்தைப் போக்கிக் கொடுத்த ராமனுக்கு பல்லாண்டு –

கோஸல – ஸுதா – குமார – பாவ – கஞ்சுகித – காரணாகார !–7-

கோஸல – ஸுதா – குமார – பாவ – கஞ்சுகித – காரணாகார !-கௌசலை குமாரன் -ஆகாரம் -தன்மை -முதல் தனி வித்து என்பதை ஒளித்து -உலகை திருவயிற்றில் வைத்தருளிய பெருமாளை 12 மாதம் கர்ப்ப வாஸம் –பரம்பொருள் என்பதை மறந்தான் அல்ல -மறைத்தான் –

கௌமார -கேளி – கோபாயித – கௌசிகாத்வர !–8-

கௌமார -கேளி – கோபாயித – கௌசிகாத்வர !-விஸ்வாமித்திரர் யாக ரக்ஷணம் இவனது பால விளையாட்டு –கல்விச் சிலையால் காத்தான் – -கோதண்டம் -சீதா கல்யாணம் பின்பு

ரணாத்வர துர்ய பவ்ய திவ்யாஸ்த்ர ப்ருந்த வந்தித !–9-

ரணாத்வர துர்ய பவ்ய திவ்யாஸ்த்ர –அஸ்திரம் – சஸ்திரம் -மந்த்ரம் சொல்லி உபயோகம் –போரே யாகம் -தர்மம் நிலை நாட்ட –ப்ருந்த வந்தித !-தேவர்கள் நேராக வந்து கருவிகளாக பயன்படுத்த முன்பே வந்து பணிவுடன் கூட்டமாக வந்து வணங்கினார்கள்-
தர்ம சக்கரம் சிவசூலம் கால பாசம் வருண பாசம் போன்ற அஸ்திரங்கள் பட்டியல் வால்மீகி ராமாயணத்தில் உள்ளன

ப்ரணத ஜன விமத விமதன துர்லளித தோர்லளித !–10-

ப்ரணத ஜன -பக்த ஜனங்களின் –விமத விமதன -எதிரிகளை அழிக்க வல்ல துர்லளித தோர்லளித !–பயங்கரமான அழகிய திருத் தோள்கள் -சார்ங்கம் தோய்ந்த திருத் தோள்கள் -பக்தர்களுக்கு அழகியவையாயும் விரோதிகளுக்கு பயங்கரமாயும் இருக்குமே –

தனுதரவிதாடன விகடித விஶராருஶராருதாடகா தாடகேய !-

தனுதர -மிகச் சிறிய -விஶிக-அம்புகள் – விதாடன-கொண்டு அடுத்து – விகடித -துன்புற்ற –விஶராரு-மற்றவர்களால் துன்புறுத்த முடியாத – ஶராரு -இவர்கள் துன்புறுத்த வல்லவர்கள் –தாடகா தாடகேய !--துன்புறுத்தியவனே-மூவருக்கும் பொதுவான வினைச் சொல் இதுவே –அன்னைக்கு சம்ஸ்காரம் பண்ண இவனை விட்டு வைத்தான்மாரீசனை விரட்டி சுபாகுவைக் கொன்று – ர ஆரம்பிக்கும் சொற்களே பயப்படுத்தும் படி துன்புறுத்திய பெருமாளுக்கு பல்லாண்டு

ஜட-கிரண ஶகல-தர ஜடில நட பதி மகுடதட நடனபடு விபுத-
ஸரிததி பஹுள மது களந லலித பத நளின-ரஜ உப-ம்ருʼதித
நிஜவ்ருஜின ஜஹதுபல தனுருசிர பரம-முனிவர யுவதி நுத !

ஜட-கிரண –சந்த்ர சூடன் -தலையில்-ஶகல-தர-துண்ட பிறையன் ஜடில நட பதி -நடராஜர் –மகுடதட -முடியில் –நடன படு-நாட்டியமாடவிபுத-ஸரிததி -தேவ நதி கங்கை-பஹுள மது களந-தேன் பெருக்கு- லலித பத–தேனே மலரும் திருப்பதங்கள்- நளின-ரஜ-திருவடி துகள் -திருவடியால் தீண்ட மாட்டான் – உப-ம்ருʼதித நிஜ வ்ருஜின-அகலிகை சாபம் தீர்த்த – ஜஹ துபல-உபலம் கல் – தனு ருசிர பரம-முனிவர யுவதி நுத !-கௌதமர் இடம் அகலிகையைக் கொடுத்த (சிவன் பெற்ற பேற்றை போல் பெற்ற அகலிகையை )பெருமாளுக்கு பல்லாண்டு

குஶிகஸுத கதித விதித நவ விவித கத !

குஶிக ஸுத-விஸ்வாமித்திரர் – கதித –கதைகள் – விதித-அறிந்து நவ விவித கத !-புதிதான பல கதைகள் -பெருமாளுக்கு இவர் சொன்னதும் அறிய வேண்டுமோ –உபநிஷத் ரஹஸ்யம் -ஆச்சார்யர் மூலம் கற்றதே கல்வி -ஸர்வஞ்ஞனும் இத்தைக் காட்டி அருள வேண்டும் -யாதாத்ம்ய தாத்பர்யங்கள் நவ -புதிதாக பல இருக்குமே -புதையல்கள் போல் -பலவும் இருக்கும் அன்றோ –

மைதில நகர ஸுலோசனா லோசன சகோர சந்த்ர !

மைதில நகர--மிதிலை நகரில் உள்ள ஸுலோசனா லோசன-அழகிய பெண்களின் கண்கள் – சகோர சந்த்ர !--சகோரப்பறவை -ராமசந்திரன் -சாதகப் பறவை என்றும் சொல்வார்கள் -சந்திரன் ஒளியையே உணவாகக் கொள்ளும் -அதையே உண்டு வாழும் –தோள் கண்டார் தோளே கண்டார்–தடக்கை கண்டாரும் அக்தே -இத்யாதி -கம்பர் –

கண்ட-பரஶு கோதண்ட ப்ரகாண்ட கண்டன ஶௌண்ட புஜ-தண்ட !-உன் கரத்தால் சிவ பெருமானின்
வில்லை உடைத்து  ஓ வலிமையான ஆயுதமேந்தியவனே, வெற்றி, வெற்றி

சண்டகர கிரண மண்டல போதித புண்டரீக வந ருசி லுண்டாக லோசந !–சூரியனின் துளையிடும் கதிர்களால் ஆற்றல் பெற்ற தாமரை மலர்களின் அழகை உன் கண்களின் த்ருஷ்ட்டி , வெற்றி, வெற்றி. 

மோசித ஜனக ஹ்ருʼதய ஶங்காதங்க !-ஜனகனின் இதயத்தை சந்தேகம் மற்றும் கவலையிலிருந்து விடுவித்தாய், 

பரிஹ்ருʼத நிகில நரபதி வரண ஜனக துஹித்ரு குசதட விஹரண ஸமுசித கரதல !–மற்ற எல்லா அரசர்களிடமிருந்தும் திருமண மாலையைப் பறித்து, ஜனகனின் மகளின் மார்பில், வெற்றி, வெற்றி ஆகியவற்றைப் பற்றிக் கொள்ளத் தகுந்த கைப்பிடியைப் பெற்றிருந்தாய்.

ஶதகோடி ஶதகுண கடின பரஶு தர முனிவர கர த்ருʼத
துரவநமதம நிஜ தநுராகர்ஷண ப்ரகாஶித பாரமேஷ்ட்ய !
–கோடரியைக் கையில் ஏந்தியிருந்த முனிவர், நூறு பில்லியன் மடங்கு கடினமானதும், நூறு மடங்கு அதிக செயல்திறன் மிக்கதுமான வில்லைக் கொண்டு கடினமான பயிற்சி செய்து, அந்த வில்லை வளைத்து அம்பை எய்து, உமது உன்னத மகிமையை அவருக்குக் காட்டினீர்

க்ரது-ஹர ஶிகரி கந்துக விஹ்ருத்யுந்முக ஜகத-ருந்துத ஜிதஹரி-
தந்தி தந்த தந்துர தஶவதந தமந குஶல தஶ-ஶத-புஜ முக
ந்ருபதி-குல ருதிர ஜர பரித ப்ருʼதுதர தடாக தர்பித பித்ருʼக
ப்ருகு பதி ஸுகதி விஹதிகர நத பருடிஷு பரிக !
-20-கதவின் பூட்டைப் போன்ற ஒரு அகன்றஅம்பினால்,  ஆயிரம் கரங்களும் முகங்களும் கொண்ட அரசனைக் கொன்று, பத்து முக ராவணனைத் தோற்கடித்து, கைலாச மலையை உலுக்கி, தேவேந்திரனைத் தோற்கடித்து, இந்திரனின் கம்பீரமான யானையால் தனக்கு ஏற்பட்ட காயங்களைக் காட்டி,  மேலும் இருபத்தொரு தலைமுறை அரசர்களைக் கொன்று, அவர்களின் இரத்தம் நிறைந்த குளத்தில் தன் தந்தைக்கு பலி கொடுத்த ப்ருகு குலத்தின் தலைவனின் நல்ல காலத்திற்கு நீ முற்றுப்புள்ளி வைத்தாய்., வெற்றி, வெற்றி –

அயோத்யா காண்டம்

அந்ருத பய முஷித ஹ்ருʼதய பித்ருʼ வசன பாலன ப்ரதிஜ்ஞா- வஜ்ஞாத யௌவராஜ்ய !–தான் கொடுத்த சத்தியத்தால் கட்டுண்டு, மிகவும் அச்சம் நிறைந்திருந்த உன் தந்தையின் கட்டளைகளை நிறைவேற்றுவதற்காக, நீ யுவ ராஜா (பட்டத்து இளவரசர்) பதவியைத் துறந்தாய், வெற்றி, வெற்றி.

நிஷாத ராஜ ஸௌஹ்ருʼத ஸூசித ஸௌஶீல்ய ஸாகர !–22-வேட்டையாடும் அரசனுக்குப் பெரும் நட்பைக் காட்டியதன் மூலம் நீ நற்குணங்களின் சமுத்திரம் என்பதை நிரூபித்தாய், வெற்றி, வெற்றி.

பரத்வாஜ ஶாஸன பரிக்ருʼஹீத விசித்ர சித்ரகூட கிரி கடக தட ரம்யாவஸத !–23-பரத்வாஜ முனிவரின் விருப்பப்படி, அற்புதமான சித்திரகூடத்தின் அடிவாரத்தில் ஒரு அழகான வீட்டில் நீங்கள் வாழ்ந்தீர்கள், வெற்றி, வெற்றி

அநன்ய ஶாஸனீய !–வேறு யாராலும் கட்டளையிட முடியாத நீ , வெற்றி, வெற்றி

ப்ரணத பரத மகுடதட ஸுகடித பாதுகாக்ர்யாபிஷேக நிர்வர்த்தித ஸர்வ லோக யோக க்ஷேம !-25-உனக்கு வணக்கம் செலுத்தி, அனைத்து மக்களின் நலனையும், வெற்றி, வெற்றியைக் கவனித்து வந்த பரதனால் செருப்புக்கு மகுடம் சூட்ட ஏற்பாடு செய்தாய்.

பிஶித ருசி விஹித துரித வல-மதன தனய பலிபுகனு-கதி ஸரபஸ ஶயன த்ருʼண ஶகல பரிபதன பய சரித ஸகல ஸுரமுனி-வர பஹுமத மஹாஸ்த்ர ஸாமர்த்ய !--26-ப்ரஹ்மாஸ்த்ர சக்தியால் மாமிசம் உண்ண ஆசைப்பட்ட காகத்தின் வடிவிலான இந்திரனின் மகன் மீது, உனது தர்பைப் படுக்கை யிலிருந்து ஒரு புல்லை ஏவினாய்.  அவன் பெரிதும் அஞ்சி, எல்லா தேவர்களையும் முனிவர்களையும் அணுகினான், வெற்றி, வெற்றி

த்ருஹிண ஹர வல-மதன துராரகக்ஷ ஶர லக்ஷ !–27-எல்லா தேவர்களாலும் கூட அந்த இந்திரனின் மகனை உனது அம்பின் இலக்கிலிருந்து காப்பாற்ற முடியவில்லை, வெற்றி, வெற்றி.

தண்டகா தபோவன ஜங்கம பாரிஜாத !–28-நீ தண்டடக வனத்தின் அசையும் வரம் தரும் மரமாக இருந்தாய், வெற்றி, வெற்றி.

விராத ஹரிண ஶார்தூல !–29-நீ விராதா, வெற்றி, வெற்றி என்ற மானைப் போல் இருந்தாய்

விலுலித பஹுபல மக கலம ரஜநிசர ம்ருʼக ம்ருʼகயாரம்ப ஸம்ப்ருʼத சீரப்ருʼதனுரோத !-30-பிறகு ராக்ஷஸ மிருகங்களைப் போல் வேட்டையாடிப் பயிர்களைக் காத்தாய். பட்டை அவர்களைப் பாதுகாக்கிறது, வெற்றி, வெற்றி.

த்ரிஶிர: ஶிரஸ்த்ரிதய திமிர நிராஸ வாஸர-கர !–31-த்ரிசிரஸின் மூன்று தலைகளை வெட்டும் போது இருளை விரட்டும் சூரியனைப் போல் தோன்றினாய், வெற்றி, வெற்றி

தூஷண ஜலநிதி ஶோஷண தோஷித ருஷிகண கோஷித விஜய கோஷண !-32-தூஷணனால் (கரனின் தளபதி) உலர்த்தப்பட்ட நீர்ப் புதையலில் இருந்து நீ நீரைத் திரும்பக் கொண்டு வந்தாய், முனிவர்கள் உன் வெற்றியைப் போற்றினார்கள். வெற்றி, வெற்றி.

கரதர கர தரு கண்டன சண்ட பவன !-33-மூர்க்கமான கரனை இரண்டாகப் பிளந்த புயல் நீயே, வெற்றி, வெற்றி.

த்விஸப்த ரக்ஷ: ஸஹஸ்ர நளவன விலோலன மஹாகலப !-34-ரக்ஷசர்களைப் போல பதினான்காயிரம் மரங்களைப் பிடுங்கிய மாபெரும் யானை நீயே.

அஸஹாய ஶூர ! அநபாய ஸாஹஸ !–35-36-நிகரற்ற வீரன், வெற்றி, வெற்றி.-நீ என்றும் வீரம் மிக்க வீரன், வெற்றி, வெற்றி.-

மஹித மஹா-ம்ருʼத தர்ஶன முதித மைதிலீ த்ருʼட-தர பரிரம்பண விபவ விரோபித விகட வீரவ்ரண !-37-மிகவும் மதிக்கப்பட்ட போரைக் கண்டு, மிதிலையின் மகள், போர், வெற்றி, வெற்றி ஆகியவற்றின் காயங்களால் மார்பில் மூடப்பட்டிருக்கும் நிலையில், உன்னை இறுகத் தழுவினாள்.

மாரீச மாயா ம்ருக சர்ம பரிகர்மித நிர்பர தர்பாஸ்தரண !-38-உன் தர்ப்ப புல் படுக்கை. மரீச்சா, வெற்றி, வெற்றி என்று மாயையான மானின் தோலுடன் பரவியது.

விக்ரம யஶோ லாப விக்ரீத ஜீவித க்ருத்ர-ராஜ தேஹ திதக்ஷா லக்ஷித-பக்தஜன தாக்ஷிண்ய !-39-உமது பக்தர்களிடம் மென்மையான உணர்ச்சிகளைக் கொண்ட நீ, மிகுந்த வீரத்துடன் போராடி இழந்த கழுகு மன்னனின் இறுதிச் சடங்குகளைச் செய்தாய், வெற்றி

கல்பித விபுத பாவ கபந்தாபிநந்தித !-40-வடிவத்தை, வெற்றியை, வெற்றியை மீண்டும் பெற்ற 
கபந்தநனால்  உனக்கு நன்றி  கூறப்பட்டது

அவந்த்ய மஹிம முனிஜன பஜன முஷித ஹ்ருʼதய கலுஷ ஶபரீ மோக்ஷ ஸாக்ஷிபூத !–41-
மகிழ்ந்த மனம் கொண்ட புகழ், வெற்றி, வெற்றி

கிஷ்கிந்தா காண்டம்

ப்ரபஞ்ஜன தனய பாவுக பாஷித ரஞ்ஜித ஹ்ருʼதய ! தரணி-ஸுத ஶரணாகதி பரதந்த்ரீக்ருʼத ஸ்வாதந்த்ர்ய !-42-43-காற்றின் மகனின்  மங்களகரமான மற்றும் பணிவான  பேச்சால் உங்கள் மனம் மகிழ்ச்சியடைந்தது, வெற்றி, வெற்றி –ஜயா  என்ற உங்கள் மகனால் நீங்கள் திரும்பப் பெற்றீர்கள். அவருக்கு சுதந்திரம், வெற்றி, வெற்றி

த்ருட கடித கைலாஸ கோடி விகட துந்துபி கங்காள கூட தூர விக்ஷேப தக்ஷ தக்ஷிணேதர பாதாங்குஷ்ட தர சலன விஶ்வஸ்த ஸுஹ்ருʼதாஶய !-44-உனது வலது பெருவிரலின் அசைவால், துந்துபியின் மலை போன்ற பிரம்மாண்டமான எலும்புக்கூட்டை மிக நீண்ட தூரம் எறிந்து, நெருங்கிய நட்பையும் நம்பிக்கையையும் பெற்றாய், வெற்றி, வெற்றி.

அதிப்ருʼதுல பஹு விடபி கிரி தரணி விவர யுகபதுதய விவ்ருʼத சித்ரபுங்க வைசித்ர்ய !–45-உனது அலங்கரிக்கப்பட்ட அம்பால் மிக அகன்ற மரங்களையும், மலையையும், பூமியையும், நரகத்தையும் துளைத்தாய், அதிசயங்களிலும் அதிசயம், வெற்றி, வெற்றி

விபுல புஜ ஶைல மூல நிபிட நிபீடித ராவண ரணரணக ஜநக சதுருததி விஹரண சதுர கபிகுலபதி ஹ்ருʼதய விஶால ஶிலாதல தாரண தாருண ஶிலீமுக !–46-துறவியின் மார்பில் ஒரு துறவியின் கடுமையான அம்பை எய்தினாய். போரிட வந்த ராவணன், அவனைத் தன் கைக் குழியில் வைத்துக் கொண்டு, தன் அன்றாடப் பிரசாதம், வெற்றி, வெற்றி என்று நான்கு சமுத்திரங்களுக்கும் பறந்தான்

ஸுந்தர காண்டம்

அபார பாராவார பரிகா பரிவ்ருʼத பரபுர பரிஸ்ருʼத தவ தஹன ஜவன-பவன-பவ கபிவர பரிஷ்வங்க பாவித ஸர்வஸ்வ தான !–47-காற்றின் மகனாகிய வானரப் பெருமானை நீ தழுவி , அவன்விரும்பியதை எல்லாம் கொடுத்து , பெருங்கடலைக் கடக்கும் , பெருங்கடலைக் கடக்க அவனுக்குத் தோன்றியவானரப் பெருமானை நீ தழுவிக் கொண்டாய்

யுத்த காண்டம்

அஹித ஸஹோதர ரக்ஷ: பரிக்ரஹ விஸம்வாதி விவித ஸசிவ விஸ்ரலம்பண ஸமய ஸம்ரம்ப ஸமுஜ்ஜ்ருʼம்பித ஸர்வேஶ்வர பாவ !–48-எதிரிக்குக் கொடுக்கப்பட வேண்டிய வெற்றியைப் பாதுகாப்பதைக் கருத்தில் கொண்டு வெவ்வேறு மந்திரிகளுக்கு நம்பிக்கையை அளிக்க நீ உன் பிரபஞ்ச வடிவத்தை எடுத்துக் கொண்டாய் 

ஸக்ருʼத் ப்ரபன்ன ஜன ஸம்ரக்ஷண தீக்ஷித !-வீர ! ஸத்யவ்ரத !–49-50-51-உன்னிடம் தன்னை ஒப்படைப்பவர்களை காக்கும் தவம் நீ எடுத்தாய், வெற்றி , வெற்றி –வீரன் , வெற்றி , வெற்றி -சத்தியம், வெற்றி , வெற்றி என்ற தவம் உள்ளவனே

ப்ரதிஶயன பூமிகா பூஷித பயோதி புளிந !–சமுத்திரத்தின் மணலை அதன்மேல் படுத்து புல்லால் அலங்கரித்த நீ 

ப்ரளய ஶிகி பருஷ விஶிக ஶிகா ஶோஷிதாகூபார வாரி பூர !-பிரளயத்தில் சுடர்., வெற்றி, வெற்றி

ப்ரபல ரிபு கலஹ குதுக சடுல கபிகுல கரதல துலித ஹ்ருʼத கிரி நிகர ஸாதித ஸேது-பத ஸீமா ஸீமந்தித ஸமுத்ர !–54-போருக்குத் துடித்த குரங்கு குலத்தை அமர்த்தி சமுத்திரத்தைப் பிரிக்கும் பாலத்தைக் கட்டி, பருத்தி மூட்டைகளைப் போல மலைகளைக் கொண்டு வந்து கடலில் எறிந்தாய், வெற்றி, வெற்றி.

த்ருத-கதி தரு-ம்ருʼக வரூதினீ நிருத்த லங்காவரோத வேபது லாஸ்ய லீலோபதேஶ தேஶிக தனுர்ஜ்யாகோஷ !–55-ஆசிரியையான நீ உன் வில்லின்  சத்தத்தால் லங்காவின் பெண்களை  நடனம் போல் நடுங்க அறிவுறுத்தினாய் 

ககன-சர கனக-கிரி கரிம-தர நிகம-மய நிஜ-கருட கருதநில லவ களித விஷ-வதன ஶர கதன !-56-வேதங்களின்  வடிவமான உங்கள் நண்பன் கருடன்,  வானில் ஒரு பொன் மலையாகத் தோன்றி, தன் சிறகுகளின் தென்றலால் அந்த விஷ அம்பின் விளைவை விரட்டி யடித்தான், வெற்றி, வெற்றி—சிறிய திருவடி என்று பெயர் பெற்ற உன்னுடைய நண்பன் ஆன கருடன் எதிரி விடுத்த விஷம் தோய்த அம்பில் இருந்து உன்னுடைய வானர சேனையை மிகவும் கஷ்டப்படுதிய போது தன்னுடைய சிறகுகளால் காற்று போல் அதை விசிறி தள்ளினான். வேதங்களின் உருவம் என்றும் கருடனை கூறுவார்கள்.

அக்ருʼத சர வநசர ரண-கரண வைலக்ஷ்ய கூணிதாக்ஷ பஹுவித ரக்ஷோ பலாத்யக்ஷ வக்ஷ: கவாட பாடன படிம ஸாடோப கோபாவலேப !-57-நீ கோபத்துடனும் வீரத்துடனும் மார்பைப் பிளந்தாய், ஏனென்றால் அவர்கள் தாழ்வான துறவிகளுக்கு எதிராகப் போரிட்டார்கள். , வெற்றி, வெற்றி -இதற்கு முன் கண்டறியாத குரங்குகள் யுத்தத்தை கண்டு வெட்கிப்போன பலபல ராக்ஷஸ தலைவர்களின் மார்பாகிற கவாடம் பிளந்திட மிகவும் முனிந்தவனே! ஸ்ரீ ராம ! ஜய விஜயீபவ

கடுரட-தடனி டங்க்ருதி சடுல கடோர கார்முக விநிர்க்கத விஶங்கட விஶிக விதாடன விகடித மகுட விஹ்வல விஶ்ரவஸ்தனய விஶ்ரம ஸமய விஶ்ராணன விக்யாத விக்ரம !–58-நீ மிகுந்த கோபத்துடன் உனது வில்லைத் தூளாக்கி அவனது வில்லைப் பொடியாகப் பொடி செய்து அனுப்பியாய். உங்கள் மிகவும் பிரபலமான வீரத்தை காட்டும் ஓய்வு., வெற்றி, வெற்றி–கேட்போர் காது கிழிய டங்காரம் செய்கிற கோதண்ட வில்வலவா ! நீ விளங்குவாயாக-இத்தகைய பெரும் போரிலும் ., இராவணனின் மகுட மாத்திரத்தை பங்கம் செய்து உயிரை வைத்து ஒடிப் போ என்று விட்ட உன்னுடைய உதார குணத்தை உலகமே புகழ்கிறது .

கும்பகர்ண குல கிரி விதளன தம்போளி பூத நி:ஶங்க கங்கபத்ர !–59-நீ கேள்விக்கு இடமில்லாத சக்தி கொண்ட மிக சக்திவாய்ந்த அம்புக்குறியை பயன்படுத்தி அவர்களின் குடும்ப மலையான கும்பகர்ணனை உடைத்தாய் , வெற்றி , வெற்றி

அபிசரண ஹுதவஹ பரிசரண விகடன ஸரபஸ பரிபதத் அபரிமித கபிபல ஜலதி லஹரி கலகல-ரவ குபித மகவஜி தபிஹனன-க்ருʼதனுஜ ஸாக்ஷிக ராக்ஷஸ த்வந்த்வ-யுத்த !–60-இந்திரஜித்தைக் கொன்ற பிறகு, அவனது சூனிய  ஹோமத்தை எல்லை யில்லாத வானரப் படையுடன் சீர் குலைத்து, அலறல் சத்தம் எழுப்பி, நீர் அலைகளை வீசி, உன்னுடைய மாபெரும் வெற்றியைக் கண்ட உன் சகோதரன்.–சத்ருக்களை வெல்ல வேண்டி இந்திரஜித்து அபிசாரயாகம் செய்திட, அதை அறிந்து லக்ஷ்மணன் வாநர ஸேனைகளோடு சென்று விலக்க அப்போது கடல் கலந்தது போல இருவரும் கை கலக்க இவர் அவனை கொன்றார்.அப்படி எதற்கும் இளமையாக இளையபெருமாள் ஸாக்ஷியாகப் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே நீ இரண்டாம் தடவையாக தனித்து லக்ஷ கணக்கிலான ராக்ஷஸர்களுடன் த்வந்த்வ யுத்தம் செய்தாய்.

அப்ரதித்வந்த்வ பௌருஷ !-61-பரஸ்பர சண்டை, வெற்றி, வெற்றி ஆகியவற்றில் உனது முழுமையான மற்றும் ஒப்பற்ற வீரம்

த்ர யம்பக ஸமதிக கோராஸ்த்ராடம்பர !–62-சிவபெருமானை விட உக்கிரமான தெய்வீக அம்புகள் உங்களிடம் உள்ளன

ஸாரதி ஹ்ருʼத ரத ஸத்ரப ஶாத்ரவ ஸத்யாபித ப்ரதாப !-63-அந்த ராட்சச மன்னனின் தேரோட்டி , போர், வெற்றி, வெற்றி

ஶித ஶர க்ருʼத லவந தஶமுக முக தஶக நிபதன புனருதய தர களித ஜனித தர தரள ஹரி-ஹய நயன நளின-வன ருசி-கசித கதல நிபதித ஸுர-தரு குஸும விததி ஸுரபித ரத பத !–64-உன் தேர் பாதை நறுமணம் வீசியது. தாமரை மலர்கள்) ப்ரஹ்மாஸ்திரத்தால் ராவணனின் தலைகளை வெட்டுவதைப் பார்த்து  அவர்கள் விழுந்து மீண்டும் தோன்றிய பிறகு .வெற்றி, வெற்றி

அகில ஜகததிக புஜ பல வர பல தஶ-லபந லபந தஶக லவந ஜனித கதன பரவஶ ரஜனி-சர யுவதி விலபன வசன ஸமவிஷய நிகம ஶிகர நிகர முகர முக முனி-வர பரிபணித!–65-மண்டோதரிக்குப் பிறகு வேதங்களுக்குத் தகுந்த துதிகளைப் பயன்படுத்தி நீங்கள் பெரிய முனிவர்களால் வணக்கம் மற்றும் புகழப்பட்டீர்கள்  இளம் ராட்சசப் பெண்மணி தனது மிகுந்த துக்கத்தால் வேத உண்மைகள் அடங்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி பிரபஞ்சத்தின் மிகவும் வலிமையான பிரபஞ்சத்தின் அதிபதியான தனது இழப்பைப் பற்றி புலம்பினார். வெற்றி, வெற்றி

அபிகத ஶதமக ஹுதவஹ பித்ருʼபதி நிர்ருʼதி வருண பவன தனத கிரிஶர முக ஸுரபதி நுதி முதித !அமித மதி விதி விதித கதித நிஜ விபவ ஜலதி ப்ருʼஷத லவ !-66-67-உன்னை இந்திரன், அக்னி , யமன் , நிருதி, வருணன்,  வாயு , குபேர , சிவன் ஆகியோர் அணுகி ,  அவர்களின்  புகழ் வெற்றி, வெற்றியால் மகிழ்ந்தனர்  கடலில் துளி, வெற்றி, வெற்றி-

விகத பய விபுத விபோதித வீர ஶயன ஶாயித வானர ப்ருʼதனௌக !–68-பின்னர், தன் பயத்தை இழந்த இந்திரனிடம் அனைத்து வானரங்களையும் மீண்டும் உயிர்ப்பிக்குமாறு நீ வேண்டினாய், அவனும் அவ்வாறே செய்தான், வானரங்கள் ஒரு பெரிய நதியைப் போல நகரத் தொடங்கின., வெற்றி, வெற்றி.

ஸ்வ ஸமய விகடித ஸுகடித ஸஹ்ருʼதய ஸஹதர்ம சாரிணீக !–69-நீ முன்னர் உன் சுய விருப்பத்தின் பேரில் பிரிந்திருந்த உன் மனைவியுடன் தர்மத்தை நிறைவேற்றுவதில் பங்காளியாக இருப்பவள் 
மீண்டும் இணைந்தாய். வெற்றி, வெற்றி.

விபீஷண வஶம்வதீ-க்ருʼத லங்கைஶ்வர்ய !-70-லங்காவின் செல்வத்தின் மீது விபீஷணனை முழுமையாகக் கட்டுப்படுத்தினாய் ., வெற்றி , வெற்றி

நிஷ்பன்ன க்ருʼத்ய !–71-நீ உன் கடமைகளை முடித்தாய் ,  வெற்றி , ஜெயம்

க புஷ்பித ரிபு பக்ஷ !–72–புஷ்பக ரபஸ கதி கோஷ்பதீ-க்ருʼத ககனார்ணவ !-73-புஷ்பக விமானத்தின் வேகத்தால் கடலை பசுவின் குளம்படி ஆக்கி , வெற்றி ,  வெற்றி

ப்ரதிஜ்ஞார்ணவ தரண க்ருʼத க்ஷண பரத மனோரத ஸம்ஹித ஸிம்ஹாஸனாதிரூட !–74-அக்கினியில் குதிப்பதாக சபதம் எடுத்த பரதன், சிம்மாசனத்தில் அமர்ந்து, வெற்றி, வெற்றி

ஸ்வாமின்!-75-மை லார்ட் வெற்றி, வெற்றி
ராகவ ஸிம்ஹ!–76-ஓ ராகவா சிங்கம், ஜெயம், ஜெயம்

உத்தர காண்டம்

ஹாடக கிரி கடக லடஹ பாத பீட நிகட தட பரிலுடித நிகில ந்ருʼபதி கிரீட கோடி விவித மணி கண கிரண நிகர நீராஜித சரண ராஜீவ !--77-உமது பொன் பாதம் பொன்  மேரு மலையைப் போல் ஒளிர்ந்தது 
வணங்கும் மன்னர்களின் மகுடங்களில் உமது ஒளிரும் தாமரை பிரதிபலித்த போது, ​​அது கற்பூரம் ஏற்றி வணங்கப்படுவது போல் தோன்றியது. வெற்றி, வெற்றி

திவ்ய பௌமாயோத்யாதிதைவத !–78-நீர் இரு அயோத்யாக்களுக்கும் (ஒன்று விண்ணகத்திலும் மற்றொன்று மண்ணிலும்) அதிதேவதையாக இருந்தீர், வெற்றி, வெற்றி

பித்ருʼ வத குபித பரஶு-தர முனி விஹித ந்ருʼப ஹனன கதன பூர்வ கால ப்ரபவ ஶத குண ப்ரதிஷ்டாபித தார்மிக ராஜ வம்ஶ !–79-தன் தந்தை கொல்லப்பட்டதால் கோபமடைந்த கோடரி ஏந்திய முனிவரால் முந்தைய தலை முறையினர் கொல்லப்பட்ட போது, ​​நீர் நல்ல அரச குடும்பங்களை மீண்டும் நிலை நாட்டினீர், வெற்றி, வெற்றி

ஶுச சரித ரத பரத கர்வித கர்வ கந்தர்வ யூத கீத விஜய காதா ஶத !–80-பெருமையும் கர்வமும் 
கொண்ட கந்தர்வர்களுடன் போரிட நல்ல குணத்துடன் அன்பான பரதனை அனுப்பினாய் , அவனது வெற்றிக்குப் பிறகு உன்னைப் பாடி துதிக்க ஆரம்பித்து , வெற்றி ,  வெற்றி 
.

ஶாஸித மது-ஸுத ஶத்ருக்ன ஸேவித !

குஶ லவ பரிக்ருʼஹீத குல காதா விஶேஷ !-82-நீ சத்ருக்னனை அனுப்பி, மதுவின் லவா மகனைக் கொன்று, அதைச் செய்தபின், அவன் உனக்கு மீண்டும் சேவை செய்யத்  தொடங்கினான் 

விதி வஶ பரிணமதமர பணிதி கவிவர ரசித நிஜ சரித நிபந்தன நிஶமன நிர்வ்ருʼத !–83- ஸர்வ ஜன ஸம்மானித !=84-விதியின் திருப்பங்களால் மரணம் கண்ட ஒரு மாபெரும் கவிஞன் இயற்றிய உன் கதையின் சொற்பொழிவைக் கேட்டு நீங்கள் சிலிர்த்துப் போனீர்கள் . அனைத்து மக்களாலும் புகழப்பட்ட பின், வெற்றி, வெற்றி

புனருபஸ்தாபித விமான வர விஶ்ராணன ப்ரீணித வைஶ்ரவண விஶ்ராவித யஶ: ப்ரபஞ்ச !–85-குபேரர்களுக்கு புஷ்பக விமானத்தை பரிசாகத் திருப்பித் தந்தாய், உன்னைப் புகழ்ந்து உலகம் முழுவதும் உன் புகழ் பரவியது

பஞ்சதாபன்ன முனிகுமார ஸஞ்ஜீவநாம்ருʼத !–86-ஜெபம் செய்து கொண்டிருந்த முனிவரின் இறந்த மகனை மீண்டும் உயிர்ப்பித்தாய் தவம் , வெற்றி, வெற்றி

த்ரேதாயுக ப்ரவர்தித கார்தயுக வ்ருʼத்தாந்த !–87-நீ க்ருத யுகத்தில் பராமரித்தாய் , 
திரேதா யுகத்தின்  தர்மம் ,  வெற்றி , வெற்றி

அவிகல பஹுஸுவர்ண ஹய-மக ஸஹஸ்ர நிர்வஹண நிர்வர்த்தித நிஜ வர்ணாஶ்ரம தர்ம !–88-ஏராளமான தங்கத்தை பரிசாக அளித்து, பல அஸ்வமேத யாகங்களை நடத்துதல், வெற்றி, வெற்றி

ஸர்வ கர்ம ஸமாராத்ய !-89-மக்களால் சகல கடமைகளையும் செய்து வழிபட்ட நீ, வெற்றி, வெற்றி
ஸனாதன தர்ம !-90-ஜெய  ஜெயம், ஹிந்துக்களின் மதத்திற்கு வெற்றி

ஸாகேத ஜனபத ஜனி தனிக ஜங்கம ததிதர ஜந்து ஜாத திவ்ய கதி தான தர்ஶித நித்ய நிஸ்ஸீம வைபவ !-91-என்றும் எல்லையற்ற புகழ் பெற்றவரே,அயோத்தி  மக்கள் அனைவருக்கும் , அங்கு வாழும் விலங்குகளுக்கும் முக்தியை அளித்தவரே, வெற்றி, வெற்றி. 

பவத-பநாதா-பித பக்தஜன பத்ராராம !–92-இல்லறத் துயரத்தால் வாடும் பக்தர்களை நீர் கவனித்து, அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறீர், வெற்றி, வெற்றி.

ஶ்ரீ ராமபத்ர !-93-ராம பத்ரனுக்கு வெற்றி, வெற்றி
நமஸ்தே புனஸ்தே நம: !
-94-வணக்கங்களும் மீண்டும் வணக்கங்களும்

சதுர்முகேஶ்வரமுகை: புத்ர பௌத்ராதி ஶாலினே । நம: ஸீதா ஸமேதாய ராமாய க்ருʼஹமேதினே ॥-95-நான்முகனை மகனாகவும், பரமேஸ்வரனைப் பேரனாகவும்  கொண்ட  சீதையுடன் இல்லறம் நடத்தும் ராமருக்கு வணக்கங்கள்

கவிகதக ஸிம்ஹகதிதம் கடோத ஸுகுமார கும்ப கம்பீரம் ।
பவ பய பேஷஜமேதத் படத மஹாவீர வைபவம் ஸுதிய: ॥-ஓ அறிஞர்களே, ‘மாபெரும் நாயகனின் பெருமை’ எனும் இப்பிரபு, கவிஞர்களுள் சிங்கமான கவிஞரால் இயற்றப்பட்டுள்ளது; ஆழ்ந்த உட்பொருள்களைக் கொண்ட மென்மையான மற்றும் கடினமான சொற்களால் ஆனது; மேலும் இது, இல்லறம் எனும் நோயின் அச்சத்தை அழித்துவிடும்.

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே ।
ஸ்ரீமதே வேங்கடேஶாய வேதாந்த குரவே நம: ॥

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரும் தேவி தாயார் சமேத ஸ்ரீ தேவாதி ராஜ பர ப்ரஹ்மம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

———————————–

மரகத வுருவும்-தூய தாமரைக் கண்களும் -துவர் இதழ் பவள வாயும்-உபதேசம் அருளி -அழகைக் காட்டி -கடாக்ஷித்து -பேற்றை அளிக்கிறான்-

August 11, 2026

அவதாரிகை

இவ் விஷயத்தில் ப்ராவண்யத்தை தவிர்த்து
எங்களைப் போலே தேக யாத்ரா பரராய் வர்த்திக்கவே தரிக்கலாம் -என்ன
கண் வளர்ந்து அருளுகிற அழகைக் கண்டு வைத்து
இஸ் ஸ்மர்த்தி யடங்க எங்களுக்கு -என்னும்படியான ஸ்வரூப ஞானம் உடைய எங்களுக்கு
அஹம் மம –என்கிற உங்களைப் போலே
அகல விரகு உண்டோ –
என்கிறார் –

—————

பாயு நீர் அரங்கம் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட
மாயனார் திரு நன் மார்பும் மரகத வுருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும் துவர் இதழ் பவள வாயும்
ஆய சீர் முடியும் தேசும் அடியரோர்க்கு அகலலாமே–

பதவுரை

பாயும் நீர்–பாயா நின்றுள்ள காவிரி சூழ்ந்த
அரங்கம் தன்னுள்–கோயிலிலே
பாம்பு அணை–சேஷ சயநத்திலே
பள்ளி கொண்ட–கண் வளர்ந்தருளா நின்ற
மரகதம் உருவும்–மரகத மணி போன்ற திருமேனி நிறமும்
தோளும் –திருத் தோள்களும்
தூய தாமரை கண்களும்–பரிசுத்தமான தாமரை மலர் போன்ற திருக் கண்களும்
துவர் இதழ்–சிவந்த அதரமும்
பவளம் வாயும்–பவளம் போன்ற வாயும்
மாயனார்–ஆச்சரிய சக்தி வாய்ந்த எம் பெருமானது
திரு நல் மார்வும்–பிராட்டி வாழ்கின்ற விலக்ஷணமான மார்பும்.
ஆய சீர் முடியும் –வேலைப்பாடுள்ள அழகிய திருமுடியும்
தேசும்–(இவற்றாலுண்டான) தேஜஸ்ஸும்.
அடியரோர்க்கு–ஸ்வரூப ஜ்ஞான முடைய தாஸர்களுக்கு
அகலலாமோ–இழக்கத் தகுமோ?

—————————–

பாயு நீர் அரங்கம் –
அடைத்தேற்ற வேண்டாத படி நீருக்குப் பள்ள நாலியான கோயில் –
இது உப லஷணம் –

பாவனமாயும்
பிரசன்னமாயும் உள்ள பதார்த்தங்களுக்கு
பள்ள மடையாய் இறே கோயில் இருப்பது –
ரமணீயம் ப்ரஸன்நாம்பு சந் மநுஷ்ய நோயதா –
நீருக்கு சாத்விகர் நிதர்சனமாய் இறே இருப்பது –

தன்னுள் பாம்பணைப் –
அந் நீர் உறுத்தாமைக்கு படுத்த படுக்கையாய் யாய்த்து திரு வநந்த ஆழ்வான் –
வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து -என்னக் கடவது இறே

பள்ளி கொண்ட மாயனார் –
கண் வளர்ந்து அருளும் போதை அழகு ஆச்சர்யமாய்த்து இருப்பது –
சமயா போதிதச் ஸ்ரீ மான் ஸூக ஸூப்த பரந்தப-என்னக் கடவது இறே –
நிற்றல் இருத்தல் செய்தார் ஆகிலும் அகலலாம் கிடீர்
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் -என்றும்
ஆனையில் கிடந்த கிடக்கை கண்டிடப் பெற்றிலேன் -என்றும்
என்றும் சொல்லக் கடவது இறே –
ஆனையில் கிடக்கை -ஆனை போல் கிடக்கை –

(வடி கொள் அஞ்சனம் எழுது செம் மலர் கண் மருவி மேல் இனிது ஒன்றினை நோக்கி
முடக்கி சேவடி மலர் சிறு கரும் தாள் பொலியும் நீர் முகில் குழவியே போலே
அடக்கி ஆர செஞ்சிறு விரல் அனைத்தும் அம் கை யோடு அணைந்து ஆனையில் கிடந்த
கிடக்கை கண்டிட பெற்றிலன் அந்தோ! கேசவா ! கெடுவேன் கெடுவேனே–பெருமாள் திருமொழி 7-2-

ஆனையில் கிடந்த கிடக்கை கண்டிட பெற்றிலன் அந்தோ!
ஆனை தன் அவயவங்களை பொகட்டுக் கொண்டு ஸ்வைரகமாக கிடந்தால் போலே
தொட்டிலிலே கிடக்கும் போது அனுபவிக்கப் பெற்றிலேன் என்று ஐயோ -என்கிறாள்)

திரு நன் மார்பும்
பிராட்டியாலே லஷணமான மார்பும்
பிராட்டியினுடைய செம்பஞ்சின் சுவடுகளும்
கழித்த மாலைகளுமாய் கிடக்கும் யாய்த்து –
பிராட்டி –அகலகில்லேன் இறையும்-என்று -பிரிய மாட்டாத
வை லஷண்யத்தை உடைய  மார்வு -என்னவுமாம்

மரகத வுருவும்-
கண்டார் கண் குளிரும்படி நீர் வெள்ளத்தை திறந்து விட்டாப் போலே யாய்த்து வடிவு இருப்பது

தோளும்-
கீழ் இலவை போலே
இடு சிவப்பு-ஆரோபிதாகாரம் -என்றபடி – இல்லாத தோளும்
அவ் வெள்ளத்திலே அழுந்துவார்க்கு தெப்பம் போலே
இருக்கிற திருத் தோளும் –

தூய தாமரைக் கண்களும்-
பிராட்டியோடு ஹிரண்யாதிகளோடு வாசி அற
குளிர நோக்குகிற திருக் கண்களும் –

நோக்குத் தூய்மை யாவது –
நிர்ஹேதுகமாக கடாஷிக்கை –

ஸூஹ்ருதம் சர்வ பூதானாம் -என்கிறபடியே –
அனுகூல பிரதி கூல விபாக ரஹீதமாய்த்து சௌஹார்த்தம் இருப்பது –

தேவாநாம் தாநவா நாஞ்ச சாமான்ய மதி தைவதம் -என்கிறபடியே
சம்பந்தம் ஒத்ததாய்த்து இருப்பது –

இப்படி இருக்க
சில பதார்த்தங்களுக்கு கடாஷம் அநர்த்த ஹேது வாகிறது -பிரகிருதி தோஷத்தாலே –
சர்வ அனுகூலமான தென்றல் ஆனது ஒரு பதார்த்ததில் வந்தால் சோஷகம் ஆகாது நின்றது இறே –

மென்மை குளிர்த்தி நாற்றம் இவற்றுக்கு தாமரை ஒரு போலியாம் இத்தனை -போக்கி
அகவாயில் தண்ணளிக்கு த்ர்ஷ்டாந்தம் ஆக மாட்டாதே

துவர் இதழ் பவள வாயும் –
சிறந்த திரு அதரத்தையும்
பவளம் போலே இருந்துள்ள தந்த பந்தியையும் உடைய வாயும் –
அவாக்ய அநாதர -என்கிற காம்பீர்யம் குலைந்து –
கிட்டினாரை சாந்தவ வாதனம் பண்ணுகிற திருப் பவளமும் –
ஸ்வ அபராதத்தை அனுசந்தித்து கிட்டி அஞ்சினவர்கள் உடைய அபராதத்துக்கு
நேர்த்தரவு கொடுக்க ஸ்மிதம் பண்ணும் திருப் பவளமும் -என்கை –

ஆய சீர் முடியும்-
பண்டே யாய்ச் சீர்மையை உடைத்தான முடியும் –
சித்தமாய் ஐஸ்வர்ய ஸூசகமான திரு அபிஷேகமும் –

இத்தனையாலுமாக அவயவ சோபை சொல்லிற்று –

தேசும் –
இத்தால் சமுதாய சோபையைச் சொல்லுகிறது –

அடியரோர்க்கு அகலலாமே –
இஸ் சமர்த்தியைக் கண்டால் ஸ்வரூப ஞானம் உடையார்க்கு அகலப் போமோ
இதற்குப் புறம்பாய் -அஹம் மம -நான் என்னது -என்று
இருப்பார்க்கு அன்றோ அகலல் ஆவது –

ஆமே -என்றது
எதிரிகளுக்கும் அகலப் போகாது என்ன வேண்டும் படியாய் இறே
அர்த்தத்தின் மெய்ப்பாடு இருப்பது-

(எம்பெருமானுடைய அதிஸயங்களை வெறும் ஏட்டுபுறத்தில் கேட்டுப் போகை யன்றிக்கே
பரம பாவநமான திருவரங்கந் திருப்பதியிலே திருவனந்தாழ்வான் மீது
“தன் தாளுந் தோளும் முடிவுகளும் சமனிலாத பல பரப்பி” என்றபடி
ஸகலாவயவ ஸெளந்தரியமும் நன்கு விளங்கும்படி சாய்தருள்கின்ற எம்பெருமானது திவ்ய தேஜஸ்ஸைக்
காணப் பெற்றவர்களும் மீண்டு கால் பேர்ந்து விலக முடியுமோ?)

———-

மரகத வுருவும்-தூய தாமரைக் கண்களும் -துவர் இதழ் பவள வாயும்உபதேசம் அருளி -அழகைக் காட்டி -கடாக்ஷித்து -பேற்றை அளிக்கிறான்

யமாதி நியமங்கள் வேண்டாமே -இவை கொண்டே அறிந்து தியானித்து மனம் வாக் கார்யம் அவனிடம் ப்ரவணமாகி கடாக்ஷத்துக்கு இலக்காகலாமே

பூமாதி கரணம்-மற்ற ஒன்றைக் கேட்க்காதே -பேசாதே -நினைக்காதே-நான்யஸ்ய -பஸ்யதி -ஸ்ருணோதி -தியானாதி -மூன்றும் சேர்ந்தே பல பாசுரங்கள் –பச்சை மா மலை போல் மேனி -பவள வாய் -கமலச் செங்கண்
அந்தாமத்து அன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாமம் வாள்முடி சங்கு ஆழி நூல் ஆரம் உள
செந்தாமரை தடம் கண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தாமரை யடிகள் செம்பொன் திரு வுடம்பே
–2-5-1–இங்கும் மூன்றும் சேர்ந்து அருளிச் செய்கிறார்-ஆழ்வார்கள் திவ்ய மங்கள விக்ரஹத்திலும் கல்யாண குணங்களிலுமே ஆழங்கால் பட்டு அருளிச் செய்துள்ளார்கள் -ரிஷிகள் ப்ரஹ்ம ஸ்வரூபத்தில் இழிந்து இருப்பார்கள் – ப்ருஹத்வாத் -ஞான ஆனந்த மயமாய் -அனுகூல ஞானமே ஆனந்தம் –ஸர்வ வ்யாபி -ஆகாசம் போல் -ஸர்வ நியந்தா -ஸர்வேஸ்வரேஸ்வரன் -ஸூபாஸ்ரயம் -நமக்கு கிட்டும்படி தியானத்துக்கு எளியதாய் -இடம் காலம் உருவம் அடக்கி –பஞ்ச பிரகாரம் –பச்சை மா மலை போல் மேனி என்பதே மரகத உரு-கட்டுண்ணப் பண்ணிய பெருமாள்-கிருபை அடியாக விகாரம் -தளிர் புரையும் திருவடிகள்-அல்பஸ்ருதே : -1-3-3- தஹராகாசம் அல்பமானது (சிறியது) என்று சொல்லப் படுகிறபடியால் அது பரமாத்மாவாக இயலாதே
இதி சேத் – என்று கேட்டால்
தது₃க்தம் – அதற்கான விடை முன்னமே 1.2.1 ஸர்வத்ர ப்ரஸித்தி அதிகரணத்தில் “அர்ப₄கோகஸ்த்வாத் தத்₃ வ்யபதே ₃சாத் நேதி சேத் ந நிசாய்யத்வாதே₃வம் வ்யோமவச்ச” என்கிற ஸூத்ரத்தில் சொல்லப்பட்டது. பரமாத்மா அளவற்றவராய் இருந்தாலும், உபாஸகனுக்கு அனுக்ரஹிப்பதற்காக அவர் ஹ்ருதயத்துக்குள்ளும் சிறிய வடிவத்வதாடு இருக்கிறபடியால் இதில் பொருந்தாமை இல்லை.

பரமேஷ்டி புமான் நிவ்ருத்த விஸ்வ ஸர்வ –பஞ்ச பூதங்கள் போல் இவை உண்டாக்கப்படுபவை அல்ல -அப்ராக்ருதம் -ஸுத்த ஸத்வம் -ஞானத்தை வளர்க்கும் -தானே விளங்கும் மற்ற அனைத்தையுமே விளக்கும் -ஸூயம் ப்ரகாஸம்-ஜெய் சிந்தானாம் -சிந்தா நல்ல விஷயம் -சிந்தை மற்ற நின் திறத்து அல்லால் அனைத்தும் -சிதை போல் ஆகும் -ஸாத்யமான த்யானம் —

ந தே ரூபம் ந சாகாரோ ந ஆயுதாநி ந ச ஆஸ்பதம்
ததா அபி புருஷாகாரோ பக்தாநாம் த்வம் ப்ரகாஸஸே–5-

ந தே ரூபம் –
ரூபம் -எனபது திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது –
ஆகார -என்று திவ்ய விக்ரஹத்தை மேலே சொல்லுகையாலே-
இஸ் ஸ்லோகத்தால்
ஸ்வரூபாதிகள் இவனுக்கு இல்லை என்கிறது -எங்கனே -என்னில்
தே -என்று
நிர்த்தேசித்து வைத்து -ஸ்வரூபாதிகளை நிஷேதிக்கையாலே
நிஷேதிக்கிறது எவ் வாகாரத்தாலே -என்னில்
ஸ்வரூபாதிகளாலே தேவர் கொள்ளுவது ஒரு கார்யம் இல்லை என்று ஸ்வார்த்தத்தை நிஷேதிக்கிறது –

தே ரூபம் ந தே –
உன்னுடைய திவ்யாத்ம ஸ்வரூபம் உனக்காய் இராது
ஆஸ்ரித ரஷணத்துக்கு அனுகூலமாய் இருக்கில்
ஸ்வ தந்த்ரமாய் இருக்கிற அது பர தந்த்ரமாய் இருக்கும் –
மயி ப்ருத்யே ஸ்திதே தேவா நா ஜ்ஞாபயத கிம் ந்ருபை -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-21-12-என்றும்
கிங்க ரௌ சமுபஸ்தி தௌ -பால -31-4-என்றும் சொல்லக் கடவது இறே-

தூய தாமரைக் கண்கள்
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசி
கண்கள் விரிவடைந்து நீண்ட அப்பெரியவாய கண்கள்–அதீர்க்கம்-அப்ரேம துகம்-க்ஷண உஜ்ஜ்வலம் -ந சோர அந்தக்கரணம் பஸ்யதாம் -கூரத் தாழ்வான்-தாமரை நின் கண் ஒவ்வாவே -யதா கப்யாஸம் ஏவ புண்டரீகம்–ததைவ அக்ஷிணீ–இரண்டு திருக்கண்கள் –
ஆறு நிர்வாகங்கள் –மூன்று பொருந்தாது -மூன்று பொருந்தும்

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருமழிசை அண்ணாவப்பங்கார்

August 11, 2026

திருநக்ஷத்ரம் : ஆனி அவிட்டம்
அவதார ஸ்தலம் : திருமழிசை
ஆசார்யன் : திருதகப்பனார் நரஸிம்ஹாசார்யர்

மஹீஸார க்ஷேத்ரம் என ப்ரசித்தி பெற்ற திருமழிசையில் பிறந்த இவர்க்குத் திருத் தகப்பனார் வீர ராகவன் எனப் பெயரிட்டார். முதலியாண்டானின் வாதூல குலத்தில் திருவவதரித்தார். இவரது பக்தி ஸாரோதயம் எனும் தோத்திர நூலில் இவர் பிதாமகர் திருநாமம் ரகுவராசார்யர் என்று காண்கிறது. கி பி 1766ல் பிறந்த இவர் வாதூல வீர ராகவாசார்யர் என்றும் அழைக்கப்பட்டதாகக் காண்கிறது.

இளமையிலேயே மிக்க அறிவாளியாய் திகழ்ந்த இவர், 15 ப்ராயத்துக்குள் தம் யஜுஸ் சாகை முழுதும் கற்றார். அத்தோடே தர்க்கம், வியாகரணம், மீமாம்ஸை, சாங்க்யம், பதஞ்ஜலி யோகம் முதலியனவும், ஜ்யோதிஷம், ஸங்கீதம், பரத நாட்யம், போன்றனவும் கற்றுத் தேர்ச்சி பெற்றார். 20 பிராயம் முடியுமுன்பே ஸகல சாஸ்த்ர நிபுணர் ஆனார். திருத்தகப்பனாரிடம் ரஹஸ்ய கிரந்தங்கள் கற்று மிக்க இளமையிலேயே ஸம்ப்ரதாய ஸ்ரீகோசங்கள் எழுதலானார். வாதூல வரதாசார்யர் மற்றும் பல திவ்ய தேச யாத்ரைகள் செய்து பலரை வாதில் வென்ற ஸ்ரீரங்காசார்யர் இருவரிடமும் பயின்றார்.

இவரின் லிகித கைங்கர்யங்களில் தலையானது பிள்ளை லோகாசார்யர் அருளிச்செய்த ஸ்ரீவசன பூஷணத்துக்கு மாமுனிகள் அருளிச் செய்த வ்யாக்யானத்துக்கு விரிவான அரும்பத உரை அருளியது ஆகும். இவரின் மற்றொரு க்ரந்தமான பக்தி ஸாரோதயம் திருமழிசை ஆழ்வாரின் சரித்ரத்தை மிக அழகாகக் காட்டியுள்ளது.

51 ஆண்டுகளே எழுந்தருளியிருந்த இந்த ஸ்வாமி அச்சிறிய வயதுக்குள் பலரை வாதங்களில் வென்றார். ஈச்வர வருஷம் ஐப்பசி சுக்லபக்ஷ சதுர்த்தசியில் பரமபதித்தார்.

க்ரந்தங்கள்

இவர் தான் வாழ்ந்த குறுகிய காலத்துள் பல க்ரந்தங்கள் அருளியுள்ளார். அவற்றின் தொகுப்பு இங்கே:

  • ஸ்ரீ பக்தி ஸாரோதயம்
  • வேதவல்லி சதகம்
  • ஹேமலதாஷ்டகம்
  • அபீஷ்ட தண்டகம்
  • சுக சந்தேசம்
  • கமலா கல்யாண நாடகம்
  • மலயஜா பரிணய நாடிகா
  • ந்ருஸிம்ஹாஷ்டகம்
  • மாமுனிகள் ஸ்ரீவசன பூஷண வ்யாக்யான அரும்பதம்
  • திருச்சந்த விருத்த ப்ரதிபதம்
  • ஸ்ரீரங்கராஜ ஸ்தவ வ்யாக்யானம்
  • மஹாவீரசரித வ்யாக்யா
  • உத்தர ராம சரித வ்யாக்யா
  • சத ச்லோகீ வ்யாக்யா
  • ராமாநுஜாஷ்டக வ்யாக்யா
  • நக்ஷத்ர மாலிகா வ்யாக்யா
  • தேவராஜ குரு விரசித வரவரமுனி சதக வ்யாக்யா
  • துஷ்க்கர ச்லோக டிப்பணி
  • தினசர்யா
  • ஷண்மத தர்சனி
  • லக்ஷ்ம்யா உபாயத்வ நிராஸ:
  • லக்ஷ்மீ விபுத்வ நிராஸ:
  • ஸூக்தி ஸாதுத்வ மாய்யா
  • தத்வ ஸுதா
  • தத்வ ஸார வ்யாக்யா
  • ஸச்சரித்ர பரித்ராணம்
  • பழனடை விளக்கம்
  • த்ரிம்சத் பிரச்னோத்தரம்
  • லக்ஷ்மீ மங்கள தீபிகா
  • ராமானுஜ அதிமானுஷ வைபவ ஸ்தோத்ரம்
  • அநு பிரவேச ச்ருதி விவரணம்
  • ”சைலோக்னிச்ச” ச்லோக வ்யாக்யா
  • மஹீஸார விஷய சூர்ணிகா
  • “ஸ்வாந்தே மே மதனஸ்திதிம் பரிஹர” இத்யாதி ஸ்லோக வ்யாக்யானம்
  • ஸச்சர்யக்ஷகம்
  • ப்ராப்ய ப்ரபஞ்சந பஞ்ச விம்சதி:
  • ந்யாய மந்தரம்
  • தாத்பர்ய ஸச்ச்ரீகரம்
  • வசஸ் சுதா மீமாம்ஸா
  • வசஸ் சுதா பூர்வ பக்ஷ உத்தரம்
  • ப்ரஹ்மவத்வதங்கம்
  • லக்ஷ்மீ ஸ்தோத்ரம்
  • வரணபஞ்ச விம்சதி:

இவ்வாறு தமது அளப்பரிய ஞான வைபவத்தால் ஸம்ப்ரதாயப் பெரும்பணியாற்றிய அண்ணாவப்பங்கார் ஸ்வாமியின் வைபவம் சிறிதே அனுபவித்தோம். நாமும் இவரின் திருவடிகளில் பணிந்து, பகவத் விஷயத்தில் சிறிது ஞானத்தைப் ப்ரார்த்திப்போம்.

இவர் தனியன்:

ஸ்ரீமத் வாதுல நரஸிம்ஹ குரோஸ்தநூஜம்
ஸ்ரீமத் ததீய பதபங்கஜ ப்ருங்கராஜம் |
ஸ்ரீரங்கராஜ வரதார்ய க்ருபாத்த பாஷ்யம்
ஸேவே ஸதா ரகுவரார்யம் உதாரசர்யம் ||

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அமலனாதிபிரான் -அனுபவம்

August 11, 2026

வ்ருச்சிகே ரோஹிணீ ஜாதம்‌ ஸ்ரீபாணிம் நிசுளாபுரே
ஸ்ரீவத்ஸாம்சம்‌ காயகேந்தரம்‌ முனி வாஹனன் ஆஸ்ரயே
-திருப்பாணாழவார்‌ திருநக்ஷத்திரத் தனியன்‌

பெரியாழ்வார் அவதார ஈடுபாடு-(பெரியாழ்வார் திருமொழி)

அ. பாதக்கமலம் -(1.3.1)-திருப்பாணாழ்வார் அருளியதிருப்பாணாழ்வார் அர்ச்சாவதார
ஈடுபாடு (அமலனாதிபிரான்) திருக்கமலபாதம் (1)
ஆ. பீதகச்சிற்றாடையொடும்(1.8.3.)–அரைச்சிவந்தாடையின்மேல் – (2)
இ.அழகியஉந்தி-(1.3.8)-அயனைப்படைத்ததோர்எழில் உந்தி -(3)
ஈ. பழம்தாம்பால் ஆர்த்தஉதரம் (13.9)-திருவயிற்றுதர பந்தனம் (4)
உ. குருமாமணிப் பூண்குலாவித் திகழும் திருமார்பு (1.3.10)-திருவார மார்பு-(5)
ஊ. அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய கண்டம்-(1.3.13)-முற்றுமுண்ட கண்டம் – (6)
எ. நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய கைத்தலம் – (1.3.12)-கையினார் சுரிசங்கனலாழியர் – (7)
ஏ. செந்தொண்டைவாய்-(1314)-செய்ய வாய்(7)
ஐ.கண்களிருந்தவா – (1.3.16)-அப்பெரியவாய கண்கள் – (8)
ஒ. உருவுஉரியவொளிமணிவண்ணன் (1.3.17)-எழில் நீலமேனி -(9)-குழல்களிருந்தவா – (13.20)-துளப விரையார் கமழ் நீண்முடி- (7)

நாச்சியார் பெரிய பெருமாளுடன் “நமக்கு அந்தரங்கரான இப் பாண் பெருமாள் புறம்பே நிற்கலாமோ” என்று கூறுகிறார். இதில் ஆழ்வாரை ”பாண் பெருமாள்’ என்று பெயரிட்டு அழைப்பது காண முடிகிறது-எம் பெருமான் ஆணைப்படி லோகசாரங்க முனிவர் திருப்பாணாழ்வாரைத் தம்தோள்களின் மேல் ஏற்றிக் கொண்டு எம்பெருமான் சன்னதிக்கு வந்ததனால் இவருக்கு’முனி வாகனர்.’ என்ற பெயர் வழங்கலாயிற்று.”மேலும்,நம்மாழ்வார் தாம் அருளிய திருவாய்மொழியில் ”இசைகாரர்’ என்ற பெயரால் திருப்பாணாழ்வாரை நினைப்பதாகக் கூறுவர்.” பட்டர் தாம் அருளிய வடமொழி ஸ்லோகத்தில் ஆழ்வாரை “யோகி வாஹாந் என்றும் அழைக்கின்றார். இவ்வாறாக திருப்பாணாழ்வாருக்கு பாண் பெருமாள், முனி வாகனர், இசை காரர் யோகி வாஹான் என்று பலபடியான திருநாமங்கள் இருப்பதைக் காணமுடிகிறது.

அமலனாதிபிரான் முதல் மூன்று பாடல்களில் எல்லா வேதத்தின் சுருக்கமாய் மூன்று எழுத்துக்களை உள்ளடக்கியதான ‘ஓம்” என்கிற பிரணவத்தின் அகார,உகார, மகாரங்களாலே முதலீட்டு மூன்று பாட்டுக் களையுடைய அடியிலே அமைந்துள்ளது இப்பிரபந்தம் என்றும், ”ஓம்” என்ற பிரணவத்தைத் தெரிவிப்பதான வஸ்து எம்பெருமான் என்றும், பெரிய பெருமாளைப் பிரணவ வடிவமான விமானத்தின் நடுவில் திருவடி தொடங்கி திருமுடி வரையில் அனுபவித்த பிரபந்தம் என்கிற விருப்பத்தோடு ஆசாரிய உச்சாரண முறையில் கற்பார்கள் என்றும், அமலனாதிபிரானின் பெருமையைச் சீயர் கூறுவர்.’சீரிய நான்மறைச் செம்பொருள் செந்தமிழாலளித்த பாரியலும் புகழ்ப்பாண் பெருமாள்–திருவரங்கத்து அமுதனார்-மாமுனிகள் இதற்கு உரைய-எம்பெருமானின் இயல்பு, வடிவம், குணம் செல்வங்கள் (லீலா விபூதி, நித்ய விபூதி ) இவற்றை உள்ளபடியே தெரிவிப்பதால் வந்த சீர்மையை உடையது என்றும், ருக்,. யஜூர்,சாம, அதர்வண என்று நான்கு வகைப்பட்ட வேதத்தினுடைய இனிமையான பொருளை சொல்வது என்றும், இதனை அருளியவர் நடை விளங்கு தமிழ் மாலையாலே உதவி செய்தவராய் பூமியிலே நிலையாக நின்றுள்ள கீர்த்தியையுடைய திருப்பாணாழ்வார்

“அண்டர்கோன் அணியரங்கள் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே என்று அருளியபடியே ஆளவந்தார் வேறொரு விஷயம் அறியாதவராய் இருந்தார்; அவ்வாறே ஆளவந்தார் திரு மேனியிலே வாட்டம் கண்டு எழுந்தருளியிருக்கும் போது அவருடைய சீடர்கள் தங்களுக்குத் தஞ்சமாக இருப்பதின் பொருளைச் சொல்ல வேண்டும்படி வேண்டினர், அதற்கு ஆளவந்தார் “பெரிய பெருமாளின் திருவடிகளின் கீழே வீணையும் கையுமாய் சேவித்து இருக்கும் திருப்பாணாழ்வார் விக்ரஹத்தை பாதாதிகே சாந்தமாக ( பாதம் முதல் முடிவரையில்) சேவித்துக் கொண்டு போருங்கள்” என்று சொன்னார். மேலும், பெரிய பெருமாள் உயிர் நிலை அறிந்தவர் திருப்பாணாழ்வார்; திருப்பாணாழ்வார் உயிர் நிலை அறிந்தவர் திருவரங்கப் பெருமாள் அரையர் என்றும் அருளினார்.திருமந்திரத்தின் பொருளாக போக மண்டபமாகத் திருவரங்கம் திகழ்கிறது-இதனை வெளியிட்டவர் திருப்பாணாழ்வார்-கோயில் என்று சொல்லப்படும் திருவரங்கத்துக்கு முதன்மை வந்ததுக்குக் காரணம் அவ்வெம்பெருமான் திருப்பாணாழ்வாரோடு கலந்து பரிமாறுகையாலே என்பர்-பரமபதம், திருவேங்கடம், திருவரங்கம்ஆகிய இம்மூன்று திவ்விய தேசங்களையும் ஆழ்வார் இருந்த இடத்திலிருந்தே முதல் பாடலிலேயே மங்களாசாசனம் செய்தார் என்பது அறிய முடிகிறது.

‘சதுர மா‘ நாலாம் பாட்டின்‌ முகலெழுத்தான, :‘ என்பது முதலாவதான பிரமாண-பிரணவம் – சாரத்தையும்‌, இரண்டாவதான பிரமேய சாரத்தையும்‌-பாதுகை – சேர்கிறது

‘உயர்வற உயர் நலம் உடையவன்.”–”அமலன்” என்ற சொல்லாலே குறிப்பிடுகிறார்.அதாவது, குற்றங்களுக்கு எதிர்தட்டானவன் என்றும், தூய்மை யானவன் என்றும், தான் ஒருவன் தூயனாவது மட்டுமின்றித் தன்னோடு உறவுடையாரையும் தூய்மை யாக்க வல்ல திருவடியை யுடையவன்

யவன்” என்று திருவாய்மொழியில் குறிப்பிட்டதை, ஆழ்வார் ‘‘ஆதி” என்று குறிப்பிடுகிறார்; ‘யவன்” என்ற சொல் பிரசித்தியைக்காட்டுகிறது . அத்தகைய பிரசித்தியைத்தான் ”ஆதி” என்று குறிப்பிடுகின்றார் ஆழ்வார். இச் சொல்லுக்கு ‘உலகுக்கு காரணமாம் தன்மை” ( ஜகத் காரணத்வம்) என்றுஉரையிடுவர் பெரியவாச்சான் பிள்ளை-

மயர்வற மதி நலம் அருளினன்“-இது தன்னையே திருப்பாணாழ்வார் ” பிரான்” என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.”பிரான்” என்பதினால் ஆழ்வார் தாழ்ச்சியைப் பாராதே எம்பெருமான் ஆழ்வாரைத் தனக்கு இலக்காக்கிக் கொண்ட உதவியாளனைச் சொன்னபடி.

”நீதி வானவன்“-வானவனுடைய நீதியாவது ஆண்டவன் – அடியவன் என்ற உறவாம் தன்மை (சேஷ சேஷித்துவங்கள்) முறை மாறாது இருத்தல்-அதாவது “சேஷித்வம்” என்பது தலைவனாம் தன்மை.-ஈச்வரன் நான்” என்று எதிரிட்டு இருக்கும் இடம் இந்த உலகம்:-நித்ய விபூதியான வானுலகில் கலக்குவாறுமில்லை. கலங்குவாறுமில்லை; இந்த பூமியில் கலக்குவாறுமுண்டு கலங்குவாறுமுண்டு என்றவாறு.

கொண்டல் வண்ணன்” என்ற சொல்லடிப் படையில் எம்பெருமான் மேகம் போல் வள்ளல்
தன்மை யுடையவன் என்பதை இவர் பக்கல் ஔதார்யம் இல்லை யென்று போகவோ?-‘வெண்ணெய் உண்ட வாயன்” என்ற சொல்லடிப் படையில் அடியார்களுடைய உடைமையான வெண்ணெயை விழுங்கியதனால் அந்தக் குணுங்கு நாற்றம் வாயிலே தோன்றும்படி இருப்பதினால் “வடிவில் பசை யில்லை யென்று போகவோ?“-கோவலனாய்” என்ற சொல்லடிப்படையில் இடையரோடு இடைச்சியரோடு வாசியற ஒரு நீராகக் கலந்ததனால் “செனசில்யம் இல்லை யென்று போகவோ?” என்றும்.”என்னுள்ளம் கவர்ந்தானை” என்ற சொல்லடிப்படையில் கோவலனாய் வெண்ணெய் உண்டாப் போலே கொண்டல் வண்ணனாய் ஆழ்வார் உள்ளத்தைக் கவர்ந்ததனால்”நெஞ்சுக்கு பிடித்திருந்த தில்லை யென்று போகவோ?”-“அண்டர் கோன்” என்ற சொல் அடிப்படையில் வேறு அண்டத்திலுள்ள ஆத்ம சமூகத்திற்குத் தலைவனாய் இருப்பதனால் “மேன்மை யில்லை யென்று போகவோ?”-” அணியரங்கன்” என்ற சொல்லடிப்படையில் கண்ணாலே காணலாம்படி சம்சாரத்துக்கு
ஆபரணமான திருவரங்கத்தில் எம்பெருமான் வந்து பள்ளி கொண்டதனால் சௌலப்பியம்
(எளிவந்த தன்மை) இல்லை யென்று போகவோ?
என் அமுதினை” என்ற சொல்லடிப்படையில்
அளப்பரிய ஆரமுதாய் இருப்பதனால் இனிமை (போக்யதை) இல்லையென்று போகவோ?”அமுதினைக் கண்ட கண்கள்” என்ற சொல்லடிப்படையில் திருவரங்கத்து இறைவனை முழுமையாக அனுபவித்த கண்கள் ஆதலால் “அனுபவத்தில் குறை யுண்டென்று போகவோ?”–நாயனார் அருளுவது சுவை மிக்கதாகும்.

செய்ய வாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே-“மற்ற அவயவங்களின் அழகில் முன்பே என் நெஞ்சு பறிகொடுத்த என்னை மற்ற அவயவங்களைக்காட்டிலும் தனது திருப்பவள செவ்வாயைக் காட்டி “கல்லை நீராக்கி, நீரையும்தானே கொண்டது என்றும் உகக்கின்றார். ஆழ்வார். இதையே ‘கல்லை நீராக்கி நீரைத் தானே கொண்டதனால் வந்த உகப்பு என்பர்.

வேதாந்த தேசிகர் தாம் அருளிய முனிவாகன போகத்தில் முதல் மூன்று பாடல்கள்
அகார, உகார, மகாரமாகிய ” ஓம் ” என்ற பிரணவத்தின் பொருள் என்பதையும், நான்காவது பாடல் ‘ நம:” என்பதின் பொருள் என்றும், ஐந்து ஆறாவது பாடல்கள் ” நாராயண ” என்ற சொல்லின் பொருள் என்றும், ஏழு எட்டு ஒன்பது பத்து ஆகிய நான்குபாடல்கள் “ஆய” என்பதின் பொருள் என்றும், இவற்றை அனைத்தையும் கூட்டி “ஓம் நமோ நாராயணாய” என்ற திருமந்திரத்தின் பொருளாக அமலனாதிபிரான் அமைந்துள்ளது
என்று விரிவாக உரை வழங்கியுள்ளார்.

பெரியவாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே ” என்னும் தொடருக்கு உரை
வழங்கிய ஆசாரியர்கள், முன்பாட்டான “கையினார் சுரிசங்கனலாழியர்” என்ற பாடலில் ”என்னைச் சிந்தை கவர்ந்ததுவே ” என்று அறிவு வளர்ச்சிக்கு இடமான வழியைக் கவர்ந்தபடியைச் சொல்லிற்று என்பர். அதாவது அறிவை அபகரித்தபடியைச் சொல்லுகிறது. “அறிவைக் கவர்தலாவது அழகிலே அலமருகை

ஆல மா மரத்தினிலை மேல்–ஆல மாமரத்திலே நெரித்தால் பால்பாயும்படி இருக்கின்ற இளந்தளிர்” என்று சொல்லி”மாமரம்” என்பதற்கு எதிர் மறையாய்ச் சிறிய மரம் என்று பொருள் உரைப்பர். “‘இலைமேல் என்பதனால் இந்த இலைக்குள்ளே அடங்கும்படியாய்த்து வடிவின் சிறுமை யிருப்பது”யசோதை பாலகன் முற்றினவன்” (மிகப்பெரியவன்) என்னும்படி “ஒப்பற்ற இளம் பாலகன் – முற்றினவன்” மிகப்பெரியவன். இங்கே எதிர்மறையாக யசோதையின் பால் வாய்ப் பிள்ளையான கிருஷ்ணனும் முரணித்திருக்கும்படி இவனுடைய இளமை (பால்யம்) செம்பால்பாயா நிற்கும்’ என்று எதிர்மறைப் பொருள் கூறிஉணர்த்துவார்.

உலகறிய மலிபுகழ்க்‌ கார்த்திகை மாதத்தில்‌ உரோகிணி நாளுறந்தை வளம்பதியில்‌ தோன்றித்‌
தலமள ந்த தென்னரங்கர்பால்‌ உலோக சாரங்கமா முனிதோள்‌ தனிலே வந்து
பலமறையின்‌ பொருளாற்‌ பாண் பெருமாளே நீ பாதாதி கேசமதாய்ப்‌ பாடித்‌ தந்த
சொல வமலனாதிபிரான்‌ பத்துப்பாட்டும்‌ சோராமலெனக்‌ கருள் செய்‌ துலங்க நீயே| |
(பிரபந்த ஸாரம் )

வணடின முரலுந்‌ தாமவன மணி மார்பன்றன்னைக்‌
கண்‌ டுள நிறையாநந்த நீரிரு கண்ணுங்‌ காட்ட
அண்டர்‌ நாயகனை வாழ்த்தி யவனருளமுதமாந்‌திப்‌
பண்டுபோம்‌ பொருள்‌ கிடைத்தபடியுள மகிழ்ந்தானன்றே,
மாடமாளிகையரங்க மறைவலாரிவனை வாழ்த்திக்‌
கோடுடைப்‌ பரனுக்‌ குற்ற குணங்களிலீடுபட்டுப்‌
பாடலிலுனக்கு நாமம்‌ பாண்‌ பெருமாள்‌ என்றரோத
வீடிலான்‌ வேதாந்தார்த்த மிசைத்தனன்‌ றமிழிலன்றே
(ஸ்ரீ சடகோப திவ்ய சரிதம் )

உம்பர்தொழும் மெய்ஞ்ஞானத்து உறையூரான் வாழியே
உரோகிணி நாள் கார்த்திகையில் உதித்தவள்ளல் வாழியே
வம்பவிழித்தார் முனிதோளில் வந்த பிரான்வாழியே
மலர்க் கண்ணை மற்றொன்றில் வையாதான் வாழியே
அம்புவியில் மதிலரங்கர் அகம் புகுந்தான் வாழியே
அமலனாதிபிரான் பத்தும் அருளினான்வாழியே
செம்பொன்னடி முடியளவும் சேவிப்போன் வாழியே
திருப்பாணன் பொற்பதங்கள் செகதலத்தில் வாழியே

எம்பெருமானுறையூராரேத்த வந்தோன் வாழியே
ஏற்ற கார்த்திகையில் உரோகிணி யுதித்தான் வாழியே
அம்புவியிலங்கருக் கண்டுகந்தான் வாழியே
அக மகிழ்ந்ததே அவர் புகழநின்று யர்ந்தோன் வாழியே

அம்புய நேர்தாண்முனிதோள் வைத்திட்டான் வாழியே
அமலனாதிபிரான் பத்து அருள் செய்தான் வாழியே
பைம்பொழில் சூழ் திருவரங்கந் திகழ்ந்தபிரான் வாழியே
பாண்பெருமாள் பங்கயத்தாள் பார்தனில் வாழியே

    —————————————————————————

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

    ஸ்ரீ பொன் பதர் கூடம்-அருள் மிகு சதுர் புஜ ஸ்ரீ கோதண்ட ராமர் திருக் கோயில்

    August 11, 2026

    மூலவர் : சதுர்புஜ கோதண்டராமர்
    தாயார் ; சீதா பிராட்டி
    தீர்த்தம் : தேவராஜ புஷ்கரிணி, சேஷ தீர்த்தம்
    புராண பெயர் : பொன்பதர்க்கூடம்
    ஊர் : பொன்பதர்க்கூடம்

    ஸ்தல வரலாறு:
    ஸ்ரீ ராமபிரானாக மனித வடிவில் அவதரித்த மகாவிஷ்ணு, எடுத்த அவதாரங்களில் குறிப்பிடத்தக்கது, ராம அவதாரம். இந்த அவதாரத்தின் போது தாய் கவுசல்யா, பக்தன் ஆஞ்சநேயர், இலங்கையில் சீதாதேவியின் மீது பரிவு காட்டிய திரிசடை, ராவணனின் மறைவிற்குப் பின்னர், அவனுடைய மனைவி மண்டோதரி ஆகிய நால்வருக்கும், நான்கு திருக்கரங்களுடன் சங்கு-சக்கரம் ஏந்தி மகாவிஷ்ணு திருக் கோலத்தில் காட்சி தந்து அருளினார். இந்த திருக் காட்சியைத் தானும் தரிசிக்க விரும்பிய தேவராஜ மகரிஷி, இத் தலத்தில் மகா விஷ்ணுவை நினைத்துத் தவமியற்றினார். தேவராஜ மகரிஷியின் பக்திக்கு மனமிரங்கிய மகாவிஷ்ணு சங்கு, சக்கரம், அபயம், ஹஸ்தம் என நான்கு திருக்கரங்களுடன் சதுர்புஜ கோதண்டராமராக காட்சி கொடுத்து அருளினார். தான் கண்ட இக்காட்சியை பக்தர்களும் கண்டு மகிழ வேண்டும் என்று மகரிஷி வேண்டிக்கொள்ள, மகாவிஷ்ணு இத்தலத்தில் சதுர்புஜ கோதண்டராமராக எழுந்தருளினார் என்று தல வரலாறு சொல்கிறது. பிற்காலத்தில் இங்கே கோவில் அமைக்கப்பட்டது. இந்த ஆலயம் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
    ஒருசமயம், வைஷ்ணவ ஆசார்ய புருஷர்களில் ஒருவரான சுவாமி தேசிகர் இப்பகுதிக்கு யாத்திரையாக வந்த தருணத்தில் ஒரு கடலை வியாபாரி வீட்டின் திண்ணையில் அவருடைய அனுமதி பெற்று தான் பூஜைக்காக உடன் கொண்டு வந்திருந்த ஹயக்ரீவர் விக்கிரகத்துடன் தங்கினார். அன்றிரவு தன் நிலத்தை ஒரு குதிரை மேய்வதாக கடலை வியாபாரி கனவு கண்டார். மறுநாள் திண்ணையில் குதிரை முகம் மனித உடலுடன் கூடிய ஹயக்ரீவ விக்கிரகத்துடன் அமர்ந்திருந்த தேசிகரிடம் தன் கனவை சொல்லி வியந்தார் வியாபாரி. அவருக்கு ஹயக்ரீவர் அருள் பரிபூர்ணமாக கிடைத்து விட்டதாக கூறினார் தேசிகர். பிறகு தன் நிலத்திற்கு போய் பார்த்த போது குதிரை மேய்ந்ததாக கனவில் கண்ட தன் நிலத்தில் நெற் கதிர்கள் பொன் மணிகளாக விளைந்திருப்பதைக் கண்டு பிரமித்தார். அதிலிருந்து இத்தலம் “பொன் உதிர்ந்த களத்தூர்’ என்று அழைக்கப்பட்டு நாளடைவில் “பொன் விளைந்த களத்தூர்’ என்று மாறியது. இந்த பொன் நெல் மணிகளைத் தூற்றிய போது இவற்றின் பொன் பதர்கள் சுமார் 2 கி.மீ. தொலைவிலுள்ள இடத்தில் போய் விழுந்ததாம். அப்படி பதர் விழுந்த இடமே “பொன் பதர் கூடம்’ என்றாகியது. இங்கு தான் சதுர்புஜ ராமர் கோயில் உள்ளது.
    கோயில் சிறப்புகள்:
    தமிழ்நாட்டில் தொண்டை மண்டலம் பகுதியில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களாக பல திருக்கோயில்கள் விளங்கினாலும் அபிமான தலங்களாகவும் பல கோயில்கள் போற்றப்படுகின்றன. அவைகளில் ஒன்று தான் நான்கு திருக்கரங்களுடன் ஸ்ரீராமன் அருள்பாலிக்கும் பொன்பதர் கூடம்.
    பெரும்பாலான தலங்களில் அருளாட்சி செய்யும் கோதண்டராமர், கையில் வில்-அம்பு வைத்திருப்பார். ஆனால் இந்த ஆலயத்தில் உள்ள கோதண்டராமரின் கரங்களில் வில்- அம்பு இல்லை. அதற்கு பதிலாக சங்கு, சக்கரம் ஏந்தியும், அபயம், ஹஸ்தம் காட்டியும் சீதாதேவியுடன் திருமணக் கோலத்தில் அமர்ந்த நிலையில் காட்சி தருவது வேறு எங்கும் காணக் கிடைக்காத காட்சி என்கிறார்கள்.
    இங்கு சதுர்புஜ ராமர் சங்கு, சக்கரம், கோதண்டம் மற்றும் பாணம் இவைகளை தரித்துக் கொண்டு அருள் பாலித்து வருகிறார். உற்சவ மூர்த்தியும் அதே திருக் கோலத்துடன் ராம காவியத்தில் வர்ணிக்கப்பட்ட வண்ணம் இளைய பெருமாள், சீதாப்பிராட்டி மற்றும் அனுமன் இவர்களோடு சேவை தந்து தம்மை வழிபடுவோருக்கு அனைத்து வரங்களையும் அருளுகின்றார்.
    இத்தலத்து உற்சவமூர்த்தி அபூர்வமான அமைப்பில் அருள்பாலிக்கிறார். விரல், நகம் மற்றும் கைகளில் ரேகைகள் தெரியும்படியாக இந்த உற்சவர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
    மகாவிஷ்ணு கோலத்தில் ராமபிரான் காட்சி தந்த தலம் என்பதால், இத்தல உற்சவரின் திருமார்பில் மகாலட்சுமி அமைந்திருப்பது கூடுதல் விசேஷம்.
    சீதாதேவியைத் திருமணம் செய்யும் முன்னர் ராமபிரான் இடது கால் பெருவிரலால் வில்லின் ஒரு பகுதியை மிதித்து உடைத்தார் என்பதன் அடிப்படையில், இடதுகால் சற்று முன்னே அழுத்திய நிலையில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய கோலத்தில் ராமபிரானை தரிசிப்பது அபூர்வம்.
    ஆஞ்சநேயர் பவ்யமாக அமர்ந்திருக்கும், உற்சவர் கோலத்தினையும் இங்கே காணலாம்.
    தர்மதிஷ்டர் என்னும் மகானுக்கு ஒரு சாபத்தால் சயன ரோகம் ஏற்பட்டது. நிவர்த்தி வேண்டி இத்தலத்தில் ராமபிரானை வழிபட்டார். சுவாமி, அவரது நோயைப் போக்கியருளினார். இந்நிகழ்வின் அடிப்படையில் தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு சுவாமிக்கு துளசி மாலை அணிவித்து, கல்கண்டு படைத்து வேண்டிக் கொள்கிறார்கள்.
    இங்கு இறைவன் புஷ்பக விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.
    லட்சுமி நாராயணர், விஷ்வக்சேனர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர், தேசிகர் ஆகியோர் முன்மண்டபத்தில் அருள்பாலிக்கின்றனர்.
    இந்த ஆலயத்திற்குள், ‘சேஷதீர்த்தம்’ என்ற தீர்த்தக்குளம் உள்ளது. தேவராஜ புஷ்கரணி என்ற தீர்த்தம், ஆலயத்திற்கு வெளியே சற்று தொலைவில் இருக்கிறது.
    கோயிலில் தனிச்சன்னதியில் ஸ்ரீ தர்ப்பஸயன சேதுராமர். ஸயனக்கோலம். திருப்புல்லாணியில் சேவிக்கும் அதே திருக்கோலம். இராமருக்குப் பின்னால் லக்ஷ்மணரும், திருவடிக்கு அருகில் ஸமுத்ரராஜனும், ஆஞ்சநேயரும் நிற்கிறார்கள்.
    பொன் விளைந்த களத்தூரில் அருகருகே இரண்டு கோயில்கள் அமைந்திருக்கிறது. ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் மற்றும் ஸ்ரீகோதண்ட ராமர் திருக்கோயில்.
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோயில். மூலவர் வைகுண்டநாதர். உற்சவர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர். ஆனால் சிங்கமுகம் இல்லை. சாந்தமான ரூபத்தில் சேவை சாதிக்கிறார். இவர் மாமல்லபுரத்தில் இருந்தவராம்.
    ஸ்ரீ நரசிம்மரே விரும்பி வந்து குடிகொண்ட தலம்.
    அந்நிய படையெடுப்பின்போது ஸ்ரீ நரசிம்மரே அசரீரியாக, தன்னை மாமல்லபுரத்திலிருந்து எடுத்துச் செல்லும்படியும், கூடவே பறந்து வரும் கருடன் எங்கே தரை இறங்குகிறதோ, அங்கே தன்னைப் பிரதிஷ்டை செய்யும்படி அருளினாராம். மாமல்லபுரம் ஆலயங்கள் கடலில் மூழ்கிய நிலையில், ஒரு வயோதிகரின் கனவில் நரசிம்மர் தோன்றி சொன்னார் என்றும் சொல்வதுண்டு. தாயார் அஹோபிலவல்லித் தாயார். ராமர், ஹயக்ரீவர், ஆண்டாள், ஆழ்வார்களுக்கும் தனி சன்னதிகள் உள்ளன.
    திருவிழா:
    தைப்பொங்கல் தினத்தன்று இத்தல இறைவனுக்கு, விசேஷ திருமஞ்சனமும், பரிவேட்டை உற்சவமும் நடைபெறும். ராமநவமி, பங்குனி உத்திரம் அன்று திருக்கல்யாணம், திருவாதிரை ஸ்ரீஉடையவர் சாற்றுமுறை, ஸ்ரீராமர் கோடை உற்சவம், நவராத்திரி உற்சவம், அன்னக்கோடி உற்சவம், தனுர்மாத பூஜை, அனுமன் ஜெயந்தி முதலான உற்சவங்கள் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. தினமும் காலை, மாலை என இருகால பூஜைகள் நடைபெறுகின்றன
    திறக்கும் நேரம்:
    காலை 6 மணி முதல் 7 மணி வரை,
    மாலை 5 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும்
    முகவரி:
    அருள்மிகு சதுர்புஜ கோதண்டராமர் கோயில்
    பொன்பதர்கூடம் – 603 405.
    காஞ்சிபுரம் மாவட்டம்..
    போன்: +91- 44 – 2744 1227, 97890 49704
    அமைவிடம்:
    செங்கல்பட்டில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும், திருக்கழுக்குன்றத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும் பொன்பதர்கூடம் என்ற இத்தலம் உள்ளது. செங்கல்பட்டில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் தனியார் பேருந்து ஒன்று, பொன்பதர்கூடம் வழியாக இயக்கப்படுகிறது. தவிர செங்கல்பட்டு மற்றும் திருக்கழுக்குன்றத்தில் இருந்து ஷேர் ஆட்டோ வசதியும் இருக்கிறது.
    மாவட்டம் : காஞ்சிபுரம்

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

    ஸ்ரீ விஷ்ணு தர்மோத்தரத்தில் உள்ள ஸ்ரீமத்‌ அபாமார்ஜந ஸ்தோத்ரம்‌ –

    August 11, 2026

    பாராயணத்திற்குச்‌ சிறந்ததாக ““ஸ்ரீ அபாமார்ஜந ஸ்தோத்ரம்‌” பெரியோர்களால்‌ உகந்து ஏற்றுக் கொள்ளப் பட்டதாம்‌-பலவித ஜ்வரமும்‌ மற்றும்‌ வ்யாதிகளும்‌ துர் தைவ, க்ரஹ. | பீடைகளும்‌ தனித்தனியே பெயரிட்டுக்‌ கூறப்பட்டு, அதன்‌ நிவ்ருத்தி வேண்டிக் கொள்ளப்படுகிறது. ‘ஹிரண்யாக்ஷனைக்‌ | கொன்று பூமிப் பிராட்டியின்‌ துயர்‌ துடைத்த ஸ்ரீ மஹா வராஹரும்‌, தந்தையின்‌ உத்தரவால்‌ நலியும்‌ க்ருத்யையையும்‌ விஷத்தையும்‌ போக்கி ஸ்ரீ ப்ரஹ்லாதாழ்வானை ரக்ஷித்த ஸ்ரீ அழகிய சிங்கரும்‌, இந்த்ரனது செல்வத்தைக்‌ கவர்ந்த மாவலியை வஞ்சித்த ஸ்ரீ வாமநரும்‌, எங்கும்‌. பரந்த, திருமேனியுடன்‌ எல்லாரையும்‌ அணைத்துக்‌ கொண்ட ஸ்ரீ திரிவிக்கிர்மனும்‌, கஜேந்த்ராழ்வான்‌ முதலியவரை ரக்ஷித்த ஸ்ரீ ஸுதார்சநாழ்வானும்‌ நம்மைக்‌ கைவிடமாட்டார்கள்‌ என்றே பரம விச்வாஸத்துடன்‌ இந்த ஸ்ரீ அபாமார்ஐந ஸ்தோத்‌ரத்தைப்‌ பாராயணம்‌ செய்து ஸகல வித வ்யாதிகளும்‌ நீங்கப்‌ பெற்றும்‌, ஸகல க்ஷேமங்களும்‌ கூடப் பெற்றும்‌ நல் வாழ்வு வாழ வேண்டுமென்று ப்ரார்த்திக்கிறோம்‌

    ஸ்ரீ தால்ப்ய உவாச
    பகவந்‌ ப்ராணிநஸ்‌ ஸர்வே விஷ ரோகாத் யுபத்ரவை; |
    துஷ்ட க்ரஹாபி காதைச்‌’ ச ஸர்வ கால-முபத்ருதா –
    ஆபிசாரிக க்ருத்யாபி: ஸ்பர்ச ரோகைச்‌’ ச தாருணை: |
    ஸதா ஸம்பீட்யமாநாஸ்து திஷ்டந்தி முநி ஸத்தம —
    கேந கர்ம விபாகேந விஷ ரோகாத் யுபத்ரவா: |
    ந பவந்தி ந்ருணாம்‌ தந்மே யதாவத்‌ வக்து மர்ஹஸி –

    ஸ்ரீ புலஸ்ய உவாச
    வ்ரதோபவா ஸைர்யைர் விஷ்ணுர் நான்ய ஜென்மநி தோஷித: |
    தே நரா முநி சார்தூல விஷ ரோகாதி பாகிந
    ஆரோக்யம்‌ பரமாம்‌ ருத்திம்‌ மநஸா யத்‌ யதிச்சதி |
    தத் ததாப்நோத்ய ஸந்திக்தம்‌ பரத்ராச்யுத தோஷ க்ருத் –
    நாதீந்‌ ப்ராப்நோதி ந வ்யாதீந்‌ விஷ க்ரஹ நிபந்தநம்‌।
    க்ருத்யா ஸ்பர்ஸ பயம்‌ வாபி ததோஷிதே மது ஸூதநே —
    ஸர்வ து:க சமஸ்தஸ்ய ஸெளம்யாஸ்‌ தஸ்ய ஸதா க்ரஹா; |
    தேவாநாமபி துஷ்ட்யை ஸ யஸ்ய துஷ்டோ ஜநார்தந —
    யஸ் ஸமஸ்‌ ஸர்வ பூதேஷு யதாத்மநி ததா பரே |
    உபவாஸாதி தாநேந தோஷிதே மதுஸூதநே ॥
    தோஷகாஸ்‌ தஸ்ய ஜாயந்தே நரா: பூர்ண மநோ ரதா.।
    அரோகாஸ்‌ ஸுகிநோ போகாந்‌ போக்தாரோ முநி ஸத்தம ॥
    ந தேஷாம்‌ ச’த்ரவோ நைவ ஸ்பர்ஸ ரோகாதி பாகிந;। |
    க்ரஹ ரோகாதிகம்‌ வாபி பாப கார்யம்‌ ந ஜாயதே ||
    அவ்யாஹதாநி க்ருஷ்ணஸ்ய சக்ராதீந் யாயுதாநி ச |
    ரக்ஷந்தி ஸகலாபத்ப்ய, யேந விஷ்ணு ருபாஸித-

    ஸ்ரீ தால்ப்ய உவாச
    அநாராதித கோவிந்தா யே நரா து:க பாகிந:| தேஷாம்‌ து:காபி பூதாநாம்‌ யத்‌ கர்தவ்யம்‌ தயாளுபி –
    பச்‌’யத்பிஸ்‌ ஸர்வ பூதஸ்தம்‌ வாஸுதேவம்‌ மஹாமுநே ।
    ஸமத்ருஷ்டிபிரீ சே’சச’ம்‌ தந் மம ப்ரூஹ்ய சேஷத-

    ஸ்ரீ புலஸ்த்ய உவாச
    ஸ்ரோது காமோஸி வை தால்ப்ய ஸ்ருணுஷ்வ்‌ ஸுஸமாஹித: | அபமார்ஜநகம்‌ வக்ஷயே ந்யாஸ பூர்வ மிதம்‌ பரம் –

    ஓம்‌ நமோ பகவதே வாஸு தேவாய ஸர்வ க்லேசாப ஹந்த்ரே நம –

    அத ந்யாஸ :
    அஸ்ய ஸ்ரீமத்‌ அபாமார்ஜந ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய ஸ்ரீபுலஸ்த்யோ பகவாந்‌ ருஷி:-அநுஷ்டுப் சந்த;- ஸ்ரீவாராஹ நாரஸிம்ஹ வாமந விஷ்ணு ஸுதர்ச’நா தேவதா: ஹராமுகஸ்ய துரிதமிதி பீஜம்‌ | அச்யுதாநந்த கோவிந்தேதி சக்தி:| _ ஜ்வலத் பாவக லோச நேதி கலகம்‌ | வஜ்ராயுத நக ஸ்பர்‌சேதி கவசம்‌ | ஸ்ரீவாராஹ நாரஸிம்ஹ வாமந விஷ்ணு ஸுதர்சந ப்ரஸாத ஸித்யர்த்தே ஜபே விநியோக —

    வராஹாய அங்குஷ்டாப்யாம்‌ நம: | நாரஸிம்ஹாய தர்ஜநீப்யாம்‌ ஸ்வாஹா | வாமநாய மத்யமாபயாம்‌ வஷட்‌ | விஷ்ணவே அநாமிகாப்யாம்ஹும்‌ |ஸூதர்சநாய கநிஷ்டிகாப்யாம்‌ வெளஷட்‌ | பாஞ்சஜந்யாய கரதல கர ப்ருஷ்டாப்யாம்‌ பட்‌ நம, | இதி கர ந்யாஸ: ॥

    அத அங்க ந்யாஸ:

    வராஹ நரஸிம்ஹாய வாமநாய மஹாத்மநே | ஜ்ஞாநாய ஹ்ருதயாய நம: (மார்பில்‌)
    நம: கமல கிஞ்ஜல்க பீத நிர்மல வாஸஸே-— ஐஸ்வர்யாய சிரஸே ஸ்வாஹா (தலையில்‌)
    நம: புஷ்கர நேத்ராய கேச’வாயாதி சக்ரிணே, சக்த்யை சி’காயை வஷட்‌ (சிகையில்‌)
    தாமோதராய தேவாய அநந்தாய மஹாத்மநே , பலாய கவசாய ஹும்‌ (கவசம் போல்‌ இரு புறத்தில்‌)
    காச்‌’யபாயாதி ஹ்ரஸ்வாய ருக் யஜுஸ் ஸாம மூர்த்தயே தேஜஸே நேத்ராப்யாம்‌ வெளஷட்‌ (கண்களில்‌)
    ஓம் நம: பரமார்த்தாய. புருஷாய மஹாத்மநே ॥ வீர்யாய அஸ்த்ராய பட்‌ (இரு கையைத் தட்ட)
    ஓம்‌ பூர்‌ புவஸ் ஸூவரோம்‌ இதி திக்பந்த: | (எட்டு திக்கில்‌ வலமாகச்‌ சொடக்கவும் )

    த்யானம்
    அத த்யாநம்‌ ப்ரவக்ஷ்யாமி ஸர்வ பாப ப்ரணாச நம்‌|
    வராஹ ரூபிணம்‌ தேவம்‌ ஸம்ஸ்மரந்‌ அர்ச்சயேத்‌ ஜபேத்
    ஜலெளகதாம்‌ ந: ஸசராசரா தரா விஷாண கோட்யா கில விச்‌’வரூபிணா |
    ஸமுத் த்ருதா யேந வராஹ ரூபிணா ஸ மே ஸ்வயம்பூர்‌ பகவாந்‌ ப்ரஸீதது ॥

    சஞ்சத்‌ சந்த்ரார்க தம்ஷ்ட்ரம்‌ ஸ்புரதுரு ரதநம்‌ விதயுதுத்யோத ஜிஹ்வம்‌
    கர்ஜத்‌ பர்ஜந்ய நாதம்‌ ஸ்புரித ரவி ருசிம்‌ சஷுர ஷூத்ர ரெளத்ரம்‌ |
    த்ரஸ்தாசா’ ஹஸ்தியூதம்‌ ஜ்வலதநல ஸடா கேஸரோத் பாஸமாநம்‌
    ரஷோ ரக்தாபிஷிக்தம்‌ ப்ரஹரதி துரிதம்‌ த்யாயதாம்‌ நாரஸிம்ஹம்

    அதிவிபுல ஸுகாத்ரம்‌ ருக்ம பாத்ரஸ்த மந்நம்‌
    ஸலலித ததிகணடம்‌ பாணிநா தக்ஷிணே ந।
    கலச’ம்‌ அம்ருத பூர்ணம்‌ வாம ஹஸ்தே ததாநம்‌
    தரதி ஸகல து:கம்‌ வாமநம்‌ பாவயேத ய: —

    விஷ்ணும்‌ பாஸ்வத்‌ கிரீடாங்கத வலயகளா கலப ஹாரோஜ்‌ ஜ்வலாங்கம்‌
    ஸ்ரோணீ பூஷா ஸுவக்ஷோ மணி மகுட மஹா குணடலைர்‌ மண்டி தாங்கம்‌ | ஹஸ்தோதயத்‌-சங்க சக்ராம்புஜ கத மமலம்‌ பீத கெளசே’ய மாசா”
    வித்யோதத-பாஸ முத்யஜ்‌ திநகர ஸத்ருச’ம்‌ பத்ம ஸம்ஸ்தம்‌ நமாமி ॥

    கல்பாந்தார்க ப்ரகாசம்‌ த்ரி புவந- ‘ மகிலம்‌ தேஜஸா பூரயந்தம்‌
    ரக்தாக்ஷம்‌ பிங்ககேசம்‌ ரிபுகுலதமநம்‌ பீம-தம்ஷ்ட்ராட்ட ஹாஸம்‌ |
    சங்கம்‌ சக்ரம்‌ கதாப்ஐம்‌ ப்ருதுதர முஸலம்‌ சூல பாச’ங்குசாக்நீந்
    பிப்ராணம்‌ தோர்பிராத்யம்‌ மநஸி முரரிபும்‌ பாவயே சக்ர ஸம்ஜ்ஞம்‌ ||

    ஓம்‌ நம: பரமார்த்தாய புருஷாய மஹாத்மநே |
    அரூப பஹு ரூபாய வ்யாபிநே பரமாத்மநே

    நிஷ் கல்மஷாய சு’த்தாய த்யாந யோக ரதாய ச |
    நமஸ்க்ருத்ய ப்ரவஹ்யாமி யத்ர ஸித்யது மே வச –

    நாராயணாய ஸூத்தாய விச்வேசா யேஸ்வராய ச |
    அச்யுதாநந்த கோவிந்த பத்ம நாபாய ஸெளஹ்ருதே —

    ஹ்ருஷீகேசாய கூர்மாய மாதவா யாச்யுதாய ச |
    தாமோதராய தேவாய அநந்தாய மஹாத்மநே ॥

    ஐநார்தநாய க்ருஷ்ணாய உபேந்த்ர ஸ்ரீதராய்‌ ச |
    த்ரிவிக்ரமாய ராமாய வைகுண்டாய ஹராய ச |!
    பிரத்யும்நா யாநிருத்தாய புருஷோத்தம தே நம: |
    யோகீஸ்வராய குஹ்யாய கூடாய பரமாத்மநே ॥
    பச்த ப்ரியாய தேவாய விஷ்வக்ஸேநாய சார்ங்கிணே।
    அதோக்ஷஜாய தஷாய மத்ஸ்யாய மது ஹாரிணே–

    வராஹாய ந்ருஸிம்‌ஹாய வாமநாய மஹாத்மநே |
    வராஹேச’ ந்ருஸிம்ஹேச” வாமநேச: த்ரி விக்ரம-
    ஹயக்ரீவேச ஸர்வேச ஹ்ருஷீகேச ஹராசு:பம்‌ |
    அபராஜித சக்ராத்யை: சதுர்பி: பரமாத்புதை:
    அகண்டிதா நுபாவைஸ்த்வம்‌ ஸர்வ துஷ்ட ஹரோ பவ।
    ஹரா முகஸ்ய துரிதம் துஷ்க்ருதம் துருபோஷிதம்
    ம்ருத்யு பந்தார்த்திபயதம்‌ அரிஷ்டஸ்ய ச யத்பலம்‌ |
    பரமத்வாந ஸஹிதம்‌ ப்ரயுக்தம்‌ சாபிசாரிகம் –

    கர ஸ்பர்ச” மஹா ரோகாந்‌ ப்ரயுக்காந்‌ த்வரயா ஹர |
    ஓம்‌ நமோ வாஸுதேவாய நம: க்ருஷ்ணாய சார்ங்கிணே–
    நம: புஷ்கர நேத்ராய கேச’வாயாதி சக்ரிணே |
    நம: கமல கிஞ்ஜல்க பீத நிர்மல வாஸஸே ||
    மஹாஹவ ரிபுஸ்கந்த கருஷ்ட சக்ராய சக்ரிணே |
    தம்ஷ்ட்ராக்ரேண க்ஷிதி த்ருதே த்ரயீ மூர்த்தி மதே நம: ॥
    மஹா யஜ்ஞ வராஹாய சேஷ போகோப சாயிநே |
    தப்தஹாடக கேசாந்த ஜ்வலத்பாவக லோசந ॥

    வஜ்ராயுத நகஸ்பர்ச” திவ்ய ஸிம்ஹ நமோஸ்து தே |
    காச்‌’யபாயாதி ஹ்ரஸ்வாய ருக் யஜுஸ் ஸாம மூர்த்தயே
    துப்யம்‌ வாமந ரூபாய க்ரமதே காம்‌ நமோ நம; |
    வராஹா சேஷ துஷ்டாநி ஸர்வ பாப பலாநி வை ||
    மர்த மர்த மஹா தம்ஷ்ட்ர மர்த மர்த ச தத் பலம்‌ |
    நரஸிம்ஹ கராளாஸ்ய தந்த ப்ராந்தோஜ் ஜ்வலாநந —

    பஞ்ஜ்‌ பஞ்ஜ நிநாதேந துஷ்டாந்யஸ் யார்த்தி நாஸந |
    ருக் யஜுஸ் ஸாம ரூபாபிஃ வாக்பிர்‌ வாமந ரூப த்ருக்‌ |
    ப்ரசமம்‌ ஸர்வ துஷ்டாநாம்‌ நயத்வஸ்ய ஐநார்தந:।
    கெளபேரம்‌ தே முகம்‌ ராத்ரெள ரெளத்ரம்‌ . ்‌ ஸெளம்யம்‌ முகம்‌ திவா ॥ .
    ஜ்வராந்‌ ம்ருத்யு பயம்‌ கோரம்‌ விஷம்‌ நாச’யதே ஜ்வரம்‌ |
    த்ரிபாத் பஸ்ம ப்ரஹரண: த்ரிசிரா ரக்த லோசந: |
    ஸ மே ப்ரீதஸ்‌ ஸுகம்‌ தத்யாத்‌ ஸர்வாமய பதிர் ஜ்வர –

    ஆத்யந்தவந்த: கவய: புராணா; ஸந் மார்க வந்தோ ஹ்யநுசாஸிதார; |
    ஸர்வ ஜ்வராந்‌ க்நந்து மமா நிருத்த ப்ரத்யும்‌ந ஸங்கர்ஷண வாஸு தேவா. || ஐகாஹிகம்‌ த்வ்யாஹிகம்‌ ச ததா த்ரி திவஸ ஜ்வரம்‌ |
    சாதுர்த்திகம்‌ ததாத் யுக்ரம்‌ ததைவ ஸதத ஜ்வரம்‌ ||
    தோஷோத்தம்‌ ஸந்‌நிபா தோத்தம்‌ ததைவாகந்துகம்‌ ஜ்வரம்‌|
    சமம்‌ நயாசு கோவிந்த சிந்த்திச்‌ சிந்த்யஸ்ய வேதநாம் –

    நேத்ர்து;கம்‌ சி’ரோது;கம்‌ து;கம்‌ சோதர ஸம்பவம்‌ |
    அதிச்‌’வாஸ மநுச்ச்வாஸம்‌ பரிதாபம்‌ ஸவேபதும்‌ ||
    குதக்ராணாங்க்ரி ரோகாம்ச்‌’ ச குக்ஷி ரோகம்‌ ததா க்ஷயம்‌|
    காமாலாதீந்‌ ததா ரோகாந்‌ ப்ரமே ஹாம்ச்‌’ சாதி தாருணாந்‌ |
    பகந்தராதி ஸாராம்ச்‌’ச முக ரோகாம் ஸவல்குளிம்‌ |
    அச்‌’மரீ மூத்ர க்ருச்ச்ரம்‌ ச ரோகா நந்யாம்ச்‌’ ச தாருணாந்‌ |
    யே வாத ப்ரபவா ரோகா; யே ச பித்த ஸமுத்பவா; |
    கபோத் பவாச்‌’ச யே ரேகா; யே சாந்யே ஸாந்நி பாதிகா —

    ஆகந்துகாச்‌’ச யே ரோகா; லூதாதி ஸ்போடகாதய: |
    ஸர்வே தே ப்ரசமம்‌ யாந்து வாஸூ தேவாபமார்ஐநாத்‌ ||
    விலயம்‌ யாந்து தே ஸர்வே விஷ்ணோ ருச்சாரணேந ச |
    க்ஷயம்‌ கச்சநது சாசேஷா; சக்ரேணாபி ஹதா ஹரே: ॥
    அச்யுதாநந்த கோவிந்த விஷ்ணோ நாராயணாம்ருத |
    ரோகாந்‌ மே நாச’யாசேஷாந ஆசு: தந்வந்தரே ஹரே ॥
    ௮ச்யுதாநந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத்‌ |
    நச்‌’யநதி ஸகலா ரோகா; ஸத்யம் ஸத்யம்‌ வதாமயஹம்

    ஸத்யம் ஸத்யம்‌ புநஸ் ஸத்யம்‌ உத்த்ருத்ய புஜமுச்யதே |
    வேதாச் சாஸ்த்ரம் பரம்‌ நாஸ்தி நதைவம்‌ கேசவாத் பரம்‌ ॥
    ஸ்தாவரம்‌ ஜங்கமம்‌ சாபி க்ருத்ரிமம்‌ சாபி யத்விஷம்‌ |
    தநதோத்பவம்‌ நகோத்பூதம்‌. ஆகாஸ ப்ரபவம்‌ விஷம்‌ |
    லூதாதிஸ் போடகம்‌ சைவ விஷமத் யந்த துஸ் ஸஹம்‌ |
    சமம்‌ நயது தத் ஸர்வம்‌ கீர்த்தி தோஸ்ய ஜநார்தந 😐
    க்ரஹாந்‌ ப்ரேத க்ரஹாந்‌ சைவ ததா வைநாயிக க்ரஹாந்‌ |
    வேதாளாம்ச்‌’ ச பிசாசாம்ச்‌’ ச கந்தர்வாந்‌ யஷ ராக்ஷஸாந் –
    சாகிநீபூத நாத்யாம்ச்‌’ ச ததா வைநாயிக க்ரஹாந்‌ |
    முக மண்டலிகாந்‌ க்ரூராந ரேவதீந் வ்ருத்த ரேவதீந்‌ ||
    வ்ருச்‌’சிகாக்யாந்‌ க்ரஹாந்‌ சோக்ராந்‌ ததா மாத்ரு கணாநபி |
    பாலஸ்ய விஷ்ணோச்‌’சரிதம்‌ ஹந்து பால க்ரஹாநி மாந ॥|
    வ்ருத்தாநாம்‌ யே க்ரஹா: கேசித்‌ யேச பால க்ரஹா: க்வசித்‌।
    நரஸிம்ஹஸ்ய: தே த்ருஷ்ட்யா தக்தா யே சாபி யெளவநே —

    ஸடா கராள வதநோ நரஸிம்ஹோ மஹா பல: | க்ரஹாந சேஷாந் நிச்‌சேஷாந கரோது ஜகதோ ஹித:
    நர ஸிம்ஹ மஹா ஸிம்ஹ ஜ்வாலா மாலோஜ் ஜ்வலாநந |
    க்ரஹாந சே’ஷாந்‌ ஸர்வேஷாம்‌ காதகாதாக நிலோசந
    யே ரோகா யே மஹோத்பாதா யத் விஷம்‌ யே மஹோரகா: |
    யாநி ச க்ரூர பூதாநி க்ரஹ பீடாச்‌’ ச தாருணா-

    சஸ்த்ரஷதே ச யே தோஷா: ஜ்வாலா கர்தமகாதய: |
    யாநி சாந்யாநி துஷ்டாநி ப்ராணி பீடா கராணி ச ॥
    தாநி ஸர்வாணி ஸர்வாத்மந்‌ பரமாத்மந்‌ ஜநார்தந |
    கிஞ்சித் ரூபம்‌ ஸமாஸ்தாய வாஸு தேவாஸ்ய நாசய ||
    க்ஷிப்த்வா ஸுதர்சநம்‌ சக்ரம்‌ ஜ்வாலா மாலாதி பூஷணம்‌ |
    ஸர்வ துஷ்டோபச’ மநம்‌ குரு தேவவராச்யுத ॥.
    ஸுதர்ச’ந மஹா சக்ர கோவிந்தஸ்ய கராயுத |
    தீஷ்ண பாவக ஸங்காச’ கோடி ஸூர்ய ஸமப்ரப |
    த்ரைலோக்ய கர்தா த்வம்‌ துஷ்ட த்ருப்த தாநவதாரண |
    தீஷ்ண தார மஹா வேக சிநதி சிந்தி மஹாஜ்வரம்‌ ॥

    சிந்தி பாதம்‌ ச லூதம் ச சிந்தி கோரம்‌ மஹத்பயம்‌ |
    க்ருமிம்‌ தாஹம்‌ ச சூலம்‌ ச விஷ ஜ்வாலாம்‌ ச கர்தமாந்‌ ||
    ஸர்வதுஷ்டாநி ரஷாம்ஸி க்ஷபயாரி விபீஷண |
    ப்ராச்யாம்‌ ப்ரதீச்யாம்‌ திசிச தக்ஷிணோத்தர யோஸ்ததா ॥
    ரக்ஷாம்‌ கரோது பகவாந்‌ பஹு ரூபீ ஜநார்தந: |
    பரமாத்மா யதா விஷ்ணு: வேதாந்தேஷ் வபிதீயதே ||
    தேந ஸத்யேந ஸகலம்‌ துஷ்டமஸ்ய ப்ரசாம்யது |:
    யதா விஷ்ணுர்‌ ஜகத் ஸர்வம்‌ ஸதேவாஸாுர மாநுஷம் —

    தேந ஸத்யேந ஸகலம்‌ துஷ்டமஸ்ய ப்ரசாம்யது |
    யதா விஷ்ணெள ஸ்ம்ருத ஸத்ய: ஸம்க்ஷயம்‌ யாந்தி த பாதகா: |.
    தேந ஸத்யேந ஸகலம்‌ துஷ்ட மஸ்ய ப்ரசாம்யது |
    யதா யஜஞோச்‌’வரோ விஷ்ணு: வேதாந்தேஷ் வபிதீயதே ॥
    தேந ஸத்யேந ஸகலம்‌ யந்மயோக்தம்‌ ததாஸ்து தத்‌ |
    சாந்திரஸ்து சிவம்‌ சாஸ்து ஹ்ருஷீகேச”ஸ்ய கீர்த்தநாத் –

    வாஸுதேவ சரீரோத்தை: குசை’ஸ் ஸம் மார்ஜிதம்‌ மயா |
    அபாமார்ஜது கோவிந்தோ நரோ நாராயணஸ்‌ ததா |
    மமாஸ்து ஸர்வ து:காநாம்‌ ப்ரசமோ யாசநாத்‌ ஹரே! |
    சாந்தாஸ் ஸமஸ்தா ரோகாஸ்தே க்ரஹாஸ்‌ ஸர்வ விஷாணி ச
    பூதாநி ச ப்ரசாம்யந்து ஸம்ஸ்ம்ருதே மதுஸூதநே |
    ஏதத்‌ ஸமஸ்த ரோகேஷு பூத க்ரஹ பயேஷு ச ॥
    அபாமார்ஜநகம்‌ சஸ்த்ரம்‌ விஷ்ணு நாமாபி மந்த்ரிதம் –

    ஏதே குசா விஷ்ணு ச:ரீர ஸம்பவா!:
    ஐநார்தநோ அஹம்‌ ஸ்வயமேவ சாகத: | ஹதம்‌ மயா துஷ்டமசேஷ மஸ்ய
    ஸ்வஸ்தோ பவத்வேஷ யதா வசோ ஹரே: |
    ‘சாந்திரஸ்து சிவம்‌ சாஸ்து ப்ரணச்‌:ய த்வ ஸுகம் சயத்‌ |
    ஸ்வாஸ் த்யமஸ்து சிவம்‌ சாஸ்து துஷ்டமல்ய ப்ரசாம்யது ||
    யதஸ்ய துரிதம்‌ கிஞ்சித்‌ தத் க்ஷிப்தம்‌ லவணார்ணவே |
    ஸ்வாஸ்த்ய மஸ்து சி’வம்‌ சாஸ்து ஹ்ருஷீ கேச’ஸ்ய கீர்த்தநாத் –

    ஏதத்‌ ரோகாதி பீடாஸு ஐந்தூநாம்‌ ஹித மிச்சதா |
    விஷ்ணு பக்தேந கர்தவ்யம்‌ அபாமார் ஜநகம்‌ பரம்‌ |
    அநேந ஸர்வ துஷ்டாநி ப்ரசமம்‌ யாந்த்ய ஸம்‌சய: |
    ஸர்வ பூத ஹிதார்த்தாய குர்யாத் தஸ்மாத்‌ ஸதைவ ஹி ||
    குர்யாத் தஸ்மாத்‌ ஸதைவ ஹ்யோம்‌ நம இதி |
    இதம்‌ ஸ்தோத்ரம்‌ பரம்‌ புண்யம்‌ ஸர்வ வ்யாதி விநாசநம்‌ |
    விநாசாய ச ரோகாணாம்‌ அப ம்ருத்யு ஐயாயச |
    இதம்‌ ஸ்தோத்ரம்‌ ஜபேத்‌ சாந்த: குசை’ஸ் ஸம்மார்ஜயேத்‌ சுசி; ||
    வ்யாத் யபஸ்மார குஷ்டாதி பிசா சோரக ராக்ஷஸா: |
    தஸ்ய பார்ச்‌வம்‌ ந கச்சந்தி ஸ்தோத்ர மேதத்து ய: படேத்‌।
    வாராஹம்‌ நார ஸிம்ஹம்‌ ச வாமநம்‌ விஷ்ணு மேவ ச |
    ஸ்மரந்‌ ஜபேதிதம்‌ ஸ்தோத்ரம்‌ ஸர்வ து:கோப சாந்தயே ॥

    இதி ஸ்ரீ விஷ்ணு தர்மோத்தர புராணே தால்ப்ய புலஸ்த்யஃ ஸம்வாதே அபாமார்ஜந ஸ்தோத்ரம்‌ ஸம்பூர்ணம் –

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

    ஸ்ரீ விஷ்ணு விஜய ஸ்தோத்திரம்-

    August 10, 2026

    தேவா ஊச:
    ததா: ஸ்ம விஷ்ணும்‌ ஐகதாதி பூதம்‌ ஸுரா ஸுரரேந்த்ரம்‌ ஜகதாம்‌ ப்ரபாலகம்‌ | யந்நாபி-பத்மாத்‌ கில பத்ம யோநி: பபூவ தம்‌ வை சரணம்‌ கதா: ஸ்ம: ॥–1-

    நமோ நமோ மத்ஸ்ய-வபுர்த்தராய நமோஸ்து தே கச்சப ரூப-தாரிணே |
    நம: ப்ரகுர்மச்‌’ ச ந்ருஸிம்ஹ ரூபிணே ததா புநர்‌ வாமந ரூபிணே நம; ||–2-

    நமோஸ்து தே க்ஷத்ர விநாச: நாய ராமாய ராமாய தசாஸ்ய நாசிநே |
    ப்ரலம்ப ஹந்த்ரே சிதிவாஸஸே நமோ நமோஸ்து புத்தாய ச தைத்ய மோஹிநே–3–

    ம்லேச்சாந்த காயாபி ச கல்கி நாம்நே நம: புந: க்ரோட வபுர்த்தராய |
    ஜகத்திதார்த்தம்‌ ச யுகே யுகே பவாந்‌ பிபர்த்தி ரூபம்‌ த்வ ஸுராபவாய ॥–4-

    நிஷூதி தோயம்‌ ஹ்யதுநா கில த்வயா தைத்யோ ஹிரண்யாக்ஷ இதி ப்ரகல்ப: |
    யச்‌ சேந்த்ர முக்யாந்‌ கில லோக பாலாந்‌ ஸம் ஹேலயா சைவ திரச்‌’சகார | –
    -5-

    ஸ வை த்வயா தேவ ஹிதார்த்த மேவ நிபாதிதோ தேவவர ப்ரஸீத |
    த்வமஸ்ய விஸ்வஸ்ய விஸர்க கர்த்தா ப்ராஹ்மேண ரூபேண ச தேவ தேவ ||-
    -6-

    பாதா த்வமேவாஸ்ய யுகே யுகே ச ரூபாணி தத்ஸே ஸு மநோ ஹராணி |
    த்வமேவ காலாக்நி ஹரச்‌ச பூத்வா விஸ்வம்‌ க்ஷயம்‌ நேஷ்யஸி சாந்த காலே-
    -7-

    அதோ பவாநேவச விஸ்வகாரணம்‌ ந தே பரம்‌ ஜீவ-மஜீவமேவ |
    யத்கிஞ்ச பூதம்‌ ச பவிஷ்ய ரூபம்‌ ப்ரவர்த்தமாநம்‌ ச தவைவ ரூபம்‌ ॥-8-

    ஸர்வம்‌ த்வமேவாஸி சராசராக்யம்‌ ந பாதி விஸ்வம்‌ த்வத்ருதே ச கிஞ்சித்‌ |
    அஸ்தீதி நாஸ்தீதி ச பேத-நிஷ்ட்டம்‌-த்வய்யேவ பாதம்‌ ஸதஸத்‌ ஸ்வரூபம்‌ ॥–9-

    ததோ பவந்தம்‌ கதமோபி தேவ ந ஜ்ஞாது மர்ஹ-த்யவிபக்வ-புத்தி: |
    ருதே பவத்‌-பாத-பராயணம்‌ ஜநம்‌ தே நாகதா; ஸ்ம: சரணம்‌ சரண்யம்‌ ॥–10-

    வ்யாஸ உவாச
    ததோ விஷ்ணு; ப்ரஸந்நாத்மர உவாச த்ரிதிவெளகல: | |
    துஷ்டோஸ்மி தேவா பத்ரம்‌ வோ யுஷ்மத்‌-ஸ்தோத்ரேண ஸாம்ப்ரதம் –11-

    பல ஸ்ருதி
    ய இதம்‌ ப்ரபடேத்‌ பக்த்யா விஜய ஸ்தோத்ர மாதராத்‌ ॥
    ந தஸ்ய துர்லபம்‌ தேவா; த்ரிஷு லோகேஷு கிஞ்சந —
    12-

    கவாம்‌ சத ஸஹஸ்ரஸ்ய ஸம்யக்‌ தத் தஸ்ய யத் பலம்‌ |
    தத் பலம்‌ ஸமவாப்நோதி கீர்த்தந-ஸ்ரவணாந்‌ நர: |॥ –
    -13-

    ஸர்வ காம ப்ரதம்‌ நித்யம்‌ தேவ தேவஸ்ய கீர்த்தநம்‌ |
    அத: பரம்‌ மஹா ஜ்ஞாநம்‌ ந பூதம்‌ ந பவிஷ்யதி–14–

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

    ஸ்ரீ மாங்கள்ய வ்ருத்தி ஸ்தவ ஸ்தோத்ரம் -ஸ்ரீ தால்ப்யர் ஸ்ரீ புலஸ்ய மஹ ரிஷி ஸம்வாதம்–ஸ்ரீ விஷ்ணு தர்மம்–

    August 10, 2026

    கார்யாரம்பேஷு ஸர்வேஷு து:ஸ்வப்நேஷு ச ஸத்தம |
    அமங்கள்யேஷு த்ருஷ்டேஷு யஜ் ஜப்தவ்யம்‌ ததுச்யதாம்‌ ॥
    யே நாரம்பாச்‌’ச ஸித்த்யந்தி து:ஸ்வப்நச்‌’சோப சாந்தயே |
    அமங்களாநாம்‌ த்ருஷ்டாநாம்‌ பரிஹாரச்‌’ச ஜாயதே ||-
    1-2-

    தால்ப்யர் கூறுகிறார்‌: ‘ ப்ரஹ்மத்தை உணர்ந்தவருள் பெரியோரே, கார்யங்களை ஆரம்பிக்கும்‌ போதும்‌, துஸ்வப்நமேோ அமங்களமோ நேரும் போதும்‌ எதனை ஜபிக்க வேண்டும்‌? அறிவுறை எங்கட்கு வழங்கப்பட வேண்டும்‌. துவங்கிய கார்யங்கள்‌ இனிது திறைவேறுவது எதனால்‌ 2? கெட்ட கனவு பலனற்றுப்‌ போவதும்‌ எதனால்‌ ? யாம்‌ காணும்‌ அசுபங்களுக்குப்‌ பரிஹாரம்‌ உண்டாவதும்‌ எதனால்‌ ?

    ஸ்ரீ புலஸ்த்ய:–

    ஜநார்தநம்‌ பூத பதிம்‌ ஜகத் குரும்‌ ஸ்மரந்‌ மநுஷ்யஸ்‌ ஸததம்‌ மஹாமுநே | துஷ்டாந் யசே’ஷாண் யபஹந்தி ஸாதயதி அசேஷா கார்யாணி ச யாந்ய பீப்ஸதி-3-

    புலஸ்தியர்‌ மொழிவது :- மா முனிவரே, பிறவியை நீக்க வல்லவரும்‌, உலகில்‌ உள்ள பொருள்‌ எல்லாவற்றிற்கும்‌ சொந்தக்‌காரரும்‌, உலகிலேயே மிக உயர்ந்தவருமான எம்பெருமானைத் தியானித்துக்‌ கொண்டிருக்கும்‌ மனிதன்‌ தீயனவெல்லாம்‌ போக்கிக்‌ கொண்டு, தான்‌ விரும்பும்‌ எல்லாச் செயல்களையும்‌ நற் பயனளிக்கும்‌ படி ஸாதித்துக்‌ கொள்ளுகிறான்

    ச்‌’ருணுஷ்வ சாந்யத்‌ கததோ மமாகிலம்‌ வதாமி யத்தே த்விஜ வர்ய மங்களம்‌ |
    ஸர்வார்த்த ஸித்திம்‌ ப்ரததாதி யத்‌ ஸதா நிஹந்த்யசே’ஷாணி ச பாதகாநி ॥|-4-

    அந்தணர்‌ பெருமானே, எது உமக்குச்‌ சுபமோ, எது வேண்டிய பலன் யாவும்‌ கைகூடும்படி செய்ய வல்லதோ, எது தீவினை யாவற்றையும்‌ ஒழிக்க வல்லதோ அத்தகைய ஸ்துதியை உமக்குக்‌ கூறுகிறேன்‌. அதை முழுவதும்‌ கேட்பீராக

    ப்ரதிஷ்டிதம்‌ யத்ர ஜகத்‌ சராசரம்‌ ஜகத் த்ரயே யோ ஜகதச்‌’ ச ஹேது: |
    ஜகத்‌ ச பாத்யத்தி ச யஸ்ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ||
    -5-

    மூவுலகிலும்‌ யார்‌ ஜங்கம ஸ்தாவர ரூபமான உலதற்குக்‌ காரணமானவரோ, யாரிடத்தில்‌ இது நிலைத்துக்‌ கீழே விழாது தாங்கப்பட்டு நிற்கிறதோ, இவ் வுலகை யார்‌ ரஷிக்கிறாரோ,.(ப்ரளய காலத்தில்‌) யார்‌ இதனை உணவைப் போல்‌ தம்முள்‌ ஒடுங்கும்‌ படி செய்கிறாரோ, ஸர்வ பாபங்களையும்‌ போக்கும்‌ அந்தத்‌ திருமால்‌ “எனக்கு மங்களங்கள்‌ பொங்கிப்‌ பெருக அருள்வாராக –

    வ்யோமாம்பு வாய்வக்நி மஹீஸ்வ ரூபை: விஸ்தாரவாந்‌ யோ அணுதரோ அணுபாவாத்‌ |
    அஸ்தூல ஸூக்ஷ்மஸ்‌ ஸததம்‌ பரேஸ்வரோ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: –6-

    வான்‌, வாயு, தீ, நீர்‌, பூமி எனும்‌ இவ்வுருவுகளால்‌ தம்மைப்‌ பெருக்கிக்‌ கொண்டவரும்‌, சிறிய பொருட்களிலும்‌ சிறியவரும்‌, சிறிது, பெரிதென்றளவுள்ள பொருட்களைக்‌ காட்டிலும்‌ முற்றிலும்‌ வேறான்‌ தன்மை யுள்ளவருமான ஹரி எக் காலத்திலும்‌ எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள்வாராக-

    யஸ்மாத்‌ பரஸ்மாத்‌ புருஷா தநந்தாத்‌ அநாதிமத்யா ததிகம்‌ ந கிஞ்சித்‌ |
    ஸ ஹேது ஹேது: பரமேஸ்வரேஸ்வரோ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ||–7-

    காலத்தாலும்‌, இடத்தாலும்‌, குணங்களாலும்‌ அளப்பரியதானவரும்‌, பிறப்பும்‌ இறுதியுமற்றவரும்‌, தம்மிலும்‌ உயர்ந்த ஒருவரைக்‌ கிடையாதவரும்‌, படைப்போரையும்கூட. படைப்பவராகவும்‌, தேவர்க்கும்‌ தேவனாகவும்‌ உள்ள ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள்வாராக.

    ஹிரண்ய கர்ப்பாச்யுத ருத்ர ரூபீ ்‌ ஸ்ருஜத்யசே”ஷம்‌ பரிபாதி ஹந்தி |
    குணாக்ரணீர்‌ யோ பகவாந்‌ ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி; ||-8-

    நான்முகனுக்கு அந்‌தராத்மாவாயிருந்து உலகத்தைப்‌ படைத்‌தும்‌, தானே நேரில்‌ அச்சுதனாய்த்‌ தோன்றி அதை ரஷித்தும்‌, ருத்ரனுக்கு ஆத்மாவாய்‌ நின்று இதனை அழித்தும்‌ வருகிறவரும்‌, குணசாலிகளுள்‌ முதல்வரும்‌, நன் ஞானம்‌, படைக்கப்படும்‌ பொருளாக ஆகும்‌ ஆற்றல்‌, அனைத்தையும்‌ தாங்கும்‌ வலிமை, இதில்‌ ஆயாஸமின்மை, பிறரைத்‌ தம்‌ இஷ்டப்படி இயங்கும்படிச்‌ செய்யா வல்ல மிடுக்கு, ஸூர்ய வெளிச்சத்தில்‌ விளக்குப் போல்‌ . பிற பொருளை யில்லை யாக்கவல்ல பேரொளி இவை யாவும்‌ உடையவரும்‌, தோஷம்‌ சிறிதுமில்லாதவருமான ஹரி எனக்குச்‌ சுபங்களே பெருக அருள் பாலிப்பாராக

    பரஸ்‌ ஸுராணாம்‌ பரமோ அஸுராணாம்‌ பரோ யதீநாம்‌ பரமோ முநீநாம்‌ |
    பரஸ்‌ ஸமஸ்தஸ்ய ச யஸ்‌ ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ||
    -9-

    தேவர்க்கும்‌, : அஸுரர்க்கும்‌, துறவிகட்கும்‌, முனிவர்க்கும்‌, எல்லாவற்றிற்குமே மிகமிக உயர்ந்தவரான ஹரி எனக்கு மங்களங்‌கள்‌ பெருக அருள வேண்டும் –

    த்யாதோ முநீநா மபகல்மஷைர்‌ யோ ததாதி முக்திம்‌ பரமேஸ்வரேஸ்வர : |
    மநோபிராம: புருஷஸ்‌ ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ॥-10-

    எல்லாக் காலத்திலும்‌ தன்னையே நினைத்திருப்பவர்களின்‌, குற்று மற்ற உள்ளங்களால்‌ சிந்தனை செய்யப்பட்டு, அவர்க்கு முக்தி யளிப்‌ யவராயும்‌, மனதைக்‌ கவரும்‌ அழகுடையவராயும்‌ எல்லா பலனையும்‌ தர வல்லவராயும்‌ இருக்கும்‌ ஹரி எனக்கு மங்களங்கள்‌ வ்ருத்தி யாக அநுக்ரஹம்‌ செய்வாராக–

    ஸுரேந்த்ர-வைவஸ்வத-வித்தபாம்‌ புப ஸ்வரூப ரூபீ பரிபாதி யோ ஜகத்‌ |
    ஸ ஸூத்த ஸூத்த: பரமேஸ்வரேஸ்வர: மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ॥–11-

    தேவேந்த்ரன்‌, இயமன்‌, வருணன்‌, குபேரன்‌ என்பவரைத்‌ தம்‌ உடலாகக்‌ கொண்டு யார்‌ உலகைப்‌ பரிபாலிக்கிறாரோ, தூய பொருட்கும்‌ தூய்மை யளிக்கும்‌ அந்த ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள்வாராக.

    யந்நாம-ஸங்கீர்த்தநதோ விமுச்யதே ஹி அநேக-ஜந்மார்ஜித-பாப ஸஞ்சயாத்‌ |
    பாபேந்தநாக்நிஸ்‌ ஸ ஸதைவ நிர்மலோ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ॥ -12-

    பல பல பிறவிகளில்‌ ஈட்டிய பாப மூட்டைகள்‌ எவருடைய திருநாம ஸங்கீர்த்‌தநத்தால்‌ தொலைகிறதோ, விறகை அழிக்கும்‌ தீ போலே பாபத்தை அழிக்க வல்லவரும் மாசற்றவருமான அந்த ஹரி எனக்கு மங்களங்கள்‌ எப்பொழுதும் பொங்கிப் பெருக அருள் செய்ய வேண்டும் –

    ஸ்ரீ வராஹாவதாரம்
    யேநோத்த்ருதேயம்‌ தரணீ ரஸாதலாத்‌ அசேஷ ஸ்ருஷ்டி ஸ்திதி காரணாதிகம்‌ |
    பிபர்த்தி விஸ்வம்‌ ஜகதஸ்‌ ஸ மூலம்‌ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ||–13-

    பாசி தூர்த்துக் கிடந்த பார்மகளைப்‌ பாதாளத்திலிருந்து யார்‌ தூக்கி எடுத்தாரோ, யார்‌ மற்றெல்லாரையும்‌ படைத்தளித்து அழிக்கவும்‌ செய்கிறாரோ, ஜகந்‌ மூலமான அந்த ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள்வாராக-

    பாதேஷு வேதா ஜடரே சராசரம்‌ ரோமஸ்‌-வசேஷா முநயோ முகே மகா: | யஸ்யேஸ்வரேஸஸ்ய ஸ ஸர்வதா ப்ரபு மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ||–14-

    எந்த தேவ தேவனுடைய பாதங்களில்‌ வேதங்களும்‌, திருவயிற்‌றில்‌ அண்ட சராசரம்‌ முழுவதும்‌, உரோமங்களில்‌ முனிவர்கள் அனைவரும்‌, முகத்தில்‌ யாகங்களும்‌ இருக்கின்றனவோ அந்த ஆற்றல்‌ மிக்கானான ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அநுக்ரஹம்‌ செய்ய வேண்டும்‌-

    ஸமஸ்த யஜ்ஞாங்க மயம்‌ வபு: ப்ரபோ:யஸ்யாங்க-மீசேஸ்வர-ஸம்ஸ்துதஸ்ய |
    வராஹ ரூபீ பகவாந்‌ ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: –15-

    ஸமஸ்த தேவர்களாலும்‌ ஸ்துதிக்கப்பட்ட எந்த ப்ரபுவின்‌ திரு அவயவங்கள்‌ யாக உபகரணங்களனைத்துமாய்‌ ஆகின்றனவோ, அந்தக்‌ கோல வராஹ வடிவம்‌ கொண்ட பக்வானான ஹரி எனக்கு மங்களங்கள்‌ பல்கிப்‌ பெருக அருள வேண்டும்‌-

    விக்ஷோப்ய ஸர்வோததி-தோய-ஸம்பவம்‌ ததார தாத்ரீம்‌ ஜகதச்‌ ச யோ புவம்‌ |
    யஜ்ஞோஸ்வரோ யஜ்ஞ புமாந்‌ ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: || –16-

    மாகடல்‌ நீரனைத்தையும்‌ கலக்கி ப்ராணிகளின்‌ இருப்பிடமான . வார் மடந்தையைப்‌ பேர்த்தெடுத்தவரும்‌ யாகங்களால்‌ பூஜிக்கப்படுபவரும்‌ யஜ்ஞ வராஹ மூர்த்தியுமான ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள வேண்டும்‌-

    விந்யஸ்ய பாதெள ப்ருதிவீம்‌ ச பிப்ரத: | யஸ்யோபமாநம்‌ ந பபூவ ஸோச்யுதோ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ||–17-

    ஸமஸ்த ஜகதாதாரனான பரமனது திருப் பள்ளியான ஆதி சேஷன் மேல்‌ திருப் பாதங்களை ஊன்றிப்‌ பூமி தேவியைப்‌ பேர்த்‌தெடுத்த எந்‌த பகவானுக்கு உவமையே இல்லையோ அந்த பகவான்‌ எனக்கு மங்கள வ்ருத்தியைச்‌ செய்வாராக-

    ஸகர்கரம்‌ யஸ்ய ச ப்ரும்ஹிதம்‌ முஹா:ஸநந்தநாத்யைர்‌ ஜந லோக-ஸம்ச்‌’ரிதை: |
    ஸ்ருதம்‌ ஜயே த்யுக்தி பரைஸ்‌ ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய-விவ்ருத்தயே ஹரி; | –18-

    உறுமலுடன்‌ கூடிய எவரது ஐய கோஷத்தை ஐந லோகத்தில் இருந்த ஸநந்தநாதியர்‌ பல்லாண்டு பாடிய வண்ணமே கேட்டு மகிழ்ந்தனரோ அந்த ஹரி எனக்கு மங்களங்களைப்‌ பெருக்கி அருள்‌ செய்ய வேண்டும் –

    ஏகார்ணவாத்‌ யஸ்ய மஹீயஸோ மஹீம்‌ ஆதாய வேகேந கமுத்பதிஷ்யத: |
    நதம்‌ வபுர்‌ யோகிவரைஸ்‌ ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி; | .-19-

    மிகப் பெரிய நீர்ப் பரப்பிலிருந்து நிலமகளைப்‌ பெயர்ந்து எடுத்துக் விரைவாக விரைவாக மேலே பாய்ந்து வந்த எந்தக்‌ கோல வராஹ மூர்த்தியை ஸநகாதி யோகியர்‌ கண்டு வணங்கினரோ அந்த ஹரி எனக்கு மங்களங்களைப் பெருக்குவராக –

    ஹதோ ஹிரண்யாஷ மஹாஸூர: புரா புராண பும்ஸா பரமேண யேந |
    வராஹ ரூபஸ்‌ ஸ பதி: ப்ரஜாபதி:மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி; ||–20-

    மிகச் சிறந்த புராண புருஷரான யாரால்‌ ஹிரண்யாக்ஷனென்ற அஸுரன்‌ அழிக்கப் பட்டானோ, அந்த ஞானப் பிரான்‌ எனக்கு மங்களங்கள் பெருக அருள்‌ செய்ய வேண்டும் –

    ஸ்ரீ நரஸிம்ஹாவதாரம்
    தம்ஷ்ட்ரா-கராளம்‌ ஸுர பீதி நாச”கம்‌ க்ருதம்‌ வபுர்‌ திவ்ய-ந்ருஸிம்ஹ-ரூபிணா |
    த்ராதும்‌ ஜகத்‌ யேந ஸ ஸர்வதா ப்ரபு: மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ॥–21-

    தேவர்களின்‌ பயத்தை அகற்ற வல்லரும்‌ கோரைப் பற்களால்‌ அச்சுறுத்துவதுமான நரங் கலந்த சிங்க உருவை உலகைக்‌ காக்க வென்றே யார்‌ தரித்தாரோ அந்த ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள்‌ செய்ய வேண்டும்‌-

    தைத்யேந்த்ர-வக்ஷஸ் ஸ்தல-தார-தாருணை: கரேருஹைர்‌ ய: க்ரகசாநுகாரிபி: |
    சிச்சேத லோகஸ்ய பயாநி ஸோ அச்யுதோ மமாஸ்து மாங்கள்ய-விவ்ருத்தயே ஹரி: ||–22-

    அவுணன்‌ மார்பைக்‌ கிழிக்க வல்லதும்‌ ரம்பம்‌ போன்றதுமான நகங்களால்‌ உலகின்‌ பயத்தைப்‌ போக்கிய ஹரி எனக்கு மங்களங்‌கள் பெருக அருள வேண்டும் –

    தந்தாந்த-தீப்தத்யுதி-நிர்மலாநி ய; சகார ஸர்வாணி திசாம்‌ முகாநி |
    நிநாத-வித்ராஸித-தாநவோ ஹ்யஸெள மமாஸ்து மாங்கள்ய-விவ்ருத்தயே ஹரி: |–23-

    பற்களின்‌ காந்தியால்‌ திசை முடிவிலும்‌ ஒளி பரப்புகிறவரும்‌ ஸிம்ஹ நாதத்தால்‌ அஸுரர்களை நடுக்கமுறச்‌ செய்பவருமான ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள வேண்டும் –

    யந்நாம-ஸங்கீர்த்தநதோ மஹா பயாத்‌ விமோக்ஷ-மாப்நோதி ந ஸம்சயம்‌ நர; |
    ஸ ஸர்வ-லோகார்த்தி-ஹரோ ந்ரு கேஸரீ மமாஸ்து மாங்கள்ய-விவ்ருத்தயே ஹரி: ॥–24-

    தன்‌ நாமத்தைச்‌ சொல்பவனது பெரும்‌ பயத்தைப்‌ போக்கி அருள்பவரும்‌ உலகனைத்தின்‌ துயரைத்‌ துடைப்பவருமான சிங்கப்‌ பிரான்‌ எனக்கு மங்களங்களைப்‌ பெருக்குவாராக-

    ஸடா-கராள-ப்ரமணா நிலாஹதா: ஸ்புடந்தி யஸ்யாம்புதராஸ்‌ ஸமந்தத: |
    ஸ திவ்ய ஸிம்ஹ: ஸ்புரிதா-நலேக்ஷணோ மமாஸ்து மாங்கள்ய-விவ்ருத்தயே ஹரி:–25-

    அசையும்‌ பிடரி மயிர்களால்‌ மேகக்‌ கூட்டங்களை நாற் புறமும்‌ சிதறி விழும்படி செய்பவரும்‌ ஜ்வலிக்கும்‌ கனல்‌ போன்ற கண்களை வுடையவருமான சிங்கப்பிரான்‌ எனக்கு மங்களம்‌ பெருக அருள்வாராக.

    யதீஷண-ஜ்யோதிஷி ரஸ்மி-மண்டலம்‌ ப்ரலீந-மீஷந்‌ ந ரராஜ பாஸ்வத: |
    குத: ச சாங்கஸ்ய ஸ திவ்ய ரூப-த்ருக்‌ மமாஸ்து: மாங்கள்ய-விவ்ருத்தயே ஹரி: |–26-

    பகலவனது கதிர்க் கூட்டங்கள்‌ எவரது கண்ணொளியில்‌ மங்கிப்‌ போகிறதோ, சந்திரனைப் பற்றிப்‌ பேசவே வேண்டிய தில்லையோ, அந்த அழகிய சிங்க உருவம்‌ தரித்த ஹரி எனக்கு மங்களங்களைப்‌ பெருக்குவாராக-

    அசே’ஷ-தேவேச’-நரேஸ்வரேஸ்வரை: ஸதா ஸ்துதம்‌ யஸ் சரிதம்‌ மஹாத்புதம்‌ |
    ஸ ஸர்வ-லோகார்த்தி-ஹரோ மஹா ஹரி: மமாஸ்து மாங்கள்ய- -விவ்ருத்தயே ஹரி: ॥–27-

    எந்த சிங்கப் பிரானது மிக அத்புத சரிதையை ப்ரபுக்களும்‌ மேலாத்‌ தேவரும்‌ நிலத் தேவரும்‌ புகழ்ந்த வண்ண மிருக்கிறார்களோ உலகனைத்தின்‌ துயரையும்‌ பாபங்களையும்‌ போக்க வல்ல அந்த ஹரி: எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள்வாராக –

    த்ரவந்தி தைத்யா: ப்ரணமந்தி தேவதா: நச்‌யந்தி ரஷாம்ஸி அபயாந்தி சாரய; | யத் கீர்த்தநாத்‌ ஸோ அத்புத-ரூப கேஸரீ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ||–28-

    எவருடைய திரு நாமத்தைச்‌ சொன்ன மாத்திரத்தாலேயே அஸூரர்கள்‌ ஒடுகின்றனரோ, தேவர்கள்‌ வணங்குகின்றனரோ, அரக்கர்கள்‌ அழிந்து போவார்களோ, எதிரிகள்‌ திரும்பி ஓடுவார் களோ, அந்த அழகிய சிங்கர்‌ எனக்கு மங்களங்களைப்‌ பெருக்குவாராக-

    வாமனாவதாரம்‌
    ருக்பாவிதம்‌ யோ யஜுஷா ஹி ஸ்ரீமத்‌ ஸாம த்வநி-த்வஸ்த-ஸமஸ்த-பாதகம்‌ |
    சக்ரே ஜகத்‌ வாமநகஸ்‌ ஸ் ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய-விவ்ருத்தயே ஹரி –29-

    ருக் வேதத்தை உச்சரித்து உலகைத்‌ தூயதாக்கியும்‌, யஜுர்‌ வேதத்தால்‌ நிறம் பெறச் செய்தும்‌ ஸாம கானத்தால்‌ ஸமஸ்த பாதகத்தையும்‌ அழித்து முள்ள திருக் குறள்‌ உருவனான மாயன்‌ எனக்கு மங்களங்களைப்‌ பெருக்குவாராக-

    யத்பாத-விந்யாஸ-பவித்ரதாம்‌ மஹீ யயெள வியச்சர்க்‌-பஜுஷா-முதீரணாத்‌ |
    ஸ வாமநோ வாம சரீர-ரூப த்ருக்‌ மமாஸ்து மாங்கள்ய-விவ்ருத்தயே ஹரி: ॥–30-

    எவருடைய திருவடி படுதலால்‌ நிலப் பரப்பும்‌, ருக்‌ யஜுஸ்‌ மூதலிய வேதங்களைச்‌ சொல்வதால்‌ வானமும்‌ புனிதமாயினவோ அந்த வாமன மூர்த்தி எனக்கு மங்களங்களைப்‌ பெருக்குவாராக –

    யஸ்மிந்‌ ப்ரயாதே அஸூர-பூப்ருதோ அத்வராத்‌ நநாம கேதாத்‌ அவநிஸ்‌ ஸஸாகரா |
    ஸ வாமநஸ்‌ ஸர்வ-ஜகந் மயஸ்‌ ஸதா மமாஸ்து மாங்கள்ய-விவ்ருத்தயே ஹரி: ॥–31-

    அஸுர மன்னன்‌ மஹா பலியின்‌ அரண்மனையை நோக்கி எவர்‌ போன போது கடல்‌ சூழ்ந்த நில மங்கை வருந்தித் தலை குனிந்தாளோ உலகனைத்தையும்‌ தன்னுள்‌ ஒடுக்கிய அந்தத்‌ திருக் குறளப்பன்‌ எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள்வாராக–

    மஹாத்புதே தைத்ய பதேர்‌ மஹா த்வரே யஸ்மிந்‌ ப்ரவிஷ்டே ஷுபிதம்‌ மஹா ஸூரை: |
    ஸ வாமநோ அந்தஸ்‌ ஸ்தித ஸப்த லோக த்ருக்‌ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ॥–32-

    மிக ஆச்சர்யமான அஸூர மன்னனது யாக சாலையில்‌ எவர் ப்ரவேசித்ததும்‌ அஸுரரனைவரும்‌ குழப்ப மடைந்து போயினரோ, ஸப்த லோகத்தையும்‌ தன்‌ வயிற்றில்‌ வைத்துக் கொண்ட அந்த ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள்வாராக–

    ஸங்கைஸ்‌ ஸுராணாம்‌ திவி பூதலஸ்திதை: ததா மநுஷ்யைர்‌ ககநே ச கேசரை: |
    ஸ்துத: க்ரமாத்‌ ய: ப்ரசசார ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ॥–33-

    ஸ்வர்க்கத்தில்‌ தேவர்களாலும்‌, தரையில்‌ மனிதர்களாலும்‌, வானில்‌ வானவர்களாலும்‌ முறையுடன்‌ ஸ்துதிக்கப்பட்டவாறு உலகளந்த ஹரி எனக்கு மங்கள வ்ருத்தியை செய்தருள வேண்டும் –

    க்ராந்த்வா தரித்ரீம்‌ ககநம்‌ ததா திவம்‌ மருத் பதேர்‌ ய: ப்ரததெள த்ரிவிஷ்டபம்‌ |
    ஸ தேவ தேவோ புவநேஸ்வரேஸ்வரோ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி; –34-

    நிலத்தையும்‌ வானத்தையும்‌ ஸ்வர்க்க உலகையும்‌ அளந்து கொண்டு இந்த்ரனுக்கு மூவுலகையும்‌ அளித்த ஜகந் நாதனான ஹரி எனக்கு மங்களங்களைப்‌ பெருக்கி யருள வேணும் –

    அநுக்ரஹம்‌ சாபி பலே-ரநுத்தமம்‌ சகார யச்சேந்த்ர-பதோபமம்‌ க்ஷணாத்‌ | ்‌
    ஸுராம்ச்‌’ச யஜ்ஞாம்ச”புஜஸ்‌ ஸ ஸர்வதா |மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ||–35-

    மஹாபலிக்கு இந்திர பதவியை யொத்த உயர்‌ பதவியையும்‌. வாசகத்தின்‌ ஹவிர்ப் பாகத்தைத்‌ தேவர்களுக்கும்‌ விரைவில்‌ அளித்த ஹரி எனக்கு மங்களங்களே பெருக அருள் பாலிப்பாராக —

    ஸ்ரீ மத்ஸ்யாவதாரம்‌
    ரஸாதலாத்‌ யேந புரா ஸமாஹ்ருதா: ஸமஸ்த வேதா ஜல சார ரூபிணா |
    ஸ கைடபாரிர்‌ மதுஹாம்புசாயீ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ||–36-

    மீனாக, மது கைடபர்களை அழித்து, பாதாளத்‌திலிருந்து வேதங்‌களை மீட்டுக்‌ கொணர்ந்த ஷீராப்தி நாதனான ஹரி என்‌ மங்கள்‌களைப்‌ பெருக்குவாராக–

    ஸ்ரீ பரசுராமாவதாரம்‌
    நி:ஷத்ரியாம்‌ யச்‌’ச சகார மேதிநீம்‌ அநேகசோ பாஹு வநம்‌ ததாச்சிநத்‌ |
    ய:கார்த்த வீர்யஸ்ய ஸ பார்க வோத்தமோ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி; || –37-

    கார்த்த வீர்யார்ஜுனனது ஆயிரம்‌ தோள்களைத்‌ துணித்து, பலகால்‌ அரசர்களை யழித்த பரசுராமராகிய ஹரி எனக்கு மங்களங்‌களைப்‌ பெருக்க வேணும்‌–

    ஸ்ரீ ராமாவதாரம்‌-
    நிஹத்ய யோ வாலிந-முக்ர-விக்ரமம்‌ நிபத்ய ஸேதும்‌ ஜலதெள தசா நநம்‌ |
    ஜகாந சாந்யாந்‌ ரஜநீ சரா நஸெள மமாஸ்து மாங்கள்ய விவருத்தயே ஹரி: ॥ –38-

    கொடிய வலிமை யுள்ள வாலியைக்‌ கொன்று, மா கடலில்‌ அணையைக்‌ கட்டி தசமுகனையும்‌ மற்றுமுள்ள அசுரர்களையும் அழித்த ஹரி எனக்கு மங்களங்களைப்‌ பெருக்குவாராக–

    ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்‌-
    சிக்ஷேப பால: சகடம்‌ பபஞ்ஜ யோ யமார்ஜுநம்‌ கம்ஸமரிம்‌ ஜகாந ௪ |
    மமர்த சாணூர முகாந்‌ ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ||–39-

    பால கிருஷ்ணனாய்ச்‌ சகடெறிந்தும்‌, மருத மரங்களை முறித்தும்‌ சாணூராதியரையும்‌, பகைமை கொண்ட கம்சனையும்‌ அழித்‌தும்‌ உகந்த ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள் பாலீப்பாராக–

    ப்ராதஸ்‌ ஸஹஸ்ராம்சு” மரீசி-நிர்மலம்‌ கரேண பிப்ரத்‌-பகவாந்‌ ஸுதர்ச’நம்‌ |
    கெளமோதகீம்‌ சாபி கதா-மநந்தோ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: |-40-

    காலையில்‌ ஆயிரம்‌ கதிரவனது கதிர்க் கூட்டத்தைப்‌ போன்ற பேரொளி யுள்ள சக்கரத்தையும்‌ கெளமோதகி எனும்‌ கதையையும்‌ ஏந்திய பகவானான ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள் பாலிப்‌ பாராக.-

    ஹிமேந்து-குந்த-ஸ்படிகாப-நிர்மலம்‌ முகா நிலா பூரிதம்‌ ஈஸ்வரேஸ்வர | மத்யாஹ்ந காலே அபி ஸ ச’ங்கமுத்வஹந்‌ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ॥–41-

    பனி நீர்‌, சந்த்ர மண்ட்லம்‌, குந்தப்பூ, ஸ்படிகமணி இவை போன்று வெண்ணிறமாயும்‌, திரு முகத்தால்‌ காற்று நிரப்பப் படுவதாயும்‌ உள்ள ஸ்ரீ பாஞ்ச ஜந்யத்தை நடுப் பகலில்‌ ஏத்தி யருளும்‌ ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள்‌ செய்வாராக –

    ததா அபராஹ்ணே ப்ரவிகாஸி பங்கஜம்‌ வக்ஷஸ் ஸ்தலேந ஸ்ரிய முத்வஹந்‌ ஹரி: |
    விஸ்தாரி-பத்மாயத-பத்ர லோசநோ மமாஸ்து மாங்கள்ய-விவ்ருத்தயே –42-

    மலர்த்த தாமரையைக்‌ கையிலும்‌ திருமகளைத்‌ திரு மார்பிலும்‌ மாலையில்‌ ஏந்தி யருளும்‌ மலர்ந்த தாமரை யிதழை யொத்த கண்ணீனரான ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள்‌ செய்வாராக –

    ஸர்வேஷு காலேஷு ஸமஸ்த தேசேஷு அசேஷ கார்யேஷு ததேஸ்வரேஸ்வர: |
    ஸர்வைஸ்‌ ஸ்வரூபைர்‌ பகவாநநாதிமாந்‌ மமாஸ்து மாங்கள்ய-விவ்ருத்தயே ஹரி: ॥ –43-

    எல்லாக்‌ காலத்திலும்‌, எல்லா இடங்களிலும்‌, எல்லாத்‌ தொழில்களிலும்‌, எல்லா வித உருவங்களுடன்‌ தோன்றி யருளும்‌ ஆதி யந்த மற்ற பகவானான ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அநுக்ரஹம்‌ செய்வாராக –

    பல ஸ்ருதி
    ஏதத்‌ படந்‌ தால்ப்ய ஸமஸ்த பாபை; விமுச்யதே விஷ்ணு பரோ மநுஷ்ய: |
    ஸித்த்யந்தி கார்யாணி ததாஸ்ய ஸர்வாந்‌ அர்த்தா-நவாப்நோதி யதேச்சதே தாந்‌ ॥–44-

    தால்ப்ய முனிவரே, விஷ்ணுவே பர தேவதை யெனும்‌ உண்மை உணர்ந்த மனிதன்‌ இத்துதி நூலைப்‌ பாராயணம்‌ செய்து எல்லாப்‌ பாபங்களிலிருந்தும்‌ விடுபடுகிறான்‌. அவனுடைய கார்யங்கள்‌ யாவும்‌ நற் பயனை அளிக்கின்றன. விரும்பிய எல்லாப்‌ பொருளும்‌ அவனுக்‌குக்‌ கை கூடுகின்றன-

    துஸ் ஸ்வப்ந: ப்ரச’ம-முபைதி பட்ய மாநே ஸ்தோத்ரேஸ்மிந்‌ ஸ்ரவண விதெள ஸதோத்ய தஸ்ய!
    ப்ராரம்போ த்ருத முபயாதி ஸித்திமீச பாபாநி க்ஷபயதி சாஸ்ய தேவ தேவ: ||–45-

    இத்துதியை எப்பொழுதும்‌ படிப்பதைக்‌ கேட்பதென்னும் விரதம்‌ பூண்டவனது கெட்ட கனவுகள்‌ அடங்கிப்‌ பயனற்றுப்‌ போகும்‌, துவங்கிய தொழில்கள்‌ விரைவில்‌ நற்பயனளிக்கும்படி, நிறைவேறும்‌, தேவ தேவனாய இறைவன்‌ பாவங்களை யெல்லாம்‌ போக்கி விடுதிறான் –

    மாங்கள்யம்‌ பரமபதம்‌ ஸதார்த்த-ஸித்திம்‌ நிர்விக்நா-மதிகபலாம்‌ ஸ்ரியம்‌ ததாதி |
    கிம்‌ லோகே ததிஹ பரத்ர சாபி பும்ஸாம்‌ யத்‌ விஷ்ணு-ப்ரவணதியாம்‌ ந தால்ப்ய ஸாத்யம்‌ ॥–46-

    மங்களத்தையும்‌, நலமந்தமில்லதோர்‌ நாட்டையும்‌, விரும்பியது நன்கு விரைவில்‌ கை கூடுவதையும்‌, தடை யற்ற பெருஞ் செல்வத்தையும்‌ இறைவன்‌ அருள்வான்‌. தால்ப்ய முனிவரே, இம்மையிலும்‌ மறுமையிலும்‌ திருமாலடி யார்க்குக்‌ கிட்டாதது யாதுமில்லை —

    தேவேந்த்ரஸ்‌ த்ரிபுவந-மர்த்த-மேகபிங்க: ஸம் ஸித்திம்‌ த்ரி புவநகாம்‌ ச கார்த்த வீர்ய: |
    வைதேஹ: பரமபதம்‌ ப்ரஸாத்ய விஷ்ணும்‌ ஸம் ப்ராப்தஸ்‌ ஸகல-பல ப்ரதோ ஹி விஷ்ணு: ||–47-

    கார்த்த வீர்யார்ஜுனன்‌ மூவுலகிலும்‌ அதர்மத்தைத் தடுக்க வல்ல தர்ம சக்தியையும்‌, குபேரன்‌ பணத்தின்‌ அதிபனாகும்‌ பதவியையும்‌, இந்த்ரன்‌ மூவுலகில்‌ உள்ள இன்பத்தையும்‌, விதேஹ மன்‌னன்‌ பரம பதத்தையும்‌ திருமாலைப்‌ பூசித்தே பெற்றனர்‌. எல்லாப் பயன்களையும் அளிக்க வல்லவர்‌ திருமால் தானே –

    ஸர் வாரம் பேஷு தால்ப்யைதத்‌ துஸ் ஸ்வப்நேஷு ச பண்டித:
    ஜபே-தேகமநா விஷ்ணெள ததா மங்கள்ய-தர்சநே ॥-48-

    தால்ப்யரே, அறிவுள்ளவன்‌ எல்லாக்‌ கார்யங்களை ஆரம்பிக்‌கும் போதும்‌, கெட்ட கனவுகள்‌ தோன்றும் போதும்‌, அமங்களங்கள்‌ நேரும் போதும்‌, இறைவனான திருமாலிடம்‌ மாறாத பக்தியுடன்‌ இத்‌ ஸ்துதியை ஜபம்‌ செய்ய வேண்டும் –

    சமம்‌ ப்ரயாந்தி துஷ்டாநி க்ரஹபீடாச்‌’ச தாருணா: |
    கர்மாரம்பாச்‌’ ச ஸித்த்யந்தி புண்யமாப்நோதி சோத்தமம்‌ –49-

    அவனது தீமைகள்‌ யாவும்‌ அழிந்து போகின்றன. கொடிய கிரஹங்களின்‌ தீய பலன்களும்‌ மாறுகின்றன. தொழில்களும்‌ நற்‌ பயனளிக்கின்றன. தீய கனவும்‌ பயனற்றதாகிறது. நல் வினையின்‌ உயர்ந்த பயனையும்‌ பெறுகிறான் —

    ஹரிர்‌ ததாதி பத்ராணி மங்கள்ய ஸ்துதி ஸம்ஸ்துத;
    கரோ-த்யகில-ரூபைஸ்து ரக்ஷா-மக்ஷத-ச’க்தி ப்ருத்‌ ॥–50-

    மாங்கள்ய ஸ்தவத்தால்‌ ஸ்துதிக்கப் பெற்ற திருமால்‌ எல்லா மங்களங்சளையும்‌ நல்குகிறான்‌. எல்லா வித வடிவத்திலும்‌ தோன்றி குறைவற்ற ஆற்றல்‌ படைத்த அந்தப்‌ பரமன்‌, அடியார்க்கு நற் பாது காப்பையும்‌ அளிக்கிறான் –

    ஸ்ரீ விஷ்ணு தர்மோத்தரத்திலுள்ள மாங்கள்ய ஸ்தவம்‌ முற்றும்‌.

    ——————————————-

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

    ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌–16 –முக்தி பாதம்—(229 – 234 ) 27 –திவ்ய ப்ரபந்த, தாத்பர்ய ப,க,வத்‌-ப்ரஸாதாதி கரணம்‌ –(234)ஸ்ரீ மணவாள மா முனிகள் –

    August 10, 2026

    1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
    (2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 234 முடிய (48)

    1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
    (2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
    (3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
    (4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-234 (27)

    16 –முக்திபாதம்—229 – 234 – மொத்தம் –6 – ஸூரணைகள்–இதில் மூன்று அதிகரணங்கள்
    25–ஆர்த்த ப்ரபந்ந ஸூரி ஸரீர வியோகா பாவ காரணாதி கரணம்‌ –229—ஒரே ஸூரணை
    26– பர ப,க்த்யாதி, நிரூபண ஸ்தாநாதிகரணம்‌ 230 – –233—மொத்தம் –4–ஸூரணைகள்
    27 –திவ்ய ப்ரபந்த, தாத்பர்ய ப,க,வத்‌-ப்ரஸாதாதி கரணம்‌ –234 –ஒரே ஸூரணை-

    நூறே சொன்ன பத்து நூறு ஓர் ஆயிரம் என்றதும் சாபிப்ராயம் -என்றதில் – நூறே சொன்ன பத்து நூறு என்றதில் –கருத்தை பத்து நிகமநத்திலே விஸ்த்ரேண பிரதிபாதித்து – ப்ராசங்கிகமாக அருளிச் செய்ய வேண்டுமவையும் அருளிச் செய்தாராய் நின்றார் கீழ் –-இனி ஓர் ஆயிரம் ஒன்றதின் கருத்தை விசதமாக்கா நின்று கொண்டு –பிரபந்தத்தை நிகமித்து அருளுகிறார் —

    அவித்‌யா நிவர்த்தக ஜஞாந பூர்த்தி ப்ரத பகவத் ப்ரஸாதாத்‌ மோக்ஷ லாபம்‌ என்கை மயர்வற வீடுபெற்றவென்ற ப்ரபந்த ஏக அர்த்‌யம்‌.–சூரணை -234-

    அதாவது-சம்சார காரணமான அஞ்ஞானத்துக்கு நிவர்த்தகமான ஞான பூர்த்தியை உபகரித்த
    ஞானாதி குண பூர்ணனான பகவானுடைய நிர்ஹேதுகமான பிரசாதத்தாலே –-சம்சார நிவ்ருத்தி பூர்வக-பகவத் பிராப்தி ரூப மோஷத்தினுடைய – லாபம் என்று பிரதிபாதிக்கை –
    மயர்வற மதி நலம் அருளினன் -என்று தொடங்கி –அவா அற்று வீடு பெற்ற –என்று தலைக் கட்டின
    இப் பிரபந்தத்துக்கு ஒன்றான தாத்பர்யம் என்கை –இத்தால் ஞான பிரதான -பகவத் பிரசாதமே மோஷ பிரதமும் -என்னுமிது இப் பிரபந்தத்துக்கு தாத்பர்யமாய் இருப்பதோர் அர்த்தம் என்றது ஆய்த்து 

    ” மயர்வற மதிநலமருளினன்‌” திருவாய்மொழி 1-1-1 என்றும்‌ “அவா வற்று வீடு பெற்ற திருவாய்மொழி 10-10-11-என்றும் சொல்லுகையாலே ஸம்ஸார காரணமான அஜ்ஞாநத்தை நிவர்த்திப்பித்து ஜ்ஞாந பூர்த்தியை நிர்ஹேதுகமாக உபகரித்த ஜ்ஞாநாதி குண பூர்ணனான பகவானுடைய ப்ரஸாதம்‌ பரமபக்தி தஸையான பாகத்தையும்‌ விளைத்து ஸ்வரூபாநுரூபமான மோக்ஷத்தையும்‌ தரும்‌ என்கை- ஒன்றான ப்ரபந்த த்துக்குத்‌ தாத்பர்யமென்கிறார்‌. (மயர்வற வீடுபெற்ற என்ற பிரபந்த ஏக அர்த்‌யம்‌) அநிஷ்டமான அஜ்ஞாந நிவ்ருத்தி பூர்வகமாக இஷ்டமான மோக்ஷத்தை ப்ராபிக்கை என்று ஓரர்த்தம்‌

    உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
    மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
    அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
    துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே 
    –1-1-1-மயர்வற-மயர்வு -அஜ்ஞானம் -இத்தால் ஜ்ஞான உதய -அந்யதா ஜ்ஞான -விபரீத ஜ்ஞான ரூபமான அஜ்ஞானத்தைச் சொல்லுகிறது-அற -சவாசனமாகப் போகும்படி-மதி நலம்-மதி என்று ஜ்ஞானம்-நலம் -என்று பக்தி -பக்தி ரூபாபன்ன ஜ்ஞானம் என்றபடி
    அருளினன்-இத் தலையில் நன்மை தீமை பாராதே நிர்ஹேதுக கிருபையால் தந்து அருளினான்
    முலைக் கடுப்பாலே தரையிலே பீச்சுமா போலே –-எனக்குத் தந்து அருளினான் -என்னாது ஒழிந்தது -பகவத் விஷயீ காரத்துக்கு முன்பு தம்மை அசத் கல்பராக நினைத்து இருக்கையாலே-எவன்–-இப்படி உபகாரகனான ஸ்ருதி பிரசித்தி ஆனவன்

    அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
    அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
    அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
    அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-அவனைப் பெற்று நிரஸ்தித ஸமஸ்த பிரதிபன்னராகையாலே நிர் துக்கரான ஆழ்வார்-அருளிச் செய்த-இவற்றை அறிந்தவர்கள் சம்சாரத்திலே பிறந்து வைத்தே நித்ய ஸூ ரிகளோடே ஒப்பர்கள் –பகவத் ந்யஸ்த பரராய் இருக்கும் அதிகாரிகளுக்கு போது போக்கு இப்பிரபந்தம் –தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன் -என்றும் –கேட்டாரார் வானவர்கள் -என்றும் தானே அருளிச் செய்தார் இறே

    ஆக
    இப்பிரபந்தத்தால் –
    1-சர்வேஸ்வரன் தன் கிருபையாலே -அஞ்ஞான சேதனர்-தத்வஞ்ஞராய் -சார அசரா விவேகம் பண்ணுகைக்கு சாஸ்திர பிரதானம் பண்ணின படியையும்-
    2-அந்த சாஸ்திர முகேன தத்வ ஞானம் பிறக்கும் அளவில் உண்டான அருமையை நினைத்து –
    தாத்பர்யமான திரு மந்த்ரத்தை-தன் பரம கிருபையால் வெளி இட்ட படியையும் –
    3-அந்த சாஸ்திர தாத்பர்யங்களின் விஷய பேதாதிகளையும்-
    4-தத் உபய நிஷ்டரான அதிகாரிகளுடைய பிரகாரங்களும் –
    5-அந்த வியாஜத்தாலே பிரஸ்துதமான திருவாய் மொழியினுடைய வைபவத்தையும் –
    6-அதுக்கு வக்தாக்களான ஆழ்வார்களுடைய பிரபாவத்தையும் –
    7-அந்த பிரபாவத்துக்கு மூலமான பகவத் நிர்ஹேதுக கடாஷத்தையும் –
    8-அதடியாக இவர்க்கு உண்டான ஞான பக்திகளும் –
    9-அந்த ஞான பக்தி தசைகளில் இவர் பேசும் பேச்சுகளையும் –
    10-அந்த பக்தி தசையில் பகவத் பிரேம யுக்தர் எல்லோரோடும் இவர்க்கு உண்டான சாம்யத்தையும் –
    11-அந்த பக்தி தசையில் பேசும் அந்ய உபதேசங்களுக்கு ஸ்வாப தேசங்களையும் –
    12-அந்த பக்தி விஷயமான திவ்ய தேசங்களில் நிற்கிற ஈஸ்வரனுடைய குண விசேஷங்களையும் –
    13-அந்த குண விசிஷ்ட வஸ்துவில் உண்டான -அனுபவ ஜனித ப்ரீதி ப்ரேரிதமாய் கொண்டு இப்பிரபந்தங்கள் அவதரித்த படியும் –
    14-பிரதிபாத்யார்த்த சாம்யத்தாலே ஸ்ரீ கீதையோடு திருவாய்மொழிக்கு உண்டான சாம்யத்தையும் –
    15-தத் வ்யாவிருத்தியையும்
    16-இதில் இவர் உபதேசிக்கிற விஷய பேதத்தையும்
    17-அவ்வோ விஷயங்கள் தோறும் உபதேசிக்கிற அர்த்த விசேஷங்களையும் –
    18-அந்த வியாஜத்தாலே உபதேச விஷயமான சிஷ்ய லஷணதையும் –
    19-அந்த லஷணம் இல்லாதவருக்கும் இவர் உபதேசிகைக்கு ஹேதுக்களையும் –
    20-க்யாதி லாபாதி நிரபேஷராய் பகவத் கைங்கர்ய புத்த்ய உபதேசிக்கையாலே -உபதேசம் சபலமான படியையும் –
    21-உபதேசிக்கிற இப் பிரபந்தங்கள் தாம் ரகஸ்ய த்ரய அர்த்தம் என்னுமத்தையும் –
    22-அந்த ரகஸ்ய த்ரயத்திலும் பிரதிபாதிக்க படுகிற அர்த்த பஞ்சகமும் இப் பிரபந்தங்களிலே சங்கரக விபரண ரூபேண சொல்லப் படுகிற பிரகாரத்தையும் –
    23-பிரபந்த ஆரம்பங்களில் அபேஷிதமான மங்களா சரணங்கள் இப்பிரபந்தத்தில் உண்டான படியையும் –
    24-சாது பரித்ராணாதிகளிலே – ஜகத் ரஷண அர்த்தமான சர்வேஸ்வர அவதாரம் போலே இப் பிரபந்த அவதாரம் என்னுமத்தையும் –
    25-இதில் பத்து பத்தாலும் பிரதிபாதிக்கப் பட்ட ஈஸ்வரனுடைய பரத்வாதி குணங்களையும் –
    26-அக் குண விசிஷ்டனானவன் -இப் பத்து பத்தாலும் இவ் ஆழ்வாருக்கு தத்வ ஞானம் முதலாக ப்ராப்தி பர்யந்தமாக பிறப்பித்த தசா விசேஷங்களையும் –
    27-பத்து தோறும் இவர் தாம் பிறருக்கு உபதேசித்த பிரகாரங்களையும் –
    28-இவருக்கு பிரதமத்திலே ஆர்த்தி பிறந்திருக்கச் செய்தே -ஈஸ்வரன் இவரை வைக்கைக்கு பிரதான அப்ரதான ஹேதுக்களையும் –
    29-இவருக்கு பிறப்பித்த பரபக்தி பரஞான பரம பக்தி களாகிற தசா விசேஷ ஸ்தலங்களையும்
    30-அஞ்ஞான நிவர்த்தக ஞான பூர்த்தி ப்ரத பகவத் பிரசாதமே அநிஷ்டமான சம்சாரத்தை அறுத்து அபீஷ்டமான மோஷ லாபத்தை உண்டாக்கும் என்கை- இப்பிரபந்ததுக்கு ஒன்றான தாத்பர்யம் என்னும் அத்தையும்
    31-ஆஸ்திகராய் ஆழ்வார் அபிமானத்தில் ஒதுங்கி – அவருடைய திவ்ய ஸூக்திகளில் பிரவணராய்-அநந்ய பரராய் இருப்பார் -எல்லோரும் அனுசந்தித்து வாழும்படி அதி ஸ்புடமாக அருளிச் செய்து தலைக் கட்டினார் —

    ஆக, 1-ஸர்வேஸ்வரன்‌ அஜ்ஞரான சேதநர்க்‌குத் தன் கிருபையாலே புருஷாரத்த ஜஞாநம்‌ உண்டாகைக்கு ஸாஸ்த்ர பிரதானம் பண்ணினமையும்
    2-அந்த ஸாஸ்த்ரம்‌ கொண்டு புருஷார்த்த ஞானம் பிறக்கை அரிதென்று தாத்பர்யமான திருமந்த்ரத்தை வெளியிட்டமையும்
    3-அந்த ஸாஸ்த்ர தாத்பர்யங்களுக்கு விஷயபேதம்‌ தொடக்கமான ஷைம்யங்களையும்‌,
    4-உபயத்திலும்‌ நிஷ்டரான அதிகாரிகளுடைய பரகாரங்களையும்‌,
    5-அந்த வ்யாஜத்தாலே ப்ரஸக்தமான திருவாய்மொழியினுடைய வைபவத்தையும்‌,
    6-அதுக்கு வக்தாக்களான ஆழ்வார்களுடைய ப்ரபாவத்தையும்
    7-அந்த ப்ரபாவத்துக் கடியான பகவந் நிர்ஹேதுக கடாக்ஷத்தையும்‌,
    8-அந்த கடாக்ஷமடியாக இவர்க்குண்டான ஜ்ஞாந பக்திகளையும்‌,
    9-அந்த ஜ்ஞாந பக்தி தஸைகளில்‌ இவர பேசும்‌ பேச்சுக்களையும்‌,
    10-அந்த பக்தி தஸையில்‌ பகவத் ப்ரேம யுக்தர் எல்லாரோடும்‌ இவர்க்குண்டான ஸாம்யத்தையும்‌,
    11-அந்த பக்தி தஸையில்‌ பேசும் அந்யாபதேஸங்களுக்கு ஸ்வாபதேஸங்களையும்‌,
    12-அந்த பக்திக்கு விஷயமான திவ்ய தேஸங்களில்‌ நிற்கிற எம்பெருமான்களுடைய குணங்களையும்‌,
    13-அந்த குண விஸிஷ்ட வஸ்துவிலுண்டான அநுபவ ஜநித ப்ரீதி ப்ரேரிதமாய்க்‌ கொண்டு ப்ரபந்தங்கள்‌ அவதரித்தமையையும்‌,
    14-தத்வார்த்த,ப்ரதி பாதந பரமான திருவாய்மொழி ப்ரபந்தத்துக்கு ஸ்ரீகீதா ஸாம்ய முண்டான படியையும்‌,
    15-அந்த கீதையில்‌ காட்டில்‌ இதுக்குண்டான வ்யாவ்ருத்தியையும்‌,
    16-இதில்‌ இவர்‌ உபதேஸிக்கிற விஷய பேதத்தையும்‌,
    17-அவ்வோ விஷயங்கள்‌ தோறும்‌ உபதேஸிக்கிற அர்த்த விஸேஷங்களையும்‌,
    18-அந்த வ்யாஜத்தாலே உபதேஸ விஷயமான ஸிஷ்ய லக்ஷணத்தையும்‌,
    19-இந்த லக்ஷணமில்லாதார்க்கு உபதேஸிக்கைக் கடியான இவருடைய க்ருபையையும்‌,
    20-இப்படி இவர்‌ க்ருபையாலே உபதேஸிக்கையாலே அவவுபதேஸம்‌ பலித்தபடியையும்‌,
    21-உபதேஸிக்கிற இப் ப்ரபந்தங்கள் தான்‌ தத்வ ஹித புருஷார்த்த ப்ரதிபாதகமான ரஹஸ்ய த்ரயார்த்த மென்னு மிடத்தையும்‌,
    22-அந்த ரஹஸ்ய த்ரயத்திலும்‌ ப்ரதிபாதிக்கப்படுகிற அர்த்த பஞ்சகங்களும்‌ இந்த ப்ரபந்தங்களிலே ஸங்க்‌ரஹ விஸ்தர ரூபேண சொல்லப்படுகிற ப்ரகாரத்தையும்‌,
    23-ப்ரபந்த ஆரம்பங்களில்‌ உண்டான லக்ஷணங்களில்‌ ப்ரபந்தாதியிலுண்டாயிருக்கிற ப்ரகாரத்தையும்‌,
    24-ஸாது பரித்ராணாதிகளாலே ஜகத் ரக்ஷணார்த்தமான பகவதவதாரம்‌ போலே ஜகத் ரஷணார்த்தமாக இப்ப்ரபந்தம்‌ அவதரித்த தென்னுமிடத்தையும்‌, 25-திருவாய்மொழியில்‌ பத்துப் பத்தாலும்‌ ப்ரதிபாதிக்கப்பட்ட எம்பெருமானுடைய பரத்வாதி குணங்களையும்‌,
    25-அக் குண விஸிஷ்டனான ஸர்வேஸ்வரன்‌ அந்தப் பத்துப் பத்தாலுமிவ் வாழ்வார்க்கு தத்வ ஜ்ஞாநம்‌ முதலாக ப்ராப்தி பர்யந்தமாகப்‌ பிறப்பித்த தஸா விஸேஷங்களையும்‌,
    26-இவர் தாம்‌ பிறரைக்‌ குறித்து உபதேஸித்த ப்ரகாரங்களையும்‌,
    27-இவர்‌ ப்ரதமத்திலே ஆர்த்தி பிறந்திருக்கச் செய்தே ஈஸ்வரனிவரை வைக்கைக்கு ப்ரதாந அப்ரதாந ஹேதுக்களையும்‌,
    28-இவர்க்குப்‌ பிறந்த பரபக்தி பரஜ்ஞாந பரமபக்திகளாகிற தஸா விஸேஷங்களையும்‌,
    29-அஜ்ஞாந்‌ நிவ்ருத்தி பூர்வகமாக ஜ்ஞாந ப்ரதனான பகவானுடைய ப்ரஸாதமே மோக்ஷ ஹேது என்னுடத்தையும்‌,
    30-அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட மோக் ஷப்ராபணமே பரபந்த தாத்பர்யமென்னுமத்தையும்‌
    அருளிச் செய்து தலைக் கட்டி யருளினார்

    நான்காம் பிரகரணம் முற்றிற்று-

    ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதய வியாக்யானம் முற்றிற்று –

    தந்து அருள வேணும் தவத்தோர் தவப் பயனாய் வந்த முடும்பை மணவாளா
    சிந்தையினால் நீ உரைத்த மாறன் நினைவின் பொருள் அனைத்து என் வாய் உரைத்து வாழும் வகை-

    ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி தாழ்வதுமில் குரவர் தாம் வாழி
    ஏழ்பாரும் உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி செய்ய மறை தன்னுடனே சேர்ந்து

    அடியார்கள் வாழ அரங்கன் நகர் வாழச் சடகோபன் தண் தமிழ் நூல் வாழக்
    கடல் சூழ்ந்த மண்ணுலகம் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
    ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌–16 –முக்தி பாதம்—(229 – 234 )-26– பர ப,க்த்யாதி, நிரூபண ஸ்தாநாதிகரணம்‌ (230 –233) ஸ்ரீ மணவாள மா முனிகள் –

    August 10, 2026

    1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
    (2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 234 முடிய (48)

    1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
    (2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
    (3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
    (4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-234 (27)

    16 –முக்திபாதம்—229 – 234 – மொத்தம் –6 – ஸூரணைகள்–இதில் மூன்று அதிகரணங்கள்
    25–ஆர்த்த ப்ரபந்ந ஸூரி ஸரீர வியோகா பாவ காரணாதி கரணம்‌ –229—ஒரே ஸூரணை
    26– பர ப,க்த்யாதி, நிரூபண ஸ்தாநாதிகரணம்‌ 230 – –233—மொத்தம் –4–ஸூரணைகள்
    27 –திவ்ய ப்ரபந்த, தாத்பர்ய ப,க,வத்‌-ப்ரஸாதாதி கரணம்‌ –234 –ஒரே ஸூரணை-

    அதில் இவ் ஆர்த்திக்கு அடியான –பர பக்தி -பர ஞான -பரம பக்திகளின் தசைகள்-எந்த திரு வாய் மொழிகள் என்னும் அபேஷையிலே அவற்றை அருளிச் செய்கிறார் மேல் மூன்று வாக்யத்தாலே –-அது தன்னில் பரபக்த்ய வஸ்தை இன்னது என்கிறார் இதில் –ஆர்த்திக்கடியான பரபக்தி பரஜ்ஞாந பரமபக்திகளினுடைய தஸைகள்‌ எந்தெந்த திருவாய்மொழிகள்‌ என்ன- அத்தை அருளிச் செய்கிறார்‌-

    கமலக்கண்ணனென்று தொடங்கிக்‌ கண்ணுள்‌ நின்றிறுதி கண்டேனென்ற பத்தும்‌ உட்கண்ணாலேயாய்‌, காண்பான வாவுதல்‌ அதிலிரட்டி யாகையாலே கண்டு களிப்ப வளவும்‌ பரஜ்ஞாந கர்ப்ப பரபக்தி.-சூரணை -230-

    அதாவது –கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் -1-9-9–என்று புண்டரீகாஷனானவன் என் கண்ணுக்கு விஷயமானான் என்று தொடங்கி –கண்ணுள் நின்று அகலான்-10-8-8- -என்று என் கண் வட்டத்திலே நின்றும் கால் வாங்கு கிறிலன் என்னுமதளவாக –-என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10-கலைப் பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டு கொண்டு –3-2-10–நறும் துழாய் என் கண்ணி யம்மா நான் உன்னைக் கண்டு கொண்டே –4-7-7–கை தொழ இருந்தாயது நானும் கண்டேனே –-5-7-5–ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் அம்மானே –5–8-1-திரு விண்ணகர் கண்டேனே –6-3-1–தேவர்கட்க்கு எல்லாம் கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே –-9-4-8–கண்டேன் கமல மலர் பாதம் –10-4-9-
    என்று இப் பத்து சந்தையாலும் சொன்ன சாஷாத்காரம் –-நெஞ்சு என்னும் உட் கண் -பெரிய திருவந்தாதி -28-என்கிற ஆந்தர சஷுசான மனசாலே உண்டானதாய் –

    “கமலக்கண்ணன்‌ என்‌ கண்ணினுள்ளான்‌ காண்பன்‌” (திருவாய்மொழி 1-9-9) என்று புண்டரீகாக்ஷ்னானவன்‌ என்‌ கண்ணுக்கு விஷயமானான்‌; நானுமவனை ஸாக்ஷாத்கரியா நின்றேன்‌ என்று உபக்ரமித்து “கண்ணுள்‌ நின்றகலான்‌’ (திருவாய்மொழி 10-8-8) என்‌ கண் வட்டத்தை விட்டுப்‌ போகிறிலன்‌ என்றெதளவாக “என்‌ கண்ணனை நான்‌ கண்டேனே”, (திருவாய்மொழி 2-8-10) “கலைப்பல்‌ ஞானத்தென்‌ கண்ணனைக் கண்டு கொண்டு” (திருவாய்மொழி 3-2-10), “நறுந்துழாயின்கண்ணியம்மா நானுன்னைக்கண்டு கொண்டே” (திருவாய்மொழி 4-7-7), “கூட்டரிய திருவடிக்கள்‌ கூட்டினை நான்‌ கண்டேனே”, (திருவாய்மொழி 4-9-9) “கைதொழவிருந்தாயது நானுங்‌ கண்டேனே (திருவாய்மொழி 5-7-5), “ஏரார்‌ கோலந்திகழக்கிடந்தாய்‌ கண்டேனெம்மானே’ (திருவாய்மொழி 5-8-1), “திருவிண்ணகர்க்‌ கண்டேனே’ (திருவாய்மொழி 6-3-1), “தேவர்கட்கெல்லாம்‌ கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே” (திருவாய்மொழி 9-4-8) என்று இப் பத்து சந்தையாலும்‌ ஸாக்ஷாத்காரமாகச்‌ சொல்லுகிறவிது “நெஞ்சென்னும்‌ உட்கண்‌” (பெரிய திருவந்தாதி 28) என்கிற ஆந்தர சக்ஷுஸ்ஸான மாநஸ ஸாக்ஷாத்காரமாய்‌-

    கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே
    அமலங்களாக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி
    கமலத்தயன் நம்பி தன்னைக் கண்ணுத லானொடும் தோற்றி
    அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி என் நெற்றி உளானே –1-9-9—புண்டரீகாக்ஷனான சர்வேஸ்வரன் என் கண்ணுக்கு விஷயம் ஆனான் –-ந மாம்ஸ சஷூர் அபி வீக்ஷ தேதம் ந சஷூஷா பஸ்யதி-என்கிற மரியாதை குலைந்தது-காண்பன் –-நானும் அவனைக் காணா நின்றேன்-காண்பன் -என்கிற இடம் வர்த்தமானம்-நீர் காண வல்லீர் யாயிற்று -எத்தாலே என்னில்-அவன் கண்களாலே -அமலங்களாக விழிக்கும் – அவன் திருக் கண்களால் நிர் தோஷனாம் படியும் -காண வல்லேனாம் படியும் விசேஷ கடாக்ஷத்தைப் பண்ணினான்

    கண்ணுள் நின்று அகலான் கருத்தின் கண் பெரியன்
    எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே
    வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான்
    திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –10-8-8–சதா தரிசனத்துக்கு வேறு தனக்கு ஒரு விபூதி யுண்டு என்று இருக்கிறிலன்-கருத்தின் கண் பெரியன்-நம் விஷயத்தில் அவன் பார்க்கிற பாரிப்பு நமக்கு மநோ ரத விஷயம் அன்று -நம்மைக் கொண்டு போகையிலே பாரித்து அர்ச்சிராதி கணங்களை அழைப்பது –தான் அவர்களுக்கு முற்பாடன் ஆவதாகா நின்றான் –

    சீர்மை கொள் வீடு ச்வர்க்க நரகு ஈறா
    ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்
    வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற
    கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10-பரமபதத்தில் வர்ஷூ கலாவாஹம் போலே -ஸ்ரமஹரமான வடிவோடே அத்விதீயனாய் எழுந்து அருளி இருக்குமவன்
    கிருஷ்ணனாய் எனக்கு உபகரிக்கையாலே நான் அனுபவிக்கப் பெற்றேன் என்கிறார் –

    தலைப்பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால்
    அலைப்பூண் உண்ணும் அவ் வல்லல் எல்லாம்
    அகலக் கலைப்பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டுகொண்டு
    நிலைப்பெற்று என்னெஞ்சம் பெற்றது நீடுஉயிரே.
    –3-2-10-பல கலைகளாலும் அறியப் படுபவன்
    வேதைஸ் ச சர்வர் அஹமேவ வேத்ய -என்று வேதைக சமதி கம்யனான கிருஷ்ணனைக் கண்டு கொண்டு நிலைப்பெற்று என்னெஞ்சம் – என் மனத்தினை நீ சிந்தாமல் செய்வாய் -என்று சிதிலமான நெஞ்சம் தான் தரித்தது-பெற்றது நீடுஉயிரே.–-உயிர் நீடு பெற்றது -எங்கு இனித் தலைப் பெய்வன்-என்று முடிய புக்க ஆத்ம வஸ்துவும் நித்யமாயிற்று-நித்ய வஸ்துவுக்கு நாசமாவது -தாஸ்ய அசித்தி
    தாஸ்யமே நிரூபகம் ஆனால் தத் அலாபத்தில் நிரூப்பியமும் இல்லையாம் இறே-ச்சேத்யாதி விஸஜாதீயம்-ஏன்னா பகவத் அலாபத்தில் அழியாது ஒழியுமோ –

    அறிந்து அறிந்து, தேறித் தேறி,யான் எனது ஆவியுள்ளே
    நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,
    பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
    நறுந்து ழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே.–4-7-7-இவ்வளவு பெறுகைக்கு முதல் காட்சியைச் சொல்கிறார் -வைத்த வளையத்தை காட்டி யாற்று இவரை அநந்யார்ஹர் ஆக்கிற்று-நான் உனைக் கண்டு கொண்டே.–-பெற்ற அம்சத்தாலே திருப்தி பிறவாத நான் –-நிரதிசய போக்யனான உன்னைக் கண்டு கொண்டு -அறிந்து அறிந்து தேறி தேறி -என்று அந்வயம் –

    கூட்டுதி நின் குரை கழல்கள்; இமையோரும் தொழா வகைசெய்து,
    ஆட்டுதி நீ; அரவணையாய்! அடியேனும் அஃது அறிவன்;
    வேட்கை எலாம் விடுத்து எனை உன் திருவடியே சுமந்து உழலக்
    கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே
    .–4-9-9–ருசியுடைய என்னை உன் திருவடிகளிலே கைங்கர்யம் பண்ணி வர்த்திக்கும் படி-கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே.– அந்நிய சாத்தியமான திருவடிகளிலே கூட்டினாய் -கேட்டார் வாய் கேட்க்கை யன்றிக்கே நான் அனுபவிக்க பெற்றேன் ஆகையால் அறிந்தேன்

    எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? எவ்வ தெவ்வத் துளாயுமாய் நின்று
    கை தவங்கள் செய்யும் கருமேனி அம்மானே!
    செய்த வேள்வியர் வையத் தேவர் அறாச் சிரீவர மங்கலநகர்
    கைதொழ இருந்தாய் அது நானும் கண்டேனே!
    –5-7-5—இவர்கள் நிரந்தரமாக வர்த்திக்கும் தேசம் -நகர் கை தொழுகை யாவது -மஞ்சா க்ரோஸந்தி போலே இவர்கள் அனுவர்த்த நமே தாரகமாய் இருந்தாய்
    அது நானும் கண்டேனே!–அநுபூத அம்சத்தை இல்லை என்கிறேன் அல்லேன்-அனுபாவ்ய அம்சம் யுண்டாகையாலே சொல்லுகிறேன் -அடிமை கொள்ளுகிற நீ சந்நிஹிதன் ஆனமை அறிந்தேன் -எனக்கு அத்தால் போராது -உன் திருவடிகளில் கைங்கர்யமே யாத்ரையாகப் பெற வேணும் என்று வாக்ய சேஷமாகத் தலைக் கட்டுகிறது-

    ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
    நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே!
    சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
    ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–
    5-8-1-அழகு மிக்க ஒப்பனை -இப் ஒப்பனை அழகு நிறம் பெறும்படி யாயிற்று கண் வளர்ந்து அருளிற்று -அல்லாதார்க்கு கிடந்த போது வைரூப்யம் உறைத்து இருக்கும் -இங்கு அழகு உறைத்து இருக்கும் -ச மயா போதித ஸ்ரீ மான் –-கிடந்தாய் கண்டேன் -கண் வளர்ந்து அருளுகிற படி கண்டேன் –உணர்ந்து குளிர நோக்குதல் -அணைத்தல் -இந்த சொல்லுச் சொல்லுதல் -செய்யப் பெற்றிலேன் -கண்ணாலே காணப் பெற்றேன் -நினைத்த பரிமாற்றம் பெற்றிலேன் -பரி மாற்றம் பெறா விட்டால் ஆறி இருக்கலாம் -பிராப்தி இல்லை யாகில் -வடிவு அழகோ பாதி சம்பந்தமும் நலியா நின்றதே –ஸ்தநந்த்ய பிரஜை தாய் அறிந்தால் முலை முலை என்னுமா போலே சம்பந்த ஞானம் அன்றோ கூப்பிடப் பண்ணுகிறது –

    நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
    வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
    பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்
    செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே.–6-3-1-சர்வகதனானது தமக்காக என்று இருக்கிறார் –ஒருவனை பிடிக்க சுற்றி ஒரூரை வளைப்பாரை போலே -இப்படி சர்வகதனான பெருமையை உடையனாய் வைத்து -ப்ரணய ரோஷத்தாலே அகன்று -முடிய புக்க என்னை தாழ நின்று சேர்த்துக் கொண்ட உபகாரகனை என்றுமாம் –செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே.–-நிரவதிக சம்பத்தை உடைய தேசம் -பிரிந்து தூது விட வேண்டாதே-ப்ரணய ரோஷத்தாலே -கிட்ட ஓட்டோம் -என்று வியசனப் படாதே -நித்ய அனுபவம் பண்ணலாம் இடம் என்கை –லஷ்மனோ லஷ்மி சம்பன்னவ் -என்கிறபடியே இடைவிடாதே பகவத் அனுபவ ஸ்ரீ -இறே சம்பத்து ஆகிறது –-திருவிண்ணகர்க் கண்டேனே.-ஓர் இடத்திலே காண ஆசைப்பட்டு ஓர் இடத்தே காண்கை அன்றிக்கே தூது விட்ட அர்ச்சாவதாரத்திலே கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –

    உருவாகிய ஆறு சமயங்கட்கு எல்லாம்
    பொருவாகி நின்றான் அவன் எல்லாப் பொருட்கும்
    அருவாகிய வாதியைத் தேவர்கட்கு எல்லாம்
    கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே
    –9-4-8-ப்ரஹ்மாதிகளுக்கும் கூட காரண பூதனானவனை –கண்ணனைக் -காரியங்களில் ஒன்றுக்கு தான் காரணம் ஆனவனை-கண்டு கொண்டேனே–அவதாரத்துக்கு பிற்பாடராய் இருக்க கண்டு கொண்டேன் என்கிறார் இறே -ப்ரேமார்த்த சித்தருக்கு என்றும் காணலாம் -அவதார சம காலத்திலும் காண ஒண்ணாது சிசு பாலாதிகளுக்கு –பாஹ்ய சமயங்களால் அவிஸால்யனாய் -சர்வ அந்தராத்மாவாய்க் கொண்டு -சர்வ நியாந்தாவாய் -ப்ரஹ்மாதிகளுக்கும் உத்பாதகனாய் இருந்து வைத்து ஆஸ்ரிதற்கு ஸூலபனாய் இருக்கிறவனைக் காணப் பெற்றேன் -என்கிறார் –

    கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே
    விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்

    தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக
    பண்டே பரமன் பணித்த பணி வகையே–10-4-9–என்றும் கேட்டே போம் விஷயத்தை சாஷாத் கரிக்கப் பெற்றேன் —கமல மலர்ப்பாதம் –பிராப்தி ஒழியவே ஞான லாபமே அமையும் படியான போக்ய விஷயம் என்கிறது –-காண்டலுமே-விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்–கண்ட போதே வினை என்று பேர் பெற்றவை எல்லாம் விட்டுப் போய்த்து –சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்னுமவன் அடியாக வந்ததாகையாலே தட்டில்லை இறே

    கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பான் அவாவுவன் நான் –திருவிருத்தம் -84-
    அடியேன் காண்பான் அலற்றுவன் –1-5-7-
    உம்மைக் காணும் ஆசையுள் நைகின்றாள் –2-4-2-
    கூவுகின்றேன் காண்பான்-3-2-8-
    மெய் கொள்ளக் காண விரும்பும் என் கண்களே –3-8-4-
    கூவியும் காணப் பெறேன் உன் கோலமே –3-8-7-
    உன்னை எந்நாள் கண்டு கொள்வேனே –3-8-8-
    கோல மேனி காண வாராய் –4-7-1-
    தடவுகின்றேன் எங்குக் காண்பன் –4-7-9-
    பாவியேன் காண்கின்றிலேன் –4-7-10-
    உன்னைக் காண்பான் நான் அலப்பாய் –5-8-4-
    உலகம் பரவக் கிடந்தாய் காண வாராயே –5-8-9-
    என்று கொல் கண்கள் காண்பதுவே –5-9-5-
    விளங்க ஒருநாள் காண வாராய் –6-9-4-
    உன்னைக் காண்பான் வருந்தி எனை நாளும் –6-9-6-
    அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாய் –8-1-1-
    ஒருநாள் காண வாராய் –8-5-1-
    தொண்டனேன் உன் கழல் காண ஒருநாள் வந்து தோன்றாயே –8-5-6-
    உன்னை எங்கே காண்கேனே-8-5-10-
    உன்னைக் காணக் கருதும் என் கண்ணே –9-4-1-

    என்று பாஹ்ய சஷுசாலே அவனைக் காண ஆசைப் பட்டு கூப்பிட்ட சந்தைகள் –அதில் இரட்டி உண்டாகையாலே –-கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலான் -10-8-7–என்று திருமால் இரும் சோலை அளவாக ஆந்த்ர அனுபவம் செல்லா நிற்க – பெற்று அன்று தரியாத –பாஹ்ய அனுபவ அபேஷை -நடக்கையாலே – பர ஞானத்தை கர்ப்பித்து கொண்டு இருக்கிற பர பக்தி என்கை —

    கைய பொன்னாழி வெண்சங்கொடுங்‌ காண்பான்‌ அவாவுவன்‌ நான்‌ (திருவிருத்தம்‌ 84), “அடியேன்‌ காண்பானலற்றுவன்‌ ‘, (திருவாய்மொழி 1-5-7) “உம்மைக் காணு மாசையுள்‌ நைகின்றாள்‌” (திருவாய்மொழி 2 -4-2, “கூவுகின்றேன்‌ காண்பான்‌” (திருவாய்மொழி 3-2-8), “மெய் கொள்ளக் காண விரும்பும்‌ என் கண்களே’ (திருவாய்மொழி 3-8-4), “கூவியுங்காணப்‌ பெறேன்‌ உன கோலமே”, (திருவாய்மொழி 3-8-7) “உன்னை யெந்நாள்‌ கண்டு கொள்வனே’ (திருவாய்மொழி 3-8-8), “கோல மேனி காண வாராய்‌” (திருவாய்மொழி 4-7-1), “கூவுகின்றேன்‌ காண்பான்‌” (திருவாய்மொழி 3-2-8) “பாவியேன்‌ காண்கின்றிலேன்‌” (திருவாய்மொழி 4-7-10), “உன்னைக் காண்பான்‌ நானலப்பாய்‌” (திருவாய்மொழி 5-8-4), “ஒரு நாள்‌ காணவாராயே” (திருவாய்மொழி 8-5-1) “என்று கொல்‌ கண்கள்‌ காண்பதுவே” (திருவாய்மொழி 5-9-5), “விளங்க ஒருநாள்‌ காண வாராய்‌” (திருவாய்‌ மொழி 6-9-4), “உன்னைக் காண்பான்‌ வருந்தியெனை நாளும்‌” (திருவாய்‌ மொழி 6-9-6) “அலைகடல்‌ கடைந்தவப்பனே காணுமாறருளாய்‌” (திருவாய்மொழி 8-1-1), “தொண்டனேனுன்கழல்காணவொருநாள்வந்து தோன்றாயே” (திருவாய்மொழி 8-5-6), “உன்னையெங்கே காண்கேனோ’ (திருவாய்மொழி 8-5-10), “கனிவாய்‌ சிவப்ப நீ காணவாராயே” (திருவாய்மொழி 9-2-4), “உன்னைக்காணக்‌ கருதுமென்கண்ணே’ (திருவாய்மொழி 9-4-1) என்று அவனைக் காண வாசசைப்பட்டுக்‌ கூப்பிட்ட சந்தைகள்‌ அதிலிரட்டி யாகையாலே “கண்டு களிப்பக்‌ கண்ணுள்‌ நின்றகலான்‌’ (திருவாய்மொழி 10-8-7) என்று திருமாலிருஞ்சோலையளவும்‌ அநுபவம்‌ செல்லா நிற்கச்‌ செய்தே பெற்றல்லது தரியாதபடியான பாஹ்ய ஸம்ஸ்லேஷாபேஷை நடக்கையாலே பரஜ்ஞாநத்தை கர்ப்பித்துக் கொண்டு பரமபக்தி யாயிருக்கிறது –

    தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழு வினுள்ளும்
    ஐய நல்லார்கள் குழிய விழவினும் அங்கங்கெல்லாம்
    கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பானவாவுவன் நான்
    மைய வண்ணா மணியே முத்தமே என் தன் மாணிக்கமே 
    – -84-குழாங்கள் குழிய குழு-என்கையாலே அஸ் ஸமூஹம் தான் பலவாய்ச் சேர்ந்த சமுதாயத்தைச் சொல்லுகிறது-ஐய நல்லார்கள் குழிய விழவினும்-பூஜ்யரான விலக்ஷண புருஷர்கள் திரண்ட மஹா உத்ஸவத்திலும்–அங்கங்கெல்லாம்-அவ்வவ் விடங்கள் எல்லாவற்றிலும்–கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பானவாவுவன் நான்-போக்யத்வ ரக்ஷகத்வங்களுக்கு ஸூசகமாய் கற்பகக் கவடு விழுந்தால் போலே திருக்கைக்கு அலங்காரமாய் ஒவ்ஜ்வல்ய விசிஷ்டமான திருவாழியோடும் அத்யந்த பரி ஸூத்தமான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தோடும் கூடக் காண வேணும் என்று ஆசைப்படா நிற்பன்

    அடியேன் சிறிய ஞானத்தன் அறிதலார்க்கும் அரியானை
    கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை
    செடியார் ராக்கை யடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை
    அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கதோர் அயர்வுண்டே 
    –1-5-7-அடியேன் – ஸ்வாமிக்கு அதிசயத்தைப் பண்ணப் பார்த்தால் அன்றோ மாம்பழ யுண்ணி போலே பேரைச் சுமந்து காண வேணும் என்று கூப்பிடா நின்றேன் அவ்விஷயத்தைக் கிட்டி தூஷிக்கப் பாரா நின்றேன்

    வாணுதல் இம்மடவரல் உம்மைக்
    காணும் ஆசையுள் நைகின்றாள்
    விறல்
    வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் உம்மைக்
    காண நீர் இரக்கமிலீரே–2-4-2-பிரிந்தார்க்கு தரிக்க ஒண்ணாத உம்மை இவளை அறியாது ஒழிந்தால் உம்மை அறியாது ஒழிய வேணுமோ-உம்மை நீர் கண்ணாடிப் புறத்திலும் கண்டு அறியீரே-காணும் ஆசையுள் நைகின்றாள் – உம்மைக் கிட்டி அணைக்கவோ ஆசைப் பட்டது -ஒரு கால் காண வன்றோ
    நைகின்றாள் –-வாடுகை தான் தேட்டமாம் படி யாயிற்று

    மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்
    ஓவுதல் இன்றி யுன் கழல் வணங்கிற்றிலேன்
    பாவு தொல் சீர்க் கண்ணா வென் பரஞ்சுடரே
    கூவிகின்றேன் காண்பான் எங்கு எய்தக் கூவுவனே –3-2-8–சாதனா அனுஷ்டானம் பண்ணி பலம் தாழ்த்தாரைப் போலெ கூப்பிடா நின்றேன்-எங்கு எய்தக் கூவுவனே –-ஒரு ஷூத்ரன் கூப்பீடு எங்கே பலிக்க -சாபலம் இறே

    கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை வைகலும் மாத்திரைப் போதும் ஓர் வீடு இன்றிப்
    பைகொள் பாம்பு ஏறி உறை பரனே! உன்னை மெய்கொளக் காண விரும்பும் என் கண்களே.–3-8-4-உன்னை-இப்படி பிராப்தனும் போக்யமுமான உன்னை-மெய்கொளக் காண விரும்பும் என் கண்களே.–
    மானஸ அநு பவமாதரமாய் -பாஹ்ய சம்ச்லேஷத்துக்கு எட்டாது ஒழிகை அன்றிக்கே மெய்யாகக் காண வேணும் என்று விரும்பா நின்றன –

    ஆவியே! ஆரமுதே;என்னை ஆளுடைத் தூவி அம் புள்ளுடையாய்!சுடர் நேமியாய்!
    பாவியேன் நெஞ்சம் புலம்பப் பல காலும் கூவியும் காணப்பெறேன் உன கோலமே.–3-8-7-கூவியும் காணப்பெறேன் –-ஸ்வரூபம் பெற்றேன் அல்லேன்-அபிமதம் பெற்றேன் அல்லேன் என்கிறார்
    தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று இருக்கப் பெற்றிலேன்-மடலூர்ந்தார் பெற்ற பேற்றை பெற்றேன் அல்லேன்-என் ஸ்வரூபத்தை நோக்கினேன் அல்லேன் -அவன் ஸ்வரூபத்தை நோக்கினேன் அல்லேன்
    உன்னுடைய நீர்மையும் அழித்தேன்-என்னுடைய சேஷத்வத்தையும் அழித்தேன் –-உன கோலமே-இரண்டு தலையையும் அழித்தே யாகிலும் பெற வேண்டும் விஷய வை லக்ஷண்யத்தை சொல்லுகிறது
    வ்யதிரேகத்தில் புறம்பே போது போக்குதல் கண் உறங்குதல் செய்யும் விஷயம் அன்று இறே –

    கோலமே! தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன நீலமே! நின்று எனது ஆவியை ஈர்கின்ற
    சீலமே! சென்று செல்லாதன முன் நிலாம் காலமே! உன்னை எந்நாள் கண்டு கொள்வனே?–3-8-8-உன்னை-சர்வ பிரகார வி லஷணனாய் கால த்ரயமும் நீ இட்ட வழக்கான உன்னை எந்நாள் கண்டு கொள்வனே?–நான் பெரும் நாள் இன்ன நாள் என்ன வேணும் –-பூர்ணே சதுர்தசே வர்ஷே என்று ஸ்ரீ பரத ஆழ்வானுக்குச் சொன்னால் போலே சொல்ல வேணும் என்கிறார் –

    சீலம் இல்லாச் சிறியே னேலும், செய்வினையோ பெரிதால்;
    ஞாலம் உண்டாய்! ஞான மூர்த்தி! நாராயணா! என்று என்று
    காலந் தோறும் யான் இருந்து, கைதலை பூசலிட்டால்,
    கோல மேனி காண வாராய்; கூவியும் கொள்ளாயே.–4-7-1-இப்படி விடாயைப் பிறப்பிக்கும் வடிவு -விடாய்த்தார்க்கு காட்ட அன்றோ வடிவு படைத்தது -பக்தா நாம் அன்றோ –காண-காண்கை இறே பிரயோஜனம் –சதா பஸ்யந்தி இறே-கருமுகை மாலை தேடுவார் சூட வன்றோ தேடுவது -சும்மாட்டைக் கொள்ள அன்றே-வாராய்;-இப்போதும் அவன் வரவால் பெறுகை முறை என்கை -வருகிறிலை
    கூவியும் கொள்ளாயே.-இஷ் ஷூ த்ர ஜந்துவின் பக்கலிலே நான் செல்லவோ என்று இருந்தாயாகில் என்னை அழைத்துக் கொள்ளலாம் –அதுவும் செய்கிறிலை-ஞாலம் உண்டாய் என்று தொடங்கி-காண வருகிறிலை -கூவியும் கொள்ளுகிறிலை -சீலமில்லா சிறியேனாலும் செய் வினையோ பெரிதால் -என்று அந்வயம்-

    இடகிலேன் ஒன்று; அட்டகில்லேன்; ஐம்புலன் வெல்லகிலேன்;
    கடவனாகிக் காலந்தோறும் பூப்பறித்து ஏத்தகிலேன்;
    மடவல் நெஞ்சம் காதல் கூர, வல்வினையேன் அயர்ப்பாய்த்
    தடவுகின்றேன்; எங்குக் காண்பன் சக்கரத்து அண்ணலையே?–4-7-9-அறிவு கேட்டை உடையேனாய் முன்னே வந்து நின்றாலும் காண முடியாத படி தடவா நின்றேன்-நத்வா பச்யாமி கௌசல்யே -என்கிறபடியே-எங்குக் காண்பன்-ஒரு கைம்முதல் இன்றிக்கே இருக்க கூப்பிடா நின்றேன் -எங்கே காணப் பெறுகிறேன்-சக்கரத்து அண்ணலையே?–-கையும் திரு வாழியுமான சேர்த்தியிலே யாயிற்று இவர் அகப்பட்டது-

    சக்கரத்து அண்ணலே! என்று தாழ்ந்து, கண்ணீர் ததும்ப,
    பக்கம் நோக்கி நின்று, அலந்தேன்; பாவியேன் காண்கின்றிலேன்;
    மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கினை என்
    தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே
    .–4-7-10-வேதமாகிற விளக்கிலே காணப் படுமவனை
    என்-தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே.–எனக்கு தக்காப் போலே ஒரு ஞான த்ருஷ்ட்டி யுண்டாய் அத்தாலே கண்டு அனுபவிப்பன்-காணப் பெறாமையாலே ப்ரேமம் கிலேச ஹேது வாகிறாப் போலே -நெஞ்சில் பிரகாசமும் கிலேச ஹேது வாகா நின்றது-மதி நலம் அருளினன் என்கிற ஞான பக்திகள்-இரண்டும் கழுத்துக்கு கட்டியாய் விட்டது

    செலக் காண்கிற்பார் காணு மளவும் செல்லும் கீர்த்தியாய்!
    உலப்பிலானே! எல்லா உலகு முடைய ஒருமூர்த்தி!
    நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான் நான்
    அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே.
    –5-8-4-ஆஸ்ரித வத்சலனான உன்னை காண் கைக்காக -அத்தலை இத்தலையாய் நீ என்னை காண பட்ட அளவன்று-நான் உன்னை காண் கைக்கு பட்டது-அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே-அலமந்து -விஷயம் சந்நிஹிதமாய் இருக்கச் செய்தே-ஆகாசத்தை பார்க்கிறது -நினைத்த பரிமாற்றம் பெறாமையாலே ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு உதவ வந்து தோற்றினால் போலே -தம் தசையைப் பார்த்து தோற்றுகிறானோ என்று பார்த்து -என்னுடைய நிராலம்பநதையைப் பார்த்து என்னுமாம் ஆண்டான் வரக் காணா மையாலே ஸ்நே ஹிதிகள் செய்வதும் செய்யா நின்றேன் -க்ருபணர் செய்வதும் செய்யா நின்றேன் -சபலர் செய்வதும் செய்யா நின்றேன் -விரக்தர் செய்வதும் செய்யா நின்றேன் –

    இசைவித் தென்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே!
    அசைவில் அமரர் தலைவர் தலைவா! ஆதிப் பெரு மூர்த்தி!
    திசைவில் வீசும் செழுமா மணிகள் சேரும் திருக்குடந்தை
    அசைவில் உலகம் பரவக் கிடந்தாய்! காண வாராயே
    .–5-8-9-வருத்தம் இன்றிக்கே லோகமானது ஆஸ்ரயிக்க என்னுதல் -நித்ய ஸூ ரிகள் நீர்மைக்குத் தோற்று ஏத்தும் படி என்னுதல் -இடம் வலம் கொண்ட போது எல்லாம் திருத்திரை எடுத்தால் போலே லோகம் அடங்க ஏத்தக் கிடந்தாய் என்னுதல் –
    கிடந்தாய்! காண வாராயே.–-கண் வளர்ந்து அருளுகிற அழகை அனுபவித்தால்-நடை அழகை அனுபவிக்க வேண்டாவோ -அதீந்திரியமான வடிவை கண்ணுக்கு இலக்காக்கின அருமை யுண்டோ நடக்கையில் –

    நன்னலத் தோழிமீர்காள்! நல்ல அந்தணர் வேள்விப் புகை
    மைந்நலங் கொண்டுயர் விண் மறைக்கும் தண் திருவல்ல வாழ்
    கன்னலங் கட்டி தன்னைக் கனியை இன்னமுதந் தன்னை
    என்னலங் கொள் சுடரை என்று கொல் கண்கள் காண்பதுவே
    .–5-9-5-கண்ட போதே நுகரலாம் படி இருக்கை -ரசத்துக்கு மேலே போன உயிரை மீட்க வற்றாய் இருக்கை -என்னை சர்வ ஸ்வபஹாரம் பண்ணி -அத்தாலே உஜ்ஜவலனாய் இருக்கிறவனை –என்னை எழுதிக் கொண்ட அழகை யுடையவனை என்றுமாம் –என்னலங் கொள் சுடரை என்று கொல் கண்கள் காண்பதுவே.–-நான் பட்டது பட -பிரஜை ஜீவிப்பது காண் என்பாரைப் போலே என் கண்களின் விடாய் தீருவது என்றோ என்கிறாள் -முடியானேயில் கரணங்கள் இ றே -காண விரும்பும் என் கண்களே என்று கண்களும் தாமும் தனித்தனியே விடாய்க்கும் படி இ றே இவருடைய விடாய்-என்னலம் கொள் சுடரை என் கண்களின் விடாய் கெட காணப் பெறுவது என்றோ –

    காண்ப தெஞ்ஞான்று கொலோ? வினையேன் கனிவாய் மடவீர்!
    பாண் குரல் வண்டினொடு பசுந் தென்றலுமாகி எங்கும்
    சேண் சினை ஓங்கு மரச் செழுங்கானல் திரு வல்லவாழ்
    மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே.–5-9-6–பிறருக்கும் ஐயோ என்னும் திசையோ இது –கண்கள் செய்த படி செய்ய -நான் காணப் பெறுவது என்றோ என்கிறாள் –கன்று வேறு தாய் வேறாகும் விஷயம் இறே -பிரஜை பட்டது படுகிறது -நான் பசி தீரும் வழி என் -என்பாரைப் போலே
    வினையேன்- கண்கள் விடாய்க்கு அன்றிக்கே என் விடாய்க்கு அன்றிக்கே அலமாக்கும் படியான பாபத்தைப் பண்ணினேன் –

    தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல்வேறாப்
    பிளந்து வீயத் திருக்கா லாண்ட பெருமானே!
    கிளர்ந்து பிரமன் சிவன்இந் திரன்விண் ணவர்சூழ
    விளங்க ஒருநாள் காண வாராய் விண்மீதே.–6-9-4-ஈஸ்வர அபிமானிகளான ப்ரஹ்மாதிகள் பெரிய கிளர்த்தியோடே ஜய ஸ் துதி களைப் பண்ணிக் கொண்டு சூழ்ந்து சேவிக்க-விளங்க ஒருநாள் காண வாராய் விண்மீதே.–ஆகாசம் அவகாசம்எ ல்லாம் அழகு வெள்ளம் இடும்படி என்னுதல் -ஆதித்ய சகாசத்தில் நக்ஷத்ராதிகள் போலே அவர்கள் ஒளி கீழ்ப் பட என்னுதல்-ஒரு நாள் -ஆனைக்கு வந்து தேப்பற்றினார் போலே ஒருநாள் வந்து அருள வேணும் –

    பாயோர் அடிவைத்து அதன்கீழ்ப் பரவை நிலமெல்லாம்
    தாயோர் அடியால் எல்லா உலகும் தடவந்த
    மாயோன்! உன்னைக் காண்பான் வருந்தி எனைநாளும்
    தீயோடு உடன்சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ?
    –6-9-6–என்னைக் கிட்டுக்கைக்கு வருந்தி திரிந்த உன்னைக் காண வேணும் என்று நான் வருந்தி -அத்தலை இத்தலையாய் –எனைநாளும்–அநேக காலமும் -ஒரு நாள் என்னாசையை ஆவிஷ்கரித்து விட்டேனோ-தீயோடு உடன்சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ?–அக்னி சகாசத்திலே மெழுகு போலே -தூர இருந்து அழியாது இருத்தல் -அக்னியில் புக்கு நசித்தல் -செய்யப் பெறாதே இருக்கை -நசையின் ஸ்வ பாவத்தாலும் -விஷய ஸ்வ பாவத்தாலும் ஸைதில்யாம் நித்தியமாய் இருக்கை -ஜீவிக்கவும் பெறாதே முடியவும் பெறாதே யாதநா சரீரம் போலே குளிர்ந்த வழி இல்லாத தேசத்தே எத்தனை நாள் தட்டித் திரியக் கட வேன்-

    தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்
    மேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்
    பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணது ஓர் பவளவாய் மணியே
    ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாயே–8-1-1-நிரதிசய போக்யனாய் இருந்த உன்னை அநாதரித்து புறம்பே ஓர் உப்புச்சாறு அமையும் என்று இருப்பார்க்கு உடம்பு நோவக் கடல் கடைந்து கொடுக்கும் உபகாரகனே-காணுமாறு அருளாயே–எனக்கு கடல் கடைய வேண்டா -வடிவைக் காட்ட அமையும் -இவருக்கு பிராப்யம் அம்ருதம் அன்று –காண்கை -உபாயமும் கடல் கடைகை அன்று –அருளே -ப்ராப்ய ப்ராபகம் இரண்டும் ஒன்றே என்று இருப்பார்க்கு கார்யம் செய்யலாகாது என்கை –

    காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கிக் கண்ண நீர் அலமர வினையேன்
    பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ
    காணுமாறு அருளாய் காகுத்தா !கண்ணா !தொண்டனேன் கற்பகக் கனியே !
    பேணுவாரமுதே !பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா !–8-1-2-அலை கடல் கடைந்த அப்பனே -காணுமாறு அருளாய் என்னைச் செய்தே காணப் பெறாதே இருக்க பின்னையும் காணுமாறு அருளாய் என்கிறார் இ றே -காண்கைக்கு ஒரு ப்ரவ்ருத்தி பண்ணுமவர் அல்லரே-வர்ஷ தாரையால் அல்லாது தரியாத சாதகம் போலே அருள் அல்லது அறியாதவர் ப்ரவர்த்திகைக்கு தாம் சக்தர் ஆனாலும் பிராப்தி இல்லை என்று இருக்குமவர் –-என்று என்றே -அநவரதம் இத்தையே சொல்லா நிற்பார் -ஒரு கால் சொன்னால் வர காணாது ஒழிந்தால் வேறு ஒரு புகில் யுண்டாகில் இ றே அத்தை பற்றலாவது –
    கலங்கிக்-இப்படி கூப்பிட்டு ஒரு படி செல்லா நின்ற வந்த தாருண த்வனி வழியே ஹ்ருதயத்தில் பிறந்த கலக்கம் ஒருகாலைக்கு ஒரு கால் ஏறி வரா நின்றது -ஜடிலம் சீர வசனம் – கண்ண நீர் அலமர – அகவாயில் கலக்கம் உள் அடங்காமை கண்ண நீராய் ப்ரவாஹியா நின்றது-வினையேன்-இதுக்கு முன்பு அவ்விஷயத்தை பற்றினார்க்கு கலக்கமும் கண்ண நீருள் இல்லை கிடீர் -ஆசா லேசமுடையார் கால்கடையிலே துவளக் கடவ தத்துவத்தை பெறுகைக்கு நான் இங்கனம் கூப்பிடும் படியான பாபத்தை பண்ணினேன்-

    மாயக் கூத்தா வாமனா வினையேன் கண்ணா கண் கை கால்
    தூய செய்ய மலர்களா சோதித் செவ்வாய் முகிழதா
    சாயல் சாமத் திருமேனி தண் பாசடையா தாமரை நீள்
    வாசத்தடம் போல் வருவானே ஒரு நாள் காண வாராயே-8-5-1-பரப்பு மாற தாமரை அலர்ந்து இருப்பதாய் ஏகார்ணவத்தை ஒரு தாமரை தடாகம் ஆக்கினால் போலே பரந்து இருப்பதாய் -அப்பரப்பு அடங்க பரிமளம் நிரம்பி இருபத்தொரு தடாகம் நடந்து வருமா போலே யாயிற்று -பரிமளம் முன்பே அலை எறிய வரும் போது இருப்பது -சர்வ கந்த என்ன கடவது இறே –வருவானே-வரும் ஸ்வ பாவனே-முன்பு தம் பக்கல் வரும்படியை யுபகார ஸ்ம்ருதியாலே சொல்லுகிறார்-ஒரு நாள்-ஒரு கால் நாக்கு நனைக்க என்பாரை போலே-காண -வந்தால் கொள்ளும் பிரயோஜனம் காணும் அதுவே -ஒரு தேச விசேஷத்திலும் சதா பஸ்யந்தி -தரிசனத்தை இ றே பிரயோஜனமாக சொல்லிற்று-வாராயே-ஆற்றாமை மிக்காலும்-தானே வந்து காட்ட காணும் அதுவே முறை –தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தனும் ஸ்வாம் –ஏஷ சர்வஸ்வ பூதஸ்து –என்ன கடவது இறே –

    காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன்
    நாணி நன்னாட்டலமந்தால் இரங்கி யொருநாள் நீ யந்தோ
    காண வாராய்
    கரு நாயிறுதிக்கும் கருமா மாணிக்கம்
    நாள் நன்மலைபோல் சுடர்ச் சோதி முடிசேர் சென்னி யம்மானே–8-5-2–ஒருகால் அழைத்தது வரக் காணா விட்டால் -நம் ஆசையை ஆவிஷ்கரித்தோம்-வந்த போது வருகிறான் -என்று இருக்கிறார் அல்லர் -நிரந்தரமாக கூப்பிடா நிற்பர் –யந்தோ-உன் வை லக்ஷண்யம் அறியாது ஒழிந்தால் -என் ஆர்த்தியும் அறியாது ஒழிவதே-காண வாராய்-பிரயோஜனார்த்தியாய் அழைக்கிறேனோ –

    கொண்டல்வண்ணா குடக்கூத்தா வினையேன் கண்ணா கண்ணா -என்
    அண்ட வாணா வென்று என்னை ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்
    விண் தன்மேல் தான் மண் மேல்தான் விரி நீர்க் கடல் தான் மற்றுத் தான்
    தொண்டனேன் உன் கழல் காண ஒரு நாள் வந்து தோன்றாயே-8-5-6-தூணிலே வந்து தோற்றினால் போல் ஆதல் -ஆனைக்கு உதவ வந்து தோற்றினால் போலே யாதல் தோற்றவுமாம்-தொண்டனேன் -உன் திருவடிகளிலே கைங்கர்யத்தில் சபலனான நான்-உன் கழல் காண-எனக்கு ஜீவனமான திருவடிகளை காண-ஒரு நாள் வந்து தோன்றாயே—பல நாள் வேணும் என்று நிர்பந்திக்கிறேனோ என் சத்தையை நோக்குகைக்கு ஒரு நாள் வந்து தோற்றி அருள வேணும் –

    பிறந்த மாயா பாரதம் பொருத மாயா நீ யின்னே
    சிறந்த கால் தீ நீர் வான் மண் பிறவுமாய பெருமானே
    கறந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் கண்டு கொள்
    இறந்து நின்ற பெருமாயா உன்னை எங்கே காண்கேனே-8-5-10-காலத்தாலும் ஆதஞ்சா நாதிகளாலும் தோற்றுகிற நெய் கறந்த காலத்தில் தோற்றாது இ றே -உன் பக்கல் ந்யஸ்த பரராகை யாகிற ஸம்ஸ்காரத்தால் அல்லது காண வரியை என்கை-உன்னை எங்கே காண்கேனே–பரமபதத்தில் காட்சிக்கு சரீர சம்பந்தம் அற வேணும் -அவதாரத்துக்கு பிற்பாடான ஆனேன் -அர்ச்சாவதாரம் நினைத்தபடி கிடையாது -அந்தர்யாமித்வம் கண்ணுக்கு விஷயம் அன்று -இனி எங்கே காணப் புகுகிறேன் –

    எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்று என்று
    அங்கே தாழ்ந்த சொற்களால் அந்தண் குருகூர்ச் சடகோபன்
    செங்கேழ் சொன்ன வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
    இங்கே காண விப் பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே-8-5-11–ஐஸ்வர்ய ஸூ சகமான திருத் துழாய் மாலையை யுடைய சர்வேஸ்வரனை கண்டு அல்லது தரிக்க மாட்டாத படி சபலனான நான் எங்கே காணக் கடவேன்-என்று என்று-நிரந்தரமாக சொல்லி -ஒரு கால் சொல்லி -ஆசையை ஆவிஷ்கரித்தோம் இறே -என்று ஆறி இருக்கிறார் அல்லரே -லாபத்தளவும் சொல்லும் அத்தனை இறே-இங்கே காண விப் பிறப்பே மகிழ்வர்-எல்லியும் காலையே-–இஹ லோகத்தில் இஜ்ஜன்மத்திலே திவா ராத்திரி விபாகம் இன்றிக்கே பகவத் அனுபவம் பண்ணி மகிழப் பெறுவர் –ஆளாக் கூப்பிட்டு அழைத்தக்கால் –என்று கூப்பிட வானத்து முகம் காட்டாததால் பிறந்த தன்னுடைய அவத்யத்தை-ஆழ்வார் ஆஸ்ரயித்தார் பக்கலிலே தீருமாயிற்று அவன் -பார்யையோடு வெறுப்புண்டால் அவள் பக்கல் முகம் பெறுகைக்கு பிரஜைகளை ஸ்லாகிப்பாரை போலே –

    புளிங்குடிக் கிடந்து வர குணமங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று
    தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி
    நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்பப்
    பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வாராயே–9-2-4–தெளிந்த நீரை முகக்கையாலே தர்ச நீயமான மேகமானது பவளத்தைப் பூத்தால் போலே யாயிற்று திரு வதரத்தில் பழுப்பு இருப்பது –இவர் சமப்ரமத்தைக் கண்டு அவன் பண்ணும் ஸ்மிதம் இருக்கிற படி –நீ காண வாராயே–நான் காண நீ வர வேணும் -என் எதிரே உன் நடை அழகு காண வேணும் -அவன் கூத்து இருக்கிற படி -வல்லார் ஆடினால் போலே இறே நடை அழகு இருப்பது –

    பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வந்து நின் பல் நிலா முத்தம்
    தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக் கண் தாமரை தயங்க நின்று அருளாய்
    பவள நன் படர்க் கீழ் சங்கு உறை பொருநல் தண் திருப் புளிங்குடி கிடந்தாய்
    கவள மாக் களிற்றின் இடர் கெடத் தடத்துக் காய்சினப் பறவை ஊர்ந்தானே–9-2-5-அவாக்ய அநாதரா என்கிறபடியே ஒன்றுக்கும் விக்ருதன் ஆகாத நீ -அனுகூல தர்சனத்தாலே அகவாயில் பந்தம் தோற்ற விக்ருதனாய் ஸ்மிதம் பண்ணி நிற்கும் படியைக் காண வேணும் –பல் நிலா முத்தம்-பல்லாகிற நிலாவை யுடைய திரு முத்து நிரையானது-தவழ் கதிர் முறுவல் செய்து-கதிர் தவழும் படி -கதிர் புறப்படும் படி -முறுவல் செய்து-நின் திருக் கண்தாமரை தயங்க நின்று அருளாய்-திருக் கண்கள் ஆகிற தாமரை விளங்க நாலடி வந்து -முடிய வர மாட்டாதே ஸ்தப்தனாய் நிற்கும் நிலையைக் காண வேணும் -கண்ணினுடைய ஸ்மிதம் இருக்கும் படி-

    மையார் கருங்கண்ணி கமல மலர்மேல்
    செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே
    வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும்
    கையா உனைக் காணக் கருதும் என் கண்ணே–9-4-1-சங்க சக்ர கதா தர –ஸ்ரீ வத்ஸ வக்ஷ-என்கிற வடிவையுடைய உன்னை-காணக் கருதும் -காண ஆசைப்படா நின்றது -இவ்வஸ்துவைப் பார்த்தால் கண்டு கொண்டே இருக்கை இறே சத்ருசம் -நித்ய ஸூ ரிகளும் சதா தர்சனம் இறே பண்ணுவது –
    என் கண்ணே–சம்சாரிகளில் இவர்க்கு உள்ள வியாவ்ருத்தி போருமாயிற்று -இவரில் காட்டில் இவருடைய கண்ணுக்கு –

    கண்ணே உன்னைக் காணக் கருதி என்நெஞ்சம்
    எண்ணே நின்று இயம்பும் கொண்ட சிந்தையதாய்
    விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்பு அரியாயை
    நண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பேனே – -9-4-2—கண்ணே -எனக்கு த்ருஷ்ட்டி யானவனே –
    உன்னைக் காணக் கருதி -நிரதிசய போக்யனான உன்னைக் காண ஆசைப்பட்டு -காண்கைக்கு சாதனமான கண்ணும் காணப்படும் விஷயமும் அவனே -என்கிறார் –சஷூச் ச த்ரஷ்டவ்யஞ்ஜ நாராயணா -என்னக் கடவது இறே -அவன் தன்னாலே அவனைப் பெறும் அவர் இறே இவர் -ப்ராப்யத்தில் நியதி போலே இறே இவர்க்குப் ப்ராபகத்தில் நியதியும் –-என் நெஞ்சம்-இயற்றுவாய் எம்மோடு நீ கூடி -என்ன வேண்டும்படியான நெஞ்சம் –-எண்ணே — கொண்ட சிந்தையதாய்–எண் கொண்ட மநோ ரதத்தை யுடைத்தாய் -பஹு மநோ ரதங்களைப் பண்ணி -காண வேணும் -காணாதே பட்ட துக்கத்தை போக்க வேணும் -அடிமை செய்ய வேணும் -என்று –-நின்று இயம்பும்-நிரந்தரமாக கூப்பிடா நிற்கும் -வாக் விருத்தியும் தானே ஏறிட்டுக் கொள்ளா நிற்கும் –

    உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
    தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
    வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்
    கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே
    -10-8-7-கண்டு களிப்ப –மெய் கொள்ளக் காண விரும்பும் என் கண்கள் என்று விடாய்த்த கண்கள் கண்டு களிக்கும் படியாக –-கண்ணுள் நின்று அகலானே--நான் போகச் சொல்லிலும் கண் வட்டத்திலும் நின்றும் போகிறிலன் -விஷய பிரவணரை போகச் சொன்னாலும் தூணைக் கட்டிக் கொண்டு போகாதாப் போலே -இப்படி அவனை அனுபவித்துக் களிக்கப் பெற்ற எனக்கு இனி மேல் ஒரு குறை யுண்டோ –

    கண்ணுள் நின்று அகலான் கருத்தின் கண் பெரியன்
    எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே
    வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான்
    திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –10-8-8-சதா தரிசனத்துக்கு வேறு தனக்கு ஒரு விபூதி யுண்டு என்று இருக்கிறிலன்-கருத்தின் கண் பெரியன்-நம் விஷயத்தில் அவன் பார்க்கிற பாரிப்பு நமக்கு மநோ ரத விஷயம் அன்று -நம்மைக் கொண்டு போகையிலே பாரித்து அர்ச்சிராதி கணங்களை அழைப்பது –தான் அவர்களுக்கு முற்பாடன் ஆவதாகா நின்றான் –

    அநந்தரம் பரஞான அவஸ்தை ஆகிறது இன்னது என்கிறார்–

    இருந்தமை யென்றது பூர்ண பரஜ்ஞாநம்‌.–சூரணை -231-

    அதாவது–அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு இருந்தமை -2-3-10–என்று – அடியார்கள் குழாங்களைக் கூடுவது என்று கொலோ -10-9-11–என்று ஆசைப் பட்ட படி – அர்ச்சிராதி கதியாலே -தேச விசேஷத்திலே -போய் -பகவத் ஸ்வரூபாதிகளை பரி பூர்ண அனுபவம் பண்ணுகிற நித்ய ஸூரிகளின் திரளிலே கூடி இருந்தாராக தரிசித்துப் பேசின – சூழ் விசும்பணி முகில் -10-9- -பூரணமான பர ஞானம் என்கை —

    சூழ்விசும்பணிமுகில்‌ தூரியம்‌ முழக்கி” (திருவாய்மொழி 10-9-1 என்று தொடங்கி “அந்தமில் பேரின்பத்தடியரோ டிருந்தமை” (திருவாய்மொழி 10-9-11) என்று அர்ச்சிராதி மார்கத்தையும்‌ மார்கஸ்த்தரான புருஷர்களுடைய ஸத்காரத்தையும் தேஸ விஸேஷ ப்ராப்தியையும்‌ பகவதநுபவத்தையும்‌ பகவத் ஸ்வரூப ரூப குண விபூ,திகளை ஸாக்ஷாத்கரித் தநுபவிக்கிற நித்ய ஸூரிகளோடு ஏக ரஸராய்க்‌ கொண்டிருந்த நுபவிக்கிற ப்ரகாரத்தையும்‌ யதாவாக ஸாக்ஷாத்கரிக்கையாலே சூழ்விசும்பணிமுகில்‌ பூர்ண பரஜ்ஞாநமாய்‌ இருக்கிறது –

    களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
    ஒளிக் கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
    துளிக்கின்ற வான்நிலம் சுடர் ஆழி சங்கேந்தி
    அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே -2-3-10—அடியார்கள் குழாங்களையே –-இவன் தன்னையே அன்றிக்கே இவனுடைய ரக்ஷகத்வத்திலே தோற்று இருக்கும் ததீயர் திரள்களை –
    குழாங்களையே –-திரளாக வேணும் -அது தான் அநேகமாக வேணும்-இவ்விஷயத்துக்கு உசாத் துணையாம் போது அசங்க்யாதராக வேணும் என்று இருக்கிறார் –உடன் கூடுவது என்று கொலோ-நான் எனக்கு என்று அகன்று நிற்க வேண்டாதே-அத் திரளில் ஒரு நீராகக் கூடுவது என்றோ-வைஷ்ணவ ஸஹவாசம் இனிது என்று இருக்கச் செய்தேயும் அஹங்காரத்தால் செய்யப் போகாது ஒழிகிறது இறே

    சூழ் விசும்பணி முகில் -10-9-வேதாந்தங்களில் பிரசித்தமான அர்ச்சிராதி கதி மார்க்கத்தையும் -சரீர விஸ்லேஷ சமயத்தில் வரும் கிலேசம் எல்லாம் ஆறும் படி தானே வந்து முகம் காட்டும் படியையும் –
    மார்க்கஸ்தரான புருஷர்களுடைய ஸத்காரங்களையும் -அம்மாக்கத்தாலே போய்ப் புகக் கடவ பரம பதத்தையும்-நித்ய ஸூரிகள் வந்து ஆதரிக்கும் படியையும் -பிராட்டிமாரும் ஸ்ரீ வைகுண்ட நாதனும் எதிரே வந்து ஆதரிக்கும் படியையும் –நித்ய ஸூரிகள் சேவிக்க பிராட்டிமாரோடு வீற்று இருந்து அருளுகிற படியையும் -பரம ப்ராப்யரான நித்ய ஸூ ரிகள் நடுவே தாமே ஆனந்த நிர்ப்பரராய் இருக்கும் படியையும் காட்டி அருளக் கண்டு ப்ரீதராய் -அத்தை அந்யாபதேசத்தாலே பேசி அனுபவிக்கிறார்
    -தமக்கு அவன் பண்ணிக் கொடுத்த பேற்றை ஸ்ரீ வைஷ்ணவர்கள் எல்லாரும் பெற்றவராக பேசுகிற இது -அந்யாபதேசமாவது- அது தனக்கு பிரயோஜனம் -இங்குள்ளார் ஆழ்வார் பேறு நமக்குத் தப்பாது -என்று இருக்கைக்காக –

    சூழ்  விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
    ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
    ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
    வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே –10-9-1-திரு நாட்டுக்குப் போக உபக்ரமிக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்ட ப்ரீதி அதிசயத்தாலே -ஸ்த்தாவர ஜங்கமங்களுக்குப் பிறந்த விக்ருதியை அருளிச் செய்கிறார்-

    நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்
    பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்
    நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத்
    தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே–
    10-9-2-மேல் உண்டான லோகங்கள் பண்ணின ஸத்காரங்களை அருளிச் செய்கிறார் –

    தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை
    பொழிவனர்பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே
    எழுமின் என்று இருமருங்கு இசைத்தனர் முனிவர்கள்
    வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே
    –10-9-3-ஆதி வாஹிக லோகங்களில் உள்ளார் திரு நாட்டுக்கு நடக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் எதிரே வந்து புஷ்ப வர்ஷாதிகளைப் பண்ணிக் கொண்டாடுகிற படியை அருளிச் செய்கிறார் –

    எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
    கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்
    அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த
    மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே
    -10-9-4-மேலில் லோகங்களில் தேவாதிகள் ஸ்ரீ வைஷ்ணவர்கள் போகிற வழிகளில் தங்குகைக்கு பார்த்த பார்த்த இடம் எல்லாம் தோப்புக்கள் பண்ணியும் -வாத்யாதி கோஷங்களைப் பண்ணியும் -கொண்டாடுகிற படியை யருளிச் செய்கிறார் –

    மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
    போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்
    கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
    வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே
    –10-9-5-ஆதி வாஹிக கர்த்தாக்களான வருண இந்த்ராதிகளும் மற்றும் உள்ளாறும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப் பண்ணும் ஸத்காரத்தை அருளிச் செய்கிறார் –

    வேள்வி உள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
    காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்
    ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
    வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே–
    10-9-6-ஸத்கார பூர்வகமாக தேவ ஸ்த்ரீகள் உகந்து ஸ்ரீ வசனங்களை ஆசீர் வசனங்களை பண்ணினார்கள் என்கிறார் –

    மடந்தையர்  வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
    தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்
    கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி
    குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே–10-9-7-மருத் கணமும் வஸூ கணமும் தங்கள் எல்லைகளுக்கு அப்பாலும் செல்லலாம் இடம் எல்லாம் சென்று ஸ்ரீ வைஷ்ணவர்களை ஸ்தோத்ரம் பண்ணினார்கள் என்கிறார்-

    குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று
    முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள
    கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
    வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே–
    10-9-8-பிரகிருதி மண்டலத்துக்கு அவ்வருகாகத் திரு நாட்டிலே எல்லைக்கு புறம்பாக நித்ய ஸூரிகள் ஸ்ரீ வைஷ்ணவர்களை எதிர் கொள்ளுகிறபடியை யருளிச் செய்கிறார் –

    வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
    வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
    வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
    வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே
    –10-9-9-ஸ்ரீ வைகுண்டத்தில் சென்று திரு வாசலிலே முதலிகளாலே சம்மதரானவாறே-அங்குத்தை நித்ய ஸூரிகள் சம்சாரிகள் ஆனவர்கள் ஸ்ரீ வைகுண்டத்தில் வருவதே -இது என்ன புண்ய பலம் -என்று விஸ்மயப் பட்டார்கள் என்கிறார்

    விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
    பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
    நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
    மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே
    –10-9-10-சம்சாரத்தில் நின்றும் ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்ரீ வைஷ்ணவர்களை அங்குள்ள அயர்வறும் அமரர்கள் கொண்டாடும் படியை அருளிச் செய்கிறார் –

    வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
    அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
    கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
    சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–
    10-9-11-நிகமத்தில் இத்திருவாய் மொழி அப்யஸிக்க  வல்லார் வைகுந்தத்து முனிவரோடு ஒப்பர் -என்கிறார் 

    அநந்தரம் பரம பக்தத்யவஸ்தை இன்னது என்கிறார் —

    முடிந்த அவாவென்றது பரமபக்தி–சூரணை -232-

    அதாவது-அப்படி தர்சித்த அது தான் மானச அனுபவமாய் -பாஹ்ய அனுபவ யோக்யம் அல்லாமையாலே – பெரு விடாய் பிறந்து கூப்பிட்டுத் தரிக்க மாட்டாமல் – திரு வாணை இட்டுத் தடுத்து -பெறா ஆணை அல்லாமை சாதித்து -பேற்றோடு தலைக் கட்டின – முடிந்த அவாவில் அந்தாதி இப்பத்து–10-10-11 -என்கிற-முனியே நான் முகன் -பக்தியினுடைய சரம அவதியான பரம பக்தி என்கை —

    இப்படி ஸாக்ஷாத்கரித்த விது மாநஸாநுபவமாகையாலே யதா மநோரதாநுபவ ஸித்‌தியாகத்‌ திருவாணை யிட்டுத்‌ தடுத்துப்‌ பெருங் கூப்பீடாகக்‌ கூப்பிட்டுப்‌ பெற்றாலல்லது தரிக்க வொண்ணாத படியாய்‌ “முடிந்த அவாவில்‌ அந்தாதி இப்பத்து” (திருவாய்மொழி 10-10-11) என்கிற “முனியே நான்முகன்‌” (திருவாய்மொழி 10-10) பரமபக்தி தஸையாயிருக்கிறது –

    பசியாலும் தாஹத்தாலும் தளர்ந்து தாயையும் காணப் பெறாத ஸ்தநந்த்ய பிரஜை ஆர்த்தியின் மிகுதியால் கூப்பிடுமா போலே நிர்க்ருணரானாருடைய ஹ்ருதயங்களும் கூட இரங்கும் படி வளவேழ் உலகில் படியை யுடைய தாம் தம்முடைய ஆர்த்தியின் மிகுதியால் தம்முடைய ஸ்வரூபம் அனுசந்திக்கவும் ஷமர் இன்றிக்கே கலங்கி அவனுக்கு இட்ட அடி பேர ஒண்ணாத படி பெரிய பிராட்டியார் திருவாணை இட்டு காட்டுத் தீயில் அகப்பட்டாரைப் போலே போக்கடி அற்று மஹா கிலேசத்தோடே தூத ப்ரேஷண த்தால் பிற வாயிலிட்டு நீட்டு கையும் இன்றிக்கே – தம்மை ரக்ஷித்து அல்லது எம்பெருமானுக்கு திரு நாட்டிலும் கூட இருப்பு அரிதாம் படி பெரு மிடறு செய்து ஆர்த்த த்வனியோடு மிகவும் கூப்பிட்டு ––சாகாம்ருக ராவண சாயகார்த்தா ஜகமுச் சரண்யம் சரணம் ஸ்ம ராமம் -என்கிறபடியே தரிக்க மாட்டாமையாலே அவன் திருவடிகளிலே சரணம் புக – பரம தயாளுவான சர்வேஸ்வரன் இவற்றிலும் காட்டிலும் தான் நொந்து – பெரிய பிராட்டியாரோடே கூட பெரிய திருவடி மேலே இவர் அபேக்ஷித்தாலே போலே தானான படியே பரி பூர்ணனாக வந்து தோற்றி அருளி -இவருடைய பிரகிருதி சம்பந்தத்தை அறுத்து -இவருடைய விடாயும் தன்னுடைய விடாயும் தீரும் படி சம்ச்லேஷித்து தம்முடைய அபேக்ஷிதங்கள் எல்லாம் செய்து அருளினான் என்கிறார் –
    அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று இவர் ஆசைப் பட்ட படியே அத்திரளிலே புகப் பெற்று- என் அவா அறச் சூழ்ந்தாயே என்றும் – அவாவற்று வீடு பெற்ற என்றும் இவர் வாயாலே சொல்லும் படி இவர் விடாயும் தீர்ந்து இவருக்கும் அவ்வருகான தன் விடாயும் தீரும் படி சம்ச்லேஷித்து அருளினான் –என்கிறார் –

    அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
    அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
    அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
    அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே
    –10-10-11-பெற்று அல்லது தரிக்க ஒண்ணாத படியான பரம பக்தியால் பிறந்தது யாய்த்து -இத் திருவாய் மொழி -கீழ் அடைய பர பக்தி பிறந்து சொல்லிற்று யாயிற்று -பரம பக்தி பிறந்து சொல்லிற்று யாயிற்று இத் திருவாய் மொழி –அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–இவற்றை அறிந்தவர்கள் சம்சாரத்திலே பிறந்து வைத்தே நித்ய ஸூரிகளோடே ஒப்பர்கள் –1- முதல் திருவாயமொழியில் நாராயண சப் தார்தத்தை அனுசந்தித்து பிறருக்கு உபதேசிக்கும் இடத்தில் –வண் புகழ் நாரணன் -என்று பிரயோகித்து –அமைவுடை நாரணன் -என்றும் –செல்வ நாரணன் -என்றும் –நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் -என்றும் –திரு நாரணன் -என்றும் –நாராயணன் நாங்கள் பிரான் -என்றும் -சொல்லிக் கொடு போந்து –திண்ணம் நாரணமே என்றும் –வாழ் புகழ் நாரணமே -என்றும் தலைக் கட்டுகையாலே –அவனுக்கு அசாதாரணமான திரு நாமம் இதுவே என்னும் இடம் தோற்றுகிறது--2-முதலிலே மலர் மகள் விரும்பும் -என்றும் திருவுடை அடிகள் என்றும் –கமல மலர் மேலே செய்யாள் -என்றும் –நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன் -என்றும் -சொல்லிக் கொடு போந்து –திருவாணை நின்னாணை கண்டாய் –என்றும் கோலா மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -என்றும் தலைக் கட்டுகையாலே –ஸ்ரீ மானான நாராயணனே ப்ராப்யமும் ப்ராபகமும்-என்று இவருக்கு பக்ஷம் என்னும் இடம் தோற்றுகிறது -இவ்வர்த்தம் உபநிஷத் பிரசித்தம் -அநந்ய பாரமான நாராயண அநுவாகத்திலே-நாராயண சப் தத்தாலே சர்வாதிகனைச் சொல்லி –ஹ்ரீச்சதே லஷ்மீ ச்ச பத்நவ் -என்று உத்தர நாராயணத்திலே சொல்லிற்று –-3-முதலிலே மயர்வற மதிநலம் அருளினன் என்றும் –எனதாவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது என்பது உண்டே -என்றும் சொல்லி –நாலு பிரயோகம் எடுத்து சரணம் புக்கு -தேவிமாராவாரிலே -தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த -என்றும் சொல்லிக் கொடு போந்து –இன்று என்னைப் பொருளாக்கி தன்னை என்னுள் வைத்தான் அன்று என்னைப் புறம் போகப் புணர்ந்து என் செய்வான் -என்றும் தலைக் கட்டுகையாலே –அம் மிதுனத்தைப் பெறுகைக்கு சாதனமும் அவனுடைய நிர்ஹேதுக கிருபை என்னும் இடம் தோற்றிற்று--4-முதலிலே அயர்வறும் அமரர்கள் அதிபதி –என்று தொடங்கி –அடியார்கள் குழாங்களை— உடன் கூடுவது என்று கொலோ என்று பிரார்த்தித்து –பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமையில் ததீய சேஷத்வத்தை பரக்கத் சொல்லி -அடியாரோடு இருந்தமை என்று தலைக் கட்டுகையாலே பகவத் சேஷத்த்வத்தின் யுடைய எல்லை யாகிறது ததீய சேஷத்வம் என்னும் இடம் தோற்றிற்று –இவ்வர்த்தங்கள் இப்பிரபந்தத்துக்கு பிரதானம் -என்று கருத்து –-பகவத் ந்யஸ்த பரராய் இருக்கும் அதிகாரிகளுக்கு போது போக்கு இப்பிரபந்தம் –தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன் -என்றும் –கேட்டாரார் வானவர்கள் -என்றும் தானே அருளிச் செய்தார் இறே 

    இந்த பரபக்தியாதிகளின் வேஷத்தை பகவத் வசனத்தாலே தர்சிப்பிக்கிறார்

    இவை ஜ்ஞாந -தர்ஸந – ப்ராப்தி அவஸ்த்தைகள்‌.–சூரணை-233-

    அதாவது-இந்த-பரபக்தி -பரஞான -பரம பக்தி தசைகள் –-பக்த்யா த்வய அந்ய யா சக்ய அஹமேவம் விதோர்ஜுனா ஜ்ஞாதும் த்ருஷ்டுஞ்ச தத்வேன ப்ரேவேஷ்டுஞ்ச பரந்தப – ஸ்ரீ கீதை-11-54-என்று
    அர்ஜுனனைக் குறித்து திருத் தேர் தட்டிலும் —-பரபக்தி பரஞான பாமபக்தி ஏக ஸ்வாபம் மாம் குருஷ்வ -ஸ்ரீ கத்ய த்ரயம் -என்று- பிரார்த்தித்த ஸ்ரீ பாஷ்யகாரரைக் குறித்து–மத் ஜ்ஞான தர்சன ப்ராப்திஷு நிச்சம்சயஸ் சுகமாஸ்வ -ஸ்ரீ கத்ய த்ரயம் -என்று சேர பாண்டியனிலும் அவன் அருளிச் செய்த ஞான தர்சன பிராப்த்ய அவஸ்தைகள் என்கை —இத்தால் –பகவத் சம்ஸ்லேஷ விஸ்லேஷ ஏக சுக துக்கராம் படியான பரபக்தி -ஞான அவஸ்தையாகவும் – பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை -விசித தமமாக சாஷாத்கரிக்கிற -பர ஞானம் -தர்சன அவஸ்தையாகவும் – அப்படி சாஷாத் கரித்த வஸ்துவை அப்போதே கிட்டி அனுபவிக்க பெறாவிடில் முடியும்படியான பரம பக்தி -ப்ராப்ய அவஸ்தையாகவும் -சொல்லப்படும் என்ற படி —

    “ஜ்ஞாதும்‌ த்‌,ரஷ்டுஞ்ச தத்வேந ப்ரவேஷ்டுஞ்ச பரந்தப” (கீதை 11-54) என்றிந்த பரபக்தி பரஜ்ஞாந பரம பக்திகளை ஜ்ஞாந தர்ஸந ப்ராப்தி அவஸ்தைகள்‌ என்கிறார்‌. எங்ஙனே என்னில்‌ பகவத்‌ ஸம்ஸ்லேஷ விஸ்லேஷைக ஸுகதுக்கராம்படியான ப்ரேம பூர்வகமான பரபக்தி ஜ்ஞாந தஸையாயும்‌, பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை ஸாக்ஷாத்கரிக்கிற பரஜ்ஞாநம்‌ தர்ஸந தஸையாயும்‌ ஸாக்ஷாத்கார ஸமநந்தரம்‌ அப்போதே அநுபவியா விடில்‌ முடியும்படியான பரமபக்தி ப்ராப்தி தஸையாயுமிருக்கிற அவஸ்தா விஸேஷம்‌ என்கிறார்

    பக்த்யா த்வநந்யயா ஸக்ய மஹமேவஂவிதோர்ஜுந.–
    ஜ்ஞாதும் த்ருஷ்டும் ச தத்த்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப-–৷৷11.54৷৷எதிரிகளைத் தவிக்கச் செய்யும் அர்ஜுனா நீ என்னை எப்படிக் கண்டு இருக்கிறாயோ அவ்வண்ணம் உள்ளபடி நான் வேதங்களைக் கொண்டும் காண முடியாதவன் – தவத்தைக் கொண்டும் காண முடியாதவன் – தானத்தைக் கொண்டும் காண முடியாதவன் – யாகத்தைக் கொண்டும் காண முடியாதவன் – நான் ஸ்வயம் பிரயோஜன பக்தியாலேயே இவ்வண்ணமாக உள்ளபடி சாஸ்த்ரங்களால் அறிவதற்கும் காண்பதற்கும் அடைவதற்கும் கூடியவன்

    அதஸ் த்வம் தவ தத்த்வதோ மத் ஜ்ஞான தர்சன ப்ராப்திஷூ நிஸ் சம்சயஸ் ஸூக மாஸ்ஸ்வசூரணை -23-அதஸ் –ஆகையாலே–த்வம் – இப்படிப் பட்ட நம்முடைய மெய்ம்மைப் பெரு வார்த்தையைக் கேட்டு -என்னையே விஸ்வசித்து இருக்கிற நீர்–தவ தத்த்வதோ மத் ஜ்ஞான தர்சன ப்ராப்திஷூ –மத் -என் விஷயமாக-தவ-உமக்கு-தத்வத -மெய்யாக உண்டான-மெய்யே என்னுடைய ஜ்ஞான தர்சன ப்ராப்திகளிலேபக்த்யா தவ நன்யயா சக்ய அஹம் ஏவம் விதோர்ஜூன ஜ்ஞாதும் த்ரஷ்டும் ச தத்த்வேன ப்ரவேஷ்டும் ச பரந்தப-ஸ்ரீ கீதை -11-54- என்கிற ஜ்ஞான தர்சன ப்ராப்திகளிலே
    நிஸ் சம்சயஸ் ஸூக மாஸ் ஸ்வ-சம்சயம் இல்லாதவராய்க் கொண்டு சுகமே வர்த்தியும்-

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
    ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்