ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -74 -தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப் பாயில்-செய்ய தாமரை -3 -6 –

March 14, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

செய்ய தாமரை -3 -6 -அவன் இவன் என்று கூழேன்மின் அவனாகும் நீள் கடல் வண்ணன் -அர்ச்சாவதார சீர்மை-இவன் அவன் ஆக மாட்டானே -இங்கே தானே சரணாகதியும் அனுபவமும்-தமர் உகந்த இவ்வுருவம் அவ்வுருவம் தானே-கடல் வண்ணன் கண்ணன் -கருமாணிக்கம் –அன்று தேர் தடவிய கண்ணன் கழல் காண்பது என்றோ – கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -தனது துறையிலே இரங்குகிறார்
அர்ச்சை கிடைத்த சந்தோஷமும் -தேர் கடாவிய கழல் காண்கை இழந்த வருத்தமும் உண்டே-ஹந்த -அந்தோ -சந்தோஷ ஸூ சகம்-பாயில் -திருப்பாற்கடலில் -திரு அனந்தாழ்வான் -திரு -அழகிய நெடும் -அபரிச்சின்ன கண்கள் -வளர்ந்து -உறங்குவான் போல் யோகு செய்யும் – அறிவு -உற்றும் -ஜகத் ரக்ஷண சிந்தை –

அவதாரிகை –ஒரு தென்றல் வந்து உலாவிற்றாய் – தென்றல் வந்தது -அவன் வரக் கண்டிலோம் -என்று தலைமகள் தளர – அத்தைக் கண்ட தோழி யானவள் –இத்தை வெறும் தென்றல் என்று இருந்தாயோ –
மாளிகை சாந்து நாறா நின்றால்-ராஜ புத்திரன் -வரவணித்து – என்று இருக்க வேண்டாவோ –இது அவன் வரவுக்கு ஸூ சகம் காண் -நீ சோகிக்க வேண்டா -என்று ஆஸ்வசிப்பிக்கிறாள்-ஆக இருக்கிறது –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-அவதாரிகை-இப்படி இவருடைய ஜகத் ரக்ஷணமும் ஜகத் ஆஹ்லாதனமும் ஸ்வா தந்தர்ய அசஹை களானவர்களுடைய வதனே யாமதோ என்று
மோஹங்கதையான தன்மைகளை ஆஸ்வஸிப்பிக்க இவளின் பரம பிரணயியான சர்வ ரக்ஷகன் திரு அபிஷேகத்தில் சாத்தின திருத்துளாய்ப் பரிமள மயமான தென்றலை இவன் மேலே ப்ரஸவிப்பித்தான்
அத்தால் ஆஸ்வஸ் தையான நாயகி பாவம் பெற்றாராய் அவள் தன் தோழிக்கு உரைத்த பாசுரத்தால் தாம் அதுக்கு ஆச்சர்யப்படுகிறார்

தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப்பாயில் திரு நெடுங்கண்
வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும் மால் வரையைக்
கிளர்ந்து  மறிதரக் கீண்டு எடுத்தான் முடி சூடு துழாய்
அளைந்து உண் சிறு பசுந்தென்றல் அந்தோ வந்து உலாகின்றதே
– – -74 -திரைப்பாயல் பாட பேதம்–தலைவி மகிழ்வுடன் சொல்லும் பாசுரம் என்றும் -தென்றல் வருகிறதே -அவன் வரவில்லை -என்று வருந்த தோழி திரு மேனி ஸ்பர்சம் முகந்து வருவதால் அருகில் வந்து கொண்டு இருக்கிறார் -அறியலாம் –தோழி அவன் வருகைக்கு அறிகுறி என்பதாகவும் கொள்ளலாம்

தளர்ந்தும் முறிந்தும் வருதிரை–(கொந்தளித்து விழுவதெழுவதாயக்) கனத்தாலே தளர்ந்தும்
காற்றாலே முறிந்தும் வருகிற அலைக் கிளர்ச்சியையுடைய திருப்பாற்கடலில்
பாயல்–(ஆதிசேஷனாகிய) சயனத்தில்
திருநெடு கண் வளர்ந்தும்–அழகிய நீண்ட திருக்கண்களுறங்கியும்
அறிவுற்றும்–(அவ்வுலகத்தில் யாவும்) அறிந்தும்
வையம் விழுங்கியும்–பிரளயகாலத்திலே உலகங்களை வயிற்றினுட்கொண்டு காத்தும்
மால்வரையை கிளர்ந்து மறிதர தீண்டு எடுத்தான்–கோவர்த்தனகிரியை மேலெழுந்து குடையாகக் கவியும்படி
பெயர்த்தெடுத்தும் உதவிகிற எம்பெருமானது
முடிசூடு துழாய்–திருமுடியிற் சூடியுள்ள திருத்துழாயை
அளைந்து உன்–அளாவியுண்ட
பசு சிறு தென்றல்–புதிய இளமையான தென்றற் காற்றானது
அந்தோ வந்து உலாகின்றது–மகிழ்ச்சி யுண்டாம்படி (என்மேல்) வந்து வீசுகிறது.

செய்ய பரத்துவமாய்ச் சீரார் வியூகமாய்
துய்ய விபவமாய்த் தோன்றி வவற்றுள் -எய்துமவர்க்கு
இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிது என்றான்
பன்னு தமிழ் மாறன் பயின்று
—26-தாமே விழுவாரைத் தடி கொண்டு அடிக்கை அன்றோ நாமும் கை விடுகை -என்று தம்மாலே பொடியப் பட்டார் நாட்டார் இழவு பொறுக்க மாட்டாத கிருபா அதிசயத்தாலே
மீண்டும் அவனுடைய சௌலப்யத்தை உபதேசிக்கைக்காக பர வ்யூஹ விபவங்களை அடைவே அருளிச் செய்து கொண்டு சென்று நீங்கள் உகந்த படியே உகந்து எழுந்து அருளப் பண்ண
அத்தை அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தோடு ஒக்க விரும்பும் சீலாதி அதிசயத்தாலே உங்களோடு புரையறக் கலந்து சர்வ அபேஷிதங்களையும் குறைவற உபகரிக்கும் அர்ச்சாவதாரத்தில் ஆஸ்ரயிங்கோள் என்கிற செய்ய தாமரைக் கண்ணனில் தாத்பர்யத்தை அருளிச் செய்கிறார்

தளர்ந்தும் -இத்யாதி –பெருத்து மலை போலே இருக்கிற திரைகளை எடுத்து – அக் கனத்தாலே தளர்ந்தும் – காற்றாலே முறிந்தும் வருகிற -திரைகளை உடைத்தான படுக்கையிலே – இவன் சர்வேஸ்வரன் -என்று ஐஸ்வர்யத்தை கோள் சொல்லிக் கொடுப்பதாய் –அழகுக்கு எல்லை இன்றிக்கே இருக்கிற கண்களைக் கொண்டு உறங்கியும் – ஜகத் ரஷணத்தை பண்ணிக் கொண்டு கண் வளர்ந்தும் –அறிவுற்றும் – பிரளயம் வந்து நலியப் புக்கவாறே -இவற்றின் உடைய ரஷண அர்த்தமாக –  நாம் வந்து கிடக்கச் செய்தே இவற்றை நோவு பட விட்டு இருக்கை யாவது என் -என்று உணர்ந்து அருளியும் –வையம் விழுங்கியும் –பிரளயத்தில் நோவு படாத படி பூமியை எடுத்து வயிற்றிலே வைத்து நோக்கியும் –மால் வரை -இத்யாதி – அப்படி ஜகத்துக்காக வருகை அன்றிக்கே – ஒரூராக நோவு படப் புக்கால் வந்து நோக்கும்படியைச் சொல்லுகிறது –-கோவர்த்தனம் ஆகிற மகா கிரியை நின்ற நிலையிலே நின்று கிளப்பி – கீழது மேலதாம்படி பேர்த்து எடுத்தவனுடைய –முடி சூடு துழாய் இத்யாதி –தாளிணை மேல் தண் அம் துழாய் -என்று அவள் இருந்தாலும் –-ஏகாந்தி விதி ப்ரயுக்தாம் பூஜாம் -க்ருஹ்னாதி சிரஸா ஸ்வயம் -என்று-அவன் இருக்கும்படியாலே இவள் அத்தைச் சொல்லுகிறாள் –இவன் திரு அபிஷேகத்தில் சாத்தின-திருத் துழாயிலே புக்கு உழறி- அதிலே வாசனையைப் பண்ணி –
நடுவிலே ஒன்றிலும் தங்காதே- கலப்பற்று வருகிற மந்த மாருதம் அன்றோ வந்து உலாவுகிறது –
இனி உனக்கு சோகிக்க அவகாசம் உண்டோ –அவன் முடி சூடு துழாய் என்று அமைந்து இருக்க கீழ்ச் சொன்ன விசேஷணங்களுக்கு கருத்து என் என்னில் – அவன் ஆஸ்ரித அர்த்தமாக வ்யாபரித்த-இடம் எங்கும் புக்கு ஸ்வேத கந்தத்தைக் கொண்டு வாரா நின்றது என்கை –சிறு தென்றல் –-மந்த மாருதம்திரு  –ஐஸ்வர்யமாகவும்–அழகாகவும்

நாயகன் உடைய திரு முடியில் சூடிய திருத் துழாய் வாசனை பருகி வந்து தென்றல் வீச நாயகி மகிழ்ந்து பேசும் பாசுரம் –அவன் வரவுக்கு ஸூ சகம் என்று சொல்லி தோழி தலைவியை ஆற்றாமை தணிக்கும் பாசுரம் என்றுமாம்–திரு நெடுங்கண்-வளர்ந்தும் அறிவுற்றும்– லோக ரக்ஷணம் சிந்தனை -யோக நித்திரை -அறிதுயில் -விழி துயில் -துயிலாத துயில் -போய் உறக்கம் –-மால் வரையைக்-கிளர்ந்து மறிதரக் கீண்டு எடுத்தான்–பசுக்கள் எட்டிப் புல் மேயலாம் படி கோவர்த்தன மலையைத் தலை கீழாக எடுத்துக் பிடித்தமை –-சிறு பசுந்தென்றல்-மந்த மாருதம் –

ஸ்வாபதேசம் –-ஆழ்வார் எம்பெருமானது காருண்யம் ஐஸ்வர்யம் போக்யதைகளில் ஈடுபட்டு தரித்தமையும் அவனது மஹா குணங்களை சொல்லி ஆழ்வாரை பாகவதர்கள் ஆற்றாமை தனித்தவையும் சொல்லிற்று யாய்த்து–நாயகனது திருத்துழாயிற்பட்ட தென்றல், நாயகி மகிழ்நதுரைக்கும் பாசுரம் இது.-நாயகனது மேனியோடு ஸம்பந்தப்பட்ட பொருள் தன் உடம்பின்மீது வந்து பட்டுத் தனது பிரிவாற்றாமைத் துயரைச் சிறிது தணிப்பித்தலாகிய ஸந்தோஷத்தைத் தலைவி தோழிக்கு உரைக்கின்றாளென்க.–கொந்தளித்து வீசுகின்ற அலைக்கிளர்ச்சியையுடைய திருப்பாற்கடலில் சேஷசயனத்தில் உறங்குவான் போல் போகு செய்தும் பிரளய காலத்தில் உலகங்களை வயிற்றினுட்கொண்டு காத்தும் கோவர்த்தநகிரியைக் குடையாக வெடுத்துப் பிடித்துப்
பெருமழைத் துன்பத்தைப் போக்கியும் உபகரித்தருள்கின்ற எம்பெருமானுடைய திருமுடியில் அணிந்துள்ள திருத்துழாயை யளைந்த புதிய இளந்தென்றற் காற்றானது மகிழ்ச்சியுண்டாகும்படி என் மேல் வந்து வீசுகின்றது என்றாளாயிற்று.-இனி, இதனை, வழக்கம்போலத் தென்றல் வரவு கண்டு அதற்கு வருந்தத் தொடங்கிய நாயகியை நோக்கித் தோழி ‘இதை நீ வெறுந்தென்றலென்று கருதாதே; அவனுடம்பிற்பட்டு வருகிறது காண் இது;-இது அவன் வரவுக்கு அறிகுறி’ என்று கூறிச் சோகந்தணிக்கிறதாகவுங்கொள்வர்.-ஹந்த! என்னும் வடசொல் (அவ்பயம்)- மகிழ்ச்சி, இரக்கம், துன்பம் முதலிய பொருள்களில் வருமென்று வடமொழி நிகண்டினால் தெரிகிறதனால் அதன் விகாரமாகிய அந்தோ வென்பது இங்கு மகிழ்ச்சிப் பொருளில் வந்ததென்க.-திருநெடுங்கண் வளர்ந்து மறிவுற்றும் = எம்பெருமானது தூக்கம் நமது தூக்கம் போல் தமோகுண காரியமாய் உடம்பு தெரியாது கொள்ளுந் தூக்கமன்றியே எல்லாப் பொருளையும் அறிந்து கொண்டே லோகரக்ஷணை சிந்தனை பண்ணும் தூக்கமாதலால் ‘கண்வளர்ந்தும் அறிவுற்றும்’ எனப்பட்டது; இது பற்றியே அத் தூக்கம்- யோக நித்திரை, அறிதுயில், விழிதுயில் துயிலாத் துயில், பொய்யுறக்கம் எனப்படும்.-“மால்வர¬யை மறிதர எடுத்தான்” என்றதனால் பசுக்கள் எட்டிப் புல்மேயலாம்படி கோவர்த்தந மலையைத் தலைகீழாக எடுத்துப் பிடித்தமையுந் தோன்றும்.சிறு தென்றல் – மந்தமாருதம்.–இப்பாட்டுக்கு உள்ளுறை பொருளாவது- பிரிந்த நிலையில் ஆழ்வார் தாம் எம்பெருமானது காருண்யம் ஆச்வர்யம் யோக்யதை
என்னும் இக்குணங்களின் நடையாட்டத்தைக் கண்டு ஆறியிருக்குந் தன்மையை அருளிச் செய்தலாம். மற்றவை வெளிப்படை. இனி தோழிவார்த்தை யென்னும் பக்ஷத்தில், அவன் ஆச்ரிதர்களை ரக்ஷித்தருளும் பொருட்டுக் கடலிலே யோக நித்திரை கொண்டருள்வதும் பிரளயாபத்தில் உலகத்தை வயிற்றில் வைத்து நோக்குவதும் கோவர்த்தநோத்தாரணம் பண்ணினமையுமாகியமஹா குணங்களைச் சொல்லி அன்பர்கள் ஆழ்வாரை ஆற்றுகின்றதாக ஸ்வாபதேசம் கொள்கை.

தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப்பாயில்-பகவத் ஸ்பர்ச ஸூகத்தாலே கொந்தளித்து விழுவது எழுவதாய் பரஸ்பர ஹானியாலே முறிந்தும் வருகிற திரைக் கிளப்பத்தை யுடைத்தான
ஷீரார்ணவத்தில் படுக்கையிலே--திரு நெடுங்கண் வளர்ந்தும் ஸ்ரீ மத்தாய் அதிசய ஸூசகமான திருக்கண்கள் உறங்கியும்-அழகிய நெடும் கண் என்றுமாம்-அறிவுற்றும்-அவ்வுறக்கம் தமஸ் கார்யம் அல்லாமையாலே அத்தோடே ஜகத் ரக்ஷண சிந்தை பண்ணியும்-வையம் விழுங்கியும்-ரக்ஷணீயமான ஜகத்துக்கு பிரளய ஆபத்து வந்தவாறே திரு வயிற்றிலே வைத்து நோக்கியும்–மால் வரையைக் கிளர்ந்து மறிதரக் கீண்டு எடுத்தான்-ஆஸ்ரித ரானவர்களை -அந்தர் வர்க்கமான இந்த்ராதிகள் பசிக் கோபத்தாலே வர்ஷாதிகளாலே நலியும் அளவிலே பெரிய மலையை உயர மறித்துக் குடையாக்குகைக்காக இடந்து எடுத்த மஹா உபகாரகனுடைய-முடி சூடு துழாய் இந்திரன் கோவிந்த அபிஷேகம் பண்ணின திரு முடியிலே சாத்தின திருத்துழாயை-அளைந்து உண் சிறு பசுந்தென்றல்
தழுவி முழுசி அனுபவித்த மந்தமான புதிய தென்றலானது-அந்தோ வந்து உலாகின்றதே-ஐயோ வந்து உலவா நின்றது என்று தன்னுடைய சந்தோஷத்தைத் தோழிக்கு உரைத்தாளாயிற்று-அன்னோ -என்ற பாடமாய் உலவா நின்றதீ என்றுமாம்–இவ் விடத்தில் தென்றல் உலாவுதலை உகந்து உரைத்தது
தலைவனான ஈஸ்வரன் ஆசன்னனானான் என்கிற அபிப்ராயத்தாலே-இத்தால் தன்னோட்டை ஸம்ஸ்லேஷ ஸூகத்தாலே பெரும் கடல் கிளர்ந்தால் போலே தான் நித்ய வாஸம் பண்ணுகிற தேசத்தின் நீர்மையை யுடையரானவர்கள் அனுபவிக்கும் படி தன்னை ஸர்வ ஸ்வ தானம் பண்ணி ஜகத்துக்கு ஸர்வ பிரகார ரக்ஷகனாய் ஆபத் சகனாய் விரோதி நிவர்த்தன சீலனான கிருஷ்ணனுடைய நிரவதிக சேஷித்வ போக்யத்வங்களானவை அவனுடைய தாக்ஷிண்ய அதிசயத்தாலே பிரகாசியா நின்றது என்று ஆஸ்வஸ் தராய் ஸூஹ்ருத்துக்களுக்கு அருளிச் செய்தார் ஆயிற்று-(சிறு பசும் தென்றல் தழுவி முழுசி -தாக்ஷிண்ய அதிசயம் )

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம் –தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப்பாயில் திரு நெடுங்கண்
வளர்ந்தும்
-தளர்ந்து பெரும் திரையாக எடுத்து -அக்கனத்தாலே தளர்ந்தும் காற்றாலே முறிந்தும் வருகிற திரைகளை யுடைத்தான படுக்கையிலே இவன் ஸர்வேஸ்வரன் என்று ஐஸ்வர்யத்தைக் கோள் சொல்லிக் கொடுப்பதாய் பரப்புக்கு எல்லை இன்றிக்கே இருக்கிற கண்களைக் கொண்டு உறங்கியும்
ஜகத் ரக்ஷண சிந்தையைப் பண்ணிக் கொண்டு கண் வளர்ந்ததும்-அறிவுற்றும்-பிரளயம் வந்து நலியப் புக்கவாறே இவற்றினுடைய ரக்ஷண அர்த்தமாக நாம் வந்து கிடக்கச் செய்தே இவற்றை நோவு பட விட்டு இருக்கையாவது என் என்று உணர்ந்து அருளியும்-வையம் விழுங்கியும்-பிரளய ஆபத்திலே நோவு படாதபடி பூமியை எடுத்து திருவயிற்றிலே வைத்து நோக்கியும்–மால் வரையைக் கிளர்ந்து மறிதரக் கீண்டு எடுத்தான்-அப்படி ஜகத்துக்காக வருகை அன்றிக்கே ஒரூராக நோவு படப்புக்கால்
வந்து நோக்கும் படியைச் சொல்லுகிறது-கோவர்த்தனம் ஆகிற மஹா கிரியை நின்ற நிலையிலே கிளம்பும்படி கீழது மேலதாம் படி பேர்த்து எடுத்தவனுடைய-முடி சூடு துழாய் அளைந்து உண் சிறு பசுந்தென்றல் அந்தோ வந்து உலாகின்றதேதாளிணை மேல் அணி தண்ணம் துழாய் -திருவாய் -4-2-1- என்று அவன் இருந்தாலும் கிருஷ்ணாதி சிரஸா ஸ்வயம் -என்று அவன் இருக்கும்படியாலே
இவள் அத்தைச் சொல்லுகிறாள் அவன் திரு அபிஷேகத்திலே சாத்தின திருத்துழாயைப் புக்கு உழறி
அதிலே வாஸனை பண்ணி நடுவு ஒன்றிலே தங்காதே கலப்பற்று வருகிற மந்த மாருதம் அன்றோ வந்து உலவுகிறது இனி உனக்கு சோகிக்கைக்கு அவகாசம் உண்டோ–அவன் முடி சூடு துழாய் என்ன அமைந்து இருக்க கீழ்ச் சொன்ன விசேஷணங்களுக்குக் கருத்து என் என்னில்-அவன் ஆஸ்ரித அர்த்தமாக வியாபாரித்த இடம் எங்கும் புக்கு ஸ்வேத கந்தத்தைக் கொண்டு வாரா நின்றது என்கை-இத்தால் அவன் ஆஸ்ரித அர்த்தமாகாது திருப்பாற் கடலிலே வந்து கண் வளர்ந்து அருளின படியையும்
பிரளய ஆபத்திலே ஜகத்தை திரு வயிற்றிலே வைத்து நோக்கின இம் மஹா உபகாரத்தையும்
கோவர்த்தன உத்தரணம் பண்ணின படியையும்
ஆக இக் குணங்களைச் சொல்லி பார்ஸ்வஸ்த்தர் ஆஸ் வஸி ப்பிக்கும் படியைச் சொல்லுகிறது
ஆக குண ஞானத்தாலே ஜீவித்த படியைச் சொல்லுகிறது

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-வியாக்யானம்-தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப்பாயில்
ஒன்றுக்கு ஓன்று கொந்தளித்து விழுந்தும் புரளுமதாய் முறுகளைப் பெற்றும் மேல் வருகிற திரைப்பாயனுள்ள ஆழ் கடலிலே திரு நெடுங் கண் வளர்ந்தும் திருவும் தாமும் தீர்க்க லோசனாத்மக யோக நித்திரை செய்தும்-அறிவுற்றும்-மத்யே வந்தவர்களைக் கடாக்ஷிக்கக் கண் விழித்தும்–வையம் விழுங்கியும்மால் வரையைக் கிளர்ந்து மறிதரக் கீண்டு எடுத்தான் -மஹத்தான கோவர்த்தனத்தை விஜ்ரும்பணத்தால் விஜ்ரும்பித்து மேற்புறம் உட் படும்படி நிலத்தோடு ஒட்டு விடுவித்தவனுடைய-முடி சூடு துழாய் அளைந்து உண்-திரு அபிஷேகத்தில் சாத்தின திருத்துழாயில் விளையாடி தத்கத கந்த மகரந்த ஆஸ்வாதீ யானதாய்–சிறு பசுந்தென்றல்-சிறுகச் சிறுக வருகிற குளிர்ந்த தென்றலானது-அந்தோ வந்து உலாகின்றதே – இப்போதாக ஸஞ்சரியா நின்றபடி என்று ஆஸ்வஸிக்கிறார் –

ஸ்வாபதேசம்
இத்தால் –
1-அவன் ஆஸ்ரித அர்த்தமாக திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின படியும் –
2-பிரளய ஆபத்தில் ஜகத்தை வயிற்றில் வைத்து நோக்கின இம் மகா குணமும் –
3-கோவர்த்தனம்-உத்தரணம் பண்ணின படியும் – ஆகிற அக் குணங்களைச் சொல்லி பார்ஸ்வஸ்தார் ஆஸ்வசிப்பிக்கிற படியை சொல்லுகிறது –
குண ஜ்ஞானத்தாலே ஜீவித்த படியை சொல்லுகிறது –

தாத்பர்யம்–கீழ்-ராக -பூர்ண -சந்த்ரனைக் கண்டு மோஹித்துக் கிடந்த நாயகி திருத்தாயார் அடல் ஆழிப்பிரான் -பொழில் ஏழும் காத்து அளித்த பிரான் என்று திரு நாமம் செவிப்பட்டவாறே மோஹம் தெளிந்து அப்பொழுது குளிர்ந்த மந்தமாருதமும் வீச அத்தாலே நலிந்த தலைமகளைக் கண்ட தோழி
அவன் திருப்பாற் கடலிலே கள்ள நித்திரை –ஏரார் கோலம் திகழக் கிடந்தான் அன்றோ-கண் மூடி தூங்காமல் -கூப்பீடு சப்தம் கேட்பதற்க்காகவும் அழகை வெளிப்படுத்திக் கொண்டு -ரக்ஷண ஏக சிந்தையானாய் அதி ஸூந்தரமான விசாலமான திருக்கண்கள் காட்டி உபகரிப்பவனுமாயும்
பிரளய ஆபத்தில் திருவயிற்றிலே ஸகல லோகங்களையும் வைத்து ரக்ஷிப்பவனாயும்
கோவர்த்தனம் உதாரணம் பண்ணி ஆ நிரைகளையும் கோபர்களையும் ரக்ஷிப்பவனாயும் இருப்பவன் என்று அவன் ரக்ஷகத்வ குண சேஷ்டி தங்களைக் காட்டி தோழி ஆஸ்வஸிப்பிக்கிறாள்
நாயகன் குணங்களை அறியாயோ-இப்படி ரக்ஷணமே குணமாக உள்ள அவன் உன்னை உபேக்ஷிக்க மாட்டானே -இத் தென்றலும் வெறும் தென்றல் அல்லவே-அவன் சாத்தி அருளும் திருத்துழாய் மதுவில் அளைந்து –அந்த தேன் துளியை நம் மேல் தெளித்து நாயகன் அருகில் வந்தமை ஸூ சிப்பிக்கிறதே
தண்டகாரண்ய ரிஷிகள் பெருமாள் வந்ததை நீல மேக ஸ்யாமளன் -தண்டகாரண்யம் நிறுத்தாலேயே
அறிந்தால் போல் இதுவும் அவனது வரத்த்துக்கு ஸூ சகமே நீ சோகிக்க வேண்டா என்று ஆஸ்வஸிப்பிக்கிறாள் –

3-6-செய்ய தாமரைக் கண்ணன் -பிரவேசம் 

சர்வேசுவரன் திருவடிகளில் கைங்கரிய ருசியுடையார்க்கு அதனைக் கொடுக்கக் கடவனுமாய், அவ்வடிமைதான் அவன் தனக்கு
இனியதாயிருக்கக்கடவதுமாய், அவ்வழியாலே இம்மக்களுக்கு உத்தேஸ்யமாகக் கடவதுமாயிருக்க,
அதனை இழக்கையாலே நிந்திக்க வேண்டும்படி இருந்தமையின், இவ்வடிமையிலே சேர்ந்தவர்களைக் கூட்டிக்கொண்டு,
அது இல்லாதாரை வெறுத்தவராய் நின்றார் மேல் திருவாய்மொழியில்;

அவ்வாறு வெறுத்தல், தாமே விழுவாரைத் தடிகொண்டு அடித்தலைப் போன்றது என்று நினைந்து, ‘இவர்கள் பண்டே
அறிவு கேட்டாலே வழி தப்பிப் போய்க் கேட்டினை அடையாநின்றார்கள்; நாம் இவர்களைக் கைவிட ஒண்ணாது;
நலத்தைச் சொல்லுவோம்,’ என்று பார்த்து, -தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவருக்கும் இவர் அடி பணிந்தார்க்கும் இவை உள்ளதே —
பிராட்டி நலம் அருளிச் செய்தாற்போலே நலத்தை அருளிச்செய்கிறார் இத்திருவாய்மொழியில்.
இராவணன் பிராட்டிபக்கல் ‘பெற்றதாய்’ என்ற நினைவு இன்றிக்கே திருமுன்பே நின்று சிலவற்றைப் பிதற்றப் புக்கவாறே
‘ஸ்ரீராமபிரான் யானையைப் போல எண்ணப்படுகிறார்; நீ மிகச் சிறிய முயலைப் போல எண்ணப் படுகிறாய்,’ என்று வெறுத்து வைத்து
பின்னையும் ‘ஐயோ! இவன் நினைவு இருந்தபடி என்? இவனுக்கு ஒரு நல்வார்த்தை சொல்லுவார் இன்றிக்கே ஒழிவதே!’ என்று
இரக்கங்கொண்டு ‘நீ ஸ்ரீராமபிரானோடு தோழமை கொள்,’என்று அவன்தனக்கே நலத்தை அருளிச்செய்தாற்போன்று,
இவரும் மேல் திருவாய்மொழியில் அவர்களை நிந்தித்து வைத்து, இரங்கி இத்திருவாய்மொழியில் நலத்தை அருளிச்செய்கிறார்.

ஸ்ரீராமா சுந். 21 : 19.- இந்தச் சுலோகத்திற்கு வியாக்கியாதா அருளிச்செய்த பொருள் வருமாறு:
மித்ரம் ஒளபயிகம் கர்த்தும் ராம :-
‘பெருமாளைச் சரணம் புகு’ என்றால் அப்பையல் அதனைத் தனக்கு எளி வரவாக நினைத்திருக்குமே? அதற்காகத் ‘தோழமை கொள்’ என்கிறாள்.
தங்களைச் சரணம் புக்காரைத் தங்களிற் காட்டில் குறைய நினைத்திருப்பதில்லையே இவர்கள்;
‘மித்ரபாவேந’ என்றும்,‘மித்ரம் ஒளபயிகம் கர்த்தும்’ என்றுமிறே இருவர் படியும்.-துல்ய சீல வயோ வ்ருத்தாம் -முதலிலே சொன்னது பிராட்டியே –
இவள் துவம்சிக்கும் ராவணனை பார்த்து -சொல்ல -சரணாகதி என்று சொல்லாதவன்
-பெருமாள் -சரண் அடைந்த விபீஷணன் இடம் -ஊருக்கு பந்தல் போட சொன்ன வார்த்தை
ஸ்தாநம் பரீப்ஸதா
– வழியடிப்பார்க்கும் தரையிலே கால் பாவி நின்று வழியடிக்கவேணுமே? உனக்கு ஓர் இருப்பிடம் வேண்டியிருந்ததேயாகிலும் அவரைப் பற்ற
வேணுங்காண்.-கிளை மேலே இருந்து மரத்தை அடியிலே வெட்டுவது போலே உள்ளேயே —
எளிமையாக எதிரி காலிலே குனிந்து இவ்விருப்பு இருப்பதில் பட்டுப் போக அமையும் என்றிருந்தாயோ?
வதஞ்சாநிச்சதா கோரம் –
அப்படி உன்னை நற்கொலைப்பட விடுவரோ? உன்னை வைத்து உன் முன்னே உன் சந்தான கூட்டத்தைக் கொன்று பின்னை உன்னைச்
சித்திரவதை பண்ணுகையாகிற இவ்வதத்தை இச்சித்திலையே யாகிலும் அவரைப் பற்ற வேணுங்காண்.
த்வயா –
உன் நிலை இருந்தபடியால் விசேடித்து உனக்கு அவரைப் பற்றவேணும்.
அசௌ-
உருவெளிப்பட்டாலே முன்னிலையாயிருக்குமிறே இவளுக்கு;
அவனுக்கும் தானே மாயாமிருகத்தின் பின்னே போகிற போது கண்ட காட்சியாலே அச்சத்தாலே எப்போதும் முன்னிலையாயிருப்பரிறே.
புருஷர்ஷப:-
‘நான் பண்ணின அபராதத்துக்கு என்னை அவர் கைக்கொள்ளுவாரோ?’ என்றிருக்க வேண்டா; இவற்றை ஒன்றாக நினைத்திரார்காண்;
அவர் புருஷோத்தமர்காண்.
அசௌ புருஷர்ஷப: ராம: த்வயா மித்ரம் கர்த்தும் ஒளபயிகம்.

பிராப்தி ஒத்து இருக்க ‘இவர்கள் தாம் வழி தப்பிப் போய்க் கேட்டினை அடைதற்குரிய காரணம் யாதோ, சம்பந்தம் ஒத்திருக்க?’ என்று பார்த்தார்;
பகவானுடைய பரத்துவ ஞானம் இல்லாமையும் அவனுடைய சௌலப்ய ஞானம் இல்லாமையுமாயிருந்தது
அதாவது, ‘ஈசுவரனாகிறான் பெரியான் ஒருவனன்றோ? அவன், விசைக்கொம்பு; நமக்கு அவனை எட்டப்போகாதொன்றாய் இருந்தது’
என்று சமுசாரிகள் கைவாங்க,
விசைக்கொம்பு -பனி பட்டு மூங்கில் சாயுமே -காலை கட்டு சாதம் வைத்து பாட -ராகம் பாட -மாலைக்குள் போஜனம் மேலே போனதே –
விசை எந்தரம் -கிட்டே போனால் அடிக்கும் என்றுமாம்
‘அவனுடைய சௌலப்யத்தை விரித்துப் பேசுவோம்,’ என்று பார்த்து,
‘நீங்கள் அவன் அரியவன் என்று கைவாங்க வேண்டா; அவன் அடைவதற்குச் சுலபன்; அவனை அடையுங்கோள்,’ என்கிறார்.
ஆயின், மேல் ‘பத்துடையடியவர்’ தொடங்கிச் சௌலப்யமே யன்றோ சொல்லிக்கொண்டு போந்தது?
இப்போதாகச் சௌலப்யம் சொல்ல வேண்டுகிறது என்?’ என்னில்,
அங்குச் சொன்ன சௌலப்யந்தான் பரத்துவம் என்னும்படி அர்ச்சாவதாரம் எல்லையான சௌலப்யத்தின் எல்லை நிலத்தை அருளிச்செய்கிறார்.
அர்ச்சாவதாரம் -சௌலப்ய காஷ்டை -என்றவாறே -திருமால் இரும் சோலை -சொன்னாரே -கிருஹார்ச்சா -காஷ்டை என்றபடி –

‘அர்ச்ய – சமுசாரிகளுக்கும் அர்ச்சிக்கலாம்படி வணங்கத் தக்கவனாய் இருக்கும்.
சீலா ஜடீ பூயதே -நீராக உருக்கப் பண்ணுமே -குணா பரிவாஹம் -அவதாரம் –
‘சமுசாரிகளாகில் அர்ச்சிக்கிறார்கள்; அவர்கள் குற்றமே அன்றோ பண்ணுவது?’ என்னில், -அபசாரமே -செய்து போவது –
ஸர்வ ஸஹிஷ்ணு: – அவற்றையடையப் பொறுத்துக்கொண்டு நிற்கும். ‘ஆனாலும், நினைவு இரண்டாய் இராநின்றதே!’ என்னில்,
அர்ச்சக பராதீந அகிலாத்ம ஸ்திதி : – ‘நமக்கு ஒரு நினைவும் அவர்களுக்கு ஒரு நினைவுமாகில் அன்றோ சேராச் சேர்த்தியாவது?’ என்று
அவர்களுக்கு ஈடாகத் தன்னை அமைத்து நிற்கும்,’ என்றார் பட்டர்.
‘தமர் உகந்தது எவ்வுருவம்? அவ்வுருவந் தானே; தமருகந்தது எப்பேர்?மற்றப்பேர் – தமருகந்து,
எவ்வண்ணம் சிந்தித் திமையா திருப்பரே? அவ்வண்ணம் ஆழியானாம்,’ என்றார் பொய்கையார்.
‘எவர் சிலர் அதிகாரிகள் யாதொருபடியாகவேண்டும் என்று நம்மை வணங்குகிறார்கள்? அவர்களைக் குறித்து அப்படிக் கிட்டலாம்படிக்கு
ஈடாக நம்மை அமைத்துக்கொண்டு நிற்போம்; இப்படி அவர்கள் நினைவே நமக்கு நினைவாம்படி இருக்கையாலே அவர்கள்
எல்லாரும் நம் வழி போனார் ஆவர்கள்,’ என்பது இறைவன் திருவாக்கு.
‘சங்கல்பத்துக்குத் தகுதியாக நினைக்கப்படுகின்ற விஷ்ணு’ என்பது ஸ்ரீவிஷ்ணு புராணம். ‘நன்று; ‘சங்கல்பத்துக்குத் தகுதியாக’ என்பது,
பரத்துவம் முதலான நிலைகளைச் சொல்லுகிறது என்று கொள்ளாமல், அர்ச்சாவதார விக்கிரஹத்தைச் சொல்லுகிறது என்று
கொள்ளுதற்குக் காரணம் யாது?’ எனின், பரமபதத்தில் அசாதாரண விக்கிரஹத்தோடும் குணங்களோடும் இருக்கும்;
விபவங்களில் வந்தால் அது தன்னைத் தன்னின் வேறுபட்ட மற்றைச் சாதிகட்குத் தகுதியாக -இதர சஜாதீயனாய்
-ஆக்கிற்றாய் இருக்கும்;-நம் போல்வார் கண்ணுக்கு இலக்காக ஆகிறானே –
தேவகி வாசுதேவன் யசோதா நந்த கோபன்-சங்கல்பத்துக்கு தகுதியாகவே அமைத்துக் கொள்பவன் கிருஷ்ணன் -அன்றோ
தமர் உகந்த அவ்வுருவம் போலே அன்றோ இங்கும்
அசாதாராண விக்ரகம் -தான் அபிமாநிக்கிறார் -பிரக்ருதிம் ஸ்வாம்-அதிஷ்டாயா -ச விக்ரகனாய் -நாம் வைத்த விக்ரகத்துக்குள் புகுகிறான் -வட தேசம் –
புகுந்தால் தாழ்மை வரும் என்றதே தப்புதானே -தாழ்ந்தது என்ற எண்ணமே அவனுக்கும் வாராதே -இரண்டு குற்றங்களும் வருமே –
அபசாரம் பட்டு அவன் மகாத்மயம் குறைக்க முடியாது -நாம் தான் நம்மை காத்துக் கொள்ள படாமல் இருக்க வேண்டும் -சாந்நித்த்யம் குறையாது அவனுக்கு –
அந்தர்யாமியாய் இருந்து அமிர்தமாய் இருக்கிறான் -சுருதி -அவன் சம்பந்தத்தால் அமிர்தம் ஆக்குவான் தான் புகுந்து -வியாப்தகத தோஷம் வாராது
தூப்பில் பிள்ளை கத்ய வியாக்யானத்தில் -ஷாட் குணிய பிரகாச -சுத்த சத்வமயம் -நாம் உகந்த வற்றிலே -அர்ச்சாபி-என்கிறார் –
அர்ச்சாவதார திருமேனியாக இருந்தாலும் -உம்மைத் தொகை சொல்வதையே ஒத்துக் கொள்ள மாட்டார்கள் –
இங்ஙன் அன்றிக்கே, அடியவன் தான் உகப்பது யாதேனும் ஒரு பொருளைத் திருமேனியாகக் கோலினால், அதனையே
தனக்குத் திருமேனியாகக் கொண்டு, அதிலே அசாதாரண விக்கிரஹத்தில் பண்ணக்கூடிய அபிமானத்தைப் பண்ணி,
இவ்வழியாலே முகங்கொடுக்கும்படியாய் இருப்பது இந்நிலை.மேலும், தன்னினின்றும் வேறுபட்ட எல்லாப் பொருள்களினுடையவும்
சொரூபம், நிலை பேறு, தொழில் நடத்தல், தொழில் நடவாமை முழுதும் தன் அதீனமாம்படி இருக்கிற இறைவன்,
தன்னுடைய சொரூபம் நிலைபேறு முதலியவைகள் அடியார்களுடைய அதீனமாம்படியாய் அவர்களுக்கு வீடு நிலம் முதலியவைகளைப் போன்று
கூறு கொள்ளலாம்படி நின்ற நிலை அன்றோ இது? மேலும், இவனுக்கு ருசி பிறந்த போது மற்றொரு இடத்தில் போக வேண்டாதே,
இங்கே அனுபவிக்கலாம்படி நிற்கிற நிலையாய், இச்சரீர சம்பந்தமற்று ஒரு தேச விசேடத்திலே போய் அதற்கு ஈடாய் இருப்பது
ஒரு சரீரத்தைப் பெற்றுச் செய்யக்கூடியனவான அடிமைகளை இதர விஷயங்களின் ஆசைக்கு உறுப்பான இவ்வுடம்போடே செய்யலாம்படியாய்,
இவன் வேறொன்றிலே நோக்குள்ளவனான அன்றும் இவன் கையையே பார்த்திருக்கக் கூடியவனாய்
, இவன் தான் பசித்த போது உண்ணும் பொருளை ‘அமுது செய்ய வேண்டும்’ என்று விரும்பினால், அப்போதே அமுது செய்யக்கூடியவனாய்,
ஆசனம் படுக்கை அணிகள் முதலியனவெல்லாம் இவன் இட்ட வழக்காக்கி, திருமகள் கேள்வனாய், அடையப்பட்ட
எல்லா விருப்பத்தையுமுடையவனான இறைவன் அடியார்கட்கு வசப்பட்டவனாய், இவன் யாதேனும் ஒரு பொருளை இட்டால்
அதனைத் திருவாய்ப்பாடியில் யசோதை முதலானோர் வெண்ணெயைப் போன்று விரும்பக்கூடியவனாய்,
இப்படித் தன்னை அமைத்துக் கொண்டு நிற்கிற இடமே அன்றோ அர்ச்சாவதாரமாவது?

பரத்துவமே தொடங்கி அவதாரங்களிலே வர அவன் குணங்களைச் சொல்லிக்கொண்டு போந்து அர்ச்சாவதாரத்தின்
எல்லை நிலமான சௌலப்யத்தின் எல்லை நிலத்தை உபதேசிக்கிறார்.
‘ஆயின், இப்போது உபதேசிக்கப்புகுகிறது சௌலப்யமேயாகில், பரத்துவமே தொடங்கி உபதேசிக்க வேண்டுவான் என்?’ என்னில்,
‘மேன்மையுடையவன் தாழாநின்றான்’ என்றால் அன்றோ குணமாவது? தாழ்ந்த நிலையினனான ஒருவன் தாழாநின்றால்
சொரூபமாமித்தனையே அன்றோ? இப்படித் தாழ நிற்கிறவன் மேன்மையையுடையவன் என்கைக்காகச் சொல்லுகிறது.
உபாயங்களில் பிரபத்திமார்க்கம் போன்றது, சௌலப்யங்களில் அர்ச்சாவதார சௌலப்யம்.
‘தான் உகந்த பொருளைத் திருமேனியாகக் கொண்டு சந்நிதி பண்ணுவானேயாயின், கௌரவபுத்தி உண்டாகுமோ?’ எனின்,
தாய்க்கும் பெண்களுக்குரிய தன்மை ஒத்திருந்தும் பண்ணுகிற உபகாரங்களைக் காண்கையாலும்
சாஸ்திரம் சொல்லுகையாலுமன்றோ கௌரவிக்கிறது? அப்படியே,பிரமாணத்தை நம்புகிறவனுக்கு அடையத்தக்க இடம் அர்ச்சாவதாரம்
ஒழிய இல்லை என்று இவ்வளவான சௌலப்யத்தின் எல்லை நிலத்தை உபதேசிக்கிறார் ஆதலின், கௌரவபுத்தி உண்டாகும்.

தாம் உபதேசிக்கிற அதிகாரிகளுக்கும் தம்மைப் போன்று கைங்கரியத்தில் பிராப்தியுண்டு என்று காட்டுகைக்காக ‘ஒழிவில் காலமெல்லாம்’ என்ற
திருவாய்மொழி தொடங்கிச் சங்கதி அருளிச்செய்கிறார், ‘சர்வேஸ்வரன்’ என்று தொடங்கி. ‘சர்வேஸ்வரன்’ என்றது முதல் ‘உத்தேஸ்யமாகக் கடவதுமாயிருக்க’
என்றது முடிய, ‘ஒழிவில் காலமெல்லாம்’ என்ற திருவாய்மொழியின் அநுவாதம். அதற்குமேல் ‘வெறுத்தவராய் நின்றார்’ என்றது முடிய, மேல்
திருவாய்மொழியின் அநுவாதம். ‘இப்படி நிந்திக்கத் தக்கவர்கட்கு உபதேசிக்கைக்குக் காரணம் என்?’ என்ன, ‘அருள் கண்டீர் இவ்வுலகினில்
மிக்கதே’ என்கிறபடியே, மிக்க பேரருளே காரணம் என்கிறார், ‘அவ்வாறு வெறுத்தல்’ என்று தொடங்கி.

‘நண்ணாதார் மெய்யில் ஊன் ஆசை நிர்வேதத்தோடே ஆஸ்திக்ய அமாநித்வாதிகள் விஞ்சின பிரணிபாத அபிவாதந பரிப்ரச்ந சேவாபரர்க்கு
உளங்கொள் பேசுமளவன்று என்னும் அர்த்தத்தை வம்மின் விரோதம் ஈனச் சொல் எவ்வுயிர்க்கும் அறிய என்று அடைவுகெட அதபஸ்கர்க்கு
உபதேசிக்கிறது ஞாலத்தார் பந்தபுத்தியும் அநர்த்தங்கண்டு ஆற்றாமையும் மிக்க கிருபையுமிறே.’ ‘தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும்
இவர்க்கும் இவர் அடிபணிந்தவர்க்குமே இவையுள்ளது’ என்னும் ஆசார்யஹ்ருதய ஸ்ரீசூக்திகளை இங்கு அநுசந்திக்கத் தகும்.
வேத வேத்ய நியாயம் பரதவ பரமுது வேதம் வ்யூஹ வ்யாப்தி அவதாரங்களிலே ஓதின நீதி கேட்ட மனு படு கதைகளாய் ஆக
மூர்த்தியில் பண்ணிய தமிழ் ஆனவாறே வேதத்தை த்ராவிடமாகச் செய்தார் என்னும்
-பெரும் புறக்கடலும் சுருதி சாகரமும் அலைத்து ஆழ்ந்து ஓடும் இடங்களில் அயோக்யருக்குச் சமைத்த மடுவும் சாய்கரமும் மாந மேய சரமம் –
கௌரவ பிரதிபத்தி நமக்கு வருமோ என்னில் -ஜனனிக்கு ஸ்திரீ சாம்யம் ஒத்து இருக்கச் செய்தே பண்ணும் உபகாரங்களை
பிரத்யஷிக்கையாலும் -மாத்ரு தேவோ பவ -பிதா விட சதா -100 மடங்கு -சாஸ்திரம் சொல்லிற்றே
பிரத்யஷமாக நாமும் பார்க்கிறோம் -த்ரவ்ய புத்தி மாத்ரு யோனி பரிஷை உடன் ஒக்கும் –
வீட்டு இன்பப் பாக்களில் த்ரவ்ய பாஷா நிரூபண சமம் இன்ப மாரியில் ஆராய்ச்சி
இது பூர்ணம் –அது பூர்ணம் -பர -அங்கு இருந்து அது பூர்ணம் -வ்யூஹம் -அங்கு இருந்து அது பூர்ணம் -விபவங்கள்
அங்கு இருந்து அது பூர்ணம் -அர்ச்சை –அதுவே பூர்ணம் -க்ருஹ அர்ச்சை –

ஆறாம் திருவாய் மொழியில் -கீழ் சேஷத்வ ஸாரஸ்யத்தால் பிறந்த ப்ரீதி விகாரம் உத்தேச்யம் என்று அருளிச் செய்தவர்
அந்த இனிமை இல்லாமையால் அவிகிருதரான சம்சாரிகளுக்கும் பகவச் சேஷத்வத்தை உபதேசிப்பதாக
சேஷியினுடைய அர்ச்சாவதார பர்யந்தமான சவ்லப் யத்தை உப பாதிப்பதாக நினைத்து
1-அந்த சவ்லப்யத்துக்கு ஊற்றான ஜகத் ஸ்ரஷ்ட்ருத்வத்தையும்
2-ஸ்ருஷ்டமான ஜகத்தினுடைய ரக்ஷண அர்த்தமான அவதார கந்தத்வத்தையும்
3-அவதீர்ணனுடைய அதிசயித சேஷ்டிதத்வத்தையும்
4-ஈஸ்வர அபிமானிகளுக்கும் ஆஸ்ரயணீயனான ஸீலாதிசயத்தையும்
5-அவதார திசையிலும் அகில விபூதித்வம் தோற்றும் படியான ஆதிக்யத்தையும்
6-ஆஸ்ரித விஷயத்தில் அதிசயித வாத்சல்யத்தையும்
7-நிரவதிக போக்யதையும்
8-பற்றினாரை நழுவ விடாத பக்ஷபாதத்தையும்
9-சர்வவித பந்துவுமாய்க் கொண்டு ஆஸ்ரிதர் இட்ட வழக்கான அர்ச்சாவதார பாரதந்த்ரியத்தையும்
10-ஆஸ்ரித பரதந்த்ரனான அவன் பக்கல் தமக்குப் பிறந்த அபி நிவேசத்தையும்
அருளிச் செய்து பகவச் சேஷத்வத்தை பிரதிபாதித்து அருளுகிறார் –

செய்ய தாமரைக் கண்ணனாய் உலகு
ஏழும் உண்ட அவன் கண்டீர்
வையம் வானம் மனிசர் தெய்வம்
மற்று மற்றும் மற்றும் முற்றுமாய்
செய்ய சூழ் சுடர் ஞானமாய் வெளிப்
பட்டு இவை படைத்தான் பின்னும்
மொய்கொள் சோதியோடு ஆயினான் ஒரு
மூவர் ஆகிய மூர்த்தியே.
–3-6-1-

கம் பிபதீதி கபி–கம்பீராம்ப -சமுத்பூத ச்ம்ருஷ்ட நாள- ரவி கர விகசித -புண்டரீக தல -அமல ஆயத ஈஷண-அமலங்களாக விளிக்கும் கரியவாகி –நீண்ட அப்பெரிய வாய கண்கள்

‘மற்றும்’ என்றது, விலங்கு பறவை தாவரங்களை.-மீண்டும், ‘மற்றும்’ என்றது, அவற்றுக்குக் காரணமான ஐம்பெரும்பூதங்களை.-மீண்டும் மற்றும் என்றது, அவை தமக்கும் காரணமான மகான் முதலிய தத்துவங்களை. ‘முற்றும்’ என்றது, எல்லாவற்றையும்.-முற்றவும், உண்டாகைக்காக இவையாய்க் கொண்டு தான் படைத்தலில் கருத்து உள்ளவனாய்த் தோன்றி இவற்றைப் படைத்தான்–அதனுடைய கர்மத்துக்குத் தகுதியாகப் படைத்த செவ்வை’ –சூழ்தலாவது, காரியக் கூட்டத்தில் எல்லாம் பரந்திருக்கை. சுடராவது, மழுங்காத ஞானமாய் மிக விளக்கமாயிருக்கை.

சோதி – குணம். ‘சோதி’ என்றது, குணங்களுக்கெல்லாம் உபலக்ஷணம்.-‘இப்போது குணங்களைச் சொல்லுகிறது என்?’ என்னில், குணங்களையுடைய பொருள் அன்றோ பற்றத்தக்கது? ஆதலால், சொல்லுகிறது.

மூவராகிய மூர்த்தி –செய்ய தாமரைக் கண்ணனாய் -உலகம் ஏழும் உண்ட அவன் கண்டீர் -என்று அந்வயம் –

———

மூவர் ஆகிய மூர்த்தியை முதல்
மூவர்க்கும் முதல்வன் தன்னைச்
சாவம் உள்ளன நீக்குவானைத்
தடங் கடற் கிடந்தான் தன்னைத்
தேவ தேவனைத் தென்னிலங்கை
எரி எழச்செற்ற வில்லியைப்
பாவ நாசனைப் பங்கயத் தடங்
கண்ணனைப் பரவுமினோ
.–3-6-2-

அகில காரணாய அத்புத காரணாய நிஷ்காரணமாய் –‘பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரம் – தனக்குத் தானே தலைவன்’-தடம் கடல் கிடந்தான் தன்னை –‘இன்னம் இவர்கட்கு ஆபத்து வந்த போது நம்மைத் தேடித் திரிய ஒண்ணாது’ என்று ஏற்கவே கடலில் இடங் கொண்டவனை-தென்னிலங்கை எரி எழச்செற்ற வில்லியை- நெருப்பானது இராவணபயத்தாலே புகமாட்டாத ஊரிலே தான் நினைத்தபடி பரவும்படி செய்ய வல்ல வில் வலியை யுடையவனை,-இதனால், பிரமன் முதலியோர் கூப்பீடு கேட்டு எழுந்திருந்து செய்த தொழிலைத் தெரிவித்தபடி.-முதல்வன் – காரணன்-தலைவன்.-தேவதேவன்-எரி எழச் செற்ற வில்லி-மனிதத்தன்மையில் பரத்துவம்-பங்கயம் தடம் கண்ணனை –-பாப நாசனாய் இல்லாமல் – பாவத்தை வளர்ப்பவன் ஆனாலும், விடவொண்ணாத படியான கண்ணழகை யுடையவனை.-பரவுமினோஜிதந்தே புண்டரீகாஷே நமஸ்தே -‘தாமரைக் கண்ணரே! தேவரீருக்கு வெற்றி!’ என்று முறை கெடப் புகழுங்கோள்.

————

பரவி வானவர் ஏத்த நின்ற
பரமனைப் பரஞ்சோதியைக்
குரவை கோத்த குழகனை மணி
வண்ணனைக் குடக்கூத்தனை
அரவம் ஏறி அலைகடல் அம
ருந் துயில் கொண்ட அண்ணலை
இரவும் நன் பகலும் விடாது என்றும்
ஏத்துதல் மனம் வைம்மினோ
.–3-6-3-

இராமாவதாரம் பரத்துவம் என்னும்படியான கிருஷ்ணாவதாரத்திலே பற்றுங்கோள்-ஏத்துவதனாலே பரமன்’ -ஏத்தினாலும் அதற்கும் அப்பாற்பட்டவன்’ -பரஞ்சோதியை – அவர்கள் ஏத்த, அதனாலே ஒளியை உடையவனாயிருக்கிறவனை;-அவர்கள் ஏத்துமது தன் பேறாக நினைத்து, அது தன் வடிவிலே தோன்ற இருக்கின்றமையைத் தெரிவித்தபடி.

நித்திய ஸூரிகளோடு செய்யும் செயல்களை ஆயர் பெண்களோடு கலக்கும் இடத்தில், வாசி அறக் கலக்க வல்லவனை. குழகன் – பவ்யன்-மணி வண்ணனை – அவர்களை வசீகரிக்கைக்கும் மருந்திடும் பரிகரத்தை உடையவனை;குடக்கூத்தனை –திருக் குரவைக் கூத்தில் சேராதவர்களும் இழக்க ஒண்ணாதபடி மன்றிலே தன்னுடைய வடிவழகினை முற்றூட்டாக அநுபவிப்பிக்குமவனை.-மன்றம் அமர கூத்தாடி -இவன் ஆடி விட்டு போன பின்பும் கோபிமார்கள் மன்றிலே அமரும் படி –இரவும் நன்பகலும் விடாது என்றும் ஏத்துதல் மனம் வைம்மினோ –‘காலம் நடையாடாத தேசத்தில் அனுபவத்தை அன்றோ காலம் நடையாடும் தேசத்திலே நான் உங்களை அனுபவிக்கச் சொல்லுகிறது?’ என்கிறார்.
ஏத்துகைக்கு ஈடான காலம் ஆகையாலே ‘நல் இரவும் நன்பகலும்’ என்கிறார்.
‘துதி செய்துகொண்டேயிருக்கின்றார்கள்’ என்கிறபடியே ஆதல் வேண்டும் என்பார், ‘என்றும் ஏத்துதல்’ என்கிறார்.-‘நீங்கள் அங்கே நெஞ்சை வைக்குமித்தனையே வேண்டுவது; விஷயம் தன்னடையே கொண்டு முழுகும்,’ என்பார், ‘மனம் வைம்மினோ’ என்கிறார்;

‘நித்தியஸூரிகள் ஏத்தும் விஷயத்தை அன்றோ நான் உங்களை ஏத்தச் சொல்லுகிறது?
அறப் பெரியவனை அன்றோ நான் உங்களை ஏத்தச் சொல்லுகிறது? நீங்கள் ஏத்துகிற இது தன் பேறு என்னுமிடம் வடிவிலே தோன்ற இருக்கிறவனை அன்றோ நான் உங்களை ஏத்தச் சொல்லுகிறது?
உங்களுடைய விலக்காமையே பற்றாசாக வந்து கலக்குமவனை அன்றோ நான் உங்களை ஏத்தச் சொல்லுகிறது?
யாதாயினும் நேர்ந்து அணுக வேண்டும் வடிவழகையுடையவனை அன்றோ ஏத்தச் சொல்லுகிறது?
சேஷசயனத்தை யுடையவனை அன்றோ ஏத்தச் சொல்லுகிறது?
உங்களுடைய சேர்க்கையாலே செருக்கியிருக்கிறவனை அன்றோ ஏத்தச் சொல்லுகிறது?
ஒரு கால நியதி உண்டாய் இருக்கின்றீர்களோ? ஏத்துகைக்குச் சாதனம் இல்லாதவர்களாய்த்தான் இருக்கின்றீர்களோ?
அதில் ஒரு அருமை உண்டாய்த்தான் இருக்கின்றீர்களோ?
ஆன பின்னர், விஷயங்களிலே ஓடித்திரிந்த மனத்தினை மீட்டு இவ்விஷயத்திலே வைக்கப் பாருங்கோள்,’ –ஓவாதே என்றும் ஸ்தோத்ரம் பண்ணுகையிலே நெஞ்சை வையுங்கோள் —-விஷய வைலக்ஷண்யத்தாலே இது தானே கொண்டு முழுகும் என்று கருத்து —

————

வைம்மின் நும் மனத்து என்று யான் உரைக்
கின்ற மாயவன் சீர்மையை
எம்மனோர்கள் உரைப்பது என்? அது
நிற்க; நாடொறும் வானவர்
தம்மை ஆளுமவனும் நான்முக
னும் சடைமுடி அண்ணலும்
செம்மையால் அவன் பாத பங்கயம்
சிந்தித்து ஏத்தித் திரிவரே
.–3-6-4-

செருக்கு மிக்கவர்களான பிரமன் உருத்திரன் முதலாயினார்கட்கும் தடையின்றிக்கே புக்குப் பற்றும்படியாக இருக்கிற சீலகுணத்தைப் பேசுகிறார்.-பாடித் திரிவனே’ என்னுமாறு போலே. வேறு பலன்களைக் கருதும் தன்மையும் நெஞ்சிலே கிடக்கச் செய்தே வேறு பலனைக் கருதாதவர்களைப் போல வந்து பற்றாநிற்பர்கள் ஆதலின்,-‘செம்மையால் திரிவர்’ என்கிறது;-அளவிறந்த நீர்மையை யுடையனாய் இருந்தவன் அநந்ய ப்ரயோஜனராய்க் கொண்டு ஆஸ்ரயிக்குமவர்களைக் கை விடுமோ -என்கிறார் –

————-

திரியும் காற்றோடு அகல் விசும்பு திணிந்த மண் கிடந்த கடல்
எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம் மற்றும் மற்றும் முற்றுமாய்
கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன் கண்ணன் விண்ணோர் இறை
சுரியும் பல் கருங்குறிஞ்சி எங்கள் சுடர் முடி யண்ணல் தோற்றமே 
–3-6-5-

ஆஸ்ரித பரதந்த்ர தயா நிர்வதிக தேஜஸான திரு அபிஷேகத்தை உடையனான சர்வேஸ்வரனுடைய தோற்றரவு –பிரகாசம் -என்னுதல் -அவதாரம் என்னுதல்-

———

தோற்றக் கேடு அவை இல்லவன் உடையான் அவன் ஒரு மூர்த்தியாய்ச்
சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக்கீழ்ப் புக நின்ற செங்கண்மால்
நாற்றம் தோற்றம் சுவை ஒலி உறல்ஆகி நின்ற எம்வானவர்
ஏற்றையே அன்றி மற்றொருவரை யான் இலேன் எழுமைக்குமே.
–3-6-6-

தனக்கு மேல் ஒரு இனிய பொருள் இல்லாதவனான-நரசிம்ஹத்தை ஒழிய வேறு ஒருவரை உத்தேசியமாக உடையேன் அல்லேன், காலன் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும்,’ என்கிறார்.-பரோபதேசம் செய்து கொண்டு –இங்கு ஸூய அனுபவம் -தம்மைப் போலே சம்சாரிகளும் இருக்க வேண்டும் என்று காட்ட அருளிச் செய்கிறார் -இதுவும் பர உபதேச உக்தி-

இரணியன் துவேஷத்திற்கு விஷயம் ஆனாற்போலே இவன் அருளுக்கு விஷயமானான் ஆதலின்,‘சீற்றத்தோடு அருள் பெற்றவன்’ என்கிறது.
இனி, ‘சீற்றத்தோடு’ என்பதனை ‘ஒரு மூர்த்தி’ என்பதற்கு அடையாக்கலுமாம். -சீற்றமே வடிவு கொண்ட ஒரு மூர்த்தி -என்றவாறு —
‘இரணியன் பக்கல் சீற்றமும் செல்லா நிற்க, ஸ்ரீ பிரஹ்லாதாழ்வானுக்குக் கிட்டலாய் இருந்தபடி எங்ஙனே?’ என்று எம்பெருமானாரைச் சிலர் கேட்க, ‘சிம்ஹம் யானை மேலே சீறினாலும் குட்டிக்கு முலை உண்ணலாம்படி இருக்கும் அன்றோ?’ என்று அருளிச் செய்தார்.
‘அடியாரிடத்துள்ள அன்பினாலே அவர்கள் விரோதி மேலே சீறின சீற்றமானால், பின்னை அவர்களுக்கு அணைய ஒண்ணாதபடி இருக்குமோ?’ என்று அருளிச் செய்தார் என்றபடி. எழுமைக்குமே – காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும். அவன் நித்தியசூரிகள் பக்கலிலே இருக்கக்கடவ இருப்பை என் பக்கலில் இருக்க, நான் வேறொன்றை இனிய பொருளாக நினைத்திருப்பேனோ? அவர்கள் அவனை ஒழிய வேறொன்றை இனிய பொருளாக நினைக்கில் அன்றோ நான் வேறொன்றை இனிய பொருளாக நினைப்பது?சீற்றத்தோடு அருள் பெற்றவன் -என்று சிஸூபாலனாகவும் சொல்லுவர் –

————-

எழுமைக்கும் எனது ஆவிக்கு இன்அமுதத்தினை எனது ஆருயிர்
கெழுமிய கதிர்ச் சோதியை மணிவண்ணனைக் குடக் கூத்தனை
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னற் கனியினைத்
தொழுமின் தூய மனத்தராய்;இறையும் நில்லா துயரங்களே.
–3-6-7-

இப்படிச் சுலபனானவன் பக்கல் அரியன் என்னும் ஐயத்தை நீக்கி அவனைப் பற்றுங்கோள்,
உங்களுடைய எல்லாத் துக்கங்களும் போம்படி,’ என்கிறார்.மணி வண்ணனைக் குடக்கூத்தனை –வடிவழகையும் மனத்தை அழிக்கும்படியான செயல்களையும் உடையவனை. வண்ணம் – நிறம்.-இனி, ‘நீலமணிபோலே முடிந்து ஆளலாம்படி இருக்கிறவன்,’ எனலுமாம்.-இத்தலையில் இசைவு பாராமலே அகப்படுத்திக் கொள்ளுகைக்கு ஏதுக்கள் இருக்கிறபடி.-தொழுமின் – இதுவன்றோ நான் உங்களுக்கு இடுகிற வேப்பங்குடி நீர்? பால்குடிக்கக் கால் பிடிக்கிறேன் அன்றோ?

———–

துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய் அவை அல்லனாய்
உயர நின்றது ஓர் சோதியாய் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் தனை
அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன் தனைத்
தயரதற்கு மகன் தனையன்றி மற்றிலேன் தஞ்சமாகவே
.–3-6-8-

இப்படி எல்லாம் நிறைந்தவனாய் இருந்தானேயாகிலும், தன் விபூதியில் ஒரு கூறான இவ்வுலகத்தைப் பிரளயங்கொண்டது என்றால்,-இங்கே வந்து வயிற்றிலே எடுத்து வைத்து நோக்கி, ‘இத்தனை போதும் காணப்பெறாமையாலே இவை என்படுகின்றனவோ!’ என்று
உமிழ்ந்து பார்க்குமவனை; வழிபறிக்கும் நிலத்திற் போவார் சீரிய தனங்களை விழுங்கி பின்னை அமர்ந்த நிலத்திலே புக்கால் புறப்பட விட்டுப் பார்க்குமாறு போலே.‘தயரதன் மகன்’ என்னாதே, தயரதற்கு மகன் தன்னை’ என்கிறது,-ஒருகால் வெற்றிலைச் செருக்கிலே ‘அரசு தந்தேன்’ என்னா, மீண்டு பெண்ணுக்கு வசப்பட்டவனாய், ‘நான் தந்திலேன்; நீ காடு ஏறப் போ,’என்னா, இப்படிச் சொல்லலாம்படி அவனுக்கு இஷ்ட வினியோகத்திற்குத் தக்க புத்திரனாய் இருந்தான் ஆதலின்-

அன்றி மற்று இலேன் தஞ்சமாகவே –இவ்விடத்தைப் பட்டர் அருளிச்செய்யாநிற்க, நஞ்சீயர், ‘இவர் புக்க இடம் எங்கும் இப்படியே சொல்லுவர்; இவர்க்கு இது பணியே அன்றோ?’ என்ன,
ஞானப்பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -என் சிங்க பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே -போலே – ‘இவர் மற்றோரிடத்தில் தலை நீட்டுவது பாவநத்வத்தைப் பற்ற; இவர் தஞ்சமாக நினைத்திருப்பது சக்கரவர்த்தி திருமகனையே,’ என்று அருளிச் செய்தார்.போக்யத்தை பற்ற இவர் இடம் -மற்றவர்கள் -பாவனத்வம் -இவரையே அனுபவிக்க ஆழ்வார் –

ராவண வத சமனந்தரத்திலே முதலிகளிலே சிலரை காணாது ஒழிய தேவதைகளைக் கொண்டு மீட்டும்-ஒரு பாலனுக்கு அகால ம்ருத்யு வர அம்பாலே மீட்டுக் கொடுத்தும் செய்த சக்கரவர்த்தி திருமகனை அன்றி – ததவ் கௌசிக புத்ராய -என்று ராஜ்யத்தை தந்தேன் என்னா அத்தை தவிர்ந்து காடு ஏறப் போம் என்னா ஒரு சம்சாரிக்கு இஷ்ட விநியோக அர்ஹன் ஆனவனை – பவான் நாராயணோ தேவ -என்று ஈஸ்வர அபிமானிகள் தங்கள் வந்து சொன்னால் ஆத்மா நம் மானுஷம் மன்யே என்னுமவன் –

பட்டர் இராமாவதாரத்தில் பக்ஷபாதத்தாலே அருளிச்செய்யுமது கேட்கைக்காக,
சிறியாத்தான், ‘பெருமாளுக்கு எல்லா ஏற்றங்களும் அருளிச்செய்ததேயாகிலும், பாண்டவர்களுக்காகக் கழுத்திலே ஓலை கட்டித் தூது போன கிருஷ்ணனுடைய நீர்மை இல்லையே சக்கரவர்த்தி திருமகனுக்கு? என்ன,
‘அதுவோ! பெருமாள் தூது போகாமை அன்றுகாண்; இக்ஷ்வாகு குலத்தாரைத் தூது போக விடுவார் இல்லாமைகாண்,’ என்று அருளிச் செய்தார்.
‘அவ்வவதாரத்தில் அக்குறை தீருகைக்காக அன்றோ கிருஷ்ணனாக அவதரித்துத் தூது போயிற்று? ‘முன்னோர் தூது வான ரத்தின் வாயில் மொழிந்து அரக்கன், மன்னூர்தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே, பின்னோர் தூது ஆதிமன்னர்க்காகிப் பெருநிலத்தார்,
இன்னார் தூதன் என்ன நின்றான் எவ்வுட் கிடந்தானே,’ என்பது மங்கை மன்னன் மறைமொழி;-பாரதந்திரிய ரசம் அனுபவிக்கைக்காகப் போந்த பின் அதில் ஒன்று குறைந்தது என்று ஏன் இருக்க வேண்டும்?’
‘எம்பெருமானார் திருவாராதனம் பண்ணிப் போருவது வெண்ணெய்க்காடும் பிள்ளையாய் இருக்கும்.-இங்ஙனமிருக்கவும், ஒரு நாள் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் சக்கரவர்த்தி திருமகனை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வந்து கொடுத்தாராய் அவரைப் பார்த்து, இந்த ‘என் ஒருவனையே சரணமாகப் பற்று’ என்று தேவையிடாதார் எழுந்தருளினார்,’ என்றாராம்.

‘இத்தலையில் ஆபிமுக்கியத்திற்கு மேற்பட வேண்டா,’ என்று சொல்லுகிறவை எல்லாம்,
பற்றப்படுகின்ற சர்வேசுவரனுடைய நீர்மையைப் பற்றச் சொல்லுகிறது;-இவனுக்கு வேண்டுவன சொல்லப்புக்கால் ‘மஹாவிஸ்வாச பூர்வகம் – மஹாவிசுவாசம் முன்னாக’ என்ன வேண்டும்படியாய் இருக்கும்.-‘ஒரு சிறாயை நம்பி ஆறுமாதங்கட்கு வேண்டும் சோறும் தண்ணீரும் ஏற்றிக்கொண்டு கடலிலே இழியாநின்றான்;-அதைப் போன்ற நம்பிக்கையாகிலும் வேண்டாவோ பகவத் விஷயத்தைப் பற்றுகிறவர்களுக்கு?’ என்று அருளிச் செய்தார்-

————–

தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு தானுமாய் அவை அல்லனாய்
எஞ்சல் இல் அமரர் குல முதல் மூவர் தம்முளும் ஆதியை
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் அவன் இவன் என்று கூழேன்மின்;
நெஞ்சினால் நினைப்பான் எவன்?அவன் ஆகும் நீள்கடல் வண்ணனே
.–3-6-9-

நீங்கள் விரும்பியபடியே உகந்தருளப் பண்ண,-அத்திருமேனியையே இவ்வுலக சம்பந்தமில்லாத தெய்வத் திருமேனியைப் போன்று விரும்பும் அர்ச்சாவதாரத்தைப் பற்றுமின்,’ என்கிறார்-இத்திருவாய்மொழிக்கு நிதானம் இப்பாசுரம்

இழவுக்குக் கண்ணநீர் பாயவேண்டாத தந்தையாய் இருப்பான்.-தஞ்சமாகி தாய் -தஞ்சமாகிய தந்தை -தஞ்சமாகிய தான் –‘தஞ்சமாகிய தானும்’ என்று ஓதியது என்?’ என்னில், -அந்நாள் நீ தந்த ஆக்கையின்வழி உழல்வேன்-ஆகையாலே, தனக்குத்தான் தஞ்சம் அல்லன்.-

அவன் இவன் என்று கூழேன்மின் –‘அவன் ஆகிறான், தேச கால வஸ்துக்களால் அளவிடமுடியாதவனாய் அசாதாரண விக்கிரஹத்தோடே நித்தியஸூரிகளுக்கு
அனுபவிக்கப்படுகின்றவனாய்க் கொண்டிருக்கிறான் ஒருவன்;
இவன் ஆகிறான், தேச கால வஸ்துக்களாற்பிற்பட்டு, நாம் விரும்பியது ஒரு பொருளைத் தனக்குத் திருமேனியாகக் கொண்டு இவ்வழியாலே நம் புத்திக்கு உரிமைப்பட்டவனாய் இருப்பான் ஒருவன்;
ஆன பின்பு, அவன் அளவிடப்படாதவன்; இவன் அளவிற்கு உட்பட்டவன்,’ என்று இங்ஙனம் சந்தேகம் பொருந்திய மனம் உடையவர் ஆகாதே கொள்ளுங்கோள்.
நெஞ்சினால் நினைப்பான் எவன் – மனத்தினாலே யாதொன்றைத் திருமேனியாகக் கோலினீர்கள்-நீள்கடல் வண்ணன் அவன் ஆகும் – அளவிட முடியாத பெருமையையுடைய சர்வேசுவரன் அதனையே தனக்கு அசாதாரண விக்கிரஹமாகக் கொண்டு விரும்பும்.
‘பிராஹ்மணர்கள் அக்நியில் பார்க்கிறார்கள்; யோகிகள் இருதயத்தில் பார்க்கிறார்கள்; அறிவில்லாதவர்கள் பிம்பங்களிலே; சமமாகப் பார்க்கும் ஞானிகள் எங்கும் பார்க்கிறார்கள்,’ என்று ரிஷிகளைப் போலே தம் வாயாற்சொல்ல மாட்டாமையாலே ‘அவன், இவன்’ என்கிறார்.

‘நெஞ்சினால் நினைப்பான் எவன்? அவனே நீள்கடல் வண்ணன் ஆகும்’ என்று கொண்டு கூட்டி,‘அங்குத்தைக்கு உகந்தருளின இடத்தை விபூதியாக நினையாதே, இங்குத்தைக்கு அவ்விடத்தை விபூதியாக நினையுங்கோள்,’ என்று பணிப்பர் ஆண்டான்.நெஞ்சால் நினைக்கும் அங்குத்தைக்கும் -உகந்து அருளினை நிலம் விபூதி சேஷம் அர்ச்சை என்று நினையாதே-அர்ச்சைக்கு பரவாசுதேவன் சேஷன் என்பர் முதலியாண்டான்
தெளி விசும்பு திரு நாடும் அர்ச்சையிலே சேர்த்தே -108-திவ்ய தேசம்

இவ்வுலக சம்பந்தமில்லாத விக்கிரகத்திலே செலுத்தும் விருப்பத்தை அர்ச்சாவதாரத்தில் செலுத்தமுடியுமோ?’ எனின்,-அசாதாரண விக்கிரகத்தை நாம் ஆதரிக்கிறதும் ‘அவன் விரும்பி மேற்கொண்டது’ என்றுதானே?-அதைப் போன்று, இதுவும் அவன் விரும்பி மேற்கொண்டானாகில், ஆதரிக்கத் தட்டு இல்லையே?-முதல் தன்னிலே அவன் திருமேனியை விரும்பி மேற்கொண்டதும்‘பக்தாநாம் – பத்தர்களுக்காகவே’ என்கிறபடியே, அடியார்களுக்காக அன்றோ?-அது காரியமாய்ப் பயன் தருமிடத்திலே அன்றோ மிகவும் உறைக்க இருப்பது?ஆகையாலே, நீள் கடல் வண்ணன் அவன் ஆகும்.-அர்ச்சாவதார சேதன புத்தியால் மூச்சு விடுவான் உண்பான் அன்றோ –

———–

கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர் கருமாணிக்கம் எனது ஆர்உயிர்
பட அரவின் அணைக் கிடந்தபரஞ்சுடர் பண்டு நூற்றுவர்
அடவரும் படை மங்க ஐவர்கட்கு ஆகி வெஞ்சமத்து அன்று தேர்
கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே?
–3-6-10-

தாம் உபதேசிக்கத் தொடங்கின சௌலப்யத்தை அர்ச்சாவதாரம் முடிவாக அருளிச்செய்து, பின், தன் துறையான கிருஷ்ணாவதாரத்திலே போய், ‘நான் கண்ணாலே கண்டு அனுபவிக்கப் பெறுவது என்றோ!’ என்னும் மனக் குறைவோடே தலைக்கட்டுகிறார். ‘தயரதற்கு மகன்தன்னை அன்றிமற்றிலேன்’ என்றது செய்வது என்?’ என்னில், கிருஷ்ணாவதாரத்தில் நீர்மை காணுமளவுமே இது சொல்லுகிறது. கிருஷ்ணாவதாரத்திற்காட்டிலும் அர்ச்சாவதாரத்துக்குச் சௌலப்யம் மிக்கிருந்ததே யாகிலும், இவர் ‘எத்திறம்!’ என்று ஆழங்காற்பட்டது கிருஷ்ணாவதாரத்திலே ஆயிற்று.

விண்ணவர் கருமாணிக்கம்’ என்றதனால், நித்திய ஸூரிகளுக்கு அனுபவிக்கத் தகுந்த விக்கிரகத்தையுடையவன் என்பதனைத் தெரிவித்தபடி.
‘பட அரவின் அணைக் கிடந்த’ என்றதனால், அங்குநின்றும் பேர்ந்து, பிரமன் முதலியோர் கூக்குரல் கேட்கைக்காகத் திருப்பாற்கடலிலே அணித்தாய் வந்து கண்வளர்ந்தருளுகிறவன் என்பதனைத் தெரிவித்தபடி.
‘கண்ணன்’ என்றதனால், அங்கு நின்றும் பேர்ந்து எல்லார்க்கும் அனுபவிக்கலாம்படி கிருஷ்ணனாய் வந்து அவதரித்தமையைத் தெரிவித்தபடி.

தேர் கடவிய பெருமான் கனை கழல் –‘சேநா தூளியும் உழவுகோலும் சிறுவாய்க் கயிறும் தேருக்குக் கீழே நாற்றின திருவடிகளும் அத்திருவடிகளிலே சார்த்தின சிறுச் சதங்கையுமாய்ச் சாரதி வேஷத்தோடே நின்ற போதைத் திருவடிகளில் ஆபரணத்தின் ஒலி செவிப்படவும் அவ்வடிவைக் காணவும் காணும் ஆசை.

கண்கள் காண்பது என்று கொலோ– இக்கண்கள் அடிப்படுவது –திருவடிப் படுவது -எப்போதோ? இவை முடியப் பட்டினி விட்டே போந்தவை இப்பட்டினி விடக்கடவது என்றோ?
‘அவ்வடிவைக் காண வேண்டும்,’ என்று விடாய்த்த கண்கள் ‘காணப் பெறுவது என்றோ?’ என்றபடி.-இவர் மனஸ் சஹகாரியம் இல்லாமலே கண்கள் காண ஆசைப் படுகின்றனவே –

————-

கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
மண்கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள்செய்யும் வானவர் ஈசனைப்
பண்கொள் சோலை வழுதி வளநாடன் குருகைக்கோன் சடகோபன் சொல்
பண்கொள் ஆயிரத்து இப் பத்தால் பத்தராகக் கூடும் பயிலுமினே
.–3-6-11-

காண ஒண்ணாது’ என்று மறந்து பிழைக்க ஒண்ணாதபடி நெஞ்சுக்கு மிகவும் முன்னிலையாய் காணப்பெறாத இன்னாப்போடே சொல்லுகிறார். இவர்க்குப் பிரிவாவது, புறக்கண்களால் காணவேண்டும் என்னும் நசையாலே மனத்தின் அனுபவத்துக்கு வரும் கலக்கம். கலவியாவது புறக்கண்களால் நேரே காண்டலைப் போன்று உட்கண்ணால் காண்டல்.-நித்தியஸூரிகளுக்கு அனுபவிக்கத் தக்கவன் ஆனாற்போலே, சமுசாரிகள் என்று வாசிவையாமல் அர்ச்சாவதார முகத்தாலே வந்து சுலபன் ஆனவனை.

1- பரத்துவ ஞானத்துக்கு அடியான புண்ணியமாதல், -2-சாஸ்திர ஞானமாதல்,
3- நற்குருவின் உபதேசமாதல், 4-பகவானுடைய நிர்ஹேதுகத் திருவருளாதல் இவையனைத்தும் இல்லாதார்க்கும் அர்ச்சாவதார சௌலப்யத்தை அநுசந்திக்கவே பகவானிடத்தில் பத்தி உண்டாகக் கூடும் என்பார், ‘பத்தராகக் கூடும் பயிலுமின்’ என்கிறார்.
ஒரு பொருளிலும் விருப்பம் இல்லாதவனான சர்வேசுவரன் அடியார்களிடத்து வைத்த வாத்சல்யத்தாலே இவன் உகந்தது ஒன்றைத் திருமேனியாக விரும்பி, ‘இவன் உண்பித்ததை உண்டு, அகங்கள்தோறும் புக்கு விடமாட்டாமல் இருந்தால்,
‘இவன் நம்மை விடமாட்டாதே இருந்த பின்பு நாமும் இவனிடத்தில் அன்பு வைத்தல் ஆகாதோ?’ என்னக் கூடும் அன்றோ?’ என்றபடி.
‘‘பயிலுமின்’ என்றால், பயில்வர்களோ?’ எனின், ‘நிதி இங்கே உண்டு’ என்ன, அவ்விடத்தைத் தோண்டுவார்களே அன்றோ? அப்படியே, ‘பத்தி உண்டாம்’ என்ன, கற்பார்கள் என்று அருளிச்செய்கிறார்.-கல்லுவார்கள் -தோண்டுவார்கள் கற்பார்கள் அப்யசிப்பார்கள்-

என் ஆத்மாவை முற்றும் உண்ணுவதற்காக–எனக்கு உன்னுடைய எல்லை இல்லாத இனிமையைக் காட்டி-என்னை அடிமைப் படுத்தினாய் –-என் விடாய் தீரக் கலந்தாய் -என்று இருந்தேன்-உன் விடாய் தீரவாய் இருந்ததே அன்றோ -என்றது-உனக்காக அன்றோ உன்னைக் காட்டிற்று -என்றபடி-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -73 -வால் வெண் நிலவு உலகு ஆரச் சுரக்கும்-வேய் மரு தோள் இணை-10-3 –

March 8, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

அழகிய உருவகம் கொண்ட பாசுரம் -துறையடைவு-தலைவி இளம் பிறை கண்டு தளர்தலைக் கண்டு தோழி இரங்கல் –இரவைக் கண்டு ஆற்றாமல் தலைவி தளர தோழி இரங்கி பேசும் பாசுரம்
ரக்ஷகத்தின் -சால்பின் தகைமை கொலாம் -நன்றாக இருக்கிறதே – ஆகாசத்தில் சஞ்சரிக்கும் வெண் திங்கள் என்னும் தேவப் பசு சுரபி பாலாகப் பொழிய – சந்திரன் கிரணங்கள் -நிலவைச் சுரக்க -அமுதம் போன்ற கலைகள்-வால் வெண் -மிகவும் வெளுத்த நிலாவாகிற பாலை-உலகம் என்னும் பாத்திரம் நிறையும் படி பொழிகின்றன-அம்ருத கலைகளைப் பெற்று நாம் ஆனந்தம் படுவது போல் -தேவப்பசு பாலைச் சுரந்து – காணாத ஒன்றுக்கு காணும் சந்திரன் த்ருஷ்டாந்தம் –-உலகம் எல்லாம் மகிழ இவள் மட்டும் தளர்ந்து இதுக்கு நேராக எதிர் கோஷ்ட்டி பரிதி வட்டம் -ஸூரியன் -போலும் ஆழி -ஆயிரம் ஸூர்யன் போல் -இதுவும் வட்டம் அதே போல் – பற்றிய பிரான் -உபகாரகன் -ரக்ஷகத்வ ஸ்வபாவம் இதுவோ – தர்மமே உரு எடுத்த இவளை ரக்ஷிக்காமல் இது என்ன தர்ம ஹானி -திருத்தாயார் -தோழி பாசுரம்-வேய் மரு தோள் இணை -10 -3 -இதன் விவரணம் -காலைப் பூசல் – ஒரே படுக்கையிலே இருக்க -பசு மேய்க்கப் போந்தானாகவே -தோள் மெலிய அவனுக்கு இவளை விட ப்ராவண்யம் மிக்கு –-இவள் தோள் மெலிவைக் கண்டு போந்தானாகவே அவனும் நினைத்து –-எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல் -இந்தப்பாசுரத்திலும் பசு சுரக்கும் பால் – வர்ணாஸ்ரமம் தாய் சொல்படி -அதுவும் காரணம் இல்லை-உன் தன் திரு உள்ளம் இடர் தோறும் -பெண்மை ஆற்றோம் -அவர்களைக் கூட்டி என் முன்னே –
களை அற்ற கைங்கர்யம் –செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு -ஸூவ போக்த்ருத்வம் ஒழிக்க வேண்டுமே –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடுஅவதாரிகை –நிலவு போய் முடிய நின்று பாதகமாய் —போய் என்றது மிகுதியாய் –-அத்தாலே இவளும் நோவு பட்டு -மோஹித்து கிடக்க – இத்தைக் கண்ட திருத் தாயார் -தர்ம ஹானி கிடீர் -என்று கூப்பிடுகிறாள் – பிறை யுடை மாலைக்கு ஆற்றாத தலைவியின் தளர்ச்சிக்குப் பாங்கி இரங்கல்-

இப்படி விஷய வைலக்ஷண்ய ஞானம் மிகவும் நடக்க அனுபவ யோக்ய காலத்தில் போக ஸித்தி இல்லாமையாலே பிறந்த தளர்த்தியைக் கண்ட ஸூஹ்ருத்துக்கள் நொந்து உரைத்த பாசுரத்தை நிலவு விஞ்சும்படியான மாலைக்கு ஆற்றாத் தலைவி தளர்த்தி கண்டு இரங்கின பாங்கி வார்த்தையாலே
அருளிச் செய்கிறார் –(இருள் -அனுபவம் பெறாமல் நலிய அதுக்கும் மேல் ஸ்வரூப ஞானம் -நிலவு போல் -அறிவு பெற்றாலும் -பக்தி முத்த -அனுபவம் பெறாமல் – இப்படி வைலக்ஷண்யம் அறிந்தாலும் -இழந்து தவிக்கிறோம் -என்று மேலும் துன்பம் பட்டத்தைக் கீழே பார்த்தோம் )

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-அவதாரிகை-ரக்ஷகத்வ ஸ்வபாவமாமதோ இதோ வெண் திங்களாகிற ஸூரபி பால் வெண் நிலாவாகிற முதிர்ந்த பாலை எங்கும் சுரக்கப் பண்ணுகையாலும் இந்த முதிர்ந்த மாலையாலும் தனியாட்டி தளர்ந்ததுவே தம் பொழில் ஏழையும் ரக்ஷகத்வ ஸ்வ பாவமாய் என்னை நலியா நின்றான் என்று தளருகிற தலைவி பாசுரத்தால் அருளிச் செய்கிறார் இதில்

வால் வெண்ணிலா வுலகாரச் சுரக்கும் வெண் திங்கள் என்னும்
பால் விண் சுரவி சுர முதிர்மாலை பரிதி வட்டம்
போலும் சுடர் ஆழிப் பிரான் பொழில் ஏழும் அளிக்கும்
சால்பின் தகைமை கொலாம் தமியாட்டி தளர்ந்ததுவே
– 73-தலைவி இளம் பிறை கண்டு தளர்தலைக் கண்டு தோழி இரங்கல் –

விண்–ஆகாயத்தில் நின்று
வால் வெள் நிலவு–மிகவும் வெளுத்த நிலாவாகிய
பால்-பாலை
உலகு ஆர சுரக்கும்–உலகமெங்கம் நிறையும்படி சுரந்து சொரிகிற
வெண் திங்கள் என்னும் வெளுத்த சந்திரனாகிய
சுரவி–பசுவினது
சுர–சுரம்பு
முதிர்–மிகப்பெற்ற
மாலை–மாலைப்பொழுதிலே
தமியாட்டி தளர்ந்தது–(நாயகன் வாராமையாலே) தனிமையையுடைய இவள் தளர்ச்சியை யடைந்த தன்மை
பரிதிவட்டம் போலும்–இத் திங்களொளியை விழுங்க வல்ல ஸூர்யமண்டலம் போலும் ஒளியையுடைய
அடல் அழி–வலிய சக்கராயுதமுடைய
பிரான்–அத்தலைவன்
ஏழ்பொழில்–ஏழுவகைப்பட்ட லோகங்களையும்
அளிக்கும் சால்பின் தமைகை கொல் ஆம்–ரக்ஷிக்கிற அமைவின் பெருமையா?

வால் வெண் நிலா -இத்யாதி –இவள் நலிவைக் கண்டு -அவன் ரஷகத்வத்திலேயும் அதி சங்கை பண்ணுகிறாள் –வலியதாய் –வெளுத்த நிறத்தை உடையதாய் –நிலவாகிற பாலை -(அம்ருத கலையைச் சொன்ன வாறு ) லோகமடைய நிரம்பும்படி -சுரக்கிற வெளுத்த நிறத்தை உடைய சந்தரன் ஆகிற ஆகாசத்தில் உண்டான ஸூரபி யானது – சுரக்கிற சுரப்பு போய் –முதிர்ந்த ராத்திரி -வெண் -திங்கள் என்னும் வெண் சுரவியானது வால் வெண் நிலா வாகிற பாலை உலகாகிற தாழி நிறையும் படி சுரக்கிற சுரப்பு முதிர்ந்த மாலையிலே –விண் சுரவி –இப் பிரளயம் தன் பக்கல் தட்டாதபடி உயரத்திலே நிற்கை –(விரஹ தாபம் பிரளயம் – வெக்காயம் சந்திரனையும் ஸூரபியையும் பாதிக்காதே )-பரிதி வட்டம் இத்யாதி –இந்நிலவுக்கு பகை உண்டு கிடீர் இங்கே -என்கிறாள் –ஆதித்ய மண்டலம் போல் இருக்கிற சுடரை உடைத்தாய் – எப்போதும் உத்தோன்முகமாய் –ஆஸ்ரித விரோதிகளைப் போக்கும் திரு ஆழியை கையிலே உடைய மகோ உபகாரகன் –பொழில் ஏழும் அளிக்கும் சால்பின் தகைமை கொலாம்-
பூமி அடைய ரஷித்து போருகிறவனுடைய ரஷகத்வ ஸ்வ பாவமோ   இது –பொழில் ஏழையும் அளிக்கிற சால்புண்டு -மகா புருஷத்வ மரியாதை –அதின் ஸ்வ பாவம் இருந்த படியோ -இது –அவன் ரஷகனாக –
அவன் கை பார்த்து இருப்பார்க்கு அழகிதாக ஜீவிக்கலாய் இருந்தது –பிரளய ஆபத்து வந்தாலும் அவன் உளன் என்று அழகிதாக விஸ்வசிக்கலாய் இருந்தது –கையும் திரு ஆழியுமாய் இருந்து -ரஷித்து போந்தபடி இதுவோ –முன்பு பண்ணிப் போந்த ரஷகத்வத்துக்கு நமஸ்காரம் –தமியாட்டி தளர்ந்ததுவே –
அசாதாரண பரிகரம் படுகிறபடி கண்டால் –விபூதி மாத்ரமாய் -ரஷ்ய கோடியிலே அந்வயித்து இருப்பார்க்கு அழகிதாக ஜீவிக்கலாய் இருந்தது –(தனி -நிகர் அற்ற -ஒருத்தி என்றுமாம்-கருதும் இடம் பொருதும்-சக்கரமே பிரிய வேண்டி இருக்க ரக்ஷிக்கும் கோஷ்ட்டியில் உள்ள அவன் பாடும் இதுவேயாய் இருக்க நமக்கு இப்படி இருக்கச் சொல்ல வேண்டுமோ )தமியாட்டி என்கிறாள் இறே –-தாயாரான தானும் கூட இருக்கச் செய்தே-அவள் கருத்தை அநுவர்த்தித்து -அவனை ஒழிந்தார் அடங்கலும் கழுத்துக் கட்டி அவன் ஒருவனுமே துணை என்று இறே இவள் இருப்பது –அந்திம சமயத்தில் யம படர் சூழ நின்றார்கள் என்னா அவர்கள் துணை ஆகார்கள் இறே –க்ரம ப்ராப்தி அமையும் என்று ஹிதம்-சொல்லுவார் பாதகராம் இத்தனை இறே –(பேற்றுக்குத் த்வரை -அவன் வை லக்ஷண்யம் பார்த்து இருக்கும் இவளுக்கு பேறு தப்பாது என்று துணிந்து இருக்கச் சொல்வதும் பாதகம் தான் அன்றோ
நல்கித் தான் காத்து அளிக்கும் –நல்கத்தான் ஆகாதோ வினையேற்கே நாரணனைக் கண்டக்கால் -பேறு தகுமோ )வால் வெண்ணிலவு  வுலகார்ச் சுரக்கும் வெண் திங்கள் என்னும் பால் விண் சுரவி
சுர முதிர் மாலையிலே -தமியாட்டி தளர்ந்தது – பரிதி வட்டம் போலும் சுடர் அடல் ஆழிப் பிரான்- பொழில் ஏழு  அளிக்கும் சால்பின் தகைமை கொலாம் –

நிலாவின் இடத்து பாலின் தன்மையையும் -அதை வெளியிடும் அம்ருத கிரணான சந்திரன் இடத்து பால் சுரக்கும் பசுவின் தன்மையையும் ஏறிட்டுச் சொல்வது ரூபக அலங்காரம்-அரும் தவன் சுரபியே ஆதி வானமா விரிந்த பேருதயமே மடி வெண் திங்களா -வருந்தலின் முலை கதிர் வழங்கு
தாரையாய்ச் சொரிந்த பால் ஒத்தது நிலவின் தோற்றமே -கம்பர் –விண் சுரவி சுர-தெய்வப்பசு சுரப்பி –
உரிய காலத்திலே பேறு கை புகாமையாலே ஞான விளக்கமும் பாதகமாக ஆழ்வார் தளர்ச்சியைக் கண்ட பாகவதர்கள் நொந்து அருளிச் செய்யும் பாசுரம் – பிரான் பொழில் ஏழும் அளிக்கும்-
சால்பின் தகைமை கொலாம் தமியாட்டி தளர்ந்ததுவே-ஸ்வாபாவிகமான சர்வ ரக்ஷகத்வமும் இவர் பால் கிடையாது ஒழிவதே–  -பாட பேதம் –பிறைபடை மாலைக்கு ஆற்றாத தலைவியின் தளர்ச்சி கண்டு தோழி இரங்கிக் கூறும் பாசுரம் இது.-மாலைப்பொழுதுக்கும் இளம்பிறைக்கும் வருந்தும்படி இவளைத் தனியே விட்டிருத்தல் உலக முழுவதும் ரக்ஷிக்கும் அவனுடைய பெருந்தன்மைக்குச் சிறிதும் ஏழாது என்கிறாளாயிற்று.-ஆகாசத்தில் நின்றும் மிகுந்த வெளுத்த நிலாவாகிய பாலை உலகமெங்கும் நிறையச் சுரந்து சொரிகிற சந்திரனாகிய காமதேநுவின் சுரப்பு அதிகரித்திருக்கின மாலைப் பொழுதிலே இத் தலைவி தனிமைப்பட்டுத் தளர்ந்திருப்பதானது-ஆழியங் கையவன் அனைத்துலகங்களுயும் காத்தருளுந் திறத்துக்குப் பொருந்துமோ? (பொருந்தாது) என்றவாறு.
நிலாவினிடத்துப் பாலின் தன்மையையும்,அதனை வெளியிடுகிற அம்ருத கிணனான சந்திரனிடத்துப் பால்சுரங்கும் பசுவின் தன்மையையும் ஏற்றிக்கூறினது ரூபகாலங்காரம். (கம்பராமாயணம் சுந்தரகாண்டம் – ஊர் தேடு படலம் 56.) “அருந்தவன் சுரபியே ஆதிவானமா,விரிந்த பேருதயமே மடிவெண்டிங்களா, வருத்தலின் முலைக்கதிர் வழங்கு தாரையாச், சொரிந்த பாலொத்தது நிலவின் தோற்றமே” என இவ்வர்ணனைப் பிறவிடத்துஞ் சிறிது வேறுபடக் கூறப்பட்டிருக்குமாறு காண்க.
உலகு ஆர்ச்சுருக்கும்- உலகமாகிய தாழி நிறையும்படி சுரக்குமென்க. விண்சுரவி- தெய்வப்பசு, ஸுரபி: என்னும் வடசொல் சுரவியெனத் திரிந்தது.-சுர- சுரப்பு; முதனிலைத் தொழிற்பெயர். பரிதி- வடசொல் (பொழிலேழனிக்கும்) பொழில்- உலகம்.-இனி, பொழில்- சோலையுமாம்; உலகங்களை எம்பெருமானுடைய சிங்காரப் பூந்தோட்டமென்ப; “பிரான் பெய்த காவுகண்டீர் பெருந்தேவுடை மூவுலகே” 6-3.5) என்பர் திருவாய்மொழியிலும்,

இப்பாட்டுக்கு ஸ்லாபதேசப் பொருளாவது: உரிய காலத்தில் பேறு கைபுகாமையாலே ஞானவிளக்கமும் பாதகமாக ஆழ்வார் அடைந்த தளர்ச்சியைக் கண்ட அன்பர்கள் நொந்து உரைத்த வார்த்தையாம்.
(பிரான பொழிவேழளிக்குஞ் சால்பின் தகைமை கொலாம் தமிபாட்டி தளர்ந்ததுவே)
எம்பெருமானுக்கு இயல்பான ஸ்வாக்ஷகத்வமும், இவ்வாழ்வார் திறத்தில் நிகழா கொழிவதே! என்று சங்கித்தபடி. ‘சால்வின்’ என்றும் பாடமுண்டாம். வால் வெள்- ஒருபொருள் பன்மொழி.
–“நிலவுகார” என்றவிடத்து, ‘நிலவு’ என்னாமல் ‘நீல’ என்றும் பிரிக்கலாம்;-“குறிய தன் கீழ் ஆக்குறுதலுமதனோடு, உகர மேற்றலுமியல்புமாந் தூக்கின்” என்ற நன்னூல் அறிக.

வால் வெண்ணிலா வுலகாரச் சுரக்கும் வெண் திங்கள் என்னும் பால் விண் சுரவி சுர முதிர்மாலை
மிகவும் வெளுத்த நிலவை லோகம் நிறைய சுரவா நிற்பதாய் வெள்ளைத் திங்கள் என்று சொல்லப்படுவதான விண்ணில் பால் பசுவினுடைய சுரப்பு முதிரா நிற்கிற மாலையிலே-பரிதி வட்டம் போலும் சுடர் ஆழிப் பிரான்-இத் திங்கள் ஒளியை விழுங்குவதான ஆதித்ய மண்டலம் போலே ஒளியை உடைத்தாய் ஆஸ்ரித விரோதி நிரசன ஸீலமாய் யுத்த காலத்தில் பரிகரமாக திருவாழியை யுடையனாய்த் தன்னைப் பற்றினார்க்கு உபகாரகனானவன்–பொழில் ஏழும் அளிக்கும் சால்பின் தகைமை கொலாம்-லோகம் ஏழையும் ரக்ஷிக்கிற அமைவு யுடைமையின் பெருமையாகக் கூடும் இறே-தமியாட்டி தளர்ந்ததுவே-தாம் வாராமையாலே தனிமையை உடையளான இவள் தளர்ந்தது என்று நொந்து உரைத்தாள் யாயிற்று–இத்தால்-அனுபவ யோக்ய காலத்திலே அநுபாவ்ய விஷய வைலக்ஷண்யம் அடியாக ஞான பிரகாசம் அதிசயித்து நடக்க அனுபவ ப்ரதாநம் பண்ணாமையாலே
ஸ்வாபாவிகமான ரக்ஷகத்வமும் அகிஞ்சித் கரமாம் படி இருந்ததீ என்று ஸூஹ்ருத்துக்கள் சங்கித்து உரைத்தாராயிற்று

வால் வெண்ணிலா வுலகாரச் சுரக்கும் வெண் திங்கள் என்னும் பால் விண் சுரவி சுர முதிர்மாலை
வெண் திங்கள் என்னும் விண் சுரபி உலகார வாழ் வெண்ணிலவு என்ற முதிர்ந்த பால் சுரக்கும் முதிர் மாலை என்று அந்வயம்

முதிர்ந்த மாலையில் வெளுத்த சந்த்ரனாகிற ஆகாசத்தில் உள்ள ஸூரபியானது லோகங்கள் எல்லாம் நிறையும்படி வான் -மிகவும் வெளுத்த நிலாவாகிற முதிர்ந்த பாலை சுரக்குமாயிற்று முதிர்ந்த மாலை பால் சுரக்கும் காலமாகையாலே அற முதிர் மாலை யாயிற்று-பரிதி வட்டம் போலும் சுடர் ஆழிப் பிரான் பொழில் ஏழும் அளிக்கும் சால்பின் தகைமை கொலாம்-பரிதி வட்டம் -ஆதித்ய மண்டலம்-தேஜஸ்ஸில் அத்தைப் போன்றதாய் யுத்தத்தில் அசூரரைத் தொடருமதான திருவாழியால் அவர்களை நிரசித்தும்
கையும் திருவாழியுமான அழகை நமக்கு காட்டியும் உபகரிக்கிறவனுடைய விஹாரணா ராமமான ஸப்த லோகங்களுக்கும் ரக்ஷகனானவனுடைய சால்பு ரக்ஷண சாமர்த்தியம் அதின் தகைமை -அதனுடைய விஜ்ரும்பணம்–கொலோ–ஆமதோ–தமியாட்டி தளர்ந்ததுவே-தம்மால் தனிப்பட்டவள் அத்யாவசந்நை யாமதுவே ஜகத் ரக்ஷண விஜ்ரும்பணம் ஆமதோ –

ஸ்வாபதேசம் இத்தால் இவருடைய தசா விபாகத்தை கண்டார்க்கு அவனுடைய ரஷகத்வத்தையும் அதி சங்கை பண்ண வேண்டும்படியான  நிலையை சொல்லுகிறது-தமியாட்டி -தமி -தனியாய் -அத்வதீயை —தனி -யாய் ஒருத்தி என்னுதல்-இப் பிரளயம் -இவளுடைய விரகம்-

தாத்பர்யம் –இதில் பூர்ண சந்த்ரனைக் கண்டு நலியும் தலை மகளைக் கண்டு தாயார் நாயகனான சர்வேஸ்வரனை வெறுத்து ஷோடச கலா பரிபூர்ண சந்த்ரன் ஆகாசத்தில் மத்யம் வந்து அமுத கிரணங்களை உலகு எங்கும் வியாபிக்கச் செய்து அதி ரம்யமான இரவில் நாயகனான சர்வேஸ்வரன் வந்து உதவாமல் துன்புறுத்த அவனும் திருக்கையில் ரஷ்ய பரிகரமான வட்ட வடிவமான ஒளிப் பிழம்பு போன்ற திருச் சக்ரமும் ஏந்திக்கொண்டு உலக எழும் ரசிப்பவன் என்று விருதூதிக் கொண்டு இவளை உபேக்ஷிப்பது தகுந்ததாய் இராதே -என்கிறாள் –

10-3-வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ-ப்ரவேஸம்-

திரு வனந்த புரத்திலே புக்குப் பாரித்த படியே அடிமை செய்யப் பெறாமையாலே -அதி சங்கை ––ஐயப்பட வேண்டும்படியாய் வந்து விழுந்தது –
ஸ்ரீ வைஷ்ணவர்களும் தாமுமாய் அடிமை செய்ய வேண்டும் என்று பாரித்தார் –
பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும்-காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும் -என்னுமவர் ஆகையாலே –
பாரித்த படியே அந்நகரிலே போய் புக்கு அடிமை செய்யப் பெற்றிலர் –
1-அந்நகரிலே அப்போதே சென்று சேரப் பெறாமையாலும்–
2-பாரித்த படி அடிமை செய்யப் பெறாமையாலும்-
-பல காலம் பிரிந்து போன வாசனையாலும் -திருவிருத்தம் -95-
3-தொன்று தொட்டு வருகின்ற சரீரத்தின் சேர்க்கையை நினைந்து அஞ்சின அச்சத்தாலும்-
4-சர்வேஸ்வரனுடைய ஸ்வாதந்த்ர்யத்தை நினைந்து அஞ்சின படியாலும் -அதாவது –
சிசுபாலனுக்கு தன்னைக் கொடுத்தும்-ஸ்ரீ பரத ஆழ்வான் வளைப்பு கிடக்க மறுத்து மீண்டு போரும்படியும் அன்றோ-ஸ்வா தந்த்ர்யம் இருப்பது -அதனாலும்
5-இனி–சர்வேஸ்வரன் தானே வந்து அங்கீ கரிக்கைக்கு ஈடான பக்தி தமக்கு இல்லை என்று இருக்கையாலும்
இன்னம் இவ் உலகில் வைக்கில் செய்வது என் -என்னும்-அச்சத்தாலே துன்புற்றவராய்
-தமக்குப் பிறந்த நிலை வேறுபாட்டினை-ஒரு பிராட்டி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்-

காலைப் பூசல் –கீழும் மேலும் இரண்டு திருவாய் மொழிகளில் பர உபதேசம் –

அச்சம் நீங்குதற்கு உடலான இவை தாமே அன்றோ இப்போது-இவர்க்கு அச்சத்துக்கு காரணங்கள் ஆகின்றன –
1-இப்போதே அந்நகரிலே சென்று சேரப் பெற்றிலோம் -என்று இருக்க வேண்டா –
அவனை நினைந்தால் காலாழும் நெஞ்சழியும் -பெரிய திருவந்தாதி -34-என்கிறபடியே
பத்தியினால் பரவசப் பட்ட காரணத்தால் இப்போது அடி இட மாட்டாதே ஒழிகிறார் ஆகையாலே-
2-அடிமை செய்யப் பெற்றிலோம் என்று அஞ்ச வேண்டா –
புகழும் நல் ஒருவன்-என்கிற திருவாய் மொழியின் படியே
இருந்த இடத்தே இருந்து ஏதேனுமாக சொன்னவற்றையே-தனக்கு அடிமையாகக் கொள்ளும் தன்மையன் ஆகையாலே
இன்று நினைத்தவற்றையும் செய்தவற்றையும் எல்லாம் தனக்கு அடிமையாக-நினைத்து இருக்குமவன் அன்றோ அவன் –
3-இனித் தமப்பன் பகையாக அவனிலும் இவன் அண்ணியன்-என்று வர நின்ற பிரகலாதன் அன்றோ-முடிவில் வந்து எதிர் இட்டான்-
ஆக-மயக்கம் கொண்டவனுக்கு பிறந்த தெளிவு போலே-இச் சரீரத்தோடு சேர்ந்து இருக்கிறவனுக்கு பிறக்கும் ஞானத்தினை நம்ப ஒண்ணாது என்றே அன்றோ
இவர் தாம் இச் சரீர சம்பந்தத்தை நினைந்து-தேறேல் என்னை -2-9-10-என்று அஞ்சிற்றும் –அங்கண் அஞ்ச வேண்டா –
முடியானே -என்ற திருவாய் மொழியிலே கூறப் பட்ட உறுப்புகளை உடையவர் ஆகையாலே-
4-அவனுடைய ஸ்வா தந்த்ர்யத்தை நினைத்து அஞ்ச வேண்டா–சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மாசுச -ஸ்ரீ கீதை -18-66-எல்லா பாபங்களில் நின்றும்
உன்னை விடுவிக்கிறேன்-நீ துக்கப் படாதே -என்கிறபடியே –பாபங்களைத் துண்டித்துக் கொண்டு போகைக்கும் உடலாய் இருக்கையாலே ..
5-பக்தி தமக்கு இல்லை என்று இருக்க வேண்டா -பிரபத்தியை உபாயமாக பற்றினவர் ஆகையாலே –
நாராயணாயா – ஏக நிஷ்டை யில் இருந்தால் எத்தை செய்தாலும் கைங்கர்யம் -யோ யோ ஜல்ப -ஜபம் -தது தியானம் —
பிரகலாதன் போலே இவருடைய கரணங்கள் பிராகிருத போகங்களில் இல்லையே –
நெடு நாள் பிரிந்து -போன வாசனை-முடியானே கரணங்கள் உடையவர் -பிரகிருதி சம்பந்தம் நினைத்து அஞ்ச வேண்டாம் என்பதை
அத்தால் வந்த பிரிவையும் கண்டு அஞ்ச வேண்டாம் என்றபடியும் ஆகுமே –

இனி –ச உத்தம புருஷ சதத்ரபர்யேதி ஜஷத் கிரீடன் ராமமான-
ஸ்த்ரீபிர்வா யானைர்வா ஜ்ஞாதிபிர்வா நோபஜனம் ஸ்மரன் இதம் சரீரம் -சாந்தோக்யம் -8-12-3-என்கிறபடியே
இதனை நினையாதபடியான சாஷாத் காரம் இல்லாமல் படுத்துகிற பாடே அன்றோ இது –
நேரே கண்கூடாக காண்கிற காட்சியும் பயன் இல்லாததாய்-கூட இருக்கச் செய்தே பிரிந்தான் -என்று மயங்கும்படி
பிரிவால் வந்த வாசனை மேற்கொள்ளுகிறது அன்றோ-தகுதி கிடந்து படுத்துகிற பாடே அன்றோ-

கெடும் இடரில் பிரத்யக்ஷ சாமானாகாரம் கிட்டிற்றே -வைகுந்தம் கிட்டினால் போலே -என்றாரே -எதற்காக துன்பப் பட வேண்டும்
பிரத்யக்ஷமும் அகிஞ்சித் கரமாய் கூட இருக்கச் செய்தே பிரிந்தான் என்று அதி சங்கை
பிரிந்தான் என்று இவள் உடம்பு மெலிய -அத்தைக் கண்டு அவனும் பிரிந்தோமோ என்று அவனும் நினைக்கும் படி
-இப்படி இருவரும் ஊமத்தங்காய் தின்றால் போலே மயங்கி
கலப்பார் பிரிவார் என்கிற வாசனை மேலிட –யோக்யதை கிடந்து படுத்தும் பாடு இது -சரீரம் இருப்பதால் -விஸ்லேஷ ஹேது அன்றோ சரீரம் –
அதி சங்கை பிராந்தி கார்யம் இல்லை -மயர்வற மதி நலம் அருளப் பெற்றதால் —

மயர்வற மதிநலம் அருளினன் – என்கிறபடியே-பகவானுடைய திருவருளால் கிடைத்ததாய்-
பரபக்தி ரூபமாய்-ருசி கார்யமாய்-இருக்கிற இருட்சி இருக்கிறபடி அன்றோ இது –
இனி ஈஸ்வரனுக்கு கால் நடையாடாதது ஒரு தேசத்தில்-இவரை வைத்து அதனைப் போக்கலாம் அத்தனை –
கலந்து பல நாள் பிரிந்து போந்தாள் ஒரு பிராட்டியாய்-அவ் வாசனையாலே
கிருஷ்ணன் கூடி இருக்கச் செய்தேயும் -நீ கண்ணா -என்கிறாள் இங்கே –
இவன் பண்டு பிரிந்து போந்த விடியில் காலமும் வந்து அக்காலத்துக்கு அடைத்த காற்றுக்கள் அடிக்கையாலும் -வாடை தூவ –
குயில்கள் கூவுகையாலும்-மயில்கள் ஆலிக்கையாலும்-காடு எங்கும் ஒக்க கன்றுகளும் பசுக்களும் பரக்கையாலும்-இக்காலத்தில் அவன் போகை தவிரான்
பசுக்களை ஒரு தலையாக காப்பாற்றுமவன் ஆகையாலே அவற்றை விட்டு நம்மோடு இருப்பான் ஒருவன் அல்லன் –
ஆனபின்பு அவன் போனான் -என்று-கூட இருக்கச் செய்தேயும் அவன் பிரிவினை நிச்சயித்து-
இன்னுயிர் சேவல்-மல்லிகை கமழ் தென்றல்-தொடக்கமான திருவாய் மொழிகளில்
அவன் முன்னம் இல்லாமையால் பட்ட துக்கம் முழுதினையும் அவன் கண் முகப்பே படுகிறாள்-
எல்லா வற்றையும் செய்து முடிக்கும் ஆற்றல் வாய்ந்த-அவனாலும் போக்க ஒண்ணாதபடி ஆயிற்று இவ் வாபத்து-
அதாவது-போனானாய் வருகிறவன் அல்லன்-போக நினைத்தானாய் தவிருகிறவன் -அல்லனே -என்றபடி –

இப்படி நோவு பட்டு-நீ பசு மேய்க்கப் போதலை நிச்சயமாக தவிராய்-
நீ போதல் எனக்கு விருப்பம் இல்லாத கார்யம் ஆகையாலே உன் செலவினை விலக்க வேண்டும் என்று நினையா நின்றேன்-
இதற்கு நா நீர் வருகிறது இல்லை
அதற்கு மாற்றாக-உன் கையை என் தலையிலே வைக்க வேண்டும் –அணி மிகு தாமரைக் கையை –
நீபசு மேய்க்கப் போகாது ஒழிய வேண்டும்-வீவ நின் பசு நிரைமேய்க்கப் போக்கு –
தீங்கினை விளைக்கக் கூடிய காட்டில் நீ பசு மேய்க்கப் போனால் அங்குள்ள-அசுரர் இராக்கதர்கள் முதலியோர்களால் என் வருகிறதோ –
அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் –என்று அஞ்சா நின்றேன் –என்கிறாள் –
அஞ்சன வண்ணனை -பெரியாழ்வார் திருமொழி –என் செய்யப் பிள்ளையை போக்கினேன் ஏ பாவமே -தாயார் பாசுரம் –
இனி-மாதா பிதா ப்ராதா நிவாஸ சரணம் சூக்ருத் கதி நாராயணா -சுபால உபநிஷத் -என்கிறபடியே
அவன் எல்லா வகையான உறவுமாய் இருப்பதைப்போன்று –
இத்தலைக்கும் சம்பந்த ஞானம் பிறந்தால் எல்லா பிரிவுகளும் உளவாய் இருக்கும் அன்றோ –அதனால் இவளும் தாய் போலே படுகிறாள் என்றவாறு –
யதா யதா ஹி கௌசல்யா தாசிவச்ச சகீவச-பார்யாவத் பைநீவச்ச மர்த்ருவச்ச உபநிஷ்டதே -அயோத்யா -18-68-
ஸ்ரீ கௌசல்யார் சகரவர்த்திக்கு-வேலைக்காரி தோழி மனைவி உடன் பிறந்தவள் தாய் ஆகிய இவர்களைப் போன்று இருந்தாரே -என்கிறபடியே –
ஆனபின்பு–நீ செல்லில் நான் உளளாக மாட்டேன் -என்று-இப்படி நோவுபட-அவனும் இவை முழுதினையும் நினைந்து -நான் போகிறேன் அல்லேன் -என்று
தன் போகாமையை இவள் நெஞ்சிலே படுத்தி தரிப்பிக்க-தரிப்பததாய் -செங்கனிவாய் எங்கள் ஆயர் தேவு –தலைக் கட்டுகிறது -இத் திருவாய் மொழியில்-

இதனால்
திரு மந்த்ரத்தில் கூறிய அடிமைத் தன்மையின் எல்லை இருக்கிறபடியைத் தெரிவித்தபடி-
உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் -அவனுக்கே உறுப்பாக பயன் கொடுக்கை -தானே அடிமைத் தனத்தின் எல்லை-
எம்மா வீடு -திருவாய் மொழியில்-தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -என்று அறுதி இட்டது ஓன்று உண்டே அன்றோ –
அதனை அழிக்கிறதாயிற்று இங்கு –என்னைக் கொள்ள வேண்டும் என்றே அன்றோ அங்குச் சொல்லிற்று-
என்னோடு கலக்கவுமாம்-வேறு சிலரோடு கலக்கவுமாம் –அங்குத்தைக்கு குறை தீரும் அத்தனை வேண்டுவது என்கிறது இங்கு-
அங்கு -எனக்கு என்ற இடம் புருஷார்த்தம் ஆகைக்கு சொன்ன இத்தனை அன்றோ –
உனக்கே நான் ஆட் செய்வோம்-அது அறிவில்லா பொருளின் வேறுபாட்டுக்கு உடலாம் இத்தனை-
இவன் தான் எனக்கு என்னாத அன்று புருஷார்த்தம் ஆகாது-அவன் தான் விரும்பி கார்யத்தை செய்யவும் தொடங்கான்-
உனக்கு நல்லவரோடும் உழி தந்து -உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும் எம் பெண்மை யாற்றோம் –
தாதார்த்தம் -அத்தலைக்கே உறுப்பாக -தாதர்த்த சதுர்த்தி லுப்த சதுர்த்தி -பகவான் பிரயோஜனம் பிரதானம் -எம்மா வீட்டிலும் இதுக்கு ஆதிக்யம் –

மூன்றாம் திருவாய் மொழியில் -கீழே -திருவனந்த புரத்திலே அடிமை செய்யப் பாரித்தவர்
அவிம்பலேன -கிட்டப் பெறாமையாலே -அவனுடைய
போக்யத்தையும்
ப்ராப்ய பாவமும்
அடிமை கொள்ளப் பாரித்து இருக்கிற படியும்
புத்திஸ்த்தமாம் படி ஹ்ருதய ஸந்நிஹிதனாய் இருக்கச் செய்தேயும்
சீக்ர ப்ராப்தியில் இச்சையால் த்வரிக்கும் படியான ஸுபாக்ய அதிசயத்தை யுடையானாகையாலே -அவனுடைய
புண்டரீகாக்ஷத்வத்தையும்
அர்ஜனீய சம்ச்லேஷத்வத்தையும்
அசகாய ஸ்வ பாவத்தையும்
ரமணீய ஸுலப்யத்வத்தையும்
ஆகர்ஷக திவ்ய அவயவத்தையும்
அசாதாரண நாயகத்வத்தையும்
ஆச்ரித ஜன போக்யத்வத்தையும்
அனுசந்தித்து விளம்பம் பொறாமையால் விஸ்லேஷத்தை அதி சங்கித்து
ஏவம் பூதனான நீ என்னை அகலாது ஒழிய வேணும் என்று அபேக்ஷித்து தமக்குப் பிறந்த ஆர்த்தியை
அவன் சந்நிதியில் விண்ணப்பம் செய்த பிரகாரத்தை
ஸ்ரீ கிருஷ்ணனோடு ஸம்ஸ்லேஷித்து ப்ரபாத சமயத்திலே அவனுடைய பிரிவை சங்கித்து அஞ்சினாள் ஒரு கோபிகை –
சந்தியில் பாதகங்கள் நலிவு செய்யா நிற்கும் என்னை நீ ஆஸ்வசிப்பித்துக் கொண்டு இருக்கவும் வேணும் –
போன இடத்தில் ஆஸூரா ப்ரக்ருதிகள் வரில் என் ஆமோ என்று அஞ்சா நின்றேன் -என்று
திருவாய்ப்பாடியில் பெண்கள் எல்லார்க்குமாகச் சமைந்தவனுடைய போக்கை விலக்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

——

வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ
மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்காக்
காமரு குயில்களும் கூவும் ஆலோ
கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு
ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ
தகவிலை தகவிலையே நீ கண்ணா-
-10-3-1-ஆலோ-துக்கத்தின் மிகுதியைக் குறித்தபடி –

தன்னுடைய பிரிவில் இவள் ஆற்றாமை கேட்டார் வாய் கேட்கை அன்றிக்கே-
கைம்மேல் காணலாய் இருக்கிறது காணும் இவள் மெலிவு –தனக்குப் பிறந்த துன்பத்தினை தோழி மாருக்கு சொல்லுமாறு போலே-அவனுக்கு சொல்கிறாள்-கூட இருந்தாலும் பயன் இல்லையே அகவாயிலே பிரிவு உண்டானால்-அதன் கார்யமான மெலிவு பிறந்தன்றி நில்லாதே-தன் தோள்கள் மெலிகிற இதனை -உன்னுடைய தோள்கள் மெலியா நின்றன -என்பாரைப் போலே-சொல்லுகிறாள் காணும்-இவள் தோள் மெலிந்தால் தன்னுடைய அபிமதம் -வருத்தமும் -தனக்கு வந்ததாய் இருக்கையாலும் -வலியுமும்-ஆக -இரட்டிப்பாய் இருக்கும்-மெல்லியல் தோள் தோய்ந்தாய் –திரு நெடும் தாண்டகம் -13-அன்றோ விடாய் ஆறுவது-இருவருக்கும் விடாய் ஆற்ற முடியாதே – -தேவதத்தன் என்றதனோடு வாசுதேவன் என்ற சொல்லோடு-வாசி அறும்படி அவனுக்கு சரீரமாக அன்றோ இவ் உயிர்ப் பொருள் இருப்பது-பர்யவசான விதி -சர்வ சப்த வாச்யன்

போனோம் அல்லோம்-போக நினைத்தோம் அல்லோம்-நாம் கூட இருக்கச் செய்தே பிரிந்தோமாகக் கொண்டு நோவு பட்டு-பார்க்கப் படும் பொருள்கள் எல்லாம் துன்புறுத்தும் படியாக இருப்பதே-இது ஒரு அன்பின் தன்மை இருக்கும் படி என் -என்று-கண்களாலே குளிர நோக்கினான் –தாமரைக் கண்டால் கொண்டு ஈர்தி யாலோ –-நீ நோக்காலே நலிவதில் இன்னம் பசு மேக்கப் போக்கையே நன்று –

————

தகவிலை தகவிலையே நீ கண்ணா
தடமுலை புணர்தொறும் புணர்ச்சிக்கு ஆராச்
சுகவெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க்கச்
சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே
அக உயிர் அகம் அகம் தோறும் உள் புக்கு
ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ
மிக மிக இனி உன்னை பிரிவை ஆமால்
வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே
–10-3-2-

தகவிலை தகவிலையே நீ கண்ணா–நம்மை அருள் இல்லாதவன் -என்பதே –
பிரிய நினைத்தோம் அல்லோம் –பிரிந்தோம் அல்லோம் -என்று இவள் தரித்து இருப்பதற்காக-நெருக்கி அணைத்தான் —இவள் தரிப்பதற்க்காக பலகால் அணைத்து அருள – இச் சேர்க்கையால் ஆய இன்பம் எல்லாம் -நீ நீங்கக் கூடியவன் என்னும் இதனாலே- கனாக் கண்டு விழித்தால் போலே யாய் நோவு படா நின்றேன் -என்கிறாள்

ஆவியின் பரம் அல்ல வேட்கை –அணு அளவிதனா உயிர் பொருளின் அளவன்று காதல் –
என் தன் அளவன்றால் யானுடைய அன்பு -இரண்டாம் திருவந்தாதி -100-என்றாரே அவரும்
உயிரின் அளவன்று ஆயிற்றுக் காதல் –

———–

வீவன் நின் பசு நிரை மேக்கப் போக்கு
வெவ் உயிர் கொண்டு எனது ஆவி வேமால்
யாவரும் துணை இல்லை யான் இருந்து உன்
அஞ்சன மேனியை ஆட்டம் காணேன்
போவது அன்று ஒரு பகல் நீ அகன்றால்
பொரு கயல் கண்ணினை நீரும் நில்லா
சாவது இவ் ஆய்க் குலத்துக்கு ஆய்ச்சி யோமாய்
பிறந்த இத் தொழுத்தையோம் தனிமை தானே-
-10-3-3-

சாவது -இவ் ஆய்க் குலத்துக்கு ஆய்ச்சி யோமாய்பிறந்த இத் தொழுத்தையோம் தனிமை தானே-நீ போகிலும் போ-இருக்கிலும் இரு-இத் தனிமை நசிப்பது-இவனுக்கு நான் நூறு பிள்ளை பெற வேண்டும் -என்ற சாவித்ரியை போலே சொல்லுகிறாள் –அன்றிக்கே-தனிமை தானே சாவது-எங்களுக்கு தனிமை என்றும் சாதல் என்றும் இரண்டு இல்லை காண்–தனிமை தானே சாக்காடு -என்றுமாம்
நின்னலால் இலேன் -2-3-7- என்னுமவர் அன்றோ-இறப்பதற்கே எண்ணாது-திரு நெடும் தாண்டகம் -1- என்றாரே அவரும்-சேஷ பூதை-அடிமையாக இருக்கும் எங்கள் உடைய தனி இருப்பு ஒழியட்டும் -தனிமை ஸ்வ பாவம் என்பதால் அதன் முடிவு தங்கள் முடிவு என்கிறாள் கூடி இருந்தால் வாழ்ச்சி பிரிந்தால் வீழ்ச்சி –அன்றிக்கே-தனிமை சாவது-இத் தனிமை சாலப் பொல்லாதது -என்னவுமாம்-ஒரு தலைக் காமம் தனிமை என்றுமாம் –
இவ் ஒருதலைக் காமம் போவது-கைக் கிளைத் தலைவி பொறை அழிந்தால்-எல்லாம் சொல்லப் பெறுவள் அன்றே

————–

தொழுத்தையோம் தனிமையும் துணை புரிந்தார்
துயரமும் நினைகிலை கோவிந்தா நின்
தொழுத்தனில் பசுக்களையே விரும்பி
துறந்து எம்மை இட்டு அவை மேய்க்கப் போதி
பழுத்த நல் அமுதின் இன் சாற்று வெள்ளம்
பாவியேன் மனம் அகம் தோறும் உள் புக்கு
அழுத்த நின் செங்கனி வாயின் கள்வப்
பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்
–10-3-4-

இவன் போக்கினை நினைத்து நோவு படப் புக்கவாறே –நின் செங்கனி வாயின் கள்வப்
பணி மொழி
-உன்னைப் பிரிகைக்கு காரணம் உண்டோ -என்று-இப்புடையிலே தாழ்வோடு சில வார்த்தைகளைச் சொல்ல –இவை அன்றோ என்னை அழிக்கின்றன –என்கிறாள் –பிரிவினை நினைத்து பிரியேன் -என்னும் இது நஞ்சுக்கு சமம் அன்றோ –

இங்கு உள்ளது பொய் ஆலிங்கனமே – பிள்ளை அமுதனார்-ஒரு பசுவின் காலிலே முள் பாய்ந்தால்-ஆயன் தலை காண் சீய்க் கொள்வது -என்பாராம்-
சரீரத்தில் ஓன்று வந்தால் இன்ப துன்பங்கள் அனுபவிப்பது ஆத்மா அன்றோ –அந்தராத்மா இவன் அன்றோ –எம்மைத் துறந்து – அவற்றை விரும்ப விரும்ப-தங்களை துறந்தான் என்று இருக்கிறார்கள் – பசுப் பால் மனம் சுளிப்ப பராங்குச நாயகி தோள் கை விட்டு அன்றோ இவன் இருப்பது

—————-

பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்
பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா
பிணியவிழ் மல்லிகை வாடை தூவப்
பெரு மத மாலையும் வந்தன்றாலோ
மணி மிகு மார்வினின் முல்லைப் போது
என் வன முலை கமழ்வித் துன் வாயமுதம் தந்து
அணி மிகு தாமரைக் கையை யந்தோ
அடிச்சியோம் தலை மிசை யணியாய்
-10-3-5-வந்தன்றாலோ-வந்தின்றாலோ பாட பேதங்கள்

நான் உன் முன்னம் இருந்து கொண்டு இருக்க-நீ இப்படி படுகிறது என் என்ன –
நீ பசு மேய்க்கக் கடவனான பின்பு நீயும் போனாய் –கண்ணா என்று விளித்து -அவன் தன்னையே-நீ போனாய் என்கிறாள்- அப்படி தெளிவில்லாமல் தவிக்கும் நிலை அன்றோ இவளுக்கு –நீ போனால் நலியக் கடவ மாலைக் காலம் முதலிய பொருள்களால்-நலிவுபடுகிற என்னை நலிவு படா வண்ணம்-செய்து அருள வேண்டும் -அணைக்க என்று நேராகச் சொல்லாமல் அக்ராமமாக -நகர வார்த்தை போல் மூன்று கிரியைகள் பிராத்தனை –

மணி மிகு மார்வினின் –ஸ்ரீ கௌஸ்துபம் நிறம் பெறும்படியான மார்பு -என்னுதல்-
திரு மார்பு அடங்க ஸ்ரீ கௌஸ்துபத்தின் புகரே யாம்படி இருக்கும் -என்னுதல்-
கலவியிலும் கழற்ற ஒண்ணாதபடி அன்றோ கௌஸ்துபம் இருப்பது –இவளுடைய பெண்மைக்கு முலை போலே ஆயிற்று-அவனுடைய ஆண்மைக்கு ஸ்ரீ கௌஸ்துபம்-
புருஷோத்தமன் ஆகும் தன்மைக்கு இலக்கணம் அன்றோ –

உன் போக்கினை நினைக்க நா நீர் வருகிறது இல்லை –அதற்கு மாறாக உன் கையை தலை மேலே வைக்க வல்லையே-நா நீர் வருகைக்கு இவர்களுடைய முந்தரி கைப் பழம் இருக்கிறபடி-ராஜ குமாரர்க்கு நாக்கு வாற்றாமைக்கு பச்சைக் கற்பூரம் போலே- த்வய உச்சாரணம் நம் பூர்வர்களுக்கு-

அணி மிகு தாமரைக் கையை யந்தோ தலை மிசை நீ அணியாய் –ஆபரணத்துக்கு அந்தக் கை போலே ஆயிற்று-இவள் தலைக்கு அந்தக் கை-பாத பங்கயமே தலைக்கு அணியாய் -9-2-2-எனபது-அணி மிகு தாமரைக் கையை யந்தோ
அடிச்சியோம் தலை மிசை
 அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் -என்பதே-காலைக் கையைப் பிடித்து கார்யம் முற்றுவிக்கப் பார்க்கிறார்கள் –உன் பேற்றுக்கு நீ தானே பிரயத்தனம் பண்ண வேணும் –ப்ரேமையை கை விட்டது நீ செய்த அல்வழக்கு -ராமன் விட்டாலும் ராமானுஜர் விட மாட்டாரே –

—————

அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய்
ஆழி அம் கண்ணா உன் கோலப் பாதம்
பிடித்து அது நடுவு உனக்கு அரியையரும்
பலர் அது நிற்க எம் பெண்மை ஆற்றோம்
வடித்தடம் கண் இணை நீரும் நில்லா
மனமும் நில்லா எமக்கு அது தன்னாலே
வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு
வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே
–10-3-6-

சென்ற சென்ற இடம் எல்லாம் அபிமதைகள் பலர் உளர் –உனக்கு ஒரு குறை இல்லை-அரிவையர் –தங்கள் பருவத்தாலே துவக்க வல்லவர் பலர் -ஒருவர் இருவரா –பெண்கள் பதினாறாம் ஆயிரவர் –நாங்கள் உன்னைப் பிரிந்து தரிக்க மாட்டு கிற்றிலோம்-ஆதலால் உன் செலவினை எங்களால் பொறுக்க முடியாது –என்கிறாள்-

ஆழி அம் கண்ணா –என்கையாலே-திருக் கண்களாலே குளிர நோக்க வேண்டும் -என்பது போதரும் –உங்கள் கைகளால் தீண்டுதல் வேண்டும் என்று அன்றோ நான் இருப்பது –
எனக்கு போக்கு உண்டோ –போனாலும் உங்களை ஒழிய புறம்பு விஷயம் தான் உண்டோ-என்பது போல் கண்களாலேயே பேசினான்

வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கு
வெள் வளை மேகலை கழன்று வீழ
தூ மலர்க்கண் இணை முத்தம் சோரத்
துணை முலை பயந்து என தோள்கள் வாட
மா மணி வண்ணா உன் செங்கமல வண்ண
மென் மலரடி நோவ நீ போய்
ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு
அசுரர்கள் தலைப் பெய்யில் எவன் கொல் ஆங்கே–
10-3-7-

நாங்கள் நோவு பட-உன் மெல்லிய திருவடிகள் நோவ பசு மேய்க்கப் போனால்-அங்கு அசுரர்கள் கிட்டினால்-என்னை விளையும்-என்கிறாள்-எமது உயிர் வேம் -என்கையாலே-உனக்கு அது இல்லை என்று தோன்றுமே அன்றோ –இந்த பாடு எல்லாம் எங்களுக்கே –

தூ மலர்க்கண் இணை முத்தம் சோரத்-இது காறும் பார்த்து இராத ஓன்று நீ காணலாம்-இப்பொழுது தானே சந்நிஹிதனாக இருக்க நீர் -அதனால் அபூர்வம் -போகாதே காண் -என்கிறாள் –தாமரைப் பூவிலே முத்துப் பட்டது-கண்ணான முத்தே அன்றோ –நேத்ர பூதம் -சாடு -கண்ணிலே தோன்றிய முத்து -சிலாக்கியமான முத்து -கண் மணி போலே

———–

அசுரர்கள் தலைப்பெய்யில் எவன் கொல் ஆங்கு என்று
ஆழும் என்னார் உயிர் ஆன் பின் போகல்
கசிகையும் வேட்கையும் உள் கலந்து
கலவியும் நலியும் என் கை கழியேல்
வசி செய் உன் தாமரைக் கண்ணும் வாயும்
கைகளும் பீதக வுடையும் காட்டி
ஓசி செய் நுண்ணிடை இள வாய்ச்சியர்
நீ யுகக்கும் நல்லவரோடும் உழி தராயே-1
0-3-8-

பிரபல தர விரோதி இதில் ஆரம்பம் -அடுத்த பாசுரம் விளக்கம் –

நீ சென்றால் தீங்கு விளையுமோ என்று அஞ்சா நின்றேன்-உன்னைப் பிரியவும் மாட்டேன்-
பசு மேய்த்தலை வ்யாஜ்யமாகக் கொண்டு-காதலிமார்களை நினைத்து போகிறாய் ஆகில்-
-நீ விரும்பி இருக்கும் அவர்களோடு என் கண் வட்டத்தே சஞ்சரிக்கப் பார் என்ன-
ஆனால் அவர்களை அழைத்து தருவார் யார் என்ன-வசி செய் உன் தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக வுடையும்- உனக்கு தூது செய் கண்கள்-9-9-9- உளவாக இருக்க புறம்பே பரிகரம் தேடி அழைக்க வேண்டி இருந்ததோ-இனிப் பொருந்தோம் என்று இருப்பார் மரத்தை மாற்றி அவர்களை வசீகரித்து தரும் கண்களும்-அந்நோக்கில் கருத்தினை வெளிப்படுத்தும் வாயும்-அந்நோக்கிலும் முறுவலிலும் நேர் விழிக்க மாட்டாதே நாணத்தாலே கவிழ்ந்தவர்களை-எடுத்துக் கொள்ளும் கைகளும்-தொடுதலாலே தோற்றவர்களை கீழே போகாதபடி தன் செல்லாமையாலே-மேலே ஏறட்டு கொள்கிற பொன்னாடையும்-உனக்கு புறம்பே அழைத்து தருவார் வேண்டி இருந்ததோ-பிடாத்தை விழ விட்டு வடிவைக் காட்ட அமையாதோ-என்கிறாள்

————-

உகக்கும் நல்லவரோடும் உழி தந்து உன் தன்
திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள்
வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம்
எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்
மிகப் பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு
நின்று உழி தருவர் கஞ்சன் ஏவ
அகப்படில் அவரோடும் நின்னொடு ஆங்கே
அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ
–10-3-9-இதுவே இத் திருவாய் மொழிக்கு நிதான பாசுரம்

உகக்கும் நல்லவரோடும் உழி தராய்-என்று நான் போகாமைக்கு சொன்ன வார்த்தை இத்தனை ஒழிய-உங்கள் முன்னிலையிலே நான் வேறு பெண்கள் சிலரோடு கலந்து பழகுதல்- உங்களுக்கு விருப்பம் இல்லாதது அன்றோ என்ன –
எங்களோடு கலக்கும் கல்வியால் உண்டாகும் இன்பத்தைக் காட்டிலும்-உன் திரு உள்ளத்தில் பிரியமே எங்களுக்கு மிகப் பெரிய இன்பமாகும்–நாங்கள் வியக்க இன்புறுதும் –புறம்பு உள்ளாரைப் போலே அன்றியே-உன் உகப்பையே பிரயோஜனமாக கொண்டுள்ள நாங்கள் மிகவும் உகப்புதோம் –பிரதான அவன் ஆனந்தம் சொல்லி பின்பு நம் ஆனந்தம்-உன்னிலும் அவர்களிலும் நாங்கள் வியக்க – -நீ உகந்தாரை ஒழிய உன்னை உகக்குமவர்கள் அல்லோம் காண் நாங்கள்–ஆன பின்பு தீமை விளையும் இடத்திற்கு போகாது ஒழிய வேணும்-என்கிறார்கள் –

மூன்றில் சுருக்கிய ஐந்தையும்-உயர் தினை ஒன்று பயில் /ஏறு கண் கரு வீடு /சொன்னால் ஒருக் கொண்ட/நோற்ற நாலும் /எம்மா ஒழிவில் நெடு வேய் –என்கிற இருபதிலே விசதமாக்கி-எண்பதிலே பரப்புகையாலே -ஐந்தையும்
அருளினான் வீடு பெற்ற என்கையாலே ஐந்தில் இரண்டையும்
தொழுது களித்தேன் சொல்லுப் பெற்றேன் பணி செய் என்கிற முக்த லக்ஷண வ்ருத்தியாலே இரண்டில் ஒன்றையும் இதுக்கு ப்ரமேயம் என்னும் -சூர்ணிகை -211-

————-

அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ
அசுரர்கள் வன்கையர் கஞ்சன் ஏவ
தவத்தவர் மறுக நின்று உழி தருவர்
தனிமையும் பெரிது உனக்கிராமனையும்
உவத்திலை உடன் திரிகிலையும் என்று என்று
ஊடுற வென்னுடை யாவி வேமால்
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி
செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே–
10-3-10-

திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி –ஆமாம் -நீ ஒவ்வோர் இருப்புகளை குலைத்துக் கொண்டு- போந்து அறியாயே-பரம பதத்தில் இருப்பினைக் குலைத்து அன்றோ பசு நிரை மேய்க்கப் போந்தது –அங்கு இருந்தான் ஆகில் என் வயிறு எரிய வேண்டாவே-நாம் பெறுவோம் இழப்போம் -அங்கே இருந்து வந்தது உன்னை கடாக்ஷிக்க அன்றோ என்ன -நாம் பெறுவோம் இழப்போம் -இவனுக்கு ஒரு தீங்கு வாராது ஒழியுமே-இது ஒரு அன்பின் தன்மை இருந்தபடி என் -என்று முறுவல் பூத்தான் –
செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே –அதிலே ஈடுபடுகிறார்கள் –அவ்விருப்பு குலைந்து போந்தமை உண்டு-உங்களை விட்டுப் போந்தேனோ-என்று முறுவல் செய்ய-இவர்களும் வாய்க்கரையிலே -அதரத்தில் -அழுந்துகிறார்கள்-இத்தை நம்பி திருவாய்மொழி நிகமிக்கிறார் –பரம பதம் விட்டாலும் உம்மை விடோம் என்றானே –

————

செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு
அத் திருவடி திருவடி மேல் பொருநல்
சங்கணி துறைவன் வண்தென் குருகூர்
வண் சடகோபன் சொல்லாயிரத்துள்
மங்கையர் ஆய்ச்சியர் ஆராய்ந்த மாலை
அவனோடும் பிரிவதற்கு இரங்கி தையல்
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன
இவையும் பத்து அவற்றின் சார்வே
-10-3-11-

பொருநல் சங்கணி துறைவன் –தாம் இருந்த இடத்தில் மேன்மக்கள் அடங்கலும் வந்து (பவிஷ்யத் எம்பெருமானாரும் பெரிய ஜீயரும்)சேருமாறு போலே ஆயிற்று –திருப் பொருநலில் சங்குகள் வந்து சேரும்படி –

இவையும் பத்து அவற்றின் சார்வே –அவை -என்கிறது 1-மேலே போந்த திருவாய் மொழிகளாய் –அவற்றின் அருகே இதுவும் ஒரு திருவாய் மொழியே-என்ற ஆச்சர்யத்தில் ஆக்கி-ஆயிற்று சீயர் அருளிச் செய்ததும் -9000 படி வியாக்யானம் செய்ததும்
அன்றிக்கே –2-இவையும் பத்து அவற்றின் சார்வே —மேல் திருவாய் மொழிகளுக்கு சொன்ன பலம் இதற்கு பலம்-என்கிறது ஆகவுமாம்-
அன்றிக்கே-3-அவை -என்கிறது-மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை -என்கிறவற்றையாய்-இவையும் அவற்றோடு ஒக்கும் என்னுதல் -என்றது-அதனுடைய பலமே இதற்கும் பலம்-அது பலத்தோடு கூடியதாயின் இதற்குபேறு உண்டாம் -என்றபடியாம் –அவர்கள் நீ போகாதே கொள் -என்ன-அவன் தவிர்ந்து அவர்கள் உடன் கலந்தால் போலே-
இது கற்றாரும் அவனோடு நீங்காத கலவியைப் பெறுவார் –என்றவாறு –

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -72 -சூழ்கின்ற கங்குல் சுருங்கா இருளின்-சீலமில்லாச் சிறியன் -4-7-

March 8, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

இருளும் -திங்கள் அம் பிள்ளை -பாலசந்த்ரனும் -விரோதிகள் -ஸஹஜ சத்ருக்கள்-இருந்தாலும் தனித்தனியே என்னை நலிகின்றனவே-இருளுக்கு ஆற்றாத தலைவி இளம்பிறை கண்டு தளர்ந்து உரைத்தல் – இருட்டைப் போக்க பாலசந்திரன் வர -அத்தைக் கண்டு ஆற்றாமை-திருமேனி இருள் போல்
பாலசந்திரன் போல் தாப ஹரன்-இரண்டுமே நிறத்தை அழிக்கின்றனவே சீலமில்லாச் சிறியன் -4-7-இதன் விவரணம் 

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-அவதாரிகை  – போலி கண்டு தரிக்க வேண்டும்படி ஆற்றாமை மிக்கு இருக்கிற சமயத்திலே – ராத்திரி வந்து இருளாலே நலிய – இத்தால் வந்த நலிவைப் போக்கி நம்மை ரஷிப்பார் யாரோ -என்று இருக்கிற அளவில் சந்தரன் வந்து தோன்றினான் –

இவ்விடத்தே பிள்ளை அமுதனார் -ஒரு கதை சொல்லுவார் –-ஒரு சாது பிராமணர் காட்டிலே தனி வழியே போனானாய்- ஒரு பசு தொடர்ந்து வந்ததாய் – இத்தால் வந்த நலிவை போக்கி நம்மை ரஷிப்பார் யார் -என்று இருக்கிற சமயத்தில் ஒரு புலி வந்து தோன்றி அப்பசுவையும் கொன்று –
அதனுடைய ரத்த பானத்தைப் பண்ணி – இவன் முன்னே வந்து தண்டையை முறுக்கி இட்டு இருந்ததாய் அந்த பசுவையாகில் ஒருபடி பிராண ரஷணம் பண்ணி போகல் ஆயிற்று –-இனி இத்தைத்  தப்பி நம் சத்தையை நோக்குகை  என்று ஒரு பொருள் இல்லை ஆகாதே -என்று-அது போலே இறே இதுக்கும் –

இப்படி பிறரும் அதி சங்கை பண்ணும் படி பலத்தில் த்வரையை யுடைய இவருக்கு அனுபவ ஸித்தி இல்லாமையாலே பிறந்த மோஹமும் பல வை லக்ஷண்ய விஷயமான ஞானமும் நடந்து அலாப நிபந்தநமான கிலேசத்தை விளைக்க ஆர்த்தரான பிரகாரத்தை இருளுக்கு ஆற்றாத ஈடுபாட்டின் மேலே
இளம்பிறை கண்டு தளர்ந்து உரைத்த தலைவி வார்த்தையால் அருளிச் செய்கிறார்

சூழ்கின்ற கங்குல் சுருங்காவிருளின்  கருந்திணிம்பை
போழ்கின்ற திங்களம் பிள்ளையும் போழ்க துழாய் மலர்க்கே
தாழ்கின்ற நெஞ்சத்தொரு தமியாட்டியேன் மாமைக்கின்று
வாழ்கின்றவாறு இதுவோ வந்து தோன்றிற்று வாலியதே
– 72-இருளுக்கு ஆற்றாத தலைவி இளம்பிறை கண்டு தளர்ந்து உரைத்தல் –

சூழ்கின்ற–(இடைவிடாது) சூழ்ந்து நிற்கிற
கங்குல்–ராத்ரியினுடைய
சுருங்கா இருளின்–சுருங்காமற் பெருகுகிற இருளினுடைய
கரு திணிம்பை–கறுத்த செறிவை
போழ்கின்ற–பிளக்கிற
அம்பிள்ளை திங்களும்–அழகிய இளஞ் சந்திரனும்
போழ்க–(என்னையும்) பிளக்கட்டும்;
துழாய் மலர்க்கே தாழ்கின்ற நெஞ்சத்து–(நாயகனது) திருத்துழாய் மலரைப் பெறுதற்காகவே யீடுபடுகிற மனத்தையுடைய
ஒரு தமியாடடி யேன்–ஒரு துணையும் இல்லாமல் மிக்க தனிமையை யுடையேனான என்னுடைய
மாமைக்கு–(இயல்பான) மேனி நிறத்துக்கு
இன்று வாழ் கின்ற ஆறு–(இப்பொழுது வாழ்க்கை நேரும்படி
வாலியது வந்து தோன்றிற்று–சுத்தமான இளம் பிறை வந்து தோன்றியது
இதுவோ–இப்படியோ?

சீலமிகு கண்ணன் திரு நாமத்தால் உணர்ந்து
மேலவன் தன் மேனி கண்டு மேவுதற்கு சால
வருந்தி இரவும் பகலும் மாறாமல் கூப்பிட்டு
இருந்தனனே தென் குருகூர் ஏறு—37-வர்ஷேண பீஜம் பிரதிச்ஜ்ஞ ஹர்ஷா -என்னுமா போலே
தோழி சொன்ன ம்ருத சஞ்ஜீவியான-திரு நாம பிரசங்கமே சிசிரோபோபசாரமாக வாஸ்வச்தராய்
உணர்ந்த அநந்தரம்-பிறந்த உணர்த்தி பேற்றுக்கு உடல் அன்றிக்கே கிலேச அனுசந்தானத்துக்கு உடலாய் அத்தாலே நோவு பட்டு ஆபத் சகனாக தந் நிதான பரிஹாரங்களை உள்ளபடி அறியும் சர்வஞ்ஞனாய் கார்யம் செய்கைக்கு உறுப்பான உறவையும் உடையனாய் இருக்கிறவன் ரஷியாது ஒழிகையாலே ஆர்த்தி நிரம்பின கடல் கை எடுத்துக் கூப்பிடுமா போலே அவனைக் காண வேணும் என்று கேட்டார் அடைய நீர்ப் பண்டமாம்படி கூப்பிடுகிற சீலமில்லா சிறியனில் அர்த்தத்தை அருளிச் செய்கிறார்–இவர் நெஞ்சு உருகி நோவு பட்டு அருளுகிறார் –இனி திரு நகரியில் ஆழ்வார் பிரதான்யம்
எங்கனே நடக்கக் கடவதோ என்று சங்கிக்கும் படியாய் இருக்கிறது –

சூழ்கின்ற –பிரளயம் கோக்குமா போலே எங்கும் ஒக்க தானே வந்து சூழ்ந்தது –-இது ஓர் இடத்திலேயாய்-மற்றொரு இடத்தில் ஒதுங்க நிழலாம் படி இருக்கை அன்றிக்கே–கங்குல் சுருங்கா  இருளின் –இன்னதினை போதை-இருள் செறிந்து வரக் கடவது –இன்னதினை போதை அதாகக் கடவது -என்று ஓர் மரியாதை உண்டு இறே – அது இன்றிக்கே இரா நின்றது –கரும் திணும்பை –
கறுத்த நிறத்தை உடைய திணும்பை என்ற ஒரே சொல்லாய்- அத்தால் திண்மையை சொல்லுகிறது –
இருளினுடைய புற இதழைக் கழித்து – அகவாயில் திண்மையான-வயிரத்தை சேர பிடித்தால் போல் இருக்கிறது–போழ்கின்ற இத்யாதி –-இவ்விருளை போழ்ந்து கொடு கீண்டு கொண்டு தோற்றுகிற சந்திரனும் – தனக்கு புறம்பு பாத்யம் இல்லாத படியாலே நம்மையே பாதித்திடுக –தண்டையை  முறுக்கி இட்டு –தண்டு வாலாய் வாலை முறுக்கிக் கொண்டு என்றபடி  –போழ்கின்ற –சஹஜ சாத்ரவத்தாலே –
இத்தால் அவன் சன்னதியிலே இது போழ்கின்றது  அன்றியிலே கை தொட்டு அழிக்கிறாப் போலே ஆயிற்று –இதனுடைய திண்மையும் சந்தரனுடைய பருவம் நிரம்பாமையும் –திங்களம் பிள்ளை –
சந்திரன் ஆகிற அழகிய பிள்ளை –முந்துற அநு கூலரைப் போலே தோற்றி பின்னை இறே இவன் பாதகன் ஆவது –இருளைப் போக்குகிற ஆகாரத்திலே அநு கூலனாய் – பின்பு இறே தான் நின்று பாதகனாவது –பத்ம கோச -இத்யாதி –பத்ம கோச பலாசாநி த்ருஷ்டாத்ர்ஷ்டிர் ஹி மந்யதே -ஸீதாயா நேத்ர கோசாப்யாம் சத்ருசா நீதி லஷ்மணா -இதனுடைய விபாகம் அறிகிறதில்லை- ரசனை என்னா நஞ்சைத் திண்ண ஒண்ணாது இறே –-பஸ்ய லஷ்மண -இத்யாதி –தர்சி ஸௌமித்ரி -என்னுமிவ் வாகாரத்தை பார்க்கிற இத்தனை போக்கி பின்பு அது பாதகம் என்னும் இடத்தை பார்க்கிறது இல்லை –மிருக விஷயத்தில் பொன் மான் மேலோட்ட வடிவில் ஆசை கொண்டாள் சீதா -இத்தைப் பார் லஷ்மணா –

துழாய் மலர்க்கே இத்யாதி –அவன் தோளில் இட்ட திருத் துழாய் மாலையை பெற வேணும் என்று ஆசைப்பட்டு –அதிலே கால் தாழ்ந்து கிடக்கிற நெஞ்சை உடைய – துழாய் மலர்க்கே தாழ்கின்ற -அதில் அருமை ஒன்றையும் புத்தி பண்ணாதே-ஒரு தமியாட்டியேன் – ஸ்ரீ ஜனக ராஜனின் திரு மகளும் ஒப்பன்று காணும் இவளுடைய தனிமைக்கு – இருளுக்கும் நிலவுக்கும் நொந்து தனிமைப் பட்டாள்  இவள் இறே –ஒரு -என்கிற இத்தால்-உபமான ராஹித்யம் சொல்லுகிறது —மாமைக்கு இன்று வாழ்கின்றவாறு இதுவோ--இருளால் வந்த நலிவைப் போக்கி-நம் நிறத்தைத் தருகைக்கு சந்தரன் வந்து தோன்றினான் என்று நாம் பாரித்து இருந்தது எல்லாம் இதுவோ–வந்து தோன்றிற்று வாலியதே –
இருளைப் போக்குகைக்கு சந்தரன் வந்து தோன்றினால் போலே- இச் சந்தரனைப் போக்குகைக்கு ஒரு ஆதித்யன் இல்லையே -என்கிறாள் –இதுவே நிலை நின்று-நலியும் என்று இருக்கிறாள் –வாலியது –
வலியது –

திங்களம் பிள்ளையும் போழ்க  – அதுவும் நம்மை வந்து நலிந்திடுக –வந்து தோன்றிற்று வாலியதே –
அவ்விருளுக்கு  மேலே இத் திங்களும் வந்து பாதகமாய் தோற்றிற்று – மாமைக்கு இன்று வாழ்கின்றவாறு இதுவோ
-என்று அந்வயம் –

இருளுக்கு ஆற்றாத தலைவி அதுக்கு மேலே இளம் பிறை கண்டு தளர்ந்து உரைத்தல் -துயர் நீக்க வந்தான் என்று கருதும் படி வந்து மேலும் துயரை விளைவிப்பதே-பேறு கிட்டாததால் வந்த மோகாந்தகாரமும் -அதனை அடக்கி மேலிடுவதான தத்வ ஞான பிரகாசமும் இரண்டும் ஒன்றின் மேல் ஒன்றுடன் சேர்ந்து வருந்தி ஸ்வரூபத்தை அழிக்க இருக்கும் தன்மை –சந்திரோதயம் -என்றது விவேகத்தை –இருளுக்கு ஆற்றாத தலைவி இளம்பிறை கண்டு தளர்ந்து உரைத்தல் இது. நாயகனைப் பிரிந்த நிலையில் பகலிற் காட்டிலும் இரவில் இருளில் மிக வேதனைப்படுகிற நாயகி, அப்பொழுது இளம்பிறை தோன்றி அவ்விருளை அழிக்கத் தொடங்கியதை நோக்கி இனி நமக்கு இருளினாலாகுந் துயரம் குறைவுபடுமென்று கருதி ஒருவாறு தணிந்திருக்கத் தொடங்கிய வளவிலே, இளம்பிறையும் விரஹிகளுக்குத் தாபஹேதுவான பொருள்களும் ஒன்றாதலால் அது இவளை இருளினும் அதிகமாக வேதனைப் படுத்த, அது நோக்கி அத் தலைவி இரங்கிக் கூறியதென்க.–எனக்குப் பகையாய்ச் சூழ்கிற இருளைப் பிளந்தொழிக்கிற இளம்பிறை அவ்வருளின் ஒழிவுக்கு மகிழ்கிற என்னையும் பிளந்தொழிக்கட்டும்.-பிறைதோன்றி இருள் அகன்றதைக் கண்டு இனி என் துயரங் குறைந்து இழந்த மாமை நிறத்தைப் பெற்று வாழ்வேனென்று கருதிய எனக்கு அந்தோ! பிறை தோன்றியது இங்ஙனமோ முடிந்தது! என்கிறான். துயர் நீக்க வந்தானென்று கருதப்பட்டவன்தானே துயர¬ மிகுவிக்கின்றானே! என்செய்வேன்! என்கிறாள்.-வாலியது – வாலிமை யென்னும் பண்பிணடியாய் பிறந்த ஒன்றன்பாற் குறிப்பு வினையாலனையும் பெயர். இதுவோ வந்து தோன்றிற்று–இப்பிறையோ வந்து தோன்றியது. வாலியதே- இதன் தன்மை சீரிதாகவுள்ளது! என்றுங் கொள்ளலாம்; இப்பொருளில் விபரீத லக்ஷனையால் வெறுப்புத் தோன்றும். பிள்ளை– இளமைப்பெயர்.-தாம் நினைத்தபடியே பேறு கிடைத்திடாமையா லுண்டான மோஹாந்தகாரமும் இதனையடக்கி மேலிடுவதான தத்துவ ஞானப் பிரகாசமும் இரண்டும் எம்பெருமானைச் சேராது நிலையில் தம்மை ஒன்றினுமொன்று மிகுதியாக வருத்தித் தமது ஸ்வரூபத்தையும் அழிக்கவிருந் தன்மையை ஆழ்வார் வெளியிடுதல் இதற்கு உள்ளுறை பொருள். சந்திரோதய மென்றது விவேகத்தை.

சூழ்கின்ற கங்குல் சுருங்காவிருளின் கருந்திணிம்பை போழ்கின்ற திங்களம் பிள்ளையும் போழ்க
சூழ்ந்து நிற்கிற ராத்ரியின் நீண்ட இருளினுடைய கறுத்த செறிவைப் பிளவா நிற்கிற அழகிய பாலசந்த்ரனும் என்னைக் கீளுக-திணும்பு -என்று செறிவு-பிள்ளையும் என்று இருளை போக்குகையாலே உபகாரகமான இதுவும் ப்ரகாசத்தாலே நலிகிறமை சொல்லுகிறது-துழாய் மலர்க்கே தாழ்கின்ற நெஞ்சத்தொரு தமியாட்டியேன்-திருத்துழாயினுடைய பூந்தாரினுக்கு ஈடுபட்ட நெஞ்சை யுடைய மிக்க தனிமையை யுடையேனான என்னுடைய –மாமைக்கின்று வாழ்கின்றவாறு-ஸ்வா பாவிகமான நிறத்துக்கு வாழ்ச்சி யுண்டாகிற பிரகாரம்-இதுவோ வந்து தோன்றிற்று வாலியதே
முன் இருளிலும் கனத்த இந்த இளம்பிறை வந்து தோன்றிற்று-இதுவும் போழ்க–வாலிமையாவது
சீர்மையாய் கனத்தைச் சொல்லுகிறது–அன்றியே பிறையின் வெளுப்பு ஆகவுமாம்–இத்தால்
போக ஸித்தி பெறாமையாலே வந்த மோஹ அந்தகாரத்திலும் மோஹத்தை அமுக்கி மேல் இடுவதான விஷய வைலக்ஷண்ய ஞான சந்த்ர உதயம் தானும் அலாப தசையில் மிகவும் பாதகம் என்னும் இடம் சொல்லிற்று ஆயிற்று –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்–சூழ்கின்ற கங்குல் சுருங்காவிருளின் கருந்திணிம்பை போழ்கின்ற திங்களம் பிள்ளையும் போழ்க துழாய் மலர்க்கே தாழ்கின்ற நெஞ்சத்தொரு தமியாட்டியேன்
தனிமைப் பட்டேனான என்னுடைய– மாமைக்கின்று வாழ்கின்றவாறு-இதுவோ வந்து தோன்றிற்று
உடலுக்கு இன்றாக இப்பிறையால் பிளக்கப்படும் இதுவோ வாழ்கின்ற பிரகாரம் என் உடலுக்கு உலகள நிறத்தையும் கெடுத்து அத்தையே பிளந்து விடவும் தோன்றிற்று--வாலியதே-இந்தப் பிறையானது இதுக்கே வந்ததாய் நிராதாரமாகத் தொங்குமதாய் தன் மிக்க வெளுப்போடும் சீர்மையோடும் ஆவிர்பவித்தது இதுக்கு எங்கே ஒதுங்குவேன் என்கிறாள் –

ஸ்வா பதேசம் –இத்தால் –இருளன்ன மா மேனி -என்கிறபடியே –திரு நிறத்துக்கு போலியான இருள் –
அதுக்கு ஸ்மாரகமாய் நலிகிற படியையும் – (கண்ணன் என்னும் கரும் தெய்வம் )அதுக்கு மேலே சந்திரனும்  –திரு முகத்துக்கு ஆதல்-திருக் கையில் திரு பாஞ்ச ஜன்யத்துக்கு ஆதல் –நாள் இளம் திங்களைக் கோள் விடுத்து திருவாய்-என்கிறபடியே திரு முகத்துக்கு ஸ்மாரகமாய் நலிகிற படியால் இவற்றைச் சொல்லுகிறது  –பால சந்தரன் ஆகையாலே இருளானது சந்திரனையும் கை தொட்டு நலியா நின்று-கொண்டு தன்னையும் நலிகிறது என்றபடி –=புலிக்கு பசுவும் பிராமணனும் எதிரி போல் இவள் ஹிருதயம் பத்ம கோசம் -போன்றது ஆகையாலே ஆதித்யனுக்கே அலரக் கடவது
ஆகையாலே -பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் –இருளுக்கும் சந்த்ரனுக்கும் மலராமையாலே
சாத்ரவம் சஹஜம் என்றபடி – மாயா மிருகத்தில் பிராட்டி ஆசைப்பட்டாள் -ரசனை உள்ளோருக்கு  நஞ்சு இடுவாரோ – இது மேல் எழுந்த ஆகாரம் -என்றபடி –பஸ்ய லஷ்மண வைதேஹ்யாஸ் ஸ்ப்ருஹாம்
ம்ருக கதாமிமாம் ரூபஸ் ஸ்ரேஷ்ட தயாஹ்யேஷ ம்ருகோத்யந  பவிஷ்யதி
-இத்யாதி கண்டு கொள்வது அது போல் பிரதமத்தில் அழகிய சந்தரன் என்றாள் –ஊர்த்வம் மாசான்ன ஜீவிஷ்யதே -பிரிந்த பத்து மாசங்களிலே ராத்ரியும் உண்டு இறே –

தாத்பர்யம்-பகவத் அனுபவ அலாபத்தாலே பிறந்த மோஹ அந்தகாரம்-அதுக்கும் மேலே விவேக ஸ்வரூப ஞானம் -பேறு தப்பாது என்று துணிந்து இருக்க வேண்டும் -ஆறி இருக்க -வேண்டும் –
பரதந்த்ரன் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை -என்பதாலும் வந்த நலிவு படுகிற தமது படியையும்
சொல்லும் பாசுரத்தை-இருளுக்கும் சந்திரோதயத்துக்கும் நலியும் தலைவி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –இதுவரை பலகல்பங்களாகச் சென்ற இருள் காலம் முடிந்து ஆதித்யன் வர அவனுக்கு ஸத்ருச போலி பதார்த்தங்களைக் கண்டு தரித்து இருந்த ஆழ்வாருக்கு போக யோக்ய காலமும் வந்து
இருளும் எங்கும் ஓக்க வியாபிக்க இவரது இந்திரியங்களை நலிய இவ்வளவில் பால சந்த்ர உதயம் ஆக – –நாயகன் திருமேனிக்கு போலியான இருளும் நீங்கி எனது நலிவைப் போக்கவே -பால சந்திரன் மிக உபகாரகன் என்று இருந்தேன்-சந்த்ர காந்த திருமுகம் அன்றோ-பாஞ்ச ஜன்யமும் சந்திரன் போல் தானே-இவ்வாறு போலியான அவன் உருவைக் காட்டி நிறம் அழியும்படி இரண்டுமே செய்தனவே
நாயகன் திருத்துழாய்க்கு ஆசைப் பட்டு நலிந்த என்னைப் போல் வேறே யாரும் உண்டோ என்கிறாள்

4-7-சீலம் இல்லாச் சிறியே னேலும்,–ப்ரவேஸம்-

காற்றாலும் வெயிலாலும் அடிபட்டு உலர்ந்த பயிரானது, மழை பெய்தவாறே பச்சை பெற்றுப்
பருவம் செய்வது போன்று, மகிழ்ச்சி அடைந்தாள்,’
என்கிறபடியே, மழை பெய்தால் பயிர் பருவம் செய்வது தன் உணர்த்தியால் அன்றே?
அப்படியே, திருநாமப் பிரசங்கத்தால் இவர் உணர்ந்தார்.
‘ஆயின், மேல் திருநாமப் பிரசங்கம் உண்டோ?’ எனின், ‘வண் துவராபதி மன்னனை ஏத்துமின்’ என்று
அமிருத சஞ்சீவினியான திருநாமப் பிரசங்கம் உண்டாயிற்றே அன்றோ?
அந்தத் திருநாமப் பிரசங்கமே குளிர்ந்த உபசாரமாக உணர்த்தி உண்டாயிற்று.
அதனால் பெற்ற பலம், முன்புத்தை மயக்கத்தையும் இழப்பதற்கு உறுப்பானது இத்தனை.
மயங்கியிருக்கும் நிலையில் நினைவு இல்லாமையாலே துன்பம் இல்லை;
பிறந்த உணர்த்தி பேற்றுக்குக் காரணம் அல்லாமையாலே துன்பத்தை விளைக்க, அதனாலே கூப்பிடுகிறார்.

உறக்கத்தில் பசி பொறுக்கலாம்; உறக்கத்தினின்றும் உணர்ந்தால் உண்டு அன்றி நிற்க ஒண்ணாதே அன்றோ?
உணர்ந்த பின்னர்ப் பொறுக்க ஒண்ணாதபடி தனக்குப் பிறந்த-அலாப கிலேசத்தை அனுசந்தித்து- பயனில் துன்பத்தை நினைத்து,
1-அவன் ஆபத்துக்கு உதவும் தன்மையனாய் இருக்கிறபடியையும்,
2-ஆபத்தின் காரணத்தை அறிந்து அதனைப் போக்குவதில் வல்லன் என்பதனையும் நினைத்து,
3-ஆபத்துக்கு உதவுகைக்குத் தகுதியான சம்பந்தத்தையுடையவனாவது,
4-பிரிந்தால் பொறுக்க ஒண்ணாதபடியான வடிவழகையுடையவனாவது,
5-ஆபத்துகளிலே விரோதியைப் போக்கி உதவுகைக்குத் தகுதியான ஆற்றலையுடையவனாவது,
6-அதற்குத் தகுதியான சாதனங்களையுடையவனாவது,
7-வரையாதே, எல்லாரையும் ஒருசேரப் பாதுகாக்க வல்லவனாவது,
இப்படியிருக்கத் தம் ஆற்றாமைக்கு உதவக் காணாமையாலே, பரமபதத்திலே இருந்தானாகிலும் அவ்விருப்பு நிலை குலைந்து
வந்து முகம் காட்டும்படி துக்கத்தாலே நிரம்பியது ஒரு கடல் கை எடுத்துக் கூப்பிட்டாற்போலே,
8-கேட்டார் அனைவரும் நீராகும்படி கூப்பிடுகிறார்.

‘அதனாலே கூப்பிடுகிறார்’ என்றதனை விரித்து அருளிச்செய்கிறார்,
‘உணர்ந்த பின்னர்’ என்று தொடங்கி. இத்திருவாய்மொழியில் வருகின்ற
1-‘ஞாலமுண்டாய்’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘ஆபத்துக்கு உதவும் தன்மையன்’ என்கிறார்.
2-‘ஞானமூர்த்தி’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி,‘ஆபத்தின் காரணத்தை அறிந்து’ என்கிறார்.
3-‘நாராயணா’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘சம்பந்தத்தையுடையவனாவது’ என்கிறார்.
4-‘கோலமேனி’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘வடிவழகையுடையவனாவது’ என்கிறார்.
5-‘ஆழ்கடலைக் கடைந்த துப்பனே’ என்றதனைத் திருவுள்ளம் பற்றித் ‘தகுதியான ஆற்றலையுடையவனாவது’ என்கிறார்.
6-‘அடலாழியானே’ என்றதனைத் திருவுள்ளம் பற்றித் ‘தகுதியான சாதனங்களையுடையவனாவது’ என்கிறார்.
7-‘வையங்கொண்ட வாமனாவோ’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘வரையாதே’ என்கிறார்.
8-‘வள்ளலேயோ! வாமனாவோ! என்பனவற்றைத் திருவுள்ளம் பற்றிக் ‘கூப்பிடுகிறார்’ என்றார்.

‘ஓ கௌசல்யே! ஓ சுமித்திரே! ஓ ராமா! ஓ லக்ஷ்மணா!’ என்றாற்போலேயும், ஸ்ரீ கௌசல்யையார் பெருமாளைப் பிரிந்த
ஆற்றாமையாலே ‘பிரியேதி புத்ரேதிச ராக வேதிச’ என்று கூப்பிட்டாற்போலேயும் இவரும் கூப்பிடுகிறார்.

‘ததாபி சூதேந’ என்ற சுலோகத்திற்கு வியாக்கியாதா அருளிச்செய்த பொருள் வருமாறு :-
‘ஸ்ரீ கௌசல்யையார் பெருமாளைப் பிரிந்த ஆற்றாமையாலே கூப்பிட, ஸ்ரீ சுமந்திரன், ‘அவரைப் பிரிந்தோம் என்று
கூப்பிட வேண்டாகாணும்; தாமே வந்து புகுவர் காணும்,’ என்று தேற்றினான்.
சூதேந –
சொன்ன வார்த்தை ‘நம்பத்தகுந்தது’ என்று கைக்கொள்ள வேண்டும்படி அந்தரங்கன் ஆவது,
சாரதிகள் சொல்லுவனவெல்லாம் நம்பத் தக்கன அன்றோ?
சு யுக்த வாதிநா –
அஃது இல்லையேயாகிலும் வார்த்தையைக் கேட்டால், ‘இது அப்படியே’ என்று நம்பி ஓடுகிற சோகம்
தீரும்படி வார்த்தை சொல்ல வல்லன் ஆவது.
நிவார்யமாணா –
இவனாலே ‘இது வேண்டா’ என்று தடுக்கப்படா நிற்கச் செய்தேயும்.
சுத சோக கர்சிதா –
இப்படி இவனைப் போரப் பொலியச் சொல்லுங்காட்டில் நீங்காதே அன்றோ, இவள் பிரிந்த விஷயத்தில் ஆற்றாமை?
நெடு நாள் கூடிப்பெற்ற பிள்ளையைப் பிரிந்தால் தரிக்கப் போகாதே!
ந சைவ தேவீ விரராம கூஜிதாத் –
பிறர் கண்ணீரையும் மாற்றி, இதற்கு முன்பு சோகமும் புதியது உண்ணாதே போந்தவள்,
கூப்பிடுகிற கூப்பீட்டினின்றும் ஓவிற்றிலள்;
கூப்பிடுகிற போதுதான் கேட்டார்க்கு அடைய இரக்கம் பிறக்கும்படி குயில் கூவினாற் போலே
காணும் கூப்பிடுவது. கூப்பிட்ட பாசுரம்,
பிரியேதி புத்ரேதி ச ராகவேதி ச –
‘பிரிந்தால் தரிக்க ஒண்ணாதபடி எனக்கு இனியவரே!
உம்மைப் பிரிந்தாருடைய ஆற்றாமையை நீக்கும் தன்மையை யுடையவரே!
எல்லாரையும் பாதுகாக்கும் குடியிலே பிறந்து, பெற்ற தாயை நலியலாமோ!’ என்று
அவள் கூப்பிட்டாற்போலே இவரும் கூப்பிடுகிறார்.

ஏழாம் திருவாய் மொழியிலே
கீழ் ஏத்துதலும் தொழுதாடும் -என்று பகவத் நாம ஸ்ரவணத்தால்பிறந்த ஆச்வாஸம் அவனைக் கிட்டி அனுபவிக்கைக்கு உடல் அன்றியே
அலாபத்தாலே ஆர்த்தராகைக்கு உடலாகையாலே அபிநிவேச அதிசயத்தை யுமுடைய இவ்வாழ்வார் தமக்கு அநு பாவ்யமான சர்வேஸ்வரனுடைய
அகில வஸ்து சத்தையும் அழியாமல் நோக்கும் அசாதாரண சம்பந்தத்தையும்
அநந்யார்ஹமாக்கி அனுபவிப்பிக்கும் உதார குணத்தையும்
அநந்யார்ஹமான ஆஸ்ரிதர் பக்கல் அத்யந்த பவ்யதையையும்
அவர்களுக்கு ஆஸா ஜநகமான ஆபி ரூப்யாதி அதிசயத்தையும்
அரும் தொழில் செய்தும் ஆஸ்ரிதர்க்கு அபேக்ஷிதம் கொடுக்கும் படியையும்
ஆசைக்கு தீபகமான ஆந்திர ஸ்திதியையும்
அந்த அவஸ்தா நத்தினுடைய அதிசயித போக்யதையையும்
போக்யதா நிபந்தமான அபிநிவேச ஜனகத்வத்தையும்
அபி நிஷ்டர்க்கு அநு பாவ்யமான அசாதாரண சிஹ்னவத்தையும்
அகில வேத வேத்யத்வத்தையும்
அனுசந்தித்து -ஏவம் விசிஷ்டனான போக்ய பூதன் பக்கல் அனுபவ அபி நிவேசத்தால் பிறந்த ஆர்த்யதிசயத்தை அருளிச் செய்கிறார்-

சீலம் இல்லாச் சிறியே னேலும், செய்வினையோ பெரிதால்;
ஞாலம் உண்டாய்! ஞான மூர்த்தி! நாராயணா! என்று என்று
காலந் தோறும் யான் இருந்து, கைதலை பூசலிட்டால்,
கோல மேனி காண வாராய்; கூவியும் கொள்ளாயே.
–4-7-1-

இங்குச் ‘சிறியன்’ என்கிறது, அணுத்துவமன்று; ஞான சூக்ஷ்மத்தை,’ என்கிறார்,-செய்வினை ஓ பெரிது – செய்த பாவத்தைப் பார்த்தவாறே, ‘சித்து அசித்தோடு ஈசன் என்று செப்புகின்ற மூவகைத் தத்துவங்களையும்’ விளாக்குலை கொள்ளும்படி பெருத்திருந்தது.-ஈசுவரனுடைய குணங்களைக் காட்டிலும், அவன் தந்த மதி நலன்களைக் காட்டிலும் பெரிதாய் ஆயிற்று இருக்கிறது-செய்வினை –-இவைதாம் ஈசுவரனைப் போலே சங்கற்பத்தாலே உண்டாக்கப்பட்டன அல்ல ஆதலின், ‘செய்வினை’ என்கிறது,-இதற்குப் பரிஹாரம் அவன் கையிலே’ என்றே யன்றோ அறுதியிட்டிருப்பது?
எப்போதும் ‘கை கழலா நேமியான் நம்மேல் வினை கடிவான்’ என்றேயன்றோ இவர் சொல்லுவது?-இதுதான் ஸூதரிசனமாய் இருக்குமேயன்றோ? (-ஸூ தர்சனமாய் –திருவாழியையும் அழகிய தர்சனமாயும் என்று சாடு)

பூமியாகப் பிரளயங்கொள்ளிலோ பாதுகாக்கையாவது? எல்லார்க்கும் உண்டான ஆபத்து ஒருவனுக்கே உண்டானால், உதவலாகாதோ? தங்கள் தங்களுடைய ஆபத்தை அறிந்து கூப்பிடாதார்க்கோ உதவலாவது?-‘ஆபத்து அறிந்து கூப்பிடுவார்க்கு உதவோம்’ என்னும் நிர்ப்பந்தம் உண்டோ?’பிரளயத்தால் கொள்ளப்பட்ட பூமி, தன்னைத்தானே எடுக்க முயற்சி செய்யும் அன்றேயன்றோ தாங்கள் தாங்கள் செய்த கர்மங்களைத் தாங்கள் போக்கிக் கொள்ளத் தகுதியுள்ளது? சம்பந்தமும் ஆபத்தையுடைய வராகையும் அன்றோ
உனக்குக் காப்பாற்றுவதற்கு வேண்டுவது?’ என்கிறார் என்னுதல்.-
ஆபத்து -சம்பந்தம் -இரண்டும் இருந்தும்- ஆத்ம ஞானமும் அப்ரதிஷேதமும் வேண்டுமே 

நான் அறிவது ஒன்றும் இல்லை; நீ அறியாதது ஒன்றும் இல்லை;
நான் செய்ய வல்லது ஒன்றும் இல்லை; நீ செய்யமாட்டாதது ஒன்றும் இல்லை.
யார் காரியம் யாருக்குப் பரம்? ஒருவனுக்குக் கண் தோற்றாதே காலும் நடை தாராதே இருந்தது;-ஒருவனுக்குக் கண்ணும் தோற்றிக் காலும் நடை தருவதுமாய் இருந்ததானால். யார்க்கு யார் வழி காட்டிப் போவார்?’ -கேவலம் சரீரமோ, சரீரியைப் பெறுகைக்கு முயற்சி செய்வது?

இவர்தாம் ஒரு பிரயோஜனத்திற்காக ஒருகால் சொல்லி, ‘அது கைபுகுந்தது’ என்று ஆறியிருக்குமவர் அல்லரே!-நம் உபாயத்தில் வர்த்தமானம் போலே இதுதான் பிரயோஜனமாய் இருக்குமே இவர்க்கும்! ஆதலின், ‘என்று என்று’ என்கிறார் என்னுதல்.
‘நமோ நாரணா என்று ஓவாது உரைக்கும் உரை’-முதல் திருவந்தாதி, 95.- அன்றோ இதுதான்?-இனிமையாலே நித்தியமாக அநுசந்திக்கப்படும்

கை தலை பூசல் இட்டால் –
‘தலையிலே கை வைத்தால் -பூசல்’ என்று பொருந்துதலாய், தலையிலே கை பொருந்தினால்; அதாவது, ‘அஞ்சலி செய்தால்’-மெய் காட்ட வேண்டாவோ?
அன்றிக்கே, ‘தலையில் கை வைத்துக் கூப்பிட்டால்’ -பூசலிடல் – கூப்பிடுதல்.-என்னுதல்;
அன்றிக்கே, ‘கையும் தலையுமான பூசல் மாறாதே ஒருபடியே இருந்தால்’ -காலந்தோறும் இருந்து அஞ்சலி இட்டால்’-என்னுதல்.

சேர்ந்து குளிர்ந்த தண்ணீரை விடாயர்க்கு எட்டாமல் வைப்பாரைப் போலே,
வேட்டார்க்கு உதவாத தண்ணீர் ஆவதே! ‘மரகத மணித்தடம்’ என்னப்படுமவன் அன்றோ அவன்?

காண –கருமுகை மாலை தேடுவார், சூட அன்றிக்கே, சும்மாட்டைக் கொள்ளத் தேடுவர்களோ?கிட்டினாலும் ‘ஸதா பஸ்யந்தி – எப்பொழுதும் பார்த்துக்கொண்டே இருக்கின்றார்கள்’ என்பதே அன்றோ?
‘காரார் திருமேனி காணுமளவு’மே -சிறிய திருமடல், 69.-அன்றோ இங்கும்?
‘அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண’- இத்தனையே அன்றோ-

வாராய் –‘வாராய்’ என்றதனால் உபாயம் சொல்லுகிறது. அவ்வடிவைக் காணும்போது என்றும் அத்தலையாலே வரப்பெற இருக்கை போலே காணும் முறை.
‘நீ முறை செய்யப் பார்த்திலையேயாகிலும், என் துன்பம் தீரும் அத்தனையே எனக்கு வேண்டுவது,’ என்கிறார்.
காண –பிராப்யம் -தர்சனமே பிராப்யம் -வாராய் -பிராபபகம் -அவனே உபாயம்

கூவியும் கொள்ளாயே –முறை கெட அழைத்தாகிலும் கொள்ளுகின்றிலை.
காலந்தோறும் யான் இருந்து கைதலை பூசல் இட்டால் கோல மேனி காண வருகின்றிலை;
கூவியும் கொள்ளுகின்றிலை;
இதற்குக் காரணம், சீலமில்லாச் சிறியனேலும் செய்வினையோ பெரிதால்,’ எனக் கூட்டுக.

நாராயணன்’ என்கையாலே, இறை நிலை சொல்லிற்று;
‘சிறியன்’ என்கையாலே, உயிர்நிலை சொல்லிற்று;
‘வாராய்’ என்கையாலே, உபாயம் சொல்லிற்று;
‘காண’ என்கையாலே, பலம் சொல்லிற்று;
‘செய்வினையோ பெரிதால்’ என்கையாலே, விரோதி சொல்லிற்று;
ஆக, ஐந்து பொருள்களும் இத்திருப்பாசுரத்திலே சொல்லப்பட்டன.

ப்ராசாங்கிகம் -த்வயார்த்தம் விவஷிதம்
ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி -ஞான சக்தியாதிகள் -உத்தர வாக்யார்த்தம்-
நாராயணா -ஆஸ்ரயண சௌகர்யர்ய ஆபாதக -வாஸ்தல்யாதிகள்-பூர்வ வாக்யார்த்தம்
ஞாலம் உண்டான் -ரஷகம் -சப்த சாமர்த்தியத்தால் ஸ்ரீ மத் பதார்த்தமும்
கோல மேனி -சரண -திருவடி -சப்தார்த்தம்
வாராய் -சரண உபாயம் சப்தார்த்தம்
கை தலை பூசல் இட்டால் — கிரியா பிரபத்யே பிரபதனம்
பதில் கதௌ தாது -காலம் தோறும் -மகா விஸ்வாசம்-பிரகர்ஷனே பர்த்யே- பிரபர்த்யே
யான் -உத்தம அதிகாரி -அஹம் –
என்று என்று -பூர்வ உத்தர வாக்யமும்– கிரியா பதம்–வர்த்தமானம் –
காண -சதுர்த்யந்தமான பிராப்யம் -ஆய –
செய்வினையோ பெரிது -நமஸ் -அவித்யாதி கழி உண்ணும்

————–

கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோது இல தந்திடும் என்
வள்ளலேயோ! வையம் கொண்ட வாமனாவோ!’ என்று என்று
நள் இ ராவும் நன்பகலும் நான் இருந்து,ஓலம் இட்டால்
கள்ள மாயா! உன்னை என்கண் காணவந்து ஈயாயே
.–4-7-2-

அனுபவிக்க அனுபவிக்கத் தன் பக்கலிலே ஆசையைப் பிறப்பித்து, இதர விஷய வைராக்கியத்தையும் பிறப்பிப்பதான ஆனந்தமாதலின், ‘கோதில’ -இப்படி இப்போது கூப்பிடப் பண்ண நினைத்திருந்தால், ‘வீற்றிருந்தேழுல’கிலே அப்படி என்னை அனுபவிப்பிக்க வேண்டுமோ?’ -இரந்தார்க்குக் கொடுக்கைக்காக நீ இரக்குமவன் அன்றோ? -நீ இரந்து தருகை ஒழிய நான் இரந்து கூப்பிட இருப்பதே இப்போது!’-

என்று என்று –இந்திரனைப் போன்று இராச்சியம் பெற்றுப் போகிறார் அல்லர்,
மஹாபலியைப் போலே ஒளதார்யம் கொண்டாடிப் போகின்றார் அல்லர்,
எப்போதும் இதனையே சொல்லி. வையங்கொண்ட பின்பும் வாமன வேஷமாயிற்று இவர் திருவுள்ளத்தில் ஊற்று இருந்தது;-ஆதலின், ‘வையம் கொண்ட வாமனா!’ என்கிறார்

நடையழகு கண்டு வாழும்படி முன்னே நடந்து வந்து தர வேண்டும்.-உன்னை நீயே கொண்டு வந்து தரவேண்டும்.-மாநச அனுபவத்தால் போராது; கண்களுக்கு இலக்காம்படி வரவேண்டும்’ –  ஈகிறிலை-பாடமான போது-செய்விவினையோ பெரிதால்’ ஈகின்றிலை

———–

ஈவு இலாத தீ வினைகள் எத்தனை செய்தனன் கொல்?
தாவி வையம் கொண்ட எந்தாய்! தாமோதரா! என்று என்று,
கூவிக் கூவி நெஞ்சு உருகி, கண்பனி சோர நின்றால்,
பாவி நீ என்று ஒன்று சொல்லாய், பாவியேன் காணவந்தே
.–4-7-3-

அனுபவித்தாலும் குறையாதிருக்க வேண்டுமோ?-அனுபவிக்காத கர்மம் தொலையாது
அனுபவித்த கர்மம் தொலைய வேண்டுமே-நானோ அனுபவித்தேனே -ஆனால் கர்மம் தொலைய வில்லையே –-‘ஆயின், அனுபவித்தாரோ?’ என்னில், -அரை ஷணம்-சிறிது நேரம் முகம் மாற வைத்த போதே எல்லாம் அனுபவித்தார் அன்றோ?
‘செய்வினை’ என்று ஒன்றாய் இருந்ததோ? எத்தனை கோடி பாவங்களைச் செய்தேனோ!’ என்பார்,-‘தீவினைகள் எத்தனை செய்தனன் கொல்?’ என்கிறார்.-அவன் இவற்றைக் காப்பதற்கு அடியிட்டான்;-அச்செயலிலே இவரும் தோற்று அவனுக்கு உரியவராய் ‘எந்தாய்!’ என்கிறார்.-உன் வயிறு வாழாமல் அன்றோ இப்படிக் களவு கண்டு கட்டுண்டு அடி உண்டது?முந்துறக் கூவுகிற இது பிற்படக் கூவுமதனை விருத்தி செய்யும்படி கூவுகிற தம் மிடற்று ஓசை செவிவழியே புக்கு, நெஞ்சமானது நீர்ப்பண்டமாய் உருகும் ஆயிற்று.

நான் ஆசையற்றவன் ஆகும்படி ஒரு வார்த்தை சொல்ல வேண்டும்’ என்பார், ‘நீ பாவி’ என்று சொல்லாய் என்கிறார்-இரண்டு அவதாரத்துக்கும் புறம்பாம் படியான பாபத்தை பண்ணினாய் நீ என்று நான் நிராசனாயத் தரிக்கும் படி ஒரு வார்த்தை சொல்லாய்-.-‘‘நீ பாக்கியவான்’ என்னவுமாம். ‘பாக்கிய ஹீநன்’ என்னவுமாம்; அதில் அர்த்தங்கொண்டு காரியம் இல்லை; உன் மிடற்றோசை கேட்குமித்தனையே எனக்கு வேண்டுவது,’ என்பார், ‘ஒன்று சொல்லாய்’ என்கிறார்.-அங்ஙனம் சொல்லுமிடத்து நிர்ப்பந்தம் ஒன்று உண்டு;-பாவியேன் காண வந்து –‘என் கண்களுக்கு இலக்காம்படி வந்து சொல்ல வேண்டும்;

———-

காண வந்து,என் கண் முகப்பே தாமரைக் கண் பிறழ,
ஆணிச் செம்பொன் மேனி எந்தாய்! நின்று அருளாய் என்று என்று,
நாணம் இல்லாச் சிறு தகையேன் நான் இங்கு அலற்றுவது என்
பேணி வானோர் காண மாட்டாப் பீடுடை அப்பனையே?
–4-7-4-

‘மானச அனுபவம் மாத்திரம் அன்றிக்கே, புறப்படுதல் தொடங்கி  கண்களாலே, காணும் படிக்குத் தகுதியாக வந்து-ஆணிப்பொன் – அதிக மாற்றுடைய பொன்.-‘மற்று ஒப்பாரை இல்லா ஆணிப் பொன்னே!’ -திருவிருத்தம், 85.-சுட்டு உரைத்த நன்பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது’-என்னாவகம்பால் மாற்றின்றி உரைத்துக்கொண்டேன்’-நெஞ்சாகிற மெழுகிலே இட்டுப் பார்த்தால், அது தள்ளுண்ணுமே அன்றோ? இவர் தாம் கண் ஆணியாக அன்றோ காண்பது?

கண் கரு விழியால் காண -ஆழ்வாருக்கு உரைகல்லே வேண்டாமே-தாமரைக் கண் பிறழ –‘கடல் கலங்கினாற்போலே, ஆழ்வாரைக் கண்ட காட்சியிலே திருக்கண்கள் மிளிர’ -என்னுடைய முன்னைய ஒழுக்கத்தை நினைக்க மாட்டாத நாணம் இல்லாதவனும், மிகச் சிறியனுமான சிறுதகையேன் –ஆக, பேணி வானோர் காண மாட்டாப் பீடு உண்டு. பீடு – பெருமை;‘அதனையுடைய சர்வேசுவரனை, -ப்ரஹ்மாதிகளுக்கும் குத்ஸிதமான நிலத்திலே இருந்து அவர்களுக்கும் நிலம் இல்லாத விஷயத்தை கூப்பிட்டு என்ன பிரயோஜனம் உண்டு –நாணமில்லாச் சிறு தகையேன் நான் இங்கு அலற்றுவது என்?’ என்கிறார் –

—————–

அப்பனே!அடல் ஆழி யானே! ஆழ் கடலைக் கடைந்த
துப்பனே!‘உன் தோள்கள் நான்கும் கண்டிடக் கூடுங்கொல்?’என்று
எப்பொழுதும் கண்ணநீர் கொண்டு, ஆவி துவர்ந்து துவர்ந்து,
இப்பொழுதே வந்திடாய் என்று ஏழையேன் நோக்குவனே.–
4-7-5-

ஆழ்கடலைக் கடைந்த துப்பனே – உன்னை விரும்பாமல் ‘வேறு பிரயோசனங்களே அமையும்’ என்னுமவர்களுக்கும் ‘அளவிட முடியாத கடல்’ என்கிறபடியே,
ஒருவரால் அளவிட ஒண்ணாதபடியான கடலைக் கடைந்து கொடுத்த ஆற்றலை உடையவனே!

உன் தோள்கள் நான்கும் கண்டிடக் கூடுங்கொல் என்று ‘உன் தோள்கள் நான்கனையும் கண்டேனாய் விடக் கூடுமோ?’ என்று. அவர்களைப் போன்று உப்புச்சாறு கொண்டு போமவர் அல்லரே இவர்! அந்தக் கடலைக் கடைகிற போது பரந்திருந்த தோள்களைக் காணக் காணும் இவர் ஆசைப்படுகிறது. மதுரக் கொழுஞ்சாறு கொண்ட சுந்தரத் தோள்களே அன்றோ அவை?- நாய்ச்சியார் திருமொழி, 9 : 1.

இப்பொழுதே வந்திடாய் என்று – தம் துன்பமே செப்பேடாக-தாமர சாசனம்- அரைக்கணமும் தாழாமல் வரவேண்டும் என்று.-நோக்குவனே –வருவதற்குச் சம்பாவனை யுள்ள திசையைப் பாரா நிற்பன். ‘வருகைக்கு அவன் பக்கலிலும் ஏதேனும் நினைவு உண்டாயோ இவர் இப்படிச் செய்கிறது?’ என்னில் –ஏழையேன் – அஃது ஒன்று இல்லை. இவர் தம் ஆசையே உள்ளது.-ஆழ்வான் பணித்த வரதராஜ ஸ்தவத்திலே ஒரு சுலோகத்தைக் கேட்டு, எம்பெருமானார், ‘இப்பாசுரங் கேட்டால் பெருமாள் இரங்காமை இல்லை; ஆழ்வான், உன் முகத்தைக் காட்டிக் காணாய்,’ என்று பார்த்தருளினார்.-நாள்தோறும் – எப்பொழுதும். ‘நாள்தோறும் நாக்கு நீள்வன்’ எனக் கூட்டலுமாம். நாக்கு நீளுதல் – ஆசைப்படுதல்.-

———-

நோக்கி நோக்கி, உன்னைக் காண்பான், யான் எனது ஆவியுள்ளே
நாக்கு நீள்வன், ஞானம் இல்லை; நாள்தோறும் என்னுடைய
ஆக்கை யுள்ளும் ஆவி யுள்ளும் அல்ல புறத்தினுள்ளும்
நீக்கம் இன்றி, எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே
.–4-7-6-

யான் எனது ஆவியுள்ளே நாக்கு நீள்வன் – என் மனத்திலே ஆசைப்படாநின்றேன். ‘வாய் விட்டுச் சொல்லமாட்டாமல்’ என்பார், ‘எனது ஆவியுள்ளே’ என்கிறார் ஒரு விஷயத்திலே ஆசையுள்ளவனை ‘இவன் இவ்விஷயத்திலே நாக்கு நீட்டாநின்றான்,’ என்பார் அன்றோ?
ஆதலால், ‘நாக்கு நீள்வன்’ என்பது, ‘ஆசைப்படுவன்’ என்னும் பொருளைக் காட்டாநின்றது.
‘ஆசைப்படுவதற்குக் காரணம் என்?’ என்னில், ஞானம் இல்லை – இது இருந்தபடியால் என்னைப் போன்ற அறிவு கேடர் இலர். ‘சர்வேசுவரனைக் காண வேண்டும் என்று ஆசைப்படுகிற இது அறிவு கேடாக வேண்டுகிறது என்?’ என்னில்
என்னுடைய ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும் அல்ல புறத்தினுள்ளும் நீக்கம் இன்றி எங்கும் நாள்தோறும் நின்றாய் – உன்னைப் பெறுவதற்குத் தடையாக உள்ள என் சரீரத்திலும்,
பெற இருக்கிற ஆத்துமாவிலும்,இவை ஒழிந்த தடையாய் உள்ள உறுப்புகளிலும் விடாதே எங்கும் எல்லாக்காலத்திலும் புக்கு நின்றாய்.-கிழிச் சீரையிலே தனம் கிடக்கப் புறங்கால் வீங்குவாரைப்போலே காணும் இவர் படி.

நின்னை அறிந்து அறிந்து –இதன் பாதுகாவலுக்குச் சம்பந்தம் உடையன் ஆவது,
நிதானமறிந்து பரிஹரித்தற்கு முற்றறிவினன் ஆவது,-தொடங்கினது முடிக்க வல்ல எல்லா ஆற்றலையுமுடையன் ஆவது,-‘ஐயோ!’ என்று இரங்குகைக்கு நீர்மையுடையன் ஆவது,
எப்பொழுதும் உடனிருத்தலையுடையனாவது;-இப்படியிருக்க, ‘இவன் முகங்காட்டாதொழிகிறது, செய்ய நினையாமையே அன்றோ?’ என்று
இருக்க மாட்டாதொழிகிறது என் அறிவு கேடாமித்தனையே அன்றோ?‘

நான் சம்பந்தம் உள்ளவனாய் நீ சம்பந்தம் இல்லாதவனாய் இருக்கிறாய் அல்லை;
நான் முற்றறிவினனாய் நீ அறிவு இல்லாதவனாய் இருக்கிறாய் அல்லை; நான் எல்லா ஆற்றலையும் உடையவனாய் நீ ஆற்றல் இல்லாதவனாய் இருக்கிறாய் அல்லை; நான் எங்கும் பரந்திருப்பவனாய் நீ அணுவாய் இருக்கிறாய் அல்லை;
இத்தலை நோவு பட விட்டு அருள் அற்றவனாய் இருக்கிறாய் அல்லை; ‘உடையவனாய் வைத்து உடைமை நோவுபட விட்டிருக்கிறது செய்ய நினையாமையே அன்றோ?’ என்று ஆறி இருக்க மாட்டாதொழிகிறது என் அறிவு கேடாமித்தனை அன்றோ?’

நாராயணனே’ என்றதனை நோக்கிச் ‘சம்பந்தமுடையனாவது’ என்றும்,
‘ஞானமூர்த்தி’ என்றதனை நோக்கி,‘முற்றறிவினனாவது’ என்றும்,
‘துப்பனே’ என்றதனை நோக்கி, ‘ஆற்றலையுடையனாவது’ என்றும்,
‘ஞாலமுண்டாய்’ என்றதனை நோக்கி,‘நீர்மையுடையனாவது’ என்றும்,
‘நீக்கமின்றி எங்கும் நின்றாய்’ என்றதனை நோக்கி, ‘உடனிருத்தலை யுடையனாவது’ என்றும் அருளிச் செய்கிறார்.

1-நாராயணா -பிராப்தம் உண்டு
2-ஞான மூர்த்தி -சர்வஜ்ஞ்ஞன்
3-துப்பன் -சர்வசக்தன்
4-ஞாலம் உண்டாய் -இரக்க ஸ்வபாவம்
5-நீக்கம் இன்றி எங்கும் நின்றாய் -சதா சந்நிஹிதன்

—————

அறிந்து அறிந்து, தேறித் தேறி,யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
நறுந்து ழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே
.–4-7-7-

இத்திருப்பாசுரம் எச்சமாய்க் கிடக்கிறது; அதாவது,‘பேதைமை தீர்ந்தொழிந்தேனித்தனை; மார்பும் மாலையுமான வடிவழகைக் கண்ணிட்டுக் காணப் பெற்றிலேன்,’ என்பது எச்சம். அடைவிப்பவன் நீ -அடைந்து அனுபவிப்பனும் நீயே -மயர்வற மதி நலம் அருளினீரே -சிறிது செய்தமை உண்டு; இந்த அமிசத்தைப் பெற்றேன்; எனக்கு இதனால் போராது,’ என்கிறார்.

அறிந்து தேறி அறிந்து தேறி –முதல் திருவாய்மொழியிலே பரத்துவத்தை நினைந்தார், அது விஷயமானவாறே பிறப்பது ஒரு தெளிவு உண்டே அன்றோ?
அந்தத் தெளிவும்; பின்பு, ‘வணங்கத்தக்கவன்’ என்று அருளிச்செய்தார், அதனாலே பிறந்த ஒரு தெளிவும்;-பின்பு ‘சுலபன்’ என்று கூறினார், ‘அங்ஙனம் கூறியதால் பிறந்ததொரு தெளிவும்;-பின்பு, ‘குற்றங்களைப் பொறுப்பவன்’ என்று கூறினார், அதனாலே பிறந்தது ஒரு தெளிவும்-இப்படிக் கிரமத்திலே அன்றோ திருவாய்மொழி முடிய நடந்தது? இவையெல்லாம் மானச அனுபவங்களே அன்றோ?
அன்றிக்கே,
இனி, ‘அறிந்து அறிந்து தேறித்தேறி’ என்றதனை அர்த்த பஞ்சக பரமாக்கி வேறும் ஒரு கருத்து அருளிச் செய்கிறார், ‘
‘பரம்பொருளின் சொரூபத்தை அறிந்து தேறி, அந்தப் பரம்பொருளின் யாதாத்மியத்தை யறிந்து தேறி’ என்றபடி-இப்படியே, மற்றை நாலுக்கும் கண்டு கொள்க. யாதாத்மியம் – அதனுடைய முடிவின் எல்லை;அதனுடைய உண்மை நிலை.
நீ மயர்வு அற மதிநலம் அருளுகையாலே,
மிக்க இறைநிலை,
மனன் உணர்வு அளவு இலன், பொறி உணர்வு அவையிலன், எதிர் நிகழ் கழிவினும் இனன் இலன், மிகுநரை இலன்,-உணர் முழுநலம், இனன்’-. திருவாய். 1. 1 : 2.- என்று அறிய,
அதனாலே பிறப்பது ஒரு தெளிவும், அந்தப் பரமாத்தும சொரூபத்தினுடைய யாதாத்மியம்,
‘அது நமது விதி வகையே,’ -. திருவாய். 10. 6 : 1.-
‘நெஞ்சினால் நினைப்பான் எவன் அவன் ஆகும் நீள்கடல் வண்ணன்’-. திருவாய். 3. 6 : 9.- என்கிறபடியே, அர்ச்சாவதார பரியந்தமான அடியார்கட்குப் பரதந்திரப்பட்டவனாய் இருத்தல் என்று அறிய, அதனாலே பிறப்பது ஒரு தெளிவும்;
உயிர்நிலை,
‘சென்று சென்று பரம்பரமாய் யாதும் இன்றித் தேய்ந்து அற்று, நன்று தீது என்று அறிவு அரிதாய் நன்றாய் ஞானம் கடந்திருக்கும்’ . திருவாய். 8. 8 : 5.என்று அறிய, அதனாலே பிறந்தது ஒரு தெளிவும், அதனுடைய யாதாத்மியம்,
‘சிறுமாமனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரிய, நறு மா விரை நாண்மலர் அடிக்கீழ்ப் புகுதல் உறுமோ?’-6. திருவாய். 8. 10 : 3. என்றும்,
‘தம்மடியார் அடியோங்களே’ -. திருவாய். 3. 7 : 10.-என்றும் ‘அடியார்கட்கு அடிமையாய் இருத்தல் எல்லையாய் இருக்கும்’ என்று அறிய,-அதனாலே பிறந்ததொரு தெளிவும்;
தக்க நெறியின் சொரூபம்,
‘நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு’ -5-10-11-என்று அறிய, அதனாலே பிறந்தது ஒரு தெளிவும்;
அதனுடைய யாதாத்மியம், அறிவின் காரியமாய் அதிகாரி விசேஷணமான பிரபத்தியையும் உபாயமாகக்-கொள்ளப் பொறாதது என்று அறிய, அதனாலே பிறந்ததொரு தெளிவும்;
பல சொரூபம்
‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி, வழுவிலா அடிமை செய்கை’ -3-3-1-என்று அறிய, அதனாலே பிறந்தது ஒரு தெளிவும்;
அதனுடைய யாதாத்மியம், ‘உன்றன் திருவுள்ளம் இடர் கெடுந்தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும்’ -10-3-9-என்று அறிய, அதனாலே பிறப்பதொரு தெளிவும்;
விரோதி சொரூபம்,
‘யானே என்றனதே என்று இருக்கை’-2-9-9- என்று அறிய, அதனாலே பிறந்தது ஒரு தெளிவும்; அதனுடைய யாதாத்மியம்,
‘கைங்கரியத்தில் அகங்காரத்தை உட்கொண்டதான மமகாரம்’ என்று அறிய, அதனாலே பிறப்பது ஒரு தெளிவும் என்று பொருள் கூறலுமாம்.

ஆக, பரம்பொருளின் சொரூபத்தை அறிதலாலது, சித்து அசித்து இவற்றைக்காட்டிலும் வேறுபட்டிருப்பது என்று அறிதல்;
பரம்பொருளின் யாதாத்மியத்தை அறிதலாவது, ஆஸ்ரிதபாரதந்திரியம் என்று அறிதல்.
ஜீவாத்துமாவின் சொரூபத்தை அறிதலாவது, ஞான ஆனந்தங்கள் தொடக்கமானவை என்று அறிதல்;
ஜீவாத்துமாவின் யாதாத்மியத்தை அறிதலாவது, அவன் அடியார்கட்கு அடிமைப்பட்டிருத்தல் என்று அறிதல்.
உபாயத்தின் சொரூபத்தை அறிதலாவது, அவனே மோக்ஷத்திற்குச் சாதனமாக இருப்பவன் என்று அறிதல்;
உபாயத்தின் யாதாத்மியத்தை அறிதலாவது, இவன் செய்யும் பிரபத்தியையும் சாதனமாகப் பொறாது தானே சாதனமாக இருப்பவன் என்று அறிதல்;
பலத்தின் சொரூபத்தை அறிதலாவது, கைங்கரியம் புருஷார்த்தம் என்று அறிதல்;
பலத்தின் யாதாத்மியத்தை அறிதலாவது, தனக்கும் அவனுக்கும் பொதுவாக இல்லாமல், அவனுக்காகவே செய்தல் என்று அறிதல்;
விரோதி சொரூபத்தை அறிதலாவது, அகங்கார மமகாரங்கள் என்று அறிதல்;
விரோதி யாதாத்மியத்தை அறிதலாவது, கைங்கரியத்தில் அகங்கார மமகாரங்கள் என்று அறிதல் எனக் கொள்க.

நறுந்துழாயின் கண்ணி வேந்தே –-வைத்த வளையத்தைக் காட்டி அவ்வடிவிலே குருகுலவாசத்தைப் பண்ணுவித்து அறிவு பிறப்பித்தாயிற்றுத் தனக்கு ஆக்கிக் கொண்டது.
இவ்வறிவு பிறக்கைக்கு அவன் இட்ட பச்சை இருக்கிறபடியைத் தெரிவித்தபடி.-நான் உனைக் கண்டு கொண்டே.–-பெற்ற அம்சத்தாலே திருப்தி பிறவாத நான் – நிரதிசய போக்யனான உன்னைக் கண்டு கொண்டு -அறிந்து அறிந்து தேறி தேறி -என்று அந்வயம்

—————–

கண்டு கொண்டு, என் கைகள் ஆர, நின் திருப்பாதங்கள் மேல்
எண் திசையும் உள்ள பூக்கொண்டு ஏத்தி, உகந்துகந்து,
தொண்டரோங்கள் பாடி ஆட, சூழ் கடல் ஞாலத்துள்ளே
வண் துழாயின் கண்ணி வேந்தே! வந்திட கில்லாயே
.–4-7-8-

மேல் திருப்பாசுரத்தில் பெற்ற அமிசம் சொன்னார்; ‘பெறாத அமிசம் இது’ என்கிறார் இத்திருப்பாசுரத்தில்.கண்டுகொண்டு –‘காண விரும்பும் என் கண்கள்’-3. 8 : 4. என்கிறபடியே, காணப் பெறாமல் பட்டினி விட்ட கண்கள் பட்டினி தீரும்படி கண்டு கொண்டு.
‘அரவிந்தம் போன்று நீண்ட கண்ணானைக் கண்ணாரக் கண்டு கொண்டு’-பெரிய திருமொழி. 2. 5 : 8. என்கிறபடியே, இக் கண்களின் வயிறு ஆரக் கண்டு கொண்டு.

என்கைகள் ஆர –‘தாயவனே என்று தடவும் என்கைகள்’-3. 8 : 3.- என்கிற கைகளின் உறாவுதல் தீரும்படியாக.-கலியர், ‘வயிறார உண்ண’ என்னுமாறு போன்று, ‘கைகள் ஆர’ என்கிறார்.

நின் திருப்பாதங்கள் மேல் –உனக்குத் தாரகமுமாய் இனிய பொருளுமான திருவடிகளிலே. பிடித்துச் சுவைத்து உண்ணும் பாதக் கமலம் ஆதலின்,-பெரியாழ்வார் திருமொழி 1. 2 : 1. தாரகம் தானேயாய் நின்றது.-‘சுவைத்துண்ணும் பாதம்’ என்றதிலே நோக்கு.
‘திரு’ என்றதனாலே, போக்கியமும், ‘பாதம்’ என்றதனாலே, தாரகமும் பெறப்படுதலின்,
‘தாரகமுமாய் இனிய பொருளுமான’ என்கிறார்.
அன்றிக்கே,
‘உன் தேனே மலரும் பாதமாதலின்,-திருவாய். 1. 5 : 5.- எனக்கு வகுத்ததுமாய் இனிய பொருளுமான உன் திருவடிகளிலே’ என்னுதல்
முன்பும் விஷயங்களிலே தொடர்ந்து செல்லுமது உண்டே அன்றோ?
அங்ஙன் அன்றிக்கே,-அடையத் தக்கவனாக உன் திருவடிகளிலே; ‘உன்னுடைய தாமரை போன்ற பாதங்களை அடைவதனாலே பிறவியின் பயனை அடைந்தவனாகக் கடவேன்,’ -மாலதீ மாதவ நாடகம்.-என்பதனைக் கேட்ட ஆளவந்தார்,
‘வார்த்தை அழகியது! வகுத்த விஷயத்திலேயாகப் பெற்றிலோம்,’ என்று அருளிச் செய்தார்.
‘போக்கியதை யுண்டானாலும் அடையத் தக்கதாய் இராதாகில், அது தியாஜ்யம்,’ என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார்,

எண் திசையும் உள்ள பூக்கொண்டு –
விஷயத்திற்குத் தகுதியாகவும் தம்முடைய ஆசைக்குத் தகுதியாகவும் இருக்க வேண்டுமாதலின், ‘எண் திசையும் உள்ள பூ’ என்கிறார்.
தம்முடைய ஆசைக்குத் தகுதியாக ‘ஆசையில் உள்ளவை எல்லாம் வேண்டும்,’ என்கிறார்.
அவ்வாசைதான் திக்குப்பட்டே அன்றோ இருப்பது? கலியர் ‘கல அரிசிச்சோறு உண்ண வேண்டும்,’ என்னுமாறு போன்று.-இங்ஙனமே அன்றோ கைங்கரிய ருசியுடையார் வார்த்தை இருப்பது? ‘நான் உமக்கு எல்லா அடிமைகளையும் செய்வேன்,’ என்றாரே அன்றோ இளைய பெருமாள்?
உகந்து உகந்து –பிரீதி மாறாதே செல்லும்படியாக.
தொண்டரோங்கள் – இந்தக் கைங்கரியத்தில் இனிமை அறிந்த நாங்கள்.-‘கேசவன் தமர்’க்குப் பின் தனியர் அல்லராதலின், ‘தொண்டரோம்’ என்கிறார்.

பாடி ஆடபிரீதியினாலே தூண்டப்பட்டவர்களாகிப் பாடுவது ஆடுவதாம்படி.
‘இதுவாயின், முன்பே நாம் செய்வதாக இருந்தது ஒன்றே அன்றோ? இந்தச் சரீர சம்பந்தம் அற்றால், ஒரு தேச விசேடத்தில் கொண்டுபோய், ‘மேலே சொல்லப் போகிற சாமத்தைப் பாடிக் கொண்டிருக்கிறான்’ என்னும்படி பண்ணுகிறோம்,’ என்ன, ‘அதுவோ நான் விரும்புகிறது? அன்று; இங்கேயே,’ என்கிறார் மேல் :

சூழ் கடல் ஞாலத்துள்ளே – கடல் சூழ்ந்த இவ்வுலகத்துள்ளே நான் காண வரவேண்டும். என்றது,-‘எங்கேனும் விடாய்த்தாரை எங்கேனும் விடாய் தீர்க்க ஒண்ணாது என்கிறார்’

வண் துழாயின் கண்ணி வேந்தே –-இவ்வுலகத்துக்குள்ளே காட்டுமிடத்தில், அங்குள்ளார்க்குக் காட்சி கொடுக்குமாறு போலே காட்டவும் வேண்டும்.
நித்திய ஸூரிகளுக்குக் காட்சி கொடுக்கும் ஒப்பனையோடே காட்டவும் வேண்டும்,’ என்பார்,
‘துழாயின் கண்ணி வேந்தே’ என்கிறார்.

வந்திடகில்லாயே
வந்திடுகின்றிலை. இதனால் ‘கூவியுங்கொள்ளாயே’ என்றது பற்றாது என்கிறார். இது நான் பெறாத அமிசம்.

‘இவைதாம் இருந்தபடி என்? இந்தச் சரீர சம்பந்தம் அற்றமையும் இல்லை; கைங்கரியம் பெற்றமையும் இல்லை;-இங்ஙனம் இருக்க, ‘இவ்வமிசம் பெற்றேன், இவ்வமிசம் பெற்றிலேன்’ என்கிறபடி என்?’ என்னில், ஒன்று குறிக்கோளாய், மற்றையது அதற்கு உறுப்பாய் வருவதே அன்றோ? -( கைங்கர்யத்துக்கு தேக விநியோகம் உறுப்பு அன்றோ )
இவர்தாம் முதலிலே ‘இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை’ என்றார்;-அவனும் அளவிலா ஆற்றலை யுடையவனாய் இருந்தான். ஆதலால்,-இது கழிந்ததே அன்றோ?’ என்று அதனைப் பெற்றாராக நினைத்திருந்தார்;-கைங்கரியம் அவசியம் பெற்றல்லது நிற்க ஒண்ணாமையாலே, ‘அது கை புகுராமையைப் பற்றப் பெற்றிலேன்,’ என்கிறார்.-

————–

இடகிலேன் ஒன்று; அட்டகில்லேன்; ஐம்புலன் வெல்லகிலேன்;
கடவனாகிக் காலந்தோறும் பூப்பறித்து ஏத்தகிலேன்;
மடவல் நெஞ்சம் காதல் கூர, வல்வினையேன் அயர்ப்பாய்த்
தடவுகின்றேன்; எங்குக் காண்பன் சக்கரத்து அண்ணலையே?
–4-7-9-

நூல் பிடித்தாற்போலே சாஸ்திரங்களிலே சாதனரூபமாகச் சொல்லுகிற சமாராதனத்தில் இவர்க்குச் சம்பந்தம் இல்லை;-நூல் – சாஸ்திரமும், முறையும். ‘முறை தப்பாமல்’ என்றபடி. தேக யாத்திரைக்கு – கைங்கரியத்திற்கு.-அதாவது, கைங்கரியம் செய்யாத போது தரிக்கமாட்டாமையாலே செய்துகொடு நிற்பர்.இதனால், ‘பிராப்பியம் என்ற எண்ணத்தால் செய்யுமது உண்டு’ என்றபடி.

மடம் வல் நெஞ்சம் –மடப்பத்தால் மென்மையை நினைக்கிறது : அதாவது, ‘பகவத் விஷயம்’ என்றால் கடுக விழுந்து கொண்டு நிற்கை.
வன்மையாவது, விழுந்தால் பின்னை அங்கு நின்றும் மீட்க அரிதாய் இருக்கை.
காதல் கூர – இப்படிப்பட்ட மனத்திலே அன்பு மிக. வல்வினையேன் எங்குக் காண்பன் –
அன்பிற்குத் தகுதியாகக் காணப் பெறாத பாவத்தைச் செய்தவன். காதலுக்கு விஷயம் பெற்றேன் அல்லேன்;-இதனை அகஞ்சுரிப்படுத்தினேன் அல்லேன், ஆசை சிறிதுடையார்க்கு முகங்கொடாதவனாய் இழந்தேன் அல்லேன்;-என் பாவம் இருந்தபடி என்?’ என்கிறார்.

சக்கரத்து அண்ணலையே –கையில் திருவாழியையுடைய சர்வேசுரனை. எங்கே காணக் கடவேன்? யசோதைப் பிராட்டி கையும் வெண்ணெயுமாகப் பிடித்துக் கொண்டாற்போலே, கையும் நெய்யார் ஆழியுமாகப் பிடித்துக் கொள்ளவாயிற்று இவர் ஆசைப்படுகிறது.
நெய் -கூர்மை -நெய் பூசப்பட்ட என்றுமாம்-

————

சக்கரத்து அண்ணலே! என்று தாழ்ந்து, கண்ணீர் ததும்ப,
பக்கம் நோக்கி நின்று, அலந்தேன்; பாவியேன் காண்கின்றிலேன்;
மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கினை என்
தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே
.–4-7-10-

கண் நீர் ததும்ப –கண்கள் நீர் மிகைக்கும்படி. இவருடைய துக்கத்தின் எல்லை காண்பது கண்ண நீரிலே காணும்.-காணப்பெறாது ஒழிந்தால் மறந்து பிழைக்கலாம்படி நெஞ்சில் பிரகாசிக்காமல் ஒழியத்தான் பெற்றேனோ?’

வேத விளக்கினை –வேதமாகிற விளக்காலே காணப்படுமவனை.–வேதத்துக்கு விளக்கு’-‘வேதத்தைப் பிரகாசிக்கச் செய்கின்றவனை’-நெஞ்சில் பிரகாசிப்பதுவும் துக்கத்திற்குக் காரணம் ஆகாநின்றது. என்றது,-‘மயர்வு அற மதிநலம் அருளினன்’ என்கிற ஞான பத்திகள் இரண்டும் கழுத்துக் கட்டியாய் விட்டன,’-கண்டு அனுபவிக்கவும் ஒட்டாது,
மறந்து பிழைக்கவும் ஒட்டாது,’ என்றபடி-

————-

தழுவி நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன்றனைக்
குழுவு மாடம் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல்
வழு விலாத ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இப்பத்தும்
தழுவப் பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே.
–4-7-11-

தழுவி நின்ற காதல் தன்னால்-நான் விடுவேன்’ என்றாலும் விட ஒண்ணாதபடியாய் உடன் வந்தியான அளவு கடந்த காதலாலே-தாமரைக் கண்ணன் தன்னை –இந்தக் காதலுக்குக் கிருஷி பண்ணின –நேத்திரபூதரைச் சொல்லுகிறார்.-அந்தரங்கர் -என்றுமாம் –செந்தாமரைக் கண்ணோடு மறப்பற என்னுள்ளே மண்ணினான் -என்னக் கடவது இறே -இது இறே மதி நலம் அருளின படி

குழுவு மாடம் தென் குருகூர்-‘ஆழ்வார்க்குத் துக்கம் மிக மிகச் சர்வேசுவரன் வரவு தப்பாது’ என்று திருநகரி குடி நெருங்கிக் குளிர்ந்து தேறினபடி-ஆழ்வாருடைய மனநலம் ஒருவர்க்கும் பிறக்கமாட்டாதே அன்றோ? தழுவப் பாடி-அதிலே சிறிது அணைய நின்றாகிலும்-காண ஆசைப்பட்டுக் கூப்பிடுகிற இவ்வுலகத்தைக் கழித்து, எப்பொழுதும் அனுபவிக்கத் தக்க பரமபதத்திலே புகப்பெறுவர்.-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -71 -ஊழி களாய் உலகு ஏழும் உண்டான் –எங்கனேயோ அன்னைமீர்காள் -5-5-

March 8, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

தலைவி களாம் பழம் ஆழி வண்ணம் போல் உள்ளது என்றதே கொண்டு அன்னை -தாயானவள்
பிறக்கும் போதே தாயார் போல் இவள் நான் படும் கஷ்டம் அறியாதவள்-நாழ்-சாமர்த்தியம்-பல பல நாழ் சொல்லி சிசுபாலன் போல்-திருத்தாயார் -செவிலித்தாயார் வெறுத்துப் பேச-தோழிக்கு தலைவி அப்படி பேசவில்லை நீ சொல்லி -தப்பு உண்டோ உரையீர்-தாய்க்கு பரிகாரம் உரையீர் என்றுமாம்-உபாயாந்தர சம்பந்தம் என்று கொள்வானோ என்று–எங்கனேயோ அன்னைமீர்காள் -5-5-இதன் விவரணம்–ஊழி-கால உபலஷித்த அனைத்து பதார்த்தங்களும் நிர்வாஹகன்-சொல்ல வேண்டியவற்றை எல்லாம் சொல்லி என்று இலோம் சொன்னால் தாயார் இன்னாவாள் என்று –

அவதாரிகை –களவிலே புணர்ந்து நீங்கின தலைமகன் –இவள் ஆற்றாமையை பரிகரிக்கைக்காக
இவள் வர்த்திக்கிற தேசத்தில் தன் நிறத்தோடு போலியான பழங்களை சிலர் விற்பர்களாக பண்ணி –
இவளும் அத்தைக் கண்டு தரிக்க –அத்தை தாயார் நிஷேதிக்கிறாள் – தாயார் சொல்லுகிற மிகையை தலைமகள்  தோழி மாருக்கு சொல்லுகிறாள்–செவிலி  வெறுத்தலைத் தலைவி   தோழியர்க்கு உரைத்தல் —உண்டு ரக்ஷித்தான் -காரணம் ரஷகன் -சொன்னால் –காரணந்து த்யேய -உபாசகன் பேச்சு என்று கொள்வானோ என்று அஞ்சும் தாயார்-

இப்படித் தளர்ந்தவர் தம்முடைய ப்ராவண்ய அதிசயத்தாலே பல வை லக்ஷண்யத்தின் பெருமையை அனுசந்தித்து வார்த்தை சொன்னபடியைக் கேட்ட பரிவுடையார் இவர் ப்ராப்ய ப்ராவண்யத்தாலே சொன்ன பாசுரம் என்று அறியாதே சாதநந்தர நிஷ்டரைப் போலே உபாஸ்ய வேஷத்தைப் போற்றி விடுகிறாராக நினைத்துப் பரிவாலே நியமித்த பாசுரத்தைத் தம்முடைய ஸூஹ்ருத்துக்களுக்கு ஆவிஷ் கரித்து இவர்கள் நெஞ்சு அறியாமல் ஆரோபித்துச் சொல்லுகிறார்கள் என்று அருளிச் செய்து அந்த ஸூஹ்ருத்துக்களை விட்டுப் பரிவரைத் தெளிவிக்கும் பாசுரத்தை-தலைவன் அடியான தலைவி தன் ஆர்த்தியை ஊரார் முதலான குறியாலே அறிந்து அன்னை முனிந்த பாசுரத்தைத் தோழிமார்க்கு யுரைத்து அவர்களால் தெளிவித்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு –அவதாரிகை களவிலே புணர்ந்து பிரிந்த தலைமகன் இவள் ஆற்றாமையைப் பரிஹரிக்கைக்காக இவள் வர்த்திக்கிற தேசத்தில் தன் நிறத்தோடு போலியான பழங்களைச் -பலங்களைச் – சிலர் விற்பார்களாகப் பண்ண-இவளும் அத்தைக் கண்டு தரிக்க அத்தைத் தாயார் அறிந்து நிஷேதித்துச் செய்கிற மிகையைத் தலைமகள் தோழிமார்க்குச் சொல்லுகிறாளாய் இருக்கிறது

ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம் பழம் கண்டு
ஆழி களாம்  பழ வண்ணம் என்றேற்கு அக்தே கொண்டு அன்னை
நாழி வளோ வென்னும் ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்
தோழிகளோ உரையீர் எம்மை யம்மனை சூழ் கின்றவே 
– – -71-செவிலித் தாயின் கோபத்தைத் தலைவி தோழியிடம் கூறுதல் –எங்கனேயோ  அன்னைமீர்காள் -5-5-

ஊழிகள் ஆய்–காலங்களுக்கு நிர்வாஹகனாய் (மஹாகல்பகாலத்தின் முடிவிலே)
உலகு ஏழும் உண்டான்–உலக முழுவதையும் திருவயிற்றில் வைத்துக் காத்தருளியவன்
என்றிலம்–என்று (யாம் தலைவனது பெயர் பெருமை தொழில் முதலியவற்றை வெளிப்படையாகக் ) கூறினோமில்லை.
களா பழம் கண்டு–களாப் பழத்தைப் பார்த்து
பழம் வண்ணம் ஆழி என்றேற்கு–‘இப்பழத்தின் நிறம் கடலின் நிறம்’ என்று(குறிப்புப் பொருளொன்றுங் கருதாமல் இயல்பாகச்) சொன்ன எனக்கு
அஃதே கொண்டு–அந்தச் சொல்லையே பொருளாகக் கொண்டு
அன்னை–(எனது) தாய்
இவளோ நாழ் என்னும்–‘இப்பெண்பிள்ளையோ (என் சொற்கேளாது தன் நினைவின்படி) சுதந்தரமாய் நடக்குஞ் செருக்குடையவள்’ என்று (கடுஞ் சொற்) கூறுவன்;
ஞானம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்–உலகமுண்ட அத்தலைவனது நிறத்தைச் சொன்னவாறு-இது என்று குற்றங் கூறுவன்;
தோழிகளோ–தோழிகளே!
எம்மை அம்மனை சூழ்கின்ற–எம்மை எமது தாய் மாறுபட நினைத்து ஏறிட்டுச் சொல்லுஞ் சொற்களுக்கு
உரையீர்–நீங்கள் (சமாதானஞ்) சொல்லுங்கள்

எங்கனே நீர் முனிவது என்னை யினி நம்பி அழகு
இங்கனே தோன்றுகின்றது என் முன்னே -அங்கன்
உரு வெளிப்பாடா வுரைத்த தமிழ் மாறன்
கருதும் அவர்க்கு இன்பக் கடல்
—45-உறங்குவான் போல் யோகு செய்த பெருமான் -என்று ரஷகனுடைய குண ஞானத்தாலே மீளவும் தெளிவு குடி புகுந்து-நம்பியைத் தென்குருங்குடி நின்ற -1-10–என்று
முன்பு அனுபூதமான ஸ்ரீ நம்பி உடைய வடிவு அழகு நெஞ்சிலே ஒருபடிப்பட பிரகாசிப்பிக்கையாலும்
யதா மநோ ரதம் அவ் வடிவு அழகைக் கண்ணால் கண்டு அனுபவிக்கப் பெறாமையாலும் ப்ரீத்ய அப்ரீத்ய சமமாய் செலுகிற தம் தசையை ஸ்ரீ நாயகனோடு கலந்து பிரிந்து உரு வெளிப்பாட்டாலே உருவ நோவுபட்டு செல்லுகிற ஸ்ரீ பிராட்டி பேச்சாலே அருளிச் செய்கிற எங்கனயோ – வில் அர்த்தத்தை-எங்கனே நீர் முனிவது -என்று தொடக்கி அருளிச் செய்கிறார் -என்கை —அது ஆண் தன்மையான அனுபவம் -இது பெண் தன்மையான அனுபவம் – உரு வெளிப்பாடு –முன்பு அனுபூத அனுபவம் இருக்க ரசாந்த்ரம் தேடுவது அன்றோ –சென்னி நீண் முடி யாதியாய வுலப்பில் அணி கலத்தன் கன்னல் பாலமுதாகி வந்து என்நெஞ்சம் கழியான்-என்று ஸ்ரீ ஆழ்வார் தமக்கு அவ் வாகாரம் இனிதாய் இருக்குமா போலே அவர் சம்பந்திகள் ஆனவர்களுக்கும் ஸ்ரீ ஆழ்வார் அப்படியே இருப்பார் -என்றபடி –

ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம்–இப்படி சொன்னேன் ஆகில் குற்றமாம் இறே
கால உபலஷித ஸகல பதார்த்தங்களுக்கும் நிர்வாஹகனாய்-இவற்றை பிரளயம் வர எடுத்து திரு வயிற்றிலே வைத்து நோக்கின மஹா உபகாரகன் என்றிலேன்–குண நிஷேதத்தைப் பண்ணப் புக்கவர்கள் ஸத்ய ஞானாதி பதங்களுக்கு வ்யாவர்த்ய பதத்தாலே பேதம் சொல்லுமா போலே
இவளும் குண ஸத் பாவத்தை சாதிக்கைக்காக வ்யதிரேக முகத்தாலே குணங்களை சொல்லித் தரிக்கிறாள்–இவளுக்குச் சொல்லுகைக்கு பிராப்தி யுண்டு-அவளுக்கு இதிலே ஒரு கருத்து உண்டு என்று நிஷேதிக்கைக்கு பிராப்தி யுண்டு-உபகரித்த விஷயத்தில் உபகாரம் கொண்டவர்களும் பேசாது இருக்க ஒண்ணாது இறே-சேதனரானார் பேசாது இரார்கள் இறே-இவளுக்கு இது விபாகத்திலே பொல்லாதாம் என்று ஆயிற்று அவள் நிஷேதிக்கிறது -குணாதிக விஷயத்தில் ப்ராவண்யம் கிலேச அவஹமாய்த் தலைக்கட்டும் என்று இருக்கும் இறே–ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம்-இப்படிச் சொன்னாள் ஆகில் குற்றம் ஆகுமே-எதிர்மறையாய்ச் சொல்லி குணம் சொல்லுகிறாள்சத்யம் ஞானம் அனந்தம்-ப்ரஹ்மம் ச விசேஷம் -கூடியே இருக்கும் -குணம் குணி இரண்டும் வருமே–விஸிஷ்ட ப்ரஹ்மம்-ஏகமேவ ப்ரஹ்மம்-ப்ரஹ்மம் ஒன்றே சத்யம் அத்வைதி–ஞான மயமாகவே இருக்கும் சத்தியமாக இருக்கும்-ஞானம் சத்யம் கூடியதாக சொல்ல மாட்டார்கள்-அசத்தியம் வேறுபட்டதாய்-எல்லாவற்றையும் விட வேறுபட்டதாய்-அபேதம் சித்திக்க மாயாவாது-தர்சனம் பேத ஏவச -தேவப் பெருமாள் ஆறு வார்த்தைகள்-ஈஸ்வரன் நிர்குணன் என்று கூறும் மாயாவாதிகள் இப்படி கூறுவார்கள்-ஸத்ய ஞானாவாதி வியாவர்த்தம் –-எதிர்சொல் பொய் -ஜடம் ஞான சூன்யம் -பரிச்சின்னம் -சொல்களைக் கொண்டு இவை இல்லாமல் வேறுபட்டதாய் ப்ரஹ்மம் இருக்கும் என்பர்–சத்யம் என்கையால் சத்யாதி வேறுபாடு-ஹனானாம் ஜடம் வேறுபாடு-அனந்தம் -பரிச்சின்ன வேறுபாடு–அசத்தியத்வம் கூடி இருக்கும் வருமே -இங்கும் பேதமே சித்திக்கும்-கூடியே இருப்பதால் ப்ரஹ்மம் விசிஷ்டம் தானே சித்திக்கும் -பிரளயம் வர தனது வயிற்றிலே வைத்து ரஷித்தவன் அல்லேன் என்று சொன்னேன் அல்லேன்–குணங்களை சொல்லி தரிக்கிறாள்–உண்டான் -உண்மை -நாம் சொல்ல வில்லை -உண்மையை எனது வாயால் சொல்ல வில்லை உண்ணவில்லையே ஆகுமோ -ஆழமான அர்த்தம் -இவளுக்கு சொல்லுகைக்கு பிராப்தி உண்டு–அவளுக்கு நிஷேதிக்கவும் பிராப்தி உண்டு–அபகரித்த விஷயத்தில் உபகாரம் கொண்டவர்கள் பேசாமல் இருக்க ஒண்ணாதே -சேதனர்கள் ஆனால் பேசாமல் இருக்க மாட்டார்களே -குணாதிக விஷயத்தில் இவ்வளவு ஈடுபட்டால் கிலேஸிக்க வேண்டி வருமே–இவளும் குணம் சாதிக்கவேஏழு உலகும் உண்டான் சொல்லி சொன்னேன் அல்லேன் என்று தப்பிக்கப் பார்க்கிறாள்

பழம் கண்டு புரோ வர்த்தியான பதார்த்தங்களை கடமாகில் கடம் என்றும் படமாகில் படம் என்றும் சொல்லக் கடவது இறே-பிள்ளாய் கண்டது சொல்லுகையும் குற்றம் ஆவதே–ஆழி களாம் பழ வண்ணம் என்றேற்கு –-களாம் பழ வண்ணமானது ஆழி போலே இருந்தது-என்று இத்தனை கிடி கோள் நான் சொல்லிற்று – அவள் ஆழி வண்ணரை அன்றா சொல்லிற்று -என்று கொண்டாள் அவள் –அக்தே கொண்டு –இவ் உக்தி மாத்ரத்தில் பர்யவசியாதே இதுக்கு-வேறு ஒரு கருத்து உண்டு என்று கொண்டு –அன்னை –இவள் பிறந்த அன்று தொடங்கி தாயாயோ-வளர்ந்தது – ஒரு கால் பெண் பிள்ளையாயும் வளர்ந்திலள் போலே காணும்  –குற்றம் உண்டாகில் பிராப்தம் இறே –குற்றம் இல்லாத இடத்திலும் நியந்த்ரு நியாம்ய பாவம் அமையுமோ நியமிக்கைக்கு –நாழ் இவளோ என்றும் –நாமும் எல்லாம் பழம் கண்டது சொல்லிப் போருகிறோம் இறே –இவளுக்கும்-நாம் சொல்லுகிற அளவே அமையாதோ –இவளுக்கு ஓர் ஏற்றம் என் செய்ய வென்னா நின்றாள் –நாழ் -என்று தரம் உடைமை – அத்தாலே ஏற்றத்தை சொல்லுகிறது –அதாகிறது-நருவட்டாணித் தனம் –இவளுடைய ஏற்றம் எது என்னில்
ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்றும் –பிரளய ஆபத்திலே ஜகத்தை அடங்க வயற்றிலே வைத்து நோக்கிய அக் குணத்திலே  வித்தையாய் ஆற்ற மாட்டாமை சொன்ன வாரத்தை யன்றோ  இது -என்னா  நின்றாள் –தோழிகளோ உரையீர் –நீங்கள் முன்னம் என்னோடு சமான சுக துக்ககைகள்   அன்றோ தாய்மார் அல்லீர்கோள்–எம்மை அம்மனை சூழ் கின்றனவே  – என்னை மனைப்பாம்பு போலே புக்க விடமும் புறப்பட்ட விடமும் தானே யாய் நலிகிறபடிக்கு நீங்கள் தானே ஏதேனும் சொல்ல வல்லீ  கோளோ–சூழ்கின்ற –முத்துலை இட்டுக் கொண்டு (ஒன்றுக்கு மூன்றாகச் சொல்லி )இவள் நலியா நின்றாள் –காண்கிறதும் சொல்லுகிறதும் கிடக்க –இதுக்கு வேறே ஒரு கருத்து உண்டு என்று இவள் நலிகிறதற்கு  நீங்கள் தான் ஒரு பரிகாரம் சொல்லீ கோளே-

ஊழி களாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம் பழம் கண்டு களாம் பழ வண்ணம்
ஆழி என்றேற்கு அக்தே கொண்டு அன்னை நாழி களோ வென்றும் ஞாலம் உண்டான்
வண்ணம் சொல்லிற்று என்றும் எம்மை அம்மனை சூழ்கின்ற வற்றை தோழிகளே உரையீர்-என்று அந்வயம் –

மனைப் பாம்பு -கிரகத்தில் வர்த்திக்கிற பாம்பு முத்துலை இட்டு -நீர் ஏற்ற ஒரு குழி கல்லி ஏற்றம் இட்டு அதிலே ஏற்றி மீண்டும் ஒரு குழி கல்லி ஏற்றம் இட்டு ஏற்றுவாரைப் போலே –ஒன்றைச் சொல்லி அதுக்கு மேலே ஒன்றை கற்ப்பிக்கிறாள்  – பழம் என்கிறது காண்கிறது ஆழி –ஆழி வண்ணன் -என்கிறது சொல்கிறது —உரையீர் -நான் சொல்வதில் குற்றம் உண்டோ என்னுதல் -இவள் சொல்லுக்கு பரிகாரம் சொல்லுங்கோள்  என்னுதல்-என்றேற்கு -என்று சொன்னேன் என்றபடி
வட்டாணி -சமத்காரம் -சாமர்த்தியமாக சொல்லுதல் -நறு வட்டாணி -நல்ல சமர்த்து-மனைப் பாம்பு கடியா விட்டாலும் பயங்கரமாய் இருக்குமா போலே-இவள் சொன்னது செய்யா விட்டாலும்-பயங்கரமாய் இருக்கும் என்றபடி-முத்துலை ஒன்றுக்கு மூன்று சொல்லுகை -கடியன் கொடியன் -அப்படிப்பட்டவன் பிரளய காலத்திலேயே வந்து உதவினான் -என்று வ்ருத்த கீர்த்தன முகேன உபகாரத்தை ஸ்த்ரீகரிக்கைக்காக--ஸத்ருச வஸ்துக்களை ஆகிலும் கண்டால் ஒழிய ஜீவிக்கக் கூடாமையாகிய
ப்ராவண்ய அதிசயத்தைக் கண்ட சில அன்பர்-சாதனாந்தர பரராக பிரமித்து இவரது ப்ராவண்யத்தை நிஷேதிக்க தம்முடைய அபிப்ராயத்தை மற்றும் சில ஸூஹ்ருத்துக்களுக்கு ஆவிஷ்கரித்து
அவர்களைக் கொண்டு இவர்கள் பிராந்தியைப் போக்கினை பாசுரத்தை நாயகனுடன் ஒத்த பாதார்த்தங்களைக் கண்டு தரிக்க நினைத்த விரஹிணியான நாயகியை நிஷேதித்த தாயமார்க்கு
சகிகளைக் கொண்டு தன் அபிப்ராயத்தை அறிவித்து தெரிவித்த நாயகியின் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்-ஆழி -கடல்-வண்ணமே இந்த களாம் பழம் என்றேன்-ஆழி வண்ணனின் வண்ணம் என்று சொன்னேனோ-ஆனால் அன்னை இவள் மனதில் அவனையே நினைத்து இப்படியே சொல்கிறாள் என்கிறாள்-காரணந்து த்யேய -உபாசகர் போல் சொல்கிறாள் என்று ஒன்றுக்கு மூன்றாகச் சொல்லி அன்றோ சொல்கிறாள்

அலர் பரவும் தாய் முனியவும் இருக்கிற இக்கள வொழுக்கம் இனி ஆகாது –-மணந்து கொள்ளல் வேண்டும் என்று விவாஹ ருசியை வெளியிட்டவாறு –ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம்–ஊழிகள்-பன்மை காலத்தின் பகுப்புக்களைக் குறிக்கும் -சகல காலங்களுக்கும் நிர்வாஹகன் -சர்வ ரக்ஷகன்-பழம் கண்டு-ஆழி களாம் பழ வண்ணம் என்றேற்கு-பழத்தின் நிறம் கடலின் நிறம் என்றே சொன்னேன் – நாழ் குற்றம் –தாயின் முனிவைத் தலைவி தோழியர்க்கு உரைத்த பாசுரம் இது.
நாயகனைக் களவொழுக்கத்தாற் புணர்ந்து பிரிந்து நாயகி வருந்துமளவில் அக்களவொழுக்கம் மெல்ல வெளிப்பட்டு ஊரெங்கம் பழி பரவ,அதனை யறிந்த தாய் ‘இது நம் குடிக்குக் குறையாம்’ என்று கருதி இவளை நிர்பந்தத்திலே வைத்திருக்க, அவளுக்கு அஞ்சி நாயகி தன் ஆற்றாமையால் வாய் பிதற்றுதலொன்றுஞ் செய்யாத ஆற்றாமையை அடக்கிக் கொண்டிருக்க, அவ்வளவிலே சிலர் களாப்பழங்கொண்டு விற்க, அதனை நோக்கி நாயகி ‘இதன் நிறம் கடல்போலுள்ளது’ என்று பாராட்டிக் கூற, ஏற்கனவே இவன்மேல் குறிப்புக் கொண்டுள்ள தாய் ‘இவள் இப்படி சொன்னது நாயகனது நிறத்தைப் பாராட்டிக் கூறியபடியாம்’ என்று உட்கொண்டு இப்படியும் ஒரு அடங்காத்தன்மை யுண்டோ’ என்று வெறுக்க, அதற்குக் கலஙகிய நாயகி தோழியரை நோக்கி ஒருவகையான உட்கருததையுங் கொண்டு சொல்லவறியாத எனது தன்மையை நீங்கள் அவளுக்குச் சொல்லி அவளுடைய கோபத்தைத் தனிப்பீராக வென்று வேண்டிக் கொள்ளுகிறாளென்க.–சில பிரதிபந்தங்களினால் நாயகனை அடையப் பெறாத நாயகி, அவன் தன்னை வெளிப்படையாக விரைவில் விவாஹஞ் செய்து கொள்ள வேண்டுமெனக் கருதிச் சிறைப்புறத்தானாகுமளவில் தோழியர்க்குச் சொல்லுவாள் போன்று
ஊர்ப்பழி மிகவும் பரவியிருக்கிறபடியையும் அதனைக் தாயுமறிந்து வெறுக்கிறபடியையும் தெரிவிக்கும் முகத்தால் விரைவில் வெளிப்படையாக விவாஹஞ் செய்து கொள்ளத் தூண்டியதாமிது.
அவர் பரவவும் தாய் முனியவும் இருக்கிற இக்களவொழுக்கம் இனி ஆகாது, மணந்து கொள்ளல் வேண்டும் என்று விவாஹ ருசியை வெளியிட்டவாறு.–ஊழிகளாய் உலகேழு முண்டானென்றிலம் = ஊழிகள் என்ற பன்மை காலத்தின் பகுப்புகளைக் குறிக்கும்; ஸகல காலங்களுக்கும் நிர்வாஹகனாய் மஹாகல்பகாலத்தின் முடிவிலே திருவயிற்றில் வைத்துக் காத்தருளியவனான எம்பெருமான் என்று அவன் திருநாமத்தையோ தொழிலையோ பெருமையையோ ஒன்றையும் நான் வெளிப்படையாகச் சொன்னேனில்லை;-ஒருகால் அப்படி சொல்லியிருந்தேனாயின் தாய் குறை கூறுவது தகுதியேயாம்;
அந்தோ! ஆதாரமொன்று மின்றிக்குறை கூறுகின்றானே யென்றவாறு. ஊழிகளாய் என்பதற்கு- கல்பமும், அக்காலத்தில் அழிவு செய்கிற கடல் நெருப்பு முதலியனவுமாகிய இவற்றின் வடிவமாய் என்றும் உரைப்பர். என்றிலும்- என்று சொல்லிற்றிலோம்.–ஊழிகளாயுலகேழு முண்டான என்று சொல்லவில்லையாகில் பின்னை என்ன வென்று சொல்லிற்றென்ன. பழங்கண்டு ஆழிகளாம் பழ வண்ணமென்றேற்கு’ என்கிறான். (விற்பனைக்காக வீதியில் வந்த) களாப்பழத்தைப் பார்த்து
இப்பழத்தின் நிறம் கடலின் நிறம் போன்றுள்ளதென்று உட்கருத்து ஒன்றுமின்றியே இவ்வளவே சொன்னேன்:குறிப்பொருளொன்றுங் கருதாது இயல்பாகச்சொன்ன இச்சொல்ல¬யே பற்றிக்கொண்டு எனது தாய் “இப்பெண்பிள்ளை என் சொற்கேளாது தன் நினைவின்படி ஸ்வதந்த்ரமாய் நடக்குஞ் செருக்குடையவளாயினள்’ என்று கடுஞ்சொல் கூறத்தலைப்பட்டாள். களாம் பழவண்ணம் கடல் வண்ணமென்று இவள் சொன்னதானது வெறுமனோ? உலகமுண்ட பெருவாயனுடைய திமேனி நிறத்தைச்சொன்னபடியன்றோவென்று குற்றங்கூறுகின்றான்; தோழிமார்களே! இப்படி எனது தாய் என்னை மாறுபட நினைத்து ஏறிட்டுச் சொல்லுஞ் சொற்களுக்கு நீஙகளே ஸமாதானஞ் சொல்லித் தெளிவிக்க வேணுமென்றாயிற்று.-நாழ் –குற்றம்; “நாமா மிகவுடையோம் நாழ்” “நாழாலமர் முயன்ற” என்ற திருவாந்திதிப் பாசுரங்களில் இப்பொருளில் பிரயோகங்காண்க.-பெரியாழ்வார் திருமொழியில் “பல நாழஞ்சொல்லிப் பழித்த சிசுபாலன்” என்ற விடத்தில் இச்சொல்‘அம்’சாரியை பெற்று வந்தமையும் காண்க. இங்கே, நாழுடையாள் என்ற பொருளில் ‘நாழ்’ என்றது உபசார வழக்கு.

இப்பாட்டுக்கு ஸ்வாபதேசப் பொருளாவது-–ஆழ்வார் எம்பெருமானிடத்தில் தமக்கு உண்டான ஈடுபாட்டினை மிகுதியால் அப்பெருமானது பயனாகிய வடிவத்தின் கடல்போலளவிடப்படாத பெருமையைப் பாராட்டி ஒரு வார்த்தை சொல்ல, அது கேட்ட ஞானிகள் அவ்வார்த்தைக்கு வேறு பொருள் சங்கித்து,-ஸாதநாந்தர நிஷ்டையுடையோர்போல உபாஸஸநக்கு உரியதொரு காரணவடிவத்தைப் போற்றினதாக நினைத்து அது தகுதியன்றென்று அறியாமல் ஆரோபித்துச் சொல்லும் வார்த்தைக்கு என் நினைவறிந்து பழகிய நீங்கள் மறு மாற்றஞ் சொல்லி இவர்களைச் சொல்லும் வார்த்தைக்கு என் நினைவறிந்து பழகிய நீங்கள் மறு மாற்றஞ் சொல்லி இவர்களைத் தெளிவியுங்க ளென்று அருளிச் செய்தலாம். (ஊழிகளாய் உலகேழு முண்டானவற்றிலம்) ஸாதுநாந்தா நிஷ்டையுடையார்போல உபாஸகைக்கு உரிய காரணவடிவத்தைச் சொன்னோமில்லை.
(பழங்கண்டு ஆழி களாம்பழ வண்ணமென்றேற்கு.) பயனாகிய வடிவத்தைக் குறித்து அவ்வடிவம் கடல்போலும் என்று கூறிய எமககு.(அஃதே கொண்டு) அந்தச் சொல்லுக்கே வேறு பொருள் கொண்டு. (அன்னை) ஞானிகள்(இவளோ நாழ் என்னும்) இவரே பரதந்த்ரமான ஸ்வரூபத்துக்கு விரோதியான ஸ்வாதந்திரியத்தை யுடையாரென்று குறையேறிட்டுச் சொல்வார்கள்.(ஞாலமுண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்) உபாஸகைக்கு விஷயமாகின்ற காரணவடிவத்தை யாம் கூறியதாகக் குற்றங்கூறுவார்கள்.(அமனை எம்மை சூழ்கின்ற) தாய்போ லெம்மிடத்தும் பரிவுடையான் ஞானிகள் எமது ஸ்வரூபத்துக்கு எங்கே குறைபாடு வருகிறதோவென்று ஏறிட்டுச் சங்கித்த சங்கைக்கு (தோழிகளோ! உரையீர்) என நெஞ்சரிந்த அன்பர்களே! நீங்கள் பரிஹாரஞ் சொல்லித் தெளிவிக்க வேணும் என ஸ்வாபதேசப்பொருள் காண்க.-ப்ரபத்தி மார்க்கத்தை யனுட்டிப்பவர் எம்பெருமானது பயனாகிய வடிவத்தையே கருதிப் பாராட்டக் கடவரென்றும், அதுவே முக்தி பெறுவதற்குச் சிறந்த வழியாகுமென்றும், உபாஸகைக்கு உரிய காரண வடிவத்தையே பாராட்டி உபாளித்தல் முக்தி பெறுவார்க்கு அவ்வளவாகச் சிறவா தென்றும் உணர்க.

ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம்-மஹா கல்பமான காலங்களுக்கு நிர்வாஹகானாய்
(பூத பவ்ய பவத் பிரபு -காலங்களில் உள்ள வஸ்துக்களுக்கு பிரபு அங்கும் ) கால அவசாநத்திலே ஸப்த லோக உப லஷிதமான ஸமஸ்த ஜகத்தையும் பசியர் உண்டால் போலே அமுது செய்ததுவே பற்றாசாக
திருவயிற்றிலே வைத்து நோக்கினவன் என்று சொல்லிற்றிலோம்–பழம் கண்டு ஆழி களாம் பழ வண்ணம் என்றேற்கு-களாப் பழத்தைக் கண்டு அதின் நிறம் ஆழியின் நிறம் என்று சொன்னேனுக்கு-அக்தே கொண்டு-அந்தச் சொல்லிலே பொருள் கொண்டு–அன்னை-எனக்கு பிரியம் செய்து போந்த தாயானவள்–நாழி வளோ வென்னும்-இவள் தன்னிலே நடத்தும் ஸ்வ தந்தரையாய் இரா நின்றாள் என்னும்–நாழ்-என்று-மேனாணிப்பு-நறு வட்டாணித்தனம் என்றும் சொல்லுவார்-தோழிகளோ உரையீர்
என் நினைவு அறிந்து பரிமாறிப் போந்த நீங்கள்-நான் சொன்ன வார்த்தையின் உட்பாடு சொல்ல வேணும்-தோழிகள் -என்ற பன்மையாலே பலரும் சொல்லித் தெரிவிக்க வேணும் என்றபடி-எம்மை யம்மனை சூழ் கின்றவே –உள் ஓன்று வைத்துச் சொல்ல அறியாத எம்மைப் பெற்ற தாயானவள்
சூழ்ந்து ஏறிட்டுச் சொல்லுகிறவற்றை உரையீர் என்று இதற்கு மறுமாற்றம் சொல்லுகிறீலீர் -என்றுமாம்

இத்தால்-களாம் பழ வண்ணம் ஆழி போலும் -என்கையாலே-பல வேஷம் அபரிச்சின்னம் என்று
ஸூசிப்பித்ததாயிற்று–ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம் -என்கையாலே-உபாஸ்யமான காரண வேஷம் சொல்லிற்றிலோம் என்றபடி–நாழி வளோ வென்னும் ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்-என்கையாலே பரதந்த்ரமான ஸ்வரூபத்துக்கு விருத்தமான ஸ்வா தந்தர்யத்தை
ஏறிட்டமை சொன்னபடி (குகன் குக பரிகரங்கள் சங்கித்தால் போல் )தோழிகளோ உரையீர் -என்கையாலே-ஸ்வரூப விரோதி சங்கை பிறந்தால் நெஞ்சு அறிவாரை இட்டுத் தெளிவிக்க வேணும் என்றபடி–எம்மை யம்மனை சூழ் கின்றவே-என்கையாலே-பரிவுடையாரானார் ஸ்வரூபத்துக்கு எங்கே விரோதம் வருகிறதோ என்று ஏறிட்டு சங்கிப்பர் என்றதாயிற்று —

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம்–ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம்-இப்படி சொன்னேன் ஆகில் குற்றமாம் இறே -கால உபலஷித ஸகல பதார்த்தங்களும் நிர்வாஹகனாய் இவற்றை பிரளயம் வர எடுத்து திரு வயிற்றிலே வைத்து நோக்கின மஹா உபகாரகன் என்றிலேன் குண நிஷேதத்தைப் பண்ணப் புக்கவர்கள் ஸத்ய ஞானாதி பதங்களுக்கு வ்யாவர்த்ய பதத்தாலே பேதம் சொல்லுமா போலே
இவளும் குண ஸத் பாவத்தை சாதிக்கைக்காக வ்யதிரேக முகத்தாலே குணங்களை சொல்லித் தரிக்கிறாள்-இவளுக்குச் சொல்லுகைக்கு பிராப்தி யுண்டு அவளுக்கு இதிலே ஒரு கருத்து உண்டு என்று நிஷேதிக்கைக்கு பிராப்தி யுண்டு-உபகரித்த விஷயத்தில் உபகாரம் கொண்டவர்களும் பேசாது இருக்க ஒண்ணாது இறே-சேதனரானார் பேசாது இரார்கள் இறே இவளுக்கு இது விபாகத்திலே பொல்லாதாம் என்று ஆயிற்று அவள் நிஷேதிக்கிறது-குணாதிக விஷயத்தில் ப்ராவண்யம் கிலேச அவஹமாய்த் தலைக்கட்டும் என்று இருக்கும் இறே-பழம் கண்டு-புரோ வர்த்தியான பதார்த்தங்களை
கடமாகில் கடம் என்றும் படமாகில் படம் என்றும் சொல்லக் கடவது இறே-பிள்ளாய் கண்டது சொல்லுகையும் குற்றம் ஆவதே-ஆழி களாம் பழ வண்ணம் என்றேற்கு-களாம் பழ வண்ணமானது –அக்தே கொண்டு அன்னை

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-வியாக்யானம்–ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம்
ஸர்வ கல்ப நிர்வாஹகனாய்-லோகங்கள் ஏழையும் ஸ்வ முகம் கொண்டு தன் திரு வயிற்றிலே வைத்து ரஷித்தான் என்று சொல்லேன் அல்லேன்–பழம் கண்டு-களாம் பழத்தைக் கண்டு–ஆழி களாம் பழ வண்ணம் என்றேற்கு–இக் களாம் பழத்தின் வண்ணம் கருங்கடல் போன்றது என்ற அளவே சொன்ன எனக்கு–அக்தே கொண்டு அன்னை-அவ்வளவே கொண்டு எனக்குத் தாயானவள்–நாழி வளோ வென்னும்நாழ்-என்று நிறம் உடைமை-அத்தாலே ஏற்றத்தைச் சொல்லுகிறது-இவள் எங்களில் ஏற்றம் பெற்றவளோ என்னா நின்றாள்-நான் என்ன குற்றம் செய்தேனாய் இவள் என்னைப் பொடியுமது-இவ்வளவு அன்றிக்கே-ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும் இந்தப் பெண் இந் நிலத்தோடு கூடியவற்றை எல்லாம் உண்டவனுடைய வர்ணத்தைச் சொல்லிற்று என்னா நின்றாள்
நான் அங்கனே சொன்னேனோ–தோழிகளோ உரையீர்-ஓ தோழிகாள் -என் அன்னைக்கு உன் மகள் அங்கனே சொல்லவில்லை என்று சொல்லா நின்றாளே–அவளை நீ தூற்றாதே கொள் —என்னுங்கோள்-எம்மை யம்மனை சூழ் கின்றவே-என்னை மனைப்பாம்பு போலே நான் போன போன இடம் எங்கும் தான் சூழ்ந்து கொண்டாடியும் தூற்றியும் என்னைக் கொல்லா நின்றாள்-ஓ தோழி காள்
என்று இலம் என்றேர்க்கு என்கிற பஹு வசனம் இங்கனே தரிப்பாரைக் கூட்டிக் கொண்டுமாம் –

ஸ்வாபதேசம் —ஆழ்வார் அவன் வண்ணம் ஸ்வபாவம் கடல் போலே என்று சொல்வதைக் கேட்டு –
இது சாதனாந்தர நிஷ்டையில் உள்ளோர் வார்த்தை யன்றோ என்ன-என் நெஞ்சு ஆராயாமல் ஆரோபித்துச் சொன்ன வார்த்தை ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம்-உபாஸனைக்கு உரிய காரண வடிவத்தை சொன்னோம் இல்லை-பழம் கண்டு-ஆழி களாம் பழ வண்ணம் என்றேற்கு-பலத்தைக் கண்டு கடல் போலென்ற வடிவம் என்றே சொன்னேனே-அக்தே கொண்டு அன்னை-அந்த சொல்லுக்கே வேறே பொருளைக் கொண்டு ஞானிகள்-நாழி வளோ வென்னும்-பரதந்த்ர ஸ்வரூபத்துக்கு விரோதமான ஸ்வாதந்தர்ய வார்த்தை என்று ஏறிட்டுச் சொல்வார்கள்
ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்-உபாஸனைக்கு உரிய காரண வடிவைச் சொன்னேன் என்பர்-தோழிகளோ உரையீர் எம்மை யம்மனை சூழ் கின்றவே -ஏறிட்டு சங்கித்த சங்கைக்கு என் நெஞ்சு அறிந்த நீங்களே பரிஹாரம் சொல்லுங்கோள்-

ஸ்வா பதேசம் –-இத்தால் அவனோடு போலியாய் இருப்பது ஓன்று அல்லது தரியாதபடியையும் –
பகவத் விஷயத்தில் உண்டான பிராவண்ய அதிசயம் ஒருவராலும் மீட்க ஒண்ணாதபடி
இருக்கிறதையும் சொல்லுகிறது –

தாத்பர்யம்-சர்வேஸ்வரனை நேராகவே சேவிக்கா விட்டாலும் அவனுக்கு சத்ருச லௌகிக பதார்த்தம் கண்டு தரிக்க எண்ணி இருந்த ஆழ்வாரைக் கண்ட அன்பர் சாதநாந்தர- உபாயாந்தர -சம்பந்தம் ஆகிவிடுமோ என்று பிரமித்து ஆழ்வாருடைய பிராவண்யத்தை நிஷேதிக்க தம்முடைய அபிப்ராயத்தை வேறே சில ஸூஹ்ருத்துக்களுக்கு ஆவிஷ்கரித்து – எடுத்துச் சொல்லி இவர்களுடைய -பிராந்தியைப் போக்கச் சொல்லும் பாசுரத்தைத் தலைவியை நிந்திக்கும் திருத் தாயாரை ஸஹிக்களைக் கொண்டு சமாதானப்படுத்தும் பாசுரத்தால் அருளிச் செய்கிறார்–கீழே அநேகம் கல்பமாக போன இரவு கழிந்ததும்
விற்க வந்த களாம் பழத்தைக் கண்டு ஆழி வண்ணம்- கடல் வண்ணமாக இப்பழம் உள்ளதே -என்று சொல்ல தாயார் ஆழி வண்ணனான எம்பெருமானை இவள் நினைத்தே இவ்வாறு சொல்கிறாள் என்று நிஷேதிக்க-தோழிகளே நான் சகல ஜகத் ஸ்ரஷ்டாவானர் சகல ரக்ஷகன் சகல கல்யாண குண பரிபூர்ணன் ஸ்ரீயப்பதி ஆபத் சகன் என்று இவ்வாறெல்லாம் சொல்லி -அவனது திரு நாமமே சொல்ல வில்லையே-சிறிய திருமடல் யாராலே கல் மாரி காக்கப்பட்டது – ஆரால் இலங்கை பொடி பொடியாக வீழ்ந்தது -பெயர் சொல்லாமல் சொன்னது போல் -இவள் சொன்னேன் என்று சொல்லி சமாளிக்கிறாள்
இத்தால் நம்மை நிஷேதிப்பது யுக்தம் அல்லவே-நான் ஒன்றையும் சொல்லாமல்-பழம் கடல் வண்ணம் என்று கொள்ளாமல் -இவள் மகளது சாமர்த்தியத்தால் சர்வேஸ்வரன் வண்ணம் சொல்கிறாள் என்று அன்றோ நிஷேதிக்கிறாள் நீங்கள் சம சுக துக்கம் காணும் ஸஹிகள் அன்றோ இதுக்கு பரிகாரம் சொல்லுங்கோள் என்று தோழிகளைக் குறித்து சொல்கிறாள் –

5-5-எங்ஙனேயோ அன்னை மீர்காள்! -ப்ரவேஸம்-

மாசறு சோதி” என்ற திருவாய்மொழியில் “நாடும் இரைக்கவே, யாம் மடல் ஊர்ந்தும்” என்று மடல் ஊரப் பாரித்தாள்;
பாரித்தபடியே தலைக்கட்டப் பெறாமையாலே “ஊரெல்லாம் துஞ்சி” என்ற திருவாய்மொழியில்
1-ஊரெல்லாம் துஞ்சி உலகு எல்லாம் நள் இருளாய் என்று முதலிலே மடல் ஊருகைக்கு
விஷயந்தான் -பழிச் சொற்கள் -இல்லாதபடி பழி சொல்லுவாருங்கூட உறங்கினார்கள்’ என்று வெறுத்தாள்;
ஏசிப் பேசினால் தானே அவனைப் பற்றி ஸ்மரணம் வரும் –
2-“அம் சுடர வெய்யோன் அணி நெடும் தேர் தோன்றாதால்” என்று,
சூரியோதயத்திற்குச் சூசகமும் கூட இல்லையாயிற்று’ என்று வெறுத்தாள்;
3- “நீயும் பாங்கு அல்லை காண் நெஞ்சமே” என்று-வேறு – ‘ஒன்றை நினைத்துத்
தரிக்கைக்கு விரகு அற்றது’ என்றும் வெறுத்தாள்.

“மாசறு சோதி” என்ற திருவாய் மொழியில், பிராப்பியத்தைப் பெற வேண்டும் என்னும்
மனோ வேகத்தாலே உபாய அத்யவசாயம் கலங்கினபடி;
ஊரெல்லாம்” என்ற திருவாய் மொழியில், அந்த மனோ வேகமுங் கூடக் கலங்கினபடி; –
எரு நீர் இல்லாமல் பயிர் விளையாதே –
இத் திருவாய்மொழியில், ‘ரக்ஷகன் அவன்’ என்னும் தெளிவும் செல்லா நிற்க, பிராப்பிய ருசி நலிகிறபடி.
மடல் -பிராப்ய த்வரை -காள ராத்ரி வியசனம் -இழந்த உபாய அத்யவசாயமும் பிராப்ய த்வரையும் மீண்டதே –
மூன்று ஹேதுக்களும் போனத்தை அருளிச் செய்கிறார் மேலே

இந்தக் குறைகள் -மூன்று வெறுப்புகள்- எல்லாம் தீரும்படி போதும் விடியப் பெற்று,
அன்னையரும் தோழியரும் துஞ்சுவர்” என்கிற இழவு தீர
உகப்பாளும் பொடிவாரும் ஹிதம் சொல்லுவாருமாகப் பெற்றது இத் திருவாய் மொழியில்.
என்றது, பின்னர், உறவினர்கள் அனைவரும் உணர்ந்து,
1-“தீர்ந்த என் தோழி” என்ன வேணும்படி இவளுடைய துணிவு கண்டு உகப்பாளும்,
2- “எங்ஙனேயோ அன்னைமீர்காள் என்னை முனிவது நீர்” என்ன வேண்டும்படி பொடிவாரும்,
3-“தோழிமீர் என்னை இனி உமக்கு ஆசை இல்லை” என்ன வேண்டும்படி ஹிதம் சொல்லி அலைப்பாருமாகப் பெற்றது;
அவ் வழியாலே அவர்கள் தாம் இவ் விஷயத்தினை நினைப்பூட்டுகின்றவர்கள் ஆவர்களே அன்றோ.

சூரியனும் உதித்துப் பொருள்களைக் காணவும் பெறுகையாலே வியசனமும் பாலி பாயப் பெற்றது.
இவ்வளவு ஆஸ்வாசம் உண்டானவாறே, நெஞ்சு நினைத்துத் தரிக்கைக்கும் துணையாயிற்று என்றபடி.
இப்படி இரவு வியசனம் போம்படி போது விடியப் பெறுகையாலே ஒரு தரிப்பும் உண்டாய், அவனை அநுபவிக்கப் பெறாமையாலே
ஆற்றாமைக்கும் காரணமாய் நோவு பட்டுச் செல்லா நிற்க, உணர்ந்த உறவினர்கள் அனைவரும்,
நீ இப்படி இவ்விஷயத்தில் எல்லை இல்லாத காதலை யுடையவளா யிருத்தலாகிற இது உனக்குக் குடிப் பழி,
உன்னுடைய பெண் தன்மைக்குப் போராது, அவன் தலைமைக்கும் போராது’ என்று ஹிதம் சொல்லி மீட்கப் பார்க்க,
இவர்கள் உகந்தருளின நிலங்களின் வாசி அறியார்கள்’ என்று இருந்தாள் இவள்,

நீங்கள், சிலர் காட்டக் கண்டீர் கோள் அல்லாமையாலே இவ் விஷயத்தை உள்ளபடி அறிந்திலீர்கோள்;
நான் அங்ஙன் அன்றிக்கே, அவன் தானே மயர்வு அற மதிநலம் அருளித் தன்னைக் காட்டக்
காண்கையாலே உள்ளபடி கண்டேன்;
ஆகையாலே, நம்பியுடைய வடிவழகிலும் ஒப்பனை அழகிலும் ஆபரணச் சேர்த்தியிலும் பெருமையிலும்
நீல மேனி -1-வடிவு அழகு–நீல மேனி /-
2-ஒப்பனை அழகு–பூம் தண் மாலை /3-மின்னு நூலும் குண்டலும் -ஆபரண அழகு /4-பொன் முடி வேண்டற்பாடு
நான் உங்கள் ஹித வசனத்துக்கு மீளாதபடி அகப்பட்டேன்’ என்று இங்ஙனம் தம் படிகளைச் சொல்லா நிற்கச் செய்தே;
தம் முயற்சி கொண்டு அறிவார்க்கு அறிய ஒண்ணாதபடி பெற்றோமே அன்றோ,
இவ் வஸ்து தான் உண்டாகப் பெற்றால் நாம் பெற்ற போது பெறுகிறோம், பிறர் அறியாது
ஒழியப் பெற்றோமே யன்றோ’ என்னும் பிரீதியோடே தலைக் கட்டுகிறது.

ஸூவ யத்னத்தால் காண்பார் -அறிவரிய பிரான் -அறிவுக்கு அரிய –
பிரான் -உபகாரகன் –தன்னால் காட்டக் கொடுப்பவன் -ஆழி யங்கை பிரானை அலற்றி –
ஸ்வகத ஸ்வீகார நிஷ்டர்களுக்கும் உபாசகர்களுக்கும் கிட்ட அரியவன் –
பரகத ஸ்வீகார நிஷ்டர்களுக்கு அவன் காட்டக் காண்கையாலே-காணலாம் என்றபடி

ஆக, போதும் விடிந்து ஹிதம் சொல்லி அலைப்பாரும் உண்டாகப் பெறுகையாலே ஒரு தரிப்பும்,
அதுதான் நினைத்த விடியலாகப் பெறாமையாலே ஒரு பிரீதி இன்மையும்;
அவனை நினைக்கப் பெறுகையாலே ஒரு பிரீதியும்,
அதுதான் அநுபவமாகப் பெறாமையாலே ஒரு பிரீதி இன்மையும்;
சூரியன் உதித்துப் பொருள்களைப் பார்க்கப் பெறுகையாலே ஒரு பிரீதியும்,
அதுதான் அவனைக் காணப் பெறாமையாலே ஒரு பிரீதி இன்மையுமாய்;
பிரீதியும் பிரீதி இன்மையும் சமமாகச் செல்லுகின்றன.

நன்று; “ஏழையராவி” -7-7-என்ற திருவாய்மொழியும், ‘உரு வெளிப்பாடு’ சொல்லா நின்றதே,
அதற்கும் இத் திருவாய் மொழிக்கும் வேற்றுமை என்? என்னில்,
அதில், “இணைக் கூற்றங்கொலோ” என்றும், “உய்விடம் ஏழையர்க்கும் அசுரர்க்கும் அர்க்கர்கட்கும் எவ்விடம்” என்றும்
பாதகத் தன்மை உறைத்திருக்கும்; இதில், மேலே உண்டான துக்கம் நீங்குதல் உண்டாம்படி நினைத்துத் தரிக்கவும் பெற்று,
அது தான் அநுபவமாகப் பெறாமையாலே வந்த பிரீதி இன்மையுமாய், –
இப்படிப் பிரீதியும் பிரீதி இன்மையும் சமமாகச் செல்லுகிறதாக இருக்கும்.

1-ஜாபாலி பகவானும் வார்த்தை சொல்லி, ‘ஸ்ரீ வசிஷ்ட பகவானும் இக்குடியில் போந்த படிகள் எல்லாவற்றையும் சொல்லி,
இனி மீண்டு திருவபிடேகம் செய்துகொள்ள அமையும் என்ன, பெருமாள் ‘அங்ஙனம் செய்வது இல்லை’ என்று
முடிய நின்றபடியைக் கண்டவாறே, நகரத்து ஜனங்கள் எல்லாம் உகப்பது செய்தார்கள், வெறுப்பதும் செய்தார்கள்;
ரக்ஷகனானவன் தொடங்கின காரியத்திலே இப்படி முடிய நின்ற இடம் நம்முடைய ரக்ஷணத்துக்கும் உண்டே அன்றோ’ என்று
உகப்பதும் செய்தார்கள்; ‘அதனாலே நாம் பெற்றது என்? இப்போது பதினான்காண்டு இழந்திருக்கும்படி வேண்டி இருந்ததே!’ என்று
வெறுப்பதும் செய்தார்களே அன்றோ.
2-பிராட்டியைத் திருவடி தொழுதபோது, ‘நாம் இலங்கையை அடைவதற்குரிய ஆற்றல் உண்டாகப்பெற்றோமே அன்றோ’ என்று உகப்பதும்
செய்தான், ‘இவள் அவரைப் பிரிந்து இந்த நிலையில் இருப்பதே!’ என்று வெறுப்பதும் செய்தான்.
3-பிராட்டி, திருவடி வார்த்தையைக் கேட்டபோது “வாநர! உன்னால் சொல்லப்பட்ட பெருமாள் என்னை அல்லது அறியார்,
பிரிவாலே தளர்கின்றார் என்ற இரண்டு வார்த்தைகளும் விஷத்தோடு கூடின அமுதம் போல் இருக்கிறது” என்று,
பெருமாள் என்னைப் பிரிந்த இடத்தில் என்னை அல்லது அறிந்திலர் என்று சொன்னது எனக்கு இனியதாயிருந்தது,
அவர் பிரிவாலே தளர்கின்றார் என்று சொன்னபடியாலே வெறுப்பாய் இருந்தது என்றாளே அன்றோ.
அப்படியே, இவர்க்கும் பிரீதி அப்ரீதிகள் சமமாகச் செல்லுகின்றன.

திரு மங்கை ஆழ்வாரால் கடைசியில் பேசப் பெற்ற திவ்ய தேசம் –
சுந்தர பரி பூரணன் -நின்ற இருந்த கிடந்த நம்பிகள் திருக் கோலம் -ஆழ்வாராகவே திருவதரித்த எம்பெருமான் -அன்றோ –
நம் ஆழ்வார் விக்ரகம் தனியாக இங்கு இல்லை –
வைஷ்ணவ நம்பி -குருகியவன் -குறுங்குடி -நெடும் தகை -கரண்ட மாடு பொய்கை –உருவ வெளிப்பாடு -மானஸ பிரத்யஷம்
-5-3-/5-4/5-5- மூன்று காதல் தசைகள் -பேரமர் காதல் -பின் நின்ற காதல் கழிய மிக்கதோர் காதல்
நான்கு நாயகி பாவம் தொடர்ந்து -5/3 –5/4 –/5-5 தலைமகள் -5-6 தாயார் -அடுத்த நான்கும் நோற்ற நான்கு –

பிரத்யஷமாக தோற்றுவதே உருவ வெளிப்பாடு –ப்ரீதி அப்ரீதி -முனியே நான் முகனும் வரை மானஸ அனுபவம் தானே –
பூர்வ அனுபூத ரசத்தை மறந்து — ரசாந்தரமாகச் செல்லுவதே மானஸ அனுபவம் –
பரத்வம் பஜநீயத்வம் இத்யாதி -பராங்குச பக்தி கடல் தழும்பி இருக்கும்
இக்கரை அக்கரை தொட்டு காவேரி போவது போலே நடுவிலும் உண்டே -எல்லா மநோ பாவமும் உண்டே பூர்த்தியாக
அனுபூத ரசம் அனுபவியா நிற்கச் செய்தே -ரசாந்தரம் தேடிச் செல்வதே உருவ வெளிப்பாடு –
வ்ருஷே வ்ருஷே -பயத்தாலே மாரீசன் -உருவ வெளிப்பாட்டால் பயந்தான் –
இங்கு பிராவண்யத்தால் உருவ வெளிப்பாடு இவளுக்கு-

எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்!
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என்நெஞ்சமே
.–5-5-1-

என்னுடைய பிராவண்யத்தை நீக்குதற்குப் பார்த்தால், எனக்கு இவ்வளவான பிராவண்யத்தை விளைத்த நம்பியுடைய அழகினை அறிந்து அதனை அன்றோ பொடிவது நம்பியுடைய அழகினை அறிந்து அநுபவிக்கிற நீங்கள், அதிலே துவக்குண்டு இருக்கிற
என்னை மீட்கப் பார்க்கிறபடி எங்ஙனேயோ?நீங்கள் சொல்லுகிற வார்த்தைகளைக் கேட்டு
வளர்ந்தவள் அன்றோ நான்.-தாம் தாம் செய்வனவற்றை வயிற்றிற் பிறந்தார் செய்தவாறே குற்றமாமித்தனையேயோ.

புத்திரர்களாகவுமாம், சிஷ்யர்களாகவுமாம், பகவத் விஷயத்தில் ஓர் அடி வர நின்றவர்கள் சிலாகிக்கத் தக்கவர்களத்தனை அன்றோ;
கூரத்தாழ்வார் ஓரளவிலே நங்கையார் திருவடி சார்ந்தவாறே, ‘இன்னமும் ஒரு விவாகம் செய்து கொள்வேமோ’ என்று ஆராய்ந்து,
இது தான் கிரமத்திலே வந்து ஆழ்வானுக்கு விரோதமாகத் தலைக் கட்டும்;
இனித் தான் -ப்ரஹ்மசாரீ க்ருஹஸ்தோ வா வானப் பிரஸ்தோத பிக்ஷுக: அநாஸ்ரமீந திஷ்டேத்து தினம் ஏகம் அநாபதி”-சாமான்ய தர்மம்-
பிரஹ்மசாரி யாகவாவது இல்லறத்தா னாகவாவது வானப் பிரஸ்தனாகவாவது சந்நியாசி யாகவாவது ஒருவன் இருக்க வேண்டும்;
ஆபத்து இல்லாத சமயத்தில் ஒருநாள்கூட ஓர் ஆச்ரமத்திலும் சேராதவனாக இருக்கக் கூடாது” என்று சாஸ்திரம் சொல்லா நின்றது;
இந்தச் சாஸ்திரத்தின் அர்த்தத்தை அநுஷ்டிப்போமோ! பாகவத பரிசர்யையைச் செய்வோமோ! என்று ஆராய்ந்து,
அந்தச் சாமான்ய தர்மத்திற் காட்டில் இந்த விசேஷ தர்மமே பிரபலம்’ என்று அதனைத் தவிர்ந்தார்.

நங்கள் நம்பி–கடகர் களான -உங்களை அறியா விட்டால் அவ்விஷயத்தையும் அறியாது ஒழிய வேணுமோ என்கிறாள்.-இக்குடிக்கு -ஏக போகம் -முற்றூட்டுப் போலே காணும் நம்பியுடைய அழகு -சர்வேச்வரனை நோக்கிப் பல விரதங்களை நோற்றுப் பெற்றவர்களைப் போலன்றிக்கே, நம்பியை அடைந்தாயிற்று இவரைப் பெற்றது.
உடைய நங்கையார் நம்பியை அடைந்து ஆழ்வாரைத் திருவயிறு வாய்த்தார்’ என்பது பிரசித்தமே அன்றோ.-நெடுங்காலமும் கண்ணன் நீண்மலர்ப் பாதம் பரவி” அன்றோ பெற்றது.நம்பியை நான்–அகப் படுத்துகைக்கு அழகு சீலம் முதலிய குணங்களால் அத் தலை குறைவற்றிருக்குமாறு போலே ஆயிற்று,-அகப் படுக்கைக்குரிய ஆசையால் இத் தலை குறைவற்றிருக்கிறபடி என்பாள் ‘நம்பியை நான்’ என்கிறாள்.

காண்பதற்கு முன்னே மீட்டீர் அல்லீர்கோளே, இனி மீட்கப்போமோ? என்பாள் ‘கண்ட பின்’ என்கிறாள்.-தண்ணீர் போன பின்னர் அணையைக் கட்டுதல் அன்றோ நீங்கள் செய்கிறது என்றபடி.-கை மேலே ஒரு முகத்தாலே தான் அகப் பட்டபடியைச் சொல்லுகிறாள் மேல்:-சங்கினோடும் நேமியோடும் தாமரைக் கண்களோடும் செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே –கரு நிறமான திரு மேனிக்குப் பரபாகமான
வெளுத்த நிறத்தையுடைத்தான ஸ்ரீ பாஞ்சசன்யத்தோடும்,-இந்தக் கைக்கு இது ஆபரணமானால், வேறு ஒன்று வேண்டாதே தானே ஆபரணமாகப் போரும்படி
இருக்கிற திருச் சக்கரத்தோடும்,மலர்ச்சி முதலியவைகளால் தாமரை போன்று இருக்கிற திருக் கண்களோடும்,–இதனால், கண் காணக் கை விட்டுப் போயிற்றுக் காணும்.-கண்ட போது, நான் உன் சரக்கு அன்றோ, “தவாஸ்மி-உன்னுடையவன் ஆகிறேன்” என்ற முறுவலோடும்,-சம்சார யாத்திரையை முக்தன் மறக்குமாறு போலே, இவ் வருகுண்டான வற்றோடு அவ்வருகுள்ள வற்றோடு வேற்றுமை அற எல்லாவற்றையும் மறக்கும்படி செய்ய வல்லதான திரு அதரத்தோடும். –உங்கள் சொற்களை மறுத்தேனே யாகிலும் நம்பியுடைய திரு முகம் மறுக்க ஒண்ணாது –என் நெஞ்சமே –-உங்களைப் போலன்றிக்கே, அவன் தானே காட்டப் பெறுகையாலே முழுக்க அநுபவித்த என் நெஞ்சமானது.

மீண்டும் இப்போதாக ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் வர அருளிச் செய்கிறார்
எங்ஙனேயோ என்னை முனிவது நீர் – பிராவண்யமே ஸ்வபாவமாம்படி வளர்த்து வைத்து, இப் போதாகப் பொடிகிற படி எங்ஙனேயோ?-முன்பு நீங்கள் கற்பித்துப் போந்து, அது பயன் பட்டவாறே பொடியு மத்தனையோ?
கோலம்--உங்கள் ஹித வசனத்துக்கும் மீளாதபடியான அழகு.
திருக் குறுங்குடி நம்பியை- பரத்துவத்தில் முதன்மையிலேயோ அகப்பட்டது மீளுகைக்கு.
நம்பியை–குணங்களில் நிறைவின்மை உண்டாய்த் தான் மீளுகிறதோ
நான் கண்ட பின்--இவ் விஷயத்தில் ஆசை இல்லாமல் மீளுகிறேனோ.
சங்கினோடும்- ஸ்ரீ பாஞ்ச சன்யத்தோடே விசேஷித்து ஒரு சம்பந்தம் உண்டு காணும் இவளுக்கு; திரு வாயின் அமிர்த இனிமையை அறிந்திருக்கையாலே; ஒரு கலத்திலே ஜீவிப்பாரைப் போலே.-

————

என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே
தென்னன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திருமறுவும்
மன்னு பூணும் நான்கு தோளும் வந்தெங்கும் நின்றிடுமே.–
5-5-2-

என் நெஞ்சினால் நோக்கிக் காணீர்’-என்கையாலே உங்களுக்குப் பக்தி இல்லை என்கிறாள்- கண புரம் கை தொழும் பிள்ளையைப் பிள்ளை என்று எண்ணப் பெறுவரே’ என்னக் கூடியதாக இருக்க,-நம் வயிற்றிற் பிறந்த இதுவே காரணமாக, இவள் நின்ற நிலை பாராமல் நாம் பொடிந்தோமித்தனை அன்றோ” என்று-பின்னையும் உங்களை நீங்களே பொடிந்து கொள்ளுவீர்கோள்.-திருதராட்டிரரே! உமது வித்யையானது வித்யை அன்று, என்னுடைய வித்யையானது அழயாதிருக்கின்றது,-வித்யை அற்றவரும் இருளில் தள்ளப்பட்டவருமான நீர் கேசவனை அறிய மாட்டீர்” என்று,-தங்கள் தங்களுக்கு என்னவும் ஒரு கைம் முதலுடையார்க்கு அவனை அறியப் போகாது என்றதே அன்றோ.

வந்து எங்கும் நின்றிடும் – ‘உங்கள் ஹித வசனத்தின் படியே செய்ய வேணும்’ என்று நான் கடக்க நிற்கவும், அங்கேயும் பல வகையாக வாரா நின்றன.-“மர வுரி, மான் தோல் இவற்றை உடுத்திருப்பவரும், வில்லைத் தரித்திருப்பவருமான ஸ்ரீ ராம பிரானை, பாசக் கயிற்றைக் கையிலே யுடைய யமனைப் போன்று ஒவ்வொரு மரத்திலும் பார்க்கிறேன்” என்பது போலே,
உகப்பார்க்கும் உகவாதார்க்கும் பலம் ஒன்றாய் விட்டது. நான் எங்கே ஒதுங்குவேன், சொல்லிக் காணீர் கோள்.

————

நின்றிடும் திசைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும்
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா நெஞ்சுளும் நீங்காவே
.–5-5-3-

இராம பாணங்கள் ஒன்று செய்தது மற்றொன்று செய்யாதாப் போலே ஆயிற்று,
நம்பியுடைய அழகுகளும்-சேர்த்தி அழகு முக பேதத்தாலே நையும் –
ஒன்று செயல் அறுதலைப் பண்ணும், ஒன்று அறிவைக் குடி போக்கும்,
ஒன்று அறிவைக் கொடுத்து வருந்தப் பண்ணும். செயல் அற்றவள் ஆகா நின்றாள்,
அறிவு கெடா நின்றாள், வருந்தா நின்றாள் என்று என் குற்றமாக நினைத்துப் பொடியா நின்றீர்கோள்.

அன்னையரும் முனிதிர் – தெளிந்திருப்பார் தாம் பொடியப் பெற்றதோ. இவற்றிற்கெல்லாம் தாயா யிருக்கிற இப்படிச் செய்யக் கடவதோ.-தெளிவது கலங்குவதாய் இவை தாமே யாத்திரையாகப் போந்த நீங்களும் முனியா நின்றீர்கோள்.-இது, பெண் பிள்ளை வார்த்தை யானாலும், இங்கு, “அன்னையர்” என்றது,-அத்யவசாய நிஷ்டரான ஸ்ரீ வைஷ்ணவர்களை ஆகையாலே, அவர்களுக்கும் தெளிவதும் கலங்குவதும் உண்டு-யௌவனத்தில் நீங்கள் செய்து போந்தவற்றை அப் பருவத்தில் நான் செய்தவாறே குற்றமாயினவோ.
இந்தக் குடிக்காகப் பகவத் பிராவண்யமே யாத்திரை போலே காணும்.

நான் கண்ட பின் – ஆயுதம் பிடித்த பிடியில் வாசி அறியும் நான் கண்ட பின். வீரபத்தினி ஆகையாலே வாசி அறிவாளே அன்றோ!-பெருமாளுக்கு வில் எடுத்துக் கொடுப்பவள் பிராட்டி அன்றோ.-பெருமாள் ‘வில்லைத் தா’ என்ன, கொடுத்து, அவர் கையும் வில்லுமாய் நின்ற நிலையைக் கண்டவாறே,-நீர் இப்படி வில்லைத் தரித்தவராய்த் திரியப் புக்கால் உம்மை ரிஷிகள் வந்து சரணம் புகுவார்கள்;-அவர்களுக்குப் பகைவர்களான இராக்கதர்களோடு எதிரிட வேண்டி வரும்; அது பின்னை ஜாதிப் பகையாம்,
பின்னை நீரும் நானும் இரண்டு இடத்திலே இருக்க வேண்டிவரும்.
ஆன பின்னர், வில்லைப் பொகட்டுத் தாபத வேடத்தோடே திரிய அமையும்’ என்றாளே அன்றோ.-பெருமாள் பக்கல் சாங்கமே -பஷ பாதம் -சார்ங்கம் -சாடு -அன்றோ இப்படிச் சொல்லுவித்தது.-திவ்விய ஆயுதங்களுக்கு, ஆயுதங்கள் ஆபரணங்கள் என்னும் இரண்டு இடங்களிலும் மெய்க் காட்டு உண்டு காணும்.-போர்த் தலையில் ஆயிற்று ஆயுதம் என்று அறியலாவது.

நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா--கண் வட்டத்தை விடாதே நின்று தோன்றா நின்றன.
இவை கண் முகப்பே நின்று நலியப் புக்கவாறே,-அஞ்சிக் கண்களைச் செம்பளித்தவாறே நெஞ்சுக்குள்ளே நின்று பிரகாசிக்கத் தொடங்கின.-நெஞ்சுள்ளும் நீங்கா – கீழே “வந்து எங்கும் நின்றிடுமே” என்றாள்;-இங்கு உள்ளும் புறம்பும் ஒக்க நலியா நின்றன என்கிறாள்.
இவற்றிற்கு வாசி என்? என்னில், நம்பியுடைய அழகுக்கு உள்ளன எல்லாம் உண்டாயிற்று இவளுக்கும்.-அவ் வழகு எங்கும் ஒக்க நலிகிறாப் போலே ஆயிற்று, இவளும் கட் கண்ணாலும் உட் கண்ணாலும் அநுபவிக்கிறபடியும்.-பக்தி பெருக்காலே இவள் வியாபகத்வம் –

————

நீங்க நில்லா கண்ண நீர்கள் என்று அன்னையரும் முனிதிர்
தேன் கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
பூந்தண் மாலைத் தண் துழாயும் பொன் முடியும் வடிவும்
பாங்கு தோன்றும் பட்டும் நாணும் பாவியேன் பக்கத்தவே.
–5-5-4-

நீங்க நில்லா கண்ண நீர்கள் –அவன் நீங்க, கண்களில் நீர் நீங்குகின்றது இல்லை.
அன்றிக்கே,-நீங்க நில்லா- பேர நில்லா என்னுதல்.
அன்றிக்கே-நீங்க நில்லா என்பதனை மெலித்தல் விகாரமாகக் கொண்டு நீக்க நிற்கின்றன இல்லை என்னுதல்.-நீக்க – நீங்க என வல்லொற்று மெல்லொற்றாகத் திரிந்தது.-இந்தக் கண்ண நீர்க்கு ஸஹ்யம் அவ்வூரில் இனிமை போலே காணும்.

வடிவும் – அம் மாலைக்கும் முடிக்கும் இசைந்த வடிவும் – ‘இவனே மாலைக்கும் முடிக்கும் உரியான்’ என்று படி எடுத்துக் காட்டலாமே.-வடிவும்’ என்பதே!” என்று ஈடுபட்டவராய் இருப்பர் நஞ்சீயர் –பூந் தண் மாலைத் தண் துழாயும் –-பொன்முடியும் –வடிவும்–மூன்றுக்கும் உம்மைத் தொகை –-இவற்றை உடைய வடிவு சொல்லாமல் -வடிவும் ஆபரண கோஷ்டியில் சேர்த்து அருளிச் செய்து உள்ளார் –பாவியேன் பக்கத்தவே– அநுபவிக்கத் தருதல்- உரு வெளிப்பாடாய்த் தோன்றாதே ஒழிதல் – செய்யாத படியான மஹா பாவத்தைச் செய்தேன்.
அருகே நின்று பிரகாசித்துக் கொண்டு நின்றன; அநுபவ யோக்கியமாகப் பெறுகின்றன இல்லை.-அணைக்கத் தருதல், அகல நிற்றல் செய்கின்றன இல்லை.-

————-

பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
தொக்க சோதித் தொண்டை வாயும் நீண்ட புருவங்களும்
தக்க தாமரைக் கண்ணும் பாவியேன் ஆவியின் மேலனவே
.–5-5-5-

ஒன்றற்கொன்று தகுதியான நம்பியுடைய திருமுகத்தில் அழகுகள் என்-உயிர்நிலையிலே நலியா நின்றன என்கிறாள்.-அவன் வருகைக்குச் சம்பாவனை யுள்ள பக்கத்தைப் பார்த்துக்கொண்டு நிற்குமாயிற்று.-அந்தத் திக்கில் வந்து தோற்றாமையாலே வருந்துவாள்.-அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து வைத்த படியை அறிந்து வைத்த நீங்களும் பொடியா நின்றி கோள்–பாவியேன் ஆவியின் மேலனவே- தோல் புரையிலே போகை யன்றிக்கே -உயிர் நிலையிலே நின்று நலியா நின்றது -அகவாயில் வெளிச் சிறப்பு அழகிது.-அப்படியே புறம்பேயும் தோற்றப் பெறுகிறது இல்லை என்பாள், தன்னைப் ‘பாவியேன்’ என்கிறாள்.

———————-

மேலும் வன்பழி நங்குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்
சோலை சூழ் தண் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
கோல நீள்கொடி மூக்கும் தாமரைக் கண்ணும் கனிவாயும்
நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே
.–5-5-6-

அன்னை காணக் கொடாள்–தன்னோடு ஒத்தவர்கள் சொல்லுகை அன்றிக்கே, அடியிலே என்னைப் பெறுகைக்கு நோன்பு நோற்ற-இவளும் இப்படிச் சொல்லா நின்றாள்.
முன்பு- அன்னைமீர் -வளர்த்த தாய்கள் இவள் உடன் சாம்யம் உண்டே -இதில் பெற்ற தாய் –

அழகு மிக்க கொடி போலே இருக்கிற திரு மூக்கும்,-அதன் படியேயாய் இருக்கிற தாமரை போன்ற திருக் கண்களும்,-அந்தக் கொடி பூத்தாற் போலே யாயிற்றுத் திருக் கண்கள் இருப்பது.-அது ஒரு பலத்தை உண்டாக்கினாற்போலே இருக்கிற கனி வாயும்,-அத் தாமரையின் இலை போலே நீலமாய் இருக்கிற திரு மேனியும்,-ஒரு பெரு வெள்ளம் போலே ஆயிற்றுத் திருமேனி, அதனை நீந்துகைக்குச் சில தெப்பங்கள் போலே இருக்கிற திருத் தோள்கள் நான்கும்,-என் நெஞ்சம் நிறைந்தனவே- உங்கள் ஹித வசனங்கட்கெல்லாம் என் நெஞ்சில் இடம் இல்லை.-

————-

நிறைந்த வன்பழி நம்குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்
சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும்
நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் நேமி அம் கை உளதே.
–5-5-7-

ஆண்டாள், ஒரு நாள் பட்டரையும் சீராமப் பிள்ளையையும் காட்டி, ‘இவர்கள் விவாகத்தைச் செய்வதற்குரிய பருவத்தை அடைந்தார்கள், பேசாதே இருக்கிறது என்?’ என்ன, ‘ஆகில், நாளைப் பெருமாள் பாடே போனவாறே வரக் காட்டு’ என்ன,
அவர்களையும் கொண்டு திரு முன்பே நிற்கச் செய்தே, பெருமாள் அருளப் பாடிட்டு,
ஒன்று சொல்வாய் போலே இருந்தாயே!’ என்று திரு வுள்ளமாக,
“இவர்கள் விவாகத்தைச் செய்வதற்குரிய பருவத்தினர் ஆனார்கள் என்று சொல்லா நின்றார்கள்” என்ன,-நாமே ஒத்ததான இடத்தில் சம்பந்தம் செய்து தருகிறோம்’ என்று அருளிச் செய்ய,-பிற்றை நாள் மன்னியைக் -கன்னிகையைக் -கொடு வந்து நீர் வார்த்தார்கள்.
ஆக, ‘அத்தலையாலே வருமது ஒழிய, தாம் தாம் ஒன்றை ஆசைப்படுகையும் கூடப் பழி’ என்று இருக்குங் குடி – பிரபன்ன குடி-காணும்.

இப்போது ‘பழி’ என்று பரிஹரிக்கப் பார்க்கிறது -இவ்விஷயத்தில் உள்ள-நம்பியிடத்துள்ள பிராவண்யத்தை அன்றோ;-“பழி’ என்று பரிஹரிக்கப் பார்க்கிற திருத் தாயாராயும், ‘பழி என்று மீளேன்’ என்கிற பிராட்டியாயும் ஓடுகிற இந்த இரண்டு ஆகாரமும்- நிலைகளும் ஆழ்வார் தமக்குப் பிறந்த அவஸ்தா விசேஷங்களே அன்றோ;-பழி என்று பரிஹரிக்கப் பார்க்கிற திருத் தாயார் வார்த்தையான இடம், சரம ஸ்லோகத்துக்கு மேலுள்ளவற்றை அநுபாஷித்தாற் போலே இருக்கிறதாயிற்று.
(பகவத் ப்ராவண்யம் தோஷம் -உபாய அத்யவசாயத்தில் நிலை நின்ற -திட சித்தம் -திருத்தாயார் நிலை )பழி என்று மீளேன்’ என்கிற இவள் வார்த்தையான இடம், சரம ஸ்லோகத்தில் நிஷ்கர்ஷம் போலே இருக்கிறதாயிற்று.
பழி’ என்று பரிஹரிக்கப் பார்க்கிற இது, உபாயத்தில் கொத்தை அறுக்கிறது;பழி என்று மீளேன், என்கிற இது, உபேயத்தில் கொத்தை அறுக்கிறது;
ஆக, உபாயத்தினுடைய நைரபேக்ஷ்யத்தை (வேறு ஒன்றினையும் விரும்பாமையைப்) பார்த்தால், தங்களுடைய முயற்சிகள் அனைத்தும் குற்றமாயிருக்கும்;
உபேய வைலக்ஷண்யத்தைப் பார்த்தால், விரையாமல் ஆறியிருத்தல் குற்றமாயிருக்கும்;
ஆகையால், இரண்டு குற்றங்களையும் அறுக்கிறது என்றபடி. கொத்தை-குற்றம்.
ஸ்வரூபமாய் அந்வயித்ததில் மிகுதியாய்க் கழிவது ஒன்று உண்டோ? என்றபடி; (மகள் வார்த்தை ) (அடிமைத்தனத்துக்குத் தக்க கைங்கர்யமே ஸ்வரூபம் -ஒரே காரியத்துக்கு உபாய உபேய ஆகாரங்கள் உண்டே )

அவனுக்கு அக் கீர்த்தியைப் போன்று,-தன்னுடைய சம்பந்தமும் ஏற்றமாம்படி இருக்குமவளே அன்றோ.-நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனி யொடும்-
கங்கையின் அலைகளின் நடுவே வசிப்பாரைப் போலே ஒளிகளாகிய அலைகளின் நடுவே ஆயிற்று இருப்பது.-ஒளிகளின் நடுவே வடிவு ஊகிக்கப் படுவதாயாயிற்று இருப்பது.
அவ் வடிவு தான் எவ்வளவு போரும் என்னில், அளவிட்டு அறிதற்கு அரியதாய்ச் ஸ்லாக்கியமாய் இருக்கும்.-நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் – ஒருநாள், சீயர் கோயிலுக்கு எழுந்தருளா நிற்க, வழியிலே பிள்ளானைக் கண்டு, ‘ஈச்வரனுக்கு ஸ்வரூப வியாப்தியேயோ உள்ளது,-விக்கிரஹ வியாப்தியும் உண்டோ?’ என்று கேட்க, ‘சர்வ விஷயமாக ஸ்வரூப வியாப்தியே உள்ளது;-உபாசக விஷயத்தில், அவர்கள் பக்கல் அநுக்ரஹத்தாலே, அவர்கள் பற்றுக் கோடாகப் பாவித்த விக்கிரஹத்தோடே எழுந்தருளியிருக்கும்;-இனி, ஸ்வரூப வியாப்திக்குப் பிரமாணம் கண்ட இடம் சாமான்ய விஷயமாகிறது,-விக்கிரஹ வியாப்திக்குப் பிரமாணம் கண்ட இடம் விசேஷ விஷயமாகிறது’ என்று பணித்தானாம்.

நேமி அம் கை உளதே.–-அல்லாத அழகுகள் எல்லா வற்றிலும் மிகுதியாய் யாயிற்று கையும் திரு வாழி யும் இருப்பது -வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும் படியான திருக் கையிலே திரு வாழி யானால் மீட்கப் போமோ –-அவன் கையில் திருவாழி பிடித்திலனாகில் நான் பழி பரிஹரித்து மீளேனோ?-அவன் கையில் திருவாழி இருக்க, என்னாலே பழிக்கு அஞ்சி மீளப்போமோ? என்றபடி.
உங்கள் ஹித வசனங்களைக் கேட்கைக்கு உள்ளே இடம் இல்லாதபடி நிறைந்து நின்றான் என்பாள்,-நிறைந்து என் உள் நின்றொழிந்தான்’ என்கிறாள்
இனி, போக்கிடம் இல்லையாம்படி அவன் வந்து உள்ளே நிற்க, எனக்கு ஒரு போக்கிடம் உண்டோ என்பாள், நின்றொழிந்தான்’ என்கிறாள் என்னுதல்.
அவனை என் மனத்தினின்றும் புறப்படச் சொல்ல மாட்டீர்களோ நான் என் பழி நீக்குவதற்கு.
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும்படியான கையிலே திருவாழியுமானால் மீளப் போமோ,-அவனுடைய நிறைவினைக் குறைக்கவோ, என் பழி நிறைவினைக் குறைக்கவோ.

——-

கையுள் நன்முகம் வைக்கும் நையும்என்று அன்னையரும் முனிதிர்
மைகொள் மாடத் திருக்கு றுங்குடி நம்பியை நான் கண்டபின்
செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும்
மொய்ய நீள்குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன்னிற்குமே
.–5-5-8-

கையுள் நன் முகம் வைக்கும் – அவனைப் பிரிகையால் வந்த தளர்த்தியாலே கையிலே முகத்தை வையா நின்றாள். இத்தனை சாகசத்திலே துணியும் படி ஆவதே இவள். தன் முகத்தின் வாசி தான் அறியாது ஒழிய வேணுமோ.கணவனுடைய கரத்தின் பரிசமே யாயிற்றுப் பொறுப்பது. இதனால், தன்னோடு தனக்குச் சம்பந்தமில்லாத பாரதந்திரியத்தைச் சொல்லுகிறது.-அதுவே அன்றோ “நம:” என்ற சொல்லின் அர்த்தமாகிறது.-இதனுடைய சுருக்கமாக இருக்கின்ற உகாரத்திலேயும் இது உண்டாயிருக்கச் செய்தே இங்கேயும் –-நமஸ்-சொல்லும்போது இதுவே அர்த்தமாக வேணுமே அன்றோ.

வடிவும்-என்னை மீள ஒட்டாத வடிவும், மெய்யே மீள ஒட்டுகிறது இல்லை காணும் இவளை.-பாவியேன் முன் நிற்குமே –-அநுபவத்திற்குத் தகுதி யில்லாதவை முன்னே நிற்கை யாகிறது மிகுந்த கிலேசத்திற்குக் காரணமாய் இருப்பது ஒன்றே அன்றோ.
‘முன் நிற்கும்’ என்னா நிற்கச் செய்தே அன்றோ ‘பாவியேன்’ என்கிறது.
கண்களுக்குத் தோற்றா நிற்கச் செய்தே யானைக்குக் குதிரை வையா நின்றது.-

————

முன்னின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர்
மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
சென்னி நீண்முடி ஆதியாய உலப்பில் அணி கலத்தன்
கன்னல் போல் அமுதாகி வந்து என் நெஞ்சம் கழியானே
.–5-5-9-

பார் அளந்த விசும்பு அரசே —எம்மை வஞ்சித்த ஓர் அரசே -மூன்று வித கிரீடங்கள் –
செல்லப் பிள்ளை – ராஜ முடி -வைர முடி -கிருஷ்ண ராஜ முடி -மூன்று நாள்கள் உத்சவங்கள்
மூன்று பாகங்கள் –கிரீட மகுட சூடாவதம்ச —-ஆதி ராஜ்ய ஜல்பிகா –தத்வ த்ரய சம்ப்ரதாயம்

பூஷண பூஜ்யங்களுடைய சேர்த்தியால் கண்ட சக்கரையும் சேலப் பாலும் கலந்தால் போலேயாய்-வந்து என் நெஞ்சம் கழியானே –-வந்து என் நெஞ்சில் நின்றும் போகின்றிலன்.
முன்னே நிறுத்தினவனைப் பொடிய மாட்டார்கள்; ‘பெற்றோம், பிழைத்தோம்’ என்று,
‘முன்னின்றாய்’ என்று என்னைப் பொடியுமித்தனை காணும் இவர்கள் வல்லது.
எனக்கு மறக்கை தேட்டம், முடியாமை இருக்கிறேனத்தனை.-நம்பி புகுந்து விடுகின்றிலன்

—————–

கழிய மிக்கதோர் காதலள் இவள் என்று அன்னை காணக்கொடாள்
வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
குழுமித் தேவர் குழாங்கள் கைத்தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே
எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே.
–5-5-10-

கழிய மிக்கது ஓர் காதலள் இவள் –-எல்லாருடைய காதலைக் காட்டிலும் வேறுபட்ட காதல்; -இதர விசஜாதீய காதல்–அன்றிக்கே,-நாள் கழியக் கழியப் பெருகி வருகிற காதல் என்னுதல் நாட்டார், “நாள் செல்லச் செல்லச் சோகத்தை மறந்து போகா நிற்பர்கள்;
எனக்கு, அங்ஙன் அன்றிக்கே, நாள் செல்லச் செல்லச் சோகம் பெருகி வாரா நின்றது” 

அன்னை காணக் கொடாள்--‘இவள் ஒரு விஷயத்திலே காதலைச் செய்யக் கண்டேனாக வல்லேனே’ என்றிருக்குமவளும் காண வேண்டுகின்றிலள்.-ஆனால், இப்போது இங்ஙனம் படுகிறது என்? என்னில்,-தர்மி லோபம் வரும்படிப் பிராவண்யத்திலே மூழ்கினவளாக ஒட்டாளே,-சரீரம் உண்டாய் மேல் நடக்க வேணும் என்று இருப்பவள் அன்றோ.
காண்கையாவது –-அநுசந்தித்தல்.-நெஞ்சு என்னும் உட் கண்”-நெஞ்சையுங் கூட வாய் கட்டா நின்றாள்.-வழு இல் கீர்த்தி –-குறை வற்ற கீர்த்தியை யுடைய. நான்-அக் கீர்த்திக்குப் பிரிந்து நிலைபெறுதல் இல்லாதது போன்று, அவனை ஒழியத் தனித்து நிலை பெறுதல் இல்லாத நான்.–நித்ய ஸூ ரிகளுடைய சமூகங்கள் திரண்டு அனுபவிக்க கிண்ணகத்தில் இழிவாரை போலே திரள் திரளாக வாயிற்று இழிவது-அழகு வெள்ளத்தின் நடுவே-எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே-உஜ்ஜவலமாய் தோற்றுகிற அத்விதீயமான விக்ரஹம்
இன்னார் என்று அறியேன் என்கிறபடியே நித்ய அபூர்வமாய் இருக்கும் வடிவு -தேஜஸாம் ராசி மூர்ஜ்ஜிதம்–கண்ட பின் –இவர்க்கு இப்போது காட்சியாவது தான் ஏது? என்னில்,
அடியில், ‘பொய்ந் நின்ற ஞானம்’ தொடங்கி ‘முனியே நான்முகனே’ என்ற பாசுரம் அளவும் செல்ல ஒரே வாக்கியமே அன்றோ,-நடுவில் உள்ளவை அநுபவப் பிரகாரங்களாலே பிறக்கிற விசேடங்களே அன்றோ.-நித்திய ஸூரிகள் நடுவே தோன்றுமாறு போலே என் நெஞ்சுக்குள்ளே பிரகாசியா நின்றது.-ஆர்க்கும் அறிவு அரிது –-எனக்கு மறக்க ஒண்ணாதாப் போல ஆயிற்று, தம் முயற்சியால் அறிவார்க்கும் அறிய ஒண்ணாதிருக்கிறபடியும்.

————

அறிவரிய பிரானை ஆழி அம் கையனையே அலற்றி
நறிய நன்மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துளிவை பத்தும் திருக்குறுங்குடி யதன்மேல்
அறியக் கற்று வல்லார் வைட்ணவர் ஆழ்கடல் ஞாலத்துள்ளே
.–5-5-11-

அறிவு அரிய பிரானை– நாம் பெறுதல் இழத்தல் செய்கிறோம், தம் முயற்சியால் சாதித்துக் கொள்ளப் படுவது அன்றிக்கே ஒழியப் பெற்றோமே முன்னம்.-வஸ்து தான் உண்டானால் நினைத்த போது பெற்று அநுபவிக்கலாமே அன்றோ.-இவர்கள்- தாய் மார்கள் -பின்னைத் தங்கள் முயற்சியாலே அறியுமவர்களோ? என்னில்,-ஆக வேணுமே அன்றோ, ‘மீட்கலாம்’ என்று இருந்த போதே, தங்கள் தங்களாலே அறியவுமாம்’ என்று இருந்தார்களாக வேணுமே அன்றோ.-ஆழி அம் கையனையே அலற்றி – “சங்கினோடும் நேமியோடும்” என்று, தொடங்கின படியே தலைக் கட்டுகிறார்.-அவனைக் கை விடாமல் -இடைவிடாமல் -அநுபவித்ததித்தனை இதற்கு முன்பெல்லாம்;-இதில், கையும் திருவாழியுமான அழகை யாயிற்று உருவச் சொல்லிக் கூப்பிட்டது.

ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு, நம்பியுடைய அழகினை மெய் காட்டுக் கொண்ட இப் பத்தும் திருக் குறுங்குடி விஷயம்-திவ்விய ஆயுதங்களும் திவ்விய ஆபரணங்களும் சேர்ந்த சேர்த்தியாலுண்டான நம்பியுடைய அழகைத் திரளச் சொன்ன பத்தும்-அறியக் கற்று வல்லார்--இதனைக் கற்று அறிய வல்லவர்.-அறியக் கற்கையாவது, ஸ்ரீ வைகுண்டத்தில் நித்திய ஸூரிகள் நடுவே இருக்கிற இருப்பைக் காட்டிலும், திருக் குறுங்குடியில் நிற்கிற நிலையிலே குணாதிக்யம் உள்ளது என்னுமிடத்தை அறிந்து கற்க வல்லவர்கள்.
வஸ்துவுக்குக் குணத்தாலே அன்றோ உயர்வு; அந்தக் குணாதிக்யம்-சௌலப்யாதிகள் எங்கே உண்டு, அங்கே அன்றோ ஏற்றம்.-ஆழ் கடல் ஞாலத்துள்ளே வைட்ணவர் –
மரு பூமியான சம்சாரத்தில் இருக்கச் செய்தே நித்திய ஸூரிகளோடு ஒக்கச் சொல்லலாம் படி ஆவர்கள்-உகந்தருளின நிலங்களில் வாசி அறியுமவர்கள்.-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -70 -வளை வாய்த் திருச் சக்கரத்து எங்கள் –பிறவித் துயரற -1-7-

March 7, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

தலைவி இரவின் நெடுமைக்கு இரங்குதல் – பிறவித் துயரற -1-7- நிரதிசய போக்யத்வம் ஆராதனைக்கு இனியவன்–இதிலும் துழாய் இனியது-திருத்துழாய் முடிந்த அவன் -இரான் எனில் -அதிலும்–மூன்று அர்த்தங்கள்–1-திருத்துழாய் ஆசைப்பட்ட எனக்கு -கிடையாதபடியாலே வண்ணம் பசலை நோய் இப்படி மாறிக் கொண்டு இருக்க – 2-இரவு நெடுகி துன்பம் கொடுக்க – 3-இப்பொழுது மாலை மாறி இரவு வரப் போகிறது இது அநேகம் கல்பங்களாகி என்னாய் ஆகுமோ – )

அவதாரிகை –-ஸ்ரீ வைகுண்ட நாதன் சாத்தின மாலையை பெற வேணும் என்னும் அபேஷையால்
உண்டான-த்வரையாலே – காலம் செலுத்த உள்ள அருமை -சொல்லுகிறது –

இப்படி பார்ஸ்வஸ்தர் ஆஸ்வஸிப்பித்த இடத்திலும் விளம்ப அஷ மத்வத்தாலே கால தைர்க்யம் பொறாமையாலே வந்த ஆர்த்தியை இரவின் நெடுமைக்கு இரங்கின தலைவி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

ஸ்ரீ நம்பிள்ளை –ஈடு ––அவதாரிகை -ஸ்ரீ வைகுண்ட நாதன் சாத்தின திருத்துழாய் மாலையைப் பெற வேணும் என்னும் அபேக்ஷையால் உண்டான த்வரையாலே காலம் செலுத்த உள்ள அருமை சொல்லுகிறது

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள–அவதாரிகை-இதுக்கு மேல் வந்த நெடுகைக்கு இரங்கின
தலைமகன் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் ஸ்வயம் விளம்ப அஷமராய்
இப் பாசுரத்தில்

வளைவாய்த்  திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல்
தளைவாய் நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை
விளைவான் மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க எம்மை
உளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே
— 70-தலைவி இரவின் நெடுமைக்கு இரங்குதல் –

பிறவி யற்று நீள் விசும்பில் பேரின்பம் உய்க்கும்
திறம் அளிக்கும் சீலத் திருமால் -அறவினியன்
பற்றும் அவர்க்கு என்று பகர் மாறன் பாதமே
உற்ற துணை என்று உள்ளமே ஓடு —7–ஆராதனத்தில் அல்ப சந்துஷ்டதையாலே அவனுக்கு செய்ய வேண்டியது பணி இல்லையே யாகிலும் உள்ளது தேவையாய் இருக்கும் அன்று-ஆஸ்ரயணீயம் கூடாதே என்ன-ஸ்மர்த்தவ்ய விஷய சாரச்யத்தாலே பல தசையில் போலே ஆஸ்ரயணம் தசையே பிடித்தும் ரசிக்கும் விஷயம் ஆகையாலே அபிமத விஷயத்தில் பரிமாற்றம் போலே ஆஸ்ரயணம் அத்யந்தம் சரசமாய் இருக்கும் என்கிற பிறவித் துயரில் -அர்த்தத்தை பிறவி யற்று -இத்யாதியாலே அருளிச் செய்கிறார்–இப்படி ஆஸ்ரயிப்பார்க்கு- குணைர் விருருசே ராம-என்னும்படி நிரதிசய போக்கினாய் இருக்கும் என்று இத் திருவாய் மொழி முகேன அருளிச் செய்யும் ஆழ்வார் திருவடிகளே
பிராப்தமான துணை என்று நெஞ்சே சீக்ர கதியாகச் சென்று பற்று – முந்துற்ற நெஞ்சாய் அங்கே  பற்றும் படி ஓடு-

வளைவாய் திருச் சக்கரத்து –வளைத்த வாயை உடைய திருச் சக்கரம் -என்னுதல்-அன்றிக்கே –
வளை -ஸ்ரீ பாஞ்ச   ஜன்யமாய் –வாயை உடைய திரு ஆழியை உடையவன் என்னுதல்–தமஸ பரமோ தாதா சங்கு சக்ர கதாதர -என்னக் கடவது -இறே (மண்டோதரி பெருமாளது அடையாளம் சொல்லும் ஸ்லோகம் )-எங்கள் வானவனார் முடி மேல் –த்ரிபாத் விபூதி யடைய திவ்ய ஆயுதங்களும் – சாத்தின மாலைகளும் – ஆன இவ் அழகே யாம்படி  இருக்கிற ஸ்ரீ வைகுண்ட நாதனுடைய – திரு அபிஷேகத்தில்  உண்டான தொடை வாய்ப்புள்ள –அநந்த வைநதேயாதிகள் தொடுக்கிறது இறே –தளை என்று தொடையாய் –வாய் –வாய்ப்பை உடைய – தொடை வாய்ப்புள்ள திருத் துழாய்–வண்ணம் பயலை விளைவான்–நறுங்கண்ணி தண் அம் துழாய்க்கு – செவ்வியை உடைய மாலையான திருத் துழாய்க்கு வண்ணம் இத்யாதி –அம் மாலையை ஆசைப்பட்டு -பெறாமையாலே நிறமானது பயலை யாம்படி-விவர்ணமாம் படியாக–மிக வந்து இத்யாதி – முந்துற ஒரு ராத்திரி –ஒரு நாளாய் பெருகிற்று –
அது போய் ஒரு மாசமாய் – அது போய் ஒரு வத்சரமாய் – அது போய் ஒரு கல்பமாய் -பெருகும் படி ஒழிய
என்னை நலிகைக்காக வந்து புகுந்து ஒரு ராத்திரி அநேகம் ஊழிகளாக நின்றது –மிக வந்து – ஒன்றுக்கு ஓன்று மிகும் படி வந்து என்னுதல் – அநேகம் ராத்திரி எல்லாம் வந்தது இறே – இது ஒரு ராத்திரி இருந்தபடி என்-

இருள் இன்று என்னை அடியோடு முடிக்க கங்கணம் கட்டிக் கொண்டு வந்து நீடிக்கிறதே
வளைவாய்த் திருச் சக்கரத்து-வட்டமான நுனியை யுடைய திருச் சக்கரம் என்றும் -சங்கையும் கூர்மையான சக்கரமும் என்றுமாம்-ஸர்வேஸ்வரத்வத்துக்கு ஸூ சகமம் -அடிமை கொள்ள -சம்பந்தமும் உடைய -உபய விபூதி நாயகன் -அலங்காரமும் உடைய சர்வேஸ்வரனை அனுபவிக்க பெறாமையாலே தன்மை குலையும் படி காலம் வரையறை இல்லாமல் வளர்கின்றதே –

வளைவாய்த் திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல்-வளைந்த வாயை யுடைத்தான திருவாழியை யுடையனாய் எங்கள் பக்கலிலே பரமபதத்திலே பண்ணின அபிமானத்தை பண்ணும்
ஸர்வேஸ்வரனுடைய திரு முடியில் சாத்தின-தளைவாய் நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு-கட்டு வாய்ந்து பரிமளத்தை யுடைத்தான மாலா ரூபமான குளிர்ந்த திருத்துழாய்க்கு-வண்ணம் பயலை விளைவான்-ஸ்வ பாவிகமான நிறம் ஒழிந்து வெளுப்பு நிறம் விஞ்சி வருகைக்காக–மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க-ஒரு ராத்ரி மிக்கு நாளாயும் மாஸமாயும் ஆண்டாயும் ஊழியாயும் வந்து ஒழிய–எம்மைஉளைவான் புகுந்து-எம்மை ஈடுபடுத்துகைக்காகக் கிட்டி-இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே-இந்த ஒரு ராத்ரியானது ஆயிரம் கல்பம் ஆகா நின்றன-ஆயிரம் என்றது-அநந்தம் என்றதாகவுமாம் –இத்தால்-வளைவாய்த்  திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல் தளைவாய் நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு-ஈஸ்வரத்வ சிஹ்னமான பரிகரத்தையும் விபூதியையும்
பூஷணத்தையும் ஒப்பனையையும் யுடைய ஸர்வேஸ்வரனுடைய போக்யதையை–வண்ணம் பயலை
அனுபவிக்கப் பெறாமையாலே ஸ்வரூப விபர்யாசம் பிறக்கும் படி நம்மை கிலேசிப்பதாக-விளைவான் மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க எம்மை உளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே — காலமானது அவச்சேதகங்களால் பரிச்சின்னமாகை யன்றியே பிரகாச பிரஸங்கம் இல்லாதபடி அபரிச்சின்னம் ஆகா நின்றது என்று தளர்ந்து அருளிச் செய்தார் ஆயிற்று

ஸ்ரீ நம்பிள்ளை –ஈடு –வியாக்யானம்-வளைவாய்த் திருச் சக்கரத்து-வளைந்த வாயை யுடைய திருச்சக்கரம் என்னுதல்–அன்றிக்கே-வளையையும்–ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் வாயையும் யுடைய -திருச்சக்கரத்தையும் என்னுதல்-தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதா தர -யுத்த –114-15-என்னக் கடவது இறே–எங்கள் வானவனார் முடிமேல்-த்ரிபாத் விபூதியை யுடையராய் திவ்ய ஆயுதங்களும் சாத்தின மாலைகளுமான அழகேயாய் இருக்கிறவர் ஸ்ரீ வைகுண்ட நாதனுடைய திரு அபிஷேகத்தில் யுண்டான-தளைவாய்-தொடை வாய்ப்புள்ள அநந்த வைநதேயாதிகள் தொடுக்கிறது இறே–நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு-செவ்வியை யுடைய மாலைத் திருத்துழாய்க்கு–வண்ணம் பயலை விளைவான்–அம்மாலையை ஆசைப்பட்டுப் பெறாமையாலே நிறமானது பயலை விளையும்படியாக விவரணமாம் படியாக–மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க-முந்துற வந்ததொரு ராத்ரி ஒரு நாளாய்ப் பெருகிற்று-அது போய் ஓர் ஆண்டாய்ப் பெருகிற்று-அது போய் ஒரு கல்பமாய்ப் பெருகிற்று–அது நிற்க-அத்தைக் கடக்க நிறுத்தி இது ஒரு ராத்ரி இருந்தபடி என் அவை போலே இன்றிக்கே இது வேறு ஒன்றாய் இரா நின்றது–எம்மைஉளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே–இவை யடைய நமக்கு அனுகூலம் என்னும்படி என்னை நலிகைக்காக வந்து புகுந்தது அநேகம் ஊழிகளாய் இரா நின்றன-மிக வந்து–ஒன்றுக்கு ஓன்று மிகும் படி வந்து என்னுதல்
அநேக ராத்ரிகள் எல்லாம் வந்தது இறே இது ஒரு ராத்ரி இருந்தபடி என்-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்–வியாக்யானம்–வளைவாய்த் திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல் தளைவாய் நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை விளைவான்-வளையவும் பர பேத நத்துக்கான தீக்ஷணமாகிய வாயுள்ள திருவாழியை யுடையவராய் எங்கள் பக்கல் வானில் பண்ணும் ப்ரீதியைப் பண்ணுமவருடைய திரு அபிஷேகத்தில் சாத்தின திருத்துழாயாதான
மரு கானத்தில் எங்கும் வாய்ந்த நறு நாற்றமுள்ள திருமாலையான திருத்துழாய்க்கு ஆசைப்பட்டு
என்னில் பசுமையான வர்ணத்தை உண்டாக்கி விளைப்பதுக்காக–மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க-ஒரு நாழிகையே வந்து நாளாயும் திங்களாயும் ஆண்டாயும் ஊழியாயும் மிகவும் வளர்ந்து நிற்குமே–எம்மை உளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே–ஒரு ராத்ரியானது பதினாயிரம் ஊழி களாய்க் கொண்டு நம்மை வளைத்துக் கொண்டு கொள்ளப் புக்கது எங்கனே நான் தரிக்கும் படி –

ஸ்வா பதேசம்–இத்தால் –பதி ஸம்மாநிதா ஸீதா –அயோத்யா -16-21- அவதாரத்தில் பிராட்டி பெற்ற பேற்றை ஸ்ரீ வைகுண்ட நாதன் பக்கலிலே பெற வேணும் என ஆசைப்பட்டுப் பெறாமையாலே காலம் செல்ல அரிதான படியைச் சொல்லுகிறது

ஸ்வாபதேசம்-இத்தால்-பதி சம்மா நிதா சீதா –என்று அவதாரத்தில் பிராட்டி பெற்ற பேற்றை- ஸ்ரீ வைகுண்ட நாதன் பக்கலிலே -பெற வேணும் என்று ஆசைப்பட்டு – பெறாமையாலே காலம்- செல்ல அரிதான படி சொல்லிற்று –ஒரு கங்குல் –வளைவாய் திருச் சக்கரத்து எங்கள் வானவனார்
முடி மேல் தளைவாய் தண் அம் துழாய்க்கு
வண்ணம் பயலை விளைவான் மிக வந்து-
நாளாய் திங்களாய் ஆண்டாய் ஊழியாய் வர்த்திக்கிற மாத்ரம் அன்றிக்கே – எம்மை உளைவான் புகுந்து ஊழிகள் ஆயிரமாகா-நின்றது
– என்று அந்வயம் –தளை –கட்டாய் —வாய் -வாய்ப்பாய் –தொடை வாய்த்து இருக்கை–என்னை உபேஷித்து என் உடம்பை விவர்ணமாம் படி செய்து –-தான் தன திருக்கையில் இற்று இருக்கிற திரு ஆழியினால் தன்னுடைய பரம பதத்தை விளங்கச் செய்து –
அவ் விபூதி எங்கும்-தான் சூடிய திருத் துழாய் பரிமளம்  கமழும் படி  தூரமாக வீற்று இருந்தான் –
என் எளிமை அறிந்து-இந்த இரவானது இப்படி நீண்டு அநந்த கல்பங்களாக பரிணமிக்க தொடங்கிற்று இதைக் கடந்து-நாம் ஜீவிக்க வழி என் -என்று சோகிக்கிறாள்  –

தாத்பர்யம்-இதில் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆஸ்வஸிப்பித்த அளவிலும் அஷமத்தால் -கால விளம்பம் பொறுக்காமல் நலிய கார் காலத்தில் வருவதாகச் சொல்லிப் போந்தான்-அதுவும் வந்து அவனும் வாராமல் நலிய இப்பொழுது இரவும் வந்து குளிர்ந்த திருத்துழாய் மேல் ஆசைப்பட்டு பெறாமல்
பயலை நோய் திரு மேனி எங்கும் பரவ அவன் ஸ்ரீ வைகுண்டத்தில் -எட்டா நிலத்தில் -தூரமாக வீற்று இருந்து அங்கு உள்ளார் அதன் பரிமளம் அனுபவிக்க இப்பொழுது எனது எளிமையையும் தனிமையையும் அறிந்து நலிய இரவு வந்து பரிணமிக்கும் காலம் போல் இல்லாமல் அளவுக்கு உட்பட்ட காலம் இல்லாமல் அளவு இல்லாத அநேக கல்பங்களாய் பரிணமிக்கத் தொடங்க இத்தைக் கடந்து நாம் ஜீவிப்பது எங்கனே என்கிறாள்

1-7-பிறவித் துயர் பிரவேசம் 

கீழில் திருவாய்மொழியில் ஸ்வாராதன் என்றார் –
அதில் சொன்ன ஆஸ்ரயணம் தான் போகரூபமாய் இருக்கும்,’ என்கிறார் இத் திருவாய்மொழியில்-இதுக்கு இட்டுப் பிறவாத சர்வேஸ்வரனும் ஆசைப்படும் படி போக ரூபமாய் இருப்பது ஓன்று இறே . 

ஸூ ஸூகம் கர்த்தும் – ஸ்மர்த்தவ்ய விஷய சாரஸ்யத்தாலே தானும் போகரூபமாய் இருக்கும் –
அவ்யயம் -கோலின பலன்களைக் கொடுக்கச் செய்தேயும் ஒன்றும் செய்யாதோமாய் நம் நெஞ்சிலே கிடக்கையாலே தான் முதல் அழியாதே கிடக்கும் 

ஏழாம் திருவாய் மொழியிலே -இப்படி ஸ்வ ஆராதனானாலும் குடி நீர் போலே ஆஸ்ரயணம் சரஸமாய் இராதாகில் அஹ்ருத்யமாய் இருக்கும் என்று நினைத்து
ஆஸ்ரயணத்தினுடைய ரஸ்யதைக்கு உறுப்பாக-1- ஆஸ்ரயணீயனுடைய பாவநத்வத்தையும்–2- நிரதிசய ஆனந்த யோகத்தையும் –3-பர தசையிலும் அவதாரம்
அத்யந்த ஸரஸம் என்னும் இடத்தையும்–4 இப்படி சரசனானவனைப் பிரிய விரகில்லை என்னும் இடத்தையும் 5-தாம் விட ஷமர் அல்லர் என்னும் இடத்தையும் –
6-அவன் தான் அகலத் தேடிலும் தம்முடைய இசைவு இல்லாமையையும் -7-தாம் அகலிலும் அவன் நெகிழ விடான் -என்னும் இடத்தையும் –
-8-தம்மை அகற்றிலும் தம் நெஞ்சை அகற்ற ஒண்ணாமையையும் –9-சர்வ பிரகார சம்ஸ்லிஷ்டமான தம்முடைய ஆத்மா அகல
பிரசங்கம் இல்லை என்னும் இடத்தையும்–10- நிரந்தர அனுபவம் பண்ணினாலும் திருப்தி பிறவாமையாலே தவிர அரிது என்னும் இடத்தையும் –
அருளிச் செய்து ஆச்ரயண சாரஸ்யத்தை உபபாதித்து அருளுகிறார் –

பிறவித் துயர் அற ஞானத்துள் நின்ற -துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்வார்
அறவனை ஆழிப் படை அந்தணனை மறவியை இன்றி மனத்து வைப்பாரே 
–1-7-1-

நிரதிசய போக்யனை ஆஸ்ரயித்து வைத்து -ஷூத்ர பிரயோஜனத்தை அபேஷிப்பதே-என்று கேவலரை நிந்தித்து-அவர்கள் சிறுமை பாராதே அவர்கள் அபேஷித்ததைக் கொடுப்பதே -என்று அவன் நீர்மையைக் கண்டு விஸ்மிதர் ஆகிறார்-அறவனை – அவர்கள் படியையும், காரியம், பலன் கொடுக்கின்றவன் படியையும் பார்த்து, ‘என்ன பரம உதாரனோ!’என்கிறார்;
ஒருவன் விரும்பும் பயன் யாதாயினும், அதனைப் பெறுவற்குத் தன்னை விரும்பும் அத்தனையே அவன் வேண்டுகின்றான் என்றபடி.
‘எங்களுக்கு நீ வேண்டா; ஷூத்ர பிரயோஜனம் -சிறிய பயனே அமையும்,’ என்று இருக்கிறவர்களுக்கும் அதனைக் கொடுத்து விடுவதே! என்ன தார்மிகனோ!’ என்கிறார்.

அந்தணன்-என்று . சாணிச் சாற்றைப் போன்று ‘சுத்தன்’ என்று கொண்டார்கள் இத்தனை;
இனிமையில் நெஞ்சு சென்றது இல்லை.-ஆழிப் படை அந்தணனை-கையுந்திருவாழியுமான அழகைக் கண்டால் அதிலே கால் தாழாதே, தங்கள் பிரயோஜனத்துக்கு உறுப்பான சுத்தி மாத்திரத்தையே பற்றுவதே!’ என்கிறார்.

மறவியை இன்றி மனத்து வைப்பாரே – அவனுடைய இனிமையையுங் கண்டு வைத்து, தங்கள் புருஷார்த்தத்தை மறவாதே அதனைப் பெறுதற்கு அவனை அடைகின்றார்கள்.
‘மறவியை இன்றி’ என்று, அவர் தம் செயலுக்கு இரங்கும் இவர் மறப்பரோ?’ எனின்,
இவர்க்குக் கையுந்திருவாழியுமான அழகைக் கண்டால் முன் அடி தோற்றாது; 
‘சக்கரத்து அண்ணலே’ என்றால் பின்னைத் தரைப்படும் இத்தனை அன்றோ இவர்?’ 
ஸ்ரீ திருமங்கை மன்னனும், ‘ஆழியொடும், பொன்னார் சார்ங்கமுடைய அடிகளை இன்னார் என்று அறியேன்!’ என்று உத்தேஸ்யமான பொருளையும் மறக்கும்படி கலங்குவர்.
‘பிள்ளாய், நல்லதை மறக்கப் பண்ணா நிற்க இவ் விஷயம், தீயதை மறவாது ஒழிவதே!

மறவியை -மறப்பை -மறப்பு இன்றிக்கே-மறவாதே மனத்து வைப்பாரே-
உபாசன பரமானால் -சுடர் விளக்கம் குண பிரகாசகமான விக்ரஹமாகக் கடவது – அவனுடைய இனிமையை அநுசந்தித்து வைத்தும், பின்னையும் இந் நிலை குறையாதே நிற்பதே! இவ் வரிய செயலைச் செய்கைக்குத் திண்ணியர் ஆவதே இவர்கள்!’ என்று இரங்குகிறார்.

————–

வைப்பாம் மருந்தாம் அடியாரை வல்வினைத்-துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடானவன்
எப்பால் எவர்க்கு நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே 
–1-7-2-

ஒருவன் நினைத்த வகைகள் எல்லாம் அநுபவிக்கலாம்படி இறைவன் தானே தன்னை
இஷ்ட விநியோகத்திற்குத் தகுதி ஆக்கி வைப்பவன் ஆதலின், ‘வைப்பாம்’ என்கிறார்.
இதனால், பிராப்யத்வம் கூறியபடி.-அனுபவ விரோதிகளைப் போக்கித் தன்னை அனுபவிக்கைக்குத் தகுதியான சத்தி யோகத்தையுங் கொடுத்துத் தன்னையும் கொடுக்குமவன் ஆதலின், ‘மருந்தாம்’ என்கிறார். இதனால், பிராபகத்வம் கூறிய படி.

எங்கள் ஆயர் கொழுந்தே-ஸ்ரீ கிருஷ்ணன் திருவவதரித்த ஊரில் உள்ளாரோடு தமக்கு ஒரு-பிராகிருத – சரீர சம்பந்தத்தினை விரும்பி,  எங்கள் ஆயர்’ என்கிறார்.
அன்றி,
எங்கள் கொழுந்தே-– அவதாரந்தான் அடியார்களைக் காப்பதற்காகவே எடுக்கப்பட்டது ஆதலானும்,-வெண்ணெய் களவு கண்டு புசித்ததனால் நகரம் கலங்கிய செய்தி பழையதாக எழுதிக் கிடக்கவும், அதனைக் கூறிய அளவில் ‘எத்திறம்’ என்று மோகித்தவர் இவரே ஆதலானும், எங்கள் கொழுந்து’ என்கிறார் என்று கொண்டு, ‘எங்கள்’ என்பதனைக் கொழுந்திற்கு அடை மொழி ஆக்கலுமாம்.
இனி, தான், பிரமன் முதலிய தேவர்கட்குத் தலைவனாக இருத்தலால் உளதாய பெருமையைப் போன்றே, ஆயர்தங்களுக்குத் தலைவனாய் இருத்தலால் உளதாய பெருமையையும் பெருமையாக நினைக்கிறான் என்பார்,  ‘ஆயர் கொழுந்தே’ என்கிறார்

———–

ஆயர் கொழுந்தாய் அவரால் படை யுண்ணும் மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியை
தூய வமுதைப் பருகிப் பருகி என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே–
1-7-3-

எம்பெருமானைத் தமக்கு இனிதாக புஜியா நிற்கச் செய்தெ சாம்சாரிக சகல துக்கங்களும் போயிற்று என்கிறார் –
ஷூ த்ரமான பிரயோஜனத்துக்காக பற்றினேன் அல்லேன்
அவனைப் பரம பிரயோஜனத்துக்கு உபாயமாகப் பற்றினேன் அல்லேன் –
இனிய விஷயம் என்று அனுபவிக்க இழிந்தேன் -விரோதியானது தானே போகக் கண்டேன் -என்கிறார் –

வேரிலே வெப்பம் தட்டினால் கொழுந்து முற்ப டவாடுவது போன்று, காட்டிலே பசுக்களின் பின்னே திரிகின்ற ஆயர்கட்கு அடி கொதித்தால் ஸ்ரீகிருஷ்ணன் முகம் முதற் கண் வாடும்-அவரால் புடை உண்ணும்-‘-மத்தாலே ஓர் அடி அடிப்பார் போலே காணும்’ என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்யும்படி.அவாப்த ஸமஸ்த காமனான ஸ்ரீ சர்வேஸ்வரன், தனக்கு ஒரு குறை உண்டாய் வந்து அவதரித்து,-ஆஸ்ரிதர் ஸ்பர்சமுள்ள பொருளால் அல்லது தரியாதானாய், அதுதான் நேர் கொடு நேர் கிடையாமையாலே களவு காணப் புக்குத்
தலைக் கட்ட மாட்டாதே வாயது கையது ஆக அகப்பட்டுக் கட்டுண்டு அடியுண்டு நிற்கும் நிலையை நினைத்து ‘மாயப் பிரானை’ என்கிறார்.என் மாணிக்கச் சோதியை-
அடியார்கள் கட்டி அடிக்க அடிக்க களங்கம் அறக் கடை யுண்ட மாணிக்கம் போன்று,
திரு மேனி புகர் பெற்று வருகிறபடி.என் சோதியை-அப் புகரைத் தனக்கு முற்றூட்டு ஆக்கினான் ஆதலின், ‘என் சோதியை’என்கிறார்.மயர்வை அறுத்தவன் இறைவனாக இருக்க, ‘அறுத்தேன்’ என்று தம் தொழிலாகக் கூறல் பொருந்துமோ?’ எனின், 
‘இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை’ என்று விரும்பியவர் தாமே யாதலின்,’ -அபேக்ஷித்தபடியே -விரும்பியவாறே பல அனுபவம் தம்மது ஆகையாலே ‘அறுத்தேன்’ எனத் தம் தொழிலாக அருளிச் செய்கிறார்.-தூய வமுதைப்அந்த அம்ருதம் அதிக்ருதாதிகாரம்-இது சர்வாதிகாரம் –அந்த அம்ருதம் சம்சாரத்தைப் பூண் கட்டும்-ஸக்ருத் சேவ்யம் அது -சதா சேவ்யம் இது

———-

மயர்வற என் மனத்தே மன்னினான் தன்னை -உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வில் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என் இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ 
–1-7-4-

தன் படியைக் காட்டி என்னை இசைவித்து -அயர்வறும் அமரர்களோடு கலக்குமா போலே என்னோடே கலந்த உபகாரகனை நினைத்து விட உபாயம் உண்டோ -என்கிறார் –
முன்பு அயோக்கியன் என்று அகன்றவர் ஆகையால் இனி விடேன் என்கிறார் –

என் மனத்தே மன்னினான் தன்னை – இன்னமும் மயர்வு குடி கொள்ள ஒண்ணாது என்று என்னுடைய மனத்திலே புகுந்து- ஸ்தாவரப் பிரதிஷ்டையாக இருந்தவனை,-என் மனத்தே-புறம்பேயும் -ஒரு கந்தவ்ய பூமி -சேரத் தக்க இடம் உண்டு’ என்று தோற்ற இராமல் இருக்கின்றான்-உயர் வினையே தரும் – -ஞான விஸ்ரம்ப பக்திகளைத் தாரா நின்றான்-தரும்-தந்து சமைந்தானாய் இராது மேன்மேலும் தந்து கொண்டே யிருக்கின்றான்
ஆதலின், ‘தந்து’ என்னாது ‘தரும்’என்கிறார்.-காதல் கடல்புரைய’, ‘காதல் கடலின் மிகப் பெரிதால்’,  ‘நீள் விசும்பும் கழியப் பெரிதால்’,  ‘சூழ்ந்தனிற் பெரிய என் அவா’-என பத்தியை மேன்மேலும் தந்து கொண்டே இருக்கின்றான்-ஒண் சுடர்க் கற்றையை – இதனால், எனக்கு உபகரித்தானாய் இருத்தல் அன்றியே, ‘தான் உபகாரங்கொண்டான்’ என்னுமிடம் வடிவில் புகரிலே தோற்ற ‘இரா நின்றான்’ என்கிறார்.-என் இசைவினை – ‘நான் அல்லேன்’ என்று அகலாதபடி  என் இசைவு தானாய்ப் புகுந்தவனை.

என் சொல்லி யான் விடுவேன் – 
1-‘சிறிது மயர்வு கிடந்தது’ என்று விடவோ? -மயர்வு அற
2-‘மயர்வைப் போக்கித் தான் கடக்க இருந்தான்’ என்று விடவோ?- என் மனத்தே மன்னினான்
3-‘எனக்கு மேன்மேலென நன்மைகளைப் பண்ணித் தந்திலன்’ என்று விடவோ? -உயர் வினையே தரும்
4-‘தான் செய்த உபகாரத்துக்குக் கைம்மாறு-ப்ரத்யுபகாரம் – கொள்ள இருந்தான்’ என்று விடவோ? -ஒண் சுடர்க் கற்றையை
5-‘வடிவழகு இல்லை’ என்று விடவோ? -ஒண் சுடர்க் கற்றையை
6-‘மேன்மை போராது’ என்று விடவோ? -அயர்வு இல் அமரர்கள் ஆதிக் கொழுந்தை
7-‘இப் பேற்றுக்கு-கிருஷி பண்ணினேன் – முயற்சி செய்தேன் நான்’ என்று விடவோ? என் இசைவினை எதனைச் சொல்லி நான் விடுவேன்?’ என்கிறார்.-

———–

விடுவேனோ என் விளக்கை என் ஆவியை -நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை
தொடுவே செய்து இள வாய்ச்சியர் கண்ணினுள்ளே விடவே செய்து விழிக்கும் பிரானையே
 –1-7-5–

‘திருவாய்ப்பாடியில் பெண்கள் கிருஷ்ணனை விட்டுப் பரமபதத்தை விரும்பும் அன்று அன்றோ நான் இவனை விட்டுப் புறம்பே போவேன்?’ என்கிறார்

இவர்க்குத் தன்னையும் காட்டி, ஆத்தும ஸ்வரூபத்தையும் விரோதி ஸ்வரூபத்தையும் காட்டித் தந்தானாதலின், ‘விளக்கு’ என்கிறார்.-மற்றையோர்க்குப் பத்தி-ஸ்நேஹம்- இல்லையே?
ஸ்நேஹம்–பத்தி உண்டாகில் அன்றோ இவ் விளக்குப் பிரகாசிப்பது? ஆதலால், ‘என் விளக்கை’ என்கிறார்.-உய்யக்கொண்டு விட்டிலன்;-மேல் மேல் எனக் கொள்ளா நின்றான் ஆதலின், ‘உய்யக் கொள்கின்ற’ என்கிறார்.-உடையவன் ஆகையாலே செய்தான்-திருவாய்ப்பாடியில் பெண்களுடைய பேற்றுக்கு-யத்னம் – முயற்சி செய்தவர் யார்?’ 

விடவே செய்து விழிக்கும்–அவர்கள் தூது விடும்படியைச் செய்து விழிக்கின்ற.
இனி, இதற்குத் ‘தூது செய் கண்கள்’ என்கிறபடியே, தான் தூது விடுகையாகிற செயலைச் செய்து விழிக்கின்ற’ என்று கூறலுமாம்.-தவாஸ்மி–தாஸோ அஸ்மி -என்றால் போலே சொல்லுகை – இனி, ‘விடருடைய செயல்களைச் செய்து’ என்று பொருள் கூறலும் ஓன்று.விஷமமான சேஷ்டிதங்கள் என்னவுமாம் -விடர் உண்டு தூர்த்தர் -அவர்களுடைய செயலைச் செய்து என்றுமாம்-விடவே செய்து விழிக்கை -ச விலாசமாக நோக்குகை –

—————

பிரான் பெரு நிலம் கீண்டவன் பின்னும் விராய் மலர்த்துழாய் வேய்ந்த முடியன்
மராமரம் எய்த மாயவன் என்னுள் இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ
 –1-7-6-

அவன் தான் விடில் செய்வது என் -என்னில் -தன் நீர்மையாலே -தன் குணங்களாலும் -சேஷ்டிதங்களாலும் -செயல்களாலும்-என்னைத் தோற்பித்தவனை நான் விட இசைவேனோ என்கிறார்-பிரான் –நிலா, தென்றல், சந்தனம் என்னுமிவை பிறர்க்கேயாக இருக்குமாறு போன்று, தன் படிகளை அடையப் பிறர்க்கு ஆக்கி வைக்குமவன்.-பெரு நிலம் கீண்டவன்-சம்சாரப் பிரளயங் கொண்ட என்னை எடுத்தவன்-விராய் மலர்த்துழாய் வேய்ந்த முடியன்.-ஒப்பனை அழகோடே பிரளயத்தில் மூழ்கினான்-மரா மரம் எய்த மாயவன் –இது-ஆஸ்ரிதர் – அடியார் விஷயமாகச் செய்த உபகாரம்.-பின்னை யான் ஒட்டுவேனோ-என்னுடைய கர்ம பாரதந்திரியம் போலே, அவனுடைய ஆஸ்ரித பாரதந்திரியத்துக்கும் ஏதேனும் கண்ணழிவு உண்டோ? ஆதலால், என்னுடைய இசைவு இன்றிக்கே இருக்க, அவனாலே போகப் போமோ?’ என்பதாம்.
இனி, ‘ஒட்டுவேனோ’ என்பதற்கு, ‘நான் தொங்குவேனோ’ என்று ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான்  பணிப்பர். தொங்குகை-திரிதல்.

————-

யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன் தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
ஊனொட்டி நின்று என்னுயிரில் கலந்து இயல் வானொட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே
–1-7-7–

நான் நெகிழ்த்துக் கொடு போக்கிலும் அவன் இசையால் -என்கிறார் –ஆகில் இங்கே இருக்கக் கடவோம்’ என்று -ப்ரதிஜ்ஜை -சூளுறவு செய்து வந்து புகுந்தான் ஆதலின், 
தான் ஒட்டி’ என்கிறார்.என் பக்கல் விலக்காமை பெற்றவாறே ‘என் ஆத்துமாவோடே வந்து கலந்து’ என்று ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்வர். -‘எனக்கு ஞானம் பிறத்தற்கு-கிருஷி பண்ணி -முயன்றவன்–பிறந்த ஞானம் பயன் பெறும் அளவாகக் கொண்டு, நான் அகன்று போவேன் என்றால் அவன் சம்வதிக்குமோ உடன்படுவேனோ?’-

————-

என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதலானே 
–1-7-8-

அவனுடைய கல்யாண குணங்களிலே அகப்பட்ட என் நெஞ்சை அவனாலும் பிரிக்கப் போகாது’ என்கிறார்.-‘ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டி புருஷகாரமாக நித்திய ஸூரிகள் ஓலக்கம் இருக்க அடிமை புக்கு அந்தப்புரப் பரிகரமான இவ் வாத்துமாவை அகற்றப் போகாது,’

——

அமரர் முழு முதல் ஆகிய வாதியை -அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை
அமர வழும்பத் துழாவி என்னாவி அமரத் தழுவிற்று இனி யகலுமோ
 –1-7-9-

சர்வ பிரகாரத்தாலும் அவனை ஸம்ஸ்லேஷித்த -ஏக த்ரவ்யம் — என்னலாம்படியான இவ் வுயிரைப் பிரிக்கும்படி எங்ஙனே?’ என்கிறார்-விளக்கு, விளக்கின் ஒளி என்னும் இரண்டும், இரண்டு பொருள்களாய் இருப்பினும், ‘ஒன்றனை விட்டு ஒன்றைப் பிரிக்க முடியாமல் இருக்குமே –.-அமரர்க்கு முழுமுதல்’ என்றவர், ‘லீலா விபூதிக்கு ஆதியை’ என்னக் காரணம் யாது?’ எனின், இவ்வுலகில் உள்ளார்க்கும் நித்திய ஸூரிகளைப் போன்று சம்பந்தம் உண்டாயிருக்கவும், இவர்கட்கு இச்சை இல்லாமையாலே, யோக்கியதையைப் பண்ணிக் கொடுக்குமளவே செய்கிறான் ஆதலின், ‘ஆதியை’ என்கிறார் .

————–

அகலில் அகலும் அணுகில் அணுகும் புகலும் அரியன் பொருவல்லன் எம்மான்
நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம் பகலும் இரவும் படிந்து குடைந்தே 
–1-7-10–

இப்படிப்பட்ட இவ்வனுபவத்தை கால தத்வம் உள்ளதனையும் அனுபவித்தாலும் திருப்தன் ஆகிறிலேன்-என்கிறார் –இத் திருவாய் மொழியில் முதல் பாட்டு –அகலில் அகலும் என்றவிடம் சொல்லுகிறது-இரண்டாம் பாட்டு –அணுகில் அணுகும் -என்றவிடம் சொல்லுகிறது –பொருவல்லன் – ஆஸ்ரிதர் தன்னைக் கிட்டும் இடத்தில் தடை உடையன் அல்லன்-பொரு -என்று ஒப்பாய் -ஒப்பாவது நேர் நிற்குமதாய் -அத்தால் தடையைச் சொல்லிற்றாய்-தடை உடையவன் அல்லன் -என்கை-அன்றியே பொரு என்று பொருத்தமாய் -அநன்யரைச் சேர வல்லன் என்றுமாம் –

————-

குடைந்து வண்டுண்ணும் துழாய் முடியானை -அடைந்து தென்குருகூர்ச் சடகோபன்
மிடைந்த சொல்தொடை ஆயிரத்து இப்பத்து உடைந்து நோய்களை ஒடுவிக்குமே 
–-1-7-11-

அம் மதுவிலே படிந்த வண்டுகள் விடமாட்டாதவாறு போன்று, பகவத் விஷயத்தை விடமாட்டாத ஆழ்வார் ஆயிற்று அருளிச் செய்தார்.

உடைந்து ஓடுவிக்கும்-இவனை விட்டுப் போகும் போதும் திரளப் போகப் பெறாமல், 
வள்ளலே உன் தமர்க்கு என்றும் நமன் தமர், கள்ளர் போல் என்கிறபடியே,
சிதறுண்டு தனித் தனியே ஓடச் செய்யும் என்பார், ‘உடைந்து ஓடுவிக்கும்’ என்கிறார். இருவர் ஒருவழி போகப் பெறார்கள் –
இனி, இப்பாவங்கள் வேறு இடத்திற்சென்று சேரினும்-ஆஸ்ரயாந்தரத்தில் (அதாவது, அசல் பிளந்து ஏறிடினும் என்றபடி) தத்தம் பயன்களைக் கொடுப்பதற்குத் தகுதியுடையன’-மறுமுட்டப் பெறாதபடி அல்லாதனவாகக் கெடும்-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -69-கார் ஏற்று இருள் செகில் ஏற்றின் சுடருக்கு-கற்பார் இராம பிரானை -7-5-

March 7, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

கால மயக்கு-தோழி சந்த்யா காலம் இல்லை-மாலையும் வந்தது -இரவும் வரும் -பெருந் துக்கம் வர
சர்வ ரக்ஷகன் வந்துவிடுவான்-கார் எருதுவும் சிகப்பு எருதுவும் சண்டை போடுகின்றன என்கிறாள்
ப்ராத காலம் சாயங்காலம் -அதுக்கு ஒரு காலம் இதுக்கு ஒரு காலம்-அற்பமான இருள் அதிகமான சுடர் ப்ராத காலம்-அற்பமான சுடர் அதிகமான இருள் சாயம் சந்த்யா-அருளால் விட மாட்டார் -வருந்தாதே -சமாதானம் படுத்துகிறாள் கற்பார் இராம பிரானை -7-5-இதன் விவரணம்-சராசரம் முற்றும் நற்பாலுக்கு உய்த்தவன் அன்றோ-மோக்ஷ பிரதன்-ரக்ஷகத்துக்கு சீமா பூமி தானே நாட்டை அளித்து ஷேம கரன்
சிசுபாலனுக்கும் ரக்ஷகன் அன்றோ-நன்மைப்புனல் பண்ணி -நான்முகனைப் பண்ணி -பாட்டுத்தொறும் ரக்ஷகத்வம் உண்டே –

அவதாரிகை –அதுக்கு மேல் சந்த்யையும் வந்து நலிய –அநந்தரம்-போகயோக்யமான காலமாய் இருக்க அவன் வந்து தோன்றாமையால் தலை மகள் ஆற்றாளாக –இது கண்ட தோழி யானவள் -இது சந்த்யை அல்ல இரண்டு வ்ருஷபங்கள் தங்களிலே பொருகிறன காண் -என்றுகாலம் மயக்கி அவளைத் தரிப்பிக்கிறாளாய்  -இருக்கிறது –

இப்படி ஆஸ்வாஸ கரரான பாகவதருடைய ஆகமநமும் இன்றியே அனுபவ யோக்ய காலத்தில் பகவத் அனுபவமும் ஸித்தியாமையாலே சிதிலரான இவரை ஸூஹ்ருத்துக்கள் ஆனவர்கள் இவ் வவஸ்தையில் பகவத் அங்கீ காரத்துக்குக் குறையில்லை என்று ஆஸ்வஸிப்பித்த பிரகாரத்தை
மாலைக்கு ஆற்றாத் தலை மகளை ஆற்றி யுரைத்த தோழி வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு–அவதாரிகை--அதுக்கு மேலே ஸந்த்யையும் வந்து நலிய போக யோக்கியமான காலமாய் இருக்க அவன் வந்து தோற்றாமையாலே தலைமகள் நோவு பட-இத்தைக் கண்ட தோழியானவள் ஸந்த்யை அல்ல -இரண்டு வ்ருஷபங்கள் தன்னிலே பொருகிறன காண் என்று
இங்கனே சொல்லி ஆஸ்வஸிப்பிக்கிறாள்

காரேற் றிருள் செகிலேற்றின சுடருக்கு உளைந்து வெல்வான்
போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை  புவனி எல்லாம்
நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே
வாரேற்றி இள முலையாய் வருந்தேல் உன்வளைத் திறமே
– -69 –மாலைப் பொழுது கண்டு மயங்கிய தலைவியைத் தோழி ஆற்றுதல் –

கற்றோர் கருதும் விசயங்களுக்கு எல்லாம்
பற்றாம் விபவ குணப் பண்புகளை -உற்று உணர்ந்து
மண்ணில் உள்ளோர் தம் இழவை வாய்ந்து உரைத்த மாறன் சொல்
பண்ணில் இனிதான தமிழ்ப் பா
 –65-கீழ்ச் சொன்ன விஜய பரம்பரைக்கு அடியான விபவ குணங்களை அனுசந்தித்து படுக்கைக்கு கீழே தனம் கிடக்க கால் வீங்கிச் சாவாரைப் போலே இம் மகா நிதி யுண்டாய் இருக்க இவர்கள் இத்தை இழந்து அனர்த்தப் படுவதே என்று சம்சாரிகள் இழவுக்கு வெறுக்கிற கற்பார் ராம பிரானில் அர்த்தத்தை கற்றோர் கருதும் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார்-அவன் குணம் இப்படியாய் இருக்க இத்தை இழப்பதே -என்று பூமியில் உண்டானவர்கள் உடைய ஸ்ரீ பகவத் குண அனுபவ அலாபத்தை –ஸூலபராய்க் கிட்டி நின்று அந்தரங்கமாக அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியானது-நட்ட ராகத்தோடு கூடி திராவிட சப்த ரூபமான சந்தஸ் ஸூ இப்படி கானத்தோடு கூடின இதுவும் ஒரு சந்தஸ்ஸே என்று ஈடுபாடாய் இருக்கிறது-

காரேற் றிருள்–இருளாகிற கார் ஏறானது- கறுத்த வ்ருஷபம்  ஆனது –செகிலேற்றின சுடருக்கு உளைந்து –ஆதித்யனாகிற சிவந்த ரிஷபத்தினுடைய கிரணங்களுக்கு தோற்றுப் போய் சுரமடைந்தது (தளர்ந்து மங்கிப்போனது )- வெல்வான்போரேற்று எதிர்ந்தது–அது -நாம் முடிய இங்கனே தோற்றுக் கிடக்கும் இத்தனையோ –நாமும் ஒருகால் மேலிட வேணும் -என்று பார்த்து-போரிலே வந்தேன் என்று கொண்டு எதிர் இட்டது – இருள் தான் வெல்ல வேணும் என்று மாலை இட்டுக் கொண்டு வந்தது போலே காணும் –(சாடு -மாலைப் பொழுது ஏறிட்டுக் கொண்டு-உறுதி தீக்ஷை மாலை சாத்தி வந்தது ) புன் தலைமாலை – புல்லிதான தலையை உடைத்தான சந்த்யை யானது –(சிறிய பொழுது -ஆழ்வாருக்கு துன்பம் தருவது ஆகவே புல்லியது ) நக நிப ஸூ ஞ்சதி யாந்தமோவல்லய-என்கிறாப் போலே சந்த்யையினுடைய உபக்கிரமம் இத்தனை – சந்த்யை யானது அல்ல காண் இது –புவனி எல்லாம் நீரேற்று அளந்த நெடிய பிரான் –1-அவன் படியை அறிந்தால் வரும் என்று இருக்க வேண்டாவோ –2-இந்த்ரன் வ்யாஜ்யமாக எல்லார்-தலையிலும் -நிர்ஹேதுகமாக –அமரர் சென்னிப் பூவாய் இருக்கிற திருவடித் தாமரைகளை வைக்குமவன் அன்றோ —3-இப்படி எல்லாருக்கும் உபகாரகனாய் இருக்குமவன் உன்னை விடுமோ –4-தாமஸ பிரகிருதிகள்  ஆனவர் மேலிடப் புக்கால் வந்து உதவுமவன் –தமஸ்ஸூ தான் வந்து அனுபவிக்கப் புக்கால் விட்டு இருக்குமோ –தன்னுடைமையை பிறர் -என்னது -என்று இருந்தால் தன்னை அரத்தி யாக்கி -அவர்கள் பக்கலிலும் வந்து இரந்து கொள்ளுமவன் இரக்க வேண்டாதே -தன் உடைமையான உன்னை விட்டு இருக்குமோ –(தமோ குணம் இரவு -தமஸ் குணவான் மஹா பலி ) -காடும் மேடுமான பூமியில் ஒன்றும் விடாதவன்-
உன்னை இங்கனே அறிவு அழிய விடுமோ –5-மண்ணுக்குப் பதறி இரந்தவன் பெண் ஒரு தலை யானால் ஆறி  இருக்குமோ –6-வாரேற்றி இள  முலையாய் -என்னும் அளவுக்கு – காடும் மேடுமான பூமியிலே காலை வைத்தவன்- உன்  முலை மேலே காலை வையாது ஒழியுமோ –

புவனி இத்யாதி –பூமிப் பரப்படைய நீரேற்று அளந்து கொண்டு  –எல்லார் தலைகளிலும் திருவடிகளை வைக்கச் செய்தேயும்-பின்னையும் ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்று இருக்கும் மகா உபகாரன் ஆனவன் –அருளா விடுமே – சத்வம் உடையாருக்கு தன்னை அழிய மாறுமவன் சுத்த சத்வமேயான   உன் விஷயத்தில் கை வாங்கி இருக்குமோ-அருளா விடுமே –பிரண யித்வம் போனால் ஸ்வரூப அநு பந்தியான  அருளும் உன் பக்கம் கார்யகரம் இன்றிக்கே ஒழியுமோ –வாரேற்று இள முலையாய் –
வாராலே தாங்க வேண்டும்படியான முலையை உடையவளே – வார் தரித்தல்-தான் தரித்தல் செய்ய வேண்டும்படியான முலைகளை நீ தரிக்க விட்டிட்டு இருக்குமோ –இள முலையாய் –பருவம் நிரம்பாதிருக்கச் செய்தேயும் – வாராலே தரிக்க வேண்டும்படியாய் காணும் முலைகள் இருப்பது –
ஷாம காலத்தில் பிரஜைகள் சோறு சோறு என்னுமா போலே – விஷயத்தை காட்டு காட்டு -என்று
கிளருகிற இள முலைகள் –வருந்தேல் உன் வளைத்-திறமே –உன் வளை இடையாட்டமாக நீ வருந்த வேண்டா –வேணுமாகில் அவன் கையில் வளை இடையாட்டமாக வருந்தில் வருந்து – அப் பாஞ்ச சந்யமும் பல்லாண்டு -என்றது நங்கையிலே அகப்பட்டு இருப்பதொன்று – அதற்கு மங்களாசாசனம் பண்ணு –(அதுக்கு வருந்தி பல்லாண்டு பாடுவதே கர்தவ்யம் இது தானே நமது கையில் அகப்பட்டு
பல்லாண்டு பாடி ரக்ஷிக்க வேண்டும் என்றபடி )

இத்தால்-அவனுடைய குண ஞானத்தாலும் – அவன் இத்தலையை அவஹாகித்த படியாலும் தரிப்பித்த படியைச் சொல்லிற்று கீழ் –இதில் அது வேண்டாதே இருவருடையவும் தர்மிஹராக பிரமாணமே அமையும் தரிக்கைக்கு என்கிறது – அவனாகில் ரஷகனாய் – இத்தலையாகில் ரஷ்யகமாய் -இருக்கும் இறே –ஓங்காரம் பார்த்தே தரிக்கலாம்–தர்மி இருவரும் ஸ்வரூபம் சொல்லும் பிரமாணம் பிரணவம்
அவனாகில் ரக்ஷகன் அவ ரஷணே தாது இத்தலை ரஷ்யம்–வருந்தேன் உன் வளைத் திறமே -மாஸூச -என்கிறாள் – அஹம் த்வா இரண்டு தர்மி சப்தங்கள் -என்று (ப்ராப்தனாய் சக்தனாய் ரக்ஷகனாய் இத்யாதி-அஹம் அசக்தனாய் இத்யாதி -த்வா ) இருவருடையவும் சொல்லி வைத்து இறே – மாஸூச -என்றது –செல்வான்-ஜெயிக்கைக்காக –நெடிய பிரான் என்கையாலே ரஷகமும் –வாரேற்ற இள முலை-என்கையாலே ரஷ்யகமும் -தோற்றுகிறது-

இருளாகிற காரேறு செகிலேற்றின் சுடருக்கு உளைந்து செல்வான் போரேற்று எதிர்ந்தது –
பிரத்யஷ்யமான சந்த்யையை- ருஷபங்கள்  என்று சொல்லுகிறது என் என்ன –
புன் தலை மாலை ஆகையாலே -புவனி எல்லாம் நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே –
வாரேற்றின இள முலையாய்-உன் வளைத் திறம் வருந்தேல்
-என்று அந்வயம்

மாலை பொழுதில் தோழி தலைவிக்கு -இருள் ஆகிய கறுத்த எருதும் ஸூ ரியன் ஆகிய சிவந்த எருதும் பொருகின்றன- காலையில் பகலுக்குத் தோற்ற இருள் இப்பொழுது வெல்லும் பொருட்டு வந்து மேலிடத்து என்கிறார்-இந்திரியாணி புரா ஜித்வா ஜிதம் த்ரிபுவனம் த்வயா ஸ்ம்ரத்பரிய தத் வைரம் அத்ய தைரேவா மிர்ஜித்த-மண்டோதரி ராவணனுக்கு இந்திரியங்கள் சமயம் பார்த்து ராவணனை நலிய வந்தன என்றால் போலே-காவலில் புலனை வைத்து -என்ற பாசுரத்தில் தொண்டர் அடிப்பொடி ஆழ்வாரும் அருளிச் செய்தார்-புன் தலை மாலை -நலியும் மாலை -பகலுக்கும் இரவுக்கும் நடுவில் சிறிய பொழுது என்றுமாம்–நீரேற்று தாரேற்ற வெண் குடை மாவலி வார்க்கவும் தாமரை மேல் சீரற்ற தொல் நான் முகத்தோன் விளக்கவும் செம் பொன் முடி காரேற்ற மேனி அரங்கன் கையும் கழலும் ஓக்க நீர் ஏற்றன வண் திருக் குறளாகி நிமிர்ந்த அன்றே -திருவரங்கத்து மாலை -33—நெடிய பிரான் -ஓங்கி உலகு அளந்த பராத் பரன் பூமிப் பரப்படைய நீரேற்றுஅளந்து கொண்டு –-புவனி எல்லாம்-நீரேற்று அளந்த நெடிய பிரான் -அருளாவிடுமே -எல்லார் தலைகளிலும் திருவடிகளை வைக்கச் செய்தேயும்
பின்னையும் ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்று இருக்கும் மகா உபகாரன் ஆனவன் –
அருளா விடுமே –பிரண யித்வம் போனால் ஸ்வரூப அநு பந்தியான அருளும் -உன் பக்கம்-கார்யகரம் இன்றிக்கே ஒழியுமோ –வாரேற்றி இள முலையாய்-இப்படிப் பட்ட அழகையும் இளமையையும் விட்டு இருப்பானோ-

காரேற் றிருள் செகிலேற்றின சுடருக்கு உளைந்து-கறுத்த ஏறு போலே மேல் எழுச்சியை யுடைத்தான இருளானது சிவந்த ஏற்றினை ஒத்த ஆதித்யன் சுடருக்கு முன்பு இடைந்து–வெல்வான் போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை-வெல்லுகைக்காக யுத்தத்தை ஏன்று கொண்டு எதிர புல்லிய தலைப்பாட்டை யுடைத்தான மாலையிலே-இதுக்கு வன்மையாவது-பிரிந்தாரை நலிகை–புவனி எல்லாம் நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே-பூமி முதலான ஸர்வ லோகத்தையும் பிறர் மேலிடாதபடி இரந்து தன் கைப்படுத்தி எல்லை நடந்து காற் கீழே யிட்டுக் கொண்ட
சர்வாதிகனான மஹா உபகாரகன் பூமியோ பாதி அநந்யார்ஹை யான உனக்கு அருளாது ஒழியுமோ-வாரேற்றி இள முலையாய் -வாரை ஏற்றுவிக்கும் படி வளருகின்ற இளமையே வடிவான
முலையை யுடையவளே–ஏற்றுகை -முடிகை–வருந்தேல் உன் வளைத் திறமே-உன் முகப்படம் கிழிந்து இருக்க வளை கழலுகிறதே என்று கிலேசிக்க வேண்டுவது இல்லை-அவன் அருளும் என்றதாயிற்று –இத்தால்–காரேற் றிருள் -என்று (மயர்வற மதிநலம் அருளுவதுக்கு முன்பு ) பூர்வகமான அஞ்ஞானத்தை ஸூசிப்பித்து-செகிலேற்றின சுடருக்கு உளைந்து -என்று அது ராகோத்தரமான விவேகம் ஆகிற பக்தி ரூபாபன்ன ஞானத்தாலே கழிந்தமை சொல்லி —வெல்வான் போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை புவனி எல்லாம் நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே-என்று யோக்ய காலத்தில் அனுபவ அலாபத்தாலே இருந்த விவேகமும் அழியும்படி மோஹ அந்தகாரம் மேலிடும் அவஸ்தையை ஸூசிப்பித்ததாயிற்று–வாரேற்றி இள முலையாய் –என்கையாலே இவளுடைய பக்தி அபி விருத்திக்குத் திரோதாயகர் இல்லை என்றபடி–வருந்தேல் உன் வளைத் திறமே -என்று-இப்படி பக்தி ப்ரபாவத்தை யுடைய உம்முடைய கையில் பாரதந்தர்ய ஸூசகமான மினுக்கம் கழலுகிறது என்று கிலேஸிக்க வேண்டா–சம்பந்தம் உள்ளாரைத் தானே இரந்து வந்து அநந்யார்ஹர் ஆக்கிக் கொள்ளும்
சர்வாதிக ஸ்வாமி யானவன் அருளாது ஒழியுமோ என்று ஆஸ்வஸிப்பித்தார் ஆயிற்று –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம்-காரேற் றிருள்-இருளான கார் ஏறானது கறுத்த வ்ருஷபமானது-செகிலேற்றின சுடருக்கு உளைந்து-ஆதித்யன் ஆகிற சிவந்த வ்ருஷபத்துக்குத் தோற்றுப் போய் சுரமடைந்தது–வெல்வான் போரேற்று எதிர்ந்தது-நாம் முடிய இங்கனே தோற்றுக் கிடைக்கும் இத்தனையோ-நாமும் ஒரு கால் மேலிட வேணும் என்று பார்த்து-போரிலே வந்தேன் என்று கொண்டு எதிர் இட்டது–புன் தலைமாலை-புல்லிதான தலையை யுடைத்தான ஸந்த்யையானது-ஜசுகைசான இருள் கொழுந்துகளை உடைத்தான ஸந்த்யையானது-நக நிர் லுஞ்ச நீயா தமோ வல்லய (இந்த ஸ்லோகத்தின் அக்ஷரங்கள் சரியாகாது தெரியவில்லை என்று பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்யானத்தில் குறிப்பு உள்ளது ) ஸந்த்யையினுடைய உபக்ரமம் அத்தனை ஸந்த்யை தான் அல்லது காண் இது

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-வியாக்யானம-காரேற் றிருள் செகிலேற்றின சுடருக்கு உளைந்து வெல்வான் போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை-இருளாகிற கறுத்த ருஷபமானது முன்
செகிலேறு சிவந்த வ்ருஷபமான ஆதித்யனுடைய கிரணங்களால் பஃனமாய் ஓடிப் போனது
இப்போது அந்த சிவந்த வ்ருஷபத்தை ஜெயிக்கவே பொரும் விருஷபமாய் எதிர்த்தது–மேகத்தின் செக்கரைத் தான் ஏறிட்டுக் கொண்டு பொன்னிறம் போன்ற மாலைகள் அசைய அசைய–புவனி எல்லாம் நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே வாரேற்றி இள முலையாய் வருந்தேல் உன்வளைத் திறமே பூமி முதலான ஸர்வ லோகத்தையும் தன் பொற் கையில் நீர் ஏற்றவனாய்
தன் திருவடிகளால் அளைந்து கொண்டு ஸர்வத்திலும் நெடு மாளாய் உபகரித்தவன் தான் கடுக வாராமல் அருளிச் செய்த மாத்ரமாய் விடுமோ-கண் எச்சில் வாராதபடியும் வெளிறு மேல் இடாதபடியும்
கச்சை காட்டும் படி இள முலைகள் அழகியளானவளே-உன் வளைகள் கழலுமதாய் மநோ விசாரப்பட்டு ஆயாசப்படாதே கொள்ளாய்–உன்வளைத் திறமே வளை விஷயத்தில் உன்னோடு வரும் காலம் குறித்தவன் அக்காலம் வரவே வாராமல் தப்பான் காண் என்கிறாள் –

ஸ்வா பதேசம் –முன்பு உள்ள அஞ்ஞானம் -பக்தி ரூபா பன்ன செவ்விய ஞானத்தால் கழிந்தது என்றும்
உரிய காலத்தில் அனுபவிக்கப் பெறாமையால் அருள பெற்ற மதி நலமும் அழிந்து மோஹாந்தகாரம் மேலிட்டது என்றும்-வாரேற்றி இள முலையாய்-அடக்கவும் மறைக்கவும் அரிதான பக்தி விசேஷம்
வருந்தேல் உன் வளைத் திறமே -இப்படிப் பட்ட பக்தி வெள்ளம் உடைய நீர் உமது அடிமைத் திறம் குலையும் என்று வருந்த வேண்டா –

தாத்பர்யம்--கீழ் சொன்ன கொன்றை மலர் விருத்தாந்தத்துக்கு மேல் மாலையும் வர -அவனும் வாராமல் இருளும் வரத் தொடங்க-ஸந்த்யா காலத்துக்கு வருந்த அவரை ஆஸ்வாஸப்படுத்த பார்ஸ்வத்ஸர் பாசுரத்தை தலைவியை சமாதானப்படுத்தும் தோழி பாசுரத்தால் அருளிச் செய்கிறார்–இவை இரண்டு ரிஷபங்கள் –இருள் கறுத்த எருது -ஒளி சிவந்த எருது – இரண்டு எருதுகளும் போர் புரியும் காலம் இது
முன் ஜெயிக்கப்பட்டு தனக்கும் ஒரு காலம் வரும் என்று கருவி இருந்து மூலையில் ஒழிந்து இருந்து சமயம் வந்ததும் ஆக்ரோஷமாக சண்டை போட யத்தனிக்கிறது-ஆஸ்ரித அநாஸ்ரித பேதம் இல்லாமல் அவர்கள் தலையில் தனது திருவடி வைத்து ரஷித்த அவனுக்கு அபிமதை யாகவும் அவனாலேயே ரஷிக்கப்பட வேண்டிய உன்னை ரஷியாமல் – உனது கை வளையல்களை கழல விட மாட்டான் –
சோகப்படாதே என்கிறாள்

7-5-கற்பார் இராம பிரானை அல் லால் மற்றும் கற்பரோ?-ப்ரவேஸம்-

மேல் திருவாய்மொழியிலே, எம்பெருமானுடைய வெற்றிச் செயல்களை அனுபவித்தார்;
அவை தாம் அடியார்களின் பொருட்டே அன்றோ இருப்பன? ‘அவன், தன்னை இவர்களுக்கு ஆக்கி வைக்கக,
இவர்கள் புறம்பு உண்டான விஷயங்களிலே வேறு நோக்குள்ளவர்களை ஆவதே!’ என்று ஆச்சரியப்படுகிறார்.
யஸ்ய அஸ்மி -எவனுக்கு அடியவனாகிறேன்?’ என்கிறபடியே,
யாவன் ஒருவனுடைய சத்தையே பிடித்து அவனுக்காய் இருக்கும்?
அப்படி இருக்கிறவன் தான் பிறந்தது தொடங்கி இவனுக்கு ஆக்கி வைக்கிறான் அன்றோ?

பாதுகாப்பதற்கே உரியனவான பிறவிகளிலே வந்து பிறந்த படியையும்,
தன் ஸ்வரூபம் ரூபம் குணம் முதலானவைகளையும் பிறர்க்கு ஆக்கி வைக்கிற படியையும்,
அதற்குக் காரணமான கிருபையைத் தனக்கு வடிவாகவுடைனாய் இருக்கிற படியையும்,
கிருபையின் காரியமான செயல்களையும் நினைத்து, முற்றத்திலே பொற் குவியல் புதைந்து கிடக்க,
அதனை அறியாதே மேலே சஞ்சரித்துப் புறங்கால் வீங்குவாரைப் போலே
இச் செல்வம் தங்களுக்காக இருக்கச் சம்சாரிகள் புறம்பே போது போக்குவதே!’ என்று ஆச்சரியப்படுகிறார்.

ஆழ்வான் ஒருகால், இத் திருவாய்மொழி பத்துப் பாசுரங்களையும் இராமாவதார விஷயமாக்கி நிர்வஹித்தாராம்.
அதற்குக் காரணம்: ஆயிரத்தில் ஒன்றும் கடலில் குளப்படியும் போலே, பெருமாளுடைய குணத்தில் ஒரு பகுதியே அன்றோ?
அல்லாத அவதாரங்கள் எல்லாவற்றிலும் உள்ளது ஆதலின்.
‘பேரெயில் சூழ்கடல் தென்னலங்கை செற்ற பிரான்’ என்றும்,
‘மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள்’ என்றும்,
மேலே சொல்லிப் போந்த இராமாவதாரத்தினுடைய செயலை அநுசந்தித்து,
அவ்வழியாலே அன்றோ அவதாரங்களை அநுசந்திக்கிறது?

மற்றைய அவதாரங்களிலே ஈடுபட்டவர்களும் இராமாவதாரம் பிராசங்கிகமாகச் சொல்ல வேண்டி வந்தால்,
‘மனத்துக்கு இனியானை’ என்றே அன்றோ சொல்லுவது?
‘பட்டர் இராமாவதாரத்தில் போரப் பக்ஷிபதித்து இருப்பர்’ என்று,
அவர் அருளிச் செய்யுமது கேட்கைக்காகச் சிறியாத்தான் ஒருநாள்
‘பெருமாளுக்கு எல்லா நன்மைகளும் உளவாகிலும், கழுத்திலே ஒலை கட்டித் ‘தூது போ’ என்ன,
தூது சென்ற கிருஷ்ணன் நீர்மை இல்லையே?’ என்ன,
‘அது அங்ஙன் அன்று காண்; கழுத்திலே ஒலை கட்டித் ‘தூது போ’ என்பார் இல்லாமையாலே
தவிர்ந்தார் அத்தனை காண்,’ என்று அருளிச் செய்தார்.
நாடுடை மன்னர் வேறே சிலர் இலரே.– முடி சூடிய க்ஷத்திரிய குலத்திலே பிறக்கையாலே போக விடுவாரைப் பெற்றது இல்லை.
முடியைத் தவிர்ந்து சடையைப் புனைந்து நாட்டினை விட்டுக் காடு ஏறப் போனவர், தூது போகாமை இல்லை அன்றோ?

‘காடு ஏறப் போகவுமாம்; துரியோதனன் கோட்டியிலே போகை அன்றோ அரிது?
‘மதுசூதனரே! எந்த இடத்திலே நல்ல வார்த்தையும் கெட்ட வார்த்தையும் வாசி இல்லாமல் ஆகின்றதோ,
அங்குத் தெரிந்தவன் ஒன்றும் பேசக்கூடாது,’ என்பதே அன்றோ பிரமாணம்?
‘யத்ர ஸூக்தம் துருக்தம் வாஸமம் ஸ்யாத் மதுசூதந
ந தத்ர ப்ரல்பேத் ப்ராஜ்ஞ: பதிரேஷ்விவ நாயக:’-என்பது, பாரதம், உத்யோகபர். 95.( விதுரர் வாக்கியம் )

‘பாண்டவர்கள் கிடக்கைக்கு ஐந்து ஊர் தர வேணும்’ என்று இவன் சொன்ன வார்த்தைக்கும்,
‘பந்துக்களுக்கும் ஒரு கோற் குத்தும் கொடேன்’ என்று அவன் சொன்ன வார்த்தைக்கும் வாசி அறியாத கோட்டியிலே அன்றோ போய்ப் புக்கது?
‘இராமாவதாரத்தில் தூது சென்ற திருவடியுடைய ஏற்றம் தன் திருவுள்ளத்திலே பட்டுக் கிடந்தே அன்றோ,
‘அவனே பின்னோர் தூது ஆதி மன்னர்க்கு ஆகிப் பெரு நிலத்தார் இன்னார் தூதன் என நின்றது?பெரிய திருமொழி, 2. 2 : 3.

மீனோடு –முன்னும் இராமனாய் தானாய் பின்னும் இராமனாய் –
மற்றவை தான் இல்லையோ -ஸ்ரீ ராமாவதார சிறப்பால் தானாய் என்கிறார்
ஆழ்வார் ஸ்ரீ கிருஷ்ணனுக்காக -குலசேகர பெருமாள் பெருமாளுக்காக -மனத்திற்கு இனியன் என்றாள் ஆண்டாள்
பாரார்த்தியம் ஸ்வம் பராஸ்மி காகுஸ்த –
கண்ணன் பக்தராக்கி தான் பிரிந்து சென்று திரும்பாமல் -வேறே வேறே இடங்களுக்கு தானே செல்வான்
ராமனோ அனைவரையும் கூட்டிச் சென்றான்
ஸ்ரீ ராம ராம ராமேதி -ஸஹஸ்ர நாம சாரமே இது ஒன்றே

அஞ்சாம் திருவாய்மொழியில்-கீழ் -அநேக வித விஜய அபதானங்களை யுடையனான சர்வேஸ்வரனுடைய
அதிசயித சக்தி யோகத்தை அனுசந்தித்து விரோதி நிரசன சமர்த்தன் அவனே என்று அறுதி இட்டவர் –
அவனை ஒழிய வேறு ரக்ஷகர் இல்லை என்னும் இவ்வர்த்தத்தை வெளியிடுகைக்காக -ஸ்வ அபிமான அந்த பாவ மாத்ரத்தாலே
அவனுடைய அதிசயித புருஷார்த்த பிரதத்வத்தையும்
அநிஷ்ட நிவ்ருத்தி யுக்தமான ரேஷன் பிரகாரத்தையும்
சிசுபால மோக்ஷத்தையும்
ஜகத் ஸ்ரஷ்ட்ருத்வத்தையும்
ஸ்ரீ வராஹ வ்ருத்தாந்தத்தையும்
ஆஸ்ரித அர்த்தமான ஆர்த்தித்தவ சாமர்த்யத்தையும்
மார்க்கண்டேய ரக்ஷண பிரகாரத்தையும்
ஆஸ்ரித உபகாரகமான ஹிரண்ய நிரசனத்தையும்
பாண்டவ விரோதி பஞ்சனத்தையும்
சம்சார நிவர்த்தகத்வத்தையும்
அனுசந்தித்து -ஏவம்வித ஸ்வ பாவனாய் அதிசயித சீல ப்ரகாசகமான அவதார வைலக்ஷண்யத்தை யுடைய சர்வேஸ்வரனை ஒழிய
அநிஷ்ட நிவ்ருத்தி அர்த்தமாகவும் இஷ்ட பிராப்தி அர்த்தமாகவும் ஆஸ்ரயணீயர் வேறொருவர் இல்லை என்னும் இடம்
சர்வ ஸம்ப்ரதிபன்னம் என்று அருளிச் செய்கிறார் –

கற்பார் இராம பிரானை அல் லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே.
–7-5-1

கற்பார் –ஒருவன் ஒன்றைக் கற்பது ‘அப்போதைக்கு இனியது’ என்றாதல்
‘பின்பு ஒரு நன்மையை விளைக்கும்’ என்றாதல் ஆயிற்று;
‘இராம பிரான்’ என்கையாலே-அவை இரண்டும் (பிரியமும் ஹிதமும் )இவ் விஷயத்தை ஒழிய இல்லை’ என்கிறது.-இராமன்’ என்கிற இதனால், புறம்பு போகாமல் காற்கட்டும் படியான அழகைச் சொல்லுகிறது;
‘பிரான்’ என்கிற இதனால், அவ் வழகாலே சேதநரை அநந்யார்ஹமாக்கும்படியும்,
நிலாத் தென்றல் சந்தனம் தண்ணீர் போலே, தன்னுடைய ஆனந்திக்கச் செய்கிற தன்மையும் பிறர்க்கே யாயிருக்கும் உபகாரமாம் தன்மையும் சொல்லுகிறது.

கற்பார் இராம பிரானை – கற்பார் என்கை அன்று இவர்க்கு உத்தேசியம்;
‘மற்றையவற்றைக் கற்கலாகாது,’ என்று விலக்குதலேயாம்,
-ராக ப்ராப்தம் ஸ்வயம் ஏவ ப்ரவர்த்திக்குமே -ஆசையாலே செய்யப் படுவதாகில் தானாகவே செல்லும் அன்றோ’-ஆகையால், வேறு ஒன்றில் போகாமையே வேண்டுவது.

மற்றும்’ என்றதனால், வேறு தெய்வங்களை வணங்குதல் முதலானவற்றை வேறுபடுத்துகிறார் அல்லர். பஜனீய -வணங்கக் கூடிய பொருளிலே கூறு இடுகிறார்.வேறு தெய்வங்களாகிற பதரைக் கூட்டிக் கழிக்குமவர் அல்லரே இவர்?
ஆதலால், பரத்துவத்தையும் மற்றை அவதாரங்களையும் கழிக்கிறார்.

பெருமாளை ஒழியச் செல்லாமை பிறந்து பிரிவில் முடிந்த சக்கரவர்த்தியின் நிலை சினேகம்;-பத்தியாவது, ‘நில்’ என்ன, ‘குருஷ்வ – கொள்க’ என்னும் படியாய், முறை அறிந்து பற்றின இளைய பெருமாள் நிலை

புல் பா முதலா – பா என்பது, பொருள்; புல்லாகிற பொருள் என்னுதல்.
‘பா’ என்பது பரப்பு; ‘பரந்திருக்கிற புல்’ என்னுதல்; என்றது,-பசுவின் வாய்க்கு எட்டாதபடியாய் இருக்ககையைத் தெரிவித்தபடி.
பா பதார்த்த வாசகம் -படர்ந்த புல்-இதனால், ‘புல் முதலாகத் தாவரம் முடிவாக’ என்றபடி. புற்பா முதலாப் புல் எறும்பு ஆதி’ என்று இவற்றுக்கு ஒரு முதன்மை சொல்லுகிறார் அல்லர்;
‘ஸ்ரீராமபிரானுடைய திருவுள்ளத்துக்கு முற்பட்டன இவை,’ என்கிறார்;-வெள்ளமானது தாழ்ந்த இடத்திலே ஓடுமாறு போலே.-தாவரங்களில் தாழ்ந்தது புல்; சங்கமங்களில் தண்ணியது எறும்பு;-இவை இரண்டனையும் ஒக்க எடுக்கையாலே. ஞான பலம் மோக்ஷம் என்றதனைத் தவிர்க்கிறது.-‘ஞானம் உண்டாகையும் இல்லையாகையும் காரணம் அன்று. பெருமாள் கிருபைக்கு,’ என்கிறது.-இவற்றின் கர்மங்களால் வரும் உயர்வு தாழ்வுகள் காரணம் அன்று.’ என்கிறது.-காரணம் இல்லாமலே சேஷியாக இருக்கிற சர்வேஸ்வரன் பக்கல் விலக்காமையே பேற்றுக்கு வேண்டுவது.-முற்றவும்’ என்று முழுவதும் என்ற பொருளைக் காட்டுகிற சொல் உண்டாகையாலே.-ஸாகல்ய வசனம் உண்டாகையாலே
இனி, ‘ஒன்று இன்றியே’ என்கிறது, ‘பேற்றுக்குத் தகுந்ததாய் இருப்பது ஒரு சாதனம் இன்றிக்கே இருக்கச் செய்தே’ என்றபடி.-‘திருவயோத்யையினின்றும் குடி வாங்க நினைவு இல்லை’ என்கிற இது வன்றோ சாதனம்-நில மிதியே இராம பத்தியை விளைக்கும்’ –அயோத்தியில் வாழும்- வசிக்கும் என்னாமல் ‘வாழும்’ என்கிறது,-அத் தேச வாசமும் வாழ்வும் என்று இரண்டு இல்லாமையாலே;‘வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள்!’ என்றும்,
‘நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம்’நாய்ச்சியார் தி. 8 : 9., 11 : 5.என்றும், சொல்லுகிறபடியே,
‘அயோத்தியில் வாழும்’ என்கிறார்,

நற்பாலுக்கு உய்த்தனன் –நல்ல ஸ்வபாவத்தை யுடைத்தாம்படி செலுத்தினான். என்றது,
தன் சேர்க்கையாலே சுகத்தை யுடையவர்களாகவும் தன் பிரிவாலே துக்கத்தை யுடையவர்களாகவும் செய்கையைத் தெரிவித்தபடி.

இங்கு உண்டான பற்று அறுத்து ஒரு தேச விசேடத்து ஏறச் சென்று அனுபவிக்கும் அனுபவத்தைக் கொடுக்க வல்லவனுக்கு
இங்குத் தன்னை ஒழியச் செல்லாமை விளைக்கை பணியுடைத்து அன்றோ?

நான்முகனார் பெற்ற நாட்டுளே நற்பாலுக்கு உய்த்தனன் – அரசன் தன்னுடையான் ஒருவனுக்கு ஒரு நாட்டைக் கொடுத்தால் அவனுடைய ஆணையும் ஆஜ்ஞையுமாக
அவனுடைய ஸ்வாதந்திரியமே நடக்கும்படி செய்து கொடுக்குமாறு போலே,
சம்சாரி சேதநர்க்குத் தலையான பிரமனுக்குக் கை யடைப்பான நாட்டுக்குள்ளே,
அவன் ஸ்வாதந்திரியத்தையும் தவிர்த்து, இவற்றின் கர்ம பாரதந்திரியத்தையும் தன் குணத்தாலே பதஞ்செய்து, தன்னைப் பெற்ற போது ஜீவிக்கும்படியாய்ப்
பெறாத போது உறாவும்படியான தன்மையை உண்டாக்கினான்.
ஆன பின்பு அவனை ஒழிய வேறேயும் சிலவற்றைக் கற்பரோ?

(கோயில் கந்தாடை ஆயன் -முதலிகள் சம்வாதம்
மூவரும் திருவரங்கம் திருக்கோயிலில் ரெங்க விலாஸ மண்டபத்தில் சேர்ந்து எழுந்து அருளி இருக்க காரணம்-பாவோ நான்யத்ர கச்சதி -திருவடி
அச்சவை பெறினும் வேண்டேன் -தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்
மற்று ஒன்றைக் காணாவே -திருப்பாண் ஆழ்வார் -என்றாராம் –
யத்ர நந்யத்ர பஸ்யதி –ஒன்றைக் கண்டால் வேறே ஒன்றைக் கானாவோ நினைக்காது பேசாதோ அதுவே -பூமா –-இவர்களுக்கு ராம அனுபவம் அரங்கன் அனுபவம் திருநாம சங்கீர்த்தனமே பூமா )-

—————

நாட்டிற் பிறந்தவர் நாரணற்கு ஆளன்றி ஆவரோ?
நாட்டிற் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு
நாட்டை அளித்து உய்யச் செய்து நடந்தமை கேட்டுமே
.–7-5-2-

மேல் பாசுரங்களில் சொல்லப் புகுகிற குணங்களை நோக்க, முதற்பாசுரத்திற் சொன்ன குணம் குண ஹாநி’ என்னும்படி மேலே யுள்ள பாசுரங்கள் குணாதிக்கியம் சொல்லுகின்றன’, என்று அருளிச் செய்வர்.-நாட்டில் பிறக்கையாவது, அவருடைய எல்லைக்குள்ளே பிறந்து, அவர் தோள் நிழலிலே வாழ்தல்.-நாரணற்கு ஆள் அன்றி ஆவரோ –‘பெருமாளுக்கு ஆள் அன்றி ஆவரோ?’ என்றபடி.-நாரணற்கு –-வரையாதே எல்லாரோடும் பொருந்துகையும்,-அடியார்களுக்காகத் தன்னை ஆக்கி வைக்கயும்,-அவர்களுக்காத் தன் மார்பில் அம்பு ஏற்கையும்,-அவர்கள் விரோதிகளைப் போக்குவதையும்,
அடியார்கட்கு வத்சலனாய் இருக்கையும்,-அவர்கள் தோஷத்தைப் பார்த்து விட்டுப் போக மாட்டாமையும் ஆகிய இவை-எல்லாவற்றாலும் பெருமாளை‘நாராயணன்’ என்னத் தட்டு இல்லை அன்றோ?-ஆள் அன்றி ஆவரோ –-மேற்பாசுரத்திலே ‘கற்பரோ?’ என்றது; இங்கே,‘ஆள் இன்றி அவரோ’ என்கிறது; ‘கல்வியினுடைய பலம் ஆள் ஆகை’ என்றபடி.-ஜெனித்தவர் ஜன்ப பலன் இன்றி இருப்பாரோ –

நாட்டிற் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா –கர்மங்கட்குக் கட்டுப்படாத தான் கர்மங்கட்குக் கட்டப்பட்டவர்களோடே ஓரினனாய் நாட்டிலே வந்து பிறந்து,-அவர்கள் படும் துக்கத்துக்கு அளவன்றிக்கே,-கடலுக்கு அக்கரையிலே உயிரும் இக்கரையிலே உடலுமாம்படியான ஜானகியின் பிரிவு என்ன,-பெரிய வுடையார் சாக்காடு என்ன, இந்த விதமான துக்கங்களையும் பட்டு,-அதற்கு மேலே, செய்ந்நன்றி அறியாத மனிதர்கட்காக.-நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு நாட்டை அளித்து உய்யச் செய்து – யாதொரு குற்றமும் இல்லாத நாட்டினை நலிகிற இராவணன் முதலான கண்டகரை,-அவர்கள் இருந்த இடங்களிலே தேடிச் சென்று கொன்று,-இலங்கையின் வாசலிலே வீர லக்ஷ்மியோடு கூடினவராய்க் கொண்டு எழுந்தருளி நிற்க,-

நடந்தமை கேட்டுமே.-அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி -என்றும் சொல்லுகிற பிரயாண வ்ருத்தாந்தத்தை கேட்டும் நாட்டில் பிறந்தவர் நாரணற்கு ஆளின்றி ஆவரோ –

சப்தம் போன்ற விஷயங்களில் பிரவணராய் சர்வேஸ்வரன் என்ற தத்வம் உண்டு என்று கேட்டார் வாய் கேட்டு இருந்து தான் வந்து அவதரித்து அழகு குணங்களால் வசீகரித்து
தன்னால் அல்லால் செல்லாமை -பிறப்பித்து பின்பு பொகட்டுப் போவது படு கொலை போலே –இதில் ஸ்ரீ வைகுந்தம் -தன்னுடன் கூட கொடு போய் ரஷித்த குணத்துக்கு ஆள் ஆகாமல் இருப்பாரோ –

————-

கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றுங் கேட்பரோ?
கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளே வையும்
சேட்பாற் பழம் பகைவன் சிசு பாலன் திருவடி
தாட்பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே 
.–7-5-3-

பருவம் நிரம்பிக் கற்ற பின்பு அன்று விரோதிகளைப் போக்கியது;
பூதனை தொடக்கமான விரோதிகளைத் தொட்டிற் பருவத்தே அன்றோ போக்கியது?
விரோதிகளை அழிப்பது தான் அறிந்ததனால் அன்று; பொருளின் உண்மையாலேயே பாதகமாய் இருக்கிறபடி.-நஞ்சு கொல்லுவது அறிவு உண்டாய் அன்றே?-கேசியானவன் வாயை அங்காந்து கொண்டு கண்டார் எல்லாரும் நடுங்கும்படி வந்து தோற்ற,
இளைஞராய் இருப்பார் துவாரம் கண்ட இடத்தே கை நீட்டக் கடவர்களாய் இருப்பார்கள் அன்றோ? அந்த வாசனையாலே இவன் வாய்க்குள்ளே கையை நீட்ட, புதிதான அனுபவத்தால் கை விம்ம வளர்ந்து கொடுத்தது; அப்போதோ இடியேறு உண்ட மரம் போலே இரு பிளவாய் விழுந்தான்.

அந்த அவதாரத்தினை நினைத்த போது ‘தயரதற்கு மகன் தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாக’ திருவாய். 3. 6 : 8.-என்பர்;
இந்த அவதாரத்தை நினைத்த போது ‘நம் கண்ணன் கண் அல்லது இல்லை ஓர் கண்ணே’ திருவாய். 2. 2 : 1.-என்பர்;
இப்படி இழிந்த துறைகள் தோறும் அழுந்த வல்லார் ஒருவர் அன்றோ?
ஒவ்வொரு குணத்தை அனுபவிக்கப் புக்கால் வேறு குணங்களில் கால் வாங்க மாட்டாதவாறு போலே ஆயிற்று,-ஒவ்வோர் அவதாரத்தில் இழிந்தால் மற்றை அவதாரங்களில் போக மாட்டாமையும்.

இவன், திருவடிகளைக் கிட்டிற்று என் கொண்டு?’ என்னில்,
திரு நாமங்களைச் சொல்லித் துவங்கரிக்கையும்,
கையும் திருவாழியுமான அழகை மரண காலத்தில் நினைக்கவும் கூடும் அன்றோ?
மேலெழ ஆராய்ந்து பார்த்தால், சில காரணங்கள் சொல்லலாம்;
இதற்கு இனி ஒரு காரணம் தேடிச் சொல்லுகையாவது,
அவன் கிருபைக்கு ஒரு கொத்தை சொல்லுகை யன்றோ?

‘சர்வேஸ்வரன் கிருபையாலே சிசுபாலன் திருவடிகளைப் பெற்றான்’ என்று ஆழ்வார்களும் இருடிகளும் எல்லாரும் சொல்லிக் கொண்டு போருவார்கள் அன்றோ?
இவன் பக்கலிலே பரம பத்தி அளவாக உண்டானாலும்,
‘அதற்கும் கரணங்கிளன் சேர்க்கையைக் கொடுத்தான் ஈஸ்வரன் அன்றோ?’ என்று
அதுவும் கழியா நிற்க, வருந்தி இல்லாதது ஒன்று உண்டாக்குகை பணி அன்று.

ஆளவந்தார், ‘சிசுபாலன் பெற்றிலன் காண்’ என்று அருளிச் செய்வர்; ‘அது என்?’ என்னில்,
‘இதற்கு அடியாகச் சொல்லலாவது ஒரு சாதனம் இவன் கையில் இல்லாமையாலே;
நாட்டை நலியாமைக்குக் கொற்றவன் வாசலுக்குள்ளே சுழற்றி எறிந்தான் அத்தனை காண்’ என்று அருளிச் செய்வர்.

காகம், திரு முன்பே எய்த்து விழுகையாலும், இவன் திருநாமத்தைச் சொல்லித் துவங்கரிக்கையாலும்,-அவன் குணங்கள் நினைத்தபடி விரிவாகப் பெறாதே குறைந்தவகள் ஆயிற்றன’ என்றே அன்றோ சொல்லுகிறது?

இப் பாசுரத்தில் ஏற்றமாகிறது,-‘தன்னால் அல்லது செல்லாமை விளைந்தாரைக் கூடக் கொடு போனான்’ என்றது ஓர் ஏற்றமோ,-தன் பக்கல் அபராதம் செய்த சிசுபாலனுக்கும் அவர்கள் பேற்றைக் கொடுத்ததற்கு?’ என்பதாம்.-

————-

தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆளன்றி ஆவரோ?
பன்மைப் படர்பொருள் ஆதுமில் பாழ் நெடுங் காலத்து
நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணித் தன்னுள்ளே
தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே.
–7-5-4-

தன்மை அறிபவர் தாம் –‘ஸ்ருஷ்டஸ்த்வம் வநவாஸாய’-அவனுடைய கைங்கரியத்துக்கு உடலாகப் படைக்கப்பட்டது’-உலகத்திற்குக் காரணமாக வுள்ள பொருளே உபாசிக்கத் தக்கது என்று அறியுமவர்கள்’-கரண களேபரங்களைக் கொடுத்தது தனக்கு அடிமை செய்கைக்கு அன்றோ?-நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணித் -என்கையாலே -சேதன அசேதனங்களை உண்டாக்குவானும் இவனே -அவனாலே வந்த ஸ்ருஷ்டியும் இவனதே -அவை உபகரணம் மாத்திரமே -உபகாரணமாம் இடத்தில் அசேதனத்தோபாதி சேதனனும் –விரோதியான சிசுபாலனுக்குத் தன் திருவடிகளைக் கொடுத்தான்’ என்றது,இது ஓர் ஏற்றமோ விரோதிகளை உண்டாக்கித் தன்னை வைவித்துக் கொண்ட நீர்மைக்கு?’ என்கிறார்.-

——————-

சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ?
ஆழப் பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தைத்
தாழப் படாமல் தன்பால் ஓரு கோட்டிடைத் தான் கொண்ட
கேழல் திருவுரு வாயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே.
–7-5-5-

தன்பால் ஓரு கோட்டிடைத் தான் கொண்ட-பெரிய பூமியைத் தன் எயிற்றிலே நீல மணி போலே கொண்ட; -ஸ்வேத வராஹம் – தன் திரு எயிற்றிலே ஒரு கூற்றிலே கொண்ட உதாரராய் இருப்பார் நாற்பது பேருக்குச் சோறு இட நினைத்து-நூறு பேருக்குச் சோறு சமைக்குமாறு போலே, பாதுகாக்கப்படுகிற பொருள்களின் அளவு அன்று காணும் கொண்ட எயிற்றின் பெருமை;-தான் கொண்ட–முகாந்தரத்தாலே -வேறு முகத்தாலே காத்தல் அன்றியே,-தன் முகத்தாலே எடுத்துக் காத்தபடி கரைந்து போன பூமி வேண்டிக் கொள்ளச் செய்தது அன்று ஆதலின், ‘தான் கொண்ட’ என்கிறார்.-கேழல் திரு உரு ஆயிற்று –
அழிவுக்கு இட்ட வடிவிற்கே ஆலத்தி வழிக்க வேண்டி இருந்தபடி. அடியார்களைப் பாதுகாக்க வந்து தன்னைப் பேணாதே ஒழிய ஒழிய அதுதானே நிறம் பெறும்படியாய்க் காணும் இருப்பது;(விக்ரஹம் சீர்மையும் குணத்தின் சீர்மையும் )-அது தான் ஆலத்தி வழிக்க வேண்டி இருக்கையாலே திருவுரு என்கிறார் இவர் –கோலா வராகம் ஒன்றாய் -பன்றியாம் தேசு -பரமபத நிலையனான தேஜஸ் ஸூ க்கும் அவ்வருகு ஒரு தேஜஸ் ஸூ இ றே

தான் உலகத்திற்குக் காரணனாய் இருத்தல் முதலிய குணங்களுள் ஒன்றும் குறையாதபடி சங்கற்பத்தாலே உலகத்தைப் படைத்தான் என்னுமது ஓர் ஏற்றமோ, பிரளயம் கொண்ட பூமியைத் தன்னுருக் கெடுத்து வேற்றுருக் கொண்டு எடுத்த இந்த உபகாரத்துக்கு?

—————

கேட்டும் உணரந்தவர் கேசவற்கு ஆளன்றி ஆவரோ?
வாட்டமிலா வண்கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு
ஈட்டங்கொள் தேவர்கள் சென்றிரந் தார்க் கிடர் நீக்கிய
கோட்டங்கை வாமனனாய்ச் செய்த கூத்துகள் கண்டுமே
.–7-5-6-

ஈட்டம் கொள் தேவர்கள் –கிராமணிகளைப் போலே, ஒருவர் உயர்வு ஒருவர் பொறாதே,
தலை அறுப்பாரும் தலை அறுப்பு உண்பாருமாய்த் திரியக் கடவ சாதி அன்றோ?
இப்படிச் சேராச் சேர்த்தியாய் இருக்கிறவர்கள் ஆபத்து மிக்கவாறே தங்கள் தங்கள் செருக்கினைப் பொகட்டு.-எல்லாரும் ஒரு மிடறாய் வந்து விழுந்தார்கள்.-ஈட்டம் – திரள்.-சென்று இரந்தார்க்கு இடர் நீக்கிய – மணியக்காரர் -கூறு செய்வானும் அம்பலத்தே இருந்தால் ‘ஈஸ்வரனும் நம் பக்கல் வரத் தட்டு என்?’ என்று இருக்குமாறு போலே,
‘எல்லாரும் நம் பக்கல் வர வேணும்’ என்று இருந்தவர்கள் தங்கள் ஆபத்தின் மிகுதியினால் அன்றோ-செருக்கு உற்றவர்களாய் இருக்கிறவர்கள் திரள வந்து இரந்தது?’ என்று திருவுள்ளத்தே கொண்டு அவர்கள் இடரைப் போக்கினபடி.

பொற் கை – பொலிவு எய்தின கை;-‘அழகிய கை’ என்றபடி. -கொடுத்து வளர்ந்த கை;-செய்த கூத்துகள் கண்டுமே –அன்றே பிறந்து அன்றே வளர்ந்து அன்றே இரப்பிலே மூண்டு,
மஹாபலி வேள்வி செய்யும் இடத்தளவும் செல்ல, பூமி நெளியும்படி பதறி நடந்து சென்று புக்கு, மான் தோலும் பூணு நூலும் தருப்பைப் புல்லுமான வணக்கமுள்ள வடிவத்தோடு நின்று‘கொள்வன் நான்’ திருவாய். 3. 8 : 9.-என்றாற் போலே சொன்ன பிள்ளைப் பேச்சுக்களும்-சிறு காலைக் காட்டிப் பெரிய காலாலே அளந்ததும் ஆகிற இச் செயல்கள் அடங்கலும் இவர்க்கு வல்லார் ஆடினாற்போலே இருக்கிறபடி.

‘இறைமைத் தன்மைக்குரிய மேன்மையும் கிடக்கச் செய்தே, திருமகள் கேள்வனான தான் இரந்து தன்னை அடைந்தாரைக் காத்த நீர்மைக்குப் பிரளயங்கொண்ட பூமியை எடுத்துக் காத்தது ஒரு குணமாயிற்றதோ?’ என்கிறார்.

———————-

கண்டு தெளிந்தும் கற்றார் கண்ணற்கு ஆளன்றி ஆவரோ?
வண்டுண் மலர்த் தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழுநாள்
இண்டைச் சடைமுடி ஈசன் உடன்கொண்டு உசாச் செல்லக்
கொண்டங்குத் தன்னொடுங் கொண்டு உடன் சென்றது உணர்ந்துமே
.–7-5-7-

தாய் தந்தையர்கள் மார்க்கண்டேயனை ஒப்பித்து விளையாட விட,
அங்கே ஓர் அசரீரி வாக்கியம் ‘இவனுக்குச் சாக்காடு குறுகிற்று’ என்று சொல்ல,
அதனைக் கேட்டத் தாய் தந்தையர்கள் வெறுக்க, ‘இதற்கு நீங்கள் அஞ்ச வேண்டா; நான் போக்கிக் கொள்ளுகிறேன்,’ என்று-இவன் சென்று சிவனை அடைய, அவனும் பச்சை இடும் நாள் எல்லாம் இடுவித்துக் கொண்டு, ஒரு நாளிலே வந்தவாறே
தலைக் கடையையும் புழைக் கடையையும் அடைத்துச் சடையை விரித்துக் காட்டி,

‘உன் காரியத்தைப் போன்றே ஆறல் பீறல் காண் என் காரியமும்:-அருகில் மாலையைப் பாராதே-என் தலையில் சடையைப் புத்தி பண்ணாய்’ என்று காட்டி,
‘ஆனாலும் நெடு நாள் பச்சை இட்டு என்னைத் துதித்த நீ பேசாதே போக ஒண்ணாதே அன்றோ?-உனக்கு ஒரு பற்றுக் கோடு காட்டக் காணாய்!’ என்று, சர்வேஸ்வரனுடைய சௌலப்யம் முதலிய குணங்களையும் மோட்சத்தைக் கொடுத்தல் முதலான குணங்களையும் சொல்லிக் கொண்டு சர்வேஸ்வரன் பக்கல் ஏறச் சென்றான்.

செருக்கனான சிவன் கொண்டு வந்தான்’ என்று பாராமல்,-ஒரு பிராட்டி புருஷகாரமாக வருவாரைக் கைக் கொள்ளுமாறு போலே கைக் கொண்டு என்னுதல்.-தன்னொடும் கொண்டு–இவன் வந்த காரியத்தை முடித்து, பின்பு தன்னுடன் ஒத்த தன்மையையும் கொடுத்து.-உடன் சென்றது உணர்ந்தும் – ஒரு ‘கள்வன் கொல்’ பெரிய திருமொழி, 3 : 7.-என்ற திருமொழியில் பிராட்டியைக் கொடு போமாறு போலே கொடு போனான் காணும்.

நெடுநாள் தேவதாந்த்ர பஜனம் பண்ணினவன் மறந்தும் புறம் தொழா மாந்தரான சாத்விக புருஷகாரம் ஆவது ஆதல் -பிராட்டி புருஷகாரமாவது ஆதல் அன்றிக்கே தாமஸ தேவதையை புருஷகாரமாக கொண்டு வர -புறம் தொழா தவகம் படி சீற -அவர்களையும் பொருந்த விட்டு -மேன் மேலே ரஷித்த நீர்மைக்குப் போருமோ கீழ் சொன்ன குணங்கள் என்கிறது –

——————

செல்ல உணர்ந்தவர் செல்வன் தன் சீர் அன்றிக் கற்பரோ?
எல்லை இலாத பெருந் தவத்தால் பல செய்மிறை
அல்லல் அமரரைச் செய்யும் அரணியன் ஆகத்தை
மல்லல் அரியுரு வாய்ச் செய்த மாயம் அறிந்துமே
.-7-5-8-

மல்லல் அரி உருவாய்--மல்லல்-பெருமை.-‘மஹா விஷ்ணும்’ என்கிறபடியே,‘உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம் ந்ருஹிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்’-இரணியன் குளம்படியாம்படியாகப் பெரிய வடிவைக் கொண்டு. அன்றிக்கே,-மல்லல் என்று செல்வமாய்,-அதனால், இலட்சுமி நரசிம்மமாய்’ என்னலுமாம்

ஒருவன் புருஷகாரமாகக் கொடு வர அவனைக் காப்பாற்றியது ஒரு குணமோ,
தமப்பன் பகையாக, உத்தம அங்கம் -முகம் ஒரு வடிவம் திருமேனி ஒரு வடிவுமாகக் கொண்டு பாதுகாத்த குணத்துக்கு?’ என்கிறார்-

—————-

மாயம் அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
தாயம் செறும் ஓரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய்த்
தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று சேனையை
நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை அறிந்துமோ
.–7-5-9-

உலகப் பிரசித்தமாம்படி தன்னைத் தாழ விட்டது?-பார்த்த சாரதி -நின்ற திருக் கோலம் -அங்கே நடந்தும் தேர் ஒட்டியும் –-பாண்டவ தூதன் நடந்தாலும் இன்று இருந்த திருக் கோலம் – உபதேசத்தால் சேவித்தும் பிரயோஜனம் பெறுவோம்-நடந்த நல் வார்த்தை அறிந்தும் –
தன் மேலே அம்பு மழையாகப் பெய்கிற இத் தண்ணிய பூமியினின்றும் தன் வரவுக்கு எதிர் கொள்வார் இருந்த இடத்தே போய்ப் புக்கான் என்கிற பெரிய வார்த்தையை அறிந்தும்.

‘மேலே கூறிய செயல்கள் அடங்கலும் தன் ஸ்வாதந்திரியம் கிடக்கச் செய்தே செய்தவை அன்றோ?-தன்னைப் பாதுகாத்துக் கொள்ளுதற்குத் திரு உகிராலும் உண்டே அங்கு; அவை போல அன்றே இங்கு? தன்னை அடைந்தவர்க்குப் பரதந்திரனாய்த் தன்னை அழிய மாறி,
பாண்டவர்களுக்கு உடம்புக்கு ஈடு இடாதே-ஈடு -கவசம் – எதிரிகள் அம்புக்கு இலக்கு ஆக்கின இந்நீர்மைக்குப் போருமோ. மேலே கூறிய குணங்கள்?’ என்கிறார்.-

———–

வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை
பேர்த்துப் பெருந்துன்பம் வேரற நீக்கித தன் தாளின் கீழ்ச்
சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே
.–7-5-10-

மேலே சேதநர்க்குச் செய்த உபகாரங்கள் எல்லாம் சம்சாரத்திலே இருக்கச் செய்தே செய்தவை அன்றோ?-அவை போன்றது அன்றி,-சம்சாரம் மறுவல் இடாதபடி செய்து தன் திருவடிகளிலே சேர்த்துக் கொண்டது ஒரு மஹோபகாரத்தை அருளிச்செய்கிறார்.

வார்த்தை அறிபவர் – மஹாபாரதம் எல்லாவற்றாலும் சொல்லிற்றாயிற்றது ஒரு வார்த்தை அன்றோ? வார்த்தையாவது, பிரயோஜனத்தோடு கூடி இருப்பது அன்றோ?
‘என் ஒருவனையே சரணமாகப் பற்று,’ என்றதனை அன்றோ இங்கு வார்த்தை என்கிறது?
மேலே சொன்னவை அடங்கலும் கடல் போலே; அதில் அமிருதம் போலே இது.- கீதையிலும் இத் திருவாய்மொழியிலும்

மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ- அவன் ‘என்னையே பற்று’ என்று சொல்லா நின்றார், இவர்கள் அவனை ஒழியவும் பற்றுவார்களோ?-ரஹஸ்யங்கள் எல்லாவற்றையும் வெளியிட்டான் அன்றோ அவள் சூழல் முடிக்கைக்காக?

தன் தாளின் கீழ்ச் சேர்த்து- பாத ரேகை போலே இருக்கத் திருவடிகளிலே சேர்த்து.-அவன் செய்யும் சேமத்தை எண்ணி –பின்னை இவனுடைய மீட்சி தன் புத்தி அதீனமாம்படி பண்ணி விடுகை. ‘-இவன் நினைவோடு தன் சங்கற்பத்தோடு வாசி அறும்படி செய்தல்.
இவனும் சேதனனாய் இருக்கச் செய்தே, முத்தன் ஆனாற் கொள்ளும் பல வகையான நிலைகளும் அவன் புத்தி அதீனமாய் அன்றோ இருப்பவன்?’ இவன் கையிலே இவனைக் காட்டிக் கொடுத்தாலும் அவனுக்கு அஞ்ச வேண்டாதபடியாய் இருக்கை.

அவனுக்கு அல்லது ஆள் ஆவரோ? மேலே கூறிய குணங்கள் எல்லாம், ‘மண் தின்ன வேணும்’ என்று அழுத குழந்தைக்கு அதனை இட்டு அதற்குப் பரிஹாரம் பண்ணுமாறு போலே ஆயிற்று;-இங்கு, இவற்றினுடைய ஹிதமே பார்த்துச் சம்சாரம் தொடக்கமான எல்லாத் துன்பங்களும் மறுவலிடாதபடி போக்கித் தன் திருவடிகளின் கீழே வைத்துக் காத்த பெரிய நீர்மைக்குப் போருமோ மேலே கூறியவை அடங்கலும்?-மேலே செய்த பரிஹாரங்கள் கிரந்தி கிடக்கச் செய்யும் பரிஹாரம் போலே சம்சாரம் கிடக்கச் செய்த பரிஹாரங்கள் அன்றோ? அது புண் இல்லாதபடி அறுத்து நோக்குவாரைப் போலே இதிற் சொல்லுகிற குணம்.-மேற் கூறியவை சம்சாரிகள் இச்சையாலே செய்தவை; இது ஈஸ்வரன் தன்னிச்சையாலே செய்ததன்றோ?-

————-

தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக்கதி செய்யும்
தெளிவுற்ற கண்ணனைத் தென் குரு கூர்ச்சட கோபன் சொல்
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்
தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே.
–7-5-11-

தெளிவுற்று வீவு இன்றி நின்றவர்க்கு--பிராப்ய பிராபகங்கள் இரண்டும் அவனே’ என்று அறுதியிட்டு, பின்னர்-நாட்டார் செயல்களைக் கண்டாதல், போலி வார்த்தைகளைக் கண்டாதல் பிற்காலியாதே நின்றவர்களுக்கு.-நாட்டார் செயல்களாவன, சாதன அநுஷ்டானங்கள்.-போலி வார்த்தைகளாவன: உபாய பல்குத்துவம் – சாதனம் சிறிதாய் இருத்தல்,-உத்தேஸ்ய துர்லபத்துவம் – பேறு கிடைத்தற்கு அரியதாய் இருத்தல்,
ஸ்வ கிருத தோஷ பூயஸ்த்வம்-தன்னால் செய்யப்பட்ட பாவங்கள் பலவாக இருத்தல் என்னுமிவை.

தெளிவுற்ற கண்ணனை-இவன் தெளிய மாட்டாத இழவு தீர இவனுக்கு நித்தியமான கைங்கரியத்தைக் கொடுக்கையிலே தான் தெளிந்தபடி இருக்கும் கண்ணபிரானை

தெளிவுற்ற ஆயிரம் – மலையிலே கலங்கின நீரானது ஒரோ பிரதேசங்களில் வந்து தெளிந்து உபயோகத்திற்குத் தகுதியாமாறு போலே

‘மண்ணாடின ஸஹ்ய ஜலம் தோதவத்திச் சங்கணித் துறையிலே துகில்
வண்ணத் தெண்ணீராய அந்தஸ்தத்தைக் காட்டுமாபோலே அல்ப ஸ்ருதர்
கலக்கின ஸ்ருதி நன்ஞானத்துறை சேர்ந்து தெளிவுற்று ஆழ் பொருளை
அறிவித்தது,’
 என்பது, ஆசார்ய ஹ்ருதயம், –71

பாமரு மூவுலகத்துள்ளே –-‘பாபம் நிறைந்திருக்கிற தேசத்திலே’ என்றபடி.
அவ் வருகே ஒரு தேச விசேடத்தே போனால் பெறக் கடவே தெளிவை அதற்கு எதிர்த்தட்டான இங்கே இருந்தே யுடையராவர்;
‘சர்வேஸ்வரன் தானே இங்கு வந்து அவதரிக்கிலும் சோக மோகத்தைச் செய்ய வல்ல சம்சாரத்தே இருந்தே தெளிவுற்ற சிந்தையர்:
குற்றங்களுக்கு எல்லாம் எதிர்த் தட்டான பரமாத்துமாவையும் தன் வழி ஆக்க வல்ல இவ் விபூதியிலே இருந்து வைத்தே சுத்த பாவராய் இருப்பர்.
பாபம் என்பது, ‘பா’ எனக் கடைக் குறைந்து நிற்கிறது.-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -68-மலர்ந்தே ஒழிந்தில மாலையும் -கொண்ட பெண்டிர் -9-1-

March 6, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

இது கால மயக்கு–கொன்றை மலர் பூக்கும் பொழுது வருவதாகச் சொல்லி-அவையும் பூக்க
தோழி -இவை மொட்டு விடத் தொடங்கிற்று -பூக்க வில்லை–இரண்டையும் சொல்லி -ஏமாற்றாமல் –
வருவதுக்கும் ஸூசகமாக மொட்டு விட்டது என்றும் சொல்ல வேண்டுமே –-கார்த்தனவே-சினத்தன
மலர்ந்தே ஓழிந்தில-முழுவதாக மலரவில்லை –கொண்ட பெண்டிர் –
9-1-இதன் விவரணம்
பர உபதேசத்தில் ப்ரவ்ருத்தர் ஆகிறார் -நம்பிள்ளை-சகலவித பந்துவும் அவனே-வீடு சொன்னால் ஒரு கொண்ட -நான்கும் விரோதி ஸ்வரூபம்-அவன் வரவில்லை -விரோதி போக்கி தோழி ஆற்றுகிறாள் இதில்-மற்று ஓன்று இல்லை -சுருங்கச் சொன்னோம்- மானிடத்து எவ்வுயிர்க்கும் சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும்-மலர்ந்தே ஒழிந்தில-கார்த்தனவே -இதுவே சுருக்கமாக இங்கே சொல்லி
ஆழ்வாரைக் கூட்டிப் போகும் காலம் அணித்தாயிற்று-உபதேசம் இன்னும் பண்ண வேண்டுமே -இதுவே காலமயக்கு
–சம்சார வெறுப்புடன் ஆழ்வார் இருக்க-பாட்டுத் தோறும் வடமதுரைப் பிறந்தான்
ஆஹதோ மதுரா புரம்
-ஆனானப்பட்ட அவனே பிறக்க நீர் இருந்தால் என்ன-உம்மைக் கூட்டிப் போகவே பிறந்தான் என்றுமாம்-அதே போல் இங்கும் பூக்கவில்லை கார்த்தனவே

இப்படி நிரதிசய வைலக்ஷண்யத்தை யுடைத்தான தம்முடைய ஞானத்தால் பகவத் பாகவத விஷயங்களை நிறைந்த அனுபவம் பண்ணப் ப்ராப்தமாய் இருக்க-யோக்ய காலங்களில் அனுபவிக்கப் பெறாமையாலே பிறந்த ஸைதில்யத்தை ஸூஹ்ருத்துக்கள் ஆற்றினை பாசுரத்தை காலம் கண்டு இரங்கின தலைவியைக் காலம் இளையது என்று ஆற்றினை தோழி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-அவதாரிகை-கலந்து பிரிந்த தலைமகள் கொன்றை பூக்கிற காலத்திலே வருகிறேன் என்று போனானாய் அக்காலமும் வந்து அவையும் பூக்கவும் அவன் வரக் காணாமையாலே
தலை மகள் தளர அத்தைக் கண்ட தோழி அவை இப்போது பூக்க உத்யோகிக்கிற அத்தனை –காலம் தாமும் இளையது என்று ஆற்றின தோழி பாசுரத்தாலே தம்மில் தாமே ஸமாஹிதராகிறார்
இதில்

மலர்ந்தே யொழிந்தில   மாலையும் மாலைப் பொன் வாசிகையும்
புலந்தோய் தழைப் பந்தர் தண்டுற நாற்றி பொரு கடல் சூழ்
நிலந்தாவிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய்
கலந்தார் வர வெதிர் கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவே
– 68-கால மயக்கு காலம் இளையது என்றல் –

கொண்ட பெண்டிர் தாம் முதலாக் கூறும் உற்றார் கன்மத்தால்
அண்டினவர் என்றே யவரை விட்டு -தொண்டருடன்
சேர்க்கும் திருமாலைச் சேரும் என்றான் ஆர்க்குமிதம்
பார்க்கும் புகழ் மாறன் பண்டு 
–81-தன்னைப் பற்றினாரை தனக்கு அபிமதரான பாகவதர்கள் திருவடிகளிலே சேர்த்து ரஷிக்கும் ஸ்ரீ சர்வேஸ்வரனே பிராப்யமும்-பிராபகமும் சர்வ வித பந்துவும் – அல்லாதார் அடங்கலும் ஔபாதிக பந்துக்கள் – ஆன பின்பு – அவனை ஒழிந்த ஔபாதிக பந்துக்களை விட்டு பிராதா பார்த்தா ச பந்து ச பிதா ச மம ராகவா -என்னும்படி நிருபாதிக-சர்வவித பந்துவுமாய் இருக்கும் ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அடிமை புக்கு உஜ்ஜீவித்துப் போருங்கோள் என்று ப்ரீதி பிரகர்ஷத்தாலே பிறரைக் குறித்து உபதேசிக்கிற கொண்ட பெண்டீரில் அர்த்தத்தை கொண்ட பெண்டிர் தாம் முதலா -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –பஹூ முகமாக சர்வர்க்கும்-சர்வ ஹிதங்களையும் உபதேசித்து அருளிற்று -என்கை-இம் மட வுலகர் கண்டதோடு பட்ட-அபாந்தவ-அரஷக-அபோக்ய-அஸூக அநுபாய பிரதி சம்பந்தியைக் காட்டி -என்று இறே ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் ஸ்ரீ நாயனாரும் அருளிச் செய்தது 

மலர்ந்தே ஒழிந்தில –அக் காலம் அல்ல காண் -என்னாமே தோழி –  கெடுவாய்-இவை இங்கனே மலரா நிற்க அல்ல காண் -என்னும்படி எங்கனே -என்ன –மலர உபக்ரமித்த-இத்தனை காண் – மலர்ந்து சமைந்தது இல்லை காண் –மாலை இத்யாதி –மாலைகளாகவும் – அம் மாலைகளாலே சமைந்த பொன் வாசிகை போலே –சுருளவும் இறே யவை தான் பூப்பது – கண்டாருடைய ஹ்ருதயங்கள் அபஹ்ருததாம்படி -என்னுதல் –தழைப் பந்தல் தண்டுற நாற்றி மலர்ந்தே ஒழிந்தில -என்னுதல் –
தண்டுற நாற்றிக் கார்த்தன -என்னுதல் –தழைப் பந்தலாக பணைகள் தோறும் கண்கள் தோறும் நாற்றி –புலந்தோய் –புலம் –இந்திரியங்களாய்-தோய்கை-அபஹரிக்கையாய் –(புலந்தோய்-புலன்கள்-அபகரிக்கும் -பூமியில் படராமல் இரண்டும் உண்டே )புலம் -பூமியாய் –தோய்கை-ஸ்பர்சிக்கையாய் –
தரையிலே வந்து தோயும்படி -என்னுதல்-பொரு கடல் இத்யாதி –அவனுடைய அழியாத நித்ய விபூதியோடு ஒத்து உள்ளவள் அல்லையோ நீ –அவன் உன்னை அழிய விட்டு இருக்குமோ –
ஆவது அழிவது ஒரு விபூதியும் –அழியக் கூடாததொரு விபூதியுமாய் இறே இருப்பது –அழிய விட்டு மீட்டிக் கொள்ளும் லீலா விபூதியை –-முதலிலே அழிகைக்கு சம்பாவனை இல்லாதபடி நோக்கும் நித்ய விபூதியை -பொரா நின்றுள்ள கடலாலே சூழப்பட்ட பூமியை தாவி அளந்து கொண்டு – அச் செயலாலே ஆஸ்ரித வர்க்கத்துக்கு அடங்க நாதனானவன் –தனது வைகுந்த மன்னாய் –உனக்கு ஸ்வரூப ஞானம் இன்றிக்கே ஒழியுமோ –-அவனதான நித்ய விபூதியோடு  ஒத்து இருந்துள்ளவள் அன்றோ நீ –அவ் விபூதியை விடில் அன்றோ உன்னை விடுவது – உன்னை தளர விட்டு இருக்குமோ-ஆண்டு தோறும் அங்கு சென்று-நம் சடகோபனைத் தந்து அருளாய் என்ன கொடுத்து அருளுகிறானே-கலந்தார் -உன் ஸ்வ ரூபத்தை அறியாது ஒழிந்தால் –அவன் தன் ஸ்வ ரூபத்தையும் அறியாது ஒழியுமோ –உன்னோடு கலந்து சுவடி அறிந்தவன் -உன்னை விட்டு இருக்குமோ –கலந்தார் -என்றே-காணும் அவனுக்கு நிரூபகம் –ஞானியை விக்ரஹத்தோடு ஆதரிக்கும்-த்யாஜ்ய தேஹ வ்யாமோஹம் -விமல சரம தேகம் அன்றோ-ஸ்வரூபம் இங்கு ஆழ்வார் ரூபம் நிலம் தாவிய எம்பெருமானே கலந்தார் – வேறே பெயர் இல்லாமல் இதுவே ஸ்வரூப நிரூபகம்வா வெதிர் கொண்டு – வாசி யறியாத ஸ்த்தாவரங்களும் கூட –
அகால பலி நோ வ்ருஷா -என்று அவன் வர உத்யோக்கிகிற   படியைக் கண்டு(இவையும் உத்யோகித்து )அலராமல் நிற்க –நீ தளரும் இத்தனையோ –வன் கொன்றைகள் – அவன் வரில்  அலரக் கடவதாய் -இல்லையாகில் தவிருமதாய் –இப்படி அவன் வரவோடு தப்பாதான கொன்றைகள் –இவை பூத்தால் அவன் வந்திகிடுவான்-பூக்க வில்லையே-அதனால் வன் கொன்றைகள் குயிலே நீ கூவினால் அவன் வந்திடுவான் போல்கார்த்தன –சினைத்தன –கருவடைந்தால்-ஒரு நிறம் உண்டு இறே இடுவது -அத்தை சொல்லிற்றாதல் –அன்றியே-கார்காலத்தைக் காட்டி நின்றன -என்றது ஆதல் –பொருகடல் சூழ் நிலம் தாவிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய் – வன் கொன்றைகள் கலந்தார் வர வெதிர் கொண்டு கார்த்தன – மாலையும் மாலைப் பொன் வாசிகையும் புலந்தோய் தழைப் பந்தல் தண்டுற நாற்றி மலர்ந்தே ஒழிந்தில –-அன்றிக்கே கார்த்து மலர்ந்தே ஒழிந்தில  -என்னுதல் –

கார்காலம் வந்தது அன்று -அவன் வருகையை முன்னிட்டு மகிழ்ந்து கொன்றை மலர்கள் அரும்பின –
கலந்து பிரிந்த தலைமகன் கொன்றை போக்கும் காலத்திலேயே வருவேன் என்று சொல்லிப் போக –
அக்காலமும் வந்து அவையும் போகச் செய்தே-அவன் வாராமையாலே தலைமகள் தளர அத்தைக்கு கண்ட தோழியானவள் – அக்காலம் அல்ல என்ன ஒண்ணாத படி-அவை முடிகிக் கொடு நிற்கையாலே இவை பூக்க உத்யோகிக்கின்றன அத்தனை -பூத்துச் சமைந்து இல்லை காண்-ஆன பின்பு அவனும் வந்தான் அத்தனை -நீ அஞ்சாதே கொள் என்று ஆசிவசிப்பிக்கிறாள்-அக்காலம் அல்ல காண்
என்னும் தோழி கெடுவாய் இவை இங்கனம் மலரா நிற்க அல்ல காண் என்னும் படி எங்கனே என்ன மலர உபக்ரமித்த அத்தனை காண் -மலர்ந்து சமைந்து இல்லை காண் -என்கிறாள்–மாலையும் மாலைப் பொன் வாசிகையும்-மாலைகளாகவும் பொன் மாலையால் சமைந்த வட்டம் போலே சுருளவும் கொன்றை பூத்தலால்–அம்மலர் அலரத் தொங்குதல் -பந்தலில் கொம்புகளின் இடையில் தொங்க விட்டதை போல் உள்ளதால் – தழைப் பந்தர் தண்டுற நாற்றி -என்கிறார் இத்தைக் கண்ட கண்கள் வேறு எங்கும் போகாது என்பதை –புலந்தோய் தழை- புலம் -நிலம் -தரையிலே வந்து தோயும்படி கவிந்து செழித்து உள்ள தழை என்றுமாம்–வைகுந்த மன்னாய்-எம்பெருமானுக்கு உரியவள் -உன்னைப் பிரிந்து அவன் ஆற்றான்-கலந்தார்-பிரிந்தார் என்னாமல் -கலந்தார் என்றது உன்னை கலந்து உன் தன்மை அறிந்தவர் உன்னை விட்டு இருக்க மாட்டார் என்றபடி-வர வெதிர் கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவே-வாசி அறியாத ஸ்தாவரங்கள் கூட வர இருப்பதைக் கண்டு அலரா நிற்க நீ தளர வேண்டுமோ –தாம் மலர்ந்தால் இவள் கலங்குவாள் என்று அறிந்தும் மலர்ந்த வன் கொன்றைகள்
கார்த்தன -கருக் கொண்டன -அரும்பின் நிலையை ஒழிய மலரின் நிலையை அடைய வில்லையே –
கார் காலத்தை காட்டா நின்றன என்றுமாம் –எம்பெருமானுக்கு உரியவரே-உம்மை ஆட் கொள்ளாது ஒழியான் –அவன் வரவை ஸூசிப்பிக்கும் காலம் தோன்றா நின்றது-வரும் காலம் இன்னும் அணுகிற்றிலை என்று கூறி ஆற்றிய படி –

மலர்ந்தே யொழிந்தில மாலையும் மாலைப் பொன் வாசிகையும் புலந்தோய் தழைப் பந்தர் தண்டுற நாற்றி –கொன்றைகளானவை மாலையாகவும் மாலையாலே சமைந்த பொன்னின் வாசிகையாயும் இருக்கிற பூக்களை கண் வைத்தால் வாங்க ஒண்ணாத படி செறிந்த தழைப் பந்தலிலே கொம்புகள் சிக்கனைத் தூக்கி மலர்ந்தே வியானவில்லை–பொரு கடல் சூழ் நிலந்தாவிய வெம்பெருமான்-அலைகள் தன்னில் தான் பொருகிற கடலாலே சூழப்பட்ட பூமியை அளந்து கொண்ட நம்முடைய
ஸ்வாமியானவனுடைய–பொரு கடல்-செறிந்த கடல் என்னவுமாம்–தனது வைகுந்த மன்னாய்
அவனுக்கு அசாதாரணமான பரமபதம் போலே-அந்நிய அபிமான பிரசங்கம் யுண்டாய்க் கழிக்க வேண்டாதபடியான ஸ்வ பாவத்தை யுடையவளே–(உலகு அளந்த பொன்னடி -சாத்ய பூமி அது
பற்றுவது இங்கே -திருவிக்ரமனது திருவடி பற்றி அங்கு சென்று அந்த ஸ்ரீ வைகுண்டம் போல் இனியவளே-நித்யம் நிரதிசய போக்யம் -கீழ் அந்நிய அபிமான பிரசங்கம் இல்லாத ஆழ்வார் –
நின்ற ஆதிப் பிரான் நிற்க மற்றத் தெய்வம் நாடுதிரே என்று இகழ்பவர் அன்றோ )கலந்தார் வர வெதிர் கொண்டு-தம்மோடு முன்பு ஸம்ஸ்லேஷித்த அன்புடையாருடைய வரவை முற்கோலி-வன் கொன்றைகள்-நாம் மலர்ந்தால் இவள் ஈடுபடும் என்னும் இரக்கம் இல்லாத வன்மையை யுடைய கொன்றைகள்–கார்த்தனவே –-கருவடைந்து அரும்பின இத்தனை-மலர்ந்தன வில்லை என்றதாயிற்று-வன் கொன்றை என்று அரும்பின சிக்கனவைச் சொல்லி மலர விளையது என்றதாகவுமாம்
(வன் -செறிந்து அடர்ந்து என்றபடி இதில் )-இத்தால் விஸ்லேஷித்த நண்பரான பாகவதருடைய ஆகமநத்தை ஸாம்ஸாரிக போக தர்சனத்தாலே (கொன்றைப் பூக்கள் பூக்க ஆரம்பிப்பது ) வந்த ஆர்த்தி சமிக்கைக்கு உஸாத் துணையாக ஆசைப்பட்டவர் விளம்ப அஷமதையாலே சிதிலராக ஸூஹ்ருத்துக்கள் ஆற்றின பாசுரமாய் இருக்கிறது–இதில் வன் கொன்றை -என்கையாலே ஸ்த்தாவர பிராயராய் அஞ்ஞரான சரீரிகளுடைய தேவதாந்த்ர அபிமானத்தை சிக்கனவை ஸூசிப்பிக்கிறது
(கொன்றைப்பூ சிவனது )-புலந்தோய் தழைப் பந்தர் -என்கையாலே இந்திரியங்கள் படியும்படியான விஷய பிரவணர் ஒதுங்க நிழல் என்றபடி–மாலையும் மாலைப் பொன் வாசிகையும்-என்கையாலே
ருஜு வாயும் (நேர்மையாயும் -சாத்விக ஆகாரம் அளவு விஞ்சி போல் ) வக்ரமாயும் (வளைந்தும் ராஜஸ தாமஸ ஆகாரங்கள் தள்ளுபடி தானே ) யுண்டான போக்ய வஸ்துக்களை ஸூசித்தப்படி-தண்டுற நாற்றி -என்கையாலே (கிளையில் பொருந்தி ) இவ்விஷயங்களினுடைய அநு பந்தம் ஆஸ்ரய பர்யந்தமாய் இருக்கும் என்றபடி (கிளையும் தள்ளுபடி -விஷயாந்தரம் போல் விஷயாந்தர பரரும் த்யாஜ்யம் )-மலர்ந்தே ஒழிந்தில -என்கையாலே-கிலேச கரமான வைஷயிக போக விகாஸம் உம்முடைய ஸந்நிதியில் அதிசயித்தது இல்லை என்றபடி-அப்போது இறே உஸாத் துணை வேண்டுவது-பொரு கடல் சூழ் நிலந்தாவிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய் கலந்தார் வர வெதிர் கொண்டு -என்று உஸாத் துணையான நண்பருடைய ஆகமநம் மேல் அபேக்ஷிதம் என்றபடிகார்த்தனவே -என்கையாலே ஆகாமியான விகாஸத்துக்கு ஸூசகம் யுண்டு இத்தனை என்றதாயிற்று

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-வியாக்யானம்-மலர்ந்தே யொழிந்தில மாலையும் மாலைப் பொன் வாசிகையும் புலந்தோய் தழைப் பந்தர் தண்டுற நாற்றி கொன்றைகளானவை மாலையாயும்
மாலைகளால் கட்டப்பட்ட பொன் வாசிகையாயும் யுள்ள பூக்களை வைத்த கண் வாங்காதபடி அழகுள்ள பசும் தழைப் பந்தலில் யுள்ள கொம்புகளிலே தூக்கின அளவே காண்
மலர்ந்தே ஒழிந்தில-மலர உபக்ரமித்தனை-இன்னும் மலர்ந்தது இல்லை-அவன் வரும் அளவில் அல்லது மலராது காண்
மலரும் காலத்தில் அவன் வருவது நிச்சிதம்–பொரு கடல் சூழ் நிலந்தாவிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய் கலந்தார் வர வெதிர் கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவே-அலைகள் தன்னில் தாம் பொருகிற கடலாலே சூழப்பட்ட பூமியை அளந்து கொண்டு நம் ஸ்வாமியால் நம் விபூதகி எல்லாம் ஒரு தட்டு இவள் ஒரு தட்டு என்று அபிமானிக்கப் பட்டவளே-உன்னோடு கலந்தவருடைய வரவுக்கு எதிர்கொண்டு அவரைக் கண்டு அல்லது அலரலாகாது என்கிற புத்தி சக்தி பலமுள்ள கொன்றைகள் கார்த்திக் கொண்டே நின்றன காண்–கலந்து பிரிந்தவர்கள் ஆராரோ-அவர்களை எல்லாம் எதிர்கொண்டு என்றுமாம்

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-ஸ்வாபதேசம்-இத்தால் அவனுடைய குண ஞானத்தாலும் இக்கலையை அவகாஹித்த படியாலும் போக யோக்கியமான காலத்தில் வாராது ஒழியான் என்று பார்ஸ்வஸ்த்தர் ஆஸ்வஸிப்பிக்கிற படியைச் சொல்லுகிறது

ஸ்வா பதேசம் –
இத்தால் அவனுடைய குண ஜ்ஞானத்தாலும் – இத் தலையை அவன் அவஹாகித்த படியாலும்-
போக யோக்யமான காலத்தில் வாராது ஒழியான் என்று பார்ஸ்வச்தர் ஆஸ்வசிக்கிறபடியை   சொல்லுகிறது –தழைப் பந்தல் தண்டுற நாற்றி -தழை
-செறிந்த  –பந்தல் -பந்தலாக –தண்டு -சாகைகளிலே –உற –சிக்கென -நாற்றி -நாலா நின்று கொண்டு -என்று சப்தார்த்தம் –
சினைத்தல் -கர்ப்பமாதல்-மொட்டாதல்-மகாத்மாவின் விரஹ அஸஹத்வம் வளத்தின் களத்திலே கூடு பூரிக்கும் –திரு மூழிக் களத்திலே காட்டி அருளிய திருக்குணம்

தாத்பர்யம்–சர்வேஸ்வரன் குறித்த காலத்திலேயே வராததால் நோவு பட்ட தலைவியைத் தோழி காலத்தை மயக்கி சமாதானப்படுத்தும் பாசுரம்-பார்ஸ்வஸ்த்தில் உள்ள ஸ்ரீ வைஷ்ணவர்
கிலேசிக்கும் ஆழ்வாரை சமாதானப்படுத்த கிறார்கள்
ஓ சஹி நாயகன் குறித்த காலம் இன்னம் வர வில்லை-பூக்கள் மாலையாகவும் பூமி எங்கும் படர்ந்து இருக்கும் காலத்தில் அன்றோ வருவதாகச் சொல்லிப் போந்தான்-அவன் உன்னைக்கான உத்யோகிக்க
இவையும் பூக்கள் அலர்ந்து உத்யோகிக்கின்றன அத்தனையே -இவரை சமாதானம் பண்ண இத்தனையும் பண்ண வேண்டுமே
உபய விபூதி நாதன் ஒரு கால விசேஷத்தில் இங்கே வந்து அவதரித்து போல் அல்லாமல் நித்ய ஸ்ரீ வைகுண்டம் போல் அவனது போக்யத்தை நித்தியமாக வளர்க்கும் படி அன்றோ உம்முடைய போக்யதை
உம்முடைய சம்ஸ்லேஷமே தாரகம்-என்று -இருப்பவன் அன்றோ அவனும்-உன்னை விட்டு க்ஷண காலமும் பிரிந்து இருக்க வல்லன் அல்லனே -அவன் வரவைக் கண்டு இவையும் பூக்க ஆரம்பிக்கின்றன-அண்ணல் வந்தான் -ஆரியன் வந்தான் என்று திருவடி-பரதனுக்கு சமாதானம் சொன்னதுக்காக அவன் வரவில்லை-அதே போல் அரும்பிக்கத் தொடங்கிற்று-இவை பூத்து சமையும் அளவில் வந்தே தீருவான் கவலைப்படாதே என்று சமாதானம் பண்ணுகிறார்கள்

9-1-கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்-ப்ரவேஸம்-

ஒன்பதாம் பத்து -பிரவேசம் –
முதல் பத்தால் -பகவத் கைங்கர்யம் புருஷார்த்தம் என்று அறுதி இட்டார் –
இரண்டாம் பத்தால் -அந்த கைங்கர்யத்தில் களை அறுத்தார் –
மூன்றாம் பத்தால் – களை அறுக்கப் பட்ட அந்த கைங்கர்யமானது-பாகவத சேஷத்வ பர்யந்தமான பகவத் கைங்கர்யம் -என்றார் –
நான்காம் பத்தால் -இப்படிப் பட்ட கைங்கர்யத்துக்கு விரோதிகள் ஐஸ்வர்ய கைவல்யங்கள் -என்றார்
ஐந்தாம் பத்தால் -அந்த விரோதிகளைப் போக்குவானும் அவனே -என்றார் –
ஆறாம் பத்தால் -விரோதிகளைப் அளிக்கும் தன்மையனான சர்வேஸ்வரன் திருவடிகளிலே சரணம் புக்கார் –
ஏழாம் பத்தால் -இப்படி பெரிய பிராட்டியார் முன்னிலையாக சரணம் புக்க இடத்திலும்-தக்தபட நியாயம் போலே சம்சாரம் தொடருகிற படியைக் கண்டு நோவு பட்டார் –
எட்டாம் பத்தால் -இப்படி பிரபன்னராய் இருக்கச் செய்தே-தக்த பட நியாயம் போலே நம்மை விடாமல் தொடருகிறது
நம்முடைய ஆத்மாவிலும் ஆத்மா சம்பந்தப்பட்ட பொருள்களிலும்-நசை அறாத படியாலே -என்று பார்த்து -அவற்றில் ஒரு நசை இல்லை -என்றார்
இப்படி நசை அற்ற பின்பும் பாது காவாமல் ஒழிவான் -என்-என்று ஐயம் கொள்ள
நான் நாராயணன்-எல்லா ஆற்றலோடும் கூடினவன்-உம்முடைய விருப்பங்கள் அனைத்தையும் செய்து முடிக்கிறேன் –என்று அருளிச் செய்ய
அவனுடைய சீல குணங்களிலே ஆழம் கால் படுகிறார்-இந்த ஒன்பதாம் பத்தில் –

————————————————————————————————-

கொண்ட பெண்டிர் -பிரவேசம் –

மேல் திருவாய் மொழியிலே
பாகவதர்களுக்கு அடிமைப் பட்டு இருத்தலை எல்லையாக உடைய-தனக்கு மேல் ஓன்று இல்லாததான பேற்றினை
யாதொரு தடையும் இல்லாதபடி அவன் காட்டிக் கொடுக்க
மிக்க ப்ரீதியோடே-காட்டிக் கொடுத்த அந்த பேர் உபகாரத்தைக் கூறிக் கொண்டு
சயமே அடிமை தலை நின்றார் -என்றும்
நீக்கம் இல்லா அடியார் -என்றும் –
கோதில் அடியார் -என்றும்-பாகவதரை விரும்பினாராய் நின்றார் –
ஆப்பான் திருவழுந்தூர் அரையர் -தாம் ஆஸ்ரியராய் அடைந்ததும் திருவாய்மொழி கேட்டதும்-ஆழ்வான் உடன் அன்றோ –
சயமே அடிமை தலை நின்றார் -என்றது -ஸ்ரீ பரத ஆழ்வானை போல்வாரை –
நீக்க மில்லா அடியார் -என்றது -இளைய பெருமாளை போல்வாரை –
கோதில் அடியார் -என்றது -ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் போல்வாரை காணும்-என்று ஆழ்வான் பணித்தாராக பணிப்பர் –
இப்படிப் பட்ட -பாகவதர்களுக்கு அடிமை பட்டு இருத்தல் ஆகிற பேற்றின் எல்லையை நமக்குத் தந்த-
அவனே இயல்பாகவே அமைந்த நல்ல எண்ணத்தை உடையவன் –
அல்லாதார் பக்கல் தோன்றுகிற நல்லெண்ணம் ஒரு காரணத்தைப் பற்றி-வருகிற நல்லெண்ணம் -ஆகும்-என்று
பிராப்ய ஆபாசங்களைத் தவிர்த்து-அவனே பிராப்யன் என்றும் –
பிராபக ஆபாசங்களைத் தவிர்த்து -அவனே பிராபாகன் என்றும்
அறுதி இட்டு பிறந்த லாபத்தாலே உண்டான உவகையாலே-மக்களைக் குறித்து
நீங்கள் ஒரு காரணம் பற்றி வந்த பந்துக்களான மற்றோரை விடுத்து-இயல்பாகவே உள்ள பந்துவான அவனையே பற்றி-
உஜ்ஜீவிக்க பாருங்கோள்-என்று-பரோபதேசத்திலே மூளுகிறார்

சர்வேஷாம் ஏக லோகாநாம் பிதா மாதா ச மாதவ-கச்சத்வம் ஏனம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா -பாரதம் –
உலகில் உள்ள எல்லா உயிர்கட்கும் திருமகள் கேள்வரே தந்தையும் தாயுமாக இருக்கிறார் -ஓர் ஆடவர் ஏறே –
காப்பவரான அவரையே சரணமாக சென்று அடைமின் –
பூதாநாம் ய அவ்யய பிதா – சஹஸ்ரநாமம் –
மற்றையோர் தாய் தமப்பன் என்ற பேரே-நாலு நாள்கள் இருந்து மணல் கொட்டகம் போலே அழிந்து போவார்கள் –
அங்கன் இன்றிக்கே -அழியாதே என்றும் ஒக்கக் காப்பாற்றும் தமப்பன் அவனே ஆயிற்று –
தனக்கு நலத்தை கூறிய விபீடணனை –
அன்யஸ்து ஏவம் விதம் ப்ரூயாத் வாக்யம் ஏதத் நிசாசர-அஸ்மின் முகூர்த்தே நபவேத் த்வாம் து திக் குலபாம்சனம் – யுத்த -16-15-
அரக்கர் குலத்துக்கு குறையை விளைவித்த உன்னை விடுகிறேன் -என்று
புறப்பட விட்டான் அன்றோ ராவணன் –
அவன் தம்பியை ஒழியச் செல்லாது என்றார் அன்றோ -பெருமாள் –
பெற்ற தமப்பன் பகையாக அவனிலும் அண்ணியனாய் வந்து உதவினான் அன்றோ பிரகலாதனுக்கு
மகாராஜர் தமையனால் நோவு பட தனிமையில் வந்து உதவினார் அன்றோ பெருமாள் –
மாதா பிதாக்கள் கை விட்ட ஜெயந்தனுக்கு ப்ரஹ்மா-தரீன் லோகன் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத -சுந்தர -38-33-
அந்த காகாசுரன் தமப்பனாலும் முனிவர்களாலும் தேவர்களாலும்-விடப்பட்டவனாய் மூன்று லோகங்களிலும் நன்றாக திரிந்து
அந்த பெருமாளையே சரணம் அடைந்தான் -என்கிற படியே-ஸ-நீரிலே புக்கு அழுந்துவாரைப் போலே
தாரகர் ஆனவரே பாதகராய்-அம்பு தொடுக்கும் படி சூழ்த்துக் கொடு நின்ற அவன்
மற்றைய பதங்கட்கு முன்பு கூறியது போன்று கொள்க –பயிலும் சுடர் ஒளி -நம்பனை பாசுர வியாக்கினத்தில் கண்டு கொள்வது -என்றவாறு –

த்ரௌபதி தர்மத்திலே தலை நின்றவர்களான கணவன்மார் ஐவரும் வெறும் தரையைக் கீறிக் கொண்டு இருக்க
அவர்களை ஒழிய சேயனான கிருஷ்ணனை நினைக்க –
கோவிந்தேதி யத் ஆக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூரவாசினம்
ருணம் பிரவ்ருத்தம் இவ மே ஹ்ருதயாத் ந அபசர்பதி -பாரதம் -உத்தியோக பர்வதம் -58-22-
அவள் ஆபத்தை அடைந்தவளாய் நம்மை நினைக்க நாம் உதவப் பெற்றிலோம் -என்று
த்ரௌபதி யானவள் தூரத்தில் இருக்கிற என்னை கோவிந்தா என்று அழைத்து அழுதாள் –
எனபது யாது ஓன்று உண்டோ -அது வட்டிக்கு வட்டி ஏறின கடன் போன்று
என் மனத்தின் நின்றும் நீங்க வில்லை என்று புண் பட்டான் அவன் அன்றோ –
அர்ஜுனன் என் கார்யங்களை என்னால் செய்து கோடல் அரிது-என்று சோகிக்க
உன்னைத் தொற்றி வருவது ஓன்று பேற்றுக்கு உடலாம் அன்றே அன்றோ உனக்கு சோகிக்க வேண்டுவது –
உன்னுடைய எல்லா பாரங்களையும் நம் தலையிலே போகட்டு -நாமே கடவோம் -என்று இரு –
உன்னுடைய பகைக் கூட்டத்தை எல்லாம் நாமே போக்கித் தருகிறோம் -என்றான் அன்றோ –
இப்படிகளாலே
அவனே நிருபாதிக பந்து-அவனையே பற்றப் பாருங்கோள் -என்று-தாம் அறுதி இட்ட அர்த்தத்தை
தம்மைப் பற்றினார்க்குத் தஞ்சமாக உபதேசித்து அருளுவதாக-பரோபதேசத்தில் மூளுகிறார் –

ஒன்பதாம் பத்தில்
கீழ் ஏழாம் பத்திலும் எட்டாம் பத்திலும் விரோதி ஸ்வரூபத்தையும் -தந் நிவ்ருத்தி பிரகாரத்தையும் அருளிச் செய்து –
மேல் இரண்டு பாத்தாலும் பிராப்தி பலாவாப்தியை அருளிச் செய்வதாக –
இப்பத்திலே பல ஸ்வரூபத்தை நிரூபிப்பதாகக் கொண்டு
பல பூதனான ஈஸ்வரனுடைய நிருபாதிகதையையும்
கைங்கர்ய பிரதி சம்பந்தி தயா நித்ய பிரார்த்யத்வத்தையும்
நிரதிசய போக்ய சீலாதி குண யோகத்தையும்
நித்ய அபூர்வ யோக்யதையையும்
ஸ்மரண தசையில் சைத்தில்ய ஜனகமான போக்கிய குணவத்தையும்
ஸ்ம்ருதிஸைதில்யம் யுடையாரை புஜிம்பிக்கையில் உண்டான பிரதம உத்யோத்தையும்
அத்தயதரணீய கடக கமயத்வத்தையும்
பத்னீ பரிஜன பூர்த்தியையும்
அல்ப கால விளம்பத்திலும் அதி கிலேச அவஹத்வத்தையும்
பத்தி காரிதமான கைங்கர்ய பிரதி சம்பந்தத்வத்தையும்
அருளிச் செய்து அவனுடைய பல ரூபத்தை அருளிச் செய்து அருளுகிறார்

முதல் இரண்டு பத்தாலே நிரூபித்த ப்ராப்ய ஸ்வரூபத்தினுடைய ப்ரயோஜன ரூபத்வம் இங்கே நிரூபிக்கப் படுகிறது –

முதல் திருவாய் மொழியிலே ததீய சேஷத்வ போக்யதா பிரதிபத்தி பிறக்கும் படி ஸமஸ்த விரோதி நிவ்ருத்தி பிறந்த பின்பு –
அந்த ததீய சேஷத்வ போக்யதா மூலமான தத் போக்யதையை அனுசந்தித்து –
அவனுடைய சர்வ பிரகார பலத்தவத்துக்கு உபபாதகமான சர்வவித அந்வயத்துக்கு ப்ரகாசகமான
ஆபத் ஸகத்வத்தையும்
அவிஸ்வாச நிராசகத்வத்தையும்
அநிஷ்ட நிரசன கிருபா யோகத்தையும்
அவதார ப்ரயுக்த குணோத்தரத்தையையும்
அநிஷ்டயத்வம்சகத்வம் அடியான அபிமத நீயதையையும்
கீர்த்த நீய குணவத்ததையும்
சிந்தா மாத்திரை ஸூலபத்வத்தையும்
உஜ்ஜீவன ஹேதுத்துவத்தையும்
போக்கிய விக்ரஹ விசிஷ்டதையையும்
பூ பார நிராசகத்வத்தையும்
அனுசந்தித்து -ஏவம் பூதனான சர்வேஸ்வரன் நிருபாதிக பந்துவானவன் -அல்லாதார் உபாதி நிபந்தனபந்துக்கள் –
ஆதலால் அவர்களை விட்டு நிருபாதிக பந்துவானவான இவனை நோக்கி உஜ்ஜீவியுங்கோள் -என்று
தாம் அறுதியிட்டு அர்த்தத்தை தம்மைப் பற்றினார்க்குத் தஞ்சமாக உபதேசித்து அருளுகிறார் –

கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்
கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை
எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்
தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே–9-1-1-

ஈஸ்வரனை ஒழிந்தவர் ரக்ஷகர் அல்லர் என்று பிரபன்ன பவித்ராணாம் -பிரபந்தத்தில் சொன்னோம் –

கீழ் அனுகூலமாகக் கொண்ட -இங்கு எல்லாமாகக் கொண்ட பெண்டிர்-ஆச்சார்யனும் பரம் பொருளும் செல்வமும் முதலானவைகள் எல்லாம்-இவளே ஆக கொண்ட –பத்னியே ஸர்வம் என்று கொண்ட -தான் மட்டும் தன் மனத்திலே உறவாக நினைத்து இருக்கும் மனைவி-பொருள் முதலான காரணங்களாலே கொள்ளப் பட்ட மனைவி-தஞ்சமாக நெஞ்சிலே கொண்ட மனைவி -என்னுதல் –கொண்ட -என்பதனை மக்கள் முதலாயினாருக்கும் கூட்டிப் பொருள் கோடலுமாம்-

காதல் மற்று யாதும் இல்லை –
பிரயோஜனம் கண்ட போது உடன்படுமது ஒழிய வேறு வகையில் சிறிதும்
சிநேகம் உடையார் அல்லர் -என்னுதல்
காணாத போது மெய்யான அன்பு சிறிதும் இல்லை -என்னுதல்

மற்று -எனபது-காணாத போதைக் காட்டுமோ -எனின் கண்டதற்கு மறுதலை காணாத போது அன்றோ –
காதல் மற்று -அன்பும் அதற்கு மறுதலையான வெறுப்பும் இல்லை -என்னுதல்
அன்பும் அதுக்கடியான உறவும் இல்லை -என்னுதல் –

எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான் –
பிரளயம் தோன்றிய நிலையில் காப்பதற்கு சாதனமும் இல்லை-வேண்டுகோளும் இல்லை அன்றோ
பாது காப்பதற்கு தான் அறிந்த ஆபத்தும் சம்பந்தமும் அன்றோ வேண்டுவது-அப்போது விலக்குகைக்கு ஒரு சாதனம் இல்லையே

பிரான் –
உபகார சீலன் ஆனவன் –

தொண்டரோமாய் உய்யல் அல்லால் –இல்லை கண்டீர் துணையே–விதி முகத்தால் அன்றிக்கே-மறை முகத்தாலும் இவ் வர்த்தத்தை அறுதி இடுகிறார்-ஆபத்துக்கு வேறு ஒரு பற்றுக் கோடு உண்டாய் இருக்க-இவனைப் பற்றச் சொல்லுகிறேன் அல்லேன்-அவனைப் பற்றி ஸ்வரூபம் பெறுதல் இல்லை யாகில் இல்லையாம் இத்தனை –அந்வயத்தாலே சாதித்து வ்யதிரேகத்தாலே த்ருடீ கரிக்கிறார் –

————

துணையும் சார்வும் ஆகுவார் போல் சுற்றத்தவர் பிறரும்
அணைய வந்த வாக்கம் உண்டேல் அட்டைகள் போல் சுவைப்பர்
கணை யொன்றாலே யேழ் மராமும் எய்த எம் கார் முகிலை
புணை என்று உய்யப் போகல் அல்லால் இல்லை கண்டீர் பொருளே-9-1-2-

உபகாரகரைப் போலே இருந்து -தம் தம் காரியங்களையே-தலைக் கட்ட நினைக்கும் நம்பத் தகாதவர்களை ஒழிய-
காரணம் இல்லாமலே இயல்பாகவே நம்பிக்கையை விளைக்குமவனாய்-விஸ்வாச ஜனகனுமாய்-யுபகரிக்குமவனை-ஆபத்திற்கு துணைவன் ஆனவனைப் பற்றுமது அன்றிப் பயன் இல்லை –என்கிறார் –

துணையும் சார்வும் –துணையாகை யாவது –துக்கமும் சுகமும் நம் இருவருக்கும் ஒன்றே-சார்வு ஆகையாவது –
போக்கடி அற்ற நிலையில் தாங்களே புகலிடம் ஆதல் 

புணை என்று உய்யப் போகல் அல்லால் – இட வேண்டுவது ஒரு பச்சை இல்லை –ஒரு வார்த்தை மாத்ரம் அமையும் –
என் கார்யம் உனக்கே பொறுப்பு -என்ற ஒரு வார்த்தையே அவனுக்கு நேர வேண்டுவது –

இல்லை கண்டீர் பொருளே –புறம்பு ஒருவரைப் பற்றினால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்றது –
புறம்பே சிலரை பற்றுகையிலே துக்கப்பட சிலர் உண்டு அத்தனை-பயன் தரத் தக்கது ஓன்று இல்லை -என்றபடி –

—–

பொருள் கையுண்டாய்ச் செல்லக் காணில் போற்றி என்று ஏற்றி எழுவர்
இருள் கொள் துன்பத்தின்மை காணில் என்னே என்பாருமில்லை
மருள் கொள் செய்கை யசுரர் மங்க வடமதுரைப் பிறந்தார்க்கு
அருள் கொள் ஆளாய் யுய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரணே-9-1-3-

அவனை ஒழிந்தவர்கள்-பயன் உள்ள போது -பந்துக்களாய் கொண்டாடுவார்கள் –
ஆபத்து வந்த காலத்தில் ஏன் என்று கூடப் பார்க்க மாட்டார்கள் –ஆன பின்பு-அவாப்த சமஸ்த காமன் ஆகையாலே
சம்பந்தமோ இயல்பாகவே அமைந்ததே இருந்தது –காரணம் இல்லாமலே ஆபத்துக்கு துணைவனாய் இருக்கிற-ஸ்ரீ கிருஷ்ணனுடைய திருவருளுக்கு பாத்திரம் ஆகுங்கோள்–அவனை ஒழிய காப்பவர் வேறு இல்லை –என்கிறார் –தன் அருள் கொள்வாரை -உதாரர் -என்னும் அவன் அன்றோ அவன் –

அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்ட நாயகன் –இவன் இடம் -கை நீட்டி பெற்றால் அவனே வள்ளல் ஆகிறான்-கொடுக்கத் தொடங்கும் பொழுதே சாம்யா பத்தி அருளுகிறானே –

—————-

அரணம் ஆவர் அற்ற காலைக்கு என்று என்று அமைக்கப் பட்டார்
இரணம் கொண்டு தெப்பர் ஆவர் இன்றி இட்டாலும் அக்தே
வருணித்து என்னே வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
சரண் என்று உய்யப் போகல் அல்லால் இல்லை கண்டீர் சதிரே–9-1-4-

சிலரை ஆபத்துக்கு துணை ஆவார் என்று செல்வம் முதலியவற்றைக் கொடுத்து பல நாள் அடைந்தாலும்-
ஆபத்து வந்தவாறே கண்ணற்று பாராமுகம் செய்வார்கள்-
ஆதலால் ஒருவித காரணமும் இல்லாமல் வந்து அவதரித்து-ஆபத்துக்கு துணை ஆனவனே பற்றத் தக்கவன் -என்கிறார்-வடமதுரைப் பிறந்தவன் -நாம் ஆஸ்ரயியாது இருக்க நமக்கு உதவுகையே தன் பேறாக வந்து பிறந்தவன் –சௌசீல்யம் சௌலப்யம் முதலான கல்யாண குணங்களே நமக்கு புகலிடம் என்று பிழைத்து போகல் ஒழிய-இல்லை கண்டீர் சதிரே –

இல்லை கண்டீர் சதிரே –நெற்றி பெருத்து-பிரயாசை செய்து – பயன் ஒன்றும் இன்றிக்கே-இருக்கும் என்னுமது இளிம்பு அன்றோ-சதிராவது -அநாயாசேன பலம் பெறலாம் பிரவிருத்தி-அல்ப யத்னத்தாலே பஹு பலம் பெறுமது -சதிர் -பஹு யத்னத்தை பண்ணி பல வேளையில் ஒன்றும் இன்றிக்கே ஒழிகை -இளிம்பு —
நெற்றி சிறியதாய் பயன் கனக்கப் பெறுமது அன்றோ சதிராவது- இங்கு நெற்றி –நம -என்றல்-பயன் –சமன் கொள் வீடு -அன்றோ –

———

சதிரமென்று தம்மைத் தாமே சம்மதித் தின்மொழியார்
மதுர போகம் துற்றவரே வைகி மற்றொன்றுறுவர்
அதிர் கொள் செய்கை யசுரர் மங்க வட மதுரைப் பிறந்தார்க்கு
எதர் கொள் ஆளாய் யுய்யல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே–9-1-5-

இம் மட உலகர் கண்ட தோடு பட்ட அபாந்தவ அரஷக அபோக்ய அஸூக அனுபாய பிரதி சம்பத்தியைக் காட்டி-மற்று ஒன்று கண்ணன் அல்லால் என்கிற வைகல் வாழ்தலான சித்த உபாயம் -சூர்ணிகை –227-

தன்னைப் பெறா விடில் தரிக்க மாட்டாதபடி சிநேகத்தை உடையவர்களான-பெண்களாலே ஆபத்து வந்த காலத்திலே இகழப் படுவர்
ஆன பின்பு-ஒரே தன்மையான சிநேகத்தை உடைய இறைவனைப் பற்றுவது ஒழிய-சுகம் வேறு இல்லை -என்கிறார்

எதர் கொள் ஆளாய் யுய்யல் அல்லால் – எதிர்முகமாதலை உடைய அடியாராய் உய்யுமது ஒழிய-அவனுக்கு நான் செய்ய வேண்டுவது இது
அவன் தானே மேலே விழா நின்றால்-முகத்தை மாறா வைக்காது ஒழிகையே வேண்டுவது-உண்டவனுக்கு உண்ணப் போகாதே அன்றோ
அப்படியே இவன் முயற்சி மாத்ரத்திலே அவன் வயிறு நிறையும்-ஆன பின்பு இவன் செய்யுமவை அடைய அவனுக்கு மிகையாக இருக்கும் –

———

இல்லை கண்டீர் இன்பம் அந்தோ உள்ளது நினையாதே
தொல்லையார்கள் எத்தனைவர் தோன்றிக் கழிந்து ஒழிந்தார்
மல்லை மூதூர் வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
சொல்லி யுப்பப் போக வல்லால் மற்று ஓன்று இல்லை சுருக்கே–9-1-6-

எல்லை இல்லாத பேரின்பம் ஆகிற பேற்றினை உணராமல்-முன்புள்ளார் பலர் முடிந்து போனார்கள் –
ஆதலால் அப்படியே நீங்களும் அழிந்து போகாமல்-அடியார்கட்காக அவதரித்து பாதுகாக்கும் அவனையே பற்று-உய்யுங்கோள்-
அதனை ஒழிய ஆத்மாவுக்கு நன்மை இல்லை -என்கிறார்-
பிராப்தம் -நித்யம் -பேரின்பம் -சோபாதிகம்-உண்மை இது அன்றோ –

உள்ளது நினையாதே – உண்டான பேற்றினை நினையாமல் -என்றது
இன்ப மயமாய்-என்றும் உள்ளதாய்-இருப்பது பகவத் விஷயம் என்று நினையாமல் -என்றபடி –
அன்றிக்கே
உண்டான இல்லாமையை நினையாமல் -என்று மேலே கூட்டலுமாம் –இல்லாமை தானே உள்ளது உலகத்தில் -இது அன்றோ பிரத்யக்ஷம் –

மல்லை மூதூர் வடமதுரைப் – நிறைவை உடையதாய்-அவனுக்கு என்றும் ஒக்க கலவிருக்கையாய் போருகிற-சித்தாஸ்ரமமாய்
ஸ்ரீ வாமனன் எழுந்து அருளி இருந்தும்-முன்பே துருவன் தவம் செய்த மதுவனமாகவும்
ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் படை வீடு செய்தும்-ஸ்ரீ கிருஷ்ணன் வந்து அவதரித்ததும்-
இப்படி பகவானுடைய சம்பந்தம் மாறாதே போருகிற-தேசம் ஆதலால் -மல்லை-என்கிறார்
மல்லை -நிறைவு-பழையதாய் வருகிற ஊர் ஆதலின் -மூதூர் -என்கிறார் –
அயோத்யா மதுரா -ஆழ்வார் இங்கேயே இருக்கிறாய் போலே ஆழ்ந்து அனுபவிக்கிறார் –
அயோத்யா -மதுரா – மாயா -அவந்திகா (-உஜ்ஜைனி- ) காசி -காஞ்சி — -த்வாராகா –முக்தி தரும் ஏழு ஷேத்ரங்கள் –

———-

மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர் க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ
குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன் வடமதுரைப் பிறந்தான்
குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே–9-1-7-

பகவானைப் பற்றுதல் மிக மிக எளியது-இனிமை வாய்ந்தது-என்று அருளிச் செய்கிறார்

மற்று ஓன்று இல்லை – இதனோடு ஒக்க வேறு எண்ண லாவது இல்லை -என்னுதல்
அன்றிக்கே
இப்போது இதனை சொல்லி வேறு ஒரு போது வேறு ஒன்றைச் சொல்லுகிறான்-என்று இருக்க வேண்டா -என்னுதல்-
ஒரே மருந்து ஒரு வைத்தியர் -ஒரே ரகஸ்யம் – த்வய மந்த்ரம் -பிரதி பத்தி பட இத்துடன் எண்ண வேறு ஒன்றும் இல்லையே –

சிற்ற வேண்டா –வருந்த வேண்டா-சிற்றுதல் -சிதறுலதாய்-பரக்க வேண்டா -என்கை-வேறு ஒரு செய்கை வேண்டா -என்றபடி –

சிந்திப்பே அமையும் கண்டீர்கள்-வார்த்தைகள் வேண்டா-நினைப்பே அமையும்-கண்டீர் கோள் -என்றது
அவனைப் பற்றி பேசுதல் வணங்குதல் வேண்டா -என்பார்-சிந்திப்பே – எனப் பிரிநிலை ஏவகாரம் கொடுத்துப் பேசுகிறார்

எங்கள் பெற்றத் தாயன் வடமதுரைப் பிறந்தான் –வந்து பிறப்பதற்கு முன்பே-பெற்றத்து ஆயன் போலே காணும்
வந்து அவதரிப்பதாக நினைப்பட்டதில் புரை அற்று இருக்கிறபடி-
அடியார்கட்காக வடமதுரை பிறந்தானான பசு மேய்க்கும் ஆயன் -என்னுதல்
அடியார்கட்காக பசு மேய்க்கும் ஆயன் ஆவானாக வடமதுரை பிறந்தான் -என்னுதல் –

சர்வ உபாய -அதிகமத்வ-பிரதிபத்தி விஷயத்துவ –விச்வாஸ நீயமான– ஸூ லபத்வ -சர்வாதிகாரத்தவ
அநாயாஸத்வ -யுக்தி நிரபேஷ ரூபமாக -இருப்பது அன்றோ

வைகல் வாழ்தல் கண்டீர் குணமே –
கற்பது ஒரு காலாய்-ஒரு தடவையாய்-பின்பு வாழ்ச்சி நித்தியமாய்-இருக்கும் ஆயிற்று-இதுவே பிராப்தம் –
ஏவகாரத்தால் -இது ஒன்றுமே குணம்-இது ஒழிந்தன அடையத் தக்கன அல்ல -என்கிறார் –

———–

வாழ்தல் கண்டீர் குணம் இது அந்தோ மாயவன் அடி பரவி
போழ்து போக வுள்ள கிற்கும் புன்மை யிலாதவர்க்கு
வாழ் துணையா வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
வீழ் துணையாப் போமிதனில் யாதுமில்லை மிக்கதே–9-1-8-

அவதாரத்துக்கு காரணத்தை சொல்லி-பாது காப்பவனாக அவனையே பற்றுமது ஒழிய
வேறு சீரியதாய் உள்ள ஒரு பற்றுக் கோடு இல்லை-என்கிறார் –

மாயவன் அடி பரவி போழ்து போக வுள்ள கிற்கும் புன்மை யிலாதவர்க்கு-
அழகு சீலம் முதலியவைகளால் ஆச்சர்யப் படத் தக்கவனாய்-இருந்துள்ள இறைவனுடைய-குணங்களுக்கு தோற்றவர்களாய் –
ப்ரீதியாலே அவன் திருவடிகளை முறை இன்றிக்கே ஏத்தி-அதனாலே போது போக்குவதலைச் செய்வதாக-
அறுதி இட்டுள்ள நன்மையை உடையவர்கள் -சீரியர்கள் -என்றது –
வேறு பயன்களைக் கருதாத ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு -என்றபடி –
தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும்-போது போக்குமவர்கள் –நான் முகன் திருவந்தாதி -63-என்றவாறு –
இந்த மாயவன் அடி பரவுகையை சூது சதுரங்களை போன்று-காலத்தை கழிப்பதற்கு வழியாக
கொள்ளுகின்ற புன்மை இல்லாதவர்கள் -என்று-பட்டர் அருளிச் செய்வர் –போக ரூபமாக உள்ளுவர்கள் என்றபடி –

——

யாதும் இல்லை மிக்கதனில் என்று என்று அது கருதி
காது செய்வான் கூதை செய்து கடை முறை வாழ்க்கையும் போம்
மாதுகிலின் கொடிக் கொள் மாட வடமதுரைப் பிறந்த
தாதுசேர் தோள் கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரணே–9-1-9-

இவனை ஒழிய வேறு ஒன்றனை ரட்ஷகம் என்று பற்றினவர்கள்-பண்டு நின்ற நிலையும் கெட்டு அழிந்து போவார்கள் –
ஆனபின்பு -இவன் அல்லது சரண் இல்லை -என்கிறார்-
அன்றிக்கே
கைவல்யம் ஆகிற பேற்றினைச் சொல்லுகிறார் -என்னாலும் ஆம் –

மாதுகிலின் கொடிக் கொள் மாட வடமதுரைப் பிறந்த –
கம்சன் வாழ்கிறானாய் -அலங்காரமாக கட்டின கொடியை-கிருஷ்ணன் உடைய அவதாரத்துக்கு என்றே நினைத்து இருக்கிறார் ஆயிற்று இவர்
சிசுபாலன் திரு மணத்துக்கு உடலாக செய்த சடங்குகள் அடங்க தனக்கு-உடலாக செய்ததாக நினைத்து கைப் பிடித்தான் அன்றோ ஸ்ரீ கிருஷ்ணன் –

——-

கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து
மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்
திண்ண மா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்ம்மினோ
எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லையே–9-1-10-

சேஷத்வம் முதல் நிலை -அடுத்து அநந்யார்ஹத்வம் -நமஸ் உகாரார்த்தம்-சொல்லி -பாகவத சேஷத்வம் -மூன்றாவது நிலை –
சர்வவித பந்து நாராயணன் -என்பதை இதில் சொல்லி -பந்து கிருத்யம் கைங்கர்யம் -ஆய -அர்த்தம் –
8-8 பகவத் சேஷத்வம் யானும் தானாய் ஒழிந்தானே
8-9-அநந்யார்ஹத்வம் -குட்ட நாட்டுத் திருப்புலியூர் – மாயப்பிரானுக்கு வாழ்க்கை பட்டு
8-10- நெடுமாற்கு அடியார் -பாகவத சேஷத்வ பர்யந்தம் –
9-1-சோபாதிக பந்துக்களை விட்டு -அசாதாரண பந்து வடமதுரை பிறந்தவனே -நாராயண சப்தா ர்த்தம்
எண்ணிடையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான் தொடங்கி -ஆபத் சஹத்வம் -ஒன்பதாம் பத்து தாத்பர்யம் –
கணை ஒன்றினால் ஏழு மரங்கள் எய்தவன் –
வட மதுரை பிறந்தான் -8 தடவை சொல்லி -அஷ்டாக்ஷர மந்த்ரார்த்தம் சொல்லி –
9-2- கைங்கர்யம் அடுத்த பத்தில் -குடி குடி ஆட் செய்ய -ஆய -பிரார்த்தனையாயாம் சதுர்த்தி –
ஐம்பது பாசுரங்களால் ஐந்து அர்த்தங்களும் -திருமந்த்ரார்த்தம் சாதித்தார் –

தானே புகலிடம் -என்னும் உண்மையை-நிலை நிறுத்துவதற்காக அவதரித்த ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளைப் பற்றுமினோ –என்கிறார்

தானே உபாயம் உபேயம் நிலை நிறுத்த ஸ்தாபிக்க அவதரித்து -பூ பாரம் நீக்கி -இது வந்த இடத்தில் செய்த -தர்ம சமஸ்தானம் அர்த்தமாக –
நீங்கள் நினைத்து இருப்பதை திருத்தமாக அவன் இடம் சமர்ப்பியுங்கோள் -பலம் எதிர்பார்க்காமல் –கர்மம் செய்து -சர்வம் ஸ்ரீ கிருஷ்ணாப்பரணம் அஸ்து-
உபாய உபேய பாவம் நிலை நிறுத்தப் பட்டு நிற்க –
மண்ணின் பாரம் நீக்குதற்கே-வடமதுரைப் பிறந்தான்-தத்விரோதிகளை – பூ பாரத்தை நீக்கி -நாக பர்யங்கம் விட்டு -ஏஷ நாராயண ஸ்ரீ மான் -இத்யாதி

—————

ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே துணிந்து
தாது சேர் தோள் கண்ணனை குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீதிலாத ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும்
ஓத வல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே-9-1-11-

8-10 வாசனை மாறாமல் -பலன் -பாகவத உத்தமர்களுக்கு சேஷ பூதர்-இந்த திருவாயமொழி கற்றவர்களுக்கு சேஷ பூதர் தாம் என்கிறார் –

இவர்க்கு இப்படி இந்த துணிவைக் கடுத்தார் ஆர் -எனின்
வேறு ஒருவர் உளரோ –தாது சேர் தோள் கண்ணனை-அவனுடைய தோளும் தோள் மாலையும் அன்றோ

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -67-திரிகின்றது வட மாருதம் திங்கள் வெம் தீ –நங்கள் வரி வளை -8-2-

March 4, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

தலைவி பிரிவு ஆற்றாமை வருந்தும் நிலையைக் கண்டு இரங்கிப் பேசும் செவிலித்தாய் பாசுரம்-நங்கள் வரிவளை யாயங் காளோ. நம்முடை ஏதலர் முன்பு நாணி,
நுங்கட் கியானொன்று ரைக்கும் மாற்றம் நோக்குகின் றேனெங்கும் காண மாட்டேன்,
சங்கம் சரிந்தன சாயி ழந்தேன் தடமுலை பொன்னிற மாய்த்த ளர்ந்தேன்,
வெங்கண் பறவையின் பாக னெங்கோன் வேங்கட வாணணை வேண்டிச் சென்றே-8-2-1-வளையல் களைந்து போல்-சங்கம் சரிந்தன சாய் இழந்தேன் தடமுலை பொன்னிற மாய்த் தளர்ந்தேன்,
வேங்கட வாணனை வேண்டிச் சென்று-அதே போல் இங்கும் உள்ளதே-வட மாருதம் -வடக்கில் இருந்து வருவது-சரத்காலம் வடமாருதம் -ஐப்பசி கார்த்திகை-வடக்கு நோக்கி போகும் தென்றல் காற்று அதுக்கு முன் உள்ள ருது-தென் மேற்கு வட கிழக்கு காற்றுக்கள்-

அவதாரிகை –கலந்து பிரிந்து பிரிவாற்றாமை நோவு படுகிற தலை மகளைக் கண்டதிருத் தாயார்- பாதகங்களின் பெருமையையும் –இவள் ஆர்த்தவத்தையும் அனுசந்தித்து – என்னாய் விளையக் கடவதோ -என்கிறாள் –(மானஸ அனுபவம் கிடைத்து பாஹ்ய அனுபவம் கிட்டாமையால் தளர்ந்து )

இப்படி அனுபாவ்யமான ஆழ்வாருடைய ஞான வைலக்ஷண்யத்தை போக்தாக்கள் உகந்து யுரைத்த பாசுரத்தை தலைமகள் கண்ணழகு கண்டு தலைமகன் வியந்து யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு–அவதாரிகை–இப் பாட்டாலும் கண்ணழகு தன்னையே சொல்லுகிறான்
தலைமகன்-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-அவதாரிகை-இப்படி பகவானுடைய உக்த வித கடாக்ஷத்தாலே
தாம் இங்குள்ள இருப்பில் உயரப் பெற்றமையை அருளிச் செய்து நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின் கோயில் சீய்த்து –திருவாய் -9-2-1- என்று அருளிச் செய்த படியே
இவ் வாழ்வார் அவ்விருவராலும் ஒரு நினைவால் நீயதராய்mஇந்த திவ்ய பிரபந்த கரணத்தில்
அதிக்ருதரானது கொண்டு அவன் கடாக்ஷத்தைக் கடாஷித்தவராய் இங்கான வெந்நிலத்தில் உள்ள பங்கயத்தாள் பாரிப்பு என்னாத்ம ஸ்வரூபம் மட்டுல்ல என்று அவளுடைய இப்போதான் விசேஷ கடாக்ஷத்தில் தாமான தன்மையில் ஈடுபடுகிறார் இதில்

திரிகின்றது வடமாருதம் திங்கள் வெந்தீ முகத்து
சொரிகின்றது அதுவுமது ,கண்ணன் விண்ணூர் தொழவே
சரிகின்றது சங்கம் தண்ணம் துழாய்க்கு  வண்ணம் பயலை
விரிகின்றது முழு மெய்யும் என்னாம் கொல் என் மெல்லியற்கே
–47–பிரிவாற்றாது வருந்தும் தலைவி நிலை கண்டு செவிலி இரங்குதல் –

உலகுய்ய மால் நின்ற உயர் வேங்கடத்தே
அலர் மகளை முன்னிட்டு அவன் தன் -மலரடியே
வன் சரணாய்ச் சேர்ந்த மகிழ் மாறன் தாளிணையே
உன் சரணாய் நெஞ்சமே உள்
—60-ஆர்த்தி பாரவச்யத்தாலே கூப்பிடுகிற இவர்-பிராப்யாந்தரமான ஐஸ்வர்ய கைவல்யங்களை காற்கடைக் கொண்டு ஸ்ரீயபதிகளின் திருவடிகளிலே பண்ணும் அடிமையே பரம பிராப்யம் என்று அறுதி இட்டு அந்த பிராப்யத்தை பெறுகைக்காக-தேச காலாதி விப்ர க்ருஷ்டங்களான ஸ்தலங்களை விட்டு கானமும் வானரமும் வேடும் ஆனவருக்கு முகம் கொடுத்துக் கொண்டு சௌலப்ய சாம்ராஜ்யம் பண்ணுகிற ஸ்ரீ திரு வேங்கடமுடையான் திருவடிகளிலே
ச பிராது -இத்யாதிப் படியே ஸ்ரீ பிராட்டியை முன்னிட்டு சரண்ய குண பூர்த்தியையும்-சரண வரண உத்யுக்தரான தம் வெறுமையையும் அனுசந்தித்துக் கொண்டு பூர்ண பிரபத்தி பண்ணுகிற உலகமுண்ட பெருவாயனில் அர்த்தத்தை உலகு உய்ய மால் நின்ற -இத்யாதியாலே அருளிச் செய்கிறார்
–சரணாகதரான இவரும் மகிழ் மாலையினரானார் அது சேஷித்வ உத்தியோகம் இது சேஷத்வ உத்தியோகம் –அவர் பூம் துழாயன் அடியைச் சேர்ந்தால் போலே இவரும்-மகிழ் மாறன் தாளிணையே உன் சரணாய் நெஞ்சமே உள்-என்கிறார்–நெஞ்சே வகுளாபிராமமான திருவடிகளை உனக்கு உபாயமாக அத்யவசித்துப் போரு-என்கிறார்-

திரிகின்றது வட மாருதம் –வாடையானது -மத்தகஜம் ஆளை கணிசித்து உலாவுமா போலே உலாவா நின்றது –(சஞ்சரிக்கின்றது முதல் இரண்டு நிர்வாஹங்கள்-மாறாட்டம் -மூன்றாவது நிர்வாஹம் )
நாயகனுடைய தண்ணளி யற்ற சமயம் பார்த்து நலிவதாக திரியா நின்றது –
அன்றிக்கே –-வாடை யாவது குளிரக் கடவது இறே –அந்த சைத்தியத்தை மாறாடி சுடா நின்றது –திங்கள் இத்யாதி –இதனுடைய ஸ்வ பாவம் அந்யதாபவித்தவாறே –நாம் தான் பேசாது இருக்கிறது என் –
என்று சந்தரன் நெருப்பை முகந்து சொரியத் தொடங்கினான் –வெம் தீ-நெருப்பும் காற்றும் கூடிற்று காணும் –நெருப்பு சுடுமா  போல் அன்று இறே நீர் கொதித்தால்  சுடுவது –முகந்து சொரிகின்றது –
அங்கு குறைவற்று கிடக்கிறது – வாடையோபாதியும் சந்த்ரனோபாதியும் பிரிந்தார்க்கு
பாதகமாவன சில உண்டு இறே –ஒரு கடலோசை  -அன்றில் -தென்றல் -விடை மணி ஓசை குழல் இசை -குயில் -என்றாப் போலே – இவற்றிலே ஓன்று புத்திஸ்தமானத்தை-அதுவும் அது – அதினுடைய பாதகத்வத்தில் உறைப்பு -தன் வாயால் சொல்ல மாட்டாமையாலே அதுவும்  அப்படியே -என்கிறாள் –
(பேதை பாலகன் அதாகும் போல் )-அன்றிக்கே –-திரிகின்றது என்றது-(சஞ்சரிக்கின்றது என்ற பொருளில்-அதுவும் அது -அவ்வாடையும் சந்த்ரனோபாதி நெருப்பை முகந்து சொரியா நின்றது -என்கை —

கண்ணன் இத்யாதி –புறம்பே சிலர் பாதகராக நின்றார்கள் என்று சொல்ல வேணுமோ –
நங்கை-நம் கை – பட்டவை நலிகிறபடி கண்டால் -அவதரித்து ஸூலபனான இது தான்
காதா சித்கதம் ஆகையாலே -என்றும் ஒக்க ஓர்  இருப்பேயாய் காட்சி கொடுக்கிற
(கண்ணன் காதா சித்கதம் -விண்ணூர் என்றும் ஒக்க ஓர்  இருப்பேயாய் காட்சி கொடுக்கிற) கண்ணன் விண்ணூர் –ராகவஸ்ய நிவேசனே -ஸூந்தர காண்டம் – 33-7 –ஸ்ரீ ராமனுடைய அரண்மனையில் -என்னுமா போலே –(மானுஷன் லோகான் -ராகவஸ்ய வீட்டில் போல் இங்கும் கண்ணன் விண்ணூர் )-தண்ணம் துழாய் -இத்யாதி –அவையானால் கொண்டு இட்டவை இறே – ஸ்வாபாவிகமான நிறமும் வேறுபடா நின்றது –தண்ணம் துழாய் -இத்யாதி—பதி சம்மாநிதா –அயோத்யா காண்டம் –18-21 –
கணவரால் நல்ல செய்தி கூறப் பட்ட சீதை என்று- அவன் தோளின் மாலையை வாங்கி -இட்டுக் கொண்டு ஆடும்படி நினைத்து ஆயிற்று – உடம்பு வெளுக்கிறது –வண்ணம் இத்யாதி – ஸ்வாபாவிகமான நிறமானது பயலையாய்க் கொண்டு உடம்பு அடைய பரவா நின்றது –என்னாம் கொல் இத்யாதி –ஒரு வாடையும் வை வர்ணயமும் வேண்டாதபடி –ம்ருது ஸ்வபாவையாய் இருக்கிற இவளுக்கு –அதுக்கு மேலே இவையும் ஆனால் என்னாய் விளையக் கடவதோ –(க்ஷண விரஹ அஸஹிஷ்ணுத்வம் )

தலைவன் தன் ஆற்றாமைக்கு காரணம் சொல்லும் பாசுரம் – உத்தம லக்ஷணம் ஆகிற ரேகைகள் செம்மையால் செங்கழு நீரையும் -கரு நிறத்தால் நீலோத்பத மலரையும் கூர்மையாலும் வருத்துவதாலும் ஒளியால் வேலாயுதம் போன்றதும் -குளிர்ச்சியால் வடிவாலும் கயல் மீனையும்
மருட்சி முதலியவற்றால் மான் விழி போன்ற பல வற்றுக்கும் கூட ஒப்பு சொல்ல முடியாத திருக் கண்கள்
என்னை வென்று வருத்தி உயிர் நிலையில் நலிகின்றன-

காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று –சிவப்பாலே செங்கழு நீரையும் நைல்யத்தாலே நெய்தலையும் கூர்மையாலும் ஒளியாலும் வேலையும் குளிர்த்தியாலும் மிளிர்த்தியாலும் கயலையும்-மற்றும்-கண்ணுக்கு ஒப்பான வாள் அம்பு வடி மான் விழி முதலான பலவற்றையும் வென்று–அன்றியே
கீழ்ச் சொன்னவற்றைத் தனித்தனியே பலவற்றையும் வென்று என்னவுமாம்–ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு–நம்முடைய பிராணனின் ஸ்வரூபத்துக்குத் தக்கதல்ல இவற்றினுடைய கோலுதலின் பரப்பு–அசுரைச் செற்ற மாவியம்புள் வல்ல மாதவன்-விரோதி நிரசன ஸமர்த்தனாய்
பெரிய ஆச்சர்யத்தை யுடையவனான பெரிய திருவடியை நடத்த வல்லவனாய்–பொரு சிறைப் புள்ளுவந்து ஏறும் பூ மகளார் தனிக் கேள்வன் –திருவாய் -1-9-3- என்கிற படியே-இந்த கருட வாஹனத்வத்துக்குத் தகுதியான ஸ்ரீயபதித் வத்தை யுடையவன்--கோவிந்தன்-வெறும் பரத்வத்தால் வந்த மேன்மையோ-பசுக்களின் பின்ன போகலாம்பாடி பவ்யனானவன்–வேங்கடம் சேர் தூவியம் பேடை யன்னாள்–இந்த பரத்வ ஸுலப்யங்கள் இரண்டும் ப்ரகாசிப்பதான திருமலையில்
பொருந்தி வர்த்திக்கிற அழகிய சிறகுகளை யுடைய அன்னப் பேடை போலே இருக்கிற இவளுடைய-(ஸ்ரீ வைகுண்ட விரக்தாயா வேங்கடேசாயா ரமயா ராமமாணாயா ஸ்வாமி புஷ்காரணீ தடே
ஸ்லோகத்தில் -இவை அனைத்துமே உண்டே )கண்களாய துணை மலரே-கண் என்று பேராய் இருக்கிற
தன்னில் தான் சேர்ந்த இரண்டு கண்களானவை–இவற்றுக்கு -என்று-அத்யாஹரித்து-ஆவியின் தன்மை அளவுள்ள பாரிப்பு -என்று அந்வயம்

இத்தால்–காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு -என்கையாலே–ஆழ்வாருடைய ஞானமானது ராக ஹேதுவான ரஜஸ்ஸையும் கார்ஷ்ண்ய ரூபமான தமஸ்ஸையும் லகுவாய் ப்ரகாசகமான சத்வத்தையும் கடந்து(மிஸ்ர ஸத்வம் தாண்டி ஸூத்த ஸத்வம் வேண்டுமே-முக்குணம் தாண்டி நித்ய ஸத்வம் வேண்டுமே )-இப்படி குண த்ரய உத்தீர்ணம் ஆகையால்
ஜட ப்ரக்ருதியான பதார்த்தங்களில் சேர்த்தி அற்ற படி பஹு பிரகாரமான வ்யாவ்ருத்தியை யுடைத்தாய்க் கொண்டு நம்முடைய ஸ்வரூபத்தின் அளவன்று இதினுடைய பாரிப்பு என்றபடி-தூவியம் பேடை யன்னாள் -என்கையாலே-இவருடைய ஸூத்த ஸ்வபாவத்தையும்(வேல் வெளுப்பு மிஸ்ர ஸத்வம் )ஞான அனுஷ்டான ரூப பஷ த்வய அந்வயமும் பாரதந்தர்யமும் (பேடை) ஸூசிதமாயிற்று–அசுரைச் செற்ற மாவியம்புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர் தூவியம் பேடை -என்று-அலர் மேல் மங்கையைச் சொல்லி அவளோடே இவருடைய ரூபத்துக்கு ஒப்புச் சொல்லிற்று ஆகவுமாம்
(கடி மா மலர்ப்பாவையுடன் ஷாம்ய ஷட்கம் உண்டே )-கண்களாய துணை மலரே -என்றவிடம்
இவருக்கும் துணையாய்–ஆஸ்ரிதற்கும் துணையான விகாஸத்தை உடைத்து என்று தோற்றுகிறது

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு வியாக்யானம் –காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று-கண்ணுக்கு ஒப்பு தேடப் புக்கால்-விஷ்ணுநா சத்ருஸோ வீர்யே –ஸ்ரீ பாலா -1-18-என்கிறபடியே ஒரோ ஆகாரங்களாலே ஒப்பாகப் பலவற்றையும் பிடித்தால் எல்லாம் கூட ஒப்பாகவற்றோ-மாட்டாது என்னும்படி இறே இவை தான் இருப்பது–விஷ்ணுநா சத்ருஸோ வீர்யே-பரத்வமும் வீர்ய குணம் ஒன்றுக்கும் ஒப்பாம் அத்தனை–இப்படி சீலாதி குணங்கள் கண்டு அனுபவிக்கப் போகாதே இறே அங்கு-சிவப்பாலே செங்கழுநீரை வென்று கருமையாலே நெய்தலை வென்று ஓராளும் ஓர் நோக்குமாய் இருக்கும்படி இருக்கையாலே வேலை வென்று-மவ்க்யத்தாலே கயலை வென்று
மற்றும் ஒப்பாகச் சொல்லும் அவற்றை அடையப் புக்கவிடம் புக்கு வென்று–ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு–தன்னடையே அழியுமவற்றை வெல்லுகை வெற்றிக்கு உடலோ என்று அழியாத ஆத்ம வஸ்துவையும் அழிப்பதாகக் கோலா நின்றன–ஆவியின் தன்மை அளவுள்ள–இவ்வாத்ம வாஸ்துவின் அளவன்றியே இதனுடைய சத்தா ஹேதுவான பதார்த்தத்து அளவும் செல்வன போலே இரா நின்றன-இவளுடைய அவயவங்கள் அவனையும் கூட மயக்க வல்ல போலே காணும்–அசுரைச் செற்ற மா வியம்புள் வல்ல மாதவன்–அசுரர் வர்க்கத்தை யடைய அழியச் செய்து மஹானாய்
அவன் தன்னோ பாதியும் பெரியனாய் விஸ்மய நியாமான வியாபாரங்களை யுடையனாய் இருந்துள்ள பெரிய திருவடியைக் கருத்து அறிந்து நடத்த வல்லவன்-மாதவன் -கருட வாஹனனான ஏற்றத்துக்கு மேலே ஸ்ரீ லஷ்மீ பதியான ஏற்றத்தை யுடையவன்-கோவிந்தன் -அவளோட்டைக் கண் கலவியாலே ஆஸ்ரித ஸூலபனானவன்–வேங்கடம் சேர்-அந்த ஸுலப்யமும் மேன்மை என்னும்படி திருமலையிலே வந்து ஸூலபனானவன்–தூவியம் பேடை யன்னாள்-கோவிந்தனதான வேங்கடத்தைச் சேருமதாய்
புறம்பு ஓர் இடத்திலும் பொருந்தாததான தூவியம் பேடை யுண்டு அழகிய சிறகை யுடைய அன்னப்பேடை-அத்தோடு ஒத்து உள்ளவள்–அன்றிக்கே-தூவியம் பேடை -என்று பெரிய பிராட்டியாரைச் சொல்லிற்றாய் அவளோடே ஒத்து உள்ளவள் என்றுமாம்–கருட வாஹனன்–ஸ்ரீ லஷ்மீ பதி என்கிற இவை இப்போது சொல்லுகிறது என் என்னில் ஸுலப்யத்தைச் சொல்ல நினைத்து அது குணம் ஆகைக்கு அடியான பரத்வத்தைச் சொல்லி பின்பு அந்த ஸுலப்யத்தின் எல்லையில் வந்து ஆறுகை–கண்களாய துணை மலரே–கண் என்கிற வியபதேசத்தாலே ஒன்றுக்கு ஓன்று ஒப்பாய் இருப்பன இரண்டு பூக்களாயிற்று–கண்களாய துணை மலரின் பாரிப்பு காவியும் என்று தொடங்கி ஆவியின் அளவுள்ள பாரிப்பு என்று அந்வயம்இத்தால் திருமலையிலே வந்து நிற்கிறவனுடைய சீல குணத்திலே வித்தராய் இருக்கிற ஆழ்வார் படி போக்த்தாக்கள் அளவல்ல என்று ஸ்ரீ வைஷ்ணவர்கள் சொல்லுகிற பாசுரத்தை பார்ஸ்வஸ்த்தர் பாசுரத்தாலே அனுபவிக்கிறார் தாம்

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-வியாக்யானம்-காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
சிவப்பாலே செங்கழு நீரையும் கறுப்பாலே நெய்தலையும் தன் படியை ஸ்வ வசமாக்கிக் கொள்ளுமத்தால் வேலையும் ஒளியோடு கூடின ஆகார ஸுந்தரியத்தாலே கயலையும் மற்றும் கண்ணுக்கு ஒப்பாகச் சொல்லப்பட்ட அம்பு மான் விழி என்று பல பல வானவைகளையும் வென்ற கண் படைத்தவள்அசுரைச் செற்ற மாவியம்புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர் தூவியம் பேடை யன்னாள்-அதி விஸ் மய நீய விரோதி நிரசனமுள்ள ககேந்த்ரனை நடத்த வல்ல ஸ்ரீ லஷ்மீ வல்லபன் கிடீர் கோவிந்தனாய் வந்து அவதரித்தவனும் திருவேங்கடம் சேர்ந்தவனும் அவனுடையதாய் அமைந்த ஸர்வ ஸரீரியாய் தத் கத தத் ப்ரயுக்த தோஷ அஸ்பர் ஸித்வம் உள்ளது கொண்டு அவனுக்கு அழகியளான பேடை யானப்பட்டவளுடைய கண்களாய துணை மலரே–ஒன்றுக்கு ஒன்றே ஸுந்தர்ய சாத்ருஸ்யம் கொண்டதான திருக்கண் மலர்களே–என் ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு-என்னாத்மாவுக்கு யுள்ள ஸ்வ பாவ ஸித்த ஞான சக்த்யாதிகளின் மாட்டு இல்லாத பலவிதரண உத்ஸாஹம் உள்ளது–ஐஸ்வர்யம் அக்ஷர கதிம் –ஸ்ரீ குணரத்ன கோசம் -68- என்று அருளிச் செய்த
ஸுந்தர்யத்தின் மாட்டு அல்லவாய் இரா நின்றது என்னில் கடாக்ஷத்தால் அறியப்பட்ட ஸுந்தர்யம் என்றபடி –

ஸ்வாபதேசம் –-ஆழ்வார் ஞான விளக்கம் -ஆழ்வார் -துஷ்ட நிக்ரஹ சீலத்திலும்-கருடாவாஹன ரூபத்திலும் -உத்தம பிரமாண ப்ரதிபாத்யனுமாய் புருஷகார பூதையான பிராட்டிக்கு வசப்பட்டவனும் – ஆத்மாக்களை பரிபாலனம் செய்து அருளும் அவனது வாஸஸ் ஸ்தானம் திரு மலையில் ஆழ்வார் ஈடுபட்டமை –வேங்கடம் சேர்-இடை விடாமல் நினைந்து கொண்டே இருப்பவர் என்றவாறு
தூவியம் பேடை யன்னாள்-சுத்த ஸ்வ பாவமும் -அர்ச்சிராதி கதி கூட்டிச் செல்ல சாதனம் உடைமையும் பார தந்தர்யமும் சொன்ன படி-வேங்கடம் சேர்-தூவியம் பேடை-அலர் மேல் மங்கை தாயாருக்கு ஒப்பு உடையவள் என்றுமாம்-கண்களாய துணை மலரே-தமக்கும் தம் அடியார்க்கும் துணை யாகும் ஞான வகைகள் காவியை வென்றது என்றது ரஜஸ் குணங்களை அகற்றி என்றபடி-நீலத்தை வென்றது தமஸ் அகற்றி வேலை வென்றது என்றது சத்வ குணத்தை கடந்து – கயலை வென்றது முக்குணங்கள் ஜட பொருள்களை வென்று சஞ்சலத் தன்மை இல்லாமை என்றபடி-இப்படி பட்ட ஞான விசேஷம் எம்மை வென்றதில் அதிசயம் இல்லையேவியப்புள் என்றது -வியம்புள்-என்று மெலித்தது –

ஸ்வாபதேசம்–இத்தால் ஆழ்வாருடைய ப்ரக்ருதியா உண்டான மார்த்வத்தையும் ஆற்றாமையையும்
இவர் ஆசைப்பட்டது அந்தரங்க விருத்திகள் ஆகையால் அது பெறாமையால் வரும் ஆற்றாமை பாடாற்றலாம் அல்லது என்னும் இடத்தையும் கேட்டவர்கள்- இனி இவரைக் கிடைக்க மாட்டாதோ என்னும்படியான தம் தசையைப் பார்ஸ்வத்தவர்கள் பாசுரத்தால் தாம் அனுபவிக்கிறார் –

தாத்பர்யம்–பகவத் அலாபத்தால் தளர்ந்த தசையில் பாதகமான லௌகிக பதார்த்த தர்சனத்தாலே
நொந்த ஆழ்வார் தசையைக் கண்டு–பார்ஸ்வத்தார் திருத் தாயார் பாசுரமாக அருளிச் செய்கிறார்
நாயகன் பிரிந்த சமயம் பார்த்து வந்த மாந்த மாருதம் பூர்ண சந்திரன் போன்றவை இவளை மேலும் நலிய வெம்மை தணிக்கைக்குக் குளிர்ந்த திருத்துழாயில் அபி நிவேசத்தாலே இவள் அங்கே- பரமபதம் சென்று-நித்ய அனுபவம் பெற்று ஆனந்திக்க ஆசைப்பட்டு இருக்க இவற்றின் நலிவாலே இவள் காலம் என்னவாய் ஆகுமோ என்று வெறுத்துப் பேசும் பாசுரமாய்ச் செல்லுகிறது –

6-10-உலகம் உண்ட பெருவாயா! -ப்ரவேஸம்-

மேல் திருவாய்மொழியிலே, பிராப்பியத்தின் தன்மை இருக்கும்படி குறைவறச் சொன்னார்;
இத் திருவாய்மொழியில் பிராபகத்தின் தன்மை குறைவறச் சொல்லுகிறார்.
மேல் திருவாய்மொழியிலே உபாயத்தைப் பற்றிக் கூறுகின்ற வாக்கியங்கள் உண்டேயாகிலும், பிராப்யம் பிரதாநமாகக் கடவது;
இத் திருவாய்மொழியில் உபேயத்தைப் பற்றிக் கூறுகின்ற வாக்கியங்கள் உண்டேயாகிலும், பிராபகம் பிரதாநமாகக் கடவது.
மேல் திருவாய்மொழி திருமந்திரம் போலே. இந்தத் திருவாய்மொழி சரம ஸ்லோகம் போலே –
இரண்டும் ஒன்றிலே உண்டே? என்னில், அது சக்தி யோகத்தாலே வருமது அன்றோ;
வெவ்வேறு நிலைகளைப் பற்றி வரும் இரண்டும் இரண்டாயே இருக்கக் கடவன.

கோல திரு மா மகள் -தடம் தாமரைகட்கே -பிராப்ய வேஷம் –
பிராபக வேஷம் -அகலகில்லேன் –அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே
சரணாகதனுக்கு பிராப்ய பிராபகங்கள் அவனே -பக்தனுக்கு பக்தி உபாயம் –
காப்பானே -கீழில்–பிராபகத்வம் -இங்கு நால் தோள் அமுது -பிரபாயத்வம் -இரண்டிலும் இரண்டு உண்டே -பிரதானம் –
பிரதான குணங்கள் திவ்ய தேசம் காட்டி நாயனார் அருளிச் செய்தது போலே -வாத்சல்யம் திருவேங்கடத்தில் –

பிராப்ய பிரதானம் திரு மந்த்ரம் –பிராபக பிரதானம் சரம ஸ்லோகம் –
பாலே மருந்துமாகவும் விருந்தாகவும் -உபாயம் உபேயம் -தன்மை மாற்றாதே -பிரதானம் சொல்வது எங்கனே –
சக்தி யோகம் -பாலுக்கு மருந்தாகும் சக்தி உண்டு –மருந்து பால் ஆகாதே -அவன் எப்போதும் அனுபவிக்க தக்க பிராப்யம் தான்
வேற வழி இல்லாமல் அவனை உபாயம் -கரு முகை மாலையை சும்மாடு ஆக்குகிறோம்
நம்முடைய -வரண தசை –பிராப்தி தசை -இரண்டும் -அவஸ்தா பேதம் -ஒன்று முடிந்து அடுத்து ஒன்று வருமே –
அதனால் இரண்டும் இரண்டாகவே இருக்கக் கடவது -என்றவாறு

கீழே ஸங்க்ரஹ சங்கதி
இனி விஸ்தார சங்கதி அருளிச் செய்கிறார்

மிகப் பெரிய துன்பத்தோடே பரம பதத்திலே கேட்கும்படி கூப்பிடச் செய்தேயும் சர்வ ரக்ஷகனானவன் வந்து
முகம் காட்டாமையாலே மிகவும் தளர்ந்தவராய், திருமகள் கேள்வனாய் எல்லா விருப்பங்களும் நிறைந்தவனாய்
உபய விபூதிகளோடு கூடினவனாய் எல்லா நற்குணங்களையு முடையவனாய் –
ஸ்ரீ யபதி — அவாப்த ஸமஸ்த காமன்– உபய உக்தன் -ஸமஸ்த கல்யாண குணாத்மகன் –
“நினைவிற்கும் எட்டாத ஸ்வரூபத்தை யுடைய உலக நாதனான விஷ்ணுவானவர் பிராட்டியோடும்
பக்தர்கள் பாகவதர்களோடு கூட ஸ்ரீ வைகுண்டம் என்கிற சிறந்த உலகத்தில் எழுந்தருளியிருக்கிறார்”
‘வைகுண்டே து பரேலோகே ஸ்ரியா ஸார்த்தம் ஜகத்பதி:
ஆஸ்தே விஷ்ணு: அசிந்த்யாத்மா பக்தை: பாகவதை: ஸஹ”–லிங்க புராண ஸ்லோகம் -என்கிறபடியே,
நித்திய ஸூரிகட்குக் காட்சி கொடுத்துக் கொண்டு இருக்கக் கூடிய சர்வேஸ்வரன், பலரும் நம்மை இழக்க
நாம் நெடுங்கை நீட்டாக இருக்க ஒண்ணாது என்று பார்த்தருளி, இராமன் கிருஷ்ணன் முதலான அவதாரங்களைச் செய்து
அந்தக் காலத்திலே உள்ளவர்கட்குத் தன் குணங்களையும் செயல்களையும் காட்டி அநுபவிப்பித்தான்;

அக் காலத்திலும் பிற்பாடரான சம்சாரிகளுக்கும் இழக்க வேண்டாதபடி ருசி உண்டாக்குகிறவனாய்க் கொண்டு வந்து
திருமலையிலே நாய்ச்சியாருடனே கூட நின்றருளினான்;
அதிகாரி நியதி, கால நியதி, அங்க நியதி என்றாற்போலே சொல்லுகிற நிர்ப்பந்தங்கள் ஒன்றும் இன்றிக்கே
அடையலாம்படி அங்ஙனம் நிற்கிற சௌசீல்யத்தைக் கண்டு, திருவேங்கடமுடையான் திருவடிகளிலே,
பெரிய பிராட்டியார் முன்னிலையாகத் தம்முடைய வேறு கதி இல்லாமையை விண்ணப்பம் செய்து
சரணம் புக்குத் தம்முடைய-அத்யாவசாயத்தை – எண்ணத்தை அறிவிக்கிறார்.

மேலேயும், பல இடங்களிலே சரணாகதி செய்தார்; அந்த அந்த இடங்களிலே
‘தர்மி புக்க இடத்தே நிரூபக தர்மங்களும் புகக் கடவன’ என்கிற நியாயத்தாலே, லக்ஷ்மீ சம்பந்தம் சொன்னார்;
இங்கு அது தன்னையே வாய் விடுகிறார்.
மேலேயுள்ள சரணாகதிகள் திருமந்திரம் போலே; இது துவயம் போலே.
திருமந்திரத்திலும் லக்ஷ்மீ சம்பந்தத்துக்கு வாசகமான சொற்கள் உண்டாயிருக்கச் செய்தேயும், –
அகாரம் உகாரம் நார சப்தங்கள் ஸ்ரீ சம்பந்தம் சொல்லும் சப்தங்கள்
வெளிப்படையாகச் சொல்லிற்று துவயத்திலே அன்றோ; அது போலே இத் திருவாய்மொழி.

“தாவத் ஆர்த்தி:-“தாவத்ஆர்த்தி: ததாவாஞ்சா தாவந்மோஹ: ததா ஸுகம்
யாவந் நயாதி ஸரணம் த்வாம் அஸேஷாக நாஸநம்”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. பகவானைப் பார்த்துப் பிரமன் கூறியது

சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோர்ஜுந
ஆர்த்தோ ஜிஜ்ஞாஸு: அர்த்தார்த்தீ ஜ்ஞாநீச பரதர்ஷப”–என்ற ஸ்ரீகீதை இங்கு அநுசந்தேயம். 7 : 16.

1-‘இழந்தது பெற வேணும்’ என்னுமதுவும் அவ்வளவே.
2-ததாவாஞ்சா-அப்ராப்த விஷயத்தில் செய்யும் சாபலமும் அவ்வளவே.
3-தாவந்மோஹ: – சரீரத்தையும் ஆத்மாவையும் ஒன்றாக புத்தி பண்ணுகை என்னும் அதுவும் அவ்வளவே.
4-ததாஸுகம் – “ஏஷஹ்யேவாநந்தயாதி – இவனே யன்றோ ( ஜீவனுக்கு ) ஆனந்தத்தைக் கொடுக்கிறான்” என்கிறதற்கு
விரோதமாக வரும் சுகங்களும் அவ்வளவே.
யாவந்நயாதிஸரணம் த்வாம் அஸேஷாகநாஸனம் – செல்வம் ஆத்ம பிராப்தி பகவத் பிராப்தி விரோதி இவை எல்லாம்
உன்னைக் கிட்டுமளவே யன்றோ நிற்பது” என்கிறது.-சர்வ பல சாதகம் பிரபத்தி –
(இவை எல்லாம்-ஆர்த்தி – ஆசை -மோகம்- இதரவிஷய ஸூகங்கள்-இந்த நால்வருக்கும் )

அவனை ஆஸ்ரயிக்கும் அளவே -இழந்தது பெறுவதும் –
ஆர்த்தன்-வாஞ்சா -ஐஸ்வர்ய காமன் ஆசை -அர்த்தாத்தி -அபிராப்தி விஷய சாபல்யம் —
மோஹம்-அஜ்ஞ்ஞானம் -ததா சுகம் இஹ லோக சுகம் -விரோதிகள் -தொலைந்து -அபேக்ஷிதங்கள் பெறுவர் –
அனைத்துக்கும் தம் இடம் வரச் சொல்லி -திட்டம் -அழகு குணம் பார்த்து என்றாவது ஒரு நாள் வைராக்யம் பெற்று
பகவல் லாபார்த்தி ஆவார்கள் -கதி த்ரயத்வ மூலத்வாத்

இப்படியே தம்முடைய எல்லா விரோதிகளும் போய்த் தம்முடைய எல்லா அபேக்ஷிதங்களும் கிடைக்கைக்கு ஒரு குறை இல்லை என்று,
எப்பொழுதும் அண்மையில் இருக்கிற திருவேங்கடமுடையான் திருவடிகளிலே சரணம் புகுகிறார்.

இனித் தான், சரணாகதி பலத்தைக் கொடுப்பதாகுமிடத்தில், சரண்யன் பக்கலிலே செய்யவும் வேணும்;
தான் அதிகாரியாகவும் வேணும்.
நற் குணங்கள் இல்லாதவர்களிடத்திலே செய்யுமிடத்தில் அது தானே கொல்லுதலுக்குக் காரணமாகக் காணா நின்றோம் அன்றோ.
இங்ஙனே இருக்கச் செய்தேயும் அந்த அந்த இடங்களிலும் பலிக்கிற இது, இவ் விஷயத்தில் பலிக்கின்றது என்னுமிடம்
கிம்புநர் நியாயத்தாலே சித்திப்பதாம்.

இனி, அதிகாரியாமிடத்தில், மெய்யே வேறு கதி அற்றவனாகவும் இருக்க வேணும்;
சரணம் புகா, பலித்தது இல்லை என்னா,அஸமர்த்தம் விஜாநாதி-என்பார் ஆகாது-
“இந்தக் கடல் பொறுமையோடு கூடிய என்னைச் சக்தி இல்லாதவனாக அன்றோ நினைக்கிறது” என்பார் ஆகாது
“க்ஷமயா ஹி ஸமாயுக்தம் மாமயம் மகராலய:
அஸமர்த்தம் விஜாநாதி திக்க்ஷமாம் ஈத்ருஸேஜநே”-என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 20.
(மகராலய:-மீன் குட்டை -அஸமர்த்தம் விஜாநாதி-சாமர்த்தியம் இல்லை என்று எண்ணின் கடலை இப்படி சொல்லி )

சரண்யன் ஸ்வரூபம் -உலகம் உண்ட பெருவாயா -குணாதிகன்-இடம் பண்ண வேண்டும் –
அதிகாரி ஸ்வரூபம் –குல தொல் அடியேன் –கார்யகரத்துக்கு இரண்டும் இங்கே உண்டே
குண ஹானி இடம் பண்ணி அனர்த்த ஹேது -சமுத்திர ராஜன் -பெருமாள் -பலராமன் -சக்கரவர்த்தி -இடம் பார்த்தோமே
சிபி புறா –கபோதம் -வேடன் -பலிக்க கண்டோமே -என்னில் -கிம் புனர் நியாய சித்தம் –

“மயர்வற மதிநலம் அருளினன்” என்னா,உடனே மடல் எடுத்துக் கொண்டு புறப்படுவார் வேணும்.
(எப்படியாவது கார்யம் செய்விக்கத் தேடுவார்களே -அச்சம் கொடுத்து ஆகிலும் காரியமே மடல் எடுப்பது )
செய்த சரணாகதிக்குப் பலம் தாழ்த்தது என்னா, வேறே போக்கடி யுடையார்க்குக் கார்ய கரம் ஆகாதே அன்றோ.
பெருமாள் போல்வார் இடம் இல்லாமல் ஆழ்வார் போல்வார் இடமே சரணாகதிக்கு பலம் கிட்டும் -என்றபடி
வேறே இடம் போகாமல் அவன் இடமே கார்யம் நிர்பந்தித்தாகிலும் அச்சம் கொடுத்தாவது கார்யம் கொள்வார் வேணும் –
ஸூ பிரவ்ருத்தியில் ஈடு படாமல் பர ப்ரவ்ருத்தி எதிர்பார்த்து -நான் பண்ண மாட்டேன் -உன்னை பண்ண வைப்பேன் என்றாரே

“சமுத்திரத்தை வற்றும்படி செய்யப் போகிறேன்; வானர வீரர்கள் கால்களால் நடந்து செல்லட்டும்”
“சாபம்ஆநய ஸௌமித்ரே ஸராந்ச ஆஸீவிஷ உபமாந்
ஸாகரம் ஸோஷ யிஷ்யாமி பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 22.
என்று அவன் தாழ்த்ததுவே காரணமாக, சமூத்திர ராஜனை அழித்துப் பொகட்டு,
மற்றை நான்கு பொருள்களையும் கொண்டு காரியம் கொள்ளுகிறேன் என்றாரே அன்றோ.-
பஞ்ச பூதங்களில் ஒன்று போனால் என்ன நான்கையும் வைத்து காரியம் கொள்ளுகிறேன்

“க்ஷமயாஹி ஸமாயுக்தம் – ‘ஒரு பெண் பெண்டாட்டி எனக்கு என்றதனை நாம் விரும்புவது என்?’ என்று
இராஜ்யத்தைப் பொகட்டுப் பொறுத்துப் போந்தார்;
இங்கே வருணனை வழி வேண்டி அவன் முகங்காட்டிற்றிலன் என்னா, சீறிக் காலைக் கையைக் கட்டா நின்றார்;
வருண தேவன் கால் கை பிடிப்பது –வில் -வில் காலைப் பிடிக்கை -கை விரல் சரம் பிடிக்கை –
இது இருந்தபடி என்?” என்றாற்போலே இருந்தார்கள் வானர முதலிகள்.‘இவன் வந்திலன்’ என்று நாம் சீற ஒண்ணாதபடி,
வாலி புறப்படுகிறபோது தாரை வந்து காற்காட்டினத்தைப் போன்று, பொறை வந்து நம்மைக் காற்கட்டா நின்றது என்றார். –

கைகேயி அசமர்த்தனாக நினைக்க வில்லை –சமர்த்தன் சொன்னாலே சரணாகதன் லக்ஷணம் போகுமே –
அபலை ஆகையால் ராஜ்யம் விரும்பினாள் ஆகையால் க்ஷமை பண்ணி வந்தோம் –
க்ஷமை கால் காட்டியதால் மூன்று நாள் பொறுத்து இருந்தார் பெருமாள் -முதலில் சமர்த்தன் என்று நினைக்க வில்லை
அப்புறம் தான் தெரிந்தது அசமர்த்தன் என்று எண்ணி இருப்பதை அறிந்து க்ஷமையுடைய கால் கட்டை அவிழ்த்து விட்டார் –

மாம் என்கிற நாம் தாஸன் சொன்னதும் சரணாகதி பலிக்கும் –
பெருமாள் தாஸன் சொல்லி பின்பு மாம் சொல்லியதும் பலிக்க வில்லையே

“மாம் – ‘தூங்கினவன் மதங்கொண்டவன் கோபித்தவன் இவர்களுக்கு இயற்கை உணர்வு வெளிப்படும்’ என்கிறபடியே,
கோபம் விளைந்த பின்னர் ஜந்மத்தை உணர்ந்தார்.
‘பிறர் கை பார்த்திருக்கும் குடிப்பிறப்பு அன்று’ என்று இருக்கிறது இல்லை;- ‘நம்மை ஐயர் மகன்’ என்று அறிகிறது இல்லை.
அயம் – மஹோததி என்னும் பெருமையை நினைத்திரா நின்றது; தன்னைச் சிறாங்கித்திருக்கிற நம்மை அறிகிறது இல்லை.
மகராலய :- ஓர் அயோத்யாதிபதி, கோசலாதிபதிகளோடு ஒக்கக் காணும் தன்னை நினைத்திருக்கிறது;
தன்னை மீன் படு குட்டமாக அறிகிறது இல்லை.
அஸமர்த்தம் விஜாநாதி – செவ்வை கெடப் பரிமாறினாரையும் ஒக்கவிட்டுக் காரியம் கொள்ள வல்லோம் என்று அறிகிறது இல்லை.
இவ்வளவில் செய்ய அடுப்பது என்? என்னில்,
திக்க்ஷமாம் – இப்போது பொறையை வேண்டோம்.
விநியோகமுள்ள இடத்தே அன்றோ காரியம் கொள்ளுவது?
கோபத்தைப் போன்று, காரிய காலத்தே அழைத்துக் காரியம் கொள்ளப் பார்த்தோம்.
அது என்? இக்ஷ்வாகு குலத்தினராயிருப்பார்க்குப் பொறை கொண்டு காரியம் கொள்ள வேண்டாவோ?
என்னில், ஈத்ருஸே ஜநே – அதனால் பெற்றது என்? அது இங்கு ஜீவிக்கிறது இல்லை.
இதுக்கு இங்குள்ளாருடைய சம்பந்தமே பலியா நின்றதே. -கரைக்கு அந்தப் பக்கம் உள்ள இராவணன் படி –

ஒன்பது பாசுரங்களாலும் சரண்யன்படி சொல்லி, பத்தாம் பாசுரத்தில் சரணம் புகுகிறார்.

அப்பால் முதலாய் நின்ற அளப்பரிய ஆராவமுதே -அரங்கமேய அந்தணன் –
ஸ்வாமி புஷ்கரணி தடே -மந்தி பாய் –வானவர்கள் சந்தி செய்ய நின்றான் –அரங்கத்து அரவிந் அணையான்
விண்ணவர் கோன்-விரையார் பொழில் வேங்கடவன் -நீள் மதிள் அரங்கத்து அம்மான் –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் -ஷீரார்ணவ நிகேதன் நாக பர்யந்தம் உத்ஸ்ருஜ்ய ஆகாதோ மதுராம் புரிம்
திருப்பேர் நகரான் திரு மால் இரும் சோலை பொருப்பே உறைகின்ற பிரான்
இன்று வந்து இருப்பேன் என்று என் நெஞ்சு நிறைய புகுந்தான்
அயோத்தியை சித்ர கூடம் ஜடாயு இடம் இருக்க -இப்படி மூன்று ஸ்தானங்கள்
இரட்டைக் குழந்தை தாய் -விண்ணோர் மண்ணோர்-அனுபவிக்க திருமலை
ரிக்வேதம் -பத்து புராணங்கள் பேசும் -ரிஷபாசசலம்-
வ்ருஷபாத்ரி அஞ்சனாத்ரி -சேஷாசலம் வேங்கடாசலம் -நான்கு யுகங்களாக காத்து இருந்த திருமலை
வேங்கடேச சம ஸ்தானம் நாஸ்தி கிஞ்சித் – ந பூதோ ந பவிஷ்யதி -வேங்கடேச இதிஹாச மாலை அனந்தாழ்வான் பணித்தது –
கரவீர புரம்-ப்ரஹ்மா பசு ருத்ரன் கன்று –
வேங்கடேசன்-மாட்டை அடித்ததால் சபிக்க -பிசாசாக -அடுத்த பிறவி ஆகாச ராஜன் -மகள் பத்மாவதி -தம்பி தொண்டைமான் சக்கரவர்த்தி
வேகவதி தானே பத்மாவதி தேவி -நாராயண புரம் -ஆகாச ராஜன் பிரார்தித்த படி -புரட்டாசி ஸ்ரவணம்-ஏகாந்தமாக சேவை –
கல்லும் கனை கடலும் -விண் மேல் இருப்பாய் மலர் சேர்ப்பாய் –திருச் சுகவனூர் -திருச்சானூர் மருவி -சுகாச்சார்யார்
ஓன்று அத்விதீயம் இரண்டு வாக்கியம் மூன்று கண்டங்கள்-
நான்கு புருஷார்த்தங்கள் -அர்த்த பஞ்சகம் -ஆறு பாதங்கள் -ஏழு சமுத்திரம் போலே –
அஷ்டாஷர விவரணம்- நவ ரசம் சாந்தி கொடுக்கும் த்வயம் –
பாட்டுத் தோறும் திருவடி பிரஸ்தாபம் பதிகத்தில் –
கைங்கர்ய பிரார்த்தனை ஒழி வில் காலம் எல்லாம்
இதில் சரணாகதி
த்வயம் இரண்டு வாக்யத்துக்கும் இவை இரண்டும் –
குரு பரம்பரா பூர்வகமாக த்வயம் ஸதா அனுசந்தேயம் –சந்ததஸ் ஸ்புரிதா சதம் -நம் பூர்வர்களுக்கு

பத்தாம் திருவாய் மொழியில் -கீழ் -தமக்குப் பிறந்த ப்ராவண்ய அதிசயத்தாலே புருஷார்த்த வைலக்ஷண்ய நிபந்தமான ஆர்த்தி
பிறந்து கூப்பிட்டவர் -பல சித்திக்கு சரணையானவன் திருவடிகளை ஒழிய உபாயம் இல்லை -என்று அறுதி இட்டு
சரண்யத்வ பிரகாசகமான அகில ஜகத் ரக்ஷண ஆகாரத்தையும்
அசேஷ விரோதி நிவர்த்தனத்தில் அத்யுஜ்ஜ்வல பரிகர யோகத்தையும்
ரூப குண சாரஸ்யத்தால் யுண்டான ஊத்துங்க அநு பாவ்யதையையும்
ஜகத் விரோதிகளுக்கு தீங்கு விலைக்கும் ஸ்ரீ மத்தையையும்
ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமான அ நாயாச வியாபாரத்தையும்
அதிசயித ஞானர்க்கும் ஆராத்யனாம்படியையும்
சர்வ சாதாரண சாரஸ்ய அதிசயத்தையும்
சர்வ ரோதரான ஈஸ்வர அபிமானிகளுக்கும் சதா ஆஸ்ரயணீயனாம் படியையும்
அதிசயித போக்யமான அவயவ சோபையையும்
ஆஸ்ரயணீயத்வ ஆகாரத்தையும்
அனுசந்தித்து -இப்படி சரண்யனான திருவேங்கடமுடையான் விஷயமாக
ச க்ரம சமக்ர சரணாகதியைப் பண்ணித் தலைக் கட்டுகிறார்-

உலகம் உண்ட பெருவாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே!
நிலவும் சுடர்சூழ் ஒளி மூர்த்தி! நெடியாய்! அடியேன் ஆருயிரே!
திலதம் உலகுக் காய்நின்ற திருவேங் கடத்தெம் பெருமானே!
குல தொல் அடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே
.–6-10-1-

1-பிரளய ஆபத்தில் -விரஹ ஆபத்து -லோகமாக -ஒருவனை -ஆர்த்தி அறியாதார் -ஆர்த்தி அறிந்த என்னை ரஷிக்கலாகாதோ
2-அர்த்தித்தவம் இல்லா உலகம் -ஆசைப் பட்டாரை-ரஷிக்கலாகாதோ -அர்த்தித்தவம் ஆசா கார்யம்
3-வயிற்றில் வைத்து -வடிவு காட்டி ரஷிக்கலாகாதோ
4-அபி நிவேசத்தால் ரக்ஷித்தாய்- நான் அபி நிவேசித்தால் ரஷிக்கலாகாதோ
5-வாயாலேயே ரக்ஷிக்க வேண்டுமோ -வார்த்தையால் ரஷிக்கலாகாதோ
6-அபரியந்த குணங்களை அழிய மாறியோ ரஷிக்க வேண்டும் -அவற்றை அனுபவிப்பித்து ரஷிக்கலாகாதோ
7-உறவு அறியா லோகம் -உறவு அறிந்த என்னை -ரஷிக்கலாகாதோ
8-வடிவில் வாசி அறியாத உலகம் -அறிந்த என்னை ரஷிக்கலாகாதோ -பெருமை உணராத லோகம்
9-வியதி ரேகத்தால் தரிக்கும் லோகம் -வாழ மாட்டேன் என்று இருக்கும் என்னை ரஷிக்கலாகாதோ
10–ஸுலப்ய ஞானம் இல்லா லோகம் -அன்ய சேஷம் -அன்ய கதி ரஷிக்கலாகாதோ -பிரயோஜனாந்தர பரர்களை ரக்ஷித்தாயே
11-பிரிய நினைப்பார் -எழுவார் -வைகல் தொழுவார் வழுவா வகை நினைந்து -கூட இருப்பாரை ரஷிக்கலாகாதோ
12–மகா வியாபாரம் செய்து ரஷிக்க -மாஸூச சொல்லி ரஷிக்கலாகாதோ
13-ஏக பிரளயம் -பஹு நாம் அனுக்ரகம் நியாயம் -என் பிரளயம் மோசம் –
14-அசேதனம் -உலகம் -உண்டது முக்கியமா உலகத்தாரை ரக்ஷித்தார்-அசேதனம் போலே அன்றோ கிடந்தார்கள்

ஒரு விபூதிக்காக ஆபத்து வரிலோ நோக்கலாவது! விபூதிக்காக உண்டான ஆபத்து என் ஒருவனுக்கும் உண்டானால் நோக்கலாகாதோ?
பிரளயார்ணவத்திலே அழுந்துவாரையோ நோக்கலாவது! சம்சார அர்ணவத்தில் அழுந்துவாரை நோக்கலாகாதோ?
அபேக்ஷிக்காதவர்களையோ நோக்கலாவது! அபேக்ஷித்தார்க்கு உதவலாகாதோ?
( உலகத்தார் உலகம் போல் அசேதனமாக இருந்தார்களே )
சரீரத்துக்கு வரும் ஆபத்தையோ நோக்கலாவது! ஆத்மாவுக்கு வரும் ஆபத்தை நோக்கலாகாதோ?
ஜலப் பிரளயத்தில் அகப்படிலோ நோக்கலாவது! விரஹ பிரளயத்தில் அகப்பட்டாரை நோக்கலாகாதோ?
பிறரால் வரும் ஆபத்தையோ நோக்கலாவது! உன்னால் வரும் ஆபத்தை நோக்கலாகாதோ?
‘சரணம் புகாதாரை ரக்ஷிக்க வேண்டும் என்கிற நியதி உண்டோ! சரணம் புக்காரை ரக்ஷிக்கலாகாதோ?

பெரு வாயா – பாதுகாக்கப்படுகின்ற பொருள்களின் அளவு அல்லாத ரக்ஷகனுடைய பாரிப்பு இருக்கிறபடி. என்றது,-அவற்றின் பக்கல் உண்டான ரக்ஷணத்தில் பாரிப்போபாதியும் போரும், தம் பக்கல் உபேக்ஷை என்றிருக்கிறர் என்றபடி.-உலப்பு இல் கீர்த்தி அம்மானே – இவனுக்குக் காக்குந் தன்மை வந்தேறியாய்ப் போய், பழையது கொண்டு வளைப்பிடுகிறேன் அல்லேன்;-இப்படி உலகத்தைக் காப்பாற்றி ஆர்ஜித்த -ஈட்டிய புகழுக்கு முடிவில்லை என்கிறது.-பொழில் ஏழும் காவல் பூண்ட புகழே அன்றோ. திருநெடுந்தாண்டகம்,-இப் படிகளால் வந்த குணங்களுடைமையால் வந்த பிரசித்தியை யுடைய சர்வேஸ்வரனே!-ஸ்வரூபம் ஒழிய குணங்களுக்கு அன்றோ இவர் தோற்றது-நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி – பாதுகாப்பவன் அன்றிக்கே கொலைஞன் ஆனாலும் விட ஒண்ணாத வடிவழகு இருக்கிறபடி-த்த சுத்துவமயமாய் நிரவதிக தேஜோ ரூபமாய்,
நெய் திணுங்கினாற்போலே உள்ளும் புறம்பும் ஒக்க ஒளியேயாய் இருக்கையைத் தெரிவித்தபடி.-நெடியாய் –மேலே கூறிய குணங்களுக்கு எல்லை உண்டானாலும், சௌந்தரியம் லாவண்யம் முதலானவற்றிற்கு எல்லை காண ஒண்ணாதபடி யாயிருக்கை.-நெடியாய்-“குணானாம் ஆகரோ மஹாந்” என்கிறபடியே, தொட்ட தொட்ட துறைதோறும் தரை காண ஒண்ணாதிருக்கிறபடி.-அடியேன் ஆருயிரே–-வடிவழகையும் குணங்களையும் காட்டி, என்னை, உன்னை விட்டுப் பிரியின் ஜீவியாதபடி செய்தவனே!-“திருவேங்கடத்து எம்பெருமானே” என்றதனோடு ஒக்க-இதனைக் -அடியேன் ஆருயிரே-கூட்டக் கடவது.

இவ்வளவும் வர, அவனுடைய ஸ்வரூபம் சொன்னார்; இனி, தம் ஸ்வரூபம் சொல்லுகிறார்:-குல தொல் அடியேன் – குலமாகப் பழையதான அடியேன்.-எந்தை தந்தை –முன்பே அருளி –
இதனால் தமக்கு ஓர் உயர்வு சொல்லுகிறார் அல்லர்;-தம்முடைய அநந்யகதித்வம் சொல்லுகிறார் –உன பாதம் கூடுமாறு கூறாய் –-ஸ்வரூபம் இதுவான பின்பு, ஸ்வரூபத்திற்குத் தக்கதான பேற்றினைப் பெறும்படி செய்தருளாய்.-அடியவன் உன்னைக் கூட என்னுமது ‘உன பாதம் கூட’ என்பதே அன்றோ.-இவருடைய சாயுஜ்யம் இருக்கிறபடி.
பெறுமாறு சொல்லாமல் கூடுவதை -சா யுஜ்யம் -யுஜ் -தாது -சேர்ந்து குண அனுபவம் –-கூறாய் –-உனக்கு ஒரு சொல்;-எனக்கு ஸ்வரூப லாபம் கண்டாய்.-அவன் ஒரு வார்த்தை அருளிச் செய்ய, தளப்பம்-அலைச்சல் – தீரும் அன்றோ-இவர்க்கு. “மாஸூச: – துக்கப்படாதே” என்ன வேணும்.-

—————–

கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல்லசுரர் குலமெல்லாம்
சீறா எரியும் திருநேமி வலவா! தெய்வக் கோமானே!
சேறார் சுனைத்தா மரை செந்தீ மலரும் திருவேங் கடத்தானே!
ஆறா அன்பில் அடியேன்உன்னடி சேர் வண்ணம் அருளாயே
.–6-10-2-

அவன் அருள் மறுத்த போதும் இங்குத்தை அருள் மாறாதே அன்றோ இருப்பது.
ஆகையாலே, அவன் திருவருளைப் பெற்றவர்கள் திருவாழியில் கூர்மையை அன்றோ
தங்களுக்குத் தஞ்சமாக நினைத்திருப்பது.-அநுகூலரோடு பிரதிகூலரோடு வாசி அற இவன் வளைவில் அகப்படாதார் இல்லை.-திரு நேமி -அழகு அனுகூலர்களுக்காக -கூர்மை பிரதி கூலர்களுக்கு-திரு நேமி வலவா –-நீ வலவருகே திருவாழியைத் தரித்திருக்க, நான் துக்கத்தைத் தரித்திருப்பதே!-தெய்வக் கோமானே –அயர்வறும் அமர்கள் அதிபதி கண்டீர்.
அங்குக் கையும் திருவாழியுமான அழகை அநுபவிப்பாரே அன்றோ உள்ளது;
இரு துண்டமாக விடுவதற்கு ஆள் உள்ளது இங்கே அன்றோ.-இரண்டு விபூதியையும் ஆளுவது திருவாழியாலே.-அழகாலே அங்குள்ளாரை ஆளும்; கூர்மையாலே இங்குள்ளாரை ஆளும்.-அங்குக் கூர்மை குமர் இருக்கும்; இங்கு அழகு குமர் இருக்கும்.
அங்குள்ளார்க்குக் கை மேலே ஜீவனமாயிருக்கும்;-இங்குள்ளார்க்கு விரோதியைப் போக்கிப் பின்னையாயிற்று ஜீவனம் இடுவது. அங்குள்ளார் அவன் கையே பார்த்திருக்கையாலே;இவர்களுக்கு அது இல்லையே.-ஸூய பிரயத்தனம் இங்கு –

சேறு ஆர் சுனைத் தாமரை செந்தீ மலரும் திருவேங்கடத்தானே –-சேறுகள் ஆர்ந்துள்ள சுனைகளிலே தாமரைகளானவை செந்தீப் போலே மலரா நிற்கும்.
எண்ணெயாலே எரியும் விளக்கு ஒழிய, நீராலே எரியும் விளக்குக் கண்டு அநுபவிக்கக் காணும் இவர் ஆசைப்படுகிறது;-நீரிலே நெருப்பு எழுந்தாற்போலே காணும் இருக்கிறது.

ஆறா அன்பில் அடியேன் –-இவர்க்கு நிரூபகம் இருக்கிறபடி.-சுனைகளில் நீர்வற்றில் ஆயிற்று இவருடைய அன்பு வற்றுவது.-மயர்வற மதி நலம் அருள அது அடியாக வந்த அன்பு அன்றோ. ஊற்றுடைத்தே.-கிரமப் பிராப்தி பற்றாதபடியான பிரேமம் அன்றோ.-உன் அடி சேர் வண்ணம் அருளாயே – உன் திருவடிகளிலே சேர்ந்து அடிமை செய்யும்படி என் பக்கலிலே கிருபை பண்ணி அருள வேணும்.-நீ திருமலையிலே நிற்கிற நிலைக்குப் பிரயோஜனம் பெறப் பாராய்! என் அன்புக்கு இரை இடப் பாராய்-நீ வந்து திரு மலையிலே அவசர பிரதீஷனாய் இருக்க -உன்னைப் பெற வேணும் என்னும் ருசி எனக்கு உண்டாய் இருக்க நான் கூப்பிடுகை மிகை அன்றோ –

———–

வண்ண மருள் கொள் அணி மேக வண்ணா! மாய அம்மானே!
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே! இமையோர் அதிபதியே!
தெண்ணல் அருவி மணி பொன் முத் தலைக்கும் திருவேங் கடத்தானே!
அண்ணலே! உன்னடி சேர அடியேற்கு ஆ ஆ என்னாயே.
–6-10-3-

வேறுபட்ட சிற்றின்பங்களில் போகாதபடியான ஞான லாபத்தைப் பண்ணித் தந்த உனக்கு,
பேற்றினைத் தருதல் பெரிய பணியோ? -என்னால் வந்த குறை அறுத்த உனக்கு, உன்னால் வரும் குறை அறுத்தல் பெரிய பணியோ

மேகத்தினுடைய அகவாய் கல் என்னும் படியாயிற்றுத் திருமேனியில் உண்டான
திருவருளின் மிகுதி இருக்கிறபடி-இமையோர் அதிபதியாயிருந்து வைத்து வண்ணமருள் கொள் அணி மேக வண்ணனாய் மாய அம்மானாய்த் தெள் நல் அருவி மணி பொன் முத்து அலைக்கும் திருவேங்கடத்தானாய் அண்ணலாய்க் கொண்டு, எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே -உன் அடி சேர அடியேற்கு ஆ ஆ என்னாய் – கிட்டி நின்று முறையை அறிவித்த நீ, பேற்றினையும் செய்து தாராய்!-உன் திருவடிகளை அடையும்படி வேறு கதி இல்லாத எனக்கு
ஐயோ ஐயோ என்று திருவருளைச் செய்தருள வேண்டும்.-உன்னடி அன்றோ?
உபாயமுமாய் உபேயமுமாய்ப் போக்கியமுமான திருவடிகளைச் சேரும்படி கிருபை செய்தருளாய்.-

அடியேற்கு ஆ ஆ என்னாயே.–அடியோமுக்கு -முறை அறிந்த எங்களுக்கு -ஐயோ ஐயோ என்று கிருபை பண்ணி அருள வேணும் –வடிவு அது -குண சேஷ்டிதங்கள் அவை -ரஸ்யத்தை அது -மேன்மை அது -ஸுலப்யம் அது -இப்படிப்பட்ட உன்னோடு உண்டான முறையை அறிவித்தால் ஆறி இருக்கலாமோ-

————–

ஆவா என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள்மேல்
தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா! திருமா மகள்கேள்வா!
தேவா! சுரர்கள் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!
பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்துமாறு புணராயே.
–6-10-4-

நஞ்சீயரை, நம்பிள்ளை ஒரு நாள் “பஞ்சமோபாயம் என்று கொண்டு ஒன்று உண்டு என்று சொல்லா நின்றார்கள்;-நாட்டிலேயும் அங்ஙனே இருப்பது ஒன்று உண்டோ?” என்று கேட்டருள,-“நான் அறிகிலேன்; இனி, நான்காவது உபாயந்தான் பகவானேயாயிருக்க, ஆகாயமென்று கூறப்படுகிற நாராயணனுக்கும் அப்பால் ஒன்றுண்டு என்று சொல்லுவாரைப் போல, அவனுக்கும் அவ்வருகே ஒன்று உண்டு’ என்கை அன்றோ,
அது நான் கேட்டு அறியேன்” என்று அருளிச் செய்தார்.

ஆகாயம் என்று கூறப்படுகிற நாராயணனுக்கும் அப்பால் ஒன்று உண்டு என்று சொல்லுவாரைப் போலே’ என்றது,-“தத்ராபிதஹரம்”என்கிறபடியே, நாராயணனைச் சொல்லி,-“தஸ்மின் யதந்த:”என்கிறபடியே, அவனுக்கு அந்தர்யாமியாக இருப்பவன் சிவன் என்று சொல்லுவாரைப் போலே என்றபடி. அங்ஙனம் சொல்லுபவர், சைவர்.

“ஆனால், ‘ஆவா’ என்கிற பாசுரம் அருளிச் செய்யும் போது, ‘எனக்குத் தனியே ஒரு சாதனம் கண்டு தர வேணும் என்கிறார்’ என்று அருளிச் செய்கையாயிருக்குமே” என்ன, “அதுவோ! அது உன் நினைவின் குற்றங்காண்; அதற்கு இங்ஙனே காண் பொருள்;
நீயும் உளையாயிருக்க, நான் இங்ஙனே இழப்பதே என்கிறார் காண்” என்று அருளிச் செய்தார்.-ஸ்வதந்திரம் அடியாக ஏறிட்டுக் கொண்ட பாரதந்தர்யம் தானே ஆச்சார்ய ஜென்மம்-

நஞ்சீயர் ஸ்ரீ பாதத்திலே அடைந்த ஒருவன்,-‘எம்பெருமானே உபாயமாகில் சரணாகதி கொண்டு இங்குச் செய்கிறது ஒன்றும் கண்டிலேன்’ என்ன,-செவியைப் புதைத்து ‘நாதமுனிகள் தொடங்கி இவ்வளவும் வர நம் ஆசாரியர்கள் பரம ரஹஸ்யமாக உபதேசித்து
ஓராண் வழியாய்க் கொண்டு போந்த இதனை, இதன் சீர்மை அறியாத உனக்கு மஹா பாபியேன் இதனை வெளியிடுவதே!’ என்று திருமுடியிலே அடித்துக் கொண்டு–
திருப்பள்ளி யறையிலே புக்கருளினார். –இவனை நிக்ரகிக்காதே என்று பிரார்த்தித்தார் —பண்ணும் பொழுது அதிகாரி விசேஷணமாய் இருக்கும் -விருப்பம் உபாயம் இல்லை -விஷ்ணு போதம் ஓடம் உபாயம் -பண்ணின பின்பு அதுவே ப்ராப்யம்

ஆ ஆ என்னாது –ஈஸ்வரனுக்குப் பிரியம் செய்கை யாகிறது, அவன் விபூதியிலே கிருபை செய்தலே அன்றோ;-நஞ்சீயர், “ஒருவனுக்கு, பிறர் துக்கத்தைக் கண்டால் சகிக்க முடியாத தன்மை வந்ததாகில்,‘நமக்குப் பகவத் சம்பந்தம் உண்டு’ என்று அறுதி இடலாம்; ‘அது தக்கது’ என்றிருந்தானாகில்,‘நமக்குப் பகவத் சம்பந்தம் இல்லை’ என்று தனக்கே கை வாங்க அமையும்” என்று அருளிச் செய்தார்.-பிறர் ஆகிறார் யார்? என்னில், தன்னினின்றும் வேறுபட்டவர்.

திருமாமகள் கேள்வா –-விரோதிகளைப் போக்கினது கண்டு உகந்து அணைக்குமவளைச் சொல்லுகிறது.-அநுகூலர்களை ரக்ஷித்தலும் பிரதிகூலர்களை அழித்தலும் இவளுக்குப் பிரியமாகச் செய்யுமவை அன்றோ-உன்னுடைய சக்திக்குக் குறைவு உண்டாய் இழக்கின்றேனோ?புருஷகாரம் இல்லாமல் இழக்கின்றேனோ?-அருவினையேன் 
அவன் தடைகளைப் போக்க வல்லனாயிருப்பது,-எனக்கு ஆசை கரை புரண்டு இருப்பது,
திருவடிகள் எல்லை இல்லாத இனிய பொருளாக இருப்பது;-இங்ஙனே இருக்கச் செய்தே,
கிட்டி அநுபவிக்கப் பெறாத பாவத்தைப் பண்ணினேன்.-
பொருந்துமாறு புணராயே –
அசோக வனத்திலே இருந்த பிராட்டியைப் போலே காணும் தம்மை நினைத்திருக்கிறது;-புணராய் –உன்னைக் கிட்டும் வழி கல்பிக்க வேணும் என்னுதல்; நான் கிட்டும்படி செய்ய வேணும் என்னுதல்.

————–

புணரா நின்ற மரமேழ் அன் றெய்த ஒருவில் வலவாவோ!
புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ!
திணரார் மேக மெனக்களிறு சேரும் திருவேங்கடத்தானே!
திணரார் சார்ங்கத் துனபாதம் சேர்வ தடியேன் எந்நாளே
.–6-10-5-

ரக்ஷணத்தில் ஐயப்பட்டாரையும் நம்பும்படி செய்து காரியம் கொள்ளும் நீ, ஆசைப்பட்ட எனக்கு உதவ வாராது ஒழிவதே!-அந்த ஐயத்தைப் போக்கிக் காப்பாற்றிய நீ, ஐயம் இல்லாமலே பற்றின என்னைக் காக்க வேண்டாவோ?

திணர் ஆர் சார்ங்கம் –-தன் வளைவிலே-மிடுக்கிலே – விரோதிகளைத் தப்பாமல் அகப்படுத்திக் கொள்ளுகை.-உன பாதம் – அந்த வளைவுக்கு -மிடுக்கிலே -அகப்படாதாரை முதல் அடியிலே அகப்படுத்திக் கொள்ளுவது.-சார்ங்கத்தில் அகப்படுவார் பிரதி கூலர் அடியில் அகப்படுவார் அநு கூலர் –-ஏழு ரிஷிகள் கன்னிகைகள் குல பர்வதங்கள் சமுத்திரங்கள் நடுங்கினவே-சேர்வது அடியேன் எந்நாளே –-கையில் வில் இருக்க இழக்க வேண்டா விரோதி உண்டு என்று;-இனி உன்னைப் பெறும் நாளையாகிலும் சொல்ல வேணும். கையில் வில் இருக்க விரோதி கண்டு என்ன பயம் where there is will there is way

————

எந்நாளே நாம் மண்ணளந்த இணைத்தாமரைகள் காண்பதற்கென்று
எந்நாளும் நின் றிமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனமினமாய்
மெய்ந்நா மனத்தால் வழிபாடு செய்யும் திரு வேங்கடத்தானே!
மெய்ந்நான் எய்தி எந்நாள் உன்னடிகள் அடியேன் மேவுவதே?
–6-10-6-

 இங்குள்ளார் அங்கே சென்று அடிமை செய்ய ஆசைப்படுமாறு போலே காணும்,
அங்குள்ளாரும் இவனுடைய சௌலப்யத்தைக் கண்டு அநுபவிக்க வேணும் என்று ஆசைப்பட்டு வரும்படி.-மெய்ந் நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங்கடத்தான் 
மனம் வாக்குக் காயங்களாலே அடைந்து அடிமை செய்யா நிற்பர்கள்.
அன்றியே,-மெய்யான நாவாலும் மனத்தாலும் வழிபடுவர்கள் என்றுமாம்.
வழிபடுதலாவது,-வேறு பிரயோஜனங்களுக்கு உறுப்பாகாத கரணங்களைக் கொண்டு அடைந்து வணங்குதல்.-நித்திய ஸூரிகளான போது, கைங்கரியமாகக் கொள்க.
பிரமன் முதலான தேவர்களான போது, உபாசனமாகக் கொள்க-மேலே அவர்களை சொல்லுகையாலே ப்ரஹ்மாதிகளை சொல்கிறது உசிதம் அன்று –.-மெய்ந் நான் எய்தி எந்நாள் உன் அடிகள் அடியேன் மேவுவதே –-குணங்களின் பிரகாசத்தாலே மாநசாநுபவத்தைப் பண்ணுவித்துப் பகட்ட ஒண்ணாது;-நான் உன் திருவடிகளைப் பத்தும் பத்தாக வந்து கிட்டி, பின்னைப் பிரிவோடே கூடி இராதபடி பொருந்தப் பெறுவது என்றோ? என்கிறார்.-ஓர் அடி விடில் சத்தை நீங்கி அன்றோ இவர் இருப்பது.-எனக்கு ருசி உண்டாய் -நீயும் சந்நிஹிதனாய் இருக்க இழக்கவோ –

————–

அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! இமையோர் அதிபதியே!
கொடியா அடுபுள் ளுடையானே! கோலக் கனிவாய்ப் பெருமானே!
செடியார் வினைகள் தீர்மருந்தே! திரு வேங்கடத்தெம் பெருமானே!
நொடியார் பொழுதும் உனபாதம் காண நோலா தாற்றேனே
.–6-10-7-

அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! – தேவஜாதிகளுடைய உப்புச் சாறு போலன்று;
ஒரு திரளாய் அநுபவிக்குமது அன்று;-வேறு பிரயோஜனத்தைக் கருதாதவர்கள் அநுபவிக்கும் அமிருதமாயிற்று.-அநந்ய ப்ரயோஜனமாய் -நித்தியமாய் -அத்விதீயமாய் இருக்கை-அமர்கின்ற -அர்ச்சை-மேவி -மற்றவற்றை த்யஜித்து-செடியார் வினைகள் தீர் மருந்தே-அந்த அமுதந்தானே காணும் மருந்தாகிறது.-

திருவேங்கடத்து எம்பெருமானே – அவ் வமுதம், உண்பார்க்கு மலை மேல் மருந்து அன்றோ.
அவ் வமுதம், உண்பார்க்குச் சாய் கரகம் போலே உயரத்திலே அணித்தாக நிற்கிறபடி.

1-இமையோர் அதிபதியாய், 2-கொடியா அடு புள் உடையானாய், 3-செடியார் வினைகள் தீர் மருந்தாய், 4-திருவேங்கடத்து எம்பெருமானாய், 5-கோலக் கனிவாய்ப் பெருமானாய்,
6-அடியேன் மேவி அமர்கின்ற அமுதே? என்கிறார்.

1-பரத்வம் -சொல்லி -2-விரோதி நிரசன பரிகரம் சொல்லி -3-விரோதி நிரசனத்தைச் சொல்லி –4–ஸுலப்யம் சொல்லி –5-அழகைச் சொல்லி-6–போக்யனாய் இருப்பத்தைச் சொல்லுவதே அறு சுவை அமுது

பட்டர், “நித்தியத்திலே, ‘அமுது செய்யப் பண்ணும் போது தோத்திரத்தை விண்ணப்பம் செய்வது’ என்று இருக்கின்றதே,-என்ன தோத்திரத்தை விண்ணப்பம் செய்வது?” என்ன, “
‘அடியேன் மேவி அமர்கின்ற அமுதே’, ‘பச்சை மாமலை போல் மேனி’ என்பன போலே
இருக்கும் திருப் பாசுரங்களை விண்ணப்பம் செய்வது” என்று அருளிச் செய்தார்.

உன பாதம் காண நோலாது ஆற்றேன்–அவனே சாதனமான இவர்க்கு விளம்பித்தால் ‘அவன் திருவருளும் ஏறிப் பாயாத படியானேனோ?’ என்னும் அச்சம் அன்றோ தொடர்வது.உன் திருவடிகளைக் கிட்டுக்கைக்கு சாதன அனுஷ்டானம் பண்ணாதே அனுஷ்ட்டித்து பலம் தாழ்த்தாரைப் போலே கூப்பிடா நின்றேன் –

————

நோலா தாற்றேன் உன பாதம் காண என்று நுண்ணுர்வின்
நீலார் கண்டத் தம்மானும் நிறை நான் முகனும் இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திரு வேங்கடத்தானே!
மாலாய் மயக்கி அடியேன் பால் வந்தாய் போலே வாராயே
–6-10-8-

எத்தனையேனும் அளவுடைய ப்ரஹ்மாதிகளும் சபரிகரமாக வந்து தங்கள் ஆகிஞ்சன்யத்தை ஆவிஷ்கரித்து அன்றோ தங்கள் தங்கள் அபேக்ஷிதங்களைப் பெற்று போவது – 

மாலாய் மயக்கி –-“மயங்கல் கூடலும் கலவியும்”. ‘மாலாய்-நான் மயங்கும்படிக்குத் தகுதியாக வரவேணும் என்கிறார் என்றும்,-அன்றிக்கே,-மாலாம்படி மயக்கிக் கொண்டு வர வேணும் என்கிறார்’ என்றும் சொல்லுவர்கள்;-ஸம்ஸலேஷிக்கும் படி வர வேண்டும் -நீ வ்யாமோகத்துடன் வர வேண்டும் –-வ்யாமோஹம் என்னிடம் உண்டாக்கிக் கொண்டு வர வேண்டும் –அவை அல்ல பொருள். மால் என்று கருமையாய், அதனால் நினைக்கிறது கிருஷ்ணனை என்கையாய்,-கிருஷ்ணனாய்க் கொண்டு உன் குணங்களாலும் செயல்களாலும் அந்த அவதாரத்தில் உள்ளாரைப் பிச்சு ஏற்றிக் கொண்டு
வந்தாற் போலே எனக்காகவும் ஒரு வரத்து வர வேணும் என்கிறார்;
“மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை” என்று சொல்லுகிறபடியே.-நாய்ச்சியார் திருமொழி, 14 : 3.-மாலே செய்யும் மணாளனை – தன் வியாமோகத்தைக் காட்டி இத் தலைக்கு-வியாமோகத்தை விளைக்குமவனை.-மாலாய் – கிருஷ்ணனாய்.-
பித்தே வடிவாக உள்ள குண பூர்ணன் -மாலாக்கி சாம்யா பத்தி அளிப்பான்-

————–

வந்தாய் போலே வாராதாய்! வாராதாய்போல் வருவானே!
செந்தாமரைக்கட் செங்கனிவாய் நாற்றோ ளமுதே! எனதுயிரே!
சிந்தா மணிகள் பகரல்லைப் பகல்செய் திரு வேங்கடத்தானே!
அந்தோ அடியேன் உனபாதம் அகல கில்லேன் இறையுமே
.–6-10-9-

போக்கியமும் குறைவற்று, அவன் தானும் அண்மையனாய், எனக்கு ஆசையும் மிகுத்திருக்க,
கிட்டி அநுபவிக்கப் பெறாது ஒழிவதே–எனதுயிரே!-புண்டரீகாக்ஷமாய் சதுர்புஜமுமாயிற்று இவர் பிராணன் இருப்பது-அந்தோ -ஆற்றாமையும் அபேக்ஷையும் எனக்கே பரமாவதே
அடியேன் -ஸ்வ ரக்ஷணத்தில் பிராப்தி இல்லாத பாரதந்தர்யத்தை யுடைய நான்-அடியேன் உன பாதம் அகலகில்லேன் இறையுமே –-என் ஸ்வரூபத்தைப் பார்த்து என் நிலையைப் புத்தி பண்ணாய்.-காணா நிற்கச் செய்தே, அது வளர்வதற்குக் கண்ணை மாற வைக்கிலும் பொறுக்க மாட்டேன்.-நிரதிசய போக்யமான உன் திருவடிகளை க்ஷண காலமும் அகல ஷமன் ஆகிறிலேன்-

————-

அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன் றில்லா அடியேன் உன் னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே
.–6-10-10-

தம்முடைய அபேக்ஷிதம் சடக்கெனச் சித்திக்கைக்காகப் பெரிய பிராட்டியாரைப் புருஷகாரமாகக் கொண்டு
திருவேங்கடமுடையான் திருவடிகளிலே சரணம் புகுகிறார்.
மேலே ஒன்பது திருப் பாசுரங்களாலும் சரண்யனான சர்வேஸ்வரனுடைய ஸ்வரூபத்தைச் சொன்னார்.
இதில் தம்முடைய ஸ்வரூபம் சொல்லிச் சரண் புகுகிறார்.
மேலே, “அடியேன்” என்றும், “அருவினையேன்” என்றும் தம்முடைய ஆகிஞ்சந்யத்தையும், சேஷத்துவத்தையும்,
அவனுடைய சரண்யதைக்கு உறுப்பாகச் சொல்லிக் கொடு போந்தார். -அசரண்ய சரண்யன் என்பதால் சொல்லி-
இங்கு அது தன்னையே பேற்றுக்கு உடலாகச் சொல்லிச் சரணம் புகுகிறார். -புனருக்தி தோஷம் இல்லை –
பேற்றுக்கு உடல் -வெறுமை ஸ்வரூபம் -இரண்டும் பிரபத்திக்கு பரிகரம்–
வெறுமையும் ஸ்வரூபமும் -ஆகிஞ்சன்யமும் அநந்ய கதித்வமும் – பிரபதிக்கு பரிகாரம் அன்றோ

அலர்மேல்மங்கை” என்கையாலே, “ஸ்ரீ” என்ற சொல்லின் பொருளும்,
(போக்யத்வம் மார்த்வம் வாலப்யம் மூன்றும் கீழே பார்த்தோம் இதுக்கு )
“அகலகில்லேன்” என்கையாலே, “மத்” என்ற சொல்லின் பொருளும்,(பிரிய மாட்டாள்)
“உறை மார்பா” என்கையாலே, நித்திய யோகமும்,
(பிரியாமல் இருப்பதும் நித்ய யோகமும் கொஞ்சம் வாசி –
கோயிலே கதி என்றால் -கோயில் சாத்தின பின்பு -இருக்க முடியாதே –
சரணாகதி பலித்தே தீரும் -பிராட்டி இருந்தால் தான் பலிக்கும் –
எப்பொழுதும் பண்ணலாம் என்றால் நித்ய யோகம் இருக்க வேண்டுமே )

“நிகரில் புகழாய்”என்றது முதல் “திருவேங்கடத்தானே” என்றது முடிய “நாராயண”என்ற சொல்லின் பொருளும்,
(வாத்சல்யம் ஸ்வாமித்வம் ஸுசீல்யம் ஸுலப்யம் )
“புகல் ஒன்றில்லா அடியேன்”என்கையாலே, உத்தமனால் (உத்தமன் – தன்மையிடம்) போதருகின்ற அதிகாரியும்,
“உன்னடிக் கீழ்” என்கையாலே, “சரணௌ” என்ற சொல்லின் பொருளும்,
“அமர்ந்து புகுந்தேனே” என்கையாலே,“பிரபத்யே” என்ற சொல்லின் பொருளும் கூறியுள்ளதைத் தெரிவித்தபடி.
“சரணம்” என்ற சொல்லின் பொருளைத் தெரிவிக்கும் பதம் திருப்பாசுரத்தில் இல்லையே? எனின்,
“புகுந்தேன்” என்றதனால்“சரணம்” என்ற சொல் கோல் விழுக்காட்டாலே வருவது ஒன்றாம் ஆதலின், தனியே கூறிற்றிலர் என்க.
இப்பொருள் தன்னையே விவரணம் செய்கிறார்
‘“அகலகில்லேன் இறையும்” என்று’ என்றது முதல்‘பதத்தோடே சேரக் கடவனவாம்’ என்றது முடிய.

இனி த்வயத்தை விட இங்கு ஏற்றம்
அதில் அர்த்தத்தால் போதருகின்ற ‘அஹம்’ என்ற சொல்லின் பொருளை இங்கு ‘அடியேன்’ என்கிறது.-
பிரபத்யே -ஆர்த்தமாக அங்கு –
அடியேன் -த்வயத்துக்கு அடையாளம் சொல்லும் ஸ்லோகத்தில் உண்டே -லக்ஷணம் ஸ்லோகம் –
அஹம் அஸ்மி அபராத ஆலய அகிஞ்சனன் அகதி த்வயமேய உபாய பூத பிரார்த்தனா மதி சரணாகதி –
(த்வயத்துக்கு லக்ஷணம் சொல்லும் இந்த வாக்கியத்தில் இருப்பதால் இது இங்கு தானாகேவே சொல்லவில்லை -)

ஒருநாள் பட்டர், பிள்ளை அழகிய மணவாள அரையர்க்குத் துவயம் அருளிச் செய்கைக்காக ‘எல்லாரும் செல்லுங்கோள்’ என்ன,
அஷட் கரணமாக சொல்ல வேண்டுமே -மூன்றாம் ஆள் கேட்க்க கூடாதே —
நஞ்சீயரும் எழுந்து சென்றுபோய், ‘நம்மை ‘இராய்’ என்றருளிச்செய்திலர்’ என்று வெறுத்திருக்க,
அப்பொழுதே ‘சீயர் எங்குற்றார்?’ என்று கேட்டருளித் தேடி அழைத்துக் கூட வைத்துக் கொண்டிருந்து
துவயத்தை அருளிச் செய்கையில் அருளிச் செய்த வார்த்தை” என்று சீயர் அருளிச் செய்வர்.

“இந்த ஆத்ம வஸ்து சேஷமாகில் அவன் சேஷியாகில் இங்குப் பிராட்டி சம்பந்தத்தால் செய்கிறது என்?” என்று கேட்க
“அது இருக்கிறபடி கேளீர், இராவணனுக்கும் காகத்துக்கும் சம்பந்தமும் செயலும் ஒத்திருக்க,
இனி, இராவணன் சாபத்தாலே கிட்டமாட்டாதே இருப்பது ஒன்று உண்டே அன்றோ;
அங்ஙன் அன்றிக்கே, தாய் பக்கல் குற்றத்தில் கைதொடனாயிருக்கத் தலை கொண்டு தப்பினான் அன்றோ, அவள் சந்நிதி உண்டாகையாலே.
அவள் கடக்க இருக்கையாலே இராவணன் தலை அறுப்புண்டான்.”
போக்கு அற்றுச் செயல் மாண்டு நின்ற நிலை அவனுக்கும் ஒக்கும் அன்றோ;
(கையில் வில் நழுவி போக்கற்று நின்ற நிலையே சரணாகதி தானே )
இங்ஙனே இருக்கச் செய்தேயும் காரியகரமாயிற்றது இல்லை அன்றோ, அவனுக்குப் பிராட்டி சந்நிதி இல்லாமையாலே.
இனித்தான், தாயும் தந்தையுமானால் தந்தையைப்போல் அன்றே, மக்கள் பக்கல் தாய் இருக்கும்படி;
இவன் செய்த குறைகளைத் தான் காணாக் கண் இட்டிருக்கை அன்றிக்கே,
தந்தையிடத்தும் மறைத்துக் காட்டுவாள் ஒருத்தி அன்றோ.

ஆகையால் அன்றோ துவயத்தில் பின்பகுதியில் அவனோடு ஒப்புச் சொல்லி,
முன்பகுதியில், புருஷகாரமாகையாகிற நீர்மையில் ஏற்றம் சொல்லுகிறது.
தொட்டாரைத்தொட்டு “குற்றம் செய்யாதார் யாவர்” என்னக் கடவ இவள்,

இதில் உபாயத் தன்மை சொல்லச் செய்தே,
உபேய விஷயமும் ஸூசகமுமாயிருக்கிறது.
அதாகிறபடி எங்ஙனே? என்னில்,
இருவருமான சேர்த்தியிலே அன்றோ ஒருவன் அடிமை செய்வது;
அச் சேர்த்தி தன்னையே அன்றோ உபாயமாகப் பற்றுகிறதும். இத்தால் சொல்லிற்றாகிறது, நித்தியப் பிராப்யத்வம் அன்றோ.
நித்யாபூர்வ விஷயமன்றோ நித்தியப் பிராப்யமாக வல்லது.
அகலகில்லேன் இறையும் என்று-இது அகன்று இருந்து சொல்லுகிற வார்த்தை அன்று.

இவள் அவனுடைய ஸ்வாதந்திரியத்தை நினைத்து
‘இவற்றின் பக்கல் என்னாய் விளைகிறதோ?’ என்றிருக்கையும்,
அவன் இவளுடைய மிருதுத் தன்மையையும் இளமையையும் நினைத்து ‘இவற்றின் பக்கல் எவ்வளவாய் இருக்கிறாளோ?’ என்றிருக்கையும்.
ஆக, ஒருவரை ஒருவர் அதிசங்கை பண்ணி நோக்கும் இருவர் நிழலையும் பற்றி அன்றோ உபயவிபூதியும் கிடக்கிறது என்றபடி.

அவன் ‘அல்லேன்’ என்று கைவிடும் அன்றும் செங்கற்சீரை கட்டி வளைக்கலாம்படி அன்றோ இச் சம்பந்தம் இருப்பது. -காஷாய வஸ்த்திரத்தை உடுத்து இரப்பதற்குப் புகுகிறேன் என்று கூறி வளைக்கலாம்படி என்றபடி.-இந்தச் சம்பந்தத்தைப் பார்த்தால், இருவராலும் விட ஒண்ணாது என்கிறார்

மண்ணோர் விண்ணோர் வைப்பில் ஏழு உலகுக்கு உயிர் பாசம் வைத்த நிகரில் வாத்சல்யம் உஜ்வலம் –

திருவேங்கடத்தானே –
அதற்கு முடிந்த பொருள், சௌலப்யம் என்னக் கடவதன்றோ.
குண யோகமும், சேஷித்வமும், விசேஷ கடாக்ஷமும், சௌலப்யமும் இவை இத்தனையும் உண்டு அன்றோ இப் பதத்துக்கு.
இவன் விரும்பியவை அனைத்தையும் இவனுக்குக் கொடுப்பதற்காக அந்தராத்மாவாக நிலை பெற்றிருக்கின்றான்
என்றே அன்றோ நாராயண பதத்திற் சொல்லுகிறது. –
அந்தர்யாமித்வ ஸுலப்யம் -சதா சன்னிஹித ஆகாரம் அர்ச்சையிலும் உண்டே
அந்தச் சௌலப்யம், இங்கு எப்பொழுதும் நிலைபெற்று இருப்பதாலே திருவேங்கடமுடையான் பக்கலிலே கிடக்குமன்றோ.

மேல் ஒன்பது பாசுரங்களாலும் சரண்யனான சர்வேசுவரன் சொரூபத்தையும் அதிகாரி ஸ்வரூபத்தையும் சொல்லி
சரணாகதியின் பிரகாரத்தைச் சொல்லுகிறார் இப்பாசுரத்தால்.
சரண்யன் ஸ்வரூபமாவது,
நிரதிசய போக்கியமுமாய் வகுத்த விஷயமுமாய் விரோதிகளைப் போக்கக்கூடியதுமாய்ச் சர்வ சுலபமுமாய் இருக்குமது.
அல்லாதவைபோல் அன்றிக்கே, பற்றுவதற்கு ஏகாந்தமாயிருப்பது சௌலப்யம். பரத்துவம், சேதனனுக்கு ருசி பிறந்தபோதே
பற்ற ஒண்ணாதபடி தூரதேசமாக இருக்கும்.
வியூகமும், பிரமன் சிவன் முதலான தேவர்களுக்காமத்தனை.
ஆகையாலே பரத்துவத்தைப் போன்றதேயாம். அவதாரங்கள், புண்ணியம் மிக்கவர்களாய் அக் காலத்தில்
உதவினார்க்கு ஒழியப் பிற்பாடர்க்கு உதவாமையாலே காலத்தாலே கழிந்தனவாய் இருக்கும்.

அக் குறைகள் இரண்டும் இன்றிக்கே எல்லாக் காலத்திலும் எல்லார்க்கும் வந்து அடையலாம்படி,
“வானவர் வானவர்கோனொடும்” திருவாய். 3. 3 : 2.-என்கிறபடியே, நித்திய ஸூரிகளோடு, இவ்வருகுள்ள பிரமன்
முதலானோர்களோடு, இவ்வருகுள்ள மனிதர்களோடு கானமும் வானரமுமாய்க் கொண்டு மிக இழிந்த பிறவிகளிலே
ஆனார்களோடு வாசி அற எல்லார்க்கும் பற்றுமிடம் திருவேங்கடமுடையான் திருவடிகளே.
விடாத ஸ்வபாவமுடைய னாகையாலே விரும்பியவற்றைப் பெறுதற்குக் காரணங்களான ஞானம் சக்தி முதலான
எட்டுக் குணங்களையுமுடையன்; ஆகையாலே, எல்லாக் குணங்களாலும் நிறைவுற்றிருக்கின்றவனான திருவேங்கடமுடையான் சரண்யன்.

அதிகாரி ஸ்வரூபமாவது, அநந்யகதித்வமும் பிராப்பிய ருசியும் ஸ்வரூபப் பிரகாசமும் என்கிற இவையே யன்றோ.
திர்யக்குகளுக்கு இப்படி அடைதல் கூடுமோ? என்னில், ஸ்ரீகஜேந்திராழ்வான் பகவானை ஆராதனை செய்தானாகத்
துறைச் சுவடிகளிலே எழுதியிட்டு வைத்தும் சொல்லியும் கேட்டும் போரா நின்றோமே;

ருசியைப் பிறப்பிக்கையும், பிறந்த ருசியை வளர்க்கையும், விரோதிகளைப் போக்குகையும்,
ஒரு தேச விசேடத்து ஏறக்கொண்டு போகையும், உரியதான அடிமையைக் கொள்ளுகையும் ஆகிற இந்த இடங்களில் நிரபேக்ஷமாகத் தானே செய்யும்;-புருஷகார சாபேஷமாயும் -அதிகாரி சாபேஷமாயும் இருக்கும் –

உன் அடிக் கீழ் –
“சரணௌ” என்ற பதத்தால் சொல்லப்படுகிற விக்கிரஹத்தைச் சொல்லுகிறது. யாங்ஙனம்? எனின்,
1-ஸூ பாஸ்ரயமாய் -எளிதில் பற்றக்கூடியதாய்,
2-உலக விஷயங்களிலே அருசி முன்னாகத் தன் பக்கல் ருசியையும் உண்டாக்கி,
3-பிறந்த உருசியையும் வளர்த்து,
4-பேற்றிற்கு விரோதமாயுள்ளனவற்றையும் தவிர்த்து,
5-ஒருதேச விசேடத்திலே போனால் நித்தியமாகக் கைங்கரியத்தைச் செய்வதற்கு எதிர்த் தொடர்புள்ளதுமாய்,
6-எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருப்பதற்கு விஷயமுமாவது
விக்கிரஹம் ஆகையாலே என்க.

முதல் முதலிலே,
“துயர் அறு சுடர் அடிதொழுது எழு” என்று” திருவுள்ளத்தைக் குறித்து அருளிச் செய்து,
தாம் பற்றுகிற இடத்தில்
“உனபாதம் கூடுமாறு கூறாய்” என்றும்,
“உன்னடி சேர் வண்ணம் அருளாய்” என்றும்,
உன்னடி சேர அடியேற்கு ஆஆ என்னாயே!” என்றும்,
“பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராய்” என்றும்,
“உனபாதம் சேர்வது அடியேன் எந்நாள்” என்றும்,
“எந்நாள் உன்னடிக்கள் அடியேன் மேவுவதே?” என்றும்,
“நொடியார் பொழுதும் உனபாதம் காண நோலா தாற்றேன்” என்றும்,
“அடியேன் உனபாதம் அகலகில்லேன் இறையும்” என்றும்,
“உன்னடிகீழ் அமர்ந்து புகுந்தேன்” என்றும் இவர் அடி விடாமல் அநுசந்தித்தபடி கண்டதே!

ஏகம்” என்னும் சொல்லைச் சொன்னதைப் போன்று,
திருவேங்கடமுடையான் திருவடிகளும் தம்முடைய தலையும்
கொக்குவாயும் படுகண்ணியும் போலே இடைவெளி இல்லாமல் பொருந்தினபடி சொல்லுகிறது.

பிராட்டியாலே பேறு சொல்லும் த்வயம் –
சரீரத்தால் பேறு வேதம் —
ஆத்மாவால் பேறு திருமந்திரம் –
ஈஸ்வரனால் பேறு சரம ஸ்லோகம் சொல்லும்

திருவாய் மொழி ஆகிறது இப்பாட்டு –பாத ரேகை போல் அமர்ந்து புகுந்தார்
மந்த்ர ராஜா திருமந்திரம் -மந்த்ர ரத்னம் -த்வயம் -சாம்யாபத்தி கொடுக்கும் –
கிழிச் சீரை போல் தனம் –
உதடு துடித்துக் கொண்டே இருக்குமே
ராஜ குமாரர் கற்பூர நிகரம் போல் த்வயம் நமது பூர்வர்களுக்கு
கூரத்தாழ்வானனுக்கு சரம விமல திருமேனியில் த்வயம் ஓத உடையவர் கட்டளை –

———————

அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்றென்றருள் கொடுக்கும்
படிக் கேழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங் கடத்துக் கிவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே
.–6-10-11-

அடியார்கள் விஷயத்தில் அருள் கொடுக்கும் ஸ்வபாவத்துக்கு ஒப்பு இல்லாத சர்வேஸ்வரனை.-“மாஸுச: – துக்கப் படாதே” என்ற கிருஷ்ணனும் ஒவ்வான் இவன் படிக்கு.

பெரிய வானுள் நிலாவுவரே –
“மஹாகம்” என்றும், “பரமாகாசம்” என்றும் சொல்லப்படுகிற பரமபதத்திலே வாழப் பெறுவர்கள்.
இந்திரன் முதலானோர் வாழும் இவ் வருகில் வெளியில் அன்று, மேல் வரும் அநுபவம் ஒழியப் பேற்றுக்குச் சரணம் புக
வேண்டாத தேசத்திலே போய்ப் புகப் பெறுவர்.
இவர் செய்த சரணாகதியே நமக்கும் எல்லாம்; தனித்து வேண்டா;
இத் திருப்பாசுரத்தைச் சொல்லிப் பலத்திலே சேர்தல் அத்தனை.

நற்கன்றுக்கு இரங்கினது தோல் கன்றுக்கு இரங்குமாறு போலே, இவரை நினைத்து
இப்பத்துங் கற்றார்பக்கலிலும் ஈஸ்வரன் பிரசந்நனாம்.
ஸ்ரீவிபிஷணாழ்வானோடு வந்த நால்வர்க்கும் அவன்செய்த சரணாகதியே அமைந்ததே அன்றோ.
‘இவன் உடையவன்’ என்று எதிர்த் தலைக்குத் தோற்ற இருக்குமத்தனையே வேண்டுவது.

பஞ்ச ஸம்ஸ்காரமும் ஞான அனுஷ்டானங்கள் வேண்டாவோ -இப்பத்தில் அந்வயமே போதுமோ -என்னில் – வேணும் –இவை அந்தர் பூதங்கள்-ஆழ்வார் சம்பந்தம் என்று சொல்லும் பொழுதே-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -66-உண்ணாது உறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும்-ஆராவமுதே–5-8-

March 1, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

புண்டரீகாக்ஷன் கண்ணிலே அன்றோ ஈடுபட வேண்டும் என்று பாங்கன் சொல்ல
தலைவன் தோழன் பேச்சை மறுத்தல் –-கீழே 57 பாசுரம் ஐந்தே துறை பார்த்தோம்
ஆராவமுதே இதன் விவரணம்-மலர்க்கண் வளர்கின்றான் அங்கும் உண்டே
நீர் பஞ்ச பூதங்கள் நல்லது செய்ய அந்தர்யாமியான அவன் நம்மைத் துன்புறுத்துவதே -என்று உள்ளுறைப் பொருள்-1-வைகுந்தம் போல் போக்யம்-2-எனக்கு உயிர்-3-யோகிகளால் என்ன அரியன
மூன்று விஷயங்கள் ஆழ்வாரது கண்கள்-

அவதாரிகை-தலைமகள் கண் அழகில் ஈடுபட்ட தலைமகன் வார்த்தை இதுவும் தலைவன் பாங்கனுக்கு கழற்றெதிர் மறுத்தல்-

கீழே புலக்குண்டல புண்டரீகத்த -பாசுரம் போலே இதுவும் -நாயகி உடைய கண் அழகில் ஈடுபட்டமை
தலை மகளை இயற்கையில் கலந்து பிரிந்த தலைவன் தன் உறாவுதல் கண்டு வினவிய பாங்கனைக் குறித்து உற்று உரைத்த பாசுரம் –

இப்படி இவருடைய ஞான வைலக்ஷண்யத்தைக் கண்ட அன்பர் நம்முடைய அளவிலேயே இவருடைய ஞானம் விஷயீ கரித்தது விலக்ஷண ஞானரான பரம யோகிகளுக்கும் நித்ய அனுபாவ்யமாய் யன்றோ இருப்பது என்று தங்கள் ஸூஹ்ருத்துக்களுக்குச் சொன்ன பாசுரத்தை-தலை மகளை இயற்கையில் கலந்து பிரிந்த தலைவன் தன்னுறாவுதல் கண்டு வினாவின பாங்கனைக் குறித்து உற்றது யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு–அவதாரிகை–தலைமகள் கண் அழகிலே ஈடுபட்ட தலைமகன் வார்த்தையாய் இருக்கிறது கீழ் போலே

உண்ணாது உறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும்
எண்ணாய் மிளிரும் இயல்வினவாம் எரி நீர் வளி வான்
மண்ணாகிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாள்
கண்ணாய் அருவினையேன் உயிராயின காவிகளே
– -66–தலைவன் தோழன் பேச்சை மறுத்தல் –

ஆராவமுதாழ்வார் ஆதரித்த பேறுகளை
தாராமையாலே தளர்ந்து மிக -தீராத
ஆசையுடன் ஆற்றாமை பேசி யலமந்தான்
மாசறு சீர் மாறன் எம்மான் 
—48–ஸ்ரீவர மங்கை வாணன் திருவடிகளிலே சரண் புக்க விடத்திலும் அங்கே தம் அபேஷிதம் கிடையாமையாலே ஆஸ்ரித ரஷண தீஷிதனான ஸ்ரீ சர்வேஸ்வரன் நம் கார்யம் செய்யாமை இல்லை –-எங்கே கார்யம் செய்ய நினைத்து இருக்கிறான் என்று தெரியாது என்று ஸ்ரீ திருக் குடந்தையிலே ஸ்ரீ ஆராவமுதாழ்வார்-திருவடிகளிலே செல்லவே நம் அபிமதம் சித்திக்கும் என்று மநோ ரதித்து சென்ற இடத்தில் அவர் எழுந்து இருத்தல்-இருத்தல்-உலாவி அருளுதல்-இன் சொல்லுச் சொல்லுதல்-குளிர நோக்குதல்-அரவணைத்தல்–செய்து அருளக் காணாமையாலே -ஸ்ரீ பிராட்டியும் அவனுமான சேர்த்தியும் யுண்டாய்–நமக்கு அபேஷையும் யுண்டாய் இருக்க அபிமதம் பெறாது ஒழிவோமோ-என்று துடித்து இவ்வளவிலும் திருவடிகளே உபாயம் என்னும் துணிவு குலையாது ஒழியப் பெற்றோமே என்று வருந்தி தரித்தாராய் தலைக் கட்டுகிற ஸ்ரீ ஆராவமுதத்தில் அர்த்தத்தை அருளிச் செய்கிறார்–இவ்வளவான தசையிலும்-உபாயாந்தரங்களில் கண் வைக்கை யாகிற மாசு இன்றிக்கே இருக்கிற அத்யாவச்ய ஞானாதி குணங்களை யுடையரான ஸ்ரீ ஆழ்வார் தம்மை அடைந்து பிரபன்ன ஜனமான நமக்கு ஸ்வாமி

உண்ணாது இத்யாதி –பிராக்ருத போகங்களால் தரியாதாராய் –பிரக்ருதி-ப்ராக்ருதங்கள்-த்யாஜ்யம் -என்னும் புத்தியை உடையராய் –அவ் வாத்மா வஸ்து தான் ஸ்வதந்த்ரம் -என்று இருக்கை யன்றிக்கே –
ஆத்மா யாதாம்ய ஜ்ஞான பூர்வகமாக -ஈஸ்வர ஜ்ஞானத்தை உடையராய் –இது அவனுக்கு பிரகாரம் -என்று இருக்கும்படி –பரம யோகம் கை வந்துள்ள அவர்களுக்கும் –எண்ணாய் மிளிரும் இயல்வினவாம் –அவர்களும் இக் கண்ணுக்கு இலக்கானாராகில் அவர்களுக்கும் ஆஸ்ரயமான பரத்வம் தன்னையும் காற்கடை கொண்டு –இத்தையே அது அது -என்று எண்ணும்படி பிரகாசிக்கையே ஸ்வ பாவமாய் உள்ளன –(கரையேற்றுவனுக்கும் அறு நான்கும் உபதேசித்த ஞானம் அன்றோ ஆழ்வாரது )-எரி நீர் வளி வான் மண்ணாகியகாரணமான பூத பஞ்சகங்களும் கார்ய ஜாதத்துக்கு எல்லாம்  உப லஷணம்-
அக்நி-நீர் -காற்று -ஆகாசம் -பூமி -இவை அடைய தனக்கு விபூதியாக உடையவன் –எம்பெருமான் –
அவனுடைய விபூதி யோகம் தமக்கு பேறாய் இருக்கிறபடி –   அவனுடைய குணங்களோபாதி  
விபூதி யோகமும் தமக்கு உத்தேயமாய் இருக்கிறபடி –தனது வைகுந்த மன்னாள் –0மானாதி போல்
(மஹா நவமி சோலை போல் லீலா விபூதி போல் )ஆவது அழிவதாம் விபூதி போல் அன்றிக்கே –
ஒரு நாளும் அழியாததாய் –அவனுக்கு அசாதாரணமாய் –அந்தரங்கமாய் இருக்கும் நித்ய விபூதி உடன் ஒத்து இருக்கிறவள் –கண்ணாய் அருவினையேன் உயிராயின காவிகளே –அப்படிப் பட்டவள் பக்கலிலே வந்தவாறே –பிரதான அவயவகமாய் –என் பக்கலிலே வந்தவாறே – அசேத்யமாய் –அதாஹ்யமாய் – அழியாதாய் இருந்துள்ள ஆத்ம வஸ்துவாய் –பாதகமாம் இடத்தில் ஸ்வதந்த்ரமாய் –
கண்ணுக்கு விஷயமாய் நின்று பாதகம் ஆகா நின்றன –அரு வினையேன் –ரஷகம் ஆனவையே
பாதகமாம் படி பாபத்தை பண்ணினேன் –உயிரான காவிகளே –அவள் பக்கலிலே வந்தவாறே கண்ணாய் –(நிரூபித்தவாறே ) என் பக்கலிலே வந்தவாறே உயிராய் – இவை தான் நிரூபித்த வாறே
வடிவு சில காவிகளாய் இரா நின்றன –உயிரான காவிகளே –உயிர் தான்-கொண்டு நின்று பாதகம் ஆகுமா –

வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாள்-கண்ணாய் -பரம பதம் போல் பேர் இன்பம் வடிவு எடுத்த தலைவியின் கண் –யோகியர்க்கும்-எண்ணாய் மிளிரும் இயல்வினவாம்-யோகம் கை வந்த பரம யோகிகளுக்கும் சிந்தனைக்கு உரியன-அவர்கள் பரம் பொருளை சிந்தனை மாற்றி இவள் கண் அழகையே சிந்தனை செய்வார்கள்-அருவினையேன் உயிராயின-பிரிந்து ஆற்றாமையும் துடிக்கும் அரு வினையேன் -உயிர் போலே தரிக்க முடியாமல் பண்ணுமே –

உண்ணாது உறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும் எண்ணாய் மிளிரும் இயல்வினவாம்
அத்யசனமும் அதி நித்தரையும் யோக விரோதியாம் என்று துறந்து-யுக்தாஹார விஹாரராய்-யுக்த ஸ்வப்ந அவ போதராய்க் கொண்டு நிரந்தர த்யான தத் பரரான ஸநகாதி பரம யோகிகளுக்கும் ஹ்ருதயமாய்க் -(எண்ணாய் )கொண்டு நிரந்தர அனுபாவ்யமாய் மிளிர்ந்து தோற்றும் ஸ்வ பாவத்தை யுடையனவாகா நிற்கும்(ஆழ்வாரது கண்கள் )–எரி நீர் வளி வான் மண்ணாகிய வெம்பெருமான்
பிராணிகளுக்கு சீதோஷ்ண பரிஹார ரூபமாயும் (எரியும் நீரும் ) ஆஸ் வாஸ கரமாயும் (காற்று)
அவகாஸ ப்ரதமாயும் தாரகமாயும் யுள்ள பஞ்ச பூதங்களுக்கும் அந்தராத்மாவாய் அக் கணக்கிலே நமக்கு ஸ்வாமியான ஸர்வேஸ்வரனுடைய–தனது வைகுந்த மன்னாள் கண்ணாய்-அசாதாரணமாய்
அழிவற்ற தேசம் போலே நித்ய அநுபாவ்யை யானவளுடைய கண் என்ற பேராய்–அருவினையேன் உயிராயின–நிரந்தர அனுபவம் பண்ணப் பெறாமல் பிரிகைக்கு–அடி முடி காண ஒண்ணாத (அநாதியான -அந்தமும் இல்லாத ) பாபத்தை யுடையேனான எனக்கு முடிய ஒண்ணாத படி பிராணனாய்ப் புக்கு நில்லா நிற்பன வாயின–காவிகளே— ராக உத்தரதையாலே செங்கழுநீர்த் தடாகம் போலே இருக்கையாலே காவி என்னாலானவை--கண்ணாய் அருவினையேனு யிராயின காவிகள் எண்ணாய் மிளிரும் இயல்வினவாம்-என்று அந்வயம்–இத்தால் ஆஸ்ரிதரான அன்பருக்கு தாரகமாய்
ராகோத்தரமான ஆழ்வாருடைய ஞானமானது அசநாத்ய தீதராய் அசங்குசித ஸ்வ பாவராய் நிரந்தர அனுபவ தத் பரரான நித்ய யோகத்தை யுடைய ஸூரிகளுக்கும் நித்ய அனுபாவ்யமாய்க் கொண்டு
விளங்கித் தோற்றும் ஸ்வ பாவத்தை யுடைத்தாகா நிற்கும் என்றதாயிற்று –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம்-உண்ணாது உறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும்
பிராகிருத போகங்களால் தரியாதாராய் ப்ரக்ருதி ப்ராக்ருதங்கள் த்யாஜ்யம் என்கிற புத்தியே யன்றியே
உபாதேயமான ஆத்ம வஸ்து உத்தேச்யம் என்னும் புத்தியை யுடையராய் அவ்வாத்ம வஸ்து தான் ஸ்வ தந்திரம் என்று இருக்கை அன்றிக்கே ஆத்ம யாதாத்ம்ய ஞான பூர்வகமாக ஈஸ்வர ஞானத்தை யுடையராய் இது அவனுக்கு பிரகாரம் என்று இருக்கும் படி பரம யோகம் கை வந்து இருக்குமவர்களுக்கும்-எண்ணாய் மிளிரும் இயல்வினவாம்–அவர்களும் இக்கண்ணுக்கு இலக்கானார்கள் ஆகில் தங்களுக்கு ஸூபாஸ்ரயமான பரதத்வம் தன்னையும்
காற்கடைக் கொண்டு இத்தையே அது அது என்னும்படி பிரகாசிக்கையே ஸ்வ பாவமாக யுடையனவாய் யுள்ளன-எரி நீர் வளி வான் மண்ணாகிய-காரணமான பூத பஞ்சகங்களும் கார்ய ஜாதத்துக்கு எல்லாம் உப லக்ஷணம்-அக்னி நீர் காற்று ஆகாசம் பூமி இவை யடையத் தனக்கு விபூதியாக யுடையவன்-வெம்பெருமான்–அவனுடைய விபூதி யோகம் தனக்குப் பேறாய் இருக்கிற படி–தனது வைகுந்த மன்னாள்-மானாவிச்சோலை போலே ஆவது அழிவதாம் இவ்விபூதி போல் அன்றிக்கே ஒரு நாளும் அழியாததாய் அவனுக்கு அஸாதரணமாய் அந்தரங்கமான நித்ய விபூதியோடே ஒத்து இருந்தவள்
அவனோடே அழியாத விபூதியோடே ஒத்து இருந்துள்ளவள்–கண்ணாய் அருவினையேன் உயிராயின காவிகளே–அப்படிப்பட்டவன் பக்கலிலே வந்தவாறே பிரதான அவயவமாய் என் பக்கலிலே வந்தவாறே அச்சேத்யமாய் அதாஹ்யமாய் அழியாததாய் இருந்துள்ள ஆத்ம வஸ்துவாய் பாதகமாம் இடத்தில் ஸ்வ தந்திரமாய் நின்று பாதகமாகா நின்றன–அறு வினையேன்-ரக்ஷகமானவை தானே பாதகமாம் படி பாபத்தைப் பண்ணினேன் 

ஸ்வாபதேசம் –ஆழ்வார் ஞானத்தின் சிறப்பை பாகவதர்கள் அன்பர்களுக்கு சொல்லும் பாசுரம் –
பரமபதம் போலே அழிவற்ற -அனுபவிக்கத் தக்க ஞானம் –எங்களுக்கு மட்டும் இல்லை நிறைந்த அனுபவம் செய்யும் நித்ய ஸூரிகளுக்கும்-இன்பம் பயக்குமதாய்-யாவரும் மகிழ்ந்து சிரஸ் மேல் வைத்து கொண்டாடும் படியான ஞான வகைகளை காவி மலர்கள் என்கிறது –

ஸ்வா பதேசம்-இத்தால் ஆழ்வார் உடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை கண்டு அனுபவிக்கும் பாகவதர்களுக்கு –தேவு மற்று அறியேன் -என்னும் படி இறே இருப்பது –
அவர்கள் அதை ஆதரிக்கிறது-பகவத் சம்பந்தத்தால் இறே –அதுக்கு அடியான பகவத் விஷயத்தை அநாதரித்து –இவரை ஆதரிக்க-வேண்டும்படி இவருக்கு ஸ்ரீ வைஷ்ணத்வம்  தலை நிரம்பின படியை சொல்கிறது –சரம அவதியை-கண்டு அனுபவித்தவர்கள் பிரதம அவதியில் நில்லார்கள் இறே –
அவன் ஸ்ரீ வைஷ்ணவன் ஆகமாட்டானே

தாத்பர்யம்-ஆழ்வார் உடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீரியில் ஈடுபட்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள்-நாயகி நோக்கில் ஈடுபட்ட தலைவன் பாசுரத்தால் அருளிச் செய்கிறார்-தோழன் இந்த அளவில் இவளின் கண் அழகில் உனக்கு ஈடுபாடு கூடாது என்ன அதற்கு மறுத்து தலைவன் பேசுகிறான்-செங்கழு நீர் போல் குளிர்ந்து மணமுடைய-கண் -ஆழ்வாரது ஞானம் –இத்தைக் கொண்டே-எனக்கு பிராண தாரகம் போல் நல் ஜீவனாய் -உள்ளதே-ஸ்ரீ வைகுண்ட திவ்ய நகர் போல் அபரிச்சின்ன போக்யம் உள்ள கண்கள் இவற்றில் ஈடுபட்டது நான் மட்டும் அல்ல–நித்ய ஸூரிகளும் ––அன்ன பானாதிகளை விட்டு சம்சாரம் த்யாஜ்யம் ஸ்ரீயப்பதியே உத்தேச்யம் என்று இருக்கும் மஹா யோகிகளுக்கும் இக்கண்ணைக் கண்டதும் வேறே ஒன்றில் கண் வைக்க இயலாதே இந்தக் கண்ணை நித்தியமாக அனுபவிக்கப் பெறாத பாக்யம் இழந்தேன் என்று வருந்துவதாகச் செல்லும் பாசுரம் –

5-8-ஆரா அமுதே! ப்ரவேஸம்

ஸ்ரீ நாதமுனிகள் திருவவதாரம் -823–ஸ்ரீ கீதாச்சார்யன் தானே மனுவுக்கு அருளிச் செய்ததை மீண்டும் வெளியிட்டால் போலே அன்றோ –
திராவிட ஸ்ருதி தர்சகாய நம-திரு நாமம் ஸ்ரீ ஆராவமுத ஆழ்வாருக்கு -அகதிகளுக்கு ஒரே சரண் அன்றோ இவன் –
மகர சங்கராந்தி–ஸ்ரீ கோமள வல்லித் தாயார் – பொற்றாமரை -தேரோடு இற ங்கி திருக் கல்யாணம் –
ஸ்ரீ ஆராவமுத ஆழ்வார் -ஸ்ரீ திரு மழிசை பிரான்
ஆத்மாவுக்கு ஸ்வரூபம் அழியாமல் இருக்க ஆராவமுதம் -சரீரம் அழியாமல் இருக்கவே அமுதம் -உப்புச் சாறு –

ஸ்ரீ சிரீவரமங்கல நகரிலே எழுந்தருளியிருக்கின்ற வானமாமலை திருவடிகளிலே, வேர் அற்ற மரம் போலே வீழ்ந்து
அநந்ய கதியாக-வேறு கதி இல்லாதவராய்க் கொண்டு சரணம் புக்கார்;
இவர் அப்படிப் பெரிய ஆர்த்தியோடே சரணம் புகச் செய்தேயும் வந்து முகங்காட்டாதிருக்க;
கடலில் அமிழ்ந்துவார் அங்கே ஒரு மிதப்புப் பெற்றுத் தரிக்குமாறு போலே,
“இவ்வளவிலும் ‘வேறு ஒன்றாலே பேறு’ என்றிருத்தல்,-ஆகிஞ்சன்யம் கீழே –
மற்றொருவர் வாசலிலே சென்று கூப்பிடுதல் செய்தல் -அநந்ய கதித்வம் இதில் –
என்னும் மயக்கத்தைத் தவிர்த்தானே அன்றோ” என்று கொண்டு தரித்தார்;
தரித்த இது தான் திருக் குடந்தை யளவும் கால் நடை தந்து போகைக்கு உடலாயிற்று.

“ஆறு எனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” என்றதனைக் கடாக்ஷித்து,
‘இவ்வளவிலும்’ என்று தொடங்கி அருளிச் செய்கிறார்.
இங்கே, ‘வேறு ஒன்றாலே பேறு என்றிருத்தல், மற்றொருவர் வாசலிலே சென்று கூப்பிடுதல் செய்தல்’ என்றிருக்கையாலே,
“ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” என்பதற்கு, மேல் அருளிச் செய்த மூன்று யோசனைகளையும் தவிர,
(உபாயம் ப்ராப்யம் -க்ருஹம் –
இரண்டுமே உபாயம்
சபதம் இட்டு சொன்னது -மூன்றும் )
இன்னமும் ஒரு யோசனை உண்டு என்று தோற்றுகிறது. அதாவது,
எனக்கு உன் பாதமே உபாயமாகவும், ரக்ஷகமாகவும் தந்தாய் என்பது.
“நின் பாதமே ஆறாக” என்கையாலே வேறு ரக்ஷகங்களை நீக்குகிறது;
“நின் பாதமே சரணாக” என்கையாலே வேறு உபாயங்களை நீக்குகிறது;
ஆக, “ஆறு” என்றதனால், ஆகிஞ்சந்யமும், “சரண்” என்கையாலே, அநந்யகதித்வமும் போதரும்.
ஆகிஞ்சந்யமாவது, வேறு உபாயம் இன்மை. அநந்யகதித்வமாவது, வேறு இரக்ஷகரில்லாமை.

தரித்த இது தான் திருக் குடந்தையளவும் கால்நடை தந்து போகைக்கு உடலாயிற்று.
என் தான்? இங்கு, தம் விருப்பம் கிட்டா தொழியவும் அங்கு ஏறப் போக வேண்டுவான் என்? என்னில்,
வஸ்து ஐக்கியம் உண்டே -பிரபத்தி ஒரு தடவை தானே பண்ண வேண்டும் -விசுவாசம் குலையாதோ என்னில் –
‘ஒரு கால் சரணாகதி செய்தோம், அது பலித்தது இல்லை’ என்னா,
நாஸ்திக புத்தியாலே விசுவாசம் குலைந்து ருசியும் நெகிழுமவரன்றே;
“அடியார்களுக்காக எழுந்தருளி யிருக்கிறவன் நம் காரியம் செய்து தலைக் கட்டாமை இல்லை,
‘இன்ன இடங்களிலே செய்யக் கடவோம்’ என்று அறுதி யிடப்பட்டதா யிருக்குமே அன்றோ,
ஆன பின்பு, இங்குச் செய்யப் பார்த்திலனாகில் மற்றோர் இடத்தில் செய்கிறான்;
(ராஜா ஆசன பேதத்தாலே கார்யம் செய்யுமா போல் )
ஸ்ரீ ரெங்கம் போன்ற இடங்களில் சரண் அடைந்த கலியன் திருக் குருங்குடியிலே பேறு பெற்றாரே –

இனித் தான், ஸ்ரீ பரதாழ்வான் ஸ்ரீ பெருமாளை மீட்டுக் கொண்டு வந்து திருமுடி சூட்ட வேண்டும்’ என்று பாரித்துக் கொண்டு செல்ல.
‘பதினான்கு ஆண்டும் கழித்தல்லது மீளோம்’ என்ற ஸ்வதந்திரனே அன்றோ;
ஆகையாலே, நமக்கு நான்கு நாள் தாழ்த்ததே யாகிலும் நம் காரியம் செய்யாமை இல்லை” என்று பார்த்து,
ஸ்ரீ திருக் குடந்தையிலே சென்று புகவே நாம் விரும்பினவை அனைத்தும் கிட்டும்,
நமக்கு ஒரு குறையும் இல்லை’ என்று ஸ்ரீ திருக் குடந்தையை அடைந்தார்.

அவ்வாறு அடைய, ஸ்ரீ பரதாழ்வான் ‘இராச்சியத்துக்கு நிமித்தமானவனானேன்’ என்றதாலே ஒரு புண்பாடும்,
தாயைக் கொண்டு இராச்சியத்தை வாங்கிப் பெருமாளைக் காடேறப் போகவிட்டான்’ என்று நாட்டார் சீறுபாறு என்றிருப்பார்கள்”
என்றத்தாலே வந்ததொரு அச்சத்தையுமுடையவனாய்க் கொண்டு;
(ஆழ்வார் ப்ரவ்ருத்திகளை உபாயாந்தரம் என்று சங்கை கொள்வானோ என்ற புண்பாடும்
அன்னை ஊரார் என் சொல்வார் என்ற பயமும்
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என்று சொல்லிக் கொள்பவர் அன்றோ ஆழ்வாரும் )
நான் திருவடிகளிலே சென்று கிட்டினால்,
ஏபிஸ்ச ஸசிவை: ஸார்த்தம் ஸிரஸா யாசிதோ மயா
பிராது: ஸிஷ்யஸ்ய தாஸஸ்ய ப்ரஸாதம் கர்துமர்ஹஸி”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 101 : 12.
உடன் பிறந்தவன் அல்லனோ! சிஷ்யன் அல்லனோ! தாசன் அல்லனோ!
என் பக்கல் மலர்ந்த முகத்தராய்த் திரு அருள் செய்யாதொழிவரோ! என்று பார்த்து;

அம்பு எய்வார் படை திரட்டிக் கொண்டு போமாறு போல, திரு வயோத்தியிலுள்ளாரில் மரங்கள் அகப்பட ஆர்த்தியில்
தன்னில் குறைந்த பொருள்கள் இல்லை அன்றே, நம் ஆர்த்தி கண்டு மீண்டிலராகிலும் ஆர்த்தர் பலரையும் கண்டால்
மீளாமை இல்லை என்று பார்த்து “இந்த மந்திரிமார்களோடுங்கூட என்னால் தலையால் வணங்கி யாசிக்கப்பட்ட தேவரீர்,
பின் பிறந்தவனும் சிஷ்யனும் தாசனுமான அடியேனுக்குத் திருவருள செய்ய வேண்டும்” என்கிறபடியே,
இவன் செல்ல;

ஸ்ரீ பெருமாளும் “இராச்சிய தந்திரங்களில் குறைவு படாமல் நடத்தா நின்றாயே?
காரியங்கள் செய்யுமிடத்தில் மந்திரிகளோடு கூடிச் செய்யா நின்றாயே? என்பன போலே
இவனுக்கு இடம் அற வார்த்தைகள் கேட்டாற்போலே;

இவர் அடைந்த இடத்தில் திருக் கண்களை அலர விழித்துக் குளிர நோக்கி யருளுதல்,
திறந்து ஒரு வார்த்தை அருளிச் செய்தல், அணைத்தல் செய்யக் கண்டிலர்.
“அந்த ஸ்ரீ கிருஷ்ணன், என்னை அக்ரூரனே! என்று அருளிச் செய்வர்” என்றாற்போலே
பகைவன் சோறு உண்டு வளர்ந்தவன் மனோ ரதம் பெற்றானே அன்றோ;
(அக்ரூரரும் யாதவ வம்சம் )
அப்படியே தம்மையும் கிட்ட வந்து அணைக்கப் பெறாமையாலே மிகவும் துக்கித்தவராய்,
இனிமையாலும் ஈடுபட்டு, அழகு முதலாயினவற்றாலும் போர நொந்து,
(ஆரா அமுதம்-போக்யதை -செந்தாமரைக் கண்ணன் -ஸுந்தர்யம்
உனக்கு ஆட்பட்டும் இன்னும் உழல்வேனோ -போர நொந்து )
பால் குடிக்கும் குழந்தை தாய் பக்கலிலே கிட்ட முகம் பெறா விட்டால்
அலமந்து நோவு படுமாறு போலே, அவன் சந்நிதியிலே தளர்ந்து கிடந்து கூப்பிட்டு,
இன்னம் எத்தனைத் திரு வாசல் தட்டித் திரியக் கடவேன் என்னும் ஆர்த்தியோடே தலைக் கட்டுகிறார்.
(அநந்ய கதி ஞானம் உடையவர் அன்றோ -இவன் நித்ய சந்நிதி உள்ள வேறே திவ்ய தேசங்களைச் சொன்னவாறு )

எட்டாம் திருவாய் மொழியில் கீழ் -ஸ்ரீ வானமா மலை திருவடிகளில் அனுபவத்தை அபேக்ஷித்து அவன் தம் திருவடிகளில்
உபாய பாவத்தையும் பிரகாசிப்பிக்கக் கண்டு ஸந்துஷ்டாராய் பின்பும் அனுபவம் சித்திக்கக் காணாமையாலே அவசன்னரான இவருக்கு
ஆராவமுத ஆழ்வார் தம் வடிவு அழகை பிரகாசிப்பிக்க -அங்கே தம் அபிமதம் தலைக் கட்டிக் கொள்ளலாம் என்று நினைத்து
ஆராவமுதாழ்வாருடைய நிருபாதிக சம்பந்தத்தையும்
சம்பந்த கார்யமான அவதார உஜ்ஜ்வல்யத்தையம்
அவரை ஒழியத் தம்மை அந்நிய நிரபேஷராக்கின படியையும்
அவருடைய அபரிச்சின்ன மஹாத்ம்யத்தையும்
மஹாத்ம்ய ப்ரகாசகமான புண்டரீகாக்ஷத்வத்தையும்
நித்ய ஸூரி ஸேவ்யமான நிரதிசய போக்யத்தையும்
போக்யதா பிரகாசகமான விக்ரஹ வை லக்ஷண்யத்தையும்
விபரீதமே பலிக்கிலும் விடாதபடியான தம்முடைய அநந்ய கதித்வத்தை பிரகாசிப்பித்த படியையும்
அனுமதியையும் பிறப்பித்து அனுபவிப்பிக்கும் ஆகாரத்தையும்
ஆந்திர அனுபவ விஷயமான அதிசயித சாரஸ்யத்தையும்
அனுசந்தித்து -ஏவம் பிரகார விசிஷ்டரானவர் ஆலோக அலாபாதிகளாலே நம்மை அனுபவித்திலரே என்று
ஸூத்தி சாஷாத்கார ஸந்நிஹிதரான அவர் தம்மையே நோக்கி அத்யந்தம் ஆர்த்தராய்க் கூப்பிட்டு
எல்லா அவஸ்தையிலும் முன்பு பிரகாசிப்பித்த திருவடிகளே யல்லது உபாயம் இல்லை என்று பிரதிபத்தி பண்ணித் தலைக் கட்டுகிறார் –

ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே
–5-8-1-

முற்படக் காட்சியாய், அதன் பின்னர் அணுகி, பின்னர் ஸ்பரிசமாய், இப்படியே அன்றோ அநுபவப் பிரகாரங்கள் இருக்கின்றன;-அத்துணைக் கிரமங்களைப் பார்த்திருக்க ஒண்ணாதபடி-ஆரா அமுதே--சர்வாதிகாரமுமாய், எப்பொழுதும் உண்ணக் கூடியதாய், பிரஹ்மசரியம் முதலான வற்றினின்றும் நழுவுதலால் வரும் குற்றங்களையும் தானே போக்கக் கூடியதாயிருக்கும்.-தான் தன்னை அநுபவிக்கும் போதும் கூட்டுத் தேட வேண்டும்படி யாயிற்று ஆராமை இருக்கும்படி என்பதனைச் சொல்லியவாறாம்.-ஆரா அமுதே – இத் திருவாய்மொழியில் இவர்க்கு உண்டான ஆற்றாமைக்கெல்லாம் வித்து இச் சொல்லே ஆயிற்று.

வட தேசத்திலே லோக சாரங்க மஹாமுனிகள் வசித்துக்கொண்டிருக்க, இங்கேயுள்ள ஒருவன் அங்கு ஏறச்செல்ல, ‘பிள்ளாய்! தென்தேசத்தில் விசேஷம் என்?’ என்று கேட்க, ‘திருவாய்மொழி என்ற ஒரு பிரபந்தம் அவதரிக்க, அதனைச் சிஷ்டர்கள் மேற்கொண்டு போரக் கொண்டாடிக் கொடு போகா நின்றார்கள்’ என்ன,
அதிலே உனக்குப் போவது ஒரு பாசுரத்தைச் சொல்லிக் காணாய்’ என்ன,‘“ஆராவமுதே’” என்கிற இத்துணையே எனக்கும் போம்” என்ன,
நாராயணன் முதலான நாமங்கள் கிடக்க, இங்ஙனேயும் ஒரு பெயர் உண்டாவதே’ என்று அதனைக் காண மிக்க ஆவலுடையவராய், இச்சொல் நடையாடுகிற தேசத்து ஏறப்போவோம்’ என்று அப்பொழுதே புறப்பட்டுப் போந்தார்.

அடியேன் –-மயர்வு அற மதிநலம் அருளப் பெற்ற ஸ்வரூபத்தால் சொல்லுகிறார் அல்லர்,
இனிமைக்குத் தோற்றுப் புற்கவ்விச் சொல்லுகிறார்.-இளைய பெருமாள் -“பரவாநஸ்மி – அடியவன் ஆகிறேன்” என்றவர் “அவர் குணங்களால் கைங்கர்யம் செய்து கொண்டிருக்கிறேன்” என்றாற்போலே குணங்கள் தானே ஈர்க்கும்-

நான்’ என்று இருக்கக்கூடிய இவர் தாம் ‘அடியேன்’ என்கிறது, விஷயத்தினுடைய இனிமையின் மிகுதியே அன்றோ;-அப்படியே சரீரமும் விஷயத்திற்கு வசப்பட்டதாய் அழிந்தபடி.-சேஷத்வமே உருவமான ஆத்மாவைத் தன் வழியே இழுக்கை தவிர்ந்து
அதன் வழியே தான் ஒழுகும்படியாயிற்று விஷயத்தினுடைய இனிமை. –
ஞானியை விக்ரகத்துடன் ஆராதிக்கும் -திருமேனி ஆத்மா தத்வம் ஆனதே –சேதனம் என்றும் அசேதனம் என்றும் கூறப்படுகின்ற வேற்றுமை அற அழிக்கவல்ல உன் பக்கலிலே அன்புக்கு இருப்பிடமாகை தவிர்ந்து அன்பு தான் ஒரு வடிவு கொண்டாற்போலே இரா நின்றது என்பார் ‘நின்பால் அன்பாயே’ என்கிறார்.–கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் அன்றோ ‘உருக்குகின்ற’-அழிக்கிறவன் ‘ஆபரணங்கள்’ என்று பாராதே உருக்கி அழிக்குமாறு போலே காணும் இவனும் உருக்கி அழிக்கிறபடி.-தேசமான அணிகலனும் இவர் கை கூப்புச் செய்கையே அன்றோ.

நெடுமாலே’-எதிர்த் தலையில் அழிவு கண்ட பின்பே அன்றோ இத் தலையில் அழிவு-அவனுடைய அழிவு சொல்லும் போது இனி இவ்வடைவில் சொற்களைக் கொண்டு சொல்ல ஒண்ணாது.-மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவன்-அவனுடைய பெருமையும் இவரை அழிக்கைக்குக் காரணமாம்-பரத்வமும் நீர்மையும் உருக வைக்கிறது-என்னில் முன்னம் பாரித்து தான் முற்றப் பருகினான் –-

சீர் ஆல் செந்நெல் கவரி வீசும் – மிக்க கனத்தை யுடைத்தான செந்நெற் கதிர்களானவை திருக் கண் வளர்ந்தருளுகிற அழகைக் கண்டு-கைங்கர்யம் செய்வாரைப் போலே அசையா நிற்கும்.-சீர் – கனமும், அழகும்-ஆராவமுதாழ்வாருக்கு அமுதுபடி யாகிற சீர்மை-எம்பொழுதும் செந்நெற்கள் உள்ளன என்பார் ‘வீசும்’ என நிகழ் காலத்தாற் கூறுகிறார்.–நித்ய ஸூரிகளாய் வந்த சீர்மை

கிடந்த கிடைக்கு ஆலத்தி வழிக்க வேண்டும்படி இருத்தலின் ‘ஏரார் கோலம் திகழ’ என்கிறார்.-‘இவன் உணரில் செய்வது என்’ என்றுவயிறு பிடிக்க வேண்டி இருக்கை.
கிடந்தாய் கண்டேன் –-“சுகமாகத் தூங்குகிறவன்” என்கிறபடியே, கிடை அழகினைக் கண்களாலே காணப்பெற்றேன்,-நினைத்த பரிமாற்றம் பெற்றிலேன். என்றது, எழுந்திருத்தல், இருத்தல், உலாவுதல், ‘என் செய்தாய்’ என்று வினவுதல், அணைத்தல் செய்யப் பெற்றிலேன் என்றபடி

எம்மானே--இது நம்மது’ என்று இரா தொழியப் பெற்றேனாகில் நான் ஆறி இருக்கலாயிற்றே.-சம்பந்தத்தைக் கொண்டு என்னை இப்படி நலியலாமோ –
வடிவினைப் போன்றே சம்பந்தமும் என்னை நலியா நின்றது -ஸ்தநந்த்ய பிரஜை தாய் அறிந்தால் முலை முலை என்னுமா போலே சம்பந்த ஞானம் அன்றோ கூப்பிடப் பண்ணுகிறது –என்கிறார் –

—————

எம்மானே! என் வெள்ளை மூர்த்தி! என்னை ஆள்வானே
எம்மா உருவும் வேண்டு மாற்றால் ஆவாய்! எழிலேறே!
செம்மா கமலம் செழுநீர் மிசைக் கண் மலரும் திருக் குடந்தை
அம்மா மலர்க் கண் வளர்கின்றானே! என் நான் செய்கேனே?
–5-8-2-

எம்மானே! என் நான் செய்கேன் –-உடைமையோ! உடையவனோ உடைமையை நிர்வஹிப்பார்.-நீயே உன் காரியத்தைச் செய்து தலைக் கட்டிக் கொள்’ என்கைக்கு வெறும் நானேயாய் இருந்தேனோ.-பரதந்த்ரன் அடியேன் அன்றோ -ஸ்வா தந்த்ரன் அல்லன்-சுத்த ஸ்வரூபனாகையாலே தன் படிகளில் ஒன்றும் குறையாதபடி எனக்குத் தன் பேறாகத் தானே காட்டக் கண்டேன்.- சிறிது மயர்வு கிடக்க நீ அருளினாயாகில் நான் ஆறி இருக்கலாயிற்றே.-

என்னை ஆள்வானே –காட்டுகிறபோது தெரியக் காட்டி, பின்னர் என் வழியே யாக்கி என்னைக் கை விட்டாயோ. என்றது,-அஞ்சிறைமடநாராய்”, “மாசறு சோதி” தொடக்கமான திருவாய்மொழிகளிலுண்டான வியசனங்களையும் போக்கி, குண ஞானத்தாலே தம்மைத் தரிப்பித்துக்கொண்டு போந்த படியைத் தெரிவித்தபடி.

எம் மா உருவும் ஆவாய் –-எனக்காகவும் அடியார்கட்காகவும் நீ படும்பாடு அறிவுதியே-எவ்வகையாலும் விலக்ஷணமான விக்கிரஹங்களை மேற்கொள்ளுகின்றவனே!-பிரகிருதி சம்பந்தமில்லாத தெய்வத்தன்மை பொருந்திய -அப்ராக்ருத திவ்ய சமஸ்தானம்-திருமேனியாக இருக்கை.-வேண்டுமாற்றால் – “தனக்கு வேண்டு உருக்கொண்டு” என்கிறபடியே, இச்சையாலே என்னுதல்.-அடியார்கள் வேண்டுமாற்றால் என்னுதல்;
“தமருகந்ததெவ்வுருவம் அவ்வுருவம் தானே” -முதல் திருவந். 44.-என்னக்கடவதன்றோ.
அன்றிக்கே,-‘எ மா உருவும் ஆவாய்’ என்று கொண்டு-“எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய்” என்கிறபடியே, அடியார்களைக் காக்கும் பொருட்டு நீ கொள்ளாத வடிவு உண்டோ என்னுதல்.
எல்லா வடிவங்களும் அவன் கொண்டவையாகையாலே சிலாக்கியமாயிருக்கிறபடி;

கர்மம் அடியாக இவன் பிறக்குமாறு போலே அன்றோ அநுக்கிரஹம் அடியாக அவன் பிறக்கும்படி என்பார்-“வேண்டுமாற்றால் ஆவாய்” என்கிறார்.
இருவர்க்கும் பிறவி ஒக்கும். இவனுக்குக் கர்மங்கள் அழியப் பிறவி நீங்கும்,
இவன் கர்மங்கள் அவன் காலிலே குனியப் போம்; அவனுக்கு நித்தியமாகச் செல்லா நிற்கும்.-இனி, அவனுக்குக் கர்மம் என்னப் பார்க்கிறது, அநுக்கிரஹத்தை அன்றோ, அதுதானும் நித்தியமே அன்றோ அவனுக்கு.-இவனுக்கு இவன் தன் அளவிலே பிறக்க அமையும், அவனுக்கு எல்லார்க்குமாகப் பிறக்க வேணுமே.-இவனுக்குக் கர்மங்காரணமாக வந்ததாகையாலே தன் பொருட்டேயாயிருக்கும், அவனுக்கு அநுக்கிரஹம் காரணமாக வந்ததாகையாலே பிறர் பொருட்டேயாயிருக்கும்.-எழில் ஏறே ––பண்டு இல்லாத எழிலும் உண்டாயிருக்கை.-கர்மத்தால் பிறக்கில் அன்றோ நிறக்கேடாவது. பல பிறப்பாய் ஒளி வரும் முழுநலமே அன்றோ.பட்டி மேய்ந்த ஓர் காரேறு – என்கிறபடியே, ‘பிறக்கப் பெற்றோம்’ என்னும் மேனாணிப்பை யுடையவனாயிருக்கும்.-ஆத்மாநம் மாநுஷம் மந்யே ராமம் தசரதாத்மஜம்-அஹம்வோ பாந்தவோ ஜாதோ-சூழ்த்துக் – ஆணையிட்டுக் கொடுக்கும்படி.

என் நான் செய்கேனே –-இவை இரண்டும் மலர்ந்தால் அல்லது தரியாதிருக்கிற நான் என் செய்கேன்? திருக் குடந்தையிலே தாமரைகள் அலர்ந்தால் தேனைக் குடிக்கக் கூடிய வண்டுகள் தேனைக் குடித்துக் களியா நின்றன,
இத் தாமரைகள் அலர்ந்தால் தேனைக் குடிக்கக் கூடிய வண்டு இங்ஙனே பட்டினி கிடந்து போமித்தனையோ! –-தெய்வ வண்டு அன்றோ
‘இக் கூப்பீடு உருவச் செல்லும்’ என்று இருக்கிறாயோ, சென்றற்றது கண்டாய்.
‘இவை ஒழிய -திருக் கண்கள் கடாஷம் ஒழிய -மது பானம் செய்யோம்’ என்கை யன்றோ
இவர்க்கு இங்ஙன் பட வேண்டுகிறது.
இனி, இவை அலர்தலாவது, விசேஷ கடாக்ஷம் பண்ணுகை காணும்.-அவன் கண் விழியாத போது இவர் கண் விழிக்க மாட்டாரே.

—————–

என்னான்  செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3-

என்மேலே விட்டிருக்கிறாயோ? பிறர் மேலே விட்டிருக்கிறாயோ? நீயே செய்யக் கடவதாக நினைத்திருக்கிறாயோ?-என் நான் செய்கேன்’ என்றதனால் ‘நான் செய்வது எது’ என்று கேட்கிறார் அல்லர்,-என் நான் செய்கேன்” என்றது, அநுவாதமன்று, வினாவுமன்று;
க்ஷேபோக்தியாய், அஜ்ஞனாய் அசக்தனான நான் என்ன நான் செய்து தலைக்கட்டுவதாக
நினைத்திருக்கின்றவற்றுக்கும் எனக்கும் என்ன சேர்த்தி உண்டு என்கிறார்.-“என் நான் செய்கேன்’-என்றவிடத்தில் இம் மூன்றும் உண்டு” என்ற ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூக்தி 

‘யாரே களை கண்’ என்றதனால்,-அமிழ்ந்துகிறார் அமிழ்ந்துகிறாரை எடுக்கவோ?
ஒருவருக்கு ஒருவர் உணர்த்திக்கொள்வதற்கும் ஆள் அல்லாதவர்கள்-என் காரியம் செய்யவோ? -நெறி காட்டி நீக்குதியோ

என் நான்செய்கேன் யாரே களைகண் என்னை என் செய்கின்றாய் –-என்னை அறியாயோ!
பிறரை அறியாயோ!-உன்னை அறியாயோ-என்னை நானாகவன்றோ புத்தி பண்ணி இருக்கிறது.-ஆக, “என் நான் செய்கேன், யாரே களைகண், என்னை என் செய்கின்றாய்” என்ற இம் மூன்றாலும், உன் அபேக்ஷை ஒழிய, முகங்காட்டாமைக்கு வேறு காரணம் இல்லை- இம் மூன்றாலும், ஆகிஞ்சந்ய அநந்ய கதித்வங்களும், அவனே ரக்ஷகன் என்னுமதுவும் சொல்லப் படுகின்றன 

உபாயாந்தரம் வேண்டாம் -என் நலம் நீ தேடுவதே உக்தம் –-உபாயம் தன்னைப் பொறுக்கும் -உபாயாந்தரம் இரண்டையும் பொறுக்கும் -பிரபத்தி எதையும் பொறாதே –‘யாவையாலும்’ என்னாமல், ‘யாவராலும்’ என்கிறது உபாய பாவம் ஒரு சேதனனாலே என்றிருக்கையாலே. பெறுவது உன்னையே யாகிலும் உன்னாலே பெறுமன்று வேண்டுவன்,-என்னாலும் பிறராலும் பெறும் உன்னையும் வேண்டேன்-காலன் கொண்டு மோதிரம் இடுமாறு போலே
ஸ்வரூப விரோதியானது எனக்கு வேண்டாம்.

‘உன்னால் அல்லால்’ என்கிற இதனை, உபேய விஷயமாக்கி,-‘உன்னை ஒழியமற்றென்றால் எனக்கு ஒருகுறை இல்லை’ என்று சொல்லுவாருமுளர்.

கன் ஆர் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய்–இவருடைய உபாயம் அரண் செய்து கிடக்கிறபடி. ‘அவனே உபாயமும் உபேயமும்’ என்று அறுதியிட்டவர்கள்-அத்தலையில் உண்டான பரிவாலே அவனைக் காக்கை பணியே அன்றோ.

உன தாள் பிடித்தே செலக் காணே--உன் திருவடிகளையே பெற்றுச் செல்லும்படி பார்த்தருள வேண்டும்.-காற்கூறும் விடாதபடி பார்த்தருள வேண்டும்.‘ஒன்றும் குறை வேண்டேன்’ என்ற பின்னர், வந்து குறை நிரப்பக் கண்டிலர்;
இனி அநுபவம் பெற்றபோது பெற, ‘உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்’ என்கிற இந்த உறுதிகுலையாதபடி பார்த்தருள வேண்டும் என்கிறார்.
அடிவிடில் உறுதி குலையுமே, அடியே பிடித்து ஜீவித்தவர் அதனை விடாரே இப்போதாக. அத்யவசாயம் இது,-ருசியில் வந்தால் பரபக்தியை யுடையவர், விளம்பத்துக்குக் காரணம் என்? என்னில்,-பக்தி விபாகத்துக்காகவும், இவருடைய பிரேமம் வழிந்த சொல்லால் நாட்டினைத் திருத்துகைக்காகவும்.-

————————-

செலக் காண்கிற்பார் காணு மளவும் செல்லும் கீர்த்தியாய்!
உலப்பிலானே! எல்லா உலகு முடைய ஒருமூர்த்தி!
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான் நான்
அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே.
–5-8-4-

எல்லாவுலகுமுடைய ஒரு மூர்த்தி” என்பதற்கு, மூன்று வகையாகப் பொருள் -“மூர்த்தி” என்பது விக்கிரஹமாய், அதனாலே அழகினை விவக்ஷித்து, வடிவழகைக் காட்டி எல்லா உயிர்களையும் காற்கீழே இட்டுக் கொள்ளக் கூடியவனே!-அழகைக் கொண்டே நாதன் ஆனவன் –மூர்த்தி’ என்ற சொல்லானது, விக்கிரஹத்துக்கும் பெயராய், ஐஸ்வரியத்துக்கும் பெயராய் இருக்கும்.-செல்வந்தர் என்றபடி-அப்போது, இவனே எல்லா உலகங்களுக்கும் சேஷி-ர்வாஹகனாய் –ஒப்பற்றவனான –சர்வேச்வரன்

நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்--நீ ஸ்வரூபங்களால் வேறுபட்டவனாய்க் கொண்டு அங்கே இருந்தாயாகில் நான் ஆறி இரேனோ,-உன்னால் அல்லது செல்லாதாருடைய தேசத்தை விரும்பிப் படுகாடு கிடவா நின்றாய்,-கிரமப் பிராப்தி பற்றாதபடி அன்பு செலுத்தியிருப்பவர்களாதலின் ‘நலத்தால் மிக்கார்’ என்கிறது.-உன்னைக் காண்பான் நான்-
ஸ்ரீ வைகுண்டம் கலவிருக்கையாக இருக்க, அடியார்களை விடமாட்டாதே திருக் குடந்தையில் திருக் கண் வளர்ந்தருளுகிற உன்னை,-மிக்க காதலையுடைய நான், அத்தலை இத் தலையாய்க் காண ஆசைப்பட்டு அலமாவா நின்றேன்.-உன்னைக் காண்பான் நான்-
காண்கிறவன் நான் அன்றோ, காண்கிறது உன்னை அன்றோ; ஆன பின்னர், எங்ஙனே ஆறியிருக்கும்படி.-உன்னை –-மேலே கூறிய –ஆராவமுதே –மூர்த்தி –இரண்டு இனிமையும் உண்டே –

உன்னை’ என்னா நிற்கச் செய்தே ‘ஆகாசத்தை நோக்கி’ என்பான் என்? என்னில்,
‘அலப்பாய்’ என்றாரே அன்றோ, –கலக்கத்தின் காரியம் இருக்கிறபடி.
விஷயம் அண்மையில் இருக்கச்செய்தே ஆகாசத்தைப் பார்க்கிறது. நினைத்த பரிமாற்றம் பெறாமையாலே.-ஸ்ரீகஜேந்திராழ்வானுக்கு வந்து தோற்றினாற் போலே தம் தசையைப் பார்த்துத் தோற்றுகிறானோ’ என்று பார்த்து.-இனிமையையுடைய உன்னை-ஆகாசத்தை நோக்கி என்பதற்கு, என்னுடைய நிராலம்பநதையைப் பார்த்து” என்று ஆண்டான் அருளிச் செய்வர்.
அன்றிக்கே,-வயோதிகரான தசரத சக்கரவர்த்தி அப்படியே வெம்மை தோன்ற பெருமூச்சு விட்டு ஆகாசத்தை நோக்கிய கண்களை யுடையவராய்த் துக்கத்தால் பீடிக்கப்பட்டவன் போலக் கதறினார்” என்று கொண்டு, கண்கள் இலக்கில் தைக்க மாட்டாதபடியாயிற்றுச் சென்றற்றபடி என்னுதல்
“ததைவ உஷ்ணம் விநிஸ்வஸ்ய விருத்தோ தசரதோ ந்ருப: விலலாப ஆர்த்தவத் துக்காத் ககநாஸக்தலோசந:”-ஸ்ரீராமா. அயோத். 13 : 16.-இது, கைகேசின் வார்த்தையைக் கேட்ட தசரதனது துக்கம்.

அழுவன் தொழுவன்-உபாசகர்கள் செய்யுமதனையும் செய்யா நின்றேன்,-பிரபந்நர்கள் செய்யுமதனையும் செய்யா நின்றேன்.-சபலர் செய்யுமதனையும் செய்யா நின்றேன்,-விரக்தர் செய்யுமதனையும் செய்யா நின்றேன்.

—————-

அழுவன் தொழுவன் ஆடிக் காண்பான் பாடி அலற்றுவன்
தழுவல் வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன்
செழு வொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்! செந்தாமரைக் கண்ணா!
தொழுவனேனை உனதாள் சேரும் வகையே சூழ்கண்டாய்.
–5-8-5-

அழுவன் –-குழந்தைகள் செய்வதனையும் செய்யா நின்றேன்.-“மற்றவள் தன் அருள் நினைந்து அழுங்குழவியதுவே போன்றிருந்தேன்” என்னக் கடவதன்றோ-.தொழுவன் –
வேதாந்த ஞானமுடையார் செய்வதனையும் செய்யா நின்றேன்“அஞ்சலி: பரமா முத்ராஆடிக் காண்பன் – இத்தனை சோறு இடுகிறோம், ஆட வல்லையோ’ என்றால், கலியர் -பசியர்-ஆடுமாறு போலே ஆடியும் பார்ப்பன்.-என் பட்டால் பெறலாம்’ என்று அறியாரே. —–பாடி அலற்றுவன் – காதலால் வழிந்த சொல் பாட்டாய், அது தானும் அடைவு கெடக் கூப்பிடுகை, அலற்றுகை.

தழு வல் வினையால் –-இப்படிப் பட்டாலும் காண ஒண்ணாதே அன்றோ -‘உடன் வந்தியான-வர்த்தியான- வல்வினை.-என்னைத் தழுவி விடாதே நிற்கிற காதலாகிற பிரபலமான பாவத்தாலே.-பக்தியை, பாவம் என்கிறது,வேண்டாததைக் கொடுப்பது பாபம் ஆகையாலே.
வாராயோ என்றார்க்கு-சென்றேன் என் வல் வினையால் –போலே –சத்ருக்னன் அநக போலே –

செந்தாமரைக் கண்ணா
1-கையிலே நிதி உண்டாயிருக்க வறியர்க்கு-ஆர்த்தருக்கு- இடாதாரைப் போலே.
2-வேறு முகத்தாலே -சம்பந்தத்தாலே -என் ஜீவனமாய்க் கிடக்கிறாய் இல்லை,
3-என் ஜீவனம் ஒருமுகம் -ஒரு லஷ்யம்-செய்து கிடக்கிற தன்றோ.

தம்முடைய ஆற்றாமை பேற்றுக்குக் காரணம் அன்றிக்கே, அது பிரகிருதியாய்,-ஸ்வரூபம் – ‘அவனாலே பேறு’ என்று இருக்கிறபடி.-வேறு பிரயோஜனங்களை விரும்பாதார் திறத்தில் காரிய சிந்தையும் அவனதாக இருக்கிறபடியைத் தெரிவித்தபடி.-தேக யாத்ரை கர்மாதீனம் -ஆத்மா யாத்ரை கிருபாதீனம் –த்ருஷ்டம் அத்ருஷ்டம் இரண்டுக்கும் நமக்கு பொறுப்பு இல்லையே-கைங்கர்யத்திலே நாம் கண் வைக்க வேண்டும் –

——————–

களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது
இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே
.–5-8-8-

களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் – நீ உன் காரியத்தைச் செய்யிலும் செய், தவிரிலும் தவிர்வாய், நான் குறைவற்றேன், -ரஷணம்-அவன் கார்யம் தானே“நீயே உபாயமாக எனக்கு ஆவாய்” என்கிற அம்சத்தில் குறையில்லை;-அறிவிப்பே அமையும் –என்னுடைய ரக்ஷணத்துக்காக அன்றோ இக்கிடை-களையாதொழிகைக்குச் சொல்லலாம் கண்ணழிவு உண்டோ?-பரிகரம் இல்லை என்னப் போமோ;-நேமிப்படையாய்-இனிப் படை திரட்ட வேண்டும்’ என்னும் கண்ணழிவு உண்டோ?-தொழுவித்துக் கொள்ளும் கைக்கு பரிகரம் உண்டு -சங்கு சக்கரம் ஏந்தும் கையான் –தொழும் கைக்கு அஞ்சலி பரிகரம் உண்டே-வளைவாய்-உன் கையில் ஆயுதத்துக்கு வாய் இல்லாத இடம் உண்டோ, அது வாய் படைத்த பிரயோஜனம் பெற வேண்டாவோ? ‘’ –மா ஸூ ச சொல்ல வேண்டாமோ

குடந்தைக் கிடந்தாய் மா மாயா – சக்தி வைகல்யம் சொல்ல ஒண்ணாது -ஸூ லபன் அன்று என்ன ஒண்ணாது -ருசியுதபாதகன் அன்று என்ன ஒண்ணாது-திருக் குடந்தையிலே வந்து ஆச்சரியமான அழகோடே திருக்கண் வளர்ந்தருளுகிறது அடியார்களுக்காக அன்றோ. நீ “மாம்” என்றதன் பின் இவ்வருகுள்ள ஏற்றமெல்லாம் பாராய். இதனால், அவதார தசையிலும் அர்ச்சாவதாரம் சுலபம் என்றபடி.-இளையாது உன தாள் ஒருங்கப் பிடித்துப் போத நீ இசை – அபேக்ஷிதம் பெற்றிலேனேயாகிலும், நான் விரும்பியது சித்திக்கும்படி உன் திருவடிகளைப் பற்றின பற்று நெகிழாமற் பண்ணி அருளவேண்டும்.-அநுபவம் கிடையாமையாலே, ‘அதற்கு அடியான உபாய அத்யவசாயமும் குலைகிறதோ’ என்று அஞ்சி, இது குலையாமல் பார்த்தருள வேண்டும் என்கிறார். ஒருங்க – ஒரு படிப்பட.-

———

இசைவித் தென்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே!
அசைவில் அமரர் தலைவர் தலைவா! ஆதிப் பெரு மூர்த்தி!
திசைவில் வீசும் செழுமா மணிகள் சேரும் திருக்குடந்தை
அசைவில் உலகம் பரவக் கிடந்தாய்! காண வாராயே.–
5-8-9-

என்னை இசைவித்து – நெடுநாள் விமுகனாய் நித்திய சம்சாரிகளுக்கும் இவ்வருகாயிருக்கிற என்னை அடிமையிலே இசைவித்து.-இசையாத என்னை இசைவித்த அருமை வேணுமோ இசைந்திருந்த நீ காரியம் செய்கைக்கு.–தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சினை வஞ்சித்து -எதிர் சூழல் புக்கு -ஒருவனை வளைக்க ஊரை வளைப்பாரைப் போலே –-உன் தாள் இணைக்கீழ் இருத்தும் – நித்தியஸூரிகள் அடிமை செய்கின்ற உன் திருவடிகளிலே இருத்தினவனே!-சாக்கியம் கற்றோம் -இத்யாதி -பரகு பரகு என்று திரியாதபடி தன் திருவடிகளிலே விஷயமாம்படி செய்யுமவன் என்கை.
நிழலும் அடிதாறும் ஆனோம்” என்கிறபடியே, மிதி அடியாம்படி ஸ்ரீசடகோபன் ஆக்கி-அவன் இசைவிக்க வேண்டின சம்பந்தம் சொல்லுகிறது.-அசைவு இல் அமரர் தலைவா –குறைதல் விரிதல் இல்லாமல் எப்பொழுதும் ஒரே தன்மைத்தான ஞானத்தை யுடையவர்கள்-ஆதிப் பெரு மூர்த்தி--இவ் வருகுள்ளாருடையவும் சத்தைக்குக் காரணமாக இருப்பவனே!-மூர்த்தி – ஐஸ்வர்யம் உடைய ஸ்வாமி.

அசைவு இல் உலகம் பரவக் கிடந்தாய் – உலகமானது வருத்தம் அற்று அடையும்படி கிடந்தாய்.-வருத்தம் அறுதலாவது, கண்களால் காண முடியாதவனை நாம் எங்கே அடையப் போகிறோம் என்கிற வருத்தம் தீர்தல்.-அன்றிக்கே, அசைவில்லாத உலகமான நித்திய விபூதியிலுள்ள நித்தியசூரிகளும் வந்து அடையும்படி கிடந்தாய் என்னுதல்.
அன்றிக்கே, அசைவுண்டு – இடம் வலம் கொள்ளுகை, அதனைக் கண்டு உலகமானது பரவும் படி கிடந்தாய் என்னுதல்.
ஆக சத்தையை நோக்கி, மேலுள்ளனவற்றை இவர்கள் தாமே நிர்வஹித்துக் கொள்ள இருக்கை அன்றிக்கே,-மேலுள்ளனவற்றையும் தானே செய்வானாக நினைத்து வந்து கிடக்கிறபடியைத் தெரிவித்தபடி
கிடந்தாய் காண வாராய் – திருக்கண் வளர்ந்தருளுகின்ற அழகினைக் கண்டு அநுபவித்தேன், இனி நடையழகு கண்டு நான் வாழும்படி வரவேணும்.
செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை என்பதற்கு, -புருஷ ரத்னங்கள் ––‘ஆராவமுதாழ்வார், திருமழிசைப்பிரான் போல்வார் புருஷ ரத்நங்கள் சேரும் திருக்குடந்தை’ என்று நிர்வஹிப்பர்கள்.-

——————

வாரா அருவாய் வரும் என் மாயா! மாயா மூர்த்தியாய்!
ஆரா வமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்!
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை
ஊராய்! உனக் காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?–
5-8-10-

வாராஅருவாய்--வாராத அருவாய். என்றது, புறத்திலே கண்களாலே கண்டு அநுபவிக்கலாம்படி வாராத அரூபிப் பொருளாய் என்றபடி.-நம் சம்ப்ரதாயம் -அரூபமும் ஒரு வகை ரூபம் தானே -சர்வசக்தன்-அருவாய் வரும் என் மாயா –மறந்து பிழைக்க ஒண்ணாதபடி அகவாயிலே அருவாய்க் கொண்டு பிரகாசிக்கின்ற ஆச்சரியத்தை யுடையவனே!-அரு என்று ஆத்மாவாய், அகவாயிலே தாரகனாய்க்கொண்டு என்றபடி.
மாயா மூர்த்தியாய் – நித்தியமான திவ்விய மங்கள விக்கிரஹத்தை யுடையவனே! 

உன்னை அநுபவிப்பதற்குத் தடையாக வுள்ள கருமங்களைப் போக்குவித்து,
‘அடியேன் ஆவியகமே தித்திப்பாய்’ என்னும்படி புகுர நிறுத்தினவனே!-“தீர்ப்பாரை யாம் இனி” என்று திருவாய்மொழியில் கூறிய வினைகள் தொடக்கமானவற்றைப் போக்கி
என்னை அடிமை கொண்டாய்-திருக்குடந்தை ஊராய் –-என்னை அடிமை கொள்ளுகைக்குத் திருக்குடந்தையிலே வந்து அண்மையில் இருப்பவனே! என்றது,-நான் கிட்டாத அம்சத்துக்கு நீ கிட்ட வந்து கிடக்கிறவனே! என்றபடி.-நீ இருக்கிற பரமபதத்தே நான் கிட்ட வேண்டும்படி யாயிருக்க, நான் இருக்கிற இடத்திலே நீ கிட்ட வந்து கிடக்கிறவனே-பர வ்யூஹ விபவங்களை-வ்யாவர்த்திக்கிறது ––உனக்கு ஆட்பட்டும் – சம்சாரிகளை அநுபவிப்பிக்க வந்து கிடக்கிற உனக்கு ஆட்பட்டும்.-அடியேன் – யாருடைய வஸ்து இங்ஙனே அலமந்து திரிகிறது.-இன்னம் உழல்வேனோ--என்னுடைய முயற்சிகள் எல்லாவற்றையும் உன் திருவடிகளிலே பொகட்டு, நீ செய்து தலைக் கட்டக் கடவையாக நினைத்திருக்கிற நான், இன்னம் எத்தனை திருப்பதிகள் புக்குத் தட்டித் திரியக் கடவேன் –

——————

உழலை என்பில் பேய்ச்சி முலை யூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே.
–5-8-11-

திருக்குழல் ஓசையிற்காட்டிலும் விஞ்சி, கேட்டார் நோவுபடும்படியாக இருக்கிற ஒப்பற்ற
ஆயிரம் திருவாய் மொழியில் இப்பத்தையும், மரங்கள் நின்று மதுதாரைகள் பாய்தல் அன்றோ அங்கு,-மரங்களும் இரங்கும் வகை இங்கு; இனி, நாம் இரங்குகிற இது தன்னேற்றமே அன்றோ இங்குத்தைக்கு;-ஆதலின், ‘குழலின் மலிய’ என்கிறது.

அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன் பாடி அலற்றுவன்” என்பதே அன்றோ இவர் சொன்ன ஆற்றாமையோடே சொல்ல வல்லாரை-இது கற்றாரை எம்பெருமானும் ஸ்ரீவைஷ்ணவர்களும் மேல் விழுந்து இனியராகக் கொள்ளுவர்கள்–மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே.–தங்கள் மௌக்த்யம் தீர்ந்து பாவ வ்ருத்தியுடன் சொல்ல வல்லவர்கள்-மான் போலே இருக்கிற நோக்கையுடைய மதிமுக மடந்தையரான திவ்ய அப்சரஸ் ஸூக்களுக்கு- ப்ரஹ்ம அலங்கார முகத்தாலே கமநீயராம்படி ஆதரிக்கப்படுவர்கள்
மானேய் நோக்கியர்க்குக் காமுகரைப் போலே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஆதரணீயர் என்று த்ருஷ்டாந்த அபிப்ராயமாகவும் சொல்லுவர்–அவர்களுக்குப் போல்’ என்ற ஒரு தொடர் இங்குக் கண்டிலோமே! என்னில், முற்றுவமை என்ற ஒரு இலக்கணம் இருக்கிறபடி.-உவமை புக்க இடத்தே உபமேயமும் வரக்கடவது. ““தாவி வையங்கொண்ட தடந் தாமரைகள்” என்னா நின்றதே அன்றோ.-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -65-கற்றுப் பிணை மலர்க் கண்ணின் குலம் வென்று -நோற்ற நோன்பு -5-7-

March 1, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

இதுவும் அடுத்த பாசுரமும் கிளவித் தலைவனின் பேச்சு-தலைவியின் கண் அழகு ஸ்லாகித்து பேசும் பாசுரம் இது-அடுத்து இதில் இவ்வளவு ஈடு பாடு கூடாது என்று கழன்று பாங்கன் பேச-அத்தை மறுத்துப் பேசுவது -ஆழ்வாரது ஞானத்தின் சீர்மையைச் சொன்னபடி-நல்லார் நவில் குருகூரான் அன்றோஇந்த இரண்டுக்கும் நோற்ற நோன்பிலேன் ஆகிஞ்சன்யம் சொல்லும் -உபாயாந்தர சம்பந்தம் இல்லை -ஆறு எனக்கு நின் பாதமே சரணம் அநந்ய கதித்வம் சொல்லும் ஆராவமுது விவரணம் உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் உனக்கு ஆட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ –பதிகங்களும் அடுத்து அடுத்து உள்ளன –ஆழ்வார் ஞானம் –அவன் திருவடியே சரணம் என்று இருந்தும் நமக்கு உபதேசித்தும் அருளிச் செய்த -பாசுரங்கள் இவை-இதுவே புகல் இப் பாசுரம் -வேறே கிஞ்சித்தும் இல்லை-இத்தை விட்டால் வேறே இல்லை அடுத்த பாசுரம் –ஓரோ கருமம் உற்று -உன்னை விட்டு ஒன்றும் ஆற்றகில்லேன் செய்த வேள்வியர் -அங்கு போல்-காதுடன் உசாவி -போதயந்த பரஸ்பரம் -சாஸ்திரம் கேட்டு ஞானி காதுகள் தானே பேசித்தான் ஞானம் வளரும் –செவி அளவு நீண்டு என்றுமாம் –1-கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று-உள்ள கண்கள்–2-ஒரோ கரும முற்றுப் பயின்று செவியொடு உசாவி -உள்ள கண்கள்–3-உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ் உள்ள கண்கள்–4-உற்றமுறாதும் மிளிர்ந்து உள்ள கண்கள் -யெம்மை உண்கின்றவே -என்றவாறு-

அவதாரிகை தலை மகள் நோக்கி வீடுபட்ட தலைமகன் -அக் கண்கள்  தனக்கு பாதகமானபடியை
பாங்கனுக்குச் சொல்லுகிறான் –தலைவி நோக்கின் வாசி கண்டு தலைவன் குறிப்பறிந்து உரைத்தல் –
ஆழ்வாருடைய ஞான வைபவத்தில் ஈடுபட்ட அன்பர் பாசுரத்தை நாயகியின் நோக்கில் அகப்பட்டு உரைத்த நாயகன் பேச்சாலே அருளிச் செய்கிறார்

இப்படி இவ்வாழ்வாருக்கு பகவத் விஷயத்திலே-எண்ணம் புகுந்து –திரு விருத்தம் -63-என்கிறபடியே
மானஸ அனுபவம் நடக்கிற படியும்-கருக்காய் கடிப்பவர் போல் –திரு விருத்தம் -64-என்று பூர்ண அனுபவம் பெறாமையால் யுண்டான அதிருப்தி நடக்கிற படியையும் கண்டு-(உற்றும் -எண்ணம் புகுந்தது படி -மானஸ அனுபவம்-உறாததும் -கனி இருக்க காய் -உண்ட பூர்ண பாஹ்ய அனுபவம் கிடைக்காமல்)இந்த உபய ஆகார விசிஷ்டமான இவருடைய ஞானத்திலே (கண்ணிலே ) அன்பர் அகப்பட்டு உரைத்த பாசுரத்தை–தலைவி நோக்கின் வாசி கண்டு தலைவன் குறித்து ( விரித்து )யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-அவதாரிகை-தலைமகள் நோக்கிலே ஈடுபட்ட தலைமகன் ஆக்கங்கள் தனக்கு பாதகம் ஆகிறபடியைப் பாங்கனுக்குச் சொல்லுகிறான்

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்–அவதாரிகை-வண்ணம் சிவத்தில் அவள் நோக்கில் அவனுக்கு அகப்பட்ட தலைமகன் அவன் நோக்கின் வாசியை-செங்கண் சிறுச் சிறிதே -திருப்பாவை -22-
என் மேல் செய்த படியைக் கண்டு நாயகன் கருத்து அறிந்த தாயாருக்கும் தோழிமார்க்கும் உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் இதில்

கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று ஒரோ கரும
முற்றுப் பயின்று செவியொடு உசாவி உலகமெல்லாம்
முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்
உற்றமுறாதும் மிளிர்ந்த கண்ணா யெம்மை உண்கின்றவே
–65 –தலைவியின் கண்கள் கவர்ந்ததைத் தலைவன் கூறல் –

நோற்ற நோன்பாதி யிலேன் உன் தனை விட்டாற்ற கில்லேன்
பேற்றுக்கு உபாயம் உன் தன் பேர் அருளே -சாற்றுகின்றேன்
இங்கு என்னிலை (இது) என்னும் எழில் மாறன் சொல் வல்லார்
அங்கு அமரர்க்கு ஆராவமுது
—-47–அப்ரீதியாலே அனுகரித்து தரிக்க வேண்டும்படி அபிநிவேசம் அதிசயித்து செல்லா நிற்கச் செய்தேயும் ஸ்வ அபிமதம் பெறாமையாலே அவசன்னராய்-இப்படி அனுபவ ருசி ரூபமான தம் அபிநிவேசத்தை சாதனமாகக் கருதி அது முற்றினவாறே கார்யம் செய்கிறோம் என்று ஸ்ரீ ஈஸ்வரன் நினைத்து இருந்தானாகா கொண்டு பேற்றுக்கு உறுப்பாக சாஸ்திர சித்தமான கர்மாத் யுபாயங்களிலே-தமக்கு மறந்தும் அந்வயம் இல்லாமையை சொல்லிக் கொண்டு
அவன் அடியிலே காட்டின உபாயம் ஒழிய-(சிலேடை -பாட்டுக்கு அடி -திருவடி) வேறு ஒரு உபாயம் இல்லை -என்று சம்சாரி சம்ரஷண அர்த்தமாக ஸ்ரீ பிராட்டிமாரோடும்-ஸ்ரீ நித்ய பரிகரத்தோடும் கூட ஸ்ரீ வர மங்கையிலே வந்து எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ வான மா மலை திருவடிகளிலே-வேர் அற்ற மரம் போலே புகல் அற்று விழுந்து சரணம் புகுகிற-நோற்ற நோன்பில் – அர்த்தத்தை-அருளிச் செய்கிறார்
நோற்ற நோன்பாதியிலேன்-என்று தொடங்கி -என்கை-சேஷத்வ பாரதந்த்ர்யங்கள் ஆகிற ஆத்ம பூஷணத்தாலே அபிராமராய் இருக்கிற ஸ்ரீ ஆழ்வார் உடைய வுபாய நிஷ்கர்ஷகமான இத் திருவாய் மொழியை அப்யசிக்க வல்லார் –அவ்விடத்தில்- அளப்பரிய ஆராமுதை அனுபவிக்கிற ஸ்ரீ நித்ய ஸூரிகளுக்கு நித்ய அபூர்வமான அம்ருதமாகப் பெறுவார்

கற்றுப் பிணை மலர் –கன்றான மான் –முக்தமான மானுடைய கண் –மலர்க் கண் –மலர் போல் இருக்கிற கண் என்னுதல் –விகசிதமான கண் என்னுதல் –குலம் வென்று –அஜ் ஜாதியாக வென்று–ஒரோ கரும முற்றுப் பயின்றுஒரோ கார்யத்திலே உற்று –அதிலே நெருங்கி –அதை செவியொடு உசாவி –சர்வ விஷயமாக ஓர் இடத்திலும் பற்று இன்றிக்கே இராமே –ஒன்றிலே துணிந்து –அதிலே நெருக்கி –அத்தை தேசிகரோடே-போத யந்த பரஸ்பரம் -பண்ணுவாரைப் போலே- இவனையே ச விஷயமாக (விசேஷமாக )கடாஷிப்பது –இவன் பார்த்தவாறே கண்ணை மாற வைப்பதா-இருந்தபடி –யான் நோக்கும் காலைநிலை நோக்கும் நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும் (திருக்குறள்) -என்கிறபடியே –உலகம் எல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்சர்வ ரஷகனாவன் திருவடிகளில் இருந்து –அவன் எல்லைக்குள்ளே இருந்ததாயிற்று பாதகம் ஆகிறது –உற்றாம் உறாது மிளிர்ந்த –உற்றும் உறாதும் மிளிர்ந்த மாறுபாடுருவும்படி இவனை நோக்குவது –அந் நோக்கிலே பரவசனாய் –இவன் பார்த்தவாறே அந் நோக்கை மாற வைப்பதாக கொண்டு மிளிரா நின்றுள்ள –கண்ணா யெம்மை உண்கின்றவே –கண் என்கிற வ்யபதேசத்தாலே –ஒரு பாதக பதார்த்தம் என்னை நலியா நின்றது –இணைக் கூற்றங்கள் கொலோ அறியேன் -ஆழ்வார் அருளிச் செய்தது போல்-

ஸ்வா பதேசம்-இத்தால்–ஆழ்வார் படியை கண்டவர்கள் இருக்கிற படி இறே இது – கற்றுப் பிணை மலர்க் கண்ணின்-குலம் வென்று -என்கிற இத்தால் கார்ய புத்தி இல்லாத மௌக்த்யத்தை -நினைக்கிறது (அறியாத பிள்ளைகள் போல் ) ஒரோ கருமம்-உற்ற பயின்று -என்ற இத்தால்
பிரபத்தியை சொன்னபடி இறே-இது பின்னை ஜ்ஞான கார்யம் அன்றோ – கீழ் சொன்ன மௌக்த்யத்துக்கு சேர்ந்த படி எங்கனே என்னில் –அதில் கர்த்தவ்யதா புத்தி இன்றிக்கே இருக்கையை நினைக்கிறது –இது தன்னைச் செய்யா நிற்கச் செய்தே –சாதனத்தில் அன்வயியாதே- ஸ்வரூபத்தில் அந்தர்பவித்து இருக்கும் இறே-பிரார்த்தனா மதி சரணாகதி–அறிவும் வேணும்-பற்றினதுவும் உபாயம் இல்லை என்ற அறிவும் வேண்டுமே-அவன் திருவடியே -இசைவித்து அவன் தாளிணைக் கீழ் இருத்துமவன் -ஸ்வீ காரத்தில் உபாய புத்தியுயைத் தவிர்ந்த ஞானம் -ஆழ்வாரது – இது தானே குலமாக வென்ற ஞானம் ப்ரபந்ந ஜன கூடஸ்தர் அன்றோ கண்ணா இத்யாதி –சொன்ன படியை உடையராய் இருக்கிற(ஞானிகள் அனைவருடைய ஞானங்களையும் விழுங்கிய ஞானம் தானே ஆழ்வாரது )
இருப்பு தான் கண்டவரை ஈடுபடுத்துகிற படியை சொல்லுகிறது –கற்றுப் பிணை மலர்க் கண்ணின் குலம் வென்று இருப்பதாய் – ஒரோ கருமமும் உற்றுப் பயின்று – செவியொடு உசாவினால் போல் இருப்பதாய் – உலகம் எல்லாம் முற்றும் விழுங்கி உமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ் இருந்து – உற்றும் உறாத மிளிர்ந்த கண்ணா யெம்மை உண்கின்ற – என்று அந்வயம் –

தலைவியின் நோக்கில் ஈடுபட்ட தலைவன் பாசுரம் –கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று —இளைய மான் பேடை நோக்கும் நோக்கத்தினும் இவள் நோக்கம் அழகியதாய் உள்ளதே-ஒரோ கரும முற்றுப் பயின்று செவியொடு உசாவி-தான் நாயகியை நோக்காத பொழுது அவள் தன்னை மனத்தில் பொருந்திய காமத் குறிப்பு வெளியாம்பாடி அன்போடு நோக்கியும் தான் நோக்கும் பொழுது அவள் நாணத்தால் எதிர் நோக்காது வேறு ஒரு வஸ்துவை பார்ப்பவள் போலே வேறு இடத்தில் செலுத்தியும்
இப்படி பல கால் விரைவில் நிகழும் பொழுது அவள் கண் பார்வை காதல் அளவும் செல்லுதல் –
தான் கருத்தூன்றியதொரு கார்யத்தைப் பற்றி காதை யடுத்து வினவி-அதனோடு ஆராய்தல் போலும் –
நாயகியின் கண்கள் காது அளவும் நீண்டு விலக்ஷணமாக இருப்பதை வெளியிட்ட வாறு –உற்றமுறாதும் மிளிர்ந்த –குறிப்பு நோக்கை அனுகூலமாகவும் புறம்பு நோக்குவதை பிரதிகூலமாகவும் கொண்டு –உலகமெல்லாம்-முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்யெம்மை உண்கின்றவே-சர்வ ரக்ஷகனான சர்வேஸ்வரன் விபூதியின் கண் தமக்கு இந்த நலிவு உண்டாவதே –உண்கின்றன -என்னை வசப் படுத்து கின்றன -நலிகின்றன –

கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று–இளைய மான் பேடைகளுடைய மலர்ந்த கண்ணின் ஜாதியை வென்று–ஒரோ கரும முற்றுப் பயின்று-தன்னில் தான் பலகாலும் கிட்டுகையாலே-பர்யாயம் தோறும் ஒரு கார்யத்தைக் கிட்டி அறுதியிடுகிறது என்னலாய்–செவியொடு உசாவி-மாண்டு கர்ணத்து அளவும் செல்லுகையாலே அறுதியிட்ட காரியத்தை ஸ்ரவண இந்த்ரியத்தோடே விசாரியா நின்றது என்னலாய்–உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்-லோகம் அடைய பிரளய ஆபத்தில் ஈடுபடாமல் திரு வயிற்றிலே வைத்து நோக்கியும் நெருக்குப் படாமல் வெளிநாடு காட்டியும் ரஷித்த ஈஸ்வரனுடைய திருவடிகளிலே–உற்றமுறாதும்-உற்றும் உறாதும்-கிட்டினார் கண் போலேயும் கிட்டாதார் கண் போலேயும்–அதாவது உகப்பும் செல்லாமையும் தோற்றி இருக்கை-நாயகனைக் கண்ட உகப்பும் இவனை ஒழியச் செல்லாமையும் தோற்றும்படி பார்வையிலே அறியலாய் இருக்கை–மிளிர்ந்த கண்ணாய்-உகப்பும் செல்லாமையும் மிளிர்தலிலே காணலாம் படி கண் என்று பேராய்-எம்மை உண்கின்றவே-நம்மைத் தனக்குள்ளே யாம் படி க்ரஹியா (க்ரஸியா) நின்றன என்று தன்னை இவள் கண்களுக்கு ஆக்கிக் கொண்டமை சொன்னான் ஆயிற்று-

இத்தால்–கற்றுப் பிணை -இத்யாதியாலே–இவ்வாழ்வாருடைய ஞானம் ஸம்ஸாரம் ஆகிற காட்டிலே திரிகிற முக்தமான ம்ருக பிராயருடைய ஸப்தாதி விஷயங்களிலே விகஸிதமான ஞான ஜாதியை
வென்று இருக்கும் என்றபடி-ஒரோ கரும முற்றுப் பயின்று -என்கையாலே -ஞாதவ்யமான பகவத் ஸ்வரூபாதிகளிலும் ஸ்வரூப விரோதிகளிலும் புருஷார்த்த விரோதிகளிலும் சாதன விரோதிகளிலும்
வ்யவசிதமாய்க் கொண்டு சீலித்த படி–செவியொடு உசாவி –என்கையாலே இவ் வர்த்த நிஷ் கர்ஷங்கள் இதுக்கு நிர்ணாயக ப்ரமாணமான ஸ்ருதியோடே சம்வதித்து இருக்கும் என்றபடி
(ஸ்ருதி சொல்வதை ஸ்ராவ்ய காது இடம் தானே கேட்க வேண்டும் )உலகம் இத்யாதியாலே
ஸர்வ ரக்ஷகனான ஸர்வேஸ்வரன் திருவடிகளிலே மானஸ அனுபவத்தால் வந்த உறுதலையும்
பாஹ்ய அனுபவத்தால் வந்த உறாமையையும் சொல்லுகிறது-மிளிர்ந்த கண்ணாய் -என்கையாலே
ஸர்வ அவஸ்தைகளிலும் ஞானத்தினுடைய விகாஸம் சொல்லிற்று–எம்மை யுண்கின்றனவே -என்கையாலே-இந்த பிரகாரத்தாலே இவருடைய ஞானம் ஆஸ்ரிதரை வஸீ கரித்த படி சொல்லிற்று ஆயிற்று-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம் கற்றுப் பிணை-கன்றான மான் முக்தமான மானினுடைய-மலர் கண்ணின்-மலர் போலே இருக்கிற கண் என்னுதல்-விகஸிதமான கண் என்னுதல்-குலம் வென்று
அஜ்ஜாதியாக வென்றதாயிற்று-ஒரோ கரும முற்றுப் பயின்று செவியொடு உசாவி-ஒரோ கார்யத்திலே யுற்று அதிலே நெருங்கி அத்தைச் செவியோடே உசாவி ஸர்வ விஷயமாய் ஓர் இடத்திலும் பற்று இன்றியிலே இராதே ஒன்றிலே துணிந்து அதிலே நெருங்கி அத்தை தேசிகாரோடே போதயந்த பரஸ்பரம் –ஸ்ரீ கீதை –10-9-பண்ணுவாரைப் போலே இவனையே ச விசேஷமாகக் கடாக்ஷிப்பது
இவன் பார்த்தவாறே கண்ணை மாற வைப்பதான போது இருந்தபடி–உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்-ஸர்வ ரக்ஷகரானவர் திருவடிகளிலே இருந்து அவர் எல்லைக்குள்ளே இருந்தாயிற்று இவை பாதகம் ஆகிறது–உற்றமுறாதும் மிளிர்ந்த கண்ணாய்-மாறுபாடு யுருவும்படி இவனை நோக்குவது-அந்நோக்கிலே பரவசனாய் இவன் பார்த்தவாறே அந்நோக்கை மாற வைப்பதாய்
மிளிரா நின்றுள்ள கண்ணாய்–எம்மை உண்கின்றவே-கண் என்கிற வியபதேசத்தாலே ஒரு பாதக பதார்த்தம் என்னை நலியா நின்றது–இத்தால் ஆழ்வார் படியைக் கண்டவர்களுக்கு இருக்கிற படி இறே இது கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று -என்கிற இத்தால் கார்ய புத்தி இல்லாத முக்யத்தை நினைக்கிறதுஒரோ கரும முற்றுப் பயின்று -என்கிற இத்தால் ப்ரபத்தியைச் சொன்னபடி இறே இது–பின்னை ஞான கார்யம் அன்றோ –கீழ்ச் சொன்ன மௌக்த்யம் இதுக்குச் சேர்ந்த படி எங்கனே என்னில் அதில் கர்தவ்யதா புத்தி இன்றிக்கே இருக்கையை நினைக்கிறது-இது தன்னைச் செய்யா நிற்கச் செய்தே சாதனத்தில் அந்வயியாதே ஸ்வரூபத்திலே அந்தர்பவித்து இருக்கும் இறே-செவியொடு உசாவி உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்
உற்றமுறாதும் மிளிர்ந்த கண்ணா யெம்மை உண்கின்றவே
-சொன்னபடியே யுடையராய் இருக்கிற இருப்புத் தான் கண்டாரை ஈடுபடுத்தும் படியைச் சொல்லுகிறது-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-வியாக்யானம்-கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று
இள மான் பேடைகளுடைய மலர்க்கண்களை எல்லாம் ஜயித்தாய்–ஒரோ கரும முற்றுப் பயின்று
பரஸ்பர ஸ்ப்ர்த்தை யுள்ளதாய்-தன்னில் தான் பர்யாயத சலிக்குமதாய் ஓர் காரியத்தை எண்ணி அறுதியிடுகிறது என்னவாய்-செவியொடு உசாவி-அறுதியிட்டு கார்யத்தைச் செவியோடே உற்றுப் பேசுகிறது என்னலாய்–உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்-லோகங்களை பிரளயம் வர திருவயிற்றிலே வைத்து ரஷித்தும் அது போக வெளிப்படுத்தி ரஷித்தும்
உபகரித்த அவன் திருவடிகளுக்கு அடிமை செய்ய–உற்றமுறாதும்-கிட்டின அவளாயும் கிட்டாத அவளாயும்–மிளிர்ந்த கண்ணாய்-கடாஷமுள்ள திருக்கண் மலர்களாய்–எம்மை-என்பது -ஸ்வீ யரைக் கூட்டிக் கொண்டு–உண்கின்றவே-எம்மை அனுபவிப்பதாய் ப்ரதிமையைப் பண்ணுமவையாய்
இரா நின்றதுகன் –

ஸ்வாபதேசம் –-கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று–சம்சாரமாகிய காட்டில் -பேதமையுள்ள மிருகம் போலே ஐம்புல வழியில் பரவும் ஞான சாதியை அதிசயித்து உத்க்ருஷ்டமான ஆழ்வார் ஞானம்
ஒரோகரும-முற்றுப் பயின்று-ஆழ்வார் ஞானம் அவன் ஸ்வரூபாதி களில் பொருந்தி உன்று ஆராய்ந்து நிலை பெற்ற ஞானம் செவியொடு உசாவி –செவி -சுருதி -ஆழ்வார் ஞானம் மறைகளு உடன் ஓத்தே இருக்கும் என்றபடி –உலகமெல்லாம்-முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்-உற்றமுறாதும் எண்ணம் புகுந்து -மானஸ அனுபவம் உற்றது –கருக்காய் கடிப்பவர் போல் திருநாமம் சொல் கற்றனமே-பூர்ண அனுபவம் இல்லாத -உறாத -இரண்டையும் காட்டிய படி-மிளிர்ந்த கண்ணா -எல்லா நிலையிலும் ஆழ்வார் ஞானம் குவியாது விசாலித்து உள்ளபடி யெம்மை உண்கின்றவே -இப்படிப் பட்ட ஆழ்வார் ஞானம் தம்மை வசப்படுத்திய படி –

தாத்பர்யம்–ஆழ்வாருடைய ஞான வைபவம் -சொல்லும் பாசுரம் நாயகி பேச்சால் அருளிச் செய்கிறார்
இரண்டு கண்கள் என்னை ஈடுபடுத்தி -வேறே எங்கும் செல்ல வேண்டாத படி ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்–மான் பேடைகள் சேர்ந்தாலும் -குலத்தையே வெல்லும் பிரபன்ன ஜன கூடத்ஸ்தர் அன்றோ-அதி ஸூந்தரமாய் சாமான்யம் இல்லாமல் -விலக்ஷணமான கண்கள் நான் வேறே இடம் பார்க்க என்னையே பார்க்கும் நம்பினான் –மடவாரையும் முன் எல்லாம் செம் பொன் மாடத் திருக் கோயில் – திருடப் போனேன் பயன் ஒன்றும் இல்லாமல் பாங்கும் இல்லாமல் இருக்க என்னைத் திருத்திப் பணி காய்ந்து அருளினாரே –நான் திருந்திய பின்பு-இங்கு இல்லாமல் -தன்னுடைச் சோதி புறப்பட்டு போனார்–செவியுடன் ஆலோசித்து -செவியாலேயே ஸ்ருதி சொல்வதைக் கேட்டு நிச்சயித்து-ஆழ்வார் நினைவால் இவர் தமக்கு சிஷ்யன் அல்லர் -தான் ஆச்சார்யர் உடைய ஸஹ சிஷ்யரே என்று திரு உள்ளம் கொண்டவர் அன்றோ -இத்தை அறிய உசாவி ஆலோசித்து-செவி அளவும் நின்று உலாவும் உலகம் அளந்த அவனது திருவடிகள் போல் ரக்ஷகனாய் இல்லாமல் என்னைப் பாதிக்கின்றனவே–மத் பாபமே-ஆழ்வார் -அனுபவம் பகவத் அனுபவத்துக்கும் மேலே அன்றோ-ததீய சேஷத்வ பாரதந்தர்யம் சரம பர்வ நிஷ்டை பெறாமல்-ஆழ்வாரது திருக்கண்கள் துன்பம் கொடுக்கின்றனவே -என்று வருந்திச் சொல்லும் பாசுரம் –

5-7-நோற்ற நோன்பிலேன்-ப்ரவேஸம்

மேல் திருவாய்மொழியில் அநுகரித்துத் தரிக்கப் பார்த்தார்;
அநுகரித்துத் தரிக்க வேண்டும்படியான கலக்கம் பிறந்த இடத்திலும் வந்து முகங்காட்டிற்றிலன்; இதற்குக் காரணம் என்?
தன் பக்கல் ஆசை சிறிதுடையார்க்குத் தானே வந்து முகங்காட்டிக் காப்பாற்றக்கூடிய சர்வேச்வரன்
நம் பக்கல் ஆறி இருக்கைக்கு நிபந்தனம் என்?’ என்று பார்த்தார்;
இனி இங்ஙனேயாமித்தனை; நம் பிரகிருதி ஸ்வபாவத்தாலே தன்னால் அல்லது செல்லாதபடியாயிருப்பதோர் ஆற்றாமை உண்டாயிருந்தது;
அது நமக்கு ஸ்வரூபம்’ என்று அறியாதே ‘உபாயம்’ என்றிருந்தானாக வேணும் என்று பார்த்து,
தம் கையில் ஒன்று இல்லாமையை அறிவித்து அவன் திருவடிகளிலே சரணம் புகுகிறார்.

“ஆற்றகிற்கின்றிலேன்” என்றதனைத் திருவுள்ளம்பற்றி. ‘உபாயம் என்றிருந்தானாக வேணும்’ என்றது,
ஆற்றாமையாவது சிநேகமாய், சிநேகத்தை முன்னாகக் கொண்ட தியானம் பக்தி யாகையாலே,
இது உபாயமாகவேணும் என்றிருந்தானாகவேணும் என்றபடி.–
பிரசக்தி -தஸ்ய பிரதி நிஷேதம் -இருந்தால் தானே சொல்ல வேண்டும் –

கடற்கரையின் வெளியில் மஹாராஜரை உள்ளிட்ட முதலிகளோடும், லக்ஷ்மணம் புண்ய லக்ஷ்மணம்” என்பது, ஸ்ரீராமா. யுத். 18:7.-
“புண்ணியத்தையே இலக்ஷணமாகவுடைய இளைய பெருமாள்” என்கிற தம்பியோடுங்கூட எழுந்தருளி யிருக்க,
ராவணோ நாம துர்வ்ருத்தோ ராக்ஷஸோ ராக்ஷஸேஸ்வர: தஸ்ய அஹம் அநுஜோ ப்ராதா விபீஷண இதி ச்ருத:” என்பது, ஸ்ரீராமா. யுத். 17:10.
ஸ்ரீவிபீஷணாழ்வான் “கெட்ட ஒழுக்கத்தை யுடையவன், இராவணன் என்று பிரசித்தி பெற்றவன், அரக்கர்களுக்கெல்லாம் அரசனான
அரக்கன் இருக்கிறான்; நான் அவனுக்குப் பின் பிறந்த தம்பி; விபீஷணன் என்று பிரசித்தி பெற்றவன்” என்று தன்னுடைய தாழ்ச்சியை
முன்னிட்டுக்கொண்டு பெருமாள் திருவடிகளிலே விழுந்தாற்போலே,
இவரும், அவன் கடற்கரையிலே தனி இருந்த இழவு தீர,
பிராட்டிமாரோடும் நித்திய பரிகரத்தோடுங் கூடச் சிரீவரமங்கல நகரிலே திருவனந்தாழ்வான் மேலே எழுந்தருளியிருக்கின்ற
வானமாமலை திருவடிகளிலே, வேர் அற்ற மரம் போலே புகல் அற்று விழுந்து சரணம் புகுகிறார்.

இவர் தாம் என் கொண்டு அவனை வடிம்பிடப் பார்க்கிறது என்னில், அவன் காத்தற்குரிய பொருள்களை விரும்பியுள்ளான்,
காவலனை விரும்புதல் தமக்கு உண்டாயிருந்தது; ஆன பின்னர், இதற்கு மேற்பட சம்பந்தம் உண்டோ? என்று.

நோற்ற நோன்பு -நாலிலும் சரணாகதி -ரகஸ்ய த்வயம் படி-திருமந்தரம் -சரம ஸ்லோகம்
-5-7 முதல் 6-10 நாராயணா –சராணாகதி பூர்வாக கல்யாண குணங்கள் அனுபவம்
6-10- வாக்ய த்வயம் பிரக்ரியை படி சரணாகதி –
ஸ்ரீ வைகுண்ட இருப்பு போலே -சேவை -அமர்ந்த திருக் கோலம் -கூந்தல் –கேள்வன் -வைகுண்ட நாதன் -ஸ்வயம் வ்யக்த ஷேத்ரம்
தோத்தாத்ரி -தெற்கு கோடி வடக்குக் கோடி அமர்ந்த திருக் கோலம் -பத்ரி விசால் -நாராயணன் –
நடுவில் நின்றது -திருவேங்கடம்-ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரங்களில் -கிடந்தது ஸ்ரீ ரெங்கம் மட்டுமே
நாச்சியார் அனுக்ரகம் -பொன்னடிக்கால் ஜீயர் -பெண்ணாகப் பாவித்து -கனுப்பொடிக்கு
இன்றும் ஸ்வாமி திருமடத்துக்கு -உத்சவம் கண்டு அனுபவிக்கிறார் –
ருசி விவசர்க்குப் பாதமே சரணாக்கும் ஔதார்யம் வானமா மலையிலே கொழுந்து விடும் -சூர்ணிகை -163-

நீசர்களை ரக்ஷிக்க அன்றோ இங்கே வீற்று இருந்து அருளுகிறார் -ரஷ்ய
ரஷக அபேக்ஷையும் இருக்க அடியேன் இழக்கவோ

ஏழாம் திருவாய் மொழியில் -கீழில்- திருவாய் மொழியில் அநுகாரம் ப்ராப்தியோடு தலைக் கட்ட மாட்டாமையாலே
ஆர்த்தியே அதிசயித்து பாவனையால் வந்த அநு கார்த்தாலே அல்பம் ஆஸ்வஸ்தராய் ப்ரசோகம் பிறந்து
இவ்வளவில் தன்னை லபிக்கைக்குத் தானே உபாயமான இவன் முகம் காட்டாது ஒழிந்தது நம்முடைய அநுகார
அர்த்தமான பாவனையை உபாசனமாக நினைத்து
அதனுடைய சரம தசையில் வருகிறோம் என்று என்று விளம்பித்தானாக அதி சங்கை பண்ணி
நம் ஆகிஞ்சன்யத்தை முன்னிட்டுக் கொண்டு அபேக்ஷிக்க அவன் ஆபி முக்கியம் பண்ணும் என்று அறுதியிட்டு
ஆகிஞ்சனரும் ஆசைப்படும்படியான அவனுடைய ஆச்ரித சம்ச்லேஷ ஸ்வ பாவத்தையும்
அநிஷ்ட நிவர்த்தகத்வத்தையும்
அதிசயித பரத்வ பிரகாசகங்களான அசாதாரண ஆகாரங்களையும்
ஆஸ்ரித சம்ரக்ஷண பிரகாரத்தையும்
ஆஸ்ரித விரோதிகளை அந்தரப்பேதம் பண்ணும் ஆகாரத்தையும்
ஆஸ்ரித உபகாரத்தால் வந்த உஜ்ஜ்வல்யத்தையும்
அகில சத்தா ஹேதுத்வத்தையும்
ஆஸ்ரித விரோதி அவன் இட்ட வழக்கு என்னும் அத்தையும்
விரோதி நிவர்த்தகத்வத்தால் வரும் விசேஷ உஜ்ஜ்வல்யத்தையும்
விரோதி நிவர்த்தகமான உபாய ப்ரகாஸகத்வத்தையும்
அநு சந்தித்து ஏவம் விசிஷ்டனான நீ உன்னை பிராபிக்கைக்கு ஹேது வான உபாயாந்தரங்களில் அகிஞ்சனாய்
ஆர்த்தனான எனக்கு உன் திருவடிகளே உபாயமாக அபகரித்த இதற்கு என்ன பிரதியுபகாரம் பண்ணுவேன் என்று அலமரும்படி
தமக்குப் பிறந்த ஆசுவாச விசேஷத்தை ஸ்ரீ வர மங்கையிலே ஆசன்னமாக எழுந்து அருளி இருக்கிற
ஸ்ரீ வானமா மலையை நோக்கி விண்ணப்பம் செய்கிறார் –

நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்று
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே
.—5-7-1-

என்னுடைய பேற்றுக்குக் காரணமாயிருப்பதொரு கைம்முதல் என்னிடத்தில் இல்லை,-“நோற்ற நோன்பிலேன்”–இல்லாமையாலே ரக்ஷகன் வேண்டும் என்ற விருப்பம் உண்டு;-“ஆற்றகிற்கின்றிலேன்–பரிபூர்ணரான தேவர், காத்தற்குரிய பொருள்களை விரும்புகின்றவராய் இருந்தீர்;-சிரீவரமங்கலநகர் வீற்றிருந்த”--ஆகையாலே, தேவரே என் விருப்பத்தை முடித்தருள வேண்டும் என்கிறார்.

கர்ம யோகத்தில் நிஷ்டையுடையேன் அல்லேன், ஞானயோகத்தையுடையேன் அல்லேன்,மேற்சொல்லிய அவை இரண்டும் உண்டானால் வருமதுவே அன்றோ -பக்தியுடையேனல்லேன்-‘நோன்பிலேன்’ என்ன அமையாதோ? ‘நோற்ற நோன்பிலேன்’ என்ன வேண்டுமோ? என்ன-சாதனங்களைச் சமைய அநுஷ்டித்து, பலத்தோடே கூடியிருப்பதாகப் பார்த்திருக்கலாவது-க்கர்வர்த்தி, ஸ்ரீ வசுதேவரைப் போலே பேற்றுக்கு அடியாக நினைத்திருக்கலாவது ஒன்று இல்லை என்கைக்காகச் சொல்லுகிறார்.‘அறிவிலேன்’ என்னாமல், ‘நுண்ணறிவிலேன்’ என்கிறார். என்றது,
ஆத்ம ஞானம் முன்னாகப் பரம்பொருளின் சொரூபத்தைக் காணும் அளவாக அறியும் அறிவை யுடையேனல்லேன் என்றபடி.

அவை இரண்டும் உண்டானால் வருமதுவே யன்றோ பக்தி; அவை இல்லாமையாலே எடுத்துக் கழிக்கவும் வேண்டாவே அன்றோ.-ஆனால், இதைப் போன்று, ‘கர்மம் இல்லை’ என்ற போதே, ‘ஞானம் இல்லை’ என்பது போதருமே அன்றோ,-அதனை எடுத்துக் கழிக்க வேண்டுவது என்? என்னில், முற்பிறவியில் கர்மங்கள் முடிந்த அளவிலே மரணம் உண்டானால்-அடுத்த பிறவியிலே ஞானம் உண்டாகக் கடவது. ஆயின், பக்தியும் அப்படி ஆனாலோ? என்னில்,-ஞான கர்மங்கள் இரண்டும் உண்டானால்
பக்திஸ்ச ஞான விஸேஷ:” என்றும், “ஞானம் கனிந்த நலம்” என்றும் சொல்லுகிறபடியே,
பக்தி கூடி அல்லது நில்லாது, ஆன பின்பு, இங்கு அப்படி ஆக ஒண்ணாது.
‘உன்னைவிட்டு ஒன்றும் ஆற்றகிற்கின்றிலேன்’ என்று இவர் சொல்லுகிற இது, பக்தி அன்றோ,-“உபய பரிகர்மித ஸ்வ அந்தஸ்ய ஏகாந்திக ஆத்யந்திக பக்தியோ கைகலப்ய:”-என்பது, — ஏகாந்திக அத்யந்திக -அவனைப் பற்றியே இடைவிடாமல் ஆத்ம சித்தி “சிநேகத்தை முன்னிட்ட தியானமானது பக்தி” அன்றோ; ஆன பின்பு, இது உபாயம் ஆனாலோ? என்ன, அங்ஙனம் ஒண்ணாது அன்றோ,
கரும ஞானங்களோடு கூடியுள்ள மனத்தை யுடையவனுக்கு உண்டாகும் பரபக்தி அன்றோ
சாஸ்திரங்களில் சாதனமாகச் சொல்லிப் போருகிறது;
“ஸ்நேஹ பூர்வம் அநுத்யானம் பக்தி: இதி அபிதீயதே பஜ இதி ஏஷதாது: வை ஸேவாயாம் பரிகீர்தித: தஸ்மாத் ஸேவாபுதை: ப்ரோக்தா பக்தி ஸப்தேந பூயஸீ”-இது, அங்ஙன் அன்றிக்கே, அவனுடைய திருவருள் காரணமாக வந்தது ஆகையாலே இது ஸ்வரூபமாமித்தனை.–புராணங்களிலே தனித்தனியே கர்ம ஞானங்களைச் சாதனமாகச் சொல்லுகையாலே சொல்லிற்றாகவுமாம்.-கர்ம ஞான ரஹித்யம் -பக்தி ராஹித்தியம் உப லஷணம் -சாதனம் இல்லை என்றால் சாத்தியம் இருக்காதே-புராண பிரகிரியையில் -கர்ம ஞானம் இல்லை என்றது பக்தியும் இல்லை -என்றவாறு – சாதனம் இல்லா விடில் சாத்தியம் கிட்டாது

உபாயம்’ என்றிருந்தாராகில், ‘ஆகிலும்’ என்கைக்கு இடம் இல்லை.-ஆனால், நீர் இந்நாள் வரை ஆறி இருந்தீரே? என்ன,-இனி--உன்னையும் அறியாதே என்னையும் அறியாதே இருந்த அன்று இழக்க அமையாதோ,-உன் நிறைவும் என் குறைவும் அறிந்த இன்றும் இழக்க வேண்டுமோ?-ஒருவன் கையிலே சோறும் உண்டாய் அவன் இடுவானுமானால்,-காருணிகனாயும் இருந்து –-ஒருவனுக்குச் சோறும் இன்றிக்கே பசியனும் ஆனால் இழக்க வேணுமோ?-இனி –-என் கையிலேயும் ஒன்று உண்டாய் அது சமையும் தனையும் ஆறி இருக்கிறேனோ.-ஸ்வரூபத்தை உபாயத்திலே செலவு எழுதிக் கைவிடப் பார்க்கில் பார்க்குமித்தனை.-அநாதி காலம் மெய் மறந்து இழந்த காலம் போராதோ, நான் மெய்யாக இசைந்த இன்றும் இழக்க வேண்டுமோ?

உன்னை விட்டு-நீயும் என்னைப் போலே இருந்தாயாகில் நான் ஆறி இரேனோ,
நானும் சிறிது செய்து வரவேண்டும்படியோ நீ இருக்கிறது.
அன்றிக்கே,-உயிரை விட்டு உடல் தரிக்கவற்றோ என்னலுமாம்.-ஒன்றும் ஆற்ற கிற்கின்றிலேன் – உன்னுடைய ஸ்வரூப ஞானம் என்னுடைய தாரணத்துக்குக் காரணமாய் இருக்கிறதில்லை.-“அங்ஙனம் அழைத்துக் கொண்டு செல்லும் செயல் அவருக்குத் தக்கதாகும்” என்று ஆறி இருக்கைக்கும் ஒருவழி உண்டே அன்றோ அவளுக்கு.
கடலை அணை செய்யவும் இராவணனை அழியச் செய்யவும் வேண்டாவே அன்றோ இவளுக்கு.

உன்னுடைய போகப் பிராவண்யம் என்னால் ஆறி இருக்கலாயிருக்கிறதோ?
நீ பரம போகியாயிருக்க, என்னால் ஆறியிருக்கப்போமோ?

சம்சாரிகளுடைய இரக்ஷணத்துக்காக நித்திய வாசம் செய்யும் தேசம். பரம பதத்தையும் மறக்கச் செய்யும் தேசம்-வீற்றிருந்த--‘அங்கே இருக்கக்கூடிய நமக்கு, இவ்விருப்பு இருக்க வேண்டா நின்றதே!’ என்னும் வெறுப்போடு அன்றிக்கே,-தட்டியிலிருந்தவன் முடி சூடினாற்போலே தன் வேறுபாடு தோற்ற இருக்கை (அங்கே சிறை இருப்பு போலே அவாக்ய அநாதர )– அங்குத்தை இருப்பு நித்தியசூரிகளுக்கு ஆனாற்போலே, இவ்விருப்பு எனக்காக அன்றோ இருக்கிறது. சிரீவரமங்கல நகரான அங்கே வீற்றிருந்த எந்தாய்! -பரம பதத்திலே நெடுங்கை நீட்டாக இருந்தாயாகில் நான் தரித்திருக்கலாயிற்றே, எனக்காக வந்த இடத்தை நான் இழக்கவோ.-அங்கே வீற்றிருந்த உனக்கு மிகை அல்லேன் –-காக்கும் பொருள்களைத் தேடிக் கொண்டிருக்கின்ற உனக்குப் புறம்பு அல்லேன்.-உனக்கு மிகையான போது அல்லேனாய் ஆகி விடுவேன்-இத்தால் வரும் பிரயோஜனமும் தேவரீருடையதே.
பால் குடிக்கும் குழந்தையை, பால் குடித்து வயிறு நிறையக் கண்டு உகக்கும் தாயைப் போலே, அடிமையாக இருப்பவன்-ஸ்வரூபம் பெற்று அடிமை செய்கை சேஷிக்குப் பேறே அன்றோ.–ப்ரீதி உன் பக்கலிலே யானால் இழவும் உன் பக்கலிலே யாக வேண்டாவோ –

—————-

அங்குற்றேனலேன் இங்குற்றேனலேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான்
எங்குற்றேனுமலேன் இலங்கை செற்ற அம்மானே!
திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவர மங்கல நகருறை
சங்கு சக்கரத்தாய்! தமியேனுக்கு அருளாயே
.–5-7-2-

“நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன்” என்று சொன்ன உபாயம் இன்மையை,
இத் திருப்பாசுரத்தில் “அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன்” என்று வேறு வகையாக அநுபாஷிக்கிறார் –அங்குற்றேன் அல்லேன் – முக்தர் இந்தச் சம்சாரத்திலே – -உலாவினாற் போன்று சித்த சாதனனாய்த் -பேறு நிச்சயம் என்று உணர்ந்து -திரிகிறேன் அல்லேன்.-இங்குற்றேன் அல்லேன் –-இங்கே இருந்து சாதனங்களைச் செய்கின்றவர்களிலே ஒருவனாய் இருக்கிறேன் அல்லேன்.-உன்னை அநுபவித்துச் சம்சாரத்தை நினையாதிருக்கிறேன் அல்லேன்.-உன்னை மறந்து,“அவர் தரும் கலவியே கருதி”அதுவே பேறாக இருக்கிறேன் அல்லேன் -‘உன்னைக் காண வேணும்’ என்னும் ஆசையாலே வலிமை குன்றினவனாய்த் தளர்ந்தேன்.- ஆதலால் சாதனங்களைச் செய்வதற்கு ஆற்றலுடையவன் அல்லேன். இது, பூர்வர்கள் நிர்வாஹம்.

அங்குற்றேன் அல்லேன் – நித்திய சூரிகளோடு கூட அங்கே இருக்கிறேன் அல்லேன்.
இங்குற்றேன் அல்லேன்-சம்சாரிகளைப் போன்று இங்கே உண்டு உடுத்துப் போருகிறேன் அல்லேன்.-இங்ஙனே ஆனால்,-பக்தி பாரவச்யத்தால் -நிரதிசய பக்தியால் – நீ வந்து முகங்காட்டுமளவும்-நடு ஓர் இடத்தில் நிற்கப் பொறாதவனாக இருக்கிறேன். -( எங்குற்றேனும் அல்லேன்-உம்மைத்தொகை )-பிரபந்நர் ஆர்த்தப் பிரபந்நர் என்றும், திருப்தப் பிரபந்நர் என்றும் இரு வகையர்;-அவர்களுள், திருப்தப் பிரபந்நனல்லேன் என்கிறார்
உன்னைக் காணும் அவாவில் -நிரதிசய பக்தியால் -வீழ்ந்து யான் எங்குற்றேனுமல்லேன் –
“காலாழும்”(பெரிய திருவந்.) என்றபடியே, பக்தி பாரவஸ்யத்தாலே அசக்தனான நான்,
மேலும் சாதந அநுஷ்டானத்துக்குத் தக்கவனல்லேன்-சேஷிசெய்தபடி கண்டிருக்கிறோம்” என்று ஆறியிருக்கப் பொறுமை யுடையவனல்லேன் –

ஸ்வரூபம் பிரகாசித்தால், அவன் தலையிலே தள்ளி வைக்கவுங்கடவதாய், அவனும் பிராட்டிமாரைப் போன்று மேல் விழுந்து விரோதிகளையும் போக்கி அணைக்கைக்கு வேண்டும் சம்பந்தம் உண்டாய்க் காணும் இருப்பது-அதற்குப் பிற்பட்டதே? என்ன,
அக்கண்ணழிவு அறுத்துவைத்தாய் அன்றோ-சிரீவரமங்கல நகரிலே, அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாதே நித்தியவாசம் செய்கின்றாயில்லையோ?

சங்கு சக்கரத்தாய் –-பரிகரம் இல்லையே? என்ன, ஒரோ கைக்குப் படை அன்றோ கூட நிற்கிறது -1-நீ அண்மையிலிருப்பவன் அல்லாமையோ,-நீ சந்நிஹிதன் —
2-நீ ஆற்றலுடையவன் அல்லாமையோ,
3-உனக்குப் பரிகரம் இல்லாமையோ,
4-பரிகரம் தான் கை கழிய நின்றோ,-
சங்கு சக்கரத்தாய் -இதுவே நிரூபகம் – எதனாலே தான் இழக்கிறது?

தமியேனுக்கு – 1- இத்தலையும் குறைவற்றது என்கிறார். ருசி உள்ளதே –
அங்கே பிரியாதிருக்கிறார் படி அல்லேன், -அங்கே சதா பஸ்யந்தி அன்றோ
இங்கே பிரியாதிருக்கிறார் படி அல்லேன். -இங்குள்ளார்க்கு இவ்விஷயத்தை அறியாமையாலே பிரிவு இல்லையே.-தமியேனுக்கு--2-உன்னை ஒழியத் துணை இல்லாத எனக்கு.-தமியேன்–3-பிராட்டியில் வேறுபாடு அங்காகில் ஒரு திரிசடையாகிலும் உண்டே அன்றோ, இங்கு “ஆவார் ஆர் துணை” என்னும்படி அன்றோ தனிமை.

அருளாயே –-என் வெறுமையும் உன் நிறைவும் அறிகைக்கு, நீ அடியில் தந்த அருள் இன்று குடி போயிற்றோ,-அன்று நான் விரும்பாதிருக்க அருளின நீ, விரும்புவதற்குத் தகுதியைப் பிறப்பித்துப் பொகடவோ.-ருசியை உண்டாக்குவார் ஒருவரும், உபாயத்தை அநுஷ்டிக்கிறவர் ஒருவருமாயோ இருப்பது.-நின்னருளே புரிந்திருக்கிற எனக்கு அருளாயாகில் பின்னை யார்க்கு வேறு அருள இருக்கிறாய்.-

————-

கருளப் புட்கொடி சக்கரப் படை வானநாட என் கார் முகில் வண்ணா
பொருள் அல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்
தெருள் கொள் நான் மறை வல்லவர் பலர் வாழ் சிரீவர மங்கல நகர்க்கு
அருள் செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே
 –5-7-3-

கைங்கர்யத்து அளவும் வர புகுர நிறுத்தினோம் -அதுக்கு அவிச்சேதம் யுண்டான போது நம் சந்நிதி வேணும் என்று அங்கே இருந்தாய்-அறியேன் ஒரு கைம்மாறே-இவ்வளவு உபகரித்ததுக்கு நான் ஒரு பிரதியுபகாரம் பண்ணினேனாக அறிகிறி லேன்-பிராங் நியாயத்தாலே மேல் உள்ளதும் நீயே செய்யும் அத்தனை-சாஸ்திர பலம் ப்ரயோக்த்ரி-என்கிறபடி பலம் உம்ம தான பின்பு சாதனத்திலும் அந்வயம் வேண்டாவோ என்ன இவ்வளவும் வர இதுக்கு முன்பே நிர் ஹேதுகமாக விஷயீ கரித்த பின்பு நீயே செய்து அருள வேணும்-

———–

மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காயன்று மாயப் போர் பண்ணி
நீறு செய்த எந்தாய்! நிலம் கீண்ட அம்மானே!
தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர்
ஏறி வீற்றிருந்தாய்! உனை எங்கு எய்தக் கூவுவனே?
–5-7-4-

கேவலம் கிருபையாலே தாழ்ந்த தலையிலே நின்றாயே –-ஐவர்க்காய் –-அவர்களுக்குத் தன்னை வேண்டியவாறு உபயோகப்படுத்திக் கொள்ள வைத்தபடி.–மாயப்போர் தேர்ப்பாகு–எந்தாய் –-எந்தையே! பாண்டவர்களுக்காகத் துரியோதனாதியர்களை அழித்ததும் தம் பேறாக இருக்கிறபடி.

பிரளயம் கொண்ட இப்பூமிக்கு என்ன தக்கோர்மை இருந்தது நீ செய்வதற்கு?
‘எடுக்க வேணும்’ என்ற விருப்பமும் இல்லாமல், செய்ந்நன்றி யறிதலும் இல்லாமல் இருக்கிற இந்தப் பூமிக்கு உதவி செய்தாயில்லையோ? –அம்மானே –‘உடைமை இழக்க ஒண்ணாது’ என்று, வெறும் உன் கிருபையாலே செய்த இத்தனை அன்றோ.

அநுஷ்டானத்தையும் அநநுஷ்டானத்தையும் விகல்பிக்கலாம்படி தெளிந்திருக்குமவர்கள்.
அநநுஷ்டானம் சாதனம் ஆகாதே அன்றோ. ‘விலக்கிய ஒழுக்கங்கள் நமக்கு இரக்ஷகம் ஆகா’ என்றிருக்குமாறு போன்று,-‘விதித்த ஒழுக்கங்களும் நமக்கு இரக்ஷகம் ஆகா’ என்றிருக்குமவர்கள். ஆனால், இவற்றைச் செய்வது என்?என்னில், சர்வேச்வரனுடைய ஆணையைச் செய்தவன் ஆகிறான்.-சிரீவரமங்கல நகர் ஏறி வீற்றிருந்தாய்-இவனும் அவர்களிலே ஒருவனாய் ஒரு சேரக் குடி ஏறி இருக்கிறபடி. ‘இவர்கள் நடுவே இருக்கப் பெற்றோமே’ என்று பெறாப்பேறு பெற்றனாய் இருக்கிறபடி.—வேறு உபாயங்களாலே அடைய முடியாதவனான உன்னை எங்கு எய்தக் கூவுவன் – நீ இவ்விருப்பு இருக்கைக்கு நான் செய்தது ஏதேனும் சாதனம் உண்டாகில் அன்றோ என்பேற்றுக்கு நான் ஏதேனும் செய்வது. என்றது,-இவ்வளவாகச் செய்த நீ இனியும் உன் கிருபையாலே செய்தருள வேணும்-

———-

எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? எவ்வ தெவ்வத் துளாயுமாய் நின்று
கை தவங்கள் செய்யும் கருமேனி அம்மானே!
செய்த வேள்வியர் வையத் தேவர் அறாச் சிரீவர மங்கலநகர்
கைதொழ இருந்தாய் அது நானும் கண்டேனே!
–5-7-5-

அவனாலே பேறு என்றிருக்குமவர் ஆகையாலே’; நீ கைவிட்ட அன்று நான் அநுஷ்டிக்கும்படி,
திருமகள் கேள்வனான உன்னோடு ஒக்க விகல்பிக்கலாம்படி இருந்தேனோ என்கிறார்.
எய்தக் கூவுதல் ஆவதே –நீ எனக்குக் கைப்படும்படியாக விரும்புதல் ஆவதே.
எனக்கு--வலி இல்லாதான் ஒருவன் தலையிலே ஒரு மலையை வைத்தாற்போலே இருக்கிறது காணும் இவர்க்கு.மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவ ஏஷ்யஸி யுக்தா ஏவம் ஆத்மானம் மத் பராயண:
” -ஸ்ரீ கீதை, 9: 34-
“என்னை வணங்குவாய்” என்றால்,உபாயாந்தர பக்தி யோகம் விதித்தால் – பின்னர் இல்லை யாவரே அன்றோதான்.-இனி, பிரபலனாயிருப்பான் ஒருவன் அதனைத் தள்ளி ‘அஞ்சாதே கொள்’ என்ன வேண்டுமே அன்றோ,-ஆகையாலே, அவன், பகைவர்களை அழித்த தன்மையை அருளிச் செய்கிறார் மேல்:

எவ்வ தெவ்வத்துளாயும் ஆய் நின்று கைதவங்கள் செய்யும் கருமேனி அம்மானே –-அடியர் அல்லாதார் பக்கல் செய்வதனை, வேறு கதியற்ற வற்றவர்களாயிருக்கின்ற அடியார் பக்கலிலும் செய்யப் புக்கதோ இப்போது.-அங்கு புத்த முனியாய் அவர்கள் நடுவே புக்கு நின்று அவர்களுக்குண்டான வைதிக ஸ்ரத்தை குலைத்தீர் -இங்கு நீயே உபாய அத்யவசாய ஸ்ரத்தை குலைக்கப் பார்க்கிறீர் –கை தவங்கள் செய்யும் கருமேனி அம்மானே –
வசனங்களாலும் யுக்திகளாலும் வஞ்சகங்களைச் செய்து -தன்னுடைய வார்த்தைகளாலே அவர்களைச் சவப்பிராயராக்கி,-வைதிக சிரத்தையைப் போக்கி, அவ்வளவிலும் கேளாதார்க்கு வடிவைக் காட்டி வாய் மாளப் பண்ணினபடி

அம்மானே– சம்பந்தம் ஒருத்திருக்கச் செய்தே, நீ அவர்களை அழியச் செய்தது அடியார்களுக்காக அன்றோ?-உன்னை ஒழிய -ஒரு தெய்வம் உண்டு’ என்று இருக்கின்றவர்களை அழித்ததைப் போன்றதே அன்றோ.
உன்னை ஒழிய -‘ஒரு தெய்வம் இல்லை’ என்றிருக்கிற என்னை ஒன்று செய்யச் சொல்லுகையாவது.
“ஒரு மா தெய்வம் மற்றுடையமோ யாமே” -திருவாசிரியம், 7.-என்றாரே அன்றோ இவர்.
அவர்களுடைய வைதிக சிரத்தையை அழித்தாற்போலே இருக்கிறதாயிற்று,
சித்த சாதனத்தைப் பற்றி இருக்கின்ற தன்மையினின்றும் நெகிழ்த்துச் சாதனத்திலே மூட்டுகிற இது.

அறாச் சிரீவரமங்கல நகர் கைதொழ இருந்தாய் –-அவர்கள் நித்தியவாசம் செய்கிற ஸ்ரீ வரமங்கல நகரிலே அங்குள்ளவர்கள் அடிமை செய்ய, அதுவே தாரகமாக இருந்தாய்.——-அது நானும் கண்டேன் –-ஸ்ரீவைகுண்டத்தைக் கல விருக்கையாகவுடைய நாம் இங்கே வந்து உமக்காக இருக்க, ஒன்றும் செய்திலோமாகச் சொன்னீரே? என்ன,
இருந்தாய், அதில் தடை இல்லை, நான் அநுபவித்த அம்சத்தை இல்லை செய்கிறேன் அல்லேன்;-அநுபவித்த அம்சம் போராமல் படுகிறேன். என்றது, தேவர் செய்தருளின அம்சம் இவ்வளவு உண்டு,-அதில் குறை இல்லை, எனக்கு அவ்வளவால் போராது என்கிறார் என்றபடி.-திருவடிகளில் கைங்கரியமே யாத்திரையாகப் பெற வேண்டும் என்பது அவாய் நிலை.-வாக்ய சேஷமாகத் தலைக் கட்டுகிறது-

————–

ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா! என்றும் எனை ஆளுடை
வான நாயகனே! மணி மாணிக்கச் சுடரே!
தேனமாம் பொழில் தண் சிரீவர மங்கலத்தவர் கை தொழ உறை
வான மாமலையே! அடியேன் தொழ வந்தருளே.
–5-7-6-

வாக்ய சேஷத்தால் சொல்லப்பட்ட கைங்கர்யத்தை விரும்புகிறார் இப்பாசுரத்தில்.—-ஏனமாய் நிலம் கீண்ட – ஆபத்தை அடைந்தவர்கள் அறிவிக்கையும் மிகையாம்படி அன்றோ உன்படி இருப்பது.-காத்தல் ஒருதலையானால் உன்னைப் பேணாதவன் அன்றோ என்றபடி.-சம்சார பிரளயம் கொண்ட என்னை ஸ்ரீ கிருஷ்ணனாய் எடுத்தாய்.-என் அப்பனே-பிரளயத்தாற் கொள்ளப்பட்ட பூமிக்கு உதவி செய்தது தமக்கு உதவி செய்ததாயிருக்கிறபடி.
என் அப்பனே கண்ணா –என்னைக் காப்பாற்றுவதற்கு ஏதேனும் முகம் பண்ண வேண்டுமோ?-கோலம் கொள்ள வேண்டுமோ?-(முகம் – வேறொரு பிரகாரமும்,-வராகத்தினது முகமும். கோலம் – வராகமும், அலங்காரமும்.)

என்றும் என்னை ஆளுடை வான நாயகனே –-தனக்குத் தகுதியானவரோடு இருக்கும்போதும் இவர் இடையாட்டமாயிற்று-ரக்ஷகமே- ஆராய்ந்து போருவது.
இவர் சத்தையே தொடங்கிக் கை தொட்டு நோக்கிக் கொண்டாயிற்றுப் போந்தது.
நித்ய ஸூரிகள் உடன் இருக்கும் பொழுதும் இவர் நினைவே அவனுக்கு-மணி மாணிக்கச் சுடரே –உளரான பின்பு ஓர் ஏற்றம் செய்து கொடுத்தலன்றிக்கே, அடியே பிடித்து நோக்கிக் கொண்டு போந்து,-இச்சை பிறந்தவாறே, அவ்வளவிலே நித்திய ஸூரிகளுக்கு விடும் படியையும் இவர்க்கு விட்டான்.மணி -நீல மாணிக்கம் -பத்ம- ராகம் –-சுடர் -லஷ்மி சமேதத்வாத் -தேஜஸ் -ஸ்வா பாவிக தேஜஸ் —-இரண்டு வித தேஜஸ் உண்டே –அப்ரமேயம் சீதயா உண்டே-ருசி விவசர்க்குப் பாதமே சரணாக்கும் ஔதார்யம் வானமா மலையிலே கொழுந்து விடும் –

அடியேன் தொழ வந்தருளே –சந்நிஹிதனாய் எழுந்து அருளி இருக்கிற படி கண்டேன்-நான் அடிமை செய்து வாழும்படிக்குத் தகுதியாக வந்து தோற்ற வேண்டும்.-நான் அடிமை செய்து வாழும்படிக்குத் தகுதியாக என் முன்னே நடந்து வரவேணும்-என் கண் வட்டத்திலே உலாவி நின்று நீ அடிமை கொள்ள வேண்டும்-நடந்து ஓர் இடத்தில் நின்றால் இளைப்பாற சிசிரோபசாரம் பண்ண வேண்டும் –

—————-

வந்தருளி என் னெஞ்சிடம் கொண்ட வானவர் கொழுந்தே! உலகுக்கோர்
முந்தைத் தாய் தந்தையே! முழு ஏழுலகும் உண்டாய்!
செந் தொழிலவர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர்
அந்தமில் புகழாய்! அடியேனை அகற்றேலே
.–5-7-7-

‘வந்தருளி என் நெஞ்சிடம் கொண்ட வானவர் கொழுந்தே’ என்பதற்கு, –சுரத்தாலே அறியும் பொருள் உண்டே –
“பட்டர், ஸ்ரீ புஷ்ப யாகம் அணித்தானவாறே, நஞ்சீயரைப் பலகாலும் இயல் கேட்டருளுவர்;
ஒரு கோடையிலே திருவீதியிலே நீரை விட்டு எழுந்தருளியிருந்து இப் பாட்டை இயல் சொல்லும் என்று சீயரை அருளிச் செய்து, தாம் இதனை அநுசந்தித்திருந்து பின்பு தாமும் இப்பாசுரத்தை இயல் சொல்லி, – சந்நிதியில் உபன்யாச உபயுக்தமாக திருப் பாசுரம் கேட்டு அருளுவாராம் –
இயமம் நியமம் முதலிய கிரமத்தாலே தியானம் செய்யத்தக்க சர்வேச்வரனை மனனம் செய்து புறம்புள்ள பராக்கை அறுத்துஅநுசந்திக்கப் புக்காலும் சுக்கான் பரல் போன்று இருக்கக்கூடிய நெஞ்சுகளைப் பதம் செய்யும்படி, தார்மிகராயிருப்பார்
இவை சில ஈரச் சொற்களைப் பொகட்டுப் போவதே!’ என்று அருளிச் செய்தார்;
நஞ்சீயர், இவ் வார்த்தையை உருத்தோறும் அருளிச் செய்வர்” என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்.

உத்தேஸ்ய வஸ்து இருந்த இடத்து ஏற இவன் தான் போக வேண்டியவனாக இருக்க,
அது பெறாவிட்டால் இருவரும் பாதிப்பாதி வழிதான் வரப்பெற்றார்களோ.
‘வந்தருளி’ என்று நெஞ்சுளுக்கிச் சொல்லுகிறாரன்றோ. -நெஞ்சு உருகி தாழ்ந்த குரலில் —
ஸ்ரீ ஆப்பான் திருவழுந்தூர் அரையர் கையிலே தாளத்தை வாங்கி ‘வந்தருளி, வந்தருளி’ என்று மேல் போகமாட்டாதே பாடுவராம்.

நெஞ்சிடம் கொண்ட’ என்றதனால்-திரவிய குணங்கள் போலே சேர்ந்தான்-அப்ருதக் சித்தம்- என்பதனைத் தெரிவித்தபடி.-திரவியமாக இருக்கச் செய்தேயும் குணங்களைப் போன்று சில பொருள்கள் சேரக் காணா நின்றோமே யன்றோ.-நித்திய ஸூரிகளுக்குத் தலையானவன் அன்றோ நித்திய சம்சாரிகளுக்குத் தலையான என் நெஞ்சு பெறுகைக்குப் பிரார்த்திக்கிறான் 

ஒருநாளும் அழியாத மாதா பிதாக்கள் அன்றோ இவர்கள்.-இவைதாம் நோவு படாதொழியப் பெற்றோமே’ என்று இதனைத் தன் பேறாக நினைத்திருப்பான்.-

வேத வேள்வி அறா – வேத ஒலியும் வைதிக கார்யங்களின் கோலாகலமும் மாறாதே செல்லுகை.-பிராப்பிய விரோதியாதல் பிராபக விரோதியாதல் இல்லாமையாலே, நாய்ச்சிமாருடைய கலவியைப் போன்று நித்தியமாய்ச் செல்லா நிற்கும்.
காதலியை அணைக்கிறதற்கு வேறு ஒரு பலம் உண்டாகில் அன்றோ இதற்கு வேறு ஒரு பலம் உண்டாய் அவ்வளவிலே தலைக் கட்டுவது.-சிரீவர மங்கலநகர் அந்தம் இல் புகழாய் –
ஸ்ரீ வைகுண்டத்திலே இருந்தானாகில் புகழுக்கு முடிவு உண்டு போலே காணும்-அடியேனை அகற்றேலே – ஒரு தேசத்திலிருந்து மற்றொரு தேசத்திற்குச் சென்று நீ படைத்த புகழை,
‘வேறு ஒரு கதியும் இல்லாதவனைக் கை விட்டான்’ என்ற பழி ஆக்கித் தலைக் கட்டுவித்துக் கொள்ளப் பாராதே கொள்ளாய்.
’அகற்றேல்’ என்பது, அரைக்கணம் தாழ்க்கப் பொறுக்க மாட்டாமை சொல்லுகிற வார்த்தை.
விளம்பம் பொறாதார் சொல்லப் பெறுவர் போலே காணும்.-இறுக்கி அணைக்க கை நெகிழ அத்தையும் பொறுக்க மாட்டாமல் சொல்லும் வார்த்தை அன்றோ –-இதனுடைய இரக்ஷணத்தில் உன்னை ஒழிய வேறு ஒரு சம்பந்தம் உண்டாய்த் தான் அகற்றுகிறாயோ என்பார் ‘அடியேனை’ என்கிறார்.-வர வேணும் என்கிற நிலையும் போய் அகற்றாது ஒழிய வேணும் என்கிறார்

————

அகற்ற நீ வைத்த மாய வல் லைம் புலன்களா மவை நன்கறிந்தனன்
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்தி கண்டாய்
பகர்க் கதிர் மணிமாட நீடு சிரீவர மங்கை வாணனே! என்றும்
புகற்கரிய எந்தாய்! புள்ளின் வாய் பிளந்தானே!
–5-7-8-

உம்மை அகற்றுவதற்குக் காரணம் என்? இங்கு வந்து அண்மையினேனாய் நின்றது உமக்காக அன்றோ? என்ன, அடிமைக்குப் பகையாக இருக்கின்ற ஐம்புல இன்பங்கள் நடையாடுகிற சம்சாரத்திலே வைத்த போதே-என்னை அகற்றினாய் அல்லையோ -உன்னை விரும்பாதார் அகன்று போம்படிக்குத் தகுதியாகச் சர்வேச்வரனான நீ வைத்த-மாய வல் லைம் புலன்கள் –நமக்கே பழியாய் வந்து விளையப் புகா நின்றது’ என்று நீர்மை யுடையார் காரியம் செய்து தலைக் கட்டுவர்கள் என்று நினைத்துச் சொல்லுகிறார்.-பகாசுரனை அழித்தாற்போலே, என் சரீர சம்பந்தத்தைப் போக்கியருளாய் நான் வந்து கிட்டும்படி என்கிறார்.-

————–

புள்ளின் வாய் பிளந்தாய்! மருதிடை போயினாய்! எருதேழ் அடர்த்த என்
கள்ள மாயவனே! கருமாணிக்கச் சுடரே!
தெள்ளியார் திரு நான்மறைகள் வல்லார் மலி தண் சிரீவர மங்கை
யுள்ளிருந்த எந்தாய்! அருளாய் உய்யுமாறு எனக்கே
.–5-7-9-

கலியர் சோறு இட்ட நாட்களை எண்ணுமாறு போன்று, பண்டு உபகரித்த படிகளைச் சொல்லுகிறார்.-பகாசுரனை அழித்தாய், இரட்டை மருதமரங்களைப் பொடிபடுத்தினாய், இடபங்கள் ஏழனையும் ஊட்டியாக நெரித்தாய்.-ஒருவர்க்கும் தெரியாத ஆச்சரியமான செயல்களையுடையையாய், அவை எல்லாம் எனக்குத் தெரியும்படி செய்து, என்னை அகப்படுத்திக் கொண்டவனே!-நப்பின்னை பிராட்டிக்கு சர்வ ஸ் வதானம் பண்ணின நிரதிசய போக்யமான வடிவை எனக்குத் தந்தவனே –மற்றவர்க்கு கள்ளன் –மாயவன் -எனக்கு கள்ள மாயவன்

தெள்ளியார் – தங்கள் தங்களுக்கும் சில உண்டேயாகிலும், அவற்றைப் பொகட்டு அவன் கைபார்த்திருக்குமவர்கள்.-இவர்கள் ஞானத்துக்கு விநியோகம் இதுவே அன்றோ-அசோக வனத்திலே தனியிருப்பில் பிராட்டியின் தெளிவினைப் போன்ற தெளிவினை யுடையவர்கள்- நீ வழி தப்பினாலும் ஆஸ்ரிதரை கை விடாமல் உன்னைத் திருத்தும் தெள்ளியார் –நலியா நின்றாலும் தாய் முகமே பார்த்துக் கிடக்கும் குழந்தையைப் போலே,ஸ்ரீ விபீஷணாழ்வான் தெளிவு போன்ற தெளிவினை யுடையவர்கள்-மாதவன் பேர் சொல்லுவதே ஓத்தின் சுருக்கு.-என்றிருக்குமவர்கள்-

எனக்கு உய்யுமாறு அருளாய் அறச்சென்றற்றது கண்டாய்,– ஏஹி பஸ்யாமி சரீராணி போலே -விரஹ தாபம் தின்ற இவர் திருமேனியைக் காட்டுகிறார்-உன் திருவடிகளில் கைங்கர்யத்தைத் தந்தருள வேணும். -கைங்கரியம் என்றும், உய்கை என்றும் இரண்டு இல்லை இவர்க்கு.-விரைந்திலராகில் அவன் வைலக்ஷண்யத்தில் ஞானம் இல்லையாகக் கடவது,-இங்கே கால் பாவிற்றாகில் சம்சாரத்தின் தண்மையில் ஞானம் இல்லையாகக் கடவது.-

ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக் கோர் கைம்
மாறு நான் ஒன்றிலேன் என தாவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெருஞ் செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை
நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!
–5-7-10-

ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் 
1–உபாய உபேயங்கள் இரண்டும் உன் திருவடிகளேயாம்படி செய்து தந்தாயே என்று பிள்ளான் பணிப்பர்.-ஆறு – வழி. வழி – உபாயம்.
எவ்வாறு நடந்தனை? எம்மிராமாவோ! எம்பெருமான்! என் செய்கேனே?” என்பது, பெருமாள் திருமொழி, 9 : 2.
“இப் பொய்கைக்கு”என்பது, நாய்ச்சியார் திருமொழி, 3 : 2.– என்னக் கடவதன்றோ.
சரண் – க்ருஹமாய் அத்தால் உபேயம்.-சரண் –வீடு -புகலிடம் -பிராப்யம்-ரக்ஷிதா அர்த்தங்கள்-ஆறு உபாயம் -நின் பாதங்களே உபாய உபேயம் என்றவாறு –
ஏவகாரம்-சரண் ஆகிற நின் பாதமே எனக்கு ஆறு –
கரு முகைப் பூ மாலை சும்மாடு போலே -புருஷார்த்தமாக அனுபவிப்பதை புகல் இல்லாமல் உபாயம் ஆக்குகிறோம்

2-அன்றிக்கே. “இவை இரண்டாலும் உபாயத்தையே சொல்லுகிறது’ என்று பட்டர் அருளிச் செய்வர்.-ஆறு – உபாயம். -நெடுமாற்கு அடிமை -ஒழிவில் காலம் எல்லாம் தானே உபேயம் –
“உபாயே க்ருஹ ரக்ஷித்ரோ : ஸப்த: ஸரணம் இதி அயம் வர்த்ததே ஸாம்ப்ரதம் ச ஏஷ: உபாயார்த்தைகவாசக:” என்பது, பாஞ்சராத்திரம்.
“சரணம் என்கிற இந்தச் சொல்லானது உபாயம், வீடு, காப்பவன் என்ற இம் மூன்று பொருள்களைக் காட்டும்;-இப்போது இந்தச் சரணம் என்ற சொல் உபாயத்தையே சொல்லாநின்றது” என்கையாலே ‘சரண்’ என்பதும் உபாயம்.-ஆக, எனக்கு உபாயம் உன் திருவடிகளேயாம்படி செய்து தந்தாய் என்றபடி.
பட்டர் நிர்வாஹத்துக்கு “எனக்கு ஆறு தருமிடத்தில், நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” என்று சொற்களைக் கூட்டிக் கோடல் தகும்.

நின் பாதமே’ என்ற ஏகாரத்தாலே–மாம் ஏகம் – ஏக பதத்தை நினைக்கிறது. -இத்தால் ஸ்வீகாரத்தில் உபாய புத்தியைத் தவிர்க்கிறது –ஆத்ம சமர்ப்பணம் செய்கையாவது, இராஜ மகேந்திரன் படியை எடுத்து ‘என்னது’ என்று கொண்டு பெருமாளுக்குக் கொடுப்பாரைப் போன்று களவு வெளிப்படுதலே அன்றோ.

3-“சரண்-திருவடிகளை; ஆறாக எனக்குத் தந்தொழிந்தாய்; நின் பாதமே, எனது ஆவியும் உனதே” என்று கூட்டி-நின் பாதமே’ என்பதனைச் சபதமாக்கி நிர்வஹிப்பர் ஆப்பான் திருவழுந்தூர் அரையர்.-நின் பாதமே -உன் திருவடிகளில் ஆணை இட்டு சொல்கிறேன் -எனது ஆவியும் உனதே -என்கிறார் என்றபடி –

4-ரஷித்தா-அர்த்தம் அடுத்த பாட்டில் –மேலே அருளிச் செய்வார் –

நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!– திருத் துழாய் மாலை சர்வாதிக வஸ்துவுக்கு லக்ஷணம் – பரிமளிதமாய்-தர்ச நீயமான திருத் துழாய் -நித்ய ஸூரிகளுக்கு அதிபதியானவனே – தேசம் அது –போக்யம் அது -குறைவற்றவர்கள் சாபேஷராய் இருக்கிறார் -நான் எங்கனே யுபகரிக்கும் படி-நீ குறைவாளன் ஆதல் -நான் அகிஞ்சனன் இன்றிக்கே ஒழிதல்-நீ உபகரியாது ஒழிதல் -நான் சேதனன் இன்றிக்கே ஒழிதல் செய்யப் பெற்றதோ-

—————–

தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக்
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்த ஆயிரத்துள்ளிவை தண் சிரீவர மங்கை மேய பத்துடன்
வைகல் பாடவல்லார் வானோர்க்கு ஆராவமுதே.
–5-7-11-

குருகூர்ச் சடகோபன் –-ஸ்ரீகீதையில் வேறுபாடு.-தமப்பன் இல்லாத இழவு தீரச் சக்கரவர்த்திக்குப் பிள்ளையானாற் போன்று, வேதமும் இவர் பக்கல் வந்து பிறந்தது ஆதலின் ‘செய்த ஆயிரம்’ என்கிறது–வேதம் பர தசை போலே -அவதாரம் போலே திரு வாய் மொழி-வேறு உபாயங்களில் விருப்பம் இல்லாமல் பகவத் ருசியையுடைய இவரை விரும்பி இருக்கையாலே,-வேறு உபாயங்களில் விருப்பம் இல்லாதவராய் இதனை அனுபவிக்க வல்லரானவர்கள் நித்திய ஸூரிகளுக்கு அமுதாவர்.-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –