1) பூர்வ த்,விகம் – ஸூரி வைபவம் 1 முதல் 186 வது ஸூத்ரம் வரை (186)
(2) உத்தர த்,விகம் – ஸூரி ஸுக்த்தி வைபவம்– 187 முதல் 234 முடிய (48)–
1) ப்ரத, மோத், யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம் 1-38 (38)
(2) த்,விதீயோத், யாய: – க்,ரந்த, கர்த்ரு வைப,வம் 39 – 186 (148)
(3) த்ருத்யோத், யாயம் – க்,ரந்தாந்தர தார தம்ய வைப,வம் 187-207 (21)
(4) சதுர்த்தே ரத், யாயம் -கிரந்த, ப்ரதிபாத்,ய க்ரம வைப,வம் 208-234 (27)
15 –குணாநுபவ பாதம் –218 – 228 —மொத்தம் —11– ஸூரணைகள் –இரண்டு அதிகரணங்கள்–
23 –தஸ ஸதக கத பகவத் குண தஸக அநு குண அநுபவ உபதேச அதிகரணம் —-218—ஒரே ஸூரணை
24-தஸ ஸதக பகவத் குண அநுபவ விவரண அதிகரணம் –219–228—மொத்தம் –10–ஸூரணைகள்
—
ஏழாம் பத்தால்-உபாய க்ருத்யதுக்கு உபேஷிதமான விசித்ர சக்தி யோகத்தாலே –யதா ஜ்ஞானம் பிறந்தவர்களுக்கு கொடுக்கக் கடவதான பரம பதத்தைத் தானே உபாயமாக கொடுக்கும் இடத்தில் –திர்யக் ஸ்தாவரங்களுக்கும் சத்ருவுக்கும் உள் படக் கொடுக்க வல்ல சர்வேஸ்வரன் திரு அடிகளை ஷண காலமும் பிரிய ஷமரும் இன்றிக்கே –சாங்க பிரபதனம் பண்ணின -தம்மை-விஷயங்களிலே மூட்டி –தன் பக்கலிலே சேராதபடி -அகற்றுமவையான -இந்திரியங்கள் நடையாடுகிற சம்சாரத்தில் -வைக்கக் கண்டு –விஷண்ணராய்க் கூப்பிட்டு –தம் தசை தாம் பேசமாட்டாதபடி -தளர்ந்து பிறரால்- மீட்க ஒண்ணாதபடி -அபருஹ் சித்தராய் —அவன் தன் விஜயங்களைக் காட்டி இவரைத் தரிப்பிக்க –அந்த தரிப்பும் சம்சாரிகள் இழவைப் பார்த்து நினைத்து சுவறி பழைய வார்த்தியே தலை எடுத்து –அனுபாவ்ய விஷயம் -ஸ்ம்ருதி விஷயமாய் ஒரு முகம் செய்து -நலிய நோவு பட்டு-இப்படி எடுப்பும் சாய்ப்புமாக கிலேசம் செல்லச் செய்தே-உபாய பூதனான உனக்கு ஞான சக்திகளிலே குறைவற்று இருக்க –எனக்கு ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வங்களிலும் ஆர்த்தியிலும் குறை வற்று இருக்க –என்னை சம்சாரத்திலே வைக்கைக்கு அடி என் என்று கேட்க –அவனும் நமக்கும் நம் உடையாருக்கும் இனிதாக திருவாய் மொழி பாடுவிக்க வைத்தோம் காணும் என்று அருளிச் செய்ய –வ்யாசாதிகள் முதல் ஆழ்வார்கள் கவி பாட உண்டாய் இருக்க நம்மைக் கொண்டு கவி பாடுவித்துக் கொள்வதே என்று அவன் பண்ணின உபகாரத்தை அனுசந்தித்து –அதுக்கு பிரதி உபகாரம் தேடிக் காணாமையாலே –இனி இது ஒழிய செய்யலாவது ஓன்று இல்லை-என்று திரு வாறன் விளையிலே-பெரிய பிராட்டியாரோடு எழுந்து அருளி இருக்கிற பேர் ஓலக்கத்திலே –திரு வாய் மொழி கேட்பித்து -அடிமை செய்வதாக மனோரதித்து –அங்கே தம் திரு உள்ளம் பிரவணம் ஆகையாலே -பரம பதத்தில் இருக்கும் இருப்பையும் உபேஷிக்கும் படி ஆனவர் –கீழ் தம்முடைய உபாய நிஷ்டை வெளி இடும்படி புகுர நின்றவர்களுக்கு –திரு வாறன் விளையே -பிராப்யம் –அங்கு எழுந்து அருளி நிற்கிறவனே உபாயம் -என்று தாம் அறுதி இட்ட பிராப்ய பிராபகங்களின் முடிவை தம் முகப்பாலே வெளி இடுகிறார் என்கிறார் —
இப்படி ப்ரபந்நரான இவர்களுடைய அநிஷ்ட நிவருத்தி பூர்வகமாக இஷ்ட ப்ராப்தியை பண்ணுகைக்கீடான ஆஸ்சர்யமான ஜ்ஞாந சக்த்யாதி, யுக்தனாகையாலே யதாஜ்ஞாநம் பிறந்தவர்களுக்குக் கொடுக்கக் கடவதான பரமபதத்தைத் தானே உபாயமாய்க் கொண்டு கொடுக்குமிடத்தில் சத்ருவுக்கும் திர்யக் ஸ்த்தாவரங்களுக்கு முட்படக் கொடுக்க வல்ல ஸர்வ ஸக்தியான ஸர்வேஸ்வரன் தன் திருவடிகளிலே ஸாங்க,ப்ரபதநம் பண்ணின தம்மை விஷயாந்தரங்களிலே மூட்டி நஸிப்பிக்கக் கடவதான இந்த்ரியங்கள் நடையாடுகிற ஸம்ஸாரத்திலே வைக்கக் கண்டு விஷண்ணராய்க் கூப்பிட்டு தம் தமை தாம் பேச மாட்டாதே அபஹ்ருத சித்தராக அவன் தன் விஜயத்தைக் காட்டித் தரிப்பிக்க அந்த தரிப்பும் ஸம்ஸாரிகளிழவை நினைத்துச் சுவறிப் பழைய வார்த்தியே தலை யெடுத்து அநுபாவ்ய விஷயம் ஸ்ம்ருதி விஷயமாய் ஒருமுகஞ்செய்து நலிய நோவு பட்டு இப்படி க்லேஸப்படுகிற இவர் உபாய பூதனாயிருக்கிற உனக்கு ஜ்ஞாந சக்திகளில் குறைவற்றிருக்க எனக்கு ஆகிஞ்சந்ய அநந்யகதித்வங்களிலும் ஆர்த்தியிலும் குறைவற்றிருக்க என்னை ஸம்ஸாரத்திலே வைக்கைக் கடியென் என்று அவனைக் கேட்க அவனும் நமக்கும் நம்மடியார்க்கும் திருவாய்மொழி பாடுகைக்கு வைத்தோங்காணும் என்று தான் இவரை வைத்ததுக்கு ஹேதுவை அருளிச் செய்ய முதலாழ்வார்கள் வ்யாஸாதிகள் கவி பாடுகைக்கு உண்டாயிருக்க நம்மைக் கொண்டு கவிபாடுவித்துக் கொள்ளுவதே என்று அவன் பண்ணின உபகாரத்தை அநுஸந்தித்து அதுக்குப் ப்ரத்யுபகாரம் தேடிக் தாணாமையாலே திருவாறன்விளையிலே அவன் பெரிய பிராட்டியாரோடே கூட எழுந்தருளி யிருக்கிற விருப்பிலே திருவாய்மொழி பாடி அடிமை செய்யப் பாரித்து அங்கே தம்முடைய திருவுள்ளம் ப்ரவணமாகையாலே பரமபதத்திலிருப்பை உபேக்ஷிக்கும்படியான ப்ரகாரத்தை உடையரான இவர் கீழ் தம்முடைய உபாயத்தில் நிஷ்டையை வெளியிடும்படி புகுர நின்றவர்களுக்கு அந்த திருவாறன்விளையில் நின்றருளினவனுடைய திருவடிகளே உபாயம் அத்தேஸமே ப்ராப்யமென்று தாமறுதியிட்ட ப்ராப்ய ப்ராபகங்களினுடைய முடிவைத் தம்முடைய திருவுள்ளத்தில் உகப்பாலே வெளியிடுகிறார் என்கிறார்.
(1-)எண்ணிலா குணங்கள் பால துன்ப வேறவன் மாயாப் பல் யோகு செய்தி என்னும் ஆச்சர்ய சக்தி யோகத்தாலே(2)-தெளி உற்றவருக்கு ஏற்றரும் வைகுந்தத்தை அருளும்
பிராபகத்வம் புல் பா வெறும்பு பகைவனுக்கும் ஆக்கவல்ல சர்வ சக்தி பாதமகலகில்லா தம்மை(3)-அகற்றும் அவற்றின் நடுவே இருத்தக் கண்டு நலிவான் சுமடு தந்தாய் ஒ வென்று சாதன பலமான ஆக்ரோசத்தோடே பழி இட்டுக் (4)-கங்குலும் பகலும் அடைவற்ற ஆர்த்தியை கோவில் திரு வாசலிலே முறை கெட்ட கேள்வி யாக்கித் (5)-தேற்ற ஒண்ணாதபடி தோற்று ஒன்றி நிற்கப் பண்ணின பல தானம் மற்றும் கற்பார் இழவிலே சுவறி(6)-பழைய தனிமைக் கூப்பீடு தலை எடுத்து -சூழவும் பகை முகம் செய்ய -எடுப்பும் சாய்ப்புமான க்லேசம் நடக்க உபாய அதிகார தோஷம் ஒழிய மாயங்கள் செய்து வைத்த வைசித்திரியைக் கேட்க (7)-ஐச்சமாக இருத்தி உறக் கொண்ட ஸ்வ பர பிரயோஜனத்தை அருளிச் செய்ய -என் சொல்லி எந்நாள் பார் விண்ணீர் இறப்பு எதிர் எதுவும் என்கிற உபகார ஸ்ம்ருதியோடே (8)-தன் சரிதை கேள்வி யாகாமல் இன்பம் பயக்க இருந்த நிலத் தேவர் குழுவிலே பாட்டுக் கேட்பிப்பதாக கான கோஷ்டியையும் – தேவ பிரான் அறிய -மறந்தவர் (9)-சரமோ உபாய பரர் ஆனார்க்கு நீள் நகரமது -துணித்தான் சரண் அன்றி மற்று ஓன்று இலம் உள்ளித் தொழுமின் என்று பிராப்ய சாதன அவதியை ப்ரீதியாலே பிரகாசிப்பிகிறார் ஏழாம் பத்தில் —
1-எண்ணிலா குணங்கள் பால துன்ப வேறவன்-மாயாப் பல் யோகு செய்தி என்னும் ஆச்சர்ய சக்தி யோகத்தாலே–அதாவது–எண்ணிலா பெரு மாயனே-7-1-1–என்று எண்ணிறந்த ஆச்சர்ய குணங்களை உடையவனே என்றும் –குணங்கள் கொண்ட மூர்த்தி யோர் மூவராய் படைத்து அளித்து கெடுக்கும் –7-1-1- என்று சத்வாதி குண அனுகுணமான மூர்த்திகளைக் கொண்டு சிருஷ்டியாதிகளை பண்ணுபவன் என்றும் – பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய் -7-2-7–என்று இடமறிந்து சுக துக்கங்களை கல்பித்தவன் என்றும்–ஊழி தோர் ஊழி உருவும் பேரும் செய்கையும் வேறவன் வையம் காக்கும் -7-3-11-என்று கல்பம் தோறும் ரூப நாம சேஷ்டிதங்களை வேறாக உடையனாய்க் கொண்டு ஜகத்தை ரஷிக்கும் என்றும் – மாய வாமனனே -7-8-7–என்று ஆச்சர்ய சேஷ்டிதங்களை உடையவன் என்றும் –-உள்ளப் பல் யோகு செய்து -7-8-4–என்று திரு உள்ளத்தில் பல ரஷண உபாய சிந்தைகளும் பண்ணி நிற்றி என்றும்
இப்படிப் பல விதமாகச் சொல்லப் பட்ட உபாய க்ருத்யத்துக்கு அபேஷிதமான ஆச்சர்ய சக்தி யோகத்தாலே–
(எண்ணிலாக் கு,ணங்கள் இத்யாதி,) ஆஸ்சர்ய யோக,த்தாலே “எண்ணிலாப் பெரு மாயனே’ (திருவாய்மொழி 7-1-1 “குணங்கள் கொண்ட மூர்த்தியோர் மூவராய்ப் படைத்தளித்துக் கெடுக்கும்” (திருவாய்மொழி 7-1-11 “பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்” (திருவாய்மொழி 7-2-7) “ஊழிதோறாழி உருவும் பேரும் செய்கையும் வேறவன் வையங்காக்கும்” (திருவாய்மொழி 7-3-11) “மாயா வாமனனே’ (திருவாய்மொழி 8-8-1 “உள்ளப் பல் யோகு செய்தி” (திருவாய்மொழி 7-8-4) என்று எண்ணிறந்த கல்யாண குணங்களை யுடையனாய் ஸத்வாதி குண ப்ரசுரமான மூர்த்திகளைக் கொண்டு ஸ்ருஷ்ட்யாதிகளைப் பண்ணுமவனாய் இடமறிந்து ஸுக,துக்கங்களை ஸங்கல்பிக்குமவனாய் ஆஸ்ரித ரக்ஷணார்த்தமாகக் கல்பந்தோறும் திருமேனியும் சேஷ்டிதங்களும் வேறு படக் கொள்ளுமவனுமாய் ஆஸ்சர்ய சேஷ்டிதங்களை உடையவனுமாய் ஸர்வருடையவும் ரக்ஷ்ணோப சிந்தை பண்ணுமவனுமாய் இப்படி உபாய க்ருத்யத்துக்கு அபேஷிதமான ஆஸ்சர்ய சக்தி யோகத்தை உடையவனாகையாலே
உண்ணி லாவிய ஐவராற் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம்
நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய்
எண்ணிலாப் பெரு மாயனே!இமையோர்கள் ஏத்தும் உலக மூன்றுடை
அண்ணலே! அமுதே! அப்பனே!என்னை ஆள்வானே!–7-1-1-எண்ணிறந்த காரியங்களை விளைக்க வற்றாய் துஸ்தரமான பிரக்ருதியை யுடையவனே -நீ வேண்டாதாரை நலிகைக்கு ப்ரக்ருதியை உபகரணமாக யுடையவன் என்கை –மமமாயா துரத்யயா –ஸமஸ்த கல்யாண குணாத்மகன் என்று பிள்ளான் பணிக்கும் -என்னுடைய நோய்க்கும் உன்னுடைய குணங்களுக்கும் என்ன சேர்த்தி யுண்டு
கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க் குணங்கள் படைத்து அளித்துக் கெடுக்குமப்
புண்டரிகக் கொப்பூழ்ப் புனற்பள்ளி அப்பனுக்கே
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்லா யிரத்துள் இப்பத்தும்
கண்டு பாட வல்லார் வினை போம் கங்குலும் பகலே.–7-1-11-சத்வாதி குண அனுரூபமான வடிவை யுடைய மூவராய் – படைத்து அளித்துக் கெடுக்கும்-சதுரமிக்க அந்தர்யாமியாய் நின்று ஸ்ருஷ்டித்து ஸ்வேன ரூபேண நின்று பரிபாலனம் பண்ணி -ருத்ராந்தர்யாமியாய் சம்ஹரித்து செய்து அருளுகிற
அப்-புண்டரிகக் கொப்பூழ்ப் புனற்பள்ளி அப்பனுக்கே-ஜகத் காரணத்தயா பிரசித்தமான புண்டரீகத்தோடே கூடின திரு நாபியை யுடைய ஏகார்ணவ சாயியான சர்வ காரணனுக்கே
பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்! பற்றிலார் பற்ற நின்றானே!
கால சக் கரத்தாய்! கடலிடங் கொண்ட கடல்வண்ணா! கண்ணனே!’ என்னும்;
‘சேல்கொள் தண் புனல்சூழ் திருவரங்கத்தாய்!’ என்னும்’என் தீர்த்தனே!’ என்னும்;
கோல மா மழைக்கண் பனி மல்க இருக்கும் என்னுடையக் கோமளக் கொழுந்தே.–7-2-7-இடம் அறிந்து ஸூ க துக்கங்களை படைத்தவனே –பாலாவாக -ஸ்த்தாநே ஸ்த்தாநே யாக -பிரிந்தார் எல்லாரும் அனுபவிக்கும் இத்தை இவள் ஒருத்தியும் அனுபவிக்கப் பார்த்தால் இவளால் பொறுக்கப் போமோ -அங்கனம் இன்றிக்கே ஆஸ்ரிதர் வாழ்வும் அநாஸ்ரிதர் கெடும்படியாகவும் அன்றோ பண்ணி வைத்தது –தீமை உன்னடியார்க்குத் தீர்த்து அசுரர்க்கு தீமைகள் செய்யுமவன் அன்றோ –பண்டு கட்டின மரியாதையும் இல்லையோ இவளுக்கு –
ஊழிதோறு ஊழி உருவும் பேரும் செய்கையும் வேறவன் வையம் காக்கும்
ஆழி நீர் வண்ணனை அச்சுதனை அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன
கேழில் அந் தாதி ஓர் ஆயிரத்துள் இவை திருப் பேரெயில் மேய பத்தும்
ஆழி அம் கையனை ஏத்த வல்லார் அவர் அடிமைத் திறத்து ஆழியாரே.–7-3-11-யுகம் தோறும் ரக்ஷணத்துக்கு ஈடான ரூப நாம சேஷ்டிதங்களை வெவ்வேறாக யுடையனாய்க் கொண்டு ஜகத்தை ரக்ஷிக்கும் –பாலினீர்மை செம்பொனீர்மை-என்கிறபடியே ருஸ்யனுகுணமாக ரூப நாமாதிகளை யுடையனாயிற்று ஜகத் ரக்ஷணம் பண்ணுவது –
மாயா! வாமனனே!மது சூதா! நீ அருளாய்
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய்த்
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்
நீயாய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே!–7-8-1-மாயா!-இத் திருவாய் மொழிக்கு நிதானமான ஆச்சர்யங்களை யுடையனாய் இருக்கும் இருப்பை அனுசந்தித்து சங்க்ரஹேண சொல்லுகிறது –
வாமனனே! –ஆச்சர்யங்களுக்கு எல்லாம் உதாஹரணம் -அன்றே பிறந்து அன்றே வளர்ந்து அன்றே அர்த்தியாய் மஹாபலி யஜ்ஜ்வாடத்தில் சென்று சொல்லிற்று எல்லாம் அவன் செய்யும் படி வார்த்தை சொன்ன ஆச்சர்யங்களை நினைத்து வாமனனே என்கிறார் –மது சூதா! நீ அருளாய் ஆச்சர்யங்களுக்கு ஸ்ரீ வாமன ப்ராதுர்ப்பாவம் போலே யாயிற்று விரோதி நிரசனத்துக்கு மதுசூநத்வம்-மதுவாகிற அரசனை நிரசித்தால் போலே என் ஸம்சயத்தை அறுத்து தந்து அருள வேணும் என்கிறார்
கள்ளவிழ் தாமரைக் கண் கண்ணனே!எனக்கு ஒன்று அருளாய்
உள்ளதும் இல்லதுமாய் உலப்பில்லனவாய் வியவாய்
வெள்ளத் தடங்கடலுள் விட நாகணை மேன் மருவி
உள்ளப் பல்யோகு செய்தி இவை என்ன உபாயங்களே!–7-8-4–திரு உள்ளத்திலே பல ரக்ஷண சிந்தை பண்ணா நிற்றி –சேதன பேதத்தோபாதியும் போரும் இறே ரக்ஷண உபாய சிந்தைகளில் விதா பேதமும்
2-தெளி உற்றவருக்கு ஏற்றரும் வைகுந்தத்தை அருளும் பிராபகத்வம்-புல் பா வெறும்பு பகைவனுக்கும் ஆக்க வல்ல சர்வ சக்தி--அதாவது–தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக் கதி செய்யும் – 7-5-11-என்றும்-ஏற்றரும் வைகுந்தத்தை அருளும் 7-6-10–என்றும் பிராப்ய பிராபகங்கள் இரண்டும் தானே என்று அத்யவசித்து -பின்னை நாட்டார்கள் செயல்களைக் கண்டு ஆதல்- யுத்தி ஆபாசம் கொண்டு ஆதல் –பிற்காலியாதே நின்று – அவர்களுக்கு நிரதிசய ஆனந்த யுக்தமாய் -ஒருவராலும் ஸ்வ யத்னத்தால் ப்ராபிக்க ஒண்ணாது இருக்கிற ஸ்ரீ வைகுண்டத்தை தன் அருளால் கொடுக்கிற தன் உபாயத்தை – புற்பா முதலா புல் எறும்பாதி ஓன்று இன்றியே நற் பாலுக்கு உய்த்தனன் -7-5-1–என்றும்
நாட்டை அளித்து உய்யச் செய்து-7-5-2- -என்றும் –-சேட் பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி தாட் பால் அடைந்த-7-5-3- -என்றும் ஜ்ஞானம் லேசமில்லாத திர்யக் ஸ்தாவரங்களும் பிராதி கூல்யத்தில் முதிர நின்ற சத்ருவுக்குக்குமாம் படி பண்ண வல்ல சர்வ சக்தி யானவன் –
(தெளிவுற்றவர்க்கு ஏற்றரும் வைகுந்தத்தை அருளும் ப்ராபகத்வம் புற்பா வெறும்பு பகைவனுக்குமாக்க வல்ல ஸர்வஸக்தி) “தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக் கதிசெய்யும் தெளிவுற்ற கண்ணன்” (திருவாய்மொழி 7-5-1 “ஏற்றரும் வைகுந்தத்தை அருளும்” (திருவாய்மொழி 7-6-10) என்று ப்ராப்யமும் ப்ராபகமும் தானேயென்று அத்யவஸித்துப் பின்பு நாட்டார் செயல் கண்டாதல் உக்த்யாபாஸங்கள் கண்டாதல் பிற்காலியாதே நின்றவர்களுக்கு நிரதிஸயாநந்தமாய் ஒருவராலும் ஸ்வ யத்நத்தாலே ப்ராபிக்க வொண்ணாதிருக்கிற ஸ்ரீவைகுண்டத்தைத் தன்னருளாலே கொடுக்கைக்குத் தான் உபாயமாமிடத்தில் “புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்றின்றியே நற்பாலுக்குய்த்தனன் ‘ (திருவாய்மொழி 7-5-1) என்றும் “நாட்டை அளித்துய்யச் செய்து” (திருவாய்மொழி 7-5-2 என்றும் “சேட்பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி தாட்பாலடைந்த‘ (திருவாய்மொழி 7-5-3) என்றும் முதலிலே ஜ்ஞாந லேஸமில்லாத திர்யக் ஸ்தாவரங்களுக்கும் ப்ராதி கூல்யத்திலே முதிர நின்ற ஸத்ருவுக்கும் கொடுக்க வல்லனாம்படி ஸர்வ ஸக்தி யுக்தனான ஸர்வேஸ்வரன்
தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக்கதி செய்யும்
தெளிவுற்ற கண்ணனைத் தென் குரு கூர்ச்சட கோபன் சொல்
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்
தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே.–7-5-11-ப்ராப்ய ப்ராபகங்கள் அவனே என்று அத்யவசித்து -பின்னை யுக்தி ஆபாச வசனங்களால் அதுக்கு குஅநந்ய பிரயோஜனராய் நிலை நின்றவர்கள் என்னுதல் –-இன்பக்கதி செய்யும்-ஸூ கரூபமான ப்ராப்யத்தைக் கொடுக்கும் –ஏஷ ஹ்யேவ ஆனந்தாதி –-தெளிவுற்ற கண்ணனைத் –நாம் இவன் கார்யம் செய்யக் கடவோம் -என்று இருக்கும் கிருஷ்ணனை -இவன் கலங்கின அன்றும் தான் தெளிந்து முடிய நடத்துமவனை
ஏற்றரு வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர்குலத்து
ஈற்றிளம் பிள்ளை ஒன்றாய்ப் புக்கு மாயங்களே இயற்றிக்
கூற்றியல் கஞ்சனைக் கொன்று ஐவர்க்காய்க் கொடுஞ்சேனை தடிந்து
ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க அரியே.-7-6-10-ஸ்வ யத்னத்தாலே பிராபிக்க ஒண்ணாத பரம பதத்தை-தன்னாலே பெற்றேன் என்று துணிந்து இருக்கிற நமக்கு அருளும் –
கற்பார் இராம பிரானை அல் லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே.–7-5-1-தேச வாசம் தானே போக ரூபமாய் இருக்கை -ராம குணங்களையே அனுபவித்து இருக்கும் என்னுதல்-சராசரம் முற்றவும்-ஸ்தாவர ஜங்க மாத்மகமான சகல பதார்த்தங்களையும் –-நற்பாலுக்கு உய்த்தனன்-நல்ல ஸ்வ பாவத்தை யுடைத்தாம் படி பண்ணினவன் –தன் சம்ச்லேஷ விஸ்லேஷமே ஸூக துக்கமாம் படி பண்ணினான் -திர்யக் யோனி கதச்சாபி சர்வோ ராமம நுவரத–என்றும் – –அபி வ்ருஷா பரிம்லா நா -என்றும் -ராம மேவா நுகச்சத்வ மஸ்ருதிம் வாபி கச்சித -என்றும் –ராமேண ரஹி தா நாந்து கிமர்த்தம் ஜீவிதம் ஹிந-என்றும் -இப்படி ஸ்வ சம்ச்லேஷ விஸ்லேஷ ஸூ க துக்கமாம் படி பண்ணிற்று ஒரு தேச விசேஷத்திலேயோ -என்ன
நான்முகனார் பெற்ற நாட்டுளே.–ப்ரஹ்மாவுக்கு அடைத்த நாட்டுள்ளே-அவனுடைய நியாமகத்வத்தையும் தவிர்த்து -சேதனருடைய கர்ம வஸ்யத்தையும் தவிர்த்து தான் கைக் கொண்டு தன்னால் அல்லது செல்லாத படி பண்ணினான் –
நாட்டிற் பிறந்தவர் நாரணற்கு ஆளன்றி ஆவரோ?
நாட்டிற் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு
நாட்டை அளித்து உய்யச் செய்து நடந்தமை கேட்டுமே.–7-5-2—போந்த கார்யம் தலைக் காட்டிற்று ஆகில் இனி போவோம் என்னாதே மீண்டும் தம்முடைய ஸுந்தரியாதிகளாலே இருந்ததே குடியாக வாழ்வித்து -தம் வரவு பார்த்து இருக்கிற ஸ்ரீ பரத ஆழ்வானையும்-அபிஷேக மஹோத்சவங்கள் காண ஆசைப்பட்ட தாய்மாரையும் -பின் தொடர வழி மாற்றிப் போந்த நாட்டையும் -கடல் ஞாலத்து அளி மிக்கான் -என்கிறபடியே நெடு நாள் ஆஸ்வசிப்பித்து-உய்யச் செய்து-தம்மைப் பெறுகைக்கு அவர்கள் பக்கல் ஒரு கைம்முதல் இன்றிக்கே அசத்சமமாய் இருக்கிறவர்களை –சந்தமேனம்-என்னும் படி பண்ணி
கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றுங் கேட்பரோ?
கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளே வையும்
சேட்பாற் பழம் பகைவன் சிசு பாலன் திருவடி
தாட்பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே .–7-5-3-சிசுபாலன் -சாஸ்திரங்களில் சொன்ன அதிகாரி களில் ஒருத்தன் அல்லன் -விஷய வை லக்ஷண்யத்தாலே பெற்றவன் -வைது நின்னை வல்லவா பழித்தார்க்கும்- பேருளான் பெருமை பேசி ஏசினார்-தன்மை அறிவாரை அறிந்துமே .–-கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றுங் கேட்பரோ?–ஈஸ்வரனுடைய ஸ்வ பாவத்தை அறிந்தவர்கள் பக்கலிலே செவி தாழ்த்து வைத்தும் -இஸ் ஸ்வ பாவத்தை அறிந்து வைத்தும் –
இத்தால் சொல்லிற்று ஆயிற்று –ப்ராதிகூல்யமே யாத்ரையாய் இருந்தவனுக்கு -தன்னால் அல்லது செல்லாமை யுடையார் பெரும் பேற்றைக் கொடுத்தான் என்றது ஆயிற்று–
பாதமகலகில்லா தம்மை–அதாவது–அடியேன் உன பாதம் அகலகில்லேன் இறையும்-6-10-9- -என்று
தன் திருவடிகளை ஷண காலமும் அகல சக்தர் அன்றியே –-அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேன்—6-10-10-என்று சரணம் புக்க தம்மை-
(பாதமகலகில்லாத தம்மை) “அடியேனுன பாதம் அகலகில்லேனிறையும்” (திருவாய்மொழி 6-10-9)என்று தன் திருவடிகளை க்ஷ்ண காலம் அகல ஸக்தரன்றியிலே “அடிக்கீழமர்ந்து (திருவாய்மொழி 6-10-10) என்று ஸரணம் புகுந்த தம்மை –
வந்தாய் போலே வாராதாய்! வாராதாய்போல் வருவானே!
செந்தாமரைக்கட் செங்கனிவாய் நாற்றோ ளமுதே! எனதுயிரே!
சிந்தா மணிகள் பகரல்லைப் பகல்செய் திரு வேங்கடத்தானே!
அந்தோ அடியேன் உனபாதம் அகல கில்லேன் இறையுமே.–6-10-9-அடியேன் -ஸ்வ ரக்ஷணத்தில் பிராப்தி இல்லாத பாரதந்தர்யத்தை யுடைய நான்-உன பாதம் அகல கில்லேன் இறையுமே.–நிரதிசய போக்யமான உன் திருவடிகளை க்ஷண காலமும் அகல ஷமன் ஆகிறிலேன்-
அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன் றில்லா அடியேன் உன் னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10–உன் திருவடிகளை அநந்ய சரண்யனான அடியேன் அநந்ய ப்ரயோஜனாயக் கொண்டு-பெரிய பிராட்டியார் புருஷகாரமாக சரணம் புகுந்தேன் – இப்போதே நிரஸ்த ஸமஸ்த பிரதிபந்தயகனாய் உன் திருவடிகளில் சர்வ காலமும் சர்வ கைங்கர்யமும் அடியேன் பண்ணப் பெற வேணும் என்கிறார் –
3-அகற்றும் அவற்றின் நடுவே இருத்தக் கண்டு–அதாவது–அகற்ற நீ வைத்த மாய வல் ஐம் புலன்கள் ஆமவை -5-7-8–என்று தன் திருவடிகளைக் கிட்டாதபடி அகற்றவற்றான இந்திரியங்களின் நடுவே –
இவ் உடம்பிலே இருக்கும் படி வைக்க கண்டு- நலிவான் சுமடு தந்தாய் ஒ வென்று சாதன பலமான ஆக்ரோசத்தோடே பழி இட்டு-அதாவது- நலிவான் இன்னும் எண்ணுகின்றாய் -7-1-1–என்றும்
அன்புருகி நிற்கும் அது நிற்கச் சுமடு தந்தாய்-7-1-10- -என்றும் – விண்ணுளார் பெருமானேயோ -7-1-5–என்றும் – முன் பரவை கடைந்து அமுதம் கொண்ட மூர்த்தீயோ-7-1-10- -என்று விளம்ப ஹேது இல்லாத உபாயத்தை பரிக்ரஹித்தால் அது பல பிரதமாம் படியும் கிடந்து கூப்பிடும் இத்தனை ஆகையாலே -கீழ் தாம் பரிக்ரஹித்த உபாயத்தின் பலமாய் வந்ததாய் – கலங்கா பெருநகரம் கலங்கி -அவனுக்கு அங்கு குடி இருப்பது அரிதாய் வந்து விழ வேண்டும் படியான சம்சாரத்தில் -அடிக் கொதிப்பால் வந்த பெரிய
ஆக்ரோசத்தோடே கூடிக் கொண்டு தம் தலையால் வந்தததையும் அவன் தலையில் ஏறிடும் படியான பிராப்தியை உணர்ந்தவர் ஆகையாலே –இந்திரியங்களை இட்டு நலிவிக்கிறாய்-நீ என்று அவன் மேல் பழி இட்டு – (பிரஜை தெருவிலே இடறித் தாய் முதுகிலே குத்துமா போலே -ஸ்ரீ வசன பூஷணம் )
(அகற்றுமவற்றின் நடுவே இருத்தக் கண்டு) “அகற்ற நீ வைத்த மாய வல் ஐம் புலன்கள் ஆமவை (திருவாய்மொழி 5-7-8) என்று பகவத் விஷயத்தைக் கிட்டாத படி அகற்றவற்றான இந்த்ரியங்களின் நடுவே வைக்கக் கண்டு (நலிவான் சுமடு தந்தாய் ஓவென்று சாதன பலமான ஆக்ரஸத்தோடே பழியிட்டு )நலிவான் இன்னம் எண்ணுகின்றாய் -(திருவாய் -7-1-1)அன்புருகி நிற்கும் அது நிற்கச் சுமடு தந்தாய் (திருவாய் -7-1-10) விண்ணுளார் பெருமானேயோ (திருவாய் -7-1-5) முன் பரவை கடைந்து அமுதம் கொண்ட மூர்த்தியேயோ (திருவாய் -7-1-10) என்று வ்யவதான விளம்பம் இல்லாத உபாயத்தைக் கீழே பரிக்ரஹிக்கையாலே – பிரதிகூலமான ஸம்ஸாரத்திலே பொருந்தாமையோடே தம் தலையிலே உள்ளத்தையும் அவன் தலையிலே ஏறிடும்படியான ப்ராப்தியை யுணர்ந்தவராகையாலே –சாகாம்ருகா ராவண சாயகார்த்தா ஜக்முஸ் சரண்யம் சரணம் ச ராமம் -(யுத்த -59-44)என்கிறபடியே இவரும் அவன் பரமபதத்தில் இருப்பும் குலைந்து வந்து விஷயீ கரிக்கும்படி பெரிய ஆக்ரோஸத்தோடே அவன் மேலே பழியாம்படி கூப்பிட்டு
அகற்ற நீ வைத்த மாய வல் லைம் புலன்களா மவை நன்கறிந்தனன்
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்தி கண்டாய்
பகர்க் கதிர் மணிமாட நீடு சிரீவர மங்கை வாணனே! என்றும்
புகற்கரிய எந்தாய்! புள்ளின் வாய் பிளந்தானே!–5-7-8—அத்யாச்சர்யமான செயல்களை யுடைத்தாய் ஒருவரால் தப்ப ஒண்ணாதே இருக்கிற ஐந்து இந்திரியங்களும் -நீ வேண்டாதாரை யகற்ற வைத்தாய் என்னும் இடம் வ்யக்தமாக அறிந்தேன் -மயர்வற மதி நலம் அருள பெற்றவன் ஆகையால் அழகிதாக அறிந்தேன்-
உண்ணி லாவிய ஐவராற் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம்
நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய்
எண்ணிலாப் பெரு மாயனே!இமையோர்கள் ஏத்தும் உலக மூன்றுடை
அண்ணலே! அமுதே! அப்பனே!என்னை ஆள்வானே!–7-1-1–நலிவான் -அவனைக் கிட்டாமைக்கு மேல்பட தமக்கு நலிவு இல்லை என்று இருக்கிறார்-இன்னம் -இந்திரியங்களுக்கு அலைந்து உன்னைத் சரணம் புக்க பின்பும்-எண்ணுகின்றாய்-என்னை நித்ய சம்சாரியாக்கி அகற்றும் விரகு எண்ணுகிறான் என்று இருக்கிறார்
என் பரஞ்சுடரே! என்று உன்னை அலற்றி உன் இணைத் தாமரைகட்கு
அன்புருகி நிற்குமது நிற்கச் சுமடு தந்தாய்
வன் பரங்கள் எடுத்து ஐவர் திசை வலித்து எற்று கின்றனர்
முன் பரவை கடைந்த அமுதம் கொண்ட மூர்த்தியோ–7-1-10-!–எனக்கு நிரதிசய போக்யனானவனே-அந்யோன்யம் ஒப்பாய் ஸ்ப்ருஹணீயமான உன் திருவடிகளில் உண்டான ப்ராவண்யத்தால் சிதிலனாய் நிற்கும் அந்த புருஷார்த்தத்தை ஒழிய-சுமடு தந்தாய்-இந்திரியங்கள் சுமத்தின சுமை எல்லாம் சுமைக்கைக்கு ஈடான சரீரம் ஆகிற சும்மாட்டை தந்தாய் -ராஜபுத்ரன் தலையில் முடியை வாங்கி சும்மாட்டைக் கொடுத்து வழிக்கரையிலே நிறுத்தினால் கண்டார் எல்லாரும் சுமை ஏற்றுமா போலே இ றே இந்திரியங்கள் -இந்திரிய உபாதைக்கு ஈடான பிரகிருதி சம்பந்தம்
தீர் மருந்தின்றி ஐவர் நோயடும் செக்கிலிட்டுத் திரிக்கும் ஐவரை
நேர் மருங்கு உடைத்தா அடைத்து நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்
ஆர் மருந்தினி யாகுவார்! அடலாழிஏந்தி அசுரர் வன்குலம்
வேர் மருங் கறுத்தாய்! விண்ணுளார் பெருமானேயோ!–7-1-5-நித்ய ஸூரிகளுக்கு ஓலக்கம் கொடுத்து இருக்கிற படியை அனுசந்தித்து நான் அதுக்கு அசலாவதே என்று கூப்பிடுகிறார் –ஹா ராம ஹா லஷ்மணா என்னுமா போலே உறவு முறையரான நித்ய ஸூரிகளையும் அவனையும் நினைத்து தன் ஆற்றாமையால் அங்கு சென்று கேட்க்கும் படி கூப்பிடுகிறார்-
என் பரஞ்சுடரே! என்று உன்னை அலற்றி உன் இணைத் தாமரைகட்கு
அன்புருகி நிற்குமது நிற்கச் சுமடு தந்தாய்
வன் பரங்கள் எடுத்து ஐவர் திசை வலித்து எற்று கின்றனர்
முன் பரவை கடைந்த அமுதம் கொண்ட மூர்த்தியோ–7-1-10-!–உன் திருவடிகளில் உண்டான ப்ராவண்யத்தால் சிதிலனாய் நிற்கும் அந்த புருஷார்த்தத்தை ஒழிய-இந்திரியங்கள் சுமத்தின சுமை எல்லாம் சுமைக்கைக்கு ஈடான சரீரம் ஆகிற சும்மாட்டை தந்தாய் -ராஜபுத்ரன் தலையில் முடியை வாங்கி சும்மாட்டைக் கொடுத்து வழிக்கரையிலே நிறுத்தினால் கண்டார் எல்லாரும் சுமை ஏற்றுமா போலே இறே இந்திரியங்கள் -இந்திரிய உபாதைக்கு ஈடான பிரகிருதி சம்பந்தம்–முன் கடலைக் கடைந்து ஆஸ்ரிதர் அபேக்ஷை முடிக்க ஷமனான நாதனேயோ -கடலைக் கடைந்து அம்ருதத்தை வாங்கி தேவர்களுக்கு கொடுத்து அசுர வர்க்கங்களை பறக்க அடித்தால் போலே இந்திர வஸ்யத்தையையும் பாற அடித்து தர வல்லையே –-
4-கங்குலும் பகலும் அடைவற்ற ஆர்த்தியை கோவில் திரு வாசலிலே முறை கெட்ட கேள்வி யாக்கி-(திரு விருத்தத்தில்–62-(-இதுவே கங்குலும் பகலுமாக விரிந்தது )-இறையோ இரக்கினும் ஈங்கு ஓர் பெண் பால் எனவும் இரங்காது அறையோ என நின்றதிரும் கருங்கடல் -ஈங்கு இவள் தன் நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால் முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே -பாசுரப்படி இங்கு முறை கெட்ட -என்று அருளிச் செய்கிறார் )அதாவது-கங்குலும் பகலும் அடைவற்ற ஆர்த்தியை-அதாவது–இப்படி கூப்பிட தானும் ஷமர் அன்றிக்கே -அவசந்னராய் கொண்டு -ஒரு பிராட்டி தசையை அடைந்து –கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்-இட்டகால் இட்ட கைகளாய் இருக்கும் –சிந்திக்கும் திசைக்கும் -இத்யாதிப் படியே திவாராத்ரா விபாகமற -அழுவது -தொழுவது -மோகிப்பது -பிரலாபிப்பது —அடைவு கெடப் பேசுவது -நெடு மூச்சு எறிவது -அது தானும் மாட்டாது ஒழிவது –ஸ்தப்தையாய் இருப்பது -இப்படி ஆர்த்தி விஞ்சி செல்லுகையாலே –ஆசா சிந்தா ஸ்ம்ருதி கீர்த்திர் விலாபோன்மாத விப்ரமா மோஹோ வியாதிர் ம்ருதிச்சேதி விகாரா காம ஜாதச -என்றார் போலே அவஸ்தைகளுக்கு அடைவு பிடிக்க ஒண்ணாத படி நடக்கிற ஆர்த்தியை- பெரிய பெருமாள் கண் வளர்ந்து அருளுகிற கோவில் திரு வாசலிலே பெண் பிள்ளையைப் பொகட்டு திரு தாயார் கூச்சு முறை தவிர்ந்து -தானே இவள் தசையை அவருக்குச் சொல்லி –திரு வரங்கத்தாய் இவள் திறத்து என் செய்கின்றாய் –என் செய்திட்டாய் –என் சிந்தித்தாய் –என் செய்கேன் திரு மகட்கு -என்று அவர் தம்மையே கேட்கும் படி அத்யாவசாதம் பிறந்து–அடைவற்ற அரதியை -என்ற பாடமான போது –கங்குலும் பகலும் -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே திவாராத்ரா விபாகமற அழுவது-தொழுவது -இத்யாதிகளாலே -ஆசா சிந்தாதிகளில் போலே அவஸ்தைகளுக்கு ஓர் அடைவு பிடிக்க ஒண்ணாதபடி நடக்கிற அரதியை என்று யோஜிக்கவுமாம்–
(கங்குலும் பகலும் அடைவற்ற ஆர்த்தியை கோவில் திரு வாசலிலே முறை கெட்ட கேள்வி யாக்கி)கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் (திருவாய்மொழி 7-521)இட்ட கால் இட்ட கைகளாய் இருக்கும் (திருவாய்மொழி 7-2-4)சிந்திக்கும் திசைக்கும் தேறும் கைகூப்பும் (திருவாய்மொழி 7-2-5)என்று திவா ராத்ரி விபாகமற அரதியாயத் துடிக்கும்படி அடைவுக்கெட்ட ஆர்த்தியை திருவரங்கத்தாய் இவள் திறத்து என் செய்கின்றாயே (திருவாய்மொழி 7-2-1)என் செய்திட்டாய் (திருவாய்மொழி 7-2-3) என் சிந்தித்தாயே (திருவாய்மொழி 7-2-4)என் செய்கேன் என் திருமகட்கே (திருவாய்மொழி 7-2-8)என்றும் திரு வாசலிலே பெண் பிள்ளையைப் பொகட்டுக் கூச்சு முறை தவிர்ந்து அவன் தன்னையே கேட்டுக் கூப்பிடும்படியான ஆர்த்தியாலே வந்த அவஸ்தா பேதத்தை யுடையவராய்
இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது
அறையோ என நின்றதிரும் கருங்கடல் ஈங்கிவள் தன்
நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே – 62-ஊரார் சொல்லும் பழிக்கு அஞ்சி மீளும் எல்லையும் கழிந்தது-முறையோ – தத் தஸ்ய சத்ரு சம்பவேத் -என்று இருக்கும் நிலை கழிந்து – கூப்பிட்டுப் பெற வேண்டும் தசையேயாய் வந்து விழுந்தது –அரவணை -இத்யாதி –செங்கற் சீரை கட்டி கூப்பிட்டாகிலும் பெற வேண்டும் படி யாயிற்று வடிவு அழகும் படுக்கையும் –அரவணை மேல் – இவள் கடின ஸ்த்தலத்திலே கிடக்க–நீர் மெல்லிய படுக்கையை தேடிக் கிடக்கிறீரே –முகில் வண்ணனே-இத்தை எம்பார் அருளிச் செய்கிற போது –இயலைச் சொல்லுகிறவரைப் பார்த்து -இவ்வளவிலே முகம் காட்டாதே-செங்கற் சீரை கட்ட இருக்கிறவர் -முதலிகளாய் இருப்பார் –தலையிலே பிரம்புகள் விழிலும்-முகில் வண்ணரே -என்னீர் -என்று அருளிச் செய்தார் –இருவருமான வன்று சேர நிற்கவும்- பிரிந்த வன்று தாய்க் கூற்றிலே நிற்குமவர் இறே இவர் –
கங்குலும் பகலும் கண்துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்; ‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்; இரு நிலம் கைதுழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1–உறங்கக் கடவ இரவோடு -உறங்காமைக்கு கண்ட பகலொடு வாசி அற நித்திரை என்பது ஓன்று அறிகிறிலள் -கண் துயிலாள் என்னாதே அறியாள் என்கிறது நித்திரையை அறிந்து விரோதி என்று கை விட்ட இளைய பெருமாளின் வாசி சொல்கிறது -இளைய பெருமாளுக்கு முன்பு இல்லை யாகிலும் ஜென்மத்தில் மெய்ப்பாட்டாலே பற்றி விட வேண்டிற்று -இவளுக்கு-பிரணயிநிகள் பகல் உறங்குவர்கள் -இப்படி உபய வ்யாவ்ருத்தமாய் இரவும் பகலும் உறங்காதபடி ஆனாள்-அநித்ரஸ் சததம் ராம -என்கிற உம்முடைய படியை இவள் உடையாள் ஆனாள்
இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்; எழுந்துலாய் மயங்கும் கை கூப்பும்;
‘கட்டமே காதல்’ என்று மூர்ச்சிக்கும்; ‘கடல்வண்ணா! கடியை காண்’ என்னும்;
‘வட்டவாய் நேமி வலங்கையா!’ என்னும் ‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
சிட்டனே! செழுநீர்த் திருவரங்கத்தாய்!nஇவள் திறத் தென் சிந்தித்தாயே ?–7-2-4-ஸ்வாதீனம் இல்லாமையால் தோழிமார் இட்டு வைத்த காலும் கையுமாய் இருக்கும் –விரஹம் சந்தி பந்தங்களையும் குலைத்து சிதறிக் கிடக்கிற இத்தனை –
சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும் ‘திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;
வந்திக்கும் ஆங்கே மழைக் கணீர் மல்க ‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
‘அந்திப்போ தவுணன் உடலி டந்தானே! அலைகடல் கடைந்த ஆர் அமுதே!
சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல் செய் தானே!–7-2-5–சிந்திக்கும்-உம்முடைய ஸுந்தர்யாதி குணங்களையும் உம்மோட்டை சம்ச்லேஷத்தையும் நினைக்கும் –முன்பு இவ்வநுஸந்தானம் இன்றியே யாயிற்று இருப்பது -மோஹித்தவோ பாதி இதுவும் ஒரு படி விக்ருதி இருக்கிற படி -அப்போதே காணப் பெறாமையாலே-திசைக்கும்-மோஹிக்கும்-தேறும் -ஒரு ஹேது இன்றிக்கே இருக்க தேறா நின்றாள் -இது தானும் பயாவஹமாய் இருக்கிறதாய் யாயிற்று -மோஹம் செல்லா நிற்க அபேக்ஷிதம் பெற்றாரைப் போலே தேறுகை பயாவஹம் இறே -சரம தசையில் பிறக்கும் தெளிவுக்கு அஞ்ச வேணுமே-கை கூப்பும்-தேவர் படிகளை நினைத்து ஈடுபட்டுக் கும்பிடும் -கீழே மயங்கும் -கை கூப்பும் -என்றது -இங்கே தேறும் கை கூப்பும் என்றது -அல்லாதது சஞ்சாரியாய் செல்லா நிற்க இது ஒன்றும் ஸ்திரமாக செல்லா நின்றது –ஸ்வரூப அனுபந்தியான தர்மம் ஆகையால் -நித்யாஞ்சலி புடா -என்ன கடவது இறே -ஆற்றாமையாலே
இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-அந்த சத்தவங்களுக்கு ஜலத்தை ஒழிய செல்லாதாப் போலே உம்மை ஒழிய செல்லாத இவள் திறத்து –நிறமும் இழந்து -சஞ்சாரமும் அற்று இ றே இவள் கிடக்கிறது -ஏஹி பஸ்ய சரீராணி என்று வடிவைக் காட்டுகிறாள்-திருவரங்கத்தாய்-என் செய்கின்றாயே?-பரமபதத்தில் இருப்பிலோ கேட்க்கிறது-கண்ணுக்கு விஷயமான இடத்தே அன்றோ சாய்ந்து அருளிற்று -இவள் நிறம் பெற்று செருக்கி நடக்கும்படி பண்ணப் பார்த்ததோ -தவிரப் பார்த்ததோ – இவளை அவ் வூர்ப் படியாகப் பார்த்தாயோ இவ் வூர்ப் படியாகப் பார்த்தாயோ –
இவள் திறத் தென் செய்திட்டாயே–7-2-3-இவளுக்கு இவ்வளவான தசையை விளைக்கைக்கு நீ இட்ட மருந்து என் என்கிறாள் -அதாகிறது உன் முகம் தான் மாய மந்த்ரம் தான் கொலோ-என்று வடிவு அழகை காட்டுகை இறே -இவள் கேட்க்கிறது என் எனில் அதுவாகில் அதுக்கு பிரதிகிரியையாக –த்ரை லோக்ய ராஜ்ஜியம் சகலம் ஸீதாயா நாப் நுயாத்க்கலாம் -என்கிற இவளை அவன் முன்னே நிறுத்தி இவள் பட்டது எல்லாம் அவனைப் படுத்துவாளாக நினைக்கிறாள் –
இவள் திறத் தென் சிந்தித்தாயே ?–7-2-4-பேச்சுக்கு நிலம் இல்லாத படி நோவு பட்டக் கிடக்கிற இவள் திறத்து-என் சிந்தித்தாயே -நினைத்து இருந்தது என் –ஜீவிப்பிக்க நினைத்தீரோ -முடிக்க நினைத்தீரோ -இப்படிப்பட்ட ஆற்றாமையையும் பேற்றுக்கு உடலாக நினைத்து இருக்கிறிலள் -அவன் நினைவாலே பேறு என்று இருக்கிறாள் -உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -என்ன கடவது இறே –
என் செய்கேன் என் திரு மகட்கே?–7-2-8-இப்படி அலமாக்கிற இவள் உம்மைப் பெற்று ஆளாகைக்கு நான் செய்வது என் -உம்மால் அல்லது செல்லாமைக்கு பிராட்டி அளவு அல்லள்-என் திரு மகட்கே?-அவள் உம்மை ஆசைப்பட்டு இருக்கும் -இவள் உம்மையும் அவளையும் சேர ஆசைப்பட்டு இருக்கும் –
5-தேற்ற ஒண்ணாதபடி தோற்று-ஒன்றி நிற்க பண்ணின பல தானம் மற்றும் கற்பார் இழவிலே சுவறி-அதாவது-தேற்ற ஒண்ணாதபடி தோற்று-அதாவது-அன்னையர்காள் என்னை தேற்ற வேண்டா -என்றும் –கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன் -என்று பார்ஸ்வச்தராலும் தேற்றி தரிப்பிக்க ஒண்ணாதபடி அபஹ்ருத சித்தராய் கொண்டு பாரதந்த்ர்யமும் இழந்து –(வெள்ளைச் சுரி சங்கு சாரம்)–ஒன்றி நிற்க பண்ணின பல தானம் மற்றும் கற்பார் இழவிலே சுவறி-அதாவது-இப்படி விரஹ வ்யதையாலே மிகவும் தளர்ந்து இருக்கிற இவரைத் தரிப்பைக்கைகாக தன் விஜய பரம்பரையைக் காட்டிக் கொடுக்க கண்டு ப்ரீதராய் –குன்றம் எடுத்த பிரான் அடியாரோடு ஒன்றி நின்ற சடகோபன் -என்று தன் விஜயத்திலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களோடு பொருந்தி இருக்கும்படி பண்ணின பல தானமானது –(ஆழி எழ சங்கும் எழ சாரம்) கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ -என்று அவதார பிரயுக்த சௌலப் யத்தை உடையவனாய் -ப்ரிய பரனுமாய் -ஹித பரனுமாய் –தான் அங்கீகரிக்க நினைத்தாரை -நிர்ஹேதுகமாக -மோஷ பர்யந்தமாக -நடத்தும் அவனுமாகிய இவனை ஒழிய -மற்றும் ஒரு விஷயத்தை கற்பரோ –இப்படி சுலபமான இவ் விஷயத்தை சம்சாரிகள் இழப்பதே என்று அவர்கள் இழவை அனுசந்தித்து -அதிலே சுவறி-( கற்பார் ராம பிரானை அல்லால் சாரம்)
(தேற்ற ஒண்ணாத தோற்று)அன்னையர்காள் என்னைத் தேற்ற வேண்டா கண்ணபிரானுக்கு என் பெண்மை தோற்றேன் (திருவாய் மொழி -7-3-9)என்று பார்ஸ்வத்தாராலும் தேற்றி தரிப்பிக்க ஒண்ணாதபடி அபஹ்ருத சித்தராய்க் கொண்டு பாரதந்தர்யத்தையும் இழந்து (ஓன்று நிற்கப் பண்ணின பலாதாநம் )இப்படி இருக்கிற இவரைத் தரிப்பிக்கைக்காக ஈஸ்வரன் தன்னுடைய விஜய பரம்பரைகளைக் காட்டிக் கொடுக்கக் கண்டு ப்ரீதராய் –குன்றம் எடுத்த பிரான் அடியாரோடும் ஓன்று நின்ற சடகோபன் (திருவாய் மொழி -7-4-11)என்று அவர் விஜய பரம்பரைகளிலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களோடு ஒரு சேர்த்தியாக நிற்கும்படி பலாதாநம் பண்ணி (மற்றும் கற்பார் இழவிலே சுவறி )கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ” (திருவாய்மொழி 7-5-1) என்று “அபவரகே ஹிரண்ய நித ம் நிதா ய உபரி ஸஞ்சரந் தோ நத் ரஷ்யந்தி” என்கிறபடியே அவதார ப்ரயுக்த ஸெளலப்யத்தை உடையனாய் ப்ரிய பரனுமாய் தான் அங்கீகரிக்க நினைத்தாரை நிர்ஹேதுகமாக மோக்ஷ பர்யந்தம் நடத்துமவனுமா யிருக்குமிவனை ஸம்ஸாரிகள் இழப்பதே -என்று அவர்களுடைய இழவை அநுஸந்தித்து அதிலே அந்த பலாதாநமும் சுவறி–
சேர்வன் சென்று என்னுடைத் தோழிமீர்காள்! அன்னையர்காள்!என்னைத் தேற்ற வேண்டா;
நீர்கள் உரைக்கின்றது என்னிதற்கு? நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை;
கார் வண்ணன் கார்க்கடல் ஞாலம் உண்ட கண்ண பிரான் வந்து வீற்றிருந்த
ஏர்வள ஒண் கழனிப் பழனத் தென் திருப் பேரெயில் மாநகரே.–7-3-9-கலங்கினாரோ தெளிந்தார்க்கு உபதேசிப்பார் -அஞ்ஞரோ வ்யவஸ்திதரை உபதேசத்தால் மீட்கப் பார்ப்பார் -விஷயாதீனமாய் வருகிறத்தை சாதனத்தில் செலவு எழுத்துவார்களோ எனக்கு வார்த்தை சொல்லுவார் -இவள் தன்னை மறந்து அவனையே பார்த்து சொல்லுகிறாள் -அவர்கள் அவனை மறந்து தம் தம்மையே பார்த்து மீட்க்கத் தேடுகிறார்கள்-
முனிந்து சகடம் உதைத்து மாயப் பேய் முலை உண்டு மருதிடை போய்க்
கனிந்த விளவுக்குக் கன்று எறிந்த கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன்
முனிந்து இனி என்செ ய்தீர் அன்னைமீர்காள்! முன்னி அவன் வந்து வீற்றிருந்த
கனிந்த பொழில் திருப் பேரெயிற்கே காலம் பெற என்னைக் காட்டுமினே.–7-3-5-கிருஷ்ணனுடைய பும்ஸத்வத்துக்கு என் ஸ்த்ரீத்வத்தை தோற்றேன் -விரோதி வர்க்கத்தை அழியச் செய்த ஆண் பிள்ளைத் தனத்தை காட்டி ஒரு காலும் அழியாத ஸ்த்ரீத்வத்தை அழித்தான்
குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும்
ஒன்றி நின்ற சட கோபன் உரை செயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே–7-4-11-கோவர்த்தன உத்தாரணம் பண்ணின உபகாரகனான கிருஷ்ணன் திருவடிகளையே தஞ்சமாக நினைத்து இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களிலே தம்மையும் அந்நிய தமராக நினைத்து இருந்த ஆழ்வார் அருளிச் செய்த இது -மலையை எடுத்த அன்று மலைக்கு கீழே ஒதுங்கினவர்களை போலே சம்சாரத்துக்கு அஞ்சி கிருஷ்ணன் திருவடிகளிலே ஒதுங்குமவர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்கள் -அச் செயலுக்கு தோற்று அடிமை புக்கவர் ஆயிற்று இவர்-
கற்பார் இராம பிரானை அல் லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே.–7-5-1-நிலாத் தென்றல் சந்தனம் தண்ணீர் போலே பரார்த்தமாய் இருக்கிற விஷயத்தை ஒழிய -அதிகரிப்பார் புறம்பேயும் ஒன்றை அப்யசிப்பாரோ -அநர்த்த கரம் என்றாலும் விட ஒண்ணாத பிரிய விஷயமாய் -அபிரியம் ஆனாலும் விட ஒண்ணாத படி பத்த்யமான இவ்விஷயத்தை ஒழிய வேறு ஒன்றை அப்யஸிக்கக் கடவதோ –மற்றும் என்று -தேவதாந்தரங்களை சொல்லுகிறது அன்று -பரத்வத்தையும் அவதாரங்களையும் சொல்லுகிறது –பாவோ நான்யத்ர கச்சதி -தொழில் எனக்கு – கற்பரோ?-சேதனர் அன்றோ -எல்லாவற்றையும் விட்டு -இவ்விஷயத்தை கற்கைக்கு இங்குத்தைக்கு ஏற்றம் என் என்னில் -அது சொல்லுகிறது –மேலடைய
6-பழைய தனிமை கூப்பீடு தலை எடுத்து –-அதாவது-பாமரு மூ உலகும் படைத்த பத்மநாபாவோ-என்று தொடங்கி–தனியேன் தனை யாளாவோ – என்று ஒரு துணை அன்றிக்கே இருந்து -அவனுடைய ஜகத் காரணத்வாதிகளைச் சொல்லிக் கூப்பிடும் படி -முன்புத்தை – உண்ணிலாவியில் -கூப்பீடே மீளவும் தலை எடுத்து-
“பாமரு மூவுலகும் படைத்த பற்பநாபாவோ” என்று தொடங்கி “தனியேன் தனியாளாவோ” (திருவாய்மொழி 7-6-1 என்று அவனுடைய ஐகத் காரணத்வாதிகளைச் சொல்லிக் கூப்பிடும்படி முன்புற்றை உண்ணிலாவியில் தனிமைக் கூப்பீடே மீண்டும் தலையெடுத்து–
பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!
பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ!
தாமரைக் கண்ணாவோ!தனியேன் தனி ஆளாவோ!
தாமரைக் கையாவோ! உன்னை என்று கொல் சேர்வதுவே?–7-6-1-ஸ்தாவர ஜங்கமாத்மகமான பதார்த்தங்கள் சேர்ந்து இருந்துள்ள சகல லோகங்களையும் உண்டாக்கின திரு நாபி கமலத்தை உடையவனே-என் தாயே என்பாரைப் போலே கூப்பிடுகிறார்-தனியேன் தனி ஆளாவோ!-அக் கண் அழகே ஜீவனமாய் இருக்கிற திரளிலும் கொண்டு போகக் கண்டிலேன் -ஸ்த்ரீகளினுடைய நோக்கி ஜீவனமாய் இருக்கிற தசையில் அத் திரளிலும் கூடப் பெற்றிலேன் -த்ருதீய விபூதி போலே தனியே ஆளுகிறவனே -உன் குணங்களைக் காட்டி ஆற்றாமையை விளைத்தவனே –உன் கிருபை ஒழிய வேறு ஒன்றை அறியாதவன் நான் -உன் கிருபைக்கு நான் அல்லது இலக்கு இல்லாதபடி இருக்கிறவன் நீ என்றுமாம் –
சூழவும் பகை முகம் செய்ய--அதாவது சூழவும் தாமரை நாண் மலர்போல் வந்து தோன்றும் -என்றும் –
இணைக் கூற்றம் கொலோ அறியேன் -என்றும் – கண்ணன் கோளிழை வாண் முகமாய் கொடியேன் உயிர் கொள்கின்றதே -என்று முன்பு அனுபவித்தவனுடைய-முக அவயவ சோபையானது – விசத ஸ்ம்ருதி விஷயமாய் – பார்த்த பார்த்த இடம் எங்கும் தோன்றி நின்று நலிய- (திரு முக மண்டலத்தில் திருக்கண்கள் -திரு மூக்கு -திரு வாய் – திருப்புருவம் -திருக்காது -திருநெற்றி முதலானவை நலிவதால் சூழவும் பகை முகம் செய்ய என்கிறார் )
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் இணைக் கூற்றங்கொலோ அறியேன்” (திருவாய்மொழி 7-7-1) “கண்ணன் கோளிழை வாண்முகமாய்க் கொடியேனுயிர் கொள்கின்றதே” (திருவாய்மொழி 7-7-8 என்று முன்பு அநுபூதமான அவனுடைய முகத்தில் அவயவ ஸோபை யானது விஸத ஸ்ம்ருதி விஷயமாய்க் கொண்டு பாதிக்க நலிவு பட்டு–
ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங் கொலோ அறியேன்
ஆழியங் கண்ண பிரான் திருக்கண்கள் கொலோ அறியேன்
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றுங் கண்டீர்
தோழியர் காள்!அன்னைமீர்!என் செய்கேன் துயராட்டியேனே.–7-7-1-ஆசைப்பட்ட விஷயம் கிடையாது என்றாலும் மீள மாட்டாத சபலைகள் யுடைய பிராணனை முடிக்கும் -ராம சரம் போலே ஒப்பனை குறி அழியாது இருக்க பிராணனைத் துணிக்கும்-புருஷர்க்கும்-பருவம் நிரம்பி ஹிதம் சொல்லும் ஸ்த்ரீகளும் பாதை இல்லை – இணைக் கூற்றங் கொலோ -ஒரு மிருத்யுவால் முடிக்க ஒண்ணாது என்று இரண்டு மிருத்யு க்ருத சங்கேதிகளாய் வந்தால் போலே யாயிற்று இருக்கிறது-அறியேன்–சபலைகளையே நலிய வேணும் என்னும் நிர்பந்தம் இல்லையே பும்ஸாம் த்ருஷ்டா சித்த அபஹாரியும் இறே
கோளிழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்
கோளிழைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோளிழை யாவுடைய கொழுஞ்சோதி வட்டங்கொல்? கண்ணன்
கோளிழை வாண் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே.–7-7-8-தன் ஒளியே தனக்கு ஆபரணமாக உடைய திரு முகமாய்க் கொண்டு உபமான உபேமேயங்கள் மாறாகும் படி ரூபகம் முற்றின படி-கொடியேன் உயிர் கொள்கின்றதே.-எல்லாரும் உயிர் பெறும் நிலத்திலே இப்படி துக்கப் படுகைக்கு ஈடாகப் பண்ணின பாபத்தை யுடைய என் பிராணனை நலியா நின்றது-
எடுப்பும் சாய்ப்புமான க்லேசம் நடக்க–அதாவது விஜயங்களைக் காட்டித் தரிப்பித்த போது தலை சாய்ந்தும் -மீளவும் கூப்பிடும் படி தலை எடுத்தும்- இப்படி எடுப்பும் சாய்ப்பும் ஆக செல்லுகிற கிலேசம் நடவா நிற்கச் செய்தே-உபாய அதிகார தோஷம் ஒழிய மாயங்கள் செய்து வைத்த வைசித்திரியைக் கேட்க--அதாவது உபாய பூதனான உனக்கு அஜ்ஞான அசக்திகளாகிற தோஷம் இன்றிக்கே இருக்க –
சரண்யனான எனக்கு -ஆகிஞ்சன்யம்-அநந்ய கதித்வங்களும் ஆர்த்தியும் உண்டாகையாலே அதிகாரி தோஷம் இன்றிக்கே இருக்க –-பாசங்கள் நீக்கி -என்று தொடங்கி-மாயங்கள் செய்து வைத்தி –என்று
அவித்யா கர்ம வாசன ருசிகளை -சவாசனமாகப் போக்கி -உனக்கு அனந்யார்ஹ சேஷம் ஆக்கிக் கொண்ட பின்பு ஜன்ம மரணாத் யாச்சர்யங்களை உண்டாக்கி – என்னை சம்சாரத்தில் வைத்த ஆச்சர்யத்தை அருளிச் செய்ய வேணும் என்று கேட்க-(மாய வாமனன் சாரம்)–
(எடுப்பும் சாய்ப்புமான க்லேஸம் நடக்க) தம்முடைய ஆர்த்தியாலே வருகிற எடுப்பும் அவனுடைய குணாநுஸந்தாநத்தாலே வந்த சாய்ப்புமாய்க் கொண்டு க்லேஸமானது உருவ நடக்க (உபாயாதிகார தோஷமொழிய மாயங்கள் செய்து வைத்த வைசித்ரியைக் கேட்க) உபாய பூதனாயிருக்கிற வுனக்கு அஜ்ஞாந அஸக்திகளாகிற தோஷமின்றிக்கே யிருக்க ஸரணாகதனான எனக்கு ஆகிஞ்சந்ய அநந்ய கதித்வங்களும் ஆர்த்தியும் உண்டாயிருக்கையாலே அதிகாரத்திலே தோஷமின்றிக்கே இருக்க “பாசங்கள் நீக்கி இத்யாதி, மாயங்கள் செய்து வைத்தி” (திருவாய்மொழி 7-7-5) என்று ஸம்ஸாரத்தில் ஸங்கத்தை வாஸநையோடே அறுத்து உனக்கநந்யார்ஹ ஸேஷமாக்கிக் கொண்டு பின்பு என்னை ஸம்ஸாரத்திலே வைத்த ஆஸ்சர்யத்தை அருளிச் செய்ய வேணுமென்று கேட்க–
மாய வாமனன் -உன்னைப் பெற்று தரிக்கவும் பெறாதே இங்கே வைத்த ஆச்சர்யம் இருந்த படி என் என்ன -அவனும் ஒன்றைக் கேட்க ஒன்றை பரிஹரிப்பாரை போலே-இவ்வளவோ என் படி -என்று தன் விசித்திர விபூதி த்வத்தை காட்டி அருளக் கண்டு -இது விஸ்மயமாய் இருந்ததீ -இது இருந்த படி என் -என்று யமுனைக் கரையிலே –ஜெகதே தன்மஹாச்சர்யம் ரூபம் யஸ்ய மஹாத்மன தேனாச்சார்ய வரேணாஹம் பவதா கிருஷ்ண சங்கத -என்று அக்ரூரன் ஆச்சர்யப் பட்டால் போலே -இவரும் அவனுடைய ஜகதாகாரதையை அனுசந்தித்து விஸ்மிதர் ஆகிறார் –
பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அறக் கொண்டிட்டு நீ
வாச மலர்த் தண் துழாய் முடி மாயவனே!அருளாய்
காயமும் சீவனுமாய்க் கழிவாய்ப் பிறப்பாய் பின்னும் நீ
மாயங்கள் செய்து வைத்தி;இவை என்ன மயக்குகளே.–7-8-5-பாசங்கள் நீக்கி -அவித்யா கர்ம வாசனா ருசிகளைப் போக்கி-என்னை-விஷயாந்தரங்களிலே கால் தாழ்ந்து இருக்கிற என்னை
உனக்கே அறக் கொண்டிட்டு நீ-துயர் அறு சுடர் தொழுது எழு-என்னும் படி பண்ணி -இவருக்கு மயர்வை அறுத்து மதி நலத்தை அருளிற்று எத்தைக் கொண்டு என்னில்-வாச மலர்த் தண் துழாய் முடி மாயவனே!-சாத்தின வளையத்தின் அழகைக் காட்டி யாயிற்று இப்படி பண்ணிற்று -பரிமளத்தை யுடைத்தாய் மலரோடு கூடின சிரமஹரமான திருத் துழாய் மாலையை திருமுடியில் யுடைய ஆச்சர்ய ஸுந்தர்ய யுக்தனே –அருளாய்-இவ்வளவு புகுர நின்ற என்னை இங்கே இட்டு வைத்தது நலியவோ
காயமும் சீவனுமாய்க் -சரீரமும் ஆத்மாவுமாய்-கழிவாய்ப் பிறப்பாய் -உத்த்பத்தி விநாசங்களுமாய்
பின்னும் நீ-மாயங்கள் செய்து -சம்சாரத்தில் நசை அற்ற பின்பும் ஜென்ம மரநாத்தி யாச்சர்யங்களை யுண்டாக்கி – வைத்தி;-அவற்றோடு ஜீவிப்பித்து வைத்தீ இவை என்ன மயக்குகளே.–இவை என்ன தெரியாச் செயல்கள் -துர்ஜ்ஜேய ப்ரவ்ருத்திகள் –
7-ஐச்சமாக இருத்தி உறக் கொண்ட ஸ்வ பர பிரயோஜனத்தை அருளிச் செய்ய--அதாவது
அவன் -நமக்கும் நம் உடையாருக்கும் -போது போக்காகா உம்மைக் கொண்டு திருவாய் மொழி
பாடிவித்து கொள்ள வைத்தோம் காணும் –என்று கர்மம் அடியாக அன்றிக்கே- தன் இச்சையாலே இருத்தி –உறக் கொண்ட ஸ்வ பர பிரயோஜனத்தை அருளிச் செய்ய-அதாவது உறப் பல இன் கவி -என்கிறபடியே–தனக்கு தகுதியான கவிகளைப் பாடுவித்து கொண்ட ஸ்வ பிரயோஜனமும் – பர பிரயோஜனமுமான -வித்தை -வைத்ததுக்கு ஹேதுவாக அருளிச் செய்ய-
(ஐச்சிகமாக இருத்தி யறக்கொண்ட ஸ்வ பர ப்ரயோஜநத்தை அருளிச் செய்ய) அவன் நமக்கும் நம்முடையார்க்கும் உம்மைக் கொண்டு திருவாய்மொழி பாடுவித்துக் கொள்ளுகைக்காக நம்முடைய இச்சையாலே வைத்தோம் காணும் என்று வைத்ததுக்கு ஹேதுவை அருளிச் செய்ய
திறத்துக்கே துப்பரவாம் திரு மாலின் சீர்
இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ?
மறப்பிலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னை
உறப்பல இன்கவி சொன்ன உதவிக்கே?–7-9-9-ஸ்வ விஷய ஞானத்துக்கு சம்பாவனை இல்லாமையால் விஸ்ம்ருதியும் இன்றிக்கே அசித்சமனான என்னை -மறந்தேன் உன்னை முன்னம் என்கிற படியே அனுதாபமும் இன்றிக்கே இருக்கிற என்னை-என்னால் தன்னை உற-யதோ வாசோ நிவர்த்தந்தே என்கிற விஷயத்தை –எல்லை உற -தனக்கு நேரே வாசகமாம் படி ஈஸ்வரனுக்கு உறும் படி என்றுமாம் இது பிள்ளான் நிர்வாஹம்-பல இன்கவி சொன்ன உதவிக்கே?–சதுர்விம்சத் சஹஸ்ராணி என்றும் பாட்ட்யே-கேயே ச மதுரம் என்றும் சொல்லுமா போலே ஆயிரமுமாய் இனிதான கவி சொன்ன உபகாரத்துக்கு –திறத்துக்கு என்று தொடங்கி பருகிலும் ஆர்வனோ-
என் சொல்லி எந்நாள் பார் விண்ணீர் இறப்பு எதிர் எதுவும் என்கிற உபகார ஸ்ம்ருதியோடே--அதாவது
வியாச பராசர வால்மீகி பிரப்ருதிகள்-முதல் ஆழ்வார்கள் -உண்டாய் இருக்க – தம்மைக் கொண்டு கவி பாடு வித்த உபகாரத்தை அனுசந்தித்து –என் சொல்லி நிற்பானோ-என்றும் ,-எந்நாள் சிந்தித்து ஆர்வேனோ -என்றும் ,-பார் விண் நீர் முற்றும் கலந்து பருகிலும் ஆர்வேனோ – இறப்பு எதிர் காலம் பருகிலும் ஆர்வேனோ -என்று அவன் பண்ணின உபகாரத்தை அனுசந்தித்தால்-எங்கனே நான் தரையில் கால் பாவுவது –-அவ் உபகாரத்தை கால தத்வம் உள்ள அளவும் அனுசந்தித்தாலும் -பர்யாப்தன் ஆகிறிலேன் –-சகல ஸ்தலங்களிலும் உண்டான சகல சேதனருடையவும்-வாகாத் யுபகரணங்களை- நான் ஒருவனே யுடை யேனுமாய் — கால த்ரயத்திலும் -பேசி அனுபவித்தாலும் -த்ருப்தன் ஆவேனோ –-உதவிக் கைம்மாறு -என்று தொடங்கி –-எதுவும் செய்வது ஒன்றும் இல்லை இங்கும் அங்கும் -என்று இதுக்கு பிரத்யு உபகாரமாக ஆத்ம சமர்ப்பணைத்தைப் பண்ணுவோம் -என்னில் -அதுவும் -ததீயமாய் -இருக்கையாலே – உபய விபூதியிலும் செய்வது ஒன்றும் இல்லை என்னும் படியான உபகார ஸ்ம்ருதியோடு கூடிக் கொண்டு –
(என் சொல்லி எந்நாள் பார் விண்ணீரிறப்பெதிர் எதுவும் என்கிற உபகார ஸ்ம்ருதியோடே) வ்யாஸ பராசர வால்மீகி ப்ரப்ருதிகள் முதலாழ்வார்களள வுண்டாயிருக்கத் தம்மைக் கொண்டு கவி பாடுவித்துக் கொண்ட உபகாரத்தை அநுஸந்தித்து “என் சொல்லி நிற்பனோ” “எந்நாள் சிந்தித்தார்வனோ” (திருவாய்மொழி 7-9-7) “பார் விண்ணீர் முற்றுங் கலந்து பருகிலுமார்வனோ” (திருவாய்மொழி 7-9-7) “இறப்பெதிர்காலம் பருகிலுமார்வனோ” (திருவாய்மொழி 7-9-9) என்று எங்ஙனே நான் தரையில் கால் பாவுவது அவவுபகாரத்தைக் காலதத்வ முள்ளதனையும் அநுஸந்தித்தாலும் பர்யாப்தனாகிறிலேன். ஸகல ஸ்தலங்களிலு முண்டாயிருக்கிற ஸகல சேதநருடைய வாகாத் யுபகரணங்களை நானொருவனுமே உடையேனுமாய் கால த்ரயத்திலும் பேசி யநுபவித்தாலும் பர்யாப்தனாகிறிலேன். “உதவிக் கைம்மாறு இத்யாதி. எதுவுமொன்று மில்லை செய்வதிங்குமங்கே” (திருவாய்மொழி 7-9-10) இதுக்கு ப்ரத்யுபகாரம் பண்ணுமிடத்தில் ஆத்மாவும் ததீயமா யறிகையாலே உபய விபூதியிலும் செய்யலாவது ஒன்றில்லை என்னும்படியான உபகார ஸ்ம்ருதியை உடையராய்
என்றைக்கும் என்னை உய்யக்கொண்டு போகிய
அன்றைக்கு அன்று என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
இன் தமிழ் பாடிய ஈசனை ஆதியாய்
நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ?–7-9-1-என் சொல்லி தரிப்பேன் -சம்சாரியாய் இருக்கிற நான் தனக்கு ஆபி முக்கியம் பண்ணுகைக்கு என் பக்கலிலே ஒரு ஹேது யுண்டு என்று தரிக்கவோ -பின்பு தன்னை ஒழிய செல்லாமை பிறக்கைக்கு என் பக்கலிலே சாதன லேசம் உண்டு என்று தரிக்கவோ -என்னைக் கொண்டு கவி பாடுவித்துக் கொண்டு தனக்கு ஓர் ஏற்றம் யுண்டாக இருக்கிற நீர்மையை கண்டால் என்னால் தரிக்கலாமோ -சாரதியாய் நின்று வென்று வெற்றியை அர்ஜுனன் தலையில் ஏறிட்டால் போலே தானே பாடி என் தலையிலே ஏறிட்டான் அத்தனை –
வைகுந்த நாதன் என் வல்வினை மாய்ந்து அறச்
செய்குந்தன் தன்னை என்னாக்கி என்னால் தன்னை
வைகுந்தனாகப் புகழ் வண் தீங்கவி
செய்குந்தன் தன்னை எந்நாள் சிந்தித்து ஆர்வனோ?–7-9-7-பண்ணின உபகாரத்தை எத்தனை நாள் அநுஸந்தித்தால் எனக்கு பரியாப்தி பிறப்பது -கால தத்வம் உள்ளதனையும் ஸ்மரித்தாலும் பரியாப்தி பிறக்குமோ -சரீர சம்பந்தம் அற்றால் இதுக்கு அவசரம் இல்லை -அதுக்கு முன்பு காலம் அல்பம் ஆகையால் பரியாப்தி பிறவாது என்கிறார் –
ஆர்வனோ ஆழி அங் கை எம்பிரான் புகழ்
பார் விண் நீர் முற்றும் கலந்து பருகிலும்
ஏர்விலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைச்
சீர் பெற இன் கவி சொன்ன திறத்துக்கே ? –7-9-8-பூமியிலும் ஊர்த்வ லோகத்திலும் ஜாலங்களிலும் உள்ள சகல சேதனர்கள் உடைய போக்த்ருத்வத்தையும் வாக்யாதி உபகரணங்களையும் துணையாக கொண்டு அனுபவித்தாலும் ஆர்வேனோ
திறத்துக்கே துப்பரவாம் திரு மாலின் சீர்
இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ?
மறப்பிலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னை
உறப்பல இன்கவி சொன்ன உதவிக்கே?–7-9-9-போன காலமும் வரும் காலமும் நான் அனுபவித்தால் தான் ஆர்வேனோ -போன காலம் அனுபவிப்பாராய்ச் சொல்லுகிறார் அல்லர் -எல்லா காலமும் அனுபவித்தாலும் ஆரார் என்கை -கீழ்ச சொன்ன ஸமஸ்த சேதனருடைய போக்த்ருத்வ சக்தியையும் கூட்டிக் கொண்டு அனுபவித்தாலும் ஆராது-எந்நாள் சிந்தித்து ஆர்வேனோ என்கிறதில் காட்டிலும் ஏற்றம் இல்லையாம் இறே
உதவிக் கைம்மாறு என் உயிர் என்ன உற்று எண்ணில்
அதுவும் மற்று ஆங்கவன் தன்னது என்னால் தன்னைப்
பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு
எதுவும் ஓன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே.–7-9-10-செய்யலாவது எதுவும் ஒன்றும் இல்லை -இங்கு இருந்த நாள் சங்கோசத்தாலே செய்யலாவது ஒன்றும் இல்லை யாகிலும் -சங்கோசம் அற்று முக்தன் ஆனால் பிரத்யுபகாரம் பண்ணத் தட்டில்லையே என்னில்-இங்கும் அங்கே.–இங்கு ஆனால் தேஹாத்ம அபிமான வாசனையால் செய்யலாவது உண்டோ என்று பிரமிக்கலாய் இருக்கும் -சங்கோசம் கழிந்த அளவில் செய்யலாவது ஒன்றும் இல்லை என்னும் இடம் சொல்ல வேண்டாம் இறே –ஸ்வேந ரூபேண ஆபிநிஷ்பத்யதே-என்று ஸ்வரூப ஞானம் பிறந்த இடத்தில் ஸ்வா தந்தர்ய கார்யமான ப்ரவர்த்திக்கு இடம் இல்லை –
8-தன் சரிதை கேள்வி யாகாமல் இன்பம் பயக்க இருந்த நிலத் தேவர் குழுவிலே பாட்டுக் கேட்பிப்பதாக கான கோஷ்டியையும் – தேவ பிரான் அறிய -மறந்தவர்-அதாவது-செம்பவளத் திரள் வாய் தன் சரிதை கேட்டான் -பெருமாள் திருமொழி -10-8—என்கிறபடியே –பிராட்டியை ஒழிய பெருமாள் தனி இருந்த இருப்பிலே குசலவர்கள் ஸ்ரீ ராமாயணம் கேட்பித்தாப் போல் அன்றிக்கே –இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும் இவ் ஏழ் உலகை இன்பம் பயக்க இனிது உடன் வீற்று இருந்து –என்று ஆனந்த மயனான தனக்கும் -ஆனந்த வர்தகையான பிராட்டியும் தானுமான சேர்த்தியில் –லோகம் அடங்க வாழும் படி –உபய விபூதி நாதத்வத்தால் வந்த வேறு பாடு தோற்ற எழுந்து அருளி இருந்த –நிலத் தேவர் குழு வணங்கும் சிந்தை மகிழ் திரு வாறன் விளையில்-அந்த பூ சூரரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளிலே –பிரத்யு உபகாரமாக திரு வாய் மொழி கேட்விப்பித்து அடிமை செய்ய பாரித்து –திரு வாறன் விளையில் பரத்வ விமுகமாம் படி தன் நெஞ்சு பிரவணம் ஆகையாலே –திருவாறன் விளை உறை தீர்த்தனுக்கு அற்ற பின் — சிந்தை மற்று ஒன்றின் திறத்து அல்லாத் தன்மை -தேவ பிரான் அறியும் -என்று பகவத் அனுபவ ஜனித ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக –ஹாவு ஹாவு -என்று சாம கானம் பண்ணும் பரம பதத்தில் கோஷ்டியையும் –ஸ்வதஸ் சர்வஜ்ஞனாய் -நினைவுக்கு வாய்த் தலையிலே இருந்து –எல்லோருடைய நினைவும் அறியும் அயர்வறும் அமரர்கள் அதிபதி அறிய விஸ்மரித்தவர் –
(தன் சரிதை கேள்வி யாகாமல் இன்பம் பயக்க விருந்த நிலத் தேவர் குழுவிலே பாட்டுக் கேட்பிப்பதாக காந கோஷ்ட்டியையும் தேவ பிரானறிய மறந்தவர்) “செம்பவளத் திரள்வாய்த் தன் சரிதை கேட்டான் (பெருமாள் திருமொழி 10-8) என்று நாச்சியாரை யொழிய பெருமாள் தாமே தனி இருந்த இடத்தே ஸ்ரீராமாயணம் கேட்பித்த குஸ லவர்களைப் போல் அன்றிக்கே –இன்பம் பயக்க வெழில் மலர் மாதரும் தானும் இவ் வேழுலகை இன்பம் பயக்க நிலத் தேவர் குழு வணங்கும் சிந்தை மகிழ் திருவாறன்விளை” (திருவாய்மொழி 7-10-1 என்று ஆநந்த மயனான அவன் தனக்குமாநந்த வர்தகையான பிராட்டியும் ஸர்வேஸ்வரனுமான சேர்த்தியிலே லோகமடங்க வாழும்படி உபய விபூதி நாயகத்வத்தால் வந்த வேறுபாடெல்லாம் தோற்ற எழுந்தருளியிருக்கிற அவனை கரண த்ரயத்தாலும் அநுபவிக்கிற பூ ஸுரரான ஸ்ரீவைஷ்ணவர்களுடைய திரட்சியை யுடைத்தான திருவாறன்விளையிலே ப்ரத்யுபகமாரமாகத் திருவாய்மொழி பாடி அடிமை செய்யப் பாரித்து (காந கோஷ்டியையும் தேவபிரானறிய மறந்தவர்) “சிந்தை மற்றொன்றின் திறத்ததல்லாத் தன்மை தேவபிரானறியும் திருவாறன்விளையுறை தீர்த்தனுக்கற்றபின்” (திருவாய்மொழி 7-10-10) என்று அந்தத் திருவாறன் விளையிலே தம்முடைய நெஞ்சு ப்ரவணமாகையாலே “ஹாவு ஹாவு ஹாவு” (தைத்திரியோபநிஷத்) என்று ஸாமகாநம் பண்ணுகிற பரமபதத்தில் கோஷ்டியையும் அயர்வறுமமரர்கள் அதிபதியாய் ஸர்வருடைய ஹ்ருதயமும் அறியும்படி ஸ்வதஸ் ஸர்வஜ்ஞனா யிருக்கிற அவனும் கூட அறியும்படி விஸ்மரித்த இவர்
அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி அரசு எய்தி அகத்தியன் வாய் தான் முன் கொன்றான்
தன் பெரும் தொல் கதை கேட்டு மிதிலை செல்வி உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்
செம் பவள திறல் வாய் தன் சரிதை கேட்டான் தில்லை நகர் சித்ர கூடம் தன்னுள்
எம்பெருமான் தான் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன் அமுதம் மதியோம் அன்றே— 10-8–ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகள் ஜகம் அடைய உஜ்ஜீவிக்கும் படி பெற்ற ஸ்ரீ குசலவர்கள் பேச தம்முடைய வ்ருத்தாந்தமான ஸ்ரீ இராமாயண கதையை கேட்டு அருளினவர் நித்ய வாஸம் பண்ணுகிற
இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற் றமர்ந் துறைகின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை
அன்புற் றமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களு மாகுங் கொலோ?–7-10-1–நிரதிசய ஆனந்தம் பிறக்கும் படியாக-நித்ய துக்கியான சம்சாரியானவன் -ஆனந்தமயனான தன்னோட்டை சேர்த்தியாலே ஆனந்திக்குமா போலே யாயிற்று -பிராட்டியோட்டை சேர்த்தியாலே தான் ஆனந்திக்கிற படி –அல்லி மலர் மக்கள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் -என்னக் கடவது இறே –ராமஸ்து ஸீதயாசார்த்தம்
எழில் மலர் மாதருந் தானும்–ராகவோ அர்ஹதி வைதேஹீம் -என்று இறே இவளுக்கு ஏற்றம் –யஸ்ய ஜனகாத்மஜா -என்று இறே தனக்கு ஏற்றம் -எழிலை யுடைய பெரிய பிராட்டியார்—அன்புற்று-இவர் திருவாய்மொழி கேட்க்கைக்கு நல்ல இடம் என்று ஸ்நே ஹத்தை பண்ணி அமர்ந்து -வேறு ஒரு பிரயோஜனத்தை கனிசியாதே-தேச வாசம் தானே பிரயோஜனமாக கொண்டு-உறைகின்ற -அவதாரம் போலே அன்றிக்கே நித்ய வாசம் பண்ணுகிற-அணி பொழில் சூழ் திரு வாறன்விளை-தர்ச நீயமான பொழில் சூழ்ந்த தேசத்தை-அன்புற்று -தேன தே தமனுவ்ரதா -என்கிறபடியே அவன் விரும்பும் தேசத்தையே விரும்பும் அத்தனை இறே -அவன் திருவாய் மொழி கேட்க்கைக்கு நல்ல இடம் என்று ஸ்நேஹித்தால் போலே நாமும் திரு வாய் மொழி கேட்ப்பிக்கைக்கு நல்ல இடம் என்று ஸ்நேஹத்தை பண்ணி-அமர்ந்து -நாமும் அநந்ய பிரயோஜனராய்–அனுகூல வ்ருத்திகளைப் பண்ணி -மநோ ரத்தத்துக்கு காலமான ஆனதுவே போகத்துக்கும் காலமாக வற்றோ –அபீதா நீம் சகலஸ் ஸ்யாத் –
சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அல்லாத்தன்மை தேவபிரான் அறியும்
சிந்தையினால் செய்வதா னறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத் தேவர் குழு வணங்கும்
சிந்தை மகிழ் திரு வாறன் விளையுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே.–7-10-10-திருவாறன் விளை ஒழிய வேறு ஒன்றில் ப்ராப்ய புத்தி இல்லை என்னும் இடம் சர்வேஸ்வரன் அறியும் –கிட்டினாரை நிரதிசய ஆனந்தி யாக்கும் தேசம் -இவ்வத்தியவசாயம் என்று தொடங்கி என்ன –யுறை தீர்த்தனுக்கு-அங்குத்தை நித்ய வாசத்தாலே தனக்கு போக்யத்தை காட்டி -புறம்பு உள்ள ருசியைப் போக்கி தன் பக்கல் ருசியை பிறப்பித்தவனுக்கு –அற்ற பின்னே- அவன் பக்கல் அநந்யார்ஹமாம் படி ருசி பிறந்த பின்பு –சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அல்லாத்தன்மை -தேவபிரான் அறியும்-
9-சரமோ உபாய பரர் ஆனார்க்கு அதாவது-கீழ் தாம் அருளிச் செய்யக் கேட்ட (அகலகில்லேன் இறையும் பாசுரத்தில்) ஸித்த சாதனத்திலே- தத் பரர் ஆனவர்களுக்கு-நீள் நகரமது -துணித்தான சரண் அன்றி மற்று ஓன்று இலம் உள்ளித் தொழுமின் என்று பிராப்ய சாதன அவதியைப் ப்ரீதியாலே பிரகாசிப்பிகிறார் ஏழாம் பத்தில் .-அதாவது –-நீள் நகரம் அதுவே மலர் சோலைகள் சூழ் திரு வாறன் விளை – வாணனை ஆயிரம்தோள் துணித்தான் சரண் அன்றி மற்று ஓன்று இலம்-என்றும்
உள்ளித் தொழுமின் தொண்டீர் -என்று நிரதிசய போக்யமான திரு வாறன் விளை யாகிற மகா நகரமே பிராப்யம்– அங்கு எழுந்து அருளி இருக்கிற உஷா அநிருத்த கடகன் ஆனவனே அந்த பிராப்யத்துக்கு பிராபகம் – இவ்வர்த்ததில் மாறாட்டம் இல்லை -ஆகையால் இவ் அர்த்தத்தில் ருசி உடையார் புத்தி பண்ணுங்கோள் என்று – பிராப்யத்தினுடைய அவதி ததீய விஷயம் என்றும் – பிராபகத்தினுடைய அவதி அர்ச்சாவதார ஸூலபன் என்றும் – இவ்வர்த்தத்தை தம்முடைய உகப்பாலே வெளி இட்டு அருளுகிறார்- ஏழாம் பத்தில் என்கை.
(சரம உபாய பரரானார்க்கு )கீழ் தாமருளிச்செய்யக் கேட்ட (ஸித்த சாதனத்தாலே தத் பரரானார்க்கு நீள் நகரமது -துணித்தான் சரண் அன்றி மற்று ஓன்று இலம் உள்ளித் தொழுமின் என்று பிராப்ய சாதன அவதியை ப்ரீதியாலே பிரகாசிப்பிகிறார்) நீள் நகரமதுவே மலர்ச்சோலைகள் சூழ் திருவாறன்விளை வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரணன்றி மற்று ஒன்றிலம் உள்ளித்தொழுமின் தொண்டீர் (திருவாய் மொழி -7-10-7) என்றும் நிரதிசய போக்யமான திருவாறன்விளை யாகிற மஹா நகரே பரம ப்ராப்யம் -அங்கு எழுந்து அருளி இருக்கிற உஷா நிருத்த கடகனானவனுடைய திருவடிகளே ப்ராபகம் -இவ்வர்த்தத்தில் மாறாட்டமில்லை – ஆகையால் இவ்வர்த்தத்தில் ருசி யுடையராய் புத்தி பண்ணுங்கோள் என்று ப்ராப்யத்தினுடைய அவதி ததீயம் என்றும் பிராபகத்தினுடைய அவதி, அர்ச்சாவதார ஸுலபனானவன் திருவடிகளே என்றும் இவ்வர்த்தத்தைத் தம்முடைய திரு வுள்ளத்தி லுகப்பாலே வெளியிடுகிறார் என்கிறார் –
நீணகரமதுவே மலர்ச் சோலைகள் சூழ் திரு வாறன்விளை
நீணகரத் துறைகின்ற பிரான் நெடுமால் கண்ணன் விண்ணவர்கோன்
வாணபுரம் புக்கு முக் கட்பிரானைத் தொலைய வெம் போர்கள் செய்து
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்றொன்று இலமே.–7-10-7-நீணக ரமதுவே-கலங்கா பெரு நகரமாய் -அபுநாராவ்ருத்தி லக்ஷணமான தேசம் திருவாறன் விளையே-மஹா நகரத்திலே நித்ய வாசம் பண்ணுகிற மஹா உபகாரகன் -விண்ணவர் கோனாய் வைத்து ஆஸ்ரிதர் பக்கலிலே வ்யாமோஹத்தாலே கிருஷ்ணனாய் வந்து அவதரித்து ஸூ லபன் ஆனவன் –-வாண புரம் புக்கு -எதிரிகள் இருந்த தேசத்திலே எடுத்து விட்டு-முக் கட் பிரானைத்-ஈஸ்வர அபிமானியாய் வாணனுடைய ரக்ஷணத்துக்கு நான் கடவன் என்று ஏறிட்டு கொண்ட ருத்ரனை –-தொலைய-இனி ரக்ஷகத்வம் வேண்டா -அத்தை பொகடும் படி வெம் போர்கள் செய்து-கொடிய யுத்தங்கள் செய்து – வாணனை ஆயிரம் தோள் துணித்தான்- பாணனுடைய பாஹு வனத்தை சேதித்து விட்டான் -உஷை பித்ரு ஹீனை யாகாமைக்கு –சரண் -அவனே அத்தேசத்தை பிராபிக்கைக்கு உபாயம் –-அன்றி மற்றொன்று இலமே.–வேறு ப்ராப்ய ப்ராபகங்கள் மாறாடக் கடவோம் அல்லோம்-
—
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்