யத் பதாம் போருஹத் யாநவித் வஸ்தா சேஷ கல்மஷ
வஸ்து தாமுபயாதோ அஹம் யாமுநேயம் நமாமி தம்-எவர் உடைய திருவடித் தாமரையை தியானிப்பதால் எல்லா பாபங்களும் அழியப் பெற்று அடியேன் ஒரு பொருள் ஆனேனோ அத்தகைய யாமுனாசார்யரை வணங்குகிறேன் –
ஸ்வாதயன் நிஹா சர்வேஷாம் த்ரய்யந் தார்த்தம் ஸூ துர் க்ரஹம்
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்திர தம் வந்தே யாமுநாஹ் வயம்-
ஸ்வாதயன்-அனுபவத்திக் கொண்டே –
யன் ப்ரத்யயம் -அனுபவிப்பித்து-
இஹ -இந்த காலத்தில் -இத்தைச் சொல்லும் பொழுது -இதில் –
சர்வேஷாம்-சர்வாதிகாரம் இந்த ஸ்தோத்ரம் -ஸ்ரத்தையே வேண்டுவது
ஸூ துர்க் ரஹம்–த்ரய்யந் தார்த்தம்-அறிவரிய வேதாந்தார்த்தங்களை
ஸ்தோத்ர யாமாஸ-ஸ்தோத்ர ரூபமாக வெளியிட்டு அருளினாரோ
யோகீந்திர-எந்த யோகி ஸ்ரேஷ்டர்–எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவனான ஆளவந்தார் –
இந்த ஸ்தோத்ர ரத்னத்தின் ஒவ் ஒரு ஸ்லோகமும் வேதாந்தப் பொருளைகளையே விளக்கி அருளும் பண்டிதரோடு பாமரர்களோடு வாசியற மதுரமாக -போக்யமாக -உபநிஷத்துக்கள் பொருள்களை அருளிச் செய்த எதிகட்க்கு இறைவன் யமுனைத் துறைவனை வணங்குகிறேன்-யோகிகளுக்குள் சிறந்தவரும், புரிந்து கொள்ள அரிதான வேதாந்த அர்த்தங்களை எல்லோரும் புரிந்து கொள்ளும்படி ஸ்தோத்ரங்களாக அருளிச் செய்தவருமான ஸ்ரீ ஆளவந்தாரை வணங்குகிறேன். என்கிறது இந்த தனியன்
நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம
நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம–அஷ்டாக்ஷர மந்த்ரம் போல் இதுவே-ஆதார அதிசயத்தாலே ஸ்ரீ ஆளவந்தாருக்கு நமஸ்காரம் என்று பலகாலும் சொல்லி வணங்குவது-ஸ்ரீ ஆளவந்தாரை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன். -என்னால் அவரை வணங்குவதை நிறுத்த முடியவில்லை.-
ஸ்ரீமத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லாபஸ் ஸ்ரீ தர்ஸ்சதா –
அபயப்ரதா நாமா நமஸ் மதகுரு மஹம் பஜே
யத் கடாஷா தயம் ஜந்துர புநர் ஜன்மதாம் கத-
–
அவதாரிகை –
ஸ்ரீ சர்வேஸ்வரன் ஆழ்வாருக்கு தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை மயர்வற மதிநலம் அருளினான் -என்கிறபடியே நிர்ஹேதுக கிருபையாலே காட்டிக் கொடுக்க –கொடுத்த ஜ்ஞானம் பக்தி ரூபா பன்ன ஜ்ஞானம் ஆகையாலே பரபக்தி யுக்தராய்க் கொண்டு பகவத் குண அனுபவத்தை பண்ணிக் கொண்டு அதினுடைய விபாக தசையான பரஜ்ஞானம் பிறந்து -அதடியாக பரம பக்தி பிறந்து-அத்தாலே – ஏஷ சம்ப்ரசாதே அஸ்மா சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதிரூப சம்பாத்திய ஸ்வேன ரூபேணாபி நிஷ்பத்யதே –(இந்த ஜீவன், இந்த ஸாரீரத்திலிருக்து கிளம்பி, பரஞ்சோதியான நாராயணனை அடைந்து, ஸ்வரூப மலர்ச்சி பெறுகிறான்)என்றும்-ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்ஜன பரமம் சாம்யம் உபைதி –(பரமபுருஷனே ஸாக்ஷாத்கரித்தவுடன் ப்ரஹ்மஜ்ஞானி யானவன், புண்ய பாபங்களை விட்டு, ப்ரக்ருதி ஸம்பந்த மற்றவனாய், (புருஷோத்தமனுடன்) மேலான ஸாம்யத்தை. அடைகிறான்)என்றும்-தம்மையே ஒக்க அருள் செய்வர் -திருவாய் மொழி -11-8-5- என்றும் சொல்லுகிறபடியே ஸ்வ ஸ்வரூபத்தைப் பெற்று –பார்யைக்கு அங்க பூஷணம் போலே-வழு விலா அடிமை செய்ய வேண்டும் –என்றும்-அவா அற்று வீடு பெற்ற -என்றும் சொல்லுகிறபடியே ப்ராப்தி பலமான கைங்கர்யத்தைப் பெற்ற ஸ்ரீ ஆழ்வார் உடைய திராவிட உபநிஷத் ரஹஸ்யத்தை ஸ்ரீ பெரிய முதலியார் ஸ்ரீ ஆழ்வார் உடைய ப்ரசாதத்தாலே லபித்தது–
பின்பு ஆச்சார்ய உபதேச க்ரமத்தாலே ஆளவந்தார் அந்த திராவிட உபநிஷத் ரஹச்ய அர்த்தங்களை லபித்து-அத்தை தாம் அனுபவித்து-அவ் வனுபவத்தால் வந்த ப்ரீதி உள் அடங்காமலே பரீவாஹ அபேஷை பிறக்கையாலும்-சம்சாரிகள் துர்க்கதி கண்டு இவர்கள் இத்தை இழக்க ஒண்ணாது என்னும் கிருபையாலும்-சகல உபநிஷத் ரகஸ்யமாய் – துர்ஜ்ஞேய மான அர்த்தத்தை சர்வரும் அறியும்படியாக இவர் ஸ்தோத்ரமாக வெளி இடுகிறார் –
பகவத் வ்யதிரிக்த விஷயங்களில் ஸ்தோத்ரம் ஆவது –ஸ்தோத்ரம் நாம கிமாம நந்தி -என்றும்(ஸ்தோத்ரம் நாம கிம் ஆம நந்தி கவயோ யத்யந்ய தீயாந் குணாந்
அந் யத்ர த்வஸதோதி ரோப்ய பணிதஸ் சா தர்ஹி வந்த்யா த்வயி
சம்யக் சத்ய குணாபி வர்ண நமதோ ப்ரூயுஸ் கதம் தாத்ருசீ
வாக் வாசஸ்பதி நாபி சக்ய ரஸநா த்வத் ஸத் குண அர்ணோ நிதவ்–ஸ்ரீ ஸ்தவம்-3-[ஸ்தோத்ரமென்று கவிகள் எதைச் சொல்லுகிறார்கள் ? ஒருவனுடைய குணங்களை அவைகளில்லாதவனான மற் றொருவனிடம் ஏறிட்டுச் சொல்லுவதே (ஸ்தோத்ரம் எனில்,–அம்மாதிரியான ஸ்தோத்ரம் உன்னிடம் முடியாது; உள்ள குணங்களை நன்றாக வர்ணிப்பதே (ஸ்தோத்ரம்) என்று சொல்லுவார்களாகில்-—உன்னுடைய கல்யாண குணக்கடல் விஷயத்தில் ப்ருஹஸ்பதியாலும் அப்ப டிப்பட்ட ஸ்தோத்ரம் செய்ய எப்படி முடியும்?])என்றும்
அந்யத்ராதத் குணோக்தி -(அந் யத்ர அதத் குண யுக்தி பகவதி ந தத் உத்கர்ஷ ஸுவ்ர்யை பரேஷாம்
ஸ்துத் யத்வாத் யாவத் அர்த்தா பணிதி அபி ததா தஸ்ய நிஸ்ஸீமகத்வாத்
ஆம்நாயாநாம் அசீம் நாம் அபி ஹரி விபவே வர்ஷ பிந்தோ இவ அப்தவ்
சம்பந்தாத் ஸ்வாத்ம லாப நது கபளநத ஸ்தோது ஏவம் ந கிம் மே –1-19–[இல்லாத விஷயங்களை ஏறிட்டுச்சொல்லுவது ப,க,வானைத் தவிர மற்றவர்கள் விஷயத்தில்; ப,க,வத்,விஷயத்திலல்ல; அவனுடைய பெருமைகளைத் திருடி மற்றவர்களைத் துதிக்க வேண்டியிருக்கிறபடியால், உள்ள விஷயங்களைச் சொல்லு வதும் (ப,க,வான் விஷயத்தில்) முடியாது; பகவானுடைய பெருமைகள் எல்லையற்றவையாகையா )என்றும் இல்லாதவற்றை ஏறிட்டுச் சொல்லுதல் -உள்ளத்தை அடையச் சொல்லுதலாய் இருக்க –
எதோ வாசோ நிவர்த்தந்தே -(யதோ வாசோ நிவர்த்தந்தே | அப்ராப்ய மநஸா ஸஹ। ஆநந்தம் ப்,ரஹ்மணோ வித் வாந்। ந பி,பே,தி குதங்சநேதி ॥-எந்த ப்ஏஹ்மத்தினிடமிருந்து, மனத்துடன் கூடிய வாக் குக்கள், (அதை) அளவிட்டறியாமல் திரும்புகின்றனவோ, அந்தப் பரமாத்மாவின் ஆநந்த,த்தை அறிந்தவன் எதனிட மும் பயப்படமாட்டா)என்றும்-
அவிஜ்ஞாதம் விஜாநதாம் –(யஸ்யாமதம் தஸ்ய மதம் மதம் யஸ்ய ந வேத, ஸ:। அவிஜ்ஞாதம் விஜாநதாம் விஜ்ஞாதமவிஜாநதாம் ॥ [எவனுக்கு ப்,ரஹ்மம் (அளவிட்டு) அறியப்படவில்லையோ, அவனுக்கு (அது) அறியப்பட்டதாகிறது. எவனுக்கு (ப்ரஹ் மம்) அறியப்பட்டதாகிறதோ, அவன் (அதை) அறிய வில்லை. (அளவிட்டு) அறிந்தவர்களுக்கு அறியப்படாத தாகவும், (அளவிட்டு) அறியாதவர்களுக்கு அறியப்பட்ட தாகவுமிருக்கிறது (ப்,ரஹ்மம்)என்றும்
பூதார்த்தே கதமா ஸ்துதி -(உண்மையாக உள்ள விஷயத்தில் ஸ்துதி எப்படி முடியும்?)என்றும்-
ந சமர்த்தாஸ் ஸூ ராஸ் ஸ்தோதும் -(ந ஸமர்த்தராஸ் ஸுரா: ஸ்தோதும் த்வாமநந்யப வம் விபு,ம் [ஸர்வ வ்யாபியும், ஒருவரிடத்திலிருந்தும் உண்டாகாதவனுமான உன்னை ஸ்தோத்ரம் செய்ய தேவர்களும் ஸமர்த்த,ரல்லர்.)என்றும்-பரிச்சேதித்துப் பேச நிலம் அல்லாத பகவத் விஷயம் ஸ்துதி விஷயமான படி என் -என்னில்–அங்கனே இருந்த தாகிலும்
ஸ்தவயஸ் ஸ்தவ ப்ரிய -([ஸ்தோத்ரம் செய்யத்தக்கவன்; ஸ்துதியை விரும்புபவ)என்று ஸ்துதி பிரியன் ஆகையாலும்–
ஏத்த ஏழுலகம் கொண்ட கோலக் கூத்தனை -திருவாய்மொழி -2-2-11- என்றும்-ஏத்த ஏத்த எங்கு எய்தும் -திருவாய்மொழி -4-3-10- என்றும்
ஸ்தோத்ர வ்யவஹாரம் உண்டாய்ப் போருகையாலும் இது ஒழிய வாசக சப்தம் இல்லாமையாலும்
இவ் விஷயத்திலும் ஸ்தோத்ரம் -என்னலாம்–
அதவா –
தர்மார்த்த காம மோஷாக்யா புருஷார்த்தா உதாஹ்ருதா இதம் சதுஷ்டயம் -(தர்மார்த்தகாமமோக்ஷாக்யா:புருஷார்த்த உதராஹ்ருதா: இதம் சதுஷ்டயம் யஸ்மாத் தஸ்மாத் 8ம் மிதம் வச: ॥[தரர்மம், அர்த்தம், கர்மம், மோக்ஷ்மென்று புருஷார்த்த;ங்கள் சொல்லப்பட்டுள்ளன. இந்த நான்கும் எவனிடத்திலிருந்து அடையப்படுகின் றனவோ, அவனைக் குறித்து“அவனால் என்ன ப்ரயோஜனம்?” என்னும் இந்த வார்த்தை ஏன் சொல்லப்படுகிறது)என்றும்
மன்னும் அறம் பொருள் இன்பம் வீடு -பெரிய திருமடல் -11- என்றும் சொல்லுகிறபடியே புருஷார்த்தம் நாலாய்-அவற்றில்-தர்மம் சாதன தயா புருஷார்த்தம் ஆகையாலும்-க்லேச சாத்தியம் ஆகையாலும் –அர்த்தம்-ஸ்வயம் புருஷார்த்தம் ஆனாலும் அஸ்திரிமாய் க்லேச சாத்தியம் ஆகையாலும் –
புருஷார்தங்களுக்கு சாதனம் ஆகையாலும் –காமம்-ஸ்வயம் புருஷார்த்தம் ஆனாலும் அல்ப அஸ்த்ரத்வா அநர்த்த அவஹத்வ பீபத் சாத்திய அநந்த தோஷ துஷ்டம் ஆகையாலும் –மோஷ சாஸ்த்ரத்திலே-மோஷ விரோதித்வேன நிந்திதமாய் இருக்கையாலும்-ஸ்ரீ ஆளவந்தார் அவற்றை விட்டு மோஷத்திலும் ஆத்ம பிராப்தி-துக்கேன சிரகால சாத்தியம் ஆகையாலும்-பகவத் அனுபவத்தைப் பற்ற அல்பம் ஆகையாலும் -அதையும் விட்டு–பகவத் பிராப்திக்கு உக்த தோஷங்கள் இன்றி இருக்கும் அளவு அன்றிக்கே-நிரஸ்தாதி சயாஹ்லாத ஸூக பாவைக லஷணா -என்கிறபடியே நிரதிசய ஸூக ரூபமாய்
ஏஷ ஹேவா நந்தயாதி -(ததூஸ்ய த்ரிவித,ஸ்யா$பி து;க்கணாதஸ்ய வை மம। கர்ப்ப ஜந்மஜராத்,யேஷ- ஸ்தராநேஷு ப்ரப,விஷ்யத: ॥ நிரஸ்தாதிய யாஹ்லாத; ஸுக,ப ஈவைக லக்ஷணு | பேஷஜம் ப,சு,வத் ப்ராப்திரேகாந்தாத்யந்திகீ மதா-[கர்ப்ப,ம், பிறப்பு, கிழத்தனம் முதலிய அவஸ்தை,களில் உழலும் என்னுடைய (ஆத்,யாத்மிகம், ஆதி,தைவிகம் ஆதி, பெனதிகம் என்னும்) மூன்று விதமான து;க்க ஸமூஹத் திற்கு, தனக்கு மேலில்லாத ஆகந்த,ரூபமான ஸுகமா யிருக்கையே லக்ஷ்ணமாக உடையதும், துன்பமற்றதும், முடிவற்றதுமான ப,கவத் ப்ராப்தியே மருந்தாக எண்ணப் படுகிறது.,])என்றும்-பரமம் சாம்யம் உபைதி -என்றும்-தம்மையே ஒக்க அருள் செய்வர் -பெரிய திருமொழி -11-8-5- என்கிற படியே ஆஸ்ரிதர் தன்னைப் போலே ஆனந்திப்பிக்கக் கடவனாய்
தஸ்யாஹம் ஸூலப -(அநந்யசேதாஸ் ஸததம் யோ மாம் ஸ்மரதி நித்யா:। தஸ்யா5ஹம் ஸுலப,: பார்த்த, ! நித்யயுக்தஸ்ய யோ8,ந: ॥! [அர்ஜுனா! வேறொன்றிலும் மனத்தைச் செலுத்தாதவனாக, எவனொருவன் தினந்தோறும் எப்பொழுதும் என்னை நினைக்கிறானோ, என்னுடைய நித்ய யோக,த்தில் விருப்பமுள்ள யோகியாகிய அவனுக்கு நான் ஸுலபனாகிறேன்)என்று அத்யந்த சாத்தியமாய் ப்ராப்த புருஷார்தமுமாய் இருக்கையாலே இதுவே புருஷார்த்தம் என்று அத்யவசித்து –
அந்த பகவத் பிராப்தி ஆகிறதும்-ப்ரதான ஷேத்ரஜ்ஞபதிர் குணேச -([ப்ரக்ருதிக்கும் ஜீவனுக்கும் ஸ்வாமி; கல்யாணகுணங்களைஉடையவன்.])என்றும்-ஜ்ஞாஜ்ஜௌ தவா வஜா வீஸ நீ சௌ-([(பரமாத்மாவும் ஜீவனும்) ஸர்வஜ்ஞனாகவும், அஜ்ஞனாகவுமிருக்கிறார்கள்; ஈஸ்வரனாகவும், அநீஸ்வரனாகவும் இருக்கிறார்கள்)என்றும்-தமீஸ் வராணாம் பரமம் மகேஸ்வரம் ([ஈஸ்வரர்களுக்கும் மேலான மஹேஸ்வரனான அவனை)-என்றும்-தாசோஹம் வாஸூ தேவஸ்ய -(தாஸோஹம் வாஸுதே,வஸ்ய தேவதேவஸ்ய சார்ங்கிண சங்க, சக்ர கதா பாணேஸ் த்ரைலோக்யஸ்யைக சஷுஷ[தேவதேவனும், ஸார்ங்க,மென்னும் வில்லை யுடையவனும், சங்கம், சக்ரம், கதை; இவைகளைக் கையிலே உடையவனும், மூவுலகிற்கும் ஓர் கண்ணா யிருப்பவனுமான ‘ வாஸு தேவனுக்கு நான் அடிமை.])என்றும்-தாச பூதாஸ் ஸ்வதஸ் சர்வே -(தாஸபூ,தாஸ் ஸ்வதஸ் ஸர்வே ஹ்யாத்மாந: பரமாத்மந: | [பரமாத்மாவுக்கு, எல்லா ஆத்மாக்களும் இயற்கையாகவே அடிமைப் பட்டவர்களன்றோ)என்றும்-தாசோஹம் கோஸலேந்த்ரஸய -(தராஸோ5ஹம் கோஸலேந்த்,ரஸ்ய ராமஸ்யா$க்லிஷ்டகர்மண: | ஹநுமாந் மத்ருஸைந்யாநாம் நிஹந்தா மாருதாத்மஜ: ॥ [கோஸலதேஸத்துக்கு அதிபதியும், பெருங்காரியங்களையும் எளிதாகச் செய்து முடிப்பவனுமான ராமனுக்கு, ஸத்ரு ஸைன்யங்களை அழிப்பவனும், வாயுவின் புத்ரனும், ஹனுமான் என்னும் பெயரை உடையவனுமான நான் தாஸன்)என்றும்-யஸ் யாத்மா சரீரம் -(எந்தப் பரமாத்மாவுக்கு ஆத்மா ஸரீரமோ-யஸ்யாக்ஷரம் ஸரீரம் [எவனுக்கு ஜீவன், ஸரீரமோ)என்றும்-அந்த ப்ரவிஷ்டச் சாஸ்தா ஜ்நாநாம் சர்வாத்மா -(ஸர்வாந்தர்யாமியான புருஷோத்தமன் ஜனங்களை உள் நுழைந்தவனாய் நியமிக்கிறான்)என்றும்-பூ பிராணி நஸ் சர்வ ஏவ குஹா சயசய -(பூ: ப்ராணிநஸ் ஸர்வ ஏவ கு,ஹாஸயஸ்ய அஹந்யமாநஸ்ய விகல்மஷஸ்ய[எல்லாப் பிராணிகளும், ஹ்ருதய குஹையில் ஸயனித்திருப்பவனும், அழியாதவனும், தோஷமற்றவனுமான பரமாத்மாவுக்கு இருப்பிடம்)என்றும்-தாநி சர்வாணி தத்வபு -(யாநி மூர்த்தாந்யமூர்த்தாநி யாந்யத்ராந்யத்ர வா க்வூத்। ஸந்தி வை வஸ்துஜாதாநி தாநி ஸர்வாணி தத்,வபு: || [உருவமுள்ளவையாயும், உருவமற்றவையாயும், இங்கும் எங்கும் ஒரு சமயத்திலிருக்கும் வஸ்து ஸமூஹங்களெல்லாம்அந்தப் பரமாத்மாவுக்கு ஸரீரம்.)என்றும் –-ஜீவ பரர்களுக்கு அனன்யார்ஹ சேஷ சேஷி பாவேன சம்பந்தத்தைச் சொல்லி –
ஏன ஏன ததா கச்சதி -(யேந யேந ததா கச்ச,தி தேந தேந ஸஹ கச்சதி। தத் யத; தருணவத்ஸா வத்ஸம் வத்ஸோ வா மாதரம் சராயா வா ஸத்வமநுக,ச்சே,த் ததா ப்ரகாரம் ॥ [இளங் கன்றையுடைய பசு கன்றையும், கன்று பசுவைவும் (அல்லது குழந்தை தாயையும்), நிழல் பிராணியையும் எப்படிப் பின் தொடர்கின்றனவோ அப்படியே எப்படி எப்படிப் பரம புருஷன் செல்லுகிறானோ, அப்படி அப்படியே: (முக்தனும்) கூடப்போகிறா)என்றும்-சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா விபச்சிதா (முக்தன் எல்லாக் கல்யாண குணங்களையும், ஸர்வஜ்ஞனான ப்ரஹ்மத்துடன் கூட அனுப,விக்கிறா)-என்றும்
காமயே வைஷ்ணவத்வம் து சர்வ ஜன்ம ஸூ கேவலம் (ஜிதந்தே (1-13).)-என்றும்-ஒழிவில் காலம் எல்லாம் -இத்யாதிகளிலே ஸ்வரூப அனுரூபமான போகத்தை சொல்லுகையாலும்-பதி வ்ரதைக்கு பத்தி ஸூஸ்ருஷண்ம் போலே-சேஷ வஸ்துவுக்கு கைங்கர்யம் என்று அத்யவசித்து –இனி பேஷஜம் பகவத் பிராப்தி –என்று அவனே பிராப்யம் என்னுமதும் கைங்கர்ய பிரதி சம்பந்தி ஆகையாலே-ஸ்வேன ரூபேனே அபிநிஷ்பத்யதே-என்று ஸ்வ ஸ்வரூபத்தை ப்ராப்யம் என்கிறதும் கைங்கர்யத்துக்கு ஆஸ்ரயமாகை ஆகையாலே–சோஸ்த்வன பாரமாப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் -(ப,வாம்ஸ்து ஸஹ வைதே,ஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே ॥ அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வபதஸ்ச தே -[நீர் வைதேஹியுடன் கூட மலைத் தாழ்வரைகளில் விளையாடுவீர்; அடியேன் நீர் விழித்துக் கொண்டிருக்கும் போதும், தூங்கும் போதும் உமக்கு எல்லா அடிமைகளையும் செய்வேன்.]
விஜ்ஞாந ஸாரதிர் யஸ்து மந: ப்ரக்ரஹவாந் நர: | ஸோத்வந: பாரமாப்நோதி தத், விஷ்ணோ: பரமம் பதம் ॥ [எவனொருவன் நல்ல ஞானத்தை ஸாரதியாகவும், மனத்தைக் கடிவாளமாகவும் கொண்டிருக்கிறானோ, அவன் ஸம்ஸாரத்திற்கு அக்கரையான விஷ்ணுவினுடைய பரம பதத்தை அடைகிறான்) என்று தேச விசேஷத்தை ப்ராப்யம் என்கிறதும் கைங்கர்ய வர்த்தகம் ஆகையாலே-நிஸ்தரந்தி மநீஷின -(ஜிதந்தே (1-4).)என்று சம்சார நிவ்ருத்தியை புருஷார்த்தம் என்கிறதும் கைங்கர்ய விரோதி யாகையாலே –இவை கைங்கர்ய உபயோகி அல்லாத அன்று-ந ஹி மேஜீவிதே நாரத்த (ந ஹி மே ஜீவிதேநார்த்தேோ நைவார்த்தைர் ந ச பூஷணை: | வஸந்த்யா ராக்ஷஷீ மத்,யே விநா ராமம் மஹாரத,ம் ॥ [மஹா ரதனான ராமனை விட்டு ராக்ஷ்ஸிகள் நடுவில் வசிக்கும் எனக்கு உயிரினால் ப்ரயோஜனமில்லை; பொருள்களினால் ப்ரயோஜனமில்லை; ஆபரணங்களால் ப்ரயோஜன மில்லை)–மணிமாமை குறைவிலம் -உடம்பினால் குறைவிலம் -உயிரினால் குறைவிலம் -என்கையாலே அபுருஷார்த்தம்-
ததீய சேஷத்வத்தை புருஷார்த்தம் என்கிறதும் பதி வ்ரதைக்கு-பதியினுடைய ஆத்மாம்சத்திலும் குணாம்சத்திலும் சௌந்தர்ய விசிஷ்டமான தேகாம்சமே ப்ராப்யமாய் – அத்தாலே பாதி வ்ரதய ஹானி இல்லாதாப் போலே – இப்படி சகல சாஸ்திர தாத்பர்யமான புருஷார்த்தத்தை நிச்சயித்து–இதுக்கு உபாயம் பக்தி ப்ரபத்திகள்–என்று இரண்டாய்
அதில்
பக்தி யாவது -ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -([ப் ரஹ்மத்தை அறிபவன் (தியானிப்பவன்)மேலான பலனை (ப்ரஹ்மத்தை) அடைகிறான்)என்றும்
ஆத்மாவா அரே த்ரஷ்டவ்யஸ் ஸ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாசிதவ்ய –([கேட்கத்தக்கதும், நினைக்கத்தக்கதுமான ஆத்மா தியானிக்கத்தக்கது; பார்க்கத்தக்கது.])என்றும்
நாயமாத்மா ப்ரவச நேன லப்யோ ந மேதயா ந பஹூ நா ஸருநேன
யமேவைஷ வ்ருணுதே தேன லப்யஸ் தச்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்-(இந்தப் பரமாத்மா (பக்தியற்றற ஸ்ரவணத்தினாலும், மனனத்தினாலும், தியானத்தினாலும் அடையத்தக்க வனல்லன். எவனை இப்பரமபுருஷன் வரிக்கிறனோ, அவனாலேயே அடையத்தக்கவன்; அவனுக்கு இந்தப் பரமாத்மா தன்னுடைய திவ்ய மங்க,ள விக்ரஹத்தை (ஸ்வரூபத்தை) காட்டுகிறான்)என்றும்
பித்யதே ஹ்ருத யக் ரந்திஸ் சித் யந்தே சர்வ சம்சயா
ஷீ யந்தே சாஸ்ய கர்மாணி தஸ்மின் த்ருஷ்டே பராவரே –(மேலானவர்களிலும் மேலானவனான அந்தப் பரமாத்மா பார்க்கப்பட்டவுடன், இவனுடைய (ராகம், த,வேஷம் முதலிய) ஹ்ருதய க்ரந்தி,கள் பிளக்கின்றன; எல்லா ஸம்மயங்களும் சிதறுகின்றன; கர்மங்களும் அழிகின்றன)என்றும்
பக்த்யா த்வ நன்யா சக்ய அஹம் ஏவம் விதோ அர்ஜுன
ஜ்ஞாதும் த்ரஷ்டும் ச தத்வேன ப்ரவேஷ்டும் ச பரந்தப -(அர்ஜுனா! எதிரிகளை அழிப்பவனே! ஒரு பலனை எதிர்பாராத பக்தியினாலேயே இம் மாதிரியான நான், உண்மையாக அறிவதற்கும், பார்ப்பதற்கும், நுழைவதற்கும் தக்கவன்)ஸ்ரீ கீதை -11-54- என்றும்
சமஸ் சர்வேஷூ பூதேஷு மத் பக்திம் லபதே பராம் -(ஸர்வ ப்ராணிகளிடமும் (பற்றற்றிருக்கும் விஷயத்தில்) ஸமமாயிருப்பவன் என்னிடம் மேலான பக்தியை அடை கிறான்)ஸ்ரீ கீதை -18-54- என்றும்
வேதன த்யான உபாசன சப்த வாச்யமாய் பக்தி ரூபா பன்னமாய் தர்சன சமானாகாரமான ஜ்ஞான விசேஷம் பக்தி ஆகிறது –
அக்னி வித்ய அங்கிகையாய் கர்ம ஜ்ஞான சஹ க்ருதையுமாய் ஆகையாலே-அதிக்ருதாதி காரமாய்-விளம்பிய பல பிரதமுமாய்-பிரமாத சம்பாவனையும் உண்டாகையாலே –அவற்றை விட்டு–இந்த தோஷம் ஒன்றும் இன்றிக்கே-முமுஷூர் வை சரணம் அஹம் ப்ரபத்யே -(யோ ப்,ரஹ்மாணம் வித,த,ாதி பூர்வம் யோவை வேதாம்ஸ்ச ப்ரஹிணோதி தஸ்மை | தம் ஹ தேவமாத்மபு,த்,தி,ப்ரஸாத,ம் முமுஷூர் வை ஸரணமஹம் ப்ரபத்,யே ॥| [எவன் பிரமனை முன் படைத்தானோ, எவன் வேத,ங்களை யும் அவனுக்கு உபதேஹித்தானோ, அப்படிப்பட்ட தேவனும், தன் விஷயமான ஞானத்தை ப்ரகாசிப்பிப்பவனுமான பரமபுருஷனே, மோக்ஷமடைய விரும்பும் நான் ஸரண மடைகிறேன்.])என்றும்-ந்யாச மாஹூர் மநீஷிணோ ப்ரஹ்மாணம்-(பெரியோர்கள் பரமாத்மாவை ந்யாஸமென்று சொல்லு கிருர்கள்)என்றும்-ந்யாச இதி ப்ரஹ்மா -(ந்யாஸமென்பது ப்,ரஹ்மம்)என்றும் –-தஸ்மான் ந்யாச மேஷாம் தபஸா மதிரிக்த மாஹூ-(ஆகையால் ந்யாஸத்தை (ஸரணாக,தியை) இந்தத் தபஸ் ஸுக்களுள் மேலானதாகச் சொல்லுகிறார்கள்)என்றும்-தஸ்மாதபி வத்யம் பிரபன்னம் ந ப்ரதி ப்ரயச்சதி -(தேவா வை யஜ்ஞாத் ருத்ரமந்தராயந் | ஸ ஆதித்யா நந்வாக்ரமத | தே த்,விதைவத்யாந் ப்ராபத்,யந்த | தாந் ந ப்ரதிப்ராயச்ச,ந்। தஸ்மாத;பி வத்யம் ப்ரபந்நம் ந ப்ரதிப்ரயச்ச,ந்தி ||[தேவர்கள் யஜ்ஞத்தில் ருத்ரனுக்கு ஹவிர்ப்பாகம் கொடுக்க மறுத்தார்கள்; ருத்ரன் தேவர்களைக் கொல்லத் தொடங்கினான்; அவர்கள் அஸ்விநீ தேவதைகளை ஸரணம் புகுந்தார்கள்; அஸ்விநீ தேவர்கள் அவர்களைக் காட்டிக் கொடுக்கவில்லை; ஆகையால் ஸரணமடைந்தவன் கொல்லத் தகுந்தவனாயிருந்தாலும் அவனைக் காட்டிக் கொடுப்பதில்லை)என்றும் –ச ப்ராதுஸ் சரனௌ காடம் நிபீட்ய ரகு நந்தன -(ஸ ப்ராதும் சரணென காட் நிபீட்ய ரகு,நந்த;ந:। ஸீதாமுவாசாதியமா ராக,வஞ்ச மஹா வ்ரதம் ॥ [ரகு,குலத்தை உகப்பிப்பவனும், மிகுந்த கீர்த்தியை உடைய வனுமான அந்த லக்ஷ்மணன், தமையனின் திருவடிகளை நன்றாகப் பிடித்துக் கொண்டு ஸீதையையும், (ஆஸ்ரித ஸம் ரக்ஷணமான) பெரிய விரதத்தை யுடைய ராகவனையும் பார்த்துச் சொன்னான்.)என்றும்-சக்ருதேவ பிரபன்னாய -(ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே |அபயம் ஸர்வபூ,தேப்,யோ ததாம் யேதத், வ்ரதம் மம।| [ஒரு தடவை ஸரணமடைந்தவன் பொருட்டும், “உனக்கு அடியேனாகிறேன்” என்று பிரார்த்திப்பவன் பொருட்டும், எல்லா ப்ராணிகளிடத்தினின்றும் அபயமளிக்கிறேன். இது எனக்கு விரதம்.])என்றும்-சோஹம் த்வாம் சரணமபாரம பிரமேயம் -(ஸோ$ஹம் த்வாம் ஸரணமபாரமப்ரமேயம் ஸம்ப்ராப்த: பரமபதஹ் யதோ ந இஞ்சித் [எவனைக் காட்டிலும் மேலான ப்ராப்ய மில்லையோ அப்படிப் பட்டவனும், எல்லை யற்றவனும், அளவிட முடியாதவனுமான உன்னை, இப்படிப்பட்ட நான் ஸரணமடைந்தேன்.)என்றும்-சர்வாத்மனா யஸ் சரணம் சரண்யம் நாராயணம் லோக குரும் ப்ரபன்ன -(தேவர்ஷி பூ,தாப்தந்ருணாம் பித்ரூணாம் ந கிங்கரோ நாயம் ருணீ ச ராஜந்। ஸர்வாத்மநா யமஸ் ஸரணம் ஸரண்யம் நாராயணம் லோக கு,ரும் ப்ரபந்ந: ॥1 [அரசனே! எவனொருவன், ஸரணமடையத் தகுந்தவனும், லோக கு,ருவுமான நாராயணனை எல்லா வித,த்திலும் ஸ்ரண மடைந்தானோ, அவன் தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும், பூதங்களுக்கும், பந்துக்களுக்கும், பித்ருக்களுக்கும் அடிமை யல்லன்; கடன் பட்டவனுமல்லன்)என்றும்-மாம் ஏவ எ ப்ரபத்யந்தே -(மாமேவ யே ப்ரபத்,யந்தே மாயாமேதாம் தரந்தி தே [எவர்கள் என்னையே ஸரணமடைகிறார்களோ அவர்கள் இந்த ப்ரக்ருதியைத் தாண்டுகிறார்க)என்றும்-தமேவ சரணம் கச்ச -(தமேவ மாரணம் கச்சு, ஸர்வப,ாவேந பாரத [பரத குலத்துதித்தவனே | எல்லா விதத்திலும் அந்த பகவானையே ஸ்ரணமடை)என்றும்-சர்வ தரமான் பரித்யஜ்ய -(ஸர்வதர்மாந் பரித்யஜ்ம மாமேகம் ரணம் வ்ரஜ | அஹம் த்வா ஸர்வபாபேப்,யோ மோக்ஷமிஷ்யாமி மா ஸூ௪:॥ [(பலஸாதனமான) எல்லா தர்மங்களையும், வாஸனையுடன் விட்டு, என்னை ஒருவனையே உபாயமாக அடை; நான் உன்னை எல்லாப் பாபங்களினின்றும் விடுவிக்கிறேன்; துக்கிக்காதே)என்றும்-தாவதார்த்திச் ததா வாஞ்சா -(தாவதார்த்திஸ் தத; வாஞ்சா தாவந் மோஹஸ் ததா அஸூகம் ! யாவந்ந யாதி ஸரணம் த்வாமஸேஷாக,நாஸநம் i [எல்லாப் பாபங்களையும் போக்கடிக்கும் உன்னை எதுவரையில் ஸரணமடையவில்லையோ, அதுவரையிலேயே (செல்வத்தை இழந்ததினாலேற்படும்) வருத்தம்; அதுவரையிலேயே (செல்வம் வேண்டுமென்னும்) ஆசை; அதுவரை யிலேயே (ஆத்ம ப்ராப்தியின்மையினாலேற்படும்) மோஹம்; அதுவரையிலேயே (பகவானை அடையாததினாலேற்படும்) துன்பம். (ஆர்த்தன், அர்த்தரர்த்தி,த கைவல்ய நிஷ்டன் , பகவத் ப்ராப்தி காமன் என்னும் நான்கு விதமான அதிகாரிகளுக்கும் ப்ரபத்தியே பல ஸாதனம் என்று தாத்பர்யம் -)என்றும் இத்யாதி–ஸ்ருதி ஸ்ம்ருதி சித்தமாய் ஸூகரமாய் அத்யவசாயாத்மக ஜ்ஞான விசேஷமான ப்ரபத்தியையே உபாயமாக நிச்சயித்து –இப்படி ப்ராப்ய ப்ராபகங்களை நிஷ்கர்ஷித்து இவற்றை ஸ்தோத்ர ரூபத்தாலே ஸ்ரீ சர்வேஸ்வரனை நோக்கி பிரார்த்திக்றார் –என்னவுமாம் –
ஸ்ரீ பகவத் ஸ்தோத்ரம் பண்ணப் புக்கவர் ஆசார்ய ஸ்துதியிலே பார்ப்பான் என் -என்னில்
கர்ணே ஸ்ப்ருஷ்டே கடிம் சாலயதி -(கர்ணே ஸ்ப்ருஷ்டே கடிம் சாலயதி[காதைத் தொட்டால் இடுப்பை” ௮சைக்கிறான்)போலே அசங்கதம் -என்னில் ஸ்ரீ பகவத் விஷயத்தைத் தமக்கு ஸ்துதி விஷயம் ஆக்கிக் கொடுத்த உபகார ஸ்ம்ருதியாலும் ஸ்தோத்ரம் பண்ணுகைக்கு அடியான ஜ்ஞான வைசத்யார்த்தமாகவும் அவிக்ன பரி சமாப்த் யர்த்தமாகவும் -பண்ணுகிறார் -ஆகையாலே சங்கதம் –
ஆனால் மானசமாக அமையாதோ -என்னில் இப்பிரபந்தத்தை அதிகரிப்பார்க்கு உபகாரம் ஆகையாலே வாசிகம் ஆக்கினதும் யுக்தம் –உபகார ஸ்ம்ருதியாலே வந்த ஆசார்ய அனுவர்த்தனம் பிரமாண பிரசித்தம் –-ஆசார்ய தேவோ பவ –(ஆசார்யனை தெய்வமாக உடையவனாக ஆவாயாக)என்றும்-நம ருஷிப்யோ மந்திர க்ருத்ப்ய –(மந்த்ரத்தை ஸாக்ஷாத்கரித்த ரிஷிகளுக்கு நமஸ்காரம்)என்றும்-ச ஹி வித்யா தஸ்தம் ஜநயதி தச் ஸ்ரேஷ்டம் ஜன்ம -(ஆசாரியனன்றோ வித்யையினால் சிஷ்யனைப் பிறப்பிக்கிறான்; அது மேலான ஜன்மம்)என்றும்-மந்த்ரே தத் தேவதா யாஞ்ச ததா மந்திர பிரதே குரௌ -(மந்த்ரே தத்தேவதாயாஞ்ச தத மந்த்ரப்ரதே, கு;ரெள। த்ரிஷு ப,க்திஸ் ஸத் கார்யா ஸா ஹி ப்ரதம ஸாத,நம் ॥ [மந்திரம், அதில் சொல்லப்படும் தேவதை, மந்த்ரோபஸதேம் செய்த ஆசாரியன் இம் மூவரிடத்திலும் எப்போதும் பக்தி செய்யவேண்டும் ; அதுவன்றோ (பல ஸித்தி,க்கு) முதல் உபாயம்.)என்றும்-ஒரு ரத்னத்தை ஒருவன் கொடுத்தால் அதனுடைய மஹார்க்கத்தை அறியக் கொடுத்தவனை ஆதரிக்க பிரமாணம் வேண்டுமோ -ஆகையால் இது உபபன்னம் –
ஜ்ஞான வைசத் யார்த்தமாக ஆசார்ய அனுவர்த்தனம் சிஷ்டாசார ப்ராப்தம் –-அபி வந்தா குரு நாதௌ-சிஷ்யதீ பதமி நீர வீன் –(அபிவந்த்ய குளுநாதென் ஙிஷ்யதயத்மிநீரவீந் [சிஷ்யர்களுடைய புத்தியாகிய தாமரைக்கு ஸூர்யன் போன்றவர்களான ஆசாரியர்களை முதலில் நமஸ்கரித்து)இது மீமாம்சகா -என்றும்-யதா கனன் கனித்ரேண-இதி மனு -(யதா கருந் க.நித்ரேண நரோ வார்யதி,க,ச்ச,தி | ததர குருக;தாம் வித்,யாம் மாம்ரூஷாரதி கச்ச; தி ॥ [மனிதன் எப்படி மண்வெட்டியால் (பூமியை) வெட்டித் தண்ணீரை அடைகிறானோ, அப்படியே கு,ருவிடமிருக்கும் வித்யையை குருஸேவை செய்பவன் அடைகிறான்)என்றும்-யஸ்ய பிரசாதாத் வஷ்யாமி நாராயண கதாமிமாம் -இதி வைசம்பாயன (நமோ பகவதே தஸ்மை வ்யாஸாயாமிததேஜஸே | யஸ்ய ப்ரஸாத;த் வக்ஷ்யாமி நாராயணகதரமிமாம் || [எவருடைய அருளினால் இந்த நாராயண கதையைச் சொல்லுகிறேனோ, அளவற்ற தேஜஸ்ஸை யுடைய அந்த பகவான் வியாஸருக்கு ௩மஸ்காரம்)-என்றும் லௌகிகம் வைதிகம் வாபி -இதி மனு (லெளகிகம் வைதிகம் வா அபி ததாத்,யாத்மிகமேவ ச 1 ஆததீத யதோ ஜ்ஞாநம் தம் பூர்வமபி,வாதயேத் || (உலக விஷயங்களைப் பற்றியாவது, வேதத்தைப் பற்றியாவது, ப்ரஹ்ம விஷயமாகவாவது எவரிடமிரு்நு ஞானத்தை அடைந்தானோ, அவரை முதலில் நமஸ்கரிக்க வேண்டும்)-என்றும்
அங்கனே ஆகில்
ஸ்வ ஆசார்யனை விட்டு அவர் குருக்களை பற்றுவான் என் என்னில்-ஆசார்ய ஸ்துதியிலும் ஆசார்ய பிரியம் இறே உத்தேச்யம் –-ஸ்வாஸ்ரயணத்தில் காட்டில் ஸ்ரீ பெரிய முதலியாரை ஆஸ்ரயிக்கும் இடத்தில் ப்ரீதி மிக்கு இருக்கையாலே அதைப் பேசுகிறார் –ஸ்ரீ பெரிய முதலியார் ஸ்ரீ ஆழ்வாருக்கு பகவத் ப்ராவண்யம் அடியாக பிறந்த ஜ்ஞாநத்தை ஸ்ரீ ஆழ்வார் பிரசாதத்தாலே பெற்று -தம் அளவிலே பர்யவசிக்கை அன்றிக்கே பின்பு உள்ளார்க்கும் உபகாரமாம் படி இந்த தர்சன ஸ்தாபகர் ஆனபடியாலும் –ஸ்ரீ மணக்கால் நம்பி –பெரிய முதலியார் உடைய அர்த்தம் இது-உம்முடைய பேற்றுக்கு எல்லாம் அவருடைய திருவடிகளிலே சம்பந்தமே -என்கையாலும்-அவரை ஆஸ்ரயிக்கிறார்–இதை நினைத்து இறே ஸ்ரீ பட்டர் – ப்ரதமமபி குரும் நாத மீடே –(முதல் குருவான நாதமுனியையும் துதிக்கிறேன்)என்றதும் .-வேத காரணமான பிரணவம் வேதாத் யந்தம் களிலே ஆனால் போலே –இங்கும் ஆதி அந்தங்களிலே ஆசார்ய ஸ்துதி யாய் நடுவிலே பகவத் ஸ்தோத்ரம் ஆக இருக்கிறது –
–
ஸ்வ ஸ்வரூபத்தைப் பெற்று -பார்யைக்கு அங்க பூஷணம் போலே-வழு விலா அடிமை செய்ய வேண்டும் –என்றும்–அவா அற்று வீடு பெற்ற -என்றும் சொல்லுகிறபடியே ப்ராப்தி பலமான கைங்கர்யத்தைப் பெற்ற ஸ்ரீ ஆழ்வார் உடைய திராவிட உபநிஷத் ரஹச்யத்தை ஸ்ரீ பெரிய முதலியார் ஸ்ரீ ஆழ்வார் உடைய ப்ரசாதத்தாலே லபித்து- பின்பு ஆச்சார்ய உபதேச க்ரமத்தாலே ஆளவந்தார் அந்த திராவிட உபநிஷத் ரஹச்ய அர்த்தங்களை லபித்து அத்தை தாம் அனுபவித்து அவ் வனுபவத்தால் வந்த ப்ரீதி உள் அடங்காமலே பரீவாஹ அபேஷை பிறக்கையாலும் -சம்சாரிகள் துர்க்கதி கண்டு இவர்கள் இத்தை இழக்க ஒண்ணாது என்னும் கிருபையாலும் -சகல உபநிஷத் ரகஸ்யமாய் -துர்ஜ்ஞேய மான அர்த்தத்தை சர்வரும் அறியும்படியாக இவர் ஸ்தோத்ரமாக வெளி இடுகிறார் –
சுருதி ஸ்ம்ருதி சித்தமாய் ஸூகரமாய் அத்யவசாயாத்மக ஜ்ஞான விசேஷமான ப்ரபத்தியையே உபாயமாக நிச்சயித்து – இப்படி ப்ராப்ய ப்ராபகங்களை நிஷ்கர்ஷித்து இவற்றை ஸ்தோத்ர ரூபத்தாலே
ஸ்ரீ சர்வேஸ்வரனை நோக்கி பிரார்த்திக்றார் –ஆதி அந்தங்களிலே ஆசார்ய ஸ்துதி யாய்-நடுவிலே பகவத் ஸ்தோத்ரம் ஆக இருக்கிறது – முதல் மூன்று ஸ்லோகத்தாலே ஸ்ரீ பெரிய முதலியாரை நமஸ்கரிக்கிறார் –
–
இதில் 65 ஸ்லோகங்கள் உள்ளன.-இந்த ஸ்தோத்திரம். 65 என்ற எண் எழுத்துக்களின் கூட்டுத் தொகையாகும்.-மூன்று ரஹஸ்யங்களில் (அஷ்டஅக்ஷரி+த்வயம்+ சரம ஸ்லோகம் ) எனவே, ஸ்தோத்திர ரத்னம் ரஹஸ்ய த்ரயத்தின் சாரம்–ஸ்ரீ த்வயார்த்தங்களை அருளிச் செய்கிறார்
முதல் ஐந்து ஸ்லோகங்களால் ஆச்சார்ய வந்தனம் –
ஸ்ரீ புராண ரத்னம் அருளிச் செய்த ஸ்ரீ பராசரையும் மங்களா சாசனம் அருளிச் செய்கிறார் –
ரத்னம் தானும் பிரகாசித்து ஸ்ரீ எம்பெருமானையும் பிரகாசப்படுத்தி காட்டி அருளும் அன்றோ –
அடுத்து இரண்டு ஸ்லோகங்களால் பரத்வத்தையும்-அடுத்து இரண்டால் ஸுலப்யத்தையும் அருளிச் செய்து-மேல் ஒன்பது ஸ்லோகங்களால் ஸ்ரீ நாராயண சப்தார்த்தம் அருளிச் செய்து–ந தர்ம நிஷ்ட்டோஸ்மி ந சாத்ம வேதீ ந பக்திமாம் ஸ்தவச சரணாரவிந்தே-அகிஞ்சநோ அநந்ய கதிஸ் சரண்ய த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே–22-th ஸ்லோகத்தால் சரணாகதி செய்து அருளி–அடுத்த நான்கு ஸ்லோகங்களால் சரணாகத அதிகாரிக்கு லக்ஷணங்களையும்-மேல் இரண்டு ஸ்லோகங்களால் சரணாகதியால் வரும் பலன்களையும் அருளிச் செய்து–மேல் –16-ஸ்லோகங்களால் உத்தர காண்ட அர்த்தம் -ஸ்ரீ பரமபத வைபவம் – இவற்றை திரு உள்ளம் பற்றியே ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ வைகுண்ட கத்யம் அருளிச் செய்கிறார்-ஸ்லோகம் 52-மூலம் சேஷத்வமே ஸ்வரூப நிரூபக தர்மம் என்று அருளிச் செய்கிறார் .-அடுத்த ஸ்லோகத்தால் ஸ்ரீ நம்மாழ்வார் அருளிச் செய்த-எனது ஆவி யார் யான் யார் தந்த நீ கொண்டு ஆக்கினையே –திருவாய் -2.3.4-அடுத்த மூன்றால் தேஹ அவசானம் வரை அவன் அனுக்ரஹத்தை பிரார்த்தித்து-அடுத்து பாகவத ஸமோக மஹிமையை அருளிச் செய்து-மேலே அவனது காருணிகத்தவம் வாத்சல்யம் நவவித சம்பந்தம் -சர்வவித பந்துத்வம் போன்றவற்றை அருளிச் செய்து
மேலே நைச்ய அனுசந்தானம் பண்ணி அருளி அவனது ரக்ஷகத்வ விரதத்தை நினைவு படுத்தி
மேலே ஆச்சார்ய சம்பந்த முகேன அனுக்ரஹம் செய்து அருள பிரார்த்தித்து நிகமித்து அருளுகிறார் –
ஸ்தோத்ரம் தன்னில் செய்ததாகிறது:– முதலிட்டு அஞ்சு ஸ்லோகத்தாலே பகவத், விஷயத்தில் இழிகைக்கு யோக்யனாக்கின ஆசார்யனை உபகார ஸ்ம்ருதியாலே ஸரணம் புக்கு,
அநந்தரம் நாலு ஸ்லோகத்தாலே பகவத், விஷயத்திலே இழிந்து, தத் ப்ரப௱வத்தாலே ஸ்தோத்ரா க்ஷேப ஸமாதானத்தைப் பண்ணி,
நா வேஷஸே’–தொடங்கி *த்வதராஸ்ரிதாநாம்’ அறுதியாக ஸரண்ய ப்ரபாவத்தைச் சொல்லி,
நமோ நம:விலே அந்த ப்ரபாவத்துக்குத் தோற்றுத் திருவடிகளிலே விழுந்து,
ந த,ர்ம நிஷ்டோஸ்மி என்று தொட்ங்கி *தவாம்ருதஸ்யந்திநி’யளவும் வெறு மையை முன்னிட்டு ஸரணம் புக்கு, ஸரணாகதனுக்கு ஸம்பாவிதமான ஸ்வ பாவங்களைச் சொல்லி,
‘த்வதங்க்ரி தொடங்கி இரண்டு ஸ்லோகத்தாலே, “மநோ வாக் காயங்கள் எல்லாவற்றாலும் ஸரணம் புக வேண்டா; காயிகமாதல் மானஸமாதல் அமையும் அபிமத ஸித்திக்கு” என்று சொல்லி,
*விலாஸ தொடங்கி பவந்தம்’ முடிவாக ப்ராப்யத்தை ப்ரார்த்தித்து,
தாம் ப்ரார்த்தித்தபோதே ப்ராப்யம் ஸித்தியாமையாலே ஸூரி போக்யமான விஷயத்தை நித்ய ஸம்ஸாரியான நான் ஆசைப்படக் கடவேனோ?” என்று தம்மை “திகஸூசிம்’ என்று நிந்தித்து,
பின்பு தம்முடைய ருசியாலே, “அயோக்யதாஹேதுவான பாபத்தையும் தேவருடைய க்ருபையாலே போக்கி யருள வேணும்’ என்று தாம் பண்ணின ப்ரபத்தியை ஸ்மரிப்பித்து, “அபராத, ஸஹஸ்ரவிலே அபேஷித்து.
*அவிவேக’ என்று தொடங்கி மூன்று ஸ்லோகத்தாலே “தேவர் க்ருபைக்கும் ஆகாதாருண்டோ?” என்று சொல்லி,
மேல் இரண்டு ஸ்லோகத் தாலே ஸ்வ ஸ்வரூப யாதாத்ம்யத்தையும்,
“அவபோதி,த” விலே பரபக்தியையும் அபேக்ஷித்து,
மேல் இரண்டு ஸ்லோகத்தாலே அப் புருஷார்த்தத்தில் சரமாவதியான ததீய ஸேஷத்வத்தை ப்ரார்த்தி,த்து,
மேல் ஒரு ஸ்லோகத் தாலே *“ஸேஷத்வ விரோதிகளைப் போக்கித் தந்தருள வேணும் என்று அபேக்ஷித்து,
மேல் மூன்று ஸ்லோகத்தாலே “இப்படி இச்சிக்கிற தான் அஸூபாஸ்பதன்; இச்சைதானும் போட்கனானாலும் தேவர் க்ருபாதி,குணங்களாலே அஸூபத்தைப் போக்கி, நிருபாதிக ஸம்பந்தாத் தாலே இச்சையையும் பிறப்பிக்கை தேவர்க்கே பரம்” என்று, மேல் இரண்டு ஸ்லோகத்தாலே ‘விலக்ஷண ஸந்தானத்தில் ஜன்மமும், பாப ப்ராஸூர்யத்தாலே அகிஞ்சித்கரம்” என்று,
மேல் இரண்டு ஸ்லோகத்தாலே,நான் பண்ணின ப்ரபத்தியை நினைத்து, இப் பாபத்தை தேவருடைய க்ஷ்மைக்கு விஷயமாக்கவேணும்’ என்று ௮பேக்ஷித்து, “நான் பண்ணின ப்ரபத்தியை அநாதரிக்கிலும், ப்ரபந்ந விஷயமாகப் பண்ணின ப்ரதிஜ்ஞையை அநாதரிக்கிலும், பெரிய முதலியார் பக்கல் தேவர்க்கு உண்டான ராகத்தை விடவொண்ணாதிறே; தத் ஸம்பந்த,த்தைப் பார்த்து, என்னுடைய நன்மை தீமைகளைப் பாராதே ரக்ஷித் தருள வேணும்’ என்று முடிக்கிறார் –
—
ஸ்லோகம் -1- அவதாரிகை –முதல் ஸ்லோகத்தில் ஒருவனைக் கவி பாடப் புக்கால் அவன் ஐஸ்வர்யத்தைச் சொல்லிக் கவி பாடுமா போலே ஸ்ரீ வைஷ்ணவனுக்கு ஐஸ்வர்யமான ஜ்ஞான வைராக்யங்கள் உடைய பிரகர்ஷத்தை சொல்லி நமஸ்கரிக்கிறார் –மனமாசு தீரும் அருவினையும் சாரா
தனமாய தானே கை கூடும் –புனமேய பூந்துழாயான் அடிக்கே போதொடு நீர் ஏந்தி தாம் தொழா நிற்பார் தமர் -முதல் திருவந்தாதி -43-என்று ஸ்ரீ வைஷ்ணவனுக்கு தனம் பக்த்யாதிகள் என்று சொல்லிற்று இறே –முதல் ச்லோகத்தில், ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீமந்நாதமுனிகளின் உண்மையான செல்வமான
ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் பெருமையை வணங்குகிறார்.
நமோ அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே
நாதாயா முநயே அகாத பகவத் பக்தி சிந்தவே–1-
அசிந்த்ய –இப்படிப்பட்டது என்று நினைக்க முடியாததும் –
அத்புத –ஆச்சார்யமானதும்
அக்லிஷ்ட -அவனது நிருஹேதுக கிருபையினால் எளிதாகக் கிடைத்ததுமானஜ்ஞான வைராக்ய ராசயே-ஞானத்தினுடையவும் வைராக்யத்தினுடையவும் திரட்சி போன்றவராயும்
அகாத பகவத் பக்தி சிந்தவே–ஆழ்ந்த பகவத் பக்திக்குக் கடலையும் இருக்கிற
நாதாயா முநயே நம -ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு நமஸ்காரம் செய்கிறேன்-
நினைவுக்கு அப்பாற்பட்ட, உயர்ந்த ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் கூட்டத்தை எம்பெருமானின் கருணையால் ஸ்ரீமந்நாதமுனிகள் எளிதில் அடைந்தார்.-அவர் எப்பொழுதும் பகவானையே த்யானித்தில் கொண்டிருப்பவர்.-பகவத் பக்திக் கடலாக இருப்பவர். இப்படிப்பட்டவரை வணங்குகிறேன்.
நமோ –
அஹம் அபி ந மம பகவத ஏவ அஹம் அஸ்மீத் ஏவம் அமமதாம் யோஜயத்யதோ நம இதி -(நான் எனக்குமுரியேனல்லேன்; ப,கவானுக்கு அடியேனா கிறேன்’” என்று இம்மாதிரியாக மமகார மில்லாமையைத் தருவதால் நம: எனப்படுகிறது)என்கிறபடியே எனக்கு உரியேன் அல்லேன் –பெரிய முதலியாருக்கு சேஷம் -என்கிறார் –நமோ விஷ்ணவே -என்கிறாப் போலே – நமோ நாதாயா –என்கிறார் உபகார ஸ்ம்ருதி யாலே –ஓம் நமோ விஷ்ணவே (ஷடத் அக்ஷரீ )-என்றும்-நம இத்யேவ வாதி ந -(முக்தாநாம் லக்ஷணம் ஹ்யேதத் யச்ச்,வேதத்,வீபவாஹிநாம்। நித்யாஞ்ஜலிபுடா ஹ்ருஷ்டா நம இத்யேவ வாதி,ந: ॥ [ஸ்வேதத்,வீபவாஸிகளுக்கு எது லக்ஷ்ணமோ, அதுவே முக்தர்களுக்கும் லக்ஷணமாகும்; அதாவது: எப்போதும் அஞ்ஜலி செய்து கொண்டிருப்பார்கள் ; (அதனால்) ஆநந்திப்பார்கள்; வாயால் *நம:” என்றே சொல்லும் தன்மை யுடையவர்களா யிருப்பார்)என்றும்-நம ரிஷிப்யோ மந்த்ர க்ருத்ப்ய -என்றும்-தேஷாமபி நமோ நம -(தஸ்ய யஜ்ஞ வராஹஸ்ய விஷ்ணோரமித தேஜஸ: |ப்ரணாமம் யே$பி குர்வந்தி தேஷாமபி நமோ நம:॥ [யஜ்ஞ வராஹராகியவரும், அளவற்ற தேஜஸ்ஸை உடைய வருமான அந்த விஷ்ணுவுக்கு எவர்கள் ஒரு நமஸ்காரம் செய்கிறார்களோ, அவர்களுக்குப் பலகால் நமஸ்காரம்)என்றும் சொல்லக் கடவது இறே –ஸ்ரீ ஈஸ்வர முனிகள் -ஸ்ரீ ரங்க நாதன் என்று திருநாமம் சாற்றுகையாலே-நாதன் என்று திரு நாமம் ஆகிறது – எப்படிப் பட்டவர் -என்னும் அபேஷையில் சொல்லுகிறது –ஸ்ரீ ரெங்க நாத முனி பூர்ணமான திரு நாமம் –எப்போதும் எம்பெருமானையே மனனம் செய்பவர் என்பதால் முனி –
அசிந்த்ய –
இவருடைய ஜ்ஞானாதிகள் இன்னாருடைய ஜ்ஞானாதிகள் போலே இருக்கும் என்று நினைக்க ஒண்ணாது -என்னுதல்-இவ்வளவு என்று ஜ்ஞானாதி கராலும் -பரிச்சேதிக்க ஒண்ணாது -என்கை-
அத்புத –
கீழ் இயத்தா ராஹித்யத்தைச் சொல்லுகையாலே-க்ருஹீதாம்சம் அனுசந்தித்தார்க்கு ஆச்சர்ய அவஹமாய் இருக்கும் -என்கை –அமுதூரும் என்றக்கால் -இத்யாதியில் க்ருஹீதாம்சம் இனிதாய் இருக்கும் என்றது இறே –அத்புதமாவது –அறிய ஒண்ணாமையாக இருந்தாலும் நம் சற்று அறிவுக்கு எட்டிய அளவு ஆச்சர்யமாக இருக்கின்றவே-
அக்லிஷ்ட –
வ்யாசாதிகளைப் போலே ஸ்வ யதன சாத்திய தபஸ்ஸாலே வந்தது அன்றிக்கே–ததாமி புத்தி யோகம் தம் –(தேஷாம் ஸததயுக்தாநாம் ப,ஜதாம் ப்ரீதிபூர்வகம் | ததாமி புத்தி,யோகம் தம் யேந மாமுபயாந்தி தே॥| [என்னிடத்தில் எப்போதும் சேர்ந்திருப்பதை விரும்புபவர்களும், என்னை ப.ஜிப்பவர்களுமான அவர்களுக்கு, என்னை அடைவதற்கு ஸாதனமான அந்த புத்தி யோகத்தை அன்புடன் ௮ளிக்கிறேன்)என்றும்-மயர்வற மதி நலம் அருளினான் -என்றும் சொல்லுகிறபடியே-பகவத் பிரசாத லப்தம் ஆகையாலே வருத்தம் அற்று இருக்கை-
ஜ்ஞான –
ஜ்ஞானம் ஆவது -சித் அசித் ஈஸ்வர தத்தவங்களை விஷயமாக உடைத்தாய் இருக்கை –-அதாவது –
ஆத்மா ஈஸ்வரனுக்கு அனன்யார்ஹ சேஷம் என்றும்-அசித் ஸ்வரூபம் த்யாஜ்யம் என்றும் –
ஈஸ்வரன் உபயோர் நியந்தா என்றும் -அறிகை –ஜ்ஞானம் என்றால் இவ் விசேஷத்தைக் காட்டுகிறது
தத் ஜ்ஞானம் அஜ்ஞானம் அதோ அந்ய துக்தம்-(ஸம்ஜ்ஞாயதே யேந ததஸ்த தோஷம் ஸூத்தம் பரம் நிர்மலமேகரூபம் | ஸந்த்,ருஸ்யதே வாப்யதி,கம்யதே வா தத் ஜ்ஞாநமஜ்ஞாநமதோந்யது,க்தம் ॥| -விஷ்ணு பு. 6 -5-87.[எந்த அறிவினால், தோஷமற்றதும், ஸூத்தமானதும், மிகவும் மலமற்றதும், ஒப்புயர்வற்றதுமான அந்தப் பரவஸ்து அறியப்படுகிறதோ, பார்க்கப்படுகிறதோ, அடையப்படுகிறதோ, அதுவே ஜ்ஞானம்; அதைக் காட்டிலும் வேறானது அஜ்ஞானம்)என்றும்-வித்ய அந்ய அசில் பனை புணம் -(தத் கர்ம யந்ந பூந்தாய ஸா வித்யா யா விமுக்தயே | ஆயாஸாயாபரம் கர்ம வித்,யாந்யா ஸில்பநைபுணம் || [எந்தக் கர்மம் பந்தத்திற்குக் காரணமல்லவோ அதுவே கர்மம்; எது முக்திக்குக் காரணமோ அதுவே வித்யை, மற்ற கர்மம் ஸ்ரமத்திற்கே. மற்ற வித்,யை செருப்புக்குத்தக் கற்றது போன்றது.)என்றும் வ்யதிரிக்த விஷய ஜ்ஞானம் அநர்த்தா வஹம் என்றும் அதி சூத்ரம் என்றும் -சொல்லிற்று இறே –ஞானமாவது தத்வ த்ரய -சித் அசித் ஈஸ்வர தத்தவங்களை விஷயமாக உடைத்தாய் இருக்கை-அர்த்த பஞ்சக ஞானம் என்றுமாம்-
வைராக்ய –
இவ் விலஷண ஜ்ஞானத்தாலே பகவத் வ்யதிரிக்தங்களில்-நிஸ்ப்ருஹராய் இருக்கை –-வேண்டேன் மனை வாழ்க்கையை -பெரிய திருமொழி -6-1-
ராசயே –
ராசி என்று சமூஹம்-ஜ்ஞான இராசே –வைராக்ய ராசயே –-ஜ்ஞான வைராக்யங்கள் ஒன்றாய் இருக்க ராசயே -என்பான் என் -என்னில் –-ஸ்ரீ பகவத் ஸ்வரூபாதிகள் ஜ்ஞான விஷயங்கள் ஆகையாலே பல –
பிதரம் மாதரம் -(பிதரம் மாதரம் தாராந் புத்ராந் பந்தூந் ஸகீந் குரூந்। ரத்நாநி தந தாந்யாநி க்ஷேத்ராணி ச க்,ருஹாணி ச ॥ ஸர்வத,ர்மாம்ஸ்ச ஸந்த்யஜ்ய ஸர்வ காமாம்ஸ் ச ஸாக்ஷராந் | லோக விக்ராந்த சரணெள ஸரணம் தே$வ்ரஜம் விபோ ॥[பூத;வானே ! தந்தையையும், தாயையும், மனைவியையும், பிள்ளைகளையும், உறவினரையும், நண்பர்களையும், ஆசாரியர்களையும், ரத்னங்களையும், தனதான்யங்களையும், வயல் களையும், வீடுகளையும், எல்லா உபாயங்களையும், கைவல்ய முள்ளிட்ட எல்லா ஆசைகளையும், வாஸனையுடன் விட்டு, திருவுலகளந்தருளின உன் திருவடிகளை ஸரணமடை கிறேன்.])என்று த்யாஜ்ய விஷயங்களும் பலவாகையாலே சொல்லலாம் –லோகத்தில் விலஷணர் உடைய ஜ்ஞான வைராக்யங்கள் எல்லாம் இவருடைய ஜ்ஞான வைராக்யங்களிலே அந்தர்ப்பூதம் ஆம்படி இருக்கையாலே சொல்லுகிறது -என்றுமாம் –யத் கிஞ்சித் சாது குர்வந்தி யஸ்தத் வேத யத்ச வேத ச மயைத துக்த இதி –(ஏநம் ஸர்வம் தத;பி,ஸமேதி யத்கஞ்சித் ப்ரஜாஸ் ஸாது, குர்வந்தி யஸ்தத் வேத, யத்ஸ வேத, ஸ மயை தது,க்த இதி [மனிதர்கள் எந்தெந்த நல்ல காரியங்கள் செய்கிறார்களோ, அவையெல்லாம் ரைக்வரிடம் பொருந்தியிருக்கின் றன. எதை அவர் (ரைக்வர்) அறிந்திருக்கிறரோ அதையே எவனும் அறிகிறான். அப்படிப்பட்ட ரைக்வர் என்னால் இபபோது சொல்லப்பட்டார்) யத் கிஞ்சித் சாத்வ நுஷ்டிதம் கர்ம யச்ச சர்வ சேதன கதம் விஜ்ஞானம் ததுபயம் யதி யஜ்ஞான கர்மாந்தர்கதம் ச ரைக்வ -இதி –([உலகத்தில் அனுஷ்டி,க்கப்படும் எந்த நற்கருமமும், எல்லாச் சேதனர்களுடைய அறிவுமாகிய இவ்விரண்டும் எவருடைய ஜ்ஞானத்திலும், கர்மத்திலும் அடங்கியிருக்கின் றனவோ அவரே ரைக்வர் என்று (ஹம்ஸம்) சொல்லிற்று)என்றும்-லோகத்தில் அனுஷ்டிதமான கர்மங்களும் ஞானங்களும் யாவன் ஒருத்தன் உடைய கர்ம ஞானங்களிலே அந்தர்க்கதமாய் இருக்கும் -அவன் தானே கிடீர் ரைக்வன் -என்று பார்த்து சொல்லுமா போலே-
முநயே –
ந விவேதாத்மநோ காத்ரம் -(ஸ த்வாஸக்தமதி: க்ருஷ்ணே தஸ்யமாநோ மஹோரகை;:। ந விவேதராத்மநோ காத்ரம் தத் ஸ்ம்ருத்யஹலாத,ஸுஸ்தி,த: ॥ [மஹா நாகங்களினால் கடிக்கப்படுபவனும், க்ருஷ்ணனிடத் தில் புததியைச் செலுத்தினவனுமான அந்த ப்ரஹ்லாதன், பகவானை நினைக்கையினாலுண்டான ஆனந்தத்தி னால் நிலை நின்றவனாய், தன்னுடைய ‘உடம்பை அறிய வில்லை)என்றும்-பஸ்யந்நபி ந த்ருஷ்ட்வான் -([பார்த்துக்கொண்டிருந்த போதும் பார்க்க வில்லை)என்கிறபடியே-தேய வஸ்துவை சர்வதா சாஷாத் கரிக்கை-ஏது செய்தால் மறக்கேன் மனனே –பெரிய திரு மொழி -9-3-3- என்றும் என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் -திருவாய் மொழி -7-3-6- என்றும்-இவர் கிருஷ்ணனை அனுசந்தித்து இருக்க ராஜாவாலும் சமாதி பங்கம் பண்ணப் போயிற்று இல்லை –-ராம மேவா நுபச்யந்த -என்னுமா போலே –
அகாத பகவத் பக்தி சிந்தவே –
பக்தியாவது ஜ்ஞான விசேஷமாய் இருக்க –பக்தியைப் பிரித்துச் சொல்லிற்று –-அதினுடைய ப்ராசுர்யம் சொல்லுகைக்காகவும் –ப்ரதான்யம் சொல்லுகை தோற்றுகைக்காகவும் –-பக்தி யாகிறது –சிநேக பூர்வம் அனுத்யானம் பக்தி -(ஸ்நேஹபூர்வமநுத்,யாநம் ப,க்திரித்யபி,த,யதே | பூஜ இத்யேஷ தாதுர்வை ஸேவாயாம் பரிகீர்த்தித: ॥ தஸ்மாத் ஸேவா புதை; ப்ரோக்தா ப,க்கி ஸப்,தே.ந பூயஷீ ॥ [ஸ்நேஹத்தை முன்னிட்ட தியானம் ப,க்தியெனப்படுகிறது. ‘ப.ஜ’ என்கிற தாது (ஸேவை! என்னும் அர்த்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையால் மேலான ஸேவையே பெரியோர்களால் பத்தி ஸப்,த,த்தினால் சொல்லப்படுகிறது.])என்றும்-ஸ்வாமிநி தாசச்ய சிநேக மயீ ஸ்திதி -([ஸ்வாமியிடத்தில் தாஸனுடைய ஸ்நேஹம் நிறைந்திறாக் கும் நிலைமை.])என்றும் சொல்லுகிறபடியே- அனுபவ ஆசை -அனுபவிப்பதில் விருப்பம் –பகவச் சப்தத்தாலே பரம பதத்தில் இருப்பைச் சொல்கிறது –வாஸூ தேவோ அஸி பூர்ண – (ஆறு குணங்களாலும் பூர்ணனான வாஸுதேவனாயிருக் கிறாய்)என்று ஷாட் குணிய பூர்ணனாய் இறே இருப்பது-அகாத–அஷோப்ய-கலக்க ஒண்ணாத –அர்த்தாந்தரம் -பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கை – ஒருவரால் நிலை கொள்ள ஒண்ணாது இருக்கை –சிந்தவே –காதல் கடலின் மிகப் பெரிது –திருவாய்மொழி -7-3-6-என்றும்-ஆசை என்னும் கடல் -பெரிய திருமொழி -4-9-3- என்றும் ஈஸ்வரனுக்கும் நிலை கொள்ள ஒண்ணாதே தாம் அதில் புக்கு அமிழ்ந்தபடியாய் இருக்கை –
அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே
முனயே அகாத பகவத் பக்தி சிந்தவே நாதாய நம -என்று அந்வயம் –பகவத் பக்தி ரசத்துக்கு -ஆழ்ந்ததோர் கடல் போலே இருப்பாரே -கலக்க முடியாதபடி – பகவத் பக்திக்கு சமுத்திரம் என்றும்
பகவத் பக்தியாகிற சமுத்திரத்தை தம்மிடம் கொண்டவர் என்றுமாம் –
சிந்தையினுக்கு எட்டாமே சிறந்த அருளால் எளிது இலகி
விந்தையுறு மெய்ஞ்ஞான விரக்திக் களஞ்சியமாய்
பைந்துளவ பகவான் மீதுறு பக்திக்கு ஆழ் கடலாம்
அந்தணனாம் அந்நாத முனிகள் அடி பணிவேனே—அந்தணன் -அந்தத்தை அணவுவான் –கிட்டுவான் முனிவன்-மனத்தினால் அளவிடக் கூடாததாய்-அறிந்த மட்டில் ஆச்சர்யத்தை விளைவிப்பதாய்-பகவத் கிருபையால் வந்த காரணத்தால் ஸ்ரமம் அற்று இருப்பதாயுமுள்ள விலக்ஷணமான ஞானமும்-அந்த ஞானத்தால் யுண்டாகும் வைராக்கியமும் ஆகிய இவற்றுக்கு இருப்பிடமானவரும் திருத்துளஸீ தரிக்கும் பகவான் இடத்தில் உண்டாகும் பக்திக்கு நிலைக்காத ஸமுத்ரம் போன்றவரும் முனி ஸ்ரேஷ்டருமுமான அந்த ஸ்ரீ மன் நாதமுனிகளுக்கு நமஸ்காரம் பண்ணுகிறேன்-
–
ஸ்லோகம் -2- அவதாரிகை
முதல் ஸ்லோகத்தாலே பரத்வ விஷயமான ஜ்ஞானாதிகள் உடைய பிரகர்ஷம் சொல்லிற்று-இந்த ஸ்லோகத்தாலே அவதார விஷயமான ஜ்ஞானாதிகள் ஆகையாலே-அதினுடைய ப்ரக்ருஷ்ட தரத்வம் சொல்லுகிறது-அன்றிக்கே-கீழ் சொன்ன ஜ்ஞானாதிகள் தம்மளவில் பர்யவசியாதே என்னளவும் வர வெள்ளம் கோத்தது – என்னவுமாம் –இதில், பகவத் அவதாரங்களில் ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு இருந்த ஞானம் ஆகியவற்றின் மேலான சிறப்பு விளக்கப்படுகிறது. அல்லது, “(முந்தைய ஶ்லோகத்தில் சொல்லப்பட்ட) ஞானம் முதலியவை அவரிடமே தங்காமல், என்னளவும் பெருகி வருகிறது”
என்று ஆளவந்தார் அருளிச் செய்கிறார்.
தஸ்மை நமோ மது ஜிதங்க்ரி ஸரோஜா தத்தவ
ஜ்ஞான அனுராக மஹிமா அதிசய அந்த ஸீம்நே
நாதாயா நாத முநயே அத்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரனௌ சரணம் மதீயம்-2-
மது ஜிதங்க்ரி ஸரோஜா -எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளைப் பற்றின
தத்தவ ஜ்ஞான–உண்மை உணர்ச்சி என்ன
அனுராக –ஆசை என்ன
மஹிமா அதிசய அந்த ஸீம்நே–இவற்றின் பெரு மேன்மைக்கு எல்லை நிலமாயும்
நாதாயா-எனக்கு நாதராயும் இருக்கிற
தஸ்மை நாத முநயே நமோ–அந்த நாத முனிகளுக்கு நமஸ்காரம்
அத்ர பரத்ர சாபி-இவ்வுலகத்திலும் மேல் உலகத்திலும்
நித்யம் யதீய சரனௌ-எப்போதும் -எந்த ஸ்ரீமந் நாதமுனிகளுடைய திருவடிகள்-நித்யம் – நித்ய அக்னி ஹோத்ரம் போல் அன்றிக்கே அனவரதம் -என்கை –
மது என்னும் அஸுரனைக் கொன்ற எம்பெருமானின் திருவடிகளில் சிறந்த ஞானம் மற்றும் பக்தியின் வடிவமாக விளங்குபவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவருடைய திருவடிகளே எனக்கு இவ்வுலகிலும் பரமபதத்திலும் புகலாக இருக்கும். அவரே என் தலைவர். இப்படிப்பட்டவரை நான் வணங்குகிறேன்.
தஸ்மை நமோ –
நமஸ் தஸ்மை நமஸ் தஸ்மை நமஸ் தஸ்மை மஹாத்மநே-என்றும் –([மஹாத்மாவான அவனுக்கு நமஸ்காரம்; அவனுக்கு நமஸ் காரம்; அவனுக்கு நமஸ்காரம்) நமோ நமஸ்தே ஆஸ்து சஹஸ்ர க்ருத்வ–(நமோ நமஸ்தேஸ்து ஸஹஸ்ர க்ருத்வ:புநஸ்ச பூூயோபி நமோ நமஸ்தே |நம: புரஸ்தாத;த, ப்ருஷ்ட்டதஸ்தே நமோஸ்து தே ஸர்வத ஏவ ஸர்வ॥ [உனக்கு ஆயிரந்தடவை நமஸ்காரம்; மறுபடியும் மறுபடியும் உனக்கு நமஸ்காரம்; எல்லாமாயிருப்பவனே! உனக்கு முன்னும் பின்னும் நமஸ்காரம்; உனக்கு எல்லாவிடத்திலும் நமஸ்காரம்.]என்றும் சொல்லுகிறபடியே –-இன்னம் அவர்க்கு அடியேன் -என்கிறார் –
மது ஜீத் –
அநிருத்தராய்வந்து அவதரித்து-முதல் களையான மதுவை நிரசித்தால் போலே-பகவத் ப்ராப்தி பந்தகங்களைப் போக்குமவன் -என்கை –
அங்க்ரி –
அந்த ஸ்வ பாவத்திலே –குணைர் தாஸ்யம் உபாகத -(அஹமஸ்யாவரோ ப்,ராதா குணைர் தாஸ்யமுபாக,த: [நான் இவருடைய நினைவினால் (இவருக்குத்) தம்பி; (உண்மையில்) இவருடைய குணங்களால் (இவருக்கு) அடிமைப் பட்டவன்.])என்று பெரிய முதலியார் தோற்று இருக்கும் படியையும் அவருடைய அனன்யார்ஹ சேஷத்வமும் சொல்லுகிறது –ஸரோஜ – சம்பந்தம் இல்லா விடிலும் விட ஒண்ணாத போக்யதையைச் சொல்லுகிறது –விகாசம் செவ்வி குளிர்ச்சி பரிமளம் முதலான வற்றுக்குத் தாமரையை ஒரு படிக்குப் போலியாகச் சொல்லலாய் இருக்கை –
தத்தவ ஜ்ஞான –தத்வ ஜ்ஞானம் ஆவது – அவதார விஷய ஜ்ஞானமும்-ஆஸ்ரித பாரதந்த்ர்ய விஷய ஜ்ஞானமும் –-ஜன்ம கர்ம ஸ மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்த்வத த்யக்த்வா தேகம் புநர் ஜன்ம நைதி மாமேதி ஸோ அர்ஜுன -ஸ்ரீ கீதை -4-9-([அர்ஜுனா! என்னுடைய அப்ராக்ருதமான பிறப்பையும், சேஷ்டிதங்களையும் எவன் இப்படி உண்மையாக அறிகிறானோ, அவன் தேஹத்தை விட்டு மறு ஜன்மம் அடையான்; என்னை அடைகிறான்)என்று தானே அருளிச் செய்தான் இறே –தஸ்ய தீரா பரிஜா நந்தி யோநிம் -(அஜாயமாநோ ப,ஹாதா விஜாயதே | தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநி [பிறப்பற்றவனா யிருந்தும் பலபடியாகப் பிறக்கிறான் (பரம புருஷன்). அவனுடைய அவதாரத்தை தீரர்களே (அறிவில் மிக்கோரே) நன்கு அறிகிறார்கள்)என்றும்-அஹத்வா ராவணம் சங்க்யே-(அஹத்வா ராவணம் ஸங்க்,யே ஸ புத்ர பல பாந்த,வம் | அயோத்,யாம் ந ப்ரவேக்ஷ்யாமி த்ரிபி,ஸ்தைர் ப்,ராத்ருபிஸ் ஸயே || [பிள்ளைகளுடனும், ஸேனையுடனும், பந்துக்களுடனும் கூடிய ராவணனைச் சண்டையில் கொல்லாமல் அயோத்தியில் ப்ரவேசிக்கமாட்டேன். மூன்று தம்பிகளின் மீதும் ஆணையிடுகிறேன்)என்றும்-யத் விநா பரதம் த்வாஞ்ச சத்ருக் நஞ்சாபி மாந்த பவேன் மம ஸூகம் கிஞ்சித் பஸ்மாசாத் குருதாம் சிகி -([பெருமையைத் தருபவனே! பரதனையும், உன்னையும், ஸத்ருக்னனை யுமில்லாமல் ஏதாவது எனக்கு ஸுக,முண் டாகுமானால், அதை அக்னி சாம்பலாக்கட்டும் என்று அருளிச் செய்தான் இறே சக்கரவர்த்தி திருமகன் –அப்யஹம் ஜீவிதம் ஜ்ஹ்யாம் -(அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வா ஷீதே ஸ லக்ஷ்மணம் | ந து ப்ரதிஜ்ஞாம் ஸம்ஸ்ருத்ய ப்,ராஹ்மணேப்,யோ விமேஷத: || [நான் உயிரையும், லக்ஷ்மணனோடு கூட உன்னையும் விடுவேனே யொழிய செய்த ப்ரதிஜ்ஞையை விட மாட்டேன்) அதிலும், விமேஷமாக ப்,ராஹ்மணர்களுக்குக் கொடுதத ப்ரதிஜ்ஞையை விடேன்])என்றும் ஆத்மாநாம் நாதி வர்த்தேதா -இத்யாதி(ப,ரதஸ்ய வச: குர்வந் யாசமாநஸ்ய ராக,வ। ஆத்மாநம் நாதிவர்த்தேதா: ஸத்ய த,ர்ம பராக்ரம ॥ [ராக,வனே | ஸத்யமான தர்மத்தையும், பராக்ரமத்தையும் உடையவனே ! யாசிக்கும் பரதனுடைய வார்த்தையைச் செய்வதன் மூலம், உன்னுடைய ஸ்வரூபத்தை (ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை) மீறாமலிருப்பாயாக)
அனுராக-
அனுராகம் ஆவது -இவற்றை எல்லாவற்றையும் அனுபவித்தால் அல்லது நிற்க ஒண்ணாத ப்ரேமம்
மஹிமா அதிசய அந்த ஸீம்நே –ஜ்ஞான அநு ராகங்கள் உடைய மஹத்த்வத்தின் முடிவே எல்லையாய் இருக்குமவர்க்கு-மகிமா -மஹத்த்வம் –மனுஷ்ய ஆனந்தமே தொடங்கி-தே யே சதம் – என்கிற க்ரமத்தாலே ஈஸ்வர ஆனந்தத்திற்கு எல்லையாய் இருக்கும் இருப்பு போலே இவருக்கும் தத் விஷய ப்ரேமத்துக்கு எல்லையாய் இருக்கும் இருப்பு –
நாதாயா –
அஸ்மத் நாதாயா –நாத முநயே –இத் தர்சனத்துக்கு நாதனே -என்று-மது சூதனை யன்றி மற்று இலேன் -திருவாய்மொழி -2-7-6-என்று இருக்கும் மகாதமாக்களாலே கொண்டாடப் படுவாராய் ஆயிற்று –
தத்வ ஹிதங்களை திரு வுள்ளத்திலே கூடு பூரிக்குமவர் –-தஸ்மை நம –என்று அந்வயம் –
உபகார ஸம்ருதியாலே அவரை ஆதரித்தீர் ஆகில் ஐஹிக ஆமுஷ்மிகங்களுக்கு வேண்டாவோ -என்று பகவத் அபிப்ராயமாக அருளிச் செய்கிறார் –-அத்ர பரத்ர சாபி –-சம்சாரத்திலும் பிராப்யமான நித்ய விபூதியிலும் –நித்யம் –நித்ய அக்னி ஹோத்ரம் போல் அன்றிக்கே-அனவரதம் -என்கை –யதீய சரனௌ –என்னை இவ் வவஸ்தாபன்னனாக்கிய திருவடிகள் –சரணம் –-உபாய உபேயங்கள் இரண்டும்-மதீயம் –
பெரிய முதலியார் திருவடிகள் ஆகில் எனக்கு இரண்டுமாய் இருக்கும் -என்கை –-அதாவது -சம்சார தசையிலே பகவானே உபாயம் என்று உபதேசித்து உபாயாத்யவசாயத்துக்கு அடியான ஸ்வ அனுக்ரஹத்தாலே பகவத் பிராவணயத்தை விளைத்தும் பிராப்ய தேசத்தில் சென்றால் நித்ய ஸூரிகள் கோஷ்டியில் பிரவேசிப்பித்தும் பின்பு நித்ய ஸூரிகளோபாதி உத்தேச்யமாய் இருக்கையாலும் -அப்படிச் சொல்கிறது –அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ —வானவர் நாடு –
ஆச்சார்யர் திருவடிகளே உத்தேச்யம் –சரணம் -உபாயம் உபேயம் இரண்டுமே என்றபடி –
அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரனௌ மதீயம் சரணம் மது ஜிதங்க்ரி சரோஜ தத்தவ ஜ்ஞான அனுராக மஹிம அதிசய அந்த சீம்னே நாதாய தஸ்மை நாத முனயே நம -என்று அந்வயம் –
சரணம் மதீயம்–என்னுடையதான புகல் இடமோ –அந்த நாதமுனிகளுக்கு நமஸ்காரம்-திருவடித் தாமரைகளைப் பற்றின தத்வ ஞானத்தாலும் பரி பூர்ணர் -அன்பினாலும் பரி பூர்ணர் –
அவதார ரஹஸ்யம் வாத்சல்யாதி குணங்கள் -இவற்றின் உண்மையை உள்ளபடி உணர்ந்து ப்ரேமம் கனத்து இருப்பவர்களில் நிகர் அற்றவர்-மது ஜித் தத்வ ஞானம் -என்னாமல் -அங்கிரி -நடுவில் -பாதாரவிந்தமே தாயாரின் ஸ்தநம் போலே -பரம உத்தேச்யம்-பகவத் தத்வ ஞானமும் பகவத் அநு ராகமும் இவர் இடம் சேர்ந்து விசரமித்தன போலும் -ஆகவே இவற்றுக்கு இவரே ஸீமா பூமி –
மதுவை வென்ற நெடிய மாலின் மரை மலர்ப்பதத்தின் கண்
முதிரும் தத்வ ஞான மோக மஹிமை முற்று மோர்ந்துயர்
விதுர நாதனாம் என் நாத முலைகளை வியப்பனே
கதி எனக்கு அவன் கழல்கள் இங்கும் அங்கும் என்றுமே –2-விதுரன் -அறிஞன் –வியத்தல் -ஸ்துதித்தல்-மது என்னும் அசுரனை ஸம்ஹரித்த -ஆஸ்ரித விரோதி நிவர்த்தகனான -திருமாலின் திருவடித் தாமரைகள் விஷயமாய் முதிர்ந்து இருக்கும் தத்வ ஞானமும் -அதாவது அத்திருவடிகளே மோக்ஷத்திற்கு உபாய உபேயம் என்னும் ஞானமும் அனுபவித்தால் அல்லது தரிக்க ஒண்ணாத ஒரு ப்ரேமமுமாகிய இவற்றின் மஹிமையை முற்றும் உணர்ந்தவரும் மஹா ஞானியாயும் நமக்கு ஸ்வாமியுமான ஸ்ரீ மன் நாத முனிகளை நமஸ்கரிக்கின்றேன்–இவருடைய திருவடிகளே இம்மையிலும் மறுமையிலும் எக்காலத்தும் எமக்கு கதியாகும்–
–
ஸ்லோகம் -3- அவதாரிகை –-த்ருஷார்த்தனுக்குத் தண்ணீர் குடிக்கப் பர்யாப்தி பிறவாதாப் போலே
பின்னையும் அவர்க்கு அடியேன் -என்கிறார்-ஆஸ்ரிதரை ஒரு காலும் நழுவ விடாத அச்யுத விஷயத்திலே ஜ்ஞான பக்த்யாதிகள் ஆகையாலே தம்மளவில் பர்யவசியாதே பகவத் விஷயத்துக்கு அபூமியான சம்சாரம் எங்கும் வெள்ளம் இடும்படியான இவர் உடைய ஜ்ஞான பக்திகள் உடைய
பிரக்ருஷ்டதையைச் சொல்லுகிறது –
பூயோ நமோ அபரிமித அச்யுத பக்தி தத்தவ
ஜ்ஞாநாம் ருதாப்தி பரிவாஹ ஸூ பைர் வசோபி
லோகே அவதீர்ண பரமார்த்த சமக்ர பக்தி
யோகாய நாத முநயே யமிநாம் வராய-3-
அபரிமித அச்யுத பக்தி –அளவில்லாத பகவத் பக்தி என்ன
அபரிமித தத்தவ ஜ்ஞாநம்–அளவில்லாத தத்வ ஞானம் என்ன
அம்ருதாப்தி பரிவாஹ இவை யாகிற அமுதக் கடலின் பரிவாஹம் போன்று
ஸூபைர்– வசோபி-பிரசன்ன சீதளங்களான ஸ்ரீ ஸூக்தி களாலே
லோகே -இவ் வுலகத்தில்
அவதீர்ண பரமார்த்த –அவதாரம் செய்து இருக்கிற பரம புருஷார்த்தமாயும்
சமக்ர பக்தி யோகாய –பரி பூர்ணமாயும் இருக்கிற பக்தி யோகத்தை உடையவராய்
யமிநாம் வராய–யோகிகளின் சிறந்தவரான
நாத முநயே -பூயோ நமோ—நாத முனிகளுக்கு மறுபடியும் நமஸ்காரம்–பூயோ நமோ-புனஸ்ஸ நம–நமோ நமஸ்தே -என்கிறபடியே-
பகவானிடத்தில் எல்லை இல்லாத பக்திக் கடலில் இருந்து பெருகிய மங்களகரமான வார்த்தைகள் மற்றும் உண்மை ஞானம் வந்து பிறந்ததைப் போலே இருப்பவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவரே சிறந்த குறிக்கோள்.-அவர் பூர்த்தியையும் பக்தி யோகத்தையுமுடையவர். யோகிகளில் சிறந்தவர். அவருக்கு மீண்டும் என் வணக்கங்கள்.
அபரிமித –கிடந்த பாயிலே வெள்ளம் கோத்தால் போலே-இருந்த இடங்களிலே வந்து கிட்டும்படி எல்லை இறந்து இருக்கை –அச்யுத –நியந்த்ருத்வ ஸ்வாமித்வாதி கல்யாண குணங்களாலே குறை வற்று இருக்கை -என்னுதல் –-ஏக ரூபமாய் இருக்கும் –என்னுதல்-என்றும் ஆஸ்ரித அர்த்தமாய் இருக்கும் இருப்பை நழுவ விடாதவன் -என்னுதல் –-ஆர்ந்த புகழ் அச்சுதன் -திருவாய்மொழி -3-5-11- என்றும்
நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன் தன்னை -திருவாய்மொழி -3-6-8-என்கிறபடியே-ஆஸ்ரிதரை தாம்தாம் கையிலும் பிறர் கையிலும் காட்டிக் கொடாதவன் -என்னுதல் –பக்தி தத்தவ ஜ்ஞாநாம் ருதாப்தி பரிவாஹ ஸூபைர் வசோபி –-பக்தி தத்வ ஜ்ஞானங்கள் ஆகிற அம்ருதாப்தி யினுடைய பரிவாஹ ரூபமான ஸூபமான வசஸ் ஸூக்களாலே- உபாயம் ஈஸ்வரன் ஆகையாலே ஜ்ஞான பக்திகள் போக ரூபமாய் அபரிச்சின்னமாய் இருக்கும் -என்கை –பரிவாஹம் ஆவது -அவ்வவ ரஷண அர்த்தமாக
அதிக ஜல நிர்க்க மனஸ் ரோதஸ்ஸூ – வசஸ் ஸூக்களுக்கு ஸூபத்வம் ஆவது –-அவிஸ் தர்ம சந்திக்தம் -இத்யாதிகளை உடைத்தாய் இருக்கை–(அவிஸ்தரமஸந்தி,க்,த,மவிலம்பி,தமத்,ருதம் | உரஸ்ஸ்தஹ் கண்டஆஹ் வாக்யம் வர்த்ததே மத்யமே ஸ்வரே ॥ [( இந்த ஹனுமானுடைய ) மார்பிலிருந்தும், தொண்டை யிலிருந்தும் வரும் வாக்யம் மத்,யம ஸ்வரத்திலும், விஸ்தார மின்றியும், ஸந்தேஹமின் றியும், காலதாமத மில்லாமலும், வேகமில்லாமலுமிருக்கிறது)
லோகே –பகவத் பக்திக்கு மேட்டு மடையான சம்சாரத்திலே-சைஷா பார்க்கவீ வாருணீ வித்யா பரமே வ்யோமன் ப்ரதிஷ்ட்டிதா -(இது ப்,ருகு,விற்கு வருணனால் சொல்லப்பட்ட வித்யை; பரமபதத்தில் நிலை நிற்பது (இது)என்று பரம பதத்தில் பரிமாறக் கடவ பக்தியை-நான் முகனார் பெற்ற நாட்டுளே நற்பாலுக்கு உய்த்தனன் -திருவாய்மொழி -7-5-1-என்கிறபடியே சம்சாரத்தில் நடையாடும்படி பண்ணினபடி –அவதீர்ண –ஈஸ்வராவதாரம் போலே இறே ஸ்வயம் பிரயோஜனமான பக்த்யவதாரம் –பரமார்த்த –பரம பிரயோஜன ரூபமாய் இருக்கை –-சமக்ர –-அதனில் பெரிய அவா -என்னும்படி குறைவற்று இருக்கை –பக்தி யோகாய – பக்தியை உடையரான – உக்தமான பக்தி தத்வ ஜ்ஞானங்கள் இரண்டையும் பக்தி சப்தத்தாலே சொல்லிற்று–
நாத முநயே யமிநாம் வராய –-முடியானே -திருவாய்மொழி -3-8- யில் சொல்லுகிற படியே
அவனை அல்லது அறியாத கரணங்களை உடையராய் இருப்பார்க்குத் தலைவர் ஆனவருக்கு
வாய் அவனை அல்லது வாழ்த்தாது -முதல் திருவந்தாதி -11-என்று இருக்கும் அவர்களுக்கு வரணீயராய் இருக்குமவர் -என்றுமாம்-(வசோபி – ஸ்ரீ -ந்யாய தத்வம் -கிரந்தம் ஸ்ரீ தேசிகன் போன்றார் காட்டி அருளி உள்ளார்கள்-நித்ய கால ஷேப ஸ்ரீ ஸூக்திகளும் உண்டே-பக்தி யோகம் -ஸ்ரீ -குருகை காவல் அப்பனுக்கு பிரசாதித்து அருளிய யோக சாஸ்திரமும் –-ஸ்ரீ -மணக்கால் நம்பி போல்வாருக்கு சாதித்து அருளிய பிரபத்தி சாஸ்திரமும் ––பரமார்த்த -சமக்ர -இரண்டு விசேஷணங்கள்-பரம புருஷார்த்தம் என்றும் –பரி பூர்ணம் -என்றும் –-ஸ்வயம் பிரயோஜனம் என்றதாயிற்று -)
ஸ்ரீ ஸூக்திகளை பக்தி பரிவாஹம் என்றது –சொல்லாவிடில் சரீரம் தரிக்க முடியாது –பக்தி பலாத்காரத்தாலே அவதரித்த சொற்கள்-அம்ருத பரிவாஹம் -பிரசன்னமாயும் மதுரமாயும் சீதளமாயும்
ஸ்ரீ நியாய தத்வம் போன்ற இப்பொழுது லுப்தமான கிரந்தங்களும்-நித்ய காலக்ஷேப ஸ்ரீ ஸூக்திகளும் -இவையே பின்பு ஏடு படுத்தப் பட்டு நம்மளவும் வந்தனவே-யோகம் -குருகைக் காவல் அப்பன் அளவு மட்டுமே –-பக்தி -நெஞ்சு கனிந்து ப்ரீதி ரூபமான த்யானம் -பரமார்த்த சமக்ர -இரண்டு விசேஷங்கள் -ஸ்வயம் பிரயோஜனம் -என்றும் அவனை பிராபிக்க பர்யாபதமான உபகரணம் என்றது ஆயிற்று –
அபரிமித அச்யுத பக்தி தத்வ ஜ்ஞானம்
அம்ருதாப்தி பரிவாஹ ஸூ பைர் வசோபி
லோகே அவதீர்ண பரமார்த்த சமக்ர பக்தி யோகாய
யமிநாம் வராய நாத முனயே பூயோ நம -என்று அந்வயம்-
அச்சுதற்கு அளப்பில்லாத பக்தி தத்வ ஞானமாம்
அச்சுதைக் கடல் பெருக்கு எனத் தரைச்சுபுச் சொலான்
மெச்சி மெய்ப்பலன் விளைக்கும் பக்தி யோக கர்த்தனை
நச்சு நான் ஸ்துதிப்பன் இன்று நாதனாம் முனீந்த்ரனே –3–அச்சுதன் -ஆஸ்ரிதர்களை ஒருகாலும் நழுவ விடாதவன்–ஸர்வேஸ்வரன் விஷயத்தில் அளக்க ஒண்ணாத பக்தி தத்வ ஞானம் ஆகிய அந்த அமுதக் கடலானது உள்ளடங்காது மேலே பொங்கியது போலே மதுரமான சொற்களால் பரம ப்ரயோஜன ரூபமாயும் பரிபூர்ணமாமாயும் இருக்கிற பக்தி யோகத்தை அன்பு கூர்ந்து இவ்வுலகத்தில் பிரகாசிக்கும் படி செய்து அருளினவரும் முனிவர்களுக்கும் ஸ்ரேஷ்டருமாய் -அவர்களாலும் பூஜிக்கத் தக்கவராயும்
அந்த நாத முனிகளை மறுபடியும் நான் வணங்குகிறேன் –
–
ஸ்லோகம் -4- அவதாரிகை –பெரிய முதலியார் ஜ்ஞானத்துக்கு –-லோக பரிக்ரஹம் மாத்ரம் அன்றிக்கே
வேதவிதக்ரேசர பராசரானுமதியாலே ப்ராமாணிகத்வம் உண்டு என்று இவ்வர்த்தத்தின் உடைய ப்ராமாணிகத்வம் சொல்லுகிறது-கிஞ்ச இவர்க்கும் ஸ்ரீ பராசர பகவானுக்கும் ஸ்வபாவ ஐக்கியம் உண்டு-கிருஷ்ண ப்ராவணயமும்-லோகத்துக்கு பண்ணின ஔதார்யமும்-இருவருக்கும் உண்டு
அத்தாலும் அவரை நமஸ்கரிக்கிறார் –
தத்த்வேன யஸ் சித் அசித் ஈஸ்வர தத் ஸ்வபாவ
போக அபவர்க்க தத் உபாய கதீ உதார
ஸ்ந்தர்ஸ்யன் நிரமிமீத புராண ரத்னம்
தஸ்மை நமோ முநிவராய பராசராய –4-
ரிஷிகளில் தலை சிறந்தவரான, உதார குணத்தை உடையவரான பராசர ரிஷிக்கு என் வணக்கங்கள்.
இவரே சித் (ஆத்மாக்கள்), அசித் (அசேதனப் பொருட்கள்), ஈச்வரன், இவர்களுடைய தன்மைகள்,
இவ் வுலக இன்பங்கள், மோக்ஷம், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அடையும் வழி,
ஆத்மாக்களால் அடையப்படும் குறிக்கோள் ஆகியவற்றை உள்ளபடி, புராணங்களில் ரத்னமான
ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவர்.
தத்த்வேன –-ஜ்ஞாதவ் யார்த்தங்களை உள்ள படியே காட்டுகை –-ச ஹோவாச வியாச பாராசர்ய -(பராஸரரின் புத்திரரான அப்படிப்பட்ட வியாஸரன்றோ சொன்னார்)என்கிற பிரமாண பிரசித்தியை பிரகாசிப்பிக்கிறது –சித் ––ஆத்மா ஸூ ததோ அஷரஸ் சாந்தோ நிர்க்குண ப்ரக்ருதே பர ப்ரவ்ருத்த்ய பசயௌ நாஸ்ய சைகஸ் யாகில ஜந்துஷூ -([ஆத்மாவானவன், கர்மம் முதலிய அஸாுத்,த,மற்றவன் 5 விநாஸமற்றவன் ; பசி, தாஹம் முதலியவையற்றவன் ; ஸத்வ ரஜஸ் தமோ கு,ணங்களற்றவன்; ப்ரக்ருதியைக் காட்டி லும் மேலானவன் ; எல்லாப் பிராணிகளிலும், ஒரே மாதிரி (ஜ்ஞாநைகாகாரனாக) இருக்கும் இவனுக்கு அதிகமாவதும், குறைவதும் கிடையாது.])ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-13-71-இத்யாதி –இதில் நிர்க்குணத்வம் ஆவது –சத்வாதி குண ராஹித்யம் .--ஏக ஸ்யாகில ஜந்துஷூ -தேவ திர்யக் மனுஷ்யாக்ய சர்வ ப்ரானிஷூ ஏகஸ்ய -ஜ்ஞானைக ஆகாரத யாசம இத்யர்த்த -என்றும்
நிர்தோஷம் ஹி சமம் ப்ரஹ்ம -என்றும்–பண்டிதாஸ் சம தர்சின -இதி பகவதைவோக்தம்--(வித்,யா விநய ஸம்பந்நே ப்,ராஹ்மணே க,வி ஹஸ்திநி | மாநி சைவ ஸ்வபாகே ௪ பண்டி,தாஸ் ஸம தர்ஸ்ரிந: || இஹைவ தைர்ஜிதஸ் ஸர்க்கேரா யேஷாம் ஸாம்யே ஸ்திதம் மந:। நிர்ததோஷம் ஹி ஸமம் ப்,ரஹ்ம தஸ்மாத் ப்ரஹ்மணி தே ஸ்தி,தா: ॥[வித்,யை, அடக்கம் முதலியவைகளுடன் கூடிய ப்ராஹ் மணனிடமும், கேவல ப் ராஹ்மணனிடமும், பசுவிடமும், யானையிடமும், நாயிடமும், சண்டாளனிடமும், ஆத்மாவை உண்மையாய் அறிந்தவர்கள் ஸமதர்ஸிகளாக இருப்பார்கள். எவர்களுடைய மனமானது (இம்மாதிரியான) ஸம நிலைமையிலிருக்கிறதோ, அவர்களால் இங்கேயே ஸம் ஸாரம் ஜயிக்கப்பட்டது. ப்ரகருதி ஸம்ஸர்க்க,மற்றதும், ஸமமானதுமான ஆத்மவஸ்து வன்றோ ப்ரஹ்மம் (ப்,ரஹ்மத் திற்கு ஸமானமானது). ஆகையால் அவர்கள் ப்ரஹ்மத் திலேயே நிலை நிற்கிறார்கள்)-அசித் –
அசம்ஜ்ஞா வத்தான அசேதனம் –விகார ஜநநீம் அஜ்ஞாம்-இத் யுபநிஷத்(விகார ஜநநீமஜ்ஞாம் அஷ்டரூபாமஜாம் த்.ருவாம் [(பதினாறு) விகாரங்களை உண்டாக்குவதும், (ப்ரக்ருதி, மஹான், அஹங்காரம் ஐந்து தன்மாத்ரைகள் என்னும்) எட்டு ரூபத்தை உடையதும், ஞானமற்றதும், பிறப் பற்றதும், நிலையானதுமான ப்ரக்ருதியை)-தத்ராபி பராசர – த்ரிகுணம் தஜ் ஜகத் யோனி அநாதி ப்ரபவாப்யயம் அஷய்யம் -இத்யாதி(அக்ஷய்மம் நாந்யதாதா ரமமேயமஜரம் த்,ருவம்| ஸப்,த;ஸ்பர்ஸ விஹீநம் தத் ரூபாதி,பி,ரஸம்ஹிதம் || த்ரிகுணம் தஜ்ஜக,த்,யோநிரநாதி,ப்ரப, வாப்யயம் ||[(ப்ரக்ருதியானது) க்ஷயமற்றது; மற்றொரு அசித்தை ஆதாரமாகக் கொண்டிராதது; (தேஸகாலாதி,களால்) அளவற்றது;குறைவற்றது; நிலையானது; ஸப்த,ஸ்பர்ஸங்களற்றது; ரூபம் முதலியவை யற்றது ; ஸத்வ ரஜஸ் தமோ கு,ணங்களை உடையது ; தனக்குக் காரணத்தையும், பிறப்பையும், முடிவையுமற்ற அதுவே உலகிற்குக் காரணம்.])–ஈஸ்வர-உபயோர் நியந்தாவான ஸ்வாமி –
தத்ராபி பராசர – பரமாத்மா ச சர்வேஷாம் ஆதார பரமேஸ்வர விஷ்ணு நாமா ச வேதேஷூ வேதாந்தேஷூ ச கீயதே –([பரமாத்மாவே எல்லோருக்கும் ஆதாரமாகவும், மேலான ஈஸ்வரனாகவுமிருப்பவன். அவன் வேதங்களிலும், வேதாந்தங்களிலும் விஷ்ணுவென் ற பெயரை யுடையவனாகக் கீர்த்திக்கப்படுகிறான்)என்றும்-பர பராணாம் பரம பரமாத்மாத்ம சம்ஸ்தித ரூப வரணாதி நிர்தேச விசேஷண விவர்ஜித சர்வத்ரா சௌ சமஸ்தஞ்ச வசத் யத்ரேதி வை யத ததஸ் ச வாஸூ தேவாதி வித்வத்பி பரிபட்யதே -(மேலானவர்களைக் காட்டிலும் மேலானவனும், தன்னைக் காட்டிலும் உயர்ந்தவனற்றவனும், தனக்குத் தானே ஆதாரமாக இருப்பவனுமான பரமாதமா–ரூபம்,நிறம் முதலியவை,காமம் எனப்படும் (ப்ராக்ருதமான) விசேஷணங்களற்றவன்.இவன் அறிஞர்களால் வாஸுஃதேவனென்று படிக்கப்படுகிறான்)இத்யாதி –தத் ஸ்வபாவ–தேஷாம் ஸ்வ பாவ தத்ர ஸ ச – ப்ரதாநஞ்ச புமாம்ச்சைவ சர்வ பூதாத்மா பூதா விஷ்ணு சக்த்யா மகா புத்தே வருதௌ சம்ச்ரய தரமிநௌ-(மஹா புத்,தியை யுடையவரே ! ஒன்றோடு ஓன்று சேர்ந் திருக்கும் ஸ்வபாவத்தை யுடைய ப்ரக்ருதியும், புருஷனும், எல்லா பூதங்களுக்கும் ஆத்மாவான விஷ்ணு ஸக்தியினால் வியாபிக்கப்பட்டிருக்கின்றன)இத்யாதி–போக – ப்ரஹ்மாதி பிபீலி காந்தமான பத்த சேதன வர்க்கத்துக்குக் கர்ம அனுகுணமாக தாரதம்யேன அனுபாவ்யமான சப்தாதிகள் ––அப வர்க்க –-சப்தாதிகள் உடைய அல்ப அஸ்திரத்வாதி தோஷ தர்சனத்தாலே பீதரான சேதனருக்கு துக்க நிவ்ருத்தி ரூபமான ஆத்மபிராப்தியும் -ஸூகைகதமான பகவத் பிராப்தியும் .-
தத்ராபி ஸ –-யோகி நாமம்ருதம் ஸ்தாநம் ஸ்வாத்ம சந்தோஷ காரிணாம் –(ஆத்மமாத்ரானுப,வரிஷ்டரான யோகிகளுக்கு அழிவற்ற ஸ்தானம்]) ததச்ய த்ரிவித ஸ்யாபி துக்க ஜாதஸ்ய -இத்யாரப்ய – நிரஸ்தாதிசய ஆஹ்லாத ஸூ காபாவைக லஷ்ணா பேஷஜம் பகவத் ப்ராப்தி ஏகாந்தாத் யந்திகீ மதா -இத்யாதி –தத் உபாய கதீ –-போக மோஷங்கள் உடைய சாதன பேதங்களை
நித்ய நைமித்திக காம்ய கர்ம அனுஷ்டானம் போகச்ய- சாங்கா நுஷ்டித கர்மசாத் யஜ்ஞானயோகாதி ஆத்மப்ராப்தே ஜ்ஞான கர்மானுக்ருஹீத பக்தி பிரபதிஸ்ஸ பகவத் பிராதே
உதார--சம்சாரிகள் பக்கல் அர்தித்வம் ஆதல் -பிரயோஜனம் ஆதல் -நினையாதே-இவர்கள் அனர்த்த பரிஹாரமே பிரயோஜனமாக உபகரித்து அல்லது நிற்க மாட்டாத மேகம் போலே உபகரித்தவர் –ஸந்தர்ஸ்யன் –-சம்சய -விபர்யய -ரஹிதமாக -பிரத்யஷிப்பியா நின்று கொண்டு –நிரமிமீத –
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளை -நான் முகன் திருவந்தாதி -1- என்கிறபடியே
துரவகாஹமான வேதார்த்தத்தை அல்ப க்ரந்தாத்தாலே பண்ணினான் -என்கை –
புராண ரத்னம்–புராணம் ஆவது –சர்க்கச்ச பிரதி சர்க்கச்ச -இத்யாரப்ய-புராணம் பஞ்ச லஷணம் -(ஸர்க்கஸ்ச ப்ரதிஸர்க்கஸ்ச வம்ஸ மந்வந்தராணி ச।வம்ஸாநுசரிதம் சைவ புராணம் பஞ்ச லக்ஷணம் ॥! [ஸ்ருஷ்டி, ப்ரளயம், வம்ஸம், மன்வந்தரம், வம்ஸ சரித்ரம் ஆகிய இவ் வைந்து லக்ஷணங்களை யுமுடையது புராணமாகும்.)என்கிற படியே பஞ்ச லஷனோபேதமான கிரந்த சாதம் புராபி நவம் புராணம் -என்றுமாம் –-அதாவது -ஸ்வ ரசத்தை என்றும் ஒக்க ஒருவரால் அழிக்க ஒண்ணாது இருக்கை –
ரத்னம் –அர்த்த பிரகாசகமாய் இருக்கையும் – சங்க்ரஹமாய் இருக்கையும் – ஆபத் ரஷகமாய் இருக்கையும் – இந்தப் புராணாதிகாரிக்கு லோக பரிக்ரஹம் சித்திக்கையும் –(ரத்னத்ரயம் -மந்த்ர ரத்னம் -த்வயம் -ஸ்தோத்ர ரத்னம் -புராண ரத்னம் -ஸ்ரீ விஷ்ணு புராணம்)
தஸ்மை நமோ – முநிவராய – தனக்கு வரம் கொடுத்த வசிஷ்ட புலஸ்த்யர்களுக்கு-முத்ரிதா முத்ரித பிரதி முத்ரிதராய்-அத்தாலே அவர்கள் படியை உடையவன் -என்னுதல் –-முநிநாம் வரணீயாய் – என்கிறபடியே -அவர்களுக்கு ஆதரணீயன் -என்னுதல்-பராசராய —-பரராகிரார் -பாஹ்ய குத்ருஷ்டிகள்-அவரை பிரமாண சரங்களாலே ஹிம்சித்து வைதிக மரியாதையை ஸ்தாபித்தான் -என்னுதல் –-இந்திரிய ஜயத்தாலே ரஜஸ் தமஸ் ஸூக்களை ஜெயித்தான் -என்னுதல்-
யா உதார சித் அசித் ஈஸ்வர-தத் ஸ்வ பாவ போக அபவர்க்க தத் உபாய கதீ-தத்த்வேன சந்தர்சயன்
புராண ரத்னம் நிரமிமீத-முநிவராய பராசராய நம -என்று அந்வயம்
தத்துவத்தின் சித் அசித்தோடு ஈசன் என்னும் தன்மையும்
முக்தி போக சாதனத்து உபாய மார்க்க முழுமையும்
வித்தரித்த மெய்யுரைப் புராண ரத்ன மீது யரும்
சத்துவப் பராசர முனீந்திரன் முன் தாழ்வனே –4-பராசரன் –பர சமயங்களை பிராமண சரங்களால் நிரசித்தவன்–சேதனம் அசேதனம் இவற்றின் ஸ்வரூபங்களையும்-இவ் விரண்டு தத்துவங்களுக்கும் ஸ்வாமியான ஈஸ்வர ஸ்வரூபத்தையும்-இம் மூன்றின் தன்மைகளையும் -யாவருக்கும் அனுபாவ்யமான போகங்களையும் மோக்ஷத்தையும் -இவற்றை அடைவதற்கு உரிய உபாய மார்க்கங்களையும்
முழுமையும் உணர்ந்து பிறர்க்கு விசதமாய் விளங்கச் செய்பவராய் பொருளை விளக்குவதிலும் ஆத்ம ரக்ஷணத்திலும் ரத்னம் போன்றதான ஸ்ரீ விஷ்ணு புராணத்தைச் செய்து அருளினவரும் முனி ஸ்ரேஷ்டருமான பராசர முனிவர் முன் வணங்குகின்றேன்—
—
ஸ்லோகம் -5- அவதாரிகை –இந்த ஜ்ஞானம் அதிக்ருதாதிகாரமாய்ப் போகாமே சர்வாதிகாரமாம் படி
த்ராவிடமான ப்ரஹ்ம சம்ஹிதையை-மயர்வற மதி நலம் அருளினான் -என்கிற பக்தியாலே வாசிதமாக்கி மரங்களும் இரங்கும் வகை -திருவாய் மொழி -6-5-9-என்கிற தம்முடைய ஆகர்ஷகமான ஈரச் சொல்லாலே அருளிச் செய்கையாலும் பெரிய முதலியாருக்கு இந்த ஜ்ஞானத்துக்கு உத்பாதகம் ஆழ்வார் திருவடிகள் ஆகையாலும் இவர் திருவடிகளிலே விழுகிறார் –உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு எத்திறம் -திருவாய்மொழி -1-3-1- என்றும்-நெய்யுண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள -திருவாய்மொழி -5-10-3- என்றும்-எல்லாம் கண்ணன் -திருவாய்மொழி -6-7-1- -என்றும் பெரிய முதலியாரையும் ஸ்ரீ பராசர பகவானையும் போலே
கிருஷ்ண குணவித்தராய் இருக்கும் படியையும் நினைத்து ஆழ்வார் திருவடிகளிலே சரணம் புகுகிறார் –
மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதி
சர்வம் யதேவ நியமேன மதநவ்யாநாம்
ஆத்யஸ்ய ந குலபதேர் வகுளாபி ராமம்
ஸ்ரீ மத ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா –5-
நம்மாழ்வாரின் திருவடிகளே எனக்கும் என் குலத்தவர்களுக்கும், தாய், தந்தை, மனைவி, மக்கள், சிறந்த செல்வம் மற்றும் எல்லாமாகும். -மகிழ மாலையால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும், கைங்கர்யச் செல்வத்தை உடையராயிருக்கும், நம் வைஷ்ணவ குலத்துக்குத் தலைவரான நம்மாழ்வாரின் இரண்டு திருவடிகளில் என் தலையை வைத்து வணங்குகிறேன்.
மாதா –உத்பத்திக்கு முன்னே வரம் கிடந்தது-பெருகைக்கு வருந்தி-பத்து மாசம் கர்ப்ப தாரணம் பண்ணி
பிரசவ வேதனையை அனுபவித்து-அஸூத்திகளையும் மதியாதே-பால்ய தசையிலே ஆதரித்து-பகவான் ஆனாலும் இவன் புருஷ பாஷணம் பண்ணப் பொறுத்து-அகல இசையாதே-அவன் பிரியத்தையே வேண்டும் – மாதாவைப் போலே உபகாரகனாய் இருக்கை –பிதா –-அவள் பாத்ர மாத்ரமாம் என்னும்படி-உத்பாதகனாய் என்றும் ஒக்க ஹித பரனான பிதாவும்—கரியான் ப்ரஹ்மத பிதா –—யுவதயஸ் – இருவரையும் மறந்து விரும்பும் யுவதிகளைப் போலே நெஞ்சுக்கு இனியராய் இருக்கை—தனயா – அவளுடைய யௌவனத்தை அழிய மாறிப் பெற்றவனாய்-பால்யத்தில் ஸூககரனாய்-பக்வ தசையில் ரஷகனாய்-ஆமுஷ்மிகத்தில் நிரய நிஸ்தாரகனான-புத் -என்னும் நரகத்தை -தாண்டுவிப்பவன் –-புத்ரனைப் போல் இருக்கை ––விபூதி –விபவம் இல்லாத போது இவை எல்லாம் அசத் சமமாய் இருக்கையாலே இவற்றை நன்றாக்கும் ஐஸ்வர்யம் போலே உத்தேச்யமாய் இருக்கை –சர்வம் – அனுக்தமான சர்வ போகங்களுமாய் இருக்கை –யதேவ – அவதாரண்த்தாலே –சேலேய் கண்ணியர்-திருவாய் மொழி -5-1-8- என்று இருக்கும் ஆழ்வார் நினைவு இன்றி இருக்கை –
நியமேன –என்றும் ஒக்க அவருக்கு பிரியம் என்று போமது ஒழிய ப்ராமாதிகமாகவும் புறம்பு போவது அன்றிக்கே இருக்கை –மதநவ்யாநாம் –வித்யயா ஜந்ம நா வா -(99, தபந பவநயோர் ய: ப்ராப்தவாந் புத்ரப,ாவம் ஸதமக,க்குதபாலிர் வித்,யயா ஐந்மநா வா। [இந்திரனால் அடையாளம் செய்யப்பட்டவனும், ஸூர்யனுக்கும், வாயுவுக்கும், வித்,யையினாலும், ஜன்மத்தினாலும் புத்ரனா யிருக்கும் தன்மையை அடைந்தவனுமான ஹனுமான்…])என்று ஸூர்யன் வாயு இருவருக்கும் வித்யை ஜந்ம புத்திரன் தன்மை அடைந்த ஹனுமான் –உபய சந்தான ஜாதருக்கும்-ஆத்யஸ்ய – வைதிக சந்தானத்துக்கு பிரதம ஆசார்யராய் இருக்கை –ந குலபதேர் –-ஸ்திரீக்கு பர்த்ரு குலம் போலே-கோத்ர ரிஷிகளும் அவரே என்கை –வகுளாபி ராமம் – திரு மகிழ மாலையாலே அலங்க்ருதமாய் உள்ளத்தை –
மகிழ் அலங்காரமான திருவடிகள்-இத்தாலே திருவடிகளில் பரிமளத்தாலே வந்த போக்யதையைச் சொல்லுகிறது –நல்லடி மேல் அணி நறு துழாயை -திருவாய் மொழி -4-2-2-வ்யாவர்த்திக்கிறது –
ஸ்ரீ மத – ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யோடே நித்ய சம்யுக்தமாய் இருக்கை –-அப்ர வீச்ச ததா வாக்யம் ஜாதக்ரோதா விபீஷண அந்தரி ஷகதஸ் ஸ்ரீமான் ப்ராதரம் ராஷஸாதிபம் –யுத்த -16-17-([ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீயையுடைய விபீஷணன் அப்போது மிகவும் கோபங்கொண்டவனாய், ஆகாயத்தில் கிளம்பி, ராக்ஷ்ஸர்களுக்கு அதியதியான தன் தமையனைக் குறித்துச் சில வார்த்தைகள் சொன்னான்)
பரமாபதமா பன்னோ மனஸா சிந்தயத் ஹரிம் ஸ து நாக வர ஸ்ரீ மான் நாராயண பராயண -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -69-47-(ஸ்லாக்,யமான ஆபத்தை அடைந்தவனும், கைங்கர்ய ஸ்ரீயை உடையவனும், நாராயணனையே மேலான கதியாகக் கொண்டவனுமான அந்த கஜேந்திராழ்வான் மனத்தி னாலே ஹரியை நினைத்தான்)-சர்வ பரியகரஸ் தஸ்ய ராம ஸ்யாபி சரீரத-லஷ்மனோ லஷ்மி சம்பன்னோ பஹி ப்ராண இவாபர -பால -18-28-(கைங்கர்ய லக்ஷ்மியை உடைய லக்ஷ்மணன், ராமனுக்கு ஸரீரத்தைக் காட்டிலும் எல்லாப் பிரியத்தையும் செய்பவனாகவும், வெளியிலிருக்கும் மற்றொரு ப்ராணன் போலவும் விளங்கினான்)என்று பகவத் பிரத்யா சத்தியை ஐஸ்வர்யமாக சொல்லக் கடவது இறே – என்னுடைய சம்பத்துக்கு அடியான ஐஸ்வர்யத்தை உடையார் -என்றுமாம்-
ததங்க்ரி யுகளம் –-அது -என்னும் அத்தனை ஒழிய பேசி முடிக்க ஒண்ணாது -என்கை –யுகளம் – சேர்த்தியால் வந்த அழகை உடைத்தாய் இருக்கை –ப்ரணமாமி மூர்த்நா – ஆழ்வார் உடைய திருவடிகளை நினைத்த வாறே-நம -என்று நிற்க மாட்டாதே-அவர் திருவடிகளிலே தலை சேர்க்கிறார் –கீழ் உபகாரகரை ஆஸ்ரயித்த இத்தால் செய்தது-முமுஷூவுக்கு உபகாரகரே சேஷித்வ பிரதிபத்திக்கு விஷய பூதரும் ஸ்துத்யரும் என்னும் இடம் சொல்லிற்று ஆயிற்று–ஒருவருக்கு சேஷிகள் இருவராம் படி இருக்கை எங்கனே -என்னில்-ஸ்ருதி சேஷித்வம் யாகத்துக்கும் புரோடாசத்துக்கும் உண்டானால் போலே-ஈஸ்வரன் பிரதான சேஷியாய்-ததீயர் த்வார சேஷிகளாம் இடத்தில் விரோதம் இல்லை-அதவா
நிருபாதி சேஷி அவன்-தத் சம்பந்தம் அடியாக வந்தது ஆகையாலே பாகவத சேஷித்வம் சோபாதிகம் என்றுமாம் –
தமக்கு ஸ்தோத்ர ஆரம்ப ஹேதுவான ஜ்ஞான பக்த்யாதிகள் பிதா மஹோபாத்ததனம் -என்கைக்காக-முதல் மூன்று ஸ்லோகத்தாலே பெரிய முதலியார் உடைய ஜ்ஞான பக்த் யாதிக்யம் -சொன்னார்
நாலாம் ஸ்லோகத்தாலே –இவ் வர்த்தம் த்ரைவித்ய வ்ருத்தானுமதம் -அதாவது – வைதிகரும் பெரியோருமான பராசரால் அனுமதிக்கப் பட்டது -என்கிறார் –-ஐஞ்சாம் ஸ்லோகத்தாலே இவருக்கு இந்த ஜ்ஞானம் ஆழ்வாராலே வந்தது -என்கிறார் –
(ஆத்யஸ்ய ந குலபதே-எங்கள் பிரபன்ன குடித் தலைவர் –விப்ரர்க்கு கோத்ர-சரண -ஸூத்ர கூடஸ்தர்
பராசர பாராசார்ய போதாய நாதிகள்–பிரபன்ன ஜன கூடஸ்தர் -பராங்குச பரகால யதிவராதிகள்–
ஆத்யஸ்ய ந குலபதே–ஸ்ரீ லஷ்மி நாதனை சொல்லி –ஸ்ரீ மத் அங்க்ரி யுகளம்-ஸ்ரீ சடகோபரை சொல்லிற்று என்றுமாம் –-நம்மாழ்வாரை சொல்லுவதே உசிதம் என்பது பூர்வர்கள் திரு உள்ளம் –
மத் அன்வயாநாம்-இவருக்கு முன்பு உள்ளோர்க்கும் பின்பு உள்ளோர்க்கும் -ஸ்ரீ வைஷ்ணவ சந்தானங்களுக்கு அனைவருக்கும் ஆழ்வார் திருவடிகளே சர்வஸ்வம் –என்றதாயிற்று –வகுளாபி ராமம்–மகிழ் மாலை மார்பினன் -வகுளாபரணர்)
மத் அநவ்யாநாம்–என்னைச் சேர்ந்தவர்களுக்கு-இத்தால் தமது திரு முடி சம்பந்தத்தால் பூர்வர்களுக்கும் திருவடி சம்பந்தத்தால் அஸ்மதாதிகள் பர்யந்தமாக சொன்னவாறு
நியமேன-எப்பொழுதும்
மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதி சர்வம் –தாய் தந்தை மக்கள் செல்வம் மற்றும் உள்ள எல்லாம்
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும் மேலாய்த் தாய் தந்தையும் அவரே இனி யாவரே -5-1-8-என்று ஆழ்வாருக்கு அவன் திருவடிகள் போலே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஆழ்வார் திருவடிகளே சர்வமும் -என்ற திட அத்யவசாயம் அருளிச் செய்கிறார்-விப்ரர்க்கு கோத்ர-சரண -ஸூத்ர கூடஸ்தர் பராசர பாராசார்ய போதாய நாதிகள் –பிரபன்ன ஜன கூடஸ்தர் -பராங்குச பரகால யதிவராதிகள்-
யதேவ –யாதோ ஒரு ஆழ்வார் திருவடியேயோ
ந ஆத்யஸ்ய குலபதேர் –நமக்கு குலகூடஸ்தராகிய ஆழ்வாருடைய-நம்முடைய குலத்தலைவர் -என்று திரு நாமம் சாத்தி அருளுகிறார்
வகுளாபி ராமம்–மகிழ மலர்களினால் அழகாயும்-மகிழ் மாலை மார்பினன் -வகுளா பரணர் –
ஸ்ரீ மத -நித்ய உஜ்வலமாயும் இருக்கிற
ததங்க்ரி யுகளம் –அந்தத் திருவடி இணையை
அன்றிக்கே
ந ஆத்யஸ்ய குலபதேர்–லஷ்மீ நாத சமாரம்பாம் –வந்தே குரு பரம்பராம் –என்பதால் பெரிய பெருமாளைச் சொல்லி-ததங்க்ரி யுகளம்-நம்மாழ்வாரைஸ்ரீ சடகோபன் -அன்றோ -சொல்லிற்று என்றுமாம்-முந்திய அர்த்தமே –ந ஆத்யஸ்ய குலபதேர்-நம்மாழ்வாரை சொல்லுகிறது என்பதே பூர்வார்கள் நிர்வாகம் -மிகவும் பொருந்தும் -இதுவே கொள்ளத் தக்கது
ப்ரணமாமி மூர்த்நா –தலையால் வணங்குகிறேன்-பெரிய முதலியாரையும்-ஸ்ரீ பராசர பகவானையும் போலே-ஸ்ரீ கிருஷ்ண குணவித்தராய் இருக்கும் படியையும் நினைத்து ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளிலே சரணம் புகுகிறார் –
மத் அன்வயாநாம் யதேவ நியமேன
மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ் சர்வம்
ஆத்யஸ்ய ந குலபதே வகுளாபி ராமம்
ஸ்ரீ மத் அங்க்ரி யுகளம் மூர்த்நா ப்ரணமாமி -என்று அந்வயம் –
என்னிட வம்சத்தார்களுக்கு எக்காலத்திலும் இணை இல்லாத் தமரும்
அன்னையும் அத்தன் தானும் ஓர் இனிய வரிவையும் ஆக்கமும் மகவும்
பின்னும் மேலாய பேறுகள் யாவும் யாகும் எம் குலபதியாம் அம்
மன்னு சீர் மகிழ மாலையார் மாறன் அடியிணைத் தலை வணங்குவனே –5—எம் வம்சத்தார்களுக்கு எக்காலத்திலும் இணை இல்லாமல் அமர்ந்து பிரியத்தைச் செய்வதில் தாய் போன்றவரும்-ஹிதத்தைச் செய்வதில் தந்தை போன்றவரும்-இன்பம் விளைப்பதில் ஒரு அருமையான ஸ்த்ரீ போன்றவரும்
பாதுகாப்பத்தில் புத்ரனைப் போன்றவரும்-எல்லாவற்றையும் சாதிப்பதில் தனம் போன்றவரும்
இவ்விதம் இன்னம் பலவாய் உத்தமமான சம்பத்து போன்றவரும் எங்கள் குலத்துக்கு பரம ஆச்சார்யராயும் மகிழ மாலை அணிந்து விளங்குபவருமான அந்த நம்மாழ்வாருடைய திருவடி இணையைத் தலையால் வணங்குகின்றேன் –
—
ஸ்லோகம் -6- அவதாரிகை –அறியாதன அறிவித்த அத்தா நீ செய்தன -திருவாய் மொழி -2-3-2- என்று
உபகாரத்தில் ப்ரதமனாய் இருக்கும் இறே–வைகுந்தனாகப் புகழ் -திருவாய்மொழி -7-9-7-என்கிறபடியே
தன்னுடைய ஸ்துதி ஈஸ்வரனுக்கு அபிமதம் ஆகையாலும்-இது தான் ஆச்சார்யர்களுக்கு ப்ரியம் ஆகையாலும்-ஸ்தோத்ரத்தில் மேல் சொல்லப் புகுகிற உபாய உபேயங்களை சங்க்ரஹித்துக் கொண்டு
உபக்ரமித்த படியே பகவத் ஸ்தோத்ரத்திலே இழிகிறார் –நமது குலத்துக்கு அழியாத செல்வமான பகவத் பாராத விந்தத்தை ஸ்தோத்ரம் பண்ணப் போவதாக ப்ரதிஜ்ஜை செய்கிறார்-குல தனம் உபாயத்வம்-அயத்ன சித்தமுமாய் ஸ்வத பிராப்தமுமாய் இருக்கை-குல தைவதம் -உபேயத்வம் –-உபாய உபேயங்களை சங்க்ரஹித்துக் கொண்டு உபக்ரமித்தபடியே பகவத் ஸ்தோத்ரத்திலே இழிகிறார் –
யன் மூர்த்நி மே ஸ்ருதி ஸிரஸ்ஸூ ச பாதி
யஸ்மின் அஸ்மன் மநோ ரத பதஸ் சகலஸ் சமேதி
ஸ் தோஷ்யாமி ந குல தனம் குல தைவதம் தத்
பாதார விந்த மரவிந்த விலோச நஸய–6-
யன் மூர்த்நி மே -யத் மே மூர்த்நி–யாதொரு எம்பெருமானுடைய திருவடியானது -என் தலையிலும்
அடிச்சியாம் தலை மீசை நி அணியாய் ஆழி யம் கண்ணா நின் கோலப் பாதம் -10-3-6–ஸீரோ பூஷணம் –
நாம் தலை மடுத்து வணங்குவதால் திரு முடியில் விளங்கக் குறையில்லையே
ஸ்ருதி ஸிரஸ்ஸூ ச பாதி–வேதாந்தங்களிலும் விளங்கா நின்றதோ -வேதங்களில் விஸ்தரமாக வருணிக்கப் படுமே
யஸ்மின் –யாதொரு திருவடியில்
அஸ்மன் மநோ ரத பதஸ் சகலஸ் –நமது ஆசைப் பெருக்கம் எல்லாம்
சமேத –போய்ச் சேருகின்றதோ-திருவடிகள் கிடைக்கப் பெற்றாலே சர்வமும் கிடைக்கப் பெற்றதாகும்
தத்-அப்படிப்பட்டவராய்
நம் குலதனம்–வம்ச பரம்பரையாய் நமக்குச் சேர்ந்த செல்வமாய்
நம் குல தைவதம் -நம் குலத்துக்கு எல்லாம் ஆதாரமாய் இருக்கிற
அரவிந்த விலோச நஸ்ய- பாதார விந்த -செங்கண் மாலின் திருவடித் தாமரையை
ஸ்தோஷ்யாமி –ஸ்துதிக்கப் போகிறேன்-இப்படி பிராப்யமுமாய் விலஷணமுமாய் உபகாரகமுமான
திருவடிகளிலே வாசிகமான அடிமை செய்கிறேன் –
புண்டரீகாக்ஷனின் (தாமரைக் கண்ணனின்) திவ்ய திருவடிகளைக் கொண்டாடப் போகிறேன்.-இந்த எம்பெருமானே நம் குலத்துக்கு தனமாகவும், தெய்வமாகவும் விளங்குகிறான். நம்முடைய அதிகமான பக்தி எல்லாம் அந்த எம்பெருமானின் திருவடிகளிலே போய்ச் சேரும். அந்த எம்பெருமானின் திருவடிகளே என்னுடைய தலையிலும், வேதாந்தத்திலும் காணப்படுகின்றன.
மே மூர்த்நி -இத்யாதி-தம்முடைய நிஹிநதா அதிசயத்தையும்-சௌந்தர் யாதிகளிலே தோற்று அத்தாலே வந்த சேஷத்வத்தையும் –-அந்த காரத்தில் தீபம் போலே தம்முடைய திரு முடியில் வந்த பின்பு
திருவடிகள் மிகவும் விளங்கின படியையும் சொல்லுகிறது –இத்தால் – அவனுடைய உபாய பாவத்துக்கு ஏகாந்தமான சௌலப்யாதிகளையும்-இத் தலையில் விஷயீ காரம் தன் பேறாக நினைத்து இருக்கும் என்றும் சொல்லுகிறது –தலைக்கு அணியாய் –திருவாய் மொழி -9-2-2-என்று சேஷ பூதர் பிரார்த்திக்கும் அத்தைப் பெற்றேன் -என்கிறார் –சேஷி யாகையாலே-சர்வ விஷயங்களிலும் அவன் இருக்கும் படி இது –க்ருதஜ்ஞர் ஆகையாலே பேசுகிறார்-
ஸ்ருதி ஸிரஸ்ஸூ ச பாதி –-ஸ்ருதி ஸிரஸ்ஸூக்களிலும் விளங்கா நின்றது-இத்தால் ப்ராப்யத்வமும்
சர்வாதிகத்வமும் சர்வ மங்களாகாரத்வமும் அதி துர்லபத்வமும் சொல்லுகிறது –சகாரத்தாலே-
வேதாந்தங்களிலும் – தம் தலையிலும் ஒக்கத் திருவடிகளைத் தரமிடாதே வைத்த படியாலே தம் பக்கல் அவனுக்கு உண்டான ஆதராதிசயம் சொல்லுகிறார் –ச சப்தம்-அவதாரணத்திலே யாய் தம்முடைய தலையிலே அந்வயித்த சௌலப்யம் திருவடிகளுக்கு ஸ்வரூபம் என்றதாகவுமாம் –-திருப் பாற்கடலே என் தலையே -திருவாய்மொழி -10-7-8- என்னுமா போலே –யஸ்மின் அஸ்மன் மநோ ரத பதஸ் சகலஸ் சமேதி- பிதா த்வம் மாதா த்வம் -இத்யாதிகளான என்னுடைய ஐஹிகாமுஷ்மிக சகல மநோ ரதங்களும் அழகியதாக யாது ஒன்றிலே சேருகிறது –
ஸ்தோஷ்யாமி –இப்படி பிராப்யமுமாய் விலஷணமுமாய் உபகாரகமுமான திருவடிகளிலே வாசிகமான அடிமை செய்கிறேன் –ந குலதனம் –தனம் ஆவது -ஆபத் ரஷகமுமாய் நித்ய போக்யமுமாய் இருக்குமது-குல தனம் என்கையாலே-அயத்ன சித்தமுமாய் ஸ்வத பிராப்தமுமாய் இருக்கை –குல தைவதம்- இத் தனத்தை தருமதாய் ஆஸ்ரயணீயமாய் இருக்குமது –இத்தால் ஸ்தோத்ர ப்ரதிபாத்யமான ப்ராப்ய ப்ராபகங்களைச் சொல்லுகிறது –தத் பாதார விந்தம் –-உக்த ஸ்வபாவமான திருவடித் தாமரைகளை –மரவிந்த விலோச நஸய-ஜிதந்தே புண்டரீ காஷ-என்று ருசி ஜனகமுமாய்-தன் கால் பணிந்த என்பால் எம்பிரான் தடம் கண்கள் -திரு விருத்தம் -42- என்று வாத்சலமுமாய்-தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலை மகனை -திரு வாய் மொழி -2-6-3- என்று ஸூரி போக்யமான திருக் கண்களை உடையவன் உடைய –இத்தால்-இவருடைய உத்யோகத்தைக் கண்ட ப்ரீதி திருக் கண்களிலே தோற்றுகிறது-என்னுதல்-(குல தனம்–உபாயத்வமும் —-குல தைவதம் -உபேயத்வம் —-அடிச்சியாம் தலை மீசை நீ அணியாய் ஆழி யம் கண்ணா உன் கோலப் பாதம் –)
யன் மூர்த்நிமே ஸ்ருதி ஸிரஸ்ஸூ ச பாதி யஸ்மின்
அஸ்மன் மநோ ரத பதஸ் சகலஸ் சமேதி ந
குலதனம் குல தைவதம் அரவிந்த விலோசநஸய
தத் பாதார விந்தம் ஸ்தோஷ்யாமி -என்று அந்வயம்
இலகும் என் சென்னி மீதும் இன் மறை முடியின் மீது
மலகில் என் மனத்தின் இச்சை அகிலமும் நாடும் எங்கள்
குல தனம் குலத்தின் தெய்வங் கோமளக் கமலக் கண்ணன்
மலரும் அம்மரை மலர்த்தாள் மனம் உறப் புகழ்வன் நன்றே –6-எந்த புண்டரீகாக்ஷனுடைய திருவடி என் சிரஸ்ஸிலும் வேதாந்தங்களின் மீதும் ஓக்க பிரகாசிக்கின்றதோ-எந்த திருவடியில் என் இச்சையின் வழிகள் யாவும் செவ்வனே சென்று அடைகின்றனவோ-எது என் குலத்துக்குத் தனமாயும் தெய்வமாயும் இருக்கின்றதோ-அந்தத் திருவடியை என் நெஞ்சமார ஸ்தோத்ரம் பண்ணுகிறேன்-
—
ஸ்லோகம் -7- அவதாரிகை –விதி ஸிவ ஸநகாதிகள் கரை பற்றிலே நின்று அழுந்துகிற விஷயத்தைப் பரிச்சேதித்துப் புகழ இழிந்தேன் -என்று தம்மை ஷேபித்து யுத்தத்திலே உத்யுக்தனான அர்ஜுனன்
விஸ்ருஜ்ய ஸஸ்ரம் சாபம் -என்று நிவ்ருத்தனானால் போலே ஸ்தோத்ரத்தில் நின்றும் நிவ்ருத்தர் ஆகிறார் –(ஏவமுக்த்வா5ர்ஜுநஸ் ஸங்க்,யே ரதேராபஸ்த, உபாவிஸத்। விஸ்ருஜ்ய ஸஸரம் சாபம் ஸோக ஸம்விக்,நமாநஸ: ॥| [அர்ஜுனன், இம் மாதிரி சொல்லி விட்டு, சோகத்தினால் பீடிக்கப்பட்ட மனத்தை உடையவனாய், அம்புடன் கூடிய வில்லைக் கைவிட்டு, யுத்,த, களத்திலேயே ரத,த்தின் மேல் உட்கார்ந்தான்.])
தத்த்வேன யஸ்ய மஹிமார்ணவ ஸீ கராணு
சக்யோ ந மாதுமாபி சர்வபிதா மஹாத்யை
கர்த்தும் ததீய மஹி மஸ்துதி முத்யதாய
மஹ்யம் நமோ அஸ்து கவயே நிரபத்ரபாய–7-
யஸ்ய மஹிம–எந்த எம்பெருமானுடைய பெருமையாகிற
அர்ணவ ஸீகர அணு–கடலிலே ஒரு சிறிய திவலை அளவு கூட
சர்வ பிதாமஹ ஆதயை அபி –சிவன் ப்ரஹ்மா முதலானவர்களாலும்
தத்த்வேன –உள்ள படி
சக்யோ ந மாதும் –அளவிட்டு அறிய முடியாததோ
ததீய மஹிம ஸ்துதிம் -அந்த எம்பெருமானுடைய பெருமையைப் பற்றிய ஸ்தோத்ரத்தை
கர்த்தும் உத்யதாய–செய்வதற்கு ஆரம்பம் செய்தவனாயும்
நிரபத்ரபாய–வெட்கம் கெட்டவனாயும்
கவயே-கவி என்று பேர் சுமப்பனாயும் இருக்கிற
மஹ்யம-எனக்கே
நமோ அஸ்து –நமஸ்காரம் செய்து கொள்ள வேண்டும்-என்னை எல்லாரும் நமஸ்கரிக்கட்டும் என்று தம்மைத் தாமே நிந்தித்துக் கொள்ளுகிற படி உலகில் ஸாஹஸர்களைக் கைகூப்பி வணங்க வேண்டும் என்று சொல்வது உண்டே
எம்பெருமானின் பெருமை என்னும் கடலில் ஒரு திவலையில் இருக்கும் ஒரு அணுவின் அளவு கூட ருத்ரன், ப்ரஹ்மா போன்றவர்களால் அளக்கமுடியாது. கவிஞன் என்று வெட்கமில்லாமல் சொல்லிக் கொண்டு, அப்படிப்பட்ட எம்பெருமானின் பெருமைகளைப் பாடத் தொடங்கியதை நினைத்து (இப்படிப்பட்ட நகைப்பிற்குரிய செயலை நினைத்து) என்னை நானே வணங்கிக் கொள்கிறேன்.
தத்த் வேன –-ஈஸ்வரன் உடைய ஸ்வரூப ரூபாதிகள் இருந்தபடியே –யஸ்ய –யதா ரத் நானி ஜலதே -(யத; ரத்நாநி ஜலதேர ஸங்க்,யேயாநி புத்ரக | ததா குணா ஹ்யநந்தஸ்ய அஸங்க்,யேயா மஹாத்மந: ॥’ [குழந்தாய் | எப்படி ஸமுத்ரத்திலுள்ள ரத்னங்கள் கணக்ற்றவையோ, அம் மாதிரியே மஹாத்மாவான அநந்தனுடைய குணங்களும் அளவற்றவை.])இத்யாதி களாலே அநந்த குணகனாக பிரசித்தனான வனுடைய-மஹிமார்ணவ ஸீ கராணு--குணார்ணவத்தின் உடைய ஸீகராணு வானது – திவலையில் ஸ்பர்ச வேத்யமானது -அத்யல்பமானது –சக்யோ ந மாதும் –மாதும் ந சக்ய –மனஸ்ஸால் பரிச்சேதிக்கவும் சகயம் அன்று –-ஆராலே -என்னும் அபேஷையிலே சொல்லுகிறது –அபி சர்வ பிதா மஹாத்யை –-சர்வ பிதா மஹாத்யை ரபி –-ஈச்வராத் ஜ்ஞானமன்விச்சேத் -(ஆரோக்யம் பராஸ்கராதி,ச்சே,த் த,நமிச்சே,த் ஹுதாமநாத் | ஈஸ்வராத் ஜ்ஞாநமந்விச்சே,த் மோக்ஷமிச்சே,ஜ்ஜநார்த்த, நாத் ॥| [ஸுர்யனிடமிருநங்து ஆரோக்யத்தை விரும்பக் கடவன் ; அக்னியிடமிருந்து பொருளை விரும்ப வேண்டும் ; சிவனிட மிருந்து அறிவை விரும்பக் கடவன். நாராயணனிடமிருந்து மோக்ஷத்தை விரும்பக் கடவன்)என்று ஜ்ஞானாதிகனாகவும்–சர்வ சம்ஹர்த்தா என்று சொல்லுகிற ருத்ரனாலும் –அவனை ஒதுவித்தவனுமாய் ஜகத் ஸ்ரஷ்டாவான ப்ரஹ்மாவாலும்-ஆதி –சப்தத்தாலே ப்ரஹ்ம பாவனையேயான சநகாதிகளையும்-சர்வருக்கும் ஹிதானுசானம் பண்ணுகிற வேதத்தையும் நினைக்கிறது –-மேலே சதா ஸ்துவந்த வேதா -என்றும்-விதி சிவா சன காத்யை -என்றும் -சொல்லுகிற படியாலே-
கர்த்தும் ததீய மஹி மஸ்துதி முத்யதாய–ததீய மஹிம ஸ்துதிம் கர்த்தும் உத்யதாய –-அவனுடைய பெருமையை உள்ளளவும் சொல்லி விடுகை அன்றிக்கே இல்லாததையும் சொல்ல உத்யுக்தனாகை –மஹ்யம் நமோ அஸ்து –-இப்படி சாஹசிகனாகையாலே -ஸ்துத்ய விஷயத்தை விட்டு எனக்கு நமஸ்காரம் –கவயே – சர்வ வர்ணன் முகராய்-நிரபத்ரபாய –-நிர் லஜ்ஜனாய் இருக்கிறவனுக்கு –
நாம் புகழ்கை இவனுக்கு நிறக் கேடாம் -என்று லஜ்ஜியாது ஒழிகை –
யஸ்ய மஹிமார்ணவ சீகராணு சர்வ பிதா மஹாத்யை ரபி
தத்த் வேன மாதும் ந சக்யததீய மகிமா ஸ்துதிம் கர்த்தும் உத்யதாய
நிர்பத்ரபாய கவயே மஹ்யம் நமோ அஸ்து -என்று அந்வயம் – ( மஹ்யம் நமோ அஸ்து –ஸாஹஸ கார்யம் செய்வபர்களுக்கு நமஸ்காரம் என்பர்களே )
அன்னவன் மஹிமை வெள்ளத்து திவலையின் அணுவை யேனும்
இன்னது என்றுள்ளது ஒர விறை சிவாதியர்க்கும் ஒண்ணா
மன்னும் மஹிமை பாட மானம் அற்று எத்தனித்த
என்னையும் வணங்குவேன் நான் இந்த ஸாஹஸத் செயற்கே –7-ஓர்தல் –ஆராய்தல் தெளிதல்-எந்த சர்வேஸ்வரனுடைய குணக்கடலின் சிறு திவலையில் அணு மாத்ரத்தையும் உள்ளபடி அளந்து அறிவதற்கும் ஞானாதிகனான சிவனாலும் அவனுக்கு உபதேசம் செய்த பிரமனாலும் பிரமனுக்கு சமானமான சனகாதிகளாலும் முடியாதோ அத் தன்மையானுடைய குணங்களை ஸர்வ பிரகாரத்தாலும் ஸ்துதிப்பது என்கிற இந்த ஸாஹஸத்தைச் செய்ய வெட்கம் இல்லாமல் எத்தனித்த எனக்கு நமஸ்காரம்
—
ஸ்லோகம் -8-அவதாரிகை –இஷூ ஷயான் நிவரத்தந்தே –(-காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய் -திருவாய்மொழி -5-8-2- என்று (இஷுக்ஷயாந் நிவர்த்தந்தே நாந்தரிக்ஷக்ஷி திஷயாத் | மதிக்ஷயாந் நிவர்த்தந்தே ந கேரவிந்த,குணக்ஷயாத் |[பாணங்களில்லாமல் திரும்புகிருர்களே யொழிய, பூமியும் ஆகாயமும் அழிந்துவிட்டதாலல்ல. ( ௮ம் மாதிரியே ). பு,த்திக் குறைவினால் திரும்பு)அளவுடையாரும் தாம் தாம் ஜ்ஞான சக்த்யாதிகள் அளவும் புகழ்ந்தார்கள் அத்தனை – உமக்கும் அவ்வளவு புகழ்கைக்கு விரோதம் இல்லை – ஸா ஜிஹ்வா யா ஹரிம் ஸ்தௌதி –(ஸா ஜிஹ்வா யா ஹரிம் ஸ்தெளதி தச் சித்தம் யத்தத,ர்ப்பிதம் | தாவேவ ச கரெள ஸ்லாக்,யெள யெள தத் பூஜாகரெள கரெள ॥ [எது ஹரியைத் துதிக்கிறதோ, அதுவே நாக்கு, எது அவனிடம் ஸமர்ப்பிக்கப் பட்டதோ அதுவே நெஞ்சு. எவை அவனுக்குப் பூஜை செய்கின்றனவோ அக் கைகளே ஸ்லாக்,யமானவை)வாய் ஸ்துதிக்க வன்றோ கண்டது –-ஸ்தவ்யஸ் ஸ்தவ ப்ரிய-என்கிறபடியே -ஸ்தோத்ரம் நமக்கு பிரியம் அன்றோ -என்று-யுத்தான் நிவ்ருத்தனான அர்ஜுனனை கரிஷ்யே வசனம் தவ -என்னப் பண்ணினால் போலே ஈஸ்வரன் தானே மூட்ட சமாஹிதர் ஆகிறார்- (நஷ்டோ மோஹ: ஸ்ம்ருதிர் லப்,த, த்வத் ப்ரஸாதாந் மயாச்யுத | ஸ்திதோ5ஸ்மி க,தஸந்தே,ஹ: கரிஷ்யே வசநம் தவ॥ [அச்சுதனே | (விபரீத ஜ்ஞானமாகிய) மோஹம் நசித்தது. உன்னருளால் உண்மை அறிவு என்னால் அடையப் பட்டது. ஸந்தேஹம் நஸிக்கப் பெற்றவனாயிருக்கிறேன். உன் வசனத்தின்படியே (யுத்,த,ம்) செய்கிறேன்)ஆளவந்தாரை
“வாய் படைத்த பயன் அவனைக் கொண்டாடுவதற்கே; ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் ‘ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய:’(அவன் கொண்டாடத்தகுந்தவன்; அவன் கொண்டாட்டங்களை விரும்புபவன்)” என்று சொல்லும்படி உற்சாகப்படுத்தினான். இதைக் கேட்ட ஆளவந்தார், எம்பெருமானைக் கொண்டாடுவது என்று முடிவெடுத்தார்.
யத்வா ஸ்ரமாவதி யதாமதி வாப்ய சக்த
ஸ்தௌம் யேவமேவ கலு தேஅபி சதா ஸ்துவந்த
வேதாஸ் சதுர்முகாஸ் ச மஹார்ணவாந்த
கோ மஜ்ஜதோரணுகுலா சலயோர் விசேஷ –8-
யத்வா –அல்லது -ஸ்துதிக்க தொடங்குவதால் யத்வா -என்று உபக்ரமிக்கிறார் இதில்
அசக்த-அஹம் -சக்தியற்ற நான்
ஸ்ரமாவதி –ஸ்ரமம் உண்டாகும் அளவாவது -சக்தி உள்ள அளவாவது என்றபடி
யதாமதி வா–புத்திக்கு எட்டும் அளவாவது
ஸ்தௌமி –ஸ்தோத்ரம் பண்ணுகிறேன்
சதா அபி ஸ்துவந்த-எப்பொழுதும் ஸ்தோத்ரம் பண்ணிக்க கொண்டு இருக்கிற
தேஅபி வேதாஸ்-அந்த வேதங்களும்
சதுர்முக முகாச்ச –ப்ரஹ்மாதிகளும்
யேவமேவ கலு -இப்படி அல்லவோ ஸ்துதிப்பது-என்னைவிட அவர்கள் சிறிது அதிகமாக ஸ்துப்பார்கள் ஆகிலும்
மஹார்ணவாந்த-மஜ்ஜதோ–பெரிய கடலினுள்ளே முழுகிப் போகிற
அணு குலா சலயோர் க விசேஷ –சிறியதொரு வஸ்துவுக்கும் பெரிய குலபர்வதத்துக்கும் என்ன வாசி
அல்லது, சக்தியற்ற நான் சோர்வடையும் வரையிலோ எனக்குத் தெரிந்த அளவிலோ அவனைக் கொண்டாடுவேன்; இவ்வாறே, வேதங்களும், நான்கு முகங்களைக் கொண்ட ப்ரஹ்மா முதலியவர்களும் எம்பெருமானைக் கொண்டாடுகின்றனர்;mகடலுக்குள் மூழ்கி இருக்கும் சிறு கூழாங்கல்லுக்கும் பெரிய மலைக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? (ஒன்றும் இல்லை)
யத்வா-பூர்வ பஷ நிவ்ருத்தி – முன்பு அல்லோம் என்ற இடம் அர்த்தம் அன்று -என்கிறார்-ஸ்ரமாவதி யதாமதி வா – இளைப்பு எல்லையாக வாதல்-ஜ்ஞானம் எல்லையாக வாதல் –-ஜ்ஞான சக்த்யாதிகள் அளவே ஸ்தோத்ரம் பண்ணலாவது -என்கை –அசக்தஸ் தோபிஸ் தௌமி – சர்வ பிரகாரத்தாலும் அசக்தனே யாகிலும் ஸ்துதிக்கிறேன்(யந்நாயம் ப,க,வாந் ப்,ரஹ்மா ஜாநாதி பரமம் பத;ம் | தந்நதா: ஸ்ம ஜகத்,தாம தவ ஸர்வகதாச்யுத ॥ [அச்யுதனே ! ஸர்வ வ்யாபியே | மேலான ப்ராப்யமான எதை பகுவானான பிரமனும் அறியானோ, உலகிற் கெல்லாம் இருப்பிடமான அந்த உன்னுடைய ஸ்வரூபத்தை வணங்குகிறோம்)-யேவமேவ கலு தேஅபி சதா ஸ்துவந்த வேதாஸ் சதுர்முகாஸ் ச
சதா ஸ்துவந்த வேதாஸ் சதுர்முகாஸ் ச யேவமேவ கலு தேஅபி--த்யாஜ்ய உபாதேயங்களை பிரிக்கைக்கும்-த்யாஜ்யத்தை விட்டு -உபாதேயத்திலே அவகாஹிக்கைக்கும் அடியான ஜ்ஞான சக்த்யாதிகளால் அதிகரானவர்களும்–சதா ஸ்துவந்த வேதாஸ்--சர்வ கால சம்யோகத்தை உடைத்தான வேதங்களும்–சதுர்முகாஸ் ச--த்விபரார்த்த காலாவதிகரான ப்ரஹ்ம ருத்ரர்களும்-அதிகாராவ ஸானத்தளவும் ஸ்துதிக்கிற ஸ்நகாதிகளும் –
யெவமெவ கலு –-ஜ்ஞான சக்த்யாதிகள் அளவே இறே
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹ –
யன்நாயம் பகவான் ப்ரஹ்மா ஜாநாதி புருஷோத்தமம் –
மா மலரான் வார் சடையான் வல்லரே அல்லரே வாழ்த்து -நான் முகன் திருவந்தாதி -10-
பேசுவார் எவ்வளவு பேசுவார் அவ்வளவே -மூன்றாம் திருவந்தாதி -21
வல்லதோர் வண்ணம் -திருவாய் மொழி -7-8-10-
ந க்ராஹ்ய கே நசித் க்வசித் – (தவாந்தராத்மா மம ௪ யே சாந்யே தேஹி ஸம்ஜ்ஞிதா: | ஸர்வேஷாம் ஸாஷி பூதோ3ஸெள ந க்,ராஹ்ய: கேநசிந் க்சித் ॥ [( பிரமனாகிய ) எனக்கும், ( ருத்ரனாகிய ) உனக்கும், ( தேஹத்தை உடைத்தாயிருப்பதால் ) *தேஹீ’ என்ற பெயரையுடைய மற்றவர்களுக்கும் அந்தராத்மா நாராயணனே. எல்லாருக்கும் ஸாஷியாயிருக்கிறார் அவர், எவராலும் எக்காலத்தீலும் அறியத்தக்கவரல்லர் அவர் ) இங்கனே யாகிலும் உமக்கும் அவர்க்கும் நெடு வாசி உண்டே என்னில்
வேதங்களுக்கும் சதுர்முகா திகளுக்கும் வாசி உண்டாய் இருக்கச் செய்தே அவனை உள்ளபடி பேச மாட்டாமை ஒத்தால் போலே எனக்கும் அவர்களுக்கும் வாசி உண்டானாலும் உள்ளபடி பேச மாட்டாமையாலே வாசி இல்லை எது போலே என்னில்–
மஹார்ணவாந்த கோ மஜ்ஜதோரணுகுலா சலயோ விசேஷ – மஹார்ணவாந்தர் மஜ்ஜதோரணுகுலா சலயோ கோவிசேஷ–சர்ஷப மஹீ தரங்களுக்கு நெடு வாசி -சர்ஷபம் -கடுகு மஹீ தரம் -மலை-இப்படி வைஷம்யம் உண்டானாலும்-பெரும் கடலிலே புக்கு அமிழ்ந்தும் அளவில்-விசேஷம் இல்லை இறே
அது போலே இறே(வேதம் உரைத்து இமையோர் வணங்கும் செந்தமிழ் பாடுவார் தாம் வணங்கும் தேவர் – இப்படி தேவர் வைதிகர் வேதங்கள் அல்லும் பகலும் ஸ்துதிக்குக் கொண்டே இருந்தாலும் தலைக் கட்ட ஒண்ணாதே மீளும் படி –அவரவர் தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி – தங்கள் அன்பாரத் தமது சொல் வலத்தால் தலைத் தலைச் சிறந்து பூசிப்ப – ச்ரமாவதி-களைத்து போகிற வரையில் தண்ணீர் இறைக்கிறேன் போலே ஸ்துதிக்க இழிகிறார்)
ஆகவே நம்மால் ஆன அளவு ஸ்துதிப்பது தகுதியே என்று திரு உள்ளத்தை சமாதானம் படுத்திக்க கொள்கிறார்-வேதம் உரைத்து இமையோர் வணங்கும் செந்தமிழ் பாடுவார் தாம் வணங்கும் தேவர் –பெரிய திருமொழி -2-8-2என்கிறபடியே தேவர்களும் -வைதிகர்களும் -வேதங்களும் அல்லும் பகலும் ஸ்துதிக்குக் கொண்டே இருந்தாலும் பேசித் தலைக்கட்டி முடியாமல் தங்கள் ஞான சக்திகள் அளவும் ஸ்துக்கிறார்கள்-ஆகவே உள்ளபடி பேச மாட்டாமையில் நானும் அவர்களும் ஒரு வாசி இன்றியே சமமே
அனவதிக அதிசய அஸங்க்யேய பகவத் குண சாகரத்தில் இரண்டுமே முழுகி மறைந்து போகுமே
அவரவர் தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி-தங்கள் அன்பாரத் தமது சொல் வலத்தால் தலைத் தலைச் சிறந்து பூசிப்ப மா மலரான் வார் சடையான் வல்லரே அல்லரே வாழ்த்து -நான் முகன் திருவந்தாதி -10-
பேசுவார் எவ்வளவு பேசுவார் அவ்வளவே -மூன்றாம் திருவந்தாதி -21
வல்லதோர் வண்ணம் -திருவாய் மொழி -7-8-10-)
சக்தி இலனாகிலும் யான் தளர்ச்சி எய்திச் சகிக்க இனித் தரமில்லேன் என்னும் மட்டும்
புத்தி எனக்கு உற்ற அளவும் போற்றி நிற்பன் புகழ் ஆர்ந்து எக்காலத்தும் பொருந்தி ஏத்தும்
தத்துவத்தை யுணர் மறையும் சதுர் முகத்தோன் சங்கரன் ஆதியர்களும் இங்கனமே யன்றோ
ஒத்திடில் ஓர் பெரும் கடலுள் அமிழ்ந்து மூழ்கும் உயர் மலைக்கும் அணுவிற்கும் வாசி யுண்டோ –8—உள்ளபடியே உன்னை ஸ்தோத்ரம் செய்ய சக்தி இல்லேனாயினும் என் உணர்ச்சியில் தளர்ச்சி யுண்டாகி இனி என்னால் ஸாத்யம் இல்லை என்னும் மட்டுமாவது என் ஞானத்துக்கு எட்டும் வரையிலுமாவது ஸ்துதி பண்ணுகிறேன்-ஜகத் ப்ரஸித்தமாய் ஆதி காலம் தொட்டு உன்னை ஸ்துதிக்கும் ஸகல தத்துவத்தையும் அறிந்த வேதங்களும்-சதுர் முகன் சங்கரனாதி மற்றவர்களும்
தத்தம் ஞான சக்தி யாதிகள் அளவே யன்றோ ஸ்துதிக்கின்றார்கள் ஸ்துதிக்கின்றார்கள்
ஒரு பெரும் கடலிலே அமிழ்ந்து மூழ்குகின்ற ஒரு பெரிய பர்வதத்துக்கும் ஒரு அணுவிற்கும் என்ன வித்யாஸம் இருக்கிறது – உள்ளபடி யுன்னை ஸ்துதி செய்ய மாட்டாமையில் வேதம் முதலியவைகளும் எனக்கு யாதொரு வாசியும் இல்லை என்பது கருத்து –
—
ஸ்லோகம் -9 – அவதாரிகை –ப்ரஹ்மாதிகளில் காட்டில் எனக்கு ஸ்தோத்ரத்தில் இழிகைக்கு அதிக ஹேது உண்டு என்கிறார் – பரக்கப் புகழ்கை ஈஸ்வரன் அனுக்ரஹ ஹேது அன்றிக்கே ஸ்துதி க்ருதமான பரிஸ்ரமம் அனுக்ரஹ ஹேதுவாம் படி சீலவான் ஆகையாலே மந்த புத்தியான எனக்கு அந்த ஸ்ரமம் ஸூலபம் ஆகையாலே அவர்களில் காட்டில் நான் ஸ்தோத்ர அதிகாரி -என்கிறார்-
கிஞ்சசைஷ சக்த்யதிச யேன ந தே அனுகம்ப்ய
ஸ்தோதாபி து ஸ்துதி க்ருதேன பரிஸ் ரமேண
தத்ர ஸ்ரமச்து ஸூலபோ மம மந்த புத்தே
இதயத் யமோ அயமுசிதோ மம சாப்ஜ நேத்ர–9-
ஏஷ ஸ்தோதா-இந்த ஸ்துதிப்பவனான அடியேன்
சக்த்யதிச யேன-எனது சக்தியின் மிகுதியினால்
ந தே அனுகம்ப்ய-உனக்கு இரங்கத் தக்கவன் அல்லேன்
அபி து -பின்னை எக்காரணத்தால் இரங்கத் தக்கவன் என்னில்
கிஞ்சசைஷ ஸ்துதி க்ருதேன பரிஸ் ரமேண–ஸ்துதிப்பதனால் உண்டாகும் பரி ஸ்ரமத்தைப் பார்த்து இரங்கத் தக்கவன்
ஹே அப்ஜ நேத்ர–செங்கண் மாலே-உன் தாமரைக் கண்களால் நோக்காய் –திருவாய் மொழி -9-2-1–என்னுடைய முயற்சி ஈடேறும் படி உனது தாமரைக் கண்களால் நோக்காய்-ஸ்தோத்ரத்தில் நிலை நின்ற படியைக் கண்டு செந்தாமரைக் கண்ணோடு மறப்பற என்னுள்ளே மன்னினான் –திருவாய் மொழி -1-10-10-என்கிறபடியே ப்ரீதியாலே திருக் கண்கள் குளிர்ந்த படியைச் சொல்லுதல் -என்றுமாம் –
தத்ர மந்த புத்தே–ஸ்துதிக்கும் விஷயத்தில் மந்த புத்தியை யுடையனான
மம து ஸ்ரமம் -எனக்கோ என்றால் பரி ஸ்ரமம்
ஸூலபோ -எளிதில் உண்டாகக் கூடியது
இதி மம ச –என்கிற காரணத்தினால் எனக்கே
அயம் உத்யமஸ் -இந்த முயற்சி ஏற்று இருக்கிறது-
மேலும், என்னுடைய கவிதை பாடும் சிறந்த திறமையால், நீ கருணையைப் பொழியும் நிலையில் நான் இல்லை;-ஆனால், உன்னைக் கொண்டாட முயன்று சோர்வடையும் தன்மையை உடையவன் ஆகையால், நீ என் மீது உன் கருணையைப் பொழியலாம்;-எனக்கு மிகவும் குறைந்த ஞானமே உள்ளதால், எளிதில் சோர்வடைந்து விடுவேன்; ஆகையால், உன்னைக் கொண்டாடும் இம்முயற்சி ப்ரஹ்மா முதலியவர்களைக் காட்டிலும், எனக்கே மிகவும் பொருத்தமாக உள்ளது.
கிஞ்ச -மேலும் –கீழ் சொன்ன சாம்யம் ஒழிய-ஸ்தோத்ரத்தில் அவர்களில் காட்டில் எனக்கு அதிகாரம் உண்டு என்கைக்கு ஒரு ஹேது உண்டு -என்கிறார்-ஏஷ -ஸ்தோதா-துதிக்கும் அடியேன் –-பகவத் ஆபி முக்யத்தாலே சம்சாரிகளில் காட்டில் வ்யாவ்ருத்தனாய்-வாய் படைத்த ப்ரயோஜனம் இது -என்று பகவத் ஸ்தோத்ரத்திலே அதிகரித்தவன் –சக்த்யதிச யேன ந தே அனுகம்ப்ய – நம்மை ஸ்தோத்ரம் பண்ண சக்தன் என்று உனக்கு அனுக்ராஹ்யனாகிறேன் அல்லேன் –தே -உனக்கு-யதோ வாசோ நிவர்த்தந்தே –என்றும்-தத் விப்ராசோ விபந்யவ-என்றும் வேதங்களும் நித்ய ஸூரிகளும் புகழ்ந்து எல்லை காண மாட்டாத மகிமையை உடைய உனக்குப் பரக்க ஸ்தோத்ரம் பண்ணுகை தேட்டம் அன்றே -என்னுதல்
சம்சாரிகள் ஆபி முக்கியம் பண்ணுகை தேட்டமான சீலவான் ஆகையாலே இவன் பண்ணும் ஸ்தோத்ரம் மிகையான உனக்கு -என்னுதல் –அபி து-ஆனால் –மற்றப்படி -என்னுதல்-பின்னை எங்கனே -என்று ஸாநு நய பிரஸ்னம் ஆதல் –-ஸ்துதி க்ருதேன பரிஸ் ரமேண-துதிப்பதினால் ஏற்படும் களைப்பினாலேயே உன்னை ஸ்துதிக்கையிலே அத்ய ஆதாரத்தைப் பண்ணி அதுக்கு ஈடான சக்தி இல்லாமையாலே புகழவும் மாட்டாதே படும் இளைப்பாலே இறே நீ இரங்குவது-தத்ர-இப்படி இருக்கும் இடத்தில் அர்த்தம் இப்படியாய் நின்ற இடத்தில்-ஸ்ரமச்து ஸூலபோ மம –-எனக்கு விசேஷித்த ஸ்ரமமானது குறைவற உண்டு -என்றுமாம்-து -அவதாரணமாய்-எனக்கே குறைவற்ற ஸ்ரமம் உள்ளது -என்றுமாம்-மந்த புத்தே -என்று ஸ்ரம ஹேதுவை சொல்லுகிறது –-அல்ப புத்தி -என்கை –இதி –ஆகையால் என்று ஹேதுவை சொல்லுதல்-இப்படி என்னுதல்-யத்யமோ அய அயம் உதயம்-இந்த முயற்சி ஸ்தோஷ்யாமி -என்று கொண்டு உண்டான இந்த உத்யமம்-முசிதோ மம ––உசிதோ மம ச –
ச சப்தம் அவதாரணமாய் -எனக்கே உசிதம் என்னுதல்-சமுச்சயமாய் எனக்கும் உசிதம் -என்று கீழ் ஸ்லோகத்தோடு கூட்டுதல் –அப்ஜ நேத்ர –செங்கண் மாலே –-அவலோக நதா நேன பூயோ மாம் –
உன் தாமரைக் கண்களால் நோக்காய் –திருவாய் மொழி -9-2-1-என்றும் சொல்லுகிறபடியே-அவிக்நேன ஸ்தோத் ரத்தை தலைக் கட்டும்படி அழகிய திருக் கண்களால் நோக்கி அருள வேணும் -என்னுதல்-ஸ்தோத்ரத்தில் நிலை நின்ற படியைக் கண்டு-செந்தாமரைக் கண்ணோடு மறப்பற என்னுள்ளே மன்னினான் –திருவாய் மொழி -1-10-10-என்கிறபடியே ப்ரீதியாலே திருக் கண்கள் குளிர்ந்த படியைச் சொல்லுதல் –(மம ச -அவதாரணம் -எனக்கே -என்றபடி –கீழ் ஸ்தோத்ரம் உடன் சேர்த்து எனக்கும் -என்றுமாம்-இருக்கு வாய் முனிக் கணங்கள் ஏத்த ஈனும் ஏத்தினேன் -என்றால் போலே )
எனவே ப்ரஹ்மாதிகளை விட தனக்கு உண்டான ஏற்றம் -என்னைப் போலே தீனர்கள் அல்லவே –
எனவே சீக்கிரமாக உனது தயை என் மேலே பொழியும் -அவர்கள் ஸ்துதிப்பது வீண் -நான் ஸ்துதிப்பதே தகுதி –
உன்னையே ஸ்துதிப்ப யெய்தும் யுணர்ச்சியின் தளர்ச்சி யன்றி
நின் அருட்க்கு உரியதாமோ நிறை கவித் திரனும் சீரும்
என்னிட மந்த புத்திக்கு எளிது இளைப்பாதல் பற்றி
நன்னல நயனா விந்த முயற்சிக்கு யுரியனானே –9-நன்னலம் –அழகு–உன்னை ஸ்துதிப்பதில் இச்சை கொண்டும் -அதற்கு வேண்டிய சக்தி இல்லாமையால் புகழவும் தவிர மாட்டாமையாலே ஒருவன் படுகிற இளைப்புக்கு இரங்கி நீ அருள் செய்வதே யன்றி ஸ்தோத்ரம் செய்வதற்கு வேண்டிய பூர்ணமான
ஸாமர்த்ய அதிசயங்களைக் கொண்டு நீ அனுக்ரஹிக்கிறது இல்லை –-இங்கனம் இருக்க அல்ப புத்தியேனான எனக்கு ஸ்ரமம் அதிக சுலபத்தில் உண்டாய் விடுகிறது – ஆகையால் -என் ஸ்தோத்ரத்தைத் தலைக்கட்டும்படி கடாக்ஷிக்க வல்ல அழகிய திருக்கண்களை யுடையவனே
இந்த ஸ்தோத்ரம் செய்ய வேணும் என்னும் முயற்சிக்கு யுரியவன் நானே யாகின்றேன்-எனக்கு அம்முயற்சி தகுந்துள்ளது –
—
ஸ்தோத்ரம் -10-அவதாரிகை –இப்படி ஸ்தோத்ர ஆஷேப சமாதானத்தைப் பண்ணி ஈஸ்வரன் உடைய சரண்யதைக்கு உறுப்பான பகவத் பரத்வத்தை மேல் அஞ்சு ஸ்லோகத்தாலே அருளிச் செய்கிறார் – இதில் முதல் ஸ்லோகத்தாலே –சத் ப்ரஹ்மாதி சாமான்ய வாசி சப்தங்களாலே-ஜகத் காரணதயா பிரதிபாதிக்கப் படுகிறான் நாராயணன் என்று கதி சாமான்ய ந்யாயத்தாலே காரண வாக்ய விஷயமான பரத்வத்தை அருளிச் செய்கிறார் –ஸ்தோத்ரம் பண்ண உபக்ரமித்தவாறே வாத்சல்ய ஜன்யமான விசேஷ கடாஷத்தைப் பண்ணினான் என்கிற இது பிரளய காலத்திலேயே அசித் கல்பரான சேதனரை தயமானவாய்க் கொண்டு விசேஷ கடாஷத்தைப் பண்ணி உண்டாகி அந்த ஜந்துக்கள் உடைய ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ஹேதுவாய் உபகாரகனான உனக்கு ஸ்ருஷ்டமான ஜந்துக்கள் ஆபிமுக்யம் பண்ண முகம் கொடுத்தாய் என்கிற இது ஆச்சர்யமோ -என்கிறார் -என்றுமாம் –
நா வேஷசே யதி ததோ புவ நான்ய மூநி
நாலாம் ப்ரபோ பவிது மேவ குத ப்ரவ்ருத்தி
ஏவம் நி சரக்க ஸூ ஹ்ருதி த்வயி சர்வ ஜந்தோ
ஸ்வாமின் ந சித்ர மித மாஸ்ரித வத்ஸ்லத்வம்–10-
ப்ரபோ-பகவானே
ந அவேஷசே யதி –நீ கடாக்ஷித்து அருளா விட்டால்
ததோ புவ நான்ய மூநி நாலாம் -ததஸ் அமூநி புவநாநி பவிதும் ஏவ ந அலம்-அப்போது இவ்வுலகங்கள் உண்டாகவே மாட்டா
குத ப்ரவ்ருத்தி–ஒரு காரியமும் செய்ய மாட்டா என்பதைச் சொல்லவும் வேணுமோ
ஸ்வாமின்-இப்படியே
ஏவம் சர்வ ஜந்தோ-இப்படி எல்லா உயிர்கட்க்கும்
நி சரக்க ஸூ ஹ்ருதி -இயற்கையாகவே ஸூஹ்ருதம்-நன்மை -விரும்புவானான
த்வயி -உன்னிடத்தில்
ந சித்ர மித மாஸ்ரித வத்ஸ்லத்வம்–ஆஸ்ரித வாத்சல்யமான இந்தக் குணமானது ஆச்சர்யமே இல்லையே-
எம்பெருமானே! மஹா ப்ரளயத்துக்குப் பின், நீ உன்னுடைய கருணைக் கடாக்ஷத்தைக் காட்டவில்லை என்றால், இவ்வுலகங்கள் படைக்கப்பட்டிருக்காது; வேறு எந்த நிகழ்வுகளும் நடந்திருக்காது என்பதும் தெளிவு.-எம்பெருமானே! இப்படி நீயே எல்லோருடைய இயற்கையான நண்பனாக இருப்பதால்,
நீ உன்னுடைய அடியார்களிடம் தாயன்பைக் காட்டுவதைப் பார்ப்பதில் ஒரு ஆச்சர்யமும் இல்லை.
நா வேஷசே யதி ––ந அவேஷசே யதி –-நீ கடாஷித்து இரா விடில் –ததை ஷத பஹூஸ்யாம் பிரஜாயேயேதி -(ததைகத பஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி தத்தேஜோ$ஸ்ருஜத | [அந்தப் பரப்ரஹ்மம் (நானே) பலவாக ஆகக்கடவேன்” என்று ஸங்கல்பித்தது; அது தேஜஸ்ஸை ஸ்ருஷ்டி செய்தது)என்று அசத் கல்பரான சேதனரைக் கடாஷித்து இலையாகில் அநாதி காலம் பண்ணிப் போந்த அபராதங்களை பாராதே அவற்றின் உடைய துர்க்கதியைப் பார்த்து-க்ருபா பர தந்த்ரனாய் இறே அப்போதே கடாஷித்தது அல்லது உன்னைக் கடாஷித்திலையே -என்பார் இல்லையே –தத- பிரளயத்துக்கு பின் –பஹூஸ்யாம் -என்கிற சங்கல்பத்துக்கு பின்பு-புவன சிருஷ்டிக்கு முன்பு உண்டான தூரத்தை சொல்லுகிறது –-புவ நான்ய மூநி நாலாம் -பவிது மேவ-அமூநி புவநானி பவிதுமேவ நாலாம் – இவ் உலகங்ககள் உண்டாகவே மாட்டாது –-போக மோஷங்களை சாதித்துக் கொள்ளுகைக்கு ஏகாந்தமான சதுர்தச புவனங்கள் ஆனவை உண்டாகவே மாட்டாது –-வியதிரேக நிர்த்தேசம் அர்த்த ஸ்தைர்யத்துக்காக – கோ ஹ்யேவான் யாத் க ப்ராண்யாத் ந ததஸ்தி விநாயத் ஸ்யான்மயா பூதம் சராசரம்- (ரஸோ வை ஸ:। ரஸம் ஹ்யேவாயம் லப்,த்,வாநந்த, பவதி। கோ ஹ்யேவாந்யாத் க:. ப்ராண்யாத்| யதே;ஷ ஆகாம ஆநந்தே ந ஸ்யாத் ஏஷ ஹ்யேவாநந்த –ரஸ (ஆநந்த) ஸ்வரூபனன்றோ அந்தப் பரம புருஷன். ரஸ ஸ்வரூபனான அவனை அடைந்து (இந்த ஜீவன் ) ஆநந்த,த்தை உடையவனாகிறான். பிரகாசிப்பவனும், ஆநந்த,ஸ்வரூபனுமான இப் பரம புருஷன் இல்லாவிடில் எவன் இவ்வுலகிலுள்ள ஸுகத்தையோ, மோக்ஷ ஸுகத்தையோ அடைய முடியும் ? (ஆகையால்) இவனே (ஜீவனை) ஆநந்தி,ப்பிக்கிறான் )என்னக் கடவது இறே
குத ப்ரவ்ருத்தி –-எக்கார்யம் செய்ய மாட்டாது என்பது சொல்லவும் வேண்டுமோ-உன் சங்கல்பம் ஒழிய உண்டாக மாட்டாத இவை ப்ரவர்த்திப்பது எத்தாலே-சகல உத்பத்தியும் பிரவ்ருத்தி நிவ்ருத்தியும்
உன்னுடைய கடாஷ பலம் அன்றோ –ப்ரபோ –ஜகத் காரண்த்வ பிரயுக்தமான ஐஸ்வர்யத்தை பிரகாசிப்பிக்கிறது-ஏவம் நி சரக்க ஸூ ஹ்ருதி த்வயி சர்வ ஜந்தோ – (ந ததஹஸ்தி விநா யத் ஸ்மாந்மயா பூ,தம் சராசரம் [அசையக்கூடியவையும், அசையக் கூடாதவையுமான வஸ்துக்களில், நானில்லாமல் இருக்கக்கூடிய வஸ்து கிடையாது.])சர்வ ஜந்தோ ரேவம் நி சரக்க ஸூ ஹ்ருதி–நித்ய விபூதி உண்டாய் இருக்க இவற்றை இழக்கையாலே-ஸ ஏகாகீ ந ரமேத -([(ப்ரளய காலத்தில்) ஒருவராயிருந்த அந்த நாராயணன் ஆனந்தத்தை அடையவில்லை)என்னும்படி தனிமைப் பாடாய் ப்ரஹ்ம ருத்ராதி ஸ்தாவராந்தமான ஜந்து ஜாதத்துக்கு கரண களேபரங்களை கொடுத்து குறை தீர்ந்தே என்னும்படி அகாரண ஸூஹ்ருத்தான உன் பக்கல்–ஸ்வாமின் – இவற்றை உண்டாக்குகிற இது உன் பேறாக வேண்டிற்று இவற்றோடு உண்டான குடல் துவக்கு இறே-ஸ்வ முத்திச்ய –உபாதத்தே –என்று இறே அபிஉக்தர் -ஸ்ரீ பட்டர் -வார்த்தை-(உபாத,த்தே ஸத்தாஸ்தி,திநியமநாத்,யைஸ் சித,சிதெள ஸ்வமுத்,இஸ்ய ஸரீமாநிதி வததி வாகெ,ளபநிஷதீ, | உபாயோபேயத்வே ததி, தவ தத்த்வம் ந து கரணெள அதஸ்த்வாம் ஸ்ீரங்கேஸய ஸரணமவ்யாஜமப,லம் || [ஹே ஸ்ரீரங்கநாதனே ! “ஸ்ரீமந்நாராயணன் ஸ்ருஷ்டி, ஸ்தி,தி, நியமனம் முதலிய காரியங்களால் சேதனாசேதனங்களைத் தனக்காக ஸ்வீகரிக்கிறான்” என்று உபனிஷத், வாக்யமானது சொல்லுகிறது. ஆகையால், இவ்விஷயத்தில் உபாயத்வமும் உபேயத்வமும் உனக்கு இயல்வு; செயற்கையல்ல. ஆகையால் உன்னை நிர்வ்யாஜமான உபாயமாக அடைந்தேன்)ஸ்வ வ்யதிரிக்த சகல சேதன அசேதனங்களும் உனக்கு அனன்யார்ஹ சேஷமான ஸ்வாமித்வத்தை உடையவனே –
ந சித்ர மித மாஸ்ரித வத்ஸ்லத்வம் – இத ஆஸ்ரித வத்சலத்வம் ந சித்ரம் – சகல வாங் மனஸ் அகோசரமான -த்வத் விஷய ஸ்தோத்ரத்துக்கு யோக்யனாம் படி என் பக்கல் உண்டான வத்சலத்வம் உனக்கு ஆச்சர்யமோ–கிமத்ர சித்ரம் -இத்யாதி–ஜகத் காரணத் வத்தாலே -சர்வ உத்க்ருஷ்டன் என்றும்-(கிமத்ர சித்ரம் த.ர்மஜ்ஞ! லோகநாத, ! ஸுகாவஹ !| யத் த்வமார்யம் ப்ரபாஷேதரா: ஸத்த்வவாந் ஸத்பதே, ஸ்தி,த: ॥-தர்மங்களை அறிந்தவரே | லோக நாதரே |! ஸாுகத்தைத் தருபவரே |. ஸத்வ கு,ணத்தை யுடையவரும், நல்ல மார்க் கத்தில் நிற்பவருமான நீர் அழகிய சொல்லைச் சொன்னீர் என்பதில் என்ன ஆச்சரியம்) காரணம் து த்யேய-(காரண வஸ்துவே தியானிக்கத்தக்கது)என்கையாலே சர்வ சமாஸ்ரயணீயன் என்றும்-ஏஷ ஹ்யேவா நந்தயாதி -என்கையாலே ப்ராப்யன் என்றும்-ஸ்ருஷ்ட்யாதிகளை தன் பேறாகப் பண்ணுகையாலே சர்வ ஸ்வாமி என்றும்-தாம் ஸ்தோத்ரத்தில் மூளும் படி முகம் காட்டுகையாலே ஆஸ்ரித வத்சலத்வமும் – சொல்லிற்று ஆயிற்று –(கீழே அப்ஜ நேத்ரே -என்ற சம்போதம் திரு விழி செவிப் பட்டவாறே தாமரைக் கண்களால் கடாக்ஷித்து அருள –-தத் ஐஷத–பஹுஸ் யாம் பிரஜாயேயேதி -ஸ்ருதி படியே இவரும்-அவேஷஸே-ஈஷணம்-ஸ்வாபாகிக ஸூஹ்ருத கடாக்ஷம் -என்றவாறு-வாத்சல்யம் பிரபாவம் அத்புதம் அன்று இயற்க்கை என்றவாறு )-
ஸ்தோத்ரம் பண்ணுவதற்கு அதிகாரம் உண்டு என்று ஸ்தாபித்த பின்பு ஸ்தோத்ரம் பண்ணத் தொடங்குகிறார் இது முதல்-அப்ஜ நேத்ர-என்று கீழே சம்போதித்த உடனே தண் தாமரைக் கண்களால் கடாக்ஷித்து அருளி அனுக்ரஹித்தான்-தத் ஐஷத பஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி –ஸ்ருதி அடி ஒற்றி இவரும் அவேஷசே -என்று அருளிச் செய்கிறார்-ஈஷணம்-அனுக்ரஹத்தோடு கூடிய சங்கல்பம்
ஸ்வாபாவிக ஸூஹ்ருத்தாய் எல்லார் விஷயத்திலும் இருக்கும் நீ என் விஷயத்திலும் -ப்ரீதி விசேஷமான வாத்சல்யம் காட்டி அருளுவது ஆச்சர்யமே இல்லையே –ஜகத் காரணத் வத்தாலே -சர்வ உத்க்ருஷ்டன் என்றும்-காரணம் து த்யேய-என்கையாலே சர்வ சமாஸ்ரயணீயன் என்றும்-ஏஷ ஹ்யேவா நந்தயாதி -என்கையாலே ப்ராப்யன் என்றும்-ஸ்ருஷ்ட்யாதிகளை தன் பேறாகப் பண்ணுகையாலே சர்வ ஸ்வாமி என்றும் தாம் ஸ்தோத்ரத்தில் மூளும் படி முகம் காட்டுகையாலே ஆஸ்ரித வத்சலத்வமும் –சொல்லிற்று ஆயிற்று –
நாத நின் ஸங்கல்பம் இன்றி யுண்டாய் நன்மை யுறும் இருக்கைக்கும் சமர்த்தம் இல்லா
சாதனமாம் இப்புவனங்கட்க்கும் எங்கன் ஸம்பவிக்கும் ப்ரவ்ருத்தி இவ்விதத்தே
ஏது விலாத எல்லா உயிர்களுக்கும் இதம் புரியும் இயற்கையனாம் ப்ரபோ நின் தன்
பாதம் அணி அன்பர்க்கு இவ்வாற் ஸலீயம் படைத்து உள்ளாய் என்பதிலோர் விந்தை என்னே -10-பிரபோ ஆதியில் நீ ஸங்கல்பித்து கடாக்ஷித்து இரா விட்டால் இப்பதினான்கு உலகங்களும் உண்டாய் இருப்பதற்கே ப்ரமேயம் இருந்திராது -அப்படி இருக்க அவைகளுக்கு ப்ரவ்ருத்தி எங்கனே யுண்டாகும்
ஏ ஸர்வ சேஷியானவனே பிரமன் முதலிய சகலஜீவன்களுக்கும் கரண களேபரங்களைக் கொடுத்து குறை தீர்த்து அருளிய ஸ்வ பாவமாய் ஸூஹ்ருத்தான உன் விஷயத்தில் ஸ்துதி பண்ண வல்லராம் படி
உன் அன்பரைச் செய்வதற்காக உனக்கு யுண்டான ஆஸ்ரித வத்சலத்வமும் ஓர் ஆச்சர்யம் ஆகுமோ-
—
ஸ்லோகம் -11-அவதாரிகை–இத்தால் பரத்வ லஷணம் சொல்லுகிறது-கீழ் கதி சாமான்ய ந்யாயத்தாலே நாராயணனே சர்வ ஸ்மாத் பரன் -என்றது இதில் விசேஷ வாசியான சிவா சம்ப்வாதி வாக்யங்களாலும்
பிரதி பாதிக்கப் படுகிறான் நாராயணனே -என்று சர்வ வேதாந்த வ்யாக்யானமாய் அநந்ய பரனான நாராயண அநுவாக சித்தமான பகவத் பரத்வத்தை -அருளிச் செய்கிறார் –
ஸ்வா பாவிக அநவதிக அதிசய ஈசித்ருத்வம்
நாராயண த்வயி ந ம்ருஷ்யதி வைதிக க
ப்ரஹ்மா சிவச் சதமக பரம ஸ்வ ராடித்
யேதே அபி யஸ்ய மஹிமார்ணவ விப்ருஷஸதே–11-
நாராயண-நாராயணனே
ப்ரஹ்மா சிவச் சதமக பரம ஸ்வராட் -பிரமன் சிவன் இந்திரன் -இவர்களை விட சிறந்த முக்தாத்மா
இதி ஏத அபி -என்கிற இவர்கள் எல்லாரும்
யஸ்ய தே மஹிமார்ணவ விப்ருஷஸதே-யாதொரு உன்னுடைய பெருமையாகிற கடலிலே திவலையாக ஆகின்றனரோ
( தஸ்மிந் ) த்வயி-அப்படிப்பட்ட உன்னிடத்தில்
ஸ்வா பாவிக அநவதிக அதிசய ஈசித்ருத்வம்-இயற்கையான உயர்வற்ற அதிசய ஐஸ்வர்யத்தை
க வைதிக ந ம்ருஷ்யதி –எந்த வைதிகன் ஸஹிக்க மாட்டான் –சஹியாதவன் அவைதிகன் ஆவான் என்கை-
நாராயணனே! உன்னுடைய பெருமைக் கடலில் ஒரு திவலையைப் போன்றவர்களே (கர்மத்துக்கு வசப்பட்ட) ப்ரஹ்மா, சிவன், இந்திரன் ஆகியோரும், இந்த தேவதைகளைவிடச் சிறந்தவர்களான, கர்மத்துக்கு வசப்படாத முக்தாத்மாக்களும்; உன்னுடைய இயற்கையான மற்றும் எல்லை யில்லாத பெருமையை உடைய ஐச்வர்யத்தை (ஆளுமையை) எந்த வைதிகன் பொறுக்க மாட்டான்?
ஸ்வாபாவிக – இத்தால் கர்ம உபாதிகமாய் -அத்தாலே-அநித்யமாய் துக்க மிஸ்ரமான ப்ரஹ்மாதிகள் ஐஸ்வர்யத்தை வ்யாவர்த்திக்கிறது –அநவதிக அதிசய–இத்தால் நித்யரையும் முக்தரையும் வ்யாவர்த்திக்கிறது –-ஸ ஸ்வராட் பவதி -(அந்த முக்தாத்மா கர்மத்திற்கு வ௱ப்படாதவனாக ஆகிறான்)என்றும்-சத்ய காமஸ் சத்ய சங்கல்ப -(ய ஆத்மா ௮பஹத பாப்மா விஜரோ விம்ருத்யுர் விஸோகோ விஜிக,த்ஸோ$பிபாஸஸ் ஸத்யகாமஸ் ஸத்யஸங்கல்பஸ் ஸோ$ந்வேஷ்டவ்ய:[எந்த ஆத்மாவானவன், பாபமற்றவனாகவும், கிழத்தனமற்றவனாகவும், ம்ருத்யுவற்றவனாகவும், மோகமற்றவனாகவும், பசியற்றவனாகவும், தாகமற்றவனாகவும், வீண்போகாத இஷ்டத்தையும், ஸங்கல்பத்தையும் உடையவனாகவுமிருக்கிறானோ அவன் தேடத்தக்கவன்.)என்றும் -நித்ய முக்த விஷயமான ஐஸ்வர்யங்களும் பாகவதா யத்தமாய் சாவதிகங்களுமாய் இருக்கையாலே –ஈசித்ருத்வம்
இந்த அசாதாரண ஸ்வரூப நிர்தேசத்தாலே-நிர் விசேஷ சின்மாத்திர வஸ்து -என்ற புத்த கந்திகளான வேதாந்திகளை வ்யாவர்த்திக்கிறது-நாராயண –-சத் ப்ரஹ்மாதி சாமான்ய வாசி சப்தங்களையும்
விசேஷ வாசியான சிவா சம்ப்வாதி சப்தங்களையும்-நாராயணன் பக்கலிலே வ்யவஸ்தாபிக்கிற
நாராயண அனுவாகம் சொல்லுகிற இவ்வர்த்தத்தில் பிரமாணம் ப்ரத்ய பிஜ்ஞை பன்னப் படுகிறது –
த்வயி –சர்வ வேதாந்தங்களிலும் சர்வாதிகனாக பிரதி பாதிக்கப் படுகிறவனாய்-இவ்வாத்மாவுக்கு வகுத்தவனான உன் பக்கலிலே-ந ம்ருஷ்யதி-உக்தமான ஐஸ்வர்யத்தை பொறாதே ஒழிகிறவன்-வைதிக க –அப்ராஹ்மண இத்யர்த்தம் – யோ விஷ்ணும் சத்தம் த்வேஷ்டி விஷ்ணு பக்தி விஹீ நோ யஸ் சர்வ சாஸ்த்ரார்த்த வேத்யபி பிராமண்யம் தஸ்ய ந பவேத் தச்யோத் பத்திர் நிரூப்யதாம் இத்யாதி –(ய: புத்ர: பிதரம் த்,வேஷ்டி தம் வித்,யாத,ந்யரேதஸம் | யோ விஷ்ணும் ஸததம் த்,வேஷ்டி தம்வித்,யாதந்த்யரேதஸம் ॥| [எந்தப் புத்திரன் பிதாவை துவேஷிக்கிறானோ அவனை மற்றொருவனுடைய ரேதஸ்ஸுக்குப் பிறந்தவனாக அறியலாம்; எவனொருவன் விஷ்ணுவை எப்போதும் த்வேஷிக் கிறானோ அவனைச் சண்டாளனுக்குப் பிறந்தவனாக அறியலாம்)(விஷ்ணு ப,க்தி விஹீநோ யஸ் ஸர்வ ஸாஸ்த்ரார்த்த,வேத்யபி। ப்,ராஹ்மண்யம் தஸ்ய ந ப,வேத் தஸ்யோத்பத்திர் நிரூப்யதாம் || எல்லா ஸாஸ்த்ரங்களின் அர்த்தத்தை அறிந்தவனான போதிலும் எவன் விஷ்ணுப,க்தி யில்லாதவனோ அவனுக்கு ப்.ராஹ்மண்யம் கிடையாது. அவனுடைய உத்பத்தியை நிரூபிக்கலாம்)
ஹிரண்ய கர்ப்பச் சம வர்த்த தாக்ரே பூ தஸ்ய ஜாத பதி ரேக ஆஸீத் – கிரிந்த்ர த்வதுத்தர ஏகோ ஹி ருத்ரோ ந த்விதீயாய தஸ்து -([முதலில் பூ,தங்களுக்கெல்லாம் ஒரே பதியான ஹிரண்ய கர்ப்பன் (ஜீவாத்ம ஸமூஹத்தைத் தன்னுட் கொண்ட பகவான்) இருந்தான்–[ருத்ரன் ஒருவனே; இரண்டாவதாக (ஸஹாயமாக) ஒருவருமில்லை.-ந கிரிந்த்,ர த்வது,த்தரோ ந ஜ்யாயோ ௮ஸ்தி வ்ருத்ரஹந் [இந்திரனே | உன்னைக் காட்டிலும் மேலானவனில்லை ; வ்ருத்ரனைக் கொன்றவனே (உன்னைக் காட்டிலும்) பெரிய வனில்லை.]இத்யாதிகளிலே ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு சர்வேஸ்வரத்வம் ஓதா நிற்க-சிவா சம்ப்வாதி சப்தம் நாராயணனை பிரதி பாதிக்கிறது என் என்று இப் பிரமாணங்களில் அபர்ய வசித்தவன் வைதிகன் அல்லன் என்று ஷேபித்த படி -எங்கனே என்னில் –ச ப்ரஹ்மா ச சிவச் சேந்திர -இத்யாதிகளில் பரிஹரித்தது என்கிறது உத்தரார்தம்–ப்ரஹ்ம ருத்ராதிகளோடே சம்ப்ரதிபந்த ஷேத்ரஞ்ஞன் ஆன-நன்கு அறியப் பட்ட ஜீவன் ஆன – இந்த்ரனையும் பாரதந்த்ர்யமே ஸ்வரூபமான முக்தாத்மா ஸ்வரூபத்தையும் –சமபி -வ்யாபஹரிக்கையாலே -கூடப் படிக்கையாலே –-அவர்கள் உடைய அநீஸ்வரத்வம் சம் ப்ரதிபன்னம் -என்கிறது-
யேதே அபி – இந்த லோகத்திலே ஈஸ்வர தயா பிரசித்தரான இவர்களும்-யஸ்ய–நாராயண பரா வேதா -என்று சர்வ வேதாந்த பிரசித்தியை -நினைக்கிறது-மஹிமார்ணவ விப்ருஷஸதே- சர்வேஸ்வர மகிமை யாகிற கடலிலே ஒரு பிந்து மாதரம் என்று நாராயண அனுவாகம் தானே பரிஹரியா நின்றது -என்கிறார் –யஸ்ய தே –என்று ஸ்ருதி பிரசித்தியையும் தமக்கு அவ்வர்த்தத்தில் உண்டான சாஷாத் காரத்தையும் அருளிச் செய்கிறார் –
ஸ்வா பாவிக அநவதிக அதிசய ஈசித்ருத்வம்-இரண்டு விசேஷணங்கள் இவனுக்கே அசாதாரணம் –
ச ப்ரஹ்மா ச சிவஸ் சேந்த்ரஸ் ஸோஷர -பரமஸ் ஸ்வராட்-முக்தருக்கும் ச ஸ்வராட் பவதி -நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி — ஸ்வ தந்திரம் இங்கு முக்தர்களுக்கு தங்கள் நினைத்த படி கைங்கர்யம் செய்ய-அநேக சரீரம் பரிக்ரஹம் கொண்டு –அவனை மகிழ்விக்க என்றபடி-எந்த வைதிகன் உன் ஐஸ்வர்யம் சகிக்க மாட்டான் என்றது-ஸ்ரீ மன் நாராயணனுடைய ஜகத் காரணத்வம் சர்வ ஸ்வாமித்வம் போன்ற ஐஸ்வர்யத்தை பெறாதவர்கள்-வேத பாஹ்யர்கள் -என்றதாம் – )
ஸ்ரீ மன் நாராயணனே சர்வ ஸ்மாத் பரன்-என்பதை ஸ்தாபித்து அருளுகிறார் –-நாராயண அநுவாகத்திலே சொல்லிற்றே–ச ப்ரஹ்மா ச சிவஸ் சேந்தரஸ் ச அக்ஷரஸ் பரம ஸ்வராட் -(தஸ்ய மத்,யே வஹ்நிஸிகர அணியோர்த்,வா வ்யவஸ்தி,த:। நீலதோயதமமத்,யஸ்த;ா வித்,யுல்லேகேவ பாஸ்வரா | நீவார ஸூகவத் தந்வீ பீதாபாஸ்யாத் தநூபமா| தஸ்யாஸ் ஸிகராயா மத்,யே பரமாத்மா வ்யவஸ்து,த: | ஸ ப்ரஹ்மா ஸ ஸிவஸ்ஸேந்த்,ரஸ் ஸோக்ஷர:பரமஸ் ஸ்வராட் ॥|[அந்த இருதய கமலத்தின் நடுவில், சிறியதும் மேல் நோக்கினதுமான அக்னி ஸிகை, (பரமாத்மாவின் திவ்ய மங்கள விக்,ரஹம்) இருக்கிறது. ( அது) நீலமேகத்தை உட்கொண்ட மின்னல் போல் பிரகாஸமுள்ளதாகவும், நெல் நுனிபோல் சிறிதாகவும், மஞ்சள் நிறமுள்ளதாகவும், ஒப்பற்றதாகவும் இருக்கிறது. அந்த ஸிகையின் நடுவில் பரமாத்மா விளங்குகிறான். அவனே பிரமனுக்கும் அந்தர்யாமி; அவனே ஸிவனுக்கும் அந்தர்யாமி; அவனே இந்திரனுக்கும் அந்தர்யாமி; (பிரமன் முதலியவர்களைக் காட்டிலும்) மேலானவனும், கர்மத்திற்கு வசப்படாதவனும், அழிவற்றவனுமான முக்தாத்மாவுக்கும் அவனே அந்தர்யாமி)முக்தர்கள் கர்ம வஸ்யர்கள் என்றதே-நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி –ஜகத் வியாபார வர்ஜனம் –அவனுக்கு பரதந்த்ரர்களே-ப்ரஹ்மாதிகளுக்கு சொல்லப்படும் ஏற்றம் எல்லாம் உனது பெருமையின் சிறு திவலையே-அவர்களது ஈஸ்வரத் தன்மை ஸ்வாபாவிகமும் இல்லை -அநவதிக அதிசயமும் இல்லையே –கர்ம வஸ்யர்கள் அன்றோ –ஸ்வாபாவிக –-இத்தால் கர்ம உபாதிகமாய் -அத்தாலே அநித்யமாய் துக்க மிஸ்ரமான ப்ரஹ்மாதிகள் ஐஸ்வர்யத்தை வ்யாவர்த்திக்கிறது –-அநவதிக அதிசய- இத்தால் நித்யரையும் முக்தரையும் வ்யாவர்த்திக்கிறது – ஸ்ரீ மன் நாராயணனுடைய ஜகத் காரணத்வம்-சர்வ ஸ்வாமித்வம் -ஐஸ்வர்யம் பொறாதவர்கள் வேத பாஹ்யர்களே அன்றோ –
விந்தையாய் இயற்கையாம் உன் விதப்புறு நாயகத்தை
எந்த மா வைதிகர் தான் பொறுத்திலார் நாரணா நின்
சிந்துவா மஹிமை தன்னில் சிறு துளி யாவர் யன்றோ
நந்தி நான்முகன் வலாரிமுத்தராம் ஏனையோரும் –11-விதப்பு –அதிசயம் -மிகுதி-வைதிகர் -வேதாந்த ஸாஸ்த்ரம் உணர்ந்தவர்-நந்தி -சிவன்-வலாரி -இந்த்ரன்-நாராயணா -இயற்கையையும் ஆச்சர்யமாயும் உன்னிடத்து அமைந்துள்ள உனது ஓப்புயர்வு இல்லாத உபய விபூதி ஸாம்ராஜ்யத்தை -வேதாந்த ஸாரத்தை அறிந்த எவர் தான் பொறுக்க மாட்டார் –பிரமன் சிவன் இந்திரன் முக்தர் முதலிய இவர்கள் எல்லோரும் கடல் போன்ற உன் மஹிமையில் ஒரு துளியே ஆகின்றார்கள் அன்றோ –
—
ஸ்லோகம் -12- அவதாரிகை —இதில் விப்ரதிபத்தி ஷமங்கள் அன்றியிலே-தனித் தனியே பூரணமாய்
வஸ்து சாமர்த்ய அபர நாமங்களான லிங்கங்களாலே பரத்வத்தை அருளிச் செய்கிறார் –இதில், ஆளவந்தார், ஸந்தேஹத்துக்கு இடமளிக்கும் பொதுப் பெயர்களைச் சொல்லாமல், தன்னடையே முழுமையான மற்றும் எம்பெருமானின் பரத்வத்தை நன்றாக வெளியிடும் திருநாமங்களை அருளிச் செய்கிறார்.(நாராயண பரா வேதா தேவா நாராயணாங்க,ஜா: | நாராயணபரா லோகா நாராயணபரா மகா: ॥ [வேதங்கள் நாராயணனைச் சொல்லுபவை ; தேவர்கள் நாராயணனுடைய அங்க,த்திலிருந்து உண்டானவர்கள் ; நாராயணனைப் பற்றியிருப்பவை உலகங்கள் ; யாகங்கள் நாராயணனை ஆராதி,ப்பவை)
கஸ்ஸ்ரீ ஸ்ரீய பரம சத்த்வ சமாஸ்ரய க
க புண்டரீக நயன புருஷோத்தம க
கஸ்யா யுத அயுத சதா ஏக கலா அம்சக அம்சே
விச்வம் விசித்திர சித் அசித் ப்ரவிபாக வ்ருத்தம்—12-
கஸ்ஸ்ரீ ஸ்ரீய -திருவுக்கும் திருவாகிய செல்வன் யார்
பரம சத்த்வ சமாஸ்ரய க-சிறந்த சுத்த சத்வ குணத்துக்கு இருப்பிடம் யார்-பிரமன் ரஜோகுண அதிகன் -ருத்ரன் தமோகுண அதிகன் அன்றோ
க புண்டரீக நயன -செங்கண் மால் யார்-உயிர்களுக்கு எல்லாம் தாயாய் அளிக்கிற தண் தாமரைக் கண்ணன் யார்–தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ
புருஷோத்தம க–புருஷோத்தமன் எனப்படுபவன் யார்
கஸ்யா யுத அயுத சதா ஏக கலா அம்சக அம்சே-எவனுடைய அநேகம் ஆயிரம் கோடி பாகங்களின் ஒரு பகுதியில்
விச்வம் விசித்திர சித் அசித் ப்ரவிபாக வ்ருத்தம்—இப்பிரபஞ்சம் முழுவதும் விசித்திரமான சேதந அசேதன பிரிவுகளை உடையதாக இருக்கின்றது-அவனுடைய ஸ்வரூப ஏக தேசத்தில் சகல கார்ய வர்க்கங்களும் அடங்கும்
ஸ்ரீ: என்று சொல்லப்படும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் செல்வம் யார்? யாரிடத்தில் சுத்த ஸத்வம் உள்ளது?
யார் புண்டரீகாக்ஷன்? யார் புருஷோத்தமன் என்று சொல்லப்படுபவன்? யாருடைய ஸங்கல்பத்தின் ஒரு சிறு பகுதி, பலவகைப்பட்ட சேதனர்கள் மற்றும் அசேதனப் பொருள்களாக விரிந்திருக்கும் இவ் வுலகத்தைத் தாங்குகிறது?
கஸ்ஸ்ரீ ஸ்ரீய –ஈஸ்வர வ்யதிரிக்த சகல சேதனமும் தம் தாமுடைய ஸ்வரூப ரூப ஸ்தித்யாதிகளுக்காக
பற்ற வேண்டும்படியான மேன்மை யுடைத்தான பிராட்டியும்-தன்னுடைய ஸ்வரூப ரூப ஸ்தித் யாதிகளுக்காக பற்ற வேண்டும்படியான மேன்மையை உடையார் உன்னை ஒழிய ஆர் –-கிம் ஷேப –ஆர்த்தமாக இல்லை -என்றபடி –ஈஸ்வரீம் சர்வ பூதானாம் -(க,ந்த,த்,வாராம் து,ராத,ர்ஷாம் நித்யபுஷ்டாம் கரீஷிணீம்। ஈஸ்வரீம் ஸர்வபூ,தாநாம் தாமீஹோபஹ்வயே ஸ்ரியம் ॥ [கீர்த்தியைத் தருபவளும், ( து;ஷ்டர்களால் ) அடைய முடியாதவளும், எப்போ தும் ஸம்ருத்,தி,யை. உடையவளும், எல்லா ஸம்பத்துகளையும் உடையவளும், எல்லா பூ,தங் களுக்கும் ஈங்வரியுமான ஸ்ரீதேவியை இங்கு அழைக் கிறேன்.])–அஸ்ய ஈசானா ஜகதோ விஷ்ணு பத்நீ – திருவுக்கும் திருவாகிய செல்வா –பெரிய திருமொழி -7-7-1- ([இந்த உலகிற்கெல்லாம் ஸ்வாமினியாகவும், விஷ்ணுவுக்குப் பத்னியாகவும் இருப்பவளும்,) என்னக் கடவது இறே-பரம சத்த்வ சமாஸ்ரய க –பரம -சப்தத்தாலே ரஜஸ் தமஸ் ஸூக்களையும் அத்தோடு சமபிவ யாஹ்ருதமான சத்வத்தையும் வ்யாவர்த்திக்கிறது-ஸூத்த சத்வத்துக்கு ஆஸ்ரயமான விக்ரஹாதிகளை உடையவன் ஆர்-மகான் ப்ரபுர்வை புருஷ சத்த்வஸ் யைஷ ப்ரவர்த்தக – ஆதித்ய வர்ணம் தம்ஸ பரஸ்தாத் –க புண்டரீக நயன –([மஹாபுருஷனே ! (மோக்ஷ) பலத்தைக் கொடுக்கக்கூடியவன். இவனே ஸூத்த,ஸத்வத்திற்கு ப்ரவர்த்தகன்-வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதி,த்யவர்ணம் தமஸ; பரஸ்தாத்। தமேவம் வித்,வாநம்ருத இஹ பவதி -… நாந்ய: பந்தள வித் மதே5யநாய ॥ [(வேத,புருஷனாகிய) நான் (ஸ்வரூப ரூப கு,ண விபூ,திகளில்) பெரியவனும், ஸுர்யன் போல் ப்ரகாஸிப்பவனும், ப்ரக் ருதிக்கு அப்பாற்பட்டவனுமான இந்தப் புருஷனை அறிகிறேன். அவனை இம் மாதிரி அறிபவன் இங்கேயே முக்தனக ஆகிறான். மோக்ஷத்திற்கு ( அவனைத் தவிர ) வேறு வழி கிடையாது )
ஸுவ அனுபவ ஆனந்த த்ருப்தியாலும்-ஆஸ்ரித அர்த்தமான நீர்மைகளுக்கு பிரகாசமாயும் சர்வேஸ்வரத்வ ஸூசகமான திருக் கண்களை உடையவன் ஆர் –தஸ்ய யதா –புண்டரீகம் ஏவம் அஷிணீ –-(ய ஏஷோ$ந்தராதி,த்யே ஹிரண்மய: புருஷோ த்,ருஸ்யதே ஹிரண்யஸ் மஸ்ருர் ஹிரண்யகேஸ ஆப்ரணகராத் ஸர்வ ஏவ ஸுவர்ண: | தஸ்ய யத கப்யாஸம் புண்ட, ரீகமேவமக்ஷிணீ॥।[ஸுர்யனுக்கு நடுவில் தங்கம் போல் அழகிய உருவை யுடைய எந்த இந்தப் பரம புருஷன் காணப்படுகிறானோ, அவன் ஸுவர்ணம் போன்று அழகான மீசையையும், கேஸங்களையும், எல்லா அவயவங்களையும் உடையவன். அவனுக்கு ஸுர்யனால் மலரும் தாமரை போன்ற இரு கண்கள் உள.])-மஹா வராஹ ஸ்புட பத்ம லோசன-(ததஸ் ஸமுத் க்ஷிப்ய தராம் ஸ்வத;ம்ஷ்ட்ரயா மஹா வராஹ: ஸ்புட பத்மலோசந: |ரஸாதலாதுத் பல பத்ர ஸந்நிப,: ஸமுத்ததோ நீல இவாசலோ மஹாந் ॥ [மலர்ந்த தாமரை போன்ற திருக் கண்களை உடையவரும், நீலோத்பலமலரின் இதழ் போன்ற நிறத்தை யுடையவருமான மஹா வராஹ ஸ்வரூபியான பகவான் தன்னுடைய தந்தத்தால் பூதேவியை ரஸாதலத்திலிருந்து எடுத்துக் கொண்டு பெரிய நீல மலை போல் கிளம்பினார்) –ஜிதந்தே புண்டரீ காஷ –-தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா -பெரிய திருமொழி -7-7-9–புருஷோத்தம க – உன்னை ஒழிய புருஷாணாம் உத்க்ருஷ்ட தமராய் இருக்கிறார் ஆர் –-யஸ்மாத் ஷரமதீ தோஹம்-இத்ராப்ய-அதோ அஸ்மி லோகே வேதே ச பிரதித புருஷோத்தமா -ஸ்ரீ கீதை -15-38-(நான் ஞானத்தில் ஏற்றக் குறைவுகளுள்ள ஸம்ஸாரி புருஷனை அதிக்ரமித்திருப்பதாலும், ஞானத்தில் ஏற்றக் குறைவுகளற்ற . முக்த புருஷனைக் காட்டிலும் மேலானவனா யிருப்பதாலும், ஸ்ருதியிலும், ஸ்ம்ருதியிலும் புருஷோத்தம னென்று பிரஸித்தி,பெற்றிருக்கிறேன்)என்று ஆப்தரான தேவரீரே அருளிச் செய்திலீரோ –
கஸ்யா யுத அயுத சதா ஏக கலா அம்சக அம்சே விச்வம் விசித்திர சித் அசித் ப்ரவிபாக வ்ருத்தம் – விசித்திர சித் அசித் ப்ரவிபாக வ்ருத்தம் -கஸ்ய அயுத அயுத சதா ஏக கலா அம்சக அம்சே –-சித் அசித் விபாகத்தாலும் வர்த்திக்கிற இந்த ஜகத் விசித்ரமாய்க் கொண்டு ஆருடைய சங்கல்ப சதா சஹாஸ்ராயுதைக தேசத்தில் வர்த்திக்கிறது –கர்மத்தால் வந்த சதுர்வித சரீரங்களும்–தத் போக்யாதிகளும்–அம்சம் என்று கலோபாதிகம் –-அல்பார்த்தத்திலே- பாதோ அஸ்ய விஸ்வா பூதானி –யஸ்ய அயுத அயுத அம்ஸ அம்சே – மேரோரிவாணுர் யஸ்யை தத் – இதம் க்ருத்ஸ்நம் ஏகாம்சேன ஸ்திதோ ஜகத் -இத்யாதி-(ஏதாவாநஸ்ய மஹிமா அதோ ஜ்யாயாம்ஸ்ச பூருஷ: |பாதேரஸ்ய விஸ்வா பூ,தாநி த்ரிபாதஃஸ்யாம்ருதம் திவி ॥ [இவனுடைய மஹிமை இப்படிப்பட்டது. பரமபுருஷன் இதைக்காட்டிலும் மேலானவன், எல்லா உலகங்களும் இவனுடைய ((விபூ,தியில்) கால் பாகம்; பரமபதத்தில் இவனுடைய (விபூ,தியில்) அழிவற்றதான முக்கால் பாக, மிருக்கிறது)
(வேதாந்தாஸ் -தத்வ சிந்தாம் முரபிதுரஸி யத் பாத சிஹ்னைஸ் தராந்தி-திருவுக்கும் திருவாகிய செல்வன் – தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அக்ஷணீ –பரத்வ லிங்கங்கள் –க க கஸ்ய கஸ்ய-கேள்விகள்-மேலே -14- த்வத் அந்நிய க –உன்னை தவிர வேறே யார் -என்று எம்பருமானையே நேராக ஸ்பஷ்டமாக –கேட்டு-நீயே பரம்பொருள் என்று விஞ்ஞாபித்த படி )
யஸ்யாயுதா யுதாம் சாம்சே விஸ்வ சக்திரியம் ஸ்திதா மேரோரிவாணுர் யஸ்ய தத் ப்ரஹ்மாண்ட அகிலம் முநே –(யஸ்யாயுதாயுதாம்மாம்மே விஸ்வமுக்திரியம் ஸ்தி,தா |பரப்,ரஹ்ம ஸ்வரூபஸ்ய ப்ரணமாமஸ்தமவ்யயம் || [பரப்,ரஹ்ம ஸ்வரூபியான எவனுடைய பல்லாயிரத்தில் ஒரு பாகத்தில் உலகமாகிற ஸக்தி நிலைகிற்கிறதோ, குறை வற்றவனான அவனை வணங்குகிறோம்-மேரோரிவாணுர் யஸ்யை தத் ப்,ரஹ்:மாண்ட,மக,லம் முநே [முனிவரே ! இந்த ப்ரஹ்மாண்ட,ம் முழுவதும் எவனுக்கு, மேருவுக்கு அணுவைப் போலாகிறதோ)இத்யாதி பிரமாணங்கள்-அவனே சர்வ வியாபகன்-ப்ரஹ்மாதிகள் இவனுடைய ஏகதேசத்தில் அடங்கி உள்ளார்கள் என்பதை பறை சாற்றும்-ஸ்ரீ கீதையில் விஸ்வரூப அத்தியாயத்தில் (விஷ்டப் யாஹமித,ம் க்ருத்ஸ்நமேகாம்மேநஸ்தி,தோ ஜகத்[நான் இவ்வுலகையெல்லாம் (எனது) ஒரு அம்ஸத்தினால் தரித்துக் கொண்டிருக்கிறேன்)அர்ஜுனன் வியந்து நின்றானே-அயுதம் -பதினாயிரம் கலா என்றும்-அம்சம் -ஏக தேசம் என்றும் காட்டும் இவனே சர்வ ஸ்மாத் பரன் என்பதை த்ருடப்படுத்தி அருளுகிறார்–வேதாந்தாஸ் தத்வ சிந்தாம் முரபிதுரசி யத் பாத சிஹ்னைஸ் தரந்தி–ஸ்ரீ குணரத்னகோசம்-விசித்திரம் –தேவ மனுஷ்யாதி ரூபா பேதம்-போக்ய போக உபகரணங்கள் போக ஸ்தானங்கள் -என்கிற விபாகங்கள்-வ்ருத்தம் -நிலை நிற்கிற படியைச் சொல்லும்-இதிலும் அடுத்த இரண்டு ஸ்லோகங்களிலும் கேள்விகள்-14-ஸ்லோகத்தில் த்வத் அந்ய க –உன்னைத் தவிர வேறே யார் -ஸ்பஷ்டமாக இருக்கும்-ஆகவே நீயே பரம் பொருள் என்று விஞ்ஞாபித்து அருளுகிறார் –
ஆர் திருவுக்கும் திருவாகுபவன் ஆனார் பரம ஸத்வ ஸ்வரூபம் உளனார்
ஆர் மலரும் தாமரையின் கண்ணுடையவன் யாவன் புருஷோத்தமன் எனும் பெயர் உளான்
ஆருடை ஸ்வரூபம் அதில் ஆயிரத்து ஆயிரம் கோடி பதினாயிரம் அதில்
ஆர் கலையினோர் சிறிய பாகம் அதில் அகில பிரபஞ்சமும் அடங்கி உளதே –12—திருவுக்கும் திருவாகுபவன் யாவன் -ஸ்ரீ மஹா லஷ்மிக்கும் ஒரு சம்பத்தாய் அமைந்துள்ளவன் யாவன்-ஸூத்த ஸத்வ ஸ்வரூபம் யுடையவன் நீ யல்லாமல் வேறே யாவன்-ஸர்வேஸ்வரத்வத்தைக் குறிப்பிக்கும் மலர்ந்த தாமரை போன்ற திருக்கண்களை யுடையவன் வேறு யாவன்-புருஷோத்தமன் என்னும் பெயரை யுடையவன் உன்னிலும் எவன்-சரீர போக்யாதிகளால் அத்யந்தம் வேறு பட்டு இருக்கிற சேதன அசேதன கங்களுடைய வியாபகத்தோடு கூடிய அகில பிரபஞ்சமும் உன்னை விட மற்று எவனுடைய ஸ்வரூபத்தில் பலகோடி நூறு ஆயிரங்களின் ஒரு சிறு பங்கில் அடங்கி இருக்கின்றது –
—
ஸ்லோகம் -13-அவதாரிகை –இதிஹாச புராண ப்ரக்ரியையாலே ப்ரஹ்ம ருத்ராதிகள் உடைய
ஷேத்ரஜ்ஞத்வத்தையும் பகவத் பரத்வத்தையும் அருளிச் செய்கிறார் –ஆளவந்தார் ப்ரஹ்மா, ருத்ரன் ஆகியோரின் க்ஷேத்ரஜ்ஞத்வத்தையும் (ஜீவாத்மாவாக இருக்கும் தன்மையையும்) பகவானின் பரத்வத்தையும், இதிஹாஸ மற்றும் புராணங்களில் உள்ள சரித்ரங்களைக் கொண்டு அருளிச் செய்கிறார்..
வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாத்
யாபத் விமோசன மஹிஷ்ட்ட பலப்ரதானை
கோ அந்ய ப்ரஜாப ஸூ பதி பரிபாதி கஸ்ய
பாதோ தகேந ச சிவஸ் ஸ்வ சிரோத்ருதேந–13-
வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாத் யாபத் விமோசன மஹிஷ்ட்ட பலப்ரதானை–இவை போன்ற இவர்கள் ஆபத்துக்களை விடுவிப்பதானாலும்-உயர்ந்த பலன்களை அளித்து அருளுவதாலும்
ஸ்ரீ ஹயக்ரீவ அவதாரம் எடுத்து -மது கைடபர்களை அழித்து வேதங்களை மீட்டு அருளி-சோமுகன் அசுரன் இடம் இருந்து ஸ்ரீ மத்ஸ்ய அவதாரம் எடுத்து அருளி–ஹம்ஸாவதாரத்தாலும் வேதங்களை அருளி
குரு பாதகம் –குரு விஷயமான மஹா பாதகம்
தைத்ய பீடாத்-தைத்ய பீடை -அந்தகாசுரன் –வ்ருகாசூரன்-ஹிரண்ய ராவணாதிகள்
ஆதி -இவை முதலாக பல ஆபத்துக்களையும் போக்கி ரஷித்து அருளினவன்
ரக்ஷணம் -அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும்
மஹிஷ்ட்ட பலப்ரதானை-சாமான்ய ஜீவர்களை ஈஸ்வரர் என்று கொண்டாடும் படி ஆக்கி அருளினவன்
யுக கோடி சஹஸ்ராணி விஷ்ணும் ஆராத்ய பத்ம பூ -புநஸ் தரை லோக்ய தாத்ருத்வம் ப்ராப்தவா நிதி சுச்ரும -என்றும்
ப்ரஹ்மாதயஸ் ஸூராஸ் சர்வே விஷ்ணும் ஆராத்ய தே புரா ஸ்வம் ஸ்வம் பதம் அநு பிரதா-என்றும்
கேசவஸ்ய ப்ரசாததஸ் –என்றும் பிரமாணங்கள் உண்டே
கோ அந்ய -உன்னைத்தவிர வேறே யார்
ப்ரஜா பஸூ பதி பரிபாதி கஸ்ய-பிரஜாபதியான பிராமனையும் பசுபதியான சிவனையும் ரஷிப்பார் யார்
பாதோ தகேந ச சிவஸ் ஸ்வ சிரோத்ருதேந–அந்த சிவனானவன் தனது தலையிலே தரிக்கப்பட்ட
யாருடைய ஸ்ரீ பாத தீர்த்தத்தால் பரிசுத்தனானான்
சதுமுகன் கையில் சதுப்புயன் தாளில் சங்கரன் சடையினில் தங்கிக் கதிர் முக மணி கொண்டு
இழி புனல் கங்கை –பெரியாழ்வார்
ததம்பு பரயா பக்த்யா ததார சிரஸா ஹரஸ் பாவனார்த்தம் ஜடா மத்யே –ஈஸ்வர சம்ஹிதை
யஸ் ஸுவ்சனிஸ் ஸ்ருத சரித் ப்ரவரோதகேந தீர்த்தேன மூர்த்நீ விக்ருதேன சிவச் சிவோ பூத் –ஸ்ரீ மத் பாகவதம்
ப்ரஜாபதி என்று சொல்லப்படும் பிரமனையும், பசுபதி என்று சொல்லப்படும் ருத்ரனையும் மற்றும் இந்திரனையும் முறையே அவர்களுக்கு வந்த ஆபத்தான வேதம் திருடப்பட்டு அதை இழந்ததையும்,
தன்னுடைய தந்தையின் தலையைக் கிள்ளிய பாபத்தையும், அஸுரர்களால் ஏற்பட்ட துன்பத்தையும் போக்கியவன் யார்? யாருடைய ஸ்ரீபாத தீர்த்தத்தைத் தலையில் தாங்கி, ருத்ரன் புனிதத் தன்மையை அடைந்தான்?
வேத அபஹார –
யோ வை வேதாம்ஸ்ச-என்று ப்ரஹ்மாவுக்கு வேத சஷூஸ்சைக் கொடுக்க -அது அசுரர்களாலே அபஹ்ருதமாக ப்ரஹ்மா வேதத்தை இழந்து துக்காந்தர் நிமக்நனான அளவிலே விரோதிகளை அழியச் செய்து மீட்டுக் கொடுத்த உபகாரத்தைச் சொல்லுகிறது-
ததோ ஹ்ருதேஷூ வேதேஷூ ப்ரஹ்மாணம் காசமஅவிசத் – ததோ வசனமீஸாநம் ப்ராஹ வேதைர் விநாக்ருத ப்ரஹ்மா வேதா மே பரமம் சஷூ வேதா மே பரமம் தனம் வேதா மே பரமம் தாம வேதா மே ப்ரஹ்ம சோத்தமம் மம வேதா ஹ்ருதாஸ் சர்வே தானவாப்யாம் பலாதித்த அந்த காரா இமே ஜாதா லோகா வேதைர் விவர்ஜிதா வேதா த்ருதே ஹி கிம் குர்யாம் லோகன் வை ஸ்ரஷ்டுமுத்யத
அஹோ பத மஹத் துக்கம் வேத நாச நஜம் மம ப்ராப்தம் து நோதி ஹ்ருதயம் மாம் து சோகாமயஸ் த்வயம்-ஜக்ராஹ வேதா ந கிலான் ரஸா தல கதான் ஹரி ப்ராதாச்ச ப்ரஹ்மனே ராஜன் ததாஸ் ஸ்வாம் ப்ரக்ருதிம் யயௌ ததஸ் தயோர் வதே நாஸூ வேதோ பஹரனேந ச- சோகாப நயனம் சக்ரே ப்ரஹ்மன புருஷோத்தம -இத்யாதி([பிறகு, வேதங்கள் அபஹரிக்கப்பட்டவுடன், பிரமனை அஜ்ஞானம் பீடித்தது. அதன் பின் வேதங்களை இழந்த அவன ஈசனைக் குறித்துப் (பின்வருமாறு) பேசினான். பிரமன்; *வேத,ங்களே எனக்கு உயர்ந்த கண்; வேதங் களே எனக்கு மேலான தனம்; மறைகளே எனக்கு மேலான தேஜஸ்; வேதங்களே எனக்கு உயர்ந்த ப்ரஹ்மம். அஸாுரர்களுடைய பலத்தினால் இங்கிருந்து என்னுடைய எல்லா வேத,ங்களும் அபஹரிக்கப் பட்டன. வேத,ங்களற்ற இவ்வுலகங்களெல்லாம் இரு ளடைந்தன. லோகங்களை ஸ்ருஷ்டிக்க ஆரம்பித்த நான் வேத,மில்லாமல் என் செய்வேன் ? ஐயோ ! வேதங்கள் நஸித்ததினால் எனக்குப் பெரிய துக்கும் வந்து சேர்ந்தது; என்னை அடைந்த இந்த மோக மாகிய வியாதி (என்) மனத்தைத் துன்புறுத்துகிறது”…… ஹரியானவர் ரஸாதலத்திலிருந்த எல்லா வேதங்களையும் எடுத்துப் பிரமனிடம் கொடுத்தார். அரசனே! பிறகு (அப்பிரமன்) தன் இயற்கை நிலையை அடைந்தனன். இப்படி (மது,கைடப,ர்களென்னும்) அவ் விருவரையும் கொன்றதாலும், வேதத்தை மீட்டுக் கொணர்ந்ததாலும், புருஷோத்தமன் பிரமனுடைய ஸோகத்தைப் போக்கடித் தான்.])
குரு பாதக –
ருத்ரன் லோக குருவும் பிதாவுமாய் இருக்கிற ப்ரஹ்மாவை துர்மானமே ஹேதுவாக தலையை அறுத்துப் பாதகியான பாதகத்தையும் போக்கி-தலை அறுப்புண்ட ப்ரஹ்மாவையும் ஜீவிக்கும்படி பண்ணி ரஷித்த படி-
ஸ்ரீ மாத்ச்யே-தேவீம் ப்ரதி ருத்ர -தத கரோத பரீதேன சம்ரக்தனய நேன ச வாமாங்குட்ட நாகாக் ரேன சின்னம் தஸ்ய சிரோ மயா–ப்ரஹ்மா -யசமாத நபரா தஸ்ய சின்னம் த்வயா மம தஸ்மாச்சா பசமா விஸ்ட கபாலீ தவம் பவிஷ்யசி ருத்ர -ப்ரஹ்ம ஹாஸ் ஸ் குலிதோ பூத்வா சரண தீர்த்தானி பூதலே
ததோ அஹம் கதவான் தேவி ஹிமவந்தம் சிலோச்ச்சயம்-தத்ர நாராயணஸ் ஸ்ரீ மான் மயா பிஷாம் பிரயாசித்த ததச்தேன ஸ்வகம் பார்ச்வம் நகாக்ரேன விதாரிதம் மஹதீ ஸ்ரவதீ தாரா தஸ்ய ரக்தச்ய நிஸ் ஸ்ருதா விஷ்ணு பிரசாதாத் ஸூ ஸ்ரோணி கபாலம் தத் சஹஸ்ரதா ஸ் புடிதம் பஹூதா யாதம் ஸ்வப்ன லப்தம் யதா -இத்யாதி-([தேவியைக் குறித்து ருத்ரன்: “பிறகு கோபத்தை யுடையவனும், சிவந்த கண்களை உடையவனுமான என்னால், அப்பிரமனுடைய தலை இடதுகைக் கட்டைவிரல் நகத்தின் நுனியால் கிள்ளப்பட்டது’. பிரமன்:– “அபராத, மற்ற என்னுடைய தலை, உன்னால் அறுக்கப்பட்டபடியால் நீ பாபத்தை அடைந்து கபாலியாக (கபாலத்துடன் கூடிய வனாக) ஆவாய்.” ருத்ஜன்:- தேவி! ப்,ரஹ்மஹத்தி செய்த வனாயும் கலங்கினவனாகவும் பூமியில் தீர்த்தங்களைச் சுற்றிக் கொண்டிருந்த நான் அதற்குப் பின் ஹிமாசல மலைக்குச் சென்றேன். அங்கு ஸ்ரீமந் நாராயணன் என்னால் பிச்சைக்காக யாசிக்கப்பட்டான். அதன் பின் அவனால் தன் (தே,ஹத்தில்) ஒரு பாகம் நகத்தின் நுனியால் கீறப் பட்டது. அதிலிருந்து பெரிதாக வெள்ளமிடும் ரத்த தாரை பெருகியது. …… அழகிற் சிறந்தவளே! விஷ்ணுவினுடைய அருளினால் அக் கபாலம் ஆயிரக் கணக்கான பல துண்டுகளாக வெடித்து, கனவில் கிடைத்த பணம்போல் போயிற்று)
தைத்ய பீடாத் யாபத் விமோசன –-ஹிரண்ய ராவணாதிகள் என்ன –-த்ரிபுரத்தில் அசுரர்கள் என்ன-ஆதி சப்தத்தாலே-துரவாசஸ் சாபாதிகளை நினைக்கிறது – இவர்களால் தேவதைகளுக்கு வரும் ஆபத்தைப் போக்கி-மஹிஷ்ட்ட பலப்ரதானை--ஷேத்ரஜ்ஞத் வேன சம்ப்ரதி பன்னரான அவர்களுக்கு-ஸ்வ சமாராதா நத்தாலே-லோகம் அடங்க-ஈஸ்வரன் என்று கொண்டாடும் படியான பதங்களைக் கொடுத்த படியாலே–
யுக கோடி சஹஸ்ராணி விஷ்ணும் ஆராத்ய பத்மபூ புநஸ் த்ரை லோகய தாத்ருத்வம் ப்ராப்தவாநிதி ஸூ ச்ரும-([தாமரையில் பிறந்த நான்முகன் ஆயிரங்கோடி யுகங்கள் விஷ்ணுவை ஆராதித்து மறுபடியும் மூவுலகிற்கும் பதியா யிருக்கும் தன்மையை அடைந்தானென்று கேள்விப்படு கிறோம்)என்றும்-ப்ரஹ்மா தயஸ் ஸூ ராஸ் சர்வே விஷ்ணும் ஆராத்ய தே புரா ஸ்வம் ஸ்வம் பதம் அநு ப்ராப்தா கேசவச்ய பிரசாத்த –([பிரமன் முதலிய எல்லா தேவர்களும் முன் விஷ்ணுவை ஆராதித்து, தங்கள் தங்கள் பதவிகளைக் கேஸவனுடைய அருளாலே பெற்றார்கள்.])என்றும்-ஏவமேஷாஸ் ஸூ ராணாம் ச ஸூ ராணாஞ்சாபி சர்வச பயா பயங்கர கிருஷ்ணஸ் சர்வ லோகேஸ்வரபிரபு -([இம்மாதிரியாக (௩மக்கு) ஸ்வாமியும், எல்லா உலகங் களுக்கும் ஈஸ்வரனுமான இந்த க்ருஷ்ணன் அஸூரர்களுக்கும் தேவர்களுக்கும் எக் காலத்திலும் (முறையே) பயத்தையும், அபயத்தையும் அளிப்பவன் .)என்றும்-
கோ அந்ய ப்ரஜாப ஸூ பதி பரிபாதி –பிரஜா பஸூ பதிகளைத் தம் தாமால் வந்த ஆபத்துக்களோடு
பிறரால் வந்த ஆபத்துகளோடு வாசி அற சாகல்யேன ரஷிக்கிறான் மற்று எவன் –கஸ்ய பாதோ தகேந ச சிவஸ் ஸ்வ சிரோ த்ருதேந-ஆருடைய திருவடிகளின் நின்றும் விழுந்த ஜலத்தை ஜடையிலே தரிக்கையாலே அந்த ருத்ரன் சிவனாயிற்று -சுத்தனாயிற்று-அவன் அசுத்தியை விளைத்து கொள்ளவும் அவனை சுத்தனாக்கும் பரம பாவனன் உன்னை ஒழிய வேறு ஆர் தான் –
த்ரவீபூ தஸ் ததா தரமோ ஹரி பக்த்யா மஹா முனே
க்ருஹீத்வா தர்ம பாநீயம் பதம் நாதஸ்ய துஷ்டயே
ஷாளிதம் பரா பக்த்யா பாத் யார்க்யாதி பிரர்ச்சிதம்
ததம்பு பதிதம் த்ருஷ்ட்வா ததார சிரஸா ஹர
பாவ நாரத்தம் ஜடா மத்யே யோகயோ அஸ்மீத்யவ தாரணாத்
வர்ஷா யுதாந்யத பஹூன் ந முமோச ததா ஹர-([ரிஷி ஸ்ரேஷ்ட,ரே! (பகவான் திருவுகைளந்தருளின) அச்சமயம், ஹரியினிடம் பக்தியினால் தர்மம் ஜலமாயிற்று. தர்மமாகிய அந்த ஜலத்தை எடுத்து, ஜகந்நாத,னுடைய ஸந்தோஷத்திற்காக (அவனுடைய) திருவடி யானது (என்னால்) மேலான பத்தியுடன் விளக்கப்பட்டது; பாத்யம், அர்க்,யம் முதலியவைகளாலும் பூஜிக்கப்பட்டது. விழுந்த அந்த ஜலத்தைப் பார்த்து, நான் (பரிஸூத்தப் படுத்தத்) தகுந்தவனாயிருக்கிறேன்’ என்று நிஸ்சயித்து, சிவன் தன்னைப் பரிஸூத்,தப்படுத்திக் கொள்வதற்காக ஜடையின் நடுவில் தலையால் தாங்கினான். பிறகு, பல பதினாயிரக்கணக்கான வருஷங்கள், உருத்திரன் அப்படியே(அதை) விடவில்லை)என்றும்-
சதுர் முகன் கையில் சதுப் புயன் தாளில் சங்கரன் சடையினில் தங்கி
கதிர் முக மணி கொண்டு இழி புனல் கங்கைக் கண்டம் என்னும் கடி நகரே -பெரியாழ்வார் திரு மொழி -4-7-3-
நலம் திகழ சடையான் முடிக் கொன்றை மலரும் நாரணன் பாதத் துழாயும் கலந்து
இழி புனல் -பெரியாழ்வார் திரு மொழி -4-7-2-
யுக கோடி சஹஸ்ராணி விஷ்ணும் ஆராத்ய பத்ம பூ –புனஸ் த்ரை லோக்ய தாத்ருத்வம் ப்ராப்தவா நிதி சுச்ரும -என்றும்-ப்ரஹ்மாதயஸ் ஸூராஸ் சர்வே விஷ்ணும் ஆராத்ய தே புரா-ஸ்வம் ஸ்வம் பதம் அநு ப்ராப்தா கேசவஸ்ய ப்ரசாதத-என்றும் ஸ்ருதிகள் உண்டே –
மங்கை பாகன் சடையில் வைத்த கங்கை யார் பாதத்து நீர் -வனச மேவு முனிவனுக்கு மைந்தன் ஆனதில்லையோ
செங்கையால் இரந்தவன் கபாலம் ஆர் அகற்றினார் -செய்ய தாளின் மலரான் சிரததில் ஆனதில்லையோ –
வெம் கண் வேழ மூலம் என்ன வந்தது உங்கள் தேவனோ -வீறு வாணன் அமரில் அன்று விறல் அழிந்தது அல்லையோ –
அம் கண் ஞாலம் உண்ட போது வெள்ளி வெற்பு அகன்றதோ – ஆதலால் அரங்கன் அன்றி வேறு தெய்வம் இல்லையே –-ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் -)
வேதம் அபகாரம் உறு நாளிலும் குரூர குரு பாதகம் விளை நாளினும்
தீதர அசுரர் செயிட ராதிபல வாப தங்க டீர்த்தருண் மகோத்தம பலன்
போதன் அரனார்க்கு அருள் புரிந்த பரதேவன் எவன் புகலில் யுனை யல்லாது எவன்
பாத மலர் ஆதரவின் பாய் நதி புனல் தன் தலை ஏந்து சிவன் ஏந்து சிவமே –13–ஆபதம் -ஆபத்து
போதன் -பிரமன்-சிவம் -மங்களம் -நன்மை –வேதமானது மது கைடபர்களால் அபஹரிக்கப் பட்ட காலத்திலும் – தனது பிதாவும் குருவுமான பிரமனுடைய தலையைக் கொய்தலால் யுண்டான குரூரமான குரு பாதகம் சிவனுக்கு நேரிட்ட காலத்திலும்-திரிபுர அசுரர் முதலிய அசுரர்களால் யுண்டான பீடையாதி ஆபத்துக்கள் நேரிட்ட காலத்திலும்-அவைகளின் நின்றும் விடுவித்து தன்னைப் பிரார்த்தித்ததால் லோகத்தில் ஈஸ்வரன் என்று கொண்டாடும் படியான பதவியை பிரம ருத்ராதிகளுக்குக் கொடுத்து அவர்களுக்கு ரக்ஷகனான நீ அன்றி வேறு யார் உள்ளான்
எவனுடைய ஸ்ரீ பாத தீர்த்தத்தைத் தன் தலை மேல் கொண்டதனால் சிவன் மங்களத்தை அடைந்தான் –
—
ஸ்தோத்ரம் -14- அவதாரிகை –பிரமாண அனுகூலமான தர்க்க ரூப ந்யாயத்தாலே உக்தமான பரத்வத்தை நியமிக்கிறவர் -ஆளவந்தார் எம்பெருமானின் பரத்வத்தை சாஸ்த்ரத்துக்கு அனுகூலமான ந்யாயத்தின் மூலமாக நிரூபித்து, (இந்த ஐந்து பாசுரங்களின் தொடரை) முடிக்கிறார்.
கஸ்யோ தர ரே ஹர விரிஞ்சி முக ப்ரபஞ்ச
கோ ரஷதீ மமஜ நிஷ்ட ச கஸ்ய நாபே
க்ரந்த்வா நிகீர்ய புனருத் கீரதி தவ தன்ய
க கேன வைஷ பரவாநிதி சக்ய சங்க—14-
யாருடைய வயிற்றில் ருத்ரன், ப்ரஹ்மா முதலியவர்களும் இவ்வுலகமும் அடங்கியது? யார் இந்த உலகத்தைக் காப்பவன்? யாருடைய திருநாபியிலிருந்து இவ்வுலகம் படைக்கப்பட்டது? உன்னைத் தவிர வேறு யாரால் இவ்வுலகம் அளக்கப்பட்டு, விழுங்கப்பட்டு மீண்டும் வெளியே உமிழப்பட்டது? இவ் வுலகத்தின் தலைவன் யார் என்பதில் ஸந்தேஹம் இருக்க முடியுமா?
ஹர விரிஞ்சி முக ப்ரபஞ்ச -சிவன் பிரமன் முதலான உலகம்
கஸ்ய உதரே–யாருடைய வயிற்றில் இருக்கிறது-உதரே–பிரளய காலத்தில் ப்ரஹ்மத்திடம் அனைத்தும் உள்ளனவே-நின்னுள்ளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும் நின்னுள்ளே அடங்குகின்ற -என்பதால்
திரு வயிற்றின் உள்ளே என்றது தன்னுள்ளே என்றபடி-நாராயணே பிரலீ யந்தே-லீயதே பரமாத்மனி
கோ ரஷதீ இமம் –இந்த பிரபஞ்சத்தை யார் காப்பாற்றுகிறார் –-காக்கும் இயல்பினன் கண்ணபிரான் –
(ப்ரபஞ்ச )அஜநிஷ்ட ச கஸ்ய நாபே-எவருடைய உந்தியில் நின்றும் இவ்வுலகம் உண்டாயிற்று-உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றினாய் நான்முகனை-திரு நாபிக் கமலத்திலே நாராயணன் நான்முகனைப் படைக்க -நான்முகனும் சங்கரனைப் படைக்க-திரு நாபிக் கமலம் முதல் கிழங்காம்
த்வத் அந்ய க –உம்மை விட வேறு யார்
(இமம ) க்ரந்த்வா -இவ்வுலகத்தை ஒரு கால் அளந்தும்-க்ரந்த்வா -உள்ளும் புறமும் உறைந்து வியாபித்து நியமிக்கும் படி –சர்வ அந்தர்யாமித்வத்தை சொல்லும் என்றுமாம்
நிகீர்ய –அவாந்தர பிரளயங்களிலே -ஒருகால் விழுங்கியும்
புனருத் கீரதி -மறுபடியும் வெளி நாடு காண உமிழ்கிறான்-பாரை உண்டு பார் உமிழ்ந்து பார் அளந்து பாரை ஆண்ட பேராளன்
கேன வைஷ -இவ்வுலகம் வேறு எவனால்
பரவாநிதி சக்ய சங்க—தலைவனை உடையது என்று சங்கிப்பதற்கும் கூடியது
கஸ்யோ தர ரே ஹர விரிஞ்சி முக ப்ரபஞ்ச –
ப்ரஹ்ம ருத்ர முகமான சகல பதார்த்தங்களும் மஹா ப்ரளயத்திலே ஆருடைய பக்கலிலே லயித்து இருக்கிறது –ஸ தேவ சோமயே தமக்ர ஆஸீத் -ஏகமேவ அத்விதீயம் -(குழக்தாய்! (நாம ரூபங்களுடன் காணப்படும்) இந்த உலகம் ப்ரளயகாலத்தில் (நாம ரூபங்களில்லாமையால்) ஒன்றாகவும், (தன்னைப் போல் வேறொன்றில்லாததால்) இரண்டற்றதாகவுமிருந்த “ஸத்” எனப்படும் ப்,ரஹ்மமாகவே இருந்தது)என்கிறபடியே த்வி பரார்த்த காலம் நாம ரூபங்களை இழந்து-தம பர் தேவ -ஏகி பவதி –([“தமஸ்” எனப்படும் மூல ப்ரக்ருதி பரமாத்மாவுடன் ஒடுங்குகிறது.])என்கிறபடியே-சர்வேஸ்வரன் பக்கலிலே கிடக்கிற படி- ப்ரஹ்மாதி ஷூ ப்ரலீநேஷூ நஷ்டே லோகே சராசரே ஆபூத சம்ப்லவே ப்ராப்நே ப்ரலீநே ப்ரக்ருதௌ மஹான் ஏகஸ் திஷ்டதி விஸ்வாத்மா ஸ து நாராயண பிரபு -([பிரமன் .’முதலியவர்களெல்லாம் லயமடைந்து, சராசரமான “உலகெல்லாம் நஸித்து, பஞ்ச பூதங்களும் லயமடைந்து, மஹத் தத்வமானது மூல ப்ரக்ருதியிஸ் லயமடை யும்போது ஸர்வாந்தர்யாமியான ஒருவனே இருக்கிறான். அவனே ஸர்வ ஸ்வாமியான நாராயணன்)இத்யாதி சம்ஹாராதிகளிலே கர்மீ பவிக்கும் இடத்தில் ப்ரஹ்மாதிகளோடு பிபீலிகாதிகளோடு வாசி இல்லை -என்கை – –
கோ ரஷதீ –
ஹர விரிஞ்சி முகமான பிரபஞ்சத்தை ரஷிக்கிறார் ஆர் –-ந ஹி பாலான சாமர்த்தியம் ருதே சர்வேஸ்வரம் ஹரிம் ஸ்தி தௌ ஸ்திதம் மகாப்ராஜ்ஞ பவத் யன்யச்ய கஸ்யசித் –([மஹாபு,த்,திர மானே! ரக்ஷ்ணத்தில் நிலைநிற்கும் ஸர்வேஸ்வரனான ஹரியைத் தவிர வேறு எவனுக்கும் ரக்ஷிக்க ஸாமர்த்யம் கிடையாதன்றோ)ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-21 —ந சம்பதாம் சமாஹாரே விபதாம் விநிவர்த்தனே–அஜ நிஷ்ட ச கஸ்ய நாபே – (ந ஸம்பதாம் ஸமாஹாரே விபதாம் விநிவர்த்தநே | ஸமர்த்தேரா த்ருஸ்யதே கஸ்சித் தம் விநா புருஷோத்தமம் ॥| [செல்வங்களைச் சேர்த்துக் கொடுப்பதிலும், ஆபத்துக்களை அடியோடு போக்குவதிலும் மைர்த்தனாயிருப்பவன் அந்தப் புருஷோத்தமனைத் தவிர வேறொருவனும் காணப்படுகிறதில்லை)மஹா பிரளயத்திலே அவி பக்தமாய்க் கிடக்கும் பிரபஞ்சம் யாருடைய குஷியினின்றும் உத்பன்னம் ஆயிற்று
மஹா பாராதே மார்க்கண்டேய சமாக்யானே-ஸ்ருஜதஸ் தஸ்ய தேவஸ்ய பத்மம் ஸூரிய சமப்ரதம்
நா பேர் வினிஸ் ஸ்ருதம் தஸ்ய தத் ரோத் பன்ன பிதா மஹா ஸூ பர்ண வைகுண்ட சமவாதே-
யத் தத் பத்ம பூத் பூர்வம் தத்ர ப்ரஹ்மா வ்யாஜாயத ப்ரஹ்மனாஸ் சாபி சம்பூதஸ் சிவா இதய வதார்ய தாம் சிவாத் ஸ்கந்தாஸ் சம்பபூவா ஏதத் சிருஷ்டி சதுஷ்டயம் -([அந்த தேவன் ஸ்ருஷ்டிக்கும் போது, ஸூர்யனை ஒத்த ஒளியை உடைய ஒரு தாமரை அவனுடைய உந்தியிலிருந்து வெளிப்பட்டது; அதில் நான்முகன் உண்டானான்–பகவானுடைய உந்தியிலிருந்து) யாதொரு தாமரை முன் உண்டாயிற்றோ அதில் பிரமன் பிறந்தான். பிரமனிடமிருந்தே சிவன் பிறந்தானென்று அறியத்தக்கது)இத்யாதி (பஹு முக ஸ்ருஷ்டி -நான்முகன் ஐந்து முக ருத்ரன் ஆறு முக ஸ்கந்தன் )-
க்ரந்த்வா –
ப்ரஹ்மாதி ஸ்தாவராந்தகமான எல்லார் தலைகளிலும் திருவடியை வைத்தவன் ஆர்-திருவடியை தலையிலே வைத்தவனோ திருவடியின் கீழே துகை யுண்டவனோ ஈஸ்வரன் -என்கிறார் – சங்கைஸ் ஸூ ராணாம் –(ஸங்கைஸ் ஸுராணாம் திவி பூ,தலஸ்தைஸ் ததா மநுஷ்யைர் ககநே ச கே,சரை: | ஸ்துத: க்ரமாந் ய: ப்ரககார ஸர்வதா மமாஸ்து மாங்கஃல்ய விவ்ருத்த,யே ஹரி: || [ஸ்வர்க்க,த்தில் தேவ ஸமூஹங்களாலும், அப்படியே பூ,மி ப்ர தேஸ்த்திலிருக்கும் மனுஷ்யர்களாலும், ஆகாயத்தில் ஆகாம ஸஞ்சாரிகளாலும் துதிக்கப்பட்டவனாய், எந்த பகவான் திருவடிகளை வைத்தருளினானோ, (திரிவிக்ரமாவ தாரம் செய்த) அந்த ஹரி எனக்கு எப்போதும் மங்களங்களின் வ்ருத்தியின் பொருட்டு ஆகட்டும்)இத்யாஹி-நிகீர்ய புனருத் கீரதி – இப்படி சர்வ பிரகார ரஷகர் உன்னை ஒழிய மற்று ஆர்-தவ தன்ய க கேன வைஷ பரவாநிதி சக்ய சங்க –-இதரராலே பரதந்த்ரம் என்றும் சக்ய சங்கமாய் இருக்கிறதோ –சந்திக்தே கலு நியாய ப்ரவர்த்ததே –-([ஸந்தே,ஹத்திற்கு இடமுள்ள விஷயத்திலன்றோ ந்யாயம் ப்ரவர்த்திக்கும் (செல்லுபடி யாகும்)வேறே சிலரை சம்சயிக்கைக்கு சம்பாவனை இல்லை -என்கை –
(அஜன் அதிகன் அயன் அதிகன் உலகு அளந்த அரி அதிகன் -கம்பர் )
ஒருவன் ஜனகனாய் -ஒருவன் ஜன்யனாய்
ஒருவன் சேஷியாய் -ஒருவன் சேஷனாய்
ஒருவன் ஸ்ரீ ய பதியாய் ஒருவன் உமாபதியாய்
ஒருவன் புண்டரீ காஷனாய் ஒருவன் விரூ பாஷனாய்
ஒருவன் கருட வாஹனாய் ஒருவன் வ்ருஷப வாகனனாய்
ஒருவன் பாதகியாய் ஒருவன் சோதகனாய்
ஒருவன் புருஷோத்தமனாய் ஒருவன் புருஷனாய்
ஒருவன் சிரஸ் ஸ்தித பாத பங்கஜனாய்-ஒருவன் பாத பாம்ஸூ மாத்ரமாய்
ஒருவன் ஸூரி த்ருஸ்யனாய் -ஒருவன் வேதாள த்ருஸ்யனாய்–இப்படி தம பரகாசங்கள் போலே
ருத்ரனுக்கும் சர்வேஸ்வரனுக்கும் நெடு வாசி உண்டு ஆகையாலே ருத்ரனுக்கு அஸ்மத் யாதிகளோபதி ஷேத்ரஜ்ஞதையாலே ஈஸ்வரத்வ சங்கை இல்லை-பிரம்மாவுக்கும் சமான ந்யாயத்தாலே ஈஸ்வரத்வ சங்கை இல்லை – என்றது ஆயிற்று –
அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள் ஊர்தி
உரை நூல் மறை உறையும் கோயில் வரை நீர்
கருமம் அழிப்பு அளிப்பு கையது வேல் நேமி
உருவம் எரி கார் மேனி ஒன்று -பொய்கை ஆழ்வார்-
(அன்று எல்லாரும் அறியாரோ எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர் -உதரே-திரு வயிற்றினுள்ளே -ஒவ்பசாரிக பிரயோகம்-அவன் இடமே லயிக்கும் -என்றவாறு –நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும் நின்னுளே அடங்குகின்ற -என்றபடி-தன்னுள்ளே என்றபடியே இங்கும் –நாராயணே ப்ரலி யந்தே–லீயதே பரமாத்மநி-ஸ்ருதிகள் போலே –இமாம் கோ ரஷதி – காக்கும் இயல்வினன் கண்ணபிரான் –உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றினாய் நான் முகனை
க்ராந்த்வா –பாரை உண்டு பார் உமிழ்ந்து பார் அளந்து பாரை யாண்ட பேராளன் –
சர்வாந்தர்யாமி என்றுமாம் –உனக்கே பரத்வம் பொலிகின்ற படியால் வேறு ஒரு தெய்வம் இடமும் பரத்வ சங்கை உண்டாவதற்கும் இடம் இல்லையே -என்று சொல்லி நிகமிக்கிறார் )
ராஜஸ தாமச புராணங்களிலும் கூட ப்ரஹ்மாதிகள் ஸ்ருஷ்டிக்கப்படுபவர்கள் என்றும் கர்ம வஸ்யர்கள் என்றும் உள்ளனவே-அன்று எல்லாரும் யார்யாரோ இவர்கள் எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர்கள் என்று சர்வ ஆதார -சர்வ நியாமகன்-சர்வ சேஷி நீ ஒருவனே -உனக்கே பரத்வம் பொலிகிற படியால் வேறே சங்கைக்கும் இடம் இல்லை -என்று நிகமிக்கிறார்
யார் இறையோன் இறை யுப்பட யண்டம் யடங்கலும் தன் உதரத்து யுடையான்
யார் இத்தலைக்கண் நின்று ஆயினவாகும் அண்டம் அனைத்தும் அளித்து அருள்வான்
யார் அகிலத்தை அளந்து விழுங்கி யுமிழ்ந்தவன் இன்னும் அன்னியனே
யார் பரதந்த்ரம் உற்றுளது அகிலமும் நின் அதலாது இதிலையமுமே –14-இறையோன் -சிவன்
இறை -பிரமன்-இதலை -கொப்பூழ் –உந்தி–எவனுடைய திரு வயிற்றிலே பிரமன் சிவன் ஆதியரான சகலமும் அடங்கிய இந்தப் பிரபஞ்சம் அடங்கி இருந்தது-இப் பிரபஞ்சமானது வேறு எவனுடைய நாபியில் இருந்து உண்டாயிற்று-இப் பிரபஞ்சத்தை நீ அல்லது எவன் ரக்ஷிக்கின்றான்-உன்னை அல்லால் வேறு எவன் இப்பிரபஞ்சத்தை த்ரிவிக்ரமனாக அளந்து பிரளய காலத்தில் விழுங்கி மறுபடியும் உமிழ்கின்றவன்-இப் பிரபஞ்சம் உன்னைத் தவிர வேறே எவனுடைய ஸ்வ அதீனத்தில் அடங்கி உள்ளது –இவைகளைக் குறித்து சந்தேகிக்கவும் கூடுமோ
—
ஸ்லோகம் -15- அவதாரிகை –நாவேஷ ஸே – யில் –10-வேதாந்த பிரதமபாத உக்த காரணத்வம் சொல்லுகிறது –-ஸ்வா பாவிக-த்திலே –11-குண உபசம்ஹார பாதார்த்தம் சொல்லுகிறது-க ஸ்ரீஸ் ஸ்ரீய -வில் -12-த்ரிபாதத்தில் அர்த்தம் சொல்லுகிறது-வேத அபஹார த்தில் –13-உப ப்ரும்ஹணமான அர்த்தம் சொல்லுகிறது – கஸ்யோதர -வில் -14-பிரமாண அனுக்ருஹீத தர்க்க சித்த பரத்வம் சொல்லுகிறது –இனி -இதில் இப்படி-த்ருட பிரமாண சித்தமாய் இருக்க-ஆசூரீம் யோநிமா பன்னா -(ஆஸுரீம் யோநிமாபந்நா மூடா ஐந்மநி ஐந்மநி। மாமப்ராப்யைவ கெளந்தேய ததோ யாந்த்யத,மாம் க,திம்॥ [அர்ஜுனா ஆஸாுரஸ்வபாவமுள்ள ஜன்மத்தை அடைந்து, ஜன்மந் தோறும் மூடரர்களாய், என்னை அடையாமலே, அதிலும் கீழான கதிக்குப் போகிறார்கள்.])ஸ்ரீ கீதை -16-20-என்கிறபடியே ஆசூர பிரகிருதிகள் அவனை இழப்பதே என்று அவர்கள் இழவுக்கு இன்னா தாகிறார்-அதவா-யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான் -திருவாய் மொழி -1-3-4-என்று துஷ் பிரகிருதிகள் கண் படாது ஒழியப் பெறுவதே இவ் விலஷண விஷயம் -என்றுமாம் –
த்வாம் சீல ரூப சரிதை பரம ப்ரக்ருஷ்ட
சத்த் வேன சாத்த்விக தயா ப்ரபலைச்ச சாஸ்த்ரை
பரக்யா ததைவ பரமார்த்த விதாம் மதைச் ச
ந வ ஆஸூர ப்ரக்ருதய ப்ரபவந்தி போத்தும்-15-
த்வாம் -இப்படிப்பட்ட உன்னை
சீல ரூப சரிதை –குண ரூப சரிதைகளாலும்
பரம ப்ரக்ருஷ்ட சத்த் வேன –மிகச் சிறந்த சத்வ குணத்தினாலும்
சாத்த்விகதயா ப்ரபலைச்ச சாஸ்த்ரை–சாத்வீகங்கள் என்பதினாலேயே பிரபலமான சாஸ்த்ரங்களினாலும்
பரக்யாத தைவ பரமார்த்த விதாம் மதைச்ச–பிரசித்தர்களாய் தெய்வத்தின் உண்மையை அறிந்த
மஹான்களினுடைய மதங்களினாலும்
நைவாஸூர ப்ரக்ருதய ப்ரபவந்தி போத்தும்-அஸூரத் தன்மை பொருந்திய நீசர்னல் அறிவதற்கு வல்லர் அல்லர்-
[ஐயோ!] எல்லோரையும் விட உயர்ந்தவனான உன்னை அஸுரர்கள் அறிந்து கொள்ள முடியாது.
உன்னை அறிந்து கொள்ளும் வகைகள்:-1-உன்னுடைய சீல (எளிமை) குணம், 2-வேதத்தில் கொண்டாடப்பட்ட ரூபங்கள் =3-மற்றும் திவ்யமான லீலைகள்-4-சுத்த ஸத்வத்தால் நிறைந்திருக்கும் உன்னுடைய பரம பதம்-5-தன்னிடம் இருக்கும் நன்மையினால் திடமாக இருக்கும் சாஸ்த்ரம்
6-உன்னைப் பற்றிய உண்மையை அறிந்தவர்களின் அபிப்ராயத்தின் மூலம்
த்வாம்--சர்வாதிகனாய் -இவ் வாத்மாவுக்கு வகுத்த உன்னை-சீல ––மஹததோ மந்தை -நா வேஷ ஸே (10)-([ஸீலம் ஹி நாம மஹதோ மந்தைஸ் ஸஹ நீரந்த்ரேண ஸம்ஸ்லேஷ– ஸீலமென்பது, பெரியவன் தாழ்ந்தவர்களோடு நெருங்கிச் சேருதல்.])என்கிற ஸ்லோகத்திலே சொல்லுகிற ஸ்வ பாவம் அதாகிறது-சர்வாதிகனாய் இருந்து வைத்து –பஹூஸ்யாம் -என்கிறபடியே இவற்றின் இழவு பேறு தன்னதாய் அபிமானியும் தானேயாய் இருக்கை–ரூப –க புண்டரீக நயன -என்கிற வடிவு-ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே –தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணீ –-நீல தோ யத மதயஸ்தா –ந பூத சங்க சம்ஸ்தானோ தே ஹோ அஸ்ய பரமாத்மன ந தஸ்ய ப்ராக்ருதா மூர்த்தி மாம் ஸ மஜ்ஜாச்தி சம்பவா -(ந பூ,த ஸங்க,ஸம்ஸ்தாநோ தே,ஹோஃஸ்ய பரமாத்மந: | [இந்தப் பரமாத்மாவினுடைய திருமேனி பஞ்ச பூ,தங்களு டைய சேர்க்கையால் உண்டானதன்று–ந தஸ்ய ப்ராக்ருதா மூர்த்திர் மாம்ஸ மஜ்ஜாஸ்த்தி, ஸம்ப,வா | [அவனுக்கு, மாம்ஸம், மஜ்ஜை, எலும்பு இவைகளாலுண்டான ப்ரக்ருதி ஸம்பந்த முள்ள உடம்பு கிடையாது)இத்யாதி–சரிதை ––க்ரந்த்வா நிகீர்யா புனருத் கிரதி-என்றும்-வேத அபஹார குரு பாதக என்றும் சொல்லுகிற அதி மானுஷ சேஷ்டிதங்களாலும்—பரம ப்ரக்ருஷ்ட சத்த் வேன – பரம சத்த்வ சமாஸ்ரய க -என்று ஸூத்த சத்வ மயமான விபூதி யோகத்தாலும்-ஷயந்த மஸ்ய ரஜஸ பராகே- தம்ஸ பரஸ்தாத் ஸ்வ சத்தா தாரகம் சத்த்வம் மிஸ்ர சத்த்வாத் விலஷணம் -(தம் த்வா க்,ருணாமி தவஸ மதவீயாந் ச ஷயந்தமஸ்ய ரஜஸ: பராகே [இந்த ரஜோ குணத்தை யுடைய மூலப்ரக்ருதிக்கு மேலான பரமபத,த்தில் எழுந்தருளியிருக்கும் தனி வீரரான அப் படிப்பட்ட உம்மை ஸக்தியற்ற அடியேன் துதிக்கிறேன்–ஸ்வஸத்தா தாரகம் ஸத்த்வம் மிஸ்ர ஸத்த்வாத் விலக்ஷணம் [தன்னுடைய ஸத்தையினாலேயே (பிறருக்கு) தாரகமானதும், ரஜஸ் தமோ குணங்களோடு சேர்ந்திருக்கும் ஸத்வத்தைக் காட்டிலும் வேறுப்பட்டதுமான ஸத்வம்)இத்யாதி-சாத்த்விக தயா ப்ரபலைச்ச சாஸ்த்ரை –வேதத்தில் சாத்விகருக்கு ஹித அனுசானம் பண்ணும் ஜ்ஞான பாகத்தாலும்-அக்னேஸ் சிவச்ய மகாத்மியம் -இத்யாரப்ய –சாதத் விகேஷ்வத கல்பேஷூ மாஹாத்ம்ய மதிகம் ஹரே -(௮க்நே: ஸிவஸ்ய மாஹாத்ம்யம் தாமஸேஷ” ப்ரகீர்த்யதே। ராஜஸேஷ ச மாஹாத்ம்யமதிகம் ப்,ரஹ்மணோ விது; |! ஸாத்த்விகேஷ்வத, கல்பேஷு மாஹாத்ம்யமதிகம் ஹரே: | தேஷ்வேவ யோக,ஸம்ஷித்,த. க,மிஷ்யந்தி பராங்கதிம் ॥[அக்னியினுடையவும், சிவனுடையவும் பெருமை தாமஸ கல்பங்களில் சொல்லப்படுகிறது. ராஜஸ கல்பங்களில் பிரமனுடைய பெருமை அதிகமாகச் (சொல்லப்படுவதாக) அறிகிறார்கள். ஸாத்விக கல்பங்களில் ஹரியின் பெருமை அதிகமாகச் சொல்லப்படுகிறது, அவைகளிலேயே யோக; ஸித்,தி, அடைந்தவர்கள் மேலான கதியை அடைகிறார்கள், (கலபம்–பிரமனுடைய தினம்,)என்று ஸ்ரீ மாத்ச்ய புராணத்திலே சத்வ உத்ரிக்தனான ப்ரஹ்மாவின் வாக்கியம் ஆகையாலே பிரபலமான சாஸ்த்ரங்களாலும்–
பரக்யாத தைவ பரமார்த்த விதாம் மதைச்ச –-பிரக்யாதமான தைவத்தின் உடைய யதார்த்த வித்துக்கள் உடைய மதங்களாலும்-சிருஷ்டி வாக்கியம் -நாராயண அனுவாகம் -ஸூபால உபநிஷத்-அந்தர்யாமி ப்ரஹ்மணாதிகளில் சர்வாதிகனாக பிரசித்தனாய் இருக்கை –ஏவம் விசிஷ்டம் -நைவாஸூர ப்ரக்ருதய ப்ரபவந்தி போத்தும் – த்வாம் ஆசூர பிரக்ருதய போத்தும் இவ ந பிரபவந்தி – ஆசூரீம் யோநிமா பன்னா -இத்யாதி–பிரக்யாததைவ பரமார்த்த வித்துக்கள் -என்கிறது-ஸ ஹோவாச வியாச பாராசர்ய -என்கிற பராசர பகவான் யாதவை கிஞ்ச மனுரவதத் தத் பேஷஜம் -என்கிற மனு-வேதாசார்யனான வேத வியாசன்’வாஜசனேய பிரசித்தனான யாஜ்ஞ வல்க்யன்-நமஸ் சௌநகாய -என்று வைதிக அக்ரேசர் சொல்லும் ஸ்ரீ சௌநகன்-ஏவம் பூதனான ஆபஸ்தம்பன் அயோ நிஜனாய் ஸ்ரீ இராமாயண ப்ரவர்த்தகனான வால்மீகி–ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோ வை நர ஸூ நவ -இதி வசிஷ்ட புலஸ்திய ருக்மாபம் ஸ்வப்னதீ கம்யம் இதி மனு–ஷேத்ரஜ்ஞ்ஸ் யேச்வர ஜ்ஞாநாத் விஸூத்தி பரமா மதா -இதி யாஜ்ஞ் வல்க்யன்–பூ பிராணி நச் சர்வ ஏவ குஹாச யஸ்ய –இதி ஆபஸ்தம்ப-பவான் நாராயணோ தேவ -இதி வால்மீகி -என்கிற இவர்களை-ஏவம் விசிஷ்டம் -த்வாம் ஆசூர ப்ரக்ருத்ய க்ரூர கர்மக்களான பேர்கள் சர்வாதிகரான தேவரீரை—போத்தும் இவ ந பிரபவந்தி-அறிகைக்கு ஆன சமர்த்தர்கள் அன்று ‘-ஆசூரீம் யோநிமா பன்னா -இத்யாதி-
(வேடன் வேடுவிச்சி குரங்கு இடையன் இடைச்சி -ஒரு நீராக கலந்த சீலம் –-பரக் யாததை வ பரமார்த்த விதாம்–ப்ரக்யாத பதம் தைவத்துக்கு விசேஷணம் என்பர் பெரியவாச்சான் பிள்ளை
தைவ பரமார்த்த நாராயண அநுவாகம்-ஸூபால உபநிஷத் – அந்தர்யாமி ப்ராஹ்மணம் –
இவற்றில் பிரசித்தமான பரம புருஷன் உண்மை நிலையை கண்டு அறிந்த பரமார்த்த வித்துக்கள் -வியாசர் பராசரர் வால்மீகி மனு யாஜ்ஞ வல்க்யர் ஸுநகர் ஆபஸ் தம்பர் ஆழ்வார்கள் போன்றவர்களே என்றவாறு )
எம்பெருமானைப் பற்றி அறியும் வழிகளில் ஐந்து ஆறு இங்கே அருளிச் செய்கிறார்
வேடன் வேடுவிச்சி குரங்கு இடைச்சிக்கள் முதலானோர் ஒரு நீராகக் கலந்த ஸுவ்சீல்யம்
பஹுஸ்யாம்-என்று சங்கல்பித்த சீர்மை
திவ்ய மங்கள விக்ரஹ வை லக்ஷண்யம்
வேத அபஹாராதி நிரசனாதிகள் -க்ரந்தவா நிகிய புனர் உதக்ரதி போன்ற சேஷ்டிதங்கள் –
ஆலிலை துயின்ற மற்றும் பல அதி மானுஷ சேஷ்டிதங்கள்
அப்ராக்ருத சுத்த சத்வமயத்வம் –
பரக்யாத தைவ பரமார்த்த விதாம் மதைச்ச–இதில் பரக்யாத-என்ற விசேஷணம் தைவத்துக்கும்
தைவ பரமார்த்த வித்துக்களுக்கும் ––நாராயண அநு வாகம் -ஸூ பால உபநிஷத் -அந்தர்யாமி பிராமணம் இத்யாதிகளில் பிரசித்தமான தைவத்தை-வியாசர் பராசர வால்மீகி மனு ஆஞ்ஞவல்கர் ஸுவ்நகர் ஆபஸ்தம்பர் ஆழ்வார்கள் போன்றவர்களை பரமார்த்த வித்துக்கள் என்கிறார்–பாக்யசாலிகளே நன்கு அறிந்து உஜ்ஜீவிக்கிறார்கள் என்றதாயிற்று–மூடர்கள் இழந்தே போகிறார்களே என்று பரிதவிக்கிறார்-விலக்ஷண பகவத் விஷயம் இவர்கள் கண்ணில் படாமல் போனதே என்று மகிழ்கிறார் என்னவுமாம்-இவர்களைப்போலே நாம் இழந்தே போகாமல் பகவத் பரத்வத்தை அனுபவிக்கப் பெற்றோமே என்ற உகப்பு உள்ளுறைப் பொருளாகும்
உத்தம சீல குணத்தகையால் உருவால் அதி மானுட சரிதைகளால்
சத்துவ சுத்த விபூதியினால் உயர் சாத்து விகத்தினை யுரை மறையால்
தத்துவ மெய்ப்பொருள் யுன்னை யுணர்த்திடு சான்றவர் கொள்ளும் மதங்களினால்
எத்திறன் எனும் உறார் சில தாமஸ இயல்புடையோர் யுனை அறியுமே –15-உன் உத்தமமான ஸுசீல்ய குணத்தினாலும்-அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரகத்தினாலும்-அதி மானுஷ சரித்ரங்களினாலும்
அத்யந்தம் ஸ்ரேஷ்டமான சுத்த ஸத்வ யோகத்தினாலும் ஸாத்விக கல்பத்தில் சொல்லுகிறபடியால் ப்ரபலங்களான ஸாஸ்த்ரங்களினாலும் ப்ரஸித்தமான தேவதா பாரமார்த்யத்தை அறிந்த பரசாராராதி ஸித்தாந்தங்களினாலும்-உன்னை அறிவதற்கும் கூட ஆஸூர ப்ரப்ருதிகளான சிலருக்கு எவ்வளவேனும் சாத்தியப்படுகிறது இல்லை –
–
ஸ்லோகம் -16- அவதாரிகை –மஹாத்மா நஸ்து மாம் -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே உன்னைப் பெரும் சத் பிரகிருதிகள் காணப் பெறுவதே -என்றும் –யாரும் ஓர் நிலைமையன் என அறிவு எளிய எம்பெருமான் -என்று அது தன் பேறு என்றும் இருக்கிறார் –மஹாத்மா நஸ்து மாம் பார்த தைவீம் ப்ரக்ருதிமாஸ்ரிதா: பஜந்த்யநந்யமநஸோ ஜ்ஞாத்வா பூதாதிமவ்யயம்-ஸ்ரீ பகவத்கீதை-9-13-(அர்ஜுனா! தேவ ஸ்வபாவத்துடன் கூடிய மஹாத்மாக்களோவெனில், ஸகல பூ,தங்களுக்கும் காரணனாகவும், குறைவற்றவனாகவுமிருக்கும் என்னை அறிந்து வேறெதிலும் மனம் செலுத்தாதவர்களாய், (என்னை) உபாஸிக்கிறார்கள்)ஆனால் பார்த்தா,-தெய்விக இயல்பைக் கைக் கொண்ட,:-மகாத்மாக்கள்,-என்னை எல்லா உயிர்களுக்கும் முதல் என்றும், அழிவற்றவன் என்றும் அறிந்து,-வேறு எதிலும் நாட்டமில்லாத மனதுடன்,வழிபடுகிறார்கள்.-பார்த்தா, மகாத்மாக்கள் தெய்விக இயல்பைக் கைக் கொண்டு பூத முதலும் கேடற்றவனுமாகிய என்னை வேறு மனம் இன்றி வழிபடுகிறார்கள்-எம்பெருமானின் எளிமையினால் அவனை அடையும் உயர்ந்த ஆத்மாக்களைப் பற்றி எண்ணிய ஆளவந்தார், அவர்களுக்குக் கிடைத்த பேறு தனக்குக் கிடைத்ததாக நினைக்கிறார்.
உல்லங்கித த்ரிவித சீம சமாதி சாயி
சம்பாவனம் தவ பரிப்ரடிம ஸ்வ பாவம்
மாயா பலே ந பவதா அபி நிகூஹ்ய மாநம்
பஸ்யந்தி கேசித் அநிஸம் த்வத் அநன்ய பாவா–16-
உன்னுடைய ஸ்வாமித்வத்தை நீ உன்னுடைய ஆச்சர்ய சக்தியினால் மறைத்துக் கொண்டாலும்,
உன்னையே நினைத்துக் கொண்டிருக்கும், மிகவும் உயர்ந்த ஆத்மாக்கள் கால, தேச, வஸ்துக்களுக்கு அப்பாற்பட்ட உன்னுடைய ஸ்வாமித்வத்தை உணர்ந்து, “எம்பெருமானுக்கு ஸமமாகவோ அவனைவிட உயர்ந்தவராகவோ எவரேனும் உண்டோ?” என்று ஸந்தேஹம் கொள்ளாமல் இருப்பார்கள்.
உல்லங்கித த்ரிவித சீம சம அதிசாயி சம்பாவனம் –த்ரிவித அபரிச்சேதனானோ –-ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயவனோ என்று எல்லாம் சங்கிப்பதற்கும் கூடாததுமான-விபுத்வாத் தேச பரிச்சேத ரஹித-நித்யத்வாத் கால பரிச்சேத ரஹித-சர்வ பிரகாரித்வேன ப்ருதக் ஸ்திதி யோக்ய அவஸ்த அந்தராபாவத் வஸ்து பரிச்சேத ரஹித – சீமை -எல்லை –-உல்லங்கித-விசேஷணம் சம அதிசாயி சம்பாவனம் -என்பதிலும் அந்வயிக்கும்-சமம் -துல்யம் அதிசாயி -மேம்பட்ட வஸ்து-தவ பரிப்ரடிம ஸ்வ பாவம்-உன்னுடைய பரத்வமாகிற ஸ்வ பாவத்தை-மாயா பலே ந பவதா அபி நிகூஹ்ய மாநம்–நீ மாயையினால் மறைத்த போதிலும்-மாயா பலம் -குண மயமான பிரகிருதியின் சாமர்த்தியம்-திவ்ய விக்ரஹத்தை இதர சஜாதீயம் ஆக்கும் ஆச்சர்ய சக்தி யோகத்தாலே -என்னுதல்-த்வத் அநன்ய பாவா–உன்னிடத்திலேயே மனம் பொருந்தி உள்ளவர்களான-பஸ்யந்தி கேசித் அநிஸம் –சில மஹான்கள் எப்போதும் சாஷாத்கரிக்கிறார்கள்-அவர்களின் திவ்ய சஷுஸ் களை பிரகிருதி மறைக்க மாட்டாதே
ஸ்ரீ மந் நாராயணனுடைய பரத்வம் சாஸ்த்ரங்களால் மட்டும் அறிந்து கொள்ளலாம் என்று இல்லாமல்
நேராக சாஷாத்கரிக்கும் மகான்களும் உண்டே
உல்லங்கித த்ரிவித சீம சமாதி சாயி சம்பாவனம் தவ பரிப்ரடிம ஸ்வ பாவம் –-த்ரிவித பரிச்சேத ரஹிதமாய்-சமாதிக சம்பாவனையும் கடந்துள்ள உன்னுடைய ப்ரபுத்வத்தை-விபுத்வாத் தேச பரிச்சேத ரஹித-நித்யத்வாத் கால பரிச்சேத ரஹித-சர்வ பிரகாரித்வேன ப்ருதக் ஸ்திதி யோக்ய அவஸ்த அந்தராபாவத் வஸ்து பரிச்சேத ரஹித –-சத்ருக்வச்த் வந்தாரா பாவத் துலயா ப்ரஸ்தாதி நா வா பரிச்சேத ரஹித இதி வா அத ஏவ சமாதி கத ரித்ர-
மாயா பலே ந –
பகவத் ஸ்வரூபத்தை மறைக்கும் பிரகிருதி பலத்தாலே -என்னுதல்
திவ்ய விக்ரஹத்தை இதர சஜாதீயம் ஆக்கும் ஆச்சர்ய சக்தி யோகத்தாலே -என்னுதல்
பவதா அபி நிகூஹ்ய மாநம் –
ஆத்மானம் மானுஷம் மன்யே அஹம் வோ பாந்தவோ சாத -(அப்,ரவீத் த்ரித,ஸஸ்ரேஷ்ட்டாந் ராமோ தர்ம ப்ருதாம் வர: | ஆத்மாநம் மாநுஷம் மந்யே ராமம் தஸரதரத்மஜம் ॥ [நான் என்னை மனுஷ்யனாகவும், தயரதன் பிள்ளை ராமனாகவும் நினைக்கிறேன்” என்று–த,ர்மவான்௧ளில் மேலான ராமன் தேவ ங்ரேஷட்டர்களைக் குறித்துச் சொன்னான்–நாஹம் தே,வோ ந க,ந்த,ர்வோ ந யக்ஷோ நச தராநவ:।அஹம் வோ பாந்த,வோ ஜாதோ நைதச்சிந்த்யமிதோ$ந்யதரா ॥[நான் தே,வனல்லன்; க;ந்தருவனல்லன்; யக்ஷ்னல்லன்; அஸுரனுமல்லன்; நான் உங்களுக்கு உறவினனாகப் பிறந் திருக்கிறேன். என் பிறப்பு இதைத் தவிர வேறுவிதமாக (உங்களால்) நினைக்கத் தக்கதல்)என்று-ஆள் பார்த்து உழி தரும் -நான்முகன் திருவந்தாதி -60 -உன்னாலே மறைக்கப் பட்டதே யாகிலும்-பஸ்யந்தி கேசித நிஸம் த்வத நன்ய பாவா-சத் பிரக்ருதிகளாய் இருப்பார் சில மகாத்மாக்கள் சர்வ காலமும் உள்ளபடி காணா நின்றார்கள் –த்வத நன்ய பாவா – க்ரியதாம் இதி மாம் வத -என்று உன்னை ஒழிய வேறு நினைவு-விஷயம் – இல்லாதவர்கள் -என்னுதல்-உன்னை ஒழிய உபாயாந்தரம் அறியாதவர்கள் என்னுதல்-உன்னை ஒழிய வேறு பரதவ புத்தி இல்லாதவர்கள் -என்னுதல்-(பஸ்யந்தி -சாஸ்திரம் மூலம் பார்க்கிறார்கள் முதலில் -யோகம் மூலம் சாஷாத்காரிக்கிறார்கள்சரபங்க மகரிஷி -ததிபாண்டாதிகள் விபவத்திலே நேராக கண்டார்கள் அன்றோ )
பஸ்யந்தி-பார்க்கிறார்கள் -முதலில் சாஸ்த்ரத்தால் பார்த்து அறிந்து யோக பலத்தால் சாஷாத்கரிக்கிறார்கள்-சரபங்க மகரிஷி -ததி பாண்டன் போல்வார் அறிந்து கொண்டார்களே அவதார தசையில்-அநிஸம் பஸ்யந்தி என்றும் அநிஸம் த்வத் அநன்ய பாவா -என்றும் கொள்ளலாம்-உன்னை ஒழிய வேறு நினைவு-விஷயம் – இல்லாதவர்கள் -என்னுதல்-அநிஸம்-எப்பொழுதும்-அநன்ய பாவா-உன்னை ஒழிய உபாயாந்தரம் அறியாதவர்கள் என்னுதல் உன்னை ஒழிய வேறு பரதவ புத்தி இல்லாதவர்கள் -என்னுதல்-
வீத மூன்று அளப்பு விஞ்சி ஒப்புயர் விலா துயர்
நாத மாயையோடு நீ யுன்னாகம் மறைக்கினும்
ஓத யுன்னை அன்றி இல்லன் என்னும் ஓர்தலார் சிலர்
வாதமின்றி என்றும் உள்ள வாறு காண வல்லரே –16—காலத்தாலும் தேசத்தாலும் வஸ்துவினாலும் -ஆகிய மூன்று விதங்களினாலும் இவ்வளவு என்று நிச்சயிக்க முடியாததும் ஒப்பு உயர்வு இல்லாமல் உயர்ந்து இருக்கிற உன் பிரபுத் வத்தை உன் ஆச்சார்ய சக்தி யோகமாகிற மாயையைக் கொண்டு நீ மறைத்த போதிலும் உன்னைத் தவிர வேறே ஒரு சேஷியையும் அறியாத மன நிலையை யுடைய சில மகான்கள் எக் காலத்திலும் அந்தப் பிரபுத்வத்தை உள்ளபடி அறிகின்றார்கள் –
—
ஸ்லோகம் -17- அவதாரிகை –கீழ் பிரதிபாதித்த சர்வேஸ்வரத்துக்கு பிரதிசம்பந்தி தயா அபேஷிதமான
ஈசித வ்யஜாதத்தை ப்ரபஞ்சீ கரிக்கிரார் –இதில் ஆளவந்தார் பகவானாலே நிர்வஹிக்கப்படும், முன்பு விளக்கப்பட்ட அவனுடைய ஸர்வேச்வரத்வத்துக்கு உட்பட்ட பலவிதமான வஸ்துக்களை அருளிச் செய்கிறார்.–கீழே அருளிச் செய்த சர்வேஸ்வரத்தை த்ருடப்படுத்தி அருளுகிறார் –-அசாதாரண உபய விபூதி உக்தன் அன்றோ
யதண்ட மண்டாந்தர கோ சரஞ்ச யத்
தச உத்தராணி ஆவரணாநி யாநி ஸ
குணா பிரதானம் புருஷ பரம் பதம்
பராத்பரம் ப்ரஹ்ம ச தே விபூ தய—17-
யத் அண்டம் அண்டாந்தர கோ சரஞ்ச யத்-எந்த ப்ரஹ்மாண்டமோ அண்டங்களுக்குள் இருக்கக் கூடியது எதுவோ
தச உத்தராணி ஆவரணாநி யாநி -ஒன்றுக்கு ஓன்று பத்து மடங்கு மேற்பட்டுச் சொல்லுகின்ற
அண்டங்களின் ஆவரணங்களும் எவையோ-அண்டம் -ஏக வசனமாக இருந்தாலும் சமுதாயத்தைச் சொல்லும்
ஸ குணா –சத்வம் ரஜஸ் தமஸ் என்னும் குணங்களும்
பிரதானம் புருஷ பரம் பதம்-ப்ரக்ருதியும் ஜீவாத்ம வர்க்கமும் ஸ்ரீ வைகுண்டமும்
பராத்பரம் –அசேதனங்களில் காட்டில் சிறந்த சேதன வர்க்கங்களுள் சிறந்த முக்தாத்ம நித்யாத்ம வர்க்கமும்
ப்ரஹ்ம ச –திவ்ய மங்கள விக்ரஹமும்
தே விபூ தய—உமக்கு சேஷப்பட்டவை
1) ப்ரஹ்மாவின் ஆளுகைக்குட்பட்ட, 14 லோகங்கள் கொண்ட ப்ரஹ்மாண்டம்,-2) அந்த அண்டத்துக்குள் இருக்கும் வஸ்துக்கள்,-3) ஒவ்வொரு அண்டத்தை மூடிக் கொண்டிருக்கும், முந்தைய ஆவரணத்தைப் போலே பத்து மடங்கு அளவுள்ள, ஸப்த ஆவரணங்கள்,-4) ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய குணங்கள் 5) மூல ப்ரக்ருதி 6) இவ் வுலகில் இருக்கும் பத்தாத்மாக்கள் (கட்டுப்பட்ட ஆத்மாக்கள்),
7) ஸ்ரீவைகுண்டம் 8) (தேவதைகளை விட உயர்ந்தவர்களான) முக்தாத்மாக்களை விட உயர்ந்தவர்களான நித்ய ஸூரிகள்-9) உன்னுடைய திய்வ மங்கள விக்ரஹங்கள் ஆகிய எல்லாம் உனக்கு சரீரங்களே.
யதண்டம் –
சதுர்தச புவநாத் மகமான அண்டம் ஒன்றாக அண்டா நாந்து சஹஸ்ராணாம் –(அண்டாநாந்து ஸஹஸ்ராணாம் ஸஹஸ்ராண்யயுதாநி ச। ஈத்ருஸாநாம் ததர தத்ர கோடிகோடியதாநி ச ॥[*அந்த ப்ரக்ருதியில் இம்மாதிரியான பல கோடி நூறாயிரம் அண்டங்கள் இருக்கின்றன என்பது ஸாரார்த்தம்)இத்யாதிகளில் படியே அண்ட சமூஹம் யாதொன்று–அண்டாந்தர கோ சரஞ்ச யத் –-அண்டாதிப த்ரிலோக ஈஸ்வர திக்பால நரபதி ப்ரமுகமாய் – ஸ்தாவர ஜங்கமாத் மகமான அண்டாந்தர் வர்த்தி சமூஹம் யாதொன்று-தச உத்தராணி ஆவரணாநி யாநி ஸ –மேன்மேலும் தச குணிதமான வாரிவஹ்நயா நிலாகாசங்களும்-பூதாதியும் -மகானும் -கார்ய உந்முகமான பிரகிருதி அம்சமான ஆவரணங்கள் யாவை சில–குணா – அது சேதனரை பந்திப்பது குணா த்வாரா வாகையாலே -பந்த காரணமான சத்வாதிகள் –பிரதானம் – அவிக்ருத பிரகிருதி பிரதேசம்-குணா பிரதானம் -என்று குணா குணிகளைப் பிரித்து பேசுகிறது குணங்களை ஜகத் காரணமாகச் சொன்ன சாங்க்ய மதம் அவைதிகம் -என்கைக்காக –புருஷ –பத்தாத்மா சமஷ்டி–கார்ய காரண உபய அவஸ்த பிரக்ருத்யாஸ்ரய ஷேத்ரஜ்ஞர் ஷேத்ரஜ்ஞக ஆத்மா புருஷ -என்னக் கடவது இறே–அண்டாந்தர கோசரம் என்று வ்யஷ்டியைச் சொல்லுகையாலே-இது சமஷ்டி விஷயம்–
பரம பதம் –-கார்ய காரண உபய அவஸ்த ப்ரக்ருத் யாஸரயாத் ஷேத்திர ஜ்ஞாத் ஆனந்தாத் பரமம் பதம் –
ஹிரண்மயே பரே லோகே இத்ராப்ய ஜ்யோதிஷாம் ஜ்யோதிஸ் தத் யதாத்மா விதோ விது – பரமே வ்யோமன்- ஸோ அஸ்நுதே – த்ரிபாதஸ் ஸ்யாம்ருதம் திவி – யத்ர பூர்வே சாத்யா ஸந்தி தேவா –
அத யர்க்கா நல தீப்தம் தத் ஸ்தானம் விஷ்ணோர் மஹாத்மன-ஸ்வ யைவ ப்ரப யா ராஜன் துஷ் ப்ரேஷம் தேவதாநவை தத்ர கத்வா புநர் நேமம் லோகமா யாந்தி பாரத -இத்யாதி பி -(ஹிரண்மயே பரே லோகே விரஜம் ப்,ரஹ்ம நிஷ்களம் | தச்சு ப்ரம் ஜ்யோதிஷாம் ஜ்யோதிஸ் தத், யதாத்ம விதோவிது: ॥ [பொன் மயமான மேலான உலகத்தில், ரஜோ குணமற்றதும் அவயவங்களில்லாததுமான ப்ரஹ்மமிருக்கிறது. அது பரிஸூத்த,மானது. சோதிகளுக்கெல்லாம் சோதியா யிருக்கும் அதைப் பரமாத்மஜ்ஞானிகள் ௮றிகிறார்கள்)(யோ அ௮ஸ்யாத் யக்ஷ: பரமே வ்யோமந் |ஸோ அங்க, வேத, யதி, வா ந வேத, [எவனொருவன் இவ் வுலகத்திற்கு அதிபதியாய், பரமபத,த் தில் (எழுந்தருளி யிருக்கிறானோ), அவனே (தன் பெருமையை) அறிவானோ, அறியானோ)(தே ஹ நாகம் மஹிமாநஸ் ஸ சந்தே யத்ர பூர்வே ஸாத்,யாஸ் ஸந்தி தேவா: [யாதொரு பரம பத,த்தில் ஸாத்,யர்கள் எனப்படும் தேவர்கள் இருக்கிறார்களோ, அந்தப் பரமபத,த்தை அவர்கள் மஹிமை யுடையவர்களாய் அடைகிறார்கள்)(அத்யர்க்காநல$,ப்தம் தத் ஸ்தாநம் விஷ்ணோர் மஹாத்மந: | ஸ்வயைவ ப்ரப,யா ராஜந்! துஷ்ப்ரேக்ஷம் தே,வதாநவை: |… தத்ர கத்வா புநர் நேமம் லோகமாயாந்தி பாரத॥ [மஹாத்மாவான விஷ்ணுவினுடைய அந்த ஸ்தானம் ஸுர்யனுடையவும், அக்னியுடையவும் ஒளியை விஞ்சியது. அரசனே! அது தன்னுடைய ஒளியினாலேயே தேவர்களாலும், அஸாரர்களாலும் காண அரியது. பரதவம்மத்தில் உதித்தவனே ! அங்கு போய் மறுபடியும் இவ்வுலகுக்குத திரும்பி வருவதில்லை)
உக்தா த்ரிபாத் விபூதி –பராத்பரம் –-ப்ரஹ்மாதிகளில் பரர் -முக்தர்-அவர்களில் பரர் நித்ய சித்தர்–ப்ரஹ்ம ச – ஸூ த்த சத்வமாய்-பரஞ்ஜ்யோதிர் மயமாய்-சௌந்தர்ய சௌகுமார்யாதி கல்யாண குணோ பேதமாய் ப்ருஹத் சப்த வாச்யமான திவ்ய விக்ரஹம்-ச பரச சர்வ சக்தி நாம் ப்ரஹ்மணஸ் சமநந்தரம் மூர்த்தம் ப்ரஹ்ம –-சாந்த அனந்த மஹா விபூதி பரமம் யத் ப்ரஹ்ம ரூபம் ஹரேர் மூர்த்தம் ப்ரஹ்ம ததோ அபி தத் ப்ரிய தரம் ரூபம் யத த்யத் புதம் -இத்யாதி –(ஸ பரஸ் ஸர்வ ஸக்தீநாம் ப்,ரஹ்மணஸ் ஸமநந்தரம் | மூர்த்தம் ப்,ரஹ்ம மஹா பாக, ஸர்வ ப்,ரஹ்ம மயோ ஹரி: ॥|[பகவான் (இவனுடைய உருவமான ஸம்ஸாரி ஜீவன், முக்தன், திவ்யமங்கள விக்ரஹம் எனப்படும்) எல்லா ஸக்திகளைக் காட்டிலும் மேலானவன். “ப்ரஹ்மம்” என்று சொல்லப்படும் ப,க,வானுடைய திருமேனி விஷ்ணுவுக்கு அந்தரங்கமானது. மஹா பாக்,யவானே! ப்ரஹ்மமென்று சொல்லப்படும் எல்லாவற்றிற்கும் அந்தர்யாமியாயிருப்பவன் ஹரி.])(சாந்தாநந்தமஹாவிபூ,தி பரமம் யத் ப்,ரஹ்ம ரூபம் ஹரே: மூர்த்தம் ப்,ரஹ்ம ததோ 5பி தத்ப்ரியதரம் ரூபம் யத,த்யத்ஃபு,தம் | யாந்யந்யாநி யதா ஸூக,ம் விஹரதோ ரூபாணி ஸர்வாணி தாந்யாஹு: ஸ்வைரநுரூபரூபவிப,வைர் காடோபகூடடாநி தே॥ [தோஷங்களற்றதும், அளவற்றதும், பெரிதான உபய விபூ,திகளை உடையதும், மேலானதும், ப்ரஹ்ம ஸப்,த,த்தி னால் சொல்லப்படுவதுமான ஹரியினுடைய ஸ்வரூபம் யாதொன்று உண்டோ, அந்த ஸ்வரூபத்தையும் விட அவனுக்கு மிகவும் பிரியமானதும், மிகவும் அற்புதமான தும், “உருவமுள்ள ப்,ரஹ்மம்’என்று சொல்லப்படுவதுமான, எம் பெருமானுடைய திஃவ்ய மங்கள விக்ரஹம் யாதொன்று உண்டோ, திருவுள்ளமுகந்தபடி விளையாடுகிற அந்த ஸர்வேஸ்வரனுடைய மற்ற திருவுருவங்கள் யாவையோ, அவை எல்லாவற்றையும் உமக்கே அஸாதாரணமானவையும், தகுந்தவையுமான ஸ்வரூப ரூப விஸேஷங்களாலே நன்றாக அணைக்கப் பட்டிருப்பவையாகச் சொல்லுகிறாள்)
(ப்ரஹ்ம சப்தம் -திவ்ய மங்கள விக்ரஹத்தையே குறிக்கும் –-தே விபூதய-இவை எல்லாம் உன்னுடைய விபூதிகள்-உனக்கு ஆதேயங்கள் -நியாம்யங்கள் -சேஷங்கள் என்றவாறு )-தே விபூ தய – விபூதி சரீர சப்தங்கள் பர்யாயம் ஆகையாலே-சரீர தயா சேஷங்கள்-விபூதயோ ஹரே ரேதா ஜகத சிருஷ்டி ஹேதவ யாநி மூர்த்தான்ய மூர்த்தானி யான்ய த்ரான்யத்ர வா க்வசித் ஸந்தி வை வஸ்து ஜாதானி தாநி சர்வாணி தத் வபு தத் சர்வம் வை ஹரேஸ்தநு -இத்யாதிபி (ப். ரஹ்மா தக்ஷாதவ: காலஸ் ததை,வாகி,லஜந்தலவ: | விபூ,தயோ ஹரேரேதா ஜக,தஸ் ஸ்ருஷ்டி ஹேதவ: ॥ [பிரமனும், தக்ஷன் முதலிய ப்ரஜாபதிகளும், காலமும், அம் மாதிரியே எல்லா ஜந்துக்களும் உலகை ஸ்ருஷ்டிப்ப தற்குக் காரணமாயிருக்கும் ஹரியின் ஸரீரங்கள்)(யத்ஞ்சித் ஸ்ருஜ்யதே யேந ஸத்த்வ ஜாதேந வை த்ஸிஜ। தஸ்ய ஸ்ருஜ்யஸ்ய ஸம்பூ,தெள தத் ஸர்வம் வை ஹரேஸ் தநு: ॥ [ப்ராஹ்மண | ஒரு ப்ராணியால் யாதொன்று ஸ்ருஷ்டிக்கப் படுகிறதோ, ஸ்ருஷ்டிக்கப்படும் அதை ஸ்ருஷ்டிக்கும் விஷயத்தில் (ஸ்ருஷ்டி செய்யும்) அவை யெல்லாம் ஹரியினுடைய ஸரீரமாகின் றன)– விபூதி சரீர சப்தயோ பர்யா யத்வம் சாஸ்த்ரேஷூ பிரசித்தம்-
ஒவ் ஒரு அண்டத்திலும் அண்டாதிபதி -சர்வ வித ஜந்துக்கள் போக்ய போக உபகரண பதார்த்தங்கள்
எல்லை அற்று இருக்குமே -இவற்றையே அண்டாந்தர கோசாரம் எனப்படுகிறது-அனைத்துக்கும் ஆதாரகன் நியாமகன் சேஷி இவனே-பிரகிருதி த்ரிவித குணங்களும் அவன் இட்ட வழக்கு
பிரதானம் -விகாரம் அற்று இருக்கும் மூலப் பிரக்ருதி–குணங்களைத் தனிப்பட பிரித்து அருளிச் செய்தது ஸாம்யாவஸ்தமான குண த்ரயமே பிரகிருதி–குணங்களை ஜகத் காரணமாகச் சொன்ன என்னும் சாங்க்ய மத நிரசனத்துக்காக–புருஷ -பிரக்ருதியை வியாபித்து இருக்கும் ஷேத்ரஞ்ஞ சமுதாயம்-கோட்டைக்குள் நெருப்பு போலவும் எள்ளுக்குள் எண்ணெய் போலவும் பிரதானத்தில் உறைந்து இருக்குமே-அண்டாந்தர கோசரம் என்று வ்யஷ்டியைச் சொல்லுகையாலே-இது சமஷ்டி விஷயம்–ப்ரஹ்ம –ஸ்வரூபத்தை குறிக்கும் யாகிலும் இங்கே அனைத்தும் உன் விபூதிகள் என்று முடிப்பதால் இங்கு திவ்ய மங்கள விக்ரஹமே–இவை அனைத்தும் உனக்கு ஆதேயங்கள் -நியாம்யங்கள் -சேஷங்கள்-என்றபடி –
ஆதி யண்டம் யவ்வண்டம் அடங்கிய அகில வத்தும் ஐ இரண்டள வுயர்
மீது சூழும் ஏழு ஆவரணங்களும் விரி குணங்களும் வேற்றுமை அற்றதும்
வேதகத்திய சேதன வர்க்கமும் மேலதான் வைகுண்டமும் நித்தரும்
சோதி யாகு நின் சுந்தர ரூபமும் சொந்தமாம் உன் விபூதிகளாகுமே –16-வேதகம் -வேறு படுத்தல்–ஆதி காலத்தில் உண்டான அண்டங்களும்-அவ்வண்டங்களில் அடங்கிய அகில வஸ்துக்களும்-பதின் மடங்கு அதிகமான அண்ட ஆவரணங்களும்-ஸத்வாதி குணங்களும்-விகாரப்படாத ப்ரக்ருதியும்-சேதனர்களும்
உயர்ந்த பரமபதமும்-பத்த முக்தர்களிலும் மேலான நித்யர்களும்-ஸூத்த ஸத்வ தேஜஸ்ஸுடன் விளங்கும் உன் திவ்ய மங்கள விக்கிரகமும் ஆகிய இவை எல்லாம் உனது சேஷ வஸ்துக்கள்
—
ஸ்லோகம் -18-அவதாரிகை –கீழ் சரண்யன் உடைய உத்கர்ஷம் சொல்லி-இதில் உபய விபூதி நாதனை நம்மால் கிட்டலாமோ -என்று கூசாதபடி ஆஸ்ரிதருக்கு இழியும் துறையான கல்யாண குணங்களிலே பன்னிரண்டு குணங்களை அருளிச் செய்கிறார்–அதவா-கீழ் சர்வேஸ்வரத்வம் சொல்லிற்றே-இனி சொல்ல பிராப்தமான சமஸ்த கல்யாண குணாத் மகதையை அருளிச் செய்கிறார் என்றுமாம் –ஆளவந்தார் முன்பு ஶரண்யனான (புகல்) எம்பெருமானின் பெருமைகளைப் பேசினார்.
இதில் “இப்படிப்பட்ட உபய விபூதி நாதனை நாம் எப்படி அணுகுவது?” என்ற தயக்கத்தைப் போக்க,
அவனுடைய அடியார்கள் ஈடுபடும் பன்னிரண்டு குணங்களை அருளிச் செய்கிறார்.-முன்பு பகவானின் ஸர்வேஶ்வரத்வத்தை அருளிய ஆளவந்தார், இப்பொழுது அவனுடைய பேசத் தகுந்த குணங்களை அருளிச் செய்கிறார்.
வஸீ வதாந்யோ குணவான் ருஜூஸ் ஸூசிர்
ம்ருதுர் தயாளூர் மது ரஸ் ஸ்திரஸ் ஸம
க்ருதீ க்ருதஜ்ஞஸ் த்வமஸி ஸ்வ பாவதஸ்
சமஸ்த கல்யாண குணாம்ருதோ ததி—18–
நீ இயற்கையாகவே அமுதக் கடல் போன்ற இனிமையான குணங்களை உடையவன். உன் குணங்களாவன
1) உன் அடியார்களுக்கு வசப்பட்டவன்
2) உன்னுடைய அடியார்களுக்கு உன்னையே தரும் குணத்தை உடையவன்
3) எல்லோரிடமும் கலந்து பழகும் ஸௌஶீல்யத்தை உடையவன்
4) உள்ளம் உரை செயல்களில் நேர்மை உடையவன்
5) நிர்ஹேதுகமாக க்ருபை பண்ணும் பரிசுத்தியை உடையவன்
6) அடியார்களின் பிரிவைத் தாங்க முடியாதவன்
7) அடியார்களின் துயரைத் தாங்க முடியாத கருணை உள்ளம் கொண்டவன்
8) இனிமையானவன்
9) அடியார்களைக் காப்பதில் உறுதியாக இருப்பவன்
10) உன்னிடம் சரணடைந்தவர்களிடத்தில் ஸமமாக இருப்பவன்
11) உன் அடியார்களின் செயல்களை உன் செயல்களாக நினைத்துச் செய்பவன்
12) அடியார்களின் சிறு உதவிகளுக்கும் நன்றியுடன் இருப்பவன்.
ஸ்வ பாவதஸ்–இயற்கையாகவே –இது அனைத்துக் குணங்களிலும் அந்வயம்
1-வஸீ –
கீழ் சொன்ன ஈசிதவ்யதையைத் தன் வசத்திலே நடத்தி-வர்த்திக்கும் –என்கை -இத்தாலும் ஸ்வ தந்த்ரன் பக்கலிலே குணம் கிடந்தது பெரு விலையனாம் – என்னும் இடம் சொல்லுகிறது –-சர்வச்ய வஸீ சர்வச்யேசான – ஜகத் வாசே வர்த்ததேதம்–(ஸர்வஸ்ய வஸீ ஸர்வஸ்யேசாநஸ் ஸர்வஸ்யாது, பதி: ‘ [எல்லாவற்றையும் தன் வத்தில் நடத்துபவன்; எல்லாருக்கும் ஈஸ்வரன்; எல்லாருக்கும் அதி,பதி.])(ஸஸுராஸுரக,ந்த,ர்வம் ஸயக்ஷோரக,ராக்ஷ்ஸம் |ஜகத் வஸே வர்த்ததேத,ம் க்ருஷ்ணஸ்ய ஸசராசரம் || [தேவர், அஸுரர், கூந்த ர்வர்களோடு கூடியதும், யக்ஷர், நாகர், ராக்ஷ்ஸர்களுடன் சேர்ந்ததும், அசையக் கூடியதும், அசையக் கூடாததும் சேர்ந்ததுமான இந்த உலகம் கிருஷ்ணனுடைய வஸத்திலிருக்கிறது)அதவா-தன்னுடைய திருவடிகளில் ஆனுகூல்யம் உடையார் வசத்தில் தாழ நிற்கும் -என்றுமாம் –-இமௌ ஸ்மமுநி சார்தூல கிங்கரௌசமுபஸ்திதௌ ஆஜ்ஞாபயா யதேஷ்டம் வை ஸாசனம் கரவாவ கிம் – ஆஜ்ஞாபய மஹாபாஹோ ப்ரூஹி யத்தே விவஷிதம் – ஸ்வ யமேவ ஹரிர் வவரே விபர பாதாவநே ஜனம் அனந்யாதீ நத்வம் -இத்யாதி –(இமெள ஸ்ம முநிஸார்தூ,ல! கிங்கரெள ஸமுபஸ்தி,தெள।| ஆஜ்ஞாபய யதேஷ்டம் வை ஸமாஸநம் கரவாவ இம் | [முநி ஸ்ரேஷ்ட,ரே ! நாங்களிருவரும் ( தேவாீருக்குக் ) கைங்கர்யம் செய்பவர்களாக அருகில் இருக்கிறோம், (தேவரீருடைய) இஷ்டப்படி கட்டளை யிட வேண்டும்; (தேவரீருடைய) எந்தக் கட்டளையை நாங்கள் செய்யவேண்டும்)(ஆஜ்ஞாபய மஹா பாஹோ! ப்ரூஹி யத்தே விவக்ஷிதம் | கரிஷ்யாமி ஹி தத் ஸர்வம் யத்த்வம் வக்ஷ்யஸி பாரத ॥|நீண்ட கைகளை உடையவனே | நீ சொல்ல விரும்பியதைச் சொல்; கட்டளையிடு. தர்ம புத்தீரனே! நீ சொல்லுவது எதுவோ அது முழுவதும் நான் செய்கிறேன்)(ஸ்வயமேவ ஹரிர் வவரே விபர பாதாவநே ஜநம்[ஹரியானவர், ப்ராஹ்மணர்களுடைய திருவடியை விளக்குவதைத் தாமாகவே ஸ்வீகரித்தார்)(அநந்யாத,நத்வம் தவ கில ஜகுர் வைதிக: பராத,நம் த்வாம் து ப்ரணத பரதந்த்ரம் மநுமஹே।| உபாலம்போ அயம் போ ஸ்ரயதி ப,த ஸார்வஜ்ஞ்யமபி தே யதோ தோஷம் ப,க்தேஷ்விஹ வரத, நைவாகலயஸி॥ [வரதனே! வேத,வாக்கியங்கள் உனக்குப் பிறர்க்கு வஸப் பட்டிராமையாகிய ஸ்வாதந்த்ரியத்தைப் பேசியுள்ளன; நாங்களோ வெனில் அடியவர்களுக்கு ஆட்பட்டவனான.. உன்னைப் பரதந்த்ரனாகவே நினைக்கிறோம். இம் மாதிரியான நிந்தை, உன்னுடைய ஸர்வஜ்ஞத்வத்தையும் பற்றுகிறது; ஆஸ்சர்யம் ! ஏனெனில்; இவ் வுலகிலுள்ள பக்தர்களிடத் தில் நீ குற்றத்தைச் சிறிதும் பார்க்கிறா யில்லை யன்றோ)-ஆஸ்ரித பர தந்த்ரனாய் இருக்கும் இருப்பு பிறர்க்காக என்றால் நியாமகர் இல்லாமையாலே ஸ்வ தந்திர கார்யமாய் இருக்கும் –
பிரபுவாய் -அல்லது ஆஸ்ரித பரதந்த்ரனாய் -தூது போனமை கட்டுண்ணப் பண்ணிக் கொண்டமை –
ஸ்வ இச்சையால் வந்த பாரதந்தர்யம் -கர்மம் அடியாக இல்லவே -இத்தைக் காட்டவே ஸ்வ பாவதஸ்-விசேஷணம் –
2-வதாந்ய-
இப்படி ஆஸ்ரித பர தந்த்ரனாய் செய்யும் கார்யம் ஏது என்னில்-தன்னையும் தன் உடைமையையும் அவர்களுக்கு கொடுக்கும் ஔதார்யத்தைச் சொல்லுகிறது-ப்ரியவாக்தா ந ஸீ லச்சவ தான்ய பரி கீர்த்தித – ய ஆத்மாதா பலதா-ச சர்வா நர்த்தி நோ த்ருஷ்ட்வா ச மேத்ய ப்ரதி நந்த்ய ச-உதாராஸ் சர்வ ஏவித–ந தே ரூபம்–(ப்ரியவாக், தராநமீலஸ்ச வதாந்ய: பரிரேத்தித: [இனிமையாகப் பேசுபவனும், கொடையாளியும் “வதாந்யன்’ என்று சொல்லப்படுகிறான்-(ய ஆத்மதா பலதா: [எந்தப் பரமபுருஷன், தன்னையும் கொடுத்துத் தன்னை அனுபவிக்கத்தகுந்த மநோ பலத்தையும் கொடுக்கிறான்)(அத; மத் யமகக்ஷ்யாயாம் ஸமாக,ச்சத் ஸுஹ்ருஜ் ஜநை: | ஸ ஸர்வாநர்த்திநோ த்,ருஷ்ட்வா ஸமேத்ய ப்ரதிநந்த்,ய ச ॥ [அந்த ஸ்ரீராமன் யாசிப்பவர்களைக் கண்டு, (அவர்களை) எதிர் கொண்டு ஆநந்தப் படுத்திப் பிறகு நடுக்கட்டில் நண்பர்களுடன் சேர்ந்தார்)(உதாராஸ் ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம்[இவர்கள் எல்லாரும் உதாரமானவர்களே; ஜ்ஞாநியோ எனக்கே ஆத்மா (தாரகன்) என்று என் ஸித்,தாந்தம்)
3-குணவான் –
தன்னையும் தன் உடைமையையும் அவர்களுக்குக் கொடுக்கும் இடத்தில் அவர்கள் தன்னையும் தங்கள் சிறுமையையும் பார்த்து பிற்காலியாமே அவர்கள் அளவாகத் தன்னை அமைக்கும் சீலம்-மஹதோ மந்தை – குண பிரகரணம் ஆகையாலே குணவான் -என்கிறது குண சாமான்யத்தைச் சொல்லுகிறது அன்று – குண விசேஷத்தை சொல்லுகிறது—குண்யத இதி குண -என்கிற படியே அனுசந்தாவுக்கு
எப்போதும் ஒக்க விட ஒண்ணாமை யாலே சீலத்தை குண சப்தத்தாலே சொல்லுகிறது-சால சப்தம் வ்ருஷ சாமான்ய வாசியாய் இருக்கிறது வ்ருஷ விசேஷத்தைக் காட்டுகிறாப் போலே –அஜாயமான கோன்வஸ்மின் சாம்ப்ரதம் லோகே குணவான் -என்று தொடங்கி-இஷ்வாகு வம்ச பிரபவ -பபூவ குணவத்தர ச ஹி தேவைருதீர்ண்ஸ்ய -என்கிறபடியே-சீல கார்யம் அவதாரம் -என்கை-(கோந்வஸ்மிந் ஸாம்ப்ரதம் லோகே குணவாந் கஸ்ச வீர்யவாந்।… நாரத;– ..இக்ஷ்வாகு வம்ஸ ப்ரப,வோ ராமோ நாம குணாகர: |[வால்மிகி:– “இப்போது இவ்வுலகில் எவன் குணவானா யிருக்கிறான்? எவன் வீர்யவானாயிருக்கிறான்?…… ”நாரதரர்: இக்ஷ்வாகு வம்ஸத்தில் பிறந்தவனான ராமனென்பவன் குணங்களுக்கெல்லாம் இருப்பிடமா யிருப்பவன்)(பபூவ குணவத்தர:, ஸ ஹி தேவைருதீர்ணஸ்ய ராவணஸ்ம வதார்த்தி,பி; | அர்த்திதோ மாநுஷே லோகே ஜஜ்ஜே விஷ்ணுஸ் ஸநாதந: ||[கொழுத்தவனான ராவணனுடைய வதத்தை விரும்பும் தேவர்களால் பிரார்த்திக்கப்பட்டவனும், பழமையானவனுமான விஷ்ணு மனுஷ்ய லோகத்தில் பிறந்தான்; (அப்படி அவதாரம் செய்த) அந்த: ராம பிரானே (தன் பராவஸ்தை,யைக் காட்டிலும்) குணத்தில் சிறந்தவனானான்)
4-ருஜூஸ்
இப்படித் தன்னை அமைத்துக் கொண்டு பொருந்தும் போது அவர்கள் நாநா ருசிகள் ஆகையாலே
மேட்டிலே விரகாலே நீர் எற்றுமா போலே அவர்கள் செவ்வைக் கேடே செவ்வை யாம்படி செவ்வியனாகை-ஆர்ஜவம் ஆவது -ஆஸ்ரித விஷயத்தில் மநோ வாக் காயங்களால் ஏக ரூபனாகை-
யஜ்ஜாதீயோ யாத்ருசோ யத் ஸ்வ பாவ –தாஜ்ஜாதீய தாத்ருச தத் ஸ்வ பாவ – ததவை ததாஸ்து கதமோ அயமஹோ ஸ்வ பாவோ யாவான் யதாவித குணோ பஜதே பவந்தம் தாவாம்ஸ் ததாவித குணஸ் த்தீன வ்ருத்தி சம்ச்லிஷ்யசி த்வமிஹ தேன சமான தர்மா –(யஜ்ஜாதயோ யாத்,ருமோ யத் ஸ்வvவ: பாதச்சாயாம் ஸம்ஸ்ரீதோ யோ$பி கோஅபி । தஜ்ஜாதீயஸ் தாத்,ருஸஸ் தத்ஸ்வபாவ: ஸ்லிஷ்யத் யேநம் ஸுந்த,ரோ வத்ஸலத்வாத்-[தன் திருவடி நிழலில் ஒதுங்கினவன் எவனாயிருந்தாலும், அவன் எந்த ஜாதியை உடையவனாயிருக்கிறானோ, எந்த ஆசாரத்தை உடையவனோ, எந்த குணங்களை உடையவனோ, அந்த ஜாதியையும், அந்த ஆசாரத்தையும், அந்த குணங்களையும் உடையவனாய், அவனிடம் வாத்ஸல்யத்தினால் அவனுடன் ஸுந்தரராஜனாகிய பகவான் சேருகிறார்.](தத்,வை ததாஸ்து கதமோ5யமஹோ ஸ்வபாவோ யாவாந் யதாவித கு,ணோ பஜதே பவந்தம்। தாவாம்ஸ்தத;வித,குணஸ் தததீந வ்ருத்தி: ஸம்ஸ்லிஷ்யஹி த்வமிஹ தேந ஸமாந த,ர்மா।॥ [முன் சொன்னது அப்படியே இருக்கட்டும், இந்த ஸ்வ பாவம் எவ்வளவு ஆஸ்சர்யமானது | (அதாவது:–) தேவரிரை எவனொருவன் எம்மாதிரியான ஸ்வரூபத்தையும், குணத்தையும் உடையவனாய் உம்மிடம் பத்தி செய்கிறானோ, அவனோடு அம் மாதிரியான ஸ்வரூபத்தையும்,குணங்களையும் உடையவனாயும், அவனுக்கு வஸப்பட்ட எல்லா வ்யாபாரங்களையும் உடையவனாகவும், அவனோடொத்த ஆசாரத்தை உடையவனாகவும் இங்கேயே நீ சேர்கிறாய்)
ருஜூஸ் –த்ரி கரணங்களினாலும் கபடம் அற்றுச் செவ்வியனாய்-ருஜு புத்திதயா சர்வம் ஆக்யாதும் உபசக்ரமே -வால்மீகி -பெருமாள் சூர்பணை இடம்
5-ஸூசிர் –
இப்படி உபகரிக்கும் இடத்தில் ஒரு பிரயோஜனத்தைக் கணிசியாதே-வெறும் புறத்தில் உபகரிக்கும் பாவ ஸூத்தியைச் சொல்கிறது –யோ அர்த்தே ஸூசி ஸ ஹி ஸூ சி –-(ஸர்வேஷாமேவ மெளசாநாம் அர்த்த மெளசம் பரம் ஸ்ம்ருதம் | யோரர்த்தே, ஸூசிஸ் ஸ ஹி ஸூதிர் ந ம்ருத்வாரி ஸூசி: ஸூசி: || [எல்லா ஸூத்திகளுக்குள்ளும், பொருள் விஷயத்தில் ஸூத்,தனாயிருக்கையே மேலானதாக எண்ணப்படுகிறது; பொருள் விஷயத்தில் எவன் ஸூத்,த,னாயிருக்கிறானோ, அவனே ஸாத்,தன். மண்ணாலும், தண்ணீராலும் மட்டும் ஸூத்தி செய்து கொள்ளுபவன் ஸூத்தனல்லன்)நித்ய சம்சாரியை ஸ்வ சம்பந்தமே ஹேதுவாக நித்ய சூரிகளோடு ஒரு கோவை யாக்க வல்ல பாவனத்வத்தைச் சொல்லுகிறது -என்றுமாம் –பாவனா சர்வ லோகாநாம் த்வமேவ ரகு நந்தன –பக்தி ரஷ்டவிதா ஹ்யேஷா யஸ்மின் ம்லேச்சே அபி வர்த்ததே ஸ விப்ரேந்த்ரோ முநிஸ் ஸ்ரீ மான் ஸ யதிச் ஸ ஸ பண்டித மயா பூஜ்ய சதா சா சௌ மதபக்த ஸ்வ ப ஸோ அபி தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் ஸ ஸ பூஜ்யோ யதா ஹ்யஹம்-(பாவநஸ் ஸர்வலோகாநாம் த்வமேவ ரகு,நந்த;ந [ரகுநந்தனா! நீயே எல்லா உலகங்களையும் பரிஸூத்,த,ப் படுத்துபவன்)(ப.க்திரஷ்டவிதரா ஹ்யேஷா யஸ்மிந் ம்லேச்சே,5பி வர்த்ததே | ஸ விப்ரேந்த்,ரோ முநி: ஸ்ரீமாந் ஸ யதிஸ் ஸ ச பண்டி,த:।| மயா பூஜ்யஸ் ஸதா சாஸெள மத்,ப,க்த: ஸம்வபசோ$பி ய:। தஸ்மை தேயம் ததோ க்,ராஹ்யம் ஸ ச பூஜ்யோ யதா ஹ்யஹம் ॥ [இம் மாதிரியான எட்டு விதமான பக்தியானது எந்த மிலேச்சனிடமும் இருக்கிறதோ, அவனே (பகவானை) மனனம் செய்யும் பிராஹ்மண ஸ்ரேஷ்டடன்; அவனே கைங்கர்ய லக்ஷ்மியை உடையவன்; அவனே ஸந்யாஸி; அவனே பண்டிதன்; சண்டராளனா யிருந்த போதிலும் எவனொருவன் என் ப,க்தனோ அவன் என்னுடன் எப்போதும் பூஜிக்கத் தக்கவன். அவனுக்கு (ஜ்ஞானத்தைக்) கொடுக்கலாம்; அவனிடமிருந்து (ஜ்ஞானத்தைக்) கொள்ளலாம்; என்னைப் போல் அவனும் பூஜிக்கத்தக்கவன்)
6-ம்ருதுர் –
சம்ஸ்லேஷத்தில் இப்படி இருக்கிறவன் இவர்கள் விஸ்லேஷத்தில் ஆற்ற மாட்டான் -என்கிறது
ஆத்ம குண பிரகரணம் ஆகையாலே மானச தௌர்பலத்தைச் சொல்லுகிறது –-நைவ தம்சான் ந மசகான் –-ந ஜீவேயம் ஷணம் அபி-அவகாஹ் யார்ணவம் ஸ்வப்ஸ்யே-(நைவ தம்ஸாந் ந மஸகாந் ந கீடாந் ந ஸரீஸ்ருபாந் | ராகவோஃபநயேத் காத்ராத் த்வத், க,தே நாந்தராத்மநா ॥ [உன்னிடம் மனம் லயித்திருப்பதால், ராக,வன் ஈக்களையும், கொசுக்களையும், புழுக்களையும், பாம்புகளையுங் கூட உடம்பிலிருந்து தள்ளுவதில்லை) (சிரம் ஜீவதி வைதே,ஹீ யதி, மாஸம் த,ரிஷ்யதி। ந ஜீவேயம் க்ஷணமபி விநா தாமஸி தேக்ஷணாம் | [ஸீதை ஒரு மாதம் தரித்திருப்பாளாகில், வெகுகாலம் * பிழைத்திருந்தவளாகிறாள். கறுத்த கண்ணை உடைய அவளை விட்டு ஒரு க்ஷண நேரமும் நான் பிழைத்திருக்க மாட்டேன்.]) (அவக்ராஹ்யார்ணவம் ஸ்வப்ஸ்யே ஸெளமித்ரே ! ப,வதா விநா | கத,ஞ்சித் ப்ரஜ்வலந் காம: …’ ஸ மாம் ஸுப்தம் ஜலே த,ஹேத்॥ [லக்ஷ்மணா! (உன்னைப் பார்ப்பதால் ஸீதையின் நினைவு வருகிறபடியால்) உன்னை விட்டுவிட்டு ஸமுத்ரத்தில் இறங்கித் தூங்கப் போகிறேன். மிகவும் ஜ்வலிக்கும் அந்தக் காமாக்னியானது ஜலத்தில் தூங்கும் என்னைக் கஷ்டப் பட்டே தஹிக்கும்)ம்ருதுர் -ஸூ குமாரனாய் –திவ்ய மங்கள விக்ரஹ குணமும் ஆத்ம குணமும் – மஹாத்மாக்களை க்ஷணம் நேர விஸ்லேஷம் அஸஹிஷ்ணு -பொறாதவன் இங்கு ஆத்ம குணத்தை குறிப்பதே உசிதம்
7-தயாளூர் –
ஆஸ்ரித விஷய துக்கத்தில் அசஹனாய் இருக்கை-தயை பர துக்க அசஹத்வம்-வ்யசநேஷூ மனுஷ்யாணாம்– (வ்யசநேஷூ மனுஷ்யாணாம்– ப்ருஸம் பவதி துக்கத: | உத்ஸவேஷு-ச ஸர்வேஷு பிதேவ பரிதுஷ்யதி | [(ராமன்) மனுஷ்யர்களுடைய துக்கங்களில், (அவர்களைக் காட்டிலும) அதி,கமாக துன்புறுகிறான். (அவர்களுடைய) எல்லா உத்ஸவங்களிலும தந்தையைப் போல் ஆனந்தப் படுகிறான்)இதி சர்வ சாதாரணம் ஆனால் ஆஸ்ரித விஷயத்தில் கிருபை-அவாங் மனஸ் அகோசரம் இறே-ப்ரியோ ஹி ஜ்ஞானி நோ அத்யர்த்தம் -இதி ஸ்திரீ ப்ரணஷ்டேதி காருண்யாத்-
ஸ தம் நிபதிதம் –இத்யாதி-(தேஷாம் ஜ்ஞாநீ நித்ய யுக்த: ஏக ப,க்திர் விஸிஷ்யதே | ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோ$த்யர்த்த,மஹம் ஸ ச மம ப்ரிய:।| [(என்னுடன்) எப்போதும் சேர்ந்திருப்பவனும், என்னிடம் மட்டும் அன்பு. செய்பவனுமான ஜ்ஞானி அந்த நால்வருள் மேலானவன், நான் ஜ்ஞானிக்கு மிகவும் பிரியனன்றோ. (அப்படியே) அவனும் எனக்குப் பிரியமானவன்.) (இயம் ஸா யத்க்ருதே ராமஸ் சதுர்ப்பி,: பரிதப்யதே। காருண்யே நாந்ரு ஸம்ஸ்யேந ஸோகேந மத,நேந ச॥ ஸ்த்ரீ ப்ரணஷ்டேதி காருண்யா தாஸ்ரிதேத். யாந்ரும்ஸ்யத: | பத்நீ நஷ்டேதி ஸோகேந ப்ரியேதி மத,நேந ச–[எவளுக்காக ஸ்ரீராமபிரான் கருணை, இரக்கம், சோகம், காமம் என்னும் நான்கினாலும் வருந்துகிறாரோ, அந்த ஸீதை இவளே. (ஸ்ரீராமபிரான்) *ஒரு பெண் பிள்ளை அபஹரிக்கப் பட்டாளே’ என்னும் கருணையினாலும், * நம்மைச் சேர்ந்தவள் (அபஹரிக்கப்பட்டாளே) என்னும் இரக்கத்தினாலும், நம்முடைய மனைவி நஷ்டமாயினளே” என்னும் மோகத்தினாலும், ‘ நமக்கு இனியவள் (அபஹரிக்கப்பட்டனளே): எனனும் காமத்தினாலும் (வருந்துகிறார்) (ஸ பித்ரா ச பரித்யக்தஸ் ஸுரைஸ்ச ஸ மஹர்ஷிபி;: | த்ரீந் லோகாந் ஸம்பரிக்ரம்ய தமேவ ஸரணம் ௧,த: || ஸ தம் நிபதிதம் பூமவ் ஸரண்ய; ஸரணாக,தம் | வதார்ஹமபி காகுத்ஸ்த;: க்ருபயா பர்யபாலயத் ॥ [அந்தக் காகாஸுரன், தந்தையினாலும், ( தாயினாலும், ) மஹர்ஷிகளுடன் கூடிய தேவர்களாலும் கைவிடப்பட்ட வனாய், மூன்று உலகங்களையும் சுற்றித் திரிந்து அந்த ராமனையே ஸரணமடைந்தான். ஸரணமடைந்தவனும், பூமியில் விழுந்தவனுமான அவனை, கொல்லத் தகுந்தவனா யிருந்த போதிலும், ஸரணமடையத் தகுந்தவனான ஸ்ரீ ராம பிரான் (தன்) அருளாலே காப்பாற்றினார்)
தயாளூர் –இரக்கமுடையவனாய்-பிறர் துக்கம் கண்டு தானும் துக்கப்படுபவன்-வ்யசநேஷூ மனுஷ்யாணாம்-அவிகார ஸ்வபாவனாவனுக்கு பிறர் துக்கம் போக்க நினைக்கும் கருணையே என்று ஸ்ரீ தேசிகர் திரு உள்ளம்
8-மதுர-
நிர்தயனானாலும் விட ஒண்ணாத சாரச்யத்தைச் சொல்லுகிறது –-நாநா வித ருசிகளான ஜந்துக்களுக்கு அவ்வவர் நிலைகளிலே இனியனாய் இருக்கை –-ரசோ வை ஸ-ஏஷ ஹேவா நந்த யாதி
ரசம் ஹ்யேவாயம் லப்த்வா நந்தி பவதி -இத்யாதய-
மது ரஸ் –ச ரசனாய் -மதுரமான வாக் சாமர்த்தியம் -என்றும்-எனக்கு தேனே பாலே கன்னலே அமுதே திருமாலிருஞ்சோலைக் கோனே -என்னும்படி திவ்ய மங்கள விக்ரஹம் என்றுமாம் –ரஸோ வை ச –சர்வ ரஸா –
9-ஸ்திர-
இப்படி சர்வ ரசிகனாய் இருக்கிறவன் பக்கலிலே அல்ப அனுகூல்யம் பண்ணினார்க்கு-தனக்கு அந்தரங்கரானார் விரோதிகள் ஆனாலும் அவர்களால் அப்ரகம்யனாய் இருக்கை –-ந த்யஜேயம் கதஞ்சன – அபயம் சர்வ பூதேப்ய-என்னடியார் அது செய்யார்-ஸ்திர –-ஆஸ்ரிதர் உடைய பராதி கூல்யங்களாலும் அவிக்ருதனாய் இருக்கும் என்றுமாம் —(மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சந | தோஷோ யத்,யபி தஸ்ய ஸ்யாத் ஸதா மேதத கர்ஹிதம் ॥ [நண்பனுடைய பாவத்தோடு நெருங்கின இவ் விபீ,ஷணனை ஒரு பொழுதும் கைவிட மாட்டேன். அவனிடம் தோஷமிருந்தாலும் இருக்கட்டுமே. நல்லோர்களுக்கு இவனை ஸ்வீகரிப்பது நிந்திக்கத் தக்கதல்ல)
ஸ்திரஸ் –ஒருவராலும் அசைக்க முடியாதவனாய் –ஆஸ்ரிதர் அபராதங்களைக் கண்டு திரு உள்ளம் சீறிக் கை விடாதவன்-தன் அடியார் திறத்தகத்து தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல் என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்றே செய்தார் என்னுமவன்
10-ஸம--ஆஸ்ரயிக்கும் இடத்தில் ஜ்ஞான வ்ருத்தாதிகளில் குறைந்து இருந்தார்களே யாகிலும்
ஆஸ்ரயணீயத்வே சமனாகை –-ஸமோஹம் சர்வ பூதேஷு-ஈடும் எடுப்புமில் ஈசன் –திருவாய் மொழி -1-6-3–கொள்கை கொளாமை இலாதான் -திருவாய் மொழி -1-6-5-(ஸமோஹம் ஸர்வபூ,தேஷு ந மே த்,வேஷ்யோ $ஸ்தி கஸ்சந–என்னை ஆஸ்ரயிக்கும் விஷயத்தில்) நான் எல்லா பூ,தங் களுக்கும் ஸமமாயிருப்பவன்; எனக்கு ஒருவனும் வெறுக்கத் தக்கவனல்லன்)
ஸம-அனைவருடன் வாசி இன்றி ஒத்துப் பரிமாறுபவனாய் -பரம பவித்ரன் என்றவாறு-ஜாதி குண வ்ருத்தங்களைப் பாராதவன் –சமோஹம் சர்வ பூதானாம் -விஷம ஸ்ருஷ்ட்டி கர்மங்கள் அடியாகவே –
11-க்ருதீ –
கர்த்தும் உத் யுக்தவான்-இப்படி ஆஸ்ரயித்தால்-அவருடைய கர்த்தவ்ய அம்சம் எல்லாம்
தனக்கே அனுஷ்டேயம் என்று இருக்கும்-ஆதி கர்மணி க்த-ந ஸ்மரத்யப காராணாம் ஸ்தமப்யாத் மவத்தயா-கதஞ்சிதுப காரேண க்ருதே நை கேன துஷ்யதி-உச்யமா நோ அபி பருஷம் நோத்தரம் ப்ரதி பத்யதே-ஆஸ்ரிதர் தன்னை லபித்தால் இழந்தவர்கள் பெற்றாராய் இருக்குமது அன்றிக்கே –தன் பேறாய் இருக்கை –-அபி ஷிச்ய ஸ தவ சார்த்த ப்ரகல்பதே-(அபி,ஷிச்ய ச் லங்காயாம் ராக்ஷஸேந்த்,ரம் விபீ,ஷணம் | க்ருதக்ருத்யஸ் தத,” ராமோ விஜ்வர: ப்ரமுமோத, ஹ॥[லங்கையில் ராக்ஷஸ ஸ்ரேஷ்டனான விபீஷணனை அபி,ஷேகம் செய்து தன் காரியத்தைச் செய்து முடித்தவனான ராமன், கவலை நீங்கப் பெற்று ஸந்தோஷித்தான்)நன்றி புரியுபவனாய் –தனக்கு செய்ய வேண்டிய க்ருத்யம் ஒன்றும் இல்லாதவனாய்-ஆஸ்ரித ரக்ஷணமே விரதமாகக் கொண்டவன்-(குருஷ்வ மாமநுசரம் வைதர்ம்யம் நேஹ வித்,யதே । க்ருதார்த்தே 5ஹம் ப,விஷ்யாமி தவ சார்த்த; ப்ரகல்பதே॥ [என்னைக் கைங்கர்ய பரனாக வைத்துக் கொள்ளும். இதில் தவறொன்றுமில்லை. ( இதனால் ) நானும் தன்யனாவேன். உம்முடைய காரியமும் நடைபெறும்.])
12-க்ருதஜ்ஞஸ் –
இப்படித் தான் அவர்களுக்கு எல்லா உபகாரங்களைப் பண்ணினாலும் அவர்கள் அடியில் பண்ணின அல்ப அனுகூல்யத்தைக் குவாலாக -பெரியதாக -நினைத்து இருக்கும் –-அவர்கள் பண்ணும் அபகாரமும் அறியான் –அவிஜ்ஞாதா சஹஸ்ராம் ஸூ – (அடியார்களின் தேரஷங்களைக் காண்பதில்) ஞானமற்றவனாயிருப்பவன் ; (அடியார்களின் நன்மைகளைக் காண்பதில்) அளவற்ற ஞானமுடையவனாயிருப்பவன்)தான் பண்ணின உபகாரமும் அறியான் –-ருணம் ப்ரவ்ருத்த மிவ மே ஹ்ருதயானநாப ஸ்ர்ப்பத்தி -(கேரவிந்தே,தி யதா க்ரந்த;த். க்ருஷ்ணா மாம் தூர வாஸிநம் | ருணம் ப்ரவ்ருத்,த,மிவ மே.ஹ்ருதயாந்நாபஸர்ப்பது || [திரெளபதி,யானவள் வெகு தூரத்திலிரு்த என்னைக் குறித்து ‘கோவிந்தா ! என்று கூக்குரலிட்டது ( வட்டியினால் ) வ்ருத்தி யடைந்த கடனைப் போல் என்னுடைய ஹ்ருத்யத்திலிருக்து அகலுகிறதில்லை)என்று இருக்குமவன் –சிரஸா யாசத்-(தம் து மே ப்,ராதரம் த்,ரஷ்டும் பரதம் த்வரதே மந: | மாம் நிவர்த்தயிதும் யோ5ஸெள சித்ரகூடமுபாக;த: ॥ ஸிரஸா யாசதஸ்தஸ்ய வசநம் ந க்ருதம் மயா॥[என்னைத் திருப்பி யழைத்துச் செல்ல எவனொருவன் சித்ர கூடத்திற்கு வந்தானோ, அந்த என்னுடைய தம்பியாகிய பரதனைப் பார்க்க என் மனம் விரைகிறது. தலையாலே யாசித்த அவனுடைய வார்த்தை என்னால் செய்யப்பட வில்லை)
ஆஸ்ரிதர் செய்யும் ஸ்வல்ப அனுகூல்யத்தையும் பெருக்க மதிப்பவனாய்-என் ஊரைச் சொன்னாய் –இத்யாதிகளால் மடி மாங்காய் இட்டு ஸூஹ்ருதங்களை ஓன்று பத்தாக்கிக் கொண்டு போருபவன்
ருணம் ப்ரவ்ருத்த மிவ மே ஹ்ருதயானநாப ஸ்ர்ப்பத்தி -என்று இருக்குமவன் –சிரஸா யாசத்
அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி
த்வமஸி – ஆஸ்ரயத்தில் நலங்கள் குணம் பெறாத படி இருக்கும் -என்னுதல் –-இக் குணங்களும் தன்னைப் பற்றி நிறம் பெறும்படி ஸ்பருஹணீயமாய் இருக்கும் -என்னுதல் –ஸ்வ பாவதஸ் –-இக் குணங்கள் ஆவித்யகம் அன்று-ஆவித்யகம் -அவித்யா கல்பிதம் –-ஔபாதிகம் என்னலாகாத படி -நை சர்க்கிகம் -இயற்க்கை யானது -என்னுதல்–சமஸ்த கல்யாண குணாம்ருதோ ததி – எல்லா குணங்களும் கல்யாணமே நிரதிசய போக்யங்களுமாய் அனுபவிக்க இழிந்தார்க்கு கரை காண ஒண்ணாமைக்கு
ஒரு கடல் என்னும் அத்தனை -என்கிறார்-மதிஷாயான்நிவர்த்தந்தே ந கோவிந்த குண ஷயாத்-(ஸ்வபாவத-என்பதை ஒவ் ஒன்றிலும் அன்வயித்து -சிலவற்றை அருளிச் செய்து-ஸமஸ்த கல்யாண குண அமுதக் கடல் -என்று நிகமிக்கிறார் -)
த்வம் சமஸ்த கல்யாண குணாம்ருதோ ததி–அஸி -நீ கல்யாண குணங்கள் எல்லாவற்றுக்கும் அமுதக் கடலாய் இராநின்றாய் அனைத்தையும் சொல்ல சந்தஸிசில் இடம் இல்லாமையால் ஒரு பன்னிரண்டு குணங்களை எடுத்துக் காட்டி அனுபவிக்கிறார்
மன்னு மிரு வச முகந்து வண்மை வீசி வாய்மையுடன் தூய்மையினை வகித்து அன்பர்க்கே
இன்னமுதாய் ஏனையோருக்கும் சமனாய் என்றும் இளகிய நெஞ்சுடன் அளி கூர்ந்து அவர் தம் வேட்கை
யுன்னி முடித்து அன்னவர் செய் நன்றி நாடி யுகந்து யுதவி யரும் சீல குணவானா நீ
நின்னியல்வாம் கல்யாண குணங்கட்க்கு எல்லா நிகர் அற்ற சுதை யாழி என நின்றாயே –18—எல்லாவற்றையும் தன் வசமாக்கி நடத்துவதோடு ஆஸ்ரிதர்களுக்குத் தானே வசமாகி நடப்பவனும்
இனிய வசனங்களோடு தன் ஆஸ்ரிதற்குத் தன்னையும் தன்னுடைமையையும் கொடுக்கும் தன்மையை யுடையவனும்-ஆஸ்ரித ரக்ஷணத்தில் அவரது அபராதத்தால் மாறுபாடு இல்லாமல் ஒரே நிலையில் நின்று தான் வாக்கு அளித்தபடி ரக்ஷிப்பவனும்-நித்ய ஸம்ஸாரிகளை தன் ஸம்பந்தத்தினால் நித்ய ஸூரிகளோடே சேர்க்க வல்ல பரி ஸூத்தன் ஆனவனும்-அவர்கள் அனுபவிக்கத் தக்க போக்யனானவனும்-தன் பெருமையைக் கருதாது தன்னை அடைபவரை சாதி பேதம் பாராட்டாமல் கூடி உறவாடி அவர்களுக்கு சமானமாய் இருப்பவனும்-அவரது பிரிவையும் அவர் படும் துன்பத்தையும் சகியாத இளம் நெஞ்சை யுடையவனும்-கைம்மாறு கருதாமல் அவர்களுக்கு உபகரிக்குமவனும்
அவரது இச்சையை தன் திரு உள்ளத்தில் கொண்டு அதற்குத் தக்கபடி தான் அடைந்து அவர் கார்யத்தைத் தானே அடைபவனும்-அவர்களுக்குத் தான் செய்த பேர் உபகாரத்திற்காக அவர் செய்யும் அல்ப உபகாரத்தையும் பெரிதாக நினைப்பவனுமாகிய நீ-உனக்கு இயற்கையாகவே அமைந்துள்ள சகல கல்யாண குணங்களுக்கும் இணை இல்லாததான ஓர் அம்ருத சாகரம் போலே -கரை இல்லாமலும் பரம போக்யமாகவும் ஆகின்றாய் –
—
ஸ்லோகம் -19- அவதாரிகை –இக் குணங்களுக்கு சங்க்யை இல்லாதோபாதி ஒரோ குணங்களுக்கு அவதி இல்லை என்கிறார் –
உபர்யுபர்யப் ஜபு வோ அபி பூருஷான்
பிரகல்ப்ய தே யே சதா மித்ய நுக்ரமாத்
கிரஸ் த்வதே கைக குணாவதீ ப்ஸயா
ஸதா ஸ்திதா நோத் யமதோ அதி ஸேரதே–19-
கிரஸ்-வேத வாக்யங்களானவை
உபர்யுபர் -மேன்மேலும்
யப்ஜபு வோ அபி பூருஷான் பிரகல்ப்ய –ப்ரஹ்மாக்களையும் மநுஷ்யர்களாகக் கற்பனை செய்து
தே யே சதா மித்ய நுக்ரமாத்-தே யே சதம் தே யே சதம் என்று ஓயாமல் சொல்லிக் கொண்டே போவதானால்
த்வத் ஏகைக குண அவதீ ப்ஸயா-உன்னுடைய ஒவ் ஒரு குணத்தின் எல்லையைக் கண்டு பிடிக்க வேண்டும் என்கிற விருப்பத்தோடு
ஸதா ஸ்திதா –எப்போதும் இருக்கின்றன -ஆகையினால்
நோத் யமதோ அதி ஸேரதே—ஆரம்ப தசையைக் கடந்து அப்பால் சொல்லவில்லையே
வேத வாக்யங்கள் “தேயே சதம்” (இது போன்ற நூறு) என்று மீண்டும் மீண்டும் புதிய ப்ரஹ்மாக்களை கற்பனை செய்து, உன்னுடைய ஒரு (ஆனந்தம் என்னும்) குணத்தின் எல்லையைக் காண முயன்று,
சிறிதளவும் முன்னேறாமல், ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றன,
உபர்யுபர்யப் ஜபு வோ அபி பூருஷான் பிரகல்ப்ய தே யே சதா மித்ய நுக்ரமாத் –-அப்ஜ புவ உபர்யு பரி தே யே ஸதா மித்ய நுக்ரமாத் பூருஷான் பிரகல்ப்ய –-திரு நாபீ கமலத்திலே அவ்யவதானே பிறந்து அவனோடு ஓதின சதுர் முகனுக்கு மேலே அவனை மனுஷ்யர் கோடியிலே நிறுத்தி-தே யே சத -க்ரமத்தாலே மனுஷ்ய கந்தர்வாதி ப்ரஹ்மாந்தமாக – அநந்த அவதி சித்த்யர்த்தமாக ப்ரஹ்மாக்களை கற்பித்து –-கிரஸ் த்வதே கைக குணாவதீ ப்ஸயா -ஸதா ஸ்திதா –-ஆனந்த குணம் ஒன்றையும் எல்லை காண்கையிலே-இச்சையாலே உத்யோகித்து-சர்வ காலமும் ஸ்திதைகளான வைதிககீர்கள் ஆனவை –
யெகைக-என்கையாலே ஜ்ஞான ஆனந்த அவஹமான யுவத வாதிகளை நினைக்கிறது –
சதா ஸ்திதா கிர -என்று நித்யத்வ அபௌருஷேயத்வங்களை சொல்லிற்று ஆகவுமாம் – வேத அஷர ராசி என்னாதே-கீர்கள் -என்கிறது-வேத சப்தேபய ஏவாதௌ -(நாம ரூபஞ்ச பூ,தாநாம் க்ருத்யாநாஞ்ச ப்ரபஞ்சநம் | வேத,ஸப்,தே,ப்,ய ஏவாதெ,ள தேவா$,நாம் சகார ஸ: ॥| [தே,வர்கள் முதலிய ஜீவ ராசிகளுடைய பெயரையும், உருவத்தையும், வைதிக க்ரியைகளுடைய விவரணத்தையும் ஆதியில் பிரமன் வேத,ஸப்,த,ங்களிலிருந்து (அறிந்தே) செய்தான்.])-என்கிறபடியாலே லௌகிக சப்தங்களும் வைதிக சப்தங்கள் ஆகையாலே சொல்லுகிறது-அவை அந்த குணங்களைக் கண்டபடி யென் -என்னில்-நோத் யமதோ அதி ஸேரதே– உத்தியோக தசையான இது ஒழிய மேல் கால் வாங்கிற்றன வில்லை –
சைஷா நந்தச்ய மீமாம்ஸா பவதி -இத்ராப்ய–ஸ ஏகோ ப்ரஹ்மண ஆனந்த -இதி-யுவா ஸ்யாத்-–ஸ்வரூப ரூப குணங்களுக்கும் உப லஷணம் ஆதல்–யுவத வைத்தால் வந்த தேஜஸ்சை சொல்லுதல்(ஸைஷாநந்த,ஸ்ய மீமாம்ஸா ப,வதி–௮ந்த இந்த ப், ரஹ் மானந்த,த்தினுடைப விசாரம் செய்யப்படுகிறது; யுவா ஸ்யாத் ஸாது, யுவாத்யாயக;। ஆஸிஷ்டோ த்ரடிஷ்டோ ப,லிஷ்ட,;–யெளவனமுள்ளவனாகவும், (தன்போல்) நல்ல யெளவனமுடையவர்களுக்கு ௮த்,யயனம் செய்விப்பவனாக வும், ஸக்தியுள்ளவனாகவும், வீர்யமுள்ளவனாகவும், பல முள்ளவனாகவும் (ஒரு மனிதன்) இருக்கட்டும். தஸ்யேயம் ப்ருதி,வீ ஸர்வா வித்தஸ்ய பூர்ணா ஸ்யாத்–ஸர்வைஸ்வர்யமும் நிரம்பிய பூமி முழுவதும் அவனுக்கு வமப்பட்டதாக இருக்கட்டும். ஸ ஏகோ மாநுஷ ஆநந்த: இது ஒரு மனுஷ்யனுடைய ஆனந்தம், ஸ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய–ப்,ரஹ்ம நிஷ்ட,னும், ஸம்ஸாரத்தில் ஆசையற்ற வனுமான முக்தனுக்கும் (இந்த ஆனந்த,ம் உண்டு,) தேயே ஸதம் மாநுஷா ஆநந்தா:। ஸ ஏகோ மநுஷ்ய கந்தர்வாணாமாநந்த;:– அப்படிப்பட்ட நூறு மனுஷ்யர் களுடைய ஆனந்த,ங்கள் ஒரு மனுஷ்ய கந்தர்வனுடைய ஆனந்த,மாகிறது …… தே யே மதம் ப்ரஜாபதேராநந்தா: | ஸ ஏகோ ப்,ரஹ்மண ஆநந்த;:-—அப்படிப்பட்ட நூறு ப்ரஜாபதியின் ஆனந்த,ங்கள் ஒரு ப்ரஹ்மானந்த,மாகும்)
அத்யாயக இதி ஜ்ஞானம்-ஆசிஷ்ட்ட இதி சக்தி-த்ரடிஷ்ட்ட இதி வீர்யம்-பலிஷ்ட்ட இதி பலம்
தஸ்யேயம் -இதி ஐஸ்வர்யம்-த்ரய்யு யதா தவ யுவத்வ முகைர் குனௌ கை இத்யாதய
உத்யமத –-உத்யோகாத்-நாதி சேரதே அதிக்ரமண சமர்த்தா ந பவந்தி-(அப்ஜபுவ உபர்யுபரி –(த்ரய்யுத், யதா தவ யுவத்வ முகைர் குணெளகை : ஆநந்த,மேது, தமியாநிதி ஸந்நியந்தும் | தே யே ஸதந்த்விதி பரம்பரயா ப்ரவ்ருத்தா நைவைஷ வாங் மநஸகேரசர இத்யுதாஹ ॥ [யெளவனம் முதலிய கு,ண க,ணங்களால் வ்ருத்,தி,யடைந்த உன்னுடைய ஆநந்த,த்தை “இவ்வளவு! என்று அளவிடு வதற்கு ஆரம்பித்து *தே யே ஸதம்” என்று படிப்படியாகப் படித்த வேதம், (அதற்குப் பின்) *இவன் வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாதவன்’ என்று உரக்கக் கூவிற்று) அப்ஜபுவ பூருஷான் ப்ரகல்ப்ய ப்ரஹ்மாக்களை மநுஷ்யர்களாக கல்பித்து -சதம் சதம் நூறு நூறாக – ஆனந்தவல்லி -சொல்லுமா போலே-சொல்லலாமது ஒழிய –உபர்யுபரி ப்ரகல்ப்ய-என்று கல்பித்தததே மேலும் மேலும் செல்லும் -முடிந்தபடி இல்லை ––தே யே சதம் தே யே சதம் தே யே சதம் -என்று அநு க்ரமம்-ஒன்றின் பின் ஒன்றாக -கிர-வேத வாக்கியம் செல்லும் என்றவாறு –-ஆனந்த வல்லீ தவ குண நிவஹம் யவ்வன ஆனந்த பூர்வம் -நான்மறைகள் தேடி என்றும் காண மாட்டாச் செல்வன் –ஆழ்வார் போலே உயர்வற உயர்நலம் உடையவன் என்று பேசி விடாமல் ஏதோ பேசத் தொடங்கி பரிபவப் பட்டனவே வேதங்கள் –அருமையான வேதாந்த விழுப் பொருளை அருளிச் செய்கிறார் இத்தால் -)
குணங்கள் கணக்கில்லாதவை என்பது மட்டும் இல்லை –-ஒவ் ஒரு குணமும் எல்லை காண ஒண்ணாத படி அநவதிகமாய் இருக்குமே –-ஆனந்த வல்லீ -நூறு நூறு என்று திரும்பிக் கொண்டே இருக்குமா -வர்த்தமான பிரயோகம் – ப்ரஹ்ம ஆநந்தத்தின் அத்யந்த அபரிச்சேத் யத்தை சொன்னவாறு
ப்ரஹ்மாக்களை மனுஷ்ய ஸ்தானத்தில் வைத்து வைத்து மேலே மேலே ஓயாமல் கற்பனைகள்
நிகழ்நின்றனவே ஒழிய முடிந்த பாடு இல்லையே-அநுக்ரமம்–ஒன்றின் பின் ஒன்றாக சொல்லிக் கொண்டே போகை-கிர-வாக்குகள் அர்த்தமானாலும் இங்கு வேத வாக்குகள் –சதா ஸ்திதா -எப்பொழுதும் உள்ள வேத வாக்குகள் என்றும் கொள்ளலாம்–யுவா ஸ்வாத் என்று உபக்ரமித்து யவ்வனம் உபதேசிகத்வம் ஆசிஷ்டத்வம் த்ரடிஷ்டத்வம் பலிஷ்டத்வம் சர்வ பிருத்வீ பதித்வம் குணங்களும் கூறப்பட்டமையால் இவற்றின் எல்லை இல்லாதத் தன்மைகளையும் சொன்னவாறு
ஆனந்த வல்லீ தவ குண நிவஹம் யவ்வன ஆனந்த பூர்வம் -ஸ்ரீ பட்டர்
கீதம் கிளத்திடும் தேயேசதம் எனும் கிரமத்தில்
போதனின் மென் மேற் புருடர் விதித்து உன் குணம் ஒன்றின்
ஏதமில் எல்லை காணிய விச்சித்து என்றும் உறை
வேத முயற்சி தசையினை யின்னும் விட்டிலதே –19-வேதத்தில் கூறிய -தே யே சதம் -என்னும் ஒரு கிரமத்தை அனுசந்தித்து உன் அநந்த குணங்களில் ஆனந்த குணமாகிய ஒன்றினுடைய
எல்லையைக் காணும் பொருட்டு வேதங்கள் பிரம்மாவை மனுஷ்ய கோடிகளில் ஒன்றாய் நிறுத்தி அவனுக்கு மேன்மேல் ப்ரம்மா வரையில் புருஷர்களைக் கற்பித்து அதில் ஒவ்வொருவருடைய ஆனந்த குணமும் நூறு நூறு மடங்கு அதிகம் எனக் கணக்கிட்டுச் சொல்லியும் கடைசியில் அந்த உன் ஆனந்த குணத்தின் எல்லையைக் காண மாட்டாமல் இன்றும் காணும் ப்ரயத்னத்தில் நின்றும் மீள வில்லையே-
—
ஸ்லோகம் -20- அவதாரிகை –கீழ்ச் சொன்ன குணங்களுக்கு போக்தாவான ஆஸ்ரிதர் பெருமையை அருளிச் செய்கிறார்-அஸ்மின் நஸய ஸ தத் யோகம் சாஸ்தி -ப்ரஹ்ம சூத்ரம் -1-1-20-(அஸ்மிந்நஸ்ய ச தத்,யோக,ம் மாஸ்து [(ஆநந்த மயனான) இந்த ப்ரஹ்மத்தினிடத்தில், இந்த ஜீவாத்மாவுக்கு ஆநந்தச் சேர்க்கையை (‘ரஸம் ஹ்யேவாயம் லப்டத்,வாநந்தீ, ப,வதி’ என்ற ஸ்ருதி) சொல்லுகிற)-இந்த ஆனந்த சேர்க்கையை ஸ்ருதி –ரசம் ஹ்யேவாயம் லப்த் வா நந்தீ பவதி – -என்று இவனாலே வந்த பெருமையை உடையவர்கள் அளவு இதுவானால்-அவன் பெருமை பரிச்சேதிக்க ஒண்ணாது என்னும் இடம்
கிம்புநர் நியாய சித்தம் அன்றோ -என்கிறார்-என்றுமாம் –ஆளவந்தார் முன்பு அருளிச் செய்த பகவத் குணங்களை அனுபவிக்கும் அடியார்களின் பெருமையை அருளிச் செய்கிறார்.-அல்லது –
ப்ரஹ்ம ஸூத்ரம் 1.1.20இல் “அஸ்மிந்நஸ்ய ச தத்யோகம் ஶாஸ்தி”(வேதம் ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஆனந்தமாகக் கூடியிருக்கும் ஆனந்தத்தை விளக்குகிறது) என்று சொன்னபடி-பகவானிடத்திலிருந்து அடைந்த பெருமையை உடைய அடியார்களின் பெருமையே மிகப் பெரியது என்றால், அந்த பகவானின் பெருமை அளவிட முடியாதது என்பது தெளிவு என்கிறார்.
த்வத் ஆஸ்ரிதா நாம் ஜகத் உத்பப ஸ்திதி
பிரணாச சம்சார விமோசன ஆதய
பவந்தி லீலா வித யஸ்ஸ வைதிகாஸ்
த்வதீய கம்பீர மநோ நுசாரிண–20-
த்வத் ஆஸ்ரிதா நாம் ஜகத் உத்பப ஸ்திதி பிரணாச சம்சார விமோசன ஆதயபவந்தி லீலா –உலகத்தைப் படைப்பது காப்பது அழிப்பது மோக்ஷம் அளிப்பது-முதலிய விளையாடல்கள் உனது அடியவர்களுக்காக ஆகின்றன
வித யஸ்ஸ வைதிகாஸ்த்வதீய கம்பீர மநோ நுசாரிண–வேத விதிகளும் உன்னுடைய பக்தர்களின் கம்பீரமான திரு உள்ளத்தைப் பின் செல்பவைகளாக இருக்கின்றன-காட்டில் எரியும் நிலா போலே இல்லாமல் உன்னுடைய அபரிமித குண மகிமைகளை அனுபவிக்க பலரும் உண்டே –-குண விபூதிகள் லீலைக்கு மட்டும் அல்ல -ஆஸ்ரிதர் ஆனந்தத்துக்காகவே
ப்ரஹ்மா முதலான உன் அடியார்களுக்கு இவ் வுலகைப் படைப்பது, காப்பது, அழிப்பது மற்றும் இந்த ஸம்ஸாரத்தை கடக்க உதவுவது ஆகியவை எளிய விளையாட்டாக இருக்கும்; வேதத்தின் விதிகளும் கூட உன்னுடைய அடியார்களின் ஆழமான நெஞ்சங்களையே தொடரும்.
த்வத் ஆஸ்ரிதா நாம் –ப்ரஹ்ம ருத்ராதி நாம் -ஸநாகாதி நாம் -ஸ-தேவரை தூர நின்று ஆஸ்ரயிக்கிற ப்ரஹ்மாதிகள் சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்களை உபதேச க்ரமத்தாலே பெற்று- சம்சார விமோசநத்தையும் பண்ண சக்தரான பின்பு அநந்ய பிரயோஜனராய் ஆஸ்ரயிக்கும் அவர்கள்
அவற்றைச் செய்யப் பார்த்தால் – லீலையாகா நின்றது –முக்தர் தேவரோடு லீலா ரசம் அனுபவிக்கும் போது சங்கல்ப்பத்தாலே ஜ்ஞாத்யாதிகளை சிருஷ்டித்தே அனுபவிப்பது – சங்கல்பா தேவ தச்சருதே -ப்ரஹ்ம சூத்ரம் -4-4-8-–ஸ யதி பித்ரு லோக காமோ பவதி சங்கல்பா தே வாஸ்ய பிதரஸ் ஸ முத்திஷ் டந்தி -சாந்தோக்யம் –(ஸங்கல்பாதே;வ தச்ச்,ருதே: [ஸங்கல்பத்தாலேயே (முக்தன் ஸ்ருஷ்டிக்கிறான்), (ஸ யதி, பித்ரு லோக காமோ ப,லதி। ஸங்கல்பா தேவாஸ்ய பிதரஸ் ஸமுத்திஷ்ட,ந்தி |[அந்த முக்தன் (தன் பழைய பிறப்புகளிலிருந்து) பித்ரு வர்க்கங்களைக் காண விரும்பினானாகில் அந்தப் பித்ரு வர்க்கங்கள் இவனுடைய ஸங்கல்பத்தாலேயே கிளம்பி வருகின்றன.])அப்படி ஸ்ருதியிருப்பதனால்)-ஜகத் ஸ்ருஷ்ட்யாதி யில் ப்ராப்தி இல்லாமை போக்கி சக்தி இல்லாமையாலே தவிருகிரார் அல்லர் –ஆதி சப்தத்தாலே-அநேக சரீர அந்த பிரவேச நியமங்களை நினைக்கிறது –-ஜகத் வியாபார வர்ஜம் ப்ரகரணாத சன்னிஹி தத்வாச்ச -ப்ரஹ்ம சூத்ரம் -4-4-17-(முக்தனுடைய ஐஸ்வர்யம்) ஜகத் வ்யாபார மில்லாத (ப்ரஹ்மானுப,வ மாத்ரமே ) ; ப்ரஹ்மத்தைக் குறித்தே ஐகத், வ்யாபாரம் சொல்லப்படுவதால் ; (ஜகத்,வ்யாபாரத் தில் முக்தனுக்கு) ஸந்நிதானம் இல்லாததாலும்)–போக மாத்ர சாம்ய லிங்காச்ச -ப்ரஹ்ம சூத்ரம் -4-4-21-(ப்ரஹ்மானுப,வமாகிற) போகத்தில் மட்டும் ஸாம்யத்தைச் சொல்லும் அடையாளத்தினாலும் ( முக்தனுக்கு ) ஜகத்வ்யா பாரமில்லை)
அதவா-ஜகத் உத்பப ஸ்திதி பிரணாச சம்சார விமோசன ஆதய பவந்தி லீலா -த்வத் ஆஸ்ரிநாம் –
முமுஷூ சிஸ் ருஷையா விறே ஸ்ருஷ்டியாதிகள்– நிரதிசய போகயதையே ஸ்வரூபமாய் இருக்க
சம்சார விமோசகர் என்கிறது ஆஸ்ரித அர்த்தமாக விறே –-ஆதி சப்தத்தாலே-ததர்த்தமான அநேக அவதாரங்கள் – திருக் குரவையிலே அநேக விக்ரஹ பரிக்ரகாதிகள் –
வித யஸ்ஸ வைதிகாஸ்-
இதம் குரு இதம் மா கார்ஷீ -([இதைச் செய்; இதைச் செய்யாதே)என்று ஸ்வ தந்த்ரமான வைதிக விதிகளும்-த்வதீய கம்பீர மநோ நுசாரிண-அநந்ய ப்ரயோஜனராய்-ஆஸ்ரயித்த வர்களுடைய கம்பீரமான மனஸ்சைப் பின் செல்லா நின்றன –மனஸ்ஸூக்கு கம்பீரத்வம் ஆவது -ஷூத்ரமான ஐஸ்வர்யாதிகளிலே கால் தாழாதே அநந்ய பிரயோஜனமாகை-ப்ரஹ்ம வாதி நோ வதந்தி ஸ ஹோவாச வியாச பாராசர்ய யே தத்ர ப்ராஹ்மாணாஸ் சம்மர்சின –இத்ராப்ய-யதா தே தத்ர வர்த்தே ரன் ததா தத்ர வரத்தே தா – நினை தொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும் -திருவாய் மொழி -9-6-2- (ப்,ரஹ்மவாதி,நோ வத,ந்தி [ப்,ரஹ்மவாதி,கள் சொல்லுகிறார்கள்) (அத; யதி, தே கர்ம விசிகித்ஸா வா வ்ருத்த விசிகித்ஸா வா ஸ்யாத் |. யே தத்ர ப்,ராஹ்மணாஸ் ஸம்மர்ஸிந:| யுக்தா ஆயுக்தா:। அலூக்ஷா தர்ம காமா: ஸ்யு:। யதா தே தத்ர வர்த்தேரந்। ததா தத்ர வர்த்தேதா:।[உனக்குக் கர்மத்திலேயோ, ஆசாரத்திலேயோ ஸந்தேஹம் ஏற்பட்டதாகில், விசாரம் செய்வதில் நிபுணர்களாகவும், வேத,ஸாஸ்த்ரங்களில் ஈடுபட்டவர்களாகவும், எல்லா விஷயங்களிலும் ஸமர்த்த,ர்களாகவும், காம க்ரோ தாதிகள் அற்றவர்களாகவும், தர்மத்தில் விருப்பமுள்ள வர்களாவுமிருக்கும் ப் ராஹ்மணர்கள் அவ் விஷயத்தில் எப்படி நடக்கிறார்களோ, அப்படியே நீயும் அவ் விஷயத்தில் நடப்பாயாக.)என்று பகவத் விஷயத்தில் இவ்வளவு அவகாஹி யாதார்க்கு-நிதித்யாசி தவ்ய விஜ்ஞாய ப்ரஜ்ஞாம் குர்வீத ஆத்மானம் த்யாயீத -(தமேவ தீரோ விஜ்ஞாய ப்ரஜ்ஞாம் குர்வீத ப்,ராஹ்மண-ஜ்ஞான முடையவனான ப்ராஹ்மணன் அந்தப் பரமாத்மாவை (ஸ்ரவண மனனங்களாலே அறிந்து த்யானம் செய்யக் கடவன்) (ஓமித்யேவ த்,யாய தாத்மாநம் [பரமாத்மாவை *ஓம்’ என்றே த்யானம் செய்யுங்கள்.)என்று விதிக்கிறது இறே –த்வதீயமான கம்பீர மனஸ்சை அனுசரியா நின்றன -என்றுமாம் –ஸ்ருதி ஸ்ம்ருதிர் மமை வாஜ்ஞா –(ஸ்ருதி: ஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா யஸ்தாமுல்லங்க்ய வர்த்ததே | ஆஜ்ஞாச்சேதீ, மம த்ரோஹீ மத்,ப,க்தோ5பி ந வைஷ்ணவ: || [வேத,மும்,ஸ்ம்ருதியும் என்னுடைய ஆஜ்ஞையே, எவனொருவன் அதை மீறி நடக்கிருனோ, அவன் என் ஆஜ்ஞையை மீறினவன்; எனக்கு த்,ரோஹம் செய்தவன்; என்னுடைய ப,த்தனாயிருந்த போதிலும் (அவன்) வைஷ்ணவனல்லன்0
(நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய் சென்று சென்று ஆகிலும் கண்டு
ஜன்மம் களிப்பான் எண்ணி ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் –அடுத்து அடுத்து உபகார பரம்பரைகளை செய்து அருளி -ஒருவராவது அகப்படுவாரோ என்ற நப்பாசையாலே -என்றபடி –
த்ரிபி பிரஜாபதேர் பக்தா சப்தபிச் சங்கரஸ்ய து விம்சத்யா அக்னி இந்திரா ஸூர்யாதே விஷ்ணு பக்த ப்ரஜாயதே )
ஜகத் உத்பப ஸ்திதி பிரணாச சம்சார விமோசன ஆதய -தவ -லீலா –த்வதீய கம்பீர மநோ நுசாரிண-
தவ வைதிகாஸ்-வித யஸ்ஸ -த்வத் ஆஸ்ரிதா நாம்-பவந்தி-என்று அந்வயித்து-படைத்தல் அளித்தல் அழித்தல் மோக்ஷம் அளித்தல்-மற்றும் உனது லீலைகளை -பரமைகாந்திகளின் திரு உள்ளத்தைப் பின் செல்லும்-ஸாஸ்த்ர விதிகளும் -எல்லாமே உன்னுடைய ஆஸ்ரிதர்களுக்கு ஆகவே ஆகின்றன
அவாப்த ஸமஸ்த காமன்-நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய்ச் சென்று சென்று ஆகிலும் ஜன்மம் கழிப்பான் எண்ணி ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் –-அனைத்தும் ஒரு சேதனன் நமக்கு அகப்படுவான் என்ற திரு உள்ளத்தால் அன்றோ
ஜகத் உத்பப ஸ்திதி பிரணாச சம்சார விமோசன ஆதய–த்வத் ஆஸ்ரிதா நாம்-லீலா — வைதிகாஸ்-வித யஸ்ஸ- த்வதீய கம்பீர மநோ நுசாரிண–பவந்தி -என்றும் அன்வயித்து-உனது அடியவர்களான ப்ரஹ்மாதிகளுக்கு விளையாட்டாய் -உன்னுடைய கிருபாதிகளால் அவலீலையாகச் செய்யும் படி இருக்கும்-அப்படியே ஸாஸ்த்ர விதிகளும் உன்னை அடி பணிந்தவர்களுடைய ஆழ்ந்த திரு உள்ளத்தை அனுசரிக்கின்றன-சிஷ்டாசாரத்தை முதன்மையான பிரதானமாகச் சொல்லி அதற்கு பிந்தின பிரமாணமாக வேதங்களைச் சொல்ல வேணும்-உனது ஆஸ்ரிதர்களின் பெருமை அப்படியானால் உனது பெருமையின் அளவை எண்ணவும் முடியுமோ –என்றவாறு-ப்ரஹ்ம வாதினோ வதந்தி -மனு மகரிஷி சொன்னது எல்லாம் மருந்து –
உனை யடுப்போர்க்கு உண்டாக்கல் உலகம் எல்லாம் அளித்து ஒழித்தல்
வினை யுறும் ஸம்ஸாரத்தின் விமோசனம் அடைதல் என்னும்
அனையவும் லீலையாகும் அன்னவர் தம் கம்பீர
மனதினை அநுசரிக்கும் மா மறை விதி கண் மாதோ –20-இவ் வுலகங்களை எல்லாம் உண்டாக்குதல்
ரஷித்தல் -அழித்தல் -முதலான தொழில்களும் ஸம்ஸார விமோசனம் அடைதல் முதலிய மற்ற சகலமும்
உன் ஆஸ்ரிதர் விஷயத்தில் லீலைகளாக்கி அவர் நிமித்தமாகவே உண்டாய் இருக்கின்றன-வேதங்களில் சொல்லப்பட்ட விதிகளும் உன்னை ஆஸ்ரயித்த அநந்ய ப்ரயோஜனருடைய கம்பீரமான மனஸ்ஸை அனுசரிக்கின்றன –
—
ஸ்லோகம் -21-அவதாரிகை –இதுக்கு கீழ்-ஈஸ்வரன் உடைய ஸ்வரூபத்தால் வந்த உத்கர்ஷத்துக்கும் –
உபய விபூதி யோகத்தால் வந்த ஐஸ்வர்யத்துக்கும் – குண உத்கர்ஷத்தால் வந்த நீர்மைக்கும் – தோற்று
ஜிதந்தே -என்னும் ஸ்வேத த்வீப வாசிகளைப் போலேயும்-நம புரஸ்தா தத ப்ருஷ்ட்ட தஸ்தே -என்ற அர்ஜுனன் போலேயும் –யாருமோர் நிலைமையன் -என்ற ஆழ்வாரைப் போலேயும் சரண்யன் உடைய பெருமையை அனுசந்திக்கிறார் –இதுக்கு முன்பு-பிராப்ய ஸ்வரூபம் சொல்லிற்றே-இதில் ப்ராப்தாவின் ஸ்வரூபம் சொல்லுகிறது -என்றுமாம்-கீழ் சரண்ய ஸ்வரூபம் சொல்லிற்றாய்-மேல் சொல்லப் படுகிற சரணாகதியை -இதில் ப்ரஸ்தாபிக்கிறார் –என்றுமாம் –ஶரண்யனான எம்பெருமானின் பெருமைகளை த்யானிக்கிறார். அல்லது – முன்பு உபேயத்தை (குறிக்கோளை) விளக்கினார், இங்கே அதை அடைய விரும்புபவரின் தன்மையை விளக்குகிறார்.-மற்றொரு விளக்கம் –-முன்பு ஶரண்யனான பகவானின் தன்மையை விளக்கிய ஆளவந்தார், இங்கே மேலே விளக்கப்படும் சரணாகதியின் தன்மையை வெளியிடுகிறார்.
நமோ நமோ வாங் மனஸாதி பூமயே
நமோ நமோ வாங் மனசைக பூமயே
நமோ நமோ அநந்த மஹா விபூதயே
நமோ நமோ அநந்த தயைக சிந்தவே—-21-
வாங் மனஸாதி பூமயே-ஸ்வ தந்த்ரர்களுடைய வாக்குக்கும் மனஸுக்கும் எட்டாதவனான உன் பொருட்டு
நமோ நமோ –நமஸ்காரம் -நமஸ்காரம்
வாங் மனசைக பூமயே-தன்னுடைய நிர்ஹேதுக விஷயீ காரத்துக்கு பாத்திரமாய் இருக்கிற-அந்தரங்கர்களுடைய வாக்குக்கும் மனஸுக்குமே விஷயமாய் இருக்கிற உன் பொருட்டு
நமோ நமோ -நமஸ்காரம் -நமஸ்காரம் –
அநந்த மஹா விபூதயே– வேத வேதாந்தங்களிலும் எல்லை யில்லாத பெரிய ஐஸ்வர்யங்களை உடைய உனக்கு
நமோ நமோ -நமஸ்காரம் -நமஸ்காரம் –
அநந்த தயைக சிந்தவே—எல்லை யில்லாத கருணைக்கே கடலாய் இருக்கின்ற உனக்கு-தயை -என்றது வாத்சல்யம் ஸுவ்சீல்யம் ஸுவ்லப்யம் -போன்ற பல கல்யாண குணங்களுக்கும் உப லக்ஷணம்
நமோ நமோ -நமஸ்காரம் -நமஸ்காரம் —-எம்பெருமானுடைய பெருமையை பரக்கப் பேசின பின்பு அந்தப் பெருமைக்குத் தோற்றுத் தொழுகின்றார் –
தன் முயற்சியால் அறிய முயல்பவர்களின் வாக்குக்கும் மனதுக்கும் எட்டாத உனக்கு என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்;-உன்னுடைய கருணையால் உன்னை அறிந்தவர்களின் வாக்குக்கும் மனதுக்கும் எட்டுபவனான உனக்கு என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்; எல்லை யில்லாத ஐச்வர்யத்தை உடைய உனக்கு என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்; கருணைக் கடலான உனக்கு என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்.
நமோ நமோ வாங் மனஸாதி பூமயே-வாங் மனஸாதி பூமயே-நமோ நம- எத்தனை யேனும் ஜ்ஞாநாதி கரும் ஸ்வ யத்னத்தால் அறியப் புக்கால் அவர்களுக்கு வாங் மனஸஸூக்களுக்கு அபூமியாய் இருக்கிற உனக்கு எதோ வாசோ நிவர்த்தந்தே –யன்நாயம் பகவான் ப்ரஹ்மா ஜாநாதி புருஷோத்தமம் –நம –
என்று அஹங்காரம் இல்லாத ஸ்வரூபத்தை சொல்லுகிறது –-அநாத்மன் யாத்ம புத்தி – அஹமபி ந மம -இத்யாரப்ய(அநாத்மந்யாத்மபு,த்,திர்யா சாஸ்வே ஸ்வமிதி யா மதி:| ஸம்ஸார தரு ஸம்பூதி பீஜமேதத் த்,விதா ஸ்திதம் | [ஆத்மா வல்லாத தே,ஹத்தில் ஆத்மா என்னும் புத்தியும், தனதல்லாத பொருளில் தன்னுடையது என்னும் புத்தி,யும், ஸம்ஸாரமாகிய வ்ருக்ஷத்தின் விருத்திக்கு இருவகை யாயிருக்கும் விதையாகும்)–இத்யேவ மமமதாம் யோஜயதயதோ நம இதி – த்வய ஷரஸ்து பவேன் ம்ருத்யுஸ் த்ரய ஷரம் ப்ரஹ்மண பதம் -இத்யாதி(த்வ்யக்ஷரஸ்து பவேந்ம்ருத்யுஸ் த்ர்யக்ஷரம் ப்.ரஹ்மண: பதம்!மமேதி த்வ்யக்ஷரோ ம்ருத்யுர் ந மமேதி ச ஸாஸ்வதம் ॥ [இரண்டு அக்ஷரத்தை யுடையது ஸம்ஸாரமடையக் காரண மாகிறது.மூன்றக்ஷரங்களை யுடையது ப்,ரஹ்மத்தை யடையக் காரணமாகிறது. இரண்டெழுத்துச் சொல்லான*மம”என்பது ஸம்ஸாரத்திற்குக் காரணம். மூன்றெழுத்துச் சொல்லான ந மம” என்பது நிலையான மோக்ஷத்திற்குக் காரணம்)–நமஸ் சப்தம் பர்யாயம் ஆகையாலே சரணாகதியை பிரஸ்தாபிக்கிறது ஆகவுமாம்-வீப்சையாலே அந்த ஸ்வ பாவத்துக்குத் தோற்று அருளிச் செய்கிறார் –சக்ருத்தே நம த்விச்தே நம இத்யாராப்ய சஹச்ரக்ருத் வஸதே நம அபரிமிதக்ருத் வஸதே நம இத்யாதி-(ஸக்ருத்தே ௮க்நே நம:। த்விஸ்தே நம:। த்ரிஸ்தே நம:। சதுஸ்தே நம:। பஞ்ச க்ருத்வஸ்தே நம:। தஹுக்ருத்வஸ்தே நம: | மத க்ருத்வஸ்தே நம: | ஆஸஹஸ்ர க்ருத்வஸ்தே நம: | அபரிமித க்ருத்வஸ்தே நம: ||[அக்னியே! உனக்கு ஒருகால் நமஸ்காரம்; இருமுறை நமஸ்காரம்; மும்முறை நமஸ்காரம்; நாலு தரம் நமஸ்காரம்; ஐந்து முறை நமஸ்காரம்; பத்து தரம் நமஸ்காரம்; நூறு முறை நமஸ்காரம்) ஆயிரம் தரம் வரை நமஸ்காரம்; கணக்கற்றமுறை நமஸ்காரம்)
நமோ நமோ வாங் மனசைக பூமயே–வாங் மனசைக பூமயே -நமோ நம – நீ காட்டக் காண்பார் உடைய வாங் மனஸ் ஸூக்களுக்கு நிலமாய் இருக்கிற உனக்கு –-பவந்தி பாவா பூதா நாம் மத்த ஏவ ப்ருத கவிதா -(ப,வந்தி பாவா பூ,தாநாம் மத்த ஏவ ப்ருத,க் விதா: [ஜீவராசிகளுடைய (ஞானம் முதலிய) பலவகையான மநோ பாவங்கள் என்னுடைய ஸங்கல்பத்தாலேயே ஏற்படுகின் றன)ஸ்ரீ கீதை -10-5- -இத்யாதி-
நமோ நமோ அநந்த மஹா விபூதயே –அநந்த மஹா விபூதயே -நமோ நம —-அபரிச்சேத்ய உபய மஹா விபூதிகனாய் இருக்கிற உனக்கு வாங் மனஸ் ஸூக்களுக்கு அபூமியாகைக்கு அடி அபரிச்சேத்ய மஹா விபூதிமானாய் இருக்கை –
நமோ நமோ அநந்த தயைக சிந்தவே – அநந்த தயைக சிந்தவே -நமோ நம — உன்னை வாங் மனஸ் ஸூக்களுக்கு ஏக பூமியாம் படி பண்ணும் அபரிச்சேத்ய தயைக்கு ஒரு சிந்துவாய் இருக்கிற உனக்கு –
யதி சகநோஷி கச்ச தவம் -(தாம்நா சைவோத,ரே படத்,த்,வா ப்ரத்யப,த் நாது,லூக,லே | க்ருஷ்ண மக்லிஷ்ட கர்மாணமாஹ சேத,மமர்ஷிதா || யதி, ஸக்நோஷி கச்ச, த்வமதி சஞ்சல சேஷ்டித || [(யசோதையானவள்) குறும்புச் செயல்களை வெகு ஸுலப,மாகச் செய்யும் அந்த க்ருஷ்ணனைத் தாம்புக் கயிற்றினால் வயிற்றில் பிணைத்து ஒரு உரலில் கட்டினாள், கோபங் கொண்டவளாய் இப்படிச் சொன்னாள்:– “மிகவும் சஞ்சல மான செயல்களை உடையவனே! முடியுமாகில் இப்போது போ.”])என்று சர்வ சக்தியை ஓர் இடைச்சி பரிச்சேதிக்கலாம் படி இறே கிருபையினுடைய நிரவதிகத்வம் –
(தயா -என்றது வாத்சல்யம் -ஸுசீல்யம் -ஸுலப்யம் -இத்யாதிகளுக்கும் உப லக்ஷணம் –
ஏக கிருஷ்ண நமஸ்காரோ முக்தி தீரஸ்ய தேசிக -ஒரு முறை நமஸ்கரித்தாலே முக்தி கிட்டும் –
பராசம்சாயாம் ப்ரதிஞ்ஞாயாம் ப்ரலாபே தர்ஜ நேபிச பயேச விஜயே சைவ பவ்நம் புன்யம் அலங்க்ருதி -என்றபடி-அச்சம் தோற்ற மீண்டும் மீண்டும் நமஸ்காரம் -பாம்பு பாம்பு பாம்பு என்று ஒரே பாம்பை கண்டு சொல்வது போலே-தண்டவத் நிபபாத -தண்டம் விழுந்தால் தானே எழாதே – கணக்கு எண்ணி சேவிப்பதை விட்டு -பக்தி பாரவசயத்தாலே –மெய் மறந்து விழுவது எழுவதாக அத்யந்த பக்தி யுக்தானாம் ந சாஸ்திரம் நைவ ச க்ரம–)
ஏக கிருஷ்ணோ நமஸ்கார முக்தி தீரஸ்ய தேசிக -ஸக்ருத் நமஸ்காரம் – ப்ரஸம்சாயம் ப்ரதிஞ்ஞாயம் ப்ரலாபே தர்ஜ நேபிச பயேச விஜயே சைவ பவ்ந புந்யம் அலங்க்ருதி -என்று பிரதிஜ்ஜை செய்யும் பொழுதும் -அழும் பொழுதும் -வெருட்டும் பொழுதும் -அச்சம் தோற்றச் சொல்லும் பொழுதும்
வெற்றி தோற்றச் சொல்லும் பொழுதும் ஒரு சொல்லையே அடுத்து அடுத்துச் சொல்வதானது அலங்காரம் ஆகும்-பாம்பு பாம்பு பாம்பு என்று அஞ்சிச் சொல்வது உண்டே-தண்டவத் நிபபாத -தண்டனை சமர்ப்பித்தல் -வேர் அற்ற மரம் போலே விழுந்து இருக்க-ஸக்ருத் நமஸ்காரத்துக்கு மேல் வேண்டாமே-ஸ்ரீ வைகுண்ட கத்யம் -பிரணம்ய உத்தாய உத்தாய புந புந பிரணம்ய-என்றது எம்பெருமானைக் கிட்டும் அளவும் காலால் நடந்து செல்லாமல் தண்டனை இட்டுக் கொண்டு செல்வதையே அருளிச் செய்கிறார்-கணக்கு எண்ணி சேவிப்பதை விட பக்தி பாரவஸ்யத்தாலே மெய் மறந்து – அத்யந்த பக்தி யுக்தா நாம் ந ஸாஸ்த்ரம் நைவ ச க்ரம–
நெஞ்சுடன் வாக்கினை மீறியதாகு நினைப் பணிவேன் பணிவேன்
நெஞ்சுடன் வாக்கு அதினுக்கு இடமாகு நினைப் பணிவேன் பணிவேன்
விஞ்சும் அநந்த விபூதியனாகு நினைப் பணிவேன் பணிவேன்
விஞ்சு மஹா தயை வேலையனாகு நினைப் பணிவேன் பணிவேன் –21–ஞானத்தில் மிக்கோர் ஆயினும் தம்முடைய பிரயத்தனத்தால் அறிய நினைக்கில் – அவரது வாக்குக்கும் மனதுக்கும் எட்டாதவனான உன்னைப் பன்முறை நமஸ்கரிக்கிறேன் உன் கிருபையால் நீ காட்டி அருள -அந்தக் காரணத்தால் உன்னைக் காண்பவருடைய வாக்கிற்கும் மனதுக்கும் விஷயமான வுன்னைப் பன் முறை நமஸ்கரிக்கிறேன்-அநேகங்களான மகத்தான உபய விபூதியை யுடையனான யுன்னைப் பன் முறை நமஸ்கரிக்கிறேன்-வாக்கினுக்கும் மனசுக்கும் விஷயமாகிய பரம தயா சக்கரமான உன்னைப் பன் முறை நமஸ்கரிக்கிறேன்-
—
ஸ்லோகம் -22-அவதாரிகை –தம்முடைய அதிகாரத்தைச் சொல்லிக் கொண்டு பிரஸ்துதமான ப்ரபத்தியை ப்ரயோகிக்கிறார்--கீழ்ச் சொன்ன உபேய அனுகூலமான உபாயத்தை அனுஷ்டிக்கிறது -என்றுமாம் – கீழ் –த்வாம் சீல -உல்லன்கித -என்கிற இடத்தில் துஷ் பிரகிருதிகள் உன் பெருமையை அறியார்கள் சத் பிரகிருதிகள் அறிவார்கள் -என்றார் —நமோ நம -என்கிற ஸ்லோகத்திலே ஸ்வரூபத்தைப் பர தந்தரமாக உணர்ந்தவனுக்கே இவ்விஷயம் ப்ராப்யம் ஆவது ஸ்வ தந்த்ரனுக்கு பிராப்யம் அன்று -என்கிறது –ஆஸ்ரயிக்கும் இடத்தில் ஸ்வ சக்தி கொண்டு விஷயம் அன்று
தன்னுடைய ஆகிஞ்சன்யத்தை முன்னிட்டுக் கொண்டு ஆஸ்ரயிக்கும் விஷயம்-என்கிறார் –ஆளவந்தார் தன்னுடைய தகுதியைச் சொல்லி, முன் பாசுரத்தில் சொல்லப்பட்ட சரணாகதியைச் செய்கிறார்.-அல்லது –முன்பு சொன்ன குறிக்கோளுக்குத் தகுந்த வழியை அனுஷ்டிப்பதை அருளிச் செய்கிறார் என்றும் சொல்லலாம்.
ந தர்ம நிஷ்ட்டோஸ்மி ந சாத்ம வேதீ
ந பக்திமாம் ஸ்தவச சரணாரவிந்தே
அகிஞ்சநோ அநந்ய கதிஸ் சரண்ய
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே–22-
சரண்ய-சர்வ ரக்ஷகனே
ந தர்ம நிஷ்ட்டோஸ்மி -அடியேன் கர்ம யோகத்தில் நிலை நின்றவன் அல்லேன்
ந சாத்ம வேதீ அஸ்மி –ஆத்ம ஞானமும் உடையேன் அல்லேன்
ந பக்திமாம் ஸ்தவச சரணாரவிந்தே-உனது திருவடித் தாமரைகளில் பக்தியையும் உடையேன் அல்லேன்
அகிஞ்சநோ அநந்ய கதிஸ் -ஒரு சாதனமும் இல்லாதவனாய் வேறு புகல் அற்றவனுமான அடியேன்
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே–உனது திருவடித் தாமரையை சரணமாக அடைகிறேன்
சரணடையத் தகுந்த ஸ்வாமியே! நான் கர்ம யோகத்தில் நிலையாக இல்லை; என்னிடத்தில் ஆத்ம ஞானமும் இல்லை;-என்னிடத்தில் உன் திருவடிகள் விஷயமான பக்தியும் இல்லை; இப்படி வேறு உபாயமும் புகலும் இல்லாத நான், உன் திருவடிகளையே உபாயமாக உறுதியாக ஏற்றுக் கொள்கிறேன்.
ந தர்ம நிஷ்ட்டோஸ்மி –
தார்மிகனாக என்கிறேன் அல்லேன்-தர்மத்தில் நிஷ்ட்டை உடையேன் அல்லேன்-சிலர் -தார்மிகன் -என்று நினைக்கைக்கும்-நானும் -எனக்கு நன்மை யுண்டு -என்று பிரமிக்கைக்கும்-தானே சில ப்ரவர்த்தியா நின்றான் ஆகில்-தானே செய்திடுக -என்று நீ கை விடுகைக்கும் வேண்டுவது உண்டு இத்தனை –-உன் திருவடிகளை ப்ராபிக்கைக்கு ஹேதுவாக வேண்டும்படியான ப்ரவ்ருத்தியில் நிஷ்டை இல்லை -என்கை –
ந சாத்ம வேதீ-
ஆத்ம தர்சனம் பண்ணிப் போருமவர்களைப் போலே சொல்லி நிர்ப்பந்திகிறேன் அல்லேன் –
கர்ம யோகாநுஷ்டாநத்தாலே ஷீண பாபனானவனுக்கு ஆத்மயாதாத்ம்ய தர்சனமாய் இருக்க
அது இல்லை என்ற போதே தத் சாத்தியமான ஜ்ஞானம் இல்லாமை அர்த்த சித்தமாய் இருக்க -ஜ்ஞானம் இல்லை -என்கிறது – பஹூ நாம் ஜன்ம நாமந்தே ஜ்ஞான வான் – என்று
ஜன்மாந்தர சம்ஸ் காரத்தாலே ஜ்ஞானம் பிறக்கலாம் இறே என்னில் -அதுவும் இல்லை -என்கிறார் –(பஹுூநாம் ஜந்மநாமந்தே ஜ்ஞாநவாந் மாம் ப்ரபத்யதே வாஸுதேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப,: || [பல ஜன்மங்களுக்குப் பின் ஜ்ஞானியானவன் **வாஸு தேவனே (எனக்கு)எல்லாம்”என்று என்னை உபாஸிக்கிறான். அப்படிப்பட்ட மஹாத்மா மிகவும் கிடைத்தற்கரியவன்)
நபக்திமாம் ஸ்தவச சரணாரவிந்தே
இவ்வாத்மாவுக்கு நாதனாய் இருந்துள்ள உன்னுடைய நிரதிசய போக்யமான திருவடிகளில்
அனவரத பக்தியை உடையேன் அல்லேன் –கர்ம ஜ்ஞானங்களை அங்கமாக வுடைத்தான பக்தி
அங்கம் தான் இல்லை -என்ற போதே இதுவும் இல்லை அன்றோ -என்னில் பூர்வோக்த பிரகாரத்திலே ஜன்மாந்தர சம்ஸ்காரம் உதவி உண்டாகலாம் இறே-குளித்து மூன்று அனலை -திரு மாலை -15
நோற்ற நோன்பு -திருவாய் மொழி -5-7-1–கறவைகள் பின் சென்று -திருப்பாவை -28-என்று-
அகிஞ்சநோ –என்று அனுதாபம் -என்ன-இவை உண்டாகைக்கு உறுப்பான ஆத்ம குணம் என்ன
அதிகாரி சக்தி வாஞ்சாதிகள்-என்ன இவற்றை உடையேன் அல்லேன் –அநந்ய கதிஸ் –இப்படி நம்மைக் கிட்டுககைக்கு கைம்முதல் இல்லை யாகில் புறம்பே ரஷகராய் இருப்பார் பக்கலிலே போனாலோ -என்னில்-புறம்பு ஒரு புகல் இல்லை -என்னுதல் –-உன்னை விட்டு ஒன்றும் ஆற்ற கிற்கின்றிலேன் -திருவாய்மொழி -5-7-1-என்கிறபடியே உன்னை ஒழியச் செல்லாது -என்னுதல்
சரண்ய
தன் பக்கல் முதல் இல்லாதார்க்கு-சரண வரண அர்ஹன் இறே-நிருபாதிக சரண்யர் ஆகையாலே ருசியே வேண்டுவது-தேவரைப் பெறுகைக்கு ஒரு கைம் முதல் வேண்டா விறே –
த்வத் பாத மூலம் –
தேவர் திருவடிகளை –-மூலம் என்றது சௌலப்யாதி குணங்களையும் இதர அவயவங்களையும் ஒழிய
திருவடித் தாமரைகளை நினைக்கிறது–
சரணம் ப்ரபத்யே
விரோதி நிவ்ருத்தி பூர்வகமான-கைங்கர்ய சித்திக்கு உபாயமாக அத்யவசிக்கிறேன் –-மாம் ஏகம் சரணம் வ்ரஜ –என்ற தேவரீர் திருவடிகளே மூலம் –உபாயே கருக ரஷித்ரோ- (உபாயே க்,ருஹ ரக்ஷித்ரோஸ் ஸப்தஸ் ஸரணமித்ய்யம் |வர்த்ததே ஸாம்ப்ரதம் சைஷ உபாயார்த்தை,கவாசக: ॥ [ஸரணம் என்னும் இந்த வார்த்தை–உபாயம், வீடு, காப்பாற்றுபவன் என்னும் அர்த்தங்களில் வழங்கப் படுகிறது. இப்போது இது “உபாயம்” என்னும் அர்த்தத்தையே சொல்லுவதா யிருக்கிறது)அஹிர்புத்ன்ய சம்ஹிதையிலே இதினுடைய ஸ்வரூபம் சொல்லுகிறது-அஹம் அஸ்ம் அபராதா நாம் ஆலய-ஸ்வ தாஸ்வதரே-யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்-(அஹமஸ்ம் யபராதாநாமாலயோ அகிஞ்சநோ5க,த: ॥ த்வமேவோபாயபூ,தோ மே ப,வேதி ப்ரார்த்தநாமத: ॥ ஸரணாக,திரித்யுக்தா ஸா தேவே ஜஸ்மிந் ப்ரயுஜ்யதாம் || [நான் குற்றங்களுக்கு ஓர் இருப்பிடமாயிருக்கிறேன்.(என்னை ரக்ஷித்துக் கொள்ள) ஒரு உபாயமுமற்றவனாயிருக்கிறேன். உன்னை யொழிய வேறு கதியில்லாதவனா யிருக்கிறேன். நீயே எனக்கு உபாயமாக ஆவாயாக” என்று ப்ரார்த்திக்கும் புத்தியே ஸரணாகதியெனப்படுகிறது. அது இந்த பகவான் விஷயத்தில் செய்யப்படட்டும்-
இந்த ஸ்லோகத்தாலே-அதிகாரி ஸ்வரூபமும்-சரணாகதி பிரயோகமும் சொல்லிற்று –(நோற்ற நோன்பிலேன் நுண் அறிவிலேன்-குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள் அந்தணமை தன்னை ஒளித்திட்டேன் என் கண் இல்லை-நின் காணும் பக்தனும் அல்லேன் புகல் ஒன்றும் இல்லா அடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே-இந்த ஸ்லோகம் -இவற்றை அனுசந்தித்திக் கொண்டே பகவத் சந்நிதிகளில் நாம் சேவிக்க வேண்டும் -)
நிலை பெறக் கரும நிடடை நின்றிலேன் ஞானம் இல்லேன்
மலரடி இணையைப் பற்றும் அன்பினை வகித்தேன் அல்லேன்
இலை சரண்யனும் வேறு சாதனமும் ஒன்றும் இல்லேன்
தலைவ நின் பாத மூலம் சரண் எனப் பற்றுவேனே –22—உன் திருவடிகளை அடைந்து நிலை பெறுவதற்கு அவஸ்யமான கர்ம யோகத்தில் நிஷ்டை யுடையேன் அல்லேன்-ஞான யோகமும் யுடையேன் அல்லேன்-உன் திருவடித் தாமரைகளில் பக்தி யுடையவனும் அல்லேன்-இவைகள் இல்லை என்று அனுதாபம் யுண்டாவதற்கு ஏற்ற ஆத்ம குணம் யுடையேனும் அல்லேன்-ஏ ஸர்வ சரண்யனான ஸ்வாமியே -விரோதி நிவர்த்தக பூர்வகமாக கைங்கர்ய ப்ராப்திக்கு உபாயமாக உன் திருவடிகளையே சரணமாகப் பற்றுகிறேன் –
—
ஸ்லோகம் -23- அவதாரிகை –அனுகூலங்கள் இல்லை என்று வெறுக்க வேண்டா-உண்டான யோக்யதையையும் அழிக்க வற்றான-நிஷித்த அனுஷ்டானங்கள் இல்லை யாகில்-நன்மைகளை உண்டாக்கிப் புருஷார்த்தத்தையும் தருகிறோம் -என்று பகவத் அபிப்ராயமாக பிரதிகூலங்களாலே பூரணன்-என்கிறார்-எம்பெருமான் “உம்மிடத்தில் நன்மைகள் இல்லை என்றாலும் சரி; ஆனால் உம்முடைய தகுதியைக் குலைக்கும் தடை செய்யப்பட்ட விஷயங்களில் ஈடுபாடு இல்லாமல் இருந்தாலே, நானே உமக்கு நன்மைகளை உண்டாக்கி பேற்றையும் கொடுப்பேன்” என்று சொல்லுவதாக எண்ணி “நான் தீமைகளின் முழுமையான வடிவமாக இருக்கிறேன்” என்கிறார் ஆளவந்தார் .
ந நிந்திதம் கர்ம ததஸ்தி லோகே
சஹஸ்ரசோ யன்ன மயா வ்யதாயி
ஸோ அஹம் விபாகா வஸ்ரே முகுந்த
க்ரந்தாமி ஸம்ப்ரத்ய கதிஸ் தவாக்ரே —23-
முகுந்த–பகவானே
யத் நிந்திதம் கர்ம –யாதொரு சாஸ்த்ரங்களாலும் சிஷ்டர்களாலும் நிந்திக்கப்பட்ட பாப க்ருத்யமானது
மயா சஹஸ்ரச–அடியேனால் பல்லாயிரம் தடவை
ந வ்யதாயி– செய்யப்பட வில்லையோ
தத் லோகே நாஸ்தி -அப்படிப்பட்ட தீவினை உலகத்திலேயே இல்லையே
ஸோ அஹம் –அப்படிப்பட்ட கடு வினைகளைச் செய்தவனான அடியேன்
விபாகா வஸ்ரே ஸம்ப்ரத்ய-அக் கடு வினைகள் பலன் கொடுக்கும் தருணமாகிய இப்போது
அகதிஸ்–வேறு கதி அற்றவனாய்
க்ரந்தாமி தவாக்ரே —உன் முன்னிலையில் காத்திருக்கின்றேன்
மோக்ஷத்தைக் கொடுக்கும் ஸ்வாமியே! பல்லாயிரம் முறை என்னால் செய்யப்படாத நிந்திக்கப்பட்ட கர்மங்கள் சாஸ்த்ரங்களிலேயே இல்லை; இப்பொழுது, என்னுடைய பாபங்கள் பலன் கொடுக்கும் சமயத்தில், வேறு புகல் இல்லாததால், நான் தேவரீர் திருமுன்பே நின்று கதறுகிறேன்.
ந நிந்திதம் கர்ம ததஸ்தி லோகே சஹஸ்ரசோ யன்ன மயா வயதாயி சஹஸ்ரசோ யன்ன மயா வயதாயி நிந்திதம் கர்ம-தத் லோகே நாஸ்தி-ஆயிரம் மடங்கு என்னால் பண்ணப் படாதது-யாதொரு நிந்தித்த கர்மம் உண்டு-அதி பாதக மஹா பாதகாதிகள்-அது சாஸ்த்ரத்தில் இல்லை-அனுஷ்டாதாக்கள் பக்கல் இல்லாத நிஷித்தங்களும் சாஸ்த்ரத்திலே காணலாம் இறே–ஸோ அஹம் –-நிஷித்தங்களை அனுஷ்டித்து பிராயச் சித்தங்களிலும் இழியாதே தப்பச் செய்தோம் என்கிற அனுதாபமும் இன்றிக்கே
இருக்கிற நான்-விபாகா வஸ்ரே –அவை பக்வமாய் அனுபவத்தை ஒழியப் போக்கிடம் இல்லாத
அவஸ்தையிலே-முகுந்த-முக்தி பூமி பரத-இத் துர்தசையை ப்ராப்தனானவனுக்கும்-தேவரே உஜ்ஜீவன ஹேது என்னும்-இத்தையே புத்தி பண்ணி-துரா சாரோ அபி சர்வாசீ கருதக் நோ நாஸ்திக –
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் வதார்ஹமபி காகுத்ச்த க்ருபயா பர்யா பாலயத் தஸ்மாதபி வத்யம் பிரபன்னம் ந ப்ரதி ப்ரயச் சந்தி அஹிர் புத்ன்ய சம்ஹிதாயாம் அநேநைவ ப்ரபன்னச்ய பகவந்தம் ஸ நாதனம் தஸ்யா நுபந்தா பாபமா நஸ் சர்வே நச்யந்தி தத் ஷணாத் கரு தான்ய நேன சர்வாணி தபாம் சி தபதாம் வர சர்வே தீர்த்தாஸ் சர்வ யஜ்ஞ்ஞாஸ் சர்வ தாநானி தத் ஷணாத் க்ருதாந்யே தேன மோஷச்ச தஸ்ய ஹஸ்தே ந சம்சய-(து.ராசாரோ$பி ஸ்வாமீ க்ருதக்நோ நாஸ்திக; புரா।| ஸமாஸ்ரயேதராதி,தே;வம் ஸ்ரத்,தயா ஸ்ரணம் யதி, ॥ நிர்தோஷம் வித்தி, தம் ஐந்தும் ப்ரபாவாத் பரமாத்மந:।![அநாதிகாலமாக ஒருவன் கெட்ட ஒழுக்கமுள்ள வனாகவும், எதையும் சாப்பிடுபவனாகவும், செய்ந்நன்றி மறந்தவனாகவும், நாஸ்திகனாகவும் இருந்த போதிலும், ஆதிதேவனாகிற பகவானை ஸ்ரத்தையுடன் ஸரணமடைவானாகில், அந்த மனிதனை, பரமாத்மாவினுடைய மஹிமையினாலே தோஷமற்றவனாக அறிவாயாக.)([இந்த மந்த்ரத்தால் பழைமையான அந்த பகவானை ஸரணமடைந்தவனுக்கு, அவனை ஒட்டியிருக்கும் எல்லாப் பாபங்களும் அந்த க்ஷணத்திலேயே நஸிக்கின் றன. முனி ஸ்ரேஷ்ட,ரே ! இவனால் எல்லாத் தவங்களும் செய்யப் பட்டன. எல்லாத் தீர்த்தங்களும், எல்லா யஜ்ஞங்களும், எல்லா தானங்களும் அந்த க்ஷணத்திலேயே இவனால் செய்யப்பட்டன. மோக்ஷ்மும் இவனுடைய கையிலிருக் கிறது. (இதைப் பற்றி) ஸந்தேஹமில்லை)
அகதி-தேவரீர் உடைய நீர்மையே அன்றியே-என்னுடைய கதி ஸூந்யதையே ஹேதுவாக-க்ரந்தாமி ஸம்ப்ரததி – ஸம்ப்ரததி -க்ரந்தாமி-க்ரந்தாமி -கதறுகிறேன்-தேவரீருக்கு பரிஹரிக்க ஒண்ணாத தசையிலே-தேவர் பக்கல்-குண ஹானியை சம்சிக்கும் படி-சாதனா அனுஷ்டானம் பண்ணிப் பலம் பெறாதாரைப் போலே கூப்பிடா நின்றேன்-தவாக்ரே –-தவ அக்ரே-ஹரீரேஷா ஹி மமாதுலா -(ப்ரஸீத,ந்து ப,வந்தோ மே ஹ்ரீரேஷா ஹி மமாதுலா | யதீத்ரு ஸைரஹம் விப்ரைருபஸ்தேயை ருபஸ்தி,த: || [(முனிவர்களே!) நீங்கள் உகந்தருளுவீர்களாக, வந்து அடையத் தகுந்த பெரியோர்களான உங்களால் (நான்) அடையப்பட்டபடியால், எனக்கு இப்போதிருக்கும் லஜ்ஜை மிக அதிகமாயிருக்கிற) என்கிற தேவர் திரு முன்பே
(லோக சப்தம் -சாஸ்த்ரத்திலே -என்றவாறு-காரொளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன் யாருளர் களைகண் அம்மா அரங்க மா நகருளானே –பாசுரம் தழுவிய ஸ்லோகம்-தவ அக்ரே க்ரந்தாமி-ருணம்-என்று திரௌபதி கோவிந்தா கதறலுக்கு உதவவில்லையே என்ற புண் பட்ட தேவரீர் முன்னே அன்றோ கதறுகின்றேன் -)
பிரதிபந்தக சாமாக்ரிகள் என்னிடத்தில் அளவற்றவை உண்டு என்கிறார்-நான் செய்யாத இழி தொழிலே உலகிலே இல்லையே –ஒப்பற்ற பாபாத்மா-லோகே -சாஸ்திரத்தில் -என்பதே மிக பொருந்தும்
ஆயிரம் மடங்கு என்னால் பண்ணப் படாதது யாதொரு நிந்தித்த கர்மம் உண்டு-அதி பாதக மஹா பாதகாதிகள் அது சாஸ்த்ரத்தில் இல்லை -அனுஷ்டாதாக்கள் பக்கல் இல்லாத நிஷித்தங்களும்
சாஸ்த்ரத்திலே காணலாம் இறே- இது ஒரு சமத்காரச் சொல்லாகும்-பாபங்களை அதிகமாகச் செய்தாலும் பின்பு அஞ்சி அனுதாபமோ வெட்கமோ படாமலும்-பிராயச்சித்தமோ செய்யாமல் துன்பங்களை அனுபவிக்க முடியாமல் கதறுகின்றேன்–முகுந்த-முக்தி பூமி பரத-இத் துர்தசையை ப்ராப்தனானவனுக்கும் தேவரே உஜ்ஜீவன ஹேது என்னும்-இத்தையே புத்தி பண்ணி கதறுகின்றேன்
கார் ஒளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன் ஆர் உளர் களை கண் அம்மா-அரங்க மா நகர் உளானே –திருமாலை -போலே-கோவிந்தா என்று திரௌபதி கதறினது உன் திரு உள்ளத்தை புண் படுத்திற்றே-இப்பொழுது என் கதறுதலுக்கு பரிஹாரம் செய்யா விடில் அது வெளி வேஷம் என்று
நிச்சயிக்கலாமே என்பது உள்ளுறைப் பொருள் –
பலமுறை யான் இயற்றா பாதக் கணங்கள் தம்முள்
உலகினில் ஒன்றும் இல்லை யுறு பலன் எனை வதைப்ப
நிலை குலைந்து ஏங்கி வேறு கதியிலேனாகி நின் முன்
கலியுடன் முகுந்த வின்றுக் கதறியே கரைகின்றேனே –23—பலதடவைகளில் என்னால் பண்ணப்படாத மஹா பாதகக் கணங்களுள் ஒன்றேனும் இவ்வுலகின் கண் இல்லை-ஏ முகுந்த அப்பாவங்கள் பக்வ தசையை அடைந்து பலத்தை எனக்கு விளைவிக்க-இதை அனுபவித்து உழன்று நிலை குலைந்து ஏங்கி வேறே கதி ஒன்றும் இலேயேனாய் உன் முன்பு இப்பொழுது கதறிக் கரைகின்றேன் –
—
ஸ்லோகம் -24-அவதாரிகை –உம்முடைய பூர்வ வ்ருத்தி இதுவாய் இருக்க –க்ரந்தாமி -என்று நம் குற்றம் போலே கூப்பிடுவது எத்தாலே -என்ன –சம்சார ஆர்ணவத்திலே அழுந்துகிற எனக்கு-நிர்ஹேதுக கிருபையாலே உன் வாசியை அறிவித்தாய் –-கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்தந்தந்தோ -திருவாய் மொழி -10-10-2- என்கிற ப்ராங் ந்யாயத்தாலே உன் திருவடிகளை ப்ராபிக்கைக்கும் அந்த கிருபையே ஹேது என்று தயைக ரஷ்யத் வத்தாலே கூப்பிடுகிறேன் -என்கிறார் –எனக்கு தேவரை லபிக்கை பெறாப் பேறு ஆனாப் போலே இறே தேவருடைய கிருபைக்கும் என்னுடைய லாபம் -என்கிறார் –ஆளவந்தார் எம்பெருமானை அழைத்து “உன்னுடைய கருணையே எனக்கிருக்கும் ஒரே புகல்” என்கிறார்;-ஆளவந்தார் “உன்னை அடைவது எனக்கு எப்படி ஒரு பாக்யமோ, உன்னுடைய கருணைக்கும் நானே தகுதியான பேறு” என்கிறார்.
நி மஜ்ஜதோ அநந்த பவ அர்ணவ அந்தஸ்
சிராய மே கூலம் இவ அஸி லப்த
த்வயாபி லப்தம் பகவந் நிதா நீம்
அநுத்தமம் பாத்ரம் இதம் தயாயா—24-
தேச கால வஸ்துக்களினால் எல்லையிலாத ஸ்வாமியே! இந்த ஸம்ஸாரக் கடலில் பல காலமாக மூழ்கியிருக்கும் எனக்கு நீ கரையைப் போலே வந்தாய்; பகவானே! உன்னுடைய கருணைக்கு நானே தகுந்த பாத்திரம்.
ஹே அநந்த-எல்லை அற்ற குண விபூதியை உடைய பெருமானே
பவ அர்ணவ அந்தஸ்-சம்சாரமாகிற கடலினுள்ளே
அநந்த பவ அர்ணவ அந்தஸ்-சேர்த்தும் -கரை காண ஒண்ணாத சம்சாரக் கடலினுள்ளே என்றுமாம்
நி மஜ்ஜதோ மே -மூழ்கிக் கொண்டே இருக்கிற அடியேனுக்கு
சிராய கூலம் இவ அஸி லப்த–நெடு நாள் களித்து கரை போலே நீ கிடைத்தாய்-ஆவாரார் துணை என்று அலை நீர் கடலுள் அழுந்தும் நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்க-என்பதை அடி ஒற்றி அருளிச் செய்தபடி சனகாதிகளைப் போலே கண் பற்றிலே இருந்தேனோ –த்வயாபி பகவந் –பகவானே உன்னாலும்-தயாயா- அநுத்தமம் பாத்ரம் இதம் இதா நீம் லப்தம்-உனது அருளுக்கு சிறந்த பாத்ரமாகிய
இந்த வஸ்து-நான் -அடையப் பெற்றது –-எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய -உன்னுடைய கிருஷியும் பலித்ததே-என்பதை நீ நோக்கி அருள வேணும்
நி மஜ்ஜதோ அநந்த பவ அர்ணவ அந்தஸ்-அநந்த பவ அர்ணவ அந்தஸ் நி மஜ்ஜதோ-த்ரிவித பரிச்சேத ரஹித என்னுடைய சம்சாரத்தைப் பரிச்சேதிக்கிலும் தேவருடைய பிரபாவத்தை பரிச்சேதிக்க ஒண்ணாது -என்கை –பவார்ணவ விசேஷணமாய்-கரை காண ஒண்ணாத சம்சார அர்ணவத்திலே
ஆவாரார் துணை என்று அலை நீர்க் கடலுள் அழுந்தும் -திருவாய்மொழி -5-1-9- என்கிறபடியே
அழுந்துகிற எனக்கு -என்னவுமாம் –சனகாதிகளைப் போலே கண் பற்றிலே இருந்தேனோ –சிராய-மே
அநாதி காலம் எல்லாம் அழுந்து இருக்கும் எனக்கு –அழுந்துகை ஒழிய பரிஹாரம் பார்க்க அறியாத எனக்கு-கூலம் இவ அஸி லப்த-உன் பேர் அருளால் இக்கரை ஏறி -பெரியாழ்வார் திருமொழி -5-3-7-என்னும்படி அழுந்துகிற இடத்தில் கரை கிட்டினால் போலே லப்தனாகா நின்றாய்–த்வயாபி லப்தம் –
தேவராலும் லபிக்கப் பட்டது –-எனக்கு தேவர் பெறாப் பேறு ஆனாப் போலே இறே-எதிர் சூழல் புக்குத் -திருவாய் மொழி -2-7-6- திரிந்த தேவர்க்கும் இவ் வஸ்து –பகவந் –ஜ்ஞானாதி குண பூரணரான-தேவருடைய பேறு என்னும் இடம் நான் சொல்ல வேண்டுமோ -என்கை–இதா நீம்--தேவரும் நம்மை அற்று விடும்படியான துர் தசையிலே–அநுத்தமம் பாத்ரம் – உத்தமோத்தமான பாத்ரம்-இதம் –
ரஷக அபேஷைக்கு இனி இல்லை என்னும் இவ் வஸ்து-தயாயா--ரஷ்ய விஷயம் உண்டாகில் தான்
உண்டாம் தேவர் தயைக்கு –
(அநந்த-விசேஷணம் ஸ்வரூப குண விபூதிகளுக்கும் -எல்லை அற்ற இவை –பாவார்ணவம் -எல்லை அற்ற –தூராக் குழி -கரை காண ஒண்ணாத சம்சார கடலுக்கும் –ஆவாரார் துணை என்று அலை நீர் கடலுள் அழுந்தும் நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்க – சேதன லாபம் அவனுக்கே -எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய – நிர்ஹேதுக கிருபையினால் கைக் கொண்டே தீர வேண்டிய நிலைமை யுண்டே என்று விஞ்ஞாபனம் – -)
ஆகவே ரஷ்யனான எனக்கும் ரக்ஷகனான உனக்கும் லாபம் கிடைக்க நேர்ந்த இப்பொழுது இழக்கலாமா என்று அற்றோ கதறுகின்றேன்-என்னிடத்தில் யோக்யதைக் கண்டு நீ கைக் கொள்ள விஷயம் இல்லாவிடினும்-உன்னுடைய நிருஹேதுக கிருபையினால் கைக் கொண்டே தீர வேண்டிய நிலை யுண்டே என்று விஞ்ஞாபித்தபடி-உன் பேர் அருளால் இக்கரை ஏறி –பெரியாழ்வார் திருமொழி -5-3-7-என்னும்படி அழுந்துகிற இடத்தில் கரை கிட்டினால் போலே லப்தனாகா நின்றாய்–அநுத்தமம்-ந வித்யதே உத்தமம் யஸ்மாத் தத் -வ்யுத்பத்தி — இதற்கு மேல் சிறந்தது இல்லை என்னும்படி லோக உத்தமமானது என்றபடி –
பவம் என்னும் பரவை தன்னுள் பகவ நீடு ஊழியாகக்
கவலையோடே அழுந்தும் எற்கு ஓர் கரையென யகப்பட்டாய் காண்
உவமையில் யுன் தயைக்கோர் யுத்தமே யுரிமை பூண்ட
வவலமார் இதுவும் உன்னால் அடை தலைப் பெற்றது இன்றே –24–அநேக ஊழிகளாக ஸம்ஸாரம் என்னும் பெரும் கடலில் கவலையோடு கூடி அழுந்தி-வேறு பரிகாரம் அறியாத எனக்கு ஒரு கரை போலே நீ அகப்பட்டாய்-இது எங்கனம் இருக்க -ஏ ஸ்வாமியே-உன்னுடைய இணை இல்லாத தயைக்கு உத்தம உத்தமமான ஒரு விஷயமாக இந்த அவல வஸ்துவும் உன்னால் இப்பொழுது அடையப் பெற்றது
—
ஸ்லோகம் -25- அவதாரிகை –நம் பக்கல் ந்யஸ்த பரராய் இருக்கிற உமக்கு-தத் தஸ்ய சத்ருசம் பவேத் -(ஸரைஸ்து ஸங்குலாம் க்ருத்வா லங்காம் பரப,லார்த;ந; | மாம் நயேத் யதி, காகுத்ஸ்த,ஸ் தத் தஸ்ய ஸத்,ருஸம் ப,வேத் || [ஸத்ருக்களின் பலத்தை ஒழிப்பவரான ஸ்ரீராம பிரான் லங்கையை பாணங்களாலே கலங்கச் செய்து என்னை அழைத்துப் போவாராகில், அப்படிச் செய்வது அவருக்கே தகுந்ததாகும்)என்கிறபடியே கண்டிருக்கை ஸ்வரூபமாய் இருக்க இங்கனே நிர்பந்திக்கக் கடவீரோ -என்ன-என்னுடைய அனர்த்தத்தை பரிஹரிக்கச் சொல்லுகிறேன் அல்லேன் –ஆஸ்ரிதர்க்கு விஷயங்களால் வரும் பரிபவம் ரஷகரான தேவருக்கு தேஜோ ஹாநி -என்று அத்தைப் பரிஹரிக்கச் சொல்லுகிறேன் என்கிறார்-எம்பெருமான் “உம்முடைய பாரத்தை முழுவதுமாக என்னிடம் வைத்த பின்பு, நீர் ஸ்ரீராமாயணம் ஸுந்தர காண்டம் 9.30இல் ‘தத் தஸ்ய ஸத்ருஶம் பவேத்’ (ஸ்ரீராமனே லங்கையை அழித்து என்னை ரக்ஷிப்பதே அவன் தன்மைக்குச் சேர்ந்தது – ஆகையால் நான் அவர் வரும் வரை காத்திருப்பேன்) என்றபடி இருக்க வேண்டாமோ? எதற்காக உடனே நான் உமக்கு உதவ வேண்டும் என்று நிர்பந்தம் செய்கிறீர்?” என்று கேட்க,-ஆளவந்தார் “என்னுடைய துயரத்தைப் போக்கும்படி நான் கேட்க வில்லை; உன்னுடைய அடியார்கள் இவ்வுலகில் துன்பப்பட்டால்-அது உன்னுடைய பெருமைக்குத் தானே அவப் பெயர்; அதைப் போக்கிக் கொள்ளும்படி ப்ரார்த்திக்கிறேன்” என்கிறார்.
அபூத பூர்வம் மம பாவி கிம் வா
சர்வம் சஹே மே சஹஜம் ஹி துக்கம்
கிந்து த்வதக்ரே சரணாக தா நாம்
பராபவோ நாத ந தே அநுரூப—–25-
ஸ்வாமியே! இதுவரை அனுபவிக்காத எந்தப் புதிய துன்பம் எனக்கு ஏற்படப்போகிறது இப்போது?
இந்தத் துன்பங்களை நான் பொறுத்துக்கொள்கிறேன்; இவை என்னுடன் பிறந்தவை;-ஆனால் உன்னிடம் சரணடைந்தவர்களுக்கு தேவரீரின் திருமுன்பே ஒரு அவமானம் ஏற்பட்டது என்றால்,
அது தேவரீருடைய பெருமைக்குச் சேராது.
ஹே நாத-
அபூத பூர்வம் மம -அடியேனுக்கு இதற்கு முன்பு உண்டாகாத
கிம் வா துக்கம்-பாவி –என்ன துக்கம் புதிதாக உண்டாகப் போகிறது -ஒன்றுமே இல்லையே
துக்கம் மே சஹஜம் ஹி -துக்கம் என்பது என்னுடன் கூடவே பிறந்தது அன்றோ
சர்வம் சஹே -எல்லாத் துயரங்களையும் பொறுத்துக் கொண்டே இருக்கிறேன்-தனது காய்களைப் பொறாத கொம்பு உலகில் உண்டோ
கிந்து -ஆனால்-த்வதக்ரே சரண ஆகதாநாம்–உன் எதிரிலே வந்து சரணம் புகுந்தவர்களுக்கு
பராபவோ ந தே அநுரூப—-ஒரு அவமானம் உண்டாவது உனக்குத் தகுதி அல்லவே-சர்வ ரக்ஷகன் சர்வ சக்தன் சரணாகத ரக்ஷகன் என்று எல்லாம் சொல்லப்படும் பேற்றை அன்றோ நீ இழக்க இருக்கிறாய்
நமது ஸ்வாமிக்கு அபவாதம் ஏற்படுகிறதே என்கிற பெரிய துக்கத்தைப் பொறுக்க ஒண்ணாதே
இதற்காக அன்றோ இப்பொழுது கதறுகின்றேன்–எங்கனம் தேறுவர் உமர் –திருவாய் மொழி -8-1-3-என்கிறபடியே-உனக்குக் கை புகுந்தவர்களும் உன்னுடைய ரஷணத்தில் அதி சங்கை பண்ணுவார்கள் -என்கை –-ஆஸ்ரிதர்க்கு விஷயங்களால் வரும் பரிபவம் ரஷகரான தேவருக்கு தேஜோ ஹாநி –என்று
அத்தைப் பரிஹரிக்கச் சொல்லுகிறேன் என்கிறார்–என்னத் தவறாமல் ரஷித்தே தீர வேண்டும் -என்கிற பிராத்தனையில் விசித்திரமான முறை அன்றோ இது
அபூத பூர்வம் மம பாவி கிம் வா – நரக கர்ப்ப வாச ஜனன மரண க்லேசாதிகளே யாத்ரையாய்ப் போந்த எனக்கு-முன்பு அநு பூதம் அன்றிக்கே-இனி அநு பாவ்யமாய் இருப்பதொரு துக்கம் உண்டோ –-கிம் ஷேபே –சர்வம் சஹே –ஆதி வாதிகள் பர பரிபவம் சீதோஷ்ணாதிகள்-தத் விஸ்லேஷ ஜனித்த துக்கம்
இவற்றை இவர் சஹிக்க வல்லராய்ச் சொல்லுகிறார் அல்லர் –ஆத்மா நித்யன்-காலம் அநாதி
இவற்றைப் பொறுத்து உட்கொதி போலே நசியாதே கிடந்த ஆச்சர்யத்தைக் கண்டு சொல்லுகிறார் –மே சஹஜம் ஹி துக்கம் – அநாதி காலம் கர்மமே நிரூபகமாகப் போந்த எனக்கு – அதின் பலமான துக்கமும் சஹஜம் அன்றோ –கிந்து –-பொறுக்க ஒண்ணாதது ஓன்று உண்டு –த்வதக்ரே –-சர்வ சேஷியாய்-சர்வத்ர சந்நிஹிதரான தேவர் முன்பே-சரணாக தா நாம் பராபவோ –-உன் பக்கல் ந்யச்த பரராய் இருக்கும் அவர்களுக்கு-சப்தாதி விஷய ப்ராவண்யத்தால் வந்த எளிவரவு–பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ – திருவாய் மொழி -6-9-9–கிறி செய்து என்னைப் புறத்து இட்டு இன்னம் கெடுப்பாயோ -திருவாய் மொழி -6-9-8-என்று விஷய சந்நிதியே தொடங்கி எளிவரவாய் இறே அநந்ய ப்ரயோஜனர் இருப்பது–பஹூ வசனத்தாலெ சொல்லுகிறது –-ஒருத்தனுடைய எளிவரவு சஜாதீயர்க்காக வந்தது என்கை –-எங்கனம் தேறுவர் உமர் -திருவாய் மொழி -8-1-3-என்கிறபடியே
உனக்குக் கை புகுந்தவர்களும் உன்னுடைய ரஷணத்தில் அதி சங்கை பண்ணுவார்கள் -என்கை –நாத – இது தன்னரசு நாடாகில் தேவருக்கு வருவது உண்டோ உடைமை நோவுபடுகிறது உடையவனுக்கு எளிவரவு அன்றோ-ந தே அநுரூப-தே நா நுரூப-சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-என்று தேவருக்கு அநு ரூபம் அன்று-அது தனக்கு அசஹ்யம் -என்கை —
இதுவரை யான் படாத இடர் எனக்கு இனி ஓன்று உண்டோ
எதையும் நான் சகிப்பன் துக்கம் இயற்கையே எனக்கானால் யுன்
பதமுறச் சரண் அடைந்தோர் பரிபவப் படில் யுன் முன்னர்
அது உனக்கு இணக்கம் அன்றே நாத எவ்விதத்தும் அந்தோ -25-இதுவரையும் நான் அனுபவியாத சங்கடங்களில் இனி நான் அனுபவிக்கும்படி நேரிடக்கூடிய சங்கடம் ஓன்று யுண்டோ-எதையும் நான் சகிப்பன்-காமியான எனக்கு கர்ம பலமான துக்கங்கள் ஸஹஜமே-ஆனால் ஓன்று யுண்டு -ஏ ஸர்வேஸ்வரனே உன் முன்பே உன் திருவடிகளிலே சரணம் அடைந்தோர் பரிபவப் பட்டால் அப்பரிபவம் உனக்கு எவ்விதத்திலும் தகுதி அன்று –
—
ஸ்லோகம் -26- அவதாரிகை –தேவர் உடைய ரஷண அபாவத்தால் வந்த தேஜோ ஹாநியையும் பாராதே
என்னைக் கைவிடும் அன்றும் நான் விடப் பார்க்கிறிலேன் -என்று தம்முடைய அகதிவத்தாலே தம்முடைய மகா விஸ்வாசத்தை ஆவீஷ்கரிக்கிறார்-ஆளவந்தார் “நீ உன்னுடைய பெருமைக்கு ஏற்படும் தோஷத்தையும் பார்க்காமல் என்னைக் கை விட்டாலும், நான் உன்னை விடமாட்டேன்” என்று தன்னுடைய அகதித்வத்தினாலே (வேறு புகலில்லாத நிலையினாலே) உண்டான மஹா விஶ்வாஸத்தை வெளியிடுகிறார்.
நிராஸ கஸ்ய அபி ந தவ உத்ஸஹே
மஹேஸ ஹாதும் தவ பாத பங்கஜம்
ருஷா நிரஸ்தோ அபி ஸிஸூ ஸ்தநந்தயோ
ந ஜாது மாதுஸ் சரனௌ ஜிஹாஸதி——–26–
ஸர்வேஶ்வரனே! நீ என்னைத் தள்ளினாலும், நான் உன்னுடைய திருவடித் தாமரைகளை விடத் துணிய மாட்டேன்; பால் குடிக்கும் குழந்தையைத் தாயானவள் கோபத்தில் தள்ளினாலும், அக்குழந்தை தாயின் காலை விடாமல் இருக்குமா போலே.
மஹேஸ-ஸர்வேஸ்வரனே
நிராஸ கஸ்ய அபி – என்னை நீ துரத்தித் தள்ளினாலும்
தவ பாத பங்கஜம் ஹாதும் -உன்னுடைய திருவடித் தாமரையை விடுவதற்கு
ந உத்ஸஹே தாவத் –அடியேன் துணிய மாட்டேன் காண்
ஸ்தநந்தயோ ஸிஸூ–முலைப்பால் குடிக்கும் பருவமுள்ள குழந்தை
ருஷா நிரஸ்தோ அபி –கோபத்தினால் தள்ளப்பட்டாலும்-கையாலே தள்ளுகை அன்றிக்கே-காலாலே தள்ளிலும் அந்தக் காலைக் கட்டிக் கொள்ளும் அத்தனை ஒழிய புறம்பு போகப் பாராதாப் போலே-
மாதுஸ் சரனௌ -ஜாது -ந ஜிஹாஸதி—தாயாருடைய கால்களை ஒரு போதும் விடுவதற்கு விரும்ப மாட்டாது அன்றோ
நிராஸ கஸ்ய அபி –-ரஷகத்வம் ஸ்வரூபமாய் இருக்கிற தேவர்-நிராஸகராக பிரசங்கம் இல்லை – இப்படிப் பட்ட தேவர் நிஷ் கருணராய் -நிராஸகரானாலும்-தவ பாத பங்கஜம் -தாவத் -ஹாதும் -நோத்ஸஹே--ரஷகமுமாய்-ப்ராப்தமமுமாய் போக்யமுமான திருவடிகளை முந்துற முன்னம் விட்டு ஜீவிக்க ஸ்ரத்தை பண்ணு கிறிலேன்-கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும்
கொண்டானை அல்லால் அறியாக் குலமகள் போல் -என்று தேவர் ரஷகர் அன்றியிலே ஒழிந்தாலும்
புறம்பு போக்கில்லை -என்கை –மஹேஸ – தமீஸ் வராணாம் பரமம் மகேஸ்வரம் -என்றும்-ஈச்வரஸ் சர்வ பூதா நாம் -என்றும் -சொல்லுகிறபடியே நிருபாதிக நிர்வாஹகனானவனே–(ஈஸ்வரஸ் ஸர்வ பூ,தாநாம் ஹ்ருத்,தே,ஸே 5ர்ஜுந! திஷ்ட தி। ப்,ராமயந் ஸர்வ பூ,தாநி யந்த்ராரூடாநி மாயயா॥[ஸர்வேஸ்வரனாகிய வாஸுதேவன் ( ப்ரக்ருதியாகிய ) யந்திரத்தில் ஏறி நிற்கும் எல்லா ஜீவ ராசிகளையும், (ஸத்வ ரஜஸ் தமோ கு,ண மயமான) மாயையினால் சுழற்றிக் கொண்டிருக்கிறா)
சம்சாரத்தில் பந்தங்களைப் போலே கர்மோ பாதிகமாய் புறம்பே போய் உஜஜீவிக்கிறேனோ-ஸூஹ்ருதம் சர்வ பூதா நாம் சர்வேஷா மேவ லோகா நாம் பிதா மாதா ஸ மாதவ -(போக்தாரம் யஜ்ஞ தபஸாம் ஸர்வ லோக மஹேஸ்வரம் | ஸுஹ்ருதஃம் ஸர்வ பூ,தாநாம் ஜ்ஞாத்வா மாம் ஸாந்திம் ருச்சதி || [யஜ்ஞங்களையும், தவங்களையும் புஜிப்பவனும், எல்லா உலகங்களுக்கும் மஹேஸ்வரனும், எல்லா ஜீவராசிகளுக்கும் நண்பனுமான என்னை அறிந்து சாந்தியை அடைகிறான்)என்னும் நிருபாதிகமான பரிவும் சம்பந்தமும் புறம்பே யுண்டாய் தேவரை விட்டுப் போய் உஜ்ஜீவிக்கவோ –ருஷா நிரஸ்தோ அபி ஸி ஸூ ஸ்தநந்தயோ – ஸ்தந்யமே தாரகமான சிசுவானது ஜனநியாலே குரோதம் அடியாக விடப் பட்டாலும்-ஸ்வ ரஷணத்தில் சக்தி இன்றிக்கே தத் ஏக ரஷ்யமான தசையைச் சொல்லுகிறது –இவ் வ்வாத்ம வஸ்து ஈஸ்வர ஏக ரஷ்யமாய் நித்ய ஸ்தனந்த்யமாய் இறே இருப்பது-அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள் தன அருள் நினைந்தே அழும் குழவி – ஈன்ற தாய் -என்றும் -அரி சினம் -என்றும் விருத்த தர்மம் – ஏக ஆஸ்ரயத்தில் சம்பவியாது என்கை-பிதாவுக்கு ஹிதார்த்தமாக குரோதம் சம்பவித்தாலும் மாத்ரு விஷயத்தில் சம்பாவனை இல்லை இறே –ஜாது- க்ருதையான போதொடு ஆதரித்த போதொடு வாசி அற-ந மாதுஸ் சரனௌ ஜிஹாஸதி –கையாலே தள்ளுகை அன்றிக்கே காலாலே தள்ளிலும் அந்தக் காலைக் கட்டிக் கொள்ளும் அத்தனை ஒழிய புறம்பு போகப் பாராதாப் போலே-(தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை — அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள் தன் அருள் நினைந்ததே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே –பாசுரம் தழுவிய ஸ்லோகம் -)(ஸர்வேஷாமேவ லோகாநாம் பிதா மாதா ச மாத,வ:। கச்ச த்வமேநம் ஸரணம் ஸரண்யம் புருஷர்ஷபா: || [புருஷ ஸ்ரேஷ்டர்களே ! எல்லா உலகங்களுக்கும் தந்தையும், தாயும் லக்ஷ்மீ நாதனே; ஸரணமடையத் தகுந்த இவனை ஸரணமடையுங்கள்.)
ரஷகமுமாய் ப்ராப்தமமுமாய் போக்யமுமான திருவடிகளை முந்துற முன்னம் விட்டு ஜீவிக்க ஸ்ரத்தை பண்ணு கிறிலேன்–கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும் கொண்டானை அல்லால் அறியாக் குலமகள் போல் -என்று தேவர் ரஷகர் அன்றியிலே ஒழிந்தாலும் புறம்பு போக்கில்லை -என்கை – இவ்வ்வாத்ம வஸ்து ஈஸ்வர ஏக ரஷ்யமாய் நித்ய ஸ்தனந்த்யமாய் இறே இருப்பது
தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை –அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள் தன் அருள் நினைந்ததே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே -பாசுரம் தழுவிய ஸ்லோகம்-ஈன்ற தாய் -என்றும் -அரி சினம் -என்றும் விருத்த தர்மம் – ஏக ஆஸ்ரயத்தில் சம்பவியாது என்கை-பிதாவுக்கு ஹிதார்த்தமாக குரோதம் சம்பவித்தாலும் மாத்ரு விஷயத்தில் சம்பாவனை இல்லை இறே –-நீ நெறி காட்டி நீக்கப் பார்த்தாலும் நான் உன்னுடைய தின் கழலை விட்டு நீங்குவேன் அல்லேன் -என்கிற திட அத்யாவசாயத்தை வெளியிட்டு அருளுகிறார்
என்னை நீ நூக்கினாலும் ஈசனே கமலம் அன்ன
யுன்னடி ஒருக்கணத்து நீத்து நான் உய்ய மாட்டேன்
என்னையே முனிந்து நூக்கின் அவள் முலைப்பால் என்றும்
மன்னியா யடியைப் பற்றா ததை விட மனமுறாதே –26-ஆஸ்ரித ரக்ஷணத்தையே ஸ்வரூபகமாக உடைய நீ என்னை கிருபை பண்ணாமல் தள்ளிவிட்ட போதிலும் உன் திருவடிகளை ஒரு க்ஷணமேனும் விட்டு விட்டு உஜ்ஜீவிக்க சமர்த்தன் அல்லேன்-ஏ ஸர்வேஸ்வரனே ஸ்தன்யமே தாரகமாக யுடைய ஒரு சிசுவானது கோபம் கொண்ட தன் மாதாவால் தள்ளப்பட்ட போதிலும் தன்னை ஆதரித்த காலத்தில் போலே அவளைக் காலைக் கட்டிக் கொள்ளுமே அன்றி அதை விட்டுவிட விரும்பாதது அன்றோ –
—
ஸ்லோகம் -27-அவதாரிகை –என்னுடைய அநந்ய கதித்வத்தாலே விட மாட்டாத அளவேயோ–தேவர் போக்யதையிலே அழுந்தின மனஸ்ஸூம் வேறு ஒன்றில் போக மாட்டாது – என்கிறார் –ஆளவந்தார் “அநந்ய கதித்வத்தினால் மட்டுமா நான் உன்னைப் பிரியாமல் இருக்கிறேன்? உன்னுடைய போக்யமான தன்மையில் என் மனம் மூழ்கியிருப்பதால், நான் வேறு விஷயங்களை விரும்ப மாட்டேன்” என்கிறார்.
தவாம்ருதஸ் யந்தி நி பாத பங்கஜே
நிவேஸி தாத்மா கத மந்யதிச் சதி
ஸ்திதே அரவிந்தே மகரந்த நிர்ப்பரே
மது வ்ரதோ நே ஷூ ரகம் ஹி வீஷதே–27-
அம்ருதஸ் யந்திநி –அம்ருதத்தைப் பெருக்குகின்ற -மோக்ஷத்தை அளிக்கின்ற
தவ பாத பங்கஜே–உன்னுடைய திருவடித் தாமரையில்
நிவேஸி தாத்மா –வைக்கப்பட்ட மனமானது
கதம் அந்யத் இச்சதி-வேறு ஒன்றை எப்படி விரும்பும்
மகரந்த நிர்ப்பரே-அரவிந்தே -ஸ்திதே -சதி–தேன் நிறைந்த தாமரைப் பூவானது இருக்கும் பொழுது
மது வ்ரதோ இஷூரகம் ந வீஷதே–ஹி–வந்து முள்ளிப் பூவைக் கண் எடுத்தும் பார்க்க மாட்டாது அன்றோ-இஷூரகம் -முள்ளிப் பூவை-உனது திருவடித் தாமரையின் போக்யதையை நோக்கும் இடத்தில் வேறு ஒன்றினில் நெஞ்சு செல்லுமோ-ஹி-இது உபதேசிக்க வேண்டுமோ — தேவருக்கு சம்ப்ரதிபன்னம் அன்றோ-எங்குப் போய் உய்கேன் உன் இணை யடியே யடையல் அல்லால் –பெருமாள் திருமொழி -5-5-என்று இராதோ-
அதிகமான தேனைப் பெருக்கும் உன்னுடைய திருவடிகளில், உன்னுடைய க்ருபையினால் பதிந்திருக்கும் என் மனம், வேறு விஷயங்களை எப்படி ஆசைப்படும்? தேன் நிறைந்த சிவந்த தாமரை இருக்கும்பொழுது, ஒரு வண்டானது முள்ளிப்பூவை விரும்பாதன்றோ?
தவாம் ருதஸ் யந்தி நி பாத பங்கஜே –-ப்ராப்தமுமாய்-போக்யமுமான தேவர் திருவடிகளிலே-விஷ்ணோ பதே பரமே மதவ உத்ஸ – ரசோ வை ஸ –-தேனே மலரும் திருப் பாதம் -என்று (தத,ஸ்ய ப்ரியமபி, பாதோ ௮ஸ்யாம்। நரோ யத்ர தே,வயவோ மத;ந்தி | உருக்ரமஸ்ம ஸ ஹி பந்துரித்தரா। விஷ்ணோ: பதே, பரமே மத்வ உத்ஸ: | (எந்த கங்கா தீர்த்த விஷயத்தில், தேவத்வத்தை விரும்பும் மனிதர்கள் சந்தோஷிக்கிறார்களோ, இனியதாக விருக்கும் இந்த பகவானுடைய அந்த ஸ்ரீபாத தீர்த்தத்தை ஆதரவுடன் பானம் செய்வேனாக. அப்படிக் குடிப்பவன் திரி விக்ரமனுக்கு பந்து,வாவான். இம் மாதிரியாக விஷ்ணுவினுடைய மேலான திருவடியில் அம்ருதத்தினுடைய ப்ரவாஹம் உண்டாகிறது) ஸ்ருதி சித்தம் இறே போக்யதை –நிவேஸி தாத்மா – தேவர் உடைய நிர்ஹேதுகமான ப்ரசாதத்தாலே நிவேசிக்கப் பட்ட மனஸ் ஸானது-அபோக்யமுமாய் அப்ராப்தமுமான ஹேய விஷயங்களிலே-பழகிப் போந்த மனஸ்ஸூ-ஸூரி போக்யமான தேவர் திருவடிகளிலே-அவகாஹிக்கும் போது -தேவர் ப்ரசாதமே வேண்டாவோ –கத மந்யதிச் சதி – மய்யா ஸகதம நா -(மய்யா ஸக்தமநா: பார்த்த,! யோகம் யுஞ்ஜந் மதராஸ்ரய: | அஸம்மயம் ஸமக்ரம் மாம் யதா ஜ்ஞாஸ்யஹி தச்ச்ருணு! [அர்ஜுனா | என்னிடம் ஈடுபட்ட மனத்தை யுடையவனாய், என்னையே ஆதாரமாகக் கொண்டவனாய், என் விஷயத்தில் யோகத்தை ஆரம்பித்தவன், ஸந்தேஹமில்லாமல் என்னை எந்த ஜ்ஞானத்தினால் பூர்ணமாக அறிவானோ அந்த ஜ்ஞானத்தைக் கேட்பாயாக)என்கிறபடியே-தேவர் திருவடிகளில் சக்தமான மனஸ்ஸூ தத் வ்யதிரிக்த விஷயங்களில் ஸ்ரத்தை பண்ணும்படி எங்கனே-உன் வாசியையும் அறிந்து வைத்து சைதன்ய பிரசார த்வாரமான இது-விஷயாந்தரங்களை விரும்பும்படி எங்கனே –ஸ்திதே அரவிந்தே மகரந்த நிர்ப்பரே –ஸூக ஸ்பர்சமாய்-மதுவாலே பூரணமான செந்தாமரை யானது-போக்தாக்களைக் குறித்து அவசர ப்ரதீஷமாய் இருக்க –மது வ்ரதோ –மதுவே ஜீவனமான பதார்த்தம் -என்னுதல்–மது சம்ருத்தமாய் இருக்கிற இடத்திலே பருகக் கடவோம்-என்கிற சங்கல்பத்தை உடைய பதார்த்தம் -என்னுதல்-நே ஷூ ரகம் ஹி வீஷதே-கிட்டுகையே அரிதாய் -கிட்டினாலும் நாக்கு நனையப் போராதே இருக்கிற முள்ளிப் பூவிலே சென்று பணியாது ஒழிகை அன்றிக்கே-கடாஷிப்பதும் செய்யாது –ஹி-இது உபதேசிக்க வேண்டுமோ தேவருக்கு சம்ப்ரதிபன்னம் அன்றோ-எங்குப் போய் உய்கேன் உன் இணை யடியே யடையல் அல்லால் –பெருமாள் திருமொழி -5-5-என்று இராதோ-
(அம்ருதஸ்யந்தி நி பாத பங்கஜே-அம்ருதத்தை பெருக்கும் -மோக்ஷத்தை அளிக்கும் –-உன்னுடைய திருவடித் தாமரையில் –உன் தேனே மலரும் திருப் பாதம் –இஷூரகம் -முள்ளிப் பூவை-நிவேஸி தாத்மா –தேவர் உடைய நிர்ஹேதுகமான ப்ரசாதத்தாலே-நிவேசிக்கப் பட்ட மனஸானது-என்பதே சிறந்த அர்த்தம்-ஸ்தாபிக்கப் பட்ட மனம் உடையவன் -என்ற அர்த்தம் சிறப்புடையது இல்லை )
உன் தேனே மலரும் திருப்பாதம்-அம்ருதம் -தேன் என்றும் மோக்ஷம் என்றும் –-சப்த சக்தியால் மோக்ஷ பிரதத்வத்தையும் கொள்ளலாம் என்று ஸ்ரீ தேசிகர் திரு உள்ளம்–நிவேஸி தாத்மா-தேவர் உடைய நிர்ஹேதுகமான ப்ரசாதத்தாலே நிவேசிக்கப் பட்ட மனஸ் ஸானது-அபோக்யமுமாய் அப்ராப்தமுமான ஹேய விஷயங்களிலே பழகிப் போந்த மனஸ்ஸூ ஸூரி போக்யமான தேவர் திருவடிகளிலே அவகாஹிக்கும் போது தேவர் ப்ரசாதமே வேண்டாவோ –-நிவேசித ஆத்மா யஸ்ய ச -பஹு வ்ரீஹி சமாசம் -ஸ்தாபிக்கப்பட்ட மனம் -என்பது-ஸ்ரீ தேசிகர் ஸ்ரீ ஸூக்தி விருத்தமாகும் -அஸ்வரஸமும் ஆகும் –
நின்னருள் தன்னால் அமுதினைப் பொழியும் அம்புயத்தாள் களின் நிலையாய்
மன்னிய மனதும் உன்னையே யன்றி மற்றதை நாடல் எங்கனமாம்
தன்னுயிர்க்கு அரிய மதுவினை நிரம்பத் தாமரை கொண்டு அலர்ந்திருப்பப்
பின்னும் உள்ளியினைப் பிரமரம் கண்ணால் நோக்கவும் நோக்கிடாது அன்றோ -27-உனது தேனே மலர்ந்த திருவடித்தாமரைகளில் உன் நிர்ஹேதுக கிருபையாலே நிலையாகச் செலுத்தப்பட்ட
மனஸ்ஸானது உன்னைத் தவிர வேறு விஷயத்தை எப்படி இச்சிக்கக் கூடும்-தேனை நிரம்பக் கொண்டு தாமரைப் புஷ்பமானது மலர்ந்து இருப்ப தேனையே யுண்டு ஜீவிக்கும் வண்டானது அதை விட்டு விட்டு நெருங்கிச் செல்லவே ஸ்ரமமாயும் ஸ்ரமப்பட்டு நெருங்கினும் அற்பமான தேனை யுடையதுமான
முள்ளிப் பூவைக் கண் எடுத்தும் பாராது அன்றோ –
—
ஸ்தோத்ரம் -28-அவதாரிகை –ந தர்ம நிஷ்ட்டோஸ்மி-யிலே தேவர் திருவடிகளை லபிக்கைக்கு அனுகூலங்கள் ஒன்றும் இல்லை -என்றார்-அவ்வளவே அன்று -பிரதிகூலங்களால் பூரணன் -என்றார்
இப்படிப் பட்ட எனக்கும் பேற்றில் வந்தால் தேவர் கிருபையே பயாப்தம் என்றார்
இப்படி ந்யஸ்த பரனான என் பக்கலிலே விரோதி மேலிடுகை தேவர்க்கு தேஜோ ஹாநி -என்றார்
அத்தை பாராதே தேவர் கை விட்ட அன்றும் புறம்பு போக்கில்லை -என்றார்-இனி மேல்
த்வத் பாத மூலம் சரணம் பரபத்யே -என்று பண்ணின பிரபத்தி ஒன்றும் அமையுமோ-விரோதி நிவ்ருத்திக்கும் அபிமத சித்திக்கும் –என்ன–மநோ வாக் காயங்கள் மூன்றாலும் பண்ணின பிரபத்தி எல்லாம் வேண்டுமோ –-பத்தாஞ்சலி புடம் தீநம் யாசந்தம் சரணாகதம் -(பத்தாஞ்ஜலிபுடம் தீநம் யாசந்தம் ஸ்ரணாக;தம் | ந ஹந்யாதரந்ருமம்ஸ் யார்த்தமபி மத்ரும் பரந்தப ||(ஸத்ருக்களைத் துன்புறுத்துபவனே | இருப்பிடத்துக்கு வருதல், கை குவித்தல் என்னும் காயிக ப்ரபத்தியை யாவது, மனத்திலே தைர்யமாகிற மானஸ ப்ரபத்தியை யாவது, வாயாலே ப்ரார்த்திப்பதாகிற வாசிகப்ரபத்தியையாவது செய்தவனை, ஸத்ருவாயிருந்தபோதிலும், “இவன் இரக்க மற்றவன்” என்னும் அபவாதம் வாராமைக்காக ஹிம்ஸிக்கக்கூடா து)என்கிற காயிகமான அஞ்சலி ஒன்றுமே அமையாதோ -என்கிறார் இதில்-ஆளவந்தார் “எனக்கு நீ உதவுவதற்கு நான் ஒரு முறை அஞ்சலி (கை கூப்புதல்) செய்வது அமையாதோ?” என்று அருளிச் செய்கிறார்..
த்வத் அங்க்ரிம் உத்திஸ்ய கதா அபி கேநசித்
யதா ததா வா அபி சத்ருக் ருத்தோ அஞ்ஜலி
ததைவ முஷ்ணாத்ய ஸூ பான்யசேஷ தஸ்
ஸூ பானி புஷ்ணாதி ந ஜாது ஹீயதே—28-
காயிக சரணாகதியைக் குறிக்கும் ஒரு அஞ்சலியை யார் எச் சமயத்தில் எவ்வாறு செய்தாலும், அது எல்லாப் பாபங்களையும் அடியோடு உடனே போக்கி விடும்; மங்களங்களை வளர்க்கும்; அந்த மங்களங்கள் அழியாமல் இருக்கும்.
த்வத் அங்க்ரிம் உத்திஸ்ய -உனது திருவடியை நோக்கி -பிராப்யமுமாய் -பிராபகமுமாய் –ப்ராப்தமுமாய் இருக்கிறபடியைச் சொல்லுகிறது
கதா அபி கேநசித்–எப்பொழுதாவது -எவனாலாவது –
யதா ததா வா அபி –எவ்விதமாகவாவது
சத்ருக் ருத்தோ அஞ்ஜலி–ஒரு தடவை பண்ணப்பட்ட கை கூப்புதலானது
ததைவ முஷ்ணாத்ய அஸூபாந அசேஷ தஸ்-அப்பொழுதே பாபங்களை மிகுதி இல்லாமல் போக்கி விடுகின்றது
ஸூ பானி புஷ்ணாதி –நன்மைகளை வளரச் செய்கின்றது-விரோதியைப் போக்கி விடும் அளவு அன்றிக்கே அபிமதங்களாலே பூர்ணமாக்கும் –-பஹூ வசனத்தாலே-பர பக்தி பரஜ்ஞானம் பரம பக்தி
தேச விசேஷ பிராப்தி பகவல் லாபம் ,ப்ராப்தி பலமான கைங்கர்யம் -இவற்றைச் சொல்லுகிறது
இத்தால் ஸ்வர்க்காதி களான ஒரோ பலங்களிலே நியதமான கர்மங்களில் வ்யாவருத்தி-ந ஜாது ஹீயதே—ஒரு போதும் குறைவது இல்லையே-அஞ்சலி வைபவம் அருளிச் செய்கிறார்
த்வத் அங்க்ரிம் – நிருபாதிக சேஷியான உன்னுடைய நிரதிசய போக்யமுமாய் சர்வ ஸூலபமுமான திருவடிகளை –இத்தால் – பிராப்யமுமாய் – பிராபகமுமாய் — ப்ராப்தமுமாய் – இருக்கிறபடியைச் சொல்லுகிறது-உத்திஸ்ய--இத்தையே பரம ப்ராப்யமாக நினைத்து-இத்தால் பிரயோஜநாந்தர வ்யாவ்ருத்தி சொல்லுகிறது –கதா அபி –இச்சை பிறந்த போது காலம் -என்கை –-இத்தால்-வசந்த க்ரீஷ்மாதி ஸூக்ல கிருஷ்ண பஷா பூர்வ ஆஹ்ணா பராஹ்னாதி கால நியதியை உடைய
ஜ்யோதிஷ்டோமாதிகளில் இதுக்கு உண்டான வ்யாவ்ருத்தி-(வசந்தே வசந்தே ஜ்யோதிஷா யஜேத் –) கேநசித் –-இத்தால்-த்ரை வர்ணிககத்வ க்ருஹ மேதித்வ கிருஷ்ண கேசத்வ வேத வேதாங்க வித்யாதிகாரி நியமம் உடைய கர்மங்களில் வ்யாவ்ருத்தி – ஆகையால் சர்வ அதிகாரம் –என்கை –(ஜாத புத்ர கிருஷ்ண கேசோ அக்னி நாத தீத –) யதா ததா– பிரகார நியதி இல்லை -என்கிறது-இத்தால் –
சாஸ்த்ரங்களில் பிரகார விசேஷ நியமம் உண்டான கர்மங்களில் வ்யாவ்ருத்தி—வா அபி –-என்று விகல்ப சமுச்சய ஸூ சகமான அவ்யயங்கள் இரண்டாலும் ஒன்றிலே நியதமான கர்மங்களில் இதுக்கு உண்டான வ்யாவ்ருத்தி சொல்கிறது—சத்ருக் க்ருத – என்று யாவ ஜ்ஜீவாதி காரமான-நித்ய கர்ம வ்யாவ்ருத்தி சொல்லுகிறது –
தோ அஞ்ஜலி –-ஜாயாதி சஹகாரி ஸாபேஷமான-அச்வமேதாதி களில் காட்டில்-இதுக்கு உண்டான ஸூகரத்வம் சொல்லுகிறது-அயஜ்ஞோ வா ஏஷ யோ அபத் நீக –ததைவ –-தேசாந்த்ரே காலாந்த்ரே தேஹாந்த்ரே -பல பிரதமான கர்மங்களில் வ்யாவ்ருத்தி சொல்லுகிறது –முஷ்ணாத்ய அஸூபான் யசேஷதஸ் – சர்வ பாபங்களும் மறுவல் இடாத படி போகை–சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி
இத்தால் ஒரு பாபத்துக்கு ஒரு பிராயச்சித்தமான த்வாதச வார்ஷிக சம்வத்சர சாந்தராயன கருச்ச ராதிகளில் வ்யாவ்ருத்தி—முஷ்ணாதி- முஷ -ச்தேய – வஞ்சித்து –முற்றம் தவிர்ந்த -திருவாய்மொழி -8-10-1- சும்மனாதே கை விட்டோடி -பெரியாழ்வார் திருமொழி -5-4-3-என்று போன பிரகாரம் தெரியாது ஒழிகை –ஸூ பானி புஷ்ணாதி –விரோதியைப் போக்கி விடும் அளவு அன்றிக்கே அபிமதங்களாலே பூர்ணமாக்கும் – பஹூ வசனத்தாலே-பர பக்தி பரஜ்ஞானம் பரம பக்தி தேச விசேஷ பிராப்தி பகவல் லாபம் ,ப்ராப்தி பலமான கைங்கர்யம் -இவற்றைச் சொல்லுகிறது-இத்தால் ஸ்வர்க்காதி களான ஒரோ பலங்களிலே நியதமான கர்மங்களில் வ்யாவருத்தி–ந ஜாது ஹீயதே –-இத்தனையும் கொடுத்தாலும் தான் குறையாது இருக்கை –-இத்தால் பல பிரதானத்து அளவிலே ஷீண சக்திகமான கர்மங்களில் வ்யாவ்ருத்தி-அஞ்சலி பரமா முத்ரா ஷிப்ரம் தேவ பிரசாதி நீ ஸூ ஸூ கம் கர்த்தும் அவ்யயம் –(௮ஞ்ஜலி: பரமா முத்ரா க்ஷிப்ரம் தே,வப்ரஸாதி,நீ [வெகு சீக்கிரமாக ப.க,வானை உகப்பிக்கும் அஞ்ஜலி மேலான அடையாளமாயிருக்கிறது) (ராஜ வித்வா ராஜ கு,ஹ்யம் பவித்ரமித,முத்தமம் | ப்ரத்யக்ஷாவகஹம் தர்ம்யம் ஸுஸுகம் கர்த்துமவ்யயம் || [வித்யைகளுக்குள்ளும், ரஹஸ்யங்களுக்குள்ளும் மேலானது இது. இது பாபங்களைப் போக்கடிப்பவற்றில் உயர்ந்தது. என்னை நேரில் காட்டுவது, என்னை அடைவதற்கு ஸாதனமாயிருப்பது, செய்வதற்கு வெகு ஸுக, மானது. (பலத்தைக் கொடுத்த பின்பும்) அழியாதது)க்ரியா ரூபமான அஞ்சலி குறையாது இருக்கை யாவது என் -என்னில் அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு பண்ணின அஞ்சலி ஆகையாலே பிரசன்னனான ஈஸ்வரன் எல்லாம் செய்தாலும் ஒன்றும் செய்யாதானாய் இருக்கையாலே—ருணம் ப்ரவ்ருத்தம் இவ மே ஹ்ருதயான் நாப சர்ப்பதி—உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ -பெரிய திருவந்தாதி -58-என்னக் கடவது இறே-(அஞ்சலி -அம் ஜலயதி ந ஜாது ஹீயதே –பலன்களை வர்த்தித்து கொண்டே இருக்கும் – பலன் கை புகுந்த பின்பும் அஞ்சலி தானே போது போக்காய் இருக்குமே )
கீழ் இரண்டு ஸ்லோகங்களையும் சேர்த்து –வேறு புகல் இல்லாமை -போக்யதையின் மிகுதி –
உபாயத்தின் ஸுவ்கர்யம்-மூன்றாலும் உன்னை விட முடியாது என்கிறார்-கதா அபி கேநசித் யதா ததா வா அபி சத்ருக் –நான்காலும் –கால நியமன இல்லை -அதிகாரி நியமம் இல்லை –-கோணலாக கூப்பினாலும் -வாயினால் மொழிந்தாலும் நெஞ்சால் நினைத்தாலும் போதும் என்கிறது
அஞ்சலி -அம் ஜலயத்தி -அவனை நீர்ப்பண்டமாக உருக்குமே-அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு பண்ணின அஞ்சலி ஆகையாலே பிரசன்னனான ஈஸ்வரன் எல்லாம் செய்தாலும் ஒன்றும் செய்யாதானாய் இருக்கையாலே-ருணம் ப்ரவ்ருத்தம் இவ மே ஹ்ருதயான் நாப சர்ப்பதி
உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ -பெரிய திருவந்தாதி -58-என்னக் கடவது இறே-
ந ஜாது ஹீயதே-அஞ்சலி செய்த பின்பு அனுக்ரஹம் அவனைச் சேர்ந்தவர்களுக்கும் செல்லும் என்றுமாம்0எப்போதும் அனுவர்த்தித்திக் கொண்டே இருக்கும்-பலன் கை புகுந்த பின்பும் அஞ்சலியை போது போக்காய் இருக்குமே-மநோ வாக் காயங்கள் மூன்றாலும் பண்ணின பிரபத்தி எல்லாம் வேண்டுமோ –-பத்தாஞ்சலி புடம் தீநம் யாசந்தம் சரணாகதம் -என்கிற காயிகமான அஞ்சலி ஒன்றுமே அமையாதோ -என்கிறார் இதில்–
ஸ்ரீ ஈட்டு ஸ்ரீ ஸூ க்திகள் –1-6-பரிவதில் ஈசனை பிரவேசம் -உன்னுடைய திருவடிகளைக் குறித்து ஒரு காலத்தில் ஒருவன் எவ்விதத்திலாயினும் ஒரு முறை அஞ்சலி செய்ய முயற்சி செய்வானேயாயின், செய்யப்படும் அவ்வஞ்சலியினால், அப்பொழுதே பாவங்கள் அனைத்தும் அடியோடே ஓடிவிடுகின்றன;
மேலும், அவ்வஞ்சலியானது, புண்ணியங்களைக் கொடுத்துப் போஷித்துத் தானும் அழியாமல் இருக்கின்றது,’ என்பது ஸ்தோத்திர ரத்தினம்.–த்வத் அங்கரி முத்திச்ச்ய – உன்னுடைய திருவடிகள்’ என்றதனால், மற்றைத் தேவர்களைக் காட்டிலும் இறைவனுக்கு உண்டான வ்யாவ்ருத்தியும் வேற்றுமையும்,0இறைவனிடத்தில் அடியார்கள் இழியுந்துறை திருவடிகள் என்னுமிடமும் அருளிச் செய்தாராவார்.-மேலும், கதா அபி ‘ஒரு காலத்தில்’ என்றதனால்,-இன்ன காலத்தில் இன்ன காரியங்களைச் செய்யவேண்டும் என்று விதிக்கிற விதியினின்று வேறுபடுத்தியும்,
கேநசித் ‘ஒருவன்’ என்றதனால், இந்தத் தகுதிகளையுடையவனே இக்காரியத்தை மேற்கோடல் வேண்டும் என்று விதிக்கிற விதியினின்று வேறுபடுத்தியும்,–யதா ததா–‘எவ்விதத்தாலாயினும்’ என்றதனால், இன்ன முறையில் இக்காரியத்தைச் செய்தல் வேண்டும் என்று விதிக்கிற விதியினின்று வேறு படுத்தியும்,–ஸக்ருத் ‘ஒரு முறை’ என்றதனால், பல வருடங்கள் செய்ய வேண்டும் என்று விதிக்கிற தீர்க்க சத்திரம் முதலான யாகங்களினின்று வேறுபடுத்தியும்,–‘அஞ்சலி’என்றதனால், மிக்க பொருட் செலவினாலும் சரீரத்தின் பிரயாசை முதலியவற்றாலும் செய்யப்படுகின்ற அஸ்வமேத யாகம் முதலியவற்றினின்று வேறுபடுத்தியும்,-அசுபானி ‘பாவங்கள்’ என்ற பன்மையால், ஒரு தர்மம் ஒரு பாவத்தையே போக்கும் என்று கூறப்படுகிற தர்மங்களினின்று வேறுபடுத்தியும்,–அசேஷத ‘அடியோடே’ என்றதனால், வாசனை கிடக்கப்போக்கும் கர்மங்களினின்று வேறுபடுத்தியும்,-சுபானி புண்ணியங்களை’ என்ற பன்மையால் ஒரு தர்மம் ஒரு பலனையே கொடுக்கும் என்று கூறப்படுகிற
தர்மங்களினின்று வேறுபடுத்தியும்,-நஜாது ஹீயதே ‘அழியாமலிருக்கின்றது’என்றதனால், பலன்களைக் கொடுத்துத் தாம் அழிந்து போகிற தர்மங்களினின்று வேறுபடுத்தியும் அருளிச் செய்திருத்தல் நோக்கல் தகும்.-மற்றும்,முஷ்ணாதி ‘ஓடிவிடுகின்றன’ என்றதனால், சும் எனாதே கைவிட்டு ஓடித் தூறுகள் பாய்ந்தனவே’ என்கிறபடியே,-பாவங்கள், இவன் தான் தொடர்ந்து பிடிப்பான் என்று நினைத்து இவனை அறியாமலே போய் விடும் என்பதனையும்,-புஷ்ணாதி ‘கொடுத்துப் போஷிக்கிறது’ என்றதனால், தீவினைகளைப் போக்குதலேயன்றி, அது போன இடம் எங்கும் நன்மையினையே நிறையச் செய்யும் என்பதனையும் தெரிவித்தவராவர்-பத்ரம் புஷ்பம் இத்யாதி -பச்சிலை மலர் பழம் நீர் ஆகிய இவற்றை எவன் ஒருவன் அன்போடு கொடுக்கின்றானோ,
தூய மனத்தினனான அவனால் பத்தியோடு கொடுக்கப்பட்ட அவற்றை நான் உண்கிறேன்,’ என்பது ஸ்ரீ கீதை.-இதனால், பொருள்களின் உயர்வு தாழ்வு பார்க்கின்றான் இல்லை; இடுகிறவன் நெஞ்சில் ஈரமே பார்க்கிறான்;-அஸ்னாமி– இப்படித் தரப்பட்டவற்றை மனோரத பதத்துக்கும் அவ்வருகானவை கைப்புகுந்தாற்போன்று நினைக்கிறான்;-அல்லது, அவன் அன்பினால் கலங்கித் தருமாறு போன்று, இறைவனும் கலங்கி அடைவு கெட விநியோகம் கொள்ளுகிறான் என்பன விளங்குதல் காண்க.-அந்யாத் பூர்ணாதபாம் கும்பாத் இத்யாதி ‘ஸ்ரீகிருஷ்ணனானவன், பூர்ண கும்பத்தைக் காட்டிலும் வேறு ஒன்றையும் விரும்பான்;-அவனுடைய திருவடிகளைக் கழுவுதலே சாலும்; அதனைத் தவிர வேறு ஒன்றனையும் விரும்பான்,’ என்பது மகாபாரதத்தில் சஞ்சயன் கூற்று.-நச்சேதி– இதனால், ஒருவன் இறைவனை ஆராதனை புரிதல் வேண்டும் என்று முயன்ற அளவிலேயே அவனுக்கு வயிறு நிறையும் என்பது பெறுதும்.-ஏகாந்தகத புத்திபி ‘இறைவனாகிய தன்னை அன்றி வேறு ஒரு பலனையும் விரும்பாத பெரியோர்களால் தூய்மையான மனத்துடன் செய்யப்படும் காரியங்கள் எல்லாவற்றையும்,
சிரஸா பிரதி க்ருஹ்ணாதி-தேவ தேவனாகிய பகவான் தானே தலையால் ஏற்றுக் கொள்ளுகிறான்,’ என்பது மோக்ஷ தர்மம்.-இதனால், தூய்மையான மனம் ஒன்றுமே வேண்டுவது என்பதும், அவன் செய்யும் காரியங்கள் அனைத்தும் யா க்ரியாஸ் ஸம்ப்ரயுக்தாஸ் ஸ்யு -அபிமத விஷயத்தின் பரிமாற்றம் போலே உத்தேஸ்யமாய்த் தோற்றும் என்பதும்,-அவற்றில் ஒன்றையும் விடான் என்பதும், எல்லாருடைய தொழில்களையும் காலாலே கொள்ளப் பிறந்தவன், இவன் காலாலே போகட்டவற்றையும் அவன் தலையாலே சுமப்பான் என்பதும்,-ஸ்வயம் -செவ்வக் கிடப்பு உண்டாயினும் மஹிஷீ ஸ்வேதத்துக்கு ஆள் இட ஒண்ணாதது போன்று, அவ் வேலைகளைத் தானே செய்வான் என்பதும் போதருதல் காண்க.-இவற்றால், இறைவனை அடைதல் எளிது என்பது போதரும்.ஆக, இப்படிகளாலே, இறைவன் எளிதில் ஆராதிக்கத் தக்கவன் என்பதனை அருளிச் செய்கிறார் இத்திருவாய்மொழியில்.
ஒருமுறை யுனது திருவடி இணையை யுன்னியே எப்பொழுதேனும்
இரு கரம் கூப்பி எத்திறத்தவர் தாமேனும் எவ்விதமாயேனும்
புரியும் அஞ்சலி அப்பொழுது இனித் தானே இடர் எல்லாம் மாயமாய்ப் போக்கித்
தரும் அரும் சுபர்கள் சகலமும் என்றும் தான் குறை ஒன்றும் இல்லாதே –28–ஸர்வ ஸுலபமானதும் -அதி போக்யமானதுமான யுன் திருவடிகளை உத்தேசித்து எப்பொழுதாவது இச்சை பிறந்த போது -ஜாதியாதி நியமம் இல்லாமல் எவரேனும் -முறை யாவது -நியமமாவது -பல அபேக்ஷையாவது -யாது ஒன்றும் இல்லாமல் எவ்விதமாயாவது-எந்நாளும் செய்ய வேண்டியது இல்லாமல் ஏதோ ஒரு தடவை இரு கரம் கூப்பிச் செய்யும் அஞ்சலியானது-அப்பொழுதே எல்லாப் பாவங்களையும் ஒரு குவியலாகக் களவு போனது போலே சென்ற வழி தெரியா வண்ணம் மாயமாய்ப் போக்கி-இவ்வளவு செய்தும் என்றும் தனக்கு ஒரு குறைவும் இல்லாமல் பிரபத்தி ஞானம் முதலிய ஸகல சம்பத்துக்களையும் விருத்தி பண்ணித் தரும்
–
ஸ்லோகம் -29-அவதாரிகை –ஆயாஸாத்மகமான அஞ்சலி தான் வேண்டுமோ-சிந்திப்பே அமையும் -திருவாய் மொழி -9-1-7-என்கிறபடியே-மானசமாக அமையாதோ – விரோதி பூர்வகமான பரம பதத்தைத் தர -என்கிறார்-இத்தால் –தீனம் -என்கிற மானச பிரபத்தியைச் சொல்லுகிறது-ந தர்ம நிஷ்ட்டோஸ்மி -என்கிற இது வாசிக ப்ரபத்தியாய்-த்வத் அங்க்ரி உத்திஸ்ய -என்றது காயிக ப்ரபத்தியாய்-இதில் மானசமான பிரபத்தி -என்னவுமாம்-அதவா-த்வத் அங்க்ரிம் –உதீர்ண –என்கிற ஸ்லோக த்வயத்தாலே
பிரபத்தி பலமான பர பக்தியைச் சொல்லுகிறது -என்னவுமாம்-
உதீர்ண சம்சார தவ ஆஸூஸூ ஷணிம்
ஷாணோத நிர்வாப்ய பராம் ஸ நிர்வ்ருதிம்
ப்ரயச்சதி தவச் சரணா ருணாம் புஜ
த்வய அநு ராக அம்ருத ஸிந்து ஸீகர–29-
தவச் சரணா ருணாம் புஜ த்வய அநு ராக அம்ருத ஸிந்து ஸீகர–உனது செந்தாமரை திருவடியை இணையைப் பற்றின அன்பாகிய அமுதக்கடலின் ஒரு திவலையானது
உதீர்ண சம்சார தவ ஆஸூஸூ ஷணிம்–மேன்மேலும் ஜ்வலிக்கின்ற சம்சாரம் ஆகிய காட்டுத்தீயை
ஷாணோத நிர்வாப்ய –ஒரே நொடிப் பொழுதில் தனித்து விட்டு
பராம் ஸ நிர்வ்ருதிம் ப்ரயச்சதி –மேலான இன்பத்தையும் தருகின்றது-அநுராக- திருவடிகளில் அத்யவஸா யாத்மகமான ருசி -என்னுதல் பிரபத்தி பலமாய் கைங்கர்ய உபகரணமான பக்தி -என்னுதல்
ப்ரீதி காரிதம் இறே கைங்கர்யம்உன்னுடைய சிவந்த திருவடித் தாமரைகளில் கொள்ளும் அன்புக் கடலில் ஒரு சிறு துளியே மிகவும் உக்ரமாக எரியும் காட்டுத் தீ போன்ற ஸம்ஸாரத்தை ஒரு க்ஷணத்திலே போக்கி, உயர்ந்த ஆனந்தத்தையும் கொடுக்கும்.
உதீர்ண சம்சார தவ ஆஸூஸூ ஷணிம்--கிளர்ந்து எரிகிற காட்டுத் தீயை –-சம்சாரத்தை காட்டுத் தீயாகச் சொல்லுகிறது -தாஹ்யமான காட்டில்-அக்னியை அவிக்க ஒண்ணாதாப் போலே அவித்யாதி களுக்கு இலக்காம் இத்தனை ஒழிய பரிஹரிக்க ஒண்ணாது -என்கைக்காக-ஆத்மா அதாஹ்யம் -என்கிறது -லௌகிக அக்னியில் இறே –-அசந்நேவ-என்கிறபடியே தக்த படம் போலே ஆக்கும் இறே–ஷாணோத நிர்வாப்ய –-அத ஸோ அபயங்கத-(அஸந்நேவ ஸ ப.வதி| அஸத் ப்ரஹ்மேதி வேத, சேத் | அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத; | ஸந்தமேநம் ததோ விது,:॥ [ப்ரஹ்மம் இல்லை யென்று அறிந்தானாகில், அவன் இல்லாதவனாகவே ஆகிறான். ப்,ரஹ்மம் இருக்கிறதென்று அறிந்தானாகில் ௮க் காரணத்தினாலேயே இவனை இருக்கிறவனாக அறிகிறார்கள்) (யத; ஹ்யேவைஷ ஏதஸ்மிந் நத்ஸ்யே$நாத்ம்மே நிருக்தே $நிலயநே$ப,யம் ப்ரதிஷ்டாம் விந்ததே। அத, ஸோ$ப,யங்க,தோ ப,வதி। [காண முடியாதவனும், (ப்ராக்ருத) ஸரீரமற்றவனும், (தே,வன், மனுஷ்யன் முதலிய) வார்த்தைகளால் சொல்லத் தகாதவனும், (தனக்கு ஒரு) ஆதாரமற்றவனுமான இந்தப் பரமாத்மாவிடம் ஸம்ஸார ப,யமில்லாமைக்காக பக்தி யோகத்தை எப்போது அடைகிறானோ, அப்போது அவன் (ஸம்ஸார) ப,யமற்றவனாக ஆகிறான்)என்கிறபடியே -அப்போதே அவித்து-ததைவ முஷ்ணாதி -ஷனே ந நிர்வாப்ய -என்று சொல்லுகையாலே-அவ் வதிகாரிக்கு பலத்துக்கு விளம்பம் இல்லை என்கிறார்-யதே ஷீகதூல மக்நௌ ப்ரோதம் ப்ரதூயேத -(தத், யதே;ஷீகதூல மக்,நெள ப்ரோதம் ப்ரதூ,யேத | ஏவம் ஹாஸ்ய ஸர்வே பாப்மாந: ப்ரதாவந்தே ॥ [நெருப்பிலிட்ட இஷீகப் புல்லின் பஞ்சு எப்படிக் கொளுத்தப் படுகிறதோ, அப்படியே இவனுடைய எல்லாப் புண்ய பாபங்களும் கொளுத்தப் படுகின்றன) என்கிறபடியே-இவன் பட்ட நோவை இவன் விரோதி வர்க்கத்தோடு போக்கும் ஈஸ்வரன் -என்கை-பராம்ஸ நிர்வ்ருதிம் ப்ரயச்சதி –-ஒரு தேச விசேஷத்திலே-ஆனந்த நிர்ப்பரனாய் இருக்கும் இருப்புத் தரா நிற்கும்–நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி-மம சாதர்ம்யம் ஆகாதா ஸ ஸ்வராட் பவதி –(இதம் ஜ்ஞாநமுமாஸ்ரித்ய மம ஸாத,ர்ம்யமாக,தா: | ஸர்க்கே,$பி நோபஜாயந்தே ப்ரளயே ந வ்யத,ந்தி ச॥[இந்த ஜ்ஞானத்தை அடைந்து, என்னைப் போல் ஆனவர்கள்,ஸ்ருஷ்டி காலத்திலும் பிறப்பதில்லை; ப்ரளய காலத்திலும் அழிவதில்லை)என்னும் ஸூகம் இறே-தவச் சரணா ருணாம் புஜத்வய அநு ராக அம்ருத ஸிந்து ஸீகர –ப்ராப்தனாய் ஸூலபனான உன்னுடைய நிரதிசய போக்யமான திருவடிகளில் அனுராகம் ஆகிற அம்ருத சாகரத்திலே ஒரு திவலை அருண பதத்தாலே பரபாக ரசம் சொல்லுகிறது–அம்புஜ பதத்தாலே-மென்மை குளிர்ச்சி நாற்றங்களால் வந்த ரசம்-த்வயம்-அந்யோந்ய சத்ருசமான சேர்த்தி அழகாலே வந்த சாரஸ்யம்-இத்தால் அநுராக ஜனகமான திருவடிகள் -என்கை-அநுராக-திருவடிகளில் அத்யவஸா யாத்மகமான ருசி -என்னுதல்-பிரபத்தி பலமாய் கைங்கர்ய உபகரணமான பக்தி -என்னுதல் –ப்ரீதி காரிதம் இறே கைங்கர்யம்–அம்ருத –-ஸ்மர்த்தவ்ய விஷய ஸாரஸ்யத்தாலே ஸ்வயம் பிரயோஜனமாய் இருக்கை அன்றியே பத்யமுமாய் இருக்கை-ஸிந்து ஸீ கர –-அதனில் பெரிய அவா -திருவாய்மொழி -10-10-10-என்கிற விஷய அநு ரூபமான ப்ரேமம் எல்லாம் வேண்டா அபிமத ஸித்திக்கு -என்கை-(பிரபத்தி தான் வேணுமோ -அஞ்சலியை போதாதோ என்றவர் இதில்-அஞ்சலி தான் வேணுமோ சிறிது ஆசை கிடந்தால் போதாதோ என்கிறார் –-பாதாரவிந்த ப்ரீதி விஷய அமுதக் கடலில் ஒரு திவலையே சம்சார காட்டுத் தீயை அணைத்து முக்தர்கள் உடன் ஓக்க பரம ஆனந்தத்தையும் அளிக்க நல்லதே – ஆஸூஸூஷணி- என்று அக்னிக்கும் பெயர் -)
தீயை அணைக்கத் தண்ணீர் வேண்டுமே – சம்சார காட்டுத்தீயை ஒரு நொடிப்பொழுதில் அணைக்க அம்ருத சாகர திவலையே போதும் என்கிறார் அவ்வதிகாரிக்கு பலத்துக்கு விளம்பம் இல்லை என்கிறார்-ஆஸூஸூ ஷணி-என்று அக்னிக்குப் பெயர் அநந்ய ப்ரயோஜன பக்தி லேசம் உண்டானால் -அது பரம பக்தி தசையை அடைந்து – சம்சார விமோசனத்தைப் பிறப்பித்து நித்ய கைங்கர்யச் செல்வத்தையும் அளித்திடும் –
செந்தழல் இட்டுச் சீறும் பவம் என்னும் காட்டுத் தீயை
முந்தியோர் கணத்து அவித்து முடிவிலா அநந்த மீயும்
சந்தமார் யுனது செந்தாமரை இணைத் தாளின் அன்பாம்
அந்தமா அமுத வாரித் திவலையில் ஓன்று தானே –29—உன்னுடைய அழகான செந்தாமரைத் திருவடிகளின் மீது வைத்துள்ள கைங்கர்ய உபகரணமான பக்தியாகிற அந்த அமுதக் கடலின் ஒரு திவலை யானது செந்தழல் இட்டு மேலே கிளம்பிச் சீறி எரிகிற ஸம்ஸாரம் ஆகிற காட்டுத்தீயை ஒரு ஷணத்திலே அவித்து அத்யுன்னதமான மோக்ஷ அனுபவ ஆனந்தத்தையும் கொடுக்கிறது –
—
ஸ்லோகம் -30-அவதாரிகை –இப்படி விளம்ப ஹேது இல்லாத ஸித்த உபாயத்தைப் பரிக்ரஹித்தவர் -ஆகையாலே க்ரம ப்ராப்தி பற்றாதே-த்வரை பிரேரிக்க-கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -திருவாய் மொழி -6-9-9-என்கிறார்-பிரபத்தி பலமான பர பக்தியாலே-கனை கழல் காண்பது என்று கொல் கண்கள் -திருவாய்மொழி -6-3-10 -என்றும்-காணக் கருதும் என் கண்ணே -திருவாய் மொழி -9-5-1-என்றும் சொல்லுகிறபடியே-கண்ணாலே காண்பது என்று -என்கிறார் -என்றுமாம் –
விலாஸ விக்ராந்த பர அவர ஆலயம்
நமஸ் யதார்த்தி ஷபணே க்ருத ஷணம்
தனம் மதீயம் தவ பாத பங்கஜம்
கதா நு சாஷாத் கரவாணி சஷூஷா—30-
விலாஸ விக்ராந்த பர அவர ஆலயம்–விளையாட்டாகவே அளக்கப்பட்ட மேல் உலகங்களையும்
கீழ் உலகங்களையும் உடையதும்-பரர் ஆலயம் -ப்ரஹ்மாதிகள் லோகம் -மேல் லோகம் –அவர லோகம் -மனுஷ்ய லோகம் -கீழ் உலகம்
நமஸ் யதார்த்தி ஷபணே-சேவிப்பவர்களின் துன்பங்களைத் தொலைப்பதில்
க்ருத ஷணம்-போது போக்கு உடையதும்-ஆஸ்ரித ரக்ஷணத்துக்காகவே கை ஒழிந்து இருக்கும் திருவடிகள் அன்றோ-தனம் மதீயம் தவ பாத பங்கஜம்-எனது செல்வமுமாய் உள்ள உனது திருவடித் தாமரையை-வைத்த மா நிதி -திருவாய் மொழி -6-7-11-என்கிறபடியே-எனக்கு ப்ராப்யமுமாய் பிராபகமுமாய் உள்ளத்தை-சர்வ ஸூ லபமுமாய் ஆஸ்ரித வத்ஸ்லமுமாய்-நிரதிசய போக்யமுமான திருவடிகளை
கதா நு சாஷாத் கரவாணி சஷூஷா–எப்பொழுது கண்ணால் சேவிக்கப் போகிறேன்-சஷூஷா-திருநாட்டில் சதா பஸ்யந்தி சொல்லுகிறார் இல்லை –-திவ்ய சஷூஸ் -அர்ஜுனனுக்குத் தந்து அருளினது போலே தமக்கும் வேண்டும் என்கிறார்-நெஞ்சு என்னும் உள் கண்ணால் காண விரும்புகிறார்-பரமபத பிராப்தியும் சொல்லுகிறார் என்னவுமாம்
என்னுடைய கண்கள் என்னுடைய தனமும், உயர்ந்த தேவர்கள் மற்றும் தாழ்ந்த மனிதர்களின் இருப்பிடங்களை விளையாட்டாக அளந்து தன்னதாகக் கொண்டு இருக்கும், வணங்குபவர்களின் துன்பத்தைப் போக்கும் உன்னுடைய திருவடியை எப்பொழுது காணும்?
விலாஸ –-லீலையாக ஆக்கிரமிக்கப் பட்ட உத்க்ருஷ்டரான தேவதைகள் உடைய இருப்புக்களையும்
மரண தர்மாக்களான மனுஷ்யாதி களுடைய இருப்புக்களையும் உடைத்தாய் உள்ளத்தை விமுகர் உடைய தலையிலே அநாயாசேன சென்று இருந்த திருவடிகளுக்கு ருசியை யுடையார் தலையிலே இருக்கை பணி யுண்டோ –விக்ராந்த –அந்ய பரரானார் பக்கலிலேயோ மேல் விழல் ஆவது-அநந்ய ப்ரயோஜனர் பக்கலிலே மேல் விழல் ஆகாதோ-பர அவர ஆலயம் –-வசிஷ்ட சண்டாள விபாகம் இன்றிக்கே தூளி தானம் பண்ணின திருவடிகள்-அத்தை ஒழியச் செல்லாத எனக்கு அரிதாவதே-
சங்கைஸ் ஸூராணாம்-என்கிற கர்ம பாவந நிஷ்டரும்-தவம் செய்து நான்முகன் பெற்றான் –இரண்டாம் திருவந்தாதி -78-என்கிறபடியே உபய பாவ நிஷ்டரும் பெற்ற பேறு எனக்கு அரிதாவதே –நமஸ் யதார்த்தி ஷபணே க்ருத ஷணம்-ப்ராசங்கிகமாகப் பிறந்த அபதானம் -முன் நடந்த வ்ருத்தாந்தம் -கிடக்க கிடீர் –
திருவடிகளிலே தலை சாய்த்தார் உடைய ஆர்த்திகளைப் போக்குகையிலே க்ருத அவசரமாய் உள்ளத்தை ஆஸ்ரித ரஷணத்திலே அவசர ப்ரதீஷமான காலத்தை எதிர்பார்த்து – இருக்கிற திருவடிகளைக் காண்கைக்கு – கதா நு சாஷாத் கரவாணி சஷூஷா -என்று கூப்பிட வேண்டுவதே –(ஆஸ்ரித ஆர்த்தியை அடியோடு அகற்ற வியாபாரிக்கும் -பரம புருஷார்த்தமாயும் இருக்கும் திருவடிகள் அன்றோ)
தனம் மதீயம்-வைத்த மா நிதி -திருவாய் மொழி -6-7-11-என்கிறபடியே-எனக்கு ப்ராப்யமுமாய் பிராபகமுமாய் உள்ளத்தை–தவ பாத பங்கஜம் –-சர்வ ஸூ லபமுமாய் ஆஸ்ரித வத்ஸ்லமுமாய்
நிரதிசய போக்யமுமான திருவடிகளை –கதா நு சாஷாத் கரவாணி சஷூஷா – த்ரிவிக்ரமா பதாந தூளி தானத்திலும் காணப் பெறாத நான் என்று காண இருக்கிறேன்-விஷயங்களிலே மண்டிக் கிடக்கிற சம்சாரிகள் நடுவே இருக்கிற உமக்கு நம்மை ஒழியச் செல்லாதபடி புகுர நிருத்தினோமாகில் ஒன்றும் செய்யாதாரைப் போலே கூப்பிடுகிறது என் -என்ன கண்ணாலே கண்டு விடாய் தீர இருக்கிற எனக்கு
சம்சாரிகளில் காட்டில் ஒரு வ்யாவ்ருத்தி பண்ணித் தர அமையுமோ–சஷூஷா- ஒரு தேச விசேஷத்திலே
சதா தர்சனம் பண்ணப் பெறாதே காண விடாய்த்த எனக்கு கண்ணாலே காண வேணும் .
(இது வரை த்வய பூர்வார்த்தம் அருளிச் செய்து மேலே உத்தரார்த்தம் -கைங்கர்ய பிரார்த்தனை –
இது முதல் அவன் வை லக்ஷண்யத்தை பரக்க-17-ஸ்லோகங்களால் அருளிச் செய்கிறார் –
அதில் முதலில் இதிலும் அடுத்த ஸ்லோகத்திலும் பரம புருஷார்த்தமான திருவடிகளை கண்டு களிப்பது என்றோ என்று அலமருகிறார்-தாவி வையம் கொண்ட தடம் தாமரை கட்கே கோவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ-என்றும்-அன்று தேர் கடாவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொலோ கண்களே –என்றும் சாஷாத்காரம் பெற பதறி அருளிச் செய்கிறார் –-சஷூஷா—திவ்ய சஷூஸ் ஸூக்களை கொடுத்து அருளினாய் அதே போலே பாவியேனுக்கும் அருள வேணும் –
நெஞ்சு என்னும் உட் கண்ணால் காண விரும்புகிறார் –பரமபத பிராப்தியை அபேக்ஷிக்கிறார் என்றுமாம் – )
விண்ணவராதி மண்ணோர் யுலகெலாமே அளந்து
நண்ணு நரார்த்தியாவு நசித்தலே தொழிலாய் நின்றேன்
எண்ணரும் தனமாம் யுன் தன் அம்புயத்தாளை இந்தக்
கண்ணினால் கண்டு நானே களிக்கும் நாள் என்னாளோ — 30—திரி விக்ரம அவதாரத்தில் ஸர்வ லோகங்களையும் அளந்ததும்-ஆஸ்ரிதர்களுடைய ஸ்ரமங்களைப் போக்குவதில் தாமே மேல் விழுந்து ஸமயம் பார்த்துக் கொண்டு இருப்பதும்-எனக்கு எண்ணுதற்கு அரிதான ஒரு நிதியாயும் உள்ள உன் திருவடித் தாமரைகளை-என் கண்களால் கண்டு நான் களிக்கும் நாள் எந்த நாளோ-எப்போது கண்டு களிக்கப் போகின்றேனோ –
————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –