ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
அன்றில் கிரௌஞ்ச மிதுனம் -ஒலி -விஸ்லேஷ துக்கம்-ஆழி -கடலின் பேர் இரைச்சல் -ஸம்ஸ்லேஷ ஸூகம்-கருடவாஹனன் என்று ஸ்தோத்ரம் பண்ணுவதே குற்றமாகக் கொண்டு உபேக்ஷித்து
வையமே சிலம்பும்படி-இத்திரு -மிதுனத்தைப் பற்றின இத்திரு-திருமால் இப்படிச் செய்வதே -மாலையைப் பற்றிய அத்திரு துறையடைவு–தலைவி ஆற்றாமைக்கு தோழி இரங்குதல் –-பண்டை நாளாலே -9-2-திருமால் உகப்புக்குக்காகக் கைங்கர்யம்-காய்சின வாழி சங்கு வாள் வில் தண்டேந்தி
எம்மிடர் கடிவானே–9-2-6-மூலவர் உத்சவர்கள் திருநாமங்கள் இதில் உண்டே-தாய் பாசுரம் என்றும் தோழி பாசுரம் என்றும் கொள்ளலாம்-
அவதாரிகை –உன்னைப் பிரிந்த அளவிலே பாதக பதார்த்தங்கள் இவளை நலிந்து ஈடுபட்டது கண்டு –
லோகமாக கூப்பிடும்படி பண்ணுவதே -என்று திருத் தாயார் வார்த்தையாய் இருக்கிறது–அன்றிற்கும் ஆழிக்கும் ஆற்றாத தலைவிக்குத் தோழி இரங்குதல் –
உன்னை பிரிந்த அளவிலே பாதக பதார்த்தங்கள் இவளை நலிந்து ஈடுபட்டது கண்டு – லோகமாக கூப்பிடும்படி பண்ணுவதே – என்று திருத் தாயார் வார்த்தையாய் இருக்கிறது -அன்றிற்கும் ஆழிக்கும் ஆற்றாத தலைவிக்குத் தோழி இரங்குதல் –
இப்படி இவருடைய ஆர்த்த ஸ்வரத்தைக் கேட்ட ஸூஹ்ருத்துக்கள் இவருடைய ஆர்த்தியின் மேலே லௌகிக வியாபாரங்கள் ஸ்மாரகமாய்க் கொண்டு இவரை நலிகிற படியைக் கண்டு இப்படி லோக உபக்ரோசம் பிறக்கும் படி ஸ்மாரகங்கள் நலிவதே என்ற ஈஸ்வரனை நோக்கி யுட் கொண்டு
வெறுத்து உரைத்த பாசுரத்தை அன்றிலுக்கும் ஆழிக்கும் ஆற்றாத் தலைவி தளர்த்தியைக் கண்டு
தோழி கிளர்ந்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-அவதாரிகை-அனுகூல பதார்த்தங்களும் பிரதிகூலமாய் இவள் நோவு பட அத்தாலே
இவளையும் உம்மையும் நாட்டார் பழி சொல்லும்படியான செயல்களை நீர் பண்ணுவதே என்று திருத்தாயார் சொல்லுகிறாள் –
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-அவதாரிகை-இப்படி உன் பிரிவு பொறாமல் உன்னைப் புலம்பும் இத்திருவினை அன்றிலும் ஆழியும் பாதிப்பதும் உன்னைப் பாடுமது குற்றமாக வையம் எல்லாம் இவளைப் பழி சொல்லுமத்தும் செய்வதே திருமால் என்று சொல்லும் தாயாராய் அருளிச் செய்கிறார் இதில் —
புலம்பும் கனகுரல் போழ்வாய வன்றிலும் பூம் கழி பாய்ந்து
அலம்பும் கனகுரல் சூழ் திரை யாழியும் ஆங்கவை நின்
வலம் புள்ளது நலம்பாடுமிது குற்றமாக வையம்
சிலம்பும்படி செய்வதே திருமால் இத்திருவினையே – 87-தலைவி ஆற்றாமைக்குத் தோழி இரங்குதல் –
திருமால்–பிராட்டியினிடத்து மோஹமுள்ளவனே!
புலம்பும்–(விரஹவேதனையால்) கத்துகிற
கன குரல்–கனத்த குரலையுடைய
போழ் வாய் அன்றிலும்–பிளந்த வாயையுடைய அன்றிற் பறவையும்-போழ்-பிரிந்தாரை இறு துண்டாக விடுவாரை-
பூ கழி பாய்ந்து அலம்பும்–அழகிய கழியினுள்ளே புகும்படி பாய்ந்து அலருகிற
கன குரல்–கம்பீரமான தொனையையுடைய
சூழ் திரை ஆழியும்–சூழ்ந்த அலைகளையுடைய கடலுமாகிய
ஆங்கு அவை–அவ்வவ்விடத்திலுள்ள அந்தந்த பாதக வஸ்துக்களானவை.
நின் வலம்புள்ளது நலம் பாடும் இது குற்றம் ஆக–உனது வலிமையையுடைய கருடப்பறவையினது நன்மையை
(இவள்) எடுத்துப் பாடுகிற இதுவே குற்றமாகிக்கொண்டு
வையம் சிலம்பும்படி–உலகத்தார் முறையிடும்படி-குற்றம் சொல்லி கோஷிக்கும் படி
இத் திருவினை–திருமகள் போன்ற இப்பெண்ணை
செய்வதே–துன்ப்படுத்துவதே! (இது தகுதியோ?)
பண்டை யுறவான பரனைப் புளிங்குடிக்கே
கண்டு எனக்கு எல்லா வுறவின் காரியமும் -தண்டற நீ
செய்தருள் என்றே யிரந்த சீர் மாறன் தாளிணையே
உய்துனை என்று உள்ளமே ஓர்—82–இப்படி நிருபாதிக பந்துவான ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு சர்வவித பந்து க்ருத்யமும் செய்ய வேணும்-என்று ஸ்ரீ திருப் புளிங்குடியிலே போய்ப் புக்கு-அங்கே ஸ்ரீ பிராட்டியாரோடு கூட- பள்ளி கொண்டு அருளுகிற-ஸ்ரீ காய்ச்சின வேந்தைக் குறித்து – திருப் பவளத்தைத் திறந்து ஒரு இன் சொல்லுச் சொல்ல வேணும் –மா ஸூ ச -உபாயத்துக்கு சோகப்படாதே– க்ரியதாம் மாம் வத -கைங்கர்யம் – திருக் கண்களை அலர விழித்துக் குளிர நோக்கி அருள வேணும்–திருவடிகளைத் தலைக்கு அலங்காரமாக வைத்து அருள வேணும் –-ஸ்ரீ பிராட்டியும் ஸ்ரீ தேவருமாக திவ்ய சிம்ஹாசனத்திலே எழுந்து அருளி இருக்க வேணும்–கண் முகப்பே நாங்கள் சசம்ப்ர்ம ந்ருத்தம் பண்ணும்படி உலாவி அருள வேணும்-என்றால் போலே ஒரு கோடி வெள்ளங்களை-அவர் சந்நிதியிலே-அசல் அறியாதபடி- பிரார்த்திக்கிற பண்டை நாளில் -அர்த்தத்தை பண்டை யுறவான இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -ஏவம் விதராண ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை –நாசத்தை விளைக்கும் துணை போல்-அன்றிக்கே-உஜ்ஜீவனத்தைப் பண்ணும் துணை என்று மனசே-அனுசந்தித்துப் போரு-என்கிறார் –
புலம்பும் கனை குரல் –பலவற்றைச் சொல்லிக் கூப்பிடுவதாய் -செறிந்த த்வனியை உடைத்தாய் –
உன்னைக் கூடி பிரிந்து தனி இருப்பாரை -இரு துண்டமாக விடுகிற வாயை வுடைய அன்றிலும் –பூம் கழி இத்யாதி –அழகிய கழியில் வரப் பாயா நிற்பதாய் –அலை எறியா நிற்பதாய் – ஊமை கூறனான த்வனியை உடைத்தாய் -பரந்த திரைகளை உடைய கடலும் –ஆங்கவை –பிரிந்து இருப்பார்க்கு மற்றும் பாதகமான சேக்கள் கழுத்திலே மணி ஓசை என்ன –சந்த்ரோதயம் என்ன -தென்றல் என்ன -இப்படிப் பட்ட பாதகங்களை சொல்லிற்று ஆதல் –அன்றிக்கே –கீழ்ச் சொன்னவை தன்னையே சொல்லிற்று ஆதல் இவை பாதகமாகா நின்றன –என்ன குற்றம் செய்தாள் என்று பாதகம் ஆகிறது என்ன –நின் வலம் புள் இத்யாதி –உனக்கு அசாதாரணமாய் -பலத்தை உடைத்தாய் – கருடோ வாருணம் சத்ரம் ததைவ மணி பர்வதம் -சபார்யஞ்ச ஹ்ருஷீகேசம் லீலயைவ வஹந்யயௌ -என்கிறபடியே தாரண சாமர்த்தியத்தை உடையனான திருவடி உடைய நலமுண்டு –நன்மை- அத்தைப் பாடினது குற்றமாக –த்வதங்க்ரி சம்மர்த கிணாங்க சோபினா (ஸ்தோத்ர ரத்னம் )-என்கிறபடியே- அவனுக்கு அடிமை செய்து அவன் தழும்பு சுமந்தாப் போலே சம்ஸ்லேஷ சிஹ்னங்களை-தரிக்க வேணும் என்று ஆசைப்பட்டு –
அவனைப் பாடின இது குற்றமாக–வையம் சிலம்பும்படி செய்வதே –சிறியார் பெரியார் என்ற வாசி இன்றிக்கே -இருந்ததே குடியாக- கை எடுத்து பழி சொல்லும்படி பண்ணுவதே –திருமால் – நீர் தான் பிரணயிகள் அல்லீராய் தான் இப்படி செய்கிறீரோ –இத் திரு வினையே –உம்மை ஆசைபட்டவளில் குறைந்தாளோ-அவளோடு கூடின உம்மை ஆசைப்பட்டவள் –ராவணாதிகள் பெருமாளைப் பழி சொல்ல ராஷசிகள் தன்னை நெருக்க இருந்தவளைப் போலே இருக்க வல்லளோ –இவள் அன்றில் -கடலோசை -தொடக்கமானவை இவளை நலிய-அத்தாலே இவள் நோவு படா நின்றாள் என்று நாட்டார் பழி சொல்ல நீர் விட்டு வைப்பதே – உம்முடைய மகிஷி நோவு பட பார்த்து இருக்கை உமக்கு குறை யன்றோ -என்றபடி –
ஆற்றாமை மிக்கு துயரம் தணியும் பொருட்டு பெரிய திருவடியின் சிறப்பை பாராட்டி நிற்க -அன்றிலின் குரலும் கடல் ஓசையும் சேர்ந்து நலிய -விரஹ வேதனை வளர்ந்து – பெண்ணை மேல் பின்னும் அவ் வன்றில் பெடை வாய்ச் சிறு குரலும் என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர் வாளாம் என் செய்கேன்-பெரிய திருமடல் –பூம் கழி பாய்ந்து-அலம்பும் கனகுரல் சூழ் திரை யாழியும்-நதி பதியாகிய கடல் அழகிய கழியின் உள்ளே புகப் பாய்ந்து அலை மறிந்து பெரு முழக்கம் செய்வது மனைவியை கைகளால் ஆரத் தழுவி ஆரவாரம் செய்வது போலே இருக்க விரஹ தாபம் விஞ்சும்–புள்ளது நலம் -எம்பெருமானை ஆஸ்ரிதர்கள் இருக்கும் இடம் எழுந்து அருள பண்ணுவதே நலம் -உனக்கு அடிமை செய்து
தழும்பு கொண்டால் போலே இவளும் சம்ச்லேஷ அடையாளங்களை தரிக்க ஆசைப்பட்டு பாடின இது குற்றமாக – பாதகங்கள் நலிய இவள் நோவு பட்டாள் என்று நாட்டார் பழி சொல்லும் படி நீர் விட்டு வைப்பதே-வையம்-சிலம்பும்படி செய்வதே-இவள் தளர்ச்சிக்காக -தாயார் தோழியர் உற்றோர் உறவினர் ஊரார்-அனைவரும் முறையிடுதல்–திருமால் இத்திருவினையே -ஒருத்திக்கு அப்படி இவளுக்கு இப்படியா -இவள் நிழல் போலே என்றாலும் இவளையும் நீ பார்க்க வேண்டாவோ-உன் மஹிஷி நோவு பட பார்த்தல் உனக்கு குறை அன்றோ-திருமால் ! நான் முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம்பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசியென்-ஒரு மா முதல்வா ! ஊழிப் பிரான் ! என்னை யாளுடை கரு மா மேனியன் ! என்பன் என் காதல் கலக்கவே –திருவாய் -8-3-9-போலே –-இங்கும் திருமால் -அண்மை விளி ஆங்கவை-பிரிந்து இருப்பிற்கு மற்றும் பாதகமான சேக்கள் கழுத்தில் மணியோசை என்ன -சந்திரோதயம் என்ன -தென்றல் என்ன-இப்படிப் பட்ட பாதகங்களை சொல்லிற்று ஆதல்–
அன்றிற் குரலுக்கும் கடலோசைக்கும் ஆற்றாத தலைவியின் நிலைமை கண்டு தோழி இரங்கிக் கூறும் பாசுரம் இது.-அதாவது- நாயகியின் தளர்ச்சியைக் கண்ட தோழி தானும் தளர்ச்சியடைந்து, பாவநாப்ரகருஷத்தாலே நாயகனை எதிரிற் கொண்டு முன்னிலைப்படுத்தித் தன்னிலே யுரைத்த பாசுரம். அன்றி, தோழி தலமைகனை எதிர்ப்பட்டுத் தலைமகளின் ஆற்றாமையை அவனுக்குக் கூறியுணர்த்துவது என்னவுமாம். உன்னிடத்தில் அன்பு கொண்டு தலைவி, உன்னைப் பிரிந்த நிலையில் அத்துயரம் ஒருவாறு தணியும் பொருட்டு உனக்கு வாஹனமாய் உது நித்யஸம்பந்தம் பெற்றுள்ள பெரிய திருவடியின் சிறப்பைப் பாராட்டிக் கூறி நிற்க,’
அதனைக் கண்டு. அதனால், இவள் பிரிவாற்றாத மெல்லிய ளென்று உணர்ந்து அன்றிற் குரலும் கடலொளியும் அவ்வாற்றாமையின் மேலும் தாமும் ஹிம்ஸை பண்ணக் கடவனோ வென்கிறாள். ஆணும் பெண்ணுமான அன்றில் இணைபிரியாமல் நெருங்கி ஒன்றொடொன்று வாயலகைக் கோத்துக்கொண்டு உறங்கும்பொழுது அவ்வுறக்கத்திலே வாயலகு தன்னிலர் நெகிழ்ந்தவளவிலே
துயிலுணர்ந்து அப்பிரிவைப் பொறாமல் மெலிந்து பெருந்தொளியாகக் கத்துகிற மிக இரங்கத்தக்க சிறுகுரல் விரஹ வேதனையை வளரச் செய்வதால் “புலம்புங் கன குரற் போழ்வாயவன்றிலும்” எனப்பட்டது.“பெண்ணை மேல், பின்னும்மவ்வன்றிற் பெடைவாய்ச் சிறுகுரலும், என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர்வாளாமென் செய்கேன்’ என்று திருமங்கையாழ்வாரும் பெரிய திருமடலில் அருளிச் செய்தார்.--பூங்கழிபாய்ந்து அலம்புங் கனகுரல் சூழ்திரையாழியும் = நதிபதியாகிய கடல் அழகிய கழியினுள்ளே புகப்பாய்ந்து அலைமறிந்து-பெரு முழக்கஞ் செய்வதை நோக்குமிடத்து, அது, தன் மனைவியைக் கைகளால் தழுவிக் களிப்பினால் ஆரவாரஞ் செய்வது போன்றிருத்தலால் விரஹ வேதனை மிகுகிறபடி. அஃறிணைப் பொருள்களிலும் சேதநமாகிய சிறுபறவையோடு அசேதநமாகிய
பெருங்கடலோடு வாசியறப் பிரிவுக்கு வேதனைப் படுவதையும் கலவிக்கு மகிழ்ச்சி கொள்வதையும் கண்ணெதிரிற் காணுதல் கலக்கத்துக்குக் காரணமாம்.
(புள்ளதுகலம்.) பக்தர்களை ரக்ஷிக்கும் பொருட்டு எம்பெருமானை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வந்து உதவுதல் கருடனுடைய நலமென்க.
வையம் சிலம்புதலாவது- இவளுடைய தளர்ச்சிக்காகத் தாயர் தோழியர் உற்றார் உறவினர் ஊரார் அனைவரு முறையிடல்.-திருமால்! என விளித்தது, ஒருத்திக்கு நல்லவனாயிருக்கின்ற நீ இவள் இங்ஙனம் வருந்தப் பார்த்திருத்தில் பக்ஷபாதமன்றோ? என்றவாறு.
‘இத்திருவினை’ என்ற இவளையுந் திருமகளாகவே சொன்னது. இவள் அவளுக்கு நிழல் போலிருப்பவள் என்றாகிலும் இவளைப் பார்க்க வேண்டாவோ?’ என வெறுத்துரைத்தவாறு. திரு- ஸ்த்ரீகளுட் சிறந்தவள்.–கனகுரல் – பண்புத்தொகை; நிலைமொழி வடமொழியாதலின் இயல்பாயிற்று.
‘கனைகுரல்’ என்ற பாடத்தில் ‘கனைக்கின்ற குரல்’ எனப்பொருள் காண்க; வினைத்தொகை.
போழ் வாய அன்றிலும் = தன் குரலால் விரஹிகளை இரு துண்டமாகப் பிளந்திடுகிற வாயையுடைய அன்றில் என்றும் உரைப்ப,-‘போழ்’ என்பது தன் வினை பிறவினை இரண்டுக்கும் பொது. பூங்கழி- பூக்களையுடைய கழி என்னவுமாம். வலம்- வெற்றியுமாம்.–“(ஆங்கவை) பிரிந்திருப்பார்க்கு மற்றும் பாதகமான சேக்கள் கழுத்திலே மணியோசையென்ன, சந்திரோதய மென்ன, தென்ற லென்ன
இப்படிப்பட்ட பாதகங்களைச் சொல்லிற்றாதல்” என்ற நம்பிள்ளை வீடு காண்க.
(நின் வலம்புள்ளது நலம்பாடுமிது குற்றமாக வையம் சிலம்பும்படி செய்வதே!) கருடன் உனக்கு அடிமை செய்த தழும்பு சுமந்தாற்போலே ஸம்ச்லேஷ அடையாளங்களைத் தரிக்க வேணுமென்று ஆசைப்பட்டு அக்கருடனைப் பாடினவிது குற்றமாக அன்றில் கடலோசை முதலானவை இவளை நலிய அத்தாலே இவள் நோவுபடா நின்றாளென்று நாட்டார் பழிசொல்லும்படி நீர் விட்டு வைப்பதே!,-உம்முடைய மஹிஷி நோவுபடப் பார்த்திருத்தல் உமக்குக் குறையன்றோ என்றபடி, திருமால்- அண்மை விளி;
“திருமால் நான்முகன்” (8-3-9) என்ற திருவாய் மொழிப் பாசுரத்திற்போல.–எம்பெருமானைச் சேராமையாலாகுந் துன்பத்தையும் சேர்வதனாலாகும் இன்பத்தையும் உலக நடத்தைகள் நினைபூட்டுதலால் வருந்தாநின்ற ஆழ்வாரது தன்மையைக் கண்ட அன்பர்கள், எம்பெருமானை நோக்கி “இப்படி உலகம் முறையிடும்படி இவரை இவை கலியக்கடவனவோ?’ என்று வெறுத்துரைத்தல்
திருமால் -நீர் தான் பிரணயிகள் அல்லீராய் தான் இப்படி செய்கிறீரோ –-இத் திரு வினையே -உம்மை ஆசைபட்டவளில் குறைந்தாளோ-அவளோடு கூடின உம்மை ஆசைப்பட்டவள் –-உம்முடைய மகிஷி நோவு பட பார்த்து இருக்கை உமக்கு குறை யன்றோ -என்றபடி –
புலம்பும் கனகுரல் போழ் வாயவன்றிலும்-தன்னில் தான் புகுந்து வாய் அலகைக் கொடுத்து அது உறக்கத்திலே நெகிழ்ந்தவாறே விஸ்லேஷ ஆர்த்தி பிறந்து புலம்பும்படியான பிளந்த வாயையும்
கனத்த குரலையும் யுடைய அன்றிலும்–பூம் கழி பாய்ந்து அலம்பும் கனகுரல் சூழ் திரை யாழியும்-அழகிய கழிக்கு உள்ளே புகுரப் பாய்ந்து அலைகிற கம்பீர த்வநியை யுடைத்தாய் ஆலிங்கநம் பண்ணுவாரைப் போலே சூழ்ந்த திரைக்கையை யுடைத்தான ஸமுத்ரமும்-ஆங்கவை அந்த அவைகள்-நின் வலம்புள்ளது நலம்பாடுமிது குற்றமாக-உன்னுடைய பிரபலமான பெரிய திருவடியினுடைய ஆஸ்ரித ஸம் ரக்ஷணத்தில் உதவியாகிற நலத்தைப் பாடின இதுவே குற்றமாக–வையம் சிலம்பும்படி செய்வதே-லோகம் எல்லாம் கூப்பிடும்படி யாக இவ்வன்றிலும் ஆழியும் செய்யக் கடவதோ–திருமால்
திருமாலே என்று தன்னிலே முன்னிலையாகச் சொல்லுகிறாள்-நீயும் ஒருத்திக்கு நல்லையாய் அன்றோ இருக்கிறாய்-அவள் என் நினைக்கும் என்று கருத்து–இத் திருவினையே-அத் திருவுக்கு நிழல் என்றாகிலும் இவளைப் பார்க்க வேண்டாவோ என்று வெறுத்து உரைத்தாள் ஆயிற்று —இத்தால்-சிறியாரோடு பெரியாரோடு (அன்றிலும் கடலும் )வாசியற போக அர்த்தமான பரஸ்பர ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களாலே சோக ஹர்ஷங்கள் யுண்டாய்க் கொண்டு நடக்கிற படியைக் கண்டு தமக்கு ஈஸ்வரனோடு போகம் சித்திக்கைக்கு ஈடான பரிகரம் (பெரிய திருவடி )அவனுக்கு உண்டாய் இருக்க
நமக்கு இழக்க வேண்டுவது இல்லை இறே என்கிற ஸந்தோஷமே குற்றமாக இந்த ஸ்மாரகங்கள் இவரை நலியும் படியாவதே என்று ஸூஹ்ருத பூதர் ஈஸ்வரனைக் குறித்துத் தம்மிலே வெறுத்து யுரைத்தார் ஆயிற்று
ஸ்வாபதேசம் –-இத்தால் -அத்தலையாலே வரக் கண்டார் ஆறி இருக்கை அன்றி -இவர் க்ரம ப்ராப்தி பற்றாமை பதறி மேல் விழ நீர் தாழ்த்தீர் ஆவது உமக்கு குறை அன்றோ -என்று இவர் தசையை அனுசந்தித்தவர் பாசுரமாய் இருக்கிறது – க்ஷிப்ரம் பவதி தர்மாத்மாச ஸ்வஸ் சாந்திம் நியச்சதி கௌந்தேய ப்ரதிஜா நீ ஹி நமே பக்த ப்ரணஸ் யதி–ஸ்ரீ கீதை – இவை மறந்தீரோ -என்கிறார்கள் –
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம் —-புலம்பும் கனகுரல் போழ் வாயவன்றிலும் -பலவற்றைச் சொல்லிக் கூப்பிடுவதாய் செறிந்த த்வனியை யுடைத்தாய் பிரிந்து தனி இருப்பாரே இரு துண்டமாக விடுகிற வாயையுடைய அன்றில்களும்-பூம் கழி பாய்ந்து அலம்பும் கனகுரல் சூழ் திரை யாழியும்-அழகிய கழியிலே வரப் பாயா நிற்பதாய் ஊமைக் கூறான த்வனியை யுடைத்தாய் பரந்த திரைகளை யுடைய கடலும்–ஆங்கவை-பிரிந்து இருப்பார்க்கு மேடும் பாதகங்களும் சேக்கழுத்தில் மணி ஓசை என்ன
தென்றல் என்ன சந்த்ர உதயம் என்ன இப்படிப்பட்ட பாதகங்களைச் சொல்லிற்று ஆதல்-கீழ்ச் சொன்னவை தன்னையே சொல்லி ற்று ஆதல்-இவை பாதகம் ஆகா நின்றன–என்ன குற்றம் செய்தாள் என்று இவை பாதகம் ஆகிறது–நின் வலம்புள்ளது நலம்பாடுமிது குற்றமாக-உனக்கு அசாதாரணமாய்
பலத்தை யுடைத்தாய்-கருடோ வாருணம் ச்சத்ரம் ததைவ மணி பர்வதம் ஸா பர்யாஞ்ச ஹ்ருஷீ கேசம்
லீலையைவ வஹந்யயவ் –(ஸ்ரீ விஷ்ணு புராணம் –5-30-1 )என்கிறபடியே தாரண சாமர்த்தியத்தை யுடையனான பெரிய திருவடியின் நலம் உண்டு-த்வத் அங்கரி ஸம் மர்த்த கிணாங்க ஸோபிநா -ஸ்தோத்ர ரத்னம் –41- என்கிறபடியே-அவன் அடிமை செய்து தழும்பு சுமந்தால் போலே ஸம்ஸ்லேஷ சிஹ்னங்களைத் தரிக்க வேணும் என்று ஆசைப்பட்டு அவனைப் பாடின இது குற்றமாக–வையம் சிலம்பும்படி செய்வதே-சிறியார் பெரியார் என்ற வாசி இன்றிக்கே இருந்ததே குடியாகக் கை எடுத்துப் பழி சொல்லும்படி பண்ணுவதே–திருமால்-நீர் ப்ரணயிகள் இல்லீராய்த் தான் இப்படிச் செய்கிறீரோ-இத்திருவினையே-உம்மை ஆசைப்பட்ட அளவில் குறைந்தாளோ அவளோடு கூடின உம்மை ஆசைப்பட்ட இவள் ராவணாதிகள் பெருமாளை பழி சொல்ல ராக்ஷஸிகள் தன்னை நெருக்க
இருந்தவளைப் போலே இருக்க வல்லளோ இவள-அன்றில்-கடலோசை-தொடக்கமானவை நலிய அத்தால் நோவு படா நின்றாள் என்று நாட்டார் பழி சொல்ல நீர் விட்டு இருப்பதே-உம்முடைய மஹிஷி நோவு படப் பார்த்து இருக்கை உமக்கு குறை அன்றோ என்றபடி –
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-வியாக்யானம்-புலம்பும் கனகுரல் போழ் வாயவன்றிலும் உன்னைப் பிரிந்து தனி இருப்பாரே இரு பிளவாக்கும் சஞ்சுவையும் அத்தால் சிலம்புவதும் கணைப்பதும் உள்ள அன்றிலும்–பூம் கழி பாய்ந்து அலம்பும் கனகுரல் சூழ் திரை யாழியும்-அழகிய கழிக்குள் புகுரப் பாய்ந்து அதில் உள்ள பதார்த்தங்களை அலப்பும் போது கனைத்துக் கொண்டும் பெரும் குரல் செய்து கொண்டும் ஒன்றுக்கு ஓன்று ஆஸ்லேஷித்துக் கொண்டு வருகிற திரைகளை யுள்ள கடலும்-ஆங்கவை
ஏவம் பூதமாயுள்ள புலம்புறு மணி தென்றல் முல்லை மல்லிகை –(திருவாய் –9-9-1–9-9-2) முதலானவையும்–நின் வலம்புள்ளது நலம்பாடுமிது குற்றமாக-உனக்கே சேஷமும் பலவத்தரமுமான
பசி ராஜனுக்குள்ள நன்மையைப் பாடின இதுவே ஒரு தப்பாக்கி-வையம் சிலம்பும்படி செய்வதே-லோகம் எல்லாம் இவளை பழி சொல்லும்படி செய்வைத்து உனக்குத் தகுமோ-திருமால்-நீர் தெருவில் மால் செய்யுமதுக்கும் இவளை பிரிந்து இங்கனே பாதிப்பத்துக்கும் என்ன சேர்த்தி யுண்டு-இத்திருவினையே-அத்திருவுக்கு இவள் அன்றோ ஸ்தந பாஹ் வாதிகளாய் விளங்கினவள்
உம்முடைய ரசிகதைக்கு இது கொத்தை காண் என்கிறாள் –
ஸ்வாபதேசம்-இத்தால்-அத்தலையாலே வரக்கண்டு ஆறி இருக்குமது அன்றிக்கே இவள் க்ரம பிராப்தி பற்றாமை பதறி மேல் விழ நீர் தாழ்த்தீராய் இருக்கும் இது உமக்கு குறை அன்றோ என்று இவர் தசையை அனுசந்தித்தவர்கள் பாசுரமாய் இருக்கிறது-ந மே பக்த பிரணஸ்யதி -ஸ்ரீ கீதை -9-31-
மறந்தீரோ என்கிறாள்
இதற்கு உள்ளுறை பொருள். -அன்றிற்குரல் பிரிவுத் துன்பத்துக்கு ஸ்மாரகம்; ஆழிமுழக்கம் சேர்க்கையின்பத்துக்கு ஸ்மாரகம்.(நின் வலம்புள்ளது நலம்பாடுமிது குற்றமாக) எம்பெருமான் நம்மிடத்து விரைந்து வந்து சேர்வதற்குறுப்பான வேக கதியைவுடைய வாஹனம் அவனுக்குச் சொந்தமாயிருக்கையில் நாம் இழக்கவேண்டுவதில்லையே யென்று மகிழ்ச்சி பாராட்டுதலே குற்றமாக என்கை. அடிமைச்செல்வமுடைமை பற்றி ஆழ்வாரைத் திரு என்றது; எம்பெருமானோடு நித்யாநுபவஞ் செய்யத்தக்கவை ரென்க.
ஸ்வா பதேசம் –அன்றில் குரல் துன்பத்துக்கு ஸ்மாரகம் -ஆழி முழக்கம் சேர்க்கை இன்பத்துக்கு ஸ்மாரகம் திருவடி இருப்பதால் நம்மிடம் கூட்டி வருவான் -இழக்க வேண்டியது இல்லை என்று பாராட்டி பேசினதே குற்றமாக – அடிமைச் செல்வம் மிக்க ஆழ்வாரை இத்திரு -என்கிறது -அத்திரு அவனைப் பற்றும் இத்திரு இருவரையும் பற்றுமே – எம்பெருமான் உடன் நித்ய அனுபவம் செய்யத் தக்கவராய் இருந்தும் இப்பாடு படுவதே –
ஸ்வா பதேசம் –இத்தால் – அத் தலையாலே வரக் கண்டார் ஆறி இருக்கை அன்றி – இவர் க்ரம ப்ராப்தி பற்றாமை பதறி மேல் விழ நீர் தாழ்த்தீர் ஆவது உமக்கு குறை அன்றோ -என்று இவர் தசையை அனுசந்தித்தவர் பாசுரமாய் இருக்கிறது –க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா சஸ்வஸ் சாந்திம் நியச்சதி கௌந்தேய ப்ரதிஜாநீ ஹி நமே பக்த ப்ரணஸ் யதி–ஸ்ரீ கீதை – இவை மறந்தீரோ -என்கிறார்கள் –
தாத்பர்யம்--இதில் லௌகிக பதார்த்தங்கள் பாதகமாம் படி ஸூஹ்ருத்துக்கள் பாசுரம் உத்போதாக பதார்த்தங்கள் ஞாபகப்படுத்தும் வருந்தும் நாயகி பாசுரத்தால் உன்னுடன் ஸம்ஸ்லேஷித்து
சிஹ்னங்கள் தனக்குப்பட ஆசை கொண்ட உனக்கு வாகனமாய் பெரிய திருவடி கல்யாண குணங்களைக் கீர்த்தனை பண்ணி அத்தைப் போலவே தானும் பெற ஆசை கொண்ட இவள்
அது பெறாமையாலே மிகவும் ஆரத்தை ஆனாள்-அதுக்கு மேல் விரஹிணிக்கு பாதகமாய் அநஷரமான அன்றில் கடலோசை இவை போன்ற பாதகங்கள் இவளை நலியும் படி வாசா மகோசரம் என்று
வையம் எல்லாம் உன்னை இகழ்ந்து புலம்பும் படி ஆனதே என்று நாயகனை நினைத்து சர்வேஸ்வரனுக்குச் சொல்கிறாள்
9-2-பண்டை நாளாலே நின் திரு வருளும்பங்கயத்தாள் திருவருளும்கொண்டு -ப்ரவேஸம்-
போக்ய பாகத் த்வரை தெளிந்த சிந்தைக்கு முன்னில் மூன்றிலும் ப்ரகடம் -சூர்ணிகை -177-
உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்-இறுதியில் தானே ஆழ்வார் -பந்து க்ருத்யம் -கைங்கர்ய பிரார்த்தனை இதில் —
மேல் திருவாய் மொழியில் -அவனை ஒழிந்தார் அடங்கலும் -ஔபாதிக -ஒரு காரணம் பற்றி வந்த உறவினர்கள்-
அவன் ஒருவனுமே -நிருபாதிக -ஒரு காரணமும் பற்றாமல் இயல்பாகவே அமைந்த உறவினன் -என்றார் –
ஒரு காரணம் பற்றாமல் அமைந்த உறவினன் ஆனால்-பின்னை உறவினருக்கு உரிய கார்யங்களைச்
செய்யாது இருக்க முடியாது அன்றோ –
ஆதலால் ஒரு காரணம் பற்றாமல் இயல்பாகவே அமைந்த-உறவினனான சர்வேஸ்வரன்
திருக் கண் வளர்ந்து அருளுகிற திருப் புளிங்குடியிலே-
எல்லா வித கைங்கர்யங்களையும் பெற வேண்டும் என்று ஆசைப் பட்டு இவர் சென்று கிட்டினார் –
கிட்டின இடத்தில் -இவரை-என் -என்னுதல்-திருக் கண்களாலே குளிர நோக்குதல் –
ஒரு வார்த்தை சொல்லுதல்-செய்யக் கண்டிலர் –காணாமையாலே மிகவும் துன்புற்றவர் ஆனார்
அத்துன்பம் அவன் உளனாக தீரும் அன்றோ –அதற்கு மேலேயும் ஓன்று உண்டாயிற்று –அது என் எனின் –
திருமேனி அலசும்படி பலகாலமாக ஒரே தன்மையாக திருக்கண் வளர்கின்றான் -என் வருகிறதோ
என்று ஒரு அச்சம் உண்டாயிற்று -திரு உடம்பு அசைய –எத்தனை காலம் கிடத்தி –
மேலே ஆரா அமுதே -என்கிற திருவாய் மொழியிலே-என் துன்பத்தை தீர்க்கின்றிலன் -என்று இன்னாதார் ஆனார் –
இங்கே -என் துன்பத்தினையும் தன் துன்பத்தினையும் தீர்க்கின்றிலன் -என்று இன்னாதார் ஆகிறார் –
ஆக –
கொடியார் மாடம் கோளூரகத்தும் புளிங்குடியும் மடியாது இன்னே -என்று அதுவே தலை எடுத்து-
அங்கும் இங்கும் -திருவாய் மொழியிலும் தன் துன்பங்களை தீர்க்காமை அருளிச் செய்தாரே –
அதனுடைய அனுபாஷனம் -இத் திருவாய் மொழி –அனுபாஷனம் –
பெரிய ஆற்றாமையோடு-மீண்டும் கூறுதல் –
பெரிய ஆற்றாமையோடு என்னுடைய துன்பம் எல்லாம் தீரும்படி-
திருக் கண்களாலே நோக்கி அருள வேண்டும் -தாமரைக் கண்களால் நோக்காய் –
என் தலை மேலே திருவடிகளை வைத்து அருள வேண்டும் -பாத பங்கயமே தலைக்கு அணியாய் –
தேவரும் பிராட்டியாரும் கூட எழுந்து அருளி இருக்கும் இருப்பை எனக்கு காட்டி அருள வேணும் –உன் தாமரை மங்கையும் நீயும் –
யத்ர கிருஷ்னௌ ச கிருஷ்ணச சத்யபாமாச பாமி நீ -பாரதம் -உத்தியோக பர்வம் –
எந்த இடத்தில் கிருஷ்ணனும் திரௌபதியும் அர்ஜுனனும்-கோபத் தன்மை உள்ள சத்ய பாமையும்-இருக்கிறார்களோ -என்று சொல்லுகிறபடி
அவ்விருப்பில் அன்றோ அவனை அழைத்து காட்சி கொடுத்தது -என்றது-இப்படி சஞ்சயன் வந்தான் என்று அறிவிக்க
நமக்கு நல்லான் ஒருவன்-உகவாதார்க்கும் இவ்விருப்பைப் போய்ச் சொல்லுவான் ஒருவன்
அனுகூலனான இவனுக்கு விழிநீர் அடைத்தோம் ஆகிறோம்
உகவாதார் மண் உண்ணும்படி கார்யம் பார்த்தோம் ஆகிறோம்-புகுர விடும் கோள்
என்று உள்ளே அழைப்பித்து காட்சி கொடுத்தான் -என்றபடி –சஞ்சயன் பெற்ற பேற்றில் எனக்கு குறைய ஒண்ணாது –
நச அபிமன்யு நயமௌ தம் தேசம் துபிஜக்மது -பாரதம் உத்தியாக பர்வம்
அவர்கள் வீற்று இருந்த அந்த இடத்துக்கு அபிமன்யுவும் சென்றான் இல்லை-
இரட்டையர்களான நகுல சகா தேவர்களும் போனார்கள் இல்லை -என்கிறபடியே-
தாயும் தமப்பனும் சேர இருந்த இடத்தில் குழந்தைகளுக்கு சென்று கிட்ட ஒண்ணாமை இல்லை அன்றோ –
அவர்களுக்கும் சென்று கிட்ட ஒண்ணாத படி ஆயிற்று எழுந்து அருளி இருக்கிற இருப்பு-
அவ் விருப்பிலே அன்றோ அவனை அழைத்து காட்சி கொடுத்தது –
அப்படியே
தேவரும் பிராட்டிமாரும் எழுந்தருளி இருக்கும் இருப்பை எனக்குக் காட்ட வேண்டும் –
என்னைக் கண்ட காட்சியிலே வேறுபட்டவனாய் என் முன்னே-நாலடி உலாவி அருள வேண்டும் –பவளம் போல் கனிவாய் சிவப்ப நீ காண வாராய் –
அனுகூலரைக் கண்டால் பிறக்கும் புன்முறுவல் காண வேண்டும் -தவழ கதிர் முறுவல் செய்து-
ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேண்டும் -கூவுதல் வருதல் செய்யாய் –என்று இங்கனே-
தாமும் அவனும் அறிந்ததாக திருவாசலை திருக் காப்பு கொண்டு தனி இடத்திலே-
தம்முடைய எண்ணங்களை எல்லாம் விண்ணப்பம் செய்து-கொடு வினையேனும் -ஏக வசனம் —
இவற்றை இப்போதே பெற வேண்டும் என்று விரைகிறார்-
இறைவனுக்கும் உயிர்கட்கும் உள்ள சம்பந்தத்தை அனுபவித்தார் மேல் திருவாய் மொழியில் –
சம்பந்தத்தின் பலத்தை ஆசைப்பட்டு விரும்புகிறார் இத் திருவாய் மொழியில் —
சர்வ வித பந்து அவனே -கண்ணன் அல்லால் வேறு சரண் இல்லை –பற்ற உபதேசித்தார்-
ஆடாமல் அசையாமல் அர்ச்சையில் கண் வளர்ந்து இருக்க கண்டார் –கைங்கர்யம் செய்ய பாரிக்கிறார் -இதில்-
உபாதி-கர்மத்தால் வந்த பந்துத்வம் -விட்டு -சர்வவித பந்து -காரணம் இல்லாமல் -ஆச்ரயித்தால் -அடியார்க்கு ஆட்படுத்த விமலன் போலே ராமானுஜர்
அனந்தாழ்வான் -அருளாள பெருமாள் எம்பெருமானார் இடமும் -வான மா மலை ஜீயர் -கோயில் அண்ணன்
அப்பாச்சி அண்ணா -இவருக்கு பொன்னடிக்கு கால் ஜீயர் இடம் காட்டிக் கொடுத்து -ஆய்ச்சியர் குமாரர் –
நித்ய நிருபாதிக சர்வ பந்து –பிராதா –பிதா ச மம ராகவா –
பந்துவும் பிதாவும் அவரே என்றார் இளைய பெருமாள் -ராமம் தசரதன் வித்தி -கச்சதாம் -தாய் சொன்ன படியே –
சர்வேஸ்வரனுக்கு அடிமை செய்து போக அருளிச் செய்கிறார் –
லுப்த சதுர்த்தி -அகாரம் -நாராயணாயா -வியக்த சதுர்த்தி –
நாராயணனுக்குக்காக -தருவித்துக் கொண்டு சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்த்தை உசித கைங்கர்யம் -செய்ய வேண்டும் –
ஸ்யாம் பவேயம் —சேர்த்தியில் -குடிக்கிடந்து கைங்கர்யம் செய்ய வேண்டும் –
இரண்டாம் திருவாய் மொழியில் கீழே நிருபாதிக பந்துவான சர்வேஸ்வரனுடைய பல ரூபதயா ப்ராப்யத்தையை அருளிச் செய்து –
அவன் கண் வளர்ந்து அருளில் கைங்கர்யம் பண்ணுகையை மநோ ரதித்து-கைங்கர்ய பிரதிசம்பந்தியானவனுடைய
புண்டரீகாக்ஷத்வத்தையும்
அனுரூப சம்பந்தத்தையும்
ஸ்ரீ மஹா லஷ்மீ ஸஹாயத்வத்தையும்
தர்ச நீய ஆகாரதையையும்
மந்த ஸ்மித சோபையையும்
ஆஸ்ரித அர்த்தமான திவ்ய வாஹந திவ்ய ஆயுதவத்தையும்
அசாதாரண திவ்ய பரிகர யோகத்தையும்
அகில லோக வந்த்யத்வத்தையும்
அதிசயித ஸுகுமார்யத்தையும்
ஸ்ரீ மஹா லஷ்மி சேவ்யத்வத்தையும்
அனுசந்தித்து -ஏவம் பிரகார விசிஷ்டனான நீ உனக்கு அசாதாரண சேஷ பூதராயப் போந்த எங்களுக்கு
கிருபை பண்ணி பூர்ண கடாக்ஷம் பண்ணவும் –
திருவடிகளை எடுத்துத் தலையிலே வைக்கவும் அங்கீ கரிக்கும் பொழுது பிராட்டியோடே கூட எழுந்து அருளி இருந்து அங்கீ கரிக்கவும்
ஆசா அநு ரூபமாக நடந்து எழுந்து அருளி வரவும்
முகமும் முறுவலுமாய்க் கொண்டு என் முன்னே நிற்கவும்
நிற்கும் போது பெரிய திருவடியை மேற்கொண்டு திவ்ய ஆயுதங்களையும் ஏந்திக் கொண்டு வரவும்
அசாதாரண பரிகாரத்தோடே வந்து என் முன்னே எழுந்து அருளி வந்து இருக்கவும்
சர்வ லோகங்களும் கண்டு வாழும்படி எழுந்து அருளி இருக்கவும்
இந்த ஸூ குமாரமான வடிவை நான் அனுபவிக்கும்படி பண்ணவும்
நாய்ச்சிமாரை அடிமை கொண்டு அருளுகிறாப் போலே உன் திருவடிகளில் அடிமை கொண்டு அருளவும் வேணும்
என்று தம்முடைய மநோ ரத பரம்பரையை திருப் புளிங்குடியிலே கிடந்தது அருளுகிற சர்வேஸ்வரன் திருவடிகளில் பிரார்த்தித்து அருளுகிறார் –
பண்டை நாளாலே நின் திரு வருளும் பங்கயத்தாள் திரு வருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால் குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1-
வேறு கதி இல்லாத-அடியோங்களைக் குறித்து-ஒரு வார்த்தை அருளிச் செய்து
விடாய் கெடும்படி குளிர நோக்கி அருள வேண்டும் -என்கிறார்-
குடி குடி வழி வந்து ஆள் செய்யும்–மூன்று பாட்டிலும் -கைங்கர்யம் செய்ய கொடுத்து வைத்து இருக்கிறோம்
யோக்யதை இருப்பதாக சொல்லிக் கொள்கிறார் அல்லர் -உரிமை -கேட்க வில்லை -உனக்கே -என்று அநந்யார்ஹை
போக்கிடம் இல்லை கத்யந்த சூன்யத்தை ஆவிஷ்கரிக்கிறார்
பண்டை நாளாலே நின் திரு வருளும் –எதிர் சூழல் புக்கு பல நாள் பட்ட கிலேசத்தின் பலம் அன்றோ இந்த கைங்கர்யம் -என்றபடி –
நெடுநாள் கிருஷியை செய்து-பல வேளையில் கை விடவோ -என்கிறார்-
என் அடியார் அது செய்யார் -பெரியாழ்வார் திருமொழி -4-9-2-என்னும் உன் திரு அருளையும் –
பாபாநாம் வா ஸூ பாநாம் வா வதார்ஹாணாம் ப்லவங்கம்-
கார்யம் கருணம் ஆர்யேண நகஸ்சின் ந அபராத்யதி -யுத்தம் -116-44 -என்று
குற்றம் செய்யாதவர் யாவர் -என்னும் அவள் திருவருளையும் பெற்று –
————–
குடிக் கிடந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த வடிமைக்குக் குற்றேவல் செய்து உன் பொன்
அடிக் கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி நீ யொருநாள்
படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கணியாய்
கொடிக்கொள் பொன் மதில் சூழ் குளிர் வயல் சோலைத் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-2-
ஆஸ்ரய விஷய அனுரூபமாக -எல்லார்க்கும் சுலபமான உன் திருவடிகளை-என் தசென்னிக்கு சூட வேணும்
ஸ்ரீ பரத ஆழ்வான்-ஆக்கம் செய்து –குடியில் -பண்டு இல்லாத நன்மைகளை உண்டாக்கியது போல் –இவரும் பிராப்ய த்வரையால் -அழுவது தொழுவது கண்ண நீர் கைகளால் இறைக்கும் -பிரபன்ன குடியில் இல்லாத -அநந்ய கத்தி ஆகிஞ்சன்யம் மட்டும் இல்லாமல் -மண்ணை இருந்து வாமனன் மண் இது மின்னிடை மடவார் -அநுகரித்துதூது விட்டு -த்வரையில் விஞ்சி -ஆக்கம் செய்தார் இறே
நின் பாத பங்கயம் –ஒரு செவ்விப் பூவினைக் கொண்டு காணும் காடும் ஓடையும் அளந்து கொண்டது-பூமிக்கு அளவாக்கின திருவடிகளை-என் தலைக்கு அளவாக்க லாகாதோ –கோலமாம் என் சென்னிக்கு -4-3-6-என்று இருப்பார் தலைக்கு வைக்கலாகாதோ
———–
கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி உன் திரு வுடம்பு அசைய
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி
தடம் கொள் தாமரைக் கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ வுலகும் தொழ விருந்து அருளாய் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-3-
திரு உடம்பு வருந்த ஒரு படியே திருக் கண் வளர்ந்து அருளாதே-அடியோமுக்காக பிராட்டியும் நீயும் எழுந்தருள வேண்டும்-என்கிறார் –
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி–இம் மூன்று பாசுரங்களிலும் தம்முடைய வம்ச பரம்பரையின் பெருமையை சொன்னால் போலே அன்றோ இருக்கிறது –அது அன்று இங்குச் சொல்லுகிறது-
ஒருவருக்கேயாய் இருப்பாரை முகம் பார்ப்பார் வேறு ஒருவர் இலர் -என்று-தம்முடைய அநந்ய கதித்வத்தைச் சொல்லுகிறார் –
கைங்கர்ய கிரியைச் சொல்லி -யோக்யதை இருப்பதாகச் சொல்லிக் கொள்ள வில்லை -உனக்கே அற்றுத் தீர்ந்தோம் -நீ கை விட்டால்
வேறு யாரும் கொள்ள மாட்டார்கள் -மறந்தும் தொழா மாந்தர் -அன்றோ -அநந்ய கதித்வம் அன்றோ வெளியிட்டுக் கொள்கிறார் –
உன் தாமரை மங்கையும் நீயும் –
பகவத் விஷயத்தில் முதலடி இடுவார் பிராட்டி புருஷகாரமாக பற்ற வேணும் -என்னுமதனாலே-பங்கயத்தாள் திருவருளும் -என்றார் மேல்
அடிமை செய்யும் இடத்திலும் இருவருமான சேர்த்தியிலே அடிமை செய்வதாக-சொல்லி போரும் அதனைப் பற்ற சொல்லுகிறார் இங்கு –
திருப் புளிங்குடி கிடந்தானே –இருந்தருளாய்-
சாய்ந்து அருளின அழகு காட்டினாய்-இருந்து அருளின போதை அழகையும் காட்டி அருளாய்-
நின்ற வாறும் இருந்த வாறும் கிடந்தவாறும் -குழந்தை கிருஷ்ணன் -பெரிய கிருஷ்ணன் -பெருமாள் நிலை சேவித்தது போராதே –
அர்ச்சையிலும் ஒவ் ஒரு பெருமாளையும் இப்படியே சேவிக்க அபேக்ஷை கொண்டோம் -காட்டி அருளுவாய் –
——————–
புளிங்குடிக் கிடந்து வர குணமங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி
நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்பப்
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வாராயே–9-2-4-
மங்களா சாசனப் பாசுரம் -ஆஸ்ரித அர்த்தமாக -நின்று இருந்து கிடந்து –
திருப்பதிகளிலே எழுந்து அருளி இருப்பவனாய்-என்னை இவ்வளவு ஆக்கினாப் போலே-
மேலும் எனது விருப்பத்தை செய்தருள வேண்டும் –என்கிறார்
புளிங்குடிக் கிடந்து வர குணமங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே–திருப் புளிங்குடியிலே –கிடந்ததோர் கிடக்கை திருமாலை -என்னும் அழகினைக் காட்டியும்-வர குண மங்கையிலே – பிரான் இருந்தமை காட்டினீர் -திருவாய்மொழி -என்னும் இருப்பின் அழகினைக் காட்டியும்-ஸ்ரீ வைகுண்டத்தில் –நிலையார நின்றான் -திருவாய்மொழி -என்னும் நின்ற நிலையின் அழகினைக் காட்டியும் –அன்றோ என்னை புகுர நிறுத்தியது
பேற்றுக்கு அடி கிருபை -இழவுக்கு அடி கர்மம் -என்கிற மகா விச்வாஸம் இருக்கும் படி –தெளிந்த என் சிந்தை –என்றபடி-
அன்றிக்கே
தண்ணியன் -என்று அகலாதபடி–கண்கள் சிவந்து -என்ற திருவாய் மொழியிலே என் மனத்தினைத் தெளிவித்தும்-
அதனைக் கைவிடாதே எப்பொழுதும் எழுந்தருளி இருந்து -என்னுதல் –
என்னை ஆள்வாய் –
என்னை -தண்ணியன் -என்று அகலவும் ஒட்டாதே-பிரிவாற்றாமையால் -முடியவும் ஒட்டாதே-
குண ஞானத்தினாலே தரிப்பித்து கொண்டு போனதாய் –
நீ காண வாராயே –
என் எதிரே உன் அழகு காண வர வேண்டும் –அவன் கூத்து இருக்கிறபடி-
அவன்மாறி மாறி இடும் அடி வல்லார் ஆடினால் போலே காணும் இருப்பது –
——————-
பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வந்து நின் பல் நிலா முத்தம்
தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக் கண் தாமரை தயங்க நின்று அருளாய்
பவள நன் படர்க் கீழ் சங்கு உறை பொருநல் தண் திருப் புளிங்குடி கிடந்தாய்
கவள மாக் களிற்றின் இடர் கெடத் தடத்துக் காய்சினப் பறவை ஊர்ந்தானே–9-2-5-
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு வந்து தோற்றினாப் போலே-வந்து தோன்றி அருள வேணும்-என்கிறார் –
அனுகூலர்களைக் கண்ட காட்சியாலே-அகவாயில் அன்பு தோற்ற-தன்மைகள் வேறுபட்டவனாய்-
புன்முறுவல் செய்து நிற்கும்படியை காண வர வேண்டும் –
நின் திருக் கண் தாமரை தயங்க நின்று அருளாய் –திருக் கண்கள் உடைய ஸ்மிதம் புன் முறுவல் இருக்கிறபடி –
தயங்குகையாவது-அப்போது பிறந்த ஒளி ஆதல்-கடல் சலித்தால் போலே அசைந்து வருகிற படியைச் சொல்லிற்று ஆதல் –
தயங்க நின்று அருளாய்-முந்துற நாலடி வந்து -பின்னை அதுவும் மாட்டாதே-ஸ்தப்த்தனாய் செயல் அற்றவனாய் நிற்கும் நிலையைக் காண வேண்டும் –புது நடை அழகை ஸேவிக்கப் பிரார்திக்கிறார்
————
காய்ச்சினப் பறவை யூர்ந்து பொன்மலையின் மீமிசைக் கார்முகில் போல்
மாசின மாலி மாலிமான் என்று அங்கவர் படக் கனன்று முன்னின்ற
காய்சின வேந்தே கதிர் முடியானே கலி வயல் திருப் புளிங்குடியாய்
காய்சின வாழி சங்கு வாள் வில் தண்டேந்தி எம்மிடர் கடிவானே–9-2-6-
எம்மிடர் கடிவானே–பெருமாள் திரு நாமம் -உத்சவர் –பூமி பாலன் காய்ச்சின வேந்து -மூலவருக்கும் உத்சவர்களுக்கும் பாசுரம்
தேவ பிரான் -அரவிந்த லோசன் -பொலிந்து நின்ற பிரான் கண்டீர் -கரும் தடம் கண்ணி தாயாருக்கும் மங்களா சாசனம் உண்டே
நீர் விரும்பினவற்றை செய்ய ஒண்ணாதபடி-தடைகள் பிரபலமாக அன்றோ இருக்கின்றன -என்ன
மாலி சுமாலி மால்யவான் என்னும் இவர்களைக் காட்டிலும்-வலியவோ என் விரோதிகள் -என்கிறார் –
கதிர் முடியானே –விளங்குகின்ற திருமுடியை உடையவனே -என்றது-
நீ பாது காப்பதற்கு முடி சூடி இருக்க -நான் இழக்கவோ -என்கிறார் என்றபடி-
எம் இடர் கடிவானே -அனுபவ விரோதிகள் -தேவர் சேவை சாதிக்கப் போகுமே –அனுபவ அலாப ரூப துக்கம்-திருக்கண் தாமரை தயங்க நின்று அருளாய் –என்று மேல் பாசுரத்தோடு கூட்டி வினை முடிக்க –
————–
எம்மிடர் கடிந்து இங்கு என்னை யாள்வானே இமையவர் தமக்கும் ஆங்கனையாய்
செம்மடல் மலரும் தாமரைப் பழனத் தண் திருப் புளிங்குடிக் கிடந்தாய்
நம்முடை யடியார் கவ்வை கண்டுகந்து நாம் களித்துள நலம் கூர
இம்மட வுலகர் காண நீ யொரு நாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே–9-2-7-
வலி அற்றவர்களோடு–வலி மிக்கவர்களோடு–வாசி அறக் காப்பவனான நீ-
நாங்கள் வாழும்படி கண் எதிரே ஒரு நாள் இருக்க வேண்டும் -என்கிறார் –
நீ யொரு நாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே –
எங்கள் கண் வட்டத்திலே ஒரு நாள் இருந்து அருள வேண்டும் -என்றது –
நித்ய ஸூரிகள் எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருப்பதற்கு விஷயமான நீ-
ஒரு நாள் எங்கள் கண்ணுக்கும் விஷயமாய் இருந்தால் ஆகாதோ -என்கிறார் என்றபடி-
உன்னுடைய காட்சி அதிகாரத்தை உடைய ஒரு சிலர்க்கேயாய் இருக்க வேண்டுமோ -என்பார்-எங்கள் கண் முகப்பே -என்கிறார் –
————–
எங்கள் கண் முகப்பே யுலகர்கள் எல்லாம் இணை யடி தொழுது எழுது இறைஞ்சி
தங்கள் அன்பாரத் தமது சொல் வலத்தால் தலைச் தலைச் சிறந்து பூசிப்ப
திங்கள் சேர் மாடத் திருப் புளிங்குடியாய் திருவைகுந்தத் துள்ளாய் தேவா
இங்கண் மா ஞாலத்தி தனுளும் ஒரு நாள் இருந்திடாய் வீற்று இடம் கொண்டே–9-2-8-
பரம பதத்தில் அன்றோ-வீற்று இருத்தலின் அழகு-காட்டலாவது-என்ன –
அவ்விருப்பின் அழகினை நாங்கள் காணத்-திருப் புளிங்குடியில் ஒரு நாள் இருந்து அருள வேண்டும் –என்கிறார் –
தங்கள் அன்பாரத் தமது சொல் வலத்தால்-இடையர் கோஷ்டியில் புகுந்து -அங்கும் இருந்து -அவர்கள் சொன்ன வார்த்தையும் -இவர் சொன்ன வார்த்தையும் –
நூறு பிராயம் புகுவீர் –பொன்னாலே பூணூல் இடுவர்-பழம் உண்பீர்-பால் உண்பீர் –அழுத்த இரட்டை உடுப்பீர் –
என்பன போன்று சொல்லுகை —
வங்கி புரத்து நம்பி -விஜயஸ்வ -வெற்றி உண்டாக -என்ன-ஆண்டான் சொன்ன வார்த்தையை நினைவு கூர்வது –
அங்கு சென்றாலும் முரட்டு சம்ஸ்க்ருதம் விட்டீர் இல்லீரே-எங்கே இருந்தாலும் நாம் நாமே காணும் இங்கே எழுந்து அருளீர் –
———-
வீற்று இடம் கொண்டு வியன் கொள் மா ஞாலத்து இதனுளும் இருந்திடாய் அடியோம்
போற்றி யோவாதே கண்ணினை குளிரப் புது மலர் ஆகத்தைப் பருக
சேற்றிள வாளை செந்நெலூடுகளும் செழும் பணைத் திருப் புளிங்குடியாய்
கூற்றமாய் அசுரர் குல முதலரிந்த கொடு வினைப் படைகள் வல்லானே–9-2-9-
இவ்விருப்பில் வாசி அறியாத-இவ் உலகத்தாருக்கு
நடுவில் இருக்கிறது என் -என்னில் -ருசி உடைய நாங்கள்-அதுவே ஜீவனமாக இருக்கிற நாங்கள் -கண்டு அனுபவிக்க –என்கிறார்
நமக்கு இவை எல்லாம் இங்கே காணலாம் அன்றோ –
சாய்ந்து அருளின அழகு பெரிய பெருமாள் பக்கலிலே காணலாம்-
நின்று அருளின அழகு நம் பெருமாள் பக்கலிலே காணலாம்-
இருப்பில் உண்டான அழகு பெரிய பிராட்டியார் பக்கலிலே காணலாம் -என்று பட்டர் அருளிச் செய்வர் –
——
கொடு வினைப் படைகள் வல்லையாய் அமரர்க்கிடர் கெட வசுரர்கட்கிடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை யமுதே கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடி விணை யில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள் கூவுதல் வருதல் செய்யாயே–9-2-10-
எல்லை இல்லாத இனிமையை உடையதான-உன் திருவடிகளில் நானும் வந்து அடிமை செய்யும் படி
என்னை அங்கே அழைத்தல்-அல்லது நீ இங்கே வருதல் செய்ய வேண்டும்-என்கிறார் —
கொடு வினையேனும் பிடிக்க –
கண்கள் சிவந்து –என்ற திருவாய் மொழிக்கு பின்பு-இவர்க்கு தாம் தாழ்ந்தவர் என்னும் நினைவு -நிஹித அநுஸந்தானம் -இல்லை அன்றோ –
அவர்களும் ஸந்நிஹிதராய் -அண்மையில் இருப்பாராய்-ப்ராப்யம்-சம்பந்தமும் உண்டாய் இருக்க-
நான் இழந்து இருப்பதே -என்று-பாவியேன் -என்பாரைப் போன்று -கொடு வினையேன் -என்கிறார் –
நீ யொருநாள் கூவுதல் வருதல் செய்யாயே –
எல்லை இல்லாத இனியனாய்-அண்மையில் இருப்பவனான நீ-ஸ்வரூபத்தை நோக்குகைக்கு-
ஒரு நாள் அங்கே அழைத்தல் -இங்கே வருதல்-செய்து அருள வேண்டும்-
முற்பட வருதல் என்று இலர் ஆயிற்று-அச் சேர்க்கையை குலைக்க ஒண்ணாது என்னுமதனாலே-
விருப்பம் உடையார் பக்கல் அவனைத் தனியே விட்டு இரார்கள் அன்றோ –
அதனால் கூடக் கொடு வருவார்கள் என்னும் அதனை பற்றச் சொல்லுகிறார்-
———-
கூவுதல் வருதல் செய்திடாய் என்று குரை கடல் கடைந்தவன் தன்னை
மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல் வழுதி நாடன் சடகோபன்
நாவில் பாடல் ஆயிரத் துள்ளும் இவையும் ஓர் பத்தும் வல்லார்கள்
ஓவுதல் இன்றி யுலகம் மூன்று அளந்தான் அடி இணை யுள்ளத்தோர் வாரே–9-2-11-
நிகமத்தில் –-இத் திருவாய்மொழி கற்றார்-எப்பொழுதும் நினைக்கப் பெறுவார்-என்கிறார்-
குரை கடல் கடைந்தவன் தன்னை -கூவுதல் வருதல் செய்திடாய் என்று-ஆயிற்று இவர் சொல்லிற்று–இந்த விருப்பம் இல்லாதார்க்கும் உடம்பு நோவ கடல் கடைந்து அமுதம்-கொடுத்தவனை ஆயிற்று இவர் விரும்பியது-
உடைமை இருந்த இடம் உடையவர் வந்து கைப்பிடித்தல் தானே முறைமை -கூவுதல் -உடைமையே வருவது -முறை இல்லாமை
வருதல் -முறையாக ஆக்கவுமாம் -என்றபடி -பார்யை ஆள் இட்டு அழைக்கை முறை இல்லையே -அதுபோல் கூவுதலும் முறை இல்லை –
திருக் கண்களால் குளிர நோக்கி அருள வேண்டும்
திருவடிகளை தலைக்கு மேலே வைத்து அருள வேண்டும்
தேவரீர் எழுந்து அருளி இருக்கும் இருப்பைக் காண வேண்டும்
நாய்ச்சிமாரும் தேவருமான இருப்பைக் காண வேண்டும்
உலாவும்படி காண வேண்டும்
புன்முறுவல் இருக்கும் படி காண வேண்டும்–என்று ஆசைப் பட்ட இவருக்கு அப்போதே கிடையாமையாலே–இவற்றைப் பெற வேண்டும் என்னும் எண்ணம் தானே பேறு ஆகத் தோற்றிற்று–இதனைக் கற்றவர்களுக்கும் இந்த எண்ணம் மாறாமலே முடியச் செல்லும் என்கிறார்-மநோ ரதம் தானே புருஷார்த்தம் -என்ற படி –
——————–——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –