ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த-ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம்-பகுதி-4–

May 21, 2026

ஸ்ரீ ஶைலேஶ தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்திர ப்ரவணம் வந்தே ரம்யாஜமாதரம் முநிம்

துறவிகளின் அரசரான பகவத் ராமாநுஜரிடம் அளவற்ற அன்பு கொண்டவரும் ஞானம், பக்தி போன்ற குணங்களின் கடலான ஸ்ரீ ஶைலேஶரின் கருணைக்கு பாத்திரமான ரம்யஜாமாத்ரு முநியை (மணவாள மாமுனிகள்) நான் வணங்குகிறேன்).

ஸ்ரீஶடாரி குரோர்திவ்ய ஸ்ரீபாதாப்ஜ மதுவ்ரதம்
ஸ்ரீமத் யதீந்த்ர ப்ரவணம் ஸ்ரீலோகார்ய முநிம் பஜே

ஸ்ரீ ஶடகோபாசார்யரின் திருவடியும் ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவ ப்ரபந்தத்தை அருளியவருமான தாமரை மலரினின்று வழியும் தேன் போன்ற பிள்ளை லோகம் ஜீயரின் திருவடிகளை வணங்குகிறேன்).

குருநாதனெங்கண் மணவாளயோகி குணக்கடலைப்
பலநாளும் அண்டிப்பருகிக் களித்திந்தப் பாரினுள்ளே
உலகாரியன் முநிமேகம் இந்நாளென்னுள்ளம் குளிர
நலமான சீர்மை மழை நாளும் பொழிந்தது இந்நிலத்தே

மணவாள மாமுனிகளின் குணங்கள் என்னும் கடலிலிருந்து பருகி அனுபவித்தவர் நம் ஆசார்யர் (பிள்ளை லோகம் ஜீயர்). இவ்வுலகில் மேகம் போல இருக்கும் அத்தகைய பிள்ளை லோகம் ஜீயர், தம் மேன்மையான குணங்கள் எனும் மழையை இந்த பூமிக்கு அனுதினமும் என் மனம் குளிரக் கடாக்ஷித்தார்)

மற்றுமொரு நாள்‌ கந்தாடை யணணனை அழைத்தருளி, பெரிய கந்தாடை யப்பன்‌, திருக் கோபுரத்து நாயனார் பட்டர்‌, சுத்த ஸத்வமண்ணன்‌, ஆண்ட பெருமாள்‌ நாயனார்‌, அய்யனப்பா இவர்களுக்கு
பகவத் விஷயம்‌ ப்ரஸாதிக்கும்படிக்கு நியமித்தருளி ”பகவத்ஸம்‌பத்தாசாரியர்‌” என்று திருநாமம்‌ ஸாதித்தருளி ஆசார்ய ஸிம்‌ஹாஸநத்திலே அபிஷேகம்‌ செய்தருளினார்‌.
சுத்த ஸத்வமண்ணனுடைய வ்யாக்யாந சாதுர்யத்தைக் கண்டு போரவுகந்தருளி அவருக்குத்‌ ‘திருவாய்மொழியாசாரியர்‌” என்று திருநாமஞ் சாத்தி பகவத் விஷய ஸிம்ஹாஸனத்திலே அபிஷேகஞ் செய்தருளினார்‌.

ஒரு நாள்‌ ராத்திரி கந்தாடை நாயனும்‌ ஜீயர் நாயனாரும்‌ பகவத் விஷயத்திலே கூடமான வாக்யங்களுக்கு அர்த்த விசாரம்‌ செய்ய,நாயன்‌ ஸம்ஸ்க்ருதமாக அர்த்தோபந்யாஸம்‌ செய்யக் கண்டு
பகவத் விஷயத்திற்கு ஸம்ஸ்க்ருதத்தில்‌ அரும் பத விளக்கம்‌ பண்ண நியமித்தளி உபலாளித்தருளினார்‌.

முதலிகளை ஆசார்ய ஸிம்ஹாஸனங்களில்‌ அபிஷேகம்‌ செய்தல்‌
ஒருநாள்‌ ப்ரதிவாதி பயங்கர மண்ணாவை அழைத்தருளி, கந்தாடை யண்ணன்‌, போரேற்று நாயனார்‌, அநந்தய்யனப்பை. எம்‌பெருமானார்‌ ஜீயர்‌ நாயனார்‌, கந்தாடை நாயன்‌ இவர்களெல்லாருக்கும்‌ ஸ்ரீபாஷ்யம்‌ ஸாதித்தருளும்படிக்கு நியமித்து அவருக்கு ஸ்ரீபாஷ்யாசாரியர்‌” என்று திருநாமம்‌ ப்ரஸாதித்தருளிஸ்ரீபாஷ்ய ஜிம்ஹாஸனத்திலே அபிஷேகம்‌ செய்தருளினார்‌,

எறும்பி அப்பாவை கோயிலுக்கு அழைத்தல்‌
முன்பு ஜீயர்‌ ஸந்நிதியினின்று அனுப்புவித்துக் கொண்டு எழுந்தருளின எறும்பி அப்பா தத் விஸ்லேஷம்‌ ஸஹிக்க மாட்டாமல்‌ ஜீயருடைய தினசர்யா ப்ரகாரங்களை அநுஸந்தித்துக் கொண்டு ௮நுபவ பரீவாஹ ரூபமாக திநசர்யை” என்கிற ப்ரபந்தத்தைச்‌ செய்‌தருளி, ஜீயர்‌ ஸந்நிதிக்கு ஒரு ஸ்ரீவைஷ்ணவர்‌ கையிலே கொடுத்து வரக் காட்ட, அத்தைக் கண்டு ஜீயர்‌ மிகவும்‌ உகந்தருளி, ”அபிமத
நிஷ்டராகில்‌ இப்படி யிருக்க வேண்டாவோ?” என்று மிகவும்‌ க்ருபை பண்ணி, அவரிடத்திலே திருவுள்ளம் சென்று, அப்போதே அப்பா எழுந்தருளும் படிக்கு ‘ப்ரீத: ப்ரேஷிதவாந்‌ முநிர் வர வரோ
யஸ்மை முஹுஸ்ரீமுகம்‌!* என்கிறபடியே எறும்பி யேறத் திருமுகம்‌ போக விட்டருள. அப்பாவும்‌ ஜீயரை அப்போதே காண வேணும்‌ என்று பேராசையோடிருக்க,
பாராவாரப் லவந சதுர: குஞ்ஜரோ வாநராணாம்‌ பத்மாபர்த்து: ப்ரிய ஸஹ சர : பத்ரிணாமீஸ்வரோ வா
வாயுர்பூத்வாஸ பதியதிவா மார்க்க முல்லங்க்ய துர்க்கம்‌ காலே காலே வரவரமுநே காமயே வீக்ஷிதும்‌ த்வாம்‌ ॥

[மணவாளமாமுனியே ! பெருங் கடலைத்‌ தாண்டுவதில்‌ சமர்த்தரான வானரங்களுள்‌ ஸ்ரேஷ்டரான சிறிய திருவடியாகவாவது பூமகள்‌ கேள்வனான எம்பெருமானுக்கு ப்ரியனாய்‌ ஸதா அருகே நித்ய கைங்கர்யம்‌ செய்து கொண்டிருக்கும்‌ பக்ஷி ராஜனான பெரிய திருவடியாகவாவது அடியேன்‌ ஆகி இப்பொழுதே கடக்த முடியாத வழியையும்‌ கடந்து தேவரீரைக்‌ காலந் தோறும்‌ கண்‌ணாரக் கண்டு களிக்க ஆசைப்படுகிறேன் ] என்றும்‌ மநோ ரதித்துக்‌ கொண்டிருக்கிற தசையிலே திருமுகம்‌ வரக் கண்டு அத்யாதரத்‌துடனே ப்ரத் யுக்தராய்ச்‌ சென்று ஸேவித்து திருமுகத்தை சிரஸா வஹித்து.

தேவ:ஸ்வாம்‌ ஸ்வயமிஹ பவந்‌ வெளம்ய ஜாமாத்ரு யோகீ |
போகீஸ த்வத் விமுக மபிமாம்‌ பூய ஸாபஸ்ய ஸித்வம்‌’?
அர்த்தெள தார்யாதசே வசஸா மஞ்ஜாஸா ஸந்நிவே ஸாதா
விர் பாஷ் பைர மலமபிதிர்‌ நித்ய மாராதநீயம்‌
ஆஸா ஸாநைர் வரவரமுநே நித்ய முக்தைரலப்யம்‌ மர்த்யோ லப்தும்‌
ப்ரபவதிகதம்‌ மத்வித: ஸ்ரீமுகம்தே
ஸாரா ஸார ப்ரமிதி ரஹிதஸ் ஸர்வதா ஸாஸ நம்தே ஸத்ய ஸ்ரீ மாந்‌
கபிகர க்ருதர மாலிகா மேவ குர்யாம்‌’

[திரு வநந்தாழ்வானே! தேவரீர் தாமாக இவ் வுலகில்‌ அஸ்மதாதிகளுக்கு ஸ்வாமியான மணவாளமாமுனிகளாகத்‌ திருவவதரித்து,தேவரீரிடத்தில்‌ விமுகனாயிருப்பினும்‌ அடியேனை விசேஷமாக கடாஷித்தருளிற்று. மணவாளமாமூனியே! தேவரீருடைய ஸ்ரீஸூக்திகளின்‌ அமைப்பினாலும்‌ அர்த்த கெளரவத்தாலும்‌ தூய மதியுடையவரால்‌ ஆநந்தக் கண்ணீருடன்‌ எப்போதும்‌
ஆராதிக்கத் தக்கனவாய்‌, எப்‌போதும்‌ பல்லாண்டு பாடிக் கொண்டுள்ள நித்ய முக்தர்களாலும்‌ அடைய வரிதான தேவரீருடைய ஸ்ரீ முகத்தை அடியேன்‌ போல்வார்‌ அடைய எப்படித் தக்கவராவர்‌.’
நன்மை தீமைகளைப்‌ பகுத்தறியும்‌ அறிவற்ற அடியேன்‌ எல்லா விதத்திலும்‌ தேவரீருடைய ஸ்ரீமுகத்தை குரங்கின்‌ கைப் பூ மாலை யாகவே ஆக்குவேன்‌] என்று அதிலே ஈடுபட்டு, அப்போதே கோயிலைக் குறித்து அத்யபி நிவேசத்துடேன எழுந்தருளி மடத்திலே புகுந்து வழியிலுண்டான விடாயும்‌ நெடு நாளாக ஸேவியாத விடாயும்‌ தீர “ஸுதா நிதிமிவ ஸ்வைர ஸ்வீக்ருதோ தகர விக்ரஹம்‌”? [அமுதக் கடல் போல தமதிச்சையாலே ஸ்வீகரிக்கப்‌ பட்ட உயர்ந்த திருமேனி] என்னும்படியான விக்ரஹத்தைக் கண்டு
களித்து, வரவர முநி யோகி வர்யருடைய ஸ்ரீபாதபத்மங்களைத் தம்‌ நெஞ்சிலும்‌ கண்ணிலும்‌ ஒற்றிக் கொண்டு ஸேவித்து,
பொன்னிதனிற்‌ குளித்தாங்கந்‌ தனிற் புகுதப்‌ பெற்றோம்‌
பொருவருஞ் சீர்‌ நம்பெருமாள் பதம்‌ புகழப் பெற்றோம்‌
மன்‌னிய சீர்‌ மணவாள மாமுநி வனென்னையன்‌ வாழ்ந்திருக்கும்‌ மடம் தனில்‌ வந்திருக்கப் பெற்றோம்‌
சென்னி தனிலவனடியார்‌ பதஞ்சூடப்‌ பெற்றோம்‌
திருமலையாழ்வாரிலென்றும்‌ சிறந்திருக்கப் பெற்றோம்‌
பின்னை யவர்க்கந்தரங்கப்‌ பொருளும்‌ பெற்றோம்‌
பெருந் திவத்தி லின்‌பமிங்கே பெருகவும்‌ பெற்றோமே
–என்றும்‌
மண்ணாடு வாழ வந்தோன்‌ மணவாளமா முனிவன்‌ வண்மை
கண்ணாருளுக் கிலக்காக நல் வாழ்வுங் கண்டவன் தன்‌
திண்ணாரடிகளில்‌ குற்றேவல்‌ செய்து திரியவும்‌ நான்‌
எண்ணாதிருக்க நடுவே நமக்கு வந்‌தெய்தியதே
–என்றுஞ்‌ சொல்லுறபடியே தாம் பெற்ற பேற்றினுடைய கெளரவத்தை நாடோறும்‌ அநுஸந்தித்துக்‌ கொண்டு,

அந்த: ஸ்வாந்தம்‌ கமபி மதுரம்‌ மந்த்ர மாவர்த்த யந்தீம்‌ உத்யத் பாஷ்ப ஸ்திமித நயநா ழுஜ்ஜிதா ஸேஷ வ்ருத்திம்‌ | வ்யாக்யா கர்ப்பம்‌ வரவர முநே த்‌வந் முகம்‌ யீக்ஷமாணாம்‌ கோணேலீந : க்வசித ணுரசவ் ஸம் ஸதம் தாமுபாஸ்தாம்‌
(மணவாள மாமுனிகளே, மனத்தினுள்ளே மதுரமான தோர் மந்த்ரத்தை அடிக்கடி உச்சரிப்பதும்‌, உண்டான ஆனத்தக்‌ கண்ணீரினால்‌ அசையாத திருக் கண்களை யுடையதும்‌, வேறு காரியங்‌களை விட்டிருப்பதும்‌, உபய வேதாந்த ரஹஸ்யார்‌த்த விவரணத்தை உள்ளடக்கிக்‌ கொண்டிருக்கிற தேவரீர்‌ திருமுக மண்டலத்தை ஸேவித்துக்‌ கொண்டிருப்பதுமான(பெரியோர்களுடைய) அந்த கோஷ்டியை, அற்பனான அடியேன்‌ ஒரு மூலையில்‌ மறைந்திருத்து அருகிலேயே ஸேவித்திருக்கக் கடவேன்‌.] என்னும்படியான திவ்ய கோஷ்டியை ஸேவித்துக் கொண்டு வரவர முநி ப்ருத்யர்‌ களுடனே வாழ்ந்து கொண்டு எழுந்தருளி யிருந்தார்‌. அவர்களிலே வரந் தரும்‌ பெருமாள்‌ பிள்ளை ஜீயருடைய திருக் கைச்‌ செம்பும்‌ திரு வொற்று வாடையுங் கொண்டு ஸேவிப்பாரா யிருக்கிற நாளிலே அவர்க்குத்‌ திருக் குழற் கற்றை வளர்ந்திருக்க, இதேதென்று ஜீயர்‌ கேட்டருள தத் தேதுவை அவர்‌ விண்ணப்பஞ் செய்ய, ‘இன்று திரு முடி விளக்கும்‌” என்று நியமித்தருள, அவரும்‌ அப்படியே திருமுடி விளக்குவித்துக்‌ கொண்டு எழுந்தருள, அவர்க்கு குமாரர்‌ திருவவதரித்தா ரென்றும்‌ பத்து நாளாயிற் றென்றும்‌ அன்று ஆள் வர?இத்தைக் கேட்டு இதென்ன ஸர்வஜ்ஞதை! என்று எல்லோரும்‌ விஸ்மயப் பட்டார்கள்‌ அவரும்‌ பின்பு தம்முடைய குமாரருக்கு நாயனாரென்று ஜீயர்‌ திரு நாமஞ் சாத்‌தி யருளினார்‌; இப்படி பலரும்‌ திரு நாமஞ் சாத்தினார்கள்‌; ஆகையாலே வந்து பரந்த தெங்கு மித்‌ திருநாமமிங்கு என்கிறபடியே இதுவும்‌ அழகிய மணவாளன்‌ கோத்ர மென்னும்படி எங்கும்‌ விஸ்த்ருதமாயிற்று,

அக் காலத்திலே கந்தாடை யண்ணன்‌ ஜீயர்‌ விரும்பி யமுது செய்தருளும்‌ கீரைக் கறியமுது நடத்திக் கொண்டு போந்து ஸர்வ காலத்திலும்‌ தத்பதாஸ்ரயராய்‌ ஸேவித்துக் கொண்டு போருகிறவர்‌ ,
தம்முடைய எம்பெருமான்‌ தளிகைக்கு உபாதான த்ரவ்யத்தாலே நடத்திக் கொண்டு செல்ல, அவருக்குண்டான த்ருஷ்ட ஸங்‌கோசதைத்‌ திருவுள்ளம் பற்றி, தமக்குவந்த திரு முன் காணிக்கைகளையும்‌ அவர்க்கு ப்ரஸாதித்தருளி, இப்படி.த்ருஷ்டாத்ருஷ்டங்‌
களிரண்டும்‌ ஸ்வாதீனமாக நடத்திக் கொண்டு போருகற நல்லடிக் காலத்திலே,
அப்பிள்ளை கந்தாடையண்ணன்‌ முதலானோர்‌
செப்பமுடன்‌ சேர்ந்த திரள் தன்னை-யெப்பொழுதும்‌
பார்த்தாலும்‌ எமக்கிழவாம்‌ பட்டர் பிரான்‌ தாதர் தனைச்‌
சூர் தீரக் காணாமையால்‌

என்று! அவர்‌ விச்லேஷம்‌ ஸஹியாமலருளிச்‌ செய்துவிட,
அப்பிள்ளானுங் கந்தாடை யண்ணனு மருள் புரிந்த சடகோபதாதரும்‌
ஒப்பிலாத சிற்றானுங் கூடியே யோங்கு வண்மை மணவாள யோகி தாள்‌
செப்பி வாழ்ந்து களித்துத்‌ தென் கோயிலிற்‌ சிறந்த வண்மையைச்‌ சேவித்திராமலே
தப்பி யோடித்‌ தவித்துத் திரிவது தலை மெழுத்துத்‌ தப்பாது காணுமே

என்று தம்முடைய இழவை அநுஸந்தித்து அப்போதே புறப்பட்டு வந்து திருவடிகளிலே ஸேவித்துக்‌ கொண்டிருந்தார்‌. பின்பு.

வாது செயவென்று சில வாதினர்கள்‌ வந்து மனமுறிய நிற்பராருமால்‌
வாழி யெனவே பெரிய சாப மறவென்று சிலர் வந்தனைகள்‌ செய்வ ரொருபால்‌
போதுமினி வாதமுன பாதம்ருளென்று புகழ்ந்து சிலர்‌ நிற்ப ரொருபால்‌
பொங்கி வருமெங்கள் வினை மங்க வருளென்‌று சிலர்‌ போற்றி செய்து நிற்ப ரொருபால்‌
ஈதிவைகிடக்க மறை நூற் றமிழ்‌ தெரிந்து சிலரேதமற வாழ்வரொரு பால்‌
ஏதமற வாதுலர்கள்‌ பேதையர்கள்‌ தாமயங்கி நிறை திறைஞ்சி நிற்பரொருபால்‌
மா தகவினாலுலக மேழையு மளிக்க வென வந்த வெதிராசனடி சேர்‌
மாமுனிவர் தீபமருளாளர்‌ மணவாள முனி மன்னு மடம்‌ வாழும்‌ வளமே

என்று இப்படி பாகவத ஸம்‌ருத்தி யுடனே வாழுகிற நாளிலே

நம்பெருமாள்‌ ஜீயரை பகவத் விஷய கால க்ஷேபம் ஸாதிக்க நியமித்தது
தத : கதாசிதா ஹூ௰ தமேகம்‌ முநி புங்கவம்‌!
ஸத் க்ருதம்‌ ஸாது ஸத் க்ருத்ய சரணாப்‌ஐ ஸமர்ப்பணாத்‌’ ॥
ஸந்நிதெள மேநிஷீதேதி ॥ஸஸாஸ முரஸாஸந : |
மஹாந் ப்ரஸாத இத் யஸ்ய ஸாஸநம்‌ ஸிரஸா வஹந்
ததைவ தத்ர வ்யாக்பாதும் தத் ஷணாதுப சக்ரமே |
ஸ்ரீமதி ஸ்ரீ பதிஸ் ஸ்வாமி மண்டபே மஹதி ஸ்வயம்‌ |
தத் வந்தஸ்ய ப்ரபந்தஸ்ய வயக்தந் தேநைவ தர்ஸிதம்‌
ஸடவைரிமுகை: ஸ்ருண்வந்‌ தேஸிகைர் திவ்ய தர்ஸநை: |
அத திவ்ய முநேஸ் தஸ்ய மஹிமாந மமாநுஷம்‌ ॥
அநுபூயே மமாபால கோபால மகிலோ ஜந: |
அமந்யத பரம் தந்ய மாத்மாநம்‌ தத்ர நிக்ஷிபந் ॥

[பின்பொரு கால்‌ நித்ய ஸூரி நிர்வாஹகரான பெருமாள்‌ முனிவர்‌ பெருமானாகிய இம் மணவாள மா முநிகளை வரவழைத்து கிருபையினால்‌ தமது ஸ்ரீசடகோபனை ஸாதிப்பதன்‌ மூலமாக மிகவும்‌ கெளரவித்து, “தேவரீர்‌ நமது ஸந்நிதியல்‌ திருவாய்‌ மொழி ஸ்ரீஸக்திகளின்‌ அறிவரிய விசேஷார்த்தங்களை ௨பந்யஸித்து கொண்டு வாரீர்‌” என்று நியமித்தருளினார்‌. மாமுனிகள்‌
அவருடைய உத்தரவை, பெரிய அநுக்ரஹ மென்று சிரஸாவஹித்து அப்படியே அங்கு அந்த ஷணத்திலேயே உபந்யஸிக்கத்‌ தொடங்கினார்‌. ஸ்ரீய பதியான ஸ்ரீ ரங்க நாதர்‌ பெரிதாய்‌ அழகிய பெரிய திருமண்டபத்தில்‌ தாம்‌ நம்மாழ்வார் முதலான திவ்ய ஞாநம் படைத்த ஆசார்யர்களுடன்‌ எழுந்தருளி யிருந்து அந்தத்‌ திருவாய்மொழிக்கு அம் மணவாள மா முனிகளாலேயே தெளிவாக அருளிச்‌ செய்‌யப்பட்ட உண்மைப்‌ பொருள்களைக்‌ கேட்டருளி மகிழ்ந்தார்‌. பின்பு குழந்தைகள்‌ இடையர்‌ தொடக்கமான சாதாரண ஜனங்கள்‌ முதலாக எல்லோரும்‌ அந்த உயர்ந்த முனிவரான மணவாள மா முனிகளின்‌ அமானுஷமான வைபவத்தை அனுபவித்துத்‌ தம்மை அவரிடத்திலேயே ஸமர்ப்‌பித்துத்‌ தம்மை மிகவும்‌ பாக்ய சாலிகளாக நினைத்தார்கள்‌, என்கிறபடியே பரீதாபி வருஷத்தில்‌ திருப் பவித்ரத் திருநாளிலே

க்ருபயா பர யா ஸ ரங்கராட்‌ மஹிமாநம்‌ மஹதாம்‌ ப்ரகாஸயந்‌
குரு’சேஸ்வய மேவசேதஸா வர யோகி ப்ரவரஸஸ்ய ஸிஞ்யதாம்‌

[அந்த ஸ்ரீரங்கராஜர்‌ தமது உயர்ந்த தயையினாலே முநிஸ்ரேஷ்டரான மணவாள மாமுனிகளின்‌ பெருமையைப்‌ பெரியோர்‌களுக்கு வெளிப்படுத்துவதற்காக, அம் முனிவர்க்குத்‌ தாம் சிஷ்யராக வேணுமென்று தாமே தமது மனத்தினால்‌ விருமபினார்‌ ] என்று ஸ்ரீரங்கநாயகரான பெருமாள்‌ தம்முடைய ப்ரம க்ருபை யாலே ஜீயருடைய மஹிமையை பெரியோர்களுக்கெல்லாம்‌ ப்ரகாசிப்பிப்பதாக ஸ்ரேஷ்டரான ஜீயருக்கு சிஷ்யராகுகையை -பிதரம்‌ ரோசயாமாஸ ததா தஸரதம்‌ ந்ருபம்‌- என்று பெருமாள்‌ சக்ரவர்த்தியை பிதாவாக ருசித்தாப்போலே இங்கும்‌ தாமே திருவுள்ளத்திலே ருசித்தருளினார்‌, அநந்தரம்‌,
ஸ்ரோதும்‌ த்ராவிட வேதபூரி விவ்ருதிம்‌ ளெளம்யோம் யந்துர் முநே ருத்கடண்டாஸ்தி மமைந மாந்ய ததஸ் தார்க்ஷ்யாஸ்ரயம்‌ மண்டபம்‌ ஆவிஸ் யார்ச்சக மூரிவாநிதிமுதா, நிஸ்போஷ லோகாந்விதோ
ரங்கீ வத்ஸர மேகமேவம ஸ்ருணோத்‌ வ்யக்தம்‌ யதோக்தம்‌ க்ரமாத்‌ ॥

[ஸ்ரீ ரங்கநாதன்‌ திராவிட வேதமான திருவாய்மொழியின்‌ உரையாகிய ஈட்டை மணவாளமா முனிவரிடமிருந்து கேட்க வேணுமென்ற ஆசை எனக்குள்ளது ஆகையால்‌ அவரை கருட மண்டபத்துக்கு அழைத்து வாரும்‌” என்று அர்ச்சகரை ஆவேசித்து அருளிச் செய்தான்‌, பின்பு அப்பெருமான்‌ எல்லாரோடும்‌ கூடி யிருந்து ஸந்தோஷமாக முறையே ஒரு வருஷ காலம்‌ அம் முனிவர்‌ ஸ்பஷ்டமாக ஸாதிக்கக்‌ கேட்டருளினான்‌] என்று ஸ்ரீராங்கநாதர்‌ நமக்கு அழகிய மணவாளமாமுனி யி டத்திலே திராவிட வேதமான நாலாயிரம்‌ திவ்ய ப்ரபந்த வ்யாக்யானங்‌களைக் கேட்டருள அபிநிவேசமா யிருக்கிறது; ஆகையாலே இந்த மணவாளமாமுனியை கருட மண்‌டபத்திலே அழைப்பியும்‌!’ என்று அர்சசகரிடத்திலே ஆவிஷ்டராய்‌ ஸந்தோஷத்துடனே அருளிச்‌ செய்து, தாமுமங்கே யெழுந்தருளி, ஸமஸ்த ஜனங்களோடுங்‌ கூடி யிருந்து ஒரு ஸம்வத்ஸரம்‌ இப்படியே வ்யக்தமாக ஜீயரருளிச்‌ செய்த கிர்மத்திலே கேட்டருளினார்‌, அதெங்ஙனே எனில்‌;

மங்களா யதநே ரங்கே ரம்ய ஜாமாத்ரு யோகிராட்‌ |
யுகபத த்ராவிடாம்நாய ஸர்வ வ்யாக்யாந கெளதுகீ
॥-என்கிறபடியே மிகவும்‌ ஹ்ருஷ்டராய்‌
தேஸ்ந்தர கதோ வாபி த்வீபாந்தர கதோபிவா |
ஸ்ரீரங்காபிமுகோ பூத்வா ப்ரணி பத்ப நஸீததி ॥

[மங்களங்களுக்கு இருப்பிடமான ஸ்ரீரங்கத்தில்‌ மணவாள மாமுனிகள்‌ ஒரே சமயத்தில்‌ திருவாய்மொழியின்‌ எல்லா வ்யாக்‌யானத்தையும்‌ உபந்யஸிப்பதில்‌ ஆசை யுடையரா யிருந்தார்‌ ]
[தேசாந்தரத்திலிருந்தாலும்‌ த்வீபாந்தரத்திலே யிருந்தாலும்‌ ஸ்ரீரங்கத்திற் கெதிர்முகமாக நின்று ஒருவன்‌ தண்டம்‌ ஸமர்ப்‌பித்தானாகில்‌ அவன்‌ எவ்வித வருத்தமும்‌ அடைய மாட்டான்‌] என்றும்‌ தேசாந்தரங்களி$ல இருந்தானே யாகிலும்‌ திருவரங்கன்‌ திருப்பதியை திக்கு நோக்கி தண்டன்‌ ஸமர்ப்பித்த மாத்ரத்திலே ஸகல துரித நிவர்த்தகமாய்‌ ஸகல மங்கள ப்ரதமான கோயிலிலே எழுந்தருளியிருந்து -ஸ்ரீரங்கமங்கள மணியான பெருமாள்‌ ஸந்‌நிதியிலே ஸ்வாமி அழகிய மணவாளமாமுனி, த்ராவிட வேதமான திருவாய்‌ மொழிக்கு ஆறாயிரப்படி , ஒன்பதினாயிரப்படி,
பன்னீராயிரப்படி, இருபத்நாலாயிரப்படி, முப்பத்தாறாயிரப்‌ படிகளையும்‌, திருவாய்மொழிக்கு அங்கோபாங்கங்களான அருளிச்‌ செயல்‌ வ்யாக்னங்களையும்‌ ஒருக்கால்‌ காலக்ஷேபம்‌ நடத்தத் திருவுள்ளமாயெழுந்தருளி யிருந்தார்‌. பெருமாளும்‌ திருப் பவித்ரோத்‌ஸவ வ்யாஜமாகப்‌ புறப்பட்டருளி யிருந்தார்‌, பெருமாளும்‌ திருப் பவித்ர மண்டபத்திலே யேறியருளி பேரோலக்கமா யெழுந்‌ தருளி “அணியரங்கன்‌ திருமுற்றத்தடியார்‌, ஆசார்ய புருஷர்கள்‌, ஜீயர்கள்‌ ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ அனைத்துக் கொத்துக்கும்‌ அருள்ப் பாடு ஸாதித்தருளி, ஜீயரும்‌ முதலிகளுடனே பெருமாளை மங்களாசாஸனம்‌ பண்ணிக் கொண்டெழுந்தருளி யிருக்க, பலரடியார்‌ முன்பருளிய என்ற படியே ஜீயரைத்‌ தனித்து அருள்பாடிட்டருளி, ஸ்ரீசடகோபனையும்‌ ப்ரஸாதித்தருளி, ‘* நாளை முதலாக தம்முடைய
பெரிய திருமண்டபத்திலே பெரிய வண்குருகூர்‌ நம்பியான ஆழ்வாருடைய திருவாய்மொழிப்பொருளை ஈடு முப்பத்தாறாயிரத்துடனே நடத்தும்‌’” என்ன
; “இப்படி அருளுவதே!” என்று மிகவும்‌ ஹ்ருஷ்டராய்
நாமார்‌? பெரிய திருமண்டபமார்‌? நம் பெருமாள்‌
தாமாக நம்மைத் தனித்தழைத்து–நீ மாறன்‌
செந்தமிழ்‌ வேதத்தின்‌ செழும் பொருளை நாளுமிங்கே
வந்துரை யென் றேவுவதே வாய்ந்து.
-என்று அருளிச் செய்தார் –

பிற்றை நாள்‌ தொடங்குவதாக எழுத்தருஸி இன்பம்‌ பயக்க விருக்க நிலத் தேவர்‌ குழுவிலே பாட்டுக் கேட்பிப்பதாக காந கோஷ்டியைப்‌ பாரித்தாப் போலவும்‌ இராமாயணத்தைக்‌ கேட்‌பதாக பார்‌த்‌தி வாம்ஸ் ச நர வ்யாக்ர: பண்டிதாத்‌ நைகமாம்ஸ்த தா”! [(புருஷஸ்ரேஷ்டனான) இராமபிரான்‌ அரசர்களையும்‌ புலவர்‌ களையும்‌ வேதம் வல்லவர் களையும்‌ வரவழைத்தான்‌] என்று தொடங்கி பரிகணிதரான அனைவரையும்‌ திரட்டினாப்‌ போலவும்‌ பெருமாள்‌ நாய்ச்சிமாருடனே கூட திவ்ய ஸிம்ஹாஸநத்திலே யேறி யருனி திவ்ய கோஷ்டியைப்‌ பாரித்து அந்த கோஷ்ட் யந்தர் பூதராய்‌ சேர்த்தியை அநுபவிக்க -அயர்வறுமமர்களான திருவநந்தாழ்‌ வான்‌, பெரிய திருவடி, ஸேநாபதியாழ்வான்‌ என்கிற ஸுரிமார்‌ களோடும்‌, -வைகுத்தத்து முனிவராயிருந்துள்ள தம்மாழ்வார்‌ தொடக்கமான ஆழ்வார்கள்‌ பதின்மரோடும்‌, நாதமுநி யதிவர ப்ரப்ருதிகளான ஆசார்யர்களனைவரோடும்‌, ஸ்ரீரங்கநாராயண ஜீயர்‌, திருமாலை தந்த பட்டர்‌ தொடக்கமானாரோடும்‌, அணிய ரங்கன்‌ திருமுற்றத்தடியார்‌ தங்கள் இன்பமிகு பெருங் குழுவோடுங்கூட பேரோலக்கமாக வெழுந்தருளி யிருத்து ஈடு தொடக்கமான ஐத்து வ்யாக்யானத்துடனே திருவாய்மொழி தொடங்க, அவ் வவ்விடங்‌ களிலே இது ஸ்ருதி ப்ரக்ரியை, இது ஸ்ரீபாஷ்ய ப்ரக்ரியை, இது ஸ்ருத ப்ரகாசிகா ப்ரக்ரியை, இது கீதாபாஷ்ய ப்ரக்ரியை, இது ஸ்ரீபாஞ்சராத்ர ப்ரகீரியை, இது ஸ்ரீராமாயண ப்ரக்ரியை, இத மஹாபாரத ப்ரக்ரியை, இது ஸ்ரீவிஷ்ணுபுராண ப்ரக்ரியை, இது மஹாபாகவத ப்ரக்ரியை, இது பதார்த்தம்‌, இது வாக்யார்த்தம்‌, இது மஹாவாக்யார்த்தம்‌, இது ஸமபிவ்யாஹாரார்த்தம்‌, இது ஸ்வத்யர்த்தம்‌, இது அர்த்தரஸம்‌, இது பாவரஸம்‌, இது ஒண்‌ பொருள் , இது உட்பொருள்‌ என்று இவர்‌ இப்படி அருளிச்‌ செய்யும்படியையும்‌, கீ ரங்க வத்ஸர மேகமேவம ஸ்ருணோத்‌ வ்யக்தம்‌ யதோக்தம்‌ க்ரமாத்‌” [ஸ்ரீரங்கநாதன்‌ மாமுனிகளால்‌ முறையே ஸ்பஷ்டமாக சொல்லப்பட்ட விஷயத்தை இங்ஙனமே ஒரு வருஷ காலம்‌ கேட்டருளினான்‌] என்றபடியே இவர்‌ தொடங்கி நடத்தி யரளும் படியையும்‌ திருச்செவி சாத்தி யருளி அங்கே இப்படியே ஒரு ஸம்வத்ஸரம்‌ நடந்து பின்பு சாத்தி யருளும் போது।

பகவத்‌ விஷய சாத்துமறை
முன்பு போலே, பராங்குஸ பரகால பட்டநாத யதிவராதிகளுடனே கூட ஏறி யருளித்‌ திருச்செவிசாத்தி யருளி ஜீயரை மிகவும்‌ உபலாளித்தருளி திவ்ய ப்ரபந்த தத்வ வ்யாக்யாந வைபவங்களையும்‌, ஜீயருடைய வைபவங்களையும்‌ ப்ரகாசஞ்‌ செய்தருள வேணுமென்றும்‌, தாம்‌ அநுஷ்டித்துக்‌ காட்ட வேணுமென்றும்‌ திரு வுள்ளமாய்‌

ஸமாப்தெள க்ரந்தஸ்ய ப்ரதிதஸீ விநிதோ பர்யாயசசயே பரம்‌
ஸஜ்ஜீபூதே வரவர முநேரங்க்ரி ஸவிதே |
ஹடாத்பால: கஸ்சீத்குத இதி நிரஸ்தோப் படிபகத: ஐகெள
ரங்கே ஸாக்ய: பரிணத் சதுர்ஹாயாந இதம் ॥

[பகவத்விஷய க்ரந்தத்தின்‌ சாத்துமுறை ஸமயத்தில்‌, வெற்றிலை பாக்கு பழம்‌ என்றிங்ஙனே ப்ரஸித்தமான பலவகைப்பட்ட உபஹாரங்கள்‌ ஸித்தப்படுத்தப் பட்டவளவில்‌, நான்கு பிராயம்‌ நிறைந்து ‘ரங்கநாயகன்‌ என்னும்‌ பெயர் பூண்ட சிறுவனொருவன்‌ திடீரென்று அங்கு வரப் புக, “நீ எதற்கு வருகிறாய்‌ அப்பால்‌ செல்‌’ என்று |தடுக்கப்பட்ட போதிலும்‌ அருகே வந்து நின்று இத் தனியனைச்‌ சொன்னான்‌ ) என்கிறபடியே ஜீயருக்கு ஆசார்ய ஸம்‌பாவனையாக சில த்ரவ்யங்களும்‌ ஏலா லவங்க கர்ப்பூராதிகளும்‌ திருப்பரிவட்டங்களும்‌, அடைக்காயும்‌, பலங்களும்‌, அமர்த்தி நிற்க

ஸ்ரீ சைலேச தயா பாத்ர தனியனவதாரம்‌
அழகிய மணவாள பட்டரான அர்ச்சக குமாரராய்‌ ஐந்தாம்‌ வயதாய்‌ ரங்கநாயக மென்கிற திருநாமத்தை யுடையரான ஒருபிள்ளை, ஸம்பாவனைத்‌ தட்டுக்களுக்கும்‌ பெருமாளுக்கும்‌ நடுவே வத்து நிற்க, அப்பாலே விடவிடத் திரும்பி வந்து நிற்கும் , இது வெறுமனன்று, ஒரு ஆஸ்சர்ய முண்டாக வேணும்‌” என்று எல்லாரும்‌ பார்த்திருந்து சிறு பிள்ளையை நீர்‌ நிற்கிற காரியமேதென்ன, அவர்‌ கையைக் கூப்பிக் கொண்டு பயப்படாமல்‌ ஸ்ரீ ஸைலேஸ தயா பாத்ரம்‌ என்ன, பின்னுமேதென்ன, தீ பக்தயாதி குணார்ணவம்‌ என்ன, இன்னஞ் சொல்லுமென்ன, யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்யஜா மாதரம்‌ முநிம்‌ என்று சொல்லி ஓடிப் போக, பெரியோர்களெல்லாம்‌ ஆஸ்சர்யப்பட்டு இந்த ஸ்லோகத்தைப்‌ பட்டோலை கொண்டு மஞ்சட்காப்புச்‌ சாத்தித்‌ திருவடிகளிலே ஸமர்ப்பித்து, பின்பு அத்தைத்‌ தட்டிலே வைத்து ரங்கநாயகத்தை உபலாளித்‌ தழைத்து இன்ன மேதென்ன, நானொன்றுமறியேன் என்ன முன்பு சொன்‌னத்தை இன்னமொறு முறை சொல்லுமென்ன, நானொன்றுமறியேனென்று ஓடி விட;

வாழி திரு நாமத்துக்கு நியமனம்‌
பின்பு அந்தப் பிள்ளைக்கு அருள்பாடு ஸாதித்து,நீர்‌ வாழித் திரு நாமமோதுமென்ன, அவர்‌ தமிழிலே அதி சதுரராகையாலே,

வாழி திருவாய்மொழிப் பிள்ளை மாதகவால்‌
வாழும்‌ மணவாள மா முனிவன்‌–வாழியவன்‌
மாறன்‌ திருவாய்மொழிப் பொருளை மா நிலத்தோர்‌
தேறும்படி யுரைக்கும்‌ சீர்‌-
– என்றும்‌(இப் பாசுரம்‌ மடத்துப்‌ பிள்ளை அருளிச்‌ செய்தது என்பர்-அப்பிள்ளை அருளிச் செய்தார் என்பாரும் உண்டு )
செய்ய தாமரைத்‌ தாளிணை வாழியே
சேலை வாழி திரு நாபி வாழியே
துய்ய மார்பும்‌ புரி நூலும்‌ வாழியே
சுந்தரத் திருத் தோளிணை வாழியே
கையுமேக்திய முக்கோலும்‌ வாழியே
சுருணைபொங்கிய கண்ணிணை வாழியே
பொய்யிலாத மணவாளமாமுனி புந்திவாழி புகழ்வாழி வாழியே
என்றும்‌–(ப்ரதிவாதி
பயங்கரம்‌ அண்ணன்‌ அப் பிள்ளை அருளிச் செய்ததாகச் சொல்வர் )
அடியார்கள்‌ வாழ அரங்க நகர்‌ வாழ
சடகோபன்‌ தண்டமிழ் நூல்‌ வாழ–கடல்‌ சூழ்ந்த
மன்னுலகம்‌ வாழ மணவாள மா முனியே!
இன்னுமொரு நூற்றுண்டிரும்‌
-என்றும்‌ -(ப்ரதிவாதி பயங்கரம்‌ அண்ணன்‌ அப் பிள்ளை அருளிச் செய்ததாகச் சொல்வர் )
ஒத, பெருமாளுகந்தருளி அவரை க்ருபை பண்ணி யருளி வரிசைகளும்‌ ப்ரஸாதித்து:

திவ்ய தேசங்களுக்கு நம்பெருமாள்‌ நியமனம்‌-
உடனே திருமலை, பெருமாள் கோயில்‌ தொடக்கமான திருப்‌பதிகளுக்கெல்லாம்‌ ஸ்ரீசேனை முதலியாருடைய ஸ்ரீமுகமாக அநுஸந்தான காலங்கள்‌ தோறும்‌ ஜீயர்‌ விஷயமாக நம்பெருமாளருளிச்‌ செய்த தனியன்‌ ,
ஸ்ரீ ஸைலேஸ தயா யாத்ரம்‌ தீ பக்த்யாதி குணார்ணவம்‌ |
யதீந்த்ர ப்ரவ்ணம்‌ வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம் ॥
-என்‌றநுஸந்திந்துத்‌ தொடங்கவும்‌, ப்ரபந்தம்‌ சாத்தி -வாழி திருவாய்மொழிப் பிளளை என்று தொடங்கி , மணவாளமாமுனியே இன்னுமொரு நூற்றாண்டிரும்‌ என்று அநுஸநத்தித்துத்‌ தலைக் கட்டவும்‌ என்று அனுப்பி விட்டருளி ஜீயருக்கு ஸம்பாவனையும்‌ செய்‌தருளி வரிசையுடன்‌ மடத்திற்கு அனுப்பியருளி நிற்க, பின்னும்‌ ஒரு
அதிசயம்‌ ப்ரவர்த்தமாயிற்று,

ஸ்ரீசைலேச தயாபாத்ரம்‌: என்பது ப்ரணவார்த்தம்‌. ஸ்ரீசைலேச-(திருமலையப்பன்‌) ௮காரார்த்தம்‌. தயா-பாத்ரம்‌-௮வன்‌ க்ருபைக்கு பாத்ரமான ஜீவாத்மா மகார வாச்யன்‌.-எம்பெருமானுகக்குரியன்‌ என்ற ஸம்பந்தார்த்தமும்‌ தயா பாத்ரம்‌ என்பதனால்‌ காட்டப்பட்டது,

அண்ணன்‌ திருமாளிகையில்‌ அதிசய நிகழ்ச்சி
ஈடு சாத்து முறை யுத்ஸவம்‌ ஸேவிக்க அனைவரும்‌ கோயிலிலே சேர்ந்த வளவிலே அண்ணன்‌ திருமாளிகையிலே ஜ்ஞாநாதிகைகளான அம்மைமார்களும்‌ அண்ணன் தேவிகளும்‌ சேர விருந்து
கொண்டு ஜீயருடைய வைபவத்தை அநுஸந்தித்திருக்கிற வளவிலே ஒரு ப்ரஹ்மசாரி வந்து ஒரு சீட்டை அண்ணன்தேவிகள்‌ கையிலே கொடுத்து, இத்தை அண்ணன்‌ திருக் கையிலே ஸமர்ப்பியும்‌-என்ன; அவர்‌ அத்தை வாங்கி வாஸிப்பித்து “இது ஒரு ஸ்லோகமிருத்தபடியே!*? என்று உகந்து ப்ரஹ்மசாரியைக்‌ கேட்டு ஆதரிக்‌ கப்பார்க்க, அங்கே அவரைக்‌ காணா தொழிய பின்பு எல்லாரும்‌
எழுந்திருந்து எங்குந் தேடியுங்‌ காணப் பெறாமையாலை அங்குள்ளவர்கள்‌ பகவல் லீலை யென்று அறுதியிட , அவர்களிலே சிலர்‌ பெரிய திருமண்டபத்திலே சென்று முறியை ஸமர்ப்பித்துச்‌ செய்தியை
விண்ணப்பஞ்‌ செய்யக் கேட்டு
ஹடாத் தஸ்மிந்‌ ஷணே கஸ்சித் வர்ணீ ஸம் ப்ராப்ய பத்ரிகாம்‌ |
வாதூல வரதாசார்ய தர்ம பத்ந்யா: கரே ததெள ॥

திடீரென்று அக் கணத்திலே ஒரு ப்ரஹ்மசாரி வந்து கோயிற் கந்‌தாடை யண்ணனுடைய தேவிகளின்‌ கையில்‌ ஒரு ஓலையைக்‌ கொடுத்‌தான்‌] என்று அநுஸந்தித்து அனைவரும்‌ ஆச்சர்யப்பட்டு முறியில்‌ திருவெழுத்துப்பட்ட ஸ்ரீஸைலேஸ தயாபாத்ர ஸ்லோகத்தைக் கண்டு வித்தராய்‌, தனியனின்‌ அர்த்தத்தை திருமந்த்ரமாக யோஜித்து -அநுஸந்தித்து, வானமா மலை ராமாநுஜ ஜீயர்‌; கந்தாடை
அண்ணன்‌, அப்பா, அண்ணா முதலான பெரியோர்கள்‌ தாங்கள்‌ தங்களுடைய பக்த் யதிசயத்தாலே தனியனாக வேணுமென்று அருளிச் செய்த ஸ்லோகங்களையும்‌ இதிலே அந்தர் பவிப்பித் தருளி -இது எல்லார்க்கும்‌ உத்தாரகம்‌’- என்று உகந்திருக்க, பெருமாள்‌ ஆழ்வார்களுக்கு அருள்பாடிட்டு அனுப்பியருளி, -உள்ளே பெரிய பெருமாள்‌ சேர்த்தியிலே எழுந்தருளினவாறே கோயில்‌ பரிகர
மனைத்துக் கொத்தும்‌ ஸகல வரிசைகளுடனே ஜீயரை யெழுந்தருளப்‌ பண்ணி வைத்துக் கொண்டு திருவீதி ப்ரதக்ஷிணமாக மடத்திலே யெழுந்தருளப்‌ பண்ணி வைத்தார்கள்‌. பின்பு கோயில்‌ பரிகரமனைத்‌துக் கொத்தும்‌ ஸந்நிதியிலே சென்றவாறே அவர்களைப்‌ பெருமாள்‌ உகந்தருளி, ஜீயர்‌ முப்பத்தாறாமிரப்‌ பெருக்கர்‌ என்னுமது கண்‌டோம்‌ என்று மிகவும்‌ க்ருபை பண்ணி யருளினார்‌. இதற்கு முதலிகளும்‌-வாழி திருவாய்மொழிப் பிள்ளை என்று தொடங்கி மங்களா சாஸநம்‌ பண்ணியும்‌
அடிசூடி யென்‌ தலைமேலரு மறை யாய்ந்து தொண்டர்‌
முடி சூடிய பெருமான்‌ வரயோகி முனங்குரவோர்‌
படி சூடு முப்பத்தாறாயிரமும்‌ பணித் தரங்க
ரடி சூடி விட்டதற்கோ எந்தாயென்ப துன்னையுமே
–என்று ஆபால கோபாலரெல்லாரும்‌ தத் வைபவத்துலே யீடு பட்டு ததேக பரராய்‌ தந் நாம குணங்களை அநுஸந்தித்துக்‌ கொண்டுஹ்ருஷ்டரா யிருந்தார்கள்‌.

திருவேங்கடமுடையான்‌ இத் தனியனை ப்ரவர்த்திப்பித்தது
இத் தனியனுக்கு இன்னம்‌ அதிசயமுண்டு. அதெங்ஙகனே யென்னில்‌; –தென்னனுயர்‌ பொருப்பிலழகரும்‌ தெய்வ வடமலையப்‌பனும்‌ இதற்கு ப்ரவர்த்தகரா யிருப்பர்கள்‌. முன்பு முமுஷு வாய்‌
தேசாந்தரங்களிலே திரிவாரொருவருடைய உஜ்ஜீவதார்த்தமாக ஸர்வேஸ்வரன்‌ ஸ்வப்நத்திலே இந்த ஸ்லோகத்தை யவருக்கு உபதேசிக்க, அவரும்‌ அத்தைத்‌ தஞ்சமாக நினைத்திருந்து பின்‌பொருக்‌கால்‌ இந்த ஸ்லோகம்‌ நடையாடுகிற தேசமான திருமலையிலே திருப் புரட்டாசாதி திருநாள்‌ ஸேவிக்கும் போது திருவேங்கடமுடையான்‌ அவரை க்ருபை பண்ணி அர்ச்சசக முகேந கையைப்‌
பிடித்திட்டு வந்து திருவோலக்கத்திலே வைஷ்ணவர்கள்‌ நடுவேயிட்டு, -அவர்கள்‌ அருளிச் செய்வதைக்‌ கேள்‌” என்றும்‌ அவர்களை“இவன்‌ பணிப்பதைக்‌ கேளுங்கோள்‌” என்றும்‌ நியமிக்க, சேனை
முதலியார்‌ திருமுகப்படியே நடத்துகிற தனியனை பெரிய கேள்வி ஜீயர்‌ தொடங்க, அத்தைக் கேட்டு விலஷணராகையாலே தெண்‌டனிட்டு,! “ஒரு விண்ணப்பம்‌; கேட்டருளவேணும்‌” என்றது விண்ணபஞ்‌ செய்து “அடியேனுக்கு ஸ்வப்ந லப்தமாய்‌ அது.தன்னை அடியேன் தஞ்சமாக நினைத்திருக்க ஸ்லோகத்தையே தேவரிர்‌களும்‌ அநுஸந்தித்தது இதென்ன ஆஸ்சர்யம்‌- என்ன, ஆகில்‌ நீர்‌ அந்த ஸ்லோகத்தைச்‌ சொல்லிக் காணீர்‌” என்ன, அவர்‌
ஸ்ரீசைலேச தயாபாத்ரத்தைச்‌ சொல்ல அத்தைக் கேட்டு எல்லாரும்‌
மிகவுமுகந்தருளித்‌ தங்களுக்கு வந்தவற்றை யெல்லாம்‌ ஸ ப்ரகாரமாக அருளிச் செய்யக்‌ கேட்டு அதி ப்ரவணராய்ப்‌ புறப்பட்டுக்‌ கோயிலிலே சென்று ஜீயர்‌ திருவடிகளிலே வேரற்ற மரம்‌ போலே விழுந்து கிடக்க; பரம தயாளுவான ஜீயரும்‌ அவரைத்‌ திருக்கையாலே ஸப்ர்சித்து ”நீயார்‌? வந்த காரியமேது?” என்று கேட்டருள“அடியேன்‌ முமுக்ஷுவாய்‌ தீர்த்த யாத்ராப்ரனாய் திரிவானொருத்‌தன்‌”என்று தொடங்கிச்‌ சிலவற்றையும்‌, ஸ்வப்ந வ்ருத்தாத்தத்தையும்‌ தனியனையும்‌ விண்ணப்பஞ் செய்து ஜீயர்‌ திருவடிகளைத்‌ தன் தலையிலே நற்றரிக்க வைத்துக் கொண்டு, திருவேங்கடமுடையான்‌ அடியேனை விசேஷ கடாஷம் செய்தருளி, இத்‌ தனியனைத்‌ திருவோலக்கத்திலே ஸாதித்து தேவரீர்‌ திருவடிகளை
ஸேவிக்க விட்டார்‌” என்று விண்ணப்பஞ் செய்து நிற்க; ,
இப்படி, பகவத்‌ கடாஷ பாத்ர பூதனோ நீ!” என்று மிகவும்‌ உகந்தருளி-இனி உனக்கு வேண்டுவதென்‌?” என்ன.-மோஷ உபாயமான மந்த்ர ரூபமான தனியனையும்‌ மந்த்ரதாசார்ய ரூபியான அப்பனையும்‌, மந்த்ர ப்ரப்‌திபாத்ய தேவதையான தேவரீர்‌ திருவடிகளையும்‌ த்ருடமாகப்‌ பற்றி முத்தனானேன்‌; இனி வேண்டுவதுண்டோ?’-என்று கையைத் தட்டிச்‌ சிரித்துக்‌ கூத்தாடி நிற்க, ஜீயரும்‌,
மந்த்ரே தந் தேவதாயாஞ்ச। ததா மந்த்ர ப்ரேத குரெள |
த்ரிஷு பக்திஸ் ஸதா கார்யா ஸாஹி ப்ரதம ஸாதநம்‌ ॥

[மந்த்ரத்தினிடத்தும்‌, அதன்‌ உள்ளீடான தேவதை யிடமும்‌ அப்படியே அம் மந்த்ரத்தை யுபதேசித்த ஆசாரியனிடமுமாக இம்‌ மூன்று விஷயங்களிலும்‌ எப்போதும்‌ பக்தி செய்யப்படவேண்டும்‌;இந்தபக்தியே பகவத் ப்ராப்திக்கு முக்ய ஸாதநம்‌] என்னுமது
இவருக்குண்டாயிருக்கிறதே! அதிகார பூர்த்திக்கு வேண்டுவதும்‌ இதுவே யன்றோ?’? என்று உகந்தருளி, அவருக்கு தாபாதி பஞ்‌ச ஸம்ங்காரங்களையும்‌ ஸாதித்து ‘*திருவேங்கடராமாநுஜ தாஸர்‌”
என்று தாஸ்ய நாமத்தையும்‌ ஸாதித்து க்ருபை பண்ணி யருளினார்‌.
பெருமாளும்‌, * வாரீர்‌ திருவேங்கட ராமாநுஜ தாஸரே! உமக்கு மேல்‌ வீடு தந்தோம்‌”? என்று ஸ்ரீ சடகோபனை ஸாதிக்க உடனே அவர்‌ திரு நாட்டுக் கெழுந்தருளினார்‌- எல்லாரும்‌ அவருக்குப்‌
பெரியோர்களுக்குச்‌ செய்யும்‌ க்ரியைகளெல்லாஞ்‌ செய்து நிறை வேற்றி ஜீயருடைய வைபவத்தை எல்லாருமாகக்‌ கொண்டாடிக் கொண்டு எழுந்தருளி யிருந்தார்கள்‌ ‘

திருமாலிருஞ்சோலை அழகர்‌ இத் தனியளை ப்ரவர்த்திப்பித்தது
அழகர்‌ திருமலையிலே ஸமஸ்த கைங்கர்ய நிரதராய்‌ ஜீயர் திருவடி ஸம்பந்த முடையாரயிருக்கிற ஜீயர்‌ தம்முடைய ஆசார்யருடைய ஆத்ம குணங்களையும்‌ விக்ரஹ குணங்களையும்‌ சிந்தித்து
அனுஸந்தித்துக்‌ கொண்டு ப்ரதஷிணமாக வெழுந்தருளி, தமக்கு நித்யா நுஸந்தேயமாக ஜீயர்‌ விஷயமான தனியன்‌ பெரியோர்களிடத்தினின்று உண்டாக வேணுமென்று எண்ணிக் கெண்டு சேனை முதலியார்‌ ஸந்நிதியிலே தண்டன்‌ ஸமர்ப்பித்து நிற்க: அந்த அவ ஸரத்திலே அர்ச்சகரும்‌ ஸேனை முதலியாருக்குத்‌ திருவாராதநங்‌ கண்டருளப் பண்ணி திருவந்திக்‌ காப்புங் கண்டருளப்‌ பண்ணி திருமுக மண்டலத்தை ஸேவித்து
ஸ்ரீசைல ஸூந்தரே ஸஸ்ய கைங்கர்ய நிரதோயதி: |
அமந்யத குரோஸ் ஸ்வஸ்ய பத்ய ஸம்பவ மார்யத; ॥

[தெற்குத்‌ திருமலை யழகருடைய கைங்கர்யத்திலே ஊற்றமுடைய ஒரு ஜீயர்‌ தமது ஆசார்யராகிய மணவாளமாமுனிகளுக்கு ஒரு தனியன்‌ பெரியோர்‌ திருவாக்கிலிருந்து அவதரிக்க
வேணுமென்று எண்ணினார் என்று விண்ணப்பஞ் செய்து கொண்டு பெருமாள்‌ ஸன்னிதியிலே அமுது செய்தருளப்‌ பண்ணச்‌ செல்ல, அவ் வளலிலே அழகிய மணவாளமாமுனியினுடைய
திருவடி ஸம்பந்தமுடைய சேனை முதலியார்‌ என்பவர்‌ தெற்குத்‌ திருப்பதிகளெல்லாம்‌ மங்களாசாஸனம் பண்ணி அழகரைத்‌ திருவடி தொழ வெழுந்தருள, ஸ்ரீகார்யம் பார்க்கிற ஜீயரும்‌. அவரைக்‌ கண்டு மிகவும்‌ ஆதரித்துப்‌ பெருமாளை மங்களாசாசனம்‌ பண்ண வெழுந்தருளப்‌ பண்ணி வைத்துக் கொண்டு திருமுன்பே செல்ல, அழகரும்‌ அவரை மிகவும்‌ க்ருபை பண்ணி யருளி தீர்த்தம்‌ முதலான வரிசைகள்‌ ப்ரஸாதித்து ஸ்ரீ சடகோபனையும்‌ அவர்‌ திரு முடியிலே நற்றரிக்க வைத்தருனி உமது நாவின்‌ நுனியில்‌ நான்‌ இருந்து
ஜிஹ்வாக்ரே தவ வக்ஷ்யாமி ஸ்த்தித்வாவதஸூ பாவநம்‌ |
பத்மம்‌ த்வதார்ய விஷயம்‌ முநீகரஸ்ய மமாஜ்ஞாயா: ॥

கொண்டு சொல்லப்‌ போகிறேன்‌, என்னுடைய நியமனமாக ௨ம்‌முடைய ஆசார்யரான மணவாள மா முனிகளுடையதாய்ப்‌ பரம பவித்ரமான (இந்த) ஸ்லோகத்தை இந்த ஜீயருக்குச்‌ சொல்லும்‌,என்று அர்ச்சக முகேந நியமிக்க சேனை முதலியாரும்‌,
தந்யோஸ் மீதிஸ் ஸேகேஸ தேஸி கோ வதந ஸ்லயம்‌’]
வஹக் ஸிரஸி தேவஸ்ய பாதெள பரம பாவநவ் ॥

(சேனை முதலியாரென்பவர்‌ அழகருடைய பரம பாவநமன திருவடி நிலைகளை ‘தமது திருமுடியில்‌ வைத்துக் கொண்டு அடியேன்‌ தந்யனானேன்‌ என்று கூறி, தாமே அத் தனியனைச்‌ சொன்னார்‌] என்கிறபடியே ஸ்ரீசடகோபனையும்‌ முடியில்‌ தரித்துக்‌ கொண்டு ஸ்ரீ சைலேச தயா பாத்ரம்‌”” என்னுமித் தனியனை யருளிச்‌’ செய்‌த உடனே அர்ச்சகரும்‌ தெரியப்பட்டு ஜீயருக்கு ஸாதித்தருளின்ர்‌-பின்பு சேனை முதலியாருக்கும்‌ அர்ச்சகருக்கும்‌ இந்த ஸ்லோகம்‌ தெரியாதொழிய, ஜீயர் மடமே சென்று ஸ்லோகம்ருளிச்‌ செய்ய வேணு மென்று கேட்க, அருளிச் செய்த தேவரீரே கேட்க வேணுோமோ “என்ன, ”எனக்கொன்றுமே தெரிய லில்லை, இது ஸுந்தர ராஜர்‌’ தானே ஸூந்தர ஜாமாத்ரு முநி விஷயமாக அருளிச்‌: செய்த என்று மூன்று திருநாமமும் கூடி தெரிவிப்பை கடாஷித்துத்‌ கொண்டு வித்தராய்த்‌ தங்களுக்குத் தஜ்சமாகக்‌ கொண்டருள்‌,சேனை முதலியாரும்‌ அதி ப்ரீதியடனே இச் செய்தியைக்‌ கோயிலிலே பெரியோர்களுக்செல்லாம்‌ தெரிவிக்க வேணுமென்று அதி த்வரையாக எமுந்தருளி கோஷ்டியிலே ஜீயரைத்‌ தண்டன்‌ ஸமர்ப்‌பித்து இவ் வைபவங்களை யெல்லாம்‌ “விண்ணப்பஞ் செய்ய, எல்லாரு மிகவும் உகந்தருளி இப்படி திருவேங்கடமுடையானும்‌ அழகரும்‌ உகந்தருளின இத் தனியனை ப்ரகாசப்‌பித் தருளுகிறதே ! இதென்ன வைபவம் தான்‌!” என்று போர வித்தரா யருளினார்கள்‌. –

வானமாமலை ஜீயர்‌ முதலானார்‌ ஜீயரைப்‌ புகழ்தல்‌
வான மாமலை ராமாநுஜ ஜீயர்‌ மிகவும்‌: ஹர்ஷ பரவசராய்‌”’ ஸ்தப்தராயிருக்க, ஜீயரும்‌ திருக் கைகளாலே அவரைத்‌ தட்டி உம்முடைய ஹர்ஷத்துக்குப்‌ போக்குவீடாக வார்த்தை யருளிச் செய்யலாகாதோ?” என்ன, அவரும்‌ “இரண்டு முலைக் காம்பினும் மாறாதே பெருகுகிற பாலை ஆராவமுதமாகப் பருகுவார்‌ தாமே யன்றோ?’” என்று கத்தாடை யண்ணனைப்‌ பார்த்தருளிச்‌ செய்ய -அண்ணணும்‌ -அந்தப் பாலிலும்‌ இந்த உக்தி ரஸம்‌ அதிசயமாயிருக்கிறதே!” என்ன, ப்ரதிவாதி பயங்கரரும்‌ உத்தரோத்தரம் அதிசயமாயிருக்கிற தென்று அண்ணனைக் கொண்டாட, அப்பிள்ளை இருத்து, மந்த்ரோத்தரமான பூர்வ வாக்கியத்திலும்‌ உத்தர வாக்கியம் அதிசயித்து இருக்குமென்ன, பட்டர்‌ பிரான் ஜீயர் த்வயத்திலும்‌ சட கோப த்வயம்‌ அதிசயிதமாய்‌, அது தன்னிலும்‌ ராமாநுஜ த்வயம் உத்‌தரம்‌ அதிசயமாய்‌, (அதுதன்னிலும்‌) தந் நிஷ்ட ரான நம்‌ ஜீயரைத்‌ தொழுவதாயிருக்கிற இந்தத் தனியனே ஸ்ரேஷ்ட்டமென்று ஒருவருக்கொருவர்‌ இட்டீடுகொண்டு சாடுரஸோக்திகள்‌ அருளிச்‌
செய்து கொண்டு எழுந்தருளி யிருந்தார்கள்‌-

ஜீயர்‌ வடதேசத்தெம்பெருமான்களை த்யாநித்தது
அநந்தரம்‌ ஒருநாள் ஜீயர் ப்ராத: காலத்திலே திருமலை யாழ்வாரிலே எழுந்தருளி யிருந்து திவ்ய தேசங்களை த்யாநித்து அங்கே ஆஸக்தமான திருவுள்ளத்தை உடையராய்‌ பாரவஸ்யத்தை யுமடைந்து அந்த திவ்யதேசங்களையே வாய் புலத்தித்‌ கொண்டு இரண்டு யாம பர்யந்த மெழுந்தருளி யிருத்து “காலம்‌ போகிறதே” என்று, சிந்திக்கும்‌ திசைக்கும் தேறும்‌ கை கூப்பும்‌; -வெருவாதாள்‌ வாய் வெருவி,
அருவி சோர் வேங்கடம நீர்மலையென்று-வாய் வெருவி; இவறிராப்‌ பகல்‌ வாய்வெரீஇ என்கிறபடியே வாய் புலத்திக்‌ கொண்டு தளர்ந்து சாய்ந்தருள, காலஷேபத்திற்கு சில ஆசார்யர்களெழுந்‌ தருளி பின்னுஞ் சில ஆசார்யர்கள்‌ எழுந்தருள வேண்டியிருக்‌கிற அவஸரத்திலே.
அவ்யாஜ பந்தோர்‌ கருட த்வஜஸ்ய திவ்யாஞ்சிதாந்யாய தநா நிபூய: |
த்யாயம் ஸ்தமோ நாஸகராணி மோஹவஸாத்த தேவ ப்ரஹரத் வயம்ல:
த்யாத்வாதி வ்யாஞ்சிதார்ச்ந விலஸித நிலயாந் யெளத்தராண்யாஸூ
விஷ்ணேஸ் தத் ஸேவாயத்த சித்தே ப்ரணிகததி முஹுர்நாமதஸ்‌ தாநிதாநி |
தூஷ்ணீம்‌ பூதேஸ பாஷ்பம்‌ ஸபுளகநிசயம்‌ ரம்ய ஜாமாத்ரு யோகி ந்யப்‌
யேத்யா நம்ய ஸர்வே கிமிதமிதி பராமார்தி மார்திமாபூர்ம ஹாந்த: |

[இயல்பாகவே உறவினனாய்‌ கருட த்வஜனான எம்பெருமானுடைய அஜ்ஞான நாசகங்களான திவ்யங்களென்று கௌரவித்துச்‌ சொல்‌லப்படுகிற திருப்பதிகளை (திவ்யதேசங்களை! தியானித்துக்‌
கொண்டே மோஹித்து இரண்டு நாழிகைக் காலம்‌ அப்படியே மாமுனிகள்‌ இருந்தார்‌. பின்பு எம்பெருமான்‌ அர்ச்சாவதாரமாக ஸேவை ஸாதிக்கிற-வடதேசத்திலுள்ள திவ்ய தேசங்களை த்யானித்து . அவற்றை ஸேவிக்க வேணுமென்ற ஆசை யுடையவராய்‌ அத் திருப்‌பதிகளின் திருநாமங்களையே அடிக்கடி உச்சரிப்பவராய்‌ மயிர்க்‌கூச்செறியக்‌ கண்ணீர்‌ மல்‌கி வெறுமனே அவர்‌ இருந்தவ ளலிலே சிஷ்யர்களான பெரியோர்கள்‌ அருகில்‌ வந்து வணங்கி இது என்‌?என்று மிசுவும்‌ வருத்த மடைந்தார்கள்‌ ] என்கிறபடியே ஜீயர்‌ கிளர் ஒளி 2-10-1) என்றநு ஸந்தித்திருந்து, வட தேசத்திலே திருவயோத்யை
முதலான திவ்யதேசங்களை ‘[த்யானித்து ‘ஸேவிக்கப்‌ பெற்றிலேமே!! என்று நிருபாதிக பந்துவாய்‌ ஆஸ்ரித ரஷணத்திற்குக்‌கொடி கட்டி யிருக்கிற திவ்ய தேசங்களை த்யாநித்து மோஹித்திருக்க
அஷ்டதிக்கஜங்கள்‌ முதலான ஆசாரியர்கள்‌ இதென்னென்பதென்று கலங்கி அநேக விதமாக ஸமாதானம்‌ விண்ணப்‌பஞ் செய்யச்‌ செய்தேயும்‌ திருக் கண்களைத்‌ திறவாமல் அஸ்ருக்களோடே புளகிதகாத்ரராய்‌ ஜீயரெழுந்தருளி யிருக்கக்‌ கண்டு கிட்டவந்து, உற்று ஸேவித்து இதென்னவென்று பெரியவர்களெல்லாம்‌ பரவஸராய்‌ ஆர்த்தியை யடைந்து விட்டார்கள்‌;அவ் வளவிலே சரம பர்வநிஷ்டராய்‌ திருவடிகளுக்கந்தரங்கராய்‌-கண்‌டியூரரங்கம்‌ மெய்யம்‌ கச்சி பேர்‌ மல்லை என்கிறபடியே திவ்ய தேசங்களில்‌ மிகுந்த கைங்கர்யத்தைப்‌ பண்ணுகிற ராமாதுஜ தாஸர்‌,
ஸூமத்யே ராமாநுஜ தாஸ நாமாவ்ய ஜிஜ்ஞ பத்தம்‌ வரயோகிவர்யம்‌–
நிஷேவ்ய ஸர்வாணி பதாநி விஷ்ணோ: ஸமர்ப்ப யிஷ்யாமித தைவதத்வ:

[ராமாநுஜ தாஸரென்னும்‌ பெயர்‌ பெற்ற ஒருவர்‌ வந்து, “விஷ்‌ணுவின்‌ ஸ்தலங்களனைத்தையும்‌ சென்று ஸேவித்துத்‌ திரும்பி வந்து அந்த ஸேவையை அப்படியே தேவரீருககுக்‌ காணிக்கையாகச்‌ செலுத்துகிறேன்‌” என்று அம்மா முனிகளிடம்‌ விண்ணப்பம்‌ செய்தார்‌] என்கிறபடியே அவர்‌ ஜீயர்‌ ஸந்நிதியிலே சென்று”அடியேன்‌ ராமாநுஜ தாஸன்‌ தேவரீர்‌ திருவடிகளை முன்னிட்டு வட தேச திருப்பதிகளெல்லாம்‌ தேவரீர்‌ மங்களாசாஸநமாகத்‌ தொழுது வந்து அந்தப் படியே ஸமர்ப்பிக்கிறேன்‌’* என்றும்‌
ஆஸேதோராப தர்யாஸ் ரமவர நிலயா தாச பூர்வா பராப்தே
க்ஷேத்ராணி ஸ்ரீதரஸ்ய த்ருஹிண ஸடஜி தாத்யஞ்சிதாநி ப்ரணம்ய |
ப்ராப்ஸ்யே ராமாநுஜோலம்‌ பவ தய தநுசதஸ் சிந்த யம்ஸ்த்வத்‌
பதா வித்யஸ்மிந்‌ விஜ்ஞாபயித்வா ப்ரணமதி புபுதே ஸெளம்ய ஜாமாத்ரு யோகீ ॥

“தென் திசையில்‌ உள்ள ஸேது முதலாக வடதிசையிலுள்ள பத்ரிகாஸ்ரமென்னும்‌ உயர்ந்த ஸ்தானம்‌ வரையில்‌ கிழக்குக்‌ கடல்‌ தொடநக்கி மேற்குக் கடலீறான இடங்களிலு முள்ளவையாய்‌, பிரமன்‌ முதலிய தேவர்களாலும்‌ நம்மாழ்வார்‌ தொடக்கமான ஆழ்வார்களாலும் பூஜிக்கப் பட்ட விஷ்ணுவின்‌ ,திவ்ய தேசங்களை எல்லாம் சேவியாததனால்‌ . தேவரீர்க்குள்ள மன வருத்தம்‌ காரணமாக
சென்று தேவரீர்‌ திருவடிகளைத் தியானித்துக்‌ கொண்டு ராமானு தாஸனாகிய அடியேன்‌ ஸமர்த்தனாய்‌ ஸேவித்து வருகிறேன்‌! என்று விண்ணப்பித்து அவர்‌ வணங்க, மாமுனிகள்‌ மோஹம் தெளியப்‌ பெற்றார்‌] என்று ராமாநுஜ தாஸர்‌ விண்ணப்பஞ்‌ செய்து தண்‌டன் ஸமர்ப்பித்த வுடனே ஜீயர்‌ தெளிந்து திருக் கண்களை மலரத்‌ திறந்து “வாரீர்‌ ராமாநுஜ தாஸரே!” என்றருளிச்‌ செய்ய திக் கஜங்‌கள்‌ , முதலானா ரெல்லாரும்‌ தேறி அவரை மிகவும்‌ கொண்டாடி இருக்க, ஜீயரும்‌ எழுந்திருந்து நெடும்‌ போதாயிற்றே காலஷேப மின்றிக்கே யொழிந்ததே!’” என்று அருளிச்செய்ய, தேவரீர்‌ திவ்ய தேசங்சளில்‌ அநுபவ பரவசரா யெழுந்தருளி யிருக்க ஸேவித்து அநுபவித்துக்‌ கொண்டிருக்க மாட்டாமல்‌ சுலங்கி பயப்பட்டு விட்‌டோம்‌” என்று விண்ணப்பஞ்செய்து நிற்க, “ராமாநுஜ தாஸரே!”நீர்‌ சொன்னது கூடவற்றோ?’” என்றருளிச் செய்ய, அவரும்‌, அப்‌பொழுதே பயணமாகப் புறப்பட்டு நிற்க, திருவடி நிலைகளில்‌ ஸம்‌பந்த முடையாரயிருக்கிற, குமாண்‌டூர்‌ இளையாழ்வார்‌ பிள்ளையை
யழைத்தருளி, “ரஈமாநுஜ தாஸரைக்‌ கூட்டிக் கொண்டு திருப்பதிகளை ஸேவித்து வருகிறீரோ?”” என்று கேட்டருள அவரும்‌ பாக்யமாயிற் றென்று விண்ணப்பஞ் செய்து நிற்க
ததோஸ் ப்வுங்க்த ஸ்வக முத்தரீயம்‌ விதீர்ய ராமாநுஜ தாஸ மாஸூ |
ஸஹஸ்வ பாதாவநி நித்ய யோக மஹோ ஜுஷாசாசுக லக்ஷ்மணேந ॥

பின்பு ஜீயர்‌ உடினே ராமாநுஜ தாஸருக்குத் தமது உத்தரீயத்தைத்‌ ப்ரஸாதித்தருளி அவரை–தம்‌ திருவடி நிலைகளோடு நித்ய ஸம்பந்தமாகிற தேஜஸ்ஸைப்‌ பெற்றவராய்‌ வேகமாகச்‌ செல்லும்‌ இளையாழ்வார்‌
பிள்ளையோடு செல்லுமாறு நியமித்தார்‌.] என்கிறபடி ஜீயர்‌ திருவடிக்குத்‌ திருவடி நிலைகள்‌ கொண்டு ஸதா ஸேவிக்கிற மஹாதிசயத்தை யுடைய இளையாழ்வார்‌ பிள்ளையோடே ராமாநுஜ தாஸரைத் தம்முடைய திருவடி நிலைகளை ஸூக்தமாக ப்ரசாதித்துப்‌ பயணமாக நியமித்தருளினர்‌-

இளையாழ்வார் பிள்ளையும்‌ ராமாநுஜ தாஸரும்‌ யாத்திரை செய்தல்‌,
சக்ரவர்த்தி திருமகனார்‌ ஸ்ரீபரதாழ்வானுக்குத்‌ திருவடி சாதிக்க அப்போது இளைய பெருமாளுக் கல்லாது ஒழிந்ததே– பரதாழ்வானைப் போலே. இளைய பெருமாள் திரு நாமத்தை யுடைய இவரும் ஜீயருடைய திருவடி நிலைகளை லபித்து, வோசத்‌தில் ஜனங்களுக்கு ஸந்தோஷ உத்ஸவத்தைச்‌ செய்தருளினார்‌-இப்படி அவருக்குத்‌ திரு உத்தீரீயம்‌ ஸாதித்தருளினாப் போலே இவருக்குத் திருவடி நிலைகள்‌- இப்படி தமக்கு ப்ரதி நிதியாக திருவடி நிலைகளை ஸாதித்தருளி யிருக்க, இளையாழ்வாரும்‌, -தநம்‌ மதீயம்‌ தவ பாத பங்கஜம்‌” என்கிறபடியே மஹா தநத்தை லபித்‌தருளி
-மதீய மூர்த்தாந மலங்கரிஷ்யதி” என்று திருமுடி மேலே நற்றரிக்க வைத்துக் கொண்டு நிர்‌ மர்யாத ஹர்ஷ யுக்தரா யருளினார்‌-ராமாநுஜ தாஸரும்‌ பெருமானரையில்‌ பீதக வண்ண வாடை
கொண்டு என்னை வாட்டம் தணிய வீசினீர்‌-என்று மிகவுமுகந்தார்‌-இப்படி அவரும்‌ ஜீயர்‌ திருவடி நிலைகளையே திருவாராதனமாக வெழுந்தருளப் பண்ணி வைத்துக் கொண்டு “அதி த்வரையாக கங்கா தீரத்திலே எழுந்தருளி திருவடி நிலைகளுக்கு நன்றாக சாஸ்த்ர ப்ரகாரம்‌ நெடும் போது கங்கையில்‌ திருமஞசனம்‌ ‘பண்ணி ஜீயர்‌ நீராடுவதாக அத்யவஸித்து அத் தீர்த்தத்திலே தாங்களும்‌ நீராடி பின்பு அங்குண்டான இடங்களெல்லாம்‌ ஸேவித்து
க்ரமேண தீர்த்தாநி ஸரீர பாஜாம்‌ பாபா பஹாந் யூர்ஜித ஸெயக்யதாநி ]
பரிக்ர மந்தாவதிதிம்‌ த்ருஸேர்ஸ்தெள விநிந்யது: ஸ்ரீ பதரீ நிவாஸம்‌ ॥
விசித்ரர் தேஹ ஸம்பத்திரீரஸ்வராய நிவேதிதும்‌

அவ்விருவரும்‌-மனிதர்களின்‌ பாபங்களைப்‌ போக்க வல்வையாய்‌ உயர்ந்த ஸெளக்யத்தை யளிக்க வல்ல தீர்‌த்தங்களை யெல்லாம்‌ முறையே நீராடிச் சென்று பின்பு தம்‌ கண்களுக்கு ஸ்ரீபதரிகாஸ்ரமப்‌ பெருமாளை அதிதியாக (விருந்தாக) ஆக்கினர்‌ ] [பல வகையான சத்திகளைப் பெற்ற சரீராவயவய ஸம்ருத்தியானது பசவானுக்குக் கைங்கர்யம் செய்வதற்காக ஏற்படுத்தப் பட்டுள்ளது ] என்கிறபடியே பகவதாத்தமாக தேஹ பரிக்‌ரஹம்‌ பணணினவர்‌ களுக்கு ஸ்வ ஸம்பந் தத்தாலே ஸமஸ்த ப்ரதிபந்தகங்களையம்‌ போக்கி ஊர்ஜிதமான மஹா புருஷார்த்தத்தை ஸாதிக்கற திவ்யதேசங்களை
-இரண்டு திருநாமங்களும்‌ க்ரமேண ஸஞ்சரித்து ஸேவித்து பத்ரிகாஸ்ரம நாராயணனைத்‌ தங்களுடைய திருக்கண்‌ மலர்களுக்கு ஸர்வ ப்ரிய தர்ஸந மாக அடைவித்தார்கள்‌. இப்படி நர நாராயணப்‌ பெருமாளை மங்களாசாஸநம்‌ பண்ணிப் புக்க வளவிலே
அயோத்ய ராமாநுஜ தாஸ நாமக ஸதா முதா பூஜயதி ப்ரஸந்ந |
வஸீ நிஜ ஸ்ரீ குல சேகரஸ் ஸந் ஹரிம்‌ பதர்யாஸ்ரம வாஸிநம்தம்‌ ॥

(அயோத்யா ராமானுஜ தாஸரென்‌பவர்‌, அனைவரையும் தாமிட்ட வழக்காக்கியவராய்த் தமது ஸ்ரீ வைஷ்ணவ குலத்துக்குச் சிரோ பூஷணமானவராய்‌, மிகத் தெளிந்த மனமுள்ளவராய்க்‌ கொண்டு
மகிழ்ச்சியுடன்‌ எப்போதும்‌ ப்ரஸித்தரான பதரிகாச்ரமப்‌ பெருமானை ஆராதித்து வருகிறார்‌] என்று அயோத்யை ராமாநுஜ தாஸ ரென்கிற திருநாமத்தை யுடையவர்‌, குலசேகரராய்க்‌ கொண்டு ஸமஸ்த துரிதஸ்ஹரான வயதாஸ்ரிமப்‌ பெருமாளை எக் காலத்‌திலும்‌ ஸந்தோஷத்துடனே ஆராதித்துக் கொண்டிருந்தார்‌,

ஸயிஷ்மணம்‌ வீஷ்ய பவித்ர ரூபம்‌ ஸமேத்ய ராமநுஜ தாஸ மேநம்‌ |
ஸமர்ச்ச யித்வா விவிதோபசாரைஸ் ஸ தர்ஸ யாமாஸ ரமாஸஹாயம்‌ ॥

[அந்த அயோத்யா ராமானுஜ தாஸர்‌-இளையாழ்வார்‌ பிள்ளையோடு வந்த இந்த சுத்த ஸ்வரூப ரான ராமாநுஜ தாஸரை கிட்டி வந்து பல வகைப்பட்ட உபசாரங்களைச்‌ செய்து ஆராதித்துப்‌ பின்பு பதரிசாச்ரம பெருமாளான ஸ்ரீயபதியை இவர்களுக்கு ஸேவை ஸாதிக்கப்‌ பண்ணினார்‌] என்று ராமாநுஜய்யங்கார்‌ பரம பாவநரா யிருக்கிற இவரைக்‌ கண்டு ஸேவித்து நர நாராயணப்‌ பெருமாளுக்கு விசேஷித்து தளிகைக்கு வரிசையாக ஸமர்ப்பித்துத்‌ தளிகை அமுது செய்தருளப்‌ பண்ணுவித்து உடனே அநுஸந்தாநம்‌ நடக்க வேணு மென்ன;
வரயோகி வராகதெள ஸகைதெள நர நாராயண ஸந்நிதெள புரஸ்தாத்‌ |
த்ரமிடோப நிஷந் மஹா பிரபந்த பிரதமோ உதாஹரணே ந்ய யுங்த வித்வாந் ॥

[வித்வானாகிற அயோத்யா ராமானுஜ ஐய்யங்கார்‌- மணவாள மா முனிகள்‌ ஸந்நிதி யிலிருந்து வந்த இவ் விருவரையும்‌-நர நாராயணப்‌ பெருமாள்‌ ஸந்நிதியில்‌ பெருமாளுக்கு முன்னிலையில்‌ திவ்ய ப்ரந்தம்‌ தொடங்கும்படி நியமித்தார்‌-. என்கிறபடியே அழகிய மணவாளமாமுனினுடைய ஸந்நிதி யினின்றும்‌ அவருடைய மரியாதையாக எழுந்தருளின இவர்களை நர நாராயணப்‌ பெருமாள்‌ திரு வோலக்கத்தலே அருளிச் செயலாகிய மஹா ப்ரபந்தாநுஸந்தானத்‌ தொடக்கத்திலே நியமிக்க, இளையாழ்வார்‌ பிள்ளையும்‌
ததா விதிஜ்ஜோ வித்‌ ப்ரஸாதாத்வ ரோப்யந்துர் துரி ரங்க தாம்நா |
நிவேநிதம்‌ பத்ய வரம்‌ த்வி கண்டம் படந்ஜகெள த்ராவிட வேதமேஷ। ॥

[முறை யறித்த இவ்விளையாழ்வார்‌ பின்ளை அவர்‌ நியமனத்‌தின் படியே, மணவாள மாமுனிகள்‌ முன்பே ஸ்ரீரங்க நாதரால்‌ மனத் தெளிவோடு அருளிச் செய்யப்பட்டதாய்‌ இரண்டு பாகங்கள்‌ கொண்ட (ஸ்ரீசைலேச’ என்ற ஸ்லோக ரத்நத்தை முதலில் சொல்லிப்‌ பின்பு திவ்ய ப்ரபந்தத்தை ஓதினார்‌.] என்‌கிறபடியே ராமாநுஜருடைய நியமனத்தின் படியே தொடங்குகிறவராய்க்‌ கொண்டு “ஸ்ரீஸைலேஸ தயா பாத்ரம்‌” என்னும் தனியனை முந்துற அனுஸந்தித்து மற்றத்‌ தனியன்களையும்‌ க்ரம ப்ரகாரம்‌ அநுஸந்தித்து ப்ரபந்தாநுஸந்தாநஞ்‌ செய்தருளினார்‌.

அது கண்டு ராமாநுஜய்யங்கார்‌ முதலானவர்கள்‌ விஸ்மிதராயிருக்க,
ஜஜ்ஜே அமுநா ஸ்வப்ந நிவேதிதம் ஹியத்‌ கதம்‌ பதர்யாஸ்ரம நித்ய வாஸிநா |
ப்ராகாஸி மந்த்ரர்ர்த்தமிதம்‌ முரத் விஷேத் யாயோத்ய ராமாநுஜ ஆவிஸிஷ்மயே 1

[பத்ரிகாச்ரமற்தில்‌ நித்ய வாஸம்‌ செய்யும்‌ இந்த முராரியான பகவானாலே தம் ஸ்வப்நததில்‌ அருளிச்‌ செய்யப்பட்டு எந்தத்‌ தனியன்‌ உண்டாயிற்றோ-மந்த்ரார்த்தங்களைத்‌ தன்னகத்தே
கொண்ட இந்தத்தனியன்‌ இவர்களால்‌ எப்படி வெளிப்படுத்தப்‌ பட்டது” என்று அயோத்யா ராமானுஜய்யங்கார்‌ மிக்க ஆச்சரிய மடைந்தார்‌]. என்று ‘ஸ்ரீபதரிகாச்ரமப்‌ பெருமாளாலே தமக்கு
ஸ்வப்நத்திலே அருளிச்‌ செய்யப்‌ பட்டதன்றோ இது ‘” என்று இவர்களாலே ப்ரகாசமாய்‌ மந்த்ரார்த்த மானத்தை யறிந்து இது க்ருஷ்ண லீலை யென்று ராமாநுஜய்யங்கார்‌ மிகவும்‌ ஆஸ்சர்யப்‌ பட்டு, பின்பு இந்த ஸ்லோகம்‌ தேவரீருக்கு வந்தபடி யென்னென்ன)-கோயிலிலும்‌ பெருமாள்‌-ஆசிநோதிஹி ஸாஸ்த்ரார்த்தாத்‌[சாஸ்த்ரப்‌ பொருள்களை வெளியிடுமவன்‌ ஆசாரியன்‌] என்கிற படியே இந்த ஸ்தலததிலே நர நாராயண ரூபேண பெரிய திருமந்தரத்யை வெளியிட்டருளினாப்‌ பாலே அந்த மந்த்ரார்த்தமான திவ்ய ப்ரபந்த தத் வ்யாக்யாநங்களை லோகோபகாரமாக ப்ரவர்த்‌திப்‌ பிக்கத்‌ திருவுள்ளமாய்‌ ”யதோசிதம்‌ சேஷ இதீரிதே”* [ஸமயத்‌துக்குத்‌ தக்கபடி அடிமைக்கு உறுப்பான பல சரீரங்களைக்‌ கொள்ளுகையால்‌ சேஷன்‌ என்று சொல்லப்பட்டவன்‌] என்கிறபடியே அசேஷ சேஷ வருத்தியிலும்‌ அந்வயித்திருக்கிற திருவநந்‌ தாழ்வானை ஜீயராக வவதரிக்கச்‌ சொல்லி நியோகிக்க, அவரும்‌ தத் கைங்கர்யமாய்‌ அவதரித்து திவ்ய ப்ரபந்ததத்‌ வ்யாக்‌யாதங்களை அதி சதுரராய்‌ நடத்திக் கொண்டு போர, அவருடைய வைபவங்களை ப்ரகாசஞ்‌ செய்தருளத்‌ திருவுள்ளமாய்‌ ஜீயரிடத்‌திலே தாம்‌ ஈடு கேட்டருள நியமிக்க, ஜீயரும்‌: இதுவுமொரு கைங்கர்யமென்று தொடங்கி. நடத்திச்‌ சாத்துகிற ஸமயத்திலே

ஆசார்ய சம்பாவனை காலத்திலே, அர்ச்சக புத்ரராம்‌ ரங்கநாயகன்‌ என்கிற பெயருடையரான அஞ்சு வயஸ்ஸூ உள்ளவர் மேலே பெருமாள் ஆவேஸித்து அருளிச்செய்த படியையும்‌, ‘ அந்தப்‌.
பிள்ளையைக்‌ கொண்டு வாழி திரு நாம மவதரிப்பித்தபடியையும்‌ ப்ரபந்தாநுஸத்தான காலத்திலே ஆதியிலே இந்தத் தனியனையும்‌ ப்ரபந்தம்‌ சாத்தினால்‌ இந்த வாழித் திருநாமத்தையும்‌ அநுஷத்‌திக்கும்படி திருமலை பெருமாள்‌ கோயில்‌ தொடக்கமான திவ்ய தேசங்களிலும்‌ மற்றெங்கும்‌ நடக்கும்‌ படிக்கு
ஸ்ரீபந்நகாதீஸ முநே பத்யம்‌ ரங்கேஸ பாஷிதம்‌ | அஷ்டோத்தர தசஸ் தாலேஷ் வநுஸந்தாநமாசரேத்‌ ॥
இத்யாஜ்ஞா பத்ரிகா விஷ்வக்ஸேநேந ப்ரதி பாதிதா | ததாரப்ய மஹத் பிஸ்ச பட்யதே ஸந்நிதே:புரா ॥

[ஸ்ரீரங்க நாதனால்‌ மணவாள மாமுனிகள்‌ விஷயமாக அருளிச்‌ செய்யப் பட்டது இந்த ஸ்லோகம்‌. இது தன்னை நூற்றெட்டுத்‌ திருப்பதி களிலும்‌ எல்லோரும்‌ அனுஸந்தானம் செய்யக் கடவர்கள்‌ -என்று நியமன பத்ரிகை ஸ்ரீஸேனை முதலியாரால்‌ அனுப்பப்பட்டது. அது முதலாகப்‌ பெரியோர்களாலும்‌ இஸ் ஸ்லோகம்‌ பெருமாள்‌ ஸந்நிதானத்தில்‌ முதலில்‌ அநுஸந்திக்கப்‌ பட்டு வருகிறது. என்கிறபடியே ஸ்ரீசேனை முதலியார்‌ திருமுகம்‌ வரவிட நடக்கிற படியையும்‌, திருவேங்கடமுடையான்‌ தீர்த்த
யாத்ரா ப்ராஹ்மணனுக்கு
உபதிஷ்டம்‌ மயாஸ்வப்நே திவ்யம்‌ பத்யமிதம்‌ ஸூபம்‌ |
வரயோகி ஸமாஸ் ரித்ய பவத:ஸ்யாத்‌ பரம்‌ பதம்‌ ॥

மிக வுயர்ந்ததும்‌ மங்களகரமுமான இந்த ஸ்லோகம்‌ கனவில்‌ உனக்கு உபதேசிக்கப்பட்டது. மணவாள மாமுனிகளை ஆஸ்ரயித்தால்‌ உனக்குப்‌ பரமபத ப்ராப்தி உண்டாகும்‌.] என்று.. ஸ்வப்நத்திலே இந்தத் தனியனையும்‌ ப்ரஸாதித்து சில நாட்களுக்குப்‌ பின்‌ அந்த ப்ராஹ்மணனை ஜீயர்‌ திருவடிகளிலே ஆஸரயிக்கும்‌ படிக்கு
இத் யுக்த்வாதம்‌ வ்ருஷாத்ரீஸோ ஸ்ரீபதாத ரேணு மேவச | தத்‌வா ஸூப்ரேஷ யாமாஸ கச்ச யோகி வரம்‌ ஸூசிம்‌.॥-[திருவேங்கடமுடையான்‌’ இங்ஙனம்‌ கூறிவிட்டு, ஸ்ரீ பாத ரேணுவையும்‌ அவனுக்குக்‌ கொடுத்து, பரிசுத்தரான ‘ மாமுனிகளிடம்‌ செல்வாயாக என்று சொல்லி விரைவாக அனுப்பினார்‌.] என்கிறபடியே அவருக்கு ஸ்ரீசடகோபனையும்‌ ஸ்ரீபாத ரேணுவையம ப்ரஸாதித்தருளின படியையும்‌, அவரும்‌ ஆஸ்ரயித்துத்‌ திருவடிகளைச்‌ சார்ந்த படியையும்‌, திருமாலிருஞ்சோலையழகர்‌ ஜீயர்‌ திருவடிகள்‌ ஸம்பந்த முடைய ஸேனை முதலியார்‌ முகமாக இந்தத் தனியனை அருளிச்‌ செய்தபடியையும்‌, பகவதுக்ததி யாயிருக்க ஈஷத் பேத முண்டாயிருந்ததே யானாலும்‌ அர்த்தைக்ய ப்ராதாந்யேந ஸேனை முதலியார்‌ ஆசார்ய கோடி ப்ரவிஷ்டராகையாலே “அவர்‌ திரு முகத்தின்படியே எங்கும்‌ அநுஸந்தித்துப்‌ போருகிறபடியையும்‌ ப்ரஹ்‌மசாரி சிறுமுறி கொடுத்ததையும்‌ ஸர்வ வ்ருத்தாந்தாந்தங்‌ களையும்‌ அருளிச் செய்யக் கேட்டு வித்தராய்‌ தமக்கு இந்தத்‌ தனியன்‌ வந்தபடியை அருளிச்‌ செய்யத்‌ தொடங்கினார்‌-

தனியனவதரித்த வருஷம்‌ மாதம்‌ முதலியன கூறல்‌
அதில்‌ முந்துற இத் தனியனும்‌ வாழித் திருதாமமும்‌ அவதரித்த வருஷம்‌ மாஸம்‌ தேதிகளைக்‌ கேட்டருள, இளையாழ்வார்‌ பிள்ளையும்‌
நல்லதோர்‌ பரீதாபி வருடந் தன்னில்‌ நலமான வவ் ஆவணியின்‌ முப்பத்‌ தொன்றில்‌
சொல்லரிய சோதியுடன்‌ விளங்கு வெள்ளித்‌ தொல் கிழமை வளர் பக்க நாலா நாளில்‌
செல்வ மிகு பெரிய திருமண்டபத்தில்‌ செழுந் திருவாய்மொழிப்‌ பொருளைச்‌ செப்புமென்று
வல்லி யுறை மணவாளரரங்கர்‌ நங்கண்‌ மணவாள மாமுனி வழங்கினாரே
—என்றும்‌,
ஆனந்த வருடத்தில்‌ கீழ்மை யாண்டில்‌ அழகான ஆனி தனின்‌ மூல நாளில்‌
பாநுவாரங் கொண்ட பகலில்‌ செய்ய ‘பெளரணையினாளி யிட்டுப்‌ பொருந்தி வைத்தே
ஆனந்த மயமான மண்டபத்தில்‌ அழகாக மணவாளரீடு சாத்த
வானவரும்‌ நீரிட்டவழக்கே என்ன மணவாள மாமுனிகள்‌ களித்திட்டாரே
–என்றும்‌

தத: கதாசிதாஹூய தமேநம்‌ முநி புங்கவம்‌ |
கிருபயா ஸாது ஸக்ருத்ய சரணாம் புஜ ஸமர்ப்பணாத்‌ ॥
தர்ஸயந்‌ துர்க்ரஹாரர்த்தாந் த்ரமிடோபநிஷத் கிராம்‌ |
ஸந்நிதெள வ்யாகுருஷ்வேதி ஸஸாஸ அமர ஸாஸந : ॥

என்கிறபடியே பெருமாளும்‌ ஒரு திருப் பவித்ரோத்ஸவத்‌ திரு நாளிலே அங்குண்டான அனைவரும்‌ பேரோலக்கமாக ஸேவித்துக்‌ கொண்டிருக்கச் செய்தே, ஜீயரும்‌ முதலிகளும்‌ பெருமாளை
மங்சகளாசானைம்‌ பண்ண எழுந்தருளின வளவிலே, பலரடியார்‌ முன்பருளிய பாம்பணை யப்பன்‌ என்கிறபடியே, தம்முடைய பரம கிருபையாலே உடையவருடைய வைபவத்தை நம்பி தாமே வெளியிட்டாப் போலே ஜீயருடைய மஹிமையை ப்ரகாசிப்பித் தருளுவதாகத்‌ திருவுள்ளம் புற்றி தாமும்‌ ஜீயருக்கு சிஷ்யராகுகையைக்‌ குறித்து ஜீயரைத்‌ தனித்தருளப் பாடிட்டருளி, “நாளை முதல்‌
நம்முடைய பெரிய திருமண்டப.த்திலே பெரிய வண்‌ குருகூர் நகர்‌ நம்பியான ஆழ்வாருடைய திருவாய்மொழியை ஈடு முப்பத்தாறாயிரம்‌ தொடக்கமான ஐந்து வ்யாக்யானங்களுடனே நடத்தும்‌”:
என்று நியமித்தருள,
மங்கள ஆயதநே ரங்கே. ரம்ய ஜாமத்ரு யோ விராட்‌ |
யுகபத்‌ த்ராவிடாம்நாய வ்யாக்யநத்யாந கெளதுகி–
–என்‌கிறபடியே, ‘“இப்படி ஏவி யருளுகிறதே!” என்று ஹ்ருஷடராய்‌

மஹாந் ப்ரஸாத இத்யஸ்ய ஸாஸநம்‌ ஸிரஸா வஹந்
ததைவ தத்ர வ்யாக்யாதும்‌ தத் க்ஷணாதுபசக்ரமே ॥
ஸ்ரீபதி ஸ்ரீபதிஸ் ஸ்வாமி மண்டபே மஹதி ஸ்‌வயம்‌ |
தத்‌வம் தஸ்ய ப்ரபந்தஸ்ப வ்யக்தம்‌ தேநைவ தந் ஸிதும்‌ ॥
ஸடவைரி முகைஸ் ருண்ஸந் தேசிகைர் திவ்ய தர்‌ஸநை |.
அத திவ்ய முநேஸ் தஸ்ய மஹிமாந மமாநுஷம்‌
அநு பூயே மஹா பூகணே கோபால மகிலோ ஜநா |
அமந் யத பரம் தந்ய மாத்மாநம்‌ தத்ர நிக்ஷிபந் ॥

என்கிறபடியே ஈடு தொடக்கமாக ஐந்து வ்யாக்யானங்களுடன்‌ மாறன்‌ பணித்த தமிழ்‌ மறைக்கு அர்த்தம்‌ நடத்துகிறபடியை அருளிச் செய்ய; (இன்பம்‌ பயக்க விருக்க நிலத்தேவர் குழுவிலே பாட்டு கேட்பிப்‌பதாக கான கோஷ்டியைப் பாரித்தாப் போலே பெருமாளும்‌ நாச்சி மாருடனே திவ்ய ஸிம்ஹாஸநத்திலே ஏறி யருளி அச் சேர்த்‌தியை யநுபவிக்கிற அயர்வறுமமரர்களான திருவநத்தாழ்வான்‌ பெரிய திருவடியாழ்வான்‌, ஸ்ரீசேநாபதி யாழ்வானாகிற நித்ய ஸூரிகளோடும்‌, வைகுந்தத்து முனிவரான நம்மாழ்வார்‌ தொடக்கமான ஆழ்வார்கள்‌ பதின்மரோடும்‌ ஸ்ரீரங்க மா மறையோரான அனைத்துப்‌ பரிகரத்தோடும்‌ அணி யரங்கத் திருமுற்‌றத்தடியார்‌களோடுங் கூடப்‌ பேரோலக்கமாக எழுந்தருளி யிருத்து “ரங்கி வத்ஸர மேக மேவம்‌ ஸ்ருணோத் வ்யக்தம் யதோக்தம்‌ க்ரமாத்‌- என்கிறபடியே திருச்செவி சாத்தியருள)அன்று ராத்ரி ஸ்வப்நத்தில பதர்யாஸ்ரம நாராயணன்‌ தமக்குப்‌ பாடமாமளவும்‌ ஸாதித்து ஸாயம் ப்ராத: அநு ஸந்தான காலத்திலே அநுஸந்தித்து ப்ரபந்தாநுஸந்தானஞ்‌ செய்யென்று நியமித்த படியைச்‌ சொல்லிக் கொண்டு விஸ்மிதராய்‌ ஆநந்த பரவசரா யிருகக, இளையாழ்வார்‌ பிள்ளை முதலானாரும்‌
பகவத் ப்ரஸாத லப்தமன்றோ இத் தனியன்‌?’‘ என்று பரஸ்பரம்‌ கொண்டாடிக்‌ கொண்டு மிகவும்‌ ஈடுபட்டிருக்க, ராமாநுஜ ஐயங்கார்‌ க்ரமத்திலே தேறி அழகிய மணவாள மா முனியினுடைய வைபவங்களை யெல்லாம்‌ அடியேனுக்கு இரங்கி ப்ரஸாதித்தருள வேணுமென்று திருவடிகளைப்‌ பிடித்து ப்ரார்‌த்‌திக்க, இளையாழ்வார்‌ பிள்ளையும்‌ ஒமறைந்து மடத்திலே யாகிறதென்ன; திருப்பாவை
அநுஸந்தாநத்தையும்‌ நிறைவேற்றிச்‌ சாத்தி தீர்த்த ப்ரஸாதங்கஞம்‌ விநியோகமாய்‌ இளையாழ்வார்‌ பிள்ளைக்கு வரிசைகளும்‌ ப்ரஸாதித்தனுப்பி யருள, அவரும்‌ ராமாநுஜய்யங்கார்‌ மடத்திலே
யெழுந்தருளி அவருக்கு அழகிய மணவாள மாமுனியினுடைய வைபவங்களை யெல்லாம்‌ ஸாதித்து உகப்பித்தருளினார்‌, ராமாநுஜய்‌யங்காரும்‌ லைபவங்களை யெல்லாங் கேட்டு வித்தராய்‌ ஜீயரைக்‌
கண்டு ஸேவிக்க வேணுமென்று அத்யபிநிஷ்டராயிருக்க’ அவருடைய மநஸ்ஸை யறிந்து ராமாநுஜதாஸர்‌ -பத்ரிகாச்ரமம்‌ முதலான திவ்ய தேசங்களில்‌ கைங்கர்யங்களுக்கு தேவரீர்‌ நியமித்த படிக்கு சில நாளைக்கு ஸேலித்துக் கொண்டிருந்து ஜீயர்‌ திருவடிகளை ஸேவிக்க விடை கொள்ளுகிறேன்‌” என்று சொல்லி,தேவரீர்‌ இளையாழ்வார்‌ பிள்ளையுடன்‌ கோயிலுக்கு எழுந்தருள
வென்று அருளிச்‌ செய்ய, ராமாநுஜய்யங்காரும்‌ மிகவும்‌ ப்ரியப்‌பட்டு அவரை பஹுவாக உபலாளித்தருளி ஜீயர்‌ திருவடி நிலைகளை வரிசையுடன்‌ எழுந்தருளப்‌ பண்ணி வைத்துக்‌ கொண்டுஇளையாழ்வார்‌ பிள்ளையும்‌ ராமா னுஜய்யங்காரும்‌ திருமலையிலே சென்று திருவேங்கடமுடையானை ஸேவிக்க நிற்க, அப்பனும்‌ இவர்களை மிகவும்‌ க்ருபை பண்ணி யருளி அயோத்யை ராமானுஜய்யங்காருக்குச்‌ சில கைங்கர்‌யங்களை நியமிக்க, அவரும்‌ அதற்கு அங்கே நிற்க வேண்டுகையாலும்‌ ஜீயரைத் தம்முடைய மநோரதத்தின்படி ஸேவிக்கப்‌ பெறாமையாலும்‌ ப்ரீத்யப்ரீதி ஸமராயிருத்தார்‌ ;மஹாந் ப்ரஸாத இத்யஸ்ய ஸாஸநம்‌ ஸிரஸா வஹந்
ததைவ தத்ர வ்யாக்யாதும்‌ தத் க்ஷணாதுபசக்ரமே ॥
ஸ்ரீபதி ஸ்ரீபதிஸ் ஸ்வாமி மண்டபே மஹதி ஸ்‌வயம்‌ |
தத்‌வம் தஸ்ய ப்ரபந்தஸ்ப வ்யக்தம்‌ தேநைவ தந் ஸிதும்‌ ॥
ஸடவைரி முகைஸ் ருண்ஸந் தேசிகைர் திவ்ய தர்‌ஸநை |.
அத திவ்ய முநேஸ் தஸ்ய மஹிமாந மமாநுஷம்‌
அநு பூயே மஹா பூகணே கோபால மகிலோ ஜநா |
அமந் யத பரம் தந்ய மாத்மாநம்‌ தத்ர நிக்ஷிபந் ॥

என்கிறபடியே ஈடு தொடக்கமாக ஐந்து வ்யாக்யானங்களுடன்‌ மாறன்‌ பணித்த தமிழ்‌ மறைக்கு அர்த்தம்‌ நடத்துகிறபடியை அருளிச் செய்ய; (இன்பம்‌ பயக்க விருக்க நிலத்தேவர் குழுவிலே பாட்டு கேட்பிப்‌பதாக கான கோஷ்டியைப் பாரித்தாப் போலே பெருமாளும்‌ நாச்சி மாருடனே திவ்ய ஸிம்ஹாஸநத்திலே ஏறி யருளி அச் சேர்த்‌தியை யநுபவிக்கிற அயர்வறுமமரர்களான திருவநத்தாழ்வான்‌ பெரிய திருவடியாழ்வான்‌, ஸ்ரீசேநாபதி யாழ்வானாகிற நித்ய ஸூரிகளோடும்‌, வைகுந்தத்து முனிவரான நம்மாழ்வார்‌ தொடக்கமான ஆழ்வார்கள்‌ பதின்மரோடும்‌ ஸ்ரீரங்க மா மறையோரான அனைத்துப்‌ பரிகரத்தோடும்‌ அணி யரங்கத் திருமுற்‌றத்தடியார்‌களோடுங் கூடப்‌ பேரோலக்கமாக எழுந்தருளி யிருத்து “ரங்கி வத்ஸர மேக மேவம்‌ ஸ்ருணோத் வ்யக்தம் யதோக்தம்‌ க்ரமாத்‌- என்கிறபடியே திருச்செவி சாத்தியருள)அன்று ராத்ரி ஸ்வப்நத்தில பதர்யாஸ்ரம நாராயணன்‌ தமக்குப்‌ பாடமாமளவும்‌ ஸாதித்து ஸாயம் ப்ராத: அநு ஸந்தான காலத்திலே அநுஸந்தித்து ப்ரபந்தாநுஸந்தானஞ்‌ செய்யென்று நியமித்த படியைச்‌ சொல்லிக் கொண்டு விஸ்மிதராய்‌ ஆநந்த பரவசரா யிருகக, இளையாழ்வார்‌ பிள்ளை முதலானாரும்‌
பகவத் ப்ரஸாத லப்தமன்றோ இத் தனியன்‌?’‘ என்று பரஸ்பரம்‌ கொண்டாடிக்‌ கொண்டு மிகவும்‌ ஈடுபட்டிருக்க, ராமாநுஜ ஐயங்கார்‌ க்ரமத்திலே தேறி அழகிய மணவாள மா முனியினுடைய வைபவங்களை யெல்லாம்‌ அடியேனுக்கு இரங்கி ப்ரஸாதித்தருள வேணுமென்று திருவடிகளைப்‌ பிடித்து ப்ரார்‌த்‌திக்க, இளையாழ்வார்‌ பிள்ளையும்‌ ஒமறைந்து மடத்திலே யாகிறதென்ன; திருப்பாவை
அநுஸந்தாநத்தையும்‌ நிறைவேற்றிச்‌ சாத்தி தீர்த்த ப்ரஸாதங்கஞம்‌ விநியோகமாய்‌ இளையாழ்வார்‌ பிள்ளைக்கு வரிசைகளும்‌ ப்ரஸாதித்தனுப்பி யருள, அவரும்‌ ராமாநுஜய்யங்கார்‌ மடத்திலே
யெழுந்தருளி அவருக்கு அழகிய மணவாள மாமுனியினுடைய வைபவங்களை யெல்லாம்‌ ஸாதித்து உகப்பித்தருளினார்‌, ராமாநுஜய்‌யங்காரும்‌ லைபவங்களை யெல்லாங் கேட்டு வித்தராய்‌ ஜீயரைக்‌
கண்டு ஸேவிக்க வேணுமென்று அத்யபிநிஷ்டராயிருக்க’ அவருடைய மநஸ்ஸை யறிந்து ராமாநுஜதாஸர்‌ -பத்ரிகாச்ரமம்‌ முதலான திவ்ய தேசங்களில்‌ கைங்கர்யங்களுக்கு தேவரீர்‌ நியமித்த படிக்கு சில நாளைக்கு ஸேலித்துக் கொண்டிருந்து ஜீயர்‌ திருவடிகளை ஸேவிக்க விடை கொள்ளுகிறேன்‌” என்று சொல்லி,தேவரீர்‌ இளையாழ்வார்‌ பிள்ளையுடன்‌ கோயிலுக்கு எழுந்தருள
வென்று அருளிச்‌ செய்ய, ராமாநுஜய்யங்காரும்‌ மிகவும்‌ ப்ரியப்‌பட்டு அவரை பஹுவாக உபலாளித்தருளி ஜீயர்‌ திருவடி நிலைகளை வரிசையுடன்‌ எழுந்தருளப்‌ பண்ணி வைத்துக்‌ கொண்டுஇளையாழ்வார்‌ பிள்ளையும்‌ ராமா னுஜய்யங்காரும்‌ திருமலையிலே சென்று திருவேங்கடமுடையானை ஸேவிக்க நிற்க, அப்பனும்‌ இவர்களை மிகவும்‌ க்ருபை பண்ணி யருளி அயோத்யை ராமானுஜய்யங்காருக்குச்‌ சில கைங்கர்‌யங்களை நியமிக்க, அவரும்‌ அதற்கு அங்கே நிற்க வேண்டுகையாலும்‌ ஜீயரைத் தம்முடைய மநோரதத்தின்படி ஸேவிக்கப்‌ பெறாமையாலும்‌ ப்ரீத்யப்ரீதி ஸமராயிருத்தார்‌ ;

மேலும்‌ கோயிலில்‌ நடந்தவை ‘
இனிக் கோயில்‌ வ்ருத்தாந்தம்‌-
திருவேங்கடமுடையான்‌ ராமாநுஜ அய்யங்காருக்கு கைங்கர்யம்‌ நியமித்தருளின தினத்‌திலே திருமலை யாழ்வாரிலே பகவத்‌ விஷய காலஷேபம்‌ நடத்தி யருள, அற்றைக்கு ஒழிவில்‌ காலத்தறுவாய்‌ நடந்து செல்ல,-ஒழிவில்காலமெல்லாம்‌ உடனாய்‌ மன்னி வழுவிலா வடிமை செய்ய வேண்டும்‌-என்று ௨க்தி மாத்ரமாயொழிவதே! என்று மிகவுத்‌ தளர்ந்து பரவசராய்ப்படுப்பதும்‌ இருப்‌பதும்‌ நிற்பதும்‌ புலம்புவதுமாயிருக்க, அற்றைக்கு முதல் நாள் ராத்ரி ப்ரதிவாதிபயங்கரமண்ணா ஸ்வப்நத்திலே திருவேங்கடஜீயர்‌ என்னும்‌ திரு நாமத்தை யுடை த்தாயிருக்கிற ஒரு ஏகாங்கி சென்று, “வாரீர்‌! ஸ்ரீவைஷ்ணவ தாஸரே நாளை ஒழிவில் கால வ்யாக்யாநாவஸரத்‌திலே ஜீயர் கைங்கர்ய ருசி விவசராயிருப்பர்‌, அவருக்கு சேஷசைலத்‌திலே சேஷாவதராமான ஜீயர்‌ மனோரதப்படியே கைங்கர்யம்‌ கொண்டருளுகிறோம்‌ என்று நீர்‌ விண்ணப்ஞ் செய்யும்‌’; என்று இப்படிக்‌ கண்டு எழுந்திருந்து வித்தராய்‌ ‘ ஈதொரு ஸ்வப்ந வைபவமிருந்தபடியே!” என்று எண்ணிக் கொண்டு நித்ய கர்மாநுஷ்‌டானங்களை நிறைவேற்றி மடத்திலே யெழுந்தருளித்‌ திருமலை யாழ்வாரிலே ஜீயரை தண்டன்‌ ஸமர்ப்பித்து, எழுந்தாருளியிருக்‌கிற ப்ரகாரத்தைக் கண்டு தம்முடைய ஸ்வப்ந மிருந்த ஸ்த்திதியும்‌ சேர்ந்திருக்கிற படியையுங்கண்டு, ஹ்ருஷ்டராய்‌ இந்த ஸ்வப்ந வ்ருத்தாந்தத்தை ஜீயர்‌ திருவுள்ளத்தில் படுத்த, ஜீயரும்‌ -இதுவுமொரு க்ருபையே!’” என்று ஹருஷ்டராய்‌ அண்ணாவை உபலாளித்தருளி, புநடபுந: கேட்டருளி, திக் கஜங்களை ‘இது எப்படி இருக்கிறது?? என்று கேட்டருள, அவர்களும்‌ “இந்த வேளை திருமலையிலே ஒரு அத்புத முண்டாயிருக்க வேணும்‌; அத்தை யறியும்‌ படிக்கு ஒருவரை நியமித்தருள வேணும்‌” என்று விண்ணப்பம் செய்ய; அவ்வளவிலே ௮ழகரண்ணன்‌ -எழுத்திந்து தண்டன்‌ ஸமர்ப்பித்து, “அடியேன்‌ தேவரீர்‌ திருவடிகளை – முன்னிட்டுக்‌ கொண்டு திருமலைக்கு விடை கொண்டு அப்பனையும்‌ – ஸேலித்து செய்தியையும்‌ அறித்து கொண்டு விடை கொள்ளுகிறேன்‌’ என்று விண்ணப்பஞ் செய்ய, ஜீயரும்‌ போர உகந்தருளி அனுப்பி யருள,அவரும்‌ அதி த்வரையாகக்‌ திருமலையிலே சென்று பெருமாளை ஸேவிக்க, உடனே இளையாழ்வார்‌ பிள்ளையைக் கண்டு அந்யோந்ப
வந்தந பரராய்க் கொண்டு குசல ப்ரச்நம்‌ பண்ணிக் கொண்டு அயோத்யை ராமாதுஜய்யங்கார் பாடே செல்ல, அழகரண்ணனுக்கு பஹுமாநம் பண்ணி ப்ரதிபத்தி பண்ண, ஜீயருடைய
வைபவங்களை புந:புந: கேட்டுத்‌ திருவேங்கடமுடையான்‌ தமக்குக்‌
கைங்கர்யங்கள்‌ நியமித்தருளின படியையும்‌ தாம்‌ ஜீயர்‌ திருவடிகளிலே ஆஸ்ரயிக்க வேணுமென்கிற த்வரையையும்‌ அருளிச்‌ செய்ய அழகரண்ணனும்‌, ஜீயருக்கு உகப்பு கைங்கர்யம்‌ செய்து போருகையாய்‌ இருக்குமென்று, ப்ரதிவாதி பயங்கரருடைய ஸ்வப்ந வ்ருத்தாந்‌தத்தையு மருளிச்செய்ய; ராமாநுஜ அய்யங்காரும்‌, “ஆனால்‌ தன்‌யனானேன்‌, ஜீயர்‌ நியமனப் படிக்கு அவருடைய திருக்கைகளாலே யதா-சக்தி செய்து போருகிறேன்‌” என்று சொல்லி இளையாழ்வார பிள்ளையையும்‌ அழகரண்ணனையும்‌ கோயிலுக்கு அனுப்பிவிட அவர்களும்‌ உடனே புறப்பட்டெழுந்தருளி ஜீயரை தண்டன்‌ ஸமர்ப்பித்து வடக்கில்‌ எம்பெருமான்களுடைய அபய ஹஸ்த ப்ரஸாதங்களையும்‌ ஸமர்ப்பித்துத்‌ திருவடி நிலைகளையும்‌ திருவடிகளிலே சேர்க்க, ஜீயரும்‌ இளையாழ்வார் பிள்ளையை பஹு நாளைக்‌காகக்‌ கண்டோமே! என்று மிகவும்‌ க்ருபை பண்ணி யருளி, அழகரண்ணனையும்‌ போர க்ருபை செய்தருளி, ப்ரதிவாதி பயங்கர மண்ணாவை -உம்முடைய ஸ்வப்நம்‌ பல வ்யாப்தமாயிற்று; உமக்‌காக வன்றோ திருவேங்கட முடையான்‌ க்ருபை பண்ணி யாருளினார்‌!-என்று உகப்பு தோன்ற அடிக்கடி அருளிச் செய்து கொண்டு இளையாழ்வார் பிள்ளையை அடிக்கடி திருக்கையாலே தழுலி
உபலாளித்து, ”நெடுந் தூரம்‌ சென்று வந்தீரே!” என்று அருளிச்‌ செய்து கொண்டு ராமாநுஜ அய்யங்கார்‌ ஸ்வரூப ஸ்வபாவங்களை உகந்தருளிக்‌ கேட்டுக் கொண்டு, நம்பெருமாள்‌, ஸ்ரீபதிகாச்ரமப்‌
பெருமாள்‌, திருநாராயணப்‌ பெருமாள்‌, திருவேங்கடமுடையான்‌,அழகர்‌, இவர்களுடைய ஐக கண்ட்யத்தையும்‌ அருளிச் செய்து கொண்டு எழுந்தருளி யிருந்தார்‌. இந்த அர்த்தங்களை யெல்லாம்‌
வரவரமுநி வைபவ விஜயம்‌ என்கிற ப்ரபந்தத்திலே கந்தாடை யப்பன்‌ விஸ்த்ருதமாக அருளிச்‌ செய்ய ஜீயர்‌ திருச்செவி சாத்தி யருளினார்‌.

பின்பொருநாள்‌ திருக் காவேரியினின்றும்‌ எழுந்தருளச்‌ செய்தே ஜீயருக்கு இளையாழ்வார்‌ பிள்ளை திருக்கை ஸர்ப்பித்துக்‌ கொண்டு வரும் போது ப்ரஸங்காத்‌ அயோத்யை ராமாநுஜ
அய்யங்காருடைய மநோ ரதத்தை விண்ணப்பஞ் செய்யக்கேட்‌டருளி, ‘திருவேங்கடமுடையானை இன்னுமொருக் கால்‌ ஸேவிக்‌கையுமுண்டாம்‌, அப்போது அவர்‌ மநோரதப் படியே ஆகிறது;
இப்போது அவர்‌ கைங்கர்யஸ்ரீ யுடனே யிருக்கக் கடவர்‌ ‘ என்றருளிச்செய்ய, பின்னும்‌ ராமாநுஜ அய்யங்கார்‌ இந்‌தத் திருவடி நிலைகளைத்‌ தமக்குத்‌ திருவாராதனமாசு ப்ரார்த்தித்துக்‌ கொண்‌
டிருக்கிறாரென்று விண்ணப்பஞ்செய்ய , அப்படியே ஆகிறதென்று மடத்திலே யெழுந்தருளி னவுடனே தைவாதீனமாகத்‌ திருவடி ஸம்பந்தமுடையரான சில வைஷ்ணவர்கள்‌ திருமலைக்கு விடை
கொண்டு திருப் புரட்டாசித்‌ திருநாள்‌ ஸேவித்து விடை கொள்ளுகிறோம் என்று தண்டன்‌ சமர்ப்பித்து நிற்க, போர உகந்தருளி,புணர்‌த்த கையினராயடியேனுக்கும்‌ போற்றுமினே என்று திருமலையை நோக்கித் தொழுது ராமாநுஜ அய்யங்காருக்குத்‌ திருவடி நிலைகளை ஸாதித்து விடை கொடுத்தருள; அவர்களும்‌ புறப்பட்டுத்‌ திருமலைக்கு எழுந்தருளினார்கள்‌.

கந்தாடை அண்ணன்‌ திருமலைக்கு எழுந்தருளல்‌
பின்பொரு நாள்‌ கந்தாடையண்ணனை கடாஷித்தருளி திரு வேங்கட முடையானை மங்களாசாஸநம்‌ பண்ண வேண்டாவோ?என்ன, அப்பிள்ளை, “காவேரி கடவாத கந்தாடையண்ணரன்றோ?” என்ன, அரங்கத்தரவினணையான்‌ வானவர்கள்‌ சந்தி செய்ய நின்றது அங்கேயே யன்றோ? என்று ஜீயரருளிச்‌ செய்ய,அண்ணனும்‌ அப்படியே நியமித்தருள வேணும்‌” என்ன, அவரையுங் கூட்டிக்‌ கொண்டு பெருமாள்‌ ஸந்நிதியிலே எழுந்தருளி விடை கொடுப்பித்தருளி உத்தம நம்பியையும்‌ கூடவே ஸேவித்துக்‌ கொணடு போரும்படி நியமித்தருளி, அனேகம்‌ ஸ்ரீவைஷ்ணவர்‌களையும்‌ ஜீயர்களையும்‌ ஏகாங்கிகளையும்‌ சாத்தாத ஸ்ரீவைஷ்ணவர்‌களையும்‌ கூடப் பயணஞ்‌ செய்தருளி யிருக்கிற வவஸரத்திலே; உத்தம நம்பியும்‌ (அண்ணனுக்குத்‌ திருப்பல்லக்கு முதலான வரிசைகளைச்‌
சேர்த்துப்‌ புறப்பட்டிருக்கும்படிக்கு விண்ணப்பஞ் செய்து கொண்டு நிற்க, அண்ணனும்‌ அவைகளை யெல்லாம்‌ நிரோதித்து ஸ்ரீ வைஷ்‌ணவ கோஷ்டியை ஸேவித்துக் கொண்டு திருமலைக்குப்‌ பெருகம் கூட்டத்துடனே செல்லுகிற நமக்கு உசிதமன்றென்று மறு விண்ணப்பஞ் செய்ய வொண்ணாதபடிக்கு நிஷேஷித்துவிட்டு ” திரு நாளிலே இரண்டு மூன்று நாளாகிலும்‌ மங்களாசாளனமாக
வேண்டும்‌” என்று அதி த்வரையாகப்‌ பயண கதிகளிலே யெழுந்தருளி திருமலை யடிவாரத்திலே அடிப்புளி யழகிய சிங்கரைத்‌ தொழுது திருமலை யேறி யருள; அச்செய்தியைத்‌ திருமலை யநந்தாழ்வான் கேட்டருளி,(இவர்‌ ஒன்றான திருமலை யநத்தாழ்வான்‌ திருவம்ச்யராய்‌ அவர்‌ ஸ்தாநத்தில்‌ கைங்கர்யம்‌ பண்ணி யிருந்தவர் ) பெரிய கேள்வி ஜீயர்‌ முதலானார்‌, மற்ற ஆசார்ய புருஷர்கள்‌, ஸ்தலத்தார்‌ எல்லாருக்குமறிவிக்க, அவர்களெல்லாரும்‌ போர உகந்தருளி வெள்ளிக்கிழமை புழுகுக் காப்பு. உத்ஸவத்தை அண்ணன்‌ மங்களாசாஸனம்‌ செய்தருள வேணுமென்று ப்ராத; கால வேளைக்கு நிறுத்தி, பெருமாள்‌ திருத்தேரிலே ஏறி யருளினவுடனே அனைவரும்‌ வரிசையுடனே ௮ண்ணனை எதிர்‌ கொண்டு எழுந்தருளப் பண்ணுவித்துக் கொண்டு வந்து திருத்‌தேரிலே பெருமாளை மங்களாசாஸனம்‌ பண்ணுவித்து, பின்பு திருத்தேர்‌ திருவீதி யெழுந்தருள இயல்‌ தொடங்குகிற விடத்திலே அயோத்யை ராமாநுஜ அய்யங்கார்‌ கண்டு பக்தி பரவசராய்‌ ஸேவித்து நிற்க, அவரையும்‌ க்ருபை பண்ணி யருளி எழுந்தருளா நிற்கிற வளவிலே:
ஸ்ரீபத்ரிகாச்ரமத்தினின்றும்‌ ராமாநுஜ தாஸர்‌ வந்து அசிந்தமாக அண்ணன் எழுந்தருளி யிருக்கக்‌ கண்டு மிகவும்‌ வித்தராய்‌ உகந்து திருவடிகளிலே தண்டன்‌ ஸமர்ப்பிக்க,, அண்ணனும்‌ போர வுகந்தருளி எடுத்தணைத்தக்‌ கொண்டு அத்யந்தம்‌ ஹர்ஷ பரவசராய்‌ “வாரீர்‌ ராமாநுஜ தாஸரே! உம்மைக்‌ காணப் பேருமே பெற்றோமே! தேசாந்தர கதனான புத்ரனிட த்தில்‌ பித்ரு ஹ்ருகயம் போலே
ஜீயர்‌ திருவுள்ளம்‌ உம்மிடத்தலே ஒருமைப் பட்டிருக்கிறது’என்று அங்குள்ள பெரியோர்களுக்கெல்லாம் இவருடைய ஆசார்ய நிஷ்டையை யருளிச்செய்து, திருத்தேர்‌ நிலையில்‌ எழுந்தருள, பெருமாளும்‌ உள்ளே எழுந்தருளின வுடனே ஸேவாக்ரமத்திலேஅப்பனை பாதாதி கேசாந்தமாகவும்‌ கேசாதி பாதாந்தமாசுவும்‌ ஸேவித்து பூர்ண மநோரதராய்‌, புழுகுக் காப்பு ஸேவையுமாய்‌,தீர்த்தம்‌ ஸ்ரீசடகோபன்‌, ஸ்ரீபாத ரேணு ப்ரஸாதித்தருள ஸ்லீகரித்தருளி, பின்பு அநந்தாழ்வான்‌ திருமாளிசைக்கு எழுந்தருளப்‌ பண்ணுவித்துக் கொண்டு எழுந்தருள, ‘அங்கே யெழுந்தருளின வுடனே அநந்தாழ்வானும்‌ ஸர்வோபசாரங்களையுஞ்‌ செய்தருள அங்கே எமுந்தருளி இருந்தார்‌.

அயோத்யை ராமாநுஜ அய்யங்கார்‌ அண்ணனை ஆச்ரயித்தது.
ராமர்நுஜ தாஸரும்‌ ராமாநுஜ அய்யங்காரைக்‌ கண்டு,“தேவரீர்‌ திருமுக ப்ரசாரம்‌ அவ் விடத்தில்‌ கைங்கர்யங்களெல்லாம்‌ அமர்த்தி, சிறிய ராமானுஜ அய்யங்காரைக்‌ கற்பித்து அவரைக்‌ கொண்டு ஸகல வித கைங்கர்யங்களும்‌ நடக்கும்படி பண்ணி வந்தேன்‌; தேவரைக்‌ காணப் பெற்றேன்‌; அண்ணன்‌ திருவடி நிலையும்‌ ஸேவிக்கப் பெற்றேன்‌? என்று விண்ணப்பஞ்செய்ய;
ராமாநுஜ அய்யங்காரும்‌ போர உகந்தருளித்‌ தமக்கு ஹிதங்‌ கேட்கத்‌ தொடங்கி அப்பன் திருவடி தொழுதவன்று தொடங்கி இற்றை வரைக்கும்‌ தம்முடைய வ்ருத்தாந்தங்களை யெல்லாம்‌
விண்ணப்பஞ் செய்யக்‌ கேட்டு அவருக்கு ஹிதமருளிச்‌ செய்தபடி,-“ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயிக்க வில்லை யென்கிற குறையை விடும்‌;அதிலும்‌ அதிசயமாய்‌ ஜீயருக்கு இரட்டிப்பு உகப்பாயிருக்கும்‌:நாளை தீர்த்தம்‌ திருவோணத்தில்‌ அண்ணன்‌ திருவடிகளிலே ஆஸ்ரயணமாக:’ என்று நியமிக்க: ராமாநுஜ அய்யங்காரும்‌ அதிஸந்தோஷத்துடனே அவரையுங் கூட்டிக் கொண்டு அண்ணனைத்‌ தெண்டன்‌ மைர்ப்பித்து நின்று இச் செய்தியை விண்ணப்பம் செய்ய, அண்ணனும்‌ ”ஜீயருடைய நியமனமும்‌ அப்படியே இருக்கும்‌’* என்றருளிச்‌ செய்து, -ராமாநுஜ தாஸர்‌ ஹ்ருதமமும்‌
ஜீயர்‌ திருவுள்ளமும்‌ ஏகமாய் இருந்தபடியென்‌!” என்று போர வித்தராயிருக்க, அண்ணனும்‌ “ஜீயர்‌, தமக்கு ப்ரதி பிம்பமாக அபிமானித்தருளி திவ்ய தேச மங்களாசாஸநம்‌ செய்தபடி அறிவீரே’” என்று அருளிச்‌ செய்து வைஷ்ண கோஷ்டி புரஸ்ஸரமாக ராமாநுஜ அய்யங்காருக்கு ஸமாஸ்ரயணம்‌ செய்தருளனார்‌. ராமாநுஜ தாஸரும்‌ பண்டைக்‌ குலத்தைத்‌ தவிர்த்து தாமும்‌ வேதகப்‌ பொன்னானார்‌ பின்பு அண்ணன்‌ இருவரையும்‌ கூட்டிக் கொண்டு கோவிலிலே எழுந்தருளி அப்பனை மங்களாசாஸதம்‌ செய்தருளா நிற்க , பெருமாளும்‌ அண்ணனை மிகவும்‌ க்ருபை. பண்ணி யருளி ராமாநுஜ அய்யங்காருக்கு அண்ணன்‌ திருவடி ஸம்பந்தம்‌ தோற்ற
“கந்தாடை ராமாநுஜ அய்யங்கார்‌” என்று அருள்‌ பாட்டுடன் பட்டு வஸ்த்ரம்‌ ப்ரஸாதித்து இதுவே இவருக்குத்‌ திருநாமமென்று விதித்தருளிச் செய்து உபலாளித்தருளினார்‌ பின்பு பெரிய கேள்வி சிறிய கேள்வி ஜீயர்கள, ஏகாங்கிகள், ஆசார்ய புகுஷர்கள்‌ முதலான ஸ்தலஸ்தாரனைவரும்‌ அண்ணன்‌ சந்நிதிக்கெழுந்‌தருளி, சிறப்பு வரிசைகளும்‌ ஸமர்ப்பித்து, ஆஸ்ரயிக்க வேண்டியவர்கள்‌ ஆஸ்ரயித்து ஸ்ரீபாத தீர்ததம்‌ ஸ்வீகரித்து, அமுது செய்யத் தக்கவர்கள்‌ அமுது செய்தருளி, தளிகை ப்ரஸாத ப்ராப்‌தாக்கள்‌ தளிகை ப்ரஸாதம்‌ ஸ்வீகரித்து ௨பலாளித்து க்ருதார்த்த ரானார்கள்‌-

அண்ணன்‌ திருமலையினின்‌ றும்‌-கோயிலுக்கெழுந்தருளல்‌
மற்றை நாள்‌ அண்ணனை அனைவரும்‌ கோவிலுக்கு வரிசையுடனே எழுந்தருளப்‌ பண்ணிக் கொண்டு வந்து மங்களாசாஸநம்‌ பண்ணின வுடனே பெருமாளரையில் பீதக வண்ண வாடையான பெரிய பீதாம்பரம்‌ முதலான வரிசைகளெல்லாம்‌ ஸாதித்தருளி கந்தாடை ராமாநுஜ ௮ய்யங்காருடைய திருப் பல்லக்கு, சத்ர சாமராதிகள்‌, மற்றை ஸமர்ப்பணைகளை யெல்லாம்‌ பரிக்ரஹிக்கும்‌ படிக்கு அர்ச்சக முகேந நியமித்தருளி விடைகொடுத்தருள உடனே புறப்பட்டருளிக்‌ கீழ்த் திருப்பதியிலே யெழுந்தருளி ஸ்ரீகோவித்த ராஜப்‌ பெருமாளையும்‌ மற்றவர்களையும்‌ மங்களாசாஸநஞ்‌ செய்தருளி வரிசை பெற்றுப்‌ புறப்பட்டு எறும்பியிலே எழுந்தருள, அப்பா திருத் தகப்பனார்‌ ஐயைகளும்‌ அழகிய மணவாள
தாஸராகிய ஸ்ரீவைஷ்ணவர்களுடனே எதிர் கொண்டு ஸேவித்துத்‌ தம்முடைய திருமாளிகையிலே எருந்தருளப்‌ பண்ணி வைத்துக்‌ கொண்டு சென்று உபசரித்தருளின வளவிலே; அண்ணன்‌,
இளையாழ்வார்‌ பிள்ளை, திருவாய்மொழியாழ்வார்‌ பிள்ளை முதலான ஆசார்யர்களும்‌, எம்பெருமானார்‌ ஜீயர்‌, திருவேங்கடஜீயர்‌ முதலான ஜீயர்களும்‌, முந்தி எழுந்தருளுகிறார்கள்‌’- என்‌கை -“அடியேன்‌ சேரிக்கு எழுந்தருளி க்ருபை பண்ணி யருளாமல்‌ அப்படிச்‌ செய்தருளலாமோ?” என்று ஐயைகள்‌ வெறுத்துக்‌ கொண்டு சுத்த ஸத்வமண்ணனைக்‌ கேட்டருள, அண்ணனும்‌,“ஸ்வாமி ஆசார்யரண்ணன்‌, தாம்‌ திருப் பல்லிக்கலே யெழுந்தருளச்‌ செய்தே அவர்களும்‌ கூட எழுந்தருளப் போகாதென்று முன்னே அனுப்பி யருளினார்‌. அவர்களும்‌, பத்மபுரமென்சிற திருமலையடி வாரத்திற் கெழுந்தருளுகிறார்கள்‌’” என்ன, ஆகில்‌ தாம்‌ எழுதந்தருளி அவர்களை யெல்லாரையும்‌ எழுந்தருளப்‌ பண்ணிக் கொண்டு வர வேணுமென்று சுத்த ஸத்வ மண்ணன்‌ திருக் கைகளைப் பிடித்துக்‌
கொண்டு பத்ம புரம் யெழுந்தருள, அவர்களுங் கண்டு அந் யோந்யலம் வந்தந பராய்‌ குசல ப்ரச்நம்‌ பண்ணிக் கொண்டு எல்லாரும்‌ எறும்பியிலே ஐயைகள்‌ திருமாளிகையிலே எழுந்தருளி சக்ரவர்‌த்தி திருமகன்‌ அதி விஜ்ரும்‌பணமாக பூர்ணமாக அமுது செய்தருளி ததீயாராதநமும்‌ நடக்க, மற்றை நாள்‌ திருக்‌ கடிகையில்‌ ௮க்‌காரக் கனியை யடைந்து மங்களாசாஸநஞ் செய்தருளிப்‌ புறப்‌பட்டுப்‌ புட்குழி யம் போரேற்றைத் தொழுது பெருமாள்‌ கோயிலுக் கெழுந்தருள, அங்குள்ள ஆசார்யர்களும்‌ கோவிலனைத்துக் கொத்தும்‌ எதிர் கொண்டு எழுந்தருளிவித்துக்‌ கொண்டு போய்‌ பேரருளாளர்‌ பெருந்தேவியாரை ஸேவா க்ரமத்‌திலே மங்களாசாஸதம்‌ பணணுவித்துத்‌ திருமாளிகையிலே எழுந்தருளப்‌ பண்ணிச்‌ சிறப்பும்‌ நிரவதிகமாக ஸமர்ப்பித்து உபசரித்‌தருளினார்கள்‌-அப்பாச்சியாரண்ணாவும்‌ முதலியாண்டான்‌ தொடங்கி யுண்டான தம்முடைய பெரியோர்களை யெல்லாம்‌ ஸேவித்தாற்‌ போலிருக்கிறதென்று மிகவும்‌ உகந்தருளி ப்ரதிபத்தியுடனே ஸ்வாமி யண்ணனையும்‌, கூட எழுந்தருளின ஸ்வாமிகளையும்‌ மற்றுமுண்டான பரிஜனங்களையும்‌ தம் திருமாளிகையிலே தானே எழுந்தருளப்‌ பண்ணி வைத்துக்‌ கொண்டு பஹுவாக உபசரித்து உபலாளித்துக்‌ கொண்டெழுந்தருருளி யிருந்தார்‌. பேரருளாளரும்‌ உகந்தருளி அண்ணனுக்குத்‌ திருநாமம்‌ :ஸ்வாமி’” என்று அனைவரும்‌ அநுஸந்திக்கும் படிக்கு ஆஜ்ஞாபித்தருளி அருள் பாடும்‌ ப்‌ரஸாதித்தருளினார்‌.

ஸ்வாமி யண்ணன்‌ பேரருளாளனுக்கு சாலைக் கிணற்றில்‌ திருமஞ்சந கைங்கர்யம்‌ செய்தல்‌-
ஸ்வாமி யண்ணனும்‌ பேரருளாளனுக்கு மிகவும்‌ ௨கப்பாக எம்‌பெருமானார்‌ உகந்து செய்தருளின கைங்கர்யமாய்‌, பின்பு முதலியாண்டானும்‌ அப்படியே செய்தருளி, துன்னு புகழ்க்‌ கந்தாடைத்‌ தோழப்பரும்‌ விரும்பிச்‌ செய்தருளின சாலைக் கிணற்றில்‌ திருமஞ்சந கைங்கர்ய மின்றிக்கே யொழிய வொண்ணா தென்று அப்பாச்சியாரண்ணா வுக்கருளிச்‌ செய்து, தாமும்‌ புறப்பட்டருளி அருணோதய காலத்திலே அநுஷ்டாந குளத்திலே நீராடி நித்ய கர்‌மாநுஷ்டாநங்களையும்‌ நிறை வேற்றி, கைங்கர்ய ருசியை யுடையருமாய்‌ சக்தருமா யெழுந்தருள ஸ்ரீவைஷ்ணவர்களுடனே சாலைக்‌ கிணற்றருகே எழுந்தருளி குடங்களை சோதித்துத்‌ திருமஞ்சநம்‌ பூரித்துத்‌ திரு முடியிலே வைத்துக் கொண்டு ஆளவந்தார்‌ ஸ்தோத்ர அநுஸந்தாநத்துடனே தண்ணீரமுது வழி திருத்துகிற உத்ஸவம்‌ (எம்பெருமானார் திரு மலையிலே நியமித்து ஏற்படுத்தி யருளிய ஒரு உத்ஸவம்‌, திரு மலையப்பன்‌ ஒரு வேடனுருலில்‌ பெரிய திருமலை நம்பி நித்யமாக ஆகாச கங்கை யினின்றும்‌ கோயிலுக்கு எழுந்தருளப்‌ பண்ணும்‌ திருமஞ்நத்தை ஒருநாள்‌ குடத்தை அம்பெய்து ஒட்டை பண்ணி பெருகிய தீர்க்தத்தைப்‌ பருகி யருளியதை அனைவரும்‌ அறியும்படி, பல ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ குழாமாக ஆகாச கங்கையிலிருந்து அத்‌யயந உத்ஸவம்‌ முடிந்த மறு தினம்‌ திருமஞ்சனம்‌ எழுந்தருளப்‌ பண்ணிக் கொண்டு திருவீதி வலம்‌ வந்து கோயிலில்‌ ஸமர்ப்பித்தல்‌ )போலே தாம்‌ எழுந்தருளி யிருக்கிற நாளெல்லாம்‌பேரருளாளருக்குத்‌ திருமஞ்சந கைங்கர்யம்‌ செய்தருளி, பின்பு அப்பாச்சியர் அண்ணாவை -இந்த கைங்கர்யம்‌ தப்பாமல்‌ நடத்தி வாரும்‌’” என்று நியமித் தருளினார்‌.

கந்தாடை ராமாநுஜ அய்யங்கார்‌ செய்த கைங்கர்பங்கள்‌
ஒரு நாள்‌ கந்தாடை ராமாநுஜ அய்யங்காரைத்‌ திருமவை திருப்பதியில்‌ கைங்கர்யங்களை நிறைவேற்றி மீண்டு வந்து, திருவநந்த ஸரஸ்ஸுக்கு நீராழி மண்டபமும்‌, சுற்றிவர ஸோபாதங்களும்‌ தென் கரையில்‌ உந்நதமான குளக் குறடும்‌, ஸிம்ஹாஸநமும்‌,மண்டபமும்‌, திருமழிசைப் பிரான்‌ கோயில்‌ கைங்கர்யமும்‌, திரு வபிஷேக மணடபத்திற்கு முன்னே பெரிய மண்டபமும்‌ திருமலைக்கு ஒலிமுக மண்டபம்‌ முதலான இன்னும் சில மண்டபங்களும்‌, திருமடைப் பள்ளி, வடக்குத்‌ திருக்குளப் படிக்கட்டும்‌, யதா ஸம்பவம்‌ திருவாபரணங்களும்‌, திருமஞ்சந காலத்திற்கு மஞ்சள் காப்பு கைங்கர்யம்‌ முதலான அநேக கைங்கர்யங்களும்‌,திருப் பவளத்திற்கு உகப்பாக அமுது செய்தருளும் படிக்கு சில
கட்டளைகளும் நியமித்து,-இவைகளெல்லாம்‌ அழகிய மணவாள மாமுனிகள்‌ கைங்கர்யம்‌, அவச்யம்‌ நடத்‌தி வாரும்‌” என்றும்‌-அப்பாச்சியாரண்ணாவை நாமாகலே ப்ரதிபத்தி பண்ணி வாரும்‌’
* என்றும்‌ புத்திகளை ஸாதித்து திருமலைக்கு அனுப்பி யருளினார்‌.

“அண்ணன்‌ ஜீயர்‌- ஜீயரண்ணன்‌”
பின்பு தாமும்‌ ஸ்ரீபெரும்பூதூர்‌ முதலான திவ்ய தேசங்களை மங்களாசாஸநம்‌ பண்ணத் திருவுள்ளமாய்‌, பேரருளாளர்‌ ஸந்நிதியிலே அனுப்புவித்துக் கொள்ள எழுந்தருள, திருவாராதநம் கண்டருளி தத் யோதந அவஸரம்‌ அமுது செய்தருளின வுடனே அண்ணனை அருள்பாடிட்டழைத்து உடுத்துக் களைந்த பீதக வாடை, அபய ஹஸ்தங்கள்‌, திருவடிசோடு, களபம்‌, சூடிக் களைத்த தொடுத்த துழாய் மலர்‌, ப்ரஸாதங்தள்‌ இவையெல்லாங் கட்டி “இவை ஜீயருக்கு’” என்று அண்ணன்‌ திருக்கைகளிலே ஸாதித்தருளி அண்ணனுக்கு உகப்புடனே வரிசைகளும்‌ ஸாதித்தருளி விடை கொடுத்தருள, ஸ்வாமி யண்ணனும்‌ திருவைய மாளிகையிலே திரு மண்டபத்திற்கு எதிராக எழுந்தருளி இருந்து ஜீயருடைய வைபவங்களை அநுஸந்திக்க அதற்கு அநு குணமாக பேரருளாளர்‌ உபலாளித்தருளி உகந்து கொண்டிருக்க , அவ்வளவிலே சில பெரியோர்கள்‌ “தம்முடைய ஸ்வாமி ஜீயருக்கு”: “அண்ணன்‌ ஜீயர்‌” என்று பேரருளாளர்‌ திருநாமம்‌ சாத்துவது!” என்று உகந்தருள! வேறு சில பெரியோர்கள்‌, அண்ணனுக்கு பெரிய பெருமாள்!”ஜீயரண்ணன்‌’ என்று திருநாமம்‌ சாத்தினதுண்டே!யென்று, “ராமாநுஜம்‌ லக்ஷ்மண பூர்வஜம்‌ ச ‘- என்கிறபடியே ஜீயருக்கும்‌ அண்ணனுக்கு முண்டான அந்யோந்ய ப்ரீத்யதிசயத்‌தையும்‌ அப்ரதிம னவபவங்களையு மிட்டுப்‌ பேரருளாளரும்‌ பெரியோர்களும்‌ உகந்தருளி இப்படித் திருநாமங்கள்‌ சாத்தினார்‌களென்று எல்லாருங்‌ கொண்டாடிக் கொண்டு திரு மாளிகை யிலே எழுந்தருள; ‘பஹுநாளாயிற்று அதி சீக்ரமாக வரவும்‌” என்று அண்ணனுக்கு ஜீயருடைய திருமுகம்‌ வர, அண்ணனும்‌ அந்தத்‌ திரு முகத்தை சிரஸா வஹித்தருளி உட்பட்டுக்‌ கொண்டு ஸ்ரீ பெரும்‌பூதூர்‌ முதலான திவ்ய தேசங்களை திக்கு நோக்கி தண்டன்‌ ஸமர்ப்‌பித்துக்‌ கோயிலுக்குப்‌ புறப்பட்டு -பொன்னடி காண்பதோராசையினால்‌ அதி த்வரையாக பயண கதியிலைழுந்தருளித்‌ திருக் காவேரிக்‌ கரையிலே யெழுந்தருள, கோயிலுள்ள பெரியோர்களெல்லாருங்‌ கேட்டருளி மிகவுமுகந்திருக்க, பட்டர்‌ கோயில் பரிகரமனைத்‌துடனே எதிர் கொண்டு திருமாளிகையிலே எழுந்தருளிப்‌ பண்ணி வைத்தார்‌. ஜீயரும்‌ அண்ணன்‌ திரு மாளிகையிலே எழுந்தருளி யிருந்து அண்ணனை க்ருபை பண்ணி யருளி, திரு வேங்கடமுடையான்‌, பேரருளாளர்‌ ப்ரஸாதங்களையும்‌ அங்கீ கரித்தருளி அவ்வவ்‌விடங்களிலுள்ள வைபவங்களைக் கேட்டருளி உகப்புடனே எழுந்‌தருளி யிருக்கிற வளவிலே, ஸ்ரீவைஷ்ணவர்கள்‌, பேரருளாளர்‌ ஜீயருக்கு அண்ணன்‌ ஜீயர்‌” என்று திரு நாமம்‌ ஸாதித்தபடியை விண்ணப்பஞ்‌ செய்யக் கேட்டருளி மிகவுமுகந்து, -நம்முடைய மனஸ்ஸூக்குத் தக்கபடி பேரருளாளரும்‌ தேவரீர் ஸம்பந்தத்ம் தோற்ற அருளிச் செய்வதே!” என்று அண்ணனைப்‌ பார்‌த்தருளிச் செய்ய, ஸ்வதந்த்ரனுடைய அதி க்ரமணத்துக்குத்‌ தடை யுண்டோ? என்று சிலர் அருளிச்‌ செய்யப் புக ப்ரதிவாதி பயங்கர மண்ணாவும்‌ “ஸ்ரீ யபதி’* என்னுமா போலே ஜீயருக்கு இதுவுமொரு திருநாமமென்ன , அவரை எல்லாரும்‌ கொண்டாடினார்கள்‌,
பின்பு ராமாநுஜதாஸர்‌ திருவடி களிலே தண்டன்‌ ஸமர்ப்பித்து நிற்க, அவர்‌ திருமுடியில் திருவடிகளை நற்றரிக்க வைத்தருளி மிகவும்‌ விஸேஷ கடாக்ஷம்‌ பண்ணி யருளினர்‌. அவரும்‌ வட தேசத்‌
தெம்பெருமான் களுடைய ப்ரஸாதங்களை நாலு ஸ்ரீவைஷ்ணவர்‌களைக் கொண்டு எழுந்தருளப் பண்ணி அவற்றை யெல்லாம்‌ ஸமர்ப்‌பிக்சக , அங்கீ கரித்தருளி விநியோகம்‌ செய்தருளி தாமும்‌ ஸ்வீகரித்‌தருளி பூர்ண மநோ ரதராய்‌, வடக்கில்‌ திருப்பதிகளெல்லாம்‌ ஸேவித்தாராயிற் றென்று ராமனுஜ தாஸரை நெருங்கத் தழுவி யருளினார்‌,

அநந்தரம்‌ அப்பாவை ஊரேற வரும்படிக்கு அவர்‌ திருத் தமப்‌பனார்‌ ராமாநுஜ தாஸர்‌ திருக்கையிலே திருமுகம்‌ வரக் காட்ட அவரும்‌ ஸேவா விஸ்லேஷ பீருவாயிருக்க, அவருக்குத் தஞ்சமாகத் தம்‌முடைய விக்ரஹமாக ஒரு விக்ரஹத்தையும்‌ திருவடி நிலைகளையும்‌ திரு உத்தரீயத்தையும ப்ரஸாதித்தருளினார்‌
ப்ரீத। ப்ரேஷி தவாந் முநிர் வர வரோ யஸ்மை முஹு: ஸ்ரீமுகம்‌
ப்ராதாத்‌ ஸ்வாங்க்ரி ஸரோஜ ஸங்க ஸுபகம்‌ ஸ்வீயா முபாநத்யுகீம்‌ |
ஸ்வீயம்‌ ஸுந்தர முத்தரீயமமலம்‌ ஸ்வாம் மூர்த்தி மர்ச்சா மயீம்‌
தம்‌ தேவேஸ குரும்‌ பஜேம ஸரணம்‌ ஸம்ஸார ஸந்தாரகம்‌ ॥

[மணவாளமாமுனிகள்‌ யாருக்கு அடிக்கடி உகந்து நீ முகம் ஸாதித்‌தாரோ, யாருக்கு தம் திருவடித் தாமரைகளின்‌ ஸம்பந்தத்தினால்‌ பாக்யம்‌ பெற்ற தமது பாதுகைகளிரண்டையும்‌, தமது அழகியதாய்த்‌ தூயதான உத்‌தரீயத்தையும்‌ தமது அர்ச்சா விக்ரஹத்தையும்‌ தந்தருளினாரோ, ஸம்ஸார தாரகரான அந்த தேவராஜ குரு வென்னும்‌ எறும்பி யப்பாவைச்‌ சரணமாகப்‌ பற்றக் கடவோம்‌]
என்று பின்புள்ளாரும்‌ இவ் வ்ருத்தாந்தத்தை யநுஸந்திக்கும்படி அபிமானித்தருள, பின்பு எறும்‌பியப்பாவின்‌ திருப் பேரனாரான பிள்ளை யப்பாவும்‌ இந்த வ்ருத் தாந்தத்தை அநுஸந்‌தித் தருளினாரிறே. அப்பாவும்‌ ஜீயரநுமதி கொண்டு கோயிலினின்றும்‌ புறப்பட்டு
எறும்பி யேற எழுந்தருளி தம் திருத் தமப்பனாரைத்‌ திருவடி தொழுது அவருக்கு சுஷ்ரூஷித்திக்‌ கொண்டிருந்து, –எண்டிசையுமறிய இயம்‌புகேன்‌ ஒண்டமிழ்ச்‌ சடகோப னருளையே-என்கிறபடியே, ஜீயருடைய சேஷா க்ருதித்வ லஷ்மணா க்ருதித்வ ப்ரப்ருதிகமான அப்ரதிம ப்ரபாவத்தை வரவர முநி ஸதகம்‌, வரவர முநி ப்ரபந்தம்‌,வர வரமுநி பஞ்சாஸத்‌, வரவர முநி ஸ்தவம்‌, வரவர முநி மங்களாசாஸநம்‌ வரவர முநி கத்யம்‌ முதலான ஹ்ருதயமான அநேக ப்ரபந்தந்களாலே வெளியிட்டு உபகரித்தருளினார்‌

ஸ்ரீ வான மாமலை ஜீயர்‌ அரங்க நகரப்பனை திருவாரதனமாகப் பெறுதல்‌
அவ்வளவிலே வானமாமலை ஜீயரை வானமாமலை ஸ்ரீகார்‌யார்த்தமாக அனுப்பி யருளவேணுமென்று ஸேனை முதலியார்‌ ஸ்ரீமூகம்வர, எதிர்கொண்டு சிரஸா வஹித்து உட்பட்டுக் கொண்டு அப்படியே ஸம்மதியாம் படி ஜீயர்‌ நியமித்தருளி, அவரையும்‌ கூட்‌டிக் கொண்டு பெருமாள்‌ திருமுன்பே சென்று இச் செய்தியை விண்ணப்பஞ் செய்து தாமும்‌ திவ்யப் ப்ரபந்தம்‌ நாலாயிரத்திலும் நூறு பாட்டு க்ரமத்திலே நித்யாநுஸந்தானமாக அநுஸந்‌திக்‌கி றது அவற்றைக்குத்‌ திருமொழி சாற்றுமுறையாய்‌, அணியர்ர்‌ பொழில் சூழ்‌ அரங்கநகரப்பா என்று -அநுஸந்திக்கிற வேளையில பெருமாளும்‌ அப்படியே ஸம்மதித்து, தம்முடைய ஸந்நிதியிலே பூபால ராயனில்‌ தட்டிலே யெழுந்தருளி யிருக்கிற அரங்க நகரப்பனாகிய லஷ்மீ நாராயணனான நாம்‌ வானமாமலை ஜீயருக்கும்‌ உமக்குமாக வருகிறோமென்று வானமாமலை ஜீயர்‌ இருக்கையிலே எழுந்‌தருளப் பண்ணிக்‌ கொடுக்க, அவரும்‌ ஜீயர்‌ திரு முக மண்டலத்தைப்‌ பார்த்து பெரியார்க் காட்பட்டக்கால்‌ பெறாத பயன்‌ பெறுமாறு என்று விண்ணப்பஞ்செய்ய., பெருமாளும்‌ தீர்த்தம்‌ திருப்பரியட்‌டம்‌, திருமாலை அபய ஹஸ்தம்‌ முதலான வரிசைகளும்‌ ஸ்ரீசடகோபனும்‌ ப்ரஸாதமும்‌ ஸாதித்து விடை கொடுத்தருள, ஜீயரும்‌ மங்கள வாத்யங்களுடளே அரங்க நகரப்பனை எழுந்தருளப் பண்ணிக்‌ கொண்டு மடத்திலே யெழுந்தருளி அமுது செய்தருளினவுடனே ஜீயரை வாழ்த்தி அரங்கநகரப்பனை ப்ரஸாதித்து வானமா மலைக்கு அனுப்‌பி யருளினார்‌.

ஸ்ரீ கோவிந்த தாஸரப்பனின்‌ மதுரகவி நிஷ்டை
அநந்தரம்‌ ஜீயரும்‌ ஒரு நாள்‌ எல்லாரும்‌ பேரோலக்கமாக ஸேவித்துக்‌ கொண்டிருக்கச்‌ செய்தே முதலிகளைக் குறித்து, எல்லாரு மறிந்தார்களே யாகினும்‌ தேவு மற்று அறியேன் என்றிருக்கிற
இருப்பு ஸ்ரீ கோவிந்த தாஸரப்பனுக்கே யுள்ளதொன்றிறே
என்று விசேஷாபிமாநம்‌ செய்தருளி,
சாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்ய மயீம்‌ தநும்‌ |
மக்நாநுத்தரதே லோதாந்‌ காருண்யாச் சாஸ்த்ர பாணிநா |
என்றும்‌
ஐகதோ ஹித சிந்தாயை ஜாக்ரத பணி ஸாயிந : |
அவதாரேஷ் யந்ய தமம்‌ வித்தி ஸெளம்யவரம்‌ முநிம்‌ ॥

[ஸர்வேஸ்வரனான நாராயணன் தானே இவ்வுலகில்‌ மனிதவுருவில்‌ (ஆசார்யனாய்‌) வந்தவதரித்து ஸம்ஸாரமாகிற கடலில்‌ முழுகிக்‌கிடக்குபம் ஜனங்களைத்‌ தமது கருணையினால்‌ சாஸ்த்ரங்களைக்‌ கைக் கொண்டு மேலெழச் செய்கிறான்‌-என்றும்‌, உலகங்களுக்கு நன்மை செய்யும்‌ எண்ணத்தினால்‌ அதன் பொருட்டு விழிப்புடனுள்ள சேஷசாயியான எம்பெருமான்‌ பண்ணி யருளும்‌ அவதாரங்களில்‌ மணவாளமாமுனிகளையும்‌ ஒரு அவதாரமாக அறிவீர்‌] என்றும்‌ சொல்‌லுகிறபடியே தாம்‌ பகவதவதாரமென்னுமிடம்‌ தோன்ற நாமே கிடீர்‌’ என்றருளிச் செய்து தம் மழகிய மணவாளப்‌ பெருமாளையும்‌ அவருக்குத்‌ திருவாராதனமாக ப்ரஸாதித்து பப்ராப்யைக நிஷ்டராக்கி யருளினார்‌. அவரும்‌, மோர் முன்ளாக முப்பது ஸம்வத்ஸரம்‌ தளிகை ப்ரஸாதம்‌ ஸ்வீகரிக்கப் பெற்று (ஆசார்யன்‌ அமுதுசெய்த பாத்ரத்தில்‌ (இலையில்‌) அவர்‌ கடைசியாக அமுது செய்த மோர் ப்ரஸாதம்‌ ரஸம்‌ மாறாமல்‌
அதையே சிஷ்யனான தாம்‌ முதலில்‌ உணடு பிறகு மற்ற வ்யஞ்சளங்‌களுடன்‌ அதே இலையில்‌ உண்பது. ஆசாரியன்‌ போனகம்‌ செய்த சேடம்‌ உண்கை சிஷ்யனுக்கு ப்ராப்யம்‌. இப்படி மோர் முன்னாரையன்‌ என்னும்படி 30 ஆண்டுகள்‌ தினமும்‌ ஆசாரியனின்‌ உச்சிஷ்ட
முண்டு சிரோபாஸித ஸத் வ்ருத்தர்‌ என்று கொண்டாடப்‌ பெற்றவர்‌ பின்புள்ளாரிலு முண்டு
)க்ருதார்த்தராய்‌ ஸகல ரஹாஸ்யார்த்தங்களையுங்‌ கேட்டு ஜீயர் திருவடிகளை ஒருக் காலும்‌
பிரியாதே, பிரிந்தாலும்‌ இராத் தங்குமூருக்கும்‌ போகாதே, நித்ய ஸேவை பண்ணிக்‌ கொண்டிருந்தார்‌. பின்பொரு திருவாடிப்‌ பூரத்திலே சூடிக் கொடுத்த நாச்சியார்‌ தீர்த்த ப்ரஸாதங்களை போர ஆதரித்துக்‌ கொண்டு வந்து ஸமர்ப்பிக்க, ஜீயரும்‌ அங்கீகரித்‌தருளி பெரிய ப்ரீதியோடே ஆண்டாளுக்குகப்பாக பட்டர்‌ பிரான்‌ தாஸர்‌” என்று திருநாமம்‌ ஸாதித்தருளினார்‌. பின்பு கோவிந்த தாஸரப்பன்‌ மஹா விரக்தராய்‌ ஆஸ்ரம ஸ்வீகாரம்‌ செய்ய,பட்டர் பிரான்‌ ஜீயர்‌!’ என்று, திருநாமமாயிற்று. எம்பெருமானார்‌ திருவடிகளுக்கு வடுக நம்பியைப் போல யாய்த்து இவரும்‌ ஆசார்ய நிஷ்ட அக்‌ரேஸரரா யிருக்கும்படி-இப்படி யான விவர்‌ சரம பர்வ நிஷ்டை மணவாள யோகி வாழ்ந்தருளிகிற காலத்திலே தணவாத வடிமை ஸகல காலத்திலும்‌ செய்தருள, ‘பட்டர் பிரான்‌ ஜீயர்‌’” என்றும்‌, தேவு மற்றறியேன்‌ என்றும்‌, ‘பட்டநாத முநி வரா பீஷ்ட தைவதம்‌” [மணவாளமாமுனிகள்‌ பட்டர்பிரான்‌ ஜீயருக்கு இஷ்ட தேவதை] எனறும்‌ “ஸ்ரீமதுரகவி சரிதகாரி மஹித சாரித்ர ஸ்ரீமாந்‌ பட்டநாத யதீஸ்வர – [ஸ்ரீமதுரகவி நிஷ்டையை மணவாள மாமுனிகளிடம்‌ உடையவர்‌ நன்னடத்தை யுள்ள ஸ்ரீபட்டர்‌ பிரான்‌ ஜீயர்‌] என்றும்‌ அங்குத்தைக்கு அந்தரங்கரானவர்கள்‌ அருளிச்‌ செய்தார்கள்‌-இப்படி அந்திமோபாய நிஷ்ட்ட அக்ரேஸராகவே ஸேவ்யமாநராய் எழுந்தருளி யிருக்கிற ஸெளம்ய ஜாமாத்ரு முநிவர்யரான ஜீயரும்‌ அன்னையாய்‌ அத்தனாய்‌ என்கிறபடியே தமக்கு ஸர்வ விதோத்தாரக பந்து பூதரான நம்மாழ்வாரை ஸேவித்து நெடுநாளாயிற்று ஆகையால்‌ தத் விஷய ப்ரேமம் அதிசயித்து தாய்‌ நாடு கன்றே போல த்வரித்துக்‌ கொண்டு பெருமாளுக்கு விண்ன்ணப்பஞ் செய்து அப்போதே திருதகரியேற வெழுந்தருளுவதாகப்‌ புறப்பட்டு, ““கூடல்‌” என்றது மதுரையிலே சென்று திருப் பல்லாண்டு அவதரித்த ஸ்தலமென்று உகந்தருளி மல்லாண்ட திண்டோனள்‌ மணி வண்ணரையும்‌ திருவடி தொழுது,
பல்லாண்டு பல்லாண்டு என்று மங்களாசாஸநம்‌ செய்தருளி அங்கே யெழுந்தருளி யிருக்குமளவிலே।

மஹாபலி வாண நாத ராயன்‌ ஜீயரை ஆஸ்ரயித்தல்‌
அத் தேசத்துக்கு அதிபதியான மஹாபலி வாண நாத ராயன்‌ வந்து திருவடிகளிலே ஆஸ்ரயிக்க, அவனையும்‌ விசேஷ கடாக்ஷம்‌ பண்ணி ஜாய புண்ட்ராதி பஞ்ச ஸம்ஸ்கார யுக்தனாக்கித்‌ திருவடிகளுக்‌ காட்படுத்திக் கொண்டு அற்றைக்கு அங்‌கே யெழுந்தருளி யிருந்து பிற்றை நாள்‌ அர்த்த ராத்ரியிலே
மணி காஞ்சந லஞ்சந்நாம்‌ சிபிகாம்‌ தததிஷ்ட்டிதாம்‌ |
ஸபந் நயந்த ஸ்வஸ்கந்தே க்ருத்வா கேகித்‌ ப்ர தஸ்த்திரே ॥

(சில ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ பொன்னாலும்‌ ரத்னங்களாலும்‌ ஆனதும்‌, நன்கலங்கரிக்கப் பட்டதும்‌, மாமுனிகள்‌ எழுந்தருளி யுள்ளதுமான அத் திருப் பல்லக்கை சலிப்பில்லாமல்‌ தமது
தோள்களிலே தாங்கிக் கொண்டு புறப்பட்டார்கள்‌ ] என்கிறபடியே அந்த ராஜா ஸமர்ப்பித்த அநர்க்கமான நவ ரத்நக சிதரமணீயாந்‌ தோளிகையிலே ஏறி யருளிப்‌ புறப்பட்டு மூடு பனி யாகையாலே
திருப் பல்லக்கை குக்கூடலிட்டு ஸ்ரீவைஷ்ணனர்கள்‌ ஸ்ரீபாதந்‌ தாங்கிக்‌ கொண்டு எழுந்தருளா நிற்க,
சத்ரம்சித்ரம்‌ தது : கேசித்‌ சாமரே ததிரேபரே |
ப்ருங்காரமவரே அபிப்ரந் களாசீமமி கேசந ॥
தத்பதாப்ஜா ஜஸ்பர்‌ஸ பாவநீ மாத்ம பாவிநீம்‌ |
ஸந்த்ஸ் ஸந்தாரயந்திஸ்ம மெளளி நாமணி பாதுகாம்‌ |
அகாயந் நக்ரத;கேசிதத ந்ருத்யந்தி கேசக ॥

[சிலர்‌ திரு வெண்‌ கொற்றக் குடையைத்‌ தாங்கிச்‌ சென்றனர்‌ ;சிலர்‌ திரு வெண் சாமங்களை வீசினர்‌; சிலர்‌ படிக்கும்‌ காளஞ்சிகளைத்‌ தாங்கிச்‌ சென்றனர்‌ சில பாகவதர்கள்‌ ஜீயருடைய ஸ்ரீபாத ரேணு
படுதலால்‌ பரிசுத்தராய்‌ ஸ்வரூபாநுகுணமாக ஸ்வாமியினுடைய மணி பாதுகங்களைத் திருமுடிமேல்‌ தாங்கிச் சென்றனா பிலர்‌ முன்னே பாடிச்‌ சென்றனர்‌; சிலர்‌ ஆடிச் சென்றனர்‌] என்கிறபடியே-சத்ர சாமராதிகள்‌ தொடக்கமான கைங்கர்யோப கரணங்களைத் தரித்துக் கொண்டு பாடுவாராடுவார்‌ உகந்தாலித்துக்‌ கேட்பாராய்‌ ஸஸம்ப்ரம ந்ருத்த கீதத்தடனே அனைவரும்‌ ஸேவித்துக் கொண்டு
போருகிற படியைக் கண்டு இரவெல்லாம்‌ அவஸர ப்ரதீஷராய்‌ ஜீயரறியாதபடி ஸ்ரீ பாதம்‌ தாங்கிக் கொண்டு இருகாத வழி ஸேவித்து வர, விடிந்த பின்பு வைகை யாற்றின்‌ கரையிலே அநுஷ்ட்டா நார்த்தமாக இறங்கி யருளின வளவிலே ராஜாவும்‌ கச்சை கட்டி யுடுத்து ஸந்நத்தனாப்‌ ஸ்ரீபாதம்‌ தாங்கின வேஷத்தோடே வந்து திருவடிகளிலே ஸேவிக்க, ஜீயரும்‌ அது கண்டு இப்படி செய்வதே என்று ஆச்சர்யப் பட்டருள அப்போது அநுஷ்ட்டானம்‌ பண்ணுவதாக வெழுந்தருளி யிருந்த “முத்தரசன்‌” என்கிற கிராமத்தை அங்கீ கரித்தருள வேணு மென்று அபேக்ஷிக்க, ஜீயருமவனுடைய நிர்ப்‌பந்தத்துக்காக அந்த க்ராமத்தை அங்கீகரித்தருளி அன்று தொடங்கி அந்த க்ராமத்திற்கு ”அழகிய மணவாள நல்லூர்‌”என்று திருநாமம்‌ ப்ரஸாதித்து மஹாபலி வாண நாத ராஜாவையும்‌ மிகவு முகப்போடே அனுப்பி யருளி, திருப்புல்லாணி வழியாக எழுந்தருளு மளவிலே முதலிகளும்‌ தாமாக அத்வஸ்ர மாந்தராய்‌ நிழல் தேடி வாரா நிற்க, அங்கே ஸ்த்தாவர விசேஷமா யிருப்பதொரு
இந்த்ரிணீ வ்ருஷம்‌ நீரந்தீரச் சாயா யுக்தமாய்‌ நிற்கக் கண்டு அங்கே வெழுந் தருளி அப் புளிய மர நிழலிலே விஸ்ரமித்து அத்வ ஸ்ரமம்‌ தீர்த்துக் கொண்டு எழுந்தருளி யிருக்க

ஜீயர்‌ புளிய மரத்துக்கு மோக்ஷமருளுதல்‌
முதலிகளெல்லாரும்‌ இப்படி மஹோபகாரம்‌ பண்ணின விதற்கு ஒரு கிருபை பண்ணி யருள வேணு மன்று ஜீயரைப் ப்ரார்த்திக்க, அவரும்‌ ஸ்வ க்ருபாதிசயத்தாலே அந்தப்‌ புளிய மரத்தைத்‌ திருக்கையாலே ஸ்பர்‌சித்து, தாம்‌ பெற்ற பேற்றை நீயும்‌ பெறக் கடவாய்‌’-என்று அநுக்ரஹித்து எழுந்தருளினார்‌. பின்பு அசிரேண அம் மரம்‌ உலர்ந்திருக்கக்‌ கண்டு முதலிகள்‌
யம்யம்‌ ஸ்ப்ருஸதி பாணிப்யாம்‌ யம்யம்‌ பஸ்யதி சஷுஷா |
ஸ்தாவராண்யபி முச்யந்தே கிம் புநர் பாந்த வாஜநா ; ॥

[ஸத்துக்கள்‌ யார் யாரைத்‌ திருக் கைகளால்‌ ஸ்பர்சிப்பார்களோ ,யார் யாரைத்‌ திருக் கண்களால் கடாக்ஷிப்பர்களோ அவரில்‌ தாவரங்‌களும்‌ மோஷமடைகின்றன; பந்து ஜனங்களை ப்பற்றிச்‌ சொல்லவும்‌ வேணுமோ? என்கிற அர்த்தம்‌ இவரிடத்திலே அந்வர்த்த ஸித்தமிறே ! என்று உகந்தருளினார்கள்‌-

அநந்தரம்‌ ஜீயரும்‌ திருப்புல்லாணி யேற எழுந்தருளி புல்லாணி யெம் பெருமானைத்‌ திருவடி தொழுது அங்கு நின்றும்‌ புறப்பட்டுப்‌ பயண கதியிலே திருநகரி யேற வெழுந்தருளி ஸேவா கிரமம்
தப்பாமல்‌ அடைவே ஆழ்வாரையும்‌ பொலிந்து நின்ற பிரானையும்‌ ஸேவித்து மங்களாசாஸநம்‌ பண்ணிக் கொண்டு அங்கே அங்கே ஆத்மாக்களை திருத்தித் திருமகள் கேள்வனுக்காக்கி , திருவாய்‌மொழி முதலான திவ்ய ப்ரபந்தங்களையும்‌ ப்ரஸாதித்து நின்று, ப்ரதி தினம்‌ ஆழ்வார்‌ திரு மஞ்சன காலத்தையும்‌ மற்ற திவ்யோத்‌ ஸவங்களையும்‌ ஸேவித்துக்‌ கொண்டெழுந் தருளி யிருக்க।

கோயிலில்‌ அநுபவங்களில்லாமைக்கு வருந்துதல்‌
இப்படிக்‌ காலங் கழித்து செல்லா நிற்கச்‌ செய்தே மார்கழி மாஸம்‌ வர,
எந்தை யெதிராசர் சிறப்பை யெழிலரங்கர்‌
சிந்தை மகிழ்ந்தமுது செய்ய–அந்த நிலம்‌
சென்று நின்று சேவிக்கும்‌ செல்வமின்று பெற்றிலமே

என்று சேவிக்குமினியாம்‌?
என்று எம்பெருமானார்‌ திருப்பாவைச்‌ சிறப்பை ஸேவிக்கப்‌ பெற்றிலோமில்லையீ என்று வெறுத்தருளியும்‌, பின்பு ஸங்க்ரமணம்‌ வர
சீராரங்கர் தந் தேவியரோடு சிறப்புடனே
யேராரு மாறன்‌ கலியனெதிராசனோடமரப்‌
பாரோர்‌ மகிழ்ந்தேத்தும்‌ தட்டுக்கள் தன்னுடன்‌ போற்று மந்தப்‌
பேரார வாரத்தை யின்று கண்டின்‌ புறப்‌ பெற்றிலமே

என்று அதற்கும்‌ நொந்தருளி, பின்பு தைத் திருநாளை நினைத்தருளி
தேவியருந் தாமும்‌ திருத்தேரின்‌ மேலரங்கர்‌
மேவி விக்கிரமன்‌ வீதி தனிற்‌–சேவைசெயு
மந்தச் சுவர்க்கத்தை யநுபவிக்கப்‌ பெற்றிலமே
யிந்தத் திருநாளிலே யாம்‌

என்றநுஸந்தித்துப்‌ பேரிழவோடே யெழுந்தருளி யிருந்து தொந்து
அணி யரங்க மாடுதுமோ என்றும்‌, திரு வரங்கப் பெரு நகருள்‌ தெண்ணீர்ப்‌ பொன்னி திரைக் கையாலடி வருடப்‌ பள்ளி கொள்ளும்‌ கருமணியைக்‌ கோமளத்தைக்‌ கண்டு கொண்டென்‌ கண்ணினைகள்‌ . என்று கொலோ களிக்கும்‌ நாள்‌ (பெருமாள்‌ திரு.1-1) என்றும்‌.
“ஊரரங்கமே யென்பதிவன்‌ தனக்காசை” என்றுஞ்‌ (
காரிளம்‌ புரைமேனி நம்கதிர்‌ முத்தவெண்ணகைச்‌ செய்யவாய்‌ ஆரமர்வ னரங்கமென்னும்‌ அரும்பெருஞ்சுடரொன் றிை , (பெரு திரு. 2-7) சேரும்‌ நெஞ்சுடையராய்‌ அப்போதே ஆத்வார்‌ திருமுன்பே சென்று-)சொல்லுகிற படியே அபிநிவேசத்தைப்‌ பண்ணிக் கொண்டு அதி த்வரையுடனே ஆழ்வார்‌ திரு முன்பே சென்று

திருக்குருகைப்பெருமாள்‌ தன்‌ திருத்தாள்கள்‌ வாழியே
திருவாளதிருமுகத்துச்‌ செவியென்‌ றும்‌ வாழியே
இருக்கு மொழி யென்னெஞ்சில்‌ தேக்கினான்‌ வாழியே
யெந்தை யெதிராசர்க்கிறைவனார்‌ வாழியே
கருக் குழியில்‌ புகா வண்ணம்‌ காத்தருள்வோன்‌ வாழியே
காசினியிலாரியனாய்க்‌ காட்டினான்‌ வாழியே
வருத்தமற வந்தென்னை வாழ்வித்தான்‌ வாழியே
மதுரகவி தம்பிரான்‌ வாழி வாழி வாழியே

என்று மங்களாசாஸனம்‌ பண்ணி ஸேவித்து, ஆழ்வாரனுமதி கொண்டு அங்கு நின்றும்‌ புறப்பட்டருளி அதி த்வரையுடனே ஸ்ரீ வில்லிபுத்தூர்‌ சென்று ப்ரவசித்து பொங்கும்‌ பரிவுடைய பட்டர்‌ பிரானையும்‌ வடபெருங்கோயிலுடையானையும்‌ ஸேவித்து, நாச்சியார்‌ திருமாளிகையிலே சென்று புகுந்து ஆழ்வார்‌ திருமகளாராண்டாளையும்‌ அன்புடனே அடி பணித்து நிற்க, கோதையும்‌ கோயிலண்ணருடைய திருவவதாரமன்றோ நீர்‌!” என்று மிகவும்‌ க்ருபை செய்தருள, ஆண்டாளருள்‌ கொண்டு புறப்பட்டு அழகனலங்காரன்‌ மலையான திருமாலிருஞ்‌சோலை மலை நின்ற சுந்தரத் தோளுடையானான பரம ஸ்வாமி யையும்‌ ஸேவித்து, அழகர்‌ திருக்குறுங்குடிக்குக்‌ குடி வாங்கிப்‌ புறப்‌ டெழுந்தருளி யிருக்கையாலே அவ்விடம்‌ “நல்லதோர்‌ தாமரைப்‌ பொய்கை நாண் மலர் மேல்‌ பனிசோர அல்லியுந் தாதுமுதிர்‌ந்திட்‌ டழகழிந்தாவொத்ததாலோ, இல்லம்‌ வெறியோடிற்றுலோ என்‌ மகளை யெங்குங்காணேன்‌ (பெரியாழ்வார்‌ திரு. 3-8-1) என்று-அழகழிந்திருக்கிற கோயிலைக் கண்டு ‘புத்ர த்வய விஹீநம்‌ தத்‌:(ராம லஷ்மணர்களாகிற புத்திரரிருவரும்‌ இல்லாத அந்த வீடு-இத்யாதிப் படியே மிகவும்‌ அவஸந்நராய்‌ க்லேசித்தருளி இவரும்‌ உடையவரைப் போல்‌ வேண்டும்‌ பொருள்களை யெல்லாம்‌ அழைப்‌பித்தருளி அங்கே பாங்காக தளிகை பண்ணி நாறு நறும்‌ பொழில்‌
மாலிருஞ் சோலை நம்பிக்கு (நாச்‌ திரு. 9 6) என்கிறபடியே அமுது செய்தருளப் பண்ணி, அத்தைக் கண்டருளினதற்குக்‌ கைக் கூலியாக-பின்னுமாளுஞ்செய்வன்‌-உன் பொன்னடி வாழ்க (பெரியா திரு,
5.3.3) என்று மங்களாசாஸநம்‌ பண்ணி யருளி பரம ஸ்வாமியின்‌ திரு முக மண்டலத்தை ஸேவித்து -நங்கள் குன்றம்‌ கை விடான்‌(திருவாய்‌ 10-8-4) என்று ஆழ்வாரருளிச்‌ செய்த பொய்யில் பாடலை
அந்வர்த்த ஸித்தமாக்கி யருள வேணுமென்று ப்ரார்த்தித் தருளி;

ஜீயர்‌ மீண்டும்‌ கோயிலுக் கெழுந்தருளியது
அங்கு நின்றும்‌ புறப்பட்டு மாலிருஞ் சோலை மணாளனார்‌ பள்ளி கொள்ளுமிடமான திருவரங்கன் திருப்பதியைக்‌ குறித்து எழுந்‌ தருளி -கொடி யணி நெடு மதிள்‌ கோபுரம்‌ குறுகினர்‌ (திருவாய்‌-10-9-8)என்னும்படி கிட்டியவாறே அங்குண்டான வர்களெல்லாம்‌ எதிர் கொண்டு வந்து திருவடி களிலே ஸேவித்து
வகுள தர ஸவித்ரீம்‌ யாதி யஸ்மிந் தரித்ரீம்‌ மது மதந நிவாஸோ ரங்க மாஸீ தஸாரம்‌ |
புநரிபி ஸூஸம்ருதம்‌ பூயஸா ஸம் ப்ரவிஷ்டே’ வர வர முநிவர்யோ மாநுஷ:ஸ்யாத் கிமேஷ ॥

எந்த மணவாள மா முனிகள்‌ மகிழ் மாலை மார்பரான நம்மாழ்‌வாருடைய பிறப்பிடமான திரு நகரியை அடைந்திருந்த போது மதுமதநனான பெருமாளுக்கு வாஸஸ்தானமான திருவரங்கமானது பொலிவற்றதாய்ப்‌ போயிற்றோ அவர்‌ அங்கு மீண்டும்‌ எழுந்தருளின வளவில்‌ அந்த ஸ்ரீரங்கம்‌ மிகவும்‌ நன்றாக பொலி வுற்றது; இந்த மணவாளமாமுனிகள்‌ மனிதராக எண்ணத் தக்கவராவாரோ?] என்றநுஸந்தித்து ப்ரீதராய்‌ ப்ரதிபத்தி பண்ண,அவர்களையும்‌ க்ருபை பண்ணி யருளி அவர்களுடனே கூட-ப்ரதமம்‌ எம்பெருமானாரைத்‌ திருவடி தொழுது அவர்‌ புருஷகாரமாக ஸ்ரீரங்கநாச்சியாரையும்‌ பெரிய பெருமாளையும்‌ திருவடி தொழுது அவர்கள்‌ ப்ரஸாத விசேஷங்களையும்‌ பெற்று மடம் யெழுந் தருளி -ரங்கே தாம்நி ஸுகாஸீதம்‌” என்‌கிறபடியே திருமலை யாழ்வாரிலே இனிதாக வீற்றிருத்து வ்யாக்யாநித்து அகிலரையும்‌ ஆநந்திப்‌ பித்துக் கொண்டு வாழ்த்தருளா நிற்க, முதலிகளும்‌ அவ் விருப்புக்கு
ஜய துயஸ ஸாதுங்கம் ரங்கம்‌ ஜகத் த்ரய மங்களம்‌
ஜயதுஸுசிரம்‌ தஸ்மிந் பூமா ரமாமணி பூஷணம்‌
வரத குருணா ஸார்த்தம்‌ தஸ்மை ஸுபாந்ய பிவர்த்தயந்‌
வரவரமுநி:ஸ்ரீமாந் ராமாநுஜோ ஐயது க்ஷிதெள ॥

[பெருமையினால்‌ உயர்ந்து முவ் வுலகுக்கும்‌ மங்களாவஹமான திரு வரங்கமானது பெருமை யுற்று விளங்க வேணும்‌; அத்‌ திருப்பதியிலே பெரிய பிராட்டியாரையும்‌ ஸ்ரீகெளஸ்துபத்தையும்‌ திவ்ய ஆபரணமாக வுடையனான எம்பெருமான்‌ பல்லாண்டாக விளங்க வேணும்‌; அவ் வெம் பெருமானின்‌ பொருட்டு வரத குருவான அண்ணனுடன் மங்களங்களை மேலும்‌ மேலும்‌ உண்டாக்குபவரான
ராமாநுஜாபரா வதாரரான மணவாள மா முனிகள்‌ இப் புவியில்‌ விளங்க வேணும்‌-என்று மங்களாசாஸனம்‌ பண்ணிக் கொண்டு வாழ்ந்தருளுகிற காலத்திலே

அழகர்‌ கோவிலுக்கு நிர்வாஹகராக ஒரு ஜீயரை அனுப்பியது -இவர்‌ அழகருக்குப்‌ பண்ணிய மங்களாசாஸனம்‌ பலித்து அழகர்‌ மீண்டும்‌ தம் கோயிலிலே குடி புகுந்தருளி ஜீயருக்குத் தம்‌
திருமுகமெழுதி,நாம்‌ உம்முடைய நினைவின்படியே வந்து-“நங்கள்‌ குன்றங்கைக் கொண்டு குடிபுகுந்‌தோம்‌; நம்‌ வீட்டில்‌ கார்யமாராய்ந்து நன்றாக நடத்தி யருளும்‌ ஒருவரை வரவிட
வேணும்‌’ என்று வரக் காட்டி யருள, ஜீயரும்‌ போர உகந்தருளி எதிராஜ ஜீயர்‌ என்னு திருநாம முடையராய்‌ மஹா விரக்தராய்‌ மங்களாசாஸன பரராயிருக்குமரை அழகர்‌ ஸ்ரீ கார்யார்த்தமாக அனுப்பி யருள, அவரும்‌ அங்கே சென்று அழகரை ஸேவிதது ஆசார்ய ப்ரீத் யர்த்தமாக அனைத்தழகும்‌ கண்டருளப் பண்ணினாரிறே
.

முதலிகளைக்‌ கொண்டு திவ்ய தேச கைங்கர்யங்கள்‌ செய்வித்தல்‌
அநந்தரம்‌, ஜீயரை யாஸ்ரயித்த மஹாபலி வாண நாதரும்‌ திருமாலை தந்தான்‌ தோழப்பரை (திருமலை தோழப்பரை) முன்னிட்டுக்‌ கொண்டு மாலிருஞ் சோலை மாலுக்கு ஸர்வ வித கைங்கர்யங்களும்‌
செய்து போந்தார்‌. இவர்களாலே அழகர் கைங்கர்யம்‌ ஸம்ருத்த மாயிற்று. இப்படி கோயில்‌ திருமலை முதலான திருப்பதிகளின்‌ கைங்கர்ய மெல்லாம்‌ குறைவறக்‌ கொண்டருளு கையாலே மிகவு முகப்புடனே எழுந்‌தருளிருக்கும்‌ காலத்திலே துளவருடைய வம்சத்திலே பிறந்து தேசாந்தரத்திலே திரிந்து போருவானொரு பிள்ளை திருவடிகளிலே வந்து ஆஸ்ரயிக்க, அவரை விசேஷித்து க்ருபை பண்ணி யருளி,-ஸ்ரீராமானுஜ தாஸர்‌’-என்று தாஸ்ய நாமம்‌ ப்ரஸாதித்து அவரைக்‌ கொண்டு அநேகம் திருப் பதிகளில்‌ கைங்கர்யமெல்லாங்‌ கொண்டருளப் பண்ணும்படிக்கு விசேஷாபிமானஞ்‌ செய்தருள, அவ்விசேஷ கடாக்ஷ மடியாக பெருமாள்‌ கோயில்‌ தொடக்கமான திருப்பதிகளில்‌ அவரைக் கொண்டு கைங்‌கர்யங்களெல்லாம்‌ கொண்டருளப்‌ பெற்றது. அநந்தரம்‌ ஜீயரும்‌.
திவ்யோத்‌வ ப்ரஸங்கேஷு தேவ தேவ மதந்த்ரித: |
ஆஸாஸாநஸ் ஸமா ஸீதந் நத்ராக்ஷீத்‌ ரங்க பூஷணம்‌ ॥

[விசேஷமான உத்ஸவ காலங்களில்‌ சோர்வில்லாமல்‌ ஸர்வேசஸ்வரனான ஸ்ரீரங்கநாதனை அணுக்கராய்‌ ஸேவித்து மங்களாசாஸனம்‌ பண்ணினார்‌ ] என்கிறபடியே திவ்யோத்ஸவங்களிலும்‌ நம்பெருமாளை மங்களாசாஸநம்‌ பண்ணிக் கொண்டு
கஸ்தூரி ஹிம கற்பூர ஸ்ரக்‌ தாம்பூலா அநுலேபரை: |
திவ்யைரப்ய பஜத்‌ போஜ்யை: ரங்கநாத திநே திநே –

அநுதினமும்‌ ஸ்ரீரங்கநாதனை கஸதூரி, பச்சை கற்பூரம்‌,பூமாலை, அடைக் காயமுது, பரமள த்ரவ்பங்கள்‌. இவற்றினால்‌ உபசரித்தராதித்தார்‌. என்கிறபடியே ப்ரதி தினமும்‌ பாங்காக கிஞ்சித்கார பூர்வகமாக கைங்கர்யங்களையும்‌ நடத்திக் கொண்டு, மார்கழி மாஸத்திலு மப்‌படியே
காலே கோதண்ட மார்த்தாண்டே காங்ஷந்நே வாருணோதயம்‌ |
ந்யஷேவத விஸேஷேண ஸேஷிணம்‌ ஸேஷ ஸாயிநம்‌ ॥ –
மங்களாநி ப்ரயுஞ்ஜாநோ மாதம்‌ ப்ரத்ய போதயத்‌
ஸம்யகேநம்‌ ஸமப்யர்ச்ய ஸர்வதாநுகதை : க்ரமை: ॥
ஸ்வ ஸ்வ காலோசிதைர் திந்யை : ஸ்வாங்கல்போப லம்பிதை: |
அபோஜயதயம்‌ போஜ்யை ஸாக மூல பலாதிபி; ॥
ஸுூபா அபூப க்ருதக்ஷீர சர்க்கரா ஸஹிதம்‌ ஹவி: |

தநுர் மாதத்தில்‌ அருணோயத்திற்கு முன்னே அரவணை மேல்‌ பள்ளியானான எம்பெருமானை விசேஷமாக பூஜித்‌தார்‌. மங்களமான பாசுரங்களை அநுஸந்தித்து திருமகள்‌ மணாளனை திருப் பள்ளி யுணர்த்தினார் – எல்லாப் படியாலும்‌ சாஸ்த்ர முறையான திருவாராதன க்ரமங்களால்‌ எம்பெருமாளை நன்றாக ஆராதித்து, பின்னர்‌ மணவாள மாமுனிகள்‌ தமது நியமனப்படி வரவழைக்கப்பட்ட தத்தத் காலோசிதங்களாய்‌ உயர்ந்தவையான காய்‌, கிழங்கு, பழம்‌, முதலான இனிய பதார்‌ த்தங்களுடன்‌ வடை,பருப்பு, நெய்‌, பால்‌ சர்க்கரை இவைகளுடன்‌ கூட ப்ரஸாதத்தை
அமுது செய்தருளப்‌ பண்ணினார்‌ ]
செந்நெலரிசி பருப்புச்‌ செய்த வக்காரம்‌ நறு நெய்‌ பாலால்‌ என்று சொல்லப்‌ படுகிற அக்கார வடிசில்‌ தொடக்கமான அனேக வகைத்‌ தளிகைகளும்‌ அமுது செய்தருளப் பண்ணிப் போருகிறதுக்கு மேலே ஒன்றும்‌ தேவும்‌ சிறப்பும்‌, கண்ணி நுண்‌ சிறுத்தாம்புச்‌ சிறப்பும்‌, நூற்றந்‌ தாதிச்‌ சிறப்பும் ப்‌ரதி ஸம்வத்ஸரம்‌ பெருமாளும்‌ நாச்சியாரும்‌ உகந்து அமுது செய்தருளும்படி நன்றாக நடத்திக் கொண்டு ஆழ்வார்களின்‌ அருளிச் செயல்களை ல்யாக்யாளங்களுடன்‌ அநுதினம்‌ அநுஸந்தித்துக்‌ கொண்டு எழுந்தருளி யிருக்கும்‌ நாளிலே

பெரியாழ்வார்‌ திருமொழிக்கு வ்யாக்யானம்‌ அருளிச் செய்தல்‌
பெரியாழ்வார்‌ திருமொழிக்குப்‌ பெரியவாச்சான் பிள்ளை யருளிச் செய்த வ்யாக்யானம்‌ காணாமையாலே அதற்கு வ்யாக்‌யானம்‌ செய்தருளத்‌ திருவுள்ளமாய்‌ (திருபபாணாழ்வார் தாதர்‌ நாயனாருக்கு)
செந் தமிழிலாழ்வார்கள்‌ செய்த வருளிச்‌ செயலை
சிந்தை செயல்‌ தன்னுடனே செப்பலுமாம்‌-அந்தோ
திருப்பாணாழ்வார் தாதர்‌ நாயனார்‌ சேர
விருப்பாராகில்‌ நமக்கீடாவர்‌ யார்‌

சிந்தையினால்‌ தேறலுமாம்‌ வாய் கொண்டு செப்பலுமாம்‌’என்று திருமுகம்‌ போக விட்டருள, அவரும்‌ திருநகரியிலே தம் திருநந்தவனத் திலிருக்கிறவர்‌ அந்த ஸ்ரீஸக்தியைக்‌ கண்டு உகந்து சிரஸா வஹித்து, திருநந்த வனத்தினின்றும்‌ அப்போதே புறப்பட்டு அதி சிக்ரமாக வெழுந்தருளி வந்து ஸேவித்து நிற்க, அவருடைய அத்வ ஸ்ரமத்தையும்‌ ஸ்வ விஸ்‌லேஷத்தா லுண்டான பெரு விடாயையும்‌ தத் விக்ரஹத்திலே கண்டு “மிகவு மிளைத்தீரே”’ என்று குசல ப்ரஸ்நம்‌ பண்ணிக்‌ குளிர கடாஷித்தருளி, பிற்றை நாள்‌ அவரையுங் கூட்டிக் கொண்டு திருமொழி நாலு பத்தளவாக நன்றாக வ்யாக்யாநஞ்‌ செய்தருளி மற்றை நாற்பது பாட்டுக்களுக்கு சேஷித்திருந்த பூர்வர்கள்‌ வ்யாக்‌யானத்தை அழைப்பித்து அத்தோடு சேர்ப்பதாக வைத்திருக்க,
கந்தாடை நாயன்‌ ஜீயரருளிய வ்யாக்யானத்தை ஸேவித்தது
அப்போது அதி பாலரா யிருக்கிற கந்தாடை நாயன்‌ அங்கே எழுந்தருளி ஜீயருடைய ஸ்ரீ ஸூக்திகளையும்‌ அபயப்ரதராஜ ஸூரி ஸ்ரீஸூக்திகளையும்‌ ஆலேகித்து அவற்றில்‌ அபய ப்ரதராஜ ஸுரி திவ்ய ஸூக்தியைக்‌ கீழே ஒரு பீடத்திலிட்டு வைத்து அபிராமவர யோகி திவ்ய ஸுூக்தியை ஆதரேண ஆலோகியா நிற்கிறவர்‌ “இந்த நாற்பது பாட்டுக்கும்‌ சேஷிடாதே முற்றப் போகா தொழிவதே!’என்ன; இத்தை மணவாளமாமுனிகள கேட்டருளி, ‘அதிபால்யத்‌திலே இவருக்கு இத்தனை ஞான பூர்த்தி யுண்டாவதே!’” என்று உகந்து, நாயனைக்‌ “கருணை பொங்கிய கண்ணிணைகளாலே கடாக்ஷித்து அழைத்தருளி “ஒன்றைப்‌ பொகட்டு ஒன்றைஆதரிப்பானென்‌); இங்ஙன மிருப்ப தொன்றுண்டோ?”?. என்று கேட்டருள, நாயனும்‌, மாம்பொழிற்றளிர் கோதிய மடக்குயில்‌ வாயது துவர்ப்பெய்த தீம்பலங் கனித்தேனது நிகர்‌”என்று சொல்லுகிறபடியே அஸாரத்தை விட்டு ஸாரத்தைப் பற்றுகை யன்றோ ஸாரஜ்ஞ க்ருத்யம்‌; ஆகையாலே அதிலுமிது மஹா ரஸ வாக்ய ஜாலவத்தா யிருக்கிறதென்று ஆதரித்தது என்ன, ஜீயரும்‌ அது கேட்டாநந்தித்து இவரும்‌ ஒரு அவதார விசேஷமென்று ஆலிங்கித்‌துக் கொண்டருளினார்‌. *இவள்‌ வாயனகள்‌ திருந்தவே என்கிறபடியே நாலூர்‌ பிள்ளை (திருவாய் மொழிப் பிள்ளை )யிட்டருளின வ்யாக்யானங்களெல்லாவற்றிலும்‌ அதிசயித்திறே இவருடைய ஸூக்தி வைபவமிருப்பது-இப்படிப்‌ பெரியாழ்வார்‌ திருமொழிக்கு ஸாவஜந ஹ்ருதய மாம்படி வ்யாக்யானஞ் செயதருளி, திருப் பாணாழ்வார்‌ தாதர் நாயனார்க்கு
பிள்ளை லோகாசாரியர்‌ திருக்கை ஸ்பர்சமுடையராய்‌ ஸ்ரீரங்க ராஜ: பதிமே ஸஹாய:’ என்கிறபடியே தமக்குத் துணையாய்‌ எழுந்தருளி யிருக்கிற ஸ்ரீ ரங்கராஜரையும்‌ திருவாராதனமாக ப்ரஸாததித்து விடை கொடுத்தருளினார்‌.

ஜீயர்‌ ஆசார்ய ஹ்ருதயத்திற்கு வ்யாக்யான மருளியது
அநந்தரம்‌ ஆசார்ய ஹ்ருதயத்திற்கு வ்யாக்யாநஞ்‌ செய்தருளத்‌ திருவுள்ளமாய்த்‌ திரு மேனியில்‌ தெளர்ப்பல்யத்தையும்‌ பாராமல்‌ திருவணையிலே சாய்ந்தருளினபடியே திருக்கழுத்து நோவத் திரு வெழுத்துச் சாத்தி யருளும்படியைக்‌ கந்தாடை யண்ணன்‌ கண்டு தேவரீர்‌ இப்படி எதுக்காக ப்ரயாஸப்படுவது?’” என்ன, ஜீயரும்‌“உம்முடைய புத்ர பெளத்ராதிகளுக்காகப்‌ படுகிறேன்‌” என்றருளிச்‌ செய்து வ்யாக்யானத்தை யருளிச்‌ செய்து தலைக் கட்டினார்‌.

ஏட்டூர்‌ சிங்கராசாரியர்‌ ஜீயரை ஆஸ்ரயித்தல்‌ -அஷ்ட கோத்ர நிபந்தனை–
அக் காலத்தில்‌ பெரிய திருமலை நம்பி திருவம்சஸ்தரான ஏட்டூர்‌ சிங்கராசாரியர்‌ ஜீயருடைய அப்ரதிம ப்ரபாவத்தைக் கேட்டு-பெருமையும்‌ நாணும்‌ தவிர்ந்து ஆகிஞ்சந்ய அநந்ய கதித்வங்களை
முன்னிட்டு அநந்ய சரணராய்‌ ஜீயர்‌ திருவடிகளை ஆஸ்ரயிக்க, அவரை க்ருபை செய்தருளி, தன் மூலமாக வந்த திரவியத்தை ஆழ்வார்‌ திருக் கோபுர கைங்கர்யத்துக்கு திரு நகரிக்குப்‌ போக
விட்டருளினார்‌. அக் கைங்கர்யம்‌ சிறிது குறையாக விருக்க பின்பு ஜீயர்‌ நாயனார்‌ அக் குறையைத்‌ தீர்த்தருளி சிகர பர் யந்தமாக நிறைவேற்றி யருளினார்‌- பின்பு போளிப் பாக்கம்‌ நாயனாரை
அழைப்பித்தருளி அவர்‌ முகமாக ஸப்த கோத்ர நிபந்தனை செய்‌தருளி அதில்‌ இந்த ஏட்டூர்‌ சிங்கராசாரியரையுங் கூட்டிக் கொண்டு அஷ்டகோத்ர ஸங்கயை யாயிரும்‌ என்று நியமித்தருளினார்‌.

இப்படி வாசா மசோசரமான வைபவத்தை யுடைய ஜீயர்‌ திருவடிகளிலே ஆஸ்ரயித்து
ஜகத் ரஷா பரோ அநந்தோ ஜநிஷ் யத்ய பரோ முநி |
ததாஸ்ரயாஸ் ஸதாசாராஸ்‌ ஸாத்விகாஸ் தத்வ தர்‌ஸிந : ॥

[ஐகத் ரக்ஷணத்தில்‌ ஊன்றி யுள்ள திருவநந்தாழ்வான்‌’ வேறு முனிவராக-மணவாளமாமுனியாக- அவதரிக்கப்‌ போகிறார்‌. அவரை ஆஸ்ரயிப்போர்‌ நல்ல ஆசார சீலர்களாகவும்‌, ஸாத்விகர்களாகவும்‌ தத்வார்த்தங்களை உணர்ந்தவர்களாகவும்‌ ஆவார்கள்‌ என்கிறபடியே ஸத்வோத்தரராய்‌ ஸதாசார நிரதராய்‌ தத்வ தர்சிகளாய்‌ அதிகத பரமார்த்தராய்‌ அநவரதம்‌ ஜீயரை ஸேவித்துக்‌ கொண்‌டிருக்கும்‌ முதலிகள்‌; (இந்த ஸ்லோகம்‌ துன்னு புகழ்க் கந்தாடைத்‌ தோழப்பருக்கு ஸ்வப்‌நத்தில்‌ கச்சிப்‌ பேரருளாளன்‌ அருளியதாக இந்த நூலின்‌ தொடக்கத்தில்‌ வந்துள்ளது காண்க, )

அஷ்டதிக்கஜங்கள்‌
பாராரு மங்கை திருவேங்கட முனி பட்டர் பிரான்‌
ஆராமம்‌ சூழ் கோயில்‌ கந்தாடை யண்ணன்‌ எறும்பி யப்பா
ஏராரு மப்பிள்ளை அப்பிள்ளார்‌ வாதி பயங்கரரென்‌
பேரார்ந்த திக் கயஞ் சூழ்‌ வர யோகியைச்‌ சிந்தியுமே

என்று சொல்லப்பட்ட வானமாமலை ஜீயர்‌, திருவேங்கடஜீயர்‌-பட்டர் பிரான்‌ ஜியர்‌, கந்தாடை யண்ணன்‌, எறும்பி யப்பா, அப்‌பிள்ளை, அப்பிள்ளார்‌, ப்ரதிவாதி பயங்கர மண்ணா என்கிற அஷ்ட திக்கஜங்களுக்கும்‌, திருப்பாணாழ்வார்‌ தாஸர்‌, ஏட்டூர்‌ சிங்கராசாரியர்‌, வரந் தரும்‌ பெருமான்‌ பிள்ளை, மேனாட்டுத்‌ தோழப்பர்‌,அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனார்‌, ஜீயர்‌ நாயனார்‌, அண்‌ணராய சக்ரவர்த்திகள்‌ தொடக்கமானாரும்‌ ஜகத் ரஷா பரோ அநந்தோ…தத்வ தர்ஸிந:” என்கிறபடியே இவர்களெல்லாரும்‌ ஸத்வோத்தரராய்‌ ஸதாசார நிரதராய்‌ தத்வ தர்சிகளாய்‌ ஜகதுஜ்‌ஜீவநைக பரராய்‌ இருப்பார்கள்‌.

முதலிகளுக்கு வகுத்த கைங்கர்யங்கள்‌
இப்படிப்பட்ட திக்கஜங்களாலும்‌ மற்றுமுள்ள முதலிகளாலும்‌ ஸேவ்யமாநரா யிருக்கிற ஜீயர்‌ திருவடிகளிலே நித்யகைங்கர்யம்‌ செய்யும்‌ முதலிகளாரென்னில்‌:
1-வானமாமலை ஜீயர்‌-பால்யாத் ப்ரப்ருதி ஸுஸ்நிக்தராய்‌ ஆஸ்ரயித்தவன்‌று தொடங்கி பிரியாதாட்‌ செய்‌திருப்பர்‌,
2-கந்தாடை அண்ணன்‌ ‘“ராமாநுஜ முநீந்த்ரஸ்ய ஸ்ரீமாந் தாஸரதிர் யதா” என்று உடையவருக்கு முதலி யாண்டானைப் போலே அத்யந்தம்‌ பீரீதி விஷய பூதராய்‌ பாதுகா ஸ்தாநீய் இருப்பர்‌
3-எறும்பி யப்பா வடுக நம்பியைப்‌ போலே தேவுமற்றறியாதே ஜீயருக்கு அத்யந்த மபிமதராயிருப்பர்‌.
4- ப்ரதிவாத பயங்கர மண்ணா உடையவர்‌ திருவடிகளுக்குக்‌ கூரத் தாழ்வான்‌ போலே ப்ரதி பக்ஷ நிரஸந பூர்‌ வகமாக ஸ்ரீபாஷ்யத்திற்கு உசாத் துணையா யிருப்பர்‌.
5-ஸேனை முதலியாரண்ணன்‌, சடகோப தாஸர்‌, அப்பிள்ளை, திருப்பாணாழ்வார்‌
தாஸர் இவர்கள்‌ திருவாய்மொழி முதலான அருளிச் செயல்களுக்கு உசாத்துணையாய் இருப்பர்கள் -விசேஷித்து அப்பிள்ளை ஜீயர் நியமனத்தாலே ஐந்து திருவந்தாதிகளுக்கும் உரை யருளிச்‌ செய்து யதிராஜ விம்ஸதிக்கும்‌ வ்யாக்யாத்ம்‌ செய்தருளினார்‌.
6-அப்பிள்‌ளார்‌ மட த்தில்‌ ஸர்வ பரங்களையும்‌ பரித்துக் கொண்டு தளிகைக்குப்‌ பாங்காக அமுதுபடி, பருப்பமுது, கறியமுது, பாலமுது, நெய்‌யமுது,தயிரமுது தொடக்கமானவை நடத்திக் கொண்டு போருவர்‌
7-பட்டர் பிரான்‌ ஜீயர்‌ எம்பாரைப்போலே ஸ்ரீபாதச்சாயா பந்தராய்‌ பிரியில்‌ தரியாமையை முன்னிட்டு அடிமை செய்து ததேக நிஷ்டராய்‌ ஸர்வவித கைங்கர்யங்களிலும்‌ அந்வயிததுத்‌ திருவடிகளை யல்லது ஒரு தெய்வ மறியா திருப்பர்‌,
8-ஜீயர்‌ நாயனார்‌ இளவரசராய்‌ எல்லார்க்கும்‌ உத்தேச்யராய்‌ திருக் குருகைப் பிரான்‌ பிள்ளாளைப்போலே அத்யாதரணீயராயிருப்பர்‌

இப்படி இவர்களாலே ஸேவ்யமானரா யிருக்கிற வரவரமுநிவர்யரான பெரிய ஜீயர்‌, திருமகள்‌ தன்‌ கொழுநன் திருக்ழல்‌ சேர்‌ மா்றனடி பரவும் எதிராசர்‌ செம் பொற் பாத மிரவு பகல்‌ மறவாமலிறைஞ்சி யேத்து மெழில்‌ திருவாய்மொழிப்‌ பிள்ளை யிணைத்தான்‌ பேணுமவரான மணவாள மா முனிவனெந்தை மண்ணுலகலவதரித்து வாழ்ந்த பின்‌ முன்னறிவெனவு மறியாத மானிடவரெல்லாமுதிதான வர்த்த பஞ்சக நிஷ்டரார்‌ என்றும்‌,
இத்தம்‌ ப்ருத்யா நர்த்திரஸ் தோஷ யித்வா தேஸே தஸ்மிந் தர்ஸயந் வைபவம்‌ ஸ்வம்‌
ப்ரத்யா வ்ருத்தஸ் த்வந்திமோபாய தத்வம்‌ தத்ரத்யேஷு ஸ்தாபயித்வா ஜநேஷு ॥
-இப்படி விஷயங்களை யறிய வேணுமென்று வந்த சிஷ்யர்‌களை மகிழ்‌வித்துக்‌ கொண்டு அந்த திவ்ய தேசத்தில்‌ தமது வைபவங்களை ப்ரகாசிப்பித்துக்‌ கொண்டு அங்குள்ள வைஷ்ணவரிடையே அந்திமோபாய நிஷ்டையில்‌ உண்‌மையை நிலை நிறுத்தித்‌ திரும்‌பி யெழுந்‌தருளினார்‌ என்றுசொல்லுகிறபடியே-)ஜகத்திதுண்டான சேதனரெல்லாரையும்‌ அர்‌த்த பஞ்சக நிஷ்டராயும்‌ அந்திமோபாய நிஷ்டராயும்‌ உஜ்ஜீவிக்கும்படிக்குத் திருத்தி வாழ்வித்ருளி நாயனாருக்குத்‌ திரு வாய் மொழி ஈடும்‌ ஸ்ரீபாஷ்யமும்‌ விசதமாக ப்ரஸாதிக்கும்படி,அண்ணனையும்‌ அண்ணாவையும்‌ நியமித்தருளி க்ருதார்த்த்ராய்‌,
தென்னரங்கா்‌ சீரருஞக்கிலக்காகப்‌ பெற்றோம்‌
திருவரங்கந் திருப்பதியே இருப்பாகப்‌ பெற்றோம்‌
மன்னிய சீர் மாறன் கலை யுணவாகப் பெற்றோம்‌
மதுரகவி சொற் படியே நிலையாகப்‌ பெற்றோம்‌
முன்னவராநங் குரவர்‌ மொழிகளுள்ளப்‌ பெற்றோம்‌
முழுது நமக்கிவை பொழுது போக்காகப்‌ பெற்றோம்‌
பின்னை யொன்று தனில் நெஞ்சம்‌ போராமற் பெற்றோம்‌
பிறர் மினுக்கம்‌ பொறாமை யில்லாப்‌ பெருமையும்‌ பெற்றோமே

என்று இப்படி ஸ்வ நிஷ்டா விசேஷத்தை மதித்துக் கொண்டு அகாரண க்ருபா பரிதஸ்வ விஸேஷ கடாஷ பாதேந புளி முதலான வ்ருஷாதிகளையும்‌ உஜ்ஜீவிப்பித்துக்‌ கொண்டெழுந் தருளியிருந்‌தார்‌. யம் யம்‌ ஸ்ப்ருஸதி பாணிப்யாம்‌” என்கற ஸ்லோகார்த்தம்‌ இவரிடத்திலே அந்வர்த்த ஸித்தமாய்‌ பலித்தபடி கண்ட பின்பு மனுஷ்யரான ஜ்ஞாநிகளுக்குஜ்ஜீவநம்‌ கிம் புநர்‌ ந்யாய ஸித்தமிறே-

தத்‌ பாத பத்ம ஸம் ஸ்பர்ஸ பாவநம்‌ ஸலிலம்‌ ஐநா |
ஸ்வீகுர் வந்தஸ் ஸூகேநைவ ஸ்வரூபம்‌ ப்ரதி பேதிரே ॥
ஆலோகைர நுகம்பாத்யை ராலாபைரம்ரு தச்யுதை: !
அந்வஹம்‌ பாணி சாதன்‌ய ஸ்பர்ஸந் யாஸைஸ் சபாவநை : ॥
மந்த்ர ரத்ந ப்ரதாநேந ததர்த்த ப்ரதி பாதநாத்‌ |
ஆத்மார்ப்பணேந கதிசிதஜ் ஞாதஜ் ஞாபநே ந௪ ॥
கேசித் ஷேமம் யயுஸ்‌ தஸ்ய பாதபத்மஸ்ய ஸம்ஸ்ரயாத்‌ |
அந்யே தத் ரூப நித்யா நாதந்யே தந் நாம கீர்தீதநாத்‌ ॥
ஸம்ருத்வா தஸ்ய குணான் திவ்யாந்‌ ஸ்துத்வாதாநேவ கேசந |
நத்வாதாம்‌ திஸ முத்திஸ்ய ஸ்ம்ருத்வா தத் வைபவம்‌ பரே ॥
அபதிஸ்ய கமப்பயே நமந்யே ப்ரதித வைபவம்‌ |
அந்யேதத்‌ பருத்ம ப்ருத்யா நாம லோக ஸ்பர்ஸ நாதபி:॥
அந்யே தத்பாத ஸம்‌ ஸ்பர்ஸ தந்யே ஸம்பூய பூதலே |
அபவந்‌ பூயஸா தஸ்ய முநே : பாத்ரம்‌ க்ருபாத்ருஸநம்‌ ॥
ஏவம்‌ ஸர்வே முநீந்தரேண பபூவுஸ் ஸ்ரஸ்த பந்தநா;
|
[அம் மணவாள மாமுனிவருடைய திருவடித் தாமரைகளின்‌ ஸம்பந்‌தத்‌தினால்‌ பரிசுத்தமான ஸ்ரீபாத தீர்‌த்தத்தைப்‌ பருக அடியார்கள்‌ எளிதில்‌ தமது ஸ்வரூபத்தை (சேஷத்வத்தை)உணர்ந்தனர்‌. அவருடைய திவ்ய கடாக்ஷத்தாலும்‌ அம்ருதம் போல்‌ பாயா நின்ற க்ருபாதிசயத்தாலும்‌, திருவடிகளின்‌ ஸ்பர்சத்தாலும்‌ அவற்றில்‌ பர ஸமர்ப்பணத்தினாலும்‌, மந்த்ர ரத்நமான த்வயத்தை ௨பதேசமாகப்‌ பெற்றும்‌ அதன்‌ பொருளை அருளிச்‌ செய்யக்‌ கேட்டும்‌ சிலர்‌ ஆத்ம ஸமர்ப்பணத்தினாலும்‌ (ப்ரபத்தியாலும்‌)), தமது அறியாமையை விண்ணப்பம்‌ செய்வதாலும்‌, (சிலர்‌) அம்மா முனிவருடைய திருவடித் தாமரைகளில்‌ ஆஸ்ரயிப்பதாலும்‌, ஆத்மோஜ்‌ ஜீவனத்தை (க்ஷேமத்தை) அடைந்தார்கள்‌. சிலர்‌ அம்மாமுனிவருடைய திருமேனியை எப் போதுமாக தியாந விஷயமாக்குதலாலும்‌, அவர்‌ திரு நாமங்களைப்‌ பாடுதலாலும்‌,சிலர்‌ அவருடைய கல்யாண குணங்களைக் கேட்டு அவற்றைக் கொண்டு அவரைத்‌ துதித்தும்‌, அவர்‌ எழுந்தருளி யுள்ள திக்கு நோக்கித்‌ தண்டனிட்டும்‌,அவருடைய பெருமைகளைச்‌ சிந்தித்து மூழ்ந்தும்‌, இப்படிப்பட்ட வைபவமுடைய ‘ஸ்வாமியை ஈடற்றவராக நிச்சயித்தும்‌, சிலர்‌ அவருடைய தாஸ தாஸர்களின்‌ கடாக்ஷித்தினாலும்‌ ஸ்பர்ஸத்தினாலும்‌, அவர்களின்‌ பாத ஸ்பர்ஸத்தினாலும்‌ தன்யமான இப்‌பூவுலகில்‌ (பாக்ய சாலிகளாக) பிறந்து, அம் முனிவருடைய க்ருபா கடாஷத்திற்கு மேலான பாத்ர பூதர்களாக ஆனார்கள்‌. இப்படி
யாவரும்‌ முநீந்தரரான மணவாள மாமுனிகளருளாலே பந்தங்‌கள்‌ நீங்கியவர்களாக ஆனார்கள்‌] என்கிற படியே தம்முடைய ஸ்ரீபாத தீர்‌த்த ஸ்வீகாராதிகள்‌ தொடக்கமாக ஈஷண த்யாந ஸம்ஸ்பர்ஸாபிமாநாதி விசேஷங்களாலே ஸமீபஸ்தரோடு தூரஸ்தரோடு பவிஷ்யோத்தர முண்டாமவர்களோடு வாசியற ஸர்வரையும்‌ ஸம்ஸாராதுத் தீர்ணராம்படி பண்ணி ஸம்ஸார பரமபத விபாகமற பூதலமெங்கும்‌ பொன்னுலகமாக்கி, இனி தேடித்‌ திருந்தும் படியாக வொழிந்த தசையாய்‌

ஸர்வாவஸ்தா ஸத்ருஸ விபவா ஸேஷக்ருத்த்வம்‌ ரமயா பர்த்து;
த்யக்வா ததபி பரமம்‌ தாம தத் ப்ரீதி ஹேதோ: |
மக்நா நக்நெள வரவரமுநே மாத்ரு ஸாநுக்கி நீஷந்‌
மர்த்யா வாஸே பவஸி பகவந்‌ மங்களம்‌ ரங்க தாம்‌ந : ॥

(கல்யாண குண பூர்ணரான மணவாள மா முனிவரே! ஸ்ரீய:பதியான எம்பெருமானுக்கு எல்லா நிலைகளிலும்‌ தகுந்தபடி வைபவம்‌ மிக்க குற்றேவல்கள் அனைத்தும்‌ செய்து கொண்டுள்ள தேவரீர்‌ அந்தப்‌ பரம பதத்தையும்‌ விட்டு அவ் வெம்பெருமானுடைய பிரீதியின்‌ பொருட்டு ஸம்ஸாராக்நியில்‌ அழுந்திக் கிடக்கிற அடியேன்‌ போல்‌வாரை உத்தரிப்பிக்கத்‌ திருவள்ளமாய்‌ இம் மாநிட வுலகில்‌ திருவரங்கமான திருப்பதிக்கு அணி விளக்‌ஈய்‌ உள்ளீர்‌] என்றபடியே தம்முடைய அவதார காரியம்‌ தலைக் கட்டி யருளி:

இராமானுசன் திருவடிகளே சரணம்‌,-இராமானுசாய நம : என்றது நடுவாக இந்த வரங்கர்‌ என்று தலைக் கட்டி அருளிச் செய்ய- அதுவே-ஆர்த்தி என்று அறுபது பாட்டாய்‌ ஒரு ப்ரபந்தமாய்த்‌ தலைக்‌
கட்டிற்று
, அந்த அபிநிவேசம்‌ அவ்வளவிலே நில்லாதே பரவி
எம்பெருமானார்‌ தம்பிரானென்னுமவரை
நம்பெருமாள்‌ தாமுகந்து நாள் தோறும்‌–தம் பரமா
ஏறிட்டுக் கொண்டளிப்ப ரென்றுமவர்‌ தம்மை
வேறிட்டுத்‌ தாங் கைவிடார்‌ —
என்று தேறுவதென்றும்‌,
பொல்லானிவனென்று போதிடென்று நங்குரவ
ரெல்லாரு மென்னை யிகழ்ந்தாரோ-நல்லார்கள்‌
வாழ்வான வைகுந்த வான்‌ சபையில்‌ வண் கூரத்‌
தாழ்வானி ருந்திலனோ வங்கு?
என்று கலங்குவதுமாய்‌ அநுகம்பாஞ்சலி யானவர்களை ஆராய்‌வதும்‌,
ஆரியர்காள்‌! ஆழ்வீர்காள்‌! அங்குள்ள முக்தர்காள்‌ !
சூரியர்காள்‌! தேவியர்காள்‌! சொல்லீரோ–நாரணற்கு
எங்களடியானிவன்‌ மீடேற வேணுமென்‌
நுங்களடியரருமுள
என்று கடகர்‌ பலரையும்‌ பல கால்‌ கால் கட்டி அர்த்திப்பதும்‌,
தென்னரங்கர்‌ தேவியே! சீரங்க நாயகியே!
மன்னுயிர்கட்கெல்லாம்‌ மாதாவே!–என்னை யினி
இவ் வுலகந் தன்னிலிருந்து நலங்காமல்‌
அவ் வுலகில்‌ வாங்கி யருள்‌
என்றும்‌
சீ ரங்க நாயகியே! தென்னரங்கள்‌ தேவியே! ்‌
நாரங்கட்கெல்லாம்‌ நற்றாயே ! — மாருதிக்கு
வந்த விடாய்‌ தன்னை யொரு வாசகத்தால்‌ போக்கின நீ
எந்தனிடர்‌ தீராத தென்‌
? என்றும்‌ மறுக்க வொண்ணாத மாத்ருத்வ ஸம்பந்தத்தைச்‌ சொல்லி மடி பிடிப்பதும்‌
இந்த வுடம்‌ போடினி யிருக்கப்‌ போகாதுன்‌
செங்கமலத் தாள் தன்னைத்‌ தந்தருள்நீ–அந்தோ
மையார் கருங் கண்‌ணி மணவாளா! தென்னரங்கா!
வையாம லிருப்பாயே யிங்கு
-என்று ஆர்த்ர ஹருதயத்வ விஸிஷ்டராய்–ஆர்த்தி ஹரத்வ விசிஷ்டரான – அவர் முன்பே தம்‌முடைய ஆர்த்தியைச்‌ சொல்லுவதும்‌,

சென்று திருமாலடியார்‌ தெய்வக் குழாங்கூடு
மென்று மொரு நாளாமோ? ஆழ்வாரே!-துன்னு புகழக்‌
கமலம்பாடினீரையோ அடியேனுமிக்‌
கமலஞ் சேர் காயம்‌ விட்டு
(கமலம்பாடி நிறையா அடியேனுமிக்‌–பாட பேதம்)என்று “அடியார்கள்‌ குழாங்களை உடன்‌ கூடுவதென்று கொலோ? என்று அர்த்தித்த ஆழ்வாரிடத்தில்‌ ஸ்வரூபா நுரூபமான ப்ராப்யத்தை அபேக்ஷிப்பதும்‌
இந்த வுடம்போ டிருவினையாலிவ்வளவும்
உந்தனடி சேராதுழன்றேனே–அந்தோ
அரங்கா! இரங்கா யெதிராசர்க்காக
இரங்காய்‌ பிரானே இனி–
என்றும்‌ திருவாங்கா! அருளாய்‌ இனி யுன் திருவருளாலன்றிக்‌ காப்பரிதால்‌” என்கிறபடியே மீளவும்‌ மரங்களுமிரங்கும்படி அவர்க்கந்தரங்கரை முன்னிட்டுக் கொண்டு அவரிரக்கத்தை இரப்‌பதுமாய்‌, இப்படி ஒரு தேச விஸேஷத்திலே சென்றாலொழிய தரியாத தசையை யடைந்து எழுந்தருளி யிருக்க;

அந்த தசையிலே தேசாந்தரஸ்தரான மேல்நா ட்டுத்‌ தோழப்‌பரும்‌ அவர்‌ திருத்தமயனாரான அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனாரும்‌ பெருமாளை ஸேவிப்‌பதாகக்‌ கோயிலுக்கெழுந்தருள।
அவர்களைத்‌ தென் மாடத்திருவீதியிலே பட்டர்பிரான்‌ ஜீயர்‌ கண்டருளி, “நீங்கள்‌ எங்கு நின்றும்‌ எழுந்தருளினீர்கள்‌? எங்கேறப்‌ போகிறீர்கள்‌?” என்று கேட்க, அவர்களும்‌ ஸ ஸாத்வ ஸ விநயராய்‌ ஸாஷ்டாங்க ப்ரணாமம் பண்ணி உகப்போடே யதா மநோ ரதம்‌ வ்ருத்தாந்தத்தை விண்ணப்பஞ் செய்ய, ‘ இப்படி ஜ்ஞாநாக்த்யாதிகள்‌ வடிவிலே தொடை கொள்ளலாம்படி அநுகூலராயிருக்கிற நீங்கள்‌ யதிபுநரவதாரமான நம்முடைய பெரிய ஜீயரை ஸேவிக்க வேண்டாவோ?” , என்றருளிச்செய்ய-
அவர்களும்

அதற்கு இசைந்து மடமேற கூடவெழுந்தருள, மணவாள யோகி தஞ்சமாம்‌ மலர்த் தாளிணைகாட்டி-என்கிறபடியே-ஜீயர்‌ திருவடிகளை ஸேவிக்கப் பண்ண, அவ்வளவிலே நாயனாரும்-புரை கொண்ட கோயில்‌ மணவாளமாமுனிக்கண்ணருளே” என்றும்‌ போதச்‌ சிவந்து பரிமளம்‌ விஞ்சும்‌ புதுக் கணித்த
சீதக் கமலத்தை நீரேற வோட்டிச்‌ சிறந்தடியேன்‌ ஏதத்தை மாற்றும்‌ மணவாள யோகி யினிமைதரும்‌
பாதக் கமலங்கள்‌ கண்டேனெனக்குப்‌ பயமில்லையே என்றும்‌ வாசிக கைங்கர்யமாக இந்தத்‌ திருநாமத்தை விண்‌ணப்பஞ் செய்து கொண்டு
திருவடிகளிலே ஸாஷ்டாங்கமாக
தெண்டன்‌ ஸமர்ப்பித்து நிற்க, ஜீயரும்‌ அவர்‌ அபேஷித்தபடியே அமலங்களாகக்‌ கடாக்ஷித்தருளி அப்போது எம்பெருமானார்‌ திறத்திற் சென்ற சிந்தையரான தாம்‌ இவர்கள்‌’ என்றவாறே
எம்பெருமானாருடைய விசேஷாபிமானமுள்ள திருநாராயண புரத்தை நினைத்து, அவர்‌ அந்திம தசையிலருளிச்‌ செய்தருளின
கச்சந் பதம் பரமுவாச வசாம்ஸி யாரி
ராமநுஜார்ய இஹதேஷு சதுர்த்த ஸித்தாம்‌ |
ஸ்ரீ யாதவாத்ரி வஸதிம்‌ ஸததம் பஜந்தஸ்‌
ஸக்தோ பவந்தி மம ஸந்ததி மூலநாத: 1

[எமது குலகூடஸ்தரான எம்பெருமானாருக்‌கு தன்னுடைச் சோதிக்கு எழுந்தருளுமளவில்‌ அருளிச் செய்த (ஆறு) வார்த்தைகளில்‌ நாலாவதான (வார்த்தைப்படி) திருநாராயணபுரத்தில்‌ இடை விடாமல்‌
வாஸம்‌ செய்பவர்கள் மஹான்களாவர்‌] என்கிறபடியே திரு நாராயண புரத்திலே நித்ய வாஸம்‌ பண்ணுவார்‌ நம்முடைய முதலிகளிலே ஒருவருமில்லையோ?” என்று ஜீயரரருளிச்‌ செய்ய,
அட்போது தோழப்பர்‌ திருப் பரியட்டத்தைத்‌ தலையிலே முடிந்து கொண்டு -‘இந்தக் கைங்கர்யம்‌ அடியேனுக்காக வேணும்‌”’ என்று ப்ரார்த்திக்க, ஜீயரும்‌ மிகவுமுகந்தருளி, “எம்பெருமானாருக்கும்‌
நமக்கும்‌ ப்ரியமாம்படி கிஞ்சித்கார பூர்வமாக எதிராஜ குமாரரை ஸேவித்து மங்களாசாஸந பரராய்‌ நித்ய வாஸம்‌ பண்ணியிரும்‌” என்று நியமித் தருளினார்‌-

அண்ண ராயரை பட்டர்பிரான்‌ ஜீயர்‌ திருவடிகளுக்கு ஆளாக்கினது
அந்த சமயத்திலே ராமாநுஜ பரிக்ருஹீதராய்‌ திருமலை நல்லான்‌ திருவம்சஸ்தராய்‌ .”இடங்கொள் சமயத்தை யெல்லாம்‌ எடுத்துக்‌ களைந்து ஸ்வமத ஸ்தாபகராயிருக்கிற அண்ணராய சக்ரவர்த்திகள்‌ ஸ குடும்பராக பெருமாளை ளேவிக்க எழுந்தருளிக்‌ கோயிலிலே பெருமாளை ஸேவித்துக்‌ கொண்டெழுந் தருளியிருக்க, அப்போது ஜீயருடைய சரம தசையை தேசாந்தரஸ்த்தரோடும்‌ தத் தேஸிரீயரோடும்‌ வாசியற ஸர்வரும்‌ குழாங் குழாமாகச்‌ சென்று ஸேவித்து மீளுகிறபடியை அண்ணராய சக்ரவர்த்தி திருத்தாயார்‌ ஆச்சி கண்டு, அவ் விசேஷங்சேட்டு, ”அண்ணராயனே! நமக்கு ஜீயரை ஸேவிக்க வேண்டாவோ?! என்ன, சக்ரவர்த்தியும்‌ இசைந்து எல்லாரையுங் கூட்டிக் கொண்டு ஜீயர்‌ மடத்திலே சென்று பட்டர்‌பிரான்‌ ஜீயர்‌ புருஷகாரமாக வந்து ஸேவித்து திருவடிகளிலே வேரற்ற மரம் போலே விழுந்து கிடக்க, ஜீயர்‌ நெடுநாளாக அங்‌கீ கரிக்கைச்கு விஷயங் காணாமையாலே முடங்கிக் கிடந்த திருவடிகள்‌ இப்போது இவரைக் கண்டு (தத ஸ்திமித முத்க்ஷிப்ப சரணம்‌ சக்ரலாஞ்சிதம்‌ |
க்ருபயாமூர்த்கி விந்யஸ்ப ஸநிநாய குருஸ்ரமம்‌
॥ [பிறகு அம் மணவாளமாமுனிகள்‌ சக்கர அடையாளம்‌ பெற்ற நிச்சலமான தம்‌ திருவடிகளை உயர வெடுத்து க்ருபையுடன்‌ அவர்‌ திருமுடியில்‌ வைத்தருளி அவரது பெரு விடாயைப்‌ போக்கினார்‌ -என்கிறபடியே; )நிமிரப் பெற்றுத் தந் திருவடித் தாமரைகளை இவர்‌ திரு முடியிலே வைத்தருள, இத்தைக் கண்டு முதலிகளெல்லாரும்‌ இவருடைய பேறிருந்தபடியென்‌! என்று உகந்தருளினார்கள்‌. ஜீயரும்‌ சக்ரவர்‌த்‌திகளைக் குறித்து எம்பெருமானார்‌ ஜீயரை திருவேங்கட த்ரோஹிகள்‌ நலியா வண்ணம்‌ காத்து ரக்ஷித்து நம்‌ தர்சந விஷயமாக அநேக கார்யங்கள்‌ பண்ணிப் போந்தவரன்றோ நீர்‌!” என்று மிகவுமுகந்தருளி, உமக்குத் தகுதியான பேறில்லையே, சற்று முந்துறச் சேரப் பெற்றீரில்லையே!’ என்று அருளிச் செய்து, பட்டர்பிரான்‌ ஜீயரைப் பார்த்து, வாரீர்‌ கோவிந்தப்ப தாஸரே! என்றழைத்தருளி, :ராமஸ்ய தஷிணோ பாஹு:”‘ [ராமபிரானுக்கு வலது கை லக்ஷ்மணன்‌ ] என்று நமக்கு தஷிண பாஹாு ஸ்த்தாநீயரன்றோ நீர்‌? ஆகையாலே நாம்‌ செய்கிறதாக நினைத்து நம்‌ ஸம்பந்தத்தை அபேக்ஷித்திருக்கிற இவர்களுக்கு பஞ்ச ஸம்ஸ்காரங்களையும்‌ செய்யுமென்று அண்ணராய சக்ரவர்த்திகளையும்‌ தோழப்பரையும்‌ நாயனாரையும்‌ அவர்‌ கையில காட்டிக்‌ கொடுத்து “தர்‌சந ப்ரவர்த்தகராம்படி திருத்தம்‌’” என்று
நியமித்தருள, அவரும்‌ அப்படியே அவர்களை விசேஷ கடாக்ஷம்‌ செய்தருளினார்‌. பின்பு அப்பிள்ளானும்‌ ஜீயர்‌ நாயனாரும்‌ ஜீயர்‌ திருவடிகளிலே ஸேவித்து, ‘அடியோங்களுக்குத்‌ தஞ்சமாசு தேவரீருடைய அர்ச்சா ரூபமான விக்ரஹம்‌ வேணும்‌” என்றபேஷிக்க,அப்படியே அநுமதி பண்ணித்‌’ தம்முடைய திருக்கைச் செம்பை உபாதாநமாக்கி யருள, அப்படியே அவர்களும்‌ இரண்டு விக்ரஹம்‌ ஏறி யருளப் பண்ணிக் கொண்டு உகந்தருளினார்‌கள்‌.

பெரிய ஜீயர்‌ சரம தசையில்‌ நாலாயிரமும்‌ கேட்டருளியது
பின்பு தனித் தனியே முதலிகளெல்லாருக்கும்‌ வேண்டிய ஹிதங்‌களை யெல்லாம்‌ ப்ரஸாதித்தருளி மேலிலங்குவானான கலங்காப்‌ பெரு நகரில்‌ சென்று இமையாத கண்ணீனராய்‌ வழுவிலா வடிமை
செய்யப்‌ புறப்பட்டெழுந்தருள நாலு நாள் என்னவே, :’“நாலாயிரமும்‌ தொடங்கி நடத்துங்கோள்‌” என்று நாயனார்‌ தொடக்கமான முதலிகளுக்கு நியமித்தருள, அவர்களுமப்படியே தொடங்கி அநுஸந்திக்க, இவைகளை யெல்லாம்‌ திருச் செவி சாத்தி யருளி
-ஜீயரும்‌ உகப்புடனே -வளர்த்ததனால்‌ பயன்‌ பெற்றேன்‌ என்‌றருளிச்‌ செய்து, மஸ்தகாஞ்சலியாய்‌ ததர்த்தாநுபவ பாரவஸ்யததாலே நிமீலிதாக்ஷ யுகளராயிருக்க, “இப்போது திருவுள்ளத்திலோடுகிறதென்‌?” என்று கந்தாடை யண்ணன்‌ கேட்டருள, “ஈட்டில்‌ அர்த்த ரஸம்‌ தலை மண்டி யிட்டுச்‌ செல்கிறது” என்று அருளிச் செய்து, அப்படியே நடக்கும் போது *மருளொழி நீ மட நெஞ்சே என்னும்‌ தசையை ப்ராப்தராய்‌ இங்ஙன்‌ ஏகாதசி சென்று மற்ற நாள்‌ திருத்‌ த்வாதசியிலே உத்தம நம்‌பி தொடக்கமான அனைத்துப் பரிகரத்தையும்‌ அழைப்பித்து ‘ஸர்வாபராதங்களையும்‌ பொறுத்தருள வேணும்‌”’ என்று ஷாமணம் பண்ணிக் கொள்ள, அவர்களும்‌ தேவரீருக்குமோரபசாரமுண்டோ?’? என்று அருளிச் செய்ய, மீளவும்‌ அவர்களைக்‌ குறித்து ‘பெரிய பெருமாளுடைய ஸ்ரீகார்யத்‌தைக்‌ குறைவற நடத்திக் கொண்டும்‌, ஸ்ரீவைஷ்ணவர்களை
வரவளைத்துக் கொண்டும்‌ போருங்கோள்‌”” என்‌றருளிச் செய்துப்‌ போக விட்டு, திருவாராதநம்‌ [திருவாராதந எம்பெருமான்‌ ஆசாரியர்‌ திருமேனிகள்‌], ஸ்ரீகோசங்கள்‌, மற்றுமுண்டான உபகரணங்கள்‌, மடம்‌ முதலான எல்லாவற்றையும்‌ :யஸ்யை தே தஸ்ய தத் தநம்‌’‘என்னும்படி நம் பெருமாளுக்கு சேஷமாக்கி ஸமர்ப்‌பித்து, ஸ்ரீ வைஷ்ணவர்களை அமுது செய்வித்து அவர்கள்‌ தீர்த்‌தமும்‌ ஸ்வீகரித்து அபராத ஷாமணம்‌ பண்ணிக் கொண்டு எழுந்‌தருளி யிருக்க, முதலிகளும்‌ பலிதமான வ்ருக்ஷத்தை பக்ஷி ஜாதங்கள்‌ காத்துக்‌ கொண்டிருக்குமா போலே பரிந்து ஸேவித்துக் கொண்டு அஞ்ஜலி பத்மதங்களை யுடையராய்‌ அநுபவித்துக் கொண்டிருக்க, ஆதித்ய அஸ்தமான வாறே தத் காலீந கர்மத்தையுஞ்‌ செய்தருளி பிள்ளை திருவடிகளே சரணம்‌-வாழி உலகாசிரியன்‌” என்றநுஸந்தித்துப்‌ பிள்ளையை த்யாநித்துக்‌ கொண்டு அவசராக அணையிலே சாய்ந்தருள, ஸ்ரீபாதத்து முதலிகளெல்லாரும்‌ கை கூப்பிக்‌கொண்டு ப்ரஹ்‌ம வம்லி ப்ருகு வல்லி, சூழ்விசும்பணிமுகில்‌, அர்ச்‌சிராதி, நூற்றந்தாதி இவைகளை அநுஸந்திப்பாராய்‌ பெரிய ஆரவாரத்துடளே செல்லுகிறவளவி3ல அங்கயல் பாய் வயல் தென்‌னரங்கன்‌ [இரா. நற்‌. 108] என்ற பாசுரத்தை ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ அநுஸந்திக்கக் கேட்டு தாமும்‌ க்ருதாஞ்ஜலிபுடராய்‌ ”எம்‌பெருமானார்‌ திருவடிகளே சரணம்‌”’ என்றநுஸந்தித்து தத் கத சித்தராய்த்‌ திருக் கண்களைச்‌ செம்பளித்துக்‌ கொண்டிருக்க:

ஜீயர்‌ திருநாட்டுக்கெழுந்தருளியது
*கநசகிரி மேலே கரிய முகல்போல விநதை சிறுவன்‌ மேற்‌ கொண்டு என்றும்‌, எந்தை திருவரங்கரேரார்‌ கருடன்‌ மேல்‌ வந்து முகங் காட்டி வழி நடத்த
என்றும்‌ இவர்‌ அபேக்ஷித்தபடியே பெரிய
பெருமாளும்‌ -செழும்பறவை தானேறித் திரிவாராய்த்‌ தம்‌ தாளிணையை இவர்‌ திருமுடி மேலே வைத்து –மஞ்சுயர்‌ பொன் மலை மேலெழுந்த மாமுகில் போன்ற தன்‌ வடிவை ஸாக்ஷாத்கரிப்பித்து
அநுபவிப்பிக்க அநுபவித்து – உன் சரணந் தந்தென்‌ சன்மங் களையாயே என்றும்‌ ”ஸுகேநேமாம்‌ ப்ரக்ருதிம்‌ ஸ்தூல ஸூஷ்ம ரூபாம்‌ விஸ்ருஜ்ய’ ‘ என்றும்‌,-நோய்களாலென்னை நலங்காமல்‌ சதிராக
உன்‌ திருத்தாள்‌ தா என்றும்‌ -நிரதிசய போக்யமான திருமேனியை விடுவித்து அங்‌கீ கரிக்கப்பெற்று, மாதவன்‌ தன்‌ துணையா நடந்‌தாள்‌ என்றும்‌ அரங்கத்துறையுமின்‌ துணைவனொடும்‌ போய்‌ என்றுஞ்‌ சொல்லுகிறபடியே
ஸ்ரீயபதியான பெரிய பெருமாள்‌ பெரிய திருவடி மேற்கொண்டு ஹார்த்தன்‌ வழி நடத்த, ஸுஷும்‌நை யாகிற வாசலிலே புறப்பட்டு சிர:கபாலத்தை பேதித்து ப்ரஹ்மரந்த்ரத்தாலே ஜீயர்‌ திருநாட்டுக் கெழுந்தருளினார்‌

அநந்தரம்‌ பெரிய பெருமாளும்‌ ‘விஸ்ருஜ்ய லஷ்மணம்‌ ராமோ துக்க ஸோக ஸமந்வித :- [இளையபெருமாளைப்‌ பிரிந்த ராம பிரான்‌ சோக துக்கங்களின்‌ வசமானான்‌] என்கிறபடியே ‘ஸெளமித்ரிர்மே ஸகலு பகவாந்‌ ஸெளம்ய ஜாமாத்ரு யோகீ – (ஸெளம்ய ஜாமாத்ரு யோகி-மணவளவாளமாமுனிகள்‌ இளைய பெருமாளே] என்கிற இளைய பெருமாளவதாரமான ஜீயரையும்‌ வழி விட்டு வந்து, இளைய பெருமாளைப்‌ பிரிந்து ஒரு பசலாயிரமூழியாய்‌ அமுது செய்யாதே முசித்துக்‌ கொண்டு பெருமாளிருந்தாப்போலே இவரும்‌ அமுது செய்யாதே முசித்து மூடிக்கிடந்தார்‌. ஸ்ரீ பாதத்து முதலிகளெல்‌லாரும்‌ –ஐயோ கண்ணபிரான்‌! அறையோ! முறையோ? அரவணை மேல்‌ பள்ளி கொண்ட முகில்‌ வணணனே| என்று பெரு மிடறு செய்து கையெடுத்துக்‌ கூப்பிட்டுக்கொண்டு துடிக்க,அருகிலிருந்த முதலிகள்‌ தேற்றத் தேறி தின்று இப்படி யெழுந் தருளின அவருடைய அந்திம தசையை எல்லாருமறிந்து உஜ்ஜீவிக்‌கும்படி
கும்பம்பாஸ்வதி யாதி தத் ஸுததிநே பஷே வள க்ஷேதரே
தவாதஸ்யாம்‌ ஸ்ரவணர் க்ஷ்பாஜி ருதிரோத் கார்யாக்ய ஸம்வத்ஸரே |
தீ பக்த்யாதி குணார்ணவோ யதி வராதீநாகிலாத்ம ஸ்த்திதி:
ஸ்ரீ வைகுண்டமகுண்ட வைபவமகாத்‌ காந்தோ பயந்தா முநி : ॥

ஜ்ஞாந பக்தி வைராக்யம்‌ முதலான குணங்களுக்கு மஹா ஸமுத்ரம்‌ போன்றவரும்‌, எம்பெருமானாருக்கு ஸ்வாதீநமான தமது ஸமஸ்தமான நிலைகளையு முடையவருமான மணவாளமாமுனிகள்‌ ருதிரோத்காரி ஸம்வத்ஸரத்தில்‌ சூரியன்‌ கும்ப ராசியை யடைந்த அளவில்‌ (மாசி மாதத்தில்‌) சனிக் கிழமையில்‌ க்ருஷ்ண பக்ஷத்த்தில்‌ திருவோண நக்ஷத்ரம்‌ கூடிய த்வாதசி தினத்தன்று எல்லை யற்ற பெருமை யுள்ள ஸ்ரீவைகுண்டத்தை அடைந்தருளினார்‌-
என்று அங்குத்தைக்கு அந்தரங்கர்கள்‌ அருளிச் செய்தார்கள்‌-
அவ்வளவு மன்றிக்கே,
ஆசிலாத மணவாள மா முனி யண்ணல் பூமியுறுவைப்‌ பசியிற் றிருமூலம்‌
தேச நாளது வந்தருள் செய்த நந் திருவாய் மொழிப்பிள்ளை தா
ளீசனாகி யெழுபத்து மூவாண்‌ டெவ் வுமிர்களையு முய்வித்து வாழ்ந்தனன்‌
மாசி மால்‌ பக்கத் துவாதசி மா மணிமண்டபத் தெய்தினன்‌ வாழியே

என்று இப்படி அவர்‌ தோன்றியது முதலாகத்‌ தன்னுலகம்‌ புக்கதீறாகப்‌ பேசித்‌ தலைக் கட்டினார்களிறே-

ஜீயருக்கு சரம கைங்கர்யங்கள்‌
அநந்தரம்‌ ஜீயருக்கு சரம கைங்கர்‌யங்களைச்‌ செய்வதாக முதலிகளெல்லாரையுங் கூட்டிக்கொண்டு ஜீயர்‌ நாயனார்‌ திருக் காவேரிக்‌ கெழுந்தருளி நீராடி அலங்காரத் திருமஞ்சனங் கொண்டு வந்தருளி
ஜீயரைத்‌ திருமஞ்சநம்‌ கொண்டருளப் பண்ணுவதாக ஒரு திருமஞ்‌சந வேதிகையிலே விமல சரம விக்ரஹத்தை யேறி யருளப் பண்ணி புருஷ ஸுக்தா நுஸத்தத்தாலும்‌ த்வயாநுஸந்தாத்தாலும்‌ மற்று முண்டான அநு ஸந்தாநத்தாலும்‌ திருமஞ்சநங்‌ கொண்டருளப்‌ பண்ணி திருவொற்று வாடை சாத்தி, திருப் பரியட்டஞ் சாத்தி அலங்கரித்து, ‘விஸ்தீர்ண பால தல விஸ்புர தூர்த்வ புண்ட்ரம்‌”[விசாலமான திரு நெற்றியில்‌ மிக விளங்கும்‌ திருமண் காப்புடையவர்‌ ] என்றபடி த்வாதசோர்ந்த்வபுண்ட்ரங்களையும்‌ தரிப்பித்து தச் சேஷிமான திருமண்‌ ஸ்ரீசூர்ணங்களை யெல்லாம்‌ தங்களுக்கு ஆபத் தநமாகச்‌ சேர்த்து வைத்துக்‌ கொண்டு, ஜீயரை திவ்ய ஸிம்‌ஹாஸநத்திலே ஏறி யருளப் பண்ணி அவர்‌ திருவடிகளைக்‌ கண்ணிலும்‌ நெஞ்சிலும்‌ ஒற்றிக் கொண்டு ஸ்வ சிரோ பூஷணமாக தரித்துக்‌ கொண்டு, அத்தன்‌ மணவாளயோகி அடியிணையைச்‌ சித்தப்‌
பெருங்கோயில்‌ கொண்டருளி என்று ஸூபாஸ்ரயமான திவ்ய மங்கள விக்ரஹத்தைத் தம் தாம்‌ திருவுள்ளங்களில தேக்கிக் கொண்டு வைத்த கண் வாங்காதே விமல சரம விக்ரஹாநுபவம்‌ பண்ணிக்‌
கொண்டிருக்க :
அவ்வளவிலே-௮ரங்கத் தம்மானரைச் சிவந்த வாடையையும்‌,-அவன் மார்வணிந்த வன மாலையையும்‌ பொற்றட்டிலே வைத்துக்‌ கொண்டு ஸகல வாத்ய கோஷங்களுடனே உத்தம நம்பி ஸிரஸா வஹித்துக்‌ கொண்டு அனைத்துக் கொத்துப் பரிகரத்துடனே மடத்து வாசலிலே செல்ல, முதலிகளும்‌ அவற்றை எதிர் கொண்டு தண்டன்‌ ஸமர்ப்பித்து அங்கீரித்து, உடுத்துக் களைந்த பீதக
வாடை யுடுத்துக்‌ கலத்ததுண்டு தொடுத்த துழாய்‌ மலர்‌ சூடிக் களைந்தன சூடுமித் தொண்டரான ஜீயருக்கு அவற்றைச்‌ சூட்டி அலங்கரித்து, கோயில் அனைத்துப் பரிகரம்‌, ஆசார்ய புருஷர்கள்‌ ஜீயர்கள்‌, ஏகாங்கிகள்‌, ஸ்ரீவைஷ்ணவர்கள்‌, சாத்தாத முதலிகள்‌ மற்று முண்டானவர்க ளெல்லாருங் கூடி ஜீயரை ஸேவித்து, -செய்‌ய தாமரைத் தாளிணை வாழியே என்று தொடங்கி அநுஸந்தித்து மங்களா சாஸநம்‌ பண்ணி ”எம்பெருமானாரை ஸேவியாத இழவெல்லாம்‌ தீர்ந்தோம்‌ இவரை ஸேவித்து; இப்போது இவ் வவதாரமும்‌ தீர்த்தம்‌ ப்ரஸாதித்துப்‌ போவதே! என்று மிகவும்‌ துக்காபிதப்தராய்‌
(சோகித்து, பின்பு அங்கிருந்த முதலிகள்‌ தேற்‌றத் தேறி நின்று ஸந்நிதியில்‌ முதலிகளெல்லாரையுங்‌ கூட்டிக்‌
கொண்டு யதா க்ரமத்திலே ஸ்ரீசூர்ண பரிபாலநத்தையும்‌ நடத்தி தச் சேஷமான ஸ்ரீசூர்ண ப்ரஸாதங்களைத்‌ தாங்களும்‌ தரித்துக்‌ கொண்டு, பின்பு எண்ணெய்‌ சுண்ணங் கொண்டாடி திவ்யா
லங்க்ருதமான புஷ்பக விமாநத்திலே ஜீயரை ஏறி யருளப் பண்ணி வைத்து எல்லோரும்‌ ஸ்ரீபாதந் தாங்கிக்‌ கொண்டு சத்ர சாமர தால வ்ருத்தாதகள்‌ பணிமாற, மஹாஸம்ப்ரமத்துடனே மத்தளங்‌கள்‌ சங்க காஹள பேரிகள்‌ தொடக்கமான ஸகல வாத்யங்கள்‌ கடல்‌ போலே முழங்க,
பதாகாத் விஜிநீம் ரம்யாம்‌ தூர்யோ த்ருஷ்ட நிகாதநீம்‌ |
ஸிக்தராஜ பதாம் ராம்யாம்‌ க்ருத்ஸ்நம்‌ ப்ரகீர்ணகுஸு மோத்கராம்‌ ॥

[நகரத்தையும்‌ மார்க்கத்தையும்‌ அலங்கரித்தக்‌ க்ரமம்‌-அங்கங்கே நாட்டிய கொடிகளால்‌ அழகியதாய்‌, ஸகல வாத்ய கோஷங்களால்‌ சப்த மயமானதாய்‌, நீர் தெளித்து அலங்கரிக்கப் பட்டதாய்‌, புஷ்பங்‌களை ராஜ மார்க்க மெங்கும்‌ தெளித்து வைத்ததாய்‌ ஆக்கினார்கள்‌] என்கிறபடியே காவொத்த கமுகு, பல, கதாலிச் சோலைகளாய்‌ அரங்‌கன்‌ திருவீதி யெட்டிலும்‌ நாட்டி -மகர தோரணம்‌ மேற்கொடிகளாட -என்று சொல்லுகிறபடியே ஸர்வாலங்கார ஸம்ப்ருதையான எட்டுத் திரு வீதிகளிலும்‌ கரும்பேந்தி நூற்றந்தாதி முதலாக அநுஸந்திக்க, திரு நீர்‌ பரிமாற பொரியும்‌ புஷ்பமும்‌ சிதற “தர்‌சநத்திலே மணவாளமாமுனிகள்‌ திருநாட்டுக் கெழுந்தருளினார்‌’-என்று ஒற்றைத் திருச்சின்னம்‌ பணிமாற ஸூமங்கலிகள்‌ தீப மெடுக்க, திருவீதிகளிலே அங்குண்டானவர்களெல்லாம்‌ ஸேவிக்க எழுந்தருளப்‌ பண்ணு வைத்துக்‌ கொண்டு போய்‌;

திருப் பள்ளிப் படுத்தல்‌
மகிழாதி கேசவன்‌ தன்னடிக்கீழாக”? என்கிறபடியே ஆதிகேசவப் பெருமாள்‌ திருவடிக்கீழாக ௮வர்‌ திருவடி பிரியா வண்‌ணம்‌ தவராசன்‌ படுகையிலே பொன்னித் தென் பாலிலே (இங்கு சொல்லப்படும்‌ ஆதி கேசவப்‌ மெருமாள்‌ ஸந்நிதியையும்‌ மணவாளமாமுனிகள்‌ திருவரசையும்‌ தென் திருக் காவேரிப்‌
படுகையில்‌ இன்றும்‌ ஸேவிக்கலாம்‌; )எழுந்தருளப் பண்ண ஒருப்பட அவ் வளவிலே பூதேவி யானவள்‌ முன்பு ஜனக ராஜன்‌ திரு மகளை மடியில வைத்து அணைத்துக் கொண்டு ஆதரித்தாற் போலே அந்த மண்மகளான பிராட்டியும்‌ மணவாளமாமுனியான இவரையும்‌ மடியிலே எழுந்தருளப் பண்ணி வைத்‌துக் கொண்டு மகிழ, ஆளவந்தார்‌ எம்பெருமானாரைப்போலே யதி ஸம்ஸ்கார விதி யடங்கச்‌ செய்து கனித்து வாழும்படி திருப் பள்‌ளிப் படுத்தினார்கள்‌.

முதலிகள்‌ ஜீயர்‌ பிரிவாற்றாமல்‌ சோகித்தல்‌
அநந்தரம்‌ ”கதிரவன் போய்‌ குணபால் சேர்ந்த மகிமை போல்‌”-என்கிறபடியே கீழ்திக்கில்‌ ஒரூ ஆதித்யன்‌ அஸ்தமித்தாற் போல இருக்கையாய்‌ தத் ப்ரபாவஜ்ஞரான ஜீயர் நாயனார்‌ கந்தாடை யண்ணனுள்ளிட்ட முதலிகளெல்லாரும்‌
ஜீயரெழுந்தருளி விட்டார்‌ செக ழுழுதும்‌
போயிருள்‌ மீளப் புகுந்ததே தீய
வினை நைய வெம் புலனா லீடழிந்து மாய்வோ
ரனை வார்க்குமேதோ வரண்‌?

என்று மிகவும்‌ சிந்தாக்ராந்தராய்‌ துக்கித்து பின்பு சிஷ்யர்களான தாங்கள்‌ தங்களுடைய சேஷத்வாநுகுணமாக திருமுடி விளக்குவித்துக் கொண்டு பெருமாள் அவப்ருதம்‌ கொண்டாடுமா போலே அவப்ருதம்‌ கொண்டாடி மீண்டும்‌ மடத்திலே எழுந்‌தருளி வெறித்தான மடத்தைக் கண்டு –இல்லம்‌ வெறி யோடிற்‌றாலோ என்று ஆசார்ய விஸ்லேஷாஸஹிஷ்ணுக்களாய்‌ மிகவும்‌
க்லேசித்து தங்களிலே தேறி நின்று
சீயர் திருத்தம பிரானாரே தென்னரங்க
மேய பெருமானே விண்ணப்பம்‌-காய விலங்‌
கெந்நாள்‌ விடுவீரெடுத்த பணி யுமக்குப்‌.
பன்னாளும்‌ செய்யும்படி –
-என்றும்‌
சீயரபிமானமே தேர்ந்தருளித்‌ தீ வினையோம்‌
காய விலங்கைக் கழித்தருளீர்‌–தூய புகழ்‌
நம்பெருமாளே! இமையோர்‌ நாயகரே!- நான்மறை தேர்‌
எம்பெருமானார்‌ பெருமாளே!
–என்றும்
தாயகலக்‌ கண்டு சிலுகிட்டடியேனை
மாயையிலே மூட்டி மருட்டாதே-சீயரே
காய விலங்கைக் கடுகெனவே தீர்த்தருளீர்
தூய திருத் தாளே தொழ-
-என்றும்
எழும் பாவி யைம் புலன்கள்‌ சொன்ன வண்ணம்‌ செய்து
தழும்பேறி வாழுந் தமியேன்‌-செழும் பொன்‌
மணவாளமாமுனியே மா சுடலைத் தீர்க்குமின
முணவாக வாழ்ந்திடுகையோர்‌
–என்றும்
நானெனதென்னும்‌ நரகத்திடை யழுந்திப்‌
போன விந்தக் காலமெல்லாம்‌ போதாதோ?-கான மலர்‌
மாலை யணி திண்டோண்‌ மணவாள மாமுனியே
சால நைந்தேனுன்‌ பாதம்‌ தா-
-என்றும்
புண்ணாராக்கை தன்னுள்‌ புக்குழலும்‌ தீ வினையேன்‌
தண்ணாருமென் கமலத் தாளணைவ தென்று கொலோ
பண்ணாரு நால் வேதம்‌ பயின்றுய்யும்‌ பண்டிதனே
மண்ணாள வந்த மணவாளமாமுனியே

என்று இத்யாதியான ஆர்த்தியை அவர் விஷயத்தில்‌ விண்ணப்‌பஞ்செய்து திருமிடறு தழுதழுப்பத்‌ திரு முத்துதிர்த்துத்‌ தங்களிலே தேறி நின்று வித்த்யுக்த ப்ரகாரேண செய்ய வேண்டுங்‌ க்ருத்யங்‌களை யெல்லாஞ் செய்து ஜீயர்‌ வைபவத்திற்கு அநுகுணமாகப்‌ பெருக்கத் திருவத்யயநம் நடத்தி யருளி தீர்த்த ப்ரஸாதங்களும்‌ ஸ்வீகரித்து, பின்பு தந்தாமுக்கு நியமித் தருளின கைங்சர்யங்களைச்‌ செய்து கொண்டு போந்தார்கள்‌

அநந்தரம்‌ –இஷ்வாஹூணாம்‌ குலதநம்‌’”’ என்னும்படியான-பெரிய பெருமாளும்‌ ஜீயர்‌ நாயனாருக்குக்‌ குலதநமான ஸ்ரீரங்கராஜரையும்‌ மடத்தையும்‌ நேக்கிக்‌ கொண்டு போருமென்று திரு வுள்‌ளமாய்‌, தீர்த்தம்‌, திருமாலை, திருப்பரியட்டம்‌, ஸ்ரீசடகோபன்‌ எல்லாம்‌ ஸாதித்து வாழ்வித்தருளினார்‌. இத்தைக் கண்டு ஜீயருடைய அபிமாநாந்தர்ப் பூதரெல்லாரும்‌ ஹர்‌ஷ ப்ரகர்ஷ யுக்தராய்‌ ஜீயர்‌ நாயனாரை பெரிய ஜீயரைக்‌ கண்டாப்‌ போலே கண்டு அநுவர்‌த்தித்து ஸேவித்துக்‌ கொண்டிருந்தார்கள்‌.

ஜீயர்‌ நாயனார்‌ ஸ்ரீபாஷ்யம்‌,திருவாய்மொழி ஈடு பெறுதல்‌.
கந்தாடை யண்ணனும்‌ ஆசார்ய நியமனத்தின் படியே ஆசார்ய பெளந்ரரான ஜீயர்‌ நாயனாருக்குத் திருவாய்‌ மொழியினீட்டை ப்ரஸாதித்தருளினார்‌. அநந்தரம்‌ ப்ரதிவாதி பயங்கரம்‌ அண்ணாவும்‌ ஸ்வாசார்ய நியமனததின் படியே நாயனாருக்கும்‌ கத்தாடை நாயனுக்கும்‌ ஸ்ரீபாஷ்யம்‌ ஸாதித்தருளி,
ஸ்ரீமாந்‌ ஸுந்தர ஜாமாத்ரு முநி: பர்யாய பாஷ்ய க்ருத்‌ |
பாஷ்யம்‌ வ்யாகுருதே தஸ்ய ஸ்ரோத்ரு கோடெள மமாந்வய; ॥

[பாஷ்யகாரருடைய புநவரவதாரமான, கைங்கர்ய ஸ்ரீமானான மணவாள மாமுனிகளே ஸ்ரீபாஷ்யத்தை விளக்கிக்‌ கொண்‌டிருக்கிறார்‌. அந்த ஸ்ரீபாஷ்யத்தை அதிகரிப்பாருடைய கோஷ்‌டியிலே அடியேனுக்கு ஸம்பந்தமுள்ளது] என்று அதில்‌ தமக்குண்டான கர்த்ருத்வத்தையும்‌ கழித்துக்‌ கொண்டருளினார்‌,-பின்பு திருப்பதியே யிருப்பாக எழுந்தருளியிருந்த போளிப்‌பாக்கம்‌ போரேற்று நாயனார்‌ தொடக்கமானவர்களுக்கும்‌ ஸ்ரீபாஷ்யத்தை ப்ரஸாதித்தருளியும்‌, பட்டர் பிரான்‌ முனி பாதசேகரஈய்‌ தத்‌ வம்ஸ்யரான பர வஸ்து ஸ்ரீநிவாஸாசாரியருக்கும்‌ அவருக்கு ஸ ப்ரஹ்மசாரிகளான பரவஸ்து அழகிய மணவாள ஜீயருக்கும்‌, திருவாய்மொழி நாயனார்‌ என்று நிரூபகமாம்படி திருவாய் மொழியினீட்டை ப்ரஸாதித்தருளியும் , ப்ரதிவாதி பயங்‌ கர ரென்னும்‌ ப்ரஸித்தி தோற்ற ஸ்ரீராமாநுஜ ஸித்தாந்தத்தை
ரக்ஷித்துப் போந்தார்‌,

வானமாமலை ஜீயர்‌ எழுந்தருளல்‌
அநந்தரம்‌ அழகிய வரதரான வானமாமலை ஜீயர்‌ வடதேசத்தினின்‌றும் எழுந்தருளி ஜீயர்‌ திருநாட்டுக் கெழுந்தருளின வருத்தாந்‌தத்தை பெரிய திருமலை யருகே கேட்டு மிகவும்‌ ப்ரலாபித்தருளி
திருமலை யேற வெழுந்தருளி அங்கே சிறிது காலம்‌ பாடாற்றிக்‌ கொண்டு எழுந்தருளி யிருந்து கைங்கர்யார்த்தமாகக்‌ கூட்டின த்ரவ்யங்களை யெல்லாம்‌ கொண்டு கோயிலேற வெழுந்தருளி மடத்‌திலே சென்று போர க்லேசித்து ஜீயர்‌ நாயனாரையும்‌ ஸேவித்து-உடனே வானமாமலை யேற வெழுந்தருளி, கைங்கர்யங்களை எல்‌லாம்‌ தலைக்கட்டி யருளி மீண்டு திருமலை யேற வெழுந்தருளி நடுவே எறும்பியிலே சிலநாளெழுந்தருளி யிருந்து சுத்த ஸத்வ மணணாவுக்கும்‌ போளிப்பாக்கம்‌ நாயனாருக்கும்‌ திருவாய்மொழயின்‌ ஈடு முதலாக பகவத் விஷயத்தை ப்ரஸாதிந்தருளி மீண்டு வான
மாமலை யேற வெழுந்தருளி தெய்வ நாயகன்‌ கைங்கர்ய ஸாம்ராஜ்‌யத்துடன்‌ வாழ்ந்து கொண்டிருந்தார்‌.

பட்டர்பிரான்‌ ஜீயர்‌ அந்திமோபாய நிஷ்டை அருளியது
பட்டர்பிரான்‌ ஜீயரும்‌ ‘வடமாமலைக்கதிபர்‌ பட்ட நாதமுனி’ என்கிறபடியே திருமலையிலே எழுந்தருளி யிருந்து அண்ணராய சக்ரவர்த்தி, நாயனார்‌, தோழப்பர்‌ தொடக்கமான அனேகாத்‌ மாக்களைத்‌ திருத்தி இந்தத் தரிசன ப்ரவர்த்கர்களாக்கி யருளி பர வஸ்து அண்ணரையும, பரவஸ்து அழகிய மணவாள ஜீயரையும்‌ ஸத் புத்ர ஸச் சிஷ்யர்களாச அபிமானித்து ஸத் ஸம்ப்ரதாய ப்ரவர்‌த்‌தகராம்படி திருத்தி யருளி அகிலாத்மாக்களும்‌ உஜ்ஜீவிக்கும்படி அந்திமோபாய நிஷ்டா க்ரேஸரர்‌ என்னுமது தோற்ற “அந்தி மோபாய நிஷ்டை” என்கிற சரம ரஹஸ்‌ப ப்ரபந்தத்தை யருளிச்‌ செய்து வாழ்வித்தருளியும்‌.

அந்திமோபாயநிஷ்டாயா வக்தா ஸெளம்ய வரோமுநி; ॥
லேககஸ்யாந்வயோ மேஅத்ர லேகநீ தாள பத்ரவத்‌ ॥

[அந்திமோபாய நிஷ்டா எனுமிந்த க்ரந்தத்தை அருளிச்‌ செய்‌தவர்‌ மணவாளமாமுனிகள்‌ ஒலை போலவும்‌ எழுத்தாணி போலவும்‌ பட்டோலையில் இதை எழுதுப்‌ தொடர்பே அடியேனுக்‌ குள்ளது] என்றும்‌
எந்தை மணவாள யோகி யெனக்களித்த
அந்திமோபாய நிட்டையாமிதனைச்‌-சிந்தை செய்திங்‌
கெல்லாரும்‌ வாழ வெழுதி வைத்தேனிப் புவியில்‌
நல்லறி வொன்‌ றில்லாத நான்‌

என்று அதில்‌ தமக்கு கர்த்ருத்வ ராஹித்யத்தையும்‌ அருளிச் செய்து உபகரித் தருளினார்‌.

திருநாராயண புரத்தில்‌ திரு நந்தவன கைங்கர்யம்‌
ஆசார்ய பரதந்த்ரரான பட்டர் பிரான்‌ ஜீயர்‌ திருவடிகளிலே ஆச்ரயித்த தோழப்பரும்‌ அவர்‌ திருத் தமையனாரான அழகிய மணவாள தாஸ நானாரும்‌ ஜீயர்‌ நியமனத்தின் படியே அரங்கத்‌துறைவா ரநுமதியடனே திரு நாராயண புரத்திலெழுந்தருளி, எம்பெருமானாருக்கும்‌ செல்வப் பின்ளைக்கும்‌ திரு நாராயணப்‌ பெருமாளுக்கும்‌ திரு நந்தவனம்‌ தொடக்‌கமான எல்லா வடிமைகளும்‌ செய்து கொண்டு அங்கே அனேகரையும்‌ ஜீயரபிமானாந்தர்‌ பூதராம்படி திருத்தி ஸ்ரீசைலத்துற்கு மேற்கும்‌ ஸ்ரீசைலே தயா பாத்ரரின்‌ வைபவத்தை வர்த்திப்பித்துக்‌ கொண்டு எதிராஜர்‌ மடத்துக்குப்‌ பின்னடியிலே வாழ்ந்து கொண்டிருந்தார்‌. பின்பு அவர்கள்‌ ஸந்தான பரம்பரையிலுணடான ஐயன்‌ முதலானாரும்‌ அந்தக் கைங்கர்யங்களை அபிவ்ர்த்தமாக நடத்திக் கொண்டு போந்‌தார்களிறே.

எறும்பி யப்பாவின்‌ ஆர்த்தி
பின்பு அழகிய மணவாள தாஸரான எறும்பி யப்பாவும்‌ ஜீயர்‌ திருநாட்டுக்‌கெழுந்தருளிள செய்தியைக் கேட்டு
வரவர முநி பதிர் மே தத் பதயுகமேவ ஸரண மநுரூபம்‌ |
தஸ்யைவ சரண யுகளே பரி சரணம்‌ ப்ராப்யமிதி நநு ப்ராப்தம்‌ |

[மணவாளமாமுனிகளே அடியேனுக்கு ஸ்வாமி; அவருடைய திருவடித் தாமரைகளே பேற்றுக் கநுரூபாமன உபாயம்‌; அவருடைய திருவடித் தாமரைகளில்‌ கைங்கர்யமே உபேயம்‌ என்றே அடியேனால்‌ அடையப்பட்டது; இதுவே எனது அத்யவஸாயம்‌ என்கிற நிஷ்டை யுடையவராகையாலே ஆசார்ய விச்லேஷாஹிஷ்‌ணுவாய்‌ அவர்‌ விஷயத்திலே ஆர்த்தி மிகுந்து
வபுரபி, ஸபதிமதீயம்‌ வரவர முநிவர்ய; மோசநீயமிதம்‌ |
பரிசரதி நஹி பவந்தம்‌ பகவநிநஹி பகவதபிமதா நபிவா ॥
–கல்யாண குண பூர்ணரான மணவாள மாமுநிவரே’ அடியேனுடைய இவ்வுடலும தேவரீரால்‌ இப்போதே விடுவிக்கத் தக்கது -இதனால் தேவரீருககு கைங்கர்யம்‌ செய்யப்‌ பெற்றதில்லை-எம் பெருமானடியார்களான பாகவதர்கள்‌ விஷயததிலுமில்லை. –என்றும்‌
இதி புநரேஷு விதந்ந பிதுரி தரதிர்தூர நிம்ந பதரூட: |
வரவர முநி வர கருணாம்‌ நிக்நந்‌ பதந்ரு பசுரஸ்நுதே நியமாந்‌ ॥
-இவன்‌ மனிதவுடல் படைத்த விலங்கினம்‌!” என்னுமபடி, அறிவிருந்தும்‌ பாப கார்யங்களில்‌ ஆசை யுடையவனாய்‌ மிகத்‌ தாழ்ந்ததான நிலையிலிழிந்து மணவாளமாமுனிகளுடைய க்ருபையை யழித்துக்‌ கெண்டு கர்ம பலன்களை அநுபவிக்கிறான்‌–என்றும்‌
ஆயுரபஹரதி ஜகதாமய முதயம்‌ விலயமபி பஜந்‌ பாநு. |
மயி புநரி தம ந்ரு ஸம்ஸோ வரவர முநிவர்ய வர்த்தயத்யேவ ॥
-மணவாள மாமுனிகளே! இந்த ஸூரியன்‌ உதயத்தையும்‌ அஸ்தமனத்தையும்‌ செய்து உலகங்களின்‌ ஆயுளை அபகரிக்கிறான்‌.-அடியேன்‌ விஷயததில்‌ மட்டும்‌ கொடியவனாய்‌ இந்த ஆயுளை வளரச் செய்கிறான்‌–என்றும்‌
ததித பரமநுரூபம்‌ ந விளம்பிதுமிதி சிந்தயந்தயயா |
மலபாஜநாதி தோமாம்‌ வரவரமுநி வர்ய மோசயத்வரிதம்‌
–ஆதலால்‌, மணவாள மாமுனிவரே-அடியேன்‌ விஷயத்தில்‌ இனி கால விளம்பம்‌ செய்யத் தக்கதன்று.-தயை யுடைய மனத்தினராய்‌ இவ்வழுக்குட ம்பினின்றும்‌ அடியேனை விடுவித் தருள வேணும்‌- என்கிறபடியே தம்முடைய ஆர்த்தியை ஆவிஷ்கரித்து குணாநுபவைக தத் பரராய்‌ தத் ஸேவாபிநிவே சத்தை யுடையராய்‌ ஜீயரைப்‌ பிரிந்து ஸம்ஸாரத்திலிருக்கு மிருப்பு பிராட்டி பெருமாளைப் பிரிந்து ராவண பவநத்திலே தனிச் சிறை யிருந்தாப் போலே அதிதுஸ்ஸஹமாய்‌ பொய்ந்நின்‌ற ஞானமும்‌ பொல்லா வொழுக்கு மழுக்குடம்பும்‌ இந் நின்ற நீர்மை யினியா முறாமை என்றும்‌, கூவிக் கொள்ளுங்கால மின்னங்‌ குறுகாதோ?-என்றும்‌, ஆவிக்கோர்‌ பற்றுக் கொம்பு நின்னலா லறிகின்‌றிலேன்‌ யான்‌ என்றுஞ்‌ சொல்லுகிறபடியே பெற்றல்லது தரிக்க கில்லாத பேரார்த்தியை யுடையராய்‌ ஒருபகலாயிர மூழியாய்‌ அவர்‌ திரு
நாமந் தன்னையே பலகாலும்‌ வாய் வெருவிக் கொண்டு முன்னடி தோற்றாதே திகைத்து மதி மயங்கி உன்மத்தர் போல்‌ பித்தேறி என்னும்படி எழுந்தருளி யிருந்தார்‌,

ஸ்ரீ பாதத்து முதலிகள்‌ தந் நிஷ்டராய்‌ வாழ்ந்தது
இப்படி ஜீயர்‌ திருவடிகளிலாஸ்ரயித்த முதலிகளெல்லாரும்‌ஆசார்யாபிமான நிஷ்டராய்‌ -யதீந்த்ர ப்ரவணரான ஜீயர்‌ திருவடிகளே தஞ்சமென்றிருங்கோள்‌”’ என்று தந் தாம்‌ சிஷ்யர்களுக்கு
அருளிச் செய்து எல்லாரையும்‌ வரவரமுநி ப்ருத்யராக்க அவர்களும்‌
அபகதமத மாநை: அந்திமோபாயநிஷ்டைஃ
அதிகத பரமார்த்தை ரர்த்த காமாநபேக்ஷை: |
நிகில ஜுஸுஹ்ருத்பிர்‌ நிர் ஜிதக்ரோத லோபை :
வர வர முநி ப்ருத்யைரஸ்துமே நித்ய யோக: ॥

[செருக்கும்‌ நான்‌ சுதந்திரனென்னும்‌ அபிமான முமில்லாதவர்களும்‌, கருமம்‌ ஞானம்‌ பக்தி ப்ரபத்தி ஆசார்யாபிமானம்‌ என்பவற்றில்‌ ஐந்தாமுபாயமான ஆசார்யாபிமானத்தில்‌ ஊன்‌றியவர்களும்‌, புருஷார்த்தத்தின்‌ எல்லையான ஆசார்ய கைங்‌கர்யத்தை யடைந்தவர்களும்‌, செல்வத்திலும்‌ அதைக்‌ கொண்டு அனுபவிக்கும்‌ சிற்றின்பத்திலும்‌ ஆசை யற்றவர்களும்‌ பகைவரிடமும்‌ நல்ல மனமுடையவர்களும்‌ கோபத்தையும்‌ உலோபித் தனத்தையும்‌ வென்றவர்களுமாகிய மணவாளமா முனி சிஷ்யர்‌களுடன்‌ சேர்க்கை அடியேனுக்கு உண்டாக வேணும்‌] என்கிற படியே ஜீதாரிஷட் வர்க்கமாய்‌ த்ரணீ க்ருத விரிஞ்சாதி நிரங்குச விபூதிகளை யடையராய்‌ அதிகத பரமார்த்தராய்‌ அந்திமோபாய நிஷ்டராய்‌ ஆஸ்திகாக்‌ரேஸரராய்‌, இடைச் சுவர் தள்ளி இரண்டு விபூதியையு மொன்றாக்கிக்‌ கொண்டு எல்லாரும்‌ தத் நிஷஷ்டராய்‌ தத் ஸேவோத் ஸுகராய்‌ வாழ்ந்து கொண்டிருந்தார்கள்‌.
ஸ்ரீ ஸடாரி குரோர் திவ்ய ஸ்ரீபாதாப்‌ஜ மதுவ்ரதம்‌ |
ஸ்ரீமத்‌ யதீந்த்ர ப்ரவணம்‌ ஸ்ரீலோகார்ய முநிம்‌ பஜே ॥

இப்புவியில ரங்கேசர்க்‌ கீடளித்தான்‌ வாழியே
எழில்‌ திருவாய்மொழிப்‌ பிள்ளை இணை யடியோன்‌ வாழியே
ஐப்பசியில்‌ திருமூலத் தவதரித்தான்‌ வாழியே
அரவரசப்‌ பெருஞ்சோதி அநந்தனென்றும்‌ வாழியே
எப்புவியும்‌ ஸ்ரீ சைலமேத்த வந்தோன்‌ வாழியே
ஏராருமெதிராசரென வுதித்தான்‌ வாழியே
முப்புரிநூல்‌ மணி வடமும்‌ முக்கோல் தரித்தான்‌ வாழியே
மூதரிய மணவாளமாமுனிவன்‌ வாழியே

செந்தமிழ்‌ வேதியர்‌ சிந்தை தெளிந்து சிறந்து மகிழ்ந்திடு நாள்‌
சீருலகாரியர்‌ செய்தருள்‌ நற்கலை தேசு பொலிந்திடுகாள்‌
மந்த மதிப்புவி மானிடர்‌ தங்களை வானிலுயர்த்திடு நாள்‌
மாசறு ஞானியர்சேரெதிராசர் தம்‌ வாழ்வு முளைத்திடு நாள்‌
கந்தமலர் பொழில் சூழ்‌ குருகாதிபன் கலைகள் விஎங்கிடு நாள்‌
காரமர் மேனி அரங்க நகர்க்கிறை கண்கள்‌ களித்திடு நாள்‌
அந்தமில் சீர் மணவாளமுனிப் பரன்‌ அவதாரம்‌ செய்திடு நாள்‌
அழகு திகழ்ந்திடும்‌ ஐப்பசியில்‌ திரு மூலமதெனும்‌ நாளே.

ஸ்ரீமதே ரம்ய ஜாமாத்ரு முநீந்த்ராய மஹாத்மநே |
ஸ்ரீரங்க வாஸிநே பூயாத்‌ நித்யஸ்ரீர் நித்ய மங்களம்‌ ॥

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த-ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம்-பகுதி-3–

May 17, 2026

ஸ்ரீ ஶைலேஶ தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்திர ப்ரவணம் வந்தே ரம்யாஜமாதரம் முநிம்

துறவிகளின் அரசரான பகவத் ராமாநுஜரிடம் அளவற்ற அன்பு கொண்டவரும் ஞானம், பக்தி போன்ற குணங்களின் கடலான ஸ்ரீ ஶைலேஶரின் கருணைக்கு பாத்திரமான ரம்யஜாமாத்ரு முநியை (மணவாள மாமுனிகள்) நான் வணங்குகிறேன்).

ஸ்ரீஶடாரி குரோர்திவ்ய ஸ்ரீபாதாப்ஜ மதுவ்ரதம்
ஸ்ரீமத் யதீந்த்ர ப்ரவணம் ஸ்ரீலோகார்ய முநிம் பஜே

ஸ்ரீ ஶடகோபாசார்யரின் திருவடியும் ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவ ப்ரபந்தத்தை அருளியவருமான தாமரை மலரினின்று வழியும் தேன் போன்ற பிள்ளை லோகம் ஜீயரின் திருவடிகளை வணங்குகிறேன்).

குருநாதனெங்கண் மணவாளயோகி குணக்கடலைப்
பலநாளும் அண்டிப்பருகிக் களித்திந்தப் பாரினுள்ளே
உலகாரியன் முநிமேகம் இந்நாளென்னுள்ளம் குளிர
நலமான சீர்மை மழை நாளும் பொழிந்தது இந்நிலத்தே

(மணவாள மாமுனிகளின் குணங்கள் என்னும் கடலிலிருந்து பருகி அனுபவித்தவர் நம் ஆசார்யர் (பிள்ளை லோகம் ஜீயர்). இவ்வுலகில் மேகம் போல இருக்கும் அத்தகைய பிள்ளை லோகம் ஜீயர், தம் மேன்மையான குணங்கள் எனும் மழையை இந்த பூமிக்கு அனுதினமும் என் மனம் குளிரக் கடாக்ஷித்தார்)

ஜீயர்‌ நாயனார்‌ திரு வவதாரம்‌.
இப்படி ஸம்பந்த ஸம்பந்திகளும்‌ உத்தாரகராம்படி வைபவமுடைய ஜீயர்‌ தர்சநம்‌ நிர்வஹிக்கிற காலத்திலே ஜீயருடைய பூர்வாஸ்ரமத்தில்‌ குமாரரான நம்மையனிராமானுசன்‌ திருநகரியிலே வளர்ந்தருளி அங்கே திருக்கல்யாணஞ்‌ செய்தருளி சில காலத்‌துக்கு மேல்‌ அவருக்குக்‌ குமாரர்‌ திருவவதரிக்க, அவருக்கு – அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌?’ என்று ஜீயர்‌ திருநாமம்‌ சாத்தி
யருளினார்‌.
பின்பு அவர்‌ ஸ்ரீவில்லிபுத்தூரிலே யெழுந்தருளியிருக்க பின்னுமொரு குமாரர்‌ திருவவதரிக்க, அவருக்குத்‌ திருநாமமேதென்று ஜீயர்‌ ஸந்நிதியிலே கேட்டு வரக் காட்ட, ஸ்ரீவில்லிபுத்‌தூரிலே பிறந்த பிள்ளைக்கு பெயரேதென்று கேட்டு வர விடுவதென்‌! பெரியாழ்வார்‌ திருநாமம்‌ சாத்துங்கோள்‌” என்று அருளிச்‌செய்து போகவிட, அப்படியே ‘பெரியாழ்வாரையன்‌”” என்று திருதாமஞ்‌ சாத்தி யருளினார்‌. அவர்களும்‌ வளர்ந்து உபநீதநான பின்பு ஜீயர்‌ திருவடிகளிலே வந்தாஸ்ரயித்தார்கள்‌. அவ்விருவரும் அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனார்‌ ஜீயர்‌ திருவடிகளைப் பிரியாது ஆட்செய்து ஸேவித்திருந்தார்‌. ஸ்ரீபாதத்து முதலிகளெல்‌லாரும்‌ ஸ்வ புத்ரர்களுக்கு நாயனார்‌ என்று திரு நாமம்‌ சாத்துகையாலே இவருக்கும்‌ *’ஜீயர்‌ நாயனார்‌” என்றே நிரூபகமாயிருக்கும்‌. இவரும்‌ ‘ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு ஆளவந்தாரைப்‌ போலே தமக்குப்‌ பெளத்ரரான இவரை தர்சந ப்ரவர்த்தகாரம்படி விசேஷ கடாக்ஷம்‌ செய்தருளினார்‌. ஆசார்ய பெளத்ரரான அவரும்‌ தீபாதுத்பந்ந ப்ரதீபம்‌ போலே மிகவும்‌ ப்ரகாச மாநராயிருத்தார்‌.-இத்தைக்‌ கொண்டு ஸ்ரீபாதத்து முதலிகள்‌ அஸ்மாஸு வத்ஸல தயா க்ருபயாச பூய:
ஸ்வச்சாவதீர்ணமிவ ஸெளம்ய வரம்‌ மூநீந்த்ரம்‌
ஆசார்ய பெளத்ர மபிராமவராபிதாநம்‌
அஸ்மத் குரும்‌ குணநிதிம்‌ ஸததம்‌ ஸ்ரயாம: ॥

நம்மிடம்‌ வாத்ஸல்யத்தாலும்‌ பரம க்ருபையாலும்‌ தமதிச்சையாலே மணவாளமாமுனிகள்‌ மீண்டுமவதரித்தாரோ என்னலாம்‌படி யுள்ளவரும்‌ நற் குணங்களுக்கு நிதி போல விருப்பிடமும்‌,
ஆசாரியர்‌ திருப் பேரனாரும்‌, அபிராமவரர்‌ (அழகிய மணவாளர்‌) என்ற திருநாம முடையவருமான ஜீயர்‌ நாயனாரான அஸ்மதசார்‌யரை எப்போதும்‌ அடி பணிகிறேன்- என்று அநுஸந்தித்துப்‌
போந்தார்கள்‌.

ஜீயர்‌ ஆழ்வார்‌ திருநகரி யேற எழுந்தருளுதல்‌
அநந்தரம்‌ -எமரேழெழு பிறப்பும்‌ கேசவன்‌ தமரானார்கள்‌ என்‌னும்படி ஆழ்வாரபிமாநாந்தர்ப் பூதரில்‌ அக்ர கண்யரான ஜீயரும்‌-பகவந்‌ பவதுத்பவஸ்தலீ பவது ஸ்ரீநகரீகரீயஸீ” –கல்யாண குண பரி பூர்ணரே! தேவரீருடைய அவதார ஸ்தலமான திருகரியானது எல்லா விடங்களிலும்‌ உயர்ந்து விளங்கட்டும்‌–என்று சொல்லுகிற படியே, ஜீயர்‌ தமக்குப்‌ பிறந்தகமான ஆழ்வார்‌ திருநகரியிலே சென்று ஆழ்வாரைத்‌ திருவடி தொழ வேணுமென்று திருவுள்ளமாய்‌, குருகூர்நம்பி! முயல்கின்றேனுன் தன்‌ மொய் கழற்கன்‌பயே -என்றபடியே உத்ஸாஹத்தை யுடையராய்‌, நம்பெருமாளை ஸேவித்து அநுமதி கொண்டு நம்மாழ்வாரை ஸேவிக்கப்‌ புறப் பட்டருளி அரங்கத்‌ துறையுமின் துணைவனே வழித்துணையாக எழுந்தருளி, திருவாய்மொழிப்பிள்ளை திருவவதார ஸ்தலமான குந்தீ நகரத்திலே த்ரிராத்ர மெழுந்தருளி யிருந்து,

சித்தந் திருமால் மேல்‌ வைத்தருளும்‌ சீர் மன்னர்‌
நத்தமிது காணு நாந் தொழில்‌–முத்தராய்ப்‌
போனாரே யாகிலும்‌ பூங் கமலத்தாள்‌ கடனைத்‌
தாமார வைத்தார்‌ தலம்‌-
என்றநுஸந்தித்து, ஸேவித்துப்‌ புறப்பட்டருளி,
யாநி யாநிச திவ்யாநி தேஸே தேஸே ஜகந்திதே: |
தாநிதாநி ஸமஸ்தாநி ஸ்த்தாநாநி ஸமஸேவத ॥

அவ்வோ இடங்களில்‌ எம்பெருமானுக்கு எந்தெந்த உகந் தருளின திவ்யதேசங்கள்‌ உண்டோ அந்தந்த ஸ்தலங்கள்‌ எல்லாவற்‌றையும்‌ திருவடி தொழுதார்‌–என்றும்‌ தானுகந்தவூரெல்லாம்‌ தன் தாள் பாடி -என்றுஞ் சொல்லுகிறபடியே வழியிலுண்டான திருப்‌பதிகளை யெல்லாம்‌ திருவடி தொழுது அவ்வவ் விடங்களிலே தத் ஸ்தலோசிதமான மங்களசாஸநங்களைப்‌ பண்ணி ஸேலித்தருளி,
வைகுண்டநாத விஜாயஸந பூமி பாலாந்‌ தேவேஸ பங்கஜ விலோசந சோர நாட்யாந் |
நிக்ஷிப்த வித்த மகராலய கர்ண பாஸாந் நாதம்‌ நமாமி வகுளாபரணேந ஸார்த்தம்‌ ॥

ஸ்ரீவைகுண்டநாதன்‌, விஜயாஸநர்‌, பூமிபாலர்‌ தேவபிரான்‌,(புளிங்குடி ) ‘ அரவிந்தலோசநர்‌ (துலை வில்லி மங்கலம்‌), சோரநாட்‌யர்‌ (மாயக் கூத்தர்‌), வைத்த மா நிதி, மகர நெடுங் குழைக் காதர்‌, வகுளாபரணரான ஆழ்வாருடன்‌ ஆதிநாதரையும்‌ திருவடி தொமூகிறேன்‌- என்கிறபடியே அஷ்டதளம்‌ போலவே யிருக்கிற ஸ்ரீவைகுண்டம் முதலான திருப்பதிகளை ஸேவித்து, தத்கர்ணிகை போலிருதந்துள்ள திருநகரியை திருக்குருகூரதனைப் பாடி யாடிப்‌ பரவிச்‌ சென்மின்கள்‌ என்று அத்யந்தம்‌ ஹர்ஷ ப்ரஹர்ஷத்துடன்‌ சென்று கிட்டி திருத் தாமிரபரணிச்‌ சங்கணித்‌ துறையிலே நீராடி–சேசவன்‌ தமரில்படியே திரு த்வாதச நாமங்களையும்‌ சாத்தியருளித் தாமும்‌ முதலிகளுமாக குயில்நின்றார்‌ பொழில்களையும்‌, செந்தாமரைத்‌ தடங்களையும்‌, அதிலே அறுகால வரிவண்டிசைபாட-அன்னமென்‌ கமலத் தணி மலர்ப் பீடத்து அலை புனலிலைக் குடை நீழல்‌ செந்நெல் ஓண்‌ கவரி யசைய வீற்றிருக்கும்‌ (திருமொழி 9-1-5) படியையும்‌ செம் பொன்‌ மாடங்களையும்‌, உயர்ந்த திருமாளிகைகளையும்‌ சிரங்களாலமரர்‌ வணங்கும்‌ திருக்குருகூர்‌ என்ற ஊரையும்‌ அனுபவித்து

புக்ககத்தினின்‌றும்‌ பிறந்தகத்தில்‌ போந்தது போல்‌
தக்க புகழ்த் தென்னரங்கந் தன்னினின்றும்‌–மிக்க புகழ்‌
மாறன்‌ திருநகரி வந்தோம்‌ அரங்கன்‌ தன்‌
பேறன்றோ? நெஞ்சே! இப்போது–

என்றநுஸந்தித்துக்‌ கொண்டு எழுந்தருளி யிருக்கிற வளவிலே-நல்லார்‌ பலர் வாழ்‌ திருக்குருகூரிலுண்டான ஸத்துக்களெல்‌லாரும்‌ குழாங்‌ குழாமாக வந்து திருவடிகளிலே ஸேலிக்க, அவர்‌களையும்‌ கிருபை பண்‌ணி யருளி, அவர்களுடனே கூட வெழுந்தருளி,
பிரதமம்‌ எம்பெருமானாரை ஸ்ரீமாதவாங்கரி என்று தொடங்கி,
ராமாநுஜம்‌ யதிபதிம்‌ ப்ரணமாமி மூர்த்நா*(யதிராஜ விம்சதி-1) என்று ஸேவித்தருளி,
அதி ப்ரீதியடனே தீர்த்தம்‌ ப்ரஸாதப்பட்டு, அங்கு நின்றும்‌ புறப்பட்டு, பிள்ளை (திருவாய்மொழிப்‌பிள்ளை ) திருமாளிகை யேற வெழுந்தருளி தண்டன்‌ ஸமர்ப்பித்து உள்ளே புகுந்து இனவாயர்‌ தலைவனையும்‌ மங்களாசாஸநஞ்‌ செய்தருளி,-நம: ஸ்ரீஸைல நாதாய என்றநுஸந்தித்து, பிள்ளை எழுந்தருளி யிருந்து வ்யாக்யானஞ்‌ செய்தருளின ஸ்தலத்தையும்‌ ”தம்மை விஷயீகரித்த இடமன்றோ!” என்று ஸேவித்து, அங்கு நின்றும்‌ புறப்பட்டு,குன்‌றம் போல்‌ மணி மாடங்களையும்‌ “செம் பொன்‌ மாடங்களையும்‌ ஸேவித்துக்‌ கொண்டு போய்‌ உபய ப்ரதாந ப்ரணவமான உறை கோயிலிலே புக்கு, ‘வகுளாபரணம்‌ தேவம்‌ ஸ்வ குலாபரணம்‌ யயெள” -தமது குலத்துக்கு பூஷணமான பூஜ்யரான நம்மாழ்‌வாரைக்‌ கிட்டினார்‌-ஆஸ்ரயித்தார் – என்கிறபடியே முந்துற நாட் கமழ்‌ மகிழ் மாலை மார்பனான ஆழ்வார்‌ திருவடிகளைச்‌ சென்று கிட்டி, மாதா பிதா என்று தொடங்கி -வகுளாபிராமம்‌
ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம்‌ ப்ரணமாமி மூர்த்நா என்றநுஸந்தித்து ஸேவித்தருளி, கண்ணி நுண் சிறுத் தாம்பை யநுஸந்தித்து, அன்னையாய் யத்தனாய்‌ என்கிற பாட்டின்படியே ஸர்‌வவித பந்து விசேஷங்களெல்லாம்‌ தமக்கு ஆழ்வாரே யென்று தோற்றும்படி அதி ப்ரேமத்துடனே அநுபலித்துக்‌ கொண்டு அஞ்ஜலித்து நிற்க, ஆழ்வாரும்‌ தேசாந்தர கதனான புத்ரனைக் கண்ட மாதா பிதாக்களைப்‌
போலே காரிமாறப் பிரானார்‌ தாம்‌. இவரைக்‌ சுண்டு கொண்டிருந்து , பின்பு தீர்த்த ப்ரஸாதங்களையும்‌ ப்ரஸாதித்து ஸ்ரீராமாநுஜனையும்‌ ப்ரலாதித்தருள.
*செல்வச் சடகோபர்‌ தேமலர்த் தாட்‌ தேய்த்தினிய –பாதுகமாமெந்தை யிராமானுசனை வாய்ந்தெனதுநெஞ்சமே வாழ்‌” என்றும்‌, “வகுளாலங்க்ருதம்‌ ஸ்ரீமச் சடகோபபத் த்வயம்‌. அஸ்மத் குல தநம்‌ போக்யமஸ்துமே மூர்த்நி பூஷணம் ‘-மகிழ மலர்‌ மாலையால லங்கரிக்கப்பட்ட செல்வச்‌ சடகோபரின்‌ (ஆழ்வாரின்‌) இனிய திருவடியிணை அடியேனுக்கு சிரோ பூஷணமாய்‌ அமையட்டும்‌ என்று மநுஸந்தித்து ஹ்ருஷ்டராய்‌, அநந்‌தரம்‌ திரிதந்தாகிலும்‌ தேவபிரானுடைக்‌ கரிய கோலத் திவுருக்‌ காண்பன்‌ நான்‌ என்கிறபடியே அவருகந்த விஷயமான பொலிந்து நின்ற பிரானையும்‌ மங்களாசாஸனம்‌ பண்ணிப்‌ பு.றப்பட்டருளி மடமே யெழுந்தருளி அங்கே சிறிது காலம்‌ எழுந்தருளியிருந்தார்‌

அங்குண்டானவர்களெல்லாம்‌ இவரை அவதார விசேஷ மென்றறிந்து இவர்‌ திருவடிகளிலே ஆஸ்ரயித்தார்கள்‌. அவர்களை க்ருபை பணணி யருளி மாஹப்ரபாவரா யெழுந்தருளி யிருக்கிற காலத்திலே
சுருதித் தமிழ் மொழியுஞ்‌ சடகோபர் தம்‌ பாதத்தைக்‌
கருதிப்‌ பரவு மெதிராசராசன்‌ கவியமுதம்‌
வருதிக் கறிந்துரை செய்யுமோ மா முனிவன்‌ புகழ் போய்ப்‌
பருதிக் கதிர்‌ செல்லு மண்டலமேறப்‌ பரந்ததுவே

என்னும்‌ படியான இவர்‌ வைபவங்களெல்லா வற்றையும்‌ அறிந்து இருக்கிறவர்களுக்கு ஆழ்வார்களின்‌ திவ்ய ப்ரபந்தங்களின்‌ அர்த்த மருளிச்‌ செய்து கொண்டிருக்குங் காலத்திலே;

திருநாராயணாபுரத்தாயி யுடன்‌ ஸமாகமம்‌
ஆசார்ய ஹ்ருதயத்திற்குப்‌ பொருள்‌ அருளிச்‌ செய்யும் போது ‘ஜ்ஞாந சதுர்த்திகளின்‌ மேலே யிறே ஆநந்த ஷஷ்டிக்குதயம்‌।” என்கிற வாக்கியத்திற்கு அர்த்தம்‌ ஸ்வ ரஸமாக வாகாமையாலே
இதற்கு அர்த்த மருளிச்‌ செய்வாராரென்று விசாரமுண்டால்‌ திரு நாராயண புரத்தாயி பக்கலிலே இவ் வர்த்தம்‌ கேட்க வேணும்‌ என்னும்‌ பேராசையோடே ஆழ்வாருக்கு விண்ணப்பஞ்‌ செய்து அவரநுமதி கொண்டு திருநாராயணபுரத்துக்குப்‌ போவோ மென்று புறப்பட்டெழுந் தருளா நிற்க, ஆயியும்‌ ஜீயருடைய ப்ரபாவங்‌ கேட்டு இவரை ஸேவிப்பதாகத்‌ திருநகரிக்கு ஆஸந்தமாக, மார்க்க மத்யே வந்து ஸங்கதராக, அவரைக்‌ கண்டு எண்‌ணின பலம்‌ எதிரிலே வரப் பெறுவதே” என்று பெரிய ப்ரீதியோடே தீர்க்க ப்ரணாமம்‌ பண்ணி நிற்க, ஆயியும்‌ தாளுந் தடக்கையுங்‌ கூப்பி ஸேவிக்க, இருவரும்‌ அந்யோந்யம்‌ வந்தந பரராய்‌ குசல ப்ரஸநம்‌ பண்ணி நிற்க, இத்தைக்‌ கண்டு ஜீயர்‌ ஸ்ரீபாதத்து முதலிகளெல்லாரும்‌ ‘பெரிய நம்பியும்‌ எம்பெருமானாரும்‌ எதிர்ப்பட்டாப்‌ போலே யாயிற்று” என்று மிகவும்‌ உகந்தருளினார்கள்‌. அநந்தரம்‌ குன்‌ற மாட திருக்குருகூரேற வெழுந்தருளி ஆயி பக்கலிலே ஆசார்ய ஹ்ருதய ரஹஸ்யார்த்தங்களை யெல்லாம்‌ கேட்டருளி,
ஆசார்ய ஹ்ருதயஸ் யார்த்தாஸ் ஸகலா யேந தர்ஸிதா: |
ஸ்ரீஸாநுதாஸ மமலம்‌ , தேவ ராஜம்‌ தமாஸ்ரயே ॥

[எவரால்‌ ஆசார்ய ஹிருதயத்தின்‌ எல்லா வர்த்தங்களும்‌ விளக்கமாகக்‌ காட்டப்பட்டதோ, தோஷமற்ற திருத் தாழ்வரைதாஸர்‌ என்ற அந்த தேவராஜரை (ஆயியை) அடி பணிகிறேன்‌ -என்று (ஸ்ரீ ஸாநு தாஸம்‌ என்று தெலுங்குப்‌ பதிப்பில்‌ பாடம்‌-ஆயிஸ்வாமிக்கு திருத்தாழ்வரை, தாஸர்‌ என்று திருநாமமுள்ள
படியால்‌ [௨. ர. மாலை 58ம்‌ பாசுர வ்யாக்யாநம்‌ காண்க ] ஸ்ரீஸாநு தாஸர்‌ என்ற பாடமே ஆதரணீயம்‌, ஸாநு-தாழ்வரை. –கிரிஸாது ஷுரம்ஸ்யஸே-அஹாம்‌ ஸர்வம் கரிஷ்யாமி*‘ எ்ன்‌று இளைய பெருமாள்‌ திருத்தாழ்வரை தாஸரானார்‌. )அந்த உபகார ஸ்ம்ருதிக்கு அவர் விஷயமாக ஒரு தனியன் அருளிச்‌ செய்தருள; ஆயி அதில்‌ தமக்கந்வய மற்றபடி தோற்ற,
பூதூரில்‌ வந்துதித்த புண்ணியனோ? பூங் கமழும்‌
தாதாரு மகிழ் மார்பள்‌ தானிவனோ–தூதூர
வந்த நெடுமாலோ? மணவாள மா முனிவன்‌
எந்தை யிவர்‌ மூவரிலும்‌ யார்‌?

என்றருளிச்‌ செய்து ‘ஜீயரை அவதார விசேஷமென்று ஆதரித்துக்‌ கொண்டு அங்கே சிலகால மெழுந்தருளி இருக்க; அதுவே ஹேதுவாக, ‘ஆயி திருநாட்டுக்‌ கெழுந்தருளினார்‌’ என்று திரு நாராயண புரத்திலுளள அஸுயாளுக்கள்‌ அவர்‌ திருமாளிகையிலுள்ள ஸர்வஸ்வத்தையும்‌ செல்வப் பிள்ளை அங்கீ கரித்தருளும்படி ஸ்ரீபண்டாரத்தில்‌ சேர்க்க அக்காலத்திலே ஆயிவும்‌ மீண்டும்‌ திருநாராயணபுரத்தேற எழுந்தருளி இச் செய்‌தியைக்‌ கேட்டு ஹ்ருஷ்டராய்‌ “யஸ்யாநுக்ரஹ மிச்சாமி தஸ்ய வித்தம்‌ ஹராம்யஹம்‌’” -நான்‌ எவன்‌ விஷயத்தில்‌ அநுக்ரஹம்‌ பண்ண விரும்புகிறேனோ அவன்‌ தனத்தை அபஹரிக்கிறேன்‌-என்னுந்‌ திருமுகப்படியே ப்ரத்யக்ஷமாகச்‌ செல்வப் பிள்ளை இத்‌தைக் கொண்டருளிய பின்பு நாம்‌ இரக்கத்துக்கு விஷயமென்பது கிம் புநர் ந்யாய ஸித்தமிறே, ”யஸ்யைதே தஸ்ய தத் தநம்‌-. உடையவன்‌ உடைமையை ஸ்வீகரிக்கை ப்ராப்தமிறே” என்று ஈடுபட்டு
ஆநந்தாஸ்ருக்கள்‌ பனிப்ப எழுந்தருளி ஆசார்ய க்ருபா லப்தரான ஞானப் பிரான்‌ ஒருவரையுமே அர்த்தித்துப்‌ பெற்று மற்றவைகளை யெல்லாம்‌ அங்குத்தைக்கு ஸமர்ப்பித்து யாதவ கிரி நிலயனுக்கு
மால்ய மமர்ப்பணைக நிஷ்டராய்‌ அங்கே ப்ரீதராய்‌ எழுந்தருளி யிருந்தார்‌.

அநந்தரம்‌ திருநகரியிலே பெரிய ஜீயரும்‌,
மாதவத்தோர்‌ வாழ்த்தும்‌ முடும்பை மணவாளன்‌
தோதவத்தித் தூய் மறையோரான பெற்றார்‌–தீதற்ற
ஆசாரியவிதயம்‌ பெற்றார்‌ நம்மாயி யிவர்‌
தேசாரத்தன் கண்‌ நெஞ்சே காண்‌
-என்று ஆசார்ய ஹ்ருதய ஸம்ப்ரதாயத்தைத் தாமநுஸந்தித்தருள-அப்படியே முதலிகளும்‌
மாதவத்‌ தோன்‌ மாறன் மனம்‌ கூறும் மணவாளன்‌
தோதவத்தித் தூய் மறையோரான பெற்றார்‌- நீதியினால்‌
ஆங்கவர் தாள்‌ சேரப் பெற்றாராயி மணவாள முநி
பூங்கமலத் தாள்கள்‌ நெஞ்சே! போற்று.
என்றநுஸந்தித்தார்கள்‌.

திருநகரியில்‌ ஜீயர் மடம்‌ தீக்கிறையாதல்‌.
இப்படி பெரிய ஜீயர்‌ ஜ்ஞாந ஸம்ருத்தியுடனே திருநகரியிலே வாழ்ந்தருளுங் காலத்திலே, இத்தைக் கண்டு ஸஹிக்க மாட்டாதசில அஸுயாளுக்கள்‌ ஆஸூர ப்ரக்ருதிகளாய்‌ மஹா பாபிகளாய்க்‌
கொண்டு கூரை மேய்ச்சலா யிருக்கிற மடத்திலே ஜீயர்‌ எழுந்தருளி யிருக்க, அர்த்தராத்ரியிலே அக்நி ப்ரஷேபணம்‌ பண்ண, அத்தசையிலே ஜீயர்‌ தம்முடைய ப்ரபாவத்தாலே அவ்வழல் தட்டாதபடி
சேஷாக்ருதியாய்க்‌ கொண்டு அனைவருங் காணப் புறப்பட்டு; மடம்‌ வேகிறபடியைக் கண்டு விஷண்ணராய்‌ சோகார்த்தரா யிருக்கிற முதலிகள் திரளிலே வந்து புகுந்து நிற்க, இந்த அத்புதத்தைக்‌ கண்ட முதலிகளெல்லாருங் கண்டு மிகவும்‌ ஸந்துஷ்டராயிருத்‌தார்கள்‌,
இந்தச்‌ செய்தியை அந்த தேசாதிபதியான ராஜா கேட்டு ப்ரச்சந்ந சாரிகளான அவர்களைக்‌ கண்டு பிடித்து தண்டிக்கத் தேட
ஸாபராதைகளான ஏகாக்ஷி ஏககரணி தொடக்கமானவர்களையுமுட்பட திருவடியோடே மறுதலித்து, :’பாபாநாம்‌ வா சுபாதாம்‌ வா ”, ‘*த்ராஹி த்ராஹி’‘ இத்யாதிப்படி ரக்ஷித்த ஜநக குல ஸூந்தரியைப் போலே ஸுந்தர வர முநியான இவரும்‌, தேவீ லக்ஷமீர்ப்‌ பவஸி தயயா வத்ஸலத்வேந சத்வம்‌” [தயையாலும்‌ வத்ஸல்யத்‌தாலும் தேவரீர்‌ லக்ஷ்மீ தேவியாகிறீர்‌– வர. சத்கம்‌-14], என்னும்‌படியான தம்முடைய பரம க்ருபையாலும்‌ வாத்ஸல்யத்தாலும்‌ அவர்களையும்‌ அப்படியே ரக்ஷித் தருளினார்‌. பின்பு அநேக காலத்‌திற்கு மேல்‌ அவர்கள்‌ ஸாந்தா நிகரா யுள்ளவர்கள்‌ கருணாம்ருத
ஸிந்துவான காந்தோ பயந்த்ரு முநிவர்ய கமநீய சரண கமலங்களை வந்தாஸ்ரயித்து அபராத ஷாமணம்‌ பண்ணிக் கொண்டார்கள்‌.

திருக் குருகூரிலும்‌ திருக் குறுங்குடியிலும்‌ கைங்கர்யங்கள்‌
அநந்தரம்‌ அத் தேசத்துக்கு அதிபதியா யிருப்பானொருவன்‌ ஜீயருடைய ஜ்ஞாநாநுஷ்டான பூர்த்தியையும்‌ ஸர்வஜ்ஞத்வாதி களையுங் கண்டு அத்யந்தம்‌ ப்ரவணனாய்த்‌ திருவடிகளிலே ஆஸ்ரயிக்க அவனுக்கு சடகோப தாஸர்‌ என்று தாஸ்ய நாமம்‌ ப்ரஸாதித்‌தருளி, அவனைக் குறித்து அத்ருஷ்டத்திலே முக்காற் கூறு ருசியும்‌ – அத்ருஷ்டாநுகுணமான தருஷ்டத்திலே காற் கூறு ருசியும பண்ணிக் கொண்டு போரும்‌” என்று நியமித்தருள அவனும்‌ அபப்டியே செய்து கொண்டு வர்த்தித்து, காளமேகன்‌ திரு மண்டபம்‌ தொடங்கித்‌ திரு வீதிகள்‌, திரு மதிள்கள்‌, திரு வெல்லைகள்‌ முதலான அனேக கைங்கர்யங்களை ஆழ்வாருகந்தருளும்படி பண்ணி அழகிய மணவாளன்‌ திரு மண்டபத்தையும்‌ உண்டாக்கினான்‌.

அநந்தரம்‌ ஜீயர்‌ திருக் குறுங்குடியிலே சென்று அங்கே திரு வேங்கடமுடையான்‌ என்றொரு ப்ராஹ்மணனை க்ருபை பண்ணி யருளி அவருக்குத்‌ திருவேங்கட தாஸர்‌ என்று தாஸ்ய நாமம்‌ ப்ரஸாதித்தருளி அவருக்குத்‌ திருக் குறுங்குடியில்‌ கைங்கர்யத்தை என்று நியமித்தருள–ஸ்ரீ வாரஹ புராண அவர்‌ நின்ற நம்பி இருந்த நம்‌பி, கிடந்த நம்பி ப்ரஸித்தமான நம்பிகள மூவருக்கும்‌ (திருப்பாற்கடல்‌ நம்பி, மலை மேல்‌ நம்பி என்று நம்பிகள் ஐவர்க்கும்‌ தனித்தனியே திரு விருப்புக்களும்‌) தனித் தனியே திரு விருப்புகளையும்‌ திரு மண்டங்களையு முண்டாக்கி ஸேவித்துக்‌ கொண்டிருந்தார்‌ இப்படி திருக் குருகூர்‌ நம்பிக்கும்‌ திருக் குறுங்குடி நம்பிக்கும்‌ அனைத்தழகும்‌ கண்டருளப்‌ பண்ணி, மற்றும்‌ அத் தேசத்திலுண்டான திருப்பதிகளுக்கெல்லாம்‌ அதிசயத்தை யுண்டு பண்ணத் தக்க ஆஸ்ரிதரையும்‌ கற்பித்தருளி, பின்பு,

ஜீயர்‌ மீண்டும்‌ கோயிலே எழுத்தருளல்‌
பிறந்தகத்திற்‌ சீராட்டுப்‌ பெற்றாலும்‌ தன்னைச்‌ –
சிறந்துகக்கும்‌ சீர் கணவன்‌ தன்னை-மறந்திருக்கப்‌
போமோ மணவாளர்‌ பொன்னடியை விட்டிருக்க
லாமோ கல்வி யறிந்தால்‌,

என்றநுஸந்தித்து அப்போதே ஆழ்வாரநுமதி கொண்டு கோயிலேறப்‌ புறப்படெழுந்தருளி பெருமாளை ஸேவித்துக்‌ கொண்டு இதர மத நிரஸந பூர்வகமாக ஸ்வமதஸ்த்தாபநம்‌ பண்ணிக்‌
கொண்டு சேஷாவதார மென்னுமது தோற்ற பெரிய பெருமாள்‌ பரிஸரத்திலே ஸுகமே வாழ்ந்து கொண்டிருக்கிற காலத்திலே அப்பிள்ளாரென்றொரு வித்வான்‌ வாதிகளை ஜயிக்கப் போய்‌ வடதேசத்திலுள்ளாரை ஜயித்து எறும்பியில்‌ அப்பாவுடனே தர்க்‌கிக்க வேணுமென்று புக, அப்பாவுடைய ப்ரபாவத்தைக்‌ கண்டு வித்தராய்‌ அவரை யநுவர்த்தித்துக்‌ கொண்டு மூன்று நாளிருந்து ஜ்ஜாதவ்யாம்சங்களைக்‌ கேட்டறிந்து, அனுப்புவித்துக்‌ கொண்டு புறப்பட, வழிவிட வெழுந்தருளின அப்பாவும்‌ இப்பால்‌ நீர்‌ இனி எங்குப்‌ போக வேண்டுவது?” என்று கேட்க, ஸ்ரீரங்க ஸ்தலத்திலேஜீயரென்றொருவர்‌ ப்ரஸித்தரா யிருக்கிறார்‌; அவரைக் கண்டு வாதிக்கவேணும்‌.’” என்ன, அப்பாவும்‌ அத்தைக் கேட்டு இவருக்கு ஹிதமாய்‌ ”நீரிப்படி செய்ய வொண்ணாது; ஜீயருடைய ப்ரபாவம்‌ நானறிவேன்‌; பெருமாள்‌ கோயிலிலே கிடாம்பி நாயனார்‌ பாடே ஸ்ரீபாஷ்யம்‌ ஸ்ரவித்தார்‌; நாயனாரும்‌ (கிடாம்பி நாயனார்‌ பாடே பாஷ்யம்‌ கேட்ட போது சிந்தனை பண்ணுவித்தவர்‌ திருநாமம்‌ ஐயைகளப்பா (பக்‌. 81) என்றுள்ளது. இங்குள்ளது மேல்‌ வரும்‌ விருத்தாந்தத்‌துடன்‌ சேரவில்லை: )நம்மை அவருடனே சிந்தனைக் கிருக்கச்‌ சொல்ல இருந்தேன்‌; அவர்‌ ஸகலார்த்தங்களையும்‌ யுகபத்‌ ஸாக்ஷாத்கரித்து உபந்யஸிப்பர்‌; அவருடனே வாதிக்க ஒருவர்க்கும்‌ க்ஷமமன்று; அதுக்கு மேலே அவர்‌ யதீசஸ்வரர்‌, ஸ்ரீவைஷ்ணவ தர்சநத்திற்கு அபி வ்ருத்திரர்‌, அவரிடத்திலே நமக்கெல்ளாம்‌ ப்ரதி பத்தி க்ரமம்‌ வேறே.இருக்கிறது, ஸமய ப்ராப்தே சொல்‌லுகிறேன்‌”என்றருளிச்‌ செய்து அனுப்பி யருளி மீண்டும்‌ எறும்பியிலே எழுந்தருளினார்‌.

எறும்பியப்பா ஜீயரிடம்‌ ஆஸ்ரயித்தல்‌
அநந்தரம்‌ ஒரு ஸ்ரீவைஷ்ணவர்‌ கோயிலினின்றும்‌ திருமலைக்கு எழுந்தருளுவதாக எறும்‌பியிலே வர, அப்பா கண்டுஅவரை யழைத்‌தருளி ஆதரித்து, கோயில்‌ விருத்தாந்தங்களையும்‌ ஜீயருடைய விருத்‌தாத்தங்களையுங்‌ கேட்டருள, அவர்‌, ‘கந்தாடையண்ணன்‌ முதலான கந்தடையய்யங்கார்களும்‌ மற்றும்‌ திருவாழியாழ்வார்‌பிள்ளை முதலான பெரியோர்களும்‌ ஸ குடும்பமாகவும்‌ மற்றும்‌
அநேகம்‌ ஸ்ரீவைஷ்ணவர்களும்‌ ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயித்‌தார்கள்‌;-ஜீயருடைய வைபம்‌ உத்தரோத்தர்ம்‌ அதிசயமாக நடக்கிறது” என்று விண்ணப்பஞ்செய்ய, திருவுள்ளமுகந்தருளி,
அவருக்கு பஹுமாநஞ்‌ செய்தருளி அற்றைக்கு அவரை நிறுத்திக்‌ கொண்டு, நீர்‌ சொன்னதெல்லாம்‌ ஸாமாந்யமாகக்‌ கேட்டிருந்‌தோம்‌; அந்த வ்ருத்தாந்தங்களையும்‌, ஜீயர்‌ திருநகரிக் கெழுந்தளி திரும்பி யெழுந்தருளின: செய்தியையும்‌ விஸ்தாரமாக வருளிச்செய்யும்‌” என்று கேட்டருளி. அவரை, பிற்றை நாள்‌ திருவேங்கடமுடையானை ஸேவித்து சீக்கிரமாக வரச்‌ சொல்லி நியமித்து நாமும்‌ பயணமாயிருக்கிறோம்‌, கூடப் போவோம்‌” என்றருளிச்‌ செய்து விட. பின்பு தமது திருத் தமப்பனாருக்கு இச் செய்தியை யறிவிக்க’ அவரும்‌, ”ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயிக்க வேணுமென்று
ருசி யுண்டு போலே யிருக்கிறது; இனி மேல்‌ அது நன்றன்று போலே தோற்றுகிறது; வேணுமாகில்‌ அவரிடத்தில்‌ ப்ரதிபத்தி பண்ணி ஜ்ஞாதவ்யாம்ச முண்டானால்‌ அநுவர்த்தித்துக் கேட்டு, ஸ்ரீபாத தீர்த்த தளிகை ப்ரஸாத ஸ்லீகாராதிகளைப்‌ பண்ணி வாரும்‌’” என்ன, அந்த ஸ்ரீவைஷ்ணவரும்‌ திருமலையில்‌ நின்றும்‌ வர,

அவரைக்‌ கூட்டிக்‌ கொண்டு எறும்பியப்பா கோயிலேற வெழுந்‌தருளி நம்பெருமாளைத்‌ திருவடிதொழுது, பெரிய கந்தாடை அண்ணன்‌ ஆப்த பந்துவாகையாலே அவர்‌ திருமாளிகையிலே அமுது செய்தருளி அவருடனே ஜீயர்‌ ஸந்நிதிக் கெழுந்தருள, ஜீயரும்‌ இவரைப்‌ பெரிய வித்வான்‌ என்றறிந்து, பரத்வ ப்ரதிபாதகமான உயர்வற வுயர்நல ப்ரவேசத்தை ௨பந்யஸித்துக்‌ காட்டி யருள. அப்பா அது கேட்டு ஆஸ்சர்யப்பட்டு ‘ஜீயருக்குத்‌ தமிழொழிய ஸம்ஸ்க்ருதத்தில்‌ மிகவும்‌ பரிசயமில்லை யென்று கேட்டிருந்தோம்‌; இவர்‌ உபய வேதாந்தத்திலும்‌ மிக நிபுணரயிருக்‌ கிறார்‌?” என்று போர ப்ரீதராயிருக்க ஜீயர்‌ இவரை மடத்தில்‌ அமுது செய்ய ப்ரார்‌த்திக்க, அவரும்‌,
யத் யந்நம்‌ பதிபாத்ரஸ்தம்‌ யதிநா ப்ரேஷிதம்ச யத்‌ |
அந்ந த்ரயம்‌ ந போக்தவ்யம்‌ புக்த்வா சாந்த்ரயணம்‌ சரேத்‌ ॥

ஸந்யாஸி களுடைய அந்நமும்‌, ஸந்யாஸிகளுடைய பாத்ரத்‌திலுள்ள அந்நமும்‌, ஸந்யாஸிகளால்‌ அனுப்பப்பட்ட அந்நமும்‌-இப்படி மூன்றும்‌ புசிக்கத் தக்கவை யன்று , அப்படி புசித்தானாகில்‌
சாந்த்ராயண வ்ரதத்தை யநுஷ்டிக்கக் கடவன்‌ -என்கிற ஸாமாந்ய சாஸ்த்ரைக நிரதராய்‌, ‘தருவரேல்‌ (திருமாலை-41),“ப்ரார்த்தயேத்‌’ என்கிற விசேஷ சாஸ்த்ர ஜ்ஞாத ரஹிதராய்‌ ஜீயர்‌ திருவடிகளிலாஸ்ரயியாமல்‌ மறுத்தெழுந்தருளி அண்ணனைப்‌ போர வெறுத்து அவர்‌ திருமாளிகைக்‌ கெழுந்தருளாமல்‌ அப்போதே கோயிலிலிருந்து புறப்பட்டுத்‌ தம்மூரேற வெழுந்‌தருளி

தமது திருவாராதநமான சச்ரவர்த்தி திருமகனாரைத்‌ திருவடி விளக்குவதாகக்‌ கோயிலாழ்வாரைத் திருக்காப்பு நீக்கப்புக; அது அவிசால்யமாய்‌, ஸக்லோபாயங்களாலும்‌ நீக்கப்‌ போகாமையாலே மிகவும்‌ து:கிதராய்‌ அமுது செய்யாமலே கண் வளர்த்தருள அவ்வளவில்‌ அப்பாவின்‌ ஸ்வப்நத்திலே
ஸேஷ: ஸ்ரீமாநஜநிஹி புரா ஸெளம்ய ஜாமாத்ரு யோகீ
போகீ பூதஸ்‌ ததநு பகவாந்‌ ராகவஸ்யாநு ஜந்மா |
பூத்வாபவ்யோ வரவர முநிர்‌ பூபஸாபா ஸமாந:
ரக்ஷத்யஸ்மாந்‌ ரகுகுல பதே ராஸ்திதோ பத்ர பீடம்‌ ॥
பூத்வாபவ்யோ வரவர முநிர்‌ போகிநாம்‌ ஸார்வ பெளம:
ஸ்ரீமத் ரங்கே வஸதி விஜயீ விஸ்வ ஸம் ரக்ஷணார்த்தம்‌ |
தத்வம்‌ கந்தும்‌ வ்ரஜ ஸரண மித்யாதி ஸத்‌ ராகவோயம்‌
ஸ்வப்நே ஸோயம்‌ வரவர குருஸ்‌ ஸம்ஸ்ரயோ மாத்ரு ஸாநாம்‌ –

இந்த மணவாள மாமுனிகள்‌ முதன் முதலில்‌ கைங்கர்ய ஸ்ரீயை யுடைய திருவனந்தாழ்வானாக இருந்தார்‌. அவ்வரவரசனே பின்பு இராம பிரானுடைய தம்பியான லஷ்மண பகவானாகப் பிறந்தான் -பின்பு ஆஸ்ரித ஸுலபரான மணவாள மா முனிகளாக அவரே அவதாரம்‌ செய்து சக்ரவர்த்தி திருமகனுடைய மங்களமான ஸிம்ஹாஸனத்தில்‌ வீற்றிருந்து நம்மை ரக்ஷிக்கிறார்‌-

திருவனத்தாழ்வான்‌ ஆஸ்ரித ஸூலபரான மணவாள மா முனிகளாக அவதரித்து லோகத்தை ரஷிப்பதற்காக ஸ்ரீரங்கத்‌தில்‌ எல்லோரினும்‌ மேம்பட்டு வாழ்கிறார்‌. தத்வ ஜ்ஞானம்‌ பெறுவதற்காக அவரை நீர்‌ தஞ்சமாகப்‌ பற்றுவீராக” என்று இந்த சக்ரவர்த்தி திருமகன்‌ அப்பாவுக்கு ஸ்வப்நத்திலே உத்தரவிட்டருளினார்‌. அப்படிப்பட்ட. மணவாள மாமுனிகள்‌ நம்மைப்‌ போன்றவர்களுக்கு சரணமடையத் தக்கவராகிறார்‌ -என்கிறபடியே, அவர்‌ திருவாராதநமான சக்ரவர்த்தி திருமகன்‌,நீர்‌ சேஷாவதாரமான ஜீயர்‌ திருவடிகளிலே அபசாரப்பட்டு. வந்தீர்‌; பகவத்‌ பக்த ஸம்புக்த பாத்ர சிஷ்டோதநாதராத்‌–கோபி தாஸீ ஸுதோப்யாஸீ தம்ருதோ வை நாரதோ அபவத்‌–பகவத் பக்தரொருவர்‌ அமுது செய்த பாத்திரத்தில்‌ மிச்சமான ப்ர்ஸாதத்தை அன்போடு உண்டதனால்‌,, வேசியின்‌ மகனொருவன்‌ கூட தான்‌ இறந்த பின்பு மறு பிறவியில்‌ நாரதராகப்‌ பிறந்தான்‌-என்று ஸ்ரீநாரதபகவான்‌ உத்பத்தி கேட்டறியீரோ? ஜீயர்‌ திருவடிகளிலே ஆஸ்ரயித்து அபராத ஷாமணம்‌ பண்ணிக்‌ கொண்டு வந்தாலொழிய உம்முடைய கையினாலே நாம்‌ திருவராதநம் கொள்ளக்‌ கடவோமல்லோம்‌; சடக்கெனப்‌ போகீர்‌” என்று நியமித்தருள; அப்பாவும்‌ திருக் கண்களை விழித்து விஸ்மிதராய்‌ ஸ்வப்நத்தை விச்வஸித்து -அப்போதே புறப்பட்டுக்‌ கோயிலேறச்‌ சென்று புக்கு, ”அங்கே கவேர கந்யாயாஸ் துங்கே புவந மங்களே ..ரங்கே தாம்நி ஸுகாஸீநம்‌ வந்தே வரவரம் முதிம்‌”– திருக்‌காவேரி மத்யத்தலே, உலகங்களுக்கு மங்களாவஹமாய்‌ விளங்கும்‌ திருவரங்கத்‌ திருப்பதியில்‌ இனிதாக வெழுந்தருளியுள்ள மணவாள
மா முனிகளை அடி பணிகிறேன்‌-என்றநுஸந்திக் கொண்டு செல்ல; அவ்வளவிலே ஜீயரும்‌ பெருமாளை ஸேவிப்பதாகப்‌ புறப்பட்டு எதிரே எழுந்தருளக் கண்டு அத்யாதரத்துடனே ‘தண்டவத் ப்ரண
மேத்பூமாவு பேத்ய குருமந்வஹம்‌”-நாடோறும்‌ ஆசாரியனைக்‌ கிட்டி தரையில்‌ தடி போல்‌ விழுந்து ஸேவிக்கக் கடவன்‌-என்கிறபடியே திருவடிகளிலே தண்டன்‌ ஸமர்ப்பிக்க, ஜீயரும்‌ அவரை “லோசநாப்யாம்‌ பிபந்நிய’ என்கிறபடியே நிரீஷண ஸுதாஸந்து ஷிதாரம்படி குளிர நோக்கிக்‌ கொண்டு நிற்க, அப்பாவும்‌ அப்போது தம்மை விஷயீகரிக்கப்‌ புறப்பட்டருளின ஜீயரின்‌ திவ்ய மங்கள விக்ரஹம ஸெளந்தர்யத்திலே யீடுபட்டு, ”மயி ப்ரவிதி ஸ்ரீமந் ‘ என்று தொடங்கி மயி ப்ரஸாத ப்ரவணம்‌” (பூர்வ தின சர்யை -என்னுமளவாக அநுஸந்தித்துக்‌ கொண்டு நிற்க

ஜீயரும்‌ இவருடைய உஜ்ஜீவநத்திலே யூன்‌றிப்‌ போமவராகையாலே மீண்டும்‌ உள்ளே புக்கு, ஆத்ம லாபத்தைப் பார்க்கிலும்‌ வேறொரு உயர்ந்த லாபமில்லை யென்றறுதியிட்டு, இவரை யங்கீ கரிக்கையிலுள்ள நசையாலே மதுரோதார பாஷணம்‌ பண்ணி யிருந்து, ஸ்ரீபாதத்து முதலிகளை ‘-பெருமாளை ஸேலித்து வாருங்கோள்‌’என்றனுப்பியருள, அவர்களும்‌ பெருமாளை ஸேவித்து மீண்டு வர ஜீயரும்‌; அவர்களுடனே ‘பெருமாள்‌ இன்னவொப்‌பனையோடே யெழுந்தருளியிருக்கிறார்‌; இன்னபடி, அமுதுசெய்ததருளினார்‌” என்றருளிச்‌ செய்ய, அவை ஒத்திருக்கையாலே, எல்‌லாரும்‌ ஜீயருடைய ஸர்வஜ்ஞதையைக் கண்டு விஸ்மயப்பட்‌டார்கள்‌. அப்பா,நெடுந்தூரத்திலிருந்து வந்தவராகையாலே வழியிலுண்டான விடாயெல்லாந்தீர பசியன்‌ சோற்றைக்‌ கண்டாப்‌போலே பவந்தமேவ நீரந்த்ரம்‌ பச்யந்வச்யேந சேதஸா” -தேவரீரையே, அடியேன்‌ வசப்பட்ட மனத்தோடு, இடை விடாமல்‌ ஸேவித்துக்‌ கொண்டு- என்றபடியே வைத்த கண்‌ வாங்க மாட்‌டாதே தாரக போஷக போக்யங்களெல்லாம்‌ ஜீயருடைய திவ்ய மங்கள விக்ரஹாநுபவமேயாக அநுபவித்துக்‌ கொண்டு போந்தார்‌ .

மற்றை நாள்‌ அபரராத்திரியிலே அண்ணன்‌ முதலாவனார்கள்‌ ஜீயர்‌ திருப்பள்னியறை வாசலிலே எழுந்தருளி
ரவிருதயத்யதாபி நவிநஸ்யதிமே திமிரம்‌
விகஸதி பங்கஜம்‌ ஹ்ருதய பங்கஜமேவ நமே |
வரவரயோகி வர்ய! வரணீய குணைக நிதே
ஐயஜயதேவ! ஜாக்ரஹி ஜநேஷு நிதேஹி த்ருஸம்‌ ॥

சூரியன்‌ உடுத்த போதிலும்‌ அடியேனுடைய அக விருள்‌ நீங்க வில்லை;-குளங்களில்‌* தாமரை மலர்கள்‌ மலரா நின்றன;-அடியேனுடைய மனமான தாமரை மலரவில்லை; விரும்பத் தக்க கல்யாண குண நிதியே! ஸ்வாமிந்‌! மணவாள மமுனியே ! விஜயியா யெழுந்தருளி யிருக்க வேணும்‌; திருப்பள்ளி உணர்ந்தருளவேணும்‌; ஆஸ்ரித ஜனங்‌களைக்‌ கடாக்ஷித்தருள வேணும்‌- என்று திருப்பள்ளி யுணர்த்த, திருப்பள்ளி யுணர்ந்து, குருபரம்பரா பூர்வகமாக ரஹஸ்ய த்ரயத்‌தையும்‌ அநுஸந்தித்தருளி அதில்‌ பர வ்யூஹாந்தர்யாமி குணங்‌களைத் திருமந்த்ரத்தாலும்‌, விபவ லெளலப்யாதி குணங்களை சரம ஸ்லோகத்தாலும்‌, அர்ச்சாவதார குண பூர்த்தியை த்வயத்தாலும்‌ அநுஸந்தித் தருளி பின்பு,

அயபம்புநஸ் ஸ்வயம் வ்யக்தாந வதாரா கநுத்தமாலந் |
நிதாய ‘ஹ்ருதிநீ ரந்தரம்‌ நித்யாயந்‌ ப்ரத்யபுத்யத ॥
விஸேஷேண ஸிஷேவேச ஸேஷபோக விபூஷணம்‌ |
அமேயமாதிமம்‌ தாம ரமேஸம்‌ ரங்கஸாயிநம்‌ ॥
த்யாயம்‌ த்யாயம்‌ வபுஸ் தஸ்ய பாயம்‌ பாயம்‌ தயோததிம்‌ |
காயம்‌ காயம்‌ குணுநுச்சைஸ்‌ ஸோயம்‌ தத்பூய ஸாந்வயூத்‌

இம் மணவாள மாமுனிகளோவென்னில்‌ ஸ்வயம் வ்யக்தங்‌களான அர்ச்சாவதாரங்களை முறையே சிந்தையில்‌ வைத்து இடைவிடாமல்‌ த்யானித்துக்‌ கொண்டே திருக்கண் விழுத்தருளினார்‌.
சிறப்பாக, திருவனந்தாழ்வானுடைய திருமேனிக்கு ஆபரணமும்‌ அளவிடற்கரியதும்‌ ஸ்ரீரங்கத்தில்‌ துயில் கொண்டிருப்பதுமான ஸ்ரீய:பதியென்னும்‌ உயர்ந்த தேஜஸ்ஸை த்யானம்‌ செய்தருளினார்‌,-அத் திருவரங்க நாகனுடைய திரு மேனியை த்யானித்துக் கொண்டும்‌ அவனுடைய கருணையாகிய கடலைப்‌ பருகிக்‌ கொண்டும்‌ அவன்‌ குணங்களைப்‌ புகழ்ந்து பாடிக்‌ கொண்டும்‌ இம் மாமுனிகள்‌ முற்‌கூறிய தேஜஸ்ஸாகிய ஸ்ரீரங்கநாதனை மறுபடியும்‌ மறுபடியும்‌ அனுபவித்தார்‌-என்கிறபடியே, அர்ச்சாவதாரத்துக்கு வேர்ப்பற்றான பெரிய பெருமாளுடைய விக்ரஹ குணங்களை விசேஷித் தநுஸந்தித்தருளி அதினுடைய பராகாஷ்டையான யதீந்த்ர சரணத்வத்த்வ ப்ராவண்யத்‌தோடே நீராடி நித்யா நுஷ்டானங்களையுஞ்‌ செய்தருளித்‌- திருமண்‌ காப்புச்‌ சாத்தி யருளி; தம்முடைய திருவாராதனமான ஸ்ரீரங்கராஜர்‌ திருமுன்பே எழுந்தருளி, தண்டன் ஸமர்ப்பித்து

ஆத்ம ஸ்வரூப யாதாத்ம்யம்‌ ஆசார்யாதீந தைவயத்‌ |
ஆம்நாயாராம்‌ ரஹஸ்யந்த தகிலேப்ய: ப்ரகாஸயந்‌ ॥
ஸர்வம் யதிபதேரேவ குர்வந் நாதேஸ பூர்வகம்‌ |
க்ருத்யாக்ருத்யேஷு கர்த்ருத்வம்‌ க்ருதீகிமபி நஸ்ப்ருபுஸக்‌ ॥
ததஸ் தஸ்ய முகோல்லாஸம்‌ சிகீர்ஷந் நேவ கேவலம்‌

யாதொரு ஆத்ம ஸ்வரூபத்தின்‌ உண்மையாண தன்மையானது ஆசார்யனுக்கே பரதந்த்ரமா யிருப்பதோ, ஸ்ருதிகளில்‌ ரஹஸ்ய மாயுள்ள அந்த ஆசார்ய பாரதந்த்ர்யத்தை ப்ரகாசிப்பிப்பவராய்‌,கேவலம்‌ அவ்வாசார்யருடைய(எம்பெருமானாருடைய) முக மலர்த்தியையே விரும்பிச்‌ செயல்படுபவரரய்‌ அவ் யதீந்த்ரரின்‌ நியமனப்படியே எல்லா விதமான கைங்கர்யங்களையுஞ்‌ செய்து கொண்டு ‘கார்யாகார்யங்களில்‌ நாம் செய்தோம்‌” என்ற எண்‌ணம்‌ சிறிதுமில்லாதவராய்‌ தந்யராய்‌ எழுந்தருளியிருந்தார்‌ -என்கிறபடி தம்முடைய பாரதந்தர்யத்துக்குச்‌ சேர்ந்த ப்ரதிபத்தியுடனே திருவாராதநத்தையும்‌ செய்தருளி;

அநந்தரம்‌ -ஸந்நிதிஸ்‌ நம்பமூல பூதல பூஷணமாய்‌ எழுந்‌தருளி யிருக்க, அவ் வளவிலே அப்பாவும்‌ அண்ணனைப்‌ புருஷகாரமாகக்‌ கொண்டு” அடியேனை அங்கீகரித்தருள வேண்டும்‌” என்றபேக்ஷிக்க அப்படியே அங்கீ கரித்தருளி, திருவிலச்சினை முதலான பஞ்ச ஸம்ஸ்காரங்களையும்‌ ப்ரஸாதித்து விசேஷ கடாக்ஷம்‌ ‘செய்‌தருளி, திருவடிகளாலே அவருடைய திருமுடியை யலங்கரித்தருளி,பின்பு அத்தலைக்கு மங்களாசாஸன பரராக வேணுமென்னும்‌ திருவுள்ளக் கருத்தோடே மந்த்ர த்ரயத்தையும்‌ ப்ரஸாதித்தருளி; அவரையும்‌ அந்தரங்கராக்கிக்‌ கொண்டு அவருடன்‌ கூட பெருமாளை மங்களாசாஸனம்‌ பண்ணுவதாகப்‌ புறப்பட்டருளி நான்‌முகன்‌ தண்டன்‌ ஸமர்ப்பித்து மெள்ள வெழுந்‌தருளி உள்ளே புக்கு
தேவீ கோதாயதிபதி ஸடத்வேஷிணெள ரங்க ஸ்ருங்கம்‌
ஸேநா நாதோ விஹக வ்ருஷபஸ்‌ ஸ்ரீநிதிஸ் ஸிந்து கந்யா |
பூமா நீளா குருஜந வ்ருத: பூரூஷஸ் சேத்யமீஷாம்‌
அக்ரே நித்யம்‌ வரவர முநே ரங்க்ரி யுக்மம்‌ ப்ரபத்யே

ஆண்டாள்‌, எம்பெருமானார்‌, நம்மாழ்வார்‌, ஸ்ரீரங்கவிமானம்‌, சேனை முதலியார்‌, பக்ஷி ராஜனாம்‌ பெரிய திருவடி ஸ்ரீரங்கநாதீன்‌, ஸ்ரீரங்கநாச்சியார்‌. பூமிதேவி, ஸ்ரீதேவி நீளாதேவி ஆழ்வார்கள்‌ ஆகியவர்களால்‌, சூழப்பட்ட பரமதநாதன்‌. என்‌னும்‌ க்ரமத்திலே மங்களாசாஸனார்த்தமாசு எழுந்தருளி ஸேவை ஸாதித்தருளும்‌ மணவாள மா முனிகளின்‌ இணை யடிகளை தினமும்‌. தொழுகின்றேன்‌-என்கிற அடைவிலே ஸேவித்து – தத்தத் ஸ்தலோசித மங்களாசாஸனங்களைப்‌ பண்ணி, பெரிய.பெருமாளையும்‌ நம்பெருமாளையும்‌ திருவடி தொழுது அநந்தரம்‌
உபேத்ய புநரப்யேஷி நிஜமேவ நியவேஸநம்‌ |
நிவேத்ய நிகிலம்‌ தத்ர யதீந்த்ராய நமஸ்யயா ॥

இந்த மணவாளமாமுனிகள்‌ மீண்டும்‌ தமது மடத்துக்‌கெழுந்தருளி அங்கு கோயில்‌ கொண்டெழுந்தருளியுள்ள யதிராஜரிடம்‌ நடந்ததை யெல்லாவற்றையும்‌ தெண்டனிட்டு விஜ்ஞாபித்து-என்கிறபடியே மீண்டும்‌ மடமே யெழுந்தருளி அங்கு எழுத்தருளியிருக்கும்‌ உடையவர்‌ ஸந்நிதியிலே ஸர்வமும்‌ விஜ்ஜாபித்து, திருமலையாழ்வாரிலே தத் பாதச் சாயையாக ப்ரதிபத்தி பண்ணிக்‌ கொண்டு எழுந்தருளியிருந்து, இவர்க்கு [எறும்பியப்‌பாவுக்கு]

ஸம்சார நிவர்‌த்நகமாயிருக்கிற ஸ்வ திவ்ய சரணாம் போஐ
ஸ்பர்ஸ ஸம்பந்ந ஸெளரபமான ஸ்ரீபாத தீர்த்தத்தையும்‌ ப்ரஸாதித்தருளி
அத மாத்யாஹ்நிகம்‌ க்ருத்யம்‌ க்ருத்வா ஸத்வோத்தரம்‌ முநி . |
ஆராத்ய விதிவத் தேவமந்வபூத்‌ ரங்க பூஷணம்‌ ॥
ததஸ்தந்‌ முக ஸம்ஸ்பர்ஸரஸேந ஸுகந்திநா |
ஸூசிநா ஸுகுமாரேண ஸத்வஸம்‌ ஸூத்தி ஹேதுநா ॥
பக்தி பூர்வம்‌ ப்ரபூதேந போஜ்யேந பகவத் ப்ரியாந்‌ |
தத்பரஸ் தர்ப்ப யாமாஸ ததீய ப்ரேம வ்ருத்தயே
ஆத்மாநமாத்மநாபஸ்‌யந்‌ போக்தாரம்‌ புருஷம்பரம்‌ ॥
அநுயாகம்‌ யதாயோகம்‌ நிஸ்ஸங்கோ நிரவர்த்தயத்‌ |

பிறகு பரம ஸாத்விகரான மணவாளமாமுனிகள்‌, மத்யாஹ்ந அநுஷ்டானங்களை முடித்து ஸ்ரீ அரங்கநகரப்பனுக்கு முறைப்படி திருவாராதனம்‌ கண்டருளப்பண்ணி, குணாநுபவம்‌ பண்ணிக்‌ கொண்டிருந்தார்‌. பின்னர்‌ அவ்வெம்பெருமானுடைய திருப்பவள ஸம்பத்தத்தினால்‌ அமுதமாய்‌, பரிமளிதமாய் துயதாய்‌, மென்மை யுடைத்தாய்‌, ஸத்வ ஸ்வபாவத்துக்கும்‌ மனத்தூய்மைக்கும்‌ முக்‌கிய காரணமாயிருப்பதான, ஸம்ருத்தமான பகவத்‌ ப்ரஸாதத்தால்‌ எம்பெருமானடியார்களை ததீயபக்தி பூர்வமாக , தத் கைங்கர்ய பரராக அவர்களிடம்‌ ப்ரேமம்‌ வளர்வதற்குறுப்பாக ஆராதித்தார்‌; தாம்‌ (ப்ரஸாதத்தை) அமுது செய்தருளுவதனால்‌ தம் மூலமாத அந்தர்யாமியான பரம புருஷனையே போக்தாவாக அத்யவஸித்து அமுது செய்வதில்‌ நேரே தொடர்பில்லாத மனதுடன்‌ பிஷை யேற்றருளினார்‌ -என்கிறபடியே பெருமாளமுது செய்தருளின அநந்தரம்‌ தாமும்‌ அமுது செய்தருளி, போனகஞ் செய்த சேடந் தருவரேல்‌ புனிதமன்றே” என்னும்படி ஸுபாவனமான திருத்தளிகை
ப்ரஸ்தம்‌ ப்ரஸாதிக்கப்‌ பெற்று இவர்‌ (அப்பா) க்ருதார்த்தரா யெழுந்தருளி யிருக்க; பின்பு,

ததஸ் ஸஜ மூல ஜீதஸ்யாம கோமள விக்ரஹே |
பீத கெளஸேய ஸம்வீதே பீந வ்ருத்த சதுர் புஜே ॥
ஸுங்க சக்ர கதா தாரே துங்க ரத்ந விபூஷணே |
கமலா கெளஸ்து போரஸ்கே விமலாயத லோசநே ॥
அபராத ஸஹே நித்யம்‌ தஹ ராகாஸ கோசரே |
ரேமே தாம்நி யதாகாஸம்‌ யுஞ்ஜாநோத்யாந ஸம்பதா ॥
ஸதத்ர நிஸா சலம்‌ சே த, சிரேண விநிவர்த்தயஙந் |

பிறகு நீர்‌ கொண்ட மேகம் போல கருமையா யழகான திருமேனியில்‌ பீதாம்பர மணிந்தவனாய, பருத்து திரண்ட நான்கு திருத் தோள்களை யுடையனாய்‌, திருவாழி திருச்சங்கு கதைகளுக்கு
இருப்பிடமாய்‌, சிறந்த ரத்ந மயமான திருவாபரணங்களாலலங்கரிக்கப் பட்டவனாய்‌, பெரிய பிராட்டியாரையும்‌ ஸ்ரீகெளஸ்துபத்தையும்‌ திரு மார்பில்‌ தரித்தவனாய்‌ நிர்மலமான நீண்ட
பெரியவாய கண்களை யுடையனாய்‌, ஆஸ்ரிதாபரதங்களைப்‌ பொறுப்பவனாய்‌ எப்போதும்‌ சேதந ஹ்ருதய மத்யத்தில்‌ வாஸம் செய்பவனாய்‌ பரம ப்ராப்யனான பரம்புருஷனிடம்‌, தமது த்யான
ஸம்ருத்தியினால்‌ ஒன்று பட்டு லயித்து யதாவகாசம்‌ தமது மட த்தில்‌ மகிழ்ந்திருந்தார்‌. அப் பெருமானிடத்தில்‌ ஸ்திரமாயிருந்த தமது மனஸ்ஸை வெகுகாலம்‌ கழித்து மீட்டு–என்கிறபடியே
ஸூபாஸ்ரயமான அந்தர்யாமி விஷயத்திலே நிமக்ந ஹ்ருதயத்தை யுடையராய்‌ அத்தை ஒருபடி மீட்டு, யதீந்த்ர ப்ரவணமாக்கி, யதிராஜ விம்சதியை யநுஸந்தித் தருளி, பின்பு ஸ்ரீவசநபூஷண வாக்யங்களுக்கு வ்யாக்யாநம்‌ ப்ரஸாதித்தருளி,ஸாயங்காலமானவாறே ஸர்வாநுஷ்டானங்களையும்‌ முன்பு போலவே செய்தருளி, மீளவும்‌ ஸந்நிதயிலே யெழுந்தருளி எல்லா வுபசாரங்களையும்‌ கண்டருளப் பண்ணி, திருப்‌ பல்லாண்டை யநுஸந்தித்து மங்களாஸசாநம்‌ பண்ணி, பின்‌ கண்‌ வளர்ந்தருளுவதற்காக ்‌
தத:.கநக பர்யங்கே தருணத் யுமணி த்யுதெள |
ரத்ந தீபத்வ யோதஸ்த மஹதஸ்‌ ஸ்தோமஸ மேதிதே ॥,
ஸோபதாநே ஸுகாஸீநம்‌ ஸுகுமாரே வாரஸநே |:
அநந்ய ஹ்ருதயைர்த் தந்யை ரந்தரங்கைர்‌ நிரந்தரம்‌ ॥,
ஸூஸ்ரூஷமாணை; ஸூசிபி; த்வித்ரைர் ப்ருத்யை ருபாஸிதம்‌ |
ப்ராசாமாசார்ய வர்யாணாம்‌ ஸூக்தி வ்ருத்‌ த்யநு வர்ணநை : ॥
வ்யாச ஷாணம்‌ பரம் தத்வம்‌ வ்யக்தம்‌ மந்ததியாமபி |

பிறகு உச்சிப்பட்ட சூரியன் போல ப்ரகாசமுடைத்தாய்‌, ரத்ந மயமான இரு தீபங்களினின்றும்‌ உண்டான ஒளியினால்‌ மிக விளங்கா நின்ற பொன்னாலான கட்டிலில்‌ தவையணையுடன்‌ கூடிய மென்மையான அழகிய ஆஸனத்தில்‌ இனிதே யெழுந்தருளி யிருப்பவரும்‌. அந்த மாமுனிகளள்லது வேறிடத்தில்‌ செல்லாத மனதை யுடையராய்‌ பாக்யமுடையரான அந்தரங்கராய்‌ கைங்கர்ய பரரான இரண்டு மூன்று சிஷ்யர்களால்‌ இடைவிடாமல்‌ ஆட் செய்யப்படுமவராய்‌, பூர்வாசாரியர்கஞ்டைய ஸ்ரீஸூக்திகளையும்‌ அநுஷ்‌டான க்ரமங்களையும்‌ அருளிச் செய்வதால்‌ மந்த மதிகளுக்கும்‌ பர தத்‌வத்தை தெளிவா யருளிச்‌ செய்து கொண்டிருக்கும்‌ மாமுனிகளை–என்றபடியே திருப்பள்ளி யறையிலே புக்கு ‘திருப்‌ படுக்கையிலே சாய்ந்தருளி எல்லார்க்கும்‌ தெரியும்படி பூர்வாசாரியர்கள்‌ போதமனுட்டானங்கள்‌ கூறுவாராக வெழுந்தருளி யிருக்கற, போக்‌யதையை அநுபலித்து அவ் வனுபவத்துக்குத்‌ தேசிகரானவர்களோடே கூட அஸ்தாநே பய சங்கிகளாய்‌
மங்களம்‌ ரம்ய ஜாமாத்ரு முநி வர்யாய மங்களம்‌ |
மங்களம்‌ பந்ந கேந்த்ராய மர்த்ய ரூபாய மங்களம்‌ ॥
ஏவம் மங்கள வாணீபி ரேநம்‌ ஸாஞ்ஜலி பந்தநா; |
ஸத் க்ருத்ய ஸம் ப்ரஸீ தந்தம்‌ ப்ரணேமு; ப்ரேம நிர்ப்பரா; ॥

ஆசார்ய ஸ்ரேஷ்டரான மணவாள மா முனிகளுக்கு மங்களம்‌ மங்களம்‌, மனித வுருவில்‌ அவதரித்துள்ள திருவனந் தாழ்வானான மா முனிகளுக்கு மங்களம்‌, மங்களம்‌; இப்படி மங்கள வார்த்தைக்ளால்‌ ப்ரஸந்நரான இந்த மணவாள மா முனிகளை பக்தி நிறைந்த சிஷ்யர்கள்‌ கை கூப்பிக்‌ கொண்டு ஸேவித்தார்கள்‌-என்கிறபடியே மங்களாஸாசனம்‌ பண்ணி ஸாஞ்ஜலி ஹஸ்தராய்‌ ஸாஷ்டாங்க தீர்க்க ப்ரணாமாதிகளைப்‌ பண்ணிப் ப்ரேம நிர்ப்பரராய்‌ ஸேவித்துக்‌ கொண்டிருக்க, அதப்ருத்யாநநுஜ்ஞாப்ய’” என்கிறபடியே அவர்ளை விடை கொடுத்தனுப்பியருளி
ததஸ் ஸஜ்ஜீக்குருதம்‌ ப்ருத்யை; ஸூயநீ யம்‌ விபூஷயந்‌ |
யுயோஜ ஹ்ருதயம் தாம்நி யோகித்யேய பதத்வயே ॥

பிறகு சிஷ்யர்களால்‌ ஸித்தப்படுத்தப்பட்ட படுக்கையில்‌ சயனித்து, யோகிகளால்‌ த்யானிக்கத் தக்க திருவடிகளை யுடைய பரம புருஷனிடத்தில்‌ மனதை சேர்ப்பித்தார்‌- என்கிறபடியே
படுத்த பைந் நாகணையாயிருக்கிற தாமும்‌ ஒரு படுக்கையைப் பற்றிக் கண் வளர்‌ந்தருளுவதற்காக யோகீ த்யேயமுமாய்‌ -ரங்காஸ்ரயம்‌ மம ஸூபாஸ்ரய மாஸாயாணி” என்னும்படி ஸூபாஸ்ரயமுகமாய் –அணைப்பார்‌ கருத்தனுவானான வெள்ளத் தரவில்‌ துயிலமர்ந்த வித்தினை மணவாள யோகியான தாம்‌ மனத்திற்‌ கொண்டு நெஞ்சத்துப்‌ பேராது நிற்கும்‌ பெருமானாய்‌ ஸூ ப்ரதிஷ்டிதஞ்‌ யெழுந்தருளி யிருக்கிற சேஷசாயியான ஸர்வேஸ்வரன்‌ திருவடிகளிலே வைத்த இத் தயை யுடையராய்‌ நிர்ப் பரராய்‌ கண் வளர்ந்தருளப் புக்கார்‌.

இத்தம்‌ திநே திநே குர்வந் வ்ருத்திம்‌ பத்யு, ப்ரஸாதிநீம்‌ |
க்ருதீர்‌ கடாபதம்‌ சக்ரே ப்ராக்தநீம்‌ தத்ர வர்த்தநீம்‌ 1
இத்தம்‌ திநே திநே குர்வந்‌ வ்ருத்தம்‌ பர்த்து; ப்ரஸாதிகீம்‌ |
க்ருதி கண்டா பதஞ்சக்ரே ப்ராக்த்நீம்‌ தத்ர வர்த்தநீம்‌ 1

இப்படி ஸ்வாமியான மணவாள மா முனிக்கு திரு யுள்ளத்துக்கு உகப்பான கைங்கர்யத்தை நாடோறும்‌ செய்து கொண்டு அவ்விடத்தில்‌ திநசர்யையை. க்ரந்தமாகச்‌ செய்தருளி அதன்‌ மூலமாம்‌ அந்த கிரந்தத்தை எல்லோரும்‌ அனுஸந்திக்கும்படி ராஜ மார்க்கம் போலே ப்ரஸித்தமாக்கினார்‌- என்கிறபடியே எழுந்தருளி யிருக்கற நாளிலே நாடோறும்‌ ஸந்நிதியிலே கைங்கர்யம் பண்ணிக்‌
கொண்டு செய்து கொண்டு அப்பா எழுந்தருளி யிருக்க; பின்பு
வரவர முநி வர்ய பாத யுக்மம்‌ வரத குரரோ; கர பல்லவ த்வயேந |
ரஹஸி ஸீரஸிமே நிதீயமாநம்‌ மநஸி நிதம்ய நிதாநவாந் பவாமி ॥

கந்தாடை யண்ணனுடைய இருதளிரன்ன கைகளாலும்‌ ஏகாந்தத்தில்‌ அடியேனுடைய சிரஸில்‌ வைக்கப்பட்ட மணவாள மாமுனிகளின்‌ திருவடித்‌ தாமரைகளை மனதில்‌ கொண்டு ஸத்தை
பெற்றவனாகிறேன்‌- என்று இவர்‌ ஹ்ருஷ்டராம்படி தம்‌ திருவடிகளைப் ப்ரஸாதித்து , ”ஊரேறப் போம்‌” என்று விடை கொடுத்தருள அப்பாவும்‌ பெரு வருத்தத்தோடே ஊரேற வெழுந்தருளினார்‌

நாயனார்‌ ஸப்த கோத்ர வ்யவஸ்தை செய்தருளியது
இவர்க்கு அநுபந்திகளுமாய் கந்தாடை யண்ணனுக்கு ஸம்பந்திகளுமாயிருப்பார்‌, கந்தாடை நாயன்‌ தேவிகளைப்‌ பிறந்தகத்தினின்‌றும்‌ புக்ககத்திற்கு அழைத்துக்‌ கொணடு வருமளவில்‌ அப்ராப்த வாஹநத்திலே ஏற்றிக்‌ கொண்டு வர, அப்பா அத்தைக் கண்டு ஜீயர்‌ ஸந்நிதியிலே விண்ணப்பஞ்செய்ய, திருவுள்ளங் கலங்கி உடனே ௮ண்ணனை அழைத்தருளி இப்படியாகாது, அவர்களையும் பெண்ணையும்‌ த்யஜிக்கிறது தகுதி ” என்ன -அவர்களுக்கு ஸ்வரூபசிஷா பூர்வகமாக ஹிதோபதேசம்‌ செய்யலாகாதோ? என்ன,-அப்படியாகாது, எம்பாவுக்கு ஆப்த ஸம்பந்திகளான துர்மாதிகள்‌!” என்ன, ஆகில்விடும்‌:’ என்ன, பின்பு முதலியாண்டான்‌ திரு வம்ஸ்யரான கந்தாடை யண்ணன்‌ முதலான கந்தாடைஅய்யங்கார்களையும்‌ அவர்களுடைய ஸம்பந்திகளையும்‌ கூட்டி விசாரித்து அவர்களை க்ருபை பண்ணி யருளி ஹிதோபதேசஞ்‌ செய்தருளி, ஸப்த கோத்ர வ்யவஸ்தை செய்தருளி-இந்த ஸப்த பர்வஸ்த்ருக்கும்‌ பரஸ்பர ஸம்பந்தங்களும்‌ அப்யவஹாராதிகளுமாம்படி மர்யாதை கட்டி இன்ன கோத்ரத்தாரின்னரென்று பட்டோலை கொண்டு திருமங்கைமன்னன்‌ திருமாளிகையில்‌ சிலா சாஸனமுமிடுவித்து விசேஷித்து கந்தாடையய்யங்கார்களுக்கு விலஷண ப்ரவரமும்‌ ஸாதித்து அப்பா திருவுள்ளம்‌ மிகவும்‌ ப்ரஸந்நமாம்படி, செய்தருளி எழுந்தருளி யிருக்கிற காலத்திவே ஜீயர்‌ திருவடிகளிலே ஆநுகூல்யமில்லாமை மாத்ரமன்றிக்கே ப்ரதிகூலித்து வாக் துருக்திகளும்‌ பண்ணினவாகள்‌ , தரித்ரராய்‌ அபக்‌யாதி பாரீத்ர பூதரர்ய்‌ அநர்‌த்தப்பட்டுப்‌ போனார்கள்‌ –

பின்பு ஜீயரும்‌ முதலிகளும்‌ ஒரு நாள்‌ ஆலின் மேலமர்ந்தான் என்கிற பாட்டுக்கு அர்‌த்த சிந்தநம்‌ பண்ணிக்‌கொண்டிருக்கிற வளவிலே, ஒன்று ஆல வ்ருக்ஷமாய்‌, மற்றதற்கு பத்ர பரமாய்‌ அர்த்தம்‌
சொல்ல, !’ஆல்‌ என்று இலையைச்‌ சொல்லாது” ‘ என்று ஜீயரரருளிச்‌ செய்ய; பாலராய்‌ ஒத்த பருவத்தாரோடே க்ரீடா ஸக்தராயிருக்‌கிற கத்தாடை நாயன்‌ ”ஜீயா! ஆலாங்கட்டி யென்‌றன்றோ வ்யவஹாரம் ‘” என்ன, அவரை யழைத்து மடி மேலே வைத்துக்‌ கொண்டு நீர்‌ தொழு குலமன்றோ?” என்று உகந்தருளி தர்சந ப்ரவர்த்தகராம்படி நன்றாக வாழ்த்தி யருளினார்‌

அப்பிள்ளை, ‘அப்பிள்ளார்‌ ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயித்தல்‌
அநந்தரம்‌ அப்பா சகுந விருத்தமென்று மீண்டு தண்டன்‌ ஸமர்ப்பிக்க, ஜீயரும்‌ இவ் விடத்திலே ஒரு அதிசயமுண்டாக வேணும்‌, ஒரு நல்ல நாளிலே பயணப் படுத்துவோம்‌” என்று உகப்‌புடனே அருளிச்‌ செய்ய, இது கேட்டுப்‌ பெரியோர்கள்‌ ‘“ஸ்ரீஸூக்தி யில்‌ மோகமாவது ஒன்றுமில்லையே: ஏதோ அதிசயமுண்டாம்‌’ என்று ஒருவருக் கொருவர்‌ அருளிச் செய்து கொண்டிருக்க, அவிளம்பேந அக்காலத்தே அப்பிள்ளை அப்பிள்ளார்‌ இருவரும்‌ ஜீயர்‌ திருவடிகளீலே ப்ராவண்யமின்றிக்கே பெருமாளை ஸேலிக்க வேணு மென்று திருக் காவேரிக் கரையிலே வந்திறங்கி இரண்டு நாளிருந்து ஜீயருடைய ஸ்த்திதிகதிகளையும் அவருடைய வாக்‌ சாதுர்யத்தையும்‌,ஆராய்ந்து கந்தாடை யண்ணன்‌ முதலானோர்‌ ஆஸ்ரயித்த படிகளையும்‌ ஸ ப்ரகாரமாகக் கேட்டு ‘இதுவென்‌”என்று விஸ்மிதராயிருந்து, அப்பிள்ளை அப்பிள்ளாரை யழைத்து -இது ஸம்பவிக்குமோ” என்று கேட்க , இவர்‌: ‘“எறும்பி யப்பா ஸகல ஸாஸ்த்ர வல்லபர்‌, அதிக்ருத பரமார்த்தர்‌; அவரிப்படிச்‌ செய்யார்‌; நாம் விசாரித்து வருகிறோம்‌” என்று போய்‌ மடத்துக்கு ஸமீபத்திலே யிருந்து, தமக்கு அந்தரங்கராய்‌ ஸமர்த்தரா யிருப்பாரொவரை யமைத்து ”நீர் போய்‌ அப்பிள்ளான்‌ வந்திருக்கிறான்‌ ” என்றறிவியும்‌ -அந்த எறும்பியப்பாவே யாமாகில்‌ உடனே எழுந்தருளுகிருர்‌; அன்றிக்கே மற்றொருவராகில்‌ அப் பிள்ளானை யாரறிவார்‌? என்கிறார் என்று விட, அவர்‌ சென்று எறும்பியப்பாவைக்‌ கேட்டறிந்து கொண்டு தண்டனிட்டு – அப்பிள்ளார்‌ வத்து தெருவிலேயிருக்கிறார்‌, தேவரீருக்குத்‌ தெரிவிக்கச்‌ சொன்னார்‌” என்ன. அப்பா, ௨கந்‌தருளி “அவருக்கு நல்விடிவு” என்‌றருளிச்‌ செய்து கொண்டு தாம்‌ புறப்பட்டெழுந்தருள, அப்பிள்ளார்‌ அவருடை புஜ மூலங்களிலே யிருக்கிற சிஹ்நங்களைக்‌ கண்டு ஒரு தெளிவு பிறந்து அவர்‌ திருவடிகளிலே தீர்க்க ப்ரணாமம்‌ பண்ணி நிற்க, அப்பா குசல ப்ரச்நங்களுடன் ஆதரித்து இருவரும் கூடி ஒரு திண்ணையிலே இருந்து பெருமாள் தம்மை உஜ்ஜீவிப்பிக்க ஜீயர்‌ திருவடிகளிலே சேர்த்த ப்ரகாரத்தை முந்துற அப்பா அருளிச் செய்யக்‌ கேட்டுத்‌ தெளிந்து ஸ்வாத்மோஜ்ஜீவநபரராய்‌ , அப்பாவை அநுவர்த்தித்து, அப்பிள்ளை முதலானார்‌ திருக்காவேரிக் கரையிலிருக்கிற செய்தியையும் அவ்விடத்தே அப்பா எழுந்தருள வேணும் என்னும் காரியத்தையும் அறிவிக்கக் கேட்டருளி திரும்பி மடத்துக்கு எழுந்தருளி இச்செய்தியை வான மாமலை ஜீயருக்கு அறிவித்து நாம் அவர்களைத் திருத்திக் கொண்டு வரலாம் படி கடாஷித்து அருள வேண்டும் என்று புறப்பட்டு அப்பிள்ளாரைக்‌ கூட்டிக்‌ கொண்டு அப்பிள்ளை பாடே எழுந்தருளி அவருக்கு ஹிதமருளிச்‌ செய்து ஆஸ்திக்யாதரங்கள்‌ விஞ்சி வரப்‌ பண்ணிக்‌ கொண்டிருக்க, வானமாமலை ஜீயர்‌, ஜீயர்‌ ஸந்நிதியிலே எழுந்தருளி, ”அப்பிள்ளை அப்பிள்ளார்‌ என்பவர்கள்‌ ப்ரஸித்தர்‌ அவர்கள்‌ திருக்காவேரிக்கரையிலே இரண்டு நாளாக விருக்கிறார்‌கள்‌; அவர்களுக்கு

ஈஸ்வரஸ்யஸ்ய ஸெளஹார்தம்‌ யத்ருச்சா ஸுக்ருதம்‌ ததா விஷ்ணோ. கடாக்ஷமத்வேஷமாபிமுக்யம்ச ஸாத்விகை: ஸம்பாஷணம்‌ ஷடேதாநி.-யன்றோ? ஸாத்விக ஸம்பாஷணம்‌ ப்ராப்தமாயிற்று- எறும்பியப்பா அங்கே எழுந்தருளியிருக்கிறார்‌; இப்படி ஆசார்ய ப்ராப்தி ஹேதுக்களெல்லாமுண்‌ டானபடியினாலே தேவரீர்‌ திருவடிகளிலே ஸம் பந்தம்‌ லபிக்கிறது; ஆத்மலாபாத்பரம்‌ கிஞ்சிதத்யத்‌ நாஸ்தி” என்‌றன்றோ தேவரீர்‌ திருவுள்ளமிருக்கும்‌; ஆசார்யன்‌ இருவருக்கும்‌ உபகாரகன்‌ என்றன்றோ இருக்கிறது; அவர்கள்‌ விஷயத்தில்‌ இரங்கி யருள வேணும்‌; அப்பாவுடையவும்‌ அடியேனுடையவும்‌ மநோ ரதம்‌ நிறைவேறும்படி ‘ஸூபேந மநஸாத்யாதம்‌” என்கிறபடிய திருவுள்ளம் பற்ற வேணும்‌’ ‘ என்று விண்ணப்பஞ்‌ செய்ய, ஜீயரும்‌ “எம்பெருமானார்‌ அப்படியே திருவுள்ளமாயருளினாய் , ஒருவருக்கு
எம்பெருமனார்‌ திருநாமம்‌’* என்று அருளிச்‌ செய்தருள, வானமாமலை ஜீயர்‌ ௨கந்தருளி *அவர்களை எதிர்‌ கொண்டு ஆதிரிப்பதற்காக அடியேனுக்கு விடை ஸாதிக்க வேணும்‌”என்ன அப்படியே
அனேகம்‌ ஸ்ரீவைஷணவர்களைக்‌ கூட்டி அனுப்பி யருளப்‌ புறப்பட்டு எழுந்தருளா நிற்க, இவர்கள்‌ வருகிற செய்தியை அப்பிள்ளாருக்‌கறிவிக்க , அவரெழுந்திருந்து அந்த கோஷ்டியைக்‌ கண்டு ஸாஷ்டாங்க ப்ரணாமம்‌ பண்ணி அஞ்சலி ஹஸ்தராய் வைத்த கண்‌ வாங்காதே ஸேவித்துக் கொண்டு -தமக்கத்யந்த மபிமதமாயிருக்கிற பட்டுப் பச்சை வடத்தை இரண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ கையிலே கொடுத்து நீங்கள்‌ அதி த்வரையாகச் சென்று அவர்களெழுந்தருளுகிற வழியிலே அகலமெல்லாம்‌ படுத்து அத்தை நாலண்டையும்‌ எல்லாரு மெழுந்தருளும்படி பண்ணி, அந்த ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ ஸ்ரீபாதரேணுவை ஸாவதாநமாகக்‌ கொண்டு
வரச்‌ சொல்லி விட்டு, அடைக்காய்த் தட்டும்‌ பழத் தட்டும்‌ மத்யையில்‌ வைத்து எறும்பியப்பாவை முன்னிட்டுக்‌ கொண்டு எதிரே சென்று ஜீயர்‌ திருவடிகளிலே தீர்க்க ப்ரணாமம்‌ பண்ணி ஸ்வ ஜதங்களை யெல்லாம் காட்டி, அடியோங்களெல்லாரையும்‌ கற்றுவிப்பித்தருள வேணுமென்று ஸ்ரீபாத ரேளியை எல்‌லோரும்‌ சிரஸா வஹித்து நிற்க, ஜீயர்‌ குசல ப்ரச்நம்‌ செய்தருளி உபலாளித்‌தருளி பெருங்கூட்டமாக அண்ணன்‌ திருமாளிகைக் கெழுந்தருள, அண்ணன்‌ எதிர் கொண்டு ஆதரித்தருளி உள்ளே அழைத்துக்‌ கொண்டு சென்று திருவோலக்கமாயிருந்து, தாம்‌ முன்னிருந்த இருப்பையும்‌, நிர்ஹேதுகமாக எம்பெருமானார்‌ க்ருபையால்‌ வந்த மஹா லாபத்தையும்‌, ஜீயர்‌ யதிபுநரவதாரமென்பதையும்‌ பஹு முகமாக அருளிச் செய்யக் கேட்டுத்‌ தாம்‌ ஜீயர்‌ திருவடிளை ஸேவிக்க த்வரிக்க, அப்படியே திருமுன் காணிக்கையையும்‌ பட்டுப்‌படாவளிகளையும்‌ பச்சையையும்‌ முன்னே பிடித்துக் கொண்டு மடத்‌திலே சென்று திருமலை யாழ்வாரிலே ஜீயர்‌ கோஷ்டியாக எழுந்த ருளியிருக்கக்‌ கண்டு மிகவும்‌ ஈடுபட்டு,
அபூர்வ ருப ஸம்ஸ்தாதம்‌ தேஜஸாம்‌ ராஸ்மி மூர்ஜிதம்‌‘-எங்கும்‌ கண்டறியாத நிறத்தோடு கூடிய அவயவ ஸந்நிவேசமுடையவரும்‌ த்ருடமான தேஜோ ராசி போலிருப்பவருமான வரை என்று
கொண்டு திருவடிகளிலை தீர்க்க ப்ரணாமம்‌ பண்ணி உபஹாரங்‌களையும்‌ ஸமர்ப்பிக்கத் தக்க மரியாதையுடனே ஸமர்ப்பித்து நிற்க, ஜீயர்‌ அவர்களுடைய வைதுஷ்யங்களுக் கநுரூபமாகச்‌
சிறிது ஸ்ரீஸூக்கிகளை யருளிச்‌ செய்ய, அவர்களும்‌ வித்தராய்‌ ஸமாஸ்ரயணத்துக்கு ப்ரார்த்தித்து த்வரைப்பட, தாப புண்ட்ர:’ இத்யாதிப்படியே பஞ்ச ஸம்ஸ்காரங்களையுஞ்‌ செய்தருளி
கோயிலுக்குப்‌ புறப்பட்டு ‘தேவீகோதா’ இத்யாதிப்படியே அவர்களோடே மங்களாசாஸனஞ்‌ செய்தருளி மீண்டு மடத்திலே யெழுந்தருளி ததீயாராதநமும்‌ நடந்து, ‘குரோருச்சிஷ்டம்‌ புஞ்ஜீத, போனகஞ் செய்த சேடந்‌ தருவரேல்‌ புனிதமன்றே-என்கிறபடியே ஸுபாவநமான தளிகை ப்ரஸாதத்தையும்‌ ப்ரஸாதித்தருளி திருவடிகளுக்கு அந்தரங்கராக்கி உஜ்ஜீப்பித்‌ தருளினார்‌. அப்பா திருத் தமப்பனா எறும்யியிலே அப்பாவைக்‌ காண வேணுமென்று ஜீயருக்குக் குறித்து வரக் காட்ட, பின்பு ஜீயர் தாமே அப்பாவை ஊருக்குப்‌ போம்‌” என்று விடை கொடுக்கப்‌ பெரு வருத்தத்தோடே ஊரேற எழுந்தருளினார்‌.

பெரிய பெருமான்‌ உத்தம நம்பியைத்‌ திருத்துதல்‌
பின்பொரு நாள்‌ ஜீயர்‌ பெருமாளை மங்களாசாஸநம்‌ பண்ண எழுந்தருளினவளவிலே ஏகாந்த ஸேயையாய்‌ திருத்திரை பரிமாறித்‌ திருவாராதநங்‌ கொண்டருளா நிற்க, இவரும்‌ உள்ளே சென்று திருவடி தொழுது நிற்க, அவ்வளவிலே திருவாலவட்டம்‌ ஸேவித்துக்‌ கொண்டிருந்த உத்தமநம்பியும்‌,-வெள்ளிப் பெருமலைக் குட்டரான ஜீயரூடைய “க்ஷீர ஸங்காத கெளரம்‌‘ என்றபடியே -பாலின்‌
நீர்மை போலிருக்கிற விக்ரஹ வைலஷண்யத்தைக்‌ கண்டு பாப வாஸனையாலே அந்யதா சங்கை பண்ணி ஜீயரை -நெடும்போதிருக்க வேண்டா”’ என்ன, இவரும்‌ அபிப்ராயமறிந்து ‘மஹாப்ர
ஸாதம்‌”” என்று புறப்பட்டு மடமே யெழுந்தருளினார்‌. அவ்வளவிலே திருவால வட்டம்‌ ஸேவித்துக்‌ கொண்டிருந்த உத்தம நம்பியும்‌ தரங்கிப்‌ பலகணிக் கதவிலே சாய்ந்திருக்க, –அரவினணை மிசை மேய
மாயனாரான பெரிய பெருமாளும்‌ இவர்‌ கனாவில் வந்து,’திருப்பவளச்‌ செவ்வாய்‌ முறுவல்‌ தோன்ற,-௮ணி விளங்குமுயர் வெள்ளை யணையான திருவநந்தாழ்வானைத்‌ தொட்டுக்காட்டி, ‘ இவர் கிடீர்‌ ஜீயராக வந்து, அவதரித்தருளினார்‌; அவருடைய நிறம்‌ வெளுப்பு:விஸ்வஸித்திரும்‌”
எனறருளிச்செய்ய, அவரும்‌ அத்யந்தம்‌ பீதராய்‌,அப்போதே மடமேற வந்து ஜீயர்‌ திருவடிகளை ஸேவித்து இச்‌ செய்தியை விண்ணப்பஞ்செய்து அபராத ஷாமணம்‌ பண்ணிக்‌ கொண்டு திருவடிகளுக் கந்தரங்கராய்ப்‌ போந்தார்‌, அது பற்றி-அனந்தாவதாரர்‌ வரயோகி யென்பது தென்னரங்கள்‌, மனந்தானறியும்‌ மற்றாரறிவார்‌ “என்று பின்புள்ளாரும்‌ சொல்லும்‌ படி யாயிற்று,

ஒரு ஸாத்விகைக்கு ஜீயர்தமது நிஜாகாரத்தைக்‌ காட்டியருளல்‌
அநந்தரம்‌ ஸாத்விகைகளில்‌ சடகோபக் கொற்றி யென்னும்‌திருநாமத்தை யுடையளாயும்‌ ஆச்சியார் பாடே திவ்ய ப்ரபந்தம்‌ நாலாயிரத்வையும்‌ ரஹஸ்யங்களையும்‌ அதிகரித்தவளாயும்‌ திருவடிகளுக்கு மிகவும்‌ அந்தரங்கையாயு மிருப்பாளொரு அம்மையார்‌ ஒரு நாள்‌ திருவோலக் கங்குலைந்த வநந்தரம்‌ மத்யாஹ்நத்திலே திருமலை யாழ்வாராகிற வ்யாக்யாந மண்டபத்திவ ஏகாந்தமாகத்‌ திருக் காப்பு சேர்த்துக்‌ கொண்டு தக்க மா மணி வண்ணனடியிலே வைத்த சிந்தையராய்‌ எழுந்தருளி யிருக்க, அப்போது கதவுப்‌ புரையிலே ஸேவிக்குமளவில்‌ ஆயிரம்‌ பைந் தலையனான திருவநந்தாழ்வானாக ஸேவை ஸாதிக்கக்‌ கண்டு திடுக் குற்றிருக்க,ஜீயர்‌ அத்தைக் கண்டு திருக்காப்பு நீக்கிக்‌ கொண்டு, புறப்பட்டு வந்து சிரித்தரூளி அம்மையாரை நடந்தபடி யென்னென்று கேட்டருள, அவள்‌ அப்போது ஸேவித்தபடியை விண்ணப்பஞ்‌ செய்ய, ‘ஆகில்‌ ஒருவர்க்கும்‌ சொல்லாதே கொள்‌” என்று நியமித்தருளினார்‌. இப்படி ஜீயர்‌ அவதார விசேஷமென்பது எல்லார்க்கும்‌ ப்ரத்யஷமிறே –

ஜீயர்‌ வ்யாக்யானங்கள்‌ அருளிச்‌ செய்தது.
பூத்வா பூயோ வரவர முநிர்‌ போகிநாம்‌ ஸார்வபெளம
ஸ்ரீமத் ரெங்கேவஸதி விஜயீ விஸ்வ ஸம்ரக்ஷணார்‌த்தம்‌”
[ஆதி சேஷன்‌ உலகைக்‌ காப்பதற்காக மறுபடியும்‌ மணவாளமாமுனிகளாக அவதரித்து ஸ்ரீரங்கத்தில்‌ மிகவும்‌ மேம்பட்டு வாழ்கிறார்‌] என்கிறபடி ஜகத் ரஷணார்த்தமாக அவதரித்தவராகையாலே ஜகத்தை யெல்லாம்‌ உஜ்ஜீவிப்பிக்கும்படி ஸகல ஜீவாதுவாகப்‌ பிள்ளை லோகாசாரியர்‌ அருளிச் செய்த ரஹஸ்யங்களுக்கெல்லாம்‌ வ்யாக்யாநம்‌
“செய்தருள்வதாகத்‌ திருவுள்ளம்‌ பற்றி
ரஹஸ்ய க்ரந்த தத்வேஷு ரமயாமாஸ தத் ப்ரியம்‌ |
வாக்ய ஸங்கதி வாக்யார்த்த தாத்பர்யாணி யதா ச்ருதம்‌ ॥
வ்யாகுர்வந்நேவ பூர்வேஷாம் வர்த்தமாந: பதே பதே |
ஸ்வமநீஷாகதாம்‌ நைவ கல்பயந்‌ கிஞ்சிதப்யயம்‌ ॥
குப்தாம ஸர்வைர் குருத்வேந கூடாநர்த்தாந தீதிஸத்‌ |
தேஸிகாநாம்‌ நிடந்த்ரூணாம்‌ தர்‌ | ஸ்யங்நேக கண்டதாம்‌. ॥
வாக்யாலங்கார வாக்யாநி வ்யாசக்ஷாணோ விசஷண: |
ஸுதீய:ஸ்வாதயாமாஸ;ஸ்வ ஸ்வ ரூபம்‌ ஸுதுர்க்ருஹம்‌ ॥

இந்த மணவாள மாமுனிகள்‌ முன்னோர்‌ மொழிந்த முறைகளில்‌ நிலை நின்றவராய்‌ ஒவ் வொரு சொல்லுக்கும்‌ தந் தெஞ்சில்‌ தோற்றினதே சொல்வதைச்‌ சிறிதும்‌ பண்ணாமல்‌ ஆசார்ய முகமாய்க் கேட்ட அர்த்தாநுகுணமாக வாக்யங்கள்‌, ஸங்கதிகள்‌ வாக்யார்த்தங்கள்‌ பாவார்த்தங்கள்‌ இவற்றை விசேஷமாக அருளிச் செய்து கொண்டு, ஸகல பூர்வாசாரியர்களாலும்‌ அர்த்த கெளரவம்‌ பற்றி மறைத்து வைக்கப்பட்ட ரஹஸ்யமான விசேஷார்த்தங்கலையும்‌ தமது க்ருபையால்‌ வெளியிட்டார்‌. இப்படி. ரஹஸ்ய க்ரந்தங்களில்‌ ஈடுபட்டவர்களை அவற்றின்‌ தத்வார்த்தங்‌களில்‌ மகிழச் செய்தார்‌. மேலும்‌ வேதங்களென்ன வேதாந்தங்‌களான உபநிடதங்களென்ன, இவற்றை யுட் கொண்டு பேசப்‌ பட்ட ஸ்ம்ருதிகளென்ன, ஸ்ரீராமாயணாதி இதிஹாஸங்கள் என்ன , ஸ்ரீபாஞ்சராத்ரமென்ன, இந்த ப்ரமாணங்களால்‌-பல க்ரந்தங்களை: யருளிச்‌ செய்துள்ள ஆசாரியர்களின் ஒருபடிப்பாட்டைக்‌ காட்டியருளி, நிபுணராய்‌ ஸ்ரீவசன பூஷண சூர்ணிகை வாக்யங்களை வியாக்யானம்‌ செய்தருளுமவராய்‌ அறிய வரிதான ஆத்ம ஸ்‌வருப யாதாத்ம்யத்தை ஞானிகளுக்கு அநுபவிப்பித்து மகிழ்வித்‌தார் ] என்றிப்படி ப்ரதமம்‌ தத்வ ரஹஸ்யங்களுக்கு வ்யாக்யாநம்‌ செய்தருளி அநந்தரம்‌ அசேஷார்த்த ப்ரதிபாதகமுமாய்‌ ஆழ்‌ பொருள்களை யுமுடைத்தான ஸ்ரீவசனபூஷணத்திற்கு மெச்சும்‌
வியாக்கியை யென்று விலக்ஷண பரிக்ரஹமாம்படி வயாக்யாநஞ்‌செய்தருளி, தாமும்‌
ஸ்ரீ வசன பூஷணமாந் தெய்வக் குளிகை பெற்றோம்‌
பார் தன்ளைப்‌ பொன்னுலகாப்பார்க்க வல்லோம்‌-தேரில் தமக்‌
கொப்பாரினியா ருலகாசிரியனருள்‌
தப்பாம லோதிய பின்‌ தான்‌

என்று இதினுடைய வைபவத்தை அநுஸந்தித்துப்‌ ப்ரீதராயருளினார்‌.-முதலிகளு மப்படியே
வாக் பூஷணம்‌ வகுள பூஷண ஸாஸ்த்ர ஸாரம்‌
யோ மாத்ருஸாஞ்ச ஸுகமம்‌ வ்யவ்ருணோத்தயாளூ |
ரம்யோ பயந்த்ரு முநயே யமிநாம்‌ வராய
தஸ்மை நமஸ் ஸமதமாதி குணார்ணவாய

(வகுளாபரணரான நம்மாழ்வாரின்‌ அருளிச் செயலான திருவாய்மொழி எனும்‌ சாஸ்தரத்தின்‌ ஸாரமான ஸ்ரீவசனபூஷணத்தை மந்தர்களான நம் போல்வாருக்கும்‌ எளிதில்‌ அறியும்படி எந்த மணவாளமாமுனிகள்‌ விவரித் தருளினாரோ, சமம்‌, தமம்‌ முதலான கல்யாண குணக் கடலாய்‌ யதி ஸ்ரேஷ்டரான அம் மணவாள மா முனிவருக்‌கு வணக்கம்‌) என்றும்‌,
மேஷந்த வத்து வரயோகி யிட்ட வியாக்கியையால்‌
தேவுந் திகைக்கும்‌, நற்றீந்தத்துவ ரகஸ்யத்துடனே
தாவும் பெரும்‌ புகழாசாரிய விதயத்திற்குமா .
தாவும்‌ பொருள் செறி சொல்லாபரணச்‌ சுருதிக்குமே
-என்றும்‌ இப்படி உபகரித்தமையை அநுஸந்தித்தார்கள்‌.

அநந்தரம்‌ ஸ்ரீவசனபூஷணத்திற்கு அடியாய்‌ சரம பர்வ நிஷ்‌டா கிரமங்ளை ப்ரதிபாதிக்கிற இராமானுச நூற்றந்தாதிக்கும்‌ ஞான ஸார ப்ரமேய ஸாரங்களுக்கும்‌ வியாக்யாளஞ்செய்தருளி (மற்றை ரஷஸ்யங்களுக்கும்‌ ஈட்டுக்கும்‌ ப்ரமாணத் திரட்டு ஸங்க்ரஹித்து அருளியும்‌ கீதைக்கு தாத்பர்ய தீபமென்றொரு வ்யாக்யானமும் இட்டருளி உடையவரருளிய நித்ய திருவாராதன க்ரமத்‌தையும்‌ ஸுக்ரஹமாகவும்‌ ஸுவ்யக்தமாகவும் ஸர்‌வவாத்மோஜ்‌ஜீவந தனமாகச்‌ செய்தருனாரிறே )திருவாய்மொழி முதலான அருளிச்‌ செயல்களை யெல்லாவற்றையும்‌ ப்ரவர்த்திப்பித்து, தர்‌சநத்துக்குப் பண்டில்லாத அதிசயங்களையும்‌ உண்டாக்கிக்‌ கொண்டு எழுத்தருளி யிருக்கிற காலத்திலே, திருவாய்மொழி விஷயமாக திருப் பவளத்தாலே ஏதேனுமொரு ப்ரபந்தம்‌ அருளிச் செய்ய வேணும்‌’ என்று முதலிகளெல்லாரும்‌ அபேஷிக்க, திருவாய்மொழி நூற்றந்தாதியை யருளிச்‌ செய்து தத்வ த்ரயத்திற்கும்‌ ஈட்டுக்கும்‌ ப்ரமாணத் திரட்டு ஸங்க்ரஹித்‌தருளி ஆசாரியர்களுடைய உபதேச பரம்பரா ப்ராப்தமாய்‌ வந்த தர்சந தாத்பர்யங்களை யெல்லாம்‌ உபதேச ரத்தின மாலை என்கிற
ப்ரபந்த முகேந ப்ரதிபாதித்து, உடையவர்‌ நித்யத்தை ஸுக்ரஹமாகவும்‌ பண்ணி யருளி இப்படி ஞான வர்த்தகராய்‌ எழுந்தருளி யிருக்கிற காலத்திலே

தம்முள்‌ விரோதப்பட்ட ஸ்ரீவைஷ்ணவர்களைத்‌ திருத்தியது.
இரண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ அஹங்காரத்தாலே அந்யோந்யம்‌ விவாதம்‌ பண்ணிக் கொண்டு போர, அப்போது நிஹீத ஜந்துக்‌களுக்கு விவாதமுண்டாக (நாய்களுக்குள்‌ சண்டை மூள), ஜீயர்‌
அத்தைக்‌ கண்டு ‘ நீங்களும்‌ இவர்களைப் போல ஸ்ரீவசன பூஷணாதிகாரிகளோ அஹங்காரம்‌ நடையாடி விவாதம்‌ பண்ணுகைக்கு–என்ன, அவர்கள்‌ இத்தைக்‌ கேட்டு லஜ்ஜா புரஸ்ரமாக அதில்‌
நின்றும்‌ நிவ்ருத்தரானார்கள்‌.

பொருளில்‌ பற்றின்மை
பின்பு வட தேசத்தினின்றும்‌ சில திரு நாமதாரிகள்‌ சில த்ரவ்வம்‌ மடத்திற்கு வரக்காட்ட, அத்தை நிரூபித்துப்‌ பார்த்த வளவில்‌ அநுகூலமன்‌றியிலே யிருக்க, அது த்யாஜ்யமென்று கழிக்க, அநந்தரம்‌ மடத்துக்கு ஷேத்ரமுண்டாய்‌ (விளை நிலம்‌ சேர்ந்ததால்‌) தத்‌த்வாரா வந்த குடிகள்‌ மடத்தில்‌ புஜித்துப் போக அவ்விடம்‌ கோ மயத்தாலே சுத்‌தி பண்ணி ஈரமாயிருக்க, யாத்ருச்சிகமாகப்‌ புறப்பட்டருளினவர்‌ அத்தைக் கண்டு ஈரமேதென்று கேட்டருள,அங்கிருந்தவர்கள்‌ அக் காரணத்தை விண்ணப்பஞ்‌ செய்ய அப்போதே அந்தப்‌ பங்கை பெருமாளுக்கு சமர்ப்பித்து அந்தக்‌ கை யோலையையும்‌ ஸ்ரீபண்டாரத்திலே அர்த்த ராத்திரியி?லே போகவிட்டருளி எழுந்தருளி யிருக்கிற காலத்திலே,

கிழட்டணிலாகிலும்‌ மரமேற வல்லதன்றோ?
அதி வ்ருத்தையாயிருப்பாள்‌ ஒரம்மையார்‌ ஒரு நாள்‌, ராத்திரி மடத்தை விட்டுப்‌ போக மாட்டாமையாலே சயநிக்க அவளைக்‌ கண்டு அர்த்த ராத்திரியில மடத்தினின்று புறப்பட விட்டு(கேட்டவர்களுக்கு) “கிழட்டாணிலாகிலும்‌ மரமேற வல்ல தொன்றன்றோ? உகவாதார் அபவாதம்‌ சொல்ல இது போறுமே’-என்‌றருளிச்‌ செய்து இப்படி யோக்யதை யில்லாத விடத்திலும்‌-பிணமெழுந்து கடிக்கிறதோ!’ வென்று அதி சங்‌கையும்‌ போரா நிற்க –

சிலருக்கு ஸ்வரூப சிக்ஷை
ஒரு ஸ்ரீவைஷ்ணவர்‌ தூதுளங் கீரை கொண்டு வந்து தளிகைக்குச்‌ செய்கிற (தளிகைக்குச்‌ செய்தலாவது-தளிகை கு உபயோகமாகக்‌ கறியமுது திருத்துதல்‌ முதலியன செய்தல்‌ )அம்மையார்‌ கையிலே ‘இத்தைப் பாங்காச்‌ செய்து ஸமர்ப்பியும்‌” என்று கொடுக்க, அவர்‌ அத்தை உதாசித்துச்‌ செய்யாமலிருக்க, பின்பு அமுது செய்தருளும் போதுஅந்த ஸ்ரீவைஷ்ணவர்‌ அம்மையார்‌ முகத்தைப் பார்க்க, ஜீயரும்‌ அத்தைக்‌ கண்ட ருளி இதென்னென்று கேட்டருள அவர்‌ உண்மையை விண்ணப்பஞ்செய்ய அத்தைக் கேட்டருளி அம்மையாரை ‘“ஆறுமாஸம்‌ தளிகைக்குப் பண்ண வேண்டாம்‌” என்று வெறுத்‌தருளிப்‌ பின்பு பாகவதாவமானம்‌ பண்ணினதற்கு ஷாமணம்‌ பண்ணுவித்து பின்பு பூர்வம் போலே நியமித்தருளி நடந்து செல்லுகிற நாளிலே!

ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ தனி வழி வரக்‌ கூடாது :
வரந் தரும்‌ பெருமாள் பிள்ளை ”ஜீயர்‌ திருவடிகளை ஸேவிக்க வேணும்‌” என்ற ஆதாரதிசயத்தாலே தனித்துப் புறப்பட்டு அதி த்‌வரையுடனே வந்து திருவடிகளிலே ஸேவிக்க, இப்படி ஸ்ரீவைஷ்ணவ ஸஹவாஸ மின்றிக்கே தனியே ஸாஹஸித்து வருவதே,!”என்று வெறுத்து அவரை ஆறு மாஸம்‌ புறத்திண்ணையிலே யிருக்கும்படி உபேஷித்து பின்பு அங்கீ கரித்தருளி ஏதத்‌விஷயமாக
1-பஷிதம்‌ ஹி, விஷம்‌ ஹந்தி ப்ராக்ருதம்‌ கேவலம்‌ வபு: |
மந்த்ரெளஷத மயீ தத்ர பவத்யேவ ப்ரதிக்ரியா,
தர்‌ஸந ஸ்பர்ஸ ஸம்ஸ்லேஷ விஸ்லேஷ ஸ்ரவணாதபி |
அப்ரதிக்ரிய மாத்மைவ ஹந்யதே விஷயைர்‌ த்ருடம்‌ ॥
இத்த முத்கோஷயந்‌ தோஷாந் விஸ்தரேண ஸாுதுஸ்தராந் |
தூரம்‌ நிர்வாஸ யாமாஸ வாஸநா விஷயேஷ் வஸெள ॥
என்றும்‌-
உட் கொள்ளப் பட்ட விஷம்‌ ப்ரக்ருதமான உடலை மட்டும்‌ அழியச் செய்கிறது; அவ் விஷயத்தில்‌ ‘மந்த்ர ரூபமாயும்‌ ஒளஷத ரூபமாயும்‌ பரிஹாரம்‌ இருக்கிறது ஸித்தம்‌, -ஜீவாத்மாவோ(அவற்றை) காண்பதாலும்‌, தொடுவதாலும்‌ அவற்றுடன்‌ கூடுவதாலும்‌ அவற்றைப்‌ பிரிவதாலும்‌, கேட்பதாலும்‌-பரிஹாரம்‌ பண்ண வொண்ணாதபடி விஷயங்களால்‌ நன்றாக அழிக்கப் படுகிறது- இந்த மணவாளமாமுனிகள்‌ எவ் விதத்திலும்‌ நிவர்‌த்திக்க முடியாத விஷய தோஷங்களை விரிவாக நன்றாக வெளிக் காட்டி ,அவற்றில்‌ வாஸனையை மீண்டும்‌ அணுக வெண்ணாபடி, ஸ மூலமாக
போக்கினர்‌)
2, நிதாநம்‌ ஸர்வ தோஷாணாம்‌ நிதாநம்‌ க்ரோத மோஹயோ; |
மாந எவ,மநாம் ஸ்யேஷாம்‌ நித்ய முந்மூல யத்யஸெள
॥ என்றும்‌
(ஸ்வாபிமாநமே (அஹங்காரமே) எல்லா தோஷங்களுக்கும்‌ காரணம்‌-கோப மோஹங்களுக்கும்‌ காரணம்‌,இவ் வபிமானமானது சேதநருடைய மதத்தை எப்போதுமாக அடியோடு அழித்து விடுகிறது. )

3-அர்த்த ஸம்பத்‌ விமோஹாய விமோஹோ நரகாயச |
தஸ்மா தர்த்த மார்த்தாக்யம்‌ ஸ்ரேயோர்த்தீ தூரதஸ் த்யஜேத்‌ ॥
யஸ்ய தர்மார்த்த மர்த்தேஹா தஸ்ய நீஹைவ ஸோபநா |
ப்ரஷாள நாத்தி பங்கஸ்ய தூராத ஸ்பர்ஸநம்‌ வரம்‌
॥ என்றும்‌
(பொருட்‌ செல்வமானது மோஹத்‌துக்குக்‌ காரணமாகிறது. மோஹம்‌ நரக ஹேதுவாகறது. ஆசையால்‌ நன்மையைக் கோருபவன்‌ அநர்த்தம்‌ என்ற பெயருடைய செல்வத்தைக் கிட்ட வொண்ணாமல்‌ விலக்கக் கடவன்‌’ எவனுக்குத்‌ தருமஞ் செய்வற்காகப்‌ பொருளில்‌ ஆசை யுண்டாகிற்தோ அவனுக்குப்‌ பொருளில்‌ ஆசை யில்லாமையே நல்லது. சேற்றைக்‌ காலிலிருந்து அலம்புவதை விட, தூர நின்று அதைக் காலில் பட விடாதிருப்பது நலம்‌.)

4–ப்ருத்யோஹம்‌ விஷ்ணு பக்தாநாம்‌ ஸாஸிதாரஸ்த ஏவமே |
க்ரேதும்‌ விக்ரேதுமபிமாமீ ஸதேதே யதேப்ஸிதம்‌ ॥
இதி யஸ்ய மதம்‌ நித்ய மயமேவாத்ம வித்தம: ॥
ஸ்வரூப ஸித்திஸ் ஸர்வேஷாம்‌ ஸ்வோஜ்ஜீவந மபி த்ருவம்‌ |
ஸ்ரேயஸீ தேஸிகாநாஞ்ச ஸித்யதி ப்ரத்யுபக்ரியா ॥
என்றும்‌
அடியேன்‌ ஸ்ரீவைஷணவர்களுக்கு தாஸ பூதன்‌. அவர்களே அடியேனுக்கு நியந்தாக்கள்‌-அவர்கள்‌ அடியேனை தங்களிஷ்டப்‌படி விற்கவும்‌ வாங்கவும்‌ உரியவர்கள்‌. இப்படி எத்த சேதனனுக்கு
அத்யவஸாயம்‌ நித்தியமாய்ச்‌ செல்லுமோ அவனே ஆத்ம ஸ்வரூப முணர்ந்தவரில்‌ முதல்வன்‌. இதனால்‌ எல்லாருக்கும்‌ ஆத்ம ஸ்வரூபம்‌ நிலை பெறுகிறது.-தமதுஜ்தீவநமும்‌ ஸித்திக்கிறது, ஆசாரியர்‌களுக்கும்‌ மேலான ப்ரத்யுபகாரமானது ஸித்திக்கிறது.

5-ஆசார்யவத்‌ தேவதாவத்‌ மாத்ருவத்‌ பித்ரு வத்ததா
த்ரஷ்ட வ்யாஸ் ஸந்த இத்யா திர்த்ருஷ்ட: ஸாஸ்த்ரேஷுவிஸ்ராத்‌ ॥
என்றும்‌
ஆசார்யனைப் போலவும்‌ தேவதையைப்‌ போலவும்‌,தாயைப்‌ போலவும்‌. தந்தையைப்‌ போலவும்‌ ஸத் புருஷர்கள்‌ அபி மானிக்கத் தக்கவர்கள்‌ என்று இது போன்ற நல் வழிகள்‌ சாஸ்தரங்‌களில் விரிவாகக்‌ காட்டப்பட்டுள்ளன.,

6-ஸுஸீலஸ் ஸுலபஸ் ஸ்வாமீ ஸ்ரீமாந பிக்குபாநிதி:
அணோரபி மஹத்த்வேஷா தத்த்யந்தாம்‌ யாதி விக்ரயாம்
பாவநீ மஹதாம்‌ த்ருஷ்டி: ப்ரச்யுதா நபி மோசயேத்‌ |
அமர்ஷ; புநரல் போபி நித்யாநபி நிபாதயேத்‌ ॥ ._
ப்ரியாத்‌ ப்ரிய தரம்‌ சவ்ரேஸ் ஸஜ்‌ ஜநாநாம்‌ ஸபாஜநம்‌ |
அப்ரியாத ப்ரியஸ் தேஷா மவ மாநோ மநாகபி ॥
என்றும்‌
ஸர்வ ஸ்வாமியான எம்பெருமான்‌ ஸ்ரீமானாயினும்‌, யாவருடனும்‌ கலப்பவனாயினும்‌, எளியனாயினும்‌, பரமகாருணீகனாயினும்‌, மஹான்களிடம்‌ பண்ணப்பட்ட சிறிது அபசாரத்தாலும்‌ மிகவும்‌ மனக் கலக்கம்‌ (சீற்றம்‌) அடைகிறான்‌, யாவரையும்‌ பரிசுத்தராக்க வல்ல மஹான்௧ளுடைய கடாஷமானது எம்பெருமானிடமிருந்து நழுவியவரையும்‌ உயர்‌த்த வல்வது, அவர்களின்‌ மனக் கலக்‌கம்‌ சிறிதாயினும்‌ நித்யர்களையுங் கூட நழுவப் பண்ண வல்லது, அந்த மஹான்களுக்கு நேரிட்ட அவமானமானது சிறிதாயினும்‌,எம்பெருமானுக்கு-தனக்கு நேரிடும்‌ அநிஷ்டத்தைக் காட்டிலும்‌ மிகவும்‌ அநிஷ்டமா யிருக்கும்‌.

7-ஸஜ்‌ஜநாதிக்ரம க்ரெளர்யம்‌ ஸாஸ்த்ரைரர்த்தம்‌ ப்ரதர்‌ஸயகந் |
ஸூக்தி பிர்யுக்தி யுக்தாபிஸ் ஸர்வாந் ஸமுத ஜீவயத்‌
-என்றும்
ஸத் புருஷர்கள்‌ விஷயத்தில்‌ பண்ணுமபசாரத்தின்‌ (பாகவதபாசாரத்தின்‌) கொடுமையை இப்படி சாஸ்த்ர முகத்தாலும்‌ யுக்திகளுடன்‌ கூடிய திரு வாக்குக்களாலும்‌ எடுத்துக் காட்டி யாவரையும்‌ உய்வித்துப் பேந்தார்‌]-என்றும்‌ இத்யாதிகளாலே
இவற்றினுடைய ஸாஹித்ய ராஹித்யங்களா லுண்டான குண தோஷங்களைத்‌ தம்முடைய தீர்க்க தர்ஸித்வத்தாலே தர்‌ஸிப்பித்‌தருளி ஸர்வரையும்‌ உஜ்ஜீவிப்பித்துக் கொண்டு போருகிற காலத்திலே

ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணம்‌ காட்டித் தருதல்‌,
இவருடைய உக்த யநுஷ்டானங்களை யெல்லாம்‌ உத்தர தேசத்‌திலே வைஷ்ணவ ப்ரபுவாயிருப்பா ரொருவர்‌ கேட்டு, தம்முடைய உஜ்ஜீவநத்திற் குடலாக ஸகல சாஸ்த்ர தாத்பர்யங்களையும்‌
ஸங்க்ரஹ ரூபேண அநுஷ்டேயமா யிருப்பதொரு படி அடியேனுக்கு அருளிச் செய்து வரக் காட்டி யருள வேண்டும்‌” என்று குறித்து வரக் காட்ட, ஜீயரும்‌ அப்படியே ‘ பகவத் தாஸ்ய ரஸம்‌ புருஷார்த்‌தமென்று தெளிந்த அதிகாரிக்கு கேவலம்‌ பகவத் தாஸ்யரணம்‌ புருஷார்‌த்தமன்று; கேவலம்‌ பகவல் லாஞ்சந தாரண மாத்ரமும்‌ போராது; கேவலம்‌ பகவத் ஸமாராதந நிஷ்ட்டா மாத்ரமும் போராது; கேவலம்‌ ஆசார்ய பர தந்த்ர யதிகார மாத்ரமும்‌ போராது; கேவல பாகவதாநுவர்‌த்தந மாத்ரமும் போராது; பின்னை எங்ஙனே யென்னில்‌; யதோசித கைங்கர்யைக நிரதகனாய் ஸ்வ கீயமான க்ருஹத்திலே ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ நிஸ் ஸங்கமாக ப்ரவேஸித்திப்‌ பாங்காக வர்த்திக்கத்‌ தன்னை அத் தலைக்காகவே வைத்துத்‌ தலைக்கட்டும்‌-அடியார்க் கென்னை ஆட் படுத்த, *எம் தம்மை விற்கவும்‌ பெறுவார்களே என்‌னும்‌ நிலை யுண்டாக வேணுமிறே,-இப்படி இவ்வர்த்தம்‌ அநுஸத்தித்து அநுஷ்டியானாகில்‌ தனக்கு ப்ரதிபத்தி ஸெளபாக்யைஸ்வர்யங்கள்‌’ கை கூடாது.
“ந்ய க்ரோத பீ்ஜ வடவத்‌ ப்ரணவே ஸப்த ஜாலவத்‌;
ஸித்தே ததீய ரோஷத்வே ஸர்வார்த்தாஸ் ஸம்பவந்தி ஹி”-

ஆலம்‌ விதையில்‌ பல கிளைகளை யுடைய ஆல மரம்‌ போலவும்‌, ப்ரணவத்தில்‌ பல சப்த ராசிகள்‌(அஷரங்கள்‌, பதங்கள்‌) போலவும்‌ பாகவத ஸேஷத்வம்‌ அநுஷ்டாந ஸித்தமானால்‌ எல்லா ஸத் ஸம்ப்ரதாய அர்‌த்தங்களும்‌ தன்னடையே கை புகும்‌] என்கிறபடியே சரமார்த்த விசேஷம்‌ கை புகுத்ததாகில்‌ விவிதங்களாய்‌ விசித்ரங்களாய்‌ அநந்தங்களா யிருந்துள்ள பகவத்‌ ரஹஸ்ய விசேஷங்களெல்லாம்‌ அறிய வேணுமென்கிற நிர்ப்பந்தமில்லை, இவ் விசேஷா நுஷ்டாந மின்றிக்கே செல்லுகிற ஜ்ஞாந அநுஷ்டாந ப்ரதி பாதநமும்‌ பகவத் ரஹஸ்ய விசேஷங்களும்‌ வேஸ்யை சொல்லுற பதி வ்ரதா தர்மம்‌ போலே வ்யர்த்தமாகி விடும்‌-
பூஜநாத்‌ விஷ்ணு பக்தாநாம்‌ புருஷார்த்தோஸ்தி நேதர:; தேஷு
வித்வேஷத: கிஞ்சித் நாஸ்தி,நாஸக மாத்மநாம்‌”’

எம்பெருமானிடம்‌ பக்தி யுள்ள ஸ்ரீவைஷ்ணவர்களை ஆராதிப்பதிற் காட்டில்‌ வேறு உயர்ந்த புருஷார்‌த்தமில்லை, அவர்களிடம்‌ த்வேஷம்‌ பண்ணுவதைக் காட்டில்‌ ஆத்ம நாசம்‌ பண்ணுவது வேறொன்‌றில்லை-என்கிறபடியே திருமந்த்ரார்த்தமான சரமார்த தந் நிஷ்டையை ஸ்வ திவ்‌ய ஸூக்தி விசேஷத்தாலே தர்சிப்பித்து எழுதிப் பேச விட்டருள,அவரும்‌ அப்படியே ததீயாராதநத்திலே நிஷ்ட்டராய்‌ :
தஸ்யை நித்யம்‌ ப்ரதி ஸததிஸே தஷிணஸ்யை நமஸ்யாம்‌”
[அந்த தெற்குத்‌ திசைக்கு எப்போதும்‌ நமஸ்காரம்‌ செய்யுங்கள்‌ ] என்றும்‌,
திஸே வாபி நமஸ் குர்யாத்‌ யத்ராஸெள வஸதி ஸ்வயம்‌”
[இவ் வாசாரியர்‌ தாம்‌ எத் திசையில்‌ வசிக்கிராரோ அத் திசைக்காவது நமஸ்கரிக்கக்‌ கடவன்‌] என்றுஞ்‌ சொல்லுகிறபடியே ஜீயரெழுந்தருளி யிருக்கிற திக்கை நோக்கி , –தொழுமத் திசை யுற்று நோக்கியே (திருவாய்‌ 6-5 5) என்கிறபடியே நாடோறும்‌ ஸேவித்துச்‌ கொண்டு தம்முடைய வர்ணாநு குணமான கைங்கர்யத்தையும்‌ மடத்திற்கு நடத்திக் கொண்டு போந்தார்‌.

அக் காலத்திலே கோயிலிலே யிருக்கிற பட்டர்‌ பெருமாள்‌ திருவோலக்கத்திலே ஜீயரை ஸேவித்து உம்முடைய சிஷ்யர்கள்‌ நம்மை தண்டனிடாமல்‌ அவமதி பண்ணிப்‌ போரா நிற்பர்கள்‌-என்று அறிவிக்க, ஜீயரும்‌ மடத்திற்கெழுந்தருளி அவர்களை யழைத்து நீங்கள்‌ இப்படி செய்வானென்‌?”‘ என்று கேட்டருள, அவர்‌கள்‌, அவரிருக்கற இருப்பை விண்ணப்பஞ் செய்து, அவரை யநுவர்த்திக்க எங்களுக்கு மனமில்லை’* என்ன, ‘ஆகில்‌, பெருமாளும்‌, பிராட்டியும்‌ திவ்ய ஸிம்ஹாஸநத்திலே எழுந்தருளி யிருக்கிறதாக ப்ரதி பத்தி பண்ணி ஸேவித்துக் கொண்டு போருங்கோள்‌” என்று அருளிச் செய்து, இப்படி தோஷமுள்ள விடத்திலும்‌ குண ப்ரதிபத்தி நடக்கும்படியான பகவத் ப்ராவண்யத்தை யுடையவராய்‌, பின்பு வ்ருத்தாசாரங்களை அறிந்தருளு மவராகையாலே வேதகப்‌ பொன்னான விலக்ஷண விஷயங்களையும்‌ ஆதரித்துக் கொண்டு,அவர்கள்‌ விஷயத்திலே பூர்வர்கள்‌ அநுஷ்டித்துப் போரும்‌ சேஷ வ்ருத்திகளெல்லாம்‌ அநுஷ்டாந பர்யவஸாயியாம்படி அநுஷ்டித்‌தருளி;
எக் குணத்தோ ரெக்குல்த்தோ ரெவ் வியல்‌ வோராயிடினும்‌
அக் கணத்தே நம்மிறைவராவரே-மிக்க புகழ்க்‌
காரார் பொழிற்‌ கோயிற் கந்தாடை யண்ணனெனும்‌
பேராளனை யடைந்த பேர்‌

என்று அநுஸூந்திந்தருளி, இப்படி விலஷணமான ஜ்ஞாந அனுஷ்‌டாநங்களோடே கூடி ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீ யுடனே எழுந்தருளி யிருக்கிற காலத்திலே –

வேடலப்பையைக்கொண்டு குத்ருஷ்டியை நிரஸித்தல்‌
குத்ருஷ்டி மதாவலம்‌பியா யிருப்பானொருவன்‌ கோயிலிலே வந்து ஸ்வமதாபந்யாஸம்‌ பண்ணிக் கொண்டு இறுமாந்திருக்க-ஸர்‌வஜ்ஞரான ஜீயரும்‌ அவனுடனே தர்க்கிக்கைக்கும்‌ ப்ரஸங்‌கத்தாலே அவனை வாய்‌ மூடப் பண்ணுகைக்கும்‌ ஸாமர்த்யமுண்டா யிருக்கச்‌ செய்தேயும்‌ -கலையறக் கற்ற மாந்தர்‌ காண்பரோ கேட்பரோ தாம்‌ -என்கிறபடியே அவனை த்ருண வத்கரித்து அநாதரித்துக்‌ கொண்டு ”பகவதநுபவ விரோதியான இவனை ஊரோடு ஒட்டக்‌ கடவோம்‌” என்று ஸங்கல்‌பித்து, முன்னே அவன்‌, வாதூல வம்ஸ்‌யரான வேடலப்பையை ஆஸ்ரயித்திருந்தவன்‌, ஸஹவாஸ தோஷத்‌தாலே கலங்கி ப்ரசந்ந பெளத்தரான விரோதிகளோடே கூடிக்‌ கொண்டு மதாந்தர ப்ரவிஷ்டனானாகையாலே, திரிசங்குவைப்‌ போலே கர்ம சண்டாளனான அவனை ஆலோசித்து வார்த்தை யருளிச்‌ செய்யக்‌ கூசி வேடலப்பையைக்‌ கொண்டு நிரஸிக்க வேணுமென்று திருவுள்ளம்‌ பற்றி அவரை அழைப்பித்தருள; அவரும்‌ லந்து ஜீயரை ஸேவித்து கோயிலிலே அவனைக் கண்டு ‘“மாணீ! இவ்‌ விடம்‌ கொண்டயோ?” என்ன, அவனும்‌ அவரைக் கண்டு கருடனைத கண்ட ஸர்ப்பம்‌ போல மிகவும்‌ பீதனாய்‌ ஸேவித்து அங்கு நின்றும்‌ புறப்பட்டு ஒடிப் போனான்‌. அப்பை யுடைய வித்வத ப்ரதிம ப்ரபாவத்தை ஜீயர்‌ கண்டருளி விஸ்மயப் பட்டு அப்பையை, “தேவரீர்‌ இங்கே யெழுந்தருளியிருக்க வேணும்‌ என்று மிகவும்‌ ஆதரிக்க,அவரும்‌ ஜீயர்‌ நியமித்தபடி செய்யாமல்‌ தம்‌ தேஹ யாத்ராசேஷமான லெவ்கிக கார்யங்களையும்‌ அபிஜந வித்யாவ் வருத்தங்களையும்‌ நினைத்து ப்ரக்ருதி பரவசராய்‌ பர்யுஷிதாந்நத்தையும மாஹிஷ ததியையும்‌ நினைத்து அங்கு நிற்க மாட்டாதே ஸ்வ க்ராமத்தை
நோக்கி எழுந்தருளினார்‌.

மணவாள மாமுனிகளால்‌ வித்யா பூர்த்தியை யிட்டு மதிக்கப் பட்டவரும்‌, முதலியாண்டான்‌ திருவம்ஸ்யருமான வித்வானைக்‌ குறித்து இந்த பரிஹாஸோக்திகள்‌ பொருந்தவில்லை.
தமது வயது முதிர்ந்த பருவத்தை யுத்தேசித்து தம்மை யொத்த ஒரு வித்வானான தமது சிஷ்யரான தாசரதி ஆச்சானை ஜீயர் ஸந்‌நிதியிலிருக்கும்படி நியமித்து ஸ்வ க்ராமம்‌ எழுந்தருளியதாகப்‌ பழ நடை விளக்கம்‌ ‘ என்னும்‌ நூல்‌ கூறுகிறது. அதிலுள்ள விவரங்கள்‌ வருமாறு –
ஸ்ரீமான்‌ திருமழிசை கோயில்‌ கந்தாடை அண்ணா வப்பங்கார்‌ ஸ்வாமி அருளிச் செய்த பழநடைவிளக்கம்‌
பின்பு க்ருஷ்ணாநந்தி யென்‌கிற ஏக தண்டி ஸந்யாஸி கோயிலிலே வந்து தன்னோடே சாஸ்த்ர வாதம்‌ பண்ணச் சொல்ல, பெரிய ஜீயரும்‌, ‘இவனோடே வாதம்‌ பண்ணும் போது மங்களாசாஸந விரோாதமாமே! வாதம்‌ பண்ணாவிட்டால்‌ விரோதி நிரஸனம்‌ ஸித்தியாதே! என்ன செய்வோம்‌?என்று சிந்தித்துக் கொண்டிருக்கச்‌ செய்தே, பெரிய பெருமாள்‌ நியமனத்தாலே வேடலப்பைக்குப்‌ பெரிய பெருமாள்‌ ஸ்ரீமுகத்தை வனுப்ப, முதலியாண்டான்‌ திருவம்ஸ்யராய்‌, மஹா வைபவ முடையரான வேடலப்பையும்‌ ஸ்ரீமுகத்தை சிரஸா வஹித்து, தம்முடைய ஸந்நிதியிலே சாஸ்த்ரங்களையும்‌ அதிகரிதது மஹா வித்வானாகிய தாசரதி யாச்சானையும்‌ கூட்டிக்கொண்டு கோயிலுக் கெழுந்‌தருளி நம் பெருமாளை மங்களாசாஸனம்‌ செய்தருளி ஸகல வரிசைகளையும்‌ விசேஷ கடாக்ஷங்களையும்‌ பெற்று, ஸ்ரீரங்க நாயகியாரை மங்களாசாஸநம்‌ செய்தருளி அவருடைய ப்ரிபூர்ண கடாக்ஷம்‌ பெற்று, ஸம்மானமும்‌ பெற்று, வில்வ வ்ருக்ஷத்திற்கு ஸமீபமாக வெழுந் தருளச்‌ செய்தே அப்போது அவ் விடத்தில்‌ ஜபம்‌ பண்ணிக்‌ கொண்டிருக்கிற ஏக தண்டியானவன்‌ இவர்களைக் கண்டெழுந்திருந்து, தனக்கு ஸகல சாஸ்த்ரங்களும்‌ படிப்பித்த வேடலப்பையை தண்டனிட்டு நின்றான்‌. வேடலப்பையும்‌ அவனைப் பார்த்து குசல ப்ரச்நம்‌ பண்ணினார்‌. அவனும்‌ தான்‌ வந்த காரியத்தை வேடலப்பைக்குச்‌ சொன்னான்‌ வேடலப்பையும்‌ -அதற்கள்றோ நாமிங்கே வந்தது’-என்‌றருளிச்‌ செய்தார்‌.-ஆனால்‌ அபசாரப்பட்‌டேன்‌” என்று பயப்பட்டு தண்டனிட்டு நின்றான்‌. வேடலப்பையும்‌ அண்ணன்‌ திருமாளிகைக்கெழுந்தருளி, அண்ணனும்‌ வேடலப்‌பையும்‌ தாசரதி யாச்சானும்‌ அமுது செய்தருளி, க்ருஷ்ணாநந்தி இவர்களுடைய ப்ரஸாதத்தை அர்த்தித்தானாகையால்‌ ஒரு பரிசு ப்ரஸாதத்தை அவனுக்கு ப்ரஸாதித்தார்கள்‌. அவனுமிவர்கள்‌ அநுமதி கொண்டு புறப்பட்டுப்‌ போய் விட்டான்‌-பின்பு வேடலப்டையும்‌ தாசரதி யாச்சானையுங்‌ கூடசக்‌ கூட்டிக்‌ கொண்டு அண்ணனும்‌, பெரிய ஜீயர்‌ ஸந்நிதியிலே யெழுந்தருளி தண்டன்‌ ஸமர்ப்பித்து க்ருஷ்ணாநந்தி போய்‌ விட்ட செய்தியை விண்ணப்பஞ் செய்ய, பெரிய ஜீயரும்‌ அண்ணனையும்‌ வேடலப்‌யையையும்‌ தாசரதி யாச்சானையுங்‌ கடாக்ஷித்து மிகவுமுகந்து”உகப்பினுடைய வதிசயத்தால்‌ முதலியாண்டான்‌ திருவம்ச விஷயமாக இரண்டு ஸ்லோகம்‌ அருளிச்‌ செய்து பரிபூர்ணாநுக்ரஹம்‌ செய்தருளி வேடலப்பையையும்‌ தாசரதி யாச்சானையும் ஸந்நிதியிலே நித்யவாஸம்‌ பண்ணும்படி நியமித்தருள- வேடலப்பையும்‌ வார்த்தகமான படியினாலே தாசரதி யாச்சானை யங்கே யிருக்கும்படி நியமித்து தாம்‌ பெரிய ஜீயர்‌ ஸந்நிதியிலே அநுமதி பெற்று மிகவும்‌ உபலாளனம்‌ பெற்று வேடலுக்கு எழுந்தருளினார்

ப்ரதிவாதி பயங்கர மண்ணா வருத்தாந்தம்‌ (இந்த வ்ருத்தாந்தம்‌ தெலுங்குப் பதிப்பில்‌ வேறு விதமாக உள்ளது. அதுவும்‌ பின்னர்‌ இப் பதிப்பில்‌ வெளியிடப்படுகிறது, )
இனி இதற்காவாராரென்று சிந்‌தித்திருக்க, அவ் வளவிலே -ஹஸ்திகிரிநாதரண்ணா வென்னும்‌ திருதாமத்தை யுடையராய்‌ தர்சந விரோதிகளான வாதிகளை ஜெயித்து ‘ப்ரதிவாதி பயங்கரர்‌’ என்று
விருதிடும்படியான ப்ரபாவத்தை யுடையராய்‌ ‘ லோகே வேதேச பண்டித; லெளகிகே ஸமயாசாரே க்ருத கல்போ விஸாரத;” இத்‌யாதிப்படியே லௌகிக வைதிகங்களிவே அத்விதீயராய்‌ பெருமாள் கோயிலிலே சில நாள்‌ வஸித்து திருப் பதியிலே நித்ய வாஸமாக எழுத்தருளி யிருக்கிற காலத்திலே அவருக்கு மூன்று குமாரர்கள்‌ திருவவதரித்திருந்து அவர்கள்‌ அதி மேதாவிகளாகவும்‌. தேவிகள்‌ கூரத்தாண்‌டளோ டொத்திருப்பவள் ஓருத்தியும்‌ இப்படி யிருக்கிற ப்ரதிவாதிபயங்கரமண்ணா கூரத்‌தாழ்வானைப்‌ போலே ப்ராப்ய விரோதி யென்று ஐச்வர்யத்தில்‌ ஜிஹாஸை பிறந்து கேவலம்‌ ஸத்வ நிஷ்டராய்‌ ”அர்த்த ஸம்பத் விமோஹாய”” இத்யாதிகளை யநுஸத்தித்து -முற்றவும்‌ வீடு செய்து எல்லாவற்றையும்‌ பகவத் பாகவத ஸ்வம் க்கி, தமக்கு: பரம ஸேஷி விஷயத்தில்‌ கைங்கர்யமே புருஷார்த்தம்‌ என்றறுதியடடு திருவேங்கடமுடையான்‌ திருவடிகளிலே ஒழிவில்‌ காலமெல்லாம்‌ உடனாய்‌ மன்னி வழுவிலா வடிமை செய்ய வேணும்‌ என்றுநிற்க, திருமலை தோழப்பர்‌
உகந்தருளி –அந்யத் பூர்ணாத பாம்கும் பாதந்ய த் பதாவநே ஜநாத் அந்யத் குஸல ஸம் ப்ரஸ்நாந்ந சேச்சதி ஜநார்த்தந:’‘-ஐநார்த்தனனாகிய கண்ண பிரான்‌ பூர்ண கும்பமோ -திருவடி விளக்குதலோ குசலப்‌ரஸ்னமோ இவற்றில்‌-ஒன்றைத் தவிர வேறொன்றையும்‌ ஆசைப் படமாட்டான்‌ என்று வெள்ளிக் குடத்தை ஸாதித்து ”ஆகாச கங்கையினின்றும்‌ திருமஞ்சநம்‌ கொண்டு வந்து பூர்ணமாக ஏலாதி ஸம்ஸ்‌க்ருத மாக்கி நீரே ஸமர்ப்பித்து வாரும்‌!’ என்று நியமிக்க, அண்ணா-நாயன்தே, நாயன்தே” என்று குடத்தை வாங்கிக் கொண்டு அதி ஸந்துஷ்டராய்‌ :“இவ்வளவாகிலும்‌ சேஷத்வ ஸித்தி யுண்டாயிற்றே’” என்று நித்யமாக நடத்திக் கொண்டு போர, ஒரு ஸ்ரீவைஷ்‌வணர்‌ கோயிலினின்றும்‌ அப்பனை ஸேவிக்க வந்து நிற்க , அவரை ஸேவிக்கப்‌ பண்ணி வைத்து, வரிசை பெறுவித்துத்‌ தாமும்‌
ஸத்கரித்து அற்றைக்கு தம்முடைய அண்டையிலே வைத்துக்‌ கொண்டு கோயில்‌ விருத்தாந்தங்களையும்‌ பெருமாளமுது, செய்கிற வரிசைகளையும்‌ உத்ஸவங்களையும்‌ அழகிய மணவாள மா முனி யுடைய அப்ததிம வைபவத்தையும்‌ கேட்டுக்‌ கொண்டிருந்து பிற்றை நாள்‌ தாம்‌ திருமஞ்சனத்திற் கெழுந்தருளுகிற போது அவரரையுங்‌ கூட்டிக் கொண்டு ”ஸ்ருணோம் யஹம்‌ ப்ரீதி கரம்‌ மமதா தஸ்ய கீர்த்தநம்‌’* [எனக்கு ப்ரீதியை யுண்டு பண்ணும்‌ என்‌ நாதனுடைய கதையைக்‌ கேட்கிறேன்‌] என்றபடியே அழகிய மணவாள மா முனியினுடைய திநசர்யையையும்‌ அத்புத வைபவங்‌களையும் சொல்லுமென்று ததேக சித்தராய்‌ திருமஞ்சநங் கொண்டு வந்து, ஏலாலவங்க கர்ப்பூராதிகளைப்‌ பரிமாறுவதற்காகத்‌ திருத்த, அப்போது ஒரு ஏகாங்கி ஓடி வந்து குடத்தை யெடுத்தக்‌ கொண்டு திருவாராதந ஸமயத்திற்கு உதவ வேணுமென்று கொண்டு போகா நிற்க , ‘-திருமஞ்சந த்ரவ்யங்கள்‌ இன்னும்‌ பரிமாற வில்லையே” -என்ன அதை அவர்‌ கேளாமல்‌ கொண்டு போய்‌ சமர்ப்பிக்க எப்போதும் போல்‌ திருவாராதநம்‌ கொண்டருளா நிற்க அண்ணா, “அபசாரம்‌ வந்ததே” எனறு ஏலாதிகளை வட்டிலிலே கொண்டு நிற்க அர்ச்சகர்‌, அவசராய்‌ ‘இத்தனை நாளைக் காட்டிலும்‌ பரிமள த்ரவ்யங்கள்‌ விஞ்சி, திருமஞ்சன வாஸனை அதிகமாயிருக்கிறதே’! என்ன அண்ணா பாவஜ்ஞராகையாலே ‘இது வெறுமன்று; ௨கப்பு விஞ்சி யிருக்கிறது; இதற்கு ஹேது ஜீயருடைய வைபவ ஸ்ரவணமாக வேணும்‌”’ என்று எண்ணி, அந்த ஸ்ரீவைஷ்ணவரை யழைத்து “நீர்‌ அழகிய மணவாளமாமுனி , வைபவமான ஐதிஹ்யங்களை அருளிச் செய்ய அடியேன்‌ கேட்டபடியினாலே க்ருதார்‌த்தனானேன்‌; அப்பன்‌ திருவுள்ளம்‌ ப்ரஸன்னமாயிற்று;, அழகிய மணவாளமா முனியை ஸேவிக்கப்‌ பெறுதேனாகவேணும்‌‘ என்ன; அப்பனும்‌ உகந்து அவரை ஸத்கரித்து அனுப்பி யருளினார்‌.
பின்பு தாம்‌ எப்போதும் போலே சில நாள்‌ திருமஞ்சந கைங்கர்‌யஞ்‌ செய்தருளி, அப்பனுடைய நியமனத்தினாலே ஸ குடும்பமாகக்‌ கோயிலுக்கும்‌ புறப்பட்டருளி, பயண கதியிலே திவ்ய நகரத்தைத்‌
தண்டன்‌ ஸமர்பித்து வைத்த கண் வாங்காமல்‌ ஸேவித்துக்‌ கொண்டு நீராடி திருமண் காப்புச்‌ சாத்தி யருளி ஸ்ரீரங்க நாராயண ஜீயர்‌ மடத்திலே எழுந்தருளி பின்பு பெரிய பெருமாளை மங்களா சாஸநம்‌ பண்ணுவதாக ஸேவா க்ரமத்திலே யெழுந்தருள சித்ர மண்டபத்திலே ஜீயர்‌ கோஷ்டியாக எழுந்தருளியிருந்து -ஒன்றுந்‌ தேவு ப்ரவேசம்‌ நடத்த அந்த கோஷ்டியைக் கண்டு ஹர்ஷ பர வசராய்‌ தண்டன்‌ சமர்ப்பித்து நிற்க, ப்ரதிவாதி பயங்கரர்‌ அண்ணா’” என்று ஜீயர்‌ கேட்டருளி குசல ப்ரச்நம்‌ செய்தருளி-இத்தனை நாளைக்காக இன்று ஸேவிக்கப்‌ பெற்றேன்‌” என்று தழுவிக்‌ கொண்டு பின்பு அவரையும்‌ கூட வைத்துக் கொண்டு கால ஷேபம்‌ நடத்த மூன்று பாட்டாய்‌ நாலாம்‌ பாட்டுத்தருவாய்‌ நிறுத்தின வளவிலே ப்ரதிவாதி பயங்கர அண்ணா ‘ இப்படி ஆழ்வார்‌ பர தத்வ நிர்ணயஞ்‌:செய்தருளி வைத்த படியை தேவரீர்‌ திருவடிகளிலே ஸம்பந்த முண்‌ டானாலல்லது ஆர்க்குமறியப்‌ போகாது””என்று வித்தராயிருக்க அவர்‌ திருக்கைகளைப்‌ பிடித்துக்‌ கொண்டு பெருமாளைத்‌ திருவடி தொழப் புக, தீர்த்தம்‌ ஸ்ரீசடகோபன்‌ முதலான வரிசைகளெல்லாம்‌ ப்ரஸாதித்து, பெருமாள்‌ அர்ச்சக முகேந-வாரீர்‌ ப்ரதிவாதி பயங்கராசார்யரே! என்று அவர்‌ கையைப்‌ பிடித்துக்‌ கொண்டு ‘ திருமலை யிலே போரத் திரு மஞ்சந கைங்‌கர்யம்‌ பண்ணினீரே: ஒரு நாள்‌ திருமஞ்சநங் கொண்டு வரும்‌போது அழகிய மணவாளமாமுனி வைபவங்‌ கேட்டுக்‌ கொண்டு வர அதினாலே தீர்த்த ருச்யாதிக்யமும்‌ பரிமளாதிக்யமுமுண்டாய்‌
தாம்‌ உகந்த படியை நினைத்து வந்தீர்‌; உமக்கு விலக்ஷண ஸம்பந்தம்‌ தந்தோம்‌” என்று ஜீயர்‌ திருக்கையிலே இவரைக்‌ காட்டிக்‌ கொடுக்கப்‌ புறப்பட்டு மடமே யெழுந்தருள;

அநந்தரம்‌ அண்ணா கந்தாடை யண்ணன்‌ திருமாளிகைக்‌ கெழுந்தருளுவதாகப்‌ புறப்பட்டருள, அண்ணன்‌ எதிர் கொண்டு, “வைஷ்ணவோ லைஷ்ணவம்‌ த்ருஷ்ட்வா தாண்டவத்‌ ப்ரணமேத்‌ புவி” என்கிற படியே அந்யோத்ய வந்தந பரராய்‌ சேஷத்வ புரஸ்‌ ஸரமாக குசல ப்ரச்நங்களுடனே திருமாளிகையிலே எழுந்தருள, அங்கே யாத்ருச்சிகமாய்‌ வானமாமலை ஜீயரெழுந்தருளி யிருக்கக் கண்டு, “அருள்கொண்டாடுமடியவரன்றோ தேவரீர்‌!’* என்று திருவடிகளிலே தீர்க்கப் ப்ரணாமம்‌ பண்ண ஜீயர்‌, ப்ரணாம பூர்வமாகத்‌ தழுவிக் கொண்டு மூவருங் கூடி யிருந்து ஜீயருடைய யதி புநரவதாராது வைபவங்களை யெல்லாம்‌ அந்யோந்யம் அநுஸந்ததித்துக்‌ கொண்டு, மடத்திலே எழுந்தருளி; சிறட்பும்‌ திருமுன்‌ காணிக்கையும்‌, ஸமர்ப்பித்தருளி தேவிகள்‌ குமாரர்‌ எம்பெருமானாரப்பன்‌, அநந்தய்யன் அப்பை, திருவாய்மொழிப்‌ பெருமாள்‌ நாயனார்‌ முதலானாரெல்லாரைங்‌ கூட்டிக் கொண்டு திருவடிகளிலே ஆஸ்ரயித்தருளி க்ருதார்த்தராய்‌ ஸ்ரீபாத தீர்த்தமும்‌ தளிகை ப்ரஸாதமும்‌ ஸ்வீகரித்துத்‌ திருவடிகளுக்கு அந்ததரங்கராய்‌ வாழ்ந்தருளினார்‌, ஜீயருடைய ஸம்பந்த முடையராய்‌ -அடங்கெழில்‌ சம்பத்து என்கிறபடியே கட்டடங்க விலஷணமான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயை அடங்‌கக்கண்டு என்கிறபடியே கார்த்ஸ்ந்யேத கண்டு –அடங்கெழில்‌ என்றபடியே பந்நகாதீஸரான அழகிய மணவாளமாமுனிகளுடைய நிரவதிக விலக்ஷண ஸ்ரீயிலே அஃதென்‌ நடங்குக வுள்ளே-என்கிறபடியே தாமுமொன்றென்று அந்தர்பவித்து, ‘‘ப்ரஸித்த:பரகோஷ்டீஷு ப்ரவாதி பயங்கர:; ஸ்ரீவைஷ்ணவா நாம்‌
கோஷ்டீஷு தத்தாஸ இதி விஸ்ருத:
[ஸ்ரீவைஷ்ணவரல்லாத புறம்‌பான கோஷ்டிகளில்‌ பிரதி வாதிபயங்கரரென்று பிரஸித்தரானாலும்‌ ஸ்ரீ வைஷ்ண கோஷ்டிகளில்‌ அவர்களுக் கடியவர்‌ என்‌று நன்கறியப்‌ப்ட்டவர்‌] என்று ஸ்வ சேஷத்வாநுஸந்தாநத்துடனே ஜீயர்‌ திருவடிகளுக் கந்தரங்கராய்‌ வாழ்ந்தருளினார்‌.

தெலுங்குப்‌ பதிப்பிலுள்ளபடி. ப்ரதிவாத பயங்கர மண்ணா வ்ருத்தாந்தம்‌-(வேடலப்பை ஸ்ரீரங்கத்தில்‌ நித்ய வாஸத்‌துக்கு இசையாமல்‌ அகன்று போக ‘இனி இதற்கு ஆவாரர்‌?” என்று சிந்தித்துப்‌ பெருமாள்‌ கோயிலில்‌ ‘ப்ரதிவாதி பயங்கரர்‌’ என்று திருநாம முடையராய்‌ விதேசேஷ்வபி விக்யாதராய்ப்‌ போருகிற ஹஸ்‌தி கிரிதாதரண்ணாவின்‌ பக்கல்‌ திருவுள்ளம்‌ குடி போய்‌ –ஆம்‌ முதல்வனிவன்‌ என்று அபிமானித்தருளி அவரை ஸ்ரீவைஷ்ணவ தாஸராக்க வேணும்‌” என்று ௧ருதித்‌ தன்‌ திருவடிகளுக் கந்தரங்கர்‌களான ஸ்ரீவைஷ்ணவரிருவர்‌ கையிலே தம்முடைய திருமுகமெழுதிக்‌ கொடுத்து அவர்பக்கல்‌ போக விட்டருள, அவர்களும்‌ ப்ரதிவாதி பயங்கர மண்ணாவைக்‌ கிடடித்‌ திருமுகத்தையும்‌ கொடுத்து ஜீயர்‌ அனுப்பின விருத்தாந்த்தையும்‌ அறிவிக்க, அண்ணாவுங்‌ கேட்டு அதி ப்ரீதராய்த்‌ திருமுகத்தை சிரஸா வஹித்துக்‌ கொண்டு; முன்பே திராவிட வேதாந்தார்த்த ஸ்ரவண ஸ்ரத்தா யுக்தரானவர்‌ இதுவே இடமாமென்று கருதி தத் ஷணமே புறப்பட்டு –தாய் நாடு கன்றே போல்‌ என்றும்‌ * வத்‌ஸோவா மாதரம்‌”’ என்றுஞ் சொல்லுகிறபடியே ஸ்ரீவத்ஸ குல திலகராய்‌ ஸ்ரீவத் ஸிஹ்ந மிச்ர துல்‌யரான இவரும்‌ ஸ்ரீரங்காபிமுகராய்‌ -ஆஜகாம முஹூர்த்தேநல்‌-என்கிறபடியே பயண கதிகளை அர்ச்சிராதி கதியாக மநோ ரதித்துக்‌ கொண்டு ::மணவாளமாமுனிவன்‌ பாத கமலங்கள்‌ காண வேணும்‌” என்ற பேராசையுடனே திருவரங்கப்‌ பெரு நகரிலே சென்று-காவேரீ விரஜா ஸேயம்‌’‘ என்கையாலே அந்த வைகுந்த நாட்டிலே விரஜை தானான தன்மை யுடைய திருக் காவேரியிலே நீராடி நதீ நிஸ்தரணாநந்தரம்‌ ப்லவ பரித்யாகம்‌ போலே, சேதனன்‌ வாஸநா ரேணுவைக்‌ கழிக்குமா போலே அநுவாதரீதியாகிற வாஸநா ரேணுவைக்‌ கழித்து கேசவாதி த்வாதசோர்த்வ புண்‌டரங்களையும்‌ தரித்துக் கொண்டுஸ்ரீவைஷ்ணவாலங்கார முடையராய்‌ திவ்ய நகர ப்ரவேச யுக்தராயிருக்க;

அவ்வளவிலே அவரண்டைக்குப்‌ போக விட்ட வைஷ்ணவர்‌களும்‌ ஜீயருக்கு இவர்‌ எழுந்தருளின வ்ருத்தாந்தத்தை விண்ணப்‌பம்‌ செய்ய, ஜீயருங் கேட்டு -பக்வமாய்ப்‌ பலிக்குமோ?”’ என்‌
அவர்களை வினவி யருள அவர்களுலம் தேவரீருடைய அமோக ஸங்கல்பம்‌ பழுது போமோ? அங்கோல தைலம்‌ போலேஅப்போதே பல பர்யந்தமாய்‌ பலித்தது” என்ன, போர வுகந்தருளி,
இவர்க்கு அபிமுகமாக கோயிலனைத்துப் பரிகரத்துடனே தம் ஸந்நிதி ஸ்ரீவைஷணவர்களைப்‌ போக விட்டருள, இவரும்‌ அணியரங்கன்‌ திருமுற்றத்தடியார்‌ தங்களின்பமிகு பெருங்குழுவு கண்டு கொண்டு ஸேவித்து ஹ்‌ருஷ்டராய்‌ நிகில ஜந ஸுஹருத்துக்களானவர்‌களுடனே கூட திருவரங்கத்‌ திருப்பதியிலே ப்ரவேசித்து, “அவர்கள்‌ முன்னிலையாகப்‌ பெருமாள்‌ ஸேவாகிரமந்தப்பாமல்‌ ஸேவித்துமீண்டு வரயோகி மடத்திலே சென்று ‘‘ரங்கேதாம்நி ஸுகாஸீநம்‌- வந்தே வர வர முநிம்‌!’ என்‌கிறபடியே விசேஷாதிஷ்டாதமாக ஸ்வாங்கீகாரோந் முகராய்‌ எழுந்தருளி யிருக்கிற ஜீயர்‌ திருவடிகளிலே ‘*அகிஞ்சநோ அநந்யகதி ஸயரண்ய த்வத்பாத மூலம்‌ சரணம்‌ ப்ரபத்யே” என்கிறபடியே ஆகிஞ்சந்ய அநந்யகதித்வ பூர்வமாகத்‌,தாளுந் தடக்கையுங்‌ கூப்‌பி ஸாஷ்டாங்க ப்ரணாமம்‌ பண்ணா நிற்க; ஜீயரும்‌ க்ருபை செய்து, “லோசநாப்யாம்‌ பிபநத்திவ – என்னும்படியே குளிர நோக்க, –வசஸா ஸாந்தவயித்வைநம்‌”என்னும்படி குசலப்ரஸநம்பண்ணி இருத்திக் கொண்டு அப்போது நடக்கிற *ஒன்றுந்தேவின்‌ ப்ரவேசத்தை உபந்யஸித்துக் காட்ட இவருங்கேட்டுப்‌ போர வாச்சர்யப்பட்டு, திருவாய்‌ மொழியிலு மருளிச்செயலிலு மொழிய ஸம்ஸ்‌க்ருத்தில்‌ பரிசயமில்லை” என்று கேட்டிருந்தோம்‌; இவர்‌ உபய வேதாந்தத்துலும்‌ மிகவும்‌ நிபுணரா யிருந்தார்‌’” என்று ஜீயரிடத்தில்‌ அத்யாதரம்‌ பண்ணி, இனி,-அடியேனை யாட் கொண்டருள வேணும்‌” என்ன, ஜீயரும்‌, “நீர்‌ ப்ரதிவாதி பயங்‌கரர்‌; நாம்‌ ஸா து; எங்ஙனே கூடுகிறது? என்ன, அண்ணுவும்‌ ஜீயரைக் குறித்து ”ப்ரஸித்த. பர கோஷ்டீஷு பரவாதி பயங்கர:, ஸ்ரீவைஷ்ணவாநாம்‌ கோஷ்டீஷு தத் தாஸ இதி விஸ்ருத:” என்று அடியேனுக்கு இங்ஙனே இரண்டு ப்ரஸித்தி யுமுண்டு”’ என்ன அத்தைக் கேட்டு ஜீயரும்‌ உகந்த திருவுள்ளத்தை யுடையராய்‌ பஞ்ச ஸம்ஸ்காரங்களையும்‌ ப்ரஸாதித்து, –பலரடியார்‌ முன்பருளிய என்றும்‌ ‘பஹுமாநேந மஹதா?’ என்றுஞ்‌
சொல்லுகிறபடியே விசேஷாபிமானம்‌ செய்தருளி, ஐந்மாத்‌ யுத்க்ருஷ்ட தாதிகளால்‌ “உண்டான அபிமானம்‌ போம்படி-“அடியார்க்கென்னை யாட்படுத்த விமலன்‌ என்கிறபடியே ஆத்ம தாஸ்யமாக ஸ்ரீவைஷ்ணவ தாஸன்‌” என்று ஆர்க்கும்‌ ஸித்தியாத தாஸ்ய நாமத்தையும்‌ ததீய சேஷத்வமே நிலை நின்ற நிரூபகமாம்‌ படி ப்ரஸாதித்தருளி, “காந்தோ பயந்த்ருயமிந: கருணைக பாத்‌ரம்‌” என்னும்படியான அண்ணாவைக்‌ குறித்து
”இதர மத நிராகரண பூர்வமாக ஸ்வ மதமான ஸ்ரீராமாநுஜ ஸித்தாந்தத்யே
ரக்ஷித்துக் கொண்டு விசிஷ்ட பஷத்திலேயே நிஷ்டராய்ப்‌ போரும்‌” என்று நியமித்தருள, இவரும்‌ ஒரு பிறவியிலே இரு பிறவியாய்‌ ஸத்தா மூலமான மூல ஸ்பர்‌ஸமுள்ள தொன்றைப்‌ பற்றி ”ஸந்தமேநம்‌ -என்னும்படி ஸத்தையும்‌ பெற்று க்ருதார்த்தராய்‌, உடையவர்‌ திருவடிகளுக்கு ஆழ்வானைப் போலே அந்தரங்கராய்‌, ஸகல வ்யாக்யான நிர்மாண ஸஹ காரியாய்‌ தத் பாதாப்த ஸேவைக தாரகராய்‌ வாழ்ந்து கொண்டு ஜீயருக்கு உகப்பாகப்‌ பெருமாளையும்‌ ஸேலித்து அரிய அருளிச்‌ செயற்‌பொருளை யெல்லாங்‌ கேட்டு ஆதரித்துக் கொண்டு எழுந்தருளி யிருத்தார்‌. பின்பு ”தஸ்மாத் பார்‌யாதய: புத்ராஸ்தமேகம்‌ குருமாப்நுயு: [அண்ணா ஆசரயித்‌த படியால்‌ அவருடைய புத்ரர்களும்‌ பத்நீ முதலானவர்களும்‌ அம்‌ மா முனிகளொருவரையே ஆச்சார்யராக ஆஸ்ரயித்தார்கள்‌] என்‌னும் படி தத் ஸம்பத்திளான அப்பா முதலானவர்களும்‌ ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயித்து உஜ்ஜீவித்தார்கள்‌. அந்த அப்பாவிறே அஸ்மத் தேசிகராயிருக்கிற சடகோப தேசிகரை ப்ரதமம்‌ கடாக்ஷித்‌தருளினார்‌.

ஜீயர்‌ மீளவும்‌ திருமலை யாத்ரை செய்தருளல்‌.
அநந்தரம்‌ ஜீயர்‌ மீளவும்‌ திருமலை முதலான திவ்ய தேசங்களைத்‌ திருவடி தொழ வேணுமென்று திருவுள்ளமாய்‌, “ப்ரதீதைரபி தத் ப்ருத்யை ப்ரதிவாதி பயங்கரை: (ப்ரதிவாதி பயங்கரம்‌ அண்ணாவுடனும்‌ பிரசித்தர்களான அவருடைய அடியார்களுடன்‌ )என்கிறபடியே ப்ரதிவாதி பயங்கர அண்ணா முதலான அனேக ஸ்ரீவைஷ்ணவர்களுடனே திருக்காவேரி வடக்கு நோக்கினாப்‌போல புறப்பட்டருளி-அதவிலோகந லோகதமேநுதம்‌ த்வதவலோகந துங்க குதூஹலம்‌ | த்விரத ஸைல ஸிரோக்ரஹ மேதிநம்‌ வரத முத்தர வேதி பூஷணம்‌ (பின்னர்‌ தமது கடாக்ஷத்தாலே ஐநங்களு டைய அஜ்ஞான இருளைஅடியோடு போக்குமவராய்‌ தேவரீரை கடாக்ஷிப்பதில்‌ மிகவும்‌ குதூஹல முடையவராய்‌ திருவத்தி மலை யுச்சியில்‌ நித்யா வாஸம்‌ செய்தருள்பவராய்‌ உத்தர வேதியான யாக சாலைக்கு அலங்காரபூதரான பேரருளாளனை) என்கிறபடியே அர்த்திதார்த்த பரிதானத்‌தில்‌ அவஸர ப்ரதீஷாரயெழுந்தருளி யிருக்கும்‌ பேரருளாளரைத்‌ திருவடி தொழுவாராக ப்ரதமம்‌ பெருமாள்‌ கோயிலேற எழுதந்தருள, அங்குண்டான ஸ்ரீ வைஷ்ணவர்களெல்லாரும்‌ எதிர்‌ கெண்டு வந்து ஸேவிக்க அவர்களை க்ருபை பண்ணி அவர்கஞடனே எழுந்தருளி கோயிலுக்குள்ளே புக்கு.
1-ஸ்ரீ மந் த்வாரவரம்‌ மஹத்தி பலிபீடாக்ர்யம்‌ பணீந்த்ரஹ்ரதம்‌கோபீநாம் ரமணம்‌ வராஹ வபுஷம்‌ ஸ்ரீபட்டநாதம்‌ ததா |
ஸ்ரீமந்தம்‌ சட வைரிணம்‌ கலிரிபும்‌ ஸ்ரீபக்தி ஸாரம்‌ முநிம்‌ பூர்ணம்‌ லக்ஷமண யோகிநம்‌ முநிவரிராநாத்யா த்வாரபவ்
ஸ்ரீமந் மஞ்ஜந மண்டபம்‌ ஸரஸிஜாம்‌ ஹேதீஸ போகீஸ்வரெள ராமம்‌ நீல மணிம்‌ மஹாந ஸவரம்‌ தார்க்ஷ்யம்‌ ந்ரு ஸிம்ஹம் ப்ரபும்‌
ஸே நாந்யம்‌ கரிபூதரம்‌ ததுபரி ஸ்ரீ புண்யகோடிம்‌ ததா தந் மத்பே வரதம்‌ ரமாஸஹசரம்‌ வந்தே ததீயைர் வ்ருதம்‌ ॥

நித்யஸ்ரீயுடன்‌ விளங்கா நின்ற பெரிய திருக் கோபுர வாயிலையும் பலி பீடத்துக்கு முன்புள்ள திருவநத்த ஸரஸ்ஸையும்‌, கோபீ ரமணனான ஸ்ரீவேணு கோபாலனையும, ஞானப் பிரானையும்‌, அப்‌படியே பட்டர்பிரானையும்‌, ஸ்ரீமானான சடகோபனையும்‌, திருக்கலிகன்‌றியான திருமங்கையாழ்வாரையும்‌, திருமழிசைப்‌ பிரானையும்‌ பெரியநம்பியாரையும்‌, எம்பெருமானாரையும்‌, முதலாழ்வார்களையும்‌, பிறகு திருவாசல் காக்கும்‌ முதலிகளையும்‌, திருவபிஷேக மண்டபத்தையும்‌, தாமரையாளான ‘பெரும் தேவித் தாயரையும்‌, திருவாழி யாழ்வானையும்‌, திருவநந்தாழ்வானையும்‌ சக்கரவர்த்தி திருமகனையும்‌, கரிய மாணிக்க வரதரையும்‌. திருமடைப் பள்ளியையும்‌, பெரிய திருவடி நாயனாரையும்‌, ஸ்வாமியான அழகிய சிங்கரையும்‌, சேனை முதல்வரையும்‌, திருயத்திமாமலையையும்‌ அதன்மேல்‌ ஸ்ரீபுண்ய கோடி விமானத்தையும்‌ அதன்‌ மத்தியில்‌ ஸ்ரீதேவி பூதேவி முதலானாரால்‌ சூழப்பட்ட திருமகள் கேள்வனான தேவப் பெருமானையும்‌: அடிபணிகிறேன்‌..


2-கமல நிவேஸி தாங்க்ரி கமலம்‌ கமலாபரணம்‌ கந மணி பூஷணத்யுதி கடாரித காத்தருசிம்‌ |
அபயகதா ஸூதர்ந ஸரோருஹ சாருகரம்‌ கரிகிரி ஸேகரம்‌ கிமபி சேதஸி மேநிததே ।

ஆஸந பத்மத்தில்‌ அழுதியிட்ட திருவடித் தாமரைகளை யுடையனாய்‌ லஷ்‌மீ வல்லபனாய்‌ உயர்ந்த மணிமயமான திருவாபரணரங்களின்‌ ஒளியினால்‌ பொன் வண்ண மாக்கப்பட்ட திருமேனி
சோபை யுடையனாய்‌ அஞ்சேலென்று காட்டும்‌ முத்திரை யென்ன கதை சங்கம்‌ சக்ரம்‌ இவ்வாழ்வார்களென்ன இவற்றை தரிக்கும்‌ திருக்கைகளாலே அழகாக விளங்கா நின்‌ற அத்திகிரிக்கு சிரோ பூஷணமான அநிர்வசநீயனான பேரருளாளனான எம் பெருமானை எனது மனதில்‌ த்யாநிக்கிறேன்‌) என்கிற படியே அடைவே ஸேவித்தருளி வைய மாளிகையிலே ஏறி யருளி பேரருளாளரைத்‌ திருவடி தொழுது
மங்களம்‌ வேதஸோ வேதி மேதிநீ க்ருஹமேதிநே வரதாயதயா தாம்நே தீர்ரேதாராய மங்களம்‌ ”--பிரமனுடைய யாக பூமியில்‌ எழுந்தருளி யிருப்பவராய்‌, க்ருபா நிதியாய்‌, ஆஸ்ரிதாபேக்ஷிதங்‌களைத் தருவதில்‌ நிலை நின்றவரான பேரருளாளருக்கு மங்களம்‌,
மங்களம்‌-என்று தொடங்கி மங்களாசாஸனம் பணணி எழுந்தருளி நிற்க திருவடிக்‌கீழவர்கள்‌ தீர்‌த்த ப்ரஸாதங்களும்‌ ஸ்ரீ சடகோபனும்‌ ப்ரஸாதிக்க ஸ்வீகரித்தருளி தண்டன் ஸமர்ப்பித்துப்‌ புறப்‌பட்டருள, அங்குண்டானவர்கள்‌எழுந்தருளியிருக்கும்படி அங்கே ஒரு மடத்தைக தற்பிக்க.
கதி ஸித்திநாநி கரிஸைல வாஸிந கமலா ஸகஸ்ய நயநாதுதா பவந |
நிஜ பாத பங்கஜ ரஜோபி ஷேச நைரகிலாஸ்ரிதாந்‌ விமலாயக்நு வாஸை : ॥

(அம் மணவாளமா முனிகள்‌: சில நாட்கள்‌ ஹஸ்தி கிரியில்‌ தித்யவாஸியாய்‌ ஸ்ரீ யபூதியான பேரருளாளனுடைய கடாக்ஷத்திற்கு இலக்காகி, அங்கு எல்லா ஆஸ்ரிவதகளையும்‌ தமது திருவடித்‌
தாமரைகளின்‌ ஸ்பர்சத்தால்‌ சுத்த ஸ்வபராகச்‌ செய்து கொண்டு எழுந்தருளி யிருந்தார்‌) என்கிறபடியே அங்கேயே அவர்களுக்கு உகப்பாக நாலாறு நாள்‌ எழுந்தருளி யிருக்க, அநந்தரம்‌ திரு வைசாகத்‌ திருநாள்‌ தொடங்கி நடக்க, முன்றாந் திருநாளன்று பெருமாள ஒப்பித்துக் கொண்டு
ஆரூட : பதகேந்த்ர மஸ்ய கரயோரங்க்ரி த்வயீ மர்ப்பயந்‌
திவ்யை ரம்பர பூஷணைர் திந க்ருதோ தீப்திம்‌ திவா தீபயத்‌ |
முக்தேந்து ஸ்மிதீரோ சிஷா மதுரயந் முக்தாத பத்ர ச்ரியம்‌
விஸ்வம்‌ பஸ்யதி சக்ஷுஷா விகஸதா வீதீ விஹாரீ ஹரி!

(தேவப் பெருமாள்‌ பெரிய திருவடியின்‌ மேலே எழுந் தருளி அவருடைய கைகளிலே இரு திருவடிகளையும்‌ வைத்துக்‌ கொண்டு, திவ்யமான திருப் பரியட்டங்களாலும்‌ திருவாபரணங்களாலும்‌சூரியனுடைய ஒளியைப்‌ பகல்‌ விளக்காக்குமவராய்‌, அழகிய வெண் மதி போன்ற புன்முறுவலுடைய காந்தியான திரு முத்துக்‌ குடைகளின்‌ சோபையை விளங்கச்‌ செய்பவராய்‌, திருவீதிகள்‌ தோறும்‌ பவநி எழுந்தருளி, திருக் கண்ணோக்கினால்‌ யாவரையும்‌குளிரக் கடாக்ஷித்‌ தருளுகிறார்‌) என்கிறபடியே பெரிய திருவடி மேற்‌கொண்டு திரு வீதியிலே புறப்பட்டருள ஜீயரும்‌ பெருமாளை ஸேவித்‌துக்‌ கொண்டு கங்கை கொண்டான்‌ மண்டபத்தேற வெழுந்தருள);

எறும்பியப்பா ஜீயரை ஸேவித்தல்‌
எறும்பியப்‌பாவும்‌ சில ஸ்ரீவைஷ்ணவர்களும்‌ திருநாள்‌ ஸேவிக்க எழுந்தருளி னவர்கள்‌ அங்கே அசித்திதமாக ஜீயரை ஸேவித்து
ஆருஹ்ய பதக வ்ருஷபமா யாந்தம்‌ வரத மாதராத் த்ரஷ்டும்‌. |
கத்வாத தக்ர பூமிம்‌ நாத்ர நஷம்‌ தத்ர தேசிகம்‌ த்ருஷ்ட்வா

(பெரிய திருவடியின்‌ மேல்‌ ஏறி யருளி எழுந்தருஞம்‌ தேவப் பெருமாளை ஸேவிக்க ஆதரத்துடன்‌ சென்று அவ் விடத்தில்‌ ஆசார்‌யரை-மணவாளமாமுனிகளை-ஸேவித்து அங்கு ஈடுபாட்டினால்‌-அதற்கு மேலே எதையும்‌ பார்க்க வில்லை) என்னும்படி அப்பா விஸ்‌மித ஹ்ருதயராய்‌ மோஹித்து ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆதராதிசயத்‌தாலே விழுந்து தத் விக்ரஹாநுபவம்‌ பண்ணிக் கொண்டு ”சிரேண ஸம்ஜ்ஞநம்‌ ப்ரதி லப்ய சைவ விசிந்தயா மாஸ விஸால நேத்ரா””. வெகு காலம்‌ கழித்துத்‌ (சீதை] தன்னினைவடைந்து மேலும்‌ மலர்ந்த திருக் கண்களை யுடையளாய்‌ சிந்திக்கலானாள்‌-என்கிறபடியே மூன்று நான்கு நாழிகைக்கு மேலே தெளிந்து-பின்பு திரு நாளென்றறிந்து ஜீயரை ஸேவித்துக்‌ கொண்டு போய்‌ –குமிறு மோசை விழவொலி தொலை வில்லி மங்கலம்‌ கொண்டுபுக்கு(திருவாய்‌ 2-4-2] என்றும்‌ (இழைகொள்‌ சோதிச்‌ செந்தாமரைக்‌ கண் பிரான்‌ இருந்தமை காட்டினீர்‌ [திருவாய்‌ 5-5] என்றுஞ்‌
சொல்லுகிறபடியே ஸேவித்தருளி
(என்கிறபடியே ஜீயர்‌ புருஷகாரமாக ‘ஸெளம்யோ பயந்த்ரு முநிசா மம தர்ஸிதெள தெள ஸ்ரீ தேவராஜ சரணெள சரணம்‌ ப்ரபத்யே ” என்கிற படியே ஸேவித்தருளி)பின்பு ஜீயரும்‌ பெரிய திருவடியோட்டைச்‌ சேர்த்தியை

ஸேவித்தருளி
ஸூபர்ண ப்ருஷ்ட ரமாரூடஸ்ஸ யாம: பிதாம் புரோ ஹரி: |
காஞ்சநஸ்ய கிரேஸ் ஸருங்கே ஸ தடித்தோ யதோ யதா ॥

(பெரிய திருவடி நாயனாரின்‌ முதுகிலே எழுந்தருளி யிருக்கும்‌ நீல மேக ஸ்யாமளனும்‌ பீதக வாடைப் பிரானுமான தேவப் பெருமாள்‌ திரு பொன்மலையின்‌ மேலே மின்னலுடன் கூடிய மேகம்‌ போலே
விளங்கினார்‌.) என்கிறபடியே மஞ்சுயர்‌ பொன் மலை மேலெழுந்த மா முகில்‌ போன்ற வடிவை அநுபவித்தருளி –

தரசழுந்து மணி தவள நற் பவள மருண ரத்ந வகை சாத்தியயே
சங்கு சக்ராமுமங்கையில்‌ திகழ மங்ஸக பாகனரனேத்தவே
நரகு மொத்தமரர்‌ திரளு மேத்தும்‌ நரவாகவனன்‌ வருணனிந்திரன்‌
நடுவு நான்‌மறை கொள்‌ முனிவர்‌ வானவர்‌ குணாலமிட்டு நடமாடவே
வரைகளிற்‌ பெரிய வட கிரிக்குமிசை மரதகக் குவடு போலவே
வரதர்‌ கச்சிநகர்‌ வரு தனித் தெருவில்‌ வடகலைக்கழகு பொழியவே
அரவுதித்த மணி மகுட முற்றவொரு வணி பிணக்குடன்‌ மிழற்றவே
கநகமொத்த தொரு வடிவமொத்தி வரு கருடனிற் பவனி வருவரே

என்றநுபவித்து அதற்குப்‌ பாசுரமிட்டருளி ஹ்ருஷ்டரா யெழுந்‌தருளியிருந்து மற்றைத்‌ திருநாள்களையும்‌ ஸேவித்தருளி எழுந்தருளி யிருக்க.

அப்பாச்சியாண்ணாவைக்‌ கச்சியில்‌ நித்ய வாசம் பண்ண நியமித்தல்‌
ஸ்தலத்திலுள்ள பெரியோர்கள் எல்லோரும் கூடி யெழுந் தருளி-ஜீயர்‌ மங்களாசாஸநஞ்‌ செய்தருளுகையாலே இந்த விசை திரு வைசாக மஹோத்ஸவம்‌ அதி விலஷணமாகக்‌ கண்டருளினார்‌” என்று உகந்தருளக்‌ கேட்டருளி, ஜீயர்‌ அவர்களை ஆதரித்தருளி- கர்த்தவ்யாசாரபாகங்களையும்‌ பரஸ்பர சேஷத்வ ஸெளஹார்தாவஸ் யாகத்வத்தையும்‌ திவ்ய ப்ரபந்த வாஸநாத்யாவஸ் யகத்தையும்‌
அவர்களுக்கு உத்தரோத்தரம்‌ அதிசயமாக வேணுமென்று அருளிச்‌ செய்ய, எல்லோரும்‌ அப்படியே யாக வேணும்‌; இவற்றிற்க் கெல்‌லாம்‌ ஒருவரைக் கற்பித்தருளி’ அடியோங்களைத்‌ திருத்திப் பணி கொள்ளும்படி அந்த ஸ்தலத்திலே நித்ய வாஸமாக நியமித்தருள வேண்டும்‌” என்ன ஜீயரும்‌ போர வுகந்தருளி வானமாமலை ஜீயரை இட்டு நம்முடைய அப்பாச்சியாரண்ணாவை அழைத்து
வாரும்‌” என்று நியமிக்க அவருமப்படியே செய்தருள, அப்பாச்யாரண்ணாவை எல்‌லார்க்குங் காட்டி யருளி, இவரை தம்முடைய மர்யாதையாக வெண்ணி க்ருபை பண்ண வாருங்கோள்‌” என்றருளிச் செய்து அவரையும்‌ நீர் முதலியாண்டான்‌ திரு வம்சத்திலேஅவதீர்ணரா யிருக்கையாலே ஆண்டான்‌, தோழப்பர்‌, முதலானார்க்கு உகப்பாக நம்முடைய வாக்யாநுவிதாயியாய்‌ இவர்‌களுக் கெல்லாம்‌-ஹித ப்ரவர்‌த்தகராய்ப்‌ பேரருளாளருக்கு மங்களாசாஸந பரராய்‌ நித்ய வாஸம்‌ பண்ணும்‌
ஸ்ரே யாம்ஸி கரி ஸைலேந்த்ர। கருணா வருணால்ய: |
தோதுஹ்யாத் வரதஸ் ஸ் ரீமா நர்த்திநாம்‌ நிதிரவ்யய: ॥

யாசிப்பவர் களுக்குக்‌ குறையாத நிதியாய்க் கருணைக்‌ கடலாய்‌ ஹஸ்திகிரி நாதனாய்‌ ‘ஸ்ரீமானான வரந் தரும்‌ பெருமாள்‌ நன்மைகளை(உமக்குச்‌) சுரந்தருளுவாராக] என்று ஆஸீர்‌வதித்தருளினார்‌-

ஜீயர்‌ திருக்கடிகை, எறும்பி வழியாகத்‌ திருமலை எழுந்தருளல்‌.
அநந்தரம்‌ அப்பாவையுங்‌ கூட்டிக்‌ கொண்டு திருப்புட்குழி வழியாக எழுந்தருளி அங்கே புட்குழி அம் போர் ஏற்றையும்‌ ஸேவித்‌துப்‌ புறப்பட்டு,
கடிகாசல ஸேகரம் ததோ நரஸிம்ஹம்‌ நயநேந நிர்விஸந் |
உதஜீவய தர்ஸ்ரிதைர ஜநைரவநீம்‌ தாம பநீத பந்தநை: ॥

(பிறகு கடிகைத் தடங் குன்‌றுக்கு சிரோ பூஷணமா யெழுந்தருளியுள்ள நரசிங்கப்‌பிரானைத்‌ திருக் கண்களாலே பூர்ணமாயநுபவித்து, தம்மை யாஸ்ரயித்தவர்களாய்‌ அறுக்கப்பட்ட ஸம்ஸார பந்தத்தையுடைய சில மனிதர்களுடன்‌ அந்த நாட்டை அநுக்ரஹித்தருளினார்‌) என்கிறபடியே வண்டு வளங் கிளரும்‌ நீள் சோலை வண் பூங் கடிகைத் தடங் குன்றேற வெழுந்தருளித்‌ தக்கானையும்‌ திருவடி தொழுது க்ராமாந்தரங்களினின்றும்‌ அநுகூலராய்‌ வந்து ஆஸ்ரயித்தவர்களையும்‌ க்ருபை பண்ணி யருளி, அநந்தரம்‌ கடிகைத்‌ தடங் குன்றின்‌ மேல்‌ ஏறி யருளி -மிக்கார் வேத விமலர்‌ விழுங்கும்‌ அக்காரக் கனியை யநுபவித் தருளி, அந்தியம் போதிலரியுருவாகி யரியை யழித்தவனைப்‌ பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்‌டென்று பாடுதும்‌ -என்கிறபடியே மங்களாசாஸனம்‌ பண்ணி-அங்கே யெழுந்தருளி நின்று எறும்பியைக்‌ கடாஷித்தருளி ‘வட திருவரங்கம்‌” என்று ஊருக்குத்‌ திருநாமஞ் சாத்‌தி யருளி-அங்குண்டானவர்களெல்லாரையும்‌ அழகிய மணவாள தாஸரென்று அபிமானித்தருளி அண்ணல் மலை யருகே அரங்க மா நகராக்கி அநந்தரம்‌ -வண் பூங் கடிகைக்கு பண்டெல்லாம்‌ வேங்‌கடம்‌ என்று திருமலையோடே சேர்த்தி யுண்டாகையாலே பொன்‌மணியை அணி யார்ந்ததோர்‌ மின்னை வேங்கடத்துச்சியில்‌ கண்டு இப்படி ஸ்ரீதிதி யாகிற பொருள் படைப்பாரரக ஒண்ணுதல்‌ மாமை
யின்படியே மநோ ரதத்தை யுடையராய்‌ தேவம்‌ திவ்யம்‌ ஸேஷஸைலே வஸந்தம்‌ தத்பாதாப்ஜம்‌ வீக்ஷிதும்‌’-என்று வேங்கடத்து உச்சியில்‌ கோயில்‌ கொண்டுள்ள தேவனின்‌ திருவடி தொழுவாராக திருவடிவாரமான திருப்பதியிலே முந்துற வெழுந்தருள அங்குள்ள்‌ ஆசார்‌ய புருஷர்கள்‌ முதலானாரனைவரும்‌ எதிர் கொண்டு சேவிக்க-

அவர்களுடன்‌ கூட கோவிந்த ராஜப்‌ பெருமாளைத்‌ திருவடி தொழுவதாக எழுந்தருளி ப்ரதமம்‌ எம்‌ பெருமானாரைத்‌ திருவடித் தொழுது, அவருகந்து எழுந்தருளப் பண்ணினவரென்று அத்‌
யாதரத்துடனே ஸ்ரீகோவிந்த ராஜப் பெருமாளையும்‌ –கையினார்‌ சுரி சங்கனலாழியர்‌ என்கிற படியே அத்யா தரத்துடன்‌ ஸேவித்‌தருளி கோவிந்தன்‌ குணம் பாடி மங்களசாளனம்‌ பண்ணி யருளி கோவிந்தன்‌ தன்னடியாரா யிருக்கிற ஸ்ரீவைஷ்ணவர்களுடனே புறப்பட்டருளி திருமலையடிவாரத்‌திலே எழுந்தருளி யிருக்கிற : நம் மாழ்வார்‌ முதலான ஆழ்வார்களையும் *உலகுய்ய மால்‌ நின்ற என்று தொடங்கி மகிழ் மாறன்‌ தாளிணையே ௨ன்‌ சரணாய்‌ நெஞ்சமே யுள்‌ (திருவாய் நூற்‌-60) என்றும்‌ ஓழிவில் காலம்‌ என்று தொடங்கி -மிக்க நலஞ்சேர் மாறன் பூங் கழலை நெஞ்சே புகழ்‌
(திருவாய்‌ நூற்‌-23) என்றும்‌ அநுஸந்தித்து ஸேவித்தருளி அ
ன்றைக்கு அங்கே எழுந்தருளி யிருந்து அங்குண்டான வர்களையும்‌ க்ருபை பண்ணி யருளி, பிற்றை நாள்‌ திலத முலகுக்காய்‌ நின்ற
திருவேங்கடத்தைச்‌ சென்று வணங்கி, அநந்தரம்‌ மொய்த்த சோலை மொய் பூந் தடந் தாழ்வரே (திருவாய்‌ 3-3-10) என்றும்‌ -தேனேய்‌ பொழில் சூழ்‌) திருவேங்கடமாமலை (திருமொழி 11-9-2) என்றும்‌-அப்ராக்ருதமமே யஞ்ச ஸர்வ ரத்ந மயம் கிரிம்‌, ஹிரண்மய மஹா ஸ்‌ருங்கம்‌ பஞ்ச உபநிஷதாத் மகம்‌:” (பஞ்சோபநிஷ மயமாய்‌ அப்ராக்ருதமாமய் அளவிடற்கு அரியதாய் ஸகல மணி மயமாய்‌ பொன்‌
மயமான பெரிய சிகரத்தை யுடைத்தான திருமலையை என்கிறபடியே அப்ராக்ருத திவ்ய வபுஸ்ஸையுடைய திருமலை யாழ்‌வாரை யடைந்து வணங்கி, அப்பால்‌ பரம பதத்துக்குப்‌ படியொழுங்கு போலே யிருக்கிற திருமலையிலே *தம்பாதே நாத்யாரோ ஹதி (கெளஷீடக்‌ 1-5) என்னும்‌ ப்ரதிபத்தியுடன்‌ ஏறி எழுந்தருளி காட்டு அழகிய சிங்கரையும் திருவடி தொழுது -தேனாறு பாயுத்‌ திரு வேங்கடத்தி லுண்டான கானாறுகளையும்‌ -கண்டு களித்து கொண்டு அவ் வருகே எழுந்தருளு கிறவர்‌ விண்ணின்‌ மீதி யன்றே வேங்கடத்திலுண்டான விலங்கல்‌ குடுமிகளையும்‌ மின்‌ திகழ்‌ குடுமிகளையும்‌ கோல் தேன் பாய்ந்தொழுகும்‌ குளிர் சோலை சூழ்ந்த வழகையும்‌ கல் தேன்‌ பாய்ந்தொழுகும்‌ கமலச் சுளைகளையும்‌ செப்பார்‌ திண் வரையையும்‌ ஸேவித்துக் கொண்டு அப்பாலே எழுந்தருளி
காட்டில்‌ வேங்கடத்திலுண்டான காட்டையும்‌ வைகுந்த நாட்டுக்‌ கொப்பான வட வேங்கட நாட்டையுமநுபவித்து –மாலுகந்தவூரான ஊரருகே யெழுந்தருளி -நன் மணி வண்ணன்‌ (நான்‌திரு, 47)
என்ற பாட்டின் படியே அங்குண்டான ‘ அபூர்வங்களை யெல்லாம்‌ ஆஸ்சர்யத்துடனனே அநுபவித்து,-கண்ணன்‌ விண்ணூரைத்‌ தொழுது ஊரருகே, ஸேவித்துக் கொண்டு நிற்க அவ்வள வில்‌ -வேங்‌கடத்தைப்‌ பதியாக வாழுகிற கோயில் கேள்‌வி ஜீயர்களும்‌ ஏகாங்கி ஸ்ரீ வைஷ்ணவர்களும்‌ மற்றெல்லாரும்‌ வந்தெதிர்‌ கொண்டு ஸேவிக்க, அவர்களை –நிகரிலமரர்‌ முனிக் கணங்கள்‌ என்று ப்ரதிபத்தி பண்ணி யருளி அவர்களுடனே கூடத்‌ திருவேங்கட நகரை ப்ரவேசித்து அவ் வருகே வைகுந்தன்‌ திருவாசல்‌, அவாவறச் சூழ்ந்‌தான்‌ திருவாசல்‌, என்கிற திரு வாசல்களையும்‌ தண்டன்‌ ஸமர்ப்‌பித்து ப்ரதஷிணமாக வெழுந்தருளி அங்கே அநந்தாழ்வான்‌ கைங்‌கர்யமான ‘இராமானுசன்‌”’ என்கிற திரு நந்தவனத்தையும்‌ மற்றுமுண்டான திருநந்தவனங்களையும்‌ திருப் பூ மண்டபங்களையும்‌ ஸேவித்து திருவுள்ளமுகந்தருளி, பின்பு திருக் கோனேரியிலே நீராடி-த்வாதச ஊர்த்வ புண்ட்ரங்களையும்‌ தரித்தருளி-மேலொரு நாள்‌ மண் கோட்டுக் கொண்டான்‌ மலை (மூன்றாம் -திரு-45) என்கிறபடியே-எறிதர வையம்‌ முற்றும்‌ ஏனத்துருவா யிடந்த ஷேத்ராதிபயான ஞானப் பிரானையும்‌ ஸேவித்து ஊனேறு!செல்வத்தை (பெரு. திரு .4) அநுஸந்தித்து அங்குண்டான திர்யக் ஸ்தாவர ஜந்மங்களை ப்ரார்த்‌தியா நின்று கொண்டு கோனேரி வாழுங் கிருகு தொடக்கமான பஷி ஸங்கங்களையும்‌ தம்பகலாய்‌ நிற்கும்‌ தவமுடையாரையும்‌ அநுபவித்துக் கொண்டு, பெரிய திருக்கோபுரத்துக் கருகே தண்டன்‌ ஸமர்ப்‌பித்து உள்ளே புகுந்து, நம்‌ பெருமாள்‌ எழுந்தருளி யிருந்த அழகிய மணவாளன்‌ திரு மண்டபத்தையும்‌ ஸேவித்தருளி

1-ஸ்ரீமதி மஹிதித்வரார சிஞ்சாம்‌ காஞ்சந மயஞ்ச பலிபீடம்‌ |
ஸ்தாந மதயாமுநேயம்‌ சம்பக தரு ஸம்பதம்‌ ப்ரதீ ஹாரம்‌ ॥
விநதா தநய மஹாநஸ மணி மண்டபம்‌ கநக மய விமாநவரம்‌ |
ப்ருதநாபதி யதி துர்யெள நரஹரி மதந மத ஜாநகீ ஜாநிம்‌ ॥

பெரிய திரு வாயிலிலே அந்தாணிப் புளிபையும்‌ பொன் மபமான பலி பீடத்தையும்‌ அதன் பின்னர்‌ யமுனைத் துறைவர்‌’ என்கிற புஷ்ப மண்டபத்தையும்‌ செண்பக வ்ருக்ஷ ஸம்பத்தை யுடைய செண்பகத்‌ திரு வாசலையும்‌ பெரிய திருவடி நாயனாரையும்‌ திருமடைப்‌ பள்ளி யையும்‌ திருமாமணி மண்டபத்தையும்‌, தங்கத்தால்‌ சமைந்த ஆநந்த நிலய விமானத்தையும்‌, சேனை முதல்வரையும்‌, யதிராசனாரை யும்‌, நரசிங்கப் பிரானையும்‌ பின்னர்‌ இராம பிரானையும்‌ வணங்கக்‌ கடவீராக.

2-அதபுநர நக மணி த்யுதி கவசித கமலா நிவாஸ புஜ மத்யம்‌ |
கலயத கமல விலோசந மஞ்ஜந கிரிநிதி மநஞ்ஜநம்‌ புருஷம்‌ ॥

பின்னர்‌ தோஷமற்ற மணிகளின்‌ காந்தியால்‌ வியாபிக்கப் பெற்றதாய்ப்‌ பெரிய பிராட்டியாருக்கு இருப்பிடமான திருமார்பை யுடையனாய்‌ செந்தாமரையை யொத்த திருக் கண்களை யுடையனாய்‌ அஞ்சன கிரி நிதியாய் ஹேய ப்ரதிபடனாய்‌ பரம புருஷனான திருவேங்கடமுடையானை கண்ணாரக் கண்டு களிக்கக் கடவீர்‌கள்‌

3-ஸரணமய மித்யங்க்ரிம்‌ நிர்திஸ்ய தக்ஷிண பாணிநா
கரகிஸலயம்‌ ஸவ்யம்‌ ஸவ்யோரு ஸீம்நி ஸமர்ப்பயந் |
மணி கண மஹோ மக்நே வக்ஷஸ் ஸ்தலெ தததிந்திராம்‌
பவதபிமத ஸ்ரீமாநஸ் மாகமஸ்து பரம்பதம்॥

இந்தத் திருவடிகளே உங்களுக்கு மோக்ஷோபாயம்‌ என்று வலது திருக் கையால்‌ காட்டிக்கொண்டு, தளிர் போன்ற இடது திருக் கையை இடது திருத் தொடை ப்ரதேசத்தில்‌ வைத்திருப்பவராய்‌, ரத்நங்களின்‌ ஒளியில்‌ மூழ்கின திரு மார்‌பில்‌ பெரிய பிராட்டியாரைத்‌ தரிக்குமவனாய்‌ உங்களுக்கு ப்ரிய தமனுமான திருவேங்கடமுடையான்‌ ஸ்ரீநிவாஸன்‌ நமக்கு மேலான ப்ராப்ய ஸ்தானமாக ஆகக்‌ கடவன்‌]

என்கிறபடியே திருவேங்கடமுடையானைத் திருவடி தொழுவதாக ஸேவா க்ரமத்தில்‌ அடைவே அத்தாணிப் புளி, ஸ்ரீபலி பீடம்‌, யமுனைத் துறைவனென்கிற திருப் பூ மண்டபம்‌, செண்‌பகத் திருவாசல்‌, பெரிய திருவடி, திருமடைப் பள்ளி, திருமாமணிமண்டபம்‌, திவ்ய விமானம்‌, முதலானவற்றையும்‌ ஸேவித்தருளி, அநத்தரம்‌ சேனை முதலியாரையும்‌ திருவடி தொழுது -நின்ற வண்‌ கீர்த்தியும்‌ நீள் புனலும்‌ நிறை வேங்கடப்‌ பொற் குன்‌றமும்‌ என்றும்‌-இருப்பிடம்‌ வைகுந்தம்‌ வேங்கடம்‌ என்றும்‌ இத்யாதிகளை அநு ஸந்தித்து எம்பெருமானாரையும்‌ ஸேவித்து அவருடைய அநுமதியோடே புறப்பட்டருளி தூணாயதனூடரியாய்‌ என்றநுஸந்தித் தருளி -திருவேங்கடத் தரியையும்‌ ஸேவித்து, வென்று மாலை யிட்‌டான்‌ திருமண்டபத்தே யெழுந்தருளி தாயே தந்தை என்று தொடங்கி -நாயேன்‌ வந்தடைந்தேன்‌ நல்கி யாளென்னைக்‌ கொண்‌டருளே என்று தண்டன்‌ சமர்ப்பித்து உள்ளே புக்கு, பின்பு-மிடைந்த ஏழ் மரங்களுமடங்க வெய்து வேங்கட மடைந்த மாலான சக்ரவர்த்தி திருமகன்‌ திருவடிகளை யடைந்து, அப்பால்‌ அவன்‌ தாளிணைக் கீழ்ப் புகுங்‌ காதலை யுடையராய்க் குலசேகரன் படி
யருகே சென்று -அகலகில்லேன்‌ என்று பூர்வ வாக்ய ப்ரக்ரியையாலே-அடிக்கீழமர்ந்து புகுந்து நின்று ஸேவித்தருளி, அநத்தரம்‌ -செங்கமலக்‌ கழலில் படியே,

திருமகள்‌ மருவு மிருபதமலரு முழந்தாள்களுங் குறங்கும் தாங்கு
செக்கரம் மா முகில் போலத்‌ திருவரைச்‌ செம்பொனம்பரமும்‌
அருமை சேர்‌ சீராவு மயனைத் தந்த தோருந்தியு மமுதமாருதர பந்தமும்‌
அலர் மேல் மங்கை யுறை திருமார்வமு மாரமும்‌ பதக்க கன்னிரையும்‌
பெருவரை யனைய புய மொரு நான்கும்‌ பிறங்கடலாழியுஞ் சங்கும்‌
பெறு திவமென்று காட்டிய கரமும்‌ பிடித்ததோர்‌ மருங்கினிற்கறமும்‌
ஒருமதி யெனவே சோதி சேர் முகமு முயர் திருவேங்கடத் துறையு
மொப்பிலா வப்பன் கருணை சேர் விழியு மென்னுளெலாம்‌ நிறைந்து நின்றனவே

என்று பாதாதி கேசமாக அநுபவித்தருளி அலங்கல்‌ துளப முடியையும்‌ திருத்தியகோறம்பையும்‌ சுற்றுமொளி வட்டஞ்சூழ்ந்து சோதி பரந்த கோளிழைவாள்‌ முகத்தையும்‌ அதில்‌ தன் முகத்‌துச் சுட்டியையும்‌, திரு நெற்றியில்‌ சாத்தின முத்தின்‌ திருநாமத்தையும்‌ “வெண்ணெ யுண்டான்‌ திருமூக்கு” என்று ப்ரத்யபிஜ்ஞை பண்ணலாம்படி புழுகிலே முழுகி யிருக்கிற கோல நீள் கொடி மூக்கையும்‌ தாமரை கட் கனி வாயையும்‌, வார் காதிலே சாத்தின இலகு மகர குண்டலங்களையும்‌ உலகமுண்ட பெரு வாயாலே அண்டமுநாடுமடங்க விழுங்கிய கண்டத்தையும்‌ அத் திருக் கழுத்தினில்‌ காறையையும்‌ -அலர் மேல்‌ மங்கை யுறை மார்வையும்‌, அதில்‌ பவள வாய்ப் பூமகளும்‌ பன் மணிப் பூணாரமுமான சேர்த்தியையும்‌,அத்தோடு சேர்த்த வெண் புரி நூலையும்‌ வட வேங்கட வனுடைய மல்லார் தோள்களையும்‌ அதிலே சாத்தின தண்டுமாய்‌ விரை நாறு கண்ணியையும்‌ திருக் கைகளிலே தரித்த வலம்புரி ஆழியையும்‌ அவற்றிற்குப்‌ பரபாகாவஹமான வண்ணமருள்‌ கொளணி மேக வண்ணத்தையும்‌, உய்ய வுலகு படைத்துண்ட மணிவயிற்றையும்‌ அதில்‌ திரு வுதர பந்தநத்தையும்‌, அதுக்கநந்தரபாவியாய்‌ உடையார்‌ கனமணி யோடொண் மாதுளம்பூ இடை விரவிக் கோத்த வெழில்‌ தெழ்கனோடும்‌ பொன்ரை நாணொடு மாணிக்கக்‌ கிண்‌ கிணியையும்‌ -பெருமானரையில்‌ பீதக வண்ண வாடை என்று ப்ரணயினிகள்‌ வாய்‌ புலற்றும் படியான அந்தி போல்‌ நிறத்தாடையையும்‌ -பல்லி நுண் பற்றாகச் சாத்தின உடை வாளையும்‌, புரிந்து மலரிடுறை புண்டரீகப்பாதமான பூவார் கழல்களையும்‌ அதில்‌ அதிர் கழல் சதங்கைகளையுமுடைய திருவேங்கடமுடையானை எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே ‘ என்கிறபடியே கேசாதிபாதாந்தமாக அநுபவித்தருளி ப்ரீதராய்த்‌ திருப் பல்லாண்டு தொடங்கி அநுசந்தித்து, மங்களாசாஸனம் பண்ணி, பர்யாப்தி பிறவாமையாலே.

மங்களம்‌ மாநுஷே லோகே வைகுண்டமதி திஷ்டதே | ஸேஷஸைல நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்‌ ॥-மானிட வுலகில்‌ ஸ்ரீவைகுண்டமான திருமலையில்‌ எழுந்தருளி யிருக்கிற திருவேங்கடவனுக்கு மங்களமுண்டாக வேணும்‌; என்று மங்களாசாஸநம் பண்ணியருளி.
ஸெளம்யோ பயந்த்ரு முநிநா மம தர்ஸி தெளதே |
ஸ்ரீ வேங்கடேஸ சரணெள சரணம்‌ ப்ரபத்யே ॥

ஆசார்யரான ஸ்ரீ மணவாள மா முனிகளாலே அடியேனுக்‌குப் புகலாகக்‌ காட்டி யருளப்பட்ட ஸ்ரீவேங்கடேச பாத கமலங்‌களைப் புகலாகப்‌ பற்றுகிறேன்‌ என்கிறபடியே எல்லார்க்கும்‌புகலாக அடிக்கீழம்ர்ந்துபுகுந்து அடியீர்வாழ்மின்‌ என்று திருவடியைக் காட்டி யருள அவனும்‌ மலை மேல் தான்‌’நின்று என்‌ மனத்‌துளிருந்தான்‌ என்கிறபடியே இவர்‌ திருவுள்ளத்தைக்‌ கணிஸித்துக்‌
கொண்டிருந்து இப்போது இவரைப்‌ பெற்றவாறே ‘ஸ்ரீமத் ஸூந்‌தர ஜாமாத்ரு முநி மாநஸ வாஸிதே’ என்னும்படி. இவர்‌ திருவுள்‌ளத்தைத்‌ தனக்கு ஆவாஸ ஸ்தாநமாக விரும்ப, –எந்தாய்‌-வந்தாய்‌
(திருவாய்‌ 2-6-9, திருமொழி 1-10-9) என்கிற பாட்டுக்களின்‌ படியே இனி யெங்குப் போகின்றதே , நிகரில் புகழான வாத்ஸல்‌யாதி குணங்களுக்குத் தோற்று அதிலே ஈடுபட்டு, ஒழிவில்காலம்‌-என்கிறபடியே உத்தர-வாக்யத்தில்‌ கைங்கர்ய ப்ரார்‌த்தனையையும்‌
பண்ணி யருளா நிற்கிற வளவிலே, தீர்த்தம்‌, ப்ரஸாதம்‌, ஸ்ரீசடகோபன்‌, பூவார்‌ கழல்கள்‌ முதலான வரிசை களெல்லாம்‌ ப்ரஸாதிக்கப்‌ பெற்று க்ருதார்த்தராய்‌ புறப்பட்டருளி :கதி சந திவஸாநி தாம்நி தஸ்மிந்‌ சுமல விலோசந மேந மீஷமாண;,’- இல
நாட்கள்‌ செந்தாமரைக்‌ கண்ணனான இவ் வெம்பெருமானை ஸேவித்துக் கொண்டு அவ் விடத்தில்‌ எழுந்தருளி யிருத்தார்‌ என்‌ கிறபடியே அங்கே சிறிது நாளெழுத்தருளி யிருந்து அங்குண்டான
வர்களையும்‌ அபிமானித்தருளி இது விண்ணோர்‌ வெற்பாயிருக்‌கிறது என்றருளிச்‌ செய்து அங்குள்ள வைபவங்கனை வைபவங்களை எல்லாம் ஸேவித்தருளிப்‌ புறப்பட்ட வளவிலே அங்தள்ளார்‌ ‘“இங்குத்தைக்‌குப் பரிவரா யிருப்பாரொருவரைக்‌ கற்பித்தருள வேணும்‌” என்ன,எம்பெருமானார்‌ ஜீயரைக்‌ கற்பித்தருளினார்‌.
திருவேங்கடவனுடைய ஐஸ்வர்யங்களை ரஷித்து நிர்வஹிக்க பகவத் ராமாநுஜர் ஸ்ரீ ஸேநாபதி ஜீயர்‌- என்‌ற பட்டப்‌ பெயருள்ள ஏகாங்கியை நியமித்ததாக கி அநந்தார்யர்‌ அருளிச்‌ செய்த வேங்கடாசல இதுஹாஸ மாலை கூறுகிறது. பின்னர்‌அவ் விராமாதுஜரே அந்த ஏகாங்கித்கு ஸந்யாஸாஸ்ரமம்‌ தந்து “அப்பன்‌ திருவேங்கட சடகோபஜீயர்‌” என்ற திரு நாமத்துடன்‌ கோயில்‌ கார்ய நிர்வாஹகராக நியமித்து அவருக்குத்‌ துணையாக நாலு ஏகாங்கிகளை ஏற்படுத்தியாக இதிஹாஸ மாலை கூறுகிறது. இவருக்குக்‌ ”கோயில்‌ கேள்வி ஜீயர் என்ற பிருதும்‌ உண்டு. பின்னர்‌ பெரிய கேள்வி ஜீயர்‌ என்றும்‌ சிறிய கேள்வி ஜீயர்‌ என்றும்‌ இரண்டு ஜீயர்‌ ஸ்வாமிகள்‌ பெரியவருக்கு சிறியவர்‌ இளவரசாக நியமனம்‌ பெற்றதாகத்‌ தெரிகிறது. மணவாளமா முனிகள்‌ ”சிறிது காலம்‌” திருமலை-திருப்பதியில்‌ தங்கி யிருந்ததாக யதீந்த்ர ப்ரவண ப்ரபாவமாகிற இந்நூலில்‌ சொல்லப்பட்டுள்ளது.-இந்த சிறிது காலம்‌ ஒன்றிரண்டு ஆண்டுகள்‌ இருக்கலாம்‌ பிள்ளைலோகாசாரியர்‌ காலத்துக்குப்‌ பின்னர்‌ ராமாநுஜார்ய திவ்‌யாஜ்ஞஜை என்று திருவரங்கம்‌ திருவேங்கடம்‌ முதலான இடங்‌களில்‌ நடந்து வந்த கட்டுக்கோப்பு கலக கலாபாங்கள்‌ காரணமாகக்‌ குலைந்து, பின்னர்‌ மா மாமுனிகள்‌ காலத்தில்‌ ராமாநுஜார்ய திவ்யாஜ்ஜஞை வரவர முநி திவ்யாஜ்ஞையாக நிலை நாட்டப்பட்டது. “கோயில்‌ கேட்கும்‌ எம்பெருமானார்‌ ஜீயர்‌ என்‌பவர்‌ [கி பி] 1445ம்‌ ஆண்டு திருப்பதி திருமலை கல்வெட்டில்‌ பேசப்படுகிறார்‌, 1370-1443-என்ற காலத்தில்‌ வாழ்ந்திருந்த மணவாள மாமுனிகள்‌ நியமித்த ஜீயர்‌ இவரே என்பது தெளிவாகிறது. இவர்‌ திருமங்கையாழ்‌வார்‌ கோயிலுக்கு தரும கர்த்தரான படியால்‌ இவர்‌ சின்ன ஜீயரே
யாவர்‌ என்று கல்வெட்டுச்‌ சான்றுகளிலிருந்து ஊகிக்க முடிகிறது திருமலை திருப்‌பதி தேவஸ்தான வெளியீடான திருப்பதி, 1953] திருமலை யொழுகு”‘ என்ற திருமலை திருப்பதி ஐதிஹ்ய மாலையில்‌
-சகாப்தம்‌ 379 விகாரி வருஷம்‌ தை மாசம் அப்பன்‌ சடகோப ஜீயரை பகவத் ராமாநுஜர்‌ கோயில்‌ கேள்வி ஜீயராகப் பட்டாபிஷேகம்‌ செய்வித்ததாகவும்‌ அவரும்‌ 45 ஆண்டுகள்‌ கைங்கர்யத்துக்குப் பின்‌ ஐய வருஷத்தில்‌ தமக்கு இளவரசாக அழகிய மணவாள ஜீயர்‌ என்‌பவரை தியமித்ததாகவும் காணப் படுகிறது [பக்‌.123], இதே நூலில்‌ (பக்‌ 104) காண்பது: “முன்னாளில்‌ ஸ்ரீராமா நுஜ தரிசந ப்ரவர்‌த்தகரான மணவாள மாமுனியானவர்‌ திருப்பதிக் கெழுந்தருளித்‌ தேசாதிபதியை ஆஸீர்வதித்து ஸ்தலத்திலே மதாந்தரஸ்தராலே உபத்ரவம்‌ வராதபடிக்கு ஒரு உத்தமாஸ்ரமியை ஸ்தலாதிபதியாக்க வேணுமென்று சிந்தித்து, தம்முடைய சிஷ்டராய்‌,கோயிலில்‌ ஸ்ரீரங்க நாராயண ஜீயர்‌ ஸ்ரீபண்டாரத்துக்கு நிர்வாஹகராய்‌ இருக்கிறாப்‌ போலே திருமலைக்கு உத்தாரகராய்‌ நிக்ரஹ அனுக்ரஹ ஸமர்த்தரான ஒரு ஜீயரைக்‌ ”கோயில்‌ கேள்வித் திருவேங்‌கட ஜீயர்‌” என்று திருநாமம்‌ சாத்தி தேசாதிபதி அனுமதி கொண்டு அர்ச்சகர்‌ முதலான ஸமஸ்த பரிகரங்களையும்‌ ஸ்தல நிர்வாஹகரான ஆழ்வார்‌ கோவிந்த ஜீயர்‌ என்ற ஏகாங்கி ஸ்ரீவைஷ்ணவரையும்‌ திருவேங்கட ஜீயர்‌ அதீனமாக்கி இவர்‌களெல்லாருக்கும்‌ இவர்‌ சிஷகராயும்‌ ரஷகராயும்‌, திருவேங்சடச்‌ செல்வத்துக்கு வர்த்தகராயும்‌ தேசாதிபதிக்கு பகவத் தர்மோபதேஷ்டாவாயும்‌ கல்பித்து, எம்பெருமானார்‌ திருமேனி முத்ரையாக ஓரு முத்ரை மோதிரத்தைப்‌ பண்ணி ஜீயரைத்‌ தரிக்கச்‌ சொல்லிக்‌ கொடுத்து விஷ்வக்ஸேந முத்ரா ஸுசிதமாக எம்பெருமானார்‌ நியமன ஸித்தமாய்‌ ஏகாங்கி பரம்பரா ப்ராப்தமான கண்டா, கடாரி, ஹநுமத் த்வஜங்களையும்‌ அவர்‌ ‘வசம் பண்ணி, கைங்கர்ய யாத்ரா காலங்களிலே கண்டா நாத ஹநுமத் த்வஜ புரஸ் ஸராமாக ஸஞ்சாரம்‌ பண்ணுமென்று நியமித்து: ஸ்ரீராமாநுஜபுரத்திலே ஜீயருக்கு ஒரு மடமும்‌ ஸங்கல்‌பித்துக்‌ கொடுத்து திருவேங்கட ஜீயர்‌ ஜ்ஞாந ஸந்தான பரம்பராந்தர்பூதரான ஏகாங்கி ஸ்ரீவைஷ்ணவர்களில் தானே திருமலை ஸ்தானத்‌துக்கு தத் தத் காலங்களிலே உத்தமாஸ்ரமியாய்‌ மடாதிபதியாய்த்‌
திருவேங்கட நாட்டுக்கும்‌ திருவேங்கடச்‌ செல்வத்துக்கும் கர்த்தாவாகவும்‌ நியமித்துக் கோயிலுக்கு எழுந்தருளினார்‌.’ இதுவரை திருமலை யொழுகு நூலில்‌ காண்பவை.

எம்பெருமானார்‌ நியமித்த ஸ்தலாதிகாரி ஜீயருக்கு திருவடி [அனுமான்‌ ] முத்ரையாக ஒரு முத்ராங்குளீயகத்தை தரிக்‌திருக்கும்படி எம்பெருமானார்‌ நியமநம்‌ [திருமலையொழுகு, பக்‌,
42] மணவாளமாமுனிகள்‌ நியமித்த ஜீயருக்கு எம் பெருமனார்‌ முத்ரையுள்ள அங்குளீயகம்‌ என்று சொல்லி யுள்ளபடியால்‌ இவர்‌ எம்பெருமானார்‌ ஜீயர்‌ என்று அழைக்கப்பட்டதாகத்‌ தெரிகிறது.

இவரே சின்ன ஜீயர்‌ என்றும்‌ தெரிய வருகிறது.

    –==-

    ஜீயர்‌ திருவாலி திருநகரியில்‌ திருமங்கை யாழ்வரை லேவித்தது:-அநந்தரம்‌ :
    அஹி ராஜ ஸைலமபிதோ நிரந்தரம்‌ ப்ருதநாஸதே நஸ விலோகயந் தத; |
    அவருஹ்ய திவ்யநகரம்‌ ரமாஸ்பதம்‌ புஜகேஸயம்‌ புநருபேத்யபூருஷம்‌ ॥

    அந்த மணவாளமா முனிகள்‌ தாம்‌ சிஷ்ய ஜந பரிவாரத்துடன்‌ திருமலைக்கு நான்கு புறத்திலும்‌ இமை கொட்டாமல்‌ பார்த்துக்‌ கொண்டே அம் மலையினின்‌றும்‌ இறங்கி திவ்ய நகரமான கீழத் திருப்‌பதியை அடைந்து மறுபடியும்‌ பெரிய பிராட்டியாருக்கு இருப்பிடமாய்த் திருவநந்தாழ்வான்‌ மேல்‌ பள்ளி கொண்டிருக்கிற பரம புருஷனான கோவிந்த ராஜனை ஸேவித்தார்‌.-என்கிறபடியே அங்கு
    நின்றுமிறங்கி யெழுந்தருளி-ஸ்ரீகோவிந்தராஜப்‌ பெருமாளையும்‌
    குளிரருவி வேங்கடத் தென்‌ கோவிந்தன்‌ குணம் பாடுவாராய்‌ அநுபவித்துப்‌ புறப்பட்டருளி, திருவெவ்வளூர்‌, திருவல்லிக்கேணி முதலான திருப்பதிகளெங்கும்‌ திருவடி தொழுது பெருமாள்‌ கோயிலேற வெழுந்தருளி பேரருளாளரையும்‌ திருவடி தொழுது, அங்கு நின்றும்‌ அவரநுமதியுடனே புறப்பட்டருளி மண்ணில்‌ பெரிய மதுராந்தகத்தேற எழுந்தருளி
    மருமலர்‌ கமழ் சோலை மதுரை மாநகர்‌ வந்தெய்தி
    அருள் பொழி பெரியநம்பி யன்றெதிராசராசற்கு
    அரும் பொருள்‌ வழங்கு மெங்களேரி காத்தருள்வார்‌ கோயில்‌
    திருமகிழடியிற் செல்வீர்‌ தீ வினை தீருமாறே
    -என்று அங்கேற வெழுந்தருளி,-
    இதுவோ கிளியாறிவ்வூரோ திரு மதுரை
    இதுவோ திருமகிழுங் கோபுரமு- மிதுவோ
    பெரியநம்பி தாமுகந்து பின்னு மெதிராசர்ச்குத்‌
    துயமளித்த தூயப் பதி-
    என்று அங்கே தண்டன்‌ ஸமர்ப்பித்து அத்யந்த ஹ்ருஷ்டராய்‌ அற்றைக்கங்கே எழுந்தருளி யிருந்து

    பிற்றை நாள்‌ புறப்பட்டு திருச்சித்திர கூடத்தேற வெழுந்தருளி கோவிந்த ராஜரையும்‌ திருவடிதொழுது- அநந்தரம்‌ சோழ மண்டலத்திலுண்டான திருப்பதிகளைத்‌ திருவடி தொழுவாராக மநோ ரதித்துக்‌ கொண்டு புறப்பட்டருளி அப்படியே வழியிலுள்ள திவ்ய தேசங்களையும்‌ மங்களாசாஸநம்‌ செய்தருளி, பின்பு திருவாலி திருதகரி யேற வெழுந்தருளித்‌ திருமங்கை யாழ்வாரைத் திருவடி தொழுது

    உறைகழித்த வேலை (வாளை )யொத்த விழி மடந்தை மாதர் மேல்‌
    உறைய (உருக )வைத்த மனமொழித்தவ்‌ வுலகளந்த நம்பிமேல்‌
    குறையை வைத்து மடலெடுத்த குறையலாளி திருமணங்‌
    கொல்லை தன்னில்‌ வழி பறித்த குற்றமற்ற-.செங்கையான்‌
    மறையன் வைத்த (மறை யுரைத்த )மந்திரத்தை மாலுரைக்க வவன் முன்னே
    மடி யொதுக்கி மன மொடுக்கி வாய் புதைத்தல்‌ வொன்‌னலார்‌
    கறை குளித்த வேலணைத்து நின்‌ற விந்த நிலைமை யென்‌
    கண்ணை விட்டகன்றிடாது கலியம் ஆணையாணையே– என்றும்‌
    அணைத்த வேலும்‌! தொழு கையும்‌, அழுந்திய திரு நாமமும்‌
    ஓமென்ற வாயும்‌, உயர்ந்த மூக்கும்‌, குளிர்ந்த முகமும்‌,
    பரந்த விழியும்‌, இருண்ட குழலும்‌, சுருண்ட வளையமும்‌,
    வடித்த காதும்‌, மலர்ந்த காதுகாப்பும்‌, தாழ்ந்த செவியும்‌
    செறிந்த கழுத்தும்‌, அகன்‌ற மார்பும்‌, திரண்ட தோளும்‌
    நெளித்த முதுகும்‌ குவிந்த இடையும்‌, அல்லிக் கயிறும்‌
    அழுந்திய சீராவும்‌, தூக்கிய கருங்கோவையும்‌’
    தெங்கலுந் தனி மாலையும்‌,சாத்திய திருத் தண்டையும்‌,
    சதிரான வீரக் கழலும்‌ குந்தியிட்ட கணைக் காலும்‌.
    குளிர வைத்த திருவடி மலரும்‌, மருவலர் தமுடல்‌ துணிய
    வாள் வீசும்‌ பரகாலன்‌ மங்கை மன்னரான வடிவே
    –என்றும்‌

    ஐயனருள் வாழி செய்ய வடிவிணைகள்‌ வாழியே
    அந் துகிலும்‌ சீராவுமணையுமரை வாழியே
    மையிலகு வேலணைத்த வண்மை மிக வாழியே
    மாறாமல்‌ அஞ்சலி செய்‌ மலர்க் கரங்கள்‌ வாழியே
    செங்யகலனுட னலங்கல்‌ சேர் மார்பும்‌ வாழியே
    திண் புயமும்‌ பணிர்ந்த திருக் கழுத்தும்‌ வாழியே
    மையல்‌ செய்யு முக முறுவல்‌ மலர்க் கண்கள்‌ வாழியே
    மன்னு முடித் தொப்பாரம்‌ வலயமுடன்‌ வாழியே–
    என்றும்‌ ஈடுபட்டு,

    வேலணைத்த மார்வும்‌ விளங்கு திரு வெட்டெழுத்தை மாலுரைக்கத்‌ தாழ்த்த வலச்‌ செவியும்‌–காலணைத்த தண்டையும்‌ வீரக் கழலும் தார்க் கலியன்‌ வாண் முகமும்‌ கண்டு களிக்கு மென்‌ கண்‌.–என்று அவர்‌ மந்த்ர லாபத்துக்கு நின்ற நிலையிலே மக்ந மநாவாய்‌ அநுபவித்து மங்களாசாஸனஞ் செய்தருளி பரகாலர்க்கு பரம ப்ரீதி கரரான வயலாவி மணவாளரையும்‌ ஸேவித்துப்‌ புறப்பட்டுத்‌ திருமணங் கொல்லை யேற வெழுந் தருளி

    ஈதோ திருவரசு? ஈதோ!மணங்கொல்லை
    ஈதோ எழிலாலி என்னுமூர்‌–ஈதோ தான்‌
    வெட்டுங்கலியன்‌ வேலை வெட்டி நெடுமால்‌
    ஈட்டெழுத்தும்‌ பறித்த விடம்‌!
    -என்று அவ்விடத்தையும்‌ ஸேவித்துப்‌ புறப்பட்டருளி,

    நீணிலா முற்றத்து நின்றிவள்‌ நோக்கினாள்‌,
    காணுமோ கண்ணபுரமென்று காட்டினாள்‌-
    என்கிறபடியே திருக் கண்ண புரத்திலே திருவுள்ளஞ்‌ சென்று –இன்றே சென்று திருக்கண்ணபுரம்‌ புக்கு- என்கிறபடியே அதி த்வரையுடனே அங்கேற வெழுந்‌தருளி கருவரை போல்‌ நின்றானையும்‌ ஸர்வாங்க ஸுந்தரரான செளரி ராஜனையும்‌ ஸேவித்தருளி கண்ணபுரத் தடியன்‌ என்றதுவே நிரூபகமான திருமங்கை யாழ்வாரையும்‌ அங்கே யேறி யருளப்‌ பண்ணி, காலின்‌ மணி கரை யலைக்கும்‌ கணபுரத்தினின்றும்‌ போந்து வாவித் தடஞ்சூழ் மணி முத்தாற்றின்‌ நறையூர்‌ நெடு மாலான நம்பியையும்‌ நாய்ச்சியாரையும்‌ ஸேவித்துப் புறப்பட்டு
    செழு மா மணிகள்‌ சேரும்‌ திருக் குடந்தையிலே சேர்ந்து ஆராவமுதாழ்வாருடைய ஏரார்‌ கோலத் திரு வுருவையும் திருவடி தொழுது, அங்கு நின்றும்‌ புறப்பட்டருளி, திருமால்‌ சென்று சேர்‌விடமான தென்திருப்பேரையில்‌ சென்று திருப்பேர் நகரானையும்‌ திருவடி தொழுது அங்கு நின்றும்‌ புறப்பட்டருளி மாமலராள்‌ புணர்ந்த பொன் மார்வன்‌ பொருந்தும் பதிதொறும்‌ புக்கு நிற்கும்‌
    -என்றும்‌,

    திவ்யாநி தத்ர நகராணி திகந்தராளேர் தேவே நயாநி ஹரிணு விஷயீ க்ருதாநி
    ஸத்யம்‌ த்வ தீஷண ஸம்ர்த்த மஹோத்ஸ வாநி தங்யாநி தாநி ஜகதஸ்‌ ஸமயம் த்வகாநி

    அவ்விடத்தில்‌ திங் மத்யத்தில்‌ எந்த திவ்ய தேசங்கள்‌ எம்பெருமானாலே ஆஸ்ரயிக்கப்பட்டனவோ, தேவரீருடைய கடாக்ஷத்தால்‌ ஸம்பூர்ணமான விஷோத்ஸவங்களை யுடையனவாய்‌. தந்யங்களான அந்த திவ்ய தேசங்கள்‌ லோகங்களுடைய ஸகல பாபங்களையும்‌ போக்கக் கடவன]என்றுஞ் சொல்லுகிறபடியே மற்றுமுண்டான திருப்பதிகளையும்‌ மங்களாசாஸநம்‌ பண்ணி யருளி, தையல் நல்லார் குழல் மாலையும்‌ மற்றவர்‌ தட முலைச்‌ செய்ய சாந்தும்‌ கலந்திழி புனல் சூழ்‌ தென்னரங்‌கத்தே சென்று பெரிய பெருமாளையும்‌ ”ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்‌டோஸ்தி கரீஷ்மே ஸீதமிவ ஹ்ரதம்‌” [இந்த நான்‌ க்ரீஷ்ம காலத்‌தில்‌ குளிர்ந்திருக்கிற மடுவில் போல்‌ பர ப்ரஹ்மத்தில்‌ மூழ்கினவனாகிறேன்‌ ] என்றும்‌,பொற்றாமரைக் கயம்‌ நீராடப் போனாள்‌-என்றும் சொல்லுகிறபடியே விடாய் கெட படிந்து குடைந்தாடி யநுபவிந்து தீர்த்த ப்ரஸாதம்‌ பெற்று ஹ்ருஷ்டராய்ப்‌ புறப்பட்டு।

    அப்பாச்சியா ரண்ணாவை பெருமாள்‌ கோயிலுக்கு நியமித்தது
    தமக் கிருப்பான திருவரங்கன்‌ திருப்பதியிலே யெழுந்தருளி பெருமாளை ஸேவித்து,
    சித்ராணி தீப்ததர ரத்ந விபூஷணாநி சத்ராணி சாமர யுகம்‌ வ்யஜ நாஸநாநி |
    தக்நா மலாஞ்சக யுதாநி ததெள ததைவ ரங்காதிபாய தயிதா ஸஹிதாய தஸ்மை ॥

    [அந்த அழகிய மணவாளனுடைய திரு நாமத்துடனும்‌ சங்கு சக்கரம்‌ முதலிய அடையாளங்களுடனும்‌ கூடி யிருக்கிற-ஆச்சர்யகரமாய்‌ மிகவும்‌ ப்ரகாசியா நின்ற ரத்ந மயமான திருவாபரணங்‌களையும்‌ திரு வெண் கொற்றக் குடைகளையும்‌ திரு வெண் சாமரங்களையும்‌ திருவாலவட்டங்களையும்‌ சித்ராஸநங்களையும்‌, பெரிய பிராட்டியாருடன்‌ கூடி யிருக்கிற அந்த அழகிய மணவாளன்‌பொருட்டு அப்போதே ஸமர்ப்பித்தார்‌.]’ என்னும்படி தாம்‌ கொண்டெழுந்தருளின திருவாபரணங்கள்‌, திரு வெண் கொற்றக்குடை. திரு வெண் சாமரம்‌,- திருவாலவட்டம்‌, ரத்ந கம்பளம்‌, திருமெத்தை முதலான வஸ்துக்களெல்லா வற்றையும்‌ ஸமர்ப்‌பித்து மங்களாசாஸநம்‌ பண்ணிக் கொண்டு எழுந்தருளி யிருக்க-
    பெருமாளும்‌ மிகவுமுகந்தருளி, தீர்த்தம்‌, ஸ்ரீசடகோபன்‌ முதலான வரிசைகளையும்‌ ப்ரஸாதித் தருளி உத்தம நம்பி பிள்ளையை கோயில்‌ பரிகர மனைத்துக் கொத்துடான் வரிசையாக ஜீயரை மடத்‌திலே விட்டுவரவென்று அருள் பாடிட்டருள, அவரும்‌ அப்படியே அஷ்டாதச வாத்யங்களுடனே மஹோத்ஸவமாக மடத்திலே எழுந்தருளப் பண்ணினார்‌. நம்‌ பெரிய ஜீயரும்‌, மடத்திலே யெழுந்தருளி
    யிருக்கிற அப்பிள்ளை, திருவாழி யாழ்வார்‌ பிள்ள தொடக்கமான பெரியோர்களையும்‌ மற்றும்‌ கைங்கர்ய பரராய்‌ எழுந்தருளி யிருக்கிற ஸ்ரீவைஷ்ணவர்களையுபம் க்ருபை பண்ணி யருளி திருமலை பெருமாள் கோயில்‌ தொடக்கமான திவ்ய தேசங்களினின்றும்‌
    கொண்டெழுந்தருளின தீர்த்த ப்ரஸாதங்களையும்‌ விநியோகம்‌செய்தருளி;

    அப்பாச்சியாரண்ணாவை அழைத்தருளி முன் நியமனப் படிக்கு பெருமாள் கோயிலுக்கு நியமித்தருள, அவரும்‌ ‘இந்த ஸேவையையும்‌ கோஷ்டியையும்‌ விட்டு விடை கொள்ள வல்லேனோ?’” என்று
    வ்யாகுலப்பட, ஜீயர்‌ அவர் கையைப் பிடித்துக் கொண்டு ஸந்நிதியிலே யெழுந்தருளி தாம்‌ அடி தொடங்கி ‘இராமானுசன்‌’* என்று திருநாமம் சாத்தி பஹுநாளாண்டதாய்‌ ஜீர்ணமாயிருக்கிற தீர்த்‌தச் செம்பு ஸ்வாமி யுடைய ப்ரஸாதமென்று வானமாமலை ஜீயர்‌ அணை கையவனாள்‌ தமது திருமண் கூடையிலே வைத்து ஸேவித்துக் கொண்டிருச்‌ கிறதைக்‌ கொண்டு வரச் சொல்லி திருக்கையிலே வாங்கிக்‌ கொண்டு: முன்னிருந்த இராமானுசன்‌ என்கிற விலாஸமும்‌, திருவாழி
    திருச்சங்கு, திருமண் ஸ்ரீசூர்ணம்‌ எல்லாம்‌ பரிமுஷிதமாயும்‌ ஜீர்ணமுமாயு மிருப்பதனாலே, தம்மைப் போலிருக்கிற இரண்டு விக்ரஹங்கள்‌ இத்தை யிட்டு உண்டாக்‌க ‘உம்முடைய ஆசாரியருக்கு ஒரு விக்ரஹமும்‌ உமக்கு ஒரு விக்ரஹமுமாகக்‌ கொள்ளும்‌” என்று ஸாதித்‌தருளி
    , கோயிலாழ்வாரிலே எழுந்தருளி யிருக்கிற “என்னைத்‌ தீ மனங்‌ கெடுத்தார்‌” ஆட்கொண்டவில்லி ஜீயர்‌ திருவாராதனமாய்‌ எழுந்‌தருளி யிருந்தவராகையாலே, அவர்‌ திருவடிகளுக்கு அந்தரங்கரான கந்தாடை யாண்டான்‌ திருவம்சமாக அவருடைய கைங்கர்யம்‌ போலே நீரும்‌ கைங்கர்யம் பண்ணத் தக்கவராகையாலே உமக்கு இவர்‌ திருவாரதனம்‌ என்று உகந்து ஸாதித்தருளி கோஷ்டியிலே எழுந்தருளி
    ஸ்ரீ தீர்த்த தேவ ராஜார்ய தநயாம்பேதி விஸ்ருதா |
    தஸ்யாஸ் தநூஜோ வரத: காஞ்சீ நகர பூஷண: ॥

    [திருமஞ்சனம்‌ அப்பா என்ற தேவ ராஜார்யரின்‌ குமராத்‌தியாய்‌ ஆய்ச்சி–அம்பா என்று அறியப்பட்டவரின்‌ குமாரரான வரதாசாரியர்‌ (அப்பாச்சியாரண்ணா) காஞ்சீ நகரத்துக்கு ஆபரணமானவர்‌] என்று பேரருளாளரே ஆச்சியாருக்கக்‌ குமாரராக அவதரித்தருளினார்‌?” என்று ப்ரீத் யதிசயத்தாலே அருளிச் செய்து பெருமாள்‌ கோயிலிலே நித்ய வாஸம்‌ பண்ணிக் கொண்டு ஸுகோத்‌தரராயிரும்‌’” என்று விடை ஸாதித்தருளினார்‌.


    ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

    ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர விளக்கங்கள்-இரண்டாம் அத்யாயம்-அவிரோத அத்யாயம் –நான்காம் பாதம் – பிராண பாதம்-ஸ்ரீ வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்-

    May 16, 2026

    அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
    விநித விவித பூத விராத ரக்ஷைக தீக்ஷே |(2)
    ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
    பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||-இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

    பாராசர்ய வசஸ்ஸுதா₄ம் உபநிஷத் து₃க்₃தா₄ப்₃தி₄ மத்₄யோத்₃த்₄ருதாம்
    ஸம்ஸாராக்₃நி விதீ₃பந வ்யபக₃த ப்ராணாத்ம ஸஞ்ஜீவநீம் |
    பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் ப₃ஹுமதி வ்யாகா₄த தூ₃ரஸ்தி₂தாம்
    ஆநீதாம் து நிஜாக்ஷரை : ஸுமநஸ: பௌ₄மா: பிப₃ந்து அந்வஹம்
     ||இரண்டாவது மங்கள ஸ்லோஹம்-

    ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
    பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||

    யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந   தர்சிதா:
    வரம் ஸுதர்சனார்யம் தம் வந்தே கூர குலாதிபம்-ஸ்ருத  ப்ரகாசிகா பட்டருடைய தனியன்:

    ————————-

    நான்காம் பாதம் -பிராண பாதம் -எட்டு அதிகரணங்கள்-

    2-4-1-ப்ராண உத்பத்த்யதி₄கரணம் –புலன்களும் படைக்கப்படுபடுபவையே

    பூர்வ பக்ஷிகளின் வாதம்- 2ஆவது அத்யாயத்தின்-3ஆவது பாதத்தில் ஐம்பூதங்களும் ஆத்மாக்களும் கூட ப்ர்ஹமத்தின் கார்யங்கள் தான், அதாவது படைக்கப் பட்டவை தான் என்று நிரூபித்தார் வ்யாஸர். அதைத் தொடர்ந்து –4ஆம் பாதத்தில் ஜீவாத்மாவுக்கு உதவும் கருவிகளான இந்திரியங்களும் ப்ராண வாயுவையும் பற்றி ஆராய்ச்சி செய்யப்படுகிறது -அவற்றுக்கு ஆகாஸம் முதலான அசேதனப் பொருள்களைப் போல் உருவ மாறுபாடு ஏற்படுகிறதா? அல்லது ஜீவாத்மாவைப் போல் நித்யமான படியால் பண்புகளில் மட்டும் மாறுபாடு ஏற்படுகிறதா? என்று.
    இந்தப் பாதத்தில் மொத்தம் 8 அதிகரணங்கள்உள்ளன. அதில் முதல் மற்றும் கடைசி அதிகரணங்களில் தான் நேரடியாக புலன்கள் மற்றும் ப்ராண வாயுவின் உண்டாக்கத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யப்படுகிறது. நடுவில் உள்ள 6 அதிகரணங்கள் ப்ரஸங்காத்(நினைவு வந்தபடியால்) புலன்கள் மற்றும் ப்ராண வாயுவின் தன்மைகளைச் சொல்பவையாக உள்ளன

    (பிராணாதிகரணம் -முதல் அத்யாயம் முதல் பாதத்தில் பார்த்தோம் -இங்கு பிராண உத்பத்தி அதிகரணம் -இதில் மூன்று ஸூத்ரங்கள் உள்ளன -முதல் ஸூத்ரம் பூர்வபக்ஷம் ஸ்பஷ்டமாக சொல்லி ஸித்தாந்தம் மறைந்த உள்ளுரைப்பொருளாக -உத் ஸூத்ரமாக உள்ளது –இறுதியான எட்டாவது அதிகரணத்தில் புலன்கள் நேரடியாக ஸ்ருஷ்டிக்கப் படுவதை காட்டி அருளுகிறார்)

    2-4-1-ப்ராண உத்பத்த்தி₄கரணம்–இந்த அதிகரணத்தில் ப்ராணன் என்று அழைக்கப் படும் புலன்கள்(இந்த்ரியங்கள்) உண்டாகின்றனவா இல்லையா என்று ஆராயப்படுகிறது. இதில் மொத்தம் 3 ஸூத்ரங்கள் உள்ளன. முதல் ஸூத்ரம் பூர்வ பக்ஷத்தைக் காட்டுகிறது. அதிலேயே உத் ஸூத்ரமாக(ஸூத்ரத்திலியே நேரடியாக சொல்லப்படாமல் மறை முகமாக)ஸித்தாந்தமும் சொல்லப்படுகிறது. அதற்குப் பின்-2 ஸூத்ரங்கள் ஸித்தாந்தி கூறும் வேறு சில யுக்திகளைச் சொல்கின்றன

    பூர்வ பக்ஷம்–1-ததா ₂ ப்ராணா :-“அவ்வாறே ப்ராணங்கள்”
    அவ்வாறு-2-3-3-ஆத்மாதிகரணத்தில் ஆத்மா எப்படிப் பட்டவராகச் சொல்லப்பட்டாவரோ அப்படிப் பட்டவை தான் ப்ராணங்களும் என்று பொருள். அதாவது, 2.3.3 ஆத்மாதிகரணத்தின் முதல் ஸூத்ரம் “ந ஆத்மா ச்ருதே .” என்பது. அதன் பொருள் – “ஆத்மா உண்டாவதில்லை ; வேதம் சொல்கிற படியால்” என்பதாகும். “ப்ராணங்கள் அவ்வாறே ” என்றால் “ப்ராணங்கள் உண்டா வதில்லை ; வேதம் சொல்கிற படியால்”என்று பொருள். எனவே ப்ராணங்கள் எனப்படும் புலன்கள் நித்யமானவை என்பதே இவர்கள் வாதம்

    அஸத்₃வா இத₃மக்₃ர ஆஸீத் … ரிஷயோ வாவ தே அக்₃ரே ஸதா₃ஸீத் । ததா₃ஹு: கே தே ரிஷய இதி । ப்ராணா வாவ ரிஷய: ஸ்ருஷ்டிக்கு முன்னால் இவ் வுலகம் அனைத்தும் அஸத்தாக(இல்லாததாக) இருந்தது. அப்போது ரிஷிகள் மட்டும் தான் இருந்தன. ரிஷிகள் எனப்படுபவை ப்ராணங்கள்(புலன்கள்-இந்த்ரியங்கள்) தான்–ப்ரளயத்தின் போதும் புலன்கள் இருந்தன என்று வேதம் சொல்கிறபடியால் அவற்றுக்கு உண்டாக்கமில்லை என்று அவர்கள் வாதம்.

    வேத வ்யாஸரின் மறுப்பு– ஸித்தாந்தம் –ஸூத்ரத்தில் வெளிப்படையாகச் சொற்களால் சொல்லப் படாமல், உள்ளுரைப் பொருளாக ஸித்தாந்தம் கூறப்படுகிறது.-ஆகமம் முதலானவை எப்படி உண்டாக்கப் படுகின்றனவோ அது போல் புலன்களும் உண்டாக்கப் படுகின்றன,ஏனெனில்
    1–“ஸதே₃வ ஸோம்ய இத₃மக்₃ர ஆஸீத் ஏகமேவ அதி₃விதீயம்”,
    “ஆத்மா வா இதம் ஏக ஏவ அக்₃ர ஆஸீத்
    ” முதலான வாக்கியங்களில் ஸ்ருஷ்டிக்கு முன்னால், ப்ரளய காலத்தில், ஒரே ஒரு பொருள் தான் இருந்தது எனப்படுகிறது. எனவே புலன்கள் அப்போது இல்லை
    2- ஏதஸ்மாத் ஜாயதே ப்ராணா : மந: ஸர்வேந்த்₃ரியாணி ச -அதாவது “இந்த ப்ரஹ்மத்திடமிருந்து ப்ராண வாயுவும் மனதும் எல்லாப் புலன்களும் உண்டாகின்றன-என்று ஸ்பஷ்டமாக உள்ளது. ஆக, ப்ரளயத்தில் அவை இல்லை

    கேள்வி –ஆத்மவுக்குச் சில வாக்கியங்களில் பிறப்புண்டு என்று சொல்லப்பட்டிருந்தாலும் அது உண்டாக்கமல்ல, நித்யமான ஆத்மா ஓர் உடலை எடுத்துக் கொள்வது தான் சொல்லப் படுகிறது என்று கூறினீர்கள். அது போல் இங்கும் புலன்கள் உண்டாகின்றன என்று கொள்ளாமல். நித்யமான புலன்கள் வெளிப்படுகின்றன என்று கொள்ளலாமே ?
    பதில்–
    (ந ஜாயதே ம்ரியதே இத்யாதி )ஆத்மாக்கள் உண்டாகுவதில்லை என்றும், ஆத்மாக்கள் நித்யமானவை என்றும் கூறும் வேத வாக்கியங்கள் பல உள்ள படியால், “ஆத்மா பிறக்கிறார்” என்று கூறும் ஒரு வாக்கியத்துக்கு வேறு மாதிரி பொருள் கொண்டோம். ஆனால் புலன்கள் நித்யமானவை என்று கூறும் எந்த வேத வாக்கியமும் இல்லை – எனவே இந்த வாக்கியத்துக்கு நேரடியான பொருளைத் தான் ஏற்க வேண்டும்.

    அஸத்₃வா இத₃மக்₃ர ஆஸீத்” என்று முன்னால் காட்டப்பட்ட வாக்கியத்திலும்,ப்ரளய காலத்தில் புலன்கள் இருந்தன என்று கூறப்பட வில்லை –அந்த வாக்கியத்தில் ரிஷி என்றும் ப்ராணன் என்றும் சொல்லப்படுபவர் பரமாத்மா தான். ஏனெனில்
    1-ப்ராணன் என்கிற சொல் வேதத்தில் பல இடங்களில் பரமாத்மாவைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டுள்ளது. பரமாத்மா நம்மை வாழ வைப்பதால், அவரைப் ப்ராணன் என்று கூறுவது பொருத்தமானதே —
    2- ரிஷி என்ற சொல்லுக்கு“சிறந்த ஜ்ஞாந முடையவர்” என்று பொருள். அறிவற்ற புலன்களை ரிஷிகள் என்று அழைப்பது பொருந்தாது. ஸர்வஜ்ஞனான பரமாத்மாவையே ரிஷி என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.

    ஆக,புலன்களும் கூட ப்ரஹ்மத்தால் படைக்கத் தான் படுகின்றன என்று வேத வ்யாஸர் தன் ஸித்தாந்தத்தைக் கூறுகிறார்.

    ஸித்தாந்தியின் வாதங்கள் -கேள்வி–ரிஷி ப்ராணன் என்ற சொற்கள் ஒருமையில் பயன் படுத்தப் பட்டிருந்தால் பரமாத்மா என்று பொருள் கூறலாம். ஆனால் வேதத்தில்“ரிஷிகள்”, “ப்ராணங்கள்” என்று ப₃ஹு வசனம்(பன்மை விகுதி) உள்ள படியால் பரமாத்மாவாக இருக்க முடியாதே ?
    பதில்-2-கௌ₃ணீ அஸம்ப₄வாத் தத் ப்ராக் ச்ருதே : ச

    கௌ₃ணீ–இவ் விடத்தில் உள்ள பன்மை விகுதி கௌ₃ணமானது– அதாவது பன்மை என்ற பொருள் இல்லாமல் வேறொரு இரண்டாம் பக்ஷமான பொருளை உடையது
    அஸம்ப₄வத்–இயலாதபடியால்-ஸ்ருஷ்டிக்கு முன் பல பொருள்கள் இருக்க முடியாத படியால்”. இதற்குக் காரணம்
    தத் ப்ராக் ச்ருதே : ச – பரமாத்மா மட்டுமே ஸ்ருஷ்டிக்கு முன் இருந்தார் என்று வேதம் சொல்கிறபடியால்.

    (நாங்கள் போய் வருகிறோம் கௌசல்யை இடம் பெருமாள் சொன்னதை காட்டி லஷ்மணன் பன்மை பிரயோகத்தால் -ஒருமை இருமை பிரயோகம் இல்லாமல் -பன்மையாகவே அருளிச் செய்ததால் -தன்னையும் பிராட்டியாரையும் சேர்த்தே சொன்னதாக காட்டி கூடச் சென்றானே)

    கேள்வி–ஸ்ருஷ்டிக்கு முன் புலன்கள் இருந்தன என்று வேதம் சொல்லா விட்டாலும் நாமே யுக்திகளைக் கொண்டு அவ்வாறு கல்பிக்கலாமே ? ப்ரளயத்தில் ஜீவாத்மா இருந்தார் என்று ஏற்பது போல் புலன்களும் இருந்தன என்றால் என்ன தவறு?

    பதில்-3–தத் பூர்வ கத்வாத் வாச :– சொற்கள் பொருள்களை முன்னிட்டுக் கொண்டவை யான படியால்”
    ப்ரளயத்திலும் ஆத்மாக்கள் இருந்தார்கள் என்று ஏற்பதற்குக் காரணம் உள்ளது -ப்ரளயத்துக்குப் பின் அந்தந்த ஜீவாத்மா அடையும் பிறவியானது, ப்ரளயத்துக்கு முன் அந்தந்த ஜீவாத்மா செய்த பாப புண்யங்களின் விளைவாகத் தான் இருக்க வேண்டும். எனவே இடைப்பட்ட ப்ரளய காலத்திலும் ஜீவாத்மாவும் அவரிடம் பாப புண்யங்களும் தொடர்ந்து இருந்தன என்று ஏற்க வேண்டும்.–அது போல் புலன்களும் ப்ரளயத்தின் போது இருந்தன என்று ஏற்க வேண்டுமென்றால், ப்ரளயத்திலும் புலன்களுக்குச் செயல்பாடு இருந்தது என்று காட்ட வேண்டும். ஆனால் அது பொருந்தாது. எடுத்துக் காட்டுக்கு–பேச்சுக்கான இந்த்ரியம் -சொற்களைப் பேச வேண்டும் என்றால் அதற்குச் சொற்கள் இருக்க வேண்டும். ஆனால், உலகச் சொற்கள் அனைத்துமே உலகம் படைக்கப் பட்ட பிறகு தான் உண்டாயின என்று வேதம் கூறுகிறது
    தத்₃தே₄த₃ம் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் । தந் நாம ரூபாப்₄யாம் வ்யாக்ரியதே என்று. ஆகையால், ப்ரளய காலத்தில் பொருள்கள் இல்லாத போது சொற்களும் இருந்திருக்க முடியாது. எனவே பேச்சுக்கான இந்த்ரியம் செயல் பட்டிருக்க முடியாது. எனவே அப் புலன் ப்ரளத்தின் போது இருந்தது என்று கல்பிப்பதற்கு எந்த ஒரு அடிப்படையும் இல்லை

    ஆகவே ப்ராணங்கள் எனப்படும் புலன்களும் ப்ரஹ்மத்தால் படைக்கப் படுபவை தான் என்று நிரூபிக்கப்பட்டது.

    2-4-2-ஸப்த க₃த்யதி₄கரணம்-புலன்கள் பதினொன்று -பூர்வ பக்ஷியின் வாதம் – ஸங்கதி – முன் அதிகரணத்தில் ப்ராணங்கள் எனப்படும் புலன்களும் உண்டாக்கப்படுபவையே என்று நிரூபிக்கப்பட்டது. புலன்களைப் பற்றின பேச்சு எழுந்தமையால் ப்ரஸங்காத் (நினைவுக்கு வந்தபடியால்) புலன்களின் எண்ணிக்கை , அளவு, தன்மைகள் முதலானவற்றை அடுத்த சில
    அதிகரணங்களால் வ்யாஸர் நிரூபிக்கிறார். அதில் இவ் வதிகரணத்தில் புலன்களின் எண்ணிக்கை ஆராயப் படுகிறது.

    ஸம்சயம் – வேதத்தில் முரண் பட்டவை போல் தோன்றும் சில வாக்கியங்கள் உள்ள படியால் புலன்கள் ஏழு உள்ளனவா? அல்லது பதினொன்றா ? என்று ஸந்தேஹம் எழுகிறது.
    பூர்வ பக்ஷம் – ஏழு புலன்கள் தான் என்ற பூர்வ பக்ஷம் இவ் வதிகரணத்தின் முதல் ஸூத்ரத்தால் சொல்லப்படுகிறது.
    1-ஸப்த க₃தே : விசேஷி தத்வாச்ச – “(புலன்கள்) ஏழு, சொல்வதாலும் சிறப்பிக்கப்பட்ட தாலும்”
    க₃தி (செல்வது) – ஜீவாத்மா ஓருடலை விட்டு மற்றோர் உடலுக்குச் செல்லும் போது அவரோடு கூடச் செல்வது தான்
    இங்கு க₃தி’ (செல்வது) என்று குறிப்பிடப் படுகிறது. அந்த க₃தி ஏழு புலன்களுக்கு தான் உண்டு என்கிறது வேதம் –
    (ஸப்த இமே லோகா : யேஷு சரந்தி ப்ரணா : கு₃ஹா ஶயா : நிஹிதா 🙂
    லோகங்கள் எனப்படும் புலன்கள் ஏழு உள்ளன -அவை உறக்கத்தின் போது இதயத்தில் சுற்றி வருகின்றன.
    விசேஷிதத்வம் (சிறப்பிக்கப்படுதல்) – ப்ராணங்களை சிறப்பித்துச் சொல்லும் போது ஏழு தான் சொல்லப்படுகின்றன –
    யதா ₃ பஞ்சா வதிஷ்ட₂ந்தே ஜ்ஞாநாநி மநஸா ஸஹ । பு₃த்₃தி₄ஶ்ச ந விசேஷ்டேத தாமாஹு꞉ பரமாம் க₃திம் ॥
    “கண், காது, மூக்கு, நாக்கு, தோல் என்ற ஐந்து ஜ்ஞாந இந்த்ரியங்களும் மனதும் புத்தியும் எப்போது செயல்படாமல் அடங்கி இருக்கின்றனவோ , அப்போது மோக்ஷத்துக்கு வழி வகுக்கும் யோகம் கை கூடுகிறது”
    ஆகவே , ஜ்ஞாந இந்த்ரியங்கள் 5, மனது, புத்தி – இந்த ஏழும் தான் இந்த்ரியங்கள் என்கிறார்கள் பூர்வ பக்ஷிகள்.
    சில இடங்களில் பேச்சுப்புலன், கைகள், கால்கள், மலம் மற்றும் கழிக்கும் புலன்கள், அஹங்காரம், சித்தம் என்று மேலும் 7 சொல்லப் பட்டிருந்தாலும், அவை ப்ராணன் என்று அழைக்கப்படும் புலன்கள் அல்ல , ஆத்மாவுக்கு உதவாத படியால்.

    ஸித்தாந்தியின் வாதம்-ஸித்தாந்தம் –2-ஹஸ்தாத₃ய: து ஸ்தி₂தே அத: ந ஏவம்
    ஹஸ்தாத₃ய: து
    – கை முதலானவையும் (இந்த்ரியங்கள் தான்) அன்றோ
    ஸ்தி₂தே அத: – (உடலில் ஜீவாத்மா ) இருக்கும் பொழுது (இன்ப துன்பங்களை அநுபவிக்கக்) கருவிகளான படியால்
    (அத:) ந ஏவம்– ஆகையால் அவ்வாறு (கை கால்கள் முதலானவை புலன்கள் அல்ல என்பது அல்ல

    கண் மூக்கு காது முதலானவை உடலிலிருக்கும் ஜீவாத்மாவுக்கு இன்ப துன்பங்களை அநுபவிக்கக் கருவிகளாக இருப்பதால் தான் அவற்றைப் புலன்கள் என்கிறோம். அதே போல் பேச்சுப் புலன், கைகள், கால்கள், மலம் மற்றும் ஜலம் கழிக்கும் இந்த்ரியங்கள் என்று இந்த ஐந்து கர்ம -இந்த்ரியங்களும் கூட ஜீவாத்மாவுக்குக் கருவிகளான படியால் அவையும் புலன்கள் (இந்த்ரியங்கள்) தான். ஆகவே 5 ஜ்ஞாந இந்த்ரியங்கள், 5 கர்ம இந்த்ரியங்கள், 1 மனது – ஆக மொத்தம் 11 இந்த்ரியங்கள் (ப்ராணங்கள் -புலன்கள்) உள்ளன என்று தெளிவாகிறது.

    சில இடங்களில் இந்த 11 இந்த்ரியங்களோடு கூட புத்தி, அஹங்காரம், சித்தம் என்ற மூன்றையும் சேர்த்து,மொத்தம் 14 இந்த்ரியங்கள் என்கிறார்கள். ஆனால் உண்மையில் புத்தி, அஹங்காரம், சித்தம் என்பவை யெல்லாம் மனதினுணடய வெவ்வேறு பெயர்கள் தான். ஒரே மனது மனனம் (ஆராய்ச்சி) செய்யும் போது மனது என்றும் , கர்வம் கொள்ளும் போது அஹங்காரம் என்றும், உறுதியோடு இருக்கும் பொழுது புத்தி என்றும்,கவலை கொண்ட போது சித்தம் என்றும் கூறப்படுகிறது. எனவே அம் மூன்றும் தனித்தனி புலன்கள் அல்ல. -மொத்தம் 11 புலன்கள் தான் உள்ளன.
    வேதம் முதலானவற்றிலும் (த₃ ச இமே புருஷே பரணா : ஆத்மா ஏகாதா₃ ஸ )
    அதாவது இந்த ஆத்மாவுக்குப் பத்து ப்ராணங்கள் (வெளிப் புலன்களும்) ஒரு மனதும் உள்ளன” என்று கூறப் பட்டுள்ளது.
    ஆக இவ்வாறு புலன்கள் மொத்தம் 11 தான் என்று வ்யாஸர் நிரூபித்தார்.

    (அந்தகரணம் -மனஸ்ஸூ –சித்தம் -சிந்தனை பண்ண -புத்தி -உறுதி கொள்ள -அபிமானம் -அஹங்காரம் கர்வம் -ஒன்றுக்கே பல நிலைகள்-வைகாரிக -ஸாத்விக அஹங்காரத்தில் இருந்து பிறந்த இந்த்ரியங்கள் 11- ‘)

    2-4-3- ப்ராணாணுத்வாதி₄கரணம்-புலன்கள் அணுவானவை -புலன்களின் அளவு – ஸங்கதி –
    புலன்களின் எண்ணிக்கையை முடிவு செய்த பின்பு புலன்களின் அளவு என்ன என்று இவ்வதிகரணத்தில் ஆராய்கிறார் வேத வ்யாஸர்.
    பூர்வ பக்ஷம் – புலன்கள் எல்லாம் விபு₄வானவை , அதாவது உலகெங்கம் நீக்கமற நிறைந்திருப்பவை என்பது பூர்வ பக்ஷம்

    வேதத்தில் -(தே ஏதே ஸர்வே ஏவ ஸமா: ஸர்வே அநந்தா🙂 அதாவது-அந்த ப்ராணங்கள் (புலன்கள்)
    அனைத்துமே ஸமமானவை , அனைத்துமே அநந்தமானவை ” என்று கூறப் படுகிறது. அந்தம் என்றால் முடிவு. அநந்தம் என்றால் முடிவற்றது, எல்லை யற்றது என்று பொருள். ஆக, புலன்கள் எல்லை யற்றவை என்று சொல்லப் படுவதால் அவை ஆகாசம் போல் விபு₄க்களாகத் தான் இருக்க வேண்டும் என்பது அவர்கள் வாதம்.

    (மூல ப்ரக்ருதி லீலா விபூதியில் தான் உள்ளது -அதில் இருந்து உண்டான ஆகாயம் நித்ய விபூதியில் இருக்காதே –நம் ஸித்தாந்தத்தில் ஆகாசம் விபு இல்லை -இங்கும் -அதைச் சுத்தி அஹங்காரம் மஹான் மூல பிரகிருதி உண்டே -)

    (இதில் இரண்டு ஸூத்ரங்கள் உள்ளன –முதல் ஸூத்ரம் இதை விவரித்து அடுத்த ஸூத்ரம் மூச்சிக்காற்றின் அறிமுகம் -மேல் அதைப் பற்றி ஆராய்ச்சி உள்ளதால்)

    ஸித்தாந்தம் – 1- அணவ: ச – “(ப்ராணங்கள் எனப்படும் புலன்கள்) அணுவானவையும் கூட
    வேதத்தில் –(ப்ராணம் அநூத்க்ராமந்தம் ஸர்வே ப்ராணா : அநூத்க்ராமந்தி) அதாவது–ஓர் உடலிலிருந்து ஜீவாத்மா புறப்படும் பொழுது அவரைத் தொடர்ந்து ப்ராண வாயு (மூச்சுக் காற்று) புறப்படுகிறது, மூச்சுக் காற்று புறப்படும் பொழுது எல்லாப் புலன்களும் பின் தொடர்ந்து புறப்படுகின்றன” என்று கூறப்பட்டுள்ளது. புலன்கள் ஓரிடத்திலிருந்து புறப்பட வேண்டும் அவை விபு₄வாக (எங்கும் நீக்க மற நிறைந்து) இருக்க முடியாது.அளவு பட்டவையாகத் தான் இருக்க வேண்டும்.

    (இதே போல் உத் க்ராந்தி என்பதால் ஆத்மாவும் அணுவே என்று முன்னமே பார்த்தோம்)

    புலன்கள் உடலிலிருந்து புறப்பட்டுச் செல்லும் பொழுது யார் கண்ணுக்கும் தெரியாதபடியால், அவை அணுக்களாக (மிக நுண்ணியவையாக) தான் இருக்க வேண்டும், குடம் கட்டை போல் நடுத்தர அளவோடு இருக்க முடியாது.-“புலன்கள் அநந்தங்கள் (அளவற்றவை )” என்று வேதம் சொன்னது அளவின் அடிப்படையில் அல்ல. எண்ணிறந்த செயல்களை இந்தப் புலன்கள் செய்கிற படியால், செயலின் அடிப்படையில் எல்லை யற்றவை என்று தான் பொருள்.
    ஆகவே , ப்ராணங்கள் (புலன்கள்) எல்லாம் அணுவானவை தான் என்று நாம் முடிவு செய்யலாம்.

    இந்த அதிகரணத்தில் புலன்களைப் பற்றிச் செய்ய வேண்டிய ஆராய்ச்சியை முதல் ஸூத்ரத்திலேயே வ்யாஸர் முடித்து விட்டார். இரண்டாவது ஸூத்ரத்தால் ப்ராண வாயு எனப்படும் மூச்சுக் காற்றும் ப்ரஹ்மத்தால் உண்டாக்கப்படுவதே என்று நிரூபிக்கிறார்.

    ப்ராண வாயுவும் உண்டாக்கப் படுவதே
    இதற்கு எந்த புதிய யுக்திகளையும் அவர் காட்ட வில்லை , முன்னால் புலன்கள் உண்டாக்கப் படுபவை என்று நிரூபிக்க என்ன வாதங்களை முன் வைத்தாரோ , அதே வாதங்களால் தான் மூச்சுக் காற்று உண்டாக்கப்படுவதே என்று நிரூபிக்கிறார். அதனால் தான் இதை ஒரு தனி அதிகரணமாக ஆக்காமல் இவ் வதிகரணத்திலேயே சேர்த்துள்ளார்.
    இதை ஏன் இப்போது கூறுகிறார்?அடுத்த அதிகரணத்திலிருந்து மூச்சுக் காற்றைப் பற்றின ஆராய்ச்சியைச் செய்ய இருப்பதால், அதற்கு அறிமுகமாக மூச்சுக் காற்றும் உண்டாக்கப்படுவதே என்று இவ் வதிகரணத்தில் கூறுகிறார்.
    2-:ஸ்ரேஷ்ட ச – “
    ஸ்ரேஷ்டமானதும் – சிறந்ததும் (உண்டாக்கப் படுவதே )”
    உபநிஷத்தில் ப்ராண ஸம்வாதம் (ப்ராணங்களின் உரை யாடல்) என்றொரு கதை . ஒரு முறை புலன்களும் மூச்சுக் காற்றும் தங்களுக்குள் யார் சிறந்தவர் (ஸ்ரேஷ்டமானவர்) என்ற விவாதத்தில் ஈடுபட்டன. ப்ரஹ்மா கூறினார் – “
    எது உடலை விட்டுப் புறப்படும் பொழுது மற்றவர்கள் எல்லாம் செயலிழந்து போகிறார்களோ அதுவே சிறந்தது” என்று. கண், காது,மூக்கு முதலானவை புறப்பட்ட போதும் மற்ற புலன்களுக்கோ உடலுக்கோ பாதிப்பு இருக்க வில்லை . ஆனால் மூச்சுக் காற்று புறப்படத் தொடங்கும் பொழுதே புலன்களனைத்தும் வலுவிழந்து போயின. அதனால் ப்ராண வாயு தான் தங்களுக்குள் சிறந்தது (ஸ்ரேஷ்டமானது) என்று முடிவு செய்தார்கள். அதனால் ’ஸ்ரேஷ்டம்’ (சிறந்தது) என்று வ்யாஸர் இங்கு குறிப்பிடுவது ப்ராண வாயுவைத் தான். ப்ராணன் என்ற சொல் புலன்களையும் மூச்சுக் காற்றையும் குறிக்கும் பொதுவான சொல். ஸ்ரேஷ்ட ப்ராணன் (சிறந்த ப்ராணன்) என்ற சொல் மூச்சுக் காற்றுக்கு மட்டும் தனிப்பட்ட பெயர்.

    (கீழ் பிராண -புலன்களை சொல்லி இங்கு மூச்சுக்காற்று -என்பதே பொருள் -ஆத்மா -உள்ளே புகுந்து இயக்கம் ஒன்றைக்குறிக்கும் –பரமாத்மா -மிகவும் உயர்ந்த ஸ்ரேஷ்டரான ஆத்மா –
    அதே போல் ஸ்ரேஷ்ட பிராணன் என்று மூச்சுக் காற்றைக் காட்டும் -முக்கிய பிராணன்
    -பிராண ஸம்வாதம் சாந்தோக்கிய உபநிடதம் மற்றும் பிருகதாரண்யக உபநிடதம் ஆகிய நூல்களில் முக்கியமாக விவரிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆற்றல்களுக்கும் (இந்திரியங்கள்) மேலானது உயிர் சக்தி (பிராணன்) என்பதை இது உணர்த்துகிறது.-)

    பூர்வபக்ஷம் – வேதத்தில் (ஆநீத் அவாதம் ஸ்வத₄யா ததே₃கம்) என்று ப்ரளயத்திலும்
    மூச்சுக் காற்று ஜீவ ராசிகளை ரக்ஷிப்பது சொல்லப் படுவதால் மூச்சுக் காற்று நித்யமானது, உண்டாக்கப்படுவதல்ல.
    ஸித்தாந்தம் – ஸ்ருஷ்டிக்கு முன் ஒரே பொருள் (பரமாத்மா) தான் இருந்தது என்று வேதம் சொல்வதாலும்,-(ஏதஸ்மாத் ஜாயதே ப்ராண: ) அதாவது-ப்ரஹ்மத்திடமிருந்து ப்ராண வாயு உண்டாகிறது” என்று தெளிவாகச் சொல்கிற படியாலும் ப்ராண வாயு உண்டாக்கப் படுவது தான். “ஆநீத் அவாதம்” என்ற வாக்கியம் ’ஸ்வதா₄-என்றழைக்கப் படும் மஹா லக்ஷ்மி யோடு கூட பரமாத்மா உலகை ரக்ஷிக்கிறார் என்று தான் கூறுகிறது.

    (ஸ்வதயா லோக பாலிநீ -ஸ்ருதி -ஸ்ரீ யபதியையே குறிக்கும்)

    2-4-4-வாயுக்ரியாதி₄கரணம்-ப்ராண வாயு என்பது யாது? ப்ராணன் என்றால் என்ன? – ஸங்கதி – முன் அதிகரணத்தில் ப்ராண வாயுவும் உண்டாக்கத் தான் படுகிறது என்று நிரூபிக்கப்பட்டது. ப்ராண வாயு என்றால் என்ன என்று இவ் வதிகரணத்தில் ஆராய்கிறார்.
    பூர்வ பக்ஷம் -1- – ப்ராண வாயு என்பது வாயு அதாவது காற்று மட்டுமே , வேறொன்றும் இல்லை –

    வேதத்திலேயே (ய: ப்ராண: ஸ: வாயு:)-அதாவது-“ப்ராணன் என்பது வாயுவே தான்” என்று கூறப்பட்டு்ள்ளது.
    பூர்வ பக்ஷம் -2- – வெறும் வாயுவே தான் ப்ராணன் என்றால், உலகத்தில் எங்கு காற்றைப் பற்றிச் சொல்வதற்கும் ப்ராணன் என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் அப்படிக் காணப்பட வில்லை . எனவே ப்ராணன் என்பது வெறும் காற்று அல்ல -காற்றினுடைய ஒரு செயல் (க்ரியை ) தான் ப்ராணன் எனப்படுகிறது. உலகத்தில் உச்வாஸம் (மூச்சை இழுப்பது) மற்றும் நிச்வாஸம் (மூச்சை வெளியே விடுவது) என்ற செயல்கள் இருக்கும் போது தான் ப்ராணன் உ்ள்ளது என்று சொல்லப் படுகிறது. எனவே ப்ராண வாயு என்பது காற்றினுடைய ஒரு செயல் தான்.

    ஸித்தாந்தம் – 4 ஸூத்ரங்களால் இந்த இரண்டு பூர்வ பக்ஷங்களையும் நிரஸித்து தன் பக்ஷத்தைக் காட்டுகிறார் வ்யாஸர்.
    1– ந् வாயு க்ரியே ப்ருத₂க் உபதே ₃ஸாத் –
    “வாயுவும் செயலும் அல்ல, தனித்த உபதேஸத்தால்”
    வாயு மட்டுமே ப்ராணன் என்று சொல்வது பொருந்தாது, ஏனெனில் -(ஏதஸ்மாத் ஜாயதே ப்ராண : மந: ஸர்வேந்த்ரியாணி ) அதாவது-ப்ரஹ்மத்திடமிருந்து ப்ராணன், மனது, புலன்கள் ,ஆகாசம், வாயு முதலானவை உண்டாகின்றன” என்று வேதம் சொல்கிறது. இதில், வாயு என்று சொல்வதைத் தவிற ப்ராணன் என்று தனித்து ஒருமுறை கூறப் பட்டு்ள்ளது. வாயுவே தான் ப்ராணன் என்றால் இது தேவையில்லை –

    வாயுவின் செயல் (க்ரியை ) தான் ப்ராணன் என்பதும் பொருந்தாது, ஏனெனில் இந்த வாக்கியத்தில் நிலம் நீர் தீ ஆகாயம் என்ற த்ரவ்யங்கள் (பொருள்கள் ) தான் பட்டியலிடப் பட்டு்ள்ளனவே தவிற, அப்பொருள்களின் செயல்கள் எதுவும் சொல்லப் படவில்லை எனவே , தனித்து சொல்லப் பட்ட ப்ராணனும் ஒரு த்ரவ்யமாகத் தான் இருக்க வேண்டுமே தவிற செயலாக இருக்க முடியாது.
    ஆகவே , ப்ராணன் என்பது ஒரு சிறப்பான வாயு -ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட செயலைச் செய்யும் வாயு.

    ப்ராணன் என்பது ஆறாவது பூதமா?
    கேள்வி
    – ஆகாசத்திலிருந்து வாயு, வாயுவிலிருந்து நெருப்பு, நெருப்பிலிருந்து ஜலம் என்று அடுத்தடுத்த பூதங்கள் உண்டாகின்றன. அதுபோல் ப்ராணன் என்பதும் வாயுவிலிருந்து பிறந்த ஒரு
    மாறுபாடு என்றால் அது வேறு பூதமா?

    பதில் – 2- ச க்ஷுராதி₃வத் து தத் ஸஹ சிஷ்ட்யாதி₃ப்₄ய:
    சக்ஷு ராதி₃வத் து –
    சக்ஷுஸ் முதலான புலன்களைப் போல் (ஆத்மாவுக்கு ஒரு கருவி) தான், (வேறு
    பூதம் அல்ல )
    தத் ஸஹ சிஷ்ட்யாதி₃ப்₄ய: – அவற்றோடு கூட உபதேசிக்கப் படுதல் -முதலான வற்றால்
    ப்ராண வாயு என்பது ஒரு தனி ஆறாவது பூதம் அல்ல – கண் காது மூக்கு முதலான புலன்கள் எல்லாம் எப்படி ஜீவாத்மாவுக்குக் கருவிகளாக இருக்கின்றனவோ , அதுபோல் ப்ராண வாயுவும் ஒரு கருவி
    மட்டுமே –

    ஏனெனில் –
    1–ப்ராண வாயுவைப் பற்றின உபதேசங்களில் அது புலன்களோடு கூடத் தான் பேசப் படுகிறது-உதாஹரணத்துக்கு ப்ராண ஸம்வாதம் என்று புலன்களுக்கும் ப்ராண வாயுவுக்குமான உரையாடலைக் கடந்த அதிகரணத்தில் பார்த்தோம். அவற்றோடு கூட ஒற்றுமை இருப்பதால் தானே அவற்றோடு சேர்ந்து பேசப் பட்டிருக்க வேண்டும்.

    2-ப்ராணங்கள் என்ற சொல் புலன்களுக்கும் ப்ராண வாயுவுக்கும் பொதுவாக உள்ளது.
    ப்ராண வாயுவை ’ஸ்ரேஷ்ட ப்ராணன்’-அதாவது-’சிறந்த ப்ராணன்’ என்று வேதம் கூறுகிறது.-எனவே , அவற்றோடு ஒற்றுமை இருக்க வேண்டும்.

    ப்ராணன் ஒன்றா? ஐந்தா?
    கேள்வி
    – கண் காது முதலானவை தங்கள் செயல்களின் மூலம் ஜீவாத்மாவுக்கு உதவுகிறபடியால் கருவிகள் ஆகின்றன.-அப்படி எந்த ஒரு உதவியும் ப்ராண வாயுவால் செய்யப் படாத போது அது எப்படி கருவியாக இருக்க முடியும்?

    3-அகரணத்வாத் ச ந தோ₃ஷ: ததா₂ ஹி த₃ர்சயதி
    அகரணத்வாத் –
    “ஆத்மாவுக்கு உதவக் கூடிய செயல் இல்லாத படியால் [கரணம் என்றால் க்ரியை (செயல்)]
    தோ₃ஷ: ந ச – கருவியாக இருக்க முடியாது” என்ற தோஷம் இல்லை .
    ததா₂ ஹி த₃ர்சயதி – ப்ராணன் ஜீவாத்மாவுக்குச் செய்யக் கூடிய உதவிச் செயலை வேதமே காட்டுகிற படியால்.
    (யஸ்மிந் உத்க்ராந்தே இத₃ம் சரீரம் பாபிஷ்ட தரம் இவ த்₃ருச்யதே ஸ: வ: ச்ரேஷ்ட₂:) அதாவது-“எந்த ஒரு ப்ராண வாயு புறப்படும் பொழுது உடலை மிகத் தாழ்ந்ததாக ஆகிறதோ , அது தான் நமக்குள் சிறந்தவன்” என்று புலன்கள் கூறுவதாக வேதம் காட்டுகிறது. எனவே , சரீரம் மற்றும் புலன்களைத் தாங்குதல் என்கிற முக்கியமான உதவியை ஜீவாத்மாவுக்கு ப்ராண வாயு தான் செய்கிறது. எனவே அது கருவியாகத் தட்டில்லை

    கேள்வி – ப்ராணம் அபானன் வ்யானன் உதா₃னன் ஸமானன் என்று தனித் தனி பெயர்கள் இருப்பதாலும், அவற்றுக்குத் உடலில் தனித் தனி இடங்களும் செயல்களும் இருக்கிற படியாலும் 5 ப்ராண வாயுக்களும் வெவ்வேறானவையா?

    பதில் – 4-பஞ்ச வ்ருத்தி: மநோ வத் வ்யபதி₃ச்யதே
    பஞ்ச வ்ருத்தி:
    – ஒரே ப்ராண வாயு தான் ஐந்து விதமான செயல்பாடுகளை உடைய படியால்
    வ்யபதி₃ச்யதே – ஐந்தாகக் கூறப்படுகிறது
    மநோவத் – (காம: ஸங்கல்போ விசிகித்ஸா
    ஶ்ரத்₃தா₄ அஶ்ரத்₃தா₄ த்₄ருதி: அத்₄ருதி: ஹ்ரீ: தீ₄: பீ₄: இத்யே தத் ஸர்வம் மந ஏவ- என்கிற வேத வாக்கியத்தின் படி மனதுக்கு ஆசை , எண்ணம், ஆராய்ச்சி, ஈடுபாடு, ஈடுபாடின்மை , தைர்யம், தைர்ய மின்ணம, வெட்கம், பயம் என்று பல செயல்பாடுகள் இருந்தாலும் மனது ஒன்றுதானே . அதே போல் ப்ராண வாயுவும் ஒன்று தான்.
    ஆக ப்ராணன் என்பது ஒரு சிறப்பான வாயு -ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட செயலைச் செய்யும் வாயு –

    ——————————————————————

    ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ உ வே வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

    ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த-ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம்-பகுதி-2-

    May 15, 2026

    ஸ்ரீ ஶைலேஶ தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
    யதீந்திர ப்ரவணம் வந்தே ரம்யாஜமாதரம் முநிம்

    துறவிகளின் அரசரான பகவத் ராமாநுஜரிடம் அளவற்ற அன்பு கொண்டவரும் ஞானம், பக்தி போன்ற குணங்களின் கடலான ஸ்ரீ ஶைலேஶரின் கருணைக்கு பாத்திரமான ரம்யஜாமாத்ரு முநியை (மணவாள மாமுனிகள்) நான் வணங்குகிறேன்).

    ஸ்ரீஶடாரி குரோர்திவ்ய ஸ்ரீபாதாப்ஜ மதுவ்ரதம்
    ஸ்ரீமத் யதீந்த்ர ப்ரவணம் ஸ்ரீலோகார்ய முநிம் பஜே

    (ஸ்ரீ ஶடகோபாசார்யரின் திருவடியும் ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவ ப்ரபந்தத்தை அருளியவருமான தாமரை மலரினின்று வழியும் தேன் போன்ற பிள்ளை லோகம் ஜீயரின் திருவடிகளை வணங்குகிறேன்).

    குருநாதனெங்கண் மணவாளயோகி குணக்கடலைப்
    பலநாளும் அண்டிப்பருகிக் களித்திந்தப் பாரினுள்ளே
    உலகாரியன் முநிமேகம் இந்நாளென்னுள்ளம் குளிர
    நலமான சீர்மை மழை நாளும் பொழிந்தது இந்நிலத்தே

    (மணவாள மாமுனிகளின் குணங்கள் என்னும் கடலிலிருந்து பருகி அனுபவித்தவர் நம் ஆசார்யர் (பிள்ளை லோகம் ஜீயர்). இவ்வுலகில் மேகம் போல இருக்கும் அத்தகைய பிள்ளை லோகம் ஜீயர், தம் மேன்மையான குணங்கள் எனும் மழையை இந்த பூமிக்கு அனுதினமும் என் மனம் குளிரக் கடாக்ஷித்தார்)


    இனி நம்பெருமாள் விருத்தாந்தம்
    பின்பு நம்பெருமாளும்‌ *அரங்கதகருள் முனைவனைத்‌- திருமாலிருஞ் சோலை நின்றான்‌ என்கிற சேர்த்தியாலே -சிலம்பாறு பாயும் தென் திருமாலிருஞ் சோலையிலே யெழுத்தருளி! இவ்விடம் ஆயிரம் ஆறுகளும் சுனைகள்‌ பலவாயிரமும்‌ ஆயிரம்‌ பூம் பொழிலுமுடைத்தாய்‌ திருப் பொன்னியாலே சூழப்பட்ட ஆராமம்‌ சூழ்ந்த யரங்கத்தைப் போலே அதி மநோ ஹரமாயிருக்கையாலே, பிள்ளையைப் பிரிந்த க்லேசமெல்லாம்‌ மாறி

    சிகரிஷு விபிநேஷ்வப் யாபகா ஸ்வச்ச தோயா ஸூ
    அநுபவசி ரசஞ்ஜோ தண்டகாரண்ய வாசாந்
    ததிஹ தத் அநு பூதவ் சாபிலாஷோத்ய ராம
    ஸ்ரயஸி வந கிரீந்த்ரம் ஸூந்தரீ பூய பூயஸ் –-ஸுந்‌, ஸ்தவம்‌
    103 —

    தண்டகாரண்யம் போன்ற காடுகள்-கோதாவரி கங்கை போன்ற நதிகள் –இவற்றால் உண்டான விலக்ஷண ஆனந்தத்தை அனுபவிக்க வேண்டியே இங்கே அழகராக சேவை சாதித்து அருளுகிறீர்-சித்ரா கூடாதி பர்வத ஸ்தானத்தில் இத்திருமலையும் தண்டகாரண்யம் -ஸ்தானத்தில் வனராஜிகளும்-கங்கா நதி ஸ்தானத்தில் நூபுர கங்கையும் கொள்ளக் கடவன ரசிகரான தேவரீர் சித்ரா கூடாதி பர்வத ராஜங்களிலும் -என்னும்படியான வனங்களிலும் தண்டகாரண்ய வாசாந் -அநுபவசி –சித்ரகூட மனு ப்ராப்ய-பரத்வாஜஸ்ய சாஸனாத் ரம்யமா வசதம் க்ருத்வாரமமானா வநே த்ரய தேவ கந்தர்வ சங்கா சாஸ் தத்ர சே ந்யவசன் ஸூகம் –இத்யாதிப்படியே ஆரண்ய வாச ஸூகத்தை அனுபவித்தீர்-அநுபவசி -வர்த்தமான பிரயோகம் –அனுபவம் தொடர்ந்து கொண்டே இருப்பது பற்றி-இங்கனம் திருஉள்ளத்துக்கு பங்காக அனுபவித்த ராசிக்ய அதிசயத்தாலே மீண்டும் அவ்வனுபவங்களைச் செய்து போர திரு உள்ளம் பற்றினவராய்க் கொண்டு அழகராக திருவவதரித்து திருமாலிருஞ்சோலை மலையை உறைவிடமாகக் கொண்டு அருளிற்று–என்கிறபடியே வந வாஸ லாஞ்சையை யுடையராய்‌ வநகரி ப்ரஸ்தமான அங்கே சிலகால மெழுந்தருளி யிருந்து விச்ரமித்தருளி, அழகிய மணவாளன்‌ கிணற்றையும்‌ அறஞ்சுவராகி நின்ற வரங்கரான தாம்‌ தார்‌மிகன்‌ வைத்த தணணீர்ப் பந்தலோ பாதியாக உண்டாக வைத்து, பின்பு அனைத்துப் பரிகரத்துடனே கொல்லி காவவன்‌ கூடல் நாயகன்‌ கோழிக் கோன்‌ குலசேகரன்‌ என்று அதுவே நிரூபகமாம்படியான ஸ்ரீகுலசேகரப் பெருமாளாண்டருளிய தேசத்தை விரும்பி யெழுந்தருளி அவ்வவ தேசங்களிலே சில நாள்‌ இனிதமர்ந்‌திருந்து; அநந்தரம்‌ கோழிக்கோடேற எழுந்தருள:

    சுடர் கொள் சோதியைத்‌ தேவரும்‌ முனிவருந் தொடர என்கிறபடியே மற்ற திவ்ய தேசத் தெம்பெருமானகளும்‌ நம்மாழ்வாரும்‌ அங்கே வலசையாக எழுந்தருள, அவர்களையும்‌ ஆதரித்தரு௭
    ஆழ்வாரைத் தம்முடைய திவ்ய ஸிம்ஹாஸனத்திலே வைத்துக்‌ கொண்டு. அடி யடையாதாள் போலணுகி யடைந்த இவரைக்‌ கண்டு கொண்டிருந்து, தம்முடைய திவ்ய ஸிம்ஹாஸனமான வட்ட
    மணையையும்‌ முத்துச் சட்டையையும்‌, பகல் திரு முன் பந்தத்தையும்‌ ப்ரஸாதித்து க்ருபை பண்ணி அங்கு நின்றும்‌ புறப்பட்டு
    ஆழ்வாருடனே தேனைக் கிடம்பைக்கு எழுந்தருளி அங்கே சிறிது காலமெழுந்‌தருளி யிருந்து, *’கூடவருகிறேன்‌” என்ற ஆழ்வாரை நிறுத்தி, புங்கனூர்‌ வழியாக வெழுந்தருளி அங்கே யிருந்து திருநாராயண புரத்தேற ப்ரதஷிணமாக வெழுந்தருளி, அங்கே சிலநாள்‌ விஹரித்து, திலதமுலகுக்காய்‌ தின்ற திருவேங்கடத்தை யடைந்து

    ஸுரம்ய மாஸாத்யது சித்ர கூடம்‌ நதீஞ்சதாம்‌(மால்யவதீம்‌ ஸுதீர்த்தாம்‌ |,நநந்த ராமோ ம்ருக பக்ஷி ஜுஷ்டாம்‌ ஜஹெளச துக்கம்‌ புரவி ப்ரவாஸாத்‌[ஸ்ரீரா ஆர. 59-38 )ஸ்ரீராமபிரான்‌ மிக அழகியதான திரி கூடத்தையும்‌ நல்ல நீருடையதும்‌ விலங்குகள்‌ பக்ஷிகளால்‌ விரும்பப் பட்டதுமான அந்த மால்யவதீ என்னும்‌ நதியையுமடைந்து அயோத்தி யினின்றும்‌ பிரினால் உண்டான துக்கத்தையும்‌ மறந்தான்‌ ]–என்கிற படியே *நன் மணி வண்ணனாரான குளிரருவி வேங்கடத்தில்‌ கூடி யிருந்து குளிரப் பெற்று, ‘ மந்திபாய்‌ வட வேங்கடமாலை வானவர்கள்‌ சந்தி செய்ய நின்றான்‌ அரங்கத்தரவினணையான்‌ என்னும்படியே ஏகமான ஆகாரத்தாலே அங்கே அநேக காலம்‌ திவ்யோத்ஸவாதி வைபவங்களுடனே வாழ்ந்து கொண்டெழந் தருளி யிருந்தார்‌.

    இனி ஆம்வார்‌ வ்ருத்தாந்தம்‌
    கோழிக் கோட்டினின்றும்‌ பெருமாள்‌ புறப்பட்டெழுந்‌தருளுகிற போது கூடப் புறப்பட்டருளாமல்‌, ஸ்தாநத்தார்‌ ஸ்தலத்தார்‌ பரஸ்பர வைஷம்யத்தாலே தடங்கல்‌ பண்ண அந்த ஸமயத்திலே மேற்கும்‌ கள்ளர் பற்றாய்‌, கிழக்கும்‌ கள்ளர்‌ பற்றாய்‌ வடக்கும்‌ துருஷ்க மயமாயிருந்த படியினாலே அத்திசைகளில்‌ இருக்கப்‌ போகாமல்‌ ஆழ்வாரை வலசையாகத்‌ தென் மேற்கு மூலையிலே பஹுதூரம்‌ எழுந்தருளப்‌ பண்ணிக்‌ கொண்டு செல்ல, அங்கே கள்ளர் பயம் மிக, வேறு கத்யந்தர மில்லாமையாலே அத்யுந்நததமான ஒரு சரிவு கண்டு ஆழ்வாரை ஒரு திருப் பெட்டகத்திலே யெழுந்தருளப் பண்ணி, சங்கிலி கட்டி ‘அந்த அரங்கிலே பாங்காக எழுந்தருளப்‌ பண்ணி விட்டு திருவாபரணங்களையும்‌ திருப்பொக்சசத்தையும்‌ நிக்ஷேபித்து எல்லோரும்‌ மலையினின்றும்‌ இறங்கின வளவிலே கள்ளர்‌ பள்ளர்‌ கையிலகப்பட்டவர்கள்‌ உடைகளை சூறை கொடுத்து விட, அதற்கும் தப்பினவர்கள்‌ தங்கள்‌ தங்களுடைய இடம்‌ போய்ச் சேர்ந்தார்கள்‌-

    அவர்களிலே தோழப்பர்‌ என்பாரொருவர்‌ ஆழ்வார்‌ திருவடிகளிலே அத்யந்த ப்ரவணராய்‌ அபிமானியா யிருக்கையாலே,தாம் மதுரையிலே சென்று திருமலை யாழ்வாருக் கறிவிக்கக்‌ காத்‌திருந்து இச் செய்தியை யெல்லாம் தெரியுச்‌ செய்ய , திருமலை யாழ்‌வாரும்‌ எல்லாவற்றையுங்கேட்டு அபிமானித்து மலையாள ராஜாவுக்கு தம்முடைய ஸ்ரீமுகமும்‌ கொடுத்து, அத்தரங்கராய்‌ ராஜ வல்லபராய் ஸ்ரீகார்‌யத்திலே அபிமானிகளா யிருக்கும் ஸ்வ படர்களையும் கூட்டி, த்ரவ்யமும்‌ ஸாதித்து அனுப்பி யருள-அவர்களும் அப்படியே திருவாங்கோட்டூரிலே. செல்ல, கலஹம்‌ தெளிந்தபடியினாலே ஹ்ருஷ்டராய்‌ ராஜாவைக்‌ சுண்டு செய்‌தியைச்‌ சொல்ல, திருமலை யாழ்வாருடைய ஸ்ரீமூகத்தை ஸரஸா வஹித்தித்துக்‌ கொண்டு. ப்ரியப்பட்டு, தோழப்பருக்கு பஹுமானம்‌, பண்ணி, ஆழ்வாரைத்‌ திருக் கணாம்பியிலே யெழுந்தருளப்‌ பண்ணி வைக்கும்படி மநுஷ்ய ஸாமக்ரியையும்‌ அர்த்த ஸாமுக்ரியையும்‌ பூர்ணமாகக்‌ கொடுத்தனுப்ப, அவர்களும்‌ முத்‌திரிப்பு என்‌கிற ஊரிலே சென்று சங்கலிகஞம்‌ ஊஞ்சற் பலகைகளும் சேர்த்துக்‌, கொண்டு மலையிலேயேறி,-சரிவிலே யிழிவாரார்‌?’? “என்று, சித்திக்க, ப்ராண ஸந்தேஹிகளாகையாலே எல்லாரும்‌ பின்‌ வாங்கி யிருக்க தோழப்பர் “நாமே, இழிகிறோம்‌” என்று துணிய: அவருக்கு அப்போது ஸ்தலத்தார்‌ சொன்ன கட்டளை : உமக்கு, ஆழ்வார்‌ ஸந்நிதியில்‌ வகுளாபரண பட்டரோடொத்த ஸ்வதந்த்‌ரமும்‌, திரு மஞ்சன காலத்திலே ஸஹஸ்ர தாரை கண்டருளிய திருவந்திக் காப்பு ஆனவுடனே ஆழ்வார்‌ திருமுடியிலே சாத்தி யிருக்கிற அலுங்கலும்‌ பூந் தொடையலையும்‌, ஆழ்வார்‌ தோழப்பர்‌” என்‌று உமக்கு அருளப்பாடிட்டு நித்யமாக ஸாதிக்கிறோம்‌” என்று சொல்லி, அனைவரும்‌ உகந்து ஓமறைந்து ஆழ்வார் தோழப்பரைத்‌ தூங்கு பலகையிலே ஏற்றிச்‌ சரிவிலே விட்டு ஸாவதாநமாகப்‌ பார்த்திருக்க அவரும்‌ அதிலிறங்கித்‌ திருப்பெட்டகத்தைத் தேட, ஒரு ஷேமகாரி பஷி திருப் பெட்டகத்தின்‌ மேலே யிருந்து நெடும் போது சப்திக்க, ‘இதுவெறுமனன்று’ என்று உகந்து திருப் பெட்‌டகம் கண்டு ஸேவித்து சிறிது பொழுது ஆழ்வாரை த்யாநிக்க-உடனே அப்பஷி அப்புறத்திற் செல்ல, திருக் காப்பு நீக்‌கி ஆழ்வாரைக் கண்டு கொண்டு ஸேவித்து க்ருதார்த்தராய்த்‌ திருப் பெட்டகத்தை திருக் காப்பு சேர்த்துக்‌ கட்டி தூங்கு பலகையிலே ஏறி யருளப் பண்ணி: சங்கலியைக்‌ குலுக்க, அவர்களும் மேலே சேர்த்துக் கொள்ள தோழப்பர்‌ எழுத்தாணியையும் ஓலையையும் கொண்டு போனவராகையாலே அங்கு நடந்த வ்ருத்தாந்தத்தை யெழுதி வைக்கசக் கண்டு அனைவரும்‌ சந்தோஷப்பட்டு சேவித்துத் திருட்பெட்டகத்தைப் பலகையினின்றும் இறக்கி யருளப் பண்ணி தோழப்பர் வரும்படிக்குத் திரும்பி பலகையை விட வந்து சேர்ந்தவுடனே தோழப்பரும் ஏறி சங்கிலியைக்‌ குலுக்க

    அவர்களும் சங்கிலியை ஏத்த நடுவே. தட்டுப்‌ பட்டுத்‌ தோழப்பர்‌ விழுந்து விட்டார்‌. பிற்பாடு அவர்‌ குமாரரான அப்பன்‌ பிள்ளைக்கு எல்லாருமாக சமாதானம்‌ சொல்லி ஆழ்வாருடைய சமீபத்திலேயே திருமேனி விட்டவராகையாலே அவருக்கு நீர்‌ சோகிக்க வேண்டா- ஆழ்வார்‌ உம்மை புத்ரராக அபிமானித்தருளினார் -உமக்கு சந்திதியிலே முன்‌ கட்டளை ப்ரகாரத்துக்கு, ஆழ்வான்‌ தோழப்பர் என்று, அருள் பாடும்‌. வரிசைகளும்‌ நடப்பிக்கிறோம் !” என்று கொல்லி, ஆழ்வாரை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு முத்திரப்பிலே சென்று ஆழ்வாருக்கு அஞ்சு நாள் ஸ்ம்ப்ரோஷணம்‌ கண்டருளப்‌ பண்ணி மலையினின்றும்‌ புறப்பட்ட வன்று தொடங்கி திருவடி நம்பியாரும்‌ ஸ்தலத்தாரும்‌ ஆழ்வாரப்பனும்‌ நன்றாக ஆராதித்துக்‌ கொண்டு போந்தார்கள்‌.-அனைத்துப்‌ பரிகரத்துடன்‌. திருக்கணாம்பியில்‌ எழுந்தருளப் பண்ணி ஸம் ப்ரோஷணம்‌ செய்து நித்தியப்படி திருவாராதனம் முதலான. விசேஷ உத்சவங்கள் எல்லாம்‌ நடத்‌திக் கொண்டு ஆழ்வார்‌ திருவடிகளில்‌.அதிப்ரவணராய்‌ அபிமானிகளாய் வாழ்ந்து. கொண்டிருந்தார்கள்‌-

    கள்ளர் பற்றி லுள்ளார் இச் செய்தியைக் கேட்ட மாத்திரத்திலே தெய்வ யோகத்தாலே ஆநுகூல்யம்‌ பிறந்து ஆழ்வார்‌ திருவடிகளிலே ப்ரவணராலய அநேகமாக ஸத்கரித்து முன்பு பறித்‌ததையும்‌ ஸமர்ப்பிக்க, அழகிய மணவாளன்‌ ப்ரஸாத லப்தமான பொற்றகடு சேர்த்த வட்ட மணையையும்‌, முத்துச்‌ சட்டையையும்‌!வெள்ளி தீவர்த்திக் கோலையும்‌, சித்தையையும்‌ மைர்ப்பித்து ஆழ்வாரைத்‌. திருக்கணாம்பி யிலெழுந்தருளப்‌ பண்ணும்‌ படிக்குத்‌ திருப் பல்லக்கு முதலானவைகளைச் சேர்த்து மார்க்க கோதஷம்‌ பண்ணி மங்கள வாத்தியங்களுடனே எழுந்தருளப்‌ பண்ணினார்கள்‌. ஒரு பெரிய திருவடி பக்ஷியும்‌ ஆழ்வாருக்கு மேலாக ஆகாசத்திலே சூழ்ந்து கொண்டு திருக்கணாம்பியிலே ஆழ்வார்எழுந்தருளி யிருக்கற கோயில்‌ மரத்திலே கூண்டு கட்டி வஸிக்க இந்த ஆச்சர்யத்தைக்‌ கண்டு எல்லாரும்‌ ஆழ்வாரை ஸேவித்து அவர்‌ ப்ரபாவத்தைக்‌ கொண்டாடிக்‌ கொண்டு தங்கள்‌ தங்கள்‌ சக்திக்குத் தக்கபடி, சிறப்பு ஆராதனமும்‌ நித்ய உத்சவமும் யதோ உசிதம்‌. விசேஷ உத்சவமும்‌ நடப்பித்துக் கொண்டு போந்‌ தார்கள் -இந்த அதிசயங்களை யெல்லாம்‌ திருவநந்தபுரம்‌, திருவட்டாறு திருவண்பரிசாரம்‌, திருவல்லவாழ்‌ முதலான திவ்ய தேசங்‌களிலுள்ள போற்றிமார்‌ நம்பூதரிமார்கள்‌ கேட்டு உடனே வந்து ஆழ்வாரை ஸேவித்து வித்தராய்‌ அவரை விட்டுப்‌ பிரிய மாட்டாமல்‌ உதய காலத்திலே எப்போதும்‌ போலே திருமஞ்சனங் கொண்டருளி தத்யோதநமும்‌ நெய்த் தோசைப் படியும்‌, பாகூட்டின கட்டிப்‌பொரியும்‌, பாற்கஞ்சிக் கடாரமும்‌ நித்யப்படியாக அமுது செய்‌தருளி விநியோகமாய்‌, பிற்பாடு ஒரைவகைகளும்‌ அமுது செய்‌தருளி, மத்யாஹ்ந காலத்திலே நாயகமலங்காரத்துடனே வரிசையாக சம்பாவவஸரமும்‌ அமுது செய்தருளி, திருப்பணியாரவகைகளும்‌ அமுது செய்து பின்பு உச்சிக் காலமும்‌ அமுது செய்தருளி காலோசிதமான உபசாரங்களுடனே விச்ரமித்தருளத்‌ திருக்காப்‌புச்‌ சேர்த்து மீளவும்‌ போது போக, ,நாலு நாழிகைக்குத்‌ திருக்‌காப்பு நீக்கி ஸாயங்காலம்‌ திருவாராதனங் கண்டருளி ‘அஸ்தமனஸமயத்திலே உப்புச்சாற்றமுதும்‌, சம்பாவும்‌, தோசைப்படியும்‌ பொரியும்‌ அமுது செய்து விநியோகமாய்‌, பிற்பாடு அத்தாளம்‌அமுது செய்த்ருளி, இராக்காலமுமாய்‌ ஸ்ரீபலிதுடி, திருவுற்றசாதம்‌, அரவணை, சுக்கு கஷாயம்‌, இவைகளெல்லாம்‌ அமுது செய்‌யும்படி போற்றிமார்‌ இட்டம்‌ பண்ணி நடப்பித்துப்‌ போந்தார்‌கள்‌. திருநகரியைப் போலே-பரிஜனங்களும்‌ பூர்ணமாய்‌ ஏழு மடாதிபதிகளும்‌ ஒன்று பட்டு ஆழ்வார்‌ திருவடிகளிலே அதி ப்ரவணராய்‌அபிமானிகளாய்‌ தத்தத் காலோசிதமான உத்ஸவங்களை நன்றாக நடப்பித்துக்‌ கொண்டு வாழ்ந்தருளியிருந்தார்க்கள்‌.

    இனி கோயில்‌ வ்ருத்தாந்தம்‌
    பெருமாள்‌ புறப்பட்டருளின பின்பு-அபிவ்ருஷ பரிம்‌லாநா: என்னும்படி அயோத்தி யென்னுமணி நகரமானது அழகழிந்தாற் போலே நம் பெருமாள்‌ புறப்பட்டருளின பின்பு அற்ற பற்றர்‌ சுற்றி வாழும்‌ அந்தணீரங்கம்‌ என்றும்‌, நல்லார்கள்‌ வாழும்‌ நளிரங்கம்‌ என்றும்‌, தென்னாடும்‌ வடநாடும்‌ தொழ நின்ற
    திருவரங்கம்‌
    என்னும்படியான கோயிலானது அழகழிந்தது.-பின்னும்‌ அங்கே வந்து ஆக்ரமித்தவன்‌ செய்தபடி: -திட்‌ கொடி மதிளைப்‌ பிடுங்கி கண்ணனூரிலே தனக்கு ஆவரணமாகக்‌ கட்டுவித்து, பின்னையும்‌ அங்கே உபத்ரவங்களைப் பண்ண உபக்ரமிக்க , அவ்வளவிலே, சிங்கப் பிரான்‌ என்னும்‌ பேரை யுடையராய்‌ பெருமாள்‌ திருவிளையாட்டமான அழகிய மணவாளர்‌ காணிய ப்ராஹ்மணராய்‌ தமிழ்‌ விரகரான ஒருவர்‌ துருஷ்கன்‌ வாசலிலே காரியம்‌ ஆராய்ந்து நின்று அவன்‌ நினைத்தபடி ஒன்றும்‌ செய்யாமல்‌ அவனுக்கு அநுகூலமாகவே சொல்லிக்‌ கொண்டு, மதிள்கள்‌, மாளிகைகள்‌, கோபுரங்கள்‌ துன்னு மணி மாடங்கள்‌, சாலைகள்‌ தொடத்‌கமானவற்றையும்‌, செம்பொனாய வருவரை யனைய கோயில்‌ மணி யனாரையும்‌ காத்து ரக்ஷித்துக்கொண்டு போந்தார்‌. அதுகண்டு அங்குண் டான ஆசார்யர்கள்‌ எல்லாரும்‌ அவரை அநுவர்த்தித்து நல்வார்த்தை சொல்லிக்‌ கொண்டு போந்தார்கள்‌.

    திருவாய்மொழிப் பிள்ளை வையவம்‌.
    பிள்ளை லோகாசாரியர்‌ திருவடிகளில ஆச்ரயித்தவளான ஸாத்விகை அம்மையார்‌ அவர்‌ விச்லேஷம்‌ பொறுக்க மாட்டாமல்‌ பரமபதத்துக் கெழுந்தருள, அவள்‌ குமாரரான திருமலை யாழ்வாரை
    அவர்‌ சிறிய தாயாரான அம்மையார்‌ போஷித்துப்‌ போந்தார்‌.- திருமலையாழ்வாரும்‌ பால்யங்‌ கடந்து ப்ராப்த யெளவநராய்‌ ப்ரவபுத்வமுலடயராய்‌, சதிரிளமடவார்‌ தாழ்ச்சியை மதித்து, அணி மென் குழலாரின்பக் கலவியமுதுண்டு கொண்டு திரிய, இவர்‌ சதிருடைய தமிழ்‌ விரகராயிருக்கையாலே இவரைத்‌ திருத்துவதாகக்‌ கூர குலோத்தம தாஸர்‌ திருவுள்ளம் பற்றி இவர்‌ முன்பே
    திருவிருத்தத்தை அநுஸந்தித்துக்‌ கொண்டு எழுந்தருள, இவர்‌ (திருமலை யாழ்வார்‌) அர்த்தவானாய்‌ அதற்குப்‌ பொருள்‌ கேட்க,நாயனும்‌, “உனக்குச்‌ சொல்ல வொண்ணாது’ என்று குத்ஸித்து
    உமிய, (திருமலையாழ்வார்‌ அப்போது ராஜ ப்ரதிநிதியாய்‌ ராஜ்ய பாரம்‌ பண்ணிக் கொண்டிருந்தார்‌. ராஜா இறந்து ராஜ புத்ரர்கள்‌ பாலர்களாயிருந்தபடியால்‌ ராஜ பத்நி ராஜய பாரத்தை இவரிடம்‌
    ஓப்புவித்திருந்ததாகத்‌ தெரிகிறது) திருப்பல்லக்கிலே இருந்த இவர்க்கு (திருமலை யாழ்‌வாருக்கு) பிள்ளை லோகாசாரியர்‌ விசேஷ கடாக்ஷம்‌ பண்ணி யிருக்கையாலே உமிழ்ந்தற்குக்‌ கோபியாமல்‌ ஸ்வபடரை விலக்கி அச் செய்தியை அம்மையாருக்குச்‌ சொல்ல, அவளும்‌ பிள்ளை லோகாசரியர்‌ திருவடிகளிலுண்டான ஸம்பந்தத்தை ஸ்மரிப்பிக்க,இவர்க்கு அநுதாபம்‌ பிறந்து ஆச்ரயணோந்முகராயிருக்க–அக் காலத்திலே சிங்கப்பிரானுக்குத்‌ திருமணத் தூண்‌ நம்பி!”என்று திருநாமமாயிருக்க, அவர்க்கு எல்லாரும்‌ ப்ரீத்யதிசயத்‌தாலே அனுவர்த்தித்து நல் வார்த்தை சொல்ல அவரும்‌, ‘பலரும்‌ அருளிச்‌ செய்கையாலே எனக்கொன்றும்‌ தெரிகிறதில்லை; வாக்மியா யிருப்பாரொருவரைத்‌ தெளிவா யருளிச்‌ செய்யும்படி கற்பிக்க வேணும்‌ என்ன; அவர்களும்‌, திருமலையாழ்வாருடைய வாக் வ்யவஹார ஸாமர்‌தயத்தைக்‌ கண்டு “நீர்‌ சொல்லும்‌!” என்று நியமிக்க, அவரும்‌ அப்படியே சொல்ல, அவ் வார்த்தைகள் அஸம்ப்‌ரதாயமாயிருந்த படியையும்‌, அவருடைய ஆச்ரய ருசியையும் கண்டு, இவரை ஸத் ஸம்ப்ரதாய ப்ரவர்‌த்தகரர்க்கக்‌ கடவோமென்று -ஒது முடும்பை யுலகாசிரியரனருள்‌ ஏதும் மறவாத எம்பெருமானான கூரகுலோத்தமதாஸர்‌ இவரை அநுவர்த்தித்துத்‌ தம்முடைய நிர்ஹேதுக க்ருபையாலே செயல்‌ நன்றாகத்‌ திருத்துவதாக மதுரையிலே சென்று ஸமயம்‌ பார்க்க, ஒரு நாளளவிலே திருமலையாழ்வார்‌ யானை மேலேறிப்‌ புறப்பட, தாம்‌ மேட்டு நிலத்திலே நின்று தம்மைக்‌ காண்பித்துக்‌ கொள்ள, திருமலையாழ்‌வார்‌ இவரைக்‌ கண்டவுடனே பிள்ளை லோகாசாரியராக ப்ரதிபத்தி பண்ணி, யானையினின்றும்‌ சடக்கென இறங்கி நாயன்‌ திரு வீதிகளில் தீர்க்க ப்ரணாமம்‌ பண்ண, நாயனும்‌ இவரை எடுத்‌ தணைத்து ஸ்வாசார்ய ப்ரபாவத்தை யிட்டு இவரைக்‌ கொண்டாட, திருமலை யாழ்வாரும்‌ இவரை (நாயனை) உள்ளே எழுந்தருளப்‌ பண்ணு வித்துக்‌ கொண்டு சென்று ஸத்கரித்து ஹிதம்‌ கேட்க, பிள்ளைலோகாசாரியர்‌ சரம காலத்திலே அருளிச்‌ செய்தபடிகளை யெல்லாம்‌ ஸவிஸ்தாரமாக அருளிச்‌ செய்யக்‌ கேட்டு உகந்து-தேவரீர்‌ அடியேனை க்ருபை பண்ணி இங்கே யெழுந்தருளி யிருந்து ப்ராத காலத்திலே திருமண்காப்பவஸரத்திலே எழுந்தருள வேணும்‌’* என்று வேண்டிக் கொண்டு, வைகையாற்றின்‌ கரையிலே ஸந்த்யா மடத்தருகே ஒரு திருவீதியையையும்‌ அதில்‌ இவர்க்‌கொரு திருமாளிகையுஞ்‌ சமைத்து ஜாத்யாச்ர நிமித்த துஷ்டங்‌கள் ஏதோ அவைகளைப்‌ பரிஹரித்துத்‌ தளிகைக்கு நடக்கும்படி அமரிக்கை பண்ணினார்‌.

    கூரகுலோத்தம தாஸ நாயனும்‌ நித்யமாகத்‌ திருமண்காப்பு வேளைக்கு எழுந்தருள, இவர்‌ திருமண்‌ சேர்க்கச்‌ செய்தே லோகா சார்யாய’ என்று தொடங்கி தனியன்களை யநுஸந்திக்கக் கண்டு மிகவும்‌ ப்ரியப்பட்டு அன்று தொடங்கி கிஞ்சித் கிஞ்சித் காலம்‌ அவரிருக்குமளவும்‌ அநுவர்த்திக் கொண்டிருந்து ரஹஸ்யார்‌த்தங்களை ப்ரஸாதிக்க, அவரும்‌ நன்றாக அநுவர்த்‌தித்துக் கொண்டு ப்ரதி பத்தியடனே கேட்டு வந்தார்‌. ஒருநாள்‌ ராஜகாரியாவஸரத்தினாலே சொன்ன அர்த்தத்தைக்‌ கேளாமல்‌ ‘பொறுத்தருள வேணும்‌’ என்ன; மற்றை நாள்‌ இவரெழுந்தருளாமலிருக்க, அற்றைத் தினம் பராமர்சமின்‌றிக்கே யொழிய,-பிற்றை நாள்‌ நாயனெழுந்தருள வில்லை யென்று பராமர்சித்து உடனே ஆளை விட, அவர்கள்‌ சென்று அறிவித்த விடத்து பேசாமலிகுந்து விட, அவர்கள்‌ சென்று திருமலையாழ்‌வாருக்கறிவிக்க, அவர்‌, மற்றை நாளும்‌ நாயனெழுந்தருளாதபடியினாலே தம்முடைய ஆர்த்தி யெல்லாம்‌ தோன்றும்படி கால் நடையாக நாயன்‌ திருமாளிகைக்குச்‌ செல்ல, நாயன்‌ நெடும் போது விளம்பித்து ஸேவை ஸாதிக்க ஸேவித்து, திருவடிகளிலே விழுந்து போர க்லேஸிக்க, நாயனாரும்‌ ௨கந்தருளி ஷமித்தோம்‌” என்று சொல்ல, காலஷேப ஸமயமாகையாலே அது நிறைவேறுந் தனையுமிருந்து அவர்களுடன்‌ ஸ்ரீபாத தீர்த்த ஸ்வீகாரம்‌ பண்ணின பின்பு
    நாயனாரும்‌ திருமலை யாழ்வாரை அமுது செய்யும்படி நியமிக்க,திருமலை யாழ்வாரும்‌ தளிகையை ஸ்வீகரிக்க அபேஷிக்க, உகத்தருளி தளிகை ப்ரஸாதம்‌ ஸாதித்தருள, திருமலை யாழ்வாரும்‌ ப்ரஸாத ஸ்வீகாரம்‌ செய்த மாத்ரத்தில்‌ பரம விரக்தராய்‌ “”கூர குலோத்தமதாஸ நாயன்‌ திருவடிகளே சரணம்‌”என்று பலகாலு மநுஸத்தித்துக்‌ கொண்டு சென்று, ராஜகார்ய ஸமயத்திலேயும்‌, ஒருவரை பேர்‌ சொல்லி யழைக்கும்‌ போதும்‌ இப்படியே சொல்லத் தொடங்கினாராகையாலே இவருக்கு உந்மாதம்‌ பிடித்ததாக வேணுமென்று ராஜபத்‌நிக்கறிவிக்க, அவளும்‌ திருமலை யாழ்வாரை யழைத்து வார்த்தை
    சொல்ல, இவரும்‌ உத்தரத்துக்கு ப்ரத்யுத்தரம்‌ சொல்லாமல்‌ கூர குலோத்தம தாஸ நாயன்‌ திருவடிளே சரணம்‌; ஸகல கார்யமும்‌ பத்ரம்‌”” என்று இப்படியே சொல்ல. அவளும்‌ நாங்கள்‌ ஸ்த்ரீ
    பாலர்களாயிருக்கிறபடியால்‌ பிள்ளை ப்ரபுத்தனாகுத்தனையும்‌ எல்லாவற்றிற்கும்‌ தேவரீருண்டென்றிருந்தோம்‌; அப்படி யின்றிக்கே யொழிந்ததோ?’ என்று சோகிக்க, “நீர் சோகிக்க வேண்டா; பிள்ளை ஸமர்த்தனானான்‌, எனக்கு நாயன்‌ திருவடிகளை ஸேவித்துக் கொண்டிருக்க வேணும்‌; நீர்‌ தவிர்க்க வேண்டா; ராஜ கார்யத்தை அடிக்கடி விசாரித்துக் கொண்டு பிள்ளைக்கும்‌ புத்தி சொல்லிக் கொண்டு வருகிறேன்‌” என்று சொல்லி ஸமாதானம்‌ பண்ணி, ராஜ கார்யமும்‌
    விசாரித்துக் கொண்டு நாயன்‌ திருவடிகளை யநுவர்த்தித்து ஸகலார்த்‌தங்களையும்‌ அருளிச் செய்யக் கேட்டு க்ருதார்த்தராய்‌ சிறிது நாள்‌ அங்கே தானே யிருந்து பிற்பாடு திருப்புல்லாணிக்கு ஸமீபத்திலே
    நாயனெழுந்தருளியிருக்கிற சிக்கிலி என்‌கிற வூரிலே யெழுத்தருளி குருகுல வாஸம்‌ பண்ணிக் கொண்டிருந்தார்‌. நாயனாரும்‌ தமக்குப்‌ பிள்ளை லோகாசாரியர்‌ ப்ரஸாதித்த பரமார்த்தங்களை யெல்லாம்‌ இவருக்கு ப்ரஸாதித்தருளினராகையாலே கூரகுலோத்தமை தாஸ முதாரம்‌ என்றருளிச் செய்தார்‌.

    அநந்தரம்‌ நாயன்‌ தம்முடைய சரம காலத்திலே திருமலை யாழ்வாரை யழைத்தருளி ‘“விளாஞ்சோலைப்பிள்ளை யிடத்திலே இன்னம்‌ உமக்கு வேண்டிய அர்த்த விசேஷங்களை யெல்லாம்‌ கேளும்‌’‘ என்றும்‌, திருக்கண்ணங்குடிப்பிள்ளை யிடத்திலே திருவாய்‌மொழியைக்‌ கேளும்‌’” என்றருளிச்‌ செய்து, பிள்ளை லோகாசாரியர்‌ திருவடிகளை த்யாநித்துக் கொண்டு திருநாட்டுக்‌ கெழுந்தருளினார்‌ . அவர்‌ குமாரரைக்‌ கொண்டு நாயனுக்கு தீர்த்த திருவத்யயனமும்‌ நடத்தி யருளினார்கள்‌.
    கூர குலோத்தம தாஸ நாயன்‌ திருநஷத்ரம்‌ ஐப்பசியில்‌ திருவாதிரை; அவர்‌ தனியன்‌
    லோகாசார்ய க்ருபா பாத்ரம்‌ கெளண்டின்ய குல பூஷணம்‌ |
    ஸமஸ்தாத்ம குணாவாஸம்‌ வந்தே கூரகுலோத்தமம்‌ ॥
    ஸ்வயமாஹுய ஸைலேஸ குரவேர அர்த் ப்ரதாநத: |
    லப்தோ தாராபிதம்‌ கூர குலோத்தம மஹம்‌ பஜே ॥

    பிள்ளை லோகாசாரியருடைய க்ருபைக்குக்‌ கொள்கலமாய்‌ கெளண்டின்ய குலத்துக்கணியாய்‌, எல்லா ஆத்ம குணங்களுக்குமிருப்பிடமான கூர குலோத்தம தாஸ நாயனாரை அடி பணிகிறேன்‌.
    தானே வலிய அழைத்து திருமலை யாழ்வாருக்கு விசேஷார்த்‌தங்களை ப்ரஸாததித்ததனால்‌ பெறப்பட்ட -௨தரார்‌” என்கிற பெயரை யுடைய கூர குலோத்தம தாஸ நாயனாரை ஸேலிக்கிறேன்‌.

    அநந்தரம்‌ திருமலையாழ்வாரும்‌ ‘திருக்கண்ணங்குடிப்பிள்ளை யருகே: எழுந்தருளி ஸேவித்து, ‘அடியேனுக்குத்‌ திருவாய்‌ மொழியின்‌ அர்த்தமருளிச் செய்யவேணும்‌‘ என்று வேண்ட,
    அவரும்‌ அப்படியே தொடங்கி யருளிச்‌ செய்ய, அவர்‌ தாத்பர்ய ப்ரதாநராய்க் கொண்டு தாத்பர்யார்த்தங்களையே ப்ரஸாதிக்க, இவர்‌ சப்தத்துக்கிசைய அருளிச் செய்ய வேணும்‌” என்று நிர்ப்பந்திக்க,ஆகில்‌ திருப்புட்குழி ஜீயர்‌ பாடேறப்‌ போய்க் கேளும்‌” என்ன,
    அப்படியே புறப்பட்டுப்‌ பெருமாள்‌ கோயிலிலே எழுந்தருளின அற்றை நாள்‌ அவர்‌ திருநாட்டுக்கெழுத்தருளின பன்னிரண்டாம்‌ திவஸமாய்‌ அவர்க்குத்‌ திருநாராயண பலி நடக்க அத்தைக்‌ கண்டு மிகவும்‌ துக்கித்திருக்க, பெருமாள் கோயிலாசார்யர்களும்‌ கோயில்‌ பரிகரமனைத்துக்‌ கொத்தும்‌ திருமலை யாழ்வாரை கோயிலுக்கெளுந்தருளப் பண்ணுவித்துக்‌ கொண்டு போய்‌ பெருந்‌
    -தேவியாரையும்‌ பேரருளாளனையும்‌ ஸேலிக்கப் பண்ணி , தீர்த்தம்‌ ஸ்ரீசடகோபன்‌, சாத்துப்படி, திருத்துழாய்‌, திருமாலை முதலான வரிசைகள்‌ ப்ரஸாதித்து பஹாுமாளம்‌ பண்ணி தர்சந ப்ரவர்த்தகராக வாழ்த்தினார்கள்‌. பிற்றை நாள்‌ திருநாராயண புரத்திலிருந்து
    நாலூர்ப்பிள்ளையும்‌ அவர் குமாரரான நாலூராச்சான்‌ பிள்ளையுமெழுந்தருளிப்‌ பேரருளாளனை மங்களாசாஸனம்‌ பண்ண வெழுந்‌தருள, அந்த வேளையில்‌ திருமலை யாழ்வார்‌ ஸத்நிதியிலே மங்களாசாஸனம்‌ பண்ணிக் கொண்டு எழுந்தருளியிருக்க, இவர்கள்‌ திருமலையாழ்வார்‌ எழுந்தருளின செய்தியும்‌ உள்ளே மங்களாசாஸனம்‌ பண்ணி யருளுகிறதும்‌ அறியாமல்‌ ஸந்நதியிலே பின்னே நின்று, ”உள்ளே ஸேவிக்கிறவரார்‌?” என்று கேட்க, கோயில்‌ திருமலை யாழ்வார்‌’”’ என்ன, ‘ கோயில்‌ திருமலை பெருமாள்‌ கோயிலன்றோ!’” என்றருளிச்‌ செய்து கொண்டு அவர்‌ ஸத்நிதி வைஷ்ணவர்களுக்குப்‌ பின்னே நின்று ஸ்ரீசடகோபனுக்கு திரு முடியை உயர வெடுத்ருள, ஸ்ரீ சட கோபன்‌ திருமுடியிலே தரிக்கிற வளவிலே தம்முடைய திருவிரலாலே ஊன்‌ற, அர்ச்சகரும்‌ சீக்கிர்மாக ஸந்நிதியிலே ஸ்ரீசடகோபனை யெழுந்தருளப்‌ பண்ணி வைத்து திருமலை யாழ்வார்‌ கைப்பிடித்து, பின்னே வருகிற நாலூர்‌பிள்ளையை ‘அருளாளர்‌ திருவடி யூன்றியவரே!”” என்றழைத்துத்‌ திருமலை யாழ்வாரை அவர் கையில்‌ காட்டிக்‌ கொடுத்து, “இவருக்கு மூவாயிர வ்யாக்யானம்‌ ஸாதிக்கும்படி ஜ்யோதிஷ்குடியிலே. நியமித்தோம்‌; இவர்‌ வந்தார்‌; திருப்புட்குழி ஜீயர் பாடே ஈடுகேளாத இழவு தீர அத்தையும்‌ இவருக்கு ஸாதியும்‌”’ என்று பரவசராய்‌ நியமிக்க, பிள்ளையும்‌, “அடியேன்‌ க்ருதார்‌த்தனாளேன்‌; திருக்‌ கண்ணங்குடிப்பிள்ளை போராத விவருக்குத்‌ தினவுகெடச்‌ சொல்ல
    வல்லேனோ?’” என்று சிந்தித்து நிற்க, மனமொத்த நாதனான பேரருளாளன்‌ ‘*ஆத்மாவை புத்ர நாமாஸி” என்று ஆச்சான்‌ பிள்ளை ஸாதித்தால்‌ நீர்‌ ஸாதித்ததாம்‌” என்று நியமித்தருள
    *நாயன்தே நாயன்தே ” என்று உகந்து புறப்பட்டருளி ‘வாரீர்‌ திருமலை யாழ்வாரே! நாம்‌ போர ஜரிந்தோம்‌; நீர்‌ அதி நிபுணர்‌; உமக்குத்‌ தகும்படி சொல்ல வல்லவர்‌ இவர்‌? என்று *நல்ல மகனாரான ஆச்சான் பிள்ளை கையிலே காட்டிக்‌ கொடுத்து, தமக்குத்‌ திருநாராயணபுரத்துக்‌ கெழுந்தருளத்‌ திருவுள்ளமாய்‌ புறப்பட்டெழுந்தருளினார்‌.

    திருமலையாழ்வாரும்‌,”க்ருதார்த்தனானேன்‌” என்று ஆச்சான்‌ பிள்ளை திருவடிகளிலே ந்யஸ்த பரராயிருக்க, இவரைக்‌ கைக்‌கொண்டருளித்‌ திருவாய்மொழி யீடு தொடங்கி நடத்தி யருளாநிற்க, இத்தைத்‌ திருநாராயணபுரத்தில்‌ ஆயி, பிள்ளை தொடக்கமானவர்கள்‌ கேட்டு, இவரை யெழுத்தருளும்படி எம்பெருமானாருடைய திருமுகமாக திவ்யாஜ்ஞையிட்டுவிட, அதைக்‌ கண்டு ஆச்சான் பிள்ளை திருமலை யாழ்வாரைக்‌ கூட்டிக்‌ கொண்டு திருநாராயணபுரத்தேற எழுந்தருள அவர்களும்‌ எதிர் கொண்டு திருவடிகளை ஸேவித்து எழுந்தருளப்‌ பண்ணிக்‌ கொண்டு போர,

    ஆகுஹ்யாமல யாதவாத்ரி சிகரம்‌ கல்யாண தீர்த்தம்‌ தத:
    ஸ்நாத்வா லக்ஷ்மண யோகிந: பதயுகம்‌ நத்வாதுகத்வாதந : |
    ஸ்ரீ நாராயயணமேத் யத்ய தத்ர தரணீ பத்மாலயா மத்யகம்‌
    பஸ்யேயம்‌ யதிகிம்‌ தப: பலமத: ஸம்பத் குமாரம்‌ ஹரிம்‌ ॥

    தூய்தான யாதவாத்ரியினுடைய உச்சியிலேறி திருக்கல்‌யாணி தீர்த்த புஷ்கரியிணியில்‌ நீராடி இளையாழ்வாருடைய (எம்பெருமானாருடைய) திருவடிகளைத்‌ தொழுது, மேலே சென்று திருநாராயணனை ஆஸ்ரயித்து, அங்கு ஸ்ரீபூமிப்பிராட்டியார்‌, பெரியபிராட்டியார்‌ இவர்கள்‌ நடுவில்‌ எழுந்தருளி யிராநின்றுள்ள சம்பத்குமார்‌ (செல்வப்பிள்ளை) எனும்‌ எம்பெருமானைக்‌ காண்‌பேனாகில்‌ இதைக் காட்டிலும்‌ வேறான தப:பலனானது என்ன இருக்கிறது?] என்று சொல்லுகிற படியே க்ரமத்திலே பெரிய ப்ரீதியோடே சென்று திருநாராயணன்‌ திருவடிகளை அரணாகப் பற்றி அங்கே இனிததமர்‌ந் தெழுந்ருளி யிருக்கிற எம்பெருமானாரை ஸேவித்து அவர்‌ புருஷகாரமாக யதுகிரி நாயகியாரையும்‌ செல்வப்‌ பிள்ளையையும்‌ திருதாராயணனையும்‌ ஸேவித்து -அங்கே யெழுந்தருளி இருந்து எம்பெருமானார்‌ ஸந்நிதியிலே தொடங்கி *உறுபெருஞ்‌ செல்வம்‌ இத்யாதிப்‌படியே அவருக்குகப்பாசக அங்கே ஆச்சான்‌ பிள்ளையுடனே ஈடு முப்பத்தாரறாயிரமுங்‌ கேட்டார்கள்‌; அவரும்‌ மேலோர்க்கீந்தார்‌ என்னும்படி ப்ரஸாதித்தருளினார்‌ -திருமலை யாழ்வாரும்‌ அவர்‌ திருவடிகளைப்‌ பழுக்க ஸேவித்து -அரிய வருளிச்‌ செயல் பொருளை ஆரியர்களெல்லாரும்‌ உகக்கும்படி கேட்டருளினார் -பின்பு தேவ ராஜரும்‌ இவருடைய ஜ்ஞாந பக்தி வைராக்‌யாதி குண பூர்த்தியைக்‌ கண்டுகந்து இவரை விசேஷாபிமானம்‌ பண்ணி யருளி தம்முடைய திருவாராதனமான *இனவாயர் தலைவனை இவர்க்கு ப்ரஸாதித்தருளினார்‌.

    தேவாதி பாத் ஸமதிகம்ப ஹைஸ்ர கீதேர்‌ பாஷ்யம்‌ நிகூடமபிய ப்ரதயாம்‌ சமார | குந்தி புரோத்பவமமும்‌ ஸரணம் பஜேஹம்‌ ஸ்ரீ சைலநாதமுருபக்தி ப்ருதம்‌ ஸடாரெள

    உறுபெருஞ்செல்வமும்‌ என்று தொடங்கி, -மாறன்‌ விளங்கிய சீர்‌ நெறி தரும்‌ செந் தமிழாரணமே -என்கிறபடியே உடையவருக்கு உகப்பாக நல்லருள்‌ நம்‌ பெருமாள்‌ நாராயணன்‌ நாமங்களாய்‌(திருவாய்‌ 5-9 10), கேட்‌டாரார்‌ வானவர்கள்‌ செவிக்கினிய செஞ்சொல்‌ (திருவாய்‌ 10-6-11)ஆன திருவாய்மொழி தொடங்கி ஈடு முப்பத்தாறாயிரமும்‌ அத்ருப்‌ தாம்ருத ரூபமான இதின்‌ சப்த ஸ்வாரஸ்யம்‌, அர்த்த ஸ்வாரஸ்யம்‌ த்வநி வ்யங்க்யம்‌, பாவார்த்தம்‌, ஸ்வாபதேசம்‌, அந்யாபதேசம்‌, எல்லாம்‌ ஸம்சய விபர்யமற நன்றாகத்‌ தெரியும்படி *மேலோர்க்‌ கீந்தார்‌ அவரேமிக்கு (௨ப.ர.மா 49) என்னும்‌ படி நாலுராச்சான்‌ பிள்ளை தம்‌ பரம க்ருபையாலே ப்ரஸாதித்தருள, பிள்ளை முதலானவர்கள்‌ கேட்டார்கள்‌, அத்தைப் பற்றி

    ஸ்ரீஸைல நாத குரு மாத்ர குருத்தமாப்யாம்‌ ஸ்ரீஸூக்தி தேிஸிக வரேண ச யஸ்த்ரிதைவம்‌ |
    வ்யக்தஸ் ஸடாரி க்ருதிபாஷ்ய ஸு ஸம்ப்ரதாயோ விஸ்தாரமேதி ஸஹி வைஷ்ணவ புங்கவேஷு ॥-
    என்றும்‌

    கோலாதிபாத்‌ பிதுரவாப்ய ஸஹஸ்ர கீதேர்‌ பாஷ்யம்‌ ஹி பூர்வதக தேஸிக வர்யகுப்தம்‌ |
    த்‌ரேதா ப்ரவர்த்யபுவிய: ப்ரத்யாஞ்சகார தம்‌ தேவ ராஜ குருவர்ய மஹம்‌ ப்ரபத்பே
    -என்றும்‌ அநுஸந்தித்தார்கள்‌.
    யாதொரு ஆழ்வாரருளிய திருவாய்‌ மொழியின்‌ பாஷ்யமான ஈட்டின்‌ நல்ல ஸம்ப்ரதாயமானது திருலாய்மொழிப் பிள்ளை திருநாராயணபுரத்தாய்‌ திருவாய்மொழி யாசார்யர்‌ என்னும்‌ இம் மூவராலும்‌ இப்படி மூன்று விதமாக வெளியாயிற்றோ, அது வன்றோ ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரேஷ்டர்களிடம்‌
    (இப்போது) பல படியாகப்‌ பரவுதலைப்‌ பெற்றுள்ளது. யாவ ரொருவர்‌–பூர்வாசார்யர்களால்‌ மறைத்துவைக்கப்‌ பெற்ற திருவாய்மொழியின்‌ ஈட்டை தம்‌ தமப்பனாராகிய நாலுர் பிள்ளை
    யிடமிருந்து பெற்று (மூவரின்‌ மூலமாக) மூன்று விதமாகப் பிரவர்த்திப்பித்து பூமியில்‌ அது தன்னை ப்ரஸித்தமாக்கினாரோ,அந்த நாலுராச்சான்‌ பிள்ளையை அடியேன்‌ சரணமடைகிறேன்‌-
    திருவாய்மொழிக்கு ஈடு முப்பத்தாறாயிரம்‌ ஸாதித்தானவுடன் நாலுராச்சான் பிள்ளை திருமலையாழ்வாருடன்‌ ஸ்வ ஸ்தானததேற எழுந்தருளினார்‌.-

    யாவரொரு திருமலையாழ்வாரானவர்‌ தேவாதிபர்‌ என்ற நாலூராச்சான் பிள்ளையிடமிருந்து ரஹஸ்யமான திருவாய்மொழி யாயிரத்தினுடைய பாஷ்யமான ஈடு முப்பத்தாறாயிரப்‌ படியைப்‌ பெற்று, பின்னர்‌ அத்தைப் ப்ரஸித்தமாக்கினாரோ, நம்மாழ்வார்‌
    விஷயத்தில்‌ மிகவும்‌ பக்தியுடையவராய்‌, குந்‌தி நகரத்தில்‌ அவதரித்‌தவரான புகழ் பெற்ற அந்தத்‌ திருமலையாழ்வாரை சரணம்‌ பற்றுகிறேன்‌ –என்கிற படியே தேவப் பெருமாள்‌ கைக் கொண்ட
    அருளுந்‌ திருமலை யாழ்வாருக்கு ஆழ்வார்‌ திருவடிகளிலே ப்ராவண்யமதிசயித்து அவர்‌ திருவடி தொழ வேணுமென்கிற அபிநிவேசத்‌தை யுடையராய்‌, ‘ஆஜகாம முஹார்த்தேந” என்கிறபடியே அவரெழுந்தருளி யிருக்கும்‌ திருக்கணாம்பி யென்கிற திருப்படை
    வீட்டைக்‌ குறித்து அங்கே சென்று அவர்‌ திருவடிகளை ஸேவித்துத்‌
    தம்முடைய அபிநிவேசமெல்லாம்‌ தீர்ந்து;

    அநந்தரம்‌ ஆழ்வாரைத்‌ திருநகரியிலே திருக்குடி புகுவிப்பதாகத் திருவுள்ளமாய்‌, தாம் முந்தி திருநகரியேற யெழுந்தருளி, காடுவெட்டி நாடாக்கி, -நல்லார்‌ பலர்வாழ்‌ குருகூர்‌ என்னும்படி குடியேற்றி ஆழ்வாரை யெழுந்தருளப்‌ பண்ணுவித்துக்‌ கொண்டு குருகூர்ச் சடகோபன்‌ என்னும்படி யதா ஸ்தாதத்திலே திருப்ரதிஷ்டை பண்ணி யருளி
    ஸடகோப முநிம்‌ வந்‌தே ஸடாநாம்‌ புத்தி தூஷணம்‌ |
    அஜ்ஞாநாம்‌ ஜ்ஞாந ஜந கம்‌ திந்த்ரிணீ மூல ஸம்ஸ்ரயம்‌ ॥

    வஞ்சகர்களுடைய புத்தியை நாசம்‌ செய்பவராய்‌, ஜ்ஞானமில்லாத மூடர்களுக்கு ஜ்ஞானம்‌ பிறப்பிப்பவராய்‌, திருப்புளியினடியில்‌ எழுந்தருளி யிருக்கும்‌ ஸ்ரீசடகோப முநிவரை அடி பணிகிறேன்‌- என்கிறபடியே உறங்காப் புளி நிழல் தன்னிலே ஏறி யருளப்‌ பண்ணி ஸேவித்து நிற்க இவர்க்கு சடகோப தாஸர்‌ என்று தம்‌முடைய திரு நாமத்தை யாதார்த்த நாமமாம்படி ப்ராஸாதித்‌தருள, இருவரும்‌ “ப்ரஸாத லப்‌த பரம ப்ராப்ய கைங்கர்ய ஸாலிநே –ஆழ்வாரின்‌ அநுக்ரஹத்தினால்‌ பெற்ற நிரதிசயமான பேறான
    கைங்கர்யத்தினால்‌ விளங்கா நின்‌ற திருமலை யாழ்வார்‌- என்னும்படி,
    பெரிய வண் குருகூர் நகர்‌ நம்பிக்காளுரியனாய்‌, புகழ் வண்‌ குருகையும்‌ பொற் கோபுரமும்‌ புரிசை சூழ் கழனி தண் பொருநை மன்னாழ்வார்‌ மறைத் தமிழாயிரமுநம் திகழும்படி செய்த ஸ்ரீசைலேசர்‌’–என்னும்படி ஆழ்வார்‌ திருவடிகளிலே ௮சேஷ சேஷ வ்ருத்திகளிலும்‌ அந்வயித்து அதுவே யாத்ரையாய்ப்‌ பேரா நிற்கிற காலத்திலே

    திருமலை யாழ்வாரும்‌ விளாஞ்சோலைப் பிள்ளையும்‌
    விளாஞ்சோலைப்‌ பிள்ளையை ஸேவித்து விசேஷார்த்தங்களைக்‌ கேட்க வேணும்‌” என்று திருவுள்ளமாய்த்‌ திருவநந்தபுரத்தே யெழுந்தருளி ஆழ்வாருடைய தமர்களில்‌ ப்ரதானரான வாசி தோற்ற –படமுடை யரவிற்‌ பள்ளி பயின்றவன்‌ பாதங்கண்டு பணிந்து, அநந்தரம்‌ “கண்ணன்‌ கழலினை காட்டுமுலகாரியன்‌ தாள்‌ நண்ணு நலந் திகழ்‌ நாரணனை”’ என்று சொல்லும்‌ படியான விளாஞ்சோலைப் பிள்ளையைத்‌ திருவடி தொழுவதாக அவரெழுந்‌தருளி யிருக்கிற -வாசமே கமழுஞ்‌ சோலையான திருச்சோலைக்‌ குள்ளே சென்று ஸேலிக்க,! ”குரு பதாம் புஜம்‌ த்யாயேத்‌ குரோர்‌
    நாம ஸதா ஜபேத்‌”
    -ஆசாரியனின்‌ தாமரை யடிகளை எப்போதும்‌ சிஷ்யன்‌ தியானிக்கக் கடவன்‌; ஆசாரியனின்‌ திருநாமத்தை விடாமல்‌ அநுஸந்திக்கக் கடவன்‌-
    ஸ்ரீ லோகார்ய முகார விந்த மகில ஸ்ருத்யர்த்த கோஸம ஸதாம்‌ |
    தத் கோஷ்டீஞ்ச ததேக லீந மநஸா ஸஞ்சிந்த யந்தம்‌ ஸதா ॥

    ஸகல வேதார்த்தங்களாகிய செல்வம்‌ சேமிக்கப்பட்ட பொக்கிஷமான பிள்ளை லோகாசார்யருடைய தாமரை போன்ற திருமுக மண்டலத்தையும்‌ ஸத் புருஷர்களினுடைய இருப்பிடமான
    அவருடைய கோஷ்டியையும்‌ எப்போதும்‌ அவற்றிலேயே லயமடைந்த மனஸ்ஸோடு த்யானித்துக் கொண்டிருக்கிற விளாஞ்‌ சோலைப்‌ பிள்ளையை- என்றும்‌ சொல்லுகிறபடியே பிள்ளை
    லோகாசாரியருடைய திவ்ய மங்கள விக்ரஹத்தையும்‌ அவருடைய திருவோலக்கத்தையும்‌ த்யானித்துக்‌ கொண்டு தம்முடைய திரு மேனியிலே சிலந்தி நூலிழைக்கும்படி அஸ்தமிதாந்ய பாவராய்‌ நாலாறு நாள்‌ ஸமாதியாக வெழுந்தருளி யிருந்து அநுபவித்து,பின்பு இவரைக்‌ கண்டு இவர்க்கு ஸகலார்த்தங்களையும்‌ ஸாதிக்க இருவரும்‌ கேட்டு க்ருதார்த்தராய்க்‌ வேதிகப்‌ பொன்னான இவர்‌
    ஸம்பந்தத்தாலே தம்முடைய ஐந்மக் கொத்தையைக்‌ கழித்துக்‌ கொண்டு மீண்டு திருநகரி யேறே வெழுந்தருளினார்‌. விளாஞ்‌ சோலைப்‌ பிள்ளையும்‌ ஸ்ரீவசந பூஷணத்தின்‌ தாத்பர்யங்களை
    ஏழுகாதையாக ஸங்க்ரஹித்து அருளிச்‌ செய்து ஸர்வர்க்கும் உபகரித்தருளி
    தாமும்‌ –செறிபொழிலந்தபுரத்து அண்ணலார்‌ கமல பாதமணுகுவார்‌ அமரராவார்‌-என்கிறபடி அயர்வறுமரர்‌களோடே கூடி அடிமை செய்ய வேணுமென்கிற ப்ராப்ய த்வரையாலே தடுத்தும்‌ வளைத்தும்‌ பெற வேண்டும்படி பரமபக்தி தலை யெடுத்து அவா வற்று வீடு பெற்றார்‌. (பாவோ நாந்யத்ர சச்சதி’ என்கிற திருவடியைப்‌ போல இவரும்‌ அஸ்தமிதாந்ய பாவராய்‌ நாலாறு நாள்‌ ஸமாதியாக எழுந்தருளி யிருந்து ஸ்வாசார்ய விக்ரஹா நுபவம்‌ பண்ணி யருளுகிறவர்‌ திருக் கண்களை விழித்து நீர்‌ யார்‌? இங்கு வந்த கார்யமென்‌?” என்று கேட்டருள இவரும்‌ அடைவே எல்லாம்‌ விண்ணப்பம்‌ செய்யக் கேட்டு ஸந்தோஷித்து இவருக்கு ஸ்ரீவசந பூஷண தாத்பர்யங்களை
    ஏழுகாதையாக ஸங்க்ரஹித்து அருளிச்‌ செய்து ஸர்வர்க்கும் உபகரித்தருளினார்
    )

    அப்போது நம்பிமார்‌ (அநந்த சயனனை) திருவாராதனம்‌ செய்யா நிற்க, விளாஞ்சோலைப்பிள்ளை திருவடி தொழச்‌ சென்று கர்ப்ப க்ருஹகத்திலே புகுந்து திருவடி யருகே நிற்கக் கண்டு நம்பிமாரும்‌ அது மலையாள தேசமாகையாலே புலையரான விளாஞ்‌ சோலைப் பிள்ளை யகத்து (அருகே) நாம்‌ போகிறதில்லை” என்று திருக் காப்பு சேர்த்துக்‌ கொண்டு புறப்பட, அவ்வளலிலே பிள்ளை
    ஸ்ரீபாதத்து முதலிகள்‌ ”விளாஞ்சோலைப் பிள்ளை வோகாசார்யர்‌ திருவடிகள்‌ சேர்த்தார்‌?” என்று நூற்றத்தாதி இயலுனே பரியட்‌டம்‌ திருமாலைக்குக்‌ கோயில்‌ வாசலிலே வரக்‌ கண்டு நம்பிமார்‌
    ப்ரத்யஷமாகக்‌ கண்ட ஆஸ்சர்யத்தை அனைவரக்கும்‌ வெளிப்‌ படுத்தினார்களென்று ப்ரஸித்தமிறே,
    இச் செய்தியை யறிந்து திருமலையாழ்வார்‌ ஸ்ரீபாதத்து முதலிகள்‌.
    கத்வா நந்தபுரம்‌ ஜகத் குரு பதத்யாநேர தம்‌ குத்ரசித்‌தம்‌
    நாராயண தாஸ மேத்ய விமலம்‌ ஈத்வா ததங்க்ரிம்‌ முதா |
    தஸ்மாதார்ய ஜநோக்தி மெளக்தி கக்ருதம்‌ வேதாந்த வாக் பூஷணம்‌
    ஸ்ரீவாக் பூஷணமப்ய வாப்பஸ ருதம்‌ ஸ்ரீஸைல நாதோ பவத்‌ ॥

    அந்தத் திருமலையாழ்வார்‌ திருவநந்த புரத்தை யடைந்து ஓரிடத்தில்‌ (புறச் சோலையில்‌) பிள்ளை லோகாசாரியருடைய திருவடிகளை தியானம்‌ பண்ணுவதில்‌ விருப்பமுள்ள அந்த நாராயண தாஸரை(விளாஞ்சோலைப்‌ பிள்ளையை) அடைந்து நிர்மவமான அவர்‌ திருவடிகளை மகிழ்ச்சியுடனடி பணித்து அவரிடமிருந்து பூர்வாசார்யர்களுடைய ஸ்ரீஸூக்திகளாகிற முத்துக்‌களால் அமைக்கப் பெற்ற வேதாந்த வாக்யங்களுக்கு ஆபரணமான ஸ்ரீவசந பூஷணத்தைப்‌ பெற்று (மேலான) ஆசார்யரானார்‌ ] என்று அநுஸந்தித் தருளினார்கள்‌-

    இத்தைத்‌ திருமலையாழ்வார்‌ கேட்டருளி சிஷ்ய புத்ரர்கள்‌ செய்யும்‌ க்ருத்யங்களை யெல்லாம்‌ பிள்ளை விஷயத்திலே அநுஷ்‌டான சேஷமாம்படி அநுஷ்டத்துக்‌ காட்டி யருளினார்-(பயிலுஞ்சுடரொளி, நெடுமாற்கடிமை திருவாய்மொழிகளில்‌ காட்டப்பட்ட ஸாரார்த்தமாய்‌ பெரிய் நம்பி மறாதே,
    நம்பி விஷயத்தில்‌ அநுஷ்டித்ததை நினைப்பூட்டும்‌,
    )இப்படி இவருடைய சரம சேஷி விஷய சரமாநுவர்த்தநத்தை யறிந்தவர்கள்‌
    பற்றாத வெங்கள்‌ மணவாள யோகி பதம் பணிந்தோன்‌
    நற்றேவராச னலந் திகழ்‌ நாரண தாதருடன்‌
    கற்றாரெங் கூர குலோத்தம தாதன்‌ கழல்‌ பணியவோன்‌
    மற்றாரு மொவ்வாத்‌ திருவாய்மொழிப்‌ பிள்ளை வாழியவே–
    என்று அநுஸந்தித்தார்கள்‌.
    வாழி நலந்திகழ்‌ நாரண தாதன்‌ வடிவும்‌
    வாழி யவனமுத வாய் மொழிகள்‌–வாழியவே
    ஏறு திருவுடை யானெந்தை உலகாசிரியன்‌ சொல்‌
    தேறு திருவுடையான்‌ சீர்‌
    — என்று தாமும்‌ அநுஸந்தித்தருளினார்‌. பின்பு திருமலை யாழ்வார்‌ தம்முடைய திருமருமகனாரை புத்ராபிமானம்‌ பண்ணி, தேவப்‌ பெருமாள்‌ என்று நாலுராச்சான் பிள்ளை திருநாமம்‌ சாத்தி யருளினார்‌.

    இனி பிள்ளை லோகாசாரியர்‌ சிஷ்யராய்‌ கொல்லி காவல தாஸரான கோட்டூர்‌ அழகிய மணவாளப்‌ பெருமாள் பிள்ளையும்‌(இவர்‌ மணவாள மா முனிகளின்‌ மாதா மஹர்‌,) லோகாசாரியர்‌ ப்ராஸாதித்தருளின அர்த்த விசேஷங்களை அநுஸந்தித்துக்கொண்டு சிக்கல்‌ கிடராம்‌ என்கிற க்ராமத்திலே சிலநாள் எழுந்தருளியிருந்தார்‌. பின்‌பு திகழக் கிடந்தான்‌ திருநாவீறுடைய
    பிரான்‌ தாதரண்ணரையர்(மா முனிகளின்‌ தகப்பனார்‌; இவர்‌ 74 ஸிம்ஹாஸனாதி பதிகளில்‌ கோமடத்‌தாழ்வான்‌ என்பவரின்‌ திருவம்ஸ்யர்‌ )அவர்‌ குமாரத்தியான ஸ்ரீ ரங்க நாச்சியாரைத்‌ திருமணம்‌ புணர்ந்து அவர்‌ திருமாளிகையிலே யெழுந்தருளி யிருந்து தமக்கு ஜ்ஞாதவ்யார்த்தங்களை யெல்லாம்‌ அவர்‌ ஸந்நிதியிலே கேட்டருளி
    பிள்ளை லோகாசாரியர்‌ ஸந்நிதியிலே கேளாத இழவெல்லாம்‌ தீர்ந்து அந்த க்ருதஜ்ஞதைக்கு
    வாழி மணவாளன்‌ வாழி யவன்‌ வீர நகர்‌
    வாழி யவன்‌ குரவை மண்ணின்‌ மேல்‌–வாழி
    உலகாசிரியனுரைத்த பொருள்களெல்லாம்‌
    பல காலும் உரைக்குமவன்‌ பண்பு

    என்றநுஸந்தித்து அவரைப்‌ பிள்ளை லோகாசாரியராகவே ப்ரதிபத்தி பண்ணிக்‌ கொண்டு அவருக்கு அநந் யார்ஹராய்‌ அநுவர்த்‌தித்துப் போந்தார்‌. இப்படி அவருக்கு அசேஷ ரஹஸ்யங்களையும்‌ ஸாதித்து சில நாள்‌ கழிந்தவாறே அழகிய மணவாளப் பெருமாள்‌ பிள்ளையும்‌ திருநாட்டுக் கெழுந்தருளினார்‌.

    அழுகிய மணவாளா மா முனிகள் திருவவதாரம்‌
    இப்படி ப்ரப்த்தி மார்க்கமானது ஸங்குசிதமாக நடந்து செல்லுகிற காலத்திலே ஸ்ரீய:பதியாய்‌ பரம காருணிகனாய்‌-திருவரங்கத் தரவணையிலே – உறங்குவான்‌ போல்‌ யோகு செய்த-என்கிறபடியே ஜகத் ரஷணந்தா யுக்தனாய்க்‌ கண் வளர்ந்தருளுகிற பெரிய பெருமாள்‌ மீண்டும்‌ தர்சநம்‌ இப்படி ஒராண் வழியாய்‌ வருகிறபடியைக்‌ கண்‌டு ‘எம்பெருமானாரைப்‌ (போலே லோகமெல்லாம்‌ உஜ்ஜீவிக்கும்படி ஒரு விஷயத்தை உண்டாக்குவோம்‌”’என்று யோசித்து இனி இதற்கு ஆவாரார்‌ என்று தேடி மீண்டும்‌ திருவநந்தாழ்வானையே. கடாக்ஷித்து ஜகத்தைத் திருத்தும்படி நியோகித்தருள அவரும்‌ அப்படியே

    1–ததஸ்ததிங்கிதம்‌ தஸ்ய ஜாநந்நேவ ஜகக்நிதே: | தஸ்மிந் தாம்நி ஸடாராதே:புரே புநரவாதரத்‌ ॥ என்றும்‌
    2–ஸம்ஸந்தி ஸமயம்‌ தஸ்ய துலாம் ப்ராப்தே த்விஷாம் பதெள |
    மூலம்‌ ஹி ஸர்வ ஸித்தீநாம்‌ மூலருஷம்‌ ப்ரசஷதே ॥ என்றும்‌
    3–யந் மூலயாஸ்வ யுஜமாஸ் யவதார மூலம்‌ காந்தோ பயந்த்ரு யமிந। கருணைகஸிந்தோ:
    நஸீத ஸத்ஸு கணிதஸ்ய மமாபி ஸததா மூலம்‌ ததீத வஷகதுப்யுதயைக மூலம்‌ ॥என்றும்‌

    1-அப்போது திருவநந்தாழ்வான்‌ பெரிய பெருமாளுடய திருவுள்ளத்தை யறிந்தவராய்‌, அதன்படியே சடகோபுனுடைய இருப்பிடமான அந்தத்‌ திருநகரியிலே மீண்டும்‌ அவதரித்தருளினார்‌-
    2-ஸுரியன்‌ துலா ராசியை அடைந்திருக்கும் போது எல்லாகாரிய ஸித்திக்கும்‌ காரணமான மூல நக்ஷத்ரத்தை அந்தத்‌ திருவநந் தாழ்வானின்‌ அவதார காலமாக பூர்வாசாரியர்கள்‌ அருளிச்‌ செய்‌கிறார்கள்‌.
    3–எந்த ஐப்பசி மாதத்தில்‌ மூல நஷாத்ரமானது கருணைக் கடலான மணவாள மா முனிகளின்‌ அவதாரத்துக்கு அடியாயிற்றோ அதே மூலமானது அஸத்துக்களில்‌ ஒருவனாக மதிக்கப்பட்ட
    (தாழ்ந்தவனான) அடியேனுக்கும்‌ ஸத்தைக்குக்‌ காரணமாகவும்‌, உலகெல்லாம்‌ வாழ்வதற்கு முக்கிய காரணமாகவும்‌ அமைந்தது] என்றும்‌ சொல்லுகிற படியே திருவநந்தாழ்வானும்‌ தம்முடைய திருவவதாரத்துக்கு இடம்‌ பார்த்து ஆழ்வார்‌ திருநகரியிலே அண்ணர் தேவிகள்‌ கர்ப்பத்தை யடைந்து நவமாஸம்‌ சென்றவாறே

    செந்தமிழ் வேதியர் சிந்தை தெளிந்து சிறந்து மகிழ்ந்திடுநாள்!
    சீருல காரியர் செய்தருள் நற்கலை தேசு பொலிந்திடுநாள்!
    மந்த மதிப்புவி மானிடர் தங்களை வானி லுயர்த்திடுநாள்!
    மாசறு ஞானியர் சேரெதிராசர் தம் வாழ்வு முளைத்திடுநாள்!
    கந்த மலர்ப்பொழில் சூழ்குருகாதிபன் கலைகள் விளங்கிடுநாள்!
    காரமர் மேனியரங்க நகர்க்கிறை கண்கள் களித்திடுநாள்!
    அந்தமிழ்சீர் மணவாள முனிப்பர னவதாரம் செய்திடுநாள்!
    அழகு திகழ்ந்திடு மைப்பசியில் திருமூலமதெனுநாளே

    பாதோபாவம்‌ கதாயாம்‌;கலியுக ஸரதி ஸ்ரத்தராயே ஸகாப்தே .
    வர்ஷே ஸாதாரணாக்யே ஸமதிகததுலே வாஸரே தீர ஸங்க்‌யே |
    வாரே ஜைவேசதுர்த்மாம்‌ ஸமஜநிசதிதெள ஸூக்லபஷே
    ஸு*கர்மா ப்ராஜம்‌ மூலக்யதாரே யதிபதி ரபரோ ரம்ய ஜாமாத்ருந்‌ நாமா 1

    கல்யப்தம்‌ 4471 என்ற எண்‌ அடைந்த வளவில்‌ சகாப்தம்‌ 1292ல்‌ ஸாதாரண வருஷத்தில்‌ சூரியன்‌ துலா ராசியை அடைந்துள்ள போது 26-ம்‌ தினத்தில்‌ வியாழக் கிழமையில்‌ விளங்கா நின்ற மூல நக்ஷத்ரத்தில்‌ சுக்ல பக்ஷ சதுர்த்தி திதியிலே ஸதாசார சீலராய்‌ ரம்ய ஜாமாத்ரு முநி என்னும்‌ !திருநாம முடையராய்‌ யதிபதி புநரவதாராய்‌ மணவாளமாமுனிகள்‌ அவதரித்தார்‌–என்கிறபடியே கலி யுகம்‌ பிறந்து நாலாயிரத்து நானூற்று எழுபத்தொரு வருஷத்துக்குப்‌ பின்பு’ ஸாதாராண வருஷம்‌ ஐப்பசி மாசத்தில்‌ சுக்ல பக்ஷத்தில்‌ சதுர்த்தியும்‌ வியாழக் கிழமையும் கூடின க்ர்ன திருமூலத்திலே (ஆங்கில கணக்கில் 1370)உபயவிபூதியும்‌ கொந்தளிக்கும்‌, குடியை யுடையரான திகழக்கிடந்தான்‌ திருநாவீறுடைய பிரான்‌ தாதரண்‌ண அரையருக்கு குமாரராகத்‌ திருவவதரித் தருளினார்‌. அநந்தரம்‌,

    யஸ்மிந் ஸ்வ பாத பத்மேநப ஸ்பர்ஸ ப்ருதிவீ மிமாம்‌ |
    கலிஸ்ச தத் ஷணேநைவ துத்ருவே தூரதஸ்தராம்‌ ॥

    எப்போது அவர்‌ தமது திருவடித்‌ தாமரைகளால்‌ இந்த பூமியைத்‌ தொட்டாரோ அப்போதே கலிபுருஷனும்‌ வெகு தூரம்‌ ஓடி விட்டான் என்று இவர்‌ கால் காண கலி கால்‌ பறந்தோடிற்று:

    இப்படி ஸமஸ்தாத்ம ஸமுஜ்ஜீவந ஜந்மாவாக அவதரித்‌தருளின தம்முடைய குமாரருக்கு அண்ணரும்‌ ஜாத கர்மம்‌ செய்‌தருளி பத்து நாளுங்கடந்த விரண்டாம் நாள்‌ திருவிலச்சினையும்‌ ப்ராஸாதித்து (முன்காலத்‌தில் குழந்தை பிறந்து புண்யாஹவாசநமானவுடன்‌ ‘புஷ்ப ஸமாஸ்ரயணம்‌” என்ற ஸம்ஸ்காரம்‌ பண்ணி வைத்தார்கள்‌. இதில் குழந்தைக்கு ஸுதர்ஸந பாஞ்சஜன்ய இலச்சினைகளை அக்நியால்லாமல்‌ திருமண்‌ ஸ்ரீ சூர்ணங்களால்‌ புஜங்களில் ஓத்துவது அநுஷ்டானம்‌. இத்த ஸம்ஸ்காரம்‌ இன்றும்‌ சில வைஷ்ணவர்களின்‌ ௮நுஷ்டாநத்திலுள்ளது. )
    அததஸ்ய குரு: ஸ்ரீமாந் மத்வாதம்‌ திவ்ய தேஜஸம் |
    அபிராம வராதீஸ இதி நாம ஸமாதிஸத்‌ ॥

    ஸ்ரீமானாய்‌–அந்தக்‌ குமாரரின்‌ தமப்பனாரான அண்ணர்‌ அந்தக்‌ குமாரை, அப்ராக்ருகதா தேஜஸ்ஸை யுடையவராகக்‌ கருதி அவருக்கு அழகிய மணவாளப் பெருமாளென்று திருநாமம்‌ சாத்தினார்‌] என்கிறபடியே-பணமாடரவணைப்‌ பற்ப காலமும்‌ பள்ளி கொள் மணவாளரான அழகிய மணவாளப்‌ பெருமாளுடய திருநாமம் சாத்தி ஆயர் புத்திரனல்லனருந்‌ தெய்வம்‌ என்றும்‌
    என்னையுமெங்கள்‌ குடிமுழுதாட்கொண்ட மன்னன்‌ என்றும் சொல்லுகிறபடியே விசேஷ ப்ரதிபத்தியுடனே மாதுல க்ருஹமான சிக்கல்‌ கிடரத்திலே வர்த்திப்பித்துக்‌ கொண்டு போர, இவரும்‌
    பரபக்தி:பரஜ்ஞாநம்‌ பரமபக்திரித்பபி |
    வபுஷா வர்த்தமாநேந தத்‌ தஸ்ய வவ்ருதே த்ரயம்‌ ॥

    அந்த அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனாருடைய வளரும்‌ தேஹத்துடனே பரபக்தி பரஜ்ஞானம்‌ பரமபக்தி என்னும்‌ படியான மூன்றும்‌ வளர்ச்சி யடைந்தன-என்றும்‌
    உன்‌ வளர்த்தி யூடே வளர்கின்றதாலுன்தன்‌ மாயை தானே என்றும் சொல்லுகிற படியே நாடோறும்‌ வர்த்தித்துக்‌ கொண்டு போரா நிற்க தம்முடைய திவ்ய வபுஸ்ஸோடே பரிணதங்களாய்‌ வளருகிற
    பர பக்த்யாதிகளை வடிவாக வுடையராய்‌ வளர்ந்து செல்லுகிற காலத்திலே மீளவும்‌ தமப்பரான அண்ணர்‌
    ப்ராப்தான் ப்ராதமிகே வர்ணே கல்பஜ்ஞா:கல்பயந்தி யாந் |
    காலே காலே ச ஸம்ஸ்காராந்‌ தஸ்ய சக்ரே க்ரமேண ஸ :

    கல்பத்ஸூத்ரங்களை யறிந்தவர்கள்‌ முதல்‌ வருணத்தவரான அந்தணர்கட்கு உரித்தாக எந்த ஸம்ஸ்காரங்களை (சடங்குகளை) விதித்தனரோ அந்த ஸம்ஸ்காரங்களை அவர்‌ (அண்ணர்‌) தமது குமாரருக்கு முறைப்படிப்‌ பண்ணினார்‌- ‘என்கிறபடியே செளள உபநயநங்களையும சாஸ்த்ர ப்ரகாரத்தாலே தத்தத் காலத்திலே செய்வித்‌து வேத சாஸ்த்ரங்களையும்‌ அதிகரிப்பித்துக்‌ கொண்டு போரா நிற்க அநந்தரம்‌,
    ஆதாம்ரபாத மாஜாநு புஜமம்புஜலோசநம்‌ |
    ஆகாரமஸ்ய ஸ்ம்பஸ்பந்‌ முக்தோபி முமுதே ஜந
    – என்றும்‌
    ஸெளஸீல்யேந ஸுஹ்ருத்வேந காம்பீர்யேண கரீயஸா |
    ரஞ்ஜநேந ப்ரஜாகாஞ்ச ராமோ அயமிதி மேநிரே ॥

    அறிவில்லாத ஐநங்களும்‌ செந்தாமரை போல்‌ சிவத்த திருவடிகளையும்‌ முழந்தாள்‌ வரையிலும்‌ நீண்டுள்ள திருக் கைகளையும்‌, செந்தாமரையை யொத்த திருக் கண்களையு முடைத்தான இவருடைய திருமேனியை ஸேவித்து மகழ்வெய்தினர்‌-
    தாழ்ந்தவர்களுடனும்‌ நன்கு கலந்து பழகுமியல்பாலும்‌ யாவரிடத்துத்‌ ப்ரீதி யுடையரா யிருப்பதாலும்‌ மிகவும்‌ கம்பீரமான ஸ்வபாவத்தாலும்‌, ஜநங்களை மகிழ்விக்கையாலும்‌, இவர்‌ ராமபிரான்‌ என்று எண்ணினார்கள்‌–என்கிறபடியே அகல ஐநங்களையும்‌ ஆநந்திப்‌பித்துக் கொண்டு
    காலேந ஸகலா நாம்ச கலாநாமேக மாஸ்பதம்‌ |:
    ஸூஸூபே ஸதநம்‌ பூர்ண: ஸுதாம் ஸூரிவ நிர்மல: ॥

    பின்னர்‌ எல்லா வித்யைகளுக்கும்‌ சிறந்த கொள்கலமான அழகிய மணவாளப் பெருமாள்‌ களங்க மில்லாத பூர்ண சந்த்ரன்‌ போலே எப்போதும்‌ விளங்கினார்‌ -என்கிற படியே-(மேகோபராக திரோஹிதனாய்‌ க்ருஷ்ணபஷே க்ஷயிஷ்ணுவாய்‌ ஸ களங்கனான தோஷா கரனைப்‌ போலன்றிக்கே அகளங்கித ஸதா ஸம்பூர்ண கலாயுத ராகா சந்த்ரனைப் போலே ஷோடஸவார்‌ஷிகரானவாறே ஷோடஸ ஸம்ஸ்கார ஸம்ஸ்க்ருதராய்‌ கலா பூர்த்தியால்‌ வந்த பரபூர்ண ஜ்ஞாநமுடையராய்‌ அத்தால்‌ அத்யந்தம்‌ ப்ரகாஸகராய்‌ போரா நிற்க ) பால சந்த்ரனாவன்‌ நாடோறும்‌ கலைகளாலே வர்த்தித்துக் கொண்டு பூர்ணனாய்‌ விளங்குமா போலே இவரும்‌ ஸகல கலா பூர்த்தியால்‌ வத்த பரி பூர்ண ஜ்ஞாதத்தாலே நிரதிஸய வைபவத்தை யுடையரா யெழுந்தருளி யிருந்தார்‌.

    இனி கோயில்‌ வருத்தாந்த்தம்‌
    அக் காலத்தில்‌ அங்கிருந்த மஹாத்மாக்கள்‌ நாடோறும்‌ பூர்வம்‌ போலே ஸ்ரீமந்‌ ஸ்ரீரங்க ச்ரிய மநுபத்ரவா மநுதிநம்‌ ஸம்வர்‌த்தய*” என்று ஸ்ரீரங்க ஐஸ்ர்வர்யம்‌ நித்யமாய்‌ நிர்வதிகமாய்‌ நிர் விக்நமாய்ச்‌ செல்ல வேணுமென்று –
    திருப்பல்லாண்டும்‌,
    ஏழை யேதலனும்‌,
    ஆழி யெழச் சங்கும்‌ அநுஸந்தித்துப்‌ பெருமாளை ப்ரபத்தி பண்ணிப்‌ போருகையாலே
    , அந்த மங்களாஸாஸநம்‌ பலித்து செஞ்சியில்‌ கோபணார்யனென்பானொரு வைஷ்ணவ ப்ரபு திருப்பதிக்குச்‌ சென்று திருவேங்கடத் தெம்பெருமானைத்‌ திருவடி தொழுது மீண்டு வருகிறவன்‌ அங்கே நம்பெருமாளை ஸேவித்து திருப்பதி யினின்றும்‌ நம்பெருமாளைத்‌ தன்னுடைய நகரமான செஞ்சி யேற எழுந்தருளுவித்துக் கொண்டு வந்து சிங்கராயபுரத்‌திலே யெழுந்தருளப் பண்ணிக்‌ கொண்டிருந்து பக்தி புரஸ்ஸரமாக ஆராதித்துக் கொண்டிருக்க, திருமணத்தூண்‌ நம்பியாகிய சிங்கப்‌ பிரானும்‌ காட்டிக்‌ கொடுக்க, பகவத் விட்டுக்களான துருஷ்கரை யடக்க ஸமயம்‌ பார்த்து, நிரவதிக பல ஸஹிதராய்ச்‌ செஞ்சியார்‌ சென்று நிஸ்ஸேஷமாக நிரஸித்து ஸ்வ நகரத்தினின்றும்‌ திரு வரங்கன் திருப்பதி யேற நம்பெருமாளைப்‌ பிராட்டிமாருடனே எழுத்தருளப் பண்‌ணி வைத்துக் கொண்டு யதாஸ்தாநத்தில்‌ பெரிய பெருமாளுடனே சேர்த்து ப்ரதிஷ்டிப்பித்து அனைத்தழகும்‌ கண்டருளப் பண்ணினானிறே –

    ஆநீயா நீலச்ருங்கத் யுதிரசித ஐகத் ரஞ்ஜ நாதஞ்ஜ நாத்ரேஸ்‌ செஞ்ஜ்யா
    யாராத்ய கஞ்சித்‌ ஸமயமத நிஹத் யோத்த நுஷ்காந்‌ துருஷ்காந்‌ |
    லக்ஷ்மீ க்ஷமாப்யா முபாப்யாம்‌ ஸஹ நிஜ நிலயே அஸ்தாபயத்‌ ரங்கநாதம்‌
    ஸம்யக்சர்யாம்‌ ஸபர்யா மக்ருத நிஜயஸோ தர்பணோ கோபர்ணார்ய: ॥

    தனது, கண்ணாடி போல்‌ பளபளக்கின்ற புகழை யுடைய கோபணார்யனென்பவன்‌, முழுவதும்‌ கறுத்த கொடி முடியின்‌ காந்தியினால்‌ உலகுக்கு மகழ்ச்சியை யூட்டுகின்ற அஞ்ஜநாசல மென்னும்‌ திருவேங்கட்மலையிலிருந்து எழுந்தருளி வித்துக்கொண்டு வந்து, செஞ்சியில்‌ சில நாட்கள்‌ ஆராதித்து பின்பு வில்லேந்தித்‌ சண்டை யிட வந்த துருஷ்கர்களைக்‌ கொன்று, ஸ்ரீதேவி பூதேவிகளோடு கூட ரங்க நாதனை அவர்‌ தமது ஸ்தானமாகிய திருவரங்கத்தில்‌ ஸ்தாபித்தான்‌. திருவாராதனத்தையும்‌ மிகவும்‌
    ஒழுங்குடையதாக நடத்தினான்‌ -என்று இவ்வார்த்தை அபியுக்தருமருளிச் செய்தாரிறே,

    கொங்குங்‌ குடந்தையுங்‌ கோட்டியூரும்‌ பேரும்‌ எங்குந்திரித்து விளையாடும்‌ என்கிறபடியே மயல்மிகுபொழில்சூழ்‌ மாலிருஞ்‌சோலையிலும்‌ -விரையார்‌ பொழில்‌ வேங்கடத்திலும்‌ விஹரித்து!
    ப்ரதிபக்ஷ நிரஸந பூர்வகமாக கோயிற்பிள்ளாய்‌! இங்கே போதராயே என்னும்‌ படியான தாம்‌ மீண்டு கோயில் ஏற வெழுந்தருளி , பஹு ப்ரியமான சகாப்தம்‌(சகாப்தம்‌ 1293 பரீதாபி வைகாசி என்று கோயிலோழுகு,) ஆயிரத்திருநூறு சென்ற வர்த்தமான பரீதாபி ஸம்வத்ஸரம்‌ வைகாசி மாஸம்‌ பதினேழாந்தேதியில் அரங்க நகரானது -ராமஸ் ஸீதா மநுப்ராப்ய ராஜ்யம்‌ புநரவாப்‌தவாந்‌’–இராமபிரான்‌ ஸீதையைப் பெற்றுத் திரும்பி மறுபடியும்‌ ராஜ்யத்தை அடைந்தான்‌-என்றும்‌, திருமகளோடினிதமர்ந்த செல்வன்‌ என்றும்‌, வீற்றிருந்த மணவாளர்‌ மன்னு கோயில்‌ என்றும்‌ சொல்லுகிறபடியே அழகிய மணவாளரான தாம்‌ நாய்ச்சிமாருடனே கூடி சேர பாண்டியன்‌ என்கிற திவ்ய ஸிம்ஹாஸநத்திலே சேர்த்தியுடனே யேறி யருளி இனிதுடன்‌ வீற்றிருத்து-செங்கோலுடைய திருவரங்கச்‌ செல்வனார்‌ என்னுமது தோன்ற திருவாரதனங் கண்டருளி வாழ்ந்தருளா நிற்க:

    அச்செய்தியை தேசாந்தரஸ்தரான ஸ்ரீவைஷ்ணவர்களெல்‌லாரும்‌ கேட்டு,
    பஹுநிநாம வர்ஷாணி கதஸ்ய ஸூ மஹத்வரநம்‌ 1
    ஸ்ருணோம்யஹம ப்ரீதிககும்‌ மமநாதஸ்ய கீர்த்தநம்‌ ॥

    பலவாண்டுகள்‌ மிகப் பெரிய கானகத்தை யடைத்த நம்பெருமாளுடையதாய்‌ மகிழ்ச்சியை உண்டாக்குகிற (திரும்பி யெழிந்தருளினாரென்னும்‌) நல் வார்த்தையைக்‌ கேட்கப் பெற்தேன்‌-என்கிறபடியே நெடுங்காலத்திற்காக இப்போது பெருமாள் எழுந்தருளப் பெற்றதே! என்று போர ப்ரீதராய்‌ அப்போதே யாவரும் வந்தடி வணங்கி, ‘*ப்ரஹ்ருஷ்ட முதிதோ லோக; -மக்கள்‌ மிகவும்‌ களிப்படைந்தனர்‌- என்றபடியே அத்யந்தம்‌ ஹ்ருஷ்டாரயிருக்க பெருமாளும்‌ ‘விஜ்வர: ப்ரமுமோதஹ”-ஜ்வரம்‌-கவலை- நீங்கியவராய்‌ மிகவும்‌ மகழ்வெய்தினார்‌- என்கிறபடியே துளக்கற்றமுதமாய்‌ எங்கும்‌ பக்க நோக்கறியாதே -ஸர்வரையுங்‌ குளிரக் கடாஷித்துக்‌ கொண்டு அன்பொடு தென் திசை நோக்கி அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனாரைக்‌ கடாக்ஷித்துக் கொண்டு எழுந்தருளி யிருந்தார்‌.

    அழகிய மணாவாளய்‌ பெருமாள்‌ திருமலை யாழ்வாரை ஆஸ்ரயிக்தல்‌
    அக் காலத்தில்‌ திகழக் கிடந்தான்‌ திருநாவீறுடைய பிரான்‌ தாதரண்ணர்‌ தம்முடைய திருக் குமாரராக வளர்ந்தருளுகிற பரம போகீந்த்ரரான அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனாருக்குத்‌ திருக் கல்யாணமுஞ்‌ செய்வித்து, பின்பு அருளிச் செயல்களையும்‌ ரஹஸ்யங்களையும்‌ தாமே யோதுவித்தருளினார்‌. அவரும்‌ அந்த உபகாரத்துக்கீடுபட்டு
    ஸ்ரீ ஜிஹ்வாவ ததீஸ தாஸமமலமஸேஷ ஸாஸ்த்ர விதம்‌ |
    ஸுந்தரவா குருகருணாகந்‌ தனிது ஜ்ஞாந மந்திரம்ச லேய ॥-ஸ்ரீஜிஹ்வார்க்யாதீஸம்‌ என்றும்‌ பாடமுண்டு-

    கோட்டூரழகிய மணவாளப் பெருமாள்‌ பிள்ளையினருளால்‌ வருத்தியடைந்த ஜ்ஞாநத்திக் கிருப்பிடமாய்‌, எல்லா சாஸ்த்ரங்களையும்‌ குறையறக்‌ கற்றறிந்தவரான திருநாவீறுடைய பிரான்‌ தாதரண்‌ணரை த்யானிக்கிறேன்‌ -என்றும்‌
    வாழி திருநாவீறுடைய பிரான்‌ தாதனருள்‌
    வாழியவன்‌ மாமை வாக்கின்பம்‌–வாழியவன்‌
    வீரன்‌ மணவாளன்‌ விரை மலர்ததாள்‌ சூடி.
    பாரமதைத்‌ தீர்த்தளித்த பண்பு
    ‘-என்று அநுஸந்தித்தருளினாரிறே.

    பின்பு சிலகாலம் சென்‌றவாறே அண்ணரும்‌ திருநாட்டுக்கெழுந்தருள, அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனாரும்‌ அவரை ஸம்ஸ்கரித்துப்‌ பள்ளிப் படுத்துதிருவத்யயநமும்‌ பெருக்க நடத்தி யருளினார்‌
    அநத்தரம்‌ ஆழ்வார்‌ திருதகரியிலே தர்‌சந ப்ரவர்த்தகரா யெழுத்தருளியிருக்கிற திருமலையாழ்வாரும்‌, “இனி தர்சநப்‌ ப்ரவர்த்தகராவாரார்‌?” என்று விசாரித்துக் கொண்டு-தொண்டர்க்கமுதுண்ணச்‌ சொன்‌ மாலைகளான திருவாய்‌ மொழி, நிலத்தேவரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும்‌, பக்தாம்ருதம் என்னும்படி பரம போக்யமாக வவதரித்ததாகையாலே சப்த ரஸம்‌, அர்த்த ரஸம்‌, பாவ ரஸம்‌, என்கிற விவற்றை அநவரதம்‌ அநுஸந்தித்துக் கொண்டு ததேக் நிஷ்டராய்‌ தத் வ்யதிரிக்த சாஸ்த்‌ரங்களை த்ருணவத் ப்ரதிபத்தி பண்ணி யிருக்கையாலே திருவாய்‌ மொழிப் பிள்ளை என்று திருவாய்மொழி ஸம்பந்தத்தையே தமக்கு நிரூபகமாக வுடையராரய்‌ ஆழ்வார்‌ திருவடிகளிலே கைங்கர்யமே அநவரதமுஞ்செய்து கொண்டு போரா நிற்கிற திருவாய்மொழிப்‌ பிள்ளையினுடைய திவ்ய கடாக்ஷத்திற்கு விஷயமாமபடி அழகிய மணவாளப்பெருமாள்‌ நாயனாரும்‌ திருவநந்தாழ்வான்‌ சகந்தன்னைத்‌ திருத்த மருவிய குருகூர்‌ வளநகர்‌ வந்து-என்‌கிற படியே ஸ்வ மாதுல க்ருஹமான சிக்கில் கடாரத்திலிருந்து தமக்கு ஜந்ம பூமியான திருநகரியேற வெழுந்தருளி பொருநற்சங்கணி
    துறையிலே சங்கங்கள்‌ சேறுமா போலே சங்க வண்ண நம்பியுடைய அவதாரமாகையாலே சுத்த ஸ்வபபாவரான தாமும்‌ திருவாய்‌ மொழிப் பிள்ளை திருத்‌ தாள்‌ சேர்ந்து என்கிறபடியே மெய்ஞ்ஞானத்‌
    துறையான பிள்ளை திருவடிகளிலே ஆச்ரயித்து ”அஸிஸரியதயம்‌ பூய: ஸ்ரீ ஸைலாதீஸ தேஸிகம்‌” -இந்த அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ திருமலை யாழ்வாரென்னும்‌ ஆசார்யரை ஆஸ்ரயித்தார்‌-என்கிறபடியே *தேசந்திகழுந்‌ திருவாய்மொழிப்பிள்ளை வாச மலர்த்தாளடைந்து வைத்து என்னும்படி விலஷாண ஸம்பந்த யுக்தராய்‌;
    ததஸ்‌ ஸ்ருதிதரஸ் ஸோயம்‌ தஸ்மாத்தஸ்ய ப்ரஸாதத: |
    அஸேஷாந ஸ்ருணோத் திவ்யாந்‌ ப்ரபந்தாந்‌ பந்தாச்சித: ॥

    பின்னர்‌ ஸாங்க வேதாத்யயநம்‌ பண்ணிய இவ் வழகிய மணவாளப்‌ பெருமாள்‌ திருமலையாழ்வாருடைய அருளால்‌ அவரிடமிகுத்து ஸம்ஸார பந்தத்தை யறுப்பதான எல்லா வருளிச்செயல்‌களின்‌ தாத்பர்யங்களையும்‌ கேட்டறிந்தார்‌-என்திறபடியே த்ராவிட வேத ததங்கோபாங்கங்களான ஸமஸ்த திவ்ய ப்ரபந்த தாத்பர்யங்க ளையும்‌ அவருபதேச முகத்நாலே.லபித்து மிக்க வேதியர்‌ வேதத்‌த்தின் உட்ப்பொருளானnசரம பர்‌ வத்திலே நிஷ்ட்டராய்‌- ஸேஷித்வ ஸரண்யத்வ ப்ராப்யத்வங்கள்‌ மூன்றையும்‌ பிள்ளை விஷயத்திலே அநுஸந்தித்து, (அன்னையுமத்தனு மாசாரியனு மனைத்துறவும்‌, மன்னிய பேறுமுபாயமும்‌ தெய்வமும்‌ மற்றுமெல்லாம்‌, என்னை யளித்த திருவாய்மொழிப்‌ பிள்ளையென்று நெஞ்சே! உன்னியிராது மற்றோன்‌றில்‌ புல ஓதுவதே’ என்றும்‌, விண்ணும்‌ திருமலையாழ்‌ வாழ்வார் வடிவு விரைபுடைசூழ்‌, மண்ணும்‌ திருமலை யாழ்லார்‌ வடிவு மற்றொங்கும்‌, கண்ணும்‌ திருமலை யாழ்வார்‌ வடிவன்றித்‌ காண்டகிறிலேன்‌, என்றும்‌ திருலையாழ்வார்‌ வடிவெங்கும்‌ யாவர்க்குமே–என்றும்‌. )ததேக நிஷ்டரா யெழுந்தருளி யிருக்கிற இவரை:

    நாயனாரை திருவாய்மொழிப் பிள்ளை உடையவர் திருவடிகளில் ஈடுபடுத்தல்‌
    பிள்ளை தாமே உகந்து உடையவர்‌ திருவடிகளைக்‌ காட்டிக்‌ கொடுத்தருள உன் பதயுகமேர் கொண்ட வீட்டை எளிதினிலெய்துவன்‌ என்கிறபடியே பரம புருஷார்த்தத்தை ஸுலபமாக லபித்து அத்யந்த ஹ்ருஷ்டராய்‌ எழுந்தருளி இருக்க, அவ்வளவில்‌ பிள்ளையும்‌ ஆழ்வார்‌ திருவடிகளிலே ப்ராவண்யாதிசயத்தாலே அவரடி பணிந்துய்ந்த எம்‌பெருமானார்‌ திருவடிகளிலும்‌ அதி ப்ராவண்யத்தை யுடையவாராய்ப்‌ போருகையாலே ராமாநுஜ பதாம் போஜ த்வந்த்வ கைங்கர்யத்திலே அந்வயிக்க வேணுமென்று திருவுள்ளமாய்‌ அப்படியே தத் கைங்கர்யத்திலே அந்வயித்து
    அவகாஹித்து அதுவே தமக்கு தாரகாதிகளாகச்‌ செய்து கொண்டு போருகிறவர்‌, உடையருக்குத்‌ தனிக் கோயில்‌ தொடக்கமான அனைத்தழகுங் கண்டருளப்‌ பண்ணி, கோயிலை வளைய ராமாதுஜ சதுர்வேத மங்கலம்‌.என்கிற திரு வீதியையும்‌ உண்டாக்கி, அங்கே ராமாநுசனைத் தொழும்‌ பெரியோரையும்‌ ப்ரதிஷ்டிப்பித்து, தாமும்‌ ஸூக ப்ரதிஷ்டிதராய்‌ எழுந்தருளி யிருந்தார்‌.
    நாயனார் யதீராஜ விம்சதீ விண்ணப்பம் செய்தல்‌
    அநந்தரம்‌ நாயனாரும்‌ தமக்குப்‌ பிள்ளை ப்ராப்யமாகக்‌ காட்டி யருளின உடையவர்‌ திருவடிகளிலே யதீந்த்ர ப்ரவணர்‌ என்னும்படி அத்யந்தம்‌ ப்ராவண்யத்தை யுடையராய்‌ தம்முடைய ப்ரேமாநுகுணமாக யதிராஜ விம்சதியை அவ்வெம்பெருமனார்‌ விஷயமாக அருளிச்‌ செய்ய, அந்த உபகாரத்திற்கு
    வல்லார்கள்‌ வாழ்த்துங் குருகேசர்‌ தம்மை மனத்து வைத்துச்‌
    சொல்லார வாழ்த்தும்‌ மணவாள மா முனி தொண்டர்‌ குழாம்‌
    எல்லாந் தழைக்க எதிராச விம்சதி யின்றளித்தோன்‌
    புல்லாரவிந்தத்‌ திருத்தாளிரண்டையும்‌ போற்று நெஞ்சே
    -என்று பின்புள்ளாரும் அநுஸந்தித்து ஈடுபடும்படியாயிற்று,

    இவருடைய விண்ணப்பமான விம்சதியைப்‌ பிள்ளையுங் கேட்டு உகந்தருளித்‌ திருப்புளி யாழ்வாரடியிலே தாம்‌ கண்ட(கண்டெடுத்த) தம் முடையவரையும்‌ (இந்த ஸன்னிதியில்‌ ப்ரதிஷ்டிப்பிதுள்ள உடையவர்‌ திருமேனி(உத்ஸவர்‌) பற்றி பெரியோர்‌ வாய் வழி வரும்‌ வரலாறு: மதுரகவிகள்‌ ஆழ்வாரின்‌ ஸ்வப்ந முக நியமனப்படி ஆழ்வார்‌ திருமேனி எழுந்தருளப்‌ பண்ணுவதாக தாம்ரபரணி நீரைக்‌ காய்ச்ச-முதலில்‌ உடையவர்‌ திருமேனி ஆவிர்ப்பவித்தாகவும்‌, மதுரகவிகள்‌
    மாநஸிகமாய்‌ “இது உமது திருமேனி யல்லவே” என்று ஆழ்வாரை வேண்ட, ஆழ்வாரும்‌ இது *பொலிக பொலிக திருவாய்‌ மொழிக்கு விஷயமான பவிஷ்யதாசார்ய விக்ரஹம்‌; கலியுங்‌ கெடும்‌ கண்டு கொண்மின்‌ என்னும்படி இவர்‌ அவதரிக்கப்‌ போகிறார்‌. இவரை ஆராதியம்‌. மீண்டும்‌ தாம்ரபரணி நீரைக்‌ காய்ச்சும்‌; நாம்‌ அர்ச்சையாக ஆவிர்ப்பவிக்கிறோம்‌” என்று நியமிக்க, மதுரகவிகளும்‌ அப்படியே செய்ய, இன்றும்‌ உபதேச முத்ரையுடன்‌ ஸேவை தரும்‌ ஆழ்வார்‌ திருமேனி ஆவிர்ப்பாவித்தாகவும்‌
    சொல்வர்‌. ஆழ்வார்‌ திருமேனிக்கும்‌ முன்னரே ஆவிர்ப்பவித்த உடையவர்‌ திருமேனியே இன்றும்‌ ஆழ்வார்‌ திருநகரி உடையவர்‌ ஸன்னிதியில்‌ ஸேவிப்பது என்று பெரியோர்‌ பணிக்கும்படி. )
    இவர்க்கு ‘ப்ரஸாதித்தருளி இவரும்‌ ‘ஸ்ரீமந்யதீத்த்ர! தவ திவ்ய பாதாப்ஜ ஸேவாம்‌ ஸ்ரீஸைல நாத கருணா பரிணாமதத்தாம்‌” (யதிராஜ விம்சதி -19) என்று அநுஸந்தித்து ப்ரிதராய்‌, ‘ யதீந்தர்மேவ நீரந்த்ரம்‌ நிஷேவேதைவதம்பரம்‌--எம்பெருமானாரையே பரதெய்வமாக அத்யவஸித்து நித்யமாய்‌ கைங்கர்யம்‌ பண்ணிக்‌ கொண்டிருந்தார்‌–என்கிறபடியே அவருக்கு உகப்பாக ததாராதன பரராய்‌ ததேக நிஷ்டரா யெழுந்தருளி யிருக்க, இப்படி ஆழ்வாருடையவும்‌ எம்பெருமானாருடையவும்‌ கைங்கர்யமே புருஷார்த்தமாக வெழுந்தருளி யிருக்கிற பிள்ளையும்‌ அப்போதைக்கப்‌போது அபிநவங்‌களாய்‌ வர்த்தித்துக் கொண்டு போகிற இவருடைய ஜ்ஞான பக்த்யாதிகளைக்‌ கண்டு (ஜ்ஞான பக்தி வைராக்யங்கள்‌ இட்டு மாறினாப்‌ போலே வடிவிலே தொடை கொள்ளலாம்படியான இவருடைய பரமாஸ் திகத்வத்தைக்‌ கண்டு-)அபிமத விஷயத்தைக்‌ கண்டாற்‌ போலே ஆதரித்துப்‌ போரா நிற்க;

    பின்பொருநாள்‌ தமது திரு நந்த்த வனத்தில்‌ விளைகிற பச்சைக் சகறியமுதை இவர்க்குப்‌ போக விட்டருள, இவரும்‌ “இப்படிச்‌ செய்‌தருளுவதே?’” என்று விண்ணப்பஞ்‌ செய்ய, பிள்ளையும்‌ உம்மைப் போலே வொரு விஷயத்தைப்‌ பெறாமையாலே அர்ச்சாவதாராத்திலே மண்டினோம்‌*’ என்று அருளிச்‌ செய்து தாமும்‌ விரக்தராய் விருக்கச்‌ செய்தேயும்‌ இவருடைய ளெளகுமார்யத்துக் கநுகுண மாக அமுது செய்தருளுகை தொடக்கமான எல்லா உபுசாரங்களையு மாராய்ந்து கொண்டு போருகிறபடியையும்‌, அங்கீ கரித்த வன்று தொடங்க பங்க்திபாவநராம்படி அபிமானித்து ஆதரித்துக்‌ கொண்டு போருகிற படியையுங்‌ கண்டு ஸ்ரீபாதத்து முதலிகளுக்கு இவரிடத்தலே அஸுயை நடந்து செல்ல, இத்தை ஸர்வஜ்ஞரான பிள்ளை அறிந்தருளி அவர்கள்‌ அபசாரப்படாதபடி இவருடைய சேஷாஹிபதிவேஷாந்தரத்தை எல்லோரும்‌ ப்ரத்யஷீ கரிக்கும் படி வாக் சாதுர்யங்களாலே காட்டி யருளி, அவர்களுக்கும்‌ இவரிடத்‌திலே விசேஷ ப்ரதி பத்தியை விளைவித்துப்‌ போரா நிற்க, இவரும்‌ பிள்ளை திருவுள்ளத்தை உகப்பித்துக்‌ கொண்டு அங்குத்தைக்கு விதேயரா யிருக்கிற காலத்திலே ஈடு முப்பத்தாறாயிரம்‌ பாட மிட்டருளி மற்று முண்டான வ்யாக்யானங்களையும்‌ பாடப்ராயமாகப்‌ பண்ணி யிருக்கிற காலத்திலே நாயனாருக்கு திருக்குமாரர்‌ ‘திருவவதரிக்க, “’திருநாமமேது?” என்று பிள்ளையைக்‌ கேட்டருள, “ஒருக்கால்‌ சொன்னாற்போலே தூற்றெட்டுதரம்‌ சொல்லி யிருக்கிறதே!’” என்றருளிச்‌ செய்ய, எம்யைனிராமானுசன்‌ என்று : திருநாமம்‌ சாத்‌தியருளித்‌ தாமும்‌ *இராமானுசன்‌ திருநாமம்‌ நம்ப வல்லராய்‌ வாழ்ந்து கொண்டு போரா நிற்க; ஒரு நாள்‌ ஒரு திருவாதிரை நக்ஷத்ரத்திலே பிள்ளையும்‌ முதலிகளும்‌ அமுது செய்தருளா நிற்க,
    இன்றோ வெதிராசரிவ்வுலகில்‌ தோன்றிய நாள்‌
    இன்றோ கலி யிருள்‌ நீங்கு நாள்‌-
    -என்று பிள்ளை ஈடுபட்டருளி மேல்‌ அருளிச்‌ செய்ய மாட்டரமல்‌ இத்தையே பலகாலுமருளிச்‌ செய்து கொண்டிருக்க
    இன்றோ தான்‌ வேதியர்கள்‌ வாழ, விரை மகிழோன்‌ தான்‌ வாழ
    வாதியர்கள்‌ வாழ்வடங்குநாள்‌–
    என்று தாயனார்‌ தலைக்கட்டியருள, இதைக்கேட்ட பிள்ளை மிகவும்‌ ப்ரீதராய்‌ அமுது செய்யா நிற்க மத்யே தளகைப்‌ ப்ரஸாதம்‌ பரஸாதித்து பிகவும்‌ க்ருபை பண்ணி யருளினார்‌. இப்படி சிஷ்யாசார்ய க்ரமம்‌ நன்றாக நடந்து செல்லுகிற காலத்திலே ஸ்ரீபராங்குச தாஸரான்‌ பெரிய நம்பியை ஆஸ்ரயித்த ஏற்றம்‌ எம்பெருமானார்க்கு உண்டானாற்போல சடகோப தாஸரான பிள்ளையை யாஸ்ரயித்த வேற்றம்‌ இவர்க்குண்டாயிற்றென்று எல்லாரு மிவரை உடையவருடைய அவதார விசேஷமென்று ஆதரித்துக் கொண்டு போந்தார்‌கள்‌.

    இப்படி அவதார விசேஷமான இவர்‌
    வடமாமலை முதல்‌ மல்லனந்தபுரி யெல்லை மல்கித்‌
    திடமாக வாழுந் திருவுடைய மன்னிரில்‌ தேசுடையோன்‌
    திடமான ஞான விரக்தி பரமிவை சேர நின்ற
    சடகோப தாதர்‌ குருகூர் வாழ்‌ பிள்ளையைச்‌ சேரு நெஞ்சே
    -என்றும்‌
    நம ஸ்ரீஸைல நாதாய குந்‌தீ நகரா ஜத்மநே !,ப்ரஸாத லப்த பரம
    ப்ராப்ய கைங்கர்யய ஸாலிநே ॥
    என்றும் -குந்தி புரத்தில்‌ திருவவதரித்தருளி ஆழ்வாரருளால் பெறப்பட்ட நிரதிசய ப்ராப்பமான கைங்கர்யத்தினால்‌ விளங்கும் திருவாய் மொழிப் பிள்ளயை வணங்குகிறேன்‌ —
    செந்தமிழ்‌ வேதத் திருமலை யாழ்வார்‌ வாழி
    குந்தி நகர்க்‌ கண்ணல்‌ கொடை வாழி—உந்திய சீர்‌
    வாழியவனமுத வாய்‌ மொழி கேட்டப் பொருளில்‌
    தாழுமற்றன்பர்‌ திருத்தாள்‌-
    -என்றும் இத்தனியன்களை பிள்ளை விஷயத்தில்‌ தாமுமநுஸத்தித்‌தருளினார்‌. அநந்தரம்‌ உகப்புடனே இங்கிருக்கும்‌ காலத்திலே பிள்ளை
    அப்யர்ச்ய நந்ததநயம்‌ கரபங்கஜாத்த வேணும்‌ ததீய சரண
    ப்ரவணார்த்ரசேதா: |
    கோதாபிதுர் கஹந ஸூக்தி நிபந்தநஸ்ய வ்யாக்யாம் வயதாத்‌
    த்ரவிட வேத குரு: ப்ரஸந்நாம்‌-என்றும்‌ ॥

    செந்தாமரைக் கைகளாலே தரிக்கப்பட்ட புல்லாங்குழலை யுடைய இன வாயர்‌ தலைவனை நன்றாக வாராதித்து, ‘ அக் கண்ணன்‌ கழலிணையில்‌ ப்ரேமத்துடன்‌ ஆழ்ந்த மனத்தை யுடைய திருவாய்‌
    மொழிப் பிள்ளை பெரியாழ்வா ருடைய கம்‌பீரமான பாசுரங்களுக்குத்‌ தெளிவான வியாக்கியானத்தை அருளிச்‌ செய்தார்‌

    அநந்தன்‌ திருமலை யாழ்வாரென வந்த வதரித்து
    தனம் தன்கைப்படிற்றானம்‌ செய்வனென்று தரணி தனில்‌.
    அநந்தம்‌ புரிய சடகோபனருட்‌ காட்செய்வது
    இனந் தனிலொக்கு மென்று எல்லோரும்‌ பாவித்திருப்பதுவே
    -என்றும்‌ பிள்ளையுடைய வைபவத்தை மற்றுமுண்டானவர்களும்‌ அநுஸந்தித்தார்கள்‌.

    அழகிய மாணவாள எம் பெருமாளுக்குப்‌ பிள்ளை சரம நியமனம்‌.
    இப்படி ஜ்ஞான பக்தி வைராக்யங்களை வடிவாக வுடையராய்‌, அத்தாலே வந்த மஹா ப்ரபாவத்தை யுடையரான பிள்ளை கைங்கர்யஸ்ரீயோடே நெடுங்காலம்‌ வாழ்ந்தருளி, பின்பு நித்ய விபூதியிலே
    நித்ய கைங்கர்யாதராய்‌ வாழ்க்கையில்‌ நினைவாய்‌,
    உத்தமனே! உலகாரியனே! மற்றொப்பாரை யில்லா
    வித்தகனே ! நல்ல வேதியனே ! தண் முடும்பை மன்னா!
    சுத்த நன்ஞானியர்‌ நற்றுணையே! சுத்த ஸத்துவனே!
    எத்தனை காலமிருந் துழல்வேன்‌ இவ்வுடம்பு கொண்டே-
    -என்று
    அதற்கு ப்ரதி பந்தகம்‌ திருமேனி யோட்டை ஸம்பந்தமென்று அறுதி யிட்டு தத் விமோசனத்தையும்‌ தம்‌ தேசிகரிடத்திலே யபேக்ஷித்துக் கொண்டே யிருக்க, ௮வ்‌ வளவிலே திருமேனியிலே நோவு சாத்தி மிகவும் தளர்ந்து கண் வளர்ந்தருளுகிறவர்‌ பெரிய கிலேசத்துடனே முத்து எழுந்தருளியிருக்க, “இது என்‌?” என்று நாயனார்‌ தொடக்கமான முதலிகள்‌ கேட்டருள, காலம்‌ கலிகால மாகையாலே ஆழ்வார்கள்‌ திவ்ய ஸூக்தகளான அருளிச் செயலிலே ருசி விஸ்வாஸங்களை யுடையராய்‌ இத்தை வளர்த்துப் போருவார்‌ ஆர்‌? என்று மிகவும்‌ க்லேசமாயிரா நின்றது” என்ன, பின்பு நாயனாரும்‌ திருவடியிலே ஸேவித்து அடியேன்‌ அப்படியே செய்‌கிறேன்‌’? என்ன, ”கேவலம்‌ வார்த்தை போராது” என்ன
    நாயனாரும்‌ திருவடிகளைத் தொட்டு சபத பூர்வகமாக அப்படியே செய்கிறேன்‌” என்றருளிச் செய்ய, பின்பு திருவுள்ளம்‌ தேறி,நாயனாரை யழைத்தருளி, ஸம்ஸ்க்ருத சாஸ்த்ரங்களிலே பல காலும்‌ கண் வையாமல்‌ ஸ்ரீபாஷ்யத்தை ஒருக்கால்‌ கேட்டு தமக்கும்‌ எம்பெருமானாருக்கும்‌ ப்ரியமாகத்‌ திருவாய்மொழி முதலான அருளிச் செயலிலே அநவரதம்‌ பரிசீலனை பண்ணிக் கொண்டு பூர்வர்களைப் போலே பெருமாளுக்கு மங்களா சாசன பரராய்க்‌ கொண்டு கோயிலிலே நித்ய வாஸமாக எழுந்தருளியிரும்‌”‘ என்று நியமித்தருளி மற்று முண்டானவர்களை யழைத்தருளி நாயனார்‌
    திருக்கையிலே காட்டிக் கொடுத்தருளி இவரை அவதார விசேஷமென்று ஆதரித்துப் போருங்கோள்‌” என்று அருளிச் செய்து ந்யஸ்த பரராய்‌ பின்பு மாக வைகுந்தம்‌ காண்பதற்கு என் மனமேக
    மெண்ணும்‌ என்கிறபடியே அதிலே அபிவ்ருத்த மநோ ரதராய்‌ பிள்ளை லோகாசாசியர்‌ திருவடிகளைத் த்யானித்துக்‌ கொண்டு வைசாக பஹுள அஷ்டமியில்‌ திருநாட்டுக் கெழுந்தருளினார்‌.(ஊூனொழிந்தால்‌ நானிருந்ந உயர்திவத்து வாரும்‌ என்ற ஸ்வாசாரியரான பின்னைலோகாசாரியர்‌-)

    திருவாய் மொழிப் பிள்ளையின் தன்னேற்றம்
    அநந்தரம்‌ நாயனார்‌ தொடக்கமான முதலிகளெல்லாரும்‌ ஆசார்ய வியோகா அஸஹிஷ்ணுக்களாய்‌ அத்யந்தம்‌ ஆர்த்தராய்‌ க்லேசித்துத்தேறி ப்ரஹ்மமேத ஸம்ஸ்காரத்தாலே பள்ளிப்படுத்து தீர்த்தம்‌ கொண்டாடி பதிமூன்றாந்‌ திவஸத்திலே திருவத்யயனமும்‌ நன்றாக நடத்தி யருளினார்கள்‌ -நாயனாரும்‌ ப்ரதிவருஷம்‌ வைகாசி மாஸத்தில்‌ அபர பக்ஷத்தில்‌ அஷ்டமி தோறும்‌ ஸ்ரீ வைஷ்ணவர்களை நன்றாக அமுது செய்யப்‌ பண்ணி யருளி “’முப்பழமுமுண்டாகப்‌ பெறுவதே தீர்த்த திவஸம்‌!!’ என்று பரிபாலித்துக்‌ கொண்டு (ஆசார்ய நியமனத்தில் படியே திருவாய்மொழி முதலானஅருளிச் செயல்களை வயாக்யானத்துடன்‌ அநுஸந்தித்துக்‌ கொண்டு-) எழுந்தருளி யிருந்தார்
    பெண்களும்‌ பேதைகளும்‌ உஜ்ஜீவிக்கும்படி பரமார்த்த விசேஷங்களை ஸுக்ரஹமாகப்‌ பண்ணப் பெற்ற தன்னேற்றமும்‌ பிரிவில்‌ தரியாமையை முன்னிட்டு பின்‌ தொடரந்தடிமை செய்யப்‌ பெற்ற தன்னேற்றமும்‌, பிள்ளை லோகாசாரியருக்கே உள்ள தொன்றிறே, ஸரரீரமர்த்தம்‌ ப்ராணஞ்ச ஸத் குருப்யோ நிவதயேத்‌” (உடல்‌ தனம்‌, உயிர்‌ யாவற்றையும்‌ ஸதாசாரியர்‌ பொருட்டுப்‌ பயன்படுத்த வேண்டும்‌) என்கிறபடியே பரமாசாரியரான பராங்குசரையும்‌ தத் ப்ரிய சிஷ்யரான உடையவரையும்‌ திரு நகரியிலே ப்ரதிஷ்டிப்பித்து அனைத்தழகுங் கண்டருளப்‌ பண்ணின தன்னேற்றமும்‌, ஆழ்வார்களின்‌ அருளிச்‌ செயல்களை ருசி விச்வாஸ பூர்வமாக ப்ரவர்த்திப்பித்துக்‌ கொண்டு போந்த
    தன்னேற்றமும்‌, திருவாய்மொழிப்பிள்ளை யொருவர்க்கே யுள்ள தொன்றிறே.
    இவர்‌ திருநக்ஷத்ரம்‌ வைகாசி விசாகம்‌, இவர்‌தனியன்‌:
    நமஸ்‌ ஸ்ரீ ஸைல நாதாய குந்தீ நகர ஜக்மநே |
    ப்ரஸாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய ஸாலிநே ॥

    அநந்தரம்‌ நாயனாரும்‌ ஆசாரியன்‌ நியமித் தருளின படியே திருவாய்மொழி முதலான அருளிச்‌ செயல்கள் வ்யாக்யானமாக அநு ஸந்தித்துக்‌ கொண்டு.
    ததஸ்து மூல பூதேஷு தேஷு திவ்யேஷு யோகிஷு
    வவ்ருதே வர்த்தயந் பக்திம்‌ வகுளா பரணாதிஷு
    ததா தத்தத் ப்ரபந்தார்த்த ஸம் ப்ரதாய ப்ரவர்த்தகாந்‌
    அயமாத்ரியத ஸ்ரீமாந்‌ ஆசார்யாநாதி மாநபி

    பின்னர்‌ ஸ்ரீமானான இவ் வழகிய மணவாளப் பெருமாள்‌ ப்ரபந்ந ஜந கூடஸ்தர்களாய்‌ பெரு மதிப்புற்ற நம்மாழ்வார்‌ முதலான ஆழ்வார்களிடத்தில்‌ பக்தியை வளர்த்துக்‌ கொண்டு(தாமும்‌) வளர்ந்தருளினார்‌; அப்படியே அந்த ஆழ்வார்களருளிச்‌ செய்த ஸம்ப்ரதாயார்த்தங்களை அநுஷ்டானத்தல்‌ ப்ரவர்த்தியா
    நின்ற பூர்வாசாரியர்களையும்‌ (ஆசார்யகளிடமும்‌) ஆதரித்துப்‌ போந்தார்‌ (மிக்க ஆதரம்‌ காட்டினார்‌] என்கிறபடியே விலஷண ப்ரமாண ப்ரமேய ப்ரமாதாக்களிடத்தில்‌ விசேஷ ப்ரதிபத்தியை யுடையராய்த்‌ திருநகரியிலே தர்சநத்தை வளர்த்துக்‌ கொண்டு போருகிற நல்லடிக்‌ காலத்திலே

    அழகிய வரதர்‌ நாயனாரை ஆஸ்ரயித்தது.
    ஸ்ரீஸெளம்ய ஜாமாத்ரு முநீஸ் வரஸ்ய ப்ரஸாத ஸம்பத்‌ ப்ரதமாஸ்பதாய” ஸ்ரீஸெளம்ய ஜாமாத்ரு முநீஸ்வரருடைய (அழகிய மணவாளர்‌ பின்னர்‌ உத்தமாஸ்ரமம்‌ பெற்று ஸெளம்ய ஜாமாத்ரு முனி- மணவாள மாமுனியானார்‌. ) அருட்‌ செல்வத்துக்கு முதல்‌ கொள்கலமான] என்கிறபடியே
    அழகிய வரதர்‌ (இவரே பின்னர்‌. ‘ஒண்ணான ஸ்ரீவானமாமலை ஜீயரானவர்‌,-பொன்னடிக் கால்‌ ஜீயர்‌-என்றழைக்கப்பட்டவர்‌ ) சேனை முதலியார்‌ தொடக்கமானவர்கள்‌ இவர்‌ வைபவத்தைக்‌ கேட்டுத்‌ திருவடிகளிலே ஆஸ்ரயித்தார்கள்‌ —அவர்களிலே அழகிய வரதர்‌, அப்போதே ஸந்யசித்து ‘ராமாநுஜ ஜீயர்‌’” என்னும்‌ திருநாமத்தை யுடையலராய்‌, நாயனாருக்கு நிழலுமடிதாறு மானோம்‌ என்னும்படி ஸதா பாதரேகா ஸமராய் நாயனாரை நித்ய ஸேவை பண்ணிக்‌ கொண்டு போந்தார்‌.

    நாயனார் திரு வரங்கத்து எழுந்தருளுதல்
    இப்படி அந்தரங்கரானவர்களோடே கூட எழுந்தருளி யிருக்‌கிறவர்‌ –ஸூபேந மநஸாத் யாதம்‌: என்கிறபடியே அப்போதொரு சிந்தை செய்து,-நமக்கெல்லாம்‌ நற்சீவனமான நம் பெருமாளை சேவித்துக் கொண்டு அத்தலைக்கு அதிசயாவஹராய்‌ மங்களாசாஸனம்‌ பண்ணிக்‌ கொண்டு யாவத் தேஹாவஸாதம்‌ அங்கே யிருக்கை யன்றோ தமக்கு ப்ராப்தம்‌” என்று அறுதியிட்டு, அப்போதே ஆழ்வார்‌ திருமுன்பே சென்று ஸேலித்து, நண்ணா வசுரர்‌ நலிவெய்த நல்லவமரர்‌ பொலிவெய்த, எண்ணாதனக
    ளெண்ணும்‌ நன்முனிவர்‌ இன்பந் தலைச்சிறப்ப, பண்ணார்‌ பாடலின்‌ கவிகளைப்பாடி தேவரீர்‌ மங்களாசாஸனம்‌ செய்தருளுகையாலே பெருமாளுடைய ப்ரதிபந்தங்ளெல்லாம்‌ நிரஸ்தமாய்ப்‌ பண்டு போல அனைத்தழகும்‌ கண்டருளுகிறார்‌; அடியேன்‌ பெருமாளை ஸேவிக்க விடை கொள்ளுகிறேன்‌
    ” என்று விண்ணப்‌பஞ்‌ செய்ய, அப்படியே நம்மாழ்வாரும்‌ விடை கொடுத்தருளினார்‌.

    அநந்தரம்‌,
    தத: கதிபயைர் திவஸைஸ்‌ ஸகுருர்‌ திவ்ய தர்ஸந |
    ஆஜகாம பரந்தாம ஸ்ரீரங்கம்‌ மங்களம்‌ புவ:

    பின்பு திவ்யமான திருமேனித்‌ தேற்றத்தை யடைய அந்த நாயனார்‌ சில தினங்களில்‌ உயர்ந்த திவ்ய தேசமாய்‌ பூமிக்கு மங்களகரமான ஸ்ரீரங்கத்துக்கு வ்ந்து சேர்ந்தார்‌- என்கிறபடியே முதலிகளும்‌ தாமுமாக, எம்பெருமான்‌ திருவரங்கம்‌ எங்கே என்று நாடிக்‌ கொண்டு புறப்பட்டெழுந் தருளுகிறவர்‌ – வில்லி புத்தூருறைவான் தன்‌ பொன்னடி காண்பதோராசையினாலே அங்கே எழுந்தருளி வட பெருங் கோயிலுடையானையும்‌ பெரியாழ்வாரையும்‌ திருவடி தொழுது. அநந்தரம்‌ அன்ன வயல் புதுவை யாண்‌டாளையும்‌ ”நீளா துங்கஸ்‌ தந கிரிதடீ” என்று தொடங்கி, கோதா”தஸ்யை நமஇதமிதம்‌ பூய,” என்கிறபடியே ஸேவித்து,

    தேவஸ்ய மஹிஷீம்‌ திவ்யாம்‌ ஆதெள கோதாமுபாஸநத்‌ |
    யந் மெளலி மாலிகாமேவ ஸ்வீகரோதி ஸ்வயம்‌ ப்ரபு –

    எந்த ஆண்டாளுடைய திருக் குழலில்‌ ‘ சாத்தின திருமாலையையே ஸ்வாமியான அழகிய மணவாளன்‌ ஆதரவுடன்‌ சாத்திக்‌ கொள்கிறானோ, அந்த அழகிய மணவாள தேவனுடைய திவ்ய மஹிஷியான கோதையை முதல்‌ முன்னம்‌ ஸேவித்தார்‌ – என்கிறபடியே
    சூடிக் கொடுத்தவள்‌ தொல்லரளால்‌ வாழ்கின்ற வள்ளலாய்‌-அங்கு நின்றும்‌ புறப்பட்டு -மாலிருஞ்சோலை தொழக் கருதி, -நெறி படவதுவே நினைவது நலமே-என்கிறபடியே மார்க்க சிந்தை பண்ணி அவ் வழியாலே அங்கே புக்கு, *பதியதுவேத்தி, அநந்தரம்‌ அழகர் தம்‌ கோயிலிலே புக்கு , திருமாலிருஞ்சோலை நின்றான்‌ கனை கழல்களைக் கண்டு வணங்கத்‌ தொழுது, -முடிச் சோதியில்‌ படியே-முடியார்‌ திருமலையில்‌” என்று தொடங்கி, -முற்றுமநுபவித்தார்‌- என்னும்படி அநுபவித்து தீர்த்‌த ப்ரஸாதங்களும்‌ ப்ரஸாதிக்க ப்ரஸாதப்படடு
    விஞ்ஞாபநம்‌ வந கிரீஸ்வர! ஸத்ய ரூபா மங்கீ குருஷ்வ கருணார்ணவ மாமகீநாம் |
    ஸ்ரீ ரங்க தாமநி யதா புரமேஷ ஸோஹம்‌ ராமாநுஜார்ய வஸாக பரிவர்த்திஷீய ॥

    கருணைக் கடலான திருமாலிருஞ் சோலை யழகரே! யதார்த்தமான அடியேனது விண்ணப்பத்தைத்‌ திரு வுள்ளம்‌ பற்றி யருளவேணும்‌; அது ஏதெனில்‌; அடியேன்‌ முன்பு போலத்‌ திருவரங்கம்‌ பெரிய கோயிலிலே எம்பெருமானாருடைய திருவடிகளிலே சேர்ந்து வாழ்வேனாம்படி அருள் புரிய வேண்டும்‌-என்று தாழம்‌ இத்தை யநுஸந்தித்து அப்படியே ப்ரார்த்தித்தருள, அரங்கனென்னம்மானுக்கே காதல்‌ செய்யும் தொ ண்டராய்‌ அதி த்வரை யுடனே கோயிலேற எழுந்தருள:

    அநந்தரம்‌
    எண்டிசைக்‌ கணங்களுமிறைஞ்சியாடு திர்த்த நீர்‌-என்றும்‌,
    கங்கையில்‌ புநிதமாய காவிரி என்றும்‌ சொல்லுகிறபடியே (காபாலி ஸ்ப்ர்ஸ ரஹிதராய்‌, ‘காவேரீ விரஜா ஸேயம்‌” என்கிற இவ் விரஜை யாறு இது வென்னும்‌ திருக் காவிரியிலே நீராடி-) திருக் காவேரியிலே நீராடி யருளி கேசவாதி பன்னிரண்டு திரு நாமங்களையும்‌ சாத்தி யருளி திருவரங்கப் பெரு நகரைத்‌ தண்டன் ஸமர்ப்பித்து நிற்க, அவ்வளவிலே தம்மை எதிர் கொள்ள வந்த அணியரங்கன்‌ திருமுற்றத்தடியார்‌ தங்களின்பமிகு பெருங்‌ குழுவு கண்டு தண்டன் ஸமர்ப்பித்து அவர்களுடனே கூட வுள்ளே புக்கு, வழியிலுள்ள வண்டினமுரலுஞ்சோலை தொடக்கமான திருச் சோலைகளையும்‌ அநுபவித்துக்‌ சொண்டு அவ்வருகே யெழுந்தருளி

    மாடமாளிகை சூழ்‌ திரு வீதியும்‌ மன்னு சேர்‌ ‘திரு விக்ரமன்‌ வீதியும்‌
    ஆடல்மாறனகளங்கள்‌ வீதியும்‌ ஆலி நாடன மர்ந்துறை வீதியும்‌
    கூடல்‌ வாழ் குலசேகரன்‌ வீதியும்‌ குலவுரந் ச மகேந்திரன்‌ வீதியும்‌
    தேடுதன்‌ வன்மாவின்‌ வீதியும்‌ தென்னரங்கர்‌ திருவாவரணமே

    என்று சொல்லப்‌ படுகிற திருவீதிகளையும்‌ திருமதிள்களையும்‌ திருக்‌ கோபுரங்களையும்‌ கண்டு களித்துக்‌ கொண்டு எழுந்தருளி, தமக்கு ஆசார்ய துல்யரான கோட்டூரிலண்ணர்‌ திருமாளிகை யேற வெழுந்‌தருளினார்‌ அவர்‌ திரு மெய்யத்திலே திருவாய்மொழி வ்யாக்யாநம்‌ இருபத்தி நாலாயிரத்தையும்‌ ஸாதித்துக்‌ கொண்டெழுந்தருளி யிருந்து பின்பு பெருமா ளெழுந் தருளுகையாலே இங்கே நித்யவாஸமாக எழுந்தருளி யிருக்கிறவரை நாயனாரும்‌ அத்யாதரத்துடனே ஸேவித்தருள அவரும்‌ உகந்தருளி இவரை அவதார விசேஷமென்‌றிந்து ஆதரித்து , பெருமாளை ஸேவிக்கப் பண்ணுவதாக எழுந்தருளப்‌ பண்ணி வைத்துக்‌ கொண்டு புறப்பட்டு, அக் காலத்திலே
    கோயிலதிபதியா யிருந்த திருமலை தந்த பெருமாள்‌ பட்டருடைய அநுமதிக்காக அவர்‌ திருமாளிகையிலே எழுந்தருள; அவரும்‌ அப்ப்யுத்தாத பிரணாமாதிகள்‌ தொடக்கமான உபசாரங்களைப்‌பண்ணி ஆஸநத்திலே எழுந்தருளுவித்து, ‘தேவரீரை ஸேலிக்கப் பெற்றோமே!?’ என்று பெரிய ப்ரீதியோடே ஆதரித்து “திருவாய்‌ மொழியிலே ஒரு பாட்டுக்கு அர்த்த மருளிச்‌ செய்ய வேணும்‌” என்ன, நாயனாரும்‌ ஆழ்வாருடைய வைபவத்தை ஐதிஹ்யமாகப்‌ ப்ரதிபாதிக்கிற பாட்டை யெடுத்து (துவளில்‌ மாமணிமாடம்‌, என்ற திருவாய்மொழியாக இருக்கலாம்‌ -இத் திருவாய்மொழி ஆழ்வார் ப்ரக்ருதி சொல்கிறது என்று நம்‌ முதலிகளெல்லாரும்‌ போர விரும்பி இருப்பார்கள் -என்று ஈட்டவதாரிகை )உபந்யஸித்தருள, பட்டரும்‌ போர வித்தராய்‌, ”இவர்‌ முப்பத்தாறாயிரப் பெருக்கர்‌ * என்று மிகவும்‌ உபலாளித்து “பெருமாளை மங்களாசாஸனம்‌ பண்ணி யருள”என்று அருளிச்‌ செய்து, அங்குண்டானண ஸ்ரீவைஷ்ணவர்‌ களையும் கூட்டி யனுப்பியருள, அவர்‌களும்‌’ அப்படியே புறப்பட்டருளி : ப்ரதமம்‌, பொனரங்கமென்னில்‌ மயலே பெருகுமிராமானுசன்‌ மன்னு மா மலர்த்தாளைக் கிட்டி, -யோ நித்யமச்யுத” என்று தொடங்கி , ‘ராமாநுஜஸ்ய சரணெ சரணம்‌ பரபத்யே!’ என்று அநுஸந்தித்து ஸேவித் தருளி.

    இவ்வுலகந்தன்னி லெதிராசர்‌ கொண்டருளும்‌
    எவ்வுருவும்‌ யான் சென்றிறைஞ்சினக்கால்‌–அவ்வுருவம்‌
    எல்லா மினிதேலுமெழிலரங்கத் திருப்புப்‌ போல்‌
    நில்லாதென்னெஞ்சு நிறைந்து

    என்றநுபவித்தருளி பின்பு பூமகள்‌ கோன்‌ தென்னரங்கள்‌ பூங்கழற்குப் பாதுகமாய்த்‌, தாம்‌ மகிழுஞ்‌ செல்வச் சடகோபரையும்‌ ஸேவித்தருளி, ப்ரதக்ஷிணமாக வெழுந்தருளி அங்கயல்‌ பாய் வயல்‌ தென்னரங்கனணி யாகம்‌ மன்னும்‌ பங்கய மா மலர்ப்‌ பாவையான ஸ்ரீரங்கநாச்சியாரையும்‌, ‘ஸ்ரீரங்க ராஜ மஹிஷீம்‌ ஸ்ரியமாஸ்ரயாம:”‘என்று திருவடி தொழுது, பூவளரும்‌ திருமகளாரருள்‌ பெற்று உள்ள புக்குத்‌ திருமண்டபங்களையும்‌ திருமடைப் பள்ளியையும்‌ கருவுகூலங்களையுங் கண்டு களித்தருளி ஸ்ரீபலிபீடத்தருகே தண்டன்‌ ஸமர்ப்பித்து உள்ளில்‌ திருச்‌ சுற்றையும்‌ ப்ரதக்ஷிணமாக வெழுந்தருளி, அநந்தரம்‌ வேத ஸ்ருங்கமாய்‌ அயன்‌ பணிந்த கோயிலான ப்ரணவாகார விமாநத்தையும்‌ ஸேனை
    முதலியாரையும்‌ ஸேவித்தருளி, அழகிய மணவாளன்‌ திரு மண்டபத்தில்‌ எழுத்தருளி, -ஆழி வண்ண। நின்‌ அடியிணை யடை ந்தேன்‌ அணி பொழில்‌ திருவரங்கத்தம்மானே என்று தண்டன்‌ ஸமர்ப்‌பித்துப்‌ பெரிய திருவடியையும்‌ திருவடி தொழுது, த்வார பாலகர்‌கள் அநுமதியுடனே யுள்ளே புகுந்து திருமணத் தூணருகே சென்று மாயோனை வாயார வாழ்த்தி, அரங்கமா கோயில்‌ கொண்ட கரும்பினைக்‌ கண்டு கண்ணினை களித்து அமலனாதிபிரானில்‌ படியே பாதாதி கேசாந்தமாக வநுபவித்தருளி, பழுதே பலபகலும்‌ போயின என்று இழந்த நாளுக்கு அநுதபித்து, அரங்கத் தரவணைப்‌ பள்ளியானாய்க் கண்வளர்ந் தருளுகிற சேர்த்தியைக்‌ கண்டு படுத்த பைந்நாகப் பள்ளி கொண்டானுக்குப்‌ பல்லாண்டு கூறுதுமே-என்கிறபடியே திருப்பல்லாண்டை யநுஸந்தித்து மங்களசாஸனம்‌ செய்தருளி, அநந்தரம்‌ பாயு நீரரங்கந்தன்னுள்‌ பாம்பணைப் பள்ளி கொண்ட மாயனார்‌ திரு நன் மார்வும்‌ என்று தொடங்கி ஆய சீர் முடியுந்‌ தேசுமடியரோர்க்ககலாமே என்று ஸேவித்து, அதற்கு மேல் பெரிய பெருமாளுடைய வ்யூஹ சவ்ஹார்தாதி குணங்களை யநுபவித்து அநந்தரம்‌ திவ்ய ஸிம்ஹாஸந ஸமான சேர பாண்டியனிலே மலர் மடந்தை மண் மடந்தைகளாகிற உபய நாய்ச்சிமாருடனே எழுந்தருளி யிருக்கிற நம்பெருமாளை

    அப்ப ஜந்யஸ்த பதாப்ஜம்‌ அஞ்சித கடீ ஸம்வாதி கெளஸேயகம்‌
    கிஞ்சித்தாண்டவ கந்தி ஸம்ஹநநகம்‌ நிர் வ்யாஜ மந்தஸ்மிதம்‌ |
    சூடாசும்பி முகாம்புஜம்‌ நிஜ புஜா விஸ்ராந்தி!திவ்யாயுதம்‌ :
    ஸ்ரீ ரங்கே ஸரதஸ்சதம்‌ ததஇத: பஸ்யேம லக்ஷ்மீஸகம்‌ [ஸ்ரீரங்க ராஜஸ்தவம்‌, பூர்‌-74:)

    ஆஸந பத்மத்திலழுத்தின திருவடித்‌ தாமரைகளை யுடையவரும்‌, சிறந்த திருவரைக்குப்‌ பாங்கான பட்டுத்‌ திருப்பரிவட்டத்தை யணிந்தவரும்‌, சிறிது நர்த்ததஞ்‌ செய்வது போல்‌ விளங்குகிற திருமேனியை யுடையவரும்‌ இயல்பான புன்முறுவலை யுடையவரும்‌, திருவபிஷேகத்தைத்‌
    தழுவி யிருக்கின்ற முக கமலத்தை யுடையவரும்‌, தமது திருக் கையில்‌ இளைப்பாறுகின்ற திவ்யாயுதங்களை யுடையவருமான திருமகட்‌கன்பனான அழகிய மணவாளனைத்‌ திருவரங்கத்தலே இன்னமொரு நூற்றாண்டளவும்‌ அங்குமிங்கும்‌ (எழுந்தருளுமிட மெல்லாம்‌) ஸேவிக்கக்‌ கடவோம்‌] என்கிறபடியே ஸேவித்தருளி ,திருக்கையிலே பிடித்த திவ்யாயுதங்களும்‌ வைத்தஞ்சலென்ற
    கையும்‌ கவித்த முடியும்‌ முகமும்‌ முறுவலும்‌ ஆஸந பத்மத்திலே அழுத்திய திருவடிகளுமாய்‌ நிற்கிற நிலையே நமக்குத்‌ தஞ்சம்‌(முழுஷுப்படி த்வயம்‌-21)
    என்று அநுஸந்திதருளி, அத நன்‌ நிதியைக்‌ கண்டாப்‌ போலே பூர்வர்கள்‌ தநமாயிருக்கிற ஸ்ரீநிதியான நம் பெருமாளைக்‌ கண்டு கொண்டு, சிவந்த திருமுக மண்டலத்‌தையும்‌ கஸ்தூரித்‌ திருநாமத்தையும்‌ (மதி நுதல்‌ கஸ்தூரி திருநாமத்தையும்‌, மறுவல் பூத்த பவன வாயையும்‌, கவித்த கதிராயிரமிரவி கலந்தெறித்தா லொத்த நீண் முடியையும்‌, கையினார்‌ சுரிசங்கனலாழி எழிலையும்‌, அஞ்சலென்ற கையையும்‌, திருவரை பூத்தாப் போலிருக்கற அந்தி போல்‌ நிறத்தாடையும்‌ ஆஸந பத்மத்திலே அழுத்தின செம் பங்கயத் பதாள்களையும்‌ கோல மா மணி யாரமும்‌ முத்துத் தாமமும்‌ முடிலில்லதோரெழிலையும் கண் வாங்க மாட்டாதே நிர்நிமேஷத்ரு ஸஞ்சலராய்‌-)வைத்த கண்‌ வாங்காதே அநிமிஷரா யநுபவித்துக்‌ கொண்டு நிற்க, தேசாந்தர கதனான புத்ரனைக்‌ கண்ட மாதா பிதாக்களைப்‌ போலே தந்தையுந் தாயுமான தாம்‌ இவரைக்‌ கண்டு ப்ரஸந்ந வதநேகஷணராய்‌ கருணாம்ருத ஸ்ஷ்டியாலே குளிரக்‌ கடாக்ஷித்தருளி ‘”தமக்காவாரை தாமே தேடிக்‌ கொள்வோம்‌” என்று அருளிச்‌ செய்து எம்பெருமானாரை விஷயீகரித்தாப்‌ போலே இவரையும்‌ விஷயீகரித்தருளினார்‌

    பின்பு தீர்‌த்த ப்ரஸாதங்களையும்‌ ஸ்ரீ சடகோபனையும்‌ திருமாலை ப்ரஸாதத்தையும்‌ ப்ரஸாதிக்கப்‌ பெற்று, முடியும்‌ மாவையும்‌ பெற்றாப்‌ போலே தென்னங்கர்‌ சீரருளுக்கிலக்காகப்‌ பெற்று
    அத்யந்தம்‌ ப்ரீதராய்‌ அண்ணரைப்‌ பார்த்து தேவரிருக்காக நம்பெருமாள்‌ இப்படி வாழ்வித்தருளினார்‌’” என்று அருளிச்‌ செய்து, அநந்தரம்‌ அண்ணருடனே கூடப் புறப்பட்டருளி அவர்‌ திருமாளிகையிலே எழுந்தருள, பட்டரும்‌ அனேக பதார்த்தங்‌களுடன்‌ சிறப்பு வரக்‌ காட்டி யருள அத்தை யங்கீ கரித்து அண்ணர்‌ திருமாளிகையிலே யமுது செய்து எழுந்தருளி யிருக்க அவரும்‌ பூர்வாசாரியர்கள்‌ ‘ போத மநுட்டானங்களை யருளிச்‌ செய்யக்‌ கேட்டுத்‌ திருவுள்ளந்தேறி அவருடனே கூடப் புறப்பட்டு பூர்வர்கள்‌
    எழுந்தருளியிருந்த திருமாளிகைகளைச்‌ சென்று ஸேலித்து, பின்பு பிள்ளை லோகாசாரியர்‌ திரு மாளிகை நோக்கி யெழுந்தருளி,
    வாழி யுலகாசிரியன்‌ வாழி யவன்‌ மன்னு குலம்‌
    வாழி முடும்பை யென்னும்‌ மாககரம்‌–வாழி
    மனஞ்சூழ்ந்த பேரின்மல்கு மிக நல்லார்‌
    இனஞ் சூழ்ந்திருக்கு மிருப்பு
    –என்றும்‌,
    மணவாளன்‌ மாறன்‌ மனமுரைததான்‌ வாழி
    மணவாளன்மன்னு குலம் வாழி–மணவாளன்‌
    வாழி முடும்பை வாழி வடவீதி தான்‌
    வாழியவன்‌ உரை செய்த நூல்‌
    –என்றும்‌
    அநுஸந்தித்துத்‌ திருமாளிகை வாசலிலே தண்டன்‌ சமர்ப்‌பித்து அஞ்ஜலித்துக்‌ கொண்டு,

    ஆத வாணிம்‌ புண்ய ஸுதாபகாம்‌ ஸடஜித்ஸ் ஸ்வைரம்‌ விகாஹ் யாதராத்‌
    ஆநீயாம்ருத மத்ர சக்ர துகுபெள லோகோபகரராத்மகெள |
    யெள வாக் பூஷண தேஸி கேந்த்ர ஹ்ருதயாபிக்யெள ப்ரபந்தாவிமெள
    தே வந்தே புவநார்ய ஸூந்தர வரெஎ க்ருஷ்ணாத்மஜெள தேஸிகவ் ॥

    இங்கு உலகத்தவருக்கு உதவுமியல் புடையராய்‌ எந்த இரு ஆசாரியர்கள்‌ நம்மாழ்வாருடைய திருவாய்மொழியாகிற புண்யமான அமுத ப்ரவாஹத்தில்‌ ஆதரத்துடன்‌ யதேச்சையாயாழ்ந்து அதில்‌ நின்றும்‌ ௮ம்ருதத்தைக் கொண்டு எந்த ஸ்ரீவசந பூஷணம்‌ ஆசார்ய ஹ்ருதயம்‌ என்ற பெயரை யுடைய இரு ப்ரபந்தங்‌களையுமருளிச்‌ செய்தார்களோ, வடக்குத்‌ திருவீதிப் பிள்ளையின்‌ குமாரர்களான பிள்ளை லோகாசாரியர்‌ அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌ என்ற ஆசாரியர்களை அடி பணிகிறேன்‌-

    ஆர்யஸ் ஸெளம்ய வர ஸடாரிகலிஜித்‌ பட்டேஸ :॥ முக்யாத்மமாம்‌
    பக்தாநாம்‌ விமலோக்தி மெளக்திக மணீநாதாய சக்ரே ப்ருஸும்‌ |
    க்ருத்வா ஸாதுரஹஸ்த்ரயார்த்த மகிலம்‌ கூடம்‌ விஸ்ப சித்ரியம்‌
    லோகார்யா வரஜஸ்ஸூ ஸிக்ஷ்க வரஸ் சூடாமணிஸ் ஸோபதே

    பிள்ளை லோகாசாரியரின்‌ திருத் தம்பியராய்‌ ஸத் ஸம்ப்ரதாயார்த்தங்களை சிக்ஷித்து அருளிச் செய்பவராய்‌, யாவருக்கும்‌ பூஜ்யராய்‌ சிரோ பூஷணமான அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனார்‌,நம்மாழ்வார்‌, திருமங்கையாழ்வார்‌. பெரியாழ்வார்‌, முதலான பக்தாக்ரேஸரர்களின்‌ தூய வாக்குக்களாகிற மணி, முத்துக்களைக்‌ கொண்டு ரஹஸ்ய த்ரயத்தின்‌ ஆழ் பொருள்களை யெல்லாம்‌ பூர்வாசாரியர்களின்‌ திருவுள்ளத்துக் கிசைய விளக்கி வெளியிட்டு மிகவும்‌விளக்கமுறுகிறார்‌.

    யஸ்யாஹம்‌ குல தைவதம்‌ ரகுபதேரா ரதநம்‌ ஸ்ரீஸக:
    காவேரீ ஸரிதிந்தரீ பநகரீ வாஸஸ்தலீ புண்யபூ: |
    க்ருஷ்ணோ மாந்ய குருர்‌ வரேண்ய மஹிமா வேதாந்த வித்யாநிதி;
    ப்ராதா சவ்ம்ய வரஸ்‌ ஸ்வயந்து புவநாசார்யோஸி கஸ்தே ஸம:

    யாருக்கு சக்ரவர்த்தி திருமகனுடைய திருவாராதனமான அழகிய மணவாளன்‌ குலதெய்வமோ, திருக் காவேரியின்‌ நடுவிலுள்ள புண்ய பூமியான கோயிலானது இருப்பிடமோ, பெரும்‌ ‘ புகழாளராய்‌ பூஜ்யரான வடக்குத்‌ திருவீதிப் பிள்ளை தந்‌தையுமாசார்யருமாவரோ, உபய வேதாந்த நிதியான அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌ இளைய ஸஹோதரரோ, அப்படியான தேவரீரே ஜகத்துக்கெல்லாம்‌ ஆசாரியராக உள்ளீர்‌; இப்புடிபட்ட தேவரீருக்கு யார்‌ ஒப்பாவார்‌? என்கிறபடியே பிள்ளை லோகாசாரியருடைய ஸமாப்யதிக ரஹிதமான பெருமையைப்‌ பேசா நின்று கொண்டு -ரஹஸ்யம்‌ விளைந்த மண்ணன்றோ?’ என்று மிகவுமாதரித்தருளி, அங்கே யெழுந்தருளி யிருந்து பிள்ளலோகாசாரியர்‌’ வைபவங்களை யெல்லாம்‌ ௮ண்ணரருளிச் செய்யக்‌ கேட்டு, இவ்வளவாகிலும்‌ பெற்றோமே!!’ என்று ப்ரீதராய்‌ அண்ணரை ஸேவித்துக் கொண்டு ஆசாரியர்களுக்கு ஆவாஸ் பூமியான கோயிலிலே எழுந்தருளி யிருக்க, பின்னையும்‌ ஒருநாள்‌ வரையிலே நம்பெருமாளை இவர்‌ திருவடி தொழச்‌ சென்றவாறே தீர்த்தம்‌ திருமாலை பரியட்டத்துடனே தம்முடைய தேனே மலரும்‌ திருப்‌ பாதத்தை இவர்‌ திருமுடி சூடுவித்து

    தஸ்மிந்‌ ஸஸ்மித நேத்ரேண ஸ்ரீமதா ஸேஷ ஸாயிநா |
    ஸத்க்ருத: க்ருதவாந் வாலம்‌ கிஞ்சித்தத்ர ததந்திகே

    மலர்ந்து நீண்ட வப் பெரியவாய கண்களை யுடைய ஸ்ரீமானான பெரிய பெருமாளாலே அநுக்ரஹிக்கப் பட்டவராய்‌ சில நாட்கள்‌ அவர்‌ திருவடி வாரத்தில வாழ்ந்திருந்தார்‌- என்கிறபடியே,
    திருப்பவளச் செவ்வாய்‌ முறுவல்‌ கொண்டு நம் முடையவரைப்‌ போலே நீரும்‌ நம் வீட்டில்‌ கார்யத்தையும்‌ தர்சந ரஹஸ்யங்களையும்‌ ஆராய்ந்து கொண்டு உம்முடைய சரீராவஸானத்தளவும்‌ இங்கேயே இரும்‌” என்று அருளிச் செய்ய; இவரும்‌ ‘ மஹா ப்ரஸாதம்‌” என்று அங்கீகரித்து நியமித்தபடியே அங்கே எழுந்தருளி யிருந்தார்‌-அக்காலத்திலே அங்குண்டான ரஹஸ்ய ப்ரபந்தங்களை யெல்‌லாம்‌ திருக் கண் சாத்தி ஜீர்ணோத்தாரணம்‌ பண்ணி யருளி அவற்றை ப்ரகாசிப்பித்துக் கொண்டு-எழுந்தருளியீருக்க; பின்பு ஒரு நாள்‌ பெருமாள்‌ திருவாராதனம்‌ நடத்திக் கொண்டு போருகிற உத்த நம்பி தாழ்வாக நடத்துகிற படியையும்‌ அமுது செய்தருளுகிற தளிகைக் குறைகளையுங் கண்டு ”இவனை நிரஸித்தருளி அநுகூலரானவர்களைக்‌ கொண்டு குறைவறக் கண்டருளப் பண்ண வேணும் ‘
    என்று வானமாமலை ஜீயரருளிச் செய்ய (அழகிய வரதர்‌ என்று திருநாமமுடையராய்‌ அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனாரை பால்யத்திலேயே ஆஸ்ரயித்துப்‌ பின்னர்‌ ஆஸ்ரம ஸ்வீகாரம்‌ செய்தருளி ஸ்ரீவானமா மலை ஜீயர்‌” என்றுஅழைக்கப்பட்டார்‌; )அத்தைக் கேட்டருளி தேவரீருடைய திருப்பணி திருவாராதநம்‌, குறைவற நடத்திப்‌ போம்படி இவனை யநுகூலனாகத்‌ திருத்திப் பணி கொணடருள வேணும்‌ என்று மங்களாசாஸனம்‌ பண்ணாீ!’ என்‌றருளிச்செய்து, தாமும்‌ அப்படியே மங்களாசாஸனம்‌ பண்ணி யருளி, (இவ்விடத்தில்‌ ஜீயர்‌, அழகிய மணவாள நாயனாரை, ”தேவரீர்‌ பெருமாளைக்குறித்து ‘இவனை நசிப்பித்து அநுகூலரைக்கொண்டு திருப்பணி திருவாராதனம்‌ குறைவறக்‌ கொண்டருளவேணும்‌” என்று ப்ரபத்தி பண்ண வேண்டிக் கொள்ளும்‌” என்ன; நாயனாரும்‌ அது கேட்டருளி அழகிய வரதரைக் குறித்து பெருமாளுக்கு-)

    நாயனார் திருவேங்கட யாத்திரை எழுந்தருளுதல்‌
    அநந்தரம்‌ வட திருவேங்கடமென்று ப்ரஸித்தமான வட மா மலை முதலான வடதிசை யிலுண்டான திருப்பதிகளைத்‌ திருவடி தொழுகையிலே மிகவுந் திருவுள்ளத்தை யுடையராய்‌ -ததஸ்தே நாப்ய நுஜ்ஞாதோ யாதோ தரணி முத்தராம்‌” -பின்னர்‌ பெருமாளால்‌ அநுமதிக்கப்‌ பட்டவராய்‌ வட தேசத்திலுள்ள திருப்பதிகளைச்‌ சென்றடைந்தார்‌-என்கிறபடியே பெருமாள்‌ ஸந்நிதியிலே
    சென்று ஸேவித்து நின்று, அடியேன்‌ திருமலைச்குப்‌ போய் திருவேங்‌கடமுடையானைத்‌ திருவடி தொழ விடை கொள்கிறேன்‌” என்று விண்ணப்பம்‌ செய்ய, பெருமாளும்‌ தீர்த்த ப்ராஸதங்களும்‌ பரியட்‌டமும்‌ ஸ்ரீசடகோபனும்‌ ப்ரஸாதித்து ”போய் வாரும்‌’ என்று விடை கொடுத்தருள;

    திருக் கோவலூர்‌, திருக் கடிகை மங்களாசாஸனம்‌
    அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனாரும்‌ *அணியரங்கத்‌தினின்றும்‌ பெரிய திருமலை யேறப்‌ போவாராய்‌ அப்போதே புறப்‌பட்டருளி, முப்போதும்‌ வானவரேத்தும முனிவர்கள்‌ வெள்ளறையிலே சென்று புக்கு பங்கயச் செல்வியார்‌ புருஷகாரமாகச்‌ செந்தாமரைக்‌ கண்ணரை ஸேவித்துத்‌ தீர்த்த ப்ரஸாதங்களும்‌ ப்ரஸாதப்‌பட்டு | பாதேயம்‌ புண்டரீக நாம ஸங்கீர்ந்தநம்ருதம்‌-செய்ய தாமரைக் கண்ணனின்‌ திருநாமங்களைப்‌ பாடுவதான அம்ருதம்‌ வழிக்கு உணவாகிறது-என்கிறபடியே! த்வய வசந பாதேயத்துடனே -பூங்கோவலுர்‌ தொழுதும்‌ போது நெஞ்சே! என்று பெரிய த்வரையோடே புறப்பட்டு அவனடி நிழற்றடங்‌களை யுடையராய்‌ விச்ரமித்து விடாயாறி, ஊரைச்‌ சென்று கிட்டி ,
    உள்ளே புக்கு முதலாழ்வார்களை த்‌ திருவடி தொழுது அவர்கள்‌புருஷகாரமாக ”த்ரிவிக்ரம மபிகம்ய”’ என்கிறபடியே ஆழ்வார்கள்‌ நாயனாரையும்‌ ஆயனாரையும்‌ ஸேவித்து, தூவடிவில் பார்‌ மகள்‌[திருமொழி 2-10-9) என்று-தொடங்கி திருக்கோவலூரதனுட்‌ கண்டேன்‌ நான்‌ என்றபடியே அநுபவித்து, நீயும்‌ திருமகளும் நின்றாயால்‌ (முதல்‌ திரு-86) என்கிற பாட்டை யநுஸந்தித்து,
    அன்‌றிவ்வுலகமளந்தாய்‌ அடிபோற்றி என்று மங்களசாஸநம்‌ பண்ணி யருளித்‌ தீர்த்தம்‌ ப்ரஸாதப்பட்டு, பூங்கோவலாயனழகு பின்னே தள்ள திருவங்கடத்தானருள்‌ முன்னே நடத்த’ புறப்‌பட்டு, குன்றமேந்திக்‌ குளிர்‌ மழை காத்தவன்‌ அன்று ஞாலமளந்த பிரான்‌ பரன்‌ சென்று சேர்‌ திருவேங்கடமாமலை (திருவாய்‌, 3-3-4)என்றும்‌ திருவேங்கடத்தாயன்‌ என்றும்‌ மொய்த்த சோலை மொய்‌ பூந்தடம்‌ என்றும்‌ சொல்லப்படுகிற நீர்மையை யுடைய திருவேங்‌கடமுடையானைத்‌ திருவடி தொழுகையிலே திருவுள்ளமாய்‌ பெருங்‌ கூட்டத்துடனே போவான் வழி கொண்டு அதி த்வரையுடனே (இதிலிருந்து திருக் கடிகை மங்களாசாஸனம்‌, )யெழுந்தருளுகையில்‌ நீள்‌ சோலை வண் பூங் கடிகையில்‌ தக்கானையும்‌, கடிகைத் தடங்குன்றில்‌ அக்காரக் கனியையும்‌ அடைந்து மங்களாசாஸநம்‌ பண்ணிப்‌ புறப்படா நிற்கச்‌ செய்தே எறும்பியிலுள்ள பெரியோர்களும்‌ பச்சையுடன்‌ வந்து ஸேவித்து நிற்க ,அவர்களை ஆதரித்துப்‌ புறப்பட்டருளினார்‌.

    இனி திருமலை வ்ருத்தாந்தம்‌
    திருப் புரட்டாசி முதல்‌ திருநாள்‌ ராத்ரி பெரிய கேள்வி ஜீயருடைய ஸ்வப்நம்‌: ஆழ்வார்‌ தீர்த்தத்திற்குத்‌ தெற்கிலுள்ள திருத்‌ தோப்பருகே ஒருவர்‌ வடக்கு முகமாக நிற்கிறதாகவும்‌ திருமலையாழ்வார்‌ மேல் கோடி தொடங்கி கிழக்கு முடிவு மட்டும்‌ ஸ்தூலமாய்‌ அதி தீர்க்கமா யிருக்கிற திருமேனி யுடையராய்‌ மேற்கே திருமுடியும்‌ இழக்கே திருவடிகளும்‌, தெற்கு திக்கைக்‌ கடாக்ஷித்துக்‌ கொண்டு பெரிய பெருமாளைப்‌ போல ஒரு ஸ்ரீவைஷ்ணவர்‌ கண்‌ வளர்‌ந்தருளுகிறதாகவும்‌;- ஒரு ஜீயர்‌ திருவடி பார்ச்வத்திலே நிற்‌கிறதாகவும்‌ கண்டு ‘“இவரார்‌?” என்று போவார்‌ வருவாரைக் கேட்க, அவர்கள்‌ சொன்னபடி: ‘இவர்‌ முப்பத்தாரறாயிரப்‌ பெருக்‌கரான அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌; அவர்‌ பொன்‌னடிக்கால்‌ ஜீயர்‌” என்று,சொல்ல, கண் விழித்து ‘“இதொரு ஸ்வப்நமிருந்தபடி என்‌!” ‘ என்று அதி ப்ரீதியுடனே “எழுந்திருந்து பெருமாள்‌ திருலீதியில்‌ ப்ராதகாலம்‌ புறப்பாட்டிற்கு மங்களா சாஸநத்துக்‌ கெழுந்தருளி இயல்‌ தொடங்குகிற விடத்திலே இச்‌ செய்தியை ஸ்வாமிகளுக் கறிவிக்க இத்தை தோழப்பய்யங்கார்‌ கேட்டருளி

    ஸ்வப்நே ப்ருஹத் யதீந்த்ரஸ்ய ஸ்ரீஸைல ஸமிதோ மஜாாந்‌ |
    ஸயாந புருஷோத்ருஷ்ட: ஸெளம்ய ஜாமாத்ரு தேஸிக: |
    ததர்ச பஸ்சாத்‌ தஸ்யைவ பாதமூலே யதீஸ்வரம்‌ |
    ப்ராஞ்ஜலிம்‌ நிப்சுதம் ப்ரஹ்வம்‌ ஸ்வர்ணாதிபதி பத ஸம்ஜ்‌ஞகம்‌ ॥

    பெரிய ஜீயருடைய ஸ்வப்நத்தில்‌: திருமலையோடு ஓத்த’ அளவுடையவராய்‌, மணவாளமாமுனி யென்கிற மிகப்‌ பெரிய புருஷர்‌ படுத்துக்‌ கொண்டிருப்பவராகக்‌ காணப்பட்டார்‌.
    அவரது திருவடி வாரத்தில்‌ விநயத்துடன்‌ குனிந்து கை கூப்பி நிற்கும்‌ பொன்னடிக்கால ஜீயரையும்‌ அப் பெரிய ஜீயர்‌ கண்டார்‌-என்று ஸ்லோகமாக அருளிச்‌ செய்தார்‌. இத்தை எல்லாரும்‌ கேட்டு உகந்திருக்க, அப்போது தேசாந்தரத்தினினில்‌ நின்றும் வந்த பெரியோர்‌களில்‌ சிலர்‌ இப்படி ஸேவை ஸாதித்தவர்‌ கோயில்‌ நாயனார்‌ என்ன, வேறு சிலர்‌ அவர்‌ திருநாளுக் கெழுந்தருளுகிறார்‌ – என்ன,
    மற்றும்‌ சிலர்‌ நாயனார்‌ தம்முடைய சிஷ்யரான வானமாமலை ஜீயரைத்‌ தமக்கு ப்ராண ஸூஹ்ருத்தென்றும்‌. பொன்னடிக்கால்‌ ஜீயரென்றும்‌ அருளிச்‌ செய்வர்‌ என்ன; ஆனால்‌ இந்த விசை
    திருநாளுக்கு மஹாதிசய முண்டாயிற்று- என்று அனைவரும்‌ போர உகந்து எதிர்பார்த்துக்‌ கொண்டு எழுந்தருளியிருக்க நாயனாரும்‌ பயண கதியிலே யெழுந்தருளித்‌ திருமலை யாழ்‌வாரைக்‌ கண்டருளி திருவேங்கடமாமலை யொன்றுமே தொழ நம்‌ வினையோயுமே (திருவாய்‌ 3-3-8)என்று திருமலையாழ்வாரைத்‌ தண்டன்‌ ஸமர்ப்பித்து, வைத்த கண் வாங்காதே அநுபவித்துக்‌ கொண்டு சென்று ”ஸுவர்ண முசகரீம்‌ தத்ர ஸங்கதாம்‌ மங்களஸ்வதாம்‌- அத் திருமலையோடு சேர்த்து நல்ல ஓசை யுடைய ஸுவர்ண முகி நதியை- என்று மங்களாவஹமான ஸ்வர்ண முகியைக்‌ கட்டி அங்கே நீராடி யருளி, கேசவாதி த்வாதச நாமங்களையும்‌ சாத்தி யருளின வளவிலே ஸ்ரீகோவிந்த ராஐருடைய அபய ஹஸ்தம்‌, களபம்‌ திருமாலை தொடக்கமான வரிசைசள்‌ வர. அங்கீ கரித்தருளி
    ஸ்ரீவைஷ்ணவர்களுக் கெல்லாருக்கும்‌ ப்ரஸாத விநியோகம்‌ செய்தருளித்‌ தாமும்‌ ஸ்வீகரித்துப்‌ புறப்பட்டு கோவிந்தராஐரை மங்களாசாஸநம்‌ செய்தருளி, வரிசை பெற்று திருமலை யடிவாரத்திலே
    அழகிய சிங்கரைத்‌ தொழுது, -ஏவம்வித்‌ பாதேநாத்யாரோஹதி”- இப்படி உபாஸிப்பவன்‌ காலால்‌ ஏறுகிறான்‌ -என்‌கிற படியே ஏறியருளி, பரிஷத்‌ திருவேங்கட முடையானைத்‌ தொழுது
    கர்ப்பூரக்காலிலே தீர்த்த ஸ்வீகாரம்‌ செய்தருளி, காட்டழகிய சிங்கரைத்‌ தொழுது, மாம்பழ வெம்பெருமானாரைத்‌ தண்டன்‌ ஸமர்ப்பித்து விச்ரமித்துப்‌ புறப்பட்டருள; இச் செய்தி கேட்டுப்‌
    பெரிய கேள்வி ஜீயரும்‌ ஏகாங்கி ஸ்ரீவைஷ்ணவர்களும்‌, அனைத்துத்‌ கொத்துப்‌ பரிகாரத்துடனே பூவார் கழல்களை எழுந்தருளப்‌ பண்ணி வைத்துக்‌ கொண்டு, பெரிய பரிவட்டம்‌, ஸ்ரீபாத ரேணு,அபய ஹஸ்தம்‌ முதலான வரிசைகள்‌ கூட்டி மங்கள வாத்யங்களுடனே எதிர்‌ கொண்டு ப்ராஸாதிக்க ஸ்லீகரித்து

    மொண்ணைத் திருக் கோபுரத்தருகே திவ்ய விமானத்தையும்‌ திரு நாராயண
    கிரியையும்‌ த்வஜ ஸ்தம்‌பத்தையும்‌ பொற் கோபுரத்தையும்‌ கண்டு களித்துத்‌ தண்டன்‌ ஸமர்ப்‌பித்து உள்ளே புக்கு, அவா வறச் சூழ்ந்தான்‌ திருவாசலிலே தண்டன்‌ ஸமர்ப்பித்து திருவீதிகளையும்‌ திரு மாளிகைகளையும்‌ கண்டு களித்துக்‌ கொண்டு ப்ரதக்ஷிணமாக வெழுந்தருளி ஸ்வாமி புஷ்கரிணியிலே நீராடி யருளி, திருமண்காப்புச்‌ சாத்தியருளி, வேங்கட வராஹத்தை ஸேவித்து, தீர்த்தம்‌ ப்ரஸாதம்‌, ஸ்ரீ சடகோபன்‌ சந்தனம்‌ ப்ரஸாதிக்க ஸ்வீகரித்துப்‌ புறப்பட்டருளி திருத் தேர்களையும் கண்டு களித்து, உள்ளே யெழுந்தருளி அழகிய மணவாளன்‌ திருமண்டபத்தை தண்டன்‌ ஸமர்ப்பித்து ஸ்ரீபலிபீடத்தையும்‌ செண்பகத்‌ திருவாசலையும்‌ அத்தாணிப்‌ புளியையுந்‌ தண்டன்‌ ஸமர்ப்பித்துச்‌ செண்பகச் சுற்று ப்ரதஷிணமாக வெழுந்தருளிச்‌ சாலை வாசலாலே
    யுள்ளே புக்கு நெய்க்கிணறு முதலான சாலை வரிசைகளைக்‌ கண்டு களித்துத்‌ திருமடைப் பள்ளியையும்‌ யமுனைத் துறைவனையுந்‌ தொழுது, புஷ்கரிணியிலே தீர்த்த ஸ்‌வீகாரம்‌ பண்ணி ஸ்வர்ணமண்டபமேறி நாராயண கிரியைச்‌ தொழுது, செண்பகத்‌ திருவாசலாலே யுள்ளே புக்கு, தேவப் பெருமாள்‌ எழுந்தருளியிருந்த பொன்‌விஞ்சு பெருமாள்‌ கோயிலையும்‌ அழகப் பிரானாரையும்‌ திவ்ய விமானத்தையும்‌ தொழுது திருமடைட்பள்ளி நாய்ச்சியாரையும்‌ ஸேவித்து தசாவதாரங்களையுந்‌ தொழுது, திருமாமணி மண்ட.பமான யாகமண்டபத்திலே நாய்ச்சிமாருடன்‌ மலைக்கினிய நின்ற பெருமாளையும்‌ தண்டன்‌ ஸமர்ப்பித்து, தீர்த்தம்‌, ஸ்ரீ சடகோபன்‌, ஸ்ரீபாதரேணு ப்ரஸாதிக்க ஸ்வீகரித்தருளி, திவ்ய விமானத்தைத்‌ தொழுது ஸேனை முதலியாரையும்‌ வணங்கி, ராமநுஜஸ்ய சரணெள சரணம்‌ ப்ரபத்யே’ என்று எம்பெருமானாரைத்‌ தண்டன்‌ ஸமர்ப்பித்து, தீர்த்தம்‌ அநந்தாழ்வான்‌, ப்ரஸாதம்‌, சந்தனம்‌, ப்ரஸாதிக்க ஸ்வீகரித்து, அழகிய சிங்கரையும்‌, திருநிலைக்‌ கண்ணாடி போலிருக்கிற பெரிய திருவடி நாயனாரையும்‌ ‘தொழுது உண்டியிலே திருமுன்காணிக்கையும்‌ ஸமர்ப்பித்து த்வார பாலகருடைய அநுமதி கொண்டு உள்ளே புக்கு, மத்யே சக்ரவர்த்தி
    திருமகனாரையும்‌ தொழுது” குலசேகரன்‌ படியருகே சென்று, பொன்னம்‌ புயல் போல்‌ மரகதம் போல்‌ பூவை மலர் போல்‌ கருவிளை போல்‌ பொங்கார்கடல் போல்‌ பொலிந்திருண்ட புழுகிற்றுளைந்த
    செஞ்சோதி, அன்னம்‌ பயிற்றி நடமாட அலர்மேல்‌ மங்கையுறை மார்பனாய்‌, ”ஸிஷேவே தேவதேவேசம்‌ சேஷ சைல நிவாஸிதம்‌”-திருமலையில்‌ நித்ய வாஸம்‌ பண்ணும்‌ தேவாதிதேவனான திரு
    வேங்கட முடையானை ஸேலித்தார்‌-என்கிற படியே,எழில் கொள் சோதியான திருவேங்கடத்தெந்தையை அநபவித்து நிற்க-அப்பனும்‌ தீர்த்த ப்ரஸாதம்‌ திருமாலை, ஸ்ரீ சடகோபன்‌ இவை ப்ரஸாதிக்க, பெற்று க்ருதார்த்தராய்‌–

    நாயனார்‌ பெருமாள்‌ கோயிலுக்கு எழுந்தருளுதல்‌
    அங்கு நின்றும்‌ புறப்பட்டு நடுவே இரண்டு மூன்று நாள்‌ வஸித்து அதன்‌ பின்பு உலகேத்து மாழியானத்தியூரேற வெழுந்தருளி
    தூரஸ்திதேபி மயித்ருஷ்டி பதம் ப்ரபந்நேது:கம்விஹாய பரமம்‌ ஸுகமேஷ்யதீதி |
    மத்வேவயத்கக நசும்பி நதார்த்திஹந்து! தத் கோபுரம்‌ பகவதஸ் ஸரணம் ப்ரபத்யே॥

    நான்‌ தூரத்திலிருந்தாலும்‌ ஒருவன்‌ கண்களுக்குப்‌ புலப்படுவேனாகில்‌, அவன்‌ துக்கத்தை விட்டு உயர்ந்த ஸுகத்தை அடைவான்‌ என்று நினைத்துப் போலும்‌ வானளாவி நிற்கிற–ப்ரணதார்த்தி ஹரனான பேரருளாளனுடைய எந்தக்‌ கோபுரமொன்றுண்டோ- அதைச்‌ சரணமடைகிறேன்‌- என்று திருக்‌ கோபுர நாயனாரை தண்டன்‌ ஸமர்ப்பித்து உள்ளே சென்று புண்ய கோடி விமானத்தையும்‌ தண்டன்‌ ஸமர்ப்பித்து திரு வநந்த ஸரஸ்ஸிலே நீராடி யருளித்‌ திருமண்‌ காப்பு சாத்தி யருளி
    அடைவே ஆழ்வார்களையும்‌ ஸேவித்து பலி பீடத்தருகே தண்டன்‌ ஸமர்ப்பித்து உள்ளே புக்கு, சேர்ந்த வல்லி நாய்ச்சியாரையும்‌ சக்ரவர்த்தி திருமகனாரையும்‌ திருவநந்தாழ்வானையும்‌ தொழுது
    ப்ரக்ஷிணமாக வெழுந்தருளித்‌ திருப்புற்றுக்குக்‌ கீழாக இளையாழ்‌ வாரை ஆம்முதல்வனிவன்‌ என்று: கடாக்ஷித்தருளிய யமுளைத்துறைவன்‌ திரு முற்றத்தையும்‌ அவரெழுந்தருளி யிருக்கிற கரியமாணிக்‌கத்தாழ்வார்‌ ஸோபாநத்தையும்‌ ஸேவித்து, பேரருளாளர்‌ பெருந் தேவியாரையும்‌
    ஆகார த்ரய ஸம்பந்நாம்‌ அரவிந்த நிவாஸிநீம்‌ |
    அஸேஷ ஜகதீஸித்ரீம்‌ வந்தே வரத வல்லபாம்‌ ॥

    அநத்யசேஷத்வ, அநந்ய சரணத்வ, அநத்ய போக்யத்வமாகிற மூன்று ஆகாரங்களோடே கூடியவளாய்‌, தாமரை மலர்மேல்‌ நித்ய வாஸம்‌ செய்யுமவளாய்‌ எல்லா வுலகங்களுக்கும்‌ ஈஸ்வரியாய்‌ தேவப் பெருமாளுக்கு வல்லபையான பெருந்தேவியாரை அடிபணிகிறேன் -என்று அநுஸந்தித்து ஸேவித்து பங்கயத்தாள் திருவருளும் கொண்டு அங்கே பெரிய திருவடியையும் தொழுது உள்ளே
    புகுந்து தானவனை வன் நெஞ்சங்‌ கீண்ட சிங்கப் பிரானையும்‌ ஸேவித்‌துச்‌ சூடிக் கொடுத்த நாய்ச்சியாரையும்‌ ஸேனை முதலியாரையும்‌ ஸேவித்து அவ்வருகே ப்ரதக்ஷிணமாக வெழுந்தருளி ஸ்ரீ ஹஸ்திகிரீ யருகே சென்று, ‘*ஏஷதம்‌ கரிகிரீம்‌ ஸமாஸ்ரயே”‘ என்று தண்டன்‌
    ஸமர்ப்‌பித்து மலையாள நாய்ச்சியாரையும்‌ ஸேவித்து, பத க்ரமத்‌திலே படிகடந்தேறி, கச்சிக்கு வாய்த்தான்‌ திருமண்டபத்திலே திருக்கச்சி நம்பி முன்னாக வரதராஜர்‌ திருவரங்கப் பெருமாள அரையருக்கு இராமானுசனைத் த்யாகம்‌ செய்தருளிய ஸ்தலமன்றோ-என்று அஞ்சலித்து, அவ் விடத்தில்‌ அநவரத ஸந்நிதி பண்ணித்‌ கொண்டிருக்கிறவர்கள்‌ புருஷகாரமாக
    ஸிந்துரர்ஜஸி ரோரத்ந மிந்திரா வாஸ வக்ஷலம்‌ |
    வவந்தே வரதம்‌ வேதிமேதிநீ க்ருஹ மேதிரம்‌ ॥

    திருவத்தி மா மலைக்குத்‌ தலைக் கணி மணியாய்‌ அலர்மேல் மங்கை வுறை திருமார்பை யுடையனாய்‌ யாக பூமிக்கு ஸ்வாமியான வரத ராஜனை அடிபணிந்தார்‌ -என்கிற படியே புண்ய கோட்‌ யாக்யாதமான விமான மத்யத்திலே எழுந்தருளி யிருக்கிற பேரருளாளரை:
    ராமாநுஜாங்க்ரி ஸரணேஸ்மி குல ப்ரதீப.
    த்வாஸீத்‌ ஸ யாமுந முநேஸ்‌ ஸ ச நாத வம்ஸ்ய: |
    வம்ஸ்ய.பராங்குஸ முநேஸ்‌ ஸ ச ஸோபி தேவ்யா:
    தாஸஸ்தவேதி வரதாஸ்மி தவேக்ஷணிய ॥

    பேரருளாளனே! அடியேன்‌ எம்பெருமானார்‌ திருவடிகளை சரணம்‌ பற்றியவன்‌; அந்த எம்பெருமானாரோ ஆளவந்தாருடைய ஜ்ஞாத பரம்பரைக் கணி விளக்கானவர்‌, அவ் வாளவந்தார்‌ தாமும்‌ ஸ்ரீமத்‌ நாதமுனிகளுடைய வம்சத்தவர்‌. அந்த நாதமுனிகளும்‌ நம்மாழ்‌வாருடைய ஜ்ஞாந பரம்பரையினர்‌, அந்த ஆழ்வாரும்‌ பிராட்டிக்‌ கடியவர்‌; இப்படி பாரம்பர்யத்தாலே அடியேன்‌ தேவரீருக்கு கடாஷிக்கத் தக்கவனாகிறேன்‌ -என்றநுஸந்தித்து தண்டன்‌ ஸமர்ப்‌பித்து, அநந்தரம்‌ திருப்பல்லாண்டையும்‌ வரதராஜ அஷ்டகத்தையும்‌ ஸ்தோத்ர கத்யங்களையும்‌ அநுஸந்தித்து மங்களாசாஸனம்‌ பண்ணி யருள , தேவப் பெருமாளும்‌, ‘நம்மிராமானுசனைப் போலே யிருப்‌ பாரோருவரைப்‌ பெறுவதே!’ என்று மிகவும்‌ க்ருபை பண்ணி தீர்த்‌த ப்ரஸாதங்களையும்‌ ஸ்ரீசடகோபனையும்‌ ப்ரஸாதித்தருளி விடை கொடுத்தருள. அங்கு நின்றும்‌ புறப்பட்டருளி–
    தீப ப்ரகாஸ நர கேஸரி வித்ருமாப வைகுண்ட வாமந யதோக்தகர அஷ்ட பாஹுூந்‌ | அந்யாந் ஸுதா பணி பாண்டவ தூத ஹேம வர்ணாதிமாந்‌ வாகுரு:க்ரமஸஸ்‌ ஸிஷேவே ॥
    ஸ்ரீ அழகிய மண்வாள குருவானவர்‌, தீப ப்ரகாசர்‌, அழகிய சிங்கர்‌,
    பவழ வண்ணர்‌, வைகுண்ட நாதர்‌, வாமனன்‌ (உலகளந்தார்‌]
    யதோக்தகாரி, அட்டபுய கரத்தான்‌, இவர்களையும்‌ ஸுதாகரர் ஊரகத்தான்‌, பாண்டவ தூதர்‌, ஹேம வர்ணர்‌, இவர்கள்‌ முதலான மற்றுமுள்ள எம்பெருமான்களையும்‌ முறைப்‌படி ஸேவித்தார் -என்கிற படியே-நிறைந்த சீர்‌ நீள்‌ கச்சியிலுண்டான திருவெஃகா முதலான திருப்பதிகளையும்‌ திருவடி தொழுது

    நாயனார் ஸ்ரீ பெரும் பூதூரேற எழுந்தருதளுல்‌-அநந்தரம்‌;,
    யதீந்ரத் ஜநநீம் ப்ராப்ய புரீம்‌ புருஷ புங்கவ: |
    அந்த.கிமபி ஸம்‌ பஸ்யந் நத்ராக்ஷீல் லஷ்மணம்‌ முநிம்‌ –

    ஆண்களின்‌ சிறந்தவரான அழகிய மணவாளர்‌ யதிராஜரின்‌ அவதார ஸ்தலமான ஸ்ரீபெரும்பூதுரை யடைந்து ஊரிலுள்ள சிறப்‌புக்களைக்‌ கண்டு களித்துக்‌ கொண்டு சென்று இளையாழ்வாரை ஸேவித்தார்‌-என்கிறபடியே ஸ்ரீ பெரும்பூதூர் ஏற வெழுந்தருளி ஊரருகே நின்று
    இதுவோ பெரும்‌ பூதூர்‌? இங்கே பிறந்தோ
    எதிராச ரெம்மிடரைத்‌ தீர்த்தார்‌? – இதுவோ தான்‌ :
    தேங்கும்‌ பொருநல்‌ திருநகரிக் கொப்பான
    ஓங்கு புகழுடைய வூர்‌
    -என்று ஊரை யநுபவித்து ஊரிலே ப்ரவேசித் தருளி, ‘
    எந்தை வயதிராச ரெம்மை யெடுத்தளிக்க
    வந்த பெரும்பூதூரில்‌ வந்தோமோ!–சிந்தை
    மருளோ? தெருளோ? மகிழ் மாலைமார்பன்‌
    அருளோ விப் பேற்றுக் கடி-
    -என்று அலாப்ய லாபமாக ப்ராப்ய கெளரவத்தை யநுஸந்தித்து வித்தரா யுள்ளே புக்கு, ஆண்டுகள்‌ நாள்‌ திங்களாய்‌ (இரா-31) என்று தொடங்கி இராமானுசனைப்‌ பொருந்தினமே என்று விஸ்மித ஹருதயராய்‌ ஸேவித்து,

    என்னெஞ்சே! எங்களிராமானுசனென்‌னும்‌
    நன்னெஞ்சே! நல்லை காண்‌, இன்னுமின்னும்‌
    பெரும்பூதாரென்னாய்‌ போரப்‌
    பெரும் போகமெல்லாம்‌ பெற
    — என்று
    ஸஹ்ருத யநுபவம்‌ பண்ணி சரம பர்வத்திலே நிலை நின்று ஸேலித்து, இராமனுசனிணையடிகளை அடைந்து ‘யோ நித்யம்‌” என்று தொடங்கி ‘ ராமாநுஜஸ்ய ஸரணென ஸரணம்‌ ப்ரபத்யே-என்று அநுஸந்தித்து தண்டன் ஸமர்ப்பித்து எதிராஜன்‌ வடிவைத்‌ தன்‌ கண்ணுள்ளும்‌ நெஞ்சுள்ளும்‌ நின்று நீங்காதபடி நிலை நிறுத்திக்‌ கொண்டு தீர்த்த ப்ரஸாதங்களும்‌ பெற்று -சீராரும்‌
    எதிராசர்‌ திருவடிகள்‌ வாழி என்று தொடங்கி, ‘ தேவரீர்‌ நித்ய மங்களராய்‌ வாழ்ந்தருள வேணும்‌’ என்று மங்ளாசாஸனம்‌ செய்தருளி, ஸ்ரீபாஷ்ய ஸ்ரவணத்துக்கு உடையவரநுமதி கொண்டு -ஸ்ரீபாஷ்யத்துக்கு அநுமதி கொண்டு -அநந்தரம்‌ கோயிலிலே யெழுந்தருளியிருக்க, ராத்ரி ஸ்வப்நத்திலே எம்பெருமானாரெழுந்தருளி நாயனாரை அழைத்தருளி ஸ்ரீபாஷ்ய கோசத்தை ஸாதித்து, “நாமே உமக்குப்‌ பெருமாள் கோயிலிலே ஸ்ரீ பாஷ்யம் சாதிக்கிறோம் -கிடாம்பி நாயனார் பாடேறேச் செல்லும் நமக்கும்‌ திருவாய்மொழிப் பிள்ளைக்கும்‌ ப்ரியமாக வாசித்து பின்பு அருளிச்செயல்‌ வ்யாக்யானங்களையே பஹுமுகமாக ப்ரவர்த்திப்பியும்‌’” என்று அருளிச் செய்கையாலே,
    ராமாநுஜயதி பணித ஸ்ரீபாஷ்யார்த்த ஸ்ரவணத்திலே ஸ்ரத்தையுடைராய்‌ மீண்டு பெருமாள்‌ கோயிலேற வெழுந்தருளி:

    நாயனார்‌ கிடாம்பி நாயனார் பாடே ஸ்ரீ பாஷ்யம் கேட்டது
    அங்கே கிடாம்பி யாச்சான்‌ திருவம்ஸ்யரான கிடாம்பி நாயனாரை ஸேவித்து (அவர் பக்கலிலே ஸ்ரீபாஷ்யம்‌ ஸேவித்தருளி, பேரருளாளரையும்‌ ஸேவித்து, சிறிது காலம்‌ எழுந்தருளி யிருந்து ஸ்ரீபாஷ்யம்‌ அநுஸந்தித்துத்‌ தலைக்கட்டினவாறே –செந் தமிழும்‌ வட கலையுந்‌ திகழ்ந்த நாவர்‌ என்கிறபடியே உபய வேதாந்தாசார்யராய்‌ வேதாந்த லிழுப்‌ பொருளின்‌ மேலிருந்த விளக்கை விட்டுசித்தன்‌ விரித்தனன்‌ என்கிறபடியே தந் முகேந பேரருளாளருடைய வைபவத்தை ப்ரகாசிப்பித்துக்‌ கொண்டு, தேவ ராஜரை ஸேலித்து அவரநுமதி கொண்டு, அங்குண்டான தர்ஸந க்ரந்தங்களை எடுப்‌பித்துக் கொண்டு கோயிலேற எழுந்தருளினார்‌)அங்கே ஸ்ரீபாஷ்யம்‌ கேட்டருளா நிற்க,கிடாம்பி நாயனாருக்கு ஸஹ பாடியாயிருக்கிற ஐயைகளப்பாவும்‌ செல்வ நாயனாரும்‌ போர ஆதரித்து வைத்துக் கொண்டு பாடம்‌ நடத்த அப்பா, நாயனாருடைய வாசகதாடியையும்‌ க்ரஹண
    தாரண வாகவ்யவஹார சாதுர்யததையும்‌ கண்டு போர வித்தராய்‌ நாயனாரைப் பார்த்து, இவருடைய புத்திக்கநுகுணமாக ஸாதிக்‌க வில்லையே” என்ன, நாயனாரும்‌ அப்பாவை, நாளை இவருக்கு
    சிந்தனை பண்ணுவியும்‌’? என்று ஸாபிப்ராயமாக ஒரு வார்த்தைmயருளிச் செய்ய, அப்பா, அதி நிபுராகையாலே’ பிற்றை நாள்‌ தொடங்கி நாயனாருக்கு சிந்தனை பண்ணுவிப்பதற்கு எழுந்தருளி
    யிருக்க, நாயனாரும்‌ ஸஹஸ்ரமுகமாக உபன்யஸிக்கக் கண்டு ஐயைகள்‌ ‘ப்ரஸாதித்த அர்த்தங்கள்‌ ஒன்றும்‌ தப்பாமல்‌ பின்னையும்‌ போஷித்து விசேஷார்த்தங்களுடனே ஸாதித்தருளினீர்‌’- என்று அதிலே ஹர்ஷ யுக்தராய்‌ நெடும்போது பரவசராயிருக்க,-இத்தைக் கேட்டு கிடாம்பி நாயனாரும்‌ ஆங்கே யெழுந்தருள, அவர்‌ சிஷ்யர்களான வித்வஜ் ஜநங்கள்‌ நாயனாரோடே தர்க்கிக்க வேணு மென்றபேக்ஷிக்க, நாயனாரும்‌, ”நமக்கு இதர சாஸ்த்ர வ்யவஹாரத்துக்கு ஆசார்ய வாக்ய நிரோதமுண்டு” என்று அப்பாவுக்கு அருளிச் செய்ய, அப்பாவும்‌, “இவர்களும்‌ ஸ்ரீ வைஷ்ணவர்களன்றோ? இவர்களோடு ப்ரஸங்கித்தால்‌ ஸ்வரூப விரோதம்‌ வராது, அவர்‌களபிநிவேசத்தைச்‌ செய்தருள வேணும்‌’? என்றருளிச் செய்து அவர்களை முன்னே கொணர்ந்து விட, அவர்களுக்குத் தக்கதாக தர்க்க சப்த மீமாம்ஸைகளிலே பஹுமுகமாக உபந்யஸித் தருளின
    ‘வளவிலே எல்லாரும் வித்தராய்‌ திருவடிகளிலே தீர்க்‌க ப்ரணாமம்‌ பண்ணிப்‌ புறப்பட்டு நாயனார் பாடே சென்று, ,’நாயனாரை இத்‌தனை நாளும்‌ ஸாதாரணமாக எண்ணி யிருந்தோம்‌; அவரிடத்திலே ஸகல சாஸ்த்ரங்களும்‌ ஒருமிடறு செய்திருக்கின்‌றன!” என்று ஆச்‌சர்யப்பட, ‘அவர்‌ ஒரு அவதார லிசேஷங் காணுங்கோள்‌”” என்று அருளிச் செய்து விட்டு அவரைக் கொண்டு அருளிச் செயல்‌ வ்யாக்‌யானங்களை ப்ரவர்த்திப்பிக்கத திருவுள்ளமாய்‌, பின்பு அதி த்வரை யுடனே ஸ்ரீபாஷ்யம்‌ நடத்திக்கொண்டு போர, நாயனார்‌ பல காலும்‌ஈடு முப்பத்தாறாயிரப்படியை உருச் சொல்லிக்‌ கொண்டு போருகிறதைக்‌ கண்டு ஆச்சர்யப்பட்டு, ஒருவரு மறியாமல்‌ ஏகாந்‌தத்திலே நாயனார்‌ பாடே சென்று “முப்பத்தாறாயிரப்‌ பெருக்கர்‌’- என்று உமக்குத்‌ திருநாமஞ் சாத்தினது வெறுமனன்று; இந்த புத்தி ஸாமர்த்யம்‌ எங்குங் கண்ட தன்று; நமக்கொரு மநோ ரதமிருக்கிறது-அவஸ்யம்‌ செய்ய வேணும்‌’- என்று மறுக்க வொண்ணாதபடி அநுவர்த்திக்க, நாயனாரும்‌ இதுக்கென்‌ செய்வோ மென்று சிந்தித்துக் கொண்டு ஏதென்று கேட்க நாயனாரும்‌, ‘*தேவரீர்‌ அவதார விசேஷமென்று நிச்சயமாக வறிந்தேன்‌; எனக்கு அத்தை யொளிக்க வேண்டா. உள்ளபடி காட்ட வேண்டும்‌” என்றருளிச்செய்ய-ஆகில்‌ ஆசார்யராகிய தேவரீருக்கு ஒளிக்க ஒண்ணாதே; பெரியபெருமாளுடைய ரஹஸ்ய நியோகத்தை’ ஒருவருமறிய வேண்டா: என்று விண்ணப்பஞ்‌ செய்து கொண்டு ஏகாந்த ஸ்லத்திலே மங்கள தீபத்தை ஸ்ப்புரித்து, ”அஞ்சாமலிருக்க’ வென்று விண்ணப்பஞ்‌ செய்து, அஹிபதி நிஜாகாரத்தைக்‌ காட்டக் கண்டருளி பீதி யுக்தராய்‌ – இத்தை உப ஸம்ஹரிக்க வேணும்‌ – என்றபேஷிக்க” உபஸம்‌ஹரித்து எப்போதும் போலே நாயனா ரெழுந்தருளி யிருக்கக் கண்டு விசேஷ ப்ரதி பத்தியடனே அத்யாதரம்‌ பண்ணிக் கொண்டு தேவ ரஹஸ்யம்‌ நடத்திக் கொண்டு நாடோறும்‌ அமுது செய்தருளினபடியையும்‌ ஆராய்ந்து கொண்டு :திருமேனி ளெஎகுமார்யத்திற்கு அநுரூபமாம்படி பண்ணிக் கொண்டு வாரும்‌-என்று அடிக்கடி யருளிச் செய்து கொண்டு ஸ்ரீபாஷ்யம்‌ தலைக்கட்டி யருளும்படி தம்முடைய திருமாளிகையிலே கறக்கிற பசுவின் பாலை ஸாவதானமாகத்‌ திருத்தி நாயனார்‌ அமுது செய்யும்‌ படிக்கு ஸாதித்து உகப்புடனே ஸ்ரீபாஷ்யம்‌ நிறைவேற்றி “செந்தமிழும்‌ வடகலையுந்‌ திகழ்ந்த நாவர்‌ என்கிறபடியே உபய வேதாந்‌தாசார்யராய்‌ வேதாந்த விழுப் பொருளின்‌ மேலிருந்த விளக்கை விட்டு சித்தன்‌ விரித்தனனே -என்கிறபடியே தந் முகேநே பேரருளார்‌ வைபவத்தை ப்ரகாஸிப்‌பித்துக் கொண்டு (ஓராண்டு காலம்‌ யதோக்தகாரி ஸந்நிதியில்‌ ஸ்ரீபாஷ்யமும்‌ பகவத் விஷயமும்‌ ஸாதித்தருளினதாகவும்‌ அது காரணமாகவே அந்த ஸந்நிதியில்‌ மணவாளமாமுனிகள்‌ உபதேச ஹஸ்த முத்ரையுடன்‌ ஸேவை ஸாதிப்பது என்றும்‌ பெரியோர்கள்‌ பணிக்கக்‌ கேட்டிருக்கை )அங்கே சிலநாளெழுந்தருளியிருந்து:-அநந்தரம்‌ அங்குண்டான பகவத் விஷய ஸ்ரீ கோசங்களை யெகுப்பித்துக் கொண்டு கோயிலிலே யெழுந்தருள-

    தத: ப்ரதிநிவ்ருத்தம் தம்‌ புருஷோ புஜ கேஸய: | ப்ரத்யுத் கம்ய ப்ரபுஸ்ஸ்வைரம்‌ புந . ப்ராவேஸ யத்புரம்‌ ॥
    பின்னர்‌ அரவணையில்‌ பள்ளியானான ஸ்ரீரங்கதாதன்‌ திரும்பவும்‌ எழுந்தருளின அவ் வழகிய மணவாளப்‌ பெருமாளை எதிர்‌ கொண்டு, தம்மிஷ்டப் படியே மீண்டும்‌ திருவரங்கத்தில்‌ ப்ரவேஸிப்‌பித்தார்‌-என்கிறபடியே பெருமாளாலே ப்ரத்யுத்கதராய்‌க் கொண்டு திருவரங்கப்‌ பெரு நகரிலே ப்ரவேஸித்துப்‌ பெருமாளை ஸேவித்தருள, பெருமாளும் போர வுகந்தருளி தீர்‌த்த ப்ரஸாதங்கள்‌ ப்ரஸாதித்து,
    நித்யம்‌ ரங்கே நிவாஸய ப்ரார்த்தித: பணி ஸாயிநா ;
    பஸ்யந்‌ பதாம் புஜம்‌ தஸ்ய பாலயாமாஸ ஸாஸநம்‌ ॥

    இந்த வரங்கத்தே இனிதிரும்‌*” என்று ஸ்ரீ ரங்கஸாயியான பெருமாளால்‌ ப்ரார்த்திக் கப்பட்டவராய்‌ அழகிய மணவாளப் பெருமாளுடைய திருவடிகளை ஸேவித்துக்‌ கொண்டு அந்த நியமனதைப்‌ பரிபாலித்தார்‌ -என்கிறபடியே, ”இங்கேயே நித்ய வாஸம்‌ பண்ணும்‌” என்று நியமித்தருள, இவரும்‌ அப்படியே ஸம்மதி பண்ணி யெழுந்தருளி யிருக்க, அங்குண்டான பெரியோர்‌களெல்லாரும்‌ “தேவரீர்‌ இங்கே பெருமாளை மங்களாசாஸனம்‌ பண்ணிக்‌ கொண்டு எழுந்தருளி யிருக்க வேணும்‌” என்று ஆதரிக்க, அப்படியே -இன்பமிகு பெருங்குழுவுடனே யெழுந்தருளியிருக்க இசைந்து,
    ஸ்ரீமத் ரங்கம்‌ ஐயது பரமம்‌ தாம தேஜோ நிதாநம்‌
    பூமா தஸ்மிந்‌ பவது குஸலீ கோபி பூமா ஸஹாய: |
    திவ்யம்‌ தஸ்மை திஸது விபவம்‌ தேஸீகோ தேஸகாநாம்‌
    காலே காலே வரவரமுநி கல்பயந்‌ மங்களாநி ॥

    பிறரை வெல்லும்‌ ஆற்றலுக்கு உயர்ந்த ஸ்தானமாய்‌, நித்ய ஸ்ரீயுடலன் கூடியதாய்‌ ஸ்ரீரங்கம்‌ என்கிற மேலான திவ்ய தேசமானது நன்றாக விளங்கட்டும்‌; அங்கு ஸ்ரீதேவி பூதேவிகளோடு கூடிய அநிவாச்யனான பெரிய பெருமாள்‌ பாங்காக எழுந்தருளி யிருக்க வேணும்‌; ஆசார்யர்களுக்கெல்லாம்‌ முதல்வரான வரவர முநி அநுதிமும்‌ மங்களாசாஸனங்களைப்‌ பண்ணிக்‌ கொண்டு அப் பெருமானுக்கு ஸ்ரேஷ்டமான வைபவங்களை உண்டாக்‌க வேணும்‌- என்று காலகாலங்களிலே மங்களாசாஸநம்‌ பண்ணி யருள அத்தாலே *அரங்கர் தஞ்சீர்‌ தழைப்ப என்கிற படியே பெரிய பெருமளுடைய திருச்செல்வம்‌, சிறந்த செல்வம்‌ மல்கி என்றும்‌ நீங்காத செல்வம்‌ நிறைந்து என்றும்‌ ஸம்ருத்தமாயிற்று-

    நாயனார்‌ ஸந்யாஸாஸ்ரமம்‌ ஸ்வீகரித்தல்
    அக் காலத்திலே பெருமாளுடைய ஸேவைக்கு விருத்தமான ஒரு ஆசெளச விசேஷத்தைத்‌ தெற்கினின்றும்‌ சிலர் வந்து விண்ணப்‌பஞ் செய்யக்‌ கேட்டருளி தென்னரங்கள்‌ கழல்‌ சென்னி வைத்துத்‌தானதில்‌ மன்னி யிருக்கிற தமக்கு தத்‌ விஸ்லேஷம்‌ அத்யந்தம்‌ துஸ் ஸஹமாய்‌ த்வத் பாத பத்ம ப்ரவணாத்ம வ்ருத்தேர்பவந்தி ஸர்வே ப்ரதி கூல ரூபா:” -தேவரீருடைய திருக் கமல பாதங்களில்‌
    ஈடுபாடுள்ள மனமுடையவனுக்கு எல்லாம்‌ விரோதிகளாகவே ஆகின்றன-என்கிறபடியே பகவதநுபவ விரோதிகளான பரிகரங்‌களெல்லாம்‌ அத்யத்தம்‌ ப்ரதிகூலங்களா யிருக்கின்‌றன வென்று
    அறுதி யிட்டு அப்போதே தமக்கு ஸப்ரஹ்மசாரியான சடகோப ஜீயர்‌ ஸத்நிதியிலே யெழுந் தருளி
    சந்தம்‌ தஸ்யைஷ விஜ்ஞாய நந்தந் நந்தந்‌ நிரந்தரம்‌ |
    ஸர்வம்‌ ஸங்கம்‌ பரித்யஜ்ய துங்கம்‌ ப்ராவிஸதாஸ்ரமம்‌ ॥

    இவ்வழகிய மணவாள நாயனார்‌ அந்த சடகோப ஜீயருடைய திருவுள்ளக்‌ கருத்தை யறிந்து மிகவும்‌ ௨கந்துகந்து, ஸர்வ ஸம்‌பந்தங்களையும்‌ விட்டு விட்டு உயர்ந்தான ஸந்நியாஸாஸ்ரமத்தில்‌
    ப்ரவேசித்தார்‌-என்கிறபடியே ஸர்வஸங்க பரித்யாக பூர்வகமாக ஸந்யஸித்தருளி, த்ரி தண்ட காஷாயங்களை அவர்‌ திருக் கைகளாலே ஸாதிக்க தரித்தருளி துரீயாச்ரமத்தை யடைந்து அதற்கு அநுகுணமாக ‘சடகோப ஜீயர்‌” என்று பிள்ளை திரு நாமத்தை யுடையராய்‌,
    அற்ற பற்றராய்‌, பற்றிலார்‌ பற்ற நின்ற பெருமாள்‌ திரு முன்பே யெழுந்தருளி ஸேவித்து,
    மங்களம்‌ ரங்க துர்யாய நம: பந்நக ஸா யிநே |
    மங்களம்‌ ஸஹ்ய ஜாமத்யே ஸாந்நித்ய க்ருத சேதஸே ॥

    ஸ்ரீ ரங்கநாதனுக்கு மங்கள முண்டாக வேணும்‌. அரவணை மேல் துயிலும்‌ பெருமாளை அடி பணிகிறேன்‌. உபய காவேரி மத்யத்தல்‌ நித்ய ஸாந்நித்யம்‌ பண்ணி யிருப்பதில்‌ நிலைத்த திருவுள்ளமுடைய பெருமாளுக்கு மங்களமுண்டாகுக-என்று மங்களாசாஸநம்‌ பண்ணிக்‌ கொண்டெழுந்தருளி நிற்க, பெருமாளும்‌ இவரை ஆதரித்தருளி, தம்முடைய திரு நாமமான முந்தின திருநாமத்‌தையே முடிய நடத்த வேணுமென்‌றருளிச் செய்து, ”உமக்கு பல்‌லவராயன்‌ மடத்தை ப்ரஸாதிக்கிறோம்‌; யாவச் சரீர பாதம்‌ எம்பெருமானாரைப்‌ போலே இங்கே இரும்‌” என்று நியமித்தருளி, எம்‌பெருமானார்‌ காலத்தில்‌ கந்தாடை யாண்டான்‌ தம்முடைய ஆசார்‌யரான ஆட் கொண்ட வில்லிஜீயர்‌ எழுந்தருளியிருக்கும்‌ படி மடமாக்கி, அவருடைய திருவராதனமான என்னைத் தீமனங்‌ கெடுத்‌தார்க்கு மத்யாஹ்ந கால அவஸரத்திலே அமுது செய்யப்‌ பண்ணும்‌ படி பெருமாள்‌ ஸந்நிதியிலே நித்யம்‌ ஒரு தளிகையும்‌ திருவிளக்கு நெய்‌ முதலியவையும்‌ நடக்கும்படி பொலிவிட்டு நடந்து வந்ததாயும்‌, சில நாள்களுக்குப்‌ பின்பு முதலியாண்டான்‌ திருவம்‌சத்தார்‌ பரஸ்பர விவாதத்தாலே ஸ்ரீபண்டாரத்தில்‌ சேர்த்ததாயும்‌ பூர்வ காலத்திலே அதி விலஷணமான ராமாநுஜ கூடம்‌ பல்லவராயன்‌ நடத்தின படியாலே பல்லவராயன்‌ மடமாயிற்று; திருவாராதநமும்‌ என்னைத் தீ மனங்கெடுத்தார்‌, என்று திருநாமம்‌; அந்த மடத்தையும்‌, திருவாராத நத்தையும்‌ ப்ரஸாதித்து மிகவும்‌ க்ருபை
    பண்ணி யருளி நிஸ்ருஷ்டாத்மா ஸுஹ்ருத்ஸுச:-நண்பர்களிடத்தில்‌ தம் பொறுப்பை வைத்தவர்‌-என்கிறபடியே தாமும்‌ அவ் விடத்திலே ந்யஸ்த பரராய்‌ தீர்த்த ப்ரஸாதங்களையும்‌ ப்ரஸாதித்து, பரிவட்டம்‌ ஸ்ரீசடகோபன்‌ ப்‌ரஸாதித்து ‘-நம்முடைய அழகிய மணவாள ஜீயரை மடத்திலே விட்டு வாருங்கோள்‌-என்று உத்தம நம்பி முதலான அனைத்துப்‌ பரிகரத்தையும்‌ இவர்‌ பின்னே அனுப்பி யருள, அவர்களும்‌ அப்படியே ஸேவித்துச்‌ கொண்டு போய்‌ மடத்தில்‌ யெழுந்தருளப்‌ பண்ணி, அடியார்கள்‌ வாழ, அரங்க நகர் வாழ…….. மணவாள மா முனியே இன்னு மொரு நாற்றாண்டிரும்‌ என்று ஸேலித்து மீண்டார்கள்‌.
    பின்பு மடம்‌ முழுவதையும்‌ வான மாமலை ஜீயர்‌ முதலான முதலிகளைக்‌ கொண்டு செப்பமிடுவித்து, ‘திருமலையாழ்வார்‌” என்று திருவாய்மொழிப் பிள்ளை பெயராலே யொரு வியாக்கியான மண்டபத்தையு (காலக்ஷேப கூடம்‌) முண்டாக்கி பிள்ளை லோகாசாரியர்‌ திருமாளிகையிலிருந்து ரஹஸ்யம்‌ விளைந்த மண்ணால்‌ தாம்‌ எழுந்தருளியிருக்கிற இடத்திற்கு மண் காப்புச்‌ சாத்துவித்து அவ்விடத்தை குருகுலவமஸமாகவே எண்ணி, ஸ்வாசார்ய பாத பங்கஜ த்வந்த்வச்சாய மத்யே ஸுகாஸீநராய்‌ இனிதமர்ந்து வியாக்யானித்துக்‌கொண்டெழுந்தருளி யிருந்து, பிள்ளை நம்மாழ்வார்‌ திரு நாமத்தாலே விளங்கி யருளினாப்‌ போலே தாமும்‌ நம் பெருமான்‌ திரு நாமத்‌தாலே மிகவும்‌ விளங்கி யருளினார்‌. இப்படி ‘ரங்க மங்கள தூயாய ரம்ய ஜாமாத்ரு யோகிநே ”’ ஸ்ரீரங்கத்துக்கு மங்களாசாஸன பரரான மணவாளமாமுனிகளுக்கு மங்களமுண்டாகுக- என்னும்படி
    கோயிலுக்கு மிசவும்‌ மங்களாசாஸன பரராய்‌ எழுந்தருளி யிருக்கும் நாளிலே,

    ஆசாரஜ்ஞாந வைராக்ரை ராகாணே ச தாத்ரும: |
    ஸ்ரீமாந்‌ ராமாநுஜஸ் ஸோயமித்யாஸம்‌ ஸந்‌ மித.ப்ரஜா:

    ஆகாரத்தினாலும்‌, ஆசாரம்‌, ஜ்ஞாநம்‌, வைராக்யம்‌ இவற்றினாலும்‌, எம்பெருமானாரைப்‌ போலலே இந்த மணவாள மா முனிகளும்‌ உள்ளமையால்‌ ஸ்ரீமானான அந்த ராமாநுஜ முனிவரே இவர்‌ என்று ஜனங்கள்‌ பரஸ்பரம்‌ புகழ்ந்து பேசினர்‌ -என்னும்படியான திருவரங்கள்‌ திருமுற்றத் தடியவ ரெல்லாரும்‌ ‘இவர்‌ எம்பெருமானார்‌ அவதாரம்‌” என்று அறுதியிட்டு இவர்‌ திருவடிகளிலே ஆஸ்ரயித்து அத்யந்தம்‌ விலஷணராய்‌, ‘ பரமந போநிவாஸ பணி புங்கவ ரங்க பதேர் பவந மிதம்‌ ஹிதாய ஜகதோ பவதா அதிகதம்‌”” (பரமபதத்‌தில்‌ எழுந்தருளி யிரா நின்ற திருவநத்தாழ்வானே! இந்த அழகிய
    மணவாளனுடைய வாஸஸ்தானமான இத் திருவரங்கமானது தேவரீரால்‌ லோக ஷேமத்தின்‌ பொருட்டு அடையப்பட்டது-என்றும்‌
    வன் பெரு வானகமுய்ய, அமரருய்ய, மண்ணுய்ய மண்ணுலகில்‌
    மனிசருய்ய, துன்பமிகு துயரகல, அயர்வொன்றில்லாச்‌ சுகம்‌ வளர
    அக மகிழுந் தொண்டர்‌ வாழ அன்பொடு தென் திசை நோக்கப்‌பள்ளி கொள்ளும்‌
    (பெரு திரு 1-10) பெரிய பெருமாள்‌ ஐகத் ரக்ஷணார்த்தமாக இங்கே யெழுந்தருளினாற் போலாயிற்று இவர்‌ இங்கே எழுந்தருளினது என்று மிகவும்‌ ஆதரித்துக் கொண்டு போந்தார்கள்‌.

    திருமஞ்சநன அப்பாவும்‌ பட்டர் பிரான்‌ ஜீயரும்‌ ஜீயரை ஆஸ்ரயித்தல்‌
    இப்படி எழுந்தருளியிருக்கிற காலத்திலே ஜீயர்‌ அருணோதயத்‌துக்குத்‌ திருக்காவேரியில்‌ நீராட எழுந்தருளுவர்‌; அக் காலத்திலே அத்யந்தம்‌ ஸத்வ நிஷ்டராய்‌ பெருமாள்‌ ஸந்நிதியிலே அநந்ய ப்ரயோஜனராய்‌ கைங்கர்யம்‌ பண்ணிப் போருகிற திருமஞ்ஜநம்‌ அப்பா வென்றொருவர்‌ கூடவே சென்று ஜீயர் நீராடுகிற ஸ்தானத்‌திற்குப்‌ பின்பே யிருந்து அந்த ப்ரவாஹ தீர்த்தத்தில்‌ தப்பாமல்‌ நீராடிக்‌ கொண்டு போக அவருக்கு ஞாநோதயமாய்‌ ஜீயர்‌ திரு வடிகளிலே நிரவதிக ப்ராவண்யமுண்டாய்‌ ஆஸ்ரயித்துக்‌கு க்ருதார்த்‌தரானார்‌. இந்த அர்த்தத்தை
    உஷஸ்யயம் வாரிணி ஸஹ்யஜாயா: ஸ்நாதோ யதீந்த்ர ப்ரவணோ முநீந்த்ர: |
    தத்ரைவ பஸ்சாதவ காஹ்ய தீர்த்தே ஸ்ரீ தீர்த்தாதாதஸ்‌ கமுபாஸரி தோபூத்‌ ॥

    உஷ: காலத்தில்‌ யதீந்த்ர ப்ரவணாரான மா முனிகள்‌ நீராடிய காவிரி ப்ரவாஹத்தில்‌ பின்னர்‌ அமிழ்ந்தாடின திருமஞ்சனம்‌ ௮ப்பா அவரிடம்‌ ப்ராவண்யமுடையராய்‌ அவரை(மாமுனிகளை) ஆஸ்ரயித்‌தவரானார்‌] என்று அநுஸந்தித்தார்கள்‌. அப்பாவும்‌ ஜீயர்‌ திருப்‌ பவளத்தாலே ஸகலார்த்தங்களையும்‌ ஸ்ரவித்து, ”சாயா வாஸத்வ மநுகச்சேத்‌ –நிழலுறடிதாறுமா னோம்‌ என்கிறபடியே சாயாவத்‌ பரதந்த்‌தரராய்த்‌ திருவடிகளைப்‌ பிரியாமல்‌ அங்குத்தைக்கு அந்தரங்கராய்‌ எழுந்‌தருளியிருத்தார்‌

    அநந்தரம்‌ ‘கோவிந்த தாஸரப்பர்‌” என்னும்‌ நிரூபகத்தை யுடையவரான பட்டர்‌ பிரான் ஜீயர்‌, திருவடிகளிலே வந்து ஆஸ்ரயித்து தத் பாத பத்ம ஸேவைகதா ரகராய் ஸேலித்துக் கொண்டு எழுந்தருளி யிருந்தார்‌-கோவிந்ததாதர்‌–பட்டர்பிரான்‌ ஜீயர்‌ மாமுனிகளின்‌ அஷ்ட திக் கஜங்கனில்‌ ஒருவரானர்‌; பட்டர்‌ பிரான்‌ ஜீயர்‌ வந்து தண்டமிழோர்‌ மன்னு புகழ்‌ தொண்டை மண்டலத்தில்‌ வந்துதித்து தன்னுடைய வாசாரம்‌தப்பாமல்‌ இந்நிலத்திலாசரிததுக் காட்டி, யரங்கத்தே சென்று புகுந்து ஈஸரவணை மேல் எம் பெருமான்‌ வாச மலர்த்தாள்‌ பரவும்‌ மணவாள யோகி மலர்த் தாள்‌ தனிலிறைஞ்சி நண்ணி நில மேல்‌ சிச்சனாகாரம்‌ தெரிவிப்போம்‌’” என்று வந்த கோவிந்ததாதன்‌–என்கிறபடியே மணவாள மாமுனியை யாஸ்ரயித்து, *கோவிந்‌ தாஹ்வாநபாயிநீ’ என்கிறபடியே எம்பாரைப் போலே இவரும்‌ அவருக்கு நிழலுமடி தாறும்‌ போல வரவர முனி சரணத்தை அரை க்ஷணமும்‌ பிரிய க்ஷமரன்றிக்கே பிரியா வடிமை செய்து தத்பாத ஸேவைகதாரகராய்‌ வாழ்ந்து கொண்டிருந்தார்‌

    அதன் பின்பு மணவாள மாமுனியும முகில்வண்ண்னடி மேல்‌ சொன்ன சொல் மாலையாயிரம்‌ என்றும்‌ மதிளரங்கர்‌ வண்‌புகழ்‌ மேலான்ற தமிழ்‌ மறைகளாயிரம்‌ என்றும்‌-இப்படி பெரிய பெருமாள்‌ விஷயமாக ப்ரதி பாதிக்கப்படுகற திருவாய்மொழியினுடைய ஈடு முதலான வ்யாக்யானங்களையும்‌ மற்றுமுண்டான ஆழ்வார்கள்‌ அருளிச்‌ செய்த வ்யாக்யானங்களையும்‌ வ்யக்தமாக ப்ரஸாதித்திக்‌ கொண்டும்‌, ஸ்ரீவசநபூஷணாதி திவ்ய ரஹஸ்ய தாத்பர் யங்களையும்‌ தர்சிப்பித்துக் கொண்டும்‌ ராமாநுஜார்ய வசகராய்‌ நாடோறும்‌ ஸேவித்துக்‌ கொண்டும்‌ குரோர்‌ நாம ஸதாஜபேத்‌”, என்று எம்பெருமானார்‌ திருநாமமாய்‌-சயந்தரு கீர்த்தியாய்‌-ஸ்ரீவைஷ்ணவ காயத்ரியான நூற்றந்தாதியை
    ‘அநவரதம்‌ அநுஸந்தித்துக்‌ கொண்டும்‌ ”வகுளபூஷண வாகம்‌ருதாராநம்‌” என்று தொடங்கி தம்முடைய அபேக்ஷிதங்களையும்‌ அவர்‌ திருவடிகளிலே நித்யமாக ப்ரார்த்திக்‌ கொண்டு
    ம்‌ தத் ப்ரஸாதைக தாரகராய்‌ தத்‌ வைபவத்தை ப்ரகாசித்துக்‌ கொண்டும் அஸத்ருச வைபவராய்‌ திருமாலை யாழ்வாருடைய அடிநிழலிலே (தத்‌ ப்ரஸாததைக ப்ரயோஜநராயிருக்க, ஸ்ரீபாதத்து முதலிகள்‌ தப்பா மறை மொழியானெதிராசன்‌ தண்டாமரைத்‌ தாள்‌, இப்பாரிடந்தனிலிட்டு வைத்த தனமிதன, வைப்பாகிய மனத்தான்‌ மணவாளமாமுனியை இனி ஒப்பார்களில்லை உலகேழி லும உம்பரிலுமே என்று உபய விபூதியிலும்‌ இவர்‌ அஸத்ருஸ வைபவ யுக்தராய்‌: தேசந் திகழ எழுந்தருளி யிருக்கிற காலத்திலே பெரிய பெருமாளுடைய நியமானத்தாலே தமக்குத்‌ திருவாராதனமாக ஸ்ரீரங்தராஜரை எழுந்தளருப்‌ பண்ணி வைத்துப்‌ பிள்ளைலோகாசாரியருடைய திருநஷத்ரமான ஐப்பசி மாஸம்‌ திருவோணத்‌ திரு நன்னாளிலே திருப்ரதிஷ்டையுங்‌ கொண்டருளப்பண்ணி, தமது திருக்கைகளாலே ஆராதநமுஞ்‌ செய்து ‘ ஐந்மர்க்ஷே ஸ்ரவணோபி வா” என்றும்‌ நீ பிறந்த திருவோணம்‌ என்றுஞ்‌ சொல்லுகிற படியே பிள்ளை லோகா சாரியர்‌ திருநக்ஷத்ரமான திருவோணம்‌ முதலான
    மற்றுமுள்ள ஆசாரியர்கள்‌ திரு நக்ஷத்ரங்களையும்‌ *செந்தெலரிசி சிறுபருப்புச்‌ செய்த வக்காரம்‌ நறு நெய் பாலால்‌ பன்னிரண்டு திருவோணமட்டேன்‌ (பெரியா திரு, 2-9-7) என்கிறபடியே அக்கார வடிசிலாலே அமுது செய்தருளப்‌ பண்ணிப் பரிபாலித்துக் கொண்டும்‌ பூர்வாசாரியர்களுடைய வசநாநுஷ்டானங்களையும்‌ தம்முடைய உக்த்யநுஷ்டாநங்களாலே ப்ரகாசிப்பித்துக் கொண்டும்‌ ஸ்ரீரங்கஸ்ரீக்கு மங்கள தீபம்‌ போலே எழுந்தருளி யிருந்தார்‌.

    இப்படி திசை விளக்காய்‌ நிற்கிற திருவரங்கத்திலே திக்குற்ற கீர்த்தி யிராமனுசனைப் போலே
    சிர விரஹதஸ் சிந்தா ஸந்தாந நஜர்‌ ஜர சேதஸம்‌ புஜக ஸயநம்‌தேவம்‌ பூய! ப்ரஸாதயிதும்‌ த்ருவம்‌ |
    யதிகுலபதிஸ்‌ ஸ்ரீமான் ராமாநுஜஸ் ஸம பூதயந்த்விதி ஸமதுஷக்‌ ஸர்வே ஸர்வத்ர தத்ர ஸுதீஜநா-
    என்றும்‌,
    வெகுகாலம்‌ பிரிந்திருந்ததால்‌, மிகவும்‌ நினைப்பதினால்‌ மனம்‌ தளர்ந்த அரவணை மேல்‌ பள்ளிகொண்டுள்ள பெருமாளை ஆஸ்வாஸிப்பிப்பதற்கு யதீந்த்ரரான ஸ்ரீமாந்‌ ராமநுஜரே இந்த மணவாளமாமுனிகளாக அவதரித்தார்‌ என்று வித்வஜ் ஜனங்கள்‌ எங்கும்‌ சொல்லி மகிழ்ந்தனர்‌.
    அதுக்கும்‌ மேலே
    (2) ஸமுநிஸ் ஸெளம்ய ஜாமாதா ஸர்வேஷாமேவ பஸ்யதாம்‌ |
    ஸ்ரீஸகஸ்ய நிதேஸேந ஸூ ஸூபே தேஸிகே ஸ்ரியா -என்றும்‌

    அழகிய மணவாள னென்று பெயருள்ள அந்த முனிவர்‌(ஆசாரியர்‌) திருமகளனபனான பெருமாளுடைய நியமனத்தினால்‌ எல்லோரும்‌ காண ஆசார்ய ஸ்ரீயுடன்‌ விளங்கினார்‌. தேஸிக ஸ்ரீயாலே மிகவும்‌ விளங்கா நிற்க இதை தேசாந்தரஸ்த ரெல்லாருங்‌ கேட்டு
    (3) ததஸ் ஸமுத் ஸுகாஸ் ஸர்வே ஸதஸோத ஸஹ ஸ்ரஸ :
    ஸரணம் தஸ்ய ஸம்ஸ்ரித்ய சரணேள தந்யதாம்‌ கதா: ॥ –

    பிறகு மிக மகிழ்ந்த யாவரும்‌ நூற்றுக் கணக்கிலும்‌ ஆயிரக்‌ கணக்கிலும்‌ அந்த மணவாளமாமுனிகளுடைய திருவடிகளைப்‌ புசுலாப் பற்றி தந்யரானார்கள்‌-என்கிறபடியே ஸமீபஸ்தரோடு தூரஸ்தரோடு வாசியற அஸங்க்யாதராய்‌ ஆஸ்ரயிக்க, அவர்களை யெல்லாம்‌ பரம க்ருபையாலே திருத்தித் திருமகள்‌ கேள்வனுக்‌காக்கி என்றும்‌, அரங்கன்‌ செய்ய தாளிணை யோடார்த்தான்‌ என்றும்‌ சொல்லுகிறபடியே அரங்கன்‌ மெய்யடியார்கள்‌ என்றும்‌ திருமாலடியார்கள்‌ என்றும்‌ நிரூபகமாம்படி அத் தலைக்கு ஆளாக்கி யருள, அவர்களும்‌ அபகத மத மனை–இத்யாதிப்‌படியே குற்றமின்றிக்‌ குணம்‌ பெருக்கிக்‌ குருக்களுக்க நுகூலராய்‌,
    -வரவர முநி ப்ருத்யர்‌” என்று நிரூபிக்கும்படி அங்குத்தைக்கு அந்‌தரங்கராய்த்‌ திருவடிசுளிலே நித்ய ஸேவை பண்ணிக்‌ கொண்டு அவர்‌ பிரஸாதித் தருளுகிற பகவத் விஷயங்களையுங்‌ கேட்டுக்‌
    கொண்டு ஆசார்யாபிமானத்திலே ஒதுங்கி அநுகூலராயிருக்க-

    அப்பா குமாரத்தி ஆச்சியார்‌ ஜீயரை ஆஸ்ரயித்தல்‌
    ஜீயர்‌ ப்ராத காலத்தில்‌ நீராட்டத்திற்குப்‌ புறப்பட்டெழுந்‌தருளா நிற்கச்‌ செய்தே ஒரு நாள்‌ அசிந்திதமாக வர்ஷம்‌ வர, அதனால்‌ ஒரு வைஷ்ணவர்‌ க்ருஹத்தின்‌ வாசல்‌ திண்ணையை உத்‌தேசித்து எழுந்தருளா நிற்க அந்தக்‌ ருஹயஜமானை கண்டு அத்யந்‌தம்‌ ப்ராவண்யத்தாலே புடவைத்‌ தலைப்பாலே திண்ணையைத்‌ துலக்கி, “ஸ்வாமீ நீர் .இங்கே எழுந்தருள வேணும்‌” என்று ஸ விநய பக்தியோடே ஸேவித்து நிற்க, ஜீயரும்‌ திருவடி நிலைகளைக்‌ கீழே வீட்டுத்‌ திண்ணை மேலே ஏறி யருள அந்த அம்மை மழையிலே நனைகிற திருவடி நிலைகளை எழுந்தருளப்‌ பண்ணித் தம்‌ சிரஸ்ஸிலே தீர்த்‌தத்தோடு தரித்துக்‌ கொண்டு, பிற்பாடு தலைப்பாலே திருவொற்றுவாடை சாத்தி மீளவும்‌ சிரஸா வஹித்து, திருமுன்பே எழுந்தருளப்‌ பண்ணி நிற்க, ஜீயரும்‌, ‘நீயார்‌? பேரேது? இது ஆருடைய திரு மாளிகை ?” என்று கேட்டருள, “தேவரீர்‌ திருவடி ஸம்பந்தியா யிருக்கிற திருமஞ்சனம்‌ அப்பாவுடைய பெண்‌- அடியேன்‌ பெயர்‌ ஆச்சி. இது அவருடைய மணவாளப்‌ பிள்ளை கந்தாடை ஐயங்‌கார்‌ க்ருஹம்‌ (முதலி யாண்டான்‌ திரு வம்ச்யரான சிற்றண்ணர்‌ )என்று விண்ணப்பம்‌ செய்யக்‌ கேட்டு உகந்தருளி,
    தம்முடைய அப்பாச்சியாரோ!’”’ என்று அருளிச்‌ செய்து கடாஷித்துக்‌ கொண்டு வர்ஷம்‌ நிவர்த்தமான வுடனே திருக் காவேரிக்‌ கெழுந்தருளினார்‌.

    ஆச்சியாரும்‌ திருவடி நிலைகளின்‌ திருமஞ்சனம்‌, தலையிலே ஊறி ஜீயர் கடாஷம்‌ பெற்றவளாகையாலே உடனே ஜ்ஞாநோதயமுண்டாய்‌, அப்போதே ஜீயர்‌ திருவடிகளிலே ஆஸ்ரயிக்க வேணு மென்னும்‌ ருசி பிறந்து, பிறந்தகத்திலே சென்று பிதாவுக் கறிவிக்க அவரும்‌ உகந்து, தம்முடைய தெளஹித்ரர்களும்‌ அறியா மலிருக்க வேணுமென்று அருளிச் செய்து, ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆச்ரயண மான பின்பு தம்முடைய திரு மாளிகையிலே தானே ஒரிடத்திற்கும்‌ புறப்பாடமல்‌ சில நாளிருக்கும்‌ படிக்கு ஆலோசனை பண்ணிய அப்பா, தம்முடைய குமாரத்தியாரைக்‌ கூட்டிக் கொண்டு மடத்திலே எழுந்தருளி ஜீயரை தண்டன்‌ ஸமர்ப்பித்து இச் செய்தியை விண்ணப்பஞ் செய்ய; ஜீயரும்‌, கந்தாடை
    அய்யங்கார்கள்‌ ஸம்பந்தத்தைப்‌ பார்க்க வேண்டாவோ? காரியப்‌ படாது” என்றருளிச் செய்ய, அப்பாவும்‌ தம்முடைய குமாரத்தியாருடைய ஆஸ்திக்யாத்ரார்‌த்திகளை விண்ணப்‌பஞ் செய்து-ப்ரதிஹதி ஒன்றும்‌ வாராது; க்ருபை செய்தருள வேனும்‌” என்று விண்ணப்பஞ் செய்ய, -ஆகில்‌ இவளை யிட்டு இந்தத் திருவம்சத்திற்‌ கெல்லாம்‌ ஆநுகூல்ய முண்டாமென்று –ஸூபேந மநஸா த்யாதம்‌’-என்கிறபடியே அப்போது ஒரு சிந்தை செய்து ஆச்சியாருக்கு ஸமாஸ்ரயணம்‌ ஸாதித்தருளி ஹிதங்களையும்‌ ஜ்ஞாதவ்யார்த்தங்‌களையும்‌ உகந்து ப்ரஸாதித்தருளினார்‌, அப்பாவும்‌ தம்முடைய குமாரத்தியாரைத்‌ தம்முடைய திருமாளிகையிலே தானே சில நாளிருக்கும்படிக்கு நியமித்து அவருடைய குமாரர்‌ அண்ணா தொடக்கமானவர்களுக்கு ஒரு கார்யாந்தரத்தை அருளிச் செய்து பரிஹரித்து வைத்தருளினார்‌. இப்படி ஆச்சியாருக்கு ஸ்ரீபாத தீர்த்த வஹநத்தினாலே வந்து அதிசயத்தை
    ஸ்ரீபாதுகாம்புஜ நிதாத்ம விவேகரங்க பூநாத தீர்த்த ஜலதாதஜ மாத்ரு தேவம்‌ |
    த்வந்த்வச்சிதம்‌ நிகில தேஸி௧ வந்த்யபாதம்‌ ஸெளம்யோ பயந்த்ரு முநி வர்யமஹம்‌ நமாமி

    என்று அநுஸந்தித்தார்கள்‌ -தமது பாதுகையின்‌ தீர்த்தத்‌தினால்‌ ஆத்ம விவேகத்தைப்‌ பெற்ற திருமஞ்ஜனம்‌ அப்பாவின்‌ பெண்ணான ஆச்சிக்குத் தேவதையும்‌, சீதோஷ்ணம்‌ ஸூக துக்கம்‌ முதலிய த்வத்வங்களை அறுப்பவரும்‌, ஆசார்யர்களனைவராலும்‌ வணங்கத் தக்க திருவடிகளை யுடையவருமான அழகிய மணவாள மாமுனிவரை அடியேன்‌ வணங்குகிறேன்‌-அநந்தரம்‌ கந்தாடை யண்ணன்‌ திருத் தகப்பனார்‌’ தேவாஜ தோழப்பருடைய தீர்த்தம்‌ வர-அற்றைக்கு சிற்றண்ணர்‌ தேவியாரான ஆச்சியாரைத்‌ தளிகை பண்ண அழைத்து விட, அவரும்‌ அப்படியே பாவநத்வ போக்யத்‌வங்களுடேன்‌ தளிகை பண்ண, பெருமாளமுது செய்தருளி முத்தின ஸ்ரீவைஷ்ணவர்களும்‌ அமுது செய்தருளி இஷ்ட பங்க்தியும்‌ அண்ணன்‌ தொடக்கமானாரும்‌ அமுது செய்தருளின அநத்தரம்‌ அண்ணன்‌ வாசல்‌ திண்ணையிலே எழுந்தருளியிருக்க;

    சிங்கரையார் வ்ருத் தாந்தம்‌
    ஓரு ஸ்ரீவைஷ்ணவர்‌ ஜீயர்‌ மடத்தில்‌ நின்றும்‌ புறப்பட்டுவர அவரைக்‌ கண்டு உமக்கு எந்த ஊர்‌?’என்று கேட்டருள, அவரும்‌ வள்ளுவ ராஜேந்த்ரம்‌ -என்ன இங்கே வந்த காரியமேது?’என்ன, ‘அடியேன்‌ ஜீயர்‌ திருவடிகளிலே ஆஸ்ரயிக்கக்‌ காத்திருக்‌கிறேன்‌: ப்ராப்‌தி காலம்‌ வர வேணும்‌ என்ன–இந்த ஸ்தலத்தில்‌ ஆசார்ய புருஷர்கள்‌ திரட்சியாக வுண்டே, மற்றோரிடத்தில்‌ ஆனாலோ? ‘என்ன, “இங்கே பகவந் நியமனமாயிருக்கிறது’ ‘ என்ன,
    -அது எப்படி?” என்ன, அது ரஹஸ்யம்‌” என்ன, “உம்முடைய பெயரேது?’ என்ன, ”சிங்கரையர்‌” என்ன, இவர்‌ பகவத்‌ ப்ரஸாத பாத்ர பூதராக வேணுமென்று திருவுள்ளத்திலே எண்ணி, இவர்‌
    கையைப்‌ பிடித்துக்‌ கொண்டு உள்ளே சென்று தீர்த்த ப்ரஸாதங்‌களையும்‌ சந்தனம்‌ அடைக்காய்களையும்‌ ப்ரஸாததித்து ஆதரித்தருளி இவ் விரா திருமாளிகையிலே சயியும்‌” என்று நியமித்தருளித்‌ தாமும்‌ திருத் தம்பிமார் கந்தாடை யப்பனும்‌, திருக் கோபுரத்து நாயனார் பட்டரும்‌ எழுந்தருளி யிருக்க, திருவத்யயநத் தளிகை கைங்கர்யமெல்லாம்‌ நிறைவேறி ஆச்சியார்‌ அலஸையாய்‌ உள்ளே படுக்‌கையிலே சாயும்‌ போது -ஜீயர்‌ திருவடிகளே சரணம்‌, பிள்ளை திருவடிகளே சரணம்‌, வாழி உலகாரியன்‌” என்று சயிக்க, இந்த சப்தத்தை மூவரும்‌ கேட்டு இதேது என்று விஸ்மித வ்யாகுலராயிருக்க, இவர்களில்‌ பாட்டர்‌ உள்ளே சென்று கேட்கிறேன்‌!”என்று போய்‌ மதினியாரே! என்றழைக்க, ஆச்சியார்‌ பயப்பட்டு,தாம்‌ சொன்னது இவர்‌ செவிப்பட்டதென்று பேசாமலிருக்க,
    அண்ணனும்‌ அப்பனும்‌ அவரை யழைத்து “எல்லாம்‌ பொழுது விடிந்தவாறே தெரியும்‌, அவரை எழுப்ப வேண்டாம்‌” என்று மூவரும் கண் வளர்ந்தருள; அண்ணனுக்கு பய பக்திகள்‌ மிக்கு
    மென்மலர்ப் பள்ளி வெம் பள்ளியாகி, ப்ராதாக்களறியாமல்‌ சிங்கரையர்‌ சயநித்த விடத்திலே எழுந்தருளி அவரை யெழுப்பி சில ஆத்யாத்மிக தர்மங்களை யருளிச்‌ செய்ய, அவர்‌ கேட்டு ௨கந்திருக்க அந்த வேளையிலே ‘ஜீயர்‌ திருவடிகளிலே ஆஸ்ரயிக்கும்படி உமக்கு பகவந் நியமனமான பெருமையை அறிய வேணுமென்று அத்யபி நிவேசமா யிருக்கிறது” என்றருளிச் செய்யக் கேட்டு அவர்‌ சொன்னது:-எங்களூரிலே யுண்டாகிற காய்‌ கிழங்குகளை யதா சக்தி ஸம்‌பாதித்து “இந்த ஸ்தலத்திலே பெரியோர்கள்‌ திரு மாளிகைகளுக்கு அடிக்கடி ஸமர்ப்பித்துப் போருவதுண்டு; அத்தை ஒரு நாள்‌ ஒரு ஸ்ரீவைஷ்ணவர்‌ கண்டு இன்றைக்கு மடத்திலே ஸமர்ப்பியும்‌ என்ன, பாக்யமாயிற்று என்று கொண்டு ஸமர்ப்பித்தேன்‌; அத்தை ஜீயர்‌ கண்டு இது எங்கே விளைந்தது? எந்த நீர்‌ பாய்ந்தது?
    நீரிறைத்தவரார்‌? எதற்காகக்‌ கொணர்ந்தீர்‌?” என்று கேட்டருள
    அடியேன்‌ அதி விநயமயயும்‌ உசிதமாயும்‌ விண்‌ணப்பம்‌ செய்தபடி-பரிசுத்த ஸ்தலத்திலேயே விளைந்தது, அடிச் சேரியிலே தேவரீர்‌ தாஸ வர்க்கங்கள்‌ நீரியிரைத்துப்‌ பாய்ச்சினது, ஸ்ரீ பாகவத
    ஸ்வத்து” என்று விண்ணப்பம்‌ செய்ய, அது கேட்டு ௨கந்தருளி அத்தை அங்கீகரித்தருளி கோயிலுக்குப் போய்‌ பெருமாளை ஸேவித்‌துப்‌ போருமென்று விடை கொடுக்கப்‌ பெருமாள் ஸந்நிதியிலே
    செல்ல, அருகே யிருந்த அர்ச்சகர்‌-இன்றைக்குக்‌ காய்கறி யாருக்கு ஸமர்ப்பித்திர்‌?’* என்ன? ஜீயர்‌ மடத்திலே” என்ன, அர்ச்சகர்‌ ப்ரியப்பட்டுப்‌ பரவசராய்‌ அடியேன்‌ முதுகைத்‌ தட்டி ‘நீர்‌ பாக்யவான்‌; உமக்கு விலஷண ஸம்பந்த முண்டாகப்‌ போகிறது-என்று தீர்த்தம்‌, சந்தனம்‌ திருமாலை, வேளையம்‌, அபய ஹஸ்தம்‌, ஸ்ரீ சடகோபன்‌ ப்ரஸாதித்து பஹுமானம்‌ பண்ண, :அடியேனை இன்றைக்கு இத்தனை க்ருபை பண்ணி யருளுவதே! என்று ஸந்நிதியினின்றும்‌ புறப்பட்ட வளவிலே, ‘இவனை மல்லுக்கட்‌டிப்பிடி? என்கிற வார்த்தை கேட்க, அவ் வார்த்தை ஸாபிப்ராயமாக இருக்‌கிறதென்று மீண்டும்‌ மடத்திலே சென்று தண்டன்‌ ஸமர்ப்பித்து
    தேவரீருக்காகப்‌ பெருமாள்‌ போர க்ருபை பண்ணி யருளினார்‌-என்று -இச் செய்தியை யெல்லாம்‌ விண்ணப்பஞ்‌ செய்து ஊருக்கு விடை கொள்ளுகிறேனென்ன; அங்குள்ளார்‌ அடியேனை யாதரித்து
    ப்ரஸாதமும்‌ ப்ரஸாதித்தனுப்ப அத்தை வழியிலே ப்ரஸாதப்‌பட்டுச்‌ செல்ல, உடனே சித்த சுத்தி பிறந்து ஆஸ்ரயண ருசி யுண்டாயிற்று; அன்று ராத்திரி ஸ்வப்நத்திலே பெரிய பெருமாள்‌ ஸந்நிதியிலே திருமணத் தூணருகே நின்று ஸேவித்துக்‌ கொண்டிருக்க பெரிய பெருமாள்‌ அணையில்‌ வைத்த திருக் கையை உயர வெடுத்துத்‌ திருவநந்தாழ்வானைக்‌ காட்டி இவர்‌ கிடாய்‌ அழகிய மணவாளச்‌ சீயர்‌, இவரோடு உனக்கு ஸம்பந்த முண்டாக்கிக்‌ கொள்‌” என்றருளிச்‌ செய்ய, இந்த ஸ்வப்நத்தைக்‌ கண்டு க்ருதார்த்தனாய்‌ ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயிக்கக் காத்திருக்கிறேன்‌’ என்று சிங்கரையர்‌ விண்ணப்பஞ் செய்யக்‌ கந்தாடை அண்ணன்‌ கேட்டருளி பய பக்திகள்‌ விஞ்சி நெடும்போது சிந்தித்து உள்ளே யெழுந்தருளித்‌ திருப் படுக்கையிலே சாய்ந்தருள, ஸ்வப்நமான ப்ரகாரம்‌:-

    கந்தாடை யண்ணன்‌ கண்ட ஸ்வப்நம்‌.
    ஒரு ஸ்ரீவைஷணவர்‌ மெத்தையினின்றும்‌ ஏணி வழியாலே இறங்கி வந்து பெரிய கசையாலே தம்மை யடிக்க, தமக்கு நிவர்த்‌திப்பிக்க சக்தி யுண்டாயிருக்கச் செய்தேயும்‌, “நம்மிடத்தில்‌ ஸ்வரூப விருத்தமான நடக்கை யுண்டாயிருப் பதினாலே சிக்ஷித் தருளுகிறார்‌ ‘ என்றெண்ணி, –ஸாஸ்த்ர ஷாராக்நி கர்மாணி ஸ்வ புத்ராய யதா பிதா–தன்‌ மகன்‌ புண்ணை ஆற்றுதற்காகத்‌ தகப்பன்‌ கத்தியாலறுப்பது, காரமான மருந்தை யிடுவது தீயினால்‌ கடுவது முதலிய செயல்களை ஹித புத்தியாலே செய்விக்குமா போலே- என்றநுஸந்தித்துக்‌ கொண்டிருக்க, கசையும்‌ துணிக்கை துணிக்‌கையாக அறுந்து போக, அந்த ஸ்ரீவைஷ்ணவர்‌ அண்ணன்‌ திருக்‌, கைகளைப்‌ பிடித்திழுக்க, அண்ணன்‌ ஏது செய்ய வேண்டுமென்ன ஏணி மேலேறி மெத்தை மேலை போவென்ன அண்ணனும்‌ அப்‌படியே செய்ய அந்த ஸ்ரீவைஷ்ணவர்‌ தாமும்‌ ஏறி வந்து எடுத்துக்‌ கட்டி மேலே கொண்டு போசு, அங்கே ஒரு ஜீயர்‌ ஒரு திருவடியைத்‌ தாங்க விட்டுக்‌ கொண்டும்‌ ஒரு திருவடியை குஞ்சித்துக்‌ கொண்‌டும்‌, த்ரிதண்டத்தைத்‌ தோளிலே சாத்திக்‌ கொண்டும்‌ திருக்கையிலே கசையைப்‌ பிடித்துக்‌ கொண்டும்‌ அக்நி கல்பராய்‌ மிகவும்‌ குபிதராயிருக்க, அவர்‌ முன்னே அண்ணனைப்‌ பிடித்துக்‌ கொண்டு போக , ஜீயர்‌ அண்ணனை பஹுவாக அடிக்க, கசையும்‌ துணிக்கையான வாறே இன்னுமடிக்கத் தக்கதாக உப தண்டத்தை வாங்கப்‌ புக, அத்த ஸ்ரீ வைஷ்ணவர்‌ தண்டன்‌ ஸமர்ப்பித்து அஞ்சலி ஹஸ்‌தரராய்‌ ஜீயர்‌ திருமுக மண்டலத்தைப்‌ பார்த்து ‘இவன் சிறுபிள்‌ளை பஹுவாக அடிபட்டான்‌. இனி க்ஷமித்தருளித்‌ திருவுள்ள மிரங்கி க்ருபைப்‌ பண்ணி யருள வேணும்‌” என்ன; அவரும் இறங்கி யருளி அண்ணனை அழைத்து மடியிலே வைத்து உச்சி மோந்து திருக் கைகளாலே திருமேனி யெங்குந்‌ தடவி நீயும்‌ உத்தம நம்பியும்‌ போர அபசாரப்‌ பட்டீர்சள்‌” என்ன, ”அழகிய மணவாள ஜீயர் ப்ரபாவ மறியாமல்‌ அவிவேகம்‌ வந்தது; இனி க்ஷமித்தருள வேணும்‌!என்று திருவடிகளைப்‌ பிடித்துக்‌ கொள்ள, ஜீயர்‌ இரங்கி யருளி, நாம்‌ ஸ்ரீபாஷ்யகாரர்‌, இவர்‌ முதலியாண்டான்‌’ என்று தம்மையும்‌ அந்த ஸ்ரீவைஷ்ணவரையுங்காட்டி,
    த்வதீயாநபரா தாந்யீரந்‌ த்வத் ஸம்பந்தி க்ருதாநபி |
    க்ஷமாம் யஹம்‌ தாஸா தேஸ்‌ ஸம்பந்தம்‌ மா அந்யதாக்ருதா: ॥

    நீர்‌ செய்த தவறுகளையும்‌ உம்‌முடைய ஸம்பந்திகள்‌ செய்த தவறுகளையும்‌ பொறுத்துக்‌ கொள்ளுகிறேன்‌ நான்‌, முதலியாண்டான்‌ ஸம்பந்தத்தை வ்யர்த்தமாக்காதீர்‌- என்றிந்த ஸ்லோகத்தை யுநு ஸந்தித்து ”நாமே திருவநந் தாழ்வான்‌, நாமே வரவர முனி; அவர்‌(அழகிய மணவாள ஜீயர்‌) திருவடிகளிலே நீயும்‌ உன்னுடைய ஸம்பந்திகளும்‌ ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள்‌” என்று விட,
    அண்ணனும்‌ திருக் கண்கள்‌ [விழித்து நெடும் போது ‘*ஈதொரு ஸ்வப்ந மிருந்தபடி யென்‌!” என்று விஸ்மிதராய்‌ கண்டவற்றை யெல்லாம்‌ புந:புந: சிந்தித்து மறவாமல்‌ திருவுள்ளத்திலே கட்டிபண்ணி, திருத் தம்பிமார்களை யெழுப்பி ஸ்வப்ந வ்ருத்தாந்தங்களை யருளிச் செய்யத்‌ தொடங்கி நடுவே நடுவே ஹர்ஷ பரவசராய்‌-ஸ்தப்தராயிருந்து அருளிச் செய்து தலைக் கட்டி யருளினார்‌.

    இப்படி அண்ணனுக்கு எம்பெருமானார்‌ ஸாதித்தருளின அர்த்தத்தையும்‌ அண்ணன்‌ விண்ணப்ஞ்செய்த அர்த்தத்தையும்‌ அதற்கு உத்தரத்தையும்‌,
    வாதூல துர்ய வரதார்ய குரோர்‌ பபாண ஸ்வப்நே யதீத்ர வபுரேத்ய க்ருபா பரோந்ய: |
    ஸேஷோப்யஹம்‌ வரவரோ முநிரப்யஹம்‌ த்வம்‌ |மாமஸ்ரயேதி தமஹம்‌ கலயாமி சித்தே ॥
    அத்யந்த பாப நிரத:கதமார்ய வர்ய-த்வாமரஸ்ரயேஹமிதி தம்‌ க்ருபணம்‌ வதந்தம்‌ |
    த்ருஷ்ட்வா க்ஷமாமி நநுதா ஸரதேஸ் த்வதீய ஸவரா பராதமிதி தம்‌ ப்ரவதந்தமீடே ॥

    யாவர் ஓருவர்‌ வாதூல குலஸ்ரேஷ்டரான அண்ணனுடைய ஸ்வப்நத்தில்‌ எம்பெருமானார்‌ திரு மேனியாக ஸேவை ஸாதித்துப்‌ பரம க்ருபை யுடையராய்‌’ ஆதிசேஷனும்‌ நாமே, மா முநிகளும்‌
    நாமே நீர்‌ நம்மை ஆஸ்ரயியும்‌” என்று அருளிச் செய்தாரோ அவரை அடியேன்‌ மனதில்‌ த்யானம்‌ செய்கிறேன்‌. பாப கார்யத்தில்‌ மிகவும்‌ ஊன்றிய அடியேன்‌ ஆசார்ய ஸ்ரேஷ்டராள தேவரீரை
    எப்படி ஆஸ்ரயிப்பேன்‌ என்று நமாகக்‌ கூறுகிற அவ் வண்ணனைப்‌ பார்த்து ஒ அண்ணனே! முதலியாண்டானுக்காக உம்முடைய ஸர்வாபாரதங்களையும்‌ பொறுத்துக்‌ கொள்ளுகிறோம்‌” என்று அருளிச் செய்யும்‌ அந்த ஜீயரை ஸ்தோத்ரம்‌ செய்கிறேன்‌- என்று பெரியோர்கள்‌ அநுஸத்தித்தார்கள்‌. அண்ணன்‌ தம்பிமார்களைக்‌ கூட்டிக்‌ கொண்டு “அத்யமே ஸபலம்‌ .ஐந்ம ஸுப்ர பாதாச மே நிமா” (விஷ்ணு 5) 7-3) இன்று என்‌ பிறவி பயன்‌பெற்றது எனக்கு நேற்றிரவு இன்று நல்ல விடிவாயிற்று-என்று சொல்லிக்‌ கொண்டு புறப்பட்டு ஆச்சியாரருகே சென்று தண்டனிட்டு அவர்‌ பயப்படாத படிக்கு முந்துற ஸ்வப்ந வ்ருத்தாந்தத்தை யருளிச் செய்ய, ஆய்ச்சியார்‌ தமக்கு ஜீயர்‌ ஸம்பந்த முண்டான படியையும்‌ ‘அதற்கு மூல பூதமான ஜீயருடைய பாதுகா தீர்த்த வைபவத்தையும்‌ தம்முடைய திருத் தமப்பனாரான அப்பாவுக்கு ஜீயர்‌ நீராடி யருள அந்த தீர்த்தத்தலே அவகாஹித்ததால்‌ வந்த ஜ்ஞாநாதிக்யத்தையும்‌ ஆச்சியார்‌ முகத்தாலே கேட்டருளி அத்யந்த ஹ்ருஷ்டராய்ப்‌ புறப்பட்டு சிங்கரையரைக் கண்டு உகந்து அவருக்கு. எல்லாவற்றையு மருளிச்‌ செய்து கொண்டு திருக் காவேரிக்‌ கெழுந்தருளி நீராடி நித்ய கர்மாநுஷ்டாநங்களாகிப்‌ புறப்‌ பட்டருளி;

    அண்ணன்‌ ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆச்ரயிக்க ஒருப்பட்டது
    சுப ஸூசகங்களா யிருக்கிற நிமித்தங்களைச்‌ செய்து கொண்டு
    ததாகதாம்தாம்‌ ல்யதிதாம நிந்திதாம்‌ வ்யபேத ஹர்ஷாம்‌ பரிதீநமாநஸாம்‌ |
    ஸூபாந் நிமித்தாநி ஸூபாநி பேஜிரே நரம்‌ ஸ்ரியா ஜுஷ்ட மிவோபஜீவிந:

    சொல்ல முடியாத துன்பமுடையவரும்‌, இனி மேல்‌ தான்‌ அதிகமான துன்பங்கள்‌ நேரப் போகின்றன வென்று நினைத்தவளும்‌ குற்றமற்றவளும்‌, சிறிதும்‌ மகிழ்ச்சி யில்லாதவளும்‌, அறவே மனமழியப்‌ பெற்றவளுமான அந்த ஸீதாப் பிராட்டியை, யாசகர்கள்‌ பணமுள்ளவனை அடைந்து ஸத்தை பெறுமாபோலே சில சுப ஸுசனைகளும்‌ அடைந்து ஸத்தை பெற்றன-என்கிறபடியே போய்‌ திருமாளிகையிலே யெழுந்தருளி ஆச்சியாரைக் கண்டு
    ரங்கேஸ கைங்கர் ஸுதீர்த்த தேவ ராஜார்யஜாம் பாகலு பாக்ய ஸீலா |
    ரம்யோ பயந்து: பத ஸம்ஸ்ரயேணயா யஸ்மத் குலம்‌ பாவந மாத நோதி ॥

    யாவருளாருத்தி மாமுனிகளின்‌ திருவடிகளை ஆஸ்ரயித்து நமது

    குலத்தைப்‌ பாவனமாக ஆக்கினாளோ, திருவரங்கனுக்குத்‌ தொண்‌டரான திருமஞ்சனம்‌ தேவராஜர்‌ என்னும்‌ அப்பாவின்‌ புதல்வியான அந்த ஆச்சியார்‌ பாக்யசாலிநி யல்லவா? என்‌று அநுஸந்‌
    தித்தருளி “உம்முடைய திருக்கைகளாலே ‘ ப்ரஸாதப்‌பட்ட்ன்றோ இப்பேறு ஸித்தத்தது” என்று உகந்தருளி, உத்தம நம்பியை யழைத்து வரப்‌ போக விட்டு, தாமும்‌ தம்முடைய தாயாதரான கந்தாடை அய்யங்கார்கள்‌ எல்லாருக்கும்‌ இச்செய்தியை அருளிச்‌ செய்து அவர்களுக்கு ஜீயர்‌ ஸம்பந்த முண்டாக்கும்படி திருவுள்ளமாய்‌ அவர்களுடைய அகங்களிலே எழுந்தருள,
    ஆச்சியார்‌ குமாரரான அண்ணாவும்‌ தாசரதி அப்பையும்‌, தந்தையரான எம்பாவும்‌ அண்ணன்‌ திருவடிசுளிலே தீர்க்க ப்ரணாமத்துடனே ‘தேவரீருக்கு ஸாதித்த ஸ்வப்நமே அடியோங்களுக்‌கும்‌” என்று விண்ணப்பஞ்செய்ய, அவர்களையுங்‌ கூட்டிக் கொண்டு லக்ஷ்மணா சாரியரென்று ப்ரஸித்தரா யிருந்தவருடைய பெளத்ரராய் இருக்கிற எம்பாவண்டையிலே எழுந்தருளி ஆஸ்ரயித்து (இந்த எம்பா என்னும்‌ ஸ்வாமி, அப்போது திருமண்‌ காப்பு வேளையா யிருக்க கோபத்தில்‌ அதையும்‌ பூர்த்தியாக அணியாமல்‌ உள்ளே எழுந்தருளி விட்டபடியினால்‌ ”ஒத்தைக்‌ கொம்பு எம்பா” என்று திருநாமம்‌ பெற்றதாக கர்ண பரம்பரைச்‌ செய்தி: பிறகு இவர்‌ ஸ்ரீரங்கத்திலிருந்து திருமழிசை எழுந்தருளி விட்டதாசச்‌ சொல்லப்‌ படுகிறது. )இச் செய்தியை அருளிச் செய்ய அவர்‌ குபிதராய்‌ ‘*அபிஜந வித்யா வ்ருத்தநங்களுடைய மஹா குலத்திகே பிறந்து இப்படியானாயோ?’? என்று நாநா பெளருஷ உக்திகளைப்‌ பண்ணி விட, அவருக்கு புத்ர கோடிகளாய்ப்‌ பெரிய ஆயி திரு வம்சத்தராயுள்ள அப்பா முதலானார்‌ பதின்மர்‌ க்ருஹங்‌ளிலுமெழுந்தருளி ஹிதமருளிச்‌ செய்ய, அவர்களுக்கு அதபிதமாய்த்‌ தோன்றி பரிஹரிக்க, திருவுள்ளத்தில்‌ குறையோடே புறப்பட்டருளித்‌ தம்முடைய திரு வம்சஸ்த்தராய்‌ தமக்கு ப்ராத்ருரு கோடிகளா யுள்ளவர்கள்‌ திரு மாளிகைகளுக்கும்‌ புத்ர கோடிகளுடைய இருபது திருமாளிகைகளுக்கும்‌ எழுந்தருள, அவர்கள்‌ அதி ப்ரவணராய்‌ இருந்து கொண்டு தண்டன்‌ ஸமர்ப்பித்து அண்ணர் அருளிச்‌ செய்த ஹிதங்களை யெல்லாங் கேட்டு, தங்கள்‌ தங்களுக்‌குண்டான ஸ்வப்நங்களையும்‌ உப ச்ருதிகளையும்‌ சகுநங்களையும்‌ அழகிய மணவாள மா முனியினுடைய வைபவங்களையுஞ்‌ சொல்லிக்‌ கொண்டு ஆஸ்ரயணத்துக்கு த்வரிக்க, தமக்கு ப்ராத்ரு
    கோடிகளா யுள்ளவர்களையும்‌ புத்‌ர கோடிகளா யுள்ளவர்களையும்‌ தங்கள்‌ தங்கள்‌ பார்யாதிகளையுங்‌ கூட்டிக் கொண்டு உபஹார புரஸ்ஸரமாக மடத்துக்குப்‌ புறப்படும்படி நியமித்து,

    தம்முடைய திருமாளிகையிலே திருத் தாயார்‌ திருத்தமப்பனார்‌ முதலானவர்களையும்‌ ;விட்டு குரு குல வாஸமாக தாரக போஷக போக்யங்களெல்லாம்‌ அண்ணன்‌ திருவடிகளே யென்றிருக்கிற திருவாழியாழ்வார்‌ பிள்ளையையும்‌, சுத்த ஸத்வம்‌ அண்ணனையும்‌,திருத் தம்பிமாரையும்‌ மற்றும்‌ பெரியோர்களையும்‌ அழைத்து வைத்துக் கொண்டு சுத்தஸத்வ மண்ணன்‌ பாக்யாதிசயத்தாலே
    ஸ்வதாவே மிகவும்‌ பாகவத ப்ராவண்ய முடையராய்‌ ஜீயருடைய திந ச்ர்யையை அடிக்கடி ஆராய்ந்து கொண்டு அதி ப்ரீதராய்‌ அண்ணன்‌ திருவுள்ளம்‌ சிறிது கலங்கினாலும்‌ –குரும்‌ ரஹ்ஸி கோதயேத்‌” என்கிற படியே திருவடிகளுக்கு ஹிதபராய்‌ ஜீயரிடத்‌திலே ப்ரீதி வரும்படி யருளிச்‌ செய்து கொண்டு போருகிறவரா யிருப்பார்‌; அத்தைத்‌ திருவுள்ளத்திலே வைத்து அண்ணன்‌ அருளிச்‌ செய்தபடி: இவருக்‌கு சுத்த ஸத்வம்‌ என்கிற திருநாமம்‌ யதார்த்தமாயிற்று; நமக்குப்‌ போர நல் வார்த்தை சொல்லிப்‌ போருவர்‌, இவருடைய ஹ்ருதயாநுஸாரியாய்‌ யாவத் கார்யமும்‌ கடித்தது; இனி ஒரு குறையுமிலலை” என்றருளிச்‌ செய்து கொண்டு தம்முடையவர்களும்‌ மற்றக்‌ கந்தாடை அய்யங்கார்‌களும்‌ அவரைக்‌ கடா௯்ஷித்துக்‌ கொண்டிருக்க-அண்ணன்‌ ஸ்வ ஸம்பந்திகளுடன்‌ ஜீயர்‌ மடத்துக்‌ கெழுந்தருளுதல்‌
    அவர்களில்‌ சிலரை எம்பா மாறுபடுத்தி விட, சென்று அண்ணனுக்கு இச் செய்தியை அறிவிக்க, மிகவும்‌ கோபித்தருளி-அவர்களை விடும்‌’ என்று மற்றவர்களை யெல்லாம்‌ கூட்டிக் கொண்டு ஜீயர்‌ ஸந்நதிக் கெழுத்தருளுவதாக ஆச்சியாரை யழைத்து ஸமயமறிந்து திருவுள்ளத்தில்‌ படுத்தும்படிக்கு அனுப்பி யருள அவரும்‌ சென்று திருமாலையாழ்வாரில்‌ ஸ்ரீவைஷ்ணவ கோஷ்ட்டி.யிலே ஜீயரெழுந்தருளி யிருக்கிறபடியினாலே கிட்டி விண்ணப்பஞ்‌ செய்ய ஸங்கோசப்பட்டு ஒரு ஸாத்விக ஸ்ரீவைஷ்ணவரை யழைத்து “ஸ்வாமியை உள்ளே யெழுந்தருளும்படி ஏகாந்தமாகத்ச் செவியிலே லிண்ணப்பஞ் செய்யும்‌” என்ன அவர்‌ ,”ஏதுக்கு”?என்ன, அண்ணன்‌ முதலான கந்தாடை அய்யங்கார்‌களெல்‌லாருங்கூடி எழுந்தருளுகிறார்கள்‌” என்று ஆச்சியார்‌ உள்ளே சென்றார்‌-

    அசட்டாச்சான்‌-
    அந்த ஸ்ரீவைஷ்ணவர்‌, ஆச்சியார்‌ சொன்னதை அந்யதாவாக க்ரஹித்து ஓடிச் சென்று, ‘ஸ்வாமீ! சீக்சரமாக எழுந்தருள। கந்தாடை அய்யங்கார்கள்‌ கூடி வருகிறார்களாம்‌’, என்ன-ஜீயர்‌
    துணுக்கென்று எழுந்திருந்து புறக்கடைக்கு எழுந்தருள உள்ளே எழுத்தருளக் காணாமையாலே ஆச்சியார்‌ அந்த ஸ்ரீ வைஷ்ணவர்‌ என்ன விண்ணப்பஞ்‌ செய்தாரோ வென்று பயப்பட்டு, சோபந
    வார்த்தையை விண்ணப்பஞ்‌ செய்ய வேணுமென்று புறக்கடையில்‌ புகுவதற்கு ஸமயமாகக் காணாமையாலே, புறம்பே ஒளிக்கஅண்ணன்‌ முதலானார்‌ பெருங்கூட்டமாகத்‌ திருமுன் காணிக்கைகளும்‌ பலங்களும்‌ முன்னே பிடித்துக் கொண்டு மடத்து வாசலிலே எழுந்தருளி வானமாலை ஜீயர்‌ முதலானவர்களை புரஸ்கரித்தருளி அவர்களுடனே அண்ணன்‌ அதிவிநீதராய்‌ ‘ஜீயர்‌ திருவடிகளே ப்ராப்ய ப்ராபகமாக வந்தடைந்தோம்‌; தேவரீர்‌ அங்கீகரிப்பித்தருள வேண்டும்‌:’ என்ன, வானமாமலை ராமாநுஜஜீயர்‌ இது கேட்டு அதி ப்ரிதராய்‌ ஸ்தப்தராயிருந்து பிற்பாடு ஸந்நிதிக்கெழுந்‌தருள; அதற்குள்ளே ஆய்ச்சியார்‌ அதி த்வரையுடனே ஸமயமானவாறே ஜீயர்‌ திருவடிசுளிலே தண்டன்‌ ஸமர்ப்பித்து, இற்றைக்கு சோபநம்‌; அண்ணன்‌ முதலானாரெல்லமும்‌ திரளாகத்‌ திருவடிகளிலே ஆஸ்ரயிக்க எழுந்தருளுகிறார்கள்‌” என்ன, அவ்வளவிலே வானமாமலை ராமாஜஜீயருமெழுந்தளி ஹர்‌ஷ பரவசராய்‌ விண்ணப்பஞ்‌ செய்ய ஜீயர்‌ கேட்டு உகந்து, இவற்றிகெல்‌லாம்‌ மூலபூதை ஆச்சியாரன்றோ!’ என்று திருவுள்ளம் பற்றி,திருமலையாழ்வாரிலே வந்து விண்ணப்பஞ்‌ செய்த ஸ்ரீவைஷ்ணவரை யழைத்தருளி உம்முடைய பேரேது?” என்று விநோதமாகச்‌ கேட்டருள, அவரும்‌ “அடியேன்‌ ராமாநுஜ தாஸன்‌” என்ன, அப்படியன்று, அசட்டாச்சான்‌- என்று அவரைப்‌ பரிஹஸித்து திருவுள்ளத்தில்‌ உகப்போடே

    அண்ணன்‌ ஐியரை ஸேவித்தல்‌
    வித்யா விமுக்தி ஜநநீ விநயாதிகத்வ மாசார ஸம்பதநுவேல விகாஹஸீலம்‌
    ஸ்ரீலஷ்மணார்ய கருணா விஷயீ க்ருதாநாம்‌ சித்ரம்‌ நதாசரதிவம்ஸ ஸமுத்பவாநாம்‌

    மோக்ஷத்துக்கு உதவக்‌ கூடிய ஜ்ஜாநமும்‌ அதிசயிச்கத்தக்க விநயமும்‌, அநுஷ்டானச்‌ செல்வமும்‌ வேளைக்கு வேளை வளரும்‌ சீலமும்‌ எம்பெருமானார்‌ கருணைக்கு இலக்கான ஸ்ரீமுதலியாண்‌டான்‌ திரு வம்சத்தினருக்கு வாய்த்திருப்பதில்‌ வியப்பில்லை] என்று அருளிச்‌ செய்து
    (இந்த ஸ்லோகத்தை மாமுனிகள்‌ வேடலப்பை விஷயமாக அருளிச்‌ செய்ததாகவும்‌ கூறுவர்‌, வேடலப்பை விஷயம்‌ பின்னர்‌ வரும்‌, ௮ங்கு இது மிகப்‌ பொருந்தும்‌. ) புறப்பட்டருளி மடத்து வாசலிலே அவர்களெல்‌லாரையுங்‌ கண்டு ஸ்ரீ ராமாநுஜ யோகீந்த்ர கருணா பரிப்ரும்ஹிதாம்‌ |
    ஸ்ரேயஸீ மநகாம்‌ வந்தே ஸ்ரீமத் வாதூல ஸந்ததிம்‌ ॥

    ஸ்ரீராமாநுஜர்‌ என்னும்‌ யோகியர்‌ தலைவர்‌ கருணையால் மல்கியதும்‌ சிறந்ததும்‌ குற்றமற்றதுமான ஸ்ரீமத் வாதூல குலக்‌ கொடி வழியை வணங்குகிறேன்‌] என்றநுஸந்தித்தருள, அவர்களெல்‌லாரும்‌ திருவடிகளிலே தீர்க்க ப்‌ரணாமம்‌ பண்ணி, ‘ந கர்மணா ந ப்ரஜியாதநேந:’வேதாஹமேதம்‌’ என்கிற பஞ்சாதிகளை அநுஸந்தித்து, உபஹாரங்களை ஸமர்ப்பிக்க, அங்கீகரித்தருளி,உள்ளே எழுந்தருளி திருவோலக்கமாக எழுந்தருளி யிருந்து
    பொலிக பொலிக, என்கிற திருவாய்‌ மொழிக்கும்‌, திருப்பல்‌லாண்டுக்கும்‌ ஸங்க்ரஹமாக அர்த்தோபந்யாஸம்‌ செய்தருளி இப்படி ஸ்ரீவைஷ்ணவ ஸம்ருத்தி நித்யமாய்ச் செல்லவும்‌ எல்லாரும்‌ மங்களாசாஸந பரராகவும்‌ ஆசீர்வதித்தருளி எழுந்தருளியிருக்க;
    அண்ணன்‌ வானமாமலை ஜீயருடனே ஸமாஸ்ரயணத்துக்கு த்வரித்‌தருள, அழகிய மணவாள மாமுனியும்‌ எழுந்திருந்து அப்பாலேரஹஸ்ய ஸ்தலத்திலே எழுந்தருளி யிருந்து வானமாமலை ஜீயரைக்‌ கொண்டு அண்ணனை அழைப்பித்து, ‘தேவரீர்‌ மஹாகுலப்ரஸூதரும்‌ எல்லாருக்கும்‌ குருகுலமன்றோ! இப்படி எதுக்கு?’! என்ன;
    அப்படியொன்றும்‌ அருளிச்‌ செய்ய வேண்டா’! என்று தாம்‌ முன்‌ விருந்த இருப்புக்கு ஷாபணம்‌ பண்ணிக்‌ கொண்டு” ஸ்வப்ந வ்ருத்‌தாந்தத்தை முதலிலிருந்து தப்பாமல்‌ விண்ணப்பஞ்‌ செய்யக்‌ கேட்‌
    டருளி, ”ஈயானுடைய திருவம்சஸ்த்தராய்‌ அநுகூலித்தவர்‌ சிலருண்டே ; அவர்களுக்கும்‌ வேறே சில பாக்யாதிகர்களுக்கும்‌ பெருமாள்‌ இரங்கி ஸ்வப்நாதிகளாலே தேவரீர்‌ நியமனத்திலே கூட்டுகிறார்‌. அவர்களையுங்‌ கூட்டிக்‌ கொண்டு இற்றைக்கு மூன்று நாள்‌ கழித்து நாலாம்‌ நாள்‌ தேவரீர்‌ திருவுள்ள ப்ரகாரத்திற்கு எல்லோருக்கும்‌ ஸமாஸ்ரயணமாகிறது” என்று நிர்ணயித் தருளிப்‌ புறப்‌பட்டுத்‌ திருவோலக்கத்திலே யெழுந்தருளின வநந்தரம்‌ சாத்துப்‌ப்டி அடைக்காயமுது விநியோகமாய்‌ எல்லாரும்‌ தம்தம்‌ திருமாளிகைகளுக் கெழுந்தருளினார்கள்‌.

    மீண்டும்‌ பெருமாள்‌ சிலரைத் திருத்துவதாகத்‌ திருவுள்ளம் பற்றி
    புநஸ் ஸ்வப்நா பதேஸேந தேஸே தேஸே நிரங்குஸ . |
    அயமர்ச்சா வதாரத்வ ஸமாதிமவதீரயத்‌
    அத்ய மர்த்யந்‌ ததே தஸ்ய தத்வ மாத்யந்திகம்‌ ஹிதம்‌ |-
    அஸங்குசித மாசக்யெள புஜங்க ஸயந: புமாந்‌ ॥

    அரவ்ணையில்‌ துயிலும்‌ ப்ரமபுருஷன்‌ மறுபடியும்‌ ஓவ்வோரிடத்திலும்‌, ஸ்வப்ந மென்கிற வ்யாஜத்தினால்‌, தன்னைத்‌ தடுப்பார்‌ யாருமில்லாமையாலே-அர்ச்சாவதாரத்வத்தின்‌ மெய்ப்பாட்டினை- பேசாமலிருக்கும்‌ ஸ்வபாவத்தை உதறி தள்ளி விட்டு, தேவர்களையும்‌ விஞ்சிய-இம் மாமுனிகளுடைய உண்மைத்‌ தன்மையையும்‌ மோக்ஷத்திற்கு அந்திமோபாய மாயிருக்கும்‌ தன்மையையும்‌ விவரமாக அருளிச்‌ செய்தான்‌–என்று இத்யாதிகளாலே ”குருஸ்ச ஸ்வப்ந த்ருஷடஸ்ச” என்கிறபடியே அவர்கள்‌ ஸ்வப்நத்திலே அர்ச்சாவதார ரூபியாய்‌ வந்து நாமே இப்படி ஆசார்ய ரூபேண அவதரித்தோம்‌; நீங்களுமப்படியே ஆசார்யம்மாம்‌ விஜாநீயாத்‌ பவ பந்த விமோசநம்‌”‘ -ஸம்ஸார பந்தத்தை விடுவிக்கும்‌ நாமே மாமுனிகளென்று அறியக் கடவர்கள்‌- என்கிறபடியே விசேஷ:ப்ரதிபத்தி பண்ணி ஆஸ்ரயியுங்கோள்‌” என்றருளிச் செய்ய;

    அநந்தரம்‌:
    அண்ணன ஜீயரிடம்‌ ஸமாஸ்ரயணம் பெற்றது
    ராமாநுஜ பதாம் போஜ ஸெளகந்த்ய நிதயோபியே |
    அஸாதாரண மெளந்நத்ய மவதூய நிஜம்தியா
    உத்தேஜ யந்தஸ்‌ ஸ்வாத்மாநம்‌ தத்ஜேஸ் ஸம்பதா ஸதா |
    ஸ்வேஷாமதிசயம்‌ மத்வா தத்வேந ஸரணம்‌ யயு: ॥

    எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளில்‌ நறுமணத்தையே நிதியாகப் பெற்றவர்களும்‌ தம்முடையதான பிறர்க்கில்லாத உயர்த்தியை புத்தி பூர்வகமாக உதறி விட்டுத்‌ தம்மை அதிகமாக ப்ரகாசிக்கும்படி செய்ய நினைத்தவர்களாய்‌, அம் மா முனிகளின்‌ தேஜஸ் ஸமருத்தியினால்‌ தமக்குப்‌ பெருமை உண்டாகுமென்று எண்ணி ௮ம் மா முனிகளைப்‌ பூர்ணமாகச்‌ சரணமடைத்தனர்‌-என்றபடியே ராமா நுஜ பரிக்ருஹீதராய்‌ அபிஜந வித்யாவ்ருத்தங்‌களா லுயர்ந்திருக்கிற கந்தாடை அண்ணன்‌ முதலான ஆசார்ய புருஷர்கள்‌ எல்லாரும்‌ தந்தம்‌ உயர்த்திகளைப்‌ பாராமல்‌ ஜீயர்‌ திருவடி ஸம்பந்தமே தங்களுக்கு ஸர்வாதிசயங்களுமாக வெண்ணி ஜீயர்‌ திருவடிகளை சரணமாக வந்தடைந்திருக்க அண்ணன்‌ ஜீயர்‌ திரு முன்பே சென்று, ‘தேவரீர்‌ அடியோங்களை க்ருபை பண்ணுகைக்கு இட்டிருந்த நாளும்‌ வந்தது; எம்பா முதனாராலே ப்ரதிபாதிக்கப்பட்ட நம்முடையவர்களுக்கு பெருமாள்‌ ஸ்வப்நாதி வ்யாஜத்தாலே திருந்தத் திருந்தி தேவரீர்‌ திருவடிகளே ப்ராப்யமாக வந்து இந்த கோஷ்டியிலே கூடி யிருக்கிறார்கள்‌. எல்லாரையும்‌ க்ருபை பண்ணி யருளத்‌ திருவுள்ளமாக வேணும்‌” என்று விண்ணபஞ்செய்ய; ஜீயரும்‌ வானமாமலை ஜீயரை அழைத்து அத்ற்கு வேண்டியவைகளை ஸந்நத்தமாக்க நியமித்தருளி, தாமும்‌ திருவாராதநஞ் செய்தருளி திருப்பணியாரமும்‌ பழவமுதும்‌ பூர்ணமாகக்‌ கண்டருளப்‌ பண்ணி, ஸந்நிதி முன்பாக எழுந்தருளி யிருந்து ஸமாச்ரயணமாக வேண்டியவர்களெல்லாரையும அழைத்து அண்டையிலே வைத்துக் கொண்டு செய்யுங் கிரிசைகளெல்லாஞ்‌ செய்தருளி, தாப புண்ட்ரஸ் ததாநாம மந்த்ரோ யாகஸ்ச பஞ்சம:” திருவிலச்சினை, திருமண்காப்பு, தாஸ்ய நாமம்‌, மந்த்‌ரோபதேஸம்‌, தேவ பூஜை என்று ஐந்து-என்கிறபடியே பஞ்ச ஸம்ஸ்‌காரங்களையும்‌ செய்தருளி பரமைகாந்த்ய மஹா பலத்தையும்‌ பூர்ணமாக்கி உகந்கருளி நெடும்போது அண்ணனை -இருந்தான்‌ கண்டு கொண்டு என்கிறபடியே கடாக்ஷித்துக்‌ கொண்டிருந்து;

    அப்பாச்சியாரண்ணா வானமாமலை ஜீயரை ஆஸ்ரயித்தல்‌
    வானமாமலை ராமநுஜ ஜீயரைக்‌ காட்டி யருளி-இவர்‌ தமக்கு ப்ராண ஸுஹருத்து, தமக்குண்டான அதிசயமெல்லாம்‌ இவர்க்கு முண்டாக வேணும்‌, முதலியாண்டான்‌ திரு வம்சத்திலே நமக்கு ஸம்பந்த முண்டானாற் போல இவர்க்கு முண்டாக வேணும்‌’ என்று அருளிச் செய்ய அண்ணன்‌, திருவுள்ளக் கருத்தறிந்து அடியேனை அங்கே ஆஸ்ரயிப்பித்தருளாதே யொழிந்ததே”’ என்று விண்ணப்பஞ் செய்ய, ‘ நமக்கு ப்ராப்தமானதை விடப் போமோ?!”என்ன, அண்ணன்‌ தம்முடைய அநுபந்திகளை ஸாபிப்ராயமாசப்‌ பின்னே கடாக்ஷித்தருன, பாவஜ்ஞராய்‌ ஆச்சியாருடை குமாரராயிருக்கிற அண்ணா எழுந்திருந்து தண்டன்‌ ஸமர்ப்பிக்க – என்னவென்று கேட்டருள, *‘அடியேனை எங்களாண்டவன்‌ வானமாமலை ராமாநுஜ ஜீயருடைய திருவடிகளிலே ஆஸ்ரயிப்பிக்க வேணும்‌ என்ன, ஜீயரும்‌ மிகவுகந்தருளி, நம்மப்பாச்சி யாரண்ணாவோ- என்றருளிச் செய்து,(‘ஸ்ரீ தீர்த்த தேவராஜஸ்ய தநயாப் பேதி விச்ருதா. தஸ்யாஸ் தநுஜோ வரத:”‘ என்று இவர்‌ போற்றப்படுகிறார்‌.-திருமஞ்சனம்‌ அப்பா என்ற தேவராஜருடைய குமாரத்தியாய்‌ ஆச்சி என்று ப்ரஸித்தை யானவருடைய குமாரரான வரதாசாரியர்‌, ஜீயர்‌ இவருக்கிட்ட பெயர்‌ அப்பாச்சியாரண்ணா என்பது.) ‘அவரைக்‌ கையைப் பிடித்துத்‌ தம்முடைய அண்டையிலே வைத்துக் கொண்டு தாம்‌ எழுந்தருளி யிருந்த ஆஸநத்திலே வானமாமலை ஜீயரை யிருத்தித்‌ தம்முடைய திருக்கைகளிலிருந்த ஆழ்வார்களை அவர்‌ திருக்கைகளிலே ஸாதித்தருளி, இவர்க்கு ‘ஸாதியும்‌’ என்ன, அவர்‌ சற்று இறாய்க்க, “அப்படி, செய்ய வேண்டா, நமக்கு ப்ரியமானதைச்‌ செய்யும்‌” என்றருளிச்‌ செய்து ௮ண்ணாவை ப்ரீத்யதிசயத்தாலே தழுவிக் கொண்டிருந்து ஆஸ்ரயிப்பித் தருளினார்‌; உடனே அண்ணாவுடைய திருத்தம்பியாரன தாசரதி அப்பையும்‌ அங்கே ஆஸ்ரயித்தார்‌. உடனே வானமாமலை. ராமாநுஜ ஜீயர்‌ போதும்‌, இனி அடியேனை விடவேணும்‌” என்று எழுந்திருந்து தூரப் போய்‌ தண்டன்‌ ஸமர்ப்‌பித்து நிற்க, “அப்படியே யாகிறது; எழுந்தருளி யிருக்க’ என்றருளிச் செய்து, தாமுபம் முன் போலே எழுந்தருளி யிருந்து கந்தாடை அப்பன்‌ முதலான அண்ணன்‌ ப்ராதாக்களுக்கும்‌, ப்ராத்ரு கோடிகளா யுள்ளவர்களும்‌, புத்ரகோடிகளா யுள்ளவர்களும்‌ ஸ்வ பார்யாதி வர்க்கங்களுடனே நூற்றிருபது திருநாமம்‌ மற்றும்‌ சிங்கரையர்‌ முதலான பகவத் க்ருபாபாத்ர பூதரான அநேசம்‌ பேர்களும்‌ ஆஸ்ரயித்தார்கள்‌. அந்த ஸமயத்தில்‌ கோயில்‌ பரிகரமனைத்துக்‌ கொத்தும்‌
    ஸகல மங்கள வாத்யங்களுடனே பெருமாளுடைய ப்ரஸாதங்‌கள் கொண்டு வர, ஜீயர்‌ எதிர் கொண்டு ப்ரணாம புரஸ்கரமாக ஆதரித்து உள்ளே எழுந்தருளப்‌ பண்ணிக்‌ கொண்டு போயிருக்க, அண்ணன்‌
    அவர்களை யதோசிதம்‌ ஆதரித்து பஹுமாநஞ்‌ செய்தருளி, அவர்‌களுடனே ஜீயர்‌ தொடக்கமானவர்களும்‌ அன்று ஆஸ்ரயித்தவர்‌களும்‌ கோயிலிலே எழுந்தருளி எம்பெருமானார்‌, ஆழ்வார்‌ பெருமாள்‌, நாய்ச்சியார்‌, எல்லாரையும்‌ “தேவீ கோதா”-இத்யாதிப்படியே மங்களாசாஸனம் செய்தருளி மீண்டும்‌ மடத்திலே எழுந்தருளிசத் ததியாராதனமும்‌ மஹோத்ஸவமாக நடந்தது.
    ஜகத் ரக்ஷாபரோ ஆநந்த'” என்று தோழப்பர்‌ ஸ்வப்நத்திலே பேரருளாளர்‌ அருளிச்‌ செய்தபடி பலிக்கக் கண்‌டோம்‌” என்று எல்லாரும்‌ உகந்தருளினார்கள்‌.

    இப்படி ஆஸ்ரயித்தவர்களெல்லாரும்‌ ஜீயருடைய அதி மானுஷமான அத்புத சரிதங்கள் எல்லாவற்றையும்‌ ஸேலித்து
    சிர விரஹதஸ் சிந்தா ஸந்தா நஜர்‌ஜ ஜர சேதஸம்‌
    புஜக சயநம்‌ தேவம்பூய: ப்ரஸாதயிதும்‌ த்ருவம்‌ |
    யதி குலபதி ஸ்ரீமாந் ராமாநுஜ ஸ்வயமித்ய பூ
    திதிதி ஸமதுஷந் ஸர்வே ஸர்வத்ர தத்ர ஸுதீ ஜநா; ॥

    யதிகுலநாதரான ஸ்ரீமத்ராமானுஜர்‌-தம்மை வெகு நாட்கள்‌ பிரிந்ததனால்‌ இடைவிடாமல்‌ தம்மையே நினைத்து நினைத்துத்‌ தளர்ந்த திருவுள்ளங்கொண்ட அரவணையானான ஸ்ரீரங்கநாதப்‌
    பெருமாளை மறுபடியும் மகிழ்விக்கக் கருதியே போலும்‌, தாமே மணவாள மாமுனிகளாக அவதரித்‌தருளினாரென்று அங்கு எல்லா விடத்திலும்‌ உள்ள ஞானியர்‌ அனைவரும்‌ மிக மகிழ்ந்தனர்‌–என்கிறபடியே யதி புந அவதாரமாக வெண்ணித்‌ தாங்களும்‌ சிரோபாஸித ஸத் வ்ருத்தரென்னும்படி அவர்‌ திருவடிகளைப்‌ பழுக்க ஸேவித்து, அங்குத்தைக்குப்‌ பரிவராயிருந்தார்கள்‌. இப்படி ஜீயர்‌ சிஷ்ய ஸம்பத்துடனே இனிதாக வாழ்ந்தருளுிற போது திருவாழி யாழ்வார்‌ பிள்ளையை ஸ்ரீகோசங்களை யெல்லாம்‌ அப்போதைக்‌கப்போது சோதித்து ஸம்ரஷணம்‌ பண்ணிக் கொண்டு வரவும்‌ ஏறி யருளப்‌ பண்ண வேண்டிய ஸ்ரீகோசங்களை லேகரிகளை யிட்டு நன்றாக ‘ஏறி யருளப் பண்ணவும்‌ தாமபேக்ஷித்த அவஸரங்களிலே அபேக்ஷிந்த ஸ்ரீகோசங்களை ஸமர்ப்பிக்கவும்‌ ஈடு முப்பத்தாறாயிரப்‌படி அர்த்தமாம்‌ படி சிறிது வ்யாக்யானங்களைக்‌ கூட்டி ப்ரதி ஏறி யருளப் பண்ணி வைக்கவும்‌ நியமிக்க, அவரும்‌ அப்படியே எல்லாவற்றையும்‌ செய்து கொண்டு போந்தார்‌.

    ஆண்ட பெருமாள்‌ அண்ணனை ஆஸ்ரயித்தது
    ஒரு நாள்‌ சுத்த ஸத்வம்‌ அண்ணனை யழைந்தருளி போர வுகந்‌தருளி “ஆழ்வாருக்கு ஸ்ரீமதுரகவிகளைப் போலே நீர்‌ அண்ணனுக்கு அபிமத விஷயமாக விருக்கப்‌ பெற்றிரே; *தன்னாரியனுக்குத்‌ தானடிமை செய்வது இந்நாடு தன்னிலிருக்கும்‌ நாளன்றோ; ஸகலசுச்ரூஷைகளும்‌ பண்ணிக் கொண்டு வாழும்‌”- என்று ஆசீர்வதித்து;குமண்டூர்‌ ஆச்சான் பிள்ளை பெளத்ரராயும்‌ ஜ்ஞாநாதிகராயும்‌ ஸகல சாஸ்த்ர பாரங்கதரா யுமிருக்கற ஆண்ட பெருமாளை ஜீயர்‌ அண்ணனிடம்‌ “உம்முடைய திருவடிகளுக்கு அந்தரங்கராய்‌ தர்சந ப்ரவர்த்தாராம்படி விநியோகித்துக்‌ கொள்ளும்‌” என்று விட, அண்ணனும்‌ அப்படியே செய்தருளினார்‌-

    (வரவரமுநி ப்ருத்யர்‌” என்று நிரூபகமாம்படி திருவடிக்கு அந்தரங்கராய்‌ ஆசார்யாபிநைக நிஷ்டராயிரா நிற்க -இது கண்டு கந்தாடை அண்ணன்‌ முதலானோர்‌ இவர்‌திருவடிகளில்‌ ஆச்ரயணோந்முக
    ராயிருக்க, அவ்வளவிலே பெருமாளும்‌ அவர்கள்‌ ஸ்வப்நத்திலே அஸங்குசிதமாசக்யே புஜங்காயந : புமாந்‌” (சேஷஸாயியான ரங்கநாதன்‌ விரிவாக அருளிச்‌ செய்தார்‌) என்கிறபடியே விசதமாக ஜீயர்‌ திருவடிகளே ஆஸ்ரயிக்கும்படி நியமித்தருள்‌, அவர்‌ திருமுகப்படியே ” ராமாநுஜ பதாம் போஜ ஸெளகந்த்ய நிதயோபியே”’ என்று தொடங்கி “ஸ்ருத்வைவ வைபவம்‌ தஸ்ய தத்வேத ஸரணம்‌ யயு.” [எவர்கள்‌ எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளின்‌ பரிமளத்தையே தமக்கு நிதியாக : நினைத்திருத்தார்‌களோ அவர்களும்‌ அந்த மணவாள மாமுனிகளுடைய வைபவங்களை உள்ளபடி கேட்ட மாத்திரத்தலேயே அவரைச்‌ சரணம்‌ பற்றினார்கள்‌-என்கிறபடியே, ராமாநுஜ பரிக்ருஹீதராய்‌
    அபிஜந வித்யா வ்ருத்தங்களாலும்‌ உயர்ந்திருக்குமவர்களான கந்‌தாடை அண்ணன்‌ முதலான ஆசார்ய புருஷர்களாயுள்ள அனைவர்‌களும்‌ தந்தாமுயர்த்திகளைப்‌ பாராமல்‌ இவர்‌ திருவடி ஸம்பந்தமே தங்களுக்கு தாரகமென்று அறுதியிட்டு வந்து ஜீயர்‌ திருவடிகளையே சரணமாகப்‌ பற்றி உஜ்ஜீலித்தார்கள்‌.
    இப்படி ஆஸ்ரயித்தவர்களெல்லாரும்‌ ஜீயருடைய அதி மாநுஷமான அற்புத சரித்‌திரங்‌களெல்லாம்‌ கண்டு யதிபுநரவதாரமாக எண்ணி, தாங்களும்‌-சிரே பாஸித ஸத் வ்ருத்தர்‌:”’ என்னும்படி அவர்‌ திருவடிகளைப் பழுக்க ஸேவித்துக்‌ கொண்டு அங்குத்தைக்கு அந்தரங்கராய்‌ இருந்தார்கள்‌– என்று மட்டுமே தெலுங்குப்பதிப்பில்‌ காண்பது, மேலே வேடலப்பை, ஹஸ்திகிரி நாதரண்ணா விஷயங்கள்‌ பேசப்பட்டு, ஜீயருக்கு பூர்வாச்ரம ஸந்ததி லிஷயம்‌ பேசப்பட்டுள்ளது, வேடலப்பை, அண்ணா பற்றியவை இப்பதிப்‌பில்‌ பின்னர்‌ வரும்‌.)

    —==-

    ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

    ஶ்ரீ விஷ்ணு ஷட்பதீ ஸ்தோத்ரம்

    May 14, 2026

    ஶ்ரீ விஷ்ணு ஷட்பதீ ஸ்தோத்ரம்

    அவினயமபனய விஷ்ணோ தமய மன ஸமய விஷய ம்ருகத்ருஷ்ணாம் |
    பூத தயாம் விஸ்தாரய தாரய ஸம்ஸார ஸாகரத: || (1)

    ஹே விஷ்ணோ! எனது பணிவின்மையைப் போக்கு! மனதை அடங்கச் செய். பேராசையையும் தணித்து விடு. எல்லா ஜீவராசிகளிடத்தும் தயை வரச்செய். என்னை ஸம்ஸாரக் கடலிலிருந்து அக்கரை சேர்ப்பித்து விடு.

    திவ்யதுனீ  மகரந்தே பரிமள பரிபோக ஸச்சிதானந்தே  |
    ஶ்ரீபதி பதாரவிந்தே பவபய கேதச்சிதே வந்தே  || (2)

    கங்கையை மகரந்தமாகக் கொண்டதும், ஸத்-சித்-ஆனந்தமாகியவற்றை வாசனையாகக் கொண்டதும், உலகில் சம்சார துன்பத்தைப் போக்குவதுமான ஸ்ரீபதியான நாராயணனின் திருவடித் தாமரைகளை வணங்குகின்றேன்.

    ஸத்யபி பேதாபகமே நாத தவாஹம் ந மாமகீநஸ்த்வம் |
    ஸாமுத்ரோ ஹி தரங்க:  க்வசன ஸமுத்ரோ ந தாரங்க:  || (3)

    ஜீவாத்மாவான எனக்கும், பரமாத்மாவான உமக்குமிடையில் வேற்றுமை இல்லையெனினும், ஹே ஸ்வாமி நான் உம்மைச் சேர்ந்த அடிமையே. தாங்கள் எனது உடைமையானவரல்ல. அலைதானே ஸமுத்திரத்தையண்டியது. ஒரு போதும் கடல், அலைகளில் அடங்கியதில்லையன்றோ!

    உத்ருதநக நகபிதநுஜ தநுஜ குலாமித்ர மித்ரசசித்ருஷ்டே  |
    த்ருஷ்டே பவதி ப்ரபவதி நபவதி கிம்பவதி ரஸ்கார: || (4)–(அந்தாதி வரிக்குள்ளே)

    கோவர்தன மலையை தூக்கியவரே! இந்திரனின் இளையவரே! அசுரக் கூட்டத்தை அழித்தவரே! சூர்ய சந்திரர்களை கண்களாகக் கொண்டவரே! உங்களுடைய கருணைக் கடைக்கண் பார்வை ஒருவனுக்கு கிடைக்குமானால் எவருக்குத்தான் உலகியலில் இழிவு தோன்றாது?

    மத்ஸ்யாதிபி  ரவதாரைரவதாரவதா(அ)வதா ஸதாவஸுதாம்
    பரமேச்வர பரிபால்யோ பவதா பவதாபீதோஹம் (5)

    மத்ஸ்ய-கூர்மாதி அவதாரங்களால் இறங்கிவந்து பூமியை காத்தருளும் தங்களால், ஸம்ஸார தாபத்தால் மருண்ட நான் காக்கப்பட வேண்டியவரன்றோ! ஹே பெருமாளே

    தாமோதர குணமந்திர ஸுந்தரவதனாரவிந்த கோவிந்த
    பவ ஜலதி மதனமந்தர பரமம் தரமபனயத்வம் மே (6)

    தாமோதரனே! குணங்களுக்கு கோயிலானவனே! அழகிய தாமரையொத்த முகம் கொண்டவனே! கோவிந்த! ஸம்ஸாரக்கடலை கடையும் மந்தர மலையானவனே! எனது பெரும் துன்பத்தைப் போக்குவாயாக!

    நாராயண கருணாய சரணம் கரவாணி தாவகௌ சரணௌ
    இதி ஷட்பதீ மதீயே வதனஸரோஜே ஸாதாவஸது (7)

    ஹே நாராயண கருணை வடிவானவனே! உனது திருவடிகளை சரணம் அடைகிறேன் என்ற இந்த ஆறு சொற்கள் என் முகத்தில் எப்பொழுதும் தங்கட்டும்.

    மனத் தூய்மை அடைந்து திருவடி தொழுது -ஸ்வாமி சொத்து உணர்ந்து -கடாக்ஷம் பிரார்த்தித்து அவன் செய்யும் உபகார பரம்பரைகளை உணர்ந்து -மோக்ஷத்துக்கு சரணம் அடைந்து -ஷட் பதம் -வண்டு வாயாகிய-தாமரை -ஆறு வார்த்தைகளை எப்போதும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் திருவடித் தாமரையையே பேசிக் கொண்டே இருக்க அது போல் ஆவோம் அன்றோ –

    இதனைப் பாராயணம் செய்தால் பகவானிடத்தில் பக்தி, வைராக்யம், மோக்‌ஷம், ஞானம் உண்டாகி மனக்கவலையும் கிரஹதோஷமும் நீங்கும்.

    பகவத் அனுபவமாகிய தேனையே பெருகிக் கொண்டே இருப்போம் -வாயைத் தாமரை யாக்கி பேச்சையே வண்டாக்கி வாழ்ந்தே போவோம்

    ————————————————————————–

    ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

    ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த-ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம்-பகுதி-1-

    May 11, 2026

    ஸ்ரீ ஶைலேஶ தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
    யதீந்திர ப்ரவணம் வந்தே ரம்யாஜமாதரம் முநிம்

    (துறவிகளின் அரசரான பகவத் ராமாநுஜரிடம் அளவற்ற அன்பு கொண்டவரும் ஞானம், பக்தி போன்ற குணங்களின் கடலான ஸ்ரீ ஶைலேஶரின் கருணைக்கு பாத்திரமான ரம்யஜாமாத்ரு முநியை (மணவாள மாமுனிகள்) நான் வணங்குகிறேன்).

    ஸ்ரீஶடாரி குரோர்திவ்ய ஸ்ரீபாதாப்ஜ மதுவ்ரதம்
    ஸ்ரீமத் யதீந்த்ர ப்ரவணம் ஸ்ரீலோகார்ய முநிம் பஜே

    (ஸ்ரீ ஶடகோபாசார்யரின் திருவடியும் ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவ ப்ரபந்தத்தை அருளியவருமான தாமரை மலரினின்று வழியும் தேன் போன்ற பிள்ளை லோகம் ஜீயரின் திருவடிகளை வணங்குகிறேன்).

    குருநாதனெங்கண் மணவாளயோகி குணக்கடலைப்
    பலநாளும் அண்டிப்பருகிக் களித்திந்தப் பாரினுள்ளே
    உலகாரியன் முநிமேகம் இந்நாளென்னுள்ளம் குளிர
    நலமான சீர்மை மழை நாளும் பொழிந்தது இந்நிலத்தே

    (மணவாள மாமுனிகளின் குணங்கள் என்னும் கடலிலிருந்து பருகி அனுபவித்தவர் நம் ஆசார்யர் (பிள்ளை லோகம் ஜீயர்). இவ்வுலகில் மேகம் போல இருக்கும் அத்தகைய பிள்ளை லோகம் ஜீயர், தம் மேன்மையான குணங்கள் எனும் மழையை இந்த பூமிக்கு அனுதினமும் என் மனம் குளிரக் கடாக்ஷித்தார்)

    ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்–திருநக்ஷத்ரம் : சித்திரை திருவோணம்-அவதார ஸ்தலம் : காஞ்சிபுரம்-காஞ்சிபுரத்தில் அவதரித்த இவர் பரவஸ்து பட்டர்பிரான் ஜீயரின் (மாமுனிகளின் அஷ்ட திக் கஜங்களில் ஒருவர்) கொள்ளுப் பேரனாவார். இவருடைய திருநாமம் வரதாசார்யர் என்பதாகும். இவர் பிரபலமாக பிள்ளை லோகம் ஜீயர் என்றும் பிள்ளை லோகாசார்ய ஜீயர் என்றும் அறியப் படுகிறார்.-இவர் திருகடல்மல்லை ஸ்தலசயன பெருமாள் (மஹாபலிபுரம் – மாமல்லபுரம்) ஆலயத்தை புதுப்பித்து, கோவிலில் முறையான வழிபாடு செய்வதையும் நிலை நிறுத்தினார். இதற்காக மன்னரால் கௌரவிக்கப்பட்டு இன்றும் இவருடைய சந்ததியினர் அந்தச் சிறப்பு கௌரவத்தை கோவிலில் பெற்று வருகிறார்கள்-திருகடல்மல்லை திவ்யதேசத்தில் கி. பி. 1614 என்ற வருடத்தை பொறிக்கப்பட்ட உள்ள ஒரு தாமிரத் தட்டில், இந்த ஜீயரை யதீந்திர ப்ரவண ப்ரபாவம் ஜீயர் என்று அழைக்கப்பட்ட குறிப்பு உள்ளது (இதிலிருந்து அக்காலத்திலேயே இவர் மணவாள மாமுனிகளின் சரித்திரத்தை எழுதியவரென்று மிகவும் பிரபலமாகவும் பரவலாகவும் அறியப் பட்டார் என்பது தெளிவாகிறது-ஸ்ரீரங்கத்தில் இரண்டாவது ப்ரகாரத்தில் கி.பி. 1614 என்ற வருடம் பொறிக்கப்பட்ட கல்வெட்டில், பிள்ளை லோகம் ஜீயருடைய சிஷ்யர் ஒருவர் எம்பெருமானாரின் திருநக்ஷத்ரத்தன்று பக்தர்களுக்கு சக்கரைப்பொங்கல் விநியோகத்திற்கு 120 பொற்காசுகளை மூலதனமாக கொடுத்துள்ளார் என்ற தகவல் உள்ளது-யதீந்திர ப்ரவண ப்ரபாவத்தில் பெரியவாச்சான் பிள்ளை, வடக்குத் திருவீதிப் பிள்ளை, பிள்ளை லோகாசார்யர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், திருவாய்மொழிப் பிள்ளை, மணவாள மாமுனிகள் மற்றும் சிலருடைய புகழ் மிக்க வாழ்க்கை வரலாற்றை அழகாக இவர் அருளிச் செய்துள்ளார். மாமுனிகளின் வாழ்க்கை வரலாற்றை மிகவும் விரிவாக கொடுத்தது மட்டுமல்லாமல் மாமுனிகளின் உபதேசங்களை இந்த கிரந்தத்தில் அழகாக கூறியுள்ளார்-

    ஸ்ரீசடாரி குரோர்திவ்ய ஸ்ரீபாதாப்ஜ மதுவ்ரதம் |
    ஸ்ரீமத்யதீந்த்ரப்ரவணம் ஸ்ரீ லோகார்ய முனிம் பஜே ||-பிள்ளை லோகம் ஜீயரின் தனியன் (யதீந்த்ர ப்ரவண ப்ரபாவத்தில் உள்ளது)

    ஸ்ரீ வைஷ்ணவ சமாசார்ய நிஷ்கர்ஷம்
    ஸ்ரீ ராமாநுஜாய திவ்ய சரித்திரம் போன்ற கிரந்தங்களையும் அருளிச் செய்துள்ளார்


    ஆசார்யபதம்‌ எம்பெருமானாருக்கே உரியதொன்று. அவரே அபராவதாரமாய்‌ வரவர முனியாய்‌ வந்துதித்தார்‌. நம் பெருமாள்‌ இவருக்கு எம்‌பெருமானாரிடம்‌ இருந்த ப்‌ரேமத்தின்‌ கனத்தை யிட்டு யதீந்த்ர ப்ரவணர்‌” என்று தாமருளிச்‌ செய்த ஸ்ரீசைலேச தனியனில்‌ பெயரிட்டருளினார்‌. அத் திருநாமமே இந்த வைபவ நூலுக்கும்‌ அமைந்தது. பிள்ளை லோகார்ய ஜீயர்‌ இந்த திவ்ய க்ரந்‌தத்தை அருளிச்‌ செய்யாவிடில்‌ நம்பிள்ளைக்குப்‌ பின்னர்‌ தோன்றிய ஆசாரியர்களின்‌-குறிப்பாக பெரிய ஜீயரின்‌ வைபவங்களை அறியவே முடியாது போயிருக்கும்‌. ஆகவே நாம்‌ பிள்ளை லோகார்ய்‌ ஜீயர்‌ விஷயத்தில்‌ கனத்த உபகார ஸ்ம்ருதியை அநுஸந்திக்க ப்ராப்‌தமாகிறது.

    மயர்வற மதிநலம் அருளப்‌ பெற்ற ஆழ்வார்கள்‌ அவர்களுக்குப்‌ பின்‌ அவதரித்த பூர்வாசாரியர்கள்‌ வைபவங்களை நம்பிள்ளையின்‌ திருவடியான பின்பழகிய பெருமாள்‌ ஜீயர்‌ ஆறாயிரப்படி குரு பரம்பரா ப்ரபாவம்‌’? என்ற கரந்தத்தில்‌ வெளியிட்‌டு அருளினார்‌.
    அந்த க்ரந்தம்‌ நம்பிள்ளை வைபவத்துடன்‌ முடிவடைகிறது, அதன்‌ தொடர்ச்சியாக அமைந்துள்ளது இந்த நூல்‌ வடக்குத்‌ திருவீதிப்‌ பிள்ளை வைபவம்‌ ஈடு முப்பத்தாறாயிரப்படியின்‌ அவதாரம்‌, நம்‌
    பிள்ளை நியமனத்தால்‌ அது பிராசாரமடையாம லிருந்தது, நம்‌ பிள்ளை யருளால்‌ வடக்குத்‌ தி௫ வீதிப் பிள்ளைக்கு பிள்ளை லோகாசாரியர்‌, அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனார்‌ என்ற இரு குமாரர்களின்‌ அவதாரம்‌- அவர்கள்‌ ரஹஸ்‌ய க்ரந்தங்கள்‌ அருளிச்‌ செய்தமை, பிள்ளை லோகாசாரியர்‌ நம்பெருமாள்‌ திவ்ய மங்கள விக்ரஹத்தை துலுக்கரால்‌ விளைந்த கலாபத்தில்‌ வலசையாய்‌ எழுந்தருளப்‌ பண்ணியது. ஆழ்வார்‌ திரு நகரி நம்மாழ்வார்‌ திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு ஏற்பட்ட ஆபத்து, நம்‌ பெருமாளுடன்‌ ஆழ்வார்‌ ஸமாகமம்‌, பிரிவு, இந்த விக்‌ரஹங்கள்‌ சேமமாகப்‌ பேணப்பட்ட வைபவங்கள்‌ எல்லாம்‌ இந்‌ நூலில்‌ முற்‌பகுதியில் விவரிக்கப் பட்டுள்ளன. திருவாய் மொழிப் பிள்ளை பிள்ளை லோகாசாரியர்‌ நியமனப்படி கூர குலோத்தம தாஸரால்‌ திருத்தப்பட்டது.
    பெருமாள்‌ கோவிலில்‌ சேம வைப்பாயிருந்த ஈடு முப்‌பத்தாறாயிரப்‌படியை தேவப் பெருமாளுடைய நியமனத்தால் திருவாய் மொழிப்‌ பிள்ளை பெறுதல்‌, திருவாய்மொழிப்பிள்ளை ஆழ்வார்‌ திருநகரியிபல் கோயிலை புநருத்தாரணம்‌ பண்ணி வலசையாக எழுந்தருளியிருந்த
    ஆழ்வார்‌ திருமேனியை எழுந்தருளப் பண்‌ணி ப்ரதிஷ்‌டிப்பித்தல்‌,மணவாள மா முனிகளின்‌ அவதாரம்‌, அவர்‌ திருவாய்மொழிப்‌பிள்ளையிடம்‌ ஆச்ரயித்தல்‌ முதலான விஷயங்கள்‌ அடைவே பேசப்‌பட்டுப்‌ பின்னர்‌ மணவாளமாமுனிகளின்‌ வைபவம்‌ பரக்கப் பேசப்‌ பட்டுள்ளது-

    பூர்வாசார்யர்களைப் பற்றிய குருபரம்பரா ப்ரபாவம் போன்ற முன்னுள்ள ப்ரபந்தங்களைத்  தொடர்ந்து இந்த ப்ரபந்தம் வரும்.  பிள்ளை லோகம் ஜீயர்,  இந்த ப்ரபந்தத்தின் தொடக்கத்திலேயே மணவாள மாமுனிகளின் மேன்மையை குறித்துச் சொல்லாமல் முதலில் மணவாள மாமுனிகள் எவ்வாறு ஸத் ஸம்ப்ரதாயத்தின் (தொன்மையான பாரம்பரியக் கருத்துக்கள்) பொருட்களை கிடைக்கப் பெற்றார் என்று சொல்கிறார். பாரம்பரிய தத்துவத்தின் கொள்கைகளில் நம்பிள்ளை நஞ்சீயர் முதலானோருக்கு இருந்த ஊக்கத்தைக் காட்ட கீழ்க்கண்ட ஶ்லோகத்தை அவர் மேற்கோளாகக் காட்டுகிறார்.

    ஸ்ரீவத்ஸசிஹ்ந பவதஶ் சரணாரவிந்த3 ஸேவாம்ருதைக ரசிகான் கருணாஸுபூர்ணான் |
    பட்டார்யவர்ய நிகமாந்தமுனீந்த்ர லோகாகு3ர்வாதி3 தே3ஶிகவரான் ஶரணம் ப்ரபத்3யே ||

    கூரத்தாழ்வானே! தேவரீருடைய திருவடித் தாமரைகளில்‌ கைங்கர்யமாகிற அமுதத்தில் மிக்க ரஸிகர்களாய்‌, கருணை மிக்கரான பட்டர்‌ நஞ்ஜீயர்‌, நம்பிள்ளை, முதலான மஹாசாரியர்களை சரணமாகப் பற்றுகிறேன்‌.

    (கூரத்தாழ்வானே ! காருண்யம் நிறைந்த இதயமும் உம் திருவடித் தாமரைகளில் தொண்டு செய்வதில் உறுதியும் கொண்ட பட்டர் (கூரத்தாழ்வானின் திருக்குமாரரான பராசர பட்டர்) நஞ்சீயர் நம்பிள்ளை முதலான மஹாசார்யர்களின் திருவடிகளில் பணிகின்றேன். பிள்ளைலோகம் ஜீயர், நம்பிள்ளைக்கு பிற்பட்ட ஆசார்யர்களில், பிள்ளை லோகாசார்யரின் வ்யாக்கியானங்களை முதலில் எடுத்து கொண்டு எவ்வாறு மணவாள மாமுனிகள் பாரம்பரிய தத்துவத்தின் கொள்கைகளைப் பெற்றார் என்று நமக்குக் காட்டுகிறார். இது கீழ்க்கண்ட பாசுரம் மூலம் காட்டப்பெறுகிறது:

    கோதில் உலகாசிரியன் கூரகுலோத்தம தாதர்
    தீதில் திருமலையாழ்வார் செழும் குரவை மணவாளர்
    ஓதரியபுகழ் திருநாவீறுடைய பிரான் தாதருடன்

    போத மணவாளமுனி பொன்னடிகள் போற்றுவனே

    (1) அப்பழுக்கற்ற பிள்ளை லோகாசார்யர் (2) கூரகுலோத்தமதாசர் (3) குறையொன்றும் இல்லாத திருவாய்மொழிப்பிள்ளை எனப்படும் திருமலையாழ்வார் (4) குரவை நகரில் அவதரித்த கோட்டூர் அழகிய மணவாளர் (5) போற்றத்தக்க புகழ் கொண்ட திகழக்கிடந்தான் திருநாவீறுடைய பிரான் தாசர் (6) தாமரை ஒத்த திருவடிகள் கொண்ட மணவாள மாமுனிகள் முதலானோரின் திருவடிகளைப் பணிவோம். [ஸ்ரீவசன பூஷணம் அனுஸந்தானத்தின் முடிவில் இப்பாசுரம் சேவிக்கப்படுகிறது; மேற்சொன்ன ஆறு மஹாசார்யர்களில் கோட்டூர் அழகிய மணவாள தாசர் மணவாள மாமுனிகள் அம்மான் ஆவார்; திகழக்கிடந்தான் திருநாவீறுடைய பிரான் தாசர் மணவாள மாமுனிகள் திருத்தகப்பனார் ஆவார்]

    ஸ்ரீயபதியான ஸர்வேஸ்வரன்‌ ஸம்ஸாரி சேதநோஜ்ஜீவந காமனாய்க் கொண்டு கலி காலத்திலே பராங்குச பரகால பட்டநாதாதிகளான ஆழ்வார்களையும்‌ நாத யாமுந யதிவராதிகளான ஆசார்யர்‌களையும்‌ அவதரிப்பித்தருளி தந் முகேந லோகத்தை ரக்ஷித்தருளின படியைப்‌ பின்புள்ளாருமறிந்து உஜ்ஜீவிக்கும்படி முன்புள்ள ஆசார்யர்கள்‌ குரு பரம்பரா ப்ரபாவ ப்ரமுகங்களான ப்ரபந்தங்‌களாலே ப்ரதி பாதித்து உபகரித்தருளினார்கள்‌.

    அவ்வள வன்றிக்கே விசேஷித்து அசேஷ சிதசித் வஸ்து சேஷியான அந்த ஸ்ரீய பதியினுடைய நியோகத்தாலே சேஷாவதாரமாக வவதரித்து பஹு முகமான தம்முடைய உக்த் யநுஷ்டானங்களாலே ஸர்வ சேதனரையும்‌ ரக்ஷித்துப் போந்த யதீந்த்ர ப்ரவணரான ஜீயருடைய ப்ரபாவத்தை அனைவருமறியும் படியாக அஸ்மதாசார்யருடைய ப்ரஸாதமடியாகவும்‌ கந்தாடை நாயனுடைய (கோயில் அண்ணன் ஸ்வாமிகளின் திருப்பேரனார்) ப்ரஸாதமடியாகவும்‌ அறிந்தவளவிலே ப்ரதிபாதிக்கிறது இப் பிரபந்தத்தாலே.

    சத் சம்ப்ரதாயா சம்யுக்ததர் வைபவத்தை முன்புற பேசி பின்பு அவர் வைபவம் பேசுவதாக உபக்ரமிக்கிறார்-

    (1) ஸ்ரீ வத் சிஹ்ந பவத சரணாரவிந்த சேவாம்ருதைக ரஸிகாந் கருணா ஸூபூர்ணாந் |
    பட்டார்ய வர்ய நிகமாந்த முநீந்த்ர லோக குர்வாதி தேசிக வராந்‌ சரணம்‌ ப்ரபத்யே ॥
    -என்று சுத்த ஸம்ப்ரதாய ப்ரவர்த்தகத்வம்‌ நஞ்ஜீயர்க்கும்‌ நம் பிள்ளைக்குமே யுள்ள தொன்றாகையாலே, அந்த நம்பிள்ளை யடியாக வந்த ஆசார்யர்களுடைய சுத்த சம்ப்ரதாய பரம்பரா அந்வயமானது இவர்க்கு வந்தவாற்றை ப்ரதிபாதிப்பதாக ப்ரதமம்‌ பிள்ள லோகாசாரியருடைய வைபவத்தை ப்ரதிபாதிக்கிறது-எங்ஙனே யெனள்னில்‌;

    கோதில் உலகாசிரியன்‌ கூர குலோத்தம தாதர்‌
    தீதில்‌ திருமலை யாழ்வார்‌ செழுங் குரவை மணவாளர்‌
    ஒதரிய புகழ்த் திரு நாவுடைய பிரான்‌ தாத ருடன்‌
    போத மணமான முனி பொன்னடிகள்‌ போற்றுவனே

    என்கிறபடியே ஆழ்வாருடைய அவதார மென்னலாம் படியான வைபவத்தை யுடைய நம் பிள்ளை, ஒரு நாள்‌ நித்யப்படி கால ஷேபம்‌ நிறைவேறி மத்யாஹ்ந காலத்திலே தனியே எழுந்தருளி யிருக்க, திருவடிகள்‌ ஸம்பந்தியான வடக்குத்‌ திருவீதிப் பிள்ளை திருத் தாயாராயிருக்கிற அம்மி-தண்டன்‌ ஸமர்ப்பித்து நிற்க, அவளைக்‌ கடாக்ஷித்தருளி “உம்முடைய க்ருஹ யோக ஷேமங்கள் என்‌” என்று கேட்டருள; “என்ன விண்ணப்பஞ்‌ செய்யப்‌ போகிறேன்‌? ஒரு பேய்ப் பிள்ளையா யிருக்கிறதே ” என்ன,‘அதெப்படி?’ என்ன, ‘ஒரு பெண்ணை விவாஹம் செய்வித்தீரே;அந்தப்‌ பெண்‌ பெரியவளானாள்‌; ஸஹ சயன கல்யாணம்‌ பாலே பண்ணி சயிக்க விட, உடனே பிள்ளை முறையிட, ‘அதென்‌?’ என்று எல்லாரும்‌ உள்ளே புக, உடம்பெல்லாம்‌ புழுக்க நீர் சொரிய விம்மி யழுது நிற்க, “இதேது பிள்ளாய்‌?” என்று கேட்டேன்‌-
    அம்மா! இதுவொரு ஆடுகிற பாம்பாயிருந்தது; பயப்பட்டேன்‌;-இன்னுமப்படியே யிருக்கிறது” என்ன, ”இதுவுமொரு புதுமையோ”வென்று பெண்ணை அப்பாலே போக விட்டேன்‌, இன்னுமொரு நாள்‌ அந்தப்‌ படியே யாச்சுது” என்று வ்யாகுலப்‌பட, பிள்ளையும்‌ சிரித்தருளி, **அதற்கு உமக்கென் ?” என்ன,
    *இப்படி யருளிச்‌ செய்யுமோ? பெண்‌ வாழ வேண்டாவோ? வம்சத்துக்குப்‌ பிள்ளை ணே்டாவோ?” என்று திருவடிகளிலே விழுந்து சோகிக்க, பிள்ளையும்‌, ‘அம்மீ! எழுந்திரு: நீ சோகிக்க வேண்டா; மணாட்டுப் பெண்‌ ருது ஸ்நாதையாய்‌ வருகிற போது இது வழியாயழைத்து வா? என்று அருளிச் செய்து விட அவளும்‌ அப்படியே அழைத்து வந்து விட, திருவோலக்கத்திலே பிள்ளையும்‌ அந்தப்‌ பெண்ணைக்‌ கிட்ட வழைத்தருளி அவள்‌ வயிற்றைத்‌ தம்‌ திருக் கைகளாலே ஸ்பர்சித்து, “*நம்மைப்‌ போலிருப்பானொரு பிள்ளையைப்‌ பெறக்‌ கடவாய் ” என்று ஆஸீர்‌வாதம்‌ பண்ணி விட்டு, அற்றை ஞாயிறு பாடு வடக்குத்‌ திருவீதிப்‌ பிள்ளையை யழைத்தருளி, **உம்முடைய பயமும் தீர்ந்தது, விஹித விஷய வைராக்கியத்திற்கும் குறைவு வராது; ஆனால்‌ லோக மரியாதைக்கு நாம்‌ சொன்னதற்காக இன்றிராக்‌ கூடியிரும்‌’ என்றருளிச் செய்ய; அப்படியே கூடியிருந்த வளவில் ஆச்சியுங் கர்ப்‌பந் தரித்து லோக விலஷணமாய்‌ :’ததஸ்க த்வாதஸே மாஸேஎன்றபடியே பன்னிரண்டாம்‌ மாஸத்திலே ஐப்பசியில்‌ திருவோண நஷத்திரத்திலே பிள்ளை திருவவதரிக்க, அவருக்குப்‌ பன்னிரண்டாம்‌ நாள் நாம கரணத்திலே ”லோகாசார்யர்‌ பிள்ளை” என்று நம்பிள்ளை யுடைய திருநாமஞ் சாத்‌தி வளர்ந்து வந்து அப்த பூர்த்தி உத்ஸவத்திற்கு பெருமாளை ஸேவிப்பிக்கத் தக்கதாக நம்பிள்ளை முதலான பெரியோர்கள் எல்லோரும் மங்கள வாத்தியங்‌களுடனே திருப்பல்லக்கிலே எழுந்தருளிப் பண்ணுவித்துக்‌ கொண்டு சென்று ஸேவிக்க, நம் பெருமாளும்‌ போர வுகந்தருளி-தீர்த்தம்‌, ஸ்ரீ சடகோபன்‌, சந்தனம்‌, ஸூகந்தம்‌, திருமாலை ப்ரஸாதங்களும்‌ பட்டுச்‌ சிற்றாடையும்‌ ப்ரஸாதித்தருளி, நம்பிள்ளையை, அர்ச்சக முகேந “உம்மைப்‌ போலே யொரு பிள்ளை கொடுத்‌தீரே; இனி தம்மைப்‌ போலே யொரு பிள்ளை கொடும் ‘ என்று நியமிக்க, *’நாயன்தே நாயன்தே” என்று ஓமறைய, அப்படியே அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌ திருவவதாரஞ்‌ செய்தருளினார்‌.-

    (1147 நம்பிள்ளை அவதாரம்
    1167-பெரியவாச்சான்பிள்ளை வடக்குத் திருவீதிப் பிள்ளை
    1205-பிள்ளை லோகாச்சார்யார் –ஐப்பசி திருவோணம்–1325— திருநாடு
    1207-அழகியமணவாள நாயனார் –மார்கழி அவிட்டம் -1309-திருநாடு அலங்கரித்தார் -)

    ஒருநாள்‌ நம்பிள்ளை வடக்குத் திருவீதிப் பிள்ளை திருமாளிகைக்‌கெழுத்தருள, அங்குள்ளாரெல்லாரும்‌ நம்பிள்ளை திருவடிகளிலே வந்து ஸேவிக்க, அப்போது வடக்குத் திருவீதிப் பிள்ளை தேவிகள்‌
    ஆர்த்ர வஸ்த்ரததுடனே தண்டனிட்டு நிற்க, நம்பிள்ளை அவளருகு நிற்கிற ஸ்த்ரீ ஜனங்களைப்‌ பார்த்து *இத்தப்‌ பெண்‌ ஆர்த்ர வஸ்த்ரத்துடனே நிற்பானென்‌?” என்ன, அவர்கள்‌. சொன்னபடி –
    **தாலு நா ள்‌ தூரஸ்தையா யிருந்து இப்போது தீர்த்தமாடி வந்து தேவரீர்‌ திருவடிகளிலே ஸேவிக்கிறாள்‌’” என்ன. அது கேட்டு நம்‌ பிள்ளையும்‌ உகந்து அவளை “பெண்ணே! இங்கே வா” என்றழைத்து திருக் கையாலே அவளுதரத்தை ஸ்பர்சித்து **நம்மைப்‌ போலோரு பிள்ளையைப்‌ பெறுவாயாக” என்று திருவுள்ளம்‌ பற்றி யருளினர்‌. அத்தைக்‌ கண்டு வடக்குத் திருவீதிப் பிள்ளையும்‌-நமக்குக்குமாரனுண்டானால்‌ ஆசார்யன்‌ திருவுள்ளத்துக்கு உகப்பாம்‌’” என்றிருந்து ததநுகுணமாக *வர்த்திக்க, தத் ஸம்வத்‌ஸரத்தில்‌ வடக்குத் திருவீதிப் பிள்ளை தேவிகள்‌ கர்ப்பவதியாய்‌ததஸ்ச த்வாதசேமாஸே” என்கிறபடியே பன்னிரண்டாம்‌ மாஸத்தில்‌ க்ரோதந வருஷம்‌ ஐப்பசியில்‌ திருவோணத்தில்‌ ஒரு குமாரர்‌ திருவவதரிக்க ஸூதிகா செளச நிவ்ருத்தியான பன்னிரண்‌டாம் தாள்‌ நாம கரணத்திலே அக் குமாரருக்கு லோகாசாரியர்‌ என்று ஸ்வாசாரியரான நம்பிள்ளையின்‌ திருநாமம்‌ சாத்தி யருளினார்‌-பிள்ளையும்‌ அது கேட்டு, வடக்குத்‌ திருவீதிப் பிள்ளையை யழைத்து, “க்ருஷ்ணரே! நாம்‌ பெருமாளின்‌ திருநாமம்‌ சாத்துவதாக உத்தேஸித்திருக்க, நீர்‌ நம்மைக்‌ கேளாமல்‌ இப்படிச்‌ செய்யலாமா?”’ என்ன, அவரும் நடுங்கி, பயப்பட்டு, நிருத்தரராய்‌ நிற்க, அவ்வளவிலே, முதலிகளெல்லாரும்‌ “தேவரீர்‌ திருநாமம்‌ சாத்துகையிலுள்ள ஆதரத்தாலே செய்தாரித்தனை; இன்னுமொரு குமாரர்‌ உண்டாம்படி ஆஸீர்வதித் தருள வேணும்‌‘ என்று விண்ணப்பஞ்செய்ய, பிள்ளையும்‌ உகந்து, அப்படியே,-ஸத் புத்ரன்‌ இன்னுமொருவன்‌ உண்டாக”‘ என்று ஆசீர்வதித்து விட, வடக்குத்‌ திருலீதிப்‌ பிள்ளைக்கு அப்படியே பின்னையுமொரு குமாரர்‌ -திருவவதரிக்க, பிள்ளையும்‌ அதுகேட்டு ஸந்துஷ்டராய்‌, பத்துநாளும் கடத்த இரண்டாம்‌ நாள்‌ அவரை அழகிய மணவாளப்‌ பெ௫மாள்‌ நாயனார்‌” என்று நம்‌ பெருமாள் திரு நாமம் சாத்தி யருளினார்‌.

    இப்படிப்பட்ட பெருமையை யுடையவருடைய அருளாலே அவதரித்தவராய்‌ ௮வதார விசேஷ மாயிருந்துள்ள பிள்ளை லோகாசாரியரும்‌, அவருடைய அருளே தாரசகமாக வளர்ந்த அவர்‌ திருத்‌ தம்பியரான அழகிய மணவாளப் பெருமான்‌ நாயனாரும்‌, தத்வ ரஹஸ்யந்‌ தொடங்கி அநேக ப்ரபந்தங்கள்‌ இட்டருளி ஸ்வரூபவர்த்தகராய்‌
    தம்பியுடன்‌ தாசரதியானுனும் சங்க வண்ண
    நம்பியுடன்‌ பின்னடைந்து வந்தானும்‌–பொங்கு புனல்‌
    ஒங்கு முடும்பை யுலகாரியனும்‌ அறந்
    தாங்கு மணவாளனுமே தான்‌

    என்னும்படி ஸெளப்ராத்ரத்தை யுடையராய்‌ யெழுந்தருளி யிருக்‌கிற காலத்திலே ஸர்வஜ்ஞரான பிள்ளை லோகாசாரியர்‌ திருவடிகளிலே ஸாத்விகராயிருப்பார்‌ பலரும் ஆச்ரயித்து ஸத் ஸம்பந்‌தத்தை யுடையராய்‌ :ஸம்பந்தாத்‌ ஸ்வாத்ம லாப:””’ என்று ஆநந்த நிர்ப்பரா யிருத்தார்கள்‌.

    அவர்களில்‌
    கூர குலோத்தம தாஸ நாயனும்‌,
    மணப் பாக்கத்து நம்பியும்‌
    கொல்லி காவல தாஸரான அழகிய மணவாளப் பெருமாள்‌ பிள்ளையும்‌,
    கோட்டூரிலண்ணரும்‌,
    விளாஞ்சோலைப் பிள்ளையும்‌,
    ஸாத்‌விகைகளில்‌ திருமலை யாழ்வார்‌ திருத் தாயார்‌ தொடக்கமான சில அம்மையார்களும்‌,

    திருவடிகளிலே ஆச்ரயித்த வன்று தொடங்கி அந்தரங்க ஸேவை பண்ணிக் கொண்டு அந்தே வாஸிகளாய்‌ அகலாமலிருந்தார்கள்‌. இப்படி இவர்களாலே ஸேவ்யமனராயிருக்கிற
    பிள்ளை, பின்பு தம்முடைய க்ருபையாலே இவர்களை யழைத்து அந்தரங்கமாகக்‌ திருவாய் மொழியாகிற திவ்ய ப்ரபந்தத்துக்கு ஆறாயிரப்டி, ஒன்பதினாயிரப்படி, இருபத்து நாலாயிரப்படி முப்பத்தாரறாயிரப்படி, என்கிற வியாக்கியானங்கள்‌ ப்ரவ்ருத்த மானதற்குக் காரணம்‌ இன்னபடியும்‌ இன்னபடியு மென்று அருளிச்‌ செய்தருளினார்‌ .

    அதா்வது– திராவிட வேத ஸாகரமான திருவாய் மொழிக்கு நிபுணராய்‌ ‘பூர்விகரா யுள்ளவர் அனேகர்‌ ஸ்வ ஸ்வ புத்தி விஸ்தாராநுகுணமாக லக்ஷணங்களுக்கு படிமாவென்றுகந்து வ்யாக்யான மிட்டு வைத்தார்கள்‌.அவ்வளவே யன்‌றிக்கே இவற்றினுடைய ஸஹஸ்ரசாகோபநிஷத்‌ ஸமாகமத்வம்‌ ப்ரகடிதமாம்படி ஒரு ப்ரபந்தமிட்ட ருளும்படி திருக் குருகைப் பிரான்‌ பிள்னாளை எப்பெருமானார்‌
    கடாக்ஷிக்க, அவரும்‌ அவதார விசேஷமென்னும்படி ஆழ்வார்‌ திருவுள்ளத்தை அடி யொற்றிக்‌ கொண்டு; ஆறாயிரப்படி- என்கிற வியாக்யானஞ்‌ செய்தருளினார்‌

    இன்பு, அவரும்‌ மற்றுமுள்ள பெரியோர்களும்‌ ‘இன்னம்‌ இவ்‌ வர்த்த விசேஷங்களுங்‌ கூட்டி அனைவர்க்கும்‌ ஸூக்ரஹமாக அர்த்தமாம்படி ஒன்பதினாயிரப்படியாக ஒரு ப்ரபந்தமிட்டு
    வையும்‌”! என்று பட்டருக்கு நியமித்து வைகக ; அவரும்‌ அத்தைத்‌ திரு வுள்ளத்திலே வைத்துக்‌ கொண்டு மாதவர்‌ என்னும் திரு நாமத்‌தை யுடையராய்‌, ஸகல சாஸ்த்ர வித்தமராய்‌, ஸந்யஸித்து
    வேதாந்தி என்னுந்‌ திருநாமத்தை யுடையராய்‌, பின்பு பட்டர்‌ திருவடிகளிலே ஆச்ரயித்து ஸர்வஜ்ஞராம்‌ திருவடிகளுக்கு அந்தரங்‌கராயிருக்க, இவரை பட்டர்‌ *’நம்‌ ஜீயர்‌” என்று அபிமானித்துப்‌ பெருமாளைத்‌ தொழ வெழுந்தருள, பின்னும்‌ சில ஜீயர்களும்‌ ஸ்ரீவைஷ்ணவர்களும்‌ நிறைந்து நிற்க, பெருமாள்‌ உகந்தருளி அர்ச்சக முகேத இவரைக் கையைப்‌ பிடித்து, ‘வாரீர்‌ நஞ்ஜீயரே!’!என்று அருள் பாடிட்டருளி ”பட்டர்‌ திருவுள்ளப் படிக்கு ஒன்பதினாயிரப்படி வ்யாக்யானஞ் செய்யும்‌” என்று நியமித்தருள ஆறாயிரப்‌படிக்கு கனகாபிஷேக மென்னும்படி ஒன்பதினாயிரப்படி செய்‌தருளினார்‌. அன்று முதல்‌ இவருக்கு நஞ்சியர்‌ என்று இதுவே திருநாமமாயிற்று,

    பின்பு பட்டருக்கு ப்ராப்ய பூமி அணித்தாக, நஞ்சீயர் சோகித்து சிந்தித்தபடி:- நாம்‌ வார்த்தக்யத்தை யடைந்தோம்‌ -ஸ்வாமி பட்டருக்குச்‌ சிறு வயஸ்ஸாகையாேலே தர்‌சந ஸ்‌திதிக்குக்‌ குறைவில்லை, உத்தரோத்தரம்‌ தழைக்கு மென்றிருந்தோம்‌; அது போய்‌ இப்படி யாவதே!!’ என்று திருமுடி மோதி பட்டர்‌ திரு முன்பே சென்று திருவடிகளைப் பிடித்துக் கொண்டு க்லேசிக்க-பட்டரும்‌ அவரைக் கிட்ட வர வழைத்தருளி :’நீர்‌ சோகிக்க வேண்டா; தர்சந ப்ரவர்த்தகனா யிருப்பானொரு பிள்ளையைப்‌ பெருவீர்‌” என்‌றருளிச் செய்யக் கேட்டு ஜீயரும்‌ ஸமாஹிதராய்‌ திருவுத்தரீயத் தலைப்பை முடிந்து கொண்டு (பட்டர்‌ திரு நாட்டைந்‌தவாறே) பட்டருடைய கைங்கர்யத்தை அதி விஜ்ரும்பணமாக நடப்பித்தருளி, பின்பு ஒன்பதினாயிரப்படியை இன்னம்‌ இருபத்தி நாலாயிரப்படி ,முப்புத்தாறாயிரப்படி வ்யாக்யானங்களுக்‌கு இடம்‌ கொடுக்கத் தக்க அர்த்த பூர்‌த்தியுடனே பட்டோலை கொண்டு நிறை வேற்றி, இத்தை தல்லவலேகத்கிலே ஏறி யருளப் பண்ணி அநேக மதமாக ப்ரவர்த்திப்பிக்கத்‌ திருவுள்ளமாய்‌ நல்ல லேகரி விசாரித்தருள:

    அவ் வளலிலே -பருஷக சக்ரவர்‌த்தி திருமகன்‌ கோயில் அருகே குடி இருந்து அனவரதம் ஸத்வநிஷ்டராய்‌, பண்டித பாமர ஸாதாரணமாக எல்லாரும்‌ ஆதரிக்கும்‌ படியான வைபவத்தை யுடையராய்‌ உபாதாந பரராய் தேவ ராஜர்‌ என்று ஓருவருண்டு; அவரை யழைத்து அவருக்குபதேசித்து அவரைக் கொண்டு ஏறி யருளப்‌ பண்ணுவியும்‌* என்று ஸ்வப்நமாக; *’இது ஆழ்வாருடைய நியமனம்‌” என்று உகந்தருளி, மறு நாள்‌ -இப்படி யொருவருண்டோ?” என்று அருகு நிற்கிற ஸ்ரீ வைஷ்ணவர்களைக்‌ கேட்டருள, அவர்களும்‌ உண்டென்று உடனே தேவ ராஜரை யழைத்து வந்து விட, ப்ரதமத்திலே *ஆ முதல்வன் இவன்‌ என்று கடாஷித்தருளி -ஒரு முறியைக்‌ கொடுத்து எழுத்து எழுதிக்‌ காட்டுமென்ன, -அவரும் ‘நஞ்சீயர்‌ திருவடிகளே சரணம்‌, பட்டர்‌ திருவடிகளே சரணம்‌” என்று எழுதக் கண்டருளி யிருக்க, தேவராஜரும்‌, திருவடிகளைப் பிடித்துக் கொண்டு, கிருபை பண்ணி வருள வேணும்‌‘ என்று விண்ணப்பம்‌ செய்து கொள்ள; உகந்து க்ருபை பண்ணி யருளி, திருவாய்மொழியினர்த்தத்தை ஸங்க்ரஹேண ஸாதித்தருளி, பட்டோலையையும்‌ அலேகத்தையும்‌ ஸாதித்தருளி நன்றாக ஏறி யருளப் பண்ணிக் கொண்டு வாரும்‌’ என்று விடை கொடுத்தருள; அவரும்‌ அக்கரைக் கெழுந்தளுவதற்காகப்‌ புறப்பட, ஆறு பெரு வெள்ளப்பட நீஞ்ச வல்லவராகையாலே ஒரு சாலைப்‌ பிடித்துக் கொண்டு பட்டோலையும் அலேகத்தையும்‌ திருமுடியிலே கட்டிக் கொண்டு நீஞ்ச, வெள்ளம்‌ அதிகமாக, போரத் தளர்ந்து பட்டோலையும்‌ அலேகமும்‌ திருப் பரிவட்டத்துடனே (பெருக்கிலே விழுந்து விட, இவர்‌ போர கிலேஸித்து நொந்து! மெள்ள அக்கரைப்‌பட்டு, ‘ஆசார்யாபசாரம்‌ வந்ததே?’* என்று விழுந்து புரள இரண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ கண்டு தேற்றி இவர்‌ திரு மாளிகையிலே சேர்க்க, தேவிகளும்‌ கண்டு அநு சோகித்து இருவருமுபவாஸமாயிருக்க, ‘பெரு நாளுக்குத்‌ திருவாராதன மின்‌றிக்கே யிருக்க வொண்ணாது ”* என்று தேவிகளறிவிக்க , அப்படியா வென்று கைங்கர்யத்தை நியமித்துத்‌ தாமும்‌ நீராடி யருளித்‌ திருமண்காப்பு சாத்திக்‌ கொண்டு திருவாராதனத்துக்கு எழுந்தருளி உபக்ரமிக்க, அலஸையினாலே நித்ரைபட , அவ்வளலிலே கோயிலாழ்வாரிலே யிருக்கிற ஸ்ரீரங்கராஜர்‌ திருவாய் மலர்ந்தகுளி, *வாரிர்‌| தேவராஜரே! நீ சோகிக்க வேண்டா; ஸம்புடமேறி யருளப்‌ பண்ணும்‌;நாம் முன்‌ நிற்கிறோம்‌” என்ன, “ஸ்ரீய:பதியாய்‌’” என்று தொடங்கி, “விசேஷ கடாக்ஷம்‌ பண்ணி யருளினான்‌” என்னுமளவாக ஒரு ஸூர்ணையைப் ப்ரஸாதிக்கப்‌ பெற்றுத்‌ தெளிந்து, ஸூர்ண நெட்டுருவாயிருக்க அத்தை அப்போதே லிகித்தருளி, திருவுள்‌ளம் உகந்து பெருமாளை யமுது செய்தருளப் பண்ணித்‌ தாமும்‌ அமுது செய்தருளி ஸ்ரீகோசம் ஏறி யருளப் பண்ணத் தொடங்கி நிறைவேற்றி, ஸ்ரீ கோசத்தைக்‌ கொண்டு புறப்பட்டு ஜீயரை தெண்டன் சமர்ப்பித்து

    ஸ்ரீ கோசத்தையும்‌ ஸமர்ப்பிக்க, ஜீயரும்‌ உகந்தருளி திருவுள்ளத்துக் குகப்பான பேரைக்‌ கூட்டிக்‌ கொண்டு கடாக்ஷித்‌தருள: தாம்‌ ஸந்திக்தமாக வைத்த ஒரோ விடங்களிலுள்ள வாக்யங்‌களும்‌ அர்த்தங்களும்‌ நன்றாக இசைத்திருக்கக் கண்டு எல்லாரும்‌ உகந்து தேவ ராஜரை உள்ளே யழைத்தருளி, *’இதென்ன அற்புதம்‌? இதென்ன சாதுர்யம்‌?” என்று கேட்க, அவர்‌ இஸ் ஸந்நிதியினின்றும்‌ புறப்பட்ட பிற்பாடு நடந்த செய்திகளை யெல்லாம்‌ நடந்த படியே தப்பாமல்‌ விண்ணப்பஞ் செய்யக்‌ கேட்டருளி -ஜீயரும்‌ உகந்து எழுந்திருந்து தேவ ராஜரை *நம் பிள்ளையோ! என்று கட்டிக் கொண்டு எல்லாருங்கூடி யெழுந்தருளி பெருஞ்‌ செல்வத்தைத்‌ திருவடி தொழுது நிற்க; தேவராஐருக்கு நம்பிள்னை என்று அருள் பாடிட்டு தர்சந ப்ரவர்த்தகத்வாபிஷேகம்‌ பண்ணி யருளி ‘உம்முடைய புத்தி விஸ்தார அநு குணமாகத்‌ திருவாய்‌ மொழிக்கு வ்யாக்யானமாம்படி உபந்யஸித்து நம்மிராமானுசன்‌ தரிசனச்தை வளர்த்‌துக் கொண்டு போரும்‌” என்று நியமித்து-பட்டர்‌ சரம காலத்திலே தர்சந ப்ரவர்த்தகருக்கென்று ஸாதித்‌திருந்த மோதிரத்தை நம்‌பிள்ளை திரு விரலிலே யிட அவரை யெல்லாருங்‌ கொண்டாடி ப்ரதிபத்தி பண்ணினார்கள்‌. இப்படி தர்சந ப்ரவர்த்தகராய்‌ ஜ்ஞாந பக்தி வைராக்யங்கள்‌ இட்டு மாறினாப் போலே வடிவிலே தொடை கொள்ளலாம்படி அதிசயத்‌தை யுடையராய்‌, அத்புத வ்யாக்யான வைபவராய்‌ எழுந்தருளி யிருக்கிறபடிகைக்‌ கண்டு அநேகம்‌ ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ ஆச்ரயித்து, நம்‌பெருமாள்‌ கோஷ்டியோ? நம்பிள்ளை கோஷ்டியோ?”’ : என்னும்படி ஸ்ரீவைஷ்ணவ ஸம்ருத்தியுடனே வாழ்ந்தருளும் காலத்திலே யுண்டான அப்ரதிம வைபவங்கள்‌ அனேகமா யிருக்கும்‌.

    இப்போது பெரிய வாச்சான்‌ பிள்ளைக்கு (1167-1262-95 ஸம்வத்சரங்கள் எழுந்தருளி இருந்தவர்)நம்பிள்ளை ஒன்பதினாயிரப் படியுடனே சில அர்த்த விசேஷங்களைக் கூட்டி ப்ரஸாதிக்க,அவர்‌ அன்றைக்கன்றாடம்‌ பட்டோலை கொண்டு எழுதி நிறைவேறின பின்பு எல்லாவற்றையுங்கொண்டு வந்து ஸமர்ப்பிக்க-கடாக்ஷித் தருளி உகந்தருளி நல்ல அலேகத்திலே ஏறி யருளப் பண்ணி பின்னும்‌ அநேக ஸ்ரீகோசங்களையுமுண்டாக்கி பஹு முகமாக ப்ரவர்‌த்‌திப்பிக்கும்படி நியமித்தருளி அப்படியே நடவா நிற்கச்‌ செய்தே

    நம்பிள்ளை தம்முடைய நல்லருளால் ஏவி விட
    பின் பெரியவாச்சான் பிள்ளை யதனால் -இன்பா
    வருபத்தி மாறன் மறைப் பொருளைச் சொன்னது
    இருப்பத்து நாலாயிரம் –43-அந்த ஆச்சார்ய நியமனத்தைப் பற்றி–இத்தால் ஸ்வ யத்னத்தாலே செய்த ஸ்ரீ நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டரையும்
    ஸ்ரீ வடக்குத் திரு வீதிப் பிள்ளை பட்டரையும் வ்யாவர்த்திக்கிறது –

    ஐயரையும்‌ (வடக்குத் திருவீதிப் பிள்ளை) சிறியானாழ்வானப்‌ பிள்ளையையும்‌ (ஈ யுண்ணி மாதவர்‌) அழைத்து ஒன்பதினாயிரப்படி வாசியுங்கோள் ‘” என்ன; பெரியவாச்சான்‌ பிள்ளையும்‌! அடியேனுங்‌கூட ஸேவித்து வருகிறேன்‌” என்ன, “ஆனால்‌ பெருக்காம்‌” என்றருளிச்‌ செய்து உகந்து ஸாதித்தருளி; அன்றைக்கன்றாடம்‌ ஸாதித்த வர்த்தத்னத ஸ்வார்த்தமாகப்‌ (பரார்த்தமாக இல்லாமல்) பட்டோலை கொண்டு ஐயர்‌-வடக்குத்‌ திருவீதிப் பிள்ளை- சேர்த்துக்‌ கட்டி வைக்க; ஒரு நாள்‌ நம்பிள்ளையை அமுது செய்தருள விண்ணப்பஞ் செய்ய; உடனே புறப்பட்டருளி தாமே திருவாராதனஞ் செய்கிறோமென்று முயன்ற வளவிலே பட்டோலைக் கட்டைக் காணா, ஒரு ஓலையை வாங்கி வாசித்தருளி,“இதென்னன்‌ புது?!” என்று கேட்க, ஐயர்‌, ”தேவரீர் ஸாதித்‌தருளின அர்த்தத்தை விஸ்மரியாமைக்குக்‌ குறிப்பாக இட்டு வைத்‌தேன்‌” என்று விண்ணப்பஞ் செய்ய; **ஆகில்‌ திருவாராதனம்‌ நீரே செய்யும்‌” என்று நியமித்து பட்டோலைக் கட்டை யிறக்கி நெடும்‌ போது சோதித்து, பெரியவாச்சான் பிள்ளையையும்‌ சிறியாழ்‌வான் அப் பிள்ளையையும்‌ “நீங்கள்‌ இந்த விரசைப்‌ பார்த்துக்‌ கொண்‌டிருங்கோள்‌” என்று சடக்கென வமுது செய்தருளித்‌ தாமுமங்கே யெழுந்தருளி பின்னும்‌ தேடும் போது கடாக்ஷித்தருளி, “யானைக்‌ கோலஞ் செய்தாப் போலிருக்கிறது’” என்று ஒருவர்க்கொருவர்‌ அருளிச் செய்து கொண்டு உகந்திருக்கச்‌ செய்த நம் ஐயரை யழைத்தருளி, : “நீர்‌ இப்படிச்‌ செய்ததென்‌? ஆச்சான்‌ பிள்ளை பண்ணலாமோ? நாமும்‌ பண்ணுவோமென்று ஆக்ரஹித்துச்‌ செய்தது போலே யிருக்கிறது’ என்று பிள்ளை சீறி யருள, ஐயர்‌ நடு நடுங்கி சோகித்து மோஹித்துத்‌ தெளித்து ‘ஐயா! அடியேன்‌ அப்படிச்‌ செய்திலேன்‌; விஸ்மரித்தால்‌ பார்த்துக் கொள்ளச்‌ செய்தேன்‌” என்ன, ”அதற்கு இருபத்தி நாலாயிரப் படியுண்டே,- என்ன, :’ ‘அவிவேகம்‌ வந்தது”’என்று; திருவடிகளிலே விழ, க்ஷமித்‌தோம்‌:’ என்‌றருளிச் செய்து, ‘ ‘நீர்‌ ஒரு அவதார விசேஷமென்றிருக்கிறோம் ; நாம்‌ ஜீயர்‌ ப்ரஸாதமாகச்‌ சொன்ன அர்த்தத்தில்‌ ஒரு-ச-து-போடாமல்‌ எழுதினீர்‌;(தீபா உத்பன்ன ஜ்வாலை போல் 9000 படியே 36000 படியாக விரிந்தது ) உம்முடைய ஸாமர்த்யத்தை என்னென்று சொல்லுவோம்‌?” என்று மிகவும்‌ ப்ரியப்பட்டு,மாதவருக்கு ஓர் அதிசயம்‌ வேணும்‌”! என்று “திருவுள்ளம்‌ தோன்ற நமக்கு ப்ராண ஸுஹ்ருத்தாம்‌; ஜீயருடைய பூர்வாச்ரமத்தின்‌ திருநாமத்தை யுடையராய்‌ நமக்கு- அபிமதரா யிருப்பர் ரொருவரா கையாலே அவரைக் கொண்டு இத்தை ப்ரவர்த்திப்போம்‌!? என்ன ஐயரும்‌ மிகவுமுகந்து “அப்படியே செய்தருள வேணும்‌”” என்று தீர்க்க ப்ரணாமம்‌ பண்ண, உடனே பட்டோலைக் கட்டை யெடுத்துச்‌ சிறியாழ்வானப் பிள்ளை கையிலே ப்ரஸாதித்தருனி, “இத்தை நாலைந்து அலேகத்திலே ஒரு ஊர்த்வமாம்‌ படி பண்ணி இத்தை பஹு முகமாகப்‌ ப்ரவர்த்‌திப்பியும்‌” என்றை நியமித் தருள; “அதற்கு அடியேன்‌ வல்லேனோ? அதிகாரங் கிடைக்குமோ?”என்றாற் போலே சில விண்ணபஞ் செய்ய, :’அது உமக்கு பரமோ?-ஜீயர் கடாக்ஷம்‌ முன் நிற்கும்‌ திரு நாமமுடையீரன்றோ? ஒரைதிஹ்யமுண்டு–கேளும்‌, துன்னு புகழ்க் கந்தாடைத்‌ தோழப்பர்‌ ஸ்வப்நத்‌திலே பேரருளாளப்‌ பெருமாள்‌,

    ஜகத் ரஷா பரேந அநந்தோ ஜநிஷ்யத் யபரோ முநி: |
    ததரஸ்ரயாஸ் ஸதா சாரா ஸாத்விகாஸ் தத்வ தர்ஸிந : ॥

    உலகத்தைக்‌ காப்பாற்றுவதில்‌ ஊற்றமுடைய திருவனந்‌தாழ்வான்‌ [ராமாநுஜ முநிவராக மட்டுமன்றி] மற்றொரு முநிவராகவும்‌ அவதரிக்கப்‌ போகிறார்‌. [அப்போது] அவரை ஆச்ரயிக்குமவர்கள்‌ ஸதாசாரமும்‌ ஸத்துவ குணமும்‌ தத்துவ ஜ்ஞானமும் உடையரா யிருப்பர் –என்று அருளிச்‌ செய்திருப்பது முண்டு,-திருவனந்தாழ்வான்‌ எம்பெருமானருடைய அவதாரமானாப்‌போலே இன்னமும் ஓரு அவதாரமும் செய்யப்‌ போகிறார்‌ -அவர்‌ முப்பத்தாறாயிரப்‌ பெருக்கராய்‌ இத்தை ப்ரவர்‌த்‌திப்பிக்கப் புகுகிறார்‌ -நீர்‌ ஓராண்‌ வழியாய்‌ நடததிப் போரும்‌” என்று பட்டோலைக்‌ கட்டை ப்ரஸாதித்தருளினார்‌. அவரும்‌ அஞ்சு (5) ஸம்புடமாக ஏறி யருளப்‌ பண்ணித்‌ தம் குமாரருக்குப்‌ பிரஸாதித்தருளினார்‌.

    நம்பிள்ளைக்கு இரண்டு தேவிகளுண்டாயிருக்க, மூத்த தேவிகள்‌ ஒரு நாள்‌ தளிகைக்குச்‌ செய்ய இளைய தேவிகள் ஒரு நாள்‌ தளிகைக்குச்‌ செய்ய இங்ஙனே நடந்து செல்கிற நாளில் ஒரு நாள்‌ மூத்த தேவியாரை யழைத்து, ‘*நீ நம்மை புத்தி பண்ணி யிருக்கும்படி. சொல்லிக் காண்‌” என்ன, அவளும்‌ அஞ்ஜலித்து லஜ்ஜாபயங்களநுவர்த்திக்க , வணக்க வொடுக்கமுடனே ‘தேவரிீர்‌ நம்பெருமாளுடைய அபராவதாரம்‌ அடியேனுக்கு ஆசார்யர்‌” என்றும்‌, திருவடிகளிலே பண்ணும்‌ கைங்கர்யங்கள்‌ ஸத்தா தாரகமான ஆசார்யாநுவர்த்தநம்‌ * என்றும்‌ நினைத்திருப்பன்‌” என்று விண்ணப்பஞ் செய்ய, ‘*நல்லது” என்று கேட்டு, இளைய தேவியாரை யழைத்து “நீ நம்மை நினைத்‌திருக்கும்படி யென்‌?” என்று கேட்டருள , அவளும்‌ லஜ்ஜாபயங்களுடனே ‘தேவரீர்‌ பர்த்தா,அடியேன்‌ பார்யை என்றன்றோ நினைத்திருக்கும்‌ படி என்று விண்ணப்பஞ்‌ செய்யக்‌ .கேட்டு, பிள்ளை மூத்த தேவிகளைப்‌ பெருமாள்‌ தளிகைக்கு ப்ரதி தினம்‌ செய்வதாக நியமித்து இளைய தேவியை தத் பரிசாரக க்ருத்யையாக நியோகித்து இப்படிச் செல்லுகிற வளவிலே மூத்த தேவி ருதுவாய்‌ தூரஸ்தையான போது இளைய தேவி தளிகைக்குச்‌ செய்தால்‌ எம்பெருமானைத்‌ திருவடி விளக்கி அமுது செய்வித்தருளித்‌ தமக்கபிமதராய்‌ உத்க்‌ருஷ்ட ஜந்ம ஜாதராய்‌ வேதகப் பொன் போலே யிருந்துள்ள பரம ஸத்வ நிஷ்டரான ஸ்ரீவைஷ்ணவாக்ரகண்யர்‌ கர ஸ்பர்ஸமாக்கி அமுது செய்தருளுவர்‌. இத்தால்‌ இளைய தேவிகளுக்கு பாவ சுத்தி போராமையாலே பகவத் த்ருஷ்டி பூதமானாலும்‌ நியத ஸத் பாத கர ஸ்பர்சமும்‌ அவச்யாபேக்ஷிதமென்று கருத்து.

    நம்பிள்ளைக்கு இளைய தேவிகளிடத்திலே ஒரு குமாரர்‌ திருவவதரிக்க, முதலிகள்‌ வந்து பிள்ளைக்கறிவிக்க, அருகிருந்த திருப்‌பேராச்சான்‌, ”அடியேனுக்கு ஒரு திருத் தமையனார்‌ திருவவதாரம்‌”!என்று உகந்தருளினார்‌. இத்தால்‌ ஆசார்ய புத்ரன்‌ அத்ய ஜாதனேயாகிலும்‌ பஹுமந்தவ்ய னென்று கருத்து. பிள்ளையும்‌ ஜாத கர்மம்‌ செய்து, பன்னிரண்டாம்‌ நாள்‌ நாம கரணத்திலே தூவி யம்புள்‌ என்று திரு நாமம்‌ சாத்தி யருளினார்‌.

    நம்பிள்ளை பின்பழகிய பெருமாள்‌ ஜீயர்‌ மடத்திலே யொரு நாள்‌ எழுந்தருளி யிருக்க, ஸ்ரீபாதத்து முதலிகளெல்லாரும, “ஆழ்வாருடைய அவஸ்தை யுண்டாய்ப் போர வேண்‌டியிரா நின்றது; ப்ராப்ய ஸித்திக்கு இப்போது ஸ்த்ர்யந்ந பாநாதிகளாலே கூடி யிருக்கிற , நாங்கள்‌ என்‌ செய்யக் கடவது?‘ என்று விண்ணப்‌பஞ் செய்ய பிள்ளையும்‌, ”இங்கு அவஸ்தை பிறந்ததே யாகிலும்‌ (பிறக்காமல் இருந்தாலும் )ஸதாசார்ய கடாக்ஷ விசேஷத்தாலே ஸ்‌தூல சரீரம்‌ கழித்து ஸூக்ஷ்ம சரீர மோசநத்துக்கும்‌ கைங்கர்ய ப்ராப்திக்கும்‌ நடுவே அவ் வவஸ்‌தையைப்‌ பிறப்பித்து எம்பெருமான்‌ காரியம்‌ செய்யும்‌” என்‌றருளிச்‌ செய்தார்‌. இதுக்கு ப்ரமாணம்‌ ‘ந கலு பாகவதா யம விஷயம்‌ கச்சந்த்’‘[பாகவதர்களால் வைஷ்ணவர்கள்‌ யமனுடைய தேசத்தை யடையார்‌ ] என்றும்‌, அவன்‌ தமர்‌ எவ் வினையராகிலும்‌ எம் கோனவன்‌ தமரே என்றொழிவதல்லால்‌ நமன்‌ தமரால்‌ ஆராயப்‌ பட்டறியார்‌ கண்டீர்‌ [முதல திகு. 53) என்னுமிதுவே யிறே. ஆகையால் இவ் வாத்மாக்களுக்கு உஜ்ஜீவனத்தில்‌ ஊன்றிப் போரும்‌ எம்‌ பெருமான்‌ ஸ்‌தூல சரீர வியோகாதந்தரத்திலே அர்ச்சிராதி பத கமந காலத்திலே ஸ்வ சரீரோபேக்ஷயைப்‌ பிறப்பித்து ஸ்ரீமாலாகாரர்க்குத்‌ தன்‌ திருவடி வழகைக் காட்டினாப் போலே இவனுக்கும்‌ வடிவழகைக் காட்டி பரபக்தி பரஜ்ஞாந பரம பக்திகளை யுண்‌டாக்கிக்‌ கைக் கொண்டருளும்‌ படி.

    நம்பிள்ளை பெரிய கோயில்‌ வள்ளலாரைக் குறித்து *குலந்தரும்‌[திருமொழி 1-1-9] என்கிற பாட்டில்‌ முதற்பதத்துக்குத்‌ தாத்பர்யமருளிச்‌ செய்ய வேணும்‌ என்ன, அவரும்‌, “’முருட்டுத் திருப்பதியனான வென்னை நம்பூர்‌ குலத்துக்கு சேஷமாக்கினால்‌ குலந்தரும்‌:’ என்றருளினார்‌. அதாவது, பண்டைக் குலத்தைத்‌ தவிர்த்து தொண்டக் குலத்திலே மாசில்‌ குடியிலே ஸ்ரேஷ்ட ஜந்ம ஜாதனாய்‌ ஆசார்ய வம்ச பரம்பரைக்கு இஷ்ட விநியோகார்‌ ஹனாகை–ஸ்ரீ வைஷ்ணவோத்தம குல மென்றநுஸந்திக்க வேணு மென்‌றபடி-

    *அவதாரமிருக்கும்படி யென்‌?’ என்று முதலிகள்‌ நம்பிள்ளையைக்‌ கேட்க, பிள்ளையும்‌, *மெய் வெளுத்து நாக்கு வற்றி யிருக்கும்‌’என்றருளினார்‌. “முதலிகளும்‌ “அது வென்‌?‘ என்று கேட்சு, “அதிகாரி பெறாமையாலே மெய் வெளுத்திருக்கும்‌; பெற்றாலும்‌ ப்ரயோஜநாந்தர பரராகையாலே மயிர்ப்பட்ட சோறென்று நாக்கு ‘வற்றி யிருக்கும்‌’? என்றருளினார்‌. ஆகையால்‌ ஆசார்யவானான
    அநந்ய ப்ரயோஜநனா யிருக்குமதிகாரி எம் பெருமான்‌ தேடிப் பார்க்‌கிலும்‌ துர் லபனென்‌றபடி.

    முதலிகளெல்லாருங் கூடி பெரிய கோயில்‌ வள்ளலாரை ஸ்ரீவைஷ்ணவர்களென்று இவர்களுக்குத்‌ திரு நாமமாகைக் கடி யென்‌?’,என்று கேட்க -ஸ்ரீ யபதி புத்ரராகையாலும்‌, ஸ்ரீ மான் பிதாவாகையாலும்‌, ஸ்ரீ மாதா வாகையாலும்‌ ஸ்ரீமானுடைய வைபவத்தை யறிகையாலும்‌ ஸ்ரீமான்‌ இவர்கள் வைபவ மறிகையாலும்‌, ஸ்ரீமத் பதத்திலே பிறக்கையாலும்‌, ஸ்ரீ புருஷகாரமாக வளர்கையாலும்‌ இவர்களுக்கு ஸ்ரீவைஷ்ணவர்களென்று நிரூபகமாய்த்து!” என்று அவரருளிச்‌ செய்தாரிறே.

    நம் பிள்ளையைச்‌ சில ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ ‘*ப்ரபந்நனுக்குத்‌ தஞ்சமாக விச்வஸித்திருக்குமர்த்தமேது?” என்று கேட்க பிள்ளையும்‌, “ஸகல ப்ரமாண ஸார தமமான மந்த்ர ரத்நார்த்தத்தையே
    விச்வஸித்திருப்பான்‌. த்வயத்திலர்த்தத்தை விச்வஸித்திருந்‌ தானால்‌ எம்பெருமானைப் பற்றியிருக்கும்‌; ஆசார்யனைப் பற்றின ஊற்றம் உண்டாகில் ஸ்ரீ வைஷ்ணவர்களைப் பற்றி யிருக்கும்‌; இனி எம்‌பெருமானையே பற்றி யிருக்கை -தேவதாந்தர பஜந ஸமமென்று ஆசார்யன்‌ திருவடிகளையே கட்டிக் கொண்டு கிடக்க, எம்பெருமாள்‌ இவனளவிலே பிச்சேறி யிருக்கும்‌. இவன்‌ ஸ்ரீவைஷ்ணவர்களைப்‌ பற்றி யிருக்க எம்பெருமானோபாதி ஆசார்யனும்‌ இவன்‌ மேல பிச்சேறி யிருக்கும்‌. இத்தால் , தத் தேசிக ததீய (பகவத் ஆச்சார்ய பாகவத மூன்றுக்கும் இம் மூன்று பதங்கள்)சரம நிஷ்டை யுண்டாகவே அம் மூவரும்‌ இவன்‌ விஷயத்திலே ஆஸக்தராவர்சுள்‌- என்‌றருளிச் செய்தார்‌,

    நம்பிள்ளை யருளிச் செய்த வார்த்தை:– ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ ஈச்வரனுக்கு ஆத்ம ஸமாநர்‌; ப்ராண ஸமாநர்‌; திருஷ்டி ஸமாநர்‌,பாஹு ஸமாநர்‌; ஆபரண ஸமாநர்‌; ஆயுத ஸமாநர்‌; பாத ஸமாநர்‌”
    பாத ரேகா ஸமாநர்‌; பாதுகா ஸமாநர்‌; சாயா ஸமாநர்‌; ஜிஹ்வா ஸமாநர்‌,

    அதெங்ஙகனே யென்னில்‌;
    *ஜ்ஞாநீத்வாத்மைவ மேமதம்‌ (கீதை 7-18)பகவத் ப்ராப்தி காமனான ஜ்ஞாநி எனது ஆத்மா வென்பது என் கருத்து] என்கிற அநந்ய ப்ரயோஜந ஜ்ஞானத்தைப்‌ பற்றவும்‌-ஆத்ம ஸமாநர்‌-என்னது உன்னதாவி உன்னது என்னதாவி – –;
    *மம ப்ராணா ஹி பாண்டவா: (பாரதம்‌ உத்‌, 90-32)[பாண்டவர்கள்‌ எனது ப்ராண பூதர்கள்‌ அல்லவா ] என்கிற பராபிமானத்தைப் பற்றவும்‌ -ப்ராண ஸமாநர்‌-;
    *யே ப்ரபந்நா மஹாதமாநஸ்தே மே நயந ஸம்பத: [ப்ரபந்நர்களான மஹாத்மாக்கள்‌ எனக்குக்‌ கண்ணான செல்வங்கள்‌ ] என்கிற பாமர ஜநோஜ்ஜீவந கர கடாக்ஷ த்‌ருஷ்டித்வத்தைப்‌ பற்றவும்‌–திருஷ்டி ஸமாநர்‌-;
    *ராமஸ்ய தக்ஷிணோ பாஹு. (ராமா , ஆ, 34-13) [ராம பிரானுடைய வலது கை போன்றவர்‌ இளைய பெருமாள்‌] என்கிற ததிச்சா கத ப்ரவர்த்தந பாஹுத்வத்தைப்‌ பற்றவும்‌)–பாஹு ஸமாநர்‌;-
    சாப மாதாயா ஆத்ம விபூஷணம்‌ [தமக்கு ஆபரணமாயிருக்கிற தநுஸ்ஸை வாங்கி] என்ற ஆபரணகோட்யந்தர்‌ பாவத்தைப்‌ பற்றவும்‌–ஆபரண ஸமாநர்‌;-;
    *அலர்மகள்‌ கேளவன்‌ கையாழி-இடையே இராமானுசமுநி (இரா, நூற்‌ 33) என்கிற ப்ரதிபஷ நிரஸன சீல ஸுதர்சந ஸாம்யத்தைப்‌ பற்றவும்‌-ஆயுத ஸமாநர்‌=; *ஜங்கம ஸ்ரீவிமாநாநி ஹ்ருதயாநி மநீஷிணாம்‌ [ஜ்ஞானிகளின்‌ இதயங்கள்‌ எம்பெரூமானுக்கு நடமாடும்‌ ஸ்ரீவிமானங்கள்‌ –கர்ப்ப க்ருஹங்கள்‌ ] நடையாவுடைத்‌ திருநாரணன்‌ (திருவாய்‌ 3-7-4) என்கிற கௌரவத்தைப்‌ பற்றவும்‌-பாத ஸமாநர்‌–;
    ஸ்ரீ ய:பதி பதத்வந்தத்வங்களுக்கு “சடகோபன்‌”! என்கிற பாதுகா த்வத்தைப்‌ பற்றவும்‌-பாதுகா ஸமாநர்‌–;
    *நிழலும் அடி தாறுமானோம்‌
    (பெரிய“திரு 31) என்கிற அவிநா பாவ ப்ராதீந ஸத்தாதிமத்தையைப்‌ பற்றவும்‌–பாத ரேகா ஸமாநர்‌-சாயா ஸமாநர்‌-;
    *ரஸாந்‌ பக்தஸ்ய ஜிஹ்வாயாமஸ்நாமி ஷட் ரஸங்களையும்‌ பக்தனுடைய ரஸநேந்தரியமான நாக்கிலே புஜிக்கிறேன்‌ ]என்ற ஸ்வாநுபவ ஸாதநத் வத்தைப்‌ பற்றவும்‌ -ஜிஹ்வா ஸமாநர்‌ -கண்டு தானே அருளுகிறான் -அனைத்தும் ஸ்ரீ பக்தாநாம் என்று இருப்பவன் அன்றோ-ஜிஹ்வாத் யகில அவயவ ஸமானர் களிறே ஸ்ரீ வைஷ்ணவர்கள்‌.

    ஸ்ரீவைஷ்ணவத்வமாவது-மூன்று ப்ரகாரமாயிருக்கும்‌,-எங்ஙனே யென்னில்‌ ஸத்கார யோக்யரென்றும்‌,
    ஸஹவாஸ யோக்யரென்றும்‌, ஸதாநுபவ யோக்யரென்றும்‌.

    இதில்‌ ஸத்கார யோக்யராவார்‌-ரூப தாம ப்ராதாத்யர்‌, உச்சாரண ப்ராதாந்யர்‌,அபிமானப்‌ ப்ராதாந்யர்‌, ஸஹவாஸ யோக்யராவார்‌–ஜ்ஞாத ப்ராதாந்யர்‌,அனுஷ்டான ப்ராதாந்யர்‌, அங்கீகார ப்ராதாந்யர்‌,
    ஸதாநுபவ யோக்யராவார்‌ – ஆர்த்தி ப்ராதாந்யர்‌, அபிநிவேச ப்ராதாந்யர்‌- அபிருசி ப்ராதாந்யர்‌.

    இதில்‌ த்யாஜ்யோபாதேயத்தைத்‌ தெளிய வறியாதவர்களாய்‌ ஸம்பந்த மாத்ரமே யானவர்கள்‌ நமஸ்கார யோக்யர்‌-தெளிந்த ஜ்ஞாநிகளான ஸ ப்ரஹ்‌ம சாரிகள்‌ *போதயந்த:பரஸ்பரம்‌ (கீதை 10-9) பண்ண யோக்யர்‌, ஆசார்யனும்‌, ஸதாசார்ய ஸத்ருசரும்‌ உத்தேச்ய தயா அநுவர்த்தநீய ரென்ற படி.

    (நாதம் பங்கஜநேத்ர ராம யமுநாவாஸ் தவ்ய மாலாதரான்
    யோகீந்த்ரம் குருகேசசந்திரஜலதிம் கோவிந்த கூராதியௌ
    பட்டார்யம் நிகமாந்தயோகி ஜகதார்சார்யௌ சக்ருஷ்ண த்வயௌ
    வந்தே மாதவ பத்மநாப ஸூமன கோசல தேவாதிபான்
    —திருவாய் மொழிப் பிள்ளை அருளிச் செய்தது

    திருவருள் மால் சேனை முதலி சடகோபன் நாத முனி -சீர் உய்யக் கொண்டார் மணக்கால் நம்பி சென்றாம் ஆளவந்தார்
    குரு மாலாதரர் குருகைப் பிரார்க்கு அன்பாம் எதிராசர் கோவிந்தர் கூரேச பட்டர் வேதாந்த முனி
    இரு கண்ணற்கு அன்புடைய நம்பிள்ளை இவர் ஈடளித்தற்கு ஏய்ந்த மாதவர் பற்பநாபர் இவர் அருளாளர்
    திருவடி ஊன்றிய தேவப்பெருமாள் கைக்கொண்டு அருளும் திருமலை ஆழ்வார் பதங்கள் முன்பு என்னுள் சேர்ந்தனவே
    –மா முனிகள் அருளிச் செய்தது)

    இனி ஸ்ரீவைஷ்ண விஷயமாக த்ரிவித கரணங்களாலும்‌ அபராதம்‌ பண்ணாதொழிவான்‌. ப்ரஹ்ம ஹத்திக்கு சிகா யஜ்ஜோவீத தர விப்ர மாத்ரமே போருமாகையாலே பாகவதாபசாரத்துக்‌கும்‌ ரூப நாம தர வைஷ்ணவத்வ மாத்ரமே போரும்‌ -ப்ரஹ்மவிதக்‌ரேஸரை ப்ரபதந்நாதிகாரி விஷயாபாசாரம்‌ உடலும்‌ உயிரும்‌ பிரியும்‌படியாய்‌ ஸத்தாஹாநியாம்‌படி யாயுமிருக்கும்‌. *தஸ்ய ப்ரஹ்ம விதாகஸா [அந்த ப்ரஹ்ம ஜ்ஞாநியபசாரத்துக்கு] *ஸங்கே ப்ருஸம்‌ ப்ரஹ்ம விதோ வமாநாத்‌ [ப்ரஹ்ம ஜ்ஞானியை அவமதிப்பதாலே உண்டாயிற்றென்று சங்கை பண்ணுகிறேன்‌ ] என்றும்‌, *ஹந்தி ஸரோயம்ஸி ஸர்வாணி பும்ஸோ மஹ ததிக்ரம: [மஹான்களிடத்தில்‌ அபசாரமானது புருஷனுடைய ஸமஸ்த மங்களங்களையும்‌ நாசமடைவிக்கும்‌] என்றும்‌ இந்த பாகவதாபசார விஷயமாக
    ஸ்ருதி ஸ்ம்ருதி தீஹாஸ புராணாதிகளிலே ப்ரமாண சதங்கள்‌ கோஷியா நின்றதிறே, *வையத் தேவரான இவர்கள்‌ பாத தூளி பட்டு இவ் வுலகம்‌ பூதமாம்‌ படி) *ஸ்ரீதரஸன் தொல்‌ புகழ் பாடி ஸவிலாஸ ஸஞ்சாரம்‌ பண்ணி வருமது கண்டு; *த்ரவந்தி தைத்யா:ப்ரணமந்தி தேவதா: [அசுரர்கள்‌ ஓடுகிறார்கள்‌, தேவர்கள்‌ வணங்குகிறார்கள்‌] என்றும்‌, *உன் தமர்க் கென்றும்‌ நமன் தமர்‌ கள்ளர்‌ போல்‌ (திருமொழி 8-10-7) என்றுஞ் சொல்லுகிறபடியே தூரே-இவர்களைக்‌ கண்ட மாத்திரத்தில்‌ க்ரூரரான அஸுர ராஷஸ யம படாதிசள்‌ காடேறி விழுந் தாடவும்‌, ஜ்ஞாநாதிகாரன தேவ ருஷி ஜாதியிலுள்ளார்‌ அஞ்ஜலித்து விரும்பி ஸேவிக்கும்‌ படியுமிறே இவர்கள்‌ வைபவமிருப்பது என்‌றருளினாரிறே

    ஒருகால்‌ யதி ராஜ தாஸர்‌ பிள்ளை திருமாளிகைக்கு நம்பிள்ளை எமுந்தருளி அவருடைய ஸம்பத்தைக்‌ கண்டு உகந்தெழுந்தருளி யிருக்க ஸ்ரீபாதத்து முதலிகள்‌ ‘(இதுக்கடியென்‌?” என்று கேட்க,பிள்ளையும்‌, ‘த்ருஷ்டத்தில்‌ தனக்குண்டான ஸம்பத்தைத்‌ தனக்கே என்கை நரக ப்ராயம்‌; தனக்கும்‌ எம்பெருமானுக்கு மென்கை ஸ்வர்க்க ப்ராயம்‌; அவனுக்கும்‌ அவனடியாருக்கு மென்கை பரமபத ப்ராயம்‌” என்றருளினார்‌. ஆகையாலே தனக்குண்டான ஸம்பத்தைத்‌ ததீயருக்குமாக்கி நெய்யமரின்னடில்‌ நிச்சல்‌ பாலொடு (திரு வாய்‌ 8-8-2) என்கிற மாற்றிலி சோறிட்டுத்‌ திருமாலடியார்களைப்‌ பூசிக்கைக்கு அவ் வருகு பட்ட தொன்றுமில்லை யிறே என்று கருத்து-(கொடுக்கில் கள்வனாம் கொள்ளில் மிடியனாம் -கர்தவ்யம் இருவருக்கும் -இதனால் அது இல்லை)

    இப்படி பிள்ளை *ஊரும்‌ நாடும்‌ உலகமுமெல்லாம்‌ கலி யிருள்‌ நீங்கிப்‌ பெரிய கிதயுகம்‌ பற்றிப்‌ பேரின்ப வெள்ளம்‌ பெருகும்படி எல்லாரையும்‌ திருத்தித்‌ திருமாலுக்கே யாக்கிச்‌ சிறிது காலம்‌ வாழ்ந்தருளி, திருமேனியிலே நோவு சாத்தி மிகவும்‌ அவஸந்நராய்‌ முதலிகளெல்லாரையும்‌ தண்டனிட்டு தீர்த்தங் கொண்டு, அமுது செய்யப் பண்ணி முதலிகள்‌ சேஷமும்‌ அங்கீ கரித்தருளி திருநாட்டுக்‌ கெழுந்தருளும் போது ஸ்ரீ பாதத்து முதலிகள்‌ ப்ரஹ்‌மவல்லி, சூழ்‌ விசும்பணிமுகில்‌ முதலாக ஸேவிக்க, கோயிலுக்கு நேரே நடுவில்‌ திருவீதிப் பிள்ளை பட்டர்‌ திருமடியிலே திருமுடியையும்‌ பின்பழகிய பெருமாள்‌ ஜீயர்‌ திருமடியிலே திருவடிகளையும்‌ வைத்துக்‌ கண்‌ வளர்ந் தருளி நஞ்சியர்‌ திருவடிகளை த்யாநித்துக்‌ கொண்டு ப்ரஹ்‌ம ரந்த்ரத்தாலே திருநாட்டுக் கெழுத்தருள; பெரியவாச்சான்‌ பிள்ளை, நடுவில்‌ திருவிதிப் பிளளை பட்டர்‌, வடக்குத் திருவீதிப்‌ பிள்ளை, பின்பழகிய பெருமாள்‌ ஜீயர்‌ முதலாக எல்லாரும்‌ கடலோசைப்‌ போலே பெரு மிடறு செய்து கூப்பிட்டுக் கொண்டு விழுந்து ஆசார்ய விரஹ அஸஹராய்‌ மோஹித்துக்‌ கிடந்து சதைர்‌ மோஹந்‌ தெளிந்து சோகாகுலராய்‌ கண்ணீர்‌ பெரு வெள்ள மிட்டுப்‌ பெருக பஹுதா ப்ரலாபித்துத்‌ தங்களிலே தேறி நின்று,பரியட்டம்‌ திருமாலை யுடனே பெருமாள்‌ பரிகர மனைத்தும்‌ வந்து ஸேவிக்க பிள்ளை குமாரர்‌ தூவியம் புள்ளைக்‌ கொண்டு ப்ரஹ்ம மேதத்தாலே ஸம்ஸ்கரித்துப்‌ பள்ளிப் படுத்தி யருளி ஸ்ரீ பாதத்து முதலிகளெல்லாரும்‌ திருமுடி விளக்குவித்துக்‌ கொள்ள;

    நடுவில்‌ திருவீதிப்பிள்ளை பட்டரும்‌ திருமுடி விளக்க வைத்துக்‌ கொள்ள, அவருக்கு தேரே ப்ராதாவா யிருப்பாரொருவர்‌ (இவரே சர்வஞ்ஞா பட்டர் -வாக் விஜய பட்டர் இவரது தமையனார் -இருவரும் வேத வ்யாஸ பட்டரின் திருக் குமாரர்கள் )பட்டரைப்‌ பார்தது, திருக் கலி கன்‌றி தாஸர்‌ பரம பத ப்ராப்தி பண்ணினதுக்கு எங்கள்‌ கூர குலத்திலே பிறந்தவரொருவர்‌ தலை க்ஷவரம்‌ பண்ணுவித்துக்‌ கொண்டது அவத்யமன்றோ? கூர குலத்துக்‌கு இழுக்கன்றோ?” என்ன, பட்டரும்‌ அவரைப்‌ பார்த்து ‘ அப்படியா! ஐயோ உங்கள்‌ கூர குலத்துக்கிழுக்காய்ப்‌ பிறந்தேனே; இக்‌ குறையை நீர்‌ என்றைக்குத்‌ தீர்த்துக்‌ கொள்ளக் கடவீர்‌?’” என்று வ்யதிரேகம்‌ சொல்லிப்‌ போக விட, அவர்‌ இத்தைப்‌ பொறுக்க மாட்டாமல்‌ பெருமாள்‌ ஸன்னிதியிலே சென்று லிண்ணப்பஞ்‌ செய்ய அத்தைப்‌ பெருமாளும் கேட்டு பட்டரை யழைத்து வர விட்டு அர்ச்சக முகேந” தாமிருக்க நீரிப்படிச்‌ செய்யலாமோ?” என்ன, பட்டரும்‌, “பெரிய திருவோலக்த்திலே அடியேன்‌ செய்த முறை கேட்டைப்‌ பொறுத்தருள வேணும்‌” என்று தண்டனிட பெருமாளும்‌ ‘இதென்‌ நினைத்துச்‌ சொல்லுகிறபடி?” என்று கேட்டருள, இவரும்‌, ‘-பிள்ளையையும்‌ அடியேனையும்‌ பாராதே ஸர்வஜ்ஞரான தேவரீரிப்படிக்‌ கேட்டருளுவதே! நாயன்தே! நம்பிள்ளை திருநாட்டுக் கெழுந்தருளினால்‌ அவர்‌ திருவடிகளில் ஆச்ரயித்த நான்‌ ஆழ்வானுடைய சேஷத்வ, பாரதந்தர்யத்துக்குகத் தகுதியாக கூர குலத்திலே பிறந்த பின்‌ தாஸ்ய க்ருதயமான மோவாயும்‌ முன்கையும்‌ வபதம்‌ பண்ணுவித்துக்‌ கொள்ள வேண்டியிருக்க, அத்தைச்‌ செய்யாதே சிஷ்ய புத்ரர்களுடைய க்ருத்யமான தலை மாத்ரம்‌ ஷவரம்‌ பண்ணுவித்துக்‌ கொண்டதுக்கு தேவரீர்‌ முனிந்தருளக்‌ கூடுமோ?” என்று விண்ணப்பஞ்‌ செய்ய பெருமாளுமது கேட்டு இசைந்து ஸந்துஷ்டராய்‌ பட்டருக்கு தீர்த்தம்‌ திருமாலையுடனே பரியட்டமும்‌ ப்ரஸாதித்து உபலாளித்‌துத்‌ திருமாளிகை யேறப்‌ போக விட்டருளினார்‌. அதந்தரம்‌ பிள்ளைக்குப்‌ பெருக்கத்‌ திருவத்யயதம்‌ நடத்தி யருளினார்கள்‌.

    லோகாசார்யன்‌ என்று திரு நாமம்‌ பெற்ற தன்னேற்றமும்‌-அரிய வருளிச்செயல்‌ பொருள்களறிந்துரைக்கப்‌ பெற்ற தன்னேற்றமும் – பரமபதம்‌ தம்‌ சிறுமுறிக்குச்‌ செல்லப் பெற்ற தன்னேற்‌றமும்‌ நம்பிள்ளைக்கன்றி மற்றொருவருக்கு மில்லையிறே.
    இவர்‌ தனியன்‌,
    வேதாந்த வேத்யாம்ருத வாரி ராஸோ : வேதார்த்த ஸாராம்ருத பூரமக்ர்யம்‌ |
    ஆதாய வர்ஷந்தம் அஹம்‌ ப்ரபத்யே காருண்ய பூர்ணம்‌ கலி வைரி தாஸம்‌

    [நஞ்சீயராகிய- அமுதக் கடலினிதும்‌ உயர்த்த வேதாந் தார்த்த சாரமாகிற அமுத வெள்ளத்தைக்‌ கொண்டு வர்ஷிக்குமவராய் கருணையால் நிறைந்துள்ள திருக்கலிகன்றி தாஸரை தஞ்சம் அடைகிறேன் –

    நமாமி தெள மாதவ ஸிஷ்ய பாதெள யத் ஸந்நிதம்‌ ஸூக்தி மயம்‌ ப்ரவிஷ்டா: |
    தத்ரைவ நித்ய ஸ்திதி மாத்ரி யந்தே வைகுண்ட ஸம்லார விமுக்த சித்தா: ॥

    [யாதொரு நம்பிள்ளை யுடைய ஆழ்வாஸர் ஆசார்ய ஸ்ரீ ஸூக்திகளால் நிறைந்த ஸன்னிதியில்‌ அந்வயித்தவர்கள்‌ ஸ்ரீவைகுண்டத்திலும்‌ ஸம்ஸாரத்திலும்‌ செல்லாத மனத்தினராய்‌ அந்த ஸன்னிதி யிலேயே நிலையான இருப்பை ஆதரிக்கிறார்களோ அந்த மாதவ (நஞ்சீயர்‌) சிஷ்யரான நம்பிள்ளையின்‌ திருவடிகளை வணங்குகிறேன்‌]

    வார்த்த உஞ்ச வ்ருத்த்யாபி யதீய கோஷ்ட்யாம்‌ கோஷ்ட் யந்தராணாம்‌ ப்ரதமா பவந்தி |
    ஸ்ரீமத் கலி த்வம்ஸந தாஸகாம்கே தஸ்மை கஸ்‌ஸ ஒக்தி மஹார்ணவாய

    [யாதொரு நம்பிள்ளையின்‌ கால க்ஷேப கோஷ்டியில்‌ பிறக்கும்‌ வார்த்தைகளில்‌ பிஷையாவது பெற்றவர்‌ (சிறிதாவது பெற்றால்‌ அது கொண்டு) இதர கோஷ்டிகளில்‌ தலைவர்களாக ஆகிறார்களோ அந்த ஸ்ரீஸூக்தி மஹார்ணவரான (ஆழ்வாராசார்ய வசனங்கள்‌ நிறைந்த பெருங்கடலான) திருக்கலிகன்றி தாஸர்‌ என்ற திருநாமமுடைய அந்த நம்பிள்ளையை வணங்குகிறேன்‌ ]

    நெஞ்சத்திருந்து நிரந்தரமாக நிரயத் துய்க்கும்‌
    வஞ்சக் குறும்பின்‌ வகை யறுத்தேன்‌ மாய வாதியர் தாம்‌
    அஞ்சப் பிறந்தவன்‌ சீமாதவனடிக் கன்பு செய்யும்‌
    தஞ்சத் தொருவன்‌ சரணாம் புயமென்‌ தலைக் கணிந்தே
    -இயல்பா சாத்துமுறைப் பாடல்-

    ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டரைப் பார்த்து உமக்கு ஆசார்ய விஷயத்தில்‌ க்ருஜ்ஞ்தை எத்தனை நாள்‌ நடக்கும்‌?” என்று கேட்க, பட்டரும்‌ “நம்பிள்ளை திருவடிகளில்‌ உபகார ஸ்ம்ருதி அடியேனுக்கு யாவதாத்‌மபாவி (ஆத்மாவுள்ளவரை–நித்யமாக) நடக்கும்‌ என்ன, அவரும்‌, ஆசார்ய விஷயத்தில்‌ உபகார ஸ்ம்ருதி யாவதாத்மபாவியோ! யாவதாத்ம பாவியோ!!” என்று ஈடுபட்டு திருவம்ச ப்ரபாவத்தாலே தெளிந்து பட்டர் திருவடிகளிலே ஆச்ரயித்து ஜ்ஞாநாதிகராய்‌ விட்டார்–

    பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் வைபவம் –
    அனந்தரம்‌ பிள்ளை ஸ்ரீபாதத்து முதலிகளைக்‌ கூட்டிக் கொண்டு பெரியவாச்சான் பிள்ளை தர்சதம்‌ நிர்வஹித்தருளா நிற்க, நடுவில்‌ திருவீதிப் பிள்ளை பட்டர்‌ பெரியவாச்சான்‌ பிள்ளையைப்‌ பார்த்தருளி, ”குரு பரம்பரையையும்‌ த்வயத்தையும்‌ உபதேசித்தவர்‌களோடு கேட்டவர்களோடு வாசியற ‘உத்தேச்யர்‌’ என்று ப்ரஸாதித்தீர்‌. பரம ஸாத்விகரான ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ உம்மை அநுவர்‌த்‌திக்கிறதற்கு என்‌ நினைந்திருப்பீர்‌?’” என்று கேட்டருள, ஆச்சான்‌ பிள்ளையும்‌, அடியேன்‌ அஹங்காரி யாகையலே(ஸாத்விக அஹங்காரம்) அடியேனுடைய அபிப்ராயத்தாலும்‌, ஸ்ரீவைஷ்ணவத்வம்‌ உண்டென்று நினைத்திருப்பன்‌, ஈச்வரன்‌ பெற்ற பிறவியாகையாலே ஸ்ரீவைஷ்ணவன்‌ என்று நினைத்திருக்கும்‌. (இனி இவர்கள்‌ என்‌ நினைத்‌திருக்கிறார்கள்‌?! என்று கூசிக் கொண்டிருக்கும்‌. இவர்கள்‌ என்னைக் கண்டு அநுவர்த்‌திக்கையாலே இவர்கள்‌ பக்ஷத்தாலும்‌ ஸ்ரீவைஷ்ணவத்வம்‌ உண்‌டென்றிருந்தது. ஆக, திரிவிதாபிப்ராயத்தாலும்‌ அடியேனுக்கு முப்புரி யூட்டின ஸ்ரீவைஷ்ணவத்வமுண்டென்று நினைத்திருப்பன்‌’ ”என்றருளினார்‌ ஆக, தரிவிதாபிப்ராயத்தாலும்‌ ஸ்வ வைஷ்ணவத்வம்‌ ஸித்தமாய்‌, ஸ்வ ஸ்லாக்யதா புத்தி ரஹிதமுமான புத்தி விசேஷம்‌ சொல்லப்பட்டது.

    ஆச்சான் பிள்ளை கோஷ்டியிலே ஸ்ரீ வைஷ்ணவர்கள்‌ திரள விருந்து “நாம்‌ லீலைக்கு விஷயமோ? இரக்கத்துக்கு விஷயமோ?” என்று விண்ணப்பஞ் செய்ய, ‘உடன்பட்டிருந்தோமாகில்‌ லீலைக்கு விஷயமாகிறோம்‌” என்றருளிச்‌ செய்தார்‌. [ஆச்சான்‌ பிள்ளையும்‌ -அஸ்ப்ருஷ்ட அஹங்காரரான நித்யரும்‌, நிவ்ருத்த அஹங்கரரான் முக்தரும்‌ அவன்‌ இனிமைக்கு விஷயமாகிறார்கள்‌. அஹங்கார மமகார வச்யராய்‌ இருந்து வைத்து அக் குறையுங்‌ கூட அறிய மாட்டாத ஸம்ஸாரிகள்‌ லீலைக்கு விஷயமாகிறார்கள்‌- ஸதாசார்ய ப்ரஸாதமடியான பகவத் ப்ரஸாதத்தாலே அஹங்கார மமகாரம்‌ அறிய வேணுமென்றிருக்கிற நாம்‌ (முமுஷு)௮வன்‌ இரக்கத்துக்கு விஷயமாகிறோம்‌ என்றருளிச் செய்தார்‌]. ஆக, ஸர்‌வ சேதனரைரயும்‌,சர்‌வேஸ்வரன்‌ அஹம்‌ மமதா புத்தி முக்தி விரக்தி யாஸக்தி விசேஷத்‌தாலே ஸ்வ மாதுர்ய காருண்ய லீலா விஷயமாக்கி விநியோகிக்கும் என்றபடி –

    ஆச்சான்‌ பிள்ளை கோஷ்டியிலே சிலர்‌ ஸ்ரீவைஷ்ணவர்கள்‌-எங்களுக்குத் தஞ்சமா யிருப்பதொரு வார்த்தை யருளிச் செய்ய வேணும்‌” என்ன, அவரும்‌, ‘*கலங்குகிறவனும்‌, கலக்குகிறதும்‌, கலங்கிக் கிடக்கிறவர்களும்‌, தெளிவிக்கறவனும்‌ தெளிகிறவனும்‌ தெளிந்திருப்பவனுமாயிறே இருப்பது. இதில்‌ கலங்குகிறவன்‌-ஜீவாத்மா; கலக்குகிறது–அசித்து; கலங்கி இருப்பர்கள்‌–ஸம்ஸாரிகள்‌; தெளிவிக்கிறான்‌–ஆசாரியன்‌; தெளிகிறான்‌ சேதனன்‌; தெளிந்திருக்கிறான்‌–ஈச்வரன்‌, ஆகையாலே ஆசார்‌யோபதேசேந தெளிந்தவன்‌ கலங்குகிற தன்னையும்‌ கலக்குகிற ப்ரக்ருதியையும்‌ கலங்கிக் கிடக்கிற ஸம்ஸாரிகளையும்‌ தஞ்சமன்‌றென்று கை விட்டு, தெளிவிக்கிற ஆசார்யனையும்‌ தெளிந்திருக்கும்‌ ஈஸ்வரனையும்‌ பற்றுகை காண்‌ இவ் வாத்மாவுக்கு ஸ்வரூபம்‌” என்‌றருளிச் செய்தாராயிற்று.

    ஆச்சான்‌ பிள்ளையை ஒரு ஸ்ரீவைஷ்ணவர்‌ ”ஸ்வரூப பாரதந்தர்‌யமிருக்கும்படி. என்‌” என்று கேட்க, அவர்‌ அருளிச் செய்தபடி– *ஸ்வ சக்தி நிவ்ருத்தி பூர்வகமாக ஸர்வ சக்தியை அண்டை கொண்டு
    உபாயத்தில்‌ கந்தலற்று உபேயத்தில்‌ த்வரை விஞ்சி யிருக்கை காண்‌ பாரதந்தர்ய ஜ்ஞாநம்‌’”
    என்றருளினார்‌. இத்தால்‌ நிவ்ருத்தி ப்ரேரகத்தோடு ப்ரவ்ருத்தி ப்ரேரகத்தோடு வாசியற பராதீனான ‘ இவ்வதிகாரிக்கு எல்லாம்‌ பர ப்ரேரிதமா மத்தனை யிறே.

    (த்ரவ்ய குண கர்மம் -கமனம் செய்யும் கிரியையுடன் கூடியவன் –தியாகம் கிரியையுடன் கூடியவனாகி இருக்கும் கர்த்தா -பரித்யஜ்யம் -கிரியை வந்தாலே கர்த்ருத்வம் வருமே -மூன்று வித த்யாயகமும் வேண்டுமே –விடுவித்து பற்றுமவனே உபாயம் -செய்விக்கிறான் உணர்வே பாரதந்தர்யம்-மாஸூச -சோகப்படவும் கூடாதே –நின்றனர் இருந்தனர் கிடந்தனர் –நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் -இத்யாதி பிரவிருத்தியும் நிவ்ருத்தியும் அவன் ப்ரவர்த்திக்கவே நடக்கும் -)

    ஆச்சான்‌ பிள்ளையை ஒரு ஸ்ரீவைஷ்ணவர்‌ “ஸ்வரூபா நுரூபமான ப்ராப்யமோ? ப்ராப்யாநுபமான ஸ்வரூபமோ?”’ என்று கேட்க, அவரும்‌ ‘*முமுஷு தசையில்‌ ஸ்வரூபாநுரூபமான ப்ராப்யம்‌; முக்த தசையில்‌ ப்ராப்யாநுரூமாயிருக்கம்‌ ஸ்வரூபம்‌” என்றருளிச் செய்தார்‌.

    (போகத்திலே தட்ட மாறும் சீலம் காட்கரையிலே கரை அழிக்கும் -)

    நாட்டிலிருத்து பெருமாளை ஸேவித்திருப்பார்‌ இரண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ அந்யோந்யம்‌ விஸ்லேஷ பீருக்களாய்ப்‌ போருகிறவர்கள்‌ ஒரு கால்‌ ராக த்வேஷம்‌ கொண்டாடி, அதிலொருவர்‌ ஆச்சான் பிள்ளை ஸ்ரீபாதத் தேறச்‌ சென்று மற்றவருடைய குற்றம்‌ விண்ணப்பஞ்செய்ய; அருகிருந்த முதலிகளிலே சிலர்‌, “இப்படி சொல்லலாமோ?” என்று விண்ணப்பஞ்‌ செய்ய, ஆச்சான்‌ பிள்ளையும்‌, “அவர்கள்‌ சொல்லுகிறபடி கேளீர்‌: தண்ட தரனான யமன்‌“பரிஹர:’ (ஸ்ரீ வி.பு. 8-2-13; மதுசூதனனனடியார்களிடம்‌
    போகாதீர்கள்‌ என்று தனதாட்களிடம்‌ என்றான்‌. **ந கஸ்சிந் நாபாரத்யதி” [ஸ்ரீரா-யு-44-மன்னிப்பதே பெரியோர்‌ பணி-௨லகில்‌ யார் தான்‌ குற்றம்‌ செய்தவரில்லை- என்றாள்‌ பிராட்டி; ஈஸ்வரன்‌ -செய்தாரேல்‌ நன்று செய்தார்‌ [அடியார்கள் குற்றம் செய்தாராகில்‌ அது நற்றமே-பெரியா..திரு. 4-6-1. என்றான்‌. ஆழ்வார்கள்‌, அவன்‌ தமர் ! எவ்வினையராகிலும்‌ எங் கோனன்‌ தமரே–(முதல்திரு, 35)என்றார்கள்‌. இப்படி யிருக்க, ”அவர்‌ குற்றம்‌ இவரை யொழியச்‌ சொல்லுவார்‌ யார்‌?” என்றருளினார்‌.
    இத்தால்‌ சக்‌திமான்களுமுட்பட ததீய தோஷம்‌ சொல்லக் கூசுவர்கள்‌ என்றபடி,

    ஆச்சான் பிள்ளை பாகவத வைபவம்‌ அருளிச் செய்யா நிற்கச்‌ செய்தே ஒருவர்‌ பகவத் வைபவஞ்‌ சொல்ல,-விசேஷஞ் சொல்லுகிற விடத்தே இது ஸாமாந்யம்‌” என்றருளிச்‌ செய்தார்‌. இத்தால்‌ பாகவத வைபவத்தை நிறுத்தி பகவத் வைபவம்‌ சொல்லுகை அனுப யுக்தமென்றபடி. (நாவ காரியம் பாசுர வியாக்யானங்களில் -இது போல் பல ஐதிஹ்யங்கள் உண்டு)

    ஆச்சான்‌ பிள்ளை சிறிய தாயார்‌ பெரிய பிள்ளையும்‌ ஆச்சான் பிள்ளையை ஸேவித்துப்‌ போருகிற காலத்திலே,இவர்‌ சோகார்த்தராக, ஆச்சான்‌ பிள்ளை ‘*நீர்‌ சோகிக்கிற தென்‌?’। என்ன, அவரும்‌, :’அநாதிகால பாப வாஸனா பலாத்கார வசத்தாலே ஐந்மாதிகளிலே ஈஸ்வரன்‌ என்னை இன்னம்‌ தள்ளப்‌ போகிறானோ?” என்று பயப்படா நின்றேன்‌” என்ன, மேலருளிச் செய்த வார்த்தை: ”இது ஆர்‌ கேடு? என்‌றிருந்தாய்‌, உனக்கு ஸ்ருஷ்டிக்க வேணுமோ? அவதரிக்க வேணுமோ? பிறப்பில்‌ பல்‌ பிறவிப் பெருமான்‌ (திருவாய்‌, 2-9-5) என்றும் , *பொருளென்றிவ்‌ வுலகம்‌ படைத்தவன்‌ (திருவாய்‌, 2-10-11) என்றும்‌, *ஸம்பவாமி யுகே. யுகே” (கீதை 4-8) என்றும்‌ ஒருவனைப்‌ பிடிக்க நினைத்து ஊரை வளைப்பாரைப் போல்‌ அகில ஜகத் ஸ்வாமி யாய்த்து அஸ்மத்‌ ஸ்வாமியாகைக் கன்றோ?” என்‌றருளினார்‌. “ஆகையால்‌ ஈச்வரனுக்கு ஒரு சேதனனைப்‌ பெறுகை அலப்ய லாபம்‌ என்றும்‌, எதிர் சூழல்‌ புக்குத்‌ தேடித் திரியுவன் தானே, “பேறும்‌ இழவும்‌ தன்னது” என்று ரக்ஷிக்குமென்று நிர்ப் பரராயிரும்‌”-என்றபடி-

    அநந்தரம்‌ பெரியாழ்வார்‌ திருமொழி தொடக்கமான ஆழ்வார்களருளிச்‌ செயல்களுக்கெல்லாம்‌ வ்யாக்யாநம்‌ செய்து லோகத்தை வாழ்வித்தருளினார்‌, இத்தை நினைத்திறே –பெரிய வாச்சான் பிள்ளை பின்‌புள்ள வைக்கும்‌ தெரிய வியாக்கி யானங்கள் செய்வால்‌ அரிய அருளிச் செயற் பொருளை ஆரியர்கட்கு இப்போது அருளிச்‌ செயல் ஆய்த்து அறிந்து (உபேதே ரத்‌-46) என்று உபதேச ரத்தின மாலையிலே ஜீயர்‌ அருளிச் செய்ததும்‌, பின்னையும் ரஹஸ்ய த்ரய விவரணம்‌, தத்வ த்ரய நிர்ணயம்‌ முதலான அநேக ரஹஸ்ய மருளிச்‌ செய்தருளினார்‌.

    ஒருநாள்‌ பிள்ளை யுடைய ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்திருந்த வாதி கேஸரி கார்‌ஹஸ்த் யாஸ்ரம நிஷ்டராயிருக்கும் போது சாஸ்த்ர பரிசிலனை பண்ணுகிறவர்‌களைக் கண்டு ”படிக்கிறதென்‌?” என்று கேட்க அவர்களும்‌ “இவர்க்கு அஷராப்யாஸ மில்லை’ என்று அறிந்து ‘“முஸலகிஸலயம்‌ (உலக்கைக் கொழுந்து -உலக்கை துளிர்க்காதது போல் உமக்கு ஞானம் வராது )படிக்கிறோம்‌” என்று பரிஹசித்தொரு வார்த்தை சொல்ல, இவரும்‌ அத்தை யறியாதே.-இப்படி யொன்றுண்டோ என்று திகைத்து, அத்தை ஸ்வாசார்யரான பெரிய வாச்சான்‌ பின்ளைக்கு விண்ணப்பம்‌ செய்ய, அவரும்‌ மந்தஸ்மிதம்‌ செய்து, அவர்கள்‌ உமக்கு அக்ஷராப்யாஸ மில்லாமையாலே ”கழுக்காணி துளிர்க்குமோ? உமக்கத்தைக் கொண்டு காரியமென்‌?” என்று பரிஹஸித்து விட்டார்கள்‌’ என்றருளிச் செய்ய இவருமத்தைக்‌ கேட்டு லஜ்ஜாவிஷ்டராய்‌, சலம்‌ பிறந்து, திருவடிகளிலே விழுந்து, “அடியேனை வித்வானாகும்படி கடாக்ஷித்தருள வேணும்‌’” என்று ப்ரார்த்திக்க-அபய ப்ரத ராஜர்‌ (கவலைப்படாதீர் என்று உகந்து அருளிச் செய்ததால் இந்த திருநாம பிரயோகம் )உகந்து முப்பத்திரண்டு திரு நஷரத்திலே அக்ஷர சிஷைகளும்‌ பண்ணுவித்து காவ்ய நாடலங்கார சப்த தர்க்க பூர்வோத்தர மீமாம்ஸாதி ஸகல ஸாஸ்த்ர வித்தராம்படி சிஷித்தருள; இவரும்‌ அவர் கடாஷத்தாலே வித்வ ஜ்ஞாநாக்ர கண்யராய்‌ “’முஸல கிஸலயம்‌” என்று ஒரு காவ்யமிட்டு அவர்கள் கையிலே கொடுத்து வாய் மூடித் தலை யிறக்கிட்டு லஜ்ஜா விஷ்டராம்படி, பண்ணி யருளி, மஹா விரக்தாய்‌ ஆஸ்ரம ஸ்‌வீகாரம்‌ செய்து, பரவாதிகளை ஜெயித்து மிகவும்‌ சாஸ்த்ர நிபுணரா யிருக்கையாலே வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர்‌ என்று ப்ரஸித்தரான இவர்‌ பூர்வர்கள்‌ செய்தருளிய திருவாய்மொழி வ்யாக்யானங்களை யெல்லாம்‌ திருக் கண் சாத்தி அவைகளிலே ஸார தமமான அர்த்த விசேஷங்களை ஸங்க்ரஹித்து எவர்க்கும்‌ ஸுக்ரஹமாகவும்‌ ஸூ வ்யக்தமாகவும்‌ தெரியும்படி திருவாய் மொழிக்கு த்வாதச ஸ்கந்த யுக்தமான ஸ்ரீபாகவத ப்ரக்ரியையயாலே பன்னீராயிரம்‌ உரை செய்தருளினார்‌. ஜீயரும்‌ உபதேசரத்தின மாலையில்‌ *அன்போடழகிய மணவாளச் சீயர்‌ என்று தொடங்கி–ஏதமில்‌ பன்னீராயிரம்‌ (45) என்றித்தையு மருளிச்‌ செய்தார் இறே -பின்னையும்‌ தீப ப்ரகாசம் ‘ தத்வ நிரூபணம்‌ முதலான அனேக ரஹஸ்ய க்ரந்தங்களையும்‌ அருளிச்‌ செய்து உபகரித்தருளினார்‌,

    ஆச்சான் பிள்ளை குமாரர்‌ நாயனாராச்சான் பிள்ளையும்‌ தீபாதுத்‌பந்ந ப்ரதீபம் போலே தர்சநம்‌ நிர்‌வஹித்துக்‌ கொண்டு போர மதிப்புடையராய்‌ ஸகல வித்யாபாரங்கதர்‌’‘ என்கிற விருதை
    யுடையவராய்‌, :*ஸ்ரீரங்கராஜ தீக்ஷிதர்‌” என்று பெளண்டரீக யாகம்‌ செய்து ப்ரஸித்தராய்‌, தத்வ ஸங்க்ரஹம்‌, முக்த போகா வலீ: ஜ்நார்ணவம்‌, ஸாரீரம்‌ முதலான அனேக ரஹஸ்ய க்ரந்தங்களிட்டு உபகரித்தருளினார்‌ .

    பெரிய வாச்சான்‌ பிள்ளை திரு நஷத்ரம் -ரோஹிணி -இவர் தனியன் –
    ஸ்ரீ மத் க்ரூஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுந ஸூந வே !-
    யத் கடாஷண லக்ஷ்யாணாம்‌ ஸுலபஸ் ஸ்ரீதரஸ் ஸதா ॥

    யாவரொருடைய திவ்ய கடாஷத்துக்கு விஷய பூதரானவருக்கு ஸ்ரீய: பதியான ஸர்வேஸ்வரன்‌ எப்போதும்‌ ஸுலபனாயிருக்‌கிறானோ, யாமுனர்‌ குமாரராய்‌, ஸ்ரீமானான க்ருஷ்ணர்‌ என்கிற
    திரு நாமத்தை யுடையரான அந்தப்‌ பெரியவாச்சான்‌ பிள்ளையை வணங்குகிறேன்‌-

    நாயனாராச்சான் பிள்ளை திருநஷத்ரம்‌ சித்திரை-(சிலர் ஆவணி ரோஹிணி என்பர் ), இவர் தனியன்‌–
    ஸ்ருத் யர்த்த ஸார ஜாநகம்‌ ஸ்ம்ருதி பால மித்ரம்‌ பத்மோல்லஸத்‌ பகவதங்க்ரி புராண பந்தும்‌ |
    ஜ்ஞாநாதி ராஜம் அபய ப்ரத ராஜ புத்ரம்‌ அஸ்மத் குரும்‌ பரம காருணிகம்‌ நமாமி ॥

    வேதங்களின்‌ ஸாரார்த்தங்களை ப்ரதி பாதிப்பவராய்‌ ஸ்ம்ருதி களுக்கு பால மித்ரராய்‌ தாமரை போல்‌ ப்ரகாசிக்கும்‌ பகவச்‌ சரணங்களுக்குப்‌ புராதந பந்துவாய்‌, ஜாஞாந ஸாம்ராஜ்யத்தின்‌ அரசராய்‌ அபய ப்ரத ராஜரான பெரிய வாச்சான் பிள்ளையின்‌ குமாரராய்ப்‌ பரம காருணிகராய்‌ அஸ்மதாசார்யரான நாயனாராச்சான்‌ பிள்ளையை வணங்குகிறேன்‌ –

    வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர்‌ திரு நக்ஷத்ரம்‌ மகம்‌-(ஆனி ஸ்வாதி என்பர் சிலர் –ப்ரஹ்ம தேசம் மன்னர் கோயிலிலே அவதரித்தவர் -குலசேகரப் பெருமாள் திருவரசு இருக்கும் தேசம் )-இவர்‌ தனியன்‌– ்‌
    ஸுந்தர ஜாமாத்ரு முநே: ப்ரபத்யே சரணாம் புஜம்‌ |ஸம்ஸாரார்ணவ ஸம்மக்ந ஜந்து ஸந்தார போதகம்‌ ।
    அஸ்மத் வித பரித்ராண ப்ரேமே ப்ரத்ராண மாஸநம்‌ | வாதி கேஸரிணம்‌ வந்தே ரம்ய ஜாமாதரம்‌ முநிம்‌ ॥

    ஸம்ஸாரமாகிற ஸமுத்ரத்திலே மிக அழுந்திக் கிடக்கும்‌ ஜீவர்‌களை உத்தரிப்பதற்கு ஓடமான (வாதி கேஸரி) அழகிய மணவாள ஜீயருடைய திருவடித்‌ தாமரைகளை ஆஸ்ரயிக்கிறேன்‌. (அஸ்மதாதிகளை ரக்ஷிப்பதில்‌) ப்ரீதியினல்‌ நிறைந்த மனதை யுடையரரன வாதி கேஸரியான அழகிய மணவாள ஜீயரை வணங்குகிறேன்‌.]

    ஸ்ரீ ஈ யுண்ணி மாதவப் பெருமால் வைபவம்‌-(ஈ உண்ணி -ஈந்த பின்பே உண்ணுபவர்கள் வாழ்ந்த தேசம் )
    நம் பிள்ளை பக்கல்‌ ஈடு முப்பத்தாறாயிரமும்‌ பெற்ற ஈயுண்ணி மாதவப்‌ பெருமாள்‌ தம் குமாரரான ஸ்ரீபத்மநாபப் பெருமாளுக்கு ஈடு முப்பத்தாறாயிரமும்‌ பின்னும்‌ வேண்டும்‌ ரஹஸ்யார்த்தங்களை யெல்லாம்‌ ப்ரஸாதித்து தர்சன ப்ரவர்‌த்தகர் ஆக்கி அருளினார்‌.ஸ்ரீபத்ம நாபப்‌ பெருமாளும்‌ தமக்கு அந்தரங்க சிஷ்யராய்‌, கோல வராஹ நாயனார்‌ என்ற திருநாமமுடைய நாலூர்‌ பிள்ளைக்குத்‌ தம்‌ பைத்ருக தநமான ஈடு முப்பத்தாறாயிரமும்‌ பின்னும்‌ வேண்டின தர்‌ஸநார்த்தங்களெல்லாம்‌ ப்ரஸாதித் தருளினார்‌. நாலூர்‌ பிள்ளையும்‌ தம்‌ தல்ல மகனாரான நாலூராச்சான்‌ பிள்ளைக்கு ஸ்வாசார்‌யரான பத்ம நாபப் பெருமாள்‌ ப்ரஸாதித்த ஈடு முதலான அகிலார்த்‌தங்களையும்‌ ப்ரஸாதித்து தர்ஸந ப்ரவர்த்தகராம்படி கடாக்ஷித்‌ தருளினார்‌. நாலுராச்சான்‌ பிள்ளையும்‌ மணவாள மா முனிகளுக்கு நேரே ஆசார்யரான திருவாய்மொழிப் பிள்ளைக்கும்‌, திரு நாராயண புரத் தாயிக்கும்‌ -திருவாய்‌ மொழி யாச்சான்‌ பிள்ளைக்கும்‌ திருவாய் மொழியை ப்ரஸாதித்தருளினார்‌ என்னுமத்தை *ஆங்கவர் பால் பெற்ற சிறியாழ்வா னப்பிள்ளை தாம் கொடுத்தார்‌ தம்‌ மகனார்‌ தங்கையில்‌, பாங்குடனே நாலூர்ப் பிள்ளைக்கவர் தாம்‌ நல்ல மகனார்க் கவர் தாம்‌ மேலோர்‌க்‌கு ஈந்தாரவரே மிக்கு என்று உபதேசரத்ந மாலையிலே (49) ஜீயர்‌ தாமே தெளிய வருளிச்‌ செய்தாரிறே –

    ஈ யுண்ணி மாதவப் பெருமாள்‌ திரு நஷத்ரம்‌ ஹஸ்தம்‌.(சிலர் கார்த்திகை பரணி என்பர் ) இவர்‌ தனியன்‌–
    வரதார்ய க்ருபா பாத்ரம்‌ ஸ்ரீமாதவ குரும்‌ பஜே |
    குருகாதீஸ வேதாந்த ஸேவோந் மீலித வேதநம்‌ ॥

    நம்மாழ்வார்‌ அருளிச் செய்த த்ரமிடோபநிஷத்தான திருவாய்மொழி கால க்ஷேபத்தால்‌ தெளித்த ஜ்ஞானமுடையவராய்‌ வரதார்யரென்ற நம்பிள்ளையின்‌ தயைக்கு கொள்கலமான்‌ ஈ யுண்ணிமாதவப்‌ பெருமாளை வணங்கிப்‌ போற்றுகிறேன்‌-

    பத்ம நாபப்‌ பெருமாள்‌ திரு நக்ஷத்ரம்‌ ஸ்வாதி– இவர்‌ தனியன்‌–
    யேந அவகாஹ்ய விமலோஸ்மி ஸடாரி ஸூநோர்‌-வாணீ கணார்த்த பரிபோத ஸுதாபகாயாம்‌ |
    ஸ்ரீமந் முகுந்த சரணாப்ஜ மது வ்ரதாய ஸ்ரீபம் மகாப குரவே நம ஆசராம : ॥

    யார் ஓருவரால்‌ நம்மாழ்வாருடைய ஸ்ரீஸக்தி ஸமூஹத்‌திலுண்டான அர்த்த விசேஷங்களின்‌ தெளிவான அறிவாகிற அமுதக் கடலில்‌ ௮மிழ்‌ந்து தூய மனதினனாய் ஆகிறேனோ ஸ்ரீ யபதியான முகுந்தனின் திருவடிகளில் வண்டு போல்வரான அந்தப் பத்மநாபப் பெருமாள் பொருட்டு நமஸ்காரத்தைப்‌ பண்ணக் கடவோம்‌-

    நாலூர் பிள்ளை திரு நக்ஷத்ரம்‌ புஷ்யம்‌, இவர்‌ தனியன்‌…
    ஸ்ரீ பத்ம நாப குருத: ஸடஜிக்‌ முநீந்தர ஸ்ரீ ஸூக்தி பாஷ்ப மதிகம்ய ஸம்ருத்த போத: [ தந் தேவ ராஜ குரவே ஹ்யதி ஸச் சதுஷ் பூர்வாஸேத்த கோல வர தேஸிக மாஸ்ரயே தம்‌ ॥

    ஸ்ரீ பத்ம நாபப்‌ பெருமாளிடமிருந்து நம்மாழ்வாருடைய ஸ்ரீ ஸூக்திகளின் பாஷ்யமான -விளக்கமான – ஈட்டை அதிகரித்‌து நிறைவான ஜ்ஞான முடையரான யாவரொருவர்‌ அந்த ஈட்டை நாலூராச்சான்‌ பிள்ளைக்கு ப்ரஸாதித்தாரோ , அந்த–நாலூரில்‌ வாஸத்தால்‌ ப்ரசாசிக்கிற கோல வர குருவை சரணம்‌ பற்றுகிறேன்‌-(மேல்பாடாகம் -காஞ்சி அருகில் இருக்கும் நாலூர்)

    நாலுராச்சான்‌ பிள்ளை-மார்கழி பரணி திரு நக்ஷத்ரம் – தனியன்‌
    நமோஸ்து தேவ ராஜாய சதுர்க்ராம நிவாஸிநே | ராமாநுஜார்ய தாஸஸ்ய ஸூதாய குண ஸாலிநே 1

    ஸ்ரீராமாநுஜ தாஸரென்னும்‌ நாலூர்‌ பிள்ளையின் குமாரராய்‌ குண பூர்ணராம்‌ நாலூரில்‌ வாஸம்‌ பண்ணுமவரான தேவ ராஜர்‌ என்னும்‌ நாலூர் ஆச்சான்‌ பிள்ளையை நமஸ்கரிக்கிறேன்‌-

    கோலாதிபாத்‌ பிது வாரப்ப ஸஹஸ்ர கிதேர் பாஷ்பம்‌ ஹி பூர்தந .. தேஸிக வர்ய குப்தம்‌ |
    த்ரேதா ப்ரவர்த்ப புவிய: ப்ரதயாஞ்சகார ஸ்ரீ தேவ ராஐ குருவர்யமஹம்‌ பஜே தம்‌

    யாவரொருவர்‌ பூர்வர்களான ஆரியர்களால்‌ ரஹஸ்ய மாகக்‌ காக்கப்பட்டிருந்த திருவாய்மொழியின்‌ வ்யாக்யாநமான ஈட்டை, தந்தையான கோலாதிபரேன்னும்‌ நாலூர்ப் பிள்ளை யிடத்தில்‌ நின்றும்‌ பெற்று மூவர்‌ மூலமாய் வெளிப்படுத்தி உலகத்தில்‌ ப்ரஸித்தி யடையப்‌ பண்ணினாரோ அந்த பரமாசாரியரான தேவ ராஜரை (நாலூரச்சான்‌ பிள்ளையை), நான்‌ போற்றி வணங்குகிறேன்‌ –

    ஸ்ரீ சைல நாத குரு மாத்ருகுகணாருத்த மசப்யாந் ஸ்ரீஸூக்தி தேசிக வரேண ச யஸ் த்ரிதைவம்‌–
    ங்யத்தஸ் ஸடாரி க்ருதி பாஷ்ய ஸூஸம் ப்ரதாயோ விஸ்தார மேதி லஹி வைஷ்ணவா . ॥

    எந்த திருவாய்மொழியின்‌ பாஷ்யமான ஈட்டின்‌ ஸத் ஸம்ப்ரயமானது திரு வாய் மொழிப்பிள்ளை என்ன-திரு நாராயணத்தாய் என்ன–இந்த சிறந்த ஆச்சார்யர்களாலும் திருவாய் மொழி ஆச்சானாலும் மும்முகமாய் ப்ரகாசமாயிற்றோ அந்த ஸத் ஸம் பிரதாயம் தான் ஸ்ரீ வைஷ்ணவ பெரியார்கள் இடையே விஸ்தாரமாயிற்று

    வடக்குத் திருவீதிப் பிள்ளை வைபவம் –
    அநந்தரம்‌ வடக்குத் திருவீதிப் பிள்ளை தர்சநம்‌ நிர்வஹித்தருளுகிற காலத்தில்‌ ஸ்ரீபாதத்து முதலிகள்‌ –ஆத்ம ஸ்வருபமிருக்கும்‌ படியென்‌?’” என்று விண்ணபஞ்செய்ய, அவரும்‌, –அஹங்காரமாகிற ஆர்ப்பைத் துடைத்தால்‌ ஆத்மாவுக்கு அழியாத பெயர் அடியான்‌” என்றிறே” என்றருளினார்‌. இத்தால்‌ ‘ஈஸ்வரோஹம்‌-என்கிற அஹங்காரம்‌ பற்றற்றால்‌ ஆத்மாவுக்கு தாஸோஹம்‌ என்கிற சேஷத்வமே நிலை நின்ற அந்தரங்க நிரூபகம்‌ என்ற படி-பாகவத சேஷத்வ விதுரமான பகவச் சேஷத்வமும்‌ தேஹாத்மாபிமானம் போலே பொல்லாததா யிருக்கையாலே, –அடியாரடியார்‌ தம்மடியாரடியார்‌ தமக்கடியாரடியார்‌ தம்மடியாரடியோங்களே (திருவாய்‌, 3-7-10) என்றிருக்க வேணுமென்‌றருளியும்‌, எல்லா வேதங்களையும்‌ எல்லா சாஸ்த்ரங்களையும்‌ எல்லா ஆழ்வார்கள்‌ பாசுரங்களையும்‌ எல்லா ஆசார்யர்கள்‌ வசநங்களையும்‌ ஆராயந்து பார்‌த்த விடத்தில்‌ ஒரு ஸ்ரீவைஷ்ண வனுக்கு நிலை நின்ற ஆசார்யாபிமானமொழிய மோஷோபாயமில்லை; நிலை நின்ற பாகவதபசாரமொழிய மோக்ஷ விரோதி யில்லையிறே. ‘*ஸ்வ ஸத்தையில்‌ நித்யத்‌வமும்‌ நிலை நின்ற பாகவதாபசார முண்டாமளவத்தனை யன்றோ ” என்று பிள்ளை பலகாலுமருளிச் செய்யக்‌ கேட்டிருக்கை யாயிருக்கும்‌” என்று வடக்குத் திருவீதிப் பிள்ளை தம்‌ ஸ்ரீபாதத்து முதலிகளுக் கருளினார்‌. இத்தால்‌, ஆசார்யாபிமானம்‌ நிலை நிற்கையாவது- கேட்ட அர்த்தத்தின்படி அநுஷ்டானமும்‌ கைபுகுரப் பெற்று தத் விஷயமே ப்ராப்ய ப்ராபகங்களென்றும்‌, தத் விஷயத்தில மஹாவிச்வாஸத்துடனிருக்கை. பாகவதாபசாரம்‌ :நிலை நிற்கையாவது-தீரக் கழியப் பண்ணியும்‌ நிரநுதாபமான பாகவதாபசாரம்‌ ஸ்வ ஸத்தையை விளக்குப்‌ பிணம் படுத்தி தக்த படமாக்கி உயிர்‌ மாட்டல்‌ செய்து நஸிப்பிக்கு மென்றபடி

    இப்படி ஸர்வரையும்‌ உஜ்ஜீவிப்பித்துக் கொண்டிருக்கற இவர்‌ தம்‌ குமாரரான பிள்ளை லோகாசார்யரையும்‌, அவர்‌ திருத் தம்பியாரான அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனாரையும்‌ தர்சந ப்ரவர்த்தகராம்படி நன்றாகத் திருத்தி யருளி சில நாளைக்குப்‌ பின்பு பிள்ளை திருவடிகளை த்யாநித்துக் கொண்டு திருதாட்டுக் கெழுந் தருளினார்‌ . பிள்ளை லோகாசாரியரும்‌, உபய ஸம்பந்தமுடைய விலஷண விஷயத்தை இழந்தோமே” என்று பெருக்க வ்யாகுலப்‌பட்டு க்லேஸித்துத்‌ தம்மிலே தேறி நின்று பிள்ளைக்கு ப்ரஹ்மமேதத்‌தாலே சரம கைங்கர்யம்‌ செய்து பள்ளிப் படுத்தி அவப்ருதம்‌ கொண்டாடிப்‌ பெருக்கத்‌ திருவத்யயனமும்‌ நடத்தி யருளினார்‌.

    வடக்குத் திருவீதிப் பிள்ளை திரு நஷத்ரம்‌ ஸ்வாதி–இவர்‌ தனியன்‌- –
    ஸ்ரீ க்ருஷ்ண பாத பாதாப்ஜே நமாமி ஸிரஸா ஸதா |
    யத் ப்ரஸாத ப்ரபாவேந ஸர்‌வ ஸித்திர பூந்‌ மம ॥

    யாவரொருவருடைய அநுக்ரஹாதிசயத்தினுல்‌ எனக்கு ஸமஸ்த புருஷார்‌த்த ஸித்தியும்‌ உண்டாயிற்றோ அந்த ஸ்ரீக்ருஷ்ணரான வடக்குத்‌ திருவீதிப்‌ பிள்ளையின்‌ திருவடித்‌ தாமரைகளை எப்போதும்‌ தலையால்‌ வணங்குகிறேன்‌-

    பிள்ளை லோகாசார்யர் வைபவம்
    அநந்தரம்‌ நம்மாழ்வார்‌ திருவவதார மென்னலாம்‌படியான வைபவமுடையவராய்‌ நம்பிள்ளை யுடைய அநுக்ரஹத்தாலே அவதார விசேஷமாய்த்‌ திருவவதரித்‌திருந்துள்ள பிள்ளை லோகாசார்யரும்‌, அவருடைய அருளே தாரகமாய்‌ வளர்ந்த அவர்‌ திருத் தம்பியாரான அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனாரும்‌ பால்யாத்‌ ப்ரப்ருதி ஸுஸ்நிக்தராய்‌ இணைத்‌ தொட்டிலிட்டு வளர்ந்த இளைய பெருமாளையும்‌ பெருமாளையும்‌ போலவும்‌ பல தேவன் என்னும்‌ தன்னம்பியோடப்‌ பின்‌ கூடச் செல்வான்‌ (பெரியாழ்வார்‌ திரு- 1-8-5) என்கிற நம்பி மூத்த பிரானையும்‌ கிருஷ்ணனையும்‌ போலவும்‌,

    தம்பியுடன்‌ தாசரதி யானுனுஞ்‌ சங்க வண்ண
    நம்பயுடன்‌ பின்னடந்து வந்தானும்‌ –பொங்கு புனல்‌
    ஒங்கு முடும்பை உலகாரியனும்‌ அறந்
    தாங்கு மணவாளனுமே தான்‌

    என்னும்‌படி ஸெளப்ராத்ருத்வத்தை யுடையரான இவர்களிலே பிள்ளை லோகாசார்யர்‌ தம்‌ பரம க்ருபையாலே பெண்ணும்‌ பேதையும்‌ அத்கரித்து. உஜ்ஜீவிக்கலாம்படி தனி ப்ரணவம்‌, தனி த்வ்யம்‌ தனி சரமம்‌, பரந்தபடி, ஸ்ரீய:பதிப்படி, யாத்ருச்சிகப்படி, முமுஷுப்படி, ஸம்ஸார ஸாம்ராஜ்யம்‌, ஸார ஸங்க்ரஹம்‌, தத்வ த்‌ரயம்‌, தத்வ சேகரம்‌, ப்ரபந்த பரித்ராணம்‌, ப்ரமேய சேகரம்‌, அர்ச்சிராதி, அர்த்த பஞ்சகம்‌. நவவித ஸம்பந்தம்‌, நவரத்ந மாலை, ஸ்ரீவசன பூஷணம்‌ முதலான அநேக ரஹஸ்ய க்ரந்தங்களிட்டருளி தம்பியோடு தாமும்‌ கூடி வாழ்ந்தருளுங்‌ காலத்திலே பிள்ளை லோகாசாரியர்‌ திருவடிகளிலே பரம ஸாத்விகாரயிருப்பரான கூர குலோத்‌தம தாஸர்‌ நாயனும்‌ மணப் பாக்கத்து நம்பியாரும்‌, கொல்லி காவல தாஸரான அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ பிள்ளையும்‌, கோட்டூரில் அண்ணரும்‌, திருமலை யாழ்வாரும்‌, விளாஞ் சோலைப்‌ பிள்ளையும்‌-ஸாத்விகைகளில்‌ திருமலை யாழ்வார்‌ திருத் தாயார்‌ முதலான சில அம்மைமார்களும்‌ திருவடிகளிலாஸ்ரயித்து ஸத் ஸம்பந்தத்தை யுடையராய்‌, ‘“ஸம்பந்தாத்‌ ஸ்வாத்ம லாப: ‘ என்று ஆநந்த நிர்ப்‌பரராய்‌ *ஓழிவில்‌ காலப்படியே ஸர்வதேச ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும்‌ நித்ய ஸேவை பண்ணி தேவு மற்றறியாதிருந்தார்கள்‌

    இப்படி இவர்களுடைய ஐக கண்ட்யத்தாலே ப்ரவர்த்தமாய் ஸங்க்ரஹ விஸ்தார ரூபமாயிருக்குமென்று அருளிச்‌ செய்து
    சீராருந் திருவத்தியூர்‌ தன்னில்‌ நின்றும்‌ சிறந்த மணப்பாக்கத்துறு நம்பியாரை
    ஏராருங் கனவிலுபதேசத்தால்‌ முன்னெடுத்தருளி யெழிலரங்கத்தே போயிரு நச்‌
    சேராமலுக் கிதமங்கே ,சொல்வோந் தூய வுலகாரியன் பால்‌ சேர்ந்ததற் பின்‌ அவர்க்கு
    நேராகக் கனவிலாங்கவ ருபதேசத்தால்‌ முன்னம்‌ விரித்த கலை வசன பூஷண மா நிதியே

    என்கிறபடியே பரம ரஹஸ்யமான ஸ்ரீவசன பூஷணமாகிற திவ்ய ப்ரபந்தத்தைச்‌ செய்தருளி லோகத்தை வாழ்வித்தருளினார்‌.

    அநந்தரம்‌ நாயனாரும்‌ ”வாக் பூஷணம்‌ வகுள பூஷண ஸாஸ்த்ர ஸாரம்‌’” என்னும்படியான ஸ்ரீவசந பூஷண ஸ்தாபநார்த்தமாக ஆசார்ய ஹ்ருதயத்தை யருளிச்‌ செய்து தோதவத்தித்‌ தூய மறையோரான பெற்றார்க்கு ப்ரஸாதித்து இப்படி முப்பத்தாறாயிரப்‌படி யினர்த்தத்தை ஸ்ரீ வசந பூஷண ஆசார்ய ஹ்ருதய ப்ரபந்ததங்களாலே தாத்பர்யமாகக்‌ கூட்டிப்‌ பின்னையு மருளிச்‌ செய்கையாலே-ஈட்டுத் தனியனிலே இவர்கள்‌ தனியனையு மநுஸத்திக்கிறது-அவரும்‌ ஆசார்ய ஹ்ருதயம்‌ பெற்றார்க்கு ப்ரஸாதித்தார்‌; அவரும்‌ திருநாராயண புரத்து ஆயிக்கு ப்ரஸாதித்தார்‌.

    ஈட்டுத் தனியன்‌ வியாக்கியானத்தில்‌ ‘பிள்ளை லோகஞ்‌ சீயர்‌ அருளிச்‌ செய்துள்ளது: ”பிள்ளைலோகாசார்யர்‌, நாயனாராச்சான்‌ பிள்ளை, அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌, வாதி ஸேகரி அழகிய மணவாளச்‌ சீயர்‌ இவர்கள்‌ நால்வரும்‌ ஈட்டு ஸம்ப்ரதாயத்துக்கு ப்ரவர்த்தகராகாமலிருக்கச்‌ செய்தேயும்‌, பிள்ளை லோகாசாரியர்‌ ஈட்டின் வர்த்தத்துக்கு உபயுக்தமாக வகுள பூஷண சாஸ்த்ர ஸாரமான ஸ்ரீவசநபூஷண திவ்ய சாஸ்த்ரத்ரத்தை யருளிச்‌ செய்கையாலும்‌; நாயனாராச்சான் பிள்ளை பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த இருப்பத்தி நாலாயிரப்படி வயாக்யானத்துக்கு ப்ரவர்த்தகராகையாலும்‌; அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌ திருவாய்‌ மொழியினுடைய சந்தை திரட்டான ஆசார்யஹ்ருதயமருளிச்‌ செய்கையாலும்‌ வாதி கேஸரி அழகிய மணவாளச்‌ சீயர்‌ பன்னீராயிரப்படியையும்‌, திருவிருத்தத்துக்கு ஸ்வாபதேசமும்‌ அருளிச்‌ செய்கையாலும்‌ இவர்களுடைய தனியன்களும்‌ அநு சந்திக்கிறார்‌கள்‌ ‘நம்‌ ஆசார்யர்கள்‌” என்று பிள்ளை லோகாசாரியரும்‌ நாயனாரும்‌ ஈட்டை நேரே ஸேவிக்கா விடினும்‌ அதிலுள்ள அர்த்த விசேஷங்களைத்‌ தமது தமப்பனாரான வடக்குத்‌ திருவீதிப் பிள்ளை வாயிலாகக்‌ கேட்டே யிருப்பார்கள்‌-

    இதற்கு ப்ரபந்த ப்ரதிபாத்யமான அர்த்த ஸம்ப்ரதாயம்‌ ஜீயருக்கு ஆய் வழியாக வந்தபடியை மேலே சொல்லுகிறது; இது ஜீயருடைய ஆசார்யரான திருமலை யாழ்வாரும்‌, அவருடைய திருத்‌
    தமப்பனாரான அண்ணரும்‌ அதி பால்யத்திலே பிள்ளை லோகாசார்யர் திருவடிகளிலே ஆச்ரயித்தவர் களாகையாலே பின்பு கொல்லி காவல தாஸரிடத்திலும்‌ கூர குலோத்தம தாஸரிடத்திலும்‌ ஜ்ஞாநோபஜீவநம்‌ பண்ணி உஜ்ஜீவித்தார்கள்‌. இப்படி ஸம்பந்த ஸம்பத்திகளும்‌ உஜ்ஜீவிக்கும்படி தம்பியோடு தாசரதி என்கிற படியே நம்மாழ்வார்‌ திருவவதார மென்னலாம்படியான நம்பிள்ளை யுடைய அநுக்ரஹத்தாலே தேவுமற்றறியா திருந்தார்கள்‌

    இப்படி யெழுந்தருளி யிருக்கும்‌ பிள்ளை லோகாசார்யர்‌ பரம ரஹஸ்யமுமாய்‌ திவ்ய சாஸ்த்ரமுமான ஸ்ரீவசன பூஷணத்தை ஸர்வரும்‌ அதிகரித்து ஈடேறலாம்‌ படி யருளிச் செய்து லோகத்தை
    வாழ்வித்தருள, அத்தைக் கண்டு பாகவதோச்ச்ராயம்‌ பொறுக்க மாட்டாத சில அஸூயாளுக்கள்‌ நம் பெருமாள்‌ பக்கலிலே சென்று, “பெருமாளே! பிள்ளை லோகாசார்யர்‌ ஸ்ரீவசனபூஷணமென்று
    ஒரு ரஹஸ்ய க்ரந்தமிட்டு நம்‌ தர்சனத்தை யெல்லாம்‌ வ்யர்த்தமாக்‌கினார்‌” என்று பெருமாளுடனே கோள்‌ சொல்ல; அத்தைக்‌ கேட்ட பெருமாளும்‌ சீறி பிள்ளை லோகாசார்யரை யழைத்து விட, அவ்வளவிலே அவர்‌ நீராட எழுந்தருளி யிருக்க, நீராடி யெழுந்தருளுகிற அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனார்‌ இவ் விசேஷங் கேட்டு பெருமாள்‌ ஸந்நிதியில்‌ சென்றவாறே பெருமாளும்‌, அர்ச்சக முகேந , ‘நாயனாரே! நாம்‌ அநந்தமான அவதாரம்‌ பண்ணினது தர்ம ஸம்ஸ்த்தாபநார்த்த மன்றோ? நீங்கள்‌ ரஹஸ்ய க்ரந்தமிட்டு அத்தை வ்யர்த்தமாக்குகிறது என்‌?” என்று வினவி யருள; அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனாரும்‌, ஸ்ரீவசந பூஷண ஸ்தாபதார்த்தமாகச்‌ செய்தருளின ஆசார்ய ஹருதயமாகிற ப்ரபந்தத்தை பெருமாள்‌ ஸ்ரோதாவாய்‌ தாம்‌ வக்தாவாக, ஸ்ரீதொண்டரடிப்‌ பொடி யாழ்வார்‌ திருமாலை சொன்னாற் போலே இவர்‌ ஆசார்ய ஹ்‌ருதயத்தை விண்ணப்பஞ் செய்து தலைக் கட்டினவாறே, பெருமாள்‌ மிகவுகந்தருளி. “இதுவும்‌ நாம்‌ செய்ததொன்றன்றோ?” என்று கோள்‌ சொன்னவர்களை வாரி யடித்துத்‌ தள்ளி விட்டருளி நாயனாருக்கு தம்‌ ஸர்வ பரிஜந பரிச்சதங்களோடே ப்ரஹ்ம ரதம்‌ ப்ரஸாதித்து ௨பலாலித்துத்‌ திருமாளிகை யேற போக விட்டருளினார்‌.-இவ் வைபவங் கேட்டுப்‌ பிள்ளை லோகாசார்யரும்‌ -வளர்த்ததனால்‌ பயன் பெற்றேன்‌ என்று அதி ஸந்தோஷத்துடனே ஆலிங்கித்துக்‌
    கொண்டருளினார்‌

    ஸ்ரீ வசந பூஷண திவ்ய சாஸ்த்ரம்‌ நம் பெருமாளுடைய நியமனம் அடியாக அருளிச்‌ செய்யப்பட்டதென மணவாளமா முனிகள்‌ ஸாதித்தருளி யிருப்பதால்‌ இங்கு காணும்‌ ஐதிஹ்யம்‌ ப்ராமாணிகமா? என்ற ஐயம்‌ எழுகிறது பின்புள்ளார்‌ எக் காரணத்தனாலோ சேர்த்ததா யிருக்கலாம்‌ என்று தோன்றுகிறது -மணவாளமாமுனிகள்‌ தாமருளிச்செய்த ஸ்ரீவசந பூஷண வ்யாக்‌யான அவதாரிகையில்‌ ஸாதித்தருஞம்‌ பங்க்திகள்‌ வருமாறு:ஸ்ம்ஸாரி சேதனரிழவு ஸஹிக்க மாட்டாத பரம க்ருபையாலே தத் உஜ்ஜீவநார்த்தமாக தாமும்‌ பல ப்ரபந்த்தங்கள் அருளிச்‌ செய்த பிள்ளை லோகாசார்யர்‌, ஆசார்ய பரம்பரா ப்ராப்தங்களான வர்த்தங்‌களில்‌ அவர்கள்‌ தாங்கள்‌ கெளரவாதிசயத்தாலே ரஹஸ்யமாக வுபதேஸித்துப்‌ போந்தவையாய்‌ அருமை பெருமைகளைப் பற்ற-இதுக்கு முன்பு தாமும்‌ ப்ரகாசிப்பியாமலடக்கிக் கொண்டு போந்தவையுமான அர்த்த விசேஷங்களெல்லாத்தையும்‌, பின்புள்ளாருமிழக்க வொண்ணா தென்ற தம்முடைய க்ருபாதிசயத்துக்கு மேல்‌
    பெருமாளும்‌ ஸ்வப்நத்திலே திருவுள்ளமா யருளுகையாலே, ஸ்ரீ வசந பூஷணமாகிற இப் ப்ரபந்த முகேந வெளியிட்டருளினார்‌.

    முன்பே பேரருளாளப் பெருமாள்‌ (கச்சித் தேவப் பெருமாள்‌) தம்முடைய நிர்ஹேதுக க்ருபையாலே மணற் பாக்கத்திலே இருப்‌பாரொரு நம்பியாரை விசேஷ கடாஷம்‌ பண்ணி யருளி, தஞ்சமாயிருப்பன சில வர்த்த விசேஷங்களைத்‌ தாமே யவர்க்கு ஸவப்ந முகேந வருளிச்செய்து, நீர்‌ போய்‌ இரண்டாற்றுக்கும்‌ நடுவே வர்த்தியும்‌; இன்னமும் உமக்கிவ் வர்த்தங்களெல்லாம்‌ விஸதமாக நாமங்கே சொல்லுகிறோம்‌” என்று திருவுள்ளமா யருளுகையாலே அவரிங்கே (திருவரங்கத்தே) வந்து பெரிய பெருமாளை ஸேவித்துக்‌ கொண்டு, தமக்கு முன்பங்கருளிச் செய்த வர்‌த்தங்களையும்‌ அசலறியாதபடி அநுஸந்தித்துக் கொண்டு ஏகாந்தமான தொரு கோயிலிலே வர்த்தியா நிற்கச்‌ செய்தே, தம்முடைய ஸ்ரீபாதத்‌து அந்தரங்கரான முதலிகளுந்தாமுமாக பிள்ளை ஒரு நாள்‌ அந்தக்‌ கோயிலிலே யாத்ருச்சிகமாக வெழுந்தருளி, அவ்விடம்‌ ஏகாந்தமா யிருக்கையாலே ரஹஸ்யார்‌த்தங்களை யவர்களுக் கருளிச்‌ செய்து கொண்டெழுந்தருளியிரா நிற்க, அவை, தமக்குப்‌ பேரருளாளப் பெருமாளருளிச் செய்த வார்த்தா விசேஷங்களா யிருக்கையாலே, அவர்‌ போர வித்தராய்‌ உள்ளினின்றும்‌ புறப்பட்டு வந்து பிள்ளை ஸ்ரீபாதத்தலே விழுந்து, ்‌*அவரோ நீர்‌?” [அந்த பேரருளாகப்பெருமாள்‌ தானோ நீர்‌ என்ன, **ஆவது; ஏது” என்று பிள்ளை கேட்டருள, பேரருளாளப் பெருமாள்‌ தமக்கு இவ்வர்த்தங்களை ப்ரஸாதித்‌ தருளினபடியையும்‌, இத் தேசத்திலே போர விட்டருளின படியையும்‌-இன்னமுமங்கே சொல்லுகிறோமென்‌ றருளிச்‌ செய்தபடியையும்‌, லிண்ணப்பஞ் செய்ய, கேட்டு மிகவும்‌ ஹ்ருஷ்டராய்‌ அவரையுமபிமாநித்தருள, அவருமங்குத்தைக் கந்தரங்கராய்‌ வர்த்திக்கிற நாளிலே, பெருமாள்‌ அவர்க்கு ஸ்வப்நத்திலே ‘இவ் வர்த்தங்கள்‌
    மறந்து போகாதபடி ‘இவற்றை யொரு ப்ரபந்தஸ்தமாகச்‌ சொன்‌னோமென்று நீர்‌ பிள்ளைக்குச்‌ சொல்லுமென்று திருவுள்ளமாக, அவரிப்படி பெருமாள்‌ திருவுள்ளமா யருளினாரென்று விண்ணப்பம் செய்ய, ”ஆனால்‌ அப்படியே செய்வோம்‌” என்று” திருவுள்ளம்‌ பற்றி அநந்தர மிப்ரபந்த மிட்டருளினா ரென்று ப்ரஸித்தமிறே
    , [இதுவரை மணவாளமாமுனிகளின்‌ ஸ்ரீவசநபூஷண வ்யாக்யாந அவதாரிகை பங்க்திகள் –

    அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌ திருப் பாவை முதலான சில ப்ரபந்தங்களுக்கு வ்யாக்யாதஞ்‌ செய்தருளினார்‌.இத்தை நினைத்திறே –தன்‌ சீரால்‌ வைய குருவின்‌ தம்பி மன்னு மணவாள முனி செய்யுமவை தானுஞ்‌ சில– என்று ஜீயரும்‌ ௮நு சந்‌தித்தருளினார்‌. [உபதேச ரத்ன மாலை-47]-

    பின்பு பிள்ளைலோகாசாரியரும்‌ நாயனாரும்‌ அதி விரக்தராய்‌ வாழ்ந்தருளுகிற காலத்திலே, நாயனார்‌ சிறிது காலமெழுந்தருளி யிருந்து அசிரேண பரமபதத்தை ப்ராபித்தருள, பிள்ளையும்‌ பாகவத விஸ்லேஷத்தாலே மிகவும்‌ சோகார்த்தராய்‌ அவர்‌ திருமுடியைத்‌ தம் மடியிலே வைத்துக்‌ கொண்டு
    மாடுடும்மை மன்னு மணவாள வண்ணலொடு
    சேமமுடன்‌ வைகுந்தஞ் சென்றக்கால்‌–மாமென்‌று
    தொட்டுரைத்த சொல்லுந் துயந்தன்‌னின் ஆழ்‌ பொருளும்‌
    எட்டெழுத்து மிங்குரைப்பாரார்‌

    என்கிறபடியே பல வகை புலம்பி திருமுத் துதிர்த்து முதலிகள்‌ தேற்றத்‌ தேறி நின்று நாயனாருக்குச்‌ சரம கைங்கர்யஞ்‌ செய்து திருவத்யயனமும்‌ நடத்தி யருளினார்‌.
    இவர்‌ தனியன்‌
    திராவிடாம்நாய ஹ்ருதயம்‌ குரு பர்வ க்ரமாகதம்‌ |
    ரம்ய ஜாமாத்ரு தேவேந தர்ஸிதம்‌ க்ருஷ்ண ஸூநுநா ॥

    க்ருஷ்ணரென்னும்‌ வடக்குத்‌ திருவீதிப்‌ பிள்ளையின்‌ குமாரரான அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனாராலே ஆசாரியகளுடைய பரம்பரா க்ரமமாய்‌ ஆசார்ய ஹ்ருதயம்‌ என்ற க்ரந்தம்‌
    அருளிச்‌ செய்யப்‌ பட்டது

    நம் பெருமாள் கோயிலை விட்டு வஸலையாக எழுந்தருளல்‌–
    ஸர்வ சேததருமுஜ்ஜீவிக்கும்படி சரம ப்ரமாண ப்ரமேய ப்ராமத்ரு வைபவங்களைப் ப்ரகாசப்‌பித்துக்‌ கொண்டு பிள்ளை லோகாசார்யர்‌ பெருமாளுக்கு ப்ராண பூதராயெழுந்தருளி யிருக்குங் காலத்தில்‌ ஸ்ரீ ரங்கம்‌ துருஷ்காக்ராந்தமாய்க்‌ குடி யிருக்‌கப்‌ போகாமல்‌ பெருமாள்‌ நாய்ச்சி மாருடனே்‌ புறப்பட்டு, பெரிய பெருமாளுக்குத்‌ திரு முன்பே கல் காப்புச்‌ சாத்தி, முன்னே ஒரு விக்ரஹத்தை யெழுந்தருளப்‌ பண்ணி வைத்து, சுற்றமெல்லாம்‌ பின்‌ தொடரத்‌ தொல் காநமடைந்து (பெருமாள்‌ திரு4-6) என்றும்‌ *தம்பியோடு தாமொருவர் தம்‌ துணைவி காதல்‌ துணையாக (பெரிய திரு 15-10-5) என்றுஞ் சொல்லுகிறபடியே பெருமாள்‌ தம்‌ அந்தரங்க பரிகரத்துடனே வலசையாக வெழுந்தருள; பிள்ளையும்‌, வாளும்‌ வில்லுங் கொண்டு பெருமாளைப்‌ பின் தொடர்ந்தடிமை செய்த இளைய பெருமாளைப் போலே *௨ருவார்க்கரஞ் சங்கு சுமந்‌ திங்கும்‌ மோடொரு பாடுழல்வானோரடியான்‌ (திருவாய்‌ 8-3-7)
    என்கிறபடியே அத் தலைக்கு மங்காளாசாஸந பரராய்த்‌ தாமும்‌ முதலிகளும்‌ ஸேவித்துக் கொண்டு சேர வெழுந்தருள, அநந்தரம்‌ பெருமாளும்‌, ப்ரவிஸ்யது மஹாரண்யம்‌ ராமோ ராஜிவ லோசந:?’ (ஸ்ரீராம -ஸம்க்ஷேபம்‌) என்றும்‌ ‘*வநம் ஸ பார்ய: ப்ரவிவேஸ ராகவஸ் ஸ லஷ்மணஸ் ஸுர்ய இவா ப்ரமண்டலம்‌ (ஸ்ரீரா. அயோ. 119-22) (ராம பிரான்‌ மனைவியுடனும்‌ லஷ்மணனுடனும்‌ சூரியன்‌ மேக மண்டலத்தைப்‌ புகுவது போல வநம் புகுந்‌ தனர்‌-என்றுஞ் சொல்லுகிறபடியே ஹர்ய்ர்க்ஷ தரக்ஷா கிடி கட்க
    பல்லூகாதி அநேசு வந ம்ருக ஸஞ்சார கர்ஜந பயங்கரமாய்‌ *சிலைக்‌ கை வேடர்‌ திரிகிற கடுங் கானமான கள்ளர் பற்றிலே எழுந்தருளுகிற வளவிலே சில தஸ்யுக்களுக்கு ஸர்வஸ்வதாநம்‌ பண்ணி யருள, அச் செய்தியைக் கேட்டு முன்னே யெழுந்தருளின பிள்ளை லோகாசார்யர்‌ மீண்டு எழுந்தருளி அவ்விடத்தில்‌ அவர்களுக்குத்‌ தாமும்‌ ஸர்‌வஸ்வதாநம் பண்ணியருளி அப்பாலே யெழுந்தருள, அவ்வளவிலே சில கள்ளர்‌ வந்து அவர்‌ பதம்‌ பணிந்து பச்சை கட்ட,
    கலகமிகு பஞ்சமுடன்‌ கள்ளர் பற்றில்‌ கத்திருவிர் காரியப்பே ரொருவர்‌ வந்து
    பலம் அறிந்து பதம் பணிந்து பச்சை கட்டப் பாங்குடனே வாங்கினாப் போல்‌ வாங்கி நீங்க
    நல மிகுந்த தநமிதனை நம்பினோமேல்‌ நம்பெருமாளும் உம்பருடன்‌ நயந்து வாழும்
    இலகு மிகு பெருஞ் செல்வ மில்லை யென்‌று ஏர் முடும்பை யுலகாரியனு முரை செய்தானே –
    -என்கிறபடியே அவற்றை யுபேஷித்து:

    உலகாரியன்‌ திருமலை யாழ்வாரைத் திருத்த நியமித்து திருநாடலங்கரிதகல்‌
    ஜ்யோதிஷ்குடி என்கிற கிராமத்தில்‌ பெருமாளுடனே யெழூந்‌தருளி அங்கே திரு மேனி நோவு சாத்தி மிகவுந் தளர்ந்து கண்‌ வளர்ந்தருள, திருவடிகளுக்கு அந்தரங்கரான முதலிகள்‌ “எங்களுக்குத்‌ தஞ்சமேது?” என்று விண்ணப்பஞ்செய்ய, அப்போது திருமலை யாழ்வாரிட த்தில்‌ திருவுள்ளம்‌ ப்ரஸந்நமாய்க்‌ குடி.புகுந்து, ஒருமிடறு செய்து, லௌகிக வைதிகங்களிலே அதி நிபுணராய்‌
    மதுரை ராஜ்யாதிபத்யம்‌ பண்ணுகிறவர்‌ அத்தை விட்டு தர்சந ப்ரவர்த்தகராம்படி ஆசீர்‌வதித்தருளி, அவரை யநு வர்த்தித்து ரஹஸ்‌யங்களையும்‌ அர்த்தங்களையும்‌ நன்றாக ப்ரஸாதிக்கும்படி கூர
    குலோத்தம தாஸ் நாயனாருக்கும்‌, திருவாய் மொழியைப்ரஸாதிக்கும்படி திருக்கண்ணங்குடிப்‌ பிள்ளைக்கும்‌ திருபுட்குழி இருக்கும்‌, மூவாயிர வ்யாக்யாநத்துக்கு நாலூர்ப் பிள்ளைக்கும்‌,
    ஸப்தகாதை முதலான சில அர்த்த விசேஷங்களை ப்ரஸாதிக்கும்படி விளாஞ்சோலைப் பிள்ளைக்கும்‌ நியமித்தருளி,
    ஆனி தனில்‌ வளர்‌பஷத்தாறிரண்டாம் நாள்‌ தன்னில்‌, ஊனமிலில் வுலகாரு முடும்பையர் கோனுயர்‌ தவத்து, வானவர்கள்‌ தற்சூழ வைகுந் தக்குட்டனோடு தானினிது விற்றிருக்கத்‌ திருவுள்ளமாய்‌, விளாஞ்சோலைப்‌ பிள்ளையைத்‌ திருவநந்த புரத்தலே திருமேனி யளவாக எழுந்தருளி யிருக்கும்படி நியமித்தருளி, பிள்ளை திருவடிகளை த்யாநித்துக்‌ கொண்டு ஜ்யேஷ்ட சுத்த த்வாதசியிலே திருநாட்டுக்கெழுந்‌தருளினார்‌. முதலிகள்‌ சோகார்த்தராய்‌ மிகவும்‌ க்லேஸித்துத் தேறி, பெருமாள்‌ திருப்பரிவட்டம்‌ திருமாலை வரவிட, ஸம்ஸ்கரித்துப்‌ பள்ளிப் படுத்துத்‌ திருவத்யயநத்தைப்‌ பெருக்க நடத்திய௫ளினார்கள்‌.
    பிள்ளை லோகாசாரியர்‌ திரு நக்ஷத்ரம்‌ ஐப்பசியில் திருவோணம்‌, அவர்‌ தனியன்‌,
    லோகாசார்யாய குரவே க்ருஷ்ண பாதஸ்ய ஸூநவே |
    ஸம்ஸார போகி ஸந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம்: ॥

    ஸம்ஸாரமாகற பாம்‌பினால்‌ கடிக்கப் பட்டிருக்கு ஜீவர்‌ களுக்கு உஜ்ஜீவன ஒளஷதமாய்‌, வடக்குத்‌ திருவீதப் பிள்ளையின்‌ திருக்குமாரரான பிள்ளை லோகாசார்யரை அடி பணிகிறேன்‌-

    ————————————————————————–

    ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

    ஸ்ரீ Gita for Life”-

    May 6, 2026

    In this discourse titled “Gita for Life” (0:43), Dr. Venkatesh speaks in Frankfurt about the Bhagavad Gita, starting with why Krishna reared cows in his childhood (1:17). He explains that Krishna’s cow-herding was a “net practice” to extract the essence of the Upanishads, leading to the Bhagavad Gita (1:52). He highlights the following key points: Essence of Gita (3:37): Gita is the essence of all Upanishads (3:47). Yamunacharya, a preceptor of Ramanuja, explains the essence of Gita in five points (3:54): 1. Do your duty perfectly (4:16). 2. Develop self-realization knowledge (4:35). 3. Practice detachment from results (4:52). 4. These three lead to devotion (Bhakti) (5:15). 5. Bhakti leads to liberation (5:36). Applying Gita to Daily Life (6:11): Dr. Venkatesh then virtually transports the audience to Kurukshetra (6:35), the battlefield where Arjuna faces his kin (11:14) and surrenders to Krishna (12:00). He explains that this scene is not an isolated incident but a recurring mental turmoil in everyone’s mind (12:58). IPS Formula (Identity, Performance, Self-Reflection) (15:47): This three-point formula from Chapter 2 of the Bhagavad Gita helps overcome mental turmoil: Identity (I) (16:24): Realize you are a soul, not the body (16:28). This brings courage as the soul is eternal and cannot be harmed (18:28). Performance (P) (20:02): Do your duty with detachment from results (20:48). This purifies the mind, leading to clarity of thought (22:06). Self-Reflection (S) (23:22): In a pure mind, one can reflect on the self, which removes stress and depression (23:31). Spirituality: Renouncing or Performing? (25:50): Chapter 3 clarifies that spirituality is about facing and performing duties with the right attitude, not renouncing everything (35:06). Karma yoga (action with detachment) is superior to Jnana yoga (meditation) for most people (30:00). This involves: 1. Sacrificing ego (33:10): Consider yourself an instrument of God. 2. Considering duty as worship of God (33:34). 3. Detaching from the results of actions (33:46). Nature of Incarnations (Avatar) (36:32): Chapter 4 explains Krishna’s avatars with six points (37:37): 1. True appearances, not mirages (39:11). 2. Come with full potency (39:39). 3. Take a divine spiritual body, not a material one (39:48). 4. Reason for birth is compassion (Karuna), not karma (40:38). 5. Timelines: Incarnate when dharma declines and adharma rises (41:07). 6. Goal: Protect the good, eliminate evil, and uphold dharma (41:23), especially to mingle with devotees (42:47). The speaker also highlights that the deity in a temple is considered God himself, not just a representation, a concept recognized by the Indian constitution (45:00). Samadarshana (Equanimity) (46:52): Chapter 5 discusses reaching a state of perfection where one sees everyone equally, based on the understanding that differences are only bodily (48:06). All souls are qualitatively equal and connected by Paramatma (50:14), leading to universal harmony (51:21). Practical Tips for Meditation (52:05): Chapter 6 provides practical guidance for meditation, emphasizing a clean and pure environment (52:48) and a suitable seat (52:58)

    ————————————————-

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

    ஸ்ரீ அநந்தாழ்வான் மஹாத்ம்யம்—ஸ்ரீ மா முனிகள் மஹாத்ம்யம்–

    May 4, 2026

    அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம் |
    ஆச்ரிதானாம் ஸுசரணம் வந்தே அநந்தார்ய தேசிகம் ||
    அனைத்து நற்குணங்களுக்கும் இருப்பிடமாகவும், அஞ்ஞானம் என்னும் இருளைப் போக்குபவராகவும், தன்னை ஆசிரயித்தவர்களுக்கு (நம்பியவர்களுக்கு) சிறந்த புகலிடமாகவும் இருக்கும் அனந்தாரியர் (அனந்தாழ்வான்) எனும் ஆச்சாரியரை வணங்குகிறேன். 

    அடியார்கள், ராமநுசரின் (உடையவரின்) சம்பந்தம் தெளிவாகக் கூறப்படவில்லை என்று ஐயப்பட்டபோது, பெருமாள் தனியனின் இரண்டாவது பாகத்தை எடுத்துரைத்தார் !

    ஸ்ரீமத் ராமாநுஜாசார்ய ஸ்ரீபாதாம் போருஹத்வயம்
    ஸதுத்தமாங்கஸந்தார்யம் அனந்தார்ய மஹம்பஜே !
    -இராமனுஜரின் இரண்டு பாதங்கள் போன்ற (அதனாலேயே, சான்றோர் எல்லாம் போற்றி வணங்கும்) ஆச்சார்ய அனந்தார்யரின் அடி பணிந்துத் தொழுகிறேன்.

    தனியனை ஏற்றுக் கொண்ட அடியார்கள், பெருமாள் தந்த பிரசாதத்தையும், நீரையும் ஏற்றுக் கொண்டனர்.

    சென்றால் குடையாம் ஒரே பாசுரம் நித்ய ஸூரிகளில் ஒருவனுக்கு
    உறகல்-இவனைச் சொல்ல வில்லையே
    அங்கும் அஸ்தான பயசிங்கை பண்ணி பெரியாழ்வாரிலும் விஞ்சிய பரிவு உண்டே

    அநந்தம் பிரதம ரூபம் -பின்பு எம்பெருமானார் -அடுத்து அனந்தாழ்வான் -பின்பு மா முனிகள்
    ஆண் பிள்ளை
    ஸ்த்ரீ பிராய ஸ்வரூபம் தன்னை அழிய மாறி
    சிஷ்யன் இருக்கும் இருப்பைக் காட்டவே
    நரன் காட்டி அருளாத ஒன்றைக் காட்டி அருளினார்
    திருமலை நம்பி திருமலையில் நித்ய வாசம் செய்யாமல் கீழே இருந்து நித்யம் சென்று கைங்கர்யம்
    ராமானுஜர் வேறே யாருக்கும் இப்படி பட்டம் கொடுக்க வில்லையே
    பத்துக்கு மேல் அடையாளங்கள் திருமலையில் இவர் வை லக்ஷண்யம் காட்டி
    புஷ்கரணி கைங்கர்யம் -பேக் சவாரி -கடப்பாரை -பூ பறிக்க பிராட்டியைக் கட்டி வைத்து -மாமனார் ஸ்தானம்

    அலர்மேல் மங்கை திருவுக்கு அப்பனார் வாழியே
    மலையில் வேங்கடவருக்கு மாமனார் வாழியே
    திருத்தேர் -இவர் சமர்ப்பிக்க -மாப்பிள்ளைக்கு மாமனார் சம்பாவனை இன்றும் உண்டே

    மோவாக் கட்டையில் ரத்தம் பெருகி -மண்ணை வைத்து -நிற்க வைக்க
    மகரந்த பொடி -என்று வேங்கடேச இதிஹாச மாலையிலே இவரே சொல்லி வைத்து
    ப்ரஹ்ம உத்சவம் 10 நாள்-அப்ரதிக்ஷணமாக எழுந்து அருளி
    மரத்துக்கு மரியாதை -பாக் தோட்டப்புறப்பாடு
    திருத்தேர் உத்சவம் மணலை முன்பு என்றும் பின்பு பத்தாம் நாளாக மாற்றி
    கடப்பாரை கோபுர வாசலில் இட்டும் காணலாமே
    பச்சை கற்பூரம் -பிரசாதம் -ஸ்ரீ பாத ரேணு -இன்றும் பெற்று மகிழ்கிறோம்
    தாமோதரன் பட்டம் போல் இன்றும் அடையாளம் உண்டே

    கூப்பிட்டாலும் போகாமல் -ஆச்சார்ய நியமித்த கைங்கர்யங்களிலே ஈடுபாடு -ஆச்சார்யர் உகப்புக்காக செய்தார் –
    பரன் சென்று சேர் திருவேங்கடம் -ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து
    நான் -பூ லோக வைகுண்டத்தில் -ஸ்ரீ ரெங்கத்தில் இருந்து வந்தேன்

    ப்ராப்யத்துக்கு ஆச்சார்ய கைங்கர்யம் பிரதம பர்வம்
    மா முனிகள் -ப்ரீதிக்காகப் பண்ணும் பகவத் கைங்கர்யம் என்று காட்டி அருளுகிறார் –

    பாகவதர் ப்ரீதிக்காகச் செய்யும் ஆச்சார்யர் கைங்கர்யம் சரம கைங்கர்யம்
    நந்தவனம் -ஏரி -இவற்றைப் பார்க்கிறோம் இன்றும்
    எங்கள் ஆழ்வான் வாத்ஸா வரதாச்சார்யர் வரும் பொழுது
    பிரசாதம் கொடுத்து -அனந்தாழ்வான் தனியனை சாதித்த ஐதிக்யம்
    அகிலாத்மா -இத்யாதி
    இதில் ஆச்சார்யர் திருநாமம்
    ஸ்ரீ ராமானுஜ பாதாப்ஜம் திருவடி நிலைகள்
    கேட்டு ஆச்சரியப்பட்டார்

    கடிபட்ட பாம்பு கடித்த பாம்பு

    எறும்பு பிரசாதம் திரும்பி -எம்பெருமான் பொன்மலையிலே யாதேனும் ஆவேனே
    அவனே யாகவுமாம் –
    ஸ்வரூபம் அழிய மாறி இங்கே கைங்கர்யம் செய்ய வந்த ஆண் பிள்ளை அன்றோ
    அதே போல் இங்கும்

    எம்பெருமானார் தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருள
    மரம் மேல் ஏறினவர் பார்த்து வார்த்தை
    கைகால் தானே உடையும்

    திருக்கோளூர்
    அங்கே கழுதை மேய்த்து ஜீவிக்க மாட்டாயோ
    வெட்டு ஓன்று துண்டு ஒன்றாகப் பேசுவார்

    எம்பெருமானாரே ஆலிங்கனம் செய்த உத்சவ மூர்த்தி ப்ரதிஷ்டை -செய்து இன்றும் சேவிக்கிறோம்

    எம்பெருமானார் திருவடி நிலை முதலியாண்டான் -மற்ற இடங்களில்
    திருமலையில் அனந்தாழ்வான் என்றே பெயர்

    அத்யயன உத்சவம்
    இயற்பா முதலில் செவிப்பர் இங்கு
    நான்கு நாள் முதலாயிரம்
    21 கண்ணி நுண்
    அடுத்த நாள் ராமானுஜ நூற்றந்தாதி தனியாக

    81 வருஷமா – 100 வருஷம் என்பர்
    நேராக வர வேண்டாமோ
    ஆள் அந்தி தொழுகிறானோ

    சரம கைங்கர்யம் தோட்டத்திலே
    மகிழ மரம் முளைத்து
    இவரே இந்த மரம் என்று

    திருவாடிப்பூரம் அன்று -பிராட்டி உடன் எழுந்து அருளுகிறார்
    பாக் சவாரி தான் மட்டும் எழுந்து அருளுகிறார் –

    பெரிய ஜீயர் -அனந்தாழ்வான் சிஷ்ய பரம்பரையே
    மா முனிகளே மூன்று வருஷங்கள்
    பெரிய சேஷ வாஹனம்
    சின்ன சேஷ வாஹனம்
    இரண்டுமே உண்டே இன்றும்
    இப்படி பல விசேஷங்கள் திருமலைக்கு

    அனந்தம் ப்ரதமம் ரூபம்
    ராமானுஜ ததா பரம்
    அனந்தாழ்வான் த்ருதீய
    ததோ வர முனி ஸ்ம்ருத

    ————————————–

    அவரை ஆரத்தழுவிய ராமானுஜர், “அனந்தார்யா, நீயே ஆண்பிள்ளை!” என்று கூறவே.
    அன்றிலிருந்து, அவர் திருமலை ‘அனந்தாண்பிள்ளை’ என்று போற்றப்பட்டார்.
    ஆச்சார்ய கட்டளையின் பேரில், திருமலை சென்ற அனந்தார்யா, அங்கு ஒரு பூவனத்தை நிறுவி,
    பெருமாளுக்கு மலர்ச் சேவை செய்து வந்தார். அத்தோடு, ஒரு கிணறு வெட்டி, அதற்கு ராமானுஜர் என்ற பெயர் சூட்டினார்.
    அனந்தார்யா திருமலையில் செய்த பகவத் கைங்கர்யத்தின் பலனாக, பன்னிரு ஆழ்வார்களுக்கு இணையாகக் கருதப்பட்டு,
    அனந்தாழ்வான் என்ற திருநாமம் பெற்றார்.

    அவர் மைசூருக்கு அருகே உள்ள சிறுபுத்தூர் என்ற கிராமத்தில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் அவதரித்து,
    ராமானுசரின் மேன்மையால் ஈர்க்கப்பட்டு அவரிடம் சீடராகச் சேர்ந்தவர்.
    இராமனுசர் திருமலையில் தரிசிக்க வந்தபோது, அனந்தாழ்வான் நிறுவிய மலர் தோட்டத்திலிருந்த
    மல்லிகை, முல்லை, இருவாட்சி, ரோஜா, அல்லி, அளரிச் செடிகளையும்
    தவனம், மரு, மகிழ, வகூல, படால, புன்னாக, செண்பக மரங்களையும் கண்டு மனமகிழ்ந்து, அனந்தனை நோக்கி,
    “அனந்தார்யா, உன்னைச் சீடனாகப் பெற்றதின் பலனை இன்று அடைந்தேன்” என்று கூறினார்.

    முதன்முதலில் அத்தோட்டத்தில் பூப்பூத்த மகிழ மரத்தின் மேல் அனந்தனுக்கு தனிப்பற்று!
    இன்றும் உத்சவரான மலையப்ப சுவாமி, வனபோஜன உற்சவத்தின்போது இந்த மகிழ மரம் முன் எழுந்தருளுகிறார்!
    அந்த மகிழ மரத்துக்கே அனந்தன் நினைவாகப் பரிவட்ட மரியாதையும் தரப்படுகிறது.
    அத்தோட்டம், இப்போது ‘அனந்தாழ்வான்’ தோட்டம் என்றே அழைக்கப்படுகிறது.

    கொஞ்சம் கோபக்காரரான அனந்தார்யா, ஒரு முறை தனது நிறைமாத கர்ப்பிணியான மனைவிக்கு தோட்டத்தில்
    உதவி செய்ய முற்பட்ட சிறுவன் ஒருவனை (தான் மட்டுமே திருவேங்கடமுடையானுக்கு சேவை செய்ய வேண்டும்
    என்ற அதீத விருப்பத்தில் ஏற்பட்ட சினத்தால்) கடப்பாரையால் தாடையில் அடித்து விட்டார்.
    அச்சிறுவனைத் அவர் துரத்திச் சென்றபோது, அவன் கோயிலுக்குள் நுழைந்து மாயமாய் மறைந்து விட்டான்.
    கோயில் அர்ச்சகர்கள், மூலவப் பெருமாளின் தாடையில் ரத்தம் வருவதைக் கண்டு, அனந்தார்யாவிடம் கூறினர்.
    சிறுவனாக வந்தவர் பெருமாளே என்பதை உணர்ந்த அனந்தார்யா, அடிபட்ட தாடையில் பச்சைக் கற்பூரம் வைத்து,
    தன்னை மன்னித்தருளுமாறு மனமுருக வேண்டினார்! இரத்தம் வருவதும் நின்றது!
    இன்றும், திருமலை கோபுர வாசலில், வடதிசைச் சுவரின் மேற்புறத்தில், ‘அந்தக்’ கடப்பாரையைக் காணலாம்!
    அது போலவே, அனந்தன் நினைவாக, இன்றும், மூலவரின் தாடையில், பச்சைக் கற்பூரம் சாத்தப்படுகிறது.
    அது பிரசாதமாகவும் பக்தர்களுக்கு அளிக்கப்படுகிறது.

    ஆதிசேஷனின் அம்சமாகக் கருதப்படும் அனந்தாழ்வான் வைபவத்தில் ஒரு அழகான நிகழ்வு கூறப்பட்டுள்ளது.
    ஒரு முறை, அடியார்கள் சிலர், திருவேங்கடமுடையானை தரிசிக்க திருமலையில் ஏறிக் கொண்டிருந்தனர்.
    அவர்கள் மிகவும் களைப்புடனும், பசியுடனும், தாகத்துடனும் இருந்தபோது,
    பெருமாள் ஒரு பிரம்மச்சாரி வடிவில் அவர்கள் முன் தோன்றி, பிரசாதமும், நீரும் வழங்க முற்பட்டார்.
    அடியார்களோ, பெருமாளிடம் அவர் யாரென்றும், அவரின் ஆச்சார்யன் பற்றியும் அறியாமல்,
    தாங்கள் அவர் தருவனவற்றை ஏற்க இயலாதென்று கூற, பெருமாள் தான் அனந்தாழ்வானின் சிஷ்யன் என்றும்,
    அவர் தான் தன்னை உதவ அனுப்பியதாகவும் கூறினார் !!!
    அடியார்கள் நம்ப மறுத்து, பெருமாளிடம் அவரது ‘ஆச்சார்ய தனியனை’ கூறுமாறு பணித்தனர்.
    உடனே, பிரம்மச்சாரி வடிவில் வந்த பெருமாளே, பிரசித்தி பெற்ற இந்த தனியனின் முதல் பாகத்தை இயற்றினார்:

    அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம்
    ஆச்ரிதாநாம் ஸ¤சரணம் வந்தே நந்தார்ய தேசிகம்

    போற்றுதலுக்குரிய கல்யாண குணங்களும், கருணையும், நற்சுற்றமும் கொண்ட ஆச்சார்ய அனந்தார்யனின்
    திருவடிகளுக்கு என் மரியாதையைச் செலுத்துகிறேன்.
    அவரே, தன்னை வந்தடையும் மாந்தர்க்கு சிறந்த அடைக்கலம் தந்து அவர்களது அஞ்ஞான இருளை
    நீக்குகிறார்!

    அடியார்கள், ராமநுசரின் (உடையவரின்) சம்பந்தம் தெளிவாகக் கூறப்படவில்லை என்று ஐயப்பட்டபோது,
    பெருமாள் தனியனின் இரண்டாவது பாகத்தை எடுத்துரைத்தார் !

    ஸ்ரீமத் ராமாநுஜாசார்ய ஸ்ரீபாதாம் போருஹத்வயம்
    ஸதுத்தமாங்கஸந்தார்யம் அனந்தார்ய மஹம்பஜே !

    இராமனுஜரின் இரண்டு பாதங்கள் போன்ற (அதனாலேயே, சான்றோர் எல்லாம் போற்றி வணங்கும்)
    ஆச்சார்ய அனந்தார்யரின் அடி பணிந்துத் தொழுகிறேன்.

    தனியனை ஏற்றுக் கொண்ட அடியார்கள், பெருமாள் தந்த பிரசாதத்தையும், நீரையும் ஏற்றுக் கொண்டனர்.

    தமிழில், “ஏய்ந்தபெருங் கீர்த்தி” என்ற திருவாய்மொழித் தனியன் பாடல் அனந்தன் எழுதியதே.
    ‘வேங்கடாசல இதிகாசமாலா’ என்ற வடமொழி நூல் திருவரங்கத்தின் ‘கோயில் ஒழுகு’க்கு இணையானதாகப் போற்றப்படுகிறது.
    அவர் இயற்றிய ‘ராமானுஜ சௌத்ஸ்லோகி’ என்ற நூலில், திருமலை, காஞ்சி, மேல்கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய
    நான்கு புண்ணியத் தலங்களும் தனது ஆச்சார்யனான இராமனுஜரின் இதயத்துக்கு அருகே உள்ளவையாக விவரிக்கிறார்.
    அது போலவே, ‘கோதா சௌத்ஸ்லோகி’ என்ற நூலில், ஆண்டாளின் பெருமையை, மிக அழகாக, உணர்வு பூர்வமாக,
    வாசிப்பவரை ஈர்க்கும் வண்ணம் சொல்லியிருகிறார்!

    புண்ணிய மூவரான, இராமனுஜர், பெரிய திருமலை நம்பி, அனந்தாழ்வான் ஆகியோர் சேர்ந்து,
    வைகான்ஸ ஆகம வழிப்பாட்டை திருமலையில் நிலைப்படுத்த வேண்டி, ‘பெத்த ஜீயங்கார் மடத்தை’ நிறுவினர்.
    தனது ஆச்சார்யனான இராமனுஜர் மீது அளவு கடந்த பக்தியும், பாசமும் கொண்டவராக விளங்கினார் அனந்தாழ்வான்,
    குருவின் வாக்கே வேதவாக்கு என்பதற்கும் எடுத்துக்காட்டாக விளங்கினார்!
    உடையவர் இராமனுசரின் சன்னிதியை திருமலையில் அனந்தன் நிறுவினார்.
    அங்குள்ள விக்ரகம், ஸ்ரீபெரும்புதூர், ஸ்ரீரங்கம் மற்றும் திருநாராயணபுரத்தில் உள்ள உடையவர்
    திரு மூர்த்திகளை போலவே பிரசித்தம்
    ஞான முத்திரையுடன் அப்பனுக்கு சங்கு ஆழி அளித்த திருமேனி அன்றோ
    இராமனுஜர் சன்னிதியில் உள்ள சடாரி, ‘அனந்தாழ்வான்’ என்றே அழைக்கப்படுகிறது.

    ஒரு சமயம், ஸ்ரீரங்கத்து பட்டர் (ராமானுஜரின் சீடர்) தனது சீடனை, அனந்தாழ்வானிடம் அனுப்பி,
    ‘உண்மையான ஸ்ரீவைஷ்ணவன்’ யாரென்று அறிந்து வரச் சொன்னார்.
    அனந்தாழ்வான் சீடனிடம், ” உண்மையான ஸ்ரீவைஷ்ணவன் என்பவன்,
    ஒரு நாரை போல், ஒரு கோழியைப் போல, உப்பைப் போல, உன்னைப் போல இருப்பவன்” என்று கூறினார்!!!
    பொருள் விளங்காத அந்த சீடனுக்கு, பின்னாளில் பட்டர் அந்த வாக்கியத்தின் உட்பொருளை விவரித்தது சுவையானது.

    ‘நாரையைப் போன்றவன்’ என்பதற்கு, உண்மையான ஞானத்தைக் கொண்ட ஆச்சார்யனை சரணடைய காத்திருப்பவனாகவும்,
    ‘கோழியைப் போன்றவன்’ என்பதற்கு, வேதங்களின் சாரமான திருவாய்மொழியை நான்கு வேதங்களிலிருந்தும்
    சிறந்ததாக பிரித்தெடுக்க வல்ல திறமை மிக்கவனாகவும்,
    ‘உப்பைப் போன்றவன்’ என்பதற்கு, பகவத், பாகவத, ஆச்சார்ய கைங்கர்யங்களில் கரைபவனாகவும்,
    ‘உன்னைப் போன்றவன்’ என்பதற்கு, அகந்தையும், ஆணவமும் இல்லாதிருப்பவனாகவும் உட்பொருள் அமைந்திருப்பதை,
    பட்டர் அந்த சீடனுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்.

    ஆச்சார்ய பக்திக்கு உன்னதமான எடுத்துக்காட்டாக வாழ்ந்த அனந்தாழ்வான்
    புண்ணிய திருவாடிப் பூரத்து நாளில், ஆச்சார்யன் திருவடி அடைந்தார்.

    ———–

    திருநக்ஷத்ரம் : சித்திரை, சித்திரை
    அவதார ஸ்தலம் : சிறுபுத்தூர்/கிரங்கனுர் (பெங்களூரு-மைசூர் வழித்தடத்தில்)
    ஆசார்யன் : அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
    பரமபதம் அடைந்த இடம்: திருவேங்கடம்
    எழுதிய கிரந்தங்கள் : வேங்கடேச இதிகாச மாலை, கோதா சது:ச்லோகி, ராமானுஜ சது:ச்லோகி

    அநந்தாழ்வான் – அநந்தாசார்யார் மற்றும் அநந்தஸூரி என்று அழைக்கப்பட்டவர் எம்பெருமானாரின் பெருமைகளைக் கேள்வி பட்டு
    எச்சான், தொண்டனுர் நம்பி, மருதூர் நம்பி ஆகியோருடன் அவரை நாடிச் சென்றார்.
    எம்பெருமானாரின் திருவடித்தாமரைகளில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து அவருடைய நிழலில் இருக்க ஆசைப் பட்டார்.
    அந்தச் சமயத்தில் தான் எம்பெருமானார் யஞ்ய மூர்த்தி என்பவரைத் திருத்திப் பணிகொண்டு அவரை
    அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்று திருநாமமிட்டு ஸ்தாபித்திருந்தார்.
    எனவே, தன்னை நாடிய அநந்தாழ்வானையும் மற்றவர்களையும் அருளாளப் பெருமாள் எம்பெருமானாருக்கு சிஷ்யர் ஆக்கினார்.
    அனைவரும் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டனர். அவர்கள் என்னதான் தன்னுடைய சிஷ்யர்களாக இருந்தாலும்
    எல்லோருமே எம்பெருமானாரின் திருவடித்தாமரைகளிலேயே ஆச்ரயித்து இருக்க வேணுமென்று
    அருளாளப் பெருமாள் எம்பெருமானார் கேட்டுக்கொண்டார்.
    திருமலையில் எம்பெருமானாரின் திருவடி நிலைகளுக்கு அநந்தாழ்வான் என்றே பெயர்.

    அநந்தாழ்வானுக்கும் மதுரகவி ஆழ்வாருக்கும் உள்ள சில ஒற்றுமைகள்:

    இருவருக்கும் ஒரே திருநக்ஷத்ரம் …சித்திரை-சித்திரை
    இருவருமே முழுவதுமாக ஆசார்ய நிஷ்டையில் திளைத்தவர்கள்.
    மதுரகவியாழ்வார் நம்மாழ்வார் திருவடிகளிலும் அநந்தாழ்வான் எம்பெருமானாரின் திருவடிகளிலும் ஆச்ரயித்து இருந்தனர்.

    எம்பெருமானார் திருவாய்மொழியின் தேனான பாசுரங்களுக்கு வ்யாக்யானம் சாதித்துக் கொண்டிருந்தபோது
    ஒரு நாள், “ஒழிவில் காலமெல்லாம்” பதிகத்தில் (3.3) நம்மாழவார் திருவேங்கடமுடையானுக்குத் தன்னுடைய
    நீண்ட நாள் ஆசையான உயர்ந்த கைங்கர்யங்களைச் செய்ய வேணுமென்று வெளிப்படுத்தியிருந்தார்.
    அப்பதிகத்தில் திருவேங்கடமுடையான் உயர்ந்த புதிய புஷ்பங்களில் ஆசை உடையவராக இருந்ததைக் கூறியிருந்தார்.
    இதை மனதில் கொண்டு எம்பெருமானார் அங்கிருந்தோரைப் பார்த்து யாரேனும் திருமலைக்குச் சென்று
    அழகிய நந்தவனம் அமைத்து ஆழவார் விரும்பிய அந்த புஷ்ப கைங்கர்யத்தைச் செய்ய விருப்பம் உள்ளதா எனக் கேட்க
    அநந்தாழ்வான் உடனே எழுந்திருந்து ஆழவார் மற்றும் எம்பெருமானாரின் அந்த திருவுள்ளத்தைத் தாம் பூர்த்தி செய்வதாகக் கூறினார்.
    அது கேட்டு எம்பெருமானார் சந்தோஷப்பட உடனே அநந்தாழ்வான் திருமலைக்கு விடை பெற்றுச் சென்றார்.
    அவர் முதலில் திருவேங்கடமுடையனுக்கு மங்களாசாசனம் செய்து புதிய நந்தவனம் அமைத்து
    அதற்கு “ராமானுஜன்” என்று பெயரிட்டு திருவேங்கடமுடையனுக்கு தினமும் புஷ்ப கைங்கர்யங்கள் செய்து வந்தார்.
    இது கேட்டு எம்பெருமானார் அதைக் காண விருப்பம் கொண்டு தம்முடைய திருவாய்மொழி காலக்ஷேபத்தை
    விரைவாக முடித்துக் கொண்டு திருமலைக்குப் பயணப்பட்டார்.

    வழியில் காஞ்சிபுரம் தேவப்பெருமாளுக்கும் திருக்கச்சி நம்பிகளுக்கும் மங்களாசாஸனம் செய்துவிட்டு திருப்பதி வந்தடைந்தார்.
    அநந்தாழ்வானும் சில ஸ்ரீவைஷ்ணவர்களும் எம்பெருமானாரை எதிர் கொண்டழைக்க மலை அடிவாரத்திற்குச் சென்றனர்.
    ஆனால் எம்பெருமானார் திருமலையே ஆதிசேஷனின் அம்சம் எனக் கூறி அதன் மேலேற மறுத்துவிட்டார்.
    பின் அங்கிருந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் எல்லோரும் “தேவரீரே மறுத்துவிட்டால் நாங்கள் எவ்வாறு ஏறுவோம்” என்று
    மிகத் தாழ்மையுடன் வினவ அவரும் அதை ஆமோத்தித்துப் பின் மலை மேல் ஏறினார்.
    திருமலை வந்தடைந்தவுடன் திருமலை நம்பியே வந்து எம்பெருமானாரை வரவேற்று அழைத்துச் சென்றார்.
    ஸ்வாமி பின் திருமலையில் அநந்தாழ்வானால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த “ராமானுஜன்” நந்தவனத்தை பார்த்து
    அங்கு நேர்த்தியாக வளர்க்கப்பட்ட பலவித வண்ண மலர்களைப் பார்த்து பேருவகை கொண்டார்.
    திருமங்கை ஆழ்வார் கூறியது போல “வளர்த்ததனால் பயன் பெற்றேன்” (பரகால நாயகி ஒரு கிளி வளர்த்தாள்.
    அது சதா சர்வ காலமும் எம்பெருமானின் திருநாமத்தையும்/சரிதத்தையும் திரும்பத் திரும்ப கூறிக்கொண்டே இருந்ததால்
    பரகால நாயகி அக்கிளியை “வளர்த்ததால் பயன் பெற்றேன்” என்று பேரானந்தம் கொண்டாள்).
    அவ்வாறே எம்பெருமானாரும் அநந்தாழ்வானின் அர்பணிப்பைப் பார்த்து பேருவகை கொண்டார்.

    ஒரு சமயம் அநந்தாழ்வானும் அவரது கர்ப்பிணி மனைவியும் நந்தவனத்திற்காக. ஒரு சிறிய குளம் வெட்டிக் கொண்டு இருந்தனர்.
    அப்போது எம்பெருமானே ஒரு சிறுவனாகத் தோற்றம் கொண்டு அவர்களுக்கு உதவி செய்ய வந்தான்.
    ஆனால் தன்னுடைய ஆசார்யனின் கட்டளையை தானே நிறைவேற்ற எண்ணிய அநந்தாழ்வான் அச்சிறுவனின் உதவியை மறுத்து விட்டார்.
    ஆனால் அநந்தாழ்வான் இல்லாத சமயத்தில் அவருடைய மனைவி அச்சிறுவனின்உதவியைப் பெற்றுக் கொண்டாள்.
    இதைக் கேள்வியுற்ற அநந்தாழ்வான் மிகுந்த கோபம் கொண்டு அச்சிறுவனை விரட்டிக் கொண்டு ஓடினார்.
    இறுதியில் தாம் வைத்திருந்த கடப்பாரையை அவன் மீது எறிந்தார்.
    அக்கடப்பாரை அச்சிறுவனின் நாடியில் பட அவனும் ஓடி சன்னதிக்குள் மறைந்தான்.
    திருவேங்கடமுடையானின் முகவாயிலும் அடி பட்டதாகக் காட்சிளிக்க, அதற்காகத்தான் நம்ம இன்றளவும்
    திருவேங்கடமுடையனுக்குப் பச்சைக் கற்பூரம் சார்த்தி குளிரப் பண்ணுகிறோம்.

    ஒரு முறை அநந்தாழ்வானை ஒரு சர்ப்பம் தீண்டிவிட்டது. அப்போது உடனிருந்தவர்கள் மிகுந்த கவலை அடைய அவர் கூறினார்.
    “என்னைத் தீண்டிய சர்ப்பம் பலமுடையதாக இருந்தால் நான் இந்த சரீரத்தை வ்ரஜை நதியில் நீராடித் தொலைத்து விட்டுப்
    பின் பரமபதத்தில் இருக்கும் எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்வேன்.
    மாறாக இருந்தால் இங்குள்ள புஷ்கரிணியில் நீராடி திருவேங்கடத்திலேயே கைங்கர்யங்கள் செய்வேன்” என்றார்.
    அவர் கைங்கர்யத்தில் அவ்வளவு ஊற்றம் உடையவராக விளங்கினார். தன்னுடைய தேஹ அபிமானமே இல்லாதிருந்தார்.

    மற்றறொரு முறை அவர் பக்கத்தில் ஒரு ஊருக்குச் சென்று கொண்டிருந்தார்.
    அப்போது திருவேங்கடத்திலிருந்து அவர் பிரசாதங்கள் கொண்டு வந்திருந்தார். அவற்றைப் பிரித்த போது
    அதில் பல எறும்புகள் இருப்பதைப் பார்த்துத் தன்னுடைய சிஷ்யர்களைப் பார்த்து அவற்றை மீண்டும் மலையிலே கொண்டு விட பணித்தார்.
    ஏனென்றால் குலசேகர ஆழவார் கூறியது போல் (அவரும் எம்பெருமானின் பக்தர்களும் ) அவர் மலையில் ஏதேனுமாக இருக்க ஆசைப் பட்டாரே.
    அதனால் இந்த எறும்புகள் அவர்களாக இருக்கக் கூடும். எனவே நாம் அவர்கள் திருவேங்கடத்தில் வாழ்வதற்கு தொந்தரவு செய்யக் கூடாது என்றார்.

    ஒரு முறை அநந்தாழவான் திருவேங்கடமுடையானுக்கு மாலை தொடுத்துக் கொண்டிருந்தபோது அவரை உடனே அழைத்து
    வரும்படி ஒருவரை திருவேங்கடமுடையான் பணித்தார். ஆனால் அநந்தாழ்வான் தான் தொடுத்துக் கொண்டிருந்த
    மாலை கைங்கர்யம் முடிந்த பின் தாமதமாகத் திருவேங்கடமுடையானிடம் சென்றார்.
    அவருடைய கால தாமதத்திற்குக் காரணம் கேட்க அதற்கு அவர், தமக்கு புஷ்பங்கள் எல்லாம் மொட்டாக மலரும் தருவாயில்
    இருக்கும்போதே மாலை கட்டி முடித்துவிடவேண்டும் என்றும் மேலும் சந்நிதியில் அவருக்கான கைங்கர்யங்கள் ஏதுமில்லை என்பதால்
    எம்பெருமானாரால் கட்டளையிடப்பட்ட “கைங்கர்யத்தைத் தவிர வேறு கார்யம் இல்லை” என்று பதிலுரைத்தார்.
    அதற்கு எம்பெருமான் “நான் உம்மை திருமலையிலிருந்தே வெளியேற வேண்டும் எனப் பணித்தால் என்ன செய்வீர்?” என்று வினவ
    அதற்கு அவர், “நீர் எனக்குச் சில காலம் முன்பாக இங்கு வந்தீர். ஆனால் நான் எம் ஆசார்யன் கட்டளையாலே இங்கு வந்து சேர்ந்தேன்.;
    அவ்வாறிருக்க நீர் எப்படி எம்மை வெளியேறச் சொல்ல முடியும்” என்று கேட்டார்.
    அது கேட்ட எம்பெருமான், அநந்தாழ்வானின் மிக சிறந்த ஆசார்ய நிஷ்டையைக் கண்டு மிகுந்த ஸந்தோஷம் அடைந்தார்.

    அநந்தாழ்வானின் பெருமைகளையும் அறிவுரைகளையும் வ்யாக்யானங்களில் கூறிய படி சிலவற்றை இங்கே காண்போம்

    பெரியாழவார் திருமொழி 4.4.1 – மணவாள மாமுனிகள் வ்யாக்யானம் –
    இந்தப் பாசுரத்தில் திருக்கோஷ்டியூர் ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆசார்யனுக்கு உகப்பான வார்த்தைகளைத் தவிர
    வேறெந்த வார்த்தைகளையும் பேச மாட்டார்கள் என்று ஆழ்வார் புகழ்கிறார்.
    பட்டர் மேல் அநந்தாழ்வானுக்கு இருந்த பற்றுதலை (பட்டர் அநந்தாழ்வாழ்வானை விட வயதில் சிறியவராக இருந்தாலும்)
    மாமுனிகள் வெளிப்படுத்துகிறார். அநந்தாழ்வானுடைய அந்திமக் காலத்தில் அவர் சில ஸ்ரீவைஷ்ணவர்களைப் பார்த்து
    பட்டருக்கு மிகவும் நெருக்கமான/பிடித்தமான பெயர் என்று கேட்க அதற்கு அவர்கள் பட்டருக்கு மிகவும் பிடித்தமான
    நம்பெருமாள் பெயரான “அழகிய மணவாளன்” என்று பதில் கூறினர்.
    அதற்கு அநந்தாழ்வான் ஒரு கணவனுடைய பெயரைச் சொல்லுவது நம் சம்பிரயதயத்திற்கு எதிரானது என்றாலும்
    பட்டருக்கு உகப்பானது என்பதால் தாமும் அந்தப் பெயரையே சொல்வதாகவும் கூறி
    அந்தத் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டே பரமபதம் அடைந்தார்.
    அவருக்கு எம்பெருமானாரின் பெயரையே சொல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் பட்டருக்குப் பிடித்தமான பெயர்
    அழகிய மணவாளன் என்பதால் அதையே தாமும் கூறினார்.

    நாச்சியார் திருமொழி 7 .2 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம்: –
    இந்தப் பாசுரத்தில் ஆண்டாள் பாஞ்சஜன்யம் ஸமுத்ரத்தில் பிறந்தாலும் முடிவில் எம்பெருமானின்
    திவ்ய திருக்கரங்களில் சென்றடைந்தது. இதைப் பற்றி விளக்கும்போது பெரியவாச்சான் பிள்ளை,
    அநந்தாழ்வான் மற்றும் நஞ்சீயர் தொடர்பான விஷயத்தைக் கூறுகிறார்.
    பட்டரால் திருத்திப் பணி கொள்ளப்பட்ட ஒரு வேதாந்தி தம்முடைய செல்வத்தையெல்லாம் மூன்று பங்காகப் பிரித்து
    இரண்டு பகுதிகளைத் தன்னுடைய இரண்டு மனைவிகளுக்கும் கொடுத்து விட்டு மூன்றாவது பங்கைத் தமது ஆசார்யரான
    பட்டரிடம் ஸமர்ப்பித்துவிட்டுத் தாம் ஸந்யாஸம் ஏற்றுக் கொண்டு தம்முடைய ஆசார்யனுக்குக் கைங்கர்யம் செய்ய விரும்பி ஸ்ரீரங்கம் வந்தார்.

    இதைக் கேள்விப்பட்ட அநந்தாழ்வானும் அந்த வேதாந்தியிடம் “நீர் கிருஹஸ்தாச்ரமத்தில் நல்லபடியாக சௌகர்யமாகத் தானே
    இருந்து வந்தீர். நீர் அங்கேயே தொடர்ந்து இருந்துகொண்டு ஸம்பரதாய விஷயத்தை நன்றாக அறிந்துகொண்டு
    ஆசார்யனுக்கும் பாகவதர்களுக்கும் கைங்கர்யம் பண்ணி கொண்டு இருந்து பின்பு அப்படியே பரமபதம் அடைந்திருக்கலாமே.
    ஏன் ஸந்யாஸம் ஏற்றுக் கொண்டீர்?” என்றார்.
    வேறு சில ஸ்ரீவைஷ்ணவர்கள் அதற்கு “என்ன செய்ய” என்று கேட்க
    அநந்தாழ்வானும் “ஒருவர் திருமந்திரத்திலே பிறந்து (பரமாத்மா ஜீவாத்மா சம்பந்தத்தை அறிந்து கொண்டு)
    பின் த்வய மஹா மந்த்ரத்தாலே வளர்ந்து (பரமாத்மாவே உபாயம் உபேயம் என்று அறிந்து கொண்டு)
    அதற்குத் தகுந்தாற் போல் வாழ வேண்டும்” என்று அருளினார்.

    நாச்சியார் திருமொழி 12.5 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் –
    இந்தப் பாசுரத்தில் ஆண்டாள் எவ்வாறு எல்லா கோபர்களும் கோபிகளும் கண்ணன் எம்பெருமான் காளியன் தலையில் மேல் நின்று
    நடனம் ஆடுவதைக் கேட்டு மூர்ச்சித்து விழுந்தார்கள் என்று விளக்குகிறாள்.
    ஒரு முறை அநந்தாழ்வான் நம்பி குஹ தாசர் என்பவருடன் எம்பெருமானாரை தரிசிக்க சென்றார்.
    அவர்கள் ஸ்ரீரங்கம் சென்று அடைந்த பொது வழியில் சில ஏகாங்கிகள் (கைங்கர்யபரர்கள்) மழித்த தலையோடு காவேரியிலிருந்து
    நீராடிவிட்டு வருவதைப் பார்த்துக் காரணம் வினவ அவர்கள் எம்பெருமானார் இந்த பூவுலகை நீத்து பரமபதம் அடைந்ததைச் சொன்னார்கள்.
    இதைக் கேட்ட உடனேயே நம்பி குஹ தாசர் அருகிலிருந்த மரத்தின் மேலேறி தம் உயிரை மாய்த்துக் கொள்ள விரும்பினார்.
    அதற்கு அநந்தாழ்வான் “|நீர் எம்பெருமானார் பரமபதம் அடைந்த செய்தி கேள்விப்பட்ட அந்த க்ஷணமே உயிரை விட்டிருக்க வேண்டும்.
    இப்போது மரத்தில் மீதிருந்து குதிப்பதால் உங்கள் உயிர் போகாது. ஆனால் உம்முடைய கால்கள் தான் உடைந்து போகும் என்றார்”.
    இந்த நிகழ்வு கோப கோபிகளுக்கு கிருஷ்ணன் மீதிருந்த பற்றுதலை அழகாக விளக்குகிறது.

    பெருமாள் திருமொழி 4.10 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் –
    இந்தப் பதிகத்தில் குலசேகர ஆழ்வார் திருமலையில் தாம் ஏதேனுமாக வேண்டும் என்று கூறுவதன் மூலம்
    திருவேங்கடத்தின் மீது தாம் கொண்டிருந்த பற்றுதலைக் கூறினார்.
    அது போல அநந்தாழ்வானும் திருவேங்கட மலைக்கும் தமக்கும் ஏதேனும் ஒரு சம்பந்தம் இருக்க வேணும் என்பதற்காக
    திருவேங்கடமுடையனாகவே ஆனாலும் பரவாயில்லை என்கிறார்.

    பெரிய திருமொழி 5.5.1 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் –
    இந்தப் பதிகத்தில் திருமங்கை ஆழ்வார் பரகால நாயகி பாவத்தில் திருவேங்கடத்தைப் பார்த்து “வேங்கடமே வேங்கடமே” என்று
    கதறி அந்த திவ்ய தேசத்தின் மேல் தாம் கொண்டு இருந்த அளவில்லாப் பற்றுதலைக் கூறுகிறார்.
    இதை நஞ்சீயர், பட்டர் எவ்வாறு நம்பெருமாளை “அழகிய மணவாளா” என்று கூப்பிட்டாரோ,
    அநந்தாழ்வான் எவ்வாறு ஸ்ரீனிவாசனை “திருவேங்கடமுடையான்” என்று கூப்பிட்டாரோ அதற்கு ஒப்பிட்டுக் கூறுகிறார்.

    திருவாய்மொழி 6.7.1 – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் –
    இந்தப் பதிகத்தில் நம்மாழ்வாருக்கு வைத்தமாநிதி எம்பெருமானிடத்திலும் திருக்கோளூர் திவ்ய தேசத்தின் மேலும் இருந்த
    அதீத பற்றுதலைக் கூறுகிறார். நம்பிள்ளை இதை அநந்தாழ்வானின் ஒரு நிகழ்வின் மூலம் விளக்குகிறார்.
    அதாவது ஒருவன் அவனுடைய சொந்த ஊரான திவ்ய தேசத்தில் இருந்து கொண்டே அந்தப் பெருமாளுக்கு
    கைங்கர்யம் செய்வதே சிறந்ததது என்பதைக் குறிப்பிடுகிறார்.
    ஒருமுறை அநந்தாழ்வான் ஒரு ஸ்ரீவைஷ்ணவர் சோழ குலாந்தகன் என்ற ஊரில் ஒரு வயலில் உழவு வேலை செய்து
    கொண்டிருப்பதைக் கண்டு அவரிடம் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று கேட்க அவரும் தாம் திருக்கோளுரைச் சேர்ந்தவன் என்று கூற
    பின் ஏன் நீர் உமது சொந்த ஊரை விட்டு வந்து இங்கு வந்தீர் எனக் கேட்டார்.
    அதற்கு அவர் தமது சொந்த ஊரில் அவருக்கு எந்த ஒரு வேலையும் கிடைக்கவில்லை என்றும் அதனால் இங்கு வந்ததாகவும் சொன்னார்.
    அது கேட்ட அநந்தாழ்வான் நீர் உமது சொந்த ஊரில் சில கழுதைகளை மேய்த்தாவது சம்பாதித்துக் கொண்டிருந்திருக்கலாம்.
    அது திருக்கோளூர் எம்பெருமானுக்கும் நம்மாழ்வாருக்கும் மிகவும் உகப்பாக இருந்திருக்கும் .
    இங்கு வந்து வயலில் வேலை செய்வதற்குப் பதில் அங்கேயே இருந்து கொண்டு அவர்களுக்குக் கைங்கர்யங்கள்
    செய்து கொண்டு இருந்திருக்கலாம் என்றார். இதன் மூலம் இந்த உலகில் வாழும் ஜீவாத்மாக்கள் ஒரு திவ்ய தேசத்தில்
    ஸ்ரீ வைஷ்ணவர்கள் மத்தியிலேயே இருந்து கொண்டு கைங்கர்யத்தில் ஈடுபடுவதே சிறந்தது என்கிறார்.

    திருவாய்மொழி 6.8.1 – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் –
    இந்தப் பதிகத்தில் நம்மாழ்வார் பராங்குச நாயகி பாவத்தில் பிரிவாற்றாமையால் தாம் படும் வேதனையை
    எம்பெருமானிடத்தில் சென்று கூற ஒரு பறவையைத் தூது விடுகிறார்.
    அப்போது ஆழ்வார் அந்தப் பறவையிடம் அது தமக்கு தூதாகச் சென்றால் அதற்கு அவள்
    இந்த ஸம்ஸாரம் என்கிற லீலா விபூதியையும் பரமபதம் ஆகிய நித்ய விபூதியையும் இரண்டையுமே அளிப்பதாகக் கூறுகிறாள்.
    (பராங்குச நாயகியே எம்பெருமானின் நாயகியாகவும்/மனைவியாகவும் இருப்பதால்
    எம்பெருமானுக்குச் சொந்தமான எல்லாமே அவளுக்கும் சொந்தம்) .
    அப்போது ஒருவர் பராங்குச நாயகி பின் எங்கே தங்குவாள் எனக் கேட்க அதற்கு அநந்தாழ்வான் அந்த பறவை
    எங்கே இடம் கொடுக்கிறதோ அங்கே இருப்பாள் என்று மிக அழகாகச் சொல்கிறார்.

    திருவாய்மொழி 7.2.9 – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் –
    இந்தப் பாசுரத்தில் ஆழ்வார், எம்பெருமானைப் பார்த்து “என் திருமகள் சேர் மார்பன்” என்று சொல்கிறார்.
    அதாவது அவரே. மஹாலக்ஷ்மித் தாயாரின் உறைவிடம் என்பதால். ஆழ்வாரின் மேல் இருந்த மிகுந்த பற்றுதலால்
    அநந்தாழ்வான் தன்னுடைய பெண்ணிற்கு “என் திருமகள்” என்று பெயரிட்டார்.

    வார்த்தமாலை 345 –
    ஒரு முறை பட்டர் தனது சிஷ்யர்களுள் ஒருவரை அநந்தாழ்வானிடம் சென்று ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் எவ்வாறு
    நடந்து கொள்ள வேண்டும் என்று அறிந்து வரச் சொன்னார்.
    அவரும் அநந்தாழ்வானின் திருமாளிகைக்குச் சென்ற போது அங்கே ததீயாராதனம் நடந்து கொண்டிருந்தது.
    அங்கு இடம் முழுவதும் நிரம்பி இருந்ததால் அந்த சிஷ்யர் அங்கே எல்லோரும் உணவருந்தி முடிக்கும் வரை காத்திருந்தார்.
    அவரைப் பார்த்து விட்ட அநந்தாழ்வான் அவரை வரவேற்று இறுதியில் தம்மோடு இருந்து பிரசாதம் பெற்றுக் கொள்ள வேண்டினார்.
    பின் அவரைப் பற்றிய விவரங்கள் கேட்டபோது அந்த ஸ்ரீ வைஷ்ணவர் தாம் பட்டருடைய சிஷ்யர் என்றும்,
    பட்டர் தான் அவரை ஒரு ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம் என்ன என்று அநந்தாழ்வானிடமிருந்து அறிந்து கொண்டு வரச் சொன்னதையும் கூறினார்.

    அதற்கு அநந்தாழ்வான் கூறினார்,
    ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் கொக்கு போலவும்,கோழி போலவும் உப்பைப் போலவும் உம்மைப் போலவும் இருக்க வேண்டும் என்று பதிலுரைத்தார்.

    கொக்கு என்பது எப்போதும் மிகச் சிறந்த மீனுக்காக காத்திருந்து உண்ணும்.
    அது போல ஸ்ரீவைஷ்ணவனும் பகவானையே எப்போதும் எல்லாவற்றிற்கும் அண்டி இருந்து பாகவத கைங்கர்யத்தையே
    மிகச் சிறந்த ஆசீர்வாதமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    கோழி எப்போதும் குப்பையைக் கிளறி அதிலிருந்து தனக்குத் தேவையான அரிசியை பொறுக்கிக் கொள்ளும்.
    அது போல ஸ்ரீவைஷ்ணவனும் சாஸ்த்ரங்களிலிருந்து தேடி (அதில் எல்லா மனிதர்களுக்கும் தேவையான எல்லா விஷயங்களும் கிடைக்கும்)
    அதிலிருந்து மிக உயர்ந்த விஷயங்களான பரகத ஸ்விகாரம் பாகவத கைங்கர்யம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு
    அவற்றைப் பின் பற்றி நடக்க வேண்டும்.

    உப்பு நம் உணவுப் பண்டங்களோடு கலந்து அந்த உணவை சுவையானதாக ஆக்கும்.
    அதுபோல ஸ்ரீவைஷ்ணவன் என்பவன் தன்னுடைய அகங்காரம் எல்லாவற்றையும் அடக்கி இன்னொரு
    ஸ்ரீவைஷ்ணவன் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும். மேலும் தான் இல்லாதபோது தான் செய்த
    நல்ல செயல்களை மற்றவர்கள் எண்ணிப் பார்க்குமாறு இருக்க வேண்டும்.

    இறுதியில் ஒரு ஸ்ரீவைஷ்ணவன் என்பவன் உம்மைப் போன்று பொறுமை காத்து பணிவோடு இருந்து
    என்னிடமிருந்து விஷயங்களை அறிந்து கொண்டது போல ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவனும் அடுத்தவர்களின்
    சந்தோஷத்திற்காக பணிவுடன் செயல் பட வேண்டும் என்றார்.

    இன்றளவும் திருவேங்கடமுடையான் அநந்தாழ்வானை கௌரவிக்கிறார். ஒவ்வொரு வருடமும் அவருடைய திருநக்ஷத்ரமான
    சித்திரை- சித்திரையிலும் அவருடைய தீர்த்த தினமான திருவாடிப்பூரம் அன்றும் அநந்தாழ்வானின் நந்தவனத்திற்கு எழுந்தருளி
    தம்முடைய மாலை பிரசாதத்தையும் ஸ்ரீசடகோபத்தையும் அநந்தாழ்வான் சரம கைங்கர்யங்கள் நடந்த மகிழ மரத்திற்கு சாதிக்கிறார்.

    அவர் முழுவதுமாக தான் வாழ்வை பாகவத நிஷ்டையிலேயே கழித்தார்.
    எம்பெருமானாருக்கு மிகவும் நெருக்கமானவராக விளங்கினார்.
    நாமும் அவருடைய திருவடித் தாமரைகளில் பணிந்து அவருடைய பாகவத நிஷ்டையைப் போல்
    ஒரு துளி அளவாவது பெற ப்ரார்த்திப்போம்.

    ஸ்ரீ அநந்தாழ்வானுடைய தனியன்:

    அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம் |
    ஆச்ரிதானாம் ஸுசரணம் வந்தே அநந்தார்ய தேசிகம் ||

    மலையில் வேங்கடவற்கு மாமனார் வாழியே
    மணிச் சுடர் கோன் அநந்தன் என வந்து உதித்தான் வாழியே
    உலகுக்கோர் தஞ்சம் என உதித்து அருள்வோன் வாழியே
    உலகமுண்ட மாலடியை உகந்து உய்ந்தோன் வாழியே
    இலகு சித்திரை தன்னில் சித்திரையோன் வாழியே
    எந்தை எதிராசர் இணையடியோன் வாழியே
    அலர்மேல் மங்கை திருவுக்கு அப்பனார் வாழியே
    அனந்தாழ்வான் திருவடிகள் அநவரதம் வாழியே –

    https://acharya.org/mag/g/g0505.pdf–கீதாசார்யன் -505-ஐப்பசி 2020–மா முநிகழ் 650-திரு நஷத்ர மலர்

    இயற்பெயர் அழகிய மணவாளன் -ஸந்யாஸ ஆஸ்ரமம் ஏற்றுக்கொண்ட பின்பும் இந்த திருநாமம் தொடரும் -பால்யாத் -ஸஹஜ -மஹாத்ம்யம் -அழகிய மணவாள மா முனிகள் -கொண்டாடுகிறோம்-கீதா உபதேசம் -62 திருநக்ஷத்ரம் -ஈடு ஸாதித்த மா முநி களுக்கும் 62 திருநக்ஷத்ரம்-எம் ஐயன் ராமானுஜன் -திருக்குமாரருக்கு திருநாமம் ஸாதித்து அருளினார்-

    ராமாநுஜ ரஹச்யத்ரயம் மூலம் – நித்தியம்  -அனுசந்திக்க வேண்டியவை :1-திருமந்த்ரம் – திருவஷ்டாக்ஷரம்–ஓம் நமோ ராமாநுஜாய-2. த்வய மந்த்ரம்–ஸ்ரீமத் ராமாநுஜ சரணௌ சரணம் ப்ரபத்யே : /ஸ்ரீமதே  ராமாநுஜாய நம :  //3. சரமச்லோகம்–ஸர்வகர்மாணி  ஸந்த்யஜ்ய ராமாநுஜ இதி ஸ்மர /விபூதிம் ஸர்வபூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம //

    ஒரு பரிதாபீ வருடத்தில் ஸ்வாமி மணவாள மாமுனிகள் பெரியபெருமாளை ஸேவிக்கின்றார்..!“நாளைமுதலாக நம்முடைய பெரிய திருமண்டபத்தில், பெரிய வண்குருகூர் நம்பியான ஆழ்வாருடைய, திருவாய்மொழிப்பொருளை, ஈடுமுப்பத்தாறாயிரத்துடன் நடத்தும்”
    என்று நியமித்தருளினார் நம்பெருமாள்..!சொன்னதோடு மட்டுமின்றி, தம்முடைய ஒரு வருடத்தியத் திருநாட்களையெல்லாம் நிறுத்தி வைக்கின்றார்..!கலி 4533 பரீதாபீ வருஷம், ஆவணிமாதம் 31ஆம் தேதி, வெள்ளிக்கிழமை, சுக்ல சதுர்த்தி, ஸ்வாதி நக்ஷத்ரம் (16-9-1432) ஈடு துடங்கி, ஸ்ரீசைலேச தனியன் அவதரித்த நாள்: கலி 4534 – பிரமாதீச வருஷம் ஆனி மாதம் பௌர்ணமி ஞாயிறு, மூலநக்ஷத்ரம் (9-7-1433) சாற்று முறையன்று அர்ச்சக குமாரனாகத் தோன்றினார் அரங்கன்..ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்வணம் யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்”என்று தனியன் சொல்லி, ”அழகிய மணவாள மாமுனிகளை அடியேன் வணங்குகிறேன்” என்று வணங்கி நிற்கின்றார்..!“பக்தைர் பாகவத ஸஹா” “பாகவத ப்ரியன்” என்று பரமபாகவதர்களுக்கு தோழனாகவும், உற்றவனாகவும் மட்டுமின்றி தாஸனாகவும், பரம சிஷ்யனாகவும் இருக்கின்றார் அந்த பரமாத்மா..!

    திருவானந்தாழ்வானுக்கு திருவேங்கடமுடையான் ஸாதித்த தனியனும் உண்டே-தன்னை நாடிய அநந்தாழ்வானையும் மற்றவர்களையும் அருளாளப் பெருமாள் எம்பெருமானாருக்கு சிஷ்யர் ஆக்கினார். அனைவரும் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டனர். அவர்கள் என்னதான் தன்னுடைய சிஷ்யர்களாக இருந்தாலும் எல்லோருமே எம்பெருமானாரின் திருவடித்தாமரைகளிலேயே ஆச்ரயித்து இருக்க வேணுமென்று அருளாளப் பெருமாள் எம்பெருமானார் கேட்டுக்கொண்டார். திருமலையில் எம்பெருமானாரின் திருவடி நிலைகளுக்கு அநந்தாழ்வான் என்றே பெயர்

    அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம் |
    ஆச்ரிதானாம் ஸுசரணம் வந்தே அநந்தார்ய தேசிகம் ||
    –அனைத்து நற்குணங்களுக்கும் இருப்பிடமாகவும், அஞ்ஞானம் என்னும் இருளைப் போக்குபவராகவும், தன்னை ஆசிரயித்தவர்களுக்கு (நம்பியவர்களுக்கு) சிறந்த புகலிடமாகவும் இருக்கும் அனந்தாரியர் (அனந்தாழ்வான்) எனும் ஆச்சாரியரை வணங்குகிறேன். 

    ஸ்ரீமத் ராமாநுஜாசார்ய ஸ்ரீபாதாம் போருஹத்வயம்
    ஸதுத்தமாங்கஸந்தார்யம் அனந்தார்ய மஹம்பஜே !
    -இராமனுஜரின் இரண்டு பாதங்கள் போன்ற (அதனாலேயே, சான்றோர் எல்லாம் போற்றி வணங்கும்) ஆச்சார்ய அனந்தார்யரின் அடி பணிந்துத் தொழுகிறேன்.

    தனியனை ஏற்றுக் கொண்ட அடியார்கள், பெருமாள் தந்த பிரசாதத்தையும், நீரையும் ஏற்றுக் கொண்டனர்.

    இன்றளவும் திருவேங்கடமுடையான் அநந்தாழ்வானை கௌரவிக்கிறார். ஒவ்வொரு வருடமும் அவருடைய திருநக்ஷத்ரமான சித்திரை- சித்திரையிலும் அவருடைய தீர்த்த தினமான திருவாடிப்பூரம் அன்றும் அநந்தாழ்வானின் நந்தவனத்திற்கு எழுந்தருளி தம்முடைய மாலை பிரசாதத்தையும் ஸ்ரீசடகோபத்தையும் அநந்தாழ்வான் சரம கைங்கர்யங்கள் நடந்த மகிழ மரத்திற்கு சாதிக்கிறார்.

    ஈட்டுப் பெருக்கர் கோயில் செல்வ அழகிய மணவாள மா முனிகள் -கோயில் செல்வமான பெரிய பெருமாளைக் கொண்டவரே -கோயிலுக்கு செல்வமான -ஸ்ரீ ரெங்க தனம் மா முனிகள் –

    அ*ரங்கத்தில் *ஆ*னித்திருமஞ்சனம் *இ*டர்பாடில்லாமல், *ஈ*ரொன்பது கைங்கர்யபர்களுடன்,*உ*வகையுடன், *ஊ*ர் ஜனநெரிசல் இல்லாமல், *எ*ளிமையாக ,*ஏ*ற்றமுடன், *ஐ*வகை வாத்யங்கள் முழங்க, *ஒ*ய்யாரமாக யானையின் மீது, *ஓ*ங்கார நாதம் ரீங்காரமிட ,அகிலத்தின் *ஔ*ஷதமாம் நம் அரங்கநகரப்பனுக்கு *ஜேஷ்டாபிஷேக* *வைபவம் நடைபெற்றது அனைத்துலக அடியார்களுக்கும் ஒருவித மன நிறைவை அளித்தது*

    ஶிஷ்யர்கள் : அஷ்ட திக் கஜங்கள் : பொன்னடிக்கால் ஜீயர் ,கோயில் அண்ணன் , பத்தங்கி பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர், திருவேங்கட ஜீயர், எறும்பியப்பா , அப்பிள்ளை , அப்பிள்ளார் , பிரதிவாதி பயங்கரம் அண்ணா. நவ ரத்னங்கள் : ஸேனை முதலியாண்டான் நாயனார், ஶடகோப தாஸர் (நாலூர் சிற்றாத்தான்), கந்தாடை போரேற்று நாயன், ஏட்டூர் சிங்கராசாரியார், கந்தாடை அண்ணப்பன், கந்தாடை திருகோபுரத்து நாயனார், கந்தாடை நாரணப்பை , கந்தாடை தோழப்பரப்பை, கந்தாடை அழைத்து வாழ்வித்த பெருமாள். மணவாள மாமுநிகளுக்கு பல திருவம்சங்களிலிருந்தும், திருமாளிகையிலிருந்தும் மற்றும் திவ்ய தேஶங்களிலிருந்தும் மேலும் பல ஶிஷ்யர்கள் இருந்தார்கள்.

    பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் :தினமும் அவர் மாமுனிகள் சாப்பிட்ட சேஷப் பிரசாதத்தை (மிச்சத்தை) உண்ணுவார். மாமுனிகள் சாப்பிட்ட வாழை இலையிலேயே சாப்பிடுவார். மாமுனிகள் மோர் சாதத்துடன் முடிக்கும் பொழுது பட்டர்பிரான் ஜீயர் அந்த சுவை மாறாமல் இருப்பதற்காக மோர் சாதத்திலிருந்தே சாப்பிடத் தொடங்குவாராம். அதனால் அவர் மோர் முன்னர் ஐயர் என அழைக்கப்பட்டார்.

    இவரது தாயாரின் ஊரான சிக்கில் கிடாரத்திலே இவரது தந்தையார் இடத்திலே வேதாத்தியயனம் செய்து ஸாமான்ய ஶாஸ்திரங்களையும் கற்றுத் தேறுகிறார். நாளடைவிலே திருமணமும் செய்து வைக்கப் படுகிறார்.திருவாய்மொழிப் பிள்ளையின் வைபவங்களைச் செவியுற்று ஆழ்வார்திருநகரிக்குத் திரும்பிய இவர், திருவாய்மொழிப் பிள்ளையின் திருவடிகளைத் தஞ்சம் அடைகிறார்.

    இவருக்கு ஓர் திருமகனார் பிறக்க , அவருக்குத் திருநாமம் சாற்றி அருளவேண்டும் என்று திருவாய்மொழிப் பிள்ளையை ப்ரார்த்திக்கிறார். திருவாய்மொழிப் பிள்ளை , இராமானுச நூற்றந்தாதியிலே இராமானுச என்று 108 முறை வருவதால், அந்தத் திருநாமமே உகந்ததென்று ஸாதித்தருளி, இவரது திருக்குமாரருக்கு “எம்மையன் இராமானுசன் ” என்று திருநாமம் சாற்றி அருளுகிறார்.

    இவரது வைபவங்களைக் கேட்டறிந்த அழகிய வரதர் என்னுமவர் இவரின் முதல் சீடராய் வந்தடைகிறார். அழகிய வரதர் ஆசார்யனுக்கு அடிமை செய்யும் பொருட்டு துறவு புகுகிறார். அவருக்கு மணவாள மாமுனிகள் “வானமாமலை ஜீயர்” (அழகிய வரதரின் ஊர் வானமாமலை ஆதலால்) என்றும் பொன்னடிக்கால் ஜீயர் (இவர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரை வந்தடைந்தாரோ மணவாள மாமுனிகளின் சீடர்கள் எண்ணிக்கை பெருகிற்று ஆதலால் செம்பொற்கழலடி செல்வா பலதேவா என்னுமாப்போலே) என்றும் திருநாமம் சாற்றியருளினார் .

    மணவாளமாமுனிகள் பெரிய பெருமாள் ஸந்நிதி துவாரபாலகர்களுக்கு வெளியில் அமைந்த பெரிய திருமண்டபத்திற்கு எழுந்தருளுகையில், நம்பெருமாள் தனது தேவிமார்களோடும், ஸேனை முதல்வரோடும், கருடனோடும், திருவானந்தாழ்வானோடும் மற்றுமான ஆழ்வார் ஆசார்யர்கள் பரிவாரங்களோடும் காத்துக் கொண்டிருந்தார். இதனைக் கண்டு நெகிழ்ந்த பெரிய ஜீயர் காலக்ஷேபத்தை ஈடு 36000 படி வ்யாக்யானத்தை 6000 படி , 9000 படி , 24000 படி, 12000 படி உள்ளிட்ட மற்ற வ்யாக்யானங்களோடு தொடங்குகிறார். பாசுரங்களுக்குப் பதபதார்த்தம் (சொல்) இது என்றும், ஶ்ருதி, ஸ்ரீபாஷ்யம், ஶ்ருதப்ரகாஶிகை, ஸ்ரீ கீதாபாஷ்யம், ஸ்ரீ பாஞ்சராத்ரம், ஸ்ரீ ராமாயணம், ஸ்ரீ விஷ்ணு புராணம் போன்றவைகளின் அடிப்படையில் அர்த்தம் இது என்றும் மிக விஶதமாக நெய்யிடை நல்லதோர் சோறாய் சமைத்து சுமார் 10 மாத காலம் ஸாதித்து வந்தார். இறுதியிலே சாற்றுமறைக்கான தினம் ஆனி திருமூலத்தன்று அமைகிறது. இதனைத் தொடர்ந்து நம்பெருமாள் அரங்கநாயகம் என்ற சிறு பிள்ளையின் வடிவில், மண்டபத்தில் உள்ளோர் தடுத்தும், பெரிய ஜீயர் திருமுன்பே வந்து தோன்றி “ஸ்ரீஶைலேஶ தயாபாத்ரம் ” என்று ஸாதித்து மேலும் ஸாதிக்குமாறு கேட்க “தீபக்த்யாதி குணார்ணவம்” என்றும் மேலும் ஸாதிக்கப் பணிக்கும் பொழுது “யதீந்திர ப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முனிம் ” என்று முடித்து ஓடி சென்றுவிட்டார். இந்த தனியன் ஶ்லோகத்தை ஓலைப்படுத்தி அச்சிறுவனை மீண்டும் வாசிக்கக் கூறுகையில், அச்சிறுவனால் அதைப் படிக்க இயலாமையைக் கண்டு அனைவரும் முன்னர் வந்த சிறுவன் நம்பெருமாளே அன்றி ஸாதாரண பாலகன் அல்லன் என்று உணர்ந்தனர். நம்பெருமாள் இவ்வாறாக ஆசார்யனுக்குத் தனியன் ஸமர்பித்ததனைத் தொடர்ந்து அந்தத் தனியனை பட்டோலைப் படுத்தி பெரிய பெருமாள் திருமுன்பே ஸமர்ப்பிக்கையிலே, எம்பெருமான் அனைத்து திவ்யதேஶ விலக்ஷணர்களினாலும் அருளிச்செயல் தொடங்குவதற்கு முன்னரும் அருளிச்செயல் ஸாதித்த பின்னரும் இந்தத் தனியன் அனுஸந்திக்க படவேண்டியது என்று நியமிக்க ஸேனை முதல்வரிடமிருந்து அனைத்து திவ்ய தேஶ விலக்ஷணர்களுக்கும் ஸ்ரீமுகம் அனுப்பப்பட்டது . இந்த வேளையிலே , ஸ்ரீ வைஷ்ணவர்களின் ஆணைக்கிணங்க மணவாள மாமுனிகளைக் கொண்டாடும் ஒரு வாழி திருநாமத்தை அப்பிள்ளை ஸாதித்தார். மணவாள மாமுனிகளின் ஒப்பற்ற இந்த வைபவம் காட்டு தீ போல் அனைத்து திக்குகளிலும் பரந்தது .

    மணவாள மாமுனிகளின் பெருமைகளை நமக்கு உணர்த்தும் வகையில் திருவேங்கடமுடையான், திருமாலிரும்சோலை அழகர் மற்றும் பத்ரீ நாராயணன் தானும் இந்தத் தனியனை வெளியிட்டு இதனை அனுஸந்திக்க நியமிக்கிறார்கள்.மணவாள மாமுனிகளின் திருவுள்ளத்தில் வட நாட்டு திவ்யதேஶங்களின் நினைவு வர, இவரின் சார்பில் இவரது ஶிஷ்யர்கள் யாத்திரையை மேற்கொள்கின்றனர்.-தனது திவ்ய பாதுகைகளை மணவாள மாமுனிகள் எறும்பியப்பாவிற்கு தந்து அருளுகிறார்.-பின்னர் தனது திருவாராதன பெருமாளான அரங்கநகரப்பனைப் பொன்னடிக்கால் ஜீயரிடம் அளித்து, வானமாமலையில் ஒரு மடத்தை நிறுவி அங்கே தெய்வநாயகனுக்குக் கைங்கர்யம் செய்து வருமாறு பணிக்கிறார்.மணவாளமாமுனிகள் பாண்டியநாட்டு யாத்திரையை மேற்கொள்கிறார் இம்முறை அவ்வூர்களை ஆண்டு வந்த சிற்றரசனான மஹாபலி வாணநாத ராயன் இவரைத் தஞ்சம் அடைந்து , பெரிய ஜீயரின் திருவுள்ளப்படிப் பல திவ்யதேஶ கைங்கர்யங்களைச் செவ்வனே செய்து வருகிறான்.மதுரைக்கு செல்லும் வழியிலே ஒரு புளியமரத்தின் அடியில் தங்கி ஒய்வு எடுக்கிறார். பின் மணவாள மாமுனிகள் புறப்படும் வேளையிலே அடியார்கள் வேண்ட, அதை உகந்து தானும் அம்மரத்தை தொட்டு அதற்குப் பெரிய வீடளிக்கிறார். பின் எம்பெருமான்களுக்கு பல்லாண்டு பாடிவிட்டு திருவரங்கம் மீளுகிறார்.தன் சீடர்கள் மூலமாக பல கைங்கர்யங்களைத் தானும் செய்து முடிக்கிறார். மேலும் திருமாலிரும்சோலை அழகருக்குக் கைங்கர்யம் செய்ய ஒரு ஜீயரை நியமித்து அங்கு அனுப்பிவைக்கிறார்.பெரியவாச்சான் பிள்ளை, அருளிச் செயலுக்குச் செய்த வ்யாக்யானங்களிலிருந்து பெரியாழ்வார் திருமொழியின் சில பகுதிகள் காணாமல் போக, அவற்றுக்குச் சரியாகத் தொலைந்த வார்த்தைகள் வரை வ்யாக்யானம் செய்து அருளுகிறார்.நாளடைவில் மணவாள மாமுனிகள் நோவு ஸாற்றிக்கொள்கிறார் (உடல் நலம் குன்றி விடுகிறது) ஆயினும் எழுதிக் கொண்டு வருகிறார். ஆசார்ய ஹ்ருதயத்திற்கு உரை எழுதுகையில் தன்னை மிகவும் வருத்திக் கொண்டு எழுதுகிறார். இவ்வாறு தன்னை வருத்திக் கொள்வதற்குக் காரணம் என்ன என்று ஶிஷ்யர்கள் வினவியதற்கு, இதனை வரும் ஸந்ததியினர் அறிவதற்காகத் தாம் மேற்கொள்வதாகச் ஸாதித்தார்.மணவாளமாமுனிகளுக்கு தனது திருமேனியை விடுத்து திருநாட்டிற்கு எழுந்தருளவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கிநிற்க , எம்பெருமானாரிடம் தன்னை சேர்த்துக் கொள்ளும்படி ப்ரார்த்தித்து உருகி ஆர்த்தி ப்ரபந்தத்தை அருளிச் செயதார். ஏராரும் எதிராசனாக உதித்திருந்தும் இதனைச் செய்ததற்குக் காரணம் இவ்வாறே தான் நாம் அனைவரும் கேட்கவேண்டும் என்பதை நமக்கு உணர்த்தும் பொருட்டேயாம்.இறுதியில் லீலா விபூதியை விட்டு புறப்படத் தான் திருவுள்ளம் பூண்டார் பெரிய ஜீயர். ஓர் முறை அருளிச் செயல்களைக் கேட்டு அனுபவிக்கவேண்டும் என்று இவர் திருவுள்ளம் கொள்ள அதனை பக்தியோடும் பெருத்த மையலினோடும் அடியார்கள் செய்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து விஶேஷமான ததீயாராதனையும் செய்து வைத்து அனைவரிடமும் அபராத க்ஷாமணம் கேட்டு நிற்க, சூழ்ந்த அடியார்கள் செல்வ மணவாள மாமுனிகளைக் குற்றொமொன்றும் இல்லாதவர் என்று கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் பெரிய பெருமாளின் கைங்கர்யங்களைச் செவ்வனே அன்புடனும் கவனத்துடனும் செய்து கொண்டுவருமாறு நியமித்தார்.இதனை அடுத்து “பிள்ளை திருவடிகளே சரணம்” என்றும் “வாழி உலகாசிரியன் ” என்றும் “எம்பெருமானார் திருவடிகளே சரணம் ” என்றும் அனுஸந்தித்து , எம்பெருமானைக் காணவேண்டும் என்ற மையல் பெருகத் தனது நலமுடைய கருணை விழிகளை மலரத் திறந்து எழுந்தருளியிருக்க, அம்மாத்திரமே எம்பெருமான் கருடன் மீது ஸேவை ஸாதித்துப் பெரிய ஜீயரை தன்னடிச்சோதியில் சேர்த்துக் கொண்டான். கூடி இருந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் துயரம் தாளாது வேரற்ற மரம் போல் சாய்ந்து விழுந்தனர். பெரிய ஜீயர் திருநாட்டிற்கு எழுந்தருளிய பிறகு அவர் பிரிவைத் தானும் தாளமுடியாத படியினால் லட்சுமிநாதனான பெரிய பெருமாளும் போகத்தை மறுத்துவிட்டார். பின்னர் ஸ்ரீவைஷ்ணவர்கள் தங்களைத் தாமே தேற்றிக் கொண்டு, பெரிய பெருமாளின் ஆணைக்கு இணங்க, ஆசார்யனின் சரம கைங்கர்யங்களைப் பெரிய பெருமாளின் ப்ரம்மோத்ஸவத்தை காட்டிலும் சிறப்பாகச் செய்வித்தனர்.வடநாட்டு யாத்திரையிலிந்து திரும்பிய பொன்னடிக்கால் ஜீயர் தாமும் ஆசார்யனின் சரம கைங்கர்யங்களைச் செவ்வனே செய்து முடிக்கிறார்

    ஒரு முறை இரண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள் தங்களிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அதே சமயம் இரண்டு நாய்களும் தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டிருந்தன . இந்நிலையில் மணவாள மாமுனிகள் அவ்விரு நாய்களையும் கண்டு “நீங்கள் இருவரும் இந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் போல் ஸ்ரீ வசனபூஷணம் கற்றிருக்கிறீர்களோ, இத்தனைச் செருக்குடன் இருக்க ?” என்று கேட்க, அம்மாத்திரத்திலேயே அவ்விருவரும் தங்கள் பிழையை உணர்ந்து மணவாள மாமுனிகள் பொன்னடியில் மன்னிப்பு வேண்டி அன்று தொடங்கி ஸாத்விகர்களாய் இருந்தனர்.ஒருமுறை வட தேஶத்திலிருந்து ஒருவர் இவரிடம் சில பணத்தை ஸமர்ப்பிக்க, அது நேரான வழியில் ஸம்பாதித்ததல்ல என்பதை புரிந்துக்கொண்ட பெரிய ஜீயர், அதனை திருப்பித்தந்து விடுகிறார். பொருள் மீது அறவே ஆசை இன்றி, ஸ்ரீவைஷ்ணவர்கள் கொடுக்கும் ஸமர்பணைகளையே கைங்கர்யத்திற்கும் ஏற்றுக்கொண்டார்.ஒருமுறை ஒரு வயதான மூதாட்டி இவரது மடத்திற்கு வந்து தான் ஓரிரவு தங்குவதற்கு அனுமதி வேண்ட, அதை மறுத்த ஜீயர் தானும், “கிழட்டு அணிலும் மரம் ஏறும்” என்று ஸாதித்தார். அதாவது வயதான பெண்மணி தங்கினாலும் , வெளியிலுள்ளோர் மணவாள மாமுனிகளின் வைராக்கியத்தைச் சந்தேகப் பட நேரும் என்பதால் , அது போன்ற அபசாரங்களுக்கு சிறிதும் இடம் கொடுக்காது வந்தார் மணவாளமாமுனிகள்.ஒரு ஸ்ரீ வைஷ்ணவ அம்மங்கார், தளிகைக்கு காய்களைத் திருத்தி கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார். இதனை அவர் பக்தி பாவம் இன்றி செய்வதை உணர்ந்த பெரிய ஜீயர், கைங்கர்யத்தில் ஈடுபடுவோர் முழு பாவத்துடன் ஈடுபடவேண்டும் என்பதால் தண்டனையாக அவரை 6 மாத காலம், கைங்கர்யத்தை விட்டு விலக்கினார் .வரம்தரும்பிள்ளை என்ற அடியவர், மணவாள மாமுனிகளைத் தனியாக வந்து வணங்கினார். இதனைத் தொடர்ந்து பெரிய ஜீயர் எம்பெருமானிடத்திலோ ஆசார்யனிடத்திலோ ஸ்ரீ வைஷ்ணவர்கள் தனியே செல்லக் கூடாது என்றும் கூடி இருந்தே குளிர்தல் வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.பாகவத அபசாரம் கொடுமைமிகவாய்ந்தது என்பதை அறிவுறுத்தும் மணவாள மாமுனிகள் ஸ்ரீவைஷ்ணவர்கள் பரஸ்பரம் மரியாதை வைத்துக்கொள்வதை கண்காணித்து வந்தார்.அர்ச்சகர் ஒருவர், மாமுனிகளின் சீடர்கள் தம்மை மதிப்பதில்லை என்று மணவாள மாமுனிகளிடம் தெரிவிக்க,  அர்ச்சகரை எம்பெருமானும் பிராட்டியாராகவும் காணுமாறு தன ஶிஷ்யர்களுக்கு அறிவுறுத்தினார்.

    செல்வந்தரான ஒரு ஸ்ரீவைஷ்ணவர், மணவாளமாமுனிகளிடத்தே ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணங்கள் யாவை என்று கேட்க, இதனை தொடர்ந்து பெரிய ஜீயர் அவற்றை நன்கு விளக்கினார். அவை இங்கே சுருங்க காண்போம், அதாவது உண்மையான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு,-எம்பெருமானின் திருவடிகளை தஞ்சமடைதல் மட்டும் போறாது-எம்பெருமானின் தீயிற் பொலிகின்ற செஞ்சுடராழி திருச்சக்கரத்தின் லாஞ்சனம் மட்டும் பெற்றுக்கொண்டால் போறாது.-ஆசார்யனிடத்தே பாரதந்த்ரனாய் இருத்தல் மாத்திரம் போறாது-பாகவதர்களுக்கு அடிமை செய்தல் மாத்திரம் போதாது-இந்த குணங்களோடு-சரியான நேரத்தில் எம்பெருமான் திருவுள்ளம் உகக்கும் கைங்கர்யங்களை செய்து வருதல் வேண்டும்.-ஸ்ரீவைஷ்ணவர்கள் திருவுள்ளபடி வந்து தங்கி தங்களுக்குப் பிடித்தவைகளைச் செய்வதற்குப் பாங்காக இல்லத்தை வைத்திருத்தல் வேண்டும்.பெரியாழ்வார் “என்தம்மைவிற்கவும் பெறுவார்களே ” என்று ஸாதித்ததற்கு அனுகூலமாக, ஸ்ரீவைஷ்ணவர்கள் நம்மை விற்பதற்கும் நாம் தயாராக இருத்தல் வேண்டும்.பாகவத ஶேஷத்வத்தை வளர்த்துக்கொள்வோம் ஆகில், எம்பெருமான் நமக்கு அனைத்து ஸம்பிரதாய அர்த்தங்களும் விளங்குமாறு அருளிவிடுகிறார். நிஷ்டையில் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள், தனித்து எதையும் பயிலவேண்டியது இல்லை ஏனென்றால்,அவர்கள் இருப்பதே சரம நிஷ்டையில் தான் என்பதால்.கடைபிடிக்காது உபதேஶம் செய்தல் வீணான செயல். அவ்வாறு செய்தல் பதிவ்ரதையின் கடமைகளை தாஸி அறிவுறுத்துதல் போன்றுபொருந்தாத ஒன்று.ஸ்ரீவைஷ்ணவர்களை வணங்குவதை விட உயர்ந்ததோர் தொண்டும் அல்ல அவர்களைப் பழிப்பதை விட கொடூரமான பாவமும் அல்ல.இவ்வாறு ஜீயர் தம் அறிவுரைகளைப் பெற்ற அந்த ஸ்ரீவைஷ்ணவர் மணவாள மாமுனிகளிடத்தே பெருத்த பக்தி கொண்டு தன கிராமம் திரும்பியும் இவரை வணங்கிக் கொண்டே இருந்தார்.

    பெரியபெருமாள் இவரை ஆசார்யனாக ஏற்க, ஓராண் வழி ஆசார்ய குருபரம்பரையின் இறுதி ஆசார்யனாக எழுந்தருளி இருந்து குருபரம்பரா ஹாரத்தை பூர்த்தி செய்கிறார் .பெரிய பெருமாள் இவரின் சீடர் ஆன படியால், இவர்க்கு தனது ஶேஷ பர்யங்கத்தைச் ஸமர்ப்பித்தார். இன்றும் மணவாள மாமுனிகள் ஶேஷ பீடத்திலேயே எழுந்தருளி இருப்பதை நாம் ஸேவிக்கலாம். இதை மற்ற ஆழ்வார் ஆசார்யர்களிடத்தே காண இயலாது.தனது ஆசார்யனுக்குப் பெரிய பெருமாள் தானே தனியன் செய்து, மேலும் அனைத்து கோயில்கள், மடங்கள், திருமாளிகைகள் போன்ற இடங்களில் அருளிச்செயல் ஸேவிப்பதற்கு முன்னும் பின்னும் இதனைச் ஸேவிக்க உத்தரவும் இட்டார்.ஆழ்வார்திருநகரியிலே அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலத்தன்று ஆழ்வார் மணவாள மாமுனிகளுக்குத் தன்னுடைய பல்லக்கு, திருக்குடை, திருவாலவட்டம், வாத்தியங்கள் போன்றவற்றை அனுப்பிப் பின் இவரைத் தனது ஸந்நிதிக்கு வரவழைக்கிறார். இதன் பின்னரே ஆழ்வார் திருமண் காப்பு அணிந்து கொண்டு பெரிய ஜீயருக்கு பிரஸாதங்களை அளிக்கிறார்.மணவாளமாமுனிகளுக்கு இன்றும் திருவத்யயனம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒருவருக்குச் சீடர்களோ திருக்குமாரர்களோ தாங்கள் இருக்கும் வரை திருவத்யயனம் செய்து வைப்பார்கள். இவர் விஷயத்திலோ பெரிய பெருமாளே சீடனான படியால், இன்றைக்கும் தானே தனது அர்ச்சக பரிசாரகர்கள், வட்டில், குடை போன்ற விருதுகளை அனுப்பி திருவத்யயன உத்ஸவத்தைச் சிறப்பாக நடத்திவைக்கிறார். இது பெரிய ஜீயருக்கே உரிய தனிப்பெருமை-தனக்கென்று எவ்வித கோலாகலங்களோ உத்ஸவங்களோ விரும்பாத பெரிய ஜீயர், திருவரங்கம் திருப்பதியிலும் ஆழ்வார்திருநகரியிலும் தனது திருமேனி மிகச் சிறியதாக இருக்க வேண்டும் என்றே நிர்ணயித்து நம் கவனம் யாதும் எம்பெருமானிடத்திலும் ஆழ்வார் இடத்திலுமே இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.யாரையும் கடிந்து பேசாத மென்மையான திருவுள்ளம் கொண்டவர் அழகிய மணவாள மாமுனிகள். சில இடங்களில் பூருவாசார்ய வ்யாக்யானங்களில் முன்னிற்குப் பின் முரணாக சில வார்த்தைகள் காணப்பட்டாலும், அதனைப் பெரிது படுத்தாது குற்றம் காணாது எழுந்தருளி இருந்தார்.அருளிச் செயலிலேயே ஈடுபட்டிருந்த பெரிய ஜீயர், அருளிச் செயல்களையே கொண்டு வேதாந்த அர்த்தங்களை விளக்குவார். இவர் வந்து நம்மை கடாக்ஷிக்காது போயிருந்தால் ஆற்றில் கரைத்த புளியை போலே நம் ஸம்ப்ரதாயம் வீணாகி இருக்கும் .பல தலைமுறைகள் பெற்ற பேற்றைப் பெற, பெரிய ஜீயர் அனைத்து வ்யாக்யானங்களையும் திரட்டித் தாமே பட்டோலைப் படுத்தினார்.தன்னை நிந்தித்தோரிடமும் அபார கருணை காட்டுமவர் நம் பெரிய ஜீயர். அனைவரிடமும் மிருதுவாய் பேசுமவராம்.மணவாள மாமுனிகளின் திருவடிகளைத் தஞ்சம் புகுவோம் ஆகில், விரஜை நதியைக் கடக்க உதவும் அமானவன் , நம் கையைப் பிடித்து ஸம்ஸாரத்திலிருந்து விடுதலை அளித்தல் திண்ணம்.இராமன் பெரிய பெருமாளை வணங்குவது போல், தானே எம்பெருமானாராய் இருந்தும் நாம் அறிந்து அதன் படி நடக்கவேண்டும் என்பதற்காகத் தானே எம்பெருமானர் மீது பெருத்த மையல் கொண்டு எழுந்தருளி இருந்தார். இவரைப் போல் வேறொருவர் எம்பெருமானாராய் கொண்டாடுதல் அரிது. பூருவர்கள் ஸாதித்த நேர் தன்னின் படி வாழ்ந்த இவரின் வாழ்க்கையே நம் அனைவர்க்கும் உதாரணமாம்.ஒருவர் எழுந்தருளி இருந்த காலத்திலேயே பல சீடர்கள் அவரைப் பல்வகையால் கொண்டாடுதல் என்பது இவர் விஷயத்தில் மாத்திரமே நடந்தது. வேறாருக்குமின்றி மணவாள மாமுனிகளுக்கே ஸுப்ரபாதம், மங்களம், கண்ணி நுண் சிறுத்தாம்பு, அமலனாதிபிரான், பூர்வ தினசர்யை ,உத்தர தினசர்யை, வரவரமுனி ஶதகம், வரவரமுனி அஷ்டகம் இன்னும் எவ்வளவோ துதிகள் பாடப் பட்டன. இது போன்ற ஒரு கொண்டாட்டத்தை வேறொருவரிடத்தில் காண்பதரிது.

    ஸ்ரீ மா முனிகள் திருவரங்கத்தில் தமது திருமடத்தில் எழுந்தருளி இருப்பதை -ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள் –ததஸ் தத் ஸந்நிதி ஸ்தம்ப மூல பூதல பூஷணம் ப்ராங்முகம் ஸூக மாஸீநம் ப்ரஸாத மதுர ஸ்மிதம் -பூர்வ திநசர்யை – 18-கம்பத்தின் அடிக்கு அலங்காரமாக கிழக்கு நோக்கி இனிய புன்முறுவலுடன் வீற்று இருந்தார் -என்று அருளிச் செய்துள்ளார் -இன்றும் நாம் ஆதி சேஷனுடன் இருக்கும் இருப்பை உத்தம நம்பிக்கு சேவை ஸாதித்த விருத்தாந்தம்-சித்ர வடிவில் நாம் சேவித்துக் கொள்கிறோம் அன்றோ இந்த திருவுருவத்தை –

    தம்முடைய திருக்கை சொம்பை உபாதானமாக்கி இரண்டு சிறிய திரு விக்ரஹங்கள் -ஓன்று ஆழ்வார் திரு நகரியில் மூன்று அங்குல உயர நின்ற திருக்கோலம் அஞ்சலித்த திருக்கையுடன் சேவை -மற்ற ஓன்று திருவரங்கத்தில் ஞான முத்திரையுடன் வீற்று இருந்த திருக்கோலம்-ஐப்பசி திரு மூலம் சாற்றுமுறை என்று மா முனிகள் நம்மாழ்வார் திருவடிகளில் எழுந்தருளச் செய்து திருமஞ்சனம் கண்டருளப்பண்ணி நம்மாழ்வாருக்குச் சாத்தியருளிய திருமண் காப்பை மா முனிகளுக்கு சாத்தி அருளும் அழகை இன்றும் சேவிக்கலாம் -திருவரங்கத்தில் பெரிய பெருமாளே கஜ துரக சித்ரா சாமர வாத்ய விசேஷங்களுடன் பெரிய கோயில் அர்ச்சகர்கள் கைங்கர்ய பரர்கள் வந்து அமுது செய்யப்பண்ணி நடத்துவது அசாதாரண சிறப்பாகும்-காஞ்சி புரத்திலும் மா முனிகள் பரமபதித்த 50 வருடத்துக்குள் சந்நிதியும் உருவாகி -தேவப்பெருமாள் சாற்றுமுறை அன்று இங்கு எழுந்தருளி நடை பெறும் வைபவங்களைக் காணக் கண் கோடி வேண்டும்-ஸ்ரீ பெரும்பூதூரில் எம்பெருமானார் பெரிய சேஷ வாகனத்திலும் மா முனிகள் சிறிய சேஷ வாகனத்திலும் எழுந்தருளி புறப்பாடு கண்டருளுகிறார்கள்-

    பூர்வாச்சார்கள் என்னும் வ்யாபதேசம் மா முனிகள் அளவில் –மதுரேண ஸமாபயேத் -என்னும்படி விஸ்ராந்தமாயிருக்கும் அன்றோ-ஆழ்வார் ஆச்சார்ய பரம்பரை பொய்கையாழ்வார் தொடக்கி பொய்யில்லாத மா முனிகளுடன் தலைக் கட்டுகின்றது -இவருடைய அந்தரங்க சிஷ்யர்கள் பல பல ஸ்தோத்ர பிரபந்தகளை அருளிச் செய்துள்ளமையும் இவருக்கே அசாதாரணம்-ப்ரக்ருஷ்ட விஞ்ஞான பலைகதாமநி -ஆதிசேஷன் இவர் அவதாரம்–இவை இவரது பரம விலக்ஷண திரு நாறு வீறு பற்றி அருளிச் செய்துள்ளார்கள் –விசதவாக் சிகாமணிகள் -என்று கொண்டாடுகிறோம்

    நாந் ருக்வேத விநீதஸ்ய நா யஜுர் வேத தாரிண நா சாமவேத விதூஷ ஸக்யமேவம் ப்ரபாஷிதம் நூநம் வியாகரணம் க்ருத்ஸ்னம் அநேந பஹுதா ஸ்ருதம்
    இல்லாத உலகத்து எங்கும் ஈங்கு இவன் இசைகள் கூரக்
    கல்லாத கலையும் வேதக்கடலுமீ என்னும் காட்சி
    சொல்லாலே தோன்றிற்று அன்றே ஆர் கொலிச்
    சொல்லின் செல்வன் வில்லார் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடைவலானோ

    ஆத்ம குணங்களில் பிரதானம் சமமும் தமமும் –சூரணை -96-

    சமம் ஆவது -அந்தக் கரண நியமனம்-
    தமம் ஆவது -பாஹ்ய கரண நியமனம் –
    சமஸ் சித்த பிரசாந்திஸ் ஸ்யாத் தமஸ் சேந்த்ரிய நிக்ரஹா-என்னக் கடவது இறே –
    ஷமா சத்யம் தமஸ் சம-என்கிற இடத்தில் –
    தமோ பாஹ்ய கர்ணா நா மனர்த்த விஷயேப்யோ நியமனம் -சமோந்த  கரணஸ்ய ததா நியமனம் -கீதை -10-4- என்று இறே பாஷ்யகாரரும் அருளிச் செய்தது –
    மாறிச் சொல்லும் இடமும் உண்டு –

    மாறிச் சொல்லுவதும் உண்டு என்னாமல் மாறிச் சொல்லும் இடமும் உண்டு –என்று அருளிச் செய்து-பாஷ்யக்காரரே -16-1 கீதா பாஷ்யத்தில் அந்தக்கரண நியமனத்தை தமமாகவும் பாஹ்ய கரண நியமனத்தை சமமாகவும் அருளிச் செய்துள்ளார்-தமஃ மநஸோ விஷயௌந்முக நிவரித்தி ஸஂஷீலநம்.(அந்தக்கரணம் அடக்குதல் )-இரண்டு படியும் ஹ்ருத் கதமாயிருக்கையாலே இவ்வாறு அருளிச் செய்துள்ளார்

    இதுக்கு பிரயோஜனம் கேவல லீலை –சூர்ணிகை -162—அதாவது இந்த ஜகத் சிருஷ்டி வியாபாரத்துக்கு பிரயோஜனம் வெறும் லீலை -என்றபடி –லீலை யாவது -தாதாத்விக்ம ரசம் ஒழிய காலாந்தரத்தில் வருவது ஒரு பலத்தைக் கணிசியாமல் பண்ணும் வியாபாரமே யாகிலும் –இதுக்கு பிரயோஜனம் -என்று சிருஷ்டி வியாபாரத்துக்கு பிரயோஜனமாகச் சொல்லுகையாலே-தாதத்விக்ம ரச மாதரத்தை சொல்லிற்றாகக் கடவது இந்த சிருஷ்டி ரூப வியாபாரமான சார்வ பௌமரான ராஜாக்களுக்கு த்யூதாதிகள் போலேயும் பாலர்க்கு மணல் கொட்டகம் போலேயும் தாதாத்ரவிக ரசமாய் இருப்பது ஓன்று இறே இவனுக்கு –இத்தால் –லோகவ்தது லீலா கைவல்யம்-2–1–33- -என்கிற ஸூத்ரத்தை அருளிச் செய்தார் ஆயிற்று–ஜகத் சர்கே லீல ஏவ கேவலா பிரயோஜனம் -என்றும் பரஸ்ய ப்ரஹ்மணோ லீல ஏவ பிரயோஜனம் -ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூக்தி–கிரீடதோ பால கச ஏவ சேஷ்டாம் தஸ்ய நிசாமய –என்று ஸ்ரீ பராசர பகவானும் அப்ரமேயோ நியோஜ் யசச யத்ர காம கமோ வசீ–மோததே பகவான் பூதைர் பால கிரீட நகைரிவ-என்று ஸ்ரீ வேத வியாச பகவானும் நளிர் மா மலர் உந்தி வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் -என்றும் இன்புறும் இவ்விளையாட்டுடையான் -என்றும் அபியுக்தரும் இவனுடைய ஜகத் வியாபாரத்துக்கு பிரயோஜனம் லீலையாகவே சொன்னார்கள் இறே-

    ஸ்ரீஶைலேஶ தயா பாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம் |
    யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம் |
    |-திருவாய்மொழிப்பிள்ளையின் திருவருளுக்கு இலக்க்கானவரை, ஞானம் பக்தி வைராக்யம் போன்றவைகளின் கடலை, எம்பெருமானார் மீது பெருத்த மையல் உடையவரான அழகிய மணவாளமாமுனிகளை அடியேன் (அரங்கநகரப்பன்) வணங்குகிறேன்

    இப்புவியில் அரங்கேசர்க்கு ஈடளித்தான் வாழியே
    எழில் திருவாய்மொழிப்பிள்ளை இணையடியோன் வாழியே
    ஐப்பசியில் திருமூலத்தவதரித்தான் வாழியே
    அரவரசப்பெருஞ்சோதி அனந்தனென்றும் வாழியே
    எப்புவியும் ஸ்ரீசைலம் ஏத்தவந்தோன் வாழியே
    ஏராரு மெதிராச ரெனவுதித்தான் வாழியே
    முப்புரிநூல் மணிவடமும் முக்கோல்தரித்தான் வாழியே
    மூதரிய மணவாளமாமுனிவன் வாழியே

    செந்தமிழ்வேதியர் சிந்தைதெளிந்து சிறந்து மகிழ்ந்திடு நாள்
    சீருலகாரியர் செய்தருள் நற்கலை தேசுபொலிந்திடு நாள்
    மந்த மதிப் புவி மானிடர் தங்களை வானிலுயர்த்திடு நாள்
    மாசறு ஞானியர் சேர் எதிராசர் தம் வாழ்வு முளைத்திடு நாள்
    கந்த மலர்ப் பொழில் சூழ் குருகாதிபன் கலைகள் விளங்கிடு நாள்
    காரமர் மேனி அரங்க நகர்க்கிறை கண்கள் களித்திடு நாள்
    அந்தமில் சீர் மணவாளமுனிப் பரன் அவதாரம் செய்திடு நாள்
    அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலமதெனு நாளே

    ———————————————————————————-

    ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

    ஸ்ரீ தேசிக வைபவம்—ஸ்ரீ தேசிக திவ்ய ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்–அஷ்டோத்தர சத நாம ஸ்தோத்ரம்–அஷ்டோத்தர சத நாமாவளி–

    May 4, 2026

    ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய: கவிதார்கிக கேஸரீ
    வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

    ஜீவநம் ஜகதாம் ஜீயாத் கிமப்யபகத ஸ்ப்ருஹம் | ஸ்வதந்த்ரம் ஸர்வ தந்த்ரேஷு வேங்கடேஸாஹ்வயம் மஹ: ||

    தேஸிக ஸப்தத்தில் தே என்ற அக்ஷரம் தேவ: என்பதையும் ஸி என்ற அக்ஷரம் ஸிஷ்ய: என்பதையும் க என்பது கருணையையும் குறிக்கும்.தேவாநுக்ரஹ தாரித்வாத் ஸிஷ்யாநுக்ரஹ காரணாத் கருணா மய ரூபத்வாத் உச்யதே தேஸிகோ புதை:தேஸிக பதத்தின் முதல் எழுத்து தே, தேவ: என்பதைக் குறிக்கும். தேவ:என்ற ஸப்தத்தை ஸாஸ்த்ரம் தீவ்ய தீதி தேவ: என்றும் ஸ்ரத்தயா தேவ: தேவத்வம் அஸ்நுதே என்றும் பல விதமாக விளக்குகிறது. ஆசார்யர்கள் நமக்கு அநுக்ரஹம் செய்வதற்காகவே தோன்றியதால் தேஸிக ஸப்தத்தின் முதல் எழுத்து தே என்பதை தேவ: என்று சொல்வதுண்டு. ஸிஷ்யர்களுக்கு கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம், ப்ரபத்தி ஆகியவை பற்றிய ஞானத்தை வழங்கி அநுக்ரஹம் செய்கிறார் ஆசார்யன்.ஆசார்யர்கள் ஸிஷ்யர்களுக்கு அருள வேண்டும் என்பதற்காகவே எம்பெருமானிடத்திலே ஞானத்தைப் பெற்றிருக்கிறார்கள். இது தான் ஸிஷ்யாநுக்ரஹ காரணாத் என்பதன் பொருள். கார்ய நியத பூர்வ வ்ருத்தி காரணம் என்றபடி ஸிஷ்யனுக்கு அருளுவதற்கு முன்னரே எம்பெருமானிடத்திலே ஆசார்யன் அநுக்ரஹம் பெற்றுக் கொள்கிறார். இந்தக் காரணம் எப்படிப்பட்ட தென்றால் கருணா மய ரூபத்வாத்-பர துக்க துக்கித்வம் தயை என்று சொல்வார்கள்.அது போல் ஸிஷ்யர்களிடத்திலே தயையுடன் இருக்கக் கூடியவர்கள் ஆசார்யர்கள்.ப்ராதர்த் யூத ப்ரஸங்கேந மத்யாஹ்நே ஸ்த்ரீ ப்ரஸங்கத: ராத்ரௌ சௌர்ய ப்ரஸங்கேந காலோ கச்சத்ய தீ மதாம்||அதாவது,காலையில் சூதாட்டத்திலும், மதியம் பெண்கள் விஷயத்திலும், இரவில் திருட்டுத் தொழிலிலும் காலத்தை வீணடிப்பார்கள் அறிவிலிகள். அறிஞர்கள் அறிவுடையவர்கள் காலையில் மஹா பாரதக் கதை கேட்பதிலும், மதியம் ஸீதா தேவியின் சரிதமான இராமாயணக் கதை கேட்பதிலும், இரவில் நவநீத சோரனான ஸ்ரீகிருஷ்ணனுடைய கதையைக் கேட்டும். காலத்தைக் கழிப்பார்கள்.

    குரும் ப்ரகாயேத் தீமாந் மந்த்ரம் யத்நேந கோபயேத் | அப்ரகா -ப்ரகாஸாப்யாம் யேதே ஸம்பதாயுஷ்||
    என்று நூற்றெட்டு ஸம்ஹிதைகளில் ஒன்றான தேவ ஸம்ஹிதை சொல்கிறது. இந்த லோகத்தை
    ஸ்வாமி தேஸிகன் குருபரம்பரா ப்ரபாவத்திலே மேற்கோள் காட்டுகிறார். ஆசார்ய அநுஸந்தானம்
    முக்கியமானது. தேஸிகன் என்ற ப்தத்திற்கே ஆசார்யன் என்று அர்த்தம்.

    ஆசரதீதி ஆசார்ய: ஆஸமந்தாத் சரதீதி ஆசார்ய: – ஆசார்ய லக்ஷணம்
    ஸத் புத்தி: ஸாது ஸேவீ ஸமுசிதசரிதஸ் தத்வ போதாபிலாஷீ
    ஸூஸ்ரூஷுஸ் த்யக்தமாந:ப்ரணி பதந பர: ப்ரஸ்ந கால ப்ரதீக்ஷ: 1
    ஸாந்தோ தாந்தோ ந ஸூயு: ஸரணமுபகத: ஸாஸ்த்ர விஸ்வாஸ ஸாலீ
    ஸிஷ்ய ப்ராப்த: பரீக்ஷாம் கருதவிதபிமதம் தத்வத: ஸிக்ஷணீய: –ஸிஷ்ய லக்ஷணம் பற்றி ஸ்வாமி தேஸிகன்

    ஸூஸ்ரூஷா ஸ்ரவணம் சைவ க்ரஹணம் தாரணம் ததா!
    ஊஹா போஹார்த்த விஜ்ஞானம் தத்வ ஜ்ஞானம் ச தீகுணா:
    என்று சொல்லப்பட்டிருக்கிறது.
    அநுப்ரவிஸ்ய குருதே யத் ஸமேஹிதம் அச்யுதா என்றபடி எம்பெருமானே ஸ்ரீ ஸடகோபராக, ஸ்ரீ ஆளவந்தாராக, பகவத் ராமானுஜராக, ஸ்வாமி தேஸிகனாக திருவவதாரம்-


    ப்ரஸாதாத் தேஸிகேந்த்ராணாம் பராவர விபாகவித் |
    ப்ரபந்ந: பரமாத்மாநம் ப்ராப்நோதி பரமம் பதம் II
    இந்த ஒரு அனுஷ்டுப் ஸ்லோகத்திலேயே சித், அசித், ஈஸ்வர தத்வம் அனைத்தையும் அடக்கி விட்டார் ஸ்வாமி.-வ்யாகரணத்திலே சொல்வதுண்டு.
    அல்பாக்ஷரம ஸந்திக்தம் ஸாரவத் விஸ்வதோ முகம் |
    அஸ்தோபமந வத்யஞ்ச ஸூத்ரம் ஸூத்ர விதோ விது: 1
    -என்பது ஸூத்ர லக்ஷணம்.
    இப்படி சுருங்கச் சொல்வது ஸூத்ரமாகவும், விரித்துச் சொல்வது பாஷ்யமாகவும் இருக்க வேண்டும்.
    பதச்சேத: பதார்த்தோக்தி: – விக்ரஹோ வாக்ய யோஜநா |
    ஆக்ஷேபஸ்ய ஸமாதாநம் வ்யாக்யாநம் பஞ்ச லக்ஷணம்II

    ஸ்ரீராமாயணத்திற்கு ஸமானம் ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரம், ஸ்ரீமத் பாகவதத்திற்கு ஸமானம் யாதவாப்யுதயம். ஸ்வாமியினுடைய யாதவாப்யுதய க்ரந்த மானது மோக்ஷம் கொடுக்கக் கூடிய ஸர்வேஸ்வரனுடைய கிருஷ்ணாவதாரத்தைப் பற்றிக் கூறுகிறது.-அதனால் இது பரம புருஷார்த்தத்தைக் கொடுக்கக் கூடிய க்ரந்தம். இவ் விஷயத்தை ஸ்வாமி முதல் ஸர்கத்தில் எட்டாவது ஸ்லோகத்தில் –விஹாய ததஹம் வ்ரீடாம் வ்யாஸ வேதார்ணவாம்ருதம் |
    வக்ஷ்யே விபுத ஜீவாதும் வ தேவஸுதோதயம்|–

    வ்யாஸர் இயற்றிய வேதமான மஹா பாரதம் என்ற கடலிலிருந்து எடுக்கப்படும் ஸாரமான அமுதம் அதாவது தேவர்களுக்கும், வித்வான்களுக்கும் அன்னமுமான வஸுதேவருடைய குமாரரான கிருஷ்ணருடைய சரித்திரத்தைச் சொல்லுவேனாக என்று ஸாதிக்கிறார். இப்படி கிருஷ்ணனுடைய பெருமையைச் சொல்வதால் இந்த கரந்தத்தை மஹா பாரதம் என்றும் பாகவதத்தின் தஸம ஸ்கந்தத்தின் சுருக்கம் என்றும் கூறலாம்.-வந்தே ப்ருந்தாவந சரம் வல்லவீ ஜந வல்லபம் |
    ஜயந்தீ ஸம்பவம் தாம வைஜயந்தீ விபூஷணம்|||

    க்ரீடா தூலிகயா ஸ்வஸ்மிந் க்ருபா ரூஷி தயா ஸ்வயம் |1
    ஏகோ விஸ்வமிதம் சித்ரம் விபு: ஸ்ரீமாந ஜீஜனத்
    |-பகவாந் க்ருபை என்கிற வர்ணத்தில் லீலை என்கிற குச்சியைத் தோய்த்து மூவுலகம் என்ற சித்திரத்தை தன்னிடத்தில் தானே எழுதிக் கொண்டான்-

    கேவலம் பகவதநுபவத்தையே கொண்டுள்ள பகவதநுபவ ஜனிதமான இது போன்ற காவ்யங்கள் மஹா ஸ்ரேஷ்டமானவை.
    விஸூத்த விஜ்ஞாந கந ஸ்வரூபம் விஜ்ஞாந விஸ்ராணந பத்த தீக்ஷம் |
    தயா நிதிம் தேஹ ப்ருதாம் ஸரண்யம் தேவம் ஹயக்ரீவ மஹம் ப்ரபத்யே —
    என்று ஞான வடிவமானவனும், விஸேஷ ஞானத்தை அருளுவதற்காகவே விரதம் பூண்டவனும், கருணைக்கு இருப்பிடமானவனுமான அந்த ஸ்ரீஹயக்ரீவனுடைய அநுக்ரஹமும், ஆசார்ய அநுக்ரஹமும், ராமாநுஜ
    தயா பாத்ர பூதரான ஸ்வாமிக்கு ஒருங்கே இருந்ததால் கல்வியானது இவருக்கு வலைப்பட்டிருந்தது-

    ஸ்தந்யேந க்ருஷ்ண ஸஹ பூதநாயா:
    ப்ராணாந் பபௌ லுப்த புநர்பவாயா: 1
    யதத்புதம் பாவயதாம் ஜநாநாம்
    ஸ்தநந்தயத்வம் ந புநர்பபூவ II
    –நான்காவது ஸர்கத்தில் பூதனா வதத்தை ஒரே ஸ்லோகத்தில் முடித்தார்.
    தத்வ டீகா என்று ஒரு க்ரந்தம். அந்த க்ரந்தத்தில் அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா – “அத பல பதத்திற்கான விளக்கம் மட்டும் 350 பக்கம் எழுதி யிருக்கிறார் ஸ்வாமி.
    விஸேஷேண ராகம் வைராக்யம், விகத ராகம் வைராக்யம் என்று இரண்டு விதமான வைராக்யங்கள்-
    மநஸ்யேகம் வசஸ்யேகம் கர்மண்யேகம் மஹாத்மநாம் |
    மநஸ்யந்யத் வசஸ்யந்யத் கர்மண்யந்யத் துராத்மநாம்
    ||என்றபடி நாம் மஹாத்மாக்களை நினைவிற் கொண்டு நாமும் அவர்கள் வழி நடக்க வேண்டும்.
    ஆஹார ஸூத்தி ஆத்ம ஸூத்தி, ஸத்வ ஸூத்தி, தருவா ஸூத்தி, திரவ்யா ஸூத்தி, க்ரியா ஸூத்தி, மந்த்ர் ஸூத்தி அனைத்தும் நிறைந்தவர்..

    முக்தி தரும் நகர் ஏழில் முக்கியமானது காஞ்சி மாநகர். அக்காஞ்சி மாநகரில் திருத் தண்கா என்னும் திவ்யதேசம் உள்ளது. அங்கு தீபப் பிரகாசன் என்னும்
    திருமாலின் சந்நிதிக்கு வெகு அருகில் தூப்புல் என்னும் ஒர் அந்தணர் வாழ்விடம் (அக்ரஹாரம்) இருக்கிறது.(தூப்புல்- தூய்மை தரும் புல்-விஸ்வாமித்திரம் என்னும் தர்ப்பை நிறைந்த இடம்,அல்லது விஸ்வாமித்திர கோத்திரத்தில் தோன்றிய பெரியோர்கள் அங்கு வாழ்ந்து வந்ததால்,
    இவ்விடத்திற்குத் தூப்புள் என்ற பெயர் நிலைத்து விட்டிருக்கலாம்.)

    இத் தூப்புல் சேஷத்திரத்தில் அனந்த ஸூரி-தோதாரம்பா என்ற ஒரு ஸ்ரீவைஷ்ணவ தம்பதியர் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்குத் திருமணமாகி பல ஆண்டுகள் கடந்தும், குழந்தைப்
    பேறு கிடைக்கப் பெறாமல் ஏங்கிக் கொண்டிருந்தனர்.-ிருமலைக்கு இருவரும் யாத்திரையாக சென்று, திருவேங்கடமுடையானை மனமுருகி வேண்டி குழந்தைப் பேற்றினுக்கு அவனருளை எதிர் நோக்கி அங்கேயே தங்கி இருந்தனர்.ஒரு நள்ளிரவு தோதாரம்பா ஒரு கனவு கண்டார்
    எழிலொழுகும் ஓர் இளஞ்சிறுவனாக திருவேங்கடமுடையான் கனவில் தோன்றி, ” ஸ்ரீராமானுஜ ஸித்தாந்தத்தைத் தழைத்தோங்கச் செய்வதற்கு அதி மேதாவியான புத்திர ரத்தினத்தை
    அளித்தோம்; பெற்றுக் கொள்ளுங்கள்” என்று சொல்லி திருமலைக் கோயிலில் உள்ள திருமணியைப் போன்ற திருமணியைத் தன் கணவரிடம் கொடுக்க, அந்தத் திருமணியைத் தான் வாங்கிப் பெற்றுக் கொண்டு விழுங்குவது போல் அக் கனவில் கண்டார். இதே கனவை அனந்த ஸூரியும் கண்டதாக மறுநாள் காலையில் கண் விழித்ததும் சொல்லி, தோதாரம்பாவை வியப்பில் ஆழ்த்தினார்.இது இப்படி யிருக்க, மறுநாள் கோயிலில் பரிசாரகர் பூஜைக்குரிய மணியை வழக்கம் போல் எடுத்து வைக்கச் சென்றார். ஆனால் அது காண வில்லை. கைம்மணி யின்றி எப்படி பகவானுக்கு நிவேதனம் செய்வதென்று எல்லோரும் வருத்த முற்றிருந்தனர்.அப்பொழுது பகவான் கோயில் ஜீயர் பால் ஆவேசித்து. “ஸ்ரீராமாநுஜ் ஸம்ப்ரதாய ரஷணத்திற்காக ஒரு மஹானைத் தோற்றுவிப்பதற்குத் திருமணி யாழ்வாரை நாமே அநந்த ஸூரிக்கு அளித்து விட்டோம். ஆகவே இனி என் திருவாராதன காலத்தில் கைம் மணியை ஸேவிக்க வேண்டாம். நிலை மணி (பெரிய மணி)யொன்றை மட்டும் ஸேவித்தால் போதும்” என்று கூறினார்.

    சில நாட்களுக்கெல்லாம் தோதாரம்மாள் கர்ப்பவதியானாள். தம்பதிகள் வேங்கடவனிடம் விடை பெற்றுக் காஞ்சி மாநகர் சேர்ந்தனர். காஞ்சியில் இவர்கள் வசித்து வந்த பகுதி தூப்புல் என்பதாகும். இது தீப ப்ரசாசர்’ என்னும் விளக்கொளி எம்பெருமான் விளங்கும் திவ்ய ஸ்தலம்.இந்த ஸ்தலத்தில் தம்பதிகள் இனிது வாழ்ந்து வந்தனர். வேங்கடேச விமல கண்டாவதாரமாய் அவதரிக்கப் போகும் மஹானாதல் பற்றி மற்ற மானவர்களைப் போலன்றி, பன்னிரண்டு ஆண்டுகள் தமது தாயின் கர்ப்பத்தில் வளர்ந்து வந்தார்.பிறகு, கலி 4370-வது வருஷத்திற்குக் சரியான (கி.பி. 1268)
    சுக்ல புரட்டாசி மாதம் சுக்ல பஷ தசமி திருவோண நக்ஷத்திரம் கூடிய புதவாரத்தில்
    தோதாரம்மையின் கர்ப்பமாகிய பாற்கடலினின்று பகலவன் போல் ஒரு ஆண் குழந்தையாக உதித்தார். அப்புள்ளாரும் தமது சகோதரிக்கு வெகுகாலம் கழித்து உதித்த இக் குழந்தையின் தெய்விக ஒளியை மகிழ்ச்சியுடன் நோக்கி வேங்கடவனின் அருளால் தோன்றிய படியால் வேங்கடநாதன் என்றே நாம கரணம் செய்வித்தார்.

    ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் ஜாதகம்
    ஸ்வஸ்தி ஸ்ரீ சுக்ல வர்ஷம் கதகலி 4370 க்குச் சரியான (கச்சி நகர்)
    அனந்தாசார் தோதாரம்மைக்கு வரத வேங்கட ப்ரஸாதம் ஸ்வப்னத்தில் அருளியபடி- கைரவிணீ தீர்த்த ஸ்நானமும் ஆன பிறகும் புரட்டாசி மாதம் 11ந்தேதி ஞாயிற்றுக் கிழமை11 -28க்கு சுக்ல ஏகாதசி 6 நாழி-19 விநாடிக்கு திருவோண நக்ஷத்திரத்தில் கன்யா லக்னத்தில் (வேங்கட கண்டாம்சம்) அதி மானுஷ புருஷம் ப்ரஜை அவதரணம் அல்லது சுப ஐனனம் – துப்புல் புண்ய பூமி கச்சிநகர். 11 கடிகைகளும் 28 விகடிகையில் ஜனனம்.கர்ப்பச் செல்லு போக சந்திர மஹா தசையில் பாக்கி செல்ல வேண்டியது 0 வர்ஷம் –மீ 9-நா-13

    முறைப்படி செளளம், உபநயனம் முதலியவைகளைச் செய்யப் பெற்ற பின் “வேங்கடநாதன் தமது அம்மானான அப்புள்ளாரிடமே காவியம் .நாடகம், சாஸ்திரங்கள் முதலியவைகளை அப்யஸித்து வந்தார். அக் காலத்தில், நடாதூர் அம்மாள் என்னும் ஸ்ரீபாஷ்ய ஸிம்ஹாஸனாதிபதி காஞ்சி ஸ்ரீதேவராஜன் ஸந்நிதியில் சீடர்களுக்குக் கால க்ஷேபம் சொல்லி வந்தார். அப்புள்ளாரும் அம்மாளிடம் காலக்ஷேபம் செய்பவர். ஒரு சமயம் ஐந்து வயது நிரம்பிய மருமகன் வேங்கடநாதனை நடாதூர் அம்மாளுடைய கால ஷேப கோஷ்டிக்கு அழைத்துச் சென்றார் அப்புள்ளார் . மஹா தேஜஸ்வியான இச் சிறுவனைக் கண்டவுடன் அம்மாள் கால ஷேபத்தைச் சற்று நிறுத்தி விட்டு, இச் சிறுவனைப் பற்றி விசாரித்த பிறகு மறுபடியும் கால ஷேபத்தைத் தொடங்குகையில்,முன்பு எங்கே சொல்லி நிறுத்தினேன்?’ என்று சீடர்களை வினவினார்.கால க்ஷேபத்தில் விட்ட இடம் தெரியாமல் அனைவரும் திகைத்து நின்றனர். ஆனால் சிறுவன் வேங்கட நாதனோ, ‘ இந்த இடத்தில் இந்த வாக்கியத்தைச் சொல்லி ஸ்வாமி நிறுத்தியது, என்று சட்டென எடுத்துக் கூறினார். வேங்கடநாதனின் ஜ்ஞாபக சக்தியை மிகவும் புகழ்ந்த நடாதூரம்மாள் கீழ் கண்ட ஸ்லோகத்தினால் இவரை வாழ்த்தினார் .
    “ப்ரதிஷ்டாபித வேதாந்த ; ப்ரதிக்ஷிப்த பஹிர்மத
    பூயாஸ் த்ரைலோக்ய மாந்யஸ்த்வம் பூரி கல்யாண பாஜநம் |

    (நீ பிற மதங்களைக் கண்டித்து, விஸிஷ்டாத்வைத சித்தாந்தத்தை நிலை நிறுத்தி, மூவுலகிலும் போற்றப்பட்டு ஸகல க்ஷேமங்களையும் அடைவாயாக மற்றும், “இவனே ஸ்ரீ பகவத் ராமாநுஜ தர்சநத்தைப் ப்ரவர்த்திக்க வல்லவன்’ என்றும் ஆசிர்வதித்தார்.
    இவ்வாறு,தமது ப்ராசார்யரான நடாதூரம்மாளிடம் ஆசி பெற்று,தமது 20 வயதுக்குள்ளாகவே வேத வேதாங்க தர்க்க மீமாம்ஸாதி ஸகல சாஸ்திரங்களையும் மாதுலரான அப்புள்ளாரிடமே கற்றுத் தேர்ச்சி யடைந்தார்.

    இப்படி இருபது ஆண்டுகளுக்குள் ஷட் தரிசனங்களிலும் ஸ்ரீ பாஷ்யம் கீதா பாஷ்யம் முதலான ஸகல வேதாந்த கிரந்தங்களிலும் தேர்ச்சி யடைந்த தமது மருகமனுக்கு ஸகல லக்ஷணங்களோடு கூடிய திருமங்கையார் என்னும் கன்னிகையுடன் விவாஹம் செய்வித்து கருஹஸ்த தர்மத்தை அனுஷ்டிக்கும்படி செய்தார்.
    இப்படி ஸகல சாஸ்திர ஸம்பந்நராய் விளங்கும் வேங்கடநாதன் விசிஷ்டாத்வைத ஸித்தாந்த ஸ்தாபனம் செய்வதற்கு ரக்ஷையாக அப்புள்ளார் வைநதேய (கருட) மந்திரத்தை அவருக்கு உபதேசித்தார். இப்படி உபதேசிக்கப்பட்ட மந்த்ரத்தை ஸித்தி செய்துக் கொள்வதற்காக ஏகாந்த ப்ரதேசத்தைத் தேடிச் சென்று. திருவஹீந்திரபுரத்தில் ஸ்ரீ தெய்வநாயகன் ஸந்நிதிக் கெதிரேயுள்ள ஒளஷத கிரியில் ஒரு அரசமரத் தடியில் அமர்ந்து வைநதேய மந்த்ரத்தை ஜபித்து வந்தார். பிறகு, கருத்மான் மனம் மகிழ்ந்து ப்ரத்யக்ஷமாகி, இவருக்கு ஸகல வித்யாதி நாதனான ஸ்ரீஹயக்ரீவனின் மந்தரத்தை உபதேசம் செய்தார். ஸ்ரீ தேசிகனும் நியமங்களுடன் ஸ்ரீஹயக்ரீவ மந்திரத்தை ஆவ்ருத்தி செய்ய ஸ்ரீ ஹயக்ரீவன் பிரதியஷமாகி, நினைத்த போதெல்லாம் உமது நாவிலமர்ந்து நால் வேதப் பொருளை யெல்லாம் நவில்வேன்’ என அருள் புரிந்தார்.
    உடனே தேசிகள் முதன்முதலாக ஹயக்ரீவ ஸ்தோத்ரம், கருட பஞ்சாஸத், அச்யுத சதகம், தேவ நாயக பஞ்சாஸத் என்னும் ஸ்தோத்ரங்களையும் மும் மணிக் கோவை, பத்துப் பா, கழற் பா, அம்மானைப் பா, ஊசல் பா, ஏசல் பா முதலிய தமிழ்ப் பாக்களையும் இயற்றினார்.-ஸம்ஸ்கிருதம். பிராகருதம்,தமிழ் என்னும் மும் மொழிகளிலும் கவிதைகள் புனைவதிலும், தர்க்க வாதங்களால் பிற சித்தாந்திலும் இவருக்குள்ள திறமையை நோக்கி, அக் காலத்திய பெரியோர்கள் ஸ்வாமிக்குக் கவிதார்க்கிக ஸிம்ஹம்’ என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டிப் போற்றி வந்தனர்.

    இப்படி ஞான நிதியாய் விளங்கிய ஸ்வாமி, தமது கிருஹஸ்த ஜீவனார்த்தமாக யாரிடமும் சேவகம் புரியவில்லை; யாரையும் அண்டவுமில்லை. தினந்தோறும் காலையில் நித்ய கர்மாநுஷ்டானங்களை முடித்துக் கொண்ட பின், பகவந் நாம ஸ்மரணத்துடன் வெளியில் சென்று உஞ்ச வ்ருத்தியாகக் கொண்டு வரும் அமுத படியைச் சமைப்பித்து பகவானுக்கு நிவேதனம் செய்த பின் தாம் புசித்துக் குடும்ப நிர்வாஹம் செய்து வந்தார். பாக்ய வசமாக அமைந்த இவரது தர்ம பத்தினியும் இவர் மேற் கொண்ட வ்ருத்தியைப் புனிதமாகக் கருதி அன்புடன் ஸேவை புரிந்து வந்தார்.
    ஒரு நாள்,ஸ்வாமி உஞ்ச விருத்திக்குச் செல்லும் போது,ஒரு தனிகரின் பத்தினி, இவர் வறுமை நீங்கி சில நாட்களாவது சுகமாக இருக்கட்டும் என்று எண்ணி உஞ்ச விருத்தி பாத்திரத்தில் அரிசியுடன் பொன் நாணய மொன்றையும் கலந்து சேர்த்து விட்டாள். ஸ்வாமி கிருஹத்திற்குச் சேர்ந்ததும், பாத்திரத்திலிருந்து அரிசியை எடுத்துச் சுத்தம் செய்யும் போது இவரது தேவி அரிசியுடனிருந்த பொன் காசைக் காட்டி இது என்ன?’ என்று கேட்க, ஸ்வாமியும் இது ஒரு விஷப் புழு. இதை வீசி எறிந்து விடு’ என்று கூற, அவ் வம்மையார் அப்படியே அதை வீசி எறிந்து விட்டாராம். இவரல்லவோ வைராக்ய சீலர்! இவ் வம்மை யல்லவோ உத்தம தர்ம பத்தினி! என்று எல்லோரும் போற்றினர்.

    தேசிகன் இவ்வாறு வைராக்ய நிதியாய் எளிய வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பது தேசமெங்கும் பரவியது. இவரது சக மாணவராக இருந்த வித்யாரண்யருக்கும் இவ் விஷயம் தெரிந்தது-அவர் அப்பொழுது விஜயநகர ஸாம்ராஜ்யத்து ஆஸ்தான வித்வானாக இருந்தார். அரசனிடம் அவருக்கு அதிகச் செல்வாக்கு இருந்தது. எனவே, எவ்விதமாக வாவது இந்த ஞான நிதியை வர வழைத்து தம்முடன் அரச சபையில் ஆஸ்தான வித்வானாக்கி, இவரது வறுமையை அகற்றி விட வேண்டு மென்று எண்ணினார். அதற்கேற்ப ஒரு தூதுவனை இவரிடம் அனுப்ப, ஸ்வாமியும் தமக்குள்ள வைராக்யத்தைக் கூறாமற் கூறி, வைராக்ய பஞ்சகம்’ என்னும் ஒரு ஸ்தோத்ரத்தை எழுதி வித்யாரண்யருக்கு அனுப்பி வைத்தார். உல்கெலாம் ஆளும் ஆண்டவனுக்கு அடிமை யாகிய நான், இந் நிலவுலகின் ஒரு சிறு பகுதிக்கு அரசனெனக் கூறிக்கொள்பவனுக்கு அடிமையாக மாட்டேன். அன்று குசேலனைக் குபேரனாக்கிய இறைவனை யன்றி மற்றோரிடம் நான் அடிமை செய்யேன்” என்பன போன்ற வைராக்யக் கருத்துக்களைக் கொண்ட இவரது வைராக்ய பஞ்சகத்தைப் படித்த வித்யாரண்யர் இவரல்லவோ மகான் ! என மனத்தால் போற்றி மகிழ்ந்தார்.

    இப்படி ஏழ்மையையே உண்மைச் செல்வமாக ஏற்றிருக்கும் இந்த ஸ்வாமியின் ஞானத்தையும் வைராக்யத்தையும் கண்டு பொறாமை கொண்ட சில அந்தணர்கள் இவரை அவமானம் செய்ய வேண்டு மென்று முடிவு செய்து, ஒரு பிரம்மசாரியை அழைத்து, விவாஹம் செய்து கொள்வதற்காகப் பண உதவி செய்ய வேண்டு மென்று நீ ஸ்ரீதேசிகனிடம் கேள் ‘ என்று சொல்லி யனுப்பினார்கள்.-அவன் தேசிகனைத் தெண்டனிட்டு,தனது வறுமையையும் விவாஹம் செய்து கொள்வதற்கான பணத்தின் தேவையையும் கூறி, தனக்கு உதவி புரிந்தருள வேண்டுமென்று கெஞ்சினான்.-ஸ்வாமி தேசிகன், இது சிலரின் சூழ்ச்சி என்பதை நன்கு புரிந்து கொண்டார். ஆயினும் ஆண்டவனிடமுள்ள அசஞ்சலமான நம்பிக்கையால், ஜகன் மாதாவான ஸ்ரீ பெருந்தேவித் தாயார் ஸந்நிதிக்குச் சென்று, ஸ்ரீஸ்துதி’ என்னும் தமது ஸ்தோத்ரத்தால் உருக்கமாகத் தாயாரைப் பிரார்த்தித்து நின்றார். தன்னலம் கருதாது பிறர் நலனுக்காகவே இந்த வைராக்ய மூர்த்தி செய்த பிரார்த்தனைக் கிரங்கி, ஸ்ரீ மஹா லக்ஷ்மியும் பொன் மழை பொழிந்தாள். பிரம்மசாரியும் யதேஷ்டமாகப் பொன்களைத் திரட்டிச் சென்று திருமணம் புரிந்து கொண்டான். பொறாமைக்காரர்கள் தேசிகனின் திருவடி பணிந்து மன்னிக்க வேண்டினர் .
    பிறருடைய பொறாமைக் குணம் ஸ்வாமியின் பொறுமையை விளக்கிக் காட்டும் உரைக் கல்லாக அமைந்த நிகழ்ச்சிகள் பல. ஒரு சமயம் சில அற்பர்கள் ஸ்வாமி பிஷைக்கு எழுந்தருளும் தெருவழியில். சில செருப்புக்களைத் தோரணமாகத் தொடுத்துத் தொங்க விட்டிருந்தனர். ஸ்வாமி எவ்வித மனக் கசப்போ, முகச் சுளிப்போ இல்லாமல் அந்தத் தோரணத்தைத் தாண்டி,புன் முறுவல் பூத்த திருமுகத்துடன் இவ்வாறு கூறினாராம்:
    கர்மாவலம்பகா கேசித் கேசித் ஜ்ஞாநாவலம் பகா :
    வயம் து ஹரிதாஸாநாம் பாத ரக்ஷா வலம்பகா ! |

    “சிலர் ஸம்ஸார துக்கங்கள் நீங்கி, கடைத் தேறுவதற்காகக் கர்ம மார்க்கத்தைப் பின்பற்றுகிறார்கள். சிலர் ஞான மார்க்கத்தைப் பின்பற்றுகின்றனர். நான் ஹரி தாஸர்களின் பாத ரக்ஷைகளைப்
    பற்றுக் கோடாகக் கொண்டு கடைத் தேறுபவன்” என்று கூறித் தமது பொறுமையின் சிறப்பையும் பாகவத காஷ்ட்டையையும் உலகுக்கு அறிவுறுத்தினார்.

    ஒரு சமயம் கவிதார்க்கிக ஸிம்ஹம் ஸ்ரீரங்கம் எழுந்தருளி அங்கு சில நாள் தங்கியிருந்தார். அச் சமயம் பிற மதப் பண்டிதர்கள் சிலர் இவரை வாதுக்கழைத்தனர். அவர்களுடன் பல நாட்கள் வாதப் போர் செய்து அவர்களை வெற்றி கொண்டார்.-அவர்களுடன் நடந்த வாதப் பிரதிவாதங்களின் தொகுப்பை தூஷணி’ என்னும் நூலாக உருவாக்கினார் தேசிகன். அதற்கு அரங்கநாதன் மனமுவந்து, வேதாந்த தேசிகன் என்னும் சிறப்பான விருதை இவருக்கு சூட்டினார் –

    இதை நோக்கிய அரங்க நாச்சியார் தாமும் இவருக்கொரு விருதமளிக்க விரும்பி, தம் மதத்திலும் பிற மதங்களிலும் தங்கு தடையின்றி புகுந்து ஆராய்ந்து உண்மையை ஒளிவு மறைவின்றி
    எடுத்துக் கூறும் இவரது திறமையை மெச்சி,ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரர்’ என்னும் விருதமளித்து வாழ்த்தினார்.-இவ்வாறு அரங்க நகர திவ்ய தம்பதிகளால் வாழ்த்தப் பெரும் பெருமை பெற்ற வேதாந்த தேசிகனுடைய புகழ் நாடெங்கும் பரவியது. ஆய கலைகள் அறுபத்து நான்கிலும் தேர்ச்சி பெற்று-ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரா’ என்று தெய்வ தம்பதிகள் அளித்த விருதைப் பொருளுள்ளதாகச் செய்து கொண்ட நிகழ்ச்சிகள் இவரது வாழ் நாட்களில் பல நேர்ந்தன. அவைகளில் சிலவற்றை மட்டும் இங்கு காண்போம்.

    சிலருடைய துர்போதனைக் கிணங்கி ஒரு பாம்பாட்டி இவரிடம் வந்து இவர் மீது சில பாம்புகளை ஏவினான் தேசிகன் தம் முன்னே ஏழு கோடுகளைத் தரையில் கீறினார். அவைகளைத் தாண்ட
    முடியாமல் பாம்புகள் பின்னடைந்தன. பிறகு அப் பிடாரன் சங்க பாலன்’ என்ற மஹா சர்ப்பத்தை ஏவினான்.அது அந்தக் கீற்றுக்களைத் தாண்டி ஸ்வாமியை நெருங்க, கருட தண்டகத்தால் பெரிய திருவடியைத் துதித்தார். அந்த க்ஷணமே கருட பகவான் சரேலென அப் பாம்பை எடுத்துச் சென்று மறைந்தார். கிடைத்தற்கரிய ஒரு மஹா ஸர்ப்பத்தை இழந்த அப் பிடாரன் தேசிகனின் திருவடி வணங்கி பிரார்த்திக்க, ஸ்வாமியும் கருட பஞ்சாஸத்’ என்னும் ஸ்தோத்திரத்தால் கருத்மானை ஸ்தோத்ரம் செய்து சங்க பாலனை மீட்டுக் கொடுத்தார்

    திருவஹீந்திரபுரத்தில் தேசிகன் தங்கி யிருக்கும் காலையில் சில பொறாமைக் காரர்களால் ஏவப்பட்டு. ஒரு கொற்றன் தேசிகனிடம் வந்து, ‘ உங்களுக்குக் கிணறு கட்டத் தெரியுமா? இது தெரியாமல் எப்படி ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரரானீர்கள்?’ என்று கேட்டான்.இதைச் செவியுற்ற தேசிகன் தலைப் பாகைக் கட்டி, கையில் கட்டடச் சாதனங்களுடன் கிணற்றில் இரங்கி, சற்றும் ஏறுமாறில்லாமல் அழகாகக் கற்களை அடுக்கி, கிணற்றைக் கட்டி, கொற்றனைத் திகைக்க வைத்து விட்டார். அந்தக் கிணறு இன்றும் திருவயிந்தையில் தேசிகனது திரு மாளிகையில் இருப்பதைக் காணலாம்

    ஸகல கலா நிதியாய் ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரரென எல்லோரும் போற்றும் நிலையிலுள்ள ஸ்வாமி தேசிகனைக் கண்டு பொறாமை கொண்ட ஒரு சந்நியாசி ஷுத்ர மந்த்ர பிரயோகம் செய்து
    தேசிகனின் வயிற்றில் ஜலோதரம் என்னும் வியாதி யுண்டாகும்படி செய்தான். ஸவாமி அதற்குச் சளைக்காமல் தம் எதிரே நிற்கும் கம்பத்தைக் கீறி அதன் வழியே தமது உதரத்திலேற்றிய நீரெல்லாம் வழிந்தோடும்படி செய்தார். அவனும் அவரை வணங்கி மன்னிக்க வேண்டினான்.

    ஸ்ரீ தேசிகனுக்கு அளிக்கப்பட்ட கவிதார்க்கிக ஸிம்ஹம். என்னும் விருதைப் பார்த்து பொறாமை கொண்ட ஒரு வித்வான்”ஒரு ராத்திரியில் ஸ்ரீ ரங்கநாதனுடைய திருவடியை வருணிக்கும் ஆயிரம் ஸ்லோகங்களை நம் இருவரில் யார் இயற்றுகிறோமோ அவருக்குத் தான் கவி தார்க்கிக ஸிம்ஹம்’ என்ற விருது பொருந்தும்” என்று கூறி, தாம் ‘பத கமல ஸஹஸ்ரம்’ இயற்றுகிறேன் என்று சொல்லிச் சென்றார். ஆனால், அவர் அந்த இரவு முழுவதும் முயற்சி செய்தும் முந்நூறு ஸ்லோகங்களுக்கு மேல் செய்ய முடியாமல் காலையில் ஸ்ரீ ரங்கநாதன் ஸந்நிதியில் வந்து நின்றார். ஸ்ரீ தேசிகனோ ஸ்ரீ ரங்கநாதனுடைய திருவடிகளைத் தாங்கும் பாதுகைகளின் சிறப்பைப் பற்றி பாதுகா ஸஹஸ்ரம் என்ற பெயருடன் பற்பல விருத்தங்கள், சித்திர பந்தங்கள், பத்ததிகள் முதலியவைகளைக் கொண்ட ஆயிரம் ஸ்லோகங்களை அழகாகச் செய்து வந்து எம்பெருமான் ஸந்நிதியில் ஸமர்ப்பித்தார். இந்த ரஸமான-ஸ்தோத்ர ரூபமான காவியத்தைச் செவி யுற்ற அந்த அந்தணர் தமது தோல்வியை ஒப்புக் கொண்டு தேவரீரே கவி தார்க்கிக ஸிம்ஹம் என்று போற்றிச் சென்றார் –

    ஸ்ரீ தேசிகனின் திருத் தகப்பனாரின் திருவத்யயன நாள். அதில் நிமந்த்ரணம் செய்யத் தகுதியுள்ள இருவரை ஸ்வாமி முன்னாகவே ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், சில பொறாமைக்காரர்கள் நிமந்திரணத்தன்று அவர்களை அப்புறப்படுத்தி விட்டார்கள். ஸ்வாமி நித்ய கர்மா நுஷ்டானங்களை முடித்துக் கொண்டு அபராஹ்ணத்தில் நிமந்த்ரிதர்களான ஸ்ரீ வைஷ்ணவர்களை எதிர்பார்த்து அவர்கள் வராமையால் பகவானுக்கு நிவேதனம் செய்த பின், மூன்று இலைகளைச் சேர்த்து, பதார்த்தங்களைப் பரிமாறி ப்ரோண பரிஷேசனாதிகளைச் செய்த பின் திரைக்கு வெளியில் வந்து அபிச்ரவண மந்திரங்களை ஸேவித்து வந்தார். என்னே ஆச்சரியம் சிறிது நேரத்திற்கெல்லாம் மூன்று இலைகளில் இருந்த பதார்த்தங்கள் செவ்வனே புசிக்கப்பட்டு, வெளியில் வேடிக்கை பார்க்கும் துஷ்டர்கள் கண்களுக்கு மூன்று ஸ்ரீ வைஷ்ணவர்கள் வெளிக் கிளம்பிச் செல்வது போல் காணப்பட்டது. அந்த துஷ்டர்களும் தமது கர்வமழிந்து நின்றனர். அங்னம் நிமந்தரணம் அமுது செய்தது ஸாக்ஷாத் ஹயக்ரீவனும், பேரருளாளனுமே என்பதை ஸ்வாமி அறிந்து பரமானந்தமடைந்தார்

    ஸ்ரீ பாஷ்யத்தின் வியாகேயானம் ஸ்ருத ப்ரகாசிகை. இதை இயற்றியவர் சுதர்சன பட்டர் என்பவர். அவர் ஸ்ரீ ரங்கத்தி லிருந்த போது, முகம்மதியர்களால் ஸ்ரீ ரங்கம் ஆக்ரமிக்கப்பட்டது. அப்பொழுது சுதர்சன பட்டர் முதலான பல பெரியோர்கள் துருஷ்கர்களால் கொல்லப்பட்டனர். அந் நிலையில் அங்கிருந்த ஸ்ரீ தேசிகன் சுதர்சன பட்டரின் இரு புதல்வர்களுடன், ஸ்ருத ப்ரகாசிகையையும் கர்நாடக தேசத்திலுள்ள ஸத்யாகாலத்திற்கு எடுத்துச் சென்று காப்பாற்றினார். ஸ்ரீ பாஷ்யத்தின் சிறந்த வியாக்யானமான ஸ்ருத பிரகாசிகையை ரக்ஷித்த பெருமை ஸ்ரீ தேசிகனையே சாரும்.
    இப்படி எத்தனையோ ஸத் கரந்தங்களை இயற்றியும், ஸத் காரியங்களைச் செய்தும், தமது ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரத் தன்மையை உலகுக்கு எடுத்துக் காட்டிய ஸ்ரீமந் நிகமாந்த மஹா தேசிகனுடைய பெருமையை ஆயிரம் நா படைத்த ஆதி சேஷனாலும் வருணிக்க இயலாதெனில் மிகையாகாது.ஸ்ரீ தேசிகன் 102 ஆண்டுகள் இம் மண்ணுலகில் வாழ்ந்து ஒரு செளமிய கார்த்திகை மாதத்தில் தமது அவதார ஸமாப்தியைச் செய்தார். ஆனால், இவ்வுலகமுள்ளளவும், இவர் அருளிய கிரந்தங்களாலும் இவர் காட்டிய நன்னெறியாலும் இவர் என்றென்றும் நம்மிடையே வாழ்ந்து வருவதரகவே நாம் கருதி, இவரடியைப் பின்பற்றுவோமாக,

    ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்த கிரந்தங்களின் எண்ணிக்கை பின் வருமாறு
    (1) ஸ்தோத்ரங்கள் 28
    (2) வேதாந்த கிரந்தங்கள் 14
    (3) வ்யாக்யாந் கிரந்தங்கள் 8
    (4) ரஹஸ்ய கிரந்தங்கள் 31
    (5) தமிழ்ப்ரபந்தங்கள் 24
    (6) காவியங்கள் 4
    (7) நாடகம் 1
    (8) அநுஷ்டானக் கிரந்தங்கள் 2–ஆக 112 கிரந்தங்கள்

    ஸ்வாமி தேசிகன் அருளிச் செய்த ஸங்கல்ப ஸூர்யோதயமென்னும் நாடகத்தில் காணும் பின் வரும்
    ஸ்லோகத்திலிருந்து ஸ்வாமியின் திரு வாக்கினாலேயே இவர் வேங்கடேச கண்டாவதாரம் என்னும் கருத்து ஊர்ஜிதம் செய்யப்படுகிறது –
    வித்ராஸிநீ விபுத வைரி வரூதிநீநாம் பத்மாஸநேந பரிசார விதெள ப்ரயுக்தா
    உத்ப்ரேஷ்யதே புத ஜநை: உபபத்தி பூம் நா கண்டா ஹரே: ஸமஜ நிஷ்ட யதாத்மநேதி

    (அதாவது. ப்ரஹ்ம தேவன் பெருமாளை ஆராதிப்பதற்காக எந்த மணியை உபயோகித்தாரோ, எந்த மணியின் நாதம் அசுரர்களைப் பயந்தோடச் செய்ததோ அந்த மணியின் அவதாரமே இந்த நாடகத்தின் ஆசிரியர் (ஸ்வாமி தேசிகன்) என்று ஞானிகளான பெரியோர்கள் தகுந்த காரணங்களைக் கொண்டு ஊஹிக்கிறார்கள்)


    கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண ஸாலிநே
    ஸ்ரீமதே வேங்கடேஸாய வேதாந்த குரவே நம்:.


    ஸ்வாமிந் ! கபீர , ஸுபகாம் ; ஶ்ரம , ஹாரி , பும்ஸாம் ;
    மாதுர்ய , ரம்யம் ; அநகம் ; மணி , பங்க, த்ருஶ்யம் ; |
    வேகாந்தரே , விதநுதே ! ப்ரதிபிம்ப , ஶோபாம் ;
    லக்ஷ்மீ , ஸர: ; ஸரஸிஜ – ஆஶ்ரயம் ; அங்ககம் , தே ||–[இந்த ஸ்லோகம் , விளக்கொளி எம்பெருமானுடைய , திருமேனிக்கும் , அங்கு உள்ள ‘லக்ஷ்மி ஸரஸ்’ என்ற பொய்கைக்கும் , சிலேடைப் பொருள் வைத்துப் பாடப்பட்டது)

    விளக்கொளி எம்பெருமானே கம்பீரமானதும்(ஆழமானதும்) அழகியதும் மனிதர்களின் தாபத்தைப் போக்குவதும் இனிமையாய் விளங்குவதும் குற்றம் , அற்றதும் இந்த்ர நீலத் துண்டம் போல காணப் படுவதும் தாமரை (பிராட்டி)க்கு , உறைவிடமாகவும் உள்ள உன் திருமேனியும் லக்ஷ்மீ ஸரஸ் என்ற பொய்கையும் வேகவதி நதியின் நடுவில் சாயலின் அழகை செய்கின்றன !
    விளக்கொளி எம்பெருமானே !வேகவதி நதிக்கு , அருகில் உள்ள ‘லக்ஷ்மி ஸரஸ்’ என்ற பொய்கையும் , உன் திருமேனியும் , வேகவதியின் ஜலத்தில் , பிரதிபலிக்கின்றன . அவற்றின் சாயல்கள் நீரில் தெரிகின்றன .உன் திருமேனி கம்பீரமான தோற்றம் உடையது -மிக அழகியது -ஸேவிப்பவர்களின் , ஸம்ஸார தாபத்தைப் , போக்க வல்லது அனுபவிக்க மிக இனியது இழிவான அம்சம் , ஒன்றும் , இல்லாதது -இந்திரநீல மணி போன்ற , நிறம் உடையது -பெரிய பிராட்டிக்கு , உறைவிடமாய் உள்ளது -இத்தகைய உன் திருமேனி , வேகவதி ஆற்றின் நீரின் சாயல் இடுகிறது .
    இவ்வாறே , ‘லட்சுமி ஸரஸ்’ என்னும் பொய்கை ஆழமானது மிக அழகியது வெயிலால் வரும் , தாபத்தைப் போக்க வல்லது இனிய நீர் நிறைந்து அழுக்கு , அற்றது இந்திர நீலமணி போல் , சுத்தமாகக் , காணப்படுவது தாமரை மலர்கள் நிறைந்திருக்க பெறுவது இத்தகைய பொய்கையும் , வேகவதி நீரில் கலந்து, சாயல் இடுகிறது .
    இவ்விரண்டும் , அந்த ஆற்று நீரில் , பிரதிபலிப்பது , காண்பதற்கு இனிமை பயக்கிறது !


    ஸ்ரீ தேசிக திவ்ய ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்

    த்யாநம்
    அகிலபுவந ரஷா ஸாதநா யாவதீர்ணே
    குமதி கலி விலாஸ த்வாந்த திக்மாம்ஸூ ஜாலே
    நிரவதி கருணாப்தெள வேத சூடா குரெள மே
    பவது பரம பக்தி: ஸ்ரீநிதெள வேங்கடேஸே
    -1

    அஸ்மத் தேஸிக தத் குரூந் ஸ்ருதி ஸூரஸ் சூடார்ய ராமாநுஜெள
    ரங்கேஸம் ரகு புங்கவாஜ குரும் ஸ்ரீமந் நதார்த்திச்சிதம்
    ஸ்ரீ ராமாநுஜ பூர்ண யாமுந முநீந் ராமார விந்தேக்ஷணெள
    நாத ஸ்ரீ ஸடகோப ஸைந்ய ரமண ஸ்ரீ ஸ்ரீபதிந் பாவயே–
    2

    ஸ்ரீமத் த்ரயீ ஸேகர தேஸிகஸ்ய நாம்நாம் ஸஹஸ்ரம் குணது: க்ரியாத: ப்ரக்யாது மக்யாதி நிராளி ஸர்வ ஸம்பத் ப்ரதம் ஸா துமுதே தநோமி! 3

    ஸ்தோத்ராரம்ப:
    வேங்கடேஸ க்ருபா லப்த அநந்தார்ய ஸ்வப்ந சிந்தித:
    தோதாரம்பா கர்ப்ப ஸுர்ய ஸங்க்யாப்தாவாஸ் பாஸுர –1-

    மது ஸூதந ரங்கேஸ ஸாகூதேஷித ஐந்மக?
    நபஸ்ய ஸ்ரவண ஸ்ரீஸ தீர்த்த வாஸர ஐந்மவாந்–2-

    தீப ப்ரகாஸ நிகட ஸத்மாவிர்பாவ பாஸுர : ஸ்ரீ கண்டாவதாரத்வ ஜ்ஞாபகாநேக யுக்திமாந்-3-

    புண்டரீ காஷாக்ய யஜ்வ பெளத்ரோ நந்தார்ய புத்ரக !
    ஆத்ரேய வாதி ஹம்ஸாம்பு வாஹார்ய பகிநீ ஸுத 4

    ஸ்வ ஸ்வ காலாநந்த குரு க்ருத ஜாத க்ரியாதி !!
    அநந்தார்ய க்ருத ஸ்ரீமத் வேங்கடே ஸாபி தாநக–5-

    வரதாசார்ய ராமாநுஜார்யோபய க்ருபேக்ஷித
    விஸ்வாமித்ராந் வயாப் தீந்துர் ஜகத் புணய மஹா பலம்–6-

    அநந்தார்யாசார்ய ரத்ந க்ருதோப நய ஸம்ஸ்க்ருதி
    வாதி ஹம்ஸாம் புவாஹர்ய க்ருததாபாதி ஸம்ஸ்க்ருதி :–7


    அதீத ஸாங்க ஸஸி ரஸ்கா கருத்ரிம ஸரஸ்வதி :
    வாதி ஹம்ஸாம் புவாஹார்ய ஸம்ப்ராதாகில ஸாஸ்த்ரதீ : |
    –8-

    கணாத தந்த்ர பாரீண ஆஷபாதீய கௌதம
    மீமாம்ஸா மாம்ஸலோ வ்யாகரண தந்த்ர பதஞ்ஜலி: | 9

    காவ் யாலங்கார தத்வஜ் கவிதார்க்கிக கேஸரீ |
    யதிராஜ பதாம்போஜ த்வந்துவ மாத்வீ மது விரத 10

    யாமுநார்ய ப்ரேம மூர்த்தி: நாத யோகிஸ நாதவாந்
    பராங்குஸ பதா ஸக்த : பரகாலாங்க்ரி பக்திமாந்! 11

    ஸ்ரீபராஸர பட்டார்ய மேக ஸூக்த்யம்பு சாதக :
    ஸ்ரீவத்ஸ சிஹ்ந மிஸ்ரேந்து ஸூக்தி ஜ்யோத்ஸ்நா ச கோரக! ||| 12

    ஏகாந்தவாஸ ரஸிகோ த்வயசிந்தா பராயண :
    தரிரா கக்நஸ் சதுஷ் பாண்டித்ய நிர் விண்ணைக மாநஸ–13-

    பஞ்ச ப்ரகார ஸந்துஷ்டி ஷடூர்மி த்வம்ஸ கோவித!
    ஸப்த வ்யஸந தத் த்யாக தத் ஸ்வீகார விஸாரத–14-

    அஷ்டாங்க பக்திதீ ரஷ்ட புஷ்பீஷ்டாஷ்டாங்க யோகக
    நவ வ்யாக்ருதி வித் ஸ்ரீபாஷ்யாத்ய பத்ய தஸார்த்த வித் –15-

    ஸதாப்யதிக ஷட் பஞ்சாஸத் தரயீ மௌளி நீதிவித்
    ஸஹஸ்ராதி க்ருதி ந்யாய விவேசந துரந்தர | 16

    லஷகோடி ஸ்வ ப்ரபாவாம் ஸாநர்ஹ பஜந ஸத்திதி! !
    காம க்ரோதாதி நிகில துராத்ம குண வர்ஜித : 17-

    பாரதாத் யுக்த ஸகல ஸதாத்ம குண பூஷித
    ஸாஸ்த்ரோக்த ஸகலாசார்ய லஷ்மாவாஸ வரஸ்த்தலீ –18-

    ஸ்ரீ வைஷ்ணவாநேக லஷ்ம ஸோபித ஸ்வர்ண விக்ரஹ :
    அகஸ்த்ய ஸாக ப்ரமுக ஸாத்விகாஹார பாஸூர –19–

    ஸ்ரீ ராமாநுஜ ஸித்தாந்த ஸ்தாபநாசார்ய தல்லஜ
    தேவ நாயக பத்ரா ஸீரர்த்தா ஹீந்த்ர புர ஸ்திதி: 20-

    தார்ஷ்ய மந்தர ஜப ப்ரீத தார்ஷ்ய தத்த வர ப்ரியா
    தார்ஷ்ய தத்த ஹயக்ரீவ மநு ப்ரீத ஹயாநந –21-

    வாகர்த்த ஸித்தித ஹயக்ரீவ ஸ்தோத்ர விதாயக:
    ஹயாஸ்யத்த லாலாம்ருதா ஸ்வாதந ஸு போஷித: -22-

    தார்ஷ் யாஜ்ஞா க்ருத தார்ஷ்யைக பஞ்சாஸத் பிரீத தார்ஷ்யக:
    தேவ நாயக பஞ்சாஸத் ஸ்துதி ஸம்பந்ந ஸத்ய வாக் –23-

    ப்ராக்ருதோக் யச்யுத ஸதா ப்ராக்ருதாநந்த ஸம் ஸ்துதி:
    ஸ்ரீமத் த்ரிமணி ஸம் ப்ரோத காதாஸர விதாயக: -24-

    க்ருத கந்துக காத: குபேராஷீ கீதிகாரக
    குடிகா கீதி க்ருட் டோலா காதா க்ருதி விஸாரத |-25-

    உபாலம்பாஸ்வய ஸ்ரீமத் காதாக்ருதி விசக்ஷண: ||
    நவ ரத்ந ஸ்ரக் விதாதா பரதர்ஸந பங்கக் கருத்–26-

    புராணோக்தாநேக தத்வ ஸ்ருஷ்டி க்ரம் நிரூபக
    பரகால க்ருத ஸ்வர்ண பிம்ப ஸ்தேயா விரோத த்ருக்–27-

    ஸ்வதந்த்ராஷ்டோத் தரஸத விரோத பரிஹாரவித்
    ரகுபுங்கவ கத்ய ஸ்ரக் க்ருத கோபால விம்ஸதி:–28-

    கோபபூர் கதி பத்ராஸாஸந துஷ்ட த்ரி விக்ரம:
    தேஹளீஸ ஸ்துதி ப்ரீதாதி பக்த ஸ்துத மாதவ!–29-

    ஹஸ்தி ஸைலேஸ பஞ்சாஸத் ஸ்துத நாகாசலேஸ்வர! !
    ஸ்ரீசிந்ஹமாலாஹ்வ க்ருதி ப்ரீத ஸஜ்ஜந மாநஸ–30-

    த்வாத ஸாக்யாந காதா க்ருந் நியாஸகாதா விதாயக:
    அர்த்த பஞ்சக ஸங்கராஹி காதா க்ருதி விசக்ஷண–31-

    வைஷ்ண வாவஸ்யக திந சர்யா க்ரம விதாயக
    ஸ்ரீஹஸ்திகிரி மாஹாத்ம்ய க்ருத் க்ருதாஷ்ட புஜாஷ்டக!–32-

    யாதோக்தகாரி ஸ்துதி க்ருத் க்ருத காமாஸிகாஷ்டக
    ப்ரபத்தி தீபிகா ப்ரீத ஸ்ரீமத் தீப பிரகாஸக:–33-

    ப்ரபந்நாந்வஹ ஸம்பாவ்ய பரமார்த்த ஸ்துதி ப்ரிய :
    ஸூதர்ஸ நாஷ்டகோத்தூத ஸ்ரேயோ பாதக ஸஞ்சயா -34-

    ஸஜ்ஜநார்த் யாஸாஸ நார்த்த ஷோடஸாயுத ஸம் ஸ்துதி:
    ஸ்ரீமத் வேங்கட நாதீய மங்களா ஸாஸந ப்ரியா –35-

    தயாஸதக வீணாகீதி ப்ரீத ஸ்ரீநிவாஸக:
    அயோத்யாத் யுத்தர திஸா திவ்யதேஸ கதி ப்ரிய–3
    6-

    காஞ்சீமாயி யாதி ஷுத்ர நிராஸி ஸ்தம்ப லேகந:
    வித்யாரண்ய சமத்கார தாயி வைராக்ய பஞ்சக: !–3
    7-

    க்ருத ஸேஸ்வவர மீமாம்ஸோ மீமாம்ஸா பாதுகா க்ருதி:
    பட்டாதி ஸூத்ர துர்வ்யாக்யா நிராகரண தக்ஷிண!–38-

    பரிஸங்யாக்ய வித்யர்த்த நிரூபண துரந்தர!!
    ஸ்ரீரங்கநாத ஸேநேஸ ஸாஸநோத்தம் ந ப்ரிய:–39-

    பட்டாரகா த்யுக்தரீதி ரங்கி ஸேவாக்ர மோத் ஸுகா
    பகவத் த்யாந ஸோபாந வர்த்தித ஸ்ரீஸ பக்திக!||–40-

    ஸததூஷண் யபக்ராந்த மாயி துர்வாதி கர்வக
    நிர்விஸேஷ ப்ரஹ்ம ஸப்த முக்யா முக்யார்த்த பங்க க்ருத் –41-

    நிர்வி ஸேஷ ப்ரஹ்ம் ஜிஜ்ஞாஸ் யத்வ பஞ்ஜந் தக்ஷிண:
    கர்ம ப்ரஸ்ம விசாராத்ம மீமாம்ஸைக்ய விதாயக : ! –42-

    விதாநாநர்ஹ வாக்யார்த்த ஜ்ஞாந ஹேதுத்வ பஞ்ஜக!
    உபாஸநா ஹேது வேத்தா பாதாநு ஸ்ருதி பாதக–43-

    யஜ்ஞாதி ப்ரஹ்ம விவிதிஷா ஹேதுத்வ நிரோதக!
    ஸாப்தா பரோஷஹா தூத பூர்வ வ்ருத்த சதுஷ்டய–44-

    மாயி வாதாதி காரக்நோ நிர்விஸேஷாத்ம பாவஹா
    நிர்விஸேஷ பராலம்பி நிர்விகல்பக பஞ்ஜந!–45-

    ஸந் மாத்ராத் யஷரோத்தா பேத தோஷோத்தார கோவித!
    பரவேதா ப்ரமாணத்வ திருக் த்ருஸ்யத்வா நுமாநஹா–46-

    வயாவர்த்தமாந பாவாநு மாந ரோதந தத்பர :
    மாயித்ருக் திருஸ்ய ஸம்பந்த நிராஸைக விசக்ஷண:–47-

    மாயி பாஹ்ய பிரகாஸாநுப பத்தி ஸ்தாபந க்ஷம.
    ப்ரஹ்மாஸ்ர யாஜ்ஞா ந ஹந்தா ப்ரஹ்மா வேத்யத்வ பஞ்ஜக!–48-

    ஜ்ஞநா ஜந்ம நிராக்ருத் தீ நிர்விகாரத்வ மாநஹா
    தீ நாநாத்வ விரோதிக்நோ நிர்விஸேஷா னுமாநஹா !!–49-

    ஸம்விதாத்மத்வ ஹந்தா ஹமர்த்தாத்மத்வா நிரூபக:
    ஜ்ஞாத்ருத்வாத்யாஸ ஹந்தா ச ஸாக்ஷி பஞ்ஜந் தத்பர!–50-

    சாஸ்த்ராத்யஷ விரோதஜ்ஜோ அந்ருதா ஸாத்ரு தார்த்தவித்
    ஜீவன் முக்தத்வஹா பாத ஸாமாநாதி கரண்யஹா –51-

    ஸம்வி தத்வைதஹா மாய்யுபாதேஸா நுபபத்தி வித்
    நிர்விஸேஷ திரோதாந ஹந்தாத் மாத்வைத பஞ்ஜக: ! 52

    ஜீவேஸ் வரைக்ய வாதக்நோ அகண்ட வாக்யார்த்த பாதக 1
    பாவ ரூபா ஜ்ஞாந ரோத்தா ஜீவா ஜ்ஞாந விநாஸக! || 53

    அவித்யா நுபபத்திஜ்ஜோ மாயா வித்யா விபாகஹா !
    குத்ரு குந்நீத ஸம்ஸார நிவர்த்தக நிவர்த்தக! 54

    நிவ்ருத் யநுபபத்திஜ்ஞ : ஸப்தா வேத்யத்வ பஞ்ஜக !
    நிஷ் ப்ரபஞ்ச நியோகநோ விகல்பாமாநதா ப்ரிய–55-

    உப ப்ரும்ஹண வைகட்ய யுக்த துர்மத வேதிதா!
    ஐக்யோபதே ஸாந்ய தோபபத்ய ஸம்பவ பாதக:–56-

    குத்ருக் ஸாஸ்த்ராதி காரக்நோ முக்த தத்வேத்ய தத்வ வித்
    ஸ குணாகுண வேதாந்த வ்யவஸ்தா கரண க்ஷம:–57-

    ப்ரஹ்மோ பாதாநவிந் மாயோ பாதாநத்வ நிராஸக !
    கார்யா த்யநுபபந்த்வ பரிஹார விசக்ஷண :-58-

    ப்ரஹ்மா நந்தத்வ மதிநிர் விஸேஷாநந்த பஞ்ஜக
    நிர்விஸேஷ ப்ரஸ்ம நித்ய பாவ பஞ்ஜந தக்ஷிண:–59-

    அத்விதீய ஸ்ருதி வ்ராத விஸம்வாத விசாரக :
    ஸத்வாஸத்வ விவேக்தா ஜீவைக்ய பங்க விசக்ஷண:-60-

    குத்ருக்பக்ஷாப ஸூத்ராதி கரண வ்யாஹதி ப்ரிய:
    அதிகாரி விவேகஜ்ஞோ யதி லக்ஷ்ம விவேசக:–61-

    அலேபக மதச்சேத்தா மாயி ஸூத்ரார்த்த பாதக:
    தஸாவதார ஸ்தோத்ராக்ய ஜகந் மங்கள காரக:–62-

    ஸ்வப்ந பாஷ்ய கருதாஜ்ஞப்த வேத சூடா பிரவர்த்தந
    யதீந்த்ர ஸப்தத்யாக்யோபசார ஸ்ருத்யந்த தீபக்ருத்–63-

    பக்தி ப்ரகர்ஷ விஹித ஸ்ரீ பூ கோதா ஸ்துதி பரிய:
    ரங்கேஸாஜ்ஞா க்ருத நியாஸ திலக ஸ்தோத்ர ரத்நக:–64-

    ஸ்ரீரங்கநாத தத்த ஸ்ரீ வேதாந்தாசார்ய நாமக :
    ரங்கேஸ்வரீ தத்த ஸர்வ தந்த்ர ஸ்வாதந்த்ர்ய பூஷித:–65-

    அயத்நக்ருத வாதித்ரய கண்டந நிபந்தந !
    தத்வ டீகா வ்யாக்ருத ஸ்ரீமத் பாஷ்யாம்ருத ஸாகர–66-

    வாஜிஸாகா ஸிகா வ்யாக்யா க்ருதி ஸம் ப்ரீத மாநஸ
    தாத்பர்ய சந்த்ரிகா ஸூஸ்த்த கீதா பாஷ்ய மஹாபத–67-

    யாமுநார்யோக்த கீதார்த்த ஸங்கரஹ த்ராண காரக:
    பிஷ்ட பஸ்வாதி காதோக்தி வ்யவஸ்தர கரண ஷம–68-

    பரத்வம்ஸ ப்ராக பாவதி வ்யவஸ்தா கரண ஷம:
    வைத ஹிம்ஸா அஹிம்ஸதா ஸ்தாபந நீதி ஸூநீதிக –69-

    முமுஷு ஸூக்த வாகாதி பலோக்தி ததி நீதிவித்
    அவாப்த ஸர்வ காமத்வ குண நிர்ணய கோவித: 70-

    கைவல்யாக்ய புமர்த்த ஸ்வ ரூபாநித்யத்வ ஸாதக!!
    ஸாங்க கர்ம ஜ்ஞாந பக்தி யோகாவத்ருதி கோவித!! 71-

    விபூதி விஸ்வரூபாதி விரோத ஸமநக்ஷம ஆத்மாநாத்ம குண ஷேத்ர தஜ்ஜ்ஞ ஸோதந தக்ஷிண:–72-

    புருஷோத்தம தேவாஸூர விபாக நிருக்தி வித்
    கர்த்ரு கர்மாதி ஸத்வாதி குணாதீந விபாகவித்–73-

    ஏகாயநோக்தா ஸூயாவிர் பாவ வ்யாக்ருதி தக்ஷிண!
    உச்சிஷ்டாதந ஹேத்வார்ய பேத நிர்ணய கோவித:–74-

    ஸ்த்ரீ ஸூத்ர பகவத் பூஜா தாந்த்ரி கத்வாபி தாயக:
    ஸ்வ பராதீநதா யத்த ஸாஸ்த்ர வைய்யர்த்ய பாதக:–75-

    தத்வ முக்தா கலாப ஸ்ரக் க்ருத ஸர்வார்த்த ஸித்திக
    க்ருதாதி கரண ஸாராவள்யாக்ய க்ரந்த ஸிகாமணி !-76-

    ஸாராவளி வ்யாக்ரியாதி கரணாதர்ஸ காரக !
    ஸ்ரீமந் ந்யாய பரீ ஸூத்தி விஸூத்தீக்ருத மாநஸ :–77-

    ந்யாய ஸித்தாஞ்ஜநோ தஞ்சந் மேய யாதாத்ம்ய போதந:
    ஆஷ பாதீய ஸூத்ரார்த்த ஸிஷா கரண தீக்ஷித–78-

    அஷ பாத சமத்கார தாயி ஸூத்ர ஸமூஹக்ருத்
    வ்யாஸாஷ பாத ஸூத்ரார்த்த விரோத பரிஹாரவித்—79-

    த்ரவ்யாத்ரவ்ய பிதா தத்தல் லக்ஷணோக்தி விசக்ஷண
    த்ரைகால்யா நேக ஸித்தாந்த நிராஸா ஸம்பவாந்தக:–80-

    ரூபாதி பஞ்சகா தாரா பாவ வாத நிராஸக ! தர்ம தர்மித்தவா பலாப வாதத்வாந்த திவாகர!–81-

    ப்ருதிவ்யாதி சதுர் த்ரவ்ய மாத்ர பக்ஷ விபேதிதா!
    த்ரி குணேந்த்ரிய வர்கா நத்யக்ஷ பாவ விதாயக:–82-

    பிரக்ருத்யாகம கம்யத்வ ஜகந் மூலத்வ போதக
    சதுர்விம்ஸதி ஸங்க்யாக தத்வ ஸ்ருஷ்டி ப்ரகாரவித்–83-

    ஸாங்க்யாதி ஹைதுகோந்நீத ஸ்ருஷ்டி தத் தேது பாதக !
    அஷ்டீகரண பஞ்சீக்ருதி த்ரி வ்ருத் க்ருதி விபேதவித்–84-

    அந்தயாவயவிஹா அந்யூநா நுத்க்ருஷ்ட பரிமாண வித்
    ஸரீரோத்பத் யுபாதநைக பூதோக்தி நிராஸக–85-

    ஸாங்க்ய ஸத் கார்ய வாதக்ந க்ஷணிகத்வ மதாந்தக
    ஷணோபாதி விஸேஷஜ்ஞோ ஹேது ஸாத்யா பலாபஹா–86-

    ப்ரதிஸங்க்யா ப்ரதீ ஸங்க்யா நிரோத மத பஞ்ஜக
    அஷ பூத விகாரத்வ ஸாதக ப்ராண நாஸநii 87

    பூதேந்த்ரியா ப்யாயகத்வ நிர்த்தாரண விசக்ஷண:
    அந்த கரண நாநாத்வ பாஹ்யா ஷைக்ய நிராஸக: 88-

    மநோ வ்யாபித்வ நித்யத்வ ஹேந்த்ரிய அணுத்வ வேதிதா
    சக்ஷராதி ப்ராப்யகாரி பாவஸாதந தக்ஷிண–89-

    ஸப்ததேஸ கத ஸ்ரோத்ர கார்ய க்ருத்வாபி தாயக|
    ஸ்வதேஸாகத வ்ருத்தித்வ நிக்ராஹி ஸ்ரோத்ர பாதக:–90-

    வ்யோமாத் யக்ஷத்வ நிர்ணேதா காவகா ஹோபகார வித்
    ஆகாஸா வரணா பாவ மாத்ரபாவ விபஞ்ஜக–91-

    ஆகாஸ நித்யத்வ விபு பாவ வாத விநாஸக
    திக் வஸ்து ஸாதகச்சேதீ திக் வ்யோமாபேத ஸாதக! ||-92-

    ராஜ ஸாக்ய மஹத் தத்வா பிந்ந ப்ராண விபஞ்ஜந :
    ப்ராணாக்ஷத்வா வாயுபாவ வாத நிஹ்நவ தக்ஷிண |–93-

    வைஸ்வாநர ஸ்வரூபாதி நிரூபண விசக்ஷண
    தேஜோ தர்ம ப்ரபாதேஜோ பாவ ஸாதந தத் பர– 94-

    ப்ரபா தீபாத் யவயவ பாவாபாவ விதாயக:!ப்ரபாவிஷய பாஷ்யோக்தி விரோதி ஸமநக்ஷம: 95-

    ஸ்திராஸ்திராக்ய தேஜோ விபாக ஜ்ஞாந விசக்ஷண!
    தம ஆலோக விரஹத்வாபாவ பருதிவீத்வ வித்11 96-

    ப்ருத்வீ பதந பருத்வீ ப்ராமண வாத விநாஸக:
    கால ஸ்வரூப கேஸாந்ய பாவஜ்ஞாந துரந்தர:–97-

    காலானுத்பத் யஷகம்ய பாவஸ் ஸ்த்தாபந தத் பர
    கால ஸர்வ வ்யாபகத்வ ஸர்வ ஸாதகதா ப்ரிய |–98-

    ஆத்மாங்க மாநஸாக்ஷஜ்ஞாநாதி பேத ப்ரஸாதக:
    ஆத்ம ப்ரத்யகத்வ கர்த்ருத்வ ஸ்வ ப்ரகாஸத்வ ஸாதக:–99-

    யத்ந வைபல்ய ஹர்தோபாதிக ஜீவேஸ பேதஹா!
    ஸ்வாபாவிகேஸ ஜீவாத்ம பேதாபேத மதாந்த க்ருத்!!–100-

    ஏக தந்வேக ஜீவாத்ம மாத்ரபஷ விதாரண : ப்ரஹ்ம ப்ரதிச்சந்த ஜீவ வாத பஞ்ஜந தக்ஷிண–101-

    சதுர் விதாத்மா நித்யத்வ வாத ப்ராண விநாஸந!
    ஜீவாத்மா நித்யத்வ விபு வாத பஞ்ஜந தத் பர!-102-

    ஜீவைககால நைகாங்கா திஷ்டா த்ருத்வா பிதாயக:
    ஜீவ வ்யாபித்வோ பபத்திஹா ஜீவாணுத்வ ஸாதக: — 103-

    தேஹதுல்ய பரீமாண ஜீவ வாத விநாஸக.
    நித்ய ஸம்ஸாரி ஸதஸத் பாவ ஸ்த்தாபந தத் பர |-104

    மோஷோபாய ஸு துர்ஜ்ஞாந பாவவாத விபஞ்ஜந
    அபவர்கார்த்தி ஸத்தேது வித்யாநாநா விபாக வித் –105-

    க்ரியா வித்யோபகாரித்வ ப்ரகார ஜ்ஞாந கோவித:
    க்ரியாவித்யா கர்த்ரு ஸம்ஸ்காரத்வ வாத விநாஸக: |||-106-

    ஸர்வாஸ்ரமி ப்ரஹ்ம வித்யாதி க்ரியா ஸ்தாபந க்ஷம:
    கர்ம வித்யாஸ்ர மாங்கத்வ நித்யத்வாதி விபாகவித்!! | 107

    ப்ரவ்ருத்யாக்ய நிவ்ருத்யாக்ய கர்மபேத ஸ்வரூபவித்
    த்ரைவர்ணிகாதிகரண ஸர்வாதீகார பேத த்ருக் –108-

    தத்வமஸ்யாதி புவந்பாதகத்வ விநாஸக : ஜகந் நிவர்த்தக ஜ்ஞாந நிவர்தக நிவாரக: !-109-

    ஜகந் நிவர்த்தக ஞாந வேத்யாபாவ விதாயக
    ஜகந் நிவர்த்தக ஞாநாதாராபாவ விதாயக:-110-

    ப்ரஹ்ம வித்யா பாப நாஸ காரண த்வோப பத்தி வித்I
    வித்யாநாஸ்ய த்ரி வர்காதி ஸூக்ருதோக்தி விசாரக: || 111–

    அஸ்லே ஷோத்தர காம்யார்த்த புண்ய ஸம்பவ வேதிதா
    விரஜோத்தர தீராந்த த்யக்த துர்வாஸ நோக்திமாந் –112–

    முக்த புத்தி விகாஸோத்தர ஸீமா பாவ ஸாதக |
    முக்தாத்யைச்சிக தேஹாதி யோக வர்ணந தத் பர: 113-

    முக்தாதீச்சா விகாதாபாவ ஸ்தாபந விசஷண!
    நிர்துக்க முக்தா நுபவ வேதீ நித்யாக்ய ஸுரிவித்-114-

    தேவதாந்தர தாதாத்ம்ய முக்தி வாத தமோநுத
    மதாந்தரஸ்த்த ஸாயுஜ்ய ஸ்ப்தார்த்தானுப பத்தி வித்– 115-

    முக்தாத்ம புநரா வ்ருத்தி ப்ரஸங்க பரிஹாரக
    வைஸேஷிகாதி பாஷாண துல்ய மோஷோக்தி வாரக! 116-

    ஸாங்க்யாபிமத ஸம்ஸார மோஷ பக்ஷ நிவாரக
    மதாந்தரஸ்த்தாபிமத மோஷ வைவித்ய வாரக!–117-

    ஈஸ வேதைக கம்யத்வ வேதாபாத்யத்வ ஸாதக:
    உபதேஸாநு மாநே ஸாநுமாந தமந க்ஷம: –118-

    ஸாஸ்த்ர யோநித்வ ஸாங்க்யாதி க்ருதி த்வய விரோதஹா
    நிமித்ததோ பாதாநத்வ த்வயைகாதார வேதிதா–119–

    ஸூக்ஷ்ம ஜீவாசித் விஸிஷ்டே ஸோபாதாநத்வ ஸாதக
    மதாந்தரஸ்த்த ப்ரஹமோபாதா நத்வோக்தி நிவாரக!! -120-

    ஜீவாசிதீஸ விக்ருதிமத் ப்ரஹ்மோக் த்யபநோத 1
    ஸர்வாநு வ்ருத்த ஸந் மாத்ர ப்ரஹ்மத் வோக்தி விபஞ்ஜக: –121-

    ஜீவாதி பரிணாமீஸ ஜைநகந்தி மதாந்த க்ருத்
    ப்ரஹ்மோபாதிக ஜீவத்வ பாஸ்கரோக்த்யபஹாஸக: || 122-

    அவித்யா ஸஹித ப்ரஹ்ம விவர்தோக்த் யுபரோதக |
    மதாந்தஸ்தாவித்யாவ லோகநாநுப்பத்தி த்ருக்–123-

    ப்ரஹ்ம ஜ்ஞாநாநுமா ஸ்ரெளத பாதோதா ஹரண க்ஷம :
    மாயாதிபத ஸத் ப்ரஹ்ம தோஷ ஜ்ஞாபக தாபஹ : || 124-

    அவித்யா ஸாதகாஜ்ஞாந கார்யமித்யாத்வ ஸாதக!
    கார்யோபாதாந ஸாத்ருஸ்ய நியமோக்தி விபஞ்ஜகா -125-

    ஐகந் மித்யாத்வாதுமாந பஹு வ்யாஹதி போதக:”
    அநித்ய மித்யா பாவ ப்ரக்லுப்தி பங்க விதாயக -126-

    பேதா த்யக்ஷ விருத்தார்த்த நிஷேத ஸ்ருதி போதக:
    அபரோஷாபாத்யதா யோக்யா யோக்ய ப்ரத்யஷ வேதிதா| 127-

    மாயி ஸாஸ்த்ராத் யஷ மூல தோஷ ஸாம்யோப பாதக
    துல்ய தோஷ ப்ரமாணந் யோந்ய ஸம்பாத கதாபஹ! 128-

    ஸாஸ்த்ரைக வேத்யாநத்யஷ நாநாபேதோ பாதக
    மாயி பெளத்தாதி ஸாம்யாபாதந நிர்வஹண க்ஷம : 129-

    மாயி பக்ஷாநேக பாதக விகல்பாபிதாயக:
    பர ஸாஸ்த்ரா நூபபத்தி பரிஹாரா விசக்ஷண! -130-

    ஈஸ தேஹாதி பஞ்சாபா க்ருதிவாத நிராஸக!
    தேவாதி விக்ரஹாபாவ வாத வ்ராத நிராஸக: || 131-

    வ்யூஹாதி பஞ்சரூபேஸ பூர்ணஷாட் குண்ய வேதிதா
    ஈஸ வ்யூஹ விஸேஷாபி மாநித்வ பரிஹாரக -132-

    ஈஸாத்மாசார்ய ஸிஷ்யத்வாபி நீதி பல ஸாரவித் |
    ஈஸ சித்ராநேக வ்ருத்தாந்த விஸேஷாதி தத்வ வித்–133-

    ஈஸ ஸர்வஜ்ஞ பாவாநுபபத்தி விநிவாரக!
    ஸர்வேஸ ஸர்வ ஸக்தித்வ ஸ்வேச்சாவத்வா பிதாயக:–134-

    தீஸ்வ பாஸ்யத்வ நித்யத்வ திரவ்யத்வ ஸ்த்தாபந க்ஷம :
    புத்யவேத்யத்வ நித்யாநுமேயத்வ மதபஞ்ஜக.–135-

    ப்ரமா விபர்ய யத்வாபர தர்கோஹ ஸ்வரூப வித்
    ப்ரமாண லக்ஷணஜ்ஞஸ் ஸத் க்யாத்யர்த்த க்யாதி பாதக–136-

    அந்யதாக்யாதி ஸந்த்யாக ஸ்வீகார த்வய ஸாதக
    ஸந்தேஹ யாதார்த்ய வேத்தா அநிர்வாச் யக்யாதி பங்க க்ருத்–137-

    அநிர்வச ஸ்வரூபாதி ரஜதோத்பத்தி பஞ்ஜக :
    புத்தோக்த நிரதிஷ்டாந் க்யாதிவாத நிராஸக !–138-

    அநெளபாதிக துச்சக்யாதிவாத ப்ராண நாஸக
    யோகாசார பரஹர்த்தா ச ஹ்யக்யா த்யநுபபத்திஹா–139

    ஆத்மாகார ஜ்ஞாந ஹர்த்தா ஹ்யாத்மக்யா த்யப ஹாரக
    நிராலம்பந விஜ்ஞாநா நுமாபஞ்ஜந தக்ஷிண: 140-

    பாஹ்யா நெளபாதிகா ஸத்க்யாதி ஸாதந விபஞ்ஜந
    தீகதார்த்தோத் பவார்த்தாகார வாத பரிஹாரக! -141-

    ஹரித்ரா சூர்ண நீத்யர்த்த தீ யோகோத்தா க்ருதி த்விஷத்|
    ஸெளகதோர்தா நதிஷட்டாந க்யாதிவாத நிரோதக: 142-

    அநாலம்ப க்யாதி ஹந்தா ஸ்ம்ருதி ஜ்ஞாந ஸ்வரூப வித்
    ப்ரத்யக்ஷ லக்ஷண ஜ்ஞாதா திவ்யார்ஷாத்யஷ ஸாதக –143–

    வைஸிஷ்டயா கோசர ஜ்ஞாந மதச்சேதந தீக்ஷித:
    ஸம்ஜ்ஞாநுவித்த ஸர்வார்த்த புத்தி ஸப்தாத்ய பாதஹா 144-

    யோகி ப்ரத்யஷாநுமாந் தூஷணோத்பாவந ஷம 1
    மாநஸாத்யஷ பங்கஜ்ஞஸ் ஸந்நிகர்ஷ ஸ்வரூபவித் | 145–

    அலௌகிகாக்ய ஸம்பந்த ப்ரத்யஷ மத பாதக
    அநுமாநாத் யக்ஷமாந பஹிர் பாவ விதாயக: 146-

    அநுமா மாநதா லஷ்மஜ்ஞோ அநுமாபாதி தர்கஹா
    அநுமாந்வா பரோத்தார ப்ரகார விதகரணீ: |–147–

    உபாதி லக்ஷணோபாதி விதூநந விஸேஷவித் !
    வ்யாப்தி ஸ்வரூப வயாப்தி க்ராஹக மாந விசாரக 148-

    வ்யாப்தி க்ரஹ ப்ரகார ஜ்ஞாதா வயாப்த்யாதி விபாகவித்1
    கேவலாந்வய யநூமாந விஸேஷஜ்ஞாந ஸாதக : – 149-

    மஹா வித்யா நிராஸோத்த விரோத பரிஹாரக
    கேவல வ்யதிரேக்யா க்யாநுமா பஞ்ஜந தக்ஷிண–150

    லக்ஷண ஜ்ஞோந்யவாத் யுக்த லஷணார்த்த த்வயாபஹா I
    ஸ்வ பரார்த்தா நுமா ப்ராஜ்ஞோ நியாயாயவ வேதிதா 151

    நிக்ரஹஸ்தாந ஹேத்வாபாஸ ஜாதிச்சல வேதிதா
    வாத ஜல்ப விதண்டாஜ்ஞோ மாநாபாஸ விவேஸக: 152-

    அநுமாநாத்யஷ பாஹ்ய ஸப்தமாந ப்ரஸாதக:
    ஆகாங்க்ஷ யோக்யதா ஸக்தி வாக்யார்த்த ஸஹகாரி வித் 153-

    பத வாக்ய ஸ்வரூபஜ்ஞோ அந்வி தாபிவதநோத் ஸுக.
    அபீஹிதாந்வய ஜ்ஞாதா விஸிஷ்ட பத ஸக்திவித் 154-

    விபக்த்யாக்யாத தாதூப ஸர்க தத்தித வேத்யவித்
    ஸமாஸாந்வய கருந் முக்ய ப்ரத்யயார்த்த விஸேஷவித்–155-

    ஸாப்த போதாகார வேத்தா லக்ஷண பத வ்ருத்திவித்
    விஸேஷ்ய முக்ய வ்ருத்தா ப்ருதக் ஸித்த பத ஸக்திவித்–156-

    பகவத் ஸர்வ ஸப்தாபி தேயத்வ ஸ்தாபந க்ஷம:
    தத்வமஸ்யாதி வாக்யார்த்த நிரூபண விசக்ஷண:–157-

    ஸப்தோக்த ஸப்த ஸாமாநாதி கரண்யார்த்த வேதிதா !
    ப்ரமோத்பத்தி ப்ரமா ஜ்ஞப்தி ஸ்வதஸ்த்தோத் பாவந க்ஷம:–158-

    வேத ப்ரவாஹ நித்யத்வ வேதே ஸாஜநி தத்வவித்
    வித்யர்த்த வாத மந்த்ராதி ததர்த்தாவ த்ருதி க்ஷமா–159-

    பாஷா மந்த்ர வ்யவஸ்தாவிந் மந்த்ரா வாந்தர பேத வித் !
    அத்ர வ்யமாநவித் ஸத்வா ஸத்வ ஸப்தோக்தி பாதக:–160-

    ஜநநாதி ம்ருஷாத்வோக்தி மதச்சேதந தத்பர:
    த்ரவ்யாத்ர வ்யாநு மேயாத் யஷ பேதாபேத வாரக–161-

    பேத பாதக நிஸ்தாரா த்ரயேயத்தா வதாரக
    ரஜஸ் தமஸ் ஸத்வ குணோபயோகா தரவ்ய தோக்தி மாந் ;–162-

    ஸத்வாத் யவஸ்த்தா வைசித்ர்யாநந்த்ய நிர்ணய கோவித:
    ஸப்தாதி க்ராஹகாதார நியமோக்தி விசஷண:–163-

    ஸப்தாதி குணயுங்நித்ய விபூதி வ்யாக்ருதி க்ரம
    ஸர்வ பூதாஸ்ரிதத்வாநா த்ரவ்யத்வ ஸ்தாபந க்ஷம–164-

    ஸெளகதோக்த தீவாநஜைந ஸப்த புத்கல வாதஹா
    வர்ண வேதாநித்ய நித்யத்வ ப்ரகாராவதாரக | 165-

    அநுஷ்ணாஸீத ஸீதோஷ்ண ஸ்பர்ஸாதார விஸேஷவித்
    பூத பஞ்சக வர்ணோக்தி நிர் வோடா ரூபபேதவித் 166-

    சித்ரரூபமதச்சித் ஸ்நேஹ குணாந்தர பாதக: நிராக்ருத குருத்வ த்ரவத் வாக்யாந்ய குணத்வய ! 167

    குருத்வாகம நிர்வோடா குருத்வாத்யக்ஷ லிங்க நுத்
    ஏகத்வ த்வித்வ ஸங்க்யாதி குணாந்தர நிராஸக : |||168

    பரிமாண ப்ருதக் த்வாக்ய குணாந்தர நிராஸக
    நித்யாநித்யாக்ய ஸம்யோக ஸ்தாபநைக விசக்ஷண -169

    பராபர விபக்தத்வ குணத்ரய நிராஸக
    விஷயாலம்பிதாபேத தீவைஷம்யாவதாரக: 170-

    முக்த புத்தி ஜகத் வ்யாப்தோபபத்தி நிரூபக :
    யோகி புத்தி விநஷ்டைஷ்யத் கோசரத்வோபபாதக–171-

    அத்ரவ்ய நித்யதீ பக்ஷ விஷயித்வாதி பாதக 11
    தீவிகார த்வேஷ்ராக ஸுக துக்க ப்ரயத்நத்ருக்–172–

    த்யக்த ஜீவந யோந் யாக்ய யத்ந ப்ராகட்ய தர்ஸந :1
    பகவத் ப்ரீதி கோபாந்ய தர்மாதர்ம மதாந்தக–173–

    ஸ்யேநாக் நீஷோம வைஷம்ய ஸாதநைக விசஷண:
    மந்த்ர ஸ்வார்த்த பரத்வோக்தி விரோத பரிஹாரவித் –174–

    தேவதாமுக ஸம்ஸித்த பகவத் ப்ரீதி ஸாதக :
    ஸம்ஸ்கார கர்ம பகவத் பரீத் யர்த்தத்வ ப்ரஸாதக– 175–

    அபூர்வ விதி வாஸ்யத்வ ப்ராதாந்ய பஹு தோஷவித் 1
    வக்த்ர பிப்ராய தேவ ப்ரஸாத லிங்வாச்யதா ஸூதீ; 176-

    ஸம்ஸ்காராக்ய குணச் சேத்தா கர்மாக் யார்த்த ஸ்வரூபவித்
    ஸம்ஸ்த்தா நோத்தீர்ண கோத்வாதி ஸாமாந் யமத பஞ்ஜக ! !! 177-

    ஜாதிவாத நேகவாதி ஸமீரித நிராஸக : 1
    ஸாத்ருஸ்யாதி பதார்த்தாந்தர க்லுப்தி ப்ராண நாஸந– 178–

    அநேக ஸூந்யா வயவாநுவ்ருத்தி வ்யவஹாரவித்!
    விஸேஷ ஸமவாயாக்ய பதார்த்தாந்தர பாதக : –179–

    அபா பாவ ரூபத்வ ஸ்வபாவேயத்வ போதக 1
    ராமாநுஜீய ஸித்தாந்த ஸர்வோத்க்ருஷ்டத்வ ஸாதக!–180-

    ஸச்சரித்ர த்ராண ஸம்யக் த்ராத ஸந்மார்க ஸந்ததி :
    கிலாத்யஷ ஸ்ருதி ஸ்தாபித் சக்ராங்கந ஸம்ஸ்க்ருதி:–181-

    ஸ்ம்ருதீதிஹாஸ நிர்ணீத தப்தசக்ராதி தாரண :
    தப்த முத்ரா நிஷேதாதி வசோ நிர்வாஹ கோவித–182-

    ப்ரத்யக்ஷ ஸ்ருதி ரூப ப்ரமாண போத்யோர்த்வ புண்ட்ரக !
    ஊர்த்வ புண்டர ப்ரமாண ஸ்ம்ருதீதிஹாஸ புராணவித் 183

    ஊர்த்வ புண்டராநநுஷ்டாந நிமித்தா நர்த்த ஸாதக :
    ஸர்வ வைதிக கர்மாங்கோர்த்வ புண்டர த்ருதி கோவித : 184

    பஸ்ம ஸ்ரீவைஷ்ணவாஸ் ப்ருஸ்ய பாவ ஸாதந தக்ஷிண
    ஊர்த்வ புண்டர த்ருதி த்ரவ்ய விஸேஷாவ த்ருதிக்ஷம–185-

    அச்சித்ர புண்ட்ரதமநஸ் திர்யக் புண்ட்ர நிஷேதக 1!
    பகவத் பாத ஸத்ருஸோர்த்வ புண்ட்ரா க்ருதி வேதிதா –186-

    புண்ட்ர ஸச்சித்ரதா வேத்தா புண்ட்ர ஸங்க்யா விசாரக :!
    ஊர்த்வ புண்ட்ர த்ருதி ப்ரோக்த பிரகார விவ்ருதிஷம –187–

    ஊர்த்வ புண்ட்ராநேக மந்திர வ்யவஸ்தா கரண ப்ரிய :
    வர்ணாஸ்ரமாதி நியதோர்த்வ புண்ட்ராங்குளி வேதிதா -188–

    ஊர்த்வ புண்ட்ர ஸ்தாந வேத்தோர்த்வ புண்ட்ர த்யேய தேவவித்
    ஸ்ருதி ஸ்மருத்யாதி நிர்ணீத விஷ்ணு நைவேத்ய போஜந –189-

    விஷ்ண்வர்த்தாந்நா பக்த சக்ஷர் தர்ஸநோத்ஸாரண ப்ரிய
    பகவத் புக்த ஸேஷாந்நா பக்த் தாந நிஷேதக–190-

    அந்யதேவ நிவேத்யாதி போஜ்யத்வாபாவ ஸாதக : 1
    அநந்தாயுத பஷீஸ நைவேத்யாத் யத்வ ஸாதக : –191-

    ஸேநேஸ த்வாரபாலாதி நைவேத்யத் யத்வா பாதக !!
    ஸேநேஸ ஹவிராலம்பி பக்ஷபேத நிரூபக–192-

    விபக்த விஷ்ணு நைவேத்ய சாதுர் வித்யோ பயோகவித்
    ஹரி பூஜோ பயுக்தஸ்த்தாயி பூஜாந்தர யோகவித்!!–193-

    விஷ்ணு நைவேத்யைகஸாத்ய வைஸ்வதேவ விதி ப்ரிய : விஷ்ணு நைவேத்யைக ஸாத்ய பித்ரு ஸ்ராத்த க்ரியாதிக I!–194-

    விஷ்ணு நைவேத்யைக ஸாத்ய ப்ராாணாக்நி ஹவநக்ரிய 11
    வைஸ்வதேவே ஜ்யோபயுக்த போஜ்யதா வாக்ய ஸோதக !!!–195-

    விஷ்ணு நைவேத்ய ஹார்தா நிவேத்யாஸந நிஷேதக
    அர்ச்சா ஹார்தாதி ரூபாஸ்ய ஹவிரம்ஸ விஸேஷவித்||–196-

    அந்ய ப்ரயுக்தோபஜீவி ப்ராணாநி ஹவநகரிய :
    ஸடகோபாதி நைவேத்ய ஸார்த்த ப்ராணாக்நி ஹோத்ரக–197-

    ந்யாஸவிம்ஸதி ஸங்க்ஷிப்த நிஷேபா பேக்ஷிதாகில :
    ஸங்க்ஷிப்த ந்யாஸ வித்யாங்க ஸ்ரீ ந்யாஸ தஸகப்ரத !–198-

    நிஷேப ரக்ஷாக்ருந் ந்யாஸ நிஷேத நவகாந்தக
    ஆநுகூல்யா த்யங்க பேத ப்ரபத்யத்யாய பேத த்ருக் || 199-

    அந்யதேவ பராசார்ய த்யாக பர்யந்த போத க்ருத்
    ஸம்ஹிதாபேத கம்ய ந்யாஸ வித்யா மநு பேதவித் –200–

    ந்யாஸ பக்தாபசாராதி நாஸ்யத்வ வயாக்ருதி ஷம :
    ந்யாஸ மந்த்ர த்வயந்யாஸ ஸர்வாதி க்ருதி ஸோதக: –201–

    பும்ஸு வித்யா நியாஸ வித்யா ஸேஷபாவ பிரகார வித்
    ஸங்கல்பித குருபாயா ஸங்க்ராஹ்ய லகு வேதிதா–202–

    ஸ்ரீராம சரம ஸ்லோக வ்யாக்யாந கரண க்ஷம
    ஸ்ருத்யந்த வேதந க்ராஹ்ய பக்தி ந்யாஸோப பாதக : 203–

    ப்ரஹ்ம ஸூக்தாத் யுக்த பக்தி ந்யாஸ வித்யா த்வயோத்ஸு-க 11
    மோஷார்த் தாராத நாத் யர்த்த ந்யாஸா வாந்தர பேதவித் –204-

    பாஷ்யகாரோக்த கத்ய த்ரய வ்யாக்யாந விசக்ஷண :
    கத்ய த்வய வ்யாக்ருதித்வ நிரூபண விசஷண : 205–

    கத்ய ப்ரபத்தி ப்ராதாந்ய பரத்வ ப்ரதிபாதக : 1
    ப்ரபித்ஸு பூர்வ மத்யைஷ்யத் கால கர்த்தவ்ய போதக : 206–

    ஸரண்ய பூர்வ மத்யைஷ்யத் கால கர்த்தவ்ய வேதிதா
    லஷ்மீ ப்ரபத்தி மோஷார்த்த ப்ரபத்யர்த்தத்வ ஸாதக: 207–

    கமலாநுக்ரஹை காந்த்ய பாரம்ய த்ராண தீக்ஷித 1
    ஸ்ரீந்யாஸ பாரமைகாந்த்ய பஞ்ஜகத்வ நிவாரக 1 ||| –208–

    பரபக்தி பரஞாந பரம ப்ரேம ஸோதக:
    ந்யாஸ ஸ்வரூப விஷயாயத்த வைஷம்ய ஸாதக : –209–

    பஞ்சாயுதா வாந்தரீய ப்ரயோஜந விசாரக 🙂 பஞ்சாயுத ப்ரமாணீய விரோ தோத்தார கோவித :– 210–

    கத்யோக்த பித்ரு மாத்ராதி த்யாக நிர்வாஹ கோவித!!
    அக்ருத்ய கருத்யாகரணாபசாராதி விஸேவித் –211–

    பக்தாபசார வித் பாப ஸக்திபேத நிரூபக ரஹஸ்ய ஸ்பஷ்ட பச்தாபசாராதி பரிஹாரவித் ! –212–

    வர்த்தமாத பவிஷ்யத் காம்ய மார்த்தந யுக்திவித்
    ப்ரபந்நாபுத்தி பூர்வைநோ நிஷ் க்ருத் யுக்த்ய விரோதவித் –213–

    சதுஸ் லோகீ பாஷ்ய ஸூக்த லஷ்மீ ஸத்வோப பத்திக !
    லஷ்மீ விஷய துர்வாதி விருத்தோக்கி நிவாரக : –214–

    ஸ்தோத்ரபாஷ்ய க்ருதி வ்யக்த யாமுநாசார்ய மாநஸ
    ஸ்வார்த்தாந் யோக்த ஸ்தோத்ர ஸர்வ புருஷார்த் தத்வ ஸாதக–215–

    குரு தத்குரு ஸம்பாத கால ப்ராசார்ய தாஸ்ய க்ருத் !
    வைகாநஸாகமாத் யுக்த நதிபேத விசாரக: -216–

    வகுளாபரணாசார்ய பாவாநேக விரோதஹா !
    அத்யஷாகம ஸத் ஸூக்தி நிர்ணீத ஜகதீஸ்வர: 217–

    நாராயணாத் யநந்யார்த்த ஸம்ஜ்ஞாஸ் தேதர தைவத :
    பாரம்ய ஸூசகாநேகா நந்யதா ஸித்த லிங்க த்ருக்! 218–

    வக்த்ரு ஸத்வாத்யநுகுண ஸாத்விகாதி புராண வித்
    ஸாத்விகாதி ப்ரவசந ஸாத்விகத்வ ப்ரஸாதக 1 ||| 219–

    ஸ்ரீபாஞ்சராத்ரா ரஷாக்ருத் பஞ்சராத்ர ப்ரமாண வித் 1
    அஸ்மார்த்த ஸம்ஸ்க்ரியாதீநா ப்ராஹ்மண்யா பத்தி வாரக : 220–

    த்ரய்யாக மோக்த கர்மாதிகாரி வைஷம்ய ஸாதக
    ஏகாயநா பௌருஷேய பாவ ஸாதந வேதிதா ! 221–

    ஸ்ரீபாஞ்சராத்ர ஸித்தாந்த பேத லக்ஷண வேதிதா
    சதுர்விதாகம ப்ரஹ்ம ப்ராப்தி ஹேதுத்வ ஸாதக :–222-

    ஸித்தாந்த ஸம்ஹிதா தத் தத் ஸாங்கர்ய பரிஹாரவித்
    ஸ்வாந்ய ஸித்தாந்த கர்மாதிகாரா பாவ ப்ரஸாதக –223–

    ஆகமா வாந்தரோத்கர்ஷா பகர்ஷாதி விதாயக ! |
    உத்ருஷ்டஸ்த்த நிக்ருஷ்டோக்த க்ரியாதி க்ருதி போதக?- 224–

    வைகாநஸாக்ய தந்த்ர ப்ரமாணத்வ விவ்ருதி ஷம !
    வைகாநஸாக மாந்யோந்ய ஸாங்கர்யாஸக்தி பஞ்ஜக : –225-

    ஸ்ரீபாஞ்சராத்ர ஸர்வோப ஜீவ்யத் வோக்தி விசஷண:1
    ஸூத்ராந்தரஸ்த்தாபி தார்ச்சா தந்த்ர பூஜா விதாயக :–226-

    ஸைவாக மாத்ய மாந்யத்வ ஸம்ஸத்தாபந விசக்ஷண1
    ப்ராக ப்ரவ்ருத்த பரித்யாகோத் க்ருஷ்டாகம நிரோதவித்–227-

    ஸாத்விகாதி விபாகாதீ நாகமாமாந தாபஹ:
    பூர்வாகமோத்ருஷ்ட மார்க விதாந ஸூகதி ப்ரத : |–228-

    ஸ்வயம் வ்யக்தாதி. பவந தாரதம்ய விதாயக!
    தேவ பூஜா முக்ய கெளணாதிகாரி வ்யாக்ருதி க்ஷம–229-

    தேவேஜ் யாஷ்டாங்க தோத்கர்ஷ வர்ண நைக விசக்ஷண :
    ப்ரயத்நா த்யநபேக்ஷ ஸ்வதஸ் ஸித்தோத்கர்ஷ வஸ்து த்ருக் |–230-

    பரமைகாந்தி கர்த்தவ்ய பஞ்சகால க்ரியா ஸூதீ!
    பாஷ்யகாராஸ்ரயி பூத பஞ்சகால பிரகாஸக :–231-

    வைஸேஷிக த்ரிகாலார்ச்சா பிதாநாத்ய விரோத திருக்!
    ஸ்ரீபாஞ்சராத்ர ஸ்ம்ருத்யைக கண்ட்ய ஸ்தாபந தக்ஷிண :–232-

    வ்யாஸ தஷாத் யுக்த தர்ம ஸாஸ்த்ரார்த்த விவ்ருதி க்ஷம 1
    ஸர்வ க்ரியா த்யாங்க பூத ஹரி ஸ்மரண போதக !–233-

    பஞ்சராத்ரோக்த பகவத் ஜ்ஞாந நித்யத்வ ஸாதக:
    அர்ச்சாவதார ரஹித க்ருஹ போஜந தோஷவித்–234-

    பகவத் த்யாந ரஹித கால வைய்யர்த்ய ஸாதக!
    ப்ராப்த காமார்த்த லிப்ஸா பாரமைகாந்த் யாநுகூல்ய திருக் –235–

    கைங்கர்ய காலாவஸ்யாநு ஸந்தேயார்த்த விஸேஷவித் 1
    ஸமயாசார நியமா த்யாயோக்தா வஸ்யகத்வ வித்–236-

    வைஷ்ணவ ஸ்ரீ தர்மா ஸாஸ்த்ரோ தீரிதா வஸ்யகத்வ வித்
    ஆரம்ப மந்த்ர நிர்ணேதா ஸாத்விக த்யாக ஸாதக:–237-

    ராத்ர்யந்தோத்தாந ஸமய ஹரி கீர்த்தந ஸாதக 1
    நித்ரா நிமித்தா சமநாநுகல்பா வஸ்யகத்வ வித்–238-

    பூர்வஷபா விரமித யோக கார்யத்வ வேதிதா
    அபியாநாரம்பகால வேத்தா நிர்வேத காலவித் –239–

    நிர்வேத பலவித் கார்ய கர ஸாத்விக தைர்ய வித்
    மந்த்ராதிகம குர்வந்யோபாய தூஷண வேதிதா–240–

    குருத்யா நாநு கர்த்தவ்ய ஹரி த்யாந ஸ்வரூபவித்
    கைங்கர்யார்த்தாசார்ய விஷ்ணு த்யாநா நுத்யாந போதக –241–

    நித்ய ப்ரயோஜ்ய கைங்கர்ய பூரணார்த்தந மந்த்ர வித் :
    ஸ்தோத்ராதி ஸத்தாவஸ்ய கீர்த்ய தேவ தேவ்யாதி நாமவித் –242–

    பகவந் மந்த்ர தத் கால சோதிதோசித ஜப்ய வித்
    பத ந்யாஸ் மநுஜ்ஞாதா பதக்ரம மநூக்திமா –243–

    கதிகாலா வஸ்ய கார்ய கேஸவாஹ்வாந கீர்த்தந :
    ஸந்த்யா ஸ்தநோபகரண க்ரஹணைக விசக்ஷண –244–

    மலமூத்ர விஸர்கார்த்த தேஸாதி ஸகலார்த்த வித்
    சவ்ச ஸங்க்யா க்ரம த்ரவ்ய கால வைஷம்ய ஸாதக : || 245-

    தந்ததாவந் காஷ்டாதி வ்யவஸ்த்தா ந்யாய தத்பர :
    ஸ்நாந தீர்த்த விஸேஷஜ்ஞ! ஸ்நாந பேத விதாயக! 246–

    உஷ்ணோதக ஸ்நாந கால வ்யவஸ்த்தா கரண ஷம
    வாஸோ தரண புண்டராங்க தர்ப்பண க்ரம ஸாதக:–247-

    ஸந்த்யோபாஸ்தி விஸேஷஜ்ஞோ காயத்ரீ ஸ்தாந ஸாரவித்
    காயத்ரீ ஜப ஸங்க்யாந ஸாதநோத்கர்ஷ ஸாரவித்–248–

    ஸந்த்யா கலீந நியம வேத்தோபஸ்த்தாந கால வித்
    திகாதி நமநாஸக்த ஸாரமைகாந்த்ய பங்கஹா–249-

    ஸந்த்யாகாலா வஸ்யகார்ய மூலமந்த்ர ஜபோக்திமாந்
    வ்யாக்ருதாதார சக்த்யாதிதேவரிஷி பித்ரு தர்ப்பண:–250-

    நித்ய தர்ப்பண கர்மாந்த வாஸ பீடந ஸாதக:
    பரமேஜ்யாகாலவித் க்யாத தீர்த்த மந்த்ரோப ஸம்ஹ்ருதி: ||| 251-

    தீர்த்தா ஸந்நா நந்த ஸத்ம ப்ரவேஸா ,வஸ்யகத்வ வித்
    பகவத் ஸத்ம ஸந்த்யாஜ்ய த்வாத்ரிம்ஸ , தபசாரக : –252–

    அப்யுஷாணோஷித க்ருஹோ ஹோம கால விஸேஷவித்
    பரகோக்ராஸ தாநர்த்தி ரபியாந ஸ்வரூபவித் –253–

    உபாதாநாக்ய ஸமய வேத்தோபாதாந மந்த்ரவித்!
    ஹேயோபாதேய தேவார்த்த ஸூமாதி த்ரவ்ய வேதிதா –254–

    ஸ்வார்ஜி தாரண்ய மூல்ய க்ரீத யாசித குணாதிவித்
    ஸுமநோகத ஸத்வாதி க்ருதோபாதாந ஹாநக ! ! -255–

    திதிபேதாதி நியத புஷ்பபேதாதி ஸாதக !திவாநிஸா தேவ யாக வ்யாப்த ஸூந விஸேஷவித் — 256–

    ஸாஸ்த்ராநுமத ஸிஷ்டாக்ராஹ்ய புஷ்பாதி நிவாரக:
    கருஹால யார்ச்சா நியத வாஸ புஷ்பாதி பேத வித் ல்–257–

    ஸ்ரங்மாலா பேத த்ருக் ஸூத்ர க்ரதிதாதி நிஷேதக :
    பகவத்யாக வர்ஜ்யோபாதேயாபரண ஸோதக –258–

    ப்ராண்யங்க ஸூரபித்ர வ்யோபயோக வ்யாக்ருதி க்ஷம:
    ஹேயோபாதேய முகுள பத்ராங்குர விசாரக–259-

    திநக்வயாபா ர்யுஷித குஸு மோக்தி விசக்ஷண :
    போஜ ராஜா த்யுக்தகால புஷ்ப பேத விசாரக:–260-

    க்ராஹ்ய மூல க்ரஹீதா தூப தீப த்ரவ்ய வேதிதா
    தஸா விஸேஷாநுமதார் ஜநோபாய விஸேஷவித்–261-

    ஸர்வ ப்ரதி க்ரஹ வ்யாப்த மநு நிர்ணய கோவித: 1
    யதி புஷ்பக்ர ஹோபாய விஸதீகரண க்ஷம–262-

    பூஜாத் யர்ஹாந்த ராத்மீய குணோபாதாந ஸாதக
    பாஷ்யகாரோக்த நித்யாக்ய க்ரந்த வ்யாகரண க்ஷம–263-

    இஜ்யாகால விஸேஷஜ்ஞ இஜ்யா ப்ராதாந்ய ஸாதக
    பரமைகாந்தி ஸப்தார்த்த தந் நிபந்தந வேதிதா –264–

    யத்யந்ந தேவ பூஜாதி மஹா தோஷ ப்ரஸாதக !
    பரமைகாந்தி ஸந்திருஷ்டாந் யதேவ நாதிபாதக! |– 265–

    கர்மண்யதா பாவ ஹேது பாப தச்சாந்தி ஹேது த்ருக்
    இஜ்யாதிகார பேதஜ்ஞ இஜ்யா ஸாரார்த்த வேதிதா –266–

    ஸ்வாத்யாயகால ஸ்வாத்யாய பேதாதி க்ருதி பேத திருக்
    ஸ்வாத்யாய ஸார ஸந்த்ரஷ்டா ஸ்வாத்யாயாங்க விஸேஷவித்| –267–

    ஸாயம் ஸந்த்யாஹோம தேவ பூஜா போஜந காலவித்
    புஜிலோப நிமித்த ப்ராணாக்நி ஹோத்ர மநூஜப –268–

    ப்ரதோஷ வர்ஜித நிஸா யோக்யாதீதி விஸேஷவித்
    த்ரயோ தஸீ , பூர்வராத்ரி கார்யமெளந விஸேஷவித் — 269–

    ப்ரதோஷகால கர்த்தவ்ய ஸந்த்யா ஸங்கோச வேதிதா!
    ப்ரதோஷா வஸ்ய வர்ஜ்யாஷ்டாக்ஷர மந்த்ர ஜபோக்திமாந் — 270–

    ஸந்த்யா த்யாஜ்யா ஷ்டாக்ஷராந்ய காயத்ர்யந்ய ஜப க்ரிய
    ஆசவ்சகால ஸந்த்யாஜ்ய காயத்ர் யந்ய ஜப க்ரிய–271-

    அத்யாயா நர்ஹ விஷு வாத்யநுஜ்ஞாத ஜபாந்தர!!
    மெளநக்ரியா ஸமாயாத ஸச்சித்ரத்வ நிராஸக!–272-

    ப்ரதோஷ நரஸிம்ஹாந்ய ஹரி தர்ஸந பாதக: I
    ப்ரதோஷ காலாநுஜ்ஞாத ஸ்வ க்ருஹார்ச்சா வலோகந !–273–

    மத்ய ராத்ர நிஷித்தஸ்வ க்ருஹார்ச்சா பூஜநாதிக:
    மத்ய ராத்ரோபராகாதி கால வர்ஜ்யார்ச்ச நாதிக! –274–

    ஸர்வகாலாப் யநுஜ்ஞாதா ஸ்தாநஸ்த்த ஹரி தர்ஸந :
    அஷ்டாங்க யாக மத்யா நுஜ்ஞாத ஸ்வாத்யாய யோக வித் — 275–

    ஸ்ரீபராஸர ஸாண்டில்யா த்யுக்த யோக ஸ்வரூபவித்!
    ஸ்ரீபாஷ்ய க்ருத் ஸம்ப்ரதாய ப்ரபந்ந ஜந யோகதிருக் !!–276-

    ந்யாஸ கத்யாத்யநுகுண விநியோக விதாயாக!
    அர்ச்சாவதார விஷய யோகெளசித்யாபி தாயக !–277–

    யோகாங்க ஸம்ஹ்ருதி ந்யாஸ ஸ்தாநா சமந ஸாதக:1
    யோகோபகாரி கரண ஸ்ராந்தி ஹேது ஸுஷப்திமாந் –278-

    கட்வாதிருப ப்ரஹ்மாதி ஸம்பரிஷ்வங்க பாவந i
    ஸாஸ்த்ரீய ஸயநீயாதி நியமாதி விதாயக –279–

    ஸ்வாராத்ய பகவத் பாத ஸரோ ஜந்யஸ்த ஸீர்ஷக :
    நித்ராரம்பச் சேதகார்ய மாதவத்யாந கீர்த்தந! –280–

    ஏகாதஸ்யாதி லுப்தாநு யாக ஸப்தாங்க யாகத்ருக்
    த்வாதஸ்யாதி ப்ரபாதாத : பாரணாஸ்தாபந க்ஷம– 281–

    பாரணாதித மத்யாஹ்ந ஸப்தாங்கேஜ்யா விசாரக
    அநேகேஜ்யா ஸந்நிபாத லுப்தோபாதாந லேஸக!–282-

    அஸக்யவஸ்த்தா ஸ்வ ஸமாநர்த்விகாதி க்ருதேஜ்யக
    விதுர வரதி ஸந்யாஸி வநஸ்த்தர்த்விங் நிஷேதக:–283-

    ஸூதகாதி தஸாத்யாஜ்ய ஸூசிகர்த்தவ்ய கர்மக!
    மௌந ஸூந்யா சவ்ச கால கீர்த்ய த்யேய ஹரி ப்ரிய–284-

    ஆ சவ்சகால கர்த்தவ்யாபி யாநாக்ய க்ரியாபர1!
    ஸர்வக்ரியா ப்ரதிநிதி பகவந்நாம கீர்த்தந:–285-

    ரஹஸ்யாம்நாய நிஷ்டா சவ்ச நிஷேத விதாயக:
    ப்ரஹ்ம வித்வ நிமித்தாக ஸங்கோச வ்யாஹதி க்ஷமா–286-

    ப்ரக்ராந்தோத்ஸவ கார்யாதி ஸூதகாதி நிஷேதக
    ஆசவ்ச கால கர்த்தவ்ய மாநஸேஜ்யா விசாரக–287–

    ஆசவ்சகால கர்த்தவ்ய ஸந்த்யோபாஸ்தி ப்காரவித்
    துஷ்கரத்வ பரிஜ்ஞாந ஷுப்த பும்ஹர்ஷ வர்த்தக: — 288–

    பகவத் தர்ம சவ்கர்ய விஸேஷ வ்யாக்ருதி ஷம
    இஜ்யோபசார வைகல்ய தோஷாதோஷ விசாரக! 289–

    ஸங்கல்ப ஸூர்யோதயாத: க்ருத பாரக்ய நாடக
    ஸங்கல்ப ஸர்யோ தயாத்ய பத்ய வ்யக்த ஸ்வவைபவ: — 290–

    ச்சாத்ரபத்த த்வஜோத்பாஸி தாஸா ஸாஸௌத மண்டல
    ஸ்ரீவைகுண்ட விநோதீ ஸத் கவி நாடக லக்ஷம த்ருக் ||–291-

    ஸாந்தியைக ரஸ பாவஜ்ஞ ! ஸ்ருங்காராதி ரஸத்வஹா
    கௌடவைதர்ப்ப பாஞ்சால மாலாகார வசோதர:– 292–

    பாத்ரீக்ருத விவேகாதி குணாதிஷ்டாத்ரு தைவத !
    ஸந்திபஞ்சக ஸம்வேஸ நாடக ஸ்தாந கோவித–293-

    ஸர்வஸங்கட வித்வம்ஸி விஸங்கட மநீஷித:
    விம்ஸத் வர்ஷாதீத ஸர்வ வித்யாஸந்த்தி பாஸூர–294-

    த்ரிம் ஸத்வார ஸ்ராவித ஸ்ரீமச் சாரீரக பாஷ்யக
    யதீந்த்ரார்ப்பித துர்வாதி விஜ்யார்த்த பவித்ரக–295-

    வாதநாமா வாததோஷ வ்யவஸ்த்தா கரண க்ஷம:
    ஸூக்ஷ்ம ஸூஷ்ம தராத்யந்த ஸூஷ்ம ப்ரஸ் நோத்தர க்ஷம–296-

    யதீந்த்ர க்ரந்த ஸூரபி மநஸ்க பத ஸேகர !
    ஸங்கராதி குத்ருங்மூர்த்த ந்யஸ்த வாம பதோஜ்வல! -297-

    குத்ருங் மூர்த்த நீயஸ்தபாத ஸுவர்ண கடகோஜ்வல:
    வைகுண்ட லோக ஸ்த்ரீ பும்ஸ மிதுநார்த்தோப பத்தி வித் — 298–

    ஸ்வஸில்பஜித கீர்வாண தைத்ய ஸில்ப சமத் க்ருதி:!
    ஸமாதி ஸாதகஸ்தாந ஸூபாஸ்ரய நிரூபக: — 299–

    அநாத்ம குணகாமாதி நிராஸாதி ப்காரவித்
    மஹாத்மாத்மாநாத்ம குண சேஷ்டித ஜ்ஞாபந ஷம: — 300–

    ராகவாப்யுதயோத்க்ருஷ்ட யாதவாப்புதய ப்ரத:
    ஸ்ரீஸேது ஸடகோபாதி ஸேவா ஸந்துஷ்ட மாநஸ !–301-

    சோளதேஸீய பகவத் க்ஷேத்ர ஸேவா ரஸாகுல ;
    ஹஸ்தீஸ ஸேவா குலாத்மா நரேந்த்ர மத ஸர்ப்பஹா–302-

    நரேந்தர வந்திதஸ் தார்ஷ்ய தண்ட கோத்தம தாத்ருதீ !
    புநர் வ்ருஷாத்ரி ரங்கேஸ ஸேவார்த்த கமநோத் ஸூக :–303-

    ஆஸ்சர்யாவஹ சாரித்ர வாஜி வக்த்ராதி தைவத!
    வரதாசார்ய ஜநகோ ஜீவிதாகில விஷ்டப:–304-

    ஹயாஸ்ய பூர்த்த தீர்த்தாஹர் த்ருஷ்ட லஜ்ஜித விக்ந க்ருத்
    ராத்ரி நிர்வ்யூட ரங்கேஸ பாதரக்ஷா ஸஹஸ்ரக:–305-

    பாதரஷா ஸஹஸ்ரோக்த பாதுகா ஸேவகாபித:
    ரங்கேஸ தத்த கவிதார்க்கிக ஸிம்ஹாபி தாநக–306-

    ஸம்ப்ரதாய பரீஸூத்தி ஸ்தாபிதாசார்ய ஸத் பத!!
    ஸத் ஸம்ப்ரதாய ரஹித ஸாஸ்த்ரா நாதர போதக:–307-

    ஸச்சாஸ்த்ர மூலாந்ய ஸம்ப்ரதாயா நாதர போதக!!
    கல்யாதி நிகமாந்த ப்ரவர்த்த காவத்ருதி க்ஷம!–308-

    ஸட கோபாசார்ய பாவ ஸ்தாபநைக விசக்ஷண
    அநு கூலாசார்ய வம்ஸ்ய வித்யாதாந ஸூபாத்ர வித்!!–309-

    முக்ய ப்ரதாநாசார்யத்வ ஸ்தாபநைக விசக்ஷண:
    ஸ்ரீமத் ராமாநுஜாசார்ய ஸம் ப்ரதாய விரோதஹா — 310–

    ரஹஸ்ய தத்வ த்ரிதய பதவீ க்ருதி பாஸுர!! ரஹஸ்ய தத்வ ரத்நாவல்யலங்க்ருத ஸூஹ்ருந் மநா : ||| –311–

    தத் வரத்நாவளீ ப்ரதிபாத்ய ஸங்க்ரஹ காரக :
    தத்வரத்நாவளீ கம்ய ஜ்ஞாந பர்யாப்தி போதக! — 312–

    ரஹஸ்ய ரத்னாவள்யாக்ய ரஹஸ்ய வ்யாக்ருதி ப்ரிய:
    ந்யாஸ் யுத்தரைந : ப்ரதி பதோக்தா நிஷ்க்ருதி ஸாதக; — 313-

    ஸ்ரீதத்வ நவநீத ப்ரீத ஹஸ்தி கிரி நாயக:
    ரஹஸ்ய நவநீதோக்தி ஹருஷ்ட வேங்கட நாயக! ||– 314–

    காலதாமஸ பாவாதி நிபந்தந விசாரக:
    பகவத் த்ரிஸ்த்தலாவாஸ க்ரியா வ்யாக்ருதி தக்ஷிண: — 315–

    யுக பேதாதீந வர்ண பகவத்தேஹ தர்ஸந! ஸ்ரீதத்வமாத்ருகா ஹருஷ்ட பகவத் பக்த மாநஸ: | — 316–

    ரஹஸ்ய மாத்ருகா தத்த ப்ரபந்நாந்வஹ தோஷக! |
    ஸாரஸங்கரஹ க்ருந் ந்யாஸ க்ராஹ்யாக்ராஹ்ய விபாகவித் — 317–

    ப்ரபந்த ஸ்வீக்ருதிக்ருத பூர்த்ய பூரீத்தி விசாரக 1
    மாநாதி தஸ காலம்பி விவேகி பல போதக! –318–

    மாநப்ரமேய விச்சிஷ்யாசார்ய க்ருத்யாதி ஸாரவித் !
    வ்யக்தீ க்ருதாகிலோத்கர்ஷ ஸ்ரீரஹஸ்ய ஸிகாமணி — 319–

    ஸ்ரீமத்வராஹாவதார ஸர்வாதிக்யா பிதாயாக
    வராஹாக்ய புராணாதிஸய வர்ணந தக்ஷிண:–320–

    ப்ரபத்திபர வாராஹ சரம லோக போதக : 1
    யாமுநோக்தி பரிஷ்கார்யஞ்ஜலி வைபவ காரக! –321-

    ப்ரபந்த விஷய ஸ்ரீமததிகப்ரீதி ஸாதக: ! ஸ்ரீமத் தாஸ்யாநந்ய தைவத்வா தந்யார்த் தத்வ சிஹ்ந திருக்-322–

    ப்ரதாந ஸதக வ்யக்தீ க்ருத முக்யார்த்த ஸஞ்சயா
    ஸதாநு ஸந்தேயார்த்தோபகார ஸங்க்ரஹ காரக!!!–323-

    மஹோபகார வித்ஸார ஸாராக்யாந க்ருதி ப்ரிய
    பரங்குஸாதி நிர்வ்யாஜ ரக்ஷணோக்தி விரோதஹா !–324-

    ரஹஸ்ய தத்வ த்ரிதய சுளகா ஸ்வாதி தாஸ்ரித :
    அபய ப்ரதாந ஸார ஸ்பஷ்ட ராமாயணாந்தர :–325-

    ஸ்ரீஸாபசார ரஸிக வைஷ்ணவா நாதரோத்திமாந்
    ஸ்ரீஸாபசார பக்தாநாதர ஷாபண காலவித்–326-

    நியாஸாபேக்ஷித ஸர்வார்த்த வ்யஞ்ஜகாதிம காவ்யவித்
    ஸ்ரீமத் க்ருபா பரிணத ஸோபாந பதவீ ப்ரிய –327-

    அர்ச்சிராதி மஹாமார்க விரோத ஸமந ப்ரிய
    மாதவாத்மஜ பூபார்த்த தத்வ ஸந்தேஸ காரக:–328-

    ரஹஸ்ய ஸந்தேஸ க்ருதி ப்ரீத மாதவ புத்ரக :
    ரஹஸ்ய ஸந்தேஸ விவரணாக்ய க்ருதி தோஷக.–329-

    மாதவாத்மஜ பூபார்த்த ஸுபாஷித விதாநவித்
    ஹம்ஸ ஸந்தேஸ விவ்ருத பகவத் ப்ரேம தல்லஜ :–330-

    ஸ்ரீமந் மெளளி க்ரமாபிக்ய க்ரந்த நிர்மாண கோவித :!
    லோகாசார்யாதி ஸச்சிஷ் யார்ப்பித ஸாரீர பாஷ்யக:–331-

    ப்ரஹ்ம தந்த்ர ஸ்வ தந்த்ராதி ஸிஷ்யார்ப்பித ரஹஸ்யக
    க்ருதாஸீதி ஸஹஸ்ர த்ரமிடாகம பரீமள:–332-

    முநிவாஹந போகாக்ய க்ரந்த ஸம்ப்ரீத ஸஜ்ஜந : 1
    ஸ்ரீமந்மதுரகவ் யுக்தி காதா வ்யாக்யாந தஷிண ! !!–333–

    த்ரமிடாம்நாய தாத்பர்ய ரத்நாவளி விதாயக:
    த்ரமிடோபநிஷத் ஸார ப்ரபந்தோஜ்வல மாநஸ–334-

    ஸ்லோக த்ரயோக்த பகவதாராதந விதி க்ரம:
    நவஸ் லோகீ ஸங்க்ருஹீத ப்ரஹ்ம ஸத்ர விதாநக :–335-

    ப்ரபந்த ஸார நிர்மாதா ஆஹார நைய்யத்ய கீதி க்ருத
    மூல மந்த்ரார்த்த ஸங்கராஹி காதாக்ருதி விஸாரத:–336-

    த்வய மந்த்ரார்த்த ஸங்க்ராஹி காதாகரண தக்ஷிண:
    சரம ஸ்லோக ஸங்கராஹி காதா ஸங்க்ரஹ கோவித–337–

    ப்ரபத்தி கர்ப்ப கீதார்த்த காதாக்ருதி விசக்ஷண:1
    லக்ஷ்மணாசார்ய ரோகக்ந பாத தீர்த்த ப்ரபாவக: |||–338-

    ஸ்ருத ப்ரகாஸிகா ரக்ஷா ரக்ஷிதாத்யாத்ம பாஷ்யக:
    யாதவாசல பத்ரா ஸாஸநார்த்த கதிபாஸூர :–339-

    அபீதி ஸ்தவ ஸஞ்ஜாதாபீதி ரங்கபுரீ கதி:1 ரங்க ப்ராபித ரங்கேஸ கோபணார்ய ஸ்துதிப்ரிய :–340-

    ரஹஸ்யத்ரய ஸாரோஜ்ஜீவித சேதந ஸஞ்சய
    த்ரமிடோபநிஷத் த்ரஷ்ட்ரு ஸூரி ப்ருந்தோபகாரவித்–341-

    மோக்ஷைக ஸாதநாசார்ய வத்தா ஸாதந தத் பர:
    ஸ்வாசார்யாதி ஸரண்யாந்த பக்தி க்ரம விஸேஷவித்–342-

    ஸ்ரீமத் பகவதாசார்ய பாவபாதக பாதக!
    ஸடாரிநாத யோகீந்த்ர குரு ஸிஷ்யத்வ ஸாதக — 343–

    அபரீஷய ரஹஸ்யாதி ப்ரதாந பஹு தோஷவித்
    பக்தி ப்ரகாஸித குரு வம்ஸ ஸிஷ்ய நிபந்த ! –344–

    அஸம்பாஷ்யாதி ஸம்பாஷண நிஷ்க்ருதி குருஸ்ம்ருதி!!
    மோக்ஷார்த்த ஸாஸ்த்ராநாரம்ப ஹேது திக்க்ருதி தக்ஷிண!!|| 345-

    ஆசார்ய நிகடப்ராப்தி ஹேது ஷட்க நிரூபக!
    ஸார நிஷ்கர்ஷ குஸல! ப்ரதாந ப்ரதிதந்த்ர வித் !! –346–

    ஈஸா தாரகதா ஸேஷித்வ நியந்த்ருத்வ போதக : I
    ஜீவாதேயத்வ ஸேஷத்வ நியாம்யத்வ நிரூபக: –347–

    ஸங்கல்பாதீந நித்யாக்ய வஸ்து ஸ்திதி விஸேஷவித்
    ஸேஷஸேஷ்யாதி ஸம்பந்த பலிதார்த்த விஸேஷவித் –348–

    அர்த்த பஞ்சக தத்வஜ்ஞஸ் தத்வ த்ரய விஸேஷவித்
    ஸ்வாதீந திரிவிதாசித் சித் ஸ்வரூப ஸ்திதி வ்ருத்தி த்ருக் — 349–

    ப்ரமாண கம்ய தர்மி ஸ்வரூப ரூபக தர்மவித் !
    ஜீவ லக்ஷண தத்வஜ்ஜோ பத்த லக்ஷண லக்ஷிதா — 350–

    பத்த ஸ்திதி ப்ரவருத்திஜ்ஞோ முக்த லக்ஷண லக்ஷிதா நித்யஸ்திதி பரவருத்திஜ்ஞோ நித்யாத் யந் யோந்ய பேத த்ருக்– 351–

    நித்ய முக்தாத்ம கைங்கர்ய ஸார்வ வித்ய நிரூபக
    த்ரிகுணஸ்திதி வ்ருத்தி ஜ்ஞ : ஈஸ லக்ஷண லக்ஷிதா –352–

    அவதார ரஹஸ்யஜ்ஞ! பர வ்யூஹாதி பேத த்ருக்!
    ஸ்ரீ ஜகத் காரணத்வாதி ஸாதகாநேக யுக்தி மாந் — 353–

    ஸ்ரீமந் நாராயண பர தேவதா நிர்ணயக்ஷம : 1
    ஸர்வ தேவ பரப்ரஹமா பேது கண்டந தக்ஷிண : — 354–

    த்ரிமூர்த்தி ஸாம்ய தமநஸ் த்ரிமூர்த்யைக்ய விநாஸக !
    த்ரிமூர்த் யுத்தீர்ண பரம் தேவதா கண்டந க்ஷம– 355–

    த்ரிமூர்த் யந்தர்கத ப்ரஹம ருத்ர பாரம்ய கண்டந 1
    ப்ரஹ்ம ருத்ராதி கார்யத்வ கர்ம வஸ்யத்வ ஸாதக !–356–

    ப்ரஹ்ம ருத்ராதி பகவத் பாரதந்த்ர்ய விசாரக
    ப்ரஹ்மாதி பகவந் மாயா யத்ததீ ஹ்ராஸ வ்ருத்தி த்ருக் – 357–

    விஷ்ணு தர்ஸித ஸர்கோப ஸர்காதி விதி ஸம்பு த்ருக்
    ஸூபாஸ்ரயத்வ ரஹித ப்ரஹ்ம ருத்ராதி ஸாதக! — 358–

    ப்ரஹ்ம ருத்ராதி திரிகுண பாரவஸ்ய நிரூபக
    ப்ரஹ்ம ருத்ராதி பகவதாஸ்ரி தத்வ விதாயக: — 359–

    ப்ரஹ்ம ருத்ராதி பகவத் விபூதித்வ நிரூபக: ப்ரஹ்ம ருத்ராதி பகவத் பரகாரத்வா பிதாயக– 360–

    ப்ரஹ்ம ருத்ராதி பகவச் சரீரத்வ பிரகாஸக ப்ரஹ்ம ருத்ராதி பகவத் தாஸத்வ ஸ்தாபந ஷம —361-

    ஸாத்விகத் வோத்பத்தி ஹேது மது ஸூதந த்ருஷ்டி த்ருக்
    ரஜஸ் தமோ குணா ஸக்தி ஹேது ப்ரஹ்மாதி திருஷ்டி த்ருக் –362-

    ப்ரஹ்ம ருத்ராதி மோஷார்த்தி ஜநோபாஸ்யத் பாதக:1 ப்ரஹ்ம ருத்ராத்யுபாஸ் யத்வ வசோ நிர்வாஹ காரக : — 363–

    ப்ரஹ்ம ருத்ராதி பாரம்ய த்ருக் கர்மா நர்ஹதாதி த்ருக் 1
    ப்ரஹமாதி பகவத் ஸாம்ய த்ருக் பாஷண்டித்வ ஸாதக!! — 364 —

    விஷ்ணு நிக்ராஹ்ய பாத்ரத்வ ரஹிதேதர தைவ த்ருக்
    க்ஷிப்ரேதர பல ப்ராப்தி ஸாதநேதர தேவ த்ருக்-365–

    காம்யாத் யர்த்தாஸ்ரிதாநந்த புருஷார்த்த விஷ்ணுதீ
    அஜ்ஞாந்ய தேவ யஜந ப்ரீத விஷ்ணு ப்ரகாஸக : — 366–

    அஜ்ஞாந்ய தேவ யஜந பல வைகல்ய ஸாதக:
    விஷண் வாத்மகாந்ய தேவஜ்ஞ கர்ம பௌஷ்கல்ய ஸாதக — 367–

    நிஷ்காம விஷ்ணு ஸேவா நுஷங்காந்ய பல ஸித்தி த்ருக்
    பராங்குஸாதி ஸ்ரீஸுக்தி ஸாதிதோத்ருஷ்ட மாதவ –368–

    முமுக்ஷாஹேது ஸாரஜ்ஞஸ் சாதிகாரி விபாகவித்
    ப்ரபத்ய வாந்தரபிதா வேத்தோபாய விபாகவித் — 369-

    ப்ரபத்யதி க்ரியா பஞ்சதஸ நிர்ணய தூர்வஹ!
    ந்யாஸ வித்யாங்க பஞ்சத்வோபகார வ்யாக்ருதி க்ஷம –370-

    விஸ்வாஸோத்கர்ஷ விஹதி காரண வ்யாஹதி க்ஷம
    விஸ்வாஸ கோபத்ரு வரண ஸப்தார்த் தத்வ ப்ரகாரவித்–371-

    ப்ரபத்தி லக்ஷணாபிஜ்ஞோ ந்யாஸ வித்யாங்கி வேதிதா
    திரிவர்க மோஷ ஜநக ந்யாஸ வித்யா விஸேஷவித்–372-

    ஸாங்க ப்ரபத்யநுஷ்டாந ப்ரயோக விதி ஸாதக
    ஸாங்க ப்ரபத்யநுஷ்டாந ஸக்ருத்வ ஸ்தாபந ஷம –373-

    ஸஹேதுக்ருத க்ருத்யத்வாநுஸந்தாந விஸாரத
    ஸ்வ ஸ்வரூபோபாய பல நிஷ்டா த்ரய விவேகவாந்–374–

    பிரபத் யுத்தர கர்த்தவ்ய க்ருத்ய நிர்ணய தக்ஷிண!
    பகவத் தாஸ கைங்கர்ய தாஸ்ய த்வைவித்ய வேதிதா — 375 —

    பகவத் தாஸ தாஸ்ய ப்ராப்தா நந்யத்வ விரோதஹா
    ஸ்ரீமத் பாகவதாந்யோந்ய தாஸ்ய ஸாதந தத் பர–376-

    ப்ரபந்நாந்வஹ ஸங்க்ராஹ்ய ஸாஸ்த்ரீய நியம ப்ரிய:
    பாஷ்யகாரோக்த ஸாஸ்த்ராநு மத கைங்கர்ய ஸாரவித் –377–

    உல்லங்கி தாஜ்ஞாகரணா வைஷ்ணவத்வ ப்ரஸாதக:
    ப்ரபந்நாஜ்ஞாதி க்ரமாதி ப்ராயஸ் சித்த விஸேஷவித் !–378 —

    ஏநோநிஷ்க்ரு த்யுதாஸீந ப்ரபந்த லகு தண்ட த்ருக்
    ஆஜ்ஞாதி லங்கி கடிந ப்ரபந்ந நரகாப்ரிய: | –379–

    ப்ரபந்த புத்தி பூர்வைந ப்ராயஸ் சித்த விஸேஷவித்
    மஹா பாத ப்ரபந்ந ப்ரஸித்த நிஷ்க்ருதி வேதிதா — 380–

    கடிநாநியதாயு : ப்ரபந்நாயுர் வ்ருத்தி ஸாதக
    மோக்ஷார்த்த ந்யாஸ ஸம்ஹார்ய தீ பூர்வோத்தர பாபஹா — 381–

    க்ருதபாதக நாஸார்த்த ஸரணாகதி வேதிதா
    ப்ரபந்நாந்வஹ வாஸார்ஹ ஸ்தாந வ்யாக்யாந கோவித — 382–

    விகலாங்க ந்யாஸ வித்யா பூர்ண ஹேதுத்வ ஸாதக:
    தேவாந்தர த்ருடாஸக்த ப்ரபந்த நரகோக்திமாந் — 383–

    வித்வதேகாந் தோத்க்ரமண க்ரம தர்ஸந தோஷித:
    உபாயாரம்ப நஷ்டாஸ் லிஷ்ட பூர்வோத்தர பாப த்ருக் — 384–

    இஷ்டாவ தூதாந்ய பல தீ வைமுக்ய ப்ரபந்ந வித்
    விநஷ்டாஸ் லிஷ்ட புண்யாக விதூநந பதார்த்தவித் — 385–

    புதபுண்யாக மித்ராரி ஸங்க்ராந்தி வ்யாஜ போதக
    அர்ச்சிராதி கதிஜ்ஞாதா ஸுஷ்மதேஹ விஸர்கவித் — 386–

    திவ்ய தேஸ ப்ராப்தி பூர்வ க்ரம தர்ஸந தக்ஷிண:
    முக்த ப்ரபந்ந ஸாநந்த விபுஜ்ஞாந துரந்தர–387–

    மதுவித்யாத்யதீகாரி கத்யந்தர வி ஸேஷவித் !
    முக்த்யவஸ்தாநந்த தாரதம்ய வரத விநாஸக! –388–

    ஜகத் ஸ்ரஷ்ட்ரு பர ப்ரஹ்ம துல்யா நந்த விமுக்தி த்ருக்
    பரிபூர்ண பர பரஹ்மாநுபவ ஸ்ருதி வேதிதா : — 389–

    ஸுநிஸ் சித்தார்த்த பரம பிரஹ்மாநுபவ ரீதிக;
    ஸம்ஸார ப்ரதி கூலார்த்த முக்த்ய வஸ்த்தாநுகூல்ய திருக்–390-

    ஸ்ரீபதித்வ பர ப்ரஹ்ம துல்யா நந்த விமுக்தி த்ருக்
    ஸதாசார் யோபதேஸை காதிகாரி ஜ்ஞாபந க்ஷம–391-

    ஸஸத் தர்கோபதே ஸாதிகாரி வ்யாக்ருதி கோவித!
    வ்யாஜாந பேக்ஷ பகவத் ரக்ஷகத்வோக்தி வாரக–392-

    ஸ்ரீமத் ஸ்வாதந்த்ர்ய காருண்யோபயோக வ்யாக்ருதி க்ஷம;
    ப்ரபத்யதி க்ரியாவத் விஸேஷணத்வ நிரோதக–393-

    மோக்ஷ நுபாய ஸரண வரஜ்யாவாத விநாஸக;
    ப்ரதிபந்து நிராஸை கோபயுக்து வ்யாஜ வேதிதா–394-

    தேவ ஸ்வாதந்த்ர்ய கருணா மூல வ்யாஜ நிராஸஹா
    ஸ்ரீமத் ஸம்பந்த மூல வ்யாஜ நிராஸ மதாந்தக: — 393–

    அவ்யாஜ பகவத் பாத்ர பாவ மாநோபபத்திஹா
    த்வய பூர்வ ஸ்ரீபதோப லஷகத்வ விநாஸக–396–

    ஸ்ரீவிஸேஷண பாவார்த்தோபாய த்வித்வ விபஞ்ஜக: |
    நிர்வ்யூட ஸரண வ்ரஜ்யா விஸ்வாஸா பேத பூர்வ வாக் — 397–

    ப்ரபத்தி ப்ரார்த்தநா பேத வாங் நிர்வாஹ விசக்ஷண
    வாக்ய ஜந்ய ஜ்ஞாந மோஷோபாயத்வ மதபஞ்ஜக — 398–

    ஸ்வ ரக்ஷணார்த்த வ்யாபார நிவ்ருத் யுத்திதி தூர்வஹ!
    ப்ரபத்தி மோஷோபாயத்வ பாதக வ்ராத நாஸக –399–

    சரம ஸ்லோக நிகில தர்ம த்யாக பரத்வஹா
    நிஷித்த வர்ஜநா தர்ம பாவத்வோக்த்ய பநோதந :–400–

    உபாஸந ஸ்வரூபோபாய ஸ்வரூப விரோதஹா !
    வர்ணாஸ்ரமாதி தர்ம ஸ்வரூபரோத விநாஸக — 401–

    ஐகாந்த்யச் சேத் யந்யதேவ பர வர்ணாதி தர்மஹா
    பக்தி வித்யா ஸித்த ஹேது ப்ரரோசந கரத்வஹா –402–

    பக்தி வித்யா ஸிஷ்டலோகா பரிக்ரஹ நிவாரக
    பர ந்யாஸாதி ஸகல கரல தர்மத்வ பஞ்ஜந–403–

    ந்யாஸ ப்ரஸம்ஸகோ ந்யாஸ பக்த் யாதிக்ய ப்ரதர்ஸக
    அநுகூலத்வ ஸங்கல்பாத்ய வஸ்யம்பாவ வேதிதா — 404–

    விஸ்வாஸாங்க மஹத்வாந்தராய பங்க விசக்ஷண:!
    ப்ரபந்ந பகவத் ப்ரேம தாரதம்ய விதாயக–405–

    குரு பக்தி லகு ந்யாஸ பலைக்யோக்தி விசக்ஷண:
    பூர்வ பூர்வாக்ருதாம் ஸார்த்த புந! ப்ரபதநோக்திமாந் –406–

    ஐஹிகார்த்த நியாஸ கர்த்ரு ஹேது வைகல்ய ஸாதக 1
    அபியாநாதி பஞ்சாவஸர க்ருத்ய பலோக்திமாந்–407-

    விஷ்ணு பக்த சதுர்த்தாதி ப்ராஹ்மண்ய விநிவாரக!
    விதுராதி ஸ்வ ஜாத்யுக்த தர்ந மாலங்க த்ருஷ்டிமாந்–408-

    நிர்வ்யூட விதுர ப்ரஹ்மமேத ஸம்ஸ்க்ருதி ஸூக்திகா
    யஜ்ஞே விதுராந்நாதநோக்தி நிர்வாஹ தக்ஷிண; –409–

    அதிதேஸா நர்ஹகாரி ஸூநுவிருத்த பிரகாஸக:
    பகவத் பக்த ஸூத்ராதி தீதானாதி க்ருதி ப்ரிய – 410–

    சைத்தகாயிக ஸூத்ரத்வ பேத வ்யாக்யாந தஷிண
    நாராயனைக நிஷ்டேதி வசநார்த்த பிரதர்ஸக! –411-

    நிஷித்த த்யாக தர்மாக்யா முக்யார்த் தத்வ விபஞ்ஜக:
    ஸ்ரீமத் ப்ரபாவ ஸந்த்ராதோபாய மாஹாத்ம்ய ரஷக: | — 412–

    பகவத் ஷேத்ர மாஹாத்ம்ய த்ருக் வைஷ்ணவ மஹத்வவித்
    ஸெளம்காரமூல மந்த்ராஷ்டாக்ஷரத்வ த்ராண தீக்ஷித!! — 413–

    த்வய மூல மநு வ்யாக்யா ரூபத்வ பரிஸோதிக !
    மூல மந்த்ர அஷ்டாக்ஷர பத் தத்வார்த்த விஸேஷவித் — 414–

    மூல மந்த்ர மஹா வாக்ய யோஜநா ஸத காரக:
    த்வய ப்ரபாவ விஜ்ஞாதா த்வய ஸப்த நிருக்தி வித் – 415–

    த்வய த்ரயீ மூல தாந்த்ர மந்திரத்வ ஸ்த்தாபந க்ஷம :
    லஷ்மீ புருஷகாரத்வ மாநஜ்ஞ : ஸ்ரீபதார்த்த வித் — 416–

    த்வய மந்த்ர பத ப்ராத ப்ரத்யேக வ்யாக்ருதி ப்ரிய 1
    ஸ்ரீ ஸோபா யாந்தர ஸ்தாநாபத்தி ஸாரார்த்த போதக!!-417–

    கார்பண்ய கோப்த்ரு வரண ஸார்த்தோபாயத்வ யாசந:1
    உபாய வரணாத்யாத்ம நிஷேபாங்கித்வ ஸாதக: |–418-

    த்வயோத்தரார்த்த கம்யார்த்த புருஷார்த்த நிரூபக
    த்வய மந்த்ர மஹா வாக்ய யோஜநா த்ரய ஸாதக:–419-

    ஸ்ரீ கிருஷ்ண சரம ஸ்லோகாவதார வ்யாக்ருதி ஷம
    சரம ஸ்லோக தர்மோக்தி வேத்ய நிர்ணய கோவித: — 420–

    புருஷோத்தம தீமோஷ ஹேதுத்வ மதபஞ்ஜக
    அவதார ரஹஸ்ய ஜ்ஞாநாதி மோஷ கரத்வஹா! — 421–

    சரம ஸ்லோக தர்ம த்யாகாநுவாத மத ப்ரிய:
    ப்ரபத்தி ஸர்வ தர்ம த்யாகங்கோக்தி விதி பஞ்ஜக: –422–

    க்ஷேத்ரஜ்ஞோபாஸநோபாய நித்யா ஸக்தத்வ பஞ்ஜக !
    ஏக வாக்ய விதித்வாநு வாதத் வாநுப பத்தி வித் — 423–

    குரூபாய லகூபாயகீ ! ப்ரரோசகதா ப்ரிய:1
    பக்தி வித்யா மந்ததீகாதி காரித்வ மதாந்தக — 424–

    உபாஸநா மந்த விஸ்வாஸாதி காரித்வ நாஸக : I
    உபாஸநா லோக ஸங்கரஹார்த்தித்வ மதமாரக: — 425–

    ப்ரபத்தி ரூப ஸகல தர்மத்யாக மதாந்தக ! ப்ரபத் யநுஷ்டாந கால ஸர்வ தர்ம விமுக்திஹா–426-

    ப்ரதக்ஷிண ப்ரணாமாத்யநுஜ்ஞா கைங்கர்ய ஹேது த்ருக்
    அவஜ்ஞாக்ருத பக்தாதி ஜந்ம சிந்தாதி தோஷ த்ருக்–427–

    ஸாஸ்த்ர வ்யவஸ்த்தா ஸித்யர்த்த பக்த ஜந்மாதி சிந்தக:
    ஸாரகல்க ஸ்வரூப ஸ்ரீமத் கைங்கர்ய விபாக த்ருக்||–428-

    ஸம்பந்ததீ முகாநேக மோக்ஷஹேது மதாந்தக
    சரம ஸ்லோக நிகில தர்ம த்யாகி ஷடர்த்தவித்–429-

    சரம ஸ்லோகைக ஸப்த ஷடர்த்தோக்தி விசக்ஷண:
    பரதந்த்ர ஸ்வபாவாத்ம வித்ய நர்ஹத்வ பஞ்ஜக!!–430-

    பரதந்த்ராத்ம கர்த்ருத்வ ஸ்வரூப விஸதோக்திமாந்
    ஸ்ரீமத் கர்த்ரு ப்ரேராகாநு மந்த்ரு காரயித்ருத்வ வித் ||–431-

    க்ரியமாணாக வித்வம்ஸி ப்ரபத்தி ப்ரதிபாதக
    ப்ரஹ்ம வித்யாரம்ப நஷ்டாஸ் லிஷ்ட கர்ம ஸ்வரூபவித்–432-

    ப்ரியா ப்ரியோப ஸங்க்ராந்த வித்வத் புண்யாக வேதிதா
    ப்ராப்த் யந்தராய வித் ஸாத்யோபாய ரோதி விஸேஷவித் |–433-

    ப்ரதிகூலாநு பூத்யாதி ஹேது பாப ஸ்வரூப வித்
    குணாஷ்ட காவிர்ப்பா வோக்தி வேத்யார்த்த பரிஸோதக:–434-

    கைவல்யாக்ய புமர்த்த ஸ்வரூப நித்யத்வ பாதக
    மா ஸூச ஸப்த நிரணுந்த ஸோகாநேக விதத்வவித் — 435–

    ஆசார்ய க்ருத்யவிச் சிஷ்ய க்ருத்ய வேதந தீக்ஷித!!
    யதீந்த்ரமாஹாநஸிக ஸம்ப்ரதாய ஸூதாப்ரத: || -436–

    விரோத பரிஹார ஸ்ரீஸார ஸாராக்ஷி யுக்மத !
    ஸெளம்ய கார்த்திக ராகாஸ்ரீ பர்யங்காரோஹண ப்ரிய –437–

    அத்ரார்ச்யா ஜகத் ஸர்வம் பாலயந் ஜயதி ஹ்யஸெள–438-

    இதம் குரோர் திவ்ய ஸஹஸ்ர நாம ஸ்தோத்ரம் மஹார்த்தம் ஸர ஸார்த்த போதம்!
    படந்தி யே ஸர்வ ஸமீஹிதார்த்த ஸித்திம் லபந்தே அத்ர பரத்ர சாபி –439–

    பலாநபேஷோபி குரோ ப்ரஸாதாத் ஸித்திம் ஸமாப்நோ த்யநுஷங்க ஸித்தாம் ஸ்ரமாபநோதாய க்ருதாவகாஹம் கங்கா பவித்ரீ குருதே ஹி ஐந்தும் — 440–

    கோபால தாஸஸ்ய குருத்த மாங்க்ரி பக்தி ஸ்ரவந்தீ ஹ்ருதயாப்ஜ கோஸாத்
    நிர்கத்ய தந்நாம ஸஹஸ்ர ரூபா தத் த்யாயிந! ஸர்வ ஜநாந்புநாதி–441–

    இத்யாத்ரேய க்ருஷ்ணார்ய தநூஜஸ்ய ஸ்ரீமத் வேதாந்த ராமாநுஜ மஹா தேஸிக கடாஷ லப்த ஸார்வஜ்ஸ்ய கோபாலார்ய மஹாதேஸிகஸ்ய க்ருதிஷு தேஸிக திவ்ய ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.

    ஸ்ரீமதே கோபாலார்ய மஹா தேஸிகாய நம
    ஸ்ரீமதே நிகமாந்த தேஸிகாய நம

    ஸ்ரீ தேசிக அஷ்டோத்தர சத நாம ஸ்தோத்ரம்–

    ஸாங்க்ய ஸெளகத சார்வாக ஸாங்கராதி தமோநுதம்!
    த்ரய்யந்த தேஸிகம் வந்தே வேங்கடேஸாஹ்வயம் மஹ:–

    ஸ்ரீமத் வேங்கட நாதஸ்ய நாம்நாம் அஷ்டோத்தரம் ஸதம்
    ஸங்க்ருஹ்ய தத் ப்ரஸாதாய வஹ்யே ஸர்வார்த்த ஸித்திதம்–1-
    கண்டாவதாரோ அநந்தார்ய தநயோ வேங்கடாதிப :
    ஸ்ரீமல் லக்ஷ்மண யோக்யம்ஸோ வரதாசார்ய வீக்ஷித: –2-
    ராமாநுஜாரர்ய ஸந்த்ருஷ்ட: ஸெளபர்ண மனுசிந்தக
    தார்ஷ்ய தத்த வர ஸூத்த! ப்ரஸாதித ஹயாதந –3-
    அதீத ஸாங்கஸகல ஸ்ருதி ஸ்ம்ருதி விதக்ரணீ;
    இதிஹாஸ புராணஜ்ஞ ! ஸூகவிஸ் தர்க்க தத்வ வித்–4-
    பாஷ்யகாரோ பயஹர ஸுதாஸீ துக்க ராசி க்ருத்
    ப்ரதாந ப்ரதிதந்த்ரஜ்ஞ தேவதா பாரமார்த்யவித் ||–5-
    ஸ்ருத வித்யா ஸ்ராவயிதா ஸ்ருத பால ஸ்ருத ப்ரத:
    ஸ்ரித: பாண்டித்ய தாதா ச க்ருதக்ருதிய : க்ருதீ ஸூதீ–6-
    நிரஸ்த ஸாங்கய ப்ரத்யுக்த யோக காணாத பஞ்ஜந
    அசிச்சை தந்ய வாதக்ந க்ஷணி காணுமதார்தந–7-
    ஸாகாராதீ நிராகர்த்தா ஸூந்யவாத தமோநுத
    குத்ருஷ்ட்யுரக பஷீஸ ஸப்த பங்கீ விலோபந–8-
    பேதாபேத மதச்சேத்தா தூதயாதவ கல்பந
    அநீஸவாதி தம்போளி : பாஷண்ட மத கண்டந–9-
    ஸம்ரக்ஷிதாகம! ஸங்க சக்ர தாரண ரக்ஷிதா
    ஊர்த்வ புண்ட்ராங்கந த்ராதா ஸூத்த ஸத்வ மயா க்ருதி–10-
    யத்யாசார ப்ரதிஷ்ட்டாதா ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரதீ :
    அவதார ரஹஸ்யஜ்ஞா அர்ச்சா சவ்ந்தர்ய ஸக்ததீ? ||–11-
    அர்த்த பஞ்சக தத்வஜ்ஞ ! தத்வ த்ரய விஸேஷவித் | பக்தி யோக விரோதிக்ந ! பக்திமாந் பகவத் ப்ரிய–12-
    ஞாநைகஸாரோ த்வயவித் விபக்தாதி க்ருதி த்ரய:
    சதுஸ்லோக்யர்த்த ஸாரஜ்ஞ! ஸம்யக் ஜ்ஞாதாங்க பஞ்சக –13-

    ஷ்டங்கயோக நிர்ணேதா ஸப்த தந்து க்ருதுத்தம:
    அஷ்டாக்ஷரைக நிரத நவமைகரஸாஸ்ரய–14-
    தஸ தாத்பர்ய விஜ்ஞாதா ஸத க்ருச்ச ஸஹஸ்ரவித்
    ஸ்தூல லஷோ அநேக நாநா கோடி ஜ்ஞாந நிவர்த்தக–15-
    தர்ம ஸங்குஸ் ஸாது ப்ருந்த வந்தி தாங்க்ரி ஸரோருஹ:
    பத்மாக்ஷாநந்த ஜநக ததாநந்த குணாகர!–16-
    த்யாக ஸப்தார்த்தவித் தர்மவேதீ விதி விஸேஷவித் !
    உத்தம ஸ்லோக பாவஜ : பஞ்ச கால பராயண:–17-
    ஸு ரஸேவ்ய பூர்ண மநா : ஸூரீந்த்ர ப்ரதி ரூபக!
    கவிதார்க்கிக பஞ்சாஸ்ய நிகமாஞ்சல தேஸிக!–18-
    வைத்யோ முநீந்த்ரஸ் ஸர்வஜ்ஞ உபகர்த்தா குரூத்தம !
    ஸத் ஸம்ப்ரதாய ஸ்திரதீ: அநகஸ் ஸத்ய வாகபி –19-
    ஸாது வ்ருத்திர் முக்தடம்ப !: ஜிதாஷோ தீர்க்க பந்துமாந்!
    தயாளு: ஸாஸிதா ஸர்வ ஹிதாசரண தத்பர:–20-
    மஹா குரு’: ஸ்வர்ண வர்ண: ஸூபாஹு ! புண்டரீக த்ருத்
    பவித்ர பாணிர் வ்யாக்யாந முத்ராங்கித கராம்புஜ–21-
    ஸவ்யபாணி தலந்யஸ்த திவ்ய புஸ்தக பூஷண:
    பர ஸீர்ஷ ந்யஸ்த வாம பாதாப்ஜ கடகோஜ்ஜவல –22-
    பல ஸ்ருதி :
    இதீதம் தேஸி கேந்த்ரஸ்ய நாம்நாமஷ்டோத்தரம் ஸதம்
    ஸங்கீர்த்தயே தநுதிநம் ஸர்வ பாபாபனுத்தயே–23-
    படந் நாம ஸதம் பக்த்யா ஸ்ருத்வா குரு முகாம்புஜாத்
    ப்ரஸாதாத் தேஸிகேந்த்ரஸ்ய புக்தி முக்தீ ஸமஸ்நுதே–24-
    ஏகைகமபி தந்நாம கீர்த்தயந் ஸக்ருதுத்தமம்
    ஸர்வாந் காமான வாப்நோதி கிமுதாஷ்டோத்தரம் ஸதம் –25-
    இதி ஸ்ரீ நிக மாந்த மஹாதேஸிகாஷ்டோத்தர ஸதநாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.

    ஸ்ரீ நிகமாந்த தேசிகாஷ்டோத்தர சத நாமாவளி:
    ஓம் கண்டாவதாராய நம:
    “அநந்தார்ய தநயாய நம :
    வேங்கடாதிபாய நம:
    ஸ்ரீமல்லக்ஷ்மண யோக்யம்ஸாய நம
    வரதாசார்ய வீக்ஷிதாய நம
    ராமாநுஜார்ய ஸந் த்ருஷ்டாய நம
    ஸௌபர்ணமநு சிந்தகாய நம

    தார்ஷ்ய தத்த வராய நம :
    ஸூத்தாய நம ,י
    ப்ரஸாதித ஹயாநநாய நம

    அதீத ஸாங்க ஸகல ஸ்ருதயே நம
    ஸ்ம்ருதி விதே நம
    அக்ரணயே நம:
    இதிஹாஸ புராணஜ்ஞாய நம
    ஸு கவயே நம:
    தர்க்க தத்வ விதே நம
    பாஷ்யகாராய நம
    பய ஹராய நம:
    ஸூதா ஸிநே நம
    துக்த ராஸி க்ருதே நம

    பிரதான ப்ரதி தந்த்ரஞ்ஞாய நம
    தேவதா பாரமார்த்ய விதே நம:
    ஸ்ருத வித்யாய நம
    ஸ்ராவயித்ரே நம
    ஸ்ருத பாலாய நம:
    ஸ்ருத ப்ரதாய நம
    ஸ்ரிதாய நம
    பாண்டித்ய தாத்ரே நம

    க்ருத க்ருத்யாய நம
    க்ருதிநே நம
    ஸூதியே நம:
    நிரஸ்த ஸாங்க்யாய நம:
    ப்ரத்யுக்த யோகாய நம.
    காணாத பஞ்ஜநாய நம
    அசிச்சைதந்ய வாதக்நாய நம
    க்ஷணிகாணு மதார்தநாய நம

    ஸாகாரதீ நிராகர்த்ரே நம:
    ஸூந்யவாத தமோ நுதாய நம
    குத்ருஷ்ட்ரக பஷீஸாய நம
    ஸப்த பங்கீ விலோபாநாய நம

    பேதாபேத மதச் சேத்ரே நம
    தூதயாதவ கல்பநாய நம
    அநீஸவாதி தம்போளயே
    பாஷண்ட மத கண்ட்டநாய நம:
    ஸம் ரக்ஷிதாகமாய நம
    சங்க சக்ர தாரண ரஷித்ரே நம:
    ஊர்த்வ புண்ட்ராங்க த்ராத்ரே நம
    ஸூத்த ஸத்வ மயா க்ருதயே நம
    யத்யாசார ப்ரதிஷ்டாத்ரே நம
    ஸர்வ தந்த்ர ஸ்தந்த்ரதியே நம– 50

    அவதார ரஹஸ்யஜ்ஞாய நம
    அர்ச்சா ஸெளந்தர்ய ஸக்ததியே நம:
    அர்த்த பஞ்சக தத்வஜ்ஞாய நம
    தத்வ த்ரய விஸேஷவிதே நம
    பக்தியோக விரோதிக்நாய நம:
    பக்திமதே நம!
    பகவத் பிரியாய நம:
    ஜ்ஞாநைக ஸாராய நம
    த்வய விதே நம
    விபக்தாதி க்ருதி த்ரயாய நம :—60

    சதுஸ் ஸ்லோக்யர்த்த ஸாரஜ்ஞாய நம:
    ஸம்யக் ஞாதாங்க பஞ்சகாய நம
    ஷடங்க யோக நிர்ணேத்ரே நம:
    ஸப்த தந்து க்ருதுத்தமாய நம
    அஷ்டாக்ஷரைக நிரதாய நம.
    நவமைக ரஸாஸ்ரயாய நம.
    தஸ தாத்பர்ய விஞ்ஞாத்ரே நம
    ஸதக்ருதே நம
    ஸஹஸ்ர விதே நம
    ஸ்தூல் லக்ஷாய நம –70

    அநேக நாநா கோடி ஜ்ஞாந நிவர்த்தகாய நம
    தர்ம ஸங்கவே நம
    ஸாது ப்ருந்த வந்தி தாங்க்ரி ஸ்ரோருஹாய நம:
    பத்மாக்ஷாநந்த ஜநகாய நம
    அநந்த குணாகராய நம:
    த்யாக ஸப்தார்த்த விதே நம
    தர்ம வேதிநே நம
    விதி விஸேஷ விதே நம
    உத்தம ஸ்லோக பாவஜ்ஞாய நம!
    பஞ்ச கால பராயணாய நம–80–

    ஸூர ஸேவ்யாய நம:
    பூர்ண மநஸே நம :
    ஸூரீந்த்ர ப்ரதி ரூபகாய நம
    கவிதார்க்கிக பஞ்சாஸ்யாய நம:
    நிகமாஞ்சல தேஸிகாய நம
    வைத்யாய நம:
    முநீந்த்ராய நம!
    ஸர்வஜ்ஞாய நம:
    உபகர்த்ரே நம :
    குரூத்தமாய நம –90-

    ஸத் ஸம்ப்ரதாய ஸ்திரதியே நம
    அநகாய் நம:
    ஸத்ய வாசே நம.
    ஸாது வ்ருத்தயே நம:
    முக்த டம்பாய நம
    ஜிதாஷாய நம:
    தீர்க்க பந்துமதே நம:
    தயாளவே நம :
    ஸாஸித்ரே நம:
    ஸர்வ ஹிதா சரண தத் பராய நம: 100-

    மஹா குரவே நம
    ஸ்வர்ண வர்ணாய நம.
    ஸூபாஹவே நம
    புண்டரீக த்ருஸே ந :
    பவித்ர பாணயே நம:
    வ்யாக்யாந முத்ராங்கித் கராம்புஜாய நம:
    ஸவ்ய பாணிதல ந்யஸ்த திவ்ய புஸ்தக பூஷணாய நம:
    பர ஸீர்ஷ ந்யஸ்த வாம பாதாப்ஜ கடகோஜ்லவாய நம –108–

    ஸ்ரீமத் வேதாந்த தேசிக ப்ரபத்தி

    ஸ்ரீமல் லக்ஷ்மண யோகீந்த்ர ஸித்தாந்த விஜய த்வஜம்!
    விஸ்வாமித்ர குலோத் பூதம் வரதார்ய மஹம் பஜே

    வித்வந் மதங்கஜ ஸிகாபரணாய மாநௌ விஸ்வாதிஸாயி மஹிமாம்பு நிதாந பூதெள
    வித்வேஷி வாத மகுடீ க்ருத குட்டநௌதெள
    வேதாந்த ஸூரி சரணௌ ஸரணம் ப்ரபத்யே–1-

    விஸ்வம்பரா மதிதராமபி பாஸயந்தெள விந்யாஸதோ விவித ஸஜ்ஐந தாநுபாயெள
    விஸ்தீர்ண ஸம்ஸ்ருதி மஹார்ணவ் கர்ண தாரெள
    வேதாந்த ஸூரி சரணௌ ஸரணம் ப்ரபத்யே–2-

    விஸ்வாந் தராந்த தமஸ க்ஷபண ப்ர வீணவ் வித்யோதமாந நகரேந்து மயூக ஜாலை!
    விக்யாத தாமரஸ ஸங்க ரதாங்க சிஹ்நெள
    வேதாந்த ஸூரி சரணெவ் ஸரணம் ப்ரபத்யே-3-

    வித்வேஷமாந மதமத்ஸர வித்விஷெளயௌ விஷ்ண் வாலாயாநுகம நோத்தம நித்ய க்ருத்யெள
    வேதாந்த வ்ருத்த விஹிதாஞ்ஜலி கோசரெள தெள
    வேதாந்த ஸூரி சரணெள ஸரணம் ப்ரபத்யே–4–

    விஷ்ண் வர்ப்பிதாத்மஜந பாக்ய விபாக பூதெள விப்ராஜமாந் நவகோக நதாநுகல்பெவ்
    வேஷாந்தரோபகத பல்லவ தல்லஜெளதெள
    வேதாந்த ஸூரி சரணௌ ஸரணம் பிரபத்யே–5–

    வேதோ முகைரபி ஸூரைர் விஹித ப்ரணாமௌ வேலாதிலங்கி ஸுஷமா குமரபாவெள
    விஸ்மேர கேஸரலஸந் ம்ருது வாங்குலீகௌ வேதாந்த ஸூரி சரணெள ஸரணம் ப்ரபத்யே–6-

    வித்ரா விதோத்பட விகார ரஜோ குணெள தெள விக்யாத பூரி விபவேந் ரஜ கணேந
    விஸ்வோபகார கரணாய க்ருதாவதாரௌ வேதாந்த ஸூரி சரணெள ஸரணம் பரபத்யே–7-

    விஷ்ண்வங்கரி நிர்கத ஸரித் ப்ரவராநு பாவ்யெள
    வித்யா விநீத ஜநிதைர் விமலை ஸ்வ தீர்த்தை!!
    வ்யாநம்ர ஸிஷ்ய ஜந ரக்ஷண ஜாகரூகெள வேதாந்த ஸூரி சரணெள ஸரணம் பிரபத்யே–8–

    வீதீஷு ரங்க நகரே க்ருத சங்கரமௌதெள விஷ்ணூத்ஸவேஷு விதி வாஸவ ஸேவிதேஷு
    வித்யா விநீத ஐநதா விஹிதா நுஸாரெள
    வேதாந்த ஸூரி சரணெள ஸரணம் ப்ரபத்யே–9-

    விஸ்வாஸ விஷ்ணு பத பக்தி விரக்தி ஸூந்யம் |
    விப்ரஷ்ட க்ருத்யமபி மாம் விஷயேஷு ஸக்தம்
    வித்வத்ஸபாநு கதி யோக்ய மிஹாததாநெள
    வேதாந்த ஸூரி சரணெள ஸரணம் ப்ரபத்யே–10-

    ஸ்ரீமதே வேதாந்த தேஸிகாய நம:

    ஸ்ரீ தேசிக மங்களாசாஸநம்-

    ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய : கவி தார்க்கிக கேஸரீ
    வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நி தத்தாம் ஸதா ஹ்ருதி |

    ஸ்ரீமல் லக்ஷ்மண யோகீந்த்ர ஸித்தாந்த விஜயத்வஜம் |
    விஸ்வாமித்ர குலோத்பூதம் வரதார்ய மஹம் பஜே

    ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ராய ஸிம்ஹாய கவிவாதிநாம்!
    வேதாந்தாசார்ய வர்யாய வேங்கடேஸாய மங்களம் !–1-

    நபஸ்யமாஸி ஸ்ரோணாயாம் அவதீர்ணாய ஸூரயே
    விஸ்வாமித்ராந் வயாயாஸ்து வேங்கடேஸாய மங்களம்|| 2||

    பிதா யஸ்யாநந்த ஸுரி! புண்டரீகாஷ யஜ்வந:)
    பெளத்ரோ யஸ் தநயஸ் தோதாரம்பாயாஸ் தஸ்ய மங்களம்–3-

    வேங்கடேஸாவதாரோயம் ததி கண்டாம் ஸோ அதவா பவேத்
    யதீந்த்ராம்ஸோத வேத்யேவம் விதர்க்யாயாஸ்து மங்களம் –4-

    ஸ்ரீ பாஷ்யகார பந்தாந மாத்மநா தர்ஸீதம் புந!!
    உத்தரத்து மாகதோ நூந மித்யுக்தா யாஸ்து மங்களம் | -5-

    யோ பால்யே வரதார்யஸ்ய ப்ராசார்யஸ்ய பராம் தயாம்
    அவாப்ய வ்ருத்திம் கமிதஸ் தஸ்மை யோக்யாய மங்களம் 6|||

    ராமாநுஜார்யா தாத்ரேயாந் மாதுலாத் ஸ்கலா கலா!
    அவாப விம்ஸத் யப்தேயஸ் தஸ்மை ப்ராஜ்ஞாய மங்களம் –7-

    ஸ்ருத ப்ரகாஸிகா பூமெள யேநாதெள பரி ரஷிதா
    ப்ரவர்த்திதா ச பாத்ரேஷ தஸ்மை ஸ்ரேஷ்டாய மங்களம் –8-

    ஸாம்ஸ்க்ருதீபிர் த்ராமிடீபிர் பஹ்வீபி க்ருதிபிர் ஜநாந்
    யஸ் ஸமுஜ்ஜீவயாமாஸ தஸ்மை ஸேவ்யாய மங்களம் –9-

    ய : க்யாதி லாப பூஜாஸு விமுகோ வைஷ்ணவே ஜநே!
    க்ரயணீய தஸாம் பராப்த : தஸ்மை பவ்யாய மங்களம் –10-

    யஸ்மா தேவ மயா ஸர்வம் ஸாஸ்த்ர மக்ராஹி நாந்யத :
    தஸ்மை வேங்கட நதாய மம நாதாய மங்களம் –11-

    பித்ரே ப்ரஹ்மோபதேஷ்ட்ரே மே குரவே தைவதாய ச
    ப்ராப்யாய ப்ராபகாயாஸ்து வேங்கடேஸாய மங்களம்–12-

    ய கருதம் வரதார்யேண வேதாந்தாசார்ய மங்களம்
    ஆஸாஸ்தே அநு திநம் ஸோ அபி பவேந் மங்கள பாஜநம் || 13 ||

    கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண ஸாலிநே
    ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

    ஸ்ரீ தேசிக ஸ்துதி: –
    ஸ்ரீ தொட்டையாசார்யர் (வைபவ ப்ரகாசிகை)
    ஜயது நிகம சூடா தேஸிகேந்த்ரோ தயாளு
    ஜயதி ஸுமதி ஸேவ்யா ஸோபநா தஸ்ய ஸூக்தி:
    ஐயதி ஸூப தம் ஸீலயந் ஸூரி ஸங்க:
    ஜயதி வஸூ மதீயம் தஸ்ய ஸஞ்சார தந்யா-

    ஸ்ரீ ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன்
    ஜீவநம் ஜகதாம் ஜீயாத் கிமப்யபஹத ஸ்ப்ருஹம் !
    ஸ்வதந்த்ரம் ஸர்வ தந்த்ரேஷ வேங்கடேஸாஹ்வயம் மஹ :

    ஸ்ரீ அண்ணயார்ய மஹா தேசிகன்
    கவிதார்க்கிக கண்டீரவ சரணாப்ஜம்
    பிப்ருத மெளலி பாகேஷு
    விலஸதி வ ஸார்வஜ்ஞம் விபுத ஐநா : ஸர்வ மங்களோல்லலிதம் |

    ஸ்ரீ ப்ரஹ்மதந்த்ர பரகால யதீந்த்ரர்
    வாதி த்விய ஸிரோ பங்க பஞ்சாநந பராக்ரம:
    ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய: கிரம் விஐயதாம் புவி|

    ஸ்ரீமத் வேதாந்த குரு தண்டகம்

    ஸ்மயமாநாநநாம் போஜம் தயமாந த்ருஸம் குணாந் !
    அயமாநம் குரும் ஸ்ம்ருத்வா வயமாநந்த பூரிதா | :

    பரிமித மதி துஷ் பரவேஸா கிலாம்நாய கோடீ குஹாந்தர் நிராபாத ஸஞ்சார தீவ்யத் பர ப்ரஹ்ம பஞ்சாஸ்ய நிஸ் ஸங்க ஹஸ்த க்ரஹா பூர்வ திவ்யெளஷ தீபூத ஸூக்தி ச்சலோதீத திவ்யாபகா பூர நிர்த்தூத விஸ்வம்பரா பாப பாளீக நாளீக ஜந்மா த்யமேய ப்ரபாவ ப்ரதிஷட்டாபிதா ஸேஷ ராமாநுஜாசார்ய ஸித்தாந்த ஸேதோ ! பஜத் பவ்ய ஹேதோ ! சிராவ்ருத்த ஸம்ஸார பாதோதி நிர்மக்ந லோகாவநோத்யத் தயாஸார ஸேஷாசலாதீஸ ஸங்கல்ப ஸம்பூத கண்டாவதாரா கமாந் தார்ய நிஸ் ஸீம நிர் ஹேது காருண்ய ஸிந்தோ! ப்ரபந்கைக பந்தோ! தியாந்தம் மதாந்தம் பவாப்தெள நிமக்நம் கதாசார
    கந்தம் பவத்பாத பங்கேருஹ ப்ரேம பந்தம் குருஷ்வ ப்ராபோமாம் க்ருதாஜ்ஞாந பங்கை: பயோஜாந்தரங்கை ரபாங்கை ருதீக்ஷஸ்வ ரக்ஷ ஸ்வயம் — 1–

    ஐயது நிகம சூளிகா தேஸிகோ நிர்மம ஸ்தோம துஸ்ஸாத நித்யாந மந்தாந நிர்மத்ய மாநாத்ம சேத: பயோராஸி நிர்யத் ஸுதாபாநு ரேகாயிதாமந்த விஜ்ஞாந ஸந் மல்லிகா மஞ்ஜரீ வாஸிதாபஷ திங்மண்டலோ வித்விஷந் மண்டலி பூமி ப்ருத் கண்டநா கண்டல: குண்டலீஸ ப்ரதா ஹாரி பாண்டித்ய
    பாக் சண்டபாது ப்ரபா ஸ்பர்த்தி காய த்யுதிர் நிஸ்துல க்ரந்த நிர்மாண வைசித்ர்ய கண்டாபதீ பூத
    துஷ்ப்ராப நிஸ்ரேயஸாஸ்த்தா நிஷித்தாகமாளி விருத்த ப்ரசார; ப்ரபந்ந ப்ரஸித்தாபதாந ப்ரணாடீ விநிஸ்சேய ஸஞ்சாரி லக்ஷ்மீ ஸஹாயாவதாரோ மஹாந் — 2-

    ப்ரபதந ஸரணி ஸ்வரூப ப்ரமாண ப்ரசாரேஷு புங்காநு புங்காயிதாநேக துர்வார ஸந்தேஹ ஸந்தோஹ காடாந்தகார ப்ரதாந ப்ரதிக்ஷேப பாலாருணாகார நிக்ஷே பரக்ஷாதி ஸங்க்ஷிப்த யுக்த்யா விபக்ஷோக்தி ஸிக்ஷாதி தக்ஷம் ஜகத் பங்க பங்கா ப்ரகங்கா ஸமுத்பாதி துங்காநு பாவாந்த ரங்கேஸ பூவாத
    ஸங்கோதயத் பாஷ்ய வாதாவளீ யுக்ம ஸம்பந்ந மாநந்த வாசா ஸுதாபூர தோராஹவோத்யுக்த ஸராதிக ஸ்தோத்ர விஸ்மாபிதாஸேஷ வித்வஜ்ஜந ஸ்தோம ஸம்பாவ்யமாநம் பவாநீ தவாம்போஜ ஸம்பூத ஜம்பாரி முக்யாமர வ்ராத நிஸ் ஸங்க ஜ்ரும்பத் ஸ்வ வீராயீ தாநங்க தாஸீ க்ருதி ப்ரௌட கம்பீர சித்த ப்ரவ்ருத்தம் பதாம்போஜ ஸக்தாப தம்போநிதி க்ராஸ கும்பீ குமாரம் பஜேஹம் துராசார துர்போத தூர்வாத ஸந்தேஸ வைதேஸிகம் தேஸீகம் || 3 ||

    பவ ஹ்ருதய சிரத்நகீ ரஞ்சலாசார்ய வர்யேத்புதா நந்தசர்யே விசார்யேஹ கத்யந்தாரபாவ முத்புல்ல பத்ம ப்ரவாள ப்ரதி ஸ்பர்த்தி பாதே, கதா யோதநோத்யுக்த ஸச்சாத்ர ஜைத்ரோதயத் காஹளீ ஸோபி ஜங்கா யுகீபாஜி, ரம்பா வநஸ் தம்ப கும்பீந்த்ர ஸூண்டோபமாநோரு காண்டே, வளக்ஷாம் ஸூக த்வந்த்வ ராஜத்கடீகே, ஸமுத்யத் விவஸ்வத் ப்ரபா புஞ்ஜதிக்காரி தேஜ:ப்ரவாஹாந்த விப்ராம்யதாவர்த்த ஸங்காஸ்பதி பூத கம்பீர நாபௌ, கவாடப்ரமாதாயி வஷோ விலோலத்
    துலஸ்யப்ஜ பிஜாக்ஷமாலே, கராம்போஜ நாளாயிதாஜாநு ஸம்லம்பி பாஹௌ, களஜ் ஜ்யோதிஷாதோ பவத் கம்புகாந் தெள, ஸரத்பர்வ ஸோமாபி ராமாந நாம்போ ருஹாந்தர் ப்ரமத் ப்ருங்க யுக்மீ பவல் லோசநே,மோசநே துஷ்க்ருதாளேர் பஹிர்நிர்ய தந்தஸ்த்த ஸத்வாம்ஸ ஸந்தேஹ பாத்ரீபவத்
    காத்ர ஸக்தோர்த்வ புண்ட்ர ஸ்ரியாலங்க்ருதே, வேங்கடேஸே குரௌ| | 4

    ஷட் ஸப்ததி கணோபேத சரணோ ம்ருது பந்தந !!
    படதாம ஸூபச்சேதீ த்ரய்யந்தாசார்ய தண்டக–

    ஸ்ரீதேசிகன் வாழித் திருநாமம்-நேரிசை வெண்பா
    வாழி யிராமாநுசப் பிள்ளான் மாதகவால்
    வாழு மணிநிக மாந்த குரு – வாழியவன்
    மாறன் மறையுமிராமானுசன் பாடியமும்
    தேறும் படியுரைக்குஞ் சீர்.

    எண்சீராசிரிய விருத்தம்
    வஞ்சப் பர சமயம் மாற்ற வந்தோன் வாழியே
    மன்னு புகழ்ப் பூதூரான் மனமுகப்போன் வாழியே
    கஞ்சத் திருமங்கை யுகக்க வந்தோன் வாழியே
    கலியனுரை குடி கொண்ட கருத்துடையோன் வாழியே
    செஞ்சொல் தமிழ் மறைகள் தெளிந்துரைப்போன் வாழியே
    திருமலை மால் திருமணியாய்ச் சிறக்க வந்தோன் வாழியே
    தஞ்சப் பரகதியைத் தந்தருள்வோன் வாழியே
    தண்டமிழ்த் தூப்புல் திருவேங் கடவன தாள் வாழியே!

    நேரிசை வெண்பா
    நானிலமுந்தா வாழ நான் மறைகள் தாம் வாழ
    மாநகரின் மாறன் மறை வாழ- ஞானியர்கள்
    சென்னி யணி சேர் தூப்புல் வேதாந்த தேசிகனே!
    இன்னுமொரு நூற்றணடிரும்

    திருவோலக்கப் பாட்டு
    வாழி யணி தூப்புல் வரு நிகமாந் தாசிரியன்,
    வாழி யவன் பாதார விந்த மலர் – வாழியவன் கோதிலாத் தாண் மலரைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் தீதிலா நல்லோர் திரள்

    திருநாள் பாட்டு
    வாதா சனவர ரிவரென வருமா பாடியம் வகை பெறு நாள்
    வகுளா பரணப் பெருமாள் தமிழின் வாசி யறிந்திடு நாள்
    பேதா பேதம் பிரம மெனாவகை பிரமந் தெளிவுறு நாள்
    பேச்சொன் றுக்குச் சததூடணியைப் பேசிய தேசிக நாள்
    தீதா கியபல மாயக் கலியைச் சிக்கென வென்றிடு நாள்
    திக்கெட்டும் புகழ் சீபா டியத்தைத் தெளிய வுரைத்திடு நாள்,
    ஓதா தோதும் வேதாந்தாரிய னுதயஞ் செய்திடு நாள்
    உத்தமமான புரட்டாசித் திருவோண மெனுந்நாளே–

    செங்கமலத்தய னனனவரென்று புகழ்ந்து மகிழ்ந்திடு நாள்
    சீர் கொளிராமா நுசவெனுமந்திரம் பதிகளில் வாழ் திரு நாள்
    செங்கல் வாளைகள் சேர் வயல் சூழ்ந்த வரங்கர் சிறந்திடு
    சிந்துர வெற்பிடைச் சென்று திகழ்ந்து சிரீபதி வாழ்ந்திடுநாள்,
    தெங்கொடு மாங்கனி தேன் சுனை வேங்கடத்தீசர் பிறந்திடுநாள்,
    சீர்மதி யாகம மெளலி தந் தேசிகர் பிறந்து வளர்ந்திடுநாள்,
    பங்கய மா மலர் மங்கை குணங்களைத் தெளிய வெளியிடு நாள்,
    பார் திகழ் பாத்திர பதத் திருவோணமெனு திரு நன்னாளே

    ஸ்ரீ தேசிகனின் திருநக்ஷத்ரம்

    கந்யா ஸ்ரவண ஸம்பூதம் கண்டாம்ஸம் வேங்கடேஸிது
    ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேஸிகம்!

    ———————————————————————————-

    ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

    ஸ்ரீ பெருமாள் தூதரும்- ஸ்ரீ பாண்டவ தூதனும்–

    May 1, 2026

    இன்னார் தூதன் என நின்றான் -தரித்து நின்றான்

    சொல்லின் செல்வன் -ராமன் சங்கல்பத்தாலேயே சுக்ரீவன் திருவடியையே தூதுவனாக அங்கதன் தலைமையில் தெற்கு நோக்கி அனுப்பினான் -வாய் போல் எங்கும் செல்லும் திறமை யுடையவன்

    உத்யோக பர்வம் -70- கிருஷ்ணனே தன்னைத் தூதுவனாக –

    இருவருக்கும் செய்தி சொல்லி அனுப்ப -பெருமாள் -சுக்ரீவனின் மந்திரி -அவன் சொல்லியே செல்ல வேண்டும் -அங்குளி கொடுத்து -அடையாளங்களும் -ரஹஸ்யங்கள் -இதுவா காடு -கோட்டைக்கு வெளியில் வந்ததும் -கங்கை தாண்டி சுமந்தனுக்கு செய்து சொல்லும் -கிளி அரண்மனையில் விட்டு வந்தேன் ஊர்மிளையை பார்த்துக்கக் சொல்லி
    பாண்டவர்-ஐந்து ஊராவது இது உண்மைக் கார்யம் அல்ல -பாஞ்சாலி கூந்தல் முடிக்க -நறையூர் நம்பி பாசுரம் -உத்யோக பர்வம் -81-துச்சாதனன் கர்ணன் அவமானம் -சர்வாத்மா அந்தகன் வெள்ளிக்கண்ணும் உள் கண்ணும் இல்லாதவன் -சண்டைக்கு பேசிய வர சொல்லி அனுப்பினாள்

    தேர்வு – செய்தி -பயணம்
    கார்த்திகை மாதம் ஆரம்பம்

    சம்பாதி சொல்ல -கடலைத்தாண்ட -பங்குனி மாதம் மஹேந்திர கிரியில் இருந்து புறப்படுகிறார் -காலினால் அளந்தான் -வாலினால் அளந்தான் -ஆகவே திருவடி திருநாம பெற்றார்
    மூன்று தடைகள் -மைநாகம் – ஆதர சப்தமோ தசை-ஆறு சுவைக்கு மேல் -சுரசா நாகமாதா -வாயுக்குள் சென்று -ஸிம்ஹிதா நிழல் -வயிற்றுக்குள் -குடலை கிழித்து
    அன்பால் வென்று -அறிவால் வென்று ஆற்றலால் வென்று -ராமநாமம் சொல்லி தடை நீக்கி-பங்குனி பவ்ர்ணமி அடைந்தார்

    உத்யோக -82 பர்வம் -காலை புறப்பட்டு -அதே கார்த்திகை மாதம் கிளம்பி ரேவதி நக்ஷத்ரம் -பனி வர ஆரம்பிக்க – தாரகன் தேரோட்டி -நான்கு குதிரைகள் பூட்டி -சுக்ரீவனின் பெயரும் ஒரு குதிரை -சாத்விகி உடன் கூடி -காலால் குதிரைப்படை 1000 பின் தொடர-வேத விற்பன்னர் உபசரிக்க ஒரு நாள் தங்கி-ஹஸ்தினாபுரம் அடுத்த நாள்

    சந்திப்பு -திருவடி சீதா பிராட்டி -இவனோ விதுர பக்தன் -நான் தேடி கிடைக்க வில்லன் -நான் விட்டு அடியேன் -நினைக்க அசோகவனத்தில் கண்டார் -ஞான முத்திரை -கட்டைவிரல் –
    நமோஸ்து ராமாய-ருத்ரன் இத்யாதி ராமகைங்கர்ய துடிப்பால் -சம்சரே மதுரம் வாக்கியம் -31 -1-சர்க்கம் -தமிழ் இராமாயணம் -பாசுரப்படி இராமாயணம்- -அகஸ்தியர் ஆஸ்ரமம் தங்கி-இராமாயண உபன்யாசத்தில் தூங்கினால் அரக்கர்கள் ஆவோம்-

    பீஷ்ம த்ரோண -விட்டு விதுரர்-துரியோதனன் சம்பந்தி -சாம்பன் இவன் மகளை திருமணம் -மம பிராண பாண்டவ-பஞ்ச பிராணனும் பஞ்ச பாண்டவர்கள்-விதுரன் வாழ் வள மனை புகுந்தான் உன் குடிசைக்கு வா -வில்லிபாதரம்-கணை யாழி கொடுத்து சீதையை உளனாக்கி -இங்கு கைங்கர்யம் ஏற்றுக்கொண்டு விதுரனை உளனாக்கி

    பேச்சு -ராவணன் இடம் -அசோகவனம் துவம்சம் இங்கு அடிக்க அங்கு வலிக்கும் -கதை உபயோகிக்க வில்லை -மரங்களே ஆயுதம் -எதிராளி ஆயுதம் உபயோகிப்பர் -80000 கிங்கர்களை அழித்து –ப்ரஹ்மாஸ்திரம் கட்டுப்பட்டது போல் -நடித்து -ராம தூதன் -ராம தாஸ்ன் -சீதா அருளாலே-வாலையை ஆஸனம் நேரடிக் குறிப்பு இல்லை -அண்ணாந்து பார்த்து உத் வீஷய வால்மீகி இராமாயணம்-வரம் பொய்க்கும் ராமசரம் பொய்க்காது -தேவி ஒப்படைக்காவிடில் ஆவியை விடவேண்டி வரும்

    பொய்யாசனம் -பாண்டவ தூதன்-அப்பூச்சி காட்டுகிறான் ஊர் ஓன்று வேண்டி-துஷ்டர்கள் எவ்வளவு பேசினாலும் கேட்க மாட்டார்கள்

    இருவரையும் தூதன் என்றும் பார்க்காமல் அழிக்க பார்த்தால்-நரத்துக்கு வால் வாநரம் -சீதை சோக அக்னியை வைத்தே எரித்தார்-

    இருவரும் விஸ்வரூபம் -திவ்யம் ததாமி அர்ஜுனனுக்கு-த்ருதராஷ்டரனுக்கும் காட்டி -இத்தைப்பார்த்த கண்ணாலே வேறே ஒன்றையும் பார்க்க மாட்டான் கண்ணை வாங்கிக்கோ பிரார்த்தனை -தூது பேரில் -இலங்கை முழுவதும் கண்டு -விபீஷணன் பற்றி நன்றாக அறிந்து -தோளில் அமர்ந்து கொண்டு போவேன் -இவர் அறிவார் அவள் ஒத்துக்கொள்ள மாட்டாள் தெரிந்தும் -ராமன் காக்கும் வரை உயிர் காத்து இருப்பவள் -ஒரு மாதம் கெடு வாங்குவதற்காகவே இந்த வார்த்தை –

    சூடாமணி -காகாசுரன் -மனசிலா -செங்கல்பொடிக்கதை -திலகம் கோணலாக -கன்னத்தையே கண்ணாடி -இத்தையும் சொல் அடையாளம் -ஒரு கல்லில் பல மாங்காய் இருவரும் -விதுரன் உணவு -கோபத்தில் துரியோதனன் -வில் முறித்து உனக்காக போராட மாட்டான் -அரசியல் -குந்தி கர்ணன் இடம் அர்ஜுனனைத்தவிர மற்ற பாண்டவர்களை கொல்ல மாட்டான் -அஸ்வத்தாமா தளபதியாமல் பண்ணி -மோதிரம் போட-சண்டையில் உதவுவான் சகுனி தப்பாக புரிந்து -லீலைகள் பல செய்து

    இருவரும் செய்தியுடன் வந்தார்கள் தஸ்ய சத்ருசம் பவத்-தென் திசை நோக்கி நமஸ்காரம் தொழத்தக்க நிலையில் இருப்பதைக் குறிப்பால் கண்டேன் சீதையை-கற்பினுக்கு அணியை-பரிஷ்வங்கம் -தன்னையே கொடுத்து பெருமாள் திருவடியையே விட ஸ்ரேஷ்டரானார் அங்கு தர்மபுத்ரன் நன்றி கூட சொல்லாமல் சங்கல்பித்தது -பின் வந்த தூதனை கொண்டாடட்டும் என்று செய்த செயல்-தூதரே முக்கிய போர் புரிந்தனர்

    ஆச்சார்ய பிரபாவம் சொல்லும் தூது -பிறவிப்பெரும்கடல் -அசோகவனம் உடம்புடன் -இத்யாதி-தூது போனவன் ஏற்றம் உபாய வைபவம் சொல்லிற்று-ஆஸ்ரித பாரதந்தர்யம் -கண்ணன் அல்லால் கண்ணில்லை-பொருப்பு துறப்பு-

    கிருஷ்ணாவதாரத்தில் பாண்டவர்கள் தங்குவதற்கு இடம் கேட்பதற்காக துரியோதனனிடம் தூது சென்றார் கிருஷ்ணர். பாண்டவர்களின் மிகப்பெரிய பலமாக கிருஷ்ணர் இருப்பதால், அவரைக் கடத்த துரியோதனன் முயற்சிக்கிறான். கிருஷ்ணரை சூழ்ச்சிசெய்து தன் இடத்துக்கு வரவழைத்து ஓர் இருக்கையில் அமரச் செய்கிறான். அந்த இருக்கையின் கீழ் ஒரு நிலவறையை அமைத்து, கிருஷ்ணர் இருக்கையில் அமர்ந்ததும் பாதாள அறைக்குள் விழுந்து விடுவார், அப்போது அவரைக் கொன்று விடலாம் என்பது துரியோதனின் திட்டம். திட்டம் போலவே அனைத்தும் நடைபெறுகிறது. பாதாள அறைக்குள் விழுந்ததும், கிருஷ்ணர் விஸ்வரூபம் எடுத்து மல்யுத்த வீரர்களை அழித்தார். இந்த மகாபாரத சம்பவம் குறித்து வைசம்பாயனர் என்ற முனிவர் மூலம் கேள்வியுற்ற ஜனமேஜய மஹாராஜன், காஞ்சியில் அச்வமேத யாகம் செய்து கிருஷ்ணரை வரவழைத்து, பாதாள அறையில் விஸ்வரூபம் எடுத்தக் காட்சியை நினைவுகூர்ந்து, தனக்கு இங்கேயே விஸ்வரூபக் காட்சியைக் காட்ட வேண்டினான். பக்தனுக்காக ஸ்ரீகிருஷ்ணர், விஸ்வரூப காட்சியைக் காட்டிய திருத்தலம்தான் திருப்பாடகம். (திருதராஷ்டிரனுக்கு கண்பார்வை அளித்து தனது பெரிய விஸ்வரூப தரிசனத்தை கிருஷ்ண பகவான் இத்தலத்தில் காட்டியருளினார்.)திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 48-வது திவ்ய தேசம் ஆகும்.கிருஷ்ணர் இத்தலத்தில் 25 அடி உயரத்தில் , மூலஸ்தானத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சியளிப்பது வேறு எங்கும் காண முடியாத சிறப்பு அம்சமாகும்.இத்தலத்தை பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர்.மகாபாரதத்தில் விஸ்வரூபக் காட்சியை பகவான் மூன்று இடங்களில்தான் காட்டியிருக்கிறார். சகாதேவனிடம் நிமித்தம் கேட்கப் போனபோது ஒருமுறை; துரியோதன் அரசவைக்கு தூதுவனாகப் போனபோது ஒரு முறை; குருக்ஷேத்திர யுத்த களத்தில் அர்ஜுனனுக்கு கீதை உபதேசித்தபோது ஒரு முறை.-பத்ர விமானத்தின்கீழ் மூலவர் பாண்டவ தூதர், வீற்றிருந்த திருக்கோலத்தில், கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். வெள்ளிக்கிழமைதோறும் திருமஞ்சனம் காணும் ருக்மிணி தாயார் குசேலனாய் தன்னிடம் வந்து அன்பு செலுத்துவோரை பகவான் கிருஷ்ணருக்கு சிபாரிசு செய்து குபேரனாக வாழ வரம் அருள்கிறார்.

    யக்ஞ மூர்த்தி என்ற அத்வைத கொள்கையுடைய சான்றோர் ஒருவர் ராமானுஜருடன் வாதப்போரில் ஈடுபட்டார். பதினெட்டு நாட்களும் வாதம் தொடர்ந்தது. இறுதியில் தனது தோல்வியை ஒப்புக் கொண்ட யக்ஞ மூர்த்தி ராமானுஜரின் கீர்த்திக்கும் வாதத் திறமைக்கும் தன்னை அடிமையாக்கிக் கொண்டார். தனக்கு எதிராக வாதம் புரிந்தவர் ஆனாலும் அவருடைய பாண்டியத்துக்கும் மதிப்பளிக்கும் வகையில் அவரை ‘அருளாளப் பெருமாள் எம்பெருமானார்’ என்று அழைத்து சிறப்பித்தார், ராமானுஜர். ராமானுஜரின் சீடராகி அவரது கொள்கைகளையும் தத்துவங்களையும் பரப்பும் நோக்கத்தில் இதே தலத்தில் பல்லாண்டு வாழ்ந்திருந்த அவரை கவுரவிக்கும் வகையில் இந்த பாண்டவ தூதர் கோயிலிலேயே அவருக்கு தனி சந்நிதி உள்ளது.அருளாளப் பெருமான் எம்பெருமானாருக்காக கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தில் சாற்றுமுறை உற்சவம் நடைபெறுகிறது.

    மன்னா போற்றி! மணாளா போற்றி!
    அஞ்சன வண்ணத் தரியே போற்றி!
    கஞ்சனை அடர்ந்த கண்ணா போற்றி!
    கருங்கடற் றுயின்ற காரே போற்றி!
    ஆயிரந் தோளுடை அடுபோர் வாணனை
    நேமியற் றுணித்த நெடியாய் போற்றி!
    பேய்முலை யுண்ட பிரானே போற்றி!
    பேருல களந்த மாலே போற்றி!
    மருதிடைத் தவழ்ந்த மாயா போற்றி!
    மாக்கடல் கடைந்த மகேசா போற்றி!
    பெருவரை எடுத்த பிரானே போற்றி!
    சங்கொடு சக்கரந் தரித்தாய் போற்றி!
    தண்டொடு சார்ங்கமும் தனிநாந் தகமும்
    பிண்டி பாலமும் பெருவச் சிரமும்
    எண்டிசை நிறைந்த எம்மான் போற்றி!
    அண்டமும் விசும்பும் அகலிடம் எல்லாம்
    உண்டுமிழ்ந் தவனே ஒருவா போற்றி!
    திருமறு மார்பத் திருமால் போற்றி!
    தீவினை கெடுக்கும் செல்வா போற்றி!
    அருமறை தேடும் அடியாய் போற்றி!
    அடியவர் வினைகெட அருள்வாய் போற்றி!
    சென்றொரு தூணிடை நின்றாய் போற்றி!
    சிறுவனை உகந்த செல்வா போற்றி!
    அயனொடு தேவர்க் கரியாய் போற்றி!
    மலர்மகள் புணர்ந்த மணாளா போற்றி
    நிலமகள் இடந்த நெடியாய் போற்றி!
    திருவருள் தருவாய் திருவடி போற்றி!>

    இரத்தினச்‌ சுருக்கம்‌ என்னும்‌ நூல்‌ தூது விடுவதற்குரிய பொருள்களாகப்‌ பத்தினைக்‌ குறிப்பிடுகின்றது. அன்னம்‌, மயில்‌, இளி, மேகம்‌, நாகணவாய்ப்‌புள்‌, தோழி, குயில்‌, நெஞ்சு, தென்றல்‌, வண்டு
    என்னும்‌ இவற்றள்‌ ஒன்றைப்‌ பொருளாகக்‌ கொண்டு, புலவர்கள்‌ தம்‌ புலமை நலம் தோன்றுமாறும்‌ இலக்கிய நயம்‌ பொருந்துமாறும்‌ தூதிலக்கியத்தை ஓதுகின்‌றனர்‌. |
    *இயம்புகன்ற காலத்‌தெகின மயில்‌ கிள்ளை
    பயம்பெறு மேகம் பூவை பாங்கி--நயந்த குயில்‌
    பேதை நெஞ்சம்‌ தென்றல்‌ பிரமரம்‌ ஈரைந்துமே
    தூதுரைத்து வாங்கும்‌ தொடை”
    என்னும்‌ பழம் பாட்டால்‌ ௮வ் வுண்மை புலனாம்‌.

    தான்‌ வகுத்துக்‌ கூறுவான்‌ தலையாய தூதன்‌ ; கூறியது கூறுவான்‌ இடையாய தூதன்‌; ஓலை கொடுத்து நிற்பான்‌ கடையாய தூதன்‌ என்பர்‌.
    தானறிந்து கூறும்‌ தலைமற்‌றிடையது .
    கோனறைந்த தீதென்று கூறுமால்‌--தான றியா
    தோலையே காட்டும்‌ கடையென்‌(.று) ஒரு மூன்று
    மேலையோர்‌ தூதுரைத்த வாறு”
    என்னும்‌ பெருந் தேவனாரின்‌ பழந் தமிழ்ப்‌ பாரத
    வெண்பாப்‌ பாடல்‌

    கடனறிந்து காலம்‌ கருதி இடனறிந்து
    எண்ணி யுரைப்பான்‌ தலை”
    அறிவுரு ஆராய்ந்த கல்வி யிம்‌ மூன்றன்‌
    செறிவுடையான்‌ செல்க வினைக்கு”'
    இறுதி பயப்பினும்‌ எஞ்சா திறைவற்‌
    குறுதி பயப்பதாம்‌ தூது”
    ----திரு வள்ளுவர்


    அன்புடைமை ஆய்ந்த அறிவுடைமை இற்பிறப்பு
    நன்குடைமை நல்ல நயனுடைமை--நன்கமைந்த
    சுற்‌றமுடைமை வடிவுடைமை சொல் வன்மை
    கற்றடங்கல்‌ தூதின்‌ கடன்‌.”-பெரும் தேவனார்

    வில்லின்‌ செல்வனாகிய: இராமன்‌ சொல்லின்‌ செல்வனாகிய அனுமனைத்‌ தன்‌ தேவியாகிய ஸீதையைக்‌ கண்டு வரும்‌ பொருட்டுத்‌ தென்றிசை நோக்கித்‌ தூது போக்கினான்‌-ஐயமகற்றும்‌ அடையாளங்கள்‌ பலவற்றை அறிவுறுத்தினான்‌. இறுதியில்‌ ஓளி பொருந்திய கணை யாழி யொன்றையும்‌ அளித்து வாழ்த்தி வழியனுப்பினான்‌.
    அனுமன்‌ இராமனை வணங்கி விடை. பெற்றுத்‌ தென்‌றிசை நோக்கிச்‌ சென்றான்‌-இராமபிரானை மனத்துள்‌ நினைத்து வணங்கியவாறே இலங்கைமாநகர்‌ வீதிகளில்‌ ஓரமாக நடந்து சென்றான்‌. மலர்களில்‌ தேனை நாடிச்‌ செல்லும்‌ வண்டைப் போல்‌ கண்ட இட மெல்லாம்‌ சீதையைத்‌ தேடிக் கொண்டே சென்றான்‌–பிராட்டியைக்‌ காணுதற்கு இதுவே ஏற்ற சமயமென எண்ணிய அனுமன்‌ தனது மந்திர வன்மையால்‌ அரக்கியர்‌ உறக்கம்‌ கொள்ளுமாறு செய்தான்‌. உற்ற தோழியாய்‌ அமைந்த திரிசடையும்‌ துயில்‌ கொள்ளலானாள்‌-இராமபிரானால்‌ அனுப்பப்‌ பெற்ற தூதன்‌
    நான்‌” என்று கூறியவாறே அவளை வணங்கி முன்னே சென்றான்‌-
    அரக்கனே யாக, வேறோர்‌ அமரனே யாக, அன்றிக்‌
    குரக்கனத்‌ தலைவனே தான்‌ ஆகுக, கொடுமையாக :
    இரக்கமேயாக வந்து இங்‌கு எம்பிரான்‌ நாமம்‌ சொல்லி
    உருக்கினன்‌ உணர்வைத்‌ தந்தான்‌ உயிரிதின்‌ உதவி யுண்டோ

    இராமபிரான்‌ கூறியனவாக அனுமன்‌ கூறிய அடையாள மொழிகளையும்‌ கேட்டு உள்ளம்‌ உருகினாள்‌. பின்னர்‌, இராமபிரான்‌ அளித்த கணையாழி யொன்றை எடுத்துப்‌ பிராட்டிக்குக்‌ காட்டினான்‌.அதனைக்‌ கண்ட சீதை பெரு மகிழ்ச்சி கொண்டாள்‌.அதனை அன்புடன்‌ வாங்கித்‌ தன்‌ மார்பில்‌ வைத்துத்‌ தழுவிக்‌ கொண்டாள்‌ ; தலைமேல்‌ தாங்கினாள்‌ ; கண்களில்‌ ஓத்திக்‌ கொண்டாள்‌; அதனைக்‌ கொண்டுவந்தளித்த அனுமனை வாயார வாழ்த்தினாள்‌-
    பின்னர்ச்‌ சீதை, அனுமன்‌ தன்னைக்‌ கண்டு பேசியதற்கு அடையாளமாகத்‌ தன்பால்‌ இருந்த சூடாமணி யென்னும்‌ அணிகலத்தை அவனிடம்‌ நல்கினாள்‌.
    அதனைத்‌ தொழுது வாங்கிய அனுமன்‌ தன்‌ ஆடையிலே முடிந்து பாதுகாப்புச்‌ செய்து கொண்டான்‌.
    பிறகு, பிராட்டியிடம்‌ விடைபெற்று அவ்விடம்‌ விட்டுப்‌ பெயர்ந்தான்‌.
    அனுமன்‌ இராமபிரான்‌ இருக்கும்‌ இடத்தை யடைந்தான்‌. அவன்‌ அங்கு இராமபிரானை வணங்கவில்லை. ஸீதை இருக்கும்‌ திக்கை நோக்கி வணங்கி வாழ்த்தினான்‌. குறிப்பறிவதில்‌ வல்ல இராமபிரான்‌ ௮னுமனது செயலை உற்று நோக்கினன்‌.ஸீதை நலமாக உள்ளாள்‌ ; இவ்வனுமன்‌ அவளைப்‌ பார்த்து விட்டு வந்துள்ளான்‌; அவளுடைய கற்பும்‌ கலங்காது இலங்குகின்றது என்று அறிந்து கொண்டான்‌. அவனுக்கு உற்ற துயர்‌ நீங்கியது? உவகையால்‌ தோள்கள்‌ பூரித்தன.
    இங்ஙனம்‌ இராமன்‌ விடுத்த தூதனாய அனுமன்‌ அவ் விராமனைப்‌ பிரிந்த சீதைக்குக்‌ கணவன்‌ விடுத்த காதல்‌ தூதனாக மட்டும்‌ தொண்டாற்ற வில்லை. தன்‌ பெருந்தலைவனாகிய இராமன்‌ விடுத்த போர்த் தூதனாகவும்‌ இலங்கை வேந்தனைக்‌ கண்டு, அவனது உள்ளமும்‌ துளங்குமாறு செய்து மீண்டான்‌. அதனாலேயே கவியரசராகிய. கம்பர்‌, அவ்வனுமனைச்‌ சொல்லின்‌ செல்வன்‌” என்று தம்‌ காவியத்தில்‌ போற்றிப்‌ புகழ்‌கின்றார்‌.

    முன்னமே துயின்‌ றருளிய முது பயோ ததியோ
    பன்னகாதி பப்‌ பாயலோ ? பச்சை ஆல்‌ இலையோ
    சொன்ன நால் வகைச்‌ சுருதியோ ₹ கருதி நீ எய்தற்
    கென்ன மாதவம்‌ செய்தது இச்‌ சிறுகுடில்‌ என்றான்‌.”
    –விதுரர் –


    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ கனக வல்லித்தாயார் வீர ராகவ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –