ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
இல் பொருள் உவமை -இரண்டு ஸூர்யர்கள் உதய கிரியில்-இணைக் கூற்றம் கொல் அறியேன் போல் இங்கும்-வெப்பம் உமிழும் திருக்கண்கள்-மந்தேஹர்கள் ராக்ஷஸர்கள் -ஸூர்யன் ரதத்தைத் தடுக்க
அர்க்க தீர்த்தம் வஜ்ராயுத வலிமை கொண்டு -செந்தீ போல் ஸூர்யனை ஆக்கி அவர்கள் விழுந்து மடிவார்கள் -மீண்டும் மாலை தோறும் உயிர் பெறுவார்-இப்பாசுரத்திலும் மீண்டு -பத பிரயோகம்
அதே போல் அபலைகளான நங்களும் கண்களின் வெப்பக் கொழுந்தில் அழுந்துவதோ – வையம் முற்றும் விளரியது–(எம்பெருமான்) உலகம் முழுவதையும் விருப்பத்தோடு செழிக்கச் செய்யும் விதம்
ஹரி -ஹரி ப்ரஹ்ம மூர்த்தத்தில் கூக்குரல்-துறையடைவு–உருவு வெளிப்பட்டால் -தலைவி தலைவனின் கண் அழகைப் பாராட்டி இரங்குதல் —அவனையே சிந்தித்து –மீனாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணன் -இவற்றைப் பார்த்து இப்படி சொல்லும்படி ஆர்த்தி விஞ்சி–உருகுமால் நெஞ்சு -9–6-இதன் விவரணம்–
ஜீயர் –இப்பாட்டு சொல்ல வநபிமதமாய் இருக்கும் -என்று அருளிச் செய்வர் –உரு வெளிப்பாட்டிலே சர்வேஸ்வரன் உடைய திருக் கண்கள் பாதகமாம் படியை சொல்லுகிறது இது இறே – இவருடைய ஆற்றாமை உண்டாகில் இறே இப் பாசுரம் சொன்னால் நமக்கு சாத்மிப்பது – தாயாய் அளிக்கின்ற தண் தாமரை கண்ணன் அன்றோ –
அரும்பதம்-உயிருக்கு எல்லாம் தாயாய் இருக்கும் கண்கள்-தூது செய்யும் கண்கள்-காருண்யம் தயை பொழியும் கண்கள்-தெற்கு நோக்கி பெரிய பெருமாள் -துயிலுமா கண்டு –என் செய்கேன் உலகத்தீரே ‘
கிருபா ப்ரவாஹம் -தாங்க முடியாதே -கால் தள்ளாட -திரு மணத்தூண்கள் பிடித்து -ஆலம்பனம்
அரவிந்த மலர் தோறும் அதிசயம் உள்ளதே-அமலங்களால் விளிக்கும்-ஜிதந்தே புண்டரீகாக்ஷ –நமஸ்தே பூர்வஜ-ஆழ்வார் பாவம் -தவிப்பு -ஆர்த்தி இருந்தால் தானே இப்படி பாதகமாக வார்த்தை சொல்ல முடியும் –ஆற்றாமை உண்டானால் தானே இவ்வாறு சொல்லலாம் -இல்லாமல் கொடுமை என்று நம்மால் சொல்லப் போகாதே –
இப்படி அனுபவ அலாபத்தாலே சிதிலரானவர் தம்மை பிரதம அங்கீ காரம் பண்ணின ஈஸ்வர கடாக்ஷம் தான் நமக்குத் பரிதாப ஹேதுவான ப்ரகாரத்தை நாயகனான ஸர்வேஸ்வரனுடைய திருக் கண்களைக் கண்டு அனுபவிக்கப் பெறாமையாலே அவை தானே பரிதபிப்பிக்கிற பிரகாரத்தை நாயகி தோழியர்க்கு உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்
எரி கொள் செந் நாயிறு இரண்டுடனே உதய மலை வாய்
விரிகின்ற வண்ணத்த எம்பெருமான் கண்கள் மீண்டவற்றுள்
எரி கொள் செந் தீ வீழ் அசுரரைப் போலே எம்போலியர்க்கும்
விரிவ சொல்லீர் இதுவோ வையமுற்றும் விளரியதே – – – 82–தலைவி தலைவனின் கண் அழகைப் பாராட்டி இரங்குதல் —
எரிகொள்–வெப்பத்தைக் கொண்ட
செம் ஞாயிறு இரண்டு–சிவந்த இரண்டு ஸூர்ய மண்டலம்
உடனே–ஒருங்கே
உதய மலையாய்–உதய பர்வதத்திலே
விரிகின்ற–தோன்றி விளங்குகிற
வண்ணத்த–தன்மை போன்ற தன்மையை யுடைய
எம்பெருமானது கண்கள்–எம்பெருமானது திருக்கண்கள்,
அவற்றுள்–அந்த ஸூர்ய வடிவங்களிலே
எரிகொள்–ஜ்வலித்துக் கொண்டு தோன்றுகிற
செம் தீ–சிவந்த நெருப்பிலே
மீண்டு வீழ்–(வேறு புகலிடமில்லாமையால்) மீண்டும் வந்து விழுந்து இறக்கிற
அசுரரை போல–(பகைவரான கொடிய மாந்தேஹரென்னும்) அஸுரர்களுக்குப் போல
எம் போலியர்க்கும் (அநுகூலரான மெல்லிய) எம் போன்றவர்களுக்கும்-பகவத் விஷயத்தில் பிரேம உக்தரான எம் போல்வாருக்கும்
விரிவ–தாபஞ்செய்வனவாய்ப் பரவுகின்றன;
முன்னம் தோன்றா நின்றன -உருவ வெளிப்பாடு
வையம் முற்றும் விளரியது–(எம்பெருமான்) உலகம் முழுவதையும் விருப்பத்தோடு செழிக்கச் செய்யும் விதம்
இதுவோ–இதுதானோ?
சொல்லீர்–சொல்லுங்கள்.
உருகுமால் என்நெஞ்சம் உன் செயல்கள் எண்ணி
பெருகுமால் வேட்கை எனப்பேசி -மருவுகின்ற
இன்னாப்புடன் அவன் சீர் ஏய்ந்து உரைத்த மாறன் சொல்
என் நாச் சொல்லாது இருப்பது எங்கு—86-என்னால் -என் நா என்றுமாம்-ஸ்மாரக பதார்த்தங்களைக் கண்டு நோவு பட்டு செல்லா நிற்கச் செய்தே இருந்ததும் வியந்தில் தடுமாறாகக் கலந்த கலவி ஸ்ம்ருதி விஷயம்மாக தரிக்க-அத்தாலே-பூர்வ சம்ச்லேஷ பிரகாரத்தை அனுசந்தித்து ப்ரீதராய்ச் செல்லுகிற -உருகுமால் நெஞ்சத்தில் -அர்த்தத்தை உருகுமால் என் நெஞ்சம் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார்
எரி இத்யாதி –நெருப்பை உமிழா நிற்பனவாய் –சிவந்து இருந்துள்ள நாயிறு இரண்டு உதய கிரியிலே உடனே விரிக்கின்ற –-எரி போலே உதய காலத்திலே -பரம்புகிற அவற்றின் படியை உடைத்தாய் இரா நின்றன-சர்வேஸ்வரன் உடைய இரண்டு திருக் கண்கள் –மீண்டு இத்யாதி –(மீண்டும் மீண்டும் என்றும்
பாதிப்பில் இருந்து மீண்டும் என்று இரண்டு நிர்வாகங்கள் ) ஆதித்யன் உதிக்கும் அளவிலே -மந்தேகர் என்பார் -சில அசுரர்கள் ஆதித்ய ரதத்தை பற்றிக் கொண்டு போக ஒட்டாதே நிரோதிப்பார்களாய் –
பிராமணர் நீர் பொகடுகிற இத்தாலே -ஆதித்யனுக்கு ஒரு தேஜஸ் பிறந்து – அதிலே அவர்கள் புக்கு முடிந்து-போகையாய் இருப்பது உண்டு இறே – அப்படியே புறம்பு போக்கற்று திரியட்டும் அவ் வாதித்யர்களுடைய அந்த நெருப்பிலே விழுந்து முடிந்து போகிற அசுரர்களைப் போலே-எம் போலியர்க்கும் விரிவ — என்னைப் போலே ஆசைப் பட்டு நோவு படுகிற அவர்களுக்கு-எல்லாம்
அசுரர்களை போலே இவை பாதகமாய் கொண்டு பிரகாசமாகா நின்றது –சொல்லீர் இதுவோ வையமுற்றும் விளரியதே–லோகமாக கை எடுத்து கூப்பிடுகிற வதுக்குமடி இதுவோ சொல்லி கோள்-
இவை பாதகமாயோ லோகமாக கூப்பிடுகிறது என்கிறாள் –(மெல்ல எழுந்து ஹரி என்ற பேர் அரவம் இதுக்காகவோ )வாயும் திரை உகளும் படியே –(தம்மைப் போலவே நோவு படுகின்றன என்று நீயும் திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயோ )அன்றிக்கே –மீண்டவற்று -எரி கொள் செந்தீ வீழ் அசுரரைப் போலே -எம் போலியர்க்கும்– அவ் வாதித்யர்கள் உடைய தேஜஸ்சிலே விழுந்து முடிந்து போகிற
ஆசூரப் பிரக்ருதிகளைப் போலே ஆயிற்று என் போல்வார்களுக்கும் இக் கண்கள் பாதகமாம் ஆகிறபடி –விரிவ சொல்லீர் –இவ் வளவில் எனக்கு ஒரு புகலிடம் சொல்லீர் –விரிகையாவது -பரம்புகையாய் –
அத்தாலே போய் புகுகையாய் –புகலிடம் என்று வருகிறது –கீழ் விரிவ- விஸ்தரிக்க அர்த்தம்
இனி விரிவ சொல்லீர் -எம் போல்வாருக்கு விரிவ -புகலிடம் புகுகை சொல்லீர்-கீழ் மூதறிவுவாட்டி
வேங்கடம் ஆட்டவும் இத்யாதி சொன்னதே ஹேதுவாக மோஹம் தெளிந்து தரித்து கண் முன்னே அவன் கண்கள் முன்னே தோன்றி நலியத் தொடங்கிற்றே உருவ வெளிப்பாட்டில் –
உரு வெளிப்பட்டால் -நாயகி நாயகன் கண் அழகுக்கு இரங்கி உரைக்கும் பாசுரம்-ஏக காலத்திலே இரண்டு சூரியன்கள் போலே -அபூத உவமை – தாப ஹேதுவாய் -சர்வ லோக ரக்ஷகராய் விரும்பி
தன் பேறாக காத்து அருளும் தன்மைக்கு இப்படி உதவாமை ஒவ்வுமோ –மந்தேஹாருணம் த்வீபத்தில் உள்ள அசுரர்கள் தவம் செய்து பிரமன் இடம் வரம் பெற்று ஸூர்யனை வளைத்து போர் செய்ய சந்த்யா காலத்தில் மந்த்ர பூர்வகமாக விடும் தீர்த்தங்கள் வஜ்ராயுதம் போலே ஆகி அவர்களை தள்ளியது போலே – விளக்கில் விட்டில் போலே -அர்க்ய நீரால் எழுந்த செந்தீயில் விழுந்து மாண்டனர் -என்பர் –
இதையே மீண்டு -சூர்யன் அவர்கள் தீய சக்திகளில் இருந்தும் மீண்டு என்றும் -இப்படி அசுரர்கள் மீண்டும் மீண்டும் மாய்ந்து போவதையும் குறிக்கும் பூர்ண அனுபவம் பெறாமல் மானஸ அனுபவ மாத்திரமே வருந்தும் அளவு பரிதாப ஹேதுவானதே திருமேனி மைப்படி மலை போலே சோதி மயமாய் இருந்து அனுபவம் கொடுக்காமல் இருப்பதே –எம்போலியர்க்கும்-விரிவ சொல்லீர்-அநு கூலரான எம் போல்வாருக்கும் தாபம் செய்வனவாய் பரவுகின்றன –-இதுவோ வையமுற்றும் விளரியதே- உலகம் முற்றும் விருப்பத்தோடு ரஷிக்கும் விதம் இதுவோ – ஆழ்வார் ஆற்றாமை அவன் ரக்ஷகத்வத்திலும் அதி சங்கை பண்ணும் படி பண்ணிற்றே-உருவெளிப்பாடுகண்ட நாயகி நாயகனது கண்ணழகுக்கு இரங்கி யுரைக்கும் பாசுரம் இது.-உருவெளிப்பாடாவது- பிரிந்து சென்ற நாயகனிடத்தில் இடைவிடாது கருத்தை ஊன்றவைத்த மனத்தின் நினைப்பு மிகுதியால் அவனது வடிவம் வெளிப்பாடாய்க் கண்ணுக்கெதிரே காணப்படுதல். அங்ஙனம் காணப்பட, அவ்வடிவத்தின் கண்ணழகிலேயீடுபட்ட நாயகி, அவ் வடிவம் கைக்கு எட்டாது மறைந்த பின்பு, அக்கண்ணழகு தன் காதல்நோயை மிக வளர்த்தித் தன்னை மிக வருத்துகின்றமையைத் தோழியரை நோக்கிச் சொன்னது இது. வெவ்விய இரண்டு ஸூர்ய மண்டலங்கள் உதயகிரியில் ஏக காலத்தில் தோன்றி விளங்குகின்ற தன்மை போன்ற தன்மையை யுடையனவான எம்பெருமானது திருக்கண்களானவை எமக்குத் தாபஹேதுவாயிரா நின்றன.
அந்த ஸூர்ய வடிவங்களிலே ஜ்வலித்துக்கொண்டு தோன்றுகிற சிவந்த நெருப்பிலே வேறு கதியற்று விழுந்து சாகின்ற மந்தேஹரென்னும் அசுரர்களுக்கு அவை எப்படி தாபகரங்களாயிருகின்றனவோ அப்படியே அநுகூலரான எம்போன்றவர்களுக்கும் தாபஞ் செய்வனவாய்ப் பரவுகின்றன; எம்பெருமான் உலக முழுவதையும் விரும்பிக் காத்தருள்கிறானென்று புகழ்பெற்றிருக்குந் தன்மைக்கு இதுவோ ஏற்றது! என்றாளாயிற்று.–தைத்திரீய ஆரண்யகம் என்னும் வேத பாகத்தில் இரண்டாவது ப்ரச்நத்தில் இரண்டாவது அநுவாகத்தில் ஓதப்பட்டுள்ள ஒரு வரலாறு-இப் பாட்டின் மூன்றாமடியில் கொள்ளப் பட்டுள்ளது; மந்தேஹாருண மென்னும் த்வீபத்தில் வாழும் மந்தேஹ ரென்னும் அசுரர்கள்
உக்ரமான தவத்தைச் செய்து பிரமனிடத்து வரம்பெற்று அதனாற் செருக்கடைந்து எப்பொழுதும் ஸூர்யனை வளைந்து எதிர்த்துத்தடுத்துப் போர் செய்கின்றனரென்றும், அந்தணர் முதலியோர் ஸர்த்யா காலங்களில் மந்த்ரபூர்வகமாகக் கையிலெடுத்துவிடும் அரக்கிய தீர்த்தங்கள்
வஜ்யராயுதம் போலாகி அவர்கள் மேல் விழுந்து அவர்களை அப்பால் தள்ளி ஸூர்யனுடைய ஸஞ்சலத்துக்குத் தடையில்லாதபடி செய்கின்றன வென்றும், அந்தணர் முதலியோர் செலுத்தும் அர்க்கியத்தின் ஆற்றலால் ஸூர்யமண்டலத்தினிடையே ஒரு செந்தீ எழுந்து ஜ்வலிக்க (விளக்கில் விட்டில்போல்) அத் தீயில் அசுரர்கள் விழுந்து மாண்டு போகின்றனரென்றும் ஓதப்பட்டுள்ளது.-இரண்டு ஸூர்யமண்டலம் ஏககாலத்திலே ஓருதயகிரியில் உதித்தெழுந்து விளங்கினாற் போன்ற எம்பெருமான் கண்கள், வல்லியலாரான அவ்வசுரர்களுக்குப்போல, மெல்லியலாரான எமக்கும் தாபஞ் செய்கின்றவே; வலியாரை யழித்து மெலியாரைக் காத்தருள்கின்ற னென்பது இவ் வண்ணமேயோ? என்று பராங்குச நாயகி வருந்திக் கூறுகின்றாள்.-‘ஏக காலத்தில் இரண்டு ஸூர்ய மண்டலம் உதித்தாற்போல்” என்றது இல்பொருளுவமை (அபூதோபமை) அரக்கராகிய மந்தேஹரை அசுரரென்றது- கொடுமையில் ஒற்றுமையால். அசுரர¬- உருபுமயக்கம்; அசுரர்க்கு எனப் பொருள் படுதலால்.‘உதயம்மலை’ = மகாவொற்றுதலைபற்றிய விரித்தல் விகாரம்.–மந்தேஹர்கள் எரிகொள் செந்தீயில் வீழ்ந்து அழிதல் எப்பொழுதும் நிகழ்தலால் அத்தன்மையை ‘மீண்டு’ என்பதனாற் குறித்ததென்னலாம்;-மீண்டும் மீண்டும் என்றவாறு. அன்றியே,மீண்டு = (ஸூர்யனை வருத்துதலாகிய தம்தொழிலில் நின்றும்) நீங்கி என்னவுமாம்-‘விர்வ’ என்பது வினைமுற்று. ‘விளரியது’ என்பதை ‘விளரி’ என்பதன் மேற்பிறந்த ஒன்றனபாற் குறிப்பு முற்றென்று கொண்டால் அகரம் சாரியையாம்;
‘விளர்’ என்பதற்மேற் பிறந்ததென்றுகொண்டால் இகர அகரம் இரண்டும் சாரியையாம்;
விளரியென்றசொல் – மிக்க விருப்பமென்னும் பொருளதாதலை (சூடாமணி நிகண்டு-ளகரவெதுகை-15).-விளரியே யிளமை யாழிலோர் நரம்பு யாழ் நீள்வேட்கை” என்றதனாலும்,
விளர் என்பத செழிப்பென்னும் பொருளாதலை “விளரென்பிகிளமைதானே வெளுப்போடு கொழுப்புமாகும்” என்றதனாலும் உணர்க.
எரி கொள் செந்நாயிறு இரண்டுடனே உதயமலைவாய் விரிகின்ற வண்ணத்த-சிவப்பாலும்
ஒவ்ஷ்ண் யத்தாலும் அக்னி ஸ்வபாவத்தைக் கொள்ளுவதாய் உதய தசையில் ராகத்தை யுடைத்தான ஆதித்யனுடைய இரண்டு வடிவு ஏக காலத்திலே ஸஹ சரிதமாய் உதயகிரி இடத்திலே பரம்புகிறது என்னலாம் படியான ரூபத்தை யுடையன ஆயின–எம்பெருமான் கண்கள்-அடியிலே என்னை அநந்யார்ஹம் ஆக்கிக் கொண்ட ஸ்வாமியினுடைய திருக் கண்கள்-மீண்டவற்றுள் எரி கொள் செந்தீ வீழ் அசுரரைப் போலே-அந்த ஆதித்ய ரூபங்களுக்குள்ளே காயத்ரீ பூதமான அர்க்ய ஸக்தியாலே
ஜ்வலித்துக் கொண்டு தோற்றின சிவந்த அக்னியில் ஆதித்யனுக்கு பாதகராய் வந்து நாங்களே மீண்டு விழும்படியான மந்தே ஹாதிகளான ஆஸூர ப்ரக்ருதிகளைப் போலே (மந்தேஹர் ராக்ஷசர் -அசூரத் தன்மை உள்ளவர் ) எம்போலியர்க்கும் விரிவ-ஆனுகூல்யம் யுடையவராய்-அபலைகளான நம் போல்வாருக்கும் தாஹகங்களாய்க் கொண்டு பரம்பா நின்றன-சொல்லீர் இதுவோ வையமுற்றும் விளரியதே –உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணன் -பெரிய திருமொழி –7-1-9-என்கிறபடியே இந்தக் கண்ணோ லோகத்தை எல்லாம் வெளிச் செறிப்பித்து ரஷித்தது-இப்படி பாதகங்களான இவற்றுக்கு அந்த ரக்ஷகத்வம் உண்டான படி என் -சொல்லீர் என்று தன் ஆற்றாமையைத் தோழிக்கு உரைத்தாள் யாயிற்று –இத்தால்-ஜிதம் தே புண்டரீகாக்ஷ -என்கிறபடியே
பிரதமத்திலே சேஷித்வத்தைப் பிறப்பித்த ஸ்வாமி கடாஷமானது அனுபவத்தைக் கொடாமையாலே
பிரதிகூல விஷயத்தில் பரிதாப ஹேதுவாமோபாதி அனுகூலரான நமக்கும் ஆர்த்தி ஜனகமாகா நின்றன-இது லோகத்துக்கு ரக்ஷகமான படி எங்கனே என்று ஸூஹ்ருத்துக்களுக்கு (பாகவத உத்தமர்களுக்கு ) நொந்து உரைத்தார் ஆயிற்று-விளரி என்று வெளுப்பாய் வெளிச் செறிப்பிக்கிற முகத்தாலே ரக்ஷணத்தைச் சொல்லிற்று ஆயிற்று
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-வியாக்யானம்-எரி கொள் செந்நாயிறு இரண்டுடனே உதயமலைவாய் விரிகின்ற வண்ணத்த எம்பெருமான் கண்கள் மீண்டவற்றுள் எரி கொள் செந்தீ வீழ் அசுரரைப் போலே எம்போலியர்க்கும் ஆதித்ய உதய விரோதி மந்தேஹர் மேல் பிரயோகித்த படியால் அத்தால் உத்பூத சக்திக ஆதித்யனால் உத்பூத ப்ரஜ்வவநாத்ய குணாக்னியில் விழுந்து நசிக்கிற அசூரரைப் போலே என்னைப் பார்ப்பது என்னைப் போன்ற வரீலுமாய்-இதுவோ வையமுற்றும் விளரியதே –விரிவ சொல்லீர்-இந்தத் த்ருஷ்ட்டி பூமி எங்கும் பரவா நின்றது-இதுக்கு என்ன உபாயம் சொல்லீர் என்று தன் தோழிமார்களைக் கேட்க்கிறாள்-மீண்டவற்றுன் என்றது–கச்ச அநு ஜாநாமி ததா பலம் த்ரஷ்யஸி மே ரதஸ்த–யுத்த -59-144-என்று பெருமாள் அருளிச் செய்தும் மூல பலத்தோடு வந்த ராவணாதி விஷயம் ஆகவுமாம் –
இப்பாட்டுக்கு உள்ளுறை பொருளாவது- எம்பெருமான் முதலில் அகக்கண்ணுக்கு இலக்கான பொழுது தம்பக்கல் வைத்த கடாக்ஷந்தானே பின்பு பூர்ணாநுபவம் பெறாமையால் வருந்துமளவில் தமக்குப் பரிதாப ஹேதுவாகத் தோன்றும் விதத்தை ஆழ்வார் அன்பரோடு கூறுதலாம். எம்பெருமானது மைம்மலை போல விளங்குந் திருமேனியிற் சோதிவடிவமாய்க் காணப்படுகிற கண்களின் நோக்கம் அநுபவத்தைக் கொடாமையால் பிரதிகூலர்க்குத் துயர் விளைத்தல்போல அடியவரான எமக்கும் வருத்தம் விளைவிக்கின்றன! இப்படிப்பட்ட எம்பெருமான் லோகத்துக்கு ரக்ஷகனாகுந் தன்மை எங்ஙனே? என்கிறார்.-தம்மை விரைவிற் சேர்த்துக் கொள்ளாமையா லுண்டான ஆற்றாமை அவனுடைய ரக்ஷகத்வத்திலும் சங்கை செய்யும்படியாயிற்று என்க.
தாத்பர்யம்-கீழே ஞான வ்ருத்தைகள் திருவேங்கடம் சொல்ல-உணர்ந்து அவனது திருக்கண்கள் முன்னே தோற்ற நிரந்தரம் அனுபவிக்கப் பெறாமல் பாதகம் ஆகும்படியை தோழிக்கு சொல்லும் பாசுரம்
சூர்யன் உதிக்கும் பொழுது மந்தேகர் தடுக்க ப்ராஹ்மணர் காயத்ரி அர்க்யம் விட சூர்யன் தேஜஸ் மிக்கு அதில் விழுந்து மடிவது போல் உதய கிரியில் உள்ள இரண்டு சூர்யன் போல் இரண்டு திருக்கண்கள்
எம்முன்னே தோற்றி -என்னைப் போலவே பிரேம பரவசராய் உள்ளோர் முன்னும் தோற்றி மிகவும் பாதியா நின்றது-மந்தேஹா கூட்டம் போல் ஆழ்வார் தமர் உலகோர் ஹரி ஹரி சொல்வதும் இந்த பாதகம் பொறுக்க மாட்டாமல் தானோ-தண் தாமரைக் கண்களை இப்படி அக்னி போல் சொல்வது
ஆற்றாமை மிக்கு — குண அனுபவம் -கொடுத்த ப்ரீதி அனுபவம் தலைக் கட்டாமையால் வெறுத்துச் சொன்ன படி
9-6-உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி-ப்ரவேஸம்-
எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம் -என்று-தம் இருப்பில் நசை அற்றுச் சொன்ன வார்த்தை அன்றோ -மேல்
இவ்வளவில் வந்து முகம் காட்டி இவரைப் பெறுதல் –இல்லையாகில் இழத்தல் –செய்ய வேண்டும்படி யான நிலை ஆயிற்று –
இந்நிலையிலே திருவடி சென்று கிட்டின போது-முன்பு பல நாள் பட்ட துக்கமும் கிடக்கச் செய்தே-பெருமாளும் வாராது இருக்க
சமா த்வாதச தத்ர அஹம் ராகவச்ய நிவேசனே-புஜ்ஞானா மானுஷான் போகான் சர்வகாம சம்ருத்தி நீ -சுந்தர -36-11-
பன்னிரண்டு ஆண்டு பெருமாளும் தானும் ஒருபடிப்பட கலந்த கலவி வந்து
பிராட்டியின் நினைவுக்கு விஷயம் ஆனால் போலே –
இருத்தும் வியந்து -என்ற 8-6-திருவாய் மொழியிலே -தலைதடுமாறாக பிறந்த கலவி வந்து-நினைவுக்கு விஷயம் ஆயிற்று
இங்கு திருவடி போல்வார் வர வில்லை -ஸத்ருச அத்ருஷ்ட-ஸத்ருச -சம்பந்த பதார்த்தம் –அத்ருஷ்ட வசத்தால் என்றுமாம் –
அதற்கடி-
இவர் மேற்கொண்ட கைங்கர்யத்தை முடியச் செய்து-தலைக் கட்டுகைக்கு தகுதியான ஜீவன அதிர்ஷ்டமாவது –
அன்றிக்கே –-
இவர் சொல்லக் கேட்கையிலே பாரித்துக் கொண்டு இருக்கின்ற ஈஸ்வரனுடைய பாக்யமாவது –
அன்றிக்கே –
பகவானை அனுபவிக்கிற அனுபவத்தால் உண்டான ப்ரீதி-உள் அடங்காமை வழிந்து புறப்பட
இவர் சொற்களைக் கேட்டு பகவத் விஷயத்திலே ருசி பிறக்க இருக்கிற மக்கள் உடைய பாக்கியமாவது –
நின் கண் வேடிக்கை எழுவிப்பேன் -இது அன்றோ ஆழ்வார் செய்த கைங்கர்யம் —
இராமர் பாக்யம் சீதை பாக்யம் -தரணி செய்த பாக்யம் -தவம் உடைத்து தரணி -கம்பர் –
சேர்த்தி சேவை இன்றும் நமக்கு அதிருஷ்டம் -நாம் தான் பாக்கியவான்கள் -மூன்றும் என்றால் போலே –
இப்படி -இருத்தும் வியந்து -திருவாய் மொழியில் பேசப்பட்ட கலவி வந்து நினைவுக்கு விஷயம் ஆயிற்று-
சமாத்வாதச -பிள்ளாய் -இன்று இங்கு வெறும் தரையாய் இருக்கிற நான்-
எங்கள் மாமனார் மாளிகையிலே பன்னிரண்டு ஆண்டு ஒருபடிப்பட இராம குணங்களை விளை நீர் அடைத்துக் கொண்டேன் காண்
என்றாள் அன்றோ –
வீற்று இருந்து ஏழு உலகம் -கலவி என்றாலும் இருந்தும் வியந்து -என்பதில் தான் நெறி மாறி அனுபவம் –
இங்கு -இருத்தும் வியந்து -என்கிற திருவாய் மொழியிலே-மூ வுலகும் தன் நெறியா வயிற்றில் கொண்ட
சிறியேனுடைச் சிந்தையுள் நின்று ஒழிந்தான் -என்கிறபடியே
புறம்பு எங்கும் முறையிலே கார்யம் செய்தவன்-இவர் ஒருவர் அளவிலும் அன்றே -முறை கெடக் கார்யம் செய்தது
–8-7/9-6 ஏகார்த்தம் -இரண்டிலும் -சிறிய என் ஆருயிர் உண்ட -இங்கும்
அப்படிப் பட்ட அக்கலவி தான் இப்பொழுது-ஒரு நினைவின் அளவில் இருக்கை அன்றிக்கே-நினைதொறும் -ஸ்ம்ருதி விஷயம் –
அப்பொழுது உண்டான அக்கலவி இன்பத்தை-இப்பொழுதும் அனுபவிப்பதாக ஒரு புத்தி பிறந்தது -என்றது
அப்படியே மேன்மை உடையவன்-அம்மேன்மையும் கிடக்கச் செய்தே-
தாழ நின்று கலந்த குணத்தையும்-வடிவு அழகையும் சொல்லி-அது தான் இப்பொழுதைய அனுபவமே யென்னும்படியாய்
இருப்பது ஒரு புத்தி பிறந்து –
அவனுடைய சீல குணத்தை நினைக்கும் நினைவாலே-உருகுகிறார் -என்றபடி –
விஸ்வரூபம் ரூபம் அத்புதம் ஹரே -நினைத்து -இன்பம் இல்லை -கண் முன்னால் சஞ்சயன் -இன்றும் கண்டால் போலே –
ஆச்சார்ய அனுக்கிரகத்தால் – -நினைவு மாத்திரம் அன்றிக்கே –
நேராக காண்பது போன்ற இன்பம்
மேன்மை -இருத்தும் வியந்த -வாமனன் த்ரிவிக்ரமன் -சொன்னபடி -கார் முகில் வண்ணன் -அழகையும் -சொல்லி –
கடலைத் தரை காண்பாரைப் போலே-இருத்தும் வியந்து -என்கிற திருவாய் மொழியின் அனுபவத்தை-
இதிலே கொண்ட வந்து சேர்ப்பதே நம் முதலிகள் -என்று ஈடுபட்டு அருளிச் செய்வர் நஞ்சீயர்–
அப்ராப்தியும் கிடக்கச் செய்தே-சீல குணத்தை நினைக்கும் நினைவாலே உருகுகிறார் ஆயிற்று
ப்ரீதி இன்மையை உட்கொண்ட குண அனுசந்தானம் காண்-என்று இதற்கு ஆளவந்தார் அருளிச் செய்யும் சந்தை-
ஸ்ம்ருதி மாத்ர வியசனம் இருக்கச் செய்தெ -பிரத்யக்ஷ சாமானாகாரம் தர்சனம் இல்லையே -அதனால் அப்ரீதி கர்ப்ப குண அனுசந்தானம் –
குணங்கள் பல ஈடுபடுத்தும் -என்பதற்கு பிரமாணங்கள் மேலே காட்டி அருளுகிறார்-
தே தம் ஊசு மகாத்மானாம் பௌர ஜானபதை சஹ-பகவோ ந்ருப கல்யாணா குணா புத்ரஷ்ய சந்தி தே -அயோத்யா -2-26-
சக்கரவர்த்தி பெருமாளுக்கு திருமுடி சூட வேண்டும் என்று கோலி-
நாம் அறுபதினாயிரம் ஆண்டு ஒரு தலை மிதிக்க ஒரு தலை கிளற இப்படி வருந்தி அடிப்படுதின-
இராச்சியத்தை-இன்று சிறியவன் தலையில் வைத்தால் இது பொறுக்குமோ-என்று பார்த்து
இதை நாட்டோடு சேர விசாரித்து செய்வோம் என்று அரசர்கள் கூட்டத்தை கூட்டின இடத்து
சநிக்தோ நுநாத சஞ்ஜஞ்ஞே நேத்ர ஹர்ஷ சமீரித-ஜனௌ கோத்குஷ்ட சந்நாதோ விமாநம் கம்பயந்நிவ-அயோத்யா -2-18-
மக்கள் ஆரவாரித்த ஆரவாரமானது அரண்மனையை கிடு கிடுக்கச் செய்தது -என்கிறபடியே-
சகரவர்த்தி மாளிகையை அளித்து செய்யும்படி ஆரவாரிக்க அதனைக் கேட்டு
நாம் நினைத்த கார்யம் பலித்தது -ஆயினும் இவர்கள் நினைவை இவர்கள் வாயால் சொல்லக் கேட்டால் ஆகாதோ என்று நினைத்து –
கதம் நு மயி தர்மேன பிருதிவீம் அனுசாசதி-பவந்தோ த்ருஷ்டும் இச்சந்தி யுவராஜம் மமாத்மாஜம் –அயோத்யா -2-25-
வாரீர் கோள் -நான் அற நெறியில் தேசத்தை ஆண்டு வரும் போது இளவரசனைப் பார்க்க வேண்டும் என்று
எவ்வாறு விரும்புகிறீர்கள் -என்கிறபடியே
அறுபதினாயிரம் ஆண்டு சிறியது பெரியதை நலியாதபடியாக-பூமிப் பரப்பை அடைய நோக்கிக் கொண்டு
இதம் சரீரம் க்ருத்ச்னச்ய லோகஸ்ய சரதா ஹிதம்-பாண்டரஷ்ய ஆத்பத்ரஷ்ய சாயாயாம் சரிதம் மா -அயோத்யா -2-7-
எல்லா உலகங்கட்கும் நன்மையைச் செய்கிற என்னால் இந்த உடல் வெண் கொற்றக் குடையின் நிழலில்
கிலம் ஆக்கப் பட்டது -என்கிறபடியே
முத்தின் குடை நிழலிலே திரிந்து -எனக்கு என்று ஒரு சுகம் கோலாதே
உங்களைப் பாதுகாக்கும் தர்மத்தையே செய்து கொண்டு போந்தேன்-
நான் ஒரு வார்த்தை கேட்ட இடத்து –இப்போது நீ இருக்கச் செய்ய வேண்டாமோ
செய்ய வேண்டிய காலத்தில் செய்து கொள்ளுகிறோம் -என்னுதல்-அன்றியே
கார்யம் ஆகில் செய்ய லாகாதோ -என்று வார்த்தை சொல்லுதல் அன்றிக்கே –
படுகுலை அடித்தவனை தப்ப ஒரு அறவன் கீழே ஒதுங்க நினைப்பாரைப் போலே
என்னை விட்டு என் மகனே அமையும் என்று நீங்கள் விரும்புகைக்கு நான்-உங்களுக்கு செய்த தீங்கு என் என்ன –
ஜ்ஞான விஞ்ஞான சம்பன்ன நிதசே நிரத பிது-தாதுநாமிவ சைலேந்த்ரோ குணாநாம்
ஆக்ரோ மகான் – கிஷ்கிந்தா -13-20-தாரை வாலி இடம் பேசியது
நீ எங்களுக்கு செய்த தீங்கு ஒன்றும் இல்லை-உன் மகனுடைய குண அபராதங்கள் கான் இதற்கு அடி –
நீ நோக்கிக் கொண்டு போந்த படிகளில் ஒரு குறை இல்லை-
குணவானாய் இருப்பான் ஒரு புத்ரினைப் பெற்று நாட்டினை படுகுலை அடித்தாய் காண் –
பஹவ -உன் அளவு அன்று காண்-காக்கும் தர்மத்தில் அவர்க்கு உண்டான பாரிப்பு
விராஜயன் ராஜ ஸூதா ராஜமார்க்கம் நரை வ்ருதம்-ஹ்ருதயானி ஆமமந்தேவ ஜனச்ய குண வத்தையா -அயோத்யா -26-2-
பொன் முதலிய தாதுக்கள் இமய மலையைப் போன்று
சௌலப்யம் முதலிய குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமாய் இருப்பவன் -என்கிறபடியே
நாட்டிலே சிலரை குணம் இல்லாதவர் என்று பழித்தும்-சிலரை குணவான்கள் என்று கொண்டாடுகிறதும்
இன்ன ஆகாரத்தின் பொன் -என்று விலை பெறுமா போலே-
இன்னார் இடத்திலே இருக்கிற குணம் -என்று ஆயிற்று புறம்பு விலை போவது
சிறந்த குணம் உள்ளவர் ஆகையாலே மக்களின் மனத்தினைக் கடைந்தவர் போல் ஆனார் -எனபது ஸ்ரீ ராமாயணம் –
எர்ணா குளம் பக்கம் திருக் காட்கரை -பெரிய கோயில் –
போகத்திலே தட்டு மாறும் சீலம் காட்கரையிலே -கரை அழிக்கும் –
ஞானம் -தர்சன் பிராப்தி -ப்ரீதி காரித கைங்கர்யம் வரை -மூன்று தசைகள் உண்டு –
மயர்வறமதி நலம் அருள பெற்று அந்தாமத்து அன்பத்து-அனுபவம் கலந்து –
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா அடிமை செய்ய பாரித்து -உகந்து பெற்றார் ஆழ்வார்-
ஆறாம் திருவாய்மொழியில் கீழ் இவர் ஸ்மாரக தர்சனத்தாலே அத்யந்தம் அவசன்னரான அளவிலே
ஆஸ்வாச கரமாம்படி ஈஸ்வரன் தன் குணங்களை பிரகாசிப்பிக்க -அவனுடைய
ஆச்சர்ய பிரகாரத்தையும்
அனுபஹித பந்யத்தையும்
உதார குண ஸ்வ பாவத்தையும்
அதிசயித சீலத்தையும்
ஆஸ்ரித பவ்யதையையும்
அத்யந்த வ்யாமோஹத்தையும்
வ்யாமோஹ பர்யவசானத்தையும்
அபேஷா நிரபேஷமான நித்யாதரத்தையும்
அனுபாவ்ய ஸுந்தர்யத்தையும்
அபி நிவேச ஸைக்ர்யத்தையும்
அனுசந்தித்து இந்த குணங்களினுடைய வைலக்ஷண்ய அனுபவத்தால் பிறந்த ப்ரீதி அதிசயத்தாலே
மிகவும் சிதிலராகிறார் –
உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி
பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
தெருவு எல்லாம் காவி கமழ் திருக் காட்கரை
மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே–9-6-1-
திருக் காட்கரையிலே எம்பெருமானுடைய-ஆச்சர்யமான செயல்களை நினைதொறும் என் மனம் உருகா நின்றது –என்கிறார்-
மனசு ஸைதில்யாம் மாற்றவோ -அபி நிவேசம் அகம் சுரிப்படுத்தவோ -அனுபாவ்ய குணாதிகனை விலக்கவோ-ஆஸ்ரய கரமான சாபல்யத்தை தவிர்க்கவோ –
போகம் -தட்டு மாறும் சீலம் காட்கரையிலே கரை அழிக்கும் -சேஷி சேஷ பாவம் -ஆராவமுத ஆழ்வான் -திரு மழிசைப்பிரான் -ஏதோத்த காரி போலவும் –
நினைதொறே–ஊரை நினையும் தோறும்-அழகினை நினையும் தோறும்-ஒரு ஊரும் வடிவும் இல்லாதாரைப் போலே தாழ நின்ற சீலத் தன்மையை நினையும் தோறும் –
———
நினைதொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும்
வினை கொள் சீர் பாடிலும் வேம் எனது ஆர் உயிர்
சுனை கொள் பூஞ்சோலைத் தென் காட்கரை என் அப்பா
நினைகிலேன் நான் உனக்கு ஆள் செய்யும் நீர்மையே –9-6-2-
வினை கொள் சீர் பாடிலும் வேம் எனது ஆர் உயிர்– வினை கொள் சீர் பாடிலும்-எனது ஆர் உயிர்–வேம்-
பாபங்களை விழுங்கும் -அபகரிக்கும் –பாவங்களைப் போக்குகின்ற கல்யாண குணங்கள்-என் ஒருவனையும் அழியா நின்றன –
அன்றியே
சீர் -என்று சீலமாய்-வினை -என்று செயலாய் –அதாவது சீலத்தின் கார்யமாய் தாழ நின்ற செயல்கள் -என்னுதல்
உனக்கு நான் ஆள் செய்யும் நீர்மை -நினைக்க -உருகி விட்டால் முடியாதே -முதல் அர்த்தம்
பகவானுக்கு ஆள் செய்கை நீர்மை இல்லையே -ஸ்வ பாவம் தானே –இங்கே அவன் ஆழ்வாரை மேலே இருத்தி கைங்கர்யம் செய்யும் நீர்மை -என்றவாறு –
நான் எனது -என்பதை நீர் நுமது வேர் முதல் -சொன்னால் போலே வார்த்தைப் பாட்டில் ஆவது இப்படி
நான் உனக்கு ஆள் செய்வது சொல்லி வைப்போம் -பரம பிரமாதா அன்றோ ஆழ்வார்-புரிந்த அந்தரங்கள் ஈடு மூலம் அறிவார்கள் -எம்பார் நிர்வாகம்
நினைகிலேன் நான் உனக்கு ஆள் செய்யும் நீர்மையே –நான் உனக்கு அடிமை செய்யும் வகை-நினைக்க மாட்டு கின்றிலேன்
வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம் -3-3-1- என்று இருந்தமையைத் தெரிவிப்பார் –நான் -என்கிறார்
வகுத்த சேஷி யானவன் இறைவன் ஆதலின் –உனக்கு -என்கிறார் –
அவன் தாழ நின்று புரிந்த செயல்களை விநயத்தாலே-ஆள் செய்யும் நீர்மை -என்கிறார்-
அவன் தமக்கு ஆள் செய்யும் நீர்மையை –தாம் ஆள் செய்யும் நீர்மை நினைகிலேன் -என்கிறார் –
இச் சொலவையும் இழக்க ஒண்ணாது என்று-நான் உனக்கு ஆள் செய்யும் நீர்மை என்பான் என்-
நீ எனக்கு ஆள் செய்யும் நீர்மை என்னாமல்-என்ன-இச் சொலவையும் இழப்பரோ பாவியார் -என்று பணிப்பர் எம்பார்-
நம் விதி வகையே வாட்டாற்றான் -ஆழ்வார் ஆசைப் பட்டதையே தனது விதி ஆக்கி வைத்தான் அவனும்
———
நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை
ஈர்மை செய்து என் உயிராய் என் உயிர் உண்டான்
சீர் மல்கு சோலைத் தென் காட் கரை என் அப்பன்
கார் முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலன்–9-6-3-
அடிமை கொள்ள என்று புகுந்து-தன் படிகளைக் காட்டி-எல்லா வற்றையும் கொள்ளை கொண்ட தன்மைகளை
நினைக்க முடியாதவனாக இருக்கிறேன் –என்கிறார் –
என் உயிராய் என் உயிர் உண்டான் –போக்தாச்ச பிரபுரேவச -எனக்குத் தாரகன் போலே புகுந்து என்னை அழித்தான் –அழிக்குமவனாகப் புகுரில் இவர் இசையாரே –
இருவரும் கூட உண்ணப் புகுந்து உண்பவன் தானே ஆனான் –
அன்றிக்கே
என் உயிராய் என் உயிர் உண்டான் -என்பதற்கு-தன்னால் அல்லது சொல்லலாதபடி என்னைச் செய்து என்னை உண்பதும் செய்தான் -என்றுமாம் –
கார் முகில் வண்ணன்-
என்னுடைய சேர்க்கையாலே–பக்தி பூமா அன்றோ இவர் -கடலை முழுக்கப் பருகின காளமேகம் போலே ஆயிற்று அவன் வடிவில் செவ்வி இருப்பது –
தூ நீர் முகில் போலே தோன்றாயே-8-5-3-என்று இவர் ஆசைப்பட்ட படியே தோற்றி அனுபவிப்பித்து பேர நின்ற பின்பு-அத் தலையில் செவ்வி இருந்த படி –
——–
அறிகிலேன் தன்னுள் அனைத்து உலகும் நிற்க
நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான்
வெறி கமழ் சோலைத் தென் காட்கரை என் அப்பன்
சிறிய என் ஆர் உயிர் உண்ட திரு வருளே–9-6-4-
முறை தவறாமல் சர்வ ஆதார பூதன் -சர்வாந்தராத்மா -ஆனவன் -அதி ஸூத்ரனான என்னுடன் கலந்து அனுபவித்த
சீல அதிசயத்தை அளவிட்டு சொல்ல அறியேன்–சிறியேனுடைச் சிந்தையுள் நின்று ஒழிந்தார் -8-7-8- என்றதனைச் சொல்லுகிறார் –
சிறிய என் ஆர் உயிர் உண்ட- சிறியேனுடை நல் உயிரை -என்றது-மிக்க அற்பனான என்னுடைய ஆத்துமாவை -என்றபடி –
அவனுடைய மேன்மைக்கு எல்லை காண ஒண்ணாததைப் போன்று- தம்முடைய சிறுமைக்கும் எல்லை இல்லையாக நினைத்து இருக்கிறார் –
ஆர் உயிர் – இவர் தம்மை சிறுக நினைத்திரா நின்றார்-அவன் இவரை நித்ய ஸூரிகட்கும் அவ்வருகாக நினைத்திரா நின்றான்-
இவர் தம்மை சிறுக நினைத்தால் பயன் என் –இவர் தம்மைத் தாம் அறிந்தாரோ -என்று-மேல் விழா நின்றான் – யானே என்னை அறிய கிலாத என்று அன்றோ இவர் இருந்தார் –
சிறிய என் ஆர் உயிர் உண்ட திரு வருளே அறிகிலேன் – இது முன்னம் ஸ்வரூப ஞானத்தால் செய்தது ஓன்று அன்றே –
ஸ்வரூப ஞானத்தால் விரும்பினால் அன்றோ ஸ்வரூபத்து அளவு நிற்பது –கழி பெரும் காதல் –முறையை அழிக்கும் அன்றோ –
———
திருவருள் செய்பவன் போல என் உள் புகுந்து
உருவமும் ஓர் ஆர் உயிரும் உடனே உண்டான்
திருவளர் சோலைத் தென் காட்கரை என் அப்பன்
கருவளர் மேனி நம் கண்ணன் கள்வங்களே–9-6-5-(எம் கண்ணன் கள்வங்களே-பாட பேதம் )
என்னை அடிமை கொள்பவனைப் போல் புகுந்து-என் உடலையும்-உயிரையும் கொண்டான் –எனக்கும் ஹேயமான சரீரமும் –அத்துடன் வியாப்தமான ஆத்மாவையும் –
ஹேய உபாதேய விபாகம் அற – ஒருவனுடைய-கழி பெரும் காதல் -இருந்தபடி என் –என்று ஆச்சர்யப் படுகிறார்-திருவருள் தான் பெற்றானாய் இரா நின்றான்-
ஆதலின் –திருவருள் செய்பவன் போலே -என்கிறார் –
கள்வங்களே– முகப்பில் ஒன்றாய்-முடிவில் ஒன்றாய் -இருக்கும் செயல்கள் –
1-அடிமை கொள்வாரைப் போலே புகுந்து-தான் ஏவப் படுகிறவனாய் -தாழ நிற்கையும் –
2-விரோதியான சரீரத்தை -கழித்து தர என்று புகுந்து- உடலையும் உயிரையும் வேறு படுத்து உணர்தலை-செய்யாது ஒழிகையும்-
3-இனிய பொருளாக புகுந்து தான் அனுபவிக்கின்றவன் ஆகையும்
4-என் பேறாகப் புகுவானாகப் புகுந்து தன் பேறாகத் தலைக் கட்டுகையும்
5-இவை முழுதும் வடிவில் வேறுபாட்டால் தோற்றி இருக்கையும் ஆம் –க-ருவளர் மேனி
இத்தலையில் ஆத்தும அபகாரத்தை தவிர்த்தது-தன் ஆத்தும அபகாரத்தாலே ஆயிற்று –
————
எம் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும்
அம் கண்ணன் உண்ட என் ஆர் உயிர்க்கோது இது
புன் கண்மை எய்திப் புலம்பி இராப்பகல்
என் கண்ணன் என்று அவன் காட் கரை ஏத்துமே-9-6-6-
அவன் வஞ்சகன் என்று அறிந்தால்-அதிலே கிடந்தது நெஞ்சாறல் படாமல்-நீர் அகன்றாலோ -என்ன
அவனைக் கண்டவாறே–அதி வியாமுக்தன் வியாபாரங்கள்-ருஜுவாய் நேர்மையாய் இருக்கும் -அவ் வஞ்சகனை மெய் என்று இருப்பன் -என்கிறார் –
எனக்குச் செம்மாய் இருக்கும் -என்றதற்கு-எனக்கு சேமமாய் இருக்கும் என்று ஒரு தமிழ் புலவர் பொருள் கூறினார் –
புன் கண்மை – பேகணிப்பு-தீனம் -சிறிய ஞானம் இரண்டு அர்த்தங்கள் –பொல்லா நோக்கை உடைத்தாய் என்கை–புன் கண் -புல்லிய அறிவு-கண் -அறிவு-
பட்டர் -இதற்கு-புன் கண்மை எய்தி--மீளவும் அறிவை அடைந்து-மீள உயிர்ப் பெய்து -என்று ஆயிற்று நிர்வஹித்து போவது
இது தானே சொல்லோடு சேர்ந்து இருக்கிறது இல்லை–கேட்கப்பட்ட இந்த பொருளோடு -சொல்லும் சேரப் பொருந்தி வழக்காறாம் படி எங்கனே-
என்று ஆராயா நிற்கச் செய்தே -நஞ்சீயர் நம்பிள்ளை உடன் ஆராயா நிற்கச் செய்தே –
கோதான இது மீளவும் புன் கண்மை எய்தும் போது (சிறிது ஞானம் பெற்று) மீளவும்-உயிர்ப் பெய்தது ஆக வேண்டும் அன்றோ –
பொருளின் தன்மையாலே தன்னடையே வரும் என்று-நான் -நம்பிள்ளை -சொன்னேன்–சீயர் போர உகந்து அருளினார் -என்று அருளிச் செய்வர் –
————-
காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–9-6-7–உயிரான பாசுரங்கள் இது முதல் மூன்றும் –
திவ்ய தேசம் -பிரதானம் -இங்கே நித்ய வாசம் செய்வதால் அவனுக்கும் கும்பீடு -அடிமை கொள்வாரைப் போலே புகுந்து-என் உயிரை நேராக உண்டு-
என் ஆர் உயிர் கோள் உண்டே -கோட் குறை பட்டது–பின்னையும் உண்ணாதாரைப் போலே-இருக்கும் -என்கிறார் –
ஈஸ்வரன் தனக்கேயாய் இருக்கும் -அசித்துப் பிறக்கேயாய் இருக்கும் -ஆத்மா தனக்கும் பிறர்க்கும் பொதுவாய் இருக்கும் —
என்ற முற்பட்ட நினைவு -அங்கண் இன்றிக்கே அசித்தைப் போலே தனக்கே யாக எனைக் கொள்ள வேணும் என்கிறது நமசாலே
அதாவது போக தசையில் ஈஸ்வரன் அழிக்கும் போது நோக்க வேணும் என்று அழியாது ஒழிகை –
அழிக்கைக்கு ஹேது கீழே சொல்லிற்று -மேலும் சொல்லும் -(பிரணவத்திலும் -நாராயணாயா என்றத்திலும்) —சூர்ணிகை -91-93-
அகாரம் இல்லாத பிரணவம் இல்லையே -அவன் விருப்பம் செய்வதே அடிமைத் தன்மை -திரு உள்ளம் படியே வேதம் சொல்லும் –
எதிர் விழி கொடுக்கும் பார தந்தர்யம் -அவனுக்கு பிடித்ததே செய்ய வேண்டும் –
அசித்து போலே பாரதந்தர்யம் -அவனுக்கே என்ற நினைவால் -அவன் அனுபவம் வளர்க்க -இதுவும் வேண்டுமே -அவன் போகம் அழிக்க கூடாதே –
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால் –அடிமை கொள்வாரைப் போலே புகுந்து-என்னை வெறுந்தரை ஆக்கின-ஆச்சர்யத்தை உடையவனாலே
மேலே –திருவருள் -என்று மறைத்துக் கூறியதை-வெளியிடுகிறார் – கிட்டின போது தாழ நின்று மின்மினி பறக்க-செயல் புரிந்த ஆச்சர்யத்தை நினைந்து -மாயனால் -என்கிறார் –
——
கோள் உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான்
நாளும் நாள் வந்து என்னை முற்றவும் தானுண்டான்
காள நீர் மேகம் தென் காட் கரை என் அப்பற்கு
ஆள் அன்றே பட்டது என் ஆர் உயிர் பட்டதே–9-6-8-
அபேஷா நிரபேஷமாக -இவருக்கு என் ஆத்மா பட்ட பாடே —ஆட் -பட்ட பாடே–ஹர்ஷத்தாலே -இதில் -ஈடுபட்டு அருளிச் செய்கிறார் –தரைப் பட்டு முன்பு பேசினார்
நாள் தொறும் என்னை அனுபவியா நின்றாலும்-பெறாப் பேறு பெற்றால் போலே அனுபவிக்கிற இவனுடைய-குணத்தின் தன்மையை-பொறுக்க ஒண்ணுகிறது இல்லை-என்கிறார்
கோள் உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான்-(இதற்குப் பலபடியாக அருளிச் செய்வர் –)வெறிதே அருள் செய்வர் -8-7-5- எந்நன்றி செய்தேனோ -4-5-9-
அன்றிக்கே –
இதற்கு முன்பு இப்படி பட்டது ஒரு சரக்கினைப் பெற்று அறியாதானாய் –பக்கம் நோக்கு அறியான் -2-5-2- போலேயும்
அனந்தன் பாலும் -பெரியாழ்வார் திருமொழி -5-4-8- போலேயும் என் பக்கல் காதலை உடையவன் ஆனான் -என்னுதல் –
அன்றிக்கே –
என்னால் தான் கொள்ளப் படாது இருக்க-தான் யென்னைக் கைக் கொண்டான் -என்னுதல் –
நாளும் நாள் வந்து என்னை முற்றவும் தானுண்டான் – ஒரு நாள் அனுபவித்து-இனி இது நாம் அனுபவித்தது அன்றோ -என்று-கை வாங்கி இருந்தானோ
நாள் தோறும் நாள் தோறும் வந்து – அவனுடைய அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதம் இருக்கிறபடியைத் தெரிவித்தபடி –முற்றவும் தானுண்டான் –
அணு அளவிதான இவ் உயிரை-எங்கும் பரந்து இருக்கிற தான்- விளாக்குலை கொண்டு அனுபவித்தான் என்கிற இது-தனக்கு ஏற்றமாம் படி ஆதரியா நின்றான் –
சிறிய என் ஆர் உயிரை -என்ற அது தம்மை பார்த்து-இது அவனுடைய அனுபவத்தைக் கொண்டு சொல்கிறார் –
காள நீர் மேகம் தென் காட் கரை என் அப்பற்கு – கறுத்த நீர் கொண்டு எழுந்த-காளமேகம் போலே இருக்கிற வடிவை உடையவனாய்
அம்மேகம் தான் மழை பெய்யும் இடத்திலே படிந்தாப் போலே-திருக் காட் கரையிலே வந்து-அண்மையிலே எழுந்து அருளி இருக்கிற-நிருபாதிக பந்துக்கு –
வடிவழகு அது
ஊர் அது
தனக்கு என்ன குறை உண்டாய் இப்படி படுகிறான் –
———–
ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது
பேர் இதழ்த் தாமரைக் கண் கனிவாயது ஓர்
கார் எழில் மேகம் தென் காட் கரை கோயில் கொள்
சீர் எழில் நால் தடம் தோள் தெய்வ வாரிக்கே–9-6-9-
நீரேயோ இப்படிப் பட்டீர்-குண அனுபவத்தையே பொழுது போக்காக உடைய
நித்ய ஸூரிகளும் படும் பாடு இது அன்றோ -என்ன-அவர்களும் தான் நான் பட்டது பட்டார்களோ –என்கிறார் –
அபி நவ அபிமத விஷய ஈடுபாடு-அன்றோ ஆழ்வாரது -மூத்தவர் நித்ய ஸூரிகள் -யத்ர பூர்வே சாத்யா சந்தி தேவா –
பகவான் உடைய குணங்களுக்கு நிலம் அல்லாததாய் இருக்கிற-இவ் உலகத்திலே நான் பட்ட பாட்டினை-நித்ய விபூதியில் உள்ளவர்கள் தான் பட்டார்களோ -என்கிறார் –
இங்கு எனது உயிர் பட்டது-அங்கு ஆர் உயிர் பட்டது –என்று அருளிச் செய்வர் எம்பெருமானார்-எல்லார் செய்வதும் குண அனுபவம் தானே –
அங்கனம் இருக்க இவர்க்கு இவ்வாசி கூறினபடி என் -என்று நான் -நம்பிள்ளை -கேட்க
திருமணம் ஆன புதுப் பெண்ணுக்கு கணவனுடைய கைகள்-அவள் மேலே பட்டவாறே வேர்ப்பது விடுவது ஆமாறு போலே
இவர் அனுபவத்தில் புதியர் ஆகையாலே வருகிறது காணும் -என்று ஜீயர் அருளிச் செய்வர் –
———
வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10-
ஆச்சார்ய சம்பந்தம் ஹேது எனக்கு வேணுமே -அவனுக்கு அது தேவை இல்லை -அநாதி காலமாக அன்றோ -சொத்தை அடைய ஸ்வாமி
பசித்தவன் சோறு கண்டால் போல என்னை போல் அன்றிக்கே தாஹித்தவன் தண்ணீர் கண்டால் போலே-அன்றோ அவன் -பூர்ணமாக பருகினான்
முற்றப் பருகினான் –தன் குணங்களையும்-செயல்களையும்-காட்டி-என்னை நீராக்கி-குறை சிறிதும் இல்லாதபடி பருகினான் –
தஸ்ய தத் வசனம் ஸ்ருத்வா ராமோ வசனம் அப்ரவீத்-வசஸா சாந்த்வயித்வா ஏனம் லோசநாப்யம் பிபந்நிவ-யுத்தம் -16-65-
ஸ்ரீ ராமர் -அந்த விபீஷணன் உடைய அந்த வார்த்தையைக் கேட்டு-அவனை வார்த்தையால் சமாதானம் பண்ணி-கண்களால் பருகுவார் போலே
அத்யந்த அல்பன் -அவன் அபரிச்சின்ன ஸ்வ பாவன்-கோனாரை அடியேன் -அஹம் த்வா-சர்வஞ்ஞன் சர்வ சக்தன் -அஞ்ஞான அசக்தன் -தான் என்னை
கார் ஒக்கும் காட் கரை அப்பன்-ஆழ்வார் திரு மேனி உட்க்கொண்ட –கரு வளர் -ஸ்வாமி பெற்ற புகராலே திவ்ய தேசமும் சோலைகளும்-திருவளர் சோலை ஆயிற்றே
ஆழ்வாருடையது திருக்கோளூர் போல் பெருமானுடைய உண்ணும் சோறு பருகும் நீர் இருக்கும் படி அன்றோ இத் திருவாய் மொழி
———
கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக்
கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
வடிவு அமை ஆயிரத்து இப்பத்தினால் சன்மம்
முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே–9-6-11-
நிகமத்தில்- இத் திருவாய் மொழியைக் கற்பார்க்கு-பிறவி முடிந்து-அதற்கு அடியான சம்சாரமும் நசிக்கும் –என்கிறார் –
கொடி மதிள் தென் குருகூர்ச் –கம்சனை வென்ற வெற்றிக்கு கொடி கட்டிற்று-திரு நகரியிலே ஆயிற்று–ஸ்வாமியின் வெற்றிக்கு உரிய அடியார் இருந்த இடத்தே-அன்றோ கொடி கட்டுவது-
——————–——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –