ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
கொட்டாய் பல்லிக்குட்டி -போல் -கத்துவதே-பல்லி விழுந்த பலன் -வருடம் தோறும் எழுதி
அதன் கார்யங்களை ச பலமாக -ஆக்குவார்களே-தலைவி தோளிக்கு நல்ல நிமித்தம் கண்டு ஆஸ்வசிப்பிக்கும்-வேர் குரு -புண்ணில் -அதிலே பிறந்து வளர்ந்து மாயும் கிருமிகள் போல்
பிறந்து சொல்லாமல் மிளிர்ந்து -மின்னல் போல் தோன்றி மறைவதால் – புழு பூச்சி போல் கிருமி போலும்-பல்லிக்குட்டி போலும்-நைச்ய அனுசந்தானம் பண்ணுகிறார் என்னை வைத்துக் கொண்டு தன்னைப் பாடுவித்துக் கொண்டானே–
என்றைக்கும் என்னையுய் யக்கொண்டு போகிய,
அன்றைக்கன் றென்னைத்தன் னாக்கியென் னால்தன்னை,
இன்றமிழ் பாடிய ஈசனை யாதியாய்
நின்றவென் சோதியை, எஞ்சொல்லி நிற்பனோ? -7-9-1-தன்னைச் சொல்லிய-வேதமே மீண்ட விஷயத்தை -ப்ரதிபாதித்துக் கொண்டானே –திருமாலவன் கவி-கிருமி போல் பிறந்து பல்லிக்குட்டிப் போல் பேசினாலும் உலகமே கொண்டாடும் படி ஆக்கி அருளினான்-அங்கே போயும் ஏதத் சாம கானம் பாடுவது போல் அன்றோ இங்கும் திவ்ய பிரபந்தம் பாடவே வைக்குதும்-கர்ம சம்பந்தம் இல்லையே உமக்கு-பிரபந்தம் தலைக்கட்ட -நச்சு பொய்கை ஆகாமைக்காக -ஆர்த்தி பெருக்க அன்றோ வைத்தான்
மகிழ்ச்சியில் பாடும் பாசுரம் இது–
இஸ் சம்சாரத்தில் நம்மை வைத்த இதுக்கு ஹேது ஏதோ -என்று இறே இவர் நொந்தது –
இவருக்கு இவ்விருப்பு நிலம் கொதிப்பது -ஸ்வார்த்தமாக இருக்கிறோம் என்று இருக்கலில் இறே –
அங்கன் இன்றிக்கே –நமக்காக இருக்கிறீர்-என்னும் இடத்தை அறிவிக்கவே இவரை தரிப்பிக்கலாம் –
மேல் இவர் போய் பெற இருக்கிற ஸ்வரூபமும் இதுவே என்று பார்த்து –வாரீர் நீர் உமக்கு இங்கு ஒரு-சம்பந்தம் உண்டாய் இருக்கிறீர் அல்லீர் –நமக்காக இருக்கிறீர் அத்தனை –நாமும் ரசித்து நம்முடையாரும்-ரசிக்கும்படியாக உம்மை கொண்டு நம் சீல வ்ருத்தங்களை வெளி இடப் பார்த்தது –
அதுக்காக வைத்தோம் இத்தனை காணும் -என்று ஈஸ்வரன் அறிவிக்க –ஆனால் தட்டென்-நம் ஸ்வரூபத்தோடு சேர்ந்தததுவுமாய்- நாம் பெற இருக்கிறது இது வாகில் குறை என் -என்று
விஷயீகரித்த படியை கண்டு விஸ்மிதராய்- அவ்விஷயீ காரத்தை பேசுகிறார்-
இப்படி ஸூஹ்ருத பூதரும் வெறுக்கும் படி ஆர்த்தி விஞ்சின படியைக் கண்ட பார்ஸ்வஸ்தரானவர்கள்-பரமபத அனுபவத்தில் த்வரிக்கக் கடவீரோ-உம்மைக் கொண்டு லோகத்தைத் திருத்துகைக்காகக் கவி பாடுவித்துக் கொள்ளுகைக்கு ஒரு முகத்தாலே ஈஸ்வரன் வைத்தான் இத்தனை காணும் -என்று இவரை ஆஸ்வஸிப்பிக்க அவர்களைக் குறித்து ஸ்வ நிகர்ஷாதிகளை அருளிச் செய்கிறார் –
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-அவதாரிகை--இஸ் ஸம்ஸாரத்திலே வைத்தச இதுக்கு ஹேது என் என்று இறே
கீழ் நொந்தது இவருக்கு இவ்விடம் நிலம் கொதிப்பது -ஸ்வார்த்தமாக இருக்கிறோம் என்று இருக்கில் இறே அங்கன் இன்றிக்கே நமக்காக இருக்கிறோம் -என்னும் இடத்தை அறிவிக்கவே இவரைத் தரிப்பிக்கலாம் மேல் இவர் போய்ப் பெற இருக்கிற ஸ்வரூபமும் அதுவே இறே என்று பார்த்தாராய்-ஆழ்வீர் நீர் வாரீர் உமக்கு இங்கே ஒரு ஸம்பந்தம் யுண்டாய் இருக்கிறீர் அல்லீர் -நமக்காகவே இருக்கிறீர் அத்தனை-நாமும் ரசித்து நம்முடையாரும் ரசிக்கும்படியாக உம்மைக் கொண்டு சில பிரபந்தம் தலைக் கட்டுவதாகப் பார்த்தோம் – அதுக்காக வைத்தோம் அத்தனை காணும் -என்று அறிவிக்க–ஆனால் தட்டு என்-நம் ஸ்வரூபத்தோடு சேர்ந்ததுமாய் -நாமும் பெற இருக்கிறதுவுமாகில் அதில் குறை என்-ஆனாலும் நம்மைக் கொண்டு இத்தைத் தலைக் கட்ட நினைப்பதே
இதுக்கு ஈடான ஞானமாதல் -மற்றும் வேண்டும் உபகரணங்களாதல் ஒன்றும் இன்றிக்கே இருக்க
நம்மைக் கொண்டு இத்தைத் தலைக் கட்ட நினைப்பதே இது ஒரு நீர்மையே என்று ஸர்வேஸ்வரன் தம்மை விஷயீ கரித்த படியைக் கண்டு விஸ்மிதராய் விஷயீ காரத்தைப் பேசுகிறார் –
மெல்லியல் ஆக்கைக் கிருமி குருவில் மிளிர் தந்தாங்கே
செல்லியசெல் கைத்துலகை என் காணும் என்னாலும் தன்னைச்
சொல்லிய சூழல் திருமாலவன் கவியாது கற்றேன்
பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ வுண்டு பண்டு பண்டே-48 –-நன்னிமித்தம் கண்டு -பல்லிக் குரல் கேட்டதை –தான் ஆறி இருத்தலை தலைவி தோழிக்கு கூறுதல் –
என்தனை நீ யிங்கு வைத்தது ஏதுக்கு என மாலும்
என்தனக்கும் எந்தமர்க்கும் இன்பமதா -நன்றுகவி
பாட வெனக் கைம்மாறிலாமை பகர் மாறன்
பாடு அணைவார்க்கு உண்டாம் இன்பம் -69–எனக்கு ருசி இன்றிக்கே இருக்க சம்சாரத்தில் என்னை
வைத்ததுக்கு ஹேது என் என்று கேட்க – உம்மைக் கொண்டு நமக்கும் நம்முடையாருக்கும் அனுபவிக்கலாம் படி விலஷணமான திருவாய் மொழி பிரபந்தத்தைப் பாடுவித்து கொள்ள வைத்தோம் காணும் -என்று நேர் கொடு நேரான பரிஹரத்தை அவன் அருளிச் செய்ய – வேதங்கள் வ்யாசாதிகள் முதல் ஆழ்வார்கள்இவர்கள் யுண்டாய் இருக்க-அத்யந்த ஹேயனான என்னைக் கொண்டு
வேதங்களாலும் எல்லை காண ஒண்ணாத தன் வைபவத்ததுக்கு தகுதியாக விலஷணமான திருவாய் மொழியை பாடுவித்துக் கொண்ட இந்த மகா உபகாரத்துக்கு உபய விபூதியிலும் சத்ருசமாக செய்ய தக்கதொரு பிரத்யுபகாரம் இல்லை என்று தலை சீய்த்துப் படுகிற என்றைக்கும் என்னையில் அர்த்தத்தை என்தனை நீ -இத்யாதியால் அருளிச் செய்கிறார் –இப்படி க்ருதஞ்ஞாரான ஆழ்வார்
பரிசர வர்த்திகளாம் படி கிட்டுவார்க்கு ஆனந்தம் யுண்டாம் – எங்கனே சொல்லிலும் இன்பம் பயக்குமே -என்கிற நிர்பந்தமும் வேண்டா-கேவலம் -கிட்டவே அமையும்-
மெல்லியல் ஆக்கை இத்யாதி – இவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளிலே என்னுடைய ஜ்ஞானத்துக்கு விஷயம் ஆவது ஏக தேசம் கிடீர் – நான் அறிவது ஒன்றும் இல்லை என்னும்படி இருக்கிற என்னைக் கொண்டு கிடீர் இத்தை தலைக் கட்டிற்று என்கிறார் –மெல்லியல் ஆக்கை கிருமி –ம்ருது ஸ்வாபமான சரீரத்தை உடைய கிரிமியானது –இமையோடு இமை பொருந்தும் போதைக் காற்று படப் பொறாதே முடியும்படியான மிருதுவான சரீரத்தை உடைய – ஒன்றாக எண்ணப்படாத ஷுத்திர ஜந்துவானது –குருவில் மிளிர் தந்து – கிரந்தியாலே மிளிர்ந்து -உற்பத்தியும் விநாசமும் ஒழிய –
நடுவு பட்டதொரு காலம் இன்றிக்கே – தோற்றி மாயும் படி இருக்கையாலே –மிளிர்ந்தது என்கிறது –பஞ்சாக்னி வித்தையில் -சொல்லுகிறபடியே புருஷார்த்ததோப யோகியாய் இருப்பதொரு-
சரீரத்தை பரிஹரிக்கில் இறே பிறந்தது என்னாலாவது –ஆங்கே –அந்த கிரந்தியிலே-செல்லிய செல்கைத்து--செல்லுகிற செல்லுகையை உடைத்து –நடக்கிற யாத்ரையை உடைத்தானது –உத்பத்தியும் ஜீவனமும் நடுவு பட்ட நாளில் பரிபவமும் விநாசமும்-இவை அடங்க அங்கேயாய் இருக்கும் இறே –அங்கே இறே அழகு செண்டு ஏறுகிறது –நெற்காய்க்கும் மரம் எது -என்று இருப்பாரைப் போலே-
அக்க்ராந்திக்கு அவ்வருகு அறியாத இது-–உலகை என் காணும் –லோக வ்ருத்தாந்தத்தில் என்ன அறியவற்று–இது கிடீர் நான் தன்னளவில் நின்ற நிலை –
என்னாலும் –இப்படி அஞ்ஞான அசக்திகளுக்கு எல்லை நிலமான-என்னைக் கொண்டு -தன்னை –
உலகை என் காணும் -என்கிற லோக வ்ருத்தாந்த்தத்திலே தான் ஒன்றை என்னைக் கொண்டு -சொல்லி வைத்தானோ –யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று ஸ்ருதி ஸ்ம்ருதாதிகள் நமக்கு நிலம் அன்று என்று மீண்ட தன்னை –சொல்லிய –-சொல்லி வைப்பதாக கணிசித்து இருந்தானாய்–இது எவ்வளவாய் தலை கட்டுமோ என்று இருக்கிறதோ –-சொல்லி யற்றதாயிற்று –இப்படி சொல்லிவிக்கைக்கு ஹேது என் என்னில் –சூழல் – ஆச்சர்ய சக்தி யுக்தன் ஆகையாலே–திரு மால் –இந்த ஆச்சர்ய சக்தி தான் புறம்பு கிடவாதே –இவ்வாஸ்ரயத்தில் கிடக்க வேண்டுவான் என் என்னில் – ஸ்ரீய பதி ஆகையாலே –திருமாலவன் கவி –அவனும் அவளுமான சேர்த்திக்கு தகுதியான கவி –இத்தால் – ஸ்ரீ ராமாயணத்தில் வ்யாவ்ருத்தி சொல்லுகிறது –ஸீதாயாஸ் சரிதம் மகத்-என்று தொடங்கச் செய்தே அவளை ஒழிய-தனியே இறே இருந்து கேட்டது –
1-யாது கற்றேன் -என்னுதல் –
2-ஆறு கற்றேன் என்னுதல் –
3-அவன் கவி யாது கற்றேன் என்னுதல் –
4-யாதொன்று நான் கற்றது -அது திருமாலவன் கவி -என்னுதல் –யாது ஓன்று நான் கற்றது -எந்த சிறியத்தையும் நான் கற்றாலும் அதுவும் திருமாலவன் கவியே-ஆறு -ஸமஸத்தையும் கற்றேன்–கற்றேன் -என் முன் சொல்லும் -என்கிறபடியே அவன் முன்னே சந்தை இட – நான் பின்னே சொன்னேன் இத்தனை –ஆனாலும் இது தலைக் கட்டின படி எங்கனே என்ன –பல்லியின் சொல்லும் இத்யாதி – அல்பஜ்ஞராய் இருப்பார் ஒன்றை தொடங்கினால்- ஞானாதிகராய் இருப்பார் அத்தை நன்றாக்கி
தலைக் கட்டிக் கொள்ளக் கடவதாய் இருப்பது ஓன்று-உண்டு இறே –பல்லியானது ஓர் அர்த்த பிரத்யாயகம் இல்லாதபடி –தன்னுடைய ப்ரீதி யப்ரீதிகளாலே -நத்து நத்து -என்ன –அத்தை ஞானவான்களாய் இருப்பார் தம்தாமுடைய லாப அலாபங்களுக்கு உடலாக்கிக் கொள்ளா நிற்ப்பர்கள் இறே –அப்படியே நான் எனக்கு பிரதிபந்தங்களைச் சொல்ல –அத்தை தனக்கு ஈடாம் படி நன்றாகத் தலைக் கட்டிக் கொண்டான் –பண்டு பண்டே –பழையதாக இப்படி போருவதொரு மரியாதை உண்டு இறே –அத்தை இப்போது என் பக்கலிலே கை காணும்படி பண்ணினான் –
நல் நிமித்தம் கண்டு தலைவி ஆறி இருந்தமை —-பல்லி குரல் கேட்டு –கொட்டாய் பல்லி குட்டீ -குடமாடி உலகு அளந்த மட்டார் பூங்குழல் மாதவனை வரக் கொட்டாய் பல்லிக் குட்டீ -கலியன் -10 -10 – 4 –புருஷோத்தமன் இடம் ஈடுபட்ட தனக்கு புண்ணில் வெளிப்பட்ட புழுவை உபமானமாக கூறியது
அதனை யன்றி வேறு ஒன்றை அறியாமை சாதரம்யம்–வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது அடியேன் நான் பின்னும் உன் சேவடி அன்றி நயவேன் -கலியன் -11-8-7–நிஹிந உவமை குற்றத்தின் பால் படாது –என்னாலும் தன்னைச்-சொல்லிய சூழல் திருமாலவன் —உம்மை உயர்வு சிறப்பு உம்மை -காமுற்ற பெண்ணுக்கு அணிகலம் நாணுடைமை பரவசப்பட்டு அவன் விஷயமாக வாய் பிதற்றும்படி மோகத்தை உண்டாக்கியவன் –பிதற்றும் படி காம வேதனை படுத்தினவன்-பெரிய பிராட்டியார் பக்கல் வேட்க்கை மிக்கு உள்ளவன்–பல்லியின் சொல்லும்-இழிவு சிறப்பு உம்மை -விவேக உணர்ச்சி இல்லாத ஐந்து–ஆழ்வீர் இப்படி த்வரை விஞ்சி பரம பதத்துக்கு விரைய துடிக்க வேண்டுமோ –உம்மைக் கொண்டு கவி பாடுவித்து உலகத்தை திருத்த அன்றோ வைத்துள்ளான் -என்ன–தம் தாழ்வை –
மெல்லியல் ஆக்கைக் கிரிமி குருவில் மிளிர் தந்தாங்கே-செல்லியசெல் கைத்துலகை என் காணும்-
அல்ப ஞானம் சக்தி கொண்ட நான் -நைச்யத்துக்கு புழுவை உதாரணம் காட்டி-என்னாலும் தன்னைச் சொல்லிய சூழல் –நீசனான என்னைக் கொண்டும் -வியாஜமாக கொண்டதை சூழல் என்கிறார்–ஈஸ்வரன் தானே லோகத்தைத் திருத்துகைக்கு இவர் ஆவார் என்று அங்கீ கரித்து –
என்னாலும் தன்னைச் சொல்லிய சூழல் திருமாலவன் கவியாது கற்றேன்-என்னும் படி
இவர் திரு உள்ளத்திலும் நாக்கிலும் நின்று இவர் தம்மைக் கொண்டு தானே பிரவர்த்திப்பிக்கை யாலும் அத்யந்த வியாவருத்தராய் இருப்பார் ஒருவர் -என்பர் வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர்
திருமாலவன் கவி –-அவனும் பிராட்டியுமான சேர்த்தி போலே அவனும் கவியும் பொருந்தி -அவன் முன்னுருச் சொல்லி கொண்டு போக நான் பின்னுருச் சொல்லிக் கொண்டு வந்த அவ்வளவே –
நான் என் உணர்வால் கவி பாடினேன் அல்லேன் -என்பதை யாது கற்றேன் -என்கிறார்
நான் என் வசம் இழந்து பக்தி பரவசப் பட்டு வாய்க்கு வந்த படி பாடினேன் அவ்வளவே –
பரதந்த்ரமாக கூறும் சொல்லையும் என் இழிவு பாராது அங்கீ கரித்து பாராட்டுகிறார்கள் -என்பதை –
பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ வுண்டு–பண்டு பண்டே-அடுக்கு மிகுதியைக் காட்டும் -மிகு வெகு நாளாக –என்றவாறு –
மெல்லியல் ஆக்கைக் கிரிமி குருவில் மிளிர் தந்தாங்கே செல்லியசெல் கைத்துலகை என் காணும்–
ம்ருது ஸ்வ பாவமான சரீரத்தை யுடைத்தான கிரிமியானது-புண்னிலே கிளர்ந்து அவ் விடத்திலே நடத்தக் கடவதான ஸமஸ்த வியாபாரத்தையும் யுடைத்தானது லோக வியாபாரத்தை எங்கனே அறியும் படி-இத்தால் அல்ப ஞான சக்திகனான நான் லோகத்தைத் திருத்துகையாவது என் -என்கிறார் ஆயிற்று-ஆனாலும் உம்மைக் கொண்டு கவி பாடுவித்துக் கொள்ளா நின்றானே என்ன
என்னாலும்-இப்படி அத்யந்த அபக்ருஷ்டமான ஜன்ம வித்யா விருத்தங்களை யுடைய என்னாலும்-தன்னைச்-அத்யந்த விலக்ஷணமாய் அபரிச்சின்னமான ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களை உடையவனை–சொல்லிய சூழல்-சொல்லிக் கொண்ட சூழ்கையை (சாமர்த்தியத்தை) யுடைய
அதாவது தத்வமான தான் சொல்லுமதிலும் தத்வ தர்சிகள் சொன்னால் பரிக்ரஹம் யுண்டாம் என்கிற விரகு யுடையவன் -என்கை–வேதம் பெருகின சம்த்ராம்பு போல் இவர் வாயாதனவாறே
லஷ்மீ நாதாயோ சிந்து ஸ்வாதந்ரியம் போக்கி -நாதமுனிகள் மலை –காட்டாறு -ராமானுஜர் காட்டும் ஏரி -சிம்ஹாசனபதிகள் மூலம் நம்மிடம் – மண் குடம் போல் அல்லவே பொன் குடம் ஐஞ்சாம் ஒத்தும் அறு மூன்றும் கழி யுண்ணுமே–திருமால்-அர்த்தோ விஷ்ணுரியம் வாணீ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-3-18-என்கிறபடியே ஸப்த அர்த்தங்கள் இரண்டும் அவளும் தானுமான ஸ்ரீ லஷ்மீ பதியானவன் –அவன் கவி
அவனுடைய கவி ஸப்த அர்த்தங்கள் தான் ஆனவோ பாதி கவி பாட்டுண்டானும் தானேயாய் இருக்கை-யாது கற்றேன்-அது நான் கற்றேன் அத்தனை என் முன் சொல்லும் –திருவாய் -7-9-2- என்கிறபடியே
அவன் முன்னுருச் சொல்ல பின்னுருச் சொன்னேன் அத்தனை –ஆனால் என் நீர் பாடின கவி என்று ஈஸ்வர ஹ்ருதயத்திலும் யுண்டாய் லோக பரிக்ரஹமும் பிறந்து நடவா நின்றதே என்ன-பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ வுண்டு-ஷூத்ர ஜந்துவினுடையதாய் இருபத்தொரு ஸ்வைர ஸப்தத்தையும் தம் தம்முடைய பெரிய நன்மைக்கு ஸூசகமாக லோகத்திலே கொண்டு போகிற இது யுண்டே–பண்டு பண்டே-இது அநாதியாய்ப் போருகிற மரியாதை இறே என்று தம்முடைய நிகர்ஷத்தைப் பாராதே தம்மை ஈஸ்வரன் அங்கீ கரித்து பாரதந்த்ர்யமே பற்றாசாக வாசிக கைங்கர்யத்தைக் கொண்டபடி அருளிச் செய்தார் ஆயிற்று –
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம்-மெல்லியல் ஆக்கை— இவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளில் என்னுடைய ஞானத்துக்கு விஷயமாவது ஏக தேசம் கிடீர் நான் அறிவது ஒன்றும் இல்லை –இப்படி இருக்கிற என்னைக் கொண்டு கிடீர் இத்தைத் தலைக்கட்டிற்று என்கிறார் –மெல்லியல் ஆக்கைக் கிருமி-ம்ருது ஸ்வ பாவமான சரீரத்தை யுடைய கிருமியானது இமையோடு இமை பொருந்தும் போதைக் காற்றுப்படப் பொறாதே முடியும்படி மிருதுவான சரீரத்தை யுடைய ஒன்றாக எண்ணப் படாதே ஷூத்ர ஜந்துவானது–குருவில் மிளிர்ந்தது-அந்த க்ரந்தியிலே மிளிர்ந்து-உத்பத்தியும் விநாசமுமேயாய்
நடுவு பட்டதொரு காலம் இன்றிக்கே தோற்றி மாயும்படியாலே மிளிர்ந்து என்கிறது – பஞ்சாக்னி வித்யையிலே சொல்லுகிறபடியே புருஷார்த்த உபயோகியாய் இருபத்தொரு சரீரம் பரிக்ரஹிக்கில் இறே பிறந்தது என்னாலாவது–ஆங்கே-அந்தக் கிரந்தியிலே–செல்லிய செல் கைத்து-செல்லுகிற செல்கையை யுடைத்து நடக்கிற யாத்திரையை யுடைத்து உத்பத்தியும் ஜீவனமும் நடுவுபட்ட நாளில் பரிபவமும் விநாசமும் இது அடைய அங்கேயாய் இருக்கும் இறே-அங்கே இறே அழகு செண்டேறுவது
அந்தக் கிரந்தியிலே தன் வியாபாரம் எல்லாம் ராஜ மார்க்கத்தில் போலே நிராபாதமாய் நடப்பது என்றபடி-செண்டேறுகை யாவது-ராஜ மார்க்கத்தில் ஸஞ்சரிக்கை-நெல் காய்க்கும் மரம் ஏது -என்று இருக்குமா போலே -அந்தக் கிரந்திக்கு அவ்வருகு அறியாத இது –உலகை என் காணும்-லோக விருத்தாந்தத்தை ஒன்றை அறியவற்றோ-இது கிடீர் நான் தன்னளவில் நின்ற நிலை-ஏது உண்டு
அத்தை அவனே எனக்குச் சொல்ல அத்தைச் சொல்லப் பெற்றேன் காண்-இப்படி நீர் சொன்னத்தை பிராமண தர்மமாக நாங்கள் கொள்ளா நின்றோமே என்ன-பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ யுண்டு பண்டு பண்டே-பல்லி சொன்னாலும் முன் முற்காலத்திலும் அபிஞ்ஞர் ஸ்வ ஸ்வ உத்தேஸ்ய ஸித்தியிலே அத்தை பிராமணத்வேந கைக் கொள்ளுவது யுண்டே – இது இன்று முதலோ –
தாத்பர்யம்
ஆழ்வார் ஆர்த்தியை சமிப்பிக்கைக்காக சர்வேஸ்வரன் உம்மைக் கொண்டு லோகத்தை வாழ்விக்கைக்காக நம் விஷயமாக பிரபந்த நிர்மாணம் பண்ண சங்கல்பித்தோம்
இப்படி விஷயீ கரித்தான் என்று ஹ்ருஷ்டராய் பேசுகிறார்
காற்றையும் பொறாத ஜென்ம மரணம் தவிர வேறு ஒன்றை அறியாதே புழு
நித்ய ஸூ ரிகளுக்கும் வாக் மனஸ் ஸூக்களுக்கும் அரிததான தம்மை என்னைக் கொண்டு பாடுவித்துக் கொண்டான் -சர்வ சக்தித்வத்தால் ஞானிகள் ஸூபம் அஸூம் என்று பல்லி சொல்வதைக் கொள்ளுமா போல் என்னே அவனது சர்வ சாமர்த்தியம் என்று ஹ்ருஷ்டராய் அருளிச் செய்கிறார்
7-9-என்றைக்கும் என்னை உய்யக்கொண்டு போகிய-ப்ரவேஸம்-
மேலே பலகாலும், ‘சர்வேஸ்வரன், தன்னைப் பெறுவார்க்குத் தடைகள் உண்டாய் இருந்தாலும்
தானே தன்னைத் தரப்பார்க்கும் அன்று தகைய வல்லது ஒரு தடை இன்றிக்கே இருக்க,
‘தன்னாலே பேறு’ என்று இருக்கிற என்னை இங்கே வைத்தது என்?’ என்று கேட்டுப் போருவார் ஒருவர்.
அவனும், இதற்கு நேரான பரிகாரத்தைப் பண்ணாதே ஏதேனும் ஒரு குணத்தைப் பிரகாசப்படுத்தி
வேறொன்றிலே நோக்கைப் பண்ணுவிப்பான் ஒருவன், இவர்க்கு இதிலே நெஞ்சு செல்லாதபடி.
இனி, மேல் திருவாய்மொழியிலும் ‘சம்சாரத்திலே பொருந்தாமை உண்டாய், உன்னை ஒழியச் செல்லாமை உண்டாய்,
நீயே உபாயமாய் இருக்க, பின்னையும் என்னை இங்கே வைத்து ஜீவிப்பித்துக் கொடுபோருகிற ஆச்சரியம் இருந்தபடி என்?
இதனை எனக்கு அருளிச்செய்ய வேணும்,’ என்ன,
‘கண்டீரேதான் இது ஓர் ஆச்சரியம் இருந்தபடி? என்று அவ்வழியாலே தன்னுடைய ஆச்சரியமான உலகமே
உருவமாக இருக்கும் தன்மையைக் காட்டிக்கொடுத்து அதனோடே பணி போரும்படி செய்தான்.
இவரும் அப்போது அத்தனையும் அதனைச் சொல்லி, அது தலைக் கட்டினவாறே பின்பு பழையபடியே கேட்கத் தொடங்குமவர் அல்லரோ?
இச்சம்சாரத்திலே பொருந்தாது இருக்கிற என்னை இங்கு வைத்ததற்குக் காரணம் என்?’ என்ன,
‘நம்மை இதற்கு ஒரு காரணத்தை நிர்பந்தித்துக் கேட்க வேணுமோ?
கண்டன எல்லாவற்றிலும் நாக்கு நீட்டி அவற்றிலே ருசி பண்ணிப் போந்தீராகில்,அதற்கு அடியான கர்மத் கிடந்ததாகில்,
வாசனை ருசி கிடந்தனவாகில், அவற்றாலே இருந்தால் ஆகாதோ?’ என்ன,
‘அவையும் கிடக்கச் செய்தே, அவற்றையும் பாராதே எனக்கு மயர்வு அற மதி நலம் அருளிப் பாசங்கள் நீக்கி
என்னை உனக்கே அறக் கொண்ட பின்பு நீ சொல்லுகிற இது பரிகாரம் அன்று;
ஆகையாலே, என்னை இங்கு வைக்கிறது என்?’ என்று வடிம்பிட்டுக் கேட்க,
‘நீர்தாம் உம்மை நமக்காக ஓக்கி வைத்ததாகச் சொன்னீரே,
‘தனக்கேயாக எனைக்கொள்ளும் ஈதே’ –திருவாய். 2. 9 : 4.-என்று!
ஆன பின்பு நாம் வேண்டினபடி உம்மைக் காரியங் கொள்ளக் கடவோம் அன்றோ?
ஆன பின்பு, நமக்கு அதிசயத்தைப் பிறப்பிக்கை உமக்குச் சொரூபமாய் இருக்குமன்றோ?
ஆன பின்பு, உம்மைக் கொண்டு, ஸ்ரீ வீடுமரைப் பாணங்களாகிய படுக்கையிலே இட்டு வைத்து
நாட்டுக்கு வெளிச் சிறப்பைப் பண்ணிக் கொடுத்தாற்போலே,
நமக்கும் நம்முடையார்க்கும் போது போக்காகச் சில பிரபந்தங்கனைப் பண்ணுவிக்கப் பார்த்தோம்:
அது தலைக்கட்டுந்தனையுங்காணும் உம்மை இங்கு வைப்பது,’ என்று நேரான பரிகாரத்தை அருளிச் செய்தான்.
உடையவருக்கும் -உரு பெரும் செல்வமும் -நெறி தரும் செந்தமிழ் ஆரணமே -போது போக்காக-கால ஷேபமே -உயர்ந்த பிரயோஜனம் –
‘கண்டு கொண்டு என் கண்ணிணை ஆரக் களித்துப்
பண்டை வினையாயின பற்றோடு அறுத்துத்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன் மாலைகள் சொன்னேன்
அண்டத் தமரர் பெருமான் அடியேனே.’–என்பது, திருவாய். 9. 4 : 9.
அருளிச்செய்ய, இவரும் அதனை அநுசந்தித்து.
சர்வேஸ்வரனாய் அவாப்த சமஸ்த காமனாய்ச் சர்வ பிரகார பரிபூரணனாய் இருக்கிற அவன்
தனக்கு ஒரு குறை உண்டாய். அக்குறை தன்னைத் தம்மைக் கொண்டு தீர்ப்பதாகச் சொன்ன வார்த்தையைப் பொறுக்க மாட்டிற்றிலர்.
தனக்குச் சில பிரபந்தங்கள் வேண்டினால், அதற்குத் தகுதியான ஞானத்தாலும் சத்தியாலும் குறைவற்ற ஸ்ரீவேத வியாச பகவான்,
ஸ்ரீவால்மீகி பகவான் ஸ்ரீபராசர பகவான் தொடக்கமானார்,
‘செந்தமிழ் பாடுவார்’ –பெரிய திருமொழி, 2. 8 : 2.-என்று சொல்லப்படுகிற முதலாழ்வார்கள், இவர்கள் எல்லாரும் உண்டாயிருக்க,
அநாதி காலம் சம்சாரத்திலே பழகி ஐம்புல இன்பங்களிலே ஈடுபட்டவனாய்,
‘அவன் இல்லாதவன் ஆகவே ஆகிறான்’ என்கிறபடியே -‘அஸந்நேவ ஸ பவதி அஸத் ப்ரஹ்மேதி வேத சேத்’என்பது, தைத்திரீய. ஆன. 6.
அசத்தைப் போன்றவனாய் உரு மாய்ந்து போன என்னைக் கொண்டு
தனக்குத் தகுதியாகக் கவி பாடுவித்துக் கொள்ளவதாகச் சொன்ன வார்த்தை என்ன வார்த்தை!
இது ஒரு நீர்மை இருக்கும்படியே! இது என்ன நீர்மை!’ என்று,
சர்வேஸ்வரன் தம் திறத்தில் செய்த உபகாரத்தை அநுசந்தித்து,
அதற்கு ஒரு பிரதியுபகாரம் காணாமையாலே தடுமாறிச் சொல்லுகிறது.
ஒன்பதாம் திருவாய் மொழியில்
கீழ் -தம்முடைய விரோதி நிவ்ருத்திக்கு அனுரூபமான ஈஸ்வரனுடைய ஆச்சர்ய சக்தி யோகத்துக்கு ப்ரகாசகமாயுள்ள
விசித்திர விபூதிமத்தையை அனுபவித்து ஸந்துஷ்டரான இவர் –
இவன் விரோதி நிவர்த்தகத்தில் விளம்பிக்கைக்கு அடி என் என்று நிரூபித்து அவன் தம்மை வாசிக கைங்கர்யம் கொள்ளுகைக்காக
வைத்த பிரகாரத்தைக் காட்டக் கண்டு ப்ரீதராய் –
தம் விரோதி கிடக்கச் செய்தே அத்தை மதியாமல் அசித் கல்பமாக்கி அடிமை கொள்ளுகைக்கு அடியான
நிருபாதிக சம்பந்தத்தையும்
பிரதம பிரவர்த்தனத்தையும்
பக்தார்த்த ப்ரவ்ருத்தியையும்
விரோதியை மதியாமல் விரும்பின படியையும்
விருப்பத்தால் வந்த மேன்மையையும்
மேன்மைக்கு எல்லை நிலத்தையும்
அப்பரத்வ அனுபவத்துக்கு விலக்கான பாபத்தினுடைய நிவர்த்தனத்தையும்
அதிசயித அனுபாவ்ய குண யோகத்தையும்
அதனுடைய நித்ய அநுபாவ்யத்தையையும்
நிஷ் ப்ரத்யுபகாரமான நிரவதிக உபகாரகத்வத்தையும்
அனுபவித்து ஏவம்வித ஸ்வ பாவனானவன் என் விரோதியைக் கழித்து என்னை வாசிக கைங்கர்யம் கொண்ட படிக்கு
எத்தைச் செய்வேன் என்று உபகார ஸ்ம்ருதியாலே அத்யந்தம் ஹ்ருஷ்டராகிறார் –
என்றைக்கும் என்னை உய்யக்கொண்டு போகிய
அன்றைக்கு அன்று என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
இன் தமிழ் பாடிய ஈசனை ஆதியாய்
நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ?–7-9-1-
தன்னை நம்பி உடனே கிடந்தவனை மடி தடவினவன் ‘என் செய்தோமானோம்!’ என்று வருந்துமாறு போலே, எல்லாம் செய்தும் ஒன்றும் செய்யாதானாய் ‘இவனுக்கு என் செய்வோம்!’ என்று இருக்கும் ஒருவன்.-என்னைத் தன்னாக்கி –தன்னோடு ஒக்க ஞானம் சத்தி முதலானவைகளை யுடையேனாம்படி செய்து. அன்றிக்கே, ‘என்னைத் தன்னுடையேனாம்படி செய்து’ என்னுதல்.-பாடிய –-‘என்னைக் கொண்டு பாடுவித்தான்’ என்னுதல்;-பாடினான் என்னுதல்.-ஆதியாய் நின்ற--‘நான் கவி பாடுகைக்குக் காரணமாய் நின்றான். அவன் அடியாக நான் கவி பாடினேன்,’என்றபடி-என் சோதியை – பிடாத்தை விழவிட்டுத் தன் வடிவழகைக் காட்டினான்.-‘திருத்திரை எடுத்தாற் கூப்பிடுமாறு போலே கூப்பிட்டேன்; அது கவியாய்த் தலைக்கட்டிற்று. அன்றிக்கே, தன் வடிவழகைக் காட்டியாயிற்றுக் கவிக்கு உள்ளுறை கொடுத்தது,’ என்னுதல். ‘நீரும் கவி பாடினீராகில் பின்னை இப்படிக் கிடந்து படுகிறது என்?’ என்ன,
என் சொல்லி நிற்பனோ –
1-‘நானும் பாதி வழி வந்து அவனாலே அங்கீகரிக்கப்பட்டவனாய் இருக்கிறேனோ?
2-அன்றிக்கே, பெற்ற பேறும் தான் அளவுபட்டு ஆறி இருக்கிறேனோ?’ என்றது,
3-‘ஒரு சாதனத்தைச் செய்தார்க்குப் பலம் தப்பாமையாலே, நானும் இப்பேற்றுக்குச் சில செய்தேனாய் இது தக்கது என்று இருக்கிறேனோ?
4-பெற்ற பேறுதான் பொறுக்குமதாய் ஆறி இருக்கிறேனோ? எதனைச் சொல்லித் தரிப்பது?’ என்றபடி.
இதற்கு ஆளவந்தார் அருளிச் செய்யும்படி: ‘சர்வேஸ்வரன் செய்யப் புக்கால் அரியதும் ஒன்று உண்டோ?’ என்றாம்.-இன் தமிழ் பாடிய ஈசன்’ என்றதிலே நோக்கு. ஈசன் – ‘சமர்த்தன்’ என்றபடி.அங்ஙன் அன்றிக்கே, எம்பெருமானார், ‘இவர் தாம் சொன்னாராகிலும் ஒருபடி போகச் சொல்லித் தலைக் கட்டுவர்: என்னால் தன்னை இன் தமிழ் பாடிய ஈசனை’ என்றதிலே நோக்கு.-ஈசன்-குற்றங்கட்கு எல்லாம் எதிர்த் தட்டானவன்.அவனும் தானே சொன்னானாகில் ஒரு குற்றுமும் இல்லாதபடி தலைக் கட்டுவான்: சிறு குழந்தை எழுத்திடப் புக்காரல் தானே ஏதேனும் ஒருபடி இட்டுத் தலைக் கட்டும்; தந்தையாதல் உபாத்யாயனாதல் இடப் புக்கால் தானே எழுத்தாய் இருக்கும்? அங்ஙன் அன்றிக்கே, இவன் கையைப் பிடித்து இடுவிக்கப் புக்கவாறே, இவன் ஓரிடத்தே இழுக்க அவன் ஓரிடத்தே இழுக்கக் குதறிக் கொட்டியாய் உருவம் அழிந்து சிதறிப்போம்; அப்படியே, என்னை உபகரணமாகக் கொண்டு கவி பாடா நிற்கச் செய்தேயும, என்னால் வரும் குற்றம் தன் பக்கல் தீண்டாதபடி பாடுவித்தான் என்கிறார்’ என்று அருளிச் செய்வர்.
நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ?–அத்தாலே நிலை பெற்று உஜ்ஜஜ்வல விக்ரஹனாய் இருக்கிறபடியை-எனக்குப் பிரகாசிப்பித்தவனை எத்தைச் சொல்லி தரிப்பேன்-பிரதமம் ஆபி முக்கியம் பண்ணும்படி அங்கீ கரித்தான் என்னவோ
அத்தை முழுக்க நடத்திற்றிலன் என்னவோ-என்னைத் தனக்கே யாக்கிற்றிலன் என்னவோ
நான் பாடினேனாம்படி தான் பாடிற்றிலேன் என்னவோ-அத்தால் உஜ்ஜவலன் ஆயிற்றிலன் என்னவோ எத்தைச் சொல்லி தரிக்கலாவது –
————-
என் சொல்லி நிற்பன்?என் இன்னுயிர் இன்று ஒன்றாய்
என் சொல்லால் யான் சொன்ன இன்கவி என்பித்துத்
தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன் என்
முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே.–7-9-2-
உடையவன் உடைமையை கொண்டு போனான் -தான் விஷயீ கரித்தானாய் இருக்கை அன்றிக்கே இவர் வாக்காலே இவர் கவி பாட தானும் உளனாய் தன் விபூதியும் உளனாக அன்றோ கருதினான்-திவ்ய தேசம் அருளிச் செயல் பெற்றதால் அன்றோ -ஆகையால் தரிக்கைக்கு இயலாமல் உள்ளேன்
என் சொல்லி நிற்பன் – ‘அவன் என்னை அங்கீகரித்த அங்கீகாரம் காரணம் இல்லாதது என்னவோ, காரணத்தோடு கூடியது என்னவோ?-இத்தலையை ஆராய்ந்து பார்த்த இடத்து ஒரு காரணத்தைக் காண்கின்றிலர்; அத்தலையை அநுசந்தித்துப் பார்த்த இடத்து ஒரு காரணத்தைக் காண்கின்றலர்; அநாதி காலம் கைவிட்டதற்கு ஒரு காரணத்தைக் காண்கின்றிலர்; இன்று இனி, சேதனனுக்குத் தனித்து ஒரு காரியத்தைச் செய்தலுக்கும் செய்யாமைக்கும் யோக்கியதை இல்லை அன்றோ, சொரூபம் ஸ்திதி முதலானவைகள் அவன் அதீனமாய் இருக்கையாலே? இதனை இனிய கவி என்று நாட்டிலே பிரசித்தம் ஆக்கினான்.
தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த – சொல்லும் தன்னது: சொன்னவனும் தான்; சொல்லிற்றும் தன்னை. -தன் சொல்லால் தன்னை தான் கீர்த்தித்த-மூன்றுமே அவனது-
கவிபாட்டுண்டேன் நானாகில் அன்றோ கவிபாடினேன் நானாவது-என் முன் சொல்லும் –
அவன் முன்னே சந்தையிடப் பின்னே நான் சொன்னேன்.-தான் சொன்னான் ஆகில் ஸ்ரீகீதையைப் போன்று வறுமுறுகலாய்ப் போம் அன்றோ?
நம்பி திருவழுதிநாடு தாசர், ‘ஸ்ரீகீதை போவான் ஒருவன் சந்தியா சதஸ்ஸிலே வந்து கண்டால், பின்னை இவனுக்கு உழக்கு அரிசியைக் கொடுப்பித்து விடு மத்தனை போக்கி அங்கு அவர்கள் உள்ளிடம் கொடார்கள்; திருவாய்மொழி கற்றவன் ஒரு விண்ணப்பன் செய்வான் சென்றால், சர்வேஸ்வரனும் கிராமத்திலுள்ளாரும் புறப்பட்டு எதிர் கொண்டு தங்கள் இருப்பிடத்தை ஒழித்து அவனுக்குக் கொடுத்து ஆதரியா நிற்பார்கள்,’ என்று அருளச் செய்வர்.-தானே பிரபந்தத்தைச் செய்து, நான் செய்தேன் என்று என் தலையிலே ஏறிட்டு எனக்கு ஒரு பிரசித்தியைத் தந்தான்.
பிரமன் சிவன் முதலானோர்களைத் தனக்குச் சரீரமாகக் கொண்டு நின்று படைத்தல் அழித்தல்களைச் செய்து அவர்கள் மேல் ஏறிட்டாப் போலே கண்டீர், என் மேலே ஏறிட்டுக் கவி பாடினேன் நானாகச் சொல்லித் தலைக் கட்டினபடியும்,’ –
———–
ஆ முதல்வன் இவன் என்று தன் தேற்றி என்
நா முதல் வத்து புகுந்து நல் இன்கவி
தூமுதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்
வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ!–7-9-3-
ஆம் முதல்வன் இவன் என்று தன் தேற்றி--‘முதல்வன் ஆம் இவன்,’ என்று தன் பக்கலிலே எனக்குத் தெளிவு உண்டாம் படியாகச் செய்து: என்றது,-‘காரண வாக்கியங்களில் உபாசிக்கத் தக்கவனாகச் சொல்லப்படுகிறான் தானே என்று தன் பக்கலிலே நான் தெளியச் செய்து,’ என்றபடி.-அன்றிக்கே, ‘பரம பதத்தைப் போன்று, சம்சாரத்தையும் திருத்த நினைத்தோம். அதற்கு அடி ஆம் இவன், என்று என் பக்கலிலே தன் சொரூபம் முதலானவைகளைத் தெளியச் செய்து என்னுதல்.
இங்கே அருளிச் செய்யும் வார்த்தை:-‘திருப் புற்றுக்குக் கிழக்கே கரிய மாணிக்காழ்வார் திருமுன்பின் படிக் கட்டிலிலே ஆளவந்தார் எழுந்தருளி யிருக்க, உடையவர் திருப் புற்றுக்குக் கிழக்காக எழுந்தருளி நிற்கிறவரைக் கண்டு,m‘ஆம் முதல்வன் இவன்’ என்று அருளிச் செய்தாராம்’ என்பது.
தான் தன்னைச் சொன்ன – தானே சொல்லுதல்,-நானே ஒருபடி சொல்லுதல் செய்கை அன்றிக்கே,-என் நா முதல் வந்து புகுந்து தான் தன்னைச் சொன்னான் ஆயிற்று.-என் வாய் முதல் அப்பனை – எனக்கு வாய்த்த காரணனான மஹோபகாரகனை.-அன்றிக்கே,-‘என் நா முதல்’ என்றது தன்னையே பின் மொழிந்து,-‘என் வாக்குக்கு முதலான அப்பனை’ என்கிறார்.என்னுதல்.-என்று மறப்பேனோ –-‘முன்பு அநாதி காலம் மறந்து போந்ததாகில் இனி மேல் நினைக்கைக்குக் காரணமான காலத்தை எல்லாம் மறக்கைக்கு உடலாக்கினால் தான் மறப்பனோ?’ என்றது,-‘முன்பு நினைக்கையில் உள்ள அருமையோ பாதியும் போரும் இனி மறக்கையில் உள்ள அருமையும்: இனி ஏதேனும் ஒரு நாள் தான் என்னாலே மறக்கப் போமோ?’ என்றபடி.
———-
அப்பனை என்று மறப்பன் என் ஆகியே
தப்புதல் இன்றித் தனைக் கவி தான் சொல்லி
ஒப்பிலாத் தீ வினையேனை உயக்கொண்டு
செப்பமே செய்து திரிகின்ற சீர்கண்டே.–7-9-4-
என் ஆகியே –‘என் பக்கலிலே தானாய்’ என்றவாறு.-இவ்விடத்தில் ‘தான் பாடினானாகில் ஒரு குற்றமும் இல்லாமல் தலைக்கட்டும்;-நான் பாடினேனாகிலும் வருந்தி ஒருபடி தலைக் கட்டுவேன்;-என்னைக் கருவியாகக் கொண்டு கவி பாடா நிற்கச் செய்தேயும் என்னுடைய சம்பந்தத்தால் வந்த குற்றம் தட்டாதபடி கவி பாடித் தலைக் கட்டினான்’ என்று எம்பார் அருளிச் செய்வர். விஷயத்துக்குத் தகுதியாகக் கவி பாடினான் ஆதலின், ‘தனைக் கவி தான் சொல்லி’ என்கிறார்.-முற்றறிவு, வரம்பில் ஆற்றலுடைமை முதலானவைகளுக்கு ஒப்பு இல்லாதவாறு போலே ஆயிற்று,-அறிவின்மை ஆற்றலின்மை இவைகளுக்கு எனக்கு ஒப்பு இல்லாதபடியும்;-ஆதலின், நானும் அவனுக்கு ஒப்பன் என்கிறார்-
செப்பமே செய்து திரிகின்ற –-வஞ்சனை பொருந்திய மனத்தையுடையேனாய் இருக்கிற என்னோடே,-சம்சார சம்பந்தம் சிறிதும் இல்லாதவரான நித்திய ஸூரிகளோடு பரிமாறுமாறு போலோ, என்னுடனே செவ்வையே பரிமாறினான்.
அன்றிக்கே,-‘எனக்குக் காப்பினைச் செய்து கொண்டு போருகிற’ என்னுதல்.
சீர் கண்டே-இப்படி இருக்கிற சீலம் முதலான குணங்களை அநுசந்தித்து.-அப்பனை என்று மறப்பன்?–
————–
சீர் கண்டு கொண்டு திருந்து நல் இன் கவி
நேர்பட யான் சொல்லும் நீர்மை இலாமையில்
ஏர்வுஇலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைப்
பார் பரவு இன் கவி பாடும் பரமரே.–7-9-5-
தன் ஆக்கி-தன்னோடு ஒக்கச்செய்து.-அன்றிக்கே,-‘தனக்கு ஆக்கி’ என்னுதல்.-என்னால் தன்னைப் பார் பரவு இன் கவி பாடும் –என்னைக் கருவியாகக் கொண்டு பாரில் உள்ளார் அனைவரும் தன்னைப் பரவும்படி இனிய கவிகளைப் பாடினான். என்றது
‘விசேஷஜ்ஞர், விசேஷஜ்ஞர் அல்லாதார் என்னும் வேற்றுமை இன்றியே எல்லாரும் கொண்டாடும்படி செய்தான்,’ என்றபடி.
மண் மிசை–ராமானுஜன் பிறந்த பின்பே–அப்பொழுதே மாதவனுக்கு ஆளானார்கள்
பரமரே –‘அவனோடு ஒத்தவர் இல்லை’ என்கிற வாக்கியம் கொண்டு இவனுடைய உயர்வு அறிய வேண்டா;-என்னை இடுவித்துக் கவி பாடுவித்துக் கொண்ட இதுவே போரும் அவனுடைய உயர்வு அறிகைக்கு.
————
இன் கவி பாடும் பரம கவிகளால்
தன் கவி தான் தன்னைப் பாடுவியாது இன்று
நன்கு வந்து என்னுடன் ஆக்கி என்னால் தன்னை
வன் கவி பாடும் என் வைகுந்த நாதனே.–7-9-6-
இன் கவி பாடும் பரம கவிகளால். . .என்னால் தன்னை வன்கவி பாடும் –
‘பின்னைத் தான் தனக்குச் சில கவிகளைப் பாடவேண்டினால், அதற்குத் தகுதியாக இருப்பார்
ஸ்ரீ வேதவியாசபகவான். ஸ்ரீ பராசரபகவான், ஸ்ரீ வால்மீகி பகவான் இவர்கள் உளராய் இருக்க.
மற்றும் வேணுமாகில், ‘செந்தமிழ் பாடுவார்’ என்று சொல்லப்படுகிற முதல் ஆழ்வார்கள் எல்லாரும் உளராய் இருக்க
என்னைக் கொண்டு கவி பாடுவித்துக்கொண்ட இதுவும் ஒரு நீர்மையே!’ என்கிறார்.
முதல் ஆழ்வார்களிலே ஒருவரை ‘ஒரு கவி சொல்லிக் காணீர்’ என்ன,
‘பெருகு மதவேழம்.. . . . . . . . வான்கலந்த வண்ணன் வரை’ என்றே அன்றோ அவர் பாடுவது?
தன் கவி தான் தன்னைப் பாடுவியாது –-கவியும் தன்னது; பாடினாலும் தான்; கவிகட்குப் பொருளாயுள்ளவனும் தான். அவர்களைக் கொண்டு, தன்னுடையதான சொல்லாலே, அதற்குப் பொருளாயுள்ள தான் தன்னைப் பாடுவியாதே.-இன்று நன்கு வந்து – இன்று நான் இங்ஙனே உஜ்ஜீவிக்கும்படிக்குத் தகுதியாக வந்து. அன்றிக்கே,‘நான் உவந்து’ என்று பிரித்து, ‘நன்றாக உவந்து’ என்றும்,-இக்கவி பாடுகைதானே பிரயோஜனமாக உவந்து’ என்றும் பொருள் கூறலுமாம்.-என் உடன் ஆக்கி – என்னைப் பிரியாத கருவியாகக் கொண்டு.-என் வைகுந்த நாதனே –-அழியாததான கலங்காப் பெரு நகரத்தை இருப்பிடமாகவுடையோமாய் இருப்பதைப்போன்று, அழியாத வேதம் போலே நித்தியமாய் இருக்கிற ஆயிரம் பாசுரங்களைப் பாடுவிக்க வேணும்’ என்று பார்த்தான்.
அன்றிக்கே,-‘பரமபதத்தை இருப்பிடமாகவுடையனாகையாலே வந்த ஏற்றத்தைப் போன்றதாக நினைத்திராநின்றான் ஆயிற்று,-இக்கவி பாட்டுடையான் ஆகையால் வந்த ஏற்றத்தையும் என்னுதலுமாம்.-
————
வைகுந்த நாதன் என் வல்வினை மாய்ந்து அறச்
செய்குந்தன் தன்னை என்னாக்கி என்னால் தன்னை
வைகுந்தனாகப் புகழ் வண் தீங்கவி
செய்குந்தன் தன்னை எந்நாள் சிந்தித்து ஆர்வனோ?–7-9-7-
அயர்வு அறும்அமரர்கள் அதிபதி ஒரு சம்சாரி பக்கலிலே மேல் விழாநின்றால் எங்ஙனே ஆறி இருக்கும்படி?-‘முன்னே உலகங்களுக்கு எல்லாம் நாதனாய் இருந்தும், சுக்கிரீவனைத் தனக்கு நாதனாக இச்சிக்கிறார்,’ என்கிற இதற்கும் அவ்வருகே இருக்கிறது அன்றோ இது? -இங்கு வைகுந்த நாதன் -அதனாலே லோக நாதனுக்கு மேலே என்ற படி –-வல்வினை போக வேணும் என்று இராத என்னுடைய, ‘மயர்வுஅற மதிநலம் அருளினன்’ என்ற இத்தனை அன்றோ எனக்கு அருளினன்?’ என்கைக்கு, அருளுவதற்கு முன்பு தாம் ஒருவர் உளராகக் கண்டிலர் அன்றோ?-‘அவன் இல்லாதவன் ஆகவே ஆகிறான்’ என்னும் நிலையன்றோ முன்? அஸந்நேவஸபவதி’ என்பது தைத்திரீயம்.-உபாயத்தில் சொல்ல யோக்யதை இல்லை -அதனால் எனக்கு அருளினான் என்று சொல்ல வில்லை-பிராப்யத்தில் சொல்ல அவகாசம் இல்லை -அதனால் அருளினன் எனக்கு என்று சொல்ல வில்லை – -உபகார கௌரவம் -கைங்கர்யத்தில் ஆழ்ந்தேன் சர்வ சத்தியான தன்னாலே தான் இது செய்யலாமோ என்பார், ‘வல்வினை’ என்கிறார்.-மாய்ந்து அறச் செய்குந்தன் – என்னுடைய பிரபல விரோதியைப் போக்கின சுத்தியை யுடையவன்;-‘முகுந்தன்’ என்ற பெயர் ‘குந்தன்’ என்று முதற் குறையாய்க் கிடக்கிறது -குந்தன்’ என்று திருநாமம் ஆகவுமாம்; ‘குமுத: குந்தர: குந்த:’-ஸஹஸ்ரநாமம்.– என்று குந்தன் என்றே திருநாமம் ஆயிற்று அன்றோ?-,
வண் தீம் கவி செய் குந்தன் –வளவியனவாய் இனியனவாய் இருந்துள்ள கவிகளைப் பாடி,
அது தனைத் தன் பேறாக நினைத்திருக்கும் தூய்மையையுடையவன். என்றது,
‘துயர் அறு சுடர் அடி’ என்பது போன்று, இவரைக் கொண்டு கவி பாடின பின்பு தன் துயர் தீர்ந்தானாய் இருக்கிறபடியைத் தெரிவித்தவாறு.-இவர் துயர் போன பின்பு, தனக்கு ஒரு துயர் உண்டாய் அது போனாற்போலே நினைத்து இராநின்றானாயிற்று.-சரீரத்துக்கு வந்த வியாதி அனுபவிப்பான் சரீரி அன்றோ?
எந்நாள் சிந்தித்து ஆர்வனோ – செய்த உபகாரம் கனத்து இராநின்றது; உபகாரத்தை நினைப்பதற்குக் காலம் போருகிறது இல்லை’ நான் என் செய்வேன்? சரீரம் பிரிந்த பின்பு வாய் புகு நீர் ஆகையாலே சொல்லுகைக்குக் காலம் இல்லை; இங்கு இருக்கும் நாள் காலம் போருகிறது இல்லை; செய்த உபகாரமோ, கனத்து இரா நின்றது. நான் என் செய்கேன்?
கால தத்வம் உள்ள அளவும் அனுபவித்தாலும் திருப்தி கிடையாதே எனக்கு என்கிறார் –
———-
ஆர்வனோ ஆழி அங் கை எம்பிரான் புகழ்
பார் விண் நீர் முற்றும் கலந்து பருகிலும்
ஏர்விலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைச்
சீர் பெற இன் கவி சொன்ன திறத்துக்கே ? –7-9-8-
ஆழி அம் கை எம்பிரான் புகழைப் பாரிலுள்ளாரும் விண்ணிலுள்ளாரும் நீரிலே உள்ளாரும் பாதாள உலகத்திலுள்ளாரும்-மற்றும் எல்லாரும் கலந்து பருகிலும் நான் ஆர்வனோ?அன்றிக்கே,-‘பாரிலுள்ளார், விண்ணிலுள்ளார், நீரிலுள்ளாரான இவர்கள் எல்லாருடைய வாக்கு முதலான கருவிகளையும் அனுபவிக்கின்ற சத்தி விசேடங்களையும் உடையேனாய்க்கொண்டு காலம் எல்லாம் நின்று அனுபவித்தாலுந்தான் நான் ஆர்வனோ?’ அன்றிக்கே, ‘பார் விண் என்றதனால் உபய விபூதிகளையும் சொல்லி, நீர் என்றதனால் தன்மையைச் சொல்லி, உபய விபூதிகளிலும் உள்ளோர் அனுபவிக்கும் சத்தி சுபாவத்தை யுடையேனாய்க் கொண்டு அனுபவித்தாலும் ஆர்வனோ
ஏர்வு இலா என்னைத் தன் ஆக்கி – மேலே, ஐந்தாம் பாட்டில் ‘கவி பாடுகைக்கு இடமான இச்சையும் இல்லை’ என்றார்; இங்கு ‘அவ்விச்சைக்கு அடியான தகுதியும் இல்லை’ என்கிறார். இதனால், நன்மை இல்லாமையைச் சொன்னபடி.-இச்சை -முதல் படி -தபஸ் -அடுத்து -வேதனம் பலம் -ஸூத பிரகாசர்-கத்தியால் வெட்டி -கருவி தானே கத்தி -விருப்பம் இருந்தது வெட்டிற்று இல்லையே -வெட்டுதற்கு சாதனம் போலே தபசாதிகள் ஞானத்துக்கு சாதனம் என்றவாறு –அஞ்ஞாத ஸூஹ்ருத்த விசேஷத்தால் -ஈஸ்வர அபிப்ராயத்தாலே –
தானும் அறியாமல் சாஸ்திரத்திலும் விதிக்காதே -முதலில் இச்சை பிறக்கும் –-அதுவும் இன்றிக்கே இருக்கிற என்னை என்கை.-
தன்னைச்-ஸமஸ்த கல்யாண குணாத்மகனை-சீர் பெற -என் கவி பாட்டால் அந்த குணங்களை பெற்றானாம் படி-இன்கவி சொன்ன திறத்துக்கு – இப்படி இனிய கவிகளைச் சொன்ன பிரகாரம் ஒன்றுக்கும். மற்றைக் குணங்கள் குமர் இருந்து போமித்தனை. இப் பிரகாரம் ஒன்றுக்கும் ஆழி அம் கை எம் பிரான் புகழைப் பார் விண் நீர் முற்றுங்கலந்து பருகிலும் ஆர்வனோ?
———
திறத்துக்கே துப்பரவாம் திரு மாலின் சீர்
இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ?
மறப்பிலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னை
உறப்பல இன்கவி சொன்ன உதவிக்கே?–7-9-9-
திறத்துக்கே துப்பரவாம் திருமாலின் சீர் –-ஏதேனும் ஓர் காரியத்தில் வந்தால், ஒரு துரும்பைக் கொண்டு காரியம் கொள்ளப் பார்த்தால் அதனைக் கொண்டே காரியத்தை அப்படித் தலைக்கட்டிக் கொள்ளுதற்குத் தகுதியான ஆற்றலை யுடையனான.
வல்லவனுக்கு புல்லும் -அடியேன் புல் போலே–அதற்கு அடி என்?’ என்னில், திருமகள் கேள்வன் ஆகையாலே,-‘
மறப்பு இலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னை உறப் பல இன்கவி சொன்ன உதவிக்கு – மறப்பு இல்லையான என்னை. மறப்புக்கு முன் கணத்தில் நிகழக் கூடியதான நினைவும் எனக்கு இல்லை என்கைக்காக, ‘மறப்பிலா’ என்ற சொல்லாலே அருளிச் செய்கிறார்-‘’மறப்பு இலா’ என்ன வேண்டுவான் என்?’ என்னில், நினைவு உள்ள இடத்திலே அன்றோ மறப்பு உள்ளது? ஆக, ஏதேனும் ஒரு காலத்தில் உண்டாகிற நினைவுங்கூடத் தமக்கு இல்லை என்கிறார் என்றபடி.-மறப்பு இலா என்னைத் தன்னாக்கி – ஏதேனும் ஒரு காலத்தில் நினைத்துப் பின்னை ஒருகால் மறப்பு உண்டாய், அதனை காணாக் கண்ணிட்டுதான் இப்படி அங்கீகரித்தானோ? முதலிலே தன் பக்கலிலே நினைவு இன்றிக்கே இருக்கிற என்னைத் தன்னாக்கி.-என்னால் –-‘மறந்தேன் உன்னை முன்னம்’ பெரிய திருமொழி, 6. 2 : 2.-என்கிற அநுதாபமுங்கூட இன்றிக்கே இருக்கிற என்னைக்கொண்டு.-தன்னை உறப் பல இன் கவி சொன்ன – ‘சொல்ல மாட்டாது அந்த ஆனந்த குணத்தினின்றும் எந்த வேத வாக்கியங்கள் மீண்டனவோ’ என்கிறபடியே,
‘வேதங்கள் மீண்ட விஷயத்தை மறுபாடு உருவச் சொன்ன’ என்று சீயர் அருளிச் செய்வர்.
அன்றிக்கே, ‘சர்வேஸ்வரனுக்குச் சால உற்றது என்கிறார்’ என்று பிள்ளான் அருளிச் செய்வர்.-இனிய கவிகளைச் சொன்ன இந்த உபகாரத்துக்குத் திருமாலின் சீர் இறப்பு எதிர் காலம் பருகிலும் ஆர்வனோ?-
——
உதவிக் கைம்மாறு என் உயிர் என்ன உற்று எண்ணில்
அதுவும் மற்று ஆங்கவன் தன்னது என்னால் தன்னைப்
பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு
எதுவும் ஓன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே.–7-9-10-
மயங்கி இருக்குங்காலத்தில் ஆத்தும சமர்ப்பணந்தான் வேணும்:
தெளிந்த பின்னர், ‘என்னுடைய பொருளை அவனுக்குக் கொடுத்தேன்’ என்று இருக்கக்கடவன் அல்லன்;-ஆத்துமா என்னுடையது என்று பல காலமாக எண்ணிப் போந்த அதிலும் கடையாயிற்று,-தெளிந்த பின்னர் ‘நான் என்னுடைய பொருளை அவனுக்குத் தந்தேன்’ என்று இருக்குமாகில்.-பின்னையும் பழைய அபகாரமே தொடர்ந்தது ஆகுமே! ஞானம் பிறந்தமை பொய் அன்றோ?-சர்வமுத்தி பிரசங்கம் வாராமைக்காக ஆத்தும சமர்ப்பணந்தான் வேண்டிவரும்;-நெஞ்சிலே வெளிச்சிறப்பு உண்டானால் அவனுடைய பொருளினை அவனதாக இசைந்திருக்கக் கடவன்.-சொரூப ஞானம் பிறந்தால் பேற்றின் அளவும் செல்ல, இவ்விரண்டு தன்மையும் தொடரக்கடவதாக இருக்கும்.
ஆக, ஆத்தும சமர்ப்பணத்துக்கும் செய்ந்நன்றி அறிதலுக்கும் தனித்து இவனுக்குச் சம்பந்தம் இல்லாத படியான-இவனுடைய அத்தியந்த பாரதந்திரியத்தைச் சொல்லுகிறது.
பிரபத்தி சமயம் -ஆத்மீய பரந்யாசம் -பிராந்தி சமயமா இது -சமர்ப்பித்த அனந்தரம் அனுதபிப்பதால் –ஆகில் வேண்டாவோ என்னில்-வேணும் -சர்வ முக்தி பிரசங்கம் வாராமைக்கு –-பின்பு சமர்ப்பித்தது என் வஸ்து என்று நினைத்தால் முன்பு விட தாழ்வு உண்டாகும் -அதனால் செய்த அநந்தரம் அனுதபிக்க வேண்டும் –-ஆளவந்தார் ஆழ்வார் போலே -இரண்டு ஆகாரமும் உண்டு -ஜீவாத்மாவுடைய பாரதந்த்ர ஸ்வரூபம் அறிந்து கொள்ள வேண்டும் –
பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு – கவிபாட்டுண்கிறவனுக்கு இக்கவி பாட்டாலே பண்டு இல்லாத நீர்மை உண்டாம்படியாகக் கவி பாடின உபகாரனுக்கு.-எதுவும் ஒன்றும் இல்லை செய்வது –-ஏதேனும் ஒன்றும் செய்யலாவது இல்லை.-‘இங்கு இருக்கும் நாள் ஞானக் குறைவினாலே செய்யலாவது ஒன்று இல்லையாகிலும், ஞானக்குறைவு அற்று முத்தனானால், பிரதியுபகாரம் செய்யத் தட்டு என்?’ என்னில்,-இங்கும் அங்கே –
இங்கு ஆனால், தேக ஆத்துமா அபிமானத்தாலே ‘நான், என்னது’ என்று போய்க் கால் கட்டித் திரிகையாலே, செய்யலாவது உண்டோ?’ என்று பிரமிக்கவுமாய் இருக்கும்;
அதுவும் இன்றிக்கே, ஞானக் குறைவு கழிந்த அளவிலே, தான் செய்யலாவது ஒன்று இல்லை என்னும் இடம் சொல்ல வேண்டா அன்றோ?-ஸ்வரூப ஞானம் பிறந்த இடத்தில் ஸ்வா தந்தர்ய கார்யமான ப்ரவர்த்திக்கு இடம் இல்லை அன்றோ?–
————–
இங்கும் அங்கும் திரு மால் அன்றி இன்மை கண்டு
அங்ஙனே வண் குரு கூர்ச் சட கோபன்
இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இப்பத்து
எங்ஙனே சொல்லிலும் இன்பம் பயக்குமே.–7-9-11-
நமக்கும் நல்லாசிரியன் அருகே இருந்து ‘திருமகள் கேள்வன் ஒழிய இவ்வாத்துமாவுக்குத் தஞ்சமாய் இருப்பார் இலர்,’ என்று உபதேசித்தால், அத்தனை போதும்அப்படியே’ என்று இருக்குமது உண்டே அன்றோ? இவர் அங்ஙனம் அன்றிக்கே, அந்நினைவுக்குத் தகுதியான செயலையுமுடையவராய் இருப்பாராயிற்று.
எங்ஙனே சொல்லிலும் இன்பம் பயக்கும் – ஏதேனும் ஒரு படி சொல்லிலும் இன்பம் உண்டாம்.-இவர் தம்முடைய பாசுரத்தைக் கற்றவர்கள் என்றே அன்றோ ஈஸ்வரன் இவர்களைக் கடாட்சிப்பது?-இல்லையாகில், இவர் தம்மைப் போலே மனம் வாக்குக் காயம் என்னும் இவற்றினுடைய நியதி உண்டாய் அனுபவிக்கப் பெறில் அழகிது; அது இல்லாத போதும் பலம் தவறாது என்கைக்காகச் சொல்லிற்றத்தனை-இது. இன்பம் பயக்குமே –
‘இந்த இறைவனே ஆனந்தத்தைக் கொடுக்கிறான்’ என்கிறபடியே, ஏஷஹ்யேவ ஆநந்தயாதி’ என்பது, தைத். ஆன. எப்பொழுதும் பகவானுடைய அனுபவத்தாற்பிறக்கும் ஆனந்தமானது உண்டாம்.–உண்டாக்கும் என்றபடி-
——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –