ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த-ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம்-பகுதி-2-

May 15, 2026

ஸ்ரீ ஶைலேஶ தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்திர ப்ரவணம் வந்தே ரம்யாஜமாதரம் முநிம்

துறவிகளின் அரசரான பகவத் ராமாநுஜரிடம் அளவற்ற அன்பு கொண்டவரும் ஞானம், பக்தி போன்ற குணங்களின் கடலான ஸ்ரீ ஶைலேஶரின் கருணைக்கு பாத்திரமான ரம்யஜாமாத்ரு முநியை (மணவாள மாமுனிகள்) நான் வணங்குகிறேன்).

ஸ்ரீஶடாரி குரோர்திவ்ய ஸ்ரீபாதாப்ஜ மதுவ்ரதம்
ஸ்ரீமத் யதீந்த்ர ப்ரவணம் ஸ்ரீலோகார்ய முநிம் பஜே

(ஸ்ரீ ஶடகோபாசார்யரின் திருவடியும் ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவ ப்ரபந்தத்தை அருளியவருமான தாமரை மலரினின்று வழியும் தேன் போன்ற பிள்ளை லோகம் ஜீயரின் திருவடிகளை வணங்குகிறேன்).

குருநாதனெங்கண் மணவாளயோகி குணக்கடலைப்
பலநாளும் அண்டிப்பருகிக் களித்திந்தப் பாரினுள்ளே
உலகாரியன் முநிமேகம் இந்நாளென்னுள்ளம் குளிர
நலமான சீர்மை மழை நாளும் பொழிந்தது இந்நிலத்தே

(மணவாள மாமுனிகளின் குணங்கள் என்னும் கடலிலிருந்து பருகி அனுபவித்தவர் நம் ஆசார்யர் (பிள்ளை லோகம் ஜீயர்). இவ்வுலகில் மேகம் போல இருக்கும் அத்தகைய பிள்ளை லோகம் ஜீயர், தம் மேன்மையான குணங்கள் எனும் மழையை இந்த பூமிக்கு அனுதினமும் என் மனம் குளிரக் கடாக்ஷித்தார்)


இனி நம்பெருமாள் விருத்தாந்தம்
பின்பு நம்பெருமாளும்‌ *அரங்கதகருள் முனைவனைத்‌- திருமாலிருஞ் சோலை நின்றான்‌ என்கிற சேர்த்தியாலே -சிலம்பாறு பாயும் தென் திருமாலிருஞ் சோலையிலே யெழுத்தருளி! இவ்விடம் ஆயிரம் ஆறுகளும் சுனைகள்‌ பலவாயிரமும்‌ ஆயிரம்‌ பூம் பொழிலுமுடைத்தாய்‌ திருப் பொன்னியாலே சூழப்பட்ட ஆராமம்‌ சூழ்ந்த யரங்கத்தைப் போலே அதி மநோ ஹரமாயிருக்கையாலே, பிள்ளையைப் பிரிந்த க்லேசமெல்லாம்‌ மாறி

சிகரிஷு விபிநேஷ்வப் யாபகா ஸ்வச்ச தோயா ஸூ
அநுபவசி ரசஞ்ஜோ தண்டகாரண்ய வாசாந்
ததிஹ தத் அநு பூதவ் சாபிலாஷோத்ய ராம
ஸ்ரயஸி வந கிரீந்த்ரம் ஸூந்தரீ பூய பூயஸ் –-ஸுந்‌, ஸ்தவம்‌
103 —

தண்டகாரண்யம் போன்ற காடுகள்-கோதாவரி கங்கை போன்ற நதிகள் –இவற்றால் உண்டான விலக்ஷண ஆனந்தத்தை அனுபவிக்க வேண்டியே இங்கே அழகராக சேவை சாதித்து அருளுகிறீர்-சித்ரா கூடாதி பர்வத ஸ்தானத்தில் இத்திருமலையும் தண்டகாரண்யம் -ஸ்தானத்தில் வனராஜிகளும்-கங்கா நதி ஸ்தானத்தில் நூபுர கங்கையும் கொள்ளக் கடவன ரசிகரான தேவரீர் சித்ரா கூடாதி பர்வத ராஜங்களிலும் -என்னும்படியான வனங்களிலும் தண்டகாரண்ய வாசாந் -அநுபவசி –சித்ரகூட மனு ப்ராப்ய-பரத்வாஜஸ்ய சாஸனாத் ரம்யமா வசதம் க்ருத்வாரமமானா வநே த்ரய தேவ கந்தர்வ சங்கா சாஸ் தத்ர சே ந்யவசன் ஸூகம் –இத்யாதிப்படியே ஆரண்ய வாச ஸூகத்தை அனுபவித்தீர்-அநுபவசி -வர்த்தமான பிரயோகம் –அனுபவம் தொடர்ந்து கொண்டே இருப்பது பற்றி-இங்கனம் திருஉள்ளத்துக்கு பங்காக அனுபவித்த ராசிக்ய அதிசயத்தாலே மீண்டும் அவ்வனுபவங்களைச் செய்து போர திரு உள்ளம் பற்றினவராய்க் கொண்டு அழகராக திருவவதரித்து திருமாலிருஞ்சோலை மலையை உறைவிடமாகக் கொண்டு அருளிற்று–என்கிறபடியே வந வாஸ லாஞ்சையை யுடையராய்‌ வநகரி ப்ரஸ்தமான அங்கே சிலகால மெழுந்தருளி யிருந்து விச்ரமித்தருளி, அழகிய மணவாளன்‌ கிணற்றையும்‌ அறஞ்சுவராகி நின்ற வரங்கரான தாம்‌ தார்‌மிகன்‌ வைத்த தணணீர்ப் பந்தலோ பாதியாக உண்டாக வைத்து, பின்பு அனைத்துப் பரிகரத்துடனே கொல்லி காவவன்‌ கூடல் நாயகன்‌ கோழிக் கோன்‌ குலசேகரன்‌ என்று அதுவே நிரூபகமாம்படியான ஸ்ரீகுலசேகரப் பெருமாளாண்டருளிய தேசத்தை விரும்பி யெழுந்தருளி அவ்வவ தேசங்களிலே சில நாள்‌ இனிதமர்ந்‌திருந்து; அநந்தரம்‌ கோழிக்கோடேற எழுந்தருள:

சுடர் கொள் சோதியைத்‌ தேவரும்‌ முனிவருந் தொடர என்கிறபடியே மற்ற திவ்ய தேசத் தெம்பெருமானகளும்‌ நம்மாழ்வாரும்‌ அங்கே வலசையாக எழுந்தருள, அவர்களையும்‌ ஆதரித்தரு௭
ஆழ்வாரைத் தம்முடைய திவ்ய ஸிம்ஹாஸனத்திலே வைத்துக்‌ கொண்டு. அடி யடையாதாள் போலணுகி யடைந்த இவரைக்‌ கண்டு கொண்டிருந்து, தம்முடைய திவ்ய ஸிம்ஹாஸனமான வட்ட
மணையையும்‌ முத்துச் சட்டையையும்‌, பகல் திரு முன் பந்தத்தையும்‌ ப்ரஸாதித்து க்ருபை பண்ணி அங்கு நின்றும்‌ புறப்பட்டு
ஆழ்வாருடனே தேனைக் கிடம்பைக்கு எழுந்தருளி அங்கே சிறிது காலமெழுந்‌தருளி யிருந்து, *’கூடவருகிறேன்‌” என்ற ஆழ்வாரை நிறுத்தி, புங்கனூர்‌ வழியாக வெழுந்தருளி அங்கே யிருந்து திருநாராயண புரத்தேற ப்ரதஷிணமாக வெழுந்தருளி, அங்கே சிலநாள்‌ விஹரித்து, திலதமுலகுக்காய்‌ தின்ற திருவேங்கடத்தை யடைந்து

ஸுரம்ய மாஸாத்யது சித்ர கூடம்‌ நதீஞ்சதாம்‌(மால்யவதீம்‌ ஸுதீர்த்தாம்‌ |,நநந்த ராமோ ம்ருக பக்ஷி ஜுஷ்டாம்‌ ஜஹெளச துக்கம்‌ புரவி ப்ரவாஸாத்‌[ஸ்ரீரா ஆர. 59-38 )ஸ்ரீராமபிரான்‌ மிக அழகியதான திரி கூடத்தையும்‌ நல்ல நீருடையதும்‌ விலங்குகள்‌ பக்ஷிகளால்‌ விரும்பப் பட்டதுமான அந்த மால்யவதீ என்னும்‌ நதியையுமடைந்து அயோத்தி யினின்றும்‌ பிரினால் உண்டான துக்கத்தையும்‌ மறந்தான்‌ ]–என்கிற படியே *நன் மணி வண்ணனாரான குளிரருவி வேங்கடத்தில்‌ கூடி யிருந்து குளிரப் பெற்று, ‘ மந்திபாய்‌ வட வேங்கடமாலை வானவர்கள்‌ சந்தி செய்ய நின்றான்‌ அரங்கத்தரவினணையான்‌ என்னும்படியே ஏகமான ஆகாரத்தாலே அங்கே அநேக காலம்‌ திவ்யோத்ஸவாதி வைபவங்களுடனே வாழ்ந்து கொண்டெழந் தருளி யிருந்தார்‌.

இனி ஆம்வார்‌ வ்ருத்தாந்தம்‌
கோழிக் கோட்டினின்றும்‌ பெருமாள்‌ புறப்பட்டெழுந்‌தருளுகிற போது கூடப் புறப்பட்டருளாமல்‌, ஸ்தாநத்தார்‌ ஸ்தலத்தார்‌ பரஸ்பர வைஷம்யத்தாலே தடங்கல்‌ பண்ண அந்த ஸமயத்திலே மேற்கும்‌ கள்ளர் பற்றாய்‌, கிழக்கும்‌ கள்ளர்‌ பற்றாய்‌ வடக்கும்‌ துருஷ்க மயமாயிருந்த படியினாலே அத்திசைகளில்‌ இருக்கப்‌ போகாமல்‌ ஆழ்வாரை வலசையாகத்‌ தென் மேற்கு மூலையிலே பஹுதூரம்‌ எழுந்தருளப்‌ பண்ணிக்‌ கொண்டு செல்ல, அங்கே கள்ளர் பயம் மிக, வேறு கத்யந்தர மில்லாமையாலே அத்யுந்நததமான ஒரு சரிவு கண்டு ஆழ்வாரை ஒரு திருப் பெட்டகத்திலே யெழுந்தருளப் பண்ணி, சங்கிலி கட்டி ‘அந்த அரங்கிலே பாங்காக எழுந்தருளப்‌ பண்ணி விட்டு திருவாபரணங்களையும்‌ திருப்பொக்சசத்தையும்‌ நிக்ஷேபித்து எல்லோரும்‌ மலையினின்றும்‌ இறங்கின வளவிலே கள்ளர்‌ பள்ளர்‌ கையிலகப்பட்டவர்கள்‌ உடைகளை சூறை கொடுத்து விட, அதற்கும் தப்பினவர்கள்‌ தங்கள்‌ தங்களுடைய இடம்‌ போய்ச் சேர்ந்தார்கள்‌-

அவர்களிலே தோழப்பர்‌ என்பாரொருவர்‌ ஆழ்வார்‌ திருவடிகளிலே அத்யந்த ப்ரவணராய்‌ அபிமானியா யிருக்கையாலே,தாம் மதுரையிலே சென்று திருமலை யாழ்வாருக் கறிவிக்கக்‌ காத்‌திருந்து இச் செய்தியை யெல்லாம் தெரியுச்‌ செய்ய , திருமலை யாழ்‌வாரும்‌ எல்லாவற்றையுங்கேட்டு அபிமானித்து மலையாள ராஜாவுக்கு தம்முடைய ஸ்ரீமுகமும்‌ கொடுத்து, அத்தரங்கராய்‌ ராஜ வல்லபராய் ஸ்ரீகார்‌யத்திலே அபிமானிகளா யிருக்கும் ஸ்வ படர்களையும் கூட்டி, த்ரவ்யமும்‌ ஸாதித்து அனுப்பி யருள-அவர்களும் அப்படியே திருவாங்கோட்டூரிலே. செல்ல, கலஹம்‌ தெளிந்தபடியினாலே ஹ்ருஷ்டராய்‌ ராஜாவைக்‌ சுண்டு செய்‌தியைச்‌ சொல்ல, திருமலை யாழ்வாருடைய ஸ்ரீமூகத்தை ஸரஸா வஹித்தித்துக்‌ கொண்டு. ப்ரியப்பட்டு, தோழப்பருக்கு பஹுமானம்‌, பண்ணி, ஆழ்வாரைத்‌ திருக் கணாம்பியிலே யெழுந்தருளப்‌ பண்ணி வைக்கும்படி மநுஷ்ய ஸாமக்ரியையும்‌ அர்த்த ஸாமுக்ரியையும்‌ பூர்ணமாகக்‌ கொடுத்தனுப்ப, அவர்களும்‌ முத்‌திரிப்பு என்‌கிற ஊரிலே சென்று சங்கலிகஞம்‌ ஊஞ்சற் பலகைகளும் சேர்த்துக்‌, கொண்டு மலையிலேயேறி,-சரிவிலே யிழிவாரார்‌?’? “என்று, சித்திக்க, ப்ராண ஸந்தேஹிகளாகையாலே எல்லாரும்‌ பின்‌ வாங்கி யிருக்க தோழப்பர் “நாமே, இழிகிறோம்‌” என்று துணிய: அவருக்கு அப்போது ஸ்தலத்தார்‌ சொன்ன கட்டளை : உமக்கு, ஆழ்வார்‌ ஸந்நிதியில்‌ வகுளாபரண பட்டரோடொத்த ஸ்வதந்த்‌ரமும்‌, திரு மஞ்சன காலத்திலே ஸஹஸ்ர தாரை கண்டருளிய திருவந்திக் காப்பு ஆனவுடனே ஆழ்வார்‌ திருமுடியிலே சாத்தி யிருக்கிற அலுங்கலும்‌ பூந் தொடையலையும்‌, ஆழ்வார்‌ தோழப்பர்‌” என்‌று உமக்கு அருளப்பாடிட்டு நித்யமாக ஸாதிக்கிறோம்‌” என்று சொல்லி, அனைவரும்‌ உகந்து ஓமறைந்து ஆழ்வார் தோழப்பரைத்‌ தூங்கு பலகையிலே ஏற்றிச்‌ சரிவிலே விட்டு ஸாவதாநமாகப்‌ பார்த்திருக்க அவரும்‌ அதிலிறங்கித்‌ திருப்பெட்டகத்தைத் தேட, ஒரு ஷேமகாரி பஷி திருப் பெட்டகத்தின்‌ மேலே யிருந்து நெடும் போது சப்திக்க, ‘இதுவெறுமனன்று’ என்று உகந்து திருப் பெட்‌டகம் கண்டு ஸேவித்து சிறிது பொழுது ஆழ்வாரை த்யாநிக்க-உடனே அப்பஷி அப்புறத்திற் செல்ல, திருக் காப்பு நீக்‌கி ஆழ்வாரைக் கண்டு கொண்டு ஸேவித்து க்ருதார்த்தராய்த்‌ திருப் பெட்டகத்தை திருக் காப்பு சேர்த்துக்‌ கட்டி தூங்கு பலகையிலே ஏறி யருளப் பண்ணி: சங்கலியைக்‌ குலுக்க, அவர்களும் மேலே சேர்த்துக் கொள்ள தோழப்பர்‌ எழுத்தாணியையும் ஓலையையும் கொண்டு போனவராகையாலே அங்கு நடந்த வ்ருத்தாந்தத்தை யெழுதி வைக்கசக் கண்டு அனைவரும்‌ சந்தோஷப்பட்டு சேவித்துத் திருட்பெட்டகத்தைப் பலகையினின்றும் இறக்கி யருளப் பண்ணி தோழப்பர் வரும்படிக்குத் திரும்பி பலகையை விட வந்து சேர்ந்தவுடனே தோழப்பரும் ஏறி சங்கிலியைக்‌ குலுக்க

அவர்களும் சங்கிலியை ஏத்த நடுவே. தட்டுப்‌ பட்டுத்‌ தோழப்பர்‌ விழுந்து விட்டார்‌. பிற்பாடு அவர்‌ குமாரரான அப்பன்‌ பிள்ளைக்கு எல்லாருமாக சமாதானம்‌ சொல்லி ஆழ்வாருடைய சமீபத்திலேயே திருமேனி விட்டவராகையாலே அவருக்கு நீர்‌ சோகிக்க வேண்டா- ஆழ்வார்‌ உம்மை புத்ரராக அபிமானித்தருளினார் -உமக்கு சந்திதியிலே முன்‌ கட்டளை ப்ரகாரத்துக்கு, ஆழ்வான்‌ தோழப்பர் என்று, அருள் பாடும்‌. வரிசைகளும்‌ நடப்பிக்கிறோம் !” என்று கொல்லி, ஆழ்வாரை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு முத்திரப்பிலே சென்று ஆழ்வாருக்கு அஞ்சு நாள் ஸ்ம்ப்ரோஷணம்‌ கண்டருளப்‌ பண்ணி மலையினின்றும்‌ புறப்பட்ட வன்று தொடங்கி திருவடி நம்பியாரும்‌ ஸ்தலத்தாரும்‌ ஆழ்வாரப்பனும்‌ நன்றாக ஆராதித்துக்‌ கொண்டு போந்தார்கள்‌.-அனைத்துப்‌ பரிகரத்துடன்‌. திருக்கணாம்பியில்‌ எழுந்தருளப் பண்ணி ஸம் ப்ரோஷணம்‌ செய்து நித்தியப்படி திருவாராதனம் முதலான. விசேஷ உத்சவங்கள் எல்லாம்‌ நடத்‌திக் கொண்டு ஆழ்வார்‌ திருவடிகளில்‌.அதிப்ரவணராய்‌ அபிமானிகளாய் வாழ்ந்து. கொண்டிருந்தார்கள்‌-

கள்ளர் பற்றி லுள்ளார் இச் செய்தியைக் கேட்ட மாத்திரத்திலே தெய்வ யோகத்தாலே ஆநுகூல்யம்‌ பிறந்து ஆழ்வார்‌ திருவடிகளிலே ப்ரவணராலய அநேகமாக ஸத்கரித்து முன்பு பறித்‌ததையும்‌ ஸமர்ப்பிக்க, அழகிய மணவாளன்‌ ப்ரஸாத லப்தமான பொற்றகடு சேர்த்த வட்ட மணையையும்‌, முத்துச்‌ சட்டையையும்‌!வெள்ளி தீவர்த்திக் கோலையும்‌, சித்தையையும்‌ மைர்ப்பித்து ஆழ்வாரைத்‌. திருக்கணாம்பி யிலெழுந்தருளப்‌ பண்ணும்‌ படிக்குத்‌ திருப் பல்லக்கு முதலானவைகளைச் சேர்த்து மார்க்க கோதஷம்‌ பண்ணி மங்கள வாத்தியங்களுடனே எழுந்தருளப்‌ பண்ணினார்கள்‌. ஒரு பெரிய திருவடி பக்ஷியும்‌ ஆழ்வாருக்கு மேலாக ஆகாசத்திலே சூழ்ந்து கொண்டு திருக்கணாம்பியிலே ஆழ்வார்எழுந்தருளி யிருக்கற கோயில்‌ மரத்திலே கூண்டு கட்டி வஸிக்க இந்த ஆச்சர்யத்தைக்‌ கண்டு எல்லாரும்‌ ஆழ்வாரை ஸேவித்து அவர்‌ ப்ரபாவத்தைக்‌ கொண்டாடிக்‌ கொண்டு தங்கள்‌ தங்கள்‌ சக்திக்குத் தக்கபடி, சிறப்பு ஆராதனமும்‌ நித்ய உத்சவமும் யதோ உசிதம்‌. விசேஷ உத்சவமும்‌ நடப்பித்துக் கொண்டு போந்‌ தார்கள் -இந்த அதிசயங்களை யெல்லாம்‌ திருவநந்தபுரம்‌, திருவட்டாறு திருவண்பரிசாரம்‌, திருவல்லவாழ்‌ முதலான திவ்ய தேசங்‌களிலுள்ள போற்றிமார்‌ நம்பூதரிமார்கள்‌ கேட்டு உடனே வந்து ஆழ்வாரை ஸேவித்து வித்தராய்‌ அவரை விட்டுப்‌ பிரிய மாட்டாமல்‌ உதய காலத்திலே எப்போதும்‌ போலே திருமஞ்சனங் கொண்டருளி தத்யோதநமும்‌ நெய்த் தோசைப் படியும்‌, பாகூட்டின கட்டிப்‌பொரியும்‌, பாற்கஞ்சிக் கடாரமும்‌ நித்யப்படியாக அமுது செய்‌தருளி விநியோகமாய்‌, பிற்பாடு ஒரைவகைகளும்‌ அமுது செய்‌தருளி, மத்யாஹ்ந காலத்திலே நாயகமலங்காரத்துடனே வரிசையாக சம்பாவவஸரமும்‌ அமுது செய்தருளி, திருப்பணியாரவகைகளும்‌ அமுது செய்து பின்பு உச்சிக் காலமும்‌ அமுது செய்தருளி காலோசிதமான உபசாரங்களுடனே விச்ரமித்தருளத்‌ திருக்காப்‌புச்‌ சேர்த்து மீளவும்‌ போது போக, ,நாலு நாழிகைக்குத்‌ திருக்‌காப்பு நீக்கி ஸாயங்காலம்‌ திருவாராதனங் கண்டருளி ‘அஸ்தமனஸமயத்திலே உப்புச்சாற்றமுதும்‌, சம்பாவும்‌, தோசைப்படியும்‌ பொரியும்‌ அமுது செய்து விநியோகமாய்‌, பிற்பாடு அத்தாளம்‌அமுது செய்த்ருளி, இராக்காலமுமாய்‌ ஸ்ரீபலிதுடி, திருவுற்றசாதம்‌, அரவணை, சுக்கு கஷாயம்‌, இவைகளெல்லாம்‌ அமுது செய்‌யும்படி போற்றிமார்‌ இட்டம்‌ பண்ணி நடப்பித்துப்‌ போந்தார்‌கள்‌. திருநகரியைப் போலே-பரிஜனங்களும்‌ பூர்ணமாய்‌ ஏழு மடாதிபதிகளும்‌ ஒன்று பட்டு ஆழ்வார்‌ திருவடிகளிலே அதி ப்ரவணராய்‌அபிமானிகளாய்‌ தத்தத் காலோசிதமான உத்ஸவங்களை நன்றாக நடப்பித்துக்‌ கொண்டு வாழ்ந்தருளியிருந்தார்க்கள்‌.

இனி கோயில்‌ வ்ருத்தாந்தம்‌
பெருமாள்‌ புறப்பட்டருளின பின்பு-அபிவ்ருஷ பரிம்‌லாநா: என்னும்படி அயோத்தி யென்னுமணி நகரமானது அழகழிந்தாற் போலே நம் பெருமாள்‌ புறப்பட்டருளின பின்பு அற்ற பற்றர்‌ சுற்றி வாழும்‌ அந்தணீரங்கம்‌ என்றும்‌, நல்லார்கள்‌ வாழும்‌ நளிரங்கம்‌ என்றும்‌, தென்னாடும்‌ வடநாடும்‌ தொழ நின்ற
திருவரங்கம்‌
என்னும்படியான கோயிலானது அழகழிந்தது.-பின்னும்‌ அங்கே வந்து ஆக்ரமித்தவன்‌ செய்தபடி: -திட்‌ கொடி மதிளைப்‌ பிடுங்கி கண்ணனூரிலே தனக்கு ஆவரணமாகக்‌ கட்டுவித்து, பின்னையும்‌ அங்கே உபத்ரவங்களைப் பண்ண உபக்ரமிக்க , அவ்வளவிலே, சிங்கப் பிரான்‌ என்னும்‌ பேரை யுடையராய்‌ பெருமாள்‌ திருவிளையாட்டமான அழகிய மணவாளர்‌ காணிய ப்ராஹ்மணராய்‌ தமிழ்‌ விரகரான ஒருவர்‌ துருஷ்கன்‌ வாசலிலே காரியம்‌ ஆராய்ந்து நின்று அவன்‌ நினைத்தபடி ஒன்றும்‌ செய்யாமல்‌ அவனுக்கு அநுகூலமாகவே சொல்லிக்‌ கொண்டு, மதிள்கள்‌, மாளிகைகள்‌, கோபுரங்கள்‌ துன்னு மணி மாடங்கள்‌, சாலைகள்‌ தொடத்‌கமானவற்றையும்‌, செம்பொனாய வருவரை யனைய கோயில்‌ மணி யனாரையும்‌ காத்து ரக்ஷித்துக்கொண்டு போந்தார்‌. அதுகண்டு அங்குண் டான ஆசார்யர்கள்‌ எல்லாரும்‌ அவரை அநுவர்த்தித்து நல்வார்த்தை சொல்லிக்‌ கொண்டு போந்தார்கள்‌.

திருவாய்மொழிப் பிள்ளை வையவம்‌.
பிள்ளை லோகாசாரியர்‌ திருவடிகளில ஆச்ரயித்தவளான ஸாத்விகை அம்மையார்‌ அவர்‌ விச்லேஷம்‌ பொறுக்க மாட்டாமல்‌ பரமபதத்துக் கெழுந்தருள, அவள்‌ குமாரரான திருமலை யாழ்வாரை
அவர்‌ சிறிய தாயாரான அம்மையார்‌ போஷித்துப்‌ போந்தார்‌.- திருமலையாழ்வாரும்‌ பால்யங்‌ கடந்து ப்ராப்த யெளவநராய்‌ ப்ரவபுத்வமுலடயராய்‌, சதிரிளமடவார்‌ தாழ்ச்சியை மதித்து, அணி மென் குழலாரின்பக் கலவியமுதுண்டு கொண்டு திரிய, இவர்‌ சதிருடைய தமிழ்‌ விரகராயிருக்கையாலே இவரைத்‌ திருத்துவதாகக்‌ கூர குலோத்தம தாஸர்‌ திருவுள்ளம் பற்றி இவர்‌ முன்பே
திருவிருத்தத்தை அநுஸந்தித்துக்‌ கொண்டு எழுந்தருள, இவர்‌ (திருமலை யாழ்வார்‌) அர்த்தவானாய்‌ அதற்குப்‌ பொருள்‌ கேட்க,நாயனும்‌, “உனக்குச்‌ சொல்ல வொண்ணாது’ என்று குத்ஸித்து
உமிய, (திருமலையாழ்வார்‌ அப்போது ராஜ ப்ரதிநிதியாய்‌ ராஜ்ய பாரம்‌ பண்ணிக் கொண்டிருந்தார்‌. ராஜா இறந்து ராஜ புத்ரர்கள்‌ பாலர்களாயிருந்தபடியால்‌ ராஜ பத்நி ராஜய பாரத்தை இவரிடம்‌
ஓப்புவித்திருந்ததாகத்‌ தெரிகிறது) திருப்பல்லக்கிலே இருந்த இவர்க்கு (திருமலை யாழ்‌வாருக்கு) பிள்ளை லோகாசாரியர்‌ விசேஷ கடாக்ஷம்‌ பண்ணி யிருக்கையாலே உமிழ்ந்தற்குக்‌ கோபியாமல்‌ ஸ்வபடரை விலக்கி அச் செய்தியை அம்மையாருக்குச்‌ சொல்ல, அவளும்‌ பிள்ளை லோகாசரியர்‌ திருவடிகளிலுண்டான ஸம்பந்தத்தை ஸ்மரிப்பிக்க,இவர்க்கு அநுதாபம்‌ பிறந்து ஆச்ரயணோந்முகராயிருக்க–அக் காலத்திலே சிங்கப்பிரானுக்குத்‌ திருமணத் தூண்‌ நம்பி!”என்று திருநாமமாயிருக்க, அவர்க்கு எல்லாரும்‌ ப்ரீத்யதிசயத்‌தாலே அனுவர்த்தித்து நல் வார்த்தை சொல்ல அவரும்‌, ‘பலரும்‌ அருளிச்‌ செய்கையாலே எனக்கொன்றும்‌ தெரிகிறதில்லை; வாக்மியா யிருப்பாரொருவரைத்‌ தெளிவா யருளிச்‌ செய்யும்படி கற்பிக்க வேணும்‌ என்ன; அவர்களும்‌, திருமலையாழ்வாருடைய வாக் வ்யவஹார ஸாமர்‌தயத்தைக்‌ கண்டு “நீர்‌ சொல்லும்‌!” என்று நியமிக்க, அவரும்‌ அப்படியே சொல்ல, அவ் வார்த்தைகள் அஸம்ப்‌ரதாயமாயிருந்த படியையும்‌, அவருடைய ஆச்ரய ருசியையும் கண்டு, இவரை ஸத் ஸம்ப்ரதாய ப்ரவர்‌த்தகரர்க்கக்‌ கடவோமென்று -ஒது முடும்பை யுலகாசிரியரனருள்‌ ஏதும் மறவாத எம்பெருமானான கூரகுலோத்தமதாஸர்‌ இவரை அநுவர்த்தித்துத்‌ தம்முடைய நிர்ஹேதுக க்ருபையாலே செயல்‌ நன்றாகத்‌ திருத்துவதாக மதுரையிலே சென்று ஸமயம்‌ பார்க்க, ஒரு நாளளவிலே திருமலையாழ்வார்‌ யானை மேலேறிப்‌ புறப்பட, தாம்‌ மேட்டு நிலத்திலே நின்று தம்மைக்‌ காண்பித்துக்‌ கொள்ள, திருமலையாழ்‌வார்‌ இவரைக்‌ கண்டவுடனே பிள்ளை லோகாசாரியராக ப்ரதிபத்தி பண்ணி, யானையினின்றும்‌ சடக்கென இறங்கி நாயன்‌ திரு வீதிகளில் தீர்க்க ப்ரணாமம்‌ பண்ண, நாயனும்‌ இவரை எடுத்‌ தணைத்து ஸ்வாசார்ய ப்ரபாவத்தை யிட்டு இவரைக்‌ கொண்டாட, திருமலை யாழ்வாரும்‌ இவரை (நாயனை) உள்ளே எழுந்தருளப்‌ பண்ணு வித்துக்‌ கொண்டு சென்று ஸத்கரித்து ஹிதம்‌ கேட்க, பிள்ளைலோகாசாரியர்‌ சரம காலத்திலே அருளிச்‌ செய்தபடிகளை யெல்லாம்‌ ஸவிஸ்தாரமாக அருளிச்‌ செய்யக்‌ கேட்டு உகந்து-தேவரீர்‌ அடியேனை க்ருபை பண்ணி இங்கே யெழுந்தருளி யிருந்து ப்ராத காலத்திலே திருமண்காப்பவஸரத்திலே எழுந்தருள வேணும்‌’* என்று வேண்டிக் கொண்டு, வைகையாற்றின்‌ கரையிலே ஸந்த்யா மடத்தருகே ஒரு திருவீதியையையும்‌ அதில்‌ இவர்க்‌கொரு திருமாளிகையுஞ்‌ சமைத்து ஜாத்யாச்ர நிமித்த துஷ்டங்‌கள் ஏதோ அவைகளைப்‌ பரிஹரித்துத்‌ தளிகைக்கு நடக்கும்படி அமரிக்கை பண்ணினார்‌.

கூரகுலோத்தம தாஸ நாயனும்‌ நித்யமாகத்‌ திருமண்காப்பு வேளைக்கு எழுந்தருள, இவர்‌ திருமண்‌ சேர்க்கச்‌ செய்தே லோகா சார்யாய’ என்று தொடங்கி தனியன்களை யநுஸந்திக்கக் கண்டு மிகவும்‌ ப்ரியப்பட்டு அன்று தொடங்கி கிஞ்சித் கிஞ்சித் காலம்‌ அவரிருக்குமளவும்‌ அநுவர்த்திக் கொண்டிருந்து ரஹஸ்யார்‌த்தங்களை ப்ரஸாதிக்க, அவரும்‌ நன்றாக அநுவர்த்‌தித்துக் கொண்டு ப்ரதி பத்தியடனே கேட்டு வந்தார்‌. ஒருநாள்‌ ராஜகாரியாவஸரத்தினாலே சொன்ன அர்த்தத்தைக்‌ கேளாமல்‌ ‘பொறுத்தருள வேணும்‌’ என்ன; மற்றை நாள்‌ இவரெழுந்தருளாமலிருக்க, அற்றைத் தினம் பராமர்சமின்‌றிக்கே யொழிய,-பிற்றை நாள்‌ நாயனெழுந்தருள வில்லை யென்று பராமர்சித்து உடனே ஆளை விட, அவர்கள்‌ சென்று அறிவித்த விடத்து பேசாமலிகுந்து விட, அவர்கள்‌ சென்று திருமலையாழ்‌வாருக்கறிவிக்க, அவர்‌, மற்றை நாளும்‌ நாயனெழுந்தருளாதபடியினாலே தம்முடைய ஆர்த்தி யெல்லாம்‌ தோன்றும்படி கால் நடையாக நாயன்‌ திருமாளிகைக்குச்‌ செல்ல, நாயன்‌ நெடும் போது விளம்பித்து ஸேவை ஸாதிக்க ஸேவித்து, திருவடிகளிலே விழுந்து போர க்லேஸிக்க, நாயனாரும்‌ ௨கந்தருளி ஷமித்தோம்‌” என்று சொல்ல, காலஷேப ஸமயமாகையாலே அது நிறைவேறுந் தனையுமிருந்து அவர்களுடன்‌ ஸ்ரீபாத தீர்த்த ஸ்வீகாரம்‌ பண்ணின பின்பு
நாயனாரும்‌ திருமலை யாழ்வாரை அமுது செய்யும்படி நியமிக்க,திருமலை யாழ்வாரும்‌ தளிகையை ஸ்வீகரிக்க அபேஷிக்க, உகத்தருளி தளிகை ப்ரஸாதம்‌ ஸாதித்தருள, திருமலை யாழ்வாரும்‌ ப்ரஸாத ஸ்வீகாரம்‌ செய்த மாத்ரத்தில்‌ பரம விரக்தராய்‌ “”கூர குலோத்தமதாஸ நாயன்‌ திருவடிகளே சரணம்‌”என்று பலகாலு மநுஸத்தித்துக்‌ கொண்டு சென்று, ராஜகார்ய ஸமயத்திலேயும்‌, ஒருவரை பேர்‌ சொல்லி யழைக்கும்‌ போதும்‌ இப்படியே சொல்லத் தொடங்கினாராகையாலே இவருக்கு உந்மாதம்‌ பிடித்ததாக வேணுமென்று ராஜபத்‌நிக்கறிவிக்க, அவளும்‌ திருமலை யாழ்வாரை யழைத்து வார்த்தை
சொல்ல, இவரும்‌ உத்தரத்துக்கு ப்ரத்யுத்தரம்‌ சொல்லாமல்‌ கூர குலோத்தம தாஸ நாயன்‌ திருவடிளே சரணம்‌; ஸகல கார்யமும்‌ பத்ரம்‌”” என்று இப்படியே சொல்ல. அவளும்‌ நாங்கள்‌ ஸ்த்ரீ
பாலர்களாயிருக்கிறபடியால்‌ பிள்ளை ப்ரபுத்தனாகுத்தனையும்‌ எல்லாவற்றிற்கும்‌ தேவரீருண்டென்றிருந்தோம்‌; அப்படி யின்றிக்கே யொழிந்ததோ?’ என்று சோகிக்க, “நீர் சோகிக்க வேண்டா; பிள்ளை ஸமர்த்தனானான்‌, எனக்கு நாயன்‌ திருவடிகளை ஸேவித்துக் கொண்டிருக்க வேணும்‌; நீர்‌ தவிர்க்க வேண்டா; ராஜ கார்யத்தை அடிக்கடி விசாரித்துக் கொண்டு பிள்ளைக்கும்‌ புத்தி சொல்லிக் கொண்டு வருகிறேன்‌” என்று சொல்லி ஸமாதானம்‌ பண்ணி, ராஜ கார்யமும்‌
விசாரித்துக் கொண்டு நாயன்‌ திருவடிகளை யநுவர்த்தித்து ஸகலார்த்‌தங்களையும்‌ அருளிச் செய்யக் கேட்டு க்ருதார்த்தராய்‌ சிறிது நாள்‌ அங்கே தானே யிருந்து பிற்பாடு திருப்புல்லாணிக்கு ஸமீபத்திலே
நாயனெழுந்தருளியிருக்கிற சிக்கிலி என்‌கிற வூரிலே யெழுத்தருளி குருகுல வாஸம்‌ பண்ணிக் கொண்டிருந்தார்‌. நாயனாரும்‌ தமக்குப்‌ பிள்ளை லோகாசாரியர்‌ ப்ரஸாதித்த பரமார்த்தங்களை யெல்லாம்‌ இவருக்கு ப்ரஸாதித்தருளினராகையாலே கூரகுலோத்தமை தாஸ முதாரம்‌ என்றருளிச் செய்தார்‌.

அநந்தரம்‌ நாயன்‌ தம்முடைய சரம காலத்திலே திருமலை யாழ்வாரை யழைத்தருளி ‘“விளாஞ்சோலைப்பிள்ளை யிடத்திலே இன்னம்‌ உமக்கு வேண்டிய அர்த்த விசேஷங்களை யெல்லாம்‌ கேளும்‌’‘ என்றும்‌, திருக்கண்ணங்குடிப்பிள்ளை யிடத்திலே திருவாய்‌மொழியைக்‌ கேளும்‌’” என்றருளிச்‌ செய்து, பிள்ளை லோகாசாரியர்‌ திருவடிகளை த்யாநித்துக் கொண்டு திருநாட்டுக்‌ கெழுந்தருளினார்‌ . அவர்‌ குமாரரைக்‌ கொண்டு நாயனுக்கு தீர்த்த திருவத்யயனமும்‌ நடத்தி யருளினார்கள்‌.
கூர குலோத்தம தாஸ நாயன்‌ திருநஷத்ரம்‌ ஐப்பசியில்‌ திருவாதிரை; அவர்‌ தனியன்‌
லோகாசார்ய க்ருபா பாத்ரம்‌ கெளண்டின்ய குல பூஷணம்‌ |
ஸமஸ்தாத்ம குணாவாஸம்‌ வந்தே கூரகுலோத்தமம்‌ ॥
ஸ்வயமாஹுய ஸைலேஸ குரவேர அர்த் ப்ரதாநத: |
லப்தோ தாராபிதம்‌ கூர குலோத்தம மஹம்‌ பஜே ॥

பிள்ளை லோகாசாரியருடைய க்ருபைக்குக்‌ கொள்கலமாய்‌ கெளண்டின்ய குலத்துக்கணியாய்‌, எல்லா ஆத்ம குணங்களுக்குமிருப்பிடமான கூர குலோத்தம தாஸ நாயனாரை அடி பணிகிறேன்‌.
தானே வலிய அழைத்து திருமலை யாழ்வாருக்கு விசேஷார்த்‌தங்களை ப்ரஸாததித்ததனால்‌ பெறப்பட்ட -௨தரார்‌” என்கிற பெயரை யுடைய கூர குலோத்தம தாஸ நாயனாரை ஸேலிக்கிறேன்‌.

அநந்தரம்‌ திருமலையாழ்வாரும்‌ ‘திருக்கண்ணங்குடிப்பிள்ளை யருகே: எழுந்தருளி ஸேவித்து, ‘அடியேனுக்குத்‌ திருவாய்‌ மொழியின்‌ அர்த்தமருளிச் செய்யவேணும்‌‘ என்று வேண்ட,
அவரும்‌ அப்படியே தொடங்கி யருளிச்‌ செய்ய, அவர்‌ தாத்பர்ய ப்ரதாநராய்க் கொண்டு தாத்பர்யார்த்தங்களையே ப்ரஸாதிக்க, இவர்‌ சப்தத்துக்கிசைய அருளிச் செய்ய வேணும்‌” என்று நிர்ப்பந்திக்க,ஆகில்‌ திருப்புட்குழி ஜீயர்‌ பாடேறப்‌ போய்க் கேளும்‌” என்ன,
அப்படியே புறப்பட்டுப்‌ பெருமாள்‌ கோயிலிலே எழுந்தருளின அற்றை நாள்‌ அவர்‌ திருநாட்டுக்கெழுத்தருளின பன்னிரண்டாம்‌ திவஸமாய்‌ அவர்க்குத்‌ திருநாராயண பலி நடக்க அத்தைக்‌ கண்டு மிகவும்‌ துக்கித்திருக்க, பெருமாள் கோயிலாசார்யர்களும்‌ கோயில்‌ பரிகரமனைத்துக்‌ கொத்தும்‌ திருமலை யாழ்வாரை கோயிலுக்கெளுந்தருளப் பண்ணுவித்துக்‌ கொண்டு போய்‌ பெருந்‌
-தேவியாரையும்‌ பேரருளாளனையும்‌ ஸேலிக்கப் பண்ணி , தீர்த்தம்‌ ஸ்ரீசடகோபன்‌, சாத்துப்படி, திருத்துழாய்‌, திருமாலை முதலான வரிசைகள்‌ ப்ரஸாதித்து பஹாுமாளம்‌ பண்ணி தர்சந ப்ரவர்த்தகராக வாழ்த்தினார்கள்‌. பிற்றை நாள்‌ திருநாராயண புரத்திலிருந்து
நாலூர்ப்பிள்ளையும்‌ அவர் குமாரரான நாலூராச்சான்‌ பிள்ளையுமெழுந்தருளிப்‌ பேரருளாளனை மங்களாசாஸனம்‌ பண்ண வெழுந்‌தருள, அந்த வேளையில்‌ திருமலை யாழ்வார்‌ ஸத்நிதியிலே மங்களாசாஸனம்‌ பண்ணிக் கொண்டு எழுந்தருளியிருக்க, இவர்கள்‌ திருமலையாழ்வார்‌ எழுந்தருளின செய்தியும்‌ உள்ளே மங்களாசாஸனம்‌ பண்ணி யருளுகிறதும்‌ அறியாமல்‌ ஸந்நதியிலே பின்னே நின்று, ”உள்ளே ஸேவிக்கிறவரார்‌?” என்று கேட்க, கோயில்‌ திருமலை யாழ்வார்‌’”’ என்ன, ‘ கோயில்‌ திருமலை பெருமாள்‌ கோயிலன்றோ!’” என்றருளிச்‌ செய்து கொண்டு அவர்‌ ஸத்நிதி வைஷ்ணவர்களுக்குப்‌ பின்னே நின்று ஸ்ரீசடகோபனுக்கு திரு முடியை உயர வெடுத்ருள, ஸ்ரீ சட கோபன்‌ திருமுடியிலே தரிக்கிற வளவிலே தம்முடைய திருவிரலாலே ஊன்‌ற, அர்ச்சகரும்‌ சீக்கிர்மாக ஸந்நிதியிலே ஸ்ரீசடகோபனை யெழுந்தருளப்‌ பண்ணி வைத்து திருமலை யாழ்வார்‌ கைப்பிடித்து, பின்னே வருகிற நாலூர்‌பிள்ளையை ‘அருளாளர்‌ திருவடி யூன்றியவரே!”” என்றழைத்துத்‌ திருமலை யாழ்வாரை அவர் கையில்‌ காட்டிக்‌ கொடுத்து, “இவருக்கு மூவாயிர வ்யாக்யானம்‌ ஸாதிக்கும்படி ஜ்யோதிஷ்குடியிலே. நியமித்தோம்‌; இவர்‌ வந்தார்‌; திருப்புட்குழி ஜீயர் பாடே ஈடுகேளாத இழவு தீர அத்தையும்‌ இவருக்கு ஸாதியும்‌”’ என்று பரவசராய்‌ நியமிக்க, பிள்ளையும்‌, “அடியேன்‌ க்ருதார்‌த்தனாளேன்‌; திருக்‌ கண்ணங்குடிப்பிள்ளை போராத விவருக்குத்‌ தினவுகெடச்‌ சொல்ல
வல்லேனோ?’” என்று சிந்தித்து நிற்க, மனமொத்த நாதனான பேரருளாளன்‌ ‘*ஆத்மாவை புத்ர நாமாஸி” என்று ஆச்சான்‌ பிள்ளை ஸாதித்தால்‌ நீர்‌ ஸாதித்ததாம்‌” என்று நியமித்தருள
*நாயன்தே நாயன்தே ” என்று உகந்து புறப்பட்டருளி ‘வாரீர்‌ திருமலை யாழ்வாரே! நாம்‌ போர ஜரிந்தோம்‌; நீர்‌ அதி நிபுணர்‌; உமக்குத்‌ தகும்படி சொல்ல வல்லவர்‌ இவர்‌? என்று *நல்ல மகனாரான ஆச்சான் பிள்ளை கையிலே காட்டிக்‌ கொடுத்து, தமக்குத்‌ திருநாராயணபுரத்துக்‌ கெழுந்தருளத்‌ திருவுள்ளமாய்‌ புறப்பட்டெழுந்தருளினார்‌.

திருமலையாழ்வாரும்‌,”க்ருதார்த்தனானேன்‌” என்று ஆச்சான்‌ பிள்ளை திருவடிகளிலே ந்யஸ்த பரராயிருக்க, இவரைக்‌ கைக்‌கொண்டருளித்‌ திருவாய்மொழி யீடு தொடங்கி நடத்தி யருளாநிற்க, இத்தைத்‌ திருநாராயணபுரத்தில்‌ ஆயி, பிள்ளை தொடக்கமானவர்கள்‌ கேட்டு, இவரை யெழுத்தருளும்படி எம்பெருமானாருடைய திருமுகமாக திவ்யாஜ்ஞையிட்டுவிட, அதைக்‌ கண்டு ஆச்சான் பிள்ளை திருமலை யாழ்வாரைக்‌ கூட்டிக்‌ கொண்டு திருநாராயணபுரத்தேற எழுந்தருள அவர்களும்‌ எதிர் கொண்டு திருவடிகளை ஸேவித்து எழுந்தருளப்‌ பண்ணிக்‌ கொண்டு போர,

ஆகுஹ்யாமல யாதவாத்ரி சிகரம்‌ கல்யாண தீர்த்தம்‌ தத:
ஸ்நாத்வா லக்ஷ்மண யோகிந: பதயுகம்‌ நத்வாதுகத்வாதந : |
ஸ்ரீ நாராயயணமேத் யத்ய தத்ர தரணீ பத்மாலயா மத்யகம்‌
பஸ்யேயம்‌ யதிகிம்‌ தப: பலமத: ஸம்பத் குமாரம்‌ ஹரிம்‌ ॥

தூய்தான யாதவாத்ரியினுடைய உச்சியிலேறி திருக்கல்‌யாணி தீர்த்த புஷ்கரியிணியில்‌ நீராடி இளையாழ்வாருடைய (எம்பெருமானாருடைய) திருவடிகளைத்‌ தொழுது, மேலே சென்று திருநாராயணனை ஆஸ்ரயித்து, அங்கு ஸ்ரீபூமிப்பிராட்டியார்‌, பெரியபிராட்டியார்‌ இவர்கள்‌ நடுவில்‌ எழுந்தருளி யிராநின்றுள்ள சம்பத்குமார்‌ (செல்வப்பிள்ளை) எனும்‌ எம்பெருமானைக்‌ காண்‌பேனாகில்‌ இதைக் காட்டிலும்‌ வேறான தப:பலனானது என்ன இருக்கிறது?] என்று சொல்லுகிற படியே க்ரமத்திலே பெரிய ப்ரீதியோடே சென்று திருநாராயணன்‌ திருவடிகளை அரணாகப் பற்றி அங்கே இனிததமர்‌ந் தெழுந்ருளி யிருக்கிற எம்பெருமானாரை ஸேவித்து அவர்‌ புருஷகாரமாக யதுகிரி நாயகியாரையும்‌ செல்வப்‌ பிள்ளையையும்‌ திருதாராயணனையும்‌ ஸேவித்து -அங்கே யெழுந்தருளி இருந்து எம்பெருமானார்‌ ஸந்நிதியிலே தொடங்கி *உறுபெருஞ்‌ செல்வம்‌ இத்யாதிப்‌படியே அவருக்குகப்பாசக அங்கே ஆச்சான்‌ பிள்ளையுடனே ஈடு முப்பத்தாரறாயிரமுங்‌ கேட்டார்கள்‌; அவரும்‌ மேலோர்க்கீந்தார்‌ என்னும்படி ப்ரஸாதித்தருளினார்‌ -திருமலை யாழ்வாரும்‌ அவர்‌ திருவடிகளைப்‌ பழுக்க ஸேவித்து -அரிய வருளிச்‌ செயல் பொருளை ஆரியர்களெல்லாரும்‌ உகக்கும்படி கேட்டருளினார் -பின்பு தேவ ராஜரும்‌ இவருடைய ஜ்ஞாந பக்தி வைராக்‌யாதி குண பூர்த்தியைக்‌ கண்டுகந்து இவரை விசேஷாபிமானம்‌ பண்ணி யருளி தம்முடைய திருவாராதனமான *இனவாயர் தலைவனை இவர்க்கு ப்ரஸாதித்தருளினார்‌.

தேவாதி பாத் ஸமதிகம்ப ஹைஸ்ர கீதேர்‌ பாஷ்யம்‌ நிகூடமபிய ப்ரதயாம்‌ சமார | குந்தி புரோத்பவமமும்‌ ஸரணம் பஜேஹம்‌ ஸ்ரீ சைலநாதமுருபக்தி ப்ருதம்‌ ஸடாரெள

உறுபெருஞ்செல்வமும்‌ என்று தொடங்கி, -மாறன்‌ விளங்கிய சீர்‌ நெறி தரும்‌ செந் தமிழாரணமே -என்கிறபடியே உடையவருக்கு உகப்பாக நல்லருள்‌ நம்‌ பெருமாள்‌ நாராயணன்‌ நாமங்களாய்‌(திருவாய்‌ 5-9 10), கேட்‌டாரார்‌ வானவர்கள்‌ செவிக்கினிய செஞ்சொல்‌ (திருவாய்‌ 10-6-11)ஆன திருவாய்மொழி தொடங்கி ஈடு முப்பத்தாறாயிரமும்‌ அத்ருப்‌ தாம்ருத ரூபமான இதின்‌ சப்த ஸ்வாரஸ்யம்‌, அர்த்த ஸ்வாரஸ்யம்‌ த்வநி வ்யங்க்யம்‌, பாவார்த்தம்‌, ஸ்வாபதேசம்‌, அந்யாபதேசம்‌, எல்லாம்‌ ஸம்சய விபர்யமற நன்றாகத்‌ தெரியும்படி *மேலோர்க்‌ கீந்தார்‌ அவரேமிக்கு (௨ப.ர.மா 49) என்னும்‌ படி நாலுராச்சான்‌ பிள்ளை தம்‌ பரம க்ருபையாலே ப்ரஸாதித்தருள, பிள்ளை முதலானவர்கள்‌ கேட்டார்கள்‌, அத்தைப் பற்றி

ஸ்ரீஸைல நாத குரு மாத்ர குருத்தமாப்யாம்‌ ஸ்ரீஸூக்தி தேிஸிக வரேண ச யஸ்த்ரிதைவம்‌ |
வ்யக்தஸ் ஸடாரி க்ருதிபாஷ்ய ஸு ஸம்ப்ரதாயோ விஸ்தாரமேதி ஸஹி வைஷ்ணவ புங்கவேஷு ॥-
என்றும்‌

கோலாதிபாத்‌ பிதுரவாப்ய ஸஹஸ்ர கீதேர்‌ பாஷ்யம்‌ ஹி பூர்வதக தேஸிக வர்யகுப்தம்‌ |
த்‌ரேதா ப்ரவர்த்யபுவிய: ப்ரத்யாஞ்சகார தம்‌ தேவ ராஜ குருவர்ய மஹம்‌ ப்ரபத்பே
-என்றும்‌ அநுஸந்தித்தார்கள்‌.
யாதொரு ஆழ்வாரருளிய திருவாய்‌ மொழியின்‌ பாஷ்யமான ஈட்டின்‌ நல்ல ஸம்ப்ரதாயமானது திருலாய்மொழிப் பிள்ளை திருநாராயணபுரத்தாய்‌ திருவாய்மொழி யாசார்யர்‌ என்னும்‌ இம் மூவராலும்‌ இப்படி மூன்று விதமாக வெளியாயிற்றோ, அது வன்றோ ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரேஷ்டர்களிடம்‌
(இப்போது) பல படியாகப்‌ பரவுதலைப்‌ பெற்றுள்ளது. யாவ ரொருவர்‌–பூர்வாசார்யர்களால்‌ மறைத்துவைக்கப்‌ பெற்ற திருவாய்மொழியின்‌ ஈட்டை தம்‌ தமப்பனாராகிய நாலுர் பிள்ளை
யிடமிருந்து பெற்று (மூவரின்‌ மூலமாக) மூன்று விதமாகப் பிரவர்த்திப்பித்து பூமியில்‌ அது தன்னை ப்ரஸித்தமாக்கினாரோ,அந்த நாலுராச்சான்‌ பிள்ளையை அடியேன்‌ சரணமடைகிறேன்‌-
திருவாய்மொழிக்கு ஈடு முப்பத்தாறாயிரம்‌ ஸாதித்தானவுடன் நாலுராச்சான் பிள்ளை திருமலையாழ்வாருடன்‌ ஸ்வ ஸ்தானததேற எழுந்தருளினார்‌.-

யாவரொரு திருமலையாழ்வாரானவர்‌ தேவாதிபர்‌ என்ற நாலூராச்சான் பிள்ளையிடமிருந்து ரஹஸ்யமான திருவாய்மொழி யாயிரத்தினுடைய பாஷ்யமான ஈடு முப்பத்தாறாயிரப்‌ படியைப்‌ பெற்று, பின்னர்‌ அத்தைப் ப்ரஸித்தமாக்கினாரோ, நம்மாழ்வார்‌
விஷயத்தில்‌ மிகவும்‌ பக்தியுடையவராய்‌, குந்‌தி நகரத்தில்‌ அவதரித்‌தவரான புகழ் பெற்ற அந்தத்‌ திருமலையாழ்வாரை சரணம்‌ பற்றுகிறேன்‌ –என்கிற படியே தேவப் பெருமாள்‌ கைக் கொண்ட
அருளுந்‌ திருமலை யாழ்வாருக்கு ஆழ்வார்‌ திருவடிகளிலே ப்ராவண்யமதிசயித்து அவர்‌ திருவடி தொழ வேணுமென்கிற அபிநிவேசத்‌தை யுடையராய்‌, ‘ஆஜகாம முஹார்த்தேந” என்கிறபடியே அவரெழுந்தருளி யிருக்கும்‌ திருக்கணாம்பி யென்கிற திருப்படை
வீட்டைக்‌ குறித்து அங்கே சென்று அவர்‌ திருவடிகளை ஸேவித்துத்‌
தம்முடைய அபிநிவேசமெல்லாம்‌ தீர்ந்து;

அநந்தரம்‌ ஆழ்வாரைத்‌ திருநகரியிலே திருக்குடி புகுவிப்பதாகத் திருவுள்ளமாய்‌, தாம் முந்தி திருநகரியேற யெழுந்தருளி, காடுவெட்டி நாடாக்கி, -நல்லார்‌ பலர்வாழ்‌ குருகூர்‌ என்னும்படி குடியேற்றி ஆழ்வாரை யெழுந்தருளப்‌ பண்ணுவித்துக்‌ கொண்டு குருகூர்ச் சடகோபன்‌ என்னும்படி யதா ஸ்தாதத்திலே திருப்ரதிஷ்டை பண்ணி யருளி
ஸடகோப முநிம்‌ வந்‌தே ஸடாநாம்‌ புத்தி தூஷணம்‌ |
அஜ்ஞாநாம்‌ ஜ்ஞாந ஜந கம்‌ திந்த்ரிணீ மூல ஸம்ஸ்ரயம்‌ ॥

வஞ்சகர்களுடைய புத்தியை நாசம்‌ செய்பவராய்‌, ஜ்ஞானமில்லாத மூடர்களுக்கு ஜ்ஞானம்‌ பிறப்பிப்பவராய்‌, திருப்புளியினடியில்‌ எழுந்தருளி யிருக்கும்‌ ஸ்ரீசடகோப முநிவரை அடி பணிகிறேன்‌- என்கிறபடியே உறங்காப் புளி நிழல் தன்னிலே ஏறி யருளப்‌ பண்ணி ஸேவித்து நிற்க இவர்க்கு சடகோப தாஸர்‌ என்று தம்‌முடைய திரு நாமத்தை யாதார்த்த நாமமாம்படி ப்ராஸாதித்‌தருள, இருவரும்‌ “ப்ரஸாத லப்‌த பரம ப்ராப்ய கைங்கர்ய ஸாலிநே –ஆழ்வாரின்‌ அநுக்ரஹத்தினால்‌ பெற்ற நிரதிசயமான பேறான
கைங்கர்யத்தினால்‌ விளங்கா நின்‌ற திருமலை யாழ்வார்‌- என்னும்படி,
பெரிய வண் குருகூர் நகர்‌ நம்பிக்காளுரியனாய்‌, புகழ் வண்‌ குருகையும்‌ பொற் கோபுரமும்‌ புரிசை சூழ் கழனி தண் பொருநை மன்னாழ்வார்‌ மறைத் தமிழாயிரமுநம் திகழும்படி செய்த ஸ்ரீசைலேசர்‌’–என்னும்படி ஆழ்வார்‌ திருவடிகளிலே ௮சேஷ சேஷ வ்ருத்திகளிலும்‌ அந்வயித்து அதுவே யாத்ரையாய்ப்‌ பேரா நிற்கிற காலத்திலே

திருமலை யாழ்வாரும்‌ விளாஞ்சோலைப் பிள்ளையும்‌
விளாஞ்சோலைப்‌ பிள்ளையை ஸேவித்து விசேஷார்த்தங்களைக்‌ கேட்க வேணும்‌” என்று திருவுள்ளமாய்த்‌ திருவநந்தபுரத்தே யெழுந்தருளி ஆழ்வாருடைய தமர்களில்‌ ப்ரதானரான வாசி தோற்ற –படமுடை யரவிற்‌ பள்ளி பயின்றவன்‌ பாதங்கண்டு பணிந்து, அநந்தரம்‌ “கண்ணன்‌ கழலினை காட்டுமுலகாரியன்‌ தாள்‌ நண்ணு நலந் திகழ்‌ நாரணனை”’ என்று சொல்லும்‌ படியான விளாஞ்சோலைப் பிள்ளையைத்‌ திருவடி தொழுவதாக அவரெழுந்‌தருளி யிருக்கிற -வாசமே கமழுஞ்‌ சோலையான திருச்சோலைக்‌ குள்ளே சென்று ஸேலிக்க,! ”குரு பதாம் புஜம்‌ த்யாயேத்‌ குரோர்‌
நாம ஸதா ஜபேத்‌”
-ஆசாரியனின்‌ தாமரை யடிகளை எப்போதும்‌ சிஷ்யன்‌ தியானிக்கக் கடவன்‌; ஆசாரியனின்‌ திருநாமத்தை விடாமல்‌ அநுஸந்திக்கக் கடவன்‌-
ஸ்ரீ லோகார்ய முகார விந்த மகில ஸ்ருத்யர்த்த கோஸம ஸதாம்‌ |
தத் கோஷ்டீஞ்ச ததேக லீந மநஸா ஸஞ்சிந்த யந்தம்‌ ஸதா ॥

ஸகல வேதார்த்தங்களாகிய செல்வம்‌ சேமிக்கப்பட்ட பொக்கிஷமான பிள்ளை லோகாசார்யருடைய தாமரை போன்ற திருமுக மண்டலத்தையும்‌ ஸத் புருஷர்களினுடைய இருப்பிடமான
அவருடைய கோஷ்டியையும்‌ எப்போதும்‌ அவற்றிலேயே லயமடைந்த மனஸ்ஸோடு த்யானித்துக் கொண்டிருக்கிற விளாஞ்‌ சோலைப்‌ பிள்ளையை- என்றும்‌ சொல்லுகிறபடியே பிள்ளை
லோகாசாரியருடைய திவ்ய மங்கள விக்ரஹத்தையும்‌ அவருடைய திருவோலக்கத்தையும்‌ த்யானித்துக்‌ கொண்டு தம்முடைய திரு மேனியிலே சிலந்தி நூலிழைக்கும்படி அஸ்தமிதாந்ய பாவராய்‌ நாலாறு நாள்‌ ஸமாதியாக வெழுந்தருளி யிருந்து அநுபவித்து,பின்பு இவரைக்‌ கண்டு இவர்க்கு ஸகலார்த்தங்களையும்‌ ஸாதிக்க இருவரும்‌ கேட்டு க்ருதார்த்தராய்க்‌ வேதிகப்‌ பொன்னான இவர்‌
ஸம்பந்தத்தாலே தம்முடைய ஐந்மக் கொத்தையைக்‌ கழித்துக்‌ கொண்டு மீண்டு திருநகரி யேறே வெழுந்தருளினார்‌. விளாஞ்‌ சோலைப்‌ பிள்ளையும்‌ ஸ்ரீவசந பூஷணத்தின்‌ தாத்பர்யங்களை
ஏழுகாதையாக ஸங்க்ரஹித்து அருளிச்‌ செய்து ஸர்வர்க்கும் உபகரித்தருளி
தாமும்‌ –செறிபொழிலந்தபுரத்து அண்ணலார்‌ கமல பாதமணுகுவார்‌ அமரராவார்‌-என்கிறபடி அயர்வறுமரர்‌களோடே கூடி அடிமை செய்ய வேணுமென்கிற ப்ராப்ய த்வரையாலே தடுத்தும்‌ வளைத்தும்‌ பெற வேண்டும்படி பரமபக்தி தலை யெடுத்து அவா வற்று வீடு பெற்றார்‌. (பாவோ நாந்யத்ர சச்சதி’ என்கிற திருவடியைப்‌ போல இவரும்‌ அஸ்தமிதாந்ய பாவராய்‌ நாலாறு நாள்‌ ஸமாதியாக எழுந்தருளி யிருந்து ஸ்வாசார்ய விக்ரஹா நுபவம்‌ பண்ணி யருளுகிறவர்‌ திருக் கண்களை விழித்து நீர்‌ யார்‌? இங்கு வந்த கார்யமென்‌?” என்று கேட்டருள இவரும்‌ அடைவே எல்லாம்‌ விண்ணப்பம்‌ செய்யக் கேட்டு ஸந்தோஷித்து இவருக்கு ஸ்ரீவசந பூஷண தாத்பர்யங்களை
ஏழுகாதையாக ஸங்க்ரஹித்து அருளிச்‌ செய்து ஸர்வர்க்கும் உபகரித்தருளினார்
)

அப்போது நம்பிமார்‌ (அநந்த சயனனை) திருவாராதனம்‌ செய்யா நிற்க, விளாஞ்சோலைப்பிள்ளை திருவடி தொழச்‌ சென்று கர்ப்ப க்ருஹகத்திலே புகுந்து திருவடி யருகே நிற்கக் கண்டு நம்பிமாரும்‌ அது மலையாள தேசமாகையாலே புலையரான விளாஞ்‌ சோலைப் பிள்ளை யகத்து (அருகே) நாம்‌ போகிறதில்லை” என்று திருக் காப்பு சேர்த்துக்‌ கொண்டு புறப்பட, அவ்வளலிலே பிள்ளை
ஸ்ரீபாதத்து முதலிகள்‌ ”விளாஞ்சோலைப் பிள்ளை வோகாசார்யர்‌ திருவடிகள்‌ சேர்த்தார்‌?” என்று நூற்றத்தாதி இயலுனே பரியட்‌டம்‌ திருமாலைக்குக்‌ கோயில்‌ வாசலிலே வரக்‌ கண்டு நம்பிமார்‌
ப்ரத்யஷமாகக்‌ கண்ட ஆஸ்சர்யத்தை அனைவரக்கும்‌ வெளிப்‌ படுத்தினார்களென்று ப்ரஸித்தமிறே,
இச் செய்தியை யறிந்து திருமலையாழ்வார்‌ ஸ்ரீபாதத்து முதலிகள்‌.
கத்வா நந்தபுரம்‌ ஜகத் குரு பதத்யாநேர தம்‌ குத்ரசித்‌தம்‌
நாராயண தாஸ மேத்ய விமலம்‌ ஈத்வா ததங்க்ரிம்‌ முதா |
தஸ்மாதார்ய ஜநோக்தி மெளக்தி கக்ருதம்‌ வேதாந்த வாக் பூஷணம்‌
ஸ்ரீவாக் பூஷணமப்ய வாப்பஸ ருதம்‌ ஸ்ரீஸைல நாதோ பவத்‌ ॥

அந்தத் திருமலையாழ்வார்‌ திருவநந்த புரத்தை யடைந்து ஓரிடத்தில்‌ (புறச் சோலையில்‌) பிள்ளை லோகாசாரியருடைய திருவடிகளை தியானம்‌ பண்ணுவதில்‌ விருப்பமுள்ள அந்த நாராயண தாஸரை(விளாஞ்சோலைப்‌ பிள்ளையை) அடைந்து நிர்மவமான அவர்‌ திருவடிகளை மகிழ்ச்சியுடனடி பணித்து அவரிடமிருந்து பூர்வாசார்யர்களுடைய ஸ்ரீஸூக்திகளாகிற முத்துக்‌களால் அமைக்கப் பெற்ற வேதாந்த வாக்யங்களுக்கு ஆபரணமான ஸ்ரீவசந பூஷணத்தைப்‌ பெற்று (மேலான) ஆசார்யரானார்‌ ] என்று அநுஸந்தித் தருளினார்கள்‌-

இத்தைத்‌ திருமலையாழ்வார்‌ கேட்டருளி சிஷ்ய புத்ரர்கள்‌ செய்யும்‌ க்ருத்யங்களை யெல்லாம்‌ பிள்ளை விஷயத்திலே அநுஷ்‌டான சேஷமாம்படி அநுஷ்டத்துக்‌ காட்டி யருளினார்-(பயிலுஞ்சுடரொளி, நெடுமாற்கடிமை திருவாய்மொழிகளில்‌ காட்டப்பட்ட ஸாரார்த்தமாய்‌ பெரிய் நம்பி மறாதே,
நம்பி விஷயத்தில்‌ அநுஷ்டித்ததை நினைப்பூட்டும்‌,
)இப்படி இவருடைய சரம சேஷி விஷய சரமாநுவர்த்தநத்தை யறிந்தவர்கள்‌
பற்றாத வெங்கள்‌ மணவாள யோகி பதம் பணிந்தோன்‌
நற்றேவராச னலந் திகழ்‌ நாரண தாதருடன்‌
கற்றாரெங் கூர குலோத்தம தாதன்‌ கழல்‌ பணியவோன்‌
மற்றாரு மொவ்வாத்‌ திருவாய்மொழிப்‌ பிள்ளை வாழியவே–
என்று அநுஸந்தித்தார்கள்‌.
வாழி நலந்திகழ்‌ நாரண தாதன்‌ வடிவும்‌
வாழி யவனமுத வாய் மொழிகள்‌–வாழியவே
ஏறு திருவுடை யானெந்தை உலகாசிரியன்‌ சொல்‌
தேறு திருவுடையான்‌ சீர்‌
— என்று தாமும்‌ அநுஸந்தித்தருளினார்‌. பின்பு திருமலை யாழ்வார்‌ தம்முடைய திருமருமகனாரை புத்ராபிமானம்‌ பண்ணி, தேவப்‌ பெருமாள்‌ என்று நாலுராச்சான் பிள்ளை திருநாமம்‌ சாத்தி யருளினார்‌.

இனி பிள்ளை லோகாசாரியர்‌ சிஷ்யராய்‌ கொல்லி காவல தாஸரான கோட்டூர்‌ அழகிய மணவாளப்‌ பெருமாள் பிள்ளையும்‌(இவர்‌ மணவாள மா முனிகளின்‌ மாதா மஹர்‌,) லோகாசாரியர்‌ ப்ராஸாதித்தருளின அர்த்த விசேஷங்களை அநுஸந்தித்துக்கொண்டு சிக்கல்‌ கிடராம்‌ என்கிற க்ராமத்திலே சிலநாள் எழுந்தருளியிருந்தார்‌. பின்‌பு திகழக் கிடந்தான்‌ திருநாவீறுடைய
பிரான்‌ தாதரண்ணரையர்(மா முனிகளின்‌ தகப்பனார்‌; இவர்‌ 74 ஸிம்ஹாஸனாதி பதிகளில்‌ கோமடத்‌தாழ்வான்‌ என்பவரின்‌ திருவம்ஸ்யர்‌ )அவர்‌ குமாரத்தியான ஸ்ரீ ரங்க நாச்சியாரைத்‌ திருமணம்‌ புணர்ந்து அவர்‌ திருமாளிகையிலே யெழுந்தருளி யிருந்து தமக்கு ஜ்ஞாதவ்யார்த்தங்களை யெல்லாம்‌ அவர்‌ ஸந்நிதியிலே கேட்டருளி
பிள்ளை லோகாசாரியர்‌ ஸந்நிதியிலே கேளாத இழவெல்லாம்‌ தீர்ந்து அந்த க்ருதஜ்ஞதைக்கு
வாழி மணவாளன்‌ வாழி யவன்‌ வீர நகர்‌
வாழி யவன்‌ குரவை மண்ணின்‌ மேல்‌–வாழி
உலகாசிரியனுரைத்த பொருள்களெல்லாம்‌
பல காலும் உரைக்குமவன்‌ பண்பு

என்றநுஸந்தித்து அவரைப்‌ பிள்ளை லோகாசாரியராகவே ப்ரதிபத்தி பண்ணிக்‌ கொண்டு அவருக்கு அநந் யார்ஹராய்‌ அநுவர்த்‌தித்துப் போந்தார்‌. இப்படி அவருக்கு அசேஷ ரஹஸ்யங்களையும்‌ ஸாதித்து சில நாள்‌ கழிந்தவாறே அழகிய மணவாளப் பெருமாள்‌ பிள்ளையும்‌ திருநாட்டுக் கெழுந்தருளினார்‌.

அழுகிய மணவாளா மா முனிகள் திருவவதாரம்‌
இப்படி ப்ரப்த்தி மார்க்கமானது ஸங்குசிதமாக நடந்து செல்லுகிற காலத்திலே ஸ்ரீய:பதியாய்‌ பரம காருணிகனாய்‌-திருவரங்கத் தரவணையிலே – உறங்குவான்‌ போல்‌ யோகு செய்த-என்கிறபடியே ஜகத் ரஷணந்தா யுக்தனாய்க்‌ கண் வளர்ந்தருளுகிற பெரிய பெருமாள்‌ மீண்டும்‌ தர்சநம்‌ இப்படி ஒராண் வழியாய்‌ வருகிறபடியைக்‌ கண்‌டு ‘எம்பெருமானாரைப்‌ (போலே லோகமெல்லாம்‌ உஜ்ஜீவிக்கும்படி ஒரு விஷயத்தை உண்டாக்குவோம்‌”’என்று யோசித்து இனி இதற்கு ஆவாரார்‌ என்று தேடி மீண்டும்‌ திருவநந்தாழ்வானையே. கடாக்ஷித்து ஜகத்தைத் திருத்தும்படி நியோகித்தருள அவரும்‌ அப்படியே

1–ததஸ்ததிங்கிதம்‌ தஸ்ய ஜாநந்நேவ ஜகக்நிதே: | தஸ்மிந் தாம்நி ஸடாராதே:புரே புநரவாதரத்‌ ॥ என்றும்‌
2–ஸம்ஸந்தி ஸமயம்‌ தஸ்ய துலாம் ப்ராப்தே த்விஷாம் பதெள |
மூலம்‌ ஹி ஸர்வ ஸித்தீநாம்‌ மூலருஷம்‌ ப்ரசஷதே ॥ என்றும்‌
3–யந் மூலயாஸ்வ யுஜமாஸ் யவதார மூலம்‌ காந்தோ பயந்த்ரு யமிந। கருணைகஸிந்தோ:
நஸீத ஸத்ஸு கணிதஸ்ய மமாபி ஸததா மூலம்‌ ததீத வஷகதுப்யுதயைக மூலம்‌ ॥என்றும்‌

1-அப்போது திருவநந்தாழ்வான்‌ பெரிய பெருமாளுடய திருவுள்ளத்தை யறிந்தவராய்‌, அதன்படியே சடகோபுனுடைய இருப்பிடமான அந்தத்‌ திருநகரியிலே மீண்டும்‌ அவதரித்தருளினார்‌-
2-ஸுரியன்‌ துலா ராசியை அடைந்திருக்கும் போது எல்லாகாரிய ஸித்திக்கும்‌ காரணமான மூல நக்ஷத்ரத்தை அந்தத்‌ திருவநந் தாழ்வானின்‌ அவதார காலமாக பூர்வாசாரியர்கள்‌ அருளிச்‌ செய்‌கிறார்கள்‌.
3–எந்த ஐப்பசி மாதத்தில்‌ மூல நஷாத்ரமானது கருணைக் கடலான மணவாள மா முனிகளின்‌ அவதாரத்துக்கு அடியாயிற்றோ அதே மூலமானது அஸத்துக்களில்‌ ஒருவனாக மதிக்கப்பட்ட
(தாழ்ந்தவனான) அடியேனுக்கும்‌ ஸத்தைக்குக்‌ காரணமாகவும்‌, உலகெல்லாம்‌ வாழ்வதற்கு முக்கிய காரணமாகவும்‌ அமைந்தது] என்றும்‌ சொல்லுகிற படியே திருவநந்தாழ்வானும்‌ தம்முடைய திருவவதாரத்துக்கு இடம்‌ பார்த்து ஆழ்வார்‌ திருநகரியிலே அண்ணர் தேவிகள்‌ கர்ப்பத்தை யடைந்து நவமாஸம்‌ சென்றவாறே

செந்தமிழ் வேதியர் சிந்தை தெளிந்து சிறந்து மகிழ்ந்திடுநாள்!
சீருல காரியர் செய்தருள் நற்கலை தேசு பொலிந்திடுநாள்!
மந்த மதிப்புவி மானிடர் தங்களை வானி லுயர்த்திடுநாள்!
மாசறு ஞானியர் சேரெதிராசர் தம் வாழ்வு முளைத்திடுநாள்!
கந்த மலர்ப்பொழில் சூழ்குருகாதிபன் கலைகள் விளங்கிடுநாள்!
காரமர் மேனியரங்க நகர்க்கிறை கண்கள் களித்திடுநாள்!
அந்தமிழ்சீர் மணவாள முனிப்பர னவதாரம் செய்திடுநாள்!
அழகு திகழ்ந்திடு மைப்பசியில் திருமூலமதெனுநாளே

பாதோபாவம்‌ கதாயாம்‌;கலியுக ஸரதி ஸ்ரத்தராயே ஸகாப்தே .
வர்ஷே ஸாதாரணாக்யே ஸமதிகததுலே வாஸரே தீர ஸங்க்‌யே |
வாரே ஜைவேசதுர்த்மாம்‌ ஸமஜநிசதிதெள ஸூக்லபஷே
ஸு*கர்மா ப்ராஜம்‌ மூலக்யதாரே யதிபதி ரபரோ ரம்ய ஜாமாத்ருந்‌ நாமா 1

கல்யப்தம்‌ 4471 என்ற எண்‌ அடைந்த வளவில்‌ சகாப்தம்‌ 1292ல்‌ ஸாதாரண வருஷத்தில்‌ சூரியன்‌ துலா ராசியை அடைந்துள்ள போது 26-ம்‌ தினத்தில்‌ வியாழக் கிழமையில்‌ விளங்கா நின்ற மூல நக்ஷத்ரத்தில்‌ சுக்ல பக்ஷ சதுர்த்தி திதியிலே ஸதாசார சீலராய்‌ ரம்ய ஜாமாத்ரு முநி என்னும்‌ !திருநாம முடையராய்‌ யதிபதி புநரவதாராய்‌ மணவாளமாமுனிகள்‌ அவதரித்தார்‌–என்கிறபடியே கலி யுகம்‌ பிறந்து நாலாயிரத்து நானூற்று எழுபத்தொரு வருஷத்துக்குப்‌ பின்பு’ ஸாதாராண வருஷம்‌ ஐப்பசி மாசத்தில்‌ சுக்ல பக்ஷத்தில்‌ சதுர்த்தியும்‌ வியாழக் கிழமையும் கூடின க்ர்ன திருமூலத்திலே (ஆங்கில கணக்கில் 1370)உபயவிபூதியும்‌ கொந்தளிக்கும்‌, குடியை யுடையரான திகழக்கிடந்தான்‌ திருநாவீறுடைய பிரான்‌ தாதரண்‌ண அரையருக்கு குமாரராகத்‌ திருவவதரித் தருளினார்‌. அநந்தரம்‌,

யஸ்மிந் ஸ்வ பாத பத்மேநப ஸ்பர்ஸ ப்ருதிவீ மிமாம்‌ |
கலிஸ்ச தத் ஷணேநைவ துத்ருவே தூரதஸ்தராம்‌ ॥

எப்போது அவர்‌ தமது திருவடித்‌ தாமரைகளால்‌ இந்த பூமியைத்‌ தொட்டாரோ அப்போதே கலிபுருஷனும்‌ வெகு தூரம்‌ ஓடி விட்டான் என்று இவர்‌ கால் காண கலி கால்‌ பறந்தோடிற்று:

இப்படி ஸமஸ்தாத்ம ஸமுஜ்ஜீவந ஜந்மாவாக அவதரித்‌தருளின தம்முடைய குமாரருக்கு அண்ணரும்‌ ஜாத கர்மம்‌ செய்‌தருளி பத்து நாளுங்கடந்த விரண்டாம் நாள்‌ திருவிலச்சினையும்‌ ப்ராஸாதித்து (முன்காலத்‌தில் குழந்தை பிறந்து புண்யாஹவாசநமானவுடன்‌ ‘புஷ்ப ஸமாஸ்ரயணம்‌” என்ற ஸம்ஸ்காரம்‌ பண்ணி வைத்தார்கள்‌. இதில் குழந்தைக்கு ஸுதர்ஸந பாஞ்சஜன்ய இலச்சினைகளை அக்நியால்லாமல்‌ திருமண்‌ ஸ்ரீ சூர்ணங்களால்‌ புஜங்களில் ஓத்துவது அநுஷ்டானம்‌. இத்த ஸம்ஸ்காரம்‌ இன்றும்‌ சில வைஷ்ணவர்களின்‌ ௮நுஷ்டாநத்திலுள்ளது. )
அததஸ்ய குரு: ஸ்ரீமாந் மத்வாதம்‌ திவ்ய தேஜஸம் |
அபிராம வராதீஸ இதி நாம ஸமாதிஸத்‌ ॥

ஸ்ரீமானாய்‌–அந்தக்‌ குமாரரின்‌ தமப்பனாரான அண்ணர்‌ அந்தக்‌ குமாரை, அப்ராக்ருகதா தேஜஸ்ஸை யுடையவராகக்‌ கருதி அவருக்கு அழகிய மணவாளப் பெருமாளென்று திருநாமம்‌ சாத்தினார்‌] என்கிறபடியே-பணமாடரவணைப்‌ பற்ப காலமும்‌ பள்ளி கொள் மணவாளரான அழகிய மணவாளப்‌ பெருமாளுடய திருநாமம் சாத்தி ஆயர் புத்திரனல்லனருந்‌ தெய்வம்‌ என்றும்‌
என்னையுமெங்கள்‌ குடிமுழுதாட்கொண்ட மன்னன்‌ என்றும் சொல்லுகிறபடியே விசேஷ ப்ரதிபத்தியுடனே மாதுல க்ருஹமான சிக்கல்‌ கிடரத்திலே வர்த்திப்பித்துக்‌ கொண்டு போர, இவரும்‌
பரபக்தி:பரஜ்ஞாநம்‌ பரமபக்திரித்பபி |
வபுஷா வர்த்தமாநேந தத்‌ தஸ்ய வவ்ருதே த்ரயம்‌ ॥

அந்த அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனாருடைய வளரும்‌ தேஹத்துடனே பரபக்தி பரஜ்ஞானம்‌ பரமபக்தி என்னும்‌ படியான மூன்றும்‌ வளர்ச்சி யடைந்தன-என்றும்‌
உன்‌ வளர்த்தி யூடே வளர்கின்றதாலுன்தன்‌ மாயை தானே என்றும் சொல்லுகிற படியே நாடோறும்‌ வர்த்தித்துக்‌ கொண்டு போரா நிற்க தம்முடைய திவ்ய வபுஸ்ஸோடே பரிணதங்களாய்‌ வளருகிற
பர பக்த்யாதிகளை வடிவாக வுடையராய்‌ வளர்ந்து செல்லுகிற காலத்திலே மீளவும்‌ தமப்பரான அண்ணர்‌
ப்ராப்தான் ப்ராதமிகே வர்ணே கல்பஜ்ஞா:கல்பயந்தி யாந் |
காலே காலே ச ஸம்ஸ்காராந்‌ தஸ்ய சக்ரே க்ரமேண ஸ :

கல்பத்ஸூத்ரங்களை யறிந்தவர்கள்‌ முதல்‌ வருணத்தவரான அந்தணர்கட்கு உரித்தாக எந்த ஸம்ஸ்காரங்களை (சடங்குகளை) விதித்தனரோ அந்த ஸம்ஸ்காரங்களை அவர்‌ (அண்ணர்‌) தமது குமாரருக்கு முறைப்படிப்‌ பண்ணினார்‌- ‘என்கிறபடியே செளள உபநயநங்களையும சாஸ்த்ர ப்ரகாரத்தாலே தத்தத் காலத்திலே செய்வித்‌து வேத சாஸ்த்ரங்களையும்‌ அதிகரிப்பித்துக்‌ கொண்டு போரா நிற்க அநந்தரம்‌,
ஆதாம்ரபாத மாஜாநு புஜமம்புஜலோசநம்‌ |
ஆகாரமஸ்ய ஸ்ம்பஸ்பந்‌ முக்தோபி முமுதே ஜந
– என்றும்‌
ஸெளஸீல்யேந ஸுஹ்ருத்வேந காம்பீர்யேண கரீயஸா |
ரஞ்ஜநேந ப்ரஜாகாஞ்ச ராமோ அயமிதி மேநிரே ॥

அறிவில்லாத ஐநங்களும்‌ செந்தாமரை போல்‌ சிவத்த திருவடிகளையும்‌ முழந்தாள்‌ வரையிலும்‌ நீண்டுள்ள திருக் கைகளையும்‌, செந்தாமரையை யொத்த திருக் கண்களையு முடைத்தான இவருடைய திருமேனியை ஸேவித்து மகழ்வெய்தினர்‌-
தாழ்ந்தவர்களுடனும்‌ நன்கு கலந்து பழகுமியல்பாலும்‌ யாவரிடத்துத்‌ ப்ரீதி யுடையரா யிருப்பதாலும்‌ மிகவும்‌ கம்பீரமான ஸ்வபாவத்தாலும்‌, ஜநங்களை மகிழ்விக்கையாலும்‌, இவர்‌ ராமபிரான்‌ என்று எண்ணினார்கள்‌–என்கிறபடியே அகல ஐநங்களையும்‌ ஆநந்திப்‌பித்துக் கொண்டு
காலேந ஸகலா நாம்ச கலாநாமேக மாஸ்பதம்‌ |:
ஸூஸூபே ஸதநம்‌ பூர்ண: ஸுதாம் ஸூரிவ நிர்மல: ॥

பின்னர்‌ எல்லா வித்யைகளுக்கும்‌ சிறந்த கொள்கலமான அழகிய மணவாளப் பெருமாள்‌ களங்க மில்லாத பூர்ண சந்த்ரன்‌ போலே எப்போதும்‌ விளங்கினார்‌ -என்கிற படியே-(மேகோபராக திரோஹிதனாய்‌ க்ருஷ்ணபஷே க்ஷயிஷ்ணுவாய்‌ ஸ களங்கனான தோஷா கரனைப்‌ போலன்றிக்கே அகளங்கித ஸதா ஸம்பூர்ண கலாயுத ராகா சந்த்ரனைப் போலே ஷோடஸவார்‌ஷிகரானவாறே ஷோடஸ ஸம்ஸ்கார ஸம்ஸ்க்ருதராய்‌ கலா பூர்த்தியால்‌ வந்த பரபூர்ண ஜ்ஞாநமுடையராய்‌ அத்தால்‌ அத்யந்தம்‌ ப்ரகாஸகராய்‌ போரா நிற்க ) பால சந்த்ரனாவன்‌ நாடோறும்‌ கலைகளாலே வர்த்தித்துக் கொண்டு பூர்ணனாய்‌ விளங்குமா போலே இவரும்‌ ஸகல கலா பூர்த்தியால்‌ வத்த பரி பூர்ண ஜ்ஞாதத்தாலே நிரதிஸய வைபவத்தை யுடையரா யெழுந்தருளி யிருந்தார்‌.

இனி கோயில்‌ வருத்தாந்த்தம்‌
அக் காலத்தில்‌ அங்கிருந்த மஹாத்மாக்கள்‌ நாடோறும்‌ பூர்வம்‌ போலே ஸ்ரீமந்‌ ஸ்ரீரங்க ச்ரிய மநுபத்ரவா மநுதிநம்‌ ஸம்வர்‌த்தய*” என்று ஸ்ரீரங்க ஐஸ்ர்வர்யம்‌ நித்யமாய்‌ நிர்வதிகமாய்‌ நிர் விக்நமாய்ச்‌ செல்ல வேணுமென்று –
திருப்பல்லாண்டும்‌,
ஏழை யேதலனும்‌,
ஆழி யெழச் சங்கும்‌ அநுஸந்தித்துப்‌ பெருமாளை ப்ரபத்தி பண்ணிப்‌ போருகையாலே
, அந்த மங்களாஸாஸநம்‌ பலித்து செஞ்சியில்‌ கோபணார்யனென்பானொரு வைஷ்ணவ ப்ரபு திருப்பதிக்குச்‌ சென்று திருவேங்கடத் தெம்பெருமானைத்‌ திருவடி தொழுது மீண்டு வருகிறவன்‌ அங்கே நம்பெருமாளை ஸேவித்து திருப்பதி யினின்றும்‌ நம்பெருமாளைத்‌ தன்னுடைய நகரமான செஞ்சி யேற எழுந்தருளுவித்துக் கொண்டு வந்து சிங்கராயபுரத்‌திலே யெழுந்தருளப் பண்ணிக்‌ கொண்டிருந்து பக்தி புரஸ்ஸரமாக ஆராதித்துக் கொண்டிருக்க, திருமணத்தூண்‌ நம்பியாகிய சிங்கப்‌ பிரானும்‌ காட்டிக்‌ கொடுக்க, பகவத் விட்டுக்களான துருஷ்கரை யடக்க ஸமயம்‌ பார்த்து, நிரவதிக பல ஸஹிதராய்ச்‌ செஞ்சியார்‌ சென்று நிஸ்ஸேஷமாக நிரஸித்து ஸ்வ நகரத்தினின்றும்‌ திரு வரங்கன் திருப்பதி யேற நம்பெருமாளைப்‌ பிராட்டிமாருடனே எழுத்தருளப் பண்‌ணி வைத்துக் கொண்டு யதாஸ்தாநத்தில்‌ பெரிய பெருமாளுடனே சேர்த்து ப்ரதிஷ்டிப்பித்து அனைத்தழகும்‌ கண்டருளப் பண்ணினானிறே –

ஆநீயா நீலச்ருங்கத் யுதிரசித ஐகத் ரஞ்ஜ நாதஞ்ஜ நாத்ரேஸ்‌ செஞ்ஜ்யா
யாராத்ய கஞ்சித்‌ ஸமயமத நிஹத் யோத்த நுஷ்காந்‌ துருஷ்காந்‌ |
லக்ஷ்மீ க்ஷமாப்யா முபாப்யாம்‌ ஸஹ நிஜ நிலயே அஸ்தாபயத்‌ ரங்கநாதம்‌
ஸம்யக்சர்யாம்‌ ஸபர்யா மக்ருத நிஜயஸோ தர்பணோ கோபர்ணார்ய: ॥

தனது, கண்ணாடி போல்‌ பளபளக்கின்ற புகழை யுடைய கோபணார்யனென்பவன்‌, முழுவதும்‌ கறுத்த கொடி முடியின்‌ காந்தியினால்‌ உலகுக்கு மகழ்ச்சியை யூட்டுகின்ற அஞ்ஜநாசல மென்னும்‌ திருவேங்கட்மலையிலிருந்து எழுந்தருளி வித்துக்கொண்டு வந்து, செஞ்சியில்‌ சில நாட்கள்‌ ஆராதித்து பின்பு வில்லேந்தித்‌ சண்டை யிட வந்த துருஷ்கர்களைக்‌ கொன்று, ஸ்ரீதேவி பூதேவிகளோடு கூட ரங்க நாதனை அவர்‌ தமது ஸ்தானமாகிய திருவரங்கத்தில்‌ ஸ்தாபித்தான்‌. திருவாராதனத்தையும்‌ மிகவும்‌
ஒழுங்குடையதாக நடத்தினான்‌ -என்று இவ்வார்த்தை அபியுக்தருமருளிச் செய்தாரிறே,

கொங்குங்‌ குடந்தையுங்‌ கோட்டியூரும்‌ பேரும்‌ எங்குந்திரித்து விளையாடும்‌ என்கிறபடியே மயல்மிகுபொழில்சூழ்‌ மாலிருஞ்‌சோலையிலும்‌ -விரையார்‌ பொழில்‌ வேங்கடத்திலும்‌ விஹரித்து!
ப்ரதிபக்ஷ நிரஸந பூர்வகமாக கோயிற்பிள்ளாய்‌! இங்கே போதராயே என்னும்‌ படியான தாம்‌ மீண்டு கோயில் ஏற வெழுந்தருளி , பஹு ப்ரியமான சகாப்தம்‌(சகாப்தம்‌ 1293 பரீதாபி வைகாசி என்று கோயிலோழுகு,) ஆயிரத்திருநூறு சென்ற வர்த்தமான பரீதாபி ஸம்வத்ஸரம்‌ வைகாசி மாஸம்‌ பதினேழாந்தேதியில் அரங்க நகரானது -ராமஸ் ஸீதா மநுப்ராப்ய ராஜ்யம்‌ புநரவாப்‌தவாந்‌’–இராமபிரான்‌ ஸீதையைப் பெற்றுத் திரும்பி மறுபடியும்‌ ராஜ்யத்தை அடைந்தான்‌-என்றும்‌, திருமகளோடினிதமர்ந்த செல்வன்‌ என்றும்‌, வீற்றிருந்த மணவாளர்‌ மன்னு கோயில்‌ என்றும்‌ சொல்லுகிறபடியே அழகிய மணவாளரான தாம்‌ நாய்ச்சிமாருடனே கூடி சேர பாண்டியன்‌ என்கிற திவ்ய ஸிம்ஹாஸநத்திலே சேர்த்தியுடனே யேறி யருளி இனிதுடன்‌ வீற்றிருத்து-செங்கோலுடைய திருவரங்கச்‌ செல்வனார்‌ என்னுமது தோன்ற திருவாரதனங் கண்டருளி வாழ்ந்தருளா நிற்க:

அச்செய்தியை தேசாந்தரஸ்தரான ஸ்ரீவைஷ்ணவர்களெல்‌லாரும்‌ கேட்டு,
பஹுநிநாம வர்ஷாணி கதஸ்ய ஸூ மஹத்வரநம்‌ 1
ஸ்ருணோம்யஹம ப்ரீதிககும்‌ மமநாதஸ்ய கீர்த்தநம்‌ ॥

பலவாண்டுகள்‌ மிகப் பெரிய கானகத்தை யடைத்த நம்பெருமாளுடையதாய்‌ மகிழ்ச்சியை உண்டாக்குகிற (திரும்பி யெழிந்தருளினாரென்னும்‌) நல் வார்த்தையைக்‌ கேட்கப் பெற்தேன்‌-என்கிறபடியே நெடுங்காலத்திற்காக இப்போது பெருமாள் எழுந்தருளப் பெற்றதே! என்று போர ப்ரீதராய்‌ அப்போதே யாவரும் வந்தடி வணங்கி, ‘*ப்ரஹ்ருஷ்ட முதிதோ லோக; -மக்கள்‌ மிகவும்‌ களிப்படைந்தனர்‌- என்றபடியே அத்யந்தம்‌ ஹ்ருஷ்டாரயிருக்க பெருமாளும்‌ ‘விஜ்வர: ப்ரமுமோதஹ”-ஜ்வரம்‌-கவலை- நீங்கியவராய்‌ மிகவும்‌ மகழ்வெய்தினார்‌- என்கிறபடியே துளக்கற்றமுதமாய்‌ எங்கும்‌ பக்க நோக்கறியாதே -ஸர்வரையுங்‌ குளிரக் கடாஷித்துக்‌ கொண்டு அன்பொடு தென் திசை நோக்கி அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனாரைக்‌ கடாக்ஷித்துக் கொண்டு எழுந்தருளி யிருந்தார்‌.

அழகிய மணாவாளய்‌ பெருமாள்‌ திருமலை யாழ்வாரை ஆஸ்ரயிக்தல்‌
அக் காலத்தில்‌ திகழக் கிடந்தான்‌ திருநாவீறுடைய பிரான்‌ தாதரண்ணர்‌ தம்முடைய திருக் குமாரராக வளர்ந்தருளுகிற பரம போகீந்த்ரரான அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனாருக்குத்‌ திருக் கல்யாணமுஞ்‌ செய்வித்து, பின்பு அருளிச் செயல்களையும்‌ ரஹஸ்யங்களையும்‌ தாமே யோதுவித்தருளினார்‌. அவரும்‌ அந்த உபகாரத்துக்கீடுபட்டு
ஸ்ரீ ஜிஹ்வாவ ததீஸ தாஸமமலமஸேஷ ஸாஸ்த்ர விதம்‌ |
ஸுந்தரவா குருகருணாகந்‌ தனிது ஜ்ஞாந மந்திரம்ச லேய ॥-ஸ்ரீஜிஹ்வார்க்யாதீஸம்‌ என்றும்‌ பாடமுண்டு-

கோட்டூரழகிய மணவாளப் பெருமாள்‌ பிள்ளையினருளால்‌ வருத்தியடைந்த ஜ்ஞாநத்திக் கிருப்பிடமாய்‌, எல்லா சாஸ்த்ரங்களையும்‌ குறையறக்‌ கற்றறிந்தவரான திருநாவீறுடைய பிரான்‌ தாதரண்‌ணரை த்யானிக்கிறேன்‌ -என்றும்‌
வாழி திருநாவீறுடைய பிரான்‌ தாதனருள்‌
வாழியவன்‌ மாமை வாக்கின்பம்‌–வாழியவன்‌
வீரன்‌ மணவாளன்‌ விரை மலர்ததாள்‌ சூடி.
பாரமதைத்‌ தீர்த்தளித்த பண்பு
‘-என்று அநுஸந்தித்தருளினாரிறே.

பின்பு சிலகாலம் சென்‌றவாறே அண்ணரும்‌ திருநாட்டுக்கெழுந்தருள, அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனாரும்‌ அவரை ஸம்ஸ்கரித்துப்‌ பள்ளிப் படுத்துதிருவத்யயநமும்‌ பெருக்க நடத்தி யருளினார்‌
அநத்தரம்‌ ஆழ்வார்‌ திருதகரியிலே தர்‌சந ப்ரவர்த்தகரா யெழுத்தருளியிருக்கிற திருமலையாழ்வாரும்‌, “இனி தர்சநப்‌ ப்ரவர்த்தகராவாரார்‌?” என்று விசாரித்துக் கொண்டு-தொண்டர்க்கமுதுண்ணச்‌ சொன்‌ மாலைகளான திருவாய்‌ மொழி, நிலத்தேவரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும்‌, பக்தாம்ருதம் என்னும்படி பரம போக்யமாக வவதரித்ததாகையாலே சப்த ரஸம்‌, அர்த்த ரஸம்‌, பாவ ரஸம்‌, என்கிற விவற்றை அநவரதம்‌ அநுஸந்தித்துக் கொண்டு ததேக் நிஷ்டராய்‌ தத் வ்யதிரிக்த சாஸ்த்‌ரங்களை த்ருணவத் ப்ரதிபத்தி பண்ணி யிருக்கையாலே திருவாய்‌ மொழிப் பிள்ளை என்று திருவாய்மொழி ஸம்பந்தத்தையே தமக்கு நிரூபகமாக வுடையராரய்‌ ஆழ்வார்‌ திருவடிகளிலே கைங்கர்யமே அநவரதமுஞ்செய்து கொண்டு போரா நிற்கிற திருவாய்மொழிப்‌ பிள்ளையினுடைய திவ்ய கடாக்ஷத்திற்கு விஷயமாமபடி அழகிய மணவாளப்பெருமாள்‌ நாயனாரும்‌ திருவநந்தாழ்வான்‌ சகந்தன்னைத்‌ திருத்த மருவிய குருகூர்‌ வளநகர்‌ வந்து-என்‌கிற படியே ஸ்வ மாதுல க்ருஹமான சிக்கில் கடாரத்திலிருந்து தமக்கு ஜந்ம பூமியான திருநகரியேற வெழுந்தருளி பொருநற்சங்கணி
துறையிலே சங்கங்கள்‌ சேறுமா போலே சங்க வண்ண நம்பியுடைய அவதாரமாகையாலே சுத்த ஸ்வபபாவரான தாமும்‌ திருவாய்‌ மொழிப் பிள்ளை திருத்‌ தாள்‌ சேர்ந்து என்கிறபடியே மெய்ஞ்ஞானத்‌
துறையான பிள்ளை திருவடிகளிலே ஆச்ரயித்து ”அஸிஸரியதயம்‌ பூய: ஸ்ரீ ஸைலாதீஸ தேஸிகம்‌” -இந்த அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ திருமலை யாழ்வாரென்னும்‌ ஆசார்யரை ஆஸ்ரயித்தார்‌-என்கிறபடியே *தேசந்திகழுந்‌ திருவாய்மொழிப்பிள்ளை வாச மலர்த்தாளடைந்து வைத்து என்னும்படி விலஷாண ஸம்பந்த யுக்தராய்‌;
ததஸ்‌ ஸ்ருதிதரஸ் ஸோயம்‌ தஸ்மாத்தஸ்ய ப்ரஸாதத: |
அஸேஷாந ஸ்ருணோத் திவ்யாந்‌ ப்ரபந்தாந்‌ பந்தாச்சித: ॥

பின்னர்‌ ஸாங்க வேதாத்யயநம்‌ பண்ணிய இவ் வழகிய மணவாளப்‌ பெருமாள்‌ திருமலையாழ்வாருடைய அருளால்‌ அவரிடமிகுத்து ஸம்ஸார பந்தத்தை யறுப்பதான எல்லா வருளிச்செயல்‌களின்‌ தாத்பர்யங்களையும்‌ கேட்டறிந்தார்‌-என்திறபடியே த்ராவிட வேத ததங்கோபாங்கங்களான ஸமஸ்த திவ்ய ப்ரபந்த தாத்பர்யங்க ளையும்‌ அவருபதேச முகத்நாலே.லபித்து மிக்க வேதியர்‌ வேதத்‌த்தின் உட்ப்பொருளானnசரம பர்‌ வத்திலே நிஷ்ட்டராய்‌- ஸேஷித்வ ஸரண்யத்வ ப்ராப்யத்வங்கள்‌ மூன்றையும்‌ பிள்ளை விஷயத்திலே அநுஸந்தித்து, (அன்னையுமத்தனு மாசாரியனு மனைத்துறவும்‌, மன்னிய பேறுமுபாயமும்‌ தெய்வமும்‌ மற்றுமெல்லாம்‌, என்னை யளித்த திருவாய்மொழிப்‌ பிள்ளையென்று நெஞ்சே! உன்னியிராது மற்றோன்‌றில்‌ புல ஓதுவதே’ என்றும்‌, விண்ணும்‌ திருமலையாழ்‌ வாழ்வார் வடிவு விரைபுடைசூழ்‌, மண்ணும்‌ திருமலை யாழ்லார்‌ வடிவு மற்றொங்கும்‌, கண்ணும்‌ திருமலை யாழ்வார்‌ வடிவன்றித்‌ காண்டகிறிலேன்‌, என்றும்‌ திருலையாழ்வார்‌ வடிவெங்கும்‌ யாவர்க்குமே–என்றும்‌. )ததேக நிஷ்டரா யெழுந்தருளி யிருக்கிற இவரை:

நாயனாரை திருவாய்மொழிப் பிள்ளை உடையவர் திருவடிகளில் ஈடுபடுத்தல்‌
பிள்ளை தாமே உகந்து உடையவர்‌ திருவடிகளைக்‌ காட்டிக்‌ கொடுத்தருள உன் பதயுகமேர் கொண்ட வீட்டை எளிதினிலெய்துவன்‌ என்கிறபடியே பரம புருஷார்த்தத்தை ஸுலபமாக லபித்து அத்யந்த ஹ்ருஷ்டராய்‌ எழுந்தருளி இருக்க, அவ்வளவில்‌ பிள்ளையும்‌ ஆழ்வார்‌ திருவடிகளிலே ப்ராவண்யாதிசயத்தாலே அவரடி பணிந்துய்ந்த எம்‌பெருமானார்‌ திருவடிகளிலும்‌ அதி ப்ராவண்யத்தை யுடையவாராய்ப்‌ போருகையாலே ராமாநுஜ பதாம் போஜ த்வந்த்வ கைங்கர்யத்திலே அந்வயிக்க வேணுமென்று திருவுள்ளமாய்‌ அப்படியே தத் கைங்கர்யத்திலே அந்வயித்து
அவகாஹித்து அதுவே தமக்கு தாரகாதிகளாகச்‌ செய்து கொண்டு போருகிறவர்‌, உடையருக்குத்‌ தனிக் கோயில்‌ தொடக்கமான அனைத்தழகுங் கண்டருளப்‌ பண்ணி, கோயிலை வளைய ராமாதுஜ சதுர்வேத மங்கலம்‌.என்கிற திரு வீதியையும்‌ உண்டாக்கி, அங்கே ராமாநுசனைத் தொழும்‌ பெரியோரையும்‌ ப்ரதிஷ்டிப்பித்து, தாமும்‌ ஸூக ப்ரதிஷ்டிதராய்‌ எழுந்தருளி யிருந்தார்‌.
நாயனார் யதீராஜ விம்சதீ விண்ணப்பம் செய்தல்‌
அநந்தரம்‌ நாயனாரும்‌ தமக்குப்‌ பிள்ளை ப்ராப்யமாகக்‌ காட்டி யருளின உடையவர்‌ திருவடிகளிலே யதீந்த்ர ப்ரவணர்‌ என்னும்படி அத்யந்தம்‌ ப்ராவண்யத்தை யுடையராய்‌ தம்முடைய ப்ரேமாநுகுணமாக யதிராஜ விம்சதியை அவ்வெம்பெருமனார்‌ விஷயமாக அருளிச்‌ செய்ய, அந்த உபகாரத்திற்கு
வல்லார்கள்‌ வாழ்த்துங் குருகேசர்‌ தம்மை மனத்து வைத்துச்‌
சொல்லார வாழ்த்தும்‌ மணவாள மா முனி தொண்டர்‌ குழாம்‌
எல்லாந் தழைக்க எதிராச விம்சதி யின்றளித்தோன்‌
புல்லாரவிந்தத்‌ திருத்தாளிரண்டையும்‌ போற்று நெஞ்சே
-என்று பின்புள்ளாரும் அநுஸந்தித்து ஈடுபடும்படியாயிற்று,

இவருடைய விண்ணப்பமான விம்சதியைப்‌ பிள்ளையுங் கேட்டு உகந்தருளித்‌ திருப்புளி யாழ்வாரடியிலே தாம்‌ கண்ட(கண்டெடுத்த) தம் முடையவரையும்‌ (இந்த ஸன்னிதியில்‌ ப்ரதிஷ்டிப்பிதுள்ள உடையவர்‌ திருமேனி(உத்ஸவர்‌) பற்றி பெரியோர்‌ வாய் வழி வரும்‌ வரலாறு: மதுரகவிகள்‌ ஆழ்வாரின்‌ ஸ்வப்ந முக நியமனப்படி ஆழ்வார்‌ திருமேனி எழுந்தருளப்‌ பண்ணுவதாக தாம்ரபரணி நீரைக்‌ காய்ச்ச-முதலில்‌ உடையவர்‌ திருமேனி ஆவிர்ப்பவித்தாகவும்‌, மதுரகவிகள்‌
மாநஸிகமாய்‌ “இது உமது திருமேனி யல்லவே” என்று ஆழ்வாரை வேண்ட, ஆழ்வாரும்‌ இது *பொலிக பொலிக திருவாய்‌ மொழிக்கு விஷயமான பவிஷ்யதாசார்ய விக்ரஹம்‌; கலியுங்‌ கெடும்‌ கண்டு கொண்மின்‌ என்னும்படி இவர்‌ அவதரிக்கப்‌ போகிறார்‌. இவரை ஆராதியம்‌. மீண்டும்‌ தாம்ரபரணி நீரைக்‌ காய்ச்சும்‌; நாம்‌ அர்ச்சையாக ஆவிர்ப்பவிக்கிறோம்‌” என்று நியமிக்க, மதுரகவிகளும்‌ அப்படியே செய்ய, இன்றும்‌ உபதேச முத்ரையுடன்‌ ஸேவை தரும்‌ ஆழ்வார்‌ திருமேனி ஆவிர்ப்பாவித்தாகவும்‌
சொல்வர்‌. ஆழ்வார்‌ திருமேனிக்கும்‌ முன்னரே ஆவிர்ப்பவித்த உடையவர்‌ திருமேனியே இன்றும்‌ ஆழ்வார்‌ திருநகரி உடையவர்‌ ஸன்னிதியில்‌ ஸேவிப்பது என்று பெரியோர்‌ பணிக்கும்படி. )
இவர்க்கு ‘ப்ரஸாதித்தருளி இவரும்‌ ‘ஸ்ரீமந்யதீத்த்ர! தவ திவ்ய பாதாப்ஜ ஸேவாம்‌ ஸ்ரீஸைல நாத கருணா பரிணாமதத்தாம்‌” (யதிராஜ விம்சதி -19) என்று அநுஸந்தித்து ப்ரிதராய்‌, ‘ யதீந்தர்மேவ நீரந்த்ரம்‌ நிஷேவேதைவதம்பரம்‌--எம்பெருமானாரையே பரதெய்வமாக அத்யவஸித்து நித்யமாய்‌ கைங்கர்யம்‌ பண்ணிக்‌ கொண்டிருந்தார்‌–என்கிறபடியே அவருக்கு உகப்பாக ததாராதன பரராய்‌ ததேக நிஷ்டரா யெழுந்தருளி யிருக்க, இப்படி ஆழ்வாருடையவும்‌ எம்பெருமானாருடையவும்‌ கைங்கர்யமே புருஷார்த்தமாக வெழுந்தருளி யிருக்கிற பிள்ளையும்‌ அப்போதைக்கப்‌போது அபிநவங்‌களாய்‌ வர்த்தித்துக் கொண்டு போகிற இவருடைய ஜ்ஞான பக்த்யாதிகளைக்‌ கண்டு (ஜ்ஞான பக்தி வைராக்யங்கள்‌ இட்டு மாறினாப்‌ போலே வடிவிலே தொடை கொள்ளலாம்படியான இவருடைய பரமாஸ் திகத்வத்தைக்‌ கண்டு-)அபிமத விஷயத்தைக்‌ கண்டாற்‌ போலே ஆதரித்துப்‌ போரா நிற்க;

பின்பொருநாள்‌ தமது திரு நந்த்த வனத்தில்‌ விளைகிற பச்சைக் சகறியமுதை இவர்க்குப்‌ போக விட்டருள, இவரும்‌ “இப்படிச்‌ செய்‌தருளுவதே?’” என்று விண்ணப்பஞ்‌ செய்ய, பிள்ளையும்‌ உம்மைப் போலே வொரு விஷயத்தைப்‌ பெறாமையாலே அர்ச்சாவதாராத்திலே மண்டினோம்‌*’ என்று அருளிச்‌ செய்து தாமும்‌ விரக்தராய் விருக்கச்‌ செய்தேயும்‌ இவருடைய ளெளகுமார்யத்துக் கநுகுண மாக அமுது செய்தருளுகை தொடக்கமான எல்லா உபுசாரங்களையு மாராய்ந்து கொண்டு போருகிறபடியையும்‌, அங்கீ கரித்த வன்று தொடங்க பங்க்திபாவநராம்படி அபிமானித்து ஆதரித்துக்‌ கொண்டு போருகிற படியையுங்‌ கண்டு ஸ்ரீபாதத்து முதலிகளுக்கு இவரிடத்தலே அஸுயை நடந்து செல்ல, இத்தை ஸர்வஜ்ஞரான பிள்ளை அறிந்தருளி அவர்கள்‌ அபசாரப்படாதபடி இவருடைய சேஷாஹிபதிவேஷாந்தரத்தை எல்லோரும்‌ ப்ரத்யஷீ கரிக்கும் படி வாக் சாதுர்யங்களாலே காட்டி யருளி, அவர்களுக்கும்‌ இவரிடத்‌திலே விசேஷ ப்ரதி பத்தியை விளைவித்துப்‌ போரா நிற்க, இவரும்‌ பிள்ளை திருவுள்ளத்தை உகப்பித்துக்‌ கொண்டு அங்குத்தைக்கு விதேயரா யிருக்கிற காலத்திலே ஈடு முப்பத்தாறாயிரம்‌ பாட மிட்டருளி மற்று முண்டான வ்யாக்யானங்களையும்‌ பாடப்ராயமாகப்‌ பண்ணி யிருக்கிற காலத்திலே நாயனாருக்கு திருக்குமாரர்‌ ‘திருவவதரிக்க, “’திருநாமமேது?” என்று பிள்ளையைக்‌ கேட்டருள, “ஒருக்கால்‌ சொன்னாற்போலே தூற்றெட்டுதரம்‌ சொல்லி யிருக்கிறதே!’” என்றருளிச்‌ செய்ய, எம்யைனிராமானுசன்‌ என்று : திருநாமம்‌ சாத்‌தியருளித்‌ தாமும்‌ *இராமானுசன்‌ திருநாமம்‌ நம்ப வல்லராய்‌ வாழ்ந்து கொண்டு போரா நிற்க; ஒரு நாள்‌ ஒரு திருவாதிரை நக்ஷத்ரத்திலே பிள்ளையும்‌ முதலிகளும்‌ அமுது செய்தருளா நிற்க,
இன்றோ வெதிராசரிவ்வுலகில்‌ தோன்றிய நாள்‌
இன்றோ கலி யிருள்‌ நீங்கு நாள்‌-
-என்று பிள்ளை ஈடுபட்டருளி மேல்‌ அருளிச்‌ செய்ய மாட்டரமல்‌ இத்தையே பலகாலுமருளிச்‌ செய்து கொண்டிருக்க
இன்றோ தான்‌ வேதியர்கள்‌ வாழ, விரை மகிழோன்‌ தான்‌ வாழ
வாதியர்கள்‌ வாழ்வடங்குநாள்‌–
என்று தாயனார்‌ தலைக்கட்டியருள, இதைக்கேட்ட பிள்ளை மிகவும்‌ ப்ரீதராய்‌ அமுது செய்யா நிற்க மத்யே தளகைப்‌ ப்ரஸாதம்‌ பரஸாதித்து பிகவும்‌ க்ருபை பண்ணி யருளினார்‌. இப்படி சிஷ்யாசார்ய க்ரமம்‌ நன்றாக நடந்து செல்லுகிற காலத்திலே ஸ்ரீபராங்குச தாஸரான்‌ பெரிய நம்பியை ஆஸ்ரயித்த ஏற்றம்‌ எம்பெருமானார்க்கு உண்டானாற்போல சடகோப தாஸரான பிள்ளையை யாஸ்ரயித்த வேற்றம்‌ இவர்க்குண்டாயிற்றென்று எல்லாரு மிவரை உடையவருடைய அவதார விசேஷமென்று ஆதரித்துக் கொண்டு போந்தார்‌கள்‌.

இப்படி அவதார விசேஷமான இவர்‌
வடமாமலை முதல்‌ மல்லனந்தபுரி யெல்லை மல்கித்‌
திடமாக வாழுந் திருவுடைய மன்னிரில்‌ தேசுடையோன்‌
திடமான ஞான விரக்தி பரமிவை சேர நின்ற
சடகோப தாதர்‌ குருகூர் வாழ்‌ பிள்ளையைச்‌ சேரு நெஞ்சே
-என்றும்‌
நம ஸ்ரீஸைல நாதாய குந்‌தீ நகரா ஜத்மநே !,ப்ரஸாத லப்த பரம
ப்ராப்ய கைங்கர்யய ஸாலிநே ॥
என்றும் -குந்தி புரத்தில்‌ திருவவதரித்தருளி ஆழ்வாரருளால் பெறப்பட்ட நிரதிசய ப்ராப்பமான கைங்கர்யத்தினால்‌ விளங்கும் திருவாய் மொழிப் பிள்ளயை வணங்குகிறேன்‌ —
செந்தமிழ்‌ வேதத் திருமலை யாழ்வார்‌ வாழி
குந்தி நகர்க்‌ கண்ணல்‌ கொடை வாழி—உந்திய சீர்‌
வாழியவனமுத வாய்‌ மொழி கேட்டப் பொருளில்‌
தாழுமற்றன்பர்‌ திருத்தாள்‌-
-என்றும் இத்தனியன்களை பிள்ளை விஷயத்தில்‌ தாமுமநுஸத்தித்‌தருளினார்‌. அநந்தரம்‌ உகப்புடனே இங்கிருக்கும்‌ காலத்திலே பிள்ளை
அப்யர்ச்ய நந்ததநயம்‌ கரபங்கஜாத்த வேணும்‌ ததீய சரண
ப்ரவணார்த்ரசேதா: |
கோதாபிதுர் கஹந ஸூக்தி நிபந்தநஸ்ய வ்யாக்யாம் வயதாத்‌
த்ரவிட வேத குரு: ப்ரஸந்நாம்‌-என்றும்‌ ॥

செந்தாமரைக் கைகளாலே தரிக்கப்பட்ட புல்லாங்குழலை யுடைய இன வாயர்‌ தலைவனை நன்றாக வாராதித்து, ‘ அக் கண்ணன்‌ கழலிணையில்‌ ப்ரேமத்துடன்‌ ஆழ்ந்த மனத்தை யுடைய திருவாய்‌
மொழிப் பிள்ளை பெரியாழ்வா ருடைய கம்‌பீரமான பாசுரங்களுக்குத்‌ தெளிவான வியாக்கியானத்தை அருளிச்‌ செய்தார்‌

அநந்தன்‌ திருமலை யாழ்வாரென வந்த வதரித்து
தனம் தன்கைப்படிற்றானம்‌ செய்வனென்று தரணி தனில்‌.
அநந்தம்‌ புரிய சடகோபனருட்‌ காட்செய்வது
இனந் தனிலொக்கு மென்று எல்லோரும்‌ பாவித்திருப்பதுவே
-என்றும்‌ பிள்ளையுடைய வைபவத்தை மற்றுமுண்டானவர்களும்‌ அநுஸந்தித்தார்கள்‌.

அழகிய மாணவாள எம் பெருமாளுக்குப்‌ பிள்ளை சரம நியமனம்‌.
இப்படி ஜ்ஞான பக்தி வைராக்யங்களை வடிவாக வுடையராய்‌, அத்தாலே வந்த மஹா ப்ரபாவத்தை யுடையரான பிள்ளை கைங்கர்யஸ்ரீயோடே நெடுங்காலம்‌ வாழ்ந்தருளி, பின்பு நித்ய விபூதியிலே
நித்ய கைங்கர்யாதராய்‌ வாழ்க்கையில்‌ நினைவாய்‌,
உத்தமனே! உலகாரியனே! மற்றொப்பாரை யில்லா
வித்தகனே ! நல்ல வேதியனே ! தண் முடும்பை மன்னா!
சுத்த நன்ஞானியர்‌ நற்றுணையே! சுத்த ஸத்துவனே!
எத்தனை காலமிருந் துழல்வேன்‌ இவ்வுடம்பு கொண்டே-
-என்று
அதற்கு ப்ரதி பந்தகம்‌ திருமேனி யோட்டை ஸம்பந்தமென்று அறுதி யிட்டு தத் விமோசனத்தையும்‌ தம்‌ தேசிகரிடத்திலே யபேக்ஷித்துக் கொண்டே யிருக்க, ௮வ்‌ வளவிலே திருமேனியிலே நோவு சாத்தி மிகவும் தளர்ந்து கண் வளர்ந்தருளுகிறவர்‌ பெரிய கிலேசத்துடனே முத்து எழுந்தருளியிருக்க, “இது என்‌?” என்று நாயனார்‌ தொடக்கமான முதலிகள்‌ கேட்டருள, காலம்‌ கலிகால மாகையாலே ஆழ்வார்கள்‌ திவ்ய ஸூக்தகளான அருளிச் செயலிலே ருசி விஸ்வாஸங்களை யுடையராய்‌ இத்தை வளர்த்துப் போருவார்‌ ஆர்‌? என்று மிகவும்‌ க்லேசமாயிரா நின்றது” என்ன, பின்பு நாயனாரும்‌ திருவடியிலே ஸேவித்து அடியேன்‌ அப்படியே செய்‌கிறேன்‌’? என்ன, ”கேவலம்‌ வார்த்தை போராது” என்ன
நாயனாரும்‌ திருவடிகளைத் தொட்டு சபத பூர்வகமாக அப்படியே செய்கிறேன்‌” என்றருளிச் செய்ய, பின்பு திருவுள்ளம்‌ தேறி,நாயனாரை யழைத்தருளி, ஸம்ஸ்க்ருத சாஸ்த்ரங்களிலே பல காலும்‌ கண் வையாமல்‌ ஸ்ரீபாஷ்யத்தை ஒருக்கால்‌ கேட்டு தமக்கும்‌ எம்பெருமானாருக்கும்‌ ப்ரியமாகத்‌ திருவாய்மொழி முதலான அருளிச் செயலிலே அநவரதம்‌ பரிசீலனை பண்ணிக் கொண்டு பூர்வர்களைப் போலே பெருமாளுக்கு மங்களா சாசன பரராய்க்‌ கொண்டு கோயிலிலே நித்ய வாஸமாக எழுந்தருளியிரும்‌”‘ என்று நியமித்தருளி மற்று முண்டானவர்களை யழைத்தருளி நாயனார்‌
திருக்கையிலே காட்டிக் கொடுத்தருளி இவரை அவதார விசேஷமென்று ஆதரித்துப் போருங்கோள்‌” என்று அருளிச் செய்து ந்யஸ்த பரராய்‌ பின்பு மாக வைகுந்தம்‌ காண்பதற்கு என் மனமேக
மெண்ணும்‌ என்கிறபடியே அதிலே அபிவ்ருத்த மநோ ரதராய்‌ பிள்ளை லோகாசாசியர்‌ திருவடிகளைத் த்யானித்துக்‌ கொண்டு வைசாக பஹுள அஷ்டமியில்‌ திருநாட்டுக் கெழுந்தருளினார்‌.(ஊூனொழிந்தால்‌ நானிருந்ந உயர்திவத்து வாரும்‌ என்ற ஸ்வாசாரியரான பின்னைலோகாசாரியர்‌-)

திருவாய் மொழிப் பிள்ளையின் தன்னேற்றம்
அநந்தரம்‌ நாயனார்‌ தொடக்கமான முதலிகளெல்லாரும்‌ ஆசார்ய வியோகா அஸஹிஷ்ணுக்களாய்‌ அத்யந்தம்‌ ஆர்த்தராய்‌ க்லேசித்துத்தேறி ப்ரஹ்மமேத ஸம்ஸ்காரத்தாலே பள்ளிப்படுத்து தீர்த்தம்‌ கொண்டாடி பதிமூன்றாந்‌ திவஸத்திலே திருவத்யயனமும்‌ நன்றாக நடத்தி யருளினார்கள்‌ -நாயனாரும்‌ ப்ரதிவருஷம்‌ வைகாசி மாஸத்தில்‌ அபர பக்ஷத்தில்‌ அஷ்டமி தோறும்‌ ஸ்ரீ வைஷ்ணவர்களை நன்றாக அமுது செய்யப்‌ பண்ணி யருளி “’முப்பழமுமுண்டாகப்‌ பெறுவதே தீர்த்த திவஸம்‌!!’ என்று பரிபாலித்துக்‌ கொண்டு (ஆசார்ய நியமனத்தில் படியே திருவாய்மொழி முதலானஅருளிச் செயல்களை வயாக்யானத்துடன்‌ அநுஸந்தித்துக்‌ கொண்டு-) எழுந்தருளி யிருந்தார்
பெண்களும்‌ பேதைகளும்‌ உஜ்ஜீவிக்கும்படி பரமார்த்த விசேஷங்களை ஸுக்ரஹமாகப்‌ பண்ணப் பெற்ற தன்னேற்றமும்‌ பிரிவில்‌ தரியாமையை முன்னிட்டு பின்‌ தொடரந்தடிமை செய்யப்‌ பெற்ற தன்னேற்றமும்‌, பிள்ளை லோகாசாரியருக்கே உள்ள தொன்றிறே, ஸரரீரமர்த்தம்‌ ப்ராணஞ்ச ஸத் குருப்யோ நிவதயேத்‌” (உடல்‌ தனம்‌, உயிர்‌ யாவற்றையும்‌ ஸதாசாரியர்‌ பொருட்டுப்‌ பயன்படுத்த வேண்டும்‌) என்கிறபடியே பரமாசாரியரான பராங்குசரையும்‌ தத் ப்ரிய சிஷ்யரான உடையவரையும்‌ திரு நகரியிலே ப்ரதிஷ்டிப்பித்து அனைத்தழகுங் கண்டருளப்‌ பண்ணின தன்னேற்றமும்‌, ஆழ்வார்களின்‌ அருளிச்‌ செயல்களை ருசி விச்வாஸ பூர்வமாக ப்ரவர்த்திப்பித்துக்‌ கொண்டு போந்த
தன்னேற்றமும்‌, திருவாய்மொழிப்பிள்ளை யொருவர்க்கே யுள்ள தொன்றிறே.
இவர்‌ திருநக்ஷத்ரம்‌ வைகாசி விசாகம்‌, இவர்‌தனியன்‌:
நமஸ்‌ ஸ்ரீ ஸைல நாதாய குந்தீ நகர ஜக்மநே |
ப்ரஸாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய ஸாலிநே ॥

அநந்தரம்‌ நாயனாரும்‌ ஆசாரியன்‌ நியமித் தருளின படியே திருவாய்மொழி முதலான அருளிச்‌ செயல்கள் வ்யாக்யானமாக அநு ஸந்தித்துக்‌ கொண்டு.
ததஸ்து மூல பூதேஷு தேஷு திவ்யேஷு யோகிஷு
வவ்ருதே வர்த்தயந் பக்திம்‌ வகுளா பரணாதிஷு
ததா தத்தத் ப்ரபந்தார்த்த ஸம் ப்ரதாய ப்ரவர்த்தகாந்‌
அயமாத்ரியத ஸ்ரீமாந்‌ ஆசார்யாநாதி மாநபி

பின்னர்‌ ஸ்ரீமானான இவ் வழகிய மணவாளப் பெருமாள்‌ ப்ரபந்ந ஜந கூடஸ்தர்களாய்‌ பெரு மதிப்புற்ற நம்மாழ்வார்‌ முதலான ஆழ்வார்களிடத்தில்‌ பக்தியை வளர்த்துக்‌ கொண்டு(தாமும்‌) வளர்ந்தருளினார்‌; அப்படியே அந்த ஆழ்வார்களருளிச்‌ செய்த ஸம்ப்ரதாயார்த்தங்களை அநுஷ்டானத்தல்‌ ப்ரவர்த்தியா
நின்ற பூர்வாசாரியர்களையும்‌ (ஆசார்யகளிடமும்‌) ஆதரித்துப்‌ போந்தார்‌ (மிக்க ஆதரம்‌ காட்டினார்‌] என்கிறபடியே விலஷண ப்ரமாண ப்ரமேய ப்ரமாதாக்களிடத்தில்‌ விசேஷ ப்ரதிபத்தியை யுடையராய்த்‌ திருநகரியிலே தர்சநத்தை வளர்த்துக்‌ கொண்டு போருகிற நல்லடிக்‌ காலத்திலே

அழகிய வரதர்‌ நாயனாரை ஆஸ்ரயித்தது.
ஸ்ரீஸெளம்ய ஜாமாத்ரு முநீஸ் வரஸ்ய ப்ரஸாத ஸம்பத்‌ ப்ரதமாஸ்பதாய” ஸ்ரீஸெளம்ய ஜாமாத்ரு முநீஸ்வரருடைய (அழகிய மணவாளர்‌ பின்னர்‌ உத்தமாஸ்ரமம்‌ பெற்று ஸெளம்ய ஜாமாத்ரு முனி- மணவாள மாமுனியானார்‌. ) அருட்‌ செல்வத்துக்கு முதல்‌ கொள்கலமான] என்கிறபடியே
அழகிய வரதர்‌ (இவரே பின்னர்‌. ‘ஒண்ணான ஸ்ரீவானமாமலை ஜீயரானவர்‌,-பொன்னடிக் கால்‌ ஜீயர்‌-என்றழைக்கப்பட்டவர்‌ ) சேனை முதலியார்‌ தொடக்கமானவர்கள்‌ இவர்‌ வைபவத்தைக்‌ கேட்டுத்‌ திருவடிகளிலே ஆஸ்ரயித்தார்கள்‌ —அவர்களிலே அழகிய வரதர்‌, அப்போதே ஸந்யசித்து ‘ராமாநுஜ ஜீயர்‌’” என்னும்‌ திருநாமத்தை யுடையலராய்‌, நாயனாருக்கு நிழலுமடிதாறு மானோம்‌ என்னும்படி ஸதா பாதரேகா ஸமராய் நாயனாரை நித்ய ஸேவை பண்ணிக்‌ கொண்டு போந்தார்‌.

நாயனார் திரு வரங்கத்து எழுந்தருளுதல்
இப்படி அந்தரங்கரானவர்களோடே கூட எழுந்தருளி யிருக்‌கிறவர்‌ –ஸூபேந மநஸாத் யாதம்‌: என்கிறபடியே அப்போதொரு சிந்தை செய்து,-நமக்கெல்லாம்‌ நற்சீவனமான நம் பெருமாளை சேவித்துக் கொண்டு அத்தலைக்கு அதிசயாவஹராய்‌ மங்களாசாஸனம்‌ பண்ணிக்‌ கொண்டு யாவத் தேஹாவஸாதம்‌ அங்கே யிருக்கை யன்றோ தமக்கு ப்ராப்தம்‌” என்று அறுதியிட்டு, அப்போதே ஆழ்வார்‌ திருமுன்பே சென்று ஸேலித்து, நண்ணா வசுரர்‌ நலிவெய்த நல்லவமரர்‌ பொலிவெய்த, எண்ணாதனக
ளெண்ணும்‌ நன்முனிவர்‌ இன்பந் தலைச்சிறப்ப, பண்ணார்‌ பாடலின்‌ கவிகளைப்பாடி தேவரீர்‌ மங்களாசாஸனம்‌ செய்தருளுகையாலே பெருமாளுடைய ப்ரதிபந்தங்ளெல்லாம்‌ நிரஸ்தமாய்ப்‌ பண்டு போல அனைத்தழகும்‌ கண்டருளுகிறார்‌; அடியேன்‌ பெருமாளை ஸேவிக்க விடை கொள்ளுகிறேன்‌
” என்று விண்ணப்‌பஞ்‌ செய்ய, அப்படியே நம்மாழ்வாரும்‌ விடை கொடுத்தருளினார்‌.

அநந்தரம்‌,
தத: கதிபயைர் திவஸைஸ்‌ ஸகுருர்‌ திவ்ய தர்ஸந |
ஆஜகாம பரந்தாம ஸ்ரீரங்கம்‌ மங்களம்‌ புவ:

பின்பு திவ்யமான திருமேனித்‌ தேற்றத்தை யடைய அந்த நாயனார்‌ சில தினங்களில்‌ உயர்ந்த திவ்ய தேசமாய்‌ பூமிக்கு மங்களகரமான ஸ்ரீரங்கத்துக்கு வ்ந்து சேர்ந்தார்‌- என்கிறபடியே முதலிகளும்‌ தாமுமாக, எம்பெருமான்‌ திருவரங்கம்‌ எங்கே என்று நாடிக்‌ கொண்டு புறப்பட்டெழுந் தருளுகிறவர்‌ – வில்லி புத்தூருறைவான் தன்‌ பொன்னடி காண்பதோராசையினாலே அங்கே எழுந்தருளி வட பெருங் கோயிலுடையானையும்‌ பெரியாழ்வாரையும்‌ திருவடி தொழுது. அநந்தரம்‌ அன்ன வயல் புதுவை யாண்‌டாளையும்‌ ”நீளா துங்கஸ்‌ தந கிரிதடீ” என்று தொடங்கி, கோதா”தஸ்யை நமஇதமிதம்‌ பூய,” என்கிறபடியே ஸேவித்து,

தேவஸ்ய மஹிஷீம்‌ திவ்யாம்‌ ஆதெள கோதாமுபாஸநத்‌ |
யந் மெளலி மாலிகாமேவ ஸ்வீகரோதி ஸ்வயம்‌ ப்ரபு –

எந்த ஆண்டாளுடைய திருக் குழலில்‌ ‘ சாத்தின திருமாலையையே ஸ்வாமியான அழகிய மணவாளன்‌ ஆதரவுடன்‌ சாத்திக்‌ கொள்கிறானோ, அந்த அழகிய மணவாள தேவனுடைய திவ்ய மஹிஷியான கோதையை முதல்‌ முன்னம்‌ ஸேவித்தார்‌ – என்கிறபடியே
சூடிக் கொடுத்தவள்‌ தொல்லரளால்‌ வாழ்கின்ற வள்ளலாய்‌-அங்கு நின்றும்‌ புறப்பட்டு -மாலிருஞ்சோலை தொழக் கருதி, -நெறி படவதுவே நினைவது நலமே-என்கிறபடியே மார்க்க சிந்தை பண்ணி அவ் வழியாலே அங்கே புக்கு, *பதியதுவேத்தி, அநந்தரம்‌ அழகர் தம்‌ கோயிலிலே புக்கு , திருமாலிருஞ்சோலை நின்றான்‌ கனை கழல்களைக் கண்டு வணங்கத்‌ தொழுது, -முடிச் சோதியில்‌ படியே-முடியார்‌ திருமலையில்‌” என்று தொடங்கி, -முற்றுமநுபவித்தார்‌- என்னும்படி அநுபவித்து தீர்த்‌த ப்ரஸாதங்களும்‌ ப்ரஸாதிக்க ப்ரஸாதப்படடு
விஞ்ஞாபநம்‌ வந கிரீஸ்வர! ஸத்ய ரூபா மங்கீ குருஷ்வ கருணார்ணவ மாமகீநாம் |
ஸ்ரீ ரங்க தாமநி யதா புரமேஷ ஸோஹம்‌ ராமாநுஜார்ய வஸாக பரிவர்த்திஷீய ॥

கருணைக் கடலான திருமாலிருஞ் சோலை யழகரே! யதார்த்தமான அடியேனது விண்ணப்பத்தைத்‌ திரு வுள்ளம்‌ பற்றி யருளவேணும்‌; அது ஏதெனில்‌; அடியேன்‌ முன்பு போலத்‌ திருவரங்கம்‌ பெரிய கோயிலிலே எம்பெருமானாருடைய திருவடிகளிலே சேர்ந்து வாழ்வேனாம்படி அருள் புரிய வேண்டும்‌-என்று தாழம்‌ இத்தை யநுஸந்தித்து அப்படியே ப்ரார்த்தித்தருள, அரங்கனென்னம்மானுக்கே காதல்‌ செய்யும் தொ ண்டராய்‌ அதி த்வரை யுடனே கோயிலேற எழுந்தருள:

அநந்தரம்‌
எண்டிசைக்‌ கணங்களுமிறைஞ்சியாடு திர்த்த நீர்‌-என்றும்‌,
கங்கையில்‌ புநிதமாய காவிரி என்றும்‌ சொல்லுகிறபடியே (காபாலி ஸ்ப்ர்ஸ ரஹிதராய்‌, ‘காவேரீ விரஜா ஸேயம்‌” என்கிற இவ் விரஜை யாறு இது வென்னும்‌ திருக் காவிரியிலே நீராடி-) திருக் காவேரியிலே நீராடி யருளி கேசவாதி பன்னிரண்டு திரு நாமங்களையும்‌ சாத்தி யருளி திருவரங்கப் பெரு நகரைத்‌ தண்டன் ஸமர்ப்பித்து நிற்க, அவ்வளவிலே தம்மை எதிர் கொள்ள வந்த அணியரங்கன்‌ திருமுற்றத்தடியார்‌ தங்களின்பமிகு பெருங்‌ குழுவு கண்டு தண்டன் ஸமர்ப்பித்து அவர்களுடனே கூட வுள்ளே புக்கு, வழியிலுள்ள வண்டினமுரலுஞ்சோலை தொடக்கமான திருச் சோலைகளையும்‌ அநுபவித்துக்‌ சொண்டு அவ்வருகே யெழுந்தருளி

மாடமாளிகை சூழ்‌ திரு வீதியும்‌ மன்னு சேர்‌ ‘திரு விக்ரமன்‌ வீதியும்‌
ஆடல்மாறனகளங்கள்‌ வீதியும்‌ ஆலி நாடன மர்ந்துறை வீதியும்‌
கூடல்‌ வாழ் குலசேகரன்‌ வீதியும்‌ குலவுரந் ச மகேந்திரன்‌ வீதியும்‌
தேடுதன்‌ வன்மாவின்‌ வீதியும்‌ தென்னரங்கர்‌ திருவாவரணமே

என்று சொல்லப்‌ படுகிற திருவீதிகளையும்‌ திருமதிள்களையும்‌ திருக்‌ கோபுரங்களையும்‌ கண்டு களித்துக்‌ கொண்டு எழுந்தருளி, தமக்கு ஆசார்ய துல்யரான கோட்டூரிலண்ணர்‌ திருமாளிகை யேற வெழுந்‌தருளினார்‌ அவர்‌ திரு மெய்யத்திலே திருவாய்மொழி வ்யாக்யாநம்‌ இருபத்தி நாலாயிரத்தையும்‌ ஸாதித்துக்‌ கொண்டெழுந்தருளி யிருந்து பின்பு பெருமா ளெழுந் தருளுகையாலே இங்கே நித்யவாஸமாக எழுந்தருளி யிருக்கிறவரை நாயனாரும்‌ அத்யாதரத்துடனே ஸேவித்தருள அவரும்‌ உகந்தருளி இவரை அவதார விசேஷமென்‌றிந்து ஆதரித்து , பெருமாளை ஸேவிக்கப் பண்ணுவதாக எழுந்தருளப்‌ பண்ணி வைத்துக்‌ கொண்டு புறப்பட்டு, அக் காலத்திலே
கோயிலதிபதியா யிருந்த திருமலை தந்த பெருமாள்‌ பட்டருடைய அநுமதிக்காக அவர்‌ திருமாளிகையிலே எழுந்தருள; அவரும்‌ அப்ப்யுத்தாத பிரணாமாதிகள்‌ தொடக்கமான உபசாரங்களைப்‌பண்ணி ஆஸநத்திலே எழுந்தருளுவித்து, ‘தேவரீரை ஸேலிக்கப் பெற்றோமே!?’ என்று பெரிய ப்ரீதியோடே ஆதரித்து “திருவாய்‌ மொழியிலே ஒரு பாட்டுக்கு அர்த்த மருளிச்‌ செய்ய வேணும்‌” என்ன, நாயனாரும்‌ ஆழ்வாருடைய வைபவத்தை ஐதிஹ்யமாகப்‌ ப்ரதிபாதிக்கிற பாட்டை யெடுத்து (துவளில்‌ மாமணிமாடம்‌, என்ற திருவாய்மொழியாக இருக்கலாம்‌ -இத் திருவாய்மொழி ஆழ்வார் ப்ரக்ருதி சொல்கிறது என்று நம்‌ முதலிகளெல்லாரும்‌ போர விரும்பி இருப்பார்கள் -என்று ஈட்டவதாரிகை )உபந்யஸித்தருள, பட்டரும்‌ போர வித்தராய்‌, ”இவர்‌ முப்பத்தாறாயிரப் பெருக்கர்‌ * என்று மிகவும்‌ உபலாளித்து “பெருமாளை மங்களாசாஸனம்‌ பண்ணி யருள”என்று அருளிச்‌ செய்து, அங்குண்டானண ஸ்ரீவைஷ்ணவர்‌ களையும் கூட்டி யனுப்பியருள, அவர்‌களும்‌’ அப்படியே புறப்பட்டருளி : ப்ரதமம்‌, பொனரங்கமென்னில்‌ மயலே பெருகுமிராமானுசன்‌ மன்னு மா மலர்த்தாளைக் கிட்டி, -யோ நித்யமச்யுத” என்று தொடங்கி , ‘ராமாநுஜஸ்ய சரணெ சரணம்‌ பரபத்யே!’ என்று அநுஸந்தித்து ஸேவித் தருளி.

இவ்வுலகந்தன்னி லெதிராசர்‌ கொண்டருளும்‌
எவ்வுருவும்‌ யான் சென்றிறைஞ்சினக்கால்‌–அவ்வுருவம்‌
எல்லா மினிதேலுமெழிலரங்கத் திருப்புப்‌ போல்‌
நில்லாதென்னெஞ்சு நிறைந்து

என்றநுபவித்தருளி பின்பு பூமகள்‌ கோன்‌ தென்னரங்கள்‌ பூங்கழற்குப் பாதுகமாய்த்‌, தாம்‌ மகிழுஞ்‌ செல்வச் சடகோபரையும்‌ ஸேவித்தருளி, ப்ரதக்ஷிணமாக வெழுந்தருளி அங்கயல்‌ பாய் வயல்‌ தென்னரங்கனணி யாகம்‌ மன்னும்‌ பங்கய மா மலர்ப்‌ பாவையான ஸ்ரீரங்கநாச்சியாரையும்‌, ‘ஸ்ரீரங்க ராஜ மஹிஷீம்‌ ஸ்ரியமாஸ்ரயாம:”‘என்று திருவடி தொழுது, பூவளரும்‌ திருமகளாரருள்‌ பெற்று உள்ள புக்குத்‌ திருமண்டபங்களையும்‌ திருமடைப் பள்ளியையும்‌ கருவுகூலங்களையுங் கண்டு களித்தருளி ஸ்ரீபலிபீடத்தருகே தண்டன்‌ ஸமர்ப்பித்து உள்ளில்‌ திருச்‌ சுற்றையும்‌ ப்ரதக்ஷிணமாக வெழுந்தருளி, அநந்தரம்‌ வேத ஸ்ருங்கமாய்‌ அயன்‌ பணிந்த கோயிலான ப்ரணவாகார விமாநத்தையும்‌ ஸேனை
முதலியாரையும்‌ ஸேவித்தருளி, அழகிய மணவாளன்‌ திரு மண்டபத்தில்‌ எழுத்தருளி, -ஆழி வண்ண। நின்‌ அடியிணை யடை ந்தேன்‌ அணி பொழில்‌ திருவரங்கத்தம்மானே என்று தண்டன்‌ ஸமர்ப்‌பித்துப்‌ பெரிய திருவடியையும்‌ திருவடி தொழுது, த்வார பாலகர்‌கள் அநுமதியுடனே யுள்ளே புகுந்து திருமணத் தூணருகே சென்று மாயோனை வாயார வாழ்த்தி, அரங்கமா கோயில்‌ கொண்ட கரும்பினைக்‌ கண்டு கண்ணினை களித்து அமலனாதிபிரானில்‌ படியே பாதாதி கேசாந்தமாக வநுபவித்தருளி, பழுதே பலபகலும்‌ போயின என்று இழந்த நாளுக்கு அநுதபித்து, அரங்கத் தரவணைப்‌ பள்ளியானாய்க் கண்வளர்ந் தருளுகிற சேர்த்தியைக்‌ கண்டு படுத்த பைந்நாகப் பள்ளி கொண்டானுக்குப்‌ பல்லாண்டு கூறுதுமே-என்கிறபடியே திருப்பல்லாண்டை யநுஸந்தித்து மங்களசாஸனம்‌ செய்தருளி, அநந்தரம்‌ பாயு நீரரங்கந்தன்னுள்‌ பாம்பணைப் பள்ளி கொண்ட மாயனார்‌ திரு நன் மார்வும்‌ என்று தொடங்கி ஆய சீர் முடியுந்‌ தேசுமடியரோர்க்ககலாமே என்று ஸேவித்து, அதற்கு மேல் பெரிய பெருமாளுடைய வ்யூஹ சவ்ஹார்தாதி குணங்களை யநுபவித்து அநந்தரம்‌ திவ்ய ஸிம்ஹாஸந ஸமான சேர பாண்டியனிலே மலர் மடந்தை மண் மடந்தைகளாகிற உபய நாய்ச்சிமாருடனே எழுந்தருளி யிருக்கிற நம்பெருமாளை

அப்ப ஜந்யஸ்த பதாப்ஜம்‌ அஞ்சித கடீ ஸம்வாதி கெளஸேயகம்‌
கிஞ்சித்தாண்டவ கந்தி ஸம்ஹநநகம்‌ நிர் வ்யாஜ மந்தஸ்மிதம்‌ |
சூடாசும்பி முகாம்புஜம்‌ நிஜ புஜா விஸ்ராந்தி!திவ்யாயுதம்‌ :
ஸ்ரீ ரங்கே ஸரதஸ்சதம்‌ ததஇத: பஸ்யேம லக்ஷ்மீஸகம்‌ [ஸ்ரீரங்க ராஜஸ்தவம்‌, பூர்‌-74:)

ஆஸந பத்மத்திலழுத்தின திருவடித்‌ தாமரைகளை யுடையவரும்‌, சிறந்த திருவரைக்குப்‌ பாங்கான பட்டுத்‌ திருப்பரிவட்டத்தை யணிந்தவரும்‌, சிறிது நர்த்ததஞ்‌ செய்வது போல்‌ விளங்குகிற திருமேனியை யுடையவரும்‌ இயல்பான புன்முறுவலை யுடையவரும்‌, திருவபிஷேகத்தைத்‌
தழுவி யிருக்கின்ற முக கமலத்தை யுடையவரும்‌, தமது திருக் கையில்‌ இளைப்பாறுகின்ற திவ்யாயுதங்களை யுடையவருமான திருமகட்‌கன்பனான அழகிய மணவாளனைத்‌ திருவரங்கத்தலே இன்னமொரு நூற்றாண்டளவும்‌ அங்குமிங்கும்‌ (எழுந்தருளுமிட மெல்லாம்‌) ஸேவிக்கக்‌ கடவோம்‌] என்கிறபடியே ஸேவித்தருளி ,திருக்கையிலே பிடித்த திவ்யாயுதங்களும்‌ வைத்தஞ்சலென்ற
கையும்‌ கவித்த முடியும்‌ முகமும்‌ முறுவலும்‌ ஆஸந பத்மத்திலே அழுத்திய திருவடிகளுமாய்‌ நிற்கிற நிலையே நமக்குத்‌ தஞ்சம்‌(முழுஷுப்படி த்வயம்‌-21)
என்று அநுஸந்திதருளி, அத நன்‌ நிதியைக்‌ கண்டாப்‌ போலே பூர்வர்கள்‌ தநமாயிருக்கிற ஸ்ரீநிதியான நம் பெருமாளைக்‌ கண்டு கொண்டு, சிவந்த திருமுக மண்டலத்‌தையும்‌ கஸ்தூரித்‌ திருநாமத்தையும்‌ (மதி நுதல்‌ கஸ்தூரி திருநாமத்தையும்‌, மறுவல் பூத்த பவன வாயையும்‌, கவித்த கதிராயிரமிரவி கலந்தெறித்தா லொத்த நீண் முடியையும்‌, கையினார்‌ சுரிசங்கனலாழி எழிலையும்‌, அஞ்சலென்ற கையையும்‌, திருவரை பூத்தாப் போலிருக்கற அந்தி போல்‌ நிறத்தாடையும்‌ ஆஸந பத்மத்திலே அழுத்தின செம் பங்கயத் பதாள்களையும்‌ கோல மா மணி யாரமும்‌ முத்துத் தாமமும்‌ முடிலில்லதோரெழிலையும் கண் வாங்க மாட்டாதே நிர்நிமேஷத்ரு ஸஞ்சலராய்‌-)வைத்த கண்‌ வாங்காதே அநிமிஷரா யநுபவித்துக்‌ கொண்டு நிற்க, தேசாந்தர கதனான புத்ரனைக்‌ கண்ட மாதா பிதாக்களைப்‌ போலே தந்தையுந் தாயுமான தாம்‌ இவரைக்‌ கண்டு ப்ரஸந்ந வதநேகஷணராய்‌ கருணாம்ருத ஸ்ஷ்டியாலே குளிரக்‌ கடாக்ஷித்தருளி ‘”தமக்காவாரை தாமே தேடிக்‌ கொள்வோம்‌” என்று அருளிச்‌ செய்து எம்பெருமானாரை விஷயீகரித்தாப்‌ போலே இவரையும்‌ விஷயீகரித்தருளினார்‌

பின்பு தீர்‌த்த ப்ரஸாதங்களையும்‌ ஸ்ரீ சடகோபனையும்‌ திருமாலை ப்ரஸாதத்தையும்‌ ப்ரஸாதிக்கப்‌ பெற்று, முடியும்‌ மாவையும்‌ பெற்றாப்‌ போலே தென்னங்கர்‌ சீரருளுக்கிலக்காகப்‌ பெற்று
அத்யந்தம்‌ ப்ரீதராய்‌ அண்ணரைப்‌ பார்த்து தேவரிருக்காக நம்பெருமாள்‌ இப்படி வாழ்வித்தருளினார்‌’” என்று அருளிச்‌ செய்து, அநந்தரம்‌ அண்ணருடனே கூடப் புறப்பட்டருளி அவர்‌ திருமாளிகையிலே எழுந்தருள, பட்டரும்‌ அனேக பதார்த்தங்‌களுடன்‌ சிறப்பு வரக்‌ காட்டி யருள அத்தை யங்கீ கரித்து அண்ணர்‌ திருமாளிகையிலே யமுது செய்து எழுந்தருளி யிருக்க அவரும்‌ பூர்வாசாரியர்கள்‌ ‘ போத மநுட்டானங்களை யருளிச்‌ செய்யக்‌ கேட்டுத்‌ திருவுள்ளந்தேறி அவருடனே கூடப் புறப்பட்டு பூர்வர்கள்‌
எழுந்தருளியிருந்த திருமாளிகைகளைச்‌ சென்று ஸேலித்து, பின்பு பிள்ளை லோகாசாரியர்‌ திரு மாளிகை நோக்கி யெழுந்தருளி,
வாழி யுலகாசிரியன்‌ வாழி யவன்‌ மன்னு குலம்‌
வாழி முடும்பை யென்னும்‌ மாககரம்‌–வாழி
மனஞ்சூழ்ந்த பேரின்மல்கு மிக நல்லார்‌
இனஞ் சூழ்ந்திருக்கு மிருப்பு
–என்றும்‌,
மணவாளன்‌ மாறன்‌ மனமுரைததான்‌ வாழி
மணவாளன்மன்னு குலம் வாழி–மணவாளன்‌
வாழி முடும்பை வாழி வடவீதி தான்‌
வாழியவன்‌ உரை செய்த நூல்‌
–என்றும்‌
அநுஸந்தித்துத்‌ திருமாளிகை வாசலிலே தண்டன்‌ சமர்ப்‌பித்து அஞ்ஜலித்துக்‌ கொண்டு,

ஆத வாணிம்‌ புண்ய ஸுதாபகாம்‌ ஸடஜித்ஸ் ஸ்வைரம்‌ விகாஹ் யாதராத்‌
ஆநீயாம்ருத மத்ர சக்ர துகுபெள லோகோபகரராத்மகெள |
யெள வாக் பூஷண தேஸி கேந்த்ர ஹ்ருதயாபிக்யெள ப்ரபந்தாவிமெள
தே வந்தே புவநார்ய ஸூந்தர வரெஎ க்ருஷ்ணாத்மஜெள தேஸிகவ் ॥

இங்கு உலகத்தவருக்கு உதவுமியல் புடையராய்‌ எந்த இரு ஆசாரியர்கள்‌ நம்மாழ்வாருடைய திருவாய்மொழியாகிற புண்யமான அமுத ப்ரவாஹத்தில்‌ ஆதரத்துடன்‌ யதேச்சையாயாழ்ந்து அதில்‌ நின்றும்‌ ௮ம்ருதத்தைக் கொண்டு எந்த ஸ்ரீவசந பூஷணம்‌ ஆசார்ய ஹ்ருதயம்‌ என்ற பெயரை யுடைய இரு ப்ரபந்தங்‌களையுமருளிச்‌ செய்தார்களோ, வடக்குத்‌ திருவீதிப் பிள்ளையின்‌ குமாரர்களான பிள்ளை லோகாசாரியர்‌ அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌ என்ற ஆசாரியர்களை அடி பணிகிறேன்‌-

ஆர்யஸ் ஸெளம்ய வர ஸடாரிகலிஜித்‌ பட்டேஸ :॥ முக்யாத்மமாம்‌
பக்தாநாம்‌ விமலோக்தி மெளக்திக மணீநாதாய சக்ரே ப்ருஸும்‌ |
க்ருத்வா ஸாதுரஹஸ்த்ரயார்த்த மகிலம்‌ கூடம்‌ விஸ்ப சித்ரியம்‌
லோகார்யா வரஜஸ்ஸூ ஸிக்ஷ்க வரஸ் சூடாமணிஸ் ஸோபதே

பிள்ளை லோகாசாரியரின்‌ திருத் தம்பியராய்‌ ஸத் ஸம்ப்ரதாயார்த்தங்களை சிக்ஷித்து அருளிச் செய்பவராய்‌, யாவருக்கும்‌ பூஜ்யராய்‌ சிரோ பூஷணமான அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனார்‌,நம்மாழ்வார்‌, திருமங்கையாழ்வார்‌. பெரியாழ்வார்‌, முதலான பக்தாக்ரேஸரர்களின்‌ தூய வாக்குக்களாகிற மணி, முத்துக்களைக்‌ கொண்டு ரஹஸ்ய த்ரயத்தின்‌ ஆழ் பொருள்களை யெல்லாம்‌ பூர்வாசாரியர்களின்‌ திருவுள்ளத்துக் கிசைய விளக்கி வெளியிட்டு மிகவும்‌விளக்கமுறுகிறார்‌.

யஸ்யாஹம்‌ குல தைவதம்‌ ரகுபதேரா ரதநம்‌ ஸ்ரீஸக:
காவேரீ ஸரிதிந்தரீ பநகரீ வாஸஸ்தலீ புண்யபூ: |
க்ருஷ்ணோ மாந்ய குருர்‌ வரேண்ய மஹிமா வேதாந்த வித்யாநிதி;
ப்ராதா சவ்ம்ய வரஸ்‌ ஸ்வயந்து புவநாசார்யோஸி கஸ்தே ஸம:

யாருக்கு சக்ரவர்த்தி திருமகனுடைய திருவாராதனமான அழகிய மணவாளன்‌ குலதெய்வமோ, திருக் காவேரியின்‌ நடுவிலுள்ள புண்ய பூமியான கோயிலானது இருப்பிடமோ, பெரும்‌ ‘ புகழாளராய்‌ பூஜ்யரான வடக்குத்‌ திருவீதிப் பிள்ளை தந்‌தையுமாசார்யருமாவரோ, உபய வேதாந்த நிதியான அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌ இளைய ஸஹோதரரோ, அப்படியான தேவரீரே ஜகத்துக்கெல்லாம்‌ ஆசாரியராக உள்ளீர்‌; இப்புடிபட்ட தேவரீருக்கு யார்‌ ஒப்பாவார்‌? என்கிறபடியே பிள்ளை லோகாசாரியருடைய ஸமாப்யதிக ரஹிதமான பெருமையைப்‌ பேசா நின்று கொண்டு -ரஹஸ்யம்‌ விளைந்த மண்ணன்றோ?’ என்று மிகவுமாதரித்தருளி, அங்கே யெழுந்தருளி யிருந்து பிள்ளலோகாசாரியர்‌’ வைபவங்களை யெல்லாம்‌ ௮ண்ணரருளிச் செய்யக்‌ கேட்டு, இவ்வளவாகிலும்‌ பெற்றோமே!!’ என்று ப்ரீதராய்‌ அண்ணரை ஸேவித்துக் கொண்டு ஆசாரியர்களுக்கு ஆவாஸ் பூமியான கோயிலிலே எழுந்தருளி யிருக்க, பின்னையும்‌ ஒருநாள்‌ வரையிலே நம்பெருமாளை இவர்‌ திருவடி தொழச்‌ சென்றவாறே தீர்த்தம்‌ திருமாலை பரியட்டத்துடனே தம்முடைய தேனே மலரும்‌ திருப்‌ பாதத்தை இவர்‌ திருமுடி சூடுவித்து

தஸ்மிந்‌ ஸஸ்மித நேத்ரேண ஸ்ரீமதா ஸேஷ ஸாயிநா |
ஸத்க்ருத: க்ருதவாந் வாலம்‌ கிஞ்சித்தத்ர ததந்திகே

மலர்ந்து நீண்ட வப் பெரியவாய கண்களை யுடைய ஸ்ரீமானான பெரிய பெருமாளாலே அநுக்ரஹிக்கப் பட்டவராய்‌ சில நாட்கள்‌ அவர்‌ திருவடி வாரத்தில வாழ்ந்திருந்தார்‌- என்கிறபடியே,
திருப்பவளச் செவ்வாய்‌ முறுவல்‌ கொண்டு நம் முடையவரைப்‌ போலே நீரும்‌ நம் வீட்டில்‌ கார்யத்தையும்‌ தர்சந ரஹஸ்யங்களையும்‌ ஆராய்ந்து கொண்டு உம்முடைய சரீராவஸானத்தளவும்‌ இங்கேயே இரும்‌” என்று அருளிச் செய்ய; இவரும்‌ ‘ மஹா ப்ரஸாதம்‌” என்று அங்கீகரித்து நியமித்தபடியே அங்கே எழுந்தருளி யிருந்தார்‌-அக்காலத்திலே அங்குண்டான ரஹஸ்ய ப்ரபந்தங்களை யெல்‌லாம்‌ திருக் கண் சாத்தி ஜீர்ணோத்தாரணம்‌ பண்ணி யருளி அவற்றை ப்ரகாசிப்பித்துக் கொண்டு-எழுந்தருளியீருக்க; பின்பு ஒரு நாள்‌ பெருமாள்‌ திருவாராதனம்‌ நடத்திக் கொண்டு போருகிற உத்த நம்பி தாழ்வாக நடத்துகிற படியையும்‌ அமுது செய்தருளுகிற தளிகைக் குறைகளையுங் கண்டு ”இவனை நிரஸித்தருளி அநுகூலரானவர்களைக்‌ கொண்டு குறைவறக் கண்டருளப் பண்ண வேணும் ‘
என்று வானமாமலை ஜீயரருளிச் செய்ய (அழகிய வரதர்‌ என்று திருநாமமுடையராய்‌ அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனாரை பால்யத்திலேயே ஆஸ்ரயித்துப்‌ பின்னர்‌ ஆஸ்ரம ஸ்வீகாரம்‌ செய்தருளி ஸ்ரீவானமா மலை ஜீயர்‌” என்றுஅழைக்கப்பட்டார்‌; )அத்தைக் கேட்டருளி தேவரீருடைய திருப்பணி திருவாராதநம்‌, குறைவற நடத்திப்‌ போம்படி இவனை யநுகூலனாகத்‌ திருத்திப் பணி கொணடருள வேணும்‌ என்று மங்களாசாஸனம்‌ பண்ணாீ!’ என்‌றருளிச்செய்து, தாமும்‌ அப்படியே மங்களாசாஸனம்‌ பண்ணி யருளி, (இவ்விடத்தில்‌ ஜீயர்‌, அழகிய மணவாள நாயனாரை, ”தேவரீர்‌ பெருமாளைக்குறித்து ‘இவனை நசிப்பித்து அநுகூலரைக்கொண்டு திருப்பணி திருவாராதனம்‌ குறைவறக்‌ கொண்டருளவேணும்‌” என்று ப்ரபத்தி பண்ண வேண்டிக் கொள்ளும்‌” என்ன; நாயனாரும்‌ அது கேட்டருளி அழகிய வரதரைக் குறித்து பெருமாளுக்கு-)

நாயனார் திருவேங்கட யாத்திரை எழுந்தருளுதல்‌
அநந்தரம்‌ வட திருவேங்கடமென்று ப்ரஸித்தமான வட மா மலை முதலான வடதிசை யிலுண்டான திருப்பதிகளைத்‌ திருவடி தொழுகையிலே மிகவுந் திருவுள்ளத்தை யுடையராய்‌ -ததஸ்தே நாப்ய நுஜ்ஞாதோ யாதோ தரணி முத்தராம்‌” -பின்னர்‌ பெருமாளால்‌ அநுமதிக்கப்‌ பட்டவராய்‌ வட தேசத்திலுள்ள திருப்பதிகளைச்‌ சென்றடைந்தார்‌-என்கிறபடியே பெருமாள்‌ ஸந்நிதியிலே
சென்று ஸேவித்து நின்று, அடியேன்‌ திருமலைச்குப்‌ போய் திருவேங்‌கடமுடையானைத்‌ திருவடி தொழ விடை கொள்கிறேன்‌” என்று விண்ணப்பம்‌ செய்ய, பெருமாளும்‌ தீர்த்த ப்ராஸதங்களும்‌ பரியட்‌டமும்‌ ஸ்ரீசடகோபனும்‌ ப்ரஸாதித்து ”போய் வாரும்‌’ என்று விடை கொடுத்தருள;

திருக் கோவலூர்‌, திருக் கடிகை மங்களாசாஸனம்‌
அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனாரும்‌ *அணியரங்கத்‌தினின்றும்‌ பெரிய திருமலை யேறப்‌ போவாராய்‌ அப்போதே புறப்‌பட்டருளி, முப்போதும்‌ வானவரேத்தும முனிவர்கள்‌ வெள்ளறையிலே சென்று புக்கு பங்கயச் செல்வியார்‌ புருஷகாரமாகச்‌ செந்தாமரைக்‌ கண்ணரை ஸேவித்துத்‌ தீர்த்த ப்ரஸாதங்களும்‌ ப்ரஸாதப்‌பட்டு | பாதேயம்‌ புண்டரீக நாம ஸங்கீர்ந்தநம்ருதம்‌-செய்ய தாமரைக் கண்ணனின்‌ திருநாமங்களைப்‌ பாடுவதான அம்ருதம்‌ வழிக்கு உணவாகிறது-என்கிறபடியே! த்வய வசந பாதேயத்துடனே -பூங்கோவலுர்‌ தொழுதும்‌ போது நெஞ்சே! என்று பெரிய த்வரையோடே புறப்பட்டு அவனடி நிழற்றடங்‌களை யுடையராய்‌ விச்ரமித்து விடாயாறி, ஊரைச்‌ சென்று கிட்டி ,
உள்ளே புக்கு முதலாழ்வார்களை த்‌ திருவடி தொழுது அவர்கள்‌புருஷகாரமாக ”த்ரிவிக்ரம மபிகம்ய”’ என்கிறபடியே ஆழ்வார்கள்‌ நாயனாரையும்‌ ஆயனாரையும்‌ ஸேவித்து, தூவடிவில் பார்‌ மகள்‌[திருமொழி 2-10-9) என்று-தொடங்கி திருக்கோவலூரதனுட்‌ கண்டேன்‌ நான்‌ என்றபடியே அநுபவித்து, நீயும்‌ திருமகளும் நின்றாயால்‌ (முதல்‌ திரு-86) என்கிற பாட்டை யநுஸந்தித்து,
அன்‌றிவ்வுலகமளந்தாய்‌ அடிபோற்றி என்று மங்களசாஸநம்‌ பண்ணி யருளித்‌ தீர்த்தம்‌ ப்ரஸாதப்பட்டு, பூங்கோவலாயனழகு பின்னே தள்ள திருவங்கடத்தானருள்‌ முன்னே நடத்த’ புறப்‌பட்டு, குன்றமேந்திக்‌ குளிர்‌ மழை காத்தவன்‌ அன்று ஞாலமளந்த பிரான்‌ பரன்‌ சென்று சேர்‌ திருவேங்கடமாமலை (திருவாய்‌, 3-3-4)என்றும்‌ திருவேங்கடத்தாயன்‌ என்றும்‌ மொய்த்த சோலை மொய்‌ பூந்தடம்‌ என்றும்‌ சொல்லப்படுகிற நீர்மையை யுடைய திருவேங்‌கடமுடையானைத்‌ திருவடி தொழுகையிலே திருவுள்ளமாய்‌ பெருங்‌ கூட்டத்துடனே போவான் வழி கொண்டு அதி த்வரையுடனே (இதிலிருந்து திருக் கடிகை மங்களாசாஸனம்‌, )யெழுந்தருளுகையில்‌ நீள்‌ சோலை வண் பூங் கடிகையில்‌ தக்கானையும்‌, கடிகைத் தடங்குன்றில்‌ அக்காரக் கனியையும்‌ அடைந்து மங்களாசாஸநம்‌ பண்ணிப்‌ புறப்படா நிற்கச்‌ செய்தே எறும்பியிலுள்ள பெரியோர்களும்‌ பச்சையுடன்‌ வந்து ஸேவித்து நிற்க ,அவர்களை ஆதரித்துப்‌ புறப்பட்டருளினார்‌.

இனி திருமலை வ்ருத்தாந்தம்‌
திருப் புரட்டாசி முதல்‌ திருநாள்‌ ராத்ரி பெரிய கேள்வி ஜீயருடைய ஸ்வப்நம்‌: ஆழ்வார்‌ தீர்த்தத்திற்குத்‌ தெற்கிலுள்ள திருத்‌ தோப்பருகே ஒருவர்‌ வடக்கு முகமாக நிற்கிறதாகவும்‌ திருமலையாழ்வார்‌ மேல் கோடி தொடங்கி கிழக்கு முடிவு மட்டும்‌ ஸ்தூலமாய்‌ அதி தீர்க்கமா யிருக்கிற திருமேனி யுடையராய்‌ மேற்கே திருமுடியும்‌ இழக்கே திருவடிகளும்‌, தெற்கு திக்கைக்‌ கடாக்ஷித்துக்‌ கொண்டு பெரிய பெருமாளைப்‌ போல ஒரு ஸ்ரீவைஷ்ணவர்‌ கண்‌ வளர்‌ந்தருளுகிறதாகவும்‌;- ஒரு ஜீயர்‌ திருவடி பார்ச்வத்திலே நிற்‌கிறதாகவும்‌ கண்டு ‘“இவரார்‌?” என்று போவார்‌ வருவாரைக் கேட்க, அவர்கள்‌ சொன்னபடி: ‘இவர்‌ முப்பத்தாரறாயிரப்‌ பெருக்‌கரான அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌; அவர்‌ பொன்‌னடிக்கால்‌ ஜீயர்‌” என்று,சொல்ல, கண் விழித்து ‘“இதொரு ஸ்வப்நமிருந்தபடி என்‌!” ‘ என்று அதி ப்ரீதியுடனே “எழுந்திருந்து பெருமாள்‌ திருலீதியில்‌ ப்ராதகாலம்‌ புறப்பாட்டிற்கு மங்களா சாஸநத்துக்‌ கெழுந்தருளி இயல்‌ தொடங்குகிற விடத்திலே இச்‌ செய்தியை ஸ்வாமிகளுக் கறிவிக்க இத்தை தோழப்பய்யங்கார்‌ கேட்டருளி

ஸ்வப்நே ப்ருஹத் யதீந்த்ரஸ்ய ஸ்ரீஸைல ஸமிதோ மஜாாந்‌ |
ஸயாந புருஷோத்ருஷ்ட: ஸெளம்ய ஜாமாத்ரு தேஸிக: |
ததர்ச பஸ்சாத்‌ தஸ்யைவ பாதமூலே யதீஸ்வரம்‌ |
ப்ராஞ்ஜலிம்‌ நிப்சுதம் ப்ரஹ்வம்‌ ஸ்வர்ணாதிபதி பத ஸம்ஜ்‌ஞகம்‌ ॥

பெரிய ஜீயருடைய ஸ்வப்நத்தில்‌: திருமலையோடு ஓத்த’ அளவுடையவராய்‌, மணவாளமாமுனி யென்கிற மிகப்‌ பெரிய புருஷர்‌ படுத்துக்‌ கொண்டிருப்பவராகக்‌ காணப்பட்டார்‌.
அவரது திருவடி வாரத்தில்‌ விநயத்துடன்‌ குனிந்து கை கூப்பி நிற்கும்‌ பொன்னடிக்கால ஜீயரையும்‌ அப் பெரிய ஜீயர்‌ கண்டார்‌-என்று ஸ்லோகமாக அருளிச்‌ செய்தார்‌. இத்தை எல்லாரும்‌ கேட்டு உகந்திருக்க, அப்போது தேசாந்தரத்தினினில்‌ நின்றும் வந்த பெரியோர்‌களில்‌ சிலர்‌ இப்படி ஸேவை ஸாதித்தவர்‌ கோயில்‌ நாயனார்‌ என்ன, வேறு சிலர்‌ அவர்‌ திருநாளுக் கெழுந்தருளுகிறார்‌ – என்ன,
மற்றும்‌ சிலர்‌ நாயனார்‌ தம்முடைய சிஷ்யரான வானமாமலை ஜீயரைத்‌ தமக்கு ப்ராண ஸூஹ்ருத்தென்றும்‌. பொன்னடிக்கால்‌ ஜீயரென்றும்‌ அருளிச்‌ செய்வர்‌ என்ன; ஆனால்‌ இந்த விசை
திருநாளுக்கு மஹாதிசய முண்டாயிற்று- என்று அனைவரும்‌ போர உகந்து எதிர்பார்த்துக்‌ கொண்டு எழுந்தருளியிருக்க நாயனாரும்‌ பயண கதியிலே யெழுந்தருளித்‌ திருமலை யாழ்‌வாரைக்‌ கண்டருளி திருவேங்கடமாமலை யொன்றுமே தொழ நம்‌ வினையோயுமே (திருவாய்‌ 3-3-8)என்று திருமலையாழ்வாரைத்‌ தண்டன்‌ ஸமர்ப்பித்து, வைத்த கண் வாங்காதே அநுபவித்துக்‌ கொண்டு சென்று ”ஸுவர்ண முசகரீம்‌ தத்ர ஸங்கதாம்‌ மங்களஸ்வதாம்‌- அத் திருமலையோடு சேர்த்து நல்ல ஓசை யுடைய ஸுவர்ண முகி நதியை- என்று மங்களாவஹமான ஸ்வர்ண முகியைக்‌ கட்டி அங்கே நீராடி யருளி, கேசவாதி த்வாதச நாமங்களையும்‌ சாத்தி யருளின வளவிலே ஸ்ரீகோவிந்த ராஐருடைய அபய ஹஸ்தம்‌, களபம்‌ திருமாலை தொடக்கமான வரிசைசள்‌ வர. அங்கீ கரித்தருளி
ஸ்ரீவைஷ்ணவர்களுக் கெல்லாருக்கும்‌ ப்ரஸாத விநியோகம்‌ செய்தருளித்‌ தாமும்‌ ஸ்வீகரித்துப்‌ புறப்பட்டு கோவிந்தராஐரை மங்களாசாஸநம்‌ செய்தருளி, வரிசை பெற்று திருமலை யடிவாரத்திலே
அழகிய சிங்கரைத்‌ தொழுது, -ஏவம்வித்‌ பாதேநாத்யாரோஹதி”- இப்படி உபாஸிப்பவன்‌ காலால்‌ ஏறுகிறான்‌ -என்‌கிற படியே ஏறியருளி, பரிஷத்‌ திருவேங்கட முடையானைத்‌ தொழுது
கர்ப்பூரக்காலிலே தீர்த்த ஸ்வீகாரம்‌ செய்தருளி, காட்டழகிய சிங்கரைத்‌ தொழுது, மாம்பழ வெம்பெருமானாரைத்‌ தண்டன்‌ ஸமர்ப்பித்து விச்ரமித்துப்‌ புறப்பட்டருள; இச் செய்தி கேட்டுப்‌
பெரிய கேள்வி ஜீயரும்‌ ஏகாங்கி ஸ்ரீவைஷ்ணவர்களும்‌, அனைத்துத்‌ கொத்துப்‌ பரிகாரத்துடனே பூவார் கழல்களை எழுந்தருளப்‌ பண்ணி வைத்துக்‌ கொண்டு, பெரிய பரிவட்டம்‌, ஸ்ரீபாத ரேணு,அபய ஹஸ்தம்‌ முதலான வரிசைகள்‌ கூட்டி மங்கள வாத்யங்களுடனே எதிர்‌ கொண்டு ப்ராஸாதிக்க ஸ்லீகரித்து

மொண்ணைத் திருக் கோபுரத்தருகே திவ்ய விமானத்தையும்‌ திரு நாராயண
கிரியையும்‌ த்வஜ ஸ்தம்‌பத்தையும்‌ பொற் கோபுரத்தையும்‌ கண்டு களித்துத்‌ தண்டன்‌ ஸமர்ப்‌பித்து உள்ளே புக்கு, அவா வறச் சூழ்ந்தான்‌ திருவாசலிலே தண்டன்‌ ஸமர்ப்பித்து திருவீதிகளையும்‌ திரு மாளிகைகளையும்‌ கண்டு களித்துக்‌ கொண்டு ப்ரதக்ஷிணமாக வெழுந்தருளி ஸ்வாமி புஷ்கரிணியிலே நீராடி யருளி, திருமண்காப்புச்‌ சாத்தியருளி, வேங்கட வராஹத்தை ஸேவித்து, தீர்த்தம்‌ ப்ரஸாதம்‌, ஸ்ரீ சடகோபன்‌ சந்தனம்‌ ப்ரஸாதிக்க ஸ்வீகரித்துப்‌ புறப்பட்டருளி திருத் தேர்களையும் கண்டு களித்து, உள்ளே யெழுந்தருளி அழகிய மணவாளன்‌ திருமண்டபத்தை தண்டன்‌ ஸமர்ப்பித்து ஸ்ரீபலிபீடத்தையும்‌ செண்பகத்‌ திருவாசலையும்‌ அத்தாணிப்‌ புளியையுந்‌ தண்டன்‌ ஸமர்ப்பித்துச்‌ செண்பகச் சுற்று ப்ரதஷிணமாக வெழுந்தருளிச்‌ சாலை வாசலாலே
யுள்ளே புக்கு நெய்க்கிணறு முதலான சாலை வரிசைகளைக்‌ கண்டு களித்துத்‌ திருமடைப் பள்ளியையும்‌ யமுனைத் துறைவனையுந்‌ தொழுது, புஷ்கரிணியிலே தீர்த்த ஸ்‌வீகாரம்‌ பண்ணி ஸ்வர்ணமண்டபமேறி நாராயண கிரியைச்‌ தொழுது, செண்பகத்‌ திருவாசலாலே யுள்ளே புக்கு, தேவப் பெருமாள்‌ எழுந்தருளியிருந்த பொன்‌விஞ்சு பெருமாள்‌ கோயிலையும்‌ அழகப் பிரானாரையும்‌ திவ்ய விமானத்தையும்‌ தொழுது திருமடைட்பள்ளி நாய்ச்சியாரையும்‌ ஸேவித்து தசாவதாரங்களையுந்‌ தொழுது, திருமாமணி மண்ட.பமான யாகமண்டபத்திலே நாய்ச்சிமாருடன்‌ மலைக்கினிய நின்ற பெருமாளையும்‌ தண்டன்‌ ஸமர்ப்பித்து, தீர்த்தம்‌, ஸ்ரீ சடகோபன்‌, ஸ்ரீபாதரேணு ப்ரஸாதிக்க ஸ்வீகரித்தருளி, திவ்ய விமானத்தைத்‌ தொழுது ஸேனை முதலியாரையும்‌ வணங்கி, ராமநுஜஸ்ய சரணெள சரணம்‌ ப்ரபத்யே’ என்று எம்பெருமானாரைத்‌ தண்டன்‌ ஸமர்ப்பித்து, தீர்த்தம்‌ அநந்தாழ்வான்‌, ப்ரஸாதம்‌, சந்தனம்‌, ப்ரஸாதிக்க ஸ்வீகரித்து, அழகிய சிங்கரையும்‌, திருநிலைக்‌ கண்ணாடி போலிருக்கிற பெரிய திருவடி நாயனாரையும்‌ ‘தொழுது உண்டியிலே திருமுன்காணிக்கையும்‌ ஸமர்ப்பித்து த்வார பாலகருடைய அநுமதி கொண்டு உள்ளே புக்கு, மத்யே சக்ரவர்த்தி
திருமகனாரையும்‌ தொழுது” குலசேகரன்‌ படியருகே சென்று, பொன்னம்‌ புயல் போல்‌ மரகதம் போல்‌ பூவை மலர் போல்‌ கருவிளை போல்‌ பொங்கார்கடல் போல்‌ பொலிந்திருண்ட புழுகிற்றுளைந்த
செஞ்சோதி, அன்னம்‌ பயிற்றி நடமாட அலர்மேல்‌ மங்கையுறை மார்பனாய்‌, ”ஸிஷேவே தேவதேவேசம்‌ சேஷ சைல நிவாஸிதம்‌”-திருமலையில்‌ நித்ய வாஸம்‌ பண்ணும்‌ தேவாதிதேவனான திரு
வேங்கட முடையானை ஸேலித்தார்‌-என்கிற படியே,எழில் கொள் சோதியான திருவேங்கடத்தெந்தையை அநபவித்து நிற்க-அப்பனும்‌ தீர்த்த ப்ரஸாதம்‌ திருமாலை, ஸ்ரீ சடகோபன்‌ இவை ப்ரஸாதிக்க, பெற்று க்ருதார்த்தராய்‌–

நாயனார்‌ பெருமாள்‌ கோயிலுக்கு எழுந்தருளுதல்‌
அங்கு நின்றும்‌ புறப்பட்டு நடுவே இரண்டு மூன்று நாள்‌ வஸித்து அதன்‌ பின்பு உலகேத்து மாழியானத்தியூரேற வெழுந்தருளி
தூரஸ்திதேபி மயித்ருஷ்டி பதம் ப்ரபந்நேது:கம்விஹாய பரமம்‌ ஸுகமேஷ்யதீதி |
மத்வேவயத்கக நசும்பி நதார்த்திஹந்து! தத் கோபுரம்‌ பகவதஸ் ஸரணம் ப்ரபத்யே॥

நான்‌ தூரத்திலிருந்தாலும்‌ ஒருவன்‌ கண்களுக்குப்‌ புலப்படுவேனாகில்‌, அவன்‌ துக்கத்தை விட்டு உயர்ந்த ஸுகத்தை அடைவான்‌ என்று நினைத்துப் போலும்‌ வானளாவி நிற்கிற–ப்ரணதார்த்தி ஹரனான பேரருளாளனுடைய எந்தக்‌ கோபுரமொன்றுண்டோ- அதைச்‌ சரணமடைகிறேன்‌- என்று திருக்‌ கோபுர நாயனாரை தண்டன்‌ ஸமர்ப்பித்து உள்ளே சென்று புண்ய கோடி விமானத்தையும்‌ தண்டன்‌ ஸமர்ப்பித்து திரு வநந்த ஸரஸ்ஸிலே நீராடி யருளித்‌ திருமண்‌ காப்பு சாத்தி யருளி
அடைவே ஆழ்வார்களையும்‌ ஸேவித்து பலி பீடத்தருகே தண்டன்‌ ஸமர்ப்பித்து உள்ளே புக்கு, சேர்ந்த வல்லி நாய்ச்சியாரையும்‌ சக்ரவர்த்தி திருமகனாரையும்‌ திருவநந்தாழ்வானையும்‌ தொழுது
ப்ரக்ஷிணமாக வெழுந்தருளித்‌ திருப்புற்றுக்குக்‌ கீழாக இளையாழ்‌ வாரை ஆம்முதல்வனிவன்‌ என்று: கடாக்ஷித்தருளிய யமுளைத்துறைவன்‌ திரு முற்றத்தையும்‌ அவரெழுந்தருளி யிருக்கிற கரியமாணிக்‌கத்தாழ்வார்‌ ஸோபாநத்தையும்‌ ஸேவித்து, பேரருளாளர்‌ பெருந் தேவியாரையும்‌
ஆகார த்ரய ஸம்பந்நாம்‌ அரவிந்த நிவாஸிநீம்‌ |
அஸேஷ ஜகதீஸித்ரீம்‌ வந்தே வரத வல்லபாம்‌ ॥

அநத்யசேஷத்வ, அநந்ய சரணத்வ, அநத்ய போக்யத்வமாகிற மூன்று ஆகாரங்களோடே கூடியவளாய்‌, தாமரை மலர்மேல்‌ நித்ய வாஸம்‌ செய்யுமவளாய்‌ எல்லா வுலகங்களுக்கும்‌ ஈஸ்வரியாய்‌ தேவப் பெருமாளுக்கு வல்லபையான பெருந்தேவியாரை அடிபணிகிறேன் -என்று அநுஸந்தித்து ஸேவித்து பங்கயத்தாள் திருவருளும் கொண்டு அங்கே பெரிய திருவடியையும் தொழுது உள்ளே
புகுந்து தானவனை வன் நெஞ்சங்‌ கீண்ட சிங்கப் பிரானையும்‌ ஸேவித்‌துச்‌ சூடிக் கொடுத்த நாய்ச்சியாரையும்‌ ஸேனை முதலியாரையும்‌ ஸேவித்து அவ்வருகே ப்ரதக்ஷிணமாக வெழுந்தருளி ஸ்ரீ ஹஸ்திகிரீ யருகே சென்று, ‘*ஏஷதம்‌ கரிகிரீம்‌ ஸமாஸ்ரயே”‘ என்று தண்டன்‌
ஸமர்ப்‌பித்து மலையாள நாய்ச்சியாரையும்‌ ஸேவித்து, பத க்ரமத்‌திலே படிகடந்தேறி, கச்சிக்கு வாய்த்தான்‌ திருமண்டபத்திலே திருக்கச்சி நம்பி முன்னாக வரதராஜர்‌ திருவரங்கப் பெருமாள அரையருக்கு இராமானுசனைத் த்யாகம்‌ செய்தருளிய ஸ்தலமன்றோ-என்று அஞ்சலித்து, அவ் விடத்தில்‌ அநவரத ஸந்நிதி பண்ணித்‌ கொண்டிருக்கிறவர்கள்‌ புருஷகாரமாக
ஸிந்துரர்ஜஸி ரோரத்ந மிந்திரா வாஸ வக்ஷலம்‌ |
வவந்தே வரதம்‌ வேதிமேதிநீ க்ருஹ மேதிரம்‌ ॥

திருவத்தி மா மலைக்குத்‌ தலைக் கணி மணியாய்‌ அலர்மேல் மங்கை வுறை திருமார்பை யுடையனாய்‌ யாக பூமிக்கு ஸ்வாமியான வரத ராஜனை அடிபணிந்தார்‌ -என்கிற படியே புண்ய கோட்‌ யாக்யாதமான விமான மத்யத்திலே எழுந்தருளி யிருக்கிற பேரருளாளரை:
ராமாநுஜாங்க்ரி ஸரணேஸ்மி குல ப்ரதீப.
த்வாஸீத்‌ ஸ யாமுந முநேஸ்‌ ஸ ச நாத வம்ஸ்ய: |
வம்ஸ்ய.பராங்குஸ முநேஸ்‌ ஸ ச ஸோபி தேவ்யா:
தாஸஸ்தவேதி வரதாஸ்மி தவேக்ஷணிய ॥

பேரருளாளனே! அடியேன்‌ எம்பெருமானார்‌ திருவடிகளை சரணம்‌ பற்றியவன்‌; அந்த எம்பெருமானாரோ ஆளவந்தாருடைய ஜ்ஞாத பரம்பரைக் கணி விளக்கானவர்‌, அவ் வாளவந்தார்‌ தாமும்‌ ஸ்ரீமத்‌ நாதமுனிகளுடைய வம்சத்தவர்‌. அந்த நாதமுனிகளும்‌ நம்மாழ்‌வாருடைய ஜ்ஞாந பரம்பரையினர்‌, அந்த ஆழ்வாரும்‌ பிராட்டிக்‌ கடியவர்‌; இப்படி பாரம்பர்யத்தாலே அடியேன்‌ தேவரீருக்கு கடாஷிக்கத் தக்கவனாகிறேன்‌ -என்றநுஸந்தித்து தண்டன்‌ ஸமர்ப்‌பித்து, அநந்தரம்‌ திருப்பல்லாண்டையும்‌ வரதராஜ அஷ்டகத்தையும்‌ ஸ்தோத்ர கத்யங்களையும்‌ அநுஸந்தித்து மங்களாசாஸனம்‌ பண்ணி யருள , தேவப் பெருமாளும்‌, ‘நம்மிராமானுசனைப் போலே யிருப்‌ பாரோருவரைப்‌ பெறுவதே!’ என்று மிகவும்‌ க்ருபை பண்ணி தீர்த்‌த ப்ரஸாதங்களையும்‌ ஸ்ரீசடகோபனையும்‌ ப்ரஸாதித்தருளி விடை கொடுத்தருள. அங்கு நின்றும்‌ புறப்பட்டருளி–
தீப ப்ரகாஸ நர கேஸரி வித்ருமாப வைகுண்ட வாமந யதோக்தகர அஷ்ட பாஹுூந்‌ | அந்யாந் ஸுதா பணி பாண்டவ தூத ஹேம வர்ணாதிமாந்‌ வாகுரு:க்ரமஸஸ்‌ ஸிஷேவே ॥
ஸ்ரீ அழகிய மண்வாள குருவானவர்‌, தீப ப்ரகாசர்‌, அழகிய சிங்கர்‌,
பவழ வண்ணர்‌, வைகுண்ட நாதர்‌, வாமனன்‌ (உலகளந்தார்‌]
யதோக்தகாரி, அட்டபுய கரத்தான்‌, இவர்களையும்‌ ஸுதாகரர் ஊரகத்தான்‌, பாண்டவ தூதர்‌, ஹேம வர்ணர்‌, இவர்கள்‌ முதலான மற்றுமுள்ள எம்பெருமான்களையும்‌ முறைப்‌படி ஸேவித்தார் -என்கிற படியே-நிறைந்த சீர்‌ நீள்‌ கச்சியிலுண்டான திருவெஃகா முதலான திருப்பதிகளையும்‌ திருவடி தொழுது

நாயனார் ஸ்ரீ பெரும் பூதூரேற எழுந்தருதளுல்‌-அநந்தரம்‌;,
யதீந்ரத் ஜநநீம் ப்ராப்ய புரீம்‌ புருஷ புங்கவ: |
அந்த.கிமபி ஸம்‌ பஸ்யந் நத்ராக்ஷீல் லஷ்மணம்‌ முநிம்‌ –

ஆண்களின்‌ சிறந்தவரான அழகிய மணவாளர்‌ யதிராஜரின்‌ அவதார ஸ்தலமான ஸ்ரீபெரும்பூதுரை யடைந்து ஊரிலுள்ள சிறப்‌புக்களைக்‌ கண்டு களித்துக்‌ கொண்டு சென்று இளையாழ்வாரை ஸேவித்தார்‌-என்கிறபடியே ஸ்ரீ பெரும்பூதூர் ஏற வெழுந்தருளி ஊரருகே நின்று
இதுவோ பெரும்‌ பூதூர்‌? இங்கே பிறந்தோ
எதிராச ரெம்மிடரைத்‌ தீர்த்தார்‌? – இதுவோ தான்‌ :
தேங்கும்‌ பொருநல்‌ திருநகரிக் கொப்பான
ஓங்கு புகழுடைய வூர்‌
-என்று ஊரை யநுபவித்து ஊரிலே ப்ரவேசித் தருளி, ‘
எந்தை வயதிராச ரெம்மை யெடுத்தளிக்க
வந்த பெரும்பூதூரில்‌ வந்தோமோ!–சிந்தை
மருளோ? தெருளோ? மகிழ் மாலைமார்பன்‌
அருளோ விப் பேற்றுக் கடி-
-என்று அலாப்ய லாபமாக ப்ராப்ய கெளரவத்தை யநுஸந்தித்து வித்தரா யுள்ளே புக்கு, ஆண்டுகள்‌ நாள்‌ திங்களாய்‌ (இரா-31) என்று தொடங்கி இராமானுசனைப்‌ பொருந்தினமே என்று விஸ்மித ஹருதயராய்‌ ஸேவித்து,

என்னெஞ்சே! எங்களிராமானுசனென்‌னும்‌
நன்னெஞ்சே! நல்லை காண்‌, இன்னுமின்னும்‌
பெரும்பூதாரென்னாய்‌ போரப்‌
பெரும் போகமெல்லாம்‌ பெற
— என்று
ஸஹ்ருத யநுபவம்‌ பண்ணி சரம பர்வத்திலே நிலை நின்று ஸேலித்து, இராமனுசனிணையடிகளை அடைந்து ‘யோ நித்யம்‌” என்று தொடங்கி ‘ ராமாநுஜஸ்ய ஸரணென ஸரணம்‌ ப்ரபத்யே-என்று அநுஸந்தித்து தண்டன் ஸமர்ப்பித்து எதிராஜன்‌ வடிவைத்‌ தன்‌ கண்ணுள்ளும்‌ நெஞ்சுள்ளும்‌ நின்று நீங்காதபடி நிலை நிறுத்திக்‌ கொண்டு தீர்த்த ப்ரஸாதங்களும்‌ பெற்று -சீராரும்‌
எதிராசர்‌ திருவடிகள்‌ வாழி என்று தொடங்கி, ‘ தேவரீர்‌ நித்ய மங்களராய்‌ வாழ்ந்தருள வேணும்‌’ என்று மங்ளாசாஸனம்‌ செய்தருளி, ஸ்ரீபாஷ்ய ஸ்ரவணத்துக்கு உடையவரநுமதி கொண்டு -ஸ்ரீபாஷ்யத்துக்கு அநுமதி கொண்டு -அநந்தரம்‌ கோயிலிலே யெழுந்தருளியிருக்க, ராத்ரி ஸ்வப்நத்திலே எம்பெருமானாரெழுந்தருளி நாயனாரை அழைத்தருளி ஸ்ரீபாஷ்ய கோசத்தை ஸாதித்து, “நாமே உமக்குப்‌ பெருமாள் கோயிலிலே ஸ்ரீ பாஷ்யம் சாதிக்கிறோம் -கிடாம்பி நாயனார் பாடேறேச் செல்லும் நமக்கும்‌ திருவாய்மொழிப் பிள்ளைக்கும்‌ ப்ரியமாக வாசித்து பின்பு அருளிச்செயல்‌ வ்யாக்யானங்களையே பஹுமுகமாக ப்ரவர்த்திப்பியும்‌’” என்று அருளிச் செய்கையாலே,
ராமாநுஜயதி பணித ஸ்ரீபாஷ்யார்த்த ஸ்ரவணத்திலே ஸ்ரத்தையுடைராய்‌ மீண்டு பெருமாள்‌ கோயிலேற வெழுந்தருளி:

நாயனார்‌ கிடாம்பி நாயனார் பாடே ஸ்ரீ பாஷ்யம் கேட்டது
அங்கே கிடாம்பி யாச்சான்‌ திருவம்ஸ்யரான கிடாம்பி நாயனாரை ஸேவித்து (அவர் பக்கலிலே ஸ்ரீபாஷ்யம்‌ ஸேவித்தருளி, பேரருளாளரையும்‌ ஸேவித்து, சிறிது காலம்‌ எழுந்தருளி யிருந்து ஸ்ரீபாஷ்யம்‌ அநுஸந்தித்துத்‌ தலைக்கட்டினவாறே –செந் தமிழும்‌ வட கலையுந்‌ திகழ்ந்த நாவர்‌ என்கிறபடியே உபய வேதாந்தாசார்யராய்‌ வேதாந்த லிழுப்‌ பொருளின்‌ மேலிருந்த விளக்கை விட்டுசித்தன்‌ விரித்தனன்‌ என்கிறபடியே தந் முகேந பேரருளாளருடைய வைபவத்தை ப்ரகாசிப்பித்துக்‌ கொண்டு, தேவ ராஜரை ஸேலித்து அவரநுமதி கொண்டு, அங்குண்டான தர்ஸந க்ரந்தங்களை எடுப்‌பித்துக் கொண்டு கோயிலேற எழுந்தருளினார்‌)அங்கே ஸ்ரீபாஷ்யம்‌ கேட்டருளா நிற்க,கிடாம்பி நாயனாருக்கு ஸஹ பாடியாயிருக்கிற ஐயைகளப்பாவும்‌ செல்வ நாயனாரும்‌ போர ஆதரித்து வைத்துக் கொண்டு பாடம்‌ நடத்த அப்பா, நாயனாருடைய வாசகதாடியையும்‌ க்ரஹண
தாரண வாகவ்யவஹார சாதுர்யததையும்‌ கண்டு போர வித்தராய்‌ நாயனாரைப் பார்த்து, இவருடைய புத்திக்கநுகுணமாக ஸாதிக்‌க வில்லையே” என்ன, நாயனாரும்‌ அப்பாவை, நாளை இவருக்கு
சிந்தனை பண்ணுவியும்‌’? என்று ஸாபிப்ராயமாக ஒரு வார்த்தைmயருளிச் செய்ய, அப்பா, அதி நிபுராகையாலே’ பிற்றை நாள்‌ தொடங்கி நாயனாருக்கு சிந்தனை பண்ணுவிப்பதற்கு எழுந்தருளி
யிருக்க, நாயனாரும்‌ ஸஹஸ்ரமுகமாக உபன்யஸிக்கக் கண்டு ஐயைகள்‌ ‘ப்ரஸாதித்த அர்த்தங்கள்‌ ஒன்றும்‌ தப்பாமல்‌ பின்னையும்‌ போஷித்து விசேஷார்த்தங்களுடனே ஸாதித்தருளினீர்‌’- என்று அதிலே ஹர்ஷ யுக்தராய்‌ நெடும்போது பரவசராயிருக்க,-இத்தைக் கேட்டு கிடாம்பி நாயனாரும்‌ ஆங்கே யெழுந்தருள, அவர்‌ சிஷ்யர்களான வித்வஜ் ஜநங்கள்‌ நாயனாரோடே தர்க்கிக்க வேணு மென்றபேக்ஷிக்க, நாயனாரும்‌, ”நமக்கு இதர சாஸ்த்ர வ்யவஹாரத்துக்கு ஆசார்ய வாக்ய நிரோதமுண்டு” என்று அப்பாவுக்கு அருளிச் செய்ய, அப்பாவும்‌, “இவர்களும்‌ ஸ்ரீ வைஷ்ணவர்களன்றோ? இவர்களோடு ப்ரஸங்கித்தால்‌ ஸ்வரூப விரோதம்‌ வராது, அவர்‌களபிநிவேசத்தைச்‌ செய்தருள வேணும்‌’? என்றருளிச் செய்து அவர்களை முன்னே கொணர்ந்து விட, அவர்களுக்குத் தக்கதாக தர்க்க சப்த மீமாம்ஸைகளிலே பஹுமுகமாக உபந்யஸித் தருளின
‘வளவிலே எல்லாரும் வித்தராய்‌ திருவடிகளிலே தீர்க்‌க ப்ரணாமம்‌ பண்ணிப்‌ புறப்பட்டு நாயனார் பாடே சென்று, ,’நாயனாரை இத்‌தனை நாளும்‌ ஸாதாரணமாக எண்ணி யிருந்தோம்‌; அவரிடத்திலே ஸகல சாஸ்த்ரங்களும்‌ ஒருமிடறு செய்திருக்கின்‌றன!” என்று ஆச்‌சர்யப்பட, ‘அவர்‌ ஒரு அவதார லிசேஷங் காணுங்கோள்‌”” என்று அருளிச் செய்து விட்டு அவரைக் கொண்டு அருளிச் செயல்‌ வ்யாக்‌யானங்களை ப்ரவர்த்திப்பிக்கத திருவுள்ளமாய்‌, பின்பு அதி த்வரை யுடனே ஸ்ரீபாஷ்யம்‌ நடத்திக்கொண்டு போர, நாயனார்‌ பல காலும்‌ஈடு முப்பத்தாறாயிரப்படியை உருச் சொல்லிக்‌ கொண்டு போருகிறதைக்‌ கண்டு ஆச்சர்யப்பட்டு, ஒருவரு மறியாமல்‌ ஏகாந்‌தத்திலே நாயனார்‌ பாடே சென்று “முப்பத்தாறாயிரப்‌ பெருக்கர்‌’- என்று உமக்குத்‌ திருநாமஞ் சாத்தினது வெறுமனன்று; இந்த புத்தி ஸாமர்த்யம்‌ எங்குங் கண்ட தன்று; நமக்கொரு மநோ ரதமிருக்கிறது-அவஸ்யம்‌ செய்ய வேணும்‌’- என்று மறுக்க வொண்ணாதபடி அநுவர்த்திக்க, நாயனாரும்‌ இதுக்கென்‌ செய்வோ மென்று சிந்தித்துக் கொண்டு ஏதென்று கேட்க நாயனாரும்‌, ‘*தேவரீர்‌ அவதார விசேஷமென்று நிச்சயமாக வறிந்தேன்‌; எனக்கு அத்தை யொளிக்க வேண்டா. உள்ளபடி காட்ட வேண்டும்‌” என்றருளிச்செய்ய-ஆகில்‌ ஆசார்யராகிய தேவரீருக்கு ஒளிக்க ஒண்ணாதே; பெரியபெருமாளுடைய ரஹஸ்ய நியோகத்தை’ ஒருவருமறிய வேண்டா: என்று விண்ணப்பஞ்‌ செய்து கொண்டு ஏகாந்த ஸ்லத்திலே மங்கள தீபத்தை ஸ்ப்புரித்து, ”அஞ்சாமலிருக்க’ வென்று விண்ணப்பஞ்‌ செய்து, அஹிபதி நிஜாகாரத்தைக்‌ காட்டக் கண்டருளி பீதி யுக்தராய்‌ – இத்தை உப ஸம்ஹரிக்க வேணும்‌ – என்றபேஷிக்க” உபஸம்‌ஹரித்து எப்போதும் போலே நாயனா ரெழுந்தருளி யிருக்கக் கண்டு விசேஷ ப்ரதி பத்தியடனே அத்யாதரம்‌ பண்ணிக் கொண்டு தேவ ரஹஸ்யம்‌ நடத்திக் கொண்டு நாடோறும்‌ அமுது செய்தருளினபடியையும்‌ ஆராய்ந்து கொண்டு :திருமேனி ளெஎகுமார்யத்திற்கு அநுரூபமாம்படி பண்ணிக் கொண்டு வாரும்‌-என்று அடிக்கடி யருளிச் செய்து கொண்டு ஸ்ரீபாஷ்யம்‌ தலைக்கட்டி யருளும்படி தம்முடைய திருமாளிகையிலே கறக்கிற பசுவின் பாலை ஸாவதானமாகத்‌ திருத்தி நாயனார்‌ அமுது செய்யும்‌ படிக்கு ஸாதித்து உகப்புடனே ஸ்ரீபாஷ்யம்‌ நிறைவேற்றி “செந்தமிழும்‌ வடகலையுந்‌ திகழ்ந்த நாவர்‌ என்கிறபடியே உபய வேதாந்‌தாசார்யராய்‌ வேதாந்த விழுப் பொருளின்‌ மேலிருந்த விளக்கை விட்டு சித்தன்‌ விரித்தனனே -என்கிறபடியே தந் முகேநே பேரருளார்‌ வைபவத்தை ப்ரகாஸிப்‌பித்துக் கொண்டு (ஓராண்டு காலம்‌ யதோக்தகாரி ஸந்நிதியில்‌ ஸ்ரீபாஷ்யமும்‌ பகவத் விஷயமும்‌ ஸாதித்தருளினதாகவும்‌ அது காரணமாகவே அந்த ஸந்நிதியில்‌ மணவாளமாமுனிகள்‌ உபதேச ஹஸ்த முத்ரையுடன்‌ ஸேவை ஸாதிப்பது என்றும்‌ பெரியோர்கள்‌ பணிக்கக்‌ கேட்டிருக்கை )அங்கே சிலநாளெழுந்தருளியிருந்து:-அநந்தரம்‌ அங்குண்டான பகவத் விஷய ஸ்ரீ கோசங்களை யெகுப்பித்துக் கொண்டு கோயிலிலே யெழுந்தருள-

தத: ப்ரதிநிவ்ருத்தம் தம்‌ புருஷோ புஜ கேஸய: | ப்ரத்யுத் கம்ய ப்ரபுஸ்ஸ்வைரம்‌ புந . ப்ராவேஸ யத்புரம்‌ ॥
பின்னர்‌ அரவணையில்‌ பள்ளியானான ஸ்ரீரங்கதாதன்‌ திரும்பவும்‌ எழுந்தருளின அவ் வழகிய மணவாளப்‌ பெருமாளை எதிர்‌ கொண்டு, தம்மிஷ்டப் படியே மீண்டும்‌ திருவரங்கத்தில்‌ ப்ரவேஸிப்‌பித்தார்‌-என்கிறபடியே பெருமாளாலே ப்ரத்யுத்கதராய்‌க் கொண்டு திருவரங்கப்‌ பெரு நகரிலே ப்ரவேஸித்துப்‌ பெருமாளை ஸேவித்தருள, பெருமாளும் போர வுகந்தருளி தீர்‌த்த ப்ரஸாதங்கள்‌ ப்ரஸாதித்து,
நித்யம்‌ ரங்கே நிவாஸய ப்ரார்த்தித: பணி ஸாயிநா ;
பஸ்யந்‌ பதாம் புஜம்‌ தஸ்ய பாலயாமாஸ ஸாஸநம்‌ ॥

இந்த வரங்கத்தே இனிதிரும்‌*” என்று ஸ்ரீ ரங்கஸாயியான பெருமாளால்‌ ப்ரார்த்திக் கப்பட்டவராய்‌ அழகிய மணவாளப் பெருமாளுடைய திருவடிகளை ஸேவித்துக்‌ கொண்டு அந்த நியமனதைப்‌ பரிபாலித்தார்‌ -என்கிறபடியே, ”இங்கேயே நித்ய வாஸம்‌ பண்ணும்‌” என்று நியமித்தருள, இவரும்‌ அப்படியே ஸம்மதி பண்ணி யெழுந்தருளி யிருக்க, அங்குண்டான பெரியோர்‌களெல்லாரும்‌ “தேவரீர்‌ இங்கே பெருமாளை மங்களாசாஸனம்‌ பண்ணிக்‌ கொண்டு எழுந்தருளி யிருக்க வேணும்‌” என்று ஆதரிக்க, அப்படியே -இன்பமிகு பெருங்குழுவுடனே யெழுந்தருளியிருக்க இசைந்து,
ஸ்ரீமத் ரங்கம்‌ ஐயது பரமம்‌ தாம தேஜோ நிதாநம்‌
பூமா தஸ்மிந்‌ பவது குஸலீ கோபி பூமா ஸஹாய: |
திவ்யம்‌ தஸ்மை திஸது விபவம்‌ தேஸீகோ தேஸகாநாம்‌
காலே காலே வரவரமுநி கல்பயந்‌ மங்களாநி ॥

பிறரை வெல்லும்‌ ஆற்றலுக்கு உயர்ந்த ஸ்தானமாய்‌, நித்ய ஸ்ரீயுடலன் கூடியதாய்‌ ஸ்ரீரங்கம்‌ என்கிற மேலான திவ்ய தேசமானது நன்றாக விளங்கட்டும்‌; அங்கு ஸ்ரீதேவி பூதேவிகளோடு கூடிய அநிவாச்யனான பெரிய பெருமாள்‌ பாங்காக எழுந்தருளி யிருக்க வேணும்‌; ஆசார்யர்களுக்கெல்லாம்‌ முதல்வரான வரவர முநி அநுதிமும்‌ மங்களாசாஸனங்களைப்‌ பண்ணிக்‌ கொண்டு அப் பெருமானுக்கு ஸ்ரேஷ்டமான வைபவங்களை உண்டாக்‌க வேணும்‌- என்று காலகாலங்களிலே மங்களாசாஸநம்‌ பண்ணி யருள அத்தாலே *அரங்கர் தஞ்சீர்‌ தழைப்ப என்கிற படியே பெரிய பெருமளுடைய திருச்செல்வம்‌, சிறந்த செல்வம்‌ மல்கி என்றும்‌ நீங்காத செல்வம்‌ நிறைந்து என்றும்‌ ஸம்ருத்தமாயிற்று-

நாயனார்‌ ஸந்யாஸாஸ்ரமம்‌ ஸ்வீகரித்தல்
அக் காலத்திலே பெருமாளுடைய ஸேவைக்கு விருத்தமான ஒரு ஆசெளச விசேஷத்தைத்‌ தெற்கினின்றும்‌ சிலர் வந்து விண்ணப்‌பஞ் செய்யக்‌ கேட்டருளி தென்னரங்கள்‌ கழல்‌ சென்னி வைத்துத்‌தானதில்‌ மன்னி யிருக்கிற தமக்கு தத்‌ விஸ்லேஷம்‌ அத்யந்தம்‌ துஸ் ஸஹமாய்‌ த்வத் பாத பத்ம ப்ரவணாத்ம வ்ருத்தேர்பவந்தி ஸர்வே ப்ரதி கூல ரூபா:” -தேவரீருடைய திருக் கமல பாதங்களில்‌
ஈடுபாடுள்ள மனமுடையவனுக்கு எல்லாம்‌ விரோதிகளாகவே ஆகின்றன-என்கிறபடியே பகவதநுபவ விரோதிகளான பரிகரங்‌களெல்லாம்‌ அத்யத்தம்‌ ப்ரதிகூலங்களா யிருக்கின்‌றன வென்று
அறுதி யிட்டு அப்போதே தமக்கு ஸப்ரஹ்மசாரியான சடகோப ஜீயர்‌ ஸத்நிதியிலே யெழுந் தருளி
சந்தம்‌ தஸ்யைஷ விஜ்ஞாய நந்தந் நந்தந்‌ நிரந்தரம்‌ |
ஸர்வம்‌ ஸங்கம்‌ பரித்யஜ்ய துங்கம்‌ ப்ராவிஸதாஸ்ரமம்‌ ॥

இவ்வழகிய மணவாள நாயனார்‌ அந்த சடகோப ஜீயருடைய திருவுள்ளக்‌ கருத்தை யறிந்து மிகவும்‌ ௨கந்துகந்து, ஸர்வ ஸம்‌பந்தங்களையும்‌ விட்டு விட்டு உயர்ந்தான ஸந்நியாஸாஸ்ரமத்தில்‌
ப்ரவேசித்தார்‌-என்கிறபடியே ஸர்வஸங்க பரித்யாக பூர்வகமாக ஸந்யஸித்தருளி, த்ரி தண்ட காஷாயங்களை அவர்‌ திருக் கைகளாலே ஸாதிக்க தரித்தருளி துரீயாச்ரமத்தை யடைந்து அதற்கு அநுகுணமாக ‘சடகோப ஜீயர்‌” என்று பிள்ளை திரு நாமத்தை யுடையராய்‌,
அற்ற பற்றராய்‌, பற்றிலார்‌ பற்ற நின்ற பெருமாள்‌ திரு முன்பே யெழுந்தருளி ஸேவித்து,
மங்களம்‌ ரங்க துர்யாய நம: பந்நக ஸா யிநே |
மங்களம்‌ ஸஹ்ய ஜாமத்யே ஸாந்நித்ய க்ருத சேதஸே ॥

ஸ்ரீ ரங்கநாதனுக்கு மங்கள முண்டாக வேணும்‌. அரவணை மேல் துயிலும்‌ பெருமாளை அடி பணிகிறேன்‌. உபய காவேரி மத்யத்தல்‌ நித்ய ஸாந்நித்யம்‌ பண்ணி யிருப்பதில்‌ நிலைத்த திருவுள்ளமுடைய பெருமாளுக்கு மங்களமுண்டாகுக-என்று மங்களாசாஸநம்‌ பண்ணிக்‌ கொண்டெழுந்தருளி நிற்க, பெருமாளும்‌ இவரை ஆதரித்தருளி, தம்முடைய திரு நாமமான முந்தின திருநாமத்‌தையே முடிய நடத்த வேணுமென்‌றருளிச் செய்து, ”உமக்கு பல்‌லவராயன்‌ மடத்தை ப்ரஸாதிக்கிறோம்‌; யாவச் சரீர பாதம்‌ எம்பெருமானாரைப்‌ போலே இங்கே இரும்‌” என்று நியமித்தருளி, எம்‌பெருமானார்‌ காலத்தில்‌ கந்தாடை யாண்டான்‌ தம்முடைய ஆசார்‌யரான ஆட் கொண்ட வில்லிஜீயர்‌ எழுந்தருளியிருக்கும்‌ படி மடமாக்கி, அவருடைய திருவராதனமான என்னைத் தீமனங்‌ கெடுத்‌தார்க்கு மத்யாஹ்ந கால அவஸரத்திலே அமுது செய்யப்‌ பண்ணும்‌ படி பெருமாள்‌ ஸந்நிதியிலே நித்யம்‌ ஒரு தளிகையும்‌ திருவிளக்கு நெய்‌ முதலியவையும்‌ நடக்கும்படி பொலிவிட்டு நடந்து வந்ததாயும்‌, சில நாள்களுக்குப்‌ பின்பு முதலியாண்டான்‌ திருவம்‌சத்தார்‌ பரஸ்பர விவாதத்தாலே ஸ்ரீபண்டாரத்தில்‌ சேர்த்ததாயும்‌ பூர்வ காலத்திலே அதி விலஷணமான ராமாநுஜ கூடம்‌ பல்லவராயன்‌ நடத்தின படியாலே பல்லவராயன்‌ மடமாயிற்று; திருவாராதநமும்‌ என்னைத் தீ மனங்கெடுத்தார்‌, என்று திருநாமம்‌; அந்த மடத்தையும்‌, திருவாராத நத்தையும்‌ ப்ரஸாதித்து மிகவும்‌ க்ருபை
பண்ணி யருளி நிஸ்ருஷ்டாத்மா ஸுஹ்ருத்ஸுச:-நண்பர்களிடத்தில்‌ தம் பொறுப்பை வைத்தவர்‌-என்கிறபடியே தாமும்‌ அவ் விடத்திலே ந்யஸ்த பரராய்‌ தீர்த்த ப்ரஸாதங்களையும்‌ ப்ரஸாதித்து, பரிவட்டம்‌ ஸ்ரீசடகோபன்‌ ப்‌ரஸாதித்து ‘-நம்முடைய அழகிய மணவாள ஜீயரை மடத்திலே விட்டு வாருங்கோள்‌-என்று உத்தம நம்பி முதலான அனைத்துப்‌ பரிகரத்தையும்‌ இவர்‌ பின்னே அனுப்பி யருள, அவர்களும்‌ அப்படியே ஸேவித்துச்‌ கொண்டு போய்‌ மடத்தில்‌ யெழுந்தருளப்‌ பண்ணி, அடியார்கள்‌ வாழ, அரங்க நகர் வாழ…….. மணவாள மா முனியே இன்னு மொரு நாற்றாண்டிரும்‌ என்று ஸேலித்து மீண்டார்கள்‌.
பின்பு மடம்‌ முழுவதையும்‌ வான மாமலை ஜீயர்‌ முதலான முதலிகளைக்‌ கொண்டு செப்பமிடுவித்து, ‘திருமலையாழ்வார்‌” என்று திருவாய்மொழிப் பிள்ளை பெயராலே யொரு வியாக்கியான மண்டபத்தையு (காலக்ஷேப கூடம்‌) முண்டாக்கி பிள்ளை லோகாசாரியர்‌ திருமாளிகையிலிருந்து ரஹஸ்யம்‌ விளைந்த மண்ணால்‌ தாம்‌ எழுந்தருளியிருக்கிற இடத்திற்கு மண் காப்புச்‌ சாத்துவித்து அவ்விடத்தை குருகுலவமஸமாகவே எண்ணி, ஸ்வாசார்ய பாத பங்கஜ த்வந்த்வச்சாய மத்யே ஸுகாஸீநராய்‌ இனிதமர்ந்து வியாக்யானித்துக்‌கொண்டெழுந்தருளி யிருந்து, பிள்ளை நம்மாழ்வார்‌ திரு நாமத்தாலே விளங்கி யருளினாப்‌ போலே தாமும்‌ நம் பெருமான்‌ திரு நாமத்‌தாலே மிகவும்‌ விளங்கி யருளினார்‌. இப்படி ‘ரங்க மங்கள தூயாய ரம்ய ஜாமாத்ரு யோகிநே ”’ ஸ்ரீரங்கத்துக்கு மங்களாசாஸன பரரான மணவாளமாமுனிகளுக்கு மங்களமுண்டாகுக- என்னும்படி
கோயிலுக்கு மிசவும்‌ மங்களாசாஸன பரராய்‌ எழுந்தருளி யிருக்கும் நாளிலே,

ஆசாரஜ்ஞாந வைராக்ரை ராகாணே ச தாத்ரும: |
ஸ்ரீமாந்‌ ராமாநுஜஸ் ஸோயமித்யாஸம்‌ ஸந்‌ மித.ப்ரஜா:

ஆகாரத்தினாலும்‌, ஆசாரம்‌, ஜ்ஞாநம்‌, வைராக்யம்‌ இவற்றினாலும்‌, எம்பெருமானாரைப்‌ போலலே இந்த மணவாள மா முனிகளும்‌ உள்ளமையால்‌ ஸ்ரீமானான அந்த ராமாநுஜ முனிவரே இவர்‌ என்று ஜனங்கள்‌ பரஸ்பரம்‌ புகழ்ந்து பேசினர்‌ -என்னும்படியான திருவரங்கள்‌ திருமுற்றத் தடியவ ரெல்லாரும்‌ ‘இவர்‌ எம்பெருமானார்‌ அவதாரம்‌” என்று அறுதியிட்டு இவர்‌ திருவடிகளிலே ஆஸ்ரயித்து அத்யந்தம்‌ விலஷணராய்‌, ‘ பரமந போநிவாஸ பணி புங்கவ ரங்க பதேர் பவந மிதம்‌ ஹிதாய ஜகதோ பவதா அதிகதம்‌”” (பரமபதத்‌தில்‌ எழுந்தருளி யிரா நின்ற திருவநத்தாழ்வானே! இந்த அழகிய
மணவாளனுடைய வாஸஸ்தானமான இத் திருவரங்கமானது தேவரீரால்‌ லோக ஷேமத்தின்‌ பொருட்டு அடையப்பட்டது-என்றும்‌
வன் பெரு வானகமுய்ய, அமரருய்ய, மண்ணுய்ய மண்ணுலகில்‌
மனிசருய்ய, துன்பமிகு துயரகல, அயர்வொன்றில்லாச்‌ சுகம்‌ வளர
அக மகிழுந் தொண்டர்‌ வாழ அன்பொடு தென் திசை நோக்கப்‌பள்ளி கொள்ளும்‌
(பெரு திரு 1-10) பெரிய பெருமாள்‌ ஐகத் ரக்ஷணார்த்தமாக இங்கே யெழுந்தருளினாற் போலாயிற்று இவர்‌ இங்கே எழுந்தருளினது என்று மிகவும்‌ ஆதரித்துக் கொண்டு போந்தார்கள்‌.

திருமஞ்சநன அப்பாவும்‌ பட்டர் பிரான்‌ ஜீயரும்‌ ஜீயரை ஆஸ்ரயித்தல்‌
இப்படி எழுந்தருளியிருக்கிற காலத்திலே ஜீயர்‌ அருணோதயத்‌துக்குத்‌ திருக்காவேரியில்‌ நீராட எழுந்தருளுவர்‌; அக் காலத்திலே அத்யந்தம்‌ ஸத்வ நிஷ்டராய்‌ பெருமாள்‌ ஸந்நிதியிலே அநந்ய ப்ரயோஜனராய்‌ கைங்கர்யம்‌ பண்ணிப் போருகிற திருமஞ்ஜநம்‌ அப்பா வென்றொருவர்‌ கூடவே சென்று ஜீயர் நீராடுகிற ஸ்தானத்‌திற்குப்‌ பின்பே யிருந்து அந்த ப்ரவாஹ தீர்த்தத்தில்‌ தப்பாமல்‌ நீராடிக்‌ கொண்டு போக அவருக்கு ஞாநோதயமாய்‌ ஜீயர்‌ திரு வடிகளிலே நிரவதிக ப்ராவண்யமுண்டாய்‌ ஆஸ்ரயித்துக்‌கு க்ருதார்த்‌தரானார்‌. இந்த அர்த்தத்தை
உஷஸ்யயம் வாரிணி ஸஹ்யஜாயா: ஸ்நாதோ யதீந்த்ர ப்ரவணோ முநீந்த்ர: |
தத்ரைவ பஸ்சாதவ காஹ்ய தீர்த்தே ஸ்ரீ தீர்த்தாதாதஸ்‌ கமுபாஸரி தோபூத்‌ ॥

உஷ: காலத்தில்‌ யதீந்த்ர ப்ரவணாரான மா முனிகள்‌ நீராடிய காவிரி ப்ரவாஹத்தில்‌ பின்னர்‌ அமிழ்ந்தாடின திருமஞ்சனம்‌ ௮ப்பா அவரிடம்‌ ப்ராவண்யமுடையராய்‌ அவரை(மாமுனிகளை) ஆஸ்ரயித்‌தவரானார்‌] என்று அநுஸந்தித்தார்கள்‌. அப்பாவும்‌ ஜீயர்‌ திருப்‌ பவளத்தாலே ஸகலார்த்தங்களையும்‌ ஸ்ரவித்து, ”சாயா வாஸத்வ மநுகச்சேத்‌ –நிழலுறடிதாறுமா னோம்‌ என்கிறபடியே சாயாவத்‌ பரதந்த்‌தரராய்த்‌ திருவடிகளைப்‌ பிரியாமல்‌ அங்குத்தைக்கு அந்தரங்கராய்‌ எழுந்‌தருளியிருத்தார்‌

அநந்தரம்‌ ‘கோவிந்த தாஸரப்பர்‌” என்னும்‌ நிரூபகத்தை யுடையவரான பட்டர்‌ பிரான் ஜீயர்‌, திருவடிகளிலே வந்து ஆஸ்ரயித்து தத் பாத பத்ம ஸேவைகதா ரகராய் ஸேலித்துக் கொண்டு எழுந்தருளி யிருந்தார்‌-கோவிந்ததாதர்‌–பட்டர்பிரான்‌ ஜீயர்‌ மாமுனிகளின்‌ அஷ்ட திக் கஜங்கனில்‌ ஒருவரானர்‌; பட்டர்‌ பிரான்‌ ஜீயர்‌ வந்து தண்டமிழோர்‌ மன்னு புகழ்‌ தொண்டை மண்டலத்தில்‌ வந்துதித்து தன்னுடைய வாசாரம்‌தப்பாமல்‌ இந்நிலத்திலாசரிததுக் காட்டி, யரங்கத்தே சென்று புகுந்து ஈஸரவணை மேல் எம் பெருமான்‌ வாச மலர்த்தாள்‌ பரவும்‌ மணவாள யோகி மலர்த் தாள்‌ தனிலிறைஞ்சி நண்ணி நில மேல்‌ சிச்சனாகாரம்‌ தெரிவிப்போம்‌’” என்று வந்த கோவிந்ததாதன்‌–என்கிறபடியே மணவாள மாமுனியை யாஸ்ரயித்து, *கோவிந்‌ தாஹ்வாநபாயிநீ’ என்கிறபடியே எம்பாரைப் போலே இவரும்‌ அவருக்கு நிழலுமடி தாறும்‌ போல வரவர முனி சரணத்தை அரை க்ஷணமும்‌ பிரிய க்ஷமரன்றிக்கே பிரியா வடிமை செய்து தத்பாத ஸேவைகதாரகராய்‌ வாழ்ந்து கொண்டிருந்தார்‌

அதன் பின்பு மணவாள மாமுனியும முகில்வண்ண்னடி மேல்‌ சொன்ன சொல் மாலையாயிரம்‌ என்றும்‌ மதிளரங்கர்‌ வண்‌புகழ்‌ மேலான்ற தமிழ்‌ மறைகளாயிரம்‌ என்றும்‌-இப்படி பெரிய பெருமாள்‌ விஷயமாக ப்ரதி பாதிக்கப்படுகற திருவாய்மொழியினுடைய ஈடு முதலான வ்யாக்யானங்களையும்‌ மற்றுமுண்டான ஆழ்வார்கள்‌ அருளிச்‌ செய்த வ்யாக்யானங்களையும்‌ வ்யக்தமாக ப்ரஸாதித்திக்‌ கொண்டும்‌, ஸ்ரீவசநபூஷணாதி திவ்ய ரஹஸ்ய தாத்பர் யங்களையும்‌ தர்சிப்பித்துக் கொண்டும்‌ ராமாநுஜார்ய வசகராய்‌ நாடோறும்‌ ஸேவித்துக்‌ கொண்டும்‌ குரோர்‌ நாம ஸதாஜபேத்‌”, என்று எம்பெருமானார்‌ திருநாமமாய்‌-சயந்தரு கீர்த்தியாய்‌-ஸ்ரீவைஷ்ணவ காயத்ரியான நூற்றந்தாதியை
‘அநவரதம்‌ அநுஸந்தித்துக்‌ கொண்டும்‌ ”வகுளபூஷண வாகம்‌ருதாராநம்‌” என்று தொடங்கி தம்முடைய அபேக்ஷிதங்களையும்‌ அவர்‌ திருவடிகளிலே நித்யமாக ப்ரார்த்திக்‌ கொண்டு
ம்‌ தத் ப்ரஸாதைக தாரகராய்‌ தத்‌ வைபவத்தை ப்ரகாசித்துக்‌ கொண்டும் அஸத்ருச வைபவராய்‌ திருமாலை யாழ்வாருடைய அடிநிழலிலே (தத்‌ ப்ரஸாததைக ப்ரயோஜநராயிருக்க, ஸ்ரீபாதத்து முதலிகள்‌ தப்பா மறை மொழியானெதிராசன்‌ தண்டாமரைத்‌ தாள்‌, இப்பாரிடந்தனிலிட்டு வைத்த தனமிதன, வைப்பாகிய மனத்தான்‌ மணவாளமாமுனியை இனி ஒப்பார்களில்லை உலகேழி லும உம்பரிலுமே என்று உபய விபூதியிலும்‌ இவர்‌ அஸத்ருஸ வைபவ யுக்தராய்‌: தேசந் திகழ எழுந்தருளி யிருக்கிற காலத்திலே பெரிய பெருமாளுடைய நியமானத்தாலே தமக்குத்‌ திருவாராதனமாக ஸ்ரீரங்தராஜரை எழுந்தளருப்‌ பண்ணி வைத்துப்‌ பிள்ளைலோகாசாரியருடைய திருநஷத்ரமான ஐப்பசி மாஸம்‌ திருவோணத்‌ திரு நன்னாளிலே திருப்ரதிஷ்டையுங்‌ கொண்டருளப்பண்ணி, தமது திருக்கைகளாலே ஆராதநமுஞ்‌ செய்து ‘ ஐந்மர்க்ஷே ஸ்ரவணோபி வா” என்றும்‌ நீ பிறந்த திருவோணம்‌ என்றுஞ்‌ சொல்லுகிற படியே பிள்ளை லோகா சாரியர்‌ திருநக்ஷத்ரமான திருவோணம்‌ முதலான
மற்றுமுள்ள ஆசாரியர்கள்‌ திரு நக்ஷத்ரங்களையும்‌ *செந்தெலரிசி சிறுபருப்புச்‌ செய்த வக்காரம்‌ நறு நெய் பாலால்‌ பன்னிரண்டு திருவோணமட்டேன்‌ (பெரியா திரு, 2-9-7) என்கிறபடியே அக்கார வடிசிலாலே அமுது செய்தருளப்‌ பண்ணிப் பரிபாலித்துக் கொண்டும்‌ பூர்வாசாரியர்களுடைய வசநாநுஷ்டானங்களையும்‌ தம்முடைய உக்த்யநுஷ்டாநங்களாலே ப்ரகாசிப்பித்துக் கொண்டும்‌ ஸ்ரீரங்கஸ்ரீக்கு மங்கள தீபம்‌ போலே எழுந்தருளி யிருந்தார்‌.

இப்படி திசை விளக்காய்‌ நிற்கிற திருவரங்கத்திலே திக்குற்ற கீர்த்தி யிராமனுசனைப் போலே
சிர விரஹதஸ் சிந்தா ஸந்தாந நஜர்‌ ஜர சேதஸம்‌ புஜக ஸயநம்‌தேவம்‌ பூய! ப்ரஸாதயிதும்‌ த்ருவம்‌ |
யதிகுலபதிஸ்‌ ஸ்ரீமான் ராமாநுஜஸ் ஸம பூதயந்த்விதி ஸமதுஷக்‌ ஸர்வே ஸர்வத்ர தத்ர ஸுதீஜநா-
என்றும்‌,
வெகுகாலம்‌ பிரிந்திருந்ததால்‌, மிகவும்‌ நினைப்பதினால்‌ மனம்‌ தளர்ந்த அரவணை மேல்‌ பள்ளிகொண்டுள்ள பெருமாளை ஆஸ்வாஸிப்பிப்பதற்கு யதீந்த்ரரான ஸ்ரீமாந்‌ ராமநுஜரே இந்த மணவாளமாமுனிகளாக அவதரித்தார்‌ என்று வித்வஜ் ஜனங்கள்‌ எங்கும்‌ சொல்லி மகிழ்ந்தனர்‌.
அதுக்கும்‌ மேலே
(2) ஸமுநிஸ் ஸெளம்ய ஜாமாதா ஸர்வேஷாமேவ பஸ்யதாம்‌ |
ஸ்ரீஸகஸ்ய நிதேஸேந ஸூ ஸூபே தேஸிகே ஸ்ரியா -என்றும்‌

அழகிய மணவாள னென்று பெயருள்ள அந்த முனிவர்‌(ஆசாரியர்‌) திருமகளனபனான பெருமாளுடைய நியமனத்தினால்‌ எல்லோரும்‌ காண ஆசார்ய ஸ்ரீயுடன்‌ விளங்கினார்‌. தேஸிக ஸ்ரீயாலே மிகவும்‌ விளங்கா நிற்க இதை தேசாந்தரஸ்த ரெல்லாருங்‌ கேட்டு
(3) ததஸ் ஸமுத் ஸுகாஸ் ஸர்வே ஸதஸோத ஸஹ ஸ்ரஸ :
ஸரணம் தஸ்ய ஸம்ஸ்ரித்ய சரணேள தந்யதாம்‌ கதா: ॥ –

பிறகு மிக மகிழ்ந்த யாவரும்‌ நூற்றுக் கணக்கிலும்‌ ஆயிரக்‌ கணக்கிலும்‌ அந்த மணவாளமாமுனிகளுடைய திருவடிகளைப்‌ புசுலாப் பற்றி தந்யரானார்கள்‌-என்கிறபடியே ஸமீபஸ்தரோடு தூரஸ்தரோடு வாசியற அஸங்க்யாதராய்‌ ஆஸ்ரயிக்க, அவர்களை யெல்லாம்‌ பரம க்ருபையாலே திருத்தித் திருமகள்‌ கேள்வனுக்‌காக்கி என்றும்‌, அரங்கன்‌ செய்ய தாளிணை யோடார்த்தான்‌ என்றும்‌ சொல்லுகிறபடியே அரங்கன்‌ மெய்யடியார்கள்‌ என்றும்‌ திருமாலடியார்கள்‌ என்றும்‌ நிரூபகமாம்படி அத் தலைக்கு ஆளாக்கி யருள, அவர்களும்‌ அபகத மத மனை–இத்யாதிப்‌படியே குற்றமின்றிக்‌ குணம்‌ பெருக்கிக்‌ குருக்களுக்க நுகூலராய்‌,
-வரவர முநி ப்ருத்யர்‌” என்று நிரூபிக்கும்படி அங்குத்தைக்கு அந்‌தரங்கராய்த்‌ திருவடிசுளிலே நித்ய ஸேவை பண்ணிக்‌ கொண்டு அவர்‌ பிரஸாதித் தருளுகிற பகவத் விஷயங்களையுங்‌ கேட்டுக்‌
கொண்டு ஆசார்யாபிமானத்திலே ஒதுங்கி அநுகூலராயிருக்க-

அப்பா குமாரத்தி ஆச்சியார்‌ ஜீயரை ஆஸ்ரயித்தல்‌
ஜீயர்‌ ப்ராத காலத்தில்‌ நீராட்டத்திற்குப்‌ புறப்பட்டெழுந்‌தருளா நிற்கச்‌ செய்தே ஒரு நாள்‌ அசிந்திதமாக வர்ஷம்‌ வர, அதனால்‌ ஒரு வைஷ்ணவர்‌ க்ருஹத்தின்‌ வாசல்‌ திண்ணையை உத்‌தேசித்து எழுந்தருளா நிற்க அந்தக்‌ ருஹயஜமானை கண்டு அத்யந்‌தம்‌ ப்ராவண்யத்தாலே புடவைத்‌ தலைப்பாலே திண்ணையைத்‌ துலக்கி, “ஸ்வாமீ நீர் .இங்கே எழுந்தருள வேணும்‌” என்று ஸ விநய பக்தியோடே ஸேவித்து நிற்க, ஜீயரும்‌ திருவடி நிலைகளைக்‌ கீழே வீட்டுத்‌ திண்ணை மேலே ஏறி யருள அந்த அம்மை மழையிலே நனைகிற திருவடி நிலைகளை எழுந்தருளப்‌ பண்ணித் தம்‌ சிரஸ்ஸிலே தீர்த்‌தத்தோடு தரித்துக்‌ கொண்டு, பிற்பாடு தலைப்பாலே திருவொற்றுவாடை சாத்தி மீளவும்‌ சிரஸா வஹித்து, திருமுன்பே எழுந்தருளப்‌ பண்ணி நிற்க, ஜீயரும்‌, ‘நீயார்‌? பேரேது? இது ஆருடைய திரு மாளிகை ?” என்று கேட்டருள, “தேவரீர்‌ திருவடி ஸம்பந்தியா யிருக்கிற திருமஞ்சனம்‌ அப்பாவுடைய பெண்‌- அடியேன்‌ பெயர்‌ ஆச்சி. இது அவருடைய மணவாளப்‌ பிள்ளை கந்தாடை ஐயங்‌கார்‌ க்ருஹம்‌ (முதலி யாண்டான்‌ திரு வம்ச்யரான சிற்றண்ணர்‌ )என்று விண்ணப்பம்‌ செய்யக்‌ கேட்டு உகந்தருளி,
தம்முடைய அப்பாச்சியாரோ!’”’ என்று அருளிச்‌ செய்து கடாஷித்துக்‌ கொண்டு வர்ஷம்‌ நிவர்த்தமான வுடனே திருக் காவேரிக்‌ கெழுந்தருளினார்‌.

ஆச்சியாரும்‌ திருவடி நிலைகளின்‌ திருமஞ்சனம்‌, தலையிலே ஊறி ஜீயர் கடாஷம்‌ பெற்றவளாகையாலே உடனே ஜ்ஞாநோதயமுண்டாய்‌, அப்போதே ஜீயர்‌ திருவடிகளிலே ஆஸ்ரயிக்க வேணு மென்னும்‌ ருசி பிறந்து, பிறந்தகத்திலே சென்று பிதாவுக் கறிவிக்க அவரும்‌ உகந்து, தம்முடைய தெளஹித்ரர்களும்‌ அறியா மலிருக்க வேணுமென்று அருளிச் செய்து, ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆச்ரயண மான பின்பு தம்முடைய திரு மாளிகையிலே தானே ஒரிடத்திற்கும்‌ புறப்பாடமல்‌ சில நாளிருக்கும்‌ படிக்கு ஆலோசனை பண்ணிய அப்பா, தம்முடைய குமாரத்தியாரைக்‌ கூட்டிக் கொண்டு மடத்திலே எழுந்தருளி ஜீயரை தண்டன்‌ ஸமர்ப்பித்து இச் செய்தியை விண்ணப்பஞ் செய்ய; ஜீயரும்‌, கந்தாடை
அய்யங்கார்கள்‌ ஸம்பந்தத்தைப்‌ பார்க்க வேண்டாவோ? காரியப்‌ படாது” என்றருளிச் செய்ய, அப்பாவும்‌ தம்முடைய குமாரத்தியாருடைய ஆஸ்திக்யாத்ரார்‌த்திகளை விண்ணப்‌பஞ் செய்து-ப்ரதிஹதி ஒன்றும்‌ வாராது; க்ருபை செய்தருள வேனும்‌” என்று விண்ணப்பஞ் செய்ய, -ஆகில்‌ இவளை யிட்டு இந்தத் திருவம்சத்திற்‌ கெல்லாம்‌ ஆநுகூல்ய முண்டாமென்று –ஸூபேந மநஸா த்யாதம்‌’-என்கிறபடியே அப்போது ஒரு சிந்தை செய்து ஆச்சியாருக்கு ஸமாஸ்ரயணம்‌ ஸாதித்தருளி ஹிதங்களையும்‌ ஜ்ஞாதவ்யார்த்தங்‌களையும்‌ உகந்து ப்ரஸாதித்தருளினார்‌, அப்பாவும்‌ தம்முடைய குமாரத்தியாரைத்‌ தம்முடைய திருமாளிகையிலே தானே சில நாளிருக்கும்படிக்கு நியமித்து அவருடைய குமாரர்‌ அண்ணா தொடக்கமானவர்களுக்கு ஒரு கார்யாந்தரத்தை அருளிச் செய்து பரிஹரித்து வைத்தருளினார்‌. இப்படி ஆச்சியாருக்கு ஸ்ரீபாத தீர்த்த வஹநத்தினாலே வந்து அதிசயத்தை
ஸ்ரீபாதுகாம்புஜ நிதாத்ம விவேகரங்க பூநாத தீர்த்த ஜலதாதஜ மாத்ரு தேவம்‌ |
த்வந்த்வச்சிதம்‌ நிகில தேஸி௧ வந்த்யபாதம்‌ ஸெளம்யோ பயந்த்ரு முநி வர்யமஹம்‌ நமாமி

என்று அநுஸந்தித்தார்கள்‌ -தமது பாதுகையின்‌ தீர்த்தத்‌தினால்‌ ஆத்ம விவேகத்தைப்‌ பெற்ற திருமஞ்ஜனம்‌ அப்பாவின்‌ பெண்ணான ஆச்சிக்குத் தேவதையும்‌, சீதோஷ்ணம்‌ ஸூக துக்கம்‌ முதலிய த்வத்வங்களை அறுப்பவரும்‌, ஆசார்யர்களனைவராலும்‌ வணங்கத் தக்க திருவடிகளை யுடையவருமான அழகிய மணவாள மாமுனிவரை அடியேன்‌ வணங்குகிறேன்‌-அநந்தரம்‌ கந்தாடை யண்ணன்‌ திருத் தகப்பனார்‌’ தேவாஜ தோழப்பருடைய தீர்த்தம்‌ வர-அற்றைக்கு சிற்றண்ணர்‌ தேவியாரான ஆச்சியாரைத்‌ தளிகை பண்ண அழைத்து விட, அவரும்‌ அப்படியே பாவநத்வ போக்யத்‌வங்களுடேன்‌ தளிகை பண்ண, பெருமாளமுது செய்தருளி முத்தின ஸ்ரீவைஷ்ணவர்களும்‌ அமுது செய்தருளி இஷ்ட பங்க்தியும்‌ அண்ணன்‌ தொடக்கமானாரும்‌ அமுது செய்தருளின அநத்தரம்‌ அண்ணன்‌ வாசல்‌ திண்ணையிலே எழுந்தருளியிருக்க;

சிங்கரையார் வ்ருத் தாந்தம்‌
ஓரு ஸ்ரீவைஷ்ணவர்‌ ஜீயர்‌ மடத்தில்‌ நின்றும்‌ புறப்பட்டுவர அவரைக்‌ கண்டு உமக்கு எந்த ஊர்‌?’என்று கேட்டருள, அவரும்‌ வள்ளுவ ராஜேந்த்ரம்‌ -என்ன இங்கே வந்த காரியமேது?’என்ன, ‘அடியேன்‌ ஜீயர்‌ திருவடிகளிலே ஆஸ்ரயிக்கக்‌ காத்திருக்‌கிறேன்‌: ப்ராப்‌தி காலம்‌ வர வேணும்‌ என்ன–இந்த ஸ்தலத்தில்‌ ஆசார்ய புருஷர்கள்‌ திரட்சியாக வுண்டே, மற்றோரிடத்தில்‌ ஆனாலோ? ‘என்ன, “இங்கே பகவந் நியமனமாயிருக்கிறது’ ‘ என்ன,
-அது எப்படி?” என்ன, அது ரஹஸ்யம்‌” என்ன, “உம்முடைய பெயரேது?’ என்ன, ”சிங்கரையர்‌” என்ன, இவர்‌ பகவத்‌ ப்ரஸாத பாத்ர பூதராக வேணுமென்று திருவுள்ளத்திலே எண்ணி, இவர்‌
கையைப்‌ பிடித்துக்‌ கொண்டு உள்ளே சென்று தீர்த்த ப்ரஸாதங்‌களையும்‌ சந்தனம்‌ அடைக்காய்களையும்‌ ப்ரஸாததித்து ஆதரித்தருளி இவ் விரா திருமாளிகையிலே சயியும்‌” என்று நியமித்தருளித்‌ தாமும்‌ திருத் தம்பிமார் கந்தாடை யப்பனும்‌, திருக் கோபுரத்து நாயனார் பட்டரும்‌ எழுந்தருளி யிருக்க, திருவத்யயநத் தளிகை கைங்கர்யமெல்லாம்‌ நிறைவேறி ஆச்சியார்‌ அலஸையாய்‌ உள்ளே படுக்‌கையிலே சாயும்‌ போது -ஜீயர்‌ திருவடிகளே சரணம்‌, பிள்ளை திருவடிகளே சரணம்‌, வாழி உலகாரியன்‌” என்று சயிக்க, இந்த சப்தத்தை மூவரும்‌ கேட்டு இதேது என்று விஸ்மித வ்யாகுலராயிருக்க, இவர்களில்‌ பாட்டர்‌ உள்ளே சென்று கேட்கிறேன்‌!”என்று போய்‌ மதினியாரே! என்றழைக்க, ஆச்சியார்‌ பயப்பட்டு,தாம்‌ சொன்னது இவர்‌ செவிப்பட்டதென்று பேசாமலிருக்க,
அண்ணனும்‌ அப்பனும்‌ அவரை யழைத்து “எல்லாம்‌ பொழுது விடிந்தவாறே தெரியும்‌, அவரை எழுப்ப வேண்டாம்‌” என்று மூவரும் கண் வளர்ந்தருள; அண்ணனுக்கு பய பக்திகள்‌ மிக்கு
மென்மலர்ப் பள்ளி வெம் பள்ளியாகி, ப்ராதாக்களறியாமல்‌ சிங்கரையர்‌ சயநித்த விடத்திலே எழுந்தருளி அவரை யெழுப்பி சில ஆத்யாத்மிக தர்மங்களை யருளிச்‌ செய்ய, அவர்‌ கேட்டு ௨கந்திருக்க அந்த வேளையிலே ‘ஜீயர்‌ திருவடிகளிலே ஆஸ்ரயிக்கும்படி உமக்கு பகவந் நியமனமான பெருமையை அறிய வேணுமென்று அத்யபி நிவேசமா யிருக்கிறது” என்றருளிச் செய்யக் கேட்டு அவர்‌ சொன்னது:-எங்களூரிலே யுண்டாகிற காய்‌ கிழங்குகளை யதா சக்தி ஸம்‌பாதித்து “இந்த ஸ்தலத்திலே பெரியோர்கள்‌ திரு மாளிகைகளுக்கு அடிக்கடி ஸமர்ப்பித்துப் போருவதுண்டு; அத்தை ஒரு நாள்‌ ஒரு ஸ்ரீவைஷ்ணவர்‌ கண்டு இன்றைக்கு மடத்திலே ஸமர்ப்பியும்‌ என்ன, பாக்யமாயிற்று என்று கொண்டு ஸமர்ப்பித்தேன்‌; அத்தை ஜீயர்‌ கண்டு இது எங்கே விளைந்தது? எந்த நீர்‌ பாய்ந்தது?
நீரிறைத்தவரார்‌? எதற்காகக்‌ கொணர்ந்தீர்‌?” என்று கேட்டருள
அடியேன்‌ அதி விநயமயயும்‌ உசிதமாயும்‌ விண்‌ணப்பம்‌ செய்தபடி-பரிசுத்த ஸ்தலத்திலேயே விளைந்தது, அடிச் சேரியிலே தேவரீர்‌ தாஸ வர்க்கங்கள்‌ நீரியிரைத்துப்‌ பாய்ச்சினது, ஸ்ரீ பாகவத
ஸ்வத்து” என்று விண்ணப்பம்‌ செய்ய, அது கேட்டு ௨கந்தருளி அத்தை அங்கீகரித்தருளி கோயிலுக்குப் போய்‌ பெருமாளை ஸேவித்‌துப்‌ போருமென்று விடை கொடுக்கப்‌ பெருமாள் ஸந்நிதியிலே
செல்ல, அருகே யிருந்த அர்ச்சகர்‌-இன்றைக்குக்‌ காய்கறி யாருக்கு ஸமர்ப்பித்திர்‌?’* என்ன? ஜீயர்‌ மடத்திலே” என்ன, அர்ச்சகர்‌ ப்ரியப்பட்டுப்‌ பரவசராய்‌ அடியேன்‌ முதுகைத்‌ தட்டி ‘நீர்‌ பாக்யவான்‌; உமக்கு விலஷண ஸம்பந்த முண்டாகப்‌ போகிறது-என்று தீர்த்தம்‌, சந்தனம்‌ திருமாலை, வேளையம்‌, அபய ஹஸ்தம்‌, ஸ்ரீ சடகோபன்‌ ப்ரஸாதித்து பஹுமானம்‌ பண்ண, :அடியேனை இன்றைக்கு இத்தனை க்ருபை பண்ணி யருளுவதே! என்று ஸந்நிதியினின்றும்‌ புறப்பட்ட வளவிலே, ‘இவனை மல்லுக்கட்‌டிப்பிடி? என்கிற வார்த்தை கேட்க, அவ் வார்த்தை ஸாபிப்ராயமாக இருக்‌கிறதென்று மீண்டும்‌ மடத்திலே சென்று தண்டன்‌ ஸமர்ப்பித்து
தேவரீருக்காகப்‌ பெருமாள்‌ போர க்ருபை பண்ணி யருளினார்‌-என்று -இச் செய்தியை யெல்லாம்‌ விண்ணப்பஞ்‌ செய்து ஊருக்கு விடை கொள்ளுகிறேனென்ன; அங்குள்ளார்‌ அடியேனை யாதரித்து
ப்ரஸாதமும்‌ ப்ரஸாதித்தனுப்ப அத்தை வழியிலே ப்ரஸாதப்‌பட்டுச்‌ செல்ல, உடனே சித்த சுத்தி பிறந்து ஆஸ்ரயண ருசி யுண்டாயிற்று; அன்று ராத்திரி ஸ்வப்நத்திலே பெரிய பெருமாள்‌ ஸந்நிதியிலே திருமணத் தூணருகே நின்று ஸேவித்துக்‌ கொண்டிருக்க பெரிய பெருமாள்‌ அணையில்‌ வைத்த திருக் கையை உயர வெடுத்துத்‌ திருவநந்தாழ்வானைக்‌ காட்டி இவர்‌ கிடாய்‌ அழகிய மணவாளச்‌ சீயர்‌, இவரோடு உனக்கு ஸம்பந்த முண்டாக்கிக்‌ கொள்‌” என்றருளிச்‌ செய்ய, இந்த ஸ்வப்நத்தைக்‌ கண்டு க்ருதார்த்தனாய்‌ ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயிக்கக் காத்திருக்கிறேன்‌’ என்று சிங்கரையர்‌ விண்ணப்பஞ் செய்யக்‌ கந்தாடை அண்ணன்‌ கேட்டருளி பய பக்திகள்‌ விஞ்சி நெடும்போது சிந்தித்து உள்ளே யெழுந்தருளித்‌ திருப் படுக்கையிலே சாய்ந்தருள, ஸ்வப்நமான ப்ரகாரம்‌:-

கந்தாடை யண்ணன்‌ கண்ட ஸ்வப்நம்‌.
ஒரு ஸ்ரீவைஷணவர்‌ மெத்தையினின்றும்‌ ஏணி வழியாலே இறங்கி வந்து பெரிய கசையாலே தம்மை யடிக்க, தமக்கு நிவர்த்‌திப்பிக்க சக்தி யுண்டாயிருக்கச் செய்தேயும்‌, “நம்மிடத்தில்‌ ஸ்வரூப விருத்தமான நடக்கை யுண்டாயிருப் பதினாலே சிக்ஷித் தருளுகிறார்‌ ‘ என்றெண்ணி, –ஸாஸ்த்ர ஷாராக்நி கர்மாணி ஸ்வ புத்ராய யதா பிதா–தன்‌ மகன்‌ புண்ணை ஆற்றுதற்காகத்‌ தகப்பன்‌ கத்தியாலறுப்பது, காரமான மருந்தை யிடுவது தீயினால்‌ கடுவது முதலிய செயல்களை ஹித புத்தியாலே செய்விக்குமா போலே- என்றநுஸந்தித்துக்‌ கொண்டிருக்க, கசையும்‌ துணிக்கை துணிக்‌கையாக அறுந்து போக, அந்த ஸ்ரீவைஷ்ணவர்‌ அண்ணன்‌ திருக்‌, கைகளைப்‌ பிடித்திழுக்க, அண்ணன்‌ ஏது செய்ய வேண்டுமென்ன ஏணி மேலேறி மெத்தை மேலை போவென்ன அண்ணனும்‌ அப்‌படியே செய்ய அந்த ஸ்ரீவைஷ்ணவர்‌ தாமும்‌ ஏறி வந்து எடுத்துக்‌ கட்டி மேலே கொண்டு போசு, அங்கே ஒரு ஜீயர்‌ ஒரு திருவடியைத்‌ தாங்க விட்டுக்‌ கொண்டும்‌ ஒரு திருவடியை குஞ்சித்துக்‌ கொண்‌டும்‌, த்ரிதண்டத்தைத்‌ தோளிலே சாத்திக்‌ கொண்டும்‌ திருக்கையிலே கசையைப்‌ பிடித்துக்‌ கொண்டும்‌ அக்நி கல்பராய்‌ மிகவும்‌ குபிதராயிருக்க, அவர்‌ முன்னே அண்ணனைப்‌ பிடித்துக்‌ கொண்டு போக , ஜீயர்‌ அண்ணனை பஹுவாக அடிக்க, கசையும்‌ துணிக்கையான வாறே இன்னுமடிக்கத் தக்கதாக உப தண்டத்தை வாங்கப்‌ புக, அத்த ஸ்ரீ வைஷ்ணவர்‌ தண்டன்‌ ஸமர்ப்பித்து அஞ்சலி ஹஸ்‌தரராய்‌ ஜீயர்‌ திருமுக மண்டலத்தைப்‌ பார்த்து ‘இவன் சிறுபிள்‌ளை பஹுவாக அடிபட்டான்‌. இனி க்ஷமித்தருளித்‌ திருவுள்ள மிரங்கி க்ருபைப்‌ பண்ணி யருள வேணும்‌” என்ன; அவரும் இறங்கி யருளி அண்ணனை அழைத்து மடியிலே வைத்து உச்சி மோந்து திருக் கைகளாலே திருமேனி யெங்குந்‌ தடவி நீயும்‌ உத்தம நம்பியும்‌ போர அபசாரப்‌ பட்டீர்சள்‌” என்ன, ”அழகிய மணவாள ஜீயர் ப்ரபாவ மறியாமல்‌ அவிவேகம்‌ வந்தது; இனி க்ஷமித்தருள வேணும்‌!என்று திருவடிகளைப்‌ பிடித்துக்‌ கொள்ள, ஜீயர்‌ இரங்கி யருளி, நாம்‌ ஸ்ரீபாஷ்யகாரர்‌, இவர்‌ முதலியாண்டான்‌’ என்று தம்மையும்‌ அந்த ஸ்ரீவைஷ்ணவரையுங்காட்டி,
த்வதீயாநபரா தாந்யீரந்‌ த்வத் ஸம்பந்தி க்ருதாநபி |
க்ஷமாம் யஹம்‌ தாஸா தேஸ்‌ ஸம்பந்தம்‌ மா அந்யதாக்ருதா: ॥

நீர்‌ செய்த தவறுகளையும்‌ உம்‌முடைய ஸம்பந்திகள்‌ செய்த தவறுகளையும்‌ பொறுத்துக்‌ கொள்ளுகிறேன்‌ நான்‌, முதலியாண்டான்‌ ஸம்பந்தத்தை வ்யர்த்தமாக்காதீர்‌- என்றிந்த ஸ்லோகத்தை யுநு ஸந்தித்து ”நாமே திருவநந் தாழ்வான்‌, நாமே வரவர முனி; அவர்‌(அழகிய மணவாள ஜீயர்‌) திருவடிகளிலே நீயும்‌ உன்னுடைய ஸம்பந்திகளும்‌ ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள்‌” என்று விட,
அண்ணனும்‌ திருக் கண்கள்‌ [விழித்து நெடும் போது ‘*ஈதொரு ஸ்வப்ந மிருந்தபடி யென்‌!” என்று விஸ்மிதராய்‌ கண்டவற்றை யெல்லாம்‌ புந:புந: சிந்தித்து மறவாமல்‌ திருவுள்ளத்திலே கட்டிபண்ணி, திருத் தம்பிமார்களை யெழுப்பி ஸ்வப்ந வ்ருத்தாந்தங்களை யருளிச் செய்யத்‌ தொடங்கி நடுவே நடுவே ஹர்ஷ பரவசராய்‌-ஸ்தப்தராயிருந்து அருளிச் செய்து தலைக் கட்டி யருளினார்‌.

இப்படி அண்ணனுக்கு எம்பெருமானார்‌ ஸாதித்தருளின அர்த்தத்தையும்‌ அண்ணன்‌ விண்ணப்ஞ்செய்த அர்த்தத்தையும்‌ அதற்கு உத்தரத்தையும்‌,
வாதூல துர்ய வரதார்ய குரோர்‌ பபாண ஸ்வப்நே யதீத்ர வபுரேத்ய க்ருபா பரோந்ய: |
ஸேஷோப்யஹம்‌ வரவரோ முநிரப்யஹம்‌ த்வம்‌ |மாமஸ்ரயேதி தமஹம்‌ கலயாமி சித்தே ॥
அத்யந்த பாப நிரத:கதமார்ய வர்ய-த்வாமரஸ்ரயேஹமிதி தம்‌ க்ருபணம்‌ வதந்தம்‌ |
த்ருஷ்ட்வா க்ஷமாமி நநுதா ஸரதேஸ் த்வதீய ஸவரா பராதமிதி தம்‌ ப்ரவதந்தமீடே ॥

யாவர் ஓருவர்‌ வாதூல குலஸ்ரேஷ்டரான அண்ணனுடைய ஸ்வப்நத்தில்‌ எம்பெருமானார்‌ திரு மேனியாக ஸேவை ஸாதித்துப்‌ பரம க்ருபை யுடையராய்‌’ ஆதிசேஷனும்‌ நாமே, மா முநிகளும்‌
நாமே நீர்‌ நம்மை ஆஸ்ரயியும்‌” என்று அருளிச் செய்தாரோ அவரை அடியேன்‌ மனதில்‌ த்யானம்‌ செய்கிறேன்‌. பாப கார்யத்தில்‌ மிகவும்‌ ஊன்றிய அடியேன்‌ ஆசார்ய ஸ்ரேஷ்டராள தேவரீரை
எப்படி ஆஸ்ரயிப்பேன்‌ என்று நமாகக்‌ கூறுகிற அவ் வண்ணனைப்‌ பார்த்து ஒ அண்ணனே! முதலியாண்டானுக்காக உம்முடைய ஸர்வாபாரதங்களையும்‌ பொறுத்துக்‌ கொள்ளுகிறோம்‌” என்று அருளிச் செய்யும்‌ அந்த ஜீயரை ஸ்தோத்ரம்‌ செய்கிறேன்‌- என்று பெரியோர்கள்‌ அநுஸத்தித்தார்கள்‌. அண்ணன்‌ தம்பிமார்களைக்‌ கூட்டிக்‌ கொண்டு “அத்யமே ஸபலம்‌ .ஐந்ம ஸுப்ர பாதாச மே நிமா” (விஷ்ணு 5) 7-3) இன்று என்‌ பிறவி பயன்‌பெற்றது எனக்கு நேற்றிரவு இன்று நல்ல விடிவாயிற்று-என்று சொல்லிக்‌ கொண்டு புறப்பட்டு ஆச்சியாரருகே சென்று தண்டனிட்டு அவர்‌ பயப்படாத படிக்கு முந்துற ஸ்வப்ந வ்ருத்தாந்தத்தை யருளிச் செய்ய, ஆய்ச்சியார்‌ தமக்கு ஜீயர்‌ ஸம்பந்த முண்டான படியையும்‌ ‘அதற்கு மூல பூதமான ஜீயருடைய பாதுகா தீர்த்த வைபவத்தையும்‌ தம்முடைய திருத் தமப்பனாரான அப்பாவுக்கு ஜீயர்‌ நீராடி யருள அந்த தீர்த்தத்தலே அவகாஹித்ததால்‌ வந்த ஜ்ஞாநாதிக்யத்தையும்‌ ஆச்சியார்‌ முகத்தாலே கேட்டருளி அத்யந்த ஹ்ருஷ்டராய்ப்‌ புறப்பட்டு சிங்கரையரைக் கண்டு உகந்து அவருக்கு. எல்லாவற்றையு மருளிச்‌ செய்து கொண்டு திருக் காவேரிக்‌ கெழுந்தருளி நீராடி நித்ய கர்மாநுஷ்டாநங்களாகிப்‌ புறப்‌ பட்டருளி;

அண்ணன்‌ ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆச்ரயிக்க ஒருப்பட்டது
சுப ஸூசகங்களா யிருக்கிற நிமித்தங்களைச்‌ செய்து கொண்டு
ததாகதாம்தாம்‌ ல்யதிதாம நிந்திதாம்‌ வ்யபேத ஹர்ஷாம்‌ பரிதீநமாநஸாம்‌ |
ஸூபாந் நிமித்தாநி ஸூபாநி பேஜிரே நரம்‌ ஸ்ரியா ஜுஷ்ட மிவோபஜீவிந:

சொல்ல முடியாத துன்பமுடையவரும்‌, இனி மேல்‌ தான்‌ அதிகமான துன்பங்கள்‌ நேரப் போகின்றன வென்று நினைத்தவளும்‌ குற்றமற்றவளும்‌, சிறிதும்‌ மகிழ்ச்சி யில்லாதவளும்‌, அறவே மனமழியப்‌ பெற்றவளுமான அந்த ஸீதாப் பிராட்டியை, யாசகர்கள்‌ பணமுள்ளவனை அடைந்து ஸத்தை பெறுமாபோலே சில சுப ஸுசனைகளும்‌ அடைந்து ஸத்தை பெற்றன-என்கிறபடியே போய்‌ திருமாளிகையிலே யெழுந்தருளி ஆச்சியாரைக் கண்டு
ரங்கேஸ கைங்கர் ஸுதீர்த்த தேவ ராஜார்யஜாம் பாகலு பாக்ய ஸீலா |
ரம்யோ பயந்து: பத ஸம்ஸ்ரயேணயா யஸ்மத் குலம்‌ பாவந மாத நோதி ॥

யாவருளாருத்தி மாமுனிகளின்‌ திருவடிகளை ஆஸ்ரயித்து நமது

குலத்தைப்‌ பாவனமாக ஆக்கினாளோ, திருவரங்கனுக்குத்‌ தொண்‌டரான திருமஞ்சனம்‌ தேவராஜர்‌ என்னும்‌ அப்பாவின்‌ புதல்வியான அந்த ஆச்சியார்‌ பாக்யசாலிநி யல்லவா? என்‌று அநுஸந்‌
தித்தருளி “உம்முடைய திருக்கைகளாலே ‘ ப்ரஸாதப்‌பட்ட்ன்றோ இப்பேறு ஸித்தத்தது” என்று உகந்தருளி, உத்தம நம்பியை யழைத்து வரப்‌ போக விட்டு, தாமும்‌ தம்முடைய தாயாதரான கந்தாடை அய்யங்கார்கள்‌ எல்லாருக்கும்‌ இச்செய்தியை அருளிச்‌ செய்து அவர்களுக்கு ஜீயர்‌ ஸம்பந்த முண்டாக்கும்படி திருவுள்ளமாய்‌ அவர்களுடைய அகங்களிலே எழுந்தருள,
ஆச்சியார்‌ குமாரரான அண்ணாவும்‌ தாசரதி அப்பையும்‌, தந்தையரான எம்பாவும்‌ அண்ணன்‌ திருவடிசுளிலே தீர்க்க ப்ரணாமத்துடனே ‘தேவரீருக்கு ஸாதித்த ஸ்வப்நமே அடியோங்களுக்‌கும்‌” என்று விண்ணப்பஞ்செய்ய, அவர்களையுங்‌ கூட்டிக் கொண்டு லக்ஷ்மணா சாரியரென்று ப்ரஸித்தரா யிருந்தவருடைய பெளத்ரராய் இருக்கிற எம்பாவண்டையிலே எழுந்தருளி ஆஸ்ரயித்து (இந்த எம்பா என்னும்‌ ஸ்வாமி, அப்போது திருமண்‌ காப்பு வேளையா யிருக்க கோபத்தில்‌ அதையும்‌ பூர்த்தியாக அணியாமல்‌ உள்ளே எழுந்தருளி விட்டபடியினால்‌ ”ஒத்தைக்‌ கொம்பு எம்பா” என்று திருநாமம்‌ பெற்றதாக கர்ண பரம்பரைச்‌ செய்தி: பிறகு இவர்‌ ஸ்ரீரங்கத்திலிருந்து திருமழிசை எழுந்தருளி விட்டதாசச்‌ சொல்லப்‌ படுகிறது. )இச் செய்தியை அருளிச் செய்ய அவர்‌ குபிதராய்‌ ‘*அபிஜந வித்யா வ்ருத்தநங்களுடைய மஹா குலத்திகே பிறந்து இப்படியானாயோ?’? என்று நாநா பெளருஷ உக்திகளைப்‌ பண்ணி விட, அவருக்கு புத்ர கோடிகளாய்ப்‌ பெரிய ஆயி திரு வம்சத்தராயுள்ள அப்பா முதலானார்‌ பதின்மர்‌ க்ருஹங்‌ளிலுமெழுந்தருளி ஹிதமருளிச்‌ செய்ய, அவர்களுக்கு அதபிதமாய்த்‌ தோன்றி பரிஹரிக்க, திருவுள்ளத்தில்‌ குறையோடே புறப்பட்டருளித்‌ தம்முடைய திரு வம்சஸ்த்தராய்‌ தமக்கு ப்ராத்ருரு கோடிகளா யுள்ளவர்கள்‌ திரு மாளிகைகளுக்கும்‌ புத்ர கோடிகளுடைய இருபது திருமாளிகைகளுக்கும்‌ எழுந்தருள, அவர்கள்‌ அதி ப்ரவணராய்‌ இருந்து கொண்டு தண்டன்‌ ஸமர்ப்பித்து அண்ணர் அருளிச்‌ செய்த ஹிதங்களை யெல்லாங் கேட்டு, தங்கள்‌ தங்களுக்‌குண்டான ஸ்வப்நங்களையும்‌ உப ச்ருதிகளையும்‌ சகுநங்களையும்‌ அழகிய மணவாள மா முனியினுடைய வைபவங்களையுஞ்‌ சொல்லிக்‌ கொண்டு ஆஸ்ரயணத்துக்கு த்வரிக்க, தமக்கு ப்ராத்ரு
கோடிகளா யுள்ளவர்களையும்‌ புத்‌ர கோடிகளா யுள்ளவர்களையும்‌ தங்கள்‌ தங்கள்‌ பார்யாதிகளையுங்‌ கூட்டிக் கொண்டு உபஹார புரஸ்ஸரமாக மடத்துக்குப்‌ புறப்படும்படி நியமித்து,

தம்முடைய திருமாளிகையிலே திருத் தாயார்‌ திருத்தமப்பனார்‌ முதலானவர்களையும்‌ ;விட்டு குரு குல வாஸமாக தாரக போஷக போக்யங்களெல்லாம்‌ அண்ணன்‌ திருவடிகளே யென்றிருக்கிற திருவாழியாழ்வார்‌ பிள்ளையையும்‌, சுத்த ஸத்வம்‌ அண்ணனையும்‌,திருத் தம்பிமாரையும்‌ மற்றும்‌ பெரியோர்களையும்‌ அழைத்து வைத்துக் கொண்டு சுத்தஸத்வ மண்ணன்‌ பாக்யாதிசயத்தாலே
ஸ்வதாவே மிகவும்‌ பாகவத ப்ராவண்ய முடையராய்‌ ஜீயருடைய திந ச்ர்யையை அடிக்கடி ஆராய்ந்து கொண்டு அதி ப்ரீதராய்‌ அண்ணன்‌ திருவுள்ளம்‌ சிறிது கலங்கினாலும்‌ –குரும்‌ ரஹ்ஸி கோதயேத்‌” என்கிற படியே திருவடிகளுக்கு ஹிதபராய்‌ ஜீயரிடத்‌திலே ப்ரீதி வரும்படி யருளிச்‌ செய்து கொண்டு போருகிறவரா யிருப்பார்‌; அத்தைத்‌ திருவுள்ளத்திலே வைத்து அண்ணன்‌ அருளிச்‌ செய்தபடி: இவருக்‌கு சுத்த ஸத்வம்‌ என்கிற திருநாமம்‌ யதார்த்தமாயிற்று; நமக்குப்‌ போர நல் வார்த்தை சொல்லிப்‌ போருவர்‌, இவருடைய ஹ்ருதயாநுஸாரியாய்‌ யாவத் கார்யமும்‌ கடித்தது; இனி ஒரு குறையுமிலலை” என்றருளிச்‌ செய்து கொண்டு தம்முடையவர்களும்‌ மற்றக்‌ கந்தாடை அய்யங்கார்‌களும்‌ அவரைக்‌ கடா௯்ஷித்துக்‌ கொண்டிருக்க-அண்ணன்‌ ஸ்வ ஸம்பந்திகளுடன்‌ ஜீயர்‌ மடத்துக்‌ கெழுந்தருளுதல்‌
அவர்களில்‌ சிலரை எம்பா மாறுபடுத்தி விட, சென்று அண்ணனுக்கு இச் செய்தியை அறிவிக்க, மிகவும்‌ கோபித்தருளி-அவர்களை விடும்‌’ என்று மற்றவர்களை யெல்லாம்‌ கூட்டிக் கொண்டு ஜீயர்‌ ஸந்நதிக் கெழுத்தருளுவதாக ஆச்சியாரை யழைத்து ஸமயமறிந்து திருவுள்ளத்தில்‌ படுத்தும்படிக்கு அனுப்பி யருள அவரும்‌ சென்று திருமாலையாழ்வாரில்‌ ஸ்ரீவைஷ்ணவ கோஷ்ட்டி.யிலே ஜீயரெழுந்தருளி யிருக்கிறபடியினாலே கிட்டி விண்ணப்பஞ்‌ செய்ய ஸங்கோசப்பட்டு ஒரு ஸாத்விக ஸ்ரீவைஷ்ணவரை யழைத்து “ஸ்வாமியை உள்ளே யெழுந்தருளும்படி ஏகாந்தமாகத்ச் செவியிலே லிண்ணப்பஞ் செய்யும்‌” என்ன அவர்‌ ,”ஏதுக்கு”?என்ன, அண்ணன்‌ முதலான கந்தாடை அய்யங்கார்‌களெல்‌லாருங்கூடி எழுந்தருளுகிறார்கள்‌” என்று ஆச்சியார்‌ உள்ளே சென்றார்‌-

அசட்டாச்சான்‌-
அந்த ஸ்ரீவைஷ்ணவர்‌, ஆச்சியார்‌ சொன்னதை அந்யதாவாக க்ரஹித்து ஓடிச் சென்று, ‘ஸ்வாமீ! சீக்சரமாக எழுந்தருள। கந்தாடை அய்யங்கார்கள்‌ கூடி வருகிறார்களாம்‌’, என்ன-ஜீயர்‌
துணுக்கென்று எழுந்திருந்து புறக்கடைக்கு எழுந்தருள உள்ளே எழுத்தருளக் காணாமையாலே ஆச்சியார்‌ அந்த ஸ்ரீ வைஷ்ணவர்‌ என்ன விண்ணப்பஞ்‌ செய்தாரோ வென்று பயப்பட்டு, சோபந
வார்த்தையை விண்ணப்பஞ்‌ செய்ய வேணுமென்று புறக்கடையில்‌ புகுவதற்கு ஸமயமாகக் காணாமையாலே, புறம்பே ஒளிக்கஅண்ணன்‌ முதலானார்‌ பெருங்கூட்டமாகத்‌ திருமுன் காணிக்கைகளும்‌ பலங்களும்‌ முன்னே பிடித்துக் கொண்டு மடத்து வாசலிலே எழுந்தருளி வானமாலை ஜீயர்‌ முதலானவர்களை புரஸ்கரித்தருளி அவர்களுடனே அண்ணன்‌ அதிவிநீதராய்‌ ‘ஜீயர்‌ திருவடிகளே ப்ராப்ய ப்ராபகமாக வந்தடைந்தோம்‌; தேவரீர்‌ அங்கீகரிப்பித்தருள வேண்டும்‌:’ என்ன, வானமாமலை ராமாநுஜஜீயர்‌ இது கேட்டு அதி ப்ரிதராய்‌ ஸ்தப்தராயிருந்து பிற்பாடு ஸந்நிதிக்கெழுந்‌தருள; அதற்குள்ளே ஆய்ச்சியார்‌ அதி த்வரையுடனே ஸமயமானவாறே ஜீயர்‌ திருவடிசுளிலே தண்டன்‌ ஸமர்ப்பித்து, இற்றைக்கு சோபநம்‌; அண்ணன்‌ முதலானாரெல்லமும்‌ திரளாகத்‌ திருவடிகளிலே ஆஸ்ரயிக்க எழுந்தருளுகிறார்கள்‌” என்ன, அவ்வளவிலே வானமாமலை ராமாஜஜீயருமெழுந்தளி ஹர்‌ஷ பரவசராய்‌ விண்ணப்பஞ்‌ செய்ய ஜீயர்‌ கேட்டு உகந்து, இவற்றிகெல்‌லாம்‌ மூலபூதை ஆச்சியாரன்றோ!’ என்று திருவுள்ளம் பற்றி,திருமலையாழ்வாரிலே வந்து விண்ணப்பஞ்‌ செய்த ஸ்ரீவைஷ்ணவரை யழைத்தருளி உம்முடைய பேரேது?” என்று விநோதமாகச்‌ கேட்டருள, அவரும்‌ “அடியேன்‌ ராமாநுஜ தாஸன்‌” என்ன, அப்படியன்று, அசட்டாச்சான்‌- என்று அவரைப்‌ பரிஹஸித்து திருவுள்ளத்தில்‌ உகப்போடே

அண்ணன்‌ ஐியரை ஸேவித்தல்‌
வித்யா விமுக்தி ஜநநீ விநயாதிகத்வ மாசார ஸம்பதநுவேல விகாஹஸீலம்‌
ஸ்ரீலஷ்மணார்ய கருணா விஷயீ க்ருதாநாம்‌ சித்ரம்‌ நதாசரதிவம்ஸ ஸமுத்பவாநாம்‌

மோக்ஷத்துக்கு உதவக்‌ கூடிய ஜ்ஜாநமும்‌ அதிசயிச்கத்தக்க விநயமும்‌, அநுஷ்டானச்‌ செல்வமும்‌ வேளைக்கு வேளை வளரும்‌ சீலமும்‌ எம்பெருமானார்‌ கருணைக்கு இலக்கான ஸ்ரீமுதலியாண்‌டான்‌ திரு வம்சத்தினருக்கு வாய்த்திருப்பதில்‌ வியப்பில்லை] என்று அருளிச்‌ செய்து
(இந்த ஸ்லோகத்தை மாமுனிகள்‌ வேடலப்பை விஷயமாக அருளிச்‌ செய்ததாகவும்‌ கூறுவர்‌, வேடலப்பை விஷயம்‌ பின்னர்‌ வரும்‌, ௮ங்கு இது மிகப்‌ பொருந்தும்‌. ) புறப்பட்டருளி மடத்து வாசலிலே அவர்களெல்‌லாரையுங்‌ கண்டு ஸ்ரீ ராமாநுஜ யோகீந்த்ர கருணா பரிப்ரும்ஹிதாம்‌ |
ஸ்ரேயஸீ மநகாம்‌ வந்தே ஸ்ரீமத் வாதூல ஸந்ததிம்‌ ॥

ஸ்ரீராமாநுஜர்‌ என்னும்‌ யோகியர்‌ தலைவர்‌ கருணையால் மல்கியதும்‌ சிறந்ததும்‌ குற்றமற்றதுமான ஸ்ரீமத் வாதூல குலக்‌ கொடி வழியை வணங்குகிறேன்‌] என்றநுஸந்தித்தருள, அவர்களெல்‌லாரும்‌ திருவடிகளிலே தீர்க்க ப்‌ரணாமம்‌ பண்ணி, ‘ந கர்மணா ந ப்ரஜியாதநேந:’வேதாஹமேதம்‌’ என்கிற பஞ்சாதிகளை அநுஸந்தித்து, உபஹாரங்களை ஸமர்ப்பிக்க, அங்கீகரித்தருளி,உள்ளே எழுந்தருளி திருவோலக்கமாக எழுந்தருளி யிருந்து
பொலிக பொலிக, என்கிற திருவாய்‌ மொழிக்கும்‌, திருப்பல்‌லாண்டுக்கும்‌ ஸங்க்ரஹமாக அர்த்தோபந்யாஸம்‌ செய்தருளி இப்படி ஸ்ரீவைஷ்ணவ ஸம்ருத்தி நித்யமாய்ச் செல்லவும்‌ எல்லாரும்‌ மங்களாசாஸந பரராகவும்‌ ஆசீர்வதித்தருளி எழுந்தருளியிருக்க;
அண்ணன்‌ வானமாமலை ஜீயருடனே ஸமாஸ்ரயணத்துக்கு த்வரித்‌தருள, அழகிய மணவாள மாமுனியும்‌ எழுந்திருந்து அப்பாலேரஹஸ்ய ஸ்தலத்திலே எழுந்தருளி யிருந்து வானமாமலை ஜீயரைக்‌ கொண்டு அண்ணனை அழைப்பித்து, ‘தேவரீர்‌ மஹாகுலப்ரஸூதரும்‌ எல்லாருக்கும்‌ குருகுலமன்றோ! இப்படி எதுக்கு?’! என்ன;
அப்படியொன்றும்‌ அருளிச்‌ செய்ய வேண்டா’! என்று தாம்‌ முன்‌ விருந்த இருப்புக்கு ஷாபணம்‌ பண்ணிக்‌ கொண்டு” ஸ்வப்ந வ்ருத்‌தாந்தத்தை முதலிலிருந்து தப்பாமல்‌ விண்ணப்பஞ்‌ செய்யக்‌ கேட்‌
டருளி, ”ஈயானுடைய திருவம்சஸ்த்தராய்‌ அநுகூலித்தவர்‌ சிலருண்டே ; அவர்களுக்கும்‌ வேறே சில பாக்யாதிகர்களுக்கும்‌ பெருமாள்‌ இரங்கி ஸ்வப்நாதிகளாலே தேவரீர்‌ நியமனத்திலே கூட்டுகிறார்‌. அவர்களையுங்‌ கூட்டிக்‌ கொண்டு இற்றைக்கு மூன்று நாள்‌ கழித்து நாலாம்‌ நாள்‌ தேவரீர்‌ திருவுள்ள ப்ரகாரத்திற்கு எல்லோருக்கும்‌ ஸமாஸ்ரயணமாகிறது” என்று நிர்ணயித் தருளிப்‌ புறப்‌பட்டுத்‌ திருவோலக்கத்திலே யெழுந்தருளின வநந்தரம்‌ சாத்துப்‌ப்டி அடைக்காயமுது விநியோகமாய்‌ எல்லாரும்‌ தம்தம்‌ திருமாளிகைகளுக் கெழுந்தருளினார்கள்‌.

மீண்டும்‌ பெருமாள்‌ சிலரைத் திருத்துவதாகத்‌ திருவுள்ளம் பற்றி
புநஸ் ஸ்வப்நா பதேஸேந தேஸே தேஸே நிரங்குஸ . |
அயமர்ச்சா வதாரத்வ ஸமாதிமவதீரயத்‌
அத்ய மர்த்யந்‌ ததே தஸ்ய தத்வ மாத்யந்திகம்‌ ஹிதம்‌ |-
அஸங்குசித மாசக்யெள புஜங்க ஸயந: புமாந்‌ ॥

அரவ்ணையில்‌ துயிலும்‌ ப்ரமபுருஷன்‌ மறுபடியும்‌ ஓவ்வோரிடத்திலும்‌, ஸ்வப்ந மென்கிற வ்யாஜத்தினால்‌, தன்னைத்‌ தடுப்பார்‌ யாருமில்லாமையாலே-அர்ச்சாவதாரத்வத்தின்‌ மெய்ப்பாட்டினை- பேசாமலிருக்கும்‌ ஸ்வபாவத்தை உதறி தள்ளி விட்டு, தேவர்களையும்‌ விஞ்சிய-இம் மாமுனிகளுடைய உண்மைத்‌ தன்மையையும்‌ மோக்ஷத்திற்கு அந்திமோபாய மாயிருக்கும்‌ தன்மையையும்‌ விவரமாக அருளிச்‌ செய்தான்‌–என்று இத்யாதிகளாலே ”குருஸ்ச ஸ்வப்ந த்ருஷடஸ்ச” என்கிறபடியே அவர்கள்‌ ஸ்வப்நத்திலே அர்ச்சாவதார ரூபியாய்‌ வந்து நாமே இப்படி ஆசார்ய ரூபேண அவதரித்தோம்‌; நீங்களுமப்படியே ஆசார்யம்மாம்‌ விஜாநீயாத்‌ பவ பந்த விமோசநம்‌”‘ -ஸம்ஸார பந்தத்தை விடுவிக்கும்‌ நாமே மாமுனிகளென்று அறியக் கடவர்கள்‌- என்கிறபடியே விசேஷ:ப்ரதிபத்தி பண்ணி ஆஸ்ரயியுங்கோள்‌” என்றருளிச் செய்ய;

அநந்தரம்‌:
அண்ணன ஜீயரிடம்‌ ஸமாஸ்ரயணம் பெற்றது
ராமாநுஜ பதாம் போஜ ஸெளகந்த்ய நிதயோபியே |
அஸாதாரண மெளந்நத்ய மவதூய நிஜம்தியா
உத்தேஜ யந்தஸ்‌ ஸ்வாத்மாநம்‌ தத்ஜேஸ் ஸம்பதா ஸதா |
ஸ்வேஷாமதிசயம்‌ மத்வா தத்வேந ஸரணம்‌ யயு: ॥

எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளில்‌ நறுமணத்தையே நிதியாகப் பெற்றவர்களும்‌ தம்முடையதான பிறர்க்கில்லாத உயர்த்தியை புத்தி பூர்வகமாக உதறி விட்டுத்‌ தம்மை அதிகமாக ப்ரகாசிக்கும்படி செய்ய நினைத்தவர்களாய்‌, அம் மா முனிகளின்‌ தேஜஸ் ஸமருத்தியினால்‌ தமக்குப்‌ பெருமை உண்டாகுமென்று எண்ணி ௮ம் மா முனிகளைப்‌ பூர்ணமாகச்‌ சரணமடைத்தனர்‌-என்றபடியே ராமா நுஜ பரிக்ருஹீதராய்‌ அபிஜந வித்யாவ்ருத்தங்‌களா லுயர்ந்திருக்கிற கந்தாடை அண்ணன்‌ முதலான ஆசார்ய புருஷர்கள்‌ எல்லாரும்‌ தந்தம்‌ உயர்த்திகளைப்‌ பாராமல்‌ ஜீயர்‌ திருவடி ஸம்பந்தமே தங்களுக்கு ஸர்வாதிசயங்களுமாக வெண்ணி ஜீயர்‌ திருவடிகளை சரணமாக வந்தடைந்திருக்க அண்ணன்‌ ஜீயர்‌ திரு முன்பே சென்று, ‘தேவரீர்‌ அடியோங்களை க்ருபை பண்ணுகைக்கு இட்டிருந்த நாளும்‌ வந்தது; எம்பா முதனாராலே ப்ரதிபாதிக்கப்பட்ட நம்முடையவர்களுக்கு பெருமாள்‌ ஸ்வப்நாதி வ்யாஜத்தாலே திருந்தத் திருந்தி தேவரீர்‌ திருவடிகளே ப்ராப்யமாக வந்து இந்த கோஷ்டியிலே கூடி யிருக்கிறார்கள்‌. எல்லாரையும்‌ க்ருபை பண்ணி யருளத்‌ திருவுள்ளமாக வேணும்‌” என்று விண்ணபஞ்செய்ய; ஜீயரும்‌ வானமாமலை ஜீயரை அழைத்து அத்ற்கு வேண்டியவைகளை ஸந்நத்தமாக்க நியமித்தருளி, தாமும்‌ திருவாராதநஞ் செய்தருளி திருப்பணியாரமும்‌ பழவமுதும்‌ பூர்ணமாகக்‌ கண்டருளப்‌ பண்ணி, ஸந்நிதி முன்பாக எழுந்தருளி யிருந்து ஸமாச்ரயணமாக வேண்டியவர்களெல்லாரையும அழைத்து அண்டையிலே வைத்துக் கொண்டு செய்யுங் கிரிசைகளெல்லாஞ்‌ செய்தருளி, தாப புண்ட்ரஸ் ததாநாம மந்த்ரோ யாகஸ்ச பஞ்சம:” திருவிலச்சினை, திருமண்காப்பு, தாஸ்ய நாமம்‌, மந்த்‌ரோபதேஸம்‌, தேவ பூஜை என்று ஐந்து-என்கிறபடியே பஞ்ச ஸம்ஸ்‌காரங்களையும்‌ செய்தருளி பரமைகாந்த்ய மஹா பலத்தையும்‌ பூர்ணமாக்கி உகந்கருளி நெடும்போது அண்ணனை -இருந்தான்‌ கண்டு கொண்டு என்கிறபடியே கடாக்ஷித்துக்‌ கொண்டிருந்து;

அப்பாச்சியாரண்ணா வானமாமலை ஜீயரை ஆஸ்ரயித்தல்‌
வானமாமலை ராமநுஜ ஜீயரைக்‌ காட்டி யருளி-இவர்‌ தமக்கு ப்ராண ஸுஹருத்து, தமக்குண்டான அதிசயமெல்லாம்‌ இவர்க்கு முண்டாக வேணும்‌, முதலியாண்டான்‌ திரு வம்சத்திலே நமக்கு ஸம்பந்த முண்டானாற் போல இவர்க்கு முண்டாக வேணும்‌’ என்று அருளிச் செய்ய அண்ணன்‌, திருவுள்ளக் கருத்தறிந்து அடியேனை அங்கே ஆஸ்ரயிப்பித்தருளாதே யொழிந்ததே”’ என்று விண்ணப்பஞ் செய்ய, ‘ நமக்கு ப்ராப்தமானதை விடப் போமோ?!”என்ன, அண்ணன்‌ தம்முடைய அநுபந்திகளை ஸாபிப்ராயமாசப்‌ பின்னே கடாக்ஷித்தருன, பாவஜ்ஞராய்‌ ஆச்சியாருடை குமாரராயிருக்கிற அண்ணா எழுந்திருந்து தண்டன்‌ ஸமர்ப்பிக்க – என்னவென்று கேட்டருள, *‘அடியேனை எங்களாண்டவன்‌ வானமாமலை ராமாநுஜ ஜீயருடைய திருவடிகளிலே ஆஸ்ரயிப்பிக்க வேணும்‌ என்ன, ஜீயரும்‌ மிகவுகந்தருளி, நம்மப்பாச்சி யாரண்ணாவோ- என்றருளிச் செய்து,(‘ஸ்ரீ தீர்த்த தேவராஜஸ்ய தநயாப் பேதி விச்ருதா. தஸ்யாஸ் தநுஜோ வரத:”‘ என்று இவர்‌ போற்றப்படுகிறார்‌.-திருமஞ்சனம்‌ அப்பா என்ற தேவராஜருடைய குமாரத்தியாய்‌ ஆச்சி என்று ப்ரஸித்தை யானவருடைய குமாரரான வரதாசாரியர்‌, ஜீயர்‌ இவருக்கிட்ட பெயர்‌ அப்பாச்சியாரண்ணா என்பது.) ‘அவரைக்‌ கையைப் பிடித்துத்‌ தம்முடைய அண்டையிலே வைத்துக் கொண்டு தாம்‌ எழுந்தருளி யிருந்த ஆஸநத்திலே வானமாமலை ஜீயரை யிருத்தித்‌ தம்முடைய திருக்கைகளிலிருந்த ஆழ்வார்களை அவர்‌ திருக்கைகளிலே ஸாதித்தருளி, இவர்க்கு ‘ஸாதியும்‌’ என்ன, அவர்‌ சற்று இறாய்க்க, “அப்படி, செய்ய வேண்டா, நமக்கு ப்ரியமானதைச்‌ செய்யும்‌” என்றருளிச்‌ செய்து ௮ண்ணாவை ப்ரீத்யதிசயத்தாலே தழுவிக் கொண்டிருந்து ஆஸ்ரயிப்பித் தருளினார்‌; உடனே அண்ணாவுடைய திருத்தம்பியாரன தாசரதி அப்பையும்‌ அங்கே ஆஸ்ரயித்தார்‌. உடனே வானமாமலை. ராமாநுஜ ஜீயர்‌ போதும்‌, இனி அடியேனை விடவேணும்‌” என்று எழுந்திருந்து தூரப் போய்‌ தண்டன்‌ ஸமர்ப்‌பித்து நிற்க, “அப்படியே யாகிறது; எழுந்தருளி யிருக்க’ என்றருளிச் செய்து, தாமுபம் முன் போலே எழுந்தருளி யிருந்து கந்தாடை அப்பன்‌ முதலான அண்ணன்‌ ப்ராதாக்களுக்கும்‌, ப்ராத்ரு கோடிகளா யுள்ளவர்களும்‌, புத்ரகோடிகளா யுள்ளவர்களும்‌ ஸ்வ பார்யாதி வர்க்கங்களுடனே நூற்றிருபது திருநாமம்‌ மற்றும்‌ சிங்கரையர்‌ முதலான பகவத் க்ருபாபாத்ர பூதரான அநேசம்‌ பேர்களும்‌ ஆஸ்ரயித்தார்கள்‌. அந்த ஸமயத்தில்‌ கோயில்‌ பரிகரமனைத்துக்‌ கொத்தும்‌
ஸகல மங்கள வாத்யங்களுடனே பெருமாளுடைய ப்ரஸாதங்‌கள் கொண்டு வர, ஜீயர்‌ எதிர் கொண்டு ப்ரணாம புரஸ்கரமாக ஆதரித்து உள்ளே எழுந்தருளப்‌ பண்ணிக்‌ கொண்டு போயிருக்க, அண்ணன்‌
அவர்களை யதோசிதம்‌ ஆதரித்து பஹுமாநஞ்‌ செய்தருளி, அவர்‌களுடனே ஜீயர்‌ தொடக்கமானவர்களும்‌ அன்று ஆஸ்ரயித்தவர்‌களும்‌ கோயிலிலே எழுந்தருளி எம்பெருமானார்‌, ஆழ்வார்‌ பெருமாள்‌, நாய்ச்சியார்‌, எல்லாரையும்‌ “தேவீ கோதா”-இத்யாதிப்படியே மங்களாசாஸனம் செய்தருளி மீண்டும்‌ மடத்திலே எழுந்தருளிசத் ததியாராதனமும்‌ மஹோத்ஸவமாக நடந்தது.
ஜகத் ரக்ஷாபரோ ஆநந்த'” என்று தோழப்பர்‌ ஸ்வப்நத்திலே பேரருளாளர்‌ அருளிச்‌ செய்தபடி பலிக்கக் கண்‌டோம்‌” என்று எல்லாரும்‌ உகந்தருளினார்கள்‌.

இப்படி ஆஸ்ரயித்தவர்களெல்லாரும்‌ ஜீயருடைய அதி மானுஷமான அத்புத சரிதங்கள் எல்லாவற்றையும்‌ ஸேலித்து
சிர விரஹதஸ் சிந்தா ஸந்தா நஜர்‌ஜ ஜர சேதஸம்‌
புஜக சயநம்‌ தேவம்பூய: ப்ரஸாதயிதும்‌ த்ருவம்‌ |
யதி குலபதி ஸ்ரீமாந் ராமாநுஜ ஸ்வயமித்ய பூ
திதிதி ஸமதுஷந் ஸர்வே ஸர்வத்ர தத்ர ஸுதீ ஜநா; ॥

யதிகுலநாதரான ஸ்ரீமத்ராமானுஜர்‌-தம்மை வெகு நாட்கள்‌ பிரிந்ததனால்‌ இடைவிடாமல்‌ தம்மையே நினைத்து நினைத்துத்‌ தளர்ந்த திருவுள்ளங்கொண்ட அரவணையானான ஸ்ரீரங்கநாதப்‌
பெருமாளை மறுபடியும் மகிழ்விக்கக் கருதியே போலும்‌, தாமே மணவாள மாமுனிகளாக அவதரித்‌தருளினாரென்று அங்கு எல்லா விடத்திலும்‌ உள்ள ஞானியர்‌ அனைவரும்‌ மிக மகிழ்ந்தனர்‌–என்கிறபடியே யதி புந அவதாரமாக வெண்ணித்‌ தாங்களும்‌ சிரோபாஸித ஸத் வ்ருத்தரென்னும்படி அவர்‌ திருவடிகளைப்‌ பழுக்க ஸேவித்து, அங்குத்தைக்குப்‌ பரிவராயிருந்தார்கள்‌. இப்படி ஜீயர்‌ சிஷ்ய ஸம்பத்துடனே இனிதாக வாழ்ந்தருளுிற போது திருவாழி யாழ்வார்‌ பிள்ளையை ஸ்ரீகோசங்களை யெல்லாம்‌ அப்போதைக்‌கப்போது சோதித்து ஸம்ரஷணம்‌ பண்ணிக் கொண்டு வரவும்‌ ஏறி யருளப்‌ பண்ண வேண்டிய ஸ்ரீகோசங்களை லேகரிகளை யிட்டு நன்றாக ‘ஏறி யருளப் பண்ணவும்‌ தாமபேக்ஷித்த அவஸரங்களிலே அபேக்ஷிந்த ஸ்ரீகோசங்களை ஸமர்ப்பிக்கவும்‌ ஈடு முப்பத்தாறாயிரப்‌படி அர்த்தமாம்‌ படி சிறிது வ்யாக்யானங்களைக்‌ கூட்டி ப்ரதி ஏறி யருளப் பண்ணி வைக்கவும்‌ நியமிக்க, அவரும்‌ அப்படியே எல்லாவற்றையும்‌ செய்து கொண்டு போந்தார்‌.

ஆண்ட பெருமாள்‌ அண்ணனை ஆஸ்ரயித்தது
ஒரு நாள்‌ சுத்த ஸத்வம்‌ அண்ணனை யழைந்தருளி போர வுகந்‌தருளி “ஆழ்வாருக்கு ஸ்ரீமதுரகவிகளைப் போலே நீர்‌ அண்ணனுக்கு அபிமத விஷயமாக விருக்கப்‌ பெற்றிரே; *தன்னாரியனுக்குத்‌ தானடிமை செய்வது இந்நாடு தன்னிலிருக்கும்‌ நாளன்றோ; ஸகலசுச்ரூஷைகளும்‌ பண்ணிக் கொண்டு வாழும்‌”- என்று ஆசீர்வதித்து;குமண்டூர்‌ ஆச்சான் பிள்ளை பெளத்ரராயும்‌ ஜ்ஞாநாதிகராயும்‌ ஸகல சாஸ்த்ர பாரங்கதரா யுமிருக்கற ஆண்ட பெருமாளை ஜீயர்‌ அண்ணனிடம்‌ “உம்முடைய திருவடிகளுக்கு அந்தரங்கராய்‌ தர்சந ப்ரவர்த்தாராம்படி விநியோகித்துக்‌ கொள்ளும்‌” என்று விட, அண்ணனும்‌ அப்படியே செய்தருளினார்‌-

(வரவரமுநி ப்ருத்யர்‌” என்று நிரூபகமாம்படி திருவடிக்கு அந்தரங்கராய்‌ ஆசார்யாபிநைக நிஷ்டராயிரா நிற்க -இது கண்டு கந்தாடை அண்ணன்‌ முதலானோர்‌ இவர்‌திருவடிகளில்‌ ஆச்ரயணோந்முக
ராயிருக்க, அவ்வளவிலே பெருமாளும்‌ அவர்கள்‌ ஸ்வப்நத்திலே அஸங்குசிதமாசக்யே புஜங்காயந : புமாந்‌” (சேஷஸாயியான ரங்கநாதன்‌ விரிவாக அருளிச்‌ செய்தார்‌) என்கிறபடியே விசதமாக ஜீயர்‌ திருவடிகளே ஆஸ்ரயிக்கும்படி நியமித்தருள்‌, அவர்‌ திருமுகப்படியே ” ராமாநுஜ பதாம் போஜ ஸெளகந்த்ய நிதயோபியே”’ என்று தொடங்கி “ஸ்ருத்வைவ வைபவம்‌ தஸ்ய தத்வேத ஸரணம்‌ யயு.” [எவர்கள்‌ எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளின்‌ பரிமளத்தையே தமக்கு நிதியாக : நினைத்திருத்தார்‌களோ அவர்களும்‌ அந்த மணவாள மாமுனிகளுடைய வைபவங்களை உள்ளபடி கேட்ட மாத்திரத்தலேயே அவரைச்‌ சரணம்‌ பற்றினார்கள்‌-என்கிறபடியே, ராமாநுஜ பரிக்ருஹீதராய்‌
அபிஜந வித்யா வ்ருத்தங்களாலும்‌ உயர்ந்திருக்குமவர்களான கந்‌தாடை அண்ணன்‌ முதலான ஆசார்ய புருஷர்களாயுள்ள அனைவர்‌களும்‌ தந்தாமுயர்த்திகளைப்‌ பாராமல்‌ இவர்‌ திருவடி ஸம்பந்தமே தங்களுக்கு தாரகமென்று அறுதியிட்டு வந்து ஜீயர்‌ திருவடிகளையே சரணமாகப்‌ பற்றி உஜ்ஜீலித்தார்கள்‌.
இப்படி ஆஸ்ரயித்தவர்களெல்லாரும்‌ ஜீயருடைய அதி மாநுஷமான அற்புத சரித்‌திரங்‌களெல்லாம்‌ கண்டு யதிபுநரவதாரமாக எண்ணி, தாங்களும்‌-சிரே பாஸித ஸத் வ்ருத்தர்‌:”’ என்னும்படி அவர்‌ திருவடிகளைப் பழுக்க ஸேவித்துக்‌ கொண்டு அங்குத்தைக்கு அந்தரங்கராய்‌ இருந்தார்கள்‌– என்று மட்டுமே தெலுங்குப்பதிப்பில்‌ காண்பது, மேலே வேடலப்பை, ஹஸ்திகிரி நாதரண்ணா விஷயங்கள்‌ பேசப்பட்டு, ஜீயருக்கு பூர்வாச்ரம ஸந்ததி லிஷயம்‌ பேசப்பட்டுள்ளது, வேடலப்பை, அண்ணா பற்றியவை இப்பதிப்‌பில்‌ பின்னர்‌ வரும்‌.)

—==-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஶ்ரீ விஷ்ணு ஷட்பதீ ஸ்தோத்ரம்

May 14, 2026

ஶ்ரீ விஷ்ணு ஷட்பதீ ஸ்தோத்ரம்

அவினயமபனய விஷ்ணோ தமய மன ஸமய விஷய ம்ருகத்ருஷ்ணாம் |
பூத தயாம் விஸ்தாரய தாரய ஸம்ஸார ஸாகரத: || (1)

ஹே விஷ்ணோ! எனது பணிவின்மையைப் போக்கு! மனதை அடங்கச் செய். பேராசையையும் தணித்து விடு. எல்லா ஜீவராசிகளிடத்தும் தயை வரச்செய். என்னை ஸம்ஸாரக் கடலிலிருந்து அக்கரை சேர்ப்பித்து விடு.

திவ்யதுனீ  மகரந்தே பரிமள பரிபோக ஸச்சிதானந்தே  |
ஶ்ரீபதி பதாரவிந்தே பவபய கேதச்சிதே வந்தே  || (2)

கங்கையை மகரந்தமாகக் கொண்டதும், ஸத்-சித்-ஆனந்தமாகியவற்றை வாசனையாகக் கொண்டதும், உலகில் சம்சார துன்பத்தைப் போக்குவதுமான ஸ்ரீபதியான நாராயணனின் திருவடித் தாமரைகளை வணங்குகின்றேன்.

ஸத்யபி பேதாபகமே நாத தவாஹம் ந மாமகீநஸ்த்வம் |
ஸாமுத்ரோ ஹி தரங்க:  க்வசன ஸமுத்ரோ ந தாரங்க:  || (3)

ஜீவாத்மாவான எனக்கும், பரமாத்மாவான உமக்குமிடையில் வேற்றுமை இல்லையெனினும், ஹே ஸ்வாமி நான் உம்மைச் சேர்ந்த அடிமையே. தாங்கள் எனது உடைமையானவரல்ல. அலைதானே ஸமுத்திரத்தையண்டியது. ஒரு போதும் கடல், அலைகளில் அடங்கியதில்லையன்றோ!

உத்ருதநக நகபிதநுஜ தநுஜ குலாமித்ர மித்ரசசித்ருஷ்டே  |
த்ருஷ்டே பவதி ப்ரபவதி நபவதி கிம்பவதி ரஸ்கார: || (4)–(அந்தாதி வரிக்குள்ளே)

கோவர்தன மலையை தூக்கியவரே! இந்திரனின் இளையவரே! அசுரக் கூட்டத்தை அழித்தவரே! சூர்ய சந்திரர்களை கண்களாகக் கொண்டவரே! உங்களுடைய கருணைக் கடைக்கண் பார்வை ஒருவனுக்கு கிடைக்குமானால் எவருக்குத்தான் உலகியலில் இழிவு தோன்றாது?

மத்ஸ்யாதிபி  ரவதாரைரவதாரவதா(அ)வதா ஸதாவஸுதாம்
பரமேச்வர பரிபால்யோ பவதா பவதாபீதோஹம் (5)

மத்ஸ்ய-கூர்மாதி அவதாரங்களால் இறங்கிவந்து பூமியை காத்தருளும் தங்களால், ஸம்ஸார தாபத்தால் மருண்ட நான் காக்கப்பட வேண்டியவரன்றோ! ஹே பெருமாளே

தாமோதர குணமந்திர ஸுந்தரவதனாரவிந்த கோவிந்த
பவ ஜலதி மதனமந்தர பரமம் தரமபனயத்வம் மே (6)

தாமோதரனே! குணங்களுக்கு கோயிலானவனே! அழகிய தாமரையொத்த முகம் கொண்டவனே! கோவிந்த! ஸம்ஸாரக்கடலை கடையும் மந்தர மலையானவனே! எனது பெரும் துன்பத்தைப் போக்குவாயாக!

நாராயண கருணாய சரணம் கரவாணி தாவகௌ சரணௌ
இதி ஷட்பதீ மதீயே வதனஸரோஜே ஸாதாவஸது (7)

ஹே நாராயண கருணை வடிவானவனே! உனது திருவடிகளை சரணம் அடைகிறேன் என்ற இந்த ஆறு சொற்கள் என் முகத்தில் எப்பொழுதும் தங்கட்டும்.

மனத் தூய்மை அடைந்து திருவடி தொழுது -ஸ்வாமி சொத்து உணர்ந்து -கடாக்ஷம் பிரார்த்தித்து அவன் செய்யும் உபகார பரம்பரைகளை உணர்ந்து -மோக்ஷத்துக்கு சரணம் அடைந்து -ஷட் பதம் -வண்டு வாயாகிய-தாமரை -ஆறு வார்த்தைகளை எப்போதும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் திருவடித் தாமரையையே பேசிக் கொண்டே இருக்க அது போல் ஆவோம் அன்றோ –

இதனைப் பாராயணம் செய்தால் பகவானிடத்தில் பக்தி, வைராக்யம், மோக்‌ஷம், ஞானம் உண்டாகி மனக்கவலையும் கிரஹதோஷமும் நீங்கும்.

பகவத் அனுபவமாகிய தேனையே பெருகிக் கொண்டே இருப்போம் -வாயைத் தாமரை யாக்கி பேச்சையே வண்டாக்கி வாழ்ந்தே போவோம்

————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த-ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம்-பகுதி-1-

May 11, 2026

ஸ்ரீ ஶைலேஶ தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்திர ப்ரவணம் வந்தே ரம்யாஜமாதரம் முநிம்

(துறவிகளின் அரசரான பகவத் ராமாநுஜரிடம் அளவற்ற அன்பு கொண்டவரும் ஞானம், பக்தி போன்ற குணங்களின் கடலான ஸ்ரீ ஶைலேஶரின் கருணைக்கு பாத்திரமான ரம்யஜாமாத்ரு முநியை (மணவாள மாமுனிகள்) நான் வணங்குகிறேன்).

ஸ்ரீஶடாரி குரோர்திவ்ய ஸ்ரீபாதாப்ஜ மதுவ்ரதம்
ஸ்ரீமத் யதீந்த்ர ப்ரவணம் ஸ்ரீலோகார்ய முநிம் பஜே

(ஸ்ரீ ஶடகோபாசார்யரின் திருவடியும் ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவ ப்ரபந்தத்தை அருளியவருமான தாமரை மலரினின்று வழியும் தேன் போன்ற பிள்ளை லோகம் ஜீயரின் திருவடிகளை வணங்குகிறேன்).

குருநாதனெங்கண் மணவாளயோகி குணக்கடலைப்
பலநாளும் அண்டிப்பருகிக் களித்திந்தப் பாரினுள்ளே
உலகாரியன் முநிமேகம் இந்நாளென்னுள்ளம் குளிர
நலமான சீர்மை மழை நாளும் பொழிந்தது இந்நிலத்தே

(மணவாள மாமுனிகளின் குணங்கள் என்னும் கடலிலிருந்து பருகி அனுபவித்தவர் நம் ஆசார்யர் (பிள்ளை லோகம் ஜீயர்). இவ்வுலகில் மேகம் போல இருக்கும் அத்தகைய பிள்ளை லோகம் ஜீயர், தம் மேன்மையான குணங்கள் எனும் மழையை இந்த பூமிக்கு அனுதினமும் என் மனம் குளிரக் கடாக்ஷித்தார்)

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்–திருநக்ஷத்ரம் : சித்திரை திருவோணம்-அவதார ஸ்தலம் : காஞ்சிபுரம்-காஞ்சிபுரத்தில் அவதரித்த இவர் பரவஸ்து பட்டர்பிரான் ஜீயரின் (மாமுனிகளின் அஷ்ட திக் கஜங்களில் ஒருவர்) கொள்ளுப் பேரனாவார். இவருடைய திருநாமம் வரதாசார்யர் என்பதாகும். இவர் பிரபலமாக பிள்ளை லோகம் ஜீயர் என்றும் பிள்ளை லோகாசார்ய ஜீயர் என்றும் அறியப் படுகிறார்.-இவர் திருகடல்மல்லை ஸ்தலசயன பெருமாள் (மஹாபலிபுரம் – மாமல்லபுரம்) ஆலயத்தை புதுப்பித்து, கோவிலில் முறையான வழிபாடு செய்வதையும் நிலை நிறுத்தினார். இதற்காக மன்னரால் கௌரவிக்கப்பட்டு இன்றும் இவருடைய சந்ததியினர் அந்தச் சிறப்பு கௌரவத்தை கோவிலில் பெற்று வருகிறார்கள்-திருகடல்மல்லை திவ்யதேசத்தில் கி. பி. 1614 என்ற வருடத்தை பொறிக்கப்பட்ட உள்ள ஒரு தாமிரத் தட்டில், இந்த ஜீயரை யதீந்திர ப்ரவண ப்ரபாவம் ஜீயர் என்று அழைக்கப்பட்ட குறிப்பு உள்ளது (இதிலிருந்து அக்காலத்திலேயே இவர் மணவாள மாமுனிகளின் சரித்திரத்தை எழுதியவரென்று மிகவும் பிரபலமாகவும் பரவலாகவும் அறியப் பட்டார் என்பது தெளிவாகிறது-ஸ்ரீரங்கத்தில் இரண்டாவது ப்ரகாரத்தில் கி.பி. 1614 என்ற வருடம் பொறிக்கப்பட்ட கல்வெட்டில், பிள்ளை லோகம் ஜீயருடைய சிஷ்யர் ஒருவர் எம்பெருமானாரின் திருநக்ஷத்ரத்தன்று பக்தர்களுக்கு சக்கரைப்பொங்கல் விநியோகத்திற்கு 120 பொற்காசுகளை மூலதனமாக கொடுத்துள்ளார் என்ற தகவல் உள்ளது-யதீந்திர ப்ரவண ப்ரபாவத்தில் பெரியவாச்சான் பிள்ளை, வடக்குத் திருவீதிப் பிள்ளை, பிள்ளை லோகாசார்யர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், திருவாய்மொழிப் பிள்ளை, மணவாள மாமுனிகள் மற்றும் சிலருடைய புகழ் மிக்க வாழ்க்கை வரலாற்றை அழகாக இவர் அருளிச் செய்துள்ளார். மாமுனிகளின் வாழ்க்கை வரலாற்றை மிகவும் விரிவாக கொடுத்தது மட்டுமல்லாமல் மாமுனிகளின் உபதேசங்களை இந்த கிரந்தத்தில் அழகாக கூறியுள்ளார்-

ஸ்ரீசடாரி குரோர்திவ்ய ஸ்ரீபாதாப்ஜ மதுவ்ரதம் |
ஸ்ரீமத்யதீந்த்ரப்ரவணம் ஸ்ரீ லோகார்ய முனிம் பஜே ||-பிள்ளை லோகம் ஜீயரின் தனியன் (யதீந்த்ர ப்ரவண ப்ரபாவத்தில் உள்ளது)

ஸ்ரீ வைஷ்ணவ சமாசார்ய நிஷ்கர்ஷம்
ஸ்ரீ ராமாநுஜாய திவ்ய சரித்திரம் போன்ற கிரந்தங்களையும் அருளிச் செய்துள்ளார்


ஆசார்யபதம்‌ எம்பெருமானாருக்கே உரியதொன்று. அவரே அபராவதாரமாய்‌ வரவர முனியாய்‌ வந்துதித்தார்‌. நம் பெருமாள்‌ இவருக்கு எம்‌பெருமானாரிடம்‌ இருந்த ப்‌ரேமத்தின்‌ கனத்தை யிட்டு யதீந்த்ர ப்ரவணர்‌” என்று தாமருளிச்‌ செய்த ஸ்ரீசைலேச தனியனில்‌ பெயரிட்டருளினார்‌. அத் திருநாமமே இந்த வைபவ நூலுக்கும்‌ அமைந்தது. பிள்ளை லோகார்ய ஜீயர்‌ இந்த திவ்ய க்ரந்‌தத்தை அருளிச்‌ செய்யாவிடில்‌ நம்பிள்ளைக்குப்‌ பின்னர்‌ தோன்றிய ஆசாரியர்களின்‌-குறிப்பாக பெரிய ஜீயரின்‌ வைபவங்களை அறியவே முடியாது போயிருக்கும்‌. ஆகவே நாம்‌ பிள்ளை லோகார்ய்‌ ஜீயர்‌ விஷயத்தில்‌ கனத்த உபகார ஸ்ம்ருதியை அநுஸந்திக்க ப்ராப்‌தமாகிறது.

மயர்வற மதிநலம் அருளப்‌ பெற்ற ஆழ்வார்கள்‌ அவர்களுக்குப்‌ பின்‌ அவதரித்த பூர்வாசாரியர்கள்‌ வைபவங்களை நம்பிள்ளையின்‌ திருவடியான பின்பழகிய பெருமாள்‌ ஜீயர்‌ ஆறாயிரப்படி குரு பரம்பரா ப்ரபாவம்‌’? என்ற கரந்தத்தில்‌ வெளியிட்‌டு அருளினார்‌.
அந்த க்ரந்தம்‌ நம்பிள்ளை வைபவத்துடன்‌ முடிவடைகிறது, அதன்‌ தொடர்ச்சியாக அமைந்துள்ளது இந்த நூல்‌ வடக்குத்‌ திருவீதிப்‌ பிள்ளை வைபவம்‌ ஈடு முப்பத்தாறாயிரப்படியின்‌ அவதாரம்‌, நம்‌
பிள்ளை நியமனத்தால்‌ அது பிராசாரமடையாம லிருந்தது, நம்‌ பிள்ளை யருளால்‌ வடக்குத்‌ தி௫ வீதிப் பிள்ளைக்கு பிள்ளை லோகாசாரியர்‌, அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனார்‌ என்ற இரு குமாரர்களின்‌ அவதாரம்‌- அவர்கள்‌ ரஹஸ்‌ய க்ரந்தங்கள்‌ அருளிச்‌ செய்தமை, பிள்ளை லோகாசாரியர்‌ நம்பெருமாள்‌ திவ்ய மங்கள விக்ரஹத்தை துலுக்கரால்‌ விளைந்த கலாபத்தில்‌ வலசையாய்‌ எழுந்தருளப்‌ பண்ணியது. ஆழ்வார்‌ திரு நகரி நம்மாழ்வார்‌ திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு ஏற்பட்ட ஆபத்து, நம்‌ பெருமாளுடன்‌ ஆழ்வார்‌ ஸமாகமம்‌, பிரிவு, இந்த விக்‌ரஹங்கள்‌ சேமமாகப்‌ பேணப்பட்ட வைபவங்கள்‌ எல்லாம்‌ இந்‌ நூலில்‌ முற்‌பகுதியில் விவரிக்கப் பட்டுள்ளன. திருவாய் மொழிப் பிள்ளை பிள்ளை லோகாசாரியர்‌ நியமனப்படி கூர குலோத்தம தாஸரால்‌ திருத்தப்பட்டது.
பெருமாள்‌ கோவிலில்‌ சேம வைப்பாயிருந்த ஈடு முப்‌பத்தாறாயிரப்‌படியை தேவப் பெருமாளுடைய நியமனத்தால் திருவாய் மொழிப்‌ பிள்ளை பெறுதல்‌, திருவாய்மொழிப்பிள்ளை ஆழ்வார்‌ திருநகரியிபல் கோயிலை புநருத்தாரணம்‌ பண்ணி வலசையாக எழுந்தருளியிருந்த
ஆழ்வார்‌ திருமேனியை எழுந்தருளப் பண்‌ணி ப்ரதிஷ்‌டிப்பித்தல்‌,மணவாள மா முனிகளின்‌ அவதாரம்‌, அவர்‌ திருவாய்மொழிப்‌பிள்ளையிடம்‌ ஆச்ரயித்தல்‌ முதலான விஷயங்கள்‌ அடைவே பேசப்‌பட்டுப்‌ பின்னர்‌ மணவாளமாமுனிகளின்‌ வைபவம்‌ பரக்கப் பேசப்‌ பட்டுள்ளது-

பூர்வாசார்யர்களைப் பற்றிய குருபரம்பரா ப்ரபாவம் போன்ற முன்னுள்ள ப்ரபந்தங்களைத்  தொடர்ந்து இந்த ப்ரபந்தம் வரும்.  பிள்ளை லோகம் ஜீயர்,  இந்த ப்ரபந்தத்தின் தொடக்கத்திலேயே மணவாள மாமுனிகளின் மேன்மையை குறித்துச் சொல்லாமல் முதலில் மணவாள மாமுனிகள் எவ்வாறு ஸத் ஸம்ப்ரதாயத்தின் (தொன்மையான பாரம்பரியக் கருத்துக்கள்) பொருட்களை கிடைக்கப் பெற்றார் என்று சொல்கிறார். பாரம்பரிய தத்துவத்தின் கொள்கைகளில் நம்பிள்ளை நஞ்சீயர் முதலானோருக்கு இருந்த ஊக்கத்தைக் காட்ட கீழ்க்கண்ட ஶ்லோகத்தை அவர் மேற்கோளாகக் காட்டுகிறார்.

ஸ்ரீவத்ஸசிஹ்ந பவதஶ் சரணாரவிந்த3 ஸேவாம்ருதைக ரசிகான் கருணாஸுபூர்ணான் |
பட்டார்யவர்ய நிகமாந்தமுனீந்த்ர லோகாகு3ர்வாதி3 தே3ஶிகவரான் ஶரணம் ப்ரபத்3யே ||

கூரத்தாழ்வானே! தேவரீருடைய திருவடித் தாமரைகளில்‌ கைங்கர்யமாகிற அமுதத்தில் மிக்க ரஸிகர்களாய்‌, கருணை மிக்கரான பட்டர்‌ நஞ்ஜீயர்‌, நம்பிள்ளை, முதலான மஹாசாரியர்களை சரணமாகப் பற்றுகிறேன்‌.

(கூரத்தாழ்வானே ! காருண்யம் நிறைந்த இதயமும் உம் திருவடித் தாமரைகளில் தொண்டு செய்வதில் உறுதியும் கொண்ட பட்டர் (கூரத்தாழ்வானின் திருக்குமாரரான பராசர பட்டர்) நஞ்சீயர் நம்பிள்ளை முதலான மஹாசார்யர்களின் திருவடிகளில் பணிகின்றேன். பிள்ளைலோகம் ஜீயர், நம்பிள்ளைக்கு பிற்பட்ட ஆசார்யர்களில், பிள்ளை லோகாசார்யரின் வ்யாக்கியானங்களை முதலில் எடுத்து கொண்டு எவ்வாறு மணவாள மாமுனிகள் பாரம்பரிய தத்துவத்தின் கொள்கைகளைப் பெற்றார் என்று நமக்குக் காட்டுகிறார். இது கீழ்க்கண்ட பாசுரம் மூலம் காட்டப்பெறுகிறது:

கோதில் உலகாசிரியன் கூரகுலோத்தம தாதர்
தீதில் திருமலையாழ்வார் செழும் குரவை மணவாளர்
ஓதரியபுகழ் திருநாவீறுடைய பிரான் தாதருடன்

போத மணவாளமுனி பொன்னடிகள் போற்றுவனே

(1) அப்பழுக்கற்ற பிள்ளை லோகாசார்யர் (2) கூரகுலோத்தமதாசர் (3) குறையொன்றும் இல்லாத திருவாய்மொழிப்பிள்ளை எனப்படும் திருமலையாழ்வார் (4) குரவை நகரில் அவதரித்த கோட்டூர் அழகிய மணவாளர் (5) போற்றத்தக்க புகழ் கொண்ட திகழக்கிடந்தான் திருநாவீறுடைய பிரான் தாசர் (6) தாமரை ஒத்த திருவடிகள் கொண்ட மணவாள மாமுனிகள் முதலானோரின் திருவடிகளைப் பணிவோம். [ஸ்ரீவசன பூஷணம் அனுஸந்தானத்தின் முடிவில் இப்பாசுரம் சேவிக்கப்படுகிறது; மேற்சொன்ன ஆறு மஹாசார்யர்களில் கோட்டூர் அழகிய மணவாள தாசர் மணவாள மாமுனிகள் அம்மான் ஆவார்; திகழக்கிடந்தான் திருநாவீறுடைய பிரான் தாசர் மணவாள மாமுனிகள் திருத்தகப்பனார் ஆவார்]

ஸ்ரீயபதியான ஸர்வேஸ்வரன்‌ ஸம்ஸாரி சேதநோஜ்ஜீவந காமனாய்க் கொண்டு கலி காலத்திலே பராங்குச பரகால பட்டநாதாதிகளான ஆழ்வார்களையும்‌ நாத யாமுந யதிவராதிகளான ஆசார்யர்‌களையும்‌ அவதரிப்பித்தருளி தந் முகேந லோகத்தை ரக்ஷித்தருளின படியைப்‌ பின்புள்ளாருமறிந்து உஜ்ஜீவிக்கும்படி முன்புள்ள ஆசார்யர்கள்‌ குரு பரம்பரா ப்ரபாவ ப்ரமுகங்களான ப்ரபந்தங்‌களாலே ப்ரதி பாதித்து உபகரித்தருளினார்கள்‌.

அவ்வள வன்றிக்கே விசேஷித்து அசேஷ சிதசித் வஸ்து சேஷியான அந்த ஸ்ரீய பதியினுடைய நியோகத்தாலே சேஷாவதாரமாக வவதரித்து பஹு முகமான தம்முடைய உக்த் யநுஷ்டானங்களாலே ஸர்வ சேதனரையும்‌ ரக்ஷித்துப் போந்த யதீந்த்ர ப்ரவணரான ஜீயருடைய ப்ரபாவத்தை அனைவருமறியும் படியாக அஸ்மதாசார்யருடைய ப்ரஸாதமடியாகவும்‌ கந்தாடை நாயனுடைய (கோயில் அண்ணன் ஸ்வாமிகளின் திருப்பேரனார்) ப்ரஸாதமடியாகவும்‌ அறிந்தவளவிலே ப்ரதிபாதிக்கிறது இப் பிரபந்தத்தாலே.

சத் சம்ப்ரதாயா சம்யுக்ததர் வைபவத்தை முன்புற பேசி பின்பு அவர் வைபவம் பேசுவதாக உபக்ரமிக்கிறார்-

(1) ஸ்ரீ வத் சிஹ்ந பவத சரணாரவிந்த சேவாம்ருதைக ரஸிகாந் கருணா ஸூபூர்ணாந் |
பட்டார்ய வர்ய நிகமாந்த முநீந்த்ர லோக குர்வாதி தேசிக வராந்‌ சரணம்‌ ப்ரபத்யே ॥
-என்று சுத்த ஸம்ப்ரதாய ப்ரவர்த்தகத்வம்‌ நஞ்ஜீயர்க்கும்‌ நம் பிள்ளைக்குமே யுள்ள தொன்றாகையாலே, அந்த நம்பிள்ளை யடியாக வந்த ஆசார்யர்களுடைய சுத்த சம்ப்ரதாய பரம்பரா அந்வயமானது இவர்க்கு வந்தவாற்றை ப்ரதிபாதிப்பதாக ப்ரதமம்‌ பிள்ள லோகாசாரியருடைய வைபவத்தை ப்ரதிபாதிக்கிறது-எங்ஙனே யெனள்னில்‌;

கோதில் உலகாசிரியன்‌ கூர குலோத்தம தாதர்‌
தீதில்‌ திருமலை யாழ்வார்‌ செழுங் குரவை மணவாளர்‌
ஒதரிய புகழ்த் திரு நாவுடைய பிரான்‌ தாத ருடன்‌
போத மணமான முனி பொன்னடிகள்‌ போற்றுவனே

என்கிறபடியே ஆழ்வாருடைய அவதார மென்னலாம் படியான வைபவத்தை யுடைய நம் பிள்ளை, ஒரு நாள்‌ நித்யப்படி கால ஷேபம்‌ நிறைவேறி மத்யாஹ்ந காலத்திலே தனியே எழுந்தருளி யிருக்க, திருவடிகள்‌ ஸம்பந்தியான வடக்குத்‌ திருவீதிப் பிள்ளை திருத் தாயாராயிருக்கிற அம்மி-தண்டன்‌ ஸமர்ப்பித்து நிற்க, அவளைக்‌ கடாக்ஷித்தருளி “உம்முடைய க்ருஹ யோக ஷேமங்கள் என்‌” என்று கேட்டருள; “என்ன விண்ணப்பஞ்‌ செய்யப்‌ போகிறேன்‌? ஒரு பேய்ப் பிள்ளையா யிருக்கிறதே ” என்ன,‘அதெப்படி?’ என்ன, ‘ஒரு பெண்ணை விவாஹம் செய்வித்தீரே;அந்தப்‌ பெண்‌ பெரியவளானாள்‌; ஸஹ சயன கல்யாணம்‌ பாலே பண்ணி சயிக்க விட, உடனே பிள்ளை முறையிட, ‘அதென்‌?’ என்று எல்லாரும்‌ உள்ளே புக, உடம்பெல்லாம்‌ புழுக்க நீர் சொரிய விம்மி யழுது நிற்க, “இதேது பிள்ளாய்‌?” என்று கேட்டேன்‌-
அம்மா! இதுவொரு ஆடுகிற பாம்பாயிருந்தது; பயப்பட்டேன்‌;-இன்னுமப்படியே யிருக்கிறது” என்ன, ”இதுவுமொரு புதுமையோ”வென்று பெண்ணை அப்பாலே போக விட்டேன்‌, இன்னுமொரு நாள்‌ அந்தப்‌ படியே யாச்சுது” என்று வ்யாகுலப்‌பட, பிள்ளையும்‌ சிரித்தருளி, **அதற்கு உமக்கென் ?” என்ன,
*இப்படி யருளிச்‌ செய்யுமோ? பெண்‌ வாழ வேண்டாவோ? வம்சத்துக்குப்‌ பிள்ளை ணே்டாவோ?” என்று திருவடிகளிலே விழுந்து சோகிக்க, பிள்ளையும்‌, ‘அம்மீ! எழுந்திரு: நீ சோகிக்க வேண்டா; மணாட்டுப் பெண்‌ ருது ஸ்நாதையாய்‌ வருகிற போது இது வழியாயழைத்து வா? என்று அருளிச் செய்து விட அவளும்‌ அப்படியே அழைத்து வந்து விட, திருவோலக்கத்திலே பிள்ளையும்‌ அந்தப்‌ பெண்ணைக்‌ கிட்ட வழைத்தருளி அவள்‌ வயிற்றைத்‌ தம்‌ திருக் கைகளாலே ஸ்பர்சித்து, “*நம்மைப்‌ போலிருப்பானொரு பிள்ளையைப்‌ பெறக்‌ கடவாய் ” என்று ஆஸீர்‌வாதம்‌ பண்ணி விட்டு, அற்றை ஞாயிறு பாடு வடக்குத்‌ திருவீதிப்‌ பிள்ளையை யழைத்தருளி, **உம்முடைய பயமும் தீர்ந்தது, விஹித விஷய வைராக்கியத்திற்கும் குறைவு வராது; ஆனால்‌ லோக மரியாதைக்கு நாம்‌ சொன்னதற்காக இன்றிராக்‌ கூடியிரும்‌’ என்றருளிச் செய்ய; அப்படியே கூடியிருந்த வளவில் ஆச்சியுங் கர்ப்‌பந் தரித்து லோக விலஷணமாய்‌ :’ததஸ்க த்வாதஸே மாஸேஎன்றபடியே பன்னிரண்டாம்‌ மாஸத்திலே ஐப்பசியில்‌ திருவோண நஷத்திரத்திலே பிள்ளை திருவவதரிக்க, அவருக்குப்‌ பன்னிரண்டாம்‌ நாள் நாம கரணத்திலே ”லோகாசார்யர்‌ பிள்ளை” என்று நம்பிள்ளை யுடைய திருநாமஞ் சாத்‌தி வளர்ந்து வந்து அப்த பூர்த்தி உத்ஸவத்திற்கு பெருமாளை ஸேவிப்பிக்கத் தக்கதாக நம்பிள்ளை முதலான பெரியோர்கள் எல்லோரும் மங்கள வாத்தியங்‌களுடனே திருப்பல்லக்கிலே எழுந்தருளிப் பண்ணுவித்துக்‌ கொண்டு சென்று ஸேவிக்க, நம் பெருமாளும்‌ போர வுகந்தருளி-தீர்த்தம்‌, ஸ்ரீ சடகோபன்‌, சந்தனம்‌, ஸூகந்தம்‌, திருமாலை ப்ரஸாதங்களும்‌ பட்டுச்‌ சிற்றாடையும்‌ ப்ரஸாதித்தருளி, நம்பிள்ளையை, அர்ச்சக முகேந “உம்மைப்‌ போலே யொரு பிள்ளை கொடுத்‌தீரே; இனி தம்மைப்‌ போலே யொரு பிள்ளை கொடும் ‘ என்று நியமிக்க, *’நாயன்தே நாயன்தே” என்று ஓமறைய, அப்படியே அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌ திருவவதாரஞ்‌ செய்தருளினார்‌.-

(1147 நம்பிள்ளை அவதாரம்
1167-பெரியவாச்சான்பிள்ளை வடக்குத் திருவீதிப் பிள்ளை
1205-பிள்ளை லோகாச்சார்யார் –ஐப்பசி திருவோணம்–1325— திருநாடு
1207-அழகியமணவாள நாயனார் –மார்கழி அவிட்டம் -1309-திருநாடு அலங்கரித்தார் -)

ஒருநாள்‌ நம்பிள்ளை வடக்குத் திருவீதிப் பிள்ளை திருமாளிகைக்‌கெழுத்தருள, அங்குள்ளாரெல்லாரும்‌ நம்பிள்ளை திருவடிகளிலே வந்து ஸேவிக்க, அப்போது வடக்குத் திருவீதிப் பிள்ளை தேவிகள்‌
ஆர்த்ர வஸ்த்ரததுடனே தண்டனிட்டு நிற்க, நம்பிள்ளை அவளருகு நிற்கிற ஸ்த்ரீ ஜனங்களைப்‌ பார்த்து *இத்தப்‌ பெண்‌ ஆர்த்ர வஸ்த்ரத்துடனே நிற்பானென்‌?” என்ன, அவர்கள்‌. சொன்னபடி –
**தாலு நா ள்‌ தூரஸ்தையா யிருந்து இப்போது தீர்த்தமாடி வந்து தேவரீர்‌ திருவடிகளிலே ஸேவிக்கிறாள்‌’” என்ன. அது கேட்டு நம்‌ பிள்ளையும்‌ உகந்து அவளை “பெண்ணே! இங்கே வா” என்றழைத்து திருக் கையாலே அவளுதரத்தை ஸ்பர்சித்து **நம்மைப்‌ போலோரு பிள்ளையைப்‌ பெறுவாயாக” என்று திருவுள்ளம்‌ பற்றி யருளினர்‌. அத்தைக்‌ கண்டு வடக்குத் திருவீதிப் பிள்ளையும்‌-நமக்குக்குமாரனுண்டானால்‌ ஆசார்யன்‌ திருவுள்ளத்துக்கு உகப்பாம்‌’” என்றிருந்து ததநுகுணமாக *வர்த்திக்க, தத் ஸம்வத்‌ஸரத்தில்‌ வடக்குத் திருவீதிப் பிள்ளை தேவிகள்‌ கர்ப்பவதியாய்‌ததஸ்ச த்வாதசேமாஸே” என்கிறபடியே பன்னிரண்டாம்‌ மாஸத்தில்‌ க்ரோதந வருஷம்‌ ஐப்பசியில்‌ திருவோணத்தில்‌ ஒரு குமாரர்‌ திருவவதரிக்க ஸூதிகா செளச நிவ்ருத்தியான பன்னிரண்‌டாம் தாள்‌ நாம கரணத்திலே அக் குமாரருக்கு லோகாசாரியர்‌ என்று ஸ்வாசாரியரான நம்பிள்ளையின்‌ திருநாமம்‌ சாத்தி யருளினார்‌-பிள்ளையும்‌ அது கேட்டு, வடக்குத்‌ திருவீதிப் பிள்ளையை யழைத்து, “க்ருஷ்ணரே! நாம்‌ பெருமாளின்‌ திருநாமம்‌ சாத்துவதாக உத்தேஸித்திருக்க, நீர்‌ நம்மைக்‌ கேளாமல்‌ இப்படிச்‌ செய்யலாமா?”’ என்ன, அவரும் நடுங்கி, பயப்பட்டு, நிருத்தரராய்‌ நிற்க, அவ்வளவிலே, முதலிகளெல்லாரும்‌ “தேவரீர்‌ திருநாமம்‌ சாத்துகையிலுள்ள ஆதரத்தாலே செய்தாரித்தனை; இன்னுமொரு குமாரர்‌ உண்டாம்படி ஆஸீர்வதித் தருள வேணும்‌‘ என்று விண்ணப்பஞ்செய்ய, பிள்ளையும்‌ உகந்து, அப்படியே,-ஸத் புத்ரன்‌ இன்னுமொருவன்‌ உண்டாக”‘ என்று ஆசீர்வதித்து விட, வடக்குத்‌ திருலீதிப்‌ பிள்ளைக்கு அப்படியே பின்னையுமொரு குமாரர்‌ -திருவவதரிக்க, பிள்ளையும்‌ அதுகேட்டு ஸந்துஷ்டராய்‌, பத்துநாளும் கடத்த இரண்டாம்‌ நாள்‌ அவரை அழகிய மணவாளப்‌ பெ௫மாள்‌ நாயனார்‌” என்று நம்‌ பெருமாள் திரு நாமம் சாத்தி யருளினார்‌.

இப்படிப்பட்ட பெருமையை யுடையவருடைய அருளாலே அவதரித்தவராய்‌ ௮வதார விசேஷ மாயிருந்துள்ள பிள்ளை லோகாசாரியரும்‌, அவருடைய அருளே தாரசகமாக வளர்ந்த அவர்‌ திருத்‌ தம்பியரான அழகிய மணவாளப் பெருமான்‌ நாயனாரும்‌, தத்வ ரஹஸ்யந்‌ தொடங்கி அநேக ப்ரபந்தங்கள்‌ இட்டருளி ஸ்வரூபவர்த்தகராய்‌
தம்பியுடன்‌ தாசரதியானுனும் சங்க வண்ண
நம்பியுடன்‌ பின்னடைந்து வந்தானும்‌–பொங்கு புனல்‌
ஒங்கு முடும்பை யுலகாரியனும்‌ அறந்
தாங்கு மணவாளனுமே தான்‌

என்னும்படி ஸெளப்ராத்ரத்தை யுடையராய்‌ யெழுந்தருளி யிருக்‌கிற காலத்திலே ஸர்வஜ்ஞரான பிள்ளை லோகாசாரியர்‌ திருவடிகளிலே ஸாத்விகராயிருப்பார்‌ பலரும் ஆச்ரயித்து ஸத் ஸம்பந்‌தத்தை யுடையராய்‌ :ஸம்பந்தாத்‌ ஸ்வாத்ம லாப:””’ என்று ஆநந்த நிர்ப்பரா யிருத்தார்கள்‌.

அவர்களில்‌
கூர குலோத்தம தாஸ நாயனும்‌,
மணப் பாக்கத்து நம்பியும்‌
கொல்லி காவல தாஸரான அழகிய மணவாளப் பெருமாள்‌ பிள்ளையும்‌,
கோட்டூரிலண்ணரும்‌,
விளாஞ்சோலைப் பிள்ளையும்‌,
ஸாத்‌விகைகளில்‌ திருமலை யாழ்வார்‌ திருத் தாயார்‌ தொடக்கமான சில அம்மையார்களும்‌,

திருவடிகளிலே ஆச்ரயித்த வன்று தொடங்கி அந்தரங்க ஸேவை பண்ணிக் கொண்டு அந்தே வாஸிகளாய்‌ அகலாமலிருந்தார்கள்‌. இப்படி இவர்களாலே ஸேவ்யமனராயிருக்கிற
பிள்ளை, பின்பு தம்முடைய க்ருபையாலே இவர்களை யழைத்து அந்தரங்கமாகக்‌ திருவாய் மொழியாகிற திவ்ய ப்ரபந்தத்துக்கு ஆறாயிரப்டி, ஒன்பதினாயிரப்படி, இருபத்து நாலாயிரப்படி முப்பத்தாரறாயிரப்படி, என்கிற வியாக்கியானங்கள்‌ ப்ரவ்ருத்த மானதற்குக் காரணம்‌ இன்னபடியும்‌ இன்னபடியு மென்று அருளிச்‌ செய்தருளினார்‌ .

அதா்வது– திராவிட வேத ஸாகரமான திருவாய் மொழிக்கு நிபுணராய்‌ ‘பூர்விகரா யுள்ளவர் அனேகர்‌ ஸ்வ ஸ்வ புத்தி விஸ்தாராநுகுணமாக லக்ஷணங்களுக்கு படிமாவென்றுகந்து வ்யாக்யான மிட்டு வைத்தார்கள்‌.அவ்வளவே யன்‌றிக்கே இவற்றினுடைய ஸஹஸ்ரசாகோபநிஷத்‌ ஸமாகமத்வம்‌ ப்ரகடிதமாம்படி ஒரு ப்ரபந்தமிட்ட ருளும்படி திருக் குருகைப் பிரான்‌ பிள்னாளை எப்பெருமானார்‌
கடாக்ஷிக்க, அவரும்‌ அவதார விசேஷமென்னும்படி ஆழ்வார்‌ திருவுள்ளத்தை அடி யொற்றிக்‌ கொண்டு; ஆறாயிரப்படி- என்கிற வியாக்யானஞ்‌ செய்தருளினார்‌

இன்பு, அவரும்‌ மற்றுமுள்ள பெரியோர்களும்‌ ‘இன்னம்‌ இவ்‌ வர்த்த விசேஷங்களுங்‌ கூட்டி அனைவர்க்கும்‌ ஸூக்ரஹமாக அர்த்தமாம்படி ஒன்பதினாயிரப்படியாக ஒரு ப்ரபந்தமிட்டு
வையும்‌”! என்று பட்டருக்கு நியமித்து வைகக ; அவரும்‌ அத்தைத்‌ திரு வுள்ளத்திலே வைத்துக்‌ கொண்டு மாதவர்‌ என்னும் திரு நாமத்‌தை யுடையராய்‌, ஸகல சாஸ்த்ர வித்தமராய்‌, ஸந்யஸித்து
வேதாந்தி என்னுந்‌ திருநாமத்தை யுடையராய்‌, பின்பு பட்டர்‌ திருவடிகளிலே ஆச்ரயித்து ஸர்வஜ்ஞராம்‌ திருவடிகளுக்கு அந்தரங்‌கராயிருக்க, இவரை பட்டர்‌ *’நம்‌ ஜீயர்‌” என்று அபிமானித்துப்‌ பெருமாளைத்‌ தொழ வெழுந்தருள, பின்னும்‌ சில ஜீயர்களும்‌ ஸ்ரீவைஷ்ணவர்களும்‌ நிறைந்து நிற்க, பெருமாள்‌ உகந்தருளி அர்ச்சக முகேத இவரைக் கையைப்‌ பிடித்து, ‘வாரீர்‌ நஞ்ஜீயரே!’!என்று அருள் பாடிட்டருளி ”பட்டர்‌ திருவுள்ளப் படிக்கு ஒன்பதினாயிரப்படி வ்யாக்யானஞ் செய்யும்‌” என்று நியமித்தருள ஆறாயிரப்‌படிக்கு கனகாபிஷேக மென்னும்படி ஒன்பதினாயிரப்படி செய்‌தருளினார்‌. அன்று முதல்‌ இவருக்கு நஞ்சியர்‌ என்று இதுவே திருநாமமாயிற்று,

பின்பு பட்டருக்கு ப்ராப்ய பூமி அணித்தாக, நஞ்சீயர் சோகித்து சிந்தித்தபடி:- நாம்‌ வார்த்தக்யத்தை யடைந்தோம்‌ -ஸ்வாமி பட்டருக்குச்‌ சிறு வயஸ்ஸாகையாேலே தர்‌சந ஸ்‌திதிக்குக்‌ குறைவில்லை, உத்தரோத்தரம்‌ தழைக்கு மென்றிருந்தோம்‌; அது போய்‌ இப்படி யாவதே!!’ என்று திருமுடி மோதி பட்டர்‌ திரு முன்பே சென்று திருவடிகளைப் பிடித்துக் கொண்டு க்லேசிக்க-பட்டரும்‌ அவரைக் கிட்ட வர வழைத்தருளி :’நீர்‌ சோகிக்க வேண்டா; தர்சந ப்ரவர்த்தகனா யிருப்பானொரு பிள்ளையைப்‌ பெருவீர்‌” என்‌றருளிச் செய்யக் கேட்டு ஜீயரும்‌ ஸமாஹிதராய்‌ திருவுத்தரீயத் தலைப்பை முடிந்து கொண்டு (பட்டர்‌ திரு நாட்டைந்‌தவாறே) பட்டருடைய கைங்கர்யத்தை அதி விஜ்ரும்பணமாக நடப்பித்தருளி, பின்பு ஒன்பதினாயிரப்படியை இன்னம்‌ இருபத்தி நாலாயிரப்படி ,முப்புத்தாறாயிரப்படி வ்யாக்யானங்களுக்‌கு இடம்‌ கொடுக்கத் தக்க அர்த்த பூர்‌த்தியுடனே பட்டோலை கொண்டு நிறை வேற்றி, இத்தை தல்லவலேகத்கிலே ஏறி யருளப் பண்ணி அநேக மதமாக ப்ரவர்த்திப்பிக்கத்‌ திருவுள்ளமாய்‌ நல்ல லேகரி விசாரித்தருள:

அவ் வளலிலே -பருஷக சக்ரவர்‌த்தி திருமகன்‌ கோயில் அருகே குடி இருந்து அனவரதம் ஸத்வநிஷ்டராய்‌, பண்டித பாமர ஸாதாரணமாக எல்லாரும்‌ ஆதரிக்கும்‌ படியான வைபவத்தை யுடையராய்‌ உபாதாந பரராய் தேவ ராஜர்‌ என்று ஓருவருண்டு; அவரை யழைத்து அவருக்குபதேசித்து அவரைக் கொண்டு ஏறி யருளப்‌ பண்ணுவியும்‌* என்று ஸ்வப்நமாக; *’இது ஆழ்வாருடைய நியமனம்‌” என்று உகந்தருளி, மறு நாள்‌ -இப்படி யொருவருண்டோ?” என்று அருகு நிற்கிற ஸ்ரீ வைஷ்ணவர்களைக்‌ கேட்டருள, அவர்களும்‌ உண்டென்று உடனே தேவ ராஜரை யழைத்து வந்து விட, ப்ரதமத்திலே *ஆ முதல்வன் இவன்‌ என்று கடாஷித்தருளி -ஒரு முறியைக்‌ கொடுத்து எழுத்து எழுதிக்‌ காட்டுமென்ன, -அவரும் ‘நஞ்சீயர்‌ திருவடிகளே சரணம்‌, பட்டர்‌ திருவடிகளே சரணம்‌” என்று எழுதக் கண்டருளி யிருக்க, தேவராஜரும்‌, திருவடிகளைப் பிடித்துக் கொண்டு, கிருபை பண்ணி வருள வேணும்‌‘ என்று விண்ணப்பம்‌ செய்து கொள்ள; உகந்து க்ருபை பண்ணி யருளி, திருவாய்மொழியினர்த்தத்தை ஸங்க்ரஹேண ஸாதித்தருளி, பட்டோலையையும்‌ அலேகத்தையும்‌ ஸாதித்தருளி நன்றாக ஏறி யருளப் பண்ணிக் கொண்டு வாரும்‌’ என்று விடை கொடுத்தருள; அவரும்‌ அக்கரைக் கெழுந்தளுவதற்காகப்‌ புறப்பட, ஆறு பெரு வெள்ளப்பட நீஞ்ச வல்லவராகையாலே ஒரு சாலைப்‌ பிடித்துக் கொண்டு பட்டோலையும் அலேகத்தையும்‌ திருமுடியிலே கட்டிக் கொண்டு நீஞ்ச, வெள்ளம்‌ அதிகமாக, போரத் தளர்ந்து பட்டோலையும்‌ அலேகமும்‌ திருப் பரிவட்டத்துடனே (பெருக்கிலே விழுந்து விட, இவர்‌ போர கிலேஸித்து நொந்து! மெள்ள அக்கரைப்‌பட்டு, ‘ஆசார்யாபசாரம்‌ வந்ததே?’* என்று விழுந்து புரள இரண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ கண்டு தேற்றி இவர்‌ திரு மாளிகையிலே சேர்க்க, தேவிகளும்‌ கண்டு அநு சோகித்து இருவருமுபவாஸமாயிருக்க, ‘பெரு நாளுக்குத்‌ திருவாராதன மின்‌றிக்கே யிருக்க வொண்ணாது ”* என்று தேவிகளறிவிக்க , அப்படியா வென்று கைங்கர்யத்தை நியமித்துத்‌ தாமும்‌ நீராடி யருளித்‌ திருமண்காப்பு சாத்திக்‌ கொண்டு திருவாராதனத்துக்கு எழுந்தருளி உபக்ரமிக்க, அலஸையினாலே நித்ரைபட , அவ்வளலிலே கோயிலாழ்வாரிலே யிருக்கிற ஸ்ரீரங்கராஜர்‌ திருவாய் மலர்ந்தகுளி, *வாரிர்‌| தேவராஜரே! நீ சோகிக்க வேண்டா; ஸம்புடமேறி யருளப்‌ பண்ணும்‌;நாம் முன்‌ நிற்கிறோம்‌” என்ன, “ஸ்ரீய:பதியாய்‌’” என்று தொடங்கி, “விசேஷ கடாக்ஷம்‌ பண்ணி யருளினான்‌” என்னுமளவாக ஒரு ஸூர்ணையைப் ப்ரஸாதிக்கப்‌ பெற்றுத்‌ தெளிந்து, ஸூர்ண நெட்டுருவாயிருக்க அத்தை அப்போதே லிகித்தருளி, திருவுள்‌ளம் உகந்து பெருமாளை யமுது செய்தருளப் பண்ணித்‌ தாமும்‌ அமுது செய்தருளி ஸ்ரீகோசம் ஏறி யருளப் பண்ணத் தொடங்கி நிறைவேற்றி, ஸ்ரீ கோசத்தைக்‌ கொண்டு புறப்பட்டு ஜீயரை தெண்டன் சமர்ப்பித்து

ஸ்ரீ கோசத்தையும்‌ ஸமர்ப்பிக்க, ஜீயரும்‌ உகந்தருளி திருவுள்ளத்துக் குகப்பான பேரைக்‌ கூட்டிக்‌ கொண்டு கடாக்ஷித்‌தருள: தாம்‌ ஸந்திக்தமாக வைத்த ஒரோ விடங்களிலுள்ள வாக்யங்‌களும்‌ அர்த்தங்களும்‌ நன்றாக இசைத்திருக்கக் கண்டு எல்லாரும்‌ உகந்து தேவ ராஜரை உள்ளே யழைத்தருளி, *’இதென்ன அற்புதம்‌? இதென்ன சாதுர்யம்‌?” என்று கேட்க, அவர்‌ இஸ் ஸந்நிதியினின்றும்‌ புறப்பட்ட பிற்பாடு நடந்த செய்திகளை யெல்லாம்‌ நடந்த படியே தப்பாமல்‌ விண்ணப்பஞ் செய்யக்‌ கேட்டருளி -ஜீயரும்‌ உகந்து எழுந்திருந்து தேவ ராஜரை *நம் பிள்ளையோ! என்று கட்டிக் கொண்டு எல்லாருங்கூடி யெழுந்தருளி பெருஞ்‌ செல்வத்தைத்‌ திருவடி தொழுது நிற்க; தேவராஐருக்கு நம்பிள்னை என்று அருள் பாடிட்டு தர்சந ப்ரவர்த்தகத்வாபிஷேகம்‌ பண்ணி யருளி ‘உம்முடைய புத்தி விஸ்தார அநு குணமாகத்‌ திருவாய்‌ மொழிக்கு வ்யாக்யானமாம்படி உபந்யஸித்து நம்மிராமானுசன்‌ தரிசனச்தை வளர்த்‌துக் கொண்டு போரும்‌” என்று நியமித்து-பட்டர்‌ சரம காலத்திலே தர்சந ப்ரவர்த்தகருக்கென்று ஸாதித்‌திருந்த மோதிரத்தை நம்‌பிள்ளை திரு விரலிலே யிட அவரை யெல்லாருங்‌ கொண்டாடி ப்ரதிபத்தி பண்ணினார்கள்‌. இப்படி தர்சந ப்ரவர்த்தகராய்‌ ஜ்ஞாந பக்தி வைராக்யங்கள்‌ இட்டு மாறினாப் போலே வடிவிலே தொடை கொள்ளலாம்படி அதிசயத்‌தை யுடையராய்‌, அத்புத வ்யாக்யான வைபவராய்‌ எழுந்தருளி யிருக்கிறபடிகைக்‌ கண்டு அநேகம்‌ ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ ஆச்ரயித்து, நம்‌பெருமாள்‌ கோஷ்டியோ? நம்பிள்ளை கோஷ்டியோ?”’ : என்னும்படி ஸ்ரீவைஷ்ணவ ஸம்ருத்தியுடனே வாழ்ந்தருளும் காலத்திலே யுண்டான அப்ரதிம வைபவங்கள்‌ அனேகமா யிருக்கும்‌.

இப்போது பெரிய வாச்சான்‌ பிள்ளைக்கு (1167-1262-95 ஸம்வத்சரங்கள் எழுந்தருளி இருந்தவர்)நம்பிள்ளை ஒன்பதினாயிரப் படியுடனே சில அர்த்த விசேஷங்களைக் கூட்டி ப்ரஸாதிக்க,அவர்‌ அன்றைக்கன்றாடம்‌ பட்டோலை கொண்டு எழுதி நிறைவேறின பின்பு எல்லாவற்றையுங்கொண்டு வந்து ஸமர்ப்பிக்க-கடாக்ஷித் தருளி உகந்தருளி நல்ல அலேகத்திலே ஏறி யருளப் பண்ணி பின்னும்‌ அநேக ஸ்ரீகோசங்களையுமுண்டாக்கி பஹு முகமாக ப்ரவர்‌த்‌திப்பிக்கும்படி நியமித்தருளி அப்படியே நடவா நிற்கச்‌ செய்தே

நம்பிள்ளை தம்முடைய நல்லருளால் ஏவி விட
பின் பெரியவாச்சான் பிள்ளை யதனால் -இன்பா
வருபத்தி மாறன் மறைப் பொருளைச் சொன்னது
இருப்பத்து நாலாயிரம் –43-அந்த ஆச்சார்ய நியமனத்தைப் பற்றி–இத்தால் ஸ்வ யத்னத்தாலே செய்த ஸ்ரீ நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டரையும்
ஸ்ரீ வடக்குத் திரு வீதிப் பிள்ளை பட்டரையும் வ்யாவர்த்திக்கிறது –

ஐயரையும்‌ (வடக்குத் திருவீதிப் பிள்ளை) சிறியானாழ்வானப்‌ பிள்ளையையும்‌ (ஈ யுண்ணி மாதவர்‌) அழைத்து ஒன்பதினாயிரப்படி வாசியுங்கோள் ‘” என்ன; பெரியவாச்சான்‌ பிள்ளையும்‌! அடியேனுங்‌கூட ஸேவித்து வருகிறேன்‌” என்ன, “ஆனால்‌ பெருக்காம்‌” என்றருளிச்‌ செய்து உகந்து ஸாதித்தருளி; அன்றைக்கன்றாடம்‌ ஸாதித்த வர்த்தத்னத ஸ்வார்த்தமாகப்‌ (பரார்த்தமாக இல்லாமல்) பட்டோலை கொண்டு ஐயர்‌-வடக்குத்‌ திருவீதிப் பிள்ளை- சேர்த்துக்‌ கட்டி வைக்க; ஒரு நாள்‌ நம்பிள்ளையை அமுது செய்தருள விண்ணப்பஞ் செய்ய; உடனே புறப்பட்டருளி தாமே திருவாராதனஞ் செய்கிறோமென்று முயன்ற வளவிலே பட்டோலைக் கட்டைக் காணா, ஒரு ஓலையை வாங்கி வாசித்தருளி,“இதென்னன்‌ புது?!” என்று கேட்க, ஐயர்‌, ”தேவரீர் ஸாதித்‌தருளின அர்த்தத்தை விஸ்மரியாமைக்குக்‌ குறிப்பாக இட்டு வைத்‌தேன்‌” என்று விண்ணப்பஞ் செய்ய; **ஆகில்‌ திருவாராதனம்‌ நீரே செய்யும்‌” என்று நியமித்து பட்டோலைக் கட்டை யிறக்கி நெடும்‌ போது சோதித்து, பெரியவாச்சான் பிள்ளையையும்‌ சிறியாழ்‌வான் அப் பிள்ளையையும்‌ “நீங்கள்‌ இந்த விரசைப்‌ பார்த்துக்‌ கொண்‌டிருங்கோள்‌” என்று சடக்கென வமுது செய்தருளித்‌ தாமுமங்கே யெழுந்தருளி பின்னும்‌ தேடும் போது கடாக்ஷித்தருளி, “யானைக்‌ கோலஞ் செய்தாப் போலிருக்கிறது’” என்று ஒருவர்க்கொருவர்‌ அருளிச் செய்து கொண்டு உகந்திருக்கச்‌ செய்த நம் ஐயரை யழைத்தருளி, : “நீர்‌ இப்படிச்‌ செய்ததென்‌? ஆச்சான்‌ பிள்ளை பண்ணலாமோ? நாமும்‌ பண்ணுவோமென்று ஆக்ரஹித்துச்‌ செய்தது போலே யிருக்கிறது’ என்று பிள்ளை சீறி யருள, ஐயர்‌ நடு நடுங்கி சோகித்து மோஹித்துத்‌ தெளித்து ‘ஐயா! அடியேன்‌ அப்படிச்‌ செய்திலேன்‌; விஸ்மரித்தால்‌ பார்த்துக் கொள்ளச்‌ செய்தேன்‌” என்ன, ”அதற்கு இருபத்தி நாலாயிரப் படியுண்டே,- என்ன, :’ ‘அவிவேகம்‌ வந்தது”’என்று; திருவடிகளிலே விழ, க்ஷமித்‌தோம்‌:’ என்‌றருளிச் செய்து, ‘ ‘நீர்‌ ஒரு அவதார விசேஷமென்றிருக்கிறோம் ; நாம்‌ ஜீயர்‌ ப்ரஸாதமாகச்‌ சொன்ன அர்த்தத்தில்‌ ஒரு-ச-து-போடாமல்‌ எழுதினீர்‌;(தீபா உத்பன்ன ஜ்வாலை போல் 9000 படியே 36000 படியாக விரிந்தது ) உம்முடைய ஸாமர்த்யத்தை என்னென்று சொல்லுவோம்‌?” என்று மிகவும்‌ ப்ரியப்பட்டு,மாதவருக்கு ஓர் அதிசயம்‌ வேணும்‌”! என்று “திருவுள்ளம்‌ தோன்ற நமக்கு ப்ராண ஸுஹ்ருத்தாம்‌; ஜீயருடைய பூர்வாச்ரமத்தின்‌ திருநாமத்தை யுடையராய்‌ நமக்கு- அபிமதரா யிருப்பர் ரொருவரா கையாலே அவரைக் கொண்டு இத்தை ப்ரவர்த்திப்போம்‌!? என்ன ஐயரும்‌ மிகவுமுகந்து “அப்படியே செய்தருள வேணும்‌”” என்று தீர்க்க ப்ரணாமம்‌ பண்ண, உடனே பட்டோலைக் கட்டை யெடுத்துச்‌ சிறியாழ்வானப் பிள்ளை கையிலே ப்ரஸாதித்தருனி, “இத்தை நாலைந்து அலேகத்திலே ஒரு ஊர்த்வமாம்‌ படி பண்ணி இத்தை பஹு முகமாகப்‌ ப்ரவர்த்‌திப்பியும்‌” என்றை நியமித் தருள; “அதற்கு அடியேன்‌ வல்லேனோ? அதிகாரங் கிடைக்குமோ?”என்றாற் போலே சில விண்ணபஞ் செய்ய, :’அது உமக்கு பரமோ?-ஜீயர் கடாக்ஷம்‌ முன் நிற்கும்‌ திரு நாமமுடையீரன்றோ? ஒரைதிஹ்யமுண்டு–கேளும்‌, துன்னு புகழ்க் கந்தாடைத்‌ தோழப்பர்‌ ஸ்வப்நத்‌திலே பேரருளாளப்‌ பெருமாள்‌,

ஜகத் ரஷா பரேந அநந்தோ ஜநிஷ்யத் யபரோ முநி: |
ததரஸ்ரயாஸ் ஸதா சாரா ஸாத்விகாஸ் தத்வ தர்ஸிந : ॥

உலகத்தைக்‌ காப்பாற்றுவதில்‌ ஊற்றமுடைய திருவனந்‌தாழ்வான்‌ [ராமாநுஜ முநிவராக மட்டுமன்றி] மற்றொரு முநிவராகவும்‌ அவதரிக்கப்‌ போகிறார்‌. [அப்போது] அவரை ஆச்ரயிக்குமவர்கள்‌ ஸதாசாரமும்‌ ஸத்துவ குணமும்‌ தத்துவ ஜ்ஞானமும் உடையரா யிருப்பர் –என்று அருளிச்‌ செய்திருப்பது முண்டு,-திருவனந்தாழ்வான்‌ எம்பெருமானருடைய அவதாரமானாப்‌போலே இன்னமும் ஓரு அவதாரமும் செய்யப்‌ போகிறார்‌ -அவர்‌ முப்பத்தாறாயிரப்‌ பெருக்கராய்‌ இத்தை ப்ரவர்‌த்‌திப்பிக்கப் புகுகிறார்‌ -நீர்‌ ஓராண்‌ வழியாய்‌ நடததிப் போரும்‌” என்று பட்டோலைக்‌ கட்டை ப்ரஸாதித்தருளினார்‌. அவரும்‌ அஞ்சு (5) ஸம்புடமாக ஏறி யருளப்‌ பண்ணித்‌ தம் குமாரருக்குப்‌ பிரஸாதித்தருளினார்‌.

நம்பிள்ளைக்கு இரண்டு தேவிகளுண்டாயிருக்க, மூத்த தேவிகள்‌ ஒரு நாள்‌ தளிகைக்குச்‌ செய்ய இளைய தேவிகள் ஒரு நாள்‌ தளிகைக்குச்‌ செய்ய இங்ஙனே நடந்து செல்கிற நாளில் ஒரு நாள்‌ மூத்த தேவியாரை யழைத்து, ‘*நீ நம்மை புத்தி பண்ணி யிருக்கும்படி. சொல்லிக் காண்‌” என்ன, அவளும்‌ அஞ்ஜலித்து லஜ்ஜாபயங்களநுவர்த்திக்க , வணக்க வொடுக்கமுடனே ‘தேவரிீர்‌ நம்பெருமாளுடைய அபராவதாரம்‌ அடியேனுக்கு ஆசார்யர்‌” என்றும்‌, திருவடிகளிலே பண்ணும்‌ கைங்கர்யங்கள்‌ ஸத்தா தாரகமான ஆசார்யாநுவர்த்தநம்‌ * என்றும்‌ நினைத்திருப்பன்‌” என்று விண்ணப்பஞ் செய்ய, ‘*நல்லது” என்று கேட்டு, இளைய தேவியாரை யழைத்து “நீ நம்மை நினைத்‌திருக்கும்படி யென்‌?” என்று கேட்டருள , அவளும்‌ லஜ்ஜாபயங்களுடனே ‘தேவரீர்‌ பர்த்தா,அடியேன்‌ பார்யை என்றன்றோ நினைத்திருக்கும்‌ படி என்று விண்ணப்பஞ்‌ செய்யக்‌ .கேட்டு, பிள்ளை மூத்த தேவிகளைப்‌ பெருமாள்‌ தளிகைக்கு ப்ரதி தினம்‌ செய்வதாக நியமித்து இளைய தேவியை தத் பரிசாரக க்ருத்யையாக நியோகித்து இப்படிச் செல்லுகிற வளவிலே மூத்த தேவி ருதுவாய்‌ தூரஸ்தையான போது இளைய தேவி தளிகைக்குச்‌ செய்தால்‌ எம்பெருமானைத்‌ திருவடி விளக்கி அமுது செய்வித்தருளித்‌ தமக்கபிமதராய்‌ உத்க்‌ருஷ்ட ஜந்ம ஜாதராய்‌ வேதகப் பொன் போலே யிருந்துள்ள பரம ஸத்வ நிஷ்டரான ஸ்ரீவைஷ்ணவாக்ரகண்யர்‌ கர ஸ்பர்ஸமாக்கி அமுது செய்தருளுவர்‌. இத்தால்‌ இளைய தேவிகளுக்கு பாவ சுத்தி போராமையாலே பகவத் த்ருஷ்டி பூதமானாலும்‌ நியத ஸத் பாத கர ஸ்பர்சமும்‌ அவச்யாபேக்ஷிதமென்று கருத்து.

நம்பிள்ளைக்கு இளைய தேவிகளிடத்திலே ஒரு குமாரர்‌ திருவவதரிக்க, முதலிகள்‌ வந்து பிள்ளைக்கறிவிக்க, அருகிருந்த திருப்‌பேராச்சான்‌, ”அடியேனுக்கு ஒரு திருத் தமையனார்‌ திருவவதாரம்‌”!என்று உகந்தருளினார்‌. இத்தால்‌ ஆசார்ய புத்ரன்‌ அத்ய ஜாதனேயாகிலும்‌ பஹுமந்தவ்ய னென்று கருத்து. பிள்ளையும்‌ ஜாத கர்மம்‌ செய்து, பன்னிரண்டாம்‌ நாள்‌ நாம கரணத்திலே தூவி யம்புள்‌ என்று திரு நாமம்‌ சாத்தி யருளினார்‌.

நம்பிள்ளை பின்பழகிய பெருமாள்‌ ஜீயர்‌ மடத்திலே யொரு நாள்‌ எழுந்தருளி யிருக்க, ஸ்ரீபாதத்து முதலிகளெல்லாரும, “ஆழ்வாருடைய அவஸ்தை யுண்டாய்ப் போர வேண்‌டியிரா நின்றது; ப்ராப்ய ஸித்திக்கு இப்போது ஸ்த்ர்யந்ந பாநாதிகளாலே கூடி யிருக்கிற , நாங்கள்‌ என்‌ செய்யக் கடவது?‘ என்று விண்ணப்‌பஞ் செய்ய பிள்ளையும்‌, ”இங்கு அவஸ்தை பிறந்ததே யாகிலும்‌ (பிறக்காமல் இருந்தாலும் )ஸதாசார்ய கடாக்ஷ விசேஷத்தாலே ஸ்‌தூல சரீரம்‌ கழித்து ஸூக்ஷ்ம சரீர மோசநத்துக்கும்‌ கைங்கர்ய ப்ராப்திக்கும்‌ நடுவே அவ் வவஸ்‌தையைப்‌ பிறப்பித்து எம்பெருமான்‌ காரியம்‌ செய்யும்‌” என்‌றருளிச்‌ செய்தார்‌. இதுக்கு ப்ரமாணம்‌ ‘ந கலு பாகவதா யம விஷயம்‌ கச்சந்த்’‘[பாகவதர்களால் வைஷ்ணவர்கள்‌ யமனுடைய தேசத்தை யடையார்‌ ] என்றும்‌, அவன்‌ தமர்‌ எவ் வினையராகிலும்‌ எம் கோனவன்‌ தமரே என்றொழிவதல்லால்‌ நமன்‌ தமரால்‌ ஆராயப்‌ பட்டறியார்‌ கண்டீர்‌ [முதல திகு. 53) என்னுமிதுவே யிறே. ஆகையால் இவ் வாத்மாக்களுக்கு உஜ்ஜீவனத்தில்‌ ஊன்றிப் போரும்‌ எம்‌ பெருமான்‌ ஸ்‌தூல சரீர வியோகாதந்தரத்திலே அர்ச்சிராதி பத கமந காலத்திலே ஸ்வ சரீரோபேக்ஷயைப்‌ பிறப்பித்து ஸ்ரீமாலாகாரர்க்குத்‌ தன்‌ திருவடி வழகைக் காட்டினாப் போலே இவனுக்கும்‌ வடிவழகைக் காட்டி பரபக்தி பரஜ்ஞாந பரம பக்திகளை யுண்‌டாக்கிக்‌ கைக் கொண்டருளும்‌ படி.

நம்பிள்ளை பெரிய கோயில்‌ வள்ளலாரைக் குறித்து *குலந்தரும்‌[திருமொழி 1-1-9] என்கிற பாட்டில்‌ முதற்பதத்துக்குத்‌ தாத்பர்யமருளிச்‌ செய்ய வேணும்‌ என்ன, அவரும்‌, “’முருட்டுத் திருப்பதியனான வென்னை நம்பூர்‌ குலத்துக்கு சேஷமாக்கினால்‌ குலந்தரும்‌:’ என்றருளினார்‌. அதாவது, பண்டைக் குலத்தைத்‌ தவிர்த்து தொண்டக் குலத்திலே மாசில்‌ குடியிலே ஸ்ரேஷ்ட ஜந்ம ஜாதனாய்‌ ஆசார்ய வம்ச பரம்பரைக்கு இஷ்ட விநியோகார்‌ ஹனாகை–ஸ்ரீ வைஷ்ணவோத்தம குல மென்றநுஸந்திக்க வேணு மென்‌றபடி-

*அவதாரமிருக்கும்படி யென்‌?’ என்று முதலிகள்‌ நம்பிள்ளையைக்‌ கேட்க, பிள்ளையும்‌, *மெய் வெளுத்து நாக்கு வற்றி யிருக்கும்‌’என்றருளினார்‌. “முதலிகளும்‌ “அது வென்‌?‘ என்று கேட்சு, “அதிகாரி பெறாமையாலே மெய் வெளுத்திருக்கும்‌; பெற்றாலும்‌ ப்ரயோஜநாந்தர பரராகையாலே மயிர்ப்பட்ட சோறென்று நாக்கு ‘வற்றி யிருக்கும்‌’? என்றருளினார்‌. ஆகையால்‌ ஆசார்யவானான
அநந்ய ப்ரயோஜநனா யிருக்குமதிகாரி எம் பெருமான்‌ தேடிப் பார்க்‌கிலும்‌ துர் லபனென்‌றபடி.

முதலிகளெல்லாருங் கூடி பெரிய கோயில்‌ வள்ளலாரை ஸ்ரீவைஷ்ணவர்களென்று இவர்களுக்குத்‌ திரு நாமமாகைக் கடி யென்‌?’,என்று கேட்க -ஸ்ரீ யபதி புத்ரராகையாலும்‌, ஸ்ரீ மான் பிதாவாகையாலும்‌, ஸ்ரீ மாதா வாகையாலும்‌ ஸ்ரீமானுடைய வைபவத்தை யறிகையாலும்‌ ஸ்ரீமான்‌ இவர்கள் வைபவ மறிகையாலும்‌, ஸ்ரீமத் பதத்திலே பிறக்கையாலும்‌, ஸ்ரீ புருஷகாரமாக வளர்கையாலும்‌ இவர்களுக்கு ஸ்ரீவைஷ்ணவர்களென்று நிரூபகமாய்த்து!” என்று அவரருளிச்‌ செய்தாரிறே.

நம் பிள்ளையைச்‌ சில ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ ‘*ப்ரபந்நனுக்குத்‌ தஞ்சமாக விச்வஸித்திருக்குமர்த்தமேது?” என்று கேட்க பிள்ளையும்‌, “ஸகல ப்ரமாண ஸார தமமான மந்த்ர ரத்நார்த்தத்தையே
விச்வஸித்திருப்பான்‌. த்வயத்திலர்த்தத்தை விச்வஸித்திருந்‌ தானால்‌ எம்பெருமானைப் பற்றியிருக்கும்‌; ஆசார்யனைப் பற்றின ஊற்றம் உண்டாகில் ஸ்ரீ வைஷ்ணவர்களைப் பற்றி யிருக்கும்‌; இனி எம்‌பெருமானையே பற்றி யிருக்கை -தேவதாந்தர பஜந ஸமமென்று ஆசார்யன்‌ திருவடிகளையே கட்டிக் கொண்டு கிடக்க, எம்பெருமாள்‌ இவனளவிலே பிச்சேறி யிருக்கும்‌. இவன்‌ ஸ்ரீவைஷ்ணவர்களைப்‌ பற்றி யிருக்க எம்பெருமானோபாதி ஆசார்யனும்‌ இவன்‌ மேல பிச்சேறி யிருக்கும்‌. இத்தால் , தத் தேசிக ததீய (பகவத் ஆச்சார்ய பாகவத மூன்றுக்கும் இம் மூன்று பதங்கள்)சரம நிஷ்டை யுண்டாகவே அம் மூவரும்‌ இவன்‌ விஷயத்திலே ஆஸக்தராவர்சுள்‌- என்‌றருளிச் செய்தார்‌,

நம்பிள்ளை யருளிச் செய்த வார்த்தை:– ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ ஈச்வரனுக்கு ஆத்ம ஸமாநர்‌; ப்ராண ஸமாநர்‌; திருஷ்டி ஸமாநர்‌,பாஹு ஸமாநர்‌; ஆபரண ஸமாநர்‌; ஆயுத ஸமாநர்‌; பாத ஸமாநர்‌”
பாத ரேகா ஸமாநர்‌; பாதுகா ஸமாநர்‌; சாயா ஸமாநர்‌; ஜிஹ்வா ஸமாநர்‌,

அதெங்ஙகனே யென்னில்‌;
*ஜ்ஞாநீத்வாத்மைவ மேமதம்‌ (கீதை 7-18)பகவத் ப்ராப்தி காமனான ஜ்ஞாநி எனது ஆத்மா வென்பது என் கருத்து] என்கிற அநந்ய ப்ரயோஜந ஜ்ஞானத்தைப்‌ பற்றவும்‌-ஆத்ம ஸமாநர்‌-என்னது உன்னதாவி உன்னது என்னதாவி – –;
*மம ப்ராணா ஹி பாண்டவா: (பாரதம்‌ உத்‌, 90-32)[பாண்டவர்கள்‌ எனது ப்ராண பூதர்கள்‌ அல்லவா ] என்கிற பராபிமானத்தைப் பற்றவும்‌ -ப்ராண ஸமாநர்‌-;
*யே ப்ரபந்நா மஹாதமாநஸ்தே மே நயந ஸம்பத: [ப்ரபந்நர்களான மஹாத்மாக்கள்‌ எனக்குக்‌ கண்ணான செல்வங்கள்‌ ] என்கிற பாமர ஜநோஜ்ஜீவந கர கடாக்ஷ த்‌ருஷ்டித்வத்தைப்‌ பற்றவும்‌–திருஷ்டி ஸமாநர்‌-;
*ராமஸ்ய தக்ஷிணோ பாஹு. (ராமா , ஆ, 34-13) [ராம பிரானுடைய வலது கை போன்றவர்‌ இளைய பெருமாள்‌] என்கிற ததிச்சா கத ப்ரவர்த்தந பாஹுத்வத்தைப்‌ பற்றவும்‌)–பாஹு ஸமாநர்‌;-
சாப மாதாயா ஆத்ம விபூஷணம்‌ [தமக்கு ஆபரணமாயிருக்கிற தநுஸ்ஸை வாங்கி] என்ற ஆபரணகோட்யந்தர்‌ பாவத்தைப்‌ பற்றவும்‌–ஆபரண ஸமாநர்‌;-;
*அலர்மகள்‌ கேளவன்‌ கையாழி-இடையே இராமானுசமுநி (இரா, நூற்‌ 33) என்கிற ப்ரதிபஷ நிரஸன சீல ஸுதர்சந ஸாம்யத்தைப்‌ பற்றவும்‌-ஆயுத ஸமாநர்‌=; *ஜங்கம ஸ்ரீவிமாநாநி ஹ்ருதயாநி மநீஷிணாம்‌ [ஜ்ஞானிகளின்‌ இதயங்கள்‌ எம்பெரூமானுக்கு நடமாடும்‌ ஸ்ரீவிமானங்கள்‌ –கர்ப்ப க்ருஹங்கள்‌ ] நடையாவுடைத்‌ திருநாரணன்‌ (திருவாய்‌ 3-7-4) என்கிற கௌரவத்தைப்‌ பற்றவும்‌-பாத ஸமாநர்‌–;
ஸ்ரீ ய:பதி பதத்வந்தத்வங்களுக்கு “சடகோபன்‌”! என்கிற பாதுகா த்வத்தைப்‌ பற்றவும்‌-பாதுகா ஸமாநர்‌–;
*நிழலும் அடி தாறுமானோம்‌
(பெரிய“திரு 31) என்கிற அவிநா பாவ ப்ராதீந ஸத்தாதிமத்தையைப்‌ பற்றவும்‌–பாத ரேகா ஸமாநர்‌-சாயா ஸமாநர்‌-;
*ரஸாந்‌ பக்தஸ்ய ஜிஹ்வாயாமஸ்நாமி ஷட் ரஸங்களையும்‌ பக்தனுடைய ரஸநேந்தரியமான நாக்கிலே புஜிக்கிறேன்‌ ]என்ற ஸ்வாநுபவ ஸாதநத் வத்தைப்‌ பற்றவும்‌ -ஜிஹ்வா ஸமாநர்‌ -கண்டு தானே அருளுகிறான் -அனைத்தும் ஸ்ரீ பக்தாநாம் என்று இருப்பவன் அன்றோ-ஜிஹ்வாத் யகில அவயவ ஸமானர் களிறே ஸ்ரீ வைஷ்ணவர்கள்‌.

ஸ்ரீவைஷ்ணவத்வமாவது-மூன்று ப்ரகாரமாயிருக்கும்‌,-எங்ஙனே யென்னில்‌ ஸத்கார யோக்யரென்றும்‌,
ஸஹவாஸ யோக்யரென்றும்‌, ஸதாநுபவ யோக்யரென்றும்‌.

இதில்‌ ஸத்கார யோக்யராவார்‌-ரூப தாம ப்ராதாத்யர்‌, உச்சாரண ப்ராதாந்யர்‌,அபிமானப்‌ ப்ராதாந்யர்‌, ஸஹவாஸ யோக்யராவார்‌–ஜ்ஞாத ப்ராதாந்யர்‌,அனுஷ்டான ப்ராதாந்யர்‌, அங்கீகார ப்ராதாந்யர்‌,
ஸதாநுபவ யோக்யராவார்‌ – ஆர்த்தி ப்ராதாந்யர்‌, அபிநிவேச ப்ராதாந்யர்‌- அபிருசி ப்ராதாந்யர்‌.

இதில்‌ த்யாஜ்யோபாதேயத்தைத்‌ தெளிய வறியாதவர்களாய்‌ ஸம்பந்த மாத்ரமே யானவர்கள்‌ நமஸ்கார யோக்யர்‌-தெளிந்த ஜ்ஞாநிகளான ஸ ப்ரஹ்‌ம சாரிகள்‌ *போதயந்த:பரஸ்பரம்‌ (கீதை 10-9) பண்ண யோக்யர்‌, ஆசார்யனும்‌, ஸதாசார்ய ஸத்ருசரும்‌ உத்தேச்ய தயா அநுவர்த்தநீய ரென்ற படி.

(நாதம் பங்கஜநேத்ர ராம யமுநாவாஸ் தவ்ய மாலாதரான்
யோகீந்த்ரம் குருகேசசந்திரஜலதிம் கோவிந்த கூராதியௌ
பட்டார்யம் நிகமாந்தயோகி ஜகதார்சார்யௌ சக்ருஷ்ண த்வயௌ
வந்தே மாதவ பத்மநாப ஸூமன கோசல தேவாதிபான்
—திருவாய் மொழிப் பிள்ளை அருளிச் செய்தது

திருவருள் மால் சேனை முதலி சடகோபன் நாத முனி -சீர் உய்யக் கொண்டார் மணக்கால் நம்பி சென்றாம் ஆளவந்தார்
குரு மாலாதரர் குருகைப் பிரார்க்கு அன்பாம் எதிராசர் கோவிந்தர் கூரேச பட்டர் வேதாந்த முனி
இரு கண்ணற்கு அன்புடைய நம்பிள்ளை இவர் ஈடளித்தற்கு ஏய்ந்த மாதவர் பற்பநாபர் இவர் அருளாளர்
திருவடி ஊன்றிய தேவப்பெருமாள் கைக்கொண்டு அருளும் திருமலை ஆழ்வார் பதங்கள் முன்பு என்னுள் சேர்ந்தனவே
–மா முனிகள் அருளிச் செய்தது)

இனி ஸ்ரீவைஷ்ண விஷயமாக த்ரிவித கரணங்களாலும்‌ அபராதம்‌ பண்ணாதொழிவான்‌. ப்ரஹ்ம ஹத்திக்கு சிகா யஜ்ஜோவீத தர விப்ர மாத்ரமே போருமாகையாலே பாகவதாபசாரத்துக்‌கும்‌ ரூப நாம தர வைஷ்ணவத்வ மாத்ரமே போரும்‌ -ப்ரஹ்மவிதக்‌ரேஸரை ப்ரபதந்நாதிகாரி விஷயாபாசாரம்‌ உடலும்‌ உயிரும்‌ பிரியும்‌படியாய்‌ ஸத்தாஹாநியாம்‌படி யாயுமிருக்கும்‌. *தஸ்ய ப்ரஹ்ம விதாகஸா [அந்த ப்ரஹ்ம ஜ்ஞாநியபசாரத்துக்கு] *ஸங்கே ப்ருஸம்‌ ப்ரஹ்ம விதோ வமாநாத்‌ [ப்ரஹ்ம ஜ்ஞானியை அவமதிப்பதாலே உண்டாயிற்றென்று சங்கை பண்ணுகிறேன்‌ ] என்றும்‌, *ஹந்தி ஸரோயம்ஸி ஸர்வாணி பும்ஸோ மஹ ததிக்ரம: [மஹான்களிடத்தில்‌ அபசாரமானது புருஷனுடைய ஸமஸ்த மங்களங்களையும்‌ நாசமடைவிக்கும்‌] என்றும்‌ இந்த பாகவதாபசார விஷயமாக
ஸ்ருதி ஸ்ம்ருதி தீஹாஸ புராணாதிகளிலே ப்ரமாண சதங்கள்‌ கோஷியா நின்றதிறே, *வையத் தேவரான இவர்கள்‌ பாத தூளி பட்டு இவ் வுலகம்‌ பூதமாம்‌ படி) *ஸ்ரீதரஸன் தொல்‌ புகழ் பாடி ஸவிலாஸ ஸஞ்சாரம்‌ பண்ணி வருமது கண்டு; *த்ரவந்தி தைத்யா:ப்ரணமந்தி தேவதா: [அசுரர்கள்‌ ஓடுகிறார்கள்‌, தேவர்கள்‌ வணங்குகிறார்கள்‌] என்றும்‌, *உன் தமர்க் கென்றும்‌ நமன் தமர்‌ கள்ளர்‌ போல்‌ (திருமொழி 8-10-7) என்றுஞ் சொல்லுகிறபடியே தூரே-இவர்களைக்‌ கண்ட மாத்திரத்தில்‌ க்ரூரரான அஸுர ராஷஸ யம படாதிசள்‌ காடேறி விழுந் தாடவும்‌, ஜ்ஞாநாதிகாரன தேவ ருஷி ஜாதியிலுள்ளார்‌ அஞ்ஜலித்து விரும்பி ஸேவிக்கும்‌ படியுமிறே இவர்கள்‌ வைபவமிருப்பது என்‌றருளினாரிறே

ஒருகால்‌ யதி ராஜ தாஸர்‌ பிள்ளை திருமாளிகைக்கு நம்பிள்ளை எமுந்தருளி அவருடைய ஸம்பத்தைக்‌ கண்டு உகந்தெழுந்தருளி யிருக்க ஸ்ரீபாதத்து முதலிகள்‌ ‘(இதுக்கடியென்‌?” என்று கேட்க,பிள்ளையும்‌, ‘த்ருஷ்டத்தில்‌ தனக்குண்டான ஸம்பத்தைத்‌ தனக்கே என்கை நரக ப்ராயம்‌; தனக்கும்‌ எம்பெருமானுக்கு மென்கை ஸ்வர்க்க ப்ராயம்‌; அவனுக்கும்‌ அவனடியாருக்கு மென்கை பரமபத ப்ராயம்‌” என்றருளினார்‌. ஆகையாலே தனக்குண்டான ஸம்பத்தைத்‌ ததீயருக்குமாக்கி நெய்யமரின்னடில்‌ நிச்சல்‌ பாலொடு (திரு வாய்‌ 8-8-2) என்கிற மாற்றிலி சோறிட்டுத்‌ திருமாலடியார்களைப்‌ பூசிக்கைக்கு அவ் வருகு பட்ட தொன்றுமில்லை யிறே என்று கருத்து-(கொடுக்கில் கள்வனாம் கொள்ளில் மிடியனாம் -கர்தவ்யம் இருவருக்கும் -இதனால் அது இல்லை)

இப்படி பிள்ளை *ஊரும்‌ நாடும்‌ உலகமுமெல்லாம்‌ கலி யிருள்‌ நீங்கிப்‌ பெரிய கிதயுகம்‌ பற்றிப்‌ பேரின்ப வெள்ளம்‌ பெருகும்படி எல்லாரையும்‌ திருத்தித்‌ திருமாலுக்கே யாக்கிச்‌ சிறிது காலம்‌ வாழ்ந்தருளி, திருமேனியிலே நோவு சாத்தி மிகவும்‌ அவஸந்நராய்‌ முதலிகளெல்லாரையும்‌ தண்டனிட்டு தீர்த்தங் கொண்டு, அமுது செய்யப் பண்ணி முதலிகள்‌ சேஷமும்‌ அங்கீ கரித்தருளி திருநாட்டுக்‌ கெழுந்தருளும் போது ஸ்ரீ பாதத்து முதலிகள்‌ ப்ரஹ்‌மவல்லி, சூழ்‌ விசும்பணிமுகில்‌ முதலாக ஸேவிக்க, கோயிலுக்கு நேரே நடுவில்‌ திருவீதிப் பிள்ளை பட்டர்‌ திருமடியிலே திருமுடியையும்‌ பின்பழகிய பெருமாள்‌ ஜீயர்‌ திருமடியிலே திருவடிகளையும்‌ வைத்துக்‌ கண்‌ வளர்ந் தருளி நஞ்சியர்‌ திருவடிகளை த்யாநித்துக்‌ கொண்டு ப்ரஹ்‌ம ரந்த்ரத்தாலே திருநாட்டுக் கெழுத்தருள; பெரியவாச்சான்‌ பிள்ளை, நடுவில்‌ திருவிதிப் பிளளை பட்டர்‌, வடக்குத் திருவீதிப்‌ பிள்ளை, பின்பழகிய பெருமாள்‌ ஜீயர்‌ முதலாக எல்லாரும்‌ கடலோசைப்‌ போலே பெரு மிடறு செய்து கூப்பிட்டுக் கொண்டு விழுந்து ஆசார்ய விரஹ அஸஹராய்‌ மோஹித்துக்‌ கிடந்து சதைர்‌ மோஹந்‌ தெளிந்து சோகாகுலராய்‌ கண்ணீர்‌ பெரு வெள்ள மிட்டுப்‌ பெருக பஹுதா ப்ரலாபித்துத்‌ தங்களிலே தேறி நின்று,பரியட்டம்‌ திருமாலை யுடனே பெருமாள்‌ பரிகர மனைத்தும்‌ வந்து ஸேவிக்க பிள்ளை குமாரர்‌ தூவியம் புள்ளைக்‌ கொண்டு ப்ரஹ்ம மேதத்தாலே ஸம்ஸ்கரித்துப்‌ பள்ளிப் படுத்தி யருளி ஸ்ரீ பாதத்து முதலிகளெல்லாரும்‌ திருமுடி விளக்குவித்துக்‌ கொள்ள;

நடுவில்‌ திருவீதிப்பிள்ளை பட்டரும்‌ திருமுடி விளக்க வைத்துக்‌ கொள்ள, அவருக்கு தேரே ப்ராதாவா யிருப்பாரொருவர்‌ (இவரே சர்வஞ்ஞா பட்டர் -வாக் விஜய பட்டர் இவரது தமையனார் -இருவரும் வேத வ்யாஸ பட்டரின் திருக் குமாரர்கள் )பட்டரைப்‌ பார்தது, திருக் கலி கன்‌றி தாஸர்‌ பரம பத ப்ராப்தி பண்ணினதுக்கு எங்கள்‌ கூர குலத்திலே பிறந்தவரொருவர்‌ தலை க்ஷவரம்‌ பண்ணுவித்துக்‌ கொண்டது அவத்யமன்றோ? கூர குலத்துக்‌கு இழுக்கன்றோ?” என்ன, பட்டரும்‌ அவரைப்‌ பார்த்து ‘ அப்படியா! ஐயோ உங்கள்‌ கூர குலத்துக்கிழுக்காய்ப்‌ பிறந்தேனே; இக்‌ குறையை நீர்‌ என்றைக்குத்‌ தீர்த்துக்‌ கொள்ளக் கடவீர்‌?’” என்று வ்யதிரேகம்‌ சொல்லிப்‌ போக விட, அவர்‌ இத்தைப்‌ பொறுக்க மாட்டாமல்‌ பெருமாள்‌ ஸன்னிதியிலே சென்று லிண்ணப்பஞ்‌ செய்ய அத்தைப்‌ பெருமாளும் கேட்டு பட்டரை யழைத்து வர விட்டு அர்ச்சக முகேந” தாமிருக்க நீரிப்படிச்‌ செய்யலாமோ?” என்ன, பட்டரும்‌, “பெரிய திருவோலக்த்திலே அடியேன்‌ செய்த முறை கேட்டைப்‌ பொறுத்தருள வேணும்‌” என்று தண்டனிட பெருமாளும்‌ ‘இதென்‌ நினைத்துச்‌ சொல்லுகிறபடி?” என்று கேட்டருள, இவரும்‌, ‘-பிள்ளையையும்‌ அடியேனையும்‌ பாராதே ஸர்வஜ்ஞரான தேவரீரிப்படிக்‌ கேட்டருளுவதே! நாயன்தே! நம்பிள்ளை திருநாட்டுக் கெழுந்தருளினால்‌ அவர்‌ திருவடிகளில் ஆச்ரயித்த நான்‌ ஆழ்வானுடைய சேஷத்வ, பாரதந்தர்யத்துக்குகத் தகுதியாக கூர குலத்திலே பிறந்த பின்‌ தாஸ்ய க்ருதயமான மோவாயும்‌ முன்கையும்‌ வபதம்‌ பண்ணுவித்துக்‌ கொள்ள வேண்டியிருக்க, அத்தைச்‌ செய்யாதே சிஷ்ய புத்ரர்களுடைய க்ருத்யமான தலை மாத்ரம்‌ ஷவரம்‌ பண்ணுவித்துக்‌ கொண்டதுக்கு தேவரீர்‌ முனிந்தருளக்‌ கூடுமோ?” என்று விண்ணப்பஞ்‌ செய்ய பெருமாளுமது கேட்டு இசைந்து ஸந்துஷ்டராய்‌ பட்டருக்கு தீர்த்தம்‌ திருமாலையுடனே பரியட்டமும்‌ ப்ரஸாதித்து உபலாளித்‌துத்‌ திருமாளிகை யேறப்‌ போக விட்டருளினார்‌. அதந்தரம்‌ பிள்ளைக்குப்‌ பெருக்கத்‌ திருவத்யயதம்‌ நடத்தி யருளினார்கள்‌.

லோகாசார்யன்‌ என்று திரு நாமம்‌ பெற்ற தன்னேற்றமும்‌-அரிய வருளிச்செயல்‌ பொருள்களறிந்துரைக்கப்‌ பெற்ற தன்னேற்றமும் – பரமபதம்‌ தம்‌ சிறுமுறிக்குச்‌ செல்லப் பெற்ற தன்னேற்‌றமும்‌ நம்பிள்ளைக்கன்றி மற்றொருவருக்கு மில்லையிறே.
இவர்‌ தனியன்‌,
வேதாந்த வேத்யாம்ருத வாரி ராஸோ : வேதார்த்த ஸாராம்ருத பூரமக்ர்யம்‌ |
ஆதாய வர்ஷந்தம் அஹம்‌ ப்ரபத்யே காருண்ய பூர்ணம்‌ கலி வைரி தாஸம்‌

[நஞ்சீயராகிய- அமுதக் கடலினிதும்‌ உயர்த்த வேதாந் தார்த்த சாரமாகிற அமுத வெள்ளத்தைக்‌ கொண்டு வர்ஷிக்குமவராய் கருணையால் நிறைந்துள்ள திருக்கலிகன்றி தாஸரை தஞ்சம் அடைகிறேன் –

நமாமி தெள மாதவ ஸிஷ்ய பாதெள யத் ஸந்நிதம்‌ ஸூக்தி மயம்‌ ப்ரவிஷ்டா: |
தத்ரைவ நித்ய ஸ்திதி மாத்ரி யந்தே வைகுண்ட ஸம்லார விமுக்த சித்தா: ॥

[யாதொரு நம்பிள்ளை யுடைய ஆழ்வாஸர் ஆசார்ய ஸ்ரீ ஸூக்திகளால் நிறைந்த ஸன்னிதியில்‌ அந்வயித்தவர்கள்‌ ஸ்ரீவைகுண்டத்திலும்‌ ஸம்ஸாரத்திலும்‌ செல்லாத மனத்தினராய்‌ அந்த ஸன்னிதி யிலேயே நிலையான இருப்பை ஆதரிக்கிறார்களோ அந்த மாதவ (நஞ்சீயர்‌) சிஷ்யரான நம்பிள்ளையின்‌ திருவடிகளை வணங்குகிறேன்‌]

வார்த்த உஞ்ச வ்ருத்த்யாபி யதீய கோஷ்ட்யாம்‌ கோஷ்ட் யந்தராணாம்‌ ப்ரதமா பவந்தி |
ஸ்ரீமத் கலி த்வம்ஸந தாஸகாம்கே தஸ்மை கஸ்‌ஸ ஒக்தி மஹார்ணவாய

[யாதொரு நம்பிள்ளையின்‌ கால க்ஷேப கோஷ்டியில்‌ பிறக்கும்‌ வார்த்தைகளில்‌ பிஷையாவது பெற்றவர்‌ (சிறிதாவது பெற்றால்‌ அது கொண்டு) இதர கோஷ்டிகளில்‌ தலைவர்களாக ஆகிறார்களோ அந்த ஸ்ரீஸூக்தி மஹார்ணவரான (ஆழ்வாராசார்ய வசனங்கள்‌ நிறைந்த பெருங்கடலான) திருக்கலிகன்றி தாஸர்‌ என்ற திருநாமமுடைய அந்த நம்பிள்ளையை வணங்குகிறேன்‌ ]

நெஞ்சத்திருந்து நிரந்தரமாக நிரயத் துய்க்கும்‌
வஞ்சக் குறும்பின்‌ வகை யறுத்தேன்‌ மாய வாதியர் தாம்‌
அஞ்சப் பிறந்தவன்‌ சீமாதவனடிக் கன்பு செய்யும்‌
தஞ்சத் தொருவன்‌ சரணாம் புயமென்‌ தலைக் கணிந்தே
-இயல்பா சாத்துமுறைப் பாடல்-

ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டரைப் பார்த்து உமக்கு ஆசார்ய விஷயத்தில்‌ க்ருஜ்ஞ்தை எத்தனை நாள்‌ நடக்கும்‌?” என்று கேட்க, பட்டரும்‌ “நம்பிள்ளை திருவடிகளில்‌ உபகார ஸ்ம்ருதி அடியேனுக்கு யாவதாத்‌மபாவி (ஆத்மாவுள்ளவரை–நித்யமாக) நடக்கும்‌ என்ன, அவரும்‌, ஆசார்ய விஷயத்தில்‌ உபகார ஸ்ம்ருதி யாவதாத்மபாவியோ! யாவதாத்ம பாவியோ!!” என்று ஈடுபட்டு திருவம்ச ப்ரபாவத்தாலே தெளிந்து பட்டர் திருவடிகளிலே ஆச்ரயித்து ஜ்ஞாநாதிகராய்‌ விட்டார்–

பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் வைபவம் –
அனந்தரம்‌ பிள்ளை ஸ்ரீபாதத்து முதலிகளைக்‌ கூட்டிக் கொண்டு பெரியவாச்சான் பிள்ளை தர்சதம்‌ நிர்வஹித்தருளா நிற்க, நடுவில்‌ திருவீதிப் பிள்ளை பட்டர்‌ பெரியவாச்சான்‌ பிள்ளையைப்‌ பார்த்தருளி, ”குரு பரம்பரையையும்‌ த்வயத்தையும்‌ உபதேசித்தவர்‌களோடு கேட்டவர்களோடு வாசியற ‘உத்தேச்யர்‌’ என்று ப்ரஸாதித்தீர்‌. பரம ஸாத்விகரான ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ உம்மை அநுவர்‌த்‌திக்கிறதற்கு என்‌ நினைந்திருப்பீர்‌?’” என்று கேட்டருள, ஆச்சான்‌ பிள்ளையும்‌, அடியேன்‌ அஹங்காரி யாகையலே(ஸாத்விக அஹங்காரம்) அடியேனுடைய அபிப்ராயத்தாலும்‌, ஸ்ரீவைஷ்ணவத்வம்‌ உண்டென்று நினைத்திருப்பன்‌, ஈச்வரன்‌ பெற்ற பிறவியாகையாலே ஸ்ரீவைஷ்ணவன்‌ என்று நினைத்திருக்கும்‌. (இனி இவர்கள்‌ என்‌ நினைத்‌திருக்கிறார்கள்‌?! என்று கூசிக் கொண்டிருக்கும்‌. இவர்கள்‌ என்னைக் கண்டு அநுவர்த்‌திக்கையாலே இவர்கள்‌ பக்ஷத்தாலும்‌ ஸ்ரீவைஷ்ணவத்வம்‌ உண்‌டென்றிருந்தது. ஆக, திரிவிதாபிப்ராயத்தாலும்‌ அடியேனுக்கு முப்புரி யூட்டின ஸ்ரீவைஷ்ணவத்வமுண்டென்று நினைத்திருப்பன்‌’ ”என்றருளினார்‌ ஆக, தரிவிதாபிப்ராயத்தாலும்‌ ஸ்வ வைஷ்ணவத்வம்‌ ஸித்தமாய்‌, ஸ்வ ஸ்லாக்யதா புத்தி ரஹிதமுமான புத்தி விசேஷம்‌ சொல்லப்பட்டது.

ஆச்சான் பிள்ளை கோஷ்டியிலே ஸ்ரீ வைஷ்ணவர்கள்‌ திரள விருந்து “நாம்‌ லீலைக்கு விஷயமோ? இரக்கத்துக்கு விஷயமோ?” என்று விண்ணப்பஞ் செய்ய, ‘உடன்பட்டிருந்தோமாகில்‌ லீலைக்கு விஷயமாகிறோம்‌” என்றருளிச்‌ செய்தார்‌. [ஆச்சான்‌ பிள்ளையும்‌ -அஸ்ப்ருஷ்ட அஹங்காரரான நித்யரும்‌, நிவ்ருத்த அஹங்கரரான் முக்தரும்‌ அவன்‌ இனிமைக்கு விஷயமாகிறார்கள்‌. அஹங்கார மமகார வச்யராய்‌ இருந்து வைத்து அக் குறையுங்‌ கூட அறிய மாட்டாத ஸம்ஸாரிகள்‌ லீலைக்கு விஷயமாகிறார்கள்‌- ஸதாசார்ய ப்ரஸாதமடியான பகவத் ப்ரஸாதத்தாலே அஹங்கார மமகாரம்‌ அறிய வேணுமென்றிருக்கிற நாம்‌ (முமுஷு)௮வன்‌ இரக்கத்துக்கு விஷயமாகிறோம்‌ என்றருளிச் செய்தார்‌]. ஆக, ஸர்‌வ சேதனரைரயும்‌,சர்‌வேஸ்வரன்‌ அஹம்‌ மமதா புத்தி முக்தி விரக்தி யாஸக்தி விசேஷத்‌தாலே ஸ்வ மாதுர்ய காருண்ய லீலா விஷயமாக்கி விநியோகிக்கும் என்றபடி –

ஆச்சான்‌ பிள்ளை கோஷ்டியிலே சிலர்‌ ஸ்ரீவைஷ்ணவர்கள்‌-எங்களுக்குத் தஞ்சமா யிருப்பதொரு வார்த்தை யருளிச் செய்ய வேணும்‌” என்ன, அவரும்‌, ‘*கலங்குகிறவனும்‌, கலக்குகிறதும்‌, கலங்கிக் கிடக்கிறவர்களும்‌, தெளிவிக்கறவனும்‌ தெளிகிறவனும்‌ தெளிந்திருப்பவனுமாயிறே இருப்பது. இதில்‌ கலங்குகிறவன்‌-ஜீவாத்மா; கலக்குகிறது–அசித்து; கலங்கி இருப்பர்கள்‌–ஸம்ஸாரிகள்‌; தெளிவிக்கிறான்‌–ஆசாரியன்‌; தெளிகிறான்‌ சேதனன்‌; தெளிந்திருக்கிறான்‌–ஈச்வரன்‌, ஆகையாலே ஆசார்‌யோபதேசேந தெளிந்தவன்‌ கலங்குகிற தன்னையும்‌ கலக்குகிற ப்ரக்ருதியையும்‌ கலங்கிக் கிடக்கிற ஸம்ஸாரிகளையும்‌ தஞ்சமன்‌றென்று கை விட்டு, தெளிவிக்கிற ஆசார்யனையும்‌ தெளிந்திருக்கும்‌ ஈஸ்வரனையும்‌ பற்றுகை காண்‌ இவ் வாத்மாவுக்கு ஸ்வரூபம்‌” என்‌றருளிச் செய்தாராயிற்று.

ஆச்சான்‌ பிள்ளையை ஒரு ஸ்ரீவைஷ்ணவர்‌ ”ஸ்வரூப பாரதந்தர்‌யமிருக்கும்படி. என்‌” என்று கேட்க, அவர்‌ அருளிச் செய்தபடி– *ஸ்வ சக்தி நிவ்ருத்தி பூர்வகமாக ஸர்வ சக்தியை அண்டை கொண்டு
உபாயத்தில்‌ கந்தலற்று உபேயத்தில்‌ த்வரை விஞ்சி யிருக்கை காண்‌ பாரதந்தர்ய ஜ்ஞாநம்‌’”
என்றருளினார்‌. இத்தால்‌ நிவ்ருத்தி ப்ரேரகத்தோடு ப்ரவ்ருத்தி ப்ரேரகத்தோடு வாசியற பராதீனான ‘ இவ்வதிகாரிக்கு எல்லாம்‌ பர ப்ரேரிதமா மத்தனை யிறே.

(த்ரவ்ய குண கர்மம் -கமனம் செய்யும் கிரியையுடன் கூடியவன் –தியாகம் கிரியையுடன் கூடியவனாகி இருக்கும் கர்த்தா -பரித்யஜ்யம் -கிரியை வந்தாலே கர்த்ருத்வம் வருமே -மூன்று வித த்யாயகமும் வேண்டுமே –விடுவித்து பற்றுமவனே உபாயம் -செய்விக்கிறான் உணர்வே பாரதந்தர்யம்-மாஸூச -சோகப்படவும் கூடாதே –நின்றனர் இருந்தனர் கிடந்தனர் –நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் -இத்யாதி பிரவிருத்தியும் நிவ்ருத்தியும் அவன் ப்ரவர்த்திக்கவே நடக்கும் -)

ஆச்சான்‌ பிள்ளையை ஒரு ஸ்ரீவைஷ்ணவர்‌ “ஸ்வரூபா நுரூபமான ப்ராப்யமோ? ப்ராப்யாநுபமான ஸ்வரூபமோ?”’ என்று கேட்க, அவரும்‌ ‘*முமுஷு தசையில்‌ ஸ்வரூபாநுரூபமான ப்ராப்யம்‌; முக்த தசையில்‌ ப்ராப்யாநுரூமாயிருக்கம்‌ ஸ்வரூபம்‌” என்றருளிச் செய்தார்‌.

(போகத்திலே தட்ட மாறும் சீலம் காட்கரையிலே கரை அழிக்கும் -)

நாட்டிலிருத்து பெருமாளை ஸேவித்திருப்பார்‌ இரண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ அந்யோந்யம்‌ விஸ்லேஷ பீருக்களாய்ப்‌ போருகிறவர்கள்‌ ஒரு கால்‌ ராக த்வேஷம்‌ கொண்டாடி, அதிலொருவர்‌ ஆச்சான் பிள்ளை ஸ்ரீபாதத் தேறச்‌ சென்று மற்றவருடைய குற்றம்‌ விண்ணப்பஞ்செய்ய; அருகிருந்த முதலிகளிலே சிலர்‌, “இப்படி சொல்லலாமோ?” என்று விண்ணப்பஞ்‌ செய்ய, ஆச்சான்‌ பிள்ளையும்‌, “அவர்கள்‌ சொல்லுகிறபடி கேளீர்‌: தண்ட தரனான யமன்‌“பரிஹர:’ (ஸ்ரீ வி.பு. 8-2-13; மதுசூதனனனடியார்களிடம்‌
போகாதீர்கள்‌ என்று தனதாட்களிடம்‌ என்றான்‌. **ந கஸ்சிந் நாபாரத்யதி” [ஸ்ரீரா-யு-44-மன்னிப்பதே பெரியோர்‌ பணி-௨லகில்‌ யார் தான்‌ குற்றம்‌ செய்தவரில்லை- என்றாள்‌ பிராட்டி; ஈஸ்வரன்‌ -செய்தாரேல்‌ நன்று செய்தார்‌ [அடியார்கள் குற்றம் செய்தாராகில்‌ அது நற்றமே-பெரியா..திரு. 4-6-1. என்றான்‌. ஆழ்வார்கள்‌, அவன்‌ தமர் ! எவ்வினையராகிலும்‌ எங் கோனன்‌ தமரே–(முதல்திரு, 35)என்றார்கள்‌. இப்படி யிருக்க, ”அவர்‌ குற்றம்‌ இவரை யொழியச்‌ சொல்லுவார்‌ யார்‌?” என்றருளினார்‌.
இத்தால்‌ சக்‌திமான்களுமுட்பட ததீய தோஷம்‌ சொல்லக் கூசுவர்கள்‌ என்றபடி,

ஆச்சான் பிள்ளை பாகவத வைபவம்‌ அருளிச் செய்யா நிற்கச்‌ செய்தே ஒருவர்‌ பகவத் வைபவஞ்‌ சொல்ல,-விசேஷஞ் சொல்லுகிற விடத்தே இது ஸாமாந்யம்‌” என்றருளிச்‌ செய்தார்‌. இத்தால்‌ பாகவத வைபவத்தை நிறுத்தி பகவத் வைபவம்‌ சொல்லுகை அனுப யுக்தமென்றபடி. (நாவ காரியம் பாசுர வியாக்யானங்களில் -இது போல் பல ஐதிஹ்யங்கள் உண்டு)

ஆச்சான்‌ பிள்ளை சிறிய தாயார்‌ பெரிய பிள்ளையும்‌ ஆச்சான் பிள்ளையை ஸேவித்துப்‌ போருகிற காலத்திலே,இவர்‌ சோகார்த்தராக, ஆச்சான்‌ பிள்ளை ‘*நீர்‌ சோகிக்கிற தென்‌?’। என்ன, அவரும்‌, :’அநாதிகால பாப வாஸனா பலாத்கார வசத்தாலே ஐந்மாதிகளிலே ஈஸ்வரன்‌ என்னை இன்னம்‌ தள்ளப்‌ போகிறானோ?” என்று பயப்படா நின்றேன்‌” என்ன, மேலருளிச் செய்த வார்த்தை: ”இது ஆர்‌ கேடு? என்‌றிருந்தாய்‌, உனக்கு ஸ்ருஷ்டிக்க வேணுமோ? அவதரிக்க வேணுமோ? பிறப்பில்‌ பல்‌ பிறவிப் பெருமான்‌ (திருவாய்‌, 2-9-5) என்றும் , *பொருளென்றிவ்‌ வுலகம்‌ படைத்தவன்‌ (திருவாய்‌, 2-10-11) என்றும்‌, *ஸம்பவாமி யுகே. யுகே” (கீதை 4-8) என்றும்‌ ஒருவனைப்‌ பிடிக்க நினைத்து ஊரை வளைப்பாரைப் போல்‌ அகில ஜகத் ஸ்வாமி யாய்த்து அஸ்மத்‌ ஸ்வாமியாகைக் கன்றோ?” என்‌றருளினார்‌. “ஆகையால்‌ ஈச்வரனுக்கு ஒரு சேதனனைப்‌ பெறுகை அலப்ய லாபம்‌ என்றும்‌, எதிர் சூழல்‌ புக்குத்‌ தேடித் திரியுவன் தானே, “பேறும்‌ இழவும்‌ தன்னது” என்று ரக்ஷிக்குமென்று நிர்ப் பரராயிரும்‌”-என்றபடி-

அநந்தரம்‌ பெரியாழ்வார்‌ திருமொழி தொடக்கமான ஆழ்வார்களருளிச்‌ செயல்களுக்கெல்லாம்‌ வ்யாக்யாநம்‌ செய்து லோகத்தை வாழ்வித்தருளினார்‌, இத்தை நினைத்திறே –பெரிய வாச்சான் பிள்ளை பின்‌புள்ள வைக்கும்‌ தெரிய வியாக்கி யானங்கள் செய்வால்‌ அரிய அருளிச் செயற் பொருளை ஆரியர்கட்கு இப்போது அருளிச்‌ செயல் ஆய்த்து அறிந்து (உபேதே ரத்‌-46) என்று உபதேச ரத்தின மாலையிலே ஜீயர்‌ அருளிச் செய்ததும்‌, பின்னையும் ரஹஸ்ய த்ரய விவரணம்‌, தத்வ த்ரய நிர்ணயம்‌ முதலான அநேக ரஹஸ்ய மருளிச்‌ செய்தருளினார்‌.

ஒருநாள்‌ பிள்ளை யுடைய ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்திருந்த வாதி கேஸரி கார்‌ஹஸ்த் யாஸ்ரம நிஷ்டராயிருக்கும் போது சாஸ்த்ர பரிசிலனை பண்ணுகிறவர்‌களைக் கண்டு ”படிக்கிறதென்‌?” என்று கேட்க அவர்களும்‌ “இவர்க்கு அஷராப்யாஸ மில்லை’ என்று அறிந்து ‘“முஸலகிஸலயம்‌ (உலக்கைக் கொழுந்து -உலக்கை துளிர்க்காதது போல் உமக்கு ஞானம் வராது )படிக்கிறோம்‌” என்று பரிஹசித்தொரு வார்த்தை சொல்ல, இவரும்‌ அத்தை யறியாதே.-இப்படி யொன்றுண்டோ என்று திகைத்து, அத்தை ஸ்வாசார்யரான பெரிய வாச்சான்‌ பின்ளைக்கு விண்ணப்பம்‌ செய்ய, அவரும்‌ மந்தஸ்மிதம்‌ செய்து, அவர்கள்‌ உமக்கு அக்ஷராப்யாஸ மில்லாமையாலே ”கழுக்காணி துளிர்க்குமோ? உமக்கத்தைக் கொண்டு காரியமென்‌?” என்று பரிஹஸித்து விட்டார்கள்‌’ என்றருளிச் செய்ய இவருமத்தைக்‌ கேட்டு லஜ்ஜாவிஷ்டராய்‌, சலம்‌ பிறந்து, திருவடிகளிலே விழுந்து, “அடியேனை வித்வானாகும்படி கடாக்ஷித்தருள வேணும்‌’” என்று ப்ரார்த்திக்க-அபய ப்ரத ராஜர்‌ (கவலைப்படாதீர் என்று உகந்து அருளிச் செய்ததால் இந்த திருநாம பிரயோகம் )உகந்து முப்பத்திரண்டு திரு நஷரத்திலே அக்ஷர சிஷைகளும்‌ பண்ணுவித்து காவ்ய நாடலங்கார சப்த தர்க்க பூர்வோத்தர மீமாம்ஸாதி ஸகல ஸாஸ்த்ர வித்தராம்படி சிஷித்தருள; இவரும்‌ அவர் கடாஷத்தாலே வித்வ ஜ்ஞாநாக்ர கண்யராய்‌ “’முஸல கிஸலயம்‌” என்று ஒரு காவ்யமிட்டு அவர்கள் கையிலே கொடுத்து வாய் மூடித் தலை யிறக்கிட்டு லஜ்ஜா விஷ்டராம்படி, பண்ணி யருளி, மஹா விரக்தாய்‌ ஆஸ்ரம ஸ்‌வீகாரம்‌ செய்து, பரவாதிகளை ஜெயித்து மிகவும்‌ சாஸ்த்ர நிபுணரா யிருக்கையாலே வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர்‌ என்று ப்ரஸித்தரான இவர்‌ பூர்வர்கள்‌ செய்தருளிய திருவாய்மொழி வ்யாக்யானங்களை யெல்லாம்‌ திருக் கண் சாத்தி அவைகளிலே ஸார தமமான அர்த்த விசேஷங்களை ஸங்க்ரஹித்து எவர்க்கும்‌ ஸுக்ரஹமாகவும்‌ ஸூ வ்யக்தமாகவும்‌ தெரியும்படி திருவாய் மொழிக்கு த்வாதச ஸ்கந்த யுக்தமான ஸ்ரீபாகவத ப்ரக்ரியையயாலே பன்னீராயிரம்‌ உரை செய்தருளினார்‌. ஜீயரும்‌ உபதேசரத்தின மாலையில்‌ *அன்போடழகிய மணவாளச் சீயர்‌ என்று தொடங்கி–ஏதமில்‌ பன்னீராயிரம்‌ (45) என்றித்தையு மருளிச்‌ செய்தார் இறே -பின்னையும்‌ தீப ப்ரகாசம் ‘ தத்வ நிரூபணம்‌ முதலான அனேக ரஹஸ்ய க்ரந்தங்களையும்‌ அருளிச்‌ செய்து உபகரித்தருளினார்‌,

ஆச்சான் பிள்ளை குமாரர்‌ நாயனாராச்சான் பிள்ளையும்‌ தீபாதுத்‌பந்ந ப்ரதீபம் போலே தர்சநம்‌ நிர்‌வஹித்துக்‌ கொண்டு போர மதிப்புடையராய்‌ ஸகல வித்யாபாரங்கதர்‌’‘ என்கிற விருதை
யுடையவராய்‌, :*ஸ்ரீரங்கராஜ தீக்ஷிதர்‌” என்று பெளண்டரீக யாகம்‌ செய்து ப்ரஸித்தராய்‌, தத்வ ஸங்க்ரஹம்‌, முக்த போகா வலீ: ஜ்நார்ணவம்‌, ஸாரீரம்‌ முதலான அனேக ரஹஸ்ய க்ரந்தங்களிட்டு உபகரித்தருளினார்‌ .

பெரிய வாச்சான்‌ பிள்ளை திரு நஷத்ரம் -ரோஹிணி -இவர் தனியன் –
ஸ்ரீ மத் க்ரூஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுந ஸூந வே !-
யத் கடாஷண லக்ஷ்யாணாம்‌ ஸுலபஸ் ஸ்ரீதரஸ் ஸதா ॥

யாவரொருடைய திவ்ய கடாஷத்துக்கு விஷய பூதரானவருக்கு ஸ்ரீய: பதியான ஸர்வேஸ்வரன்‌ எப்போதும்‌ ஸுலபனாயிருக்‌கிறானோ, யாமுனர்‌ குமாரராய்‌, ஸ்ரீமானான க்ருஷ்ணர்‌ என்கிற
திரு நாமத்தை யுடையரான அந்தப்‌ பெரியவாச்சான்‌ பிள்ளையை வணங்குகிறேன்‌-

நாயனாராச்சான் பிள்ளை திருநஷத்ரம்‌ சித்திரை-(சிலர் ஆவணி ரோஹிணி என்பர் ), இவர் தனியன்‌–
ஸ்ருத் யர்த்த ஸார ஜாநகம்‌ ஸ்ம்ருதி பால மித்ரம்‌ பத்மோல்லஸத்‌ பகவதங்க்ரி புராண பந்தும்‌ |
ஜ்ஞாநாதி ராஜம் அபய ப்ரத ராஜ புத்ரம்‌ அஸ்மத் குரும்‌ பரம காருணிகம்‌ நமாமி ॥

வேதங்களின்‌ ஸாரார்த்தங்களை ப்ரதி பாதிப்பவராய்‌ ஸ்ம்ருதி களுக்கு பால மித்ரராய்‌ தாமரை போல்‌ ப்ரகாசிக்கும்‌ பகவச்‌ சரணங்களுக்குப்‌ புராதந பந்துவாய்‌, ஜாஞாந ஸாம்ராஜ்யத்தின்‌ அரசராய்‌ அபய ப்ரத ராஜரான பெரிய வாச்சான் பிள்ளையின்‌ குமாரராய்ப்‌ பரம காருணிகராய்‌ அஸ்மதாசார்யரான நாயனாராச்சான்‌ பிள்ளையை வணங்குகிறேன்‌ –

வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர்‌ திரு நக்ஷத்ரம்‌ மகம்‌-(ஆனி ஸ்வாதி என்பர் சிலர் –ப்ரஹ்ம தேசம் மன்னர் கோயிலிலே அவதரித்தவர் -குலசேகரப் பெருமாள் திருவரசு இருக்கும் தேசம் )-இவர்‌ தனியன்‌– ்‌
ஸுந்தர ஜாமாத்ரு முநே: ப்ரபத்யே சரணாம் புஜம்‌ |ஸம்ஸாரார்ணவ ஸம்மக்ந ஜந்து ஸந்தார போதகம்‌ ।
அஸ்மத் வித பரித்ராண ப்ரேமே ப்ரத்ராண மாஸநம்‌ | வாதி கேஸரிணம்‌ வந்தே ரம்ய ஜாமாதரம்‌ முநிம்‌ ॥

ஸம்ஸாரமாகிற ஸமுத்ரத்திலே மிக அழுந்திக் கிடக்கும்‌ ஜீவர்‌களை உத்தரிப்பதற்கு ஓடமான (வாதி கேஸரி) அழகிய மணவாள ஜீயருடைய திருவடித்‌ தாமரைகளை ஆஸ்ரயிக்கிறேன்‌. (அஸ்மதாதிகளை ரக்ஷிப்பதில்‌) ப்ரீதியினல்‌ நிறைந்த மனதை யுடையரரன வாதி கேஸரியான அழகிய மணவாள ஜீயரை வணங்குகிறேன்‌.]

ஸ்ரீ ஈ யுண்ணி மாதவப் பெருமால் வைபவம்‌-(ஈ உண்ணி -ஈந்த பின்பே உண்ணுபவர்கள் வாழ்ந்த தேசம் )
நம் பிள்ளை பக்கல்‌ ஈடு முப்பத்தாறாயிரமும்‌ பெற்ற ஈயுண்ணி மாதவப்‌ பெருமாள்‌ தம் குமாரரான ஸ்ரீபத்மநாபப் பெருமாளுக்கு ஈடு முப்பத்தாறாயிரமும்‌ பின்னும்‌ வேண்டும்‌ ரஹஸ்யார்த்தங்களை யெல்லாம்‌ ப்ரஸாதித்து தர்சன ப்ரவர்‌த்தகர் ஆக்கி அருளினார்‌.ஸ்ரீபத்ம நாபப்‌ பெருமாளும்‌ தமக்கு அந்தரங்க சிஷ்யராய்‌, கோல வராஹ நாயனார்‌ என்ற திருநாமமுடைய நாலூர்‌ பிள்ளைக்குத்‌ தம்‌ பைத்ருக தநமான ஈடு முப்பத்தாறாயிரமும்‌ பின்னும்‌ வேண்டின தர்‌ஸநார்த்தங்களெல்லாம்‌ ப்ரஸாதித் தருளினார்‌. நாலூர்‌ பிள்ளையும்‌ தம்‌ தல்ல மகனாரான நாலூராச்சான்‌ பிள்ளைக்கு ஸ்வாசார்‌யரான பத்ம நாபப் பெருமாள்‌ ப்ரஸாதித்த ஈடு முதலான அகிலார்த்‌தங்களையும்‌ ப்ரஸாதித்து தர்ஸந ப்ரவர்த்தகராம்படி கடாக்ஷித்‌ தருளினார்‌. நாலுராச்சான்‌ பிள்ளையும்‌ மணவாள மா முனிகளுக்கு நேரே ஆசார்யரான திருவாய்மொழிப் பிள்ளைக்கும்‌, திரு நாராயண புரத் தாயிக்கும்‌ -திருவாய்‌ மொழி யாச்சான்‌ பிள்ளைக்கும்‌ திருவாய் மொழியை ப்ரஸாதித்தருளினார்‌ என்னுமத்தை *ஆங்கவர் பால் பெற்ற சிறியாழ்வா னப்பிள்ளை தாம் கொடுத்தார்‌ தம்‌ மகனார்‌ தங்கையில்‌, பாங்குடனே நாலூர்ப் பிள்ளைக்கவர் தாம்‌ நல்ல மகனார்க் கவர் தாம்‌ மேலோர்‌க்‌கு ஈந்தாரவரே மிக்கு என்று உபதேசரத்ந மாலையிலே (49) ஜீயர்‌ தாமே தெளிய வருளிச்‌ செய்தாரிறே –

ஈ யுண்ணி மாதவப் பெருமாள்‌ திரு நஷத்ரம்‌ ஹஸ்தம்‌.(சிலர் கார்த்திகை பரணி என்பர் ) இவர்‌ தனியன்‌–
வரதார்ய க்ருபா பாத்ரம்‌ ஸ்ரீமாதவ குரும்‌ பஜே |
குருகாதீஸ வேதாந்த ஸேவோந் மீலித வேதநம்‌ ॥

நம்மாழ்வார்‌ அருளிச் செய்த த்ரமிடோபநிஷத்தான திருவாய்மொழி கால க்ஷேபத்தால்‌ தெளித்த ஜ்ஞானமுடையவராய்‌ வரதார்யரென்ற நம்பிள்ளையின்‌ தயைக்கு கொள்கலமான்‌ ஈ யுண்ணிமாதவப்‌ பெருமாளை வணங்கிப்‌ போற்றுகிறேன்‌-

பத்ம நாபப்‌ பெருமாள்‌ திரு நக்ஷத்ரம்‌ ஸ்வாதி– இவர்‌ தனியன்‌–
யேந அவகாஹ்ய விமலோஸ்மி ஸடாரி ஸூநோர்‌-வாணீ கணார்த்த பரிபோத ஸுதாபகாயாம்‌ |
ஸ்ரீமந் முகுந்த சரணாப்ஜ மது வ்ரதாய ஸ்ரீபம் மகாப குரவே நம ஆசராம : ॥

யார் ஓருவரால்‌ நம்மாழ்வாருடைய ஸ்ரீஸக்தி ஸமூஹத்‌திலுண்டான அர்த்த விசேஷங்களின்‌ தெளிவான அறிவாகிற அமுதக் கடலில்‌ ௮மிழ்‌ந்து தூய மனதினனாய் ஆகிறேனோ ஸ்ரீ யபதியான முகுந்தனின் திருவடிகளில் வண்டு போல்வரான அந்தப் பத்மநாபப் பெருமாள் பொருட்டு நமஸ்காரத்தைப்‌ பண்ணக் கடவோம்‌-

நாலூர் பிள்ளை திரு நக்ஷத்ரம்‌ புஷ்யம்‌, இவர்‌ தனியன்‌…
ஸ்ரீ பத்ம நாப குருத: ஸடஜிக்‌ முநீந்தர ஸ்ரீ ஸூக்தி பாஷ்ப மதிகம்ய ஸம்ருத்த போத: [ தந் தேவ ராஜ குரவே ஹ்யதி ஸச் சதுஷ் பூர்வாஸேத்த கோல வர தேஸிக மாஸ்ரயே தம்‌ ॥

ஸ்ரீ பத்ம நாபப்‌ பெருமாளிடமிருந்து நம்மாழ்வாருடைய ஸ்ரீ ஸூக்திகளின் பாஷ்யமான -விளக்கமான – ஈட்டை அதிகரித்‌து நிறைவான ஜ்ஞான முடையரான யாவரொருவர்‌ அந்த ஈட்டை நாலூராச்சான்‌ பிள்ளைக்கு ப்ரஸாதித்தாரோ , அந்த–நாலூரில்‌ வாஸத்தால்‌ ப்ரசாசிக்கிற கோல வர குருவை சரணம்‌ பற்றுகிறேன்‌-(மேல்பாடாகம் -காஞ்சி அருகில் இருக்கும் நாலூர்)

நாலுராச்சான்‌ பிள்ளை-மார்கழி பரணி திரு நக்ஷத்ரம் – தனியன்‌
நமோஸ்து தேவ ராஜாய சதுர்க்ராம நிவாஸிநே | ராமாநுஜார்ய தாஸஸ்ய ஸூதாய குண ஸாலிநே 1

ஸ்ரீராமாநுஜ தாஸரென்னும்‌ நாலூர்‌ பிள்ளையின் குமாரராய்‌ குண பூர்ணராம்‌ நாலூரில்‌ வாஸம்‌ பண்ணுமவரான தேவ ராஜர்‌ என்னும்‌ நாலூர் ஆச்சான்‌ பிள்ளையை நமஸ்கரிக்கிறேன்‌-

கோலாதிபாத்‌ பிது வாரப்ப ஸஹஸ்ர கிதேர் பாஷ்பம்‌ ஹி பூர்தந .. தேஸிக வர்ய குப்தம்‌ |
த்ரேதா ப்ரவர்த்ப புவிய: ப்ரதயாஞ்சகார ஸ்ரீ தேவ ராஐ குருவர்யமஹம்‌ பஜே தம்‌

யாவரொருவர்‌ பூர்வர்களான ஆரியர்களால்‌ ரஹஸ்ய மாகக்‌ காக்கப்பட்டிருந்த திருவாய்மொழியின்‌ வ்யாக்யாநமான ஈட்டை, தந்தையான கோலாதிபரேன்னும்‌ நாலூர்ப் பிள்ளை யிடத்தில்‌ நின்றும்‌ பெற்று மூவர்‌ மூலமாய் வெளிப்படுத்தி உலகத்தில்‌ ப்ரஸித்தி யடையப்‌ பண்ணினாரோ அந்த பரமாசாரியரான தேவ ராஜரை (நாலூரச்சான்‌ பிள்ளையை), நான்‌ போற்றி வணங்குகிறேன்‌ –

ஸ்ரீ சைல நாத குரு மாத்ருகுகணாருத்த மசப்யாந் ஸ்ரீஸூக்தி தேசிக வரேண ச யஸ் த்ரிதைவம்‌–
ங்யத்தஸ் ஸடாரி க்ருதி பாஷ்ய ஸூஸம் ப்ரதாயோ விஸ்தார மேதி லஹி வைஷ்ணவா . ॥

எந்த திருவாய்மொழியின்‌ பாஷ்யமான ஈட்டின்‌ ஸத் ஸம்ப்ரயமானது திரு வாய் மொழிப்பிள்ளை என்ன-திரு நாராயணத்தாய் என்ன–இந்த சிறந்த ஆச்சார்யர்களாலும் திருவாய் மொழி ஆச்சானாலும் மும்முகமாய் ப்ரகாசமாயிற்றோ அந்த ஸத் ஸம் பிரதாயம் தான் ஸ்ரீ வைஷ்ணவ பெரியார்கள் இடையே விஸ்தாரமாயிற்று

வடக்குத் திருவீதிப் பிள்ளை வைபவம் –
அநந்தரம்‌ வடக்குத் திருவீதிப் பிள்ளை தர்சநம்‌ நிர்வஹித்தருளுகிற காலத்தில்‌ ஸ்ரீபாதத்து முதலிகள்‌ –ஆத்ம ஸ்வருபமிருக்கும்‌ படியென்‌?’” என்று விண்ணபஞ்செய்ய, அவரும்‌, –அஹங்காரமாகிற ஆர்ப்பைத் துடைத்தால்‌ ஆத்மாவுக்கு அழியாத பெயர் அடியான்‌” என்றிறே” என்றருளினார்‌. இத்தால்‌ ‘ஈஸ்வரோஹம்‌-என்கிற அஹங்காரம்‌ பற்றற்றால்‌ ஆத்மாவுக்கு தாஸோஹம்‌ என்கிற சேஷத்வமே நிலை நின்ற அந்தரங்க நிரூபகம்‌ என்ற படி-பாகவத சேஷத்வ விதுரமான பகவச் சேஷத்வமும்‌ தேஹாத்மாபிமானம் போலே பொல்லாததா யிருக்கையாலே, –அடியாரடியார்‌ தம்மடியாரடியார்‌ தமக்கடியாரடியார்‌ தம்மடியாரடியோங்களே (திருவாய்‌, 3-7-10) என்றிருக்க வேணுமென்‌றருளியும்‌, எல்லா வேதங்களையும்‌ எல்லா சாஸ்த்ரங்களையும்‌ எல்லா ஆழ்வார்கள்‌ பாசுரங்களையும்‌ எல்லா ஆசார்யர்கள்‌ வசநங்களையும்‌ ஆராயந்து பார்‌த்த விடத்தில்‌ ஒரு ஸ்ரீவைஷ்ண வனுக்கு நிலை நின்ற ஆசார்யாபிமானமொழிய மோஷோபாயமில்லை; நிலை நின்ற பாகவதபசாரமொழிய மோக்ஷ விரோதி யில்லையிறே. ‘*ஸ்வ ஸத்தையில்‌ நித்யத்‌வமும்‌ நிலை நின்ற பாகவதாபசார முண்டாமளவத்தனை யன்றோ ” என்று பிள்ளை பலகாலுமருளிச் செய்யக்‌ கேட்டிருக்கை யாயிருக்கும்‌” என்று வடக்குத் திருவீதிப் பிள்ளை தம்‌ ஸ்ரீபாதத்து முதலிகளுக் கருளினார்‌. இத்தால்‌, ஆசார்யாபிமானம்‌ நிலை நிற்கையாவது- கேட்ட அர்த்தத்தின்படி அநுஷ்டானமும்‌ கைபுகுரப் பெற்று தத் விஷயமே ப்ராப்ய ப்ராபகங்களென்றும்‌, தத் விஷயத்தில மஹாவிச்வாஸத்துடனிருக்கை. பாகவதாபசாரம்‌ :நிலை நிற்கையாவது-தீரக் கழியப் பண்ணியும்‌ நிரநுதாபமான பாகவதாபசாரம்‌ ஸ்வ ஸத்தையை விளக்குப்‌ பிணம் படுத்தி தக்த படமாக்கி உயிர்‌ மாட்டல்‌ செய்து நஸிப்பிக்கு மென்றபடி

இப்படி ஸர்வரையும்‌ உஜ்ஜீவிப்பித்துக் கொண்டிருக்கற இவர்‌ தம்‌ குமாரரான பிள்ளை லோகாசார்யரையும்‌, அவர்‌ திருத் தம்பியாரான அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனாரையும்‌ தர்சந ப்ரவர்த்தகராம்படி நன்றாகத் திருத்தி யருளி சில நாளைக்குப்‌ பின்பு பிள்ளை திருவடிகளை த்யாநித்துக் கொண்டு திருதாட்டுக் கெழுந் தருளினார்‌ . பிள்ளை லோகாசாரியரும்‌, உபய ஸம்பந்தமுடைய விலஷண விஷயத்தை இழந்தோமே” என்று பெருக்க வ்யாகுலப்‌பட்டு க்லேஸித்துத்‌ தம்மிலே தேறி நின்று பிள்ளைக்கு ப்ரஹ்மமேதத்‌தாலே சரம கைங்கர்யம்‌ செய்து பள்ளிப் படுத்தி அவப்ருதம்‌ கொண்டாடிப்‌ பெருக்கத்‌ திருவத்யயனமும்‌ நடத்தி யருளினார்‌.

வடக்குத் திருவீதிப் பிள்ளை திரு நஷத்ரம்‌ ஸ்வாதி–இவர்‌ தனியன்‌- –
ஸ்ரீ க்ருஷ்ண பாத பாதாப்ஜே நமாமி ஸிரஸா ஸதா |
யத் ப்ரஸாத ப்ரபாவேந ஸர்‌வ ஸித்திர பூந்‌ மம ॥

யாவரொருவருடைய அநுக்ரஹாதிசயத்தினுல்‌ எனக்கு ஸமஸ்த புருஷார்‌த்த ஸித்தியும்‌ உண்டாயிற்றோ அந்த ஸ்ரீக்ருஷ்ணரான வடக்குத்‌ திருவீதிப்‌ பிள்ளையின்‌ திருவடித்‌ தாமரைகளை எப்போதும்‌ தலையால்‌ வணங்குகிறேன்‌-

பிள்ளை லோகாசார்யர் வைபவம்
அநந்தரம்‌ நம்மாழ்வார்‌ திருவவதார மென்னலாம்‌படியான வைபவமுடையவராய்‌ நம்பிள்ளை யுடைய அநுக்ரஹத்தாலே அவதார விசேஷமாய்த்‌ திருவவதரித்‌திருந்துள்ள பிள்ளை லோகாசார்யரும்‌, அவருடைய அருளே தாரகமாய்‌ வளர்ந்த அவர்‌ திருத் தம்பியாரான அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனாரும்‌ பால்யாத்‌ ப்ரப்ருதி ஸுஸ்நிக்தராய்‌ இணைத்‌ தொட்டிலிட்டு வளர்ந்த இளைய பெருமாளையும்‌ பெருமாளையும்‌ போலவும்‌ பல தேவன் என்னும்‌ தன்னம்பியோடப்‌ பின்‌ கூடச் செல்வான்‌ (பெரியாழ்வார்‌ திரு- 1-8-5) என்கிற நம்பி மூத்த பிரானையும்‌ கிருஷ்ணனையும்‌ போலவும்‌,

தம்பியுடன்‌ தாசரதி யானுனுஞ்‌ சங்க வண்ண
நம்பயுடன்‌ பின்னடந்து வந்தானும்‌ –பொங்கு புனல்‌
ஒங்கு முடும்பை உலகாரியனும்‌ அறந்
தாங்கு மணவாளனுமே தான்‌

என்னும்‌படி ஸெளப்ராத்ருத்வத்தை யுடையரான இவர்களிலே பிள்ளை லோகாசார்யர்‌ தம்‌ பரம க்ருபையாலே பெண்ணும்‌ பேதையும்‌ அத்கரித்து. உஜ்ஜீவிக்கலாம்படி தனி ப்ரணவம்‌, தனி த்வ்யம்‌ தனி சரமம்‌, பரந்தபடி, ஸ்ரீய:பதிப்படி, யாத்ருச்சிகப்படி, முமுஷுப்படி, ஸம்ஸார ஸாம்ராஜ்யம்‌, ஸார ஸங்க்ரஹம்‌, தத்வ த்‌ரயம்‌, தத்வ சேகரம்‌, ப்ரபந்த பரித்ராணம்‌, ப்ரமேய சேகரம்‌, அர்ச்சிராதி, அர்த்த பஞ்சகம்‌. நவவித ஸம்பந்தம்‌, நவரத்ந மாலை, ஸ்ரீவசன பூஷணம்‌ முதலான அநேக ரஹஸ்ய க்ரந்தங்களிட்டருளி தம்பியோடு தாமும்‌ கூடி வாழ்ந்தருளுங்‌ காலத்திலே பிள்ளை லோகாசாரியர்‌ திருவடிகளிலே பரம ஸாத்விகாரயிருப்பரான கூர குலோத்‌தம தாஸர்‌ நாயனும்‌ மணப் பாக்கத்து நம்பியாரும்‌, கொல்லி காவல தாஸரான அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ பிள்ளையும்‌, கோட்டூரில் அண்ணரும்‌, திருமலை யாழ்வாரும்‌, விளாஞ் சோலைப்‌ பிள்ளையும்‌-ஸாத்விகைகளில்‌ திருமலை யாழ்வார்‌ திருத் தாயார்‌ முதலான சில அம்மைமார்களும்‌ திருவடிகளிலாஸ்ரயித்து ஸத் ஸம்பந்தத்தை யுடையராய்‌, ‘“ஸம்பந்தாத்‌ ஸ்வாத்ம லாப: ‘ என்று ஆநந்த நிர்ப்‌பரராய்‌ *ஓழிவில்‌ காலப்படியே ஸர்வதேச ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும்‌ நித்ய ஸேவை பண்ணி தேவு மற்றறியாதிருந்தார்கள்‌

இப்படி இவர்களுடைய ஐக கண்ட்யத்தாலே ப்ரவர்த்தமாய் ஸங்க்ரஹ விஸ்தார ரூபமாயிருக்குமென்று அருளிச்‌ செய்து
சீராருந் திருவத்தியூர்‌ தன்னில்‌ நின்றும்‌ சிறந்த மணப்பாக்கத்துறு நம்பியாரை
ஏராருங் கனவிலுபதேசத்தால்‌ முன்னெடுத்தருளி யெழிலரங்கத்தே போயிரு நச்‌
சேராமலுக் கிதமங்கே ,சொல்வோந் தூய வுலகாரியன் பால்‌ சேர்ந்ததற் பின்‌ அவர்க்கு
நேராகக் கனவிலாங்கவ ருபதேசத்தால்‌ முன்னம்‌ விரித்த கலை வசன பூஷண மா நிதியே

என்கிறபடியே பரம ரஹஸ்யமான ஸ்ரீவசன பூஷணமாகிற திவ்ய ப்ரபந்தத்தைச்‌ செய்தருளி லோகத்தை வாழ்வித்தருளினார்‌.

அநந்தரம்‌ நாயனாரும்‌ ”வாக் பூஷணம்‌ வகுள பூஷண ஸாஸ்த்ர ஸாரம்‌’” என்னும்படியான ஸ்ரீவசந பூஷண ஸ்தாபநார்த்தமாக ஆசார்ய ஹ்ருதயத்தை யருளிச்‌ செய்து தோதவத்தித்‌ தூய மறையோரான பெற்றார்க்கு ப்ரஸாதித்து இப்படி முப்பத்தாறாயிரப்‌படி யினர்த்தத்தை ஸ்ரீ வசந பூஷண ஆசார்ய ஹ்ருதய ப்ரபந்ததங்களாலே தாத்பர்யமாகக்‌ கூட்டிப்‌ பின்னையு மருளிச்‌ செய்கையாலே-ஈட்டுத் தனியனிலே இவர்கள்‌ தனியனையு மநுஸத்திக்கிறது-அவரும்‌ ஆசார்ய ஹ்ருதயம்‌ பெற்றார்க்கு ப்ரஸாதித்தார்‌; அவரும்‌ திருநாராயண புரத்து ஆயிக்கு ப்ரஸாதித்தார்‌.

ஈட்டுத் தனியன்‌ வியாக்கியானத்தில்‌ ‘பிள்ளை லோகஞ்‌ சீயர்‌ அருளிச்‌ செய்துள்ளது: ”பிள்ளைலோகாசார்யர்‌, நாயனாராச்சான்‌ பிள்ளை, அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌, வாதி ஸேகரி அழகிய மணவாளச்‌ சீயர்‌ இவர்கள்‌ நால்வரும்‌ ஈட்டு ஸம்ப்ரதாயத்துக்கு ப்ரவர்த்தகராகாமலிருக்கச்‌ செய்தேயும்‌, பிள்ளை லோகாசாரியர்‌ ஈட்டின் வர்த்தத்துக்கு உபயுக்தமாக வகுள பூஷண சாஸ்த்ர ஸாரமான ஸ்ரீவசநபூஷண திவ்ய சாஸ்த்ரத்ரத்தை யருளிச்‌ செய்கையாலும்‌; நாயனாராச்சான் பிள்ளை பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த இருப்பத்தி நாலாயிரப்படி வயாக்யானத்துக்கு ப்ரவர்த்தகராகையாலும்‌; அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌ திருவாய்‌ மொழியினுடைய சந்தை திரட்டான ஆசார்யஹ்ருதயமருளிச்‌ செய்கையாலும்‌ வாதி கேஸரி அழகிய மணவாளச்‌ சீயர்‌ பன்னீராயிரப்படியையும்‌, திருவிருத்தத்துக்கு ஸ்வாபதேசமும்‌ அருளிச்‌ செய்கையாலும்‌ இவர்களுடைய தனியன்களும்‌ அநு சந்திக்கிறார்‌கள்‌ ‘நம்‌ ஆசார்யர்கள்‌” என்று பிள்ளை லோகாசாரியரும்‌ நாயனாரும்‌ ஈட்டை நேரே ஸேவிக்கா விடினும்‌ அதிலுள்ள அர்த்த விசேஷங்களைத்‌ தமது தமப்பனாரான வடக்குத்‌ திருவீதிப் பிள்ளை வாயிலாகக்‌ கேட்டே யிருப்பார்கள்‌-

இதற்கு ப்ரபந்த ப்ரதிபாத்யமான அர்த்த ஸம்ப்ரதாயம்‌ ஜீயருக்கு ஆய் வழியாக வந்தபடியை மேலே சொல்லுகிறது; இது ஜீயருடைய ஆசார்யரான திருமலை யாழ்வாரும்‌, அவருடைய திருத்‌
தமப்பனாரான அண்ணரும்‌ அதி பால்யத்திலே பிள்ளை லோகாசார்யர் திருவடிகளிலே ஆச்ரயித்தவர் களாகையாலே பின்பு கொல்லி காவல தாஸரிடத்திலும்‌ கூர குலோத்தம தாஸரிடத்திலும்‌ ஜ்ஞாநோபஜீவநம்‌ பண்ணி உஜ்ஜீவித்தார்கள்‌. இப்படி ஸம்பந்த ஸம்பத்திகளும்‌ உஜ்ஜீவிக்கும்படி தம்பியோடு தாசரதி என்கிற படியே நம்மாழ்வார்‌ திருவவதார மென்னலாம்படியான நம்பிள்ளை யுடைய அநுக்ரஹத்தாலே தேவுமற்றறியா திருந்தார்கள்‌

இப்படி யெழுந்தருளி யிருக்கும்‌ பிள்ளை லோகாசார்யர்‌ பரம ரஹஸ்யமுமாய்‌ திவ்ய சாஸ்த்ரமுமான ஸ்ரீவசன பூஷணத்தை ஸர்வரும்‌ அதிகரித்து ஈடேறலாம்‌ படி யருளிச் செய்து லோகத்தை
வாழ்வித்தருள, அத்தைக் கண்டு பாகவதோச்ச்ராயம்‌ பொறுக்க மாட்டாத சில அஸூயாளுக்கள்‌ நம் பெருமாள்‌ பக்கலிலே சென்று, “பெருமாளே! பிள்ளை லோகாசார்யர்‌ ஸ்ரீவசனபூஷணமென்று
ஒரு ரஹஸ்ய க்ரந்தமிட்டு நம்‌ தர்சனத்தை யெல்லாம்‌ வ்யர்த்தமாக்‌கினார்‌” என்று பெருமாளுடனே கோள்‌ சொல்ல; அத்தைக்‌ கேட்ட பெருமாளும்‌ சீறி பிள்ளை லோகாசார்யரை யழைத்து விட, அவ்வளவிலே அவர்‌ நீராட எழுந்தருளி யிருக்க, நீராடி யெழுந்தருளுகிற அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனார்‌ இவ் விசேஷங் கேட்டு பெருமாள்‌ ஸந்நிதியில்‌ சென்றவாறே பெருமாளும்‌, அர்ச்சக முகேந , ‘நாயனாரே! நாம்‌ அநந்தமான அவதாரம்‌ பண்ணினது தர்ம ஸம்ஸ்த்தாபநார்த்த மன்றோ? நீங்கள்‌ ரஹஸ்ய க்ரந்தமிட்டு அத்தை வ்யர்த்தமாக்குகிறது என்‌?” என்று வினவி யருள; அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனாரும்‌, ஸ்ரீவசந பூஷண ஸ்தாபதார்த்தமாகச்‌ செய்தருளின ஆசார்ய ஹருதயமாகிற ப்ரபந்தத்தை பெருமாள்‌ ஸ்ரோதாவாய்‌ தாம்‌ வக்தாவாக, ஸ்ரீதொண்டரடிப்‌ பொடி யாழ்வார்‌ திருமாலை சொன்னாற் போலே இவர்‌ ஆசார்ய ஹ்‌ருதயத்தை விண்ணப்பஞ் செய்து தலைக் கட்டினவாறே, பெருமாள்‌ மிகவுகந்தருளி. “இதுவும்‌ நாம்‌ செய்ததொன்றன்றோ?” என்று கோள்‌ சொன்னவர்களை வாரி யடித்துத்‌ தள்ளி விட்டருளி நாயனாருக்கு தம்‌ ஸர்வ பரிஜந பரிச்சதங்களோடே ப்ரஹ்ம ரதம்‌ ப்ரஸாதித்து ௨பலாலித்துத்‌ திருமாளிகை யேற போக விட்டருளினார்‌.-இவ் வைபவங் கேட்டுப்‌ பிள்ளை லோகாசார்யரும்‌ -வளர்த்ததனால்‌ பயன் பெற்றேன்‌ என்று அதி ஸந்தோஷத்துடனே ஆலிங்கித்துக்‌
கொண்டருளினார்‌

ஸ்ரீ வசந பூஷண திவ்ய சாஸ்த்ரம்‌ நம் பெருமாளுடைய நியமனம் அடியாக அருளிச்‌ செய்யப்பட்டதென மணவாளமா முனிகள்‌ ஸாதித்தருளி யிருப்பதால்‌ இங்கு காணும்‌ ஐதிஹ்யம்‌ ப்ராமாணிகமா? என்ற ஐயம்‌ எழுகிறது பின்புள்ளார்‌ எக் காரணத்தனாலோ சேர்த்ததா யிருக்கலாம்‌ என்று தோன்றுகிறது -மணவாளமாமுனிகள்‌ தாமருளிச்செய்த ஸ்ரீவசந பூஷண வ்யாக்‌யான அவதாரிகையில்‌ ஸாதித்தருஞம்‌ பங்க்திகள்‌ வருமாறு:ஸ்ம்ஸாரி சேதனரிழவு ஸஹிக்க மாட்டாத பரம க்ருபையாலே தத் உஜ்ஜீவநார்த்தமாக தாமும்‌ பல ப்ரபந்த்தங்கள் அருளிச்‌ செய்த பிள்ளை லோகாசார்யர்‌, ஆசார்ய பரம்பரா ப்ராப்தங்களான வர்த்தங்‌களில்‌ அவர்கள்‌ தாங்கள்‌ கெளரவாதிசயத்தாலே ரஹஸ்யமாக வுபதேஸித்துப்‌ போந்தவையாய்‌ அருமை பெருமைகளைப் பற்ற-இதுக்கு முன்பு தாமும்‌ ப்ரகாசிப்பியாமலடக்கிக் கொண்டு போந்தவையுமான அர்த்த விசேஷங்களெல்லாத்தையும்‌, பின்புள்ளாருமிழக்க வொண்ணா தென்ற தம்முடைய க்ருபாதிசயத்துக்கு மேல்‌
பெருமாளும்‌ ஸ்வப்நத்திலே திருவுள்ளமா யருளுகையாலே, ஸ்ரீ வசந பூஷணமாகிற இப் ப்ரபந்த முகேந வெளியிட்டருளினார்‌.

முன்பே பேரருளாளப் பெருமாள்‌ (கச்சித் தேவப் பெருமாள்‌) தம்முடைய நிர்ஹேதுக க்ருபையாலே மணற் பாக்கத்திலே இருப்‌பாரொரு நம்பியாரை விசேஷ கடாஷம்‌ பண்ணி யருளி, தஞ்சமாயிருப்பன சில வர்த்த விசேஷங்களைத்‌ தாமே யவர்க்கு ஸவப்ந முகேந வருளிச்செய்து, நீர்‌ போய்‌ இரண்டாற்றுக்கும்‌ நடுவே வர்த்தியும்‌; இன்னமும் உமக்கிவ் வர்த்தங்களெல்லாம்‌ விஸதமாக நாமங்கே சொல்லுகிறோம்‌” என்று திருவுள்ளமா யருளுகையாலே அவரிங்கே (திருவரங்கத்தே) வந்து பெரிய பெருமாளை ஸேவித்துக்‌ கொண்டு, தமக்கு முன்பங்கருளிச் செய்த வர்‌த்தங்களையும்‌ அசலறியாதபடி அநுஸந்தித்துக் கொண்டு ஏகாந்தமான தொரு கோயிலிலே வர்த்தியா நிற்கச்‌ செய்தே, தம்முடைய ஸ்ரீபாதத்‌து அந்தரங்கரான முதலிகளுந்தாமுமாக பிள்ளை ஒரு நாள்‌ அந்தக்‌ கோயிலிலே யாத்ருச்சிகமாக வெழுந்தருளி, அவ்விடம்‌ ஏகாந்தமா யிருக்கையாலே ரஹஸ்யார்‌த்தங்களை யவர்களுக் கருளிச்‌ செய்து கொண்டெழுந்தருளியிரா நிற்க, அவை, தமக்குப்‌ பேரருளாளப் பெருமாளருளிச் செய்த வார்த்தா விசேஷங்களா யிருக்கையாலே, அவர்‌ போர வித்தராய்‌ உள்ளினின்றும்‌ புறப்பட்டு வந்து பிள்ளை ஸ்ரீபாதத்தலே விழுந்து, ்‌*அவரோ நீர்‌?” [அந்த பேரருளாகப்பெருமாள்‌ தானோ நீர்‌ என்ன, **ஆவது; ஏது” என்று பிள்ளை கேட்டருள, பேரருளாளப் பெருமாள்‌ தமக்கு இவ்வர்த்தங்களை ப்ரஸாதித்‌ தருளினபடியையும்‌, இத் தேசத்திலே போர விட்டருளின படியையும்‌-இன்னமுமங்கே சொல்லுகிறோமென்‌ றருளிச்‌ செய்தபடியையும்‌, லிண்ணப்பஞ் செய்ய, கேட்டு மிகவும்‌ ஹ்ருஷ்டராய்‌ அவரையுமபிமாநித்தருள, அவருமங்குத்தைக் கந்தரங்கராய்‌ வர்த்திக்கிற நாளிலே, பெருமாள்‌ அவர்க்கு ஸ்வப்நத்திலே ‘இவ் வர்த்தங்கள்‌
மறந்து போகாதபடி ‘இவற்றை யொரு ப்ரபந்தஸ்தமாகச்‌ சொன்‌னோமென்று நீர்‌ பிள்ளைக்குச்‌ சொல்லுமென்று திருவுள்ளமாக, அவரிப்படி பெருமாள்‌ திருவுள்ளமா யருளினாரென்று விண்ணப்பம் செய்ய, ”ஆனால்‌ அப்படியே செய்வோம்‌” என்று” திருவுள்ளம்‌ பற்றி அநந்தர மிப்ரபந்த மிட்டருளினா ரென்று ப்ரஸித்தமிறே
, [இதுவரை மணவாளமாமுனிகளின்‌ ஸ்ரீவசநபூஷண வ்யாக்யாந அவதாரிகை பங்க்திகள் –

அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌ திருப் பாவை முதலான சில ப்ரபந்தங்களுக்கு வ்யாக்யாதஞ்‌ செய்தருளினார்‌.இத்தை நினைத்திறே –தன்‌ சீரால்‌ வைய குருவின்‌ தம்பி மன்னு மணவாள முனி செய்யுமவை தானுஞ்‌ சில– என்று ஜீயரும்‌ ௮நு சந்‌தித்தருளினார்‌. [உபதேச ரத்ன மாலை-47]-

பின்பு பிள்ளைலோகாசாரியரும்‌ நாயனாரும்‌ அதி விரக்தராய்‌ வாழ்ந்தருளுகிற காலத்திலே, நாயனார்‌ சிறிது காலமெழுந்தருளி யிருந்து அசிரேண பரமபதத்தை ப்ராபித்தருள, பிள்ளையும்‌ பாகவத விஸ்லேஷத்தாலே மிகவும்‌ சோகார்த்தராய்‌ அவர்‌ திருமுடியைத்‌ தம் மடியிலே வைத்துக்‌ கொண்டு
மாடுடும்மை மன்னு மணவாள வண்ணலொடு
சேமமுடன்‌ வைகுந்தஞ் சென்றக்கால்‌–மாமென்‌று
தொட்டுரைத்த சொல்லுந் துயந்தன்‌னின் ஆழ்‌ பொருளும்‌
எட்டெழுத்து மிங்குரைப்பாரார்‌

என்கிறபடியே பல வகை புலம்பி திருமுத் துதிர்த்து முதலிகள்‌ தேற்றத்‌ தேறி நின்று நாயனாருக்குச்‌ சரம கைங்கர்யஞ்‌ செய்து திருவத்யயனமும்‌ நடத்தி யருளினார்‌.
இவர்‌ தனியன்‌
திராவிடாம்நாய ஹ்ருதயம்‌ குரு பர்வ க்ரமாகதம்‌ |
ரம்ய ஜாமாத்ரு தேவேந தர்ஸிதம்‌ க்ருஷ்ண ஸூநுநா ॥

க்ருஷ்ணரென்னும்‌ வடக்குத்‌ திருவீதிப்‌ பிள்ளையின்‌ குமாரரான அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனாராலே ஆசாரியகளுடைய பரம்பரா க்ரமமாய்‌ ஆசார்ய ஹ்ருதயம்‌ என்ற க்ரந்தம்‌
அருளிச்‌ செய்யப்‌ பட்டது

நம் பெருமாள் கோயிலை விட்டு வஸலையாக எழுந்தருளல்‌–
ஸர்வ சேததருமுஜ்ஜீவிக்கும்படி சரம ப்ரமாண ப்ரமேய ப்ராமத்ரு வைபவங்களைப் ப்ரகாசப்‌பித்துக்‌ கொண்டு பிள்ளை லோகாசார்யர்‌ பெருமாளுக்கு ப்ராண பூதராயெழுந்தருளி யிருக்குங் காலத்தில்‌ ஸ்ரீ ரங்கம்‌ துருஷ்காக்ராந்தமாய்க்‌ குடி யிருக்‌கப்‌ போகாமல்‌ பெருமாள்‌ நாய்ச்சி மாருடனே்‌ புறப்பட்டு, பெரிய பெருமாளுக்குத்‌ திரு முன்பே கல் காப்புச்‌ சாத்தி, முன்னே ஒரு விக்ரஹத்தை யெழுந்தருளப்‌ பண்ணி வைத்து, சுற்றமெல்லாம்‌ பின்‌ தொடரத்‌ தொல் காநமடைந்து (பெருமாள்‌ திரு4-6) என்றும்‌ *தம்பியோடு தாமொருவர் தம்‌ துணைவி காதல்‌ துணையாக (பெரிய திரு 15-10-5) என்றுஞ் சொல்லுகிறபடியே பெருமாள்‌ தம்‌ அந்தரங்க பரிகரத்துடனே வலசையாக வெழுந்தருள; பிள்ளையும்‌, வாளும்‌ வில்லுங் கொண்டு பெருமாளைப்‌ பின் தொடர்ந்தடிமை செய்த இளைய பெருமாளைப் போலே *௨ருவார்க்கரஞ் சங்கு சுமந்‌ திங்கும்‌ மோடொரு பாடுழல்வானோரடியான்‌ (திருவாய்‌ 8-3-7)
என்கிறபடியே அத் தலைக்கு மங்காளாசாஸந பரராய்த்‌ தாமும்‌ முதலிகளும்‌ ஸேவித்துக் கொண்டு சேர வெழுந்தருள, அநந்தரம்‌ பெருமாளும்‌, ப்ரவிஸ்யது மஹாரண்யம்‌ ராமோ ராஜிவ லோசந:?’ (ஸ்ரீராம -ஸம்க்ஷேபம்‌) என்றும்‌ ‘*வநம் ஸ பார்ய: ப்ரவிவேஸ ராகவஸ் ஸ லஷ்மணஸ் ஸுர்ய இவா ப்ரமண்டலம்‌ (ஸ்ரீரா. அயோ. 119-22) (ராம பிரான்‌ மனைவியுடனும்‌ லஷ்மணனுடனும்‌ சூரியன்‌ மேக மண்டலத்தைப்‌ புகுவது போல வநம் புகுந்‌ தனர்‌-என்றுஞ் சொல்லுகிறபடியே ஹர்ய்ர்க்ஷ தரக்ஷா கிடி கட்க
பல்லூகாதி அநேசு வந ம்ருக ஸஞ்சார கர்ஜந பயங்கரமாய்‌ *சிலைக்‌ கை வேடர்‌ திரிகிற கடுங் கானமான கள்ளர் பற்றிலே எழுந்தருளுகிற வளவிலே சில தஸ்யுக்களுக்கு ஸர்வஸ்வதாநம்‌ பண்ணி யருள, அச் செய்தியைக் கேட்டு முன்னே யெழுந்தருளின பிள்ளை லோகாசார்யர்‌ மீண்டு எழுந்தருளி அவ்விடத்தில்‌ அவர்களுக்குத்‌ தாமும்‌ ஸர்‌வஸ்வதாநம் பண்ணியருளி அப்பாலே யெழுந்தருள, அவ்வளவிலே சில கள்ளர்‌ வந்து அவர்‌ பதம்‌ பணிந்து பச்சை கட்ட,
கலகமிகு பஞ்சமுடன்‌ கள்ளர் பற்றில்‌ கத்திருவிர் காரியப்பே ரொருவர்‌ வந்து
பலம் அறிந்து பதம் பணிந்து பச்சை கட்டப் பாங்குடனே வாங்கினாப் போல்‌ வாங்கி நீங்க
நல மிகுந்த தநமிதனை நம்பினோமேல்‌ நம்பெருமாளும் உம்பருடன்‌ நயந்து வாழும்
இலகு மிகு பெருஞ் செல்வ மில்லை யென்‌று ஏர் முடும்பை யுலகாரியனு முரை செய்தானே –
-என்கிறபடியே அவற்றை யுபேஷித்து:

உலகாரியன்‌ திருமலை யாழ்வாரைத் திருத்த நியமித்து திருநாடலங்கரிதகல்‌
ஜ்யோதிஷ்குடி என்கிற கிராமத்தில்‌ பெருமாளுடனே யெழூந்‌தருளி அங்கே திரு மேனி நோவு சாத்தி மிகவுந் தளர்ந்து கண்‌ வளர்ந்தருள, திருவடிகளுக்கு அந்தரங்கரான முதலிகள்‌ “எங்களுக்குத்‌ தஞ்சமேது?” என்று விண்ணப்பஞ்செய்ய, அப்போது திருமலை யாழ்வாரிட த்தில்‌ திருவுள்ளம்‌ ப்ரஸந்நமாய்க்‌ குடி.புகுந்து, ஒருமிடறு செய்து, லௌகிக வைதிகங்களிலே அதி நிபுணராய்‌
மதுரை ராஜ்யாதிபத்யம்‌ பண்ணுகிறவர்‌ அத்தை விட்டு தர்சந ப்ரவர்த்தகராம்படி ஆசீர்‌வதித்தருளி, அவரை யநு வர்த்தித்து ரஹஸ்‌யங்களையும்‌ அர்த்தங்களையும்‌ நன்றாக ப்ரஸாதிக்கும்படி கூர
குலோத்தம தாஸ் நாயனாருக்கும்‌, திருவாய் மொழியைப்ரஸாதிக்கும்படி திருக்கண்ணங்குடிப்‌ பிள்ளைக்கும்‌ திருபுட்குழி இருக்கும்‌, மூவாயிர வ்யாக்யாநத்துக்கு நாலூர்ப் பிள்ளைக்கும்‌,
ஸப்தகாதை முதலான சில அர்த்த விசேஷங்களை ப்ரஸாதிக்கும்படி விளாஞ்சோலைப் பிள்ளைக்கும்‌ நியமித்தருளி,
ஆனி தனில்‌ வளர்‌பஷத்தாறிரண்டாம் நாள்‌ தன்னில்‌, ஊனமிலில் வுலகாரு முடும்பையர் கோனுயர்‌ தவத்து, வானவர்கள்‌ தற்சூழ வைகுந் தக்குட்டனோடு தானினிது விற்றிருக்கத்‌ திருவுள்ளமாய்‌, விளாஞ்சோலைப்‌ பிள்ளையைத்‌ திருவநந்த புரத்தலே திருமேனி யளவாக எழுந்தருளி யிருக்கும்படி நியமித்தருளி, பிள்ளை திருவடிகளை த்யாநித்துக்‌ கொண்டு ஜ்யேஷ்ட சுத்த த்வாதசியிலே திருநாட்டுக்கெழுந்‌தருளினார்‌. முதலிகள்‌ சோகார்த்தராய்‌ மிகவும்‌ க்லேஸித்துத் தேறி, பெருமாள்‌ திருப்பரிவட்டம்‌ திருமாலை வரவிட, ஸம்ஸ்கரித்துப்‌ பள்ளிப் படுத்துத்‌ திருவத்யயநத்தைப்‌ பெருக்க நடத்திய௫ளினார்கள்‌.
பிள்ளை லோகாசாரியர்‌ திரு நக்ஷத்ரம்‌ ஐப்பசியில் திருவோணம்‌, அவர்‌ தனியன்‌,
லோகாசார்யாய குரவே க்ருஷ்ண பாதஸ்ய ஸூநவே |
ஸம்ஸார போகி ஸந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம்: ॥

ஸம்ஸாரமாகற பாம்‌பினால்‌ கடிக்கப் பட்டிருக்கு ஜீவர்‌ களுக்கு உஜ்ஜீவன ஒளஷதமாய்‌, வடக்குத்‌ திருவீதப் பிள்ளையின்‌ திருக்குமாரரான பிள்ளை லோகாசார்யரை அடி பணிகிறேன்‌-

————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ Gita for Life”-

May 6, 2026

In this discourse titled “Gita for Life” (0:43), Dr. Venkatesh speaks in Frankfurt about the Bhagavad Gita, starting with why Krishna reared cows in his childhood (1:17). He explains that Krishna’s cow-herding was a “net practice” to extract the essence of the Upanishads, leading to the Bhagavad Gita (1:52). He highlights the following key points: Essence of Gita (3:37): Gita is the essence of all Upanishads (3:47). Yamunacharya, a preceptor of Ramanuja, explains the essence of Gita in five points (3:54): 1. Do your duty perfectly (4:16). 2. Develop self-realization knowledge (4:35). 3. Practice detachment from results (4:52). 4. These three lead to devotion (Bhakti) (5:15). 5. Bhakti leads to liberation (5:36). Applying Gita to Daily Life (6:11): Dr. Venkatesh then virtually transports the audience to Kurukshetra (6:35), the battlefield where Arjuna faces his kin (11:14) and surrenders to Krishna (12:00). He explains that this scene is not an isolated incident but a recurring mental turmoil in everyone’s mind (12:58). IPS Formula (Identity, Performance, Self-Reflection) (15:47): This three-point formula from Chapter 2 of the Bhagavad Gita helps overcome mental turmoil: Identity (I) (16:24): Realize you are a soul, not the body (16:28). This brings courage as the soul is eternal and cannot be harmed (18:28). Performance (P) (20:02): Do your duty with detachment from results (20:48). This purifies the mind, leading to clarity of thought (22:06). Self-Reflection (S) (23:22): In a pure mind, one can reflect on the self, which removes stress and depression (23:31). Spirituality: Renouncing or Performing? (25:50): Chapter 3 clarifies that spirituality is about facing and performing duties with the right attitude, not renouncing everything (35:06). Karma yoga (action with detachment) is superior to Jnana yoga (meditation) for most people (30:00). This involves: 1. Sacrificing ego (33:10): Consider yourself an instrument of God. 2. Considering duty as worship of God (33:34). 3. Detaching from the results of actions (33:46). Nature of Incarnations (Avatar) (36:32): Chapter 4 explains Krishna’s avatars with six points (37:37): 1. True appearances, not mirages (39:11). 2. Come with full potency (39:39). 3. Take a divine spiritual body, not a material one (39:48). 4. Reason for birth is compassion (Karuna), not karma (40:38). 5. Timelines: Incarnate when dharma declines and adharma rises (41:07). 6. Goal: Protect the good, eliminate evil, and uphold dharma (41:23), especially to mingle with devotees (42:47). The speaker also highlights that the deity in a temple is considered God himself, not just a representation, a concept recognized by the Indian constitution (45:00). Samadarshana (Equanimity) (46:52): Chapter 5 discusses reaching a state of perfection where one sees everyone equally, based on the understanding that differences are only bodily (48:06). All souls are qualitatively equal and connected by Paramatma (50:14), leading to universal harmony (51:21). Practical Tips for Meditation (52:05): Chapter 6 provides practical guidance for meditation, emphasizing a clean and pure environment (52:48) and a suitable seat (52:58)

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அநந்தாழ்வான் மஹாத்ம்யம்—ஸ்ரீ மா முனிகள் மஹாத்ம்யம்–

May 4, 2026

அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம் |
ஆச்ரிதானாம் ஸுசரணம் வந்தே அநந்தார்ய தேசிகம் ||
அனைத்து நற்குணங்களுக்கும் இருப்பிடமாகவும், அஞ்ஞானம் என்னும் இருளைப் போக்குபவராகவும், தன்னை ஆசிரயித்தவர்களுக்கு (நம்பியவர்களுக்கு) சிறந்த புகலிடமாகவும் இருக்கும் அனந்தாரியர் (அனந்தாழ்வான்) எனும் ஆச்சாரியரை வணங்குகிறேன். 

அடியார்கள், ராமநுசரின் (உடையவரின்) சம்பந்தம் தெளிவாகக் கூறப்படவில்லை என்று ஐயப்பட்டபோது, பெருமாள் தனியனின் இரண்டாவது பாகத்தை எடுத்துரைத்தார் !

ஸ்ரீமத் ராமாநுஜாசார்ய ஸ்ரீபாதாம் போருஹத்வயம்
ஸதுத்தமாங்கஸந்தார்யம் அனந்தார்ய மஹம்பஜே !
-இராமனுஜரின் இரண்டு பாதங்கள் போன்ற (அதனாலேயே, சான்றோர் எல்லாம் போற்றி வணங்கும்) ஆச்சார்ய அனந்தார்யரின் அடி பணிந்துத் தொழுகிறேன்.

தனியனை ஏற்றுக் கொண்ட அடியார்கள், பெருமாள் தந்த பிரசாதத்தையும், நீரையும் ஏற்றுக் கொண்டனர்.

சென்றால் குடையாம் ஒரே பாசுரம் நித்ய ஸூரிகளில் ஒருவனுக்கு
உறகல்-இவனைச் சொல்ல வில்லையே
அங்கும் அஸ்தான பயசிங்கை பண்ணி பெரியாழ்வாரிலும் விஞ்சிய பரிவு உண்டே

அநந்தம் பிரதம ரூபம் -பின்பு எம்பெருமானார் -அடுத்து அனந்தாழ்வான் -பின்பு மா முனிகள்
ஆண் பிள்ளை
ஸ்த்ரீ பிராய ஸ்வரூபம் தன்னை அழிய மாறி
சிஷ்யன் இருக்கும் இருப்பைக் காட்டவே
நரன் காட்டி அருளாத ஒன்றைக் காட்டி அருளினார்
திருமலை நம்பி திருமலையில் நித்ய வாசம் செய்யாமல் கீழே இருந்து நித்யம் சென்று கைங்கர்யம்
ராமானுஜர் வேறே யாருக்கும் இப்படி பட்டம் கொடுக்க வில்லையே
பத்துக்கு மேல் அடையாளங்கள் திருமலையில் இவர் வை லக்ஷண்யம் காட்டி
புஷ்கரணி கைங்கர்யம் -பேக் சவாரி -கடப்பாரை -பூ பறிக்க பிராட்டியைக் கட்டி வைத்து -மாமனார் ஸ்தானம்

அலர்மேல் மங்கை திருவுக்கு அப்பனார் வாழியே
மலையில் வேங்கடவருக்கு மாமனார் வாழியே
திருத்தேர் -இவர் சமர்ப்பிக்க -மாப்பிள்ளைக்கு மாமனார் சம்பாவனை இன்றும் உண்டே

மோவாக் கட்டையில் ரத்தம் பெருகி -மண்ணை வைத்து -நிற்க வைக்க
மகரந்த பொடி -என்று வேங்கடேச இதிஹாச மாலையிலே இவரே சொல்லி வைத்து
ப்ரஹ்ம உத்சவம் 10 நாள்-அப்ரதிக்ஷணமாக எழுந்து அருளி
மரத்துக்கு மரியாதை -பாக் தோட்டப்புறப்பாடு
திருத்தேர் உத்சவம் மணலை முன்பு என்றும் பின்பு பத்தாம் நாளாக மாற்றி
கடப்பாரை கோபுர வாசலில் இட்டும் காணலாமே
பச்சை கற்பூரம் -பிரசாதம் -ஸ்ரீ பாத ரேணு -இன்றும் பெற்று மகிழ்கிறோம்
தாமோதரன் பட்டம் போல் இன்றும் அடையாளம் உண்டே

கூப்பிட்டாலும் போகாமல் -ஆச்சார்ய நியமித்த கைங்கர்யங்களிலே ஈடுபாடு -ஆச்சார்யர் உகப்புக்காக செய்தார் –
பரன் சென்று சேர் திருவேங்கடம் -ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து
நான் -பூ லோக வைகுண்டத்தில் -ஸ்ரீ ரெங்கத்தில் இருந்து வந்தேன்

ப்ராப்யத்துக்கு ஆச்சார்ய கைங்கர்யம் பிரதம பர்வம்
மா முனிகள் -ப்ரீதிக்காகப் பண்ணும் பகவத் கைங்கர்யம் என்று காட்டி அருளுகிறார் –

பாகவதர் ப்ரீதிக்காகச் செய்யும் ஆச்சார்யர் கைங்கர்யம் சரம கைங்கர்யம்
நந்தவனம் -ஏரி -இவற்றைப் பார்க்கிறோம் இன்றும்
எங்கள் ஆழ்வான் வாத்ஸா வரதாச்சார்யர் வரும் பொழுது
பிரசாதம் கொடுத்து -அனந்தாழ்வான் தனியனை சாதித்த ஐதிக்யம்
அகிலாத்மா -இத்யாதி
இதில் ஆச்சார்யர் திருநாமம்
ஸ்ரீ ராமானுஜ பாதாப்ஜம் திருவடி நிலைகள்
கேட்டு ஆச்சரியப்பட்டார்

கடிபட்ட பாம்பு கடித்த பாம்பு

எறும்பு பிரசாதம் திரும்பி -எம்பெருமான் பொன்மலையிலே யாதேனும் ஆவேனே
அவனே யாகவுமாம் –
ஸ்வரூபம் அழிய மாறி இங்கே கைங்கர்யம் செய்ய வந்த ஆண் பிள்ளை அன்றோ
அதே போல் இங்கும்

எம்பெருமானார் தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருள
மரம் மேல் ஏறினவர் பார்த்து வார்த்தை
கைகால் தானே உடையும்

திருக்கோளூர்
அங்கே கழுதை மேய்த்து ஜீவிக்க மாட்டாயோ
வெட்டு ஓன்று துண்டு ஒன்றாகப் பேசுவார்

எம்பெருமானாரே ஆலிங்கனம் செய்த உத்சவ மூர்த்தி ப்ரதிஷ்டை -செய்து இன்றும் சேவிக்கிறோம்

எம்பெருமானார் திருவடி நிலை முதலியாண்டான் -மற்ற இடங்களில்
திருமலையில் அனந்தாழ்வான் என்றே பெயர்

அத்யயன உத்சவம்
இயற்பா முதலில் செவிப்பர் இங்கு
நான்கு நாள் முதலாயிரம்
21 கண்ணி நுண்
அடுத்த நாள் ராமானுஜ நூற்றந்தாதி தனியாக

81 வருஷமா – 100 வருஷம் என்பர்
நேராக வர வேண்டாமோ
ஆள் அந்தி தொழுகிறானோ

சரம கைங்கர்யம் தோட்டத்திலே
மகிழ மரம் முளைத்து
இவரே இந்த மரம் என்று

திருவாடிப்பூரம் அன்று -பிராட்டி உடன் எழுந்து அருளுகிறார்
பாக் சவாரி தான் மட்டும் எழுந்து அருளுகிறார் –

பெரிய ஜீயர் -அனந்தாழ்வான் சிஷ்ய பரம்பரையே
மா முனிகளே மூன்று வருஷங்கள்
பெரிய சேஷ வாஹனம்
சின்ன சேஷ வாஹனம்
இரண்டுமே உண்டே இன்றும்
இப்படி பல விசேஷங்கள் திருமலைக்கு

அனந்தம் ப்ரதமம் ரூபம்
ராமானுஜ ததா பரம்
அனந்தாழ்வான் த்ருதீய
ததோ வர முனி ஸ்ம்ருத

————————————–

அவரை ஆரத்தழுவிய ராமானுஜர், “அனந்தார்யா, நீயே ஆண்பிள்ளை!” என்று கூறவே.
அன்றிலிருந்து, அவர் திருமலை ‘அனந்தாண்பிள்ளை’ என்று போற்றப்பட்டார்.
ஆச்சார்ய கட்டளையின் பேரில், திருமலை சென்ற அனந்தார்யா, அங்கு ஒரு பூவனத்தை நிறுவி,
பெருமாளுக்கு மலர்ச் சேவை செய்து வந்தார். அத்தோடு, ஒரு கிணறு வெட்டி, அதற்கு ராமானுஜர் என்ற பெயர் சூட்டினார்.
அனந்தார்யா திருமலையில் செய்த பகவத் கைங்கர்யத்தின் பலனாக, பன்னிரு ஆழ்வார்களுக்கு இணையாகக் கருதப்பட்டு,
அனந்தாழ்வான் என்ற திருநாமம் பெற்றார்.

அவர் மைசூருக்கு அருகே உள்ள சிறுபுத்தூர் என்ற கிராமத்தில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் அவதரித்து,
ராமானுசரின் மேன்மையால் ஈர்க்கப்பட்டு அவரிடம் சீடராகச் சேர்ந்தவர்.
இராமனுசர் திருமலையில் தரிசிக்க வந்தபோது, அனந்தாழ்வான் நிறுவிய மலர் தோட்டத்திலிருந்த
மல்லிகை, முல்லை, இருவாட்சி, ரோஜா, அல்லி, அளரிச் செடிகளையும்
தவனம், மரு, மகிழ, வகூல, படால, புன்னாக, செண்பக மரங்களையும் கண்டு மனமகிழ்ந்து, அனந்தனை நோக்கி,
“அனந்தார்யா, உன்னைச் சீடனாகப் பெற்றதின் பலனை இன்று அடைந்தேன்” என்று கூறினார்.

முதன்முதலில் அத்தோட்டத்தில் பூப்பூத்த மகிழ மரத்தின் மேல் அனந்தனுக்கு தனிப்பற்று!
இன்றும் உத்சவரான மலையப்ப சுவாமி, வனபோஜன உற்சவத்தின்போது இந்த மகிழ மரம் முன் எழுந்தருளுகிறார்!
அந்த மகிழ மரத்துக்கே அனந்தன் நினைவாகப் பரிவட்ட மரியாதையும் தரப்படுகிறது.
அத்தோட்டம், இப்போது ‘அனந்தாழ்வான்’ தோட்டம் என்றே அழைக்கப்படுகிறது.

கொஞ்சம் கோபக்காரரான அனந்தார்யா, ஒரு முறை தனது நிறைமாத கர்ப்பிணியான மனைவிக்கு தோட்டத்தில்
உதவி செய்ய முற்பட்ட சிறுவன் ஒருவனை (தான் மட்டுமே திருவேங்கடமுடையானுக்கு சேவை செய்ய வேண்டும்
என்ற அதீத விருப்பத்தில் ஏற்பட்ட சினத்தால்) கடப்பாரையால் தாடையில் அடித்து விட்டார்.
அச்சிறுவனைத் அவர் துரத்திச் சென்றபோது, அவன் கோயிலுக்குள் நுழைந்து மாயமாய் மறைந்து விட்டான்.
கோயில் அர்ச்சகர்கள், மூலவப் பெருமாளின் தாடையில் ரத்தம் வருவதைக் கண்டு, அனந்தார்யாவிடம் கூறினர்.
சிறுவனாக வந்தவர் பெருமாளே என்பதை உணர்ந்த அனந்தார்யா, அடிபட்ட தாடையில் பச்சைக் கற்பூரம் வைத்து,
தன்னை மன்னித்தருளுமாறு மனமுருக வேண்டினார்! இரத்தம் வருவதும் நின்றது!
இன்றும், திருமலை கோபுர வாசலில், வடதிசைச் சுவரின் மேற்புறத்தில், ‘அந்தக்’ கடப்பாரையைக் காணலாம்!
அது போலவே, அனந்தன் நினைவாக, இன்றும், மூலவரின் தாடையில், பச்சைக் கற்பூரம் சாத்தப்படுகிறது.
அது பிரசாதமாகவும் பக்தர்களுக்கு அளிக்கப்படுகிறது.

ஆதிசேஷனின் அம்சமாகக் கருதப்படும் அனந்தாழ்வான் வைபவத்தில் ஒரு அழகான நிகழ்வு கூறப்பட்டுள்ளது.
ஒரு முறை, அடியார்கள் சிலர், திருவேங்கடமுடையானை தரிசிக்க திருமலையில் ஏறிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் மிகவும் களைப்புடனும், பசியுடனும், தாகத்துடனும் இருந்தபோது,
பெருமாள் ஒரு பிரம்மச்சாரி வடிவில் அவர்கள் முன் தோன்றி, பிரசாதமும், நீரும் வழங்க முற்பட்டார்.
அடியார்களோ, பெருமாளிடம் அவர் யாரென்றும், அவரின் ஆச்சார்யன் பற்றியும் அறியாமல்,
தாங்கள் அவர் தருவனவற்றை ஏற்க இயலாதென்று கூற, பெருமாள் தான் அனந்தாழ்வானின் சிஷ்யன் என்றும்,
அவர் தான் தன்னை உதவ அனுப்பியதாகவும் கூறினார் !!!
அடியார்கள் நம்ப மறுத்து, பெருமாளிடம் அவரது ‘ஆச்சார்ய தனியனை’ கூறுமாறு பணித்தனர்.
உடனே, பிரம்மச்சாரி வடிவில் வந்த பெருமாளே, பிரசித்தி பெற்ற இந்த தனியனின் முதல் பாகத்தை இயற்றினார்:

அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம்
ஆச்ரிதாநாம் ஸ¤சரணம் வந்தே நந்தார்ய தேசிகம்

போற்றுதலுக்குரிய கல்யாண குணங்களும், கருணையும், நற்சுற்றமும் கொண்ட ஆச்சார்ய அனந்தார்யனின்
திருவடிகளுக்கு என் மரியாதையைச் செலுத்துகிறேன்.
அவரே, தன்னை வந்தடையும் மாந்தர்க்கு சிறந்த அடைக்கலம் தந்து அவர்களது அஞ்ஞான இருளை
நீக்குகிறார்!

அடியார்கள், ராமநுசரின் (உடையவரின்) சம்பந்தம் தெளிவாகக் கூறப்படவில்லை என்று ஐயப்பட்டபோது,
பெருமாள் தனியனின் இரண்டாவது பாகத்தை எடுத்துரைத்தார் !

ஸ்ரீமத் ராமாநுஜாசார்ய ஸ்ரீபாதாம் போருஹத்வயம்
ஸதுத்தமாங்கஸந்தார்யம் அனந்தார்ய மஹம்பஜே !

இராமனுஜரின் இரண்டு பாதங்கள் போன்ற (அதனாலேயே, சான்றோர் எல்லாம் போற்றி வணங்கும்)
ஆச்சார்ய அனந்தார்யரின் அடி பணிந்துத் தொழுகிறேன்.

தனியனை ஏற்றுக் கொண்ட அடியார்கள், பெருமாள் தந்த பிரசாதத்தையும், நீரையும் ஏற்றுக் கொண்டனர்.

தமிழில், “ஏய்ந்தபெருங் கீர்த்தி” என்ற திருவாய்மொழித் தனியன் பாடல் அனந்தன் எழுதியதே.
‘வேங்கடாசல இதிகாசமாலா’ என்ற வடமொழி நூல் திருவரங்கத்தின் ‘கோயில் ஒழுகு’க்கு இணையானதாகப் போற்றப்படுகிறது.
அவர் இயற்றிய ‘ராமானுஜ சௌத்ஸ்லோகி’ என்ற நூலில், திருமலை, காஞ்சி, மேல்கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய
நான்கு புண்ணியத் தலங்களும் தனது ஆச்சார்யனான இராமனுஜரின் இதயத்துக்கு அருகே உள்ளவையாக விவரிக்கிறார்.
அது போலவே, ‘கோதா சௌத்ஸ்லோகி’ என்ற நூலில், ஆண்டாளின் பெருமையை, மிக அழகாக, உணர்வு பூர்வமாக,
வாசிப்பவரை ஈர்க்கும் வண்ணம் சொல்லியிருகிறார்!

புண்ணிய மூவரான, இராமனுஜர், பெரிய திருமலை நம்பி, அனந்தாழ்வான் ஆகியோர் சேர்ந்து,
வைகான்ஸ ஆகம வழிப்பாட்டை திருமலையில் நிலைப்படுத்த வேண்டி, ‘பெத்த ஜீயங்கார் மடத்தை’ நிறுவினர்.
தனது ஆச்சார்யனான இராமனுஜர் மீது அளவு கடந்த பக்தியும், பாசமும் கொண்டவராக விளங்கினார் அனந்தாழ்வான்,
குருவின் வாக்கே வேதவாக்கு என்பதற்கும் எடுத்துக்காட்டாக விளங்கினார்!
உடையவர் இராமனுசரின் சன்னிதியை திருமலையில் அனந்தன் நிறுவினார்.
அங்குள்ள விக்ரகம், ஸ்ரீபெரும்புதூர், ஸ்ரீரங்கம் மற்றும் திருநாராயணபுரத்தில் உள்ள உடையவர்
திரு மூர்த்திகளை போலவே பிரசித்தம்
ஞான முத்திரையுடன் அப்பனுக்கு சங்கு ஆழி அளித்த திருமேனி அன்றோ
இராமனுஜர் சன்னிதியில் உள்ள சடாரி, ‘அனந்தாழ்வான்’ என்றே அழைக்கப்படுகிறது.

ஒரு சமயம், ஸ்ரீரங்கத்து பட்டர் (ராமானுஜரின் சீடர்) தனது சீடனை, அனந்தாழ்வானிடம் அனுப்பி,
‘உண்மையான ஸ்ரீவைஷ்ணவன்’ யாரென்று அறிந்து வரச் சொன்னார்.
அனந்தாழ்வான் சீடனிடம், ” உண்மையான ஸ்ரீவைஷ்ணவன் என்பவன்,
ஒரு நாரை போல், ஒரு கோழியைப் போல, உப்பைப் போல, உன்னைப் போல இருப்பவன்” என்று கூறினார்!!!
பொருள் விளங்காத அந்த சீடனுக்கு, பின்னாளில் பட்டர் அந்த வாக்கியத்தின் உட்பொருளை விவரித்தது சுவையானது.

‘நாரையைப் போன்றவன்’ என்பதற்கு, உண்மையான ஞானத்தைக் கொண்ட ஆச்சார்யனை சரணடைய காத்திருப்பவனாகவும்,
‘கோழியைப் போன்றவன்’ என்பதற்கு, வேதங்களின் சாரமான திருவாய்மொழியை நான்கு வேதங்களிலிருந்தும்
சிறந்ததாக பிரித்தெடுக்க வல்ல திறமை மிக்கவனாகவும்,
‘உப்பைப் போன்றவன்’ என்பதற்கு, பகவத், பாகவத, ஆச்சார்ய கைங்கர்யங்களில் கரைபவனாகவும்,
‘உன்னைப் போன்றவன்’ என்பதற்கு, அகந்தையும், ஆணவமும் இல்லாதிருப்பவனாகவும் உட்பொருள் அமைந்திருப்பதை,
பட்டர் அந்த சீடனுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்.

ஆச்சார்ய பக்திக்கு உன்னதமான எடுத்துக்காட்டாக வாழ்ந்த அனந்தாழ்வான்
புண்ணிய திருவாடிப் பூரத்து நாளில், ஆச்சார்யன் திருவடி அடைந்தார்.

———–

திருநக்ஷத்ரம் : சித்திரை, சித்திரை
அவதார ஸ்தலம் : சிறுபுத்தூர்/கிரங்கனுர் (பெங்களூரு-மைசூர் வழித்தடத்தில்)
ஆசார்யன் : அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
பரமபதம் அடைந்த இடம்: திருவேங்கடம்
எழுதிய கிரந்தங்கள் : வேங்கடேச இதிகாச மாலை, கோதா சது:ச்லோகி, ராமானுஜ சது:ச்லோகி

அநந்தாழ்வான் – அநந்தாசார்யார் மற்றும் அநந்தஸூரி என்று அழைக்கப்பட்டவர் எம்பெருமானாரின் பெருமைகளைக் கேள்வி பட்டு
எச்சான், தொண்டனுர் நம்பி, மருதூர் நம்பி ஆகியோருடன் அவரை நாடிச் சென்றார்.
எம்பெருமானாரின் திருவடித்தாமரைகளில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து அவருடைய நிழலில் இருக்க ஆசைப் பட்டார்.
அந்தச் சமயத்தில் தான் எம்பெருமானார் யஞ்ய மூர்த்தி என்பவரைத் திருத்திப் பணிகொண்டு அவரை
அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்று திருநாமமிட்டு ஸ்தாபித்திருந்தார்.
எனவே, தன்னை நாடிய அநந்தாழ்வானையும் மற்றவர்களையும் அருளாளப் பெருமாள் எம்பெருமானாருக்கு சிஷ்யர் ஆக்கினார்.
அனைவரும் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டனர். அவர்கள் என்னதான் தன்னுடைய சிஷ்யர்களாக இருந்தாலும்
எல்லோருமே எம்பெருமானாரின் திருவடித்தாமரைகளிலேயே ஆச்ரயித்து இருக்க வேணுமென்று
அருளாளப் பெருமாள் எம்பெருமானார் கேட்டுக்கொண்டார்.
திருமலையில் எம்பெருமானாரின் திருவடி நிலைகளுக்கு அநந்தாழ்வான் என்றே பெயர்.

அநந்தாழ்வானுக்கும் மதுரகவி ஆழ்வாருக்கும் உள்ள சில ஒற்றுமைகள்:

இருவருக்கும் ஒரே திருநக்ஷத்ரம் …சித்திரை-சித்திரை
இருவருமே முழுவதுமாக ஆசார்ய நிஷ்டையில் திளைத்தவர்கள்.
மதுரகவியாழ்வார் நம்மாழ்வார் திருவடிகளிலும் அநந்தாழ்வான் எம்பெருமானாரின் திருவடிகளிலும் ஆச்ரயித்து இருந்தனர்.

எம்பெருமானார் திருவாய்மொழியின் தேனான பாசுரங்களுக்கு வ்யாக்யானம் சாதித்துக் கொண்டிருந்தபோது
ஒரு நாள், “ஒழிவில் காலமெல்லாம்” பதிகத்தில் (3.3) நம்மாழவார் திருவேங்கடமுடையானுக்குத் தன்னுடைய
நீண்ட நாள் ஆசையான உயர்ந்த கைங்கர்யங்களைச் செய்ய வேணுமென்று வெளிப்படுத்தியிருந்தார்.
அப்பதிகத்தில் திருவேங்கடமுடையான் உயர்ந்த புதிய புஷ்பங்களில் ஆசை உடையவராக இருந்ததைக் கூறியிருந்தார்.
இதை மனதில் கொண்டு எம்பெருமானார் அங்கிருந்தோரைப் பார்த்து யாரேனும் திருமலைக்குச் சென்று
அழகிய நந்தவனம் அமைத்து ஆழவார் விரும்பிய அந்த புஷ்ப கைங்கர்யத்தைச் செய்ய விருப்பம் உள்ளதா எனக் கேட்க
அநந்தாழ்வான் உடனே எழுந்திருந்து ஆழவார் மற்றும் எம்பெருமானாரின் அந்த திருவுள்ளத்தைத் தாம் பூர்த்தி செய்வதாகக் கூறினார்.
அது கேட்டு எம்பெருமானார் சந்தோஷப்பட உடனே அநந்தாழ்வான் திருமலைக்கு விடை பெற்றுச் சென்றார்.
அவர் முதலில் திருவேங்கடமுடையனுக்கு மங்களாசாசனம் செய்து புதிய நந்தவனம் அமைத்து
அதற்கு “ராமானுஜன்” என்று பெயரிட்டு திருவேங்கடமுடையனுக்கு தினமும் புஷ்ப கைங்கர்யங்கள் செய்து வந்தார்.
இது கேட்டு எம்பெருமானார் அதைக் காண விருப்பம் கொண்டு தம்முடைய திருவாய்மொழி காலக்ஷேபத்தை
விரைவாக முடித்துக் கொண்டு திருமலைக்குப் பயணப்பட்டார்.

வழியில் காஞ்சிபுரம் தேவப்பெருமாளுக்கும் திருக்கச்சி நம்பிகளுக்கும் மங்களாசாஸனம் செய்துவிட்டு திருப்பதி வந்தடைந்தார்.
அநந்தாழ்வானும் சில ஸ்ரீவைஷ்ணவர்களும் எம்பெருமானாரை எதிர் கொண்டழைக்க மலை அடிவாரத்திற்குச் சென்றனர்.
ஆனால் எம்பெருமானார் திருமலையே ஆதிசேஷனின் அம்சம் எனக் கூறி அதன் மேலேற மறுத்துவிட்டார்.
பின் அங்கிருந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் எல்லோரும் “தேவரீரே மறுத்துவிட்டால் நாங்கள் எவ்வாறு ஏறுவோம்” என்று
மிகத் தாழ்மையுடன் வினவ அவரும் அதை ஆமோத்தித்துப் பின் மலை மேல் ஏறினார்.
திருமலை வந்தடைந்தவுடன் திருமலை நம்பியே வந்து எம்பெருமானாரை வரவேற்று அழைத்துச் சென்றார்.
ஸ்வாமி பின் திருமலையில் அநந்தாழ்வானால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த “ராமானுஜன்” நந்தவனத்தை பார்த்து
அங்கு நேர்த்தியாக வளர்க்கப்பட்ட பலவித வண்ண மலர்களைப் பார்த்து பேருவகை கொண்டார்.
திருமங்கை ஆழ்வார் கூறியது போல “வளர்த்ததனால் பயன் பெற்றேன்” (பரகால நாயகி ஒரு கிளி வளர்த்தாள்.
அது சதா சர்வ காலமும் எம்பெருமானின் திருநாமத்தையும்/சரிதத்தையும் திரும்பத் திரும்ப கூறிக்கொண்டே இருந்ததால்
பரகால நாயகி அக்கிளியை “வளர்த்ததால் பயன் பெற்றேன்” என்று பேரானந்தம் கொண்டாள்).
அவ்வாறே எம்பெருமானாரும் அநந்தாழ்வானின் அர்பணிப்பைப் பார்த்து பேருவகை கொண்டார்.

ஒரு சமயம் அநந்தாழ்வானும் அவரது கர்ப்பிணி மனைவியும் நந்தவனத்திற்காக. ஒரு சிறிய குளம் வெட்டிக் கொண்டு இருந்தனர்.
அப்போது எம்பெருமானே ஒரு சிறுவனாகத் தோற்றம் கொண்டு அவர்களுக்கு உதவி செய்ய வந்தான்.
ஆனால் தன்னுடைய ஆசார்யனின் கட்டளையை தானே நிறைவேற்ற எண்ணிய அநந்தாழ்வான் அச்சிறுவனின் உதவியை மறுத்து விட்டார்.
ஆனால் அநந்தாழ்வான் இல்லாத சமயத்தில் அவருடைய மனைவி அச்சிறுவனின்உதவியைப் பெற்றுக் கொண்டாள்.
இதைக் கேள்வியுற்ற அநந்தாழ்வான் மிகுந்த கோபம் கொண்டு அச்சிறுவனை விரட்டிக் கொண்டு ஓடினார்.
இறுதியில் தாம் வைத்திருந்த கடப்பாரையை அவன் மீது எறிந்தார்.
அக்கடப்பாரை அச்சிறுவனின் நாடியில் பட அவனும் ஓடி சன்னதிக்குள் மறைந்தான்.
திருவேங்கடமுடையானின் முகவாயிலும் அடி பட்டதாகக் காட்சிளிக்க, அதற்காகத்தான் நம்ம இன்றளவும்
திருவேங்கடமுடையனுக்குப் பச்சைக் கற்பூரம் சார்த்தி குளிரப் பண்ணுகிறோம்.

ஒரு முறை அநந்தாழ்வானை ஒரு சர்ப்பம் தீண்டிவிட்டது. அப்போது உடனிருந்தவர்கள் மிகுந்த கவலை அடைய அவர் கூறினார்.
“என்னைத் தீண்டிய சர்ப்பம் பலமுடையதாக இருந்தால் நான் இந்த சரீரத்தை வ்ரஜை நதியில் நீராடித் தொலைத்து விட்டுப்
பின் பரமபதத்தில் இருக்கும் எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்வேன்.
மாறாக இருந்தால் இங்குள்ள புஷ்கரிணியில் நீராடி திருவேங்கடத்திலேயே கைங்கர்யங்கள் செய்வேன்” என்றார்.
அவர் கைங்கர்யத்தில் அவ்வளவு ஊற்றம் உடையவராக விளங்கினார். தன்னுடைய தேஹ அபிமானமே இல்லாதிருந்தார்.

மற்றறொரு முறை அவர் பக்கத்தில் ஒரு ஊருக்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது திருவேங்கடத்திலிருந்து அவர் பிரசாதங்கள் கொண்டு வந்திருந்தார். அவற்றைப் பிரித்த போது
அதில் பல எறும்புகள் இருப்பதைப் பார்த்துத் தன்னுடைய சிஷ்யர்களைப் பார்த்து அவற்றை மீண்டும் மலையிலே கொண்டு விட பணித்தார்.
ஏனென்றால் குலசேகர ஆழவார் கூறியது போல் (அவரும் எம்பெருமானின் பக்தர்களும் ) அவர் மலையில் ஏதேனுமாக இருக்க ஆசைப் பட்டாரே.
அதனால் இந்த எறும்புகள் அவர்களாக இருக்கக் கூடும். எனவே நாம் அவர்கள் திருவேங்கடத்தில் வாழ்வதற்கு தொந்தரவு செய்யக் கூடாது என்றார்.

ஒரு முறை அநந்தாழவான் திருவேங்கடமுடையானுக்கு மாலை தொடுத்துக் கொண்டிருந்தபோது அவரை உடனே அழைத்து
வரும்படி ஒருவரை திருவேங்கடமுடையான் பணித்தார். ஆனால் அநந்தாழ்வான் தான் தொடுத்துக் கொண்டிருந்த
மாலை கைங்கர்யம் முடிந்த பின் தாமதமாகத் திருவேங்கடமுடையானிடம் சென்றார்.
அவருடைய கால தாமதத்திற்குக் காரணம் கேட்க அதற்கு அவர், தமக்கு புஷ்பங்கள் எல்லாம் மொட்டாக மலரும் தருவாயில்
இருக்கும்போதே மாலை கட்டி முடித்துவிடவேண்டும் என்றும் மேலும் சந்நிதியில் அவருக்கான கைங்கர்யங்கள் ஏதுமில்லை என்பதால்
எம்பெருமானாரால் கட்டளையிடப்பட்ட “கைங்கர்யத்தைத் தவிர வேறு கார்யம் இல்லை” என்று பதிலுரைத்தார்.
அதற்கு எம்பெருமான் “நான் உம்மை திருமலையிலிருந்தே வெளியேற வேண்டும் எனப் பணித்தால் என்ன செய்வீர்?” என்று வினவ
அதற்கு அவர், “நீர் எனக்குச் சில காலம் முன்பாக இங்கு வந்தீர். ஆனால் நான் எம் ஆசார்யன் கட்டளையாலே இங்கு வந்து சேர்ந்தேன்.;
அவ்வாறிருக்க நீர் எப்படி எம்மை வெளியேறச் சொல்ல முடியும்” என்று கேட்டார்.
அது கேட்ட எம்பெருமான், அநந்தாழ்வானின் மிக சிறந்த ஆசார்ய நிஷ்டையைக் கண்டு மிகுந்த ஸந்தோஷம் அடைந்தார்.

அநந்தாழ்வானின் பெருமைகளையும் அறிவுரைகளையும் வ்யாக்யானங்களில் கூறிய படி சிலவற்றை இங்கே காண்போம்

பெரியாழவார் திருமொழி 4.4.1 – மணவாள மாமுனிகள் வ்யாக்யானம் –
இந்தப் பாசுரத்தில் திருக்கோஷ்டியூர் ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆசார்யனுக்கு உகப்பான வார்த்தைகளைத் தவிர
வேறெந்த வார்த்தைகளையும் பேச மாட்டார்கள் என்று ஆழ்வார் புகழ்கிறார்.
பட்டர் மேல் அநந்தாழ்வானுக்கு இருந்த பற்றுதலை (பட்டர் அநந்தாழ்வாழ்வானை விட வயதில் சிறியவராக இருந்தாலும்)
மாமுனிகள் வெளிப்படுத்துகிறார். அநந்தாழ்வானுடைய அந்திமக் காலத்தில் அவர் சில ஸ்ரீவைஷ்ணவர்களைப் பார்த்து
பட்டருக்கு மிகவும் நெருக்கமான/பிடித்தமான பெயர் என்று கேட்க அதற்கு அவர்கள் பட்டருக்கு மிகவும் பிடித்தமான
நம்பெருமாள் பெயரான “அழகிய மணவாளன்” என்று பதில் கூறினர்.
அதற்கு அநந்தாழ்வான் ஒரு கணவனுடைய பெயரைச் சொல்லுவது நம் சம்பிரயதயத்திற்கு எதிரானது என்றாலும்
பட்டருக்கு உகப்பானது என்பதால் தாமும் அந்தப் பெயரையே சொல்வதாகவும் கூறி
அந்தத் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டே பரமபதம் அடைந்தார்.
அவருக்கு எம்பெருமானாரின் பெயரையே சொல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் பட்டருக்குப் பிடித்தமான பெயர்
அழகிய மணவாளன் என்பதால் அதையே தாமும் கூறினார்.

நாச்சியார் திருமொழி 7 .2 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம்: –
இந்தப் பாசுரத்தில் ஆண்டாள் பாஞ்சஜன்யம் ஸமுத்ரத்தில் பிறந்தாலும் முடிவில் எம்பெருமானின்
திவ்ய திருக்கரங்களில் சென்றடைந்தது. இதைப் பற்றி விளக்கும்போது பெரியவாச்சான் பிள்ளை,
அநந்தாழ்வான் மற்றும் நஞ்சீயர் தொடர்பான விஷயத்தைக் கூறுகிறார்.
பட்டரால் திருத்திப் பணி கொள்ளப்பட்ட ஒரு வேதாந்தி தம்முடைய செல்வத்தையெல்லாம் மூன்று பங்காகப் பிரித்து
இரண்டு பகுதிகளைத் தன்னுடைய இரண்டு மனைவிகளுக்கும் கொடுத்து விட்டு மூன்றாவது பங்கைத் தமது ஆசார்யரான
பட்டரிடம் ஸமர்ப்பித்துவிட்டுத் தாம் ஸந்யாஸம் ஏற்றுக் கொண்டு தம்முடைய ஆசார்யனுக்குக் கைங்கர்யம் செய்ய விரும்பி ஸ்ரீரங்கம் வந்தார்.

இதைக் கேள்விப்பட்ட அநந்தாழ்வானும் அந்த வேதாந்தியிடம் “நீர் கிருஹஸ்தாச்ரமத்தில் நல்லபடியாக சௌகர்யமாகத் தானே
இருந்து வந்தீர். நீர் அங்கேயே தொடர்ந்து இருந்துகொண்டு ஸம்பரதாய விஷயத்தை நன்றாக அறிந்துகொண்டு
ஆசார்யனுக்கும் பாகவதர்களுக்கும் கைங்கர்யம் பண்ணி கொண்டு இருந்து பின்பு அப்படியே பரமபதம் அடைந்திருக்கலாமே.
ஏன் ஸந்யாஸம் ஏற்றுக் கொண்டீர்?” என்றார்.
வேறு சில ஸ்ரீவைஷ்ணவர்கள் அதற்கு “என்ன செய்ய” என்று கேட்க
அநந்தாழ்வானும் “ஒருவர் திருமந்திரத்திலே பிறந்து (பரமாத்மா ஜீவாத்மா சம்பந்தத்தை அறிந்து கொண்டு)
பின் த்வய மஹா மந்த்ரத்தாலே வளர்ந்து (பரமாத்மாவே உபாயம் உபேயம் என்று அறிந்து கொண்டு)
அதற்குத் தகுந்தாற் போல் வாழ வேண்டும்” என்று அருளினார்.

நாச்சியார் திருமொழி 12.5 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் –
இந்தப் பாசுரத்தில் ஆண்டாள் எவ்வாறு எல்லா கோபர்களும் கோபிகளும் கண்ணன் எம்பெருமான் காளியன் தலையில் மேல் நின்று
நடனம் ஆடுவதைக் கேட்டு மூர்ச்சித்து விழுந்தார்கள் என்று விளக்குகிறாள்.
ஒரு முறை அநந்தாழ்வான் நம்பி குஹ தாசர் என்பவருடன் எம்பெருமானாரை தரிசிக்க சென்றார்.
அவர்கள் ஸ்ரீரங்கம் சென்று அடைந்த பொது வழியில் சில ஏகாங்கிகள் (கைங்கர்யபரர்கள்) மழித்த தலையோடு காவேரியிலிருந்து
நீராடிவிட்டு வருவதைப் பார்த்துக் காரணம் வினவ அவர்கள் எம்பெருமானார் இந்த பூவுலகை நீத்து பரமபதம் அடைந்ததைச் சொன்னார்கள்.
இதைக் கேட்ட உடனேயே நம்பி குஹ தாசர் அருகிலிருந்த மரத்தின் மேலேறி தம் உயிரை மாய்த்துக் கொள்ள விரும்பினார்.
அதற்கு அநந்தாழ்வான் “|நீர் எம்பெருமானார் பரமபதம் அடைந்த செய்தி கேள்விப்பட்ட அந்த க்ஷணமே உயிரை விட்டிருக்க வேண்டும்.
இப்போது மரத்தில் மீதிருந்து குதிப்பதால் உங்கள் உயிர் போகாது. ஆனால் உம்முடைய கால்கள் தான் உடைந்து போகும் என்றார்”.
இந்த நிகழ்வு கோப கோபிகளுக்கு கிருஷ்ணன் மீதிருந்த பற்றுதலை அழகாக விளக்குகிறது.

பெருமாள் திருமொழி 4.10 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் –
இந்தப் பதிகத்தில் குலசேகர ஆழ்வார் திருமலையில் தாம் ஏதேனுமாக வேண்டும் என்று கூறுவதன் மூலம்
திருவேங்கடத்தின் மீது தாம் கொண்டிருந்த பற்றுதலைக் கூறினார்.
அது போல அநந்தாழ்வானும் திருவேங்கட மலைக்கும் தமக்கும் ஏதேனும் ஒரு சம்பந்தம் இருக்க வேணும் என்பதற்காக
திருவேங்கடமுடையனாகவே ஆனாலும் பரவாயில்லை என்கிறார்.

பெரிய திருமொழி 5.5.1 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் –
இந்தப் பதிகத்தில் திருமங்கை ஆழ்வார் பரகால நாயகி பாவத்தில் திருவேங்கடத்தைப் பார்த்து “வேங்கடமே வேங்கடமே” என்று
கதறி அந்த திவ்ய தேசத்தின் மேல் தாம் கொண்டு இருந்த அளவில்லாப் பற்றுதலைக் கூறுகிறார்.
இதை நஞ்சீயர், பட்டர் எவ்வாறு நம்பெருமாளை “அழகிய மணவாளா” என்று கூப்பிட்டாரோ,
அநந்தாழ்வான் எவ்வாறு ஸ்ரீனிவாசனை “திருவேங்கடமுடையான்” என்று கூப்பிட்டாரோ அதற்கு ஒப்பிட்டுக் கூறுகிறார்.

திருவாய்மொழி 6.7.1 – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் –
இந்தப் பதிகத்தில் நம்மாழ்வாருக்கு வைத்தமாநிதி எம்பெருமானிடத்திலும் திருக்கோளூர் திவ்ய தேசத்தின் மேலும் இருந்த
அதீத பற்றுதலைக் கூறுகிறார். நம்பிள்ளை இதை அநந்தாழ்வானின் ஒரு நிகழ்வின் மூலம் விளக்குகிறார்.
அதாவது ஒருவன் அவனுடைய சொந்த ஊரான திவ்ய தேசத்தில் இருந்து கொண்டே அந்தப் பெருமாளுக்கு
கைங்கர்யம் செய்வதே சிறந்ததது என்பதைக் குறிப்பிடுகிறார்.
ஒருமுறை அநந்தாழ்வான் ஒரு ஸ்ரீவைஷ்ணவர் சோழ குலாந்தகன் என்ற ஊரில் ஒரு வயலில் உழவு வேலை செய்து
கொண்டிருப்பதைக் கண்டு அவரிடம் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று கேட்க அவரும் தாம் திருக்கோளுரைச் சேர்ந்தவன் என்று கூற
பின் ஏன் நீர் உமது சொந்த ஊரை விட்டு வந்து இங்கு வந்தீர் எனக் கேட்டார்.
அதற்கு அவர் தமது சொந்த ஊரில் அவருக்கு எந்த ஒரு வேலையும் கிடைக்கவில்லை என்றும் அதனால் இங்கு வந்ததாகவும் சொன்னார்.
அது கேட்ட அநந்தாழ்வான் நீர் உமது சொந்த ஊரில் சில கழுதைகளை மேய்த்தாவது சம்பாதித்துக் கொண்டிருந்திருக்கலாம்.
அது திருக்கோளூர் எம்பெருமானுக்கும் நம்மாழ்வாருக்கும் மிகவும் உகப்பாக இருந்திருக்கும் .
இங்கு வந்து வயலில் வேலை செய்வதற்குப் பதில் அங்கேயே இருந்து கொண்டு அவர்களுக்குக் கைங்கர்யங்கள்
செய்து கொண்டு இருந்திருக்கலாம் என்றார். இதன் மூலம் இந்த உலகில் வாழும் ஜீவாத்மாக்கள் ஒரு திவ்ய தேசத்தில்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் மத்தியிலேயே இருந்து கொண்டு கைங்கர்யத்தில் ஈடுபடுவதே சிறந்தது என்கிறார்.

திருவாய்மொழி 6.8.1 – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் –
இந்தப் பதிகத்தில் நம்மாழ்வார் பராங்குச நாயகி பாவத்தில் பிரிவாற்றாமையால் தாம் படும் வேதனையை
எம்பெருமானிடத்தில் சென்று கூற ஒரு பறவையைத் தூது விடுகிறார்.
அப்போது ஆழ்வார் அந்தப் பறவையிடம் அது தமக்கு தூதாகச் சென்றால் அதற்கு அவள்
இந்த ஸம்ஸாரம் என்கிற லீலா விபூதியையும் பரமபதம் ஆகிய நித்ய விபூதியையும் இரண்டையுமே அளிப்பதாகக் கூறுகிறாள்.
(பராங்குச நாயகியே எம்பெருமானின் நாயகியாகவும்/மனைவியாகவும் இருப்பதால்
எம்பெருமானுக்குச் சொந்தமான எல்லாமே அவளுக்கும் சொந்தம்) .
அப்போது ஒருவர் பராங்குச நாயகி பின் எங்கே தங்குவாள் எனக் கேட்க அதற்கு அநந்தாழ்வான் அந்த பறவை
எங்கே இடம் கொடுக்கிறதோ அங்கே இருப்பாள் என்று மிக அழகாகச் சொல்கிறார்.

திருவாய்மொழி 7.2.9 – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் –
இந்தப் பாசுரத்தில் ஆழ்வார், எம்பெருமானைப் பார்த்து “என் திருமகள் சேர் மார்பன்” என்று சொல்கிறார்.
அதாவது அவரே. மஹாலக்ஷ்மித் தாயாரின் உறைவிடம் என்பதால். ஆழ்வாரின் மேல் இருந்த மிகுந்த பற்றுதலால்
அநந்தாழ்வான் தன்னுடைய பெண்ணிற்கு “என் திருமகள்” என்று பெயரிட்டார்.

வார்த்தமாலை 345 –
ஒரு முறை பட்டர் தனது சிஷ்யர்களுள் ஒருவரை அநந்தாழ்வானிடம் சென்று ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் எவ்வாறு
நடந்து கொள்ள வேண்டும் என்று அறிந்து வரச் சொன்னார்.
அவரும் அநந்தாழ்வானின் திருமாளிகைக்குச் சென்ற போது அங்கே ததீயாராதனம் நடந்து கொண்டிருந்தது.
அங்கு இடம் முழுவதும் நிரம்பி இருந்ததால் அந்த சிஷ்யர் அங்கே எல்லோரும் உணவருந்தி முடிக்கும் வரை காத்திருந்தார்.
அவரைப் பார்த்து விட்ட அநந்தாழ்வான் அவரை வரவேற்று இறுதியில் தம்மோடு இருந்து பிரசாதம் பெற்றுக் கொள்ள வேண்டினார்.
பின் அவரைப் பற்றிய விவரங்கள் கேட்டபோது அந்த ஸ்ரீ வைஷ்ணவர் தாம் பட்டருடைய சிஷ்யர் என்றும்,
பட்டர் தான் அவரை ஒரு ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம் என்ன என்று அநந்தாழ்வானிடமிருந்து அறிந்து கொண்டு வரச் சொன்னதையும் கூறினார்.

அதற்கு அநந்தாழ்வான் கூறினார்,
ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் கொக்கு போலவும்,கோழி போலவும் உப்பைப் போலவும் உம்மைப் போலவும் இருக்க வேண்டும் என்று பதிலுரைத்தார்.

கொக்கு என்பது எப்போதும் மிகச் சிறந்த மீனுக்காக காத்திருந்து உண்ணும்.
அது போல ஸ்ரீவைஷ்ணவனும் பகவானையே எப்போதும் எல்லாவற்றிற்கும் அண்டி இருந்து பாகவத கைங்கர்யத்தையே
மிகச் சிறந்த ஆசீர்வாதமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கோழி எப்போதும் குப்பையைக் கிளறி அதிலிருந்து தனக்குத் தேவையான அரிசியை பொறுக்கிக் கொள்ளும்.
அது போல ஸ்ரீவைஷ்ணவனும் சாஸ்த்ரங்களிலிருந்து தேடி (அதில் எல்லா மனிதர்களுக்கும் தேவையான எல்லா விஷயங்களும் கிடைக்கும்)
அதிலிருந்து மிக உயர்ந்த விஷயங்களான பரகத ஸ்விகாரம் பாகவத கைங்கர்யம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு
அவற்றைப் பின் பற்றி நடக்க வேண்டும்.

உப்பு நம் உணவுப் பண்டங்களோடு கலந்து அந்த உணவை சுவையானதாக ஆக்கும்.
அதுபோல ஸ்ரீவைஷ்ணவன் என்பவன் தன்னுடைய அகங்காரம் எல்லாவற்றையும் அடக்கி இன்னொரு
ஸ்ரீவைஷ்ணவன் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும். மேலும் தான் இல்லாதபோது தான் செய்த
நல்ல செயல்களை மற்றவர்கள் எண்ணிப் பார்க்குமாறு இருக்க வேண்டும்.

இறுதியில் ஒரு ஸ்ரீவைஷ்ணவன் என்பவன் உம்மைப் போன்று பொறுமை காத்து பணிவோடு இருந்து
என்னிடமிருந்து விஷயங்களை அறிந்து கொண்டது போல ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவனும் அடுத்தவர்களின்
சந்தோஷத்திற்காக பணிவுடன் செயல் பட வேண்டும் என்றார்.

இன்றளவும் திருவேங்கடமுடையான் அநந்தாழ்வானை கௌரவிக்கிறார். ஒவ்வொரு வருடமும் அவருடைய திருநக்ஷத்ரமான
சித்திரை- சித்திரையிலும் அவருடைய தீர்த்த தினமான திருவாடிப்பூரம் அன்றும் அநந்தாழ்வானின் நந்தவனத்திற்கு எழுந்தருளி
தம்முடைய மாலை பிரசாதத்தையும் ஸ்ரீசடகோபத்தையும் அநந்தாழ்வான் சரம கைங்கர்யங்கள் நடந்த மகிழ மரத்திற்கு சாதிக்கிறார்.

அவர் முழுவதுமாக தான் வாழ்வை பாகவத நிஷ்டையிலேயே கழித்தார்.
எம்பெருமானாருக்கு மிகவும் நெருக்கமானவராக விளங்கினார்.
நாமும் அவருடைய திருவடித் தாமரைகளில் பணிந்து அவருடைய பாகவத நிஷ்டையைப் போல்
ஒரு துளி அளவாவது பெற ப்ரார்த்திப்போம்.

ஸ்ரீ அநந்தாழ்வானுடைய தனியன்:

அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம் |
ஆச்ரிதானாம் ஸுசரணம் வந்தே அநந்தார்ய தேசிகம் ||

மலையில் வேங்கடவற்கு மாமனார் வாழியே
மணிச் சுடர் கோன் அநந்தன் என வந்து உதித்தான் வாழியே
உலகுக்கோர் தஞ்சம் என உதித்து அருள்வோன் வாழியே
உலகமுண்ட மாலடியை உகந்து உய்ந்தோன் வாழியே
இலகு சித்திரை தன்னில் சித்திரையோன் வாழியே
எந்தை எதிராசர் இணையடியோன் வாழியே
அலர்மேல் மங்கை திருவுக்கு அப்பனார் வாழியே
அனந்தாழ்வான் திருவடிகள் அநவரதம் வாழியே –

https://acharya.org/mag/g/g0505.pdf–கீதாசார்யன் -505-ஐப்பசி 2020–மா முநிகழ் 650-திரு நஷத்ர மலர்

இயற்பெயர் அழகிய மணவாளன் -ஸந்யாஸ ஆஸ்ரமம் ஏற்றுக்கொண்ட பின்பும் இந்த திருநாமம் தொடரும் -பால்யாத் -ஸஹஜ -மஹாத்ம்யம் -அழகிய மணவாள மா முனிகள் -கொண்டாடுகிறோம்-கீதா உபதேசம் -62 திருநக்ஷத்ரம் -ஈடு ஸாதித்த மா முநி களுக்கும் 62 திருநக்ஷத்ரம்-எம் ஐயன் ராமானுஜன் -திருக்குமாரருக்கு திருநாமம் ஸாதித்து அருளினார்-

ராமாநுஜ ரஹச்யத்ரயம் மூலம் – நித்தியம்  -அனுசந்திக்க வேண்டியவை :1-திருமந்த்ரம் – திருவஷ்டாக்ஷரம்–ஓம் நமோ ராமாநுஜாய-2. த்வய மந்த்ரம்–ஸ்ரீமத் ராமாநுஜ சரணௌ சரணம் ப்ரபத்யே : /ஸ்ரீமதே  ராமாநுஜாய நம :  //3. சரமச்லோகம்–ஸர்வகர்மாணி  ஸந்த்யஜ்ய ராமாநுஜ இதி ஸ்மர /விபூதிம் ஸர்வபூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம //

ஒரு பரிதாபீ வருடத்தில் ஸ்வாமி மணவாள மாமுனிகள் பெரியபெருமாளை ஸேவிக்கின்றார்..!“நாளைமுதலாக நம்முடைய பெரிய திருமண்டபத்தில், பெரிய வண்குருகூர் நம்பியான ஆழ்வாருடைய, திருவாய்மொழிப்பொருளை, ஈடுமுப்பத்தாறாயிரத்துடன் நடத்தும்”
என்று நியமித்தருளினார் நம்பெருமாள்..!சொன்னதோடு மட்டுமின்றி, தம்முடைய ஒரு வருடத்தியத் திருநாட்களையெல்லாம் நிறுத்தி வைக்கின்றார்..!கலி 4533 பரீதாபீ வருஷம், ஆவணிமாதம் 31ஆம் தேதி, வெள்ளிக்கிழமை, சுக்ல சதுர்த்தி, ஸ்வாதி நக்ஷத்ரம் (16-9-1432) ஈடு துடங்கி, ஸ்ரீசைலேச தனியன் அவதரித்த நாள்: கலி 4534 – பிரமாதீச வருஷம் ஆனி மாதம் பௌர்ணமி ஞாயிறு, மூலநக்ஷத்ரம் (9-7-1433) சாற்று முறையன்று அர்ச்சக குமாரனாகத் தோன்றினார் அரங்கன்..ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்வணம் யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்”என்று தனியன் சொல்லி, ”அழகிய மணவாள மாமுனிகளை அடியேன் வணங்குகிறேன்” என்று வணங்கி நிற்கின்றார்..!“பக்தைர் பாகவத ஸஹா” “பாகவத ப்ரியன்” என்று பரமபாகவதர்களுக்கு தோழனாகவும், உற்றவனாகவும் மட்டுமின்றி தாஸனாகவும், பரம சிஷ்யனாகவும் இருக்கின்றார் அந்த பரமாத்மா..!

திருவானந்தாழ்வானுக்கு திருவேங்கடமுடையான் ஸாதித்த தனியனும் உண்டே-தன்னை நாடிய அநந்தாழ்வானையும் மற்றவர்களையும் அருளாளப் பெருமாள் எம்பெருமானாருக்கு சிஷ்யர் ஆக்கினார். அனைவரும் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டனர். அவர்கள் என்னதான் தன்னுடைய சிஷ்யர்களாக இருந்தாலும் எல்லோருமே எம்பெருமானாரின் திருவடித்தாமரைகளிலேயே ஆச்ரயித்து இருக்க வேணுமென்று அருளாளப் பெருமாள் எம்பெருமானார் கேட்டுக்கொண்டார். திருமலையில் எம்பெருமானாரின் திருவடி நிலைகளுக்கு அநந்தாழ்வான் என்றே பெயர்

அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம் |
ஆச்ரிதானாம் ஸுசரணம் வந்தே அநந்தார்ய தேசிகம் ||
–அனைத்து நற்குணங்களுக்கும் இருப்பிடமாகவும், அஞ்ஞானம் என்னும் இருளைப் போக்குபவராகவும், தன்னை ஆசிரயித்தவர்களுக்கு (நம்பியவர்களுக்கு) சிறந்த புகலிடமாகவும் இருக்கும் அனந்தாரியர் (அனந்தாழ்வான்) எனும் ஆச்சாரியரை வணங்குகிறேன். 

ஸ்ரீமத் ராமாநுஜாசார்ய ஸ்ரீபாதாம் போருஹத்வயம்
ஸதுத்தமாங்கஸந்தார்யம் அனந்தார்ய மஹம்பஜே !
-இராமனுஜரின் இரண்டு பாதங்கள் போன்ற (அதனாலேயே, சான்றோர் எல்லாம் போற்றி வணங்கும்) ஆச்சார்ய அனந்தார்யரின் அடி பணிந்துத் தொழுகிறேன்.

தனியனை ஏற்றுக் கொண்ட அடியார்கள், பெருமாள் தந்த பிரசாதத்தையும், நீரையும் ஏற்றுக் கொண்டனர்.

இன்றளவும் திருவேங்கடமுடையான் அநந்தாழ்வானை கௌரவிக்கிறார். ஒவ்வொரு வருடமும் அவருடைய திருநக்ஷத்ரமான சித்திரை- சித்திரையிலும் அவருடைய தீர்த்த தினமான திருவாடிப்பூரம் அன்றும் அநந்தாழ்வானின் நந்தவனத்திற்கு எழுந்தருளி தம்முடைய மாலை பிரசாதத்தையும் ஸ்ரீசடகோபத்தையும் அநந்தாழ்வான் சரம கைங்கர்யங்கள் நடந்த மகிழ மரத்திற்கு சாதிக்கிறார்.

ஈட்டுப் பெருக்கர் கோயில் செல்வ அழகிய மணவாள மா முனிகள் -கோயில் செல்வமான பெரிய பெருமாளைக் கொண்டவரே -கோயிலுக்கு செல்வமான -ஸ்ரீ ரெங்க தனம் மா முனிகள் –

அ*ரங்கத்தில் *ஆ*னித்திருமஞ்சனம் *இ*டர்பாடில்லாமல், *ஈ*ரொன்பது கைங்கர்யபர்களுடன்,*உ*வகையுடன், *ஊ*ர் ஜனநெரிசல் இல்லாமல், *எ*ளிமையாக ,*ஏ*ற்றமுடன், *ஐ*வகை வாத்யங்கள் முழங்க, *ஒ*ய்யாரமாக யானையின் மீது, *ஓ*ங்கார நாதம் ரீங்காரமிட ,அகிலத்தின் *ஔ*ஷதமாம் நம் அரங்கநகரப்பனுக்கு *ஜேஷ்டாபிஷேக* *வைபவம் நடைபெற்றது அனைத்துலக அடியார்களுக்கும் ஒருவித மன நிறைவை அளித்தது*

ஶிஷ்யர்கள் : அஷ்ட திக் கஜங்கள் : பொன்னடிக்கால் ஜீயர் ,கோயில் அண்ணன் , பத்தங்கி பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர், திருவேங்கட ஜீயர், எறும்பியப்பா , அப்பிள்ளை , அப்பிள்ளார் , பிரதிவாதி பயங்கரம் அண்ணா. நவ ரத்னங்கள் : ஸேனை முதலியாண்டான் நாயனார், ஶடகோப தாஸர் (நாலூர் சிற்றாத்தான்), கந்தாடை போரேற்று நாயன், ஏட்டூர் சிங்கராசாரியார், கந்தாடை அண்ணப்பன், கந்தாடை திருகோபுரத்து நாயனார், கந்தாடை நாரணப்பை , கந்தாடை தோழப்பரப்பை, கந்தாடை அழைத்து வாழ்வித்த பெருமாள். மணவாள மாமுநிகளுக்கு பல திருவம்சங்களிலிருந்தும், திருமாளிகையிலிருந்தும் மற்றும் திவ்ய தேஶங்களிலிருந்தும் மேலும் பல ஶிஷ்யர்கள் இருந்தார்கள்.

பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் :தினமும் அவர் மாமுனிகள் சாப்பிட்ட சேஷப் பிரசாதத்தை (மிச்சத்தை) உண்ணுவார். மாமுனிகள் சாப்பிட்ட வாழை இலையிலேயே சாப்பிடுவார். மாமுனிகள் மோர் சாதத்துடன் முடிக்கும் பொழுது பட்டர்பிரான் ஜீயர் அந்த சுவை மாறாமல் இருப்பதற்காக மோர் சாதத்திலிருந்தே சாப்பிடத் தொடங்குவாராம். அதனால் அவர் மோர் முன்னர் ஐயர் என அழைக்கப்பட்டார்.

இவரது தாயாரின் ஊரான சிக்கில் கிடாரத்திலே இவரது தந்தையார் இடத்திலே வேதாத்தியயனம் செய்து ஸாமான்ய ஶாஸ்திரங்களையும் கற்றுத் தேறுகிறார். நாளடைவிலே திருமணமும் செய்து வைக்கப் படுகிறார்.திருவாய்மொழிப் பிள்ளையின் வைபவங்களைச் செவியுற்று ஆழ்வார்திருநகரிக்குத் திரும்பிய இவர், திருவாய்மொழிப் பிள்ளையின் திருவடிகளைத் தஞ்சம் அடைகிறார்.

இவருக்கு ஓர் திருமகனார் பிறக்க , அவருக்குத் திருநாமம் சாற்றி அருளவேண்டும் என்று திருவாய்மொழிப் பிள்ளையை ப்ரார்த்திக்கிறார். திருவாய்மொழிப் பிள்ளை , இராமானுச நூற்றந்தாதியிலே இராமானுச என்று 108 முறை வருவதால், அந்தத் திருநாமமே உகந்ததென்று ஸாதித்தருளி, இவரது திருக்குமாரருக்கு “எம்மையன் இராமானுசன் ” என்று திருநாமம் சாற்றி அருளுகிறார்.

இவரது வைபவங்களைக் கேட்டறிந்த அழகிய வரதர் என்னுமவர் இவரின் முதல் சீடராய் வந்தடைகிறார். அழகிய வரதர் ஆசார்யனுக்கு அடிமை செய்யும் பொருட்டு துறவு புகுகிறார். அவருக்கு மணவாள மாமுனிகள் “வானமாமலை ஜீயர்” (அழகிய வரதரின் ஊர் வானமாமலை ஆதலால்) என்றும் பொன்னடிக்கால் ஜீயர் (இவர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரை வந்தடைந்தாரோ மணவாள மாமுனிகளின் சீடர்கள் எண்ணிக்கை பெருகிற்று ஆதலால் செம்பொற்கழலடி செல்வா பலதேவா என்னுமாப்போலே) என்றும் திருநாமம் சாற்றியருளினார் .

மணவாளமாமுனிகள் பெரிய பெருமாள் ஸந்நிதி துவாரபாலகர்களுக்கு வெளியில் அமைந்த பெரிய திருமண்டபத்திற்கு எழுந்தருளுகையில், நம்பெருமாள் தனது தேவிமார்களோடும், ஸேனை முதல்வரோடும், கருடனோடும், திருவானந்தாழ்வானோடும் மற்றுமான ஆழ்வார் ஆசார்யர்கள் பரிவாரங்களோடும் காத்துக் கொண்டிருந்தார். இதனைக் கண்டு நெகிழ்ந்த பெரிய ஜீயர் காலக்ஷேபத்தை ஈடு 36000 படி வ்யாக்யானத்தை 6000 படி , 9000 படி , 24000 படி, 12000 படி உள்ளிட்ட மற்ற வ்யாக்யானங்களோடு தொடங்குகிறார். பாசுரங்களுக்குப் பதபதார்த்தம் (சொல்) இது என்றும், ஶ்ருதி, ஸ்ரீபாஷ்யம், ஶ்ருதப்ரகாஶிகை, ஸ்ரீ கீதாபாஷ்யம், ஸ்ரீ பாஞ்சராத்ரம், ஸ்ரீ ராமாயணம், ஸ்ரீ விஷ்ணு புராணம் போன்றவைகளின் அடிப்படையில் அர்த்தம் இது என்றும் மிக விஶதமாக நெய்யிடை நல்லதோர் சோறாய் சமைத்து சுமார் 10 மாத காலம் ஸாதித்து வந்தார். இறுதியிலே சாற்றுமறைக்கான தினம் ஆனி திருமூலத்தன்று அமைகிறது. இதனைத் தொடர்ந்து நம்பெருமாள் அரங்கநாயகம் என்ற சிறு பிள்ளையின் வடிவில், மண்டபத்தில் உள்ளோர் தடுத்தும், பெரிய ஜீயர் திருமுன்பே வந்து தோன்றி “ஸ்ரீஶைலேஶ தயாபாத்ரம் ” என்று ஸாதித்து மேலும் ஸாதிக்குமாறு கேட்க “தீபக்த்யாதி குணார்ணவம்” என்றும் மேலும் ஸாதிக்கப் பணிக்கும் பொழுது “யதீந்திர ப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முனிம் ” என்று முடித்து ஓடி சென்றுவிட்டார். இந்த தனியன் ஶ்லோகத்தை ஓலைப்படுத்தி அச்சிறுவனை மீண்டும் வாசிக்கக் கூறுகையில், அச்சிறுவனால் அதைப் படிக்க இயலாமையைக் கண்டு அனைவரும் முன்னர் வந்த சிறுவன் நம்பெருமாளே அன்றி ஸாதாரண பாலகன் அல்லன் என்று உணர்ந்தனர். நம்பெருமாள் இவ்வாறாக ஆசார்யனுக்குத் தனியன் ஸமர்பித்ததனைத் தொடர்ந்து அந்தத் தனியனை பட்டோலைப் படுத்தி பெரிய பெருமாள் திருமுன்பே ஸமர்ப்பிக்கையிலே, எம்பெருமான் அனைத்து திவ்யதேஶ விலக்ஷணர்களினாலும் அருளிச்செயல் தொடங்குவதற்கு முன்னரும் அருளிச்செயல் ஸாதித்த பின்னரும் இந்தத் தனியன் அனுஸந்திக்க படவேண்டியது என்று நியமிக்க ஸேனை முதல்வரிடமிருந்து அனைத்து திவ்ய தேஶ விலக்ஷணர்களுக்கும் ஸ்ரீமுகம் அனுப்பப்பட்டது . இந்த வேளையிலே , ஸ்ரீ வைஷ்ணவர்களின் ஆணைக்கிணங்க மணவாள மாமுனிகளைக் கொண்டாடும் ஒரு வாழி திருநாமத்தை அப்பிள்ளை ஸாதித்தார். மணவாள மாமுனிகளின் ஒப்பற்ற இந்த வைபவம் காட்டு தீ போல் அனைத்து திக்குகளிலும் பரந்தது .

மணவாள மாமுனிகளின் பெருமைகளை நமக்கு உணர்த்தும் வகையில் திருவேங்கடமுடையான், திருமாலிரும்சோலை அழகர் மற்றும் பத்ரீ நாராயணன் தானும் இந்தத் தனியனை வெளியிட்டு இதனை அனுஸந்திக்க நியமிக்கிறார்கள்.மணவாள மாமுனிகளின் திருவுள்ளத்தில் வட நாட்டு திவ்யதேஶங்களின் நினைவு வர, இவரின் சார்பில் இவரது ஶிஷ்யர்கள் யாத்திரையை மேற்கொள்கின்றனர்.-தனது திவ்ய பாதுகைகளை மணவாள மாமுனிகள் எறும்பியப்பாவிற்கு தந்து அருளுகிறார்.-பின்னர் தனது திருவாராதன பெருமாளான அரங்கநகரப்பனைப் பொன்னடிக்கால் ஜீயரிடம் அளித்து, வானமாமலையில் ஒரு மடத்தை நிறுவி அங்கே தெய்வநாயகனுக்குக் கைங்கர்யம் செய்து வருமாறு பணிக்கிறார்.மணவாளமாமுனிகள் பாண்டியநாட்டு யாத்திரையை மேற்கொள்கிறார் இம்முறை அவ்வூர்களை ஆண்டு வந்த சிற்றரசனான மஹாபலி வாணநாத ராயன் இவரைத் தஞ்சம் அடைந்து , பெரிய ஜீயரின் திருவுள்ளப்படிப் பல திவ்யதேஶ கைங்கர்யங்களைச் செவ்வனே செய்து வருகிறான்.மதுரைக்கு செல்லும் வழியிலே ஒரு புளியமரத்தின் அடியில் தங்கி ஒய்வு எடுக்கிறார். பின் மணவாள மாமுனிகள் புறப்படும் வேளையிலே அடியார்கள் வேண்ட, அதை உகந்து தானும் அம்மரத்தை தொட்டு அதற்குப் பெரிய வீடளிக்கிறார். பின் எம்பெருமான்களுக்கு பல்லாண்டு பாடிவிட்டு திருவரங்கம் மீளுகிறார்.தன் சீடர்கள் மூலமாக பல கைங்கர்யங்களைத் தானும் செய்து முடிக்கிறார். மேலும் திருமாலிரும்சோலை அழகருக்குக் கைங்கர்யம் செய்ய ஒரு ஜீயரை நியமித்து அங்கு அனுப்பிவைக்கிறார்.பெரியவாச்சான் பிள்ளை, அருளிச் செயலுக்குச் செய்த வ்யாக்யானங்களிலிருந்து பெரியாழ்வார் திருமொழியின் சில பகுதிகள் காணாமல் போக, அவற்றுக்குச் சரியாகத் தொலைந்த வார்த்தைகள் வரை வ்யாக்யானம் செய்து அருளுகிறார்.நாளடைவில் மணவாள மாமுனிகள் நோவு ஸாற்றிக்கொள்கிறார் (உடல் நலம் குன்றி விடுகிறது) ஆயினும் எழுதிக் கொண்டு வருகிறார். ஆசார்ய ஹ்ருதயத்திற்கு உரை எழுதுகையில் தன்னை மிகவும் வருத்திக் கொண்டு எழுதுகிறார். இவ்வாறு தன்னை வருத்திக் கொள்வதற்குக் காரணம் என்ன என்று ஶிஷ்யர்கள் வினவியதற்கு, இதனை வரும் ஸந்ததியினர் அறிவதற்காகத் தாம் மேற்கொள்வதாகச் ஸாதித்தார்.மணவாளமாமுனிகளுக்கு தனது திருமேனியை விடுத்து திருநாட்டிற்கு எழுந்தருளவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கிநிற்க , எம்பெருமானாரிடம் தன்னை சேர்த்துக் கொள்ளும்படி ப்ரார்த்தித்து உருகி ஆர்த்தி ப்ரபந்தத்தை அருளிச் செயதார். ஏராரும் எதிராசனாக உதித்திருந்தும் இதனைச் செய்ததற்குக் காரணம் இவ்வாறே தான் நாம் அனைவரும் கேட்கவேண்டும் என்பதை நமக்கு உணர்த்தும் பொருட்டேயாம்.இறுதியில் லீலா விபூதியை விட்டு புறப்படத் தான் திருவுள்ளம் பூண்டார் பெரிய ஜீயர். ஓர் முறை அருளிச் செயல்களைக் கேட்டு அனுபவிக்கவேண்டும் என்று இவர் திருவுள்ளம் கொள்ள அதனை பக்தியோடும் பெருத்த மையலினோடும் அடியார்கள் செய்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து விஶேஷமான ததீயாராதனையும் செய்து வைத்து அனைவரிடமும் அபராத க்ஷாமணம் கேட்டு நிற்க, சூழ்ந்த அடியார்கள் செல்வ மணவாள மாமுனிகளைக் குற்றொமொன்றும் இல்லாதவர் என்று கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் பெரிய பெருமாளின் கைங்கர்யங்களைச் செவ்வனே அன்புடனும் கவனத்துடனும் செய்து கொண்டுவருமாறு நியமித்தார்.இதனை அடுத்து “பிள்ளை திருவடிகளே சரணம்” என்றும் “வாழி உலகாசிரியன் ” என்றும் “எம்பெருமானார் திருவடிகளே சரணம் ” என்றும் அனுஸந்தித்து , எம்பெருமானைக் காணவேண்டும் என்ற மையல் பெருகத் தனது நலமுடைய கருணை விழிகளை மலரத் திறந்து எழுந்தருளியிருக்க, அம்மாத்திரமே எம்பெருமான் கருடன் மீது ஸேவை ஸாதித்துப் பெரிய ஜீயரை தன்னடிச்சோதியில் சேர்த்துக் கொண்டான். கூடி இருந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் துயரம் தாளாது வேரற்ற மரம் போல் சாய்ந்து விழுந்தனர். பெரிய ஜீயர் திருநாட்டிற்கு எழுந்தருளிய பிறகு அவர் பிரிவைத் தானும் தாளமுடியாத படியினால் லட்சுமிநாதனான பெரிய பெருமாளும் போகத்தை மறுத்துவிட்டார். பின்னர் ஸ்ரீவைஷ்ணவர்கள் தங்களைத் தாமே தேற்றிக் கொண்டு, பெரிய பெருமாளின் ஆணைக்கு இணங்க, ஆசார்யனின் சரம கைங்கர்யங்களைப் பெரிய பெருமாளின் ப்ரம்மோத்ஸவத்தை காட்டிலும் சிறப்பாகச் செய்வித்தனர்.வடநாட்டு யாத்திரையிலிந்து திரும்பிய பொன்னடிக்கால் ஜீயர் தாமும் ஆசார்யனின் சரம கைங்கர்யங்களைச் செவ்வனே செய்து முடிக்கிறார்

ஒரு முறை இரண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள் தங்களிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அதே சமயம் இரண்டு நாய்களும் தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டிருந்தன . இந்நிலையில் மணவாள மாமுனிகள் அவ்விரு நாய்களையும் கண்டு “நீங்கள் இருவரும் இந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் போல் ஸ்ரீ வசனபூஷணம் கற்றிருக்கிறீர்களோ, இத்தனைச் செருக்குடன் இருக்க ?” என்று கேட்க, அம்மாத்திரத்திலேயே அவ்விருவரும் தங்கள் பிழையை உணர்ந்து மணவாள மாமுனிகள் பொன்னடியில் மன்னிப்பு வேண்டி அன்று தொடங்கி ஸாத்விகர்களாய் இருந்தனர்.ஒருமுறை வட தேஶத்திலிருந்து ஒருவர் இவரிடம் சில பணத்தை ஸமர்ப்பிக்க, அது நேரான வழியில் ஸம்பாதித்ததல்ல என்பதை புரிந்துக்கொண்ட பெரிய ஜீயர், அதனை திருப்பித்தந்து விடுகிறார். பொருள் மீது அறவே ஆசை இன்றி, ஸ்ரீவைஷ்ணவர்கள் கொடுக்கும் ஸமர்பணைகளையே கைங்கர்யத்திற்கும் ஏற்றுக்கொண்டார்.ஒருமுறை ஒரு வயதான மூதாட்டி இவரது மடத்திற்கு வந்து தான் ஓரிரவு தங்குவதற்கு அனுமதி வேண்ட, அதை மறுத்த ஜீயர் தானும், “கிழட்டு அணிலும் மரம் ஏறும்” என்று ஸாதித்தார். அதாவது வயதான பெண்மணி தங்கினாலும் , வெளியிலுள்ளோர் மணவாள மாமுனிகளின் வைராக்கியத்தைச் சந்தேகப் பட நேரும் என்பதால் , அது போன்ற அபசாரங்களுக்கு சிறிதும் இடம் கொடுக்காது வந்தார் மணவாளமாமுனிகள்.ஒரு ஸ்ரீ வைஷ்ணவ அம்மங்கார், தளிகைக்கு காய்களைத் திருத்தி கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார். இதனை அவர் பக்தி பாவம் இன்றி செய்வதை உணர்ந்த பெரிய ஜீயர், கைங்கர்யத்தில் ஈடுபடுவோர் முழு பாவத்துடன் ஈடுபடவேண்டும் என்பதால் தண்டனையாக அவரை 6 மாத காலம், கைங்கர்யத்தை விட்டு விலக்கினார் .வரம்தரும்பிள்ளை என்ற அடியவர், மணவாள மாமுனிகளைத் தனியாக வந்து வணங்கினார். இதனைத் தொடர்ந்து பெரிய ஜீயர் எம்பெருமானிடத்திலோ ஆசார்யனிடத்திலோ ஸ்ரீ வைஷ்ணவர்கள் தனியே செல்லக் கூடாது என்றும் கூடி இருந்தே குளிர்தல் வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.பாகவத அபசாரம் கொடுமைமிகவாய்ந்தது என்பதை அறிவுறுத்தும் மணவாள மாமுனிகள் ஸ்ரீவைஷ்ணவர்கள் பரஸ்பரம் மரியாதை வைத்துக்கொள்வதை கண்காணித்து வந்தார்.அர்ச்சகர் ஒருவர், மாமுனிகளின் சீடர்கள் தம்மை மதிப்பதில்லை என்று மணவாள மாமுனிகளிடம் தெரிவிக்க,  அர்ச்சகரை எம்பெருமானும் பிராட்டியாராகவும் காணுமாறு தன ஶிஷ்யர்களுக்கு அறிவுறுத்தினார்.

செல்வந்தரான ஒரு ஸ்ரீவைஷ்ணவர், மணவாளமாமுனிகளிடத்தே ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணங்கள் யாவை என்று கேட்க, இதனை தொடர்ந்து பெரிய ஜீயர் அவற்றை நன்கு விளக்கினார். அவை இங்கே சுருங்க காண்போம், அதாவது உண்மையான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு,-எம்பெருமானின் திருவடிகளை தஞ்சமடைதல் மட்டும் போறாது-எம்பெருமானின் தீயிற் பொலிகின்ற செஞ்சுடராழி திருச்சக்கரத்தின் லாஞ்சனம் மட்டும் பெற்றுக்கொண்டால் போறாது.-ஆசார்யனிடத்தே பாரதந்த்ரனாய் இருத்தல் மாத்திரம் போறாது-பாகவதர்களுக்கு அடிமை செய்தல் மாத்திரம் போதாது-இந்த குணங்களோடு-சரியான நேரத்தில் எம்பெருமான் திருவுள்ளம் உகக்கும் கைங்கர்யங்களை செய்து வருதல் வேண்டும்.-ஸ்ரீவைஷ்ணவர்கள் திருவுள்ளபடி வந்து தங்கி தங்களுக்குப் பிடித்தவைகளைச் செய்வதற்குப் பாங்காக இல்லத்தை வைத்திருத்தல் வேண்டும்.பெரியாழ்வார் “என்தம்மைவிற்கவும் பெறுவார்களே ” என்று ஸாதித்ததற்கு அனுகூலமாக, ஸ்ரீவைஷ்ணவர்கள் நம்மை விற்பதற்கும் நாம் தயாராக இருத்தல் வேண்டும்.பாகவத ஶேஷத்வத்தை வளர்த்துக்கொள்வோம் ஆகில், எம்பெருமான் நமக்கு அனைத்து ஸம்பிரதாய அர்த்தங்களும் விளங்குமாறு அருளிவிடுகிறார். நிஷ்டையில் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள், தனித்து எதையும் பயிலவேண்டியது இல்லை ஏனென்றால்,அவர்கள் இருப்பதே சரம நிஷ்டையில் தான் என்பதால்.கடைபிடிக்காது உபதேஶம் செய்தல் வீணான செயல். அவ்வாறு செய்தல் பதிவ்ரதையின் கடமைகளை தாஸி அறிவுறுத்துதல் போன்றுபொருந்தாத ஒன்று.ஸ்ரீவைஷ்ணவர்களை வணங்குவதை விட உயர்ந்ததோர் தொண்டும் அல்ல அவர்களைப் பழிப்பதை விட கொடூரமான பாவமும் அல்ல.இவ்வாறு ஜீயர் தம் அறிவுரைகளைப் பெற்ற அந்த ஸ்ரீவைஷ்ணவர் மணவாள மாமுனிகளிடத்தே பெருத்த பக்தி கொண்டு தன கிராமம் திரும்பியும் இவரை வணங்கிக் கொண்டே இருந்தார்.

பெரியபெருமாள் இவரை ஆசார்யனாக ஏற்க, ஓராண் வழி ஆசார்ய குருபரம்பரையின் இறுதி ஆசார்யனாக எழுந்தருளி இருந்து குருபரம்பரா ஹாரத்தை பூர்த்தி செய்கிறார் .பெரிய பெருமாள் இவரின் சீடர் ஆன படியால், இவர்க்கு தனது ஶேஷ பர்யங்கத்தைச் ஸமர்ப்பித்தார். இன்றும் மணவாள மாமுனிகள் ஶேஷ பீடத்திலேயே எழுந்தருளி இருப்பதை நாம் ஸேவிக்கலாம். இதை மற்ற ஆழ்வார் ஆசார்யர்களிடத்தே காண இயலாது.தனது ஆசார்யனுக்குப் பெரிய பெருமாள் தானே தனியன் செய்து, மேலும் அனைத்து கோயில்கள், மடங்கள், திருமாளிகைகள் போன்ற இடங்களில் அருளிச்செயல் ஸேவிப்பதற்கு முன்னும் பின்னும் இதனைச் ஸேவிக்க உத்தரவும் இட்டார்.ஆழ்வார்திருநகரியிலே அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலத்தன்று ஆழ்வார் மணவாள மாமுனிகளுக்குத் தன்னுடைய பல்லக்கு, திருக்குடை, திருவாலவட்டம், வாத்தியங்கள் போன்றவற்றை அனுப்பிப் பின் இவரைத் தனது ஸந்நிதிக்கு வரவழைக்கிறார். இதன் பின்னரே ஆழ்வார் திருமண் காப்பு அணிந்து கொண்டு பெரிய ஜீயருக்கு பிரஸாதங்களை அளிக்கிறார்.மணவாளமாமுனிகளுக்கு இன்றும் திருவத்யயனம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒருவருக்குச் சீடர்களோ திருக்குமாரர்களோ தாங்கள் இருக்கும் வரை திருவத்யயனம் செய்து வைப்பார்கள். இவர் விஷயத்திலோ பெரிய பெருமாளே சீடனான படியால், இன்றைக்கும் தானே தனது அர்ச்சக பரிசாரகர்கள், வட்டில், குடை போன்ற விருதுகளை அனுப்பி திருவத்யயன உத்ஸவத்தைச் சிறப்பாக நடத்திவைக்கிறார். இது பெரிய ஜீயருக்கே உரிய தனிப்பெருமை-தனக்கென்று எவ்வித கோலாகலங்களோ உத்ஸவங்களோ விரும்பாத பெரிய ஜீயர், திருவரங்கம் திருப்பதியிலும் ஆழ்வார்திருநகரியிலும் தனது திருமேனி மிகச் சிறியதாக இருக்க வேண்டும் என்றே நிர்ணயித்து நம் கவனம் யாதும் எம்பெருமானிடத்திலும் ஆழ்வார் இடத்திலுமே இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.யாரையும் கடிந்து பேசாத மென்மையான திருவுள்ளம் கொண்டவர் அழகிய மணவாள மாமுனிகள். சில இடங்களில் பூருவாசார்ய வ்யாக்யானங்களில் முன்னிற்குப் பின் முரணாக சில வார்த்தைகள் காணப்பட்டாலும், அதனைப் பெரிது படுத்தாது குற்றம் காணாது எழுந்தருளி இருந்தார்.அருளிச் செயலிலேயே ஈடுபட்டிருந்த பெரிய ஜீயர், அருளிச் செயல்களையே கொண்டு வேதாந்த அர்த்தங்களை விளக்குவார். இவர் வந்து நம்மை கடாக்ஷிக்காது போயிருந்தால் ஆற்றில் கரைத்த புளியை போலே நம் ஸம்ப்ரதாயம் வீணாகி இருக்கும் .பல தலைமுறைகள் பெற்ற பேற்றைப் பெற, பெரிய ஜீயர் அனைத்து வ்யாக்யானங்களையும் திரட்டித் தாமே பட்டோலைப் படுத்தினார்.தன்னை நிந்தித்தோரிடமும் அபார கருணை காட்டுமவர் நம் பெரிய ஜீயர். அனைவரிடமும் மிருதுவாய் பேசுமவராம்.மணவாள மாமுனிகளின் திருவடிகளைத் தஞ்சம் புகுவோம் ஆகில், விரஜை நதியைக் கடக்க உதவும் அமானவன் , நம் கையைப் பிடித்து ஸம்ஸாரத்திலிருந்து விடுதலை அளித்தல் திண்ணம்.இராமன் பெரிய பெருமாளை வணங்குவது போல், தானே எம்பெருமானாராய் இருந்தும் நாம் அறிந்து அதன் படி நடக்கவேண்டும் என்பதற்காகத் தானே எம்பெருமானர் மீது பெருத்த மையல் கொண்டு எழுந்தருளி இருந்தார். இவரைப் போல் வேறொருவர் எம்பெருமானாராய் கொண்டாடுதல் அரிது. பூருவர்கள் ஸாதித்த நேர் தன்னின் படி வாழ்ந்த இவரின் வாழ்க்கையே நம் அனைவர்க்கும் உதாரணமாம்.ஒருவர் எழுந்தருளி இருந்த காலத்திலேயே பல சீடர்கள் அவரைப் பல்வகையால் கொண்டாடுதல் என்பது இவர் விஷயத்தில் மாத்திரமே நடந்தது. வேறாருக்குமின்றி மணவாள மாமுனிகளுக்கே ஸுப்ரபாதம், மங்களம், கண்ணி நுண் சிறுத்தாம்பு, அமலனாதிபிரான், பூர்வ தினசர்யை ,உத்தர தினசர்யை, வரவரமுனி ஶதகம், வரவரமுனி அஷ்டகம் இன்னும் எவ்வளவோ துதிகள் பாடப் பட்டன. இது போன்ற ஒரு கொண்டாட்டத்தை வேறொருவரிடத்தில் காண்பதரிது.

ஸ்ரீ மா முனிகள் திருவரங்கத்தில் தமது திருமடத்தில் எழுந்தருளி இருப்பதை -ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள் –ததஸ் தத் ஸந்நிதி ஸ்தம்ப மூல பூதல பூஷணம் ப்ராங்முகம் ஸூக மாஸீநம் ப்ரஸாத மதுர ஸ்மிதம் -பூர்வ திநசர்யை – 18-கம்பத்தின் அடிக்கு அலங்காரமாக கிழக்கு நோக்கி இனிய புன்முறுவலுடன் வீற்று இருந்தார் -என்று அருளிச் செய்துள்ளார் -இன்றும் நாம் ஆதி சேஷனுடன் இருக்கும் இருப்பை உத்தம நம்பிக்கு சேவை ஸாதித்த விருத்தாந்தம்-சித்ர வடிவில் நாம் சேவித்துக் கொள்கிறோம் அன்றோ இந்த திருவுருவத்தை –

தம்முடைய திருக்கை சொம்பை உபாதானமாக்கி இரண்டு சிறிய திரு விக்ரஹங்கள் -ஓன்று ஆழ்வார் திரு நகரியில் மூன்று அங்குல உயர நின்ற திருக்கோலம் அஞ்சலித்த திருக்கையுடன் சேவை -மற்ற ஓன்று திருவரங்கத்தில் ஞான முத்திரையுடன் வீற்று இருந்த திருக்கோலம்-ஐப்பசி திரு மூலம் சாற்றுமுறை என்று மா முனிகள் நம்மாழ்வார் திருவடிகளில் எழுந்தருளச் செய்து திருமஞ்சனம் கண்டருளப்பண்ணி நம்மாழ்வாருக்குச் சாத்தியருளிய திருமண் காப்பை மா முனிகளுக்கு சாத்தி அருளும் அழகை இன்றும் சேவிக்கலாம் -திருவரங்கத்தில் பெரிய பெருமாளே கஜ துரக சித்ரா சாமர வாத்ய விசேஷங்களுடன் பெரிய கோயில் அர்ச்சகர்கள் கைங்கர்ய பரர்கள் வந்து அமுது செய்யப்பண்ணி நடத்துவது அசாதாரண சிறப்பாகும்-காஞ்சி புரத்திலும் மா முனிகள் பரமபதித்த 50 வருடத்துக்குள் சந்நிதியும் உருவாகி -தேவப்பெருமாள் சாற்றுமுறை அன்று இங்கு எழுந்தருளி நடை பெறும் வைபவங்களைக் காணக் கண் கோடி வேண்டும்-ஸ்ரீ பெரும்பூதூரில் எம்பெருமானார் பெரிய சேஷ வாகனத்திலும் மா முனிகள் சிறிய சேஷ வாகனத்திலும் எழுந்தருளி புறப்பாடு கண்டருளுகிறார்கள்-

பூர்வாச்சார்கள் என்னும் வ்யாபதேசம் மா முனிகள் அளவில் –மதுரேண ஸமாபயேத் -என்னும்படி விஸ்ராந்தமாயிருக்கும் அன்றோ-ஆழ்வார் ஆச்சார்ய பரம்பரை பொய்கையாழ்வார் தொடக்கி பொய்யில்லாத மா முனிகளுடன் தலைக் கட்டுகின்றது -இவருடைய அந்தரங்க சிஷ்யர்கள் பல பல ஸ்தோத்ர பிரபந்தகளை அருளிச் செய்துள்ளமையும் இவருக்கே அசாதாரணம்-ப்ரக்ருஷ்ட விஞ்ஞான பலைகதாமநி -ஆதிசேஷன் இவர் அவதாரம்–இவை இவரது பரம விலக்ஷண திரு நாறு வீறு பற்றி அருளிச் செய்துள்ளார்கள் –விசதவாக் சிகாமணிகள் -என்று கொண்டாடுகிறோம்

நாந் ருக்வேத விநீதஸ்ய நா யஜுர் வேத தாரிண நா சாமவேத விதூஷ ஸக்யமேவம் ப்ரபாஷிதம் நூநம் வியாகரணம் க்ருத்ஸ்னம் அநேந பஹுதா ஸ்ருதம்
இல்லாத உலகத்து எங்கும் ஈங்கு இவன் இசைகள் கூரக்
கல்லாத கலையும் வேதக்கடலுமீ என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்று அன்றே ஆர் கொலிச்
சொல்லின் செல்வன் வில்லார் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடைவலானோ

ஆத்ம குணங்களில் பிரதானம் சமமும் தமமும் –சூரணை -96-

சமம் ஆவது -அந்தக் கரண நியமனம்-
தமம் ஆவது -பாஹ்ய கரண நியமனம் –
சமஸ் சித்த பிரசாந்திஸ் ஸ்யாத் தமஸ் சேந்த்ரிய நிக்ரஹா-என்னக் கடவது இறே –
ஷமா சத்யம் தமஸ் சம-என்கிற இடத்தில் –
தமோ பாஹ்ய கர்ணா நா மனர்த்த விஷயேப்யோ நியமனம் -சமோந்த  கரணஸ்ய ததா நியமனம் -கீதை -10-4- என்று இறே பாஷ்யகாரரும் அருளிச் செய்தது –
மாறிச் சொல்லும் இடமும் உண்டு –

மாறிச் சொல்லுவதும் உண்டு என்னாமல் மாறிச் சொல்லும் இடமும் உண்டு –என்று அருளிச் செய்து-பாஷ்யக்காரரே -16-1 கீதா பாஷ்யத்தில் அந்தக்கரண நியமனத்தை தமமாகவும் பாஹ்ய கரண நியமனத்தை சமமாகவும் அருளிச் செய்துள்ளார்-தமஃ மநஸோ விஷயௌந்முக நிவரித்தி ஸஂஷீலநம்.(அந்தக்கரணம் அடக்குதல் )-இரண்டு படியும் ஹ்ருத் கதமாயிருக்கையாலே இவ்வாறு அருளிச் செய்துள்ளார்

இதுக்கு பிரயோஜனம் கேவல லீலை –சூர்ணிகை -162—அதாவது இந்த ஜகத் சிருஷ்டி வியாபாரத்துக்கு பிரயோஜனம் வெறும் லீலை -என்றபடி –லீலை யாவது -தாதாத்விக்ம ரசம் ஒழிய காலாந்தரத்தில் வருவது ஒரு பலத்தைக் கணிசியாமல் பண்ணும் வியாபாரமே யாகிலும் –இதுக்கு பிரயோஜனம் -என்று சிருஷ்டி வியாபாரத்துக்கு பிரயோஜனமாகச் சொல்லுகையாலே-தாதத்விக்ம ரச மாதரத்தை சொல்லிற்றாகக் கடவது இந்த சிருஷ்டி ரூப வியாபாரமான சார்வ பௌமரான ராஜாக்களுக்கு த்யூதாதிகள் போலேயும் பாலர்க்கு மணல் கொட்டகம் போலேயும் தாதாத்ரவிக ரசமாய் இருப்பது ஓன்று இறே இவனுக்கு –இத்தால் –லோகவ்தது லீலா கைவல்யம்-2–1–33- -என்கிற ஸூத்ரத்தை அருளிச் செய்தார் ஆயிற்று–ஜகத் சர்கே லீல ஏவ கேவலா பிரயோஜனம் -என்றும் பரஸ்ய ப்ரஹ்மணோ லீல ஏவ பிரயோஜனம் -ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூக்தி–கிரீடதோ பால கச ஏவ சேஷ்டாம் தஸ்ய நிசாமய –என்று ஸ்ரீ பராசர பகவானும் அப்ரமேயோ நியோஜ் யசச யத்ர காம கமோ வசீ–மோததே பகவான் பூதைர் பால கிரீட நகைரிவ-என்று ஸ்ரீ வேத வியாச பகவானும் நளிர் மா மலர் உந்தி வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் -என்றும் இன்புறும் இவ்விளையாட்டுடையான் -என்றும் அபியுக்தரும் இவனுடைய ஜகத் வியாபாரத்துக்கு பிரயோஜனம் லீலையாகவே சொன்னார்கள் இறே-

ஸ்ரீஶைலேஶ தயா பாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம் |
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம் |
|-திருவாய்மொழிப்பிள்ளையின் திருவருளுக்கு இலக்க்கானவரை, ஞானம் பக்தி வைராக்யம் போன்றவைகளின் கடலை, எம்பெருமானார் மீது பெருத்த மையல் உடையவரான அழகிய மணவாளமாமுனிகளை அடியேன் (அரங்கநகரப்பன்) வணங்குகிறேன்

இப்புவியில் அரங்கேசர்க்கு ஈடளித்தான் வாழியே
எழில் திருவாய்மொழிப்பிள்ளை இணையடியோன் வாழியே
ஐப்பசியில் திருமூலத்தவதரித்தான் வாழியே
அரவரசப்பெருஞ்சோதி அனந்தனென்றும் வாழியே
எப்புவியும் ஸ்ரீசைலம் ஏத்தவந்தோன் வாழியே
ஏராரு மெதிராச ரெனவுதித்தான் வாழியே
முப்புரிநூல் மணிவடமும் முக்கோல்தரித்தான் வாழியே
மூதரிய மணவாளமாமுனிவன் வாழியே

செந்தமிழ்வேதியர் சிந்தைதெளிந்து சிறந்து மகிழ்ந்திடு நாள்
சீருலகாரியர் செய்தருள் நற்கலை தேசுபொலிந்திடு நாள்
மந்த மதிப் புவி மானிடர் தங்களை வானிலுயர்த்திடு நாள்
மாசறு ஞானியர் சேர் எதிராசர் தம் வாழ்வு முளைத்திடு நாள்
கந்த மலர்ப் பொழில் சூழ் குருகாதிபன் கலைகள் விளங்கிடு நாள்
காரமர் மேனி அரங்க நகர்க்கிறை கண்கள் களித்திடு நாள்
அந்தமில் சீர் மணவாளமுனிப் பரன் அவதாரம் செய்திடு நாள்
அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலமதெனு நாளே

———————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ தேசிக வைபவம்—ஸ்ரீ தேசிக திவ்ய ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்–அஷ்டோத்தர சத நாம ஸ்தோத்ரம்–அஷ்டோத்தர சத நாமாவளி–

May 4, 2026

ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய: கவிதார்கிக கேஸரீ
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

ஜீவநம் ஜகதாம் ஜீயாத் கிமப்யபகத ஸ்ப்ருஹம் | ஸ்வதந்த்ரம் ஸர்வ தந்த்ரேஷு வேங்கடேஸாஹ்வயம் மஹ: ||

தேஸிக ஸப்தத்தில் தே என்ற அக்ஷரம் தேவ: என்பதையும் ஸி என்ற அக்ஷரம் ஸிஷ்ய: என்பதையும் க என்பது கருணையையும் குறிக்கும்.தேவாநுக்ரஹ தாரித்வாத் ஸிஷ்யாநுக்ரஹ காரணாத் கருணா மய ரூபத்வாத் உச்யதே தேஸிகோ புதை:தேஸிக பதத்தின் முதல் எழுத்து தே, தேவ: என்பதைக் குறிக்கும். தேவ:என்ற ஸப்தத்தை ஸாஸ்த்ரம் தீவ்ய தீதி தேவ: என்றும் ஸ்ரத்தயா தேவ: தேவத்வம் அஸ்நுதே என்றும் பல விதமாக விளக்குகிறது. ஆசார்யர்கள் நமக்கு அநுக்ரஹம் செய்வதற்காகவே தோன்றியதால் தேஸிக ஸப்தத்தின் முதல் எழுத்து தே என்பதை தேவ: என்று சொல்வதுண்டு. ஸிஷ்யர்களுக்கு கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம், ப்ரபத்தி ஆகியவை பற்றிய ஞானத்தை வழங்கி அநுக்ரஹம் செய்கிறார் ஆசார்யன்.ஆசார்யர்கள் ஸிஷ்யர்களுக்கு அருள வேண்டும் என்பதற்காகவே எம்பெருமானிடத்திலே ஞானத்தைப் பெற்றிருக்கிறார்கள். இது தான் ஸிஷ்யாநுக்ரஹ காரணாத் என்பதன் பொருள். கார்ய நியத பூர்வ வ்ருத்தி காரணம் என்றபடி ஸிஷ்யனுக்கு அருளுவதற்கு முன்னரே எம்பெருமானிடத்திலே ஆசார்யன் அநுக்ரஹம் பெற்றுக் கொள்கிறார். இந்தக் காரணம் எப்படிப்பட்ட தென்றால் கருணா மய ரூபத்வாத்-பர துக்க துக்கித்வம் தயை என்று சொல்வார்கள்.அது போல் ஸிஷ்யர்களிடத்திலே தயையுடன் இருக்கக் கூடியவர்கள் ஆசார்யர்கள்.ப்ராதர்த் யூத ப்ரஸங்கேந மத்யாஹ்நே ஸ்த்ரீ ப்ரஸங்கத: ராத்ரௌ சௌர்ய ப்ரஸங்கேந காலோ கச்சத்ய தீ மதாம்||அதாவது,காலையில் சூதாட்டத்திலும், மதியம் பெண்கள் விஷயத்திலும், இரவில் திருட்டுத் தொழிலிலும் காலத்தை வீணடிப்பார்கள் அறிவிலிகள். அறிஞர்கள் அறிவுடையவர்கள் காலையில் மஹா பாரதக் கதை கேட்பதிலும், மதியம் ஸீதா தேவியின் சரிதமான இராமாயணக் கதை கேட்பதிலும், இரவில் நவநீத சோரனான ஸ்ரீகிருஷ்ணனுடைய கதையைக் கேட்டும். காலத்தைக் கழிப்பார்கள்.

குரும் ப்ரகாயேத் தீமாந் மந்த்ரம் யத்நேந கோபயேத் | அப்ரகா -ப்ரகாஸாப்யாம் யேதே ஸம்பதாயுஷ்||
என்று நூற்றெட்டு ஸம்ஹிதைகளில் ஒன்றான தேவ ஸம்ஹிதை சொல்கிறது. இந்த லோகத்தை
ஸ்வாமி தேஸிகன் குருபரம்பரா ப்ரபாவத்திலே மேற்கோள் காட்டுகிறார். ஆசார்ய அநுஸந்தானம்
முக்கியமானது. தேஸிகன் என்ற ப்தத்திற்கே ஆசார்யன் என்று அர்த்தம்.

ஆசரதீதி ஆசார்ய: ஆஸமந்தாத் சரதீதி ஆசார்ய: – ஆசார்ய லக்ஷணம்
ஸத் புத்தி: ஸாது ஸேவீ ஸமுசிதசரிதஸ் தத்வ போதாபிலாஷீ
ஸூஸ்ரூஷுஸ் த்யக்தமாந:ப்ரணி பதந பர: ப்ரஸ்ந கால ப்ரதீக்ஷ: 1
ஸாந்தோ தாந்தோ ந ஸூயு: ஸரணமுபகத: ஸாஸ்த்ர விஸ்வாஸ ஸாலீ
ஸிஷ்ய ப்ராப்த: பரீக்ஷாம் கருதவிதபிமதம் தத்வத: ஸிக்ஷணீய: –ஸிஷ்ய லக்ஷணம் பற்றி ஸ்வாமி தேஸிகன்

ஸூஸ்ரூஷா ஸ்ரவணம் சைவ க்ரஹணம் தாரணம் ததா!
ஊஹா போஹார்த்த விஜ்ஞானம் தத்வ ஜ்ஞானம் ச தீகுணா:
என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அநுப்ரவிஸ்ய குருதே யத் ஸமேஹிதம் அச்யுதா என்றபடி எம்பெருமானே ஸ்ரீ ஸடகோபராக, ஸ்ரீ ஆளவந்தாராக, பகவத் ராமானுஜராக, ஸ்வாமி தேஸிகனாக திருவவதாரம்-


ப்ரஸாதாத் தேஸிகேந்த்ராணாம் பராவர விபாகவித் |
ப்ரபந்ந: பரமாத்மாநம் ப்ராப்நோதி பரமம் பதம் II
இந்த ஒரு அனுஷ்டுப் ஸ்லோகத்திலேயே சித், அசித், ஈஸ்வர தத்வம் அனைத்தையும் அடக்கி விட்டார் ஸ்வாமி.-வ்யாகரணத்திலே சொல்வதுண்டு.
அல்பாக்ஷரம ஸந்திக்தம் ஸாரவத் விஸ்வதோ முகம் |
அஸ்தோபமந வத்யஞ்ச ஸூத்ரம் ஸூத்ர விதோ விது: 1
-என்பது ஸூத்ர லக்ஷணம்.
இப்படி சுருங்கச் சொல்வது ஸூத்ரமாகவும், விரித்துச் சொல்வது பாஷ்யமாகவும் இருக்க வேண்டும்.
பதச்சேத: பதார்த்தோக்தி: – விக்ரஹோ வாக்ய யோஜநா |
ஆக்ஷேபஸ்ய ஸமாதாநம் வ்யாக்யாநம் பஞ்ச லக்ஷணம்II

ஸ்ரீராமாயணத்திற்கு ஸமானம் ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரம், ஸ்ரீமத் பாகவதத்திற்கு ஸமானம் யாதவாப்யுதயம். ஸ்வாமியினுடைய யாதவாப்யுதய க்ரந்த மானது மோக்ஷம் கொடுக்கக் கூடிய ஸர்வேஸ்வரனுடைய கிருஷ்ணாவதாரத்தைப் பற்றிக் கூறுகிறது.-அதனால் இது பரம புருஷார்த்தத்தைக் கொடுக்கக் கூடிய க்ரந்தம். இவ் விஷயத்தை ஸ்வாமி முதல் ஸர்கத்தில் எட்டாவது ஸ்லோகத்தில் –விஹாய ததஹம் வ்ரீடாம் வ்யாஸ வேதார்ணவாம்ருதம் |
வக்ஷ்யே விபுத ஜீவாதும் வ தேவஸுதோதயம்|–

வ்யாஸர் இயற்றிய வேதமான மஹா பாரதம் என்ற கடலிலிருந்து எடுக்கப்படும் ஸாரமான அமுதம் அதாவது தேவர்களுக்கும், வித்வான்களுக்கும் அன்னமுமான வஸுதேவருடைய குமாரரான கிருஷ்ணருடைய சரித்திரத்தைச் சொல்லுவேனாக என்று ஸாதிக்கிறார். இப்படி கிருஷ்ணனுடைய பெருமையைச் சொல்வதால் இந்த கரந்தத்தை மஹா பாரதம் என்றும் பாகவதத்தின் தஸம ஸ்கந்தத்தின் சுருக்கம் என்றும் கூறலாம்.-வந்தே ப்ருந்தாவந சரம் வல்லவீ ஜந வல்லபம் |
ஜயந்தீ ஸம்பவம் தாம வைஜயந்தீ விபூஷணம்|||

க்ரீடா தூலிகயா ஸ்வஸ்மிந் க்ருபா ரூஷி தயா ஸ்வயம் |1
ஏகோ விஸ்வமிதம் சித்ரம் விபு: ஸ்ரீமாந ஜீஜனத்
|-பகவாந் க்ருபை என்கிற வர்ணத்தில் லீலை என்கிற குச்சியைத் தோய்த்து மூவுலகம் என்ற சித்திரத்தை தன்னிடத்தில் தானே எழுதிக் கொண்டான்-

கேவலம் பகவதநுபவத்தையே கொண்டுள்ள பகவதநுபவ ஜனிதமான இது போன்ற காவ்யங்கள் மஹா ஸ்ரேஷ்டமானவை.
விஸூத்த விஜ்ஞாந கந ஸ்வரூபம் விஜ்ஞாந விஸ்ராணந பத்த தீக்ஷம் |
தயா நிதிம் தேஹ ப்ருதாம் ஸரண்யம் தேவம் ஹயக்ரீவ மஹம் ப்ரபத்யே —
என்று ஞான வடிவமானவனும், விஸேஷ ஞானத்தை அருளுவதற்காகவே விரதம் பூண்டவனும், கருணைக்கு இருப்பிடமானவனுமான அந்த ஸ்ரீஹயக்ரீவனுடைய அநுக்ரஹமும், ஆசார்ய அநுக்ரஹமும், ராமாநுஜ
தயா பாத்ர பூதரான ஸ்வாமிக்கு ஒருங்கே இருந்ததால் கல்வியானது இவருக்கு வலைப்பட்டிருந்தது-

ஸ்தந்யேந க்ருஷ்ண ஸஹ பூதநாயா:
ப்ராணாந் பபௌ லுப்த புநர்பவாயா: 1
யதத்புதம் பாவயதாம் ஜநாநாம்
ஸ்தநந்தயத்வம் ந புநர்பபூவ II
–நான்காவது ஸர்கத்தில் பூதனா வதத்தை ஒரே ஸ்லோகத்தில் முடித்தார்.
தத்வ டீகா என்று ஒரு க்ரந்தம். அந்த க்ரந்தத்தில் அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா – “அத பல பதத்திற்கான விளக்கம் மட்டும் 350 பக்கம் எழுதி யிருக்கிறார் ஸ்வாமி.
விஸேஷேண ராகம் வைராக்யம், விகத ராகம் வைராக்யம் என்று இரண்டு விதமான வைராக்யங்கள்-
மநஸ்யேகம் வசஸ்யேகம் கர்மண்யேகம் மஹாத்மநாம் |
மநஸ்யந்யத் வசஸ்யந்யத் கர்மண்யந்யத் துராத்மநாம்
||என்றபடி நாம் மஹாத்மாக்களை நினைவிற் கொண்டு நாமும் அவர்கள் வழி நடக்க வேண்டும்.
ஆஹார ஸூத்தி ஆத்ம ஸூத்தி, ஸத்வ ஸூத்தி, தருவா ஸூத்தி, திரவ்யா ஸூத்தி, க்ரியா ஸூத்தி, மந்த்ர் ஸூத்தி அனைத்தும் நிறைந்தவர்..

முக்தி தரும் நகர் ஏழில் முக்கியமானது காஞ்சி மாநகர். அக்காஞ்சி மாநகரில் திருத் தண்கா என்னும் திவ்யதேசம் உள்ளது. அங்கு தீபப் பிரகாசன் என்னும்
திருமாலின் சந்நிதிக்கு வெகு அருகில் தூப்புல் என்னும் ஒர் அந்தணர் வாழ்விடம் (அக்ரஹாரம்) இருக்கிறது.(தூப்புல்- தூய்மை தரும் புல்-விஸ்வாமித்திரம் என்னும் தர்ப்பை நிறைந்த இடம்,அல்லது விஸ்வாமித்திர கோத்திரத்தில் தோன்றிய பெரியோர்கள் அங்கு வாழ்ந்து வந்ததால்,
இவ்விடத்திற்குத் தூப்புள் என்ற பெயர் நிலைத்து விட்டிருக்கலாம்.)

இத் தூப்புல் சேஷத்திரத்தில் அனந்த ஸூரி-தோதாரம்பா என்ற ஒரு ஸ்ரீவைஷ்ணவ தம்பதியர் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்குத் திருமணமாகி பல ஆண்டுகள் கடந்தும், குழந்தைப்
பேறு கிடைக்கப் பெறாமல் ஏங்கிக் கொண்டிருந்தனர்.-ிருமலைக்கு இருவரும் யாத்திரையாக சென்று, திருவேங்கடமுடையானை மனமுருகி வேண்டி குழந்தைப் பேற்றினுக்கு அவனருளை எதிர் நோக்கி அங்கேயே தங்கி இருந்தனர்.ஒரு நள்ளிரவு தோதாரம்பா ஒரு கனவு கண்டார்
எழிலொழுகும் ஓர் இளஞ்சிறுவனாக திருவேங்கடமுடையான் கனவில் தோன்றி, ” ஸ்ரீராமானுஜ ஸித்தாந்தத்தைத் தழைத்தோங்கச் செய்வதற்கு அதி மேதாவியான புத்திர ரத்தினத்தை
அளித்தோம்; பெற்றுக் கொள்ளுங்கள்” என்று சொல்லி திருமலைக் கோயிலில் உள்ள திருமணியைப் போன்ற திருமணியைத் தன் கணவரிடம் கொடுக்க, அந்தத் திருமணியைத் தான் வாங்கிப் பெற்றுக் கொண்டு விழுங்குவது போல் அக் கனவில் கண்டார். இதே கனவை அனந்த ஸூரியும் கண்டதாக மறுநாள் காலையில் கண் விழித்ததும் சொல்லி, தோதாரம்பாவை வியப்பில் ஆழ்த்தினார்.இது இப்படி யிருக்க, மறுநாள் கோயிலில் பரிசாரகர் பூஜைக்குரிய மணியை வழக்கம் போல் எடுத்து வைக்கச் சென்றார். ஆனால் அது காண வில்லை. கைம்மணி யின்றி எப்படி பகவானுக்கு நிவேதனம் செய்வதென்று எல்லோரும் வருத்த முற்றிருந்தனர்.அப்பொழுது பகவான் கோயில் ஜீயர் பால் ஆவேசித்து. “ஸ்ரீராமாநுஜ் ஸம்ப்ரதாய ரஷணத்திற்காக ஒரு மஹானைத் தோற்றுவிப்பதற்குத் திருமணி யாழ்வாரை நாமே அநந்த ஸூரிக்கு அளித்து விட்டோம். ஆகவே இனி என் திருவாராதன காலத்தில் கைம் மணியை ஸேவிக்க வேண்டாம். நிலை மணி (பெரிய மணி)யொன்றை மட்டும் ஸேவித்தால் போதும்” என்று கூறினார்.

சில நாட்களுக்கெல்லாம் தோதாரம்மாள் கர்ப்பவதியானாள். தம்பதிகள் வேங்கடவனிடம் விடை பெற்றுக் காஞ்சி மாநகர் சேர்ந்தனர். காஞ்சியில் இவர்கள் வசித்து வந்த பகுதி தூப்புல் என்பதாகும். இது தீப ப்ரசாசர்’ என்னும் விளக்கொளி எம்பெருமான் விளங்கும் திவ்ய ஸ்தலம்.இந்த ஸ்தலத்தில் தம்பதிகள் இனிது வாழ்ந்து வந்தனர். வேங்கடேச விமல கண்டாவதாரமாய் அவதரிக்கப் போகும் மஹானாதல் பற்றி மற்ற மானவர்களைப் போலன்றி, பன்னிரண்டு ஆண்டுகள் தமது தாயின் கர்ப்பத்தில் வளர்ந்து வந்தார்.பிறகு, கலி 4370-வது வருஷத்திற்குக் சரியான (கி.பி. 1268)
சுக்ல புரட்டாசி மாதம் சுக்ல பஷ தசமி திருவோண நக்ஷத்திரம் கூடிய புதவாரத்தில்
தோதாரம்மையின் கர்ப்பமாகிய பாற்கடலினின்று பகலவன் போல் ஒரு ஆண் குழந்தையாக உதித்தார். அப்புள்ளாரும் தமது சகோதரிக்கு வெகுகாலம் கழித்து உதித்த இக் குழந்தையின் தெய்விக ஒளியை மகிழ்ச்சியுடன் நோக்கி வேங்கடவனின் அருளால் தோன்றிய படியால் வேங்கடநாதன் என்றே நாம கரணம் செய்வித்தார்.

ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் ஜாதகம்
ஸ்வஸ்தி ஸ்ரீ சுக்ல வர்ஷம் கதகலி 4370 க்குச் சரியான (கச்சி நகர்)
அனந்தாசார் தோதாரம்மைக்கு வரத வேங்கட ப்ரஸாதம் ஸ்வப்னத்தில் அருளியபடி- கைரவிணீ தீர்த்த ஸ்நானமும் ஆன பிறகும் புரட்டாசி மாதம் 11ந்தேதி ஞாயிற்றுக் கிழமை11 -28க்கு சுக்ல ஏகாதசி 6 நாழி-19 விநாடிக்கு திருவோண நக்ஷத்திரத்தில் கன்யா லக்னத்தில் (வேங்கட கண்டாம்சம்) அதி மானுஷ புருஷம் ப்ரஜை அவதரணம் அல்லது சுப ஐனனம் – துப்புல் புண்ய பூமி கச்சிநகர். 11 கடிகைகளும் 28 விகடிகையில் ஜனனம்.கர்ப்பச் செல்லு போக சந்திர மஹா தசையில் பாக்கி செல்ல வேண்டியது 0 வர்ஷம் –மீ 9-நா-13

முறைப்படி செளளம், உபநயனம் முதலியவைகளைச் செய்யப் பெற்ற பின் “வேங்கடநாதன் தமது அம்மானான அப்புள்ளாரிடமே காவியம் .நாடகம், சாஸ்திரங்கள் முதலியவைகளை அப்யஸித்து வந்தார். அக் காலத்தில், நடாதூர் அம்மாள் என்னும் ஸ்ரீபாஷ்ய ஸிம்ஹாஸனாதிபதி காஞ்சி ஸ்ரீதேவராஜன் ஸந்நிதியில் சீடர்களுக்குக் கால க்ஷேபம் சொல்லி வந்தார். அப்புள்ளாரும் அம்மாளிடம் காலக்ஷேபம் செய்பவர். ஒரு சமயம் ஐந்து வயது நிரம்பிய மருமகன் வேங்கடநாதனை நடாதூர் அம்மாளுடைய கால ஷேப கோஷ்டிக்கு அழைத்துச் சென்றார் அப்புள்ளார் . மஹா தேஜஸ்வியான இச் சிறுவனைக் கண்டவுடன் அம்மாள் கால ஷேபத்தைச் சற்று நிறுத்தி விட்டு, இச் சிறுவனைப் பற்றி விசாரித்த பிறகு மறுபடியும் கால ஷேபத்தைத் தொடங்குகையில்,முன்பு எங்கே சொல்லி நிறுத்தினேன்?’ என்று சீடர்களை வினவினார்.கால க்ஷேபத்தில் விட்ட இடம் தெரியாமல் அனைவரும் திகைத்து நின்றனர். ஆனால் சிறுவன் வேங்கட நாதனோ, ‘ இந்த இடத்தில் இந்த வாக்கியத்தைச் சொல்லி ஸ்வாமி நிறுத்தியது, என்று சட்டென எடுத்துக் கூறினார். வேங்கடநாதனின் ஜ்ஞாபக சக்தியை மிகவும் புகழ்ந்த நடாதூரம்மாள் கீழ் கண்ட ஸ்லோகத்தினால் இவரை வாழ்த்தினார் .
“ப்ரதிஷ்டாபித வேதாந்த ; ப்ரதிக்ஷிப்த பஹிர்மத
பூயாஸ் த்ரைலோக்ய மாந்யஸ்த்வம் பூரி கல்யாண பாஜநம் |

(நீ பிற மதங்களைக் கண்டித்து, விஸிஷ்டாத்வைத சித்தாந்தத்தை நிலை நிறுத்தி, மூவுலகிலும் போற்றப்பட்டு ஸகல க்ஷேமங்களையும் அடைவாயாக மற்றும், “இவனே ஸ்ரீ பகவத் ராமாநுஜ தர்சநத்தைப் ப்ரவர்த்திக்க வல்லவன்’ என்றும் ஆசிர்வதித்தார்.
இவ்வாறு,தமது ப்ராசார்யரான நடாதூரம்மாளிடம் ஆசி பெற்று,தமது 20 வயதுக்குள்ளாகவே வேத வேதாங்க தர்க்க மீமாம்ஸாதி ஸகல சாஸ்திரங்களையும் மாதுலரான அப்புள்ளாரிடமே கற்றுத் தேர்ச்சி யடைந்தார்.

இப்படி இருபது ஆண்டுகளுக்குள் ஷட் தரிசனங்களிலும் ஸ்ரீ பாஷ்யம் கீதா பாஷ்யம் முதலான ஸகல வேதாந்த கிரந்தங்களிலும் தேர்ச்சி யடைந்த தமது மருகமனுக்கு ஸகல லக்ஷணங்களோடு கூடிய திருமங்கையார் என்னும் கன்னிகையுடன் விவாஹம் செய்வித்து கருஹஸ்த தர்மத்தை அனுஷ்டிக்கும்படி செய்தார்.
இப்படி ஸகல சாஸ்திர ஸம்பந்நராய் விளங்கும் வேங்கடநாதன் விசிஷ்டாத்வைத ஸித்தாந்த ஸ்தாபனம் செய்வதற்கு ரக்ஷையாக அப்புள்ளார் வைநதேய (கருட) மந்திரத்தை அவருக்கு உபதேசித்தார். இப்படி உபதேசிக்கப்பட்ட மந்த்ரத்தை ஸித்தி செய்துக் கொள்வதற்காக ஏகாந்த ப்ரதேசத்தைத் தேடிச் சென்று. திருவஹீந்திரபுரத்தில் ஸ்ரீ தெய்வநாயகன் ஸந்நிதிக் கெதிரேயுள்ள ஒளஷத கிரியில் ஒரு அரசமரத் தடியில் அமர்ந்து வைநதேய மந்த்ரத்தை ஜபித்து வந்தார். பிறகு, கருத்மான் மனம் மகிழ்ந்து ப்ரத்யக்ஷமாகி, இவருக்கு ஸகல வித்யாதி நாதனான ஸ்ரீஹயக்ரீவனின் மந்தரத்தை உபதேசம் செய்தார். ஸ்ரீ தேசிகனும் நியமங்களுடன் ஸ்ரீஹயக்ரீவ மந்திரத்தை ஆவ்ருத்தி செய்ய ஸ்ரீ ஹயக்ரீவன் பிரதியஷமாகி, நினைத்த போதெல்லாம் உமது நாவிலமர்ந்து நால் வேதப் பொருளை யெல்லாம் நவில்வேன்’ என அருள் புரிந்தார்.
உடனே தேசிகள் முதன்முதலாக ஹயக்ரீவ ஸ்தோத்ரம், கருட பஞ்சாஸத், அச்யுத சதகம், தேவ நாயக பஞ்சாஸத் என்னும் ஸ்தோத்ரங்களையும் மும் மணிக் கோவை, பத்துப் பா, கழற் பா, அம்மானைப் பா, ஊசல் பா, ஏசல் பா முதலிய தமிழ்ப் பாக்களையும் இயற்றினார்.-ஸம்ஸ்கிருதம். பிராகருதம்,தமிழ் என்னும் மும் மொழிகளிலும் கவிதைகள் புனைவதிலும், தர்க்க வாதங்களால் பிற சித்தாந்திலும் இவருக்குள்ள திறமையை நோக்கி, அக் காலத்திய பெரியோர்கள் ஸ்வாமிக்குக் கவிதார்க்கிக ஸிம்ஹம்’ என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டிப் போற்றி வந்தனர்.

இப்படி ஞான நிதியாய் விளங்கிய ஸ்வாமி, தமது கிருஹஸ்த ஜீவனார்த்தமாக யாரிடமும் சேவகம் புரியவில்லை; யாரையும் அண்டவுமில்லை. தினந்தோறும் காலையில் நித்ய கர்மாநுஷ்டானங்களை முடித்துக் கொண்ட பின், பகவந் நாம ஸ்மரணத்துடன் வெளியில் சென்று உஞ்ச வ்ருத்தியாகக் கொண்டு வரும் அமுத படியைச் சமைப்பித்து பகவானுக்கு நிவேதனம் செய்த பின் தாம் புசித்துக் குடும்ப நிர்வாஹம் செய்து வந்தார். பாக்ய வசமாக அமைந்த இவரது தர்ம பத்தினியும் இவர் மேற் கொண்ட வ்ருத்தியைப் புனிதமாகக் கருதி அன்புடன் ஸேவை புரிந்து வந்தார்.
ஒரு நாள்,ஸ்வாமி உஞ்ச விருத்திக்குச் செல்லும் போது,ஒரு தனிகரின் பத்தினி, இவர் வறுமை நீங்கி சில நாட்களாவது சுகமாக இருக்கட்டும் என்று எண்ணி உஞ்ச விருத்தி பாத்திரத்தில் அரிசியுடன் பொன் நாணய மொன்றையும் கலந்து சேர்த்து விட்டாள். ஸ்வாமி கிருஹத்திற்குச் சேர்ந்ததும், பாத்திரத்திலிருந்து அரிசியை எடுத்துச் சுத்தம் செய்யும் போது இவரது தேவி அரிசியுடனிருந்த பொன் காசைக் காட்டி இது என்ன?’ என்று கேட்க, ஸ்வாமியும் இது ஒரு விஷப் புழு. இதை வீசி எறிந்து விடு’ என்று கூற, அவ் வம்மையார் அப்படியே அதை வீசி எறிந்து விட்டாராம். இவரல்லவோ வைராக்ய சீலர்! இவ் வம்மை யல்லவோ உத்தம தர்ம பத்தினி! என்று எல்லோரும் போற்றினர்.

தேசிகன் இவ்வாறு வைராக்ய நிதியாய் எளிய வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பது தேசமெங்கும் பரவியது. இவரது சக மாணவராக இருந்த வித்யாரண்யருக்கும் இவ் விஷயம் தெரிந்தது-அவர் அப்பொழுது விஜயநகர ஸாம்ராஜ்யத்து ஆஸ்தான வித்வானாக இருந்தார். அரசனிடம் அவருக்கு அதிகச் செல்வாக்கு இருந்தது. எனவே, எவ்விதமாக வாவது இந்த ஞான நிதியை வர வழைத்து தம்முடன் அரச சபையில் ஆஸ்தான வித்வானாக்கி, இவரது வறுமையை அகற்றி விட வேண்டு மென்று எண்ணினார். அதற்கேற்ப ஒரு தூதுவனை இவரிடம் அனுப்ப, ஸ்வாமியும் தமக்குள்ள வைராக்யத்தைக் கூறாமற் கூறி, வைராக்ய பஞ்சகம்’ என்னும் ஒரு ஸ்தோத்ரத்தை எழுதி வித்யாரண்யருக்கு அனுப்பி வைத்தார். உல்கெலாம் ஆளும் ஆண்டவனுக்கு அடிமை யாகிய நான், இந் நிலவுலகின் ஒரு சிறு பகுதிக்கு அரசனெனக் கூறிக்கொள்பவனுக்கு அடிமையாக மாட்டேன். அன்று குசேலனைக் குபேரனாக்கிய இறைவனை யன்றி மற்றோரிடம் நான் அடிமை செய்யேன்” என்பன போன்ற வைராக்யக் கருத்துக்களைக் கொண்ட இவரது வைராக்ய பஞ்சகத்தைப் படித்த வித்யாரண்யர் இவரல்லவோ மகான் ! என மனத்தால் போற்றி மகிழ்ந்தார்.

இப்படி ஏழ்மையையே உண்மைச் செல்வமாக ஏற்றிருக்கும் இந்த ஸ்வாமியின் ஞானத்தையும் வைராக்யத்தையும் கண்டு பொறாமை கொண்ட சில அந்தணர்கள் இவரை அவமானம் செய்ய வேண்டு மென்று முடிவு செய்து, ஒரு பிரம்மசாரியை அழைத்து, விவாஹம் செய்து கொள்வதற்காகப் பண உதவி செய்ய வேண்டு மென்று நீ ஸ்ரீதேசிகனிடம் கேள் ‘ என்று சொல்லி யனுப்பினார்கள்.-அவன் தேசிகனைத் தெண்டனிட்டு,தனது வறுமையையும் விவாஹம் செய்து கொள்வதற்கான பணத்தின் தேவையையும் கூறி, தனக்கு உதவி புரிந்தருள வேண்டுமென்று கெஞ்சினான்.-ஸ்வாமி தேசிகன், இது சிலரின் சூழ்ச்சி என்பதை நன்கு புரிந்து கொண்டார். ஆயினும் ஆண்டவனிடமுள்ள அசஞ்சலமான நம்பிக்கையால், ஜகன் மாதாவான ஸ்ரீ பெருந்தேவித் தாயார் ஸந்நிதிக்குச் சென்று, ஸ்ரீஸ்துதி’ என்னும் தமது ஸ்தோத்ரத்தால் உருக்கமாகத் தாயாரைப் பிரார்த்தித்து நின்றார். தன்னலம் கருதாது பிறர் நலனுக்காகவே இந்த வைராக்ய மூர்த்தி செய்த பிரார்த்தனைக் கிரங்கி, ஸ்ரீ மஹா லக்ஷ்மியும் பொன் மழை பொழிந்தாள். பிரம்மசாரியும் யதேஷ்டமாகப் பொன்களைத் திரட்டிச் சென்று திருமணம் புரிந்து கொண்டான். பொறாமைக்காரர்கள் தேசிகனின் திருவடி பணிந்து மன்னிக்க வேண்டினர் .
பிறருடைய பொறாமைக் குணம் ஸ்வாமியின் பொறுமையை விளக்கிக் காட்டும் உரைக் கல்லாக அமைந்த நிகழ்ச்சிகள் பல. ஒரு சமயம் சில அற்பர்கள் ஸ்வாமி பிஷைக்கு எழுந்தருளும் தெருவழியில். சில செருப்புக்களைத் தோரணமாகத் தொடுத்துத் தொங்க விட்டிருந்தனர். ஸ்வாமி எவ்வித மனக் கசப்போ, முகச் சுளிப்போ இல்லாமல் அந்தத் தோரணத்தைத் தாண்டி,புன் முறுவல் பூத்த திருமுகத்துடன் இவ்வாறு கூறினாராம்:
கர்மாவலம்பகா கேசித் கேசித் ஜ்ஞாநாவலம் பகா :
வயம் து ஹரிதாஸாநாம் பாத ரக்ஷா வலம்பகா ! |

“சிலர் ஸம்ஸார துக்கங்கள் நீங்கி, கடைத் தேறுவதற்காகக் கர்ம மார்க்கத்தைப் பின்பற்றுகிறார்கள். சிலர் ஞான மார்க்கத்தைப் பின்பற்றுகின்றனர். நான் ஹரி தாஸர்களின் பாத ரக்ஷைகளைப்
பற்றுக் கோடாகக் கொண்டு கடைத் தேறுபவன்” என்று கூறித் தமது பொறுமையின் சிறப்பையும் பாகவத காஷ்ட்டையையும் உலகுக்கு அறிவுறுத்தினார்.

ஒரு சமயம் கவிதார்க்கிக ஸிம்ஹம் ஸ்ரீரங்கம் எழுந்தருளி அங்கு சில நாள் தங்கியிருந்தார். அச் சமயம் பிற மதப் பண்டிதர்கள் சிலர் இவரை வாதுக்கழைத்தனர். அவர்களுடன் பல நாட்கள் வாதப் போர் செய்து அவர்களை வெற்றி கொண்டார்.-அவர்களுடன் நடந்த வாதப் பிரதிவாதங்களின் தொகுப்பை தூஷணி’ என்னும் நூலாக உருவாக்கினார் தேசிகன். அதற்கு அரங்கநாதன் மனமுவந்து, வேதாந்த தேசிகன் என்னும் சிறப்பான விருதை இவருக்கு சூட்டினார் –

இதை நோக்கிய அரங்க நாச்சியார் தாமும் இவருக்கொரு விருதமளிக்க விரும்பி, தம் மதத்திலும் பிற மதங்களிலும் தங்கு தடையின்றி புகுந்து ஆராய்ந்து உண்மையை ஒளிவு மறைவின்றி
எடுத்துக் கூறும் இவரது திறமையை மெச்சி,ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரர்’ என்னும் விருதமளித்து வாழ்த்தினார்.-இவ்வாறு அரங்க நகர திவ்ய தம்பதிகளால் வாழ்த்தப் பெரும் பெருமை பெற்ற வேதாந்த தேசிகனுடைய புகழ் நாடெங்கும் பரவியது. ஆய கலைகள் அறுபத்து நான்கிலும் தேர்ச்சி பெற்று-ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரா’ என்று தெய்வ தம்பதிகள் அளித்த விருதைப் பொருளுள்ளதாகச் செய்து கொண்ட நிகழ்ச்சிகள் இவரது வாழ் நாட்களில் பல நேர்ந்தன. அவைகளில் சிலவற்றை மட்டும் இங்கு காண்போம்.

சிலருடைய துர்போதனைக் கிணங்கி ஒரு பாம்பாட்டி இவரிடம் வந்து இவர் மீது சில பாம்புகளை ஏவினான் தேசிகன் தம் முன்னே ஏழு கோடுகளைத் தரையில் கீறினார். அவைகளைத் தாண்ட
முடியாமல் பாம்புகள் பின்னடைந்தன. பிறகு அப் பிடாரன் சங்க பாலன்’ என்ற மஹா சர்ப்பத்தை ஏவினான்.அது அந்தக் கீற்றுக்களைத் தாண்டி ஸ்வாமியை நெருங்க, கருட தண்டகத்தால் பெரிய திருவடியைத் துதித்தார். அந்த க்ஷணமே கருட பகவான் சரேலென அப் பாம்பை எடுத்துச் சென்று மறைந்தார். கிடைத்தற்கரிய ஒரு மஹா ஸர்ப்பத்தை இழந்த அப் பிடாரன் தேசிகனின் திருவடி வணங்கி பிரார்த்திக்க, ஸ்வாமியும் கருட பஞ்சாஸத்’ என்னும் ஸ்தோத்திரத்தால் கருத்மானை ஸ்தோத்ரம் செய்து சங்க பாலனை மீட்டுக் கொடுத்தார்

திருவஹீந்திரபுரத்தில் தேசிகன் தங்கி யிருக்கும் காலையில் சில பொறாமைக் காரர்களால் ஏவப்பட்டு. ஒரு கொற்றன் தேசிகனிடம் வந்து, ‘ உங்களுக்குக் கிணறு கட்டத் தெரியுமா? இது தெரியாமல் எப்படி ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரரானீர்கள்?’ என்று கேட்டான்.இதைச் செவியுற்ற தேசிகன் தலைப் பாகைக் கட்டி, கையில் கட்டடச் சாதனங்களுடன் கிணற்றில் இரங்கி, சற்றும் ஏறுமாறில்லாமல் அழகாகக் கற்களை அடுக்கி, கிணற்றைக் கட்டி, கொற்றனைத் திகைக்க வைத்து விட்டார். அந்தக் கிணறு இன்றும் திருவயிந்தையில் தேசிகனது திரு மாளிகையில் இருப்பதைக் காணலாம்

ஸகல கலா நிதியாய் ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரரென எல்லோரும் போற்றும் நிலையிலுள்ள ஸ்வாமி தேசிகனைக் கண்டு பொறாமை கொண்ட ஒரு சந்நியாசி ஷுத்ர மந்த்ர பிரயோகம் செய்து
தேசிகனின் வயிற்றில் ஜலோதரம் என்னும் வியாதி யுண்டாகும்படி செய்தான். ஸவாமி அதற்குச் சளைக்காமல் தம் எதிரே நிற்கும் கம்பத்தைக் கீறி அதன் வழியே தமது உதரத்திலேற்றிய நீரெல்லாம் வழிந்தோடும்படி செய்தார். அவனும் அவரை வணங்கி மன்னிக்க வேண்டினான்.

ஸ்ரீ தேசிகனுக்கு அளிக்கப்பட்ட கவிதார்க்கிக ஸிம்ஹம். என்னும் விருதைப் பார்த்து பொறாமை கொண்ட ஒரு வித்வான்”ஒரு ராத்திரியில் ஸ்ரீ ரங்கநாதனுடைய திருவடியை வருணிக்கும் ஆயிரம் ஸ்லோகங்களை நம் இருவரில் யார் இயற்றுகிறோமோ அவருக்குத் தான் கவி தார்க்கிக ஸிம்ஹம்’ என்ற விருது பொருந்தும்” என்று கூறி, தாம் ‘பத கமல ஸஹஸ்ரம்’ இயற்றுகிறேன் என்று சொல்லிச் சென்றார். ஆனால், அவர் அந்த இரவு முழுவதும் முயற்சி செய்தும் முந்நூறு ஸ்லோகங்களுக்கு மேல் செய்ய முடியாமல் காலையில் ஸ்ரீ ரங்கநாதன் ஸந்நிதியில் வந்து நின்றார். ஸ்ரீ தேசிகனோ ஸ்ரீ ரங்கநாதனுடைய திருவடிகளைத் தாங்கும் பாதுகைகளின் சிறப்பைப் பற்றி பாதுகா ஸஹஸ்ரம் என்ற பெயருடன் பற்பல விருத்தங்கள், சித்திர பந்தங்கள், பத்ததிகள் முதலியவைகளைக் கொண்ட ஆயிரம் ஸ்லோகங்களை அழகாகச் செய்து வந்து எம்பெருமான் ஸந்நிதியில் ஸமர்ப்பித்தார். இந்த ரஸமான-ஸ்தோத்ர ரூபமான காவியத்தைச் செவி யுற்ற அந்த அந்தணர் தமது தோல்வியை ஒப்புக் கொண்டு தேவரீரே கவி தார்க்கிக ஸிம்ஹம் என்று போற்றிச் சென்றார் –

ஸ்ரீ தேசிகனின் திருத் தகப்பனாரின் திருவத்யயன நாள். அதில் நிமந்த்ரணம் செய்யத் தகுதியுள்ள இருவரை ஸ்வாமி முன்னாகவே ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், சில பொறாமைக்காரர்கள் நிமந்திரணத்தன்று அவர்களை அப்புறப்படுத்தி விட்டார்கள். ஸ்வாமி நித்ய கர்மா நுஷ்டானங்களை முடித்துக் கொண்டு அபராஹ்ணத்தில் நிமந்த்ரிதர்களான ஸ்ரீ வைஷ்ணவர்களை எதிர்பார்த்து அவர்கள் வராமையால் பகவானுக்கு நிவேதனம் செய்த பின், மூன்று இலைகளைச் சேர்த்து, பதார்த்தங்களைப் பரிமாறி ப்ரோண பரிஷேசனாதிகளைச் செய்த பின் திரைக்கு வெளியில் வந்து அபிச்ரவண மந்திரங்களை ஸேவித்து வந்தார். என்னே ஆச்சரியம் சிறிது நேரத்திற்கெல்லாம் மூன்று இலைகளில் இருந்த பதார்த்தங்கள் செவ்வனே புசிக்கப்பட்டு, வெளியில் வேடிக்கை பார்க்கும் துஷ்டர்கள் கண்களுக்கு மூன்று ஸ்ரீ வைஷ்ணவர்கள் வெளிக் கிளம்பிச் செல்வது போல் காணப்பட்டது. அந்த துஷ்டர்களும் தமது கர்வமழிந்து நின்றனர். அங்னம் நிமந்தரணம் அமுது செய்தது ஸாக்ஷாத் ஹயக்ரீவனும், பேரருளாளனுமே என்பதை ஸ்வாமி அறிந்து பரமானந்தமடைந்தார்

ஸ்ரீ பாஷ்யத்தின் வியாகேயானம் ஸ்ருத ப்ரகாசிகை. இதை இயற்றியவர் சுதர்சன பட்டர் என்பவர். அவர் ஸ்ரீ ரங்கத்தி லிருந்த போது, முகம்மதியர்களால் ஸ்ரீ ரங்கம் ஆக்ரமிக்கப்பட்டது. அப்பொழுது சுதர்சன பட்டர் முதலான பல பெரியோர்கள் துருஷ்கர்களால் கொல்லப்பட்டனர். அந் நிலையில் அங்கிருந்த ஸ்ரீ தேசிகன் சுதர்சன பட்டரின் இரு புதல்வர்களுடன், ஸ்ருத ப்ரகாசிகையையும் கர்நாடக தேசத்திலுள்ள ஸத்யாகாலத்திற்கு எடுத்துச் சென்று காப்பாற்றினார். ஸ்ரீ பாஷ்யத்தின் சிறந்த வியாக்யானமான ஸ்ருத பிரகாசிகையை ரக்ஷித்த பெருமை ஸ்ரீ தேசிகனையே சாரும்.
இப்படி எத்தனையோ ஸத் கரந்தங்களை இயற்றியும், ஸத் காரியங்களைச் செய்தும், தமது ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரத் தன்மையை உலகுக்கு எடுத்துக் காட்டிய ஸ்ரீமந் நிகமாந்த மஹா தேசிகனுடைய பெருமையை ஆயிரம் நா படைத்த ஆதி சேஷனாலும் வருணிக்க இயலாதெனில் மிகையாகாது.ஸ்ரீ தேசிகன் 102 ஆண்டுகள் இம் மண்ணுலகில் வாழ்ந்து ஒரு செளமிய கார்த்திகை மாதத்தில் தமது அவதார ஸமாப்தியைச் செய்தார். ஆனால், இவ்வுலகமுள்ளளவும், இவர் அருளிய கிரந்தங்களாலும் இவர் காட்டிய நன்னெறியாலும் இவர் என்றென்றும் நம்மிடையே வாழ்ந்து வருவதரகவே நாம் கருதி, இவரடியைப் பின்பற்றுவோமாக,

ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்த கிரந்தங்களின் எண்ணிக்கை பின் வருமாறு
(1) ஸ்தோத்ரங்கள் 28
(2) வேதாந்த கிரந்தங்கள் 14
(3) வ்யாக்யாந் கிரந்தங்கள் 8
(4) ரஹஸ்ய கிரந்தங்கள் 31
(5) தமிழ்ப்ரபந்தங்கள் 24
(6) காவியங்கள் 4
(7) நாடகம் 1
(8) அநுஷ்டானக் கிரந்தங்கள் 2–ஆக 112 கிரந்தங்கள்

ஸ்வாமி தேசிகன் அருளிச் செய்த ஸங்கல்ப ஸூர்யோதயமென்னும் நாடகத்தில் காணும் பின் வரும்
ஸ்லோகத்திலிருந்து ஸ்வாமியின் திரு வாக்கினாலேயே இவர் வேங்கடேச கண்டாவதாரம் என்னும் கருத்து ஊர்ஜிதம் செய்யப்படுகிறது –
வித்ராஸிநீ விபுத வைரி வரூதிநீநாம் பத்மாஸநேந பரிசார விதெள ப்ரயுக்தா
உத்ப்ரேஷ்யதே புத ஜநை: உபபத்தி பூம் நா கண்டா ஹரே: ஸமஜ நிஷ்ட யதாத்மநேதி

(அதாவது. ப்ரஹ்ம தேவன் பெருமாளை ஆராதிப்பதற்காக எந்த மணியை உபயோகித்தாரோ, எந்த மணியின் நாதம் அசுரர்களைப் பயந்தோடச் செய்ததோ அந்த மணியின் அவதாரமே இந்த நாடகத்தின் ஆசிரியர் (ஸ்வாமி தேசிகன்) என்று ஞானிகளான பெரியோர்கள் தகுந்த காரணங்களைக் கொண்டு ஊஹிக்கிறார்கள்)


கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண ஸாலிநே
ஸ்ரீமதே வேங்கடேஸாய வேதாந்த குரவே நம்:.


ஸ்வாமிந் ! கபீர , ஸுபகாம் ; ஶ்ரம , ஹாரி , பும்ஸாம் ;
மாதுர்ய , ரம்யம் ; அநகம் ; மணி , பங்க, த்ருஶ்யம் ; |
வேகாந்தரே , விதநுதே ! ப்ரதிபிம்ப , ஶோபாம் ;
லக்ஷ்மீ , ஸர: ; ஸரஸிஜ – ஆஶ்ரயம் ; அங்ககம் , தே ||–[இந்த ஸ்லோகம் , விளக்கொளி எம்பெருமானுடைய , திருமேனிக்கும் , அங்கு உள்ள ‘லக்ஷ்மி ஸரஸ்’ என்ற பொய்கைக்கும் , சிலேடைப் பொருள் வைத்துப் பாடப்பட்டது)

விளக்கொளி எம்பெருமானே கம்பீரமானதும்(ஆழமானதும்) அழகியதும் மனிதர்களின் தாபத்தைப் போக்குவதும் இனிமையாய் விளங்குவதும் குற்றம் , அற்றதும் இந்த்ர நீலத் துண்டம் போல காணப் படுவதும் தாமரை (பிராட்டி)க்கு , உறைவிடமாகவும் உள்ள உன் திருமேனியும் லக்ஷ்மீ ஸரஸ் என்ற பொய்கையும் வேகவதி நதியின் நடுவில் சாயலின் அழகை செய்கின்றன !
விளக்கொளி எம்பெருமானே !வேகவதி நதிக்கு , அருகில் உள்ள ‘லக்ஷ்மி ஸரஸ்’ என்ற பொய்கையும் , உன் திருமேனியும் , வேகவதியின் ஜலத்தில் , பிரதிபலிக்கின்றன . அவற்றின் சாயல்கள் நீரில் தெரிகின்றன .உன் திருமேனி கம்பீரமான தோற்றம் உடையது -மிக அழகியது -ஸேவிப்பவர்களின் , ஸம்ஸார தாபத்தைப் , போக்க வல்லது அனுபவிக்க மிக இனியது இழிவான அம்சம் , ஒன்றும் , இல்லாதது -இந்திரநீல மணி போன்ற , நிறம் உடையது -பெரிய பிராட்டிக்கு , உறைவிடமாய் உள்ளது -இத்தகைய உன் திருமேனி , வேகவதி ஆற்றின் நீரின் சாயல் இடுகிறது .
இவ்வாறே , ‘லட்சுமி ஸரஸ்’ என்னும் பொய்கை ஆழமானது மிக அழகியது வெயிலால் வரும் , தாபத்தைப் போக்க வல்லது இனிய நீர் நிறைந்து அழுக்கு , அற்றது இந்திர நீலமணி போல் , சுத்தமாகக் , காணப்படுவது தாமரை மலர்கள் நிறைந்திருக்க பெறுவது இத்தகைய பொய்கையும் , வேகவதி நீரில் கலந்து, சாயல் இடுகிறது .
இவ்விரண்டும் , அந்த ஆற்று நீரில் , பிரதிபலிப்பது , காண்பதற்கு இனிமை பயக்கிறது !


ஸ்ரீ தேசிக திவ்ய ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்

த்யாநம்
அகிலபுவந ரஷா ஸாதநா யாவதீர்ணே
குமதி கலி விலாஸ த்வாந்த திக்மாம்ஸூ ஜாலே
நிரவதி கருணாப்தெள வேத சூடா குரெள மே
பவது பரம பக்தி: ஸ்ரீநிதெள வேங்கடேஸே
-1

அஸ்மத் தேஸிக தத் குரூந் ஸ்ருதி ஸூரஸ் சூடார்ய ராமாநுஜெள
ரங்கேஸம் ரகு புங்கவாஜ குரும் ஸ்ரீமந் நதார்த்திச்சிதம்
ஸ்ரீ ராமாநுஜ பூர்ண யாமுந முநீந் ராமார விந்தேக்ஷணெள
நாத ஸ்ரீ ஸடகோப ஸைந்ய ரமண ஸ்ரீ ஸ்ரீபதிந் பாவயே–
2

ஸ்ரீமத் த்ரயீ ஸேகர தேஸிகஸ்ய நாம்நாம் ஸஹஸ்ரம் குணது: க்ரியாத: ப்ரக்யாது மக்யாதி நிராளி ஸர்வ ஸம்பத் ப்ரதம் ஸா துமுதே தநோமி! 3

ஸ்தோத்ராரம்ப:
வேங்கடேஸ க்ருபா லப்த அநந்தார்ய ஸ்வப்ந சிந்தித:
தோதாரம்பா கர்ப்ப ஸுர்ய ஸங்க்யாப்தாவாஸ் பாஸுர –1-

மது ஸூதந ரங்கேஸ ஸாகூதேஷித ஐந்மக?
நபஸ்ய ஸ்ரவண ஸ்ரீஸ தீர்த்த வாஸர ஐந்மவாந்–2-

தீப ப்ரகாஸ நிகட ஸத்மாவிர்பாவ பாஸுர : ஸ்ரீ கண்டாவதாரத்வ ஜ்ஞாபகாநேக யுக்திமாந்-3-

புண்டரீ காஷாக்ய யஜ்வ பெளத்ரோ நந்தார்ய புத்ரக !
ஆத்ரேய வாதி ஹம்ஸாம்பு வாஹார்ய பகிநீ ஸுத 4

ஸ்வ ஸ்வ காலாநந்த குரு க்ருத ஜாத க்ரியாதி !!
அநந்தார்ய க்ருத ஸ்ரீமத் வேங்கடே ஸாபி தாநக–5-

வரதாசார்ய ராமாநுஜார்யோபய க்ருபேக்ஷித
விஸ்வாமித்ராந் வயாப் தீந்துர் ஜகத் புணய மஹா பலம்–6-

அநந்தார்யாசார்ய ரத்ந க்ருதோப நய ஸம்ஸ்க்ருதி
வாதி ஹம்ஸாம் புவாஹர்ய க்ருததாபாதி ஸம்ஸ்க்ருதி :–7


அதீத ஸாங்க ஸஸி ரஸ்கா கருத்ரிம ஸரஸ்வதி :
வாதி ஹம்ஸாம் புவாஹார்ய ஸம்ப்ராதாகில ஸாஸ்த்ரதீ : |
–8-

கணாத தந்த்ர பாரீண ஆஷபாதீய கௌதம
மீமாம்ஸா மாம்ஸலோ வ்யாகரண தந்த்ர பதஞ்ஜலி: | 9

காவ் யாலங்கார தத்வஜ் கவிதார்க்கிக கேஸரீ |
யதிராஜ பதாம்போஜ த்வந்துவ மாத்வீ மது விரத 10

யாமுநார்ய ப்ரேம மூர்த்தி: நாத யோகிஸ நாதவாந்
பராங்குஸ பதா ஸக்த : பரகாலாங்க்ரி பக்திமாந்! 11

ஸ்ரீபராஸர பட்டார்ய மேக ஸூக்த்யம்பு சாதக :
ஸ்ரீவத்ஸ சிஹ்ந மிஸ்ரேந்து ஸூக்தி ஜ்யோத்ஸ்நா ச கோரக! ||| 12

ஏகாந்தவாஸ ரஸிகோ த்வயசிந்தா பராயண :
தரிரா கக்நஸ் சதுஷ் பாண்டித்ய நிர் விண்ணைக மாநஸ–13-

பஞ்ச ப்ரகார ஸந்துஷ்டி ஷடூர்மி த்வம்ஸ கோவித!
ஸப்த வ்யஸந தத் த்யாக தத் ஸ்வீகார விஸாரத–14-

அஷ்டாங்க பக்திதீ ரஷ்ட புஷ்பீஷ்டாஷ்டாங்க யோகக
நவ வ்யாக்ருதி வித் ஸ்ரீபாஷ்யாத்ய பத்ய தஸார்த்த வித் –15-

ஸதாப்யதிக ஷட் பஞ்சாஸத் தரயீ மௌளி நீதிவித்
ஸஹஸ்ராதி க்ருதி ந்யாய விவேசந துரந்தர | 16

லஷகோடி ஸ்வ ப்ரபாவாம் ஸாநர்ஹ பஜந ஸத்திதி! !
காம க்ரோதாதி நிகில துராத்ம குண வர்ஜித : 17-

பாரதாத் யுக்த ஸகல ஸதாத்ம குண பூஷித
ஸாஸ்த்ரோக்த ஸகலாசார்ய லஷ்மாவாஸ வரஸ்த்தலீ –18-

ஸ்ரீ வைஷ்ணவாநேக லஷ்ம ஸோபித ஸ்வர்ண விக்ரஹ :
அகஸ்த்ய ஸாக ப்ரமுக ஸாத்விகாஹார பாஸூர –19–

ஸ்ரீ ராமாநுஜ ஸித்தாந்த ஸ்தாபநாசார்ய தல்லஜ
தேவ நாயக பத்ரா ஸீரர்த்தா ஹீந்த்ர புர ஸ்திதி: 20-

தார்ஷ்ய மந்தர ஜப ப்ரீத தார்ஷ்ய தத்த வர ப்ரியா
தார்ஷ்ய தத்த ஹயக்ரீவ மநு ப்ரீத ஹயாநந –21-

வாகர்த்த ஸித்தித ஹயக்ரீவ ஸ்தோத்ர விதாயக:
ஹயாஸ்யத்த லாலாம்ருதா ஸ்வாதந ஸு போஷித: -22-

தார்ஷ் யாஜ்ஞா க்ருத தார்ஷ்யைக பஞ்சாஸத் பிரீத தார்ஷ்யக:
தேவ நாயக பஞ்சாஸத் ஸ்துதி ஸம்பந்ந ஸத்ய வாக் –23-

ப்ராக்ருதோக் யச்யுத ஸதா ப்ராக்ருதாநந்த ஸம் ஸ்துதி:
ஸ்ரீமத் த்ரிமணி ஸம் ப்ரோத காதாஸர விதாயக: -24-

க்ருத கந்துக காத: குபேராஷீ கீதிகாரக
குடிகா கீதி க்ருட் டோலா காதா க்ருதி விஸாரத |-25-

உபாலம்பாஸ்வய ஸ்ரீமத் காதாக்ருதி விசக்ஷண: ||
நவ ரத்ந ஸ்ரக் விதாதா பரதர்ஸந பங்கக் கருத்–26-

புராணோக்தாநேக தத்வ ஸ்ருஷ்டி க்ரம் நிரூபக
பரகால க்ருத ஸ்வர்ண பிம்ப ஸ்தேயா விரோத த்ருக்–27-

ஸ்வதந்த்ராஷ்டோத் தரஸத விரோத பரிஹாரவித்
ரகுபுங்கவ கத்ய ஸ்ரக் க்ருத கோபால விம்ஸதி:–28-

கோபபூர் கதி பத்ராஸாஸந துஷ்ட த்ரி விக்ரம:
தேஹளீஸ ஸ்துதி ப்ரீதாதி பக்த ஸ்துத மாதவ!–29-

ஹஸ்தி ஸைலேஸ பஞ்சாஸத் ஸ்துத நாகாசலேஸ்வர! !
ஸ்ரீசிந்ஹமாலாஹ்வ க்ருதி ப்ரீத ஸஜ்ஜந மாநஸ–30-

த்வாத ஸாக்யாந காதா க்ருந் நியாஸகாதா விதாயக:
அர்த்த பஞ்சக ஸங்கராஹி காதா க்ருதி விசக்ஷண–31-

வைஷ்ண வாவஸ்யக திந சர்யா க்ரம விதாயக
ஸ்ரீஹஸ்திகிரி மாஹாத்ம்ய க்ருத் க்ருதாஷ்ட புஜாஷ்டக!–32-

யாதோக்தகாரி ஸ்துதி க்ருத் க்ருத காமாஸிகாஷ்டக
ப்ரபத்தி தீபிகா ப்ரீத ஸ்ரீமத் தீப பிரகாஸக:–33-

ப்ரபந்நாந்வஹ ஸம்பாவ்ய பரமார்த்த ஸ்துதி ப்ரிய :
ஸூதர்ஸ நாஷ்டகோத்தூத ஸ்ரேயோ பாதக ஸஞ்சயா -34-

ஸஜ்ஜநார்த் யாஸாஸ நார்த்த ஷோடஸாயுத ஸம் ஸ்துதி:
ஸ்ரீமத் வேங்கட நாதீய மங்களா ஸாஸந ப்ரியா –35-

தயாஸதக வீணாகீதி ப்ரீத ஸ்ரீநிவாஸக:
அயோத்யாத் யுத்தர திஸா திவ்யதேஸ கதி ப்ரிய–3
6-

காஞ்சீமாயி யாதி ஷுத்ர நிராஸி ஸ்தம்ப லேகந:
வித்யாரண்ய சமத்கார தாயி வைராக்ய பஞ்சக: !–3
7-

க்ருத ஸேஸ்வவர மீமாம்ஸோ மீமாம்ஸா பாதுகா க்ருதி:
பட்டாதி ஸூத்ர துர்வ்யாக்யா நிராகரண தக்ஷிண!–38-

பரிஸங்யாக்ய வித்யர்த்த நிரூபண துரந்தர!!
ஸ்ரீரங்கநாத ஸேநேஸ ஸாஸநோத்தம் ந ப்ரிய:–39-

பட்டாரகா த்யுக்தரீதி ரங்கி ஸேவாக்ர மோத் ஸுகா
பகவத் த்யாந ஸோபாந வர்த்தித ஸ்ரீஸ பக்திக!||–40-

ஸததூஷண் யபக்ராந்த மாயி துர்வாதி கர்வக
நிர்விஸேஷ ப்ரஹ்ம ஸப்த முக்யா முக்யார்த்த பங்க க்ருத் –41-

நிர்வி ஸேஷ ப்ரஹ்ம் ஜிஜ்ஞாஸ் யத்வ பஞ்ஜந் தக்ஷிண:
கர்ம ப்ரஸ்ம விசாராத்ம மீமாம்ஸைக்ய விதாயக : ! –42-

விதாநாநர்ஹ வாக்யார்த்த ஜ்ஞாந ஹேதுத்வ பஞ்ஜக!
உபாஸநா ஹேது வேத்தா பாதாநு ஸ்ருதி பாதக–43-

யஜ்ஞாதி ப்ரஹ்ம விவிதிஷா ஹேதுத்வ நிரோதக!
ஸாப்தா பரோஷஹா தூத பூர்வ வ்ருத்த சதுஷ்டய–44-

மாயி வாதாதி காரக்நோ நிர்விஸேஷாத்ம பாவஹா
நிர்விஸேஷ பராலம்பி நிர்விகல்பக பஞ்ஜந!–45-

ஸந் மாத்ராத் யஷரோத்தா பேத தோஷோத்தார கோவித!
பரவேதா ப்ரமாணத்வ திருக் த்ருஸ்யத்வா நுமாநஹா–46-

வயாவர்த்தமாந பாவாநு மாந ரோதந தத்பர :
மாயித்ருக் திருஸ்ய ஸம்பந்த நிராஸைக விசக்ஷண:–47-

மாயி பாஹ்ய பிரகாஸாநுப பத்தி ஸ்தாபந க்ஷம.
ப்ரஹ்மாஸ்ர யாஜ்ஞா ந ஹந்தா ப்ரஹ்மா வேத்யத்வ பஞ்ஜக!–48-

ஜ்ஞநா ஜந்ம நிராக்ருத் தீ நிர்விகாரத்வ மாநஹா
தீ நாநாத்வ விரோதிக்நோ நிர்விஸேஷா னுமாநஹா !!–49-

ஸம்விதாத்மத்வ ஹந்தா ஹமர்த்தாத்மத்வா நிரூபக:
ஜ்ஞாத்ருத்வாத்யாஸ ஹந்தா ச ஸாக்ஷி பஞ்ஜந் தத்பர!–50-

சாஸ்த்ராத்யஷ விரோதஜ்ஜோ அந்ருதா ஸாத்ரு தார்த்தவித்
ஜீவன் முக்தத்வஹா பாத ஸாமாநாதி கரண்யஹா –51-

ஸம்வி தத்வைதஹா மாய்யுபாதேஸா நுபபத்தி வித்
நிர்விஸேஷ திரோதாந ஹந்தாத் மாத்வைத பஞ்ஜக: ! 52

ஜீவேஸ் வரைக்ய வாதக்நோ அகண்ட வாக்யார்த்த பாதக 1
பாவ ரூபா ஜ்ஞாந ரோத்தா ஜீவா ஜ்ஞாந விநாஸக! || 53

அவித்யா நுபபத்திஜ்ஜோ மாயா வித்யா விபாகஹா !
குத்ரு குந்நீத ஸம்ஸார நிவர்த்தக நிவர்த்தக! 54

நிவ்ருத் யநுபபத்திஜ்ஞ : ஸப்தா வேத்யத்வ பஞ்ஜக !
நிஷ் ப்ரபஞ்ச நியோகநோ விகல்பாமாநதா ப்ரிய–55-

உப ப்ரும்ஹண வைகட்ய யுக்த துர்மத வேதிதா!
ஐக்யோபதே ஸாந்ய தோபபத்ய ஸம்பவ பாதக:–56-

குத்ருக் ஸாஸ்த்ராதி காரக்நோ முக்த தத்வேத்ய தத்வ வித்
ஸ குணாகுண வேதாந்த வ்யவஸ்தா கரண க்ஷம:–57-

ப்ரஹ்மோ பாதாநவிந் மாயோ பாதாநத்வ நிராஸக !
கார்யா த்யநுபபந்த்வ பரிஹார விசக்ஷண :-58-

ப்ரஹ்மா நந்தத்வ மதிநிர் விஸேஷாநந்த பஞ்ஜக
நிர்விஸேஷ ப்ரஸ்ம நித்ய பாவ பஞ்ஜந தக்ஷிண:–59-

அத்விதீய ஸ்ருதி வ்ராத விஸம்வாத விசாரக :
ஸத்வாஸத்வ விவேக்தா ஜீவைக்ய பங்க விசக்ஷண:-60-

குத்ருக்பக்ஷாப ஸூத்ராதி கரண வ்யாஹதி ப்ரிய:
அதிகாரி விவேகஜ்ஞோ யதி லக்ஷ்ம விவேசக:–61-

அலேபக மதச்சேத்தா மாயி ஸூத்ரார்த்த பாதக:
தஸாவதார ஸ்தோத்ராக்ய ஜகந் மங்கள காரக:–62-

ஸ்வப்ந பாஷ்ய கருதாஜ்ஞப்த வேத சூடா பிரவர்த்தந
யதீந்த்ர ஸப்தத்யாக்யோபசார ஸ்ருத்யந்த தீபக்ருத்–63-

பக்தி ப்ரகர்ஷ விஹித ஸ்ரீ பூ கோதா ஸ்துதி பரிய:
ரங்கேஸாஜ்ஞா க்ருத நியாஸ திலக ஸ்தோத்ர ரத்நக:–64-

ஸ்ரீரங்கநாத தத்த ஸ்ரீ வேதாந்தாசார்ய நாமக :
ரங்கேஸ்வரீ தத்த ஸர்வ தந்த்ர ஸ்வாதந்த்ர்ய பூஷித:–65-

அயத்நக்ருத வாதித்ரய கண்டந நிபந்தந !
தத்வ டீகா வ்யாக்ருத ஸ்ரீமத் பாஷ்யாம்ருத ஸாகர–66-

வாஜிஸாகா ஸிகா வ்யாக்யா க்ருதி ஸம் ப்ரீத மாநஸ
தாத்பர்ய சந்த்ரிகா ஸூஸ்த்த கீதா பாஷ்ய மஹாபத–67-

யாமுநார்யோக்த கீதார்த்த ஸங்கரஹ த்ராண காரக:
பிஷ்ட பஸ்வாதி காதோக்தி வ்யவஸ்தர கரண ஷம–68-

பரத்வம்ஸ ப்ராக பாவதி வ்யவஸ்தா கரண ஷம:
வைத ஹிம்ஸா அஹிம்ஸதா ஸ்தாபந நீதி ஸூநீதிக –69-

முமுஷு ஸூக்த வாகாதி பலோக்தி ததி நீதிவித்
அவாப்த ஸர்வ காமத்வ குண நிர்ணய கோவித: 70-

கைவல்யாக்ய புமர்த்த ஸ்வ ரூபாநித்யத்வ ஸாதக!!
ஸாங்க கர்ம ஜ்ஞாந பக்தி யோகாவத்ருதி கோவித!! 71-

விபூதி விஸ்வரூபாதி விரோத ஸமநக்ஷம ஆத்மாநாத்ம குண ஷேத்ர தஜ்ஜ்ஞ ஸோதந தக்ஷிண:–72-

புருஷோத்தம தேவாஸூர விபாக நிருக்தி வித்
கர்த்ரு கர்மாதி ஸத்வாதி குணாதீந விபாகவித்–73-

ஏகாயநோக்தா ஸூயாவிர் பாவ வ்யாக்ருதி தக்ஷிண!
உச்சிஷ்டாதந ஹேத்வார்ய பேத நிர்ணய கோவித:–74-

ஸ்த்ரீ ஸூத்ர பகவத் பூஜா தாந்த்ரி கத்வாபி தாயக:
ஸ்வ பராதீநதா யத்த ஸாஸ்த்ர வைய்யர்த்ய பாதக:–75-

தத்வ முக்தா கலாப ஸ்ரக் க்ருத ஸர்வார்த்த ஸித்திக
க்ருதாதி கரண ஸாராவள்யாக்ய க்ரந்த ஸிகாமணி !-76-

ஸாராவளி வ்யாக்ரியாதி கரணாதர்ஸ காரக !
ஸ்ரீமந் ந்யாய பரீ ஸூத்தி விஸூத்தீக்ருத மாநஸ :–77-

ந்யாய ஸித்தாஞ்ஜநோ தஞ்சந் மேய யாதாத்ம்ய போதந:
ஆஷ பாதீய ஸூத்ரார்த்த ஸிஷா கரண தீக்ஷித–78-

அஷ பாத சமத்கார தாயி ஸூத்ர ஸமூஹக்ருத்
வ்யாஸாஷ பாத ஸூத்ரார்த்த விரோத பரிஹாரவித்—79-

த்ரவ்யாத்ரவ்ய பிதா தத்தல் லக்ஷணோக்தி விசக்ஷண
த்ரைகால்யா நேக ஸித்தாந்த நிராஸா ஸம்பவாந்தக:–80-

ரூபாதி பஞ்சகா தாரா பாவ வாத நிராஸக ! தர்ம தர்மித்தவா பலாப வாதத்வாந்த திவாகர!–81-

ப்ருதிவ்யாதி சதுர் த்ரவ்ய மாத்ர பக்ஷ விபேதிதா!
த்ரி குணேந்த்ரிய வர்கா நத்யக்ஷ பாவ விதாயக:–82-

பிரக்ருத்யாகம கம்யத்வ ஜகந் மூலத்வ போதக
சதுர்விம்ஸதி ஸங்க்யாக தத்வ ஸ்ருஷ்டி ப்ரகாரவித்–83-

ஸாங்க்யாதி ஹைதுகோந்நீத ஸ்ருஷ்டி தத் தேது பாதக !
அஷ்டீகரண பஞ்சீக்ருதி த்ரி வ்ருத் க்ருதி விபேதவித்–84-

அந்தயாவயவிஹா அந்யூநா நுத்க்ருஷ்ட பரிமாண வித்
ஸரீரோத்பத் யுபாதநைக பூதோக்தி நிராஸக–85-

ஸாங்க்ய ஸத் கார்ய வாதக்ந க்ஷணிகத்வ மதாந்தக
ஷணோபாதி விஸேஷஜ்ஞோ ஹேது ஸாத்யா பலாபஹா–86-

ப்ரதிஸங்க்யா ப்ரதீ ஸங்க்யா நிரோத மத பஞ்ஜக
அஷ பூத விகாரத்வ ஸாதக ப்ராண நாஸநii 87

பூதேந்த்ரியா ப்யாயகத்வ நிர்த்தாரண விசக்ஷண:
அந்த கரண நாநாத்வ பாஹ்யா ஷைக்ய நிராஸக: 88-

மநோ வ்யாபித்வ நித்யத்வ ஹேந்த்ரிய அணுத்வ வேதிதா
சக்ஷராதி ப்ராப்யகாரி பாவஸாதந தக்ஷிண–89-

ஸப்ததேஸ கத ஸ்ரோத்ர கார்ய க்ருத்வாபி தாயக|
ஸ்வதேஸாகத வ்ருத்தித்வ நிக்ராஹி ஸ்ரோத்ர பாதக:–90-

வ்யோமாத் யக்ஷத்வ நிர்ணேதா காவகா ஹோபகார வித்
ஆகாஸா வரணா பாவ மாத்ரபாவ விபஞ்ஜக–91-

ஆகாஸ நித்யத்வ விபு பாவ வாத விநாஸக
திக் வஸ்து ஸாதகச்சேதீ திக் வ்யோமாபேத ஸாதக! ||-92-

ராஜ ஸாக்ய மஹத் தத்வா பிந்ந ப்ராண விபஞ்ஜந :
ப்ராணாக்ஷத்வா வாயுபாவ வாத நிஹ்நவ தக்ஷிண |–93-

வைஸ்வாநர ஸ்வரூபாதி நிரூபண விசக்ஷண
தேஜோ தர்ம ப்ரபாதேஜோ பாவ ஸாதந தத் பர– 94-

ப்ரபா தீபாத் யவயவ பாவாபாவ விதாயக:!ப்ரபாவிஷய பாஷ்யோக்தி விரோதி ஸமநக்ஷம: 95-

ஸ்திராஸ்திராக்ய தேஜோ விபாக ஜ்ஞாந விசக்ஷண!
தம ஆலோக விரஹத்வாபாவ பருதிவீத்வ வித்11 96-

ப்ருத்வீ பதந பருத்வீ ப்ராமண வாத விநாஸக:
கால ஸ்வரூப கேஸாந்ய பாவஜ்ஞாந துரந்தர:–97-

காலானுத்பத் யஷகம்ய பாவஸ் ஸ்த்தாபந தத் பர
கால ஸர்வ வ்யாபகத்வ ஸர்வ ஸாதகதா ப்ரிய |–98-

ஆத்மாங்க மாநஸாக்ஷஜ்ஞாநாதி பேத ப்ரஸாதக:
ஆத்ம ப்ரத்யகத்வ கர்த்ருத்வ ஸ்வ ப்ரகாஸத்வ ஸாதக:–99-

யத்ந வைபல்ய ஹர்தோபாதிக ஜீவேஸ பேதஹா!
ஸ்வாபாவிகேஸ ஜீவாத்ம பேதாபேத மதாந்த க்ருத்!!–100-

ஏக தந்வேக ஜீவாத்ம மாத்ரபஷ விதாரண : ப்ரஹ்ம ப்ரதிச்சந்த ஜீவ வாத பஞ்ஜந தக்ஷிண–101-

சதுர் விதாத்மா நித்யத்வ வாத ப்ராண விநாஸந!
ஜீவாத்மா நித்யத்வ விபு வாத பஞ்ஜந தத் பர!-102-

ஜீவைககால நைகாங்கா திஷ்டா த்ருத்வா பிதாயக:
ஜீவ வ்யாபித்வோ பபத்திஹா ஜீவாணுத்வ ஸாதக: — 103-

தேஹதுல்ய பரீமாண ஜீவ வாத விநாஸக.
நித்ய ஸம்ஸாரி ஸதஸத் பாவ ஸ்த்தாபந தத் பர |-104

மோஷோபாய ஸு துர்ஜ்ஞாந பாவவாத விபஞ்ஜந
அபவர்கார்த்தி ஸத்தேது வித்யாநாநா விபாக வித் –105-

க்ரியா வித்யோபகாரித்வ ப்ரகார ஜ்ஞாந கோவித:
க்ரியாவித்யா கர்த்ரு ஸம்ஸ்காரத்வ வாத விநாஸக: |||-106-

ஸர்வாஸ்ரமி ப்ரஹ்ம வித்யாதி க்ரியா ஸ்தாபந க்ஷம:
கர்ம வித்யாஸ்ர மாங்கத்வ நித்யத்வாதி விபாகவித்!! | 107

ப்ரவ்ருத்யாக்ய நிவ்ருத்யாக்ய கர்மபேத ஸ்வரூபவித்
த்ரைவர்ணிகாதிகரண ஸர்வாதீகார பேத த்ருக் –108-

தத்வமஸ்யாதி புவந்பாதகத்வ விநாஸக : ஜகந் நிவர்த்தக ஜ்ஞாந நிவர்தக நிவாரக: !-109-

ஜகந் நிவர்த்தக ஞாந வேத்யாபாவ விதாயக
ஜகந் நிவர்த்தக ஞாநாதாராபாவ விதாயக:-110-

ப்ரஹ்ம வித்யா பாப நாஸ காரண த்வோப பத்தி வித்I
வித்யாநாஸ்ய த்ரி வர்காதி ஸூக்ருதோக்தி விசாரக: || 111–

அஸ்லே ஷோத்தர காம்யார்த்த புண்ய ஸம்பவ வேதிதா
விரஜோத்தர தீராந்த த்யக்த துர்வாஸ நோக்திமாந் –112–

முக்த புத்தி விகாஸோத்தர ஸீமா பாவ ஸாதக |
முக்தாத்யைச்சிக தேஹாதி யோக வர்ணந தத் பர: 113-

முக்தாதீச்சா விகாதாபாவ ஸ்தாபந விசஷண!
நிர்துக்க முக்தா நுபவ வேதீ நித்யாக்ய ஸுரிவித்-114-

தேவதாந்தர தாதாத்ம்ய முக்தி வாத தமோநுத
மதாந்தரஸ்த்த ஸாயுஜ்ய ஸ்ப்தார்த்தானுப பத்தி வித்– 115-

முக்தாத்ம புநரா வ்ருத்தி ப்ரஸங்க பரிஹாரக
வைஸேஷிகாதி பாஷாண துல்ய மோஷோக்தி வாரக! 116-

ஸாங்க்யாபிமத ஸம்ஸார மோஷ பக்ஷ நிவாரக
மதாந்தரஸ்த்தாபிமத மோஷ வைவித்ய வாரக!–117-

ஈஸ வேதைக கம்யத்வ வேதாபாத்யத்வ ஸாதக:
உபதேஸாநு மாநே ஸாநுமாந தமந க்ஷம: –118-

ஸாஸ்த்ர யோநித்வ ஸாங்க்யாதி க்ருதி த்வய விரோதஹா
நிமித்ததோ பாதாநத்வ த்வயைகாதார வேதிதா–119–

ஸூக்ஷ்ம ஜீவாசித் விஸிஷ்டே ஸோபாதாநத்வ ஸாதக
மதாந்தரஸ்த்த ப்ரஹமோபாதா நத்வோக்தி நிவாரக!! -120-

ஜீவாசிதீஸ விக்ருதிமத் ப்ரஹ்மோக் த்யபநோத 1
ஸர்வாநு வ்ருத்த ஸந் மாத்ர ப்ரஹ்மத் வோக்தி விபஞ்ஜக: –121-

ஜீவாதி பரிணாமீஸ ஜைநகந்தி மதாந்த க்ருத்
ப்ரஹ்மோபாதிக ஜீவத்வ பாஸ்கரோக்த்யபஹாஸக: || 122-

அவித்யா ஸஹித ப்ரஹ்ம விவர்தோக்த் யுபரோதக |
மதாந்தஸ்தாவித்யாவ லோகநாநுப்பத்தி த்ருக்–123-

ப்ரஹ்ம ஜ்ஞாநாநுமா ஸ்ரெளத பாதோதா ஹரண க்ஷம :
மாயாதிபத ஸத் ப்ரஹ்ம தோஷ ஜ்ஞாபக தாபஹ : || 124-

அவித்யா ஸாதகாஜ்ஞாந கார்யமித்யாத்வ ஸாதக!
கார்யோபாதாந ஸாத்ருஸ்ய நியமோக்தி விபஞ்ஜகா -125-

ஐகந் மித்யாத்வாதுமாந பஹு வ்யாஹதி போதக:”
அநித்ய மித்யா பாவ ப்ரக்லுப்தி பங்க விதாயக -126-

பேதா த்யக்ஷ விருத்தார்த்த நிஷேத ஸ்ருதி போதக:
அபரோஷாபாத்யதா யோக்யா யோக்ய ப்ரத்யஷ வேதிதா| 127-

மாயி ஸாஸ்த்ராத் யஷ மூல தோஷ ஸாம்யோப பாதக
துல்ய தோஷ ப்ரமாணந் யோந்ய ஸம்பாத கதாபஹ! 128-

ஸாஸ்த்ரைக வேத்யாநத்யஷ நாநாபேதோ பாதக
மாயி பெளத்தாதி ஸாம்யாபாதந நிர்வஹண க்ஷம : 129-

மாயி பக்ஷாநேக பாதக விகல்பாபிதாயக:
பர ஸாஸ்த்ரா நூபபத்தி பரிஹாரா விசக்ஷண! -130-

ஈஸ தேஹாதி பஞ்சாபா க்ருதிவாத நிராஸக!
தேவாதி விக்ரஹாபாவ வாத வ்ராத நிராஸக: || 131-

வ்யூஹாதி பஞ்சரூபேஸ பூர்ணஷாட் குண்ய வேதிதா
ஈஸ வ்யூஹ விஸேஷாபி மாநித்வ பரிஹாரக -132-

ஈஸாத்மாசார்ய ஸிஷ்யத்வாபி நீதி பல ஸாரவித் |
ஈஸ சித்ராநேக வ்ருத்தாந்த விஸேஷாதி தத்வ வித்–133-

ஈஸ ஸர்வஜ்ஞ பாவாநுபபத்தி விநிவாரக!
ஸர்வேஸ ஸர்வ ஸக்தித்வ ஸ்வேச்சாவத்வா பிதாயக:–134-

தீஸ்வ பாஸ்யத்வ நித்யத்வ திரவ்யத்வ ஸ்த்தாபந க்ஷம :
புத்யவேத்யத்வ நித்யாநுமேயத்வ மதபஞ்ஜக.–135-

ப்ரமா விபர்ய யத்வாபர தர்கோஹ ஸ்வரூப வித்
ப்ரமாண லக்ஷணஜ்ஞஸ் ஸத் க்யாத்யர்த்த க்யாதி பாதக–136-

அந்யதாக்யாதி ஸந்த்யாக ஸ்வீகார த்வய ஸாதக
ஸந்தேஹ யாதார்த்ய வேத்தா அநிர்வாச் யக்யாதி பங்க க்ருத்–137-

அநிர்வச ஸ்வரூபாதி ரஜதோத்பத்தி பஞ்ஜக :
புத்தோக்த நிரதிஷ்டாந் க்யாதிவாத நிராஸக !–138-

அநெளபாதிக துச்சக்யாதிவாத ப்ராண நாஸக
யோகாசார பரஹர்த்தா ச ஹ்யக்யா த்யநுபபத்திஹா–139

ஆத்மாகார ஜ்ஞாந ஹர்த்தா ஹ்யாத்மக்யா த்யப ஹாரக
நிராலம்பந விஜ்ஞாநா நுமாபஞ்ஜந தக்ஷிண: 140-

பாஹ்யா நெளபாதிகா ஸத்க்யாதி ஸாதந விபஞ்ஜந
தீகதார்த்தோத் பவார்த்தாகார வாத பரிஹாரக! -141-

ஹரித்ரா சூர்ண நீத்யர்த்த தீ யோகோத்தா க்ருதி த்விஷத்|
ஸெளகதோர்தா நதிஷட்டாந க்யாதிவாத நிரோதக: 142-

அநாலம்ப க்யாதி ஹந்தா ஸ்ம்ருதி ஜ்ஞாந ஸ்வரூப வித்
ப்ரத்யக்ஷ லக்ஷண ஜ்ஞாதா திவ்யார்ஷாத்யஷ ஸாதக –143–

வைஸிஷ்டயா கோசர ஜ்ஞாந மதச்சேதந தீக்ஷித:
ஸம்ஜ்ஞாநுவித்த ஸர்வார்த்த புத்தி ஸப்தாத்ய பாதஹா 144-

யோகி ப்ரத்யஷாநுமாந் தூஷணோத்பாவந ஷம 1
மாநஸாத்யஷ பங்கஜ்ஞஸ் ஸந்நிகர்ஷ ஸ்வரூபவித் | 145–

அலௌகிகாக்ய ஸம்பந்த ப்ரத்யஷ மத பாதக
அநுமாநாத் யக்ஷமாந பஹிர் பாவ விதாயக: 146-

அநுமா மாநதா லஷ்மஜ்ஞோ அநுமாபாதி தர்கஹா
அநுமாந்வா பரோத்தார ப்ரகார விதகரணீ: |–147–

உபாதி லக்ஷணோபாதி விதூநந விஸேஷவித் !
வ்யாப்தி ஸ்வரூப வயாப்தி க்ராஹக மாந விசாரக 148-

வ்யாப்தி க்ரஹ ப்ரகார ஜ்ஞாதா வயாப்த்யாதி விபாகவித்1
கேவலாந்வய யநூமாந விஸேஷஜ்ஞாந ஸாதக : – 149-

மஹா வித்யா நிராஸோத்த விரோத பரிஹாரக
கேவல வ்யதிரேக்யா க்யாநுமா பஞ்ஜந தக்ஷிண–150

லக்ஷண ஜ்ஞோந்யவாத் யுக்த லஷணார்த்த த்வயாபஹா I
ஸ்வ பரார்த்தா நுமா ப்ராஜ்ஞோ நியாயாயவ வேதிதா 151

நிக்ரஹஸ்தாந ஹேத்வாபாஸ ஜாதிச்சல வேதிதா
வாத ஜல்ப விதண்டாஜ்ஞோ மாநாபாஸ விவேஸக: 152-

அநுமாநாத்யஷ பாஹ்ய ஸப்தமாந ப்ரஸாதக:
ஆகாங்க்ஷ யோக்யதா ஸக்தி வாக்யார்த்த ஸஹகாரி வித் 153-

பத வாக்ய ஸ்வரூபஜ்ஞோ அந்வி தாபிவதநோத் ஸுக.
அபீஹிதாந்வய ஜ்ஞாதா விஸிஷ்ட பத ஸக்திவித் 154-

விபக்த்யாக்யாத தாதூப ஸர்க தத்தித வேத்யவித்
ஸமாஸாந்வய கருந் முக்ய ப்ரத்யயார்த்த விஸேஷவித்–155-

ஸாப்த போதாகார வேத்தா லக்ஷண பத வ்ருத்திவித்
விஸேஷ்ய முக்ய வ்ருத்தா ப்ருதக் ஸித்த பத ஸக்திவித்–156-

பகவத் ஸர்வ ஸப்தாபி தேயத்வ ஸ்தாபந க்ஷம:
தத்வமஸ்யாதி வாக்யார்த்த நிரூபண விசக்ஷண:–157-

ஸப்தோக்த ஸப்த ஸாமாநாதி கரண்யார்த்த வேதிதா !
ப்ரமோத்பத்தி ப்ரமா ஜ்ஞப்தி ஸ்வதஸ்த்தோத் பாவந க்ஷம:–158-

வேத ப்ரவாஹ நித்யத்வ வேதே ஸாஜநி தத்வவித்
வித்யர்த்த வாத மந்த்ராதி ததர்த்தாவ த்ருதி க்ஷமா–159-

பாஷா மந்த்ர வ்யவஸ்தாவிந் மந்த்ரா வாந்தர பேத வித் !
அத்ர வ்யமாநவித் ஸத்வா ஸத்வ ஸப்தோக்தி பாதக:–160-

ஜநநாதி ம்ருஷாத்வோக்தி மதச்சேதந தத்பர:
த்ரவ்யாத்ர வ்யாநு மேயாத் யஷ பேதாபேத வாரக–161-

பேத பாதக நிஸ்தாரா த்ரயேயத்தா வதாரக
ரஜஸ் தமஸ் ஸத்வ குணோபயோகா தரவ்ய தோக்தி மாந் ;–162-

ஸத்வாத் யவஸ்த்தா வைசித்ர்யாநந்த்ய நிர்ணய கோவித:
ஸப்தாதி க்ராஹகாதார நியமோக்தி விசஷண:–163-

ஸப்தாதி குணயுங்நித்ய விபூதி வ்யாக்ருதி க்ரம
ஸர்வ பூதாஸ்ரிதத்வாநா த்ரவ்யத்வ ஸ்தாபந க்ஷம–164-

ஸெளகதோக்த தீவாநஜைந ஸப்த புத்கல வாதஹா
வர்ண வேதாநித்ய நித்யத்வ ப்ரகாராவதாரக | 165-

அநுஷ்ணாஸீத ஸீதோஷ்ண ஸ்பர்ஸாதார விஸேஷவித்
பூத பஞ்சக வர்ணோக்தி நிர் வோடா ரூபபேதவித் 166-

சித்ரரூபமதச்சித் ஸ்நேஹ குணாந்தர பாதக: நிராக்ருத குருத்வ த்ரவத் வாக்யாந்ய குணத்வய ! 167

குருத்வாகம நிர்வோடா குருத்வாத்யக்ஷ லிங்க நுத்
ஏகத்வ த்வித்வ ஸங்க்யாதி குணாந்தர நிராஸக : |||168

பரிமாண ப்ருதக் த்வாக்ய குணாந்தர நிராஸக
நித்யாநித்யாக்ய ஸம்யோக ஸ்தாபநைக விசக்ஷண -169

பராபர விபக்தத்வ குணத்ரய நிராஸக
விஷயாலம்பிதாபேத தீவைஷம்யாவதாரக: 170-

முக்த புத்தி ஜகத் வ்யாப்தோபபத்தி நிரூபக :
யோகி புத்தி விநஷ்டைஷ்யத் கோசரத்வோபபாதக–171-

அத்ரவ்ய நித்யதீ பக்ஷ விஷயித்வாதி பாதக 11
தீவிகார த்வேஷ்ராக ஸுக துக்க ப்ரயத்நத்ருக்–172–

த்யக்த ஜீவந யோந் யாக்ய யத்ந ப்ராகட்ய தர்ஸந :1
பகவத் ப்ரீதி கோபாந்ய தர்மாதர்ம மதாந்தக–173–

ஸ்யேநாக் நீஷோம வைஷம்ய ஸாதநைக விசஷண:
மந்த்ர ஸ்வார்த்த பரத்வோக்தி விரோத பரிஹாரவித் –174–

தேவதாமுக ஸம்ஸித்த பகவத் ப்ரீதி ஸாதக :
ஸம்ஸ்கார கர்ம பகவத் பரீத் யர்த்தத்வ ப்ரஸாதக– 175–

அபூர்வ விதி வாஸ்யத்வ ப்ராதாந்ய பஹு தோஷவித் 1
வக்த்ர பிப்ராய தேவ ப்ரஸாத லிங்வாச்யதா ஸூதீ; 176-

ஸம்ஸ்காராக்ய குணச் சேத்தா கர்மாக் யார்த்த ஸ்வரூபவித்
ஸம்ஸ்த்தா நோத்தீர்ண கோத்வாதி ஸாமாந் யமத பஞ்ஜக ! !! 177-

ஜாதிவாத நேகவாதி ஸமீரித நிராஸக : 1
ஸாத்ருஸ்யாதி பதார்த்தாந்தர க்லுப்தி ப்ராண நாஸந– 178–

அநேக ஸூந்யா வயவாநுவ்ருத்தி வ்யவஹாரவித்!
விஸேஷ ஸமவாயாக்ய பதார்த்தாந்தர பாதக : –179–

அபா பாவ ரூபத்வ ஸ்வபாவேயத்வ போதக 1
ராமாநுஜீய ஸித்தாந்த ஸர்வோத்க்ருஷ்டத்வ ஸாதக!–180-

ஸச்சரித்ர த்ராண ஸம்யக் த்ராத ஸந்மார்க ஸந்ததி :
கிலாத்யஷ ஸ்ருதி ஸ்தாபித் சக்ராங்கந ஸம்ஸ்க்ருதி:–181-

ஸ்ம்ருதீதிஹாஸ நிர்ணீத தப்தசக்ராதி தாரண :
தப்த முத்ரா நிஷேதாதி வசோ நிர்வாஹ கோவித–182-

ப்ரத்யக்ஷ ஸ்ருதி ரூப ப்ரமாண போத்யோர்த்வ புண்ட்ரக !
ஊர்த்வ புண்டர ப்ரமாண ஸ்ம்ருதீதிஹாஸ புராணவித் 183

ஊர்த்வ புண்டராநநுஷ்டாந நிமித்தா நர்த்த ஸாதக :
ஸர்வ வைதிக கர்மாங்கோர்த்வ புண்டர த்ருதி கோவித : 184

பஸ்ம ஸ்ரீவைஷ்ணவாஸ் ப்ருஸ்ய பாவ ஸாதந தக்ஷிண
ஊர்த்வ புண்டர த்ருதி த்ரவ்ய விஸேஷாவ த்ருதிக்ஷம–185-

அச்சித்ர புண்ட்ரதமநஸ் திர்யக் புண்ட்ர நிஷேதக 1!
பகவத் பாத ஸத்ருஸோர்த்வ புண்ட்ரா க்ருதி வேதிதா –186-

புண்ட்ர ஸச்சித்ரதா வேத்தா புண்ட்ர ஸங்க்யா விசாரக :!
ஊர்த்வ புண்ட்ர த்ருதி ப்ரோக்த பிரகார விவ்ருதிஷம –187–

ஊர்த்வ புண்ட்ராநேக மந்திர வ்யவஸ்தா கரண ப்ரிய :
வர்ணாஸ்ரமாதி நியதோர்த்வ புண்ட்ராங்குளி வேதிதா -188–

ஊர்த்வ புண்ட்ர ஸ்தாந வேத்தோர்த்வ புண்ட்ர த்யேய தேவவித்
ஸ்ருதி ஸ்மருத்யாதி நிர்ணீத விஷ்ணு நைவேத்ய போஜந –189-

விஷ்ண்வர்த்தாந்நா பக்த சக்ஷர் தர்ஸநோத்ஸாரண ப்ரிய
பகவத் புக்த ஸேஷாந்நா பக்த் தாந நிஷேதக–190-

அந்யதேவ நிவேத்யாதி போஜ்யத்வாபாவ ஸாதக : 1
அநந்தாயுத பஷீஸ நைவேத்யாத் யத்வ ஸாதக : –191-

ஸேநேஸ த்வாரபாலாதி நைவேத்யத் யத்வா பாதக !!
ஸேநேஸ ஹவிராலம்பி பக்ஷபேத நிரூபக–192-

விபக்த விஷ்ணு நைவேத்ய சாதுர் வித்யோ பயோகவித்
ஹரி பூஜோ பயுக்தஸ்த்தாயி பூஜாந்தர யோகவித்!!–193-

விஷ்ணு நைவேத்யைகஸாத்ய வைஸ்வதேவ விதி ப்ரிய : விஷ்ணு நைவேத்யைக ஸாத்ய பித்ரு ஸ்ராத்த க்ரியாதிக I!–194-

விஷ்ணு நைவேத்யைக ஸாத்ய ப்ராாணாக்நி ஹவநக்ரிய 11
வைஸ்வதேவே ஜ்யோபயுக்த போஜ்யதா வாக்ய ஸோதக !!!–195-

விஷ்ணு நைவேத்ய ஹார்தா நிவேத்யாஸந நிஷேதக
அர்ச்சா ஹார்தாதி ரூபாஸ்ய ஹவிரம்ஸ விஸேஷவித்||–196-

அந்ய ப்ரயுக்தோபஜீவி ப்ராணாநி ஹவநகரிய :
ஸடகோபாதி நைவேத்ய ஸார்த்த ப்ராணாக்நி ஹோத்ரக–197-

ந்யாஸவிம்ஸதி ஸங்க்ஷிப்த நிஷேபா பேக்ஷிதாகில :
ஸங்க்ஷிப்த ந்யாஸ வித்யாங்க ஸ்ரீ ந்யாஸ தஸகப்ரத !–198-

நிஷேப ரக்ஷாக்ருந் ந்யாஸ நிஷேத நவகாந்தக
ஆநுகூல்யா த்யங்க பேத ப்ரபத்யத்யாய பேத த்ருக் || 199-

அந்யதேவ பராசார்ய த்யாக பர்யந்த போத க்ருத்
ஸம்ஹிதாபேத கம்ய ந்யாஸ வித்யா மநு பேதவித் –200–

ந்யாஸ பக்தாபசாராதி நாஸ்யத்வ வயாக்ருதி ஷம :
ந்யாஸ மந்த்ர த்வயந்யாஸ ஸர்வாதி க்ருதி ஸோதக: –201–

பும்ஸு வித்யா நியாஸ வித்யா ஸேஷபாவ பிரகார வித்
ஸங்கல்பித குருபாயா ஸங்க்ராஹ்ய லகு வேதிதா–202–

ஸ்ரீராம சரம ஸ்லோக வ்யாக்யாந கரண க்ஷம
ஸ்ருத்யந்த வேதந க்ராஹ்ய பக்தி ந்யாஸோப பாதக : 203–

ப்ரஹ்ம ஸூக்தாத் யுக்த பக்தி ந்யாஸ வித்யா த்வயோத்ஸு-க 11
மோஷார்த் தாராத நாத் யர்த்த ந்யாஸா வாந்தர பேதவித் –204-

பாஷ்யகாரோக்த கத்ய த்ரய வ்யாக்யாந விசக்ஷண :
கத்ய த்வய வ்யாக்ருதித்வ நிரூபண விசஷண : 205–

கத்ய ப்ரபத்தி ப்ராதாந்ய பரத்வ ப்ரதிபாதக : 1
ப்ரபித்ஸு பூர்வ மத்யைஷ்யத் கால கர்த்தவ்ய போதக : 206–

ஸரண்ய பூர்வ மத்யைஷ்யத் கால கர்த்தவ்ய வேதிதா
லஷ்மீ ப்ரபத்தி மோஷார்த்த ப்ரபத்யர்த்தத்வ ஸாதக: 207–

கமலாநுக்ரஹை காந்த்ய பாரம்ய த்ராண தீக்ஷித 1
ஸ்ரீந்யாஸ பாரமைகாந்த்ய பஞ்ஜகத்வ நிவாரக 1 ||| –208–

பரபக்தி பரஞாந பரம ப்ரேம ஸோதக:
ந்யாஸ ஸ்வரூப விஷயாயத்த வைஷம்ய ஸாதக : –209–

பஞ்சாயுதா வாந்தரீய ப்ரயோஜந விசாரக 🙂 பஞ்சாயுத ப்ரமாணீய விரோ தோத்தார கோவித :– 210–

கத்யோக்த பித்ரு மாத்ராதி த்யாக நிர்வாஹ கோவித!!
அக்ருத்ய கருத்யாகரணாபசாராதி விஸேவித் –211–

பக்தாபசார வித் பாப ஸக்திபேத நிரூபக ரஹஸ்ய ஸ்பஷ்ட பச்தாபசாராதி பரிஹாரவித் ! –212–

வர்த்தமாத பவிஷ்யத் காம்ய மார்த்தந யுக்திவித்
ப்ரபந்நாபுத்தி பூர்வைநோ நிஷ் க்ருத் யுக்த்ய விரோதவித் –213–

சதுஸ் லோகீ பாஷ்ய ஸூக்த லஷ்மீ ஸத்வோப பத்திக !
லஷ்மீ விஷய துர்வாதி விருத்தோக்கி நிவாரக : –214–

ஸ்தோத்ரபாஷ்ய க்ருதி வ்யக்த யாமுநாசார்ய மாநஸ
ஸ்வார்த்தாந் யோக்த ஸ்தோத்ர ஸர்வ புருஷார்த் தத்வ ஸாதக–215–

குரு தத்குரு ஸம்பாத கால ப்ராசார்ய தாஸ்ய க்ருத் !
வைகாநஸாகமாத் யுக்த நதிபேத விசாரக: -216–

வகுளாபரணாசார்ய பாவாநேக விரோதஹா !
அத்யஷாகம ஸத் ஸூக்தி நிர்ணீத ஜகதீஸ்வர: 217–

நாராயணாத் யநந்யார்த்த ஸம்ஜ்ஞாஸ் தேதர தைவத :
பாரம்ய ஸூசகாநேகா நந்யதா ஸித்த லிங்க த்ருக்! 218–

வக்த்ரு ஸத்வாத்யநுகுண ஸாத்விகாதி புராண வித்
ஸாத்விகாதி ப்ரவசந ஸாத்விகத்வ ப்ரஸாதக 1 ||| 219–

ஸ்ரீபாஞ்சராத்ரா ரஷாக்ருத் பஞ்சராத்ர ப்ரமாண வித் 1
அஸ்மார்த்த ஸம்ஸ்க்ரியாதீநா ப்ராஹ்மண்யா பத்தி வாரக : 220–

த்ரய்யாக மோக்த கர்மாதிகாரி வைஷம்ய ஸாதக
ஏகாயநா பௌருஷேய பாவ ஸாதந வேதிதா ! 221–

ஸ்ரீபாஞ்சராத்ர ஸித்தாந்த பேத லக்ஷண வேதிதா
சதுர்விதாகம ப்ரஹ்ம ப்ராப்தி ஹேதுத்வ ஸாதக :–222-

ஸித்தாந்த ஸம்ஹிதா தத் தத் ஸாங்கர்ய பரிஹாரவித்
ஸ்வாந்ய ஸித்தாந்த கர்மாதிகாரா பாவ ப்ரஸாதக –223–

ஆகமா வாந்தரோத்கர்ஷா பகர்ஷாதி விதாயக ! |
உத்ருஷ்டஸ்த்த நிக்ருஷ்டோக்த க்ரியாதி க்ருதி போதக?- 224–

வைகாநஸாக்ய தந்த்ர ப்ரமாணத்வ விவ்ருதி ஷம !
வைகாநஸாக மாந்யோந்ய ஸாங்கர்யாஸக்தி பஞ்ஜக : –225-

ஸ்ரீபாஞ்சராத்ர ஸர்வோப ஜீவ்யத் வோக்தி விசஷண:1
ஸூத்ராந்தரஸ்த்தாபி தார்ச்சா தந்த்ர பூஜா விதாயக :–226-

ஸைவாக மாத்ய மாந்யத்வ ஸம்ஸத்தாபந விசக்ஷண1
ப்ராக ப்ரவ்ருத்த பரித்யாகோத் க்ருஷ்டாகம நிரோதவித்–227-

ஸாத்விகாதி விபாகாதீ நாகமாமாந தாபஹ:
பூர்வாகமோத்ருஷ்ட மார்க விதாந ஸூகதி ப்ரத : |–228-

ஸ்வயம் வ்யக்தாதி. பவந தாரதம்ய விதாயக!
தேவ பூஜா முக்ய கெளணாதிகாரி வ்யாக்ருதி க்ஷம–229-

தேவேஜ் யாஷ்டாங்க தோத்கர்ஷ வர்ண நைக விசக்ஷண :
ப்ரயத்நா த்யநபேக்ஷ ஸ்வதஸ் ஸித்தோத்கர்ஷ வஸ்து த்ருக் |–230-

பரமைகாந்தி கர்த்தவ்ய பஞ்சகால க்ரியா ஸூதீ!
பாஷ்யகாராஸ்ரயி பூத பஞ்சகால பிரகாஸக :–231-

வைஸேஷிக த்ரிகாலார்ச்சா பிதாநாத்ய விரோத திருக்!
ஸ்ரீபாஞ்சராத்ர ஸ்ம்ருத்யைக கண்ட்ய ஸ்தாபந தக்ஷிண :–232-

வ்யாஸ தஷாத் யுக்த தர்ம ஸாஸ்த்ரார்த்த விவ்ருதி க்ஷம 1
ஸர்வ க்ரியா த்யாங்க பூத ஹரி ஸ்மரண போதக !–233-

பஞ்சராத்ரோக்த பகவத் ஜ்ஞாந நித்யத்வ ஸாதக:
அர்ச்சாவதார ரஹித க்ருஹ போஜந தோஷவித்–234-

பகவத் த்யாந ரஹித கால வைய்யர்த்ய ஸாதக!
ப்ராப்த காமார்த்த லிப்ஸா பாரமைகாந்த் யாநுகூல்ய திருக் –235–

கைங்கர்ய காலாவஸ்யாநு ஸந்தேயார்த்த விஸேஷவித் 1
ஸமயாசார நியமா த்யாயோக்தா வஸ்யகத்வ வித்–236-

வைஷ்ணவ ஸ்ரீ தர்மா ஸாஸ்த்ரோ தீரிதா வஸ்யகத்வ வித்
ஆரம்ப மந்த்ர நிர்ணேதா ஸாத்விக த்யாக ஸாதக:–237-

ராத்ர்யந்தோத்தாந ஸமய ஹரி கீர்த்தந ஸாதக 1
நித்ரா நிமித்தா சமநாநுகல்பா வஸ்யகத்வ வித்–238-

பூர்வஷபா விரமித யோக கார்யத்வ வேதிதா
அபியாநாரம்பகால வேத்தா நிர்வேத காலவித் –239–

நிர்வேத பலவித் கார்ய கர ஸாத்விக தைர்ய வித்
மந்த்ராதிகம குர்வந்யோபாய தூஷண வேதிதா–240–

குருத்யா நாநு கர்த்தவ்ய ஹரி த்யாந ஸ்வரூபவித்
கைங்கர்யார்த்தாசார்ய விஷ்ணு த்யாநா நுத்யாந போதக –241–

நித்ய ப்ரயோஜ்ய கைங்கர்ய பூரணார்த்தந மந்த்ர வித் :
ஸ்தோத்ராதி ஸத்தாவஸ்ய கீர்த்ய தேவ தேவ்யாதி நாமவித் –242–

பகவந் மந்த்ர தத் கால சோதிதோசித ஜப்ய வித்
பத ந்யாஸ் மநுஜ்ஞாதா பதக்ரம மநூக்திமா –243–

கதிகாலா வஸ்ய கார்ய கேஸவாஹ்வாந கீர்த்தந :
ஸந்த்யா ஸ்தநோபகரண க்ரஹணைக விசக்ஷண –244–

மலமூத்ர விஸர்கார்த்த தேஸாதி ஸகலார்த்த வித்
சவ்ச ஸங்க்யா க்ரம த்ரவ்ய கால வைஷம்ய ஸாதக : || 245-

தந்ததாவந் காஷ்டாதி வ்யவஸ்த்தா ந்யாய தத்பர :
ஸ்நாந தீர்த்த விஸேஷஜ்ஞ! ஸ்நாந பேத விதாயக! 246–

உஷ்ணோதக ஸ்நாந கால வ்யவஸ்த்தா கரண ஷம
வாஸோ தரண புண்டராங்க தர்ப்பண க்ரம ஸாதக:–247-

ஸந்த்யோபாஸ்தி விஸேஷஜ்ஞோ காயத்ரீ ஸ்தாந ஸாரவித்
காயத்ரீ ஜப ஸங்க்யாந ஸாதநோத்கர்ஷ ஸாரவித்–248–

ஸந்த்யா கலீந நியம வேத்தோபஸ்த்தாந கால வித்
திகாதி நமநாஸக்த ஸாரமைகாந்த்ய பங்கஹா–249-

ஸந்த்யாகாலா வஸ்யகார்ய மூலமந்த்ர ஜபோக்திமாந்
வ்யாக்ருதாதார சக்த்யாதிதேவரிஷி பித்ரு தர்ப்பண:–250-

நித்ய தர்ப்பண கர்மாந்த வாஸ பீடந ஸாதக:
பரமேஜ்யாகாலவித் க்யாத தீர்த்த மந்த்ரோப ஸம்ஹ்ருதி: ||| 251-

தீர்த்தா ஸந்நா நந்த ஸத்ம ப்ரவேஸா ,வஸ்யகத்வ வித்
பகவத் ஸத்ம ஸந்த்யாஜ்ய த்வாத்ரிம்ஸ , தபசாரக : –252–

அப்யுஷாணோஷித க்ருஹோ ஹோம கால விஸேஷவித்
பரகோக்ராஸ தாநர்த்தி ரபியாந ஸ்வரூபவித் –253–

உபாதாநாக்ய ஸமய வேத்தோபாதாந மந்த்ரவித்!
ஹேயோபாதேய தேவார்த்த ஸூமாதி த்ரவ்ய வேதிதா –254–

ஸ்வார்ஜி தாரண்ய மூல்ய க்ரீத யாசித குணாதிவித்
ஸுமநோகத ஸத்வாதி க்ருதோபாதாந ஹாநக ! ! -255–

திதிபேதாதி நியத புஷ்பபேதாதி ஸாதக !திவாநிஸா தேவ யாக வ்யாப்த ஸூந விஸேஷவித் — 256–

ஸாஸ்த்ராநுமத ஸிஷ்டாக்ராஹ்ய புஷ்பாதி நிவாரக:
கருஹால யார்ச்சா நியத வாஸ புஷ்பாதி பேத வித் ல்–257–

ஸ்ரங்மாலா பேத த்ருக் ஸூத்ர க்ரதிதாதி நிஷேதக :
பகவத்யாக வர்ஜ்யோபாதேயாபரண ஸோதக –258–

ப்ராண்யங்க ஸூரபித்ர வ்யோபயோக வ்யாக்ருதி க்ஷம:
ஹேயோபாதேய முகுள பத்ராங்குர விசாரக–259-

திநக்வயாபா ர்யுஷித குஸு மோக்தி விசக்ஷண :
போஜ ராஜா த்யுக்தகால புஷ்ப பேத விசாரக:–260-

க்ராஹ்ய மூல க்ரஹீதா தூப தீப த்ரவ்ய வேதிதா
தஸா விஸேஷாநுமதார் ஜநோபாய விஸேஷவித்–261-

ஸர்வ ப்ரதி க்ரஹ வ்யாப்த மநு நிர்ணய கோவித: 1
யதி புஷ்பக்ர ஹோபாய விஸதீகரண க்ஷம–262-

பூஜாத் யர்ஹாந்த ராத்மீய குணோபாதாந ஸாதக
பாஷ்யகாரோக்த நித்யாக்ய க்ரந்த வ்யாகரண க்ஷம–263-

இஜ்யாகால விஸேஷஜ்ஞ இஜ்யா ப்ராதாந்ய ஸாதக
பரமைகாந்தி ஸப்தார்த்த தந் நிபந்தந வேதிதா –264–

யத்யந்ந தேவ பூஜாதி மஹா தோஷ ப்ரஸாதக !
பரமைகாந்தி ஸந்திருஷ்டாந் யதேவ நாதிபாதக! |– 265–

கர்மண்யதா பாவ ஹேது பாப தச்சாந்தி ஹேது த்ருக்
இஜ்யாதிகார பேதஜ்ஞ இஜ்யா ஸாரார்த்த வேதிதா –266–

ஸ்வாத்யாயகால ஸ்வாத்யாய பேதாதி க்ருதி பேத திருக்
ஸ்வாத்யாய ஸார ஸந்த்ரஷ்டா ஸ்வாத்யாயாங்க விஸேஷவித்| –267–

ஸாயம் ஸந்த்யாஹோம தேவ பூஜா போஜந காலவித்
புஜிலோப நிமித்த ப்ராணாக்நி ஹோத்ர மநூஜப –268–

ப்ரதோஷ வர்ஜித நிஸா யோக்யாதீதி விஸேஷவித்
த்ரயோ தஸீ , பூர்வராத்ரி கார்யமெளந விஸேஷவித் — 269–

ப்ரதோஷகால கர்த்தவ்ய ஸந்த்யா ஸங்கோச வேதிதா!
ப்ரதோஷா வஸ்ய வர்ஜ்யாஷ்டாக்ஷர மந்த்ர ஜபோக்திமாந் — 270–

ஸந்த்யா த்யாஜ்யா ஷ்டாக்ஷராந்ய காயத்ர்யந்ய ஜப க்ரிய
ஆசவ்சகால ஸந்த்யாஜ்ய காயத்ர் யந்ய ஜப க்ரிய–271-

அத்யாயா நர்ஹ விஷு வாத்யநுஜ்ஞாத ஜபாந்தர!!
மெளநக்ரியா ஸமாயாத ஸச்சித்ரத்வ நிராஸக!–272-

ப்ரதோஷ நரஸிம்ஹாந்ய ஹரி தர்ஸந பாதக: I
ப்ரதோஷ காலாநுஜ்ஞாத ஸ்வ க்ருஹார்ச்சா வலோகந !–273–

மத்ய ராத்ர நிஷித்தஸ்வ க்ருஹார்ச்சா பூஜநாதிக:
மத்ய ராத்ரோபராகாதி கால வர்ஜ்யார்ச்ச நாதிக! –274–

ஸர்வகாலாப் யநுஜ்ஞாதா ஸ்தாநஸ்த்த ஹரி தர்ஸந :
அஷ்டாங்க யாக மத்யா நுஜ்ஞாத ஸ்வாத்யாய யோக வித் — 275–

ஸ்ரீபராஸர ஸாண்டில்யா த்யுக்த யோக ஸ்வரூபவித்!
ஸ்ரீபாஷ்ய க்ருத் ஸம்ப்ரதாய ப்ரபந்ந ஜந யோகதிருக் !!–276-

ந்யாஸ கத்யாத்யநுகுண விநியோக விதாயாக!
அர்ச்சாவதார விஷய யோகெளசித்யாபி தாயக !–277–

யோகாங்க ஸம்ஹ்ருதி ந்யாஸ ஸ்தாநா சமந ஸாதக:1
யோகோபகாரி கரண ஸ்ராந்தி ஹேது ஸுஷப்திமாந் –278-

கட்வாதிருப ப்ரஹ்மாதி ஸம்பரிஷ்வங்க பாவந i
ஸாஸ்த்ரீய ஸயநீயாதி நியமாதி விதாயக –279–

ஸ்வாராத்ய பகவத் பாத ஸரோ ஜந்யஸ்த ஸீர்ஷக :
நித்ராரம்பச் சேதகார்ய மாதவத்யாந கீர்த்தந! –280–

ஏகாதஸ்யாதி லுப்தாநு யாக ஸப்தாங்க யாகத்ருக்
த்வாதஸ்யாதி ப்ரபாதாத : பாரணாஸ்தாபந க்ஷம– 281–

பாரணாதித மத்யாஹ்ந ஸப்தாங்கேஜ்யா விசாரக
அநேகேஜ்யா ஸந்நிபாத லுப்தோபாதாந லேஸக!–282-

அஸக்யவஸ்த்தா ஸ்வ ஸமாநர்த்விகாதி க்ருதேஜ்யக
விதுர வரதி ஸந்யாஸி வநஸ்த்தர்த்விங் நிஷேதக:–283-

ஸூதகாதி தஸாத்யாஜ்ய ஸூசிகர்த்தவ்ய கர்மக!
மௌந ஸூந்யா சவ்ச கால கீர்த்ய த்யேய ஹரி ப்ரிய–284-

ஆ சவ்சகால கர்த்தவ்யாபி யாநாக்ய க்ரியாபர1!
ஸர்வக்ரியா ப்ரதிநிதி பகவந்நாம கீர்த்தந:–285-

ரஹஸ்யாம்நாய நிஷ்டா சவ்ச நிஷேத விதாயக:
ப்ரஹ்ம வித்வ நிமித்தாக ஸங்கோச வ்யாஹதி க்ஷமா–286-

ப்ரக்ராந்தோத்ஸவ கார்யாதி ஸூதகாதி நிஷேதக
ஆசவ்ச கால கர்த்தவ்ய மாநஸேஜ்யா விசாரக–287–

ஆசவ்சகால கர்த்தவ்ய ஸந்த்யோபாஸ்தி ப்காரவித்
துஷ்கரத்வ பரிஜ்ஞாந ஷுப்த பும்ஹர்ஷ வர்த்தக: — 288–

பகவத் தர்ம சவ்கர்ய விஸேஷ வ்யாக்ருதி ஷம
இஜ்யோபசார வைகல்ய தோஷாதோஷ விசாரக! 289–

ஸங்கல்ப ஸூர்யோதயாத: க்ருத பாரக்ய நாடக
ஸங்கல்ப ஸர்யோ தயாத்ய பத்ய வ்யக்த ஸ்வவைபவ: — 290–

ச்சாத்ரபத்த த்வஜோத்பாஸி தாஸா ஸாஸௌத மண்டல
ஸ்ரீவைகுண்ட விநோதீ ஸத் கவி நாடக லக்ஷம த்ருக் ||–291-

ஸாந்தியைக ரஸ பாவஜ்ஞ ! ஸ்ருங்காராதி ரஸத்வஹா
கௌடவைதர்ப்ப பாஞ்சால மாலாகார வசோதர:– 292–

பாத்ரீக்ருத விவேகாதி குணாதிஷ்டாத்ரு தைவத !
ஸந்திபஞ்சக ஸம்வேஸ நாடக ஸ்தாந கோவித–293-

ஸர்வஸங்கட வித்வம்ஸி விஸங்கட மநீஷித:
விம்ஸத் வர்ஷாதீத ஸர்வ வித்யாஸந்த்தி பாஸூர–294-

த்ரிம் ஸத்வார ஸ்ராவித ஸ்ரீமச் சாரீரக பாஷ்யக
யதீந்த்ரார்ப்பித துர்வாதி விஜ்யார்த்த பவித்ரக–295-

வாதநாமா வாததோஷ வ்யவஸ்த்தா கரண க்ஷம:
ஸூக்ஷ்ம ஸூஷ்ம தராத்யந்த ஸூஷ்ம ப்ரஸ் நோத்தர க்ஷம–296-

யதீந்த்ர க்ரந்த ஸூரபி மநஸ்க பத ஸேகர !
ஸங்கராதி குத்ருங்மூர்த்த ந்யஸ்த வாம பதோஜ்வல! -297-

குத்ருங் மூர்த்த நீயஸ்தபாத ஸுவர்ண கடகோஜ்வல:
வைகுண்ட லோக ஸ்த்ரீ பும்ஸ மிதுநார்த்தோப பத்தி வித் — 298–

ஸ்வஸில்பஜித கீர்வாண தைத்ய ஸில்ப சமத் க்ருதி:!
ஸமாதி ஸாதகஸ்தாந ஸூபாஸ்ரய நிரூபக: — 299–

அநாத்ம குணகாமாதி நிராஸாதி ப்காரவித்
மஹாத்மாத்மாநாத்ம குண சேஷ்டித ஜ்ஞாபந ஷம: — 300–

ராகவாப்யுதயோத்க்ருஷ்ட யாதவாப்புதய ப்ரத:
ஸ்ரீஸேது ஸடகோபாதி ஸேவா ஸந்துஷ்ட மாநஸ !–301-

சோளதேஸீய பகவத் க்ஷேத்ர ஸேவா ரஸாகுல ;
ஹஸ்தீஸ ஸேவா குலாத்மா நரேந்த்ர மத ஸர்ப்பஹா–302-

நரேந்தர வந்திதஸ் தார்ஷ்ய தண்ட கோத்தம தாத்ருதீ !
புநர் வ்ருஷாத்ரி ரங்கேஸ ஸேவார்த்த கமநோத் ஸூக :–303-

ஆஸ்சர்யாவஹ சாரித்ர வாஜி வக்த்ராதி தைவத!
வரதாசார்ய ஜநகோ ஜீவிதாகில விஷ்டப:–304-

ஹயாஸ்ய பூர்த்த தீர்த்தாஹர் த்ருஷ்ட லஜ்ஜித விக்ந க்ருத்
ராத்ரி நிர்வ்யூட ரங்கேஸ பாதரக்ஷா ஸஹஸ்ரக:–305-

பாதரஷா ஸஹஸ்ரோக்த பாதுகா ஸேவகாபித:
ரங்கேஸ தத்த கவிதார்க்கிக ஸிம்ஹாபி தாநக–306-

ஸம்ப்ரதாய பரீஸூத்தி ஸ்தாபிதாசார்ய ஸத் பத!!
ஸத் ஸம்ப்ரதாய ரஹித ஸாஸ்த்ரா நாதர போதக:–307-

ஸச்சாஸ்த்ர மூலாந்ய ஸம்ப்ரதாயா நாதர போதக!!
கல்யாதி நிகமாந்த ப்ரவர்த்த காவத்ருதி க்ஷம!–308-

ஸட கோபாசார்ய பாவ ஸ்தாபநைக விசக்ஷண
அநு கூலாசார்ய வம்ஸ்ய வித்யாதாந ஸூபாத்ர வித்!!–309-

முக்ய ப்ரதாநாசார்யத்வ ஸ்தாபநைக விசக்ஷண:
ஸ்ரீமத் ராமாநுஜாசார்ய ஸம் ப்ரதாய விரோதஹா — 310–

ரஹஸ்ய தத்வ த்ரிதய பதவீ க்ருதி பாஸுர!! ரஹஸ்ய தத்வ ரத்நாவல்யலங்க்ருத ஸூஹ்ருந் மநா : ||| –311–

தத் வரத்நாவளீ ப்ரதிபாத்ய ஸங்க்ரஹ காரக :
தத்வரத்நாவளீ கம்ய ஜ்ஞாந பர்யாப்தி போதக! — 312–

ரஹஸ்ய ரத்னாவள்யாக்ய ரஹஸ்ய வ்யாக்ருதி ப்ரிய:
ந்யாஸ் யுத்தரைந : ப்ரதி பதோக்தா நிஷ்க்ருதி ஸாதக; — 313-

ஸ்ரீதத்வ நவநீத ப்ரீத ஹஸ்தி கிரி நாயக:
ரஹஸ்ய நவநீதோக்தி ஹருஷ்ட வேங்கட நாயக! ||– 314–

காலதாமஸ பாவாதி நிபந்தந விசாரக:
பகவத் த்ரிஸ்த்தலாவாஸ க்ரியா வ்யாக்ருதி தக்ஷிண: — 315–

யுக பேதாதீந வர்ண பகவத்தேஹ தர்ஸந! ஸ்ரீதத்வமாத்ருகா ஹருஷ்ட பகவத் பக்த மாநஸ: | — 316–

ரஹஸ்ய மாத்ருகா தத்த ப்ரபந்நாந்வஹ தோஷக! |
ஸாரஸங்கரஹ க்ருந் ந்யாஸ க்ராஹ்யாக்ராஹ்ய விபாகவித் — 317–

ப்ரபந்த ஸ்வீக்ருதிக்ருத பூர்த்ய பூரீத்தி விசாரக 1
மாநாதி தஸ காலம்பி விவேகி பல போதக! –318–

மாநப்ரமேய விச்சிஷ்யாசார்ய க்ருத்யாதி ஸாரவித் !
வ்யக்தீ க்ருதாகிலோத்கர்ஷ ஸ்ரீரஹஸ்ய ஸிகாமணி — 319–

ஸ்ரீமத்வராஹாவதார ஸர்வாதிக்யா பிதாயாக
வராஹாக்ய புராணாதிஸய வர்ணந தக்ஷிண:–320–

ப்ரபத்திபர வாராஹ சரம லோக போதக : 1
யாமுநோக்தி பரிஷ்கார்யஞ்ஜலி வைபவ காரக! –321-

ப்ரபந்த விஷய ஸ்ரீமததிகப்ரீதி ஸாதக: ! ஸ்ரீமத் தாஸ்யாநந்ய தைவத்வா தந்யார்த் தத்வ சிஹ்ந திருக்-322–

ப்ரதாந ஸதக வ்யக்தீ க்ருத முக்யார்த்த ஸஞ்சயா
ஸதாநு ஸந்தேயார்த்தோபகார ஸங்க்ரஹ காரக!!!–323-

மஹோபகார வித்ஸார ஸாராக்யாந க்ருதி ப்ரிய
பரங்குஸாதி நிர்வ்யாஜ ரக்ஷணோக்தி விரோதஹா !–324-

ரஹஸ்ய தத்வ த்ரிதய சுளகா ஸ்வாதி தாஸ்ரித :
அபய ப்ரதாந ஸார ஸ்பஷ்ட ராமாயணாந்தர :–325-

ஸ்ரீஸாபசார ரஸிக வைஷ்ணவா நாதரோத்திமாந்
ஸ்ரீஸாபசார பக்தாநாதர ஷாபண காலவித்–326-

நியாஸாபேக்ஷித ஸர்வார்த்த வ்யஞ்ஜகாதிம காவ்யவித்
ஸ்ரீமத் க்ருபா பரிணத ஸோபாந பதவீ ப்ரிய –327-

அர்ச்சிராதி மஹாமார்க விரோத ஸமந ப்ரிய
மாதவாத்மஜ பூபார்த்த தத்வ ஸந்தேஸ காரக:–328-

ரஹஸ்ய ஸந்தேஸ க்ருதி ப்ரீத மாதவ புத்ரக :
ரஹஸ்ய ஸந்தேஸ விவரணாக்ய க்ருதி தோஷக.–329-

மாதவாத்மஜ பூபார்த்த ஸுபாஷித விதாநவித்
ஹம்ஸ ஸந்தேஸ விவ்ருத பகவத் ப்ரேம தல்லஜ :–330-

ஸ்ரீமந் மெளளி க்ரமாபிக்ய க்ரந்த நிர்மாண கோவித :!
லோகாசார்யாதி ஸச்சிஷ் யார்ப்பித ஸாரீர பாஷ்யக:–331-

ப்ரஹ்ம தந்த்ர ஸ்வ தந்த்ராதி ஸிஷ்யார்ப்பித ரஹஸ்யக
க்ருதாஸீதி ஸஹஸ்ர த்ரமிடாகம பரீமள:–332-

முநிவாஹந போகாக்ய க்ரந்த ஸம்ப்ரீத ஸஜ்ஜந : 1
ஸ்ரீமந்மதுரகவ் யுக்தி காதா வ்யாக்யாந தஷிண ! !!–333–

த்ரமிடாம்நாய தாத்பர்ய ரத்நாவளி விதாயக:
த்ரமிடோபநிஷத் ஸார ப்ரபந்தோஜ்வல மாநஸ–334-

ஸ்லோக த்ரயோக்த பகவதாராதந விதி க்ரம:
நவஸ் லோகீ ஸங்க்ருஹீத ப்ரஹ்ம ஸத்ர விதாநக :–335-

ப்ரபந்த ஸார நிர்மாதா ஆஹார நைய்யத்ய கீதி க்ருத
மூல மந்த்ரார்த்த ஸங்கராஹி காதாக்ருதி விஸாரத:–336-

த்வய மந்த்ரார்த்த ஸங்க்ராஹி காதாகரண தக்ஷிண:
சரம ஸ்லோக ஸங்கராஹி காதா ஸங்க்ரஹ கோவித–337–

ப்ரபத்தி கர்ப்ப கீதார்த்த காதாக்ருதி விசக்ஷண:1
லக்ஷ்மணாசார்ய ரோகக்ந பாத தீர்த்த ப்ரபாவக: |||–338-

ஸ்ருத ப்ரகாஸிகா ரக்ஷா ரக்ஷிதாத்யாத்ம பாஷ்யக:
யாதவாசல பத்ரா ஸாஸநார்த்த கதிபாஸூர :–339-

அபீதி ஸ்தவ ஸஞ்ஜாதாபீதி ரங்கபுரீ கதி:1 ரங்க ப்ராபித ரங்கேஸ கோபணார்ய ஸ்துதிப்ரிய :–340-

ரஹஸ்யத்ரய ஸாரோஜ்ஜீவித சேதந ஸஞ்சய
த்ரமிடோபநிஷத் த்ரஷ்ட்ரு ஸூரி ப்ருந்தோபகாரவித்–341-

மோக்ஷைக ஸாதநாசார்ய வத்தா ஸாதந தத் பர:
ஸ்வாசார்யாதி ஸரண்யாந்த பக்தி க்ரம விஸேஷவித்–342-

ஸ்ரீமத் பகவதாசார்ய பாவபாதக பாதக!
ஸடாரிநாத யோகீந்த்ர குரு ஸிஷ்யத்வ ஸாதக — 343–

அபரீஷய ரஹஸ்யாதி ப்ரதாந பஹு தோஷவித்
பக்தி ப்ரகாஸித குரு வம்ஸ ஸிஷ்ய நிபந்த ! –344–

அஸம்பாஷ்யாதி ஸம்பாஷண நிஷ்க்ருதி குருஸ்ம்ருதி!!
மோக்ஷார்த்த ஸாஸ்த்ராநாரம்ப ஹேது திக்க்ருதி தக்ஷிண!!|| 345-

ஆசார்ய நிகடப்ராப்தி ஹேது ஷட்க நிரூபக!
ஸார நிஷ்கர்ஷ குஸல! ப்ரதாந ப்ரதிதந்த்ர வித் !! –346–

ஈஸா தாரகதா ஸேஷித்வ நியந்த்ருத்வ போதக : I
ஜீவாதேயத்வ ஸேஷத்வ நியாம்யத்வ நிரூபக: –347–

ஸங்கல்பாதீந நித்யாக்ய வஸ்து ஸ்திதி விஸேஷவித்
ஸேஷஸேஷ்யாதி ஸம்பந்த பலிதார்த்த விஸேஷவித் –348–

அர்த்த பஞ்சக தத்வஜ்ஞஸ் தத்வ த்ரய விஸேஷவித்
ஸ்வாதீந திரிவிதாசித் சித் ஸ்வரூப ஸ்திதி வ்ருத்தி த்ருக் — 349–

ப்ரமாண கம்ய தர்மி ஸ்வரூப ரூபக தர்மவித் !
ஜீவ லக்ஷண தத்வஜ்ஜோ பத்த லக்ஷண லக்ஷிதா — 350–

பத்த ஸ்திதி ப்ரவருத்திஜ்ஞோ முக்த லக்ஷண லக்ஷிதா நித்யஸ்திதி பரவருத்திஜ்ஞோ நித்யாத் யந் யோந்ய பேத த்ருக்– 351–

நித்ய முக்தாத்ம கைங்கர்ய ஸார்வ வித்ய நிரூபக
த்ரிகுணஸ்திதி வ்ருத்தி ஜ்ஞ : ஈஸ லக்ஷண லக்ஷிதா –352–

அவதார ரஹஸ்யஜ்ஞ! பர வ்யூஹாதி பேத த்ருக்!
ஸ்ரீ ஜகத் காரணத்வாதி ஸாதகாநேக யுக்தி மாந் — 353–

ஸ்ரீமந் நாராயண பர தேவதா நிர்ணயக்ஷம : 1
ஸர்வ தேவ பரப்ரஹமா பேது கண்டந தக்ஷிண : — 354–

த்ரிமூர்த்தி ஸாம்ய தமநஸ் த்ரிமூர்த்யைக்ய விநாஸக !
த்ரிமூர்த் யுத்தீர்ண பரம் தேவதா கண்டந க்ஷம– 355–

த்ரிமூர்த் யந்தர்கத ப்ரஹம ருத்ர பாரம்ய கண்டந 1
ப்ரஹ்ம ருத்ராதி கார்யத்வ கர்ம வஸ்யத்வ ஸாதக !–356–

ப்ரஹ்ம ருத்ராதி பகவத் பாரதந்த்ர்ய விசாரக
ப்ரஹ்மாதி பகவந் மாயா யத்ததீ ஹ்ராஸ வ்ருத்தி த்ருக் – 357–

விஷ்ணு தர்ஸித ஸர்கோப ஸர்காதி விதி ஸம்பு த்ருக்
ஸூபாஸ்ரயத்வ ரஹித ப்ரஹ்ம ருத்ராதி ஸாதக! — 358–

ப்ரஹ்ம ருத்ராதி திரிகுண பாரவஸ்ய நிரூபக
ப்ரஹ்ம ருத்ராதி பகவதாஸ்ரி தத்வ விதாயக: — 359–

ப்ரஹ்ம ருத்ராதி பகவத் விபூதித்வ நிரூபக: ப்ரஹ்ம ருத்ராதி பகவத் பரகாரத்வா பிதாயக– 360–

ப்ரஹ்ம ருத்ராதி பகவச் சரீரத்வ பிரகாஸக ப்ரஹ்ம ருத்ராதி பகவத் தாஸத்வ ஸ்தாபந ஷம —361-

ஸாத்விகத் வோத்பத்தி ஹேது மது ஸூதந த்ருஷ்டி த்ருக்
ரஜஸ் தமோ குணா ஸக்தி ஹேது ப்ரஹ்மாதி திருஷ்டி த்ருக் –362-

ப்ரஹ்ம ருத்ராதி மோஷார்த்தி ஜநோபாஸ்யத் பாதக:1 ப்ரஹ்ம ருத்ராத்யுபாஸ் யத்வ வசோ நிர்வாஹ காரக : — 363–

ப்ரஹ்ம ருத்ராதி பாரம்ய த்ருக் கர்மா நர்ஹதாதி த்ருக் 1
ப்ரஹமாதி பகவத் ஸாம்ய த்ருக் பாஷண்டித்வ ஸாதக!! — 364 —

விஷ்ணு நிக்ராஹ்ய பாத்ரத்வ ரஹிதேதர தைவ த்ருக்
க்ஷிப்ரேதர பல ப்ராப்தி ஸாதநேதர தேவ த்ருக்-365–

காம்யாத் யர்த்தாஸ்ரிதாநந்த புருஷார்த்த விஷ்ணுதீ
அஜ்ஞாந்ய தேவ யஜந ப்ரீத விஷ்ணு ப்ரகாஸக : — 366–

அஜ்ஞாந்ய தேவ யஜந பல வைகல்ய ஸாதக:
விஷண் வாத்மகாந்ய தேவஜ்ஞ கர்ம பௌஷ்கல்ய ஸாதக — 367–

நிஷ்காம விஷ்ணு ஸேவா நுஷங்காந்ய பல ஸித்தி த்ருக்
பராங்குஸாதி ஸ்ரீஸுக்தி ஸாதிதோத்ருஷ்ட மாதவ –368–

முமுக்ஷாஹேது ஸாரஜ்ஞஸ் சாதிகாரி விபாகவித்
ப்ரபத்ய வாந்தரபிதா வேத்தோபாய விபாகவித் — 369-

ப்ரபத்யதி க்ரியா பஞ்சதஸ நிர்ணய தூர்வஹ!
ந்யாஸ வித்யாங்க பஞ்சத்வோபகார வ்யாக்ருதி க்ஷம –370-

விஸ்வாஸோத்கர்ஷ விஹதி காரண வ்யாஹதி க்ஷம
விஸ்வாஸ கோபத்ரு வரண ஸப்தார்த் தத்வ ப்ரகாரவித்–371-

ப்ரபத்தி லக்ஷணாபிஜ்ஞோ ந்யாஸ வித்யாங்கி வேதிதா
திரிவர்க மோஷ ஜநக ந்யாஸ வித்யா விஸேஷவித்–372-

ஸாங்க ப்ரபத்யநுஷ்டாந ப்ரயோக விதி ஸாதக
ஸாங்க ப்ரபத்யநுஷ்டாந ஸக்ருத்வ ஸ்தாபந ஷம –373-

ஸஹேதுக்ருத க்ருத்யத்வாநுஸந்தாந விஸாரத
ஸ்வ ஸ்வரூபோபாய பல நிஷ்டா த்ரய விவேகவாந்–374–

பிரபத் யுத்தர கர்த்தவ்ய க்ருத்ய நிர்ணய தக்ஷிண!
பகவத் தாஸ கைங்கர்ய தாஸ்ய த்வைவித்ய வேதிதா — 375 —

பகவத் தாஸ தாஸ்ய ப்ராப்தா நந்யத்வ விரோதஹா
ஸ்ரீமத் பாகவதாந்யோந்ய தாஸ்ய ஸாதந தத் பர–376-

ப்ரபந்நாந்வஹ ஸங்க்ராஹ்ய ஸாஸ்த்ரீய நியம ப்ரிய:
பாஷ்யகாரோக்த ஸாஸ்த்ராநு மத கைங்கர்ய ஸாரவித் –377–

உல்லங்கி தாஜ்ஞாகரணா வைஷ்ணவத்வ ப்ரஸாதக:
ப்ரபந்நாஜ்ஞாதி க்ரமாதி ப்ராயஸ் சித்த விஸேஷவித் !–378 —

ஏநோநிஷ்க்ரு த்யுதாஸீந ப்ரபந்த லகு தண்ட த்ருக்
ஆஜ்ஞாதி லங்கி கடிந ப்ரபந்ந நரகாப்ரிய: | –379–

ப்ரபந்த புத்தி பூர்வைந ப்ராயஸ் சித்த விஸேஷவித்
மஹா பாத ப்ரபந்ந ப்ரஸித்த நிஷ்க்ருதி வேதிதா — 380–

கடிநாநியதாயு : ப்ரபந்நாயுர் வ்ருத்தி ஸாதக
மோக்ஷார்த்த ந்யாஸ ஸம்ஹார்ய தீ பூர்வோத்தர பாபஹா — 381–

க்ருதபாதக நாஸார்த்த ஸரணாகதி வேதிதா
ப்ரபந்நாந்வஹ வாஸார்ஹ ஸ்தாந வ்யாக்யாந கோவித — 382–

விகலாங்க ந்யாஸ வித்யா பூர்ண ஹேதுத்வ ஸாதக:
தேவாந்தர த்ருடாஸக்த ப்ரபந்த நரகோக்திமாந் — 383–

வித்வதேகாந் தோத்க்ரமண க்ரம தர்ஸந தோஷித:
உபாயாரம்ப நஷ்டாஸ் லிஷ்ட பூர்வோத்தர பாப த்ருக் — 384–

இஷ்டாவ தூதாந்ய பல தீ வைமுக்ய ப்ரபந்ந வித்
விநஷ்டாஸ் லிஷ்ட புண்யாக விதூநந பதார்த்தவித் — 385–

புதபுண்யாக மித்ராரி ஸங்க்ராந்தி வ்யாஜ போதக
அர்ச்சிராதி கதிஜ்ஞாதா ஸுஷ்மதேஹ விஸர்கவித் — 386–

திவ்ய தேஸ ப்ராப்தி பூர்வ க்ரம தர்ஸந தக்ஷிண:
முக்த ப்ரபந்ந ஸாநந்த விபுஜ்ஞாந துரந்தர–387–

மதுவித்யாத்யதீகாரி கத்யந்தர வி ஸேஷவித் !
முக்த்யவஸ்தாநந்த தாரதம்ய வரத விநாஸக! –388–

ஜகத் ஸ்ரஷ்ட்ரு பர ப்ரஹ்ம துல்யா நந்த விமுக்தி த்ருக்
பரிபூர்ண பர பரஹ்மாநுபவ ஸ்ருதி வேதிதா : — 389–

ஸுநிஸ் சித்தார்த்த பரம பிரஹ்மாநுபவ ரீதிக;
ஸம்ஸார ப்ரதி கூலார்த்த முக்த்ய வஸ்த்தாநுகூல்ய திருக்–390-

ஸ்ரீபதித்வ பர ப்ரஹ்ம துல்யா நந்த விமுக்தி த்ருக்
ஸதாசார் யோபதேஸை காதிகாரி ஜ்ஞாபந க்ஷம–391-

ஸஸத் தர்கோபதே ஸாதிகாரி வ்யாக்ருதி கோவித!
வ்யாஜாந பேக்ஷ பகவத் ரக்ஷகத்வோக்தி வாரக–392-

ஸ்ரீமத் ஸ்வாதந்த்ர்ய காருண்யோபயோக வ்யாக்ருதி க்ஷம;
ப்ரபத்யதி க்ரியாவத் விஸேஷணத்வ நிரோதக–393-

மோக்ஷ நுபாய ஸரண வரஜ்யாவாத விநாஸக;
ப்ரதிபந்து நிராஸை கோபயுக்து வ்யாஜ வேதிதா–394-

தேவ ஸ்வாதந்த்ர்ய கருணா மூல வ்யாஜ நிராஸஹா
ஸ்ரீமத் ஸம்பந்த மூல வ்யாஜ நிராஸ மதாந்தக: — 393–

அவ்யாஜ பகவத் பாத்ர பாவ மாநோபபத்திஹா
த்வய பூர்வ ஸ்ரீபதோப லஷகத்வ விநாஸக–396–

ஸ்ரீவிஸேஷண பாவார்த்தோபாய த்வித்வ விபஞ்ஜக: |
நிர்வ்யூட ஸரண வ்ரஜ்யா விஸ்வாஸா பேத பூர்வ வாக் — 397–

ப்ரபத்தி ப்ரார்த்தநா பேத வாங் நிர்வாஹ விசக்ஷண
வாக்ய ஜந்ய ஜ்ஞாந மோஷோபாயத்வ மதபஞ்ஜக — 398–

ஸ்வ ரக்ஷணார்த்த வ்யாபார நிவ்ருத் யுத்திதி தூர்வஹ!
ப்ரபத்தி மோஷோபாயத்வ பாதக வ்ராத நாஸக –399–

சரம ஸ்லோக நிகில தர்ம த்யாக பரத்வஹா
நிஷித்த வர்ஜநா தர்ம பாவத்வோக்த்ய பநோதந :–400–

உபாஸந ஸ்வரூபோபாய ஸ்வரூப விரோதஹா !
வர்ணாஸ்ரமாதி தர்ம ஸ்வரூபரோத விநாஸக — 401–

ஐகாந்த்யச் சேத் யந்யதேவ பர வர்ணாதி தர்மஹா
பக்தி வித்யா ஸித்த ஹேது ப்ரரோசந கரத்வஹா –402–

பக்தி வித்யா ஸிஷ்டலோகா பரிக்ரஹ நிவாரக
பர ந்யாஸாதி ஸகல கரல தர்மத்வ பஞ்ஜந–403–

ந்யாஸ ப்ரஸம்ஸகோ ந்யாஸ பக்த் யாதிக்ய ப்ரதர்ஸக
அநுகூலத்வ ஸங்கல்பாத்ய வஸ்யம்பாவ வேதிதா — 404–

விஸ்வாஸாங்க மஹத்வாந்தராய பங்க விசக்ஷண:!
ப்ரபந்ந பகவத் ப்ரேம தாரதம்ய விதாயக–405–

குரு பக்தி லகு ந்யாஸ பலைக்யோக்தி விசக்ஷண:
பூர்வ பூர்வாக்ருதாம் ஸார்த்த புந! ப்ரபதநோக்திமாந் –406–

ஐஹிகார்த்த நியாஸ கர்த்ரு ஹேது வைகல்ய ஸாதக 1
அபியாநாதி பஞ்சாவஸர க்ருத்ய பலோக்திமாந்–407-

விஷ்ணு பக்த சதுர்த்தாதி ப்ராஹ்மண்ய விநிவாரக!
விதுராதி ஸ்வ ஜாத்யுக்த தர்ந மாலங்க த்ருஷ்டிமாந்–408-

நிர்வ்யூட விதுர ப்ரஹ்மமேத ஸம்ஸ்க்ருதி ஸூக்திகா
யஜ்ஞே விதுராந்நாதநோக்தி நிர்வாஹ தக்ஷிண; –409–

அதிதேஸா நர்ஹகாரி ஸூநுவிருத்த பிரகாஸக:
பகவத் பக்த ஸூத்ராதி தீதானாதி க்ருதி ப்ரிய – 410–

சைத்தகாயிக ஸூத்ரத்வ பேத வ்யாக்யாந தஷிண
நாராயனைக நிஷ்டேதி வசநார்த்த பிரதர்ஸக! –411-

நிஷித்த த்யாக தர்மாக்யா முக்யார்த் தத்வ விபஞ்ஜக:
ஸ்ரீமத் ப்ரபாவ ஸந்த்ராதோபாய மாஹாத்ம்ய ரஷக: | — 412–

பகவத் ஷேத்ர மாஹாத்ம்ய த்ருக் வைஷ்ணவ மஹத்வவித்
ஸெளம்காரமூல மந்த்ராஷ்டாக்ஷரத்வ த்ராண தீக்ஷித!! — 413–

த்வய மூல மநு வ்யாக்யா ரூபத்வ பரிஸோதிக !
மூல மந்த்ர அஷ்டாக்ஷர பத் தத்வார்த்த விஸேஷவித் — 414–

மூல மந்த்ர மஹா வாக்ய யோஜநா ஸத காரக:
த்வய ப்ரபாவ விஜ்ஞாதா த்வய ஸப்த நிருக்தி வித் – 415–

த்வய த்ரயீ மூல தாந்த்ர மந்திரத்வ ஸ்த்தாபந க்ஷம :
லஷ்மீ புருஷகாரத்வ மாநஜ்ஞ : ஸ்ரீபதார்த்த வித் — 416–

த்வய மந்த்ர பத ப்ராத ப்ரத்யேக வ்யாக்ருதி ப்ரிய 1
ஸ்ரீ ஸோபா யாந்தர ஸ்தாநாபத்தி ஸாரார்த்த போதக!!-417–

கார்பண்ய கோப்த்ரு வரண ஸார்த்தோபாயத்வ யாசந:1
உபாய வரணாத்யாத்ம நிஷேபாங்கித்வ ஸாதக: |–418-

த்வயோத்தரார்த்த கம்யார்த்த புருஷார்த்த நிரூபக
த்வய மந்த்ர மஹா வாக்ய யோஜநா த்ரய ஸாதக:–419-

ஸ்ரீ கிருஷ்ண சரம ஸ்லோகாவதார வ்யாக்ருதி ஷம
சரம ஸ்லோக தர்மோக்தி வேத்ய நிர்ணய கோவித: — 420–

புருஷோத்தம தீமோஷ ஹேதுத்வ மதபஞ்ஜக
அவதார ரஹஸ்ய ஜ்ஞாநாதி மோஷ கரத்வஹா! — 421–

சரம ஸ்லோக தர்ம த்யாகாநுவாத மத ப்ரிய:
ப்ரபத்தி ஸர்வ தர்ம த்யாகங்கோக்தி விதி பஞ்ஜக: –422–

க்ஷேத்ரஜ்ஞோபாஸநோபாய நித்யா ஸக்தத்வ பஞ்ஜக !
ஏக வாக்ய விதித்வாநு வாதத் வாநுப பத்தி வித் — 423–

குரூபாய லகூபாயகீ ! ப்ரரோசகதா ப்ரிய:1
பக்தி வித்யா மந்ததீகாதி காரித்வ மதாந்தக — 424–

உபாஸநா மந்த விஸ்வாஸாதி காரித்வ நாஸக : I
உபாஸநா லோக ஸங்கரஹார்த்தித்வ மதமாரக: — 425–

ப்ரபத்தி ரூப ஸகல தர்மத்யாக மதாந்தக ! ப்ரபத் யநுஷ்டாந கால ஸர்வ தர்ம விமுக்திஹா–426-

ப்ரதக்ஷிண ப்ரணாமாத்யநுஜ்ஞா கைங்கர்ய ஹேது த்ருக்
அவஜ்ஞாக்ருத பக்தாதி ஜந்ம சிந்தாதி தோஷ த்ருக்–427–

ஸாஸ்த்ர வ்யவஸ்த்தா ஸித்யர்த்த பக்த ஜந்மாதி சிந்தக:
ஸாரகல்க ஸ்வரூப ஸ்ரீமத் கைங்கர்ய விபாக த்ருக்||–428-

ஸம்பந்ததீ முகாநேக மோக்ஷஹேது மதாந்தக
சரம ஸ்லோக நிகில தர்ம த்யாகி ஷடர்த்தவித்–429-

சரம ஸ்லோகைக ஸப்த ஷடர்த்தோக்தி விசக்ஷண:
பரதந்த்ர ஸ்வபாவாத்ம வித்ய நர்ஹத்வ பஞ்ஜக!!–430-

பரதந்த்ராத்ம கர்த்ருத்வ ஸ்வரூப விஸதோக்திமாந்
ஸ்ரீமத் கர்த்ரு ப்ரேராகாநு மந்த்ரு காரயித்ருத்வ வித் ||–431-

க்ரியமாணாக வித்வம்ஸி ப்ரபத்தி ப்ரதிபாதக
ப்ரஹ்ம வித்யாரம்ப நஷ்டாஸ் லிஷ்ட கர்ம ஸ்வரூபவித்–432-

ப்ரியா ப்ரியோப ஸங்க்ராந்த வித்வத் புண்யாக வேதிதா
ப்ராப்த் யந்தராய வித் ஸாத்யோபாய ரோதி விஸேஷவித் |–433-

ப்ரதிகூலாநு பூத்யாதி ஹேது பாப ஸ்வரூப வித்
குணாஷ்ட காவிர்ப்பா வோக்தி வேத்யார்த்த பரிஸோதக:–434-

கைவல்யாக்ய புமர்த்த ஸ்வரூப நித்யத்வ பாதக
மா ஸூச ஸப்த நிரணுந்த ஸோகாநேக விதத்வவித் — 435–

ஆசார்ய க்ருத்யவிச் சிஷ்ய க்ருத்ய வேதந தீக்ஷித!!
யதீந்த்ரமாஹாநஸிக ஸம்ப்ரதாய ஸூதாப்ரத: || -436–

விரோத பரிஹார ஸ்ரீஸார ஸாராக்ஷி யுக்மத !
ஸெளம்ய கார்த்திக ராகாஸ்ரீ பர்யங்காரோஹண ப்ரிய –437–

அத்ரார்ச்யா ஜகத் ஸர்வம் பாலயந் ஜயதி ஹ்யஸெள–438-

இதம் குரோர் திவ்ய ஸஹஸ்ர நாம ஸ்தோத்ரம் மஹார்த்தம் ஸர ஸார்த்த போதம்!
படந்தி யே ஸர்வ ஸமீஹிதார்த்த ஸித்திம் லபந்தே அத்ர பரத்ர சாபி –439–

பலாநபேஷோபி குரோ ப்ரஸாதாத் ஸித்திம் ஸமாப்நோ த்யநுஷங்க ஸித்தாம் ஸ்ரமாபநோதாய க்ருதாவகாஹம் கங்கா பவித்ரீ குருதே ஹி ஐந்தும் — 440–

கோபால தாஸஸ்ய குருத்த மாங்க்ரி பக்தி ஸ்ரவந்தீ ஹ்ருதயாப்ஜ கோஸாத்
நிர்கத்ய தந்நாம ஸஹஸ்ர ரூபா தத் த்யாயிந! ஸர்வ ஜநாந்புநாதி–441–

இத்யாத்ரேய க்ருஷ்ணார்ய தநூஜஸ்ய ஸ்ரீமத் வேதாந்த ராமாநுஜ மஹா தேஸிக கடாஷ லப்த ஸார்வஜ்ஸ்ய கோபாலார்ய மஹாதேஸிகஸ்ய க்ருதிஷு தேஸிக திவ்ய ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.

ஸ்ரீமதே கோபாலார்ய மஹா தேஸிகாய நம
ஸ்ரீமதே நிகமாந்த தேஸிகாய நம

ஸ்ரீ தேசிக அஷ்டோத்தர சத நாம ஸ்தோத்ரம்–

ஸாங்க்ய ஸெளகத சார்வாக ஸாங்கராதி தமோநுதம்!
த்ரய்யந்த தேஸிகம் வந்தே வேங்கடேஸாஹ்வயம் மஹ:–

ஸ்ரீமத் வேங்கட நாதஸ்ய நாம்நாம் அஷ்டோத்தரம் ஸதம்
ஸங்க்ருஹ்ய தத் ப்ரஸாதாய வஹ்யே ஸர்வார்த்த ஸித்திதம்–1-
கண்டாவதாரோ அநந்தார்ய தநயோ வேங்கடாதிப :
ஸ்ரீமல் லக்ஷ்மண யோக்யம்ஸோ வரதாசார்ய வீக்ஷித: –2-
ராமாநுஜாரர்ய ஸந்த்ருஷ்ட: ஸெளபர்ண மனுசிந்தக
தார்ஷ்ய தத்த வர ஸூத்த! ப்ரஸாதித ஹயாதந –3-
அதீத ஸாங்கஸகல ஸ்ருதி ஸ்ம்ருதி விதக்ரணீ;
இதிஹாஸ புராணஜ்ஞ ! ஸூகவிஸ் தர்க்க தத்வ வித்–4-
பாஷ்யகாரோ பயஹர ஸுதாஸீ துக்க ராசி க்ருத்
ப்ரதாந ப்ரதிதந்த்ரஜ்ஞ தேவதா பாரமார்த்யவித் ||–5-
ஸ்ருத வித்யா ஸ்ராவயிதா ஸ்ருத பால ஸ்ருத ப்ரத:
ஸ்ரித: பாண்டித்ய தாதா ச க்ருதக்ருதிய : க்ருதீ ஸூதீ–6-
நிரஸ்த ஸாங்கய ப்ரத்யுக்த யோக காணாத பஞ்ஜந
அசிச்சை தந்ய வாதக்ந க்ஷணி காணுமதார்தந–7-
ஸாகாராதீ நிராகர்த்தா ஸூந்யவாத தமோநுத
குத்ருஷ்ட்யுரக பஷீஸ ஸப்த பங்கீ விலோபந–8-
பேதாபேத மதச்சேத்தா தூதயாதவ கல்பந
அநீஸவாதி தம்போளி : பாஷண்ட மத கண்டந–9-
ஸம்ரக்ஷிதாகம! ஸங்க சக்ர தாரண ரக்ஷிதா
ஊர்த்வ புண்ட்ராங்கந த்ராதா ஸூத்த ஸத்வ மயா க்ருதி–10-
யத்யாசார ப்ரதிஷ்ட்டாதா ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரதீ :
அவதார ரஹஸ்யஜ்ஞா அர்ச்சா சவ்ந்தர்ய ஸக்ததீ? ||–11-
அர்த்த பஞ்சக தத்வஜ்ஞ ! தத்வ த்ரய விஸேஷவித் | பக்தி யோக விரோதிக்ந ! பக்திமாந் பகவத் ப்ரிய–12-
ஞாநைகஸாரோ த்வயவித் விபக்தாதி க்ருதி த்ரய:
சதுஸ்லோக்யர்த்த ஸாரஜ்ஞ! ஸம்யக் ஜ்ஞாதாங்க பஞ்சக –13-

ஷ்டங்கயோக நிர்ணேதா ஸப்த தந்து க்ருதுத்தம:
அஷ்டாக்ஷரைக நிரத நவமைகரஸாஸ்ரய–14-
தஸ தாத்பர்ய விஜ்ஞாதா ஸத க்ருச்ச ஸஹஸ்ரவித்
ஸ்தூல லஷோ அநேக நாநா கோடி ஜ்ஞாந நிவர்த்தக–15-
தர்ம ஸங்குஸ் ஸாது ப்ருந்த வந்தி தாங்க்ரி ஸரோருஹ:
பத்மாக்ஷாநந்த ஜநக ததாநந்த குணாகர!–16-
த்யாக ஸப்தார்த்தவித் தர்மவேதீ விதி விஸேஷவித் !
உத்தம ஸ்லோக பாவஜ : பஞ்ச கால பராயண:–17-
ஸு ரஸேவ்ய பூர்ண மநா : ஸூரீந்த்ர ப்ரதி ரூபக!
கவிதார்க்கிக பஞ்சாஸ்ய நிகமாஞ்சல தேஸிக!–18-
வைத்யோ முநீந்த்ரஸ் ஸர்வஜ்ஞ உபகர்த்தா குரூத்தம !
ஸத் ஸம்ப்ரதாய ஸ்திரதீ: அநகஸ் ஸத்ய வாகபி –19-
ஸாது வ்ருத்திர் முக்தடம்ப !: ஜிதாஷோ தீர்க்க பந்துமாந்!
தயாளு: ஸாஸிதா ஸர்வ ஹிதாசரண தத்பர:–20-
மஹா குரு’: ஸ்வர்ண வர்ண: ஸூபாஹு ! புண்டரீக த்ருத்
பவித்ர பாணிர் வ்யாக்யாந முத்ராங்கித கராம்புஜ–21-
ஸவ்யபாணி தலந்யஸ்த திவ்ய புஸ்தக பூஷண:
பர ஸீர்ஷ ந்யஸ்த வாம பாதாப்ஜ கடகோஜ்ஜவல –22-
பல ஸ்ருதி :
இதீதம் தேஸி கேந்த்ரஸ்ய நாம்நாமஷ்டோத்தரம் ஸதம்
ஸங்கீர்த்தயே தநுதிநம் ஸர்வ பாபாபனுத்தயே–23-
படந் நாம ஸதம் பக்த்யா ஸ்ருத்வா குரு முகாம்புஜாத்
ப்ரஸாதாத் தேஸிகேந்த்ரஸ்ய புக்தி முக்தீ ஸமஸ்நுதே–24-
ஏகைகமபி தந்நாம கீர்த்தயந் ஸக்ருதுத்தமம்
ஸர்வாந் காமான வாப்நோதி கிமுதாஷ்டோத்தரம் ஸதம் –25-
இதி ஸ்ரீ நிக மாந்த மஹாதேஸிகாஷ்டோத்தர ஸதநாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.

ஸ்ரீ நிகமாந்த தேசிகாஷ்டோத்தர சத நாமாவளி:
ஓம் கண்டாவதாராய நம:
“அநந்தார்ய தநயாய நம :
வேங்கடாதிபாய நம:
ஸ்ரீமல்லக்ஷ்மண யோக்யம்ஸாய நம
வரதாசார்ய வீக்ஷிதாய நம
ராமாநுஜார்ய ஸந் த்ருஷ்டாய நம
ஸௌபர்ணமநு சிந்தகாய நம

தார்ஷ்ய தத்த வராய நம :
ஸூத்தாய நம ,י
ப்ரஸாதித ஹயாநநாய நம

அதீத ஸாங்க ஸகல ஸ்ருதயே நம
ஸ்ம்ருதி விதே நம
அக்ரணயே நம:
இதிஹாஸ புராணஜ்ஞாய நம
ஸு கவயே நம:
தர்க்க தத்வ விதே நம
பாஷ்யகாராய நம
பய ஹராய நம:
ஸூதா ஸிநே நம
துக்த ராஸி க்ருதே நம

பிரதான ப்ரதி தந்த்ரஞ்ஞாய நம
தேவதா பாரமார்த்ய விதே நம:
ஸ்ருத வித்யாய நம
ஸ்ராவயித்ரே நம
ஸ்ருத பாலாய நம:
ஸ்ருத ப்ரதாய நம
ஸ்ரிதாய நம
பாண்டித்ய தாத்ரே நம

க்ருத க்ருத்யாய நம
க்ருதிநே நம
ஸூதியே நம:
நிரஸ்த ஸாங்க்யாய நம:
ப்ரத்யுக்த யோகாய நம.
காணாத பஞ்ஜநாய நம
அசிச்சைதந்ய வாதக்நாய நம
க்ஷணிகாணு மதார்தநாய நம

ஸாகாரதீ நிராகர்த்ரே நம:
ஸூந்யவாத தமோ நுதாய நம
குத்ருஷ்ட்ரக பஷீஸாய நம
ஸப்த பங்கீ விலோபாநாய நம

பேதாபேத மதச் சேத்ரே நம
தூதயாதவ கல்பநாய நம
அநீஸவாதி தம்போளயே
பாஷண்ட மத கண்ட்டநாய நம:
ஸம் ரக்ஷிதாகமாய நம
சங்க சக்ர தாரண ரஷித்ரே நம:
ஊர்த்வ புண்ட்ராங்க த்ராத்ரே நம
ஸூத்த ஸத்வ மயா க்ருதயே நம
யத்யாசார ப்ரதிஷ்டாத்ரே நம
ஸர்வ தந்த்ர ஸ்தந்த்ரதியே நம– 50

அவதார ரஹஸ்யஜ்ஞாய நம
அர்ச்சா ஸெளந்தர்ய ஸக்ததியே நம:
அர்த்த பஞ்சக தத்வஜ்ஞாய நம
தத்வ த்ரய விஸேஷவிதே நம
பக்தியோக விரோதிக்நாய நம:
பக்திமதே நம!
பகவத் பிரியாய நம:
ஜ்ஞாநைக ஸாராய நம
த்வய விதே நம
விபக்தாதி க்ருதி த்ரயாய நம :—60

சதுஸ் ஸ்லோக்யர்த்த ஸாரஜ்ஞாய நம:
ஸம்யக் ஞாதாங்க பஞ்சகாய நம
ஷடங்க யோக நிர்ணேத்ரே நம:
ஸப்த தந்து க்ருதுத்தமாய நம
அஷ்டாக்ஷரைக நிரதாய நம.
நவமைக ரஸாஸ்ரயாய நம.
தஸ தாத்பர்ய விஞ்ஞாத்ரே நம
ஸதக்ருதே நம
ஸஹஸ்ர விதே நம
ஸ்தூல் லக்ஷாய நம –70

அநேக நாநா கோடி ஜ்ஞாந நிவர்த்தகாய நம
தர்ம ஸங்கவே நம
ஸாது ப்ருந்த வந்தி தாங்க்ரி ஸ்ரோருஹாய நம:
பத்மாக்ஷாநந்த ஜநகாய நம
அநந்த குணாகராய நம:
த்யாக ஸப்தார்த்த விதே நம
தர்ம வேதிநே நம
விதி விஸேஷ விதே நம
உத்தம ஸ்லோக பாவஜ்ஞாய நம!
பஞ்ச கால பராயணாய நம–80–

ஸூர ஸேவ்யாய நம:
பூர்ண மநஸே நம :
ஸூரீந்த்ர ப்ரதி ரூபகாய நம
கவிதார்க்கிக பஞ்சாஸ்யாய நம:
நிகமாஞ்சல தேஸிகாய நம
வைத்யாய நம:
முநீந்த்ராய நம!
ஸர்வஜ்ஞாய நம:
உபகர்த்ரே நம :
குரூத்தமாய நம –90-

ஸத் ஸம்ப்ரதாய ஸ்திரதியே நம
அநகாய் நம:
ஸத்ய வாசே நம.
ஸாது வ்ருத்தயே நம:
முக்த டம்பாய நம
ஜிதாஷாய நம:
தீர்க்க பந்துமதே நம:
தயாளவே நம :
ஸாஸித்ரே நம:
ஸர்வ ஹிதா சரண தத் பராய நம: 100-

மஹா குரவே நம
ஸ்வர்ண வர்ணாய நம.
ஸூபாஹவே நம
புண்டரீக த்ருஸே ந :
பவித்ர பாணயே நம:
வ்யாக்யாந முத்ராங்கித் கராம்புஜாய நம:
ஸவ்ய பாணிதல ந்யஸ்த திவ்ய புஸ்தக பூஷணாய நம:
பர ஸீர்ஷ ந்யஸ்த வாம பாதாப்ஜ கடகோஜ்லவாய நம –108–

ஸ்ரீமத் வேதாந்த தேசிக ப்ரபத்தி

ஸ்ரீமல் லக்ஷ்மண யோகீந்த்ர ஸித்தாந்த விஜய த்வஜம்!
விஸ்வாமித்ர குலோத் பூதம் வரதார்ய மஹம் பஜே

வித்வந் மதங்கஜ ஸிகாபரணாய மாநௌ விஸ்வாதிஸாயி மஹிமாம்பு நிதாந பூதெள
வித்வேஷி வாத மகுடீ க்ருத குட்டநௌதெள
வேதாந்த ஸூரி சரணௌ ஸரணம் ப்ரபத்யே–1-

விஸ்வம்பரா மதிதராமபி பாஸயந்தெள விந்யாஸதோ விவித ஸஜ்ஐந தாநுபாயெள
விஸ்தீர்ண ஸம்ஸ்ருதி மஹார்ணவ் கர்ண தாரெள
வேதாந்த ஸூரி சரணௌ ஸரணம் ப்ரபத்யே–2-

விஸ்வாந் தராந்த தமஸ க்ஷபண ப்ர வீணவ் வித்யோதமாந நகரேந்து மயூக ஜாலை!
விக்யாத தாமரஸ ஸங்க ரதாங்க சிஹ்நெள
வேதாந்த ஸூரி சரணெவ் ஸரணம் ப்ரபத்யே-3-

வித்வேஷமாந மதமத்ஸர வித்விஷெளயௌ விஷ்ண் வாலாயாநுகம நோத்தம நித்ய க்ருத்யெள
வேதாந்த வ்ருத்த விஹிதாஞ்ஜலி கோசரெள தெள
வேதாந்த ஸூரி சரணெள ஸரணம் ப்ரபத்யே–4–

விஷ்ண் வர்ப்பிதாத்மஜந பாக்ய விபாக பூதெள விப்ராஜமாந் நவகோக நதாநுகல்பெவ்
வேஷாந்தரோபகத பல்லவ தல்லஜெளதெள
வேதாந்த ஸூரி சரணௌ ஸரணம் பிரபத்யே–5–

வேதோ முகைரபி ஸூரைர் விஹித ப்ரணாமௌ வேலாதிலங்கி ஸுஷமா குமரபாவெள
விஸ்மேர கேஸரலஸந் ம்ருது வாங்குலீகௌ வேதாந்த ஸூரி சரணெள ஸரணம் ப்ரபத்யே–6-

வித்ரா விதோத்பட விகார ரஜோ குணெள தெள விக்யாத பூரி விபவேந் ரஜ கணேந
விஸ்வோபகார கரணாய க்ருதாவதாரௌ வேதாந்த ஸூரி சரணெள ஸரணம் பரபத்யே–7-

விஷ்ண்வங்கரி நிர்கத ஸரித் ப்ரவராநு பாவ்யெள
வித்யா விநீத ஜநிதைர் விமலை ஸ்வ தீர்த்தை!!
வ்யாநம்ர ஸிஷ்ய ஜந ரக்ஷண ஜாகரூகெள வேதாந்த ஸூரி சரணெள ஸரணம் பிரபத்யே–8–

வீதீஷு ரங்க நகரே க்ருத சங்கரமௌதெள விஷ்ணூத்ஸவேஷு விதி வாஸவ ஸேவிதேஷு
வித்யா விநீத ஐநதா விஹிதா நுஸாரெள
வேதாந்த ஸூரி சரணெள ஸரணம் ப்ரபத்யே–9-

விஸ்வாஸ விஷ்ணு பத பக்தி விரக்தி ஸூந்யம் |
விப்ரஷ்ட க்ருத்யமபி மாம் விஷயேஷு ஸக்தம்
வித்வத்ஸபாநு கதி யோக்ய மிஹாததாநெள
வேதாந்த ஸூரி சரணெள ஸரணம் ப்ரபத்யே–10-

ஸ்ரீமதே வேதாந்த தேஸிகாய நம:

ஸ்ரீ தேசிக மங்களாசாஸநம்-

ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய : கவி தார்க்கிக கேஸரீ
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நி தத்தாம் ஸதா ஹ்ருதி |

ஸ்ரீமல் லக்ஷ்மண யோகீந்த்ர ஸித்தாந்த விஜயத்வஜம் |
விஸ்வாமித்ர குலோத்பூதம் வரதார்ய மஹம் பஜே

ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ராய ஸிம்ஹாய கவிவாதிநாம்!
வேதாந்தாசார்ய வர்யாய வேங்கடேஸாய மங்களம் !–1-

நபஸ்யமாஸி ஸ்ரோணாயாம் அவதீர்ணாய ஸூரயே
விஸ்வாமித்ராந் வயாயாஸ்து வேங்கடேஸாய மங்களம்|| 2||

பிதா யஸ்யாநந்த ஸுரி! புண்டரீகாஷ யஜ்வந:)
பெளத்ரோ யஸ் தநயஸ் தோதாரம்பாயாஸ் தஸ்ய மங்களம்–3-

வேங்கடேஸாவதாரோயம் ததி கண்டாம் ஸோ அதவா பவேத்
யதீந்த்ராம்ஸோத வேத்யேவம் விதர்க்யாயாஸ்து மங்களம் –4-

ஸ்ரீ பாஷ்யகார பந்தாந மாத்மநா தர்ஸீதம் புந!!
உத்தரத்து மாகதோ நூந மித்யுக்தா யாஸ்து மங்களம் | -5-

யோ பால்யே வரதார்யஸ்ய ப்ராசார்யஸ்ய பராம் தயாம்
அவாப்ய வ்ருத்திம் கமிதஸ் தஸ்மை யோக்யாய மங்களம் 6|||

ராமாநுஜார்யா தாத்ரேயாந் மாதுலாத் ஸ்கலா கலா!
அவாப விம்ஸத் யப்தேயஸ் தஸ்மை ப்ராஜ்ஞாய மங்களம் –7-

ஸ்ருத ப்ரகாஸிகா பூமெள யேநாதெள பரி ரஷிதா
ப்ரவர்த்திதா ச பாத்ரேஷ தஸ்மை ஸ்ரேஷ்டாய மங்களம் –8-

ஸாம்ஸ்க்ருதீபிர் த்ராமிடீபிர் பஹ்வீபி க்ருதிபிர் ஜநாந்
யஸ் ஸமுஜ்ஜீவயாமாஸ தஸ்மை ஸேவ்யாய மங்களம் –9-

ய : க்யாதி லாப பூஜாஸு விமுகோ வைஷ்ணவே ஜநே!
க்ரயணீய தஸாம் பராப்த : தஸ்மை பவ்யாய மங்களம் –10-

யஸ்மா தேவ மயா ஸர்வம் ஸாஸ்த்ர மக்ராஹி நாந்யத :
தஸ்மை வேங்கட நதாய மம நாதாய மங்களம் –11-

பித்ரே ப்ரஹ்மோபதேஷ்ட்ரே மே குரவே தைவதாய ச
ப்ராப்யாய ப்ராபகாயாஸ்து வேங்கடேஸாய மங்களம்–12-

ய கருதம் வரதார்யேண வேதாந்தாசார்ய மங்களம்
ஆஸாஸ்தே அநு திநம் ஸோ அபி பவேந் மங்கள பாஜநம் || 13 ||

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண ஸாலிநே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

ஸ்ரீ தேசிக ஸ்துதி: –
ஸ்ரீ தொட்டையாசார்யர் (வைபவ ப்ரகாசிகை)
ஜயது நிகம சூடா தேஸிகேந்த்ரோ தயாளு
ஜயதி ஸுமதி ஸேவ்யா ஸோபநா தஸ்ய ஸூக்தி:
ஐயதி ஸூப தம் ஸீலயந் ஸூரி ஸங்க:
ஜயதி வஸூ மதீயம் தஸ்ய ஸஞ்சார தந்யா-

ஸ்ரீ ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன்
ஜீவநம் ஜகதாம் ஜீயாத் கிமப்யபஹத ஸ்ப்ருஹம் !
ஸ்வதந்த்ரம் ஸர்வ தந்த்ரேஷ வேங்கடேஸாஹ்வயம் மஹ :

ஸ்ரீ அண்ணயார்ய மஹா தேசிகன்
கவிதார்க்கிக கண்டீரவ சரணாப்ஜம்
பிப்ருத மெளலி பாகேஷு
விலஸதி வ ஸார்வஜ்ஞம் விபுத ஐநா : ஸர்வ மங்களோல்லலிதம் |

ஸ்ரீ ப்ரஹ்மதந்த்ர பரகால யதீந்த்ரர்
வாதி த்விய ஸிரோ பங்க பஞ்சாநந பராக்ரம:
ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய: கிரம் விஐயதாம் புவி|

ஸ்ரீமத் வேதாந்த குரு தண்டகம்

ஸ்மயமாநாநநாம் போஜம் தயமாந த்ருஸம் குணாந் !
அயமாநம் குரும் ஸ்ம்ருத்வா வயமாநந்த பூரிதா | :

பரிமித மதி துஷ் பரவேஸா கிலாம்நாய கோடீ குஹாந்தர் நிராபாத ஸஞ்சார தீவ்யத் பர ப்ரஹ்ம பஞ்சாஸ்ய நிஸ் ஸங்க ஹஸ்த க்ரஹா பூர்வ திவ்யெளஷ தீபூத ஸூக்தி ச்சலோதீத திவ்யாபகா பூர நிர்த்தூத விஸ்வம்பரா பாப பாளீக நாளீக ஜந்மா த்யமேய ப்ரபாவ ப்ரதிஷட்டாபிதா ஸேஷ ராமாநுஜாசார்ய ஸித்தாந்த ஸேதோ ! பஜத் பவ்ய ஹேதோ ! சிராவ்ருத்த ஸம்ஸார பாதோதி நிர்மக்ந லோகாவநோத்யத் தயாஸார ஸேஷாசலாதீஸ ஸங்கல்ப ஸம்பூத கண்டாவதாரா கமாந் தார்ய நிஸ் ஸீம நிர் ஹேது காருண்ய ஸிந்தோ! ப்ரபந்கைக பந்தோ! தியாந்தம் மதாந்தம் பவாப்தெள நிமக்நம் கதாசார
கந்தம் பவத்பாத பங்கேருஹ ப்ரேம பந்தம் குருஷ்வ ப்ராபோமாம் க்ருதாஜ்ஞாந பங்கை: பயோஜாந்தரங்கை ரபாங்கை ருதீக்ஷஸ்வ ரக்ஷ ஸ்வயம் — 1–

ஐயது நிகம சூளிகா தேஸிகோ நிர்மம ஸ்தோம துஸ்ஸாத நித்யாந மந்தாந நிர்மத்ய மாநாத்ம சேத: பயோராஸி நிர்யத் ஸுதாபாநு ரேகாயிதாமந்த விஜ்ஞாந ஸந் மல்லிகா மஞ்ஜரீ வாஸிதாபஷ திங்மண்டலோ வித்விஷந் மண்டலி பூமி ப்ருத் கண்டநா கண்டல: குண்டலீஸ ப்ரதா ஹாரி பாண்டித்ய
பாக் சண்டபாது ப்ரபா ஸ்பர்த்தி காய த்யுதிர் நிஸ்துல க்ரந்த நிர்மாண வைசித்ர்ய கண்டாபதீ பூத
துஷ்ப்ராப நிஸ்ரேயஸாஸ்த்தா நிஷித்தாகமாளி விருத்த ப்ரசார; ப்ரபந்ந ப்ரஸித்தாபதாந ப்ரணாடீ விநிஸ்சேய ஸஞ்சாரி லக்ஷ்மீ ஸஹாயாவதாரோ மஹாந் — 2-

ப்ரபதந ஸரணி ஸ்வரூப ப்ரமாண ப்ரசாரேஷு புங்காநு புங்காயிதாநேக துர்வார ஸந்தேஹ ஸந்தோஹ காடாந்தகார ப்ரதாந ப்ரதிக்ஷேப பாலாருணாகார நிக்ஷே பரக்ஷாதி ஸங்க்ஷிப்த யுக்த்யா விபக்ஷோக்தி ஸிக்ஷாதி தக்ஷம் ஜகத் பங்க பங்கா ப்ரகங்கா ஸமுத்பாதி துங்காநு பாவாந்த ரங்கேஸ பூவாத
ஸங்கோதயத் பாஷ்ய வாதாவளீ யுக்ம ஸம்பந்ந மாநந்த வாசா ஸுதாபூர தோராஹவோத்யுக்த ஸராதிக ஸ்தோத்ர விஸ்மாபிதாஸேஷ வித்வஜ்ஜந ஸ்தோம ஸம்பாவ்யமாநம் பவாநீ தவாம்போஜ ஸம்பூத ஜம்பாரி முக்யாமர வ்ராத நிஸ் ஸங்க ஜ்ரும்பத் ஸ்வ வீராயீ தாநங்க தாஸீ க்ருதி ப்ரௌட கம்பீர சித்த ப்ரவ்ருத்தம் பதாம்போஜ ஸக்தாப தம்போநிதி க்ராஸ கும்பீ குமாரம் பஜேஹம் துராசார துர்போத தூர்வாத ஸந்தேஸ வைதேஸிகம் தேஸீகம் || 3 ||

பவ ஹ்ருதய சிரத்நகீ ரஞ்சலாசார்ய வர்யேத்புதா நந்தசர்யே விசார்யேஹ கத்யந்தாரபாவ முத்புல்ல பத்ம ப்ரவாள ப்ரதி ஸ்பர்த்தி பாதே, கதா யோதநோத்யுக்த ஸச்சாத்ர ஜைத்ரோதயத் காஹளீ ஸோபி ஜங்கா யுகீபாஜி, ரம்பா வநஸ் தம்ப கும்பீந்த்ர ஸூண்டோபமாநோரு காண்டே, வளக்ஷாம் ஸூக த்வந்த்வ ராஜத்கடீகே, ஸமுத்யத் விவஸ்வத் ப்ரபா புஞ்ஜதிக்காரி தேஜ:ப்ரவாஹாந்த விப்ராம்யதாவர்த்த ஸங்காஸ்பதி பூத கம்பீர நாபௌ, கவாடப்ரமாதாயி வஷோ விலோலத்
துலஸ்யப்ஜ பிஜாக்ஷமாலே, கராம்போஜ நாளாயிதாஜாநு ஸம்லம்பி பாஹௌ, களஜ் ஜ்யோதிஷாதோ பவத் கம்புகாந் தெள, ஸரத்பர்வ ஸோமாபி ராமாந நாம்போ ருஹாந்தர் ப்ரமத் ப்ருங்க யுக்மீ பவல் லோசநே,மோசநே துஷ்க்ருதாளேர் பஹிர்நிர்ய தந்தஸ்த்த ஸத்வாம்ஸ ஸந்தேஹ பாத்ரீபவத்
காத்ர ஸக்தோர்த்வ புண்ட்ர ஸ்ரியாலங்க்ருதே, வேங்கடேஸே குரௌ| | 4

ஷட் ஸப்ததி கணோபேத சரணோ ம்ருது பந்தந !!
படதாம ஸூபச்சேதீ த்ரய்யந்தாசார்ய தண்டக–

ஸ்ரீதேசிகன் வாழித் திருநாமம்-நேரிசை வெண்பா
வாழி யிராமாநுசப் பிள்ளான் மாதகவால்
வாழு மணிநிக மாந்த குரு – வாழியவன்
மாறன் மறையுமிராமானுசன் பாடியமும்
தேறும் படியுரைக்குஞ் சீர்.

எண்சீராசிரிய விருத்தம்
வஞ்சப் பர சமயம் மாற்ற வந்தோன் வாழியே
மன்னு புகழ்ப் பூதூரான் மனமுகப்போன் வாழியே
கஞ்சத் திருமங்கை யுகக்க வந்தோன் வாழியே
கலியனுரை குடி கொண்ட கருத்துடையோன் வாழியே
செஞ்சொல் தமிழ் மறைகள் தெளிந்துரைப்போன் வாழியே
திருமலை மால் திருமணியாய்ச் சிறக்க வந்தோன் வாழியே
தஞ்சப் பரகதியைத் தந்தருள்வோன் வாழியே
தண்டமிழ்த் தூப்புல் திருவேங் கடவன தாள் வாழியே!

நேரிசை வெண்பா
நானிலமுந்தா வாழ நான் மறைகள் தாம் வாழ
மாநகரின் மாறன் மறை வாழ- ஞானியர்கள்
சென்னி யணி சேர் தூப்புல் வேதாந்த தேசிகனே!
இன்னுமொரு நூற்றணடிரும்

திருவோலக்கப் பாட்டு
வாழி யணி தூப்புல் வரு நிகமாந் தாசிரியன்,
வாழி யவன் பாதார விந்த மலர் – வாழியவன் கோதிலாத் தாண் மலரைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் தீதிலா நல்லோர் திரள்

திருநாள் பாட்டு
வாதா சனவர ரிவரென வருமா பாடியம் வகை பெறு நாள்
வகுளா பரணப் பெருமாள் தமிழின் வாசி யறிந்திடு நாள்
பேதா பேதம் பிரம மெனாவகை பிரமந் தெளிவுறு நாள்
பேச்சொன் றுக்குச் சததூடணியைப் பேசிய தேசிக நாள்
தீதா கியபல மாயக் கலியைச் சிக்கென வென்றிடு நாள்
திக்கெட்டும் புகழ் சீபா டியத்தைத் தெளிய வுரைத்திடு நாள்,
ஓதா தோதும் வேதாந்தாரிய னுதயஞ் செய்திடு நாள்
உத்தமமான புரட்டாசித் திருவோண மெனுந்நாளே–

செங்கமலத்தய னனனவரென்று புகழ்ந்து மகிழ்ந்திடு நாள்
சீர் கொளிராமா நுசவெனுமந்திரம் பதிகளில் வாழ் திரு நாள்
செங்கல் வாளைகள் சேர் வயல் சூழ்ந்த வரங்கர் சிறந்திடு
சிந்துர வெற்பிடைச் சென்று திகழ்ந்து சிரீபதி வாழ்ந்திடுநாள்,
தெங்கொடு மாங்கனி தேன் சுனை வேங்கடத்தீசர் பிறந்திடுநாள்,
சீர்மதி யாகம மெளலி தந் தேசிகர் பிறந்து வளர்ந்திடுநாள்,
பங்கய மா மலர் மங்கை குணங்களைத் தெளிய வெளியிடு நாள்,
பார் திகழ் பாத்திர பதத் திருவோணமெனு திரு நன்னாளே

ஸ்ரீ தேசிகனின் திருநக்ஷத்ரம்

கந்யா ஸ்ரவண ஸம்பூதம் கண்டாம்ஸம் வேங்கடேஸிது
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேஸிகம்!

———————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெருமாள் தூதரும்- ஸ்ரீ பாண்டவ தூதனும்–

May 1, 2026

இன்னார் தூதன் என நின்றான் -தரித்து நின்றான்

சொல்லின் செல்வன் -ராமன் சங்கல்பத்தாலேயே சுக்ரீவன் திருவடியையே தூதுவனாக அங்கதன் தலைமையில் தெற்கு நோக்கி அனுப்பினான் -வாய் போல் எங்கும் செல்லும் திறமை யுடையவன்

உத்யோக பர்வம் -70- கிருஷ்ணனே தன்னைத் தூதுவனாக –

இருவருக்கும் செய்தி சொல்லி அனுப்ப -பெருமாள் -சுக்ரீவனின் மந்திரி -அவன் சொல்லியே செல்ல வேண்டும் -அங்குளி கொடுத்து -அடையாளங்களும் -ரஹஸ்யங்கள் -இதுவா காடு -கோட்டைக்கு வெளியில் வந்ததும் -கங்கை தாண்டி சுமந்தனுக்கு செய்து சொல்லும் -கிளி அரண்மனையில் விட்டு வந்தேன் ஊர்மிளையை பார்த்துக்கக் சொல்லி
பாண்டவர்-ஐந்து ஊராவது இது உண்மைக் கார்யம் அல்ல -பாஞ்சாலி கூந்தல் முடிக்க -நறையூர் நம்பி பாசுரம் -உத்யோக பர்வம் -81-துச்சாதனன் கர்ணன் அவமானம் -சர்வாத்மா அந்தகன் வெள்ளிக்கண்ணும் உள் கண்ணும் இல்லாதவன் -சண்டைக்கு பேசிய வர சொல்லி அனுப்பினாள்

தேர்வு – செய்தி -பயணம்
கார்த்திகை மாதம் ஆரம்பம்

சம்பாதி சொல்ல -கடலைத்தாண்ட -பங்குனி மாதம் மஹேந்திர கிரியில் இருந்து புறப்படுகிறார் -காலினால் அளந்தான் -வாலினால் அளந்தான் -ஆகவே திருவடி திருநாம பெற்றார்
மூன்று தடைகள் -மைநாகம் – ஆதர சப்தமோ தசை-ஆறு சுவைக்கு மேல் -சுரசா நாகமாதா -வாயுக்குள் சென்று -ஸிம்ஹிதா நிழல் -வயிற்றுக்குள் -குடலை கிழித்து
அன்பால் வென்று -அறிவால் வென்று ஆற்றலால் வென்று -ராமநாமம் சொல்லி தடை நீக்கி-பங்குனி பவ்ர்ணமி அடைந்தார்

உத்யோக -82 பர்வம் -காலை புறப்பட்டு -அதே கார்த்திகை மாதம் கிளம்பி ரேவதி நக்ஷத்ரம் -பனி வர ஆரம்பிக்க – தாரகன் தேரோட்டி -நான்கு குதிரைகள் பூட்டி -சுக்ரீவனின் பெயரும் ஒரு குதிரை -சாத்விகி உடன் கூடி -காலால் குதிரைப்படை 1000 பின் தொடர-வேத விற்பன்னர் உபசரிக்க ஒரு நாள் தங்கி-ஹஸ்தினாபுரம் அடுத்த நாள்

சந்திப்பு -திருவடி சீதா பிராட்டி -இவனோ விதுர பக்தன் -நான் தேடி கிடைக்க வில்லன் -நான் விட்டு அடியேன் -நினைக்க அசோகவனத்தில் கண்டார் -ஞான முத்திரை -கட்டைவிரல் –
நமோஸ்து ராமாய-ருத்ரன் இத்யாதி ராமகைங்கர்ய துடிப்பால் -சம்சரே மதுரம் வாக்கியம் -31 -1-சர்க்கம் -தமிழ் இராமாயணம் -பாசுரப்படி இராமாயணம்- -அகஸ்தியர் ஆஸ்ரமம் தங்கி-இராமாயண உபன்யாசத்தில் தூங்கினால் அரக்கர்கள் ஆவோம்-

பீஷ்ம த்ரோண -விட்டு விதுரர்-துரியோதனன் சம்பந்தி -சாம்பன் இவன் மகளை திருமணம் -மம பிராண பாண்டவ-பஞ்ச பிராணனும் பஞ்ச பாண்டவர்கள்-விதுரன் வாழ் வள மனை புகுந்தான் உன் குடிசைக்கு வா -வில்லிபாதரம்-கணை யாழி கொடுத்து சீதையை உளனாக்கி -இங்கு கைங்கர்யம் ஏற்றுக்கொண்டு விதுரனை உளனாக்கி

பேச்சு -ராவணன் இடம் -அசோகவனம் துவம்சம் இங்கு அடிக்க அங்கு வலிக்கும் -கதை உபயோகிக்க வில்லை -மரங்களே ஆயுதம் -எதிராளி ஆயுதம் உபயோகிப்பர் -80000 கிங்கர்களை அழித்து –ப்ரஹ்மாஸ்திரம் கட்டுப்பட்டது போல் -நடித்து -ராம தூதன் -ராம தாஸ்ன் -சீதா அருளாலே-வாலையை ஆஸனம் நேரடிக் குறிப்பு இல்லை -அண்ணாந்து பார்த்து உத் வீஷய வால்மீகி இராமாயணம்-வரம் பொய்க்கும் ராமசரம் பொய்க்காது -தேவி ஒப்படைக்காவிடில் ஆவியை விடவேண்டி வரும்

பொய்யாசனம் -பாண்டவ தூதன்-அப்பூச்சி காட்டுகிறான் ஊர் ஓன்று வேண்டி-துஷ்டர்கள் எவ்வளவு பேசினாலும் கேட்க மாட்டார்கள்

இருவரையும் தூதன் என்றும் பார்க்காமல் அழிக்க பார்த்தால்-நரத்துக்கு வால் வாநரம் -சீதை சோக அக்னியை வைத்தே எரித்தார்-

இருவரும் விஸ்வரூபம் -திவ்யம் ததாமி அர்ஜுனனுக்கு-த்ருதராஷ்டரனுக்கும் காட்டி -இத்தைப்பார்த்த கண்ணாலே வேறே ஒன்றையும் பார்க்க மாட்டான் கண்ணை வாங்கிக்கோ பிரார்த்தனை -தூது பேரில் -இலங்கை முழுவதும் கண்டு -விபீஷணன் பற்றி நன்றாக அறிந்து -தோளில் அமர்ந்து கொண்டு போவேன் -இவர் அறிவார் அவள் ஒத்துக்கொள்ள மாட்டாள் தெரிந்தும் -ராமன் காக்கும் வரை உயிர் காத்து இருப்பவள் -ஒரு மாதம் கெடு வாங்குவதற்காகவே இந்த வார்த்தை –

சூடாமணி -காகாசுரன் -மனசிலா -செங்கல்பொடிக்கதை -திலகம் கோணலாக -கன்னத்தையே கண்ணாடி -இத்தையும் சொல் அடையாளம் -ஒரு கல்லில் பல மாங்காய் இருவரும் -விதுரன் உணவு -கோபத்தில் துரியோதனன் -வில் முறித்து உனக்காக போராட மாட்டான் -அரசியல் -குந்தி கர்ணன் இடம் அர்ஜுனனைத்தவிர மற்ற பாண்டவர்களை கொல்ல மாட்டான் -அஸ்வத்தாமா தளபதியாமல் பண்ணி -மோதிரம் போட-சண்டையில் உதவுவான் சகுனி தப்பாக புரிந்து -லீலைகள் பல செய்து

இருவரும் செய்தியுடன் வந்தார்கள் தஸ்ய சத்ருசம் பவத்-தென் திசை நோக்கி நமஸ்காரம் தொழத்தக்க நிலையில் இருப்பதைக் குறிப்பால் கண்டேன் சீதையை-கற்பினுக்கு அணியை-பரிஷ்வங்கம் -தன்னையே கொடுத்து பெருமாள் திருவடியையே விட ஸ்ரேஷ்டரானார் அங்கு தர்மபுத்ரன் நன்றி கூட சொல்லாமல் சங்கல்பித்தது -பின் வந்த தூதனை கொண்டாடட்டும் என்று செய்த செயல்-தூதரே முக்கிய போர் புரிந்தனர்

ஆச்சார்ய பிரபாவம் சொல்லும் தூது -பிறவிப்பெரும்கடல் -அசோகவனம் உடம்புடன் -இத்யாதி-தூது போனவன் ஏற்றம் உபாய வைபவம் சொல்லிற்று-ஆஸ்ரித பாரதந்தர்யம் -கண்ணன் அல்லால் கண்ணில்லை-பொருப்பு துறப்பு-

கிருஷ்ணாவதாரத்தில் பாண்டவர்கள் தங்குவதற்கு இடம் கேட்பதற்காக துரியோதனனிடம் தூது சென்றார் கிருஷ்ணர். பாண்டவர்களின் மிகப்பெரிய பலமாக கிருஷ்ணர் இருப்பதால், அவரைக் கடத்த துரியோதனன் முயற்சிக்கிறான். கிருஷ்ணரை சூழ்ச்சிசெய்து தன் இடத்துக்கு வரவழைத்து ஓர் இருக்கையில் அமரச் செய்கிறான். அந்த இருக்கையின் கீழ் ஒரு நிலவறையை அமைத்து, கிருஷ்ணர் இருக்கையில் அமர்ந்ததும் பாதாள அறைக்குள் விழுந்து விடுவார், அப்போது அவரைக் கொன்று விடலாம் என்பது துரியோதனின் திட்டம். திட்டம் போலவே அனைத்தும் நடைபெறுகிறது. பாதாள அறைக்குள் விழுந்ததும், கிருஷ்ணர் விஸ்வரூபம் எடுத்து மல்யுத்த வீரர்களை அழித்தார். இந்த மகாபாரத சம்பவம் குறித்து வைசம்பாயனர் என்ற முனிவர் மூலம் கேள்வியுற்ற ஜனமேஜய மஹாராஜன், காஞ்சியில் அச்வமேத யாகம் செய்து கிருஷ்ணரை வரவழைத்து, பாதாள அறையில் விஸ்வரூபம் எடுத்தக் காட்சியை நினைவுகூர்ந்து, தனக்கு இங்கேயே விஸ்வரூபக் காட்சியைக் காட்ட வேண்டினான். பக்தனுக்காக ஸ்ரீகிருஷ்ணர், விஸ்வரூப காட்சியைக் காட்டிய திருத்தலம்தான் திருப்பாடகம். (திருதராஷ்டிரனுக்கு கண்பார்வை அளித்து தனது பெரிய விஸ்வரூப தரிசனத்தை கிருஷ்ண பகவான் இத்தலத்தில் காட்டியருளினார்.)திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 48-வது திவ்ய தேசம் ஆகும்.கிருஷ்ணர் இத்தலத்தில் 25 அடி உயரத்தில் , மூலஸ்தானத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சியளிப்பது வேறு எங்கும் காண முடியாத சிறப்பு அம்சமாகும்.இத்தலத்தை பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர்.மகாபாரதத்தில் விஸ்வரூபக் காட்சியை பகவான் மூன்று இடங்களில்தான் காட்டியிருக்கிறார். சகாதேவனிடம் நிமித்தம் கேட்கப் போனபோது ஒருமுறை; துரியோதன் அரசவைக்கு தூதுவனாகப் போனபோது ஒரு முறை; குருக்ஷேத்திர யுத்த களத்தில் அர்ஜுனனுக்கு கீதை உபதேசித்தபோது ஒரு முறை.-பத்ர விமானத்தின்கீழ் மூலவர் பாண்டவ தூதர், வீற்றிருந்த திருக்கோலத்தில், கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். வெள்ளிக்கிழமைதோறும் திருமஞ்சனம் காணும் ருக்மிணி தாயார் குசேலனாய் தன்னிடம் வந்து அன்பு செலுத்துவோரை பகவான் கிருஷ்ணருக்கு சிபாரிசு செய்து குபேரனாக வாழ வரம் அருள்கிறார்.

யக்ஞ மூர்த்தி என்ற அத்வைத கொள்கையுடைய சான்றோர் ஒருவர் ராமானுஜருடன் வாதப்போரில் ஈடுபட்டார். பதினெட்டு நாட்களும் வாதம் தொடர்ந்தது. இறுதியில் தனது தோல்வியை ஒப்புக் கொண்ட யக்ஞ மூர்த்தி ராமானுஜரின் கீர்த்திக்கும் வாதத் திறமைக்கும் தன்னை அடிமையாக்கிக் கொண்டார். தனக்கு எதிராக வாதம் புரிந்தவர் ஆனாலும் அவருடைய பாண்டியத்துக்கும் மதிப்பளிக்கும் வகையில் அவரை ‘அருளாளப் பெருமாள் எம்பெருமானார்’ என்று அழைத்து சிறப்பித்தார், ராமானுஜர். ராமானுஜரின் சீடராகி அவரது கொள்கைகளையும் தத்துவங்களையும் பரப்பும் நோக்கத்தில் இதே தலத்தில் பல்லாண்டு வாழ்ந்திருந்த அவரை கவுரவிக்கும் வகையில் இந்த பாண்டவ தூதர் கோயிலிலேயே அவருக்கு தனி சந்நிதி உள்ளது.அருளாளப் பெருமான் எம்பெருமானாருக்காக கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தில் சாற்றுமுறை உற்சவம் நடைபெறுகிறது.

மன்னா போற்றி! மணாளா போற்றி!
அஞ்சன வண்ணத் தரியே போற்றி!
கஞ்சனை அடர்ந்த கண்ணா போற்றி!
கருங்கடற் றுயின்ற காரே போற்றி!
ஆயிரந் தோளுடை அடுபோர் வாணனை
நேமியற் றுணித்த நெடியாய் போற்றி!
பேய்முலை யுண்ட பிரானே போற்றி!
பேருல களந்த மாலே போற்றி!
மருதிடைத் தவழ்ந்த மாயா போற்றி!
மாக்கடல் கடைந்த மகேசா போற்றி!
பெருவரை எடுத்த பிரானே போற்றி!
சங்கொடு சக்கரந் தரித்தாய் போற்றி!
தண்டொடு சார்ங்கமும் தனிநாந் தகமும்
பிண்டி பாலமும் பெருவச் சிரமும்
எண்டிசை நிறைந்த எம்மான் போற்றி!
அண்டமும் விசும்பும் அகலிடம் எல்லாம்
உண்டுமிழ்ந் தவனே ஒருவா போற்றி!
திருமறு மார்பத் திருமால் போற்றி!
தீவினை கெடுக்கும் செல்வா போற்றி!
அருமறை தேடும் அடியாய் போற்றி!
அடியவர் வினைகெட அருள்வாய் போற்றி!
சென்றொரு தூணிடை நின்றாய் போற்றி!
சிறுவனை உகந்த செல்வா போற்றி!
அயனொடு தேவர்க் கரியாய் போற்றி!
மலர்மகள் புணர்ந்த மணாளா போற்றி
நிலமகள் இடந்த நெடியாய் போற்றி!
திருவருள் தருவாய் திருவடி போற்றி!>

இரத்தினச்‌ சுருக்கம்‌ என்னும்‌ நூல்‌ தூது விடுவதற்குரிய பொருள்களாகப்‌ பத்தினைக்‌ குறிப்பிடுகின்றது. அன்னம்‌, மயில்‌, இளி, மேகம்‌, நாகணவாய்ப்‌புள்‌, தோழி, குயில்‌, நெஞ்சு, தென்றல்‌, வண்டு
என்னும்‌ இவற்றள்‌ ஒன்றைப்‌ பொருளாகக்‌ கொண்டு, புலவர்கள்‌ தம்‌ புலமை நலம் தோன்றுமாறும்‌ இலக்கிய நயம்‌ பொருந்துமாறும்‌ தூதிலக்கியத்தை ஓதுகின்‌றனர்‌. |
*இயம்புகன்ற காலத்‌தெகின மயில்‌ கிள்ளை
பயம்பெறு மேகம் பூவை பாங்கி--நயந்த குயில்‌
பேதை நெஞ்சம்‌ தென்றல்‌ பிரமரம்‌ ஈரைந்துமே
தூதுரைத்து வாங்கும்‌ தொடை”
என்னும்‌ பழம் பாட்டால்‌ ௮வ் வுண்மை புலனாம்‌.

தான்‌ வகுத்துக்‌ கூறுவான்‌ தலையாய தூதன்‌ ; கூறியது கூறுவான்‌ இடையாய தூதன்‌; ஓலை கொடுத்து நிற்பான்‌ கடையாய தூதன்‌ என்பர்‌.
தானறிந்து கூறும்‌ தலைமற்‌றிடையது .
கோனறைந்த தீதென்று கூறுமால்‌--தான றியா
தோலையே காட்டும்‌ கடையென்‌(.று) ஒரு மூன்று
மேலையோர்‌ தூதுரைத்த வாறு”
என்னும்‌ பெருந் தேவனாரின்‌ பழந் தமிழ்ப்‌ பாரத
வெண்பாப்‌ பாடல்‌

கடனறிந்து காலம்‌ கருதி இடனறிந்து
எண்ணி யுரைப்பான்‌ தலை”
அறிவுரு ஆராய்ந்த கல்வி யிம்‌ மூன்றன்‌
செறிவுடையான்‌ செல்க வினைக்கு”'
இறுதி பயப்பினும்‌ எஞ்சா திறைவற்‌
குறுதி பயப்பதாம்‌ தூது”
----திரு வள்ளுவர்


அன்புடைமை ஆய்ந்த அறிவுடைமை இற்பிறப்பு
நன்குடைமை நல்ல நயனுடைமை--நன்கமைந்த
சுற்‌றமுடைமை வடிவுடைமை சொல் வன்மை
கற்றடங்கல்‌ தூதின்‌ கடன்‌.”-பெரும் தேவனார்

வில்லின்‌ செல்வனாகிய: இராமன்‌ சொல்லின்‌ செல்வனாகிய அனுமனைத்‌ தன்‌ தேவியாகிய ஸீதையைக்‌ கண்டு வரும்‌ பொருட்டுத்‌ தென்றிசை நோக்கித்‌ தூது போக்கினான்‌-ஐயமகற்றும்‌ அடையாளங்கள்‌ பலவற்றை அறிவுறுத்தினான்‌. இறுதியில்‌ ஓளி பொருந்திய கணை யாழி யொன்றையும்‌ அளித்து வாழ்த்தி வழியனுப்பினான்‌.
அனுமன்‌ இராமனை வணங்கி விடை. பெற்றுத்‌ தென்‌றிசை நோக்கிச்‌ சென்றான்‌-இராமபிரானை மனத்துள்‌ நினைத்து வணங்கியவாறே இலங்கைமாநகர்‌ வீதிகளில்‌ ஓரமாக நடந்து சென்றான்‌. மலர்களில்‌ தேனை நாடிச்‌ செல்லும்‌ வண்டைப் போல்‌ கண்ட இட மெல்லாம்‌ சீதையைத்‌ தேடிக் கொண்டே சென்றான்‌–பிராட்டியைக்‌ காணுதற்கு இதுவே ஏற்ற சமயமென எண்ணிய அனுமன்‌ தனது மந்திர வன்மையால்‌ அரக்கியர்‌ உறக்கம்‌ கொள்ளுமாறு செய்தான்‌. உற்ற தோழியாய்‌ அமைந்த திரிசடையும்‌ துயில்‌ கொள்ளலானாள்‌-இராமபிரானால்‌ அனுப்பப்‌ பெற்ற தூதன்‌
நான்‌” என்று கூறியவாறே அவளை வணங்கி முன்னே சென்றான்‌-
அரக்கனே யாக, வேறோர்‌ அமரனே யாக, அன்றிக்‌
குரக்கனத்‌ தலைவனே தான்‌ ஆகுக, கொடுமையாக :
இரக்கமேயாக வந்து இங்‌கு எம்பிரான்‌ நாமம்‌ சொல்லி
உருக்கினன்‌ உணர்வைத்‌ தந்தான்‌ உயிரிதின்‌ உதவி யுண்டோ

இராமபிரான்‌ கூறியனவாக அனுமன்‌ கூறிய அடையாள மொழிகளையும்‌ கேட்டு உள்ளம்‌ உருகினாள்‌. பின்னர்‌, இராமபிரான்‌ அளித்த கணையாழி யொன்றை எடுத்துப்‌ பிராட்டிக்குக்‌ காட்டினான்‌.அதனைக்‌ கண்ட சீதை பெரு மகிழ்ச்சி கொண்டாள்‌.அதனை அன்புடன்‌ வாங்கித்‌ தன்‌ மார்பில்‌ வைத்துத்‌ தழுவிக்‌ கொண்டாள்‌ ; தலைமேல்‌ தாங்கினாள்‌ ; கண்களில்‌ ஓத்திக்‌ கொண்டாள்‌; அதனைக்‌ கொண்டுவந்தளித்த அனுமனை வாயார வாழ்த்தினாள்‌-
பின்னர்ச்‌ சீதை, அனுமன்‌ தன்னைக்‌ கண்டு பேசியதற்கு அடையாளமாகத்‌ தன்பால்‌ இருந்த சூடாமணி யென்னும்‌ அணிகலத்தை அவனிடம்‌ நல்கினாள்‌.
அதனைத்‌ தொழுது வாங்கிய அனுமன்‌ தன்‌ ஆடையிலே முடிந்து பாதுகாப்புச்‌ செய்து கொண்டான்‌.
பிறகு, பிராட்டியிடம்‌ விடைபெற்று அவ்விடம்‌ விட்டுப்‌ பெயர்ந்தான்‌.
அனுமன்‌ இராமபிரான்‌ இருக்கும்‌ இடத்தை யடைந்தான்‌. அவன்‌ அங்கு இராமபிரானை வணங்கவில்லை. ஸீதை இருக்கும்‌ திக்கை நோக்கி வணங்கி வாழ்த்தினான்‌. குறிப்பறிவதில்‌ வல்ல இராமபிரான்‌ ௮னுமனது செயலை உற்று நோக்கினன்‌.ஸீதை நலமாக உள்ளாள்‌ ; இவ்வனுமன்‌ அவளைப்‌ பார்த்து விட்டு வந்துள்ளான்‌; அவளுடைய கற்பும்‌ கலங்காது இலங்குகின்றது என்று அறிந்து கொண்டான்‌. அவனுக்கு உற்ற துயர்‌ நீங்கியது? உவகையால்‌ தோள்கள்‌ பூரித்தன.
இங்ஙனம்‌ இராமன்‌ விடுத்த தூதனாய அனுமன்‌ அவ் விராமனைப்‌ பிரிந்த சீதைக்குக்‌ கணவன்‌ விடுத்த காதல்‌ தூதனாக மட்டும்‌ தொண்டாற்ற வில்லை. தன்‌ பெருந்தலைவனாகிய இராமன்‌ விடுத்த போர்த் தூதனாகவும்‌ இலங்கை வேந்தனைக்‌ கண்டு, அவனது உள்ளமும்‌ துளங்குமாறு செய்து மீண்டான்‌. அதனாலேயே கவியரசராகிய. கம்பர்‌, அவ்வனுமனைச்‌ சொல்லின்‌ செல்வன்‌” என்று தம்‌ காவியத்தில்‌ போற்றிப்‌ புகழ்‌கின்றார்‌.

முன்னமே துயின்‌ றருளிய முது பயோ ததியோ
பன்னகாதி பப்‌ பாயலோ ? பச்சை ஆல்‌ இலையோ
சொன்ன நால் வகைச்‌ சுருதியோ ₹ கருதி நீ எய்தற்
கென்ன மாதவம்‌ செய்தது இச்‌ சிறுகுடில்‌ என்றான்‌.”
–விதுரர் –


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கனக வல்லித்தாயார் வீர ராகவ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ இராமானுசனர் அமைத்த ஸ்ரீ சோழங்கநல்லூர் கிருஷ்ணர் கோயில்–

May 1, 2026

சோழங்கநல்லூர் – திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு சிறு கிராமம். ஶ்ரீரங்கத்த்திற்கு வடக்கே கொள்ளிடத்திற்கு எதிர் கரையில் ( திருச்சி – நாமக்கல் ரோட்டில்) சிறுகாம்பூர் என்னும் இடம் உள்ளது. அங்கிருந்து 5 km தொலைவில் இந்த கோவில் உள்ளது. இந்த கிராமத்திற்கும் ஸ்ரீராமானுஜருக்கும் ஒரு தொடர்பு உள்ளது.-இந்த கிராமத்தில் வயற்காட்டில் நடுவில் ஒரு கிருஷ்ணர் கோவில் உள்ளது. இந்த கிருஷ்ணர் தனது ஆஸ்தானத்திலிருந்து இருந்து வெளியே ஒரு அறையில் பாலாலயமாகி 50 ஆண்டுகாலமாக கோவில் திருப்பணி நடக்க காத்துக்கொண்டிருக்கிறார்.சேவிக்க யாரும் வராமல் தினமும் வரும் அர்ச்சகரை மட்டும் கடாக்க்ஷித்து நிற்கிறார். 85 வயது முதியவர் எந்த சம்பளமும் இல்லாமல் எந்த பக்தர்களும் வராமலும் கடந்த 20 ஆண்டுகளாய் ஆராதனம் செய்து வருகிறார். இந்த கோவில் அருகே தண்ணீர் இல்லாமையால் தினமும் தனது வீட்டில் இருந்து பிரசாதமும் வழியில் ஒரு இடத்தில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிலியநல்லூர் எனும் கிராமத்திலிருந்து (மொத்தம் 14 கிலோமீட்டர் இருவழி) சிரத்தையுடன் ஆராதனம் செய்கிறார். எப்போதாவது பெருமாள் சேவிக்க இவரை குலதெய்வமாக கொண்ட ஒரு குடும்பத்தாரோ ஒரு சில உள்ளூர் மக்களோ வருவர்.

ஶ்ரீரங்கம் கோவிலுக்கு ஒரு கோசாலையை #சோழங்கநல்லூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 5 கிராமங்களை சேர்த்து பிருந்தாவனம் காடுபோல் இராமானுசர் அமைத்தார் என்பது ஶ்ரீரங்கம் கோயிலொழுகு கூறும் செய்தி. இந்த இடத்தில் ஆநிரைகாத்த பெருமாள் – கண்ணன் பிரதிஷ்டை செய்தார் என்பதும் கோயிலொழுகில் கூறப்பட்டுள்ளது.இப்போதும் அந்த கிருஷ்ணர் சோழிங்கநல்லூரில் ஒரு அறையில் இந்து சமய அறநிலை துறை திருப்பணி அனுமதி உத்தரவை எதிர்பார்த்து 50 ஆண்டுக்கு மேல் சிதிலமடைந்த கோவிலுக்கு வெளியே உள்ளார்.அந்த பசுக்களை கடாக்க்ஷிக்க இராமானுசர் தானே வந்து சில நாட்கள் இங்கே தங்குவார். திருவரங்கன் விக்ரஹத்தை பிரதிக்ஷ்டை செய்து அதற்கு வைகானச நம்பிமாரையும் திருவாராதனம் செய்ய பணித்தார் என்பதும் கோவிலொழுகில் கூறப்பட்டுள்ளது.

இன்றைய நிலை:
1. புன்சிரிப்புடன் கிருஷ்ணர் (ஆநிரைகாத்த்த பெருமாள்) கையில் வெண்ணெய்யுடன் சேவை சாதிக்கிறார்.
2. அருகே நம்மாழ்வார், இராமானுசர் மற்றும் சேனைமுதல்வன் விக்ரஹங்கள் உள்ளன.
3. த்வஜஸ்தம்பம் முன்பும் பலிபீடம் பின்பும் உள்ளதால் தற்போது பாஞ்சராத்ர ஆகம முறையில் கோவில் உள்ளது
4. கோவிலொழுகில் குறிப்பிட்ட அரங்கன் இங்கே இல்லை. கோவிலைத் தெரிந்த எவருக்கும் இங்கு இருந்த அரங்கன் பற்றிய தகவல்கள் இல்லை.
5. கோவிலுக்கு பல ஏக்கர் நிலங்கள் இருந்தும் எந்த வருமானமும் இல்லை.
6. கோவிலுக்கு தண்ணீர் மற்றும் மின்சார வசதிகள் இல்லை. கிணறு தண்ணீர் இல்லாமல் பாழ்பட்டு உள்ளது

கோவில் தொடர்பிற்கு: ஆறுமுகம் Ph: +91 93455193555

தொடருபுக்கு: வெங்கடேசன் Ph: +91 9841348374

கோவில் அர்ச்சகர்: சேதுராமன் Ph: ‭+91 97875 72556‬

கோவிலுக்கு செல்லும் வழி:
திருச்சியில் நாமக்கல் ரோட்டில் முக்கொம்புக்கு அணைக்கு 2 km முன்னால் சிறுகாம்பூர் உள்ளது.

சிறுகாம்பூர் மெயின் ரோட்டில் வலது புறம் திரும்பி 5 kms உள்ளே சென்றால் சோழங்கநல்லூர் மேல்நிலைப் பள்ளி வரும். அதைத் தாண்டி வலது பக்கத்தில் வரும் சிறு ரோட்டில் திரும்பி மீண்டும் வலது புறம் திரும்பினால் கோவில் தெரியும்.ஶ்ரீரங்கங்கத்தில் இருந்து 20 km மற்றும் திருவெள்ளறை கோவிலிலிருந்து 10 km தொலைவில் உள்ளது.

————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருவடி மஹாத்ம்யம் –ஸ்ரீ திவ்ய தேச ஸ்ரீ கருட சேவைகள்-

May 1, 2026

தை மாதம் – திருநாங்கூர் 11 கருட சேவை: தை அமாவாசைக்கு மறுநாள் (ஜனவரி/பிப்ரவரி) திருநாங்கூர் பகுதியில் உள்ள 11 திவ்ய தேசப் பெருமாள்களும் ஒரே இடத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி திருமங்கையாழ்வாருக்கு காட்சியளிக்கின்றனர்.திருநாங்கூர் 11 கருட சேவை: இது நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருநாங்கூரில் நடைபெறும் மிக முக்கியமான விழா. தை அமாவாசைக்கு மறுநாள், 11 திவ்ய தேசப் பெருமாள்களும் கருட வாகனத்தில் எழுந்தருளி திருமங்கையாழ்வாருக்குக் காட்சி அளிப்பார்கள்.-இடம்: மணிமாடக் கோயில் (திருமணிமாடம்), திருநாங்கூர்.

கும்பகோணம் 12 கருட சேவை: சித்திரை மாதத்தில் வரும் அட்சய திருதியை அன்று கும்பகோணத்தில் உள்ள 12 வைணவக் கோயில்களின் பெருமாள்களும் கருட வாகனத்தில் ஒரே இடத்தில் எழுந்தருளுவார்கள்.-இடம்: பெரிய தெரு, கும்பகோணம்.

திருவல்லிக்கேணி (சென்னை): சித்திரை பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாள் பார்த்தசாரதி பெருமாள் கருட வாகனத்தில் உலா வருவார்.

வைகாசி – காஞ்சிபுரம் கருட சேவை: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோத்ஸவத்தின் போது நடைபெறும் கருட சேவை மிகவும் பிரசித்தி பெற்றது.-பெரியாழ்வார் திருநக்ஷத்ர ஆனி ஸ்வாதிக்கும் ஆடி கஜேந்திர மோக்ஷத்துக்கும் கருட சேவை இங்கு உண்டு

ஆழ்வார்திருநகரி 9 கருட சேவை: வைகாசி விசாகத் திருவிழாவின் போது, நவதிருப்பதி எனப்படும் 9 திவ்ய தேசப் பெருமாள்களும் கருட வாகனத்தில் எழுந்தருளி நம்மாழ்வாருக்குக் காட்சி கொடுப்பார்கள்.

ஆடி– ஸ்ரீவில்லிபுத்தூர்: பெரியாழ்வார் அவதரித்த இடத்தில், திரு ஆடிப் பூரத்தை முன்னிட்டு கருட சேவை நடைபெறும்.-திரு ஆடிப் பூரம் திருவிழாவின் போது பெரியாழ்வாருடன் ஐந்து திவ்ய தேசப் பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருளும் ஐந்து கருட சேவை நடைபெறும்.

பெரும்பாலான திவ்ய தேசங்களில் பிரம்மோற்சவத்தின் 3வது அல்லது 5வது நாளில் கருட சேவை நடத்தப்படுகிறது.

ப்ரஹ்மோத்ஸவம்
கோயிலின் ப்ரதானப் பெருமாளுக்கு நடப்பது ப்ரஹ்மோத்ஸவம். பொதுவாக இது கோயிலில் முதலில் நடந்த உத்ஸவம் பிரம்மனால் நடத்தப்பட்டதைக் குறிக்கும். கோயிலின் மூலவர் ப்ரதிஷ்டையையும் குறிக்கும். பொதுவாக இவ்வுத்ஸவத்தில் காலை மாலை இரு வேளைகளிலும் புறப்பாடுகள் இருக்கும்.
அங்குரார்ப்பணம் – உத்ஸவம் தொடங்குவதைக் குறிக்க , புனிதப்படுத்திய மண்ணில் விதைகளை ஊன்றி முளைக்கவிட்டு அங்குரார்ப்பணம் செய்தல். சேனை முதலியார் புறப்பாடு உத்ஸவம் தொடங்கும்முன் விஷ்வக்ஸேநர் பெருமாள் திருவீதி புறப்பாட்டுக்கு முன் சென்று தெருக்கள் சரியாக தூய்மையாக உள்ளனவா என்று பார்த்தல்.
த்வஜாரோஹணம் – கொடி ஏற்றம்: – முதல் நாள் கருடக் கொடி கொடிக்க கம்பத்தில் ஏற்றி, உத்ஸவம் முடியும்வரை பறக்க விடப்படுகிறது.
கருட வாஹனம் – மூன்றாம் அல்லது நான்காம் அல்லது ஐந்தாம் நாள் தேச ஆசாரப்படி கருடவாஹனம் புறப்பாடு நடக்கிறது. கருடன்மீது ஸ்ரீமந் நாராயணன் எழுந்தருளுவதால் , வேத ஸ்வரூபியாகிய கருட வாஹனம் முக்கியமான திருவிழா.
ரதோத்ஸவம் – திருத்தேர். இது ஏழு அல்லது எட்டு அல்லது ஒன்பதாம் நாள் தேச ஆசாரப்படி நடக்கிறது. எல்லா இலக்கியங்களிலும் தேர்த்திருவிழா மிகச் சிறப்பாகப் பேசப்படுகிறது. எம்பெருமானின் திருத்தேர் புறப்பாடு கண்டவர்கள் பிறவிப்பாவங்களிலிருந்து விடுபடுவதாக நம்பப்படுகிறது. முழுச் சமுதாயமும் தேர்த் திருவிழாவில் ஈடுபடுகிறது.

குதிரை வாஹனம் – வேடுபறி உத்ஸவம்
வேடு – வேட்டை ஆடுவது, துணி எனப் பொருள்படும். பறி – கொள்ளை/பறித்தல். பொதுவாக இது திருமங்கை ஆழ்வார் தொடர்பான விழா. அவர், பணக்கார ப்ராமணத் திருமணமகனாக வந்த பெருமாளை அடியார்க்கு உணவளிக்கும் பொருட்டு வழிப்பறி செய்தது வேடுபறி என்று கொண்டாடப் படுகிறது.
கலியன் (திருமங்கை ஆழ்வார்) ததீயாராதனம் (அடியார்க்கு உணவளிப்பதைச்) சிறப்பாகச் செய்து வந்தார். ஏற்கெனவே ஸ்ரீவைஷ்ணவ கைங்கர்யத்திலிருந்த அவர்க்குப் பொருள் இல்லாதபோது,வழிப்பறிகள் செய்தார். அவர்க்கு மெய்ஞ்ஞானமும் தரத் திருவுளம் பற்றிய எம்பெருமான் செல்வமிக்க அந்தணப் புதுமணமகனாக வந்து தன் பொருளைக் கொள்ளை அடிக்க விட்டார். இறுதியில், ஒரு சிறிய வளையம் எம்பெருமானின் காலில் இருந்து நீக்க முடியாமல் போக, கலியன் கீழே வளைந்து பற்களால் அதை வெட்டி அதை கட்டாயமாக நீக்கினார். கலியனின் துணிச்சலை வியந்த எம்பெருமான், அவரை “நம் கலியனோ” என்று அழைத்தார். (கலியன் பொதுவாக பெரிய போர்வீரன் என்று பொருள்படும், மரணத்தின் தலைவன், நேரத்தின் கட்டுப்படுத்துபவரை குறிக்கும் – அனைவரையும் பயத்தில் ஆழ்த்துபவர்- எம்பெருமான் கூட கலியனின் வீரத்தையும் தைரியத்தையும் கண்டு பயந்தான். நகை மூட்டையை எடுத்துத் தூக்க முடியாமல் தவித்த கலியன் “ப்ராமணரே மூட்டைக்கு மந்திரம் போட்டீரோ” என வினவ. எம்பெருமானும் ஆம் என்று கலியன் காதில் திருமந்த்ரம் ஓதி ஆட்கொண்டான். எம்பெருமானின் திவ்ய மங்கள விக்ரஹத்தைக் கண்ட கலியன், “வாடினேன் வாடி வருந்தினேன்” என்று திருமந்த்ர ப்ரபாவத்தைப் பாடியருளினார்.(இந்த சம்சாரத்தில் நான் நித்தியமாக துன்புற்று இருந்தேன் … திருமந்திரத்தை எம்பெருமானிடமிருந்து கேட்க்கும் வரை-பெரிய திருமொழி முதல் பாசுரம்). ப்ரமோத்ஸவத்தில் பகுதியாக இருக்கும் குதிரை வாஹனம் நாளில், இந்த முழு நிகழ்வும் பொதுவாக திவ்யதேசங்களில் நடத்தப்படுகிறது.

மட்டையடி – ப்ரணய ரோஷம். காதலர் இடையிலான அன்புச் சண்டை. பெருமாள்/தாயார் இருவரையும் வைத்துப் பல கோயில்களில் நடக்கிறது.இது ஸ்ரீரங்கத்தில் மிக உத்ஸாகத்தோடு பங்குனி உத்தரத்தில் கொண்டாடப்படுகிறது. வேட்டையாடச் சென்ற எம்பெருமான் வேட்டைப்புண்களோடு திருமேனியை மூடி வர, பிராட்டி திவ்ய மங்கள விக்ரஹத்தில் குருதி அடையாளங்கண்டு ஸந்தேஹம் கொண்டு பெருமாள் பிற நாச்சியார்களோடு இருந்ததாக ஊடி திருக்கதவை அடைத்து அவரை உள்ளே விடாமல் தடுக்க சேதன ரக்ஷணர்த்தமாக நாம் சென்று வந்தோம் என்று அவர் சொல்வது ஏற்காததால் நம்மாழ்வார் கடகராகிப் பிராட்டியம் பெருமாளும் சமாதானமாகும் நிகழ்ச்சி பூப்பந்து எறிதலோடு அழகாக முடிகிறது.
தீர்த்தவாரி – அவப்ருத ஸ்நாநம்: சக்கரத்தாழ்வாருக்குத் திருக்குளத்தில் அல்லது சில திவ்ய தேசங்களில் எம்பெருமானுக்கே, திருமஞ்சனம் ஆகிறது.
துவஜ அவரோஹணம் – கொடி இறக்கம்:உத்ஸவம் முடிந்ததற்கு அறிகுறியாக ஏற்றப்பட்ட கருடக்கொடி இறக்கப்படும் நிகழ்ச்சி.
த்வாதச ஆராதனம் – தொண்டை நாட்டு திவ்ய தேசங்களில் பல ஸந்நிதிகளில் இறுதி நாளன்று எம்பெருமானுக்குப் பன்னிரண்டு திருவாராதனங்கள் ஸமர்பிக்கப்பட்டு, திருவாய்மொழி ஆயிரமும் ஒரே தொடர்ச்சியாக ஸேவிக்கப்படுகிறது.திருவாய்மொழி தொடங்குமுன் திருமஞ்சனமும் உண்டு.
சப்தாவரணம் – அன்றுமாலை எம்பெருமான் பிராட்டிமாரோடு சிறிய தேரில் அல்லது புண்யகோடி விமானத்தில் இராமானுச நூற்றந்தாதி கோஷ்டியோடு புறப்பாடாகி ஸந்நிதி திரும்பியதும் அர்ச்சக ஸ்வாமிகள் எல்லா தேவர்கள், ரிஷிகள், ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஸ்வஸ்தி வாசகம் சொல்லி வழியனுப்புதல்.
விடாயாற்றி பத்துநாள் உத்ஸவங்கண்ட களைப்புத் தீர எம்பெருமான் சில நாள்கள் திருமஞ்சனம்/திவ்யப்ரபந்த கோஷ்டி/இன்னிசைக் கச்சேரி என எழுந்தருளியிருப்பர்.

தெப்போத்ஸவம் – கோயில் புஷ்கரிணி அல்லது அருகிலுள்ள நீர்நிலைகளில் பிராட்டிமாரொடு எம்பெருமானுக்குத் தெப்ப உத்ஸவம் நடக்கும். குளத்து நீராழி மண்டபத்தைச் சுற்றித் அலங்கரிக்கப்பட்ட தெப்பம் வருவது அழகிய காட்சி.
பல்லவ உத்ஸவம் – இளவேனில் காலத்தில் எம்பெருமான் புதிதாய்த் துளிர்க்கும் தளிர்கள் தழைகளை அணிந்து ஸ்தல புராணம் கேட்பது.
வசந்தோத்ஸவம் – எம்பெருமான் ஸந்நிதிக்கு அருகிலுள்ள தோட்டத்திற்கு சென்று உள் புறப்பாடாகி சிறிது நேரம் எழுந்தருளியிருந்து திருமஞ்சனம் திருவாராதனம் கண்டருளுதல். அருள்வார்.பிறகு திருமஞ்சனமும் திருவராதனமும் உண்டு.
கோடை உத்ஸவம் – எம்பெருமான் ஸந்நிதிக்கு அருகிலுள்ள மண்டபத்திற்கு சென்று திருமஞ்சனம் திருவாராதனம் கண்டருளுதல்.
ஸ்ரீராம நவமி – ஸ்ரீராமன் அவதார உத்ஸவம் ஒன்பதுநாள்கள் புறப்பாடு, நவமியோடு முடிவுறுவது
பவித்ரோத்ஸவம் – கோயில் வழிபாடுகள் யாவும் பாஞ்சராத்ர/வைகாநஸ ஆகம விதிகளின்படி நடக்கின்றன. இவற்றில் ஏதாகிலும் குறை/பிழை ஏற்படக்கூடும் என்பதால் அதை நிவ்ருத்தி செய்ய மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு நாள்கள் குண்டங்கள் நிர்மாணித்து எம்பெருமானையும் தாயாரையும் தினமும் யாகசாலைக்கு எழுந்தருளச் செய்து, திவ்ய ப்ரபந்தம், வேத இதிஹாஸ புராண பாராயணங்களுடன் ஈடு/ஸ்ரீபாஷ்ய பாராயணங்களும் நடத்தப்படும். எம்பெருமானுக்குத் திருமஞ்சனமும் உண்டு.
ஆனி (ஜ்யேஷ்ட மாச) கருடோத்ஸவம் – ஆனி ஸ்வாதியில் பெரியாழ்வார் திருநக்ஷத்ரத்தன்று அவர் பரத்வ நிர்ணயம் செய்தது ஒட்டி எம்பெருமான் கருட வாஹனனாகப் பெரியாழ்வார்க்கு ஸேவை சாதிப்பார்.

ஜ்யேஷ்டாபிஷேகம்: எல்லா எம்பெருமான்களும் கவசத்தோடேயே ஸேவை சாதிப்பர். இந்த நாளன்று கவசங்கள் களையப்பட்டு திருமஞ்சனம் ஆகி அழகிய திருமேனியை யாவரும் ஸேவித்தபின் திருவாராதனமாகி ஸேவை ஆகும். இதன்பின், பவித்ரோத்ஸவம் கண்டருளும்வரை எம்பெருமானுக்குப் புறப்பாட்டுடன் உத்ஸவாதிகள் இராது.
ஆடிப் பௌர்ணமி கருடோத்ஸவம் – கஜேந்திர மோக்ஷம் – பொதுவாக இது யஜுர் உபாகர்மத்தன்று வரும்.
ஸ்ரீஜயந்தி – ஆகம விதிப்படியும், ஆவணி மாதம்/அஷ்டமி திதி அல்லது ரோஹிணி நக்ஷத்ரப்படியும் இது கொண்டாடப்படும். மாலை தொடங்கி நள்ளிரவு வரை இது நீடிக்கும்.
.நவராத்ரி – 9 நாள்கள் தாயார் புறப்பாடு, ஊஞ்சல்.
விஜயதசமி – பரிவேட்டை – எம்பெருமான் வேட்டையாட வெளியே எழுந்தருள்வது
தீபாவளி – பெருமாள்/தாயார் புறப்பாடு இது பெரும்பாலும் மாமுனிகள் அவதார உத்ஸவதோடு வரும்
கார்த்திகை தீபம் + அநத்யயந காலத் தொடக்கம் – திருவிளக்குகள் பல ஸந்நிதிகளில் ஏற்றப்படும். பெருமாள் புறப்பாட்டின்போது சொக்கப்பனை கொளுத்தப்படும்.
அத்யயந உத்ஸவம் 20+ நாள்கள் நம்மாழ்வார்க்கும் திருவாய்மொழிக்கும் என்றே ஏற்பட்ட மஹோத்ஸவம்

 

ஸ்ரீ பெரிய திருவடி மஹாத்ம்யம் –

ஸ்ரீ கருடன் மேல் ஸ்ரீ சுவாமி தேசிகர் இரு ஸ்தோத்திரங்கள் இயற்றியுள்ளார். அவையாவன ஸ்ரீ கருட தாண்டகம், ஸ்ரீ கருட பஞசாசத்

———

வைநதேயன் – விந்தையின் குமாரன்.
பக்ஷிராஜன் – வேத ஸ்வரூபன்.
கருத்மான் – அழகிய இறகுகளை உடையவன்.
தார்விகாரி – நாகப்பகையோன்
பத்ரிநாடா – பறவைகளின் யஜமானன்.
ஆசிவிகாரி – நாகங்களின்(விஷ) பகைவன். காகேந்திரன் – பறவைகளின் அரசன்.
அருண அனந்தரன்- அருணனின் இளையோன்.
பக்ஷிஇந்திரன் – பறவைகளின் அரசன்.
தெய்வப்புள்ளான கருட பகவான் ஒப்பற்ற மேன்மை யுடையவர்.
மஹாவிஷ்ணுவுடைய இரண்டாவது வியுகமான ஸ்ரீ சங்கர்ஷண மூர்த்தியின் அம்சமாக விளங்குபவர்.
மனித உடலிலுள்ள ஐந்து வாயுக்களான ப்ராணன், அபாநன், வ்யானன்,உதானன், ஸமானன் என்பவற்றுக்கு
ஸத்யர், ஸுபர்ணர், கருடர், தார்க்ஷ்யர். விஹகேஸ்வரர் என்னும் ஐந்து மூர்த்திகளாய் விளங்குகின்றார்.
இவர் ஞானம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ் என்னும் ஆறு குணங்கள் நிரம்பப்பெற்றவர்.
ஏழு சுரங்களையுடைய சாம வேதத்தின் வடிவமானவர்.
அணிமா, மஹிமா, லகிமா,கரிமா,வசித்வம்,ஐச்வர்யம், ப்ராப்தி, ப்ராகாம்யம் என்னும் அட்டமஹா சித்திகள் பெற்றவர்.
 
கருடனுக்கு ருத்ரை, ஸுகீர்த்தி என்று இரு மனைவியர்கள்.
இவரது நட்சத்திரம் சுவாதி.
சில தலங்களில் கருட சேவையின் போது ஒரு வெள்ளைத் துணியை கருட வாகனத்தின் அலகால் கிழித்து நான்கு
திசைகளிலும் திசைக்கு ஒன்றாக தூக்கி எறிவார்கள்.
இது மனிதனின் மும்மலங்கள் அவனிடமிருந்து கிழிக்கப்பட்டு திசைக்கு ஒன்றாக வீசப்பட்டு
அவன் தூயமையாவதைக் குறிக்கின்றது.
எனவே கருட சேவையை காணும் போது நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்கள் நீங்கும்(
நீக்க நாம் முயற்சி செய்தால்) இவ்வாறு மலங்கள் நீங்கும் போது மனிதன் நிர்மலன் ஆகின்றான்.
இவ்வாறு ஆணவத்தை தொலைத்தால் சீவனில் உள்ள ஆணவமாகிய சுழி இறங்கும் போது
சீவன் சிவன் ஆகிறான். அவன் தன்னை உணர்கிறான்.
இறை தரிசனம் கிட்டும்.முக்திக்கு வழி பிறக்கும்
எனவே தான் பெருமாளின் கருட சேவையைக் காண்பதால் மோக்ஷம் கிட்டும் என்பது ஐதீகம்.
 
————-
கருடன் வேதமயமானவன், அதாவது “வேத சொரூபன்”.
 
ஸூபர்ணோஸி கருத்மாந் த்ரிவ் ருத்தே சிரோ
காயத்ரம் சஷீஸ்ஸ்தோம ஆத்மா ஸாம தே
தநுர் ப்ரஹத்ரதந்தரே யஜ்ஞாயஜ்ஞியம்
புச்சம் – என்பது யஜுர் வேத வ்யாக்யானம்.
 
விநதையின் புதல்வனான கருடனின் ஒவ்வொரு அவயமமும் வேதத்தின் பகுதி.
“ஸ்தோமம்” என்னும் ஸாம வேத பாகமே அவரது ஆத்ம ஸ்வரூபம்.
“காயத்ரம்” என்கிற ஸாமம் அவருக்கு கண்கள்.
“த்ரிவ்ருத்” என்ற ஸாமம் அவருக்கு சிரசு.
யஜுர் வேதங்கள் அவருடைய திருநாமங்கள்.
சந்தஸ்ஸுக்கள் அவரது திருக் கரங்கள்.
“திஷ்ண்யம்” எனப்படும் வேள்வி மேடைகள் அவரது திருப்பாதங்கள்.
“வாமதேவ்யம்” என்கிற ஸாமம் அவரது திருமேனி,
“ப்ருஹத்” , “ரதந்தரம்” என்னும் ஸாமங்கள் அவருடைய இரு சிறகுகள்.
“யஜ்ஞாயஜ்ஞியம்” என்கிற ஸாமம் அவருக்கு வால்.
இவ்வாறு வேத பாகங்களெல்லாம் கருடனுடைய திருமேனிகளாய் விளங்குவதால்
கருடனை “வேத ஸ்வரூபன்” என்கிறார்கள் பெரியோர்.
 
பெருமாள் அவ்தாரம் செய்த உக்ர ஸ்தம்பத்திலிருந்து கருடாத்ரியைப் பார்த்தால் அப்படியே
கருடன் தன் இரு சிறகுகளையும் விரித்து மத்தியில் உயர்ந்த அலகுடனும் மூன்று பகுதிகளாகவும்
அஞ்சலி ஹஸ்தத்துடன் ( கை கூப்பிய நிலையில்) நிற்பதை இன்றும் காணலாம்.
அஹோபிலத்தில் இன்று கருடாத்ரிக்கும் வேதாத்ரிக்கும் இடையே பிறவிப் பிணியை நீக்கும் பவ நாசினி ஆறு ஓடுகின்றது.
கருடாத்ரியில் தான் நவநரசிம்மரில் இன்னொரு நரசிம்மரான பாவன நரசிம்மரும்
தாயார் செஞ்சு லக்ஷ்மித் தாயாருடன் லக்ஷ்மி நரசிம்மராக சேவை சாதிக்கின்றார்.
 
அஹோபிலே கருடசைல மத்யே க்ருபா வசாத் கல்பித ஸந்நிதாநம்
லக்ஷ்ம்யா ஸமாலிங்கித வாம பாகம் லக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே
 

ஆடி கருடன் – கஜேந்திர மோக்ஷம்

ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி யன்று கருட பஞ்சமி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது

கருடன் நாகங்களை அடக்கி தனது மேனி முழுவதும் ஆபரணமாக அணிந்துள்ளான்.
பூணூல் : வாசுகி
வலது கை கங்கணம்: குளிகன்
இடது கை கங்கணம் : ஆதி சேஷன்
அரையில் அணி: தட்சகன்
மாலை: கார்கோடகன்.
வலது காது குண்டலம்: பத்மன்
இடது காது குண்டலம் : மஹா பத்மன்
திருமுடியில் : சங்க பாலன்—சங்க ஸூடன் என்றும் சொல்வர்

விடமுடைய பாம்பின் உடம்பையும் உயிரையும் உண்ணும் பறவை கருடன்.
அக்கருடனுடைய அரைக்கசையாக, கைகளில் தோள் வளைகளாக, முடி மேல், காது குண்டலங்களாக விளங்கும்
ஆபரணங்கள் எல்லாம் பாம்பு, குடையும் பாம்பு என்று பரிபாடல் கூறுகின்றது.

விடமுடை அரவின் உடலுயிர் உருங்கு உவணம் அவன்
மடிமேல் வலந்தது பாம்பு பாம்பு தொடி பாம்பு தலைமேலது பாம்பு
இறை தலையன பாம்பு படிமதம் சாய்த்தோய் பசும் பூனலை
கொடிமேலிருந்தவன் தாக்கு இரையது பாம்பு – பரிபாடல்

எல்லா கருடனிலும் அஷ்ட நாகங்கள் ஆபரணமாக விளங்கும்
ஆனால் இந்த கல் கருடனில் ஒன்பது நாகங்கள் ஆபரணமாக உள்ளன,
ஒன்பதாவது நாகம் கருடனின் வாளை அலங்கரிக்கின்றது.

நாக பாசத்தால் இந்திரஜித் இளையபெருமாளை கட்ட, அவர் மயங்கி விழுந்த போது
அந்த கட்டிலிருந்து விடுவித்தவன் கருடன். அதற்காக இராம பிரானின் தழுவுதல பெற்றவன் கருடன். “
ககநகர கனககிரி கரிமதர நிகம்மய நிஜ கருட கருதநில லவகளித விஷவதநக்ர கதந” என்று
ஸ்வாமி தேசிகன் இவ் வைபவத்தை பாடுகின்றார்.

பரிஷ்கார வர்ணக–

வாமே வைகுண்ட சய்யா பணிபதி கடகோ வாஸூகி ப்ரஹ்ம ஸூத்ர
ரஷேந் நஸ்தஷ கேண க்ரதித கடி தடஸ் சாரு கார்க்கோட ஹார
பத்மம் கர்ணேஸ் ப அசேவ்யே ப்ரதிமவதி மஹா பத்ம மந்யத்ர பிப்ரத்
சூடாயாம் சங்க பாலம் குளிகமபி புஜே தஷிணே பக்ஷிமல்ல -ஸ்ரீ கருட பஞ்சாசத் —36-

ஆதி சேஷனே கையில் கங்கணம் -வாஸூகி பூணூல் -தக்ஷகன் கழுத்துக்கு ஆபரணம்
கார்க்கோடன் -ஹாரம் -பத்ம மஹா பத்ம காதுகளுக்கு ஆபரணங்கள்
சங்க பாலன் திரு முடியில் -குளிகன் தோல் வளை
இப்படி முக்கிய அஷ்ட சர்ப்பங்கள் சேவை உண்டே –

———-

திருமலையின் ஏழு மலைகள் சேஷாசலம், வேதாசலம், கருடாசலம், அஞ்சனாசலம், ஸ்ரீ வேங்கடாசலம், ரிஷபாசலம், அனந்தாசலம் ஆகியவை ஆகும்.

ஆதி சேஷன் ரூபத்தில் இருப்பதால் – சேஷாசலம்.
வேதங்களால் நிறைந்திருப்பதால் – வேதாசலம்.
கருடனால் வைகுண்டத்திலிருந்து பூலோகத்திற்கு கொண்டு வரப்பட்டதால் – கருடாசலம்.
விருஷாபாசுரனை சம்ஹரித்து அவனுக்கு மோக்ஷம் கொடுத்ததால் – விருஷபாத்ரி.
திரேதா யுகத்தில் அஞ்சனா தேவி தவம் இருந்து அனுமனைப் பெற்றதால் -அஞ்சனாத்ரி.
துவாபர யுகத்தில் ஆதிசேஷனையும் வாயு பகவானையும் தூண்டி அனந்த பர்வதத்திஅயும் கொண்டு வந்ததினால் – அனந்தாத்ரி.
சர்வ பாவங்களும் தஹிக்கப்பட்ட புண்ணிய ஷேத்திரமானதால் – வேங்கடாத்ரி
 
இத்தலத்தில் கருடனுக்கு இன்னுமொரு சிறப்புமுண்டு.
கோவிலின் அருகில் உள்ள கோனேரியை (திருக்குளத்தை), கருடன் தான் வைகுண்டத்து விரஜா நதியில் இருந்து உருவாக்கினான்! .
 
திருமலையில் பிரம்மோற்சவத்தின் சில சிறப்புகள்
1) முதல் நாள் கொடியேற்றம் மாலையில் நடைபெறுவது,
2)இரண்டு தடவை சேஷ வாகன சேவை,
3) தங்கத்தேர்.
4) கருட சேவையன்று மூலவராக உற்சவர் சேவைசாதிப்பது.
 
பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் மாலை கருட சேவையின் ஒரு தனி சிறப்பு கருட சேவையன்று மூலவர் வேங்கடேசருக்கு அணிவிக்கப்படும் மகர கண்டியும், லக்ஷ்மி ஹாரமும் கருட சேவையன்று மட்டும் உற்சவர் மலையப்பசாமிக்கு அணிவிக்கப்படுகின்றன. சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாளின் திருமாலையை அணிந்து கொண்டு சேவை சாதிக்கின்றார் பெருமாள் . கருடசேவைக்காகவே ஒரு மாலையை அணிந்து அனுப்புகின்றாள், கூடவே தான் தாங்கியிருந்த கிளியையும் அனுப்புகிறாள் கோதை நாச்சியார்.
 
தை மாதத்தின் வளர்பிறை சப்தமி என்னும் ஏழாம் நாள் இரத சப்தமி என்றும் சூரிய ஜெயந்தி என்றும் கொண்டாடப்படுகின்றது.
இரத சப்தமியன்று அருணன் சாரதியாக இருந்து செலுத்தும் ஏழு குதிரைகள் பூட்டிய சூரிய நாராயணரின் இரதம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி திரும்புவதாக ஐதீகம்
சூரியன் தனுர் ராசியிலிருந்து மகர ராசிக்கு மாறும் நாள் என்பாரும் உண்டு.  இரத சப்தமி என்னும் இந்நாளில் சூரியனுக்கு விசேஷ ஓளி பிறப்பதாக புராணங்கள் கூறுகின்றன.
திருப்பதியில் ஏழுமலைகள் உள்ளதால், அந்த மலைகளை சூரியனின் குதிரைகளாகக் கருதி, ரதசப்தமி விழா பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. அன்றைய விழாவுக்கு, “அர்த்த பிரம்மோற்சவம்’ என்று பெயர். “அர்த்த’ என்றால், “பாதி!’ பொதுவாக பத்து நாள் விழாக்களைத் தான், “பிரம்மோற்சவம்’ என்பர். ஒரே நாளில் ஏழு வாகனங்களில் சுவாமி பவனி வருவதால், இதை, “அர்த்த பிரம்மோற்சவம்’ என்கின்றனர். திருமலையில் அதிகாலையில் மலையப்பசுவாமி சூரியப் பிரபையில் சேவை சாதிக்கின்றார், பின் சேஷ வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், கற்பக விருட்ச வாகனம், சர்வ பூபாள வாகனம், நிறைவாக சூரிய அஸ்தமன காலத்தில் சந்திரப் பிரபை வாகனத்தில் சேவை சாதித்து வைர வைடுரிய நகைகள் மின்ன சர்வ அலங்காரத்தில் சேவை சாதிக்கும் நாள்.
 
பிரம்மோற்சவம் தவிர பெருமாள் கருட சேவை தந்தருளும் நாள் தை மாத இரத சப்தமி நாள். அன்று அதிகாலை சூரியப் பிரபை வாகனத்தில் சேவை சாதிக்கும் பெருமாள் மாலை சந்திரப்பிரபை வாகனத்தில் சேவை சாதிக்கின்றார். மேலும் பெரிய திருவடியாம் கருடன், சிறிய திருவடியாம் அனுமனிலும் சேவை சாதிக்கின்றார் பெருமாள்.
————-

இத்திவ்ய தேசத்தில் நெடியானாய் நின்ற கோலத்தில், சாரதிக்கு உரிய முறுக்கு மீசையுடன் வலக்கையில் சங்கமேந்தி சக்கரம் இல்லாமல் வேங்கட கிருஷ்ணன் என்று மூலவராயும், திருமுக மண்டலத்தில் பீஷ்மரின் அம்பு காயங்களுடன் பார்த்தசாரதி என்று உற்சவராயும், வால்மிகி முனிவர் வணங்கும் இராமனாய், மைதிலி மற்றும் தம்பி இலக்குவனோடும் சக்கரவர்த்தி திருமகனும், பள்ளி கொண்ட ஸ்ரீமந்நாதராய் அரங்கனாகவும், பிரகலாதனுக்கு அருள் புரிந்து யோக நிலையில் அமர்ந்த தெள்ளிய சிங்கராகவும், நித்ய கருட சேவை வழங்கும் கஜேந்திர வரதராகவும் பெருமாள் ஐந்து கோலங்களில் சேவை சாதிக்கின்றார்.

கஜேந்திர வரதர் சன்னதி உள் பிரகாரத்தில் தென் கிழக்கு மூலையில் தனி சன்னதியாக அமைந்துள்ளது. இவருக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் வைகாசி திருவோணத்தை ஒட்டி பத்து நாள் நிகழ்ச்சியாக நடைபெறுகின்றது. வைகானச ஆகமப்படி உற்சவங்கள் நடைபெறுவதால் மூன்றாம் நாள் அதிகாலை கோபுர வாசல் தரிசனத்துடன் கருட சேவை எல்லா பெருமாள்களின் பிரம்மோற்சவத்தின் போதும் நடைபெறுகின்றது. கஜேந்திர வரதர் ஹஸ்த நட்சத்திரத்தன்று் மாலை புறப்பாடு கண்டருளுகிறார். கஜேந்திர மோக்ஷ உற்சவம் ஆடி கருடன் என்று ஆடிப் பௌர்ணமியன்று நடைபெறுகின்றது. பங்குனி உற்சவ திருக்கல்யாண உற்சவத்தின் போது மாலை ஸ்ரீரங்கநாத சுவாமி கண்ணாடி கருட சேவை தந்தருளுகின்றார்

———-

சோள சிம்ம புரம் என்னும் திருக்கடிகையில் காஞ்சி வரதர் தனது அன்பரான தொட்டாச்சாரியாருக்கு வைகாசி கருட சேவை காட்சியை தக்கான் குளக்கரையை அளித்ததை அனைவரும் அறிவோம்

இவ்வாறு கச்சி வரதன் அளித்த அற்புத கருட சேவையை எப்போதும் அனைவரும் சேவிக்கும் பொருட்டு தக்கான் குளக்கரையில் வரதர் ஆலயம் உள்ளது. அங்கும் நாம் தினமும் மோட்சமளிக்கும் கருடசேவையை தரிசிக்கலாம்.

——–

புராணங்களில் மேல் கோட்டை
1. பத்மகூடா,
2. புஷ்கரா,
3. புத்மசேகரா ,
4.அனந்தமாயா ,
5. யாதவகிரி,
6. நாராயணாத்ரி,
7. வேதாத்ரி ,
8. வித்யா (ஞான) மண்டல்,
9. தக்ஷிணபத்ரி என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது.

மூலவர் :- திருநாராயணன் / திருநாரணன் சங்க சக்ர, கதை, முதலியவைகளுடன் நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம், சரணங்களில் பீபீ நாச்சியார் (வெள்ளி கவசத்துடன்) சரணங்களில் வணங்கிய முடி.

உத்ஸவர் :- ஸம்பத்குமாரர், இதரபெயர்கள் – ராம ப்ரியர், செல்வ பிள்ளை, செல்வ நாராயணன்.

தாயார் :- யதுகிரி நாச்சியார், மேலும் பூமி தேவி, வரநந்தினி நாச்சியார்.

தீர்த்தம் :- கல்யாணி தீர்த்தம், வேத புஷ்கரிணி, தனுஷ் கோடி தீர்த்தம், முதலிய 8 தீர்த்தங்கள்.

விமானம் :- ஆனந்தமய விமானம்

ப்ரத்யக்ஷம் :- கருட பகவான்

இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் இதர மூர்த்திகள் :

வண்புகழ் நாரணன் :- ஸ்நபனபேரர், (நாராயண பகவான் பக்கத்தில்) நித்ய திருமஞ்ஜனம் கண்டருளிகிறார்.

வாழ் புகழ் நாரணன், பலி செல்வர், செல்வப் பிள்ளை ஸந்நிதியில் ஸேவை ஸாதிக்கிறார்.

———

தேவேந்திரன் ஒரு சமயம் ஒரு விமானத்தையும் வைர முடியையும் அளித்து இவற்றை எந்தெந்த பெருமாளுக்கு உகந்ததோ அங்கு சம்ர்பித்து விடு என்று பணித்தான். கருடனும் வைர முடியை கர்நாடக மாநிலத்தில் மைசூர் அருகில் உள்ள திருநாராயண புரத்தில் செல்லபிள்ளை சம்பத்குமாரரருக்கும் விமானத்தை தேரழுந்தூரில் ஆமருவியப்பனுக்கும் சமர்பித்தான். எனவே இத்தலத்தின் விமானம் கருட விமானம் ஆகும். விமானம் சாம்ர்பித்த கருடனுக்கு “ என்ன வரம் வேண்டும்? என்று வினவ , கருடனும் அர்ச்சை நிலையில் தேவரீர் இருக்க அடியேன் எதிரே நின்று எல்லா இடங்களிலும் சேவிக்கிறேன். ஆனால் அருகிலே நின்று அடியேன் தேவரீரின் பொன்னடிகளைச் சேவிக்க வேண்டும் என்று வரம் வேண்ட பெருமாளும் கருடனை அருகில் இருத்தி கொண்டதாக ஐதீகம்.

————–

மருந்து உண்ணும் போது விஷ்ணு என்றும்
உணவு உட்கொள்ளும் போது ஜனார்த்தனா என்றும்
படுக்கச் செல்லும் போது பத்மநாபா என்றும்
திருமண காலத்தில் பிரஜாபதி என்றும்
யுத்த களத்தில் சக்ரதாரி என்றும்
இறுதி காலத்தில் நாராயணா என்றும்
நண்பர்களிடம் ஸ்ரீதரா என்றும்
கெட்ட சொப்பனம் கண்ட பின் கோவிந்தா என்றும்
சங்கட காலங்களில் மதுசூதனா என்றும்
தனி வழி செல்லும் போது நரசிம்மா என்றும்
நெருப்பினால் துன்பம் உண்டாகும் போது ஜலசாயினே என்றும்
தண்ணீரில் துன்பம் உண்டாகும் போது வராஹா என்றும்
மலை ஏறும் போது ரகு நந்தனா என்றும்
வீதியில் நடக்கும் போது வாமனா என்றும்
எங்கும் எப்போதும் மாதவா என்றும்
 

ஒரே மாலையில் 18 ஸ்ரீ கருட சேவைகளின் அரிய காட்சி

சமத கும்பம் 2025 என்று அழைக்கப்படும் 3வது வருடாந்திர பிரம்மோத்சவம், 
108 திவ்ய தேசங்களால் சூழப்பட்ட பிரமாண்டமான சமத்துவ சிலையில் ( 
சுவாமி ராமானுஜாச்சாரியாரின் 216 அடி உயர சிலை )  நடைபெற்று வருகிறது . இந்த நிகழ்வு பக்தர்களுக்கு  ஒரே மாலையில் 18 கருட சேவைகளைக் காணும் அரிய வாய்ப்பை வழங்குகிறது -இது ஆன்மீக மற்றும் மன எழுச்சியின் சூழலை உருவாக்குகிறது.காலை பூஜை மற்றும் ஆராதனைக்காக பக்தர்கள் யாகசாலையில் குவிந்தனர். புனித தீர்த்த கோஷ்டி நடத்தப்பட்டு, 18 திவ்ய தேச பெருமாள்கள் திருமஞ்சனம், சம்பிரதாய ஸ்நானம் ஆகியவற்றுக்கு தயார்படுத்தப்பட்டனர்.
காலை பூஜை மற்றும் ஆராதனைக்காக பக்தர்கள் யாகசாலையில் குவிந்தனர். புனித தீர்த்த கோஷ்டி நடத்தப்பட்டு, 18 திவ்ய தேச பெருமாள்கள் திருமஞ்சனம், சம்பிரதாய ஸ்நானம் ஆகியவற்றுக்கு தயார்படுத்தப்பட்டனர்-18 பெருமாள்களுடன் திவ்ய சாகேதம் ராமச்சந்திர பகவானும் திருமஞ்சனம் பெற்றார்.இந்த சடங்கில் மூலிகை கலந்த நீர், பால், தயிர், தேன் மற்றும் பழச்சாறுகள் பயன்படுத்தப்பட்டன.தொடர்ந்து சஹஸ்ரதாரா அபிஷேகம் , ஷங்கதாரா, சக்ரதார ஸ்நானம் உள்ளிட்டவை நடந்தன. பகவத் ராமானுஜரும் புனித சேவையைப் பெற்றார்.அபிஷேக தீர்த்தம் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டு, தெய்வீக ஆசீர்வாதங்களைப் பெற்றது.
கருடன் தான் விஷ்ணுவின் வாகனன் என்று எல்லோர்க்கும் தெரியும்-விஷ்ணு கோவில்களில் துவஜஸ்தம்பம் உண்டு. அதில் கருடனின் கொடியே கட்டி இருக்கும்.-10 நாள் உற்சவத்தின் போது கொடியை ஏற்றுவது துவஜாரோஹணம்-என்பர்.-கடைசி நாள் துவஜாஅவரோகணம் நடக்கும். 3 ஆம் நாள்கருடோத்சவம் நடக்கும். இது எல்லா கோவில்களுக்கும் பொது-

-கருடனை தரிசனம் செய்யும் போது கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்ல சாலச்சிறந்தது.

-குங்குமாங்கித வர்ணாய குந்தேந்து&நஃபிஸ்தவளாய ச!விஷ்ணு வாஹந ! நமஸ்துப்யம் பஷிராஜாய தேநம:!!

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

அரிய 100 தகவல்கள்–

1-ஸ்ரீகருடன் மகாவிஷ்ணுவின் ‘சங்கர்சண’ அம்சமாகக் கருதுவதால் அவரை கண்டிப்பாக வணங்க வேண்டும்.

2. ஸ்ரீகருடனுக்கு சிவப்பு நிறமுள்ள பட்டு வேஷ்டியை அணிவித்து மல்லிகைப்பூ, மருக்கொழுந்து, கதிர்ப்பச்சை (தமனகம்), சம்பகப் பூக்களால் அர்ச்சனை செய்வது சிறந்தது.

3-‘யுவதிஜனப்பிரியா நம’ என ஸ்ரீகருடனை துதித்து பெண்களும் மாலையில் குங்கும அர்ச்சனை செய்யலாம்.

4-கருட சேவையை அதிகாலையில் தரிசிப்பது மிகவும் விசேஷம்.

5. கருட பெருமான் திருமாலின் இரண்டு திருவடிகளையும் தம் இரு கரங்களால் தாங்கி ஊர்வலமாக வரும் காட்சியே கருட சேவை எனப்படும். அப்போது பெருமான், கருடன் ஆகிய இருவரின் அருளும் ஒருங்கே கிடப்பதைப் பக்தர்கள் புனிதமாகக் கருதுகிறார்கள்.

6. ‘திருமாலும் கருடனும் ஒருவரே’ என்று மகாபாரதத்திலுள்ள அனுசாசன பர்வத்தில் காணப்படுகிறது.

7-ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீர்யம், அதீத சக்தி, தேஜஸ் என்ற ஆறு விதமான குணங்களுடன் கருடன் திகழ்கிறார்.

8. திருமாலைப் போல அணிமா, மகிமா, லகிமா, கரிமா, ஈஸித்வம், வசித்வம், பிராபதி – பிராகாம்யம் ஆகிய எட்டு விதமான சம்பத்துக்களாக இருந்து கொண்டு, பக்தர்களுக்கு அவற்றைத் தருபவராக ஸ்ரீ கருடன் விளங்குகிறார்.

9. கருடனுக்கு சார்பர்ணன் என்றொரு பெயருண்டு. கருடனுடைய மனைவியர் ருத்ரா, சுகீர்த்தி.

10. கருடனுடைய மகிமையை ஏகாதசி, திருவோணம் போன்ற புண்ணிய தினங்களில் படிப்பவர்களும், கேட்பவர்களும் கடும் நோய்களில் இருந்து விடுதலை பெறுவர்.

11. கேரள மன்னரான சுவாதி திருநாள் இசை வித்தகராக மட்டுமின்றி பல கலைகளிலும் வல்லவராக இருந்ததற்குக் கருடோபாசனையே காரணம்.

12. கொலம்பஸ் கடலில் திக்குதிசை தெரியாமல் தவித்த போது கருடன் வானத்தில் வட்டமிட்டு திசை காட்டியதாக சரித்திரம் சொல்கிறது.

13. கருடனுக்கு கருத்மான், சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், பகிராஜன், தார்ச்டயன், மோதகாமோதர், மல்லீபுஷ்யபிரியர், மங்களாலயர், சோமகாரீ, பெரிய திருவடி, விஜயன், கிருஷ்ணன், ஜயகருடன், புள்ளரசு, கலுழன், சுவணன்கிரி என்றும் ஓடும்புள் கொற்றப்புள் என்றும் பெயர்கள் உண்டு.

14-வைணவ ஆழ்வார்கள் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் பல இடங்களில் கருடனை போற்றிப் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள்.

15. சிவகங்கை மாவட்டத்தில் -காரைக்குடியை அடுத்துள்ள அரியக்குடி. இங்கு எழுந்தருளி இருப்பவர் ஸ்ரீநிவாசப் பெருமாள்.-இங்கு மூலைக் கருடன் வழிபாடு சிறப்பானது. நல்லது நடக்கவும். தீமைகள் மறையவும் இங்கு மூலைக் கருடனுக்கு சிதறுகாய் உடைப்பது வழக்கம்.

16. மௌரியர்கள் கருடனை மிகவும் அதிர்ஷ்ட தெய்வம் என்று கருதினார்கள்.

17. குப்தர் காலத்தில் குமார குப்தன், சமுத்திர குப்தன் என்ற இரண்டு அரசர்கள் தங்கள் பொன் நாணயங்களில் கருடனைப் பொறித்தார்கள். கருட முத்திரை தங்கள் நாட்டிற்கு வளம் சேர்க்கும் என்று அவர்கள் நம்பிக்கைப்படி குப்தர்கள் காலம் வரலாற்றின் பொற்காலமாகத் திகழ்ந்தது.

18-சந்திரகுப்த விக்ரமாதித்தன் முதன் முதலில் நாட்டின் நலனைக் கருதி டெல்லியில் ஒரு கருட ஸ்தம்பத்தை ஸ்தாபித்தார்.

19-உலக வல்லரசாக அமெரிக்கா திகழக் காரணமாக இருப்பது அந்த நாட்டின் சின்னமான கருடனால்தான்.

20. பதினெட்டு நாட்கள் நிகழ்ந்த மகாபாரதப் போரில் கடைசி நாள் போர் கருட வியூக யுத்தமாக நடந்தது. இதுவே பாண்டவர்களுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது.

21. நேபாள நாட்டில் கருட நாக யுத்தம் என்று ஒரு விழா நடைபெறுகிறது. அப்பொழுது கருடனுடைய திருமேனியில் வியர்வைத் துளிகள் தோன்றும். அதைத் துணியால் ஒற்றி எடுத்து அதை அரசருக்கு அனுப்புவார்கள். அந்தத் துணியின் நூலிழையை பாம்பு கடித்த மனிதனுக்கு சுற்றினால் பாம்பு கடி விஷம் உடன் இறங்கி விடும்.

22. கருடனால் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கொண்டு வரப்பட்ட வைரமுடி என்கிற அணிகலன் தற்பொழுது கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்கோட்டை என்னும் திருநாராயணபுரத்து பெருமாளுக்கு சூட்டப்பட்டுள்ளது.-இந்த நிகழ்ச்சி இன்றும் ஒவ்வொரு பங்குனி ஏகாதசியில் வைரமுடி சேவை என்று திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

23. வானத்தில் கருடனைப் பார்க்கும் போது கைகூப்பி வணங்கக் கூடாது. கன்னத்தில் போட்டுக் கொள்ளவும் கூடாது. மங்களானி பவந்து என மனதில் சொல்லிக் கொள்ள வேண்டும்.

24. பிரான்ஸ் சக்ரவர்த்தி மாவீரன் நெப்போலியனுடைய கொடி கருடக் கொடியாகும். எனவேதான் அவரால் பலவெற்றிகளை அடைய முடிந்தது.

25. ஸ்ரீவில்லிப்புத்தூரில் ரங்க மன்னர் ஆண்டாளுடனும் கருடனுடனும் ஒரே ஆசனத்தில் காட்சி தருவது வேறு எந்த தலத்திலும் இல்லாத சிறப்பு. இப்படி இங்கு கருடனுக்கு தனிமரியாதை கொடுப்பதன் காரணம் கருடன் பெரியாழ்வாராக அவதரித்ததால் மாமனார் –

26. எல்லா திவ்ய தேசங்களிலும் இரண்டு கரங்களையும் குவித்து வணங்கும் கருடாழ் வாரைத்தான் காணமுடியும். திருக்கண்ணங்குடி என்ற திவ்ய தேசத்தில் மட்டும் இரண்டு கைகளையும் காட்டிக் கொண்டு தரிசனம் தருகிறார். இந்தக் காட்சி வைகுண்டத்தில் கருடன் எழுந்தருளியுள்ள காட்சி என்று கூறுவார்கள்.

27. கும்பகோணத்திலிருந்து அருகில் உள்ள திருவெள்ளியங்குடி என்ற தலத்தில் கருடாழ்வார் நான்கு கரங்களுடன் கைகளில் சங்கு சக்கரங்களும் கொண்டதாகக் காட்சி தருவது வேறு எந்தத் தலத்திலும் கிடையாது. சங்கு சக்கரங்களைப் பெற்றதால் பெருமாளின் சக்தியே தன்னிடம் வரப்பெற்றவராய் கருடாழ்வார் இங்கு திகழ்கிறார்.

28. ஆழ்வார் திருநகரியில் நவ கருட சேவை மிக சிறப்பானது. வைகாசி விசாகம் இறுதியாக நம்மாழ்வாருக்கு பத்து நாள் திரு அவதார திருநாள் நடைபெறுகிறது. இதில் ஐந்தாவது நாள் நவதிருப்பதி எம்பெருமான்கள் ஆழ்வார் திருநகரிக்கு எழுந்தருளி அபிஷேக, ஆராதனைகள் கொண்டு இரவு ஒன்பது பெருமாளுக்கும் கருடாரூடர்களாக ஆழ்வாருக்கு சேவை சாதிக்கிறார்கள்.இங்கு கருடன் சம்ஸரூபியாக இருக்கிறார்.

29. பாண்டி நாட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருத்தங்கல்லில் (திருத்தண்கால்) கோவிலில் கருடாழ்வார் சர்ப்பத்துடனும், அம்ருத கலசத்துடனும் காட்சியளிக்கிறார்.

30. நம்பாடுவான் என்ற ஹரிஜன வைணவ பக்தனுக்காக கருடாழ்வாரும், கொடி மரமும் சற்று விலகி உள்ள தலம் திருக்குறுங்கடி

31-கருட தரிசனம் செய்வது பெருமாளே நேரில் வந்து நமக்கு வெற்றி வாழ்த்து சொல்வதற்கு சமம் ஆகும்.

32. நமது காரியம் வெற்றி பெறும் என்று இருந்தால் தான் மகா விஷ்ணுவாகிய ஸ்ரீ நாராயணன் கருடன் தரிசனம் கிடைக்கச் செய்வார் இல்லையெனில் கருட தரிசனம் கிட்டாது.

33-ஆயிரம் ஆயிரம் சுப சகுணங்கள் கிட்டினாலும் ஒரு கருட தரிசனத்திற்கு ஈடாகாது! தன்னிகரற்றது கருட தரிசனம்!

34-கெட்ட சகுணங்கள் துர்சேட்டைகள், துர் குறிகள் போன்ற அசுபங்கள் அனைத்தும் கருட தரிசனத்தால் சூரியனைக் கண்ட பனிபோல் பறந்தோடிவிடும்!

35-பறவைகளில் நான் கருடன் என்று கருடனைப்பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது பகவத் கீதையில் கூறியுள்ளார்.

36. அழகிய கருட பகவானின் தரிசனத்தைக் கண்டாலே உள்ளத்தில் உற்சாகமும், ஊக்கமும் உண்டாவதை நிதர்சனமாக உணரலாம்.

37-கருடனில் இருந்து கிடைக்கப்பெறும் தெய்வீக ஒளிக்கதிர் வீச்சானது மனிதர்களின் உடலிலும் உள்ளத்திலும் ஒருவித நேர்மறை சக்திகளை உண்டாக்குகிறது என்று அறிவியல் ஆய்வில் கண்டு பிடித்துள்ளனர்.

38-எதிரிகளை முறியடிக்கின்ற நேர்மறையான அதிர்வலைகளை கருட தரிசனம் தருகிறது.

39-கருட தரிசனம் சிறந்த சமயோகித புத்தியையும், நல்ல சிந்தனைகளையும், நல்ல எண்ணங்களையும் அளிக்கிறது.

40-நல்ல தெய்வீக சக்திகள் சூழ்ந்த சூழ்நிலைகளில் கருட வாசம் நிச்சயம் இருக்கும்.

41-எதுவும் சரியாக இல்லாத போது என்ன தான் நாம் கருட தரிசனம் காண முற்பட்டாலும், கருட தரிசனம் கிட்டாது என்பது பலரது அனுபவமாகும்.

42-நவரத்தினங்களில் ஒன்றான பச்சை நிறமுள்ள மரகதத்திற்கு கருடோத்காரம் அல்லது காருடமணி என்று பெயர்.-கருடனால் விழுங்கி துப்பப்பட்ட பலாசுரன் என்ற அசுரனின் எலும்புகளே மரகதமாக மாறின. இதை அணிவதால் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களால் துன்பம் ஏற்படாது.

43. அமிர்தக் குடத்தை எடுத்துவர தேவலோகம் சென்ற கருடன், அங்குள்ள தர்பைப் புல்லையும் பூலோகத்திற்குக் கொண்டு வந்தார். அமிர்தத்துடன் தர்ப்பையையும் கொண்டு வந்ததால் அதனை அமிர்தவீர்யம் என்ற பெயரில் அழைக்கின்றனர்.

44. ஒரு காலத்தில் சுவேதத் தீவில் இருந்த பாற்கடலின் பால் கட்டிகளை தன்னுடைய சிறகு முழுவதும் அப்பிக்கொண்டு வந்து எங்கும் உதறினார் கருட பகவான். அவற்றையே ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருமண் என்று அணிந்து கொள்கின்றனர்.

45. கருடனுக்கு கஸ்தூரி, குங்குமப்பூ, புனுகுச்சட்டம் ஆகியவற்றை வாழைச்சாற்றில் கலந்து அவரது திருமேனியில் சாற்றி வேண்டிக் கொண்டால் அனைத்து இஷ்ட சித்திகளையும் எளிதில் அடையலாம்.

46. ஸ்ரீமந் நாராயணனின் அவசர காரியத்திற்காக, கருட பகவான் அவரைத் தாங்கிக்கொண்டு விரைந்து சென்று கொண்டிருப்பார். எனவே அவர் பறக்கும்போது கையெடுத்துக் கும்பிட்டால், அவரது வேகம் குறைந்து எம்பெருமானின் செயலுக்கு ஊறு நேரிடலாம் என்பதால் அப்படி சொல்லி உள்ளனர்.

47. கருடன் மட்டுமே இறக்கைகளை அசைக்காமல் பறக்கும் சக்தி உடையவர். எனவே உயர பறக்கும் போது இறக்கைகளை அசைக்காமல் இருந்தால் அது கருடன் என்று முடிவு செய்யலாம்.

48. ஜைன மதத்தினர் கருடனை சுபர்ணா என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனர். பவுத்தர்கள் உராசனா, பன்னகாசனா, நாகத்தகா ராஜநிர்ஹனா என்னும் பெயர்களில் கருடனை வழிபட்டு வருகின்றனர்.

49. கருடனின் நிழல்பட்ட நிலத்தில் நல்ல விளைச்சல் உண்டாகும். காரணம், வேத ஒலிகளுக்கு தாவரங்களை நன்கு வளர வைக்கும் சக்தி உண்டு.

50-சப்த மாதர்களில் ஸ்ரீவைஷ்ணவி கருட வாகனத்தைப் பயன்படுத்துகிறார். ஆனால் அவர் ஸ்ரீவிஷ்ணுவின் பிரிக்க முடியாத சக்தி என்பதால் அவரையும் ஸ்ரீவிஷ்ணுவாகவே கொள்ள வேண்டும்.

51-ஸ்ரீகருட பகவானை உபாசனை செய்வதே அவர் சுட்டிக்காட்டும் ஸ்ரீமந் நாராயணனின் திருவடிகளைப்ம் பற்றிக் கொள்வதற்காகத்தான்.

52-வெளியூர் பயணங்கள், சுபச்செயல்கள் துவங்குகையில் கருட ஸ்லோகம் படித்தால் இடையூறு நேராது.

53. கார்க்கோடகன் பெயரைச் சொன்னால் ஏழரைச் சனியினால் ஏற்படும் கஷ்டம் விலகும் என்கிறது நளசரித்திரம். அந்தக் கார்க்கோடகனை ஹாரமாக அணிந்திருப்பவர் கருடன்.

54. ஹோமர் எழுதிய இலியத் என்ற ரோமானிய காவியத்தில் ஒரு பெரிய பாம்பைப்பற்றியபடி கருடன் வானத்தில் வட்டமிடுவதாகக் கூறப்பட்டுள்ளது. காம்போஜத்தில் கருடனே யோக தேவதையாக இருந்திருக்கிறார்.

55-கருடன் தகர்த்த மேருமலையின் சிகரத்துண்டே சமுத்திரத்தில் விழுந்த இலங்கைத்தீவு என்று பேசப்படுகிறது.

56-திருவனந்தபுரத்திலுள்ள ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி கோவிலுள்ள ஸ்ரீகருட பகவான் ஆறேழு அடி உயரத்தில் நின்ற நிலையில் நாகங்களைப் பூண்டு சேவை தருகிறார்.

57-கருடனது பீசாட்சாரம் கம். சக்தி பீஜம் டம். கருடனுடைய பெயரிலேயே இரண்டும் இருக்கிறது. பெருமாள் சோதனை செய்து வரம் தருவார். கருடனோடு சேர்த்துத், திருமாலை பிரார்த்தித்தால் உடனே அமோகமான பலன்கள் கிடைக்கும் என்கிறது பரிவதிலீசனைப் பதிகம்

கடிவார் தீய வினைகள் -நொடியாரும் அளவைக் கண்
கொடியாவடு புள்ளுயர்த்த-வடிவார் மாதவனாரே
 –1-6-10–

மாதவன் பால் சடகோபன் தீதவம் இன்றி யுரைத்த
ஏதமில் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாரே 
–1-6-11-

58-கோவில் கும்பாபிஷேக நேரத்தில் வானத்தில் கருடன் வட்டமிட்டால் நாடு சுபிட்சம் பெறும் என்பது ஐதீகம்.

59=ராம ராவண யுத்தத்தில் பெருமாளையும், இளைய பெருமாளையும் நாகபாசத்தில் இருந்து விடுவித்தவர் ஸ்ரீ கருடன் தான்.

60-பாற்கடலைக் கடையும்போது திருமாலின் கட்டளைப்படி மந்திர மலையைத் தன் முதுகில் சுமந்து வந்து பாற்கடலில் வைத்தவர் கருடன் தான்.

61-கண்ணபிரான் துவார கைக்கு வெளியே இருந்த போதெல்லாம் துவாரகையைக் காத்தவர் கருடன்.

62-கருடனுக்கு பிரகஸ்பதி குலதேவதை, கன்னிப் பெண்களுக்கு திருமண பாக்கியம் கைகூடி வர குருபார்வை வேண்டும். ஆகையால் கருட பகவான் அருள் கிட்டினால் பெண்களுக்கு மனம்போல் மாங்கல்யம் அமையும்.

63. கருட புராணத்தை அமாவாசை, பவுர்ணமி, மாதப் பிறப்பு, கிரகணம், சிராத்தம் போன்ற முக்கிய தினங்களில் படிப்பது காரியத் தடைகளை அகற்றி ஜெயம் அளிக்கும்.

64. பொதுவாக வானத்தில் பறக்கும் சாதாரண கருடனும், தெய்வீகத் தன்மை வாய்ந்ததுதான். காரணம் அதுவும் கருடனின் பரம்பரை வாரிசு.

65. கருடனின் நிறம், பழுப்பு, கழுத்து வெள்ளை, இந்த வகை கருடன் மணிக்கு 105 கி.மீ. வரை பறப்பதாக பறவை ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

66. வைணவர்கள் பழுப்புநிற கருடப்பறவையைத்தான் கருட தரிசனத்திற்காக எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். வீர வைணவர்கள் கருட தரிசனம் செய்யாமல் உணவருந்த மாட்டார்கள்.

67. வானத்தில் கருடனைப் பார்ப்பதும் அதன் குரலைக் கேட்பதும் நல்ல சகுனமாகும். அதிகாலையில் நமக்குக் கருட ‘ தரிசனம் கிடைத்தால் நினைத்த காரியம் கை கூடும்.

68. அமெரிக்க நாட்டுச் சின்னம் கருடன். இதனால்தான் அந்நாடு செழிப்புடன் விளங்குகிறது. அவர்கள் கருடனை கோல்டன் பறவை (தங்கப் பறவை) என்றும் அதிர்ஷ்ட பறவை என்றும் கூறுகிறார்கள்.

69. கருட மாலா மந்திரம் பாராயணம் செய்பவர்கள் எவ்வித துன்பத்திற்கும் ஆளாக மாட்டார்கள்.

70-ரத்தின பரீட்சை என்னும் நூல் மரகதப் பச்சை கல்லுக்கு ‘காருடமணி’ என்றும், ‘கருடோத்காரம்’ என்றும் பெயர்கள் உண்டு.

71-கருடனுக்கு கோபம் வந்தால் சிறகுகள் உதறிப் பறக்கும்.

72-வீட்டில் கருடன் படம், பொம்மைகள் வைப்பதால் வாஸ்து குறைகள் நீங்கும்.

73. ஆகாயத்தில் கருடனைப் பார்ப்பதும் அவருடைய குரலைக் கேட்பதும் நல்ல சகுணம். “காருட தர்சனம் புண்யம், ததோபித்வனிருச்யமாதோ” என்று சமஸ்கிருதத்தில் இதைச் சொல்வார்கள்.

74-கருடனின் குரல் சாமவேத த்வனி ஆகும். பறவை இனங்களின் ராஜாவாக இவர் கருதப்படுவதால் இவருக்கு பட்சி ராஜன் என்றும் பெயர்.

75. கருட் என்றால் சிறகு எனப்பொருள். இதிலிருந்து கருடன் என்ற பதம் வந்துள்ளது.

76-தட்சணின் மகளான வினதா என்பவருக்கும், கச்யப முனிவருக்கும் பிறந்தவரே கருடன். அதனாலேயே அவருக்கு விநதேயன் என்ற பெயரும் உண்டு.

77-ஸ்ரீவைகுண்டத்தில் திருமாலுக்கு எப்பொழுதும் தொண்டு செய்து கொண்டிருப்பவர்கள் நித்ய ஸூரிகள் எனப்படுவர்.-அதில் முக்கியமானவர் கருடன். இவர் திருமாலுக்கு வாகனமாக இருந்து தொண்டு செய்து வருகிறார்.

78. கருடன் பெரிய திருவடி என்றும், ஆஞ்சநேயர் சிறிய திருவடி எனவும் சிறப்பித்துக் கூறப்படுகிறார்கள்.

79. வைணவ ஆலயங்களில் நான்கு மதில் சுவர்களின் மூலையிலும் கருடனின் உருவம் இருக்கும்.

80-கருடனை உபாசித்து வைணவ சமய ஆச்சார்யரான சுவாமி தேசிகன் கருடனால் ஹயக்ரீவர் மந்திரம் உபதேசிக்கப் பெற்று சிறந்த பக்திமானாக விளங்கினார். இவர் கருடன் மீது கருடதண்டகம், கருட பஞ்சாசத் என்ற சுலோகங்களை இயற்றியுள்ளார்.

81. கழுத்து வெள்ளை பஞ்சமுக ஆஞ்சநேயரின் பின்புறம் (மேற்கு) கருடமுகமாக அமைந்துள்ளது.

82-பவுத்தர்கள் கருடனை உராசனா, பன்னகாசனா, நாகத்தகா, ராஜநிர்ஹனா என்ற பெயர்களிலும், ஜைனர்கள் சுபர்ணா என்ற பெயரிலும் வழிபடுகின்றனர்.

83. பெண் கருட பறவையை எளிதாக வசப்படுத்த முடியாது. ஆண் பறவை வானத்தில் வட்டமிட்டு தன்னுடைய பலத்தை நிரூபித்தால் மட்டுமே பெண் பறவை வசப்படும்.

84. கருடன் கற்பு நெறியில் நிற்கும். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இணை சேர்ந்து முட்டையிடும்.

85-அதர்வண வேதத்தில் முப்பத்திரண்டு வித்தைகளில் கருடனுக்கு முதல் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. துறவிகளின் முக்கிய தேவதை கருடனே.

86. மணவாள மாமுனிகள் வேங்கடவனைத் தரிசிப்பதற்கு முன்பாக முதலில் ராமானுஜரை சேவித்து பிறகு கருட பகவானை வணங்கி விட்டு, பின்னர் ஏழுமலையானை தரிசிப்பது வழக்கம்.

87. கருட பகவான் வைகுண்டத்திலிருந்து திருப்பதிக்கு சுவாமி புஷ்கரணி என்ற குளத்தை கொண்டு வந்ததாக புராணம் கூறுகிறது.

88. தஞ்சை நகரின் அமைப்பு கருடன் சிறகை விரித்து பறப்பது போன்ற வடிவில் உள்ளது.

89. கருடனின் பார்வை மிகக் கூர்மையானது என்று வேதம் கூறுகிறது.

90. வீட்டிற்குள் பாம்பு தென்பட்டால் கருடனை நினைத்து அபஸர்ப்ப ஸர்ப பத்ரம்தே தூரம் கச்சமஹாயசா! ஜனமே ஜயஸ்ய யக்ஞாந்தேஹ்யாஸ்தீக வசனம் ஸ்மரண்!! என்று கூறி கையைத் தட்டினால் அங்கிருந்து பாம்பு சென்று விடும்.

91. பெருமாள் கோவில்களில் கருடனிடம் அனுமதி பெற்ற பின்பே பெருமாளை தரிசிக்க வேண்டும்.

92. கருடன் பெரிய திருவடி என்று அழைக்கப்படுகிறார்

93. கருடனுக்கு வைனதேயன் என்று ஒரு பெயரும் உள்ளது.

94. திருவரங்கத்தில் கருடனுக்கு பெரிய சன்னிதி உள்ளது.

95. கருடனை பக்ஷிகளுக்கு ஒரு ராஜா என்று வேதம் கூறுகிறது.-குங்குமோங்கித வர்ணாய குந்தேந்து தவளாய ச விஷ்ணுவாஹன நமஸ்துப்யம் பக்ஷி ராஜாயதே நமஹ)

96. பெருமாள் திருக்கோவில் சுவாமி தரிசனம் செய்த பின்பு நமது தலையில் சுவாமியின் திருவடி பதித்த சடாரி வைப்பார்கள். சடாரி வைத்த பின்பு, கருடனுக்கு பின்பு உள்ள கொடிமரத்தின் கீழே விழுந்து சுவாமிக்கு நமஸ்காரம் செய்யக்கூடாது.

97. கிருஷ்ணாவதாரத்தில் காளிங்கன் என்னும் பாம்பின் மீது கிருஷ்ணன் ஆடிய நர்த்தனம்,-காளிங்க நர்த்தனம் எனப்படும் கிருஷ்ணர் காளிங்க நர்த்தனம் ஆடிய போது அவரது பாதங்கள் காளிங்கனின் தலையில் பதிந்திருந்ததால் கருடனால் எந்த ஒரு தீங்கும் ஏற்படவில்லை.

98. கும்பகோணம் அருகில் நாச்சியார் கோவிலில் உள்ள கல் கருடன் என்னும் விக்ரஹம் சிறப்பு வாய்ந்தது.

99. கருட புராணம் என்னும் புஸ்தகத்தில் மனிதர்கள் செய்யும் பாவத்திற்கு அவர்கள் இறந்த பின் அனுபவிக்கும் கஷ்டங்களை பற்றி விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

100-பறவைகளில் நான் கருடன் என்று கருடனைப்பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது பகவத் கீதையில் கூறியுள்ளார்.

பக்ஷி ராஜாயதே நமஹ-

————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செயல்களை ஒற்றியே ஸ்ரீ நாச்சியார் அருளிச் செயல்கள்–

May 1, 2026

1-ஸ்ரீ புத்தூர்‌ – திவ்ய தேசமாகுகை
ஸ்ரீ கோதை நாச்சியாரும்‌, அவரது தகப்பனாரும்‌, பிறந்து வளர்ந்த பெருமையினாலேயே திருவில்லிபுத்தூர்‌ தெய்விகத் தன்மை பெற்று விளங்குகின்றது எனலாம்‌.
மென்னடை யன்னம்‌ பரந்து விளையாடும்‌ வில்லிபுத்தூர் உறைவான் தன் -நாச்சியார்‌ திரு-5-5-என்றும்‌
மின்னனைய நுண்ணிடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு இன்னிசைக்கும் வில்லிபுத்தூர் இனிதமர்ந்தாய் —பெரியாழ்வார்‌ திருமொழி-2-2-6–என்றும்‌ அருளிச் செய்து திவ்யதேசமாக ஆக்கி அருளினார்கள் –

மின்னனைய நுண் இடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு
இன்னிசைக்கும் வில்லி புத்தூர் இனிது அமர்ந்தாய் உன்னைக் கண்டார்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு உடையாள்
என்னும் வார்த்தை எய்து வித்த இருடீகேச முலை உணாயே
-2 2-6 –மின்னோடு  ஒத்த நுண்ணிய இடையை உடையவர்கள் என்னுதல்- மின்னை ஒரு வகைக்கு ஒப்பாக உடைத்தாய் -அவ்வளவு இன்றிக்கே ஸூஷ்மமான இடையை உடையவர்கள் என்னுதல் –விச்தர்தமான குழல் மேலே மது பான அர்த்தமாக அவஹாகித்த வண்டுகள் ஆனவை –மது பானத்தாலே செருக்கி இனிய இசைகளை பாடா நிற்கும் -ஸ்ரீ வில்லி புத்தூரிலே – ஸ்ரீ பரம பதத்திலும் காட்டில் இனிதாக பொருந்தி வர்த்திகிறவனே-
தாழ்ந்தார்க்கு  முகம் கொடுக்கும் தேசம் ஆகையாலே -திரு உள்ளம் பொருந்தி வர்த்திப்பது இங்கே இறே- பரம சாம்யாபந்நருக்கு முகம் கொடுத்து கொண்டு இருக்கும் இத்தனை இறே ஸ்ரீ பரம பதத்தில் –
இங்கு இரண்டுமே சித்திக்குமே – (ரெங்க ராஜ ஸ்தவம் அஹ்ருத ஸஹஜ தாஸ்யம் பரிகொடாதவர்கள் -அஹங்காரம் இல்லாதவர் )நாட்டில் பிள்ளைகள் போல் அன்றிக்கே -ரூப குண சேஷ்டிதங்களால்
வ்யாவர்தனாய் இருக்கிற உன்னைக் கண்டவர்கள் – நாட்டிலே பாக்யாதிகைகளாய் விலஷணமான பிள்ளைகளை பெறுவாரும்  உண்டு இறே –அவ்வளவு அன்றிக்கே – லோகத்தில் கண்டு அறியாத வைலஷண்யத்தை உடைய இவனைப் பெற்ற வயிறு உடையவள் – இதுக்கு உடலாக என்ன தபஸை பண்ணினாளோ என்று ஸ்லாகித்து சொல்லும் வார்த்தையை – எனக்கு உண்டாக்கித் தந்த–கண்டவர்களுடைய சர்வேந்த்ரியங்களையும் வ்யக்த்யந்தரத்தில் போகாத படி உன் வசம்
ஆக்கிக் கொள்ளும் வைலஷண்யத்தை உடையவனே –-யாத்ர நாந் யத்ர பஸ்யதி பூமா )-முலை உணாயே-

மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் உறைவான் தன்
பொன்னடி காண்பதோர் ஆசையினால் என் பொரு கயல் கண் இணை துஞ்சா
இன்னடிசிலொடு பாலமுதூட்டி எடுத்த வென் கோலக் கிளியை
உன்னோடு தோழமைக் கொள்ளுவன் குயிலே உலகளந்தான் வரக் கூவாய்–5-5-ஊராக தன் இனமே பெருத்து இருக்குமாய்த்து – பரம பதத்திலே நித்ய ஸூரிகள் ஓலக்கம் கொடுக்க இருக்கிறவன் அத்தை விட்டு என்னோடு சஜாதீய பதார்த்தங்கள் கண்டு போது போக்கைக்காக வன்றோ இங்கே வந்து நிற்கிறது – இப்போது காணப் பெறாத வருத்தம் வெறுப்பு தோன்ற வந்து நிற்கிறது –என்கிறாள் –வைகுந்தம் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன் -என்கை பிராப்தம்-அது தூரஸ்தம் ஆகையாலே – தனக்காக வந்து நிற்கிற இடத்திலே காணப் பெறாதே நோவு பட்டு கண் உறங்காதே இருந்தாள் என்றால் இது சேரும்படி எங்கனே என்று -நான்-நம்பிள்ளை – ஜீயரைக் கேட்டேன் –உள்ளுக்குப் புக்கால் குறி யாழியாமே நம்மைப் போலே போர வல்லவல்லள் இவள் ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே மோஹிப்பாள் ஒருத்தி யாய்த்து – உள்ளே கொடு புகில் அந்த சீல குணத்தைக் கண்டவாறே இவள் மோஹித்துக் கிடக்கும் –பின்னை இவளை இழக்க ஒண்ணாது என்று கொண்டு –
புக்கார்கள் இல்லை போலே காணும் என்று அருளிச் செய்தார் -என்று அருளிச் செய்வர் –குழையும் வானமுகத்து ஏழையை தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு இழை கொள் சோதி செந்தாமரைக் கட்பிரான் இருந்தமை காட்டினீர் –திருவாய் மொழி -6-5-5-என்று பரிஹாரம் சொல்லுகிறவர்கள் தாங்களே படுகுலை யடுத்தி கோள் -என்னும் படி இறே இருப்பது-பொன் -அழகு – பிறருக்கு காட்டுகைக்காக வந்து நிற்கிறவன் திருவடிகள் காண வேணும் என்னும் ஆசையினாலே-என் பொரு கயல் கண் இணை துஞ்சா –இக் கண்ணுக்கு   இலக்கானவன் படுமத்தை தான் படா நின்றாள் யாய்த்து – பொரா நின்றுள்ள கயல் போலேயே ஒன்றுக்கு ஓன்று ஒப்பான கண்களானவை உறங்கா –இன்னடிசிலொடு பாலமுதூட்டி எடுத்த வென் கோலக் கிளியை-உன்னோடு தோழமைக் கொள்ளுவன் குயிலே – பிறரோடு தோழமை கொள்ளுகைக்கு அவகாசம் இல்லாதபடி ஸ்லாகித்து கொண்டு போருகிற என் கிளியை– இங்கே ஒரு குறை உண்டாகில் அன்றோ பிறர் தோழைமை நாடுவது
இப்படி நான் உபாலாளநம் பண்ணிக் கொண்டு போருகிற கிளையை -உன்னோடு தோழமை கொள்ளுவிப்பன் –-அதுக்கு கடவள் தானே -நியமிப்பேன் -என்றவாறு-குயில் -ஆசார்யன் –-தானே ஆசார்யனுக்கு அடிமை யாகி என் உடைமைகளையும் அவனுக்கு அடிமை ஆக்குவேன் -அரும் பொருள் த்வனிக்கும் –-கொள்ளுவன்-என்னாதே கொள்விப்பன் -என்றது – அந்த கிளியைப் போலே உன்னையும் உபலா ளிப்பன்-என்றபடி -சாதனத்வ சங்கா நிவ்ர்த்யர்த்தம்-கார்யம் -கூவுகை -அல்பம் -பேறு அதிகம் -சம்ஸ்லேஷம் நித்யமாய் நிரதிவகமாய் இருக்குமே –உலகளந்தான் வரக் கூவாய்-இத்தோடு தோழமை கொள்ளுகையாகிற ஏற்றம் உனக்கு – பேறு எனக்குக் கைப்படும் – எல்லாரோடும் வரையாதே பொருந்துமவன் வரக் கூவுகை -உனக்குக் கார்யம் — குணாகுணம் நிரூபணம் பண்ணாதே – வசிஷ்ட சண்டாள விபாகம் அற எல்லாரோடும் பொருந்துமவன் வரும்படி கூவப் பாராய் –

2-பகவதநுபவம்‌ உண்டபோது ஒரு வார்த்தையும்‌, . உண்ணாத போது ஒரு வார்த்தையும்‌ பேசுபவர்கள்‌,
காற்றினைப்‌ புனலைச்‌ சென்று நாடிக்‌ கண்ணமங்கையுள்‌ கண்டு கொண்டேனே” -7-10-5- என்று பகவதநுபவம்‌ உண்டபோது ஒரு வார்த்தையும்‌,
‘ கடியன்‌ கொடியன்‌ நெடியமால்‌ உலகம்‌ கொண்ட அடியன்‌” -5-3-5-என்றும்‌,
ஆசை வழுவாதேத்தும்‌ எமக்கிங்கிழுக்காய்த்து * அடியோர்க்குத்‌ தேசமறிய உமக்கே யாளாய்த்‌ திரிகின்றோமுக்கு *. காசினொளியில்‌ திகழும்‌ வண்ணம்‌, காட்டீர்‌ எம்பெருமான்‌ ! * வாசிவல்லீர்‌! இந்தளூரீர்‌! வாழ்ந்தே போம்‌ நீரே! -4-9-4-என்று உண்ணாத போது ஒருவார்த்தையும்‌ பேசுவதைக்‌ காணலாம்

பகவதநுபவத்தை ஆசைப்பட்ட ஆழ்வார்களுக்கும்‌, பகவத்‌ ஸம்ருத்தியை (நிறைவில்‌ ஆசைப்பட்ட பெரியாழ்வாருக்கும்‌ நெடுவாசியுண்டு. பகவத்‌ ஸம்ருத்தியை ஆசைப்பட்ட பெரியாழ்வாருக்கும்‌ பாகவத ஸம்ருத்தியை ஆசைப்பட்ட ஆண்டாளுக்கும்‌ அம்மாதிரியே நெடுவாசி யுண்டு. ஆழ்வார்கள்‌ இளைய பெருமாளைப்‌ போன்றவர்கள்‌. “ பெரியாழ்வார்‌ பரதாழ்வானுக்கு ஒப்பானவர்‌. ஆண்டாளும்‌ மதுரகவிகளும்‌ ஸ்ரீசத்ருக்கனாழ்வானைப் போன்றவர்கள்

கலியுகம் -97-நள வருஷம் திருவாடிப்பூரம் சுக்ல பக்ஷம் -செவ்வாய் கிளம்பி -சதுர்த்தி -அயோநிஜையாய் திருவவதரித்தார்
மிக்க இறைநிலை விளக்கம் -திருப்பாவையில் முதல் ஐந்து பாசுரங்கள்
மெய்யாம் உயிர் நிலை -6-15 பாசுரங்கள்
தக்க நெறி -16-22-
வாழ்வினை பகவத் கைங்கர்யம் -23-27
ஊழ்வினை-ப்ரக்ருதி சம்பந்தம் -28-30-
பகவத் ஸம்ஸ்லேஷமே நீராட்டம்
பகவத் கைங்கர்யமே பறை

இதம் விஷ்ணுர் விசக்ரமே த்ரேதா நிததே பதம் |
ஸமூடமஸ்ய பாகும்ஸுரே |
த்ரீணி பதா விசக்ரமே விஷ்ணுர் கோபா அதா” ப்ய: |
தததோ தர்மாணி தாரயந் |-விஷ்ணு ஸூக்தம்

இதம் விஷ்ணுர் வி சக்ரமே த்ரேதா நிததே பதம் -ருக்வேதம் -ஸ்ரீ விஷ்ணு உலகங்களை எல்லாமே மூன்றடியால் அளந்தான்
த்ரீணீ பதா வி சக்ரமே விஷ்ணுர் கோபா அதாப்ய -ருக்வேதம் -யாராலும் வெல்ல முடியாத ஸர்வ ரக்ஷகனான ஸ்ரீ விஷ்ணு உலகங்களை எல்லாமே மூன்றடியால் அளந்தான்
ஓங்கி உலகளந்த உத்தமன்
அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமான்
அன்றிவ்வுலகம் அளந்தான் அடி போற்றி

ஸ காரணம் கரணாதிபாதிப ந சாஸ்ய கச்சித் ஜநிதா ந சாதிப -ஸ்வேதா -இவ்வாத்மாவுக்கு அதிபதியான ஈஸ்வரனே எல்லாவற்றுக்கும் காரணமாய் நின்று படைக்கும் முதல்வன் -அவனை உண்டாக்கியவனும் அவனுக்கு அதிபதியாகவும் யாரும் இல்லை
ஊழி முதல்வன் –பாழி யம் தோளுடை பற்ம நாபன்

அஸ்மாத் மாயீ ஸ்ருஜதே விஸ்வ மேதத் -ஸ்வேதா -மாயனான பரமபுருஷன் பிரபஞ்சம் அனைத்தையுமே படைத்தருளுகிறான்
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை -5-
மா மாயன் மாதவன் வைகுந்தன் -9-
மாயன் மணிவண்ணன் -16-

ஸமுத்ரே அந்தம் விஸ்வ சம்பவம் அந்த ஸமுத்ரே கவயோ வயந்தி -தைத்ரியம் -பாற் கடலின் நடுவே பள்ளி கொண்டவன் அகிலப் பிரபஞ்சத்துக்கும் மங்கள கரன் -அவன் திருப்பாற் கடலுள் இடமுடையான் என்றும் கவிகள் அறிகிறார்கள்
பாற்கடலுள் பையத்துயின்ற பரமன் -2-
வெள்ளத்தரவில் துயில் அமர்ந்த வித்து–6-

தத்யதா இஷீ காதூலம் அஃனவ் ப்ரோதம் ப்ரதூ யேத ஏவம் ஹாஸ்ய ஸர்வே பாப்மான ப்ரதூயந்தே -சாந்தோக்யம் -நெருப்பிலிட்டு பஞ்ச போலே ஸஞ்சித பாபங்கள் அடியோடு அற்றுப் போகின்றன –
தத்யதா புஷ்கர பலாஸ ஆபோந ஸ்லிஷ்யந்தே ஏவமேவம்விதி பாபம் கர்ம ந ஸ்லிஷ்யதே —சாந்தோக்யம் -ஸ்வரூப ஞானம் பிறந்த பிறகு தாமரை இலையில் நீர் ஒட்டாதது போல் பாப கர்மங்கள் இவன் கண் ஒட்டுவதில்லை
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் -5-

அத யததஸ் பரோ திவோ ஜ்யோதிர் தீப்யதே -சாந்தோக்யம் -பரதத்வத்தின் தோற்றமாய் நின்ற ஒண் சுடர்
தோற்றமாய் நின்ற சுடரே –21-

ஞானம் ஆத்மனி மஹதி நியச்சேத் தத் யச்சேத் சாந்தா ஆத்மனி-கட உபநிஷத் –சேஷமான இவ்வாத்மாவை சேஷியான பரமாத்மாவுக்கே தக்கவனாய் சேர்க்க வேண்டியது –
பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டில் கீலே சங்கமிருப்பார் போல் வந்து தலைப்பெய்த்தோம் –22-

அந்தப்பிரதிஷ்ட ஸாஸ்தா ஜனனாம் ஸர்வாத்மா -ஸ்வேதாஸ் –எல்லாப் பொருள்களிலும் உள் நிறைந்து உயிர் அனைத்தையுமே நியமிப்பவன்-குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி -24- இந்திரனுக்கு ஸர்வாத்ம பாவமும் நியமிப்பவனாயும் இருப்பதைக் உணர்த்தி அருளினவன்

ஸனோ புத்யா சுபயா ஸம்யுநக்து -ஸ்வேதா அவ்வெம்பெருமான் நன்மை நல்லறிவுடன் கூட்டுக -கைங்கர்யம் யவாதாத்மபாவி அருள வேண்டும் –
உனக்கே நாம் ஆட் செய்வோம் –எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உற்றோமே ஆவோம்-29-

தேவஸ்யைஷ ஸ்வ பாவோயம் ஆத்ம காமஸ்ய காஸ் ப்ரூ –மாண்டூக்யம் -அவாப்த சமஸ்த காமனான சர்வேஸ்வரனுக்கு அடையப்படாததாயும் அடையப்பட வேண்டியது ஒன்றுமே இல்லை
குறை ஒன்றுமே இல்லாத கோவிந்தா -29-

அறம் செய்ய விரும்பு -ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
ஆறுவது சினம் -சில்லென்று அழையேன்மின்
ஓதுவது ஒழியேல் -முப்பதும் தப்பாமே இங்கு இப்பரிசுரைப்பார்
ஓங்கி உலகளந்த –நீங்காத செல்வம் –
தானம் தவம் இரண்டும் தங்கா வியனுலகம்
வசனம் வழங்காது எனின் –
அம்பரமே தண்ணீரே
அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது

30-3+0=3-ஆச்சார்ய பரம் -மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ ஆச்சார்ய தேவோ பவ –
ஐ ஐந்தும் ஐ ஐந்தும் –பஞ்சபூதங்கள் சம்பந்தமுள்ள இந்த உடம்பில் ஐம் புலன்களையும் ஐம் பொருள்களையும் அடக்கி யாண்டால் அர்த்த பஞ்சகம் ஞானம் ஸித்தித்து ஆழ் பொருளை உணரலாம்
நாச்சியார் திருமொழி –143-1+4+3=8-–பிரணவத்தின்-1- விவாரமான – நான்கு வேத சாரத்தை -3 ஆச்சார்யர் அனுக்ரஹத்தின் மூலமும் அறிந்தால் ப்ரணவாகார விமானத்தின் கீழ் எழுந்தருளி இருக்கும் திரு அஷ்டாக்ஷர பொருளாக நாராயணனை அடையலாம்
எல்லே இளங்கிளியே -15-பாகவத நிஷ்டை சொல்லும் இது திருப்பாவை யாகிறது -1+5=6-உய்யும் ஆறு படி நடந்தால் அறிந்து அடையலாம்

பதின்மருடைய ஞானமும் ஸ்திரீ தனமாக இவள்‌ பக்கலிறே குடி கொண்டது. பத்துப்‌ பேர்க்கு ஒரு பெண்‌ பிள்ளை இறே – பெண்‌ ஆணைக்‌ கண்டு காதல் கொள்வது பள்ளமடை ஆகும்‌. எனவே ஆழ்வார்‌ களுடைய பக்தியைக்‌ காட்டிலும்‌ பதின் மடங்கு அதிகமான அன்பை யுடையவர்‌ கோதை நாச்சியார்‌-உபயவிபூதிக்கும்‌ நாயகன்‌ இடைக் குலத்தில்‌. பிறந்து எளிமைக்‌ குணமே நிரம்பப்‌ பெற்று இச்சை யுடையோர்க்கு வீட்டின்பத்தை அளித்தான்‌. அதே போன்று கோதை நாச்சியாரும்‌, . தாம்‌ அந்தண குலத்தில்‌ வளர்ந்தாலும்‌, இறைவனை அடைவதற்கு உபாயமாக, துவாபர யுகத்தில்‌ கோபியர்கள்‌ மேற் கொண்ட நோன்பினை வழியாகப்‌ பின் பற்றுகிறார்

இடை நடையும்‌ இடை முடியும்‌, இடையர் பேச்சும்‌ கொண்ட ‘இடைப் பெண்ணாக பாவநா ப்ரகர்ஷத்தாலே (நினைவின்‌ முதிர்ச்சியாலே) வடிவெடுத்து இடைக்குலச்‌ சிறுமியரோடு இணைந்து, ஸ்ரீவில்லி புத்தூரே . திருவாய்ப்பாடியாகவும்‌, வடபெருங்கோயிலுடையான்‌ திருக்கோயிலே நந்தகோபர்‌ திருமாளிகையாகவும்‌, வடபெருங்கோயிலுடையானையே கண்ணனாகவும்‌ பாவித்து, நோன்பினைக்‌ கைக்கொள்கிறார் –
கண்ணனும்‌, கோதை, நாச்சியாரும்‌, இழிந்த குலமென்ற தாழ்ச்சி எதுவும்‌ இன்றி இச்சை யொன்றே தாம்‌ உகந்தருளும்‌ இடம்‌ என்று காட்டியதை அடி யொற்றி இராமாநுசர்‌ பிட்டிதேவன்‌ என்ற அரசனை விஷ்ணு வர்த்தனன்‌ என்ற பெயரில்‌ திருத்திப்‌ பணி கொண்டார்‌. வில்லி என்ற: வேட்டுவனை அரங்கனின்‌ கண்ணழகைக் காட்டி, உய்வித்தார்‌, ஊனமுற்ற ஊமைக்கும்‌ உய்யும்‌ வழி அருளிச்‌ செய்தார் –-முத்தியோ சிலரது சொத்தென் றிருக்கையில்‌ தமிழ்நாடு தம்‌ இருந் தவப்‌ பயனாய்‌ நம்‌ இராமாநுசனைத்‌ தந்தது அன்றோ-

3-இளமைப்‌ பருவத்தில்‌ கோதையார்‌ ஆடிய விளையாடல்‌களிலும்‌ எம்பெருமானும்‌ எம்பெருமான்‌ தொடர்பு பெற்ற பொருட்‌ களுமே இடம்‌ பெருகின்றன.
பொங்கு வெண்‌ மணல் கொண்டு சிற்றிலும்‌ முற்றத்‌ திழைக்கலுறில்‌ சங்கு சக்கம்‌ தண்டு வாள்‌ வில்லுமல்லது இழைக்கலுறாள்‌”-பெரியாழ்வார் -3-7-3-என்பதனால்‌ இதனை அறியலாம்

பொங்கு -இத்யாதி-புறம்பே போய் -தீ இணக்கி  இணங்கி ஆடாதே முற்றத்திலே இருந்து விளையாடு -என்று நான் நியமித்து வைத்தால் வண்டலிட்டதாகையலே நுண்ணியதாய் -வெளுத்து இருக்கிற மணலைக் கொண்டு முற்றத்திலே கொட்டகமிட ஒருப் பட்டாளாகில்–உறில்-என்கையாலே-இவளுக்கு மனசு இல்லாமையும் – தன்னுடைய நிர்பந்தத்துக்காக செய்கிற இத்தனை என்னுமதும் தோற்ற சொல்லுகிறாள்-சங்கு -இத்யாதி-அவனுக்கு அசாதாராண சிஹ்னமாய் – அழகுக்கும் விரோதி நிரசனத்துக்கும் உடலாய் இருக்கும் ஸ்ரீ பாஞ்ச சன்ய ஆயுதம் ஒழிய   வேறு ஒன்றும் இட நினையாள்

4-அண்ணலார்‌ தாளிணை மேல்‌ அணி தண்ணந்துழாயென்றே மாலுமால்‌ வல்வினையேன்‌ மடவல்லியே -திருவாய் -4-2-1-என்கிறார்‌. பெரியாழ்‌வார் தன் பெண்‌ கொடியாகிய கோதை நாச்சியாருக்கு ஏற்ற கொழு கொம்பு எம்பெருமானே என்பதை அறிகிறார் -கோதை கோதை நாச்சியாரும் எந்நேரமும்‌ எம்பெருமானின்‌ வரவை எதிர் நோக்கிக்‌ காத்திருப்பவர்‌. அதனால்‌ எப்போதும்‌ அணி கலன்‌ பூண்டு ஆடைகளைச்‌ செவ்வனே உடுத்தி அழகு பார்த்திருப்‌பவர்‌. இதனை-காறை பூணும்‌ கண்ணாடி காணும்‌ தன்‌ கையில்‌ வளை குலுக்கும்‌ கூறை யுடுக்கும்‌ அயர்க்கும்‌ தன்‌ கொவ்வைச்‌ செவ்வாய்‌ திருத்தும்‌”பெரியாழ்வார் -3-7-8-என்பதால்‌ உணர இயலும்‌.
பரபக்தி நிலையில்‌ அருளிச் செய்தது திருப்பாவை. பரபக்தி, பரஜ்ஞானமாக வளர்ந்த நிலையில்‌ உருவானதே நாச்சியார்‌ திருமொழி. பரம பக்தி பிறந்த நிலையில்‌ சீவான்மாவின்‌ துடிப்பை உணர்ந்த எம்பெருமான்‌ தான்‌ தன்‌ உருக் காட்டலானான் –சேதன அசேதனம்‌ இரண்டையும்‌ எம்பெருமான்‌ உடலாகக்‌ கொண்டிருக்கிறான்‌. இவற்றுள்‌ உயிராக நின்று இயக்குபவன்‌ எம்பெருமான்‌.-இதையே திருவில்லிபுத்தூர்‌ கோயிலிலே ஆண்டாள் நாச்சியாரும்‌, ரங்கமன்னாரும்‌, பெரிய திருவடியும் ஏக ஆசனத்தில்‌ அமைந்திருப்பதைக்‌ காணும் போது எளிதில் உணர முடிகின்றது –

காறை பூணும் –தன் ஆற்றாமையாலே – ஏதேனும் ஒன்றைச் செய்து நாம் அவனை பெற வேணும் -என்று நினைத்து – அவனுக்கு ஆகர்ஷமாம் படி நம்மை அலங்கரிக்கவே அவன் தானே வந்து மேலே விழும் -என்று தன்னை அலங்கரிக்கையிலே -ப்ரவர்த்தையாய் –ப்ரதமம் –அவனைக் கண்டு பிரியப்பட்டு கட்டிக் கொள்ளும் கழுத்துக்கு அலங்காரமாக காறையைப் பூணும்-இது தான் உத்தம  அங்கத்துக்கும் உடம்புக்கும் நடுவாய் நின்று – ஒளி விடுவதோர் ஆபரணம் இறேகண்ணாடி காணும்-காறை பூண்ட திருத்தம் தன் கண்ணுக்கு விஷயம் அல்லாமையாலே அவனுக்கு உகக்கும்படி வாய்த்ததோ இல்லையோ என்னும் இடம் அறிகைக்காக-காறையும் கழுத்துமான சேர்த்தி அழகை கண்ணாடி புறத்திலே பாரா நிற்கும்–இது தான் அவயாந்தரங்களில் ஆபரணங்களும் இவள் பூணும் அதுக்கு உப லஷணம்–தன் கையில் வளை குலுக்கும்-இம் மநோ ரதம் அடியாக உடம்பிலே ஒரு பூரிப்பு தோற்றுகையாலே அது அறிகைக்காக கையிலே வளையை அசைத்து பாரா நிற்கும் –விரஹ கார்ச்யத்தாலே (பிரிவால் இளைப்பாலே )கையிலே வளைகள் கழன்றாலும் பின்னையும் எடுப்பது இடுவதாய் இறே இவள் தான் இருப்பது-இவள் எடுத்து இட்டாலும் அவை கையில் தொங்காதே
இப்போது உடம்பில் தோன்றுகிற பூரிப்பாலே -அவை கையிலே தொங்கினமை அறிகைக்காக
அசைத்து பாரா நிற்கும் -என்கை–கூறை உடுக்கும் – பரியட்டமும் அறையில் தொங்கும்படி ஆய்த்து -இம் மநோரத நிபந்தனமான தேக பௌஷ்கல்யத்தாலே இறே – அல்லாத போது – கையிலே ஒரு தலைப்பும் —காலிலும் தரையிலும் ஒரு தலைப்பு மாம் இறே–வளையும் கலையும் க்ரத சந்கேதரைப் போலே  –
கழலும் போது ஒக்க கழன்று தொங்கும் போதும் ஒக்க தொங்கா நிற்கும் ஆய்த்து —காறை பூண்டதுக்கு  மேலே ஓர் அதிசயம் தேடுகைக்காக இறே கூறை உடுக்கப் புகுந்தது–அதாவது அவனுக்கு ஆகர்ஷமாம்படி பரியட்டத்தை நன்றாக உடா நிற்கும் -என்கை-இவளுடைய அழகிலே ஆய்த்து அவன் ஈடுபடுவது-ஆதலால் அவன் உகக்க தக்க உடை வாய்ப்பு வரும் அளவும் குலைப்பது உடுப்பதுமாய் செல்லா நிற்கும் ஆய்த்து-அயர்க்கும்-இப்படி அவன் வரவுக்கு உடலாக -தன்னை அலங்கரித்த அளவிலும் வரக் காணாமையாலே அறிவு அழியா நிற்கும்–தன் கோவைச் செவ்வாய் திருத்தும் –
மீளவும் அறிவு குடி புகுந்து – இன்னமும் அவனுக்கு ஆகர்ஷமாம் படி இருப்பதோர் அதிசயம் நம் பக்கல் உண்டாக்க கடவோம் என்று – ஸ்வபாவமே கோவைப் பழம் போலே சிவந்து இருக்கிற தன்னுடைய அதரத்தை ராக ஜனகமான பதார்த்த சேவைகளாலும் மிகவும் சிவக்கும் படி பண்ணா நிற்கும்
அல்லாதவை போலே அன்றிக்கே –இது அவனுக்கு வாய் புகு சோறாய் இருப்பது ஓன்று இறே
தொண்டை அம் செங்கனி வாய் நுகர்ந்தான் -என்கிறபடியே–தேறித் தேறி நின்று – தன்னுடைய அவயவ அலங்காரத்தின் வாய்ப்பாலும் – தச்மிம்ச் ச பகவோ குண-(ஸூந்தர )-என்கிறபடியே இத் தசையில் வந்து உதவுகைக்கு ஈடான அவன் குணங்களிலே விச்வாசத்தாலும்-அயர்க்கை தவிர்ந்து
மென் மேலும் தெளிவை உடையவளாய் -அத் தெளிவு கை கொடுக்க தரித்து நின்று –ஆயிரம் பேர் தேவன் திறம் பிதற்றும் –தேவோ நாம சஹஸ்ரவான் -என்கிறபடியே (தேவ -திவி கிரீடா கிரீஷா ஸ்தோத்ரம் பண்ணத்தக்கவர் ஆனந்தம் கொண்டவர் -பல அர்த்தங்கள் உண்டே )-தன் குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான ஆயிரம் திரு நாமங்களை உடையவனாய் – அவை எல்லா வற்றிலும் மநோஹரமான வடிவு அழகை உடையனாய் – அவனுடைய பிரகாரங்களை -அவற்றினுடைய ரஸ்யதையாலே கலங்கி அடைவு கெட பேசா நிற்கும்–மாறில் -இத்யாதி-ஆகையால் ஒப்பு இல்லாத நீல ரத்னம் போன்ற வடிவு அழகை உடையவன் விஷயமாக இவள் இப்படி பிச்சேறா நின்றாள்-

5-மாணிக்கக்‌ கிண்கிணி யாரவாரிப்ப மருங்கின்‌. மேல்‌” பெரியாழ்வார்‌-1-6-1- கிங்கிணி வாய்ச்‌ செய்த தாமரைப்‌ பூப்போலே-25-

மாணிக்க கிண் கிணி யார்ப்ப மருங்கின் மேல்
ஆணிப் பொன்னால் செய்த ஆய்ப் பொன்னுடை மணி
பேணிப் பவள வாய் முத்து இலங்கப் பண்டு
காணி கொண்ட கைகளால் சப்பாணி கரும் குழல் குட்டனே சப்பாணி
–1 6-1 –பழிப்பு அற்று –
அழகியதாய் இருந்துள்ள – அரை வடத்தை உடைத்தான மருங்கின் மேல் – மாணிக்க கிண் கிணியானது த்வனிக்க –ஆய் பொன்னுடை மணி -என்கிற இடத்தில் – ஆய்தல் தெரிதலாய் பழிப்பு அறுதலை சொல் நாக மாணிக்கம் ஆகையாலே என்னவுமாம் – கிண் கிணிக்கு புறம்பே மாணிக்கம் பதித்தாலும் சப்தியாது –(ஆணிப்பொன் என்பதால் -அழகு -மேல் பகுதி-மணியின் நாக்கு மட்டும் மாணிக்கம் -சப்திக்குமேநாக மாணிக்கம் என்று இத்தையே சொல்லுவார் )

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே – ஆதித்யனைக் கண்டால் அலரக் கடவ தாமரைப் பூ போலே எங்கள் ஆற்றாமைக்கு அலருமவை இறே இவை –அர்த்திகளைக் கண்டால் அலருமவை இறே
இந்தத் தாமரைப் பூ –அலரவும் மாட்டாதே மொட்டிக்கவும் மாட்டாதே திருக் கண்கள் இருந்த படிக்கு
த்ருஷ்டாந்தம் சொல்லுகிறார்கள் –ஸ்வாதந்தர்யம் செம்பிளிப்பியா நின்றது – நப்பின்னை பிராட்டையோட்டை ஸ்பர்சம் அலரப் பண்ணா நின்றது –இத் தலையில் அபராதம் மொட்டிக்கப் பண்ணும்
அவனுடைய அபராத சஹத்வம் அலரப் பண்ணும் –கர்ம பாரதந்தர்யம் மொட்டிக்க பண்ணும்
ஆஸ்ரித பாரதந்தர்யம் அலரப் பண்ணும்-காலத்தின் இளமை மொட்டிக்கப் பண்ணா நின்றது
ஆர்த்த த்வனி விகசிக்கப் பண்ணா நின்றது –ஆதித்யனைக் கண்டால் அலரக் கடவ தாமரைப் பூ போலே இவர்கள் ஆற்றாமை கண்டால் அலருமவை யாயிற்றுஇழவு பேறுகள்-அத்தலையிலேயாய் இருக்கிற படிகாலத்தின் இளமை மொட்டிக்கப் பண்ணி பெண்கள் ஆற்றாமை அலரப் பண்ணுகிற படி
பெண்காள் நம்மைக் கிட்டுகையாலே எல்லாம் சபலமாயிற்றோ என்ன – விசேஷ கடாக்ஷம் பண்ணி அருளீர்தத்ர கோவிந்த ஆஸீனம் பிரசன்ன ஆதித்ய வர்ச்சசம் -உத்யோக பர்வதம் –90(ஆற்றாமை வெப்பம் போக்க ஆஹ்லாத கரம் -சந்திரன் – சேஷத்வம் அறிந்து முமுஷுவான பின்பும் அந்தகாரம் போக்க ஆதித்யன் குளிர்ந்த வெப்பம் உடைய கிருஷ்ணனை குரு வம்சம் -அனுகூலர்களுக்கு பிரசன்னம் -பிரதிகூலர்களுக்கு வெப்பம் )


6-வித்தகன்‌ வேங்கடவாணன்‌ உன்னை விளிக்கின்ற” _-1-4-3-
வித்தகன்‌ வேங்கடவாணன்‌ என்னும்‌*-விளக்கினில்‌ புக என்னை விதிக்கிற்றியே-1-3-

சுற்றும் ஒளி வட்டம் சூழ்ந்து சோதி  பரந்து எங்கும்-
எத்தனை செய்யிலும் என் மகன் முகம் நேர் ஒவ்வாய்
வித்தகன் வேம்கடம் வாணன் உன்னை விளிக்கின்ற
கைத் தலம் நோவாமே அம்புலீ கடிது ஓடி வா -1 4-3 –அழகாலும் குண சேஷ்டிதங்களாலும் -விஸ்மயநீயனாய் – துர்மாநிகளான- உன் போல்வாரை அநாதரித்து- கானமும் வானரமும் ஆனவற்றை ஆதரித்து கொண்டு திருமலையில் வர்த்திக்கிறவன்-(ஸ்ரீ வைகுண்ட விரக்தாய ) உன்னை ஆதரித்து அழைக்கிற திருக் கைத் தலம் நோவாதபடியாக அம்புலீ -விரைந்து ஓடி வா –வாணன்– வாழ் நன்

மத்த நன்னறு மலர் முருக்க மலர் கொண்டு முப்போது முன்னடி வணங்கி
தத்துவமிலி என்று நெஞ்செரிந்து வாசகத்தழித்து உன்னை வைதிடாமே
கொத்தலர் பூங்கணை தொடுத்துக் கொண்டு கோவிந்தன் என்பதோர் பேரெழுதி
வித்தகன் வேங்கட வாணன் என்னும் விளக்கினில் புக வென்னை விதிக்கிற்றியே–1-3-பரம பதத்தில் நித்ய ஸூரிகள் ஓலக்கம் கொடுக்க இருக்க கடவ -அவன் அவ்விருப்பை விட்டு- கானமும் வானரமும் வேடரும் -நான் முகன் -47- ஓலக்கம் கொடுக்கத் திருமலையிலே வந்து நிற்கிற விஸ்மய நீயன் –
மிகு மதத்தேன் விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே கண்டு வணங்கும் களிறு -மூன்றாம் திரு -70-என்றும் –வைப்பன் மணி விளக்கா மா மதியை மாலுக்கு -நான்முகன் -46-என்று எப்பொழுதும் கை நீட்டும் யானையை -என்றும் திரு விளக்கு இடுவதும் -திரு வாராதனம் பண்ணுவனவும் இவை இறே –சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி விண்ணோர்கள் நன்னீராட்டி அந்தூபம் தரா நிற்கவே அங்கு -திருவிருத்தம் -21- அதில் காட்டில் இது போக்யமாய் இறே இங்கு வந்து அவன் நிற்கிறது-வேங்கட வாணன் -என்னும் விளக்கினில் புக வென்னை விதிக்கிற்றியே– பரம பதத்தில் ஸ்வரூபம் மைத்துப் போலே இருப்பது – திருமலையிலே வந்து நின்ற பின்பாய்த்து- ஸ்வரூப குணங்களுக்கு பிரகாசம் உண்டாய்த்து – குன்றத்தில் இட்ட விளக்காய்த்தே –வேடார் திருவேங்கடம் மேய விளக்கு -பெரிய திரு -4-7-5-இறே – திருமலையிலே பொருந்தின பின்பு உஜ்ஜ்வலனாய்த்து
அந்த விளக்கில் புகும்படி என்னை நியமிக்க வேணும் என்கிறாள் –

மைத்தடங்கண்ணி யசோதை தன்‌ மகனுக்கு? மைத்தடங்கண்ணி –1-4-10- யசோதைக்கு அடைமொழி
மைத்தடங்கண்ணினாய்‌ நீ உன்‌ மணாளனை” –19-மைத்தடங்கண்ணி – நப்பின்னைப்‌ பிராட்டிக்கு அடைமொழி-

மைத் தடம் கண்ணி யசோதை தன் மகனுக்கு இவை-
ஒத்தன சொல்லி உரைத்த மாற்றம் ஒளி புத்தூர்
வித்தகன் விட்டு சித்தன் விரித்த தமிழ் இவை
எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு இடரில்லையே -1-4 10-கருத்து பெருத்து இருந்துள்ள கண்ணை உடையளான யசோதை – அஞ்சனத்தாலே அலங்க்ருதமாய் பரந்துள்ள கண்ணை உடையவள் என்னுதல்-அஞ்சன வண்ணனான இவனை அநவரதம் பார்த்து கொண்டு இருக்கையாலே
இவனுடைய திருமேனி நிறம் ஊறி -அத்தாலே மைத்து –இவன் பக்கல் ஸ்நேகத்தாலே விகசிதமான கண்ணை உடையவள்
என்னுதல் –(மையார் கண்ணி -யமுனா நதி கறுமை -கிருஷ்ண துளஸீ கறுமை –
இவற்றுக்கும் அந்யோன்யம் இவனுக்கும் உண்டே )

குத்து விளக்கு எரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத் தடங்கண்ணினாய் நீ யுன் மணாளனை
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனை ஏலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்-19-மைத் தடங்கண்ணினாய் –சுத்த சத்வம் ஆகிற அஞ்சனத்தை உடைத்தாகையாலே-விஸ்ருங்கலமான ஸ்வரூப யாதாம்ய ஜ்ஞானம் உடையவளே –இவன் மறுமாற்றம் சொல்லப் புக –நம்மை ஒழிய தாங்களே எழுப்புவதே என்று கண்ணாலே வாய் வாய் என்று வாயை நெரித்தாள் –இவன் வாய் திறக்கப் போக -இவர்கள் நம்மை ஒழிய இவனை எழுப்புவதே என்று அவனைக் கண்ணாலே வாய் வாய் என்ன பேசாதே கிடந்தான் ஆக் யாதி ஹ்ருதயம் ஹ்ருதா(உள்ளமும் உள்ளமும் பேசிக்கொள்ளுமே )-நாம் ஆரோனையும் இன்னாதாகிறது என் – நம் பரிகரம் நமக்கு உதவுகிறது இல்லை -என்கிறார்கள் – இவள் விலக்க வேணுமோ -இக் கண் உண்டாக அமையாதோ – அழகாலும் பரப்பாலும் கண்ணிலே அகப்பட்டவன் அக்கடலை கரை கண்டால் இறே நம்மைப் பார்ப்பது-மை இட்டு எழுதோம் -என்று இருக்கிற எங்களையும் மை இடப் பண்ணினால் அன்றோ நீ கண்ணுக்கு மை இடுவது – உன்னுடைய கண்ணில் அழகும் பெருமையும் எங்கள் பேற்றுக்கு உடல் என்று இருந்தோம் – அது இழவுக்கு உடலாவதே –நீ யுன் மணாளனை-மைத்தடம் கண்ணினாய்- உன்னுடைய கண்ணில் புகரும் பெருமையும் எங்கள் பேற்றுக்கு உடல் என்று இருந்தோம் –அது இழவுக்கு உடலாவதேஇக் கடலைக் கரை கண்டால் இறே நம் அநீதியை அவன் பார்ப்பதுஅல்லி மலர் மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் -(3-10-8) மண நோக்கம் உண்டான்(பெரிய திருமொழி -8-10) ந ஜீவேயம் க்ஷணம் அபி –என்னப் பண்ணுமவை இறேமையிட்டு எழுதோம் என்றவர்களையும் உன்படி ஆக்க வேண்டாவோ
உன்னாலே அவனைப் பெறுகை தவிர்ந்து இப்போது மற்றப்படி செய்கை யாய்த்தோ

கஞ்சன்‌ புணர்பினில்‌ வந்த கடிய சகடம்‌ உதைத்து -2-4-4-
கள்ளச்‌ சகடம்‌ கலக்கழியக் காலோச்சி”்‌–6-

கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து
வஞ்சகப் பேய் மகள் துஞ்ச வாய் முலை வைத்த பிரானே
மஞ்சளும் செங்கழு நீரின் வாசிகையும் நாறு சாந்தும்
அஞ்சனமும் கொண்டு வைத்தேன் அழகனே நீராட வாராய் -2 4-4 – கம்ச ப்ரேரிதனாய் வந்த அதி க்ரூரரான சகடாசுரனை –முலை வரவு தாழ்த்தி சீறி நிமிர்த்த திருவடிகளாலே கலக்கு அழியும்படியாக உதைத்து–

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்–6-கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி – பேயாகில் ஆராய்ந்து கொள்ளலாம்- தாயே ரஷையாக வைத்த சகடம் – அசூர ஆவேசத்தால் பிறந்த அபாயம் ஆகையாலே -கள்ளச் சகடம் -என்கிறது –சகடமானது கலக்கழியும் படி திருவடிகளை ஓச்சி -முலை வரவு தாழ்ந்தது என்று- மூரி நிமிர்த்த திருவடிகள் பட்டு முறிந்தது –இப்பொழுது இவ்வபதானங்கள் சொல்லுகிறது- பிறந்த அபாயங்கள் கேட்டு துணுக என்று எழுந்து இருக்கைக்காக-கள்ளச் சகடம்
கிருத்ரிம சகடம் ஆனதுகலக்கழிய காலோச்சிகட்டு அழிந்து சிதறும்படியாக திருவடிகளை நிமிர்த்து(இங்கும் கள்ளச் சகடம் வெளியில் உள்ளார் வார்த்தை –கலக்கழிய காலோச்சி உள்ளே இருப்பவள் வார்த்தை )காவலாக வைத்த சகடம் அஸூரா வேசத்தாலே தன் மேலே ஊரப் புக அது கட்டு அழிந்து
சிதறும் படியாக திருவடிகளாலே உதைத்து( திருக் கால் ஆண்ட பெருமான் -ஊர்ந்த சகடத்தை உதைத்த பாதத்தான்-ப்ரேமத்தாலே பயப்படுகைக்கு உடலாய் அச்சம் கெடுகைக்கும் உடலாய் இருக்கும்
பாதத்தன் -இவன் முஃயத்தாலே உறங்கத் திருவடிகளாலே பெற்றோம் -(திண் கழல் இறே )
அவனுடைய ஆபத்துக்கும் சேஷ பூதனுடைய ஆபத்துக்கும் ரக்ஷகமான திருவடிகள் – திருக் காலாண்ட பெருமான் (6-9-) ராமாவதாரத்துக்கு இளைய பெருமாளைப் போலகள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி
காம குரோதங்களையும் நிவர்ப்பித்து

பேயின்‌ முலையுண்ட பிள்ளை இவன்‌ முன்னம்‌?-2-5-2-
பேய்முலை நஞ்சுண்டு -6-

பேயின் முலை உண்ட பிள்ளை இவன் முன்னம்
மாயச் சகடும்  மருதும் இறுத்தவன்
காயா மலர் வண்ணன் கண்ணன் கரும் குழல்
தூயதாக வந்து குழல் வாராய் அக்காக்காய்
தூ மணி வண்ணன் குழல் வாராய் அக்காக்காய் -2 5-2 – முன்னம் தாய் வடிவு கொண்டு வந்த பூதனை உடைய முலையை – தாய் முலை உண்ணுமா போலே இருந்து உண்ட முக்தன் இவன் – இவனுக்கு பிள்ளைத் தனத்தில் புரை( குறை ) இல்லை யாகில் -அவள் முடிந்த படி என் என்னில் – பிரதி கூலித்து கிட்டினார் முடிய கடவ வஸ்து ஸ்வாபத்தாலே முடிந்த இத்தனை –

பேய் முலை நஞ்சுண்டு – பெற்ற தாயும் உதவாத தனிமையிலே பாதிக்க வந்த பூதனையை முடித்து-
இத்தலையை முடிக்க வந்தவள் தன்னோடே போம்படி பண்ணி –போது விடிந்தது பெண்ணே எழுந்திரு என்ன இவள் துணுக் என்று புறப்படுகைக்காகபுகுந்த அபாயம் கேட்டிலையோபெரியாழ்வாரோடு குடல் துவக்குடையார்க்கு உறங்க விரகு உண்டோ -என்கிறார்கள்(பேய் முலை நஞ்சு இது வெளியில் உள்ளார் வார்த்தை – உண்டு-இது உள்ளே இருப்பவள் வார்த்தை )சர்வேஸ்வரனை துக்க நிவர்த்தகன் என்று இருப்பார் அல்லாதார் இறே -பெரியாழ்வார் சம்பந்திகள்அங்குத்தைக்கு என் புகுகிறதோ என்று வயிறு பிடிக்குமவர்கள் இறேஅவள் பய நிவ்ருத்தி அளவும் அனுசந்தித்து பயம் கெட்டுக் கிடக்கிறாள்பேய் உண்டு -பிரகிருதிமுலை உண்டு -அஹங்கார மமகாரங்கள்நஞ்சுண்டு -அவைகள் ஆகிற விஷம்
உண்டு -அனுபவித்து –அதாவதுபிரகிருதி சம்பந்த நிபந்தமாய் சேதனருக்கு வரும் அஹங்கார மமகாரங்களைப் போக்கி -என்றபடி –பேய் பால் உண்டான் என்று அனுசந்திக்க தாய் பால் குடிக்க பிறக்க வேண்டாமே-

பொறுத்திட்டு எதிர்வந்த புள்ளின்‌ வாய் கீண்டான்‌’ -2-6-3-
புள்ளின்‌ வாய்‌ கீண்டானை’ -13-

கறுத்து எதிரிட்டு நின்ற கஞ்சனை கொன்றான்
பொறுத்திட்டு எதிர் வந்த புள்ளின் வாய் கீண்டான்
நெறித்த குழல்களை நீங்க முன்னோடி
சிறுக்கன்று மேய்ப்பாற்க்கு ஓர் கோல் கொண்டு வா
தேவ பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா – 2-6-3-வருகிற போதை வேகத்தை பொறுத்து நின்று தன்னை நலிவதாக எதிரே  வந்த பகாசுரனுடைய வாயை கிழித்தவன்

புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்
பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுப்
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளந் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்பள்ளத்தில் மேயும் பறவை யுருக் கொண்ட கள்ள அசுரன் (பெரியாழ்வார் 2-5-4 )- கள்ளச் சகடம் -என்னுமா போலே – மேய்க்கிற கொக்கிலே அசுரன் ஆவேசித்து நலியப் புகுந்தான் – பொதுக்கோ -என்று கீண்ட சடக்கைச் சொல்கிறது –இது இவர்களுக்கு ராவண வதம் பண்ணின படி –இத் தலைக்கு அனுமதி இறே வேண்டுவது –விரோதியைப் போக்கி தன்னைக் கொடுக்கை இறே அவன் பணி –இவனுடைய அனுமதியும் அவனுடைய ரக்ஷகத்வமும் ஸ்வரூபத்தில் புகும் அத்தனை(காக்கும் இயல்பினன் இயல்பு -ஸ்வரூபம் தானே -பிரபாவம் அல்ல
அனுமதியும் நமக்கு ஸ்வரூபம் ) கர்ம ஞானங்களை சஹகாரியாகக் கொண்டு பக்தி உபாயம் என்று இருக்குமவர்கள் அன்று இறே இவர்கள் – தன்னுடைய அஞ்ஞான அசக்திகளையும்- அவனுடைய ஞான சக்த்யாதிகளையும் சஹகாரியாய்க் கொண்டு அவனே உபாயம் என்று இருக்குமவர்கள் அன்றோ இவர்கள் –புள்ளின் வாய் கீண்டானை –ஸ்வ ஆஸ்ரிதருக்கு ஸ்வ அனுபவ விரோதியான காமாதி தோஷ நிவர்தகனாய்

புண்ணில்‌ புளிப்பெய்தாலொக்கும்‌ தீமை” -2-9-1-
புண்ணில்‌ புளிப்பெய்தால் போலப்‌ புறம்‌ நின்று அழகு பேசாதே” –13-1-

வெண்ணெய் விழுங்கி வெரும்கலத்தை வெற்ப்பிடை இட்டதன் ஓசை கேட்கும்
கண்ண பிரான் கற்ற கல்வி தன்னை காக்கிலோம் உன் மகனைக் காவாய்
புண்ணில் புளி பெய்தால் ஒக்கும் தீமை புரை புரையா இவை செய்ய வல்ல
அண்ணற்கு அண்ணான்  மகனைப் பெற்ற வசோதை நங்காய் உன் மகனைக் கூவாய் -2 9-1 –புண்ணிலே புளியை குறந்திட்டால் கரிக்குமா போலே துஸ்ஸகமான தீமைகளை செய்யா நின்றால் எங்கனே பொறுப்பது -நீங்கள் ஓரகத்தில் உள்ளார் அன்றோ இப்படி சொல்லுகிறிகோள்-உங்கள் ஓரகத்திலும் இப்படி நின்று இவன் தீம்புகளை செய்கிறான் ஆகாதே என்ன –-எங்கள் அகம் ஒன்றிலும் அன்று –அகம் தோறும் இப்படி இருந்துள்ள தீமைகளை செய்ய வல்லவன் காண் இவன் என்கிறார்கள் –
புரையாவது -க்ரஹம்–வீப்சையால் அகம் தோறும் என்றபடி –-ஆல்-அசைஅண்ணல் கண்ணான் –
அண்ணல் என்றது ஸ்வாமி வாசகம்
-அண்ணல் கண்ணான் என்றது ஸ்வாமித்வ ஸூசுகமான கண்ணை உடையவன் என்றபடி –-இத்தால் இவ்விடத்தில் ஸ்வாமி என்றது –-க்ரித்ரிமர்க்கு தலைவன் என்றபடியாய்-இதுக்கு பிரகாசமான கண்ணை உடையவன் என்றது ஆய்த்து –அன்றிக்கே –-அண்ணற்கு என்றது  அண்ணனுக்கு என்றபடியாய்-அண்ணான் என்றது -அண்ணியன் ஆகாதவன் என்றபடியாய்-இப்படி தீம்புகளை செய்கையாலே-தன்னம்பி நம்பியும் இங்கு வளர்ந்தது அவனிவை செய்து அறியான் (10-7)-என்கிறபடியே-சாதுவாய் திரியும் நம்பி மூத்த பிரானுக்கும் தனக்கும் ஒரு சேர்த்தி இல்லாதவன் என்னவுமாம் –

கண்ணன் என்னும் கரும் தெய்வம் காட்சிப் பழகிக் கிடப்பேனை
புண்ணில் புளிப் பெய்தால் போலப் புற நின்று அழகு பேசாதே
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக
வண்ண வாடை கொண்டு என்னை வாட்டம் என்னை வாட்டம் தணிய வீசீரே–13-1-புண்ணின் விவரத்திலே துளையிலே -புளியைப் பிரவேசிப்பித்தால் போலே-புறம் நின்று – வாசலுக்கு புறம்பு ஓன்று சொல்லாதே கொள்ளுங்கோள்-என்கிறாள் அல்லள்-என்னையும் அவனையும் சேர்க்கும் கூற்றிலே –-இதுவே அகம் –-நின்று வார்த்தை சொல்லுமது ஒழிய- மீட்கும் கூற்றிலே நின்று –புறம் நின்று -வார்த்தை சொல்லாதே-என்னையும் அவனோடு சேர்க்கைக்கு ஈடான வார்த்தை சொல்லுகை அன்றிக்கே-எனக்கு அவன் பக்கல் பிராவண்யத்தை குலைக்கு ஈடான வார்த்தை சொல்லாதே-அழகு சொல்லாதே –இப்போது மீட்கப் பார்க்கிறவர்கள் அவனுடைய சௌந்தர்யத்தைச் சொல்லுகிறார்கள் அன்றே–அவனிடம் ஈடுபாட்டைத் தவிர்ந்து மேல் வரும் நன்மைகளைப் பாராய் -என்று சொல்லாதீர்கள் -என்ற படி–இப்போது இவாற்றாமையைப் பரிஹரித்தால் –-மேல் வரும் நன்மைகளைப் பாராய் என்று அவற்றைச் சொல்லா நில்லாதே –அழகு -நன்மைபேசாதே-இது சப்த மாத்ரமாய் அர்த்த ஸ்பர்சி அன்று –காதிலே தான் விழும் நெஞ்சில் படாது என்றபடி – நீங்கள் இதில் படும் நேர்த்தியை -ஸ்ரமத்தை -செயலிலே நேரப் பாருங்கோள்-பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் –
உங்கள் இரண்டு தலைக்கும் ஒத்த உகப்புக்கு நாங்கள் சில யத்னம் பண்ணும் படி இருந்ததோ -என்ன
உகப்பு ஒத்தாலும் ஆணும் பெண்ணும் என்கிற வாசி இல்லையோ – முலை எழுந்தார் படி மோவாய் எழுந்தார்க்குத் தெரியாது இறே -என்று பட்டர் –அருளிச் செய்தாராக பிரசித்தம் இறே-சாந்தீபிநி சிஷ்யனை இறே -பிறர் மிடி -அறியான் என்கிறது பிராப்ய த்வரையால்-பெருமாள் —துஷ்கரம் க்ருதவான் ஹீ நோ யத நயா பிரபு -சுந்தர -15-53-என்கிறபடியே-பிரிந்த போது கண்ணன் பெருமானாய் இருந்தான் -என்றபடி –

வங்கம்‌ விட்டுலவும்‌ கடற்பள்ளி மாயனை”?-4-5-6-
வங்கக்‌ கடல்கடைந்த மாதவனை-30-

அங்கம் விட்டு அவை ஐந்தும் அகற்றி ஆவி மூக்கினில் சோதித்த பின்னை 
சங்கம் விட்டவர் கையை மறித்து பையவே தலை சாய்ப்பதன் முன் 
வங்கம் விட்டு வுலவும்  கடல் பள்ளி மாயனை மது சூதனை மார்பில் தங்க விட்டு வைத்து 
ஆவதோர் கருமம் சாதிப்பார்க்கு என்றும் சாதிக்கலாமே -4 -5-6 –மரக்கலம் உலவா நின்றுள்ள -கடலில் கண் வளர்ந்து அருளுகிற -ஆச்சர்ய பூதனை –அன்றிக்கே –மாயனை -என்றது -ஞானமாய் –தன் இச்சையால் கண் வளர்ந்து அருளுகிறவன்-என்றபடி –குரை கடல் மேல் அரவணை மேல் குல வரை போல் பள்ளி கொண்டு -என்னக் கடவது இறே –மது சூதனை- மதுவை நிரசித்தால் போலே ஆஸ்ரித விரோதியைப் போக்குமவனே  வெள்ளை நீர் வெள்ளத்து அணைந்த அரவணை மேல்  துள்ளு நீர் மெள்ள துயின்ற பெருமானே  வள்ளலே உன் தமர்க்கு என்றும் நமன் தமர் கள்ளர் போல் ( 8-10 )-என்னக் கடவது இறே 

வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கு அப்பறை கொண்ட வாற்றை யணி புதுவை
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்–30-கடல் கடையா நிற்க மரக்கலம் அலையாதபடி-கடைந்த நொய்ப்பம் –கடைந்த போது சுழன்று வருகையாலே கடலடைய மரக்கலமாய் நின்றபடி -என்றுமாம் – பிரயோஜனாந்த பரருக்கும் உடம்பு நோவ கடல் கடைந்து அபேஷித சம்விதானம் பண்ணும் சீலவான் என்கை –கிருஷ்ணனை யாகில் கவி பாடிற்றுஷீராப்தி மதனம் பண்ணினவனை சொல்லுகை பின்னம் சேருமோ என்னில் –விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுதம் உண்ட எம்பெருமானே -என்றுதேவ கார்யம் என்று ஒரு வியாஜ்யத்தை இட்டுபெரிய பிராட்டியார் ஆகிற பெண் அமுதத்தை பெறுகைக்காக கடல் கடைந்தபடி –ஊரார் கார்யத்தை ஒரு வ்யாஜ்யமாக்கி
பெண்களைப் பெறுகைக்காக நோன்பிலே அன்வயிப்பித்த கிருஷ்ணன் உடைய ஸ்வ பாவத்தோடு சத்ருசமாய் இருக்கையாலே சொல்லுகிறார்கள் –தேவ கார்யம் என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு
பெரிய பிராட்டியார் ஆகிற பெண்ணமுதைப் பெற்று அப்போது உகப்போடே இருந்தால் போலே
ஊரார் காரியத்தை வியாஜ்யமாக்கி- பெண்களைப் பெற்ற ஹர்ஷத்தோடே கிருஷ்ணன் இருக்கிற இருப்பைக் கண்டவாறேஅன்யார்த்தமான செயலில் அபிமதம் இவனுக்கு இன்றாக வருகிறதோ என்கிறார்கள் –பாற் கடலைக் கடைந்து பிராட்டியைப் பெற்றால் போலேஇங்குத் தயிர் கடைய என்று ஒரு வியாஜ்யமாய்கன்னிகைகளைப் பெறக் கடவனாய் இறே இருப்பதுபாற் கடலில் பையத் துயின்ற (2)-என்று ஷீரார்ணவ சயனத்தைத் தொடங்கி அதனுடைய மதனத்தைச் சொல்லி நிகமிக்கிறார்கள் –
அதில் கிடந்து முன் கடைந்த -(திருச்சந்த )ஆஸ்ரயணீய தத்வம் ஸ்ரீ லஷ்மீ நாதமாய் இருக்கும் -என்கை –
தாய் முன்பு பிதாவுக்கு பிரஜை செய்த குற்றம் பொறுக்க வேண்டுமா போலே ஆத்மாவின் குற்றம் பொறுக்கைக்குப் புருஷகாரம் என்கைஅவள் சந்நிதியில் குற்றம் மிக்க காகம் பிழைத்தது
அவள் சந்நிதி இல்லாமை அத்தனை குற்றம் இன்றிக்கே இருக்கச் செய்தே ராவணன் தலை-அறுப்புண்டான்

மானிட சாதியில்‌ தோன்றிற்று ஒர்‌ மானிட சாதியை.”–மானிட சாதியின்‌ பேரிட்டால்‌ மறுமைக்கில்லை?! -4-6-4-
மானிடவர்க்கென்று பேச்சுப்‌ படில்‌ வாழகில்லேன் -1-5-

மானிட சாதியில் தோன்றிற்று ஓர் மானிட சாதியை 
மானிட சாதியின் பேரிட்டால் மறுமைக்கு இல்லை
 
வானுடை மாதவா கோவிந்தா என்று அழைத்தக்கால் 
நானுடை நாரணன் நம் அன்னை நரகம் புகாள் – 4-6- 4-மனுஷ்ய ஜாதியில் உத்பன்னமான தொரு மனுஷ்ய ஜந்துவை  -ஆத்மா கர்ம அனுகுணமாக தேவாதி யோனிகள் தோறும் பிறக்கக் கடவன் ஆகையாலே -புண்ய பாபங்கள் இரண்டையும் அனுபவிக்கைக்கும்  ஆர்ஜிக்கைக்கும் -உறுப்பாக ஆய்த்து -மனுஷ்ய யோனியில் பிறந்தது – ஆகையால் இப்படி இருக்கிற மனுஷ்ய ஜாதியிலே உத்பன்னமானதொரு ஜந்துவை  -த்ருஷ்ட பிரயோஜனத்தை நச்சி -கர்ம வச்யமான மனுஷ்ய ஜாதியில் ஒன்றின்  பேர் இட்டால் ஐஹிகத்தில் சில பிரயோஜனம் சித்திக்கிலும் மறுமைக்கு  ஒரு பிரயோஜனம் இல்லை -மறுமை யாவது அத்ருஷ்டம் 

வானிடை வாழும் அவ் வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்த வவி
கானிடைத் திரிவதோர் நரி புகுந்து கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப
ஊனிடை யாழி சங்கு உத்தமர்க்கு என்று உன்னித் தெழுந்த என் தட முலைகள்
மானிடர்வர்க்கு என்று பேச்சுப் படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே –1-5–நானும் அறியாது இருக்க –அவனும் அறியாது இருக்க –மனுஷ்யம் மாத்ரமாய் இருப்பாருக்கு என்று நாட்டிலே இங்கனே ஒரு சப்தம் பரிமாறும் ஆகில்- அது என் காதில் விழா விடிலும் – எனக்கு சத்தை இல்லை கிடாய் –என்கிறாள்
பிறருக்காய் இருக்கும் இருப்பு -சத்த்யா பாதகமாய் இருந்த படி —உனக்கே நாம் ஆட்செய்வோம் –என்ற உறுதி உள்ள இவளுக்கு –ராவணன் மாயா சிரசைக் காட்டின போது இதர ஸ்திரீகளோ பாதி தரித்து இருந்ததுக்கு கருத்து என் -என்று ஜீயரைக் கேட்க – இவளுடைய சத்தைக்கு ஹேது பெருமாள் சத்தை யாய்த்து – அதற்கு தைவம் அறிய ஒரு குறை இல்லாமையாலே தரித்து இருந்தாள்-
இவள் சத்தைக்கு ஹேது பிரதிபத்தி அபிரதிபத்திகள் இல்லை அத்தலையில் சத்தை யாய்த்து -என்று அருளி செய்வர் –

செப்போது மென்முலையார்கள்‌ சிறுசோறும்‌ இல்லும்‌ சிதைத்திட்டு -2-8-3-
நாமமாயிரமேத்த நின்ற நாராயணா! நரனே?“ 2-1-என்று கண்ணனைத்‌ தாங்கள்‌ இழைத்த சிற்றிலைச்‌ சிதைக்க வேண்டாம்‌ என்று ஒரு பதிகத்தையே(2பதிகம் )அமைத்துள்ளார்

செப்போது மென் முலையார்கள் சிறு சோறும்  இல்லும் சிதைத்திட்டு
அப்போது நான் உரப்பப் போய் அடிசிலும் உண்டிலை ஆள்வாய்
முப்போதும் வானவர் ஏத்தும் முனிவர்கள் வெள்ளறை நின்றாய்
இப்போது நான் ஒன்றும் செய்யேன் எம்பிரான் காப்பிட வாராய் 2-8 -3-செப்பு என்று சொல்லும்படியான  சந்நிவேசத்தை உடைத்தாய் -அது போலே கடினமாய் இருக்கை அன்றிகே மிருதுவாய் இருக்கும் முலையை உடையவர்களுடைய லீலார்த்தமாக மணல் கொழித்து சமைத்த சிறு சோற்றையும்
கொட்டகத்தையும் அழித்திட்டு பெண்களோடே கை பிணக்கிட்டு திரிய வேண்டா காண் -என்று
அப்போது நான் கோபித்தவாறே- நான் பிடிக்குதல் அடிக்குதல் செய்யப் போகிறேன் என்று
என் முன் நிற்க அஞ்சி போய் உனக்கு இனிதாக சமைத்து வைத்த அடிசிலும் அமுது செய்திலை–

நமக்கு அசாதாரணைகளாய் இருக்கும் இவர்கள் தேவதாந்த்ரங்களின் காலில் விழப் பார்த்து இருக்கை நமக்கு மிகவும் பொல்லாங்கு என்று திரு உள்ளம் நொந்து தளும்பி முன் மடுவின் கரையிலே யானைக்கு உதவினால் போலே கடுக வந்து ஆய்ச்சிகட்கு முகம் காட்ட-அவர்களும் இவனை காணாதவர்கள் போலே அந்ய பரரையாய் இருக்கையைக் காட்டி சிற்றில் இழைக்க அந்த செயலும் காமாஸ்ரயணம் போலே இவனுக்கு அநிஷ்டம் ஆதலால் அவர்கள் இழைக்கும் சிற்றிலை இவன் அழிப்பதாக முயற்சி செய்ய-அவர்கள் அதுவும் வேண்டா என்ன இவன் வேணும் என்ன இப்படி நடுவே ஒரு மகா பாரதம் நடந்தது–பிறகு புணர்ச்சி நேர்ந்து அது தானும் பிரிவிலே தலைக் கட்டி நின்ற வாற்றை
ஆண்டாள் அனுகரித்து அருளிச் செய்யும் திரு மொழி இது–ஒன்பதாம் பாட்டில் -எம்மைப் பற்றி மெய்ப்பிணக்கு இட்டக்கால் -என்பதால் புணர்ச்சி நேர்ந்த படி தோற்றும்-கோழி அழைப்பதன் முன்னம் -அடுத்த திருமொழியில் அமைக்கு நோக்கும் இடத்து பிரிவில் தலைக் கட்டினபடி தோற்றும்-

தீமை செய்யும் சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேலே–2-1-நான் உங்களை நெஞ்சாலும் நினைக்காமல் இருக்க என்னை எதிர் பார்த்து நீங்கள் சிற்றில் இழைக்க – உனக்காக சிற்றில் இழைக்க வில்லை- காமன் போதரு காலம் என்று பங்குனி நாள் கடை பாரித்தோம்-காம தேவன் வீதி வலம் வரக் கூடும் என்று சொல்ல-நீங்கள் சிற்றில் இளைப்பது அந்ய அர்த்தமாகில் அதனை நான் அழிப்பதும் அந்ய அர்த்தம் தான் என்று அளிக்கப் புக ஆய்சிகள் அழிக்க வேண்டா என்று விலக்குகிறார்கள்

“இன்றுமுற்று முதுகு நோவ –2-2-என்பதற்குக் கருத்து எங்கள் முதுகை நோவு தீரச்சற்றுப் பிடிக்கலாகாதோ? என்பதாம்.-இச் சிற்றிலை இழைக்கப் பட்ட பாடு பன்னி உரைக்கும் கால் பாரதமாம் –
முதுகு நோவ தீர சற்று பிடிக்கல் ஆகாதோ-

வண்டல் நுண் மணல் தெள்ளி யாம் வளைக் கைகளால் சிரமப் பட்டோம்
தெண் திரைக் கடல் பள்ளியாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே
—2-3-

செய்ய தாமரைக் கண்ணினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே–2-4-பேச்சும் செய்கையும்
தாழ்ந்த வார்த்தைகளும் தாழ்ந்த வியாபாரங்களும் பிரானே எங்கள் திறத்திலே அடியேன் குடியேன் என்றால் போலே சொல்லும் அதி விநய வார்த்தைகளும் கள்ளக் குழைச்சல்களும் எங்களை மிகவும் மயக்குகின்றனவே இதற்கு எல்லாம் அடி உன் திருமுக மண்டலம் இறே-இப்படிப் பட்ட மயக்கத்தை உண்டு பண்ணுகைக்கு உன் திருமுகம் அம்மான் பொடியோ-

நாங்கள் இளைத்த கோலம் அழித்தி யாகிலும் உன்தன் மேல்
உள்ளம் ஓடி உருகல் அல்லால் உரோடம் ஓன்று இலோம் கண்டாய்-
-2-5-நாங்கள் இளைத்த இக் கோலத்தை அழித்தாயேஆகிலும் சர்வ ஸ்மாத் பரனானவன் இப்படி எல்லாம் செய்யப் பெறுவதே
ஈது என்ன சௌசீல்யம் என்று நெஞ்சு உருகிப் போம் இத்தனை ஒழிய ரோஷம் என்று பேர் இடும்படி ஒரு விகாரம் பெற்றோம் ஆகோம்-
ஆகிலும் உன் முகத்தில் உள்ளவை மெய்யே கண்கள் ஆகில்
நீ இந்த சிற்றிலை அழிக்க ஒருப்பட மாட்டாய்-இச் சிற்றிலை அன்புடன் நோக்குகை அன்றோ
கண் படைத்ததற்குபிரயோஜனம் என்கிறார்கள்-உரோடம் -ரோஷம்-

முற்றிலாத பிள்ளைகளோம் முலைபோந்திலாதோமை நாடொறும்
சிற்றில் மேலிட்டுக் கொண்டு நீ சிறிதுண்டு திண்ணென நாமது
கற்றிலோம்-
-2-6-சிற்றில் விஷயமாக ஒரு வியாஜ்யத்தை வைத்துக் கொண்டு நீ சிறிதுண்டு –
நீ செய்யும் செய்திகள் சில உள-திண்ணென நாமது கற்றிலோம்-அவற்றை நாங்கள் அழகியதாக அப்யசித்தோம் அல்லோம்-கண்ண பிரான் இன்னது செய்தான் என்று பிறருக்கு சொல்ல முடியாத படி சில குறும்புகளைச் செய்ய அது கண்ட ஆய்ச்சிகள் அப்பா நெஞ்சில் நினைத்தபடி சில செய்யும் அளவேயோ வேண்டுவது-எங்கள் பருவத்தை சிறிது ஆராய வேண்டாவோ-கொங்கை இன்னும் குவிந்து எழுந்து இலாத எங்கள் திறத்து நீ செய்யும் குறும்புகளுக்கு நாங்கள் அறியும்படி குருகுல வாசம் பண்ணி ஒன்றும் கற்றிலோம்

ஒதமா கடல் வண்ணா உன் மணவாட்டிமாரோடு சூழறும்
சேதுபந்தம் திருத்தினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே
——2-7-கண்ண பிரான் ஆய்ச்சிமார்களை நோக்கி சில குறும்பு வார்த்தைகளைச் சொல்லி சிற்றில் அழித்து நலிய அதுகண்ட அவர்கள் -அப்பனே
வார்த்தைகளின் வாசியை அறிய வல்லவர்கள் இடத்தில் நீ இந்த குறும்பு வார்த்தைகளைச் சொல்ல
அவர்கள் ஒன்பது சொல்ல மேன் மேலே வார்த்தைகள் பெருகி பரம ரசமாகச் செல்லும் கபடம் அற்ற
வார்த்தைகளின் கருத்தையும் அறிய மாட்டாத எங்கள் திறத்திலே அந்த பேச்சுகளைப் பேசி நலிவதனால் உனக்கு என்ன பயன் உண்டு என்று சொல்லச் செய்தேயும் அவன் மேன் மேலும் சிற்றிலை சிதைக்கப் புக நின் திருமேல் ஆணை -என்று பிராட்டி மேல் ஆணை இட்டு விலக்கப் பார்க்கிறார்கள்-

வட்ட வாய்ச் சிறு தூதையோடு சிறு சுளகும் மணலும் கொண்டு
இட்ட மாவிளையோடு வோங்களைச் சிற்றில் ஈடழித்து என் பயன்
தொட்டுதைத்து நலியேல் கண்டாய்
–2-8-கண்ணபிரான், ‘ஆய்ச்சிகாள்! இச்சிற்றிலை நான் காலாலும் கையாலும் உதைத்துச் சிதைப்பதினால் எனக்கு ஒரு பயனுமில்லை யென்பது மெய்யே உங்களைத் தீண்டுவதன்றோ எனக்குப் பிரயோஜனம்’ என்று அவர்களைத் தீண்ட-அது கண்டு ஆய்ச்சிகள், ‘ஹரி, ஹரி! நீ எத்தனை தூரிரஸ்த்ரிகளோடு கலந்துவந்தாயோ தெரியாது, எங்கள் மேல் தீண்டாதே கடக்க நில்’ என்ன’-அதுகேட்ட கண்ணன் ‘நான் ஸர்வேச்வரனல்லேனோ? என்னுடைய ஸ்பர்சம் உங்களுக்கு நலிவாய் விட்டதோ? நான் ஈச்வரனென்பதில் உங்களுக்கு ஸம்வயமுண்டாகில் என் திவ்யாயுதத்தைப் பாருங்கள்” என்று திருக்கையிற் சக்கரந் தோற்ற நின்றான்-

முற்றத்தூடு புகுந்து நின் முகம் காட்டிப் புன் முறுவல் செய்து
சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக் கடவையோ கோவிந்தா
–2-9-இவன் தனித்தனியே ஒவ்வொரு ஆய்ச்சியிடத்துஞ் சென்று,-நங்காய்! எங்ஙனே இங்கு வந்தாய்? கால்கள் நோகின்றனவோ? நானும் நீயுங் கலந்துவரப் பெற்றிலோமே!’-என்றாற்போலே சிலவற்றைச் சொல்லி முகத்தை விளங்கக்காட்டினனென்க.-அங்ஙனஞ் சொல்லக்கேட்ட ஆய்ச்சிகள் ‘நமது எண்ணம் வீணாயொழிந்ததே!’ என்று தங்கள் தோல்வியை நினைத்து லஜ்ஜிக்க, இவன் புன்முறுவல் செய்தான்.-நாம் இவனுக்குத் தோற்று வெட்கமடைகின்றமையை இவன் அறியலாகாது’ அந்யபரதையைக் காட்டுவோம்’ என்று அங்கேயிருந்து சிற்றிலிழைக்கப் புக்கார்கள்.-அதுகண்ட கண்ணபிரான் ‘இங்கே நம் கண்வட்டத்திலே இவர்கள் அந்யபரராவதென்!’ என்று சிவிட்கென்று, நினைக்கைக்கு நெஞ்சுங் கூடாதே வியாபாரிக்கைக்குக் கையுங்கூடாதபடியாகச் சிலவற்றைச் செய்தான்; (சிற்றிலோடு இத்யாதி.) உனக்குப் பசுமேய்க்கையன்றோ தொழில்; பெண்களை நலிகையும் பணியோ? என்கிறார்கள். ‘கோவிந்தா!’ என்ற விளியில் நோக்கு.–ஆவது ஆயிடுக -என்று பெண்களின் பரியட்டங்களைக் கிழித்து அவர்கள் உடம்பு கொண்டு தாய்மார் முன் நிற்க ஒண்ணாதபடி பண்ணினான் – எம்மைப் பற்றி மெய்ப் பிணக்கிட்டக்கால் இந்தப் பக்கம் நின்றவர் என்
சொல்லார் -என்கிறார்கள்-என்னோடு அணைகை உங்களுக்கு அசஹ்யமாய் இருந்ததோ
யோகிகளும் என் உடம்போடு அணைக்க ஆசைப்பட -என்ன உன்னோடு சம்ச்லேஷிக்கை எங்களுக்கு மிகவும் அழகிதே-ஆனாலும் அருகில் உள்ளார்க்கு அஞ்ச வேண்டுமே -என்றார்கள்-இத்தால் சம்ச்லேஷம் பிரவ்ருத்தமான படி சொல்லுகிறதுஆழ்வார்கள் ஆண்களாய் இருந்துவைத்து
பெண்ணுடை உடுத்து மின்னிடை மடவார் முதலிய திருவாய் மொழிகளிலே என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பி-ஒரு நான்று தடி பிணக்கே -என்றால் போல் சொல்லும் பாசுரங்கள் போல் அன்றிக்கே பெண் பிள்ளை தனக்கே அதுக்கு மேலே ஒரு மென்மை பிறந்து வார்த்தை சொல்லும் வேறுபாடு என்னே -என்று ஈடுபட்டு உருகுவாராம் நம்பிள்ளை-

சீதை வாய் அமுதம் உண்டாய் எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று
வீதிவாய் விளையாடும் ஆயர் சிறுமியர் மழலைச் சொல்லை
வேத வாய்த் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டு சித்தன் தன்
கோதை வாய்த் தமிழ் வல்லவர் குறைவின்றி வைகுந்தம் சேர்வரே
–2-10-நிகமத்தில்
இப்பதிகம் ஓத வல்லார் பெரும் பேற்றை அருளிச் செய்து தலைக் கட்டுகிறார்-சீதை வாய் அமுதம் உண்டாய் -என்ற விளிச் சொல்லும்-ஆயர் சிறுமியர் மழலைச் சொல்லை -என்பதையும் நோக்குக
பருவம் நிரம்பினவள் உடன் ரசானுபவம் பண்ணுபவன் எல்லாரும் திரளும் இடத்திலே மறைக்க வேண்டியவற்றை மறைக்கக்கூட தெரியாத தோற்றினபடி விளையாடுகிற பருவம் நிரம்பாத பெண்களுடன் போராடுகை விரூபம் என்று உணர்த்தியவாறு-

ஆற்றிலிருந்து விளையாடுவோங்களை சேற்றாலெறிந்து வளை துகில்‌ கைக் கொண்டு”–2-10-1-என்று பெரியாழ்வார்‌ உரைத்தவற்றிலிருந்து கோதை நாச்சியார்‌,
கோழியழைப்பதன்‌ முன்னம்‌ குடைந்து நீராடுவான்‌ போந்தோம்‌
ஆழியஞ்செல்வன்‌ எழுந்தான்‌ அரவணை மேல்‌ பள்ளி கொண்டாய்‌ !
ஏழையமை யாற்றவும்‌ பட்டோம்‌ இனி யென்றும்‌ பொய்கைக்கு வாரோம்‌
தோழியும்‌ நானும்‌ தொழுதோம்‌ துகிலைப்‌
பணித்தருளாயே -3-1-என்று கண்ணன்‌ கவர்ந்து கொண்ட கூறைகளைக்‌ கன்னியர்‌ கேட்பதாக ஒரு பதிகம்‌(3) பாடியுள்ளார்

ஆற்றிலிருந்து விளையாடுவோங்களை
சேற்றால் எறிந்து வளை துகில்  கைக் கொண்டு
காற்றில் கடியனாய் ஓடி அகம் புக்கு
மாற்றமும் தாரானால் இன்று முற்றும்
வளைத் திறம் பேசானால் இன்று முற்றும்  
-2 -10-1 –சிலர் எங்களது -என்று அபிமாநிக்கும் நிலத்திலே இருந்தோமோ –சர்வ சாதாரணமான ஸ்தலத்திலே அன்றோ நாங்கள் இருந்தது –இத்தால் ஏகாந்தமாய் -இவனுக்கு வந்து தீம்பு செய்ய ஒண்ணாதபடி பலரும் போவார் வருவாரான ஸ்தலத்திலே அன்றோ-நாங்கள் அந்ய பரைகள் அன்றோ – தன் இடையாட்டம் பட்டமோ – நாங்கள் முன் தீமை செய்தோம் ஆகிலுமாம் இறே-தன்னைக் கடைக் கண்ணால் கணிசித்தோமோ – தன்னை இங்கு இட்டு (இங்கிட்டு இங்கே )எண்ணினார் இல்லை கிடீர் –சேற்றை இட்டு எறிந்து – பிறர் அறியாதபடி -கைகளாலே ஸ்பர்சித்தால் ஆகாதோ-இது ஏது என்று பிறர் கண்டு கேட்கும்படி சேற்றை இட்டு எறிய வேணுமோ –நாங்கள் குளிகைக்காக கழற்றி இட்டு வைத்த வளைகளையும் துகில்களையும்  வாரிக் கொண்டு
இடைப் பென்கள் ஆகையாலே ஆபரணங்களையும் பரிவட்டங்களையும் களைந்து இட்டு வைத்து இறே குளிப்பது-துடர அகப்படாதே காற்றிலும் காட்டிலும் கடியனாக ஓடி – தன் ஜீவனத்தில் ஒன்றும் குறையாடதபடி கொண்டால் – எங்கள் ஜீவனத்தையும் கொண்டு போக வேணுமோ –
அவனுக்கு ஜீவனம் -இவர்களுடைய வளையல்களும் துகில்களும் –இவர்களுக்கு ஜீவனம் –அவன் தன்னுடைய வடிவு இறே
(திருக்கோளூர் பதிகம் -இதே போல் -தனது ஜீவனம் தேடித் போனாள் – அவள் தானே திருத்தாயாருக்கு ஜீவனம் -முகத்தை வைத்து போகலாகாதோ )-பின் தொடர்ந்து சென்றாலும் காணப் போகாதபடி தன் அகத்திலே சென்று புக்கு வழி பறித்து அசாதாரண  ஸ்தலத்திலே ஆய்த்து இருப்பது-நாங்கள் தன் பேரை சொல்லி அழைத்தாலும் -அதுக்கு ஒரு மாற்றம் தானும் சொல்லுகிறான் இல்லை –
வார்த்தையும் -ஏதேனும் வளையும் துகிலுமோ (உம்மைத்தொகை -வளை துகில் தர வில்லை –வார்த்தையும் தர வில்லை-மாற்றமும் தாராரோ -திருப்பாவை -தூ மணி மாட பாசுரம் போல் )
ஒரு வாரத்தை தன்னை ஆகிலும் தந்தால் ஆகாதோ – இப்படி  ஒரு வார்த்தையும் உட்பட சொல்லாதவனாலே இன்று முடிவோம் – ஒரு வார்த்தை பேரில் ஜீவிப்பார் போலே காணும்
-தருவன் என்னுதல் -தாரேன் என்னுதல் -வளை இடையாட்டமாக ஒன்றும் சொல்லாதவனாலே இன்று முடிவோம்

வடிவார்சோதி வலத்துறையுஞ்‌ சுடராழியும்‌ பல்லாண்டு படைபோர்‌ புக்கு முழங்கும்‌ அப்பாஞ்ச சன்னியமும்‌ பல்லாண்டே-1-
பூங்கொள்‌ திருமுகத்து மடுத்தூதிய சங்கொலியும்‌ ‘ சார்ங்கவில்‌ நாணொலியும்‌ தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ-9-9-

வடிவார் சோதி வலது உறையும் ஆழியும் பல்லாண்டு
படை போர் புக்குமுழங்கும் அப் பாஞ்ச சந்யமும் பல்லாண்டு–இச் சேர்த்திக்கு ஒரு தீங்கு வராதபடி கல் மதிள் இட்டால் போலே இருக்கிற ஆழ்வார்களைப்-பாரீர் என்ன -அவர்களோட்டை சேர்த்திக்கு என்ன தீங்கு வருகிறதோ என்று மங்களா சாசனம்-பண்ணுகிறார் –-வடிவார் சோதி – காளமேக நிபச்யாமமான திருமேனி ஸ்வ தேஜஸ் ஸாலே வ்யாப்தமாம் படியாய் இருக்கை –-புருஷம் க்ருஷ்ண பிங்களம் -என்னும் படியாய் இறே இருப்பது-தேஜோ ராசியாய் இருக்கும் வடிவை உடையவன் என்னவுமாம்-வலத் துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு –-வலம் அருகே நித்யவாசம் பண்ணுமவனாய் -பிறருக்கு அநபி பவநீயனாய் இருக்கிற ஆழ்வானோட்டை சேர்த்தி நித்தியமாய் செல்ல வேணும் என்கிறார் –
ஆழியும் -என்கிற சப்தத்தாலே -ஆயுதாகாரத்தாலே ரஷகமாகக் காட்ட -ஆபரண புத்தியாலே அவனையும் குறித்து மங்களா சாசனம் பண்ணுகிறார் என்கை –
படை போர் இத்யாதி – நம் கையை விடாதே த்வநியாலே எதிரிகளை யழிக்கும் இவனைப் பாரீர் என்ன –
படை போர் முழங்கும் –சேனையை உடையயுத்தத்திலே புக்கு முழங்கும் என்னுதல்
யுத்தத்திலே ஆயுதமாக புக்கு முழங்கும் என்னுதல்-முழங்கும் சகோஷொ  தார்த்தராஷ்டாராணாம்  ஹ்ருதயா நிவ்யதாரயத் -என்றும் – யஸ்ய நாதேன தைத்யானாம் பலஹா நிரஜாயத-என்றும் பிரதிகூலர் மண் உண்ணும்படியும் அனுகூலர் வாழும்படியாய் இறே த்வனி இருப்பது -இத் த்வனி இவருக்கு பய ஸ்தானமான படி-என் என்னில் -த்வனி வழியே நின்று இடம் காட்டிக்  என்று பயப்படுகிறார்-அப் பாஞ்ச சன்னியமும் –-முன்னிலையாய்  இருக்க பரோஷ நிர்த்தேசம் பண்ணுவான் என் என்னில் – புத்ரனை அலங்கரித்த தாய் -தன் கண் படிலும் கண் எச்சிலாம் -என்று பார்க்கக் கூசுமா போலே-மங்களா சாசனம் பண்ணுகிற தம்முடைய கண்ணையும் செறித்து முகத்தை மாற வைத்து-சொல்கிறார் அன்று யுத்தத்தில் பிறந்த ப்ரமாததுக்கு இன்று மங்களா சாசனம் பண்ணுகிறார் -என்றுமாம்-

கோங்கலரும் பொழில் மாலிரும் சோலையில் கொன்றைகள் மேல்
தூங்கு பொன் மலைகளோடு உடனே நின்று தூங்குகின்றேன்
பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலியும்
சாரங்க வில் நாண் ஒலியும் தலைப் பெய்வது எஞ்ஞான்று கொலோ
–9-9-இரண்டாவது அவதாரத்தில் பிராட்டிமார்க்கு உதவினது தனக்கு ஒருத்திக்குமே வேண்டும்படி யாய்த்து இவள் தசை-சிஸூ பாலன் ஸ்வயம் வரார்த்தமாக ஒருப்பட்ட சமயத்தில் புறச் சோலையிலே-ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஆழ்வானது கோஷமானது-வந்து செவிப்பட்டு தரிப்பித்தது-ஸ்ரீ ருக்மிணி பிராட்டியை-ராவணன் மாயா சிரசைக் காட்டின போது ஸ்ரீ சார்ங்கத்தின் ஜய கோஷமானது வந்து செவிப்பட்டு –இரண்டு அவதாரத்தில் உள்ளவையும் மடுத்து ஒலிக்க வேண்டும் படி யாய்த்து இவள் விடாய்- அவர்கள் அளவல்ல வாய்த்து இவள் ஆற்றாமை –தரிப்பித்தது ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளை

நல்ல என்‌ தோழி! நாகணையிசை நம்பரர்‌ * செல்வர்‌ பெரியர்‌ சிறுமானிடவர்‌ நாம்‌ செய்வதென்‌? வில்லிபுதுவை விட்டுசித்தர்‌ தங்கள்‌ தேவரை வல்லபரிசு வருவிப்பரேல்‌ அது காண்டுமே -10-10-

நல்ல வென் தோழீ நாகணை மிசை நம்பரர்
செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வது என்
வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே–10-10-நல்ல வென் தோழீ – என்னிலும் என் இழவுக்கு நொந்து இருப்பாய் நீயே இறே-நாகணை மிசை நம்பரர் செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வது என்-அநந்த சாயியாய் -ஸ்ரீ யபதியுமாய் -உயர்ந்தார் ஒருத்தரை இருக்கிறவரை -அதி ஷூத்ரராய் இருக்கிற நம்மால்-செய்யலாவது உண்டோ –அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்று சரணம் புக ஒருப்பட்டவர் அதுக்கு உறுப்பாக –-அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா -என்றும்-நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -என்றும்-தன் பேற்றுக்கு உடலாக நினைத்து இருந்தவை தன்னையும் இழவுக்கு உடலாகச் சொல்லி கை வாங்கும் படி காணும் கண்ணாஞ்சுழலை இட்ட படி –நாகணை மிசை--அநந்த சாயியாய் இருக்கைக்கு மேற்பட இல்லை இறே ஒருவனுக்கு ஏற்றத்துக்கு–நம் பரர் –அநந்ய பரமான வாக்யங்களாலே பிரசித்தமான பரத்வத்தை உடையவர்-நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண பர -நாராயண பரம் ஜ்யோதிர் ஆத்மா நாராயண பர —இத்யாதிகளில் -படியே-செல்வர் –ஸ்ரீ யபதிகள்-அணைவது அரவணை மேல் பூம் பாவை யாகம் புணர்வது -திருவாய் -2-8-1- ஹ்ரீச்ச தே லஷ்மீச்ச பத்ன்யௌ-என்கிறபடியே ஆகையாலே–பெரியர் –
நமக்கும் அவனுக்கும் பர்வத பரம அணுக்களோட்டை வாசி போரும்-சிறு மானிடவர் – தேவ யோநியிலே பிறந்து சிறிது அணைய நிற்கையும்  அன்றிக்கே-ப்ராஜ்ஞராய் அவனோடு அணைய நிற்கவும் அன்றிக்கே அதி ஷூத்ரரான மனுஷ்யர் நாம் செய்வது என் முன்பே ஒரு வார்த்தை சொல்லி வைத்தார் என்பதையே கொண்டு நம்மாலே அவரை வளைக்கப் போமோ-ஆனால் நாம் இழந்தே போம் அத்தனையோ -என்ன -நமக்கு இழக்க வேண்டா காண் த்வயி கிஞ்சித் சமாபன்னே கிம் கார்யம் சீதயா மம-பரதேன மஹா பாஹோ லஷ்மணேன யவீயஸா -யுத்த -41-4-என்றவனுக்குச் சொல்ல வேண்டுவதும் ஒரு விஷயம் உண்டு காண்-நீ பின்னையும் பேற்றுக்கு உடலாக நினைத்து இருந்தது என் என்ன-வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே– சர்வ சாதாரணமாக இருக்கும் வஸ்து என்று பற்றக் கடவது அன்று-ஆச்சார்யனுக்கு விதயம் அவ்வஸ்து – விஷ்ணு சித்தே யஸ்ய -அனந்தன் பாலும் -5-4-8– அவன் வழியாலே நமக்குக் கிடைக்கும் என்று இருக்க அடுக்கும்–சம்பந்தம் நமக்கும் அவனுக்கும் ஒக்கும் என்று நினைக்கலாகாது -சம்பந்தம் நித்தியமாய் இருக்கச் செய்தே இறே இந்நாள் வரை கிடந்தது-தங்கள் தேவரை -என்று தன்னோடு உறவு அறுத்து-பெரியாழ்வார் உடன் சேர்த்து சொல்லுகிறாள்–பெரியாழ்வார் உகந்தது என்றாய்த்து உகந்தது
திரிபுரா தேவியார் வார்த்தையை நினைப்பது –-வல்ல பரிசு வருவிப்பரேல் ஒரு பூவை இட்டு வரப் பண்ணவுமாம்-2-7-பூ சூட்டு பதிகம்-ஒரு இசையைச் சொல்லி இசைவிக்கவுமாம் -திருப்பல்லாண்டு –
கிழியை அறுத்து வரப்பண்ணவுமாம்-
வேண்டிய வேதங்கள் ஓதி கிழி அறுத்து திருமஞ்சனத்தைச் சேர்த்து அழைக்கையுமாம்-2-4- நீராட்ட பதிகம் திருக் குழல் பணியைச் சேர்த்து வைத்து அழைக்க வுமாம்
அன்றிக்கே திருவந்திக் காப்பிட்டு அழைக்கவுமாம் -2-8- காப்பிட்டுபதிகம்வெண்ணெய் அளைந்த குணுங்கும் –ஆரை  மேய்க்க நீ போதி–இந்திரனோடு பிரமன் -இத்யாதிகள் அநேகம் இறே-அன்றிக்கே நான் தம்மை முன்னிட்டால் போலே -தமக்கு புருஷகாரமாவாரை முன்னிட்டு வரப் பண்ணவுமாம்–வல்ல பரிசு –ஆசார்ய பரம்பரையை முன்னிட்டு -என்றபடி-அது காண்டுமே -அவ் வழியாலே பெறக் கடவோம்–பிதா மஹம் நாத முனிம் விலோக்ய ப்ரசீத -ஸ்தோத்ர ரத்னம் -65-என்னுமா போலே த்வத் பாதமூலம் சரணம் ப்ரபத்யே -ஸ்தோத்ர ரத்னம் -22-என்று சரணம் புக்கு வைத்து பிரபத்தி பண்ணினோம் நாம் ஆகையாலே அதுவும் போட்கனாகக் கூடும் என்று அக்குறை தீர -நாத முனிகளை முன்னிட்டால் போலே பெரியாழ்வாரை முன்னிடுகிறாள் –

மாலே மணி வண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்து பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய் அருளேலோ ரெம்பாவாய்பல்லாண்டு இசைப்பாரே ––திருப் பல்லாண்டு பாடிக் கொண்டு போருவார் வேணும் -சத் சஹாவாசம் வேணும் –வேணும் –கொட்டிக் கொண்டு புறப்படும் போதே எதிரே நின்று காப்பிடுவார் வேணும் –உனக்கும் பாகவதருக்கும் பல்லாண்டு பாட பெரியாழ்வாரும் நம்மாழ்வாரும் போல்வார் வேணும் –

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றமுடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசல் கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றியாம் யாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்--19-போற்றுகையாவது -திருப் பல்லாண்டு பாடுகை-பெரியாழ்வாரைப் போலே வந்தோம் –போற்றி –புகழ்ந்து –வந்தோம்பெரியாழ்வாரைப் போலேயும் வந்தோம் –அல்லாதாரைப் போலேயும் வந்தோம் –புகழ்ந்துசத்ரோ ப்ரக்யாத வீரஸ்ய-என்று
மாற்றாரும் தங்களைத் தோற்பித்த வீர்யத்தை சொல்லி புகழ்வார்கள்-இவர்களும் தங்களை நலிந்த நலிவை சொல்லிப் புகழும் அத்தனை இறே –எங்களைத் தோற்பித்த குணங்களை சொல்லிப் புகழ்ந்து
அழித்தாய் யுன் திருவடியால் (6-2) -நின் தன்னால் நலிவே படுவோம் -என்று வருகை இறே யுள்ளது-

பிரானடிக் கீழ் பிரியாது -14-10
சாயை போலே அணுக்கர்களே -பெரியாழ்வார் திருமொழி -5-4-11-

வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் மனத்தே
கோயில் கொண்ட கோவலனைக் கொழும் குளிர் முகில் வண்ணனை
ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர் தம் அமுதத்தினை
சாயை போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே -5 -4-11 –
ஸ்ரீ எம்பாரை சிலர் -இப் பத்துக்கு பொருள் என் -என்று கேட்க –நான் ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாதத்தில் இது கேட்டிலேன் – ஆகிலும் நீங்கள் கேட்ட இவ் அர்த்தம் போராது என்ன ஒண்ணாது –-இப்பொழுதே கேட்டு உங்களுக்கு சொல்ல ஒண்ணாதபடி
ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்தேற எழுந்து அருளினார் –ஆகிலும் இப்பொழுதே உங்களுக்கு சொன்னேன் ஆக வேணும் -என்று ஸ்ரீ உடையவர் திருவடி நிலைகளை எடுத்து தம் திரு முடியிலே வைத்துக் கொண்டு – இப்பொழுது ஸ்ரீ உடையவர் எனக்கு அருளிச் செய்தார் கேட்கல் ஆகாதோ -என்று பாட வல்லார் -சாயை போலே -தாமும் -அணுக்கர்களே -என்று அருளிச் செய்தார் –
(ராமானுஜ பதச்சாயை தாமே இவ்வர்த்தம் அருளிச் செய்யும் படி ஆய்த்தே )தாமும் -என்கைக்கு அடி –
அவர்கள் ஏற்றதை நினைத்து-அதாவது – பிரயோஜனாந்தரங்களையும் -உபாயாந்தரங்களையும் -கணிசித்து – மங்களா சாசனம் பண்ணுகை அன்றிக்கே – தத் காலத்துக்கு மங்களா சாசனம் பண்ணுகை அன்றிக்கே – கழிந்த காலத்துக்கும் மங்களா சாசனம் பண்ணுகை இறே ஏற்றம் –
(அன்று உலகு அளந்தாய் அடி போற்றி –இன்று யாம் வந்தோம் ஆண்டாள் போல் )
இப்படிக்கொத்த தம்மை தம்முடைய வம்சத்தில் ஏழு படி கால் இல்லை என்னும் இடத்தை ஏழாட்  காலம் பழிப்பிலோம்  -என்று அருளிச் செய்தார் இறே –பாடுகை யாவது – உன் செவ்வடி செவ்வி திருக் காப்பு -என்கை-சாயை போலே என்றது – புருஷனுடைய சாயை அவன் புக்க இடத்தே புக்கு – புறப்பட்ட இடத்தே புறப்பட்டு –
ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி அவன் இட்ட வழக்கமா போலே –இத் திரு மொழி கற்றார்க்கும்
தங்களுக்கு என்ன ஒரு பிரவ்ருத்தி நிவ்ருதிகள் இன்றிக்கே ஈஸ்வரனுக்கு அந்தரங்கர் ஆகப் பெறுவார்கள் –செவ்வடி செவ்வி திருக் காப்பு -என்று பாட வல்லார் நிழலும் அடி தாறுமாகப் பெறுவார்கள்
–அடி தாறு -திருவடிகளில் ரேகைகள்-சாயை போலே பாட வல்லார் – நிழல் உண்டாக பாட வல்லார்-நிழல் ஆவது -குளிர்த்தி-குளிரப் பாட வல்லார் என்றும் சொல்லுவார்கள்

பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னைப் பாரின் மேல்
விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதை சொல்
மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ் பிரியாது என்றும் இருப்பரே–14-10-இது தான் சம்சார பேஷஜம் என்று தம்தாமுடைய ஹிருதயத்தில் வைத்துக் கொண்டு-ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபிபேதி குத்ஸ் சன –தை ஆ -9-என்கிறபடியே -இருக்குமவர்கள்-பரம பிராப்யமாய் – நிரதிசய போக்யமாய்- இருந்துள்ள திருவடிகளை – உடையவன் திருவடிகளிலே உனக்கே நாம் ஆட்  செய்வோம் என்று-பிரியாது என்றும் இருப்பரே— சிலரை கண்டீரே -என்று கேட்க வேண்டாதே என்றும் ஒக்க தங்கள் கண்ணாலே கண்டு நித்ய அனுபவம் பண்ணுமதுவே யாத்ரையாகப் பெறுவர்-தாள் -என்கையாலே
பிராப்யாதிக்யமும் போக்யதையும் சொல்லுகிறது –

————————————————————————————–

ஸ்ரீ கோயிலே கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-