ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
திருநாமம் கற்க வில்லை -சொல் கற்றேன் -அர்த்தம் அறியாமல் கடாக்ஷம் பெற்றது -திரு நாமம் அஹ்ருத்யமாக சொன்னதால் என்றம் கனி கிடைக்காமல் காய் உண்பாரைப் போல் சொல் கற்றேன்–ஸர்வ ஸப்த வாஸ்யன் -அனைத்தும் அவனையே சொல்லும் -முனியே நான்முகனே -போன்ற சொற்களும் அவனையே சொல்லும்-நாராயண அனுவாஹம் நேராகச் சொல்லுமே-அதிகாரம் இல்லை எனக்கு -ருக் -வேத வாக்கியம் அறியாதவன் –பூ ஸூரர்கள் முறை மாறாமல் நீதி வானவர் போல் வணங்க நானும் நப்பாசை கொண்டு -வினைகள் பூரித்து நொந்து கொள்ள வேண்டும் படி உள்ளனவே-பாமுரு மூவுலகும் -7-6-இதன் விவரணம்-ஓ ஓ என்று அடையாமல் -ஆழ்வார் ஆர்த்தி நம்மால் சொல்ல முடியாதே என்பர் அம் மங்கி அம்மாள் -அதில் வியாக்யானம்-வினையோடு நொந்து இங்கு -வினை -ஸஹஜ பக்தி -பகவத் ப்ரீதியையே சொன்னவாறு-லௌகிக விஷயத்துக்கு மடைமாற்ற விடமுடியாமல் தடுக்கும்-வினை என்பது கர்மம் அர்த்தம் கொண்டால் லௌகிக விஷய ஆசையை பகவத் விஷயத்தில் மாற்ற முடியாமல் தடுக்கும்-அரன் அயன் பெற்றார்கள் என்று கொல் சார்வது -அங்கு அதிகாரம் இல்லாத நான் வணங்குகிறேன் இங்கு ப்ரயோஜனாந்தர பரர்களே அடைந்தார்கள் எனக்கு கிட்டவில்லை அங்கு-ஆர்த்தி மிக்கு உரைத்த பாசுரம் –
அவதாரிகை–திருக் கண்களால் குளிர கடாஷித்தான் என்று இறே கீழ் நின்றது – அல்லாதார் மேல் வையாதே- தம்மேல் விசேஷ கடாஷம் பண்ணுகைக்கு நிபந்தனம் என் -என்று ஆராய்ந்தார் –அஹ்ருதயமாக-திரு நாமத்தை சொன்னேனே என்ன – அத்தாலே ஆகாதே -என்கிறார் –
(திருமால் இருஞ்சோலை மலை என்றேன் என்ன திருமால் வந்து நெஞ்சு நிறைய புகுந்தானே )
இப்படி அனுபாவியனான ஸர்வேஸ்வரனுடைய திருக்கண்கள் உம்முடைய திரு உள்ளத்திலே
அபரோக்ஷ சித்தமாம் படி அனுபவித்து -இதுக்குப் பாசுரம் இட்டுச் சொல்லுவதும் செய்யா நின்றீர்
இனி வேண்டுவது என் என்ன–விலக்ஷணமான புருஷர்கள் ச க்ரமமாக ஆஸ்ரயித்து அனுபவிக்கிறாப் போலே பூர்ண அனுபவம் பண்ணப் பெறாமையாலே தரித்து இருக்கைக்காக அவன் திரு நாமத்தைச் சொல்லப் பெற்றேன் இத்தனை யன்றோ என்கிறார் –
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு–அவதாரிகை--இவரைத் திருக்கண்களால் கடாக்ஷித்தான் என்று இறே கீழ் நின்றது
அல்லாதார் மேல் வையாதே நம் மேலே இவ்விசேஷ கடாக்ஷம் பண்ணுகைக்கு நிபந்தம் என் என்று ஆராய்ந்தார்–அஹ்ருதயமாகத் திரு நாமத்தைச் சொன்னேன் அத்தாலே அன்றோ என்கிறார் –
இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகளந்த
திருத் தாளிணை நிலத் தேவர் வணங்குவர் யாமுமவா
ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து கனியின்மையின்
கருக்காய் கடிப்பவர் போல் திருநாமம் சொல் கற்றனமே – -64 –தலைவன் பேர் கூறி தரித்து இருத்தலைத் தலைவி தோழிக்குக் கூறி இரங்கல் –
பா மருவு வேதம் பகர் மால் குணங்களுடன்
ஆ மழகு வேண்டர்பாடாம் அவற்றை -தூ மனத்தால்
நண்ணியவனைக் காண நன்குருகிக் கூப்பிட்ட
அண்ணலை நண்ணார் ஏழையர்–66–கற்பாரில் – நிரவதிக போக்யங்களான கல்யாண குணங்களை யுடைய ஸ்ரீ எம்பெருமான் உடைய பிராப்யத்வம்-பிராபகத்வம்-விரோதி நிவர்த்தகம் ஆகிற இவ்வோ ஸ்வபாவங்களை அனுசந்தித்து இப்படி குணாதிகன் ஆனவனை அனுபவிக்க வேணும் என்று ஆசைப்பட்டு கிடையாமையாலே அம்பு பட்டாரைப் போலே கிடந்தது உழலுகின்ற -உழைக்கின்ற -அழைக்கின்ற –பாமருவு மூவுலகில் அர்த்தத்தை-பா மருவு வேதம் இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -இதர விஷயத்தில் சாபல்யராய்-தத் அலாபத்தாலே கூப்பிடுகிற சம்சாரிகள் நடுவே
ஸ்ரீ பகவத் அலாபத்தாலே கூப்பிடுகிற சர்வாத்ம சேஷியான ஸ்ரீ ஆழ்வாரை ஆஸ்ரயியார்கள்-
அதுக்கு அடி இதர விஷய சாபல்யம் இறே-இப்படி ஸூலபராய் பிராப்த சேஷியான ஸ்ரீ ஆழ்வாரை லபியாதே இதர விஷய சாபல்யர் ஆவதே என்று வெறுக்கிறார் –
இருக்கார் மொழியால் –இருக்கில் ஆர்ந்த மொழியாலே –பிரதிபத்தாக்களுடைய புத்தி விசேஷங்களாலே–அறை வயிறாகவும்–பதராகவும் பார்க்கலாயிருக்கும் இடங்கள் உண்டாய் இருக்கும் ஆயிற்று –வேதங்களிலே அவன் விபூதியை பரக்க சொல்லா நின்றால்-அதிலே ஏக தேச பூதரானவர்கள் பக்கலிலே பரத்வ பிரதி பத்தியை பண்ணியும் – ப்ரசம்சா பரம் என்றும் சொல்லா நிற்பார்கள் –அவன் ஸ்வரூப ரூப குண விபூதிகளை பேசுகிற இடத்தில் – ஸ்வரூப ரூப குண விபூதிகளில் பிரமிப்பார்க்கும்
பிரமிக்க அவகாசம் இல்லாதபடி பேசுகிற அநந்ய பரமான நாராயண அநு வாகாதிகளை ஆயிற்று –
அதில் ஆர்ந்த (ஆர்த்த )மொழியாக சொல்லுகிறது –சர்வே வேதா யத்ர ஏகம் பவந்தி -என்ற
வாக்யங்களுக்கும் ஒருவனே வாச்யன் ஆகை இறே உக்தம் —(ஓதுவார் ஒத்து எல்லாம் அவனையே சொல்லுமே )உத்க்ருஷ்ட பதார்த்தங்களுக்கு வாசகமான சப்தங்களை(சிவா சம்பு போன்ற சப்தங்கள் )
இவ் அநு வாகத்தில் நின்றவன் பக்கலிலே பிரயோக்கிகை யாலே எல்லாம் அவனையே சொல்லுகிறதாக வேணும் இறே –நெறி இழுக்காமை – பகவத் சமாராதனம் ஆகிற வைதிக மரியாதையை தப்பாமே –உலகு அளந்த திருத் தாளிணை –இவை அறியுமாம் -அறியாது ஒழியுமாம் –
என் உடம்பை நான் விடேன் -என்று ஸ்வீ கரிக்கும் ஸ்வா பாவனாய் உள்ளவனை –இவை அறியாது இருக்கச் செய்தே –தானே எல்லை நடந்து-மீட்டுக் கொண்டான் இறே –நிலத் தேவர் வணங்கும் –சம்சாரத்தில் வர்த்தியா நிற்கச் செய்தே –-விண்ணுளாரிலும் சீரியர் –என்னும்படியான பூஸூரர் ஆனவர்கள் – உலகு அளந்த திருத் தாளினை நெறி இழுக்காமை வணங்குவர் –யாமும் –அவர்கள் உடைய பரிகரம் இன்றிக்கே இருக்கிற நானும் –அவா ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து –
சப்தாதி விஷயங்களில் உண்டான அவாவை –பகவத் விஷயத்தில் ஒருங்க பண்ண ஒட்டாத பாபத்தோடும்- அத்தை அனுஷ்டித்த என்னோடும் கூட நொந்து – இப்படி இருப்பதொரு பாபம் உண்டாவதே – இத்தை அனுஷ்டிக்கைக்கு-நான் ஒருவன் உண்டாவதே -என்று நொந்து–
கனி இன்மையில் கருக்காய் கடிப்பவர் போல் – நெறி இழுக்காமை வணங்கும் படி அவர்கள் தம் பாவம் எனக்கு இல்லை யாகிலும் – கனி இல்லாமையாலே கருக்காய்-மெல்லுவாரைப் போலே — பழம் இல்லாமையாலே பசும் காயைக் கடிப்பாரைப் போலே –திரு நாமம் சொல் கற்றனமே – இதில் அர்த்த அனுசந்தானம் எனக்கு இல்லை –-இதில் நான் உட் புகாத நிலை பார்க்கிறிலேன் – நிர்ஹேதுகமாக கடாஷித்தான் இத்தனை –அன்றிக்கே-அவா -இத்யாதி –-பகவத் விஷயத்தில் அபிநிவேசத்தை அங்கு நின்றும் மீட்டு இதர-விஷயங்களிலே மடை மாற ஒட்டாத வினை உண்டு –பக்தி –அத்தோடும் –இப்போது பகவத்-அலாபத்தாலே படுகிற கிலேசத்துக்கு ஹேதுவாகையாலே பக்தியை வினை என்னலாம் இறே –பகவானை அடையாமல் இருக்க கர்மம் காரணம் நமக்கு பக்தி இல்லை நமக்கு அடையாத போது துன்பம் இல்லை நமக்கு ஆழ்வாருக்கு பக்தி உண்டே -ஆகவே அலாபத்திலே கிலேசம் உண்டே-அநிஷ்டாவஹம் பாபம் இத்தனை இறே – இது இல்லாதார் உண்டு உடுத்து சுகமே திரியா நின்றார்கள் இறே-கனி இன்மையால் கருக்காய் கடிப்பார் போல் – கனி இல்லாமையால் கருக்காய் கடிப்பார் போல் ஆயிற்று- இவருடைய அபிநிவேசத்துக்கு திரு நாமம் –அவனைக் கண்ணாலே கண்டு கையாலே அணைக்க-ஆசைப்பட்டாருக்கு அவன் பேரைக் கொண்டு என் செய்வார்–இனி மூன்றாவது நிர்வாகம்
காயாக இருக்கும் பொழுது கடித்தால் கனி யாகாதே -அன்றிக்கே–கனி இன்மைக்கு இங்கனே பொருள் ஆகவுமாம் –மேல் கனி இன்றிக்கே ஒழியும்படி முன்பே கருக்காய் கடிப்பாரைப் போலே – நித்ய ஸூரிகளுக்கு போக்கியம் அன்றிக்கே ஒழியும்படி இவ் வஸ்துவை நான் பேசி அழித்தேன் என்று ஆகவுமாம் –பரமே வணங்கும்படி –அவர்களைப் போல் -சதுர்த்த வர்ணத்வாத் -அதிகாரம் இல்லை யாகிலும் திரு நாமம் மாத்ரம் சொன்னேன் – இத்தை வ்யாஜ்யமாக்கி நிர்ஹேதுகமாக கடாஷித்தான் என்றபடி –அவர்களைப் போல் பக்தி பரவசனாய் அனுபவிக்க பெறாமை இழந்தேன் என்றும் –அவர்கள் அனுபவிக்கும் விஷயத்தை கிட்டி அவத்யத்தை விளைத்தேன் என்றும் விஷாதத்திலே தாத்பர்யம் –கற்றனமே ஏகாரம் -இரக்கம்-ஒருக்கா- ஈறு கெட்ட வினை எச்சம்–
நாயகி திரு நாமங்களை சொல்லி தரித்து இருந்தமை –ப்ராஹ்மண உத்தமர்கள் வேத மந்த்ரங்கள் ஓதி அனுபவிக்கும் அவனை-கருக்காய் கடிப்பவர் போல் திருநாமம் சொல் கற்றனமே-என்கிறார் –
கண்ணாலே கண்டு கையாலே அணைக்க ஆசைப் பட்டவருக்கு திரு நாம சங்கீர்த்தனம் மட்டுமே போதாதே–இருக்கார் மொழியால்-ருக்காதி வேதங்கள் பொருந்திய புருஷ சூக்தம் -அன்றிக்கே –திரு மந்த்ரம் –நெறி இழுக்காமை உலகளந்த-திருத் தாளிணை -வழி படும் முறைமையில் தவறாமல் சர்வ ஸூலபனானவன் திருவடித் தாமரைகளை வினையொடும் எம்மோடும் நொந்து-அனுபவிக்கப் பெறாத பிரதிபந்தகங்காளல் வெறுத்து கனியின்மையின்-கருக்காய் கடிப்பவர் போல்-கருக்காய் -பசுங்காய் -இளங்காய் -நைச்சயானு சந்தானம்-யாமுமவா-யாமும் அவ்வோ -அப்படி பாக்யம் செய் தேன் அல்லேன் என்றபடி –அவா ஆசைப்பட்டது தோன்ற ஒருக்கா வினையொடும் -பரிஹரிக்கப் போகாத வினை என்றபடி – அபரிஹரியமாய் இருபத்தொரு பாபம் உண்டாவதே-இத்தை அனுஷ்டிக்கைக்கு நான் உண்டாவதே –
இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகளந்த திருத் தாளிணை நிலத் தேவர் வணங்குவர்-வேதங்கள் எல்லாம் தனக்குள்ளே யாகும்படியான மூல மந்திரமான மொழியாலே (ஓம் என்னும் படி உள்ளத்துக்கு எல்லாம் சுருக்காய் இருக்குமே ) ஆஸ்ரயண பிரகாரத்தில் ஒன்றும் வழுவாதபடி அந்த மந்த்ரார்த்த ப்ரகாசமாய்க் கொண்டு ஸகல லோகங்களையும் தனக்குள்ளே யாக்கின திருவடிகளை
பூமிக்கு தேவர்களான ப்ராஹ்மண உத்தமர் ஆஸ்ரயித்து அனுபவியா நிற்பர்கள்–யாமுமவா-யாமும் அவா அந்த அதிகாரம் இல்லாத நாமும் அப்படியோ-அல்ல என்றபடி–ஆனால் உம்முடைய அளவு என் என்னில்–ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து–அனுபவ விரோதியான பாபத்தை ஒருங்க விடாமையையும் பிரதிபந்தகம் யுண்டானால் ஆறி இருக்க ஒண்ணாதபடி சபலமான ஸ்வரூபத்தையும்
பார்த்து ஈடுபட்டு -துன்பப்பட்டு–கனியின்மையின் கருக்காய் கடிப்பவர் போல்-பழம் கிடையாமையாலே பசுங்காயைத் தின்பாரைப் போலே–திருநாமம் சொல் கற்றனமே–பூர்ண அனுபவம் பெறாமையாலே சத்தை கிடைக்கைக்காக அவன் திரு நாமத்தைச் சொல்லுகையை அப்யஸித்தோம் (இத்தனை ) என்றபடி–இப் பாட்டு–கலந்து பிரிந்த நாயகி–கலவி கிட்டாமையாலே நாயகனான ஈஸ்வரனுடைய குண நாமங்களைத் தான் தரித்து இருக்கைக்காக உரைத்தேன் என்று பாங்கியிடம் உரைத்தலாகவுமாம்-
சொல் எடுத்துத் தன் கிளியைச் சொல்லே –திரு நெடும் -13-திருமாலைப் பாடக் கேட்டு வளர்த்ததனால் பயன் பெற்றேன் -திரு நெடும் -14–என்றதாய்க் கொண்டு-திரு நாமத்தால் நாயகி தரித்த இடங்களும் உண்டு இறே
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு–வியாக்யானம்–இருக்கார் மொழியால்–இருக்கில் ஆர்ந்த மொழியாலே
பிரதிபத்தாக்களுடைய புத்தி விசேஷங்களாலே அரை வயிறாகவும் பதராகவும்-பார்க்கலாய் இருக்கும் இடங்கள் உண்டாய் இருக்குமாயிற்று வேதங்களிலே-அவன் விபூதியைப் பரக்கச் சொல்லா நின்றால் –
அதில் ஏகதேச பூதரானவர்கள் பக்கலிலே பரத்வ பிரதிபத்தியைப் பண்ணியும்-ப்ரஸம்ஸா பரம் என்றும் சொல்லா நிற்பர்கள் இறே–அவன் ஸ்வரூப ரூபா குண விபூதிகளைப் பேசுகிற இடத்தில்-ஸ்வரூப ரூப குண விபூதிகளில் பிரமிப்பாரும் பிரமிக்க அவகாசம் இல்லாதபடி பேசுகிற அநந்ய பரமான நாராயண அநு வாகாதிகளை யாயிற்று இதில் ஆர்ந்த மொழியாகச் சொல்லுகிறது–ஸர்வே வேதா யத்ரைகம் பவந்தி -(யஜுஸ் ஆர ப்ரச்னம் -3)இத்யாதியால் எல்லா வாக்யங்களுக்கும் அவனே வாஸ்யனாகை இறே யுக்தம்-உத்க்ருஷ்ட பதார்த்தங்களுக்கு வாசகமான ஸப்தங்கள் இவ் வநுவாகத்திலே நின்று அவன் பக்கலிலே ப்ரயோகிக்கையாலே எல்லாம் அவனையே சொல்லிற்று ஆக வேணும் இறே–நெறி இழுக்காமை-பகவத் ஸமாராதநம் ஆகிற வைதிக மர்யாதையைத் தப்பாமே–உலகளந்த திருத் தாளிணை–இவை அறியவுமாம்-அறியாது ஒழியவுமாம்–என்னுடைமையை நான் விடேன் -என்று ஸ்வீகரிக்கும் ஸ்வ பாவனாய் யுள்ளவனை-இவை அறியாதே இருக்கச் செய்தேயும்-தானே எல்லை நடந்து மீட்டுக் கொண்டான் இறே–நிலத் தேவர் வணங்குவர்–ஸம்ஸாரத்திலே வர்த்தியா நிற்கச் செய்தேயும்–விண்ணுளாரிலும் சீரியர் –திரு விருத்தம் –79- என்னும்படியே பூ ஸூரர் ஆனவர்கள் உலகு அளந்த திருத்தாளிணை நெறி இழுக்காமை வணங்குவர்–யாமும்-அவர்களுடைய பரிகரம் இன்றிக்கே இருக்கிற நானும்–அவா ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து கனியின்மையின்
கருக்காய் கடிப்பவர் போல் திருநாமம் சொல் கற்றனமே—
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்–வியாக்யானம்–இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகளந்த
திருத் தாளிணை நிலத் தேவர் வணங்குவர் யாமுமவா ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து-கனியின்மையின் கருக்காய் கடிப்பவர் போல்-கனிந்த பழம் இல்லாத போது காய்ப்பழத்தைப் புஜிப்பாரைப் உபாயத்தில் ஸூ விசத ஞானமும் அனுஷ்டான சக்தியும் உண்மைக்கு கனி நிதர்சனமும்
மந்த ஞான சக்திகளுக்குக் கருக்காயும்–திருநாமம் சொல் கற்றனமே–அவன் அறியப் பரி பூர்ண உபாய கர்ப்பமாய் அவன் திரு நாமத்தை உட் கொண்ட சொல்-நமோ நாராயணாய என்பது அத்தை உச்சரித்தேன் அத்தால் கடாக்ஷத்தைப் பெற்றேன் என்றதாயிற்று –
தாத்பர்யம்–கீழ் சர்வேஸ்வரன் கடாக்ஷிக்க காரணம் ஆராய்ந்து திருநாமத்தை அஹ்ருதயமாகச் சொன்னதையே வியாஜமாக்கி நிர்ஹேதுகமாக அருளினான் என்று உணர்ந்து அருளிச் செய்யும் பாசுரம் மந்தமாதிகளாகப் பிரமிக்கும் அந்த சப்தங்கள் போல் இன்றிக்கே அசாதாரண நாராயண நாமம்
ஸூ ஸ்பஷ்டமாக அவனையே காட்டுமே-திருநாம அர்த்த அனுசந்தான பூர்வகமாக பகவத் சமாராதானம் செய்யும் பூ ஸூரர்கள் போல் இன்றிக்கே அர்த்தம் அனுசந்தானம் இல்லாமலே திருநாம சொல்லையே சொன்னதையே வியஜமாக்கி கடாக்ஷித்தான் என்கிறார் –
7-6-பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!ப்ரவேஸம்-
இப்படித் தெளிந்தால்,(தெளிவுற்ற ஆழ்வார் -அவனே உபாயம் உபேயம் என்று தெளிந்த பின்பு )
பின்னைச் செய்வது கூப்பிடுகை போலே காணும்;
இல்லையாகில் ‘சம்சாரம் நன்று’ என்று கலங்கினார் ஆவரே.
‘அம்மங்கி அம்மாள்’ இத் திருவாய்மொழியில் பாடக் கேட்டு அனுபவித்துப் போரும் இதற்கு மேற்பட,
இதில் ஓடுகிற ஆர்த்திக்கு நம்மாற்பாசுரம் இட்டச் சொல்லப் போகாது’ என்று பணிக்கும்’ என்று அருளிச் செய்வர்.
மேலே, ‘ஆழி எழச் சங்கும்’ என்ற திருவாய்மொழியிலே,
சர்வேஸ்வரன் காட்டிக் கொடுத்த வெற்றிச் செயல்களை அனுபவிக்கைக்கு உறுப்பாக,
அவனுடைய வீரச் செயல்களை அருளிச் செய்தார்;
அருளிச் செய்த முகத்தாலே
அவனுடைய அவதாரங்களையும்
அதற்கு அடியான கிருபை முதலான குணங்களையும் நினைத்து,
‘இக் குணங்களும் நடையாடா நிற்க,
இவற்றிலே சம்பந்தம் உண்டாய் இருக்க,
தாங்கள் சேதநராய் இருக்க,
சம்சாரிகள் இதனை இழப்பதே!’ என்று ஆச்சரியப்பட்டார் மேல் திருவாய்மொழியில்.
‘அவர்கள் விருப்பம் இல்லாமையாலே இழக்கிறார்கள்;
விருப்பமுடைய நாம் இழப்போம் அல்லோம்;
அவனுடைய அவதாரங்களையும்
வடிவழகையும் அனுபவிப்போம்,’ என்று பார்த்த விடத்து,
அவற்றை அப்போதே கிட்டி அனுபவிக்கப் பெறாமல்
மிகவும் துக்கித்தவராய்ச்
சர்வேஸ்வரனுக்குப் பரம பதத்திலும் இருப்பு அரிதாம்படி ஆர்த்தியாலே
நிரம்பிற்று ஒரு கடல் கையெடுத்துக் கூப்பிடுமாறு போலே கூப்பிடுகிற கூப்பீடு கேட்டு
அவ் விருப்புக் குலைந்து வந்து முகங்காட்ட வேண்டும்படி,
அவன் பிராப்பியனாய் இருக்கிற படியையும்-(1-2-பாசுரங்கள் -தாமரைக் கண்ணாவோ -ஸ்ப்ருஹணீயன் )
பிராபகனாய் இருக்கிறபடியையும் -(3-7–பாசுரங்கள் -வந்து எய்துமாறு அறியேன் )
விரோதிகளை அழிக்கும் தன்மையனாய் இருக்கிறபடியையும் சொல்லி,
கேட்டாரடைய நீராகும்படி பெரு மிடறு செய்து கூப்பிடுகிறார்.
‘பஹவோ ந்ருப’ – சக்கரவர்த்தி, ‘பெருமாளைத் திருமுடி சூட்ட’ என்று கோலி,
‘அறுபதினாயிரம் ஆண்டு ஒரு தலை மிதிக்க ஒரு தலை மேல் எழும்படியான இராச்சியத்தை வருந்தி ஒருபடி அடிப்படுத்தினோம்;
இதனை ஒரு சிறு பிள்ளையின் தலையிலே வைத்தால் பொறுக்குமோ, போறாதோ?’ என்று விசாரித்து,
‘இதனை உலகத்தோடே கூட்டிப் பார்ப்போம்’ என்று கோலி,
அரசர்கள் எல்லாரையும் திரட்டி,
‘நான் இங்ஙனே பெருமாளைத் திருமுடி சூட்டப் பாரா நின்றேன்: உங்களுக்கு இஷ்டமோ, இன்றோ?’ என்று கேட்க,
உடனே, ‘கிழவா! போகாய்’ என்ன, கிழவா போகாய்’ என்றது
‘அநேக வர்ஷ ஸாஹஸ்ரோ வ்ருத்தஸ்த்வம் அஸி பார்த்திவ
ஸராமம் யுவராஜாநம் அபிஷிஞ்சஸ்வ பார்த்திவம்’-(ஸ்ரீராமா. அயோத். 2 : 21 .)
(இச்சா மோஹி மஹா பாஹூம் ரகுவீரம் மஹா பலம்
கஜேந மஹதா யாந்தம் ராமம் சத்ரா வ்ருதா நநம –அயோத்யா -2-22-
இச்சா மோஹி -ஆசைப்படுகிறோம் அன்றோ
மஹா பாஹூம் -நீண்ட திருக் கைகளை யுடையராய்
ரகுவீரம்-ரகு குல ஸ்ரேஷ்டராய்
மஹா பலம் -பெரும் பலத்தை யுடையரான
கஜேந மஹதா -மஹதா கஜேந -பெரிய யானையின் மேலே
யாந்தம் -எழுந்து அருளுமவராயும்
ராமம் -ஸ்ரீ ராமனை
சத்ரா வ்ருதா நநம –குடையால் வெய்யில் படாதபடி மறைக்கப் பட்ட திரு முகத்தை யுடையவராயும்
இச்சா மோஹி -ஆசைப்படுகிறோம் அன்றோ –)
என்றதனைத் திருவுள்ளம் பற்றி.
‘கதம்நு மயி தர்மேண ப்ருதிவீம் அநுஸந்ஸதி
பவந்தோ த்ரஷ்டும் இச்சந்தி யுவராஜம் மமாத்மஐம்’-என்பது, ஸ்ரீராமா. அயோத். 2 : 25.
நாம் ஒருப்பட்ட காரியம் நன்றாக விழுந்தது; அரசர்கள் கூட்டம் இப்படி விரையப் பெறுவதே!’ என்று
அதிலே மிகுந்த உவகையனாய், அந்த உவகையை நெஞ்சிலே இட்டு வைத்து,
‘அதனை இவர்கள் வாயாலே சொல்லக் கேட்கலாகாதோ?’ என்று நினைத்து,
‘வாரீர்கோள்! அறுபதினாயிரம் ஆண்டு அரசைச் செலுத்துகிற இடத்து. இற்றைவரை எனக்கு என்று ஒரு சுகத்தைக் கோலாதே
உங்கள் இரட்சணத்துக்கு ஆமவையே தேடிக்கொடு போந்த நான். ஒரு வார்த்தை சொன்னால்,
‘இப்போது நீ இருந்தாயாகில் வீகம் என்? கிரமத்திலே செய்து கொள்ளுகிறோம்,’ என்னதல்:
அன்றாகில், ‘உனக்குப் பிரியமாகில் அப்படிச் செய்யலாகாதோ?’ என்று ஒரு வார்த்தை சொல்லி ஆறியிருத்தல் செய்கை ஒழிய,
படுகொலைக்காரர் கையிலே அகப்பட்டார், ‘தப்ப வேணும்’ என்று பார்க்குமாறு போலே
நீங்கள் இங்ஙன் கூப்பிடுகைக்கு நான் செய்த குற்றம் என்?’ என்ன,
‘ஓ அரசனே! உன் பிள்ளையான ஸ்ரீராமபிரானுக்கு மங்களகரமான குணங்கள் பல இருக்கின்றன’ என்கிறபடியே,
‘‘தே தம் ஊசு: மஹாத்மாநம் பௌரஜாபதைஸ்ஸஹ
பஹவோ ந்ருப கல்யாண குணா: புத்ரஸ்ய ஸந்தி தே’-என்பது, ஸ்ரீராமா. அயோத். 2 : 26.
எதிரிகள் அம்பால் அழியப் பெற்றது இல்லை உன்னுடைய தேசம்;
உன் மகனுடைய குணத்தாலே நாட்டைப் படுகொலைக் குத்தினாய் காண் நீ,’ என்றார்கள் ஆயிற்று. என்றது,
‘நாங்கள் குணங்களால் வெல்லப்பட்டவர்களாய் இவ்வார்த்தை சொன்னோமித்தனை அல்லது ஒரு காரியபுத்தியோடு
சொன்னோம் அல்லோங்காண்,’ என்றார்கள் என்றபடி.
‘தாதுக்களுக்கு இமயமலை போன்று குணங்களுக்குப் பிறப்பிடமாய் இருக்கின்றான்,
ஒருவராலும் அசைக்கக் கூடாத ஆற்றலை யுடையனாயும் இருக்கிறான்,’ என்கிறபடியே,
‘ஜ்ஞாந விஜ்ஞான ஸம்பந்நோ நிதேஸே நிரத: பிது:
தாதுநாம் இவ ஸைலேந்த்ரோ குணாநாம் ஆகரோ மஹாந்’-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 15 : 21.
தாதுக்களானவை ‘இன்ன மலையிற்பொன்’ என்றவாறே விலை போமாறு போலே,
புறம்பே குணங்கள் சிலவற்றைக் கண்டால்,
பெருமாள் பக்கல் குணம்’ என்று இட்டாயிற்று அங்கு விலை போவது,
‘இவ் வடித்தில் குணம்’ என்றாயிற்றுப் புறம்பு விலை போவது;
இப்படிப் பட்டவனுடைய குணங்களைச் சொல்லிக் கூப்பிடுகிறார்.
ஆறாம் திருவாய் மொழியில்
இப்படி ஆஸ்ரித பவ்யனாய் விரோதி நிவாரகனான சர்வேஸ்வரனுடைய குணாதிக்யத்தைக் கீழே அனுசந்தித்து
அவனை ஒழிய வேறு விரோதி நிவர்த்தகர் இல்லாமையால்
அவனுடைய காரணத்வாதி ப்ரயுக்தமான சம்பந்த்ய விசேஷத்தையும்
தத் கார்யமான சர்வாத்ம பாவத்தையும்
ரக்ஷணைகாந்தமான பரதவ ஸுலப்யங்களையும்
அவற்றோடு கூடின போக்யதா அதிசயத்தையும்
அந்த போக்யதா ப்ரயுக்தமாய் அத்யுஜ்ஜ்வலமாய் யுள்ள ப்ராப்யதையையும்
அந்த ப்ராப்யதா ப்ரகாசகமான ஆபி ரூப்ய அதிசயத்தையும்
ஸ்வேந ரூபேணவும் காரண புருஷ ரூபேணவும் உண்டான ரக்ஷண பிரகாரத்தையும்
தத் உபயுக்தமான மாலி ப்ரப்ருதி நிரசனத்தையும்
விபீஷண பஷ பாதத்தையும்
ஸ்வ ஜன ரக்ஷணத்தையும்
அனுசந்தித்து -ஏவம் பிரகார விசிஷ்டனான சர்வேஸ்வரனுடைய ப்ராப்தியாலும் பஷ பாதத்தாலும் அவனைக் கொண்டு
விரோதியைக் கழித்துக் கொண்டு அவனை பிராபிப்பதாக அத்யார்த்தராய்க் கூப்பிடுகிறார் –
சரணாகதி பண்ணி 6-10-
இந்திரியங்கள் நலிய அடுத்து -7-1-
பின்பு தாய் பாசுரம் கங்குலும் பகலும் -7-2-
திருநாம ப்ரஸ்த்துதம் -தரித்து தென் திருப்பேரை -வேத ஒலி கேட்டு வியசனம்-7-3-
விஜய பரம்பரை காட்டி சமாதானம்-7-4-
இலங்கை செற்ற நேரே -ராமாவதாரம் பிரஸ்த்துதம்
கற்பாரை -அனுபவம்-7-5-
மோக்ஷம் கிடைக்க உபாய பாவம் நீயே -கூப்பாடு -7-6- கை கூப்பி –
ப்ராப்யம் 1-2-
ப்ராபகம் -3-7-
அநிஷ்டம் தொலைப்பவன் -8-9-
இஷ்ட பிராப்தி -10 பாசுரம்
முமுஷுக்களுக்கு அனுபாவ்யமான குண யோகம் படைத்தவன் -இதுவே இப்பதிக அர்த்தம்-
பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!
பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ!
தாமரைக் கண்ணாவோ!தனியேன் தனி ஆளாவோ!
தாமரைக் கையாவோ! உன்னை என்று கொல் சேர்வதுவே?–7-6-1-
பாமரு மூன்று உலகும் படைத்த பற்பநாபாவோ –-பா என்பது,பதார்த்த வாசகமாய்
தேவர் மனிதர் முதலான பொருள்களைக் காட்டுவதாய்,-பா மருவி இருந்துள்ள;
அதாவது,‘பொருள்களினுடைய நெருக்கத்தை யுடையவான மூன்று உலகு’ என்னுதல்.-அன்றிக்கே,-‘பாபம் மருவி இருந்துள்ள மூன்று உலகு’ என்னுதல்: பாபம் என்றது, ‘பா’ எனக் கடைக் குறைந்து வந்தது.-அன்றிக்கே,-‘பா’ என்று பரம்புதலாய்,-‘பரப்பை யுடையவான மூன்று உலகு’ என்னுதல்.-‘மூன்று உலகு’ என்று, கீழும் மேலும் நடுவுமான உலகங்களைச் சொல்லுதல். அன்றிக்கே, கிருதகம், அகிருதகம், கிருதகாகிருதகம் என்று இவ்வகையிலே ஆக்கிச் சொல்லுதல்.-‘என் தாயே’ என்பாரைப் போலே ‘படைத்த பற்ப நாபாவோ!’ என்கிறார்.
இதனை உண்டாக்குகைக்கு அடியான சம்பந்தமேயாய், இனிமை இன்றிக்கே ஒழிந்ததாகில் தான் நான் ஆறி இரேனோ?-நீ இதனை வருந்திப் படைத்தது அழிக்கைக்காகவோ?
தோன்றுதலும், வளர்தலும், வாழ்தலும் எல்லாம் உன் பக்கலிலே யாயிற்று,-பரதன் அக்ரூரர் மாருதி -அணைத்த –தாமரைக் கையாவோ–பதினான்கு ஆண்டுகளும் முடிந்த பின் பஞ்சமி திதியில்’ என்று நாள்-‘பூர்ணே சதுர்த்தஸே வர்ஷே பஞ்சம்யாம்’-என்பது, ஸ்ரீராமா. யுத். 127 : 1.-இட்டுக் கொடுக்கலாவது தம்பிமார்க்கோ?-உனக்கே உரியரான அடியார் ஆனால் ‘இன்ன நாள் பெறக்கடவது’ என்று ஒருநாள்-இட்டுக் கொடுக்கல் ஆகாதோ?
தனியேன் உன்னை என்று கொல் சேர்வதுவே – நாராயணனை ஒழிந்து இருப்பது ஒரு நாரம் இல்லையே? இனிச் ‘சேருகையாவது, அடியார்கள் குழாங்களை உடன் கூடுகை அன்றோ?-‘உன்னை என்று கொல் சேர்வதுவே’ என்னா நிற்க,-அது சேரும்படி என்?’ என்னில்,
ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்பக் கண்டு வைக்கையாலே,-‘உன்னைச் சேர’ என்ற போதே தன்னடையே வருமன்றோ?-
———
என்று கொல் சேர்வது அந்தோ!அரன் நான்முகன் ஏத்தும் செய்ய
நின் திருப் பாதத்தை யான்? நிலம் நீர்எரி கால் விண்ணுயிர்
என்ற இவை தாம் முதலா முற்றுமாய் நின்ற எந்தாயோ!
குன்று எடுத்து ஆநிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தாவோ!–7-6-2-
அழிப்பாருடன் ஆக்குவாருடன் வாசி அற உகக்கும் படியான திருவடிகளை.
வேறு பிரயோஜனங்களை விரும்புகின்றவர்களுக்கும் கூட விரும்பத் தக்கனவாம்படி இருக்கிற திருவடிகளை வேறு பிரயோஜனங்களை விரும்பாத நான் என்று பெறக் கடவேன்?
படைப்பதற்கு முன்பே இவற்றை உண்டாக்குகைக்காகத் திருவ்ருத் கரணத்தை-தேஜஸ் அப்பு பிருத்வி மூன்றும் — நினைத்துப் பஞ்சீகரணத்தைச் செய்து,-ரக்ஷணத்தில் உள்ள பாரிப்பால் – இவற்றை அடையப் படைத்து,படைக்கப்பட்ட பொருள்கள் பொருளாந்தன்மையைப் பெறுதல், பெயரை அடைதல் முதலியவைகளுக்காக உயிர் வழியாக அநுப் பிரவேசித்து, பின்னர், இவற்றைச் சொல்லுகிற சொற்கள்,
அசித்தும் அசித்தை விரும்பி நிற்கிற உயிரும் உயிருக்குள் உயிராய் இருக்கிற பரமாத்துமாவுமான இக்கூட்டத்தைச் சொல்லுகின்றன வாய்க் கொண்டு,
தன்னளவிலே வரும்படி நிற்கிற நிலையைச் சொல்லுகிறது, ‘முற்றுமாய் நின்ற’ என்னும் இதனால்.-ஸ்வரூப ஐக்கியம் இல்லை -அனு பிரவேசித்து பெற்ற பிரகார பிரகாரி பாவம் அருளிச் செய்கிறார்-இவை அறியாது இருக்க, இவற்றின் பேற்றுக்கு அவன் வருந்த வேண்டுவதற்கு உரிய காரணத்தைச் சொல்லுகிறது,
ரக்ஷணத்துக்காக மலையை எடுத்து நின்ற நிலை இவர்க்கு வல்லார் ஆடினால் போலே இருந்தது –
ஆக, இந்த இரண்டு பாசுரங்களாலும்-அவன் விரும்பப்படுகின்றவனாக இருக்கும் தன்மையைச் சொல்லும் முகத்தால்,-பிராப்பியத்துவம் சொல்லப்பட்டது:
மேல் ஐந்து பாசுரங்களாலே, அவனுடைய பிராபகத்துவம் சொல்லப்படுகிறது.
—————
எங்குத் தலைப் பெய்வன் நான்! எழில் மூவுலகும் நீயே
அங்கு உயர் முக்கண் பிரான் பிரம பெருமான் அவன் நீ
வெங்கதிர் வச்சிரக்கை இந்திரன் முதலாத் தெய்வம் நீ
கொங்கலர் தண் அந் துழாய் முடி என்னுடைக் கோவலனே!–7-6-4-
ப்ரஹ்ம ஈஸா நாதிகளுக்கு உண்டான உச்சாரயமும் நீயே கொடுத்து அருளினாய் -அப்படியே என்னுடைய அபேக்ஷிதமும் நீயே செய்து அருளும் இத்தனை போக்கி என்னால் செய்யலாவது ஒன்றும் இல்லை என்கிறார்–கொங்கு அலர் தண் அம் துழாய் முடி’ என்கையாலே, இனிமையின் மிகுதி சொல்லிற்று;-என்னுடைக் கோவலனே!’ என்கையாலே, அடியார்கட்குப் பவ்யனாய் இருக்கும் தன்மையைச் சொல்லுகிறது. -உன்னை ஒழிந்த பொருள்களினுடைய உயர்வுகளும் உன் அதீனமாம்படி இருக்கிற நீ, உன்னுடைய உயர்வு நான் இட்ட வழக்காம்படி ஆனாய்.-அடியார்கட்கு அடக்க முடையவனாய் இருக்கிற கிருஷ்ணனே!
————-
என்னுடைக் கோவலனே! என் பொல்லாக் கரு மாணிக்கமே!
உன்னுடைய உந்தி மலர் உலகமவை மூன்றும் பரந்து
உன்னுடைச் சோதி வெள்ளத்து அகம்பால் உன்னைக் கண்டு கொண்டிட்டு
என்னுடை ஆர் உயிரார் எங்ஙனே கொல் வந்து எய்துவரே?–7-6-5-
உன்னடைய உந்தியிலே மலரா நின்றுள்ள உலகங்கள் மூன்றிலும் உண்டான விஷயங்கள் தோறும், தனித் தனியே அற்றுக் கால் தாழ்ந்து போந்தவனாய் இருந்தேன் நான்.
நீ ஸர்வ சத்தி யோகத்தாலே பரந்திருக்கும் இடம் முழுதும் நான் என்னுடைய ஆசையாலே கால் தாழ்ந்து திரிந்தேன்.-இது என் நிலை இருந்தபடி.-அதற்கு மேலே நீ எட்டா நிலத்தை இருப்பிடமாக வுடையையாய் இருந்தாய்.-என் நிலை இருந்தபடி இது;-உன் நிலை இருந்தபடி அது; -என் நெஞ்சில் ஈடுபாடு இருந்தபடி இது;-ஆன பின்பு இந்த முதலியார் கடுக வந்து உன்னைக் கிட்டாரோ?
ஆக. ஸ்வரூபம் உன் அதீனமாய் இருந்தது,-அவர் அவர்களுடைய உயர்வுகளும் உன் அதீனமாய் இருந்தன;-என் நிலை இது, உன் நிலை அது; என் நெஞ்சில் ஈடுபாடு இது;
ஆன பின்பு, நான் ஒரு சாதனத்தைச் செய்து வந்து கிட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ?’ என்கிறார்.-
————
வந்து எய்துமாறு அறியேன் மல்கு நீலச் சுடர் தழைப்பச்
செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல்
அந்தர மேற் செம்பட்டோடு அடி உந்தி கை மார்பு கண் வாய்
செஞ்சுடர்ச் சோதி விட உறை என் திரு மார்பனையே.–7-6-6-
வடிவழகு இல்லை என்று விடவோ,(மல்கு நீலம் சுடர் தழைப்ப )
பெறுவிக்கைக்குப் புருஷகாரம் இல்லை என்று விடவோ,(திருமார்பனை)
எனக்கு ஆசை இல்லையாய் விடவோ(வந்து எய்துமாறு அறியேன் –ஆசை உண்டு -என்னால் வர முடியாதே )
‘மல்கு நீலம் சுடர் தழைப்ப’ என்கையாலே, நிறம் இருந்தபடி சொல்லிற்று;
‘நெஞ்சுடர்ச் சோதிகள் பூத்து’ என்கையாலே, திவ்விய அவயங்கள் இருந்தபடி சொல்லிற்று;
‘ஒரு மாணிக்கம் சேர்வது போல்’ என்கையாலே,
இரண்டுக்கும் -ஆஸ்ரயமான-பற்றுக்கோடான திருமேனியைச் சொல்லுகிறது.
‘செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து’ என்கிற இடத்தில் தெரியாதபடி மறைத்துச் சொல்லிற்று ஒன்று உண்டே அன்றோ? அதனை விளக்கமாக அருளிச் செய்கிறார் மேல்:
அந்தரம் மேல் செம்பட்டோடு அடி உந்தி கை மார்பு கண் வாய் செஞ்சுடர்ச் சோதி விட –
அந்தரம் – நடுவு. உடம்புக்கு நடுவு, அரை. திருவரையில் (பன்னீராயிரப்படி -அந்தரம் பரம வ்யோமம் )-திருப் பீதாம்பரத்தோடே, திருவடிகள், திருநாபி கமலம், திருக் கைகள்,
பெரிய பிராட்டியார் எழுந்தருளி யிருக்கையாலே மேலே கூறியவற்றோடு ஒக்கச் சொல்லலாம்படி சிவந்திருக்கிற திரு மார்பு, திருக் கண்கள், திருப் பவளம்
இவை, சிவந்த சுடரை யுடைத்தான ஒளியை வீச.-உறை என் திரு மார்பனை –-இதுவும் ஓர் ஆபரணம் போலே:-என் தலைவியான பெரிய பிராட்டியாரைத் திரு மார்பிலே உடையவனை.-எனக்கு பவ்யனான ஸ்ரீ யபதி என்னுதல் –
—————
என் திரு மார்பன் தன்னை என் மலைமகள் கூறன் தன்னை
என்றும் என் நா மகளை அகம்பாற் கொண்ட நான் முகனை
நின்ற சசி பதியை நிலங்கீண்டு எயில் மூன்று எரித்த
வென்று புலன் துரந்த விசும்பாளியைக் காணேனோ?–7-6-7-
என் திரு மார்பன் தன்னை –
ஆஸ்ரயண தசையில் அவளைப் பற்றும் –
பிராப்தி தசையில் அவனைப் பற்றும் –
பிராபகத்தில் இருவரையும் பற்றும் –
(இப்படி மூன்றிலும் -விசேஷணத்திலும் விசேஷ்ய அம்சத்திலும் விசிஷ்டத்திலும் உண்டே )
‘என் மலை மகள் கூறன்’ என்பது முதலான இடங்களில் உள்ள ‘என்’ என்பது,
விசேடிய அமிசத்திலே ஊற்றம்.-அவனுடைய விபூதி யோகத்துக்கு உறுப்பாகச் சொல்லுகிறார்-இப்போது இவை சொல்லுகிறதற்குக் கருத்து என்?’ என்னில்,
‘ஸ்வரூபமும் உயர்வும் அவன் அதீனம்’ என்றார்;
இங்கே, ‘தக்க வயதினை அடைந்த புத்திரர்களுக்கு ஒத்த இடங்களிலே திருமணம் செய்விக்கும் தமப்பன் மார்களைப் போலே, இவர்கள் தாம் மனைவிகள் அடைந்ததும் தந்தாமால் அன்று; சர்வேஸ்வரனாலேயாம்’ என்பதனைத் தெரிவித்தபடி-‘இவர்களுடைய செயல்கள் எல்லாம் அவனுடைய அதீனம்’ என்கிறது மேல்:
காணேனோ?–என்னுடைய சத்தையே தொடங்கி உன் அதீனமாய் உன்னாலே பேறான பின்பு நான் இங்கனம் இழந்து போம் இத்தனையோ –-இனி.-இத் தலையாலே பேறு ஆம் அன்று விளம்பத்திற்குக் காரணம் உண்டாய் இருந்தது; அவனாலே பேறு ஆம் அன்று விளம்பத்திற்குக் காரணம் இன்றிக்கே இருந்தது.-இப்படி இருக்கச் செய்தேயும் தம்மை இழந்து இருக்கக் கண்டார் ஆகையாலே, ‘இனி, இந்த இழவோடே இங்ஙனே முடிந்து போமித்தனையே அன்றோ?’ என்று வருந்துகிறார்.
———–
ஆளியைக் காண் பரி யாய் அரி காண் நரியாய் அரக்கர்
ஊளை இட்டு அன்று இலங்கை கடந்து பிலம்புக்கு ஒளிப்ப
மீளியம் புள்ளைக் கடாய் விறன் மாலியைக் கொன்று பின்னும்
ஆளுயர் குன்றங்கள் செய்து அடர்த்தானையும் காண்டுங்கொலோ?–7-6-8-
அவன் அரக்கர் கூட்டத்தை அழியச் செய்தாற்போலே, நம் விரோதிகளைப் போக்கி
நமக்குக் காட்சியிலே தொடர்புண்டாய் நாம் கண்டோமாய்த் தலைக் கட்ட வல்லோமோ?
———-
காண்டுங் கொலோ நெஞ்சமே!கடிய வினையே முயலும்
ஆண் திறல் மீளி மொய்ம்பில் அரக்கன் குலத்தைத் தடிந்து
மீண்டு மவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி
ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரி ஏற்றினையே?–7-6-9-
அவனோடு சம்பந்தமுடையான் ஒருவன் வந்தானாகை அன்றிக்கே,
அவன் தானே வரப் பெறுவது காண்’ என்று செவி சீப்பாய்ந்து இருந்தார் அன்றோ?-‘அங்கு நின்றும் வந்தான் ஒருவனைக் கைக் கொண்டாராக அமையாதோ? இந் நிர்பந்தம் என்?’ என்னில்,-அவனோடு சம்பந்தமுடையான் ஒருவனைக் கைக் கொண்டால், அவன் தானும் நான்கு பேருமாகப் போம்;-அவன் தானே வரப் பெற்றதாகில் துருப்புக் கூடாக நோக்கிற்று ஆகலாம் அன்றோ?-மேலும், பகைமையில் முதிர நின்றானும் அவனே ஆகையாலே,
‘காப்பாற்றுமவனாக வேண்டும்’ என்ற விருப்பம் உள்ளதும் அவனிடத்திலே அன்றோ?
இப்படி அவனை அங்கீகரிப்பதற்குக் கோலிப் பெறாத இழவு தீர்ந்தது இவனைக் கைக் கொண்ட பின்பாயிற்று.
தன் சோதி புக்க – அம்புக்கு இலக்கு ஆக்குவார் இருந்த இடத்தை விட்டுத்
தனக்கே சிறப்பாய் எல்லை அற்ற பேரொளிப் பிழம்பு வடிவமாய் இருக்கிற
பரம பதத்திலே போய்ப் புக்க.-அமரர் அரி ஏற்றினையே– அம்பு இட்டு எய்வார் இன்றிக்கே ஆநுகூல்யமே தன்மையாய்த் தொண்டிலேயே நிலை பெற்றவர்களான நித்திய ஸூரிகள்
நடுவே அவன் இருக்கும் இருப்பைக் காண வல்லோமே?-பசுக்களின் கூட்டத்தின் நடுவே ஓர் இடபம் செருக்கித் திரியுமாறு போலே, நித்திய ஸூரிகள் கொண்டாட, அவர்கள் நடுவே அதனாலே செருக்கி மேனாணித்திருக்கும் இருப்பைச் சொல்லுகிறது.-நித்திய ஸூரிகள் திரளிலே அந்த ஓலக்கத்தின் நடுவே இருக்கும் இருப்பைக் காண்கை அன்றோ பிராப்பியமாகிறது?
———-
ஏற்றரு வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர்குலத்து
ஈற்றிளம் பிள்ளை ஒன்றாய்ப் புக்கு மாயங்களே இயற்றிக்
கூற்றியல் கஞ்சனைக் கொன்று ஐவர்க்காய்க் கொடுஞ்சேனை தடிந்து
ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க அரியே.-7-6-10-
முதல் இரண்டு பாட்டாலே -ப்ராப்யம் அவனே என்றார் –
அநந்தரம் ஐந்து பாட்டாலே உபாயமும் அவனே என்றார் -அநந்தரம் இரண்டு பாட்டாலே பிரதிபந்தகங்களைப் போக்குவானும் அவனே என்றார் –
இதில் குணாகுண நிரூபணம் பண்ண மாட்டாத மவ்க்யத்தாலே பரமபதத்தை தந்து அருளும் என்று அறுதி இடுகிறார் –
ஆற்றல் மிக்கான் .-துரியோதனாதிகளை அழிய செய்து -தர்ம புத்ரனையும் முடி சூட்டி -திரௌபதி குழல் முடித்த பின்பும் -நாதிஸ் வஸ்த்தமநா -என்றும் -ருணம் ப்ரவ்ருத்த மிவ மே -என்றும் -ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்றும் அஸந்துஷ்டனாய் எழுந்து அருளினான் –பெரிய பரஞ்சோதி புக்க அரியே – கம்ஸனும் துரியோதனனும் இல்லாத இடத்தில் பரம பதத்திலே போய்ப் புக்க பின்பும்,-நித்திய ஸூரிகள் நடுவே இருந்தோம் அன்றோ?’ என்று பாராதே, கம்ஸன் துரியோதனன், கர்ணன் என்று,ஆசிலே வைத்த கையுந்தானுமாய்ப்
பகைவர்கள் மேலே சீறன சீற்றத்தின் வாசனை அங்கேயும் தொடர்ந்தபடி.-
————–
புக்க அரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த
சக்கரச் செல்வன் தன்னைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன
மிக்க ஒர் ஆயிரத்துள் இவை பத்தும் வல் லார் அவரைத்
தொக்குப் பல்லாண்டிசைத்துக் கவரி செய்வர் ஏழையரே.–7-6-11-
இத்திருவாய்மொழி கற்றாரை மதி முக மடந்தையர் விரும்பித் திருப் பல்லாண்டு பாடி -மங்களா சாசனம் பண்ணி -சிலாகிப்பார் -என்கிறார் –நம்முடைய பிரகிருதி நமக்கு பய ஹேது என்று அபேக்ஷித்தால் நிரசிக்கும் என்று கருத்து –
புக்கு அ அரி உருவாய் – உக்ரம் வீரம் –இத்யாதி அந்த அரி உருவாய்ப் புக்கு. அவ்வரியுரு என்னுமித்தனையாயிற்றுச் சொல்லலாவது.-நரசிங்கமான வேடத்தைக் கொண்டு பகைவன் அண்மையிலே கிட்டி.-அன்றிக்கே,-இரணியன் உடலைப் பிளந்து கொடு புறப்பட்ட போதைக்கடுமை,(அங்கு அப்பொழுதே தோன்றிய என் சிங்கப்பிரான் பெருமை )
புறம்பு இட்டு ஒருவன் வந்து செய்தானாகை அன்றிக்கே, உள்ளு நின்றும் ஒரு சிங்கம் பிளந்து கொண்டு புறப்பட்டாற்போலே யாயிற்று அதனைச் சொல்லுதல்.
சக்கரச் செல்வன் தன்னை –-இரணியனுடைய உடலுங்கூடத் திரு உகிருக்கு அரை வயிறாகப் போகையாலே,-பின்னை அழகுக்குப் பத்திரங்கட்டின இத்தனையாயிற்று.
(அழகுக்கும் ஐஸ்வர்யத்துக்கும் உறுப்பாக திருவாழி பத்ரம் கட்ட -பல்லாண்டு பாட
திரு உகிரின் அழகுக்கு )
தொக்குப் பல்லாண்டு இசைத்துக் கவரி செய்வர் ஏழையர் –
கிண்ணகத்தில் இழிவாரைப் போலே தனி இழிய ஒண்ணாமை திரண்டு கொண்டு,
‘பொலிக! பொலிக!’ என்று மங்களாசாசனம் செய்து,
சர்வேஸ்வரன் பக்கல் செய்யக் கூடிய அசாதாரண கைங்கரியங்களை யடைய இப் பத்தைக் கற்றவர்கள்
பக்கலிலே செய்யா நிற்பார்கள் மதிமுக மடந்தையர்.
நெடுநாள் சம்சாரத்தில் பட்ட இழவெல்லாம் தீரும்படி அவர்களாலே கொண்டாடப் பெறுவர்கள்.-
——————–——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –